Archive for the ‘ubanishads’ Category

ஸ்ரீ நியாய மீமாம்ச வேதாந்த பாடங்கள்–ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்–பகுதி -3 –வேதாந்த சாஸ்த்ரம்– பாடங்கள் -1-12 —

August 5, 2021

பாடம் -1- வேதாந்தத்தின் முக்யத்வத்ம்

அநந்தா ஹை வேதா –பரத்வாஜர் -இந்திரன் -மூன்று மலைகள் -கற்றது கைப்பிடி அளவு –
நான் மறை -நான்கு -என்றாலும் த்ரை வேதா -வகைகளில் மூன்று -ருக் யஜுர் ஸாம –
அபூர்வம்-முன்னால் நமக்குத் தெரியாத – உண்மையையே வேதம் சொல்லும் –
ஸ்நாத்வா புஞ்சீத -குளித்தே சாப்பிட வேண்டும் –
வேதையதி வேதம் -விளக்கும்
மறை -குதர்க்க வாதிகளுக்கு மறைக்கும்
தெய்வீகத் தன்மை –
பூர்வ மீமாம்ஸை -ஆராதன முறை -வேதம் -கர்ம காண்டம் -12 அத்தியாயங்கள்
தேவதா காண்டம் -நான்கு அத்தியாயங்கள்
உத்தர மீமாம்ஸை -ஆராத்யனைப் பற்றி சொல்லும் -ப்ரஹ்ம காண்டம் -நான்கு அத்தியாயங்கள்
வேத வியாசர் -பாதராயணர் -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்
அதாதோ -ஆதாலால் அதற்குப் பின் – கர்ம விஜ்ஜாசா – ப்ரஹ்ம விஜ்ஜாசா -தொடங்கும்

கர்மங்களை அனுஷ்ட்டிக்க வேண்டும் -கேட்டு அதன்படி இருக்க வேண்டும்
திரோதானம் -பிரமம் -விபரீதம் -அநித்யங்களை நித்யமாகக் காட்டும் -அசத்யங்களை சத்யமாகவும் –
அபோக்யங்களை போக்யமாகவும் காட்டும்
சரீரம் உடன் தொடர்பால் மாற்றி அறிய வைக்கும்
இத்தை புரிந்து ஆத்மா வேறே -நித்யம் -அறிய -கர்மங்கள் செய்ய செய்ய பாபங்களைப் போக்கி –
ஆராதனம் பண்ண பண்ண தான் அபூர்வங்களை அறிய விருப்பமும் -தகுதியும் வரும்
ஆகவே வேத புருஷன் -பூர்வ காண்டம் பூர்வ மீமாம்சை -பின்பு உத்தர காண்டம் -உத்தர மீமாம்ஸை
நித்ய கர்மங்களைச் செய்யச் செய்ய அநாதி கால கர்மங்கள் -வினைகள் -போகும் –

பிரமம் -மயக்கம் விப்ரலம்பம் வஞ்சனை இல்லாமல் -பிரமாதம் -கவனக்குறைவு இல்லாமல்
உண்மை பாரமார்த்திகம் ஒன்றையே சொல்லும்
த்ரிவித பரிச்சேதம் இல்லாமல் -அநாதி -அபவ்ருஷேயம்
சர்வ கர்ம சமாராத்யானாய் -எல்லா கர்மங்களால் ஆராதிக்கப்படுபவர் ப்ரஹ்மம் -முதல் -12 அத்தியாயங்கள் –
ஆகாசாத் பதிதம் தோயம் –கேசவம் பிரதி கச்சதி- சர்வ தேவதா அந்தராத்மாவாய் -ப்ரஹ்மம் -அடுத்த நான்கு அத்தியாயங்கள் –
ப்ரஹ்ம ஸப்த வாஸ்யனாய் ப்ரஹ்மம் -இறுதி நான்கு அத்தியாயங்கள்
வேதமே ஸாஸ்த்ரம் -ஸாஸனாத் -இதம் குறு -இதம் ஆகார்ஷி –
செய்ய வேண்டியவற்றையும் செய்ய வேண்டாதவற்றையும் -ஆத்ம உஜ்ஜீவனத்துக்கு காட்டும் –
த்ரை குண்ய விஷய வேதா -புள்ளு பிள்ளைக்கு இரை தேடி கொடுத்து மேலே மேலே கூட்டிச் செல்லும் –

வேதம் செய்யச் சொல்வதே தர்மம் -செய்யாத வற்றை அதர்மம் -இதனால் அவன் திரு உள்ளத்தில் –
புண்யம் பாபம் ஈஸ்வர ப்ரீதி கோபம் –
இப்படியே அழகான தொடர்பு –
ஸ்ருதி ஸ்ம்ருதி மம ஆஜ்ஜை –

————–

பாடம் -2- வேதாந்தத்தை யார் கற்க வேண்டும் –
வேதம் -விவர்த்தி சர்வ பூதா நாம் -வேத சாஸ்திரம் ஸனாதனம் -வேத்ய இதி வேதம் –
தஸ்மாத் ஏதத் பரம் அந்நிய -ஸஹஸ்ர மாதா போல் வத்சல்ய தமம்
தொன்மையான வேதங்கள் தான் உலகில் அனைத்து உயிர் இனங்களையும் தாங்குகிறது
உலகில் ஒருவன் தனது இலக்கை அடைய நியாயமான வழியைக் கூறும் வேதங்கள் தான் சிறந்த பிரமாணங்கள் என்று மநு பகவான்
வேதத்தை விட வேறே ஒரு சாஸ்திரமே கிடையாது -அங்கங்கள் உப அங்கங்கள் ஸ்ம்ருதிகள் அனைத்துமே வேதத்தில் இருந்தே தோன்றியவை
வேதமே அவற்றின் மூலம்
தத்தவங்களைப் பாதிப்பதால் வேதம் என்று பெயர் பெற்றது
வேதத்தில் கர்ம காண்டம் நாம் செய்ய வேண்டிய கர்மங்களைப் பற்றியும் உபநிஷத் என்னும் ஞான காண்டம் ப்ரஹ்மத்தைப் பற்றியும் கூறும்
குருவுக்கு அருகில் அமர்ந்து ரஹஸ்யமாக கேட்க்கும் படியால் உப நிஷத் எனப்படுகின்றன -உப அருகில் நிஷத்ய அமர்ந்து
சம்சார தாபம் தீர்க்கும் ஞானத்தைக் கொடுக்கிறபடியாலும் உப நிஷத் -நிஸ் சேஷ தாப த்ரய விசரணம் ஞானம் -ஆதி சங்கரர் –
ப்ரஹ்மத்தை நேரடியாகக் கூறும் வேதப்பகுதி தான் உபநிஷத் -அத்வாரக ப்ரஹ்ம ப்ரதிபாத்யம் உப நிஷத் –
ஸூதர்சன ஸூரி -ப்ரஹ்மத்துக்கு மிக அருகில் இருந்து நம்மை அருகில் கூட்டிச் செல்லும்
தச உபநிஷத்துக்கள் பிரசித்தம் –

வேதக் கல்வி
ஒவ்வொருவரும் தங்கள் குலத்தில் பயிலப்படும் வேதப்பகுதியை தவறாமல் கற்க வேண்டும் என்று வேதமே சொல்கிறது –
ஸ்வாத்யாயம் அத்யே தவ்ய –
அப்படிக் கற்பவன் வேதத்தை மட்டும் கற்காமல் அவற்றின் அங்கங்களான
சிஷா வியாகரணம் சந்தஸ் ந்ருத்தம் ஜ்யோதிஷம் கல்பம் ஆகியவற்றையும் கற்க வேண்டும்
இப்படிக் கற்கும் பொழுது அவற்றைப் படிக்கும் பொழுதே மேலோட்டமாக அதன் பொருள் புரியத் தொடங்கும்
இதற்கு ஆபாத ப்ரதீதி மேலோட்டமான அர்த்தம் என்று பெயர்
இதில் சந்தேகங்களோ தவறான புரிதல்களோ ஏற்படும்

இந்த ஆபாத ப்ரதீதி எவ்வாறு இருக்கும் என்றால்
கர்மங்களின் பலன்களான ஸ்வர்க்கம் பசு குழந்தைகள் செல்வம் உணவு இவை எல்லாமே அழியக் கூடியவை என்றே தோன்றும்
சாதுர்மாஸ யாகத்தைச் செய்தால் -அக்ஷயம் -அழியாத புண்ணியம் கிட்டும் –
அபாம ஸோமம் அம்ருத -ஸோம ரஸத்தைப் பருகி மரணம் அற்றவர்கள் ஆகலாம் போன்ற சொல் தொடர்களைப் பார்த்து
சில கர்மங்களுக்கு நிரந்தரமான பலம் கிட்டும் என்றும் தோன்றும்
ப்ரஹ்ம வித் ஆப் நோதி பரம் -என்றும் –
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி-முதலான சொல் தொடர்களைப் பார்த்தால்
பரமாத்மாவை த்யானம் செய்து நித்தியமான பலம் பெறலாம் என்று தோற்றும்
இந்த மேலோட்டமான தோற்றங்களை உறுதி செய்யத் தான் ஒருவன் மீமாம்ஸா ஸாஸ்த்ரத்தில் -வேத விசாரத்தில் இழிகிறான்
விதியால் அல்ல -ஆசையால் இழிகிறான் – பூஜ்யம் -மதிக்கத்தக்க உயர்ந்த விஷய விசாரமே -மீமாம்ஸா ஸாஸ்த்ரம்
கர்ம மீமாம்ஸையில் கர்ம விசாரங்களைப் பற்றி விசாரித்து முடித்ததும் –
கர்மங்களால் ஒரு ஸ்திரமான அழியாத பலன் கிட்டாது என்ற நிச்சயம் ஏற்படும் – ஓட்டை ஓடங்கள் போல் கர்மங்கள் –
அந்தவத் -முடிவை உடையதாகவே இருக்கும் –
12 அத்தியாயங்கள் கர்ம விசாரம்
தேவதா காண்டம் -அல்லது சங்கர்ஷண காண்டம் என்று -நான்கு அத்தியாயங்களும் ஜைமினி பண்ணி உள்ளார் –
பரீஷ்ய லோகான் -ப்ராஹ்மணன் நிர்வேதம் -இவற்றை அறிந்து விசாரித்து –
வேதம் கற்பவன் வெறுப்பை அடையக் கடவன் -வேதமே சொல்லுமே

வேதாந்தக் கல்வியில் நுழைவு
இவ்வாறு கர்மங்களுக்கு ஸ்திரமான பலன் கிட்டாது என்ற நிச்சயமும் –
ப்ரஹ்ம தியானமே ஸ்திரமான பலம் கொடுக்க வல்லது என்றும்
இவ்வாறு மேலோட்டமான புரிதலும் -ஆபாத ப்ரதீதியும் -உடையவன் தான்
வேதாந்த சாஸ்திரம் -ப்ரஹ்ம மீமாம்ஸை -கற்க சரியான அதிகாரி ஆவார் –
வேதத்தைக் கற்றவன் கர்மங்களால் அடையயப்படும் பலன்களை ஆராய்ந்து –
இவற்றால் நிரந்தரமான பலன்களை அடைய முடியாது என்ற உறுதியான நிச்சயம் பெற்றதால்
கர்மங்களில் நிர்வேதம் -வெறுப்பு ஏற்பட்டவனாக மேலே உபநிஷத்துக்களில் சொல்லப்பட்ட ப்ரஹ்மத்தை அறிவதற்காக
ஒரு குருவை கண்டிப்பாக அணுக வேண்டும் –
அந்த குரு அவனை சோதித்துப் பார்த்து ப்ரஹ்ம வித்யையை உபதேசிப்பார் -என்று உபநிஷத் சொல்கிறது

இவ்விடத்தில் அவன் குருவை அணுக வேண்டும் என்பது நியம விதி ஆகும் –
ஒரு பயனை அடைய பல வழிகள் இருக்கும் பொழுது -அவற்றில் ஒன்றைக் கட்டளை இட்டு
மற்றவற்றைத் தவிர்க்கச் சொல்லும் விதி நியம விதி ஆகும் –
இங்கும் ப்ரஹ்மத்தைப் பற்றி அறிய பல வழிகள் இருந்தாலும் குருவை அணுகியே அறிய வேண்டும் என்ற நியமம் சொல்லப் படுகிறது
ஸ்வ குரு ரேவ அதிகச்சதி -நியம கதி
அபூர்வ விதி -நியம விதி வகைகளை கீழேயே பார்த்தோமே
த்ரஷ்டவ்ய-ஸ்ரோதவ்ய -மந்தவ்ய -நிதித்யாசி தவ்ய -அர்த்த க்ரமம் -பிரயோஜனம் வைத்து மாற்றிக் கொள்ள வேண்டுமே
பரமாத்மாவைப் பார்க்க வேண்டும் கேட்க வேண்டும் ஆலோசனை செய்ய வேண்டும் த்யானம் செய்ய வேண்டும் என்று உபநிஷத் கூறுகிறது
இங்கு படிக்கப்பட்ட வரிசையை விட்டு -ப்ரயோஜனத்தைக் கருதி -அர்த்த க்ரமத்தின் படி
கேட்க வேண்டும் -சிந்திக்க -ஆலோசனை செய்ய வேண்டும் த்யானம் செய்ய வேண்டும் -காண வேண்டும் என்று மாற்றிக் கொள்ள வேண்டும் –

நம் நிலை
இவ்வாறு அங்கங்களோடு சேர்ந்த வேதத்தைக் கற்று மேலோட்டமான அறிவைப் பெற்று
கர்ம விசாரித்தால் அவற்றின் தன்மைகளை நிச்சயித்து பிறகு தான் ஒருவன் ப்ரஹ்ம மீமாம்ஸா ஸாஸ்த்ரத்துக்கு
வர வேண்டும் என்றால் நாம் அனைவரும் எவ்வாறு கற்பது என்ற ஐயம் எழும்
இதற்கான விடையை ஸ்ரீ வேதாந்த தேசிகர் தம்முடைய அதிகரண சாராவளி கிரந்தத்தில் கீழில் படி அருளிச் செய்கிறார்

முன் யுகங்களில் ஆயூஸ்ஸூ உடல் வலிமை புத்திக்கு கூர்மை இவை தடங்கல்கள் குறைவாகவும் இருந்த படியால் முறைப்படியே பயின்றார்கள்
இங்கு கலியுகத்தில் நாம் ஆயூஸ்ஸூ உடல் வலிமை புத்திக்கு கூர்மை இவை குறைவாகவும் இடையூறுகள் அதிகமாகவும் இருக்கிறபடியால்
காலத்தை விரயம் செய்ய முடியாத காரணத்தால் சில பாக்கியசாலிகள் நேரடியாக வேதாந்த ஸாஸ்த்ரத்தை கற்று மகிழ்கிறார்கள் –
அப்பொழுது நியாய சாஸ்திரம் பூர்வ மீமாம்ஸா ஸாஸ்த்ரங்கள் தேவை இல்லையா -அப்படிப் பொருள் அல்ல –
முழுவதுமாக அந்த ஸாஸ்த்ரங்களைப் பயில இயலா விட்டாலும் தேவையான அளவாக வாகிலும் அவற்றைக் கற்று
பெரும்பாலும் வேதாந்த ஸாஸ்த்ரத்திலே பொழுது போக்க வேண்டும் -என்று தான் பொருள்
ஏன் என்றால் நியாயம் மீமாம்ஸை வியாகரணம் -இவற்றை பயிலாமல் வேதாந்தத்தைக் கற்க இயலாது –

————

பாடம் -3-வேதாந்தத்தின் வரலாறு
தயா சதகம் -அவனது கருணை வெள்ளத்தில் -சேர்ந்த நதி போல் -குரு பரம்பரை குளிர்ந்து –
தீர்த்த பஹுளாம் -உபதேசங்ககளில் ஆழ்ந்து உஜ்ஜீவிக்க வேண்டும்
எல்லா சம்பிரதாயங்களில் குரு பரம்பரை உண்டே –
ப்ரஹ்மம் -அஃறிணைச் சொல் சமஸ்க்ருதத்தில் பரமாத்மாவையே சொல்லும்
அனைத்து மதங்களும் இவன் மூலமே தொடங்கும்

விசிஷ்டாத்வைதம்
1-நாராயணன் -ப்ரம்மா -வசிஷ்டர் -சக்தி
2-பராசரர் -ஸ்ரீ விஷ்ணு புராணம்
3-வேத வியாஸர் -ப்ரஹ்ம ஸூத்ரம் (நியாய கலாபம் -545-ஸூத்ரங்கள் -நம் சம்பிரதாயப்படி )-மஹா பாரதம் (பஞ்சம வேதம் -இதிகாசம் )
4-போதாயனர் -ப்ரஹ்ம ஸூத்ர வ்ருத்தி (வியாக்யானம் -வ்ருத்தி வார்திகம் பாஷ்யம் போன்ற பல வகைகள் உண்டே )

5-டங்கர் -ப்ரஹ்ம நந்தி என்ற பெயரும் உண்டு -சாந்தோக்ய உபநிஷத்துக்கு வாக்கியம்
6-த்ராமிடாச்சார்யார் -சாந்தோக்ய உபநிஷத்துக்கு பாஷ்ய காரர்
7-குஹ தேவர் -கபர்தி -பாரதி -போல்வார் (வேதார்த்த ஸங்க்ரஹத்தில் இந்த பரம்பரையைக் காட்டி அருளுகிறார் )

8-ஸ்ரீ மன் நாத முனிகள் -நியாய தத்வம் -புருஷ நிர்ணயம் -யோக ரஹஸ்யம்
(யோ வேத்தி ப்ரத்யக்ஷமாக முக்காலத்தில் உள்ளவற்றை எப்பொழுதும் அறிபவன் ஸர்வஞ்ஞன் –
இவர் நியாய தத்வத்தில் காட்டி அருளிய ஸ்லோகம் கிடைக்கப் பெறுகிறோம் )

9-ஸ்ரீ யாமுனாச்சார்யர் -சித்தி த்ரயம் (ஸம்வித் -ஆத்ம -ஈஸ்வர த்ரயங்கள் ) –
ஆகம பிராமாண்யம் (பாஞ்சராத்ரம் கொள்ளத் தக்கதே என்று காட்டி அருளவே )
கீதார்த்த ஸங்க்ரஹம் (32-ஸ்லோகங்களில் )- ஸ்தோத்ர ரத்னம் -சதுஸ் ஸ்லோஹி
(த்ராயந்தார்த்தம் ஸூ ஹ்ருதமாக ஸூ லபமாகக் காட்டி அருளிய ஸ்லோக கிரந்தங்கள் இவையே முதலில் வந்தவை )

10-பகவத் ராமானுஜர் -ஸ்ரீ பாஷ்யம் -வேதாந்த தீபம் -வேதாந்த சாரம் -வேதாந்த ஸங்க்ரஹம் -கீதா பாஷ்யம் -கத்ய த்ரயம் -நித்ய கிரந்தம்
ஸ்ரீ பாஷ்யம் -வேதாந்த தீபம் -வேதாந்த சாரம்-இவை மூன்றும் ப்ரஹ்ம ஸூத்ர வியாக்கியானங்கள்
ப்ரஸ்தான த்ரயம் -உபநிஷத் -ப்ரஹ்ம ஸூத்ரம் -கீதா மூன்று -படித்துறைகள்
வேதார்த்த ஸங்க்ரஹம் -உபநிஷத்துக்களில் பிறக்கும் சங்கைகளை தீர்த்து அருளுகிறார்

(தத்வ ரத்நாகாரம் -பட்டர் எழுதியது நமக்கு கிடைக்க வில்லை )

11-வரத நாராயண பட்டாரகர் -நியாய தர்சனம் -ஸ்ரீ பாஷ்ய வியாக்யானம் -ப்ராஞ்ஞா பரித்ராணம்–
12-மேக நாதாரி ஸூரி -நயப்பிரகாசம் என்றும் ஸ்ரீ பாஷ்ய பாவ போதநம் என்றும் இரண்டு உரைகள் -நயத்யுமணி -தனி கிரந்தம்
(மேக நாதன் இந்த்ரஜித்துக்கு அரி எதிரி -லஷ்மணன் என்றவாறு -லஷ்மண ஸூரி )

13-விஷ்ணு சித்தர் -எங்கள் ஆழ்வான் -ப்ரமேய ஸங்க்ரஹம் -சங்கதி மாலை -விஷ்ணு புராணத்துக்கு விஷ்ணு சித்தீயம் என்ற வியாக்யானம்
14-வாத்ஸ்ய வரதாச்சார்யார் -நடாதூர் அம்மாள்-(1165-1275-) ப்ரமேய மாலை -தத்துவ நிர்ணயம் -தத்வ சாரம் -(முக்கிய கிரந்தம் இது )
15-ஸூ தர்சன ஸூரி (வேத வ்யாஸ பட்டர் வம்சம் )—ஸ்ரீ பாஷ்யத்துக்கு ஸ்ருதி ப்ரகாசிகா- ஸ்ருத ப்ரதீபிகா -ஆகிய இரண்டு வியாக்யானங்களும் –
வேதார்த்த ஸங்க்ரஹத்துக்கு தாத்பர்ய தீபிகா உறையும் – ஸ்ரீ மத் பாகவத புராணத்துக்கு ஸூக பஷீயம் என்ற உரையும் அருளிச் செய்தவர் –
16–ஆத்ரேய ராமானுஜர் -(அப்புள்ளார் சம்பிரதாய பெயர் -தேசிகர் தாய் சகோதரர் )-நியாய குலிசம்

17-வேதாந்த தேசிகர் –சேஸ்வர மீமாம்ஸை –மீமாம்ஸா பாதுகா ( ஜைமினி ஸூத்ர வியாக்கியானங்கள் இவை )
ஸ்ரீ பாஷ்யத்துக்கு தத்வ டீகை உரை -அதிகரண சாராவலீ -(156 அதிகரணங்கள் -ஒவ் ஒன்றுக்கும் ஸ்லோகம் அருளி )
தத்வ முக்த கலாபம் (பிரமாண ப்ரமேய விசாரங்கள் -ஸ்லோக வடிவில் -ஸர்வார்த்த சித்தி -இதுக்கு வியாக்யானம் இவரே எழுதி )
நியாய பரிசுத்தி (கத்யம் ) -நியாய ஸித்தாஞ்சனம் -( கத்யம் )
சத தூஷணீ -(அத்வைத குற்றங்கள் -100-இதுக்கு பதில் சத பூஷணி -அதுக்கும் பதில் கிரந்தம் உண்டே )
கீதா பாஷ்ய தாத்பர்ய சந்த்ரிகா
ஈஸா வாஸ்ய உபநிஷத் பாஷ்யம் —
சதுஸ் ஸ்லோஹி -ஸ்தோத்ர ரத்னம் -கீதார்த்த ஸங்க்ரஹம் (v)- இவற்றுக்கும் வியாக்கியானங்கள்

18-மஹா சார்யர் -(தொட்டாச்சார்யார் 1543-)-பாராசர்ய விஜயம் -சண்ட மாருதம் (சத தூஷணி ஆபேஷங்களுக்கு பதில் )
ப்ரஹ்ம வித்யா -ஸத் வித்யா -அத்வைத வித்யா -குரூப ஸித்தி மற்றும் பரிகர விஜயங்கள்
19-ரெங்க ராமானுஜ முனி -10 உபநிஷத் பாஷ்யம்-
மூல ப்ரகாசிகை-பாவ ப்ரகாசிகை (ஸ்ரீ பாஷ்யத்துக்கும் ஸூத பிரகாசிகைக்கும் இவை இரண்டும் )
விஷய வாக்ய தீபிகை -சாரீரிக ஸாஸ்த்ர ஸங்க்ரஹம் -ஸித்தாஞ்சன டீகை
20-ஸ்ரீ நிவாஸாச்சார்யார் -ஸ்ரீ மஹாச்சாருடைய சிஷ்யர் -யதீந்த்ர மத தீபிகை -ப்ரகரண கிரந்தம்
21-அனந்தாச்சார்யார் ( மேல் கோட்டையில் இருந்தவர் )-நியாய பாஸ்கர -வேதாந்த வாதா வளி

அத்வைதம்
1- நாராயணன் -ப்ரம்மா -வசிஷ்டர் -சக்தி -பராசரர் -வேத வியாசர் -ஸூகர்
2-கௌடபாதர் (7 நூற்றாண்டு )-மாண்டூக்ய காரிகை -கௌடபாத காரிகை –
3-கோவிந்த பகவத் பாதர் (சந்த்ர சர்மா பூர்வாஸ்ரமம் -நர்மதா கரையில் ஆதி சங்கரர் ஆச்சார்யர் )
4-ஆதி சங்கர பகவத் பாதர் -பத்து உபநிஷத்துக்களுக்கும் -பகவத் கீதைக்கும் -ப்ரஹ்ம ஸூத்ரங்களுக்கும் உரை
விவேக சூடா மணி -உபதேச சாஹஸ்ரி

5-பத்ம பாதர் -சதுஸ் ஸூத்ரி பாஷ்ய விவரணமான பஞ்ச பாதிகா –
6- ஹஸ்தா மலகர் -ஹஸ்தா மலக ஸ்தோத்ரம் -12-ஸ்தோத்ரங்கள்
7-தோடகர்-தோடகாஷ்டகம் -8-ஸ்லோகங்கள் -ஸ்ருதி சார சமுத்தரணம் -179- ஸ்லோகங்கள்
8-ஸூரேஸ்வரர் -ஆதி சங்கருடைய ப்ரஹதாரண்ய உபநிஷத் பாஷ்யத்துக்கும் தைத்ரிய உபநிஷத் பாஷ்யத்துக்கும்
வார்திகம் எனப்படும் உரை -நைஷ்கர்ம்ய ஸித்தி

9-வாசஸ்பதி மிஸ்ரர் -ஆதி சங்கர ப்ரஹ்ம ஸூத்ர பாஷ்யத்துக்கு பாபதி (பாமதி என்றும் சொல்வர் ) என்ற உரை
10-ப்ரகாசாத்மன் -பஞ்ச பாதிகா விவரணம் –
11-ஸ்ரீ ஹர்சர் -கண்டன கண்ட காத்யம் (நியாய சாஸ்த்ரா தவறுகளைக் காட்டி )
12-சித் ஸூகர் -தத்வ ப்ரதீகை

13-அமலா நந்தர் -பாமதிக்கு வியாக்யானமான கல்ப தரு
14-வித்யாரண்யர் -விவரண ப்ரமேய ஸங்க்ரஹம் -த்ருக் த்ருஸ்ய விவேகம் – ஜீவன் முக்தி விவேகம்
(ஹரிகரன் புக்கர் இவர்களின் ஆச்சார்யர் இவர் )
15-அப்பய்ய தீக்ஷிதர் -வாசஸ்பதி மிஸ்ரர் எழுதிய பாமதிக்கு அமலா நந்தர் எழுதிய
கல்ப தரு வியாக்யானத்துக்கு வியாக்யானமான பரிமளம் -நியாய ரஷா மணி -ஸித்தாந்த கால்பதிலகா –

(மது ஸூதன ஸரஸ்வதி-இவரும் பல கிரந்தங்கள் அருளிச் செய்கிறார் )

17-தர்ம ராஜ அத்வரீந்த்ரர்-வேதாந்த பரிவாஷா -அத்வைத கருத்துக்கு இது ப்ரகரண க்ரந்தம்

த்வைதம்
1-நாராயணன் -ப்ரம்மா -சனகர் –சநந்தர் -சனத்குமாரர் -ஸனாதனர் -துர்வாசர் -ஞானநிதி தீர்த்தர் –
கருட வாஹனர் -கைவல்ய தீர்த்தர் -ஞானேச தீர்த்தர் -பர தீர்த்தர் -ஸத்ய பிராஜ்ஞ தீர்த்தர் -அச்யுத ப்ரேஷ்ய ஆச்சார்யர் –

2- மத்வாச்சார்யார் -(வாசுதேவன் என்ற இயற் பெயர் -1238 அவதாரம் -இவருக்கே ஆனந்த தீர்த்தர் பூர்ண ப்ரஞ்ஞர் )
அநு வியாக்யானம் -அநு பாஷ்யம் -மஹா பாரத தாத்பர்ய நிர்ணயம் –
விஷ்ணு தத்வ வி நிர்ணயம் -பிராமண லக்ஷணம் -உபாதி கண்டனம் -கதா லக்ஷணம் -மித்யாத்வ அநு மான கண்டனம் –

3-அஷோப்ய தீர்த்தர் -வித்யாரண்யர் வேதாந்த தேசிகர் சம காலத்தவர் –

ஜெய தீர்த்தர் -22 கிரந்தங்கள் -நியாய ஸூ தா
வியாச தீர்த்தர் -பல கிரந்தங்கள்
ராகவேந்திரர் நியாய முக்தாவளி -தச பிரகாரணி
ரகோத்தம தீர்த்தர் பாவ போதகங்கள் -நியாய ரத்ன தீபிகா –

——————

பாடம் -4- ஒரே சாஸ்தம் -ஒரே நூல்
ப்ரஸ்தான த்ரயம் -ப்ரஸ்தானம் -படித்துறை போல் –
வேத வியாசர் நமக்காக செய்து கொடுத்தவை மூன்று –
வேத உபநிஷத் புராணங்கள் -இவற்றைப் பிரித்து முறைப்படுத்திக் கொடுத்தார்
பஞ்சம வேதமான ஸ்ரீ மஹா பாரதத்தையும் அதனுள் அடங்கிய ஸ்ரீ பகவத் கீதையையும் கொடுத்தார்
ப்ரஹ்ம ஸூத்ரத்தையும் கொடுத்தார்
உபநிஷத்துக்கள் ஸ்ரீ கீதை ப்ரஹ்ம ஸூ த்ரம் -மூன்றுமே ப்ரஹ்மத்தைப் பற்றி அறிய வழிகள் -இவையே ப்ரஸ்தான த்ரயம்
உபநிஷத் ஸ்ருதி பிரஸ்தானம் -கீதை ஸ்ம்ருதி ப்ரஸ்தானம் -ப்ரஹ்ம ஸூ த்ரம் -ஸூ த்ர ப்ரஸ்தானம்
உபநிஷத்துக்கள் பல -தச உபநிஷத் ப்ரஸித்தம்
ஈசாவாஸ்ய -கேன -கட -ப்ரச்ன -முண்டக -மாண்டூக்ய -தைத்ரிய -ஐத்ரேய -சாந்தோக்ய -ப்ரஹ்தாரண்யம்
கீதை பகவான் கிருஷ்ணனே அருளிச் செய்தது -18 அத்தியாயங்கள் கொண்டது
ப்ரஹ்ம ஸூத்ரம் -நான்கு அத்தியாயங்கள் -சமன்வய- அவிரோத- சாதன- பல அத்தியாயங்கள் -ஒவ் ஒன்றிலும் நான்கு பாதங்கள்
விஷய வாக்கியம் -சம்சயம் -பூர்வ பக்ஷம் -சித்தாந்தம் -பிரயோஜனம் -சங்கதி இவை அனைத்தும் அங்கங்கள் அதிகரணத்துக்கு –
மொத்தம் 156 அதிகரணங்கள் -545-ஸூத்ரங்கள் –
அத்வைதப்படி -189 அதிகரணங்கள் -555-ஸூத்ரங்கள் –

முதல் ஸூத்ரம் -அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா
மூன்று சொற்கள் -அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா

அத -இச் சொல்லுக்கு அடுத்து -என்ற பொருளை அத்வைதிகளும் விசிஷ்டாத்வைதிகளும் கொள்கிறார்கள்
ஆனால் எதுக்கு அடுத்து என்பதில் வேறுபாடு உள்ளது
அத்வைதிகள் சொல்வது -சாதன சதுஷ்ட்யங்களுக்கு அடுத்து
சாதன சதுஷ்ட்யமாவது
நித்ய அநித்ய வஸ்து விவேகம் -பகுத்தறிவு
சமதாதி சாதன ஸம்பத் -புலன் அடக்கம்
இஹாமுத்ரா பல போக விராகம் -பற்றின்மை
முமுஷுத்வம் -மோக்ஷத்தில் இச்சை
விசிஷ்டாத்வைதிகள் சொல்வது -கர்ம விசாரத்துக்கு அடுத்து -வேத அத்யயனம் செய்த ஒருவனுக்கு
மேலோட்டமான பொருள் தான் தெரியும் –
அத்தை உறுதி செய்ய தானாகவே கர்ம விசாரம் செய்து -கர்மங்களால்
அல்ப அஸ்திர பலன்களைத் தான் பெறலாம் என்று உறுதிபட அறிந்து ப்ரஹ்ம விசாரத்துக்கு வருகிறான்
த்வைதிகள் சொல்வது -அத -மங்களமான சொல் -பரமாத்மாவைச் சொல்லும் –
மங்களா சரண சொல் என்பதால் முதலில் சொல்லப்படுகிறது –

அத-இந்த சொல்லுக்கு ஆகையால் என்று பொருள்
அத்வைதிகள் சொல்வது -கர்மங்களால் நிரந்தரமான பலன்களை அடைய முடியாது –
ப்ரஹ்ம ஞானத்தால் மட்டுமே அது முடியும் என்பதால்
விசிஷ்டாத்வைதிகள் சொல்வது -கர்ம விசாரத்தால் கர்மங்களுக்கு நிரந்தரமான பலன் கிட்டாது என்ற முடிவும்
உபநிஷத்துக்களை அத்யயனம் செய்தால் ப்ரஹ்ம ஞானத்தால் அளவற்ற இன்பத்தைப் பெறலாம்
என்கிற மேலோட்டமான புரிதலும் உள்ளபடியால் -என்று
த்வைதிகள் சொல்வது -துக்கங்களை போக்கி அளவற்ற ஸூ கத்தை அடைய வேண்டும் என்கிற ஆசை இருக்கிறபடியால்

ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா-ப்ரஹ்மத்தைப் பற்றின விசாரம் என்று பொருள் –
ப்ரஹ்மம் -என்றால் மிகப்பெரியது என்று பொருள் -பரமாத்மா ஸ்வரூப ரூப குணங்களால் மிகப் பெரியவராயும்
தன்னை அண்டினார்களையும் மிகப் பெரியவராக ஆக்குபவர் –
ஆகையால்
இந்த ஸூ த்ரத்தின் பொருள் –
கர்ம விசாரத்தை முடித்த பிறகு -கர்மங்கள் நிரந்தரமான பலனை அளிக்காது என்ற உறுதி ஏற்பட்ட படியால்
ப்ரஹ்ம விசாரம் செய்யப்பட வேண்டும் என்பதாகும் –
இதைத் தான் போதாயன மகரிஷியும் -வ்ருத்தி கிரந்தத்தில்
வ்ருத்தாத் கர்மாத்திகமாத் அநந்தரம் ப்ரஹ்ம விதிஷா -என்று கூறுகிறார்
முடிக்கப்பட்ட கர்ம விசாரத்துக்குப் பிறகு ப்ரஹ்மத்தை அறிய ஆசை பிறக்கிறது -என்று இதற்குப் பொருள் –

ஏன் முதலில் கர்ம விசாரம்
வேதத்தைக் கற்ற ஒருவனுக்குத் தானாகவே அதன் பொருள் மேலோட்டமாகத் தோற்றுமாயின்
அவன் ஏன் முதலிலேயே ப்ரஹ்ம விசாரம் செய்யாமல் கர்ம விசாகம் செய்கிறான் –
இந்தக் கேள்வியின் விடையைத் தான் ஸ்ரீ வேதாந்த தேசிகன் தன்னுடைய அதிகரண சாராவளீ நூலில் அருளிச் செய்கிறார் –

க்ரமம் -மீமாம்சை ஐந்தாம் அத்யாயம் பார்த்தோம் –ஆறு வகைகள் பார்த்தோம்
1-சுருதி -நேராக வேதத்தில் சொல்லும்
2-அர்த்தம் -பிரயோஜனம் பார்த்து முடிவு செய்கிறோம் -அக்னி ஹோத்ரம் யாவகு சமைக்க வேண்டும் –
3-பாடம் -படிக்கப்பட்ட வரிசையில்
4-முக்கியம் -பிரதான கர்மங்களில் போல் அங்கங்கள் செய்ய வேண்டும் -ஆக்னேய தயிர் இத்யாதி
5-ஸ்தான கிரமம்-முன் செய்த வழக்கம் படி
6- ப்ரவ்ருத்தி -பல ஸம்ஸ்காரங்களுக்கு -பலவற்றுக்கு செய்யும் –
கர்ம விசாரம் பின்பே ப்ரஹ்ம விசாரம் -ஸ்ருதி சொல்லுமே அஸ்திர பலம் உணர்ந்து -ஆச்சார்யர் இடம் சென்று கற்க சொல்லுமே
ப்ராவண்யம் ப்ராக் த்ரி வர்க்கம் –முதல் மூன்று புருஷார்த்தங்களில் ஆசை கொண்ட வாசனை பதிவுகள் இருக்குமே –
ப்ரஹ்மம் அறிய உபாசனம் வேண்டும் -உபாசனத்துக்கு அங்கமாக கர்மங்கள் வேண்டுமே -அறிந்து அனுஷ்ட்டிக்க வேணுமே –
அங்கி அங்கம் பாவத்துக்காகவும் இப்படி கர்ம மீமாம்ஸா -முதலில் -பின்பு ப்ரஹ்ம மீமாம்ஸா
முக்கிய கிரமம் -வேதம் அர்த்தம் அறுதி விடுவதே பலன் -இரண்டுக்கும் பொதுவான நோக்கு இதுவே
மூலம் படியே வியாக்யானம் செய்ய வேண்டுமே
இன்னும் இரண்டு காரணங்கள் -பூர்வ மீமாம்ஸா கற்றவற்றை ஆதாரமாகக் கொண்டே இதன் விசாரம் அறிவோம்
வேதம் அத்யயனம் -சொல்வதன் மூலமும் யாகம் யஜ்ஜம் தானம் ஹோமம் இவற்றால் உபாசனம் செய்து
ப்ரஹ்மம் அறிய வேண்டும் -சொல் தொடர் அறிய சொல்லின் பொருள்களை அறிய வேண்டுமே
சொல்லின் பொருள் அறிய கர்ம விசாரம் -சொல் தொடரின் பொருள் அறிய ப்ரஹ்ம விசாரம் –

1-எண்ணற்றப் பிறவிகளில் நாம் தர்மம் அர்த்தம் காமம் மூன்று புருஷார்த்தங்களையே ஆசைப்பட்டதால்
இப்பொழுதும் அவற்றைச் சொல்லும் கர்ம விசாரத்தில் தான் இயற்கையாக ஆசை ஏற்படும்
முக்தியைச் சொல்லும் ப்ரஹ்ம விசாரம் பழக்கம் இல்லாத படியால் ஈற்காது
2- உபாசனம் என்ற தியானத்துக்கு கர்மங்கள் அங்கமான படியால் அங்கங்களை அறிந்த பிறகு தான்
அங்கியை அறிய வேண்டும் என்பதால்
3- வேதம் என்ற ஒரே நூலுக்கு கர்ம மீமாம்ஸையும் ப்ரஹ்ம மீமாம்ஸையும் உரை நூல்களாக இருக்கிற படியாலும் –
மூலத்தில் எந்த வரிசையில் உள்ளனவோ அதே வரிசையில் தான் உரைகளைப் படிக்க வேண்டும் –
4-பூர்வ மீமாம்ஸையில் விசாரிக்கப் பட்ட பிரமாணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ப்ரஹ்ம மீமாம்ஸையில் செய்யப் படுகிற படியாலும்
5-ஒரு சொல் தொடரின் பொருளை அறிய வேண்டும் என்றால் அதற்கு முன் அதில் இருக்கும் சொல்லின் பொருளை அறிய வேண்டும் என்பதால்
யோகத்தால் –ப்ரஹ்மத்தை உபாசிக்கிறார்கள் -என்ற சொல் தொடரை புரிவதற்கு யாகத்தை முதலில் அறிந்து இருக்க வேண்டும் –
6-பூர்வ மீமாம்ஸையில் சொன்ன விஷயங்களை எடுத்துக் காட்டாக ஆக்கி உத்தர மீமாம்ஸையில் சொல்லுகிற படியால்
முதலில் எடுத்துக் காட்டை அறிய வேண்டும் என்பதாலும் கர்ம விசாரம் தான் முதலில் செய்ய வேண்டும் –

ஐக சாஸ்திர்யம்
இப்படி ஜைமினி மகரிஷி இயற்றின பூர்வ மீமாம்ஸா ஸாஸ்த்ரமும் -வ்யாஸ மகரிஷி எழுதின உத்தர மீமாம்ஸையும்
ஒரே நூலான வேதத்தின் இரண்டு பகுதிகளைத் தான் விளக்குகின்றன –
ஆகையால் இவை இரண்டும் சேர்ந்து ஒரே சாஸ்திரம் தான்
அதாவது நியாய சாஸ்திரம் -மீமாம்ஸா ஸாஸ்த்ரம் -என்று பிரித்து எண்ணுவது போல்
பூர்வ மீமாம்ஸை வேறு உத்தர மீமாம்ஸை வேறு என்று என்று பிரித்து எண்ணக் கூடாது –
இரண்டும் சேர்ந்து மீமாம்ஸா என்கிற ஒரே சாஸ்திரம் தான்
இதைச் சொல்லும் போதாயன மகரிஷி
ஸம்ஹிதம் ஏதத் ஸாரீரிகம் ஜைமினீ யேந ஷோடச லக்ஷணேந இதி ஸாஸ்த்ர ஏகத்வ ஸித்தி –என்று தெரிவிக்கிறார் –
அதாவது ஸாரீரிகம் என்று அழைக்கப்படும் இந்த உத்தர மீமாம்ஸா சாஸ்திரம்
ஜைமினி மகரிஷி எழுதிய பூர்வ மீமாம்ஸை உடன் ஒரே சாஸ்திரம் -என்கிறார்
ஒரே சாஸ்திரமாக் இருந்தால் -எதற்கு இருவரும் தனித்தனியாக -நான் தர்மத்தைப் பற்றிச் சொல்கிறேன் –
நான் ப்ரஹ்மத்தைப் பற்றிச் சொல்கிறேன் என்று ப்ரதிஜ்ஜை செய்கிறார்கள் என்ற கேள்வி எழும்
1-உத்தர மீமாம்ஸையில் மூன்றாம் அத்யாயம் -நான்காம் பாதத்தில் -கர்மங்களைப் பற்றி விசாரம் செய்து இருக்க வேண்டும்
அது மிகப் பெரிய விசாரமான படியால் அத்தை ஜைமினி மகரிஷி முன்பே தனியாக எழுதினார் –
2- அவரவர் இயற்றிய பகுதிக்கு அந்த அந்த ப்ரதிஜ்ஜை பொருந்தும்
முழுவதுமான மீமாம்ஸா சாஸ்திரத்துக்கு -வேதாந்த விசாரம் செய்யப்பட வேண்டும் என்ற ஒரு ப்ரதிஜ்ஜையைத் தருவித்திக் கொள்ளலாம்
3- தர்ம விசாரம் செய்யப்பட வேண்டும் என்று ஜைமினி செய்த ப்ரதிஜ்ஜை உத்தர மீமாம்சைக்கும் பொதுவானது
ப்ரஹ்மம் என்ற பரமாத்மாவே ஸாஷாத் தர்மம் தானே -நாம் ஆசைப்படும் சகலத்தையும் பெற்றுத் தந்து அருளுவதால் –

ஐக பிரபந்த்யம்
பூர்வ மீமாம்ஸையும் உத்தர மீமாம்ஸையும் ஒரே ஸாஸ்த்ரம் என்பதோடு நம் ஆச்சார்யர்கள் நிறுத்த வில்லை –
இரண்டும் சேர்ந்து ஒரே நூல் என்றே தெரிவிக்கிறார்கள் –
சொல் தொடர்களின் கூட்டமே ஒரு நூல் என்பது
அவற்றுக்குள் ஒன்றுக்கு ஓன்று தொடர்பும் எதிர்பார்ப்பும் இருக்கும் பொழுது தான் –
ஒரு வரியைப் படித்த உடன் வரும் ஐயத்தை அடுத்த வரி போக்கினால் தான் அது ஒரே நூல் ஆகும் –
அதே போல் மீமாம்ஸா ஸாஸ்த்ரமும் –
ஜைமினியின் முதல் ஸூ த்ரத்தை படிக்கும் பொழுது தோன்றும் ஐயத்தை அடுத்த ஸூத்ரம் விலக்கும்
இதே போல் கடைசி ஸூ த்ரம் வரை தொடரும் –
ஜைமினியின் கடைசி ஸூ த்ரத்தைப் படித்த உடன் கர்மங்கள் அல்ப பலன்களையே கொடுக்கும் என்ற புரிதல்
ஏற்பட்டு பின்பு நித்தியமான ஸூ கத்தை ஏற்படுத்துவது எவ்வாறு என்ற எதிர்பார்ப்பு வருமே –
வியாஸரின் முதல் ஸூத்ரமானது -அதற்காகத் தான் ப்ரஹ்ம விசாரம் செய்ய வேண்டும் -என்று தொடங்கி
ப்ரஹ்மத்தைப் பற்றிச் சொல்கிறது –
ஆகையால் இரண்டு பகுதிகளுக்கும் இடையில் சங்கிலித் தொடர்பும் எதிர்பார்ப்பும் இருக்கிற படியால்
இரண்டும் ஒரே நூல் தானே

வேதாந்த தேசிகர் ஸ்லோகத்தில் அருளிச் செய்கிறார் –
வித்யா ஸ்தான ஐக்யம்
க்ரம நியதி -ஆகாங்ஷை -எதிர்பார்ப்பும் பதிலும் ஒன்றுக்கு ஓன்று இருக்கிறதே
அவாந்தர விஷயம் உள் பிரிவு இருக்கலாமே
ஜைமினி வியாசர் கருத்துக்களில் விரோதம் இல்லை -மேலோட்டமாக இருப்பது போல் இருந்தாலும் –
சொல்லப்பட்ட விஷயம் -பயன் -எழுதியவர் -முதலானவை மாறு பட்டாலும் தவறு இல்லை –
ஒரே நூலாக ஆக முடியும் என்பதையும் காட்டுகிறார் –

————-

பாடம் -5- ஸாஸ்த்ர ஆரம்பம்
சதுஸ் ஸூத்ரீ -முதல் நான்கும் பிரசித்தமாக உள்ளவை -வேதாந்த ஸாஸ்த்ர முன்னுரை –
ப்ரஹ்ம விசாரம் ஆரம்பிக்கக் கூடாது என்ற ஆஷேபம் எழ அவற்றுக்கு பதிலாக இந்த நான்கும் உள்ளன
1-ஸித்தமான வஸ்துவைப் பற்றி வ்யுத்பத்தி ஏற்பட முடியாது
2-ப்ரஹ்மத்தை லக்ஷணம் கொண்டு அறிய இயலாது
3-அனுமானத்தால் அறியப்படும் ப்ரஹ்மத்தை ஸாஸ்த்ரம் சொல்வது வீண் —
4-ப்ரஹ்ம ஞானத்தால் பிரயோஜனம் பலன் இல்லை

அறிய முடியாது -ஆஷேபம் முதல் இரண்டாலும் நிவர்த்தகம்
அறிந்தால் பிரயோஜனம் இல்லை ஆஷேபம் அடுத்த இரண்டாலும் நிவர்த்தகம்

இந்த நான்கு காரணங்களால் உபநிஷத்துக்கள் ப்ரஹ்ம ஞானம் போதிக்கும் என்று ஏற்க முடியாது என்று ஆஷேபம்
இதனால் இந்த வேதாந்த விசாரம் ஸ்தம்பித்துப் போகிறது
இதுக்கு பதில் உரைத்து வேதாந்த விசார ஸாஸ்த்ரம் ஆரம்பிக்க வேண்டியது தான் என்று இந்த சதுஸ் ஸூத்ரீ ஸ்தாபிக்கின்றது –

ஜிஜ்ஜாஸ அதி கரணம்
அதேதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா –

பூர்வ பக்ஷம்
சொல் தொடரின் பொருளை அறிய சொற்களின் பொருள் தெரிந்து இருக்க வேண்டும் —
சொல்லும் பொருளுக்கும் உள்ள தொடர்பு தான் சக்தி –
ஆகையால் சொல்லின் சக்தியைப் பற்றின ஞானம் கண்டிப்பாகத் தேவை –
அந்த அறிவு வ்ருத்த வ்யவஹாரம் என்ற முறையில் தான் ஏற்படும் –
சக்தி கிரஹணம் அஷ்ட வகை நியாய சாஸ்திரத்தில் பார்த்தோம் -அதில் ஒரு வகை வ்ருத்த வ்யவஹாரம் –
ஒருவர் ஏவி மற்ற ஒருவர் செய்வதைக் காணும் சிறுவனுக்கு இந்தச் சொல்லுக்கு இது பொருள் என்ற அறிவு ஏற்படுகிறது –
ஆகையால் செய்யப்பட வேண்டிய ஒரு செயலைச் சொல்லும் சொல் தொடரில் இருந்து மட்டும் தான் சக்தி ஞானம் ஏற்படும் –
உபநிஷத்துக்களோ -முன்னமே இருக்கக் கூடிய -ஸித்தமான -ப்ரஹ்மத்தைப் பற்றி மட்டுமே கூறுகின்றன –
ஆகையால் உபநிஷத்துக்களால் -ஸித்தமான -முன்னமே இருக்கக் கூடிய ப்ரஹ்மத்தைப் பற்றிய சக்தி ஞானம் உண்டாக்க முடியாது

சித்தாந்தம்
வ்ருத்த வ்யவஹாரத்தால் தான் சக்தி ஞானம் என்பது தவறு
ஒருவர் விரலைக் காட்டி அப்பா என்று சொல்வதால் ஒரு குழந்தையும்
இதற்கு காக்கை என்று பெயர் என்ற உபதேசத்தால் ஒரு சிறுவனும் ஒருவர் செய்கை செய்ததையும்
அதை மற்ற ஒருவர் சொற்களால் சொல்வதைக் கேட்டு அனைவரும் சக்தி ஞானத்தைப் பெறுகிறோம்
இந்த இடங்களிலே எங்குமே செய்யப்பட வேண்டிய செயலே இல்லா விட்டாலும் சக்தி ஞானம் ஏற்படுகிறது
ஆகையால் உபநிஷத்துக்களில் இருந்தும் ஸித்தமான ப்ரஹ்மத்தைப் பற்றிய சக்தி ஞானம் ஏற்படலாம் –

ஜந்மாத் யதி கரணம்
ஜந்மாத் யஸ்ய யத

பூர்வ பக்ஷம்
விசேஷணம் என்றால் -ஒரு பொருளின் பகுதியாய் இருந்து -அதை மற்றவற்றில் இருந்து வேறுபடுத்தும் ஓன்று
உப லக்ஷணம் என்றால் ஒரு பொருளைக் காட்டிலும் தனியாக இருந்தாலும் அதை மற்றவற்றில் இருந்தும் வேறுபடுத்தும் ஓன்று
உலகைப் படைத்து அழித்துக் காப்பது ப்ரஹ்மம் -என்ற லக்ஷணம் பொருந்தாத படியால் ப்ரஹ்மத்தை அறிய முடியாது –
இந்தத் தன்மைகள் விசேஷணங்கள் என்று கருதினால் மூன்று விசேஷணங்கள் உள்ள படியால்
மூன்று ப்ரஹ்மங்கள் என்று சொல்ல நேரிடும்
உப லக்ஷணம் என்று கொண்டால் அந்தப்பொருளை ப்ரஹ்மம் என்று அறிவதற்கு முன்னால்
எவ்விதமாகவும் அறியமுடியாதே -என்று கேள்வி வரும்

ஸித்தாந்தம்
இவற்றை விசேஷணமாகக் கொள்ளலாம்
வெவ்வேறு காலத்தில் இவற்றை ப்ரஹ்மம் பரமாத்மா செய்கிறபடியால் இவற்றுக்கு இடையே
முரண்பாடே இல்லாத படியால் பல ப்ரஹ்மங்கள் என்று நேரிடாது
இவற்றை உப லக்ஷணமாகவும் சொல்லலாம்
உலகுக்கு உபாதான காரணமாயும் நிமித்த காரணமாயும் முன்னமே அறியப்பட்ட பொருளை
உலகைப் படைத்து அழித்துக் காப்பதால் இதுவே ப்ரஹ்மம் -உலகிலேயே மிகப் பெரிய பொருள் என்று தெரிந்து கொள்கிறோம்

ஆக முன்னால் அறியப்பட்ட வடிவம் ஒன்றும்
உப லக்ஷணம் ஒன்றும்
பின்னால் அறியப்படும் வடிவம் ஒன்றும் கிடைக்கின்றன –
ஆகவே இவை உப லக்ஷணமாகவும் குறை இல்லை –

வீடு என்பதை அறிந்து காக்கை உட்க்கார்ந்து உள்ள என்ற விசேஷணம் கொண்டு அது வராஹ ஸ்வாமி உடைய வீடு என்று அறிகிறோம்
அதே போல் ப்ரஹ்ம லக்ஷணம் கொண்டு -ஜென்மாதி -ஜென்மம் ஸ்திதி ஸம்ஹாரம் -விசேஷணமாகவும் உப லக்ஷணமாகவும் கொள்ளலாம்
உப லக்ஷணம் என்றால் முன்பே அறிந்து இருக்க வேண்டுமே -யார் ஜகத்தை படைத்தாரோ -யார் யார் என்று முன்பே அறிந்த ஒன்றை –
யார் அறிய சதேவ சோம்ய ஏகமேவ அத்விதீயம் -சாந்தோக்யம் -அபின்ன நிமித்த காரணம் ப்ரஹ்மமே –
மூவகை காரணமாக உள்ளவன் ப்ரஹ்மம் என்று சொல்லுமே –

ஸாஸ்த்ர யோனித் வாத் அதி கரணம்
ஸாஸ்த்ர யோனித் வாத்

பூர்வ பக்ஷம்
அப்ராப்தே ஹி சாஸ்திரம் அர்த்த வத்-என்கிற நியாயத்தாலே -வேறே ஒரு பிரமாணத்தால்
அறியப் படாத பொருளை ஸாஸ்த்ரம் போதித்தால் தான் அதுக்கு பிரயோஜனம் உண்டு –
படைக்கப்படும் எந்தப்பொருளுக்கும் ஒரு படைப்பாளி வேண்டுகிறபடியால் படைக்கப்படும் இவ் உலகத்துக்கும்
ஒரு படைப்பாளி தேவைப்படும் -என்ற அனுமானத்தாலே அறியப்படும் ப்ரஹ்மம்
ஆகையால் சாஸ்திரம் பரமாத்மாவை போதிப்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை என்று நியாய மதஸ்தர் கூறுவார்கள்

சித்தாந்தம்
ப்ரஹ்மம் ஸாஸ்திரத்தாலே மட்டுமே அறியப்படும் தத்வம் தத்வம் ஆகும்
அனுமானத்தால் அறியலாம் என்பது தவறு -நீங்கள் சொல்லும் அனுமானத்தின் படி
இன்று ஒரு மூளையைப் படைக்கும் ப்ரஹ்மமும் நாளை ஒரு பூவைப் படைக்கும் ப்ரஹ்மமும்
நாளை மறு நாள் ஒரு பழத்தைப் படைக்கும் ப்ரஹ்மமும் வெவ்வேறாகக் கூட இருக்கலாம்
அனைத்தையும் படைத்தவர் ஒருவரே என்பதற்கு எந்தப் பிரமாணமும் இல்லை
மேலும் அதிகமான புண்ணியம் உடைய ஒரு ஜீவாத்மாவே உலகைப் படைக்கிறார் என்று சொன்னாலும்
தவறு இல்லை என்றாகி விடும் -சொல்லப்பட்ட அனுமானத்திலும் பற்பல தோஷங்கள் உள்ளன
ஆகையால் ஸாஸ்திரத்தாலேயே மட்டுமே உலகைப் படைத்து அழித்துக் காக்கும் பரமாத்மாவை உள்ளபடி
அறிய வேண்டும் என்பதால் உபநிஷத்துக்களுக்கு பிரயோஜனம் உள்ளது –

ஸமன்வய அதி கரணம்
தத் து சமன்வயாத்

பூர்வ பக்ஷம்
உபநிஷத்துக்களால் ப்ரஹ்மத்தைப் பற்றின அறிவு ஏற்பட்டாலும் -அதனால் நமக்கு
ஒரு முயற்சி -ப்ரவ்ருத்தி -அல்லது -ஒரு விலக்கு-ஒரு நிவ்ருத்தி -ஏற்படாத படியால்
ப்ரஹ்மத்தைப் பற்றின அறிவு பயன் அற்றது ஆகையால் ஸாஸ்த்ரத்தைத் தொடங்கக் கூடாது –

ஸித்தாந்தம்
ப்ரஹ்மம் மிக உயர்ந்த புருஷார்த்தமாக உப நிஷத்துக்களால் சொல்லப் படுகிற படியால்
வேதாந்தத்தால் ஏற்படும் அறிவுக்கு பயன் உண்டு –
எந்த ஸாஸ்த்ரத்தால் முயற்சி -ப்ரவ்ருத்தி -விலக்கு -நிவ்ருத்தி -ஏற்படுகிறதோ அது மட்டுமே
பிரயோஜனம் உடையது என்று சொல்வது தவறு –
உன் வீட்டின் கீழ் புதையல் உள்ளது -என்ற சொல் தொடரைக் கேட்டவுடன் ஒரு ஆனந்தம் ஏற்படுவதாலேயே
அந்த சொல் தொடர் பயன் உடையதாக ஆவது போல் காட்டில் தொலைந்து போய் வேடுவனாக வளர்ந்த ராஜ குமாரன்
உயர்ந்தவரான சக்கரவர்த்தி தான் தன தந்தை என்று அறிந்ததால் மட்டுமே ஆனந்தம் அடைவதால் மட்டுமே
அதை அறிவிக்கும் சொல் தொடர் பயன் உடையதாகுவது போலேவும்
சொல்ல ஒண்ணாத பெருமைகளை உடைய பரமாத்மா என்று ஒருவர் இருக்கிறார் என்று போதிக்கும்
சொல் தொடரும் -ஆனந்தத்தை விளைவிப்பதன் மூலம் மட்டுமே கூட பிரயோஜனம் உடையது தான் –

சாரீரிக சாஸ்திரம் -ஸமஸ்தமும் சரீரமாக கொண்ட ப்ரஹ்ம விசாரம் தொடங்குவோம்

——————

பாடம் -6–வேதாந்தத்தில் பிரமாணங்கள்
யதா வஸ்தித வ்யவஹார அநு குணம் ஞானம் ப்ரமா-
ஒரு பொருளைத் தகுந்தபடி வியவஹாரம் செய்யக் காரணமான ஞானம் ப்ரமா ஆகும்
வியவஹாரம் -என்பது சப்த பிரயோகம் -அதைப் பற்றிச் சொல்லுதல் -மற்றும் அதை எடுத்தல் வைத்தல் முதலான செயல்களும்
தகுந்தபடி வியவஹாரம் செய்ய-என்று சொன்னபடியால் சம்சயம் விபரீத ஞானம் அந்யதா ஞானம் ஆகியவை ப்ரமா ஆக மாட்டா
சம்சயம் -சந்தேகம் -கயிறா பாம்பா என்பது போல் –
விபரீத ஞானம் -ஒன்றை மற்ற ஒன்றாக நினைப்பது -கயிற்றைப் பார்த்து இது பாம்பு என்று நினைத்தல்
அந்யதா ஞானம் -ஒரு பொருளின் தன்மையைத் தவறாக நினைத்தல்-
பித்தம் அதிகமாக உள்ளவன் வெண்மையான சங்கைப் பார்த்து இது மஞ்சளான சங்கு என்று நினைத்தல் –
அப்படிப்பட்ட ப்ரமாவுக்கு காரணமான -உண்டாக்கும் கருவியாக -இருப்பதற்கு பிரமாணம் என்று பெயர்
விசிஷ்டாத்வைத -வேதாந்த -தரிசனத்தின் படி பிரமாணங்கள் -ப்ரத்யக்ஷம் -அனுமானம் – சப்தம் என்று மூன்றும் –
(மீமாம்ஸாவில் பாட்ட மதம் போல் அத்வைதிகள் ஆறு பிரமாணங்கள் -உபமானம் அர்த்தா பத்தி மற்றும் )

ப்ரத்யக்ஷம் –
சாஷாத்காரி ஞானம் ப்ரத்யக்ஷம்
சாஷாத்காரி என்றால் விசதமாக -தெளிவாக ஒரு பொருளைக் காட்டிக் கொடுத்தல் –
நாம் கண் மூக்கு போன்ற புலன்களால் பொருள்களை அறிகிறோமே -அதுவே ப்ரத்யக்ஷம் ஆகும்
விசத அபவாசம் -நெருப்பு சுடும் படித்து அறிவது போல் இல்லாமல் தொட்டுத் தெரிந்து கொள்வதே ப்ரத்யக்ஷம்
சந் மாத்ர க்ராஹி ப்ரத்யக்ஷம் -அத்வைதி -ப்ரஹ்மம் ஒன்றையே பார்ப்பது -பண்புகள் இல்லாமல் –
விசிஷ்டாத்வைதம் -அப்படி அல்ல பண்புகள் உடனே ப்ரத்யக்ஷம்

ப்ரத்யக்ஷம் இரண்டு வகைப்படும் -நிர்விகல்பகம் -ச விகல்பகம் –
நிர்விகல்பகம் -ஒரு பொருளையும் -அதில் இருக்கும் பண்புகள் -சாமான்யம் -செயல்கள் முதலானவற்றையும் –
முதன்முறை கிரஹிக்கப்படும் அறிவு –
மாடு -என்ற அறிவு -மாடு என்ற உடலையும் அதில் இருக்கும் மாட்டுத்தன்மை என்ற சாமான்யத்தையும் க்ரஹிக்கிறது
ச விகல்பகம் -ஒரு பொருளையும் அதில் இருக்கும் பண்புகள் முதலானவற்றையும் -அவை வேறு சில இடங்களில் இருப்பதையும்
கிரஹிக்கும் ஞானம் ச விகல்பகம் ஆகும் –
மாடு என்னும் அறிவு -மாடு -மாட்டுத் தன்மை என்ற இரண்டுக்கும் மேலாக
இந்த மாட்டுத்தன்மை முன் மாட்டிலும் இருந்தது பின் மாட்டிலும் உள்ளது என்ற அநு விருத்தியையும் -தொடர்ச்சியையும்
கிரஹிப்பது ச விகல்பகம் ஆகும் –

(சிகப்பான தடியைப் பிடித்த மனிதர் வருகிறார் -தத் பிரகாரம் -விசேஷணம் உடனே அறிவது –
பிரித்து அறியாமல் மொத்தமாக அறிவது -சம்யுக்தா ஆகார மீமாம்சையில்
குண ஸம்ஸ்தான பதார்த்த கிரஹணம்
நிர்விகல்பகம் -ச விகல்பகம் -பெயர்கள் நியாய மீமாம்ஸா வேதாந்தம் ஒன்றாக இருந்தாலும் அவற்றின் அர்த்தங்கள் மாறு படும்
இது மாடு -இதுவும் மாடு -அநு வ்ருத்தி
இது அறியும் இடமே ச விகல்பகம்
பிரதம பிண்ட கிரஹணம் நிர் விகல்பகம்
அப்புறம் கிரஹித்து ச விகல்பகம் )

ப்ரத்யக்ஷத்தின் வகைகள்
1-அநர் வாஸீ நம் -2-அர் வாஸீ நம் –
அநர் வாஸீ நம் -உண்டாகாதது -இது நித்ய ஸூரிகளுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ளது
அர் வாஸீ நம் – உண்டாகக் கூடியது
இது இரண்டு வகைப்படும் –
1-இந்த்ரிய சா பேஷம் –2- இந்த்ரிய நிரபேஷம்
இந்த்ரிய சா பேஷம் என்றால் –இந்த்ரியங்களில் தேவையை உடைய ப்ரத்யக்ஷம் -இது நம் போன்றவர்களினுடையது –

ஆறு ஸந்நிகர்ஷம் நியாய மாதத்தில் பார்த்தோம் –
வேதாந்தத்தில் இரண்டே ஸந்நிகர்ஷங்கள் ஏற்கப் படுகின்றன -1-ஸம்யோகம் -2-ஸம்யுக்த ஆஸ்ரயணம் –
த்ரவ்யங்களைக் க்ரஹிக்க ஸம்யோகம் என்ற சந்நிகர்ஷமும் –
அதில் இருக்கும் பண்புகள் முதலானவற்றைக் கிரஹிக்க ஸம்யுக்த ஆஸ்ரயணம் என்ற சந்நிகர்ஷமும் உதவுகின்றன –

இந்த்ரிய நிரபேஷம் என்றால் -இந்திரியங்களின் தேவையே இல்லாமல் ஏற்படும் ப்ரத்யக்ஷம் -இது மேலும் இரண்டு வகைப்படும்
1-ஸ்வயம் ஸித்தம் -2-திவ்யம் –
ஸ்வயம் ஸித்தம் என்றால் -தன் முயற்சியால் அடையப்பட்டது —
யோகிகள் தங்கள் யோக வலிமையால் எங்கும் உள்ள பொருள்களைக் காண்பது இந்த ப்ரத்யக்ஷத்தால் தான் –
திவ்யம் என்றால் தேவனான பரமாத்மாவால் கொடுக்கப் பட்டது
அர்ஜுனன் விஸ்வரூபம் காண்பதற்கு கண்ணனால் கொடுக்கப்பட்ட அது –

ப்ரத்யக்ஷத்தில் சேர்ந்தவை
ஸ்ம்ருதி -என்றால் நினைவு -முன்னால் ஏற்பட்ட அனுபவத்தால் -பதிவுகள் நம்மிடம் இருக்கும் –
அவை எப்பொழுது தூண்டப் படுகின்றனவோ அப்பொழுது அந்த விஷயம் நினைவுக்கு வருகிறது –
அந்தத் தூண்டுதலுக்குக் காரணம் –
1-அந்த விஷயத்துக்கு ஒப்பான மற்றறொரு பொருளைக் காணுதல்
2-அத்ருஷ்டம்
3-சங்கிலித் தொடரான நினைவு
4-அதை விட்டுப் பிரியாத ஒரு பொருளின் நினைவு -ஆகியவை –
ஆகையால் ஸ்ம்ருதி என்பதைத் தனி பிரமாணமாக எண்ணாமல்
அதற்குக் காரணமாக ப்ரத்யக்ஷத்திலேயே சேர்த்து விடலாம்

(உத்போதம் -தூண்டப்பட்ட சம்ஸ்காரம் -யானைப்பாகன் -யானை -அதன் மணி போல் சங்கிலித் தொடர் –
வயசு ஆக சம்ஸ்காரம் மறைந்து நினைவு வராமல்
ஸத்ருச அத்ருஷ்ட சிந்தை -ஆதி -சேர்ந்தே இருக்கும் தன்மைகள்-நெருப்பு புகை போல் விட்டுப்பிரியாமல் )

ப்ரத்யவிஞ்ஞா -என்பது -அந்த தேவதத்தன் தான் இவன் -என்பது போல் முன்பு அறியப் பட்ட பொருளாக
தற்போது கண் முன் இருக்கும் பொருளை அறிதல் –
இதுவும் ப்ரத்யக்ஷத்தில் தான் அடங்கும் –

அபாவங்களைப் பற்றின அறிவும் ப்ரத்யக்ஷம் தான் –
அபாவம் என்று தனியாக ஓன்று கிடையாது –
ஒரு பொருளின் அபாவம்- இன்மை என்பது – மற்ற ஒரு பொருளின் இருப்பு தான் –
தங்க வளையலின் அழிவு என்பது தங்கக் காசின் உத்பத்தி தான் –
தங்கக் காசின் அழிவு என்பது தான் தங்க மோதிரத்தின் உத்பத்தி —
ஆகையால் அபாவங்களை க்ரஹிப்பதும் புலன்களால் தான் என்பதால்
அதுவும் ப்ரத்யக்ஷம் தானே –

——————–

பாடம் -7-அனுமான பிரமாணம்

அர்த்த பஞ்சகம் சொல்லவே வேதங்களும் இதிஹாச புராணங்களும் -ஸப்த பிரமாணம்
இத்தை சரியாக அறிந்து கொள்ளவே ப்ரத்யக்ஷம் அனுமானம் -தர்க்கமும் அறிய வேண்டும் –

ஒரு பொருள் மற்ற ஒன்றுக்கு வியாப்யமானது -அதாவது -தவறாமல் -அப்பொருளோடே சேர்ந்தே இருக்கக் கூடியது -என்பதை ஆலோசிப்பதால்
இப்பொருளைப் பார்த்ததும் அப்பொருளைப் பற்றிய ஞானம் அநு மிதி ஆகும்
அதுக்குக் கருவியாக இருக்கும் ஞானம் -அதாவது இப்பொருள் அப்பொருளுக்கு வியாப்யமானது என்ற ஞானம் அநு மானம் –

எடுத்துக்காட்டு –
ஓர் இடத்தில் புகை இருந்தால் அங்கு தவறாமல் நெருப்பு இருக்கும் என்பதை நாம் காண்கிறோம் –
இதற்கு வியாப்தி என்று பெயர் -நியத ஸாஹ சர்யம்
ஆகையால் ஒரு மலையின் மேல் நாம் புகையைக் கண்டால் அங்கு கண்டிப்பாக நெருப்பு உள்ளது என்று அறிகிறோம் அதுவே அனுமானம் –

வியாப்யம் என்றால் -அதிகமான இடங்களில் இல்லாதது என்று பொருள் –
நெருப்பு இல்லாத இடத்தில் புகை இருந்தால் -அது நெருப்பைக் காட்டிலும் அதிகமான இடங்களில் உள்ளது என்று சொல்லலாம் –
ஆனால் புகை அப்படி இருக்காது –ஆகையால் நெருப்பை விட அதிகமான இடங்களில் இல்லாதது புகை -அநதிக தேச கால வ்ருத்தித்வம்
அதாவது நெருப்புக்கு வியாப்யமானது புகை என்று சொல்கிறோம் –

வியாபகம் என்றால் குறைவான இடங்களில் இல்லாதது என்று பொருள் -புகை இருக்கும் சில இடங்களிலே
நெருப்பு இல்லாமல் போனால் புகை இருக்கும் இடங்களில் எல்லாம் நெருப்பு இருக்கும் என்ற வியாப்தி பொய்த்துப் போகும் —
அதனால் வியாபகமான நெருப்பானது வியாப்யமான புகை இருக்கும் அனைத்து இடங்களிலும் இருக்க வேண்டும் –
அதை விடக் குறைவான இடங்களில் இருக்கக் கூடாது –
வியாப்தி என்பது பூயோ தர்சனத்தால் அறியப் படுகிறது -அதாவது
பல இடங்களில் பல முறை புகையையும் நெருப்பையும் சேர்ந்தே காண்பதால் ஏற்படுகிறது –

ஹேதுவின் வகைகள்
மலையில் நெருப்பு உள்ளது புகை உள்ளபடியால் -என்ற அனுமானத்தின்
மலை பக்ஷம் –
நெருப்பு சாத்யம் -சாதிக்கப் பட வேண்டியது
புகை ஹேது -சாதித்துக் கொடுப்பது –

ஹேதுவுக்கும் சாத்யத்துக்கும் உள்ள வியாப்தி இரண்டு வகை –
1- கேவல அந்வய வியாப்தி
எங்கு எங்கு புகை உள்ளதோ அங்கு அங்கு நெருப்பு உள்ளது என்று இரண்டின் இருப்பை வைத்துச் சொல்வது
2-கேவல வியதிரேக வியாப்தி
வியதிரேகம் -அபாவம் -இன்மை -எங்கு எங்கு சாத்யம் இல்லையோ அங்கு அங்கு ஹேது இல்லை
அந்வய வ்யதிரேக வியாப்தி —
சில இடங்களில் இரண்டு வகையான வியாப்திகளையும் சொல்ல முடியும்
புகை என்ற ஹேது இருக்கும் இடத்தில் நெருப்பு இருக்கும் –
நெருப்பு இல்லாத இடத்தில் புகை இருக்காது – என்ற இரண்டு வியாப்தியையும் காணலாம்
சில இடங்களில் அந்வய வியாப்தி மட்டுமே சொல்லலாம் படி இருக்கும் –
வியதிரேக வியாப்தியை அறியவோ சொல்லவோ முடியாமல் இருக்கும் –
அப்படிப்பட்ட வியாப்தி கேவல அந்வய வியாப்தி –
இந்தக் குடம் சொல்லால் குறிக்கப் படுவது -த்ரவ்யமான படியால் –
எது எது த்ரவ்யமோ அது அது சொல்லால் குறிக்கப் படும் என்ற அந்வய வியாப்தியை அறியலாம் ஒழிய
எது சொல்லால் குறிக்கப் படுவது இல்லையோ அது த்ரவ்யம் அல்ல என்ற வியதிரேக வியாப்தியை அறிய முடியாது
ஏன் என்றால் சொல்லால் குறிக்கப் படாத பொருள் என்ற ஓன்று உலகில் இல்லையே

நியாய மாதத்தில் ஏற்கப்பட்ட 3-கேவல வியதி ரேகி என்ற மூன்றாம் வகை ஹேது வேதாந்தத்தில் ஏற்கப்படுவது இல்லை –

அவயவங்களும் ஹேது ஆபாசங்களும்
தான் அனுமானத்தால் அறிந்த விஷயத்தை மற்றவரும் அறிய வேண்டும் என்றால் அதற்காக சில சொல் தொடர்களை சொல்ல வேண்டும் –
1-ப்ரதிஜ்ஜா -மலையில் நெருப்பு உள்ளது
2- ஹேது -புகை இருக்கிற படியால் –
உதாஹரணம் -எங்கு எங்கு புகை உள்ளதோ அங்கு அங்கு எல்லாம் நெருப்பு இருக்கும் -அடிப்படியில் போல்
4-உப நயம் -அப்படி நெருப்புக்கு வியாப்யமான புகையை உடையது இந்த மலை
5-நிகமனம் -ஆகையால் நெருப்பை உடையது இந்த மலை –

நியாய மதத்தில் இந்த இந்த ஐந்து சொல் தொடர்களும் வேண்டும்
மீமாம்ஸா மதத்தில் முதல் மூன்றோ இறுதி மூன்றோ போதும்
வேதாந்தத்தில் இத்தனையும் சொல்ல வேண்டும் என்கிற நியமம் இல்லை –
உதாஹரணம் உப நயம் என்ற இரண்டும் வேண்டும் –
அவை தான் நெருப்புக்கு வியாப்யமானது புகை என்றும் -புகை மலையில் உள்ளது என்றும் சொல்லும்
மற்றவை கேட்பவர்க்குத் தேவைப்பட்டால் சொல்லலாம் –

ஹேது ஆபாசங்கள் முன்பு நியாய சாஸ்திரத்தில் பார்த்தவையே வேதாந்தத்தில் கொள்ளப்படுகின்றன –

உபமானமும் அர்த்தா பத்தியும்
மீமாம்ஸா போல்வேரே சில தர்சனங்களிலும் இவை இரண்டையும் தனி ப்ரமாணங்களாகக் கொள்வர்
வேதாந்தத்தில் இவை அனுமானத்திலேயே அடங்கும் –

உபமானம்
மாட்டைப் போல் இருப்பது கவ்யம் என்று ஒருவர் சொல்வதைக் கேட்ட பின்பு –
நேரடியாக மாட்டைப் போல் இருக்கும் விலங்கைப் பார்க்கும் பொழுது
இதுவே கவ்யம் என்ற சொல்லால் குறிக்கப்படுகிறது என்ற அறிவு ஏற்படும் -அது தான் உபமிதி
அதற்கு காரணமான -இந்த விலங்கு மாட்டைப் போல் உள்ளது -என்ற ஸத்ருச ஞானம் தான் உபமானம்-என்பது நியாய மதம் –
இது ஒரு தனி பிரமாணம் அல்ல -சொல் தொடர் சப்த பிரமாணம் -நேரே காணுதல் ப்ரத்யக்ஷம் –
அவற்றின் சேர்க்கையே இந்த அறிவு -தனியான பிரமாணம் அல்ல என்பதே வேதாந்தக் கொள்கை –

அர்த்தா பத்தி
ஒவ்வாத ஒரு விஷயத்தைப் பொருந்த வைப்பதற்காக ஏற்படும் ஞானம் அர்த்தா பத்தி
குண்டாக இருக்கும் தேவதத்தன் பகலில் உண்பது இல்லை -என்பதைப் பொருந்த வைக்க –
தேவதத்தன் இரவில் உண்கிறான் -என்று கற்ப்பிப்பதே அர்த்தா பத்தி யாகும் –
இது தனியான பிரமாணம் என்பர் சிலர் -வேதாந்தத்தில் இது தனியான பிரமாணம் அல்ல -அனுமானத்திலேயே அடங்கும் –

ஸப்த பிரமாணம்
ஆப்தரால் சொல்லப்பட்ட சொல் தொடர் தான் ஸப்த பிரமாணம் -என்பர் நியாய மதத்தர்
ஆப்தர் -பொருளை உள்ளபடி அறிந்து அப்படியே உறைபவர்
வேதம் என்ற ஸப்த பிரமாணம் ஸர்வேஸ்வரனால் சொல்லப்பட்டது தான் என்று
அவர்கள் ஏற்கிற படியால் இந்த வேதத்துக்கும் பொருந்துகிறது –

ஆனால் வேதாந்த தரிசனத்தில்
வேதம் சர்வேஸ்வரனால் சொல்லப் பட்டதாகக் கொள்ள வில்லை –
வேதம் நித்யம் -ஆதி அந்தம் இல்லாதது –
ஆகவே ஆப்தனால் சொல்லப்பட்டது ஸப்த பிரமாணம் என்னும் லக்ஷணம் வேதத்துக்குப் பொருந்தாது –
ஒவ்வொரு சொல்லும் ஒலியும் அழியக் கூடியதாக இருந்தாலும் வேதம் நித்யமே –
ஏன் என்றால் வேதத்தில் இருக்கும் எழுத்துக்கள் சொற்கள் ஒலிகள் உச்சரிக்கப்படும் வரிசை மாறாமல் என்றும் ஒரே மாதிரியாகவே உள்ளது –
இதற்கு ஆனு பூர்வீ என்று பெயர்

ஆகவே என்றும் மாறாத நித்யமான ஆனு பூர்வீ வேதத்துக்கும்கு இருப்பதால் வேதமும் நித்யமாகவே சொல்லப் படுகிறது
ஆகவே வேதாந்த தரிசனத்தில் வேதத்துக்கும் பொருந்தும் படி ஸப்த லக்ஷணம் –
அநாப்தரால் சொல்லப்படாத சொல் தொடர் ஸப்த பிரமாணம் –
வேதம் யாராலும் சொல்லப்படாததாலும் அநாப்தரால் சொல்லப்படாததே ஆகும் –

வேதத்தைத் தழுவின நூல்கள்
சிஷை வியாகரணம் சந்தஸ் நிருத்தம் ஜ்யோதிஷம் கல்பம் ஆறும் வேத அங்கங்கள்
புராணங்கள் ஸ்ம்ருதிகள் இதிகாசங்கள் நியாய மீமாம்ஸா தர்ம ஸாஸ்த்ரங்கள்
ஆயுர் வேதம் தநுர் வேதம் காந்தர்வ வேதம் பரத -நாட்டிய சாஸ்திரம் அர்த்த -பொருளைப் பற்றிய சாஸ்திரம்
இவை அனைத்தும் வேதத்தைத் தழுவிய நூல்களே

இவற்றில் வேதத்துக்கு முரனாகச் சொல்லப்பட்ட விஷயங்களைத் தவிர மற்றவை பிரமாணங்கள் ஆகும்
அவற்றை இயற்றிய ரிஷிகளின் குறையால் இப்படி சில முரண்பாடுகள் இவற்றில் இருக்கலாம்
பாஞ்ச ராத்ரம் வைகானஸம் முதலிய ஆகம நூல்கள் முழுவதுமே பிரமாணங்கள் -இவற்றில் வேத வ்ருத்தமாக எதுவும் இல்லை –
மேல் சொன்னவற்றை விட ஆழ்வார்கள் அருளிச் செய்த திவ்ய பிரபந்தங்கள் உயர்ந்த பிரமாணங்கள் ஆகும் –
மிகத் தெளிவாக அர்த்தங்களை போதிக்கும் நம் பூர்வாச்சார்யர்கள் ஸ்ரீ ஸூ க்திகளும் மிகச்
சிறந்த ப்ரமாணங்களாகக் கருதப்படுகின்றன –

——-

பாடம் -8- ப்ரமேயங்கள்

மா என்றால் அறிவு -மேயம் -என்றால் அறியப் படும் பொருள்
ப்ரமா-என்றால் சிறந்த அறிவு -உண்மையான அறிவு –
ப்ரமேயம் என்றால் சரியான அறிவால் அறியப்படும் பொருள் -உண்மையான பொருள் –

வேதாந்த தரிசனத்தில் இரண்டு ப்ரமேயங்களையே ஒத்துக் கொள்ளப்படுகின்றன –
த்ரவ்யம் -என்றும் அத்ரவ்யம் என்றும்
நியாய மாதத்தில் த்ரவ்யம் குணம் கர்மம் ஸாமாந்யம் விசேஷம் ஸமவாயம் அபாவம் என்ற ஏழும் ஒப்புக் கொள்ளப் பட்டன
அவற்றுள் த்ரவ்யங்களும் குணங்களும் வேதாந்தத்தில் த்ரவ்யம் என்றும் அத்ரவ்யம் என்றும் ஏற்கப் பட்டவை
மற்றவை ஏற்கப் படாதவை
குணங்களிலும் -24 -நியாய மாதத்தில் உண்டு -அவை அனைத்தும் வேதாந்தத்தில் ஒத்துக் கொள்ளப் பட வில்லை –

கர்மம் தேவையில்லை
நியாய மதத்தில் கர்மம் என்று ஒரு பதார்த்தம் உண்டு -கர்மம் -என்றால் செயல்
ஆனால் நம் கண்ணுக்குக் கர்மம் என்ற ஓன்று தெரியவதே இல்லை -ஒரு பொருள் நகரும் பொழுது
ஓர் இடத்தை விட்டு மற்ற ஓர் இடத்தோடே தொடர்பு ஏற்படுகிறது என்பதையே கண்ணால் பார்க்கிறோம்
ஸம்யோகம் என்ற குணத்தைத் தவிர கர்மம் -செயல் என்ற பொருளை ஏற்கத் தேவையில்லை –
மேலே செல்லுதல் -கீழே செல்லுதல் -அருகில் வருதல் -தொடர்பு வைத்து ஐந்தாக சொல்லுவதால் –
ஸம்யோகம் ஒன்றையே கொள்ளலாமே

சாமான்யம் தேவை யில்லை
பல பொருள்களில் ஒரே மாதிரியான அறிவு ஏற்படும் இடங்களில் அவற்றுள் உள்ள பொதுத் தன்மை –
சாமான்யம் என்று நியாய மாதத்தில் பார்த்தோம் -அநு கத ப்ரதீதி நியாமகம் தானே சாமான்யம் –
ஆனால் நம் கண்ணுக்கு சாமான்யம் என்ற ஒரு பொருள் புலப்படுவது இல்லை –
ஒரு பொருளின் சமஸ்தானம் ஆக்ருதி மட்டும் தான் கண்ணுக்குப் புலப்படும் –
ஆகையால் வேதாந்த தர்சனத்தின் படி சமஸ்தானம் என்பது தான் ஒரு பொருளின் ஜாதி சாமான்யம் ஆகும் –தனியான ஒரு பொருள் அல்ல –
மாட்டினுடைய மாட்டுத் தன்மை என்பது கொம்பு குளம்பு வால் சாஸ்னா முதலியவற்றைக் கொண்டிருத்தல் தான்
மாடு குதிரை மேஜை போன்ற அவயவங்களுடைய பொருள்களாக இருந்தால் அவற்றின் அவயவங்கள் அமைப்பே ஸம்ஸ்தானம்
ஆத்மா ஆகாசம் போன்ற அவயவங்கள் அற்ற பொருள்களாக இருந்தால் அதன் தனித் தன்மையை தான் அதன் சமஸ்தானம் ஆகும்-
சாஸ்னாதிமத்வம் -அவயவ த்ரவ்யங்களின் கூட்டமே போதுமே -வஸ்து ஸம்ஸ்தானம் -வியக்தி மட்டுமே –

விசேஷம் தேவை யில்லை –
நித்தியமான த்ரவ்யங்களான பரம அணுக்கள் முதலானவற்றை வேறு படுத்திக் காட்ட
வேறே எந்த தன்மையும் இல்லாத படியால் விசேஷம் என்ற ஓன்று ஏற்கப்பட்டது நியாய மாதத்தில்
வேதாந்தத்தில் பரமாத்மா -விபு ஜீவாத்மா அணு -ப்ரக்ருதி முக் குண மாயம் -என்று
வேறு படுத்திக் காட்டுவதால் விசேஷம் தேவை இல்லை –

ஸமவாயம் தேவை யில்லை
பிரிக்க முடியாமல் சேர்ந்தே இருக்கும் பொருள்களுக்கு இடையில் இருக்கும் சம்பந்தம் சமவாயம் என்று நியாய மதத்தில் பார்த்தோம்
இத்தை வேதாந்தத்தில் ஏற்கவில்லை
ஒரு குடத்துக்கும் நிறத்துக்கும் உள்ள தொடர்பு -சமவாயம் என்றால்
அந்த சமவாயத்துக்கும் குடத்துக்கும் உள்ள தொடர்பு எது என்று கேள்வி எழும்
அது மற்ற ஒரு சமவாயம் என்று சொன்னால் அதன் விஷயத்தில் மறுபடியும் இதே ஒரு கேள்வி வரும் —
இப்படி முடிவு இல்லாமல் சமவாயங்களைக் கல்பிக்க வேண்டும் –
அந்த தொடர்பு வேறே ஒரு சமவாயம் அல்ல -இயற்கையாகவே வேறே ஒரு தொடர்பு தேவை இல்லாமல்
அவை தொடர்பு பட்டுள்ளன என்று சொன்னால்
அந்தத் தன்மை நிறத்துக்கும் குடத்துக்கும் இடையிலே ஒப்புக் கொண்டு –
அப்ருதக் சித்த விசேஷணம் -பிரிக்கப் பட முடியாத விசேஷணம் -ஒப்புக் கொண்டு –
சமவாயம் என்ற ஒரு பதார்த்தம் தேவை இல்லை என்பதே வேதாந்த சித்தாந்தம் –

அபாவம் தேவையில்லை –
அபாவம் -பொருளின் இன்மை –
பொருள் உண்டாவதும் முன்னால் இருக்கும் அபாவம் ப்ராக் அபாவம்
அதன் அழிவுக்கு பின்பு அபாவம் த்வம்ஸம்
எக்காலத்திலும் ஓர் இடத்தில் ஒரு பொருள் இருக்காது என்றால் அத்யந்த அபாவம்
ஒரு பொருளுக்கும் மற்ற ஒரு பொருளுக்கும் வேறுபாடு அந்யோன்ய அபாவம்-முன்பு பார்த்தோம்

வேதாந்தத்தில் அபாவம் ஏற்கப்படுவது இல்லை –
குடம் உண்டாவதும் முன்னால் குடத்தின் அபாவம் கன்னுக்குத் தெரியாதே -மண் உருண்டை தானே தெரியும் –
குடம் அழிந்த பின்பும் த்வம்ஸ அபாவம் கண்ணுக்குத் தெரியாதே -துகள்களே தெரியும் –
ஆகவே ஒரு பொருளின் அபாவம் -இன்மையே -மற்ற ஒரு பொருளின் பாவம் இருப்பு – தான் என்பதே வேதாந்த மதம்
குடத்தின் ப்ராக் அபாயம் மண் உருண்டை
குடத்தின் அழிவே கபாலங்கள்
வாயுவில் நிறம் -ரூபம் -இல்லாமை -அத்யந்த அபாவமும் தனியான ஒரு அபாவம் அல்ல –
வாயுவின் இயற்கையான தனித் தன்மையை தான்
மாட்டின் இடம் குதிரையைக் காட்டிலும் வேறுபாடு என்று தனியான அந்யோன்ய அபாவம் கிடையாது –
மாட்டுத் தன்மை தான் மாட்டின் இடம் இருக்கும் – குதிரையைக் காட்டிலும் வேறுபாடு –

அதவா வஸ்து சமஸ்தான ரூப ஜாதியாதி லக்ஷண பேதம் -மூன்றும் ஒன்றே –

———-

பாடம் -9- த்ரவ்யங்கள் –

வேதாந்த தரிசனத்தில் ப்ரமேயங்களை த்ரவ்யங்கள் என்றும் அத்ரவ்யங்கள் என்றும் பிரிக்கிறோம்
த்ரவ்யங்களைப் பற்றிப் பார்ப்போம்
உபா தாநம் -த்ரவ்யம் -என்பது த்ரவ்யத்தின் லக்ஷணம் -எது ஓன்று உபா தானமாக உள்ளதோ அதுவே த்ரவ்யம் –
உபாதானமாய் இருப்பதே த்ரவ்யத்தின் லக்ஷணம் என்றதாயிற்று –
உபாதாநம் என்பது நியாய மாதத்தில் சமவாயி காரணம் என்று சொல்லப் பட்ட தற்கு நிகரான பொருள்
வேதாந்தத்தில் சமவாயம் என்ற ஒரு பதார்த்தத்தை ஏற்காத படியால் அது உபாதானம் என்று சொல்லப் படுகிறது –
பிற்காலத்தில் வேறே ஒரு அவஸ்தையை அடையப்போகும் வஸ்து முன் அவஸ்தையோடு கூடி இருக்கும் பொழுது
அது உபாதானம் என்று சொல்லப் படுகிறது –
அவஸ்தை என்றால் நிலை என்று பொருள் -ஆகந்துகமான அப்ருதக் ஸித்தமான தர்மமே அவஸ்தை என்று சொல்லப் படுகிறது –
ஆகந்துகம் என்றால் நித்தியமாக இல்லாமல் குறிப்பட்ட காலத்துக்கு மட்டுமே இருக்கும் ஒரு தன்மை
அப்ருதக் ஸித்தமான தர்மம் என்றால் தான் இருக்கும் பொழுது தன்னுடைய இருப்பிடத்தில் இருந்து பிரிக்க முடியாத தன்மை –
எடுத்துக் காட்டு
மண் உருண்டையில் இருந்து உருண்டை என்னும் தன்மை-என்பதைப் பிரிக்க முடியாதே –
அத்தன்மை நித்தியமாக இல்லாமல் -தொடக்கமும் முடிவும் உடையதாகவும் உள்ளது –
எனவே உருண்டைத் தன்மை என்பது மண்ணின் ஒரு நிலை -அதே போல் குடமாய் இருத்தல் என்பதும் மண்ணின் மற்ற ஒரு நிலை –
மாலையில் குடமாக மாறப் போகும் மண் காலையில் உருண்டை என்ற நிலையோடு -அவஸ்தையோடு -கூடி இருக்கிறது –
எனவே மண் தான் குடத்துக்கு உபா தானம் என்று சொல்லப் படுகிறது –

ஸத் கார்ய வாதம்
த்ரவ்யங்களுக்குச் சொல்லப்பட்ட இந்த லக்ஷணம் -வேதாந்தத்தில் மிக முக்கியமான ஸத் கார்ய வாதம் என்பதையே அடி ஒற்றியது –
நியாய மதத்தில் அஸத்ய கார்ய வாதம் -ஓன்று உண்டு –அஸத் -அபாவம் -கார்யம் என்றால் உண்டாகும் பொருள்
ஒரு பொருள் ஒரு அபாவத்தில் இருந்து தான் உண்டாகிறது என்பது அவர்கள் சித்தாந்தம் –
ஒரு பொருள் உண்டாவதற்கு முன்னால் அதனுடைய அபாவம் -ப்ராக பாவம் -தான் இருந்தது –
உண்டாக்கக் கூடிய பொருள் அதன் அவயவங்களைக் காட்டிலும் முற்றிலும் வேறு பட்டது –
ஏன் என்றால் அறிவு சொல் அளவு எண்ணிக்கை சக்தி வடிவம் முதலான அனைத்துமே காரியத்துக்கும் காரணத்துக்கும் வேறாக உள்ளன –
ஆனால் வேதாந்தத்தில் இந்த அஸத் கார்ய வாதம் ஏற்கப் படுவது இல்லை –
நூல்கள் சேர்ந்து ஒரு துணி உண்டாகும் பொழுது நூல் என்பது வேறே ஒரு த்ரவ்யம் –
துணி என்பது முற்றிலும் யதிதான வேறே ஒரு த்ரவ்யம் என்று நியாய மதத்தில் சொல்வது சரியில்லை என்பதே வேதாந்த கொள்கை –
ஸத் என்றால் இருக்கும் பொருள் -எனவே இருக்கக் கூடிய ஒரு பொருள் தான் கார்யமாக மாறுகிறது –
அபாவத்தில் இருந்து கார்யம் தோன்றவில்லை -என்பதே ஸத் கார்ய வாதம் -ஆகும் –
காலையில் உருண்டையாய் இருந்த மண் தான் இப்பொழுது குடமாக மாறி உள்ளது என்று நமக்கு அறிவு ஏற்படுவதைக் காண்கிறோம் –
இதற்குப் ப்ரத்யபிஞ்ஞா என்று பெயர் –
இந்த அறிவைக் கொண்டே நாம் புரிந்து கொள்ளலாம் -மண் என்பதும் குடம் என்பதும் ஒரே த்ரவ்யம் தான் என்று –
பிறகு அளவு எண்ணிக்கை அறிவு சொல் முதலானவை ஏன் மாறுகின்றன என்றால் –
அந்த த்ரவ்யத்தின் அவஸ்தை நிலை -மாறி விட்ட படியால் மாறுகின்றன –

உபநிஷத்தில் ஸத் கார்ய வாதம்
சாந்தோக்யம் ஆறாவது ப்ரபாடகம் -ஸத் வித்யா ப்ரகரணம்
வாசா ஆரம்பணம் விகார நாம தேயம் ம்ருத்திகா இத்யேவ சத்யம்
விகாரம் -உரு மாற்றங்கள்
நாம தேயம் -பெயர்கள்
ஆரம்பணம் -அடையப்படுகின்றன
ஒரே மண் என்ற த்ரவ்யத்தால் வெவ்வேறு உருவங்களும் வெவ்வேறு பெயர்களும் அடையப் படுகின்றன என்று சொல்லும்
இதன் பிரயோஜனம் என்ன என்றால்
வாசா -வாக் முதலான வியவஹாரங்களுக்காக
வாயால் ஒரு பொருளைப் பற்றிச் சொல்வது -அதைக் கையால் எடுப்பது முதலானவை தான் வியவஹாரங்கள் –
வெவ்வேறு வியவஹாரங்கள் ஏற்படுத்துவதற்குத் தான் ஒரே மண் த்ரவ்யம்
வெவ்வேறு உருவங்களையும் பெயர்களையும் அடைகிறது என்று அழகாக ஸத் கார்ய வாதத்தைச் சொல்கிறது –
மேலும்
ம்ருத்திகா இத்யேவ சத்யம்
எந்த நிலையை அடைந்தாலும் அது மண் தான் என்பதே உண்மையாகும் -ப்ரமாணங்களால் அறியப் படுவதாகும் –
வேறே ஒரு த்ரவ்யம் உண்டாகிறது என்று சொல்ல இயலாது –

மேலும் ஸ்பஷ்டமாக அஸத் கார்ய வாதத்தைத் தவறு என்றும் கூறுகிறது –
சிலர் கூறுகிறார்கள் -ஒரு பொருள் உண்டாவதற்கு முன்னால் -அசத்தாக -அபாவமாக -இருந்தது –
அதில் இருந்து தான் ஸத் என்கிற உத்பத்தி ஏற்படுகிறது -என்று
எந்தப் ப்ரமாணத்தைக் கொண்டும் அவ்வாறு சொல்ல இயலாது
எப்படி அபாயத்தில் இருந்து உண்டாக்கும் ஏற்பட முடியும் என்று -பொருள் –

———

பாடம் -10-த்ரவ்யங்களின் வகைகள்
ப்ரமேயங்களை த்ரவ்யங்கள் என்றும் அத்ரவ்யங்கள் என்றும் இரண்டாகப் பிரிக்கலாம்
அவஸ்தை என்கிற நிலைகளுக்கு இருப்பிடமானவை த்ரவ்யங்கள்
ஸப்தம் ஸ்பர்சம் முதலான தன்மைகள் மட்டும் போதுமே -அவற்றை உடைய த்ரவ்யம் என்ற பொருள்
ஏன் ஏற்கப் பட வேண்டும் யென்று சிலர் சொல்வது சரி இல்லை –
ரூபத்தை மட்டும் க்ரஹிப்பதாக கண்ணும் ஸ்பர்சத்தை மட்டும் க்ரஹிப்பதாக தோலும் இருக்கும் பொழுது
நேற்றுப் பார்த்தத்தையே இன்று தொடுகிறேன் என்று ஏற்படும் ப்ரத்யவிஜ்ஜை யானது அவை இரண்டுக்கும்
பொதுவான இருப்பிடமாக ஒரு த்ரவ்யம் இருக்க வேண்டும் என்று காட்டுகிறது –

அதே போல் த்ரவ்யம் மட்டுமே போதுமே அதற்குத் தன்மைகள் எதற்கு என்று கூறுவதுவும் சரியில்லை
ஒரே த்ரவ்யத்தில் ஒவ்வொரு காலத்தில் வெவ்வேறு மாதிரி நாம் அறிவதால் த்ரவ்யம் அறியப் பட்ட போதும்
அதில் இருக்கும் தன்மைகள் நம்மால் அறியப்பட வில்லை என்றே சொல்ல வேண்டும்
எனவே த்ரவ்யத்தில் ரூபம் ரஸம் முதலான தன்மைகள் உள்ளன என்று அவசியம் ஒப்புக் கொள்ள வேண்டும் –

புத்த மதத்திலே த்ரவ்யங்கள் அனைத்தும் க்ஷணிகங்கள் —
அதாவது ஒரே வினாடியில் அழியக் கூடியவை என்று சொல்லப் படுகிறது -அதுவும் தவறானது
காலை பார்த்த கூடத்தை இப்பொழுது தொடுகிறேன் என்பது போன்ற ப்ரத்யபிஜ்ஜை
அனைவருக்கும் ஏற்படுகிறபடியால் நீண்ட காலத்துக்கு ஒரே த்ரவ்யம் இருக்கிறது என்றதாயிற்று
இந்த அறிவு அனைவருக்கும் தவறாக ஏற்படுகிறது என்னவும் ஒண்ணாது

த்ரவ்யங்களின் வகைகள்
ஆறாக பிரிக்கலாம் -ப்ரக்ருதி -காலம் -பரமபதம் -ஜீவாத்மா -பரமாத்மா -இவர்களுக்கு ஏற்படும் ஞானம் –
இவற்றை பலவகைகளாகப் பிரிக்கலாம்

ஜடம் -அஜடம் -பாகுபாடு
ஜடம் -ஸ்வயம் ப்ரகாஸம் அல்லாதவை
ப்ரக்ருதி காலம் இவை இரண்டும் என்றுமே தானாகப் பிரகாசிக்காதவை
இவற்றை அறிய வெளிச்சம் புலன்கள் போன்ற வேறு பொருள்களின் உதவி தேவை –
அஜடம் ஸ்வயம் ப்ரகாஸம் ஆனவை –
நித்ய விபூதி -ஜீவாத்மா -பரமாத்மா -இவர்களின் ஞானம் என்ற நான்கும்
வேறே ஒரு பொருளின் உதவி தேவைப்படாமல் தானாகவே பிரகாசிக்கக் கூடியவை

ப்ரத்யக் பராக் என்கிற வேறுபாடு
ப்ரத்யக்-ஜீவாத்மா பரமாத்மா -இருவரும் தாங்களே பிரகாசிக்கிற படியால் ப்ரத்யக் என்று அழைக்கப் படுகின்றன
பராக் -மற்ற நான்கும் -மற்றவர்களுக்குத் தான் தோற்றம் அளிக்கக் கூடியவை -தான் தன்னை அறியாது -இவை பராக்

சித் -அசித் -பாகுபாடு
சித் -அறிவுடையவர்களான ஜீவாத்மாவும் பரமாத்மாவும்
அவன் பரம சேதனன் -ஆகவே தத்வ த்ரயம்
அசித் -அறிவற்றவையான மற்ற நான்கு பொருட்களும் –

——–

பாடம் -11- பிரகிருதி

ஆறு வகையான த்ரவ்யங்களில் ஓன்று பிரகிருதி
அஜாம் -ஏகாம் – லோஹிதம் சுக்லம் க்ருஷ்ணாம் – வஸ்தூம் ப்ரஜாம் ஜநயந்தி சரூபா -ப்ரக்ருதி
ஸ்ருஷ்டிக்கு மூலப் பொருள்
ஸத் கார்ய வாதம் -நித்யம் -அழிவதோ உண்டாவதோ கிடையாது -அவஸ்தா மாற்றமே
ஸ்ருஷ்டியில் பிரக்ருதியே உலகமாக மாறி -பிரளயத்தின் பொது இயல்பு நிலைக்கு மாறும் –
எனவே பிரக்ருதியை அஜா -பிறவாதது என்றும் சொல்வர்
இது முக்குண மயம் -ஸத்வம் ரஜஸ்ஸூ தமஸ்ஸூ
இதுவே அனைத்து உலகப் பொருள்களாக மாறுவதால் அவை ப்ராக்ருதங்கள் என்று அழைக்கப்படும்
அவை அனைத்துமே முக்குணங்கள் உடையவையே
இதுவே பேர் ஆனந்தம் என்று பிரமித்து நித்ய சம்சாரிகளாக மாறி மாறி பல பிறப்புகளில் ஆழ்ந்து போகிறார்கள் பலரும்
வெகு சிலரே இவற்றை வெறுத்து முமுஷுக்களாகி முக்தர் ஆகிறார்கள் –

பிரகிருதியின் செயல்கள்
மம மாயா துரத்யயா -மாம் ஏவ -இத்யாதி
இந்த முக்குண மய பிரகிருதி என்னாலேயே இயக்கப் பட்டு என்னுடைய லீலைக்காக உள்ளது –
இந்த பிரக்ருதியான மாயையை யாராலும் எளிதில் தாண்ட இயலாது
யார் என்னையே சரணாகப் பற்றுகிறார்களோ அவர்கள் தான் இத்தைக் கடக்கிறார்கள் –

பிரகிருதி பாப புண்ணியங்களின் அடிப்படையில் நம்மைத் தளைப்படுத்துகிறது –
கர்மங்கள் நீங்கி விட்டால் ப்ரக்ருதியோடே நமக்கு இருக்கும் தொடர்பு நீங்கி விடும்
ப்ரக்ருதி பகவானை அறிய முடியாதபடி செய்து -நம்மையும் கூட நாம் சரியாகப் புரிந்து கொள்ளாத படி பண்ணி
இந்த உடலே நான் -என்கிற தேகாத்ம அபிமானத்துக்கும்
நான் ஸ்வ தந்த்ரன் என்று நினைக்கும் ஸ்வ தந்த்ர அபிமானத்துக்கும் காரணமாக உள்ளது
ப்ரக்ருதி தன்னுடைய வெவ்வேறே வடிவங்களான பிராகிருத பதார்த்தங்களில் ஆசையை வளர்த்து
அவையே மிகவும் சிறந்தவை என்று எண்ண வைக்கிறது –
உடல் புலன்கள் உலகப் பொருள்கள் -நுண்ணிய வடிவங்களில் உள்ளது
முக்குணங்களை உடையது
பகவானாலே செலுத்தப்படுவது –

ப்ரக்ருதிக்குப் பல பெயர்கள் உண்டு
1- ப்ரக்ருதி -இந்த உலகில் எல்லாப் பொருள்களும் இதில் இருந்து தோன்றுகிற படியால் இது பிரகிருதி என்னப் படுகிறது
2-அவித்யை -வித்யை என்னும் அறிவைக் கெடுக்கிற படியால்
3-தமஸ் ஸூ -வெளிச்சத்துக்கு நிகரான அறிவுக்கு எதிராக உள்ளபடியால் இருட்டு
4-பிரதானம் -முக்கியமான பொருள் -அனைத்தும் இதில் இருந்து மாறுவதால்
5-மாயா -விசித்திரமான ஆச்சர்யமான பொருள்களை உண்டாக்குகிற படியால்
பொய் என்ற பொருளில் அல்ல -நமக்குத் புரியாதபடி ஆச்சர்யமாக உள்ளது-

பரமாத்மா ஜீவாத்மா -அறிவுடைமை ஒற்றுமை
ஜீவாத்மா ப்ரக்ருதி -இரண்டும் சொத்து ஸ்வாமிக்கு
பரமாத்மாவுக்கு ப்ரக்ருதிக்கும் -ஒற்றுமை -தன்னோடே சேர்ந்தவர்களைத் தன்னைப் போல் ஆக்கும் –
சமதர்ம முக்தி அவன் தருவான் –
தன்னளவுக்கு கீழே இழுத்துச் செல்லுமே -பிரக்ருதியும்

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கணாதர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாசர் -பாதராயணர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ப்ரஹ்ம ஸ்வரூபம் -தத்வ ஜ்ஞானம்-விசிஷ்டாத்வைத -அத்வைத -த்வைத ஸித்தாந்தங்கள் —

June 27, 2021

ஸ்ரீ விசிஷ்டாத்வைத ஸித்தாந்த ப்ரகரணம்

இதன் ப்ரவர்தகர் – ஸ்ரீ பகவத் ராமாநுஜர்.

ஸ்ரீமல் லக்ஷ;மண — யோகிநஸ்து புவநம் ஸத்யம் ததீச:
ஸ்ரீய:காந்தோ ப்ரஹ்ம ஸ ஏவ ஸோகில-தந{: பிந்நாஸ் தத: சேதநா:!
ஸத்யா ஸம்ஸ்ருதி-ரீச-நிக்ரஹ-க்ருதா முக்கிஸ்து பக்த்யாதிநா
தத்-ப்ராப்தி: பரமே பதே ததநு-பூத்யாக்யேதி ஸஞ்சக்ஷதே!! !

இது இந்த ஸித்தாந்தத்திற்கு ஸங்க்ரஹ ச்லோகம்.

இதனர்த்தம் :—

ஸ்ரீ பகவத் ராமாநுஜரோ பின்வருமாறு ஸாதித்தருளுகிறார் :—
“புவநம் ஸத்யம்…—ப்ரபஞ்சம் வாஸ்தவமாயுள்ளது. முத்துச்சிப்பியில் தோன்றும் வெள்ளியைப்போல் பொய்யன்று.
அது ப்ராந்தியினால் காணப்படுவதே யொழிய ஒரு காரியத்துக்கும் உபயோகப்படுகிறதன்று.
கடையில் காணப்படும் வெள்ளிபாத்திரம் முதலியவைகளாக செய்யப்பட்டு, அந்த பாத்திரங்கள் ஜலம் முதலியவை கொண்டுவர உபயோகப்படுகிறது.
ஆகையால் இது பொய்யன்று, மேலும் ஈச்வரன் ப்ரக்ருதி என்கிற வஸ்துவைக்கொண்டு இந்த ப்ரபஞ்சத்தை
தன் ஸங்கல்ப மாத்திரத்தாலே ஸ்ருஷ்டிக்கிறான் என்று ச்ருதி சொல்லுகிறபடியால், ஸ்ருஷ்டிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்த ப்ரபஞ்சம் பொய்யாகமாட்டாது.
பொய்யான வஸ்துவுக்கு ஸ்ருஷ்டி ஸம்பவியாதன்றோ? மாயையை உபகரணமாகவுடைய ஈச்வரன் இந்த ப்ரபஞ்சத்தை ஸ்ருஷ்டிக்கிறான்.
“மாயையாவது ப்ரக்ருதி என்று ச்ருதி சொல்லுகிறது இங்கு ப்ரபஞ்ச ஸ்ருஷ்டிக்கு மாயை உபகரணமென்றும்,
அந்த மாயையாவது ப்ரக்ருதி என்றும் கிடைக்கிறது. இங்கு ப்ரபஞ்சத்துக்கு மூலமாகச்சொன்ன ப்ரக்ருதி விசித்ரமான
ப்ரபஞ்சரூப கார்யத்தை உண்டாக்குகிறபடியால் மாயை என்று சொல்லப்பட்டதேயொழிய,
அவாஸ்தவம் என்கிற அபிப்ராயத்தால் அன்று. மாயை என்கிற சப்தத்துக்கு அவாஸ்தவம் என்கிற அர்த்தமும் கிடையாது.

மமயோநிர் மஹத் ப்ரஹ்ம தஸ்மிந் கர்ப்பம் ததாம் யஹம்!
ஸம்பவஸ்ஸர்வ ப10தாநாம் ததோபவதி பாரத (பகவத்கீதை அத். 14 ச்லோ. 3 )

ஜகத்துக்கு மூலகாரணமான என்னுடையதான ப்ரக்ருதி என்கிற வஸ்துவில் ஜீவஸமுதாயத்தை நான் சேர்க்கிறேன்.
இந்தக் காரணத்தால் ஸர்வபூதங்களும் உண்டாகின்றன என்று இந்த ச்லோகத்தின் அர்த்தம்.
இதில் அசேதனமான ப்ரக்ருதியோடு சேதனவஸ்துவை பகவான் சேர்ப்பதால் இந்த ப்ரபஞ்சம் உண்டாகிறது என்று
சொல்லியிருப்பதால் இந்த ப்ரபஞ்சம் ப்ரஹ்மத்தின் அஜ்ஞானத்தால் கல்பிதமாகிறது என்று சொல்லுவதற்குக் கொஞ்சமும் இடமில்லை.

„ததீச :—காந்த :… —ஸ்ரீய: பதியான ஸ்ரீமந்நாராயணன் அந்த ப்ரபஞ்சத்துக்கு ஈச்வரன்.

„ப்ரஹ்ம ஸ ஏவ… — அவன்தான் பரப்ரஹ்மம். தைத்ரீயோபநிஷத்தில் ப்ருகுவல்லியில், „
எது ஜகத்காரணமோ அது ப்ரஹ்மம்… என்று சொல்லப்பட்டிருக்கிறது. நாராயணோபநிஷத்து
முதலான சில உபநிஷத்துக்களில் „நாராயணன் ஜகத்காரணம்… என்று சொல்லப்பட்டிருக்கிறது.
ஆகையால் நாராயணன்தான் ப்ரஹ்மம் என்று கிடைக்கிறது. நிர்குணப்ரஹ்மம் என்று வேறொன்று கிடையாது.
உபநிஷத்தில் ப்ரஹ்மம் என்று எதனால் சொல்லப்படுகிறது ? என்;று ஒரு கேள்வியைக் கேட்டு,
இதனிடத்தில் பெரியதான குணங்கள் இருக்கிறபடியால், இது ப்ரஹ்மம் என்று பதில் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆகையால், ப்ரஹ்ம சப்தம் பெரியதான குணங்களையுள்ள வஸ்துவைச் சொல்லுகிறது என்று கிடைக்கிறபடியால்,
குணமில்லாத வஸ்துவை இது சொல்ல மாட்டாது. ஆகையால், ஸகல கல்யாண குணங்களையும் உடையவனான
ஸ்ரீமந்நாராயணனைத்தான் இந்த ப்ரஹ்ம சப்தம் சொல்லுகிறது. அவன்தான் ப்ரஹ்ம சப்தத்துக்குப் பொருள்.

ஸ: அகிலதனு: — அந்த ஈச்வரன் சேதனர்கள், அசேதன வஸ்துக்கள் இவை எல்லாவற்றையும் சாPரமாக உடையவன்.
ஒரு சேதனனுக்கு – நியதாதேயமுமாய், நியத சேஷமுமான த்ரவ்யம் அந்த சேதனனுக்கு சாPரம் என்று சொல்லப்படுகிறது.

நியதாதேயமாகையாவது — அந்த சேதனனுடையஸ்வரூபத்தை எப்பொழுதும் ஆச்ரயித்திருக்கை,
அதாவது, அவன் ஸ்வரூபத்தின் ஸம்பந்தத்தால் நிலைபெற்று அழியாமலிருக்கை.

நியதநியாம்யமாகையாவது —- சேதனனுடைய ஸங்கல்பத்தால் தாங்கப்பட்டிருக்கை.

நியத சேஷத்வமாவது — அந்த சேதனன் ப்ரயோஜனத்துக்காகவே யிருக்கை.

நம்முடைய சாரீரம் இந்த ஜீவாத்ம ஸ்வரூபத்தின் ஸம்பந்தம் இருக்கும்வரையில் இருந்து, அது தப்பிப்போன போது அழிந்து போகிறது.
ஆகையால் இந்த சரீரத்துக்கு சேதன ஸ்வரூபம் ஆதாரமாய், அதனை ஆச்ரயித்திருக்கிறபடியால் இந்த சாரீரம் ஆதேயமாய் இருக்கிறது.
விழித்திருக்கும்போது அவனுடைய ஸங்கல்பத்தால் தாங்கப்பட்டு கீழே விழாமல் இருக்கிறது.
அவனுடைய புண்ய பாபங்களாகிற கர்மத்தின் பலங்களான ஸூக துக்கங்களின் அநுபவமாகிற, அவனுடைய ப்ரயோஜனத்துக்காகவே
இந்த சரீரம் உண்டாயிருக்கிறது. ஆகையால் இது அவனுக்கு சரீரமாகிறது. இப்படியே சேதனாசேதன வஸ்துக்களெல்லாம்,
ஈச்வரனுடைய ஸ்வரூபத்தின் ஸம்பந்தத்தால் நிலைபெற்று அழியாமல் அவன் ஸங்கல்பத்தால் தாங்கப்பட்டு லீலாரசம் போகரஸம்
ஆகிய அவனுடைய ப்ரயோஜனத்துக்காகவே யிருக்கிறபடியால், இவையெல்லாம் ஈச்வரனுக்கு சரீரமாகிறது. இந்த அம்சம் பலச்ருதிகளில் சொல்லப்பட்டிருக்கிறது.

பிந்நா : ……………..சேதனா : —- இந்த ஜீவாத்மாக்களெல்லாம் ஈச்வரனைக் காட்டில் ஸ்வத: வேறுபட்டவர்கள்.

„ஸத்யா ……………..க்ருதா… இஜ்ஜீவாத்மாவுக்கு கர்மத்தால் நேர்ந்த ப்ரக்ருதி ஸம்பந்தம் ஸம்ஸாரம்.
அந்த ஸம்பந்தம் ஈச்வரனுடைய நிக்;ரஹ ஸங்கல்பத்தால் உண்டாகிறபடியால் வாஸ்தவமாயுள்ளது.
அந்த ப்ரக்ருதி ஸம்பந்தத்தால் உண்டாகும் ஆசை, த்வேஷம், ஸ{கம், துக்கம், இவை முதலானவைகளும்,
அவற்றின் அனுபவங்களும், வாஸ்தவமாயுள்ளபடியால் அது ப்ராந்தியன்று.

„முக்திஸ்து ………………ததநுபூத்யாக்யா… —- ஈச்வரன் விஷயத்தில் இந்த சேதனன் பண்ணும் பக்தி, ப்ரபத்தி
இவையிரண்டில் ஒன்றால் பரமபதம் என்கிற ஒரு லோகத்தில் அந்த ஈச்வரனைக்கிட்டி அவனை அனுபவிப்பது மோக்ஷம்.

ச்வேதாச்வதரோபநிஷத்தில் ஈச்வரனைத்தொடங்கி „ப்ரக்ருதிக்கும் ஜீவாத்மாவுக்கும் பதி… என்றும் „
ஸம்ஸாரத்தினின்றும் மோக்ஷத்துக்கும் ஸம்ஸார பந்தத்துதக்கும் ஹேதுவானவன்… என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
இங்கு, ஈச்வரன் ஜீவாத்மாவுடைய ஸம்ஸார பந்தத்துக்;கும் ஸம்ஸாரத்தினின்றும் விடப்படுவதற்கும் காரண பூதன் என்று
சொல்லுகிறபடியால், ஈச்வரன் ஜீவாத்மாவுக்கு ஸம்ஸார ஸம்பந்தத்தையும் மோக்ஷத்தையும் உண்டாக்குகிறான் என்று கிடைக்கிறது.

“தாநஹம் த்விஷத: க்ரூரான் ஸம்ஸாரேஷ{ நராதமாந் !
க்ஷpபாம்யஜஸ்ரமசுபாநாஸ{ரீஷ்வேவ யோநிஷ{……–ப.கீ.16-19.
இந்தச்லோகத்தில் என்னிடத்தில் த்வேஷம் முதலான துஷ்கர்மங்களைச் செய்யுமவர்களை ஸம்ஸாரத்தில் தள்ளுகிறேன்.
அதிலும், அஸ{ர ஜன்மத்தில் தள்ளுகிறேன் என்று பகவான்தானே சொல்லியிருக்கிறபடியாலும்,

‘தேஷாமஹம் ஸமுத்தர்த்தாம்ருத்யு —ஸம்ஸார-ஸாகராத்!
பவாமி நசிராத் பார்த்தமய்யாவேசிதசேதஸாம் ! ! “.ப.கீ-12,ச்லோ-7.

இந்தச்லோகத்தில், ‘என்னிடத்தில் மிகவும் பக்தி பண்ணுபவர்களை ஸம்ஸாரமாகிற ஸாகரத்தினின்றும் எடுத்து விடுகிறேன்
மோக்ஷத்தை அடையும்படி செய்கிறேன்” என்றுபகவானே சொல்லியிருக்கிறபடியாலும், பாபகர்மங்களைச் செய்பவர்களுக்கு
அதற்குப் பலனாக ஜந்ம பரம்பரையாகிற ஸம்ஸாரத்தையும், பகவத்பக்தி ;பண்ணுபவர்களுக்கு மோக்ஷத்தையும் உண்டாக்குகிறான்
என்று கீழ்ச்சொன்ன ச்ருதியின் அர்த்தம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
இதனால், பகவானுடைய நிக்ரஹத்தால் (தண்டனையால்) ஸம்சாரம் என்றும், அநுக்ரஹத்தால் மோக்ஷம் என்றும் கிடைக்கிறது.
ஆகையால் பகவானுடைய நிக்ரஹத்தால் ஏற்படும் ஸம்ஸாரம் ஸத்யம் என்று ஸ்பஷ்டமாகிறது.

தைத்ரீயோப நிஷத்தில் ஆநந்த வல்லியில், பகவானுடைய உபாஸனத்தைச் செய்யுமவன் பரம வ்யோமத்தில் (ஸ்ரீவைகுண்டத்தில்)
ப்ரஹ்மத்தோடுகூட ப்ரஹ்மத்தின் குணங்களையும் அநுபவிக்கிறான் என்று சொல்லியிருக்கிறபடியால் ஸ்ரீ வைகுண்டத்தில் பகவானையும்,
அவனுடைய கல்யாணகுணங்களையும் அனுபவிப்பது மோக்ஷம் என்று கிடைக்கிறது.
ஆகையால் ஜீவனும் ப்ரஹ்மமும் வேறு என்கிற ப்ரமம் ஸம்ஸாரமென்றும்,
ஜீவனுக்கும் ப்ரஹ்மத்துக்கும் ஐக்யஜ்ஞானத்தால் உண்டாகும் அந்த ப்ரம நிவ்ருத்தி முக்தி என்னும் பக்ஷம்,
ச்ருதிஸம்மதமன்று என்று ஸ்ரீ பகவத் ராமாநுஜரின் அபிப்ராயம்.

ஜகத்-ஸத்யத்வ-நிரூபணம்

ப்ருதிவீ, ஜலம், தேஜஸ், வாயு, ஆகாசம் என்கிற ஐந்து பூதங்களும்,
அவைகளின் கலப்பினால் உண்டான சராசரரூபமான இந்த ப்ரபஞ்சமும் ஸத்யமாயுள்ளது.
கானல்நீர்போல் (பாலைவனத்தில் மத்யானத்தில் ஸ_ர்யகிரணங்கள் பரவுவதால் காணப்படும் ஜலம்)அஸத்யமன்று.
கானல் நீரில் ஸ்நாநம், பானம் முதலியவை செய்யமுடியாது. அவ்வாறில்லாமல் நதியிலுள்ள ஜலம் ஸ்நாநம்
முதலியவைகளுக்கு உபயோகப்படுகிறபடியால், கானல் நீரைப்போல இதுவும் பொய்யாயிருந்தால் அதைக்கொண்டு கார்யம் நடவாது.
ஆகையால் ஆற்றின் ஜலம் ஸத்யமானால், ப்ரவாஹத்திற்கு (வெள்ளம்) முன்னும் பின்னும் ஜலம் காணவேண்டுமே,
அவ்விதம் இல்லாததை எப்படி உண்மையானது என்று சொல்லலாம் என்னில், முன்னும் பின்னும் காணாததால் ப்ரவாஹம்
அநித்யமென்று கிடைக்குமேயொழிய அஸத்யமென்று கிடைக்காது.
அஸத்யமாவது—ஒரு கார்யத்திற்கும் உதவாதது.
அநித்யமாவது—கார்யத்திற்கு உபயோகப்பட யோக்யதையோடு சிலகாலமிருந்து அழிந்துபோவது.
இதற்கு த்ருஷ்டாந்தம்—
மண்ணை ஜலத்தைச் சேர்த்து பிசைந்தால் அது உருண்டையாகிறது. பிறகு குயவனால் பானையாகச் செய்யப்படுகிறது.
அப்போது ஜலம் கொண்டுவருவது முதலிய கார்யங்களுக்கு உபயோகப்படுகிறது.
கல், தடி முதலானவைகளால் அந்தப் பானையை அடித்தால், அது பானை என்னும் ஆகார(உருவம்)த்தைவிட்டு ஓடாகிறது.
அந்த ஓட்டை உடைத்தால் பொடியாகி மண்ணாகிறது. ஆகையால் மண் என்னும் வஸ்து நித்யமாயுள்ளது.
இடையிடையே வரும் ஆகாரங்கள் அநித்யம். முதலிலுள்ள வஸ்து எப்பொழுதும் உள்ளதுதான்.
ஆனால் நதிஜலமும் முன்னும் பின்னும் இருக்க வேண்டாவோவென்றால்—அதில் சிறிதுபாகம் மணலில் மறைந்தும்,
சிறிது ஸ_ர்யகிரணங்களில் கலந்தும் போகிறபடியால் காணப்படுவதில்லை. வஸ்து உள்ளதுதான்.
ஆனால் ப்ரவாஹமாயுள்ள ஆகாரம் அப்போது இல்லாதபடியால் கார்யகாரி
(குளிப்பது, குடிப்பது முதலிய கார்யங்களுக்கு உபயோகமாயிருப்பது) ஆவதில்லை.
இதனால் அது அஸத்யமாக மாட்டாது, அநித்யமாகும். நித்யமாவது எப்போதும் அநுவர்த்திக்கும் வஸ்து.
ப்ரவாஹாகாரம் எப்போதும் அநுவர்த்தித்து வராமையால் அநித்யமாய் முடிகிறது.
இப்படியே, மண்பொன் முதலியவைகளுக்கு அப்போதைக்கப் போது வரும் பானை, காப்பு முதலிய ஆகாரங்களிலும் கண்டுகொள்வது.
அநித்யமாயிருப்பது தான் அஸத்யமாகை என்றால், இப்படிப் பட்ட அஸத்யமாகை விருத்தமன்று.
இந்த அஸத்யமாகையும் ப்ரவாஹாகாரத்திற்கே தவிர எப்போதும் அநுவர்த்திக்கும் ஜலத்திற்கு இல்லை.

ஸத்யமாவது-எப்போதும் அநுவர்த்திக்கும் வஸ்து. இது இரண்டு விதம்–
ஒன்று ஸ்வரூபத்தில் மாறுபாடில்லாமல் அநுவர்த்திக்கும் ƒ மற்றொன்று ஸ்வரூபத்தின் மாறு பாட்டோடு அநுவர்த்திக்கும்.
முதலில் சொல்லியது அபரிணாமி-நித்யம். பரப்ரஹ்மமும் ஜீவாத்மாக்களும் இவ்வகைப்பட்டன.
இரண்டாவது (மாறுதல் அல்லது விகாரத்தையுடையது பரிணாமி-அதில்லாதது அபரிணாமி)
பரிணாமி-நித்யம்ƒ ப்ரக்ருதி, காலம் முதலியவைகள் இதைச் சேர்ந்தன.

ப்ரக்ருதியாவது ஆகாசம், வாயு, தேஜஸ், ஜலம், ப்ருதிவீ முதலிய விகாரங்களை அடைந்து கொண்டு
இவைகளுக்கெல்லாம் மூலகாரணமான வஸ்து. உலகில் காணப்படும் எல்லாப் பதார்த்தங்களும் இதன் விகாரங்களேயாகும்.
ப்ரக்ருதி-ஸ்வரூபம் எப்போதும் அநுவர்த்திக்கும் ƒ அதன் விகாரங்கள் அவ்வப்போது உண்டாய் சிலகாலமிருந்து பிறகு கழியும்.
அவைகளைக் கொண்டு காரியங்கள் நடக்கிறபடியால் அவைகளெல்லாம் ஸத்யம்.
ஆனால் ஸ்வப்நத்தில் ஒரு மனிதன் பொன், வெள்ளி முதலியவைகளைக் காண்பதாகவும், அவைகளைக் கொண்டு காப்பு, கடுக்கன்
முதலியவை செய்து தரிப்பதாகவும் காண்கிறான். இப்படி ஸ்வப்நததில் காணப்பட்ட வெள்ளி முதலானவைகளைக் கொண்டு
நகை செய்வது தரிப்பது முதலிய காரியங்கள் நடக்கிறபடியால் அவை ஸத்யமாகத் தடையென்ன என்றால்,
ஸ்வப்நகாலத்தில் அவைகளால் சில கார்யங்கள் நடந்ததாகக் கண்டாலும், து}ங்கி எழுந்ததும், தன் கையிலும் காதிலும்
பூண்டு கொண்டதாகக் கனவு கண்ட காப்பு கடுக்கன் முதலியவைகள் காணப்படுவதில்லை. ஸ்வப்நம் கண்டேன், ஒன்றுமில்லை என்று
அந்த வஸ்துக்களுக்கு இல்லாமை காண்கிறபடியால் ஸ்வப்நத்தில் கண்ட வஸ்துக்களும் அதனால் உண்டானதாகக் கண்ட காரியங்களும் பொய்யாகின்றன. …. ஜாக்ரத்தசையிலும் (விழித்துக் கொண்டிருக்கும் காலம்) நடுப்பகலில் கானல் நீரைக் கண்டு, பின்பு கிட்டப்போய்ப் பார்த்தால்,
இது ஜலமன்று நாம் ப்ரமித்தோம் என்று புத்தி உண்டாகிறபடியால் இது மித்யை.
உண்மையான நதீ ஜலத்தில் ஜாக்ரத்–தசையில் நாம் ஸ்நாநபானம் செய்தர்லும், செய்தது பொய்யென்று பின்னால் தோன்றாதபடியாலும்,
ப்ரத்யக்ஷத்தால் காணப்படுகிற சராசர ரூபமான ப்ரபஞ்சம் ஒன்றுமில்லை என்கிற ஞானம் உண்டாகாமையாலும் இவை உண்மையாக உள்ளவை.
இங்கு இது அறியத்தக்கது—-சில இடங்களில் இல்லாத வஸ்துக்கள் தோன்றுகின்றன. சில இடங்களில் இருக்கிற வஸ்துத்தான் தோன்றுகிறது.
ஆகையால் ஒரு வஸ்து தோன்றுகிறது என்கிற இவ்வளவு மாத்திரத்தைக் கொண்டு வஸ்து உண்மையாகவே உள்ளது என்று நிச்சயிக்கக் கூடாது.
கண்டபின் கிட்டப் போய்ப் பார்த்து, வஸ்து அங்கே இல்லாமற்போனால், „வஸ்து இல்லை, இருப்பதாக நாம் ப்ரமித்தோம்…
என்று ஞானமுண்டானால் முன் பிறந்த ஞானம் ப்ரமமென்றும், கண்டது மாத்ரமேயொழிய இங்கே ஒன்றுமில்லை
என்று ஞானமுண்டாகாதபோது முன்புண்டான ஞானம் …… யதார்ததமென்றும் நிச்சயித்து,
இவைகளைக் கொண்டு வஸ்து உண்டு இல்லை என்று நிச்சயிக்கவேண்டும்.

