பாடம் -41-மீமாம்ச சாஸ்த்ர சுருக்கங்கள் பார்த்து –
அவை வேதாந்த பாடத்துக்கு உதவு மவற்றைப் பார்த்து நிகமிப்போம் –
————-
மீமாம்ஸா -ஞாதும் இச்சா -அறிய வேண்டும் ஆசை -பூஜ்ய விஷய ஆராய்ச்சி –
அறிய ஆசை உடையவர்கள் செய்யும் கார்யம் -வேத விசாரம்
ஒன்றைச் செய்ய செயல் முறை -இதி கர்தவ்யா –
தர்ம ஞானம் பெறவே மீமாம்ஸா ஸாஸ்த்ரம் கொண்டு வேத விசாரம் செய்து பெறுவதற்காக –
மகா ரிஷி ஜைமினி -மீமாம்ஸா ஸாஸ்த்ர ஸூத்ரங்கள் -சாம வேதம் பிரசாரம் செய்ய இவர் வேத வியாசர் சிஷ்யர்
சபரர் -சபர பாஷ்யம்
குமாரில பட்டர் -பாட்ட மதம் -ஸ்லோக வார்திகம் -தந்த்ர வார்த்திகம– டுப்டீகா
பிரபாகரர் -பிரபாகர் மதம் -லக்வீ -ப்ருஹதீ –
முராரி மிஸ்ரர் -மிஸ்ர மதம் -அங்கத்வ நிருக்தி
ஜைமினி மகரிஷி நமது நன்மைக்காக ஸூத்ரங்கள் தந்து அருளி உள்ளார்
12 அத்தியாயங்கள் -60 பாதங்கள் –907 அதிகரணங்கள் -2745 ஸூத்ரங்கள்
இதுக்கும் மேல் -சங்கர்ஷ காண்டம் தேவதா மீமாம்ஸா -நான்கு அத்தியாயங்கள் –
பூர்வ மீமாம்ஸா ஸாஸ்த்ரம் இதுவே
உத்தர மீமாம்ஸா -வேதாந்த விசாரம்
ப்ரஹ்ம காண்டத்துக்கு வேத வியாசர் ஸூத்ரங்கள் -நான்கு அத்தியாயங்கள் இதிலும் -பாதராயணர் இவரே –
இரண்டும் ஒரே ஸாஸ்த்ரம்
முதல் அத்யாயம் –
முதல் பாதம் -8 அதிகரணங்கள்
இரண்டாம் பாதம் -4 அதிகரணங்கள்
மூன்றாம்பாதம் -10-அதிகரணங்கள்
நான்காம் பாதம் -20-அதிகரணங்கள்
இரண்டாம் அத்யாயம் –
முதல் பாதம் -18 அதிகரணங்கள்
இரண்டாம் பாதம் -13 அதிகரணங்கள்
மூன்றாம்பாதம் -14-அதிகரணங்கள்
நான்காம் பாதம் -2-அதிகரணங்கள்
மூன்றாம் அத்யாயம் –
முதல் பாதம் -15 அதிகரணங்கள்
இரண்டாம் பாதம் -19 அதிகரணங்கள்
மூன்றாம்பாதம் -20-அதிகரணங்கள்
நான்காம் பாதம் -21-அதிகரணங்கள்
ஐந்தாம் பாதம் –20 அதிகரணங்கள்
ஆறாம் பாதம் -16 அதிகரணங்கள்
ஏழாம் பாதம் -23-அதிகரணங்கள்
எட்டாம் பாதம் -23-அதிகரணங்கள்
நான்காம் அத்யாயம் –
முதல் பாதம் -17 அதிகரணங்கள்
இரண்டாம் பாதம் -13 அதிகரணங்கள்
மூன்றாம்பாதம் -20-அதிகரணங்கள்
நான்காம் பாதம் -13-அதிகரணங்கள்
ஐந்தாம் அத்யாயம் –
முதல் பாதம் -18 அதிகரணங்கள்
இரண்டாம் பாதம் -12அதிகரணங்கள்
மூன்றாம்பாதம் -15-அதிகரணங்கள்
நான்காம் பாதம் -9-அதிகரணங்கள்
ஆறாம் அத்யாயம் –
முதல் பாதம் -13 அதிகரணங்கள்
இரண்டாம் பாதம் -11 அதிகரணங்கள்
மூன்றாம்பாதம் -21-அதிகரணங்கள்
நான்காம் பாதம் -14-அதிகரணங்கள்
ஐந்தாம் பாதம் –21 அதிகரணங்கள்
ஆறாம் பாதம் -7 அதிகரணங்கள்
ஏழாம் பாதம் -13-அதிகரணங்கள்
எட்டாம் பாதம் -19-அதிகரணங்கள்