ஸ்வப்நத்தில் கண்ட வஸ்து து}ங்கி எழுந்த பின் கண்டதொழிய ஒன்றுமில்லை யென்றும், பாலைவனத்தில் தோன்றியது
ஜலம் இல்லை என்று உறுதியாகத் தெரிகிறபடியாலும், முதலிலுண்டான ஞானம் ப்ரமமாய், அதில் தோன்றிய வஸ்துவும் அஸத்யமாகிறது.
ப்ரத்யக்ஷத்தில் காண்கிற ப்ரபஞ்சத்திலுள்ள வஸ்துக்களில் இவை ஒன்றுமில்லை என்கிற புத்தியுண்டாகக் காணாமையால்
இந்த ப்ரத்யக்ஷம் யதார்த்தமாகி அதில் காணும் வஸ்துக்களும் ஸத்யமாக ;இருக்கின்றன. இது ஸத்யம், இது மித்யை, என்று அறிவதற்கு இது வழி.

சராசரரூபமான உலகம் ப்ரத்யக்ஷத்தால் அஸத்யம் என்று ஏற்படாவிட்டாலும், ச்ருதியில் „ப்ரபஞ்சமொன்றும் ஸத்யமன்று…
என்று சொல்லப்படுகிறபடியால், இந்த ப்ரபஞ்சம் அஸத்யம் என்று ஒப்புக் கொள்ள வேண்டாவோ என்றால் ஸர்வஸம்மதமான
ச்ருதிகளில் அப்படிச் சொல்லியிருப்பதாகக் காணவில்லை. மேலும் ப்ரத்யக்ஷ விருத்தமான விஷயத்தை ச்ருதி சொல்லவும் மாட்டாது.
மேல் பார்வையில் சில ச்ருதிகளுக்கு அப்படி அர்த்தம் தோன்றினாலும், ப்ரத்யக்ஷத்திற்கு விரோதமில்லாமல் அவைகளுக்கு
அர்த்தம் சொல்ல முடியுமாயிருக்க, ப்ரத்யக்ஷத்திற்கு விரோதமாக அர்த்தம் செய்வது உசிதமன்று.

ப்ரத்யக்ஷத்தால் அறிந்து கொள்ள முடியாத அத்விதீய- ப்ரஹ்ம-ஆத்மைக்யத்தைத் தெரிவிக்கவே ச்ருதி அவதரித்திருக்கிற படியால்
இவைகளுக்கு ப்ரபஞ்சம் மித்யை என்பதிலேயே நோக்கம். ஆகையால் ப்ரத்யக்ஷத்திற்கு விருத்தமாயிருந்தாலும்
ப்ரபஞ்ச மித்யாத்வமே (உலகம் பொய் என்பது) ச்ருதிக்குப் பொருள் என்று ஒப்புக்கொள்ளவேண்டாவோ என்னில் –
அத்விதீய-ப்ரஹ்ம – ஆத்மைக்ய – ஞானத்தை உண்டாக்குவதற்காக ச்ருதி ஆவிர்பவித்தது என்று ஸித்தித்தாலன்றோ
ச்ருதிக்கு ப்ரபஞ்ச – மித்யாத்வம் பொருள் என்று ஒப்புக்கொள்ளவேண்டும். அது அப்படி இல்லை.
ப்ரத்யக்ஷத்திற்கு எட்டாததாய் ஸம்ஸாரிகள் (கர்மத்தால் இவ்வுலகில் உழலும் ஜீவன்கள்) அவசியம் அறியவேண்டிய
அநேகார்த்தங்களை தெரிவிப்பதற்காகவே ச்ருதிகள் தோன்றியிருக்கின்றன. ஜகதீச்வரன் ஒருவன் இருக்கிறான் என்றும்,
அவனை ஆராதித்தால் நமக்கு இஷ்டமான பலன்களை கொடுக்கிறான் என்றும்,
இது முதலான பல விஷயங்களைத் தெரிவிப்பதற்காக ச்ருதி ஆவிர்பவித்தது – ஈச்வரன் ஜகத்தை ஸ்ருஷ்டிக்கிறான், ரக்ஷpக்கிறான் ,
ஜகத்திற்குள் புகுந்து அதை நியமிக்கிறான், தன் ஸங்கல்ப மாத்ரத்தாலே தரிக்கிறான், தன்னை ஆராதித்தவர்களுக்கு பலத்தைக் கொடுக்கிறான்
என்று இது முதலான ப்ரத்யக்ஷத்தால் அறிய முடியாத பல அர்த்தங்களைத் தெரிவிக்கிறது என்று ஒப்புக்;கொண்டால்
ச்ருதியின் ஆவிர்பாவம் ப்ரயோஜனமுள்ளதாயாகவில்லையா?
இப்படியிருக்க, அத்விதீய – ப்ரஹ்ம – ஆத்மைக்யத்தைத் தெரிவிக்கைக்காக ச்ருதி ஆவிர்பவித்தது என்று ஒப்புக்கொண்டு,
ப்ரபஞ்சத்தை நிஷேதிக்கிறாப்போல் (இல்லையென்று சொல்வது) மேல் பார்வைக்கு தோன்றும் சில ச்ருதிகளுக்கு
அதுவே அர்த்தமென்று சொல்லுவது உசிதமன்று. அப்படி ஒப்புக்கொண்டால் ஜகத் ச்ருஷ்டியாதிகளைச் சொல்லும்
ச்ருதிகளுக்கு வையர்த்யம் (ப்ரயோஜனமின்மை) வரும்.

இங்கே இது தெரிந்து கொள்ளவேண்டும் — ச்ருதிகளில் சில, ‘ஈச்வரன், ரக்ஷகன், ஜகத்து ரக்ஷpக்கப்படுகிறது,
ஈச்வரன் நியமிக்கிறவன், ஜகத்து நியமிக்கப்படுகிறது, அவன் தரிக்கிறவன், இது தரிக்கப்படுகிறது” என்று
இவ்விதமாக ஈச்வரனுக்கும் ஜகத்துக்கும் உள்ள பலவித ஸம்பந்தங்களைச் சொல்லுகின்றன. சில ச்ருதிகள் ஜகத்து இல்லை
என்று நிஷேதிக்கிறாப்போல் தோன்றுகின்றன. இப்படி ச்ருதிகள் இரண்டுவிதமாக இருக்கிறபடியால்,
ச்ருதிக்கு ஜகத்துக்கும் ஈச்வரனுக்கும் உள்ள முன் கூறப்பட்ட ஸம்பந்தங்களை சொல்வதில் நோக்கா,
அல்லது ஜகத்தை இல்லை என்று சொல்வதில் நோக்கா என்று விசாரிப்போம். ஜகத்தை நிஷேப்பதில்தான் நோக்கம் என்று
ஒப்புக்கொண்டால் ஜகத்துக்கும் ஈச்வரனுக்கும் ஸம்பந்தங்களைச் சொல்லும் ச்ருதிகள் வ்யர்த்தமாய் விடுகின்றன.
ஏனெனில், ப்ரத்யக்ஷத்தினால் ஈச்வரனுக்கும் ஜகத்துக்கும் ஒரு ஸம்பந்தம் தோன்றுகிறது.
அந்த ஸம்பந்தத்தை இந்த ச்ருதிகள் அநுவாதிக்கின்றன (வேறொன்றினால் தெரிந்துகொண்டதை மறுபடி சொல்வது) என்று சொல்ல ஒண்ணாது.
அந்த ஸம்பந்தங்கள் ப்ரத்யக்ஷத்திற்கு எட்டினாலன்றோ அதற்கு அநுவாதம் என்று சொல்லலாம்.
ஈச்வரனே கண்ணுக்கு எட்டாதவனாயிருக்க அவனோடு ஸம்பந்தம் எப்படி கண்ணுக்குத் தெரியும்?
இனி அந்த பலவிதமான ஸம்பந்தங்களை ஜகத்தோடு நிஷேதிக்கைக்காக இந்த ஸம்பந்தங்களை ச்ருதி விதிக்கிறது
(ஏற்கனவே தெரியாததை தெரிவிக்கிறது, அல்லது ஒரு கார்யத்தில் ஈடுபடாத ஒருவனை அதை செய்யும்படி து}ண்டுவது.)
என்று சொல்வோமானால், அப்போது கண்களுக்கு எட்டாத அர்த்தங்களை ச்ருதி தானே சொல்லி தானே நிஷேதிக்கின்றது
என்று சொன்னதாக ஆகும். இது பைத்தியக்காரனுடைய வ்யாபாரம் போலாகும்.

ஈச்வரனுக்கும் தனக்கும் உள்ள ஸம்பந்தத்தை அறிந்து அவனை உபாஸித்து இஷ்ட பலன்களை அடைவதற்காக
இந்த ஸம்பந்தங்களை ச்ருதி சொல்கிறது என்றும் சொல்லக் கூடாது.
ஏனென்றால் அப்போது ப்ரபஞ்ச – நிஷேத – ச்ருதிகள் (ப்ரபஞ்சத்தை இல்லை என்று சொல்லும் ச்ருதிகள்)
ப்ரபஞ்சத்தை மாத்ரம் நிஷேதிக்கிறதா அல்லது ப்ரபஞ்சத்தோடு கூட ஈச்வரனுடைய ரக்ஷகத்வம் (காப்பாற்றும் தன்மை)
முதலிய குணங்களையும் நிஷேதிக்கிறதா என்று விசாரிப்போம்.
ப்ரபஞ்சத்தை மாத்ரம் நிஷேதிக்கிறது என்றால் ஈச்வரனுடைய ரக்ஷகத்வாதி குணங்களுக்கு நிஷேதமில்லை என்று கிடைக்கும்.
இதனால் ப்ரஹ்மம் நிர்குணம் (குணமற்றது) அத்விதீயம் (இரண்டாவதாக ஒன்று இல்லாதது) என்று சொல்லுவது ஸித்தியாமல்
உத்தேச்ய ஸித்தி (விருப்பத்தினுடைய நிறைவேறுதல்) பிறவாது. அந்த குணங்களையும் நிஷேதிக்கிறது என்று ஒப்புக்கொண்டால் ,
அப்போது ஈச்வரனுக்குச் சொன்ன ரக்ஷகத்வாதி குணங்கள் ஒன்றுமில்லை என்று கிடைக்கும்.
ஆகையால் ஈச்வரனுக்கும் ஜகத்துக்கும் கீழ்ச்சொன்ன ஸம்பந்த விசேஷங்களை விதிக்கிற வாக்யங்களுக்கு உத்தேச்யம் ஸித்தியாமல்,
அவைகள் வ்யர்த்தமாய் விடும். தன் ரக்ஷணார்த்தமாக ஈச்வரனை உபாஸிப்பதில் ப்ரவ்ருத்திப்பிப்பதன்றோ
அந்த வாக்யங்களுக்கு உத்தேச்யம்? ரக்ஷகத்வாதி – குணங்கள் அவனுக்கு இல்லை என்று தெரிந்தால்,
தன் ரக்ஷணத்திற்காக சேதநர்கள் எப்படி முயலுவார்கள்? ஆகையால் ப்ரபஞ்சத்தை நிஷேதிக்கிறது போல் தோன்றும்
வாக்யங்களுக்கு ப்ரபஞ்ச நிஷேதத்தில் தாத்பர்யம் கொள்ளுகை அநுபந்நம் (உடன்பாடில்லை).
ஆகையால் சில வாக்யங்கள் ஜகத்துக்கும் ஈச்வரனுக்கும் பலவித ஸம்பந்தங்களை சொல்லி,
அதனால் ப்ரபஞ்சத்திற்கு ஈச்வர பாரதந்த்ர்யத்தை (ஈச்வரனுக்கு அதீனமாய் இருத்தல் – கட்டுப்பட்டதாய் இருத்தல்) அறிவிக்கின்றன.
இந் நிஷேத வாக்யங்கள் ப்ரபஞ்சத்திற்கு ஸ்வாதந்த்ர்யத்தை (சுதந்திரத்தை) நிஷேதிக்கின்றன என்று கொள்ளுகை உசிதம்.
அப்போது ஸ்வாதந்த்ர்ய நிஷேத முகத்தால் (தன்னிஷ்டப்படி நடக்கச் சக்தியற்றது என்று சொல்லுகிற வழியால்)
ஜகத்துக்கு ஈச்வரனோடு ஸம்பந்தம் சொல்லும் ச்ருதிகளால் கிடைத்த ஈச்வர பாரதந்த்ர்யத்தை நிலைப்படுத்தியதாய்
எல்லா வாக்யங்களும் ஸார்த்தகமாகின்றன (ப்ரயோஜனத்தோடு கூடியதாகின்றன). ஆகையால் ச்ருதிகளில் ஜகத்துக்கு நிஷேதம் இல்லை.
ச்ருதி ப்ரஹ்மம் அநந்தம் (அளவற்ற தன்மை) என்று சொல்லுகிறது.
அநந்தமாகையாவது இங்கே இல்லை, இப்பொழுது இல்லை, இதுவன்று என்கிற அளவு இல்லாமலிருக்கை.

ஜடமான (ஞானமில்லாதது) ப்ரபஞ்சம் ஸத்யமாக இருந்ததேயாகில் அஜடமான ப்ரஹ்மம் ஜடமான ப்ரபஞ்சமன்று என்று
அளவுவரவேண்டி இருப்பதால் ச்ருதியில் ப்ரஹ்மத்திற்குச் சொன்ன ஆநந்த்யம் (அளவற்ற தன்மை) அநுபந்நம் (அயுக்தம்) ஆகிறது.
ப்ரஹ்மம் அத்விதீயம் என்று ச்ருதி சொல்லுகிறபடியால் ப்ரஹ்மத்தைக் காட்டிலும் இரண்டாவதான வஸ்து இல்லை என்று கிடைக்கிறது.
இந்த த்வைத (பல பேதங்களை உடைய உலகம்) ப்ராந்தி (கற்பனை) மாத்திரமாயுள்ளது,
அத்வைதமே பரமார்த்தமாயுள்ளது என்று சில ச்ருதிகள் சொல்லுகின்றன. இப்படியே சில புராணங்களும் சொல்லுகின்றன.
இவைகளால் ப்ரபஞ்சம் அஸத்யமென்று கிடைக்கவில்லையோ என்றால் :-

அநந்தமாகையாவது – தேசத்தாலும், காலத்தாலும், வஸ்துவாலும் அளவில்லாமலிருக்கை. இவைகளில் மூன்றாவது தனக்கு மேற்பட்ட
ஒரு வஸ்து இல்லாமலிருக்கையே ஒழிய அந்த வஸ்துவன்று என்னுமளவில்லாமல் இருக்கையன்று.
ப்ரபஞ்சம் ஸத்யமாக இருந்தாலும் ப்ரஹ்மத்தைக் காட்டிலும் ஒரு ப்ரகாரத்தாலும் உயாந்த வஸ்து வேறொன்று இல்லாமையால்
அதற்கு ஒருவித அனுபபத்தியும் இல்லை. சிலவிடங்களில் அத்விதீயம் என்கிற ச்ருதிக்கு தன்னோடு ஸமமான
இரண்டாவது இல்லை என்று பொருள். ஜகத் காரணத்தைச் சொல்லுமிடத்தில் இந்த அத்விதீய பதத்திற்கு தன்னை ஒழிய
நிமித்த காரணம் (பானைக்கு குயவன் நிமித்த காரணம்) வேறில்லை என்று பொருள்.

எல்லாராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ச்ருதியில் ப்ரபஞ்சம் மாயாமாத்ரமென்று சொல்லப்பட்டவில்லை.
அப்படிச்சொல்லும் வாக்யத்தை ச்ருதியென்று ஒப்புக்கொண்டாலும், ஜீவாத்மாக்களில் தோன்றும் தேவன், மனுஷ்யன்
முதலிய பேதங்கள் பொய்யானவை, எல்லா ஜீவன்களும் ஞானைக – ஆகாரர்களாய் ஸமானர்களர்யிருப்பார்கள்,
அவர்களுடைய ஆகாரத்தில் பேதம் கிடையாது என்று பொருள். புராணங்களில் சொல்லப்படும்
ஸ்வப்ந – த்ருஷ்டாந்தத்திற்கு, ஸ்வப்நத்தில் காணப்படும் வஸ்துக்கள் போல, இந்த உலகம் தோன்றுவதும்
மறைந்து போவதுமாய்க் கொண்டு, அஸ்திரம் (நிலையற்றது) என்பதில் தாத்பர்யம்.
ஆகையால் ஒரு ப்ரமாணத்தாலும் ப்ரபஞ்சம் இல்லை என்று புத்தி பிறக்கிறதில்லையாதலால், இது ஸத்யமென்று ஸித்திக்கிறது.

—–

அத்வைத ஸித்தாந்தம்
இதற்கு ப்ரவர்த்தகர் – ஸ்ரீசங்கராச்சாரியார்

“ப்ரஹ்மைகம் பரமார்த்த – ஸத் ததிதரன் – மாயா மயத்வான் – ம்ருஷா
ப்ரஹ்வைகமுபாதி – பிமபித – மதோ ஜீவேச – பாவம் கதம்!
ப்ராந்திஸ் – ஸம்ஸ்ருதி – ரஸ்ய தத் – ப்ரசமனம் முக்திஸ் – ததப்யாத்மநோ
ப்ரஹ்மைக்யாவகமாத் ச்ருதி – ச்ரவண – ஜாத் இத்யாஹ{ரத்வைதிந:!!”

இது இந்த ஸித்தாந்தத்தின் ஸங்க்ரஹ ச்லோகம்.
ஏகம் – தனக்கு ஸஜாதீயமானதும், விஜாதீயமானதும், ஒன்றுமில்லாததாய், தன்னிலும் ஒரு தர்மமும் இல்லாததான,
ப்ரஹ்ம – ஆத்ம வஸ்து, பரமார்த்த ஸத்பரமார்த்தமாயுள்ளது
(ஆத்ம வஸ்துவுக்கு ஸஜாதீயமானது மற்றொரு ஆத்மா, விஜாதீயமானது ஆத்மாவைக் காட்டில் வேறுபட்டது.)
இதனால் இரண்டாவது ஆத்மாயில்லை என்றும், ஆத்மா தவிர மற்றொரு வஸ்து இல்லை என்றும்,
ஆத்ம வஸ்துவில் ஒரு தர்மமும் இல்லை என்றும் சொன்னதாகிறது.

இங்கு ‘ப்ராதிபாஸிகஸத்” ‘வ்யாவஹாரிகஸத்” இவைகளைக் காட்டில் ஆத்ம வஸ்துவுக்கு வாசி தோன்றுவதற்காக
‘பரமார்த்தஸத்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. ‘ததிதரன் …. ம்ருஷா” – ப்ரஹ்மத்தைக் காட்டில் வேறுபட்டது
மாயையின் கார்யமானதால் பொய்;. ‘ப்ரஹ்மை …. கதம்” – ஒரு ப்ரஹ்மமே உபாதியில் ப்ரதிபலித்ததாய்
அந்த ப்ரதிபலனத்தால் ஜீவனாகவும், ஈச்வரனாகவும் ஏற்பட்டது.

‘ப்ராந்தி …. அஸ்ய”- ஜீவாத்மாவுக்கு நான் ஞாதா, நான் கர்த்தா, நான் போக்தா, இது முதலிய ப்ராந்திதான் ஸம்ஸாரம்.

‘தத்ப்ரசமனம் முக்தி:” அந்த ப்ராந்தியின் நிவ்ருத்திதான் மோக்ஷம்.

‘ததபி …. ச்ரணஜாத்” தத்வமஸி என்கிற வேதாந்த வாக்ய ச்ரவணத்தால் உண்டாகும் ப்ரஹ்மாத்மைக்ய ஜ்ஞானத்தால்
(தனக்கு ப்ரஹ்மத்தோடு ஐக்ய ஜ்ஞானத்தால்) அந்த ப்ராந்தி நிவ்ருத்தி உண்டாகிறது.

‘இத்யா … ந:” என்றிப்படி அத்வைதி வேதாந்திகள் சொல்கிறார்கள்.

1. ப்ரஹ்மத்துக்கு ஸத்யத்வ நிரூபண ப்ரகரணம்
ப்ருதிவீ (பூமி), ஜலம், தேஜஸ் (ரூபம்), வாயுஈ ஆகாசம் என்று பெயருடைய பஞ்ச பூதங்களும்,
அவைகளுடைய கலப்பாலுண்டான ‘பௌதிகம்” (பூதங்களிலிருந்து உண்டானவை), என்று பெயருடைய
சரம், அசரம் என்று இரண்டு வகைப்பட்ட நமக்குத் தென்படும் ;எல்லா வஸ்துக்களும் வாஸ்தவமாவையன்று.
பாலைவனத்தில் மத்யாஹ்னத்தில் ஸ_ர்ய க்ரணங்கள் பரவ அவ்விடத்தில் வாஸ்தவமாயில்லாத (உண்மையற்ற)
ஜலப்ரவாஹமும் (கானல் நீரோட்டம்) அதின் அலைகளும் காணப்படுவதுபோல இந்த ப்ரபஞ்சமும் உண்மையில்லாதபோதிலும்
உள்ளதுபோல் தோன்றுகிறது. அங்கே பரவிய சூரிய க்ரணங்கள் ஜலம்போல் தென்படுவதுபோல,
இங்கும் எங்கும் பரவிய ஒரு வஸ்து இப்படி ப்ரபஞ்ச ரூபமாய் காணப்படுகிறது. இதுதான் ப்ரஹ்மமென்று சொல்லப்படுகிறது.

வாஸ்தவமாயுள்ள ப்ரஹ்ம ஸ்வரூபம் தெரியாமல் பொய்யான ப்ரபஞ்சம் காணப்படுவானேன்? எனில்–
வாஸ்தவமான ப்ரஹ்மஸ்வரூபத்திற்கு அநாதிகாலமாக மாயையென்று ஒரு வஸ்துவின் ஸம்பந்தம் வந்திருக்கிறது.
இந்த மாயைக்கு தனக்கு ஆதாரமான ப்ரஹ்மத்தை மறைப்பது ஸ்வபாவம்.
அப்படி மாயையினால் மறைக்கப்பட்டதால் ப்ரஹ்மஸ்வரூபம் உள்ளபடி ப்ரகாசிப்பதில்லை.

இந்த ப்ரஹ்மத்துக்கு ஸத்தை, ப்ரகாசம், ஆநந்தம் என்று மூன்று ஆகாரங்கள் உண்டு.
அதனால்தான் இது ஸச்சிதானந்த ஸ்வரூபம் என்று சொல்லப்படுகிறது.
இந்த மூன்று ஆகாரங்களும் ப்ரஹ்ம ஸ்வரூபத்தைக் காட்டிலும் வேறுபட்டவையன்று.
இந்த ப்ரஹ்ம ஸ்வரூபத்தில் ஒரு குணமும் கிடையாது. ஆகையால் இது நிர்குணம் என்றும் நிர்விசேஷம் என்றும் சொல்லப்படுகிறது.

ஸச்சிதாநந்த ரூபமான இந்த ப்ரஹ்மம் வாஸ்தவமாக உள்ளதென்று
‘ஸத்யமாயும் விஜ்ஞானமாயும், ஆந்தமாயும் உள்ளது ப்ரஹ்மம்” என்றிது முதலிய ச்ருதிகளாலும்
அதற்கு ஒத்தாசையான யுக்திகளாலும் கிடைக்கிறது. யுக்தி எதுவெனில் — முன் சொன்ன த்ருஷ்டாந்தத்தில்
(உதாரணத்தில்) பாலைவனத்தில் பரவின ஸ_ர்ய க்ரணத்தில் ஜலப்ரமம் (ஜல உள்ளது போன்ற ப்ரமை) உண்டாகிறது.
இதுபோலவே அந்தந்த ப்ரமங்களில் ஒரு வஸ்துவிலே மற்றொரு வஸ்துவுக்கு ப்ரமம் உண்டாகிறது.
அவ்விதமே இங்கும் இந்த ப்ரபஞ்சத்தினுடைய ப்ரமம் ஒரு வஸ்துவில் உண்டாயிருக்கவேண்டும்.
அந்த வஸ்து ஸத்யமென்று ஒப்புக்கொண்டால், அதன் விஷயமான ப்ரமத்திற்கு ஆதாரம் ஒன்று ஒப்புக்கொள்ளவேண்டும்.
இப்படியே மேல் மேல் ஆதார (எதில் ஒன்றுக்குத் தோற்றம் ஏற்படுகிறதோ அது அதற்கு ஆதாரம்) பரம்பரை
(ஒன்றின்மேல் ஒன்றாக தொடர்ந்து ஒரு முடிவின்றிக்கே வருவது.) ஒப்புக்கொள்ள வேண்டியதாக வருகிறது.
ஆகையால் ப்ரபஞ்ச ப்ரமத்திற்கு ஆதாரமான வஸ்து ஸத்யமாக உள்ளது என்று ஒத்துக்கொள்ள வேண்டும் என்பதே.

ப்ரபஞ்ச மித்யாத்வ நிரூபணம்

ச்ருதி ப்ரமாணத்தால் இந்த ப்ரஹ்மம் ஸத்யமாய் ஸித்திக்கிறார்போல், ப்ரத்யக்ஷ ப்ரமாண பலத்தால் ப்ரபஞ்சம்
ஸத்யமாக ஸித்திக்கத் தடையென்னவென்றால் — இது ஸத்யமென்று சொல்ல வழியில்லை.
இது ஸத்யமென்றால் எப்போதும் காணப்படவேண்டும். மூன்று காலங்களிலும் உள்ளதுதான் பரமார்த்த ஸத்யமாக ஆகும்.
ப்ரபஞ்சத்திலுள்ள வஸ்துக்கள், உண்டாவதற்கு முன்னும், நாசத்திற்கு பனின்னும் காணப்படுவதில்லை.
ஸத்யமாய் இருந்தால் இறந்தகாலம், நிகழ் காலம், எதிர் காலம் எனப்படும் மூன்று காலங்களிலும் இருப்பதாகக் காணப்படவேண்டும்.
அப்படியன்றிக்கே ஒரு காலத்தில் உண்டாய், சிலகாலமிருந்து, பிறகு நாசமடைந்து முன்னும் பின்னும் காணப்படாத
வஸ்துக்கள் பரமார்த்த ஸத்யமாக ஆகமாட்டா. ஆகையால் இந்த்ர ஜாலாதிகளில் மாயையினால் அஸத்யமான வஸ்துக்கள்
தோன்றுகிறதுபோல இங்கும் மாயையினால் இந்த ப்ரபஞ்சம் உள்ளதாகத் தோன்றுகிறது.
இந்த அர்த்தம் ‘மாயையை உடையவன் ஒருவன் இப்ரபஞ்சத்தை ஸ்ருஷ்டிக்கிறான்” என்றும்,
‘பரமாத்மா மாயைகளால் அனேக ரூபமுள்ளவனாய்;த் தென்படுகிறான்” என்றும் சொல்லும் பலச்ருதிகளால் கிடைக்கிறது.

மாயையாவது ஸத்வம், ரஜஸ், தமஸ் என்கிற குணத்ரயமாயும்,
ஸத் (ஒரு காலத்திலும் இல்லையென்று சொல்லவொண்ணாத ப்ரஹ்மம் போன்றவை) என்றும்,
அஸத் (ஒரு காலத்திலும் இல்லாத முயல் கொம்பு போன்றவை) என்றும் சொல்ல முடியாததாயும்,
தன் ஆச்ரயத்தை(தான் சார்ந்துள்ளதை) மறைக்கும் ஸ்வபாவம் உள்ளதாயும், மேல் மேல் விகாரத்தை அடைவதுமான ஒரு வஸ்து.
இது அஜ்ஞானம், அவித்யை, மோஹம் என்கிற பெயர்களாலும் வ்யவஹரிக்கப்படும் (கையாளப்படும்).
சில ச்ருதிகள் இந்த மாயைக்கு நாசத்தைச் சொல்லுகிறபடியால், இந்த மாயை ஸத்யமன்று.
இந்த மாயை ப்ரஹ்மத்தை ஆச்ரயித்து, அதன் ஸ்வரூபத்தை மறைத்து, ஆகாசம், வாயு, தேஜஸ், ஜலம், ப்ருதிவீ என்கிற விகாரங்களையும்,
அதிலிருந்து உண்டாகும் மற்ற விகாரங்களையும் அடைந்து வருகிறது. அப்போது ப்ரஹ்மம் அந்தந்த ரூபமாய்த் தோன்றுகிறது.
காப்பு முதலிய நகைகளுக்கு தங்கம் காரணமாகிறது போல, ப்ருதிவீ முதலியவைகளுக்கு மாயை மூலகாரணமாயிருக்கும்.
இப்படி அஸத்யமான மாயாகார்யமானதால் (மாயையிலிருந்து உண்டாகும் வஸ்து) இந்த ப்ரபஞ்சம் அஸத்யமென்று கிடைக்கிறது.

அன்றிக்கே ச்ருதிகள், ‘பலவாகத் தோன்றும் வஸ்துக்கள் ஒன்றும் இல்லை” என்று சொல்லுகிறபடியாலும்,
இந்த ப்ரபஞ்சம் மித்யை (பொய்) என்று கிடைக்கிறது. ஆனால் முன் சொன்ன த்ருஷ்டாந்தத்தில் ஸ_ர்ய கிரணத்தில்
தென்படும் ஜலத்துக்கும் ப்ரஹ்மஸ்வரூபத்தில் தோன்றும் ப்ரபஞ்சத்திற்கும் வாசியுண்டு (வித்யாசம் உண்டு).
அந்த ஜலாதிகள் ப்ராதிபாஸிக-ஸத்ƒ ப்ருத்வீ முதலிய ப்ரபஞ்சம் வ்யாவஹாரிக ஸத்.
ஸத் என்பது ப்ராதிபாஸிகம், வ்யாவஹாரிகம், பரமார்த்திகம் என்று மூன்று வகைப்படும்.
இதில் ப்ராதிபாஸிக ஸத்தாவது ப்ரஹ்மம் தவிர வேறு வஸ்துக்களில் தோன்றி,
அந்த வஸ்துவின் உண்மையான ஸ்வரூபத்தை அறிவதினால் நிவ்ருத்திப்பது.
அதாவது து}ரத்திலிருந்து பார்க்கும்பொழுது முத்துச்சிப்பியின் ஸ்வரூபம் மறைந்து அது வெள்ளி என்று ப்ரமம் உண்டாகிறது.
பின்பு ஸமீபத்தில் போய் பார்த்தால் இது வெள்ளியன்று சுக்தி (முத்துச்சிப்பி) என்று தெரிகிறது.
இங்கு ப்ரமத்திற்கு ஆதாரமான சுக்தியினுடைய ஸ்வரூப ஜ்ஞானத்தால் வெள்ளி நிவ்ருத்திக்கிறது.
இவ்வாறு முத்துச்சிப்பியில் தோன்றும் வெள்ளிதான் ‘ப்ராதிபாஸிக ஸத்” என்று சொல்லப்படுகிறது.

வ்யாவஹாரிக ஸத்தாவது, ப்ரஹ்ம ஸ்வரூபத்தில் தோன்றும் ஆகாசம் முதலிய பூத பௌதிக ப்ரபஞ்சம்.
ப்ரஹ்மத்தின் உண்மையான ஸ்வரூபம் மறைந்து அதில் அஜ்ஞானத்தால் ஆகாசாதி ப்ரபஞ்சம் ஏற்படுகிறது.
வேதாந்த வாக்யங்களால் தத்வஜ்ஞானம் பிறந்து இரண்டாவது இல்லாததான ப்ரஹ்ம ஸ்வரூபத்தின் ஸாக்ஷhத்காரம் உண்டாகும்போது
முன் ஏற்பட்ட ஆகாசாதி ப்ரபஞ்சம் நசித்துப்போகிறது. இதனால் ப்ரஹ்ம ஸ்வரூபத்தின் தத்வஜ்ஞானம் தவிர
மற்றொரு தத்வஜ்ஞானத்தால் நசிப்பது ப்ராதிபாஸிக-ஸத் என்றும்,
ப்ரஹ்மஸ்வரூப-தத்வஜ்ஞானம் ஒன்றினால் மாத்திரம் நசிப்பது வ்யாவஹாரிக-ஸத் என்றும் ஏற்படுகிறது.

பரமார்த்தஸத்தாவது-ஒரு காலத்திலும் நிவ்ருத்தியாமல் (நீங்குதல்) எல்லா காலங்களிலும் அநுவர்த்திக்கும்
(இடைவிடாமல் இருத்தல்) வஸ்து. இதுதான் நிர்குண ப்ரஹ்மம்.

ஜீவ ஈச்வர பேத ப்ரம நிரூபணம்
ப்ரஹ்மத்தின் ஸ்வரூபத்தை மறைக்கும் ஸ்வபாவமுள்ளதான மாயைக்கு இரண்டு அம்சமுண்டு.
ஒன்று தலையெடுத்த ஸத்வகுணத்தை உடையதாயும், மற்றொன்று குறைந்த ஸத்வமுடையதாயும் இருக்கும்.
இவ்விரண்டில் முதலாவது மாயை என்றும், இரண்டாவது அவித்யை என்றும் சொல்லப்படும்.
இந்த இரண்டும் கண்ணாடிபோல் பிம்பத்தை க்ரஹிக்க சக்தியுள்ளது. ஆகையால் ப்ரஹ்மம் இவைகளில் ப்ரதிபலிக்கிறது.
இதில் மாயையில் ப்ரதிபிம்பம் ஈச்வரனென்றும், அவித்யையில் ப்ரதிபிம்பம் ஜீவனென்றும் ஒரே ப்ரஹ்மத்தில் பேதம் உண்டாகிறது.
சிலர் மாயையில் ப்ரதிபிம்பம் ஈச்வரனென்றும், மாயா பரிணாமமான அந்தக் கரணத்தில் ப்ரதிபிம்பம் ஜீவனென்றும் சொல்லுகிறார்கள்.
அவித்யா அம்சங்களும் அந்தக்கரணங்களும் அநேகங்களாகையால் அவைகளில் ப்ரஹ்ம – ப்ரதிபிம்பத்தால் பல ஜீவர்கள் ஏற்படுகிறார்கள்.

கண்ணாடியில் ப்ரதிபலிக்கிற முகம் நேரிலிருக்கும் முகத்தைக் காட்டிலும் உண்மையில் வேறன்று, ஆகிலும் வேறாகத் தோன்றுகிறது.
அப்படியே இரண்டு கண்ணாடிகளில் ஒரு முகம் ப்ரதிபலித்தால் கண்ணாடியின் பேதத்தால் ப்ரதிபலிக்கும் முகங்கள் வேறு வேறாகத் தோன்றுகின்றன.
வாஸ்தவத்தில் எல்லாம் ஒன்றே. இவ்விதமே ஒரே ப்ரஹ்மம் இரண்டு வஸ்துக்களில் ப்ரதிபலிப்பதால் மூன்றும் வேறு வேறாகத் தோன்றுகின்றன.
அவற்றில், ஈச்வரரூபமான ப்ரதிபிம்பத்துக்கு ஆச்ரயமான மாயையில் அதிகமான ஸத்வகுணமிருப்பதால்,
அது அதிகமான ஞானம், சக்தி, முதலியவைகளை உள்ளதாயிருக்கும். கண்ணாடியிலுள்ள தோஷங்களெல்லாம்
அதில் ப்ரதிபலித்த முகத்தில் தோன்றுகிறதுபோல, மாயையிலுள்ள அதிகமான ஞானம், சக்தி முதலியவை
அதில் ப்ரதிபலிக்கிற ப்ரஹ்மத்தில் தோன்றுகிறது, அதனால் ஈச்வரன் ஸர்வஜ்ஞன், ஸர்வஸக்தன், ஸத்யஸங்கல்பன்
முதலான வ்யவஹாரங்கள் நடந்து வருகின்றன. இவனுக்கு அதிகமான ஞான சக்திகள் இருப்பதால்
இவன் ஆராத்யனாயும் (பூஜிக்கப்படுபவனாய்) தன்னை ஆராதிப்பவர்களுக்கு பலப்ரதனாயும் ஆகிறான்.
இந்த ஈச்வரன்தான் ஸகுண ப்ரஹ்மம் என்று சொல்லப்படுகிறான்.

ஜீவ ரூபமான ப்ரதிபிம்பத்துக்கு ஆச்ரயமான அவித்யை அல்லது அந்தக்கரணம் ஸத்வகுணம் குறைவாயிருப்பதால்
அல்பமான ஞான சக்திகளை உடையதாயிருக்கும். அதனால் அதில் ப்ரதிபலிக்கிற ப்ரஹ்மம்
அல்பஜ்ஞமாய் அல்பசக்திகமாய்த் தோன்றுகிறது. இதனால் ஜீவன் அல்பஜ்ஞன் அல்பசக்திகன் என்கிற வ்யவஹாரம் நடந்து வருகிறது.

மாயா பரிணாமமான அந்தக்கரணத்தின் விகாரங்களான ஞானம், இச்சா (ஆசை), க்ருதி (முயற்சி), த்வேஷம், ஸ{கம், துக்கம்
முதலானவைகள் அந்தக்கரணத்தில் ப்ரதிபலிக்கிற ஜீவனிடத்தில் தோன்றுகிறபடியால் ஜீவனுக்கு நான்
ஞாதா (அறிபவன்), போக்தா (அனுபவிப்பவன்), கர்த்தா (செய்பவன்) ஸ{கீ, துக்கீ முதலிய வ்யவஹாரங்கள் நடக்கின்றன.

ஜலத்தில் ப்ரதிபலித்த சந்திரனிடத்தில் ஜலத்திலுண்டாகும் அசைதல் முதலியவை தோன்றி, சந்திரன் அசைகிறான் என்று
ப்ரமத்தால் சொல்லப்படுவதுபோல் அந்தக்கரணத்தில் உண்டாகும் சலநாதிவிகாரம் (அசைதல் முதலிய செய்கைகள்)
அதில் ப்ரதிபலித்த ப்ரஹ்மத்தில் தோன்றுவதால், ஜீவன் இகலோக, பரலோக ஸஞ்சாரம்
(இவ்வுலகம் மேலுலகம் இவைகளுக்கு போவது, வருவது) செய்கிறான் என்கிற வ்யவஹாரம் உண்டாகிறது.

ஜீவனுக்கு ஞானம், சக்தி முதலியவை குறைவு. அதனால் ராகத்வேஷாதிகளாலே தனக்கு இஷ்டமான வஸ்துவை
அடைவதற்கும் சக்தியற்றவனாய், அதற்காக ஈச்வரனை உபாஸித்து, அவனுடைய அநுக்ரஹத்தால் ஐச்வர்யம் முதலான
ஸம்ஸாரிக பலத்தை (ஸ்வர்கம் பூமி இவைகளிலேயே அனுபவிக்கக்கூடிய பலம்) அடைகிறான்.
நிஷ்காமனாய் (பலனில் ஆசையற்றவனாய்) ஈச்வரனை உபாஸித்தால், அவனுடைய அநுக்ரஹத்தால் சித்தசுத்தி உண்டாகி
வேதாந்த ச்ரவணத்திற்கு அதிகாரியாகிறான் (ஒரு காரியத்தைச் செய்வதற்கு யோக்யதை உடையவனாகிறான்).

பந்த மோக்ஷ நிரூபணம்
இப்படி ப்ரஹ்மம் அந்தக்கரணத்தில் ப்ரதிபலிப்பதால் ஏற்பட்ட ஜீவாத்மா உண்மையில் நிர்விகாரமான ப்ரஹ்மமே.
இப்படி இருந்தபோதிலும், அழுக்கற்ற ஸ்படிகத்தின் அருகில் வைக்கப்பட்ட செம்பரத்தம் பூவின் சிவப்பு தோன்றுவது போல,
இந்த ஜீவனுக்கு உபாதியான அந்தக்கரணத்தின் விகாரமான ராகம், த்வேஷம் முதலியவை இவனிடத்தில் தோன்றுகின்றன.
இந்த ப்ராந்திதான் ஸம்ஸாரம்.

இப்படி ஜீவனுக்கு வந்த ஸம்ஸாரம் நீங்குவதற்கு வழி என்னவென்றால் யாகம், தானம், ஹோமம் முதலிய
வைதிக கர்மங்களைக் கொண்டு இந்த ஜீவாத்மா ஈச்வரனை ஆராதித்தால், அவனுடைய அநுக்ரஹத்தால் சித்தசுத்தி பிறக்கிறது.
பிறகு மோக்ஷத்தில் ஆசையுண்டாய் , அதற்காக வேதாந்த ச்ரவணத்தில் முயற்சிக்கிறான்.
பிறகு குருவின் உபதேசத்தால் ‘தத்வமஸி” என்கிற வேதாந்த வாக்யத்தின் அர்த்த ஜ்ஞானம் உண்டாகிறது.
இந்த வாக்யத்தில் ‘தத்” என்கிற பதத்துக்கு ஸச்சிதானந்த ரூபமாய், ஸர்வ விகார ஹிதமாய்
அத்விதீயமான பொருள் ப்ரஹ்மம். ‘த்வம்” என்கிற பதத்துக்கு, முஞ்ஜம் என்று சொல்லப்படும் புல்லின் மேல் புரைகளைக் கழித்து
அதன் நடுவிலிருக்கும் குருத்தை வேறாக எடுக்குமாப்போலே, சரீரம், இந்த்ரியம் முதலிய உபாதிகளோடு கலந்திருக்கும்
ஜீவாத்ம ஸ்வரூபத்தை விசாரத்தினால் அவைகளைக் காட்டிலும் வேறுபட்டதாக விவேகிக்கப்பட்ட சுத்தாத்ம ஸ்வரூபம் பொருள்.
இவையிரண்டுக்கும் அபேதம் தத், த்வம் என்கிற வாக்கியத்திற்கு அர்த்தம்.

இப்படி குரு உபதேசத்தாலே பரோக்ஷ ரூபமான நிர்விசேஷ சிந்மாத்ர ப்ரஹ்மாத்ம ஐக்ய ஜ்ஞானம் உண்டாகிறது.
பின்பு குரு முகத்தாலே கேட்ட அர்த்தத்தை இடைவிடாமல் பாவனை பண்ணுவதால், ‘தத் த்வமஸி” வாக்யத்தால்
ஸாக்ஷாத்கார ரூபமான முன் சொன்ன ஜ்ஞானம் உண்டாகிறது. அப்போது ஸகல ப்ராந்தியும் கழிந்து
ப்ராந்திகளுக்கு மூலமான அவித்யையும் கழிந்து சக்கரத்தைச் சுற்றிவிட்டு, நாம் கையை எடுத்து விட்டாலும்
சுழலுவது சில காலம் அநுவர்த்திக்கிறாப்போலே, இந்த கர்மத்தால் ஆரம்பிக்கப்பட்ட சரீரம் மாத்ரம் சிலகாலம் நிற்கிறது.
இந்த நிலைதான் ஜீவன் முக்தியவஸ்தை என்று சொல்லப்படுகிறது. பின்பு ப்ராரப்த கர்மம் கழிந்ததும் சரீரம் கழிந்துவிடுகிறது.
இந்த நிலை விதேஹ முக்தி என்றும் கைவல்யம் என்றும் சொல்லப்படும் பரமமோக்ஷம்.
அதாவது அவித்யா ரூபமான ஆவரணம் நிச்சேஷமாய்க் கழிந்து அகண்டாநந்த ப்ரஹ்ம ஸ்வரூப ஆவிர்பாவம்.
இந்த மோக்ஷத்தைப் பெறுவதற்கு வேறு உலகங்களுக்குப் போகவேண்டா. இருந்த இடத்திலேயே கிடைக்கும்.

இந்த ஸித்தாந்தத்தில் ப்ரஹ்மம் தவிர வேறொன்றும் ஸத்யமானது இல்லை என்றும்,
ஜீவப்ரமங்கள் அபின்னமென்றும் ஒப்புக்கொள்ளுகிறபடியால் இதற்கு அத்வைத ஸித்தாந்தம் என்ற பெயர் உண்டாயிற்று.

———

த்வைத ஸித்தாந்தம்
இந்த ஸித்தாந்த ப்ரவர்தகர் – ஸ்ரீ ஆநந்த தீர்த்தர்

“ஸ்ரீமந் மத்வ – மதே ஹரி: பரதர: ஸத்யம் ஜகத் தத்வதோ
பிந்நா ஜீவகணா ஹரோநுசரா நீசோச்சபாவம் கதா:!
முக்திர் – நைஜ – ஸுகாநுபூதி: அமலா பக்திச்ச தத் – ஸாதனம்
ஹ்யக்ஷாதி – த்ரிதயம் ப்ரமாணமகில – ஆம்நாயைகவேத்யோ ஹரி:!!”

த்வைத ஸித்தாந்தம்
மஹாவிஷ்ணு ஸர்வேச்வரன் – ஸர்வசக்தன், முக்தியளிப்பவன் தோஷமற்றவன்.
மஹாலக்ஷ்மி – விஷ்ணுவின் பத்னி, அவனுக்கு மட்டுமே அடங்கியவள். எல்லாவிடத்தும் வ்யாபித்திருப்வள்.
இவர்கள் இருவர்தான் நித்ய – முக்தர். ஜீவாத்மாக்களில் நித்ய-முக்தர் கிடையாது. எல்லாருமே ஸம்ஸாரத்திலிருந்து முக்தியடைகிறார்கள்.
சராசர ரூபமான ஸகல ப்ரபஞ்சமும் உண்மையாயுள்ளது. அஸத்யமன்று.
ஜீவாத்மாக்கள் பரமாத்மாவைக் காட்டிலும் ஒருவருக்கொருவர் வேறுபட்டவர்கள்.
ஜீவர்கள் பும் ஜாதி, ஸ்த்ரீ ஜாதி என்று இருவகைப் பட்டவர்கள்.
புருஷ ஜாதியைச் சேர்ந்தவர்கள் ஸம்ஸார தசையில் கர்மத்தால் ஸ்த்ரீ – சரீரத்தை அடைந்தாலும் மோக்ஷத்தில் புருஷ ஜாதியராகவே இருப்பர்.
ஸ்த்ரீ ஜாதியர் ஸம்ஸார தசையிலும், மோக்ஷ தசையிலும் ஸ்த்ரீ-ஜாதியராகவே இருப்பர்.

இஜ்ஜீவர்கள் முக்தியோக்யர், நித்ய ஸம்ஸாரிகள், தமோயோக்யர் என்று மூன்று வகைப்பட்டிருப்பார்கள்.
இவர்களில் முக்தியோக்யர் தேவ-கணம், ரிஷி-கணம், பித்ரு-கணம், சக்ரவர்த்தி-கணம், மனுஷ்யோத்தம-கணம் என்று ஐந்து வகையினர்.
அந்தந்த கணத்தைச் சேர்ந்தவர்களுக்கு அந்தந்த ஸ்தானத்தை அடைய யோக்யதை உண்டு.
ப்ரஹ்மா, வாயு முதலானோர் தேவ கணங்கள். நாரதர் முதலியவர் ரிஷி கணங்கள்.
சிராதிகள் பித்ரு கணங்கள். ரகு, அம்பரீஷன் முதலியோர் சக்ரவர்த்தி கணங்கள்.

மனுஷ்யோத்தமர்கள் த்ருண-ஜீவர், தத்வ்யதிரிக்த-ஜீவர் என்று இருவகைப்பட்டிருப்பார்கள்.
த்ருண ஜீவர் ப்ரஹ்மத்தின் ‘ஆத்மா” என்கிற ஒரு குணத்தை உபாஸிக்கிறவர்கள்.
இவர்கள் அபரோக்ஷ-ஞானம் பிறந்த பிறகு தேஹ-நாசநாந்தரம் இங்கேயே முக்தியை அடைகிறார்கள்.
த்ருண-ஜீவரைக் காட்டிலும் வேறுபட்ட மனுஷ்யோத்தமர் ப்ரஹ்மத்தின் ஸத், சித், ஆநந்தம், ஆத்மா என்கிற நான்கு குணங்களை உபாஸிப்பார்கள்.
இந்த முக்தி-யோக்யர்கள் மோக்ஷ-ஸாதன-அநுஷ்டானத்தால் மோக்ஷத்தை அடைய யோக்யதை உடையவர்கள்.
இவர்கள் ஸதாசாரம், பகவத்-பக்தி முதலான நல்ல குணங்களை உடையவராயிருப்hர்கள். இவர்களில் சிலருக்கு சில காலத்தில் துர்குணம் உண்டாவது அஸுராவேசத்தாலே.

எப்போதும் ஸுக-துக்கங்களை கலந்து அனுபவிப்பார்கள் நித்ய-ஸம்ஸாரிகள்.
இவர்கள் புண்ய-கர்மங்களால் ஸ்வர்கம் போவதும், பாப கர்மங்களால் நரகம் போவதும், பூலோகத்துக்கு வருவதுமாக சுற்றிக்கொண்டேயிருப்பார்கள்.

தமோயோக்யர் தைத்யர், அஸுரர், பிசாசர், மனுஷ்யோத்தமர் என்று நான்கு விதம்.
இவர்கள் முடிவில் நித்யமான நரகத்திலேயே விழுந்துவிடுவார்கள்.
இவர்கள் பகவானிடத்திலும், பகவத்-பக்தர்களிடத்திலும் த்வேஷம், துராசாரம் முதலான துர்குணங்களையுடையவராய் இருப்பார்கள்.

ஜீவாத்மாகள் எல்லோரும் ஞான-ஆநந்த ஸ்வரூபர்கள். மிகவும் அணு பரிமாணமுடையவர்கள். பகவானுக்கு கிங்கரர்கள்.
முக்தியோக்ய ஜீவர்களில் ஸ்தாவர ஜீவர்களைக் காட்டிலும் பசு பக்ஷ்யாதி -ஜங்கம ஜீவர்கள் பக்தி, பகவத்
மோக்ஷத்திற்கு பக்தியோடு கூடின பகவத் உபாஸனம் ஸாதனம்.
இந்த ஸித்தாந்தத்தில் ஜீவ – ஈச்வரர்களுக்கு ஸ்வரூப பேதம் ஒப்புக்கொள்ளப்படுகிறபடியால் இது த்வைத ஸித்தாந்தம் என்று சொல்லப்படுகிறது.

———

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ப்ரஹ்ம வித்யைகள்–சுருக்கம் —

June 20, 2021

ஸ்ரீ பர வாஸூ தேவன் மூலவர் -பூம வித்யை -சாந்தோக்யம் –
லீலைகள் மூலம் 30 வித்யைகளைக் காட்டி
ஸ்ரீ ராஜகோபாலன் -உத்சவர் மூலம் 32 வது வித்யை

2-பூதனா நிரஸனம் – பஞ்சாக்னி வித்யை
3-யசோதா பால் அமுது உண்டது -மது வித்யை
4-வையம் எல்லாம் பிள்ளை வாயுள்ளே கண்டது –சம் வ்ருத்த வித்யை
5-தவழ்ந்து -தளர் நடை நடந்து -பிருகு வாரிணி
6-வெண்ணெய்க்கு ஆடும் உஷஸ்தல கபால வித்யை
7-மாடு மேய்த்து காட்டி -இந்த்ரங்கள் பட்டி மேயாமல் காத்து -காயத்ரி வித்யை –
அவனுக்கு முத்திற கறவைகளும் உண்டே -எறுமை பசு ஆடு -முக் குணங்களையும் காட்டும்-கறைவைகள் பின் சென்று
எறுமை -தமஸ் -ஆடு ரஜோ குணங்களும்-உலகம் மேய்ச்சல் நிலம் -பசு ஸத்வ குணம் -அவனையே பார்த்து இருக்கும்
எறுமை ஆடு பின்னால் மேய்ந்து இருக்கும் படங்கள் முன்பு உண்டே
8-தயிர் கடைதல் ஜோதிர் வித்யை
9-குருந்திடை கூறை பறித்தல் -ந்யாஸ வித்யை –தைத்ரியம் அஹங்காரம் மமகாரம் ஆடைகள் போல்–சரணாக–மஹா விசுவாசம்-இரண்டு கைகளையும் தூக்கி அநந்ய கதித்வம் ஆகிஞ்சனம்
10-புல்லாங்குழலுதல் — ஆச்சார்யர் உபதேசம்-சாந்தோக்யம் ஆகாச வித்யை
11-கட்டுண்ட அங்குஷ்ட பிர வித்யை
12- மீண்டும் குழலூதும் சேவை –பாபங்கள் உதித்தள்ளி மங்களங்கள் தருவான் சாந்தோக்யம் வ -அஷீ வித்யை
13-கையில் கோல் வைத்து மாடு மேய்த்து -அக்ஷர வித்யை-ப்ரஹதாரண்யம்
14-பால் கறக்கும் கண்ணன் புருஷ வித்யை சாந்தோக்யம்
15-கன்று குணிலா எறிந்தாய் -கன்றை எறிந்ததாகவும் விளாம்பழத்தை எறிவதும் உண்டே -மன்னார்குடி பிரகாரத்தில் இதுவே காட்டப்பட்டுள்ளது -அந்தர்யாமி வித்யை ப்ரஹதாரண்யம்
16-காளிங்க நர்த்தனம் பாலாகிவித்யை-கௌஷீதிக்கு
17-ஸிம்ஹாஸன சேவை -அந்தராதித்ய வித்யை-சாந்தோக்யம்
18-மதன கோபாலன் மன்மதன் பர்யங்க வித்யை-கௌஷீதகி உபநிஷத்
19-ராஸ க்ரீடை -ஷோடச கலா வித்யை-பிரஸ்னோ உபநிஷத்
20-ததி பாண்டன் முக்தி -தயிர் பானைக்கும் முக்தி -கட உபநிஷத் பரம புருஷ வித்யை -உபாயமும் உபேயமும் அவனே

21-கோபிகள் உடன் உணவு உண்டு -ஜோதிஷம் ஜோதி
22- கோவர்த்தனம் -ஈசாவாச வித்யை
23- பிரமனின் கர்வம் அடக்கி -சாந்தோக்யம் ஸத்வித்யை
24- கோபிகள் உடன் ஸரஸம் –தைத்ரியம் ஆனந்த மய வித்யை
25-மைத்ரீய வித்யை ப்ரஹதாரண்யம் பாமா ருக்மிணி உடன் சேவை
26-துலாபார சேவை -துளஸீ இல்லை மஹாத்ம்யம் -சாண்டில்ய வித்யை சாந்தோக்யம் -பக்திக்கு விலை இல்லையே –
27-மலருக்கு எமன் கோபிகளுக்கு மன்மதன் -சத்யா காம வித்யை சாந்தோக்யம்
28-குழல் ஓசை கேட்டு உப கோசல வித்யை
29 பாண்டவ தூதன் சேவை – அக்ஷர பர வித்யை முண்டகம்
30 கீதா உபதேசம் — வைஸ் வாநர வித்யை
31- ஜலக்ரீடை பிராண வித்யை
32-உத்சவர் -சாந்தோக்யம் தஹர வித்யை 8-1-ப்ரஹ்மபுரம் -உபாஸக சரீரம் -அவன் வசித்தால்–க்ஷேத்ரம் தானே
இதயம் வீடு -கவிழ்ந்த தாமரை -அதில் கேவிட்டி=தத் மந்த்ய வர்த்தி -பரஸ்ய ப்ரஹ்மம் உபாசாய அனுக்ரஹ –
பகவானுக்கு உள்ளேயும் அபஹத -பாப் மாதி அஷ்ட -குண ஜாதம் -குணங்களோடு கூடிய பகவானை உபாசனம்

—————-

1-ஸ்ரீ ஈஸா வாஸ்ய உபநிஷத்–ஸ்ரீ ஈஸா வாஸ்ய வித்யை

ஸ்ரீ வேத புருஷன்-மக்களுக்கு உபதேசம் –

இவ்வுலகம் முழுவதும் ப்ரஹ்மத்தால் வ்யாபிக்கப்பட்டபடியால் அவர் சொத்து என்று அறிந்து, வைராக்யத்தோடு, தனக்கு
விதிக்கப்பட்ட கர்மங்களைத் தவறாமல் செய்து கொண்டு, பரமாத்மாவையே அனைத்து ஜீவர்களிலும் காண்பவனாக,
ஸ்வயம் ப்ரகாசமாய், ப்ராக்ருதமான உடல் இல்லாதவராய்,
அவித்யை மற்றும் புண்ய பாபங்கள் அற்றவராக அவரை த்யாநிக்க வேண்டும்.
இப்படிப்பட்ட உபாஸகன் தன் நற் செயல்களால் ஸம்ஸாரத்தைத் தாண்டி உபாஸநத்தால் முக்தி அடைகிறான்.

——-

2-ஸ்ரீ கட உபநிஷத்–ஸ்ரீ நாசிகேத வித்யை –

யமன் நசிகேதஸ் ஸைக் குறித்து உபதேசம்

தந்தையால் யமனுக்கு தானம் செய்யப்பட்ட நசிகேதஸ் யமனிடம் மூன்றாைவது வரமாக
வித்யை உபதேசம் பெருதல்
முக்தியைப் பற்றிக் கேட்ட நசிகேதஸ்ஸைக் குறித்து யமன் கூறியது
ஜீவாத்மா நித்யமானவர்
அவரது ஹ்ருதயத்தினுள் பரமாத்மா இருக்கிறார்
அவர் எந்த ஜீவாத்மாவைக் குறித்துத் தன்னைக் காட்டுகிறாரோ அவன் தான் இவ்விரண்டையும் அறிந்து
பரமாத்மாவை உபாஸித்து இன்ப துன்பங்களைத் தாண்டுகிறான் –

————-

3-ஸ்ரீ கட உபநிஷத்–ஸ்ரீ பரம புருஷ வித்யை –

யமன் நசிகேதஸ் ஸைக் குறித்து உபதேசத்தின் தொடர்ச்சி –

உடல் என்ற தேரில் இருக்கும் ஆத்மா என்ற ரதீ,
புத்தி என்ற ஸாரதியைக் கொண்டு,
மனது என்ற கடிவாளத்தால்
இந்த்ரியங்கள் என்ற குதிரைகளை
உலக விஷயங்கள் என்ற வழிகளில் செல்ல
விடாமல் பரமபதத்தை அடைய வேண்டும்
புலன்கள் அர்த்தங்கள் மனது புத்தி ஆத்மா உடல் ஆகியவற்றை விட உயர்ந்தவர் பரமாத்மா

————

4-ஸ்ரீ கட உபநிஷத்–ஸ்ரீ அங்குஷ்ட ப்ரஹ்ம வித்யை –

யமன் நசிகேதஸ் ஸைக் குறித்து உபதேசத்தின் தொடர்ச்சி

அனைவருக்குள்ளும் இருக்கும் பரமாத்மா ஒருவரே .
அவர் உபாஸகன் நன்மைக்காக கட்டை விரல் அளவில் ஒளி மயமானவராக
வெறுப்பில்லாமல் முக்காலத்திலும் ஹ்ருதயத்துக்குள் இருந்தாலும் இங்குள்ள தோஷங்கள் அவரைத் தீண்டா.
தூய மனதால் அவரை அறிபவன் இங்கேயே அவரை அநுபவித்து,
பின்னால் முக்தி அடைந்து நிரந்தரமான சாந்தி அடைகிறான் –

————-

5- ஸ்ரீ முண்டக உபநிஷத்– ஸ்ரீ அக்ஷர பர வித்யை

ஸ்ரீ அங்கிரஸ் என்ற ரிஷி ஸ்ரீ சௌநகரைக் குறித்து உபதேசம்
ஸ்ரீ சௌநகர் ஸ்ரீ அங்கிரஸ்ஸிடம் எந்த ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகும் என்று
கேட்க, அவர் உபதேசித்தார்

எந்தப் பொருளை அடைய நூல்களால் எற்படும் வித்யையும்
உபாஸநம் என்ற வித்யையும் தேவையோ அவரே சிலந்தி போல் இருந்து உலகைப் படைக்கிறார்.
கர்மங்களால் மட்டும் அவரை அடைய முடியாதபடியால் ஆசார்யனிடம் சென்று,
அக்ஷரம் என்ற ப்ரக்ருதியை விட உயர்ந்த ஜீவனையும் விட உயர்ந்த ப்ரஹ்மத்தைக் கற்க வேண்டும்.
அவர் ஜீவனோடு இவ்வுடலிலேயே இருக்கிறார்,
ஆனால் கர்ம பலன்களை அநுபவிக்காமல் அவரைக் காண்பவன் பாப புண்யங்கள் நீங்கி அவருக்கு ஸமமாக ஆகிறான்.

———————

6 –ஸ்ரீ தைத்ரிய உபநிஷத்–ஸ்ரீ ஆனந்த மய வித்யை

ஸ்ரீ வேத புருஷன் உபதேசம் –

என்றும் மாறாததாய், ஜ்ஞாந வடிவமாய் எல்லை யற்றதாய் இருக்கும் ப்ரஹ்மத்தை அறிபவன்
அவரைக் குணங்களோடு ஸ்ரீ வைகுந்தத்தில் அநுபவிக்கிறான்.
அவரிடமிருந்து தோன்றிய இவ்வுலகில் உடல் ப்ராணன் மனது ஜீவாத்மா ஆகியோருக்கும் உள்ளிருக்கும் ப்ரஹ்மம்
வேதமும் அளக்க முடியாத ஆநந்தத்தை உடையவர் (ஆநந்த மயன்).
அவரை அறிந்தவன் ஸத், ஆநந்திக்கிறான், பயமின்றி இருக்கிறன்.

————-

7–ஸ்ரீ தைத்திரீய உபநிஷத்–ஸ்ரீ வாருணீ வித்யை

ஸ்ரீ வருண பகவான் தன் மகனான ப்ருகுவைக் குறித்து உபதேசம்

யாரிடமிருந்து அனைத்து ஜீவ ராசிகளும் தோன்றுகின்றனவோ – யாரால் வாழ்கின்றனதோ , யாரிடம் லயம் அடைகின்றனதோ –
யாரால் முக்தி அடைகின்றனதோ – அவரே ப்ரஹ்மம் என்று ஸ்ரீ வருணன் உபதேசிக்க,
ப்ருகு தபஸ் செய்து, அன்னம் ப்ராணன் மனது ஆத்மா ஆகியவை ப்ரஹ்மம் அல்ல,
ஆநந்தமுடைய பரமாத்மாவே ப்ரஹ்மம் என்று அறிந்தார்.
இப்படி அறிபவன் ப்ரஹ்மத்தை அடைந்து, பின் தொடர்ந்து, ஆசைப்பட்ட இடங்களில் உருவங்களோடு
அவரை உண்டு -அனுபவித்து ஸாமகானம் செய்து, தானும் ப்ரஹ்மத்துக்கு உணவாகிறான்.

————

8- ஸ்ரீ தைத்திரீய உபநிஷத்–ஸ்ரீ ந்யாஸ வித்யை

ஸ்ரீ வேத புருஷன் உபதேசம் –

ஸ்ரீ பரமபதத்தில் இருக்கும் மிக இனிய பரமாத்மாவை அடைய ந்யாஸம் என்ற சரணாகதியே வழி;
கர்மங்கள், செல்வம் முதலானவை யல்ல.
வேதாந்தத்திலிருந்து தத்வங்களை நிச்சயித்து, இந்த்ரியங்களை அடக்கி, சரணாகதி செய்தவர்கள் முக்தி அடைகிறார்கள்.
ப்ரணைம் கொண்டு அவரை அடைய அவரையே உபாயமாகப் பற்ற வேண்டும்.

—————-

9–ஸ்ரீ கௌஷீதகீ உபநிஷத்–ஸ்ரீ பர்யங்க வித்யை

சித்ரன் அன்ற அரசன் ஆருணி மற்றும் அவர் மகனான ஸ்வேத கேது என்பவர்களைக் குறித்து உபதேசம்

சித்ரன் என்ற அரசன், தனக்காக யாகம் செய்ய வந்த ஸ்வேத கேதுக்கும் அவருடைய தந்தை ஆருணிக்கும்,
அந்த யாகத்தால் தான் அடைய இருக்கும் உலகத்தின் ரஹஸ்யத்தைக் கூறினார்.

கர்மங்களையோ உபாஸநமோ செய்தவன் சந்த்ரனை அடைய , அவர் இவனிடம் “நீ யார்” என்று கேட்க,
“நான் இதுவரை பலமுறை பிறந்துள்ளேன், எனக்குள் இருக்கும் பரமாத்மாவை அறிந்தேன்,
இனி ஸம்ஸாரம் வேண்டாம்,” என்று சொல்பவர்களை மேலே பரமபதத்திற்கும்,
இப்படிச் சொல்லாதவர்களைப் பூவுலகுக்கும் அனுப்புகிறார்.
முக்தி அடைபவன் திவ்யமான உருவத்தோடு விரஜா நதீ, குளங்கள், நகரங்கள், மண்டபம், ஆஸநம், படுக்கை எல்லம்
கடந்து பரமாத்மாவின் மடியில் ஏறி அமர்ந்து, நீரே எனக்கு ஆத்மா என்று கூறி அவரோடே சேர்ந்து ஆநந்தமாக இருக்கிறான்.

————

10-ஸ்ரீ கௌஷீதகீ உபநிஷத்–ஸ்ரீ ப்ரதர்தந வித்யை –

இந்த்ரன் ஸ்வர்கத்தில் ப்ரதர்தநன் என்பவரைக் குறித்து உபதேசம்

இந்த்ர லோகத்துக்குச் சென்ற ப்ரதர்தநனுக்கு இந்த்ரன் வரம் வழங்க,
தனக்கு மிக்க நன்மையை விளைக்கக் கூடிய ஒன்றை அவரே உபதேசிக்க வேண்டும் என்று ப்ரதர்தநன் கேட்டான்

இந்த்ரன் கூறியது – “என்னையே உபாஸிப்பாய். அதன் மூலம் முக்தி அடையலாம் என்ற படியால்
அதுவே உனக்கு நன்மை தருவது. நானே ப்ராணனாகவும் ஜீவாத்மாவாகவும் உள்ளேன்.
சக்கரத்தின் விளிம்பு அதன் குச்சிகளிலும், அவை அதன் நடுவிலும் தாங்கப் படுவது போல்
அசேதநப் பொருட்கள் சேதநர்களாலும், சேதநர்கள் ப்ராணனாலும் தாங்கப்படுகின்றன” என்று.
இங்கு இந்த்ரன் ’நான்’ என்று சொல்வது தன்வன மட்டும் அல்ல.
தனக்குள் பரமாத்மா இருப்பதை நன்றாக உணர்ந்தபடியால் தன்னைக் குறிக்கும் ’நான்’ என்ற சொல்
பரமாத்மா வரையில் குறிக்கும் என்று அறிந்து, அந்தர்யாமியான பரமாத்மாவை உபாஸிக்க வேண்டும் என்று கூறுகிறார்.

———

11-ஸ்ரீ கௌஷீதகீ உபநிஷத்–ஸ்ரீ பாலாகி வித்யை

அஜாதசத்ரு என்ற அரசன் பாலாகியைக் குறித்து உபதேசம் –

பாலாகி என்பைர் காசியின் அரசனான அஜாதசத்ரு என்பவரிடம் ப்ரஹ்மத்தை உபதேசிக்கிறேன் என்று
கூறி, இறுதியில் அவரிடம் உபதேசம் பெற்றார்

ஸூர்யன், சந்த்ரன், மின்னல், மேகம், ஆகாசம், வாயு, நெருப்பு, ஜலம், கண்ணாடி, திசைகள், நிழல், மனது, வலது கண், இடது கண்
ஆகியவற்றுக்குள் இருக்கும் புருஷன், எதிரொலி, உடலில் இருக்கும் ஆத்மா முதலானவர்களை ப்ரஹ்மம் என்று பாலாகி சொல்ல,
அதை நிராகரித்து, இவை அனைத்தையும் , ஏன் உலகனைத்தையும் கூடப்,படைப்பவர் தான் ப்ரஹ்மம் என்று அஜாத சத்ரு கூறினார்.
மேலும் , உறக்கத்தில் ஜீவாத்மா பரமாத்மாவோடு சேர்கிறார்,
பரமாத்மா அவனத்து ஜீவர்களோடும் சேர்ந்து ஆநந்திக்கிறார் என்று கூறினார்

————–

12-ஸ்ரீ ப்ருஹத் ஆரண்யக உபநிஷத்– மைத்தரயீ வித்யை

யாஜ்ஞவல்க்யர் என்ற ரிஷி மைத்தரயீ என்ற தன் மனைவியைக் குறித்து உபதேசம் –
யாஜ்ஞவல்க்யர் க்ருஹஸ்த ஆஸ்ரமத்தை விடுவதற்காக தன் சொத்தை மைத்தரயீ காத்யாயனி என்ற இரு மனைவிகளுக்கும் பிரித்துக்
கொடுக்க, மைத்தரயீ அதை ஏற்காமல் அவர் அறிந்த ப்ரஹ்மத்தை உபதேசிக்கக் கேட்டாள்-

யாஜ்ஞவல்க்யர் உபதேசித்தது – “கணவன், மனைவி, மக்கள்,செல்வம் , ஸ்வர்கம், தேவதைகள் ஆகியவர் யாருமே தங்கள்
ஸங்கல்பத்தால் நமக்குப் ப்ரியமாக இருப்பதில்லை , ஆத்மாவின்
ஸங்கல்பத்தால் தான். அந்த ஆத்மாவைப் பற்றிக் கேட்டு, ஆராய்ந்து, நேரே காண்பது போல் த்யாநித்தால், அவனத்தையும் அறிந்தவன்
ஆகிறான். அப்படிக் காண்பவன் இனி ஸம்ஸாரத்தில் பிறப்பதில்வல,
ஆசைப்பட்ட அவனத்துமாகவும் ப்ரஹ்மத்தையே அடைகிறான்.
அப்பொழுது இவனுக்கு தேஹாத்ம ப்ரமமோ ஸ்வாதந்த்ர்ய ப்ரமமோ இருக்காது. அவரை அவரருளில்லாமல் அறிவது அரிது.

————

13–ஸ்ரீ ப்ருஹத் ஆரண்யக உபநிஷத்–ஸ்ரீ சர்வ அந்தராத்ம வித்யை

யாஜ்ஞவல்க்யர் என்ற ரிஷி உஷஸ்தர் கஹோர் என்ற இரு ரிஷிகளைக் குறித்து உபதேசம்
ஜநக மஹாராஜரின் சபையில் பல ரிஷிகள் சேர்ந்து யாஜ்ஞவல்க்யரின் அறிவை பரீஷை செய்யக் கேள்விகள் கேட்டனர்.
அப்பொழுது இருவர் கேட்ட கேள்விகளுக்கு யாஜ்ஞவல்க்யர் உரைத்த பதிலே இந்த வித்யை –

முதலில் உஷஸ்தர் “ப்ரஹ்மம் யார்?” என்று கேட்க,
“ப்ராண வாயு கொண்டு வாழ வைப்பவர் ப்ரஹ்மம்” என்று கூறி, உடல் புலன்கள் ப்ராணன் முதலானவற்றிலிருந்து வேறு பாட்டையும்,
“இந்த்ரியங்களின் உதவியால் அறிவு பெரும் ஜீவனை இங்கு நினைக்க வேண்டாம்”என்று ஜீவனைக் காட்டிலும் வேறுபாட்டையும் கூறினார்.
அதுவும் புரியாமல் கஹோளர் “ஜீவனே ப்ரஹ்மமா?” என்று மறுபடியும் கேட்க,
“சோகம் பசி தாகம் அறிவின்மை மூப்பு மரணம் இவை அனைத்தையும் கடந்தவரே ப்ரஹ்மம்” என்று கூறி ஸ்பஷ்டமாக
ஜீவனைக் காட்டிலும் வேறு பட்ட பரமாத்மாவே ப்ரஹ்மம் என்றார்.

14-ஸ்ரீ ப்ருஹத் ஆரண்யக உபநிஷத்–அந்தர்யாமி வித்யை

யாஜ்ஞவல்க்யர் என்ற ரிஷி உத்தாலகர் என்ற ரிஷியைக் குறித்து உபதேசம்
உத்தாலகர் கல்வி கற்ற காப்யர் என்ற ஆசானிடம்
ஒரு கந்தர்வன் கேட்ட கேள்விகளை அவர் ஜநகனின் சபையில்
யாஜ்ஞவல்க்யரிடம்
கேட்க, அவர் அவற்றுக்கு
பதில் உரைத்தார்.

“உலகங்கள் அனைத்தையும் கட்டி வைக்கும் கயிறு எது? உலகங்கள் அனைத்துக்கும் அந்தர்யாமி
(உள்ளே புகுந்து செலுத்துபவர்) யார்?” என்று உத்தாலகர் கேட்க,
“வாயு (காற்று) தான் அனைத்தையும் கட்டும் கயிறு என்றும், ப்ருதிவீ ஜலம் அக்நி வான், காற்று, ஸ்வர்கம்,
ஸூர்யன், திசைகள், சந்த்ரன், ப்ராணன், வாக், கண், காது, மனது,தோல், ஜீவாத்மா
ஆகிய அனைத்துக்குள்ளும் இருந்து அவற்றை இயக்குபவர், என்றுமே தானாக மரணமற்றவராய்,
தான் மற்றவரால் அறியப்படாமல் தான் அனைத்தையும் அறிபவரான இவணயற்ற ப்ரஹ்மமே ” என்று கூறினார் யாஜ்ஞவல்க்யர்.

——-

15 –ஸ்ரீ ப்ருஹத் ஆரண்யக உபநிஷத்–அக்ஷர வித்யை

ஸ்ரீ யாஜ்ஞவல்க்யர் என்ற ரிஷி கார்கீ என்ற பெண்ணைக் குறித்து உபதேசம்
ஜநக மஹாராஜரின் சபையில் கார்கீ என்ற பெண் கேட்ட கேள்விக்கு யாஜ்ஞவல்க்யர் உரைத்த பதிலே இந்த வித்யை

கார்கீ ஒவ்வொன்றாகக் கேள்விகளைக் கேட்க, பூமி ஜலம் காற்று ஸூர்யலோகம், சந்த்ரலோகம், நக்ஷத்ர லோகம், தேவ லோகம் ,
இந்த்ரலோகம், ப்ரஜாபதிலோகம், ப்ரஹ்மாவின் லோகம், அவ்யாக்ருதமான ஆகாசம் ஆகியவை ஒவ்வொன்றும் அடுத்தடுத்த
உலகால் தாங்கப்படுகின்றன என்று கூறி,
அவ்வாகாசம் அக்ஷரம் என்று சொல்லப்படும் பரமாத்மாவால் தாங்கப்படுகிறது, அந்த பரமாத்மாவின் கட்டளையால் தான்
ஸூர்யன் சந்த்ரன் காலம் நதிகள் ஆகிய அனைத்தும் இயங்குகின்றன,
அவரை உபாஸிப்பவன் அவரையே அடைகிறான் என்று யாஜ்ஞவல்க்யர் கூறினார்.

————

16-ஸ்ரீ ப்ருஹத் ஆரண்யக–உபநிஷத்–ஜோயோதிஷாம் ஜோதிர் வித்யை

யாஜ்ஞவல்க்யர் என்ற ரிஷி ஜநக மஹாராஜனைக் குறித்து உபதேசம் –
இந்த உலகத்தில் ப்ராணிகள் அனைத்தும் எந்த ஒளியின் உதவியால் செயல் படுகின்றன என்று ஜநகன் கேட்க,
அதற்கு பதில் உரைக்கிறார் யாஜ்ஞவல்க்யர்

ஸூர்யனும் சந்த்ரனும் அஸ்தமிக்கிற படியாலும், அக்நியும் பேச்சும் நின்று விடுகிற படியாலும்,
ஜீவாத்மாவின் ஜ்ஞாநமும் குறைந்த சக்தியை உடைய படியாலும் எப்பொழுதும் ப்ராணிகளுக்குப்
ப்ரகாசகம் ஆக முடியாது.
இந்த ஜ்யோதிஸ்ஸுகளை விட உயர்ந்த ஜ்யோதிஸ்ஸான பரமாத்மாவே ப்ராணிகள் செயல்பட உதவும் ஒளி ஆவார்.
ஸ்வப்நத்தில் நாம் பார்க்கும் பொருள்களை எல்லாம் அவரே படைக்கிறார்
அவரை உபாஸித்தால் அவரை அடையலாம்.

———-

17-ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத்–அந்தராதித்ய வித்யை –

வேத புருஷன் உபதேசம்

ஸூர்ய மண்டலத்துக்குள்ளும் நம் கண்ணுக்குள்ளும் இருக்கும் பரமாத்மா பொன் மயமான திருமேனியும்,
தாமரை போன்ற திருக்கண்களும், உத் என்ற திருநாமமும் கொண்டவராக இருக்கிறார்.
அவர் பாபங்களைக் கடந்தவர், அவரை உபாஸிப்பவர்களும் தங்கள் பாபங்களைக் கடக்கிறார்கள்,
பரமாத்மாவையே அடைகிறார்கள் –

————–

18-ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத் –ஆகாச வித்யை

ப்ரவாஹணர் என்ற அரசன் தால்ப்யர் மற்றும் சிலகர் என்ற ரிஷிகளைக் குறித்து உபதேசம்

மூன்று ரிஷிகள் ஸாமத்தின் முடிவைப் பற்றி விவாதிக்க,
மற்ற இருவரும் அறியாத ப்ரஹ்மத்தை ப்ரவாஹணர் அவர்களுக்கு உபதேசித்தார்

சிலகர் தால்ப்யரிடம் வரிசையாகக் கேள்விகள் கேட்க,
தால்ப்யரும் ஸாமம், ஸ்வரம், ப்ராண வாயு, அன்னம், ஜலம், ஸ்வர்கம், பூமி ஆகியவற்றில் ஒவ்வொன்றும்
அடுத்தடுத்தை அண்டி உள்ளது என்று கூற, அதற்கு மேல் தால்ப்யருக்குத் தெரியாததால்,
பூமிக்கும் ஆதாரமாய் இருப்பவர் எங்கும் ஒளி பொருந்தியபடியால் ’ஆகாசம்’
என்று சொல்லப்படும் பரமாத்மா என்று ப்ரவாஹணர் கூறினார்.

————-

19-ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத்–ப்ராண வித்யை

உஷஸ்தி என்ற ரிஷி யாகம் செய்யும் மூவரைக் குறித்து உபதேசம்

உஷஸ்தி என்பவர் அருகில் அரசனின் யாகத்தைச் செய்து கொண்டிருந்த மூவரைப் பார்த்து,
அவர்கள் புகழும் தேவதை யார் என்று கூறினார்.

யாகத்தில் ப்ரஸ்தோதா உத்காதா ப்ரதிஹர்தா என்று மூவர் ஸாமம் என்ற இசையோடு மந்த்ரங்களைப் பாட வேண்டும்.
அவர்களால் பாடப்படும் தேவதைகள் முறையே ப்ராணன், ஆதித்யன் மற்றும் அன்னம் என்று உஷஸ்தி கூறினார்.
இங்கு ப்ராணன் என்று சொல்லப்படுபவர் பரமாத்மா,
அவரே அனைத்து உயிர்களையும் படைத்து அழித்து வாழ வைக்கும் ப்ராணனானபடியால்.

———

20-ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத்–மது வித்யை

வேத புருஷன் உபதேசம்

ஸூர்யனே தேனாகவும் -ஆகாசத்தையே தேன் -அடையாகவும் ,
வேதங்களில் விதிக்கப்பட்ட கர்மங்கள் என்ற பூக்களிலிருந்து வேத மந்த்ரங்கள் என்ற வண்டுகள் ஹவிஸ்ஸின் ரஸத்தை
ஸூர்யனின் கதிர்கள் என்ற ஓட்டைகள் மூலம் ஸூர்யன் என்ற தேனாக சேமித்து வைப்பதாகவும்,
அதை வஸுக்கள் ருத்ரர்கள் ஆதித்யர்கள் மருத்துக்கள் ஸாத்யர்கள் ஆகிய தேவதைகள் ஒவ்வொரு
திசையிலிருந்து உண்பதாகவும்,
அந்த ஸூர்யனுக்குள் பரமாத்மா இருப்பதாகவும் த்யாநம் செய்தால் பரமாத்மாவையே அடைந்து
என்றும் அளவற்ற ஜ்ஞாநத்தோடு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

————-

21-ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத்–காயத்ரீ வித்யை

வேதபுருஷன் உபதேசம்

நான்கு பாதங்களும் ஆறு தன்மைகளும் கொண்ட காயத்ரீ என்ற
சந்தஸ் (விருத்தம்) போல் இருப்பவர் பரமாத்மா என்று த்யாநிக்க வேண்டும்.
பரமாத்மாவுக்கும் உயிரினங்கள், ப்ருதிவீ, உடல்கள், ஹ்ருதயம் என்று நான்கு பாதங்களும், ஆறு தன்மைகளும் உள்ளன.
இவை அனைத்தும் அவருடைய செல்வத்தின் சிறு பகுதியே
இதை விட பன்மடங்கு அதிகமான செல்வம் பரமபதத்தில் உள்ளது

————–

22-ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத்–பரம் ஜ்யோதிர் வித்யை

வேதபுருஷன் உபதேசம்

ஸம்ஸாரத்தையே தாண்டி, ஶ்ரீவைகுண்டத்தில் ஒளிவிடும் மிக உயர்ந்த ஒப்பில்லாத ஜ்யோதிஸ்ஸான பரமாத்மா தான்
நமது இந்த உடலுக்குள் இருந்து நாம் உண்ணும் உணவைச் சமைக்கக் கூடிய வைச்வாநரன் என்ற நெருப்பாகவும் உள்ளார்.
அந்த நெருப்பின் ஒலியைக் தகட்டு, வெப்பத்தை அறிந்து, அதற்குள் இருக்கும் பரமாத்மாவை த்யாநிக்க வேண்டும் –

———-

23–ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத்–சாண்டில்ய வித்யை

சாண்டில்யர் என்ற ரிஷி உபதேசம்

இவ்வுலகம் அனைத்தும் ப்ரஹ்மத்தாலேயே படைத்து அழித்து காக்கப்படுகிறபடியால் இவ்வுலகம் அனைத்தும் அவரே
என்று அறிந்து, அதனால் தேவையில்லாத விருப்பு வெறுப்புகளில்லாமல் சாந்தி அடைந்து பரமாத்மாவை உபாஸிக்க வேண்டும்.
ஒருவன் இவ்வுலகில் எவ்வாறு பரமாத்மாவை உபாஸிக்கிறானோ அவன் ஸ்ரீ வைகுந்தத்தில் அவ்வாறே அவனை அநுபவிக்கிறான்.
பரமாத்மா தூய மனதால் மட்டும் அறியப்படுபவர், ஒளிமிக்கவர், எல்லாச் செயல்களாலும் ஆராதிக்கப் படுபவர்,
இயற்கையில் இவ்வுலகங்கள் அனைத்தையும் காட்டிலும் பெரியவர், உபாஸநத்தை எளிமை யாக்க நம் இதயத்தில்
மிகச் சிறியவராக உள்ளார் என்று த்யாநித்து அவரை அடையலாம் –

———–

24-ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத் –ஸம்வர்க வித்யை

ரைக்குவர் என்ற ரிஷி ஜாநச்ருதி என்ற அரசனைக் குறித்து உபதேசம்

ஜாநச்ருதி என்ற அரசன் தர்மங்களைச் செய்தாலும் ப்ரஹ்மத்தை அறியாதவன்.
அவனுக்கு அதை போதிக்க இரண்டு ரிஷிகள் பறவை உருவம் கொண்டு, அவனை விட ரைக்குவர் உயர்ந்தவர் என்று சொல்ல,
அதைக்கேட்ட அரசன் ரைக்குவரைத் தேடித் சென்று ப்ரஹ்ம உபதேசம் பெற்றான்.

ஸம்வர்கம் என்றால் அனைத்தையும் ஒன்று சேர்க்கக் கூடியது.
தேவதைகளுக்குள் வாயு தான் ஸம்வர்கம் என்றும்
ஆத்மாவோடு தொடர்பு யுடையவற்றுள் ப்ராணன் தான் ஸம்வர்கம் என்றும் ரைக்குவர் கூறினார்.
இங்கு வாயு ப்ராணன் என்ற சொற்கள் அவற்றுக்குள் இருக்கும் பரமாத்மாவைக் குறிக்கின்றன.
சௌநகர் அபிப்ரதாரி என்ற ரிஷிகளிடம் ஒருவர் வந்து நான்முகக் கடவுளே ஸம்வர்கம் என்று சொல்ல,
சௌநகர் பதிலுக்கு “தேவதைகளுக்கு எல்லாம் அந்தர்யாமியாய், தான் அழியாமல் மற்றவற்றை அழிப்பவராய்,
ந்ருஸிம்ஹ அவதாரம் செய்தவரான பரமாத்மாவே ஸம்வர்கம்” என்று கூறினார் என்ற கதையையும்
ரைக்குவர் ஜாந ச்ருதிக்கு விளக்கினார்.
இதை அறிந்து உபாஸிப்பைன் முக்தி பெற்று ஸர்வஞ்ஞன் ஆகிறான் —

———

25 -ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத்–ஸத்யகாம வித்யை / ஷோடச கல ப்ரஹ்ம வித்யை –

ஹாரித்ருமதர் என்ற ரிஷி ஸத்யகாமன் என்ற சிஷ்யனைக் குறித்து உபதேசம்

ஹாரித்ருமதரிடம் கல்வி கற்க வந்த ஸத்யகாமன், தன் கோத்ரம் அறியாததை நேர்மையாகச் சொல்ல
அவரும் அவனுக்கு 400 மாடுகளைக் கொடுத்தார்
அந்த மாடுகளை 1000ஆக வளர்த்து வரச் சொன்னார். அவனும் செய்தான்.
அதனால் த்ருப்தி அடைந்து காளை , அக்நி, ஹம்ஸம்,மத்கு பறவை ஆகிய நால்வரும்
ப்ரகாசவான், அநந்தவான், ஜ்யோதிஷ்மான், ஆயதநவான் என்ற நான்கு கால்களையும், அவை
ஒவ்வொன்றிலும் நான்கு கலைகளையும் கொண்டவர் பரமாத்மா என்று உபதேசித்தனர்.
ஆசார்யனும் அதையே உபதேசித்தார்.

————–

26-ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத்–உபகோஸல வித்யை

ஸத்யகாமர் என்ற ரிஷி உபகோஸலன் என்ற சிஷ்யனைக் குறித்து உபதேசம் –

வெகு காலம் குருகுலத்தில் இருந்த போதிலும் உபகோஸலனுக்கு ஸத்யகாமர் ப்ரஹ்மத்தை உபதேசிக்காததால்,
அக்நிகள் கருணையோடு அவனுக்கு உபதேசித்தனர்
அனைத்து உயிரினங்களையும் வாழ வைக்கும் ப்ராணனாகவும், அளவற்ற ஆநந்தத்தை உடையவராகவும் இருப்பவரே பரமாத்மா
என்று பரமாத்மாவை உபாஸிக்கும் முறையையும் , அந்த உபாஸநத்தின் அங்கமாகத் தங்களை உபாஸிக்கும் முறையையும்
கூறிவிட்டு, மீதமிருப்பதை உன் ஆசார்யரே உபதேசிக்க வேண்டும் என்று அக்நிகள் மூவரும் கூறினர்.
ஆசார்யரும் குருகுலம் திரும்பி, நடந்ததை அறிந்து, தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாதது போல்
பரமாத்மாவை உபாஸிப்பவனிடம் அவன் கவனக் குறைவால் செய்யும் பாபங்கள் ஒட்டாது என்று முக்தியை உபதேசித்தார்.

————

27-ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத் –அக்ஷி வித்யை

ஸத்யகாமர் என்ற ரிஷி உபகோஸலன் என்ற சிஷ்யனைக் குறித்து உபதேசம்
மேற்கண்ட உபதேசத்தின் தொடர்ச்சியே இது

பரமாத்மாவை நம் கண்ணில் இருப்பவராகவும், அனைத்து கல்யாண குணங்களையும் உடையவராகவும்,
தன் அடியார்க்கு மேன்மை ஏற்படுத்துபவராகவும், அழகிய ஒளி பொருந்திய திருமேனி உடையவராகவும் த்யாநிக்கும் உபாஸகன்,
அர்சிஸ் பகல் சுக்லபக்ஷம் உத்தராயணம் ஸம்வத்ஸரம் ஆதித்யன் சந்த்ரன் மின்னல் முதலான தேவதைகளின்
லோகங்கள் வழியாகச் சென்று பரமபதத்தை அடைகிறான். அவன் மீண்டும் இந்த ஸம்ஸாரத்தில் பிறப்பதில்லை

————-

28-ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத்–பஞ்சாக்நி வித்யை

ப்ரவாஹணர் என்ற ரிஷி ஆருணி என்பவரைக் குறித்து உபதேசம்

ப்ரவாஹணர் என்ற அரசன் சபையில் தன் மகனிடம் கேட்ட ஐந்து கேள்விகளின் விடைகளைத் தானும்
அறியாததால், தந்தையான ஆருணி ப்ரவாஹணரிடம் சென்று கேட்டு அறிந்தார்

பரமாத்மாவின் உடலான ஜீவாத்மா ஸவர்கம், மேகம், பூமி, ஆண்,பெண் என்ற ஐந்து அக்நிகளில் ஆஹுதியாகக் கொடுக்கப்பட்டு,
ஸோமன் மழை செடிகள் ரேதஸ் கர்ப்பம் என்ற ஐந்து வடிவங்களை எடுக்கிறார். இதை அறிந்தவனும் ப்ரஹ்மத்தை உபாஸிப்பவனும்
தேவ யாநம் என்ற வழியால் முக்தி அடைகிறான்.
வேதம் சொன்ன கர்மங்களை மட்டும் செய்பவன் பித்ருயாணம் என்ற வழியால் சந்த்ரனை அடைந்து,
புண்ணியம் உள்ள வரை அங்கு ஸுகம் அநுபவித்து, பின்பு ஆகாயம், வாயு, புகை , மேகம், மழை மூலமாக பூமியை அடைகிறான்.
உபாஸநமும் செய்யாமல் கர்மங்களையும் செய்யாதவன் இந்த இரண்டு வழிகைளாலும் செல்லாமல்,
ஸ்வர்கத்தை அடையாமல் தாழ்ந்த பிறவிகளை எடுக்கிறான்.

————-

29-ஸ்ரீ சாந்தோக்ய–உபநிஷத்–வைச்வாநர வித்யை

அச்வபதி என்ற கேகய தேசத்து அரசன்–
ப்ராசீநசாலர் ஜநர் ஸத்யயஜ்ஞர் புடிலர் இந்த்ரத்யும்நர் உத்தாலகர் என்ற அறுவரைக் குறித்து உபதேசம்

ஐவர் சேர்ந்து வைச்வாநரர் என்ற பரமாத்மாவைப் பற்றி விவாதம் செய்து, தெளிவு பெற உத்தாலகர்
என்பவரிடம் செல்ல,
அவரும் அவர்களோடு சேர்ந்து அச்வபதியிடம் உபதேசம் பெற்றார்கள்.

ஆறு ரிஷிகளும் தனித்தனியாக த்யு லோகம், ஸூர்யன்,,வாயு ,ஆகாசம், ஜலம், பூமி ஆகியைற்றையே பரமாத்மா என்று
உபாஸிப்பதை அறிந்து கொண்ட அச்வபதி, ப்ரஹ்மம் அப்படி அளவு பட்டவர் அல்ல -அளவற்றவர் , இவை அனைத்தும் அவர்
உடலின் சிறு பகுதிகளே என்றும், முழுமையான ப்ரஹ்மத்தை உபாஸிப்பவன் அந்த ப்ரஹ்மம் தன் உடலின் பகுதிகளிலும்
இருப்பதாக எண்ண வேண்டும் என்றும் கூறி, அந்த உபாஸகன் முற் செய்த பாபங்கள் அவனத்தும் எறிக்கப்படுகின்றன என்றார்.

————

30-ஸ்ரீ சாந்தோக்ய-உபநிஷத் –ஸத் வித்யை

உத்தாலகர் என்ற தந்தை ஸ்வேதகேது என்ற தன் மகனைக் குறித்து உபதேசம்
ஸ்வேதகேது குருகுலம் சென்று வந்த போதும் ப்ரஹ்மத்தை அறியாமல் கர்வத்தோடு
இருந்தபடியால் அவனுக்கு ப்ரஹ்மத்தை உபதேசித்தார் தந்தையான உத்தாலகர்

உலகம் அனைத்தையும் இயக்கும் எந்த ஒரு பொருளை அறிந்தால் உலகில் அனைத்தையும் அறிந்ததாகுமோ
அதை நீ அறிந்தாயா என்று தந்தை மகனிடம் கேட்டு, அவன் அறியாதபடியால் அப்படிப்பட்ட பரமாத்மாவை உபதேசித்தார்.

மண் என்பது குடம் முதலானவற்றின் உபாதாந காரணம் ஆனபடியால் மண்ணை அறிந்தால் அவை அனைத்தையும்
அறிந்ததாவது போல்,
ப்ரஹ்மமே இவ்வுலகின் உபாதாந காரணமானபடியால் அவரை அறிந்தால் உலகத்தில் அனைத்தையும் அறிந்ததாகும்.

அவரே தான் உலகுக்கு நிமித்த காரணமாகவும் உள்ளார், அதாவது அவர் தான் வேறே ஒருவரை எதிர்பார்க்காமல்
தானே ஸங்கல்பம் செய்து உலகைப் படைத்தார்.

இந்த உலகம் முழுவதுமே அவரை ஆத்மாவாகக் கொண்டது தான் -அவரால் வ்யாபிக்கப்பட்டது தான்.
ஆகவே , ஸ்வேதகேது என்ற உனக்குள்ளும் அதே பரமாத்மாவே இருக்கிறபடியால் அவரே தான் நீ
என்று தந்தை உபதேசித்தார். மகனும் ப்ரஹ்மத்தை அறிந்தான்.

————

31-ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத்–பூம வித்யை

ப்ரஹ்மாவின் மகனான ஸநத்குமாரர் நாரதரைக் குறித்து உபதேசம்

தான் வேதங்கள் முதலான அனைத்து நூல்களையும் அறிந்திருந்தாலும்
பரமாத்மாவை அறியாதபடியால் சோகம் நீங்கவில்லை என்று நாரதர் கூற, அவருக்கு ப்ரஹ்மத்தை
உபதேசித்தார் ஸநத்குமாரர்

சொற்கள், பேச்சு, மனது, உறுதி, சித்தம், த்யாநம், அறிவு, பலம்,
அன்னம், ஜலம், தேஜஸ், ஆகாசம், நினைவு, ஆசை , ப்ராணன் என்று வழக்கப்படும் ஜீவாத்மா ஆகியவற்றில் ஒவ்வொன்றைக்
காட்டிலும் அடுத்தடுத்தது உயர்ந்தது என்று உபதேசித்துவிட்டு,
அந்த ஜீவனையும்விட உயர்ந்த பரமாத்மா ஸத்யம் என்று அழைக்கப்படுகிறார் என்றும்,
அவரை அறிபவன் அவரைப் புகழ்ந்து பேச வேண்டும் என்றும், அந்த பரமாத்மா அளவற்ற ஸுகமே வடிவானவர் என்றும்,
அவரை ஒருவன் கண்டால் வேறே எதையும் காண மாட்டான் என்றும்,
அந்த ப்ரஹ்மம் நமக்கும் ஆத்மா என்று உபாஸிக்க வேண்டும் என்றும்,
இப்படி உபாஸிப்பவன் கர்மங்கள் நீங்கி, முக்தி அவடந்து, வேண்டிய உருவம் எடுத்து பரமாத்மாவுக்கு
கைங்கர்யம் செய்கிறார் என்றும் ஸநத்குமாரர் உபதேசித்தார்.

——————

32-ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத்–தஹர வித்யை

வேதபுருஷன் உபதேசம்

இந்த உடல் பரமாத்மாவின் இருப்பிடமான பட்டணம் ஆகும்.
இதற்குள் தாமரை வடிவத்தில் இருக்கும் ஹ்ருதயத்திற்குள் இருக்கும் நுண்ணிய ஆகாசம் தான் பரமாத்மா. அவர் சிறியவரல்ல,
ஐம்பூதங்களில் ஒன்றான ஆகாசத்வத விடப் பெரியவர். உபாஸகன் அடைந்த பொருட்கள், அடைய ஆசைப்படும் பொருட்கள்
அனைத்தும் இவருக்குள் உண்டு.
அந்த பரமாத்மாவையும், அவரிடம் இருக்கும் எட்டு கல்யாண குணங்கவையும் உபாஸிக்க வேண்டும்.
அவையாைன –
பாபங்களால் தீண்டப்படாமை , மூப்பின்மை , மரணமின்மை , சோகமின்மை , பசியின்மை , தாகமின்மை ,
நித்ய விபூதிக்குத் தலைவனாய் இருத்தல் மற்றும் தடையற்ற ஸங்கல்பம் என்பவையாம்.
ஜீவாத்மாவுக்கும் இந்த எட்டு குணங்களும் உண்டு என்று ப்ரஜாபதி இந்த்ரனுக்கு உபதேசித்தார்.
இப்படிப்பட்ட பரமாத்மாவை அறிந்து த்யாநம் செய்பவன், பாபங்கவைத் தள்ளி, சரீரத்தைத் துறந்து,
ப்ரஹ்ம லோகம் என்ற ஶ்ரீவைகுண்டத்தை அடைந்து, என்றும் மீண்டு வராமல் இன்பப்படுகிறார்கள்.

———————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸ்ருத ப்ரகாசகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேத வியாசர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ப்ரஹ்ம வித்யைகள் -ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத் –

June 20, 2021

16 ப்ரஹ்ம வித்யைகள் இதில் உண்டே –

1-அந்தராதித்ய அந்தர அஷ வித்யை –சாந்தோக்யம் -1-1-6-7–

இயமேவர்க³க்³நி: ஸாம ததே³ததே³தஸ்யாம்ருʼச்யத்⁴யூட⁴़ꣳ ஸாம
தஸ்மாத்³ருʼச்யத்⁴யூட⁴ꣳஸாம கீ³யத இயமேவ
ஸாக்³நிரமஸ்தத்ஸாம ॥ 1.6.1॥

அந்தரிக்ஷமேவர்க்³வாயு: ஸாம ததே³ததே³தஸ்யாம்ருʼச்யத்⁴யூட⁴ꣳ ஸாம
தஸ்மாத்³ருʼச்யத்⁴யூட⁴ꣳ ஸாம கீ³யதேঽந்தரிக்ஷமேவ ஸா
வாயுரமஸ்தத்ஸாம ॥ 1.6.2॥

த்³யௌரேவர்கா³தி³த்ய: ஸாம ததே³ததே³தஸ்யாம்ருʼச்யத்⁴யூட⁴ꣳ ஸாம
தஸ்மாத்³ருʼச்யத்⁴யூட⁴ꣳ ஸாம கீ³யதே த்³யௌரேவ
ஸாதி³த்யோঽமஸ்தத்ஸாம ॥ 1.6.3॥

நக்ஷத்ராந்யேவர்க்சந்த்³ரமா: ஸாம ததே³ததே³தஸ்யாம்ருʼச்யத்⁴யூட⁴ꣳ ஸாம
தஸ்மாத்³ருʼச்யத்⁴யூட⁴ꣳ ஸாம கீ³யதே நக்ஷத்ராண்யேவ ஸா சந்த்³ரமா
அமஸ்தத்ஸாம ॥ 1.6.4॥

ஸத்வித்யா முக்கியம் இதில் –
ருக் சாமம் -மந்த்ரம் இசை கூட்டி -பிருத்வி -ருக் சாமம் அக்னி / அந்தரிக்ஷம் வாயு / மேல் லோகம் ஆதித்யன் /
நக்ஷத்ரங்கள் -சந்திரன் / போலே இவை இரண்டையும்

அத² யதே³ததா³தி³த்யஸ்ய ஶுக்லம் பா:⁴ ஸைவர்க³த² யந்நீலம் பர:
க்ருʼஷ்ணம் தத்ஸாம ததே³ததே³தஸ்யாம்ருʼச்யத்⁴யூட⁴ꣳ ஸாம
தஸ்மாத்³ருʼச்யத்⁴யூட⁴ꣳ ஸாம கீ³யதே ॥ 1.6.5॥

வெள்ளை ருக் -கரு நீல ஓளி சாமம் /அரவணை மேல் பள்ளியான் -முகில் வண்ணன் /

அத² யதே³வைததா³தி³த்யஸ்ய ஶுக்லம் பா:⁴ ஸைவ
ஸாத² யந்நீலம் பர: க்ருʼஷ்ணம் தத³மஸ்தத்ஸாமாத²
ய ஏஷோঽந்தராதி³த்யே ஹிரண்மய: புருஷோ த்³ருʼஶ்யதே
ஹிரண்யஶ்மஶ்ருர்ஹிரண்யகேஶ ஆப்ரணஸ்வாத்ஸர்வ ஏவ
ஸுவர்ண: ॥ 1.6.6॥

தங்கமய மீசை –அந்தராத்திய -ஹிரண்மய புருஷ -தலை கேசம் -சர்வ ஏவ ஸ்வர்ணம் -ஸ்ப்ருஹநீயத்வம் –
சுட்டு உரைத்த நன் பொன் உன் திருமேனி ஓளி -ஒவ்வாதே-இல் பொருள் உவமை –

தஸ்ய யதா² கப்யாஸம் புண்ட³ரீகமேவமக்ஷிணீ
தஸ்யோதி³தி நாம ஸ ஏஷ ஸர்வேப்⁴ய: பாப்மப்⁴ய உதி³த
உதே³தி ஹ வை ஸர்வேப்⁴ய: பாப்மப்⁴யோ ய ஏவம் வேத³ ॥ 1.6.7॥

உத் -திரு நாமம் விளக்கவே திருவாய்மொழி-உயர்வற ஆரம்பித்து –பிறந்தார் உயர்ந்தே -முடித்து –
தாமரைக்கண்ணன் விண்ணோர் பரவும் கமலக்கண்ணன் -பரத்வ சிஹ்னம்
ஜகத் காரணத்வம் -ஸ்ரீ யபதித்தவம் -கருட வாஹனத்வம் -திருவானந்தாழ்வான் மேலே கண் வளர்ந்து –
ஸ்ரீ விஷ்வக் சேனர் திருக்கை பிரம்பின் கீழே -வர்த்திக்கும் வான் இளவரசு வைகுந்த குட்டன்
கம்பீராம்ப ஸமுத்பூத ஸ்ம்ருஷ்ட நாள-ரவிகர விகசித-புண்டரீக தள-ஆம்லா -ஆயத -ஈஷண
கம் பிபதீ சூர்யன் -கபி தேன அஸ்யதே சூர்யன் கிரணங்களால் மலர்த்தப்பட்ட தாமரை
கம் -த்ண்ணீரைக் குடிப்பது நாளம் மூலம் -நாளத்தில் வசிக்கும் தாமரை
தண்ணீரில் வாழும் -தாமரை
அமலங்களாக விளிக்கும்–நெடும் நோக்கு –
காரியவாகிப் –புடை பெயர்ந்து –மிளிர்ந்து நீண்ட அப்பெரியவாய கண்கள்

தஸ்யர்க்ச ஸாம ச கே³ஷ்ணௌ
தஸ்மாது³த்³கீ³த²ஸ்தஸ்மாத்த்வேவோத்³கா³தைதஸ்ய ஹி கா³தா
ஸ ஏஷ யே சாமுஷ்மாத்பராஞ்சோ லோகாஸ்தேஷாம் சேஷ்டே
தே³வகாமாநாம் சேத்யதி⁴தை³வதம் ॥ 1.6.8॥

இப்படி உபாசிப்பவன் மேல் லோகம் அடைகிறான்

॥ இதி ஷஷ்ட:² க²ண்ட:³ ॥

————————————–

அதா²த்⁴யாத்மம் வாகே³வர்க்ப்ராண: ஸாம ததே³ததே³தஸ்யாம்ருʼச்யத்⁴யூட⁴ꣳ
ஸாம தஸ்மாத்³ருʼச்யத்⁴யூட⁴ꣳஸாம கீ³யதே।
வாகே³வ ஸா ப்ராணோঽமஸ்தத்ஸாம ॥ 1.7.1॥

ரிக் சாமம் -வாக் பிராணன் –

சக்ஷுரேவர்கா³த்மா ஸாம ததே³ததே³தஸ்யாம்ருʼச்யத்⁴யூட⁴ꣳஸாம
தஸ்மாத்³ருʼச்யத்⁴யூட⁴ꣳஸாம கீ³யதே ।
சக்ஷுரேவ ஸாத்மாமஸ்தத்ஸாம ॥ 1.7.2॥

ஶ்ரோத்ரமேவர்ங்மந: ஸாம ததே³ததே³தஸ்யாம்ருʼச்யத்⁴யூட⁴ꣳஸாம
தஸ்மாத்³ருʼச்யத்⁴யூட⁴ꣳஸாம கீ³யதே ।
ஶ்ரோத்ரமேவ ஸா மநோঽமஸ்தத்ஸாம ॥ 1.7.3॥

அத² யதே³தத³க்ஷ்ண: ஶுக்லம் பா:⁴ ஸைவர்க³த² யந்நீலம் பர:
க்ருʼஷ்ணம் தத்ஸாம ததே³ததே³தஸ்யாம்ருʼச்யத்⁴யூட⁴ꣳஸாம
தஸ்மாத்³ருʼச்யத்⁴யூட⁴ꣳஸாம கீ³யதே ।
அத² யதே³வைதத³க்ஷ்ண: ஶுக்லம் பா:⁴ ஸைவ ஸாத² யந்நீலம் பர:
க்ருʼஷ்ணம் தத³மஸ்தத்ஸாம ॥ 1.7.4॥

கண் சாயாத்மா
கண்ணில் உள்ள கரு நீலம்

அத² ய ஏஷோঽந்தரக்ஷிணி புருஷோ த்³ருʼஶ்யதே ஸைவர்க்தத்ஸாம
தது³க்த²ம் தத்³யஜுஸ்தத்³ப்³ரஹ்ம தஸ்யைதஸ்ய ததே³வ ரூபம் யத³முஷ்ய ரூபம்
யாவமுஷ்ய கே³ஷ்ணௌ தௌ கே³ஷ்ணௌ யந்நாம தந்நாம ॥ 1.7.5॥

ஸ ஏஷ யே சைதஸ்மாத³ர்வாஞ்சோ லோகாஸ்தேஷாம் சேஷ்டே மநுஷ்யகாமாநாம்
சேதி தத்³ய இமே வீணாயாம் கா³யந்த்யேதம் தே கா³யந்தி
தஸ்மாத்தே த⁴நஸநய: ॥ 1.7.6॥

அத² ய ஏததே³வம் வித்³வாந்ஸாம கா³யத்யுபௌ⁴ ஸ கா³யதி
ஸோঽமுநைவ ஸ ஏஷ சாமுஷ்மாத்பராஞ்சோ
லோகாஸ்தாꣳஶ்சாப்நோதி தே³வகாமாꣳஶ்ச ॥ 1.7.7॥

மேல் லோகத்தவனாக உபாசித்தால் மேல் லோகம் அடைந்து

அதா²நேநைவ யே சைதஸ்மாத³ர்வாஞ்சோ லோகாஸ்தாꣳஶ்சாப்நோதி
மநுஷ்யகாமாꣳஶ்ச தஸ்மாது³ ஹைவம்விது³த்³கா³தா ப்³ரூயாத் ॥ 1.7.8॥

கம் தே காமமாகா³யாநீத்யேஷ ஹ்யேவ காமாகா³நஸ்யேஷ்டே ய
ஏவம் வித்³வாந்ஸாம கா³யதி ஸாம கா³யதி ॥ 1.7.9॥

॥ இதி ஸப்தம: க²ண்ட:³ ॥

கப்யாசம்–மூன்று பூர்வ பக்ஷ அர்த்தங்கள் மூன்று சம்ப்ரதாயம்
உத்கீதம்
கொடிய வினை
ஆதித்ய மண்டல மதியவர்த்தி -12 ஆதித்யர்கள்
அஷி க்குள்ளும் -இவனே -ஸமஸ்த லோக நிர்வாஹகன் –

—–

2-ஆகாச வித்யை 1-1–8-9-அடுத்து –

த்ரயோ ஹோத்³கீ³தே² குஶலா ப³பூ⁴வு: ஶிலக: ஶாலாவத்யஶ்சைகிதாயநோ
தா³ல்ப்⁴ய: ப்ரவாஹணோ ஜைவலிரிதி தே ஹோசுருத்³கீ³தே²
வை குஶலா: ஸ்மோ ஹந்தோத்³கீ³தே² கதா²ம் வதா³ம இதி ॥ 1.8.1॥

ததே²தி ஹ ஸமுபவிவிஶு: ஸ ஹ ப்ராவஹணோ ஜைவலிருவாச
ப⁴க³வந்தாவக்³ரே வத³தாம் ப்³ராஹ்மணயோர்வத³தோர்வாசꣳ ஶ்ரோஷ்யாமீதி
॥ 1.8.2॥

ஸ ஹ ஶிலக: ஶாலாவத்யஶ்சைகிதாயநம் தா³ல்ப்⁴யமுவாச
ஹந்த த்வா ப்ருʼச்சா²நீதி ப்ருʼச்சே²தி ஹோவாச ॥ 1.8.3॥

கா ஸாம்நோ க³திரிதி ஸ்வர இதி ஹோவாச ஸ்வரஸ்ய கா
க³திரிதி ப்ராண இதி ஹோவாச ப்ராணஸ்ய கா
க³திரித்யந்நமிதி ஹோவாசாந்நஸ்ய கா க³திரித்யாப
இதி ஹோவாச ॥ 1.8.4॥

அபாம் கா க³திரித்யஸௌ லோக இதி ஹோவாசாமுஷ்ய லோகஸ்ய
கா க³திரிதி ந ஸ்வர்க³ம் லோகமிதி நயேதி³தி ஹோவாச ஸ்வர்க³ம்
வயம் லோகꣳ ஸாமாபி⁴ஸம்ஸ்தா²பயாம: ஸ்வர்க³ஸꣳஸ்தாவꣳஹி
ஸாமேதி ॥ 1.8.5॥

தꣳ ஹ ஶிலக: ஶாலாவத்யஶ்சைகிதாயநம்
தா³ல்ப்⁴யமுவாசாப்ரதிஷ்டி²தம் வை கில தே தா³ல்ப்⁴ய ஸாம
யஸ்த்வேதர்ஹி ப்³ரூயாந்மூர்தா⁴ தே விபதிஷ்யதீதி மூர்தா⁴ தே
விபதேதி³தி ॥ 1.8.6॥

ஹந்தாஹமேதத்³ப⁴க³வதோ வேதா³நீதி வித்³தீ⁴தி ஹோவாசாமுஷ்ய
லோகஸ்ய கா க³திரித்யயம் லோக இதி ஹோவாசாஸ்ய லோகஸ்ய
கா க³திரிதி ந ப்ரதிஷ்டா²ம் லோகமிதி நயேதி³தி ஹோவாச
ப்ரதிஷ்டா²ம் வயம் லோகꣳ ஸாமாபி⁴ஸꣳஸ்தா²பயாம:
ப்ரதிஷ்டா²ஸꣳஸ்தாவꣳ ஹி ஸாமேதி ॥ 1.8.7॥

தꣳ ஹ ப்ரவாஹணோ ஜைவலிருவாசாந்தவத்³வை கில தே
ஶாலாவத்ய ஸாம யஸ்த்வேதர்ஹி ப்³ரூயாந்மூர்தா⁴ தே விபதிஷ்யதீதி
மூர்தா⁴ தே விபதேதி³தி ஹந்தாஹமேதத்³ப⁴க³வதோ வேதா³நீதி
வித்³தீ⁴தி ஹோவாச ॥ 1.8.8॥

ப்ரவாஹனன் ராஜா க்ஷத்ரியர்
சிலையின் ஸலவாத் பிள்ளை அந்தணர்
டால்வர் அந்தணர்
மூவரும் உத்கீதா பிரணவம் பற்றி பேச
சாமத்துக்கு சுரம் ஆதாரம்
அதுக்கு பிராணன் ஆதாரம்
அதுக்கு அன்னம்
அதுக்கு தண்ணீர் -ஆப
அதுக்கு லோகம்
இதுக்கு -சுவர்க்கம் ஆதாரம் டால்வார் சொல்ல சிலைகள் ஒத்துக் கொள்ள வில்லை -தப்பாக சொன்னீர்
பூமிக்கு ஆதாரம் எது தெரியவில்லை
பிரவாஹனன் -நீ சொல்லு என்று இவன் இடம் கேட்க -லோகத்துக்கு ஆகாசம் சிலகர் சொல்ல -ப்ரவாஹனன் பேச
ப்ரஹ்ம வாசக சப்தம் ஆகாசம் –
ப்ரஹ்மம் தான் படைத்து
அறிந்தவனே உயர்ந்த கத்தி அடைகிறான் –

॥ இதி அஷ்டம: க²ண்ட:³ ॥

———————————————–

அஸ்ய லோகஸ்ய கா க³திரித்யாகாஶ இதி ஹோவாச
ஸர்வாணி ஹ வா இமாநி பூ⁴தாந்யாகாஶாதே³வ ஸமுத்பத்³யந்த
ஆகாஶம் ப்ரத்யஸ்தம் யந்த்யாகாஶோ ஹ்யேவைப்⁴யோ ஜ்யாயாநகாஶ:
பராயணம் ॥ 1.9.1॥

ஸ ஏஷ பரோவரீயாநுத்³கீ³த:² ஸ ஏஷோঽநந்த: பரோவரீயோ
ஹாஸ்ய ப⁴வதி பரோவரீயஸோ ஹ லோகாஞ்ஜயதி
ய ஏததே³வம் வித்³வாந்பரோவரீயாꣳஸமுத்³கீ³த²முபாஸ்தே ॥ 1.9.2॥

தꣳ ஹைதமதித⁴ந்வா ஶௌநக உத³ரஶாண்டி³ல்யாயோக்த்வோவாச
யாவத்த ஏநம் ப்ரஜாயாமுத்³கீ³த²ம் வேதி³ஷ்யந்தே பரோவரீயோ
ஹைப்⁴யஸ்தாவத³ஸ்மிꣳல்லோகே ஜீவநம் ப⁴விஷ்யதி ॥ 1.9.3॥

ததா²முஷ்மிꣳல்லோகே லோக இதி ஸ ய ஏதமேவம் வித்³வாநுபாஸ்தே
பரோவரீய ஏவ ஹாஸ்யாஸ்மிꣳல்லோகே ஜீவநம் ப⁴வதி
ததா²முஷ்மிꣳல்லோகே லோக இதி லோகே லோக இதி ॥ 1.9.4॥

॥ இதி நவம: க²ண்ட:³ ॥

பரன் வரீயான்
பரஞ்சோதி
ரூடி அர்த்தம்
உயர்வு அற உயர் நலம் உடையவன்
குணங்களை த்யானம் –
கோவர்தனம் -மும்மாரி தாபத்ரயம் -அவனுக்குள்ளே இருக்கும் கல்யாண குணங்களை த்யானம்

——-

3-பிராண வித்யை –1-1-10-11–

மடசீஹதேஷு குருஷ்வாடிக்யா ஸஹ ஜாயயோஷஸ்திர்ஹ
சாக்ராயண இப்⁴யக்³ராமே ப்ரத்³ராணக உவாஸ ॥ 1.10.1॥

ஸ ஹேப்⁴யம் குல்மாஷாந்கா²த³ந்தம் பி³பி⁴க்ஷே தꣳ ஹோவாச ।
நேதோঽந்யே வித்³யந்தே யச்ச யே ம இம உபநிஹிதா இதி
॥ 1.10.2॥

ஏதேஷாம் மே தே³ஹீதி ஹோவாச தாநஸ்மை ப்ரத³தௌ³
ஹந்தாநுபாநமித்யுச்சி²ஷ்டம் வை மே பீதꣳஸ்யாதி³தி ஹோவாச
॥ 1.10.3॥

ந ஸ்விதே³தேঽப்யுச்சி²ஷ்டா இதி ந வா
அஜீவிஷ்யமிமாநகா²த³ந்நிதி ஹோவாச காமோ ம
உத³பாநமிதி ॥ 1.10.4॥

ஸ ஹ கா²தி³த்வாதிஶேஷாஞ்ஜாயாயா ஆஜஹார ஸாக்³ர ஏவ
ஸுபி⁴க்ஷா ப³பூ⁴வ தாந்ப்ரதிக்³ருʼஹ்ய நித³தௌ⁴ ॥ 1.10.5॥

ஸ ஹ ப்ராத: ஸஞ்ஜிஹாந உவாச யத்³ப³தாந்நஸ்ய லபே⁴மஹி
லபே⁴மஹி த⁴நமாத்ராꣳராஜாஸௌ யக்ஷ்யதே ஸ மா
ஸர்வைரார்த்விஜ்யைர்வ்ருʼணீதேதி ॥ 1.10.6॥

தம் ஜாயோவாச ஹந்த பத இம ஏவ குல்மாஷா இதி
தாந்கா²தி³த்வாமும் யஜ்ஞம் விததமேயாய ॥ 1.10.7॥

தத்ரோத்³கா³த்ரூʼநாஸ்தாவே ஸ்தோஷ்யமாணாநுபோபவிவேஶ
ஸ ஹ ப்ரஸ்தோதாரமுவாச ॥ 1.10.8॥

ப்ரஸ்தோதர்யா தே³வதா ப்ரஸ்தாவமந்வாயத்தா தாம் சேத³வித்³வாந்ப்ரஸ்தோஷ்யஸி
மூர்தா⁴ தே விபதிஷ்யதீதி ॥ 1.10.9॥

ஏவமேவோத்³கா³தாரமுவாசோத்³கா³தர்யா தே³வதோத்³கீ³த²மந்வாயத்தா
தாம் சேத³வித்³வாநுத்³கா³ஸ்யஸி மூர்தா⁴ தே விபதிஷ்யதீதி ॥ 1.10.10॥

ஏவமேவ ப்ரதிஹர்தாரமுவாச ப்ரதிஹர்தர்யா தே³வதா
ப்ரதிஹாரமந்வாயத்தா தாம் சேத³வித்³வாந்ப்ரதிஹரிஷ்யஸி மூர்தா⁴ தே
விபதிஷ்யதீதி தே ஹ ஸமாரதாஸ்தூஷ்ணீமாஸாஞ்சக்ரிரே
॥ 1.10.11॥

॥ இதி த³ஶம: க²ண்ட:³ ॥

——————————————-

அத² ஹைநம் யஜமாந உவாச ப⁴க³வந்தம் வா அஹம்
விவிதி³ஷாணீத்யுஷஸ்திரஸ்மி சாக்ராயண இதி ஹோவாச ॥ 1.11.1॥

ஸ ஹோவாச ப⁴க³வந்தம் வா அஹமேபி:⁴ ஸர்வைரார்த்விஜ்யை:
பர்யைஷிஷம் ப⁴க³வதோ வா அஹமவித்த்யாந்யாநவ்ருʼஷி ॥ 1.11.2॥

ப⁴க³வாꣳஸ்த்வேவ மே ஸர்வைரார்த்விஜ்யைரிதி ததே²த்யத²
தர்ஹ்யேத ஏவ ஸமதிஸ்ருʼஷ்டா: ஸ்துவதாம் யாவத்த்வேப்⁴யோ த⁴நம்
த³த்³யாஸ்தாவந்மம த³த்³யா இதி ததே²தி ஹ யஜமாந உவாச
॥ 1.11.3॥

அத² ஹைநம் ப்ரஸ்தோதோபஸஸாத³ ப்ரஸ்தோதர்யா தே³வதா
ப்ரஸ்தாவமந்வாயத்தா தாம் சேத³வித்³வாந்ப்ரஸ்தோஷ்யஸி மூர்தா⁴ தே
விபதிஷ்யதீதி மா ப⁴க³வாநவோசத்கதமா ஸா தே³வதேதி
॥ 1.11.4॥

ப்ராண இதி ஹோவாச ஸர்வாணி ஹ வா இமாநி பூ⁴தாநி
ப்ராணமேவாபி⁴ஸம்விஶந்தி ப்ராணமப்⁴யுஜ்ஜிஹதே ஸைஷா தே³வதா
ப்ரஸ்தாவமந்வாயத்தா தாம் சேத³வித்³வாந்ப்ராஸ்தோஷ்யோ
மூர்தா⁴ தே வ்யபதிஷ்யத்ததோ²க்தஸ்ய மயேதி ॥ 1.11.5॥

அத² ஹைநமுத்³கா³தோபஸஸாதோ³த்³கா³தர்யா தே³வதோத்³கீ³த²மந்வாயத்தா
தாம் சேத³வித்³வாநுத்³கா³ஸ்யஸி மூர்தா⁴ தே விபதிஷ்யதீதி
மா ப⁴க³வாநவோசத்கதமா ஸா தே³வதேதி ॥ 1.11.6॥

ஆதி³த்ய இதி ஹோவாச ஸர்வாணி ஹ வா இமாநி
பூ⁴தாந்யாதி³த்யமுச்சை: ஸந்தம் கா³யந்தி ஸைஷா
தே³வதோத்³கீ³த²மந்வாயத்தா தாம் சேத³வித்³வாநுத³கா³ஸ்யோ
மூர்தா⁴ தே வ்யபதிஷ்யத்ததோ²க்தஸ்ய மயேதி ॥ 1.11.7॥

அத² ஹைநம் ப்ரதிஹர்தோபஸஸாத³ ப்ரதிஹர்தர்யா தே³வதா
ப்ரதிஹாரமந்வாயத்தா தாம் சேத³வித்³வாந்ப்ரதிஹரிஷ்யஸி
மூர்தா⁴ தே விபதிஷ்யதீதி மா ப⁴க³வாநவோசத்கதமா
ஸா தே³வதேதி ॥ 1.11.8॥

அந்நமிதி ஹோவாச ஸர்வாணி ஹ வா இமாநி பூ⁴தந்யந்நமேவ
ப்ரதிஹரமாணாநி ஜீவந்தி ஸைஷா தே³வதா ப்ரதிஹாரமந்வாயத்தா
தாம் சேத³வித்³வாந்ப்ரத்யஹரிஷ்யோ மூர்தா⁴ தே வ்யபதிஷ்யத்ததோ²க்தஸ்ய
மயேதி ததோ²க்தஸ்ய மயேதி ॥ 1.11.9॥

கிராமம்-குரு தேசம் -ரிஷி போக -சாப்பிட -தண்ணீர் கொடுக்க சாப்பிட மாட்டேன்
பிராணன் போகும் சமயம் நீ கொடுத்ததை சாப்பிட்டேன்
பிராணன் நிலை நிறுத்தும் பொழுது கொள்ள மாட்டேன்
அவன் மனைவியும் அப்படியே

॥ இதி ஏகாத³ஶ: க²ண்ட:³ ॥
கல்லுக்குள்ளும் ஜீவாத்மா உண்டே
ஆத்மாவுக்கு பிராணன் காரணம் இல்லையே -நித்யம் அன்றோ
பிராண வாயுவை நம்பி இல்லையே
ஸமஸ்த வஸ்துக்களும் பிராணன் இடம் தோன்றியவை என்பதால் பிராணன் என்பது பரமாத்மாவையே குறிக்கும் –
சர்வ பூதாநி -கீதையில் -ஸ்ருஷ்டி லயம் -கல்பாதியில் படைத்து –
காரணப்பெயர் வாழ வைப்பவன் -பிராணன் பரமாத்மாவே –
ஸ்ரீ பாஷ்ய மங்கள ஸ்லோகம் -பிராண சப்தம் அங்கும் –
பிரஸ்தாபம் பகுதியால் சொல்லப்படும் பிராணன் பரமாத்மாவே
உத்கீதம் அடுத்து -ஆதித்யன் -மேலே உள்ளவன் ஸ்துதிக்கப்படுபவன் -உச்சைஸ் சந்தம்
ப்ரதிஹர்த்தா -அன்னம் -ப்ரதிஹரணம் -அன்னம் —
1-1-9-அத ஏவ பிராண -முன் ஆகாசாத் தல் லிங்காத்
ஆர் உயிரேயோ-பிராணன் ஆதி சப்தம் அவனுக்கே
அகல் இடம் முழுதும் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்த –பெரிய நீர் படைத்து
ஓர் உயிர் உலகுக்கு எல்லாம் –
ஆதித்யன் அன்னம் -அவற்றையே குறிக்கும்
அனைவராலும் போற்றப்படுவது சூரியனுக்கும் பரமாத்மாவுக்கு பொருந்தாது –
அனைத்து பூதங்களும் அன்னம் உண்டு வாழ வில்லையே -பரமாத்மாவை அனுபவித்து வாழ வில்லையே
அர்த்தம் குறைத்து -உலக வழக்கு படியே இவற்றுக்கு அர்த்தம் கொள்ள வேண்டும் –
பிராணன் -உலகு அனைத்துக்கும் காரணம் லயம் -பரமாத்மா –

——

4-மது வித்யை –3-1 –3-11-வரை இது சொல்லப்பட்டுள்ளது –

॥ த்ருʼதீயோঽத்⁴யாய: ॥

அஸௌ வா ஆதி³த்யோ தே³வமது⁴ தஸ்ய த்³யௌரேவ
திரஶ்சீநவꣳஶோঽந்தரிக்ஷமபூபோ மரீசய: புத்ரா: ॥ 3.1.1॥

தஸ்ய யே ப்ராஞ்சோ ரஶ்மயஸ்தா ஏவாஸ்ய ப்ராச்யோ மது⁴நாட்³ய: ।
ருʼச ஏவ மது⁴க்ருʼத ருʼக்³வேத³ ஏவ புஷ்பம் தா அம்ருʼதா
ஆபஸ்தா வா ஏதா ருʼச: ॥ 3.1.2॥

ஏதம்ருʼக்³வேத³மப்⁴யதபꣳஸ்தஸ்யாபி⁴தப்தஸ்ய யஶஸ்தேஜ
இந்த்³ரியம் வீர்யமந்நாத்³யꣳரஸோঽஜாயத ॥ 3.1.3॥

தத்³வ்யக்ஷரத்ததா³தி³த்யமபி⁴தோঽஶ்ரயத்தத்³வா
ஏதத்³யதே³ததா³தி³த்யஸ்ய ரோஹிதꣳரூபம் ॥ 3.1.4॥

ஆகாசம் -அந்தரிக்ஷம் -லோகம் -தேனீக்கள் -மூங்கில் -தேனடை -தேன் வண்டுகள் சாரா க்ராஹி –
ஆசை அனைவருக்கும் -பூ -சுற்று ஆ என்று பார்க்குமவர்கள்
தேவர்களுக்கு மது ஆதித்யன் -ஸ்வர்க்க லோகம் மூங்கில் /-தேன் ஆடை ஆகாசம் நாடு லோகம் /
கிரணங்கள் -தண்ணீர் /அறிந்து -கொண்டு
ஹோமம் ஆஹுதி புஷபங்கள் -தேன் வண்டுகள் வேதங்கள்–சக்தி ரசம் எடுத்து மேலே கொண்டு ஆதித்யன் இடம் சேர்க்க
யாக பலம் யஜஸ் தேஜஸ் வீர்யம் –
வசுக்கள் ருத்ரர்கள் ஆதித்யர்கள் -இதை அனுபவிக்க இருக்க
ருக் வேதம் கிழக்கே சென்று –

॥ இதி ப்ரத²ம: க²ண்ட:³ ॥

———————————————–

அத² யேঽஸ்ய த³க்ஷிணா ரஶ்மயஸ்தா ஏவாஸ்ய த³க்ஷிணா
மது⁴நாட்³யோ யஜூꣳஷ்யேவ மது⁴க்ருʼதோ யஜுர்வேத³ ஏவ புஷ்பம்
தா அம்ருʼத ஆப: ॥ 3.2.1॥

தாநி வா ஏதாநி யஜூꣳஷ்யேதம்
யஜுர்வேத³மப்⁴யதபꣳஸ்தஸ்யாபி⁴தப்தஸ்ய யஶஸ்தேஜ இந்த்³ரியம்
வீர்யமந்நாத்³யꣳரஸோஜாயத ॥ 3.2.2॥

தத்³வ்யக்ஷரத்ததா³தி³த்யமபி⁴தோঽஶ்ரயத்தத்³வா
ஏதத்³யதே³ததா³தி³த்யஸ்ய ஶுக்லꣳ ரூபம் ॥ 3.2.3॥

தெற்கு திசை யஜுஸ் -கிரணங்களே வாஹனம் போக –

॥ இதி த்³விதீய: க²ண்ட:³ ॥

———————————————

அத² யேঽஸ்ய ப்ரத்யஞ்சோ ரஶ்மயஸ்தா ஏவாஸ்ய ப்ரதீச்யோ
மது⁴நாட்³ய: ஸாமாந்யேவ மது⁴க்ருʼத: ஸாமவேத³ ஏவ புஷ்பம்
தா அம்ருʼதா ஆப: ॥ 3.3.1॥

தாநி வா ஏதாநி ஸாமாந்யேதꣳ
ஸாமவேத³மப்⁴யதபꣳஸ்தஸ்யாபி⁴தப்தஸ்ய யஶஸ்தேஜ இந்த்³ரியம்
வீர்யமந்நாத்³யꣳரஸோঽஜாயத ॥ 3.3.2॥