ஏழாம் அத்யாயம் –
முதல் பாதம் -5 அதிகரணங்கள்
இரண்டாம் பாதம் -1அதிகரணங்கள்
மூன்றாம்பாதம் -14-அதிகரணங்கள்
நான்காம் பாதம் -3-அதிகரணங்கள்
எட்டாம் அத்யாயம் –
முதல் பாதம் -19அதிகரணங்கள்
இரண்டாம் பாதம் -6 அதிகரணங்கள்
மூன்றாம்பாதம் -8-அதிகரணங்கள்
நான்காம் பாதம் -4-அதிகரணங்கள்
ஒன்பதாம் அத்யாயம் –
முதல் பாதம் -18 அதிகரணங்கள்
இரண்டாம் பாதம் -20 அதிகரணங்கள்
மூன்றாம்பாதம் -14-அதிகரணங்கள்
நான்காம் பாதம் -15-அதிகரணங்கள்
பத்தாம் அத்யாயம் –
முதல் பாதம் -11 அதிகரணங்கள்
இரண்டாம் பாதம் -34 அதிகரணங்கள்
மூன்றாம்பாதம் -30-அதிகரணங்கள்
நான்காம் பாதம் -27-அதிகரணங்கள்
ஐந்தாம் பாதம் –26 அதிகரணங்கள்
ஆறாம் பாதம் -22 அதிகரணங்கள்
ஏழாம் பாதம் -20-அதிகரணங்கள்
எட்டாம் பாதம் -19-அதிகரணங்கள்
பதினொன்றாம் அத்யாயம் –
முதல் பாதம் -11அதிகரணங்கள்
இரண்டாம் பாதம் -16 அதிகரணங்கள்
மூன்றாம்பாதம் -16-அதிகரணங்கள்
நான்காம் பாதம் -21-அதிகரணங்கள்
பன்னிரண்டாம் அத்யாயம் –
முதல் பாதம் -21 அதிகரணங்கள்
இரண்டாம் பாதம் -15 அதிகரணங்கள்
மூன்றாம்பாதம் -16-அதிகரணங்கள்
நான்காம் பாதம் -16-அதிகரணங்கள்
ஸூத்ரம்
குறைந்த எழுத்துக்கள் கொண்டது
சந்தேகத்துக்கு இடம் இல்லாதது
ஆழ்ந்த பொருளை யுடையது
பல இடங்களிலும் பயன்படுத்தப் படுவது
பயன் அற்ற எழுத்துக்கள் இல்லாதது
பிழை இல்லாதது
ஸூத்ரங்கள்
எளிதாயும்
பல பொருள்களைக் கோடி காட்டுவதாகவும்
குறைந்த எழுத்துக்களையும் சொற்களையும் யுடையதாகவும்
ரசமாகவும் இருப்பதையே ஸூத்ரங்கள்
அதிகரணம்
ஒரே விஷயத்தை ஆராயும் ஸூத்ரங்களின் கூட்டங்கள் கொண்டது அதிகரணம்
இதில் ஐந்து பகுதிகள் உண்டு
1-விஷயம் -ஆராயப்படும் வேத வாக்கியம்
2-விஷயம் -அந்த வாக்கியத்தின் பொருளில் உள்ள சந்தேகம்
3-பூர்வ பக்ஷம் -எதிராளி கூறும் யுக்திகள்
4-சித்தாந்தம் -நாம் சொல்லும் யுக்திகளை முடிவும்
5-சங்கதி -முன் அதிகரணத்துடன் இந்த அதிகரணத்துக்குத் தொடர்பு
12 அத்தியாயங்களின் ஒரே பொருள் தர்மம் -அதில் –
சோதனா ச உபதேச ச அர்த்த -கட்டளை வாக்கியம் நன்மை ஏற்படுத்தும் -லக்ஷணம்
1-பிரமாணம் -தர்மங்களை அறியும் பிரமாணங்களை பற்றியது
2-பேதம் -தர்மங்களுக்குள் உள்ள வேறுபாட்டை அறியும் முறைகள்
3-சேஷத்வம் -ஒரு பொருள் மற்ற ஒன்றுக்கு அங்கமாக துணையாக உறுப்பாக ஆகுதல்
யாகம் -தியாகம் -ஒரு தேவதையைக் குறித்து ஒரு த்ரவ்யத்தை சமர்ப்பித்தல் தான் –
மானஸ வியாபாரம் தான் இது -மற்றவை எல்லாம் அங்கங்கள்
4-ப்ரயுக்தம் -பல இடங்களில் உபயோகப்படுத்தும் ஒரு பொருளின் முக்கியமான கார்யம் எது என்று நிரூபித்தால்
5-க்ரமம் -வைதிகச் செயல்களை செய்யும் வரிசை
6-அதிகாரம் -வைதிகச் செயல்களை செய்யத் தகுதிகள்
7-ஸாமான்ய அதி தேசம் -ஓர் இடத்தில் உபதேசிக்கப்பட்ட செயல் முறையை மற்றவர் இடத்தில் ஏறிடுதல்
8-விசேஷ அதி தேசம் -எங்கிருந்து எங்கு ஏறிட வேண்டும்
9-ஊஹம் -ஏறிடும் பொழுது செய்ய வேண்டிய சிறிய மாற்றங்கள்
10-பாதம்-ஏறிடும் பொழுது தவிர்க்கப்பட வேண்டியவை -நிறுத்தப்பட வேண்டியவை
11-தந்திரம் -பலவற்றுக்காக உபயோகப்படும் ஒரு செயலை அனைத்துக்காகவும் ஒரே முறை செய்தல்
12-பிரசங்கம் -ஒன்றுக்காகச் செய்யப்பட செயலால் மற்ற ஓன்று பயன் பெற்ற படியால் அதற்காகத் தனியாக செய்ய வேண்டாமை
அத்யாயம் -1- தர்மத்தைப் போதிக்கும் பிரமாணங்கள் எட்டும் முதல் அத்தியாயத்தில் சொல்லப்பட்டு உள்ளன
1-விதி -வேதத்தில் இருக்கும் நேரடியான கட்டளைகள்
2-அர்த்த வாதம் -செய்ய வேண்டிய செயலைப் போற்றுவதன் மூலம் செயலில் தூண்டும் சொல் தொடர்கள்
3-மந்த்ரம் -அடுத்து அடுத்து செய்ய வேண்டிய செயல்களை நினைவூட்டும் சொல் தொடர்கள்
4-ஸ்ம்ருதி -வேதத்தை அறிந்த ரிஷிகளின் நூல்கள்
5-ஆசாரம் -வேதத்தை அறிந்து அதன்படி நடப்பவர்கள் நடத்தை
6-நாமதேயம் -வைதிகச் செயல்களுக்கு கொடுக்கப் பட்ட செயல்கள்
7-வாக்ய சேஷம் -ஒரு கட்டளையை தொடர்ந்து வரும் மற்ற சொல் தொடர்கள்
8-சாமர்த்தியம் -கட்டளை இடப்படும் செயலின் தன்மை திறமை –
அத்யாயம் -2- கர்ம பேதத்தைக் காட்டும் ஆறு பிரமாணங்கள் இரண்டாம் அத்தியாயத்தில் உள்ளன
1-ஸப்தாந்தரம் -வெவ்வேறு வினைச் சொற்களால் குறிக்கப்படும் செயல்கள் வெவ்வேறு கர்மங்கள் தான்
2-அப்யாஸம் -ஒரு கட்டளையை வேறே எந்த பிரயோஜனம் இல்லா விட்டாலும் திரும்ப திரும்ப வேதம் சொன்னால்
அது வெவ்வேறு கர்மங்களை விதிக்கிறது என்றே கொள்ள வேண்டும்
3-சம்க்யா -வேதமே சில கர்மங்களின் எண்ணிக்கையை சொல்லி விடும் –
அப்போது தெளிவாக அறியலாம் இவை வெவ்வேறு கர்மங்கள் என்று –
4-ஸம்ஜ்ஞா -பெயர் மாறினால் கர்மம் மாறும் -பெயர் -நாமதேயம் -என்பது
ஒரு யாகத்தை ஸூ லபமாகக் குறிப்பிட என்று பார்த்தோம்
ஆகையால் ஒரு கர்மத்துக்கு ஒரு பெயர் போதுமானது
5-குணம் -ஒரு யாகத்தில் ஒரு த்ரவ்யம் தான் உபயோகிக்கப்பட முடியும் –
ஆகையால் முன்னமே த்ரவ்யம் விதிக்கப்பட்ட ஒரு யாகத்தில் மற்ற ஒரு த்ரவ்யத்தை நுழைக்க முடியாத படியால்
அது வேறொரு யாகத்தில் தான் பயன் பயன் படுத்தப்பட வேண்டும்
ஆகையால் கர்மங்களுக்குள் வேறுபாடு த்ரவ்யங்களைக் கொண்டும் ஏற்படலாம்