தத்³வ்யக்ஷரத்ததா³தி³த்யமபி⁴தோঽஶ்ரயத்தத்³வா
ஏதத்³யதே³ததா³தி³த்யஸ்ய க்ருʼஷ்ணꣳரூபம் ॥ 3.3.3॥

மேற்கு திசை சாம வேதம்

॥ இதி த்ருʼதீய: க²ண்ட:³ ॥

—————————————————-

அத² யேঽஸ்யோத³ஞ்சோ ரஶ்மயஸ்தா ஏவாஸ்யோதீ³ச்யோ
மது⁴நாட்³யோঽத²ர்வாங்கி³ரஸ ஏவ மது⁴க்ருʼத
இதிஹாஸபுராணம் புஷ்பம் தா அம்ருʼதா ஆப: ॥ 3.4.1॥

தே வா ஏதேঽத²ர்வாங்கி³ரஸ ஏததி³திஹாஸபூராணமப்⁴யதபꣳ
ஸ்தஸ்யாபி⁴தப்தஸ்ய யஶஸ்தேஜ இந்த்³ரியாம்
வீர்யமந்நாத்³யꣳரஸோঽஜாயத ॥ 3.4.2॥

தத்³வ்யக்ஷரத்ததா³தி³த்யமபி⁴தோঽஶ்ரயத்தத்³வா
ஏதத்³யதே³ததா³தி³த்யஸ்ய பரம் க்ருʼஷ்ணꣳரூபம் ॥ 3.4.3॥

॥ இதி சதுர்த:² க²ண்ட:³ ॥

———————————————

அத² யேঽஸ்யோர்த்⁴வா ரஶ்மயஸ்தா ஏவாஸ்யோர்த்⁴வா
மது⁴நாட்³யோ கு³ஹ்யா ஏவாதே³ஶா மது⁴க்ருʼதோ ப்³ரஹ்மைவ
புஷ்பம் தா அம்ருʼதா ஆப: ॥ 3.5.1॥

தே வா ஏதே கு³ஹ்யா ஆதே³ஶா ஏதத்³ப்³ரஹ்மாப்⁴யதபꣳ
ஸ்தஸ்யாபி⁴தப்தஸ்ய யஶஸ்தேஜ இந்த்³ரியம்
வீர்யமந்நாத்³யꣳரஸோঽஜாயத ॥ 3.5.2॥

தத்³வ்யக்ஷரத்ததா³தி³த்யமபி⁴தோঽஶ்ரயத்தத்³வா
ஏதத்³யதே³ததா³தி³த்யஸ்ய மத்⁴யே க்ஷோப⁴த இவ ॥ 3.5.3॥

தே வா ஏதே ரஸாநாꣳரஸா வேதா³ ஹி ரஸாஸ்தேஷாமேதே
ரஸாஸ்தாநி வா ஏதாந்யம்ருʼதாநாமம்ருʼதாநி வேதா³
ஹ்யம்ருʼதாஸ்தேஷாமேதாந்யம்ருʼதாநி ॥ 3.5.4॥

॥ இதி பஞ்சம: க²ண்ட:³ ॥

———————————————-

தத்³யத்ப்ரத²மமம்ருʼதம் தத்³வஸவ உபஜீவந்த்யக்³நிநா முகே²ந ந வை
தே³வா அஶ்நந்தி ந பிப³ந்த்யேததே³வாம்ருʼதம் த்³ருʼஷ்ட்வா
த்ருʼப்யந்தி ॥ 3.6.1॥

த ஏததே³வ ரூபமபி⁴ஸம்விஶந்த்யேதஸ்மாத்³ரூபாது³த்³யந்தி ॥ 3.6.2॥

ஸ ய ஏததே³வமம்ருʼதம் வேத³ வஸூநாமேவைகோ பூ⁴த்வாக்³நிநைவ
முகே²நைததே³வாம்ருʼதம் த்³ருʼஷ்ட்வா த்ருʼப்யதி ஸ ய ஏததே³வ
ரூபமபி⁴ஸம்விஶத்யேதஸ்மாத்³ரூபாது³தே³தி ॥ 3.6.3॥

ஸ யாவதா³தி³த்ய: புரஸ்தாது³தே³தா பஶ்சாத³ஸ்தமேதா
வஸூநாமேவ தாவதா³தி⁴பத்யꣳஸ்வாராஜ்யம் பர்யேதா ॥ 3.6.4॥

॥ இதி ஷஷ்ட:² க²ண்ட:³ ॥

——————————————————–

அத² யத்³த்³விதீயமம்ருʼதம் தத்³ருத்³ரா உபஜீவந்தீந்த்³ரேண
முகே²ந ந வை தே³வா அஶ்நந்தி ந பிப³ந்த்யேததே³வாம்ருʼதம்
த்³ருʼஷ்ட்வா த்ருʼப்யந்தி ॥ 3.7.1॥

த ஏததே³வ ரூபமபி⁴ஸம்விஶந்த்யேதஸ்மாத்³ரூபாது³த்³யந்தி ॥ 3.7.2॥

ஸ ய ஏததே³வமம்ருʼதம் வேத³ ருத்³ராணாமேவைகோ பூ⁴த்வேந்த்³ரேணைவ
முகே²நைததே³வாம்ருʼதம் த்³ருʼஷ்ட்வா த்ருʼப்யதி ஸ ஏததே³வ
ரூபமபி⁴ஸம்விஶத்யேதஸ்மாத்³ரூபாது³தே³தி ॥ 3.7.3॥

ஸ யாவதா³தி³த்ய: புரஸ்தாது³தே³தா பஶ்சாத³ஸ்தமேதா
த்³விஸ்தாவத்³த³க்ஷிணத உதே³தோத்தரதோঽஸ்தமேதா ருத்³ராணாமேவ
தாவதா³தி⁴பத்யꣳஸ்வாராஜ்யம் பர்யேதா ॥ 3.7.4॥

॥ இதி ஸப்தம: க²ண்ட:³ ॥

————————————————-

அத² யத்த்ருʼதீயமம்ருʼதம் ததா³தி³த்யா உபஜீவந்தி வருணேந
முகே²ந ந வை தே³வா அஶ்நந்தி ந பிப³ந்த்யேததே³வாம்ருʼதம்
த்³ருʼஷ்ட்வா த்ருʼப்யந்தி ॥ 3.8.1॥

த ஏததே³வ ரூபமபி⁴ஸம்விஶந்த்யேதஸ்மாத்³ரூபாது³த்³யந்தி ॥ 3.8.2॥

ஸ ய ஏததே³வமம்ருʼதம் வேதா³தி³த்யாநாமேவைகோ பூ⁴த்வா வருணேநைவ
முகே²நைததே³வாம்ருʼதம் த்³ருʼஷ்ட்வா த்ருʼப்யதி ஸ ஏததே³வ
ரூபமபி⁴ஸம்விஶத்யேதஸ்மாத்³ரூபாது³தே³தி ॥ 3.8.3॥

ஸ யாவதா³தி³த்யோ த³க்ஷிணத உதே³தோத்தரதோঽஸ்தமேதா
த்³விஸ்தாவத்பஶ்சாது³தே³தா புரஸ்தாத³ஸ்தமேதாதி³த்யாநாமேவ
தாவதா³தி⁴பத்யꣳஸ்வாராஜ்யம் பர்யேதா ॥ 3.8.4॥

॥ இதி அஷ்டம: க²ண்ட:³ ॥

—————————————————–

அத² யச்சதுர்த²மம்ருʼதம் தந்மருத உபஜீவந்தி ஸோமேந
முகே²ந ந வை தே³வா அஶ்நந்தி ந பிப³ந்த்யேததே³வாம்ருʼதம்
த்³ருʼஷ்ட்வா த்ருʼப்யந்தி ॥ 3.9.1॥

த ஏததே³வ ரூபமபி⁴ஸம்விஶந்த்யேதஸ்மாத்³ரூபாது³த்³யந்தி ॥ 3.9.2॥

ஸ ய ஏததே³வமம்ருʼதம் வேத³ மருதாமேவைகோ பூ⁴த்வா ஸோமேநைவ
முகே²நைததே³வாம்ருʼதம் த்³ருʼஷ்ட்வா த்ருʼப்யதி ஸ ஏததே³வ
ரூபமபி⁴ஸம்விஶத்யேதஸ்மாத்³ரூபாது³தே³தி ॥ 3.9.3॥

ஸ யாவதா³தி³த்ய: பஶ்சாது³தே³தா புரஸ்தாத³ஸ்தமேதா
த்³விஸ்தாவது³த்தரத உதே³தா த³க்ஷிணதோঽஸ்தமேதா மருதாமேவ
தாவதா³தி⁴பத்ய்ꣳஸ்வாராஜ்யம் பர்யேதா ॥ 3.9.4॥

॥ இதி நவம: க²ண்ட:³ ॥

———————————————

அத² யத்பஞ்சமமம்ருʼதம் தத்ஸாத்⁴யா உபஜீவந்தி ப்³ரஹ்மணா
முகே²ந ந வை தே³வா அஶ்நந்தி ந பிப³ந்த்யேததே³வாம்ருʼதம்
த்³ருʼஷ்ட்வா த்ருʼப்யந்தி ॥ 3.10.1॥

த ஏததே³வ ரூபமபி⁴ஸம்விஶந்த்யேதஸ்மாத்³ரூபாது³த்³யந்தி ॥ 3.10.2॥

ஸ ய ஏததே³வமம்ருʼதம் வேத³ ஸாத்⁴யாநாமேவைகோ பூ⁴த்வா
ப்³ரஹ்மணைவ முகே²நைததே³வாம்ருʼதம் த்³ருʼஷ்ட்வா த்ருʼப்யதி ஸ ஏததே³வ
ரூபமபி⁴ஸம்விஶத்யேதஸ்மாத்³ரூபாது³தே³தி ॥ 3.10.3॥

ஸ யாவதா³தி³த்ய உத்தரத உதே³தா த³க்ஷிணதோঽஸ்தமேதா
த்³விஸ்தாவதூ³ர்த்⁴வம் உதே³தார்வாக³ஸ்தமேதா ஸாத்⁴யாநாமேவ
தாவதா³தி⁴பத்யꣳஸ்வாராஜ்யம் பர்யேதா ॥ 3.10.4॥

॥ இதி த³ஶம: க²ண்ட:³ ॥

————————————————

அத² தத ஊர்த்⁴வ உதே³த்ய நைவோதே³தா நாஸ்தமேதைகல ஏவ
மத்⁴யே ஸ்தா²தா ததே³ஷ ஶ்லோக: ॥ 3.11.1॥

ந வை தத்ர ந நிம்லோச நோதி³யாய கதா³சந ।
தே³வாஸ்தேநாஹꣳஸத்யேந மா விராதி⁴ஷி ப்³ரஹ்மணேதி ॥ 3.11.2॥

ந ஹ வா அஸ்மா உதே³தி ந நிம்லோசதி ஸக்ருʼத்³தி³வா ஹைவாஸ்மை
ப⁴வதி ய ஏதாமேவம் ப்³ரஹ்மோபநிஷத³ம் வேத³ ॥ 3.11.3॥

தத்³தை⁴தத்³ப்³ரஹ்மா ப்ரஜாபதய உவாச ப்ரஜாபதிர்மநவே
மநு: ப்ரஜாப்⁴யஸ்தத்³தை⁴தது³த்³தா³லகாயாருணயே ஜ்யேஷ்டா²ய புத்ராய
பிதா ப்³ரஹ்ம ப்ரோவாச ॥ 3.11.4॥

இத³ம் வாவ தஜ்ஜ்யேஷ்டா²ய புத்ராய பிதா ப்³ரஹ்ம
ப்ரப்³ரூயாத்ப்ரணாய்யாய வாந்தேவாஸிநே ॥ 3.11.5॥

நாந்யஸ்மை கஸ்மைசந யத்³யப்யஸ்மா இமாமத்³பி:⁴ பரிக்³ருʼஹீதாம்
த⁴நஸ்ய பூர்ணாம் த³த்³யாதே³ததே³வ ததோ பூ⁴ய இத்யேததே³வ
ததோ பூ⁴ய இதி ॥ 3.11.6॥

மது வித்யை இப்படி அறிந்து
பார்த்து கொண்டே திருப்தி அடையும் –
ஆதித்யனை சரீரமாக கொண்ட ப்ரஹ்மம் உபாசனம் மண்ணும் விண்ணும் ஆள்வர்

॥ இதி ஏகாத³ஶ: க²ண்ட:³ ॥

தேன் -சூரியனையே தேனாக நினைத்து -த்ருஷ்ட்டி
அந்தரிக்ஷம் அபூப தேன் அடை -மரக்க்கிளை -த்யுலோகம் -தேவ மது -ரூபகம் –
ஊர்த்வம் பக்கவாட்டில் நான்கு திக்குகள் –நான்கு வேதம் -உபநிஷத்துக்கள் -ஐந்தும் -இவையே பூக்கள்
கர்மங்கள் -கிழக்கே ருக் -வேதம் இத்யாதி
உபாசனம் -உபநிஷத் -ப்ரஹ்மம் ரஸம் -தேன் –

மந்த்ரம் சொல்லி யாகம் -ரசத்தை கொண்டு சேர்க்கும் -ரஸ்மை -கிரணங்கள் -மூலம் சேமித்து –
கிழக்கு -ரிக் மந்த்ர தேனீக்கள் கிழக்குப்புறம் -வசுக்கள் உண்பார்
தெற்கு யஜுர் வேதம் கர்மம் -ருத்ரர்
மேற்கு -ஆதித்யர்
வடக்கு -மருத்துக்கள்
மேல் ஸாத்ய கணங்கள்
அந்த தேன் =-உண்ண ஐந்து தேவதைகள் -த்ருஷ்ட்வா -பார்த்து த்ருப்தி அடைவதே உண்பது -கண்டு களிக்கிறார்கள்
இவர்களுக்குள் பரமாத்மா அந்தர்யாமி -மோக்ஷம் கொடுப்பவன் இவனே
வசுக்களாக பிறவி எடுத்து பின்பு மோக்ஷம்
இதே போல் ஆதித்யனாக இருந்து பின்பு மோக்ஷம்
தேவதா அதிகாரணம் -1-3-25-அவர்களும் உபாஸனம் செய்யலாமே –
மது அதிகரணம்
இவற்றை சொல்லும்
தாங்களே தங்களை த்யானிப்பார்களோ
இருக்கும் பலத்துக்கு செய்ய வேண்டாமே
மது -அசம்பாவித ஜைமினி ரிஷி -அதிகாரம் இல்லை
அதிகாரம் உண்டு பாரதராயணர் அந்தர்யாமியான பரமாத்மாவை உபாசனம் -மோக்ஷ பலத்துக்கு –
பரன் திறம் அன்றி தெய்வம் மற்று இல்லை

5-காயத்ரி வித்யை –சந்தஸ்ஸூ சாந்தோக்யம் —3-12-

கா³யத்ரீ வா ஈத³ꣳ ஸர்வம் பூ⁴தம் யதி³த³ம் கிம் ச வாக்³வை கா³யத்ரீ
வாக்³வா இத³ꣳ ஸர்வம் பூ⁴தம் கா³யதி ச த்ராயதே ச ॥ 3.12.1॥

யா வை ஸா கா³யத்ரீயம் வாவ ஸா யேயம் ப்ருʼதி²வ்யஸ்யாꣳ ஹீத³ꣳ
ஸர்வம் பூ⁴தம் ப்ரதிஷ்டி²தமேதாமேவ நாதிஶீயதே ॥ 3.12.2॥

யா வை ஸா ப்ருʼதி²வீயம் வாவ ஸா யதி³த³மஸ்மிந்புருஷே
ஶரீரமஸ்மிந்ஹீமே ப்ராணா: ப்ரதிஷ்டி²தா ஏததே³வ
நாதிஶீயந்தே ॥ 3.12.3॥

யத்³வை தத்புருஷே ஶரீரமித³ம் வாவ தத்³யதி³த³மஸ்மிந்நந்த:
புருஷே ஹ்ருʼத³யமஸ்மிந்ஹீமே ப்ராணா: ப்ரதிஷ்டி²தா ஏததே³வ
நாதிஶீயந்தே ॥ 3.12.4॥

ஸைஷா சதுஷ்பதா³ ஷட்³விதா⁴ கா³யத்ரீ ததே³தத்³ருʼசாப்⁴யநூக்தம்
॥ 3.12.5॥

காயத்ரி வித்யை -நாலு ஆறு -எட்டு மூன்று -பாதங்கள் -24-அக்ஷரங்கள் –
கீதா ஸ்லோகங்கள் அனுஷ்டுப் சந்தஸ் –யாப்பு இலக்கணம் தமிழ் போலே –
சந்தஸாம் மாதா காயத்ரி -இங்கு நாலு ஆறு
பூதம் –ஜீவா ராசி -பிருத்வி இருக்க -சரீரம்-வாழ – ஹிருதயம்-ஆத்மா இருக்கும் இடம் -இப்படி நாலு
ஒவ் ஒன்றுக்கும் இரண்டு குணங்கள் -கடைசி இரண்டுக்கும் ஒன்றாக்கி
காயந்தம் பாடுபவனை காப்பாற்றும் காயத்ரி –

கானம் -குறிக்கப்படும் காப்பாற்றுப்படும்
பூதம் சர்வ பூதம் பிரதிஷ்டிதம் தாண்டி போக முடியாதே
சர்வ பிராண ப்ரதிஷ்டிதம் -ஆனால் தாண்ட முடியாதே -ஆக இப்படி ஆறு குணங்கள் –

தாவாநஸ்ய மஹிமா ததோ ஜ்யாயாꣳஶ்ச பூருஷ: ।
பாதோ³ঽஸ்ய ஸர்வா பூ⁴தாநி த்ரிபாத³ஸ்யாம்ருʼதம் தி³வீதி ॥ 3.12.6॥

பிரகிருதி மண்டலம் கால் பாகம்

யத்³வை தத்³ப்³ரஹ்மேதீத³ம் வாவ தத்³யோயம் ப³ஹிர்தா⁴
புருஷாதா³காஶோ யோ வை ஸ ப³ஹிர்தா⁴ புருஷாதா³காஶ: ॥ 3.12.7॥

அயம் வாவ ஸ யோঽயமந்த: புருஷ அகாஶோ யோ வை ஸோঽந்த:
புருஷ ஆகாஶ: ॥ 3.12.8॥

அயம் வாவ ஸ யோঽயமந்தர்ஹ்ருʼத³ய ஆகாஶஸ்ததே³தத்பூர்ணமப்ரவர்தி
பூர்ணமப்ரவர்திநீꣳஶ்ரியம் லப⁴தே ய ஏவம் வேத³ ॥ 3.12.9॥

॥ இதி த்³வாத³ஶ: க²ண்ட:³ ॥

நான்கு பாதங்கள் -ஆறு வகைப்பட்ட -ஒவ்வொரு பாதத்திலும் ஆறு எழுத்துக்கள்
காயத்ரி -சந்தஸ்ஸூக்கு-சாம்யம் பரமாத்மா -இவ்வாறு உபாசனம்
இவனுக்கும் நான்கு கால்கள் -சர்வானி பூதானி முதல் பகுதி -உடலுடன் கூடிய ஜீவர்கள் அனைவரும் பூதாநி –
பிருத்வி இரண்டாவது -சரீரம் மூன்றாவது -ஹ்ருதயம் நான்காவது என்று நினைத்து
ஆறு – பூதங்களை -வாக் சொல் -பொருளை குறிக்கும் -தானே சொல்லி தானே அனைத்துக்கும் நல்லது பண்ணுகிறான்
காயதி -சொல்கிறது -த்ராயதி-உபதேசித்து -காக்கும் -காயத்ரி -இரண்டையும் காட்டும் –
சொல்லுக்கு பரமாத்மா பர்யந்தம் -காயதி
பிருத்வியில் பூதங்கள் அனைத்தும் நிலை பெற்று உள்ளன -இவனே உள்ளே இருந்து தாங்கும் சக்தி கொடுக்கிறான்
சர்வ பூத இருப்பிடம் -எங்கும் தாண்டி போக முடியாதே -ஆஸ்ரயித்தே இருக்க வேண்டும் -தாண்ட முடியாமல் இருப்பது -ஆக இரண்டும் இத்தால் –
சரீரம் -ஹ்ருதயம் -பிராணனுக்கு இருப்பிடம் -பிராணனால் வெளியே போக முடியாதே -இரண்டுக்கும் சேர்ந்து இந்த இரண்டு தன்மைகள் –
இவ்வளவு மட்டும் அல்ல
ஒரு சிறு பகுதியை மட்டும் சொன்னேன் -வேதமே சொல்லும் இறுதியில் –
தவான் அஸ்ய மஹிமா -அநந்தன் -சொத்துக்களில் ஒரு பகுதி -த்ரிபாத் -அம்ருதம் -லீலா விபூதி போல் மூன்று மடங்கு -அளவு பட்டது அல்ல என்றவாறு
ஆகாசம் -பரந்து விரிந்து -உருவம் அற்று -அசையாமல் –மூன்று தன்மைகள் -அமலத்வம் -இவற்றால் பரமாத்மாவுக்கு நிகர் –
வெளியில் உள்ள ஆகாசமே உடலுக்குள்ளும் ஹிருதயத்துக்குள்ளும் –
பூர்ணம் -த்ரிவித அபரிச்சேத்யன் -அப்ரவர்த்தி அசையாமல் -ஸ்ரீ யம் லபதே -செல்வம் பெறுகிறான் -அசையா அளவில்லா முக்தி ஐஸ்வர்யம் பெறுகிறான் –
1-1-26 ஸூத்ரம் இத்தைச் சொல்லும்
விருத்தம் சொல்வதால் -காயத்ரி சந்தஸ்ஸுவை சொல்வதால்
அப்படி சொல்ல வில்லை -பரமாத்மாவையே சொல்லிற்று
மனதை தியானிக்கும் வழியைச் சொன்னவாறு –

——

6-பரஞ்சோதிஸ் வித்யை -சாந்தோக்யம் -3-13-

தஸ்ய ஹ வா ஏதஸ்ய ஹ்ருʼத³யஸ்ய பஞ்ச தே³வஸுஷய:
ஸ யோঽஸ்ய ப்ராங்ஸுஷி: ஸ ப்ராணஸ்தச்சக்ஷு:
ஸ ஆதி³த்யஸ்ததே³தத்தேஜோঽந்நாத்³யமித்யுபாஸீத
தேஜஸ்வ்யந்நாதோ³ ப⁴வதி ய ஏவம் வேத³ ॥ 3.13.1॥

காவல் ஆள்கள் -த்வார பாலகர்கள் -கிழக்கே பிராண தேவதை வாசல் காப்பான் –
அதுக்கு ஒரு தேவதை –பிராண வாயு கண்ணில் -கண்ணுக்கு அதிஷ்டானம் தேவதை ஆதித்யன் –
இப்படி உபாஸிக்க வேண்டும் -தேஜஸ் அன்னம் பெறுகிறான்

அத² யோঽஸ்ய த³க்ஷிண: ஸுஷி: ஸ வ்யாநஸ்தச்ச்²ரோத்ரꣳ
ஸ சந்த்³ரமாஸ்ததே³தச்ச்²ரீஶ்ச யஶஶ்சேத்யுபாஸீத
ஶ்ரீமாந்யஶஸ்வீ ப⁴வதி ய ஏவம் வேத³ ॥ 3.13.2॥

வியான வாயு தக்ஷிண திக்கு காதுகளில் சந்திரன் தேவதை -ஸ்ரீ யசஸ் பெறுகிறான் செல்வமும் கீர்த்தியும் பெறுவார்கள் –

அத² யோঽஸ்ய ப்ரத்யங்ஸுஷி: ஸோঽபாந:
ஸா வாக்ஸோঽக்³நிஸ்ததே³தத்³ப்³ரஹ்மவர்சஸமந்நாத்³யமித்யுபாஸீத
ப்³ரஹ்மவர்சஸ்யந்நாதோ³ ப⁴வதி ய ஏவம் வேத³ ॥ 3.13.3॥

மேற்கு திக்குள் அபான வாயு -வாக்கில் -அக்னி -ஓளி -தேஜஸ் -பேச பேச ஒருவனை அறிகிறோம் –
அக்ரம் முன்னால் நடத்தி போகும் -யா காவாராயானும் நா கா காக்க –
ப்ரஹ்ம வர்ஜஸ் பெறுகிறான் -ப்ரஹ்ம ஞானி போலே தேஜஸ் பெறுகிறான் –

அத² யோঽஸ்யோத³ங்ஸுஷி: ஸ ஸமாநஸ்தந்மந:
ஸ பர்ஜந்யஸ்ததே³தத்கீர்திஶ்ச வ்யுஷ்டிஶ்சேத்யுபாஸீத
கீர்திமாந்வ்யுஷ்டிமாந்ப⁴வதி ய ஏவம் வேத³ ॥ 3.13.4॥

சமான வாயு -மனசில் பர்ஜன்ய தேவதை -ஓளி படைத்த சரீரம் -கீர்த்தி யுடையவன் ஆகிறான்

அத² யோঽஸ்யோர்த்⁴வ: ஸுஷி: ஸ உதா³ந: ஸ வாயு:
ஸ ஆகாஶஸ்ததே³ததோ³ஜஶ்ச மஹஶ்சேத்யுபாஸீதௌஜஸ்வீ
மஹஸ்வாந்ப⁴வதி ய ஏவம் வேத³ ॥ 3.13.5॥

மேல் நோக்கி -ஆகாசம் -உத் -இந்திரிய கிங்கரன் ஆகிறான் -வாயு தேவதை -ப்ரஹ்ம பிராப்தி –

தே வா ஏதே பஞ்ச ப்³ரஹ்மபுருஷா: ஸ்வர்க³ஸ்ய லோகஸ்ய
த்³வாரபா: ஸ ய ஏதாநேவம் பஞ்ச ப்³ரஹ்மபுருஷாந்ஸ்வர்க³ஸ்ய
லோகஸ்ய த்³வாரபாந்வேதா³ஸ்ய குலே வீரோ ஜாயதே ப்ரதிபத்³யதே
ஸ்வர்க³ம் லோகம் ய ஏதாநேவம் பஞ்ச ப்³ரஹ்மபுருஷாந்ஸ்வர்க³ஸ்ய
லோகஸ்ய த்³வாரபாந்வேத³ ॥ 3.13.6॥

ஆதி வாஹிகர்கள் என்று அறிந்து உபாசனம் –

அத² யத³த: பரோ தி³வோ ஜ்யோதிர்தீ³ப்யதே விஶ்வத: ப்ருʼஷ்டே²ஷு
ஸர்வத: ப்ருʼஷ்டே²ஷ்வநுத்தமேஷூத்தமேஷு லோகேஷ்வித³ம் வாவ
தத்³யதி³த³மஸ்மிந்நந்த: புருஷே ஜ்யோதி: ॥ 3.13.7॥

ஜோதி மயம் -சுயம் பிரகாசம் -பரஞ்சோதி–ஜாடராக்னியாக வயிற்றில் -பரமாகாச ஜோதியே இங்கும்
ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் —
அந்தப்புர ஜோதி
குதிரை முக அக்னி கடலுக்குள்

தஸ்யைஷா த்³ருʼஷ்டிர்யத்ரிதத³ஸ்மிஞ்ச²ரீரே ஸꣳஸ்பர்ஶேநோஷ்ணிமாநம்
விஜாநாதி தஸ்யைஷா ஶ்ருதிர்யத்ரைதத்கர்ணாவபிக்³ருʼஹ்ய நிநத³மிவ
நத³து²ரிவாக்³நேரிவ ஜ்வலத உபஶ்ருʼணோதி ததே³தத்³த்³ருʼஷ்டம் ச
ஶ்ருதம் சேத்யுபாஸீத சக்ஷுஷ்ய: ஶ்ருதோ ப⁴வதி ய ஏவம் வேத³
ய ஏவம் வேத³ ॥ 3.13.8॥

॥ இதி த்ரயோத³ஶ: க²ண்ட:³ ॥

———————————————-

அனைத்தும் இவன் சங்கல்பத்தால் தேஜஸ்ஸின் ஒரு பகுதி
அந்த புருஷே இதே தேஜஸ் -ஜாடராக்னி -வைஸ்வானர அக்னி -இவனும் பரமாத்மாவே –
உடலைச் தொட்டு அக்னியை அறிந்து உபாசனம் -இதுவே காண்பது போல் —
ரதம் ரிஷபம் போல் சப்தம் உள்ளே இருந்து கேட்க்கும் –
இப்படி கண்டு கேட்டு உபாசனம் –
ஸ்வரூபம் -பரஞ்சோதிஸ்ஸூ
திருமேனியும் -ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்த
விபூதியும் ஜோதி -தமச பரஸ்தாத் தேஜோ மயம் பரம சத்வ மயம் -அப்ராக்ருதம் –
1-1-25-ஜ்யோதிர் அதிகரணம் –

——

7-சாண்டில்ய வித்யை -சாந்தோக்யம் -3-14-

ஸர்வம் க²ல்வித³ம் ப்³ரஹ்ம தஜ்ஜலாநிதி ஶாந்த உபாஸீத ।
அத² க²லு க்ரதுமய: புருஷோ யதா²க்ரதுரஸ்மிꣳல்லோகே
புருஷோ ப⁴வதி ததே²த: ப்ரேத்ய ப⁴வதி ஸ க்ரதும் குர்வீத
॥ 3.14.1॥

சாண்டில்ய வித்யை
யதா உபாசனம் ததா பலம் –எப்படி நினைத்து உபாசித்தாலும் -அப்படியே -தூய்மை -ஆனந்தமயம் –
கண்ணன் பிறந்து விட்டுப்போன நியாயம் சாஸ்திரம் வெட்க்கி போகும்படி –
யசோதை கட்டி வைக்க -நாம் உபாஸிக்க சம்சார கட்டில் இருந்து விலகும் –
சாந்த– ராக த்வேஷம் பசி தாகம் சோகம் மோகம் இல்லாமல் -உபாஸீதா –
ஸூவ பர பேதம்-இல்லாமல் -அனைத்தும் ப்ரஹ்மமே அவனுக்கே சரீரம் அந்தராத்மா படைத்தது அவனே –
சர்வம் -கண்ணால் பார்க்கும் அனைத்தும் ப்ரஹ்மம்
இதி–தஜ்ஜ–அதனிடம் பிறந்து / தல்ல அதிலே லயம் /ததனு-அதனால் ரக்ஷிக்கப்பட்டு /
த்ரிவித காரணம் ப்ரஹ்மமே -ஆதி மூலமே –அகில காரணாய– அத்புத காரணாய — நிஷ் காராணாய –
லயம் முன் நிலை -காரண பாவத்தை கார்ய பாவம் அடைவதே லயம் -ப்ரக்ருஷ்ட லயம் பிரளயம் –
விசிஷ்ட ஆத்ம வேஷம் நிஷ் க்ருஷ்ட ஆத்ம வேஷம் வாசி அறிந்து -சாந்த உபாசனம் –
பிறர் நம்மை ஏச -நமது கர்மமே அவர் உரு -அது தானே காரணம்– இந்த காரியத்துக்கு நாம் துக்கப்படுவதற்கு –

மநோமய: ப்ராணஶரீரோ பா⁴ரூப: ஸத்யஸங்கல்ப
ஆகாஶாத்மா ஸர்வகர்மா ஸர்வகாம: ஸர்வக³ந்த:⁴ ஸர்வரஸ:
ஸர்வமித³மப்⁴யத்தோঽவாக்யநாத³ர: ॥ 3.14.2॥

அவாக்ய அ நாதராக -அப்படி இருப்பவன் தான் வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளையாக இங்கே

ஏஷ ம ஆத்மாந்தர்ஹ்ருʼத³யேঽணீயாந்வ்ரீஹேர்வா யவாத்³வா
ஸர்ஷபாத்³வா ஶ்யாமாகாத்³வா ஶ்யாமாகதண்டு³லாத்³வைஷ
ம ஆத்மாந்தர்ஹ்ருʼத³யே ஜ்யாயாந்ப்ருʼதி²வ்யா
ஜ்யாயாநந்தரிக்ஷாஜ்ஜ்யாயாந்தி³வோ ஜ்யாயாநேப்⁴யோ
லோகேப்⁴ய: ॥ 3.14.3॥

அரிசியை விட -கோதுமையை விட கடுகை விட சோளப்பொறியை விட சிறியதாக இருந்தும்
பிருத்வி மண்டலம் விடவும் அந்தரிக்ஷ லோகம் விட பெரியவர்
அவ்வளவு பெரியவர் நம்மை -கொள்ள இவ்வளவு சிறியதாக —
கண் காண நிற்கில் ஆணை இட்டு விலக்கும் என்று -நாள் பார்த்து இருக்கும் –

ஸர்வகர்மா ஸர்வகாம: ஸர்வக³ந்த:⁴ ஸர்வரஸ:
ஸர்வமித³மப்⁴யாத்தோঽவாக்யநாத³ர ஏஷ ம ஆத்மாந்தர்ஹ்ருʼத³ய
ஏதத்³ப்³ரஹ்மைதமித: ப்ரேத்யாபி⁴ஸம்ப⁴விதாஸ்மீதி யஸ்ய ஸ்யாத³த்³தா⁴
ந விசிகித்ஸாஸ்தீதி ஹ ஸ்மாஹ ஶாண்டி³ல்ய: ஶாண்டி³ல்ய:–॥ 3.14.4॥

கர்மங்களை செய்வேனும் யானே என்னும் -இத்யாதி –
விசாரம் இல்லாமல் சங்கை இல்லாமல் உறுதியாக உபாசித்தால் அடைகிறான் –

॥ இதி சதுர்த³ஶ: க²ண்ட:³ ॥

சர்வம் கல் இதம் ஸர்வம் ப்ரஹ்ம தஜ் ஜலான் -சாந்த உபாஸீத
உலகம் அனைத்தும் ப்ரஹ்மாத்மகம் -அனைத்துக்கும் அந்தராத்மா ப்ரஹ்மமே –
ஜம் -லம் -அன் -ஸ்ருஷ்ட்டி சம்ஹாரம் ஸ்திதி மூன்றுமே ப்ரஹ்மத்தால்
அபர்யவசான விருத்தி -அனைத்தும் அவன் வரை சொல்லுமே
இந்த அறிவாலேயே சாந்தி வருமே
அவனே அகல் ஞாலம் படைத்து இடந்தான் -அவனே அஃது உண்டு உமிழ்ந்து அளந்தான் –
அவனே அவனும் அவனும் அவனும் அவனே மற்று எல்லாமும் அனைத்தும் அறிந்தனமே-
ஆம் அவை ஆயவை ஆய் நின்ற அவரே முக்காலத்தில் சர்வமும் ப்ரஹ்மமே –
அறிந்த பின்பு மித்ரர் அமித்ரர் வாசியே வராதே -எனவே ராக த்வேஷம் இல்லாமல் சாந்தி கிட்டும் –
வியாப்த கத தோஷம் கிட்டாதே -முண்டகம் -சமண வ்ருக்ஷம்

——————-

8-சம் வர்க்கம் வித்யை –4-1/4-2/4-3-

॥ சதுர்தோ²ঽத்⁴யாய: ॥
ஜாநஶ்ருதிர்ஹ பௌத்ராயண: ஶ்ரத்³தா⁴தே³யோ ப³ஹுதா³யீ ப³ஹுபாக்ய ஆஸ
ஸ ஹ ஸர்வத ஆவஸதா²ந்மாபயாஞ்சக்ரே ஸர்வத ஏவ
மேঽந்நமத்ஸ்யந்தீதி ॥ 4.1.1॥

அத² ஹꣳஸா நிஶாயாமதிபேதுஸ்தத்³தை⁴வꣳ ஹꣳ ஸோஹꣳ ஸமப்⁴யுவாத³
ஹோ ஹோঽயி ப⁴ல்லாக்ஷ ப⁴ல்லாக்ஷ ஜாநஶ்ருதே: பௌத்ராயணஸ்ய
ஸமம் தி³வா ஜ்யோதிராததம் தந்மா ப்ரஸாங்க்ஷீ ஸ்தத்த்வா
மா ப்ரதா⁴க்ஷீரிதி ॥ 4.1.2॥

ப⁴ல்லாக்ஷ-ஆதரத்தை ஸூ சிக்கும் -மந்த த்ருஷ்ட்டி என்றுமாம் -மஹாராஜர் படுத்து இருக்க மேலே பறக்கலாமோ
அன்ன தானாதிகளால் பெற்ற தேஜஸ்-ஸமம் தி³வா ஜ்யோதிராததம்- உண்டே இவனுக்கு-

தமு ஹ பர: ப்ரத்யுவாச கம்வர ஏநமேதத்ஸந்தꣳ ஸயுக்³வாநமிவ
ரைக்வமாத்தே²தி யோ நு கத²ꣳ ஸயுக்³வா ரைக்வ இதி ॥ 4.1.3॥

இவன் ரைக்குவர் போன்ற மஹாத்மா இல்லையே /
ஸயுக்³வா ரைக்வ-வண்டியின் சாயையில் படுத்து -இருப்பவரா
பொறுப்பு வேறே வைராக்யம் வேறே -சந்நியாசி சம்சாரத்தில் ஆசை இல்லாமல் –
ஒரு கிராமத்தில் ஒரு இரவுக்கு மேலே இருக்காமல் -அபிமானம் வர வாய்ப்பு இல்லையே

யதா² க்ருʼதாயவிஜிதாயாத⁴ரேயா: ஸம்யந்த்யேவமேநꣳ ஸர்வம்
தத³பி⁴ஸமைதி யத்கிஞ்ச ப்ரஜா: ஸாது⁴ குர்வந்தி யஸ்தத்³வேத³
யத்ஸ வேத³ ஸ மயைதது³க்த இதி ॥ 4.1.4॥

தது³ ஹ ஜாநஶ்ருதி: பௌத்ராயண உபஶுஶ்ராவ
ஸ ஹ ஸஞ்ஜிஹாந ஏவ க்ஷத்தாரமுவாசாங்கா³ரே ஹ ஸயுக்³வாநமிவ
ரைக்வமாத்தே²தி யோ நு கத²ꣳ ஸயுக்³வா ரைக்வ இதி ॥ 4.1.5॥

உபஶுஶ்ராவ-இவனும் கேட்டான்-

யதா² க்ருʼதாயவிஜிதாயாத⁴ரேயா: ஸம்யந்த்யேவமேநꣳ ஸர்வம்
தத³பி⁴ஸமைதி யத்கிஞ்ச ப்ரஜா: ஸாது⁴ குர்வந்தி யஸ்தத்³வேத³
யத்ஸ வேத³ ஸ மயைதது³க்த இதி ॥ 4.1.6॥

ஸ ஹ க்ஷத்தாந்விஷ்ய நாவித³மிதி ப்ரத்யேயாய தꣳ ஹோவாச
யத்ராரே ப்³ராஹ்மணஸ்யாந்வேஷணா ததே³நமர்ச்சே²தி ॥ 4.1.7॥

ஸோঽத⁴ஸ்தாச்ச²கடஸ்ய பாமாநம் கஷமாணமுபோபவிவேஶ
தꣳ ஹாப்⁴யுவாத³ த்வம் நு ப⁴க³வ: ஸயுக்³வா ரைக்வ
இத்யஹꣳ ஹ்யரா3 இதி ஹ ப்ரதிஜஜ்ஞே ஸ ஹ க்ஷத்தாவித³மிதி
ப்ரத்யேயாய ॥ 4.1.8 ॥

ரிஷிகள் -பறவை -ஞான ஸ்ருதி -தர்மசாலைகள் எங்கும் கட்டி-தர்ம ஞானம் உள்ளது ப்ரஹ்ம ஞானம் இல்லாமல் இருக்கிறான் –
நல்லவனாக ஆக இரண்டு ரிஷிகள் -ஹம்ஸ-பறவையாக பேச -இவனுக்கு பறவை பாஷை தெரியும் –
ரைக்குவாரோ இவர் -யார் -அறிய ஆசை எந்த வண்டி சக்கரத்தின் அடியில் உள்ளான்
ஞானம் -நல்லவை எல்லாம் ரைக்குவர் இட்ட பிக்ஷை சொல்ல ஆசை பெறுக
தேடச்சொல்லி –

॥ இதி ப்ரத²ம: க²ண்ட:³ ॥

———————————————

தது³ ஹ ஜாநஶ்ருதி: பௌத்ராயண: ஷட்ஶதாநி க³வாம்
நிஷ்கமஶ்வதரீரத²ம் ததா³தா³ய ப்ரதிசக்ரமே தꣳ ஹாப்⁴யுவாத³
॥ 4.2.1॥

ரைக்வேமாநி ஷட்ஶதாநி க³வாமயம் நிஷ்கோঽயமஶ்வதரீரதோ²ঽநு
ம ஏதாம் ப⁴க³வோ தே³வதாꣳ ஶாதி⁴ யாம் தே³வதாமுபாஸ்ஸ இதி
॥ 4.2.2॥

தமு ஹ பர: ப்ரத்யுவாசாஹ ஹாரேத்வா ஶூத்³ர தவைவ ஸஹ
கோ³பி⁴ரஸ்த்விதி தது³ ஹ புநரேவ ஜாநஶ்ருதி: பௌத்ராயண:
ஸஹஸ்ரம் க³வாம் நிஷ்கமஶ்வதரீரத²ம் து³ஹிதரம் ததா³தா³ய
ப்ரதிசக்ரமே ॥ 4.2.3॥

தꣳ ஹாப்⁴யுவாத³ ரைக்வேத³ꣳ ஸஹஸ்ரம் க³வாமயம்
நிஷ்கோঽயமஶ்வதரீரத² இயம் ஜாயாயம் க்³ராமோ
யஸ்மிந்நாஸ்ஸேঽந்வேவ மா ப⁴க³வ: ஶாதீ⁴தி ॥ 4.2.4 ॥

இயம் ஜாயாயம் க்³ராமோ-இவள் உனக்கு ஏற்றவள் -இந்த கிராமமும் உன் னுடையது –
எனக்கு என்று ஒன்றும் இல்லை ப்ரஹ்ம வித்யை சொல்லிக் கொடும்

தஸ்யா ஹ முக²முபோத்³க்³ருʼஹ்ணந்நுவாசாஜஹாரேமா: ஶூத்³ராநேநைவ
முகே²நாலாபயிஷ்யதா² இதி தே ஹைதே ரைக்வபர்ணா நாம
மஹாவ்ருʼஷேஷு யத்ராஸ்மா உவாஸ ஸ தஸ்மை ஹோவாச ॥ 4.2.5 ॥

பசுக்கள் தேர் கூட்டி செல்ல -பறவை சொல்லி வந்தாயா -பெண்ணையும் கல்யாணம் பண்ணி வைக்க –
ஷத்ரிய அரசனை சூத்ரா என்று சம்போதானம் இங்கு-
சூத்ர -ப்ரஹ்ம ஞானம் இல்லாத சோகம் உள்ளவனே என்றபடி

॥ இதி த்³விதீய: க²ண்ட:³ ॥

———————————————–

வாயுர்வாவ ஸம்வர்கோ³ யதா³ வா அக்³நிருத்³வாயதி வாயுமேவாப்யேதி
யதா³ ஸூர்யோঽஸ்தமேதி வாயுமேவாப்யேதி யதா³ சந்த்³ரோঽஸ்தமேதி
வாயுமேவாப்யேதி ॥ 4.3.1॥

யதா³ப உச்சு²ஷ்யந்தி வாயுமேவாபியந்தி
வாயுர்ஹ்யேவைதாந்ஸர்வாந்ஸம்வ்ருʼங்க்த இத்யதி⁴தை³வதம் ॥ 4.3.2॥

அதா²த்⁴யாத்மம் ப்ராணோ வாவ ஸம்வர்க:³ ஸ யதா³ ஸ்வபிதி ப்ராணமேவ
வாக³ப்யேதி ப்ராணம் சக்ஷு: ப்ராணꣳ ஶ்ரோத்ரம் ப்ராணம் மந: ப்ராணோ
ஹ்யேவைதாந்ஸர்வாந்ஸம்வ்ருʼங்க்த இதி ॥ 4.3.3॥

தௌ வா ஏதௌ த்³வௌ ஸம்வர்கௌ³ வாயுரேவ தே³வேஷு ப்ராண: ப்ராணேஷு
॥ 4.3.4॥

அத² ஹ ஶௌநகம் ச காபேயமபி⁴ப்ரதாரிணம் ச காக்ஷஸேநிம்
பரிவிஷ்யமாணௌ ப்³ரஹ்மசாரீ பி³பி⁴க்ஷே தஸ்மா உ ஹ ந த³த³து:
॥ 4.3.5॥

ஸ ஹோவாச மஹாத்மநஶ்சதுரோ தே³வ ஏக: க: ஸ ஜகா³ர
பு⁴வநஸ்ய கோ³பாஸ்தம் காபேய நாபி⁴பஶ்யந்தி மர்த்யா
அபி⁴ப்ரதாரிந்ப³ஹுதா⁴ வஸந்தம் யஸ்மை வா ஏதத³ந்நம் தஸ்மா
ஏதந்ந த³த்தமிதி ॥ 4.3.6॥

தது³ ஹ ஶௌநக: காபேய: ப்ரதிமந்வாந: ப்ரத்யேயாயாத்மா தே³வாநாம்
ஜநிதா ப்ரஜாநாꣳ ஹிரண்யத³ꣳஷ்ட்ரோ ப³ப⁴ஸோঽநஸூரிர்மஹாந்தமஸ்ய
மஹிமாநமாஹுரநத்³யமாநோ யத³நந்நமத்தீதி வை வயம்
ப்³ரஹ்மசாரிந்நேத³முபாஸ்மஹே த³த்தாஸ்மை பி⁴க்ஷாமிதி ॥ 4.3.7॥

தம்ஷ்ட்ராய நீண்ட பற்கள் -ஸ்ரீ நரஸிம்ஹன் -மொத்தத்தையும் விழுங்குவார்

தஸ்ம உ ஹ த³து³ஸ்தே வா ஏதே பஞ்சாந்யே பஞ்சாந்யே த³ஶ
ஸந்தஸ்தத்க்ருʼதம் தஸ்மாத்ஸர்வாஸு தி³க்ஷ்வந்நமேவ த³ஶ க்ருʼதꣳ ஸைஷா
விராட³ந்நாதீ³ தயேத³ꣳ ஸர்வம் த்³ருʼஷ்டꣳ ஸர்வமஸ்யேத³ம் த்³ருʼஷ்டம்
ப⁴வத்யந்நாதோ³ ப⁴வதி ய ஏவம் வேத³ ய ஏவம் வேத³ ॥ 4.3.8॥

அக்னி சூர்யன் சந்திரன் அனைத்தும் வாயு இடம் சேர்வது போலே –பிராணன் இடம் கண் காது மூக்கு –
ப்ரஹ்மம் இடம் அனைத்தும் -சம்வர்க்க வித்யை -ஸங்க்ரஹண வித்யை
பிரஜாபதியுடையது இல்லை– பரமாத்மாவுடையது
விராட் ஸ்வரூபம் ப்ரஹ்மம்

॥ இதி த்ருʼதீய: க²ண்ட:³ ॥

வர்க்கம் ஒன்றிலே அனைத்தும் அடக்கம் -ப்ரஹ்ம ஞானமே
வாயு -பிராணன் –பிரஜாபதி -இத்யாதி ஒவ்வொன்றிலும் இவனே அந்தராத்மா –

ஞான ஸ்ருதி விருத்தாந்த-இவர் ரைக்குவரோ
ஸர்வ பாவம்
ஏக விஞ்ஞானம் சர்வ விஞ்ஞாநம்
செய்த வேள்வியர் வையத்தேவர்
புருஷோத்தம வித்யை -ஸர்வமும் அறிந்தவர் ஆவார் இத்தை அறிந்தால் -அவனை ஆனந்திப்பவர் ஆவார்
சுத்தம் பரம் நிர்மலம் ஏக ரூபம் -ஒன்றே அறிவு
ஞான தர்ஸன பிராப்தி
சர்வ வித் சர்வ பாவேந
ஸம் யாயதே– ஸம் த்ருஷ்யதே-அதி கம்யதே —ஞானம் தர்சனம் பிராப்தி

ஸுவ்நகர் உபதேசத்தை ரைக்குவர் ஞான ஸ்ருதிக்கு உபதேசம் –

——–

9-சத்ய காம வித்யை ஷோடஸ கல ப்ரஹ்ம வித்யை-4-4-தொடங்கி-4-9-
10-உபய கோசல வித்யை -சத்ய காமர் உப கோசலருக்கு உபதேசம் –4-10 தொடங்கி -4-14-
11-அந்தர் அஷி வித்யை
தஹர
பூமா
சத் வித்யைகள் மேலே பார்ப்போம்

——

9-சத்ய காம வித்யை ஷோடஸ கல ப்ரஹ்ம வித்யை

சாந்தோக்யம் -4-ப்ரபாதகம் -அத்யாயம் –4-4 தொடங்கி –4-9 வரை இது –

ஸத்யகாமோ ஹ ஜாபா³லோ ஜபா³லாம் மாதரமாமந்த்ரயாஞ்சக்ரே
ப்³ரஹ்மசர்யம் ப⁴வதி விவத்ஸ்யாமி கிங்கோ³த்ரோ ந்வஹமஸ்மீதி
॥ 4.4.1॥

என்ன கோத்ரம் -என்று தாயார் இடம் கேட்டான்

ஸா ஹைநமுவாச நாஹமேதத்³வேத³ தாத யத்³கோ³த்ரஸ்த்வமஸி
ப³ஹ்வஹம் சரந்தீ பரிசாரிணீ யௌவநே த்வாமலபே⁴
ஸாஹமேதந்ந வேத³ யத்³கோ³த்ரஸ்த்வமஸி ஜபா³லா து நாமாஹமஸ்மி
ஸத்யகாமோ நாம த்வமஸி ஸ ஸத்யகாம ஏவ ஜாபா³லோ
ப்³ரவீதா² இதி ॥ 4.4.2॥

16–கலைகள் ப்ரஹ்மத்துக்கு ஷோடச கலா வித்யை
ஜபாலா பிள்ளை சத்யகாமன் -கோத்ரம் தெரியாது தாய்க்கு –
யவ்வனத்தில் நீ பிறந்தாய்-என் பெயரும் உன் பெயரும் தான் தெரியும் –

ஸ ஹ ஹாரித்³ருமதம் கௌ³தமமேத்யோவாச ப்³ரஹ்மசர்யம் ப⁴க³வதி
வத்ஸ்யாம்யுபேயாம் ப⁴க³வந்தமிதி ॥ 4.4.3॥

கௌ³தம மகரிஷியிடம் சென்று உபநயனம் பண்ண கேட்டான்-

தꣳ ஹோவாச கிங்கோ³த்ரோ நு ஸோம்யாஸீதி ஸ ஹோவாச
நாஹமேதத்³வேத³ போ⁴ யத்³கோ³த்ரோঽஹமஸ்ம்யப்ருʼச்ச²ம் மாதரꣳ
ஸா மா ப்ரத்யப்³ரவீத்³ப³ஹ்வஹம் சரந்தீ பரிசரிணீ யௌவநே
த்வாமலபே⁴ ஸாஹமேதந்ந வேத³ யத்³கோ³த்ரஸ்த்வமஸி ஜபா³லா து
நாமாஹமஸ்மி ஸத்யகாமோ நாம த்வமஸீதி ஸோঽஹꣳ
ஸத்யகாமோ ஜாபா³லோঽஸ்மி போ⁴ இதி ॥ 4.4.4॥

தாய் சொன்ன வார்த்தையை மீண்டும் இவர் இடம் சொன்னான் –

தꣳ ஹோவாச நைதத³ப்³ராஹ்மணோ விவக்துமர்ஹதி ஸமித⁴ꣳ
ஸோம்யாஹரோப த்வா நேஷ்யே ந ஸத்யாத³கா³ இதி தமுபநீய
க்ருʼஶாநாமப³லாநாம் சது:ஶதா கா³ நிராக்ருʼத்யோவாசேமா:
ஸோம்யாநுஸம்வ்ரஜேதி தா அபி⁴ப்ரஸ்தா²பயந்நுவாச
நாஸஹஸ்ரேணாவர்தேயேதி ஸ ஹ வர்ஷக³ணம் ப்ரோவாஸ தா யதா³
ஸஹஸ்ரꣳ ஸம்பேது:³ ॥ 4.4.5॥

॥ இதி சதுர்த:² க²ண்ட:³ ॥

——————————————–

அத² ஹைநம்ருʼஷபோ⁴ঽப்⁴யுவாத³ ஸத்யகாம3 இதி
ப⁴க³வ இதி ஹ ப்ரதிஶுஶ்ராவ ப்ராப்தா: ஸோம்ய ஸஹஸ்ரꣳ ஸ்ம:
ப்ராபய ந ஆசார்யகுலம் ॥ 4.5.1॥

ப்³ரஹ்மணஶ்ச தே பாத³ம் ப்³ரவாணீதி ப்³ரவீது மே ப⁴க³வாநிதி
தஸ்மை ஹோவாச ப்ராசீ தி³க்கலா ப்ரதீசீ தி³க்கலா
த³க்ஷிணா தி³க்கலோதீ³சீ தி³க்கலைஷ வை ஸோம்ய சதுஷ்கல:
பாதோ³ ப்³ரஹ்மண: ப்ரகாஶவாந்நாம ॥ 4.5.2॥

ஸ ய ஏதமேவம் வித்³வாꣳஶ்சதுஷ்கலம் பாத³ம் ப்³ரஹ்மண:
ப்ரகாஶவாநித்யுபாஸ்தே ப்ரகாஶவாநஸ்மிꣳல்லோகே ப⁴வதி
ப்ரகாஶவதோ ஹ லோகாஞ்ஜயதி ய ஏதமேவம் வித்³வாꣳஶ்சதுஷ்கலம்
பாத³ம் ப்³ரஹ்மண: ப்ரகாஶவாநித்யுபாஸ்தே ॥ 4.5.3॥

குரு சிச்ருஷை செய்து ப்ரஹ்ம ஞானம் -400-பசுக்களை –ஆயிரமாக வளர்த்து –
காளை மாடு -ஓன்று பேச –தேவதை ரூபம் கொண்டு / –
ஆச்சார்யர் இடம் கூட்டிப்போக -நாலு பாதம் -நான்கு திசைகள் ஒரு காலின் ஒரு பகுதி
இத்தை அறிந்து ப்ரஹ்ம தியானம் பிரகாசவான் ஆவான்
ஹம்ஸ பறவை -அப்புறம் /நீர் பறவை -உபதேசம் –

॥ இதி பஞ்சம: க²ண்ட:³ ॥

————————————————–

அக்³நிஷ்டே பாத³ம் வக்தேதி ஸ ஹ ஶ்வோபூ⁴தே க³
ஆபி⁴ப்ரஸ்தா²பயாஞ்சகார தா யத்ராபி⁴ ஸாயம்
ப³பூ⁴வுஸ்தத்ராக்³நிமுபஸமாதா⁴ய கா³ உபருத்⁴ய ஸமித⁴மாதா⁴ய
பஶ்சாத³க்³நே: ப்ராஙுபோபவிவேஶ ॥ 4.6.1॥

தமக்³நிரப்⁴யுவாத³ ஸத்யகாம3 இதி ப⁴க³வ இதி
ஹ ப்ரதிஶுஶ்ராவ ॥ 4.6.2॥

ப்³ரஹ்மண: ஸோம்ய தே பாத³ம் ப்³ரவாணீதி ப்³ரவீது மே ப⁴க³வாநிதி
தஸ்மை ஹோவாச ப்ருʼதி²வீ கலாந்தரிக்ஷம் கலா த்³யௌ: கலா
ஸமுத்³ர: கலைஷ வை ஸோம்ய சதுஷ்கல: பாதோ³
ப்³ரஹ்மணோঽநந்தவாந்நாம ॥ 4.6.3॥

ஸ ய ஏதமேவம் வித்³வாꣳஶ்சதுஷ்கலம் பாத³ம்
ப்³ரஹ்மணோঽநந்தவாநித்யுபாஸ்தேঽநந்தவாநஸ்மிꣳல்லோகே
ப⁴வத்யநந்தவதோ ஹ லோகாஞ்ஜயதி ய ஏதமேவம் வித்³வாꣳஶ்சதுஷ்கலம்
பாத³ம் ப்³ரஹ்மணோঽநந்தவாநித்யுபாஸ்தே ॥ 4.6.4॥

அக்னி உபாசனம் அப்புறம் -பிருத்வி இத்யாதி -அனந்தாவான் பேர்
அடுத்தது ஹம்சம் சொல்லும்

॥ இதி ஷஷ்ட:² க²ண்ட:³ ॥

———————————

ஹꣳஸஸ்தே பாத³ம் வக்தேதி ஸ ஹ ஶ்வோபூ⁴தே கா³
அபி⁴ப்ரஸ்தா²பயாஞ்சகார தா யத்ராபி⁴ ஸாயம்
ப³பூ⁴வுஸ்தத்ராக்³நிமுபஸமாதா⁴ய கா³ உபருத்⁴ய ஸமித⁴மாதா⁴ய
பஶ்சாத³க்³நே: ப்ராஙுபோபவிவேஶ ॥ 4.7.1॥

தꣳஹꣳஸ உபநிபத்யாப்⁴யுவாத³ ஸத்யகாம3 இதி ப⁴க³வ
இதி ஹ ப்ரதிஶுஶ்ராவ ॥ 4.7.2॥

ப்³ரஹ்மண: ஸோம்ய தே பாத³ம் ப்³ரவாணீதி ப்³ரவீது மே ப⁴க³வாநிதி
தஸ்மை ஹோவாசாக்³நி: கலா ஸூர்ய: கலா சந்த்³ர: கலா
வித்³யுத்கலைஷ வை ஸோம்ய சதுஷ்கல: பாதோ³ ப்³ரஹ்மணோ
ஜ்யோதிஷ்மாந்நாம ॥ 4.7.3॥

ஸ ய ஏதமேவம் வித்³வாꣳஶ்சதுஷ்கலம் பாத³ம் ப்³ரஹ்மணோ
ஜ்யோதிஷ்மாநித்யுபாஸ்தே ஜ்யோதிஷ்மாநஸ்மிꣳல்லோகே ப⁴வதி
ஜ்யோதிஷ்மதோ ஹ லோகாஞ்ஜயதி ய ஏதமேவம் வித்³வாꣳஶ்சதுஷ்கலம்
பாத³ம் ப்³ரஹ்மணோ ஜ்யோதிஷ்மாநித்யுபாஸ்தே ॥ 4.7.4॥

॥ இதி ஸப்தம: க²ண்ட:³ ॥

———————————-

மத்³கு³ஷ்டே பாத³ம் வக்தேதி ஸ ஹ ஶ்வோபூ⁴தே கா³ அபி⁴ப்ரஸ்தா²பயாஞ்சகார
தா யத்ராபி⁴ ஸாயம் ப³பூ⁴வுஸ்தத்ராக்³நிமுபஸமாதா⁴ய கா³
உபருத்⁴ய ஸமித⁴மாதா⁴ய பஶ்சாத³க்³நே: ப்ராஙுபோபவிவேஶ ॥ 4.8.1॥

தம் மத்³கு³ருபநிபத்யாப்⁴யுவாத³ ஸத்யகாம3 இதி ப⁴க³வ இதி
ஹ ப்ரதிஶுஶ்ராவ ॥ 4.8.2॥

ப்³ரஹ்மண: ஸோம்ய தே பாத³ம் ப்³ரவாணீதி ப்³ரவீது மே ப⁴க³வாநிதி
தஸ்மை ஹோவாச ப்ராண: கலா சக்ஷு: கலா ஶ்ரோத்ரம் கலா மந:
கலைஷ வை ஸோம்ய சதுஷ்கல: பாதோ³ ப்³ரஹ்மண ஆயதநவாந்நாம
॥ 4.8.3॥

ஸ யை ஏதமேவம் வித்³வாꣳஶ்சதுஷ்கலம் பாத³ம் ப்³ரஹ்மண
ஆயதநவாநித்யுபாஸ்த ஆயதநவாநஸ்மிꣳல்லோகே
ப⁴வத்யாயதநவதோ ஹ லோகாஞ்ஜயதி ய ஏதமேவம்
வித்³வாꣳஶ்சதுஷ்கலம் பாத³ம் ப்³ரஹ்மண ஆயதநவாநித்யுபாஸ்தே
॥ 4.8.4॥

இப்படி நான்கு நான்கா நாலும் பிராணன் கண் காது மனஸ் கடையில்

॥ இதி அஷ்டம: க²ண்ட:³ ॥

——————————————

ப்ராப ஹாசர்யகுலம் தமாசர்யோঽப்⁴யுவாத³ ஸத்யகாம3 இதி
ப⁴க³வ இதி ஹ ப்ரதிஶுஶ்ராவ ॥ 4.9.1॥

ப்³ரஹ்மவிதி³வ வை ஸோம்ய பா⁴ஸி கோ நு த்வாநுஶஶாஸேத்யந்யே
மநுஷ்யேப்⁴ய இதி ஹ ப்ரதிஜஜ்ஞே ப⁴க³வாꣳஸ்த்வேவ மே காமே ப்³ரூயாத்
॥ 4.9.2॥

ஶ்ருதꣳஹ்யேவ மே ப⁴க³வத்³த்³ருʼஶேப்⁴ய ஆசார்யாத்³தை⁴வ வித்³யா விதி³தா
ஸாதி⁴ஷ்ட²ம் ப்ராபதீதி தஸ்மை ஹைததே³வோவாசாத்ர ஹ ந கிஞ்சந
வீயாயேதி வீயாயேதி ॥ 4.9.3॥

பதினாறு கலைகளை விளக்கி -ஆச்சார்யர் உபதேசம் –
உபகோஸலன் சிஷ்யன் சத்யா காமருக்கு வர –

॥ இதி நவம: க²ண்ட:³ ॥

ஆச்சார்யர் உபதேசம் ஸ்பஷ்டம் இதில் -ஸமித் பாணி -நிர்வேதம் -அடைந்து -ப்ரஹ்ம வித்யை தேடி –
ஆச்சார்யர் மூலமே –
சத்ய காம வித்யை -சத்யகாமர் உபதேசம் பெற்றவர் -அவர் பேராலே வித்யை –
ஜாபால என்பவளின் பிள்ளை -ஜாபாலன் இவருக்கு பெயர் -இயல் பெயர் சத்ய காமர்
கோத்ரம் வம்சம் தெரியாமல் தாய் சொன்ன பதில் -விருந்தோம்பல் குரு பரிசரியையில் காலம்
நேர்மை இருக்கிறதே -மகிழ்ந்து உபதேசம் –

400 மாடுகள் தேர்ந்து எடுத்து மேய்த்து பரிபாலனம் செய்ய –
ஒல்லியான -மெலிந்த மாடுகள் -புஷ்டியாக வைத்து 1000 மாடுகள் உடன் வருவதாக சொல்லி திரும்ப
ஒரு காளை கூறியது -ஆச்சார்யர் குலத்தில் சேர்த்து விட சொல்லி –
ப்ரஹ்மம் கால் பகுதி உபதேசம் அதே காளை
16 கலைகள் –நான்கு திக்குகள் -ஒவ்வொன்றும் ஒரு கலை -ப்ரகாஸவான் -தியானத்துக்கு தானே இந்த வித்யை

பிரகாசம் உடையவன் ஆகிறான் பிரகாச லோகம் அடைவான்
அடுத்த பாகம் அக்னி தேவதை உபதேசிப்பார் சொல்லிற்று
ஆச்சார்யர் நோக்கி போக -வழியில் அக்னி கார்யம் செய்ய
அநந்தவான்–இதுக்கு பெயர் – பிருத்வி அந்தரிக்ஷம் த்யு சமுத்திரம் நான்கு கலைகள் இதுக்கு

அந்தம் அற்று அந்தம் உள்ள லோகம் அடைகிறான் -யாரும்வெள்ள முடியாது அபராஜிதா மேல் லோக பிராப்தி
அடுத்த பாதம் ஹம்சம் உபதேசிக்கும் சொல்லிற்று

ஜ்யோதிஷ்மான் ஒளி பொருந்தியது -இது
நான்கு கலைகள் சட்னி சூர்யன் சந்திரன் மின்னல்
அறிந்தவன் இங்கேயே ஒளி பொருந்தி மேல் லோகங்களை வெல்கிறான்

மத்கு பக்ஷி அடுத்த உபதேசம்
ஆயதனாவான் -இருப்பிடம் இதுக்கு பெயர் பிராணன் சஷுஸ் ஸ்ரோத்ரம் மனஸ்ஸூ -நான்கு கலைகள்
இங்கேயும் அங்கேயும் வெல்கிறான் –

ப்ரஹ்ம தேஜஸ் பார்த்து யார் உபதேசம்
மநுஷ்யர்கள் யாரும் உபதேசம் தரவில்லை
தேவர் இஷ்டப்பட்ட பொழுது உபதேசிக்க வேண்டும் –
உண்மையை சொல்லி –
நான் கேட்க்காமலே அவர்களாக உபதேசம் -ப்ரஹ்ம வித்யை நிலை நிற்பது ஆச்சார்யர் உபதேசத்தாலேயே

இதுவே
ஷோடஸ கல ப்ரஹ்ம வித்யை
ஷோடச கலை வித்யை முழுவதும் -ஒன்றும் குறையாமல் உபதேசித்தார்
உபதேசம் இல்லாவை கே கடாக்ஷம் அனுக்ரஹம் மூலம் பெற ஆசீர்வாதமும் செய்து அருளினார்

——–

உபய கோசல வித்யை -சத்ய காமர் உப கோசலருக்கு உபதேசம் –4-10 தொடங்கி -4-14-

உபகோஸலோ ஹ வை காமலாயந: ஸத்யகாமே ஜாபா³லே
ப்³ரஹ்மசார்யமுவாஸ தஸ்ய ஹ த்³வாத³ஶ வார்ஷாண்யக்³நீந்பரிசசார
ஸ ஹ ஸ்மாந்யாநந்தேவாஸிந: ஸமாவர்தயꣳஸ்தம் ஹ ஸ்மைவ ந
ஸமாவர்தயதி ॥ 4.10.1॥

தம் ஜாயோவாச தப்தோ ப்³ரஹ்மசாரீ குஶலமக்³நீந்பரிசசாரீந்மா
த்வாக்³நய: பரிப்ரவோசந்ப்ரப்³ரூஹ்யஸ்மா இதி தஸ்மை ஹாப்ரோச்யைவ
ப்ரவாஸாஞ்சக்ரே ॥ 4.10.2॥

உபகோஸல வித்யை –ஆச்சார்யர் இடம் -12-வருஷம் -சிச்ருஷை -அக்னி ஆராதனை –
ப்ரவாஸாஞ்சக்ரே-வெளியூர் கிளம்பி போக

ஸ ஹ வ்யாதி⁴நாநஶிதும் த³த்⁴ரே தமாசார்யஜாயோவாச
ப்³ரஹ்மசாரிந்நஶாந கிம் நு நாஶ்நாஸீதி ஸ ஹோவாச
ப³ஹவ இமேঽஸ்மிந்புருஷே காமா நாநாத்யயா வ்யாதீ⁴பி:⁴
ப்ரதிபூர்ணோঽஸ்மி நாஶிஷ்யாமீதி ॥ 4.10.3॥

மனைவி சாப்பிட சொல்ல -பசி இல்லை -கற்றுக் கொடுக்கவில்லை சோகம் நிறைந்து

அத² ஹாக்³நய: ஸமூதி³ரே தப்தோ ப்³ரஹ்மசாரீ குஶலம் ந:
பர்யசாரீத்³த⁴ந்தாஸ்மை ப்ரப்³ரவாமேதி தஸ்மை ஹோசு: ப்ராணோ ப்³ரஹ்ம
கம் ப்³ரஹ்ம க²ம் ப்³ரஹ்மேதி ॥ 4.10.4॥

அக்னி ஆராதனம் மட்டும் விட வில்லை –

ஸ ஹோவாச விஜாநாம்யஹம் யத்ப்ராணோ ப்³ரஹ்ம கம் ச து க²ம் ச ந
விஜாநாமீதி தே ஹோசுர்யத்³வாவ கம் ததே³வ க²ம் யதே³வ க²ம் ததே³வ
கமிதி ப்ராணம் ச ஹாஸ்மை ததா³காஶம் சோசு: ॥ 4.10.5॥

ஐந்து அக்னிகளும் சேர்ந்து -உபதேசிக்க -ப்ரானோ ப்ரஹ்மம் கம் ப்ரஹ்மம் கம் ப்ரஹ்மம் அறிந்து கொள்
பிராணனே ப்ரஹ்மம் -சுகமும் ஆகாசமும் ப்ரஹ்மம் –
அத்தை யோசித்து யோசித்து –
எது சுகமோ அது ஆகாசம் -எது ஆகாசமோ அது சுகம் இப்படி யோசி -என்றார்கள்
ஆனந்தம் ப்ரஹ்மம் -அறிந்து -ஆனந்தவல்லி -அபரிச்சின்னம் -உயர்வற உயர்நலம் உடையவன் -ஆனந்த ஸ்வரூபம் ப்ரஹ்மம் அறிந்து
அளவுக்கு உட்படாது காட்ட ஆகாசம் த்ருஷ்டாந்தம் -திட விசும்பு –கரந்து எங்கும் பரந்துளன் –
அபரிச்சின்ன ஆனந்த ஸ்வரூபன் நேராக சொல்லாமல் இப்படி –

॥ இதி த³ஶம: க²ண்ட:³ ॥

———————————————-

அத² ஹைநம் கா³ர்ஹபத்யோঽநுஶஶாஸ ப்ருʼதி²வ்யக்³நிரந்நமாதி³த்ய
இதி ய ஏஷ ஆதி³த்யே புருஷோ த்³ருʼஶ்யதே ஸோঽஹமஸ்மி ஸ
ஏவாஹமஸ்மீதி ॥ 4.11.1॥

ஸ ய ஏதமேவம் வித்³வாநுபாஸ்தேঽபஹதே பாபக்ருʼத்யாம் லோகீ ப⁴வதி
ஸர்வமாயுரேதி ஜ்யோக்³ஜீவதி நாஸ்யாவரபுருஷா: க்ஷீயந்த உப
வயம் தம் பு⁴ஞ்ஜாமோঽஸ்மிꣳஶ்ச லோகேঽமுஷ்மிꣳஶ்ச ய ஏதமேவம்
வித்³வாநுபாஸ்தே ॥ 4.11.2॥

॥ இதி ஏகாத³ஶ: க²ண்ட:³ ॥

—————————————–

அத² ஹைநமந்வாஹார்யபசநோঽநுஶஶாஸாபோ தி³ஶோ நக்ஷத்ராணி
சந்த்³ரமா இதி ய ஏஷ சந்த்³ரமஸி புருஷோ த்³ருʼஶ்யதே ஸோঽஹமஸ்மி
ஸ ஏவாஹமஸ்மீதி ॥ 4.12.1॥

கார்ஹபத்ன்ய அக்னி உபதேசிக்க -அக்னியை உபாசனம் -சூர்யா மண்டலா மதியவர்த்தியே நான்

ஸ ய ஏதமேவம் வித்³வாநுபாஸ்தேঽபஹதே பாபக்ருʼத்யாம் லோகீ ப⁴வதி
ஸர்வமாயுரேதி ஜ்யோக்³ஜீவதி நாஸ்யாவரபுருஷா: க்ஷீயந்த உப
வயம் தம் பு⁴ஞ்ஜாமோঽஸ்மிꣳஶ்ச லோகேঽமுஷ்மிꣳஶ்ச ய ஏதமேவம்
வித்³வாநுபாஸ்தே ॥ 4.12.2॥

பாபங்கள் ஒழிந்து உயர்ந்த கதி பலன்

॥ இதி த்³வாத³ஶ: க²ண்ட:³ ॥

——————————————-

அத² ஹைநமாஹவநீயோঽநுஶஶாஸ ப்ராண ஆகாஶோ த்³யௌர்வித்³யுதி³தி
ய ஏஷ வித்³யுதி புருஷோ த்³ருʼஶ்யதே ஸோঽஹமஸ்மி ஸ
ஏவாஹமஸ்மீதி ॥ 4.13.1॥

ஸ ய ஏதமேவம் வித்³வாநுபாஸ்தேঽபஹதே பாபக்ருʼத்யாம் லோகீ ப⁴வதி
ஸர்வமயுரேதி ஜ்யோக்³ஜீவதி நாஸ்யாவரபுருஷா: க்ஷீயந்த உப
வயம் தம் பு⁴ஞ்ஜாமோঽஸ்மிꣳஶ்ச லோகேঽமுஷ்மிꣳஶ்ச ய ஏதமேவம்
வித்³வாநுபாஸ்தே ॥ 4.13.2॥

॥ இதி த்ரயோத³ஶ: க²ண்ட:³ ॥

———————————————-

தே ஹோசுருபகோஸலைஷா ஸோம்ய தேঽஸ்மத்³வித்³யாத்மவித்³யா
சாசார்யஸ்து தே க³திம் வக்தேத்யாஜகா³ம
ஹாஸ்யாசார்யஸ்தமாசார்யோঽப்⁴யுவாதோ³பகோஸல3 இதி
॥ 4.14.1॥

சந்திரனை உபாசிப்பாய் அடுத்து
மின்னலில் உள்ள புருஷனே நமக்குள்ளே இருக்கும் புருஷோத்தமன்
ஓர் அளவு சொல்லிக் கொடுத்துள்ளோம் ப்ரஹ்மத்தை பற்றி -மேலே ஆச்சார்யர் மூலம் அறிந்து கொள் –

ப⁴க³வ இதி ஹ ப்ரதிஶுஶ்ராவ ப்³ரஹ்மவித³ இவ ஸோம்ய தே முக²ம் பா⁴தி
கோ நு த்வாநுஶஶாஸேதி கோ நு மாநுஶிஷ்யாத்³போ⁴ இதீஹாபேவ
நிஹ்நுத இமே நூநமீத்³ருʼஶா அந்யாத்³ருʼஶா இதீஹாக்³நீநப்⁴யூதே³
கிம் நு ஸோம்ய கில தேঽவோசந்நிதி ॥ 4.14.2॥

இத³மிதி ஹ ப்ரதிஜஜ்ஞே லோகாந்வாவ கில ஸோம்ய தேঽவோசந்நஹம்
து தே தத்³வக்ஷ்யாமி யதா² புஷ்கரபலாஶ ஆபோ ந ஶ்லிஷ்யந்த
ஏவமேவம்விதி³ பாபம் கர்ம ந ஶ்லிஷ்யத இதி ப்³ரவீது மே
ப⁴க³வாநிதி தஸ்மை ஹோவாச ॥ 4.14.3॥

உபகோஸலனை பார்த்து ப்ரஹ்ம ஞானம் அறிந்தவனாக அறிந்து –
பிள்ளை பாதி தான் தெரிந்து -எப்படி பதில் -பிரசன்னமாகி காட்சி
நிச்சிந்தை க்ருதார்த்தனாக -பண்ண வேண்டியதை பண்ணி முடித்தவனாக அறிந்து –
உள்ளே உள்ள ப்ரஹ்மம் -அகத்தின் அழகு முகத்தில் தெரியுமே
தேவதைகள் கற்றுக் கொடுத்து -ஆச்சார்யர் மூலம் முழுவதும் அறிந்து கொள்ள -சொல்லி தேவரீர் தஞ்சம்
அபரிச்சின்ன ஆனந்த ஸ்வரூபம் மட்டும் அறிந்தாய் –
பாபங்கள் ஒட்டாத படி -தாமரை இலைத்தண்ணீர் போலே ஆக்குவேன் -நெருப்பில் இட்ட பஞ்சு போலே அழிக்க சொல்லவில்லையே
ப்ரஹ்ம ஸூத்ர விசாரம் –தத் அதிகம உத்தர பூர்வாகம் அஸ்லேஷ விநாசம் –
போய பிழை பூர்வாகம் -புகு தருவான் நின்றன உத்தராகம்–மாரீசன் ஸூ பாஹு போலே –

॥ இதி சதுர்த³ஶ: க²ண்ட:³ ॥

இந்த ஸத்ய காமனின் சிஷ்யன் உபகோஸலன். பன்னிரண்டு வருடம் ஆசார்யனின் வைதீக அக்னியைப் பாதுகாத்து வந்தான்.
ஆசார்யன் இவனுடன் இருந்த மற்ற சிஷ்யர்களுக்கு உபதேசம் முதலியவற்றை முடித்தவர் , உபகோஸலனுக்கு ஒன்றும்
சொல்லவில்லை. ஆசார்யருடைய மனைவி ப்ரார்த்தித்தும் எதுவும் சொல்லாமல், ஆசார்யன் வெளியூர் சென்று விட்டார்.

பன்னிரண்டு வருஷ காலம் பாதுகாத்து வந்த அக்னி இவனிடம் கருணை கொண்டு ”கம என்பது நமது சுகம், வம்
என்பது இந்த்ரியம் அல்லது வானம் போன்றது என்றும், ப்ராணன் ப்ருஹ்மம், கம்-ப்ருஹ்மம் (வம்) என்று உபதேசித்தான்.

பிறகு ”அக்னி வித்யையை” உபதேசித்து இதற்கு மேல் உனக்கு ஆசார்யன் உபதேசிப்பார் என்று அக்னி சொன்னான்.

வெளியூர் சென்றிருந்த ஆசார்யன் திரும்பி வந்தார்.
சிஷ்யனின் முகத்தைப் பார்த்தார். ”ப்ரஹ்ம தேஜஸ் ப்ரகாசிக்கிறதே? யார் உபதேசித்தது?” என்று கேட்டார்.

உபகோஸலன் நடந்த உண்மையைச் சொன்னான். ஆசார்யன் சந்தோஷமடைந்து மேற்கொண்டு உபதேசம் செய்தார்.
அதாவது
ஆத்மாவானது த்ரேகத்தில் இருப்பது. ஆத்மாவிற்கு அழிவு கிடையாது. இதை நன்கு தெரிந்து கொண்டால் பாபம்
ஆத்மாவில் ஒட்டாது என்று ஆரம்பித்து பலவற்றையும் உபதேசித்தார். இவ்வாறு உபாஸனம் செய்தவன் முமுக்ஷுவாக
இருப்பதால் இவன் மரணமடைந்த பிறகு இவனுக்கு செய்யவேண்டிய சடங்குகளைச் செய்யாவிட்டாலும் இவன் ஆத்மா
அர்ச்சிராதி மார்க்கம் என்கிற தேவயான மார்க்கத்தாலே ப்ரஹ்மத்திடம் சேர்க்கப்படுவான். இதன் பிறகு துக்கம் என்பதே
கிடையாது என்று உபதேசித்தார்.

ஆற்றம் கரை வாழும் மரம் போல் அஞ்சுகிறேன் –நிர்வேதம் வர வேண்டுமே
கம் -பிராணனே ப்ரஹ்மம் புரிந்து கொண்டான் -வாழ வைப்பதால் -ஆனந்தம் -ஆகாசம் -இரண்டும் கம் -ஸப்த வாஸ்யங்கள்
யது கம் அதுவே கம் -அளவற்றது அபரிச்சேத்யம் -என்றவாறு -ஆகாசம் பூதம் சொல்ல வில்லை
உயர்வற உயர் நலம் உடையவன் என்று சொல்லப்படுகிறது
ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் -ஆனந்த மய ஸூத்ரம் –
அல்லல் இல் இன்பம் அளவிறந்து –அல்லி மகள் போக மயக்குகள் எங்கும் அழகு அமர் சூழ் ஒளியன் -ஆழ்வார் –

இது வரை ப்ரஹ்மம் பற்றிய ‘பின்பு தங்களைப் பற்றி உபாசனம்
ஆஹவனீயம்–த்ரி அக்னி -அக்னி த்யானம் -இவை அங்கங்கள் -நேராக மோக்ஷம் பலன் கிட்டாதே –
கார்ஹபத்யம் -பிருத்வி -ஆதித்யம் என்று உபாசனம்
ஆஹவனீயம் -தண்ணீர் திக்குகள் நக்ஷத்ரம் சந்திரன் -சந்திரனாக உபாசனம்
தக்ஷிணாக்கினி பிரயாணம் ஆகாசம் மேல் உலகம் மின்னல் –

பாபங்கள் நீங்க இந்த உபாசனம் -பக்தி ஆரம்ப விரோதிகள் போக்கும் –
மனஸ் ஸூ சஸூ த்தம் ஆனால் தானே இடைவிடாமல் த்யானம்
ப்ரஹ்மமே பிராணன் -அளவற்ற ஆனந்தம் -என்று த்யானம்
மேல் ஆச்சார்யர் இடம் கேட்டு பெறுவாய் -சொல்லி அக்னிகள் நிறுத்திய பின்பு
ஸத்யகாமர் திரும்பி வந்து ப்ரஹ்ம தேஜஸ்
சின்ன விஷயங்கள்
ப்ரஹ்ம ஞானம் முழுவதும் உபதேசித்து –
தாமரை இலைத் தண்ணீர் போல் கர்மங்கள் ஒட்டாமல் போகும்
தீது ஒன்றும் சாரா ஏதம் ஒன்றும் வாரா
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

——–

11-அந்தர் அஷி வித்யை
ஸத்யகாமர் உபகோஸலருக்கு இதுவும்
கண்ணுக்குள்
அம்ருதம் –அ பயம் –ஆனந்தம் கொடுக்கும் துக்கம் கலவாமல்

ய ஏஷோঽக்ஷிணி புருஷோ த்³ருʼஶ்யத ஏஷ ஆத்மேதி
ஹோவாசைதத³ம்ருʼதமப⁴யமேதத்³ப்³ரஹ்மேதி
தத்³யத்³யப்யஸ்மிந்ஸர்பிர்வோத³கம் வா ஸிஞ்சதி வர்த்மநீ ஏவ
க³ச்ச²தி ॥ 4.15.1॥

உன்னாலே அப்படி ப்ரஹ்மத்தை உபாஸிக்க முடியாது –
வலக்கண்ணில் புருஷன் -அந்தராத்மா -அவனை உபாசிப்பாய்
அஷி புருஷ உபாசனம் -கண்ணின் மூலம் சூர்யன் -உன்னிடம் உள்ளதை நினைத்தால் தான் உன்னால் அறிய முடியும் –
பரம போக்யமாக உன்னை அனுபவிக்கிறான்
அவன் சுக ரூபம் அவர்கள் சொல்லிக் கொடுக்க -உனக்கு சுகத்தை அனுபவிக்கச் செய்வார் இவர் உபதேசம் –

ஏதꣳ ஸம்யத்³வாம இத்யாசக்ஷத ஏதꣳ ஹி ஸர்வாணி
வாமாந்யபி⁴ஸம்யந்தி ஸர்வாண்யேநம் வாமாந்யபி⁴ஸம்யந்தி
ய ஏவம் வேத³ ॥ 4.15.2॥

ஏஷ உ ஏவ வாமநீரேஷ ஹி ஸர்வாணி வாமாநி நயதி
ஸர்வாணி வாமாநி நயதி ய ஏவம் வேத³ ॥ 4.15.3॥

கல்யாண குணங்களுடன் கூடியவன்
வாமனன் -சேவிப்பாருக்கு தரிசனத்தால் சுகம் கொடுப்பார்
பாமினி-பிரகாச ரூபம் பரஞ்சோதி

ஏஷ உ ஏவ பா⁴மநீரேஷ ஹி ஸர்வேஷு லோகேஷு பா⁴தி
ஸர்வேஷு லோகேஷு பா⁴தி ய ஏவம் வேத³ ॥ 4.15.4॥

அத² யது³ சைவாஸ்மிஞ்ச²வ்யம் குர்வந்தி யதி³ ச
நார்சிஷமேவாபி⁴ஸம்ப⁴வந்த்யர்சிஷோঽஹரஹ்ந
ஆபூர்யமாணபக்ஷமாபூர்யமாணபக்ஷாத்³யாந்ஷடு³த³ங்ஙேதி
மாஸாꣳஸ்தாந்மாஸேப்⁴ய: ஸம்வத்ஸரꣳ
ஸம்வத்ஸராதா³தி³த்யமாதி³த்யாச்சந்த்³ரமஸம் சந்த்³ரமஸோ வித்³யுதம்
தத் புருஷோঽமாநவ: ஸ ஏநாந்ப்³ரஹ்ம க³மயத்யேஷ தே³வபதோ²
ப்³ரஹ்மபத² ஏதேந ப்ரதிபத்³யமாநா இமம் மாநவமாவர்தம் நாவர்தந்தே
நாவர்தந்தே ॥ 4.15.5॥

அர்ச்சிராதி மார்க்கம் -காட்டி அருளுகிறார் இதில் -அறிந்து கொண்டால் தானே உபாசனத்துக்கு வருவோம் –
அத்புத மந்த்ரம் -நா வர்த்தந்தே-திரும்பாத மார்க்கம் –சூழ்ந்து அகன்று -பதிகம் –
அர்ச்சிஸ் -சுக்ல பக்ஷம்- அயனம்- சம்வத்சரம் -இவ்வாறு ஆறு லோகங்கள்
சூர்ய சந்த்ர லோகம் –ஏழாவது எட்டாவது
வித்யுத் ஒன்பதாவது -அமானவன்-இவன்
வருண இந்திர சத்யா லோகம் -ஆக -12-லோகங்கள் -கோசி -அஹம் ப்ரஹ்மாஸ்மி –
தர்ம வர்மா திருச்சுற்று -விமான திருச்சுற்று -வழியாக இன்றும் சேவை நமக்காக நம்பெருமாள்
வைகுண்ட வாசலுக்குள் -திருப்பரிவட்டம் மாற்றி -விரஜை நீராட்டத்துக்கு பின்பு –
வைகுண்டத்தில் -சந்த்ர புஷ்கரணி போலே -சஹஸ்ர தூணா மணி மண்டபம் -1000-கால்கள் இல்லை –
கொட்டாய் போட்டு நிறைப்பி -வெளி மணல் வெளியில் –
1102-உருப்படி அமுது செய்வார் திருவாய்மொழி பாசுரம் கணக்குப்படி –

இந்த உபாசகனுக்கு வரும் பிழைகளை போக்க பிராயச்சித்த முறைகளை சொல்லும் மேலே இரண்டு கண்டங்களாலே

॥ இதி பஞ்சத³ஶ: க²ண்ட:³ ॥

———————————————-

மூன்று குணங்கள் -உபதேசம்
1-அம்ருதயம் அ பயம்
2-ஆஸ்ரிதற்கு நல்ல சோபை அருளுவார்
ஆச்சார்யர் காட்டிக் கொடுப்பார்
அடியார்க்கு ஆள் படுத்தும் விமலன்
தானே ப்ரஹ்மம் ப்ருஹத்வாத் நம்மையும் தம்மையே போல் ஆக்கி அருளுவான் –
3-மூன்றாவது -அழகான ஒளி பொருந்திய திவ்ய மங்கள விக்ரஹம் உடையவர்
நம்பியை நான் கண்ட பின் –சோதி வெள்ளம் -எழுவதோர் உரு –
கண்ணுக்குள்ளே இருப்பதாக த்யானம் –
அர்ச்சிராதி கதி விளக்கமும் இதில் உண்டு –
தேவ மார்க்கம் -ப்ரஹ்ம மார்க்கம் என்றும் இதுக்கு வேறே பெயர்கள்
ஆர்த்தி பிரபந்தம் -விளக்கும் -அமானவனால் ஒளிக் கொண்ட சோதி பெற்று
தாள் அடைந்தோர்க்கு தானே வழித்துணையாம் -மார்க்க பந்து
காளமேகம் –மீளுதலாம் ஏதம் இலா விண்ணுலகு அடைகிறான் -நச புனராவர்த்ததே –

ஆச்சார்யர் பெருமைகளை சொல்லும் வித்யைகள் இவை
முழு நம்பிக்கை இருந்தாலே பலன் பெறுவோம் –
இத்தை ஸத்யகாமர் இடம் அறிந்தோம்
சங்கை இருந்தால் முழுவதும் உபதேசம் கிட்டாதே -இத்தை உபகோஸலர் இடம் பார்த்தோம் –

———

12–பஞ்ச அக்னி வித்யை –5-3- தொடங்கி 5-10-

ஶ்வேதகேதுர்ஹாருணேய: பஞ்சாலாநாꣳ ஸமிதிமேயாய
தꣳ ஹ ப்ரவாஹணோ ஜைவலிருவாச குமாராநு
த்வாஶிஷத்பிதேத்யநு ஹி ப⁴க³வ இதி ॥ 5.3.1॥

பஞ்சாக்கினி வித்யை அடுத்து பல கண்டங்கள் மூலம்
ப்ரவாஹனன் ராஜ்ஜியம் இடம் ஸ்வேதகேது போக

வேத்த² யதி³தோঽதி⁴ ப்ரஜா: ப்ரயந்தீதி ந ப⁴க³வ இதி வேத்த²
யதா² புநராவர்தந்த3 இதி ந ப⁴க³வ இதி வேத்த²
பதோ²ர்தே³வயாநஸ்ய பித்ருʼயாணஸ்ய ச வ்யாவர்தநா3 இதி
ந ப⁴க³வ இதி ॥ 5.3.2॥

வேத்த² யதா²ஸௌ லோகோ ந ஸம்பூர்யத3 இதி ந ப⁴க³வ இதி
வேத்த² யதா² பஞ்சம்யாமாஹுதாவாப: புருஷவசஸோ
ப⁴வந்தீதி நைவ ப⁴க³வ இதி ॥ 5.3.3 ॥

அதா²நு கிமநுஶிஷ்டோ²ঽவோசதா² யோ ஹீமாநி ந
வித்³யாத்கத²ꣳ ஸோঽநுஶிஷ்டோ ப்³ருவீதேதி ஸ ஹாயஸ்த:
பிதுரர்த⁴மேயாய தꣳ ஹோவாசாநநுஶிஷ்ய வாவ கில மா
ப⁴க³வாநப்³ரவீத³நு த்வாஶிஷமிதி ॥ 5.3.4 ॥

எந்த மார்க்கம் மூலம் போகிறார்கள்
சென்றவர் எப்படி திரும்புகிறார்கள்
கேட்க தெரியாது என்று சொல்ல
தேவ யானும் -அர்ச்சிராதி கதி
பித்ரு யானும் திரும்பி வருவது
போயிண்டே இருந்தால் அங்கு இடம் உள்ளதா

பஞ்ச மா ராஜந்யப³ந்து:⁴ ப்ரஶ்நாநப்ராக்ஷீத்தேஷாம்
நைகஞ்சநாஶகம் விவக்துமிதி ஸ ஹோவாச யதா² மா த்வம்
ததை³தாநவதோ³ யதா²ஹமேஷாம் நைகஞ்சந வேத³
யத்³யஹமிமாநவேதி³ஷ்யம் கத²ம் தே நாவக்ஷ்யமிதி ॥ 5.3.5॥

தெரியாமல் அப்பா இடம் போக -எனக்கும் தெரியாது
ஷத்ரியன் இவன் இடம் வந்து கேட்க -நீர் கற்று வந்து சொல்லிக் கொடும் என்ன –

ஸ ஹ கௌ³தமோ ராஜ்ஞோঽர்த⁴மேயாய தஸ்மை ஹ ப்ராப்தாயார்ஹாம் சகார
ஸ ஹ ப்ராத: ஸபா⁴க³ உதே³யாய தꣳ ஹோவாச மாநுஷஸ்ய
ப⁴க³வந்கௌ³தம வித்தஸ்ய வரம் வ்ருʼணீதா² இதி ஸ ஹோவாச தவைவ
ராஜந்மாநுஷம் வித்தம் யாமேவ குமாரஸ்யாந்தே
வாசமபா⁴ஷதா²ஸ்தாமேவ மே ப்³ரூஹீதி ஸ ஹ க்ருʼச்ச்²ரீ ப³பூ⁴வ
॥ 5.3.6॥

தꣳ ஹ சிரம் வஸேத்யாஜ்ஞாபயாஞ்சகார தꣳ ஹோவாச
யதா² மா த்வம் கௌ³தமாவதோ³ யதே²யம் ந ப்ராக்த்வத்த: புரா வித்³யா
ப்³ராஹ்மணாந்க³ச்ச²தி தஸ்மாது³ ஸர்வேஷு லோகேஷு க்ஷத்ரஸ்யைவ
ப்ரஶாஸநமபூ⁴தி³தி தஸ்மை ஹோவாச ॥ 5.3.7

ஷத்ரியருக்குள் தான் இந்த ரஹஸ்யம் –
முதல் தடவையாக அந்தணருக்கு
நீர் கேட்பதால் உபதேசிக்கிறேன்

॥ இதி த்ருʼதீய: க²ண்ட:³ ॥

———————————————-

அஸௌ வாவ லோகோ கௌ³தமாக்³நிஸ்தஸ்யாதி³த்ய ஏவ
ஸமித்³ரஶ்மயோ தூ⁴மோঽஹரர்சிஶ்சந்த்³ரமா அங்கா³ரா நக்ஷத்ராணி
விஸ்பு²லிங்கா:³ ॥ 5.4.1॥

தஸ்மிந்நேதஸ்மிந்நக்³நௌ தே³வா: ஶ்ரத்³தா⁴ம் ஜுஹ்வதி
தஸ்யா அஹுதே: ஸோமோ ராஜா ஸம்ப⁴வதி ॥ 5.4.2 ॥

॥ இதி சதுர்த:² க²ண்ட:³ ॥

——————————————–

பர்ஜந்யோ வாவ கௌ³தமாக்³நிஸ்தஸ்ய வாயுரேவ ஸமித³ப்⁴ரம் தூ⁴மோ
வித்³யுத³ர்சிரஶநிரங்கா³ராஹ்ராத³நயோ விஸ்பு²லிங்கா:³ ॥ 5.5.1॥

தஸ்மிந்நேதஸ்மிந்நக்³நௌ தே³வா: ஸோமꣳ ராஜாநம் ஜுஹ்வதி
தஸ்யா ஆஹுதேர்வர்ஷꣳ ஸம்ப⁴வதி ॥ 5.5.2॥

॥ இதி பஞ்சம: க²ண்ட:³ ॥

————————————————

ப்ருʼதி²வீ வாவ கௌ³தமாக்³நிஸ்தஸ்யா: ஸம்வத்ஸர ஏவ
ஸமிதா³காஶோ தூ⁴மோ ராத்ரிரர்சிர்தி³ஶோঽங்கா³ரா
அவாந்தரதி³ஶோ விஸ்பு²லிங்கா:³ ॥ 5.6.1॥

தஸ்மிந்நேதஸ்மிந்நக்³நௌ தே³வா வர்ஷம் ஜுஹ்வதி
தஸ்யா ஆஹுதேரந்நꣳ ஸம்ப⁴வதி ॥ 5.6.2॥

॥ இதி ஷஷ்ட:² க²ண்ட:³ ॥

————————————————

புருஷோ வாவ கௌ³தமாக்³நிஸ்தஸ்ய வாகே³வ ஸமித்ப்ராணோ தூ⁴மோ
ஜிஹ்வார்சிஶ்சக்ஷுரங்கா³ரா: ஶ்ரோத்ரம் விஸ்பு²லிங்கா:³ ॥ 5.7.1॥

தஸ்மிந்நேதஸ்மிந்நக்³நௌ தே³வா அந்நம் ஜுஹ்வதி தஸ்யா
ஆஹுதே ரேத: ஸம்ப⁴வதி ॥ 5.7.2॥

॥ இதி ஸபதம: க²ண்ட:³ ॥

ஹோம குண்டம் -ஆஹுதி —
சுவர்க்கம் -மேகம் -பிருத்வி -புருஷன் -ஸ்த்ரீ ஐந்தும்
ஸ்ரத்தா முதல் ஆஹுதி -சோமன் பிறக்க -அனுபவித்து முடித்து –
மேகம் அடுத்து ஜீவனை ஆஹுதியாக கொடுக்க -வ்ருஷடி உத்பத்தி
பிருத்வி ஹோம குண்டம் -மழை பட்டு நெல் அன்னம் -புருஷன் நாலாவது அக்னி
புருஷன் உண்டு ஆண் ரேதஸ்
பெண் ஐந்தாவது அக்னி குண்டம் -கர்ப்பம் -மனுஷ்யனாகிறான்
அடுத்த தசைக்கு போவது துர்லபம் -அரிது அரிது மானிடப்பிறவி அரிது இதனாலே –
சுழற்சி இப்படி –
வெளியில் வர ஆசைப்பட்டு வந்தால் தானே மீளலாம்
ஞான ஆனந்த மயனாக இருந்து இப்படி சுழல வேண்டுமோ என்ற எண்ணம் வேண்டுமே

————————————————

யோஷா வாவ கௌ³தமாக்³நிஸ்தஸ்யா உபஸ்த² ஏவ ஸமித்³யது³பமந்த்ரயதே
ஸ தூ⁴மோ யோநிரர்சிர்யத³ந்த: கரோதி தேঽங்கா³ரா அபி⁴நந்தா³
விஸ்பு²லிங்கா:³ ॥ 5.8.1॥

தஸ்மிந்நேதஸ்மிந்நக்³நௌ தே³வா ரேதோ ஜுஹ்வதி
தஸ்யா ஆஹுதேர்க³ர்ப:⁴ ஸம்ப⁴வதி ॥ 5.8.2 ॥

॥ இதி அஷ்டம: க²ண்ட:³ ॥

———————————————–

இதி து பஞ்சம்யாமாஹுதாவாப: புருஷவசஸோ ப⁴வந்தீதி
ஸ உல்பா³வ்ருʼதோ க³ர்போ⁴ த³ஶ வா நவ வா மாஸாநந்த: ஶயித்வா
யாவத்³வாத² ஜாயதே ॥ 5.9.1॥

ஸ ஜாதோ யாவதா³யுஷம் ஜீவதி தம் ப்ரேதம் தி³ஷ்டமிதோঽக்³நய
ஏவ ஹரந்தி யத ஏவேதோ யத: ஸம்பூ⁴தோ ப⁴வதி ॥ 5.9.2॥

॥ இதி நவம: க²ண்ட:³ ॥

—————————————

தத்³ய இத்த²ம் விது:³। யே சேமேঽரண்யே ஶ்ரத்³தா⁴ தப இத்யுபாஸதே
தேঽர்சிஷமபி⁴ஸம்ப⁴வந்த்யர்சிஷோঽஹரஹ்ந
ஆபூர்யமாணபக்ஷமாபூர்யமாணபக்ஷாத்³யாந்ஷடு³த³ங்ஙேதி
மாஸாꣳஸ்தாந் ॥ 5.10.1॥

மாஸேப்⁴ய: ஸம்வத்ஸரꣳ ஸம்வத்ஸராதா³தி³த்யமாதி³த்யாச்சந்த்³ரமஸம்
சந்த்³ரமஸோ வித்³யுதம் தத்புருஷோঽமாநவ: ஸ ஏநாந்ப்³ரஹ்ம
க³மயத்யேஷ தே³வயாந: பந்தா² இதி ॥ 5.10.2॥

அத² ய இமே க்³ராம இஷ்டாபூர்தே த³த்தமித்யுபாஸதே தே
தூ⁴மமபி⁴ஸம்ப⁴வந்தி தூ⁴மாத்³ராத்ரிꣳ
ராத்ரேரபரபக்ஷமபரபக்ஷாத்³யாந்ஷட்³த³க்ஷிணைதி
மாஸாꣳஸ்தாந்நைதே ஸம்வத்ஸரமபி⁴ப்ராப்நுவந்தி ॥ 5.10.3॥

மாஸேப்⁴ய: பித்ருʼலோகம் பித்ருʼலோகாதா³காஶமாகாஶாச்சந்த்³ரமஸமேஷ
ஸோமோ ராஜா தத்³தே³வாநாமந்நம் தம் தே³வா ப⁴க்ஷயந்தி ॥ 5.10.4॥

தஸ்மிந்யவாத்ஸம்பாதமுஷித்வாதை²தமேவாத்⁴வாநம் புநர்நிவர்தந்தே
யதே²தமாகாஶமாகாஶாத்³வாயும் வாயுர்பூ⁴த்வா தூ⁴மோ ப⁴வதி
தூ⁴மோ பூ⁴த்வாப்⁴ரம் ப⁴வதி ॥ 5.10.5॥

அப்⁴ரம் பூ⁴த்வா மேகோ⁴ ப⁴வதி மேகோ⁴ பூ⁴த்வா ப்ரவர்ஷதி
த இஹ வ்ரீஹியவா ஓஷதி⁴வநஸ்பதயஸ்திலமாஷா இதி
ஜாயந்தேঽதோ வை க²லு து³ர்நிஷ்ப்ரபதரம் யோ யோ ஹ்யந்நமத்தி
யோ ரேத: ஸிஞ்சதி தத்³பூ⁴ய ஏவ ப⁴வதி ॥ 5.10.6॥

தேவ யானம்
தூப மானம் -இருட்டு -தேய் பிறை -தஷிணாயணம் -சம்வத்சரம் பித்ரு லோகம் ஆகாசம்
சந்த்ர லோகம் -அனுபவித்து திரும்பி -ஆகாசம் வாயு தூமம் –
மூன்றாவது மார்க்கம் -புழுவாக பிறந்து -ஞானமே இல்லாத ஜென்மமாக இங்கேயே இருப்பதால்
அங்கே போனவர்கள் குறைய

தத்³ய இஹ ரமணீயசரணா அப்⁴யாஶோ ஹ யத்தே ரமணீயாம்
யோநிமாபத்³யேரந்ப்³ராஹ்மணயோநிம் வா க்ஷத்ரியயோநிம் வா வைஶ்யயோநிம்
வாத² ய இஹ கபூயசரணா அப்⁴யாஶோ ஹ யத்தே கபூயாம்
யோநிமாபத்³யேரஞ்ஶ்வயோநிம் வா ஸூகரயோநிம் வா
சண்டா³லயோநிம் வா ॥ 5.10.7॥

அதை²தயோ: பதோ²ர்ந கதரேணசந தாநீமாநி
க்ஷுத்³ராண்யஸக்ருʼதா³வர்தீநி பூ⁴தாநி ப⁴வந்தி ஜாயஸ்வ
ம்ரியஸ்வேத்யேதத்த்ருʼதீயꣳஸ்தா²நம் தேநாஸௌ லோகோ ந ஸம்பூர்யதே
தஸ்மாஜ்ஜுகு³ப்ஸேத ததே³ஷ ஶ்லோக: ॥ 5.10.8॥

ஸ்தேநோ ஹிரண்யஸ்ய ஸுராம் பிப³ꣳஶ்ச கு³ரோஸ்தல்பமாவஸந்ப்³ரஹ்மஹா
சைதே பதந்தி சத்வார: பஞ்சமஶ்சாசரꣳஸ்தைரிதி ॥ 5.10.9॥

அத² ஹ ய ஏதாநேவம் பஞ்சாக்³நீந்வேத³ ந ஸஹ
தைரப்யாசரந்பாப்மநா லிப்யதே ஶுத்³த:⁴ பூத: புண்யலோகோ ப⁴வதி
ய ஏவம் வேத³ ய ஏவம் வேத³ ॥ 5.10.10॥

பாபம் பண்ணி- பாப யோனி -புண்யம் செய்தால் புண்ய யோனி -திருத்தலாம் –
பஞ்சாக்னி அறிந்து வெளி வர சாஸ்திரம் சொல்லுமே

॥ இதி த³ஶம: க²ண்ட:³ ॥

ஸ்வேதகேது -அருணை பிள்ளை -பாஞ்சால தேச சதஸ்ஸூ -ப்ரவாஹனர் அரசர் -இடம் சென்று -ஐந்து கேள்விகள்
தேவ யானம் பித்ரு யானம் பற்றி
பூத ஸூஷ்மங்கள் னுடனே செல்கிறான் -தண்ணீர் எப்படி புருஷனாக-ஐந்தாவது கேள்விக்கு முதல் பதில் – –
ஸ்ரத்தா -தண்ணீர் -பூத ஸூஷ்மங்களுக்கு பெயர்
பூத ஸூஷ்மம் உடன் சுவர்க்கம் மேகம் –நீர் நிறைந்து இருப்பதால் அத்தையே சொன்ன படி -மீண்டும் வந்து –
ப்ரஹ்ம வித்யை உபாசனத்துக்கு முதலில் -வைராக்யம் வர வேண்டுமே -அதற்காக இத்தை சொன்னபடி –
வேத நூல் -மனுஷர் தான் புகுவரேலும் –ஆதலால் பிறவி வேண்டேன் –
இவ்வாறு ஜீவாத்மாவை அறிந்து -உடலில் விட வேறே -ஐந்து ஆஹுதி அறிந்து ன்-
தபஸ் – உபாசனம் -தபஸ் என்று பரமாத்மாவை -ஆரண்யம் -காட்டில் இருந்து உபதேசிக்க –
தனிமை நாடி -ஜன கூட்டம் இல்லாமல் -அர்ச்சிராதி கதி–விவரிக்கும் மேல்
தேவர்கள் ஸத்காரம் செய்வதால் தேவ யானம் இதுவே –
அந்தர் ஆத்மாவாக இருக்கும் பரமாத்வா வரை த்யானம் செய்தால் தான் மோக்ஷ பிராப்தி
பலம் சொல்வதை பார்த்து – இத்தைக் கொள்ள வேண்டும் -என்ன் ஆவி ஆவி -ஆழ்வார் அருளிச் செயல்

இஷ்டம் யாகம் –பூர்த்தம் சமூக பணிகள் –தத்தம் தானம் –மூன்றும் செய்பவன் சுவர்க்கம் –
புகை உலகம் பூமாதி மார்க்கம் பித்ரு யானம்

————

13–வைச்வானர வித்யை –5–11-தொடங்கி -5-21-

ப்ராசீநஶால ஔபமந்யவ: ஸத்யயஜ்ஞ:
பௌலுஷிரிந்த்³ரத்³யும்நோ பா⁴ல்லவேயோ ஜந: ஶார்கராக்ஷ்யோ
பு³டி³ல ஆஶ்வதராஶ்விஸ்தே ஹைதே மஹாஶாலா மஹாஶ்ரோத்ரியா:
ஸமேத்ய மீமாꣳஸாம் சக்ரு: கோ ந ஆத்மா கிம் ப்³ரஹ்மேதி ॥ 5.11.1॥

வைச்வானர வித்யை -முழுமையான ப்ரஹ்மம் -எது -ஆறு பேர் அரசன் இடம் சென்று
ராஜ ரிஷி -இடம் சென்று -ஆறு கேள்விகள் -கேகேய தேச ராஜா அஸ்வபதி
அஹம் வைச்வானர பூத்யா– வயிற்றில் நெருப்பாக இருக்கும் ப்ரஹ்மம்
ஆகாசம் ஆதித்யன் -தலையை மட்டும் -பிருத்வியை காளை மட்டும் பார்த்தவனாவான்
பிராணா –உதானா சுவாஹா உள்ளே உள்ள அக்னிக்கு -ஆஹுதி -தேஜஸ் மிக்கு ஜெயிக்கும் -ஆரோக்யம் கிட்டும் –

தே ஹ ஸம்பாத³யாஞ்சக்ருருத்³தா³லகோ வை ப⁴க³வந்தோঽயமாருணி:
ஸம்ப்ரதீமமாத்மாநம் வைஶ்வாநரமத்⁴யேதி தꣳ
ஹந்தாப்⁴யாக³ச்சா²மேதி தꣳ ஹாப்⁴யாஜக்³மு: ॥ 5.11.2॥

அருணன் பிள்ளை – உத்தாலர் -இவர் பிள்ளை -ஸ்வேதகேது –

ஸ ஹ ஸம்பாத³யாஞ்சகார ப்ரக்ஷ்யந்தி மாமிமே
மஹாஶாலா மஹாஶ்ரோத்ரியாஸ்தேப்⁴யோ ந ஸர்வமிவ ப்ரதிபத்ஸ்யே
ஹந்தாஹமந்யமப்⁴யநுஶாஸாநீதி ॥ 5.11.3॥

தாந்ஹோவாசாஶ்வபதிர்வை ப⁴க³வந்தோঽயம் கைகேய:
ஸம்ப்ரதீமமாத்மாநம் வைஶ்வாநரமத்⁴யேதி
தꣳஹந்தாப்⁴யாக³ச்சா²மேதி தꣳஹாப்⁴யாஜக்³மு: ॥ 5.11.4॥

அஸ்வபதி ஞானி சிறந்த உபாசகன் இடம் இவரைக் கூட்டிப்போக –

தேப்⁴யோ ஹ ப்ராப்தேப்⁴ய: ப்ருʼத²க³ர்ஹாணி காரயாஞ்சகார
ஸ ஹ ப்ராத: ஸஞ்ஜிஹாந உவாச ந மே ஸ்தேநோ ஜநபதே³ ந
கர்த³ர்யோ ந மத்³யபோ நாநாஹிதாக்³நிர்நாவித்³வாந்ந ஸ்வைரீ ஸ்வைரிணீ
குதோ யக்ஷ்யமாணோ வை ப⁴க³வந்தோঽஹமஸ்மி யாவதே³கைகஸ்மா
ருʼத்விஜே த⁴நம் தா³ஸ்யாமி தாவத்³ப⁴க³வத்³ப்⁴யோ தா³ஸ்யாமி
வஸந்து ப⁴க³வந்த இதி ॥ 5.11.5॥

ப்ரதிஜ்ஜை செய்து தானம் வழங்கி திருடர்கள் இல்லை -அக்னி கார்யம் விட்டவர்கள் இல்லை
தவறான நடத்தை உள்ளவர்கள் இல்லை குற்றம் இல்லாத தானம்

தே ஹோசுர்யேந ஹைவார்தே²ந புருஷஶ்சரேத்தꣳஹைவ
வதே³தா³த்மாநமேவேமம் வைஶ்வாநரꣳ ஸம்ப்ரத்யத்⁴யேஷி தமேவ நோ
ப்³ரூஹீதி ॥ 5.11.6॥

தக்ஷிணை இலக்கு இல்லை –

தாந்ஹோவாச ப்ராதர்வ: ப்ரதிவக்தாஸ்மீதி தே ஹ ஸமித்பாணய:
பூர்வாஹ்ணே ப்ரதிசக்ரமிரே தாந்ஹாநுபநீயைவைதது³வாச ॥ 5.11.7॥

நாளை சொல்கிறேன் -உங்களுக்கு எவ்வளவு தெரியும் நிலையை அறிந்து அது தொடக்கி சொல்வேன்

॥ இதி ஏகாத³ஶ: க²ண்ட:³ ॥

———————————————–

ஔபமந்யவ கம் த்வமாத்மாநமுபாஸ்ஸ இதி தி³வமேவ ப⁴க³வோ
ராஜந்நிதி ஹோவாசைஷ வை ஸுதேஜா ஆத்மா வைஶ்வாநரோ யம்
த்வமாத்மாநமுபாஸ்ஸே தஸ்மாத்தவ ஸுதம் ப்ரஸுதமாஸுதம் குலே
த்³ருʼஶ்யதே ॥ 5.12.1॥

அத்ஸ்யந்நம் பஶ்யஸி ப்ரியமத்த்யந்நம் பஶ்யதி ப்ரியம் ப⁴வத்யஸ்ய
ப்³ரஹ்மவர்சஸம் குலே ய ஏதமேவமாத்மாநம் வைஶ்வாநரமுபாஸ்தே
மூதா⁴ த்வேஷ ஆத்மந இதி ஹோவாச மூர்தா⁴ தே
வ்யபதிஷ்யத்³யந்மாம் நாக³மிஷ்ய இதி ॥ 5.12.2॥

ஆகாசம் மேலே ஸ்வர்க்கம் லோகத்தை வைச்வானராக உபாசனம் முதலில் சொன்னவன்
தலையை மட்டும் உபாசிக்கிறாய் -முழுமையாக என்று நினைத்தாயானால் தலை போய் இருக்கும் நல்ல வேளை இன்று நீ வந்தாய்
அங்கம் மட்டும் -உபாசித்து -முக்தி கிட்டாதே -வாழும் கால நன்மை மட்டுமே கிட்டும்
அவாந்தர பலன் -நெல் குத்த வேர்வை வருவது போலே –

॥ இதி த்³வாத³ஶ: க²ண்ட:³ ॥

——————————————-

அத² ஹோவாச ஸத்யயஜ்ஞம் பௌலுஷிம் ப்ராசீநயோக்³ய கம்
த்வமாத்மாநமுபாஸ்ஸ இத்யாதி³த்யமேவ ப⁴க³வோ ராஜந்நிதி
ஹோவாசைஷ வை விஶ்வரூப ஆத்மா வைஶ்வாநரோ யம்
த்வமாத்மாநமுபாஸ்ஸே தஸ்மாத்தவ ப³ஹு விஶ்வரூபம் குலே
த்³ருʼஶ்யதே ॥ 5.13.1॥

அடுத்தவன் ஆத்யனாக உபாசனம்- ஓளி சாம்யம் உண்டே -குலம் பெருகும் ப்ரஹ்ம ஞானிகள் –
கண்ணை மட்டுமே உபாசித்தவனாக ஆவாய் –

ப்ரவ்ருʼத்தோঽஶ்வதரீரதோ² தா³ஸீநிஷ்கோঽத்ஸ்யந்நம் பஶ்யஸி
ப்ரியமத்த்யந்நம் பஶ்யதி ப்ரியம் ப⁴வத்யஸ்ய ப்³ரஹ்மவர்சஸம் குலே
ய ஏதமேவமாத்மாநம் வைஶ்வாநரமுபாஸ்தே சக்ஷுஷேததா³த்மந இதி
ஹோவாசாந்தோ⁴ঽப⁴விஷ்யோ யந்மாம் நாக³மிஷ்ய இதி ॥ 5.13.2॥

॥ இதி த்ரயோத³ஶ: க²ண்ட:³ ॥

——————————————

அத² ஹோவாசேந்த்³ரத்³யும்நம் பா⁴ல்லவேயம் வையாக்⁴ரபத்³ய கம்
த்வமாத்மாநமுபாஸ்ஸ இதி வாயுமேவ ப⁴க³வோ ராஜந்நிதி
ஹோவாசைஷ வை ப்ருʼத²க்³வர்த்மாத்மா வைஶ்வாநரோ யம்
த்வமாத்மாநமுபாஸ்ஸே தஸ்மாத்த்வாம் ப்ருʼத²க்³ப³லய ஆயந்தி
ப்ருʼத²க்³ரத²ஶ்ரேணயோঽநுயந்தி ॥ 5.14.1॥

அத்ஸ்யந்நம் பஶ்யஸி ப்ரியமத்த்யந்நம் பஶ்யதி ப்ரியம் ப⁴வத்யஸ்ய
ப்³ரஹ்மவர்சஸம் குலே ய ஏதமேவமாத்மாநம் வைஶ்வாநரமுபாஸ்தே
ப்ராணஸ்த்வேஷ ஆத்மந இதி ஹோவாச ப்ராணஸ்த
உத³க்ரமிஷ்யத்³யந்மாம் நாக³மிஷ்ய இதி ॥ 5.14.2॥

வாயு தேவதையை -உபாசிக்கிறேன் -பல ஐஸ்வர்யங்கள் வந்து சேரும் -ஆனால் முழுமையாக உபாஸிக்க வில்லை
பிராணனை மட்டும் உபாசித்தாய் –

॥ இதி சதுர்த³ஶ: க²ண்ட:³ ॥

———————————————–

அத² ஹோவாச ஜநꣳஶார்கராக்ஷ்ய கம் த்வமாத்மாநமுபாஸ்ஸ
இத்யாகாஶமேவ ப⁴க³வோ ராஜந்நிதி ஹோவாசைஷ வை ப³ஹுல
ஆத்மா வைஶ்வாநரோ யம் த்வமாத்மாநமுபஸ்ஸே தஸ்மாத்த்வம்
ப³ஹுலோঽஸி ப்ரஜயா ச த⁴நேந ச ॥ 5.15.1॥

அத்ஸ்யந்நம் பஶ்யஸி ப்ரியமத்த்யந்நம் பஶ்யதி ப்ரியம் ப⁴வத்யஸ்ய
ப்³ரஹ்மவர்சஸம் குலே ய ஏதமேவமாத்மாநம் வைஶ்வாநரமுபாஸ்தே
ஸந்தே³ஹஸ்த்வேஷ ஆத்மந இதி ஹோவாச ஸந்தே³ஹஸ்தே வ்யஶீர்யத்³யந்மாம்
நாக³மிஷ்ய இதி ॥ 5.15.2॥

ஆகாசத்தை உபாசிப்பதாக -புத்ரன் ஐஸ்வர்யம் -செழிப்பாக இருப்பாய் -நடுப்பாகம் மட்டும்

॥ இதி பஞ்சத³ஶ: க²ண்ட:³ ॥

—————————————————-

அத² ஹோவாச பு³டி³லமாஶ்வதராஶ்விம் வையாக்⁴ரபத்³ய கம்
த்வமாத்மாநமுபாஸ்ஸ இத்யப ஏவ ப⁴க³வோ ராஜந்நிதி ஹோவாசைஷ
வை ரயிராத்மா வைஶ்வாநரோ யம் த்வமாத்மாநமுபாஸ்ஸே
தஸ்மாத்த்வꣳரயிமாந்புஷ்டிமாநஸி ॥ 5.16.1॥

அத்ஸ்யந்நம் பஶ்யஸி ப்ரியமத்த்யந்நம் பஶ்யதி ப்ரியம் ப⁴வத்யஸ்ய
ப்³ரஹ்மவர்சஸம் குலே ய ஏதமேவமாத்மாநம் வைஶ்வாநரமுபாஸ்தே
ப³ஸ்திஸ்த்வேஷ ஆத்மந இதி ஹோவாச ப³ஸ்திஸ்தே வ்யபே⁴த்ஸ்யத்³யந்மாம்
நாக³மிஷ்ய இதி ॥ 5.16.2॥

அடுத்து புடிலர் நீராக உபாசனம் –

॥ இதி ஷோட³ஶ: க²ண்ட:³ ॥

———————————————

அத² ஹோவாசோத்³தா³லகமாருணிம் கௌ³தம கம் த்வமாத்மாநமுபஸ்ஸ
இதி ப்ருʼதி²வீமேவ ப⁴க³வோ ராஜந்நிதி ஹோவாசைஷ வை
ப்ரதிஷ்டா²த்மா வைஶ்வாநரோ யம் த்வமாத்மாநமுபாஸ்ஸே
தஸ்மாத்த்வம் ப்ரதிஷ்டி²தோঽஸி ப்ரஜயா ச பஶுபி⁴ஶ்ச 5.17.1॥

அத்ஸ்யந்நம் பஶ்யஸி ப்ரியமத்த்யந்நம் பஶ்யதி ப்ரியம் ப⁴வத்யஸ்ய
ப்³ரஹ்மவர்சஸம் குலே ய ஏதமேவமாத்மாநம் வைஶ்வாநரமுபாஸ்தே
பாதௌ³ த்வேதாவாத்மந இதி ஹோவாச பாதௌ³ தே வ்யம்லாஸ்யேதாம்
யந்மாம் நாக³மிஷ்ய இதி 5.17.2॥

உத்தாலகர் இடம் அடுத்து -பூமியாக உபாஸிக்க -கால் பகுதி மட்டும் -பசுக்கள் செல்வம் கிட்டும்

॥ இதி ஸப்தத³ஶ: க²ண்ட:³ ॥

——————————————

தாந்ஹோவாசைதே வை க²லு யூயம் ப்ருʼத²கி³வேமமாத்மாநம்
வைஶ்வாநரம் வித்³வாꣳஸோঽந்நமத்த² யஸ்த்வேதமேவம்
ப்ராதே³ஶமாத்ரமபி⁴விமாநமாத்மாநம் வைஶ்வாநரமுபாஸ்தே ஸ ஸர்வேஷு
லோகேஷு ஸர்வேஷு பூ⁴தேஷு ஸர்வேஷ்வாத்மஸ்வந்நமத்தி ॥ 5.18.1॥

பிரதேச மாத்திரம் -அங்கம் மட்டும் -இவற்றை உடலாகக் கொண்டு -சேதன அசேதனங்கள் ப்ரஹ்ம சரீரம் தானே –

தஸ்ய ஹ வா ஏதஸ்யாத்மநோ வைஶ்வாநரஸ்ய மூர்தை⁴வ
ஸுதேஜாஶ்சக்ஷுர்விஶ்வரூப: ப்ராண: ப்ருʼத²க்³வர்த்மாத்மா ஸந்தே³ஹோ
ப³ஹுலோ ப³ஸ்திரேவ ரயி: ப்ருʼதி²வ்யேவ பாதா³வுர ஏவ வேதி³ர்லோமாநி
ப³ர்ஹிர்ஹ்ருʼத³யம் கா³ர்ஹபத்யோ மநோঽந்வாஹார்யபசந ஆஸ்யமாஹவநீய:
॥ 5.18.2॥

॥ இதி அஷ்டாத³ஶ: க²ண்ட:³ ॥

————————————————-

தத்³யத்³ப⁴க்தம் ப்ரத²மமாக³ச்சே²த்தத்³தோ⁴மீயꣳ ஸ யாம்
ப்ரத²மாமாஹுதிம் ஜுஹுயாத்தாம் ஜுஹுயாத்ப்ராணாய ஸ்வாஹேதி
ப்ராணஸ்த்ருʼப்யதி ॥ 5.19.1॥

ப்ராணே த்ருʼப்யதி சக்ஷுஸ்த்ருʼப்யதி சக்ஷுஷி
த்ருʼப்யத்யாதி³த்யஸ்த்ருʼப்யத்யாதி³த்யே த்ருʼப்யதி த்³யௌஸ்த்ருʼப்யதி
தி³வி த்ருʼப்யந்த்யாம் யத்கிஞ்ச த்³யௌஶ்சாதி³த்யஶ்சாதி⁴திஷ்ட²தஸ்தத்த்ருʼப்யதி
தஸ்யாநுத்ருʼப்திம் த்ருʼப்யதி ப்ரஜயா பஶுபி⁴ரந்நாத்³யேந தேஜஸா
ப்³ரஹ்மவர்சஸேநேதி ॥ 5.19.2॥

அன்னம் மனஸ் -தண்ணீர் பிராணன் -நெய் வாக்கு –தொடர்பு இப்படி உண்டே
ஹோம குண்டம் உள்ளே -பிராணா சுவாஹா -ஆஹுதி கொடுக்க -திருப்தி வந்தால் -கண் திருப்தி –
அதனால் ஆதித்யன் திருப்தி -அத்யாத்மீகம் ஆதி தைவம் தொடர்பு -பிணைப்பு உண்டே –
ஆதித்யன் திருப்தி அடைந்தால் ஸ்வர்க்க லோகம் -தேவதைகள் திருப்தி –
அன்னம் தேஜஸ் கிட்டும்

॥ இதி ஏகோநவிம்ஶ: க²ண்ட:³ ॥

————————————————

அத² யாம் த்³விதீயாம் ஜுஹுயாத்தாம் ஜுஹுயாத்³வ்யாநாய ஸ்வாஹேதி
வ்யாநஸ்த்ருʼப்யதி ॥ 5.20.1॥

வ்யாநே த்ருʼப்யதி ஶ்ரோத்ரம் த்ருʼப்யதி ஶ்ரோத்ரே த்ருʼப்யதி
சந்த்³ரமாஸ்த்ருʼப்யதி சந்த்³ரமஸி த்ருʼப்யதி தி³ஶஸ்த்ருʼப்யந்தி
தி³க்ஷு த்ருʼப்யந்தீஷு யத்கிஞ்ச தி³ஶஶ்ச சந்த்³ரமாஶ்சாதி⁴திஷ்ட²ந்தி
தத்த்ருʼப்யதி தஸ்யாநு த்ருʼப்திம் த்ருʼப்யதி ப்ரஜயா பஶுபி⁴ரந்நாத்³யேந
தேஜஸா ப்³ரஹ்மவர்சஸேநேதி ॥ 5.20.2॥

॥ இதி விம்ஶ: க²ண்ட:³ ॥

———————————————

அத² யாம் த்ருʼதீயாம் ஜுஹுயாத்தாம் ஜுஹுயாத³பாநாய
ஸ்வாஹேத்யபாநஸ்த்ருʼப்யதி ॥ 5.21.1॥

அபாநே த்ருʼப்யதி வாக்த்ருʼப்யதி வாசி த்ருʼப்யந்த்யாமக்³நிஸ்த்ருʼப்யத்யக்³நௌ
த்ருʼப்யதி ப்ருʼதி²வீ த்ருʼப்யதி ப்ருʼதி²வ்யாம் த்ருʼப்யந்த்யாம் யத்கிஞ்ச
ப்ருʼதி²வீ சாக்³நிஶ்சாதி⁴திஷ்ட²தஸ்தத்த்ருʼப்யதி
தஸ்யாநு த்ருʼப்திம் த்ருʼப்யதி ப்ரஜயா பஶுபி⁴ரந்நாத்³யேந தேஜஸா
ப்³ரஹ்மவர்சஸேநேதி ॥ 5.21.2॥

॥ இதி ஏகவிம்ஶ: க²ண்ட:³ ॥

ஆறு ரிஷிகளை -பேரை ஒருவர் கேள்வி இதில் –
மீமாம்சை பூஜித விஷய விசாரம்
நம்மை செலுத்தும் அவன் யார் –
உத்தாலகர் இடம் சென்று இவரும் சென்று -இவரே அருணி
அனைவரும் அரசர் அஸ்வபதி கேகேய அரசன் -ராஜ ரிஷி இடம் சென்று உபதேசம் கேட்டுப் பெற்றார்கள் –

த்யு லோகம் -ஸ்வர்க்க லோகம் -ஆதித்யன் -வாயு -ஆகாசமே -தண்ணீரே –ப்ருத்வியே -ஆறும் சொல்ல

தலைப்பகுதி தான் த்வி லோகம் -ஸூ தேஜஸ்ஸூ -இது
ஆதித்யன் -சத்யஞ்ஞான் சொன்னது விஸ்வ ரூபன் உலகை பிரகாசப்படுத்தும் -கண்
வாயு -பிருதக் வர்த்தமான எங்கும் புகுந்து -பரமாத்மாவின் மூச்சுக்காற்று -பிராணன்
ஆகாசம் பஹுலம் -பெரிய பூதம் -மத்ய காயம் இடைப்பகுதி
மூச்சா -தண்ணீர் முடிலர் ரையி
பிரதிஷ்டா பிருத்வி திருவடிகள்
பகுதி தான் உபாசிக்கிறீர்கள்
அபரிச்சேத்யன் அவன் –

அபி விமானம் -மானம் அளவு அற்றவர் -பகுதி என்று புரிந்து கொள்ள வேண்டும் –
எங்கும் விபு -சர்வ வ்யாபி -அடைந்து அனுபவிக்கும் பலம் –
சோறு உண்கிறார்கள் -உண்ணும் சோறு இத்யாதி போல்
என்னுடைய உடலில் சேர்ந்து இருக்கிறார் என்று நினைத்து உபாஸிக்க வேண்டும்
சம்பந்தம் அறிந்து -அனைத்தும் அவன் அங்கங்கள் உடன் -இருப்பதாக அனுசந்தித்து –
இவையும் -அவையும் –1-9- என்னுடைச் சூழல் உளானே என் ஓக்கலையானே –உச்சி உளானே -அனுசந்திப்பது போல் –

இருப்பதால் தான் இந்த உடல் வேண்டும் -உபாசித்து அவனை அடைய சாதனம் –
இதுக்கு அங்கம் பிராண ஆஹுதி –அக்னி ஹோத்ரமாக இத்தை நினைத்து பண்ண வேண்டும் –
வைச்வானரனான அவனுக்கு ஆராதனம் இதுவே
இப்படி த்யானிப்பவன் -பாபங்கள் தீயில் இட்ட பஞ்சு போல் உரு மாய்ந்து போகும் –
தர்சன சமானாகார தியானத்துக்கு பின்பு –பலன் கிட்டும் –
தத் அதிகம உத்தர அகம் பூர்வ அகம் அஸ்லேஷ விநாசம்

——

14-பூமா வித்யை –7-ப்ரபாடகம் முழுவதும் -இதுவே —

॥ ஸப்தமோঽத்⁴யாய: ॥
அதீ⁴ஹி ப⁴க³வ இதி ஹோபஸஸாத³ ஸநத்குமாரம் நாரத³ஸ்தꣳ
ஹோவாச யத்³வேத்த² தேந மோபஸீத³ ததஸ்த ஊர்த்⁴வம் வக்ஷ்யாமீதி
ஸ ஹோவாச ॥ 7.1.1॥