6-ப்ரகாரணாந்தரம்–ஒரு கர்மத்தை ஒரு பிரகரணத்தில் நூலின் ஒரு பகுதியில் – விதித்து விட்டு
மற்ற ஒரு ப்ரகரணத்தில் அதே பெயரை யுடைய ஒரு கர்மத்தை விதித்தாலும் அவை ஒன்றாக மாட்டா
ஏன் என்றால் பிரகரணம் மாறி விட்ட படியால் முன் கர்மத்தின் நினைவு சடக்கென ஏற்படாது –
அத்யாயம் -3- அங்கத்தவத்தைக் காட்டும் ஆறு பிரமாணங்கள்-ஸ்ருதி
மூன்றாம் அத்தியாயத்தில் சொல்லப் பட்டுள்ளன
1-ஸ்ருதி -நேரடியாக வேதமே சொற்களால் சொல்லுதல்
2-லிங்கம் -ஸப்த ஸாமர்த்யம் -ஒரு சொல்லின் திறமை –சொல்லுக்கு இருக்கும் ஸாமர்த்யம் –
தன் பொருளை அறிவிக்கும் ஸாமர்த்யம்
3-வாக்யம் -ஸமபி வ்யாஹார -இரண்டாம் வேற்றுமை முதலான ஸ்ருதி பிரமாணம் இல்லாத போது
இரண்டு பொருள்களுக்கு இருக்கும் சேர்ந்த உச்சரிப்பு
4-ப்ரகரணம் -உபய ஆகாங்ஷா -இரண்டு கர்மங்களுக்கு இடையில் -பரஸ்பரம் ஒன்றுக்கு ஓன்று இருக்கும் எதிர்பார்ப்பு
5-ஸ்தானம் -தேச ஸாமான்யம் -இடத்தில் ஒற்றுமை
6-ஸமாக்யா -யவ்கிக ஸப்த -காரணப்பெயர் –
அத்யாயம் -4-ப்ரயோஜகத்வம்
ஒரு செயல்பொருள் பலவற்றுக்கு அங்கமாக இருக்கலாம் –
அந்த அங்கிகளுக்குள் ஏதோ ஓன்று தான் அந்தக் கர்மத்துக்கு ப்ரயோஜகமாக இருக்கும்
அதாவது அனுஷ்டாபகமாக-முக்கிய பயனாக இருக்கும்
யாகங்களில் ஒரே பொருள் செயல் பலவற்றுக்கு அங்கமாக இருக்கலாம் ஆனால் அவற்றுள் ஓன்று தான்
அதற்கு பிரயோஜகமாக செய்விப்பதாக இருக்கும் -அதற்குத் தான் பிரயோஜகம் என்று பெயர் –
இந்த கர்மத்துக்கு பிரயோஜ்யம் என்று பெயர் –
எடுத்துக் காட்டு
தர்ச பூர்ண மாசம் என்ற யாகத்தில் புரோடாசம் -தோசை என்ற த்ரவ்யத்தை தேவதைக்கு சமர்ப்பிக்க வேண்டும்
அதற்காக அதை சமைப்பதற்கு கபாலம் என்ற சுட்ட மண் தகடுகளை பயன்படுத்த வேண்டும்
இதை வேதம் -கபாலங்களில் புரோடாசத்தை சமைக்க வேண்டும் -என்ற விதியில் சொல்லுகிறது
அதே கபாலங்களைக் கொண்டு தான் நெல்லில் இருந்து பிரிந்து விழுந்த உமியை நீக்க வேண்டும் என்று வேதம் கூறுகிறது –
புரோடாசத்திற்கான கபாலத்தால் துஷங்களை நீக்க வேண்டும் -என்ற கட்டளையால்
கபாலத்தைச் செய்வது புரோடாசத்தை சமைக்கத் தான் -அதே கபாலம் உமியை நீக்கவும் பயன்படுத்தப்படுகிறது அவ்வளவே
ஆகையால் புரோடாசம் செய்வது ப்ரயோஜகமும் அங்கியும்
கபாலம் பிரயோஜ்யமும் அங்கமும்
கபாலத்துக்கு உமியை நீக்குதல் என்ற செயல் அங்கி ஆகுமே தவிர ப்ரயோஜகம் ஆகாது –
அத்யாயம் -5- க்ரமம் -பூர்வ அபவ்ர்யம் -முன் பின் தன்மை -இந்தச்செயலுக்கு அடுத்து இந்தச்செயல் -க்ரமம் -வரிசை
1-ஸ்ருதி – நேரடியாக வேதமே செயல்களின் வரிசையைச் சொல்லுதல்
2-அர்த்தம் -ஒரு செயலின் ப்ரயோஜனத்தைக் கருதி அதைச் செய்ய வேண்டிய காலத்தை நிர்ணயித்தல்
3-பாடம் -வேதத்தில் செயல்களில் படிக்கப்பட்ட வரிசையிலேயே அவற்றைச் செய்தல்
4-ஸ்தானம் -வெவ்வேறு காலங்களில் செய்யப்பட வேண்டிய பல செயல்களை சில காரணங்களால்
சேர்ந்து செய்யும் பொழுது எந்தச் செயலின் இடத்திலாவற்றைச் சேர்த்து செய்கிறோமோ
அச்செயலை முதலில் செய்து விட்டு பின்னால் மற்றவற்றைச் செய்ய வேண்டும் –
5-முக்யம் -பல பிரதான கர்மங்களும் அவற்றின் அங்கங்களும் செய்யப்படும் பொழுது பிரதான கர்மங்களை
எந்த வரிசையில் செய்யப் போகிறோமோ அதே வரிசையில் தான் அங்கங்களை செய்ய வேண்டும்
6-ப்ரவ்ருத்தி -பல பிரதான கர்மங்களுக்காக ஒரே அங்கங்களைத் திரும்ப திரும்ப செய்யும் பொழுது
அவற்றுள் முதல் அங்கத்தை எந்த வரிசையில் செய்தோமோ அதே வரிசையில் தான் பின்பு உள்ளவையும் செய்ய வேண்டும் –
அத்யாயம் -6-அதிகாரம்
வைதிக கர்மங்களை செய்ய மூன்று அடிப்படைத் தேவைகள் –
இவை நேரடியாக விதி வாக்கியங்களில் சொல்லப்படா விட்டாலும் இவை இல்லாமல் கர்மங்களை
செய்ய முடியாத படியால் இவை அதிகாரத்தில் சேர்கின்றன
1-வித்யை -அத்யயனம் செய்து வேதங்களையும் அவற்றின் பொருளையும் கற்று இருக்க வேண்டும்
இது இருந்தால் தான் அடுத்து அடுத்து என்ன செயல் செய்ய வேண்டும்
என்பதையும் சொல்ல வேண்டிய மந்திரங்களையும் அறிய முடியும்
2-அக்னி -யாகம் ஹோமம் முதலியவற்றில் ஒரு த்ரவ்யத்தை அக்னியில் சேர்க்க வேண்டும் என்பதால்
அதற்காக ஆதாநம் என்ற கர்மத்தைச் செய்து
கார்ஹபத்யம் ஆஹவ நீயம் தஷிணாக்னி என்ற மூன்று அக்னிகளும் ஒருவன் இடத்தில் இருந்தால் தான்
அவன் யாகம் முதலானவற்றைச் செய்ய முடியும்
3-சாமர்த்தியம் –யாகம் முதலியவற்றை செய்யும் திறமையும் பண வசதியும் -உடல் ஆரோக்யமும்
நன்கு செயல்படக்கூடிய புலன்களும் இருந்தால் தான் ஒருவனால் யாகம் செய்ய முடியும்
ஆகையால் பார்க்க முடியாதவர்கள் பேச முடியாதவர்கள் நடக்க முடியாதவர்கள் ஆகியவர்களுக்கு
யாகம் முதலான வற்றில் அதிகாரம் கிடையாது
ஆணுக்கும் யாகம் முதலானவற்றில் அதிகாரம் உண்டு -பெண்ணுக்கும் உண்டு
ஆனால் அவர்களுக்குத் தனித்தனியே யாகம் செய்யும் உரிமை கிடையாது
இருவரும் சேர்ந்து தான் ஒரு யாகத்தைச் செய்ய வேண்டும் –
அத்யாயம் 7-8-அதி தேசம்
அதி என்றால் மீதூர்ந்து -கடந்து -தாண்டி என்று பொருள்
தேசம் என்றால் போதித்தல் அறிவித்தல்
அதி தேசம் -கடந்து போதித்தல்
ப்ரக்ருதிக்கு அங்கமாக விதிக்கப்பட்ட ஒரு கர்மத்தை அதைக் கடந்து மற்ற விக்ருதி யாகங்களும்