மிகச்சிறந்த செழிப்பான அதிகமான தன்னில் வேறு பெரியது இல்லாது பூமா
நாரதர் -சனத் குமாரர் -பேசி –
பூமா எவ்வளவு பெரியது காட்டி -அத்தை பெற செய்ய வேண்டிய படிக்கட்டுக்கள் காட்டி
தெரிந்தது சொல்லும் அப்புறம் மேலே சொல்கிறேன் சனத்குமாரர்-
அறிந்தவற்றில் எது சிறந்தது -ஒவ் ஒன்றாக சொல்லி உயர்த்தி –

ருʼக்³வேத³ம் ப⁴க³வோঽத்⁴யேமி யஜுர்வேத³ꣳ ஸாமவேத³மாத²ர்வணம்
சதுர்த²மிதிஹாஸபுராணம் பஞ்சமம் வேதா³நாம் வேத³ம் பித்ர்யꣳ ராஶிம்
தை³வம் நிதி⁴ம் வாகோவாக்யமேகாயநம் தே³வவித்³யாம் ப்³ரஹ்மவித்³யாம்
பூ⁴தவித்³யாம் க்ஷத்ரவித்³யாம் நக்ஷத்ரவித்³யாꣳ
ஸர்பதே³வஜநவித்³யாமேதத்³ப⁴க³வோঽத்⁴யேமி ॥ 7.1.2॥

தெரிந்தது எல்லாம் நாரதர் விளக்கி -வித்யா ஸ்தானங்கள் அறிந்தவர் –

ஸோঽஹம் ப⁴க³வோ மந்த்ரவிதே³வாஸ்மி நாத்மவிச்ச்²ருதꣳ ஹ்யேவ மே
ப⁴க³வத்³த்³ருʼஶேப்⁴யஸ்தரதி ஶோகமாத்மவிதி³தி ஸோঽஹம் ப⁴க³வ:
ஶோசாமி தம் மா ப⁴க³வாஞ்சோ²கஸ்ய பாரம் தாரயத்விதி
தꣳ ஹோவாச யத்³வை கிஞ்சைதத³த்⁴யகீ³ஷ்டா² நாமைவைதத் ॥ 7.1.3॥

ஆனந்தம் இல்லை-தெரிந்து கொள்ள வேண்டியதை அறியாமல் -சார தமம் அறியாமல் துக்கமாகவே உள்ளேன்

நாம வா ருʼக்³வேதோ³ யஜுர்வேத:³ ஸாமவேத³ ஆத²ர்வணஶ்சதுர்த²
இதிஹாஸபுராண: பஞ்சமோ வேதா³நாம் வேத:³ பித்ர்யோ ராஶிர்தை³வோ
நிதி⁴ர்வாகோவாக்யமேகாயநம் தே³வவித்³யா ப்³ரஹ்மவித்³யா பூ⁴தவித்³யா
க்ஷத்ரவித்³யா நக்ஷத்ரவித்³யா ஸர்பதே³வஜநவித்³யா
நாமைவைதந்நாமோபாஸ்ஸ்வேதி ॥ 7.1.4 ॥

நாம ப்ரஹ்ம உபாசனம் முதலில் -விருப்பம் அடைகிறான் –

ஸ யோ நாம ப்³ரஹ்மேத்யுபாஸ்தே யாவந்நாம்நோ க³தம் தத்ராஸ்ய
யதா²காமசாரோ ப⁴வதி யோ நாம ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி
ப⁴க³வோ நாம்நோ பூ⁴ய இதி நாம்நோ வாவ பூ⁴யோঽஸ்தீதி தந்மே
ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.1.5॥

॥ இதி ப்ரத²ம: க²ண்ட:³ ॥

——————————————

வாக்³வாவ நாம்நோ பூ⁴யஸீ வாக்³வா ருʼக்³வேத³ம் விஜ்ஞாபயதி யஜுர்வேத³ꣳ
ஸாமவேத³மாத²ர்வணம் சதுர்த²மிதிஹாஸபுராணம் பஞ்சமம் வேதா³நாம் வேத³ம்
பித்ர்யꣳராஶிம் தை³வம் நிதி⁴ம் வாகோவாக்யமேகாயநம் தே³வவித்³யாம்
ப்³ரஹ்மவித்³யாம் பூ⁴தவித்³யாம் க்ஷத்ரவித்³யாꣳ ஸர்பதே³வஜநவித்³யாம்
தி³வம் ச ப்ருʼதி²வீம் ச வாயும் சாகாஶம் சாபஶ்ச தேஜஶ்ச
தே³வாꣳஶ்ச மநுஷ்யாꣳஶ்ச பஶூꣳஶ்ச வயாꣳஸி ச
த்ருʼணவநஸ்பதீஞ்ஶ்வாபதா³ந்யாகீடபதங்க³பிபீலகம்
த⁴ர்மம் சாத⁴ர்மம் ச ஸத்யம் சாந்ருʼதம் ச ஸாது⁴ சாஸாது⁴ ச
ஹ்ருʼத³யஜ்ஞம் சாஹ்ருʼத³யஜ்ஞம் ச யத்³வை வாங்நாப⁴விஷ்யந்ந த⁴ர்மோ
நாத⁴ர்மோ வ்யஜ்ஞாபயிஷ்யந்ந ஸத்யம் நாந்ருʼதம் ந ஸாது⁴ நாஸாது⁴
ந ஹ்ருʼத³யஜ்ஞோ நாஹ்ருʼத³யஜ்ஞோ வாகே³வைதத்ஸர்வம் விஜ்ஞாபயதி
வாசமுபாஸ்ஸ்வேதி ॥ 7.2.1॥

வாக் ப்ரஹ்மம் அடுத்து -பேச்சு இருந்தால் தானே சொற்கள் வரும் -நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் –
வாக்மீ ஸ்ரீ மான் -வாக் சாதுர்யம் -நாமங்களை விட வாக்கு ஸ்ரேஷ்டம்
நர நார த -மனுஷன் உடைய தொடர்பு உள்ள ஞானம் கொடுப்பவர்– நாரதர்

ஸ யோ வாசம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தே யாவத்³வாசோ க³தம் தத்ராஸ்ய
யதா²காமசாரோ ப⁴வதி யோ வாசம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி
ப⁴க³வோ வாசோ பூ⁴ய இதி வாசோ வாவ பூ⁴யோঽஸ்தீதி தந்மே
ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.2.2॥

॥ இதி த்³விதீய: க²ண்ட:³ ॥

———————————————

மநோ வாவ வாசோ பூ⁴யோ யதா² வை த்³வே வாமலகே த்³வே வா கோலே
த்³வௌ வாக்ஷௌ முஷ்டிரநுப⁴வத்யேவம் வாசம் ச நாம ச
மநோঽநுப⁴வதி ஸ யதா³ மநஸா மநஸ்யதி
மந்த்ராநதீ⁴யீயேத்யதா²தீ⁴தே கர்மாணி குர்வீயேத்யத² குருதே
புத்ராꣳஶ்ச பஶூꣳஶ்சேச்சே²யேத்யதே²ச்ச²த இமம் ச
லோகமமும் சேச்சே²யேத்யதே²ச்ச²தே மநோ ஹ்யாத்மா மநோ ஹி லோகோ
மநோ ஹி ப்³ரஹ்ம மந உபாஸ்ஸ்வேதி ॥ 7.3.1 ॥

மனம் அத்தை விட ஸ்ரேஷ்டம் -நினைக்காமல் பேச முடியாதே மனோ பூர்வ வாக் உத்தர –
பேசினால் தானே சொற்கள் நாமம் வரும் –
பந்த மோக்ஷ ஏவ காரணம் மனம் -பற்றுடைய மனம் எதிரி- பற்றில்லா மனம் நண்பன்
மனம் கருவி போலே சிந்திக்க –

ஸ யோ மநோ ப்³ரஹ்மேத்யுபாஸ்தே யாவந்மநஸோ க³தம் தத்ராஸ்ய
யதா²காமசாரோ ப⁴வதி யோ மநோ ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி
ப⁴க³வோ மநஸோ பூ⁴ய இதி மநஸோ வாவ பூ⁴யோঽஸ்தீதி
தந்மே ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.3.2॥

॥ இதி த்ருʼதீய: க²ண்ட:³ ॥

—————————————-

ஸங்கல்போ வாவ மநஸோ பூ⁴யாந்யதா³ வை ஸங்கல்பயதேঽத²
மநஸ்யத்யத² வாசமீரயதி தாமு நாம்நீரயதி நாம்நி
மந்த்ரா ஏகம் ப⁴வந்தி மந்த்ரேஷு கர்மாணி ॥ 7.4.1॥

-சங்கல்பம் -புத்தி-தர்ம பூத ஞானம் – -உறுதியான முடிவு எடுக்கும் -மனத்தை விட ஸ்ரேஷ்டம் –

தாநி ஹ வா ஏதாநி ஸங்கல்பைகாயநாநி ஸங்கல்பாத்மகாநி
ஸங்கல்பே ப்ரதிஷ்டி²தாநி ஸமக்லுʼபதாம் த்³யாவாப்ருʼதி²வீ
ஸமகல்பேதாம் வாயுஶ்சாகாஶம் ச ஸமகல்பந்தாபஶ்ச
தேஜஶ்ச தேஷாꣳ ஸம் க்லுʼப்த்யை வர்ஷꣳ ஸங்கல்பதே
வர்ஷஸ்ய ஸங்க்லுʼப்த்யா அந்நꣳ ஸங்கல்பதேঽந்நஸ்ய ஸம் க்லுʼப்த்யை
ப்ராணா: ஸங்கல்பந்தே ப்ராணாநாꣳ ஸம் க்லுʼப்த்யை மந்த்ரா: ஸங்கல்பந்தே
மந்த்ராணாꣳ ஸம் க்லுʼப்த்யை கர்மாணி ஸங்கல்பந்தே கர்மணாம்
ஸங்க்லுʼப்த்யை லோக: ஸங்கல்பதே லோகஸ்ய ஸம் க்லுʼப்த்யை ஸர்வꣳ
ஸங்கல்பதே ஸ ஏஷ ஸங்கல்ப: ஸங்கல்பமுபாஸ்ஸ்வேதி ॥ 7.4.2 ॥

ஸ ய: ஸங்கல்பம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தே ஸங்க்லுʼப்தாந்வை ஸ லோகாந்த்⁴ருவாந்த்⁴ருவ:
ப்ரதிஷ்டி²தாந் ப்ரதிஷ்டி²தோঽவ்யத²மாநாநவ்யத²மாநோঽபி⁴ஸித்⁴யதி
யாவத்ஸங்கல்பஸ்ய க³தம் தத்ராஸ்ய யதா²காமசாரோ ப⁴வதி ய:
ஸங்கல்பம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி ப⁴க³வ: ஸங்கல்பாத்³பூ⁴ய இதி
ஸங்கல்பாத்³வாவ பூ⁴யோঽஸ்தீதி தந்மே ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.4.3॥

॥ இதி சதுர்த:² க²ண்ட:³ ॥

———————————————-

சித்தம் வாவ ஸம் கல்பாத்³பூ⁴யோ யதா³ வை சேதயதேঽத²
ஸங்கல்பயதேঽத² மநஸ்யத்யத² வாசமீரயதி தாமு நாம்நீரயதி
நாம்நி மந்த்ரா ஏகம் ப⁴வந்தி மந்த்ரேஷு கர்மாணி ॥ 7.5.1॥

சமயோஜித சிந்தை ஸ்ரேஷ்டம் -சங்கல்பத்தை விட -சமயத்துக்கு தக்க -அப்பொழுது ஒரு சிந்தை செய்தது போலே –
மனத்தின் வேறே வேறே நிலைப்பாடுகள் இவை

தாநி ஹ வா ஏதாநி சித்தைகாயநாநி சித்தாத்மாநி சித்தே
ப்ரதிஷ்டி²தாநி தஸ்மாத்³யத்³யபி ப³ஹுவித³சித்தோ ப⁴வதி
நாயமஸ்தீத்யேவைநமாஹுர்யத³யம் வேத³ யத்³வா அயம்
வித்³வாந்நேத்த²மசித்த: ஸ்யாதி³த்யத² யத்³யல்பவிச்சித்தவாந்ப⁴வதி
தஸ்மா ஏவோத ஶுஶ்ரூஷந்தே சித்தꣳஹ்யேவைஷாமேகாயநம்
சித்தமாத்மா சித்தம் ப்ரதிஷ்டா² சித்தமுபாஸ்ஸ்வேதி ॥ 7.5.2 ॥

ஸ யஶ்சித்தம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தே சித்தாந்வை ஸ லோகாந்த்⁴ருவாந்த்⁴ருவ:
ப்ரதிஷ்டி²தாந்ப்ரதிஷ்டி²தோঽவ்யத²மாநாநவ்யத²மாநோঽபி⁴ஸித்⁴யதி
யாவச்சித்தஸ்ய க³தம் தத்ராஸ்ய யதா²காமசாரோ ப⁴வதி யஶ்சித்தம்
ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி ப⁴க³வஶ்சித்தாத்³பூ⁴ய இதி சித்தாத்³வாவ
பூ⁴யோঽஸ்தீதி தந்மே ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.5.3॥

॥ இதி பஞ்சம: க²ண்ட:³ ॥

———————————————-

த்⁴யாநம் வாவ சித்தாத்³பூ⁴யோ த்⁴யாயதீவ ப்ருʼதி²வீ
த்⁴யாயதீவாந்தரிக்ஷம் த்⁴யாயதீவ த்³யௌர்த்⁴யாயந்தீவாபோ
த்⁴யாயந்தீவ பர்வதா தே³வமநுஷ்யாஸ்தஸ்மாத்³ய இஹ மநுஷ்யாணாம்
மஹத்தாம் ப்ராப்நுவந்தி த்⁴யாநாபாதா³ꣳஶா இவைவ தே ப⁴வந்த்யத²
யேঽல்பா: கலஹிந: பிஶுநா உபவாதி³நஸ்தேঽத² யே ப்ரப⁴வோ
த்⁴யாநாபாதா³ꣳஶா இவைவ தே ப⁴வந்தி த்⁴யாநமுபாஸ்ஸ்வேதி ॥ 7.6.1॥

மேலே உயர்த்தி -தியானம் ஸ்ரேஷ்டம் -இடைவெளி இல்லாமல் – இடையூறு தடங்கல் இல்லாத சிந்தனை –
எடுத்த லஷ்யத்தில் இருந்து மனம் மாறாமல் இருக்க வேண்டுமே –
உணர்வில் உம்பர் ஒருவன் -நினைமின் நெடியானை –

ஸ யோ த்⁴யாநம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தே யாவத்³த்⁴யாநஸ்ய க³தம் தத்ராஸ்ய
யதா²காமசாரோ ப⁴வதி யோ த்⁴யாநம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி
ப⁴க³வோ த்⁴யாநாத்³பூ⁴ய இதி த்⁴யாநாத்³வாவ பூ⁴யோঽஸ்தீதி
தந்மே ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.6.2॥

॥ இதி ஷஷ்ட:² க²ண்ட:³ ॥

————————————————

விஜ்ஞாநம் வாவ த்⁴யாநாத்³பூ⁴ய: விஜ்ஞாநேந வா ருʼக்³வேத³ம் விஜாநாதி
யஜுர்வேத³ꣳ ஸாமவேத³மாத²ர்வணம் சதுர்த²மிதிஹாஸபுராணம்
பஞ்சமம் வேதா³நாம் வேத³ம் பித்ர்யꣳராஶிம் தை³வம் நிதி⁴ம்
வாகோவாக்யமேகாயநம் தே³வவித்³யாம் ப்³ரஹ்மவித்³யாம் பூ⁴தவித்³யாம்
க்ஷத்ரவித்³யாம் நக்ஷத்ரவித்³யாꣳஸர்பதே³வஜநவித்³யாம் தி³வம் ச
ப்ருʼதி²வீம் ச வாயும் சாகாஶம் சாபஶ்ச தேஜஶ்ச தே³வாꣳஶ்ச
மநுஷ்யாꣳஶ்ச பஶூꣳஶ்ச வயாꣳஸி ச
த்ருʼணவநஸ்பதீஞ்ச்²வாபதா³ந்யாகீடபதங்க³பிபீலகம்
த⁴ர்மம் சாத⁴ர்மம் ச ஸத்யம் சாந்ருʼதம் ச ஸாது⁴ சாஸாது⁴ ச
ஹ்ருʼத³யஜ்ஞம் சாஹ்ருʼத³யஜ்ஞம் சாந்நம் ச ரஸம் சேமம் ச லோகமமும்
ச விஜ்ஞாநேநைவ விஜாநாதி விஜ்ஞாநமுபாஸ்ஸ்வேதி ॥ 7.7.1 ॥

த்யானம் -பிரமாண ஜன்ய ஞானம் இருந்தால் தானே வரும் -விஞ்ஞானம் ஸ்ரேஷ்டம் தியானத்தை விட
பிரேமா புத்தி அறிவு-ஏற்படும் கருவி பிரமாணம் -பிரத்யக்ஷம் அனுமானம் சப்தம் -சாஸ்திரம் வேதம் –

ஸ யோ விஜ்ஞாநம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தே விஜ்ஞாநவதோ வை ஸ
லோகாம்ஜ்ஞாநவதோঽபி⁴ஸித்⁴யதி யாவத்³விஜ்ஞாநஸ்ய க³தம் தத்ராஸ்ய
யதா²காமசாரோ ப⁴வதி யோ விஜ்ஞாநம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி ப⁴க³வோ
விஜ்ஞாநாத்³பூ⁴ய இதி விஜ்ஞாநாத்³வாவ பூ⁴யோঽஸ்தீதி தந்மே
ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.7.2॥

॥ இதி ஸப்தம: க²ண்ட:³ ॥

—————————————–

ப³லம் வாவ விஜ்ஞாநாத்³பூ⁴யோঽபி ஹ ஶதம் விஜ்ஞாநவதாமேகோ
ப³லவாநாகம்பயதே ஸ யதா³ ப³லீ ப⁴வத்யதோ²த்தா²தா
ப⁴வத்யுத்திஷ்ட²ந்பரிசரிதா ப⁴வதி பரிசரந்நுபஸத்தா
ப⁴வத்யுபஸீத³ந்த்³ரஷ்டா ப⁴வதி ஶ்ரோதா ப⁴வதி மந்தா ப⁴வதி
போ³த்³தா⁴ ப⁴வதி கர்தா ப⁴வதி விஜ்ஞாதா ப⁴வதி ப³லேந வை ப்ருʼதி²வீ
திஷ்ட²தி ப³லேநாந்தரிக்ஷம் ப³லேந த்³யௌர்ப³லேந பர்வதா ப³லேந
தே³வமநுஷ்யா ப³லேந பஶவஶ்ச வயாꣳஸி ச த்ருʼணவநஸ்பதய:
ஶ்வாபதா³ந்யாகீடபதங்க³பிபீலகம் ப³லேந லோகஸ்திஷ்ட²தி
ப³லமுபாஸ்ஸ்வேதி ॥ 7.8.1॥

பலம் -ஞானம் சம்பாதிக்க ஆச்சார்யர் சிசுரூஷை பண்ண வேண்டுமே -குருகுல வாசம் -கைங்கர்யம் –
ஸ்ரவணம் மனனம் த்யானம் அனைத்துக்கும் பலம் வேண்டுமே

ஸ யோ ப³லம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தே யாவத்³ப³லஸ்ய க³தம் தத்ராஸ்ய
யதா²காமசாரோ ப⁴வதி யோ ப³லம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி ப⁴க³வோ
ப³லாத்³பூ⁴ய இதி ப³லாத்³வாவ பூ⁴யோঽஸ்தீதி தந்மே
ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.8.2॥

॥ இதி அஷ்டம: க²ண்ட:³ ॥

——————————————–

அந்நம் வாவ ப³லாத்³பூ⁴யஸ்தஸ்மாத்³யத்³யபி த³ஶ
ராத்ரீர்நாஶ்நீயாத்³யத்³யு ஹ
ஜீவேத³த²வாத்³ரஷ்டாஶ்ரோதாமந்தாபோ³த்³தா⁴கர்தாவிஜ்ஞாதா
ப⁴வத்யதா²ந்நஸ்யாயை த்³ரஷ்டா ப⁴வதி ஶ்ரோதா ப⁴வதி மந்தா
ப⁴வதி போ³த்³தா⁴ ப⁴வதி கர்தா ப⁴வதி விஜ்ஞாதா
ப⁴வத்யந்நமுபாஸ்ஸ்வேதி ॥ 7.9.1॥

அன்னம் -சாப்பிட்டால் தானே பலம் வரும் -புஷ்ட்டி அடைய அன்னம் —

ஸ யோঽந்நம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽந்நவதோ வை ஸ
லோகாந்பாநவதோঽபி⁴ஸித்⁴யதி யாவத³ந்நஸ்ய க³தம் தத்ராஸ்ய
யதா²காமசாரோ ப⁴வதி யோঽந்நம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி
ப⁴க³வோঽந்நாத்³பூ⁴ய இத்யந்நாத்³வாவ பூ⁴யோঽஸ்தீதி தந்மே
ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.9.2॥

॥ இதி நவம: க²ண்ட:³ ॥

———————————————

ஆபோ வாவாந்நாத்³பூ⁴யஸ்தஸ்மாத்³யதா³ ஸுவ்ருʼஷ்டிர்ந ப⁴வதி
வ்யாதீ⁴யந்தே ப்ராணா அந்நம் கநீயோ ப⁴விஷ்யதீத்யத² யதா³
ஸுவ்ருʼஷ்டிர்ப⁴வத்யாநந்தி³ந: ப்ராணா ப⁴வந்த்யந்நம் ப³ஹு
ப⁴விஷ்யதீத்யாப ஏவேமா மூர்தா யேயம் ப்ருʼதி²வீ யத³ந்தரிக்ஷம்
யத்³த்³யௌர்யத்பர்வதா யத்³தே³வமநுஷ்யாயத்பஶவஶ்ச வயாꣳஸி ச
த்ருʼணவநஸ்பதய: ஶ்வாபதா³ந்யாகீடபதங்க³பிபீலகமாப
ஏவேமா மூர்தா அப உபாஸ்ஸ்வேதி ॥ 7.10.1॥

ஆபோ தண்ணீர் -மழை பெய்தால் தானே அன்னம் -ஜெரிக்க தண்ணீர் குடிக்க வேண்டுமே –
மழை -பார்க்கவே ஆனந்தம் -முகில் வண்ணன் -மேக ஸ்யாமளன் –

ஸ யோঽபோ ப்³ரஹ்மேத்யுபாஸ்த ஆப்நோதி ஸர்வாந்காமாꣳஸ்த்ருʼப்திமாந்ப⁴வதி
யாவத³பாம் க³தம் தத்ராஸ்ய யதா²காமசாரோ ப⁴வதி யோঽபோ
ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி ப⁴க³வோঽத்³ப்⁴யோ பூ⁴ய இத்யத்³ப்⁴யோ வாவ
பூ⁴யோঽஸ்தீதி தந்மே ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.10.2॥

॥ இதி த³ஶம: க²ண்ட:³ ॥

———————————————-

தேஜோ வாவாத்³ப்⁴யோ பூ⁴யஸ்தத்³வா ஏதத்³வாயுமாக்³ருʼஹ்யாகாஶமபி⁴தபதி
ததா³ஹுர்நிஶோசதி நிதபதி வர்ஷிஷ்யதி வா இதி தேஜ ஏவ
தத்பூர்வம் த³ர்ஶயித்வாதா²ப: ஸ்ருʼஜதே ததே³ததூ³ர்த்⁴வாபி⁴ஶ்ச
திரஶ்சீபி⁴ஶ்ச வித்³யுத்³பி⁴ராஹ்ராதா³ஶ்சரந்தி தஸ்மாதா³ஹுர்வித்³யோததே
ஸ்தநயதி வர்ஷிஷ்யதி வா இதி தேஜ ஏவ தத்பூர்வம் த³ர்ஶயித்வாதா²ப:
ஸ்ருʼஜதே தேஜ உபாஸ்ஸ்வேதி ॥ 7.11.1॥

அக்னி -கொதிப்பாய் இருந்து மழை -தேஜஸ் ஸ்ரேஷ்டம் -ஆகாசம் வாயு அக்னி தண்ணீர் பிருத்வி –

ஸ யஸ்தேஜோ ப்³ரஹ்மேத்யுபாஸ்தே தேஜஸ்வீ வை ஸ தேஜஸ்வதோ
லோகாந்பா⁴ஸ்வதோঽபஹததமஸ்காநபி⁴ஸித்⁴யதி யாவத்தேஜஸோ க³தம்
தத்ராஸ்ய யதா²காமசாரோ ப⁴வதி யஸ்தேஜோ ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி
ப⁴க³வஸ்தேஜஸோ பூ⁴ய இதி தேஜஸோ வாவ பூ⁴யோঽஸ்தீதி தந்மே
ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.11.2॥

॥ இதி ஏகாத³ஶ: க²ண்ட:³ ॥

———————————————-

ஆகாஶோ வாவ தேஜஸோ பூ⁴யாநாகாஶே வை ஸூர்யாசந்த்³ரமஸாவுபௌ⁴
வித்³யுந்நக்ஷத்ராண்யக்³நிராகாஶேநாஹ்வயத்யாகாஶேந
ஶ்ருʼணோத்யாகாஶேந ப்ரதிஶ்ருʼணோத்யாகாஶே ரமத ஆகாஶே ந ரமத
ஆகாஶே ஜாயத ஆகாஶமபி⁴ஜாயத ஆகாஶமுபாஸ்ஸ்வேதி
॥ 7.12.1॥

ஆகாசம் மேலே -திட விசும்பு -விண் -அளவிட்டு அறியமுடியாமல் -அனைத்துக்கும் இடம் கொடுக்கும்-
net work -நக்ஷத்திரங்கள் வாழும் இடம்

ஸ ய ஆகாஶம் ப்³ரஹ்மேத்யுபாஸ்த ஆகாஶவதோ வை ஸ
லோகாந்ப்ரகாஶவதோঽஸம்பா³தா⁴நுருகா³யவதோঽபி⁴ஸித்⁴யதி
யாவதா³காஶஸ்ய க³தம் தத்ராஸ்ய யதா²காமசாரோ ப⁴வதி
ய ஆகாஶம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி ப⁴க³வ ஆகாஶாத்³பூ⁴ய இதி
ஆகாஶாத்³வாவ பூ⁴யோঽஸ்தீதி தந்மே ப⁴க³வாந்ப்³ரவீத்விதி
॥ 7.12.2॥

॥ இதி த்³வாத³ஶ: க²ண்ட:³ ॥

——————————————–

ஸ்மரோ வாவாகாஶாத்³பூ⁴யஸ்தஸ்மாத்³யத்³யபி ப³ஹவ ஆஸீரந்ந
ஸ்மரந்தோ நைவ தே கஞ்சந ஶ்ருʼணுயுர்ந மந்வீரந்ந விஜாநீரந்யதா³
வாவ தே ஸ்மரேயுரத² ஶ்ருʼணுயுரத² மந்வீரந்நத² விஜாநீரந்ஸ்மரேண
வை புத்ராந்விஜாநாதி ஸ்மரேண பஶூந்ஸ்மரமுபாஸ்ஸ்வேதி ॥ 7.13.1॥

நினைவு ஆகாசத்தை விட ஸ்ரேஷ்டம் -ஹிருதயத்தில் இருந்து ஸ்ம்ருதி ஞானம் என்னால் தான் ஸ்ரீ கீதாச்சார்யன் –
மறந்தேன் உன்னை முன்னம் —

ஸ ய: ஸ்மரம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தே யாவத்ஸ்மரஸ்ய க³தம் தத்ராஸ்ய
யதா²காமசாரோ ப⁴வதி ய: ஸ்மரம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி ப⁴க³வ:
ஸ்மராத்³பூ⁴ய இதி ஸ்மராத்³வாவ பூ⁴யோঽஸ்தீதி தந்மே
ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.13.2॥

॥ இதி த்ரயோத³ஶ: க²ண்ட:³ ॥

————————————————

ஆஶா வாவ ஸ்மராத்³பூ⁴யஸ்யாஶேத்³தோ⁴ வை ஸ்மரோ மந்த்ராநதீ⁴தே
கர்மாணி குருதே புத்ராꣳஶ்ச பஶூꣳஶ்சேச்ச²த இமம் ச
லோகமமும் சேச்ச²த ஆஶாமுபாஸ்ஸ்வேதி ॥ 7.14.1॥

ஆசை இருந்தால் தானே நினைவு வரும் –
பத்னி புத்திரர் பசு இவற்றை விரும்புவது ஆசை
ஆசை யுடையோர்க்கு –பேசி வரம்பு அறுத்தார் –

ஸ ய ஆஶாம் ப்³ரஹ்மேத்யுபாஸ்த ஆஶயாஸ்ய ஸர்வே காமா:
ஸம்ருʼத்⁴யந்த்யமோகா⁴ ஹாஸ்யாஶிஷோ ப⁴வந்தி யாவதா³ஶாயா
க³தம் தத்ராஸ்ய யதா²காமசாரோ ப⁴வதி ய ஆஶாம்
ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி ப⁴க³வ ஆஶாயா பூ⁴ய இத்யாஶாயா வாவ
பூ⁴யோঽஸ்தீதி தந்மே ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.14.2॥

॥ இதி சதுர்த³ஶ: க²ண்ட:³ ॥

——————————————–

ப்ராணோ வா ஆஶாயா பூ⁴யாந்யதா² வா அரா நாபௌ⁴ ஸமர்பிதா
ஏவமஸ்மிந்ப்ராணே ஸர்வꣳஸமர்பிதம் ப்ராண: ப்ராணேந யாதி
ப்ராண: ப்ராணம் த³தா³தி ப்ராணாய த³தா³தி ப்ராணோ ஹ பிதா ப்ராணோ
மாதா ப்ராணோ ப்⁴ராதா ப்ராண: ஸ்வஸா ப்ராண ஆசார்ய:
ப்ராணோ ப்³ராஹ்மண: ॥ 7.15.1॥

இங்கு பிராண சப்தத்துக்கு பிராணன் உடன் கூடிய ஆத்மா என்றவாறு
ஆசை விட ஆத்மா ஸ்ரேஷ்டம் -இப்படி சிந்தித்து மேலே மேலே போனதே ஆத்மாவால் தானே –
எதனால் ஆத்மா ஸ்ரேஷ்டம் -சரீரம் -பிள்ளை நன்றாக அப்பாவுக்கு கார்யம் -உள்ளே இருக்கும் வரை வேறே –
அழைத்து போய் –எடுத்து வந்து அஃறிணை மாறுமே –

ஸ யதி³ பிதரம் வா மாதரம் வா ப்⁴ராதரம் வா ஸ்வஸாரம் வாசார்யம்
வா ப்³ராஹ்மணம் வா கிஞ்சித்³ப்⁴ருʼஶமிவ ப்ரத்யாஹ
தி⁴க்த்வாஸ்த்வித்யேவைநமாஹு: பித்ருʼஹா வை த்வமஸி மாத்ருʼஹா வை
த்வமஸி ப்⁴ராத்ருʼஹா வை த்வமஸி ஸ்வஸ்ருʼஹா வை த்வமஸ்யாசார்யஹா
வை த்வமஸி ப்³ராஹ்மணஹா வை த்வமஸீதி ॥ 7.15.2॥

அத² யத்³யப்யேநாநுத்க்ராந்தப்ராணாஞ்சூ²லேந ஸமாஸம்
வ்யதிஷந்த³ஹேந்நைவைநம் ப்³ரூயு: பித்ருʼஹாஸீதி ந மாத்ருʼஹாஸீதி
ந ப்⁴ராத்ருʼஹாஸீதி ந ஸ்வஸ்ருʼஹாஸீதி நாசார்யஹாஸீதி
ந ப்³ராஹ்மணஹாஸீதி ॥ 7.15.3॥

ப்ராணோ ஹ்யேவைதாநி ஸர்வாணி ப⁴வதி ஸ வா ஏஷ ஏவம் பஶ்யந்நேவம்
மந்வாந ஏவம் விஜாநந்நதிவாதீ³ ப⁴வதி தம்
சேத்³ப்³ரூயுரதிவாத்³யஸீத்யதிவாத்³யஸ்மீதி ப்³ரூயாந்நாபஹ்நுவீத
॥ 7.15.4॥

அதி வாதி –ஆத்மா ஸ்ரேஷ்டம் என்று இருப்பவன்
இதுவே பூமா -நாரதர் திருப்தியாக இருப்பதை பார்த்து -மேலே சங்கை வந்ததும் மேலே உபதேசிப்போம்

॥ இதி பஞ்சத³ஶ: க²ண்ட:³ ॥

——————————————

ஏஷ து வா அதிவத³தி ய: ஸத்யேநாதிவத³தி ஸோঽஹம் ப⁴க³வ:
ஸத்யேநாதிவதா³நீதி ஸத்யம் த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்யமிதி ஸத்யம்
ப⁴க³வோ விஜிஜ்ஞாஸ இதி ॥ 7.16.1॥

அதை விட சத்யம் தான் ஸ்ரேஷ்டம் -சத்ய சப்தத்தால் ப்ரஹ்மம் –ப்ரஹ்ம அதிவாதி –
கீழே ஆத்ம அதிவாதி -ஆத்மராமர்/
சரீர அதிவாதி சம்சாரிகள் உண்டியே உடையே -இந்திரிய ராமர்

॥ இதி ஷோட³ஶ: க²ண்ட:³ ॥

——————————————–

யதா³ வை விஜாநாத்யத² ஸத்யம் வத³தி நாவிஜாநந்ஸத்யம் வத³தி
விஜாநந்நேவ ஸத்யம் வத³தி விஜ்ஞாநம் த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்யமிதி
விஜ்ஞாநம் ப⁴க³வோ விஜிஜ்ஞாஸ இதி ॥ 7.17.1॥

எத்தைக் காண வேண்டுமோ அத்தை காண வேண்டும் -ப்ரஹ்மம் சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் அடைய என்ன வேணும்
மனனம் தேவை
அதுக்கு ஸ்ரத்தை நம்பிக்கை தேவை
அதுக்கு மனஸ் கட்டுப்பாடு தேவை

॥ இதி ஸப்தத³ஶ: க²ண்ட:³ ॥

——————————————-

யதா³ வை மநுதேঽத² விஜாநாதி நாமத்வா விஜாநாதி மத்வைவ
விஜாநாதி மதிஸ்த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்யேதி மதிம் ப⁴க³வோ
விஜிஜ்ஞாஸ இதி ॥ 7.18.1॥

॥ இதி அஷ்டாத³ஶ: க²ண்ட:³ ॥

————————————————-

யதா³ வை ஶ்ரத்³த³தா⁴த்யத² மநுதே நாஶ்ரத்³த³த⁴ந்மநுதே
ஶ்ரத்³த³த⁴தே³வ மநுதே ஶ்ரத்³தா⁴ த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்யேதி
ஶ்ரத்³தா⁴ம் ப⁴க³வோ விஜிஜ்ஞாஸ இதி ॥ 7.19.1॥

॥ இதி ஏகோநவிம்ஶதிதம: க²ண்ட:³ ॥

———————————————–

யதா³ வை நிஸ்திஷ்ட²த்யத² ஶ்ரத்³த³தா⁴தி
நாநிஸ்திஷ்ட²ஞ்ச்²ரத்³த³தா⁴தி நிஸ்திஷ்ட²ந்நேவ ஶ்ரத்³த³தா⁴தி
நிஷ்டா² த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்யேதி நிஷ்டா²ம் ப⁴க³வோ
விஜிஜ்ஞாஸ இதி ॥ 7.20.1॥

॥ இதி விம்ஶதிதம: க²ண்ட:³ ॥

——————————————–

யதா³ வை கரோத்யத² நிஸ்திஷ்ட²தி நாக்ருʼத்வா நிஸ்திஷ்ட²தி
க்ருʼத்வைவ நிஸ்திஷ்ட²தி க்ருʼதிஸ்த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்யேதி
க்ருʼதிம் ப⁴க³வோ விஜிஜ்ஞாஸ இதி ॥ 7.21.1॥

ப்ரஹ்மம் நிரதிசய ஸூக ரூபம் -ஆனந்தோ ப்ரஹ்மம் அறிந்தால் தானே வருவான் –
அள்ள அள்ள குறையாத கோதில் இன்னமுதம் -தேனே பாலே கன்னலே அமுதமே -என்ற ஞானம் வேணுமே –

॥ இதி ஏகவிம்ஶ: க²ண்ட:³ ॥

———————————————-

யதா³ வை ஸுக²ம் லப⁴தேঽத² கரோதி நாஸுக²ம் லப்³த்⁴வா கரோதி
ஸுக²மேவ லப்³த்⁴வா கரோதி ஸுக²ம் த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்யமிதி
ஸுக²ம் ப⁴க³வோ விஜிஜ்ஞாஸ இதி ॥ 7.22.1॥

॥ இதி த்³வாவிம்ஶ: க²ண்ட:³ ॥

———————————————

யோ வை பூ⁴மா தத்ஸுக²ம் நால்பே ஸுக²மஸ்தி பூ⁴மைவ ஸுக²ம்
பூ⁴மா த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்ய இதி பூ⁴மாநம் ப⁴க³வோ
விஜிஜ்ஞாஸ இதி ॥ 7.23.1॥

॥ இதி த்ரயோவிம்ஶ: க²ண்ட:³ ॥

————————————————-

யத்ர நாந்யத்பஶ்யதி நாந்யச்ச்²ருʼணோதி நாந்யத்³விஜாநாதி ஸ
பூ⁴மாத² யத்ராந்யத்பஶ்யத்யந்யச்ச்²ருʼணோத்யந்யத்³விஜாநாதி
தத³ல்பம் யோ வை பூ⁴மா தத³ம்ருʼதமத² யத³ல்பம் தந்மர்த்ய்ꣳ ஸ
ப⁴க³வ: கஸ்மிந்ப்ரதிஷ்டி²த இதி ஸ்வே மஹிம்நி யதி³ வா
ந மஹிம்நீதி ॥ 7.24.1॥

அதுக்கு அடையாளம் சொல்லி நிகமிக்கிறார் –
பார்த்தால் கண் வேறு ஒன்றில் காணாதோ கேட்டால் காது வேறு ஒன்றை கேட்காதோ —
என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே —

கோ³அஶ்வமிஹ மஹிமேத்யாசக்ஷதே ஹஸ்திஹிரண்யம் தா³ஸபா⁴ர்யம்
க்ஷேத்ராண்யாயதநாநீதி நாஹமேவம் ப்³ரவீமி ப்³ரவீமீதி
ஹோவாசாந்யோஹ்யந்யஸ்மிந்ப்ரதிஷ்டி²த இதி ॥ 7.24.2॥

சொத்து குதிரை யானை -அல்பம்-ஓன்று கிடைத்தால் மேலே மேலே -ப்ரஹ்மம் அடைந்தபின்பு இரண்டாவது தேட மாட்டோமே –
தர்சனமே பலன் -தரிசனத்துக்கு பலம் வேண்டாமே
உபதேசம் பெறுவதே பலன் -பரீக்ஷித் சுகர் சம்வாதம்

॥ இதி சதுர்விம்ஶ: க²ண்ட:³ ॥

———————————————-

ஸ ஏவாத⁴ஸ்தாத்ஸ உபரிஷ்டாத்ஸ பஶ்சாத்ஸ புரஸ்தாத்ஸ
த³க்ஷிணத: ஸ உத்தரத: ஸ ஏவேத³ꣳ ஸர்வமித்யதா²தோঽஹங்காராதே³ஶ
ஏவாஹமேவாத⁴ஸ்தாத³ஹமுபரிஷ்டாத³ஹம் பஶ்சாத³ஹம் புரஸ்தாத³ஹம்
த³க்ஷிணதோঽஹமுத்தரதோঽஹமேவேத³ꣳ ஸர்வமிதி ॥ 7.25.1॥

அதுதான் முன்னும் பின்னும் மேலும் கீழும் -புறமும் உள்ளும் –

அதா²த ஆத்மாதே³ஶ ஏவாத்மைவாத⁴ஸ்தாதா³த்மோபரிஷ்டாதா³த்மா
பஶ்சாதா³த்மா புரஸ்தாதா³த்மா த³க்ஷிணத ஆத்மோத்தரத
ஆத்மைவேத³ꣳ ஸர்வமிதி ஸ வா ஏஷ ஏவம் பஶ்யந்நேவம் மந்வாந ஏவம்
விஜாநந்நாத்மரதிராத்மக்ரீட³ ஆத்மமிது²ந ஆத்மாநந்த:³ ஸ
ஸ்வராட்³ப⁴வதி தஸ்ய ஸர்வேஷு லோகேஷு காமசாரோ ப⁴வதி
அத² யேঽந்யதா²தோ விது³ரந்யராஜாநஸ்தே க்ஷய்யலோகா ப⁴வந்தி
தேஷாꣳ ஸர்வேஷு லோகேஷ்வகாமசாரோ ப⁴வதி ॥ 7.25.2॥

அந்தராத்மாவாய் இருக்கும் ப்ரஹ்மமே எங்கும் -பூமா அறிந்தவன் தன்னிலே தானே மகிழ்ந்து –
அனைத்தும் ப்ரஹ்மம் உணர்ந்து -சாம்யா பத்தி அடைகிறான்

॥ இதி பஞ்சவிம்ஶ: க²ண்ட:³ ॥

———————————————–

தஸ்ய ஹ வா ஏதஸ்யைவம் பஶ்யத ஏவம் மந்வாநஸ்யைவம் விஜாநத
ஆத்மத: ப்ராண ஆத்மத ஆஶாத்மத: ஸ்மர ஆத்மத ஆகாஶ
ஆத்மதஸ்தேஜ ஆத்மத ஆப ஆத்மத
ஆவிர்பா⁴வதிரோபா⁴வாவாத்மதோঽந்நமாத்மதோ ப³லமாத்மதோ
விஜ்ஞாநமாத்மதோ த்⁴யாநமாத்மதஶ்சித்தமாத்மத:
ஸங்கல்ப ஆத்மதோ மந ஆத்மதோ வாகா³த்மதோ நாமாத்மதோ மந்த்ரா
ஆத்மத: கர்மாண்யாத்மத ஏவேத³ꣳஸர்வமிதி ॥ 7.26.1॥

ததே³ஷ ஶ்லோகோ ந பஶ்யோ ம்ருʼத்யும் பஶ்யதி ந ரோக³ம் நோத து:³க²தாꣳ
ஸர்வꣳ ஹ பஶ்ய: பஶ்யதி ஸர்வமாப்நோதி ஸர்வஶ இதி
ஸ ஏகதா⁴ ப⁴வதி த்ரிதா⁴ ப⁴வதி பஞ்சதா⁴
ஸப்ததா⁴ நவதா⁴ சைவ புநஶ்சைகாத³ஶ: ஸ்ம்ருʼத:
ஶதம் ச த³ஶ சைகஶ்ச ஸஹஸ்ராணி ச
விꣳஶதிராஹாரஶுத்³தௌ⁴ ஸத்த்வஶுத்³தௌ⁴ த்⁴ருவா ஸ்ம்ருʼதி:
ஸ்ம்ருʼதிலம்பே⁴ ஸர்வக்³ரந்தீ²நாம் விப்ரமோக்ஷஸ்தஸ்மை
ம்ருʼதி³தகஷாயாய தமஸஸ்பாரம் த³ர்ஶயதி
ப⁴க³வாந்ஸநத்குமாரஸ்தꣳ ஸ்கந்த³ இத்யாசக்ஷதே
தꣳ ஸ்கந்த³ இத்யாசக்ஷதே ॥ 7.26.2॥

அனைத்தும் ஸ்ருஷ்டிக்கப்பட்டு -அந்தர்யாமி -அதிலே லயித்து -அறிந்தவன் முக்தன்
ப்ரஹ்மம் போலே முக்தனும் சஞ்சரித்து -பல திருமேனி எடுத்து பலவித கைங்கர்யம் –
சென்றால் குடையும் இத்யாதி –

ஆகார சுத்தி சத்வ சுத்தி த்ருவா ஸ்ம்ருதி -த்யானம் இடைவிடாமல் – சர்வ கிரந்தி ஐயம் திரிபு தொலைந்து –
காம க்ரோத லாபங்கள் தோலையும் –சனத்குமாரர் நாரதர் அஞ்ஞானம் போக்கி

॥ இதி ஷட்³விம்ஶ: க²ண்ட:³ ॥
॥ இதி ஸப்தமோঽத்⁴யாய: ॥

நாரதர் -சனத்குமாரர்
அறிந்தவற்றை முதலில் பட்டியல் -சொற்கள் -அறிவேன் தாத்பர்யம் ஆத்மாவை அறிய வில்லை -சோகம் தாண்ட வில்லை
நாமம் -சொற்களே ப்ரஹ்மம் முதலில் –வாக் பேச்சு அடுத்தது -மனஸ் – அடுத்தது ஸங்கல்பம் – அடுத்தது சித்தம் சிந்தனம் ஆராய்ச்சி அடுத்தது
த்யானம் -அடுத்தது விஞ்ஞானம் -பிராமண ஜன்ய ஞானம் -அடுத்தது பலம் இது வேண்டுமே
அடுத்தது அன்னம் -அடுத்தது -ஜலம் -அடுத்தது தேஜஸ்ஸூ -அடுத்தது -ஆகாசம் -இதுவே காரணம் தேஜஸ்ஸூக்கு
அடுத்தது -நினைவு -ஸ்மரணம் -அடுத்தது ஆசை -பரமாத்மாவை அறிய ஆசை முக்கியம் –
அப்பொழுது தான் முயற்சி செய்வோம்
அடுத்தது பிராணன் -இதுவே ஜீவாத்மா இங்கு -சக்கரம் நாபி போல் இது -தங்குவது –

படிக்கட்டுக்கள் இப்படி சொல்லி -உபாசிப்பவன்
அதி வாதி பவதி -இந்த உயர்வை பேசுவான்
மேலே கேளாமல் தானாகவே சனத்குமாரர் -ஸத்யம் என்று சொல்லும் பரமாத்மாவை அறிந்து
அவன் பெருமையை பேசுபவன் மிக உயர்ந்தவன்
ஸத்யம் -என்றும் மாறாமல் -சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் –
சடகோபன் அருளையே எண் திசையும் அறிய இயம்புகேன் -உண்மையான அதி வாதம் இதுவே சம்ப்ரதாயம் –

கேட்டு -ஸ்ரவணம்- மனனம் ஆலோசனை அடுத்து -யுக்திகளை கொண்டு நிலை நிறுத்து -ஸ்ரத்தா வேண்டும் இவற்றுக்கு -ஆசை பிறக்க வேண்டுமே
மற்றவை தள்ளத்தக்கவை -தோஷங்கள் அறிய வேண்டும் – -அதுக்கு யோவை பூமா தத் ஸூகம்–மற்றவை அல்பம் என்று அறிய வேண்டுமே
உயர்வை வைத்து பூமா ஸப்தம் -நந்யத்ர பஸ்யதி–இத்யாதி
கரந்து எங்கும் பரந்து உளன் அன்றோ அவனைத் தவிர்ந்த வேறே ஓன்று இல்லையே -ப்ரஹ்மாத்மகம் அனைத்துமே –

தத் அம்ருதம் -ஜீவாத்மா மர்த்யம் -என்று அறிய வேண்டுமே
அஹங்கார ஆவேசம் –அஹம் ஏவ -உலகம் அனைத்தும் நானே இருப்பதாக த்யானம் –
நான் பெரியவன் நீ பெரியாய் என்பதை யார் அறிவார் -ஸ்வராட் பவதி
ஆத்ம ரதி ஆத்ம கிரீட
வாஸூ தேவம் சர்வம் -உண்ணும் நீர் எல்லாம் கண்ணன் –
ஸங்கல்பத்தால் அனைத்தையும் அடைகிறான் -சாம்யாபத்தி–சர்வம் ஆப்நோதி
ஆகார சுத்தி -சத்வம் வளர -மனஸ் சுத்தம் ஆகி – தருவா ஸ்ம்ருதி -நேரே காண்போம் -சர்வ கிரந்தி -தஸ்மிந் த்ருஷ்டே பராவரே

——–

15-சத் வித்யை –6 -ப்ரபாடகம்

ஶ்வேதகேதுர்ஹாருணேய ஆஸ தꣳ ஹ பிதோவாச ஶ்வேதகேதோ
வஸ ப்³ரஹ்மசர்யம் ந வை ஸோம்யாஸ்மத்குலீநோঽநநூச்ய
ப்³ரஹ்மப³ந்து⁴ரிவ ப⁴வதீதி ॥ 6.1.1॥

ஸ ஹ த்³வாத³ஶவர்ஷ உபேத்ய சதுர்விꣳஶதிவர்ஷ:
ஸர்வாந்வேதா³நதீ⁴த்ய மஹாமநா அநூசாநமாநீ ஸ்தப்³த⁴
ஏயாய தꣳஹ பிதோவாச ॥ 6.1.2॥

ஶ்வேதகேதோ யந்நு ஸோம்யேத³ம் மஹாமநா அநூசாநமாநீ
ஸ்தப்³தோ⁴ঽஸ்யுத தமாதே³ஶமப்ராக்ஷ்ய: யேநாஶ்ருதꣳ ஶ்ருதம்
ப⁴வத்யமதம் மதமவிஜ்ஞாதம் விஜ்ஞாதமிதி கத²ம் நு ப⁴க³வ:
ஸ ஆதே³ஶோ ப⁴வதீதி ॥ 6.1.3॥

சத் வித்யை அடுத்து -சத் -ப்ரஹ்மம்
யாவையும் எவையும் தானாய் -அனைத்தும் சரீரம் தானே –
பிணக்கு இல்லாமல் -ப்ரஹ்மம் அடைவதே இலக்கு
ஸ்வேதகேது –பரிக்ஷை-உரையாடல் -சோம்ய-தட்டிக்கொடுத்து வேளை -அழகிய முகமானவனே –
-12-வருஷம் கற்று -ஒன்றும் அறியாமல் மரம் போலே இருக்க
ஆதேசம் -சொல்லால் சொல்லப்படுபவனை அறிந்தாயா
எத்தைக் கேட்டால் கேட்க்காதது எல்லாம் கேட்டதாகுமோ -புரியாதது எல்லாம் புரிந்தது ஆகுமோ
ஒன்றை அறிந்தால் அனைத்தும் அறிந்தது போலே ஆகுமோ
நீரே சொல்லிக் கொடும் -ஆச்சார்யர் பிரியமானவன் சொல்லிக் கொடுக்க வில்லை
எது ஆணை விடுமோ அது ஆதேசம் -எந்த
நிகில ஜகத் உதய -உதார –

யதா² ஸோம்யைகேந ம்ருʼத்பிண்டே³ந ஸர்வம் ம்ருʼந்மயம் விஜ்ஞாதꣳ
ஸ்யாத்³வாசாரம்ப⁴ணம் விகாரோ நாமதே⁴யம் ம்ருʼத்திகேத்யேவ ஸத்யம்
॥ 6.1.4॥

மண்ணை அறிந்தால் மண்ணால் செய்யப்பட்டவை அனைத்தையும் அறியலாம்
ப்ரதிஜ்ஜைக்கு உதாரணம் -ப்ரதிஜ்ஜா த்ருஷ்டாந்தம் –

யதா² ஸோம்யைகேந லோஹமணிநா ஸர்வம் லோஹமயம் விஜ்ஞாதꣳ
ஸ்யாத்³வாசாரம்ப⁴ணம் விகாரோ நாமதே⁴யம் லோஹமித்யேவ
ஸத்யம் ॥ 6.1.5॥

தங்கத்தால் செய்யப்பட்டவை -அடுத்த த்ருஷ்டாந்தம் சொல்லி
மண் பானை -மண் என்றே சத்யம் -பானை விகாரத்தை குறிக்கும் –
வாக்குக்கு வித்யாசம் காட்ட -பயன் வேறே என்பதால்
ஓங்கி அடித்தால் குடமும் மண் ஆகுமே -வெவ்வேறே தசைகள் இவை –

யதா² ஸோம்யிகேந நக²நிக்ருʼந்தநேந ஸர்வம் கார்ஷ்ணாயஸம் விஜ்ஞாதꣳ
ஸ்யாத்³வாசாரம்ப⁴ணம் விகாரோ நாமதே⁴யம் க்ருʼஷ்ணாயஸமித்யேவ
ஸத்யமேவꣳஸோம்ய ஸ ஆதே³ஶோ ப⁴வதீதி ॥ 6.1.6॥

நகம் வெட்டும் கருவி இரும்பால் -அடுத்த உதாரணம் -காரணம் கார்யம் ஓன்று என்று காட்ட –

ந வை நூநம் ப⁴க³வந்தஸ்த ஏதத³வேதி³ஷுர்யத்³த்⁴யேதத³வேதி³ஷ்யந்கத²ம்
மே நாவக்ஷ்யந்நிதி ப⁴க³வாꣳஸ்த்வேவ மே தத்³ப்³ரவீத்விதி ததா²
ஸோம்யேதி ஹோவாச ॥ 6.1.7॥

மண் தங்கம் இரும்பு பஞ்சு -மூலப் பொருள்கள் அன்றோ –
இவற்றை அறிவது -இதுக்கும் மூலப் பொருள் இருந்தால் அறியலாம்
பிருத்வியா -பார்த்திப பதார்த்தங்கள் -என்று சொல்ல –
தண்ணீர் ஆகாசம் இவற்றுக்கு எப்படி பிள்ளை மேலே கேள்வி –
இன்னும் ஒரு படி மேலே -மூல பிரகிருதி காரணம் இவை காரியம்
நித்ய விபூதி -அப்ராக்ருதம் அன்றோ -மேலே சந்தேகம் –
அப்பொழுது தான் கடைசி படிக்கட்டு -ப்ரஹ்மம் –
ஆதேசம் தான் ப்ரஹ்மம் முடித்து -ஆணைக்கு உட்பட்டு அனைத்தும்
பலவற்றுக்கும் இந்த ஒன்றே காரணம் -பொருந்தும் –

॥ இதி ப்ரத²ம: க²ண்ட:³ ॥

———————————————

ஸதே³வ ஸோம்யேத³மக்³ர ஆஸீதே³கமேவாத்³விதீயம் ।
தத்³தை⁴க ஆஹுரஸதே³வேத³மக்³ர ஆஸீதே³கமேவாத்³விதீயம்
தஸ்மாத³ஸத: ஸஜ்ஜாயத ॥ 6.2.1॥

கார்ய ரூபமான ஜகத் -இதம் சர்வம் பார்த்து -பலவாக -இப்பொழுது -காரணம் ஓன்று
சத் ஏவ சோம்ய -மஹா வாக்கியம் இது
இதம் சர்வம் – அக்ர ஆஸீத் -முற்காலத்தில் ஸ்ருஷ்டிக்கு முன்பு
ஒன்றாகவே இருந்தது
மூன்று சப்தங்கள்
சத்காரிய வாதம்
உத்பத்தி -இருப்பதை மாற்றி செய்வதே –
ப்ரஹ்மத்துக்கு சரீரம் பெயர் உருவ மாறுதல் உடன் இப்பொழுது -வேறுபாடு இல்லாமல் முன்பு ஸூஷ்ம ரூபம் முன்பு –
ஸூஷ்ம விசிஷ்ட ப்ரஹ்மம் -ஸ்தூல விசிஷ்ட ப்ரஹ்மம் –
ஓன்று பலவாக மாற பல காரண பொருள்கள் வேண்டாவோ என்னில் ஒன்றே உபாதான காரணம்
ப்ரஹ்மம் நித்ய நிர்விகார தத்வம் -ஒரே மயிர் காலுக்குள் அனைத்து ஜகத்தும்-
அத்விதீயம் -நிமித்த காரணம் குயவன் நெசவாளர் போலே
நான் பல வாக உருவாகப் போகிறேன் — பஹுஸ்யாம்
மண்ணை மாற்றி குடத்தைச் செய்யப் போகிறேன் -குயவன் சொல்ல -சரீரமே மண் இத்யாதி –

குதஸ்து க²லு ஸோம்யைவꣳஸ்யாதி³தி ஹோவாச கத²மஸத:
ஸஜ்ஜாயேதேதி। ஸத்த்வேவ ஸோம்யேத³மக்³ர
ஆஸீதே³கமேவாத்³விதீயம் ॥ 6.2.2॥

ததை³க்ஷத ப³ஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி தத்தேஜோঽஸ்ருʼஜத தத்தேஜ
ஐக்ஷத ப³ஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி தத³போঽஸ்ருʼஜத ।
தஸ்மாத்³யத்ர க்வச ஶோசதி ஸ்வேத³தே வா புருஷஸ்தேஜஸ ஏவ
தத³த்⁴யாபோ ஜாயந்தே ॥ 6.2.3॥

தத் ஏக யீஷத -முளை விட்டு ஸ்ருஷ்ட்டி -சங்கல்பம் -பிரகிருதி -மஹான் -அஹங்காரம் -மூன்றாக
சாத்விக அஹங்காரம் -கர்மா ஞான -இந்திரியங்கள் -மனஸ்
தாமச அஹங்காரம் பஞ்ச பூதம் தன்மாத்திரைகள்
ப்ரஹ்மம் விட்டுப் பிரியாமல் விசிஷ்ட ப்ரஹ்மம் எல்லா அவஸ்தைகளிலும் –

தா ஆப ஐக்ஷந்த ப³ஹ்வ்ய: ஸ்யாம ப்ரஜாயேமஹீதி தா
அந்நமஸ்ருʼஜந்த தஸ்மாத்³யத்ர க்வ ச வர்ஷதி ததே³வ பூ⁴யிஷ்ட²மந்நம்
ப⁴வத்யத்³ப்⁴ய ஏவ தத³த்⁴யந்நாத்³யம் ஜாயதே ॥ 6.2.4॥

॥ இதி த்³விதீய: க²ண்ட:³ ॥

———————————————

தேஷாம் க²ல்வேஷாம் பூ⁴தாநாம் த்ரீண்யேவ பீ³ஜாநி
ப⁴வந்த்யாண்ட³ஜம் ஜீவஜமுத்³பி⁴ஜ்ஜமிதி ॥ 6.3.1॥

பிருத்வி -மழை -பெய்து மரம் செடி கொடி உத்பிஜ்ஜம்
ஜீவஜம் -கர்ப்பம்
அண்டஜம் முட்டையில் இருந்து மூன்றாக
ஸ்வேதஜம் வியர்வையில் இருந்து உண்டாக்குவதும் உண்டே –

ஸேயம் தே³வதைக்ஷத ஹந்தாஹமிமாஸ்திஸ்ரோ தே³வதா அநேந
ஜீவேநாத்மநாநுப்ரவிஶ்ய நாமரூபே வ்யாகரவாணீதி ॥ 6.3.2॥

தாஸாம் த்ரிவ்ருʼதம் த்ரிவ்ருʼதமேகைகாம் கரவாணீதி ஸேயம்
தே³வதேமாஸ்திஸ்ரோ தே³வதா அநேநைவ ஜீவேநாத்மநாநுப்ரவிஶ்ய
நாமரூபே வ்யாகரோத் ॥ 6.3.3॥

தாஸாம் த்ரிவ்ருʼதம் த்ரிவ்ருʼதமேகைகாமகரோத்³யதா² து க²லு
ஸோம்யேமாஸ்திஸ்ரோ தே³வதாஸ்த்ரிவ்ருʼத்த்ரிவ்ருʼதே³கைகா ப⁴வதி
தந்மே விஜாநீஹீதி ॥ 6.3.4 ॥

ஜீவ சரீரகனாக நான் ஜீவ சரீரத்துக்குள் ஜீவன் மூலம் புகுந்து -ஒரு சொல் மூன்றையும் குறிக்கும் –
அசித்தையும் -அதுக்குள்ளே இருக்கும் ஆத்மாவையும் பரமாத்மாவையும் குறிக்கும் எல்லா சொற்களும் –
சர்வ சப்த வாச்யன் -ஒன்றை அறிந்தால் எல்லாம் அறிந்ததாகும் –
த்ரிவிக்ரணம் -பஞ்சீகரணம் -பாதி பகுதியை நாலாக்கி மற்ற நான்கிலும் கலந்து —
ஒவ் ஒன்றின் குணமும் எல்லாவற்றிலும் வரும் –
ஆகாசம் நீலம் நிறம் -நீலக்கடல் -வினிமயத்தாலே கலந்ததால்
தேஜோபன்னம்- த்ரிவிக்ரமணம்

॥ இதி த்ருʼதீய: க²ண்ட:³ ॥

———————————————–

யத³க்³நே ரோஹிதꣳரூபம் தேஜஸஸ்தத்³ரூபம் யச்சு²க்லம் தத³பாம்
யத்க்ருʼஷ்ணம் தத³ந்நஸ்யாபாகா³த³க்³நேரக்³நித்வம் வாசாரம்ப⁴ணம்
விகாரோ நாமதே⁴யம் த்ரீணி ரூபாணீத்யேவ ஸத்யம் ॥ 6.4.1॥

யதா³தி³த்யஸ்ய ரோஹிதꣳரூபம் தேஜஸஸ்தத்³ரூபம் யச்சு²க்லம் தத³பாம்
யத்க்ருʼஷ்ணம் தத³ந்நஸ்யாபாகா³தா³தி³த்யாதா³தி³த்யத்வம் வாசாரம்ப⁴ணம்
விகாரோ நாமதே⁴யம் த்ரீணி ரூபாணீத்யேவ ஸத்யம் ॥ 6.4.2॥

யச்ச²ந்த்³ரமஸோ ரோஹிதꣳரூபம் தேஜஸஸ்தத்³ரூபம் யச்சு²க்லம் தத³பாம்
யத்க்ருʼஷ்ணம் தத³ந்நஸ்யாபாகா³ச்சந்த்³ராச்சந்த்³ரத்வம் வாசாரம்ப⁴ணம்
விகாரோ நாமதே⁴யம் த்ரீணி ரூபாணீத்யேவ ஸத்யம் ॥ 6.4.3॥

யத்³வித்³யுதோ ரோஹிதꣳரூபம் தேஜஸஸ்தத்³ரூபம் யச்சு²க்லம் தத³பாம்
யத்க்ருʼஷ்ணம் தத³ந்நஸ்யாபாகா³த்³வித்³யுதோ வித்³யுத்த்வம் வாசாரம்ப⁴ணம்
விகாரோ நாமதே⁴யம் த்ரீணி ரூபாணீத்யேவ ஸத்யம் ॥ 6.4.4॥

ஏதத்³த⁴ ஸ்ம வை தத்³வித்³வாꣳஸ ஆஹு: பூர்வே மஹாஶாலா
மஹாஶ்ரோத்ரியா ந நோঽத்³ய
கஶ்சநாஶ்ருதமமதமவிஜ்ஞாதமுதா³ஹரிஷ்யதீதி ஹ்யேப்⁴யோ
விதா³ஞ்சக்ரு: ॥ 6.4.5॥

யது³ ரோஹிதமிவாபூ⁴தி³தி தேஜஸஸ்தத்³ரூபமிதி தத்³விதா³ஞ்சக்ருர்யது³
ஶுக்லமிவாபூ⁴தி³த்யபாꣳரூபமிதி தத்³விதா³ஞ்சக்ருர்யது³
க்ருʼஷ்ணமிவாபூ⁴தி³த்யந்நஸ்ய ரூபமிதி தத்³விதா³ஞ்சக்ரு: ॥ 6.4.6॥

யத்³வவிஜ்ஞாதமிவாபூ⁴தி³த்யேதாஸாமேவ தே³வதாநாꣳஸமாஸ இதி
தத்³விதா³ஞ்சக்ருர்யதா² து க²லு ஸோம்யேமாஸ்திஸ்ரோ தே³வதா:
புருஷம் ப்ராப்ய த்ரிவ்ருʼத்த்ரிவ்ருʼதே³கைகா ப⁴வதி தந்மே விஜாநீஹீதி
॥ 6.4.7॥

॥ இதி சதுர்த:² க²ண்ட:³ ॥

————————————————

அந்நமஶிதம் த்ரேதா⁴ விதீ⁴யதே தஸ்ய ய: ஸ்த²விஷ்டோ²
தா⁴துஸ்தத்புரீஷம் ப⁴வதி யோ மத்⁴யமஸ்தந்மாꣳஸம்
யோঽணிஷ்ட²ஸ்தந்மந: ॥ 6.5.1॥

ஆப: பீதாஸ்த்ரேதா⁴ விதீ⁴யந்தே தாஸாம் ய: ஸ்த²விஷ்டோ²
தா⁴துஸ்தந்மூத்ரம் ப⁴வதி யோ மத்⁴யமஸ்தல்லோஹிதம் யோঽணிஷ்ட:²
ஸ ப்ராண: ॥ 6.5.2॥

தேஜோঽஶிதம் த்ரேதா⁴ விதீ⁴யதே தஸ்ய ய: ஸ்த²விஷ்டோ²
தா⁴துஸ்தத³ஸ்தி² ப⁴வதி யோ மத்⁴யம: ஸ மஜ்ஜா
யோঽணிஷ்ட:² ஸா வாக் ॥ 6.5.3॥

அந்நமயꣳஹி ஸோம்ய மந: ஆபோமய: ப்ராணஸ்தேஜோமயீ
வாகி³தி பூ⁴ய ஏவ மா ப⁴க³வாந்விஜ்ஞாபயத்விதி ததா²
ஸோம்யேதி ஹோவாச ॥ 6.5.4॥

அன்னம் ஸூ சமம் மனசுக்கு
தண்ணீர் -மூத்திரம் ரௌத்ரம் பிராணன்
நெருப்பு -எலும்பு மஜ்ஜை வாக்கு சூஷ்மம்

॥ இதி பஞ்சம: க²ண்ட:³ ॥

————————————————

த³த்⁴ந: ஸோம்ய மத்²யமாநஸ்ய யோঽணிமா ஸ உர்த்⁴வ: ஸமுதீ³ஷதி
தத்ஸர்பிர்ப⁴வதி ॥ 6.6.1॥

ஏவமேவ க²லு ஸோம்யாந்நஸ்யாஶ்யமாநஸ்ய யோঽணிமா ஸ உர்த்⁴வ:
ஸமுதீ³ஷதி தந்மநோ ப⁴வதி ॥ 6.6.2॥

அபாꣳஸோம்ய பீயமாநாநாம் யோঽணிமா ஸ உர்த்⁴வ: ஸமுதீ³ஷதி
ஸா ப்ராணோ ப⁴வதி ॥ 6.6.3 ॥

தேஜஸ: ஸோம்யாஶ்யமாநஸ்ய யோঽணிமா ஸ உர்த்⁴வ: ஸமுதீ³ஷதி
ஸா வாக்³ப⁴வதி ॥ 6.6.4॥

அந்நமயꣳ ஹி ஸோம்ய மந ஆபோமய: ப்ராணஸ்தேஜோமயீ வாகி³தி
பூ⁴ய ஏவ மா ப⁴க³வாந்விஜ்ஞாபயத்விதி ததா² ஸோம்யேதி ஹோவாச
॥ 6.6.6॥

॥ இதி ஷஷ்ட:² க²ண்ட:³ ॥

———————————————

ஷோட³ஶகல: ஸோம்ய புருஷ: பஞ்சத³ஶாஹாநி மாஶீ:
காமமப: பிபா³போமய: ப்ராணோ நபிப³தோ விச்சே²த்ஸ்யத
இதி ॥ 6.7.1॥

தண்ணீர் மட்டும் குடித்து -பிள்ளைக்கு பரிக்ஷை-
அன்னம் -மனஸ் சம்பந்தம் -புரிய வைக்க – ருக் நினைவு இல்லாமல் -தண்ணீர் பிராணன் இருக்கும்

ஸ ஹ பஞ்சத³ஶாஹாநி நஶாத² ஹைநமுபஸஸாத³ கிம் ப்³ரவீமி
போ⁴ இத்ய்ருʼச: ஸோம்ய யஜூꣳஷி ஸாமாநீதி ஸ ஹோவாச ந வை
மா ப்ரதிபா⁴ந்தி போ⁴ இதி ॥ 6.7.2॥

தꣳ ஹோவாச யதா² ஸோம்ய மஹதோঽப்⁴யா ஹிதஸ்யைகோঽங்கா³ர:
க²த்³யோதமாத்ர: பரிஶிஷ்ட: ஸ்யாத்தேந ததோঽபி ந ப³ஹு
த³ஹேதே³வꣳஸோம்ய தே ஷோட³ஶாநாம் கலாநாமேகா கலாதிஶிஷ்டா
ஸ்யாத்தயைதர்ஹி வேதா³ந்நாநுப⁴வஸ்யஶாநாத² மே விஜ்ஞாஸ்யஸீதி
॥ 6.7.3॥

ஸ ஹஶாத² ஹைநமுபஸஸாத³ தꣳ ஹ யத்கிஞ்ச பப்ரச்ச²
ஸர்வꣳஹ ப்ரதிபேதே³ ॥ 6.7.4॥

தꣳ ஹோவாச யதா² ஸோம்ய மஹதோঽப்⁴யாஹிதஸ்யைகமங்கா³ரம்
க²த்³யோதமாத்ரம் பரிஶிஷ்டம் தம் த்ருʼணைருபஸமாதா⁴ய
ப்ராஜ்வலயேத்தேந ததோঽபி ப³ஹு த³ஹேத் ॥ 6.7.5॥

ஏவꣳ ஸோம்ய தே ஷோட³ஶாநாம் கலாநாமேகா
கலாதிஶிஷ்டாபூ⁴த்ஸாந்நேநோபஸமாஹிதா ப்ராஜ்வாலீ
தயைதர்ஹி வேதா³நநுப⁴வஸ்யந்நமயꣳஹி ஸோம்ய மந ஆபோமய:
ப்ராணஸ்தேஜோமயீ வாகி³தி தத்³தா⁴ஸ்ய விஜஜ்ஞாவிதி விஜஜ்ஞாவிதி
॥ 6.7.6॥

॥ இதி ஸப்தம: க²ண்ட:³ ॥

—————————————-

உத்³தா³லகோ ஹாருணி: ஶ்வேதகேதும் புத்ரமுவாச ஸ்வப்நாந்தம் மே ஸோம்ய
விஜாநீஹீதி யத்ரைதத்புருஷ: ஸ்வபிதி நாம ஸதா ஸோம்ய ததா³
ஸம்பந்நோ ப⁴வதி ஸ்வமபீதோ ப⁴வதி தஸ்மாதே³நꣳ
ஸ்வபிதீத்யாசக்ஷதே ஸ்வꣳஹ்யபீதோ ப⁴வதி ॥ 6.8.1॥

ஸ்வப்ன காலத்தில் ஜீவன் ப்ரஹ்மாவிடம் ஒன்றி -சம்பன்நோ பவதி –
ப்ரஹ்மம் உடன் ப்ரஹ்மம் ஒன்றி -ராக த்வேஷம் வாசி இல்லாமல் ஒன்றி –

ஸ யதா² ஶகுநி: ஸூத்ரேண ப்ரப³த்³தோ⁴ தி³ஶம் தி³ஶம்
பதித்வாந்யத்ராயதநமலப்³த்⁴வா ப³ந்த⁴நமேவோபஶ்ரயத
ஏவமேவ க²லு ஸோம்ய தந்மநோ தி³ஶம் தி³ஶம்
பதித்வாந்யத்ராயதநமலப்³த்⁴வா ப்ராணமேவோபஶ்ரயதே
ப்ராணப³ந்த⁴நꣳ ஹி ஸோம்ய மந இதி ॥ 6.8.2 ॥

அஶநாபிபாஸே மே ஸோம்ய விஜாநீஹீதி
யத்ரைதத்புருஷோঽஶிஶிஷதி நாமாப ஏவ தத³ஶிதம் நயந்தே
தத்³யதா² கோ³நாயோঽஶ்வநாய: புருஷநாய இத்யேவம் தத³ப
ஆசக்ஷதேঽஶநாயேதி தத்ரிதச்சு²ங்க³முத்பதிதꣳ ஸோம்ய
விஜாநீஹி நேத³மமூலம் ப⁴விஷ்யதீதி ॥ 6.8.3॥

தஸ்ய க்வ மூலꣳ ஸ்யாத³ந்யத்ராந்நாதே³வமேவ க²லு ஸோம்யாந்நேந
ஶுங்கே³நாபோ மூலமந்விச்சா²த்³பி:⁴ ஸோம்ய ஶுங்கே³ந தேஜோ
மூலமந்விச்ச² தேஜஸா ஸோம்ய ஶுங்கே³ந ஸந்மூலமந்விச்ச²
ஸந்மூலா: ஸோம்யேமா: ஸர்வா: ப்ரஜா: ஸதா³யதநா:
ஸத்ப்ரதிஷ்டா:² ॥ 6.8.4॥

அத² யத்ரைதத்புருஷ: பிபாஸதி நாம தேஜ ஏவ தத்பீதம் நயதே
தத்³யதா² கோ³நாயோঽஶ்வநாய: புருஷநாய இத்யேவம் தத்தேஜ
ஆசஷ்ட உத³ந்யேதி தத்ரைததே³வ ஶுங்க³முத்பதிதꣳ ஸோம்ய
விஜாநீஹி நேத³மமூலம் ப⁴விஷ்யதீதி ॥ 6.8.5॥

தஸ்ய க்வ மூலꣳ ஸ்யாத³ந்யத்ராத்³ப்⁴ய்ঽத்³பி:⁴ ஸோம்ய ஶுங்கே³ந தேஜோ
மூலமந்விச்ச² தேஜஸா ஸோம்ய ஶுங்கே³ந ஸந்மூலமந்விச்ச²
ஸந்மூலா: ஸோம்யேமா: ஸர்வா: ப்ரஜா: ஸதா³யதநா: ஸத்ப்ரதிஷ்டா²
யதா² து க²லு ஸோம்யேமாஸ்திஸ்ரோ தே³வதா: புருஷம் ப்ராப்ய
த்ரிவ்ருʼத்த்ரிவ்ருʼதே³கைகா ப⁴வதி தது³க்தம் புரஸ்தாதே³வ ப⁴வத்யஸ்ய
ஸோம்ய புருஷஸ்ய ப்ரயதோ வாங்மநஸி ஸம்பத்³யதே மந: ப்ராணே
ப்ராணஸ்தேஜஸி தேஜ: பரஸ்யாம் தே³வதாயாம் ॥ 6.8.6॥

சத் ஆயனதா இருப்பிடம் மூலம் லயிக்கும் -புலன்கள் மனசில் ஒன்றி-அவை பிராணனின் ஒன்றி போகும்

ஸ ய ஏஷோঽணிமைததா³த்ம்யமித³ꣳ ஸர்வம் தத்ஸத்யꣳ ஸ
ஆத்மா தத்த்வமஸி ஶ்வேதகேதோ இதி பூ⁴ய ஏவ மா
ப⁴க³வாந்விஜ்ஞாபயத்விதி ததா² ஸோம்யேதி ஹோவாச ॥ 6.8.7॥

தத்த்வமஸி–இது தொடக்கி மேலே மேலே இப்படியே விளக்கி -ஜகத்துக்கும் ஸ்வேதகேதுவுக்கும் ஆத்மாவாக ப்ரஹ்மம் –
அனைத்துக்கும் காரணம் -சர்வமும் ஆத்மகம்-பிரகார த்வயம் -சாமானாதிகரணம்
சங்கைகள் ஒன்பது வர ஒரே பதில் சொல்லி சங்கை போக்குகிறார் –

॥ இதி அஷ்டம: க²ண்ட:³ ॥

—————————————–

யதா² ஸோம்ய மது⁴ மது⁴க்ருʼதோ நிஸ்திஷ்ட²ந்தி நாநாத்யயாநாம்
வ்ருʼக்ஷாணாꣳரஸாந்ஸமவஹாரமேகதாꣳரஸம் க³மயந்தி ॥ 6.9.1॥

தே யதா² தத்ர ந விவேகம் லப⁴ந்தேঽமுஷ்யாஹம் வ்ருʼக்ஷஸ்ய
ரஸோঽஸ்ம்யமுஷ்யாஹம் வ்ருʼக்ஷஸ்ய ரஸோঽஸ்மீத்யேவமேவ க²லு
ஸோம்யேமா: ஸர்வா: ப்ரஜா: ஸதி ஸம்பத்³ய ந விது:³ ஸதி
ஸம்பத்³யாமஹ இதி ॥ 6.9.2 ॥

த இஹ வ்யக்⁴ரோ வா ஸிꣳஹோ வா வ்ருʼகோ வா வராஹோ வா கீடோ வா
பதங்கோ³ வா த³ꣳஶோ வா மஶகோ வா யத்³யத்³ப⁴வந்தி ததா³ப⁴வந்தி
॥ 6.9.3 ॥

ஸ ய ஏஷோঽணிமைததா³த்ம்யமித³ꣳ ஸர்வம் தத்ஸத்யꣳ ஸ ஆத்மா
தத்த்வமஸி ஶ்வேதகேதோ இதி பூ⁴ய ஏவ மா ப⁴க³வாந்விஜ்ஞாபயத்விதி
ததா² ஸோம்யேதி ஹோவாச ॥ 6.9.4॥

தூங்கும் தசையில் அடைந்தால் -நினைவு இருக்குமா இல்லையா -தேன் கூடு -பூக்கள் பலவற்றில் இருந்து
எங்கு இருந்து வந்தது தெரியுமோ –
தூங்கி எழுந்ததும் அறிகிறோம் வாசிகள் -அனைத்தையும் -தேன் போலே இல்லையே -சிங்கம் புலி -வாசி -தானே நினைந்து வருமே –

॥ இதி நவம: க²ண்ட:³ ॥

——————————————-

இமா: ஸோம்ய நத்³ய: புரஸ்தாத்ப்ராச்ய: ஸ்யந்த³ந்தே
பஶ்சாத்ப்ரதீச்யஸ்தா: ஸமுத்³ராத்ஸமுத்³ரமேவாபியந்தி ஸ ஸமுத்³ர
ஏவ ப⁴வதி தா யதா² தத்ர ந விது³ரியமஹமஸ்மீயமஹமஸ்மீதி
॥ 6.10.1॥

ஏவமேவ க²லு ஸோம்யேமா: ஸர்வா: ப்ரஜா: ஸத ஆக³ம்ய ந விது:³
ஸத ஆக³ச்சா²மஹ இதி த இஹ வ்யாக்⁴ரோ வா ஸிꣳஹோ வா
வ்ருʼகோ வா வராஹோ வா கீடோ வா பதங்கோ³ வா த³ꣳஶோ வா மஶகோ வா
யத்³யத்³ப⁴வந்தி ததா³ப⁴வந்தி ॥ 6.10.2॥

ஸ ய ஏஷோঽணிமைததா³த்ம்யமித³ꣳ ஸர்வம் தத்ஸத்யꣳ ஸ ஆத்மா
தத்த்வமஸி ஶ்வேதகேதோ இதி பூ⁴ய ஏவ மா ப⁴க³வாந்விஜ்ஞாபயத்விதி
ததா² ஸோம்யேதி ஹோவாச ॥ 6.10.3॥

எங்கு இருந்து வந்தோம் எதனால் தெரியவில்லை -கடல் நீர் மழை பெய்து நதியாகி -கடலில் சேருகின்றன –
அதே போலே ப்ரஹ்மம் இருந்து உருவாகி
மூன்றாவது தடவை தத்வமஸி சொல்லி விளக்கி

॥ இதி த³ஶம: க²ண்ட:³ ॥

—————————————–

அஸ்ய ஸோம்ய மஹதோ வ்ருʼக்ஷஸ்ய யோ மூலேঽப்⁴யாஹந்யாஜ்ஜீவந்ஸ்ரவேத்³யோ
மத்⁴யேঽப்⁴யாஹந்யாஜ்ஜீவந்ஸ்ரவேத்³யோঽக்³ரேঽப்⁴யாஹந்யாஜ்ஜீவந்ஸ்ரவேத்ஸ
ஏஷ ஜீவேநாத்மநாநுப்ரபூ⁴த: பேபீயமாநோ மோத³மாநஸ்திஷ்ட²தி
॥ 6.11.1॥

அஸ்ய யதே³காꣳ ஶாகா²ம் ஜீவோ ஜஹாத்யத² ஸா ஶுஷ்யதி
த்³விதீயாம் ஜஹாத்யத² ஸா ஶுஷ்யதி த்ருʼதீயாம் ஜஹாத்யத² ஸா
ஶுஷ்யதி ஸர்வம் ஜஹாதி ஸர்வ: ஶுஷ்யதி ॥ 6.11.2॥

ஏவமேவ க²லு ஸோம்ய வித்³தீ⁴தி ஹோவாச ஜீவாபேதம் வாவ கிலேத³ம்
ம்ரியதே ந ஜீவோ ம்ரியதே இதி ஸ ய ஏஷோঽணிமைததா³த்ம்யமித³ꣳ
ஸர்வம் தத்ஸத்யꣳ ஸ ஆத்மா தத்த்வமஸி ஶ்வேதகேதோ இதி பூ⁴ய ஏவ
மா ப⁴க³வாந்விஜ்ஞாபயத்விதி ததா² ஸோம்யேதி ஹோவாச ॥ 6.11.3॥

பிறவி நினைவு இல்லையே -ஆத்மா முடிந்து போனதா -சங்கை
மரம் -கோடாரியால் வெட்டி -பால் வழியும் எங்கு வெட்டினாலும்
கிளை பட்டுப்போனால் மரம் அழியாதே –
சரீரம் தான் பட்டுப்போகும் ஆத்மா அழியாது என்று விளக்கி –

॥ இதி ஏகாத³ஶ: க²ண்ட:³ ॥

———————————————-

ந்யக்³ரோத⁴ப²லமத ஆஹரேதீத³ம் ப⁴க³வ இதி பி⁴ந்த்³தீ⁴தி பி⁴ந்நம்
ப⁴க³வ இதி கிமத்ர பஶ்யஸீத்யண்வ்ய இவேமா தா⁴நா ப⁴க³வ
இத்யாஸாமங்கை³காம் பி⁴ந்த்³தீ⁴தி பி⁴ந்நா ப⁴க³வ இதி கிமத்ர
பஶ்யஸீதி ந கிஞ்சந ப⁴க³வ இதி ॥ 6.12.1॥

தꣳ ஹோவாச யம் வை ஸோம்யைதமணிமாநம் ந நிபா⁴லயஸ
ஏதஸ்ய வை ஸோம்யைஷோঽணிம்ந ஏவம் மஹாந்யக்³ரோத⁴ஸ்திஷ்ட²தி
ஶ்ரத்³த⁴த்ஸ்வ ஸோம்யேதி ॥ 6.12.2॥

ஸ ய ஏஷோঽணிமைததா³த்ம்யமித³த்³ꣳ ஸர்வம் தத்ஸத்யꣳ ஸ ஆத்மா
தத்த்வமஸி ஶ்வேதகேதோ இதி பூ⁴ய ஏவ மா ப⁴க³வாந்விஜ்ஞாபயத்விதி
ததா² ஸோம்யேதி ஹோவாச ॥ 6.12.3॥

ஸூஷ்மத்தில் இருந்து ஜகத் -விதையில் இருந்து மரம் -பண்புகள் எல்லாம் விதையில் உண்டே -ஐந்தாவது தடவை –

॥ இதி த்³வாத³ஶ: க²ண்ட:³ ॥

———————————————

லவணமேதது³த³கேঽவதா⁴யாத² மா ப்ராதருபஸீத³தா² இதி
ஸ ஹ ததா² சகார தꣳ ஹோவாச யத்³தோ³ஷா லவணமுத³கேঽவாதா⁴
அங்க³ ததா³ஹரேதி தத்³தா⁴வம்ருʼஶ்ய ந விவேத³ ॥ 6.13.1॥

யதா² விலீநமேவாங்கா³ஸ்யாந்தாதா³சாமேதி கத²மிதி லவணமிதி
மத்⁴யாதா³சாமேதி கத²மிதி லவணமித்யந்தாதா³சாமேதி
கத²மிதி லவணமித்யபி⁴ப்ராஸ்யைதத³த² மோபஸீத³தா² இதி
தத்³த⁴ ததா² சகார தச்ச²ஶ்வத்ஸம்வர்ததே தꣳ ஹோவாசாத்ர
வாவ கில தத்ஸோம்ய ந நிபா⁴லயஸேঽத்ரைவ கிலேதி ॥ 6.13.2॥

ஸ ய ஏஷோঽணிமைததா³த்ம்யமித³ꣳ ஸர்வம் தத்ஸத்யꣳ ஸ ஆத்மா
தத்த்வமஸி ஶ்வேதகேதோ இதி பூ⁴ய ஏவ மா ப⁴க³வாந்விஜ்ஞாபயத்விதி
ததா² ஸோம்யேதி ஹோவாச ॥ 6.13.3॥

உப்புக்கட்டி -கரைந்த நீர் -உப்பை எடுக்க முடியாதே -உப்பு கரிக்கும் -கண்ணுக்கு தெரியாது சுவையால் அறியலாம் -ஆறாவது தடவை
மீனை தொட்ட இடம் எல்லாம் தண்ணீர் போலே ஜகம் முழுவதும் ப்ரஹ்மம்

॥ இதி த்ரயோத³ஶ: க²ண்ட:³ ॥

——————————————–

யதா² ஸோம்ய புருஷம் க³ந்தா⁴ரேப்⁴யோঽபி⁴நத்³தா⁴க்ஷமாநீய தம்
ததோঽதிஜநே விஸ்ருʼஜேத்ஸ யதா² தத்ர ப்ராங்வோத³ங்வாத⁴ராங்வா
ப்ரத்யங்வா ப்ரத்⁴மாயீதாபி⁴நத்³தா⁴க்ஷ ஆநீதோঽபி⁴நத்³தா⁴க்ஷோ
விஸ்ருʼஷ்ட: ॥ 6.14.1॥

தஸ்ய யதா²பி⁴நஹநம் ப்ரமுச்ய ப்ரப்³ரூயாதே³தாம் தி³ஶம் க³ந்தா⁴ரா
ஏதாம் தி³ஶம் வ்ரஜேதி ஸ க்³ராமாத்³க்³ராமம் ப்ருʼச்ச²ந்பண்டி³தோ மேதா⁴வீ
க³ந்தா⁴ராநேவோபஸம்பத்³யேதைவமேவேஹாசார்யவாந்புருஷோ வேத³
தஸ்ய தாவதே³வ சிரம் யாவந்ந விமோக்ஷ்யேঽத² ஸம்பத்ஸ்ய இதி
॥ 6.14.2॥

ஸ ய ஏஷோঽணிமைததா³த்ம்யமித³ꣳ ஸர்வம் தத்ஸத்யꣳ ஸ ஆத்மா
தத்த்வமஸி ஶ்வேதகேதோ இதி பூ⁴ய ஏவ மா ப⁴க³வாந்விஜ்ஞாபயத்விதி
ததா² ஸோம்யேதி ஹோவாச ॥ 6.14.3॥

சுவையால் அறிவது போலே ப்ரஹ்மத்தை அறிவது எப்படி -கண்ணைக் கட்டி கூட்டி வந்து –
இந்த திசையில் நீ வந்தாய் சொல்லி -காந்தாரம் போய் சேர்ந்தான் –
யோகம் த்யானம் -கண்ணை திறப்பது போலே -ஆச்சார்ய உபதேசம் ப்ரஹ்மம் அறிய வழி –

॥ இதி சதுர்த³ஶ: க²ண்ட:³ ॥

——————————————-

புருஷꣳ ஸோம்யோதோபதாபிநம் ஜ்ஞாதய: பர்யுபாஸதே ஜாநாஸி
மாம் ஜாநாஸி மாமிதி தஸ்ய யாவந்ந வாங்மநஸி ஸம்பத்³யதே
மந: ப்ராணே ப்ராணஸ்தேஜஸி தேஜ: பரஸ்யாம் தே³வதாயாம்
தாவஜ்ஜாநாதி ॥ 6.15.1॥

அத² யதா³ஸ்ய வாங்மநஸி ஸம்பத்³யதே மந: ப்ராணே ப்ராணஸ்தேஜஸி
தேஜ: பரஸ்யாம் தே³வதாயாமத² ந ஜாநாதி ॥ 6.15.2॥

ஸ ய ஏஷோঽணிமைததா³த்ம்யமித³ꣳ ஸர்வம் தத் ஸத்யꣳ ஸ ஆத்மா
தத்த்வமஸி ஶ்வேதகேதோ இதி பூ⁴ய ஏவ மா ப⁴க³வாந்விஜ்ஞாபயத்விதி
ததா² ஸோம்யேதி ஹோவாச ॥ 6.15.3॥

ஜீவன் -தேவன் -மனுஷ்ய -சரீர அபிமானம் அங்கு இருக்குமா -எப்படி மறைக்கிறான்
மோக்ஷம் -அடைபவனின் பூதங்கள் -இந்திரியங்கள் -மனஸ் -பிராணன் –
எட்டாம் தடவை

॥ இதி பஞ்சத³ஶ: க²ண்ட:³ ॥

———————————————

புருஷꣳ ஸோம்யோத
ஹஸ்தக்³ருʼஹீதமாநயந்த்யபஹார்ஷீத்ஸ்தேயமகார்ஷீத்பரஶுமஸ்மை
தபதேதி ஸ யதி³ தஸ்ய கர்தா ப⁴வதி தத ஏவாந்ருʼதமாத்மாநம்
குருதே ஸோঽந்ருʼதாபி⁴ஸந்தோ⁴ঽந்ருʼதேநாத்மாநமந்தர்தா⁴ய
பரஶும் தப்தம் ப்ரதிக்³ருʼஹ்ணாதி ஸ த³ஹ்யதேঽத² ஹந்யதே ॥ 6.16.1॥

அத² யதி³ தஸ்யாகர்தா ப⁴வதி ததேவ ஸத்யமாத்மாநம் குருதே
ஸ ஸத்யாபி⁴ஸந்த:⁴ ஸத்யேநாத்மாநமந்தர்தா⁴ய பரஶும் தப்தம்
ப்ரதிக்³ருʼஹ்ணாதி ஸந த³ஹ்யதேঽத² முச்யதே ॥ 6.16.2॥

ஸ யதா² தத்ர நாதா³ஹ்யேதைததா³த்ம்யமித³ꣳ ஸர்வம் தத்ஸத்யꣳ ஸ
ஆத்மா தத்த்வமஸி ஶ்வேதகேதோ இதி தத்³தா⁴ஸ்ய விஜஜ்ஞாவிதி
விஜஜ்ஞாவிதி ॥ 6.16.3॥

ப்ரஹ்ம பிராப்தி அடைவதை எப்படி நிரூபிப்பது -திருடன் -கோடாலியை பழுக்க காய்ச்சி –
கையில் பிடித்ததும் போய் விடுவான் -திருடன் -lie detector போலே –
சரீரத்தில் சிக்கி -விலகினால் ப்ரஹ்மத்துடன் பெறுவான் -லயிக்கும் பொழுது -அங்கே தானே சேர வேண்டும்
இப்படி ஒன்பது சங்கைகளையும் தீர்த்து அருளி
பூமா தகர வித்யைகள் மேலே பார்ப்போம் –

16-தஹர வித்யை –7 —ப்ரபாடகம்

அதீ⁴ஹி ப⁴க³வ இதி ஹோபஸஸாத³ ஸநத்குமாரம் நாரத³ஸ்தꣳ
ஹோவாச யத்³வேத்த² தேந மோபஸீத³ ததஸ்த ஊர்த்⁴வம் வக்ஷ்யாமீதி
ஸ ஹோவாச ॥ 7.1.1॥

மிகச்சிறந்த செழிப்பான அதிகமான தன்னில் வேறு பெரியது இல்லாது பூமா
நாரதர் -சனத் குமாரர் -பேசி –
பூமா எவ்வளவு பெரியது காட்டி -அத்தை பெற செய்ய வேண்டிய படிக்கட்டுக்கள் காட்டி
தெரிந்தது சொல்லும் அப்புறம் மேலே சொல்கிறேன் சனத்குமாரர்-
அறிந்தவற்றில் எது சிறந்தது -ஒவ் ஒன்றாக சொல்லி உயர்த்தி –

ருʼக்³வேத³ம் ப⁴க³வோঽத்⁴யேமி யஜுர்வேத³ꣳ ஸாமவேத³மாத²ர்வணம்
சதுர்த²மிதிஹாஸபுராணம் பஞ்சமம் வேதா³நாம் வேத³ம் பித்ர்யꣳ ராஶிம்
தை³வம் நிதி⁴ம் வாகோவாக்யமேகாயநம் தே³வவித்³யாம் ப்³ரஹ்மவித்³யாம்
பூ⁴தவித்³யாம் க்ஷத்ரவித்³யாம் நக்ஷத்ரவித்³யாꣳ
ஸர்பதே³வஜநவித்³யாமேதத்³ப⁴க³வோঽத்⁴யேமி ॥ 7.1.2॥

தெரிந்தது எல்லாம் நாரதர் விளக்கி -வித்யா ஸ்தானங்கள் அறிந்தவர் –

ஸோঽஹம் ப⁴க³வோ மந்த்ரவிதே³வாஸ்மி நாத்மவிச்ச்²ருதꣳ ஹ்யேவ மே
ப⁴க³வத்³த்³ருʼஶேப்⁴யஸ்தரதி ஶோகமாத்மவிதி³தி ஸோঽஹம் ப⁴க³வ:
ஶோசாமி தம் மா ப⁴க³வாஞ்சோ²கஸ்ய பாரம் தாரயத்விதி
தꣳ ஹோவாச யத்³வை கிஞ்சைதத³த்⁴யகீ³ஷ்டா² நாமைவைதத் ॥ 7.1.3॥

ஆனந்தம் இல்லை-தெரிந்து கொள்ள வேண்டியதை அறியாமல் -சார தமம் அறியாமல் துக்கமாகவே உள்ளேன்

நாம வா ருʼக்³வேதோ³ யஜுர்வேத:³ ஸாமவேத³ ஆத²ர்வணஶ்சதுர்த²
இதிஹாஸபுராண: பஞ்சமோ வேதா³நாம் வேத:³ பித்ர்யோ ராஶிர்தை³வோ
நிதி⁴ர்வாகோவாக்யமேகாயநம் தே³வவித்³யா ப்³ரஹ்மவித்³யா பூ⁴தவித்³யா
க்ஷத்ரவித்³யா நக்ஷத்ரவித்³யா ஸர்பதே³வஜநவித்³யா
நாமைவைதந்நாமோபாஸ்ஸ்வேதி ॥ 7.1.4 ॥

நாம ப்ரஹ்ம உபாசனம் முதலில் -விருப்பம் அடைகிறான் –

ஸ யோ நாம ப்³ரஹ்மேத்யுபாஸ்தே யாவந்நாம்நோ க³தம் தத்ராஸ்ய
யதா²காமசாரோ ப⁴வதி யோ நாம ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி
ப⁴க³வோ நாம்நோ பூ⁴ய இதி நாம்நோ வாவ பூ⁴யோঽஸ்தீதி தந்மே
ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.1.5॥

॥ இதி ப்ரத²ம: க²ண்ட:³ ॥

——————————————

வாக்³வாவ நாம்நோ பூ⁴யஸீ வாக்³வா ருʼக்³வேத³ம் விஜ்ஞாபயதி யஜுர்வேத³ꣳ
ஸாமவேத³மாத²ர்வணம் சதுர்த²மிதிஹாஸபுராணம் பஞ்சமம் வேதா³நாம் வேத³ம்
பித்ர்யꣳராஶிம் தை³வம் நிதி⁴ம் வாகோவாக்யமேகாயநம் தே³வவித்³யாம்
ப்³ரஹ்மவித்³யாம் பூ⁴தவித்³யாம் க்ஷத்ரவித்³யாꣳ ஸர்பதே³வஜநவித்³யாம்
தி³வம் ச ப்ருʼதி²வீம் ச வாயும் சாகாஶம் சாபஶ்ச தேஜஶ்ச
தே³வாꣳஶ்ச மநுஷ்யாꣳஶ்ச பஶூꣳஶ்ச வயாꣳஸி ச
த்ருʼணவநஸ்பதீஞ்ஶ்வாபதா³ந்யாகீடபதங்க³பிபீலகம்
த⁴ர்மம் சாத⁴ர்மம் ச ஸத்யம் சாந்ருʼதம் ச ஸாது⁴ சாஸாது⁴ ச
ஹ்ருʼத³யஜ்ஞம் சாஹ்ருʼத³யஜ்ஞம் ச யத்³வை வாங்நாப⁴விஷ்யந்ந த⁴ர்மோ
நாத⁴ர்மோ வ்யஜ்ஞாபயிஷ்யந்ந ஸத்யம் நாந்ருʼதம் ந ஸாது⁴ நாஸாது⁴
ந ஹ்ருʼத³யஜ்ஞோ நாஹ்ருʼத³யஜ்ஞோ வாகே³வைதத்ஸர்வம் விஜ்ஞாபயதி
வாசமுபாஸ்ஸ்வேதி ॥ 7.2.1॥

வாக் ப்ரஹ்மம் அடுத்து -பேச்சு இருந்தால் தானே சொற்கள் வரும் -நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் –
வாக்மீ ஸ்ரீ மான் -வாக் சாதுர்யம் -நாமங்களை விட வாக்கு ஸ்ரேஷ்டம்
நர நார த -மனுஷன் உடைய தொடர்பு உள்ள ஞானம் கொடுப்பவர்– நாரதர்

ஸ யோ வாசம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தே யாவத்³வாசோ க³தம் தத்ராஸ்ய
யதா²காமசாரோ ப⁴வதி யோ வாசம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி
ப⁴க³வோ வாசோ பூ⁴ய இதி வாசோ வாவ பூ⁴யோঽஸ்தீதி தந்மே
ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.2.2॥

॥ இதி த்³விதீய: க²ண்ட:³ ॥

———————————————

மநோ வாவ வாசோ பூ⁴யோ யதா² வை த்³வே வாமலகே த்³வே வா கோலே
த்³வௌ வாக்ஷௌ முஷ்டிரநுப⁴வத்யேவம் வாசம் ச நாம ச
மநோঽநுப⁴வதி ஸ யதா³ மநஸா மநஸ்யதி
மந்த்ராநதீ⁴யீயேத்யதா²தீ⁴தே கர்மாணி குர்வீயேத்யத² குருதே
புத்ராꣳஶ்ச பஶூꣳஶ்சேச்சே²யேத்யதே²ச்ச²த இமம் ச
லோகமமும் சேச்சே²யேத்யதே²ச்ச²தே மநோ ஹ்யாத்மா மநோ ஹி லோகோ
மநோ ஹி ப்³ரஹ்ம மந உபாஸ்ஸ்வேதி ॥ 7.3.1 ॥

மனம் அத்தை விட ஸ்ரேஷ்டம் -நினைக்காமல் பேச முடியாதே மனோ பூர்வ வாக் உத்தர –
பேசினால் தானே சொற்கள் நாமம் வரும் –
பந்த மோக்ஷ ஏவ காரணம் மனம் -பற்றுடைய மனம் எதிரி- பற்றில்லா மனம் நண்பன்
மனம் கருவி போலே சிந்திக்க –

ஸ யோ மநோ ப்³ரஹ்மேத்யுபாஸ்தே யாவந்மநஸோ க³தம் தத்ராஸ்ய
யதா²காமசாரோ ப⁴வதி யோ மநோ ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி
ப⁴க³வோ மநஸோ பூ⁴ய இதி மநஸோ வாவ பூ⁴யோঽஸ்தீதி
தந்மே ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.3.2॥

॥ இதி த்ருʼதீய: க²ண்ட:³ ॥

—————————————-

ஸங்கல்போ வாவ மநஸோ பூ⁴யாந்யதா³ வை ஸங்கல்பயதேঽத²
மநஸ்யத்யத² வாசமீரயதி தாமு நாம்நீரயதி நாம்நி
மந்த்ரா ஏகம் ப⁴வந்தி மந்த்ரேஷு கர்மாணி ॥ 7.4.1॥

-சங்கல்பம் -புத்தி-தர்ம பூத ஞானம் – -உறுதியான முடிவு எடுக்கும் -மனத்தை விட ஸ்ரேஷ்டம் –

தாநி ஹ வா ஏதாநி ஸங்கல்பைகாயநாநி ஸங்கல்பாத்மகாநி
ஸங்கல்பே ப்ரதிஷ்டி²தாநி ஸமக்லுʼபதாம் த்³யாவாப்ருʼதி²வீ
ஸமகல்பேதாம் வாயுஶ்சாகாஶம் ச ஸமகல்பந்தாபஶ்ச
தேஜஶ்ச தேஷாꣳ ஸம் க்லுʼப்த்யை வர்ஷꣳ ஸங்கல்பதே
வர்ஷஸ்ய ஸங்க்லுʼப்த்யா அந்நꣳ ஸங்கல்பதேঽந்நஸ்ய ஸம் க்லுʼப்த்யை
ப்ராணா: ஸங்கல்பந்தே ப்ராணாநாꣳ ஸம் க்லுʼப்த்யை மந்த்ரா: ஸங்கல்பந்தே
மந்த்ராணாꣳ ஸம் க்லுʼப்த்யை கர்மாணி ஸங்கல்பந்தே கர்மணாம்
ஸங்க்லுʼப்த்யை லோக: ஸங்கல்பதே லோகஸ்ய ஸம் க்லுʼப்த்யை ஸர்வꣳ
ஸங்கல்பதே ஸ ஏஷ ஸங்கல்ப: ஸங்கல்பமுபாஸ்ஸ்வேதி ॥ 7.4.2 ॥

ஸ ய: ஸங்கல்பம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தே ஸங்க்லுʼப்தாந்வை ஸ லோகாந்த்⁴ருவாந்த்⁴ருவ:
ப்ரதிஷ்டி²தாந் ப்ரதிஷ்டி²தோঽவ்யத²மாநாநவ்யத²மாநோঽபி⁴ஸித்⁴யதி
யாவத்ஸங்கல்பஸ்ய க³தம் தத்ராஸ்ய யதா²காமசாரோ ப⁴வதி ய:
ஸங்கல்பம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி ப⁴க³வ: ஸங்கல்பாத்³பூ⁴ய இதி
ஸங்கல்பாத்³வாவ பூ⁴யோঽஸ்தீதி தந்மே ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.4.3॥

॥ இதி சதுர்த:² க²ண்ட:³ ॥

———————————————-

சித்தம் வாவ ஸம் கல்பாத்³பூ⁴யோ யதா³ வை சேதயதேঽத²
ஸங்கல்பயதேঽத² மநஸ்யத்யத² வாசமீரயதி தாமு நாம்நீரயதி
நாம்நி மந்த்ரா ஏகம் ப⁴வந்தி மந்த்ரேஷு கர்மாணி ॥ 7.5.1॥

சமயோஜித சிந்தை ஸ்ரேஷ்டம் -சங்கல்பத்தை விட -சமயத்துக்கு தக்க -அப்பொழுது ஒரு சிந்தை செய்தது போலே –
மனத்தின் வேறே வேறே நிலைப்பாடுகள் இவை

தாநி ஹ வா ஏதாநி சித்தைகாயநாநி சித்தாத்மாநி சித்தே
ப்ரதிஷ்டி²தாநி தஸ்மாத்³யத்³யபி ப³ஹுவித³சித்தோ ப⁴வதி
நாயமஸ்தீத்யேவைநமாஹுர்யத³யம் வேத³ யத்³வா அயம்
வித்³வாந்நேத்த²மசித்த: ஸ்யாதி³த்யத² யத்³யல்பவிச்சித்தவாந்ப⁴வதி
தஸ்மா ஏவோத ஶுஶ்ரூஷந்தே சித்தꣳஹ்யேவைஷாமேகாயநம்
சித்தமாத்மா சித்தம் ப்ரதிஷ்டா² சித்தமுபாஸ்ஸ்வேதி ॥ 7.5.2 ॥

ஸ யஶ்சித்தம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தே சித்தாந்வை ஸ லோகாந்த்⁴ருவாந்த்⁴ருவ:
ப்ரதிஷ்டி²தாந்ப்ரதிஷ்டி²தோঽவ்யத²மாநாநவ்யத²மாநோঽபி⁴ஸித்⁴யதி
யாவச்சித்தஸ்ய க³தம் தத்ராஸ்ய யதா²காமசாரோ ப⁴வதி யஶ்சித்தம்
ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி ப⁴க³வஶ்சித்தாத்³பூ⁴ய இதி சித்தாத்³வாவ
பூ⁴யோঽஸ்தீதி தந்மே ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.5.3॥

॥ இதி பஞ்சம: க²ண்ட:³ ॥

———————————————-

த்⁴யாநம் வாவ சித்தாத்³பூ⁴யோ த்⁴யாயதீவ ப்ருʼதி²வீ
த்⁴யாயதீவாந்தரிக்ஷம் த்⁴யாயதீவ த்³யௌர்த்⁴யாயந்தீவாபோ
த்⁴யாயந்தீவ பர்வதா தே³வமநுஷ்யாஸ்தஸ்மாத்³ய இஹ மநுஷ்யாணாம்
மஹத்தாம் ப்ராப்நுவந்தி த்⁴யாநாபாதா³ꣳஶா இவைவ தே ப⁴வந்த்யத²
யேঽல்பா: கலஹிந: பிஶுநா உபவாதி³நஸ்தேঽத² யே ப்ரப⁴வோ
த்⁴யாநாபாதா³ꣳஶா இவைவ தே ப⁴வந்தி த்⁴யாநமுபாஸ்ஸ்வேதி ॥ 7.6.1॥

மேலே உயர்த்தி -தியானம் ஸ்ரேஷ்டம் -இடைவெளி இல்லாமல் – இடையூறு தடங்கல் இல்லாத சிந்தனை –
எடுத்த லஷ்யத்தில் இருந்து மனம் மாறாமல் இருக்க வேண்டுமே –
உணர்வில் உம்பர் ஒருவன் -நினைமின் நெடியானை –

ஸ யோ த்⁴யாநம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தே யாவத்³த்⁴யாநஸ்ய க³தம் தத்ராஸ்ய
யதா²காமசாரோ ப⁴வதி யோ த்⁴யாநம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி
ப⁴க³வோ த்⁴யாநாத்³பூ⁴ய இதி த்⁴யாநாத்³வாவ பூ⁴யோঽஸ்தீதி
தந்மே ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.6.2॥

॥ இதி ஷஷ்ட:² க²ண்ட:³ ॥

————————————————

விஜ்ஞாநம் வாவ த்⁴யாநாத்³பூ⁴ய: விஜ்ஞாநேந வா ருʼக்³வேத³ம் விஜாநாதி
யஜுர்வேத³ꣳ ஸாமவேத³மாத²ர்வணம் சதுர்த²மிதிஹாஸபுராணம்
பஞ்சமம் வேதா³நாம் வேத³ம் பித்ர்யꣳராஶிம் தை³வம் நிதி⁴ம்
வாகோவாக்யமேகாயநம் தே³வவித்³யாம் ப்³ரஹ்மவித்³யாம் பூ⁴தவித்³யாம்
க்ஷத்ரவித்³யாம் நக்ஷத்ரவித்³யாꣳஸர்பதே³வஜநவித்³யாம் தி³வம் ச
ப்ருʼதி²வீம் ச வாயும் சாகாஶம் சாபஶ்ச தேஜஶ்ச தே³வாꣳஶ்ச
மநுஷ்யாꣳஶ்ச பஶூꣳஶ்ச வயாꣳஸி ச
த்ருʼணவநஸ்பதீஞ்ச்²வாபதா³ந்யாகீடபதங்க³பிபீலகம்
த⁴ர்மம் சாத⁴ர்மம் ச ஸத்யம் சாந்ருʼதம் ச ஸாது⁴ சாஸாது⁴ ச
ஹ்ருʼத³யஜ்ஞம் சாஹ்ருʼத³யஜ்ஞம் சாந்நம் ச ரஸம் சேமம் ச லோகமமும்
ச விஜ்ஞாநேநைவ விஜாநாதி விஜ்ஞாநமுபாஸ்ஸ்வேதி ॥ 7.7.1 ॥

த்யானம் -பிரமாண ஜன்ய ஞானம் இருந்தால் தானே வரும் -விஞ்ஞானம் ஸ்ரேஷ்டம் தியானத்தை விட
பிரேமா புத்தி அறிவு-ஏற்படும் கருவி பிரமாணம் -பிரத்யக்ஷம் அனுமானம் சப்தம் -சாஸ்திரம் வேதம் –

ஸ யோ விஜ்ஞாநம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தே விஜ்ஞாநவதோ வை ஸ
லோகாம்ஜ்ஞாநவதோঽபி⁴ஸித்⁴யதி யாவத்³விஜ்ஞாநஸ்ய க³தம் தத்ராஸ்ய
யதா²காமசாரோ ப⁴வதி யோ விஜ்ஞாநம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி ப⁴க³வோ
விஜ்ஞாநாத்³பூ⁴ய இதி விஜ்ஞாநாத்³வாவ பூ⁴யோঽஸ்தீதி தந்மே
ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.7.2॥

॥ இதி ஸப்தம: க²ண்ட:³ ॥

—————————————–

ப³லம் வாவ விஜ்ஞாநாத்³பூ⁴யோঽபி ஹ ஶதம் விஜ்ஞாநவதாமேகோ
ப³லவாநாகம்பயதே ஸ யதா³ ப³லீ ப⁴வத்யதோ²த்தா²தா
ப⁴வத்யுத்திஷ்ட²ந்பரிசரிதா ப⁴வதி பரிசரந்நுபஸத்தா
ப⁴வத்யுபஸீத³ந்த்³ரஷ்டா ப⁴வதி ஶ்ரோதா ப⁴வதி மந்தா ப⁴வதி
போ³த்³தா⁴ ப⁴வதி கர்தா ப⁴வதி விஜ்ஞாதா ப⁴வதி ப³லேந வை ப்ருʼதி²வீ
திஷ்ட²தி ப³லேநாந்தரிக்ஷம் ப³லேந த்³யௌர்ப³லேந பர்வதா ப³லேந
தே³வமநுஷ்யா ப³லேந பஶவஶ்ச வயாꣳஸி ச த்ருʼணவநஸ்பதய:
ஶ்வாபதா³ந்யாகீடபதங்க³பிபீலகம் ப³லேந லோகஸ்திஷ்ட²தி
ப³லமுபாஸ்ஸ்வேதி ॥ 7.8.1॥

பலம் -ஞானம் சம்பாதிக்க ஆச்சார்யர் சிசுரூஷை பண்ண வேண்டுமே -குருகுல வாசம் -கைங்கர்யம் –
ஸ்ரவணம் மனனம் த்யானம் அனைத்துக்கும் பலம் வேண்டுமே

ஸ யோ ப³லம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தே யாவத்³ப³லஸ்ய க³தம் தத்ராஸ்ய
யதா²காமசாரோ ப⁴வதி யோ ப³லம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி ப⁴க³வோ
ப³லாத்³பூ⁴ய இதி ப³லாத்³வாவ பூ⁴யோঽஸ்தீதி தந்மே
ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.8.2॥

॥ இதி அஷ்டம: க²ண்ட:³ ॥

——————————————–

அந்நம் வாவ ப³லாத்³பூ⁴யஸ்தஸ்மாத்³யத்³யபி த³ஶ
ராத்ரீர்நாஶ்நீயாத்³யத்³யு ஹ
ஜீவேத³த²வாத்³ரஷ்டாஶ்ரோதாமந்தாபோ³த்³தா⁴கர்தாவிஜ்ஞாதா
ப⁴வத்யதா²ந்நஸ்யாயை த்³ரஷ்டா ப⁴வதி ஶ்ரோதா ப⁴வதி மந்தா
ப⁴வதி போ³த்³தா⁴ ப⁴வதி கர்தா ப⁴வதி விஜ்ஞாதா
ப⁴வத்யந்நமுபாஸ்ஸ்வேதி ॥ 7.9.1॥

அன்னம் -சாப்பிட்டால் தானே பலம் வரும் -புஷ்ட்டி அடைய அன்னம் —

ஸ யோঽந்நம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽந்நவதோ வை ஸ
லோகாந்பாநவதோঽபி⁴ஸித்⁴யதி யாவத³ந்நஸ்ய க³தம் தத்ராஸ்ய
யதா²காமசாரோ ப⁴வதி யோঽந்நம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி
ப⁴க³வோঽந்நாத்³பூ⁴ய இத்யந்நாத்³வாவ பூ⁴யோঽஸ்தீதி தந்மே
ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.9.2॥

॥ இதி நவம: க²ண்ட:³ ॥

———————————————

ஆபோ வாவாந்நாத்³பூ⁴யஸ்தஸ்மாத்³யதா³ ஸுவ்ருʼஷ்டிர்ந ப⁴வதி
வ்யாதீ⁴யந்தே ப்ராணா அந்நம் கநீயோ ப⁴விஷ்யதீத்யத² யதா³
ஸுவ்ருʼஷ்டிர்ப⁴வத்யாநந்தி³ந: ப்ராணா ப⁴வந்த்யந்நம் ப³ஹு
ப⁴விஷ்யதீத்யாப ஏவேமா மூர்தா யேயம் ப்ருʼதி²வீ யத³ந்தரிக்ஷம்
யத்³த்³யௌர்யத்பர்வதா யத்³தே³வமநுஷ்யாயத்பஶவஶ்ச வயாꣳஸி ச
த்ருʼணவநஸ்பதய: ஶ்வாபதா³ந்யாகீடபதங்க³பிபீலகமாப
ஏவேமா மூர்தா அப உபாஸ்ஸ்வேதி ॥ 7.10.1॥

ஆபோ தண்ணீர் -மழை பெய்தால் தானே அன்னம் -ஜெரிக்க தண்ணீர் குடிக்க வேண்டுமே –
மழை -பார்க்கவே ஆனந்தம் -முகில் வண்ணன் -மேக ஸ்யாமளன் –

ஸ யோঽபோ ப்³ரஹ்மேத்யுபாஸ்த ஆப்நோதி ஸர்வாந்காமாꣳஸ்த்ருʼப்திமாந்ப⁴வதி
யாவத³பாம் க³தம் தத்ராஸ்ய யதா²காமசாரோ ப⁴வதி யோঽபோ
ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி ப⁴க³வோঽத்³ப்⁴யோ பூ⁴ய இத்யத்³ப்⁴யோ வாவ
பூ⁴யோঽஸ்தீதி தந்மே ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.10.2॥

॥ இதி த³ஶம: க²ண்ட:³ ॥

———————————————-

தேஜோ வாவாத்³ப்⁴யோ பூ⁴யஸ்தத்³வா ஏதத்³வாயுமாக்³ருʼஹ்யாகாஶமபி⁴தபதி
ததா³ஹுர்நிஶோசதி நிதபதி வர்ஷிஷ்யதி வா இதி தேஜ ஏவ
தத்பூர்வம் த³ர்ஶயித்வாதா²ப: ஸ்ருʼஜதே ததே³ததூ³ர்த்⁴வாபி⁴ஶ்ச
திரஶ்சீபி⁴ஶ்ச வித்³யுத்³பி⁴ராஹ்ராதா³ஶ்சரந்தி தஸ்மாதா³ஹுர்வித்³யோததே
ஸ்தநயதி வர்ஷிஷ்யதி வா இதி தேஜ ஏவ தத்பூர்வம் த³ர்ஶயித்வாதா²ப:
ஸ்ருʼஜதே தேஜ உபாஸ்ஸ்வேதி ॥ 7.11.1॥

அக்னி -கொதிப்பாய் இருந்து மழை -தேஜஸ் ஸ்ரேஷ்டம் -ஆகாசம் வாயு அக்னி தண்ணீர் பிருத்வி –

ஸ யஸ்தேஜோ ப்³ரஹ்மேத்யுபாஸ்தே தேஜஸ்வீ வை ஸ தேஜஸ்வதோ
லோகாந்பா⁴ஸ்வதோঽபஹததமஸ்காநபி⁴ஸித்⁴யதி யாவத்தேஜஸோ க³தம்
தத்ராஸ்ய யதா²காமசாரோ ப⁴வதி யஸ்தேஜோ ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி
ப⁴க³வஸ்தேஜஸோ பூ⁴ய இதி தேஜஸோ வாவ பூ⁴யோঽஸ்தீதி தந்மே
ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.11.2॥

॥ இதி ஏகாத³ஶ: க²ண்ட:³ ॥

———————————————-

ஆகாஶோ வாவ தேஜஸோ பூ⁴யாநாகாஶே வை ஸூர்யாசந்த்³ரமஸாவுபௌ⁴
வித்³யுந்நக்ஷத்ராண்யக்³நிராகாஶேநாஹ்வயத்யாகாஶேந
ஶ்ருʼணோத்யாகாஶேந ப்ரதிஶ்ருʼணோத்யாகாஶே ரமத ஆகாஶே ந ரமத
ஆகாஶே ஜாயத ஆகாஶமபி⁴ஜாயத ஆகாஶமுபாஸ்ஸ்வேதி
॥ 7.12.1॥

ஆகாசம் மேலே -திட விசும்பு -விண் -அளவிட்டு அறியமுடியாமல் -அனைத்துக்கும் இடம் கொடுக்கும்-
net work -நக்ஷத்திரங்கள் வாழும் இடம்

ஸ ய ஆகாஶம் ப்³ரஹ்மேத்யுபாஸ்த ஆகாஶவதோ வை ஸ
லோகாந்ப்ரகாஶவதோঽஸம்பா³தா⁴நுருகா³யவதோঽபி⁴ஸித்⁴யதி
யாவதா³காஶஸ்ய க³தம் தத்ராஸ்ய யதா²காமசாரோ ப⁴வதி
ய ஆகாஶம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி ப⁴க³வ ஆகாஶாத்³பூ⁴ய இதி
ஆகாஶாத்³வாவ பூ⁴யோঽஸ்தீதி தந்மே ப⁴க³வாந்ப்³ரவீத்விதி
॥ 7.12.2॥

॥ இதி த்³வாத³ஶ: க²ண்ட:³ ॥

——————————————–

ஸ்மரோ வாவாகாஶாத்³பூ⁴யஸ்தஸ்மாத்³யத்³யபி ப³ஹவ ஆஸீரந்ந
ஸ்மரந்தோ நைவ தே கஞ்சந ஶ்ருʼணுயுர்ந மந்வீரந்ந விஜாநீரந்யதா³
வாவ தே ஸ்மரேயுரத² ஶ்ருʼணுயுரத² மந்வீரந்நத² விஜாநீரந்ஸ்மரேண
வை புத்ராந்விஜாநாதி ஸ்மரேண பஶூந்ஸ்மரமுபாஸ்ஸ்வேதி ॥ 7.13.1॥

நினைவு ஆகாசத்தை விட ஸ்ரேஷ்டம் -ஹிருதயத்தில் இருந்து ஸ்ம்ருதி ஞானம் என்னால் தான் ஸ்ரீ கீதாச்சார்யன் –
மறந்தேன் உன்னை முன்னம் —

ஸ ய: ஸ்மரம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தே யாவத்ஸ்மரஸ்ய க³தம் தத்ராஸ்ய
யதா²காமசாரோ ப⁴வதி ய: ஸ்மரம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி ப⁴க³வ:
ஸ்மராத்³பூ⁴ய இதி ஸ்மராத்³வாவ பூ⁴யோঽஸ்தீதி தந்மே
ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.13.2॥

॥ இதி த்ரயோத³ஶ: க²ண்ட:³ ॥

————————————————

ஆஶா வாவ ஸ்மராத்³பூ⁴யஸ்யாஶேத்³தோ⁴ வை ஸ்மரோ மந்த்ராநதீ⁴தே
கர்மாணி குருதே புத்ராꣳஶ்ச பஶூꣳஶ்சேச்ச²த இமம் ச
லோகமமும் சேச்ச²த ஆஶாமுபாஸ்ஸ்வேதி ॥ 7.14.1॥

ஆசை இருந்தால் தானே நினைவு வரும் –
பத்னி புத்திரர் பசு இவற்றை விரும்புவது ஆசை
ஆசை யுடையோர்க்கு –பேசி வரம்பு அறுத்தார் –

ஸ ய ஆஶாம் ப்³ரஹ்மேத்யுபாஸ்த ஆஶயாஸ்ய ஸர்வே காமா:
ஸம்ருʼத்⁴யந்த்யமோகா⁴ ஹாஸ்யாஶிஷோ ப⁴வந்தி யாவதா³ஶாயா
க³தம் தத்ராஸ்ய யதா²காமசாரோ ப⁴வதி ய ஆஶாம்
ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி ப⁴க³வ ஆஶாயா பூ⁴ய இத்யாஶாயா வாவ
பூ⁴யோঽஸ்தீதி தந்மே ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.14.2॥

॥ இதி சதுர்த³ஶ: க²ண்ட:³ ॥

——————————————–

ப்ராணோ வா ஆஶாயா பூ⁴யாந்யதா² வா அரா நாபௌ⁴ ஸமர்பிதா
ஏவமஸ்மிந்ப்ராணே ஸர்வꣳஸமர்பிதம் ப்ராண: ப்ராணேந யாதி
ப்ராண: ப்ராணம் த³தா³தி ப்ராணாய த³தா³தி ப்ராணோ ஹ பிதா ப்ராணோ
மாதா ப்ராணோ ப்⁴ராதா ப்ராண: ஸ்வஸா ப்ராண ஆசார்ய:
ப்ராணோ ப்³ராஹ்மண: ॥ 7.15.1॥

இங்கு பிராண சப்தத்துக்கு பிராணன் உடன் கூடிய ஆத்மா என்றவாறு
ஆசை விட ஆத்மா ஸ்ரேஷ்டம் -இப்படி சிந்தித்து மேலே மேலே போனதே ஆத்மாவால் தானே –
எதனால் ஆத்மா ஸ்ரேஷ்டம் -சரீரம் -பிள்ளை நன்றாக அப்பாவுக்கு கார்யம் -உள்ளே இருக்கும் வரை வேறே –
அழைத்து போய் –எடுத்து வந்து அஃறிணை மாறுமே –

ஸ யதி³ பிதரம் வா மாதரம் வா ப்⁴ராதரம் வா ஸ்வஸாரம் வாசார்யம்
வா ப்³ராஹ்மணம் வா கிஞ்சித்³ப்⁴ருʼஶமிவ ப்ரத்யாஹ
தி⁴க்த்வாஸ்த்வித்யேவைநமாஹு: பித்ருʼஹா வை த்வமஸி மாத்ருʼஹா வை
த்வமஸி ப்⁴ராத்ருʼஹா வை த்வமஸி ஸ்வஸ்ருʼஹா வை த்வமஸ்யாசார்யஹா
வை த்வமஸி ப்³ராஹ்மணஹா வை த்வமஸீதி ॥ 7.15.2॥

அத² யத்³யப்யேநாநுத்க்ராந்தப்ராணாஞ்சூ²லேந ஸமாஸம்
வ்யதிஷந்த³ஹேந்நைவைநம் ப்³ரூயு: பித்ருʼஹாஸீதி ந மாத்ருʼஹாஸீதி
ந ப்⁴ராத்ருʼஹாஸீதி ந ஸ்வஸ்ருʼஹாஸீதி நாசார்யஹாஸீதி
ந ப்³ராஹ்மணஹாஸீதி ॥ 7.15.3॥

ப்ராணோ ஹ்யேவைதாநி ஸர்வாணி ப⁴வதி ஸ வா ஏஷ ஏவம் பஶ்யந்நேவம்
மந்வாந ஏவம் விஜாநந்நதிவாதீ³ ப⁴வதி தம்
சேத்³ப்³ரூயுரதிவாத்³யஸீத்யதிவாத்³யஸ்மீதி ப்³ரூயாந்நாபஹ்நுவீத
॥ 7.15.4॥

அதி வாதி –ஆத்மா ஸ்ரேஷ்டம் என்று இருப்பவன்
இதுவே பூமா -நாரதர் திருப்தியாக இருப்பதை பார்த்து -மேலே சங்கை வந்ததும் மேலே உபதேசிப்போம்

॥ இதி பஞ்சத³ஶ: க²ண்ட:³ ॥

——————————————

ஏஷ து வா அதிவத³தி ய: ஸத்யேநாதிவத³தி ஸோঽஹம் ப⁴க³வ:
ஸத்யேநாதிவதா³நீதி ஸத்யம் த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்யமிதி ஸத்யம்
ப⁴க³வோ விஜிஜ்ஞாஸ இதி ॥ 7.16.1॥

அதை விட சத்யம் தான் ஸ்ரேஷ்டம் -சத்ய சப்தத்தால் ப்ரஹ்மம் –ப்ரஹ்ம அதிவாதி –
கீழே ஆத்ம அதிவாதி -ஆத்மராமர்/
சரீர அதிவாதி சம்சாரிகள் உண்டியே உடையே -இந்திரிய ராமர்

॥ இதி ஷோட³ஶ: க²ண்ட:³ ॥

——————————————–

யதா³ வை விஜாநாத்யத² ஸத்யம் வத³தி நாவிஜாநந்ஸத்யம் வத³தி
விஜாநந்நேவ ஸத்யம் வத³தி விஜ்ஞாநம் த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்யமிதி
விஜ்ஞாநம் ப⁴க³வோ விஜிஜ்ஞாஸ இதி ॥ 7.17.1॥

எத்தைக் காண வேண்டுமோ அத்தை காண வேண்டும் -ப்ரஹ்மம் சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் அடைய என்ன வேணும்
மனனம் தேவை
அதுக்கு ஸ்ரத்தை நம்பிக்கை தேவை
அதுக்கு மனஸ் கட்டுப்பாடு தேவை

॥ இதி ஸப்தத³ஶ: க²ண்ட:³ ॥

——————————————-

யதா³ வை மநுதேঽத² விஜாநாதி நாமத்வா விஜாநாதி மத்வைவ
விஜாநாதி மதிஸ்த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்யேதி மதிம் ப⁴க³வோ
விஜிஜ்ஞாஸ இதி ॥ 7.18.1॥

॥ இதி அஷ்டாத³ஶ: க²ண்ட:³ ॥

————————————————-

யதா³ வை ஶ்ரத்³த³தா⁴த்யத² மநுதே நாஶ்ரத்³த³த⁴ந்மநுதே
ஶ்ரத்³த³த⁴தே³வ மநுதே ஶ்ரத்³தா⁴ த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்யேதி
ஶ்ரத்³தா⁴ம் ப⁴க³வோ விஜிஜ்ஞாஸ இதி ॥ 7.19.1॥

॥ இதி ஏகோநவிம்ஶதிதம: க²ண்ட:³ ॥

———————————————–

யதா³ வை நிஸ்திஷ்ட²த்யத² ஶ்ரத்³த³தா⁴தி
நாநிஸ்திஷ்ட²ஞ்ச்²ரத்³த³தா⁴தி நிஸ்திஷ்ட²ந்நேவ ஶ்ரத்³த³தா⁴தி
நிஷ்டா² த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்யேதி நிஷ்டா²ம் ப⁴க³வோ
விஜிஜ்ஞாஸ இதி ॥ 7.20.1॥

॥ இதி விம்ஶதிதம: க²ண்ட:³ ॥

——————————————–

யதா³ வை கரோத்யத² நிஸ்திஷ்ட²தி நாக்ருʼத்வா நிஸ்திஷ்ட²தி
க்ருʼத்வைவ நிஸ்திஷ்ட²தி க்ருʼதிஸ்த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்யேதி
க்ருʼதிம் ப⁴க³வோ விஜிஜ்ஞாஸ இதி ॥ 7.21.1॥

ப்ரஹ்மம் நிரதிசய ஸூக ரூபம் -ஆனந்தோ ப்ரஹ்மம் அறிந்தால் தானே வருவான் –
அள்ள அள்ள குறையாத கோதில் இன்னமுதம் -தேனே பாலே கன்னலே அமுதமே -என்ற ஞானம் வேணுமே –

॥ இதி ஏகவிம்ஶ: க²ண்ட:³ ॥

———————————————-

யதா³ வை ஸுக²ம் லப⁴தேঽத² கரோதி நாஸுக²ம் லப்³த்⁴வா கரோதி
ஸுக²மேவ லப்³த்⁴வா கரோதி ஸுக²ம் த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்யமிதி
ஸுக²ம் ப⁴க³வோ விஜிஜ்ஞாஸ இதி ॥ 7.22.1॥

॥ இதி த்³வாவிம்ஶ: க²ண்ட:³ ॥

———————————————

யோ வை பூ⁴மா தத்ஸுக²ம் நால்பே ஸுக²மஸ்தி பூ⁴மைவ ஸுக²ம்
பூ⁴மா த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்ய இதி பூ⁴மாநம் ப⁴க³வோ
விஜிஜ்ஞாஸ இதி ॥ 7.23.1॥

॥ இதி த்ரயோவிம்ஶ: க²ண்ட:³ ॥

————————————————-

யத்ர நாந்யத்பஶ்யதி நாந்யச்ச்²ருʼணோதி நாந்யத்³விஜாநாதி ஸ
பூ⁴மாத² யத்ராந்யத்பஶ்யத்யந்யச்ச்²ருʼணோத்யந்யத்³விஜாநாதி
தத³ல்பம் யோ வை பூ⁴மா தத³ம்ருʼதமத² யத³ல்பம் தந்மர்த்ய்ꣳ ஸ
ப⁴க³வ: கஸ்மிந்ப்ரதிஷ்டி²த இதி ஸ்வே மஹிம்நி யதி³ வா
ந மஹிம்நீதி ॥ 7.24.1॥

அதுக்கு அடையாளம் சொல்லி நிகமிக்கிறார் –
பார்த்தால் கண் வேறு ஒன்றில் காணாதோ கேட்டால் காது வேறு ஒன்றை கேட்காதோ —
என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே —

கோ³அஶ்வமிஹ மஹிமேத்யாசக்ஷதே ஹஸ்திஹிரண்யம் தா³ஸபா⁴ர்யம்
க்ஷேத்ராண்யாயதநாநீதி நாஹமேவம் ப்³ரவீமி ப்³ரவீமீதி
ஹோவாசாந்யோஹ்யந்யஸ்மிந்ப்ரதிஷ்டி²த இதி ॥ 7.24.2॥

சொத்து குதிரை யானை -அல்பம்-ஓன்று கிடைத்தால் மேலே மேலே -ப்ரஹ்மம் அடைந்தபின்பு இரண்டாவது தேட மாட்டோமே –
தர்சனமே பலன் -தரிசனத்துக்கு பலம் வேண்டாமே
உபதேசம் பெறுவதே பலன் -பரீக்ஷித் சுகர் சம்வாதம்

॥ இதி சதுர்விம்ஶ: க²ண்ட:³ ॥

———————————————-

ஸ ஏவாத⁴ஸ்தாத்ஸ உபரிஷ்டாத்ஸ பஶ்சாத்ஸ புரஸ்தாத்ஸ
த³க்ஷிணத: ஸ உத்தரத: ஸ ஏவேத³ꣳ ஸர்வமித்யதா²தோঽஹங்காராதே³ஶ
ஏவாஹமேவாத⁴ஸ்தாத³ஹமுபரிஷ்டாத³ஹம் பஶ்சாத³ஹம் புரஸ்தாத³ஹம்
த³க்ஷிணதோঽஹமுத்தரதோঽஹமேவேத³ꣳ ஸர்வமிதி ॥ 7.25.1॥

அதுதான் முன்னும் பின்னும் மேலும் கீழும் -புறமும் உள்ளும் –

அதா²த ஆத்மாதே³ஶ ஏவாத்மைவாத⁴ஸ்தாதா³த்மோபரிஷ்டாதா³த்மா
பஶ்சாதா³த்மா புரஸ்தாதா³த்மா த³க்ஷிணத ஆத்மோத்தரத
ஆத்மைவேத³ꣳ ஸர்வமிதி ஸ வா ஏஷ ஏவம் பஶ்யந்நேவம் மந்வாந ஏவம்
விஜாநந்நாத்மரதிராத்மக்ரீட³ ஆத்மமிது²ந ஆத்மாநந்த:³ ஸ
ஸ்வராட்³ப⁴வதி தஸ்ய ஸர்வேஷு லோகேஷு காமசாரோ ப⁴வதி
அத² யேঽந்யதா²தோ விது³ரந்யராஜாநஸ்தே க்ஷய்யலோகா ப⁴வந்தி
தேஷாꣳ ஸர்வேஷு லோகேஷ்வகாமசாரோ ப⁴வதி ॥ 7.25.2॥

அந்தராத்மாவாய் இருக்கும் ப்ரஹ்மமே எங்கும் -பூமா அறிந்தவன் தன்னிலே தானே மகிழ்ந்து –
அனைத்தும் ப்ரஹ்மம் உணர்ந்து -சாம்யா பத்தி அடைகிறான்

॥ இதி பஞ்சவிம்ஶ: க²ண்ட:³ ॥

———————————————–

தஸ்ய ஹ வா ஏதஸ்யைவம் பஶ்யத ஏவம் மந்வாநஸ்யைவம் விஜாநத
ஆத்மத: ப்ராண ஆத்மத ஆஶாத்மத: ஸ்மர ஆத்மத ஆகாஶ
ஆத்மதஸ்தேஜ ஆத்மத ஆப ஆத்மத
ஆவிர்பா⁴வதிரோபா⁴வாவாத்மதோঽந்நமாத்மதோ ப³லமாத்மதோ
விஜ்ஞாநமாத்மதோ த்⁴யாநமாத்மதஶ்சித்தமாத்மத:
ஸங்கல்ப ஆத்மதோ மந ஆத்மதோ வாகா³த்மதோ நாமாத்மதோ மந்த்ரா
ஆத்மத: கர்மாண்யாத்மத ஏவேத³ꣳஸர்வமிதி ॥ 7.26.1॥

ததே³ஷ ஶ்லோகோ ந பஶ்யோ ம்ருʼத்யும் பஶ்யதி ந ரோக³ம் நோத து:³க²தாꣳ
ஸர்வꣳ ஹ பஶ்ய: பஶ்யதி ஸர்வமாப்நோதி ஸர்வஶ இதி
ஸ ஏகதா⁴ ப⁴வதி த்ரிதா⁴ ப⁴வதி பஞ்சதா⁴
ஸப்ததா⁴ நவதா⁴ சைவ புநஶ்சைகாத³ஶ: ஸ்ம்ருʼத:
ஶதம் ச த³ஶ சைகஶ்ச ஸஹஸ்ராணி ச
விꣳஶதிராஹாரஶுத்³தௌ⁴ ஸத்த்வஶுத்³தௌ⁴ த்⁴ருவா ஸ்ம்ருʼதி:
ஸ்ம்ருʼதிலம்பே⁴ ஸர்வக்³ரந்தீ²நாம் விப்ரமோக்ஷஸ்தஸ்மை
ம்ருʼதி³தகஷாயாய தமஸஸ்பாரம் த³ர்ஶயதி
ப⁴க³வாந்ஸநத்குமாரஸ்தꣳ ஸ்கந்த³ இத்யாசக்ஷதே
தꣳ ஸ்கந்த³ இத்யாசக்ஷதே ॥ 7.26.2॥

அனைத்தும் ஸ்ருஷ்டிக்கப்பட்டு -அந்தர்யாமி -அதிலே லயித்து -அறிந்தவன் முக்தன்
ப்ரஹ்மம் போலே முக்தனும் சஞ்சரித்து -பல திருமேனி எடுத்து பலவித கைங்கர்யம் –
சென்றால் குடையும் இத்யாதி –

ஆகார சுத்தி சத்வ சுத்தி த்ருவா ஸ்ம்ருதி -த்யானம் இடைவிடாமல் – சர்வ கிரந்தி ஐயம் திரிபு தொலைந்து –
காம க்ரோத லாபங்கள் தோலையும் –சனத்குமாரர் நாரதர் அஞ்ஞானம் போக்கி

———-———-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸ்ருத ப்ரகாசகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேத வியாசர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ப்ரஹ்ம வித்யைகள்–

June 11, 2021

ஸ்ரீ ப்ரஹ்ம வித்யைகள் –32-ஸ்ரீ பாஷ்யத்தில் வெவ்வேறே அதிகரணங்களில் உண்டு —

(1) ஸத் வித்யை –சாந்தோக்யம் -6 அத்யாயம் -ஸ்வேதகேதுவுக்கு தகப்பனார் உத் கலர் – உபதேசம் –
ப்ரஹ்மத்தின் ஸ்வரூப நிரூபக தர்மங்கள் ஆறும் உபாசனம் இதில் -ஸமஸ்த இதர வஸ்து விலக்ஷணம் ப்ரஹ்மம்
1-ஸத்யத்வம் -பத்த ஜீவாத்மாவின் வ்யாவ்ருத்தம் -ஸ்வரூபத்திலும் ஸ்வபாவத்திலும்
2-ஞானத்தவம் –முக்தாத்மாவில் வ்யாவ்ருத்தம்
3-அனந்தத்வம் –தேச கால வஸ்து அபரிச்சேத்யன் –சர்வ வ்யாபி -சர்வ அந்தர்யாத்மா -நித்யரில் வ்யாவருத்தன்
4-ஆனந்தத்வம் –உயர்வற அற உயர் நலம் உடையவன் அவன்
5-அமலத்வம்
6- ஸ்ரீ யபதித்தவம்

ப்ரஹ்மத்தின் அசாதாரண கல்யாண குணங்கள் இதில் உபாஸனம்
1- ஜகத் உபாதானத்வம் –உபாதான காரணம்
2- ஜகத் நிமித்தத்வம் –நிமித்த காரணம்
3-ஸர்வ ஞாநத்வம்
4- ஸர்வ சக்தி யோகம்
5–ஸத்ய ஸங்கல்பம்
6-ஸர்வ அந்தர்யாமித்வம்
7- சர்வ தாரத்வம்
8- சர்வ நியந்த்ருத்வம்

சாந்தோக்யம் அத்யாயம் -6- இந்த ப்ரஹ்ம வித்யை பலம் ப்ராரப்த கர்ம அவசானத்திலே மோக்ஷ பிராப்தி என்கிறது –

——–

2)ஆனந்த மய வித்யா –
ஆனந்த வல்லி -தைத்ரியம்
கீழே சொன்ன ஆறு அசாதாரண ஸ்வரூப நிரூபக தர்ம விசிஷ்ட ப்ரஹ்ம உபாசனம்

அசாதாரண கல்யாண குணங்கள் –
1-பஞ்ச பூதங்கள் ஸ்ரஷ்டா
2-அன்ன மய -பிராண மய -மநோ மய -விஞ்ஞான மய -அனைத்துக்கும் அந்தர்யாமி
3- ஸங்கல்ப ஏக லவ தேசத்திலே ஸ்ரஷ்டா
4- ஸமஸ்த சேதன அசேதன சரீரீ
5-நிருபாதிக ரக்ஷகன் -அந்தமில் பேர் இன்பம் அளிப்பவன்
6- பீஷாத் –இத்யாதி –தேவர்கள் பயந்து விதித்த கார்யங்களை காலப்படி சரியாகச் செய்கிறார்கள் –
7- இந்த ப்ரஹ்ம வித்யைக்கு மோக்ஷ பிராப்தி

———–

3-அந்தர் ஆதித்ய வித்யை -சாந்தோக்யம் -முதல் அத்யாயம் -1-6-6-
இது உத்கீத வித்யையின் அங்கம்
மோக்ஷ பலன் இல்லை –

——-

4-அக்ஷய வித்யை
சாந்தோக்யம் முதல் அத்யாயம் -1-9-
இதுவும் உத்கீத வித்யையின் அங்கம்
ஆகாச அதிகரணம்
இதுக்கும் மோக்ஷ பலன் இல்லை –

——–

5-பிராண வித்யை
சாந்தோக்யம் -1-11-5-
இதுவும் உத்கீதா வித்யையின் அங்கம்
மோக்ஷ பலன் இல்லை
பிராண அதிகரணம்

———-

6-காயத்ரி ஜ்யோதிர் வித்யை –
சாந்தோக்யம் -3-12-
மோக்ஷ பலன்
ஜ்யோதிர் அதிகரணம்

————

7-ப்ரதர்தன வித்யை
கௌஷீதகி உபநிஷத் -3 அத்யாயம்
முதலில் ஸ்வர்க்க லோக பிராப்தி -பின்பு மோக்ஷ பலன்
இந்த்ர பிராண அதிகாரணம்

———–

8-சாண்டில்ய வித்யை
சாந்தகோக்யம் –3-14-
அக்னி ரஹஸ்யம்
ப்ரஹதாரண்யம் –7-6-1-
மோக்ஷ பலன்
ஸர்வத்ர ப்ரஸித்தி அதிகரணம்

———-

9-நச்சிகேத வித்யை
யமதேவன் நச்சிகேதுக்கு உபதேசம்
கட உபநிஷத்
மோக்ஷ பலன்
அத்ர அதிகரணம்

—————-

10-உபகோஸல வித்யை
சத்யகாமவமுனிவர் உபகோஸலருக்கு உபதேசம்
சாந்தோக்யம் -4-அத்யாயம் -10-15 காண்டங்கள்
மோக்ஷ பலன்
அந்தர அதிகரணம்

———-

11-அந்தர்யாமி வித்யா
ப்ருஹதாரண்யம் -5 அத்யாயம் -7 ப்ராஹ்மணம்
ஸூபால உபநிஷத்
மோக்ஷ பலன்
அந்தர்யாமி அதிகரணம்

————

12-அக்ஷர பர வித்யா
முண்டகம்
மோக்ஷ பலன்
அத்ரஸ்யத்வாதி அதிகரணம்

————-

13-வைச்வானர வித்யை
அஸ்வபதி ராஜா -ஆறு முனிவர்களுக்கு உபதேசம்
சாந்தோக்யம் –5-11-24
மோக்ஷ பலன்
வைச்வானர அதிகரணம்

———–

14-பூமா வித்யை
ஸநத்குமாரர் நாரதருக்கு உபதேசம்
சாந்தோக்யம் –7 அத்யாயம்
மோக்ஷ பலன்
பூமா அதிகரணம்

———–

15-கார்கி அக்ஷர வித்யை
ப்ரஹதாரண்யம் –5-8-8-
மோக்ஷ பலன்

————

16-ஹ்ரி மாத்ர ப்ரணவ வித்யை
ப்ரஸ்ன உபநிஷத் –5-5-
மோக்ஷ பலன்
ஈஷதி கர்ம அதிகரணம்

———–

17-தஹர வித்யை
சாந்தோக்யம் -8 அத்யாயம்
மோக்ஷ பலன்
தஹர அதிகரணம்

———-

18-அங்குஷ்ட ப்ரமித வித்யா
கட உபநிஷத்
மோக்ஷ பலன்
ப்ரமித அதிகரணம்

—————-

19-ஜ்யோதிஷாம் ஜ்யோதிர் வித்யா
ப்ரஹதாரண்யம் –6-4-16-
மோக்ஷ பலம்
மத்வ அதிகரணம்

————

20-மது வித்யை
சாந்தோக்யம் –3-1-
மோக்ஷ பலன்
மத்வ அதிகரணம்

———–

21-ஸம் வர்க்க வித்யா
ரைக்குவர் ஞானஸ்ருதிக்கு உபதேசம்
சாந்தோக்யம் –4-3-
மோக்ஷ பலன்
அப ஸூத்ர அதிகரணம்

————

22-ஆகாச வித்யை
சாந்தோக்யம் -8 அத்யாயம்
மோக்ஷ பலன்
அர்த்தாந்தர வியபதேச அதிகரணம்

—————

23-பாலகி வித்யை
கௌஷிதகி உபநிஷத்
ப்ரஹதாரண்யம்
மோக்ஷ பலன்
ஜகத்வ சித்வ அதிகரணம்

————–

24-மைத்ரேயி வித்யை
ப்ருஹதாரண்யம் –4-4-
மோக்ஷ பலன்
வாக்ய அந்வய அதிகரணம்

——————

25-பஞ்ச அக்னி வித்யை
ப்ரவாஹன அரசர் அருணி முனிவருக்கு உபதேசம்
சாந்தோக்யம் –5-3-
மோக்ஷ பலன்
தத் அந்தர பிரதிபத்தி அதிகரணம்

————–

26-புருஷ வித்யை
தைத்ரியம்
மோக்ஷ பலன்
புருஷ வித் அதிகரணம்

————-

27-அஷிஸ்த ஸத்ய ப்ரஹ்ம வித்யை
ப்ரஹதாரண்யம் –5-7-
மோக்ஷ பலன்

———————

28-ஈசாவாஸ்ய வித்யை
ஈசாவாஸ்ய உபநிஷத்
மோக்ஷ பலன்

———–

29-உஷஸ்திகஹோல வித்யை
யஜ்யவல்க்யர் உஷஸ்தருக்கும் கஹோலருக்கும் உபதேசம்
ப்ரஹதாரண்யம் –5-4/5-5-
மோக்ஷ பலம்
அந்தரத்வ அதிகரணம்

—————-

30-பர்யங்க வித்யை
கௌஷீதகி முதல் அத்யாயம்
மோக்ஷ பலன்

—————

31வ்யாஹ்ருதி வித்யை
ப்ருஹதாரண்யம் –7-5-1-
மோக்ஷ பலன்

—————–

32-ந்யாஸ வித்யை
தைத்ரியம்
ஸ்வேதாஸ்வரம்
மோக்ஷ பலன்

——–

1. மதுவித்யை

தேனாக ஸுர்யனையை த்யானம் செய்வது. ஸுர்ய மண்டலத்தை, தேவதைகள் உட்கொள்ளும் தேனாகவும்,
மேலுலகில் அந்தரிக்ஷம் எனப்படும் தேன் அடை இருப்பதாகவும்,
வண்டுகள் மலர்களிலிருந்து தேனை எடுத்து சேர்க்குமாப் போலே”வேத மந்த்ரங்கள்” என்றும்,
வஸு – ருத்ர – ஆதித்ய – மருத் ஸாத்ய கணங்கள் 4 திக்குகளிலும், மேல் புறத்திலும் நிற்பதாகவும்
தேனாக ஸுர்யனைப் பாவித்தும் அவனுக்கு அந்தர்யாமியாக பகவானை உபாஸனம் செய்தல்.