அங்கமாக போதிக்கும் சொல் தொடருக்குத் தான் அதி தேசம் என்று பெயர்
வேறொரு இடத்தில் சொல்லப்பட்ட காரியக்கூட்டம் -இதி கர்தவ்யதா -செயல்முறை –
தான் செய்யும் உபகாரத்தை மூலமாக வேறு இடங்களுக்குச் சென்று அடைவது தான் அதிதேசம் ஆகும்
எந்த ஒரு சொல் தொடரால் ப்ரக்ருதி என்று அழைக்கப்படும் கர்மத்தில் இருந்து அதோடு ஒத்த
ஸத்ருசமான -ஒற்றுமை யுடைய மற்ற கர்மங்களுக்கு அங்கங்கள் சென்று அடைகின்றனவோ
அந்த சொல் தொடர் அதி தேசம் என்று அழைக்கப்படுகிறது –
அத்யாயம் –9-ஊஹம்
ப்ரக்ருதி யாகத்தில் ஒன்றைக் குறித்து செய்யப்பட ஒரு செயல் விக்ருதி யாகத்தில்
வேறு ஒன்றைக் குறித்து செய்யப்படுவதற்கு ஊஹம் என்று பெயர்
ப்ரக்ருதி யாகத்தில் இருந்து ஒரு அங்கத்தை விக்ருதி யாகத்துக்கு அதி தேசம் செய்யும் பொழுது
அந்த அங்கம் விக்ருதியில் வேறொரு பொருளைக் குறித்தும் செய்யப்படலாம்
இதற்கு ஊஹம் என்று பெயர்
ஸம்ஸ்காரத்தில் ஊஹம்
மந்திரத்தில் ஊஹம்
சாமத்தின் ஊஹம்
என்று மூன்று வகைகள் உண்டு
அத்யாயம் -10-பாதம் –
ப்ரக்ருதி யாகத்துக்கு அங்கமான ஒரு செயல் விக்ருதி யாகத்துக்கு அங்கமாக இல்லாமல் போவதற்கு பாதம் என்று பெயர்
அதி தேசம் செய்யப்படும் செயலை சிறு மாற்றத்தோடு செய்வது ஊஹம்
அந்தச் செயலை முழுவதுமாக விடுவது பாதம் –
இது மூன்று காரணங்களால் ஏற்படலாம்
ப்ரத்யாம் நாநம் -முரண் பட்ட வேறே ஒரு கட்டளை
அர்த்த லோபம் -பிரயோஜனம் இன்மை
ப்ரதி ஷேதம் -செய்யாதே என்ற கட்டளை
அத்யாயம் -11- தந்திரம் -பிரயோகத்தைப் பற்றிய விசாரம்
தந்திரம் என்றால் பலவற்றைக் குறித்து ஒரு முறை அனுஷ்டித்தல்
பிரயோக விதியானது அங்கங்களையும் பிரதானங்களையும் சேர்த்து விதிக்கிறபடியால் அதிலிருந்து நமக்கு ஒரு சேர்க்கை தோற்றுகிறது
அச்சேர்க்கை ஒரே க்ஷணத்தில் அவை அனைத்தையும் செய்தால் தான் ஏற்படும் ஆனால் எங்கு அது இயலாதோ
அங்கு இடைவிடாமல் அடுத்து அடுத்து அனுஷ்டானம் செய்ய வேண்டும் என்று வேதமே கூறுகிறது
ஆனால் எங்கு எங்கு முடியுமோ அங்கெ சேர்த்தே அனுஷ்ட்டிக்க வேண்டும்
இதுவே தந்திரம்
1-பிரதான யாகங்களில் தந்திரம் -வெவ்வேறு தேவதைகளைக் குறித்து செய்யும் யாகங்களில் ஒரே நொடியிலே சேர்த்து செய்ய முடியா விட்டாலும்
ஒரே தேவதைக்காகச் செய்யப்படும் பல யாகங்களை ஒரே க்ஷணத்தில் சேர்த்து செய்யலாம் இது தந்திரம் ஆகும்
2-அங்கங்களுக்குள் தந்திரம் -பல யாகங்களை அங்கமாக ஒரே செயல் இருக்கும் பொழுது அவற்றுள்
காலத்தாலோ தேசத்தாலோ எந்த வேறுபாட்டையும் வேதம் காட்டா விட்டால் வேறுபாடு அறியாத படியாலே
அந்த செயலை ஒரே முறை செய்வதன் மூலம் அனைத்து யாகங்களும் உதவலாம்
இது அங்கங்களில் தந்த்ரம் ஆகும் –
அத்யாயம் -12–ப்ரஸங்கம்
ஒரு யாகத்துக்கு தன் அங்கம் ஒன்றில் இருந்து கிடைக்க வேண்டிய உதவி
வேறே ஒரு வழியில் கிடைத்து விட்டால் அந்த அங்கத்தைச் செய்யாமல் இருப்பது
எடுத்துக்காட்டு –
அக்னீ ஷோ மீயம் யாகம் -தர்ச பூர்ண மாசத்தில் இந்திரனுக்காகச் செய்யப்படும் தயிர் யாகத்தின் விக்ருதி ஆகும்
அந்த அக்னீ ஷோ மீயம் யாகத்துக்கு அங்கமாக புரோடாச யாகம் உள்ளது
அதுவும் தர்ச பூர்ண மாசத்தின் விக்ருதி தான்
தர்ச பூர்ண மாசங்களுக்கு எல்லாம் ப்ரயாஜங்கள் என்ற அங்கம் இருக்கிறபடியால் அதி தேசத்தின் மூலம்
இந்த அக்னீ ஷோ மீயத்துக்கும் புரோடாச யாகத்துக்கு கூட ப்ரயாஜங்கள் அங்கமாகின்றன –
பாட்ட மீமாம்சையில் ஆறு பிரமாணங்கள்
1-ப்ரத்யக்ஷம் -புலன்களுக்கும் பியருள்களுக்கும் உள்ள தொடர்பால் ஏற்படும் ஞானம்
2–அனுமானம் -ஒரு பொருள் மற்ற ஒரு பொருளை விட்டுப் பிரியாமல் இருந்தால் அதுக்கு வியாப்தி என்று பெயர்
இப்படி வியாப்தி உடைய பொருளை நாம் ஓர் இடத்தில் கண்டால் மற்ற ஒரு பொருள் இருப்பதை ஊஹித்து அறிகிறோம் –
புகை நெருப்பு மலைமேல் போல்
3- சப்தம் -சொற்களுக்கும் பொருளுக்கும் உள்ள தொடர்பு -சக்தி -பதார்த்த ஸ்மரணம்–வாக்யார்த்த ஞானம் –
4-உப மானம் -சத்ருஸ்ய ஞானம்
5-அர்த்தா பத்தி – பொருந்தாத இரண்டு பிரமாணங்களை பொருந்த வைக்க ஒரு விஷயத்தை கல்பித்து தான் அர்த்தா பத்தி
எது பொருந்தாமல் இருக்கிறதோ அது உப பாத்யம்
அதை பொருந்த வைக்க எது கல்பிக்கப் படுகிறதோ அது உப பாதகம்
6-அநுப லப்தி -முதல் ஐந்து பிரமாணங்களால் அறியப்பட முடிந்த ஒரு பொருளை பற்றின அறிவு ஓர் இடத்தில்
நமக்கு ஏற்பட வில்லை என்றால் அவ்விடத்தில் அந்தப் பொருள் இல்லை என்று அறிகிறோம்
உப லப்தி -என்றால் அறிவு
அநுப லப்தி என்றால் அறிவு தோன்றாமை
ஆகவே அறியக்கூடிய ஒரு பொருளை பற்றின அறிவு தோன்றாமல் இருப்பதே அநுப லப்தி
பாட்ட மீமாம்சையில் ஐந்து பதார்த்தங்கள்
1- த்ரவ்யம் –
ப்ருத்வீ ஜலம் தேஜஸ் வாயு ஆகாசம் காலம் திக்கு ஆத்மா மனஸ் தமஸ் ஸப்தம் என்ற 11 த்ரவ்யங்கள்
தேஜஸ் அபாவம் தமஸ் நியாய மதத்தில்
சப்தம் ஆகாச குணம் நியாய மாதத்தில்
இவர்கள் இத்தை த்ரவ்யம் என்கிறார்கள்
ஒன்பது த்ரவ்யங்கள் நியாய மாதத்தில்
2-ஜாதி சாமான்யம் என்ற பொதுத் தன்மை -குடத் தன்மை மாட்டுத் தன்மை போல்வன
3-குணம் என்ற பண்புகள் -இவர்களும் 24