——–

2. காயத்ரீ ப்ரஹ்ம வித்யை

காயத்ரீ சந்தஸ்ஸுக்கு மூன்று பாதங்கள், 24 அக்ஷரங்கள்.
ப்ரஹ்மத்திற்கு 4 பாதங்கள் (பூதம், ப்ருத்வி, சரீரம், ஹ்ருதயம்) .
வாக்கானது ஸர்வ பூதங்களையும் குறிக்கிறது.
இரு குணங்கள் . ப்ருத்வியை பாதமாக உடைய இதற்கு ஸர்வ பூதங்களும் ஆதாரம் . அவைகளால் மீள முடியாது.
சரீரமாயும் ஹ்ருதயமாகவும் இப்படி ப்ருஹ்மத்திற்கு ஆதாரமாக இருக்கிறது. இப்படி உபாஸிக்கச் சொல்கிறது.
இதற்கு அங்கமாக ஹ்ருதயத்தில் நான்கு பக்கங்களிலும் ,மேலுமாக ஐந்து குழிகள் இருப்பதாகவும்,
அங்கு ப்ராணன்கள் சஞ்சரிப்பதாகவும், ஐந்து குழிகளிலும் ஐந்து துவாரபாலகர்கள் மற்றும் ஆதித்யன், சந்த்ரன்,
அக்னி, பர்ஜன்யன், ஆகாசம் இவைகளின் தேவதைகள்
இருப்பதாகவும் உபாஸனம் செய்யுமாறு சொல்கிறது.
இது ”காயத்ரீ ப்ருஹ்ம வித்யை” எனப்படும்.

———-

3. கௌக்ஷய ஜ்யோதிர் வித்யை

ப்ரம்மமே வைச்வாநரன். இவன் அக்னிக்கு அந்தர்யாமி–
இங்ஙனம் உபாசிக்கும் முறை தான் இந்த வித்யை.
காதுகளை கைகளால் மூடிய போது காதுக்குள் ஒரு சப்தம் கேட்கிறதல்லவா?
அது, இந்த ப்ரஹ்மத்தைக் காட்டுகிறது.

——–

4. சாண்டில்ய வித்யை

ப்ரும்மமே எல்லாவற்றிற்கும் காரணம் என்று அறிந்து காம
க்ரோதங்கள் இன்றி சாந்தத்துடன் ப்ரும்மத்தை உபாஸிப்பது.

———

5. கோஸ விஜ்ஞானம் (வித்யை)

தன் புத்ரன் தீர்க்க ஆயுளோடு இருக்க செய்யப்படும் உபாஸனம்.
வாயுவை திக்குகளின் குமாரனாக நினைத்து மந்த்ரங்களைச் சொல்லி உபாஸிக்க வேண்டும்.

———-

6. புருஷ வித்யை

தன்னை ஒரு யக்ஞமாக கருதி தன் ஆயுட் காலத்தை (116 வருமூம்) மூன்றாக பிரித்து
வஸு , ருத்ர, ஆதித்யர்களாக நினைத்து, பசி, தாகங்களைத் தீக்ஷையாகவும்,
உட்கொள்வதை உபஸத்தாகவும் சிரிப்பு இவைகளை ஸ்தோத்ரங்களாகவும்,
சாஸ்த்ர சம்பந்தமாகச் செய்யப்படுவதை ஸம்பாவனையாகவும்,
மரணத்தை அவப்ருதமாகவும் பாவித்து, சாஸ்திர விதிப்படி உபாஸித்தால்,
நோயை விலக்கி நீடித்து வாழ்வான் என்கிறது.
”ஐதரேய மஹிதாஸர்” என்பவர் இப்படி வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது.
இவர், இந்த வித்யையை, ஸ்வேத கேதுவுக்கு உபாசித்ததாகவும் சொல்வர்.
அந்திம காலத்தில் ஜபிக்க வேண்டிய மந்த்ரங்களை ஜபித்தால், மோக்ஷம் அடைவான் என்றும் கூறுகிறது.
(தைத்திரீய முடிவில் சொல்லப்படும் புருஷ வித்யை இதுவல்ல).

—————————

7 – ரைக்வ வித்யை

இது ஸம்வர்க்க வித்யை என்றும் சொல்லப்படும்.
”ஜாநச்ருதி” என்பவர் மிகவும் தர்மிஷ்டர். வீடுகள், சத்திரங்கள் கட்டி எல்லா இடங்களிலும் அன்னதானம் முதலிய எல்லா
தானங்களையும் ச்ரத்தையோடு செய்பவர். ஒரு நாள் இரவில் அவர் தன்னுடைய மாளிகையின் மேல் மாடியில்
படுத்திருக்கும்போது, அவருக்கு மேலே ஆகாயத்தில் அன்னங்கள் பறந்தன. அதில் முன்னே போகும் அன்னத்தை,
பின்னே செல்லும் அன்னம், ”உனக்கு கண்ணில்லையா ?
தர்மிஷ்டனான ”ஜாநச்ருதி” படுத்திருக்க, அவன் மேலாகப் பறந்து போகிறாயே?” என்று கேட்டது.
முன்னே செல்லும் அன்னம்,”வண்டியுடன் எப்போதும் வசிக்கும் ரைக்ரவராஇவர்?” என்று கேட்டது.
”அது யார்? வண்டியோடு இருக்கும் ரைக்வர்” என்று, பின்னால் செல்லும் அன்னம் கேட்டது.
சூதாட்டங்களில் ”க்ருதம்” என்கிற ஆட்டம் தெரிந்தவர் எல்லா ஆட்டங்களும் தெரிந்ததற்குச் சமம்.
”ரைக்வர்” எல்லாம் அறிந்தவர்.
அந்த பெருமை இந்த ஜாநச்ருதிக்கு ஏது?” என்று முன்னே செல்லும் அன்னம் சொல்லிற்று.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஜாநச்ருதி , காலையில் எழுந்து ”ரைக்வர் எங்கிருக்கிறார்?” என்று அறிய எல்லா
பக்கங்களிலும் ஏவலர்களை அனுப்பினார். பல பேர் காணவில்லை என்று திரும்பி வர, ஒருவன் மட்டும் ”ஓரிடத்தில்
வண்டியின் அடியில் சிரங்குகளைச் சொறிந்து கொண்டுஅமர்ந்திருக்கிறார்” என்று சொன்னார்.

ஜாநச்ருதி, பசுக்கள், குதிரைகள் இவற்றை ஏராளமாகக் கொண்டுபோய் ரைக்வரிடம் கொடுத்து அடிபணிந்து
தேவதாக்ஞானம் உபதேசிக்க ப்ரார்த்தித்தார். ரைக்வர் மறுத்தார்.
மறுபடியும் ஏராளமான செல்வங்களையும் மற்றும் தன் புத்ரியையும் கொடுத்து உபதேசிக்குமாறு ப்ரார்த்தித்தார்.
இப்போது மனம் கனிந்து, ரைக்வர் உபதேசித்ததுதான் ரைக்வவித்யை.

————-

8 – ஸம்வர்க வித்யை

(ஸத்ய காம ஜாபாலர் என்கிற மஹரிஷி ஸ்வேதகேதுவுக்கு உபதேசித்தது)
காபேயன், அபிப்ரதாரி , என்கிற இருவர் சாப்பிட உட்கார்ந்த சமயத்தில் ஒரு ப்ரஹ்மச்சாரி பிக்ஷை கேட்டார்.
இருவரும் பிக்ஷை போடவில்லை. ப்ரஹ்மச்சாரி , ”உலகத்தை தாங்குபவன் நான்கு
நான்கு மஹாத்மாக்களை விழுங்கியுள்ளான். பற்பல உருவாக வசிப்பவன் அவன். இவனை மனிதர்கள் தெரிந்து கொள்வதில்லை.
இந்த அன்னம் யாருக்கு உள்ளதோ அவனுக்கு அளிக்கப்படவில்லை” என்றான்.

காபேயன், ”ப்ரஹ்மச்சாரியே ! எல்லாவற்றையும் ச்ருஷ்டிப்பவன் ஸர்வக்ஞன். இவன் ஒருவராலும்
சாப்பிடப்படாததைச் சாப்பிடுகிறான். இப்படி நாங்கள் உபாஸிக்கிறோம்” என்று சொல்லி, பிக்ஷை அளித்தான்.
அக்னி, ஸ@ர்யன், சந்த்ரன் இவற்றிற்கு லயஸ்தானம் வாயு.
உடம்பில் கண், காது, வாக்கு, மனஸ் இவைகளுக்கு லயஸ்தானம் ப்ராணன்.
இவற்றைத் தெரிந்து உபாஸிப்பவன் , ப்ரஹ்மத்தை அனுபவிப்பான். (இது பலன்) என்று இதில் சொல்லப்படுகிறது.

———

9 – ஷோடச கல ப்ரஹ்ம வித்யை

ஸத்ய காமன் என்கிற மஹரிஷியின் வரலாறு சொல்லப்படுகிறது. ஸத்ய காமன் ஆசார்யரை வரிக்கப்
போவதற்கு முன்பு தன் தாயாரிடம் கோத்ரத்தின் பெயரைக் கேட்டான். ”கோத்ரம் எதுவென்று தெரியாது” என்று சொன்ன
தாயார், ஆசார்யனிடத்தில் ”என் தாயார் ஜாபாலை. நான் ஸத்ய காமன் என்று சொல்!” என்றாள்.
ஸத்ய காமன் கௌதம-ஹாரித்ருபாதர் என்கிற ரிஷியிடம் சென்று இதைச் சொல்ல, குருவும் இவனை அங்கீகரித்து
இளைத்த 400 பசுக்களை வளர்த்துவரச் சொன்னார். அவற்றை வெகு சிரமப்பட்டு பல வருஷங்கள் வளர்த்து ஆயிரம்
பசுக்களாக்கினான். அவற்றில் ஒரு காளை ஸத்ய காமனுக்கு ”ப்ரகாசவா” என்கிற பாதத்தை உபதேசித்து, அதற்கு நான்கு
அவயவங்கள் என்று கூறி, ”அக்னி உனக்கு இன்னொரு பாதத்தைச் சொல்லும்” என்று சொல்லிற்று.

மறுநாள் ”ஸமிதாதானம்” செய்யும் சமயத்தில், அக்னி ”அனந்தவான்” என்கிற பாதத்தையும், அதன் நான்கு
பாகங்களையும் உபதேசித்தது. ”ஹம்ஸம் உனக்கு மூன்றாவது பாதத்தைச் சொல்லும்” என்றது.
மறுநாள் மாலை அன்னத்திடம் ஜ்யோதிஷ்மான் என்கிற பாதத்தையும்,
அதன் நான்கு பாகங்களையும் அறிந்தான். அன்னம், ”மற்றொரு பாதத்தை நீர்ப்பறவை சொல்லும்” என்றது.
அதற்கடுத்த மறுநாள் மாலை நீர்ப்பறவையிடம் ”ஆயதனவான்” என்கிற பாதத்தையும், அதன் பாகங்களையும் அறிந்தான்.
இப்படியாகக் கற்று நன்கு அறிந்த ஆசார்யனைப் போன்ற தேஜஸ் முகத்தில் தெரிய ஆயிரம் மாடுகளையும் ஓட்டிக் கொண்டு
ஆசார்யரி டம் சென்றான்.

ஆசார்யர் இவனைப் பார்த்து ”ப்ரஹ்மத்தை அறிந்தவனாக உன் முகம் சொல்கிறது. யார் உனக்கு சொன்னது?” என்று கேட்க,
ஸத்ய காமன் எல்லாவற்றையும் சொல்லி , ”இருந்தாலும் ஆசார்ய முகமாக உபதேசம் செய்யவேண்டும்” என்று ப்ரார்த்திக்க மனம்
சந்தோஷம் அடைந்து ஆசார்யனும் உபதேசம் செய்தார்.
(இரண்டு உபதேசமும்-அதாவது எல்லாம் ஒன்றாக இருந்தன).

இந்த ஸத்ய காமனின் சிஷ்யன் உபகோஸலன். பன்னிரண்டு வருடம் ஆசார்யனின் வைதீக அக்னியைப் பாதுகாத்து வந்தான்.
ஆசார்யன் இவனுடன் இருந்த மற்ற சிஷ்யர்களுக்கு உபதேசம் முதலியவற்றை முடித்தவர் , உபகோஸலனுக்கு ஒன்றும்
சொல்லவில்லை. ஆசார்யருடைய மனைவி ப்ரார்த்தித்தும் எதுவும் சொல்லாமல், ஆசார்யன் வெளியூர் சென்று விட்டார்.

பன்னிரண்டு வருஷ காலம் பாதுகாத்து வந்த அக்னி இவனிடம் கருணை கொண்டு ”கம என்பது நமது சுகம், வம்
என்பது இந்த்ரியம் அல்லது வானம் போன்றது என்றும், ப்ராணன் ப்ருஹ்மம், கம்-ப்ருஹ்மம் (வம்) என்று உபதேசித்தான்.

பிறகு ”அக்னி வித்யையை” உபதேசித்து இதற்கு மேல் உனக்கு ஆசார்யன் உபதேசிப்பார் என்று அக்னி சொன்னான்.

வெளியூர் சென்றிருந்த ஆசார்யன் திரும்பி வந்தார்.
சிஷ்யனின் முகத்தைப் பார்த்தார். ”ப்ரஹ்ம தேஜஸ் ப்ரகாசிக்கிறதே? யார் உபதேசித்தது?” என்று கேட்டார்.

உபகோஸலன் நடந்த உண்மையைச் சொன்னான். ஆசார்யன் சந்தோஷமடைந்து மேற்கொண்டு உபதேசம் செய்தார்.
அதாவது
ஆத்மாவானது த்ரேகத்தில் இருப்பது. ஆத்மாவிற்கு அழிவு கிடையாது. இதை நன்கு தெரிந்து கொண்டால் பாபம்
ஆத்மாவில் ஒட்டாது என்று ஆரம்பித்து பலவற்றையும் உபதேசித்தார். இவ்வாறு உபாஸனம் செய்தவன் முமுக்ஷுவாக
இருப்பதால் இவன் மரணமடைந்த பிறகு இவனுக்கு செய்யவேண்டிய சடங்குகளைச் செய்யாவிட்டாலும் இவன் ஆத்மா
அர்ச்சிராதி மார்க்கம் என்கிற தேவயான மார்க்கத்தாலே ப்ரஹ்மத்திடம் சேர்க்கப்படுவான். இதன் பிறகு துக்கம் என்பதே
கிடையாது என்று உபதேசித்தார்.

———-

10 – மேலே சொல்லப்பட்டது உபகோஸல வித்யை, என்றும் சொல்வர்

———

11 – நடுவில் அக்னி உபதேசித்தது இதைச் சார்ந்த அக்னி வித்யை
(ஆக, ஷோடச கலை ப்ரஹ்மவித்யை, உபகோஸல வித்யை, அக்னி வித்யை மூன்றும் சொல்லப்பட்டது)

———–

12 – ப்ராண வித்யை

ப்ராணன் மூத்தது. அதாவது கர்ப்ப வாஸத்தில் ப்ராணன் ஏற்பட்ட பிறகுதான் மீதி இந்த்ரியங்கள் உண்டாகின்றன.
ஆதலால் ப்ராணன் ”ஜ்யேஷ்டன்”.

ப்ராணனுக்கும் மீதி இந்த்ரியங்களுக்கும் ஒரு கலகம் ஏற்பட்டது. ”யார் உயர்ந்தவர்?” என்பதே அது.
ஸ்ருஷ்டி செய்த ப்ரஜாபதியிடம் சென்று, இந்த வ்யவஹாரத்தைத் தீர்க்குமாறு கேட்டுக் கொண்டன.
அவர் உங்களுக்குள் யார் சரீரத்திலிருந்து வெளிப்பட்டால்
சரீரம் குலைந்து போகுமோ அவரே ச்ரேஷ்டர், உயர்ந்தவர் என்றார்.

வாக்கு ஒரு வருஷ காலம் சரீரத்தை விட்டு வெளிப்பட்டு இருந்தது. ஊமை போல சரீரம் வாழ்ந்தது. இதைப்போலவே
கண்கள், காதுகள் மற்ற இந்த்ரியங்களும் வெளிப்பட்டு சரீரத்தைச் சோதித்தது.
சரீரத்தில் அந்தந்த அங்கத்திற்கு குறைவு ஏற்பட்டதே
தவிர, சரீரம் ஜீவித்திருந்தது. ப்ராணன், சரீரத்தை விட்டு வெளியே கிளம்பின தருணத்தில்
எல்லா அவயவங்களும் செயலிழக்கத் தொடங்கின. அவை ப்ராணனை வெளியே போக வேண்டாம் என்று வேண்டி,
ப்ராணனே ச்ரேஷ்டன் அதாவது உயர்ந்தவன் என்றன.
ப்ராணன்,தனக்கு அன்னம், ஆடை எல்லாம் அளிக்க வேண்டும் என்று கேட்டது. அன்னம் ப்ராணனுக்கு என்றும், முன்னும் பின்னும்
அருந்தும் ஆசமன தீர்த்தம் ப்ராணனுக்கு உடை என்றும் சொல்லி அவை யாவும் ப்ராணனை உபாசித்தன.

————-

13. பஞ்சாக்னி வித்யை

அருண மஹரிஷியின் குமாரர் ஆருணீ. அவரின் குமாரர் ச்வேதகேது. அவர் ஒரு சமயம் பாஞ்சால தேசத்தில் நடந்த
ஸதஸ்ஸுக்கு (விவாதங்கள் நடக்கும் சபை) சென்றார்.
ப்ரவாஹணன் என்ற பாஞ்சால தேசத்து அரசன் நடத்திய சபைக்கு அவர் சென்றார்.
அந்த அரசன் ச்வேதகேதுவை சில கேள்விகள் கேட்டார்.

அரசன்:ரிஷி புத்ரரே! உமக்கு தகப்பனார் உபதேசங்களைச் செய்திருக்கிறாரா ?

ச்வேதகேது: ஆம்

அரசன்: ப்ரஜைகள் மரணம் அடைந்த பிறகு போகும் இடம் எது?
(அதாவது யாக தான பூர்த்தாதி புண்ய கர்மாக்களைச் செய்தவர்கள் எந்த லோகத்திற்கு போகிறார்கள்)

ச்வேதகேது: தெரியாது

அரசன்: திரும்பி வரும் வழி எது? (யாகாதிகளை அனுஷ்டித்தவர் திரும்பி வரும் வழி எது ?)

ச்வேதகேது: தெரியாது

அரசன்: தேவயான மார்க்கம், பித்ருயாண மார்க்கம் இவற்றின் வேறுபாடு தெரியுமா? (வேத்தபதோ தேவயானஸ்ய
பித்ருயானஸ்யச வ்யாவர்த்தனா ?)

ச்வேதகேது: தெரியாது

அரசன்: மேலுலகம் சென்றவர்கள் யார் தெரியுமா? (இந்த லோகத்திலிருந்து செல்பவர்களில் ஸ்வர்க்க லோகத்தை
அடையாதவர்கள் யார் ?)

ச்வேதகேது: தெரியாது

அரசன்: ஐந்தாவது ஆஹூதியில் மனிதன் பிறக்கிறான் என்பது
தெரியுமா? (வேத்த யதா பஞ்ம்யாமாஹூ தாவாப புருஷவசஸோ பவந்தீதி ?)

ச்வேதகேது: ஒன்றும் தெரியாது

இங்ஙனம் கேள்விகள் கேட்ட பாஞ்சால தேசத்து அரசன் ”ரிஷிபுத்ரரே, இவை ஒன்றையும் அறியாது, நீர் பெற்றுக் கொண்ட
உபதேசம் தான் என்ன ? எப்படி உபதேசம் பெற்றதாகக் கூறமுடியும் ?” என்று கேட்க,
ச்வேதகேது மானபங்கப்பட்டு
தகப்பனாரிடம் ஓடி வந்து (ஆருணி) விஷயத்தைச் சொல்ல, அவர்
தனக்கு இதைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று வருத்தப்பட்டு, அரசனிடமே கேட்கலாம் என்று புறப்பட்டார்.
ச்வேத கேதுவையும் அழைத்தார். பிள்ளை வரவில்லை.
தான் மட்டும், ப்ரவாஹணன் என்கிற அந்த பாஞ்சால தேசத்து அரசனிடம் சென்றார்.
தன்னுடைய பிள்ளையிடம் கேட்ட கேள்விகளுக்கு தனக்கு பதில் தெரியாது என்றும் அதைத் தெரிந்து கொள்ள வந்திருப்பதாகவும்
சொன்னார். அரசன் ஆருணி என்கிற உத்தாலகருக்கு உபதேசித்ததே ”பஞ்சாக்னி வித்யை”.

ச்ரத்தையோடு புண்ய கர்மாக்களைச் செய்தவன் மரணம் அடைந்ததும், உடலில் இருந்து கிளம்பிய அவனும் (ஜீவாத்மா),
ப்ராணேயந்த்ரியங்களும், பூத ஸூக்ஷ்ம ஸரீரம் எடுத்து, முதல் அக்னியான ”ஸ்வர்க்கத்தில்” ஹோமம் செய்யப்படுகிறது.
வெகு போக்யமான ஸரீரம் எடுத்து (போக ஸரீரம்) போகங்களை அனுபவித்த பிறகு இந்த பூத சுக்ஷ்ம ஸரீரம் ”மேகம்” என்கிற
அக்னியில் சேர்க்கப்படுகிறது.
பிறகு மழை மூலமாக, பூமி என்கிற நிலத்தில் விழுந்து, தான்யங்களில் புகுந்து, ஆகாரமாக புருஷனின் (நாலாவது அக்னி)
உடலில் சேர்ந்து, பிறகு ஸ்த்ரி எனப்படும் ஐந்தாவது அக்னியில் சேர்ந்து ஏறக்குறைய பத்து மாதங்கள் இருந்து உலகில் பிறக்கிறது.
இதுவே பஞ்சாக்னி வித்யை.

ஆயுள் பர்யந்தம் வரை இருந்து, மறுபடியும் மரணம் அடைந்து, முன்பு சொன்னதைப் போல ஐந்து அக்னிகளில்
இருந்து மறுபடியும் பிறந்து இப்படி எண்ணற்ற சங்கிலித் தொடராக,ஜீவன் பிறவிகள் எடுக்கிறது. இப்படி இருப்பதை
உணர்ந்து ஆத்மாவை வேறாகப் பாவித்து, உபாஸிப்பவரும் ச்ரத்தையுடன் ப்ரஹ்மத்தையே உபாஸிப்பவரும், மரணம்
அடைந்ததும் ”தேவயான மார்க்கம்” என்று சொல்லப்படும்அர்ச்சிராதி மார்க்கத்தாலே ப்ரஹ்மத்தை அடைகின்றனர்.
(அர்ச்சிராதி மார்க்கம் – இதில் விரிவாகவே சொல்லப்படுகிறது)
யக்ஞம் செய்தவர்கள், குளம் முதலியன வெட்டியவர்கள்,
ஆலயம் கட்டியவர்கள், தான தர்மம் செய்தவர்கள், பித்ருயான மார்க்கமான புகை, இரவு, க்ருஷ்ண பக்ஷம், தக்ஷிணாயனம், பித்ரு
லோகம், ஆகாசம், சந்த்ர லோகம் மூலமாக ஸ்வர்க்கம் சென்று போகத்தை அனுபவித்து பிறகு ஆகாசம், வாயு, புகை, மேகம்,
மழை, ஓஷதிகள் என்று திரும்பி வந்து புருஷனிடம் போய் சேர்வதில் முன் கர்ம வினைகளுக்கு தக்கபடி தாமதம் முதலியன
ஏற்பட்டு கர்ப்பம் மூலமாக ஸ்த்ரீயை அடைந்து – மறுபடியும் ஜனனம், மறுபடியும் மரணம். இப்படி பலப்பல ஜன்மங்கள்.
கொசு, புழு, பூச்சி போன்ற ஜந்துக்கள் பிறப்பதும், மரிப்பதுமாய் இருக்கும். இவற்றிற்கு மேலுலகம் என்பது இல்லை.
ஸ்வர்க்க லோகம் தான் அக்னி. ஸுர்யன்-ஸமித். ஸுர்ய கிரணங்கள்-புகை. அஹஸ் – அர்ச்சிஸ். சந்த்ரன்-அங்காரம்
அதாவது தணல். நக்ஷத்திரங்கள் – நெருப்பு பொறிகள்.

———–

14. வைச்வாநர வித்யை

ப்ராசீனசாலர் , சத்யஜ்ஞர், இந்த்ரத்யும்னர், ஜனர், புடிலர் – ஆகிய ஐந்து மஹரிஷிகளும் ஒன்று கூடி ”நம் ஆத்மா யாது ?
ப்ரஹ்மம் யாது ?” என்று விசாரம் செய்து, தெளிவு ஏற்படாமல்,
அருண மஹரிஷியின் புதல்வரான உத்தாலக மஹரிஷியை அணுகினர். அவரும் இதை நான் அறியேன் அல்லேன்! இதனை
அறிந்தவர் கேகய தேசத்து அரசன் அச்வபதி என்பவர். அவரை
அணுகுவோம் என்று ஆறு மஹரிஷிகளும் அச்வபதியை அடைந்தனர்.

அச்வபதி மன்னர் இந்த மஹரிஷிகளைக் கொண்டுருத் விக்குகளாக வரித்து யாகம் செய்து தக்ஷிணையைக்
கொடுக்கிறேன் என்றார். இவர்கள் வைச்வாநர வித்யையை தானமாக (தக்ஷிணை) வேண்டினர்.(அக்காலத்தில் ஞானத்தைப்
பெறுவதற்கு மிகவும் ஆவலும், அதற்கான வழிகளில் இழிவதும் மஹரிஷிகளிடையே இருந்தது )
அரசன் இவர்களை ஒவ்வொருவராக அழைத்து, வைச்வாநர உபாஸனம் இதுவரை எப்படி செய்கிறார்கள் என்று கேட்டான்.
ப்ராசீனசாலர் த்யுலோகத்தையும், சத்யயஜ்ஞர் ஆதித்யனையும், இந்த்ரத்யும்னர் வாயுவையும் ஜனர் ஆகாசத்தையும், புடிலர்
ஜலத்தையும், உத்தாலகர் ப்ருத்வியையும் உபாசிப்பதாகச் சொன்னார்கள்.
அரசன், இவை யாவும் வைச்வாநர ஆத்மாவின் அவயவங்கள். இவை இம்மை பலனை மட்டுமே அளிக்கும்.
ஆனால் இவற்றையெல்லாம் சேர்த்து ”விச்வரூப வைச்வாநர” உபாஸனம் செய்ய வேண்டும் என்று உபதேசித்தான். இதன் பலன்
”பரப்ரம்ம உபாஸனை” என்றும் சொன்னான்.
இவற்றைத் தன் உடலில் அங்கங்களாக வைத்து ப்ராணாக்னியை வைச்வாநர அக்னியாக பாவித்து, அன்னத்தை
ஐந்து ப்ராணாஹூதிகளாக முறைப்படி செய்வது. பஞ்சப்ராணங்களை இப்படி உபாஸித்தால், அவற்றின் வழியே இந்த்ரியங்கள்,
அவற்றை நியமிக்கும் தேவர்கள், அவர்கள் சார்ந்த உலகங்கள், யாவும் திருப்தி அடையும். இப்படி உபாஸிப்பவனின்
பாபம் தீயில் இட்ட பஞ்சு போல எரிந்து போகும் என்று, அரசன் சொன்னான்.

————————

15. ஸத் வித்யை
அருண மஹரிஷியின் பேரன் ச்வேதகேது. உத்தாலகரின் குமாரன். பன்னிரெண்டு வயதான ச்வேதகேது தகப்பனாரின்
கட்டளைப்படி குருகுல வாஸம் செய்து வேதத்தை எல்லாம் அத்யயனம் செய்து 24 வயதில் திரும்பி வந்தான்.
உத்தாலகர் பிள்ளையைக் கேட்டார். ச்வேதகேது
எல்லாவற்றையும் குருகுலவாஸத்தில் அறிந்து கொண்டாயா? எதைக் கேட்டு, சிந்தனை செய்து, த்யானித்தால், உலகத்தில்
எல்லாவற்றையும் கேட்டு ,சிந்தித்துத் த்யானிக்கப் பெற்றதாக ஆகுமோ அப்படி ஸர்வத்தையும் நியமிக்கும்படியானதை
ஆசார்யன் உபதேசித்தாரா ? நீ கேட்டு தெரிந்து கொண்டாயா ?

ச்வேதகேதுவுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. ஆசார்யன் இதைச் சொல்லவில்லையே, தந்தையிடமே ப்ரார்த்திப்போம்
என்று தந்தையிடம் இதற்கு அவரையே உபதேசமாக சொல்லுமாறு கேட்டுக் கொண்டான்.
உத்தாலகர் சொன்னார்.
ஸத் என்கிற வஸ்து, தான் பலவாறாக ஆகக்கடவேன் என்று ஸங்கல்பம் செய்து கொண்டு ”தேஷஸ்”ஸை
ச்ருஷ்டித்தது. ”தேஷஸ்” ஸங்கல்பம் செய்துகொண்டு ஜலத்தை ச்ருஷ்டித்தது. ஜலம் , இவ்வாறு
ப்ருத்வியை ச்ருஷ்டித்தது. இவைகள் பூமியில் பிராணிகள் என்ற பூதங்களாயின.

அந்த பிராணிகள் அண்டஜம், ஜீவஜம், உத்பிஜ்ஞம் என்று மூன்று வகை.
அண்டஜம் – முட்டையிலிருந்து உண்டாவது.
ஜீவஜம் – பிராணிகளிடமிருந்து பிறப்பது (மனிதர்களையும் சேர்த்து)
உத்பிஜ்ஞம் – பூமியைப் பிளந்து வளர்வது (மரம், செடி,கொடிகள்).
(உத்பிஜ்ஞத்தில் வியர்வையிலிருந்து உண்டாவதும் சேரும்).

ஸத் என்பது ஜீவாத்மாவோடு ப்ரவேசித்து, பலவகை நாம ரூபங்களை உண்டாக்க சங்கல்பித்துக் கொண்டு, அதற்காக
தேஜஸ், ஜலம், ப்ருத்வி என்கிற மூன்று மகா பூதங்களையும் த்ருவித்க்கரணம் செய்தது.
அதாவது ஜலத்தில் மற்ற இரண்டும்(தேஜஸ், ப்ருத்வி) கலந்திருக்கும்.
தேஜஸ்ஸில் ஜலம், ப்ருத்வி கலந்திருக்கும். ப்ருத்வியில் தேஜஸ், ஜலம் கலந்திருக்கும்
(இவற்றை பஞ்ச பூதங்கள் என்று சொல்லும்போது பஞ்சீகரணம் என்று பெயர்).

இப்படி கலந்திருப்பதிலிருந்து உடலை ச்ருஷ்டித்து,
ஜீவாத்மாவுடன் தானும் அதன் உள்ளே புகுந்து, ஒவ்வொரு வஸ்துவாகவும், ”ஸத்” என்கிற பரப்ரம்மம் இருக்கிறது .
ஒவ்வொன்றிலும் அசேதனம், சேதனன், ஈச்வரன் சேர்ந்து இருக்கிறது என்பதை அறிவாயாக.

தேஷஸ்ஸுக்கு நிறம் சிவப்பு. ஜலத்திற்கு நிறம் வெண்மை.
ப்ருத்விக்கு நிறம் கருப்பு. நெருப்பு எரியும்போது இந்த மூன்று நிறங்களையும் காணலாம்.
இப்படி மூன்று மஹா பூதங்களிலிருந்து உண்டான அன்னம், உடலை வளர்த்து, மூன்று பரிணாமங்களைப் பெறுகின்றது.
அஸாரபாகம் – மலமாக ஆகிறது.
ஸாரபாகம் -உடலில் மாம்ஸம்.
மிகவும் ஸாரமானது மனஸைப் போஷிக்கிறது.

அருந்தும் ஜலமும், நீர், இரத்தம், மனஸைப் போஷிக்கும் பாகம் என்று மூன்றாக மாறுகிறது.
தேஜோமயமான ஆகாரமும்,எலும்பு, அதற்கு வேண்டிய ஸ்னேஹம் (பசை), வாக்கை வளர்க்கும் பாகம் என
மூன்றாக மாறுகிறது.
ஆக மனஸ்-அன்னமயம்,
ப்ராணன்- ஜலமயம்,
வாக்கு – தேஜோமயம்.
”15 நாட்கள் ஆகாரம் இல்லாமல் வெறும் ஜலத்தைப் பானம் பண்ணி வந்தால்கூட, ப்ராணன் அழியாது. அப்படி இருந்து
மறுபடியும் என்னிடம் வா” என்றார் தகப்பனார்.

ச்வேதகேது, அப்படியே 15 நாட்கள் பட்டினி கிடந்து அப்போது தீர்த்தத்தை மாத்திரம் அருந்தி தகப்பனாரிடம் வந்தான்.
தகப்பனார் வேதங்களைச் சொல்லச் சொன்னார். ச்வேதகேதுவால் எதுவும் சொல்லமுடியவில்லை.
அப்போது ”நீ சாப்பிடாத போது16 அம்சங்களில் 15 அம்சங்கள் போய் விட்டன. இப்போது சாப்பிட்டு விட்டு வா” என்றார்.
ச்வேதகேது சாப்பிட்ட பிறகு சொல்வதற்கு பலம் வந்தது.அன்னத்தால் புஷ்டி ஏற்படுகிறது என்று விளக்கினார்.

இதைப் போல எல்லா உலகுக்கும் காரணமான வஸ்து எல்லாவற்றிலும் உட்புகுந்து நியமிக்கும்
சக்தியோடு இருக்கிறது என்று சொன்னார்.
பலவகை புஷ்பங்களிலிருந்து தேனீக்கள் தேனைச் சேகரிக்கின்றன. அந்த தேன் துளிகள், ”நான் இந்த புஷ்பத்தைச்
சேர்ந்தவன்” என்று தனியாகப் பிரித்துச் சொல்ல முடியுமா ?
அப்படியே ”ஸத்” எனப்படும் பராமாத்மாவிடம் ஒன்றின ஜீவாத்மாக்கள், தங்களைத் தாங்களே தெரிந்து கொள்ள இயலாது.
பல நதிகளிலிருந்து தண்ணீர் ஸமுத்திரத்தில் சேர்ந்த பிறகு அவை இன்னின்ன நதியின் ஜலம் என்று பிரித்து சொல்ல
முடியுமா ? முடியாது.

ஒருவன் மரணம் அடையும் தருவாயில் அவனைச் சேர்ந்தவர்கள் அருகில் அமர்ந்து சில கேள்விகள் கேட்கும்போது
அவற்றை அவன் உணர்வதில்லை. ஏனெனில் அவனது வாக்கு மனஸ்ஸிலும், மனஸ் ப்ராணனிலும், ப்ராணன் தேஜஸ் எனப்படும்
பூத ஸக்ஷ்ம சரீரத்திலும் அதன் காரண வஸ்துவான பரமாத்மாவிடமும் லயித்து விடுவதால், உணர்வதில்லை.
உலகெங்கும் பரமாத்மா இருக்கிறான் என்றும், அவன் அழிவற்றவன், தோஷமற்றவன், எல்லா உயிர்களுக்கும் அவன்
ஆத்மா, உனக்குள்ளும் அவன் இருக்கிறான் என்று ச்வேதகேதுவுக்கு உத்தாலகர் உபதேசித்தார்.

இந்த ஸத்வித்யையில் 16 கண்டங்கள்
இவற்றில் சொல்லப்பட்டவை.
(1) ”ஸத்” என்பது எல்லா உலகத்துக்கும் காரணம்.
(2) ”ஸத்” முதலில் ”ஸமஷ்டி ச்ருஷ்டி” செய்கிறது.
(3) பூதங்களை ஒன்றோடொன்று சேர்த்து ”வியஷ்டி” ச்ருஷ்டி செய்கிறது.
(4) த்ருவித்கரணம் என்கிற பூதங்களின் சேர்க்கைசெய்யப்படுகிறது.
(5) தேஜஸ், ஜலம், ப்ருத்வி இவற்றால் உடல் வளர்க்கப்படுகிறது.
(6) அன்னத்தின் நுண்ணிய பாகம் வாக், ப்ராணன், மனஸ்ஸை வளர்க்கிறது.
(7) இது இல்லையேல் மனஸ் க்ஷீணமாகி விடுகிறது.
(8)”ஸத்” – சேதனங்களில் லயஸ்தானம்.
(9) இப்படி லயிக்கும் ஜீவன்கள் கணக்கில்லாதவை
(10) கடலில் இருந்து ஜலம் ஆவியாகி, மழையாகி, நதியாவது போல சேதனர்கள் (ஜீவன்கள்) ஸத்திலிருந்து புறப்படுவர்.
(11) இந்த சேதனர்களுக்கு அழிவில்லை.
(12) ”ஸத்” என்பது மிக மிக ஸக்ஷ்மமானது
(13) ”ஸத்” – எங்கும் கரந்து ,பரந்து உள்ளது.
(14) ஆசார்யன் மூலமாக இதை அறிய வேண்டும்
(15) இந்த வித்யையை உபாஸிப்பவனுக்கு எல்லா அநிஷ்டமும் போகும்
(16) அதனால் மீண்டும் ஸம்ஸார பந்தம் இல்லை.
உத்தாலகரின் உபதேசம் உலகில் உள்ளோர் மனங்களில் நன்கு பதியும்படி இருப்பதாகச் சொல்வர்.

——————————–

16. பூம வித்யை
நாரதர், ஸனத்குமாரரை அணுகி உபதேசம் செய்யும்படி ப்ரார்த்தித்தார். அவரது மனம் கலங்கியிருந்தது. நாரத மஹரிஷி
யாவும் அறிந்தவர். அவருக்கே கலக்கம் என்றால்?
ஸனத்குமாரர்,நாரதரைப் பார்த்து உமக்கு தெரிந்ததையெல்லாம் முதலில் சொல்லுங்கள் என்றார்.
நாரதர் நான் எல்லா ஸப்தங்களையும்அறிந்திருக்கிறேன் என்றார்.
இதை உபாஸித்து (ப்ரம்மமாக)ஸப்தங்கள் கேட்குமிடங்களிலெல்லாம்
ஸஞ்சரித்து ஆனந்தம் அடையலாம் என்று ஸனத்குமாரர் சொல்ல,
நாரதர் இதற்கு மேலும் உண்டா என்று கேட்டார். ஸம்பாஷணை தொடர்ந்தது.

ஸப்தம், வாக்கு, மனஸ், ஸங்கல்பம், சித்தம், த்யானம், விஜ்ஞானம், பலம், அன்னம், தண்ணீர், தேஜஸ், ஆகாயம்,
நினைவு, ஆசை என்று பதினான்கையும் ப்ரம்மமாக உபாஸிக்கலாம் என்று ஸம்பாஷணை தொடர்ந்தது.

இதற்கும் மேலானது எது என்கிற கேள்வி வந்தபோது,
”ப்ராணனை” மேலானதாக உபாஸிக்கலாம் என்றும், ப்ராணன் என்பது ஜீவாத்மா என்றும்
இந்தப் ப்ராணனை உயர்ந்த புருஷார்த்தமாக உபாஸிக்கலாம் என்றும் சொன்னார்.

ஸனத்குமாரர் மேலும் சொன்னார்.
இதை விட ”ப்ரம்மத்தை” உபாஸனை செய்வது மேலானதாகும். அதற்கு உபாஸனம், மனனம், இதில் ச்ரத்தை,
இதில் அசைக்க முடியாத பற்றுதல், அதற்கு தகுந்த செய்கைகளில் ஊக்கம், இப்படி இருந்து அந்த ப்ரம்மத்தை
உபாஸிப்பது ”பூமா” எனப்படும். இதற்கு மேம்பட்டது இல்லை.
இது எல்லாவற்றிற்கும் ஆத்மா-பரமாத்மா.
இப்படி உபாஸனம் செய்பவன், கர்மங்களிலிருந்து விடுபடுகிறான் இதற்கு மனஸ் சுத்தம் வேண்டும்.
மனஸ் சுத்தமாவதற்கு சுத்தமான ஆகாரத்தைச் சாப்பிட வேண்டும். இப்படி ஸனத் குமாரர் பதில் சொன்னார்.
இவரை ”ஸ்கந்தர்” என்றும் சொல்வதுண்டு.

——

17. தஹர வித்யை

இந்த ஸரீரத்திற்கு ”ப்ரஹ்ம புரம்” என்று பெயர். இதன் உள்ளே இருக்கிற புண்டரீகம் (தாமரைப்பூ) போன்ற சிறிய ஹ்ருதயத்திலே
ஆகாசம் இருக்கிறது. வெளியில் உள்ள ஆகாசத்தைப் போலவேதான், இதுவும். உடல் அழியும்போது, புண்டரீகம்
அழியும் போது இவ்வாகாசம் அழிவதில்லை. இப்படி உள்ள ஆகாசத்தின் உள்ளே கல்யாண குணங்களான எட்டு –
இதை உபாஸிக்க வேண்டும். இதனால் உபாஸிப்பவன் –
1) அபஹதபாப்மா (வினை இல்லாதவன்)
2) விஜர: (மூப்பில்லாதவன்)
3) விம்ருத்யு (மரணத்திற்கு இடமாகாதவன்)
4) விசோக: (துக்கமற்றவன்)
5) விஜிகத்ஸ: (பசியற்றவன்)
6) அபிபாஸ: (தாகமற்றவன்)
7) ஸத்யகாம: (நிலையான போக்யங்களை உடையவன்)
8) ஸத்யஸங்கல்ப: (தடையில்லாத ஸங்கல்ப சக்தியுள்ளவன்)
— ஆக எட்டு குணங்களை அடைகிறான்.

வேதத்தில் சொல்லப்பட்ட சில கர்மாக்களைச் செய்து புண்ணிய பலன்களைப் பெற்றாலும், அதை அனுபவித்ததும்
யாவும் அழிந்து விடும்.
ஆனால் ஆத்மாவையும் அதன் குணங்களையும் உபாஸிப்பவனுக்கு எல்லா பலன்களும் உண்டு.
இந்த பரமாத்மாவின் கல்யாண குணங்களை நாம் அறியாமல் இருப்பது நமது பாபத்தாலே. பூமிக்குள்ளே புதையல்
இருந்தும், பூமியின் மேலே நடப்பவனுக்கு அது தெரிவதில்லை.
அதைப் போல பரமாத்மாவை அறியாமல் இருக்கிறோம். இவன் ஹ்ருதயத்திலே இருக்கிறான். உபாஸகனாகிய ஜீவாத்மா
உடலிலிருந்து பிரிந்த பிறகு பரஜ்ஞோதியை அடைகிறான் என்பது இந்த பரமாத்மாதான்.
இவன் —இந்தப் பரமாத்மா—-சேதனம், அசேதனம்எல்லாவற்றையும் ஆள்கிறவன். எல்லா உலகங்களையும் எல்லா
பூதங்களையும், எல்லா வஸ்துக்களையும் ஒன்றோடொன்று கலந்து அழியாதபடி ஆங்காங்கு நிறுத்தி அதன் அதன்
தன்மையோடு காக்கின்றான்.
இவனிடத்தில் எந்த தோஷமும் இல்லை. இவனை அடைவதால் ”தாப த்ரயம்” நீங்கும்.

இவனைப் பெற, ப்ரம்மச்சர்யம் வேண்டும்.
ப்ரம்மச்சர்யத்தாலே ப்ரம்ம லோகத்தில் ”அரம்”என்றும் ”புண்யம்”என்றும் சொல்லப்படும் இரண்டு ஸமுத்திரங்களையும்
”ஐரம்மதீயம்” என்கிற தடாகத்தையும், ”ஸோமஸவனம்” என்னும் அரச மரத்தையும் தாண்டி ”அபராஜிதை” என்கிற ப்ரம்மத்தின்
(பரமாத்மா) ராஜதானிக்குச் சென்று, பரமாத்மா எழுந்தருளியுள்ளஅழகிய ஸ்தானத்தை அடைந்து ப்ரும்மானுபவம் பெறுகிறான்.
(பரமபதம் அடைகிறான்).

ஹ்ருதயத்தில் உள்ள எல்லா நாடிகளுக்கும் ஸூர்ய க்ரணங்களுக்கும் சம்பந்தம் உண்டு. ஹ்ருதயத்தில் உள்ள 101
நாடிகளில் ஒரு நாடி தலைப் பக்கம் உள்ள நாடியின் வழியே ஸூர்ய மண்டலம் போய் மனோவேகமாய் பரமபதம்
(வைகுண்டம்) சேர்ந்தால் மேலே சொன்ன பலன்கள் உண்டு.
இதுவே ”தஹர வித்யை” எனப்படுகிறது.

————–

18. ப்ரஜாபதி வித்யை

மேலே சொன்ன ”பர” வித்யைக்கு இந்த ப்ரஜாபதி வித்யை அங்கம் (முண்டகோபநிஷத்தைப் பார்க்க).
ப்ரஜாபதி தன் பிள்ளைகளான தேவர்களும், அசுரர்களும் க்ஷேமமாக இருப்பதற்காக ஆத்மாவை எட்டு குணங்களோடு
அறிந்தவனுக்கு ஸர்வ லோகமும், ஸர்வ சுகமும் உண்டு என்பதாக சொன்னதே இந்த வித்யை.

தேவர்களில் ப்ரதானன் இந்திரனும், அசுரர்களில் ப்ரதானன் விரோசனனும், 32 வருஷ காலம் ப்ரம்மச்சர்யம் அனுஷ்டித்து
ப்ரஜாபதியை அணுக அவர், ”ஆத்மா கண்ணில் தெரிகிறதா ?” என்று கேட்டார்.
கண்ணில் இருக்கும் நிழலை-அதன் பிரதிபிம்பம் தான் ஆத்மா என்று நினைத்தனர். விரோசனன் இதனையே
அசுரர்களுக்கு உபதேசித்தான். அதனால் அவர்கள் தேஹாத்மவாதிகள் ஆனார்கள்.

இந்த்ரனுக்கு திருப்தி இல்லை.
அவன் ப்ரஜாபதியை மறுபடியும் கேட்க, அவர் படிப்படியாக ஸ்வப்ன அவஸ்தையில் உள்ள ஆத்ம ஸ்வரூபம், உறக்கத்தில்
உள்ள ஆத்மஸ்வரூபம், இவற்றைச் சொல்ல இப்பொழுதும் இந்த்ரன் திருப்தி அடையவில்லை.

101 வருஷங்கள் ப்ரம்மச்சர்யம் இருந்து ”தஹர வித்யையில்” பகவானுக்கு உள்ள எட்டு குணங்களும் இவனுக்கும் உண்டு.
இவன் ,உடலில் இருந்து புறப்பட்டு பரமாத்மாவை அடைந்து சுகப்படுகிறான் என்று உபதேசித்தார். இந்த்ரனும் திருப்தி அடைந்து
தேவர்களுக்கு இதை உபதேஸித்தான். ஆத்மஸ்வரூபத்தை இந்த வித்யையினாலே ஜ்ஞான யோக பலத்தாலே அடைந்து
பக்தியோகத்தில் இழிந்து மோக்ஷம் அடைவதே பலன்.

”பகவானை கரிய திருமேனி உடையவனாகவும், சேதனஅசேதனங்களுக்கு அந்தர்யாமியாகவும் இருவகைகளாக
உபாஸிக்கிறேன். குதிரை, மயிரை சிலிர்த்து உதறுவது போலே பாபங்களை உதறித்தள்ளி ராகுவினின்று விடுபட்ட
சந்த்ரன்போலே சரீரத்திலிருந்து விடுபட்டு பரமபதம் சேருகிறேன்.”
ஸத்வ குணத்தை அழித்து சுக்லதாதுவை உட்கொள்ளும் ஜன்மம் இல்லை.

இந்த ஸாந்தோக்ய உபநிஷத்தில் சொன்ன வித்யை யாவும்
ப்ரஹ்மா ப்ரஜாபதிக்கும், ப்ரஜாபதி மனுவுக்கும், மனு ப்ரஜைகளுக்கும் உபதேசித்தது.
ஆசார்யனை அணுகி உபதேசம் பெற்று இந்த்ரியங்களை ஆத்மாவிடம் செலுத்தி (இந்த்ரியங்களை அடக்கி)
வைதீக கர்மாக்களைச் செய்து, ஜீவஹிம்சை செய்யாமல் மேற்சொன்ன வித்யைகளில் ஒன்றை உபாஸிப்பவர் ஆயுட்காலம்
முடிந்ததும் ப்ரஹ்மத்தை (பரமாத்மா) அடைகிறான்.

ப்ரம்மத்தை அறிவது உபநிஷத்துக்களைக் கொண்டு. அந்த ப்ரம்மத்தை நான் உபாஸிப்பேன். ப்ரம்மம் என்னை ஆதரிக்கட்டும்.
ஆத்ம விஷயங்களில் ஈடுபட்ட எனக்கு உபநிஷத்துக்களில் சொல்லப்பட்ட தர்மங்கள் எல்லாம் ஸித்திக்க வேண்டும்.
அவை என்னை ரக்ஷிக்க வேண்டும்.

——————-

19. புருஷாத்ம வித்யை

இது ப்ரஹதாரண்யத்தில் உள்ளது
முதன் முதலில் ஆத்மா ஒரே புருஷ ரூபமாக இருந்தது. இதற்கு (பரமாத்மா) புருஷன் என்றே பெயர்.
தனிமையில் சுகம்பெறாமல், இரண்டாவதாக ஒன்றை விரும்பி ஸ்த்ரீயும், புருஷனும் சேர்ந்ததோர் உருவமாகி,
பிறகு ஸ்த்ரீ வேறு, புருஷன் வேறு என்று பிரித்துக் கொண்டது.

இருவரும் புணரும் போது, தான் பிறப்பித்த ஸ்த்ரீயோடு தானே புணர்வது சரியல்ல என்று கருதி,பரமாத்மா ஸங்கல்பித்தவுடன் ,
ஸ்த்ரீயானவள் பசுவாக மாறினாள்.
இங்ஙனம், ஒவ்வொன்றிலும்,ஸ்த்ரீ புருஷ பேதம், எல்லா ஜீவராசிகளிலும்
ச்ருஷ்டி செய்து,தன் உள்ளங்கையிலிருந்து பரமாத்மா அக்னியைப் படைத்தார் .

தேவர்கள் ச்ருஷ்டி, ஸனக, ஸனந்தாதி முதலியவர்களின் ச்ருஷ்டி செய்யப்பட்டது. அவை ஒவ்வொன்றிலும் பரமாத்மா உட்புகுந்தார் .

அந்த ஆத்மாவை உபாஸிக்க வேண்டும்.அடையப்பட வேண்டியது அதுவே. இதற்கு ”ஆத்மோபாஸனம்” என்று பெயர்.

இவனுக்கு தேவர்களும் இடைஞ்சல் செய்ய மாட்டார்கள்.
ஆனால், தேவர்களையோ மற்ற தேவதைகளையோ உபாஸிப்பவன், அவர்களுக்கு தாஸனாய், மாடு போல் உழைக்க
வேண்டியவனாகிறான். மனிதர்களுக்கு ஆத்மஜ்ஞானம் ஏற்படுவதை தேவர்களும், இதர தேவதைகளும் விரும்புவதில்லை.
தனக்கு உழைக்கும் மாடு தன்னை விட்டு போய் விடுகிறது அல்லவா !
ஒருவன் பூர்ணனாவதற்கு, மனைவி, புதல்வன், பணம், நல்ல செய்கை என்கிற நான்கும் பொருந்தியிருக்க வேண்டும்.

வாக்கு-மனைவி,
ப்ராணன் – புதல்வன்,
கண்ணும், காதும்-பணம்.
உடலே -நல்ல செயல்களைச் செய்ய உதவுகிறது.
இவ்வளவாக ஜீவன் பூரணணாக இருந்து பரமாத்மாவை உபாஸிக்க வேண்டும்

அனைவருக்கும் தந்தையான பரமாத்மா ஏழு அன்னங்களை உண்டாக்கினான். அவற்றில் ஒன்றை எல்லாருக்கும் பொதுவாக
ஆக்கினான். (இது நாம் தினந்தோறும் உண்பது. தேவர்கள், விருந்தினர் இவர்களுக்கு அளித்த பிறகே நாம் உண்ண வேண்டும்.
ஏனெனில் இது யாவருக்கும் பொது அல்லவா!)

தேவர்களுக்கு இரண்டை அளித்தான் (வேதங்களிலும், ஸ்ம்ருதிகளிலும்
அவர்களுக்காக விதிக்கப்பட்ட தர்ஸபூர்ண மாஸங்கள் என்கிற கர்மாக்கள்)
ஒன்றை பசுவுக்கு அளித்தான். (இது பாலைக் கொடுக்கிறது).
மூன்றை தனக்காக வைத்துக் கொண்டான் (மனம், வாக்கு, ப்ராணன்)

எல்லா இந்த்ரியங்களுக்கும் மனஸே முக்கியம்.
மனஸ் வேறு ஏதாவதில் லயித்திருந்தால் கண்ணில் பட்டது காணப்படாது. காதில் கேட்டது கேட்கப்படாது.
விருப்பம், ஸங்கல்பம், ஐயம்,நம்புதல், அவநம்பிக்கை, தைர்யம், அதைர்யம், வெட்கம், அறிவு,
பயம் — இவை எல்லாவற்றுக்கும் காரணம் மனஸே. இப்படியே வாக்கு என்கிற இந்த்ரியமும் முக்கியமானது.
மூன்றாவது ப்ராணன்.
இது ப்ராண-அபான- வ்யான-உதான-ஸமானங்களாக இருக்கின்றன. மூன்று அன்னங்களாலே ஆத்மா தன்னுடைய
நிலையைப் பெறுகிறது.

இவற்றில் ப்ராணனுக்கு தேவதை சந்த்ரன். அவனுக்கு 16 கலைகள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலையாக 15 கலைகள்
அழியும். அவையே மறுபடியும் வளரும். 16வது கலை அழிவற்றது. அமாவாஸ்யை அன்று சந்த்ரன் இந்த கலை (16வது
கலை)மூலம் எல்லா பிராணிகளுக்குள்ளும் புகுந்திருப்பான்
.
சந்த்ரனைப் போலவே புருஷனுக்கும் 16 கலைகள். தானே ஒரு கலை. அது அழிவற்றது. அழியும் கலைகள் 15. இது அவருடைய
சொத்து. சொத்துகள் அழிவதும், வளர்வதும் நாம் பார்க்கிறோம்.

இப்படிப்பட்ட புருஷன், புத்திரனைப் பெற்று மனுஷ்ய லோகத்தையும், காம்ய கர்மங்களைச் செய்து பித்ரு லோகத்தையும்,
பக்தியோகம் செய்து தேவ லோகத்தையும் (பரமபதம் என்று இங்கு பொருள் கொள்க) பெற வேண்டும்.

வாயு தேவதை எப்போதும் வீசிக் கொண்டே இருக்கிறது.
அக்னி எரித்துக் கொண்டே இருக்கிறது. வெயில் காய்ந்து கொண்டே இருக்கிறது. நிலவும் அப்படியே.
இவைகளுக்கெல்லாம் அஸ்தமனம் என்பது உண்டு
ஸுர்ய,சந்த்ரர்கள் வானத்தில் சஞ்சரிப்பதற்கு வாயுவின் சகாயம் வேண்டும். வாயுவே உயர்ந்தது. ப்ராணனும் ஒரு வாயுவே.

இந்த்ரியங்களில் ப்ராணன் உயர்ந்தது. ப்ராணனுக்கு மேற்பட்ட ஜீவாத்மாவும், பரமாத்மாவும் கூட ப்ராணன் என்றே
அழைக்கப்படுவது உண்டு.
ப்ராணன் அம்ருதம்; ஆத்மா அம்ருதம்.
இப்படி ஜகத்காரணனான பரமாத்மாவை உபாஸிக்க வேண்டும்.

—————-

20 – பாலாகி வித்யை

(இதுவும் ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் உள்ளதே).
அஜாத சத்ரு என்கிற அரசனிடம், பாலாகி என்பவன் தன்னுடைய ப்ரஹ்ம ஜ்ஞான அறிவை வெளிப்படுத்த ஆவல்
கொண்டு அரசனிடம் சென்று தன்னுடைய அறிவாற்றலை வெளிப்படுத்தினான்.
ஸுர்ய மண்டலம், சந்த்ர மண்டலம்,மின்னல், ஆகாயம் இப்படி ஒவ்வொன்றாகச் சொல்லி அங்கேயுள்ள ஆத்மாவை (ஜீவாத்மா)
ப்ரம்மமாகச் சொன்னான்.
அஜாதசத்ரு இதை ஒப்புக் கொள்ளாமல், இவற்றை மறுத்து, வாதிட்டான். பாலாகி அஜாதசத்ருவைப் பணிந்து, ப்ரம்மத்தைப்
பற்றி சொல்லுமாறு கேட்டான்.
அஜாதசத்ரு பாலாகியை அழைத்துக் கொண்டு, தூங்குபவன் அருகில் சென்று, அவனை எழுப்பினான்.
அவன் எழுந்திருக்காமல் இருக்கவே, கையால் அசைத்து எழுப்பினான். அவன் எழுந்தவுடன், அரசன்
பாலாகியைப் பார்த்து ”இப்போது விழித்தவன், உறங்கும்போது எங்கு இருந்தான் என்பது உனக்கு தெரியுமா? எங்கேயிருந்து
வந்தான் என்பது தெரியுமா ?” என்று கேட்டான். பாலாகிக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.

அரசன், இப்போது, அவனுக்கு உபதேசித்தான்.
தூங்க ஆரம்பிக்கும்போது, இந்த்ரியங்கள் வேலை செய்வதிலிருந்து ஓய்வு பெற ஆரம்பிக்கின்றன. ஜீவன், ஸ்வப்னம்
காண இருக்கும் நாடிகளில் சென்று ஸ்வப்னங்களைக் கண்டு, பிறகு ஹ்ருதயத்திற்குச் சென்று, அங்கிருந்து ஆகாசம் சென்று
பரமாத்மாவிடம் உறங்குகிறது. இப்படி தூங்கி எழுந்திருக்கும்போது பரமாத்மாவிடமிருந்து வெளிப்படும்போது
இந்த்ரியங்களுடன் சேர்ந்து எல்லா உணர்ச்சிகளையும் திரும்பப் பெறுகிறது.
(கௌஷீதகி உபநிஷத்தில் இது விவரமாகச் சொல்லப்பட்டுள்ளது).

ஜீவாத்மா அதாவது ப்ராணன் – பசுங்கன்று. இதற்கு கர்ப்பஸ்தானம் ஹ்ருதயம். இது வெளிப்பட்டு விளங்கும் ஸ்தானம்
உடல். அன்னம் என்கிற கயிற்றால் கட்டப்பட்டுள்ளது.
இப்படி உணர்ந்தவருக்கு ஏழு சத்ருக்களால் அழிவில்லை.
(இரண்டு கண், இரண்டு காது, இரண்டு நாசித்வாரம், வாய் ஆக ஏழு).
தலையில் நிலைத்துள்ளது ப்ராணன்.

ப்ரம்மத்திற்கு இரண்டு ரூபங்கள்.
மண், நீர், நெருப்பு இதில் தங்கியிருப்பது ஒரு ரூபம்.–இது மூர்த்தரூபம்.
வாயுவும்,ஆகாயமும் மற்றொரு ரூபம் – இது அமூர்த்தரூபம்.
இது சத்யத்திற்கெல்லாம் சத்யம். (சத்யம்-ஜீவாத்மா. அவற்றுக்கெல்லாம் சத்யம் -ப்ரம்மம்-பரமாத்மா).

————

21. மைத்ரேயி வித்யை

(இதுவும் ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் உள்ளதே)
யாஜ்ஞவல்க்யர் மஹரிஷி . அவருக்கு இரண்டு மனைவிகள்.

மூத்த மனைவி மைத்ரேயி. இளைய மனைவி காத்யாயனி.
இது யாஜ்ஞவல்க்யருக்கும் அவரது மனைவி மைத்ரேயிக்கும் நடந்த ஸம்வாதம்.

மைத்ரேயி – பூமி அளவு பணம் கிடைத்தாலும், அதனால் மோக்ஷம் பெற முடியுமா ?

யாஜ்ஞவல்க்யர் – முடியாது. சொத்து இருந்தால் இந்த உலக வாழ்க்கைக்கு உபயோகப்படும். மோக்ஷம் பெற இயலாது.

மைத்ரேயி – சொத்தை பிரித்துக் கொடுப்பதாகச் சொன்னீர்கள். மோக்ஷத்திற்கு உபயோகப்படாதது எனக்கு எதற்கு?
மோக்ஷ உபாயத்தை உபதேசியுங்கள்.

யாஷ்ஞவல்க்யர் – மிக்க சந்தோஷம். நான் சொல்வதை கவனமாகக் கேள்.
ஒருவருக்கொருவர் பிரியமாவது என்பது நாம் நினைப்பதால் அல்ல.
பரமாத்மா அப்படி நினைத்தால்தான் அது நடக்கும். எப்போதும் ப்ரியமாக இருக்கும் பரமாத்மாவை உபதேசம்
மூலமாக கேட்டு, அறிந்து, த்யானித்து ,அனுபவிக்க வேண்டும். இதை அடைய இந்த்ரியங்களை அடக்க வேண்டும்.
இந்த பரமாத்மா, விஜ்ஞானாத்ம (ஜீவாத்ம) ஸ்வரூபனாய் பஞ்ச பூதங்களோடு கலந்து வருகிறது.

மைத்ரேயி – இதை விளக்க வேணும்

யாஜ்ஞவல்க்யர் – எல்லாம் ஆத்மாவே என்று அறியாதவன்-
அறிகிறவன்,
அறியும் கருவி,
அறியப்படுபவது இவற்றை வெவ்வேறாக பார்ப்பான்.
எங்கும் வ்யாபித்துள்ள ஆத்மாவாகவே எல்லாவற்றையும் காண்பவனுக்கு இப்படி வேறுபாடு தோன்றாது.
எதைக் கண்டாலும் ஆத்மாவைக் காண்பதாகவே தோன்றும்.

—————

22 – பர்யங்க வித்யை (இது கௌஷீதகி உபநிஷத்தில் உள்ளது)

சித்ரன் என்கிற அரசன், அருணரின் புதல்வரை யாகம் செய்விக்க வேண்டினான். அவர் தன் புத்ரனான ச்வேதகேதுவை
அனுப்பினார். அரசன், ச்வேதகேதுவைப் பார்த்து, ”என்னையோ மற்றவரையோ (மற்ற அரசர்களையோ) யாகம் செய்வித்து
அதனால் அடையப்படும் லோகத்தைப் பற்றிய ரகஸ்யம் உள்ளதா? அது உங்களுக்கு தெரியுமா? அதன் மார்க்கம் என்ன?”
என்று கேட்டார்.
ச்வேத கேதுவுக்கு பதில் சொல்ல தெரியவில்லை.
தகப்பனாரிடம் திரும்பி விட்டான். தகப்பனாரிடம் நடந்ததைச் சொன்னான். தகப்பனாருக்கும் தெரியவில்லை. அவர் அரசனிடம்
சென்று இதை தெரிவிக்க வேண்டினார்.

அரசன் சொன்னதாவது – இவ்வுலகில் மரணம் அடைபவர் சந்த்ர லோகம் செல்கின்றனர். சந்த்ரன் மேலுலகத்திற்கு வாசல்
போன்றவன். சந்த்ரன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்பவரை மேலே செல்லுமாறு அனுமதிக்கிறான். பதில்
தெரியாதவனை மழை மூலமாகத் திருப்பி, உலகத்திற்கே அனுப்புகிறான். அப்படி திரும்பியவன் இவ்வுலகில் மறு பிறவி
எடுக்கிறான்.

சந்த்ரன் ”நீ யார்?” என்று கேட்க,
பஞ்சாக்னி வித்யையில் சொல்லியபடி ஐந்து நிலைகளைப் பெற்று, பிறவியை அடைந்தவன். இனி என்னை அவ்வாறு பிறக்குமாறு
விடவேண்டாம், பகவான் சத்யம் என்று தவத்தாலே உணர்ந்தேன் என்று பதில் சொல்பவனை சந்த்ரன் விட்டு விடுகிறான்.
அப்படிச் சொல்பவனை மேலே (அர்ச்சிராதி மார்க்கத்தில்) போக அனுமதிக்கிறான். அப்படி அனுமதிக்கப்பட்டவன் அக்னி லோகம்,
வாயு லோகம், வருண லோகம், ஆதித்ய லோகம், இந்த்ர லோகம், ப்ரம்ம லோகம் என்று இப்படி அர்ச்சிராதி மார்க்கத்தில் செல்கிறான்.

ப்ரம்ம லோகத்தில் அரம் என்கிற மடு உள்ளது.
முஹூர்த்தர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள், அயலாரை தடியால் அடித்து விரட்டுவார்கள். இதற்கு மேலே ”விரஜை ”
என்கிற ஆறு. திவ்யம் என்கிற வ்ருக்ஷம். ”ஸாலஜயம்” என்று சொல்லப்படும் ”அபராஜிதம்” என்கிற ராஜதானி.
இதற்கு இந்த்ரன்,ப்ரஜாபதி என்று இரண்டு த்வாரபாலகர்கள்.
”ப்ரபுவிமிதம்”,”விஷப்ரமிதம்” என்று சொல்லப்படும் விசாலமான மண்டபம்.
”விசக்ஷணை” என்கிற பீடம். அமிதௌஜஸ் எனப்படும் அளவற்ற ப்ரகாசம் உடைய கட்டில். எல்லாவற்றையும் தங்கள் ஸௌந்தர்யத்தால்
கொள்ளை கொள்ளும் தேவியர்கள். எண்ணற்ற ஸ்த்ரீ ரத்னங்கள்.
இத்தகைய ப்ரம்ம லோகத்திற்கு இவன் வருகிறான்.

பகவான் ”விரஜை ” ஆற்றின் அருகே வந்து கட்டளையிட்டதும்,
கையில் மாலையுடன் 100 திவ்ய அப்ஸரஸ்கள், மையை வைத்துக் கொண்டு 100 திவ்ய அப்ஸரஸ்கள், கந்தப் பொடி, பட்டு வஸ்த்ரம்,
ஆபரணங்கள் இவைகளை ஏந்திக் கொண்டு நூறு, நூறு அப்ஸரஸ்கள்-ஆக 500 அப்ஸரஸ்கள் இவனுக்கு அலங்காரம் செய்கின்றனர்.

அர்ச்சிராதி மார்க்கத்தில் வந்த ஜீவன் (முக்தன்) ”அரம்” என்கிற மடுவை நினைத்த மாத்திரத்தில் தாண்டி,
முஹுர்த்தர்கள் விலகி வழிவிட ”விரஜை ” ஆற்றையும் நினைத்த மாத்திரத்தில் கடந்து,
”திவ்யம்” என்கிற மரத்தை அணுகி, ப்ரம்மத்தின் நறுமணம் இவனுடைய சரீரத்திற்கு ஏற்பட
”ஸாலஜ்யம்” என்கிற இடத்திற்கு வந்து
”அபராஜிதம்” என்கிற அரண்மனையில் புகுந்து ”ப்ரம்ம தேஜஸ்” ஜொலிக்க,
இந்த்ரன்,ப்ரஜாபதி என்கிற இரு த்வாரபாலகர்கள் வழிவிட, ”விஷப்ரமிதம்” என்கிற மண்டபத்தை அடைந்து,
”ப்ரம்மயசஸ்” வந்து சேர,விசக்ஷணை என்கிற பீடத்தை நெருங்கி, ”அமிதௌஜஸ்” என்கிற கட்டிலை அடைய,

பகவான் இவனை ”நீ யார் ? ” என்று கேட்க,

முக்தன் ”ஸ்வர்க்கத்திலிருந்து ஆகாசம், வாயு, மேகம் முதலிய
வழிகளில் கீழே இறங்கி எண்ணற்ற பிறப்புகள் எடுத்த ஜீவாத்மா.
நீர் எல்லா ஜீவாத்மாக்களுக்கும் ஆத்மா அதாவது பரமாத்மா. அடியேனுக்கும் ஆத்மா.
நான் மனஸ், வாக்கு, உடல் மற்றும்இந்த்ரியங்களின் உதவியுடன் ஆண், பெண், அலி என்று பற்பல ஜென்மம்,உருவங்கள் எடுத்தேன்.
உடல், இந்த்ரியம், மனஸ்,ப்ராணன், அறிவு இவற்றையெல்லாம் விட நான் மேலானவன் என்று தெரிந்து கொண்டேன்.
தேவரீரை ஆத்மாவாக உடையவன். தேவரீருக்கே சேஷபூதன்” என்று பதில் சொல்கிறான்.

பர்யங்க வித்யையான இதில் சொல்லப்பட்டபடி பகவானை உபாஸிப்பவர் பகவானின் திருவடிகளை அடைவர்.

—————

23. ப்ரதர்தந வித்யை
(இதுவும் கௌஷீதகி உபநிஷத்தில் உள்ளது).

திவோதாஸன் என்பவரின் குமாரன் ப்ரதர்தனன். மிகவும் பராக்ரமசாலி. சண்டைகளில் இந்த்ரனுக்கு உதவி செய்தவன். ஒரு
சமயம் இந்த்ரன் இடமான ஸ்வர்க்க லோகம் சென்றான். இந்த்ரன் இவனிடம் ”வரன் அளிக்கிறேன் கேள்” என்றான். ப்ரதர்தனன்
”மனிதனுக்கு எது ஹிதமோ, அதையே வரமாக எனக்கு அளிப்பாயாக” என்றான்.

இந்த்ரன் சொன்னதாவது:
என்னை உபாஸனை செய். என்னை உபாஸித்தால் மாத்ருஹத்தி, பித்ருஹத்தி, களவு, கர்ப்பஹத்தி போன்றவற்றால்
வரும் பாபம் கிடையாது. பாபம் செய்ததற்காக முகம் கருக்காது.
நான் ப்ராணன். என்னை ஆயுள் என்றும், அம்ருதம் என்றும் உபாஸனம் செய். இதனால் முழு ஆயுளைப் பெற்று ஸ்வர்க்க
லோகத்திலும் அழியாமல் இருப்பாய்.

ப்ராண வாயு எல்லா இந்த்ரியங்களிலும் வ்யாபித்து இந்த்ரியங்களை வேலை செய்யச் செய்கிறது. ப்ராணனே
ப்ரஜ்ஞை. ப்ரஜ்ஞையே ப்ராணன். இரண்டும் சேர்ந்தே இருக்கும்.சேர்ந்தே உடலிலிருந்து புறப்பட்டு விடும்.
ப்ரஜ்ஞை என்பது ஜீவன். இவற்றுக்கு ஆத்மா பகவான். ஆனந்த ஸ்வரூபன்;
பிறப்பு இறப்பு அற்றவன்; நல்வினை, தீவினைகளுக்கு அப்பாற்பட்டவன் ; உலகங்களைக் காப்பவன் ; நியமிக்கிறவன் ;
இப்படிப்பட்டவனை எனக்கும் ஆத்மாவாக உபாஸனை செய். இதுவே ”ப்ரதர்தன வித்யை” ஆகும்.

—————-

24. சாண்டில்ய வித்யை
(அக்னி ரஹஸ்யத்தில் இருக்கிறது)

ஸத்யத்தை ப்ரம்மமாக உபாஸிப்பாயாக. ஸத்யம் என்கிற ப்ரம்மம் எல்லாவற்றுக்கும் ஆத்மா. எங்கும் பரந்தவன்.
அணுவுக்கும் அணுவானவன். எல்லாவற்றிலும் பெரியவன்.
எனக்கும் ஆத்மா என்று உபாஸனை செய்ய வேண்டும் என்று ச்வேதகேதுவுக்கு சாண்டில்யர் கூறினார்.

————

25. புருஷ வித்யை மற்றும்
26. ந்யாஸ வித்யை
ப்ரஹ்மணேத்வா மஹஸ ஓம் இதி ஆத்மாநம் யுஜ்ஜீத….. என்று ஆரம்பிப்பது
”ந்யாஸ வித்யை”. தஸ்யை – வம் விதுஷ ———-…..என்று ஆரம்பித்துச் சொல்லப்படுவது
”புருஷ வித்யை” (புருஷ வித்யை—தைத்திரீய நாராயண உபநிஷத் )
ஆத்மாவாகிற ஹவிஸ்ஸை பரமாத்மாவிடம் சேர்ப்பித்தலாகிற யாகம் என்று சொல்லலாம்
(யஜ்ஞரூபமாகச் செய்யப்படுகிற ந்யாஸ வித்யை)
இதற்கு ஆத்மா – யஜமானன்.
ஸ்ரத்தா – ஆஸ்திக புத்தி.
பத்னீ – தர்மபத்னீ.
ஸரீரம் – ஸமித்து.
மார்பானது, யாகம் பண்ணுமிடம், அதாவது அக்னிகுண்டம்.
உடம்பில் உள்ள ரோமங்கள் – பரிஸ்தரணம்.
தலைமயிர் -தர்ப்பக்கட்டு.
ஹ்ருதயம் – யூபஸ்தம்பம்.
ஆசையானது நெய் .
கோபமானது – வெள்ளாடு.
ஆலோசிக்கிற அறிவு – நெருப்பு.
எல்லா வஸ்துக்களுக்கும் அநுகூலமாக இருக்கிற அறிவு – தக்ஷிணை.
வாக்கு – ஹோதா.
ப்ராணன் – ஸாமகானம் பண்ணுகிற ருத்விக்.
கண் – அத்வர்யு என்கிற ருத்விக்.
மனம் – ப்ரஹ்ம என்கிற ருத்விக்.
காது -அக்நீத்ரன் என்கிற ருத்விக்.
எவ்வளவு காலம் உயிருடன் இருக்கிறோமா அது யாக தீக்ஷை .
எதைச் சாப்பிடுகிறானோ, குடிக்கிறானோ – அது ஸோமபானம்.
விளையாடுகிறான் என்று சொல்லப்படுவது ”உபஸத்” என்கிற யாகம்.
நடப்பது, எழுந்திருப்பது, உட்காருவது – அது”ப்ரவர்க்யம்” என்கிற யாகம்.
முகம் – ஆஹவநீயம் என்கிற அக்னி.
இவரது அறிவு – ஹோமப் பொருள். காலையிலும், மாலையிலும்
சாப்பிடுவது – அது ஸமித்.
மாலை, காலை, மதியம் என்பவை மூன்று ஸவனங்கள் (தாநி, ஸவநாநி போன்றவை)
பகல் இரவுகள் -தர்ச பூர்ணமாஸ இஷ்டிகள்.
பக்ஷங்கள், மாதங்கள் – சாதுர்மாஸ்ய யாகம்.
ருதுக்கள் -பசு பந்தம்.
வருஷங்கள், அவற்றின்உட்பிரிவுகள் – அஹர்கணம்.
இந்த யாகமானது எல்லாச் சொத்தையும் தக்ஷிணையாகக் கொண்டது.
மரணம் – அவப்ருத ஸ்நானம்

(சாந்தோக்யத்தில் 3 -16-1 சொல்லப்பட்ட புருஷ வித்யை வேறு)
சாந்தோக்யத்தில் சொல்லப்பட்டது, ஆயுப்ராப்தியை பலமாக உடைய
ஸ்வதந்த்ர வித்யை என்று ஸ்வாமி தேசிகன் அதிகரண ஸhராவளியில் அருளியுள்ளார்.

அர்ச்சிராதி மார்க்கம் — இந்த மார்க்கம், உபகோசல வித்யை, பஞ்சாக்னி வித்யை, பர்யங்க வித்யைகளில் விவரமாகச்
சொல்லப்பட்டிருக்கிறது. ப்ரஹ்ம உபாஸகர்கள் எல்லோரும் அர்ச்சிராதி கதியைச் சிந்தனை செய்ய வேண்டும் என்கிற
எண்ணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
உபநிஷத்தில் விவரிக்கப்பட்டுள்ள (பக்தி யோகத்தில் சொல்லப்படும்) மிகக் கடினமான ப்ரஹ்ம வித்யைகள் – 32. இவை
உபாஸனா மார்க்கங்கள். அவையாவன :———–
1. அக்னி வித்யை
2. அக்ஷர வித்யை
3. ஆனந்த வித்யை
4. அதிம்ருத்யுபாஸன வித்யை
5. பாலாகி வித்யை
6. பூம வித்யை
7. ப்ரஹ்ம வித்யை
8. சாண்டில்ய வித்யை
9. தஹர வித்யை
10. ஜ்யோதிர் வித்யை
11. கோச விஜ்ஞான வித்யை
12. மது வித்யை
13. மைத்ரேயி வித்யை
14. கௌரக்ஷ ஜ்யோதிர் வித்யை
15. ந்யாஸ வித்யை
16. பஞ்சாக்னி வித்யை
17. பர வித்யை
18. பர்யங்க வித்யை
19. ப்ரஜாபதி வித்யை
20. ப்ராண வித்யை
21. ப்ரதர்ன வித்யை
22. புருஷ வித்யை
23. புருஷாத்ம வித்யை
24. ரைக்வ வித்யை
25. புருஷோத்தம வித்யை
26. ஸத் வித்யை
27. ஸர்வ பர வித்யை
28. ஷோடஸ கல ப்ரஹ்ம வித்யை
29. உத்கீத வித்யை
30. உபகோஸல வித்யை
31. வைஷ்ணவ வித்யை
32. வைச்வாநர வித்யை

இந்த 32 வித்யைகளுக்கும் ஆதாரம் ஸ்ரீ ஹயக்ரீவன். எல்லா வித்யைகளுக்குமே ஆதாரம் ஸ்ரீ ஹயக்ரீவன்.
பகவான், ஸ்ரீ ஹயக்ரீவ அவதாரம் எடுத்து வேதங்களை, மது, கைடபர்களிடமிருந்து மீட்டுத் திரும்பவும்
ப்ருஹ்மாவுக்கு உபதேசித்ததால்தான், வேதம் எல்லா உலகங்களிலும் பரவி இருக்கிறது.
நீங்கள், உங்கள் இரண்டுகாதுகளையும் இரண்டு கைகளால்
இலேசாக மூடிக்கொண்டவுடன், கேட்கும் சப்தம் வேதம் சம்பந்தப்பட்டது.
ஸ்ரீ ந்ருஸிம்ஹ தாபநீய உபநிஷத்தில் ஸ்ரீ ந்ருஸிம்ஹ அநுஷ்டுப் மந்த்ரம் 32 அக்ஷரங்களாக உள்ளது.
ஸ்ரீ ஹயக்ரீவனைப் பற்றிய முக்ய மந்த்ரம் 32அக்ஷரங்களிலுள்ள அநுஷ்டுப் ச்லோகம்.
இவை, 32 ப்ரஹ்ம வித்யைகளைக் குறிப்பதாகப் பெரியோர் சொல்வர்.
ஆக 32 ப்ரஹ்ம வித்யைகளின் பெருமையையும், அருமையையும் சொல்லில் விவரிக்க இயலாது.

———-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸ்ருத ப்ரகாசகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேத வியாசர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ நியாய மீமாம்ச வேதாந்த பாடங்கள்–இந்தியத் தத்துவ இயல் நூல்கள்– ஆசிரியர்கள் —

May 10, 2021

இந்தியத் தத்துவ இயல் நூல்கள்: ஆசிரியர்கள் : இந்திய மெய்யியலுக்கு ஆறு முக்கியமான தர்சனங்கள் அல்லது தத்துவங்கள் உள்ளது.
அதில் நியாயம், இதன் தத்துவ ஆசிரியர் கௌதமர்.
வைசேசிகம் எனும் பட்டறிவு தத்துவத்தின் ஆசிரியர் கணாதர். சாங்கியம் எனும் தத்துவத்தின் ஆசிரியர் கபிலர் (சாங்கியம்),
யோகம் என்ற தத்துவதிற்கு ஆசிரியர் பதஞ்சலி ஆவர்.
மீமாம்சம் எனும் தத்துவத்துவதிற்கு ஆசிரியர் ஜைமினி ஆவர்,
மற்றும் வேதாந்தம் எனும் உபநிடதங்கள் என ஆறு தத்துவங்கள் அல்லது ஆறு தர்சனங்கள் உள்ளது.
இதில் முதல் ஐந்தில் இறைவன் அல்லது பிரம்மம் எனும் இறையியலைப் பற்றி பேசுவதில்லை.
வேதாந்தம் ஒன்றுதான் பரம்பொருள் எனும் பிரம்மத்தைப் எனும் தத்துவத்தைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறது.

இந்தியத் தத்துவ இயலுக்கு லோகாயதம் எனும் பொருள் முதல் வாதிகள்,
பௌத்தம், மற்றும் சமண சமயம் போன்ற கருத்தியல் ஆசிரியர்களும் மிகவும் அதிகமாக பங்களித்துள்ளனர்.
இந்திய இறையியல், கருத்தியல், மெய்யியல், அறிவாய்வியல், தர்க்கம் மற்றும் பொருள் முதல்வாதம் குறித்து
அறிஞர்கள் படைத்த தத்துவ நூல்களின் விவரம்.

அபிதம்ம கோசம் : சர்வாஸ்திவாதிய புத்த மதத்வரின் அடிப்படை நூல். எழுதியவர் வசுபந்து.

அபிதம்ம கோச வியாக்யா : யசோமித்திரர் எமுதியது. அபிதம்ம கோசம் எனும் நூலின் விளக்க உரை நூல்.

அபிதம்ம பீடகா : மூன்றாவதும் இறுதியானதுமான புத்த பீடக நூல். நுண்புலப் பொருளியல் (Meta Physics) பிரச்சனைகள் பற்றி எழுதப்பட்டது என கருதப்படுவது.

அபிதம்ம விபாசா : காத்யாயனிபுத்ரரின் ’ஞானப்ரஸ்தானா’பற்றிய விமர்சனம். மன்னர் கனிஷ்கர் ஆதரவின் கீழ் நடைபெற்ற நான்காம் புத்த மாநாடு குழுவால் எழுதப்பட்டதாக கருதப்படுகிறது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

அசிந்த-பேதாபேத-வாதம் : இருமை (Dualism) மற்றும் இருமைப் மறுப்புக் கொள்கை (Non-Dualism) வங்காள வைஷ்ணவியத்தை நிறுவியவர் என்று அறியப்பட்ட சைதன்ய வேதாந்த கருத்தியலின் தத்துவகோட்பாடு.

அத்வைத-பிரம்ம-சித்தி : 18வது நூற்றாண்டில் வாழ்ந்த சதானந்த யதி எழுதியது. அத்வைத சித்தாந்தம் பற்றியது.

அத்வைத வேதாந்தம் : பரிசுத்தமான தன்னுணர்வே மெய்ம்மை (பிரம்மம்) என்ற வேதாந்த கருத்தியல். ஆதிசங்கரர் என்வர் அத்வைத வேதாந்தியால் முன் வைக்கப்பட்டது. இவர் 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

அஜிதகேசகம்பிளி : புத்தர் காலத்தில் வாழ்ந்த பொருள் முதல்வாதி.

அகலங்கர் : கி. பி.750இல் வாழ்ந்த சமண தத்துவவாதி. தர்க்கவியல் குறித்த அடிப்படை சமண விளக்கங்களுக்கு முதன்முதலில் இறுதி வடிவம் தந்தவர்.

அக்சபாதா : கோதமரின் மறு பெயர். நியாய தத்துவ அமைப்பினை நிறுவியர்.

ஆலம்பன பரீக்சா : திக்னாகா என்பவர் எழுதியது. யோக்கார கருத்தியற்கோட்பாட்டிற்கு ஆதரவான ஆய்வுக்கட்டுரை நூல்.

அனிருத்தா : கி. பி. 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த சாங்கிய சூத்ராவுக்கு விளக்கம் எழுதியவர்.

அனாகா : சமணர்களின் புனித இலக்கியங்களில் ஒருவகை.

அன்னம பட்டர் : 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நியாய – வைசேசிக தத்துவவாதி. தர்க்க சங்கிரஹா எனும் புகழ் பெற்ற நூலை எழுதியவர்.

ஆபாதேவா : 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, மீமாம்ச தத்துவவாதி

ஆரண்யகா : வேதத்தை சேர்ந்த இலக்கிய வகை. மாயாவாத, போன்ற முன்மாதிரி தத்துவம் பற்றிய கேள்விகளை இது ஆய்கிறது.

அரியேதா : கி பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்த தத்துவவாதி. தர்ம கீர்த்தி என்பவர் எழுதிய ஹேது-பிந்து நூலைப் பற்றிய விளக்கம் அளித்தவர்.

அர்த்தசாஸ்திரம் : கௌடில்யர் எனும் சாணக்கியர் எழுதிய பழமையான சமுக அரசியல் நூல்.

ஆர்யதேவா : கி பி.320இல் வாழ்ந்தவர். மாத்யமிக புத்த தத்துவத்தின் அதி நுட்ப திறனாய்வாளர்.

ஆர்யசூரா : கி.பி.4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். ஜாதக மாலா எனும் நூலை எழுதி புகழ் பெற்றவர்.

அசங்கா : கி.பி.450ம் ஆண்டைச் சேர்ந்தவர். யோகாகார புத்த த்த்துவத்தை தொடக்க காலத்தில் முறையாக செய்தவர்.

ஆசுரி : பண்டைய சாங்கிய தத்துவ ஆசிரியர்.

அஸ்வகோசர் : கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்த தத்துவவாதி, கவிஞர், நாடக ஆசிரியர்.

அதர்வ வேதம் : பண்டைய நான்கு வேதங்களில் இறுதியானது. இது மந்திர தந்திரங்களை மையமாக கொண்டது.

ஆத்ம தத்துவ விவேகம் : உதயணாவின் ஒப்பீட்டு இலக்கியம், சுயம் பற்றி புத்தம் கூறும் கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கும் நியாய வைசேசிக தத்துவ ஆய்வு நூல்.

பாதராயணர் : பிரம்ம சூத்திரம் எனும் நூலை எழுதியவர்.

பவதாயணா : கி.பி. 300ஆம் ஆண்டைச் சேர்ந்தவர். சட்டம் பற்றி எழுதிய முன்னோடி.

பகவத் கீதை : கர்மயோகம், பக்தியோகம் மற்றும் ஞானயோகம் போன்ற தத்துவங்களை, ஸ்ரீகிருஷ்ணர், அருச்சுனனுக்கு உபதேசம் செய்த நூல். இது மகாபாரதத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. பிரஸ்தானத்ரயம் எனும் உயர் வேதாந்த நூல்களான உபநிடதங்கள், பிரம்மசூத்திரம் ஆகியவற்றில் பகவக் கீதையும் ஒன்று.

பாமதி : பிரம்ம சூத்திரம் பற்றிய ஆதிசங்கரரின் பாஷ்யத்திற்கு விரிவுரை எழுதியவர்.

பாஸ்கரர் : பிரம்ம சூத்திரம் பற்றி கடவுள் நம்பிக்கை நிலையிலிருந்து விளக்கமளித்தவர். ஆதிசங்கரர் மற்றும் இராமானுஜர் இருவருக்கும் இடைப்பட்ட காலத்தவர்.

பாட்ட தீபிகா : கச்சதேவரின் மீமாம்ச தத்துவ கட்டுரைகள் எழுதியவர்.

பாட்ட மீமாம்சம் : குமாரில பட்டர் எழுதிய மீமாம்ச கருத்தியல் நூல்.

பாவவிவேகா : கி. பி. 5ஆம் நூற்றாண்டின் வாழ்ந்த மாத்யமக பிரிவு புத்த தத்துவ நிபுணர்.

பிரஸ்தானத்திரயம் : பிரம்மத்தை விளக்கும் உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் மற்றும் பகவத் கீதை ஆகிய மூன்று முதன்மையான வேதாந்த நூல்களை பிரஸ்தானத்திரயம் என்பர்.

பேதாபேத-வாதம் : பாஸ்கரரின் இருமை மற்றும் இருமையின்மை கொள்கை விளக்கம் நூல்.

போதிகார்யவாதாரா : சாந்தி தேவர் எழுதியது. மகாயான புத்தமததத்துவத்தை போற்றும் கவிதைகள்.

பிராமணம் : வேத சடங்குமுறைகளை ஆய்வு செய்யும் வேத இலக்கியம்.

பிரம்ம சூத்திரம் அல்லது வேதாந்த சூத்திரம் : உபநிடதங்களில் காணப்படும் முரணான கருத்துக்களை, பிரம்ம சூத்திரம் எனும் நூல் மூலம் பாதராயணர் களைந்து விளக்கி எழுதியதாக கூறப்படுகிறது. இந்நூலுக்கு பாஷ்யம் எழுதியவர்களில் சிறப்பானவர்கள், ஆதிசங்கரர், இராமனுஜர் மற்றும் மத்வர்.

ப்ரஹதி : மீமாம்ச சூத்திரம் பற்றிய சபரரின் கருத்துக்கள் மீது பிரபாகரர் எழுதிய விளக்கங்கள்.

புத்தர் : புத்த தத்துவத்தை தோற்றுவித்தவர். கி. மு. 483ஆம் ஆண்டில் இறந்தார்.

புத்தசரிதா : புத்தரின் வரலாற்றை கவிதை வடிவில் அஸ்வகோசர் எழுதியது.

புத்தபாலிதா : கி. பி. 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மாத்யமக புத்த தத்துவ நிபுணர்.

சைதன்யர் : கி. பி. 485வது ஆண்டில் பிறந்தவர். வங்காள வைணவ தத்துவம் என பொதுவாக அறியப்பட்ட மத இயக்கத்தை தோற்றுவித்தவர்.

சந்திரகீர்த்தி : கி. பி. 6வது நூற்றாண்டில் வாழ்ந்த மாத்யமக புத்த தத்துவ நிபுணர்; நாகார்ஜுனரின் கருத்துக்களுக்கு விமர்சனம் எழுதியதால் புகழ் பெற்றார்.

சரக சம்ஹிதை : கி. பி. இரண்டாவது நூற்றாண்டில் வாழ்ந்த சரகர் என்பவர் இந்த மருத்துவ நூலை எழுதியவர்.

சார்வாகம்: சார்வாகம் எனில் லோகாயவாதம் எனும் பொருள்முதல்வாதம் எனப்படும். சார்வாகர்என்ற பொருள்முதல்வாதி சார்வாகம் எனும் தத்துவத்தை நிறுவியவர்.

சாது சதகம் : மாத்யமக புத்த தத்துவ அறிஞரான ஆர்யவேதர் எழுதியது.

சித்சுகர்: கி. பி. 1220களில் வாழ்ந்தவர். அத்வைதி. பட்டறிவு சார்ந்த உள்ளமைவியல் (Ontology) மற்றும் அறிவாராய்ச்சியியல் (Epistemology) பற்றிய எதிர்மறையான வாதத்தை முன்வைத்து புகழ் பெற்றவர்.

தர்மகீர்த்தி : கி. பி. 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். திக்நாகருக்கு பின்வந்த புகழ்பெற்ற புத்த தத்துவவாதி.

தத்துவ – சங்கிரஹம் : கி. பி. 8வது நூற்றாண்டில் வாழ்ந்த சாந்தராட்சிதா என்பவர் எழுதிய புத்தவியல் தர்க்கநூல் ஆகும்.

தர்மோத்தரர் : கி. பி. 840களில் வாழ்ந்தவர். தர்மகீர்த்தியின் கருத்துகளுக்கு விளக்கம் அளித்தவர்.

திகம்பரர் : சமண தத்துவத்தின் ஒரு பிரிவு. இப்பிரிவுக்கு மாறானவர்கள் சுவேதாம்பரர்எனப்படுவர்.

திக்நாகர்: கி. பி. 500களில் வாழ்ந்தவர். புத்த தர்க்கவியல் கருத்தியலை நிறுவியவர்.

திபாஷிகா : சாலிகநாதர் எழுதியது. பிரபாகர மீமாம்சம் பற்றிய ஒரு நூல்.

துர்வேகர் : புத்த தத்துவவாதிகளான தர்மோத்தரர் மற்றும் அர்க்கடர் ஆகியவர்களை விமர்சனம் செய்தவர்.

துவைதாத்வைத வாதம்: நிம்பர்க்கர் என்பவர் பேதாபேதம் வேதாந்த கருத்தியலின் இருமை (துவைதம்)மற்றும் இருமையின்மை (அத்வைதம்) தத்துவ கோட்பாட்டை விளக்கியவர்.

துவைதவாதம்: இத்த்துவத்தின் ஆசிரியர் மத்வர். இருமை எனும் துவைதம் தத்துவக் கொள்கையை (இறைவனும் சீவனும் வேறு) கடைப்பிடிப்பவர்கள்.

சுதாதரர் : கி. பி. 13வது நூற்றாண்டில் வாழ்ந்தவர். தவ நியாய தத்துவ நிபுணர்.

கங்கேசர்: கி. பி. 13வது நூற்றாண்டில் வாழ்ந்த தவ நியாய தத்துவ அறிஞர்.

கௌடபாதர்: கி. பி. 800களில் வாழ்ந்தவர். ஆதிசங்கரரின் குருவின் குரு. மாண்டூக்ய காரிகை நூலின் ஆசிரியர். அத்வைத வேதாந்தி.

குணரத்ன : கி. பி. 15வது நூற்றாண்டில் வாழ்ந்த சமண தத்துவவாதி. தர்க்க-ரகசிய-தீபிகா என்ற விமர்சன நூலை எழுதியவர். இந்நூல் ஹரிபத்ரரின் இந்திய தத்துவ விளக்கத் தொகுப்பான சத் தர்சன சமுக்காயம் என்ற நூலின் விமர்சனம் ஆகும்.

ஹரிபத்ரர் : கி. பி. 8வது நூற்றாண்டில் வாழ்ந்த சமண தத்துவவாதி. இந்திய தத்துவ விளக்கத் தொகுப்பான சத் தர்சன சமுக்காயம் என்ற நூலை எழுதியவர்.

ஹேமச்சந்திரர் : இவரது காலம் கி. பி. 1018 – 1172. புகழ்பெற்ற சமண சமய தத்துவ அறிஞர். தத்துவம் மற்றும் தர்க்க நூல்களை எழுதியவர்.

ஹேது – பிந்து : தர்ம கீர்த்தி என்பவர் எழுதிய புத்த தர்க்கவியல் நூல்.

ஹீனயானம் : தமது முன்னோர்களை (மட்டமாக) குறிக்க, மகாயானம் பிரிவு புத்த சமயத்தவர் பயன் படுத்திய சொல். (ஹீனயானம் எனில் தாழ்வான வழி அல்லது குறைந்த வழி என்று பொருள்).

ஜகதீசா : கி. பி. 17வது நூற்றாண்டில் வாழ்ந்தவர். நவ நியாய தத்துவ அறிஞர்.

ஜைமினி : பூர்வ மீமாம்சக சூத்திரம் எழுதியவர்.

சமண தத்துவம் : துறவிகளின் மதம். தனித்துவமான தத்துவப்பார்வைகள் கொண்டது.

ஜாதகா : புத்தரின் ’முந்தைய பிறப்புகளை’ பற்றிய கதைகள் கூறுவது.

ஜெயந்த பட்டர் : கி. பி. 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். நியாய மஞ்சரி எழுதியவர். நியாய – வைசேஷிக தத்துவ அறிஞர்.

ஜெயராசி பட்டர் : கி. பி. 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அன்றைய காலத் தத்துவங்களை ஏற்றுக் கொள்ள மறுத்தவர். இவரை ஒரு பொருள்முதல்வாதி என்று தவறாக எண்ணினார்கள்.

ஞானப்பிரஸ்தானா : இந்நூலை காத்யாயனிபுத்ரர்என்பவர் எழுதியது. வைபாசிக புத்த தத்துவவாதிகளின் விளக்கமான மஹாவிபாச என்ற நூல் ஞானப்ரஸ்தானாவின் விமர்சனமாக எழுதப்பட்டது.

கமலசீலா : கி. பி. 750இல் வாழ்ந்தவர். புத்த தர்க்கவியல்வாதி. சாந்தராக்சிதாவின் தத்துவ சங்கிரா என்ற நூலுக்கு விளக்கம் எழுதியவர்.

கணாதர் : வைசேசிகம் எனும் தத்துவத்தை (தர்சனம்) நிறுவியவர்.

கபிலர் (சாங்கியம்) : சாங்கியம் எனும் தத்துவத்தை (தர்சனம்) நிறுவியவர்.

காத்யாயனிபுத்ரர் : கி. பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முந்தியவர். ஞானப்ரஸ்தானம்எனும் நூலை எழுதியவர்.

கௌடில்யர் : இவரை சாணக்கியர் என்றும் அழைப்பர். கி. மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அர்த்தசாஸ்திரம் எனும் அரசியல் மற்றும் சமூகம் தொடர்பாக நூலை எழுதி புகழ்பெற்றவர்.

கந்ததேவா : கி. பி. 17வது நூற்றாண்டில் வாழ்ந்த மீமாம்ச தத்துவவாதி

காந்தன-காந்த-காத்யம் : கி. பி. 1150இல் வாழ்ந்த ஸ்ரீஹர்சர் என்பவர் எழுதியது. அத்வைத வேதாந்த கருத்தியல் பற்றி, பட்டறிவு சார்ந்த உள்ளமையியல் (Ontology) மற்றும் அறிவாராய்ச்சியியல் (Epistemology) மீதான முதல் விரிவான விமர்சனம் செய்தவர்.

கிராணவளி : வைசேஷிக தத்துவம் பற்றிய பிரசஸ்தபாதரின் விளக்கம் மீதான விமர்சனம். உதயணர்என்பவர் எழுதியது.

குல்லுக பட்டர் : மத்திய காலத்தின் பிற்பகுதியில் வாழ்ந்தவர். மனுதரும சாத்திரம் (மனு ஸ்மிருதி) எனும் நூலுக்கு விளக்கம் அளித்தவர்.

குமாரில பட்டர் : கி. பி. 8வது நூற்றாண்டில் வாழ்ந்தவர். மீமாம்ச தத்துவத்தை நிறுவியவர். பாட்டா மீமாம்சா பள்ளியை (Bhatta School of Mimasa) நிறுவியவர்.

லக்வி : மீமாம்ச சூத்ரம் பற்றி சபரர் எழுதிய விளக்கத்திற்கு சுருக்கமான விளக்கம் எழுதியவர்.

லலித விஸ்தாரா : மகாயான புத்த சிந்தனைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட புத்தரின் வாழ்க்கை வரலாறு.

லங்காவதார சூத்திரம் : மகாயான பெளத்த மத சூத்திரங்களில் முக்கியமான ஒன்று.

லோகாயாதம் : பொருள்முதல்வாதம் (Materialism) எனும் தத்துவத்தை நிறுவியவர் சார்வாகர். இதனை சார்வாகம் என்றும் அழைப்பர்.

மாதவா : கி. பி. 14வது நூற்றாண்டில் வாழ்ந்த அத்வைத வேதாந்தி. சர்வ தரிசன சங்கிரஹ என்ற இந்திய தத்துவவியல் தொகுப்பை எழுதிப் புகழ் பெற்றவர்.

மதுசூதன சரசுவதி : காலம் 1565-1650. அத்வைத சித்திஎன்ற நூலை எழுதிய அத்வைத வேதாந்தி.

மத்வர் : கி. பி. 13வது நூற்றாண்டில் வாழ்ந்த துவைதம் எனும் இருமை கருத்தியலை நிறுவிய மாத்வ சம்பிராயத வைணவ குரு.

மாத்யமக : மகாயான புத்தவியல் தத்துவ கருத்தியல். இதனை நிறுவியது நாகார்ஜுனர். யதார்த்தம் (உண்மை) என்பது ’வெறுமையே’ என்பது இவர்கள் பார்வை.

மாத்யமக காரிகை : இதன் ஆசிரியர் நாகார்ஜுனர்

மகாபாரதம் : இந்தியாவின் புகழ்பெற்ற இரு இதிகாசங்களில் ஒன்றான இதை எழுதியவர் வியாசர். இப்போது நாம் பார்க்கின்ற வடிவம் கி. மு. 400க்கும் கி. பி. 400க்கும் இடைப்பட்ட காலத்தில் உருவாகியது.

மகாசாங்கிகர்கள் : பழமைவாத புத்த சங்கத்திலிருந்து முதன்முதலில் வெளியேற்றப்பட்டவர்கள். பின் இவர்கள் தங்களுக்கு என தனியாக ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொண்டவர்கள்.

மகாவிபாசா : அபிதம்ம விபாசாவும் இதுவும் ஒன்றே.

மகாவீரர் : சமண சமய தத்துவத்தை நிறுவியவர். கௌதம புத்தர் காலத்தில் வாழ்ந்தவர்.

மகாயானம் : ‘ உயர்ந்த பாதை ‘ என்று பொருள். பிற்கால புத்தவியல்வாதிகள் உருவாக்கிய புத்தமதப் பிரிவு. இவர்கள் தங்களின் எதிர்தரப்பை ஹீனயானம் (குறுகிய பாதை)என்பர்.

மகாயான சூத்திரங்கள் : மகாயான புத்தமத இறையியல் தத்துவபாடல்கள் அடங்கிய நூல்.

மைத்ரேயநாதர் : புத்தவியல் அடிப்படையிலான யோககார கருத்தியலை உருவாக்கியவர். கி. பி. 400இல் வாழ்ந்தவர்.

மந்தன மிஸ்ரா : கி. பி. 9வது நூற்றாண்டில் வாழ்ந்த முக்கிய பாட்டா மீமாம்ச தத்துவ அறிஞர்.

மாண்டூக்ய காரிகை : கி. பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கௌடபாதர் எழுதியது.

மனு : இவர் மனுதரும சாத்திரம் எனும் மனுஸ்மிர்தியின் ஆசிரியர். இந்திய சட்டங்கள் பற்றி கூறும் முதல் நூல். இப்போது நாம் பார்க்கின்ற வடிவம் கி. மு. 200க்கு முன்பு இருந்ததாகும்.

மாயாவாதம் : பிரம்மம் தவிர படைக்கப்பட்ட அனைத்துப் பிரபஞ்சங்களும் சீவராசிகளும் மித்யா(பொய்மையானது) எனக்கூறும் அத்வைத வேதாந்தக் கொள்கை.

மிலிண்ட பனாஹ : புத்தவியல் குறித்த பழங்கால பாலி மொழி (இந்தோனேசியா) நூல்.

மீமாம்சா (பூர்வ): ஜைமினி என்பவர் இதனை தொகுத்தவர். இப்பகுதியில் வேதத்தின் சடங்குகள் குறித்த விளக்கங்கள் கொண்ட மிகப் பழங்கால நூல்.

மீமாம்சா (உத்தர) : இப்பகுதியில் வேதத்தின் இறுதி பகுதிகளான உபநிடதங்கள் அமைந்துள்ளது.

மீமாம்ச சூத்ரா : மீமாம்ச தத்துவம் பற்றிய மூல நூல்.

நாகார்ஜுனர் : கி. பி. 200இல் வாழ்ந்தவர். புத்தவியல் தத்துவத்தின் மாத்யமிக கருத்தியலை உருவாக்கியவர்

நிம்பர்க்கர் : கி. பி. 12ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். பிரம்ம சூத்திரம் பற்றி ஆத்திக விளக்கம் கொடுத்தவர்.

நவ்ய நியாயா : நவ நியாயா. காங்கேசர் போதித்த நியாய தத்துவவியலின் இறுதிக் கட்டம்.

நியாயம் : இத்த்துவத்தை நிறுவியவர் கௌதமர். அறிவாய்வியல் மற்றும் தர்க்கம் குறித்த கேள்விகள் மீது கவனம் செலுத்தும் தத்தவ நூல்.

நியாய – பிந்து : புத்த தர்க்கவியல் நூல். தர்மகீர்த்தி எழுதியது.

நியாய – பிந்து – திகா : ’நியாய – பிந்து’ நூலைப் பற்றி தர்மோத்தரா எழுதிய விமர்சன நூல்.

நியாய – கந்தழி : வைசேஷிக தத்துவ முறை பற்றி பிரசஸ்தபாதர் கூறியதன் மீதான விமர்சன நூல்.

நியாய – கணிகா : மீமாம்சம் பற்றி வாசஸ்பதி மிஸ்ரர் எழுதியது. இது மந்தன மிஸ்ரர் எழுதிய ’விதி விவேகா’ என்ற நூலின் மீதான விமர்சன நூல்.

நியாய – குசுமாஞ்சலி : இந்நூலை உதயணர் எழுதியது. கடவுள் இருப்பதை நிரூபிக்கும் நியாய வைசேஷிக உரைகள் கொண்டது.

நியாய-மஞ்சரி : நியாய வைசேஷிக முறை குறித்து ஜெயந்த பட்டர் எழுதிய முக்கியமான நூல்.

நியாய-சூத்ரம் : நியாய முறைப் பற்றிய மூல நூல். கோதமர் அல்லது அக்சபாதர்எழுதியதாக கூறப்படுகிறது.

நியாய-வைசேஷிகம் : நியாயம் மற்றும் வைசேஷிக தத்துவங்கள் ஒருங்கிணைந்த போது உருவான பெயர்.

நியாய-வார்த்திகா : உத்யோதகாரர் எழுதியது. நியாய சூத்திரம் மீதான வாத்ச்யாயணரின் நூல் பற்றி எழுதப்பட்டு இன்றும் இருக்கின்ற நூல்களில் இதுவே மிகப் பழமையானது.

நியாய-வார்த்திகா-தாத்பரிய-பரிசுத்தி : உதயணர் எழுதியது. நியாய-வார்த்திகா-தாத்பர்ய-திகா பற்றி எழுதப்பட்ட நியாய வைசேஷிக விளக்க நூல்.

நியாய வார்த்திகா-தாத்பரிய-திகா : வாசஸ்பதி மிஸ்ரா எழுதியது இது நியாய-வைசேஷிக விளக்க நூல்.

பதார்த்த-தர்ம-சங்கிரஹா : வைசேஷிக தத்துவம் பற்றி இன்றும் உள்ள நூல்; எழுதியது ப்ரசஸ்பாதர்.

பத்மபாதர் : ஆதிசங்கரரின் சீடர். அத்வைத வேதாந்தி.

பங்காசிகர் : தொடக்க கால சாங்கிய ஆசிரியர்.

பாணினி : கி. மு. 300க்கு முற்பட்டவர். சிறந்த இலக்கண ஆசிரியர்.

பார்த்தசாரதி மிஸ்ரர் : பாட்ட மீமாம்ச தத்துவ ஆசிரியர்களில் முக்கியமானவர். காலம் 16வது நூற்றாண்டு.

பதஞ்சலி : யோகம் எனும் தத்துவத்தை நிறுவியர்.

பாயாசி : புத்தருக்குப் பின் வந்த பொருள்முதல்வாதி.

பீடகங்கள் : தொடக்க கால புத்த தத்துவ நெறிமுறை இலக்கியத் தொகுப்புகள்.

பிரபாசந்திரர் : கி. பி. 9வது நூற்றாண்டில் வாழ்ந்த சமண சமய தர்க்கவாதி.

பிரபாகர மீமாம்சம் : கி. பி. 7வது நூற்றாண்டில் வாழ்ந்தவர் பிரபாகரர். மீமாம்சம்எனும் தத்துவவியல் கொள்கையை நிறுவியவர்.

பிரக்ஞபாரமிதா சூத்ரம் : மகாயான புத்தமத சூத்ரங்களில் ஒன்று.

பிரக்ஞ – ப்ரதீபா : பாவவிவேகர் என்பார் எழுதியது. மாத்யமக புத்த தத்துவம் பற்றியது.

பிரகரண – பஞ்சிகம் : சாலிகநாதர் எழுதியது. பிரபாகரரின் கருத்துகளுக்கு முக்கிய விளக்க நூல்.

பிரமாண சமுக்காயம் : திக்நாகர் எழுதியது. புத்தமத தர்க்கவியல் பற்றிய அடிப்படை நூல்.

பிரமாண – வார்த்திகா : தர்மகீர்த்தி எழுதியது.

பிரசன்ன – பாதா : சந்திரகீர்த்தி எழுதியது. மாத்யமிக காரிகை பற்றிய முக்கியமான விளக்க நூல்களில் ஒன்று.

பதார்த்த – தர்ம – சங்கிரகம் : கி. பி. 5வது நூற்றாண்டில் வாழ்ந்த பிரசஸ்தபாதா என்பவர் எழுதியது.

புரந்தரர் : லோகாயத தத்துவவாதி. (பொருள்முதல்வாதி)

பூர்வங்கள் : தொடக்க கால சமணர்களின் புனித இலக்கியம்.

ரகுநாத சிரோமணி : கங்கேசரின் தத்துவங்களை விமர்சித்தவர். 16வது நூற்றாண்டினர்.

ராஜசேகர சூரி : சமண சமய தத்துவ ஆசிரியர். கி. பி. 1340ல் வாழ்ந்தவர்.

ராமாயணம் : இந்தியாவின் புகழ்பெற்ற இரண்டு இதிகாசங்களில் ஒன்று. கி. மு. 3வது நூற்றாண்டில் உருவானது. இப்போது நாம் பார்க்கின்ற வடிவம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் உருவானது.

இராமானுஜர் : கி. பி. 11வது நூற்றாண்டில் வாழ்ந்த விசிட்டாத்துவைதம் எனும் தத்துவத்தை நிறுவிய வைணவ சமயப் பெரியார். பிரம்ம சூத்திரம் பற்றி ஸ்ரீபாஷ்யம் எனும் ஆத்திக அடிப்படையிலான விளக்கங்கள் எழுதியவர்களில் மிக முக்கியமானவர்.

ராவண-பாஷ்யம்: தொடக்க கால வைசேஷிக நூல்களில் ஒன்று.

ரமணர் : காலம் 1879-1950, அத்வைத வேதாந்தி. “உள்ளவை நாற்பது” போன்ற அத்வைத வேதாந்த நூல்களை எழுதியவர்.

ருக் வேதம் : வேத நூல்களில் மிகப்பழமையானதும் முக்கியமானதும் ஆகும். இதன் காலம் கி. மு. 1500 – 1100 ஆகும்.

ரிஜ்விமாலா : சாலிகநாதர் என்பவர் எழுதியது. பிரபாகரின் பிரஹதி என்ற நூல் பற்றிய விளக்க நூல்.

சபரர் : கி.பி. 400ல் வாழ்ந்தவர். மீமாம்ச சூத்திரம்பற்றி இன்றும் நம்மிடையே உள்ள மிகப் பழமையான நூலை எழுதியவர் சபரர்.

சபர பாஷ்யம் : மீமாம்ச சூத்திரம் பற்றி சபரர் எழுதிய நூல்.

சத்-தர்சன-சமுக்காயம் : இந்தியத் தத்துவங்களின் தொகுதி. ஹரிபத்ரர் எழுதியது.

சத்தர்ம-புண்டரீகம் : மகாயான பௌத்த சமய சூத்திர நூல்.

சாலிகநாதர் : கி. பி. 7 அல்லது 8வது நூற்றாண்டை ஒட்டி வாழ்ந்தவர். பிரபாகரரின் தத்துவங்கள் பற்றி எழுதப்பட்ட விளக்கங்களில் சாலிகநாதரின் விளக்கங்கள் புகழ் பெற்றது.

சமாதிராஜா : மகாயான பௌத்த சமய சூத்திர நூல்.

சமந்தபத்ரா : முற்காலத்திய சமண சமய தத்துவவாதி.

சாம வேதம் : நான்கு வேதங்களில் மூன்றாவது. சடங்குகளின் போது பாடப்படும் பாடல்கள் கொண்டது.

சங்கரர் : கி. பி.788 – 820இல் வாழ்ந்த அத்வைத வேதாந்திகளில் மிக முக்கியமானவர். இவர் தத்வ போதம், விவேக சூடாமணி, பஜ கோவிந்தம், ஆத்ம போதம், முதலிய நூல்கள் இயற்றியவர். மேலும் முக்கிய பத்து உபநிடதங்களுக்கும் மற்றும் பிரம்ம சூத்திரம் ஆகியவற்றுக்கும் பாஷ்யம் (விளக்க உரை) எழுதியவர்.

சாங்கியம் : மிகப் பழமையான இந்திய தத்துவப் பிரிவுகளில் ஒன்று. கபிலர் (சாங்கியம்) இத்தத்துவத்தை நிறுவியவர்.

சாங்கிய-காரிகா : ஈஸ்வர கிருஷ்ணா எழுதியது. சாங்கியம் பற்றி இன்றும் நம்மிடையே உள்ள மிகப் பழமையான நூல் இதுவே.

சாங்கிய-ப்ரவசன-பாஷ்யா : விஞ்ஞான பிட்சு என்பவர் எழுதியது. சாங்கிய சூத்திரம் பற்றிய விளக்க நூல்.

சாங்கிய-சூத்திரம் : மத்திய காலத்தின் இறுதிப் பகுதியில் எழுதப்பட்ட சாங்கியம் பற்றிய நூல்.

சாங்கிய-தத்துவ-கவ்முதி : வாசஸ்பதி மிஸ்ரர் எழுதியது. சாங்கிய காரிகா எனும் நூலின் விளக்க உரை நூல் இது.

சங்கபத்ரா : வசுபந்துவுக்கு பிறகு வைபாஷிக புத்த தத்துவவாதி.

சஞ்சய பெலத்திட்டா : புத்தர் காலாத்தில் வாழ்ந்த கடவுள் மறுப்புவாதி.

சாந்திதேவா : கி. பி. 7வது நூற்றாண்டில் வாழ்ந்த மகாயான புத்தவியலை பரப்பியவர்.

சாரீரக – பாஷ்யம் : சங்கரரின் பிரம்ம சூத்திரம் நூலின் பாஷ்யத்திற்கு விரிவான விளக்க நூல்.

சர்வ-தர்சன-சங்கிரகம் : மாதவர் எழுதிய இந்திய தத்துவவியல்கள் பற்றிய மிகப் புகழ் பெற்ற தொகுப்பு.

சர்வாஸ்தி-வாதம் : “எல்லாமும் எப்போதும் உயிருடன் உள்ளது” என்ற புத்தவியல் கருத்தியல் கொள்கையை விளக்கும் நூல்.

சௌராந்திகா : புத்தமத தத்துவவியல் மற்றும் கருத்தியல் கொள்கைகளை விளக்கும் நூல்.

சாயனர் : கி. பி. 14ஆம் நூற்றாண்டில் விசயநகரப் பேரரசில், முதலாவது புக்கா ராயன் காலத்தில் வாழ்ந்தவர். நான்கு வேதங்களைப் பற்றி விரிவான விளக்க நூல்கள் எழுதியவர். இன்று நாம் படிப்பது இவரது வேத விளக்க நூல்களே.

சித்தசேனர் : தொடக்ககால சமண சமய தத்துவவாதி.

சிக்ஷா சமுக்காயம் : சாந்தி தேவர் எழுதிய மகாயான பௌத்த சமயத்தை பரப்ப உதவிய கவிதை நூல்.

சுலோக வார்த்திகா : குமாரில பட்டர் எழுதிய முக்கிய தத்துவவியல் நூல்.

ஸ்புதார்த்த-அபிதம்ம-கோசாம்-வியாக்யா : யசோமித்ரர் எழுதியது. அபிதம்ம கோசம் பற்றிய விளக்க நூல்.

ஸ்தவீரவாதிகள் : புத்தவியல் கருத்தியலை பின்பற்றிய மிகப்பழமையான தொண்டர்கள்.

சுவேதாம்பரர் : சமண சமயத்தின் ஒரு பெரும் பிரிவினர்.

ஸ்ரீகந்தா : பிரம்ம சூத்திரம் எனும் வேதாந்த நூலுக்கு விளக்கம் எழுதியவர்.

சூன்யவாதம் : மாத்யமிக புத்தவியலாளர்களின் தத்துவக்கொள்கை. அதாவது “ உண்மை என்பது வெற்றிடமே “.

சுரேஷ்வராச்சாரியர் : ஆதிசங்கரரின் காலத்தில் வாழ்ந்தவர். சங்கரரின் சீடர். சங்கர அத்வைத வேதாந்திகளில் வேதாந்தங்களைப் பற்றி விளக்கம் எழுதியவர்களில் முதன்மையானவர்.

சுத்த பீடகம் : தொடக்க கால புத்த நெறிமுறை இலக்கியத் தொகுப்புகள் அடங்கிய மூன்று நூல்களில் ஒன்று.

தந்திர-வார்த்திகா : மீமாம்ச தத்துவம் பற்றி குமரில பட்டர் எழுதியது.

தர்க்க-ரகஸ்ய-தீபிகா : சத்-தர்சண-சமுக்காயம் எனும் நூல் பற்றி குணரத்ணா என்பவர் எழுதிய விளக்க நூல்.

தர்க்க-சங்கிரஹா : அன்னம பட்டர் என்பவர் நியாய – வைசேஷிகம் தத்துவம் பற்றி எழுதிய பிரபலமான நூல்.

தத்துவார்த்த அதிகாம சூத்திரம் : உமாஸ்வாதி எழுதியது. சமண சமயம் பற்றி தொடக்க காலத்தில் எழுதப்பட்ட முறையான விளக்க நூல்.

தத்துவ சிந்தாமணி : கங்கேசர் எழுதியது. புதிய நியாயா தத்துவத்தின் மூல நூல்.

தத்துவ சங்கிரகம் : சந்திராக்சிதா என்பவர் எழுதிய புத்த தத்துவ நூல்.

தத்துவ வைசாரதி : வாசஸ்பதி மிஸ்ரர் என்பவர் பிரம்ம சூத்திரம் எனும் வேதாந்த நூலுக்கு எழுதிய விரிவான விளக்க நூல்.

தத்வோபப்ளவசிம்மம் : ஜயராசி பட்டர் எழுதிய நூல். யதார்த்த நிலை மீது ஏற்படும் தீவிர சந்தேகம் பற்றிய நூல். பொருள்வாதிகள் எழுதியதாக தவறாக கருதப்படுவது இந்நூல்.

தேரவாதிகள் : தேரவாத பௌத்த சமய பிரிவினர். இது ஸ்தவீரவாதிகள் என்ற பாலி மொழிச் சொல்.

துப்திகா : குமாரில பட்டர் எழுதிய மீமாம்சகத் தத்துவ நூல்.

உதயணா : கி. பி. 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். நியாய – வைவேஷிக தத்துவத்தின் பழைய வடிவம் பற்றி போதித்தவர்களில் இறுதியானவர்.

உத்யோதகாரர் : வாத்ஸ்யாயனர் எழுதிய நியாய சூத்ரம் எனும் நூலுக்கு விளக்கம் எழுதியவர். கி. பி. 6 அல்லது 7வது நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

உபநிஷத்துக்கள் : நான்கு வேதங்களின் இறுதியில் வரும் இறையியல் அல்லது மெய்யியல் தொடர்பான தத்துவ நூல்கள் என்பதால் இதனை வேதாந்தம் என்றும் உத்தர மீமாம்சம் என்றும் அழைப்பர். இவைகள் பிரம்மத்தைபற்றியும், பிரபஞ்சம் பற்றியும், பிரபஞ்சம் மித்யா எனும் நிலையாமையானது என்ற கொள்கையும், சீவ-பிரம்ம ஐக்கிய தத்துவத்தையும் வலியுறுத்தும் நூல்கள். இவைகளைப் பல ரிஷிகள் இயற்றியுள்ளனர். ஆதிசங்கரர் பத்து முதன்மையான உபநிஷத்துகளுக்கு பாஷ்யம் (விளக்கம்) எழுதியுள்ளார். சங்கரரின் உபநிடத விளக்கங்களுக்கு அவருக்கு பின் வந்தவர்கள் விரிவான விளக்கங்கள் எழுதியுள்ளனர்.

உமாஸ்வாதி : கி. பி. முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சமண சமயத்திற்கு தொடக்க காலத்தில் முறையான வடிவம் கொடுத்தவர்.

வாசஸ்பதி மிஸ்ரர் : கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சாங்கியம், யோகம், நியாயம், மீமாம்சம், அத்வைத வேதாந்தம் போன்ற பலதரப்பட்ட தத்துவங்களுக்கு இவர் எழுதிய விளக்கங்கள் மிக முக்கியமானவை.

வைபாசிகம் : புத்தவியல் கருத்தியல் அடங்கிய நூல்.

வைசேசிகம் : பட்டறிவின் அடிப்படையிலான உள்ளமைவியல் குறித்த இந்தியத் தத்துவம்.

வைசேசிக சூத்ரம் : வைசேசிக தத்துவத்தின் நிறுவனரான கணாதர் என்பவரால் எழுதப்பட்ட வைசேசிக தத்துவத்தின் அடிப்படை நூல்.

வல்லபர் : 15வது நூற்றாண்டில் வாழ்ந்தவர். பிரம்ம சூத்திரத்திற்கு ஆத்திக அடிப்படையில் விளக்கம் அளித்தவர்.

வாசுதேவ சார்வபாஉமா : கி. பி. 15 மற்றும் 16வது நூற்றாண்டிற்கு இடைப்பட்டவர். நவ நியாயம் எனும் தத்துவத்தை வங்காளத்தில் அறிமுகம் செய்தவர்.

வசுபந்து : கி. பி. 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். முதலில் வைபாசிக புத்த சமயத்தை பின்பற்றியவர். பின்னர் யோககார புத்த சமயத்தை தழுவியவர்.

வாத்ஸ்யாயணர் : கி. பி. 4வது நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் எழுதிய பழமையான நியாய சூத்திரம் எனும் நூல் இன்னும் நம்மிடையே உள்ளது.

வேதம் : இந்துசமயத்தின் புனித நூல். மிக விரிவான இலக்கியத் தொகுப்பு. இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் மிகப்பழமையானது. இதனை ருக் வேதம், யசுர்வேதம், சாம வேதம் மற்றும் அதர்வண வேதம் என்று நான்காக தொகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வேதத்தின் இறுதியில் அமைந்துள்ள பகுதிகளுக்கு வேதாந்தம் அல்லது உபநிசத்துக்கள் என்பர்.

வேதாந்தம் : வேதத்தின் இறுதிப் பகுதியில் அமைந்துள்ளதால் இதனை உத்தர மீமாம்சம் என்பர்.

வேதாந்த சூத்திரம் : இதனையே பிரம்ம சூத்திரம் என்பர்.

வேதாந்த சாரம் : 18வது நூற்றாண்டில் வாழ்ந்த சதானந்தர் என்பவர் உபநிடதங்களின் சாரத்தை இந்நூலில் எளிமையாக விளக்கியுள்ளார்.

விபாசா : இதனையே அபிதம்ம விபாசம் என்பர்.

விதி-விவேகா : மந்தன மிஸ்ரர் எழுதியது. பாட்ட மீமாம்சம் பற்றிய நூல்.

வித்யானந்தா : சமண சமய தர்க்கவியல்வாதி.

வித்தியாரண்யர் : விசயநகரப் பேரரசு தோண்றக் காராணமானவர். உபநிடதங்களின் தெளிவுரையாக இவர் எழுதிய பஞ்ச தசீ எனும் அத்வைத வேதாந்த நூல் மிகவும் பிரபலமானது. மேலும் சிருங்கேரி மடாதிபதியாகவும் திகழ்ந்தவர். சிறந்த அத்வைத வேதாந்தி

விஞ்ஞான பிட்சு : கி. பி. 16வது நூற்றாண்டில் வாழ்ந்தவர். சாங்கிய தத்துவத்தை பின்பற்றிய ஆன்மிகவாதி.

விஞ்ஞான-வாதம் : அகநிலைக் கருத்துக் கொள்கை. புத்தவியலின் யோககார கருத்தியலின் தத்துவக் கொள்கை.

விஞ்ஞாப்திமாத்ரா சித்தி : வசுபந்து எழுதியது. விஞ்ஞான வாதத்திற்கு ஆதரவான தத்துவக் கொள்கை கொண்ட நூல்.

வினய பீடகம் : தொடக்க கால புத்த சமய மூன்று நூல்களில் ஒன்று. புத்த துறவற நெறிகள் விளக்குவது.

விசிட்டாத்துவைதம் : முழுமுதற் கொள்கை. இராமானுஜரின் வேதாந்த கருத்தியலின் தத்துவப் பார்வை கொண்டது.

விருத்திகாரர் : மீமாம்ச சூத்திரம் பற்றி தொடக்க காலத்தில் விளக்கியவர்களில் ஒருவர் எனச் சபரர் சுட்டுகிறார்.

யோகா சூத்ரம் : மனிதனுக்கும் அப்பாற்ப்பட்ட சக்திகளை அடைய மேற்கொள்ளப்படும் ஒரு பண்டைய பயிற்சி முறை. பதஞ்சலி முனிவர் இதனை அறிமுகப்படுத்தியவர்.

யோககார : மைத்ரேயநாதர் மற்றும் அசங்கர் ஆகியோர் நிறுவிய மகாயான புத்த தத்துவ கருத்தியல் எண்ணங்களே உண்மை என்பது இவர்கள் கொள்கை.

யோககார-பூமி-சாஸ்த்ரா : அசங்கர் எழுதியது. யோககார புத்தவியல் பற்றிய அடிப்படை நூல்.

பதஞ்சலி யோக சூத்திரம் : பதஞ்சலி முனிவர் இத்தத்துவத்திற்கு ஆசிரியர். இவரின் பதஞ்சலியோக சூத்திரம் எனும் நூல் உலகளவில் பெருமை பெற்றது.

யாக்ஞவல்கியர் : உபநிடதங்கள் பற்றி போதித்த முக்கிய தத்துவவாதி. இவரது மனைவி மைத்ரேயி கூட ஒரு வேதாந்தி ஆவர்.

யாக்ஞயவல்கிய ஸ்மிருதி : கி. பி. 100க்கும் 300வது ஆண்டுகளுக்கு இடைப்பட்டது.

யசுர்வேதம் : பண்டைய நான்கு வேதங்களில் மூன்றாவதாகும். வேத சடங்குகள் பற்றிய விளக்க நூல்.

யசோமித்ரா : வசுபந்துவின் அபிதம்ம கோசம் நூலுக்கான விளக்க நூல் எழுதியவர்.

யசோவிஜயா : சமண சமய தர்க்கவியல்வாதி.

————

ஆதி சங்கரர் கால ஆராய்ச்சி–

வேதாந்த மார்க்கத்துக்குப் பெரும் வித்திட்ட அப்பெரியோர்களின் வரிசையில் மிக முக்கியமான இடத்தை வகிப்பவர்
அத்வைத சம்பிரதாயத்தின் ஸ்ரீமத் ஆச்சாரியராகிய ஸ்ரீ சங்கர பகவத்பாதர் ஆவார்.
பகவத் கீதை, உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், ஆகியவற்றிற்கு ஒப்பற்ற பாஷ்யங்கள் (விளக்கவுரைகள்) எழுதி
நம் மார்க்கத்துக்குத் தொண்டு புரிந்தவர்–
“பிரம்ம சூத்திரத்திற்கு ’யுஷ்மதஸ்மத் ப்ரத்யய கோசரயோ:’ என்று தொடங்கி,
’அனாவ்ருத்தி: சப்தாத் இதி ஸூத்ராப்யாஸ: சாஸ்த்ரபரிஸமாப்திம் த்யோதயதி’ என்று முடியும் பிரபல பாஷ்ய உரை நூலை எழுதியவர்”

சாக்ஷாத் அவருடைய சீடர் பத்மபாதர் “பஞ்சபாதிகா” என்ற நூலில் சங்கர பாஷ்யத்தின்
முதல் நான்கு சூத்திர பாஷ்யங்களை விரிவாக விளக்கியுள்ளார். இதை மேலும் விவரிக்க, ராமானுஜர் காலத்திற்கு முன்பே
பிரகாசாத்ம யதிகள் “பஞ்சபாதிகா விவரணம்” என்ற அநு பாஷ்யம் செய்துள்ளார்.
“விவரண பிரஸ்தானம்” என்ற அத்வைத பாண்டித்ய உட்பிரிவை ஏற்படுத்தியவர் இவர்.
இவ்விவரண நூலை மேலும் விளக்க, “ருஜு விவரணம்”, “தத்வ தீபனம்” முதலிய பாஷ்ய நூல்கள் 13,14,15-ஆம்
நூற்றாண்டுகளில் வெளிவந்தமை பண்டிதர்கள் அனைவரும் அறிவர்.

ஆனந்தகிரி அல்லது ஆனந்தஞானர் எனப்படும் அத்வைத ஆச்சாரியார் சங்கரருடைய
பிரம்ம சூத்திர பாஷ்யம், பத்து உபநிடத பாஷ்யங்கள், கீதா பாஷ்யம், உபதேச சாஹச்ரி கிரந்தம் ஆகியவற்றுக்கும்,
சங்கரருடைய பிரதான சீடராகிய சுரேஷ்வரருடைய பிருகதாரண்யக தைத்திரீய பாஷ்ய வார்த்திகங்களுக்கும், டீகைகளை இட்டுள்ளார்.

மேலும், ஒன்பதாவது/பத்தாவது நூற்றாண்டில் வாழ்ந்தவராக அறியப்படும் வாசஸ்பதி மிச்ரா என்பவர்
சங்கர பாஷ்யத்தை விவரிக்கும் “பாமாதி” என்னும் நூலை எழுதியுள்ளார்.
இவர் “பாமாதி பிரஸ்தானம்” என்ற அத்வைத பாண்டித்ய உட்பிரிவை உண்டாக்கியவர்.
அதையும் மேலும் விவரித்து அமலானந்தர் என்னும் 13-ஆம் நூற்றாண்டு அத்வைதியர் “வேதாந்த கல்பதரு” என்ற ஒரு உரையையும் எழுதியுள்ளார்.

(4) இன்று சங்கர பிரம்ம சூத்திர பாஷ்யத்தை விளக்கும் “பிரகடார்த்த விவரணம்” என்ற நூல் பதிப்பில் உள்ளது.
இதில் பேதாபேத மதமாகிய பாஸ்கரமதம் கண்டிக்கப்படுகிறது. ஆனால் ராமானுஜரின் ஸ்ரீபாஷ்யத்தில் இருந்து ஒரு குறிப்பும் இல்லை.
ஆகையால் இது இராமானுஜர் காலத்திற்கு முந்தையது என்று கொள்ள இடமிருக்கிறது.
பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராக அறியப்படும் ஸ்ரீ ஆனந்தகிரியும் தம் சூத்திர பாஷ்யத்தில் “பிரகடார்த்த காரர்” என்று
இவ்வாசிரியரைக் குறிப்பிட்டு, இந்நூலிலிருந்து மேற்கோளும் எடுத்துள்ளார்.

அத்வைத பிரம்ம சூத்திர பாஷ்யகாரராகிய சங்கரர் எழுதிய வேறு நூல்கள் எவை எவை என்று பார்த்தால்,
சர்ச்சைக்கு இடமில்லாதபடி அவருடைய
(1) கீதா பாஷ்யம்,
(2) ஈசாவாஸ்ய-கேன (பத/வாக்ய பாஷ்யங்கள் இரண்டு)-கட-பிரஷ்ன-முண்டக-மாண்டூக்ய-ஐதரேய-தைத்திரீய-பிருகதாரண்யக-சாந்தோக்ய
ஆகிய பத்து உபநிடதங்களுக்கு அவரிட்ட பாஷ்யங்கள்,
(3) ‘உபதேச சாஹச்ரி’ என்ற கிரந்தம் ஆகியவற்றை சம்பிரதாயமும் வரலாற்று ஆராய்ச்சியும் ஒப்புக் கொள்கிறது.
இது தவிர விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யம் முதலிய நூல்கள் அவருடையதா என்பதில் வரலாற்று ஆசிரியர்கள் மத்தியில் சர்ச்சை உள்ளது –

ஸ்ரீ ராமானுஜர் காலம் கி.பி. 11 அல்லது 12-ஆம் நூற்றாண்டு என்பதும், அவர் ஆதி சங்கரர் கொள்கைகளைத் தம்
ஸ்ரீபாஷ்யத்திலும் கீதா பாஷ்யத்திலும் விமர்சித்துள்ளமையால் அவர் சங்கரர் காலத்திற்கு பின்பு வாழ்ந்தவர் என்பதும் திண்ணம்.
அத்துடன், ஸ்ரீ ராமானுஜரின் இளைய பருவத்தில் வயதில் முதிர்ந்தவராக இருந்த யாமுனாச்சாரியார் அல்லது ஆளவந்தார்,
தம் நூல்களான “சித்தி திரயம்” மற்றும் “ஆகம பிராமாண்யம்” எனும் நூல்களில் சங்கரரின் சில கொள்கைகளைச்
சுட்டிக் காட்டி அவைகளிலிருந்து மாறுபடுகிறார்.

சங்கர பாஷ்யத்தை விளக்க எழுந்த பாமாதி என்ற நூலின் ஆசிரியராகிய வாசஸ்பதி மிச்ரர்
தம் “நியாய சூசி நிபந்தனம்” என்னும் நூலில் “வருடம் 898-இல் முடிக்கப்பட்டது” என்று குறிப்பிடுகிறார்.
இந்திய வருடக்கணக்கில் சாக வருடம் விக்கிரம வருடம் என்று இரண்டு கணக்குகள் உண்டு.
சாக வருடம் என்று எடுத்துக் கொண்டால் வாசஸ்பதி மிச்ரர் கூறும் தேதி கி.பி. 976 என்று கொள்ள வேண்டி வரும்.
விக்கிரம வருடம் என்று எடுத்துக் கொண்டால் கி.பி. 841 என்று கொள்ள வேண்டி வரும்.
இவ்விரண்டில் “விக்கிரம வருடம் 898”, அதாவது ஆங்கில வருடம் கி.பி. 841 என்று கொள்வது தான் சரி என்று
வரலாற்று ஆராய்ச்சியாளர் Hajime Nakamura தமது “A History of Vedanta Philosophy, Vol. 1” என்ற நூலில் விளக்கியுள்ளார்.

ஆளவந்தார் என்னும் யாமுனாச்சாரியார் தம் சித்தித்ரயத்தில் “ஸ்ரீவத்சாங்கர் என்னும் வேதாந்தி
சங்கரர் காலத்துக்கும் பாஸ்கரர் காலத்துக்கும் இடையே வாழ்ந்தார்” என்று குறிப்பிடுகிறார்.
இது சித்தி த்ரயம் ஐந்தாம் பாகம், முதல் அத்தியாயத்தில் உள்ளதென்றும் குறிப்பிடுகிறார்.
இதையும், வாசஸ்பதி மிச்ரர் கி.பி. 841-இல் நூற்கள் எழுதியிருப்பதையும் சேர்த்துப் பார்த்தால், சங்கரர் கால வரையறையைக்
கண்டிப்பாகக் கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்கு முன் வைக்க வேண்டும். இதிலிருந்து சிருங்கேரி மடம் கூறும் “கி.பி. 788-820” என்ற
கணக்கு சற்று அடிபடுகிறது. ஓர் ஐம்பதாண்டுகளாவது தாமதமாக இருக்க வேண்டும்.

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கணாதர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாசர் -பாதராயணர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ வேதங்களும் ஸ்ரீ வேதாந்தங்களும் -ஸ்ரீ உபநிஷத்துக்கள் சுருக்கம் —

April 9, 2021

வேதம் – அநாதியானது
அதாவது ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை. இதை ஒருவரும் இயற்றவில்லை. மஹரிஷிகளால் த்யானத்தில்
காணப்பட்டவை வேதம். இந்த மஹரிஷிகள்”மந்த்ர த்ரஷ்டா ”எனப்பட்டனர். வேதம் ”அபௌருஷேயம்” எனப்படும்.
அதாவது
ஒருவராலும் இயற்றப்படாதது. உலகில் வேறு எந்த நூலோடு கூடவும் ஒப்பிட இயலாதது. ஏனெனில் வேதம் ஆரம்பமும்,
முடிவும் இல்லாதது. இது எப்போது தோன்றியது என்பதை வரையறுத்து சொல்லவும் இயலாது. பகவானின் மூச்சுக்காற்று
என்று சொல்லப்படுவதால், பகவானைப் போலவே வேதமும் ஒருவராலும் தோற்றுவிக்கப்படாதது. வேதம் மிக கவனமாக பல
லட்சக்கணக்கான ஆண்டுகளாக முன்னோர்களால் எழுத்துப் பிசகாமல், ஸ்வரம் பிசகாமல் மனனம் பண்ணி, வழிவழியாக,
இப்போதுள்ள தலைமுறை வரை கொண்டு வந்திருப்பது வேறு எங்கும் காணாத, கேட்கப்படாத விந்தை. உலகத்தில் மிகமிகப்
பழமையானவை ‘வேதங்கள்”.
வேதத்தில் தர்மத்தைச் சொல்லும் பாகம் ”ஸம்ஹிதை”.
தத்வத்தைச் சொல்லும் பாகம் ”உபநிஷத்” அல்லது ”வேதாந்தம்”.
வேதத்தை ”ஸ்ருதி” என்றும் சொல்வர்.
ஆசார்யன் உபதேசிக்க சிஷ்யன் கேட்க, பிறகு, அந்த சிஷ்யன் தன் சிஷ்யனுக்கு அல்லது சிஷ்யர்களுக்குச் சொல்ல
இப்படி வேதம், வழி வழியாகச் சொல்லப்பட்டது. தமிழில் இதை ”எழுதாக் கிளவி” என்று சொல்வர்.

க்ருஷ்ண த்வைபாயநர் – அச்வத்தாமா

ஒவ்வொரு த்வாபரயுகத்திலும் விஷ்ணுவின் அம்சமாக ஒரு ரிஷி ”வ்யாஸர்” என்கிற பெயருடன் தோன்றி வேதத்தை
ஒழுங்குபடுத்துகிறார். இது 28வது சதுர்யுகம். இந்த யுகத்தில். ”க்ருஷ்ண த்வைபாயனர்” என்கிற ரிஷி வ்யாஸராக அவதரித்து
வேதங்களை ஒழுங்குபடுத்தினார்.
அடுத்து வரும் த்வாபரயுகத்தில் த்ரோணாரின் புத்ரர் ”அச்வத்தாமா” (இவர் சிரஞ்சீவிகளில் ஒருவர்) வ்யாஸராகத்
தோன்றி, வேதங்களை ஒழுங்குபடுத்துவார் என்று சாஸ்த்ரக்ஞர்கள் கூறியுள்ளனர்.
வேதம் என்பது ஸ்வர்க்கம், பசு, புத்ரன் முதலிய இஷ்டத்தை அடைவதற்கும், நரகம் முதலிய
அநிஷ்டத்தை அடையாமல் இருப்பதற்கும் உபாயத்தை, லோக ரீதியில் இல்லாததான ஒரு விஷயத்தைச் சொல்கிறது;.
யாகம்,ஹோமம், தானம், த்யானம் – இவை தர்மங்கள்.
இவைகளுக்கு ப்ரமாணமாக இருப்பது—_மூலமாக இருப்பது ”வேதம்”. இதை ”வேதோமீ கில தர்ம மூலம்” என்று சொல்வர்.
இப்படி வேதத்தின் அருமை, பெருமைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். இது பாரத நாட்டின் பொக்கிஷம்,
கலியுகத்தில், மனிதர்கள் மந்த புத்தி உடையவர்களாக இருப்பர் என்று வ்யாஸர் (க்ருஷ்ணத்வைபாயனர்) வேதத்தை நான்காக
பிரித்தார் என்று பொரியோர்கள் சொல்வார்கள்

வேதங்களை அத்யயனம் செய்ய ”ஸ்வரம்” முக்கியம். இதை ஐந்து விதமாக அத்யயனம்/ பாராயணம் செய்வார்கள்.

பாராயண முறை விவரம்
(1) வேத மந்த்ரங்களை சந்தி சேர்த்து பாராயணம் செய்தல்– இது ”மூலஸம்ஹிதை” எனப்படும்.
(2) வேத மந்த்ரங்களைப் பதம் பதமாக பிரித்து அத்யயனம் செய்தல் – இது ”பதஸம்ஹிதை” எனப்படும்
(3) ஒரு பதத்தை முன்னும், பின்னும் சொல்லுதல் (உ.ம்:அக்னிம் ஈளே, ஈளே ப்ரோஹிதம், ப்ரோஹிதம்
யஜ்ஞஸ்ய, யஜ்ஞஸ்ய தேவம், தேவம் ரித்விஜம் —இப்படி ) இது ”க்ரம ஸம்ஹிதை” எனப்படும்.
(4) பதங்களைச் சேர்த்து சேர்த்து மறுபடியும் பிரித்துச்சொல்லுதல் (உ.ம்: .அக்னிம் ஈளே, ஈளே அக்னிம்,அக்னிம் ஈளே, ஈளே ப்ரோஹிதம்,
ப்ரோஹிதம் ஈளே,ஈளே ப்ரோஹிதம், ப்ரோஹிதம் யஞ்ஞயஸ்ய,யஞ்ஞயஸ்ய ப்ரோஹிதம் இப்படி) – இது”ஜடஸம்ஹிதை” எனப்படும்.
(5) கடினமாக அத்யயனம் செய்தல் (உ.ம்: அக்னிம் ஈளே, ஈளே அக்னிம், அக்னிம் ஈளே ப்ரோஹிதம், ப்ரோஹிதம் அக்னிம் ஈளே,
அக்னிம் ஈளே ப்ரோஹிதம், ஈளே ப்ரோஹிதம், ஈளே, ஈளே ப்ரோஹிதம், யஞ்ஞஸ்ய ப்ரோஹிதம் -இப்படி) இது ”கனம்” எனப்படும்

———

ஸ்ரீ வேதாந்தங்கள்-ஸ்ரீ உபநிஷத்துக்கள்

இவற்றில் முக்கியமானவை
1. ஈசோபநிஷத்
(ஈசாவஸ்ய உபநிஷத்)
2. கேநோபநிஷத்
3. கடோபநிஷத்
4. ப்ரச்னோபநிஷத்
5. முண்டக உபநிஷத்
6. மாண்டூக்ய உபநிஷத்
7. தைத்திரீய உபநிஷத்
8. ஐதரேய உபநிஷத்
9. சாந்தோக்ய உபநிஷத்
10. ப்ருஹதாரண்யக உபநிஷத்
இவற்றின் சுருக்கம் ”ப்ருஹ்ம ஸூத்ரம் ” . வ்யாஸர் இயற்றியது. 545 ஸுத்ரங்கள்

மேற்சொன்ன, பத்து உபநிஷத்துக்களுடன்கூட,
(11)ச்வேதாச்வதர உபநிஷத்
(12) அதர்வசிர உபநிஷத்
(13) அதர்வசிகோ உபநிஷத்
(14) கௌஷீதகி உபநிஷத்
(15) மந்த்ரிகோபநிஷத்
(16) ஸூபாலோபநிஷத்
(17)அக்நி ரஹஸ்யம்
(18) மஹோபநிஷத் –

———-

வேதமும் உபநிஷத்தும் கங்கை.
பாஞ்சராத்ர நூல் -யமுனை.
ஆழ்வார் அருளிச் செயல்கள் – சரஸ்வதி நதியைப் போல.
ஆக விசிஷ்டாத்வைதம் ”த்ரிவேணி வைஷ்ணவம்” எனப்படுகிறது.

————-

வேதாங்கங்கள் – ஆறு
1.சிக்ஷை 2. வியாகரணம் 3. சந்தஸ் 4. நிருக்தம் 5.ஜ்யோதிஷம் 6.கல்பம்

1) சிக்ஷை – பாணினி, நாரதர் முதலியவர்களால் செய்யப்பட்டது என்று சொல்வர். 32 சிக்ஷைகள் கிடைத்துள்ளதாகவும்,
இதில் சப்தங்களின் அக்ஷரங்கள், மூன்று ஸ்வரங்கள், இவற்றைச் சரியாக உச்சரிக்கும் விதம் சொல்லப்பட்டுள்ளது என்றும் சொல்வர்.

2) வ்யாகரணம் – இது இலக்கணம். அனுமானை நவ வ்யாகரண பண்டிதன் என்று புகழ்வார்கள்.
வ்யாகரணம். ஸமஸ்க்ருத மொழிக்கும், வேதத்துக்கும் முக்யமானது

3) சந்தஸ் – வேத மந்திரங்களின் மாத்திரை. ; உச்சரிப்பு,உச்சரிக்கும்போது உள்ள ஏற்ற, இறக்கம் சந்தஸ்எனப்படுகிறது.

4) நிருக்தம் – வேதச் சொற்களைப் பிரிக்கும் விதம் இதில் சொல்லப்படுகிறது. அரிய பதங்களின் அர்த்தங்களும்
நிகண்டுவும் இதில் உள்ளன. பாஸ்கர முனிவரால் செய்யப்பட்டது தற்போது வழக்கத்தில் உள்ளது.

5) ஜ்யோதிஷம் – வானஇயல் என கருதப்படுகிறது. வானசாஸ்த்ரமும் இதில்சொல்லப்படுகிறது. ஜ்யோதிஷத்துக்கு சம்பந்தப்பட்டது
வானவியல். இதில் வைதீக கர்மாக்களை செய்ய வேண்டியகாலம், பலன் விசாரிக்கப்படுகிறது.
ஸுர்யன், மற்றும் க்ரஹங்களைப் பற்றிய கணித சாஸ்த்ரம் உள்ளது.

6) கல்பம் – வேதங்களில் சொல்லும் கர்மாக்களை ”கல்பம்” சொல்கிறது.
காத்யாயனர், ஆச்வலாயனர், போதாயனர் – இவர்கள் அருளிய கல்பஸுத்ரங்கள் புகழ் பெற்றவை

உப அங்கங்கள் (உபாங்கங்கள்)
(வேதத்திற்கு உப அங்கமாக ஆறு ரிஷிகள் அருளியவை
1. சாங்கியம் 2. யோகம் 3.மீமாம்ஸம் 5.ந்யாயம் 6 வைசேஷிகம்

1. சாங்கியம் – ஸ்ரீ கபில முனிவர் அருளியது. 25 தத்வங்கள் இதில் சொல்லப்படுகின்றன. பஞ்ச அங்க யோகத்தால்,
ஞானத்தை அடையலாம் என்றும் சொல்லப்படுகிறது.

2. யோகம் – ஸ்ரீ பதஞ்சலி முனிவர் இயற்றியது.இவர் இருபத்து மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாகச் சொல்வர்
யோகஸுத்ரம் என்கிற நுhலை இயற்றியிருக்கிறார்-ஸம்ஸ்க்ருதத்திற்கு மஹா பாஷ்யம் என்கிற இலக்கணமும் இயற்றியிருக்கிறார்
யோகத்தில்194 ஸுத்ரங்கள் உள்ளன.-=மனஸ், உடல், ஆத்மா இவைகளை யோகம் செய்து நெறிப்படுத்தி பகவானுக்கு அர்ப்பணிப்பதைப் பற்றிச்
சொல்கிறது. இது ”யோகஸித்தி” எனப்படுகிறது.
யோகஸுத்ரத்தில் 185 பழமொழிகள் வாக்யங்களாக உள்ளன.
இதில் நான்கு பிரிவுகள் உள்ளன அவை சமாதி, ஸாதனா, விபூதி, கைவல்யம் (மோக்ஷம்) எனப்படும்

3. மீமாம்ஸம் (பூர்வ மீமாம்ஸம்) – ஜைமினி முனிவர் அருளியது.12 காண்டங்கள் 60 அத்யாயங்கள் வேதத்தில் உள்ள தத்வ விசாரணைகள் இதில் உள்ளன.

4. மீமாம்ஸம் (உத்தர மீமாம்ஸம்) – இது வேதாந்தம் எனப்படும்.ஸ்ரீ வியாஸ முனிவர் அருளியது. இது வேதங்களின் ஸாரம்.
இது ”ப்ருஹ்ம ஸுத்ரம் ” என்றும் சொல்லப்படும். 4 அத்யாயங்கள் உள்ளன. ஒவ்வொரு அத்யாயத்துக்கும் 4பாதங்கள்.
ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதாள் இதற்கு பாஷ்யம் (உரை) எழுதியுள்ளார். இது ”சாரீரக மீமாம்ஸை” எனப்படுகிறது.
பகவத்ஸ்ரீ ராமனுஜரின் உரை ”ஸ்ரீ பாஷ்யம்” எனப்படுகிறது.
ஸ்ரீ மத்வாச்சாரியாரும் உரை எழுதியிருக்கிறார்.

5. ந்யாயம் – வேதத்தில் சொல்லப்பட்டவைகளைக் கடைந்து அதிலிருந்து எடுக்கப்பட்டவை ”ந்யாயம்” , 537 ஸுத்ரங்கள் உள்ளன.
”ந்யாயத்தை”அறிய 16 வழிகளைச் சொல்கிறது
(1) ப்ரமாணம் (2) ப்ரமேயம் (3) ஸம்சயம் (4) ப்ரயோஜனம்
(5) உதாரணம் (6) சித்தாந்தம் (7) அவயவம் (8) தர்க்கம்
(9) நிர்ணயம் (10) வாதம் (11) ஜல்பம் (12) விதண்டாவாதம்
(13) ஹேத்வபாஸம் (14) தந்த்ரம் (15) ஜோதி
16) நிக்ரஹஸ்தானம்

6. வைசேஷிகம் – ஸ்ரீ கணாத முனிவர் அருளியது. உலகில் உள்ள எல்லாப் பொருள்களின் குண ஆராய்ச்சி ஸம்பந்தமானது.
இவை ஆறு 1) த்ரவியம் – இது 9 பிரிவு –
அவையாவன – மண், ஜலம், தேஜஸ், வாயு, ஆகாயம், காலம், திசை, ஆத்மா, மனம்
2) குணம் – இது த்ரவியத்துடன்சேர்ந்தது. 24 பிhpவுகள் உள்ளன.
அவை ரூபம் , ரஸம், கந்தம்,பரிசம், சங்க்யை, பரிமாணம், பிரிதல், சம்யோகம், வியோகம்,முன்னிலை, பின்னிலை, புத்தி,ஸுகம், துக்கம்,
த்வேஷம்,முயற்சி குருத்வம், ஸ்நேஹம், சப்தம், வேகம், திரவத்வம், விருப்பு, வெறுப்பு, அடக்கம் – ஆக 24.
3) கர்மம் (வினை)
4)சாமான்யம் (த்ரவ்யம், குணம் கர்மத்திலே சேரும். இது உயர்வு, தாழ்வு என்று இரண்டு வகை)
5) விசேஷம் (கடைசியாக மீதமாகும் இரண்டு அணுக்களின் நிலை)
6) ஸமவாயம்(கர்த்தா, செயல், அணு , அண்டம் – இவற்றின் ஆராய்ச்சி) –

”ருக்” வேதத்திலிருந்து ஆயுர்வேதமும்
”யஜூர்” வேதத்திலிருந்து தனுர்வேதமும்
”ஸாம” வேதத்திலிருந்து கான வேதமும்
”அதர்வண” வேதத்திலிருந்து அர்த்த வேதமும் (அர்த்தசாஸ்த்ரம் – ஆட்சிக்கலை) தோன்றியது என்று சொல்வர்.

இப்படி மிக முக்கியமானதாக உள்ள உபநிஷத்துக்களை, ஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீ ப்ரஹ்ம ஸுத்ரம் இவைகளுடன் சேர்த்து
”ப்ரஸ்தான த்ரயம்” என்று சொல்வர்.

———

1 – ஈசாவாஸ்ய உபநிஷத்

இது குரு, சிஷ்யனுக்கு உபதேசம் செய்வதைப் போல அமைந்துள்ளது. 18 மந்த்ரங்கள் இந்த உபநிஷத்தில் இருக்கின்றன.
இதன் சுருக்கம் –
குரு, சிஷ்யனுக்கு உபதேசம்
பகவான் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறான். வெளிப்புறக் காட்சிகளைக் கண்டு மயங்காமல், உள்ளே இருக்கும் பகவானை
த்யானம் செய்வதில் வைராக்யம் இருக்க வேண்டும். அதே சமயம், கர்மாக்களையும் செய்தல் வேண்டும். எல்லாவற்றிலும்
வ்யாபித்து, எல்லாவற்றையும் நியமித்து, எல்லாவற்றிற்கும் ஆத்மாவாக பகவான் இருக்கிறான். ஆதலால் எல்லாமே
பகவானுக்குச் சரீரம். எல்லாக் கல்யாண குணங்களும் நிறைந்தவன் பகவான். பகவானை அடைய தனியான கர்மமோ,
தனியான ஞானமோ போதாது. ஸத்கர்மாக்களைச் செய்து கொண்டே இருந்து, வினைகளைப் போக்கிக் கொண்டு, நல்ல
ஞானம் வரப்பெற்று மோக்ஷம் அடைய வேண்டும்.
இதற்கு பக்தி அல்லது ப்ரபத்தி வழி.
இதில் 18 மந்த்ரங்கள் உள்ளன. இந்த 18மந்த்ரங்களின் விசேஷத்தை விவரிப்பது தான் ஸ்ரீமத் பகவத்கீதையின்
18 அத்யாயங்கள். ஈசன் வாஸம் பண்ணுகிற விஷயத்தைச் சொல்வதால் ”ஈசாவாஸ்யம்” எனப்பட்டது.

————-

2 – கேநோபநிஷத்து

இது சிஷ்யன் கேள்வி கேட்கும் ரூபமாய் அமைந்துள்ளது.
சிஷ்யன் –
மனது தன் இஷ்டப்படி சஞ்ரிக்கிறது. இப்படியே கண், காது, வாக்கு தம்தம் கார்யங்களைச் செய்கிறது.
இது யாருடைய கட்டளையால்?

ஆசார்யன் –
ப்ராணனுக்கும் ப்ராணனாய், நீ சொன்ன எல்லாவற்றிற்கும் சக்தியை அளித்து, பகவான் இயக்குகிறான்.
அவன் அனுக்ரஹத்தாலே ஒவ்வொரு அவயவமும், வேலை செய்கிறது. எவ்வளவு தெளிவாக பகவானின் செயலை நீ அறிய
முயன்றாலும், ஒரு ”திவலை” அளவுதான் தெரிந்து கொண்டவன் ஆவாய். பகவானை நான் நன்கு அறியேன் என்று
வணக்கத்துடன் சொல்பவனே, பகவானை அறிந்தவன் ஆவான்.-தேவர்களே கூட பகவானை முழுமையாக அறிந்தவரில்லை.
இதற்கு ஒரு உபாக்யானம் (கதை) உள்ளது.

பகவான் தன்னுடைய பக்தர்களான தேவர்கள் மீதுள்ள அன்பினால் அஸுராதிகளை ஜெயிக்கிறான். ஆனால் தேவர்கள்,
தாங்களே அஸுராதிகளை ஜெயிப்பதாக கர்வம் கொண்டனர்.
இந்தக் கர்வத்தை அழிக்க, பகவான் திருவுள்ளம் கொண்டான்.
உடனே பரப்ரம்மம் (பகவான்) யக்ஷரூபமெடுத்து அவர்கள் எதிரில் நின்றது. அவர்களுக்கு இது யாரென்று தெரியவில்லை.

தேவர்கள், அக்னி தேவனைப் பார்த்து இந்த ”யக்ஷன்” யாரென்று தெரிந்து கொண்டு வா என்றார்கள்,
அக்னி தேவன் யக்ஷனிடம் வந்தான். யக்ஷன் நீர் யாரென்று கேட்க
அக்னிதேவன் தன் பெருமை எல்லாவற்றையும் சொன்னான். உன்னுடைய வீர்யம்
எப்படிப்பட்டது என்று யக்ஷன் கேட்க எல்லாவற்றையும் ஒரு நொடியில் எரித்து விடுவேன் என்று அக்னி தேவன் சொன்னான்.
பரப்ரம்மம் ஒரு புல்லை எடுத்து எதிரில் வைத்து அக்னியைப் பார்த்து இதை எரித்து விடு என்றது. அக்னி, வெகு துரிதமாகவும்,
முழு ஆற்றலோடும் முயன்றும் அந்தப் புல்லை எரிக்க முடியவில்லை. இவன் யாரென்று தெரியவில்லை என்று
அக்னிதேவன் திரும்பி விட்டான்.

தேவர்கள் வாயு தேவனை யக்ஷனிடம் அனுப்பினார்கள்.
யக்ஷன், உன் பலம் எப்படிப்பட்டது என்று கேட்க,
வாயுதேவன், நான் எல்லாவற்றையும் என் ஆற்றலால் தூக்கி எறிந்து விடுவேன் என்றான்.
பரப்ரம்மம் இந்தப் புல்லை எடுத்துச் செல் என்றது. வாயுதேவன் தன்னுடைய சக்தியை எல்லாம் ப்ரயோகித்தும் புல்லை அசைக்க
முடியவில்லை. வாயுதேவனும் திரும்பி விட்டான்.
இவர்கள் இருவரும் பூமி, அந்தரிக்ஷம், ஸ்வர்க்கம் என்ற மூன்று உலகங்களுக்கும் ப்ரதான தேவதைகள் இவர்களால் முடியவில்லை.

மூன்றாவது ப்ரதான தேவதையான இந்த்ரனை தேவர்கள் அனுப்பினார்கள். இப்போது பரப்ரம்மம் மறைந்து விட்டது.
இந்திரன் திகைத்து நின்றான். அச் சமயம் ஆகாயத்தில் ஸர்வாபரண பூஷிதையாய் ஒரு ஸ்த்ரி தோன்றினாள்.
அவள் பார்வதி தேவி.
இந்த்ரன் அவளிடம் , ”யார் அந்த யக்ஷன்” என்று கேட்டான்.
”இந்திரனே, அது யக்ஷனல்ல! பரப்ரம்மம்.பரப்ரம்மத்தின் அனுக்ரஹம் இல்லாவிடில் உங்களால் ஒரு அணுவைக் கூட அகற்ற முடியாது.
உங்கள் கர்வத்தை விட்டு பரப்ரம்மத்தின் பெருமையை உணருங்கள்! என்று பார்வதி சொன்னாள்.
இந்திரன், இந்த உண்மையை எல்லாத் தேவர்களுக்கும் எடுத்துச் சொல்லி கர்வத்தை ஒழித்தான்.

பரப்ரம்மம் அனந்த கல்யாண குணங்களை உடையது.
வேத, வேதாங்கங்களை அத்யயனம் செய்து, ஸத்யஸந்தர்களாக இருப்பவர்களுக்கு ப்ரஹ்மஜ்ஞானம் கூடி வரும்.
நல்ல ஒழுக்கம், இந்த்ரியநிக்ரஹம், தபஸ் உள்ளவர்களுக்கு, ப்ரம்மவித்யை நிலையாக நிற்கும்.
இந்த வித்யையைப் பெற்றவர்கள், பகவான் வீற்றிருக்கும் உலகிற்குச்சென்று உயர்ந்த புருஷார்த்தத்தை அடைவர் என்று சொன்னார்.

இதில் நான்கு காண்டம்.
”கேந” என்கிற சொல்லைக் கொண்டு தொடங்குவதால் இது ”கேநோபநிஷத்து” எனப்பட்டது.

————

3 – கடோபநிஷத்து

இது க்ருஷ்ண யஜூர் வேதத்தில் உள்ளது.
”கடசாகை”யைச் சேர்ந்த உபநிஷத். ”கடா” என்பவரைச் சார்ந்த சாகை கடசாகை. இதில் நசிகேதஸ் உபாக்யானம் உள்ளது.
இது தைத்திரீய ப்ராம்மணத்திலும் (3-11-8) உள்ளது. மஹா பாரதத்தில் உள்ளது சிறிது வேறுபடும்.
இந்த உபநிஷத்தில் ”வல்லி” என்கிற பிரிவுகள் ஆறு உள்ளன. மும் மூன்றாக இரண்டுஅத்யாயங்கள் உள்ளன.

வாஜச்ரவஸர் (கௌதமர் என்றும் சொல்வர்) என்கிற மஹரிஷி தன் சொத்துக்களை எல்லாம் தக்ஷிணையாக கொடுத்து ஒரு யாகம் செய்தார்.
மிகவும் வயது முதிர்ந்த பசுக்களைத் தானம் செய்ய முற்பட்டபோது இவர் குமாரரான நசி கேதஸ், தந்தை இப்படித் தானம் செய்வதால்
(ஒன்றும் உபயோகப்படாத பசுக்களை) இருள் சூழ்ந்த உலகில் அல்லவோ வசிக்க நேரிடும் என்கிற தர்ம சாஸ்த்ரத்தை உணர்ந்து அதற்காக வருந்தி
தந்தையிடம் தன்னையே தானம் செய்யும்படி ஒரு தரத்துக்கு மூன்று தரம் வேண்டினான்.
தந்தைக்குக் கோபம் வந்து ”உன்னை யமனுக்குத் தானம் பண்ணுகிறேன்” என்று சொன்னார்.
நசிகேதஸ்,தந்தையின் வாக்கைச் சத்யமாக்க யம லோகம் செல்லப் புறப்பட்டான்.
வாஜச்ரவஸர் வருத்தம் மேலிட்டு, யமன் தன்னுடைய க்ருஹத்தில் இல்லாத சமயமாக பார்த்து நசிகேதஸ் என்கிற குமாரனை
யம லோகத்துக்குச் செல்ல அனுமதித்தார்.

அப்படியே யமனுடைய உலகத்தில் அவனுடைய க்ருஹத்துக்குச் சென்ற நசிகேதஸ், யமன் க்ருஹத்தில் இல்லாததால், அவன்
வீட்டிற்கு திரும்பும் வரை வீட்டு வாசலிலேயே காத்திருந்தான்.-மூன்று நாட்கள் அன்ன, ஆகாரமின்றி பட்டினியுடன் காத்திருந்தான்
யமன் வந்ததும் அதிதியான ப்ராம்மணச் சிறுவன் பட்டினியுடன் இருப்பதை அறிந்து அதற்கு பிராயச்சித்தமாக மூன்று வரங்களை கொடுப்பதாகவும்,
வரங்களை கேட்க வேண்டும் என்றும், நசிகேதஸைக் கேட்டுக் கொண்டான்.

நசி கேதஸ் கேட்ட முதல் வரம் – தன்னுடைய தந்தை துயரம் நீங்கி தன்னை அனுக்ரஹிக்க வேண்டும் என்றும், 2வது வரமாக
வயோதிகம், மரணம் இவை இல்லாத ஸ்வர்க்கமான மோக்ஷத்தை அடைய, அக்னி விஷயமாக ஹோமத்தைச் செய்யும் விதத்தைச்
சொல்ல வேண்டும் என்று கேட்டான்.-இந்த இரண்டு வரங்களும் யமனால் அருளப்பட்டன.
மூன்றாவது வரமாக இறந்தவனுடைய உண்மை நிலையை, ஆத்ம தத்துவத்தைச் சொல்லுமாறு கேட்டான். யமன் இந்த
விவரத்தை உடனே சொல்லாமல் பலவிதங்களில் நசிகேதஸ்ஸை, பரீக்ஷை செய்துவிட்டு பிறகு சொன்னான்.

”ஜீவாத்மா” பிறப்பு, இறப்பு அற்றவன். உடல் அழியுமே தவிர ஜீவாத்மா அழியாது. ஜீவாத்மா, பரமாத்மா இருவரும் ஹ்ருதயத்தில் இருக்கின்றனர்.
ஜீவாத்மாவுக்கு உடம்பு-ஒரு ரதம்.
புத்தி – ஸாரதி. மனது – கடிவாளம்.
புலன்கள் – குதிரைகள்.
விஷயங்கள் – அவற்றின் புலங்கள்.
இவற்றைக் கொண்டு ஜீவன், சுக துக்கங்களை அனுபவிக்கிறான். அறிவுள்ளவன் இவற்றை தக்கவாறு பயன்படுத்தி பகவானை அடைகிறான்.
பரமாத்மாவை அடைவதே ”ஸ்ரேயஸ்”.
ஹ்ருதயத்தில் பகவானை உபாஸிக்க வேண்டும்.

ஹ்ருதயத்தில் பகவானை உபாஸிக்க வேண்டும். வேர் மேலாகவும், கிளைகள் கீழாகவும், உள்ள இந்த ஸம்சாரம் என்கிற மரத்தில்,
எல்லாம் பகவானின் இஷ்டப்படி நடக்கிறது. கண்ணால் காணமுடியாத பகவானை மனத்தினால் காண,யோகத்தில் நிலை பெற வேண்டும்.
பலவகை நாடிகளும் தலையில் உள்ள ”ஸுஷும்நா ” நாடி வழியாகச் செல்ல அப்போது ஜீவனும் சென்று பகவானின் இருப்பிடம் சென்று விளங்குவான்.
பகவானை உபாஸித்து அவனுக்கு அடிமையாக பரமபதத்தில் ஸுகானுபவம் பெற்று வாழ்வான் என்று யமன் சொல்லி முடித்தான்.
கடோபநிமூத்தில் மிக விவரமாக இது சொல்லப்படுகிறது.

—————-

4 – பிரச்னோபநிஷத்து

இதில் 6 ப்ரச்னங்கள். ”ப்ரச்னம்” என்றால் கேள்வி.
ஒவ்வொரு ப்ரச்னமும் ஒரு மஹரிஷியின் கேள்வியாக அமைந்து அதற்கான பதிலை விளக்குகிறது.
ஸுகேசர், சைப்யர்,ஸெளர்யாயணி, கௌஸல்யர், பார்க்கவர், கபந்தி என்று ஆறுரிஷிகளும்,
பிப்பலாத மஹரிஷியை அணுகி, ஒரு வருட காலம் தபஸ், ப்ரம்மச்சர்யம், ச்ரத்தை இவைகளுடன் இருந்து
மஹரிஷியிடம் கேள்விகள் கேட்டுத் தெளிவு பெறுகின்றனர்.

ஒவ்வொரு மஹரிஷியின் கேள்வியும், மஹரிஷியின் பதிலும் சுருக்கமாகத் தரப்படுகிறது.

1-முதலில் கபந்தி – ப்ரஜைகள் எங்கிருந்து பிறக்கின்றன?
பிப்பலாதர் –
ப்ரஜாபதியானவர், ப்ரஜைகளை ச்ருஷ்டிக்க எண்ணி,”ரயி”, ”ப்ராணன்” என்ற இரண்டையும் ச்ருஷ்டித்தார்.
”ப்ராணன்” என்பது ஜீவ சமஷ்டி .”ரயி” என்பது அதற்கு உடலாக இருக்கின்ற ப்ரக்ருதி.
ஸ்ருஷ்டிக்கும் பகவானே, ஸம்வத்ஸரம், மாஸம், நாள் என்று கால ரூபமாக இருக்கிறான்.
தக்ஷிணாயனத்தின் வாயிலாக சில ப்ரஜைகள் சந்திரலோகம் (ஸ்வர்க்கம்) சென்று பலனை அனுபவித்து திரும்புகின்றனர் (மறுபடியும் பிறவி)
இவர்கள் கர்மானுஷ்டானத்திலேயே நோக்கம் உள்ளவர்கள்
வித்யையை அனுஷ்டித்து ஆத்மாவை அறிந்தவர் உத்தராயணம் வாயிலாக ஸுர்ய மண்டலம் சென்று
மறுபடியும் திரும் பமாட்டார்கள்.
த்ரிகரண சுத்தியும், தபஸ்ஸ@ம், ப்ரஹ்மசர்யமும் உள்ளவர்களுக்கு ப்ரக்ருதி மண்டலத்துக்கு மேலேயுள்ளது ப்ரஹ்மலோகம்.

2 – பார்க்கவர் கேட்பது –
ப்ரஜைகளின் உடம்பைத் தாங்குபவர் எவர்?
ப்ரகாசப்படுத்துகிறவர் எவர்?
இவர்களில் யார் சிறந்தவர்?

பிப்பலாதர் பதில் –
பஞ்சபூதங்களும், இந்திரியங்களும் உடம்பைத் தாங்குகின்றன. இதில் ப்ராண வாயு சிறந்தது. இதை நிரூபித்தும்
ப்ராண வாயு மற்ற இந்த்ரியங்களுக்கு உணர்த்தியது.
வாக்கு, கண், மனசு, காது போன்றவை. ப்ராணனைப் பலவாறு புகழ்ந்தன.
இந்த ஸ்தோத்ரம் இங்கு விவரமாகச் சொல்லப்பட்டுள்ளது ).

3 – கௌசல்யரின் கேள்வி –
இந்த ப்ராணவாயு எங்கிருந்து பிறக்கிறது?
எப்படி உடலில் வந்து சேருகிறது?
எவ்வாறு தன்னைப் பிரித்துக் கொள்கிறது?
எந்த வழியாக வெளியே கிளம்புகிறது?
உடலுக்கு உள்ளேயும், வெளியேயும் எப்படி இருந்து வருகிறது?

பிப்பலாதர் பதில் –
பரமாத்மாவிடமிருந்து (பகவான்) ப்ராண வாயு பிறக்கிறது. ஒவ்வொருவர் உருவத்திற்கும் நிழல் இருப்பதைப்
போல, ஜீவனின் உடலில் சேர்ந்து( ப்ரவேசித்து) மனசும் மற்ற இந்த்ரியங்களும் பிரியாதபடி இருக்கிறது.
முகபாவத்தில் இருக்கிறது. ஹ்ருதயத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
கீழ் இந்த்ரிய ஸ்தானத்தில் ”அபானன்” என்கிற பெயராலும்,
ஹ்ருதய நாடித்துடிப்பில் ”வ்யானன்” என்கிற பெயராலும்,
பாப புண்ய பலன் பெறும் நாடியில் – ”உதானன்” என்கிற பெயராலும்,
வயிற்றில் அக்னியாக ”ஸமானன்” என்கிற பெயராலும்,ப்ராணவாயு வசிக்கிறது.

கீழ் இந்தீரிய ஸ்தானம் – அபானன் – ஸுர்யன்
வயிற்றில் – ஸமானன் – பூமி
ஹ்ருதயத்தில் வ்யானன் – ஆகாயம்
புண்ய, பாப நாடித் துடிப்பில் – உதானன் – வாயு
முக்ய ப்ராணன் – தேஜஸ்
இப்படி பஞ்ச பூதங்களுக்கு சம்பந்தப்படுத்துவர்.

(அதனால்தான் ஆகாரம் உட்கொள்ளும் முன்பாக ப்ராணாஹுதி என்று ப்ராணாயஸ்வாஹா , அபாநாயஸ்வாஹா ,
வ்யாநாயஸ்வாஹா , உதானாயஸ்வாஹா , ஸமாநாயஸ்வாஹா , ப்ரஹ்மணேஸ்வாஹா … என்று துளி சாதம் எடுத்துக் கொண்டு
பல்லில் படாமல் ஒவ்வொரு மந்த்ரத்தையும் சொல்லி சாப்பிடுகிறோம்).

4. ஸெளர்யாயணி முனிவர் கேள்விகள் –
தூங்கும்போது உடலில் எவை வேலை செய்கின்றன?
எவை வேலை செய்யாமல் உள்ளன?
ஸ்வப்னம் காண்பது எப்படி?
எதற்கு சுகம் உண்டாகிறது?
எல்லாம் எங்கே தங்கி நிற்கின்றன?

பிப்பலாதர் பதில் –
உறங்கும்போது எல்லா இந்த்ரியங்களும் மனத்தில் லயிக்கின்றன. அப்போது ப்ராண, அபான, வாயுக்கள் வேலை செய்கின்றன.
அப்போது ப்ராணன் (ஜீவன் என்று பொருள் கொள்க), மனசை உடலிலேயே பரப்ரம்மம் உள்ள இடத்திற்கு கொண்டு செல்கிறது.
அப்போது வழியில் கண்டது, கேட்டது, எப்போதோ அனுபவித்தது, அனுபவிக்காதது, இருப்பது,
இல்லாதது எல்லாம் ஸ்வப்னத்தில் – ஸ்வப்ன அனுபவத்தில் வருகிறது.
தேஜஸ் (பராமாத்மா)ஸினால் தாக்கம் ஏற்பட்டு ஸ்வப்னமும் போய் சுகத்தை ஜீவன் அனுபவிக்கிறது.
எல்லாம் இப்படி தன்னிடத்தில் லயித்து இருக்கும்போது ஜீவன், பரமாத்மாவிடம் தங்கி நிற்கிறான்.
இப்படி உபாசிப்பவன் எல்லாவற்றையும ;அறிந்தவன் ஆவான்.

5 – சைப்யரின் கேள்வி –
ப்ரணவத்தை சாகும் வரை உபாஸிப்பவன் பெறும் உலகம் எது?

பிப்பலாதர் பதில் –
ஒற்றை மாத்ரை உள்ள ப்ரணவத்தை உபாஸிப்பவன் தபஸ், ப்ரஹ்மச்சர்யம், ஆஸ்திக்யம், என்ற
செல்வங்களுடன் உயர்ந்ததை அனுபவிப்பான்.
இரண்டு மாத்திரைஉள்ள ப்ரணவத்தை உபாஸிப்பவன் ஸ்வர்க்க லோகம் வரை(சந்திர லோகம்) சென்று நல்ல
அனுபவங்களை அனுபவித்து திரும்புவான்.
மூன்று மாத்ரை கொண்ட ப்ரணவத்தினாலே, பரமான ப்ரஹ்மத்தை உபாசிப்பவன், எல்லா பாபமும் போய்
பயத்தையும் போக்குகின்ற பரமபுருஷனைக் கண்ணாலே காண்பான்.

6 – ஸுகேசர் கேள்வி –
ஷோட சகல புருஷன் யார்?
எங்கு உள்ளான்?

பிப்பலாதர் பதில் –
பதினாறு கலைகளுக்கு புருஷன். இந்த உடலிலேயே இருக்கிறான். சிந்தனை செய்து ப்ராணன், ச்ரத்தை,
5 பூதங்கள், இந்த்ரியம், மழை, அன்னம், வீர்யம், தபஸ், மந்த்ரம், கர்மம், பலன், பேர் என்கிற பதினாறையும் அமைத்துக்
கொண்டால் இந்த ஜீவனுக்கும் மேலானவன் ப்ரம்மம் – பரமாத்மா என்று அறிவான்.
16 கலைகளும் ஜீவனிடம் அடங்கியுள்ளன.
இப்படி அறிந்தவனுக்கு ம்ருத்யு பயம் இல்லை. பொதுவாக ப்ராண வாயு முக ஸ்தானம் என்றும், இதுவே கீழ் இந்திரிய
ஸ்தானத்தில் அபான வாயு (அபானன்), வயிற்றில் அக்னி இருக்குமிடத்தில் ஸமானன், ஆத்மாவின் இருப்பிடமான
ஹ்ருதயத்தில் ஆயிரக்கணக்கான நாடிகளில் வ்யானன், புண்யத்தினால் பெறப்படும் புண்ய லோகம், பாவத்தின் பலனாக
பெறப்படும் பாப லோகம், இரு வினைகளின் பயனாக மனித உலகத்தையும் பெற வழியாக உள்ள நாடிகளில் உதானன் என்றும்
ப்ராண வாயு தன்னை பிரித்துக் கொண்டு இயங்குவதாக சொல்லப்படுகிறது.

————-

5 – முண்டகோபநிஷத்து

ப்ரஹ்மா, எல்லா வித்யைகளுக்கும் ஆதாரமான ”ப்ரஹ்ம வித்யை”யை, தன் மூத்த குமாரரான அதர்வர் என்பவருக்கு உபதேசித்தார்.
இந்த வித்யை அங்கீர், பாரத்வாஜர், ஸத்யவாஹர் வழியாக ”அங்கிரஸுக்கு” வந்தது.
சௌநகர் என்கிற ரிஷி ,அங்கிரஸை அணுகி
”எதை அறிந்தால் எல்லாவற்றையும் அறிந்ததாகும்?” எனக் கேட்டார். அதற்குரிய விளக்கம் தான்—-முண்டகோபநிஷத்து.

”பரை”, ”அபரை” என்கிற இரண்டு வித்யைகளை அறிய வேண்டும்.
அபரை என்பது வேதங்களும் அவற்றின் அங்கங்கள் உபாங்கங்கள். இவற்றை அர்த்தத்துடன் அத்யயனம் செய்து
அடையப்படும் தெளிவான ப்ரஹ்ம ஞானமே அபர வித்யை (உலக வாழ்க்கைக்கு பயன்படும் பலவகையான
கல்விகளைச் சொல்வது என்றும் சொல்லப்படுகிறது).

”பரை” – என்பது அழிவே இல்லாத பர ப்ரஹ்மத்தைப் பெற வழியாக உள்ள ஸாக்ஷாத்காரம். இது ஜ்ஞானிகளுக்கு உரியது.

ப்ரஹ்மத்திற்கு உதாரணமாகச் சொல்ல வேண்டும் என்றால்,
தன் த்ரேகத்திலிருந்து நூல் உண்டாக்கி அதனால் கூடு ஒன்று செய்து அதில் இருக்கும் ”ஊக்ணநாபி” என்கிற சிலந்திப் பூச்சியே.
நித்ய கர்மாக்களை விடாமல் செய்தால் ப்ரஹ்ம லோகம் வரையிலுள்ள பலன்கள் எல்லாம் கர்மம் செய்வதாலேயே வந்து சேரும்.

பரமபுருஷன் – பகவான் என்று அறிந்து அனுஷ்டான பரர்களாக இருப்பவர்கள் ஸுர்ய மண்டலம் வழியாக பகவானின் உலகத்தை அடைவர்.
காம்யங்களை விட்டு, நித்ய கர்மாக்களை விடாமல் செய்து வேத வேதாந்த ஞானமுள்ள குருவை அடைந்து அவர் மூலம் ப்ரஹ்மத்தை அறிய வேண்டும்.

ப்ரணவம் என்கிற வில்லில் ஜீவாத்மா என்கிற அம்பை உபாஸனையால் கூர்மை யாக்கி வில்லில் தொடுத்து, ப்ரஹ்மம் என்ற இலக்கில் எய்ய வேண்டும்.
இதுதான் மோக்ஷத்திற்கு உபாயம். இப்படிப்பட்ட மோக்ஷ ராஜ்யத்திற்கு உரியவனான பகவான் ஹ்ருதயத்திலும் இருக்கிறான்.
இதை அறிந்தவன் த்வேஷம், வினைகள் எதுவும் இல்லாதவனாக ஆகிறான்.

உடல் ஒரு வ்ருக்ஷம். இதில் இரண்டு பக்ஷிகள் உள்ளன. ஒன்று வ்ருக்ஷத்தில் உள்ள பழங்களை சாப்பிடுகிறது
இன்னொரு பக்ஷி எதுவும் சாப்பிடாமல் ஒளியுடன் உள்ளது.
கர்மானுஷ்டானன் ப்ரஹ்ம வித்யை செய்யத் தகுந்தவன். ப்ரஹ்ம வித்யையை அனுசரிப்பவனை ஆராதிப்பவனுக்கு ஸர்வ லோகமும் பயன்.

ஸ்ரீ பாஷ்யத்தில் சொல்லப்பட்ட விவேகம், விமோகம், அப்யாஸம், க்ரியை, கல்யாணம், அனவஸாதம், அனுத்தர்ஷம் ஆகிய ஏழும் வேண்டும்.

1) விவேகம் – சாஸ்த்ர சம்பந்தமான சுத்தமான ஆஹாரத்தை எடுத்துக் கொண்டு வாழ்தல்.
2) விமோகம் – பற்றற்று இருப்பது.
3) அப்யாஸம் -பக்திக்கு இலக்கான பகவானையே சிந்தனை செய்வது.
4) க்ரியை – வைதீக கர்மானுஷ்டானம்.
5) கல்யாணம்- சத்யம், முக்கரணங்களுடன் (மனோ, வாக்கு,காயம்) ஒத்திருப்பது. தயை – நன்கொடை, அஹிம்சை – பிறருக்கு துன்பம் நினைக்காமை என்பன.
6) அனவஸாதம் – சோர்வில்லாமல் இருப்பது.
7) அனுத்தர்ஷம் – அதிக மகிழ்ச்சிக்கு ஆளாகாமல் இருத்தல்.

பக்தி யோகம் செய்ய இவை எல்லாமும் வேண்டும். இதனால் பகவானை அடையலாம்.

இந்த உபநிஷத் மூன்று பிரிவாக உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு கண்டங்கள்.

————-

6 – மாண்டூக்யோபநிஷத்து

ஆறு கண்டங்கள். இது ப்ரணவத்தில் உள்ள அக்ஷரங்களைப் பிரித்துச் செய்யப்படும் உபாஸநத்தைப பற்றிச் சொல்கிறது.
இந்த அக்ஷரங்களை வைச்வாநரன், தைஜஸன், ப்ராஜ்ஞன் – என்றிப்படி உபாஸிக்க வேண்டும்.
ஜீவனுக்கு விழிப்பு,ஸ்வப்நம், உறக்கம், மோக்ஷம் என்று நான்கு நிலைகள் உள்ளன.
ஒவ்வொரு நிலைக்கும் ஒரு மூர்த்தி.
இம் மூர்த்தி ஸ்ருஷ்டி, ஸ்திதி,வ்யாபாரங்களுக்குக் காரணன்.
சாந்தமாக இருப்பது நான்காவது மூர்த்தி. அதுவே ஆத்மா.
வைச்வாநரன் – அநிருத்தனையும்,
தைஜஸன் – ப்ரத்யும்நனையும்,
ப்ராஜ்ஞன் – ஸங்கர்ஷணனையும்,
துரீயன் – வாஸுதேவனையும் குறிக்கும்.
(உபநிஷத் பாஷ்யகாரர்–ப்ரஹ்மஸுத்ரத்தில் உபயலிங்க அதிகரணத்தில் விவரம் உள்ளது).

ஜீவனின் மூர்த்தி வ்யூஹம் குணங்கள்–நிலை

விழிப்பு வைச்வாநரன் அநிருத்தன் சக்தி,தேஜஸ் –(ஜாக்ரந் மூர்த்தி) ரக்ஷணம் – அறிவு
ஸ்வப்னம் தைஜஸன் ப்ருத்யும்னன் ஐச்வர்யம்,(ஸ்வப்னமூர்த்தி) வீர்யம்,ஸ்ருஷ்டி, தர்மம்
உறக்கம் ப்ராஜ்ஞன் ஸங்கர்ஷணன் க்ஞானம், பலம்(ஸஷுப்த ஸம்ஹாரம் மூர்த்தி) சாஸ்த்ரப்ரசாரம்
மோக்ஷம் வாசுதேவன் வாஸுதேவன் (மூர்ச்சாமூர்த்தி)

*முதல் வ்யூஹம் – வாஸுதேவன் என்றும், மொத்தம் நான்கு வ்யூஹங்கள் என்றும் சொல்வர். மூலவாஸுதேவனை –
பரவாஸுதேவன் என்றும், இந்த முதல் வ்யூஹ வாஸுதேவனை வ்யூஹ வாஸுதேவன் என்றும் சொல்வர்.
வ்யூஹ வாஸுதேவன் எல்லாவற்றிற்கும் பொது.
விழித்திருப்பவன் – எல்லாவற்றையும் செய்கிறான். ஸ்வப்னத்தில் உடலின் செயல் இல்லை.

ஜீவன் செய்யும் த்யானத்திலும் நான்கு நிலை:
1) வெளிவிஷயங்களிலே ஈடுபட்டுக் கொண்டே பகவானை சிந்தித்தல் – ஜாக்ரத் த்யானம்
2) வெளி விஷயங்கள் இல்லாமல், மனஸ் மட்டும் வெளிவிஷயங்களில் பற்றைவிடாமல்——பகவத்சிந்தனை—–ஸ்வப்ந த்யானம்
3) வெளிவாஸனையோடுமட்டும் கலப்புண்ட சிந்தனை——ஸுஷுப்தி த்யானம்
4) எல்லாமும் விலக பகவத் த்யானம் மட்டுமே இருப்பது—-மூர்ச்சா த்யானம்

பகவானின் லீலா விபூதியில் (உலகங்களையெல்லாம், ஜீவன்களை எல்லாம் படைத்துக் காத்து அழிக்கும் விளையாட்டில்)
ஸ்ருஷ்டி, ஸ்திதி ஸம்ஹாரங்களில் வாஸுதேவ மூர்த்தியிடமிருந்து ஸங்கர்ஷண மூர்த்தி,
அதனின்று ப்ரத்யும்னமூர்த்தி, அதனின்று அநிருத்தமூர்த்தி தோன்றுகிறது.

ஸங்கர்ஷணன் – ஜீவ தத்துவத்திற்கு அபிமானி.
ப்ரத்யும்னன் -மனஸ்ஸுக்கு அபிமானி.
அநிருத்தன் அஹங்காரத்திற்கு அபிமானி.

மோக்ஷ ஆசை யுள்ளவர்கள் முதலில் அநிருத்தன், பிறகு ப்ரத்யும்னன், பிறகு ஸங்கர்ஷணன் அதன் பிறகு வாஸுதேவ உபாஸனம் செய்ய வேண்டும்.

ப்ரணவத்திற்கு வ்யூஹ மூர்த்தி விஷயமாக விவரித்துச் சொல்லப்படுகிறது.
அதர்வ வேதத்தைச் சேர்ந்த பிப்பலாத சாகையில் உள்ள ப்ரச்னோபநிஷத்து, முண்டக சாகையில் உள்ள முண்டகோபநிஷத்து,
மண்டூக சாகையில் உள்ள மாண்டோக்ய உபநிஷத்து இவை பிரஸித்தி பெற்றவை.

ஆத்மாவின் பதங்கள் நான்கு.
வைச்வாநரன், தைஜஸன், ப்ராஜ்ஞன், துரீயன்.
ஜீவனுடைய நான்கு அவஸ்தைகள்
விழிப்பு,ஸ்வப்னம், ஸுஷுப்தி மோக்ஷம்.-இந்த நான்கு அவஸ்தைகளை (நிலைகளை) நிர்வஹிப்பது நான்கு மூர்த்திகள் என்று சொல்லப்படுகிறது.

————-

7. தைத்திரீயோபநிஷத்து

கிருஷ்ண யஜூர்வேதம் – தைத்திரீய சாகை – ஆரண்யகத்தில் ஐந்தாவது, ஆறாவது ப்ரச்னம் என்பதாக தைத்திரீயோபநிஷத்து உள்ளது.

ஐந்தாவது (முதல் ப்ரச்னம்) – சீக்ஷா வல்லி, ஆனந்த வல்லி என்கிற ப்ரஹ்ம வல்லி, ப்ருகு வல்லி என்று மூன்று பிரிவுகள்.

ஐந்தாவது, ஆறாவது ப்ரச்னங்கள், ஸாம்ஹிதி உபநிஷத்,வாருணீ உபநிஷத் , யாஜ்ஞிகீ உபநிஷத் என்றும் மூன்றாகப் பிரிப்பர்.

சீக்ஷாவல்லிக்கு ஸாம்ஹிதீ உபநிஷத் என்றும், ஆனந்த வல்லியும், ப்ருகுவல்லியும் – ஆனந்தமயமான ப்ரஹ்ம வித்தையைச் சொல்வதால் ஸைஷா ,
பார்கவீ, வாருணீ வித்யா என்று சொல்லப்பட்டதற்கு இணங்க
வாருணீ உபநிஷத் என்றும் நாராயண உபநிஷத் – யாஜ்ஞகீ உபநிஷத் என்றும் சொல்லப்படுகிறது .

வேதாங்கங்களில் கூறப்படும் சிக்ஷையைச் சொல்வதால், சீக்ஷாவல்லி என்றும், ஆநந்தமய வித்யையைச் சொல்வதால் ஆனந்த வல்லி என்றும்,
”ப்ரஹ்மவித் ஆப்நோதிபரம்…..” என்ற ப்ரஹ்மசப்தத் தொடக்கத்தாலே ”ப்ரஹ்மவல்லி” என்றும் சொல்வர்.
இது வாருணீ உபநிஷத்தின் முன் பகுதி. பின் பகுதியானது ப்ருகுவுக்கு அவர் பிதாவான வருணன் உபதேசித்தது”ப்ருகுவல்லி.”

யக்ஞன் என்கிற நாராயணன் என்கிற மஹரிஷியால் ஸக்ஷாத்கரிக்கப்பட்டிருப்பதால், ”யாஜ்ஞகீ” என்றும், நாராயண உபநிஷத் என்றும் சொல்வர்.
நாராயணாநுவாகம் நடுநாயகமாக இதில் உள்ளது.
பகவான் நாராயணனையும், அவனை ஆராதிக்கும் முறையையும் சொல்கிறது. இது முக்யமானது.

சீக்ஷாவல்லி

வேதத்திற்கு அங்கமானவை ஆறு. அவற்றில் ஒன்று சிக்ஷை.
இதில் வர்ணம், ஸ்வரம், ஹ்ரஸ்வதீர்க்காதி மாத்ரை. உச்சரிப்புக்கு வேண்டிய ப்ரயத்ன பலம் (வலிமை) ஸாமஸம்ஹி தை எனப்படும்
ஸந்தானம் – இவைகள் இதில் உள்ளன.-ஸம்ஹிதை என்பது இணைப்பு,-இணைப்பதற்கு இரண்டு வேண்டும்.
பூர்வ ரூபம்,உத்தரரூபம், ஸந்தி, ஸந்தானம் என்ற நான்கு வஸ்துக்களில்
லோகம், ஜோதி, வித்யா, ப்ரஜை , சாரீரம் இவை ஸம்பந்தமாகச் சொல்லி இவற்றைச் சொல்பவருக்கு மக்கள், பசுக்கள்,
வேதார்த்தஜ்ஞானம், அன்னம், ஸ்வர்க்கம் போன்ற பலன்கள் சொல்லப்பட்டது.
ப்ரணவத்தைச் சொல்லி, அதனால் அறிவு, ஆரோக்யம், பேசும் ஆற்றல், காதுக்கு வன்மை வேண்டப்பட்டது.
பூ:, புவ:, ஸுவ: என்றமூ_ன்று வ்யாஹ்ருதிகள். அத்துடன் ”மஹ ” சேர்த்து நான்கு உபாஸனங்கள் சொல்லப்பட்டது.
உபாஸன பலனாக, பகவானைத் தியானித்து ஹ்ருதய நாடி மூலம் சிரசில் கபாலத்தை பிளந்து அக்னிலோகம்,
வாயுலோகம், ஸுர்ய லோகம் இவற்றில் தங்கி ப்ரஹ்மத்திடம் சேர்ந்து பேரானந்தத்தை அனுபவிப்பது சொல்லப்பட்டது.
பிறகு பங்க்தி, ஐந்து ஐந்தாக சொல்லப்பட்டது. துர்க்குணங்களை ஒழித்து ஸத்வ குணத்தை வளர்த்து தபஸ் செய்தல் – ”ந்யாஸம்”
என்கிற தபஸ் சொல்லப்பட்டது. முக்யமாக வேதரஹஸ்யம் சொல்லப்பட்டது.

ஆநந்தவல்லி

பகவானிடமிருந்து பஞ்சபூதங்களும் ஓஷதிகளும், அன்னமும், அன்னத்தின் மூலம் உடலும் பிறக்கின்றன.
எல்லாரும் அன்னத்தால் போஷிக்கப்படுகிறார்கள். அன்னம் உயர்ந்தது.
அன்னமய உடலில், ப்ராணமய ஆத்மா. இதற்கு ப்ராணன் தலை; வ்யானன் வலப்பக்கம்; அபானன் இடப்பக்கம்;
வாயு நடுவுடல்; பூமி ஆதாரம்; ப்ராணனே ப்ரஹ்மம்.

இதற்கு மேல் மனோமயம். யஜூர்வேத சிந்தனம் தலை; ருக்வேத சிந்தனம் வலப்பக்கம்; ஸாமவேத சிந்தனம் இடப்பக்கம்;
ஆசார்யர்களின் ஆக்ஞை நடுவுடல்; அதர்வ வேத சிந்தனம் ஆதாரம்.
இப்படி உபாஸிப்பதால் மனதிற்கு எட்டாத பேரானந்தம் கிடைக்கும். இதற்கு மேல் விஞ்ஞானமயம். ஜீவன் இதற்கு
(அறிவுகள் சக்தி – அவயவங்கள். ச்ரத்தை. அநித்ய வஸ்துவின் அநுபவம், நித்ய வஸ்துவின் அநுபவம். யோகம், சக்தி –அவயவங்கள்)
இப்படி உபாஸித்தால் உடலிலிருந்து வெளியே வரும் போது எல்லா பாபங்களையும் போக்கி எல்லாவற்றையும் அடையலாம்.

இதற்கு மேல் ஆனந்த மயம்.
ப்ரியம் – தலை; மோதம் -வலப்பக்கம்; ப்ரமோதம் – இடப்பக்கம் ;
ஆனந்தம் – நடுவுடல் ;ப்ரஹ்மம் – ஆதாரம்.
சிறந்த ஸுகஅனுபவம்.
இதை இப்படி உபாஸிப்பவன் பெறும் ஆனந்தம் அளவிட இயலாதது .

மானுஷ ஆனந்தம் – நல்ல ஆரோக்யத்துடன், யுவாவாய் இருக்கும்போது சிஷ்யர்களுக்கு நன்கு உபதேசித்துச்
செல்வத்துடன் இருக்கும்போது பெறும் ஆனந்தம்.

இதைப் போல் நூறு மடங்கு – மனுஷ்ய கந்தர்வர்களின் ஆனந்தம். தேவகந்தர்வர்கள், பித்ருக்கள், தேவலோக வாசிகள்,
இந்த்ரன், ப்ருஹஸ்பதி, ப்ரஹ்மா வரை ஆனந்தத்தை நூறு நூறாகப் பெருக்கி சதுர்முகாநந்தம் நூறு கொண்டது,
பரப்ரஹ்மத்தின் ஆனந்தம் என்று சொல்கிறது. இவ்வளவாக மோக்ஷம் அடைந்து, பரப்ரஹ்மத்தை அடைவது சொல்லப்படுகிறது.

ப்ருகுவல்லீ

வருணர் – தன் குமாரனான ப்ருகுவுக்கு சொன்னது.

ப்ரஹ்மம் என்பது அன்னம், ப்ராணன், கண், மூக்கு, மனஸ், வாக்கு, பிறகு ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயம் இப்படி உபாஸிப்பது –
இதுதான் ப்ரஹ்மம் என்றார்.
கடைசியில் பிதாவின் உபதேசப்படி தபஸ் செய்து ஆனந்தமயமே
ப்ரஹ்மம் என்று ப்ருகு தெளிந்தான்.
இதில் ”விசிஷ்டாத்வைத”ப்படி மோக்ஷம் விளக்கப்படுகிறது

இரண்டாம் ப்ரச்னம் – நாராயணோபநிஷத்

திருப்பாற்கடலிலும், ஸுர்ய மண்டலத்திலும், பரமபதத்திலும் உள்ளவன்.
ஸர்வந்தர்யாமி.
எல்லாவற்றையும் படைத்து, காத்து,அழிப்பவன்.
எல்லாவற்றிலும் ஆராதிக்கப்படுபவன் என்று
பலவாறாக துதிக்கிறது நாராயணோபநிஷத்து.

திருப்பாற்கடலிலும், ஸுர்ய மண்டலத்திலும், பரமபதத்திலும் உள்ள ஸர்வந்தர்யாமி
இதில் அக்னி, ருத்ரன், விநாயகர், கருடன், துர்க்கை, நாராயணன் இவர்களைப் பற்றிய மந்த்ரங்கள் உள்ளன.
அகமர்ஷ ண ஸுக்தம் – ஸ்நானம் செய்யும் முறை, அபிகமன காலம் வரை செய்பவை சொல்லப்படுகின்றன.
ப்ரம்மோபாஸனம் சொல்லப்படுகிறது.

மதுஸுக்தம், க்ருதஸுக்தம் உள்ளது. ஸாத்விக த்யாகம் சொல்லப்படுகிறது.
தஹர வித்யை, மோக்ஷ வித்யை, பர வித்யைகளாலே உபாசிக்கப்படுபவன் என்கிறது.
ஸுர்ய மண்டலத்திலே பகவானை உபாசிக்கும் விதம் சொல்லப்படுகிறது.

உபாதான கால விவரம், ஆராதனம் இவைகள் கோடி காட்டுகிறது.
ஹிரண்ய கர்ப்ப ஸுக்தம், மேதா ஸுக்தம், த்ரி ஸுபர்ண ப்ரஹ்ம ஸுக்தம் இதில் உள்ளன.

ஸன்யாஸ,ஹோம மந்த்ரங்கள் சொல்லப்படுகின்றன–ஸத்யம், தபஸ், தமம்,சமம், தானம், தர்மம், பிரஜநனம், அக்னி,
அக்னிஹோத்ரம்,யஜ்ஞம், மாநஸம் இவைகளைச் சொல்லிக் கடைசியாக ”ந்யாஸத்தை”ச் சொல்கிறது.
இதுவே ப்ரபத்தி.

ப்ரபத்தி செய்து கொள்பவன் மீண்டும் பிறப்பதில்லை.
ப்ரணவத்தைக் கொண்டு ஜீவனை , பகவானிடம் சமர்ப்பிக்கும் தேவ ரஹஸ்யம் என்பது சொல்லப்படுகிறது.

தைத்திரியோபநிஷத்தில் உள்ள மஹா நாராயணோபநிஷத்”
பர தத்துவத்தைச் சொல்கிறது.

இதற்கு இரண்டு ப்ரச்னங்கள்.
முதல் ப்ரச்னத்தில் சீக்ஷாவல்லி, ப்ருகுவல்லி, ஆனந்தவல்லி.
இரண்டாவது ப்ரச்னத்தில் ”யாஜ்ஞிகி உபநிஷத்”.

—————————

தைத்திரியோபநிஷத்

இது மூன்றாக உள்ளது.
(1) ஸாம்ஹிதி உபநிஷத் (சீக்ஷாவல்லி),
(2) வாருணி உபநிஷத் (ப்ருஹ்ம வல்லி, ஆனந்த வல்லி)
(3) யாஜ்ஞிகி உபநிஷத் (ப்ருகுவல்லி)

பரவித்யாவின் அங்கம் – பூர், புவஸ், ஸுவ: என்கிற வ்யாஹ்ருதி த்ரயம் (பூர், புவ:, ஸுவ:மூன்று) நாலாவது வ்யாஹ்ருதி – மஹ

இந்த நாலாவது வ்யாஹ்ருதி – முதல் மூன்று வ்யாஹ்ருதிக்கு சரீரம்.
இந்த சரீரத்திற்கு ஆத்மா பரப்ருஹ்மம்.
இதற்கு ”வ்யாஹ்ருத் உபாசனை” என்று பெயர்.
இதைச் செய்பவனுக்கு ”ப்ரஹ்ம வித்யை” ஸித்திக்கிறது.

உபாஸனா | பூ | புவ: | ஸுவ: | மஹ :

1. லோகோபாஸனா | உலகம் | அந்தரிக்ஷம் | ஸ்வர்க்கம் | ஆதித்யன்
2. தேவதோபாஸனா | அக்னி | வாயு | ஆதித்யன் | சந்த்ரன்
3. வேதோபாஸனா | ருக் | ஸாமம் | யஜூர் | ப்ரஹ்ம| (ப்ரணவம்)
4. ப்ராணோபஸனா | ப்ராணன் |அபானன் |வ்யானன் | அன்னம்

இப்படி ப்ரஹ்ம வித்யை ஸித்திக்கும் உபாஸகன் தனது ஹ்ருதயாகாசத்தில் உள்ள அழகிய, அழிவற்ற ஒரு புருஷனை
உபாசித்து வாயினுள், அடி நாக்கின் மேலே” தாலுகை” எனப்படும்.
நடுவில், பசுவின் காம்பு போல் தொங்கும் ஒருவகை மாமிச பிண்டத்தின் உள் வழியாகச் சென்று, தலையின் ரோம வேர்களை
அடைந்து, பின் மண்டையோட்டை விலக்கிக் கொண்டுச் செல்லும்” ஸுஷும்னா” என்கிற நாடியின் வழியாக
அக்னி, வாயு,மற்றும் ஆதித்ய லோகங்களை அடைந்து, ப்ரஹ்மத்தை அடைந்து, கர்ம பந்தஹீனன் ஆகையாலே
அப்ராக்ருத சரீர இந்த்ரியங்களை தன் விருப்பப்படி பெற்று, நித்ய ஸூரிகள் அனுபவிக்கும் எல்லையில்லாப் பேரானந்தத்தை அனுபவிக்கிறான்.

————-

தைத்திரிய நாராயண உபநிஷத்

இப்போது நடப்பது, ஸ்வேதவராஹ கல்பம்.
இது முடிந்ததும் நைமித்திக ப்ரளயம். அப்போது ஸுர்ய மண்டலம் நாசம்.
ஒரு வஸ்துவை அறிய வேண்டிய ஜ்ஞானம் – தர்ம பூத ஜ்ஞானம் எனப்படும். நித்ய முக்தர்களுக்கு இது அளவில்லாதது.
பாபத்தை போக்கக்கூடிய வருணனுக்கு ”அகமர்ஷணன்” என்று பெயர். அகமர்ஷண ஸுக்தம் என்றால் எல்லா பாபங்களையும்
போக்குவதற்காக ஜபிக்கப்படும் மந்த்ரம் என்று அர்த்தம்.

பரமாத்மாவிடமிருந்து உண்டான வஸ்துக்கள்.

(1) ஏழு இந்த்ரியங்கள் (மனஸ், புத்தி, ஐந்து ஜ்ஞானேந்த்ரியங்களான கண், காது, மூக்கு, தோல், நாக்கு)
(2) ஏழு அக்னிகள் – ஆவஹனீயம், கார்ஹ பத்யம், தக்ஷிணாக்னி, ஸப்ய, ஆவஸத்ய, ப்ராஜஹித,அக்னிர்த்ராஹா ::
(3) ஏழு ஸமித்துக்கள் (மரங்கள் – அச்வத்த, உதும்பல, பலாச, ஸமீ, விகங்கத, அசனீ, புஷ்கரபர்ன)
(4) அக்னிக்கு ஏழு நாக்குகள் (காயீ, கராலீ, மனோஜவ, சுநீசுதா, சுதாம்பரவர்ணா, ஸ்ப்ரிலிங்கிணீ, விஸ்வரூபி)
(5) ஏழு லோகங்கள் – பூலோக, புவர், ஸுவர், மஹர், ஜனோ, தபோ, ஸத்ய லோகம்

நாராயண உபநிஷத்தில்
64வது மந்த்ரம் – ஜ்ஞானத்தைப் பெற, ஜபிக்கப்பட வேண்டும்.
65வது மந்த்ரம் – கெட்ட கனவுகள், பயத்தைப் போக்க ஜபிக்கப்படவேண்டும்.
66வது மந்த்ரம் – மதுஸுக்தம் (அமாவாஸ்யை, ச்ராத்த காலங்களில் சொல்லப்படுகிறது)

————–

8. ஐதரேயோபநிஷத்து

இது ”ருக்” வேதத்தைச் சேர்ந்தது. ”ஐதரேயர்” என்கிற மஹரிஷி தவம் புரிந்து கண்ட ப்ராஹ்மணம். ஐதரேய ஆரண்யகமும் உள்ளது.
(ஐந்து ஆரண்யகங்கள் – இரண்டாவதுமற்றும் மூன்றாவது ஆரண்யகத்திற்கு ஐதரேயோபநிஷத்து என்றுபெயர்).

ப்ராணன் சிறந்தது. இது உடலை விட்டு கிளம்பினால் எல்லா அவயவங்களும் செயல்படாது.
ஸத்யம் – இதை ”ஸத்” ,”தி”, ”யம்” என்று மூன்றாகப் பிரித்தால் ”ப்ராணன்”, ”அன்னம்”,”ஆதித்யன்” என்று பொருள்படும்
வாக்கு – இதில் அடங்கிய சந்தஸ்களுக்கு,
ப்ருஹதி சந்தஸ் என்பது ப்ராணன்.

தண்ணீரால் ப்ராணனுக்கு புஷ்டி ஏற்படுகிறது.
விஸ்வாமித்ரர், இந்திரனிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த்ரன் சொன்னதாவது:-
நான் ப்ராணன், எல்லா பூதங்களும் ப்ராணனே, ஆதித்யன் ப்ராணனே.
எனக்கு அன்னம் இதுவே.
இது வைச்வாமித்ரம் ஆகும். (கௌஷீதகி உபநிஷத்தில்” ப்ரதர்தந வித்யை” முதலியவற்றில் உள்ளது).

மரம், செடி இவற்றில் ஆத்மா சிறிது விரிந்திருக்கும்.
பிராணிகளிடத்தில் கொஞ்சம் அதிகம்.
மனித உடலில் இந்த விரிவு அதிகம். (ஜீவாத்மா)

மனித உடலில் வாயு ஐந்து விதமாக இருக்கிறது.
இவைகளுக்கு கட்டுப்பட்டது கண், காது,மூக்கு,மனம், சொல் (வாக்கு).
வாக்கினால் செய்யப்படும் யஜ்ஞம் ஐந்து விதம் (ஸோம யாகமும் சேர்த்து)

உக்தி (அல்லது) உக்த்தம் மிக முக்கியமானது.
நிஷ்கேவல்யம் என்பது உக்த்த சாஸ்த்ரம்.
இது ஒரு விதமான மந்த்ர பாடம்.
பல த்ருஷ்டி விதிகள் இதில் சொல்லப்படுகின்றன (த்ருஷ்டி என்பது, ஒன்றை மற்றொன்றாகப் பாவிப்பது)
ப்ருஹதீயை (ஆயிரமாக) பாவித்து, இந்த்ரனாக பாவித்து, அதனால் இந்த்ர லோகத்தை அடையலாம்.
ஆனால்,மீண்டும் பிறப்பு உண்டு.
ஆதித்ய, அக்னியின் (இரண்டின்) அம்சங்கள் சுக்ல சோணிதங்கள். இவை ஒன்று சேர்வதால் ஆத்மா இவ்வுலகை அடைகிறது.
ஆத்மாவுக்கு ஆண்,பெண் என்கிற வித்யாஸம் இல்லை.
மனுஷ்ய ஆயுள் நூறு வயது.
அதாவது முப்பதாயிரம் நாட்கள்தான். நூறு என்பதை 365ல் பெருக்காதீர்கள். மொத்தத்தில் நூறு வயது;( நூறு வருஷம் அல்ல)
ப்ருஹதிசந்தஸ் ஆயிரம் என்று சொன்னதைப் போல,
இந்த எண்ணிக்கையும் முடிவடையும் போது, தேவ ரதத்தில் (ஐந்து உரு) சென்று பரமாத்மாவை அடையலாம்.
ஐந்து உரு என்பது – 1) வாக்கு – ரதத்தின் ஏர்க்கால்,
2) காதுகள் -சக்கரங்கள்,
3) கண்கள் – குதிரைகள்,
4) மனம் – தேர் பாகன் அல்லது கடிவாளம்,
5) ப்ராணன் – முதலாளி (ஆத்மா)

இதில் (ஐதரேயோபநிஷத்தில்) ஆத்ம ஷட்கம்

உலகெல்லாம் ச்ருஷ்டிப்பதற்கு முன்பு ஆத்மா ஒன்றே. (அதாவது பரமாத்மா ; பரமபுருஷன்)
இது ஸங்கல்பித்துக் கொண்டு ச்ருஷ்டி செய்யத் தொடங்கியது.
அம்பஸ் (ஸ்வர்க்கம்)
,மரீசி (அந்தரிக்ஷ லோகம்),
மரம் (பூலோகம்),
அப்பு (பாதாளம்).
லோக பாலர்கள், இவைகளை முதலில் ச்ருஷ்டித்தது.-பிறகு,ஜலத்தினின்று ஒரு புருஷ வடிவத்தை உண்டாக்கியது.
இதற்கு, அண்டம் போல் வாய் இருந்தது. வாக்கு, மூக்கு, கண், காது இந்த்ரியங்களையும் அவைகளுக்கான தேவதைகளையும்
பிறகு,
ஹ்ருதயம், ப்ராணன், மனஸ், சந்த்ரன், நாபி, அபானம், ம்ருத்யு தேவதை, ஆண் குறி, வீர்யேந்த்ரியம், இப்படி உண்டாக்கப்பட்டது.
இவைகளுக்கு பசி,தாகத்தை பரமாத்மா, உண்டாக்கியது.
அவைகள் ”நாங்கள் வசிப்பது எங்கே?” என்று கேட்க,
பரமாத்மா முதலில் பசுவைக் கொடுத்தது.-பிறகு குதிரையைக் கொடுத்தது.-மனித உடலை உண்டாக்கிக் கொடுத்தது.
பசி, தாகம் இரண்டும் எங்கள் இடம் எது என்று மறுபடியும் கேட்க ”ஹவிஸின்” பாகம் என்று பரமாத்மா சொல்லிற்று.

பிறகு ஜலத்திலிருந்து அன்னத்தை உண்டாக்கியது.
வாய்,அபானம் என்கிற வாயுவினாலே அன்னத்தை உண்ணத் தெரிந்து கொண்டது. ப்ராணன் என்கிற ஜீவாத்மா’ ஸீமா” என்கிற
தலையின் உச்சியைப் பிளந்து கொண்டு உள்ளே புகுந்தது. இது ”வித்ருதி” எனப்படும்.
இந்த ஜீவாத்மாவுக்கு விழிப்பு (ஜாக்ரம்),சொப்பனம் (ஸ்வப்னம்) ஸுஷுப்தி (தூக்கம்) என்கிற மூன்று நிலைகள் உண்டு.
இவை யாவும் அழியக் கூடியது. எங்கும் ப்ரம்மம் (பரமாத்மா) வ்யாபித்துள்ளது.

ஜீவாத்மா, முதலில் புருஷனிடத்தில்” வீர்ய”மாக இருக்கிறது.–புருஷன் வீர்யத்தை ஒன்று சேர்த்து ஸ்திரீயிடத்தில் சேர்த்தவுடன்,
இது ஜீவாத்மாவிற்கு முதல் பிறப்பு.-பிறகு எப்போதும் போலப் பிறப்பது இரண்டாவது பிறப்பு.
ஆயுள் முடிந்து, மரித்து,மறுபடியும் பிறக்கிறான்.-இது மூன்றாவது பிறப்பு.
இப்படி எண்ண இயலாத பிறப்புகள், இறப்புகள், சங்கிலித் தொடர் போல ஜீவாத்மாவுக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

வாமதேவர் என்கிற மஹரிஷி , கர்ப்பத்தில் இருக்கும்போதே முன் ஜன்மங்களையெல்லாம் அறிந்து, பிறந்தவுடனேயே கர்ம
பந்தத்திலிருந்து விடுபட்டு பரமபதம் சேர்ந்தார், என்று சொல்வர்.

இது எல்லோராலும், ரிஷிகளால் கூட இயலாத செயல்.

பரமாத்மா சர்வ சேஷி . ப்ரஹ்மா, இந்த்ரன், ப்ரஜாபதி எல்லா தேவதைகள், பஞ்ச பூதங்கள், யோநிஜங்கள், அயோநிஜங்கள்,
முட்டையில் பிறப்பன, கர்ப்பத்தில் பிறப்பன, புழுக்கத்தில் பிறப்பன, பூமியை பிளந்து பிறப்பன, பறக்கும் பிராணிகள், நீர் வாழ்வன என்று
இப்படி ஜீவராசிகள் எல்லாமும், பரமாத்மாவின் ஆக்ஞைக்கு உட்பட்டு, அவனுக்கு சேஷனாக இருப்பவை.

மனித உடலில் எலும்புகள் 360. அவற்றில் கொழுப்பு 360 ஆக 720.
ஒரு வருடத்தில் பகல் 360 இரவு 360 ஆக 720.
உடல் என்கிற குடிசையி;ல் எல்லா மூங்கில்களுக்கும் ஆதாரமான நடுமூங்கில் போல, கண், காது, மூக்கு இவற்றிற்கு ஆதாரமான
ப்ராணனை நாளுக்கு சமமாக பாவித்து பாவனை செய்தால் ஆயுள் முதலிய பலன் கிடைக்கிறது.

அக்ஷரங்களை 360 , 360 என்று இரண்டு பாகமாக ஆக்கி, அவற்றின் சேர்க்கையை 360ஆக ஆக்குங்கள் (எப்படி என்று யோசியுங்கள்).
பகல், இரவு, சந்தி இவை முறையே 360 , 360 360, ஆக மொத்தம் 1080 ஆகும்- இப்படி ப்ருஹதி 1080 ஆகிறபடி,

இதை எலும்பு, கொழுப்பு 540, 540 ஆக பிரித்து மறுபடியும் கூட்டி”1080” என்று சொல்லி, பாவனை செய்யும் விதமும் அதன் பலனும் சொல்லப்படுகிறது.

சரீர புருஷனுக்கு, ரஸம், ப்ரஜ்ஞாத்மா. ஸந்தஸ் புருஷனுக்கு,ரஸம், அகாரம். வேதங்கள் மூன்றுக்கு, ரஸம் பிரமன். மஹா புருஷன் என்பது ஸம்வத்ஸரம்(வருடம்).
இதன் ரஸம் ஆதித்யன்.
ஸரீர ரசமான ப்ரஜ்ஞாத்மாவையும் மஹா புருஷனான ஆதித்யனையும் ஒன்றாக பாவனை செய்வது சொல்லப்படுகிறது.
பரமாத்மா, தன் ஆத்மாவின் அந்தராத்மா என்று தெளிய வேண்டும் என்று ஒரு மந்த்ரம் சொல்கிறது. (அதாவது ஜீவாத்மாவுக்கும் ஆத்மா).
சரீரத்தை வீணைக்கு ஒப்பிட்டு இதை நன்கு தெளிந்தவன், பார் புகழும் வண்ணம் இருப்பான் என்பது சொல்லப்படுகிறது.

ஸம்ஹிதையில் ”ண”காரம் பலம்.
”ஷ ”காரம் ப்ராணன்.
பரமாத்மாவே எல்லாமும் என்று இந்த உபநிஷத் சொல்கிறது.

—————

9 – சாந்த்யோக்யோபநிஷத்

இது ஸாம வேதத்தைச் சேர்ந்தது. இது ”தாண்டி”சாகையின் கடைசி பாகம்.
வேத வ்யாஸர் ப்ரம்மஸுத்ரத்திற் குஎடுத்துக் கொண்ட உபநிஷத்துக்களில் இதுவே அதிகமாக எடுத்தாளப்பட்டுள்ளது.

ஸாம வேதத்தைச் சேர்ந்ததாகையால், உத்கீதத்தைப் பற்றி இது (இந்த உபநிஷத்) சொல்கிறது.
ப்ரணவத்தை முதலில் சொல்லி, பலவாறு உபாஸனங்களைச் சொல்லி,
உத்கீத பதம்,ஸாம பதம், ஸாம பொது, அதன் அம்சங்கள், உட் பிரிவுகள்
இவைகளில் உபாஸனம் செய்வதைச் சொல்லி, ஐஷிகம், ஆமுஷ்மிகம் என்று பல பலன்களுக்கான உபாஸனங்களைச் சொல்லிப்
பிறகு மோக்ஷத்திற்கான பக்தியோகம் இவற்றைச் சொல்கிறது.

எட்டு பிரபாடகங்களாக உள்ளது. பிரபாடகம் என்பது
அத்யாயம். அத்யாயத்தில் அனேக காண்டங்கள் (பிரிவுகள்).
ஸாமம் – வேத கானம்.”ருக்”குகளில் கானம் பண்ணப்படும்.
ஒவ்வொரு” ரிக்”கிலும் கானம் பண்ணும்போது அந்த கானத்தை ஐந்து பாகமாக பிரிப்பார்கள். அவையாவன:-
1) ஹிங்காரம்,
2) ப்ரஸ்தாவம்,
3) உத்கீதம்,
4) ப்ரதிஹாரம்,
5) நிதனம்.
இதை ஏழாகவும் பிரித்துச் சொல்வார்கள்.
1) ஹிங்காரம், 2) ப்ரஸ்தாவம், 3) ஆதி, 4) உத்கீதம், 5) ப்ரதிஹாரம், 6) உபத்ரவம், 7) நிதனம்.

ப்ரபாடகம் -1 –
ப்ரணவத்தை உத்கீதமாக உபாசிக்கச் சொல்கிறது.
உத்கீதம் உலகில் ஸாரமானது. பூமியின் ஸாரம்எதுவென்றால் விளையும் பயிர்களுக்கு ஜலம் மூலமாக இருப்பதால், ஜலம் – ஸாரம்.
அதில் உண்டான ஓஷதிகள் ஸாரம். இவற்றைச் சாப்பிட்ட மனித உடல் ஸாரம். இந்த உடலில் வாக்கு ஸாரம்.
வாக்குகளில் ”ருக்” ஸhரம். இதற்கு மேல் ஸாம கானம். இதில் சிறந்தது உத்கீதம்.

உபாஸனம் இல்லாமல் விதிக்கப்பட்டதைச் செய்தாலும் பலன் உண்டு.
உபாஸனத்தோடு செய்தால், பலன் மிகவும் அதிகம்.
இந்த உத்கீதத்தை -ப்ராணவாயுவாக உபாஸிப்போருக்கு விரோதிகள் அழிவர்.

கச்யப ப்ராஜபதிக்கு திதி, அதிதி என்று இரண்டு மனைவிகள்.-இவரின் புதல்வர்கள் தேவர்களும், அசுரர்களும் ஆவர்.

இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. அசுரர்களை ஜெயிக்க தேவர்கள் முடிவெடுத்து தேவர்கள் மூக்கில் உள்ள இந்த்ரியமாக
உத்கீதத்தில் சொல்லப்பட்ட ”ப்ரணவத்தை” உபாஸித்தனர்.

அசுரர்கள் அதைக் கெடுத்தனர். இப்படி வாக்கு, கண், காது, மனஸ் என்பதையெல்லாம் உபாஸித்தனர். அசுரர்கள்
எல்லாவற்றையும் கெடுத்தனர்.
கடைசியில் முகத்தில் உள்ள ப்ராணனான ப்ராண வாயுவை உத்கீதமாக தேவர்கள் உபாஸித்ததும் அசுரர்கள் அதன் மீது
எறிந்த பாவங்கள் வெளியே சிதறி ஓடியது.
(ப்ராணன் பாதிக்கப்படவில்லை). இவ்வாறாக ப்ராணனாக பாவிக்கப்பட்ட உத்கீதத்தின் பெருமை சொல்லப்பட்டது.

உத்கீத ப்ரணவத்தை ”அமிர்தம்” எனப்படும் ப்ரம்மமாக உபாஸிக்கச் சொல்கிறது. தேவதைகள், ம்ருத்யுவுக்குப் பயப்பட்டு
வேத வித்யைக்குள் புகுந்து வேத மந்த்ரங்களால் தங்களை மறைத்துக் கொண்டனர்.
அப்போது ம்ருத்யு, தண்ணீரில் மீனைக்கண்டாற் போல் தேவதையைப் பார்த்து விட்டான்.
பிறகு அவர்கள் அமிர்தமான ப்ரணவத்திலே மறைந்து கொண்டனர்.
இங்ஙனம் தங்களைக் காத்துக் கொண்டனர்.
இப்படி உபாஸிப்பவனுக்கு ” ம்ருத்யு ” இல்லை, பயமுமில்லை.

”கப்யாஸ புண்டரீகாக்ஷ த்ருஷ்டி” என்பது சொல்லப்படுகிறது.
ஆகாசமாக உத்கீதத்தைப் பார்ப்பவனுக்கு உயர்ந்த ஜீவனம் —-, உயர்ந்த உலகங்கள் கிடைக்கும். (சௌனகர் – சாண்டில்யருக்குச் சொன்னது).

உமூஸ்தி என்கிற மஹரிஷி , பஞ்சம் ஏற்பட்ட சமயத்தில் உணவு கிடைக்காமல், ஒரு கிராமத்தில், யானைக்குக்
கொடுக்கப்படும் ”குல்மாஷம்” என்கிற உணவை, உயிர் தரிக்க வேண்டும் என்ற காரணத்தால், யானைப் பாகனிடம் கேட்டு, ஒரு
கவளம் வாங்கிச் சாப்பிட்டார்.
ஆனால் தொடர்ந்து யானைப் பாகன் கொடுத்த தண்ணீரை ”இது எச்சில் வேண்டாம்” என்று சொல்லிவிட்டார்
. உயிர் தரிக்க கொஞ்சம் உணவு சாப்பிட்டால் போதும் என்கிற நியதி இந்தத் தத்வத்தில் சொல்லப்படுகிறது.

ஒரு அரசன் யாகம் செய்யப் போகும் சமயத்தில் ”ப்ரஸ்தாபம்”, ”உத்கீதம்”, ”ப்ரதிஹாரம்” என்கிற ஸாமங்களுக்கு தேவதை யார்
யார் என்று ரிக் வித்குகளிடம் கேட்க (யாகத்தை நடத்திவைப்பவர்கள்),
அவர்கள் தெரியாது என்று சொல்ல,
அரசன் இவரையே (உஷஸ்தி) (அச்சமயர் உஷஸ்தி அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார்) ரிக்வித்தாக நியமித்து அவரை மேற்கண்ட
ஸாமங்களுக்கு தேவதைகளைப் பற்றிக் கேட்க உஷஸ்தி. ”ப்ரஸ்தாபம்” என்கிற ஸாமகானத்தில்
ஸர்வ பூதங்களுக்கும் பிறவி,அழிவு இவைகளுக்கு காரணமாக உள்ள ”ப்ராண” தேவதையையும் , உத்கீதத்திலே ”ஆதித்யன்” தேவதையையும்,
ப்ரதிஹாரத்தில் ”அன்னத்தையும்” தேவதையாகப் பாவிக்க வேண்டும் என்று சொல்லி யாகத்தை நடத்தி வைத்தார்.

அன்னத்தைப் பெறக் காரணமாக உள்ள ”சௌவோத்கீதம்” என்கிற உத்கீதம் இதில் சொல்லப்படுகிறது. ஸாமகானத்தில்
இசையின் பொருத்தத்திற்காக புதிய அக்ஷரங்கள் இருக்கும். அவை” ஸ்தோபாக்ஷரங்கள்” எனப்படும்.
”ஹா உ”, ”ஹா இ ”’போன்றவை

1) ஸுர்யோதயத்திற்கு முன்பு ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்குபுறப்படும் காலம்;
2) மனிதர்கள் விழித்தெழும் உதய காலம்;
3) பறவைகள் பறக்கும் ஸங்கவ காலம்;
4) தேவதைகளின் உச்சிக் காலம்;
5)அபரான்ன காலம்;
6) அஸ்தமனத்திற்கு முன்பு கால்நடைகள் திரும்பும் காலம்;
7) பித்ருக்களின் அஸ்தமன காலம்.
இப்படி ஏழு பிரிவுகளாக ஸுர்யனைப் பாவித்து ஸாமத்தை உபாஸிப்பது சொல்லப் படுகிறது.

மேலும், ”அதிம்ருத்யூபாஸனம்” விவரிக்கப்படுகிறது.

மாதங்கள் 12,
ருதுக்கள் 5 (ஹேமந்த ருது, சிசிர ருது ஒன்றாக கணக்கிடப்படுகிறது)
உலகங்கள் 3 . ஸுர்யன் 1
ஆக 21. ஸாம பக்திகளில் எழுத்துக்கள் 22.
இப்படி ஸுர்யோபாசனம் செய்தால் ம்ருத்யுவை ஜயித்து மோக்ஷத்திற்கு அருகதையாவது சொல்லப்படுகிறது.
ஸோம யாகத்தில் 3 யவனங்களுக்கு அதிபதியான வஸு , ருத்ர, ஆதித்யர்களைப் பற்றிய ஸாமங்களைச் சொன்னால்
மூவுலகும் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

——————

10 ப்ருஹதாரண்யக உபநிஷத்து

இது உருவில் பெரியது. சுக்ல யஜூர் வேதத்தைச் சேர்ந்த சதபத ப்ராம்மணத்தின் கடைசிப் பகுதி.
இது காண்வம்,மாத்யந்தினம் என்று இரண்டு பிரிவுகள். (கிளைகள்).
ப்ராஹ்மணம் – காண்வ சாகையிலும் மாத்யந்தின சாகையிலும் உள்ளது.

எட்டு அத்யாயங்கள் இதில் உள்ளன. முதல் இரண்டு அத்யாயங்கள் ஜ்ஞானத்தைப் பற்றிச் சொல்கிறது. “ப்ரவர்க்யம்”
என்கிற ஸோம யாகத்தைச் சேர்ந்த ஒரு அங்கத்தைச் சொல்வதாகவும் சொல்வர். மீதி ஆறு அத்யாயங்களுக்கும் பாஷ்யம் (விரிவுரை) உண்டு .

ஒன்றை மற்றொன்றாகப் பாவிப்பது “த்ருஷ்டி விதி” எனப்படும். அச்வமேத யாகம் தொடங்கி, ஒரு வருஷ காலம்
கழித்து இதைச் செய்ய வேண்டும் என்று சொல்லப்படுகிறது
(ஒன்றை மற்றொன்றாகப் பாவிப்பது). குதிரையின் தலை, கண், ப்ராணன் முதலிய அங்கங்களை விடியற்காலை வேளை (உஷத் காலம்)
ஸுர்யன், வாயு இவைகளைப் போல பாவிக்க வேண்டும்.
யாகம் செய்பவன் இது போன்ற பாவனைகளைத் தெளிந்து செய்ய வேண்டும். விரைவில் பலன் பெறலாம்.

பரமாத்மா உருவத்தை எடுக்க விருப்பம் கொண்டு ஜலத்தை உற்பத்தி செய்தது. ஜலத்தின் சாரமாக, பூமி உண்டாயிற்று.
அதிலிருந்து, அக்னி உண்டாயிற்று. அக்னியே, ஆகாயத்தில் வாயுவாகவும், மேலுலகில் ஆதித்யனாகவும் உள்ளது.
அக்னி என்கிற உருவத்தை எடுத்த பரமாத்மா, ஸம்வத்ஸரத்தை உண்டாக்கியது. அதாவது பல ஸம்வத்ஸர காலம் (பல வருஷங்கள்)
ப்ராணிகளை படைக்கும் ப்ரஹ்மா என்று கொள்ளலாம்.

ப்ரஹ்மஞானம் உண்டாகத் தடையாக இருக்கும் பாபங்களைப் போக்க ப்ராணனை உபாஸிக்கச் சொல்கிறது.
”மதுப்ராம்மணம்” என்பது இதில் சொல்லப்படுகிறது.
ஓவ்வொரு இந்த்ரியத்திற்கும் ஒரு அதிஷ்டான தேவதை உண்டு. தேவதைகள் இஷ்டப்படி இவை இருக்கின்றன. ஆதலால் மது என்று பெயர்.
இந்த தேவதைகள், ”மற்ற எல்லாருக்கும், அழிவே இல்லாமல் ஒருவன் அந்தர்யாமியாக இருக்கிறான். அவனே
ஆத்மா , அவனே மது” என்று உபாசித்தன (பரமாத்மாவை). இந்த மது ரஹஸ்யத்தை ”தத்தியங்” என்கிற மஹரிஷியிடத்தில்
”அச்வினி தேவர்கள்” வந்து, இந்த வித்யையை உபதேசிக்குமாறு கேட்டார்கள். இந்த ரஹஸ்யத்தை வெளியிட்டால் தலையை
வெட்டி விடுவதாக இந்த்ரன் சொல்லியிருப்பதால் அஞ்சுகிறேன் என்றார் முனிவர்
உங்களுடைய தலையை வெட்டித் , தனியாகப் பாதுகாத்து குதிரையின் தலையைப் பொருத்துகிறோம். நீங்கள் உபதேசியுங்கள்.
இந்த்ரன் வெட்டுவதாயிருந்தால், இந்த குதிரைத் தலையைத் தான் வெட்ட வேண்டும். வெட்டியவுடன் உங்கள் தலையைப் பொருத்தி விடுகிறோம் என்றனர்
அச்வினி தேவர்கள் –வைத்யர்கள் அல்லவா? மஹரிஷி ஒப்புக் கொண்டு ரஹஸ்யத்தை தேவர்களுக்கு குதிரை முகமாக உபதேசித்தார். (ஹயக்ரீவ ஸ்வரூபம்)

”பரமாத்மா எல்லா உயிர்களிலும் இருக்கிறான். உள்ளே, வெளியே எங்கும் இருக்கிறான். அவன் இல்லாத இடமே இல்லை.
உலக வ்யவஹாரங்களை நடத்த பற்பல உருவங்களை எடுத்துக் கொள்கிறான்.
ஹரியானவன் அவன் —-பல ஆயிரக்கணக்கான ஹரியாக ஆகிறான். இந்தப் பரமாத்மா, எல்லாக் காலங்களிலும்
எல்லா இடங்களிலும் இருந்து ஸர்வேச்வரன் என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறான்”. இதுதான், உபதேசத்தின் சுருக்கம்.

இந்த்ரன் கோபத்துடன் வந்து, முனிவரின் தலையை (குதிரைத்தலை) வெட்ட, அச்வினீ தேவர்கள், முனிவரின்
சுயமான தலையைப்பொருத்த, ”தத்தியங்” என்கிற அந்த முனிவர் செய்த பேருபகாரம் இவையெல்லாம்—————- தனிக்கதை.

வித்யையை உபதேசிக்கும் ஆசார்யன் முதல் பகவான் வரையிலுள்ள வம்ச ப்ராம்மணம் முக்யம். (வம்ச வித்யை) இதை
ஒவ்வொருவரும் அநுஸந்திக்க வேண்டும்.
அச்வலர் -யாஜ்ஞவல்க்யர் – ஸம்வாதம்
விதேஹ தேச ராஜாவான ஜனகர், விசேஷமாக ஒரு யாகம் நடத்தினார். அதற்கு, ஏராளமான வேத வித்துக்கள் வந்தனர்.
இவர்களில், வேதங்களை வேதாங்கங்களை அத்யயனம் செய்து, ப்ரம்ம வித்யை வரையில் எல்லா வித்யைகளிலும் சிறந்து
விளங்குபவர் யார் என்று அறிய விருப்பம் கொண்டார்.
சிறந்த ஜ்ஞானியாக இருப்பவர், பொன் குப்பிகளால் அலங்கரிக்கப்பட்ட இந்த ஆயிரம் பசுக்களை ஸ்வீகரிக்க வேண்டும் என்று
ப்ரார்த்தித்தார். ஒருவரும் முன்வரவில்லை.
அச்சமயத்தில் யாஜ்ஞவல்க்யர் (இவர் ஸுர்யனைத் த்யானம் பண்ணி ஸுர்யன் குதிரை ரூபமாகப் ப்ரஸன்னமாகி உபதேசிக்க அவரிடம் உபதேசம்
பெற்றார். இதற்கு அந்தர்யாமி ப்ராம்மணம் என்று பெயர்).
தன் சிஷ்யனை அழைத்து, ”பசுக்களை நம் க்ருஹத்திற்கு ஓட்டிக் கொண்டு போ” என்றார்.
மற்ற ப்ராம்மணர்கள் ஆக்ஷேபித்தனர்.
ஜனக ராஜனின் யாகத்தை நடத்தி வைக்கும் ருத்விக் அச்வலர், நீர்தான் சிறந்த ப்ரம்ம வித் என்று உங்களைக் கருதுகிறீரா ? என்று கேட்டார்.
யாஜ்ஞ வல்க்யர் ”அத்தகைய ப்ரஹ்ம வித்யைக்கு எனது நமஸ்காரம்,எனக்கு பசுக்கள் தான் தேவை” என்றார்.
அச்வலர், யாஜ்ஞவல்கயரை கேள்வி கேட்கலானார்.
அச்வலர் யாகத்தை நடத்தும் எஜமானர் மோக்ஷம் பெற ஹோதா, அத்வர்யு, உத்காதா, ப்ரம்மா, என்கிற ருத்விக்குகள் பற்றியும்,
ஹோதா சொல்லும் ருத்விக்குகள், உத்காதா செய்யும் சாமகான ருக்குகள், ப்ரஹ்மா யாகத்தைக் காப்பது, பிற தேவதைகள்
பற்றியும் அவ்வப்போது பெறும் பலன்களைப் பற்றியும், யாஜ்ஞ வல்க்யரைக் கேட்டுத் , திருப்தி அடைந்தார்.

ஆர்த்தபாகர் என்கிற மஹரிஷி கேள்வி கேட்க யாஜ்ஞவல்க்யர்,
அவருக்கு க்ரஹங்கள் எட்டு
அவை மூக்கு, வாக்கு, நாக்கு, கண்,காது, மனஸ், கை, த்வக் என்பவை என்றும், அவற்றின் விஷயங்கள் அதிக்ரஹங்கள் என்றும்,
அக்னி ம்ருத்யு என்றும்,ஜலம் அதை அன்னமாக உடையது என்றும்,
ஜீவன் மரணம் அடையும்போது, ப்ராணன்கள் அவற்றை விடுவதில்லை என்றும் சொன்னார்.
ஜீவன் லயமடையப் போகுமிடம் எங்கே?” என்றுஆர்த்தபாஹர் கேட்க,
அவரைத் தனியே அழைத்துப்போய் புண்யம், பாபம் என்கிற கர்மாக்களுக்கு ஏற்பச் செல்கிறான் என்று பதில் சொன்னார்.
(ஸதஸ்ஸில் சொல்லாமல், தனிமையில் ஒருவருக்கு மட்டில் – கேள்வி கேட்டவருக்கு மட்டில்—- சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது)

புஜ்யு என்பவர், மத்ர தேசத்தில் அத்யயனம் செய்து கொண்டிருந்தபோது, ”பதஞ்சலர் என்பவர் வீட்டிற்குச்
சென்றோம். அவருடைய பெண்ணை, ஒரு கந்தர்வன் பிடித்திருந்தான் (ஒருவகைப் பிசாசம்) அதை நீ யார் என்று
கேட்டோம். நான் ஸுதன்வா–”ஆங்கீரஸ கோத்ரம்” என்று பதில் சொல்லிற்று. பிறகு லோகங்கள் விஷயமாகச் சில கேள்விகள்
கேட்டு “பாரிக்ஷிதர்கள்” எங்கே போயிருந்தன என்று அந்தக் கந்தர்வனைக் கேட்டோம். இதற்கு நீர் பதில் சொல்லும்” என்று
யாஜ்ஞவல்க்யரைக் கேட்டாh.

”பாரிக்ஷதர்கள், அச்வமேதயாகம் செய்யும் இடத்திற்குப் போனார்கள்” என்று பதில் சொன்னார்.
புஜ்யு , ”அச்வமேத யாகம் செய்பவர் எங்கே போகிறார்?” என்று கேட்டார்.
ஸுர்யனை, பூமி சுற்றிக் கொண்டிருக்கிறது. இதில் பெரும் பகுதி ஸமுத்ரம். இந்த அண்டகடாஹத்தில்— இதில் கத்தி
முனையளவு கொசுவின் இறகளவு கனமுள்ள சந்தில் பாரிக்ஷதர்கள் சென்றனர். இந்த்ரன் அவர்களைக் கருடனாக
இருந்து சுமந்து சென்று வாயுவிடம் சேர்த்தான். வாயு அவர்களை அச்வமேத யாகம் செய்பவர் இடத்தில் சேர்த்தது. இப்படி அந்தக்
கந்தர்வன் உமக்குச்சொல்லி வாயுவே வ்யஷ்டி, சமஷ்டி எல்லாம் எங்கும் சஞ்சரிப்பவன் என்று சொல்லியிருப்பான் என்றார்.

பிறகு உஷஸ்தர் , கஹேளர்-இருவரின் கேள்விகள்.
உஷஸ்தர் – எல்லாவற்றுக்குள்ளும், உள்ளே இருக்கும் ஆத்மா ப்ரத்யக்ஷமாக இருக்கிற ப்ரம்மம் என்கின்றனர். இது என்ன?
யாஜ்ஞ வல்க்யர் – உமக்கும் ஆத்மாவாக இருப்பது அது.
உஷஸ்தர் – இது மாடு, இது குதிரை என்று சொல்வதைப் போல இருக்கிறதே ?
யாஜ்ஞவல்க்யர் – ச்ரவணம், மனனம், த்யானம், தர்சனம் என்பவற்றைச் செய்யும் ஆத்மாவை நான் சொல்லவில்லை.இது
ஜீவாத்மா. நான் சொன்னது எல்லா ஜீவாத்மாக்களுக்கும் ஆத்மாவாக இருப்பது.
கஹோளர் – அது எந்த ஆத்மா ?
யாஜ்ஞவல்க்யர் – பசி, தாகம், சோகம், மூப்பு, மரணம் இவை எதுவுமே இல்லாத ஆத்மா. இதனை உணர்ந்தவர்கள்
(ப்ராஹ்மணர்கள்) புத்ரன், பணம், உலகம் என்கிற மூன்றிலும் பற்று இல்லாமல், பிக்ஷை எடுத்து வாழ்கின்றனர். ப்ராஹ்மணன்,
உபதேசம் மூலம் பாண்டித்யம் பெற்று, அஹங்காரம் அற்று இருக்க வேண்டும். எப்போதும் அந்த ஆத்மாவையே சிந்திக்க வேண்டும்.

கார்கி என்கிற ஸ்த்ரீ கேள்வி கேட்டாள்
”இந்த பூமிக்கெல்லாம் ஆதாரமானது ஜலம். அதற்கு எது ஆதாரம்” என்று கேட்டு மேன்மேலும் கேள்விகளை கேட்டுக் கொண்டே வந்தாள்.
யாஜ்ஞயவல்க்யர் மேன்மேலும் பதில்களைச் சொல்லி லோகங்களைப் பற்றியும் சொல்லிக் கொண்டே வந்தார்.

கடைசியாக ”ப்ரம்ம லோகங்களுக்கு எது ஆதாரம்?” எனக் கேட்டாள்.
கேட்கத் தகாததை, உள்ளபடி உணராமல் கேட்டால் தலை விண்டு விழுந்து விடும் என்று யாஜ்ஞவல்க்யர் சொல்ல,
கார்கி அத்துடன் கேள்வி கேட்பதை நிறுத்திக் கொண்டாள்.

உத்தாலகர் சொன்னதாவது:
மத்ர தேசத்தில் பதஞ்சலரின் வீட்டில் அத்யயனம் செய்து கொண்டிருந்த போது அவருடைய மனைவியை ஒரு கந்தர்வன்
பிடித்தான். அவனை யார் என்று கேட்டோம். நான் ஆதர்வணன், கபந்தன் என்றான். அந்த கந்தர்வன் என்கிற பிசாசம் எங்களைக் கேட்டான்.

”எல்லா உலகங்களையும் எல்லா ஜந்துக்களையும் தரித்திருக்கும் ஸுத்ரம், அவற்றின் உள்ளே இருந்து நியமிக்கும்
அந்தர்யாமியை அறிவீர்களா?
இதை அறிந்தவன்தான் லோகம்,வேதம், ப்ரம்மம் இவற்றை அறிந்தவனாவான் என்று சொன்னான்.
அது என்ன?”
யாஷ்ஞவல்க்யர் – நான் அறிவேன். அந்த ஸுத்ரமானது ப்ராணன். எல்லா உலகங்களையும் ஜந்துக்களையும் உள்ளே
இருந்து நியமிக்கும் அந்தர்யாமிதான் ப்ரம்மம். சாதாரணமாக உத்தாலகர் கேள்விகளுக்குத் த்ருப்தியான பதில் வந்தால்,
ஸதஸ்ஸில் கேள்வி கேட்பதை அத்துடன் நிறுத்திக் கொள்வார்கள். (இவரை வெல்ல யாருமில்லை என்று பொருள்)

ஆனால், கார்கி மறுபடியும் கேள்வி கேட்டாள்.
கார்கி – வானுலகுக்கு கீழும், மேலும் (எல்லா இடங்களிலும்) எல்லா காலங்களிலும் எல்லா வஸ்துக்களும் எதை ஆதாரமாக
உடையதோ, எது காரணமோ, அது என்ன?
யாஜ்ஞவல்க்யர் – ஆகாசம் (மூலப்ரக்ருதி)
கார்கி – இதற்கும் (ஆகாசத்திற்கும்) ஆதாரம் எது ?
யாஷ்ஞவல்க்யர் – அக்ஷரம். சிறிதுமல்ல, பெரிதுமல்ல, நீண்டதுமல்ல, குறுகியதுமல்ல எந்த நிறமுமல்ல. எல்லா
இடத்திலுமிருப்பது. இதன் ஸங்கல்பத்தினாலே ஸுர்யன், சந்த்ரன்,ஸ்வர்க்கம், நக்ஷத்ரங்கள், பூமி யாவும் தரிக்கப்பட்டு இருக்கின்றன.
இதற்கு மேம்பட்ட எதுவுமில்லை என்று பலவாறாக எடுத்துரைத்தார்.

கார்கி என்பவள் ”இவரை ஜெயிக்க இயலாது எல்லோரும் இவருக்கு நமஸ்காரம் செய்யுங்கள்” என்றார்.

பிறகும் விதக்தர் என்பவர் கேள்விகள் கேட்டார்.
யாஜ்ஞவல்க்யர் ”இவ்வளவு மஹரிஷிகள் இந்த ஸதஸ்ஸில் கேள்விகள் கேட்டு என்னுடைய பதில்களால் திருப்தி
அடைந்தார்கள். நீர் வீண் ஆடம்பரத்திற்காக கேள்விகள் கேட்கிறீர். நான் கேட்கும் கேள்விகளுக்கு முதலில் பதில் சொல்லும்” என்று பலவாறாகக் கேட்க,
எல்லாவற்றிற்கும் விதக்தர் பதில் சொல்லிக்கொண்டே வந்தார்.
இந்தச் சமயத்தில்,
யாஜ்ஞவல்க்யர் முன்பு எட்டு புருஷர்களைப் பற்றிச் சொன்னேன் -அவர்களுக்கும் அவர்களின் ஆதாரம் முதலியவற்றிற்கும்
மேற்பட்டு அவற்றையெல்லாம் நியமித்து அடக்கும் ஓளபநிஷத புருஷன்–உபநிஷத்துக்களிலே சொல்லப்படும் புருஷன் யார்?
நீர் அது யார் என்று சொல்லவில்லையெனில், உமது தலை துண்டாகிக் கீழே விழும்” என்றார்.
விதக்தர் பதில் சொல்லத் தெரியாமல் விழித்தவுடன் தலை துண்டாகிக் கீழே விழுந்தது.

அவருடைய சிஷ்யர்கள், அவருடைய அஸ்திகளை மூட்டையாகக் கட்டி, அவர் வீட்டில் சேர்க்க, எடுத்துச் செல்லும்
போது, வழியில், திருடர்கள், இந்த மூட்டையில் பணம் இருக்கிறது என்று எண்ணி அதைப் பிடுங்கிக் கொண்டு ஓடினர்
(ப்ரம்ம வித்திடம் அபசாரப்பட்டதால் இப்படிநேர்ந்தது என்பதை உணர வேண்டும்).

யாஜ்ஞவல்க்யர், ஸதஸ்ஸில் உள்ளவர்களைப் பார்த்து, இன்னும் யாராவது கேள்விகள் கேட்கலாம் என்றார்.
நடுநடுங்கிய அவர்கள் ஒன்றும் பேசவில்லை. ஸதஸ் கலைந்தது.

10(2) ஜநகர் – யாஜ்ஞவல்க்யர் – ஸம்வாதம்

பிறிதொரு சமயம் யாஜ்ஞவல்க்யர் ஜனக ராஜன் சபைக்கு மறுபடியும் சென்றார். அரசன் வணங்கி, வரவேற்று, பசுக்கள்
வேண்டுமா அல்லது வேத அர்த்தங்களுக்கா என்றார்.
யாஜ்ஞவல்க்யர் இப்போது அரசனுக்கு உபதேசித்தார்.

வலது கண்ணிலே ”இந்த்தன்” என்கிற புருஷன் இருக்கிறான்
(இந்திரன் என்கிறதை மறைமுகமாக இப்படிச் சொல்லும் பழக்கம் உண்டு) இடது கண்ணில் அவனுடைய பத்னி இருக்கிறாள்.
இவ்விருவருக்கும் ஹ்ருதயமே வாசஸ்தலம். அங்குள்ள மாம்ஸமே அன்னம்.
ஹ்ருதயத்தில் பின்னலைப் போல உள்ள நாடிகள் வஸ்த்ரம்.
ஹ்ருதயத்தினுள் பல ஆயிரமாகப் பிரிந்து, கேசத்தைவிட மெல்லிய நாடிகள் உள்ளன. அவற்றிற்கு ”ஹிதை” என்று பெயர்.
அவற்றின் வழியாக, ஜீவன் வெளியே கிளம்புகிறான்.

ஹ்ருதயத்திலிருந்து உச்சந்தலை உள்ளவரை உள்ள மார்க்கமானது (சுஷும்நா நாடி) ப்ராண, இந்த்ரியங்களில்
சிக்குண்ட ஜீவாத்மாவைக் காட்டிலும், பற்றற்றவனாக அழிவற்றவனாக ஹ்ருதயத்திலுள்ள பரமாத்மா வேறுபட்டவன்.

இன்னொரு சமயம், இதே போன்ற ஒரு ஸம்வாதம் நடந்தது.
அரசன் கேட்க யாஜ்ஞவல்க்யர் பதில் சொல்ல மிக உன்னதமான கருத்துக்கள் கிடைத்தன.

அரசன் – புருஷ னுக்கு எது ஜ்யோதிஸ் ?
யாஞவல்க்யர்- ஸுர்யன்தான் ஜ்யோதிஸ்
அரசன் – ஸுர்யன் அஸ்தமித்தால் ?
யாஜ்ஞவல்க்யர் – அப்போது சந்த்ரன்
அரசன் – இருவரும் இல்லாதபோது ?
யாஜ்ஞவல்க்யர் – அப்போது அக்னி (விளக்கு போன்றவை)
அரசன் – அதுவுமில்லாதபோது ?
யாஜ்ஞவல்க்யர் – வாக்கு, மையிருட்டிலும் பேசினால் பேச்சைக் கொண்டு அவனை அறியலாம், அணுகலாம்
அரசன் – வாக்கும் இல்லாத போது ?
யாஜ்ஞவல்க்யர் – ஆத்மாவே ஜ்யோதிஸ்
அரசன் – ஆத்மாவாவது எது ?
யாஜ்ஞவல்க்யர் – ஹ்ருதயத்திலே ப்ராண வாயு முதலியன இருக்க அறிவுக்கு ஆதாரமாக இருப்பது ஆத்மா. ஸ்வப்ன லோகத்தை
ஆத்மா சேரும்போது, துக்க ரூபமான இவ்வுலகைக் கடக்கிறது.
உடலோடு சேர்ந்திருக்கும்வரை பாபம் செய்கிறது.
உடலிலிருந்து விடுபட்டு விட்டால் பாபம் இல்லை. ஸ்வப்ன காலத்தில், அவற்றில் ஏற்பட்டதைக் கொண்டு தானே அவற்றை அறிகிறான்.
திரும்பவும் இவ்வுலகத்திற்கு வருகிறான். ஸ்வப்னத்தில் துக்கம், மகிழ்ச்சி, சோகம், இன்பம் இப்படி அனுபவிக்கிறான். எல்லாம்
ஸ்வப்னம் என்று பிற்பாடுதான் தெரிகிறது. ஸ்வப்ன காலத்திலே ஜீவன் தனக்குத் தானே ஜ்யோதிஸ்ஸாக ஆகிறான்.
உறக்கத்தில்(ஸுஷுப்தி) பரமாத்மாவுடன் ஐக்கியமாகிறான். அப்போது உற்றார், உறவினர், புண்யம், பாபம் , துக்கம் என்று எதனோடும்
இணைப்பு இருப்பதில்லை
தைத்திரியோபநிஷத்தில் சொல்லியபடி,

மனுஷ்ய ஆநந்தம், பித்ருக்களின் ஆநந்தம், தேவர்களின் ஆநந்தம், சதுர்முக (ப்ரம்மா) ஆநந்தம் என்று மேன்மேலும் உள்ள
ஆநந்தத்தை அடைகிறான். இப்போது எந்த இந்த்ரியமும் வேலை செய்வதில்லை. மனஸ் ஓய்வில் இருக்கிறது.

10(3) – விழிப்பு, ஸ்வப்னம், உறக்கம், இறப்பு

விழிப்பு, ஸ்வப்னம், உறக்கம் என்ற நிலைகளுக்கு மேற்பட்ட நிலை இறப்பு. அப்போது பரமாத்மாவினால் வேறு இடம் கொண்டு போகப்படுகிறான்.
புண்ய, பாபங்களுக்கு ஏற்றவாறுவேறு சரீரம் எடுத்து அனுபவிக்கிறான்.
ஜ்ஞானம், கர்மாக்கள்,பூர்வ வாஸனை, இந்த மூன்றும இந்த ஜீவனைத் தொடர்கின்றன.
ஜ்ஞானமும், கருமங்களும் ஜீவனுக்கு அடுத்த பிறவியில் அநுபவிக்க வேண்டிய விஷயங்களைச் சேர்த்து வைக்கின்றன.
இந்த விஷயங்களைக் கையாள பூர்வ வாசனை உதவுகிறது.
ப்ரஹ்மஞானம் உள்ளவன், ப்ரம்மாநுபவம் பெறுகிறான்.
புனர் ஜன்மம் இன்றி, தேவயானம் வழியாக ஸுர்ய மண்டலம் புகுந்து மோக்ஷம் பெறுகிறான்.
பரமாத்மாவே,ப்ராணேந்த்ரியங்களுக்குச் சக்தி அளிப்பவன். அவன் எங்குமிருப்பவன். மனஸ்ஸால் தான் அவனைப் பார்க்க இயலும்.
அந்தர்யாமியாய் ஹ்ருதயத்தில் இருக்கிறான். இவனை அறிய, வேத அத்யயனம், யஜ்ஞம், தானம், தபஸ் முதலியன செய்கின்றனர்.
யோகநிஷ்டையில் இழிந்து, இவனைக் காண முயற்சிக்கின்றனர். இவனை அடைய ஸன்யாஸம் மேற்கொள்கின்றனர். இந்த்ரியங்களை அடக்கி, தீயதைச்
செய்யாமல், காம்ய கர்மங்களைச் செய்யாமல், சீதோஷ்ண சுக துக்கங்களைப் பொறுத்துக்கொண்டு, மனஸ்ஸை நன்கு
நிலைநிறுத்தி தனக்குள்ளே இருக்கும் இந்தப் பரமாத்மாவைப் பார்க்கவேண்டும்.
இதுவே ”பரப்ரம்மம்”. இந்த பரப்ரம்மம் , இக பர சுகங்களையும் எல்லாவற்றையும் அளிக்கும்.

பூர்ணத்தில் இருந்து பூர்ணம் உயர்ந்தது. பூர்ணத்தைச் சார்ந்த பூர்ணத்தை அழித்து , பூர்ணம் தான் முடிவில் இருக்கிறது.
வேதத்தில் சொல்லியபடி, எல்லா உலகமும் உயிர்களும் ப்ரஹ்மாவால் சிருஷ்டிக்கப் படுகின்றன. ஆதலால், வேதம்
எங்கும் நிறைந்திருக்கிறது. இதற்குக் காரணமான வேதம்,
கார்யமான ப்ரபஞ்சத்தைக் காட்டிலும் உயர்ந்தது. கார்யமாய் காரணம் நிறைந்து உள்ளதற்கும், மேலான வ்யாஹ்ருதி ( பூ:, புவ:,ஸு வ:)க்கு, லயஸ்தானமாய் எல்லாவற்றிற்குமே காரணமாக இருப்பது ப்ரணவம். இந்த ப்ரணவத்தை ப்ரம்மமாக உபாஸிக்க வேண்டும்
(பூர்ணம் என்கிற மந்திரத்திற்குப் ப்ரம்மம் என்றும் பொருள் உண்டு).

10(4) ப்ரஜைகள் மூன்று வகை

தேவர்கள் (தேவதைகள்), மனிதர்கள், அசுரர்கள். இவர்கள் தங்களுடைய தகப்பனாரை அண்டி, உபதேசிக்குமாறு வேண்டினர்.
தேவர்கள் வேண்டிய போது “த” என்று உபதேசித்து தெரிந்து கொண்டீர்களா என்று தகப்பனார் கேட்டார்.
”தமம்”அதாவது ”இந்த்ரிய நிக்ரஹம்” வேண்டும் என்று புரிந்து கொண்டோம் என்றனர்.

மனிதர்களிடம் ”த” என்பதைச் சொன்னபோது ”தானம்” செய்யுங்கள் என்பதை உணர்ந்ததாக, அவர்கள் சொன்னார்கள்.

அசுரர்களிடம், அந்த எழுத்தைச் சொன்ன போது, தயை புரியுங்கள் என்று உணர்ந்ததாகச் சொன்னார்கள்.

ப்ரம்மத்திலிருந்து பிறந்த ”ப்ரஜாபதியின்” புதல்வர்களான தேவர்கள் ஸத்யத்தை உபாஸிக்கின்றனர். பரப்ரம்மமே ஸத்யம்.
இது (பரப்ரம்மம்) ஆதித்ய மண்டலத்திலும் உள்ளது.
கண்ணிலும் உள்ளது. இதற்கு பூ: , புவ:, ஸுவ: என்கிற வ்யாஹ்ருதிகள்.

சாந்தோக்ய உபநிஷத்தில் சொல்லப்பட்ட சாண்டில்ய வித்யை, மின்னலை ப்ரம்மமாக உபாஸிப்பது சொல்லப் படுகிறது
வாக்கை, ”பசு”வாக உபாஸிப்பது, மோக்ஷம் செல்பவன் தேவயான மார்க்கத்தில், ஆத்யாத்மிக, ஆதிபௌதிக, ஆதிதைவிக
தாபங்களுக்கு இடமில்லாத ப்ரம்ம லோகம் சென்று சந்தோஷிப்பது சொல்லப்படுகிறது .
அன்னத்தை ”வி” என்றும், ப்ராணனை ”ரம்” என்றும் சேர்த்து ப்ரம்மமாக உபாஸிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
ப்ராணனை, ருக்காகவும், யஜூஸ்ஸாகவும், ஸாமமாகவும் உபாஸிப்பது சொல்லப்படுகிறது. வாக் எனப்படும் வேதத்தை
பசுவாக உபாஸிக்க வேண்டும். பசுவுக்கு நான்கு மடிகள்.
ஸ்வாஹா , வஷட், ஹந்த, ஸ்வதா.
தேவர்களுக்குக்கொடுக்கப்படும் ஹவிர் பாகங்கள் ஸ்வாஹா அல்லது வஷட்.
மனுஷ்ய யஜ்ஞத்தில், ஹந்த என்று சொல்லி ஹவிஸ்ஸும்,
பித்ருக்களை உத்தேசித்துச் செய்யும்போது ஸ்வதா என்றும் சொல்லப்படுகிறது.

பசு – வாக்கு.
காளை – ப்ராணன்.
கன்று – மனஸ்.
பால்-பகவானை துதிக்கும் ஸ்தோத்ரங்கள்.

10(5) – காயத்ரீ உபாஸனம்

காயத்ரீயின் முதல் பாதத்தை மூன்று உலகங்களாக உபாஸிப்பவன் மூன்று உலகங்களில் எதையும் அடைவான்.
இரண்டாம் பாதத்தை மூன்று வேதங்களாக உபாஸிப்பவன்,
வேதத்தில் சொல்லப்பட்ட பலன்களை அடைவான்.
மூன்றாம் பாதத்தை, ப்ராண அபான, வ்யானங்களாக உபாஸித்தால், எல்லாப் ப்ராணிகளையும் வசமாக்கிக் கொள்ளலாம்.
நான்காம் பாதத்திற்கு “தர்சபதம்” என்று பெயர். இதைப் ப்ரம்மமாக உபாஸித்தால், புகழ், பொருள் கிடைக்கும்.
ப்ராணன்களுக்கு,“கயம்” என்று பெயர்.
கயங்களைக் காப்பதாலே காயத்ரீ .
காயத்ரீ உபாஸனம் செய்பவன் இஷ்டப்பட்ட பலனை அடைவான்.

ப்ரம்ம உபாஸனம் செய்பவனுக்கு நான்கு மந்த்ரங்கள் –
ப்ரார்த்தனை செய்வதற்காக இங்கு சொல்லப்படுகிறது.
(இது,ஈசாவாஸ்ய உபநிஷத்திலும் உள்ளது).

10(6) மந்த்த கர்மா

ப்ராண வித்யை, பஞ்சாக்னி வித்யை, மந்த்த கர்ம – –மூன்றும் சொல்லப்படுகின்றன (சாந்தோக்ய உபநிஷத்தைப் பார்க்க) .
மந்த்த கர்மாவில் நெய்யினால் ஹோமங்களைச் செய்த பிறகு, ”மந்த்த”என்கிற வஸ்துவை, ப்ராணனைப் புகழும் மந்த்ரத்தைச் சொல்லிக்
கொண்டே கையில் வைத்துக் கொண்டு, காயத்ரீயினாலும், இன்னும் சில மந்த்ரங்களாலும், விதிப்படி ஆசமனம் செய்து,
அக்னிக்கு மேற்கே கிழக்கில் தலை வைத்து இரவில் படுத்திருந்து,
உதயத்தில் ஸுர்யனுக்கு உபஸ்தான மந்த்ரங்களைச் சொல்ல வேண்டும்.
இப்படியான மந்த்த த்ரவ்யத்தாலே உலர்ந்த கட்டையை நனைத்தால் அது துளிர் விட்டு, கப்பும் களையுமாக வளரும்.
”மந்த்த த்ரவ்யம்” என்பது, நெல், யவம், எள், உளுந்து, கோதுமை, ப்ரயங்கு, மஸுரம் கல்வம், கலகுலம்,இன்னொன்று
பெயர் தெரியவில்லை (பத்து தானியங்கள்)
இவற்றை எல்லாம் அரைத்து தயிர், தேன், நெய் இவற்றில் ஊற வைக்க வேண்டும்.
ஹோமங்கள் நெய்யினாலே செய்யப்பட வேண்டும்.
பிள்ளை பெறுகிறவன், இந்த பிள்ளை ,தனக்குச் சிறந்த பலன்களை மேலுலகில் அடையுமாறு செய்ய,இவன் எப்படி நடந்து கொள்ளவேண்டும்,
என்ன கார்யங்களைச்செய்யவேண்டும் என்று பல விஷயங்கள் சொல்லப்படுகின்றன.

தீர்க்கமான ஆயுளைப் பிள்ளை பெறும்படியாகவும்,நன்கு படிக்கவும்,
பிரஸித்தியாக வேண்டுமென்றாலும் செய்ய வேண்டிய முறைகள்,இதில் சொல்லப்படுகின்றன.

”வம்ஸ ப்ராம்மணம்” என்கிற பரம்பரை சொல்லப்படுகிறது.
பரப்ரம்மம், ப்ரஜாபதி என்கிற பரம்பரை ஒன்று.
ஆதித்யனிடமிருந்து வரும் பரம்பரை மற்றொன்று.
இரண்டும் ஒன்று சேர்ந்ததும் சொல்லப்படுகிறது.
யாஜ்ஞ்யவல்க்யர், ஸுர்யனிடம் ஸூக்ல யஜூஸ் வேதத்தைப் பெற்றது சொல்லப்படுகிறது .

இதுவே ப்ருஹதாரண்யக உபநிஷத்தின் சாரம்.

————

11 – ச்வேதாச்வதரோபநிஷத்

ஆறு அத்யாயங்கள். சித், அசித், ஈச்வரன் என்று தத்துவங்களை மூன்றாக வகுத்ததற்கு இது ஆதாரம்.
பரமாத்மாவின் ஸ்வரூபம்,சக்ர ரூபமாகச் சொல்லப்படுகிறது.
பிறப்பது, வாழ்வது, இறப்பது முதலிய எல்லாவற்றிற்கும் காரணமானது எது?
காலமா?
இயற்கையா?
முன்வினையா?
பஞ்சபூதங்களா?
மூலப்ரக்ருதியா?
ஜீவனா?—இல்லை,
இவை எல்லாம் சேர்ந்ததா?
சேர்ந்ததாக இருந்தால், சேர்த்தது யார்?
என்று விவாதித்து “பரமாத்மா” என்கிற முடிவுக்கு வந்தது.

ஸம்ஸாரத்திலே உழல்கின்ற ஜீவர்.
எல்லாம் அறிந்த ஈச்வரன்.
போகத்தை அளிக்கும் அசித் (அசேதநம்).
ஈச்வரன், குணங்கள் நிறைந்த குறையில்லாத ஜோதி.
இவன், சேதனன், அசேதனங்களுக்கு அந்தர்யாமியாக இருக்கிறான்.
இதுதான் ப்ரம்மம்.-இதற்கு மேல் ஒன்றுமில்லை.
இது அரணிக்கட்டையில் உள்ள அக்னியைப் போன்றது.-எளிதில் அறிய இயலாது.
ஜீவாத்மா கீழ் அரணிக் கட்டை.
ப்ரணவம் மேல் அரணி.
கடைதல் என்பது த்யானம் செய்தல்.
இப்படி ஜீவாத்மாவுக்குள் பரமாத்மா மறைந்திருப்பதைத் த்யானம் செய்து,அறிந்து உபாஸிக்க வேண்டும்.
த்யானம் செய்பவருக்கு,கர்மானுஷ்டானம் முக்கியம்.
விஷ்வக்ஸேனர், ஆசார்யன் இவர்களின் அநுக்ரஹத்தைப் பெற வேண்டும்
பகவானை ஸ்தோத்தரித்து, அவன் அருளாலே, அவனிடம் மனதைப் பதிய வைக்கவேண்டும்.
தலை, கழுத்து, மார்பு இவற்றை நன்கு நிமிர்த்தி, சுத்தமான இடத்தில் தகுந்த ஆஸனத்தில் அமர்ந்து புலன்களை அடக்கி ,
ப்ராணாயாமங்களைச் செய்து, மனஸ்ஸை பரப்ரம்மத்திடம் நிறுத்த வேண்டும்.

அக்ஷரங்கள் யாவும் அகரத்திலிருந்து உண்டாகின்றன.
அகரத்தின் பொருளான பரமாத்மாவிடமிருந்து எல்லா உலகங்களும் உண்டாகின்றன.
அவன் அனைத்துக்கும் அந்தராத்மா. அவன் மாயன். மாயை ”மூலப்ரக்ருதி”.
அவனுடைய அம்சங்களே ஜீவாத்மாக்கள். இவனைச் சரணம் அடைய வேண்டும்.
ஜ்ஞானம், கர்மம் இரண்டாலும் அவனை ஆராதிக்க வேண்டும்.
இந்த ஜீவாத்மா ஆணல்ல, பெண்ணல்ல,அலியுமல்ல.
எந்த உடலை, கர்ம வினையால் பெறுகிறதோ, அதன் அடிப்படையில் ஜென்மாக்களில் இந்த ஜீவன்
அழைக்கப்படும்.
இவற்றையெல்லாம் தெளிந்து, பரமாத்மாவை ஆராதிப்பவர் அவன் திருவடியை அடைவர்.

பரமாத்மா ஜகத்காரணன்.
பந்த பாசங்களிடமிருந்து விடுபட்டு, அவனையே கதி என்று நினைப்பவருக்கு மோக்ஷம் உண்டு.
பரமாத்மா – ஆறு விதமான – எட்டுகளை உடையவன்.
(1) அஷ்டமாசித்தி
(2) எட்டு திக்குகள்
(3) எட்டு திக்பாலகர்கள்
(4) எட்டு ப்ரக்ருதிகள் (பூமி, ஜலம், ஆகாசம், நெருப்பு, வாயு,மனஸ், புத்தி, அஹங்காரம்)
(5) எட்டு தேவதைகள் (ப்ரஹ்மா, ப்ரஜாபதி போன்றவர்கள்)
(6) எட்டு வஸுக்கள்
(7) எட்டு திருக்கல்யாண குணங்கள்

(இந்த ஏழில் ஏதேனும் ஆறு) மூன்று மார்க்கங்களை உடையவன்.
(1) மோக்ஷத்திற்குச் செல்லும் தேவயாநம்
(2) கர்மலோகத்திற்குச் செல்லும் பித்ருயாநம்
(3) க்ஷூத்ர ஜந்துக்களுக்கான மார்க்கம்

ச்வேதாச்வதரர், தன் தபோபலத்தாலும், தெய்வ அநுக்ரஹத்தாலும், ப்ரம்மத்தை அறிந்து பலருக்கு இப்படி உபதேசித்தார்.

—————-

12 -அதர்வசிர உபநிஷத்து

தேவதைகள், ஸ்வர்க்கத்திற்குச் சென்று, ருத்ரனைப் பார்த்து, ”நீர் யார்?” என்று கேட்க,
அவர், ”நான் ஒருவனே முதலில் இருந்தேன்: இப்போதும் இருக்கிறேன்.
இனிமேலும் இருக்கப் போகிறேன் என்னைத் தவிர வேறொன்றும் இல்லை” என்றார்.
தேவதைகள், பகவான் சொல்ல வேண்டியதை இவர் சொல்கிறாரே என்று நினைத்தனர்.

ருத்ரன், ”தேவதைகளே! நீங்கள் நினைத்த அந்த பகவான் சூக்ஷ்மத்திற்கும் சூக்ஷ்மமானவன். எங்கும் பரந்து உள் புகுந்து
இருப்பவன். எனக்கும் அந்தர்யாமி. இவ்வாறே எனக்குள் புகுந்திருப்பதால், நான் என்றேன்” என்று சொன்னார்.
ருத்ரன், பகவானின் பக்தன். தேவதைகள் இவ்வாறு ருத்ரனைத் துதித்தனர்.
ப்ரணவம், அதற்கு விளக்கம்-இது ஒருஉபாஸனா மார்க்கம் என்று சொல்லப்பட்டது.
இந்த்ரன், நான்முகன், ஆதித்யன், பசுபதி, யாவருக்கும் பகவான் அந்தர்யாமி . இது ஒருவகை உபாஸனம்.

————-

13 – அதர்வ சிகோபநிஷத்து

பைப்பலாதர் மற்றும் பல மஹரிஷிகள், ”அதர்வா” என்பவரிடம் சென்று ”த்யானத்திற்கு மந்த்ரம் எது?
த்யானமானது எது?
த்யானம் செய்பவன் யார்?
த்யானம் செய்யப்படும் தத்துவம் என்ன?” என்று கேட்டனர்.

அதர்வா பதில் சொன்னார்.
”த்யானத்திற்கு மந்த்ரம் ப்ரணவம். அது நான்கு பாதம் உள்ளதாய் ப்ரம்மமாகும். அகார,உகார, மகாரங்கள்
அவற்றின் மேல் அரை மாத்திரை –
இதுவே வேதங்கள். இதுவே லோகங்கள் என்றும் மற்றும் பலவிதமாகவும் , இது புகழப்படுகிறது .
இந்தப் ப்ரணவம் ஹ்ரஸ்வம், தீர்க்கம், ப்லுதம், எனவும் பிரிக்கப்படும்.
இந்த நான்கு மாத்திரைகளை மனிதனுக்கு உள்ள விழிப்பு, ஸ்வப்னம், உறக்கம், மோக்ஷம் என்கிற நான்கு தசைகளாகச் சொல்வர்.
இந்தப் ப்ரணவமே த்யானத்திற்குச் சாதனம்.
த்யானத்தை விஷ்ணுவாகப் பாவிக்க வேண்டும்.
த்யானத்திற்கு அதிஷ்டான தேவதை விஷ்ணு . த்யானம் செய்பவனை ருத்ரனாகப் பாவிக்க வேண்டும்.
ஸர்வ ஐச்வர்யம் உள்ள எல்லாவற்றிற்கும் காரணனான முன்பு அரை மாத்திரையில் தேவதையாகச் சொல்லப்பட்ட
பரம புருஷனே எல்லோருக்கும் சுகம் அளிப்பவன். அவனே உபாஸிக்கப்படவேண்டியவன்.

ஓம்-உபாஸனா மந்த்ரம். இதில் பரமாத்மா என்கிற எண்ணம் வேண்டும்.
ஓம் – இதற்கு நான்கு பாதங்கள்- அகாரம், உகாரம், மகாரம், நாதம்.

அகாரம் – பாஸ்வதீ என்றும் பெயர்.
ப்ருத்வி லோகம்;சிவப்பு, மஞ்சள் நிறம்;
ருக் வேதம்; ப்ரஹ்மா
தேவதை; அஷ்டவஸுக்கள்;
காயத்ரீ சந்தஸ்;
கார்ஹபத் அக்னி; என்று த்யானித்தல்.அவச்யம்

உகாரம் – வித்யுமதீ என்றும் பெயர்.
அந்தரிக்ஷ லோகம்;
யஜூர்வேதம்;
கருப்பு நிறம்;
விஷ்ணு தேவதை;
ஏகாதச ருத்ரர்கள்;
த்ருஷ்டுப்சந்தஸ்;
தக்ஷிணாக்னீ;
என்று த்யானிக்க வேண்டும்.

மகாரம் – ”சுபாசுபா” என்றும் பெயர்.
ஸாம வேதம்;
வெளுப்பு நிறம்;
ருத்ரன் தேவதை;
பன்னிரண்டு ஆதித்யர்கள்;

ஜகதீசந்தஸ்;
ஆஹவநீயாக்னி; என்று த்யானிக்க வேண்டும்.

நாதம் – ”வித்யுமதி” என்றும் பெயர்.
அதர்வ வேதம். அர்த்த மாத்திரை;
ஸோம லோகம்;
எல்லா நிறங்களும்;
மருத்தேவதைகள்;
விராட் சந்தஸ்;
ஏகர்ஷி என்கிற அக்னி; என்று த்யானிக்க வேண்டும்.

————

14 – கௌஷீதகி உபநிஷத்து

இதில் பர்யங்க வித்யை, ப்ரதர்தந வித்யை, பாலகி வித்யை சொல்லப்படுகிறது.
இவை யாவும் வித்யைகளில் சொல்லப்பட்டுள்ளது.

—————

15 – மந்த்ரிகோபநிஷத்து

ஸத்வ, ரஜஸ், தமோ குணங்களால் மூல ப்ரக்ருதியானது, பரப்ரம்ம ஸ்வரூபத்தை மறைக்கிறது.
ரஜஸ், தமோ, குணம் ஒழிந்து ஸத்வ குணம் மேலோங்கியவர்களின் ஹ்ருதயத்திலே அந்தர்யாமியாக ப்ரம்மத்தை தர்சிப்பார்கள்.
உலகில் ப்ரம்மத்தைச் சிலர் 26வது தத்துவமாயும், 27வதாகவும், 24-ஆகவும், இன்னும் எவ்வெவ்வாறோ
பார்க்கிறார்கள். எல்லாம் அவனிடமிருந்து பிறந்து அவனிடமே மறைகின்றன. இந்த ப்ரம்மத்தை அறிந்து உபாஸிப்பவர் அவனிடம்
சேர்ந்து விளங்குவர்.

————–

16 – ஸூபாலோபநிஷத்து

16 அத்யாயங்கள் உடையது. நாராயணனே பரதத்துவம் என்பதைச் சொல்கிறது.
”கோராங்கர்” என்பவர் ரைக்வருக்குச் சொன்னது இது.

சேதனங்கள், அசேதனங்கள், சேதனா சேதனங்கள் இவைகளுக்கு கார்யமாக இல்லாத ஒன்றிலிருந்து ”தமஸ்” தோன்றியது.
தமஸ்ஸிலிருந்து பஞ்ச பூதங்களுக்குக் காரணமான தாமஸ அஹங்காரம்,
இதிலிருந்து ஆகாசம்,
இதிலிருந்து வாயு,
வாயுவிலிருந்து அக்னி,
இதிலிருந்து ஜலம்,
ஜலத்திலிருந்து மண்
இப்படியாகத் தோன்றி இதெல்லாம் ப்ரம்மாண்டமாக ஆயிற்று.
கொஞ்சகாலத்திற்குப் பிறகு, இந்த ப்ரம்மாண்டம் பிளக்கப்பட்டு, மேல் பாகம் – ஸ்வர்க்கம், கீழ் பாகம் பூமியாகவும் ஆயிற்று.
நடுவில் ப்ரம்மாவுக்கு அந்தர்யாமியான மஹா புருஷன்.
அவன் ப்ராணிகளுக்கு ம்ருத்யுவைப் படைத்தான். அவன்தான் ருத்ரன். (கண்ட பரசு என்றும்பெயர்).
அந்த ம்ருத்யு ப்ரம்மாவிடத்தில் புகுந்து மறைந்தான்.

ப்ரஹ்மா, மானஸ புத்ரர்களாக ஏழு பேரைப் படைத்தான்.
அவர்கள் புத்ரர்களைப் படைத்தனர் (ப்ரஜாபதி எனப்படுபவர்கள்).
முகத்திலிருந்து ப்ராம்மணனும், கைகளிலிருந்து க்ஷத்திரியர்களும், தொடையிலிருந்து வைச்யர்களும்,
கால்களிலிருந்து ஸுத்ரர்களும் உண்டானார்கள்.
மனஸ்ஸிலிருந்து சந்த்ரனும், கண்ணிலிருந்து
ஸுர்யனும் காதிலிருந்து காற்றும், ப்ராண வாயுவும்,
ஹ்ருதயத்திலிருந்து மற்ற எல்லாமும் உண்டாயிற்று.
நெற்றியிலிருந்து கோபத்தினால் ருத்ரன் உண்டானார்.
எல்லா உலகங்களையும் தனதாக்கிக் கொண்ட ஹிரண்ய கர்ப்பன்,
ஸ்த்ரீ , புருஷன் இரு உருவமாகப்பிரிந்து, தேவ – ரிஷி – யக்ஷ –
ராக்ஷஸ – கந்தர்வ ஜாதிகளையும், மிருகங்களையும் மற்றப் பிராணிகளையும் ச்ருஷ்டித்தான்.

ப்ரளய காலத்தில் அவனே அக்னியாகி எல்லாவற்றையும் எரிக்கிறான். அப்போது பூமி, ஜலத்திலும், ஜலம், நெருப்பிலும்,
நெருப்பு, காற்றிலும், காற்று, ஆகாசத்திலும் லயிக்கின்றன.

ஆகாசம், இந்த்ரியங்களோடும், இந்த்ரியங்கள், தன்- மாத்ரைகளோடும், தன்மாத்ரைகள், அஹங்காரத்திலும்,
அஹங்காரம், மஹத்திலும், மஹத், அவ்யக்தத்திலும், அவ்யக்தம், அக்ஷரத்திலும், அக்ஷரம், தமஸ்ஸிலும் லயிக்கின்றன.
தமஸ் பகவானுடன் ஒன்றி மறைகிறது.

இப்படிப்பட்ட பகவானை அடைய பலனில் பற்றில்லாமல், ஸத்யம், கொடை, தவம், ப்ரம்மச்சர்யம், வைராக்யம், யஜ்ஞம்,
என்கிற ஆறு அங்கங்களைக் கொண்டு உபாஸிக்க வேண்டும்.
ஹ்ருதயத்தின் நடுவே, மாம்ஸ பிண்டம் ஒன்று உள்ளது. (புரிதத்து) . அதில் தாமரைப் பூ போல ஓர் அவயவம் உள்ளது.
அங்கே நாடிகளின் வாயாக பத்து த்வாரங்கள் உள்ளன.அவற்றில் ப்ராண, அபான முதலிய வாயுக்கள் உலவுகின்றன.
யோகி, அந்தந்த வாயுவின் ஸகாயத்தால் எல்லா லோகங்களையும் யக்ஷ , ராக்ஷஸ, கந்தர்வர்களையும் மற்ற எல்லாவற்றையும் பார்க்கிறான்.
முக்யமான இந்த பத்து நாடிகள் ஒவ்வொன்றுக்கும் 72,000 சிறிய நரம்புகள் உள்ளன. ஜீவாத்மா இந்த நாடிகளில் இருக்கிறான்
(விழித்திருக்கும்போது).ஸ்வப்ன தசையில், ஸ்வப்னம் காண்பது,உறக்கத்தில் உடலைக் காப்பது,
ரத்தத்தை எல்லா நாடிகளிலும் பரப்புவது,ஹிதை எனப்படும் நாடிகளோடு சேர்ந்த ”புரிதத்து”என்கிற
ஹ்ருதயாகாசத்தில் போய் உறங்குவது எல்லாமே இதன் செயல்.
கண், காது, மூக்கு, நாக்கு, த்வக் (தோலில் எங்கும் உள்ளது) மனஸ், புத்தி, அஹங்காரம், சித்தம், வாக்கு, கை, கால்,
மலேயந்திரியம், மூத்திரேந்திரியம்-ஆக 14 இந்த்ரியங்கள்.
இவைகளுக்குத் தனித்தனியாக உள்ள விஷயம் – இவற்றுக்கான
தேவதை-இப்படி 14 உபாஸனைகள்.
நாடி, ப்ராணன், அதனால்உண்டாகும் அறிவஅப்போது ஏற்படும் ஆநந்தம், ஹ்ருதயாகாசம்
ஆகிய 8 இடங்களில் பரந்து உள்ளவனாக-பகவானை உபாஸிக்கவேண்டும்.
எல்லாவற்றையும் நிர்வஹிப்பவன். கட்டளையிடுகிறவன்.
எல்லா ஜீவாத்மாக்களுக்கும் ஆத்மா.
ப்ராணனுக்கும் ஆத்மா.
அறிவுக்கு எட்டாதவன்.
பலபடியாக வருணிக்கப்படும் பரமாத்மா
ஸ்ரீமன்நாராயணன். ஆதித்யர்கள், ருத்ரர்கள் அவனே.
காரணமும் அவனே. அவனுக்கு எல்லாப் பூமிகளும் உடல்.
பரமபதத்தில் எழுந்தருளியிருப்பவன்.
எல்லாம் உடலாய், பகவான்எல்லாவற்றிற்கும் அந்தர்யாமியாய் –
ஆத்மாவாய் இருக்கும் இந்தவித்யையை உபதேசமாகப் பெற்றார்.
இது வேத ரஹஸ்யம்.

உடம்பில் உள்ள நாடிகளில் நான்கு நாடிகள்
முக்கியமானவை. ரமை, அரமை, இச்சை, அபுநர்பவை –
புண்யலோகம், பாப லோகம், நினைத்த இடம், மோக்ஷ ஸ்தானம், என்கிற இடங்களுக்கு இவை முறையே வாயில்கள்.
நான்காம் நாடி வழியாகப் புறப்பட்டு, ஹ்ருதயகோசம்,
தலைக்கபாலம் இவற்றைப் பிளந்து கொண்டு ப்ருத்வி முதல் எல்லா தத்துவங்களையும் கடந்து ஜீவன் மேலே செல்கிறான்.

இப்படிப்பட்ட வித்யையை புத்ரன், சிஷ்யன் தவிர வேறு யாருக்கும் உபதேசிக்கலாகாது.

————————

17 – அக்னி ரஹஸ்யம்

சுக்ல யஜூர் வேதத்தில், சதபத ப்ராம்மணத்தில் இது ஒரு பாகம். இது உபநிஷத்து அல்ல.
யாகங்கள், ஹோமங்கள் செய்பவர் வைதீகமான அக்னியை ”ஆதானம்” என்பதை அனுஷ்டித்து ஸம்பாதிக்கிறான்.
இவன் ”ஆயிதாக்னி” எனப்படுகிறான்.
ஸோம யாகம் செய்யும்போது கருடன் முதலான உருவில இடம், நிர்மாணிக்கப்பட்டு,ஆஹவநியாக்னி வைக்கப்படுகிறது.
புருஷனுடைய ஆயுட்காலம் 36,000 நாட்கள்.ஒவ்வொரு நாளிலும் செய்யும் கடமைகளை, யாகத்துக்கு வேண்டிய அங்கங்களாக பாவித்து க்ரது (யாகம்)
செய்ய வேண்டும். (ஸ்தோத்ரங்கள், பூஜை உட்பட ஒவ்வொருவரும் செய்யும் கடமைகள்).
இது” வித்யாமயக்ரது” எனப்படும்.(வைச்வாநர வித்யை – சாண்டில்ய வித்யை தனியே சொல்லப்பட்டுள்ளது)

————-

18- மஹோபநிஷத்

நாராயணன் ஒருவன் தான் ச்ருஷ்டிக்கு முன்பு இருந்தான்.
ப்ரம்மன், ருத்ரன், ஜலம், அக்னி, ஸோமன், ஸ்வர்க்கம்,பூமி,நக்ஷத்ரம், ஸுர்யன், சந்த்ரன் முதலிய எதுவும் இல்லை,
தனியாக இருப்பதில் த்ருப்தி இல்லாத நாராயணன்
த்யானம் செய்ய 14 பிள்ளைகள். (10 இந்த்ரியங்கள், மனஸ், அஹங்காரம்,ப்ராணன், ஆத்மா (உடல்).
புத்தி 15வது—— இப்படியாகப் பிறந்தன.
பிறகு 5 பூதங்கள், 5 தன்மாத்ரைகள்,, 25வது தத்துவமாக ஜீவன் பிறந்தன.
பரமாத்மா எல்லாவற்றையும் ஒன்றாக்கி ஜீவனை அதில் புகுத்தி ஸ்ருஷ்டி செய்தான்.
இப்படி எல்லா ஜீவ ஸ்ருஷ்டிக்கும் காரணம் நாராயணன்.
நெற்றியிலிருந்து ருத்ரன், இவனிடம் சத்யம், ப்ரம்மச்சர்யம்,
வேதம் மற்றும் பல செல்வங்கள் சேர்ந்தன.
ஆகவே அவன் ஈசானன், மஹா தேவன் எனப்பட்டான்.
அவன் நாராயணனை தியானம் செய்ய நெற்றியில் வியர்வை உண்டாயிற்று.
அது எங்கும் பரவி நீராக ஆயிற்று.
அதில் ப்ரம்மாண்டம் உண்டாயிற்று. ப்ரம்மன் அங்கு தோன்றினான்.
பிறகு அந்தந்த லோகங்கள், தேவதைகள் பிறந்தன.
இதற்கெல்லாம் காரணம் நாராயணன். அவனை ஆச்ரயித்தே எல்லா உலகமும் உயிர்களும் உள்ளன.
தாமரை மொட்டுபோன்ற ஹ்ருதயத்தில் அக்னி ஜ்வாலை உள்ளது.
அதனிடையில் பரமாத்மா இருக்கிறான். ப்ரம்மன், சிவன், இந்த்ரன் எல்லோருடைய ஹ்ருதயத்திலும் இருக்கிறான்.
இதற்கு மேல் ச்லோக ரூபமாக இந்த உபநிஷத் உள்ளது.

வேதம்- பெரிய பர்வதம்.
வேதாந்தம் என்கிற உபநிஷத் —-மலைக்குள் இருக்கும் குகை.
இந்த குகைக்குள் நம்மை அழைத்துப் போய்
நமக்கு வழிகாட்டுபவர்கள் ஆசார்யர்கள்.
வேதத்தை அத்யயனம் செய்தால் மட்டும் போதாது.
வேதாங்கங்களையும் கற்க வேண்டும் (வ்யாகரணம், சந்தஸ், நிருக்தம், கல்பம், சிக்ஷா , ஜோதிடம்).

மஹரிஷிகள், ருக் வேதத்தை புத்தியாகிற மத்தினால் கடைந்தார்கள். எட்டு அக்ஷரம் கிடைத்தது.
இப்படியே யஜூர் வேதம் கடையப்பட்டது.
இதிலிருந்து எட்டு அக்ஷரம் கிடைத்தது.
இப்படியே ஸாமவேதம் கடையப்பட்டது.
இதிலிருந்து எட்டு அக்ஷரம் கிடைத்தது.
இந்த 24 அக்ஷரங்கள் தான் காயத்ரீ மந்த்ரம்.

இதையும் சுருக்கினார்கள்.
ருக் வேத 8 அக்ஷரங்களிலிருந்து ” பூ: ”
யஜூர் வேத 8 அக்ஷரங்களிலிருந்து ”புவ:” ,
ஸாமவேத 8 அக்ஷரங்களிலிருந்து ” ஸுவ:”
பூ:, புவ:, ஸுவ: —– வ்யாஹ்ருதி மந்த்ரம் என்று பெயர். இதை மேலும் சுருக்கினார்கள்.

ருக் —–.. பூ:.—— … என்பதிலிருந்து ”அ ”காரம்
யஜூர் ..—- புவ : —–… என்பதிலிருந்து” உ”காரம்
ஸாம —–.. ஸுவ:—- … என்பதிலிருந்து ”ம” காரம்
மூன்றையும் சேர்த்தார்கள்.
”ஓம்காரம்” பிறந்தது. வேதத்திற்கு இதுவே சிரஸ்.

யஜ்ஞ ப்ரகரணத்தில்
உத்கீதத்தாலே (ஸாம வேதம்)தேவதைகளையும், பகவானையும் அழைக்க வேண்டும்.
ருக் வேதத்தாலே அப்படி வந்தவர்களை ஸ்தோத்ரம் பண்ண வேண்டும்.
யஜூர் வேத மந்த்ரங்களால் இப்படி இப்படி அழைக்கப்பட்டு வந்துள்ள தேவதைகளுக்கும் பகவானுக்கும் ஹோமம் பண்ண வேண்டும்.
அதர்வ வேதமானது ப்ரஹ்மாவாக இருந்து இந்த யஜ்ஞத்தை நடத்தி வைக்கிறது.
வேதமும், ஸ்ம்ருதிகளும் என் கட்டளைகள். அவற்றை மீறி நடப்பவன் என் கட்டளையை மீறியவனாவான்.
அவன் என்னிடம் பக்தி கொண்டாலும் ஏற்கப்படாது என்று ஸ்ரீ விஷ்ணு தர்மத்தில் பகவானே அருளி யிருக்கிறார்.

ஸ்ரீ நாராயண உபநிஷத் மந்த்ரத்தைச் சொல்லி வேதோபாஸனத்தை நிறைவு செய்கிறோம்.

ஓம் அத புருஷோ ஹவை நாராயணோ காமயத ப்ரஜாஸ் ஸ்ருஜேயதி |
ஸ்ரீ நாராயணாத் ப்ராணோ ஜாயதே |
ஸ்ரீமனஸ்ஸர்வேந்த்ரியாணிச |
ஸ்ரீ கம்வாயுர் ஜ்யோதிராப: ப்ருதிவீ விச்வஸ்ய தாரிணீ |
ஸ்ரீ நாராயணாத் ப்ரஹ்மாஜாயதே |
ஸ்ரீ நாராயணாத் ருத்ரோ ஜாயதே |
ஸ்ரீ நாராயணாதிந்த்ரோ ஜாயதே |
ஸ்ரீ நாராயணாத் த்வாதாசா தித்யா ருத்ரா வஸவ: ஸர்வாணிச சந்தாகும்ஸி |
ஸ்ரீ நாராயணாதேவ ஸமுத்பத்யந்தே |
ஸ்ரீ நாராயணாத் ப்ரவர்த்தந்தே |
ஸ்ரீ நாராயணே ப்ரலீயந்தே |
ஸ்ரீ அத நித்யோ நாராயண: |
ஸ்ரீ ப்ரஹ்மாச நாராயண: |
ஸ்ரீ சிவஸ்ச நாராயண: |
ஸ்ரீ சந்ரஸ்ச்ச நாராயண: |
ஸ்ரீ காலஸ்ச்ச நாராயண: |
ஸ்ரீ ஊர்த்வம்ச நாராயண: |
ஸ்ரீ அதஸ்ச்ச நாராயண: |
ஸ்ரீ அந்தர்பஹிஸ்ச நாராயண: |
நாராயண ஏவேதகும் ஸர்வம் |
யத்பூதம் யச்சபவ்யம் |
நிஷ் களங்கோ நிர்விகலபோநிராஞ்ஜநோ நிராக்யாத:

ஸுத்தோதேவ ஏகோ நாராயண: |
நத்விதியோஸ்தி கஸ்சித் |
ய ஏவம் வேத
ஸவிஷ்ணுரேவபவதி ஸவிஷ்ணுரேவ பவதி

ஓமித்யக்ரே வ்யாஹ்ரேத்
நம இதி பஸ்சாத்
நாராயணாயேத்யுபரிஷ்டாத்
ஓமித்யோகாக்ஷரம்
நம இதி த்வே அக்ஷரே
ஸ்ரீ நாராயணாயேதி பஞ்சாக்ஷராணி
ஏதத்வை நாராயண-ஸ்யாஷ்டாக்ஷரம் பதம்
யோஹவை நாராயணஸ்யாஷ்டாக்ஷரம் பதமத்யேதி
அனபப்ருவ: ஸர்வமாயுரேதி
விந்ததே ப்ராஜாபத்யம் ராயஸ்போஷம் கௌபத்யம்
ததோம்ருதத்வமச்நுதே ததோம் ருதத்வ மச்னுத இதி
ய ஏவம் வேத
இத்யுபநிஷத்

ப்ரத்யகானந்தம் ப்ரம்ஹ புருஷம் ப்ரணவ ஸ்வரூபம்
அகார உகார மகார இதி
தானேகதா ஸதபவத்ததோமிதி
யமுக்த்வா முச்யதோ யோகீ ஜன்ம ஸம்ஸார பந்தனாத்
ஓம் நமோ நாராயணாயேதி மந்த்ரோபாஸக:
வைகுண்டலோக புவனம் கமிஷ்யதி
ததிதம் பரம் புண்டரீகம் விக்ஞாநகனம்
தஸ்மாத் ததிதாப மாத்ரம்
ப்ரம்ஹ்ண்யோ தேவகீ புத்ரோம் ப்ரம்ஹண்யோ மதுஸுதனோம்
ஸர்வபூதஸ் தமேகம் நாராயணம்
காரண ரூப மகாரம் பரம்ப்ரஹ்மோம்
ஏதத தர்வதிரோயோ தீயதே

ப்ராதரதீயானோ ராத்ரிக்ருதம் பாபம் நாசயதி
ஸாயமதீயானோ சிவஸ்க்ருதம் பாபம்நாசயதி
மாத்யந்தின மாதித்யாபிமுகோதீயான:
பஞ்சபாதக உபபாதகாத் ப்ரமுச்யதே

ஸர்வவேதபராயண புண்யம் லபதே
நாராயண ஸாயுஜ்யமவாப்னோதி
நாராயண ஸாயுஜ்யமவாப்னோதி

ய ஏவம் வேத
இத்யுபநிஷத்

ஹரி : ஓம்

————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேத வியாஸர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ப்ரஹ்ம வித்யைகள் –32-சுருக்கம் —

April 8, 2021

1. மதுவித்யை

தேனாக ஸுர்யனையை த்யானம் செய்வது.
ஸுர்ய மண்டலத்தை, தேவதைகள் உட்கொள்ளும் தேனாகவும்,
மேலுலகில் அந்தரிக்ஷம் எனப்படும் தேன் அடை இருப்பதாகவும்,
வண்டுகள் மலர்களிலிருந்து தேனை எடுத்து சேர்க்குமாப் போலே”வேத மந்த்ரங்கள்” என்றும்,
வஸு – ருத்ர – ஆதித்ய – மருத் ஸாத்ய கணங்கள் 4 திக்குகளிலும், மேல்புறத்திலும் நிற்பதாகவும்
தேனாக ஸுர்யனைப் பாவித்தும் அவனுக்கு அந்தர்யாமியாக பகவானை உபாஸனம் செய்தல்.

————

2. காயத்ரீ ப்ரஹ்ம வித்யை

காயத்ரீ சந்தஸ்ஸுக்கு மூன்று பாதங்கள், 24 அக்ஷரங்கள்.
ப்ரஹ்மத்திற்கு 4 பாதங்கள் (பூதம், ப்ருத்வி, சரீரம், ஹ்ருதயம்) .
வாக்கானது ஸர்வ பூதங்களையும் குறிக்கிறது – இரு குணங்கள் .
ப்ருத்வியை பாதமாக உடைய இதற்கு ஸர்வ பூதங்களும் ஆதாரம் . அவைகளால் மீள முடியாது.
சரீரமாயும் ஹ்ருதயமாகவும் இப்படி ப்ருஹ்மத்திற்கு ஆதாரமாக இருக்கிறது. இப்படி உபாஸிக்கச் சொல்கிறது.
இதற்கு அங்கமாக ஹ்ருதயத்தில் நான்கு பக்கங்களிலும் , மேலுமாக ஐந்து குழிகள் இருப்பதாகவும்,
அங்கு ப்ராணன்கள் சஞ்சரிப்பதாகவும்,
ஐந்து குழிகளிலும் ஐந்து துவாரபாலகர்கள் மற்றும் ஆதித்யன், சந்த்ரன், அக்னி, பர்ஜன்யன், ஆகாசம்
இவைகளின் தேவதைகள் இருப்பதாகவும் உபாஸனம் செய்யுமாறு சொல்கிறது.
இது ”காயத்ரீ ப்ருஹ்ம வித்யை” எனப்படும்.

———-

3. கௌக்ஷய ஜ்யோதிர் வித்யை

ப்ரம்மமே வைச்வாநரன். இவன் அக்னிக்கு அந்தர்யாமி. இங்ஙனம் உபாசிக்கும் முறைதான் இந்த வித்யை.
காதுகளை கைகளால் மூடிய போது காதுக்குள் ஒரு சப்தம் கேட்கிறதல்லவா? அது, இந்த ப்ரஹ்மத்தைக் காட்டுகிறது.

————

4. சாண்டில்ய வித்யை

ப்ரும்மமே எல்லாவற்றிற்கும் காரணம் என்று அறிந்து காம க்ரோதங்கள் இன்றி சாந்தத்துடன் ப்ரும்மத்தை உபாஸிப்பது.

————-

5. கோஸ விஜ்ஞானம் (வித்யை)

தன் புத்ரன் தீர்க்க ஆயுளோடு இருக்க செய்யப்படும் உபாஸனம். வாயுவை திக்குகளின் குமாரனாக நினைத்து
மந்த்ரங்களைச் சொல்லி உபாஸிக்க வேண்டும்.

———-

6. புருஷ வித்யை

தன்னை ஒரு யக்ஞமாக கருதி தன் ஆயுட் காலத்தை (116 வருமூம்) மூன்றாக பிரித்து
வஸு , ருத்ர, ஆதித்யர்களாக நினைத்து,
பசி, தாகங்களைத் தீக்ஷையாகவும், உட்கொள்வதை உபஸத்தாகவும் சிரிப்பு இவைகளை ஸ்தோத்ரங்களாகவும்,
சாஸ்த்ர சம்பந்தமாகச் செய்யப்படுவதை ஸம்பாவனையாகவும், மரணத்தை அவப்ருதமாகவும் பாவித்து, சாஸ்திர விதிப்படி உபாஸித்தால்,
நோயை விலக்கி நீடித்து வாழ்வான் என்கிறது.
”ஐதரேய மஹிதாஸர்” என்பவர் இப்படி வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது.
இவர், இந்த வித்யையை, ஸ்வேத கேதுவுக்கு உபாசித்ததாகவும் சொல்வர்.
அந்திம காலத்தில் ஜபிக்க வேண்டிய மந்த்ரங்களை ஜபித்தால், மோக்ஷம் அடைவான் என்றும் கூறுகிறது.
(தைத்திரீய முடிவில் சொல்லப்படும் புருஷ வித்யை இதுவல்ல).

————-

7 – ரைக்வ வித்யை

இது ஸம் வர்க்க வித்யை என்றும் சொல்லப்படும்.
”ஜாநச்ருதி” என்பவர் மிகவும் தர்மிஷ்டர். வீடுகள், சத்திரங்கள் கட்டி எல்லா இடங்களிலும் அன்னதானம் முதலிய எல்லா
தானங்களையும் ச்ரத்தையோடு செய்பவர். ஒரு நாள் இரவில்அவர் தன்னுடைய மாளிகையின் மேல் மாடியில்
படுத்திருக்கும்போது, அவருக்கு மேலே ஆகாயத்தில் அன்னங்கள் பறந்தன. அதில் முன்னே போகும் அன்னத்தை,
பின்னே செல்லும் அன்னம், ”உனக்கு கண்ணில்லையா ?
தர்மிஷ்டனான ”ஜாநச்ருதி” படுத்திருக்க, அவன் மேலாகப் பறந்து போகிறாயே?” என்று கேட்டது.
முன்னே செல்லும் அன்னம்,”வண்டியுடன் எப்போதும் வசிக்கும் ரைக்ரவரா இவர்?” என்று கேட்டது.
”அது யார்? வண்டியோடு இருக்கும் ரைக்வர்” என்று, பின்னால் செல்லும் அன்னம் கேட்டது.
சூதாட்டங்களில் ”க்ருதம்” என்கிற ஆட்டம் தெரிந்தவர் எல்லா ஆட்டங்களும் தெரிந்ததற்குச் சமம்.
”ரைக்வர்” எல்லாம் அறிந்தவர். அந்த பெருமை இந்த ஜாநச்ருதிக்கு ஏது?” என்று
முன்னே செல்லும் அன்னம் சொல்லிற்று.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஜாநச்ருதி , காலையில் எழுந்து ”ரைக்வர் எங்கிருக்கிறார்?” என்று அறிய எல்லா
பக்கங்களிலும் ஏவலர்களை அனுப்பினார். பல பேர் காணவில்லை என்று திரும்பி வர, ஒருவன் மட்டும் ”ஓரிடத்தில்
வண்டியின் அடியில் சிரங்குகளைச் சொறிந்து கொண்டு அமர்ந்திருக்கிறார்” என்று சொன்னார்.

ஜாநச்ருதி, பசுக்கள், குதிரைகள் இவற்றை ஏராளமாகக் கொண்டுபோய் ரைக்வரிடம் கொடுத்து அடிபணிந்து
தேவதாக்ஞானம் உபதேசிக்க ப்ரார்த்தித்தார். ரைக்வர் மறுத்தார். மறுபடியும் ஏராளமான செல்வங்களையும் மற்றும் தன்
புத்ரியையும் கொடுத்து உபதேசிக்குமாறு ப்ரார்த்தித்தார்.
இப்போது மனம் கனிந்து, ரைக்வர் உபதேசித்ததுதான் ரைக்வவித்யை.

————–

8 – ஸம்வர்க வித்யை

(ஸத்ய காம ஜாபாலர் என்கிற மஹரிஷி ஸ்வேதகேதுவுக்கு உபதேசித்தது)
காபேயன், அபிப்ரதாரி , என்கிற இருவர் சாப்பிட உட்கார்ந்த சமயத்தில் ஒரு ப்ரஹ்மச்சாரி பிக்ஷை கேட்டார். இருவரும் பிக்ஷை
போடவில்லை. ப்ரஹ்மச்சாரி , ”உலகத்தை தாங்குபவன் நான்கு நான்கு மஹாத்மாக்களை விழுங்கியுள்ளான். பற்பல உருவாக
வசிப்பவன் அவன். இவனை மனிதர்கள் தெரிந்து கொள்வதில்லை.
இந்த அன்னம் யாருக்கு உள்ளதோ அவனுக்கு அளிக்கப்படவில்லை” என்றான்.

காபேயன், ”ப்ரஹ்மச்சாரியே ! எல்லாவற்றையும் ச்ருஷ்டிப்பவன் ஸர்வக்ஞன். இவன் ஒருவராலும் சாப்பிடப்படாததைச் சாப்பிடுகிறான்.
இப்படி நாங்கள் உபாஸிக்கிறோம்” என்று சொல்லி, பிக்ஷை அளித்தான்.
அக்னி, ஸ@ர்யன், சந்த்ரன் இவற்றிற்கு லயஸ்தானம் வாயு.
உடம்பில் கண், காது, வாக்கு, மனஸ் இவைகளுக்கு லயஸ்தானம் ப்ராணன். இவற்றைத் தெரிந்து உபாஸிப்பவன் ,
ப்ரஹ்மத்தை அனுபவிப்பான். (இது பலன்) என்று இதில் சொல்லப் படுகிறது.

————–

9 – ஷோடச கல ப்ரஹ்ம வித்யை

ஸத்ய காமன் என்கிற மஹரிஷியின் வரலாறு சொல்லப்படுகிறது.
ஸத்ய காமன் ஆசார்யரை வரிக்கப் போவதற்கு முன்பு தன் தாயாரிடம் கோத்ரத்தின் பெயரைக் கேட்டான்.
”கோத்ரம் எதுவென்று தெரியாது” என்று சொன்ன தாயார், ஆசார்யனிடத்தில் ”என் தாயார் ஜாபாலை. நான் ஸத்ய
காமன் என்று சொல்!” என்றாள்.
ஸத்ய காமன் கௌதம-ஹாரித்ருபாதர் என்கிற ரிஷியிடம் சென்று இதைச் சொல்ல, குருவும் இவனை அங்கீகரித்து
இளைத்த 400 பசுக்களை வளர்த்துவரச் சொன்னார். அவற்றை வெகு சிரமப்பட்டு பல வருஷங்கள் வளர்த்து ஆயிரம்
பசுக்களாக்கினான். அவற்றில் ஒரு காளை ஸத்ய காமனுக்கு ”ப்ரகாசவா” என்கிற பாதத்தை உபதேசித்து, அதற்கு நான்கு
அவயவங்கள் என்று கூறி, ”அக்னி உனக்கு இன்னொரு பாதத்தைச் சொல்லும்” என்று சொல்லிற்று.

மறுநாள் ”ஸமிதாதானம்” செய்யும் சமயத்தில், அக்னி ”அனந்தவான்” என்கிற பாதத்தையும், அதன் நான்கு
பாகங்களையும் உபதேசித்தது.
”ஹம்ஸம் உனக்கு மூன்றாவது பாதத்தைச் சொல்லும்” என்றது.
மறுநாள் மாலை அன்னத்திடம் ஜ்யோதிஷ்மான் என்கிற பாதத்தையும், அதன் நான்கு பாகங்களையும் அறிந்தான்.
அன்னம், ”மற்றொரு பாதத்தை நீர்ப்பறவை சொல்லும்” என்றது.

அதற்கடுத்த மறுநாள் மாலை நீர்ப்பறவையிடம் ”ஆயதனவான்” என்கிற பாதத்தையும், அதன் பாகங்களையும் அறிந்தான்.
இப்படியாகக் கற்று நன்கு அறிந்த ஆசார்யனைப் போன்ற தேஜஸ் முகத்தில் தெரிய ஆயிரம் மாடுகளையும் ஓட்டிக் கொண்டு
ஆசார்யரிடம் சென்றான்.

ஆசார்யர் இவனைப் பார்த்து ”ப்ரஹ்மத்தை அறிந்தவனாக உன் முகம் சொல்கிறது. யார் உனக்கு சொன்னது?” என்று கேட்க,
ஸத்ய காமன் எல்லாவற்றையும் சொல்லி , ”இருந்தாலும் ஆசார்ய முகமாக உபதேசம் செய்யவேண்டும்” என்று ப்ரார்த்திக்க மனம்
சந்தோஷம் அடைந்து ஆசார்யனும் உபதேசம் செய்தார்.(இரண்டு உபதேசமும்-அதாவது எல்லாம் ஒன்றாக இருந்தன).

இந்த ஸத்ய காமனின் சிஷ்யன் உபகோஸலன். பன்னிரண்டு வருடம் ஆசார்யனின் வைதீக அக்னியைப் பாதுகாத்து வந்தான்.
ஆசார்யன் இவனுடன் இருந்த மற்ற சிஷ்யர்களுக்கு உபதேசம் முதலியவற்றை முடித்தவர் , உபகோஸலனுக்கு ஒன்றும்
சொல்லவில்லை. ஆசார்யருடைய மனைவி ப்ரார்த்தித்தும் எதுவும் சொல்லாமல், ஆசார்யன் வெளியூர் சென்று விட்டார்.

பன்னிரண்டு வருஷ காலம் பாதுகாத்து வந்த அக்னி இவனிடம் கருணை கொண்டு ”கம என்பது நமது சுகம், வம்
என்பது இந்த்ரியம் அல்லது வானம் போன்றது என்றும், ப்ராணன் ப்ருஹ்மம், கம்-ப்ருஹ்மம் (வம்) என்று உபதேசித்தான்.

பிறகு ”அக்னி வித்யையை” உபதேசித்து இதற்கு மேல் உனக்கு ஆசார்யன் உபதேசிப்பார் என்று அக்னி சொன்னான்.

வெளியூர் சென்றிருந்த ஆசார்யன் திரும்பி வந்தார்.
சிஷ்யனின் முகத்தைப் பார்த்தார். ”ப்ரஹ்ம தேஜஸ் ப்ரகாசிக்கிறதே? யார் உபதேசித்தது?” என்று கேட்டார்.

உபகோஸலன் நடந்த உண்மையைச் சொன்னான். ஆசார்யன் சந்தோஷமடைந்து மேற்கொண்டு உபதேசம் செய்தார்.
அதாவது
ஆத்மாவானது த்ரேகத்தில் இருப்பது. ஆத்மாவிற்கு அழிவு கிடையாது. இதை நன்கு தெரிந்து கொண்டால் பாபம்
ஆத்மாவில் ஒட்டாது என்று ஆரம்பித்து பலவற்றையும் உபதேசித்தார். இவ்வாறு உபாஸனம் செய்தவன் முமுக்ஷுவாக
இருப்பதால் இவன் மரணமடைந்த பிறகு இவனுக்கு செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்யா விட்டாலும் இவன் ஆத்மா
அர்ச்சிராதி மார்க்கம் என்கிற தேவயான மார்க்கத்தாலே ப்ரஹ்மத்திடம் சேர்க்கப்படுவான்.
இதன் பிறகு துக்கம் என்பதே கிடையாது என்று உபதேசித்தார்.

—————

10 – மேலே சொல்லப்பட்டது உபகோஸல வித்யை, என்றும் சொல்வர்
————–

11 – நடுவில் அக்னி உபதேசித்தது இதைச் சார்ந்த அக்னி வித்யை
(ஆக, ஷோடச கலை ப்ரஹ்மவித்யை, உபகோஸல வித்யை, அக்னி வித்யை மூன்றும் சொல்லப்பட்டது)

—————-

12 – ப்ராண வித்யை

ப்ராணன் மூத்தது. அதாவது கர்ப்ப வாஸத்தில் ப்ராணன் ஏற்பட்ட பிறகுதான் மீதி இந்த்ரியங்கள் உண்டாகின்றன.
ஆதலால் ப்ராணன் ”ஜ்யேஷ்டன்”.

ப்ராணனுக்கும் மீதி இந்த்ரியங்களுக்கும் ஒரு கலகம் ஏற்பட்டது. ”யார் உயர்ந்தவர்?” என்பதே அது.
ஸ்ருஷ்டி செய்த ப்ரஜாபதியிடம் சென்று, இந்த வ்யவஹாரத்தைத் தீர்க்குமாறு கேட்டுக் கொண்டன.
அவர் உங்களுக்குள் யார் சரீரத்திலிருந்து வெளிப்பட்டால் சரீரம் குலைந்து போகுமோ அவரே ச்ரேஷ்டர், உயர்ந்தவர் என்றார்.

வாக்கு ஒரு வருஷ காலம் சரீரத்தை விட்டு வெளிப்பட்டு இருந்தது. ஊமை போல சரீரம் வாழ்ந்தது. இதைப் போலவே
கண்கள், காதுகள் மற்ற இந்த்ரியங்களும் வெளிப்பட்டு சரீரத்தைச் சோதித்தது.
சரீரத்தில் அந்தந்த அங்கத்திற்கு குறைவு ஏற்பட்டதே தவிர, சரீரம் ஜீவித்திருந்தது.
ப்ராணன், சரீரத்தை விட்டு வெளியே கிளம்பின தருணத்தில் எல்லா அவயவங்களும் செயலிழக்கத் தொடங்கின.
அவை ப்ராணனை வெளியே போக வேண்டாம் என்று வேண்டி, ப்ராணனே ச்ரேஷ்டன் அதாவது உயர்ந்தவன் என்றன.
ப்ராணன்,தனக்கு அன்னம், ஆடை எல்லாம் அளிக்க வேண்டும் என்று கேட்டது.
அன்னம் ப்ராணனுக்கு என்றும், முன்னும் பின்னும் அருந்தும் ஆசமன தீர்த்தம் ப்ராணனுக்கு உடை என்றும் சொல்லி
அவையாவும் ப்ராணனை உபாசித்தன.

————–

13. பஞ்சாக்னி வித்யை

அருண மஹரிஷியின் குமாரர் ஆருணீ. அவரின் குமாரர் ச்வேதகேது. அவர் ஒரு சமயம் பாஞ்சால தேசத்தில் நடந்த
ஸதஸ்ஸுக்கு (விவாதங்கள் நடக்கும் சபை) சென்றார்.
ப்ரவாஹணன் என்ற பாஞ்சால தேசத்து அரசன் நடத்திய சபைக்கு அவர் சென்றார். அந்த அரசன் ச்வேதகேதுவை சில கேள்விகள் கேட்டார்.
அரசன்:ரிஷி புத்ரரே! உமக்கு தகப்பனார் உபதேசங்களைச் செய்திருக்கிறாரா ?
ச்வேதகேது: ஆம் அரசன்: ப்ரஜைகள் மரணம் அடைந்த பிறகு போகும் இடம் எது?
(அதாவது யாக தான பூர்த்தாதி புண்ய கர்மாக்களைச் செய்தவர்கள் எந்த லோகத்திற்கு போகிறார்கள்)
ச்வேதகேது: தெரியாது
அரசன்: திரும்பி வரும் வழி எது? (யாகாதிகளை அனுஷ்டித்தவர்திரும்பி வரும் வழி எது ?)
ச்வேதகேது: தெரியாது
அரசன்: தேவயான மார்க்கம், பித்ருயாண மார்க்கம் இவற்றின் வேறுபாடு தெரியுமா? (வேத்தபதோ தேவயானஸ்ய
பித்ருயானஸ்யச வ்யாவர்த்தனா ?)
ச்வேதகேது: தெரியாது
அரசன்: மேலுலகம் சென்றவர்கள் யார் தெரியுமா? (இந்த லோகத்திலிருந்து செல்பவர்களில் ஸ்வர்க்க லோகத்தை
அடையாதவர்கள் யார் ?)
ச்வேதகேது: தெரியாது
அரசன்: ஐந்தாவது ஆஹூதியில் மனிதன் பிறக்கிறான் என்பது தெரியுமா?
(வேத்த யதா பஞ்ம்யாமாஹூ தாவாப புருஷவசஸோ பவந்தீதி ?)
ச்வேதகேது: ஒன்றும் தெரியாது

இங்ஙனம் கேள்விகள் கேட்ட பாஞ்சால தேசத்து அரசன்
”ரிஷிபுத்ரரே, இவை ஒன்றையும் அறியாது, நீர் பெற்றுக் கொண்ட உபதேசம் தான் என்ன ? எப்படி உபதேசம் பெற்றதாகக்
கூறமுடியும் ?” என்று கேட்க,
ச்வேதகேது மான பங்கப்பட்டு தகப்பனாரிடம் ஓடி வந்து (ஆருணி) விஷயத்தைச் சொல்ல, அவர்
தனக்கு இதைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று வருத்தப்பட்டு,அரசனிடமே கேட்கலாம் என்று புறப்பட்டார்.
ச்வேத கேதுவையும் அழைத்தார். பிள்ளை வரவில்லை.
தான் மட்டும், ப்ரவாஹணன் என்கிற அந்த பாஞ்சால தேசத்து அரசனிடம் சென்றார்.
தன்னுடைய பிள்ளையிடம் கேட்ட கேள்விகளுக்கு தனக்கு பதில் தெரியாது என்றும்
அதைத் தெரிந்து கொள்ள வந்திருப்பதாகவும் சொன்னார்.

அரசன் ஆருணி என்கிற உத்தாலகருக்கு உபதேசித்ததே ”பஞ்சாக்னி வித்யை”.
ச்ரத்தையோடு புண்ய கர்மாக்களைச் செய்தவன் மரணம் அடைந்ததும், உடலில் இருந்து கிளம்பிய அவனும் (ஜீவாத்மா),
ப்ராணேயந்த்ரியங்களும், பூத ஸூக்ஷ்ம ஸரீரம் எடுத்து, முதல் அக்னியான ”ஸ்வர்க்கத்தில்” ஹோமம் செய்யப்படுகிறது.
வெகு போக்யமான ஸரீரம் எடுத்து (போக ஸரீரம்) போகங்களை அனுபவித்த பிறகு இந்த பூத சுக்ஷ்ம ஸரீரம் ”மேகம்” என்கிற
அக்னியில் சேர்க்கப்படுகிறது. பிறகு மழை மூலமாக, பூமி என்கிற நிலத்தில் விழுந்து,தான்யங்களில் புகுந்து, ஆகாரமாக புருஷனின் (நாலாவது அக்னி)
உடலில் சேர்ந்து, பிறகு ஸ்த்ரி எனப்படும் ஐந்தாவது அக்னியில் சேர்ந்து ஏறக்குறைய பத்து மாதங்கள் இருந்து உலகில் பிறக்கிறது.
இதுவே பஞ்சாக்னி வித்யை.

ஆயுள் பர்யந்தம் வரை இருந்து, மறுபடியும் மரணம் அடைந்து, முன்பு சொன்னதைப் போல ஐந்து அக்னிகளில்
இருந்து மறுபடியும் பிறந்து இப்படி எண்ணற்ற சங்கிலித் தொடராக,ஜீவன் பிறவிகள் எடுக்கிறது. இப்படி இருப்பதை
உணர்ந்து ஆத்மாவை வேறாகப் பாவித்து, உபாஸிப்பவரும் ச்ரத்தையுடன் ப்ரஹ்மத்தையே உபாஸிப்பவரும், மரணம்
அடைந்ததும் ”தேவயான மார்க்கம்” என்று சொல்லப்படும் அர்ச்சிராதி மார்க்கத்தாலே ப்ரஹ்மத்தை அடைகின்றனர்.
(அர்ச்சிராதி மார்க்கம் – இதில் விரிவாகவே சொல்லப்படுகிறது)

யக்ஞம் செய்தவர்கள், குளம் முதலியன வெட்டியவர்கள், ஆலயம் கட்டியவர்கள், தான தர்மம் செய்தவர்கள், பித்ருயான
மார்க்கமான புகை, இரவு, க்ருஷ்ண பக்ஷம், தக்ஷிணாயனம், பித்ரு லோகம், ஆகாசம், சந்த்ர லோகம் மூலமாக ஸ்வர்க்கம் சென்று
போகத்தை அனுபவித்து பிறகு ஆகாசம், வாயு, புகை, மேகம், மழை, ஓஷதிகள் என்று திரும்பி வந்து புருஷனிடம் போய்
சேர்வதில் முன் கர்ம வினைகளுக்கு தக்கபடி தாமதம் முதலியன ஏற்பட்டு கர்ப்பம் மூலமாக ஸ்த்ரீயை அடைந்து – மறுபடியும்
ஜனனம், மறுபடியும் மரணம்.
இப்படி பலப்பல ஜன்மங்கள். கொசு, புழு, பூச்சி போன்ற ஜந்துக்கள் பிறப்பதும், மரிப்பதுமாய் இருக்கும்.
இவற்றிற்கு மேலுலகம் என்பது இல்லை.
ஸ்வர்க்க லோகம் தான் அக்னி. ஸுர்யன்-ஸமித். ஸுர்ய கிரணங்கள்-புகை. அஹஸ் – அர்ச்சிஸ். சந்த்ரன்-அங்காரம்
அதாவது தணல். நக்ஷத்திரங்கள் – நெருப்பு பொறிகள்.

———–

14. வைச்வாநர வித்யை

ப்ராசீனசாலர் , சத்யஜ்ஞர், இந்த்ரத்யும்னர், ஜனர், புடிலர் – ஆகிய ஐந்து மஹரிஷிகளும் ஒன்று கூடி ”நம் ஆத்மா யாது ?
ப்ரஹ்மம் யாது ?” என்று விசாரம் செய்து, தெளிவு ஏற்படாமல்,
அருண மஹரிஷியின் புதல்வரான உத்தாலக மஹரிஷியை அணுகினர்.
அவரும் இதை நான் அறியேன் அல்லேன்! இதனை அறிந்தவர் கேகய தேசத்து அரசன் அச்வபதி என்பவர். அவரை
அணுகுவோம் என்று ஆறு மஹரிஷிகளும் அச்வபதியை அடைந்தனர்.
அச்வபதி மன்னர் இந்த மஹரிஷிகளைக் கொண்டு ருத் விக்குகளாக வரித்து யாகம் செய்து தக்ஷிணையைக்
கொடுக்கிறேன் என்றார்.
இவர்கள் வைச்வாநர வித்யையை தானமாக (தக்ஷிணை) வேண்டினர்.(அக்காலத்தில் ஞானத்தைப்
பெறுவதற்கு மிகவும் ஆவலும், அதற்கான வழிகளில் இழிவதும் மஹரிஷிகளிடையே இருந்தது )
அரசன் இவர்களை ஒவ்வொருவராக அழைத்து, வைச்வாநர உபாஸனம் இதுவரை எப்படி செய்கிறார்கள் என்று கேட்டான்.
ப்ராசீனசாலர் த்யுலோகத்தையும், சத்யயஜ்ஞர் ஆதித்யனையும், இந்த்ரத்யும்னர் வாயுவையும் ஜனர் ஆகாசத்தையும், புடிலர்
ஜலத்தையும், உத்தாலகர் ப்ருத்வியையும் உபாசிப்பதாகச் சொன்னார்கள்.
அரசன், இவை யாவும் வைச்வாநர ஆத்மாவின் அவயவங்கள். இவை இம்மை பலனை மட்டுமே அளிக்கும்.
ஆனால் இவற்றையெல்லாம் சேர்த்து ”விச்வரூப வைச்வாநர” உபாஸனம் செய்ய வேண்டும் என்று உபதேசித்தான்.
இதன் பலன் ”பரப்ரம்ம உபாஸனை” என்றும் சொன்னான்.

இவற்றைத் தன் உடலில் அங்கங்களாக வைத்து ப்ராணாக்னியை வைச்வாநர அக்னியாக பாவித்து, அன்னத்தை
ஐந்து ப்ராணாஹூதிகளாக முறைப்படி செய்வது. பஞ்சப்ராணங்களை இப்படி உபாஸித்தால், அவற்றின் வழியே இந்த்ரியங்கள்,
அவற்றை நியமிக்கும் தேவர்கள், அவர்கள் சார்ந்த உலகங்கள், யாவும் திருப்தி அடையும். இப்படி உபாஸிப்பவனின்
பாபம் தீயில் இட்ட பஞ்சு போல எரிந்து போகும் என்று, அரசன் சொன்னான்.

————–

15. ஸத்வித்யை
அருண மஹரிஷியின் பேரன் ச்வேதகேது. உத்தாலகரின் குமாரன். பன்னிரெண்டு வயதான ச்வேதகேது தகப்பனாரின்
கட்டளைப்படி குருகுல வாஸம் செய்து வேதத்தை எல்லாம் அத்யயனம் செய்து 24 வயதில் திரும்பி வந்தான்.
உத்தாலகர் பிள்ளையைக் கேட்டார். ச்வேதகேது எல்லாவற்றையும் குருகுலவாஸத்தில் அறிந்து கொண்டாயா?
எதைக் கேட்டு, சிந்தனை செய்து, த்யானித்தால், உலகத்தில் எல்லாவற்றையும் கேட்டு ,சிந்தித்துத் த்யானிக்கப் பெற்றதாக
ஆகுமோ அப்படி ஸர்வத்தையும் நியமிக்கும்படியானதை ஆசார்யன் உபதேசித்தாரா ? நீ கேட்டு தெரிந்து கொண்டாயா ?

ச்வேதகேதுவுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. ஆசார்யன் இதைச் சொல்லவில்லையே, தந்தையிடமே ப்ரார்த்திப்போம்
என்று தந்தையிடம் இதற்கு அவரையே உபதேசமாக சொல்லுமாறு கேட்டுக் கொண்டான்.
உத்தாலகர் சொன்னார்.
ஸத் என்கிற வஸ்து, தான் பலவாறாக ஆகக் கடவேன் என்று ஸங்கல்பம் செய்து கொண்டு ”தேஷஸ்”ஸை ச்ருஷ்டித்தது.
”தேஷஸ்” ஸங்கல்பம் செய்துகொண்டு ஜலத்தை ச்ருஷ்டித்தது. ஜலம் , இவ்வாறு ப்ருத்வியை ச்ருஷ்டித்தது.
இவைகள் பூமியில் பிராணிகள் என்ற பூதங்களாயின.
அந்த பிராணிகள் அண்டஜம், ஜீவஜம், உத்பிஜ்ஞம் என்று மூன்று வகை.
அண்டஜம் – முட்டையிலிருந்து உண்டாவது.
ஜீவஜம் – பிராணிகளிடமிருந்து பிறப்பது (மனிதர்களையும் சேர்த்து)
உத்பிஜ்ஞம் – பூமியைப் பிளந்து வளர்வது (மரம், செடி,கொடிகள்).
(உத்பிஜ்ஞத்தில் வியர்வையிலிருந்து உண்டாவதும் சேரும்).
ஸத் என்பது ஜீவாத்மாவோடு ப்ரவேசித்து, பலவகை நாம ரூபங்களை உண்டாக்க சங்கல்பித்துக் கொண்டு,
அதற்காக தேஜஸ், ஜலம், ப்ருத்வி என்கிற மூன்று மகா பூதங்களையும் த்ருவித்க்கரணம் செய்தது.
அதாவது ஜலத்தில் மற்ற இரண்டும்(தேஜஸ், ப்ருத்வி) கலந்திருக்கும்.
தேஜஸ்ஸில் ஜலம், ப்ருத்வி கலந்திருக்கும். ப்ருத்வியில் தேஜஸ், ஜலம் கலந்திருக்கும்
(இவற்றை பஞ்ச பூதங்கள் என்று சொல்லும்போது பஞ்சீகரணம் என்று பெயர்).
இப்படி கலந்திருப்பதிலிருந்து உடலை ச்ருஷ்டித்து, ஜீவாத்மாவுடன் தானும் அதன் உள்ளே புகுந்து, ஒவ்வொரு வஸ்துவாகவும்,
”ஸத்” என்கிற பரப்ரம்மம் இருக்கிறது .
ஒவ்வொன்றிலும் அசேதனம், சேதனன், ஈச்வரன் சேர்ந்து இருக்கிறது என்பதை அறிவாயாக.
தேஷஸ்ஸுக்கு நிறம் சிவப்பு. ஜலத்திற்கு நிறம் வெண்மை.
ப்ருத்விக்கு நிறம் கருப்பு. நெருப்பு எரியும்போது இந்த மூன்று நிறங்களையும் காணலாம்.
இப்படி மூன்று மஹா பூதங்களிலிருந்து உண்டான
அன்னம், உடலை வளர்த்து, மூன்று பரிணாமங்களைப் பெறுகின்றது.
அஸாரபாகம் – மலமாக ஆகிறது.
ஸாரபாகம் -உடலில் மாம்ஸம்.
மிகவும் ஸாரமானது மனஸைப் போஷிக்கிறது.
அருந்தும் ஜலமும், நீர், இரத்தம், மனஸைப் போஷிக்கும் பாகம் என்று மூன்றாக மாறுகிறது.
தேஜோமயமான ஆகாரமும்,எலும்பு, அதற்கு வேண்டிய ஸ்னேஹம் (பசை), வாக்கை வளர்க்கும் பாகம் என மூன்றாக மாறுகிறது.
ஆக மனஸ்-அன்னமயம்,
ப்ராணன்- ஜலமயம்,
வாக்கு – தேஜோமயம்.
”15 நாட்கள் ஆகாரம் இல்லாமல் வெறும் ஜலத்தைப் பானம் பண்ணி வந்தால்கூட, ப்ராணன் அழியாது. அப்படி இருந்து
மறுபடியும் என்னிடம் வா” என்றார் தகப்பனார்.
ச்வேதகேது, அப்படியே 15 நாட்கள் பட்டினி கிடந்து அப்போது தீர்த்தத்தை மாத்திரம் அருந்தி தகப்பனாரிடம் வந்தான்.
தகப்பனார் வேதங்களைச் சொல்லச் சொன்னார்.
ச்வேதகேதுவால் எதுவும் சொல்ல முடியவில்லை.
அப்போது ”நீ சாப்பிடாத போது16 அம்சங்களில் 15 அம்சங்கள் போய் விட்டன. இப்போது சாப்பிட்டு விட்டு வா” என்றார்.
ச்வேதகேது சாப்பிட்ட பிறகு சொல்வதற்கு பலம் வந்தது. அன்னத்தால் புஷ்டி ஏற்படுகிறது என்று விளக்கினார்.

இதைப்போல எல்லா உலகுக்கும் காரணமான வஸ்து எல்லாவற்றிலும் உட்புகுந்து நியமிக்கும்
சக்தியோடு இருக்கிறது என்று சொன்னார்.
பலவகை புஷ்பங்களிலிருந்து தேனீக்கள் தேனைச் சேகரிக்கின்றன. அந்த தேன் துளிகள், ”நான் இந்த புஷ்பத்தைச்
சேர்ந்தவன்” என்று தனியாகப் பிரித்துச் சொல்ல முடியுமா ?
அப்படியே ”ஸத்” எனப்படும் பராமாத்மாவிடம் ஒன்றின ஜீவாத்மாக்கள், தங்களைத் தாங்களே தெரிந்து கொள்ள இயலாது.
பல நதிகளிலிருந்து தண்ணீர் ஸமுத்திரத்தில் சேர்ந்த பிறகு அவை இன்னின்ன நதியின் ஜலம் என்று பிரித்து சொல்ல முடியுமா ? முடியாது.
ஒருவன் மரணம் அடையும் தருவாயில் அவனைச் சேர்ந்தவர்கள் அருகில் அமர்ந்து சில கேள்விகள் கேட்கும்போது
அவற்றை அவன் உணர்வதில்லை. ஏனெனில் அவனது வாக்கு மனஸ்ஸிலும், மனஸ் ப்ராணனிலும், ப்ராணன் தேஜஸ் எனப்படும்
பூத ஸக்ஷ்ம சரீரத்திலும் அதன் காரண வஸ்துவான பரமாத்மாவிடமும் லயித்து விடுவதால், உணர்வதில்லை.
உலகெங்கும் பரமாத்மா இருக்கிறான் என்றும், அவன் அழிவற்றவன், தோஷமற்றவன், எல்லா உயிர்களுக்கும் அவன்
ஆத்மா, உனக்குள்ளும் அவன் இருக்கிறான் என்று ச்வேதகேதுவுக்கு உத்தாலகர் உபதேசித்தார்.

இந்த ஸத்வித்யையில் 16 கண்டங்கள்
இவற்றில் சொல்லப்பட்டவை.
(1) ”ஸத்” என்பது எல்லா உலகத்துக்கும் காரணம்.
(2) ”ஸத்” முதலில் ”ஸமஷ்டி ச்ருஷ்டி” செய்கிறது.
(3) பூதங்களை ஒன்றோடொன்று சேர்த்து ”வியஷ்டி” ச்ருஷ்டி
செய்கிறது.
(4) த்ருவித்கரணம் என்கிற பூதங்களின் சேர்க்கை
செய்யப்படுகிறது.
(5) தேஜஸ், ஜலம், ப்ருத்வி இவற்றால் உடல் வளர்க்கப்படுகிறது.
(6) அன்னத்தின் நுண்ணிய பாகம் வாக், ப்ராணன், மனஸ்ஸை
வளர்க்கிறது.
(7) இது இல்லையேல் மனஸ் க்ஷீணமாகி விடுகிறது.
(8)”ஸத்” – சேதனங்களில் லயஸ்தானம்.
(9) இப்படி லயிக்கும் ஜீவன்கள் கணக்கில்லாதவை
(10) கடலில் இருந்து ஜலம் ஆவியாகி, மழையாகி, நதியாவது போல சேதனர்கள் (ஜீவன்கள்) ஸத்திலிருந்து புறப்படுவர்.
(11) இந்த சேதனர்களுக்கு அழிவில்லை.
(12) ”ஸத்” என்பது மிக மிக ஸக்ஷ்மமானது
(13) ”ஸத்” – எங்கும் கரந்து ,பரந்து உள்ளது.
(14) ஆசார்யன் மூலமாக இதை அறிய வேண்டும்
(15) இந்த வித்யையை உபாஸிப்பவனுக்கு எல்லா அநிஷ்டமும் போகும்
(16) அதனால் மீண்டும் ஸம்ஸார பந்தம் இல்லை.
உத்தாலகரின் உபதேசம் உலகில் உள்ளோர் மனங்களில் நன்கு பதியும்படி இருப்பதாகச் சொல்வர்.

—————

16. பூம வித்யை
நாரதர், ஸனத்குமாரரை அணுகி உபதேசம் செய்யும்படி ப்ரார்த்தித்தார். அவரது மனம் கலங்கியிருந்தது.
நாரத மஹரிஷி யாவும் அறிந்தவர். அவருக்கே கலக்கம் என்றால்?
ஸனத்குமாரர்,நாரதரைப் பார்த்து
உமக்கு தெரிந்ததையெல்லாம் முதலில் சொல்லுங்கள் என்றார்.
நாரதர் நான் எல்லா ஸப்தங்களையும் அறிந்திருக்கிறேன் என்றார்.
இதை உபாஸித்து (ப்ரம்மமாக)ஸப்தங்கள் கேட்குமிடங்களிலெல்லாம்
ஸஞ்சரித்து ஆனந்தம் அடையலாம் என்று ஸனத்குமாரர் சொல்ல,
நாரதர் இதற்கு மேலும் உண்டா என்று கேட்டார்.
ஸம்பாஷணை தொடர்ந்தது.

ஸப்தம், வாக்கு, மனஸ், ஸங்கல்பம், சித்தம், த்யானம், விஜ்ஞானம், பலம், அன்னம், தண்ணீர், தேஜஸ், ஆகாயம்,
நினைவு, ஆசை என்று பதினான்கையும் ப்ரம்மமாக உபாஸிக்கலாம் என்று ஸம்பாஷணை தொடர்ந்தது.
இதற்கும் மேலானது எது என்கிற கேள்வி வந்தபோது,
”ப்ராணனை” மேலானதாக உபாஸிக்கலாம் என்றும், ப்ராணன் என்பது ஜீவாத்மா என்றும்
இந்தப் ப்ராணனை உயர்ந்த புருஷார்த்தமாக உபாஸிக்கலாம் என்றும் சொன்னார்.

ஸனத்குமாரர் மேலும் சொன்னார்.
இதை விட ”ப்ரம்மத்தை” உபாஸனை செய்வது மேலானதாகும். அதற்கு உபாஸனம், மனனம், இதில் ச்ரத்தை,
இதில் அசைக்க முடியாத பற்றுதல், அதற்கு தகுந்த செய்கைகளில் ஊக்கம், இப்படி இருந்து அந்த ப்ரம்மத்தை
உபாஸிப்பது ”பூமா” எனப்படும்.
இதற்கு மேம்பட்டது இல்லை. இது எல்லாவற்றிற்கும் ஆத்மா-பரமாத்மா.
இப்படி உபாஸனம் செய்பவன், கர்மங்களிலிருந்து விடுபடுகிறான் இதற்கு மனஸ் சுத்தம் வேண்டும்.
மனஸ் சுத்தமாவதற்கு சுத்தமான ஆகாரத்தைச் சாப்பிட வேண்டும். இப்படி ஸனத் குமாரர் பதில் சொன்னார்.
இவரை ”ஸ்கந்தர்” என்றும் சொல்வதுண்டு.

———–

17. தஹர வித்யை

இந்த ஸரீரத்திற்கு ”ப்ரம்மபுரம்” என்று பெயர்.
இதன் உள்ளே இருக்கிற புண்டரீகம் (தாமரைப்பூ) போன்ற சிறிய ஹ்ருதயத்திலே ஆகாசம் இருக்கிறது.
வெளியில் உள்ள ஆகாசத்தைப் போலவே தான், இதுவும். உடல் அழியும்போது, புண்டரீகம் அழியும் போது இவ்வாகாசம் அழிவதில்லை.
இப்படி உள்ள ஆகாசத்தின் உள்ளே கல்யாண குணங்களான எட்டு – இதை உபாஸிக்க வேண்டும்.
இதனால் உபாஸிப்பவன் –
1) அபஹதபாப்மா (வினை இல்லாதவன்)
2) விஜர: (மூப்பில்லாதவன்)
3) விம்ருத்யு (மரணத்திற்கு இடமாகாதவன்)
4) விசோக: (துக்கமற்றவன்)
5) விஜிகத்ஸ: (பசியற்றவன்)
6) அபிபாஸ: (தாகமற்றவன்)
7) ஸத்யகாம: (நிலையான போக்யங்களை உடையவன்)
8) ஸத்யஸங்கல்ப: (தடையில்லாத ஸங்கல்ப சக்தியுள்ளவன்)— ஆக எட்டு குணங்களை அடைகிறான்.
வேதத்தில் சொல்லப்பட்ட சில கர்மாக்களைச் செய்து புண்ணிய பலன்களைப் பெற்றாலும், அதை அனுபவித்ததும்
யாவும் அழிந்து விடும்.ஆனால் ஆத்மாவையும் அதன் குணங்களையும் உபாஸிப்பவனுக்கு எல்லா பலன்களும் உண்டு.
இந்த பரமாத்மாவின் கல்யாண குணங்களை நாம் அறியாமல் இருப்பது நமது பாபத்தாலே. பூமிக்குள்ளே புதையல்
இருந்தும், பூமியின் மேலே நடப்பவனுக்கு அது தெரிவதில்லை.
அதைப் போல பரமாத்மாவை அறியாமல் இருக்கிறோம். இவன் ஹ்ருதயத்திலே இருக்கிறான். உபாஸகனாகிய ஜீவாத்மா
உடலிலிருந்து பிரிந்த பிறகு பரஜ்ஞோதியை அடைகிறான் என்பது இந்த பரமாத்மாதான்.
இவன் —இந்தப் பரமாத்மா—-சேதனம், அசேதனம் எல்லாவற்றையும் ஆள்கிறவன். எல்லா உலகங்களையும் எல்லா
பூதங்களையும், எல்லா வஸ்துக்களையும் ஒன்றோடொன்று கலந்து அழியாதபடி ஆங்காங்கு நிறுத்தி அதன் அதன்
தன்மையோடு காக்கின்றான்.இவனிடத்தில் எந்த தோஷமும் இல்லை.-இவனை அடைவதால் ”தாபத்ரயம்” நீங்கும்.

இவனைப் பெற, ப்ரம்மச்சர்யம் வேண்டும்.
ப்ரம்மச்சர்யத்தாலே ப்ரம்ம லோகத்தில் ”அரம்”என்றும் ”புண்யம்”என்றும் சொல்லப்படும் இரண்டு ஸமுத்திரங்களையும்
”ஐரம்மதீயம்” என்கிற தடாகத்தையும், ”ஸோமஸவனம்” என்னும் அரச மரத்தையும் தாண்டி ”அபராஜிதை” என்கிற ப்ரம்மத்தின்
(பரமாத்மா) ராஜதானிக்குச் சென்று, பரமாத்மா எழுந்தருளியுள்ள அழகிய ஸ்தானத்தை அடைந்து ப்ரும்மானுபவம் பெறுகிறான்.
(பரமபதம் அடைகிறான்).

ஹ்ருதயத்தில் உள்ள எல்லா நாடிகளுக்கும் ஸூர்ய க்ரணங்களுக்கும் சம்பந்தம் உண்டு. ஹ்ருதயத்தில் உள்ள 101
நாடிகளில் ஒரு நாடி தலைப் பக்கம் உள்ள நாடியின் வழியே ஸூர்ய மண்டலம் போய் மனோவேகமாய் பரமபதம்
(வைகுண்டம்) சேர்ந்தால் மேலே சொன்ன பலன்கள் உண்டு. இதுவே ”தஹர வித்யை” எனப்படுகிறது.

———-

18. ப்ரஜாபதி வித்யை

மேலே சொன்ன ”பர” வித்யைக்கு இந்த ப்ரஜாபதி வித்யை அங்கம் (முண்டகோபநிஷத்தைப் பார்க்க).
ப்ரஜாபதி தன் பிள்ளைகளான தேவர்களும், அசுரர்களும் க்ஷேமமாக இருப்பதற்காக ஆத்மாவை எட்டு குணங்களோடு அறிந்தவனுக்கு
ஸர்வ லோகமும், ஸர்வ சுகமும் உண்டு என்பதாக சொன்னதே இந்த வித்யை.

தேவர்களில் ப்ரதானன் இந்திரனும், அசுரர்களில் ப்ரதானன் விரோசனனும், 32 வருஷ காலம் ப்ரம்மச்சர்யம் அனுஷ்டித்து
ப்ரஜாபதியை அணுக அவர், ”ஆத்மா கண்ணில் தெரிகிறதா ?” என்று கேட்டார்.
கண்ணில் இருக்கும் நிழலை-அதன் பிரதிபிம்பம் தான் ஆத்மா என்று நினைத்தனர். விரோசனன் இதனையே
அசுரர்களுக்கு உபதேசித்தான். அதனால் அவர்கள் தேஹாத்மவாதிகள் ஆனார்கள்.

இந்த்ரனுக்கு திருப்தி இல்லை.
அவன் ப்ரஜாபதியை மறுபடியும் கேட்க, அவர் படிப்படியாக ஸ்வப்ன அவஸ்தையில் உள்ள ஆத்ம ஸ்வரூபம், உறக்கத்தில்
உள்ள ஆத்மஸ்வரூபம், இவற்றைச் சொல்ல இப்பொழுதும் இந்த்ரன் திருப்தி அடையவில்லை.

101 வருஷங்கள் ப்ரம்மச்சர்யம் இருந்து ”தஹர வித்யையில்” பகவானுக்கு உள்ள எட்டு குணங்களும் இவனுக்கும் உண்டு.
இவன் ,உடலில் இருந்து புறப்பட்டு பரமாத்மாவை அடைந்து சுகப்படுகிறான் என்று உபதேசித்தார். இந்த்ரனும் திருப்தி அடைந்து
தேவர்களுக்கு இதை உபதேஸித்தான். ஆத்ம ஸ்வரூபத்தை இந்த வித்யையினாலே ஜ்ஞான யோக பலத்தாலே அடைந்து
பக்தி யோகத்தில் இழிந்து மோக்ஷம் அடைவதே பலன்.

”பகவானை கரிய திருமேனி உடையவனாகவும், சேதன அசேதனங்களுக்கு அந்தர்யாமியாகவும் இருவகைகளாக
உபாஸிக்கிறேன். குதிரை, மயிரை சிலிர்த்து உதறுவது போலே பாபங்களை உதறித்தள்ளி ராகுவினின்று விடுபட்ட
சந்த்ரன் போலே சரீரத்திலிருந்து விடுபட்டு பரமபதம் சேருகிறேன்.”
ஸத்வ குணத்தை அழித்து சுக்லதாதுவை உட்கொள்ளும் ஜன்மம் இல்லை.
இந்த ஸாந்தோக்ய உபநிஷத்தில் சொன்ன வித்யை யாவும்
ப்ரஹ்மா ப்ரஜாபதிக்கும், ப்ரஜாபதி மனுவுக்கும், மனு ப்ரஜைகளுக்கும் உபதேசித்தது.
ஆசார்யனை அணுகி உபதேசம் பெற்று இந்த்ரியங்களை ஆத்மாவிடம் செலுத்தி (இந்த்ரியங்களை அடக்கி)
வைதீக கர்மாக்களைச் செய்து, ஜீவஹிம்சை செய்யாமல் மேற்சொன்ன வித்யைகளில் ஒன்றை உபாஸிப்பவர் ஆயுட்காலம்
முடிந்ததும் ப்ரஹ்மத்தை (பரமாத்மா) அடைகிறான்.

ப்ரம்மத்தை அறிவது உபநிஷத்துக்களைக் கொண்டு. அந்த ப்ரம்மத்தை நான் உபாஸிப்பேன். ப்ரம்மம் என்னை ஆதரிக்கட்டும்.
ஆத்ம விஷயங்களில் ஈடுபட்ட எனக்கு உபநிஷத்துக்களில் சொல்லப்பட்ட தர்மங்கள் எல்லாம் ஸித்திக்க வேண்டும்.
அவை என்னை ரக்ஷிக்க வேண்டும்.

—————

19. புருஷாத்ம வித்யை

(இது ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் வருகிறது. இருந்தாலும், வித்யைகளை வரிசையாகச் சொல்லிக் கொண்டு
இருப்பதால், இங்கு சேர்க்கப்பட்டு விவரிக்கப்படுகிறது).

முதன் முதலில் ஆத்மா ஒரே புருஷ ரூபமாக இருந்தது. இதற்கு (பரமாத்மா) புருஷன் என்றே பெயர்.
தனிமையில் சுகம் பெறாமல், இரண்டாவதாக ஒன்றை விரும்பி ஸ்த்ரீயும், புருஷனும் சேர்ந்ததோர் உருவமாகி,
பிறகு ஸ்த்ரீ வேறு, புருஷன் வேறு என்று பிரித்துக் கொண்டது.

இருவரும் புணரும் போது, தான் பிறப்பித்த ஸ்த்ரீயோடு தானே புணர்வது சரியல்ல என்று கருதி,பரமாத்மா ஸங்கல்பித்தவுடன் ,
ஸ்த்ரீயானவள் பசுவாக மாறினாள்.
இங்ஙனம், ஒவ்வொன்றிலும்,ஸ்த்ரீ புருஷ பேதம், எல்லா ஜீவராசிகளிலும் ச்ருஷ்டி செய்து,தன் உள்ளங்கையிலிருந்து பரமாத்மா அக்னியைப் படைத்தார் .

தேவர்கள் ச்ருஷ்டி, ஸனக, ஸனந்தாதி முதலியவர்களின் ச்ருஷ்டி செய்யப்பட்டது. அவை ஒவ்வொன்றிலும் பரமாத்மா உட்புகுந்தார் .

அந்த ஆத்மாவை உபாஸிக்க வேண்டும்.அடையப்பட வேண்டியது அதுவே. இதற்கு ”ஆத்மோபாஸனம்” என்று பெயர்.

இவனுக்கு தேவர்களும் இடைஞ்சல் செய்ய மாட்டார்கள்.
ஆனால், தேவர்களையோ மற்ற தேவதைகளையோ உபாஸிப்பவன், அவர்களுக்கு தாஸனாய், மாடு போல் உழைக்க
வேண்டியவனாகிறான். மனிதர்களுக்கு ஆத்மஜ்ஞானம் ஏற்படுவதை தேவர்களும், இதர தேவதைகளும் விரும்புவதில்லை.
தனக்கு உழைக்கும் மாடு தன்னை விட்டு போய் விடுகிறது அல்லவா !
ஒருவன் பூர்ணனாவதற்கு, மனைவி, புதல்வன், பணம், நல்ல செய்கை என்கிற நான்கும் பொருந்தியிருக்க வேண்டும்.

வாக்கு-மனைவி,
ப்ராணன் – புதல்வன்,
கண்ணும், காதும்-பணம்.
உடலே -நல்ல செயல்களைச் செய்ய உதவுகிறது.
இவ்வளவாக ஜீவன் பூரணணாக இருந்து பரமாத்மாவை உபாஸிக்க வேண்டும்
அனைவருக்கும் தந்தையான பரமாத்மா ஏழு அன்னங்களை உண்டாக்கினான். அவற்றில் ஒன்றை எல்லாருக்கும் பொதுவாக
ஆக்கினான். (இது நாம் தினந்தோறும் உண்பது. தேவர்கள், விருந்தினர் இவர்களுக்கு அளித்த பிறகே நாம் உண்ண வேண்டும்.
ஏனெனில் இது யாவருக்கும் பொது அல்லவா!)
தேவர்களுக்கு இரண்டை அளித்தான் (வேதங்களிலும், ஸ்ம்ருதிகளிலும் அவர்களுக்காக விதிக்கப்பட்ட தர்ஸபூர்ண மாஸங்கள் என்கிற கர்மாக்கள்)
ஒன்றை பசுவுக்கு அளித்தான். (இது பாலைக் கொடுக்கிறது).
மூன்றை தனக்காக வைத்துக் கொண்டான் (மனம், வாக்கு, ப்ராணன்)

எல்லா இந்த்ரியங்களுக்கும் மனஸே முக்கியம்.
மனஸ் வேறு ஏதாவதில் லயித்திருந்தால் கண்ணில் பட்டது காணப்படாது. காதில் கேட்டது கேட்கப்படாது.
விருப்பம், ஸங்கல்பம், ஐயம்,நம்புதல், அவநம்பிக்கை, தைர்யம், அதைர்யம், வெட்கம், அறிவு, பயம் — இவை எல்லாவற்றுக்கும் காரணம் மனஸே.
இப்படியே வாக்கு என்கிற இந்த்ரியமும் முக்கியமானது.
மூன்றாவது ப்ராணன்.
இது ப்ராண-அபான- வ்யான-உதான-ஸமானங்களாக இருக்கின்றன. மூன்று அன்னங்களாலே ஆத்மா தன்னுடைய நிலையைப் பெறுகிறது.

இவற்றில் ப்ராணனுக்கு தேவதை சந்த்ரன். அவனுக்கு 16 கலைகள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலையாக 15 கலைகள் அழியும்.
அவையே மறுபடியும் வளரும். 16வது கலை அழிவற்றது. அமாவாஸ்யை அன்று சந்த்ரன் இந்த கலை (16வது கலை)மூலம்
எல்லா பிராணிகளுக்குள்ளும் புகுந்திருப்பான்
சந்த்ரனைப் போலவே புருஷனுக்கும் 16 கலைகள். தானே ஒரு கலை. அது அழிவற்றது. அழியும் கலைகள் 15.
இது அவருடைய சொத்து. சொத்துகள் அழிவதும், வளர்வதும் நாம் பார்க்கிறோம்.

இப்படிப்பட்ட புருஷன், புத்திரனைப் பெற்று மனுஷ்ய லோகத்தையும், காம்ய கர்மங்களைச் செய்து பித்ரு லோகத்தையும்,
பக்தியோகம் செய்து தேவ லோகத்தையும் (பரமபதம் என்று இங்கு பொருள் கொள்க) பெற வேண்டும்.

வாயு தேவதை எப்போதும் வீசிக் கொண்டே இருக்கிறது. அக்னி எரித்துக் கொண்டே இருக்கிறது. வெயில் காய்ந்து
கொண்டே இருக்கிறது. நிலவும் அப்படியே.
இவைகளுக்கெல்லாம் அஸ்தமனம் என்பது உண்டு
ஸுர்ய,சந்த்ரர்கள் வானத்தில் சஞ்சரிப்பதற்கு வாயுவின் சகாயம் வேண்டும். வாயுவே உயர்ந்தது. ப்ராணனும் ஒரு வாயுவே.

இந்த்ரியங்களில் ப்ராணன் உயர்ந்தது. ப்ராணனுக்கு மேற்பட்ட ஜீவாத்மாவும், பரமாத்மாவும் கூட ப்ராணன் என்றே
அழைக்கப்படுவது உண்டு.
ப்ராணன் அம்ருதம்; ஆத்மா அம்ருதம்.-இப்படி ஜகத்காரணனான பரமாத்மாவை உபாஸிக்க வேண்டும்.

————-

20 – பாலாகி வித்யை

(இதுவும் ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் உள்ளதே).
அஜாதசத்ரு என்கிற அரசனிடம், பாலாகி என்பவன் தன்னுடைய ப்ரம்மஜ்ஞான அறிவை வெளிப்படுத்த ஆவல்
கொண்டு அரசனிடம் சென்று தன்னுடைய அறிவாற்றலை வெளிப்படுத்தினான்.
ஸுர்ய மண்டலம், சந்த்ர மண்டலம்,மின்னல், ஆகாயம் இப்படி ஒவ்வொன்றாகச் சொல்லி அங்கேயுள்ள ஆத்மாவை (ஜீவாத்மா)
ப்ரம்மமாகச் சொன்னான்.
அஜாதசத்ரு இதை ஒப்புக் கொள்ளாமல், இவற்றை மறுத்து, வாதிட்டான். பாலாகி அஜாதசத்ருவைப் பணிந்து, ப்ரம்மத்தைப்
பற்றி சொல்லுமாறு கேட்டான்.
அஜாதசத்ரு பாலாகியை அழைத்துக் கொண்டு, தூங்குபவன் அருகில் சென்று, அவனை எழுப்பினான்.
அவன் எழுந்திருக்காமல் இருக்கவே, கையால் அசைத்து எழுப்பினான். அவன் எழுந்தவுடன், அரசன்
பாலாகியைப் பார்த்து ”இப்போது விழித்தவன், உறங்கும்போது எங்கு இருந்தான் என்பது உனக்கு தெரியுமா? எங்கேயிருந்து
வந்தான் என்பது தெரியுமா ?” என்று கேட்டான். பாலாகிக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.

அரசன், இப்போது, அவனுக்கு உபதேசித்தான்.
தூங்க ஆரம்பிக்கும்போது, இந்த்ரியங்கள் வேலை செய்வதிலிருந்து ஓய்வு பெற ஆரம்பிக்கின்றன. ஜீவன், ஸ்வப்னம்
காண இருக்கும் நாடிகளில் சென்று ஸ்வப்னங்களைக் கண்டு, பிறகு ஹ்ருதயத்திற்குச் சென்று, அங்கிருந்து ஆகாசம் சென்று
பரமாத்மாவிடம் உறங்குகிறது. இப்படி தூங்கிஎழுந்திருக்கும்போது பரமாத்மாவிடமிருந்து வெளிப்படும்போது
இந்த்ரியங்களுடன் சேர்ந்து எல்லா உணர்ச்சிகளையும் திரும்பப் பெறுகிறது. (கௌஷீதகி உபநிஷத்தில் இது விவரமாகச் சொல்லப்பட்டுள்ளது).

ஜீவாத்மா அதாவது ப்ராணன் – பசுங்கன்று. இதற்கு கர்ப்பஸ்தானம் ஹ்ருதயம். இது வெளிப்பட்டு விளங்கும் ஸ்தானம் உடல்.
அன்னம் என்கிற கயிற்றால் கட்டப்பட்டுள்ளது.
இப்படி உணர்ந்தவருக்கு ஏழு சத்ருக்களால் அழிவில்லை.
(இரண்டு கண், இரண்டு காது, இரண்டு நாசித்வாரம், வாய் ஆக ஏழு).
தலையில் நிலைத்துள்ளது ப்ராணன்.
ப்ரம்மத்திற்கு இரண்டு ரூபங்கள்.
மண், நீர், நெருப்பு இதில் தங்கியிருப்பது ஒரு ரூபம்.
இது மூர்த்தரூபம்.
வாயுவும்,ஆகாயமும் மற்றொரு ரூபம் – இது அமூர்த்தரூபம்.
இது சத்யத்திற்கெல்லாம் சத்யம். (சத்யம்-ஜீவாத்மா. அவற்றுக்கெல்லாம் சத்யம் -ப்ரம்மம்-பரமாத்மா).

———–

21. மைத்ரேயி வித்யை

(இதுவும் ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் உள்ளதே)
யாஜ்ஞவல்க்யர் மஹரிஷி . அவருக்கு இரண்டு மனைவிகள்.மூத்த மனைவி மைத்ரேயி. இளைய மனைவி காத்யாயனி.
இது யாஜ்ஞவல்க்யருக்கும் அவரது மனைவி மைத்ரேயிக்கும் நடந்த ஸம்வாதம்.

மைத்ரேயி – பூமி அளவு பணம் கிடைத்தாலும், அதனால் மோக்ஷம் பெற முடியுமா ?

யாஜ்ஞவல்க்யர் – முடியாது. சொத்து இருந்தால் இந்த உலக வாழ்க்கைக்கு உபயோகப்படும். மோக்ஷம் பெற இயலாது.

மைத்ரேயி – சொத்தை பிரித்துக் கொடுப்பதாகச் சொன்னீர்கள்.
மோக்ஷத்திற்கு உபயோகப்படாதது எனக்கு எதற்கு? மோக்ஷ உபாயத்தை உபதேசியுங்கள்.
யாஷ்ஞவல்க்யர் – மிக்க சந்தோஷம்.
நான் சொல்வதை கவனமாகக் கேள்.
ஒருவருக்கொருவர் பிரியமாவது என்பது நாம் நினைப்பதால் அல்ல. பரமாத்மா அப்படி நினைத்தால்தான் அது நடக்கும்.
எப்போதும் ப்ரியமாக இருக்கும் பரமாத்மாவை உபதேசம் மூலமாக கேட்டு, அறிந்து, த்யானித்து ,அனுபவிக்க வேண்டும்.
இதை அடைய இந்த்ரியங்களை அடக்க வேண்டும்.
இந்த பரமாத்மா, விஜ்ஞானாத்ம (ஜீவாத்ம) ஸ்வரூபனாய் பஞ்ச பூதங்களோடு கலந்து வருகிறது.

மைத்ரேயி – இதை விளக்க வேணும்

யாஜ்ஞவல்க்யர் – எல்லாம் ஆத்மாவே என்று அறியாதவன்-
அறிகிறவன், அறியும் கருவி, அறியப்படுபவது இவற்றை வெவ்வேறாக பார்ப்பான். எங்கும் வ்யாபித்துள்ள ஆத்மாவாகவே
எல்லாவற்றையும் காண்பவனுக்கு இப்படி வேறுபாடு தோன்றாது. எதைக் கண்டாலும் ஆத்மாவைக் காண்பதாகவே தோன்றும்.

————-

22 – பர்யங்க வித்யை (இது கௌஷீதகி உபநிஷத்தில் உள்ளது)

சித்ரன் என்கிற அரசன், அருணரின் புதல்வரை யாகம் செய்விக்க வேண்டினான். அவர் தன் புத்ரனான ச்வேதகேதுவை அனுப்பினார்.
அரசன், ச்வேதகேதுவைப் பார்த்து, ”என்னையோமற்றவரையோ (மற்ற அரசர்களையோ) யாகம் செய்வித்து
அதனால் அடையப்படும் லோகத்தைப் பற்றிய ரகஸ்யம் உள்ளதா? அது உங்களுக்கு தெரியுமா? அதன் மார்க்கம் என்ன?” என்று கேட்டார்.
ச்வேத கேதுவுக்கு பதில் சொல்ல தெரியவில்லை.
தகப்பனாரிடம் திரும்பி விட்டான். தகப்பனாரிடம் நடந்ததைச் சொன்னான். தகப்பனாருக்கும் தெரியவில்லை. அவர் அரசனிடம்
சென்று இதை தெரிவிக்க வேண்டினார்.

அரசன் சொன்னதாவது – இவ்வுலகில் மரணம் அடைபவர் சந்த்ர லோகம் செல்கின்றனர். சந்த்ரன் மேலுலகத்திற்கு வாசல்
போன்றவன். சந்த்ரன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்பவரை மேலே செல்லுமாறு அனுமதிக்கிறான்.
பதில் தெரியாதவனை மழை மூலமாகத் திருப்பி, உலகத்திற்கே அனுப்புகிறான். அப்படி திரும்பியவன் இவ்வுலகில் மறு பிறவி எடுக்கிறான்.
சந்த்ரன் ”நீ யார்?” என்று கேட்க,
பஞ்சாக்னி வித்யையில் சொல்லியபடி ஐந்து நிலைகளைப் பெற்று, பிறவியை அடைந்தவன். இனி என்னை அவ்வாறு பிறக்குமாறு விடவேண்டாம்,
பகவான் சத்யம் என்று தவத்தாலே உணர்ந்தேன் என்று பதில் சொல்பவனை சந்த்ரன் விட்டு விடுகிறான்.
அப்படிச் சொல்பவனை மேலே (அர்ச்சிராதி மார்க்கத்தில்) போக அனுமதிக்கிறான். அப்படி அனுமதிக்கப்பட்டவன் அக்னி லோகம்,
வாயு லோகம், வருண லோகம், ஆதித்ய லோகம், இந்த்ர லோகம், ப்ரம்ம லோகம் என்று இப்படி அர்ச்சிராதி மார்க்கத்தில் செல்கிறான்.
ப்ரம்ம லோகத்தில் அரம் என்கிற மடு உள்ளது. முஹூர்த்தர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள், அயலாரை
தடியால் அடித்து விரட்டுவார்கள். இதற்கு மேலே ”விரஜை ” என்கிற ஆறு. திவ்யம் என்கிற வ்ருக்ஷம்.
”ஸாலஜயம்” என்று சொல்லப்படும் ”அபராஜிதம்” என்கிற ராஜதானி.
இதற்கு இந்த்ரன்,ப்ரஜாபதி என்று இரண்டு த்வா ரபாலகர்கள்.
”ப்ரபுவிமிதம்”,”விஷப்ரமிதம்” என்று சொல்லப்படும் விசாலமான மண்டபம். ”விசக்ஷணை” என்கிற பீடம்.
அமிதௌஜஸ் எனப்படும் அளவற்ற ப்ரகாசம் உடைய கட்டில். எல்லாவற்றையும் தங்கள் ஸௌந்தர்யத்தால்
கொள்ளை கொள்ளும் தேவியர்கள். எண்ணற்ற ஸ்த்ரீ ரத்னங்கள்.
இத்தகைய ப்ரம்ம லோகத்திற்கு இவன் வருகிறான்.

பகவான் ”விரஜை ” ஆற்றின் அருகே வந்து கட்டளையிட்டதும், கையில் மாலையுடன் 100 திவ்ய அப்ஸரஸ்கள், மையை வைத்துக்
கொண்டு 100 திவ்ய அப்ஸரஸ்கள், கந்தப் பொடி, பட்டு வஸ்த்ரம், ஆபரணங்கள் இவைகளை ஏந்திக் கொண்டு
நூறு, நூறு அப்ஸரஸ்கள்-ஆக 500 அப்ஸரஸ்கள் இவனுக்கு அலங்காரம் செய்கின்றனர்.
அர்ச்சிராதி மார்க்கத்தில் வந்த ஜீவன் (முக்தன்) ”அரம்” என்கிற மடுவை நினைத்த மாத்திரத்தில் தாண்டி,
முஹுர்த்தர்கள் விலகி வழிவிட ”விரஜை ” ஆற்றையும் நினைத்த மாத்திரத்தில் கடந்து,
”திவ்யம்” என்கிற மரத்தை அணுகி,
ப்ரம்மத்தின் நறுமணம் இவனுடைய சரீரத்திற்கு ஏற்பட
”ஸாலஜ்யம்” என்கிற இடத்திற்கு வந்து
”அபராஜிதம்” என்கிற அரண்மனையில் புகுந்து
”ப்ரம்ம தேஜஸ்” ஜொலிக்க,
இந்த்ரன்,ப்ரஜாபதி என்கிற இரு த்வாரபாலகர்கள் வழிவிட,
”விஷப்ரமிதம்” என்கிற மண்டபத்தை அடைந்து,
”ப்ரம்மயசஸ்” வந்து சேர,விசக்ஷணை என்கிற பீடத்தை நெருங்கி,
”அமிதௌஜஸ்” என்கிறகட்டிலை அடைய,

பகவான் இவனை ”நீ யார் ? ” என்று கேட்க,

முக்தன் ”ஸ்வர்க்கத்திலிருந்து ஆகாசம், வாயு, மேகம் முதலிய வழிகளில் கீழே இறங்கி எண்ணற்ற பிறப்புகள் எடுத்த ஜீவாத்மா.
நீர் எல்லா ஜீவாத்மாக்களுக்கும் ஆத்மா அதாவது பரமாத்மா.
அடியேனுக்கும் ஆத்மா. நான் மனஸ், வாக்கு, உடல் மற்றும்இந்த்ரியங்களின் உதவியுடன்
ஆண், பெண், அலி என்று பற்பல ஜென்மம்,உருவங்கள் எடுத்தேன்.
உடல், இந்த்ரியம், மனஸ்,ப்ராணன், அறிவு இவற்றையெல்லாம் விட நான் மேலானவன் என்று தெரிந்து கொண்டேன்.
தேவரீரை ஆத்மாவாக உடையவன். தேவரீருக்கே சேஷபூதன்” என்று பதில் சொல்கிறான்.
பர்யங்க வித்யையான இதில் சொல்லப்பட்டபடி பகவானை உபாஸிப்பவர் பகவானின் திருவடிகளை அடைவர்.

————————-

23. ப்ரதர்தந வித்யை
(இதுவும் கௌஷீதகி உபநிஷத்தில் உள்ளது).

திவோதாஸன் என்பவரின் குமாரன் ப்ரதர்தனன். மிகவும் பராக்ரமசாலி. சண்டைகளில் இந்த்ரனுக்கு உதவி செய்தவன். ஒரு
சமயம் இந்த்ரன் இடமான ஸ்வர்க்க லோகம் சென்றான். இந்த்ரன் இவனிடம் ”வரன் அளிக்கிறேன் கேள்” என்றான். ப்ரதர்தனன்
”மனிதனுக்கு எது ஹிதமோ, அதையே வரமாக எனக்கு அளிப்பாயாக” என்றான்.

இந்த்ரன் சொன்னதாவது:
என்னை உபாஸனை செய். என்னை உபாஸித்தால் மாத்ருஹத்தி, பித்ருஹத்தி, களவு, கர்ப்பஹத்தி போன்றவற்றால்
வரும் பாபம் கிடையாது. பாபம் செய்ததற்காக முகம் கருக்காது.
நான் ப்ராணன். என்னை ஆயுள் என்றும், அம்ருதம் என்றும் உபாஸனம் செய். இதனால் முழு ஆயுளைப் பெற்று ஸ்வர்க்க
லோகத்திலும் அழியாமல் இருப்பாய்.

ப்ராண வாயு எல்லா இந்த்ரியங்களிலும் வ்யாபித்து இந்த்ரியங்களை வேலை செய்யச் செய்கிறது. ப்ராணனே
ப்ரஜ்ஞை. ப்ரஜ்ஞையே ப்ராணன். இரண்டும் சேர்ந்தே இருக்கும். சேர்ந்தே உடலிலிருந்து புறப்பட்டு விடும்.
ப்ரஜ்ஞை என்பது ஜீவன். இவற்றுக்கு ஆத்மா பகவான். ஆனந்த ஸ்வரூபன்;
பிறப்பு இறப்பு அற்றவன்; நல்வினை, தீவினைகளுக்கு அப்பாற்பட்டவன் ; உலகங்களைக் காப்பவன் ; நியமிக்கிறவன் ;
இப்படிப்பட்டவனை எனக்கும் ஆத்மாவாக உபாஸனை செய். இதுவே ”ப்ரதர்தன வித்யை” ஆகும்.

————

24. சாண்டில்ய வித்யை
(அக்னி ரஹஸ்யத்தில் இருக்கிறது)

ஸத்யத்தை ப்ரம்மமாக உபாஸிப்பாயாக. ஸத்யம் என்கிற
ப்ரம்மம் எல்லாவற்றுக்கும் ஆத்மா. எங்கும் பரந்தவன்.
அணுவுக்கும் அணுவானவன். எல்லாவற்றிலும் பெரியவன்.
எனக்கும் ஆத்மா என்று உபாஸனை செய்ய வேண்டும் என்று
ச்வேதகேதுவுக்கு சாண்டில்யர் கூறினார்.

———

25. புருஷ வித்யை மற்றும்
26. ந்யாஸ வித்யை
ப்ரஹ்மணேத்வா மஹஸ ஓம் இதி ஆத்மாநம் யுஜ்ஜீத…..என்று ஆரம்பிப்பது
”ந்யாஸ வித்யை”. தஸ்யை – வம் விதுஷ ———என்று ஆரம்பித்துச் சொல்லப்படுவது
”புருஷ வித்யை” (புருஷ வித்யை—தைத்திரீய நாராயண உபநிஷத் )
ஆத்மாவாகிற ஹவிஸ்ஸை பரமாத்மாவிடம் சேர்ப்பித்தலாகிற யாகம் என்று சொல்லலாம் (யஜ்ஞரூபமாகச் செய்யப்படுகிற ந்யாஸ வித்யை)
இதற்கு ஆத்மா – யஜமானன்.
ஸ்ரத்தா – ஆஸ்திக புத்தி.
பத்னீ – தர்மபத்னீ.
ஸரீரம் – ஸமித்து.
மார்பானது, யாகம் பண்ணுமிடம், அதாவது அக்னி குண்டம்.
உடம்பில் உள்ள ரோமங்கள் – பரிஸ்தரணம்.
தலைமயிர் -தர்ப்பக்கட்டு.
ஹ்ருதயம் – யூபஸ்தம்பம்.
ஆசையானது நெய் .
கோபமானது – வெள்ளாடு.
ஆலோசிக்கிற அறிவு – நெருப்பு.
எல்லா வஸ்துக்களுக்கும் அநுகூலமாக இருக்கிற அறிவு –தக்ஷிணை.
வாக்கு – ஹோதா.
ப்ராணன் – ஸாமகானம் பண்ணுகிற ருத்விக்.
கண் – அத்வர்யு என்கிற ருத்விக்.
மனம் – ப்ரஹ்ம என்கிற ருத்விக்.
காது -அக்நீத்ரன் என்கிற ருத்விக்.
எவ்வளவு காலம் உயிருடன் இருக்கிறோமா அது யாக தீக்ஷை .
எதைச் சாப்பிடுகிறானோ, குடிக்கிறானோ – அது ஸோம பானம்.
விளையாடுகிறான் என்று சொல்லப்படுவது ”உபஸத்” என்கிற யாகம்.
நடப்பது, எழுந்திருப்பது, உட்காருவது – அது”ப்ரவர்க்யம்” என்கிற யாகம்.
முகம் – ஆஹவநீயம் என்கிற அக்னி.
இவரது அறிவு – ஹோமப் பொருள். காலையிலும், மாலையிலும் சாப்பிடுவது – அது ஸமித்.
மாலை, காலை, மதியம் என்பவை மூன்று ஸவனங்கள் (தாநி, ஸவநாநி போன்றவை)
பகல் இரவுகள் -தர்ச பூர்ணமாஸ இஷ்டிகள்.
பக்ஷங்கள், மாதங்கள் – சாதுர்மாஸ்ய யாகம்.
ருதுக்கள் -பசு பந்தம்.
வருஷங்கள், அவற்றின்உட்பிரிவுகள் – அஹர்கணம்.
இந்த யாகமானது எல்லாச் சொத்தையும் தக்ஷிணையாகக் கொண்டது.
மரணம் – அவப்ருத ஸ்நானம் (சாந்தோக்யத்தில் 3 -16-1 -சொல்லப்பட்ட புருஷ வித்யை வேறு)
சாந்தோக்யத்தில் சொல்லப்பட்டது, ஆயு ப்ராப்தியை பலமாக உடைய
ஸ்வதந்த்ர வித்யை என்று ஸ்வாமி தேசிகன் அதிகரண ஸhராவளியில் அருளியுள்ளார்.
அர்ச்சிராதி மார்க்கம் — இந்த மார்க்கம்,
உபகோசல வித்யை, பஞ்சாக்னி வித்யை, பர்யங்க வித்யைகளில் விவரமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
ப்ரஹ்ம உபாஸகர்கள் எல்லோரும் அர்ச்சிராதி கதியைச் சிந்தனை செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

உபநிஷத்தில் விவரிக்கப்பட்டுள்ள (பக்தி யோகத்தில் சொல்லப்படும்) மிகக் கடினமான ப்ரஹ்ம வித்யைகள் – 32. இவை
உபாஸனா மார்க்கங்கள். அவையாவன :———–
1. அக்னிவித்யை
2. அக்ஷர வித்யை
3. ஆனந்த வித்யை
4. அதிம்ருத்யுபாஸன வித்யை
5. பாலாகி வித்யை
6. பூம வித்யை
7. ப்ரஹ்ம வித்யை
8. சாண்டில்ய வித்யை
9. தஹர வித்யை
10. ஜ்யோதிர் வித்யை
11. கோச விஜ்ஞான வித்யை
12. மது வித்யை
13. மைத்ரேயி வித்யை
14. கௌரக்ஷ ஜ்யோதிர் வித்யை
15. ந்யாஸ வித்யை
16. பஞ்சாக்னி வித்யை
17. பர வித்யை
18. பர்யங்க வித்யை
19. ப்ரஜாபதி வித்யை
20. ப்ராண வித்யை
21. ப்ரதர்ன வித்யை
22. புருஷ வித்யை
23. புருஷாத்ம வித்யை
24. ரைக்வ வித்யை
25. புருஷோத்தம வித்யை
26. ஸத் வித்யை
27. ஸர்வ பர வித்யை
28. ஷோடஸ கல ப்ரஹ்ம வித்யை
29. உத்கீத வித்யை
30. உபகோஸல வித்யை
31. வைஷ்ணவ வித்யை
32. வைச்வாநர வித்யை

மோக்ஷம் அடைய இரண்டு வழிகள்:
முதல் வழி :
1) பக்தி யோகம் மூலமாக
(2) ப்ரபத்தி மூலமாக-பரமபதத்தை அடையலாம் என்று சொல்லப்படுகிறது.
முதல் வழியில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் , ஸ்ரீமத் பகவத்கீதையில் அருளிய ”கர்ம யோகம்” , ”ஞான யோகம்” இரண்டையும் நன்கு புரிந்து
கொண்டு (கசடறக் கற்று) பிறகு ”பக்தி யோகத்தில்” இழிந்து 32 உபாஸனா மார்க்கங்களில் ஏதாவது ஒன்றில் “தைலதாரை”
போன்று புத்தியைச் செலுத்தி பகவானை அடைதல்.
இப்படிச் செய்து கொண்டே வந்தால், பலப்பல ஜன்மங்கள் எடுத்து, அந்தந்த ஜன்ம வாசனையாலே இந்த புத்தி தொடர்ந்து இருந்து,
ஏதாவது ஒரு ஜன்மத்தில் பகவானின் திருவடியை அடையலாம்.
பெரிய ஞானிகளுக்கும், மஹான்களுக்கும், மஹரிஷிகளுக்கும் இது முடியுமோ, என்னவோ ?

நம்மைப்போன்ற பரம லௌகீகத்தில் உழலும் சம்சாரிகளுக்கு ஏற்றது இரண்டாவது வழியான ப்ரபத்தி தான்.
இராமாயணம் முழுவதும் ப்ரபத்தி தர்மத்தைச் சொல்கிறது.
ப்ரஹ்ம வித்யைகள் எல்லாம் பகவானை அடைவதற்கான சாதன வித்யைகள்.
சத் வித்யா, பூம வித்யா, தஹர வித்யா, உபகோசல வித்யா, சாண்டில்ய வித்யா, வைச்வா நர வித்யா, ஆனந்த மய
வித்யா, அக்ஷர வித்யா முதலிய வித்யைகள் ஒரே சாகையில் இருப்பவைகள் மற்றும் அனேக சாகைகளில் இருப்பவைகளுக்கான உதாரணங்கள்.
இப்படிப்பட்ட ப்ரஹ்ம வித்யையானது மரண கால பர்யந்தம் இடைவிடாமல் தினந்தோறும் அநுஷ்டிக்கப்பட வேண்டி இருக்கிறது.

இந்த 32 வித்யைகளுக்கும் ஆதாரம் ஸ்ரீ ஹயக்ரீவன்.
எல்லா வித்யைகளுக்குமே ஆதாரம் ஸ்ரீ ஹயக்ரீவன்.
பகவான், ஸ்ரீ ஹயக்ரீவ அவதாரம் எடுத்து வேதங்களை, மது, கைடபர்களிடமிருந்து மீட்டுத் திரும்பவும்
ப்ருஹ்மாவுக்கு உபதேசித்ததால் தான், வேதம் எல்லா உலகங்களிலும் பரவி இருக்கிறது.

ஸ்ரீ ந்ருஸிம்ஹ தாபநீய உபநிஷத்தில் ஸ்ரீ ந்ருஸிம்ஹ அநுஷ்டுப் மந்த்ரம் 32 அக்ஷரங்களாக உள்ளது.
ஸ்ரீ ஹயக்ரீவனைப் பற்றிய முக்ய மந்த்ரம் 32அக்ஷரங்களிலுள்ள அநுஷ்டுப் ச்லோகம்.
இவை, 32 ப்ரஹ்ம வித்யைகளைக் குறிப்பதாகப் பெரியோர் சொல்வர்.
ஆக 32 ப்ரஹ்ம வித்யைகளின் பெருமையையும், அருமையையும் சொல்லில் விவரிக்க இயலாது.

————-————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேத வியாஸர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ நியாய மீமாம்ச வேதாந்த பாடங்கள்–ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்–பகுதி -2 –மீமாம்ச சாஸ்த்ரம்– பாடங்கள் -22-30—

March 24, 2021

பாடம் -22
அத்யாயம் -9-ஊகம்
•ஏழாவது அத்யாயத்தில் அதிதேசம் பொதுவாக சொல்லப்பட்டு, எட்டாவது அத்யாயத்தில்
அதி தேசத்தைப் பற்றின சில சிறப்பு விசாரங்கள் செய்யப் பட்டன.
•அதற்கு அடுத்ததாக, ஒன்பதாவது அத்யாயத்தில், ஊஹம் என்பது ஆராயப் படுகிறது.
• ப்ரக்ருதி யாகத்தில் ஒன்றைக் குறித்து செய்யப் பட்ட ஒரு செயல் விக்ருதி யாகத்தில் வேறு ஒன்றைக் குறித்து
செய்யப் படுதலுக்கு ஊஹம் என்று பெயர்.
• ப்ரக்ருதி யாகத்திலிருந்து ஒரு அங்கத்தை விக்ருதி யாகத்துக்கு அதிதேசம் செய்யும் பொழுது, அந்த அங்கம்
விக்ருதியில் வேறே ஒரு பொருளைக் குறித்தும் செய்யப் படலாம். இதற்கு ஊஹம் என்று பெயர்.
•இதுமூன்று சைகைப்படும்
•(1) ஸம்ஸ் காரத்தின் ஊஹம்
•(2) மந்த்ரத்தின் ஊஹம்
•(3) ஸாமத்தின் ஊஹம்

ஸம்ஸ்கார ஊகம்
தர்சபூர்ணமாஸம் என்ற கர்மத்தில் ஒரு யாகமான ஆக்நேய யாகத்தின் விக்ருதி தான்
ஸௌர்ய யாகம் என்று எட்டாவது அத்யாயத்தில் பார்த்தோம்.
• தர்சபூர்ணமாஸத்தில் ’ நெல்லை ப்ரோக்ஷிப்பாய் ’ என்று ஒரு கட்டளை உள்ளது. இந்தக்
கட்டளையில் ப்ரோக்ஷணம் என்ற செயல் எதைக் குறித்து விதிக்கப் படுகிறது, அதாவது,
ப்ரோக்ஷணத்தின் குறிக்கோள் என்ன என்று ஆராய வேண்டும்.
• ப்ரோக்ஷணம் என்பது நெல் உண்டாவதற்காக என்று சொல்ல இயலாது, ப்ரோக்ஷணம்
இல்லாமல் நெல் உண்டாகிற படியால். ஆகவே , ப்ரோ க்ஷணம் என்பது நெல்லில் ஒரு
தகுதியை ஏற்படுத்துவதற்காக என்று கொள்ள வேண்டும்.
• தகுதி ஏற்படுவதாவது – “ப்ரோக்ஷிக்கப் பட்ட நெல்லைக் கொண்டு புரோடாசத்தை சமைத்து
யாகம் செய்தால் தான் அந்த யாகத்திலிருந்து பயன் கிடைக்கும்,இல்லை என்றால் வெறும் நெல்லால்
புரோடாசத்தைச் செய்து யாகம் செய்தால் பயன் கிடைக்காது” என்பது தான்.
• அந்தத் தகுதி ஒரு வகையான அபூர்வம் / அத்ருஷ் டம் / புண்ணியம். ப்ரோக்ஷணம்
செய்வதால் நெல்லில் ஒரு அபூர்வம் உண்டாகிறது.
அது இருந்தால் தான் அந்த நெல்லால் செய்யப்பட யாகத்துக்கு பலன் கிடைக்கும்.

• ஆகவே , ப்ரோக்ஷணம் என்பது நெல் நெல்லாக ஆவதற்காக அல்ல. யாகத்தில்
பயன் படக்கூடிய த்ரவ்யமாக நெல்லை ஆக்குவதற்காகத் தான்.
ஆகையால், “நெல்லை ப்ரோக்ஷிப்பாய் ” என்ற கட்டளைக்கு உண்மையான பொருள் “அரிசி
உண்டாக்குவதன் மூலம் எந்த பொருள் யாகத்துக்கு உதவுகிறதோ , அந்த ப்ரோக்ஷணம்
செய்ய வேண்டும்” என்பதுதான். அது நெல்லா மற்ற ஓன்றா என்பது முக்கியம் அல்ல.
• இப்படி இருக்கிற படியால், இந்த ப்ரோக்ஷணம் என்கிற ஸம்ஸ்காரத்தை ஒரு விக்ருதி
யாகத்துக்கு அதிதேசம் செய்யும் பொழுது, அங்கு நெல் இல்லாமல் வேறே ஓரு
தான்யத்தால் ஹவிஸ் செய்யப்படவிருந்தாலும் அந்த தாந்யத்துக்கு ப்ரோக்ஷணம் செய்ய வேண்டும்.
•ப்ரக்ருதியில் நெல்லுக்கு செய்யப்பட்ட ஸம்ஸ்காரம் விக்ருதியில் ச்யாமாகம் முதலான
த்ரவ்யங்களுக்குச் செய்யப்படுகிறடியால் இது ஊஹம் ஆகும்

மந்த்ர ஊகம்
யாகங்களில் ஒவ்வொரு செயலைச் செய்யும் பொழுதும் மந்த்ரத்தை உச்சரிக்கிறோம்.
அந்த மந்த்ரங்கள் அடுத்தடுத்து செய்ய வேண்டிய செயலை நமக்கு நினைவூட்டுகின்றன.
• ப்ரக்ருதியான ஆக்நேய யாகத்தில் நாலு கைப்பிடி அளவு நெல்லை யாகத்துக்காக எடுக்கும் பொழுது,
’இந்த நெல் அக்நிக்கு பிரியமானதாக ஆகும் படி இதத நிர்வாபம் செய்கிறேன்” என்ற
மந்த்ரம் சொல்ல ப்படுகிறது
• இந்த மந்த்ரத்தை ஸௌர்ய யாகத்துக்கு அதிதேசம் செய்யும் பொழுது, ஸூர்யனுக்காக செய்யப்படும் யாகத்தில் இந்த
மந்த்ரத்தை அப்படியே உச்சரித்தால் அது தவறாகும்,
ஏன் என்றால் இந்த யாகத்தில் ஸூர்யனுக்காக தான் நெல், அக்நிக்காக அல்ல.
• பிரக்ருதியில் அக்நியைப் பற்றி பேசிய மந்த்ரம் விக்ருதியில் ஸூர்யனைப் பற்றப் பேசுகிற டியால் இது மந்த்ரத்தின் ஊஹம் ஆகும்.
•ஆனால், அக்நிக்கு பதிலாக ஸூர்யன் இந்த யாகத்தில் தேவதையாக இருக்கிற படியால், மந்த்ரத்தில் அக்நி என்ற சொல்லை எடுத்துவிட்டு
அவ்விடத்தில் ’ஸூர்யன்’ என்ற சொல்லைச் சேர்த்துக் கொண்டு,
“இந்த நெல் ஸூர்யனுக்கு பிரியமானதாக ஆகும் படி இதை நிர்வாபம் செய்கிறேன் ” என்று தான் சொல்ல வேண்டும்.
• இது தான் மந்த்ரத்தின் ஊஹம்

சாம ஊகம்
•ஸாமம் என்பது இசை . ருக் என்பது ஸாஹித்யம் / பாடல் வரிகள் போல். ஒரு ஸாமத்தோடு சேர்த்து ஒரு ருக் மந்த்ரத்தைப் பாடி,
அதன் மூலம் ஒரு பொருளின் குணங்களைப் புகழ்ந்ததால் அதற்கு ஸ்தோத்ரம் என்று பெயர்.
•ஸாமம் என்ன செய்கிறது என்றால் – ருக்கில் இருக்கும் எழுத்துகளை விஸ்லேஷம் அதாவது விரித்தல் / நீட்டிப்பு செய்கிறது. எடுத்துக்காட்டு
– ருக் மந்த்ரத்தில் ’எ’ என் ற எழுத்து இருந்தால், அதை இசையாகப் பாடும் பொழுது ’ஆஇ’ என்று பிரித்துப் பாட வேண்டும்
• பிரக்ருதியில் ஒரு ருக் மந்த்ரத்தில் மூன்றாவது இடத்தில் ’எ’ என்ற எழுத்து இருந்திருந்தால், அவ்விடத்தில் ’ஆஇ’ என்று பாடி யிருப்போம்.
• அதத ஸாமத்தை வேறே ருக்கில் அதிதேசம் செய்து, அந்த ருக்கோடு சேர்த்து பாடும் பொழுது, அதிலும் மூன்றாவது இடத்தில்
’எ’ என்ற எழுத்து இருக்கும் என்று சொல்ல இயலாது. ஏழாவது இடத்தில் இருக்கலாம்.
• அப்பொழுது, ’ஆஇ’ என்ற இதை ஏழாவது இடத்திலிருக்கும் ’எ’ என்ற எழுத்தை விஸ்லேஷம் செய்யப் பயன் படுகிறது.
•ஆக, பிரக்ருதியில் மூன் றாவது ஸ்தாநத்திலிருந்த எழுத்தை விஸ்லேஷம் செய்யப் பயன் பட்ட ஸாமம் விக்ருதியில் ஏழாவது
இடத்திலிருக்கும் எழுத்தை விஸ்லேஷம் செய்யப் பயன் படுகிற டியால் இது ஸாமத்தின் ஊஹம் ஆகும்.

—————-

பாடம் -23-அத்யாயம் -10-பாதம்
மீமாம்ஸா சாஸ்த்ரத்தில், எட்டாவது அத்யாயத்தில் அதிதேசத்தைப் பற்றிச் சொன்ன பிறகு, ஒன்பதாவது
அத்யாயத்தில் ஊஹமும் பத்தாவது அத்யாயத்தில் பாதமும் சொல்லப்பட்டுள்ளன.
•ப்ரக்ருதி யாகத்தில் ஒன்றைக் குறித்து செய்யப்பட்ட ஒரு செயல் விக்ருதி யாகத்தில் வேறே ஒன்றைக் குறித்து
செய்யப்படுதலுக்கு ஊஹம் என்று பெயர் என்று சென்ற பாடத்தில் பார்த்தோம்.
•ப்ரக்ருதி யாகத்துக்கு அங்கமான ஒரு செயல் விக்ருதி யாகத்துக்கு அங்கமாக இல்லாமல் போவதற்கு பாதம் என்று பெயர்.
•அதிதேசம் செய்யப்படும் செயலை சிறு மாற்றத்தோடு செய்வது ஊஹம். அந்தச் செயலை முழுவதுமாகக்
கை விடுவது பாதம். ஆகையால், அதிதேசத்தைச் சொன்னவுடன், அதில் சிறு மாற்றத்தை மட்டும் சொல்லும்
ஊஹத்தை முதலில் சொல்லிவிட்டு, கை விடுதல் என்ற பெரிய மாற்றத்தைச் சொல்லும் பாதம் பின்னால் சொல்லப்பட்டுள்ளது.

பாதம் ஏன் ஏற்படுகிறது
•விக்ருதி யாகம் நேரடியாக ப்ரக்ருதி யாகத்தின் அங்கங்களை எதிர்ப்பார்க்கவில்லை . ’எனக்கு உதவி வேண்டும்’ என்ற தேவை
முதலில் ஏற்பட்டு, அதன் பின் தான் ’அந்த உதவியைச் செய்யக் கூடிய செயல்கள் / பொருள்கள் எவை ’ என்ற எதிர்பார்ப்பு ஏற்படுகிறது.
•ஆகையால், ப்ரயாஜம் அநுயாஜம் ஆஜ்யபாகம் முதலான அங்கங்களை ஆக்நேய யாகத்திலிருந்து ஸௌர்ய யாகத்துக்கு
அதிதேசம் செய்யும் பொழுதும், அவற்றை மற்றும் அதிதேசம் செய்யக் கூடாது. எனவே , ’ப்ரயாஜம் செய்து, அநுயாஜம் செய்து,
ஆஜ்யபாகம் செய்து ஸௌர்ய யாகம் செய்ய வேண்டும்’ என்று அதிதேசத்தை ஏற்க முடியாது.
• ’ப்ரயாஜத்தால் இந்த உதவியைச் செய்து, அநுயாஜத்தால் இந்த உதவியைச் செய்து, ஆஜ்யபாகத்தால் இந்த உதவியைச் செய்து,
ஸௌர்ய யாகத்தைச் செய்ய வேண்டும்’ என்று உதவிகளின் பின்னால் தான் செயல்கள் வர வேண்டும்.
•ஆகவே , ப்ரக்ருதி யாகமான ஆக்நேய யாகத்தில் தேவைப்பட்ட ஓர் உதவி விக்ருதியான ஸௌர்ய யாகத்தில் தேவைப்படாவிட்டால்,
அந்த உதவியையோ அதைச் செய்யும் செயலையோ அதிதேசம் செய்யத் தேவை இல்லை –
•ஆகவே , ப்ரக்ருதிக்கு அங்கமான ஒன்று விக்ருதிக்கு அங்கமாக இல்லாமல் போனபடியால் அந்தச் செயலுக்கு / பொருளுக்கு பாதம்
ஏற்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது –

அர்த்த லோபத்தால் பாதம் –
• அர்த்தம் என்றால் ப்ரயோஜனம்/ பயன். லோபம் என்றால் மறைதல் .
• தர்சபூர்ணமாஸம் என்ற கர்மத்தில் ஆக்நேய யாகம் உள்ளது. அந்த யாகத்தைச் செய்ய நெல்லை உலக்கையால்
குத்தி, உமியை நீக்கி,அரிசியை எடுக்க வேண்டும்.
• மற்ற ஓரு யாகம் – “நீண் ட ஆயுஸ் வேண்டும் என்று ஆசைப்படுபவன்,ப்ரஜாபதி என்ற தேவதைக்காக நூறு தங்கத்தகடுகளை நெய்யில்
சேர்த்து சரு செய்து யாகம் செய்ய வேண்டும்” என்று விதிக்கப்பட்டுள்ளது. இது ஆக்நேய யாகத்தின் விக்ருதி ஆகும்.
•ஆக்நேய யாகத்திலிருந்து இந்த யாகத்துக்கு அங்கங்களை அதிதேசம் செய்யும் பொழுது, உலக்கையால் குத்துதல் என்ற செயலை
அதிதேசம் செய்வதில் எந்த ப்ரயோஜனமும் இல்லை , ஏன் என்றால் தங்கத் தகடுகளை உலக்கையால் குத்தி உமியை நீக்க முடியாது.
•ஆக, இவ்விடத்தில், ப்ரக்ருதியில் ஒரு செயலால் ஏற்படும் பயன் விக்ருதியில் தேவைப்படாமல் போகிறபடியால்,
ப்ரயோஜனமில்லாதமயால் ’உலக்கையால் குத்துதல்’ என்ற செயலுக்கு அதிதேசம் கிடையாது, அதாவதி, அதற்கு பாதம் ஏற்படுகிறது.
• அதே போல் ஒரு யாகத்தில் ’தானாக வெட்டப்பட்ட தர்பத்தைக் கொண்டு யாகம் செய்ய வேண்டும்’ என்று வேதம் சொல்கிறது.
ஆகையால், தர்மத்தை வெட்டுதல் என்ற செயலை ப்ரக்ருதியிலிருந்து இந்த யாகத்துக்கு அதிதேசம் செய்யத் தேவையில்லை –

பிரதி ஆம்நாநத்தால் பாதம் –
ப்ரதி என்றால் எதிர்மறை என்று பொருள். ஆம்நாநம் என்றால் உபதேசம்.
• ப்ரக்ருதியில் ஒரு அங்கத்தை உபதேசித்துவிட்டு, விக்ருதியில் அதற்கு முறண் பட்ட வேறே ஒரு அங்கத்தை
வேதமே உபதேசித்தால், ப்ரக்ருதியில் சொல்லப்பட்ட அங்கத்தை விக்ருதிக்கு அதிதேசம் செய்யத் தேவையில்லை .
ஆகையால், அந்த அங்கத்துக்கு விக்ருதியில் பாதம் ஏற்படுகிறது.
• எடுத்துக்காட்டு – ப்ரக்ருதி யாகத்தில் ’குசம்’ என்ற புல்லை தர்பமாகப் பயன் படுத்த வேண்டும் என்று வேதம் சொல்கிறது.
ஆனால், ஒரு விக்ருதியில், ’சரம்’ என்ற மற்ற ஓரு புல் வகையை தர்பமாகப் பயன் படுத்தச் சொல்கிறது.
ஆகையால், ப்ரக்ருதியில் சொல்லப்பட்ட குசம் விக்ருதிக்கு அங்கமாக அழைத்து வரப் படக் கூடாது. ஆகையால்,
அந்த ’குசம்’ என்ற புல்லுக்கு விக்ருதி யாகத்தில் பாதம் ஏற்படுகிறது.
• ப்ரக்ருதியில் சொல்லப்பட்ட அங்கத்துக்கும் விக்ருதியில் சொல்லப்பட்ட அங்கத்துக்கும் ஒரே ப்ரயோஜனம் இருந்தால் தான் இப்படி பாதம்
ஏற்படும். நக்ஷத்ர இஷ்டி என்று ஒரு யாகம் உள்ளது. அதற்கு நாரிஷ்ட ஹோமம் என்ற ஒரு ஹோமம் அதிதேசத்தால் வந்து அடைகிறது.
புதிதாக இந்த யாகத்தில் உபஹோமம் என்ற ஒரு ஹோமமும் விதிக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில், நாரிஷ் டஹோமம்
உண்டாக்கும் அதே அபூர்வத்தைத் தான் உபஹோமம் உண்டாக்கும் என்பதற்கு எந்த ப்ரமாணமும் இல்லாததால், இரண்டையுமே
செய்ய வேண்டும். ஒன்று மற்ற ஒன்றைப் பாதிக்காது.

பிரதி ஷேதத்தால் பாதம்
ப்ரதிஷேதம் என்றால் ஒன்றைச் செய்யாதே என்ற உபதேசம்.
ஒன்றைத் தவிற மற்றவற்றைச் செய் என்ற கட்டளைக்கு பர்யுதாஸம் என்று பெயர்.
• பொதுவாக யாகங்களின் யஜமாநன் சில ரித்விக்குளை அவனுக்குத் துணையாக அழைத்து, அவர்களை வரிக்க வேண்டும்.
ஆனால், மஹாபித்ரு யஜ்ஞம் என்று அழைக்கப்படும் விக்ருதியில் ’ஹோதா என் ற ரித்விக்கை வரிக்காதே ’ என்று கட்டளை உள்ளது.
• பூர்வபக்ஷம் – ப்ரக்ருதியில் ஹோதாவை வரிக்க வேண்டும் என்ற கட்டளை உள்ளது. எனவே அதிதேசத்தால் ஹோதாவை வரித்தல்
என்ற செயல் இந்த விக்ருதியை வந்து அடையும். ஆனால் விக்ருதியில் ’ஹோதாவை வரிக்காதே ’ என்று ப்ரதிஷேதம் / நிஷேதம் உள்ளது.
ஆகையால், சாஸ் த்ரமே ஹோதாவை வரிக்க வேண்டும் என்றும் வரிக்க வேண்டாம் என்றும் சொல்கிறபடியால் இரண்டுக்கும்
விகல்பம் தான், நம் ஆசைப்படி ஏதோ ஒன்றைச் செய்யலாம்.
• ஸித்தாந்தம் – விகல்பம் ஒப்புக் கொண்டால் பல தோஷங்கள் ஏற்படுகின்றன. ஆகையால், பர்யுதாஸம் சொல்வது தான் சிறந்தது.
பர்யுதாஸம்-இதைத்தவிர வேறே ஒன்றைச் செய்யாதே -சொல்வது தான் சிறந்தது.-
எனவே , இந்த கட்டளைக்கும் நாம் கல்பித்த கட்டளைக்கும் தொடர்பைக் கல்பித்து, ’மஹாபித்ரு யஜ்ஞத்தில் ஹோதாவை
வரித்தலைத் தவிற மற்ற அங்கங்கள் அனைத்தையும் செய்ய வேண்டும்’ என்று பொருள் கொள்ள வேண்டும். ஆகையால்,
இங்கு ஹோதாவை வரித்தல் என்ற செயல் பாதிக்கப்படுகிறது, ஆனால் பர்யுதாஸத்தின் மூலம், ப்ரதிஷேதத்தால் அல்ல.

தர்ச பூர்ண மாஸங்களில் ஆறு ப்ரதான யாகங்கள் சொல்லப் பட்டுள்லன. அவற்றின் அங்கங்களில்
ஆஜ்யபாகங்கள் என்று இரு யாகங்கள் உள்ளன. அவற்றை உபதேசித்துவிட்டு, ’இவற்றை ஒரு விக்ருதி யாகத்தில்
செய்யக்கூடாது’ என்று ஒரு கட்டளை உள்ளது.
• இங்கும் முன் சொன்னது போல் ப்ரதிஷேதம் ஒப்புக் கொண்டால் விகல்பம் ஏற்படும் என்ற காரணத்தால் பர்யுதாஸம் தானா?
’அந்த விக்ருதியில் ஆஜ்யபாகங்கள் தவிற மற்ற அங்கங்களைத்தான் அதிதேசம் செய்ய வேண்டும்’ என்று பொருளா?
என்று பார்த்தால், அல்ல. ஏன் என்றால்,
எங்கோ இருக்கும் விக்ருதியின் அதிதேச வாக்யத்துக்கும் இங்கிருக்கும் வாக்யத்துக்கும் தொடர்வை கல்பிக்க இயலாது.
• ஆகையால், தவறு வழி இல்லாமல் இது ப்ரதிஷேதம் தான். ஆகையால், அந்த விக்ருதி யாகத்தில் ஆஜ்யபாகங்களுக்கு பாதம் ஏற்படுகிறது

————

பாடம் -24- அத்யாயம் -11-
• மீமாம்ஸா சாஸ்த்ரத்தின் பத்தாவது அத்யாயத்தில் பாதம் என்பது விசாரிக்கப்பட்டது.
ஆக பத்து அத்யாயங்களால் ப்ரக்ருதி கர்மங்களிலும் விக்ருதி கர்மங்களிலும் எவை எல்லாம் அங்கங்கள் ஆகின்றன என்பது
முடிவாகியுள்ளது. இப்படி அந்தந்த யாகத்தில் ப்ரயோஜ்யமான அங்கங்கள் முடிவான பிறகு, அவற்றின் ப்ரயோகத்தைப் பற்றின விசாரம்
செய்யப் படுகிறது, தந்த்ரம் என்பதை விசாரிப்பதன் மூலம்.
• தந்த்ரம் என்றால் பலவற்றைக் குறித்து ஒரே முறை அநுஷ்டித்தல்.
• ப்ரயோக விதியானது அங்கங்களையும் ப்ரதாநங்களையும் சேர்த்து விதிக்கிறபடியால் அதிலிருந்து ஒரு சேர்க்கை நமக்குத் தோற்றுகிறது.
அச் சேர்க்கை , ஒரே க்ஷணத்தில் அவை அனைத்தையும் செய்தால் தான் ஏற்படும். ஆனால், எங்கு அது இயலாதோ அங்கு இடை விடாமல்
அடுத்தடுத்து அநுஷ்டானம் செய்ய வேண்டும் என்று வேதமே கூறுகிறது .
• ஆனால், எங்கு எங்கு முடியுமோ அங்கு சேர்த்தே அநுஷ் டிக்க வேண்டும், அதற்கு தான் தந்த்ரம் என்று பெயர்.
• (1) ப்ரதாந யாகங் களில் தந்த்ரம் –
வெவ்வேறு தேவதைகளைக் குறித்து செய்யும் யாகங்களை ஒரே நொடியில் சேர்த்துச் செய்ய முடியாவிட்டாலும்,
ஒரே தேவதைக்காகச் செய்யப் படும் பல யாகங்களை ஒரே க்ஷணத்தில் சேர்த்துச் செய்யலாம்.ஆகையால், இது தந்த்ரம் ஆகும்.
• (2) அங்கங்களுக்குள் தந்த்ரம் –
பல யாகங்களுக்கு அங்கமாக ஒரே செயல் இருக்கும் பொழுது, அவற்றுக்குள் காலத்தாலோ தேசத்தாலோ
எந்த வேறுபாட்டையும் வேதம் காட்டா விட்டால், வேறுபாடு அறியாதபடியாலேயே அந்தச் செயலை ஒரே முறை செய்வதன் மூலம்
அனைத்து யாகங்களுக்கும் உதவலாம். இது அங்கங்களில் தந்த்ரம் ஆகும்

தந்திரம் ஏற்படுமா
• பூர்வபக்ஷம்
• தர்சபூர்ணமாஸம் என்ற கர்மத்தில் உள்ள ஆறு ப்ரதாந யாகங்கள் தனித் தனி விதி வாக்கியங்களால் விதிக்கப்படுகின்றன.
ஆகையால், அவை ஒவ் ஓன்றும் தங்கள் தங்கள் பலனை உண்டாக்க தனித் தனியே ஸாமர்த்யம் படைத்தவை என்று அறிகிறோம்.
• அடுத்து, ஒரு வேத வாக்கியம், இந்த யாகங்களுக்கு எல்லாம் ஸ்வர்கம் தான் பயன் என்று சொல்கிறது.
ஆகையால், தனித்தனியே ஒவ் ஓரு யாகத்தைச் செய்வதாலும் ஸ்வர்கம் பெறலாம்.
• ஆகையால், ஒன்றைச் செய்யும் பொழுது மற்ற ஓரு யாகத்தைச் செய்யும் ஆசை இருக்கத் தேவையில்லை .
எனவே அவற்றினிடையே ஒரு எத்ர்பார்ப்பு இல்லாத படியால் ஒரே ப்ரயோக விதிக்கு அவை இலக்கு ஆக மாட்டா.
• ஆகையால், அவற்றைச் சேர்த்து அநுஷ்டிக்க வேண்டும் என்று வேதம் சொல்லாத படியால், தந்த்ரம் என்பதே கிடையாது.
•ஸித்தாந்தம்
• முதலில் தனித்தனியே யாகங்கள் போதிக்கப் பட்டிருந்தாலும் அவை அனைத்துக்கும் சேர்த்து ஸ்வர்கம் என்ற ஒரே பயன் வேதத்தால்
சொல்லப் பட்டுள்ளது. ஆகையால், அவை ஒவ் ஓன்றும் மற்ற 5 யாகங்களை எதிர்பார்த்து தான் பலத்தைக் கொடுக்கின்றன.
• ஆகையால், பரஸ்பரம் எதிர்பார்ப்பு உள்ளபடியால் அனைத்துக்கும் சேர்த்து ஒரே ப்ரயோக விதி தான் உள்ளது.
ஆகையால், ஆறு ப்ரதாந யாகங்களையும் அவற்றின் அங்கங்கள் அனைத்தையும் சேர்த்தே செய்ய வேண்டும் என்பது வேதத்தின் எண்ணம்.
• ஆகையால், பல ப்ரதாநங்களைக் குறித்து ஒரு செயலை ஒரே முறை செய்யும் தந்த்ரம் என்பது ஏற்படலாம்.

கபிஞ்ஜல அதிகரணம் -உத்தர அதிகரணம்
• கபிஞ்ஜலாதிகரணம்
• வேதத்தில் ’வஸந்தம் என்ற தேவதைக்காக கபிஞ்ஜலங்களைக் கொண்டு யாகம் செய்ய வேண்டும்’
என்று ஒரு வாக்கியம் விதிக்கிறது.
• பூர்வபக்ஷம் –
இங்கு ’கபிஞ்ஜலங்கள்’ என்று பன்மை இருக்கிற படியால், பன்மை யானது மூன்று தொடங்கி இருக்கும் அனைத்து
எண்ணிக்கைகளையும் குறிக்கும் என்பதனால் யஜமாநனின் இஷ்டப்படி இரண்டுக்கு மேற்பட்ட எத்தனை
கபிஞ்ஜலங்களை வேண் டுமானாலும் பயன் படுத்தலாம்
•ஸித்தாந்தம் –
பன்மையைப் பார்த்தவுடன் முதலில் நினைவுக்கு வருவது மும்மை தான். மேலும், நான்கு ஐந்து என்ற
எதை எடுத்தாலும் அதில் மூன்றும் அடங்கும் என்பதனால் மும்மை என்பது தவிர்க்கமுடியாதது.
ஆகையால், மூன்று கபிஞ்ஜலங்களைப் பயன் படுத்தினாலே சாஸ்த்ரம் சொன்னது நிறைவேறி விடும்
என்பதால் பன்மைக்கு மும்மை தான் பொருள்
• உத்தராதிகரணம்
• தர்சபூர்ணமாஸத்திலுள்ள பால் யாகத்துக்காக மாடுகளைக் கறக்கும் போது
’மூன்று மாடுகளைக் கறந்து விட்டு மேலுள்ள மாடுகளைக் கறக்க வேண்டும்’ என்று வேதம் சொல்கிறது.
• பூர்வபக்ஷம் –
இங்கும் பன்மைக்கு மும்மை தான் பொருள். ஆகையால், மேலுள்ள மாடுகளில் மூன்றை மட்டும் கறக்க வேண்டும்.
•ஸித்தாந்தம் –
இங்கு ’அன்று இரவு குழந்தைகளுக்கும் பால் கிடைப்பதில்லை , பாலால் இவன் அக்நி ஹோத்ரமும் செய்ய முடியாது’ என்று
வேதம் சொல்கிற படியால், அந்த யஜமானனிடம் எத்தனை மாடுகள் உள்ளனவோ அவை அனைத்தையும்
கறக்க வேண்டும் என்று தெரிகிறது–மூன்றோடு நிறுத்தக் கூடாது –

ஆதாநம் ஒரு முறை தான்
•ஒரு யாகத்தைச் செய்ய அத்யயநம் செய்து பெற்ற வித்யை ,
ஆதாநம் செய்து பெற்ற அக்நிகள், ஸாமர்த்யம் ஆகியவை தேவை என்று பார்த்தோம்.
•ஒவ்வொரு யாகத்துக்கும் அக்நிகள் தேவைப்படுகிறபடியால், ஒவ்வொரு யாகத்துக்கு
முன்னாலும் ஆதாநம் செய்ய வேண்டுமா என்பது கேள்வி.
•பதில் – ஆதாநத்தால் கிடைக்கும் அக்நிகள் அனைத்து யாகங்களிலும் பயன்பட்டாலும், ஆதாநம் எந்த ஒரு
யாகத்தின் ப்ரகரணத்திலும் சொல்லப் படவில்லை .
அநாரப்யாதீதமாகச் சொல்லப் பட்டபடியால் அனைத்து யாகங்களுக்கும் பொதுவானது. மேலும், ’வஸந்த காலத்தில்
ஆதாநம் செய்ய வேண்டும்’ என்று தனியே ஆதாநத்துக்கு என்று ஒரு காலம் சொல்லப்பட்டபடியால்,
அவனத்து யாகங்களுக்காகவும் சேர்த்து ஒரே முறை ஆதாநம் செய்ய வேண்டும் என்று தெரிகிறது.
•ஆகவே ,ஆதாநம் செய்வதும் தந்த்ரம் தான்

விதிக்கப் பட்டதும் விதிக்கப் படாததும்
• ஸோம யாகத்தில் காலையில் இருந்து தொடங்கி மதியம் ருத்விக்குகளுக்கு தக்ஷிணை கொடுக்கும் வரை
யஜமாநனுக்கு அரிப்பு ஏற்பட்டால், சொரிந்து கொள்வதற்காக ஒரு மான் கொம்பு விதிக்கப்பட்டுள்ளது சாஸ்த்ரத்தால்.
• மதியம் தக்ஷிணை கொடுத்த பிறகு மான் கொம்பை ஒரு குழியில் எறிந்துவிட வேண்டும் என்று வேதம் சொல்கிறது.
ஆகையால், மதியம் யாகத்தைத் தொடரும் போது அரிப்பு ஏற்பட்டால் கையால் தான் சொரிந்து கொள்ள வேண்டும்.
• இந்த யாகத்தின் விக்ருதியாக பல நாட்கள் செய்யும் ஸோம யாகங்கள் உள்ளன.
அவற்றில் ஒவ்வொரு நாளும் மதியும் ருத்விக்குகளுக்கு தக்ஷிணை கொடுக்க வேண்டும்.
• கேள்வி – முதல் நாள் தக்ஷிணை கொடுத்த பின்பு மான் கொம்பை எறிய வேண்டுமா?
கடைசி நாள் தக்ஷிணையைக் கொ டுத்த பின்பு எறிய வேண்டுமா?
• பூர்வபக்ஷம் –
நம் இஷ்டப்படி செய்யலாம். முதல் நாள் மதியம் அதை எறிந்துவிட்டால், இரண்டாம் நாள் தொடங்கி காலையில் யாகம்
செய்யும் பொழுது அரிப்பு ஏற்பட்டால் சொரிந்து கொள்ள மான் கொம்பு இல்லாதபடியால் சாஸ்த்ரத்தை மீறினவராவோம்.
கடைசி நாள் எறிந்தால், முதல் நாள் தொடங்கியே மதியம் கையால் சொரிய வேண்டும் என்று வேதம்
சொன்னதை மீறினராவோம்.ஆகையால், ஒரு வேறுபாடும் இல்லை .
•ஸித்தாந்தம் –
கடைசி நாள் தான் எறிய வேண்டும். தினமும் காலையிலும் மான் கொம்பால் சொரிந்து கொள்ளுதல் என்பது விதிக்கப்பட்டதே
தவிற மதியம் கையால் சொரிந்து கொள்வது வேதத்தில் விதிக்கப்படவில்லை ,
நாமாக அறிந்து கொண்டது தான்.ஆகையால், அதற்கு பாதம் ஏற்பட்டால் தவறில்லை

————

பாடம் -25- அத்யாயம் -12-பிரசங்கம் –
• பதினோராவது அத்யாயத்தில் தந்த்ரம் என்பதை விசாரித்து, கடைசியாக பன்னிரண்டாம்
அத்யாயத்தில் ப்ரஸங்கம் என்பதைப் பற்றி ஆராய்கிறார் மஹர்ஷி ஜைமிநி.
• ப்ரஸங்கம் என்றால் – ஒரு யாகத்துக்குத் தன் அங்கம் ஒன்றிலிருந்து கிடைக்க வேண்டிய உதவியானது
வேறே ஓரு வழியில் கிடைத்து விட்டால் அந்த அங்கத்தைச் செய்யாமல் இருப்பது.
• எடுத்துக்காட்டு –
அக்நீ ஷோமீயம் என்று ஒரு யோகம் உள்ளது. அது தர்ச பூர்ண மாஸத்தில் இந்த்ரனுக்காகச் செய்யப்படும் தயிர் யாகத்தின்
விக்ருதி ஆகும். அந்த அக்நீ ஷோமீய யோகத்துக்கு அங்கமாக புரோடாச யோகம் ஒன்று உள்ளது.
அதுவும் தர்ச பூர்ண மாஸத்தின் விக்ருதிதான் .
தர்ச பூர்ண மாஸங்களுக்கு எல்லாம் ப்ரயாஜங்கள் என்ற அங்கம் இருக்கிற படியால், அதி தேசத்தின் மூலம்,
இந்த அக்நீஷோமீயத்துக்கும் புரோடாச யாகத்துக்கும் கூட ப்ரயாஜங்கள் அங்கம் ஆகின்றன .

பிரசங்கம்
• இந் நிலையில், அக்நீஷோமீயம் என்ற யாகத்தின் பிரயோகம் -அனுஷ்டானம் பெரியது. அதற்கு
அங்கமான புரோடாச யோகத்தின் ப்ரயோகம் (அநுஷ் டானம் ) சிறியது.
ஆகையால், புரோடாச யாகத்தின் அநுஷ்டானம் அக்நீஷோமீய அநுஷ்டானத்துக்குள் அடங்கியது தான் .
• உதாஹரணத்துக்காக,
அக்நீ ஷோமீய யாகத்தின் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செய்கிறேன் என்று வைத்துக் கொள்வோம் .
அதற்கு அங்கமான ப்ரயாஜங்களை காலை 7 மணிக்கு செய்ய வேண்டும். அதே போல், புரோடாச யாகத்தை
மதியம் 12 மணி முதல் 1 மணி வரை செய்கிறேன் -அதற்கு அங்கமான ப்ரயாஜங்களை மதியம் 12:30 மணிக்கு செய்ய வேண்டும்.

• இந் நிலையில் காலை 7 மணிக்கு அக்நீ ஷோமீயத்துக்கு அங்கமாக நான் ப்ரயாகங்களைச் செய்தவுடன்
அதிலிருந்து அபூர்வம்/ அத்ருஷ்டம்/புண்ணியம் உண் டாகிறது. அந்த அபூர்வம் யோகத்தின் ப்ரயோகம் முழுவதும்
முடிந்து பரம அபூர்வம் உண்டாகும் வரை இருக்க வேண்டும் என்ற படியால் மாலை 6 மணி வரை இருக்கப் போகிறது.
• இந் நிலையில், மதியம் நான் புரோடாச யோகத்தைச் செய்யும் பொழுது, அந்த யாகத்துக்கும் ப்ரயாஜங்களால்
உண்டான உதவி (அபூர்வம்) தேவைப்படும் பொழுது, நான் காலை செய்த ப்ரயாஜங்களால் உண்டான
அபூர்வம் ஸித்தமாக (தயாராக) இருக்கிற படியால் அதுவே புரோடாச யாகத்துக்கும் உதவி செய்து விடும். ஆகையால்,
தனியான புரோடாச யாகத்துக்கு அங்கமான ப்ரயோஜங்களை அநுஷ்டிக்கத் தேவை யில்லாமல் போகிறது –
• அக்நீ ஷோமீய யாகத்துக்கு அங்கமான ப்ரயாஜங்களில் இருந்தே புரோடாச யோகத்துக்கு தேவையான உதவியும்
கிடைத்து விட்ட படியால், புரோடாச யாகத்துக்கு எனத் தனியாக ப்ரயோஜங்களைச் செய்யத் தேவையில்லை
இதுவே ப்ரஸங்கம் ஆகும்.

மற்ற அங்கங்கள்
• ப்ரஸங்கம் ஏற்படும் இடத்தில், ஒரு யாகத்துக்குத் தன் அங்கத்திடம் இருந்து வர வேண்டிய உபகாரம் வேறே ஒன்றிலிருந்து
கிடைக்கிற படியால், அதற்கு என எந்த அங்கங்களும் தேவையில்லை -ஆகையால் அதிதேசமே வேண்டாம் என்று சொல்லக் கூடாது
• அதிதேசம் என்பது நாம் வேதத்தைக் கற்று ஆராயும் போது நாம் மனசால் ஏற்படும் ஒன்று.
அதன் மூலம் புரோடாச யாகத்துக்கும் அங்கமாகப் ப்ரயாஜங்கள் கண்டிப்பாக வந்து சேர்கின்றன
• அதற்குப் பிறகு, எப்பொழுது ப்ரயோக விதியால் ப்ரயோகம் என்ற அனுஷ்டானத்தை விதிக்கிறதோ,
அப்பொழுது தான் இந்த யாகத்துக்குத் தேவையான ஒரு உதவி வேறே ஓரு வழியில் கிடைக்கிற படியால், இதற்கு
அங்கமோ ப்ரயாஜங்களைச் செய்ய வேண்டாம் என்ற காரணத்தால், ப்ரயோக விதி ”ப்ரயாஜங்களைச் செய் ” என்று கட்டளை இடாது
• இப்படி இருக்கும் நிலையில், அக்நீ ஷோமீய யாகத்துக்கு அங்கமாக இல்லாத ஒரு செயல் புரோடாச யாகத்துக்கு அங்கமாக இருந்தால்,
அப்பொழுது ப்ரஸங்கம் ஏற்பட வாய்ப்பே இல்லை . ஆகையால் புரோடாச யாகத்தின் அங்கமாக அந்தச் செயலைச் செய்தே
ஆக வேண்டும்.
• எடுத்துக் காட்டு – அக்நீ ஷோமீயத்தில் ஆஜ்ய பாகங்கள் என்ற அங்கங்கள் கிடையாது
ஆனால் புரோடாச யாகத்தில் அவை அங்கங்கள் தான் . ஆகையால் , ப்ரஸங்கம் ஏற்பட முடியாததால்,
புரோடாச யகத்துக்காக ஆஜ்ய பாகங்களைச் செய்து தான் ஆக வேண்டும் –

பலருக்காக சிலரை விடலாம்
• இந்த அத்யாயத்தில் “பூயஸாம் ஸ்யாத் ஸ்வ தர்மத்வம்” என்று ஒரு ந்யாயம் சொல்லப் படுகிறது.
ஒரு கூட்ட த்தில், சிலருக்கு ஒரு தேவையும் பலருக்கு வேறே ஓரு முரண் பட்ட தேவையும் இருந்தால்,
பலரின் எதிர் பார்ப்பைப் பூர்த்தி செய்வதே சரியானது என்பது தான் அந்த நியாயம் –

• வேதத்தில், கீழ்க் கண்ட ஏழு யாகங்கள் சேர்த்து ஒரு பலனுக்காக விதிக்கப் பட்டுள்ளன .
இவற்றில் ஒவ் வொரு யாகமும் தர்சபூர்ணமாஸத்தில் இருக்கும் 6 யோகங்களுள் ஏதோ ஒன்றின் விக்ருதி ஆகும்.
எந்த யாகத்தின் விக்ருதியாக எந்த யாகம் உள்ளதோ, அது அதன் தன்மைகளைக் கொண்டு இருக்கும்

1-அக்னிக்கு புரோடாசம் -ஆக்னேய யாகத்தின் விக்ருதி
2-இந்திரனுக்கு புரோடாசம் -ஐந்த்ராக்னி யாகத்தின் விக்ருதி
பிரஜாபதி தேவதைக்காக ஐந்து
1-தயிர் -இந்திரனுக்கான தயிர் யாகத்தின் விக்ருதி
2-தேன் -உபாம்சு யாஜத்தின் விக்ருதி
3-நெய் -உபாம்சு யாஜத்தின் விக்ருதி
4-நீர் -உபாம்சு யாஜத்தின் விக்ருதி
5- தான்யம் -ஆக்னேய யாகத்தின் விக்ருதி

தர்ச பூர்ண மாஸத்தில் ஆக்நேய யோகம் அமாவாசையிலும் பௌர்ணமியிலும் செய்யப்படுகிறபடியால்,
அதன் விக்ருதிகளும் (யோகம் 1 மற்றும் யோகம் 7) இரண்டுக்கும் பொது வானவை .
• ஐந்த்ரோக்ந யோகமும் இந்த்ரனுக்கான தயிர் யாகமும் அமாவாஸையில் மட்டும் உள்ளபடியால் அவற்றின்
தன்மைகள் தான் அவற்றின் விக்ருதிகளுக்கும் (யாகம் 2 மற்றும் யாகம் 3)
• உபாம்சு யாஜம் பௌர்ணமியில் செய்யப்படுகிறபடியால், அதன் விக்ருதிகளுக்கு
(யாகம் 4,5,6) பௌர்ணமியின் தன்மைகள் தான் –

சமமானவர்களுள் முதலாவது
பலருக்கு ஒரு விருப்பமும் சிலருக்கு வேறே ஓரு விருப்பமும் இருந்தால் பலரின் விருப்பத்தைச் செய்ய வேண்டும் என்று பார்த்தோம்.
•ஸமமான எண்ணிக்கையக் கொண்ட இரண் டு பக்ஷங்களுக்குள் முரண் பாடு வந்தால் முதலில் சொல்லப் பட்டத்தை
எடுத்துக் கொள்ள வேண்டும். இதை நாம் உபக்ரம ந்யாயம் என்ற விஷயத்திலும் முன்னமே பார்த்தோம் .
• வேதத்தில், புரோடாசத்தை வைத்து செய்யப்படும் ஆக்நா வைஷ்ணவம் என்ற ஒரு யாகமும்
ஸரஸ்வதிக்காக நெய்யைக் கொண்டு செய்யப்படும் யாகமும் சேர்ந்து ஒரே பயனுக்கக விதிக்கப் பட்டுள்ளன .
இதில் முதல் யாகம், தர்ச பூர்ண மாஸத்தில் அமாவாசை யன்று செய்யப்படும் ஐந்த்ராக்ந யாகத்தின் விக்ருதி.
இரண்டாம் யாகம் பவுர்ணமி அன்று செய்யப்படும் உபாம்சு யாஜத்தின் விக்ருதி.
•ஆகையால் முதல் யாகத்துக்கான ஆஜ்ய பாகங்கள் வ்ருதந்வதீ மந்த்ரங்களோடும்
இரண்டாவதற்கான ஆஜ்ய பாகங்கள் வார்த்ரக்நீ மந்த்ரத்தோடும் செய்யப் பட வேண்டியவை –
ஆனால் தந்த்ரமாக ஒரே முறை செய்கிற படியால் ஏதோ ஒன்றைத் தான் செய்ய முடியும்.
•ஸித்தாந்தம் – முதலில் சொல்லப் பட்ட படியால் ஆக்நா வைஷண யாகத்தால் எதிர் பார்க்கப்படும்
வ்ருதந்வதீ மந்த்ரத்தத்தைத் தான் சொல்ல வேண்டும்

காம்ஸ்ய போஜி நியாயம்
• ஒரு கூட்டத்தில் , பலருக்கு எந்த சிறப்பு எதிர்பார்ப்பும் இல்லை , ஆனால் சிலருக்கு ஒரு விசேஷ எதிர்பார்ப்பு
உள்ளது என்றால் , அந்த சிலரின் எதிர் பார்ப்பு தான் செய்யப்பட வேண்டும் –
• வேதத்தில் ஆக்ரயணம் என்ற ஒரு கர்மத்தில் ஐந்த்ராக்நம்,
வைச்வதேவம் , த்யாவா ப்ருதிவ்யம் என்று மூன்று யாகங்கள் சொல்லப் பட்டுள்ளன
. இவற்றில் முதல் இரண்டு யாகங்களில் இந்தப் புல்லைத் தர்பமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற
எந்த நியமமும் வேதத்தில் சொல்லப்பட வில்லை –
ஆனால் மூன்றாவதில் ப்ரஸூநமயமோ (பூவோடு கூடின / வெட்டப்பட்டு மறுபடியும் வளர்ந்த) புல்லைக் கொண்டு
செய்ய வேண்டும் என்று சொல்லப் பட்டுள்ளது
•ஆகையால், முதல் இரண்டு யாகங்களுக்கும் எந்த விசேஷ எதிர்பார்ப்பும் இல்லாத படி யாகையால் ,
மூன்றாவது யாகத்தின் தேவைப்படியே மூன்றையும் செய்ய வேண்டும்
• இதற்கு அடிப்படை காம்ஸ்ய போஜி ந்யாயம் ஆகும் – குரு என்பவர் சிஷ்யரை விட உயர்ந்தவர்.
குருவிற்கு ’இந்த பாத்திரத்தில் தான் சாப்பிட வேண்டும் என்ற நியமம் இல்லை -.
ஆனால் சிஷ்யன் ’பித்தளை பாத்திரத்தில் மட்டும் தான் உண்பேன் என்ற நியமம் கொண்டவர் –
இந்நிலையில், இருவரும் சேர்ந்து ஒரே பாத்திரத்தில் உண்ணும் பொழுது, குரு உயர்ந்தவராக இருந்தாலும்
சிஷ்ய விஷயத் தேவைக்கு ஏற்பத் தானும் பித்தளை பாத்திரத்தில் தான் உண்ண வேண்டும்.
அதே ந்யாயம் தான் இங்கும் சொல்லப்படுகிறது.

விகல்பமும் சமுச்சயமும் –
ஒரு த்ருஷ்டமான ப்ரயோஜனத்துக்காக்க இரண்டு பொருள்கள் விதிக்கப் பட்டால் அவற்றில்
ஏதோ ஒன்றைத் தான் உபயோகிக்க முடியும் / செய்ய முடியும்.
ஆகையால் அவ்விடத்தில் அவ்விடத்தில் விகல்பம் ஏற்படும். எடுத்துக்காட்டு – புரோடாசத்தை செய்வது என்ற
த்ருஷ்டமான ப்ரயோஜனத்துக்கு நெல் மற்றும் யவம் என்ற இரண்டு தானியங்கள் வேதத்தால் போதிக்கப் பட்டுள்ளன
ஆகையால் அவற்றில் ஒன்றைத் தான் உபயோகிக்க முடியும் என்ற விகல்பம் ஏற்படுகிறது.
• அத்ருஷ்டத்துக்காக -அதாவது -அபூர்வம் என்ற புண்யத்துக்காக சில செயல்கள் விதிக்கப் பட்டால்
அதில் ஒரு செயலில் இருந்து வரும் அபூர்வம் மற்ற ஒன்றில் இருந்து வராது என்பதால்
ஒன்றைச் செய்தால் மற்ற ஓன்று வீணாகாது ஆகையால் அவற்றைச் சேர்த்தே செய்ய வேண்டும் –
இதற்கு சமுச்சயம் என்ற பெயர் -. எடுத்துக்காட்டு –
ப்ரயாஜங்கள் அநுயாஜங்கள் என்ற அங்கங்களுக்கு ஸமுச்சயம் தான் –
•அத்ருஷ்டமான ப்ரயோஜனங்கள் இருந்தால் எந்த இடத்தில் பிரயோஜனம் ஓன்று என்று முடிவு
செய்ய முடியுமோ அங்கு விகல்பம் தான் -எடுத்துக்காட்டு
– தர்ச பூர்ண மாஸம் செய்ய வேண்டிய ஒருவன் அமாவாசை அல்லது பௌர்ணமியைத் தெரியாமல் விட்டு விட்டால்
அதற்கு இரண்டு ப்ராயச்சித்த யாகங்கள் சொல்லப் பட்டுள்ளன .
அவை அத்ருஷ்டமான ப்ரயோஜனத்தை உண்டு செய்தாலும் தர்ச பூர்ணமாஸம் செய்யயாதலால் வந்த ஒரே பாபத்தைப் போக்க
இரு யாகங்களும் என்று நாம் அறிவோம்.ஆகையால் ஒன்றைச் செய்தால் மற்ற ஓன்று தேவையில்லை என்ற விகல்பம் ஏற்படுகிறது –

————–

சங்கர்ஷ தேவதா காண்டம் மேலே நான்கு அத்யாயங்கள்
மேலே மீமாம்ஸா தர்சனம் பார்ப்போம்

பாடம் –26-மீமாம்சையில் பிரமாணங்கள்

மீமாம்ஸா சாஸ்த்ரத்தின் பன்னிரண்டு அத்யாயங்களின் பொருளையும் நாம் படித்தோம்.
அதில் சொல்லப்பட்ட கருத்துக்களைக் கொண்டு தான் வேதத்தின் பொருள் நிச்சயிக்கப்படுகிறது.
இப்படி வேதத்தின் உபாங்கமாக விளங்கும் மீமாம்ளஸ, ஒரு தனி தர்சநமாகவும் வளர்ந்துள்ளது.
அந்த தர்சநத்தின் சிறப்பம்சங்களைத் தான் நாம் மேல் வரும் சில வகுப்புகளில் படிக்கப் போகிறோம்.
• ஒவ்வொரு தர்சநமும் அவர்கள் ஏற்கும் ப்ரமாணங்களையும், அவற்றால் அறியப்படும் விஷயங்களான
ப்ரமேயங்களளயும் நிர்ணயிக்க வேண்டும்.

ப்ரத்யக்ஷம், அநுமானம், சப்தம், உபமாநம், அர்த்தாபத்தி, அநுபலப்தி, ஸம்பவம் ஐதிஹ்யம் என்ற எட்டு ப்ரமாணங்கள் வெவ்வேறு
சாஸ்த்ரங்களில் சொல்லப்பட்டுள்ளன.
அவற்றில் சார்வாகர்கள் முதல் ப்ரமாணத்தை மட்டும் ஒப்புக் கொண்டார்.
பௌத்தர்களும் வைஸேஷிகர்களும் முதலிரண்டு ப்ரமாணங்களை ஏற்றனர்.
பாஸவஜ்ஞர் முதலான சில நையாயிகர்களும், ஸாங்க்ய மதத்தாரும் முதல் மூன்று ப்ரமாணங்களை ஏற்றார்கள்.
நையாயிகர்களில் பலர் முதல் நான்கு ப்ரமாணங்களை ஒப்புக் கொண்டார்கள்.
ப்ராகாரர்கள் என்ற ஒரு வகையான மீமாம்ஸகர்கள் முதல் ஐந்து ப்ரமாணங்களை ஏற்றனர்.
பாட்டர்கள் என்ற மீமாம்ஸகர்களும், அத்வைத தேதாந்திகளும் முதல் ஆறு ப்ரமாணங்களை ஒப்புக் கொண்டார்கள்.
இறுதியாக, பௌராணிகர்கள் என்பவர் எட்டு ப்ரமாணங்களையும் ஆதரித்தார்கள்.

• ந்யாய மதத்தில், ஒரு பொருளை உள்ளபடி காட்டிக்டுக்கும் ஜ்ஞாநம் ப்ரமா (யதார்த்த ஜ்ஞாநம்) என்று சொல்லப்பட்டது.
குமாரில பட்டரின் சிஷ்யர்களான பாட்ட மீமாம்ஸகர்கள் இதை ஏற்க வில்லை
• “முன்னால் அறியப்படாத விஷயத்தை உள்ளபடி காட்டிக் கொடுக்கும் அறிவு தான் ப்ரமா ” என்று அவர்கள் கூறுகிறார்கள்.
• ’முன்னால் அறியப்படாத’ என்று சொன்னபடியால், ஸ்ம்ருதி என்று அழைக்கப்படும் நினைவுக்கு ப்ரமா என்ற பெயர் கிடையாது என்று
அறியலாம், ஏன் என்றால் நிளனவு எப்பொழுதுமே முன்னால் அறியப்பட்ட விஷயத்தைப் பற்றியதாகத் தான் இருக்கும்.

• ’உள்ளபடி’ என்று சொன்னபடியால், ப்ரமம் ஸந்தேகம் முதலானஅறிவுகளுக்கும் ப்ரமா என்று பெயர் கிடையாது என்று தேருகிறது.
• கேள்வி – தாராவாஹிக ஜ்ஞாநம் (அறிவுத் தொடர்) என்று ஒன்று உண்டு. நீண்ட நேரத்துக்கு நான் என் கண்ணால் ஒரு குடத்தைப் பார்த்தால்,
’இது குடம்’, ’இது குடம்’ என் ற அறிவு பல முறை ஏற்படும். இவை அனைத்துமே ப்ரத்யக்ஷம் என்ற அறிவு தான், ஸ்மரணம் அல்ல.
அறிவு என்பது சில வினாடிகள் மட்டுமே இருக்கும் ஒன்று, ஆகையால், நீண்ட காலத்துக்குள் அந்தக் குடத்தைப் பற்றின பல அறிவுகள் ஏற்பட வேண்டும்.
அதில் முதல் அறிவானது, நான் இதுவரை அறியாத குடத்தைக் காட்டிக் கொடுத்தபடியால் ப்ரமா ஆகும்.
அதற்குப் பிறகு, அதே குடத்தைப் பற்றி மறுபடியும் மறுபடியும் ஏற்படும் மற்ற ஜ்ஞாநங்கள் ப்ரமா ஆகுமா?
• பதில் – தாராவாஹிக ஜ்ஞாநத்தில் முதல் அறிவி லேயே குடம் அறியப்பட்டுவிட்டாலும், அது ’அந்தந்த வினாடியில் உள்ளது’ என்ற
புது புது அம்சம் அந்தந்த ஜ்ஞாநத்தில் புதிதாக அறியப்படுகிறபடியால் அவற்றையும் ப்ரமா என்று கூறலாம்.

ப்ராபகர மாதத்தில் ஞானம்
பாட்டர்களின் மதத்தில், கயிற்றை பாம்பு என்றும், கிளிஞ்சலை வெள்ளி என்றும், சங்கத்தை மஞ்சளானது என்றும்
காட்டிக் கொடுக்கும் தவறான அறிவுகள் உண்டு.
ந்யாய மதத்தில் அயதார்த்த ஜ்ஞாநம் எப்படி சொல்லப்பட்டதோ அதே போல்தான் பாட்ட மதத்திலும்.
• ப்ராபாகரர்கள் என்ற ஒரு வகையான மீமாம்ஸகர்களின் மதத்தில் வேறான அறிவு என்று ஒன்றே கிடையாது.
ஜ்ஞாநம் அனைத்துமே சரியானதுதான்.
• கயிற்றைப் பார்த்து பாம்பு என்று அறிகிறோமே , எப்படி அது சரியாக இருக்க முடியும்? அவர்களின் கூற்றைப் பார்ப்போம்.
• கயிற்றைப் பார்த்து ’இது பாம்பு’ என்று அறியும் இடத்தில் தோன்றுவது ஒரு ஜ்ஞாநமே அல்ல, இரண்டு ஜ்ஞாநங்கள்.
கண் முன் இருக்கும் பொருள் நீளாமானது, வளைந்தது , பச்சையானது என்று கண்ணால் அறிகிறேன்.
இது புலன்களால் ஏற்படும் ப்ரத்யக்ஷம் ஆகும்.
கயிற்றிலுருக்கும்’கயிற்றுத் தன்மை ’ என்ற ஸாமாந்யத்தை (ஜாதியை ) மட்டும் க்ரஹிக்க வில்லை .
இல்லாத ஒரு தன்மையை உள்ளது என்று நினைத்தால் தான் ப்ரமம் ஆகும்.
இருக்கும் தன்மையை க்ரஹிக்காதது குற்றமல்ல.ஆகதே, இந்த ஜ்ஞாநம் சரியானது தான்.
• அதே ஸமயத்தில், இதே தன்மைகளை உடைய ஒரு பாம்பை நான் முன் ஓரு நாள் கண்டிருந்தபடியால் பாம்பின் நிளனவு ஏற்படுகிறது.
இதிலும் எந்த பொய்யான தன்மையும் தோற்றவில்லை . இதுவும் சரி தான்.
• நினைவுக்கு வந்த பாம்புக்கும் கண் முன் இருக்கும் பொருளுக்குமுள்ள வேறுபாட்டை அறியாத படியால் அதைக் கண்டு பயந்து விட்டேன்.
• ஆகவே , ஒரு பொருளின் ப்ரத்யக்ஷம், மற்ற ஓரு பொருளின் ஸ்மரணம், அவற்றுக்குள் வேறுபாட்டை அறியாமை
என்ற மூன்று தான் உள்ளன. ப்ரமம் இல்லை

ஞானம் ப்ரத்யக்ஷமா அல்லவா –
ஆத்மாவினுடைய குணமான ஜ்ஞாநம் என்பதை புலன்களால் அறிய முடியுமா முடியாதா என்ற விஷயத்திலும் வாதமுள்ளது.
• ந்யாய மதத்தில், மனது என்ற புலனைக் கொண்டு ஆத்மாவையும், ஆத்மாவின் குணங்களான ஜ்ஞாநம், இச்சை , த்தேஷம், ஸுகம்,
துக்கம் முதலானவற்றை அறியலாம் என்று படித்துள்ளோம்.
• ந்யாய மதத்தில் ஒரு பொருளை நான் பார்த்தவுடன் ’இது குடம்’ என்ற அறிவு ஏற்படுகிறது. இதற்கு வ்யவஸாயம் என்று பெயர்.
அதற்குப் பிறகு, ’நான் குடத்தை அறிகிறேன்’ என்ற ஜ்ஞாநம் உண்டாகிறது. இதற்கு அநுவ்யவஸாயம் என்று பெயர்.
இதுதான் ஜ்ஞாநத்தைப் பற்றின ப்ரத்யக்ஷம்.
• ப்ராபாகர மதத்தில், முதலில் ஏற்படும் ஜ்ஞாமே பொருள், அறிவு, ஆத்மா என்று மூவரையும் காட்டிக் கொடுக்கும்,
அதாவது “நான் குடத்தை அறிகிறேன்” என்று தான் முதலிலேயே ஜ்ஞாநம் உண்டாகும்.
ஆகவே , ஜ்ஞாநம் புலன்களால் அறியக் கூடியது தான்.
• பாட்ட மதத்தில் ஜ்ஞாநம் புலன்களுக்கு அப்பாற்பட்டது. நமக்கு ஒரு ஜ்ஞாநம் ஏற்பட்டாலும், அதை நாம் மனதால் அறிய இயலாது.
நாம் அறிந்த விஷயத்தில் ’அறியப்படுதல்’ என்ற ஒரு தன்மையை முதலில் பார்த்து, இந்தப் பொருளில் அறியப் படுதல் என்ற தன்மை
உள்ளபடியால் நான் என்ற ஆத்மாவிடம் அறிவு இருக்க வேண்டும்’ என்று அநுமானம் செய்து தான் அறிவு உள்ளது என்றே அறிய முடியம்

த்ரிபுட ப்ரத்யக்ஷம் -குடத்தை நான் அறிகிறேன் குடமும் நான் அறிவு மூன்றுமே ப்ரத்யக்ஷம் –
மூன்றுமே அறியலாம் -ப்ராபகரர்கள் -ஞானம் ப்ரத்யக்ஷம்
பாட்ட மதத்தில் அனுமானத்தாலே அறிகிறோம் -குடம் அறியப்பட்டது என்றால் அறிவு இருக்க வேண்டும் என்று அனுமானம் செய்து கொள்ள வேண்டும் –

ஞானம் சரியானது என்று எப்பொழுது அறியலாம் –
ந்யாய மதத்தில் ஒரு ஜ்நாநம் சரியானதா தவறானதா என்பதை உடனடியாக அறிய முடியாது.
’இது ஜலம்’ என் றஅறிவு ஏற்பட்டவுடன் அதை எடுக்க முயற்சி செய்ய வேண்டும்.
குடத்தால் ஜலத்தை எடுக்க முடிந்தால், நமக்கு வந்த ஜ்ஞாநம் சரியானது என்று முடிவு செய்யலாம்.
குடத்தில் நீர் வராமல் மண் மட்டுமே வந்தால், நாம் கண்டது கானல்நீர், ஆகையால் நமக்கு ஏற்பட்ட
அறிவு தவறானது என்று அறியலாம்.
ஆகவே , ஒரு ஜ்ஞாநம் சரியானது என்றோ தவறானது என்றோ முயற்சி செய்த பிறகு தான் அறிய முடியும்.
இதற்கு ’பரத: க்ராஹ் யத்வம் ’ (வேறே ஒன்றின் மூலம் க்ரஹிக்கப் படுதல்) என்று பெயர்.
• மீமாம்ஸையில் (ப்ராபாகர மதத்திலும் பாட்ட மதத்திலும் பொதுவாக ) ஒரு ஜ்ஞாநம் ஏற்படும் பொழுதே அது சரியானது தான்
என்று அறியப்படுகிறது. இதற்கு ஸ்வத: க்ராஹ் யத்வம் (தானாக /இயற்கையாகவே அறியப்படுதல்) என்று பெயர்.
ஆனால், முயற்சி செய்த பிறகு, முயற்சி வீணாகப் போனால், நமக்கு ஏற்பட்ட அறிவு தவறானது என்று மட்டும் பின்னால் அறிகிறோம்.
ஆகையால், ஜ்ஞாநம் சரியானது என்று உடனே அறியலாம், தவறானது என்பதை பிற்காலத்தில் தான் அறியமுடியும்.

—————

பாடம் -27-மீமாம்ஸையில் பிரமாணங்கள்
•பாட்ட மதத்ததச் சசர்ந்த மீமாம்ஸகர்களால் ஆறு ப்ரமாணங்கள் ஒப்புக் கொள்ளப் படுகின் றன. அவையாவன –
1. ப்ரத்யக்ஷம்
2. அநுமானம்
3. சப்தம்
4. உபமாநம்
5. அர்த்தாபத்தி
6. அநுபலப்தி
இதில் முதல் ஐந்து ப்ரமாணங்கள் ப்ராபாகர மதத்தைச் சேர்ந்த மீமாம்ஸகர்களாலும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன.

ப்ரத்யக்ஷம்
• புலன்களுக்கும் ஒரு பொருளுக்கும் ஏற்படும் தொடர்பால் உண்டாகும் ஜ்ஞாநம் ப்ரத்யக்ஷம் ஆகும்.
• சக்ஷுஸ் , க்ராணம், ஸ்ரோத்ரம், ரஸநம், த்வக் மற்றும் மனஸ் ஆகியதை ஆறு புலன்களில்.
இதில் முதல் ஐந்தும் வெளிப் புலன்கள் வெளி விஷயங்களைக் க்ரஹிக்க உதவுகின்றன.
மனது உட்புலன். ஆத்மாவையும் அதன் பண்புகளையும் அறிய உதவுகிறது.
• இந்த்ரியத்துக்கும் பொருளுக்கும் ஏற்படும் தொடர்பு ஸந்நிகர்ஷம் என்று அழைக்கப் படுகிறது.
ந்யாய மதத்தில் ஆறு ஸந்நிகர்ஷங்கள் ஏற்கப் பட்டன.
ஆனால், மீமாம்ஸையில் இரண்டே ஸந்நிகர்ஷங்கள் தான் தேவைப் படுகின்றன.
• ந்யாய மதத்தில் ஏற்கப்பட்ட ஸமவாயம் என்ற ஸம்பந்தம் மீமாம்ஸையில் ஏற்கப் படவில்லை .
ஆகையால், குணத்துக்கும் அது இருக்கும் த்ர்வ்யத்துக்கும், செயலுக்கும் அது இருக்கும் த்ரவ்யத்துக்கும்,
ஸாமாந்யத்துக்கும் அது இருக்கும் த்ர்வ்யத்துக்கும் இடையில் ஸமவாயம் கிடையாது,–தாதாத்ம்யம் என்ற ஸம்பந்தம் தான் உண்டு.
• தாதாத்ம்யம் என்றால் ஐக்யம். குணமானது, தானிருக்கும் த்ர்வ்யத்தைக் காட்டிலும் முற்றிலும் வேறுபட்டதே அல்ல
என்பது மீமாம்ஸகர்களின் ஸித்தாந்தம். ஆகையால், கண்ணுக்கும் குடத்துக்கும் உள்ள தொடர்பு ஸம்யோகம்.
கண்ணுக்கும் குடத்திலிருக்கும் நிறத்துக்கும் / செயலுக்கும் / ஸாமாந்யத்துக்கும் உள்ள தொடர்பு ஸம்யுக்த தாதாத்ம்யம்.
நிறத்திலிருக்கும் நிறத் தன்மையும் நிறத்தைக் காட்டிலும் வேறுபட்டதே அல்ல,
ஆகையால் அங்கும் தாதாத்ம்யம் இருப்பதால் ஸம்யுக்த தாதாத்ம்யமே ஸந்நிகர்ஷம்.

• ஒரு பொருளை மற்ற த்ரவ்யம் / குணம் / க்ரியை / ஸாமாந்யம் / பெயர்-ஆகியவற்றோடு சேர்த்து க்ரஹிக்கும்
ஜ்ஞாநத்துக்கு ஸவிகல்பகம் என்று பெயர். விகல்பம் என்றால் வேறுபாடுகள்.
இந்த ஜ்ஞாநத்தில் பல வேறுபாடுகள் தோற்றுகிற படியால் இது ஸ விகல்பகம் ஆகும்.
• கையில் தடி பிடித்த, வெள்ளையான, தேவதத்தன் என்ற பெயரை உடைய மனிதன் நடக்கிறான்” என்ற ஒரு
சொல் தொடரில் த்ரவ்யம் , குணம், பெயர், ஸாமாந்யம், செயல் ஆகிய ஐந்து விகல்பங்களை யுமே நாம் அறியலாம்.
• இந்த ஜ்ஞாநம் ஏற்படுவதற்கு முன்பு,வெறுமனே ஒரு பொருளைப் பற்றின அறிவு ஏற்படும்.
அதற்கு நிர்விகல்பகம் என்று பெயர். அதில் ஸாமாந்யம், குணம், க்ரியை என்று எல்லாம் பிரித்து அறிய முடியாது.
ஸம்முக்தமாக / ஒன்றாகத் தான் அனைத்தும் தோற்றும்.
• ஒரு மாட்டை முதன் முதலில் காணும் பொழுது அதைப் பற்றின நிர்விகல்பக ப்ரத்யக்ஷம் ஏற்படும்.
அப்பொழுது என் கண்ணுக்கும் மாட்டுக்கும் தொடர்பு ஏற்பட்டவுடன், மாடு, அதன் அங்கங்கள், தன்மைகள், குணங்கள்
அனைத்தையும் நாம் க்ரஹிக்கிறோம்.
ஆனால் முதன் முதலில் ஏற்படும் நிர்விகல்பகத்தில் எது அனைத்து மாடுகளுக்கும் பொதுவான அம்சம், எது
இந்த மாட்டின் தனித்தன்மை என்பது எல்லாம் தெரியாது.
அந்த தன்மைகள் மட்டுமே அறியப்படுகின்றன.
• இந்த நிர்விகல்பக ப்ரத்யக்ஷத்துக்கு ஆலோசநா ஜ்ஞாநம் என்றும் பெயர் உண்டு.

அனுமானம்
• ந்யாய மதத்தில் போல் மீமாம்ஸையிலும் அநுமானம் ஏற்கப் படுகிறது.
• ஒரு பொருள் மற்ற ஓரு பொருளை விட்டுப் பிரியாமல் இருந்தால் அதற்கு வியாப்தி என்று பெயர்.
இப்படி வியாப்தி உடைய ஒரு பொருளை நாம் ஓரிடத்தில் கண்டால், மற்ற ஓரு பொருள் இருப்பதை ஊஹம் செய்யலாம்.
இதற்கு தான் அநுமானம் என்று பெயர். எடுத்துக் காட்டு –
புகை என்றுமே நெருப்பைப் பிரிந்து இருக்காது என்பதால் ஒரு மலையின் மேல் புகையைக்
கண்டால், அங்கு நெருப்பு உள்ளது என்று நான் முடிவு செய்யலாம்.
• வியாப்தியை க்ரஹிப்பதற்கு நாம் பல இடங்களில் புகையையும் நெருப்பையும் சேர்த்துப் பார்த்திருக்க வேண்டும்,
ஓரிடத்தில் கூட நெருப்பில்லாமல் புகையைக் கண்டிருக்கக் கூடாது.
• ந்யாய மதத்துக்கும் மீமாம்ஸா மதத்துக்கும் ஒரு முக்கிய வேறுபாடு அநுமானத்தை அடி ஒற்றி உள்ளது.
ந்யாய மதத்தில் பரார்த்த அநுமானம் ( வேறு ஒருவருடைய பயனுக்காகச் செய்யப்படும் அநுமானம்) என்று நாம் படித்தோம்.
அதில் ஐந்து அவயவங்கள் சொல்லப்பட்டன –
“மலையில் நெருப்பு உள்ளது” என்று ப்ரதிஜ்ஞா;
“புகை இருக்கிறபடியால்” என்று ஹேது;
“எங்கு எங்கு புகை உள்ளதோ அங்கு அங்கு நெருப்பு இருக்கும், அடுப்படியில் போல்” என்று உதாஹரணம்;
“அப்படி நெருப்பை விட்டுப் பிரியாத புகை இந்த மலையில் உள்ளது” என்பது உபநயம்;
“ஆகையால் இந்த மலையில் நெருப்பு உள்ளது” என்பது நிகமநம்.
• மீமாம்ஸகர்கள் இதை ஏற்க வில்லை .
இதில் சொன்னதையே சொல்கிறோம் என்று அபிப்ராயப்பட்டு 3 அவயவங்கள் போதும் என்கிறார்கள், அதாவது –
முதல் மூன்று அவயவங்களையோ கடைசி மூன்று அவயவங்களையோ ப்ரயோகம் செய்தாலே போதும் என்பது அவர்கள் கூற்று.

சப்த பிரமாணம்
• ந்யாய மதத்தில் போல் மீமாம்ஸையிலும் சப்த ப்ரமாணம் ஏற்கப் படுகிறது.
• முதலில் நாம் சொற்களுக்கும் அவற்றின் பொருள்களுக்கும் உள்ள தொடர்பை அறிய வேண்டும். இந்தத் தொடர்புக்கு சக்தி என்று பெயர்.
• அடுத்து, நாம் “ராமன் ராவணனைக் கொன்றான்” என்ற ஒரு சொல் தொடரைக் கேட்கிறோம்
. இதைக் கேட்டவுடன், இதிலிருக்கும் ஒவ்வொரு சொல்லின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு ஒரு பொருளை நினைவு படுத்துகிறது –
ராமன், ராவணன், கொலை , ஒருமை , கடந்த காலம், ஆண் பால் என்பது போல். இது தான் பதார்த்த ஸ்மரணம்
• பிறகு, அந்த பதார்த்தங்கள் (பொருள்கள்) எல்லாம் சேர்ந்து, வாக்யார்த்த ஜ்ஞாநம்
(சொல் தொடரின் பொருளைப் பற்றின அறிவை ) என்பதை உண்டாக்குகின்றன.
• இதில் ஆகாங்க்ஷா (சொற்களுக்கு இடையில் இருக்கும் எதிர்பார்ப்பு), யோக்யதா (சொல்லப் படும் அர்த்தத்தின் ஏற்புடமை ),
ஸந்நிதி (சொற்களை தாமதமில்லாமல் உச்சரித்தல்),
தாத்பர்ய ஜ்ஞாநம் (பேச்சாளர் எந்த எண்ணத்தோடு இந்தச் சொல் தொடரைச் சொன்னார் என்ற அறிவு) ஆகியவை உதவுகின்றன.
• சப்தம் இரண்டு வகைப்படும் – (1) லௌகிக சப்தம் – மனிதர்களால் சொல்லப்பட்டது. இது ப்ரமாணமாகவும் இருக்கலாம், அப்ரமாணமாகவும்
இருக்கலாம். பேச்சாளரின் நம்பகத் தன்மையைப் பொருத்தது அது.
(2) வைதிக சப்தம் – வேதம் என்னும் நூல் எப்பொழுதுமே முழுமையாக ப்ரமாணம் தான். அது
யாராலும் இயற்றப் படாதபடியால் மனிதனின் குறைகளால் ஏற்படும் சொற் குற்றங்ககளோ பொருட்குற்றங்களோ
வேதத்தில் ஏற்பட வாய்ப்பே இல்லை . ஆகையால் அது ப்ரமாணமே
• சொல் தொடரின் பொருளை அறிவதில் இரண்டு வழிகள் உள்ளன –
(1) கலே கபோத ந்யாயம் – அந்தந்த சொற்களால் நினைவு படுத்தப்பட்ட பதார்த்தங்கள்
அனைத்துமே சேர்ந்து ஒரே ஸமயத்தில் ஒரு கூட்டுப் பொருளை உணர்த்துகின்றன
(2) கண்ட வாக்யார்த்த போதம் – ஒரு சொல் தொடரின் சிறு பகுதிகளின் பொருளை
முதலில் அறிந்து, அதற்குப் பிறகு முழு சொல் தொடரின் பொருளை அறிதல்.

உபமானம்
• ந்யாய மதத்தில் சபோல் மீமாம்ஸையிலும் உபமாநம் எனற ப்ரமாணம் ஒப்புக் கொள்ளப் பட்டுள்ளது.
ஆனால், இரண்டு மதங்களிலும் சிறு வேறுபாடும் உள்ளது.
• நகரத்திலிருக்கும் என்னிடம் காட்டிலிருந்து ஒருவர் வந்து “மாட்டைப் போல் இருப்பது கவயம்” என்று கூறினார்.
பிறகு நானே ஒரு முறை காட்டிற்குச் சென்று மாடு போன்ற ஒரு ப்ராணியைப் பார்த்தேன்.
பார்த்தவுடன் அந்த மனிதர் எனக்குச் சொன்ன சொல் தொடரின் பொருள் ஞாபகம் வந்தது.
அதனால் “இது கவயம் என்று அழைக்கப் பட வேண்டும்” என்று அறிந்தேன்.
இப்படி சொல்லுக்கும் பொருளுக்கும் உள்ள தொடர்பைக் காட்டும் அறிவு தான் உபமிதி.
இதற்குக் காரணமாக ஸாத்ருச்யம் என் ற ஒற்றுமையைப் பற்றின ஜ்ஞாநம் தான் உபமாநம் – இது ந்யாய மதத்தின் படி உபமாநத்தின் விளக்கம்.
• மீமாம்ஸையில் சொல்லுக்கும் பொருளுக்கும் உள்ள தொடர்பைப் பற்றின ஜ்ஞாநம் உபமிதி என்று ஏற்கவில்லை .
“மாடு போல் உள்ளது இந்த ப்ராணி” என்று எனக்கு ஏற்பட்ட ஸாத்ருஸ்ய ஜ்ஞாநம் (ஒற்றுமையைப் பற்றின ஜ்ஞாநம்) தான் உபமானம்.
அதிலிருந்து தோன்றக் கூடிய “இந்தப் ப்ராணியைப் போல் தான் என்னுடைய மாடு உள்ளது” என்ற அறிவு தான் உபமிதி ஆகும்.
• அதாவது, கண் முன் இருக்கும் பொருளில் மாட்டின் ஒற்றுமையைக் காண்பது உபமாநம்.
நினைவுக்கு வரும் பொருளில் கண் முன்னாலிருக்கும் பொருளின் ஒற்றுமையைக் காட்டுவது உபமிதி.
• இது அதிதேசம் செய்யும் பொழுது மீமாம்ஸையில் உபயோகப்படும். ஸௌர்ய யாகத்தின் விதி வாக்கியத்ததப் பார்த்ததும்
“இதைப் போல்தான் ஆக்நேய யாகமும் உள்ளது” என்று நாம் அறிந்து உபமாந ப்ரமாணத்தால்.
இதை அறிந்தால் தான் ஆக்நேய யாகத்தின் அங்கங்களை ஸௌர்ய யாகத்திற்கு அதிதேசம் செய்து நம்மால் கொண்டு வர முடியும்.

அர்த்தா பத்தி

• பொருந்தாத இரண்டு ப்ரமாணங்களைப் பொருந்த வைப்பதற்காகக் ஒரு விஷயத்தைக் கல்பிப்பதற்குத் தான் அர்த்தா பத்தி என்று பெயர்.
எது பொருந்தாமலிருக்கிறதோ அதற்கு உபபாத்யம் என்று பெயர்.
அதைப் பொருந்த வைக்க எது கல்பிக்கப்படுகிறதோ அதற்கு உபபாதகம் என்று பெயர்.
• எடுத்துக் காட்டு 1 – தேவதத்தன் பருத்துள்ளான் என்று ஒரு ப்ரமாணத்தால்
அறிந்தேன். ஆகையால், பொதுவாக அவன் சாப்பிடுவான் என்று அறிந்தேன். அதே
ஸமயத்தில், வேறே ஓரு ப்ரமாணத்தால், அவன் பகலில் உண்பதே இல்லை என்று
அறிந்தேன். தேவதத்தன் உண்கிறான் என்னும் ப்ரமாணத்துக்கும், பகலில்
உண்பதில்லை என்னும் ப்ரமாணத்துக்கும் விரோதம் தோற்றி, அதைப் போக்குவதற்காக
“தேவதத்தன் இரவில் உண்கிறான்” என்று கல்பிக்கிறோம்.
• எடுத்துக் காட்டு 2 – ஜ்யோதிஷ சாஸ்த்ரத்தைக் கொண்டு தேவதத்தன் நூறு வயது வரை வாழ்வான் என்று நான் அறிந்தேன்.
ஆகையால், அவன் வீட்டிலோ அல்லது வேறே எங்கோ கண்டிப்பாக இருக்கிறான் என்று அறிவேன்.
அதே ஸமயம், அவன் வீட்டில் பார்த்த பொழுது அவன் காணப் படவில்லை .
இப்பொழுது “வீட்டிலோ வெளியிலோ இருக்கிறார்” என்னும் பொதுவான ப்ரமாணத்துக்கும் “வீட்டில் இல்லை ” என்ற
சிறப்புப் ப்ரமாணத்துக்கும் முறண்பாட்டைப் போக்குவதற்காக, வெளியிலே இருக்கிறான்” என்று கல்பிக்கிறோம். இதுவும் அர்த்தாபத்தி தான்.
• இது இரண்டு வகைப்படும் –
(1) த்ருஷ்ட அர்த்தா பத்தி – நாம் கண்ட ஒரு விஷயத்தைப் பொருந்த வைப்பதற்காக மற்ற ஓன்றைக் கல்பிப்பது
(2) ச்ருத அர்த்தா பத்தி – நான் கேட்ட ஒரு விஷயத்தைப் பொருந்தத வைப்பதற்காக மற்ற ஓன்றைக் கல்பிப்பது.
எடுத்துக்காட்டு – ஸ்ம்ருதி நூல் ப்ரமாணம் ஆவதற்காக ச்ருதியைக் கல்பிப்பது, ப்ரயாஜங்கள் தர்ச பூர்ண மாஸத்தின்
ப்ரகரணத்தில் படிக்கப் பட்டதைப் பொருந்த வைப்பதற்காக ச்ருதியைக் கல்பித்து ப்ரயாஜங்கள் தர்சபூர்ணமாஸத்தின் அங்கம் என்று அறிதல்.

அநுப லப்தி
பாவ பதார்த்தங்களை (இருக்கும் பொருள்களை ) க்ரஹிப்பதற்கு உதவும் ஐந்து ப்ரமாணங்ளைப் பார்த்தோம்.
ஆறாவது ப்ரமாணமான அநுபலப்தி என்பது அபாவத்தை (ஒரு பொருளின் இன்மையை ) க்ரஹிப்பதற்கு உதவுகிறது.
• முதல் ஐந்து ப்ரமாணங்களால் அறியப்பட முடிந்த ஒரு பொருளைப் பற்றின அறிவு ஓரிடத்தில் நமக்கு ஏற்படவில்லை என்றால்,
அவ்விடத்தில் அந்தப் பொருள் இல்லை என்று நாம் அறிகிசறாம்.
உபலப்தி என்றால் அறிவு. அநுபலப்தி என்றால் அறிவு தோன்றாமை -.
ஆகவே , அறியக் கூடிய ஒரு பொருளைப் பற்றின அறிவு தோன்றாமல் இருப்பது தான் அநுபலப்தி ஆகும்.
• இதில் இரண்டு அம்சங்கள் உள்ளன –
(1) பொருள் அறியப்பட முடிந்ததாக இருக்க வேண்டும். பிசாசு முதலானவை ஓரிடத்தில் இருந்தாலும் நம்மால் காண
முடியாது. ஆகையால், காணாமையைக் கொண் டு அது இல்லை என்று முடிவு செய்ய இயலாது
(2) அந்தப் பொருளைப் பற்றின அறிவு தோன்றாமல் இருக்க வேண்டும்.
• இதில் இரண்டாவதாகச் சொல்லப் பட்ட ’அறிவு தோன்றாமை ’ என்பது ஸத்தயா காரணம், அதாவது,
தன் இருப்பாலேயே அது காரணமாகும்.
யோக்யதை / அறியப்படும் தகுதி என்பது அந்தப் பொருளில் இருந்தால் போதாது, நம்மால் அறியப்பட வேண்டும்.
• ஓர் இருட்டு அறையில் மோதிரத்தைத் தொலைத்து விட்டுத் தேடினேன் .
அறை முழுவதும் தேடா விட்டாலும், தேடினேன் என்று நான் நம்பினேன் என்றால், “இங்கு
மோதிரம் இல்லை ” என்ற அறிவு (அபாவத்தைப் பற்றினது) வந்து விடும்.
முழுவதுமாகத் தேடியிருந்தாலும் “சரியாகத் தேடவில்லை ” என்று தோன்றினால்,
அங்கு உண்மையில் மோதிரம் இல்லா விட்டாலும், நமக்கு “இங்கு மோதிரம் இல்லை ”அறிவு ஏற்படாது.

சம்பவம் ஐதிஹ்யம்
• மீமாம்ஸகர்கள் இந்த ஆறு ப்ரமாணங்களைத் தான் ஏற்கிறார்கள். இதற்கு மேல் ப்ரமாணங்கள் இல்லை என்கிறார்கள்.
ஆனால் பௌராணிகர்கள் ஸம்பவம் என்றும் ஐதிஹ்யம் என்றும் இரண்டு அதிகமான ப்ரமாணங்களை ஏற்கிறார்கள்.
அவற்றைப் பற்றி மீமாம்ஸகர்களின் கருத்து இவ்வாறு உள்ளது :
•ஸம்பவம் – நூறு ரூபாய் ஒருவரிடம் உள்ளது என்று அறிந்தால், அவரிடம் ஐம்பது ரூபாய் உள்ளது என்று அறிகிறோம்.
இது தான் ஸம்பவம் என்று பௌராணிகர்கள் சொல்கிறார்கள். ஆனால், இதைத் தனி ப்ரமாணம் என்று சொல்லத் தேவையில்லை .
இதை அநுமானத்திலேயே அடக்கி விடலாம் என்பது மீமாம்ஸகர்களின் அபிப்ராயம்.
எங்கு எல்லாம் நூறு ரூபாய் உள்ளது அங்கு எல்லாம் ஐம்பது ரூபாய் உள்ளது என்ற வியாப்தியைக் க்ரஹித்த ஒருவனுக்கு
இந்த அறிவு அநுமானத்தாலேயே வரக் கூடும்.
• ஐதிஹ்யம் – “’மரம் தோறும் குபேரன் உள்ளார்” போன்ற சொல் தொடர்களை நாம் கேள்விப் படுகிறோம்.
இதை சரியா தவறா என்று சொல்ல எந்த வழியுமில்லை . இது தான் ஐதிஹ்யம் என்று பௌராணிகர்கள் சொல்கிறார்கள்.
ஆனால், இதை சப்த ப்ரமாணத்திலேயே அடக்கலாம் என்பது மீமாம்ஸகர்களின் கூற்று.
சொன்னவர் யார் என்று தெரியாத சொல் தொடர் இது. ஆகவே சப்த ப்ரமாணம் தான்.

————-

பாடம் –28-மீமாம்ஸையில் ப்ரமேயங்கள்

•பாட்ட மீமாம்ஸகர்கள் ஐந்து பதார்த்தங்கைள ஏற்கிறார்கள். அவை யாவன –
1. த்ரவ்யம்
2. ஜாதி / ஸாமாந்யம் என்கிற பொதுத் தன்மை
3. குணம் என்கிற பண்புகள்
4. க்ரிையை என்கிற செயல்
5. அபாவம் என்கிற இன்மை
ந்யாய மதத்தில் ஏற்கப்பட்ட விசேஷம் என்ற பதார்த்தத்தையும் ஸமவாயம் என்ற பதார்த்தத்தையும் இவர்கள் ஏற்க வில்லை –

த்ரவ்யங்கள்
• “பரிமாணம் என்ற குணத்துக்கு ஆதாரமாக எது உள்ளதோ அதுவே த்ரவ்யம் ”
என்று த்ரவ்யங்களின் பொதுவான லக்ஷணம் சொல்லப் படுகிறது.

உண்டாகும் க்ஷணத்தில் குணம் இருக்காதே -நியாய மாதத்தில் ஓன்று மற்ற ஒன்றுக்கு காரணம் -சமவாயம் –
மீமாம்சையில் இத்தை கொள்ளாமல் தாதாத்ம்யம் என்று குணத்தை பிரித்துப் பார்க்க முடியாது
உண்டாகும் பொழுதே குணம் நிறம் பரிமாணம் உண்டு -என்பர் –

• மீமாம்ஸையில் 11 த்ரவ்யங்கள் சொல்லப்படுகின்றன.-அவையாவன –
1. ப்ருதிவீ – மணத்தை உடையது ப்ருதிவீ. மூக்கிலிருக்கும் க்ராண இந்த்ரியம் ப்ருதிவியால் ஆனது.
ப்ருதிவியால் ஆன சரீரம் ஜராயுஜம் (கர்ப்பையிலிருந்து தோன்றியது),
அண்டஜம் (முட்டையிலிருந்து தோன்றியது),
ஸ்வேதஜம் (வியர்வையிலிருந்து வந்தது)
மற்றும் உப்பிஜ்ஜம் (முளையிலிருந்து வந்தது) என்று நான்கு வகைகளில் உள்ளது
2. ஜலம் – இயற்கையான த்ரவத்வம் -நீர்மையை -உடையது –
3. தேஜஸ் – வெப்பத்தை உடையது -. இதன் ரூபமும் ஸ்பர்சமும் உத்பூதம் (வெளிப் பட்டது),
அநுத்பூதம் (வெளிப் படாதது), அபிபூதம் (மறைக்கப் பட்டது) என்று மூன்று நிலைகளில் இருக்கும் .
A. இரும்பைக் காய்ச்சினால் தெரியும் தேஜஸ்ஸின் ரூபமும் ஸ்பர்ஸமும் உத்பூதமாக (வெளிப்பட்டு) இருக்கின்றன.
B. தீபத்தின் ஒளியில் ரூபம் உத்பூதமாகவும் ஸ்பர்ஸம் அநுத்பூதமாகவும் உள்ளது.
C. வெந்நீரிலுள்ள தேஜஸ்ஸில் ஸ்பர்ஸம் உத்பூதமாகவும் ரூபம் அநுத்பூதமாகவும் உள்ளது.
D. சஷுர் இந்த்ரியம் தேஜஸ்ஸால் ஆக்கப் பட்டபடியால் ரூபத்தையும் வெப்பத்தையும் கொண்டது தான்,
ஆனால் அவை இரண்டுமே அதில் அநுத்பூதமாக இருக்கிறபடியால் நமக்குத் தோற்றுவதில்லை .
E. தங்கம் தேஜஸ்ஸால் ஆனது, எனவே வெப்பத்தையும் வெள்ளை நிறத்தையும் உடையது.
ஆனால் அருகிலுள்ள ப்ருதிவீ பாகத்தின் மஞ்சள் நிறத்தாலும் ஸ்பர்சத்தாலும் அவை மறைக்கப் படுகின்றன
4. வாயு – ரூபம் அற்றது ஆனால் ஸ்பர்சம் உடையது . த்வக் இந்த்ரியத்தால் க்ரஹிப்படுவது.
5. தமஸ் –ஸ்பர்சம் அற்ற்து ஆனால் ரூபம் உடையது. இது தனி த்ரவ்யம் அல்ல,-
தேஜஸ்ஸின் அபாவம் தான் தமஸ் என்று ந்யாய மதத்தில் சொல்லப் படுகிறது.
ஆனால் அது சரி அல்ல. கருமை நிறமுடைவதாக தோற்றுகையாலும், செயலுடைய தானபடியாலும்,
’இருட்டு உள்ளது’ என்று பாவ பதார்த்தமாக(இருக்கும் பொருளாக) தோற்றுைகையாலும், தேஜஸ்ஸின் நினைவு இல்லாத பொழுதும்
தமஸ் க்ரஹிக்கப் படுகிறபடியால் அதன் அபாவமாக இது இருக்க முடியாத படியாலும் தமஸ் கருப்பு நிறத்தை உடைய தனி த்ரவ்யம் தான்.

• மேல் சொல்லப்பட்ட ஐந்து த்ரவ்யங்களுக்கும் அவயவங்கள் உண்டு.அவயவங்கள் சேர்ந்து அவயவியை உண்டாக்குகின்றன.
• அவற்றின் கடைசி அவயவம் தான் பரமாணு, அது கண்ணுக்குப் புலப்படாது,
அணுவானது என்று ந்யாய மதத்தில் சொல்லப்படுகிறது. மீமாம்ஸா தர்சனத்தில் ஜன்னல் வழியாக ஸூர்ய ஒளி
வரும் பொழுது கண்ணுக்குத் தெரியும் மிக மிக நுண்ணிய பொருட்கள் தான் பரமாணுக்கள்,
அதை விட சிறிய பொருள் கிடையாது என்று சொல்லப் படுகிறது.
• இப்படி அவயவங்களைச் சேர்த்து உலகத்தைப் படைப்பது ஈச்வரன் என்று ந்யாய மதம்.
எந்த ஒரு உண்டாகும் பொருளுக்கும் உண்டாக்கிய ஒருவர்
தேவைப் படிகிறபடியால் இந்த உலகை உண்டாக்கியவர் ஈஸ்வரன் என்று அநுமானம் செய்கிறார்கள் அவர்கள்.
அது மீமாம்ஸையில் ஏற்கப்படவில்லை .
ஈஸ்வரன் ஒரு உடலோடு படைத்தார் என்றால் நாம் பார்த்திருப்போம், உடல் இல்லாமல் படைக்க முடியாது.
ஆகையால் இந்த உலகம் படைக்கப்படவே இல்லை , எப்பொழுதும் இப்படியே தான் இருந்தது, வருங்காலத்திலும் இருக்கும்.

6. ஆகாசம் – நித்யமானது, அவயவங்கள் அற்றது,விபுவானது, ப்ரத்யக்ஷமானது
7. காலம் – நித்யமானது, அவயவங்கள் அற்றது,விபுவானது, ப்ரத்யக்ஷமானது
8. திக்- நித்யமானது, அவயவங்கள் அற்றது,விபுவானது, ப்ரத்யக்ஷமானது
9. ஆத்மா – ஜ்ஞாநம் உடையவர். மநஸ் என்ற உட்புலனால் க்ரஹிக்கப் படுபவர்.
• உடலையும், இந்த்ரியங்கைளயும் காட்டிலும் வேறு பட்டவர், அவற்றை இயக்குபவர்.
• அறிவு வடிவானவர் அல்ல, அறிவை உடையவர், அறிவாளி.
• ஸுகமே வடிவானவர் அல்ல,ஸுகத்தை உடையவர்,ஸுகீ.
• ஒவ்வொரு சரீரத்திலும் வெவ்வேறு ஆத்மா உள்ளார், அவரவரின் இன் பம்
துன்பம் விருப்பு வெறுப்பு முதலியவை வேறுபடிகிறபடியால்.
• விபுவானவர். நித்யமானவர்.
• போகம் என்று அழைக்கப்படும் இவ்வுலக இன்பத்தையும், ஸ்வர்கம் எனப்படும் இன்பத்தையும்,
முக்தி என்று அழைக்கப்படும் நிகரற்ற இன்பத்தையும் அநுபவிப்பவர்.
• முக்தி என்ற நிலையில் ஆத்மாவின் துக்கங்கள் எல்லாம் நீங்கி, இயற்கையாக ஆத்மாவிடம் இருக்கும் ஸுகத்தை
அவர் அநுபவிக்கிறார்,தன்னுைடய மனதைக் கொண்டு.
10. மநஸ் – ஸுகம் துக்கம் முதலிய குணங்கைள ப்ரத்யக்ஷமாக அறிகைக்கான கருவி. இது மீமாம்ஸா தர்சனத்தில் விபுவானது.
11. சப்தம் – மீமாம்ஸா தர்சனத்தில் சப்தம் என்பது ஆகாசத்தின் குணம் அல்ல. தனி த்ரவ்யம் .
அ, ஆ, இ, ஈ என்ற ஒவ்வொரு சப்தமும் நித்யமானது, விபுவானது (எங்கும் பரந்திருப்பது).
நாம் வாயால் சில வியாபாரங்களைச் செய்தால் நம்மைச் சுற்றி இருக்கும் ஒரு சிறு இடத்தில் மட்டும் அந்த சப்தம் வெளிப் படுகிறது.
வியாபாரம் அழிந்தவுடன் அந்த சப்தத்தின் வெளிப் பாடும் அழிந்து விடும், சப்தம் உண்டாவதும் இல்லை – அழிவதும் இல்லை

ஜாதி சாமான்யம் பொதுத்தன்மை .
• மீமாம்ஸையில் ஏற்கப்பட்ட அடுத்த பதார்த்தம் ஸாமாந்யம் என்று ந்யாய மதத்தில் அழைக்கப் படும் பொதுத் தன்மை .
• அனைத்து குடங்களிலும் குடத் தன்மை என்று ஒரு பொதுத் தன்மை உள்ளது.
அனைத்து மாடுகளிலும் மாட்டுத் தன்மை என்ற ஒரு பொதுத் தன்மை உள்ளது.
• இந்த பொதுத் தன்மை நித்யமானது, விபுவானது. மாடு இருக்கும் இடத்தில் மட்டும் தான் மாட்டுத் தன்மை உள்ளது என்றல்ல.
மாட்டுத் தன்மை உலகு எங்கும் பரந்திருக்கும் ஒன்று.
• எங்கு ஒரு மாடு தோன்றுகிறதோ , அங்கு அந்த மாட்டுக்கும், முன்னமே இருந்த மாட்டுத் தன்மைக்கும் ஒரு தொடர்பு ஏற்படுகிறது.
• மாடு இல்லாத போது ஏன் மாட்டுத் தன்மையை அறிய முடிய வில்லை என்றால், மாட்டுத் தன்மையை வெளிப் படுத்துவது (அபிவ்யங்ஜகம்)
மாடு தான். எப்படி ஒரு விளக்கு இல்லாமல் ஒரு குடம் வெளிப்படாதோ ,அதே போல் மாடு இல்லாத போது
ஓரிடத்தில் மாட்டுத் தன்மை இருந்தாலும் அது வெளிப் படாது.
• ’த்ரவ்யம் உள்ளது’, ’குணம் உள்ளது’, ’க்ரியை உள்ளது’, ’ஜாதி உள்ளது’ என்று இந்த நாலு பதார்த்தங்கைளப் பற்றியும்
’உள்ளது’, ’உள்ளது’ என்ற அறிவு ஏற்படுகிறபடியால், இந்த நான்குக்கும் பொதுவான
’ஸத்தா’ /’இருத்தல்’ என்ற ஒரு பொதுத் தன்மை ஒப்புக் கொள்ளப் படுகிறது –

குணங்கள் –
• மீமாம்ஸா தர்ஸநத்தில் 24 குணங்கள் ஏற்கப்பட்டுள்ளன. அவை –
(1) ரூபம் = நிறம் (2) ரஸம் = சுவை (3) கந்தம் = மணம்
(4) ஸ்பர்சம் = குளிர்ச்சி வெப்பம் இரண்டும் இல்லாமை என்ற தொடு வுணர்ச்சி
(5) ஸம்க்யா = ஒன்று, இரண்டு முதலான எண்ணிக்கை (6) பரிமாணம் = அணு, மஹத், விபு என்ற அளவுகள்
(7) ப்ருதக்த்வம் = வேறுபாடு (8) ஸம்யோகம் = சேர்க்கை (9) விபாகம் = பிரிவு
(10, 11) பரத்வம் அபரத்வம் = தொலைவில் இருத்தல் -அருகில் இருத்தல்-காலத்தால் முதுமை இளமை
(12) குருத்வம் = எடை (13) த்ரவத்வம் =நீர்மை (14)ஸ்நேஹம் = பசை

சப்தம் குணம் இல்லை த்ரவ்யம் இவர்கள் தர்சனத்தில்
தர்மம் அதர்மம் இவற்றையும் கொள்ள வில்லை
த்வநி சக்தி ப்ராகட்யம் இந்த மூன்றும் இவற்றுக்குப் பதில் இங்கு

மேலே ஆத்மாவின் குணங்கள் -ஆறும்
(15) புத்தி = அறிவு. இது ந்யாய மதத்தில் ப்ரத்யக்ஷமானது அதாவது மனதால் அறியப் படுவது.
ஆனால் மீமாம்ஸையில் இதை அநுமானம் தான் செய்யலாம்.
(16) ஸுகம் = ஐஹிகம் (இவ்வுலகத்தது), ஆமுஷ்மிகம் (ஸ்வர்க இன்பம்), அபவர்கம் (மோக் ஷஇன் பம்) என்று மூ வகைப் பட்டது
(17) துக்கம் = ஐஹிகம் (இவ்வுலகத்தது), ஆமுஷ் மிகம் (நரகத் துன்பம்) என்று இரண்டு வகைப் பட்டது
(18) இச்சை = ஆசை (19) த்வேஷம் = வெறுப்பு (20) ப்ரயத்நம் = முயற்சி
(21) ஸம்ஸ்காரம் = இது மூ வகைப்படும் – வேகம், பாவனை , ஸ்திதி ஸ்தாபகம் என்று.

(22) த்வநி = இது வாயுவின் குணம். நம் தொண்டை /வாயின் வியாபாரத்தால்
வாயுவில் இந்த குணம் ஏற்பட்டு, இது தான் சப்தத்தை வெளிப் படுத்துகிறது.
(23) ப்ராகட்யம் = ஒரு பொருளில் உண் டாகும் ’அறியப் படுதல்’ என்ற குணம்.
இதைக் கண்டு தான் நமக்கு அறிவு ஏற்பட்டதை நாம் அநுமானம் செய்யலாம்.
(24) சக்தி = திறமை . இது இரண்டு வகைப்படும்
(1) லௌகிக சக்தி –நெருப்புக்கு எரிக்கும் சக்தி, நீருக்கு நெருப்பை அணைக்கும் சக்தி முதலியவை
(2) வைதிக சக்தி – ஜ்யோதிஷ் டோமம் முதலான வற்றுக்கு ஸ்வர்க்கத்தை ஏற்படுத்தும் சக்தி.
அபூர்வம் என்ற ஒன்றைக் கல்பிக்கிறார்கள்

கர்மம் அபாவம்
• மீமாம்ஸா தர்ஸநத்தில் ஏற்கப்பட்ட அடுத்த பதார்த்தம் கர்மம் எனப்படும் க்ரியை / செயல் ஆகும்.
• இது விபு அல்லாத த்ரவ்யங்களில் மட்டும் இருக்கும், ஏன் என்றால் விபு த்ரவ்யங்களால் நகர இயலாது.
• இது புலன்களால் க்ரஹிக்கக் கூடியது.
• உத்ஷேபநம் (மேலே செல்லுதல்)முதலான வடிவங்களில் இருக்கும்
• ஸம்யோகத்துக்கும் விபாகத்துக்கும் காரணமானது

• மீமாம்ஸா தர்ஸநத்தின் ஏற்கப்பட்ட ஐந்தாவது பதார்த்தம் அபாவம்.
• இது ப்ராபாகரர்கள் என்ற மீமாம்ஸகர்களால் ஏற்கப்பட வில்லை . ஆனால் பாட்டர்களால் ஏற்கப் பட்டுள்ளது.
• ஒது ப்ராகபாவம் (ஒரு பொருள் உண்டாவதற்கு முன்னால் இருக்கும் அதன் அபாவம்),
ப்ரத்வம்ஸா பாவம் (ஒரு பொருளின் அழிவு), அத்யந்தா பாவம் (ஒரு பொருள் இருக்கவே முடியாத இடத்தில் இருக்கும் அதன் அபாவம்) மற்றும்
அந்யோந்யா பாவம் (பொருட்களுக்கு இடையுள் இருக்கும் வேறுபாடு) என்று நான்கு வகைப்படும்.

• ஆறாவது ப்ரமாணமான அநுபலப்தி என்ற ப்ரமாணத்தால் இந்த அபாவம் க்ரஹிக்கப் படுகிறது என்று பாட்ட மீமாம்ஸகர் களின் கூற்று –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கணாதர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நியாய மீமாம்ச வேதாந்த பாடங்கள்–ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்–பகுதி -2 –மீமாம்ச சாஸ்த்ரம்– பாடங்கள் -11-20—

March 24, 2021

பாடம் -11-யாகத்தின் அறிமுகம்

யாகம் என்றால் ஒரு தேவதையைக் குறித்து ஒரு த்ரவ்யத்தை ஸமர்பித்தல் / த்யாகம் செய்தல் .
ஆகையால், எந்த ஒரு யாகத்திற்கும்
அதில் கொடுக்கப்படும் த்ரவ்யமும் வணங்கப்படும் தேவதையும் தான் முக்கியமான பகுதிகள்.
• த்ரவ்யம் – பால் (பயஸ்), தயிர் (ததி), நெய் (ஆஜ்யம்), ப்ருஷதாஜ்யம் (தயிர் கலந்த நெய்),
ஆமிக்ஷா (கொதிக்கும் பாலில் தயிரைச் சேர்த்தால் கிடைக்கும் கெட்டியான த்ரவ்யம்),
வாஜிநம் (அதே செயலில் கிடைக்கும் த்ரவமான த்ரவ்யம்), புரோடாசம் (தோசை போன்றது),
சரு (கஞ்சி வடிக்காத சோறு), யவாகூ (அரிசிக்கஞ்சி), ஸோமம் என்ற கொடியின் ரஸம் என்று
பல த்ரவ்யங்களால் செய்யப்படும் யாகங்கள் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளன
• தேவதை – அக்நி, இந்த்ரன், ஸோமன், வருணன், வாயு, மித்ரன்,
ருத்ரன், ப்ரஜாபதி, விஷ்ணு போன்ற பல தேவதைகள் வேதங்களில் சொல்லப் பட்டுள்ளனர்.
• சில இடங்களில் இரண்டு தேவதைகள் சேர்ந்து ஒரு த்ரவ்யத்தை ஏற்றுக் கொள்வார்கள்.
எடுத்துக்காட்டு –
இந்த்ராக்நீ (இந்த்ரனும் அக்நியும் சேர்ந்து), அக்நாேிஷ்ணூ (அக்நியும் விஷ்ணுவும் சேர்ந்து), முதலானவை .
• சில யாகங்களில் இரண்டு தேவதைகளுக்கு தனித்தனியே ஆகுதிகளைக் கொடுக்க வேண்டும்.

யாகம் செய்ய யோக்யதை

ஒருவன் யாகம் செய்ய வேண்டும் என்றால் மூன்று தகுதிகள் இருக்க வேண்டும்
• (1) வித்யை – அத்யயநம் செய்து, அதன் மூலம் வேதத்தின் பொருளை அறிந்திருக்க வேண்டும்
• (2) அக்நி – ஆதாநம் என்ற வைதிகச் செயலைச் செய்து, அதன் மூலம் மூன்று அக்நிகளைப் பெற்றிருக்க வேண்டும்
• (3) ஸாமர்த்யம் – யாகத்தைச் செய்வதற்கு வேண்டிய பொருள், பண வசதி, உடல் ஆரோக்யம், உதவிக்கு மக்கள், முதலியவை –

ஆதானம்

ஒருவனுடைய விவாஹத்தில் (கல்யாணத்தில்) உபயோகிக்கப்பட்ட அக்நிக்கு வைவாஹிகாக்நி என்று பெயர்.
அதை விவாஹம் முதல் ரக்ஷித்து வைத்து, அதில் சில ஹோமங்களை
தினமும் செய்ய வேண்டும் என்று சாஸ்த்ரம் கூறுகிறது.
ஸ்மார்த்த அக்னி ஸ்ம்ருதியில் சொல்லிய அக்னி
அத்தை ஸ்ருதியில் சொன்ன அக்னியாக மாற்றி உயர்ந்த ஆதானம் செய்ய வேண்டும்

• அந்த அக்நிக்கே ஆதாநம் என்ற ஒரு ஸம்ஸ்காரத்தைச் செய்தால், அது உயர்வு பெற்று யாகம் செய்வதற்குத்
தகுந்த அக்நியாக ஆகிறது. அந்த அக்நியில் தான் ஒருவன் வேதம் கூறிய யாகங்களைச் செய்ய வேண்டும்.
• ஒருவன் தவறாமல் செய்ய வேண்டிய வைதிகச் செயல்களுள், அக்நி ஹோத்ரம் என்ற ஹோமமும்,
தர்சபூர்ணமாஸம் என்ற யாகமும், அக்நிஷ்டோமம் (வருஷத்துக்கு ஒரு தடவை )என்ற யாகமும் உள்ளன.
• ஆதாநம் செய்துவிட்டு உடனடியாக அக்நிஹோத்ரம் செய்யத் தொடங்கி விட்டால் அதற்கு
ஹோம பூர்வக ஆதாநம் என்று பெயர்.
• ஆதாநம் செய்துவிட்டு உடனடியாக தர்சபூர்ணமாஸம் செய்யத் தொடங்கி விட்டால் அதற்கு
இஷ்டிபூர்வக ஆதாநம் என்று பெயர்.
• ஆதாநம் செய்துவிட்டு உடனடியாக அக்நிஷ்டோமம் என்ற ஸோம யாகத்தைச் செய்யத் தொடங்கி விட்டால் அதற்கு
ஸோம பூர்வக ஆதாநம் என்று பெயர்.

மூன்று அக்நிகள்
ஸ்ரவ்த அக்னி மூன்று -த்ரேத அக்னிகள் -குளித்து மூன்று அனலை ஓம்பும் –

ஆதாநம் செய்வதன் மூலம் ஒருவனுக்கு மூன்று அக்நிகள் ஸித்திக்கின்றன –
கார்ஹ பத்யம், ஆஹவநீயம், தக்ஷிணாக்நி
• (1) கார்ஹபத்யம் – இது மேற்கு திசையில் வட்டமான குண்டத்தில் வைக்கப்பட வேண்டும்.
இதில் தான் யாகத்தில் தேவதைக்குக் கொடுக்கப் போகும் த்ரவ்யத்தை சமையல் செய்ய வேண்டும்.
• (2) ஆஹவநீயம் – இது கிழக்கு திசையில் சதுரமான குண்டத்தில் வைக்கப்பட வேண்டும்.
இதில் தான் அநேகமாக யாகங்களிலும் ஹோமங்களிலும் ஆஹுதிகளைக் கொடுக்க வேண்டும்.
• (3) தக்ஷிணாக்நி – இது தெற்கு திசையில் அர்த்த-சந்த்ரம் வடித்திலுள்ள குண்டத்தில் வைக்கப் பட வேண்டும்.
இதில் தான், யாகத்தில் கலந்துகொள்ள வந்தவர்களுக்கு இடப் போகும் அன்னத்தை ஸமைக்க வேண்டும்.
• இவற்றில், கார்ஹபத்யம் தான் தினமும் வீட்டில் ரக்ஷிக்கப்பட வேண்டும்.
ஆஹவநீயம்-தக்ஷிணாக்நி-இதில் சேர்த்து விடலாம் -பின்பு இதில் இருந்து எடுத்து இவற்றைத் தொடங்கலாம்
அதில் தான் தினமும் செய்ய வேண்டிய அக்நி ஹோத்ரம் என்ற கர்மத்தைச் செய்ய வேண்டும்.
எப்பொழுது வேறு யாகங்களைச் செய்கிறோமோ , அப்பொழுது கார்ஹபத்யத்திலிருந்து
தணல்களை எடுத்துச் சென்று ஆஹவநீயத்தையும் தக்ஷிணாக்நியையும் மூட்டிக் கொள்ள வேண்டும்.

அக்நி ஹோத்ரம்

ஆதாநம் செய்து, மூன்று அக்நிகளை உடைய ஒருவன், தினமும் காலையிலும் மாலையிலும்
அக்நி ஹோத்ரம் என்ற ஹோமத்தைச் செய்ய வேண்டும்.
இன்று மாலையும், நாளை காலையும் செய்யும் ஹோமங்கள் சேர்ந்து ஒரு
அக்நி ஹோத்ரம் என்று அழைக்கப் படுகின்றன.
• அக்நிஹோத்ரத்தை பால், தயிர், நெய், கஞ்சி முதலான பல த்ரவ்யங்களைக் கொண்டு செய்யலாம்.
ஆனால், முதன் முதலில் எந்த த்ரவ்யத்தைத் தேர்ந்தெடுக்கிறோமோ , அதைத் தான் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.
• இந்த அக்நி ஹோத்ரத்தில், மாலைப் பொழுதில், அக்நி தேவதைக்கு மந்த்ரம் சொல்லியும்,
ப்ரஜாபதி தேவதைக்கு மந்த்ரம் இல்லாமல் மௌனமாகவும் ஹோமம் செய்யவேண்டும்.
காலைப் பொழுதில், ஸூர்ய தேவதைக்கு மந்த்ரம் சொல்லியும்,
ப்ரஜாபதி தேவதைக்கு மந்த்ரம் இல்லாமல் மௌனமாகவும் ஹோமம் செய்ய வேண்டும்-

சாயங்காலம் தொடங்கி அடுத்த நாள் காலை செய்வது தான் ஒரு அக்னி ஹோத்ரம் –
காலையில் தானே ஆதாயம் பண்ணி மாலையில் தொடங்குவதால் –

தர்ச பூர்ண மாஸம்

ஆதாநம் செய்து கொண்டு மூன்று அக்நிகளை உடைய ஒவ் வொருவனும், பர்வ காலங்களில்
(பௌர்ணமி மற்றும் அமாவாஸை காலங்களில்) ஒரு கர்மத்தைச் செய்யவேண்டும்.
அதற்கு தான் தர்ச-பூர்ணமாஸம் என்று பெயர்.-தர்சம் என்றால் அமாவாஸை.
• இந்த தர்சபூர்ணமாஸம் என்பது 6 யாகங்களின் கூட்டம். அதில்
• பௌர்ணமியில் செய்யும் யாகங்கள்:
• அஷ்ட கபாலம் (எட்டு கபாலங்களில் சமைக்கப்பட்ட புரோடாசத்தைக்) கொண்டு அக்நி தேவதைக்காகச் செய்யும்
யாகம் – ஆக்நேய யாகம் என்று பெயர்
• நெய்யைக் கொண்டு விஷ்ணுவுக்கோ , ப்ரஜாபதிக்கோ , அக்நீஷோமீயர்களுக்கோ செய்வது – உபாம்சு யஜம் என்று பெயர்
• ஏகாதச கபாலம் (பதினொரு கபாலங்களில் ஸமைக்கப்பட்ட புரோடாசத்தைக்) கொண்டு அக்நீ ஷோமர்கள் என்ற தேவதைக்காகச் செய்யும் யாகம்
• அமாவாஸையில் செய்யும் யாகங்கள்:
• அஷ்ட கபாலம் (எட்டு கபாலங்களில் ஸமைக்கப்பட்ட புரோடாசத்தைக்) கொண்டு அக்நி தேவதைக்காகச் செய்யும்
யாகம் – ஆக்நேய யாகம் என்று பெயர்
• பாலைக் கொண்டு இந்த்ரனுக்குச் செய்யும் யாகம்-ஐந்த்ரம் பய
• தயிரைக் கொண்டு இந்த்ரனுக்குச் செய்யும் யாகம்-ஐந்த்ரம் தயி
• இந்த ஆறு யாகங்களுக்கு ப்ரதான யாகங்கள் என்று பெயர், ஏன் என்றால் அவை தான் நாம் ஆசைப்படும்
பயனைப் பெற்றுத் தரப் போகின்றன.

பவுர்ணமி தொடங்கி பிரதமை காலை பண்ண வேண்டும்
அமாவாசை தொடங்கி இதுவும் பிரதமை காலை பண்ண வேண்டும்

எட்டு கட்டுகள் தர்ப்பம் பரப்பி வைக்க
பரித்ராணாம் -சுற்றி வைப்பது
ஆதார சமித்துகள்
21 சமித்துகள்

நெல்லை எடுத்து ப்ரோக்ஷணம் உலூகலம் குத்தி பத்னி கார்யம்
அம்மியில் அரைப்பது பேஷனம்
வறுத்து தீர்த்தம் வைத்து பிண்டம் கபாலத்தில் வைத்து புரோடாசம் பண்ணும் முறை

அத்வர்யு
ஆக்னீஸ்வரன் உதவி
ஹோதா மந்த்ரம் சொல்லி
ப்ரம்மா மேற்பார்வை அனுமதி
நால்வரும் எஜமானுக்கு வேண்டும்

தர்சபூர்ண மாஸத்தின் அங்கங்கள் –

இந்த தர்சபூர்ணமாஸம் என்ற கர்மத்திற்கு அங்கமாக பல யாகங்களும் ஹோமங்களும் விதிக்கப்பட்டுள்ளன
ப்ரதான யாகங்களைச் செய்வதற்கு முன்னால் செய்யப் பட வேண்டியவை
1. ஆகார ஹோமங்கள் – மந்த்ரம் சொல்லாமல் ப்ரஜாபதி தேவதைக்கும் மந்த்ரம்
சொல்லி இந்த்ரனுக்கும் நெய்யைக் கொண்டு செய்யும் இரண்டு ஹோமங்கள்
2. ப்ரயாஜங்கள் – அக்நி முதலான தேவதைகளுக்காக நெய்யைக் கொண்டு
செய்யும் ஐந்து யாகங்கள். மீதமிருக்கும் நெய்யை ப்ரதான யாகங்களின் ஹவிஸ்ஸூகளில் சேர்க்க வேண்டும்.
3. ஆஜ்ய பாகங்கள் – அக்நி தேவதைக்கும் ஸோமன் என்ற தேவதைக்கும் நெய்யைக் கொண்டு செய்யும் இரண்டு யாகங்கள்

ப்ரதான யாகங்களைச் செய்த பிறகு சேய்யப்பட வேண்டியவை .
1. ஸ்விஷ்டக்ருத் – ப்ரதான யாகத்தின் ஹவிஸ்ஸூகளிலிருந்து சிறு சிறு
துண்டுகஸள எடுத்து, அக்நி தேவதை க்காகச் செய்யப்படும் ஒரு யாகம்
2. அநுயாஜங்கள் – பர்ஹிஸ், நராசம்ஸன், ஸ்விஷ்டக்ருத் என்ற மூன்று தேவதை களுக்காக நெய்யைக் கொண்டு செய்யும் மூன்று யாகங்கள்
3. பத்நீ ஸம்யாஜங்கள் – ஸோமன், த்வஷ்டா, தேவ பத்நிகள், க்ருஹபதி என்ற அக்நி ஆகிய நால்வருக்கும் செய்யப் படும் நான்கு யாகங்கள்
4. பார்வண ஹோமம் – பௌர்ணமி அல்லது அமாவாஸை தேவதைக்காகச் செய்யும் ஒரு ஹோமம்
5. நாரிஷ்ட ஹோமம் – யாகம் செய்பவனின் வயிற்றில் இருக்கும் ஜாடராக்நியும்,
அவனது ப்ராண வாயுவும் சிறப்பாக இருப்பதற்காகச் செய்யும் ஏழு ஹோமங்கள்
6. ஸமிஷ்டயஜு: – ஒரு ஹோமம்
7. ப்ராயச்சித்த ஹோமங்கள் – வ்ரதத்தில் தவறுதல்களுக்காகவோ மந்த்ரங்களில் தவறுகளுக்காகவோ செய்யப்படும் ப்ராயச்சித்தங்கள்

பிரதிபத்தி கர்மங்கள் –

யாகத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்களை மீதமில்லாமல் கௌரவத்வதோடு செலழிப்பதற்காக
வேதமே ப்ரதிபத்தி கர்மங்களை விதிக்கிறது.
• ப்ரதான யாகங்களைச் செய்து முடித்தவுடன், அந்த ஹவிஸ்ஸின் மீதமிருக்கும் பகுதியைச் செலழிப்பதற்காக
ஸ்விஷ்டக்ருத் யாகம் – ப்ரதான யாகத்தின் ஹவிஸ்ஸிலிருந்து ஒரு பகுதியை எடுத்து இந்த யாகம் செய்யவேண்டும்.
• ஒவ் வொரு ஹவிஸ்ஸிலிருந்தும் ஒரு துண்டை எடுத்து, அதை ப்ரஹ்மா என்ற ருத்விக் உண்ணவேண்டும்.
இதற்கு ப்ராசித்ரம் என்று பெயர்.
• ஒவ்வொரு ஹவிஸ்ஸிலிருந்தும் இரண்டிரண்டு துண்டுகளை எடுத்து அதை ப்ரஹ்ம, அத்வர்யு, ஹோதா, ஆக்நீத்ரன் என்ற நால்வரும்
உண்ணவேண்டும். இதற்கு இடா பக்ஷணம் என்று பெயர்
• அக்நிக்காக செய்யப்பட்ட புரோடாசத்தை நான்காகப் பிரித்து, நான்கு ரித்விக்குகளும் உண்டு விடவேண்டும்.
• நெல்லிலிருந்து நீக்கப்பட்ட உமியை , கபாலத்தில் வைத்து, ஒரு மூலையில் வைத்து விடவேண்டும். இது ராக்ஷைர்களுக்காக
• நெல்லின் தவிடை நெய்யில் சேர்த்து, கார்ஹபத்யம் என்ற அக்நியில் ஹோமம் செய்யவேண்டும்
• அரிசியை அரைக்கப் பயன்பட்ட அம்மியிலும் குழயியிலும் ஒட்டிக் கொண்டிருக்கும் மாவைச் சுரண்டு, அதை நெய்யில் சேர்த்து,
பிஷ்டலேபம் / பலீகரணம் என்ற ஹோமத்தைச் செய்யவேண்டும்.
• ப்ரஸ்தரம் என்ற தர்பக்கட்டை நெருப்பில் இடகேண்டும்
• அரிசி மாவை பிண்டமாக்கப் பயன்படுத்திய ப்ரணீதா என்ற ஜலத்தைக் கொண்டு யஜமாநன் முகம் துடைக்க வேண்டும்.
இது தான் இந்த யாகத்தின் அவப்ருத ஸ்நானம் ஆகிறது.

எஜமானன் செய்ய வேண்டிய கர்மங்கள்

ஒரு யாகத்தில் யஜமாநன் அவசியம் செய்ய வேண்டிய கர்மங்களுள் சில:
• தேவதைகளை ஸ்வீகரித்து வரவேற்றல்
• ருத்விக்குகளைத் தேர்ந்தெடுத்து, யாகத்திற்கு அழைத்து, வரித்தல்
• வ்ரதமிருத்தல், அதைத் தொடங்கவும் முடிக்கவும் தேவையான கர்மங்களைச் செய்தல்
• யாகத்தின் முக்கியப் பகுதி – தேவதையைக் குறித்து த்ரவ்யத்தைத் த்யாகம் செய்தல்.
சொத்து அவனதானபடியால், யஜமாநன் தான் இதைச் செய்யவேண்டும். ரித்விக்குகளைக் கொண்டு செய்ய முடியாது
• ருத்விக்குகளுக்கு தக்ஷிணையை வழங்குதல்
• இவற்றைத் தவிர்ந்த மற்ற செயல்களை எல்லாம் ருத்விக்குகளைக் கொண்டு யஜமாநன் செய்யலாம்

———————

நான்காம் அத்யாயம் –
பிரமாணங்கள் -பேதங்கள் -அங்கங்கள் கீழே பார்த்தோம்
சேஷ சேஷித்வம் அறிந்து ஏது பிரயோஜனம் எதிர் பார்ப்பு வருமே –
ஒரே செயல் பலவற்றுக்கும் அங்கம் ஆகும் -எது பிரயோஜனம் என்ற கேள்வி வருமே
இதுவே -ப்ரயுக்தம்-இத்தை விவரித்து சொல்லும் இதில் –
இவற்றைப் பார்க்கும் முன்பு அங்கங்களின் வகைகளைப் பற்றி அறிய வேண்டுமே
அவற்றைப் பார்ப்போம்

பாடம் -12-அங்கங்களின் வகைகள்

மூன்றாம் அத்யாயத்தில் ஒரு வைதிக கர்மத்தின் அங்கங்களை எப்படி அறியலாம் என்று பார்த்தோம்.
அந்த அங்கங்கள் இரண்டு வகைகளாக உள்ளன.
• (1) ஸித்த ரூபம் – ஸித்தமாக (தயாராக) இருக்கும் பொருள்கள்.எடுத்துக்காட்டு –
பால், தயிர், நெய், கரண்டி, புரோடாசம், ரித்விக், புரசக்கிளை , தர்பம், காலம், தேசம், முதலானவை ,
• (2) க்ரியா ரூபம் – செயல் வடிவமான அங்கங்கள். எடுத்துக்காட்டு –
ப்ரோக்ஷித்தல், உலக்கையால் குத்துதல், அரைத்தல், சமைத்தல்,
அங்கமான யாகங்கள், அங்கமான ஹோமங்கள், முதலானவை

• க்ரியை வடிமான அங்கங்களை மறுபடியும் இரண்டாகப் பிரிக்கலாம் –
• (1) ஸந்நிபத்ய உபகாரகம் – ஒரு யாகத்தின் அங்கமான த்ரவ்யம் முதலானவற்றுக்கு அங்கமாக இருந்து
உதவி செய்யும் செயல்கள். எடுத்துக்காட்டு –
ப்ரோக்ஷணம், உலக்கையால் குத்துதல் முதலியவை யாகத்தின் அங்கமான நெல்லினுடைய அங்கங்கள்.
ஸ்விஷ்டக்ருத் என்ற அங்க யாகம், ப்ரதான யாகத்திற்கு அங்கமான ஹவிஸ்ஸை சரியாகச் செலவழிப்பதற்காக
உள்ளபடியால் அது அந்த ஹவிஸ்ஸின் அங்கம்.
• (2) ஆராத் உபகாரகம் – த்ரவ்யம் முதலானவை மூலமாக அல்லாமல் நேரடியாக
அத்ருஷ்டம் / அபூவர்ம் / புண்யம் வழியாக ஒரு யாகத்திற்கு உதவி செய்யும் செயல்கள். எடுத்துக்காட்டு –
ப்ரயாஜங்கள் முதலானவை

ஸந்நிபத்ய உபகாரங்களின் வகைகள்
ஸந்நிபத்ய உபகாரகங்களான செயல்கள் மூன்று வகைப்படும் –
• (1) த்ருஷ்டார்த்தம் – த்ருஷ்டமான (இந்த்ரியங்களுக்கு புலப்படும்) ஒரு நன்மையைக் / பயனைக் கொடுக்கக் கூடியவை .
எடுத்துக்காட்டு
– உலக்கையால் குத்துதல் என்பது நெல்லின் அங்கம். அது, உமியை நீக்குதல் என்ற த்ருஷ்டமான ப்ரயோஜனத்திற்காகத் தான்
செய்யப்படுகிறது.
அதே போல் அரிசியை அரைத்தல் என்பதும் த்ருஷ்டார்த்தம்,
அரைக்காவிட்டால் யாகத்திற்குத் தேவையான புரோடாசத்தைச் செய்ய முடியாதே .
• (2) அத்ருஷ்டார்த்தம் – த்ருஷ்டமான பலன்களை ஏற்படுத்தாமல்,
அத்ருஷ்டமான (இந்த்ரியங்களுக்குப் புலப்படாத) அபூவர்ம் / புண்யம