நியாய -தர்மம் அதர்மம் சப்தம் மூன்றையும் விட்டு
மீதி 21 இவர்கள் கொண்டு
இவற்றுக்குப் பதில்
ப்ராகாட்யம்
த்வனி
சக்தி
மீமாம்ஸா தகர்சனத்தில் 24 குணங்கள்
1-ரூபம் -நிறம்
2-ரஸம் -சுவை
3-கந்தம் -மணம்
4-ஸ்பர்சம் -குளிர்த்தி வெப்பம் இரண்டும் இல்லாமை என்ற தொடு உணர்ச்சி
5-சம்க்யா-எண்ணிக்கை
6-பரிமாணம் -அணு மஹத் விபு போன்ற அளவுகள்
7-பிருத்தக்த்வம் -வேறுபாடு
8-சம்யோகம் -சேர்க்கை
9-விபாகம் -பிரிவு
10-பரத்வம் -தொலைவு முதுமை
11-அபரத்வம் -அருகில் இளைமை
12-குருத்வம் -எடை
13-த்ரவத்வம் -நீர்மை
14-ஸ்நேகம் -பசைத்தன்மை
15-புத்தி -அறிவு
இது நியாய மதத்தில் ப்ரத்யக்ஷம்-மனசால் அறியப்படுவது
மீமாம்சையில் இதை அனுமானம் தான் செய்யலாம்
16-ஸூகம் -ஐஹிகம் -ஆமுஷ் மிகம் -ஸ்வர்க்கம் -அப வர்கம் -மூ வகைப்பட்டது
17- துக்கம் – ஐஹிகம் -ஆமுஷ் மிகம்-நரகம் -இரண்டு வகைப்பட்டது
18-இச்சை -ஆசை
19-த்வேஷம் -வெறுப்பு
20-பிரயத்தனம் -முயற்சி
21-சம்ஸ்காரம் -வேகம் பாவனை ஸ்திதி ஸ்தாபனம் என்று மூன்று வகைப்படும்
22-த்வனி இது வாயுவின் குணம் -நம் தொண்டை வாயின் வியாபாரத்தால் வாயுவில்
இந்த குணம் ஏற்பட்டு இது தான் சப்தத்தை வெளிப்படுத்து கிறது
23-ப்ராகட்யம் -ஒரு பொருளில் உள்ள அறியப்படுதல் -பயின்ற குணம் –
இதைக் கண்டு தான் நமக்கு அறிவு ஏற்படுவதை நாம் அனுமானம் செய்யலாம்
24-திறமை -இது இரண்டு வகைப்படும்
லௌகிக சக்தி -நெருப்புக்கு எரிக்கும் சக்தி நீருக்கு நெருப்பை அணைக்கும் சக்தி போல்வன
வைதிக சக்தி ஜ்யோதிஷ்டோமம் முதலானவற்றுக்கு ஸ்வர்க்கம் கொடுக்கும் சக்தி போல் வன
4-கிரியை என்ற செயல்
கர்மம் கிரியை செயல்
இது விபு அல்லாத த்ரவ்யங்களில் மட்டும் இருக்கும்
விபு த்ரவ்யங்களால் நகர முடியாதே
இது புலன்களால் க்ரஹிக்கக் கூடியது
உத்ஷேபநம் மேலே செல்லுதல் போல்வன -நியாய மதம் போலவே
சம்யோகத்துக்கும் விபாகத்துக்கும் காரணமானது –
5-அபாவம் என்ற இன்மை
ப்ராபகரர்கள் அபாவம் ஏற்க வில்லை
ப்ராக் அபாவம்
ப்ரத்வம்ஸா அபாவம்
அத்யந்த அபாவம்
அந்யோன்ய அபாவம்
இது பிரபாகர் மீமாம்சகரால் எபிற்கப்படுவது இல்லை
பாட்ட மீமாம்ஸகர்கள் அநுப லப்தி ப்ரமாணத்தால் இது அறியப்படுகிறது -க்ரஹிக்கப் படுகிறது – என்பர்
நியாய மதத்தில் ஏற்கப்பட்ட
விசேஷம்
சமவாயம்
பதார்த்தங்களை இவர்கள் ஏற்க வில்லை –
—————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கணாதர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாசர் -பாதராயணர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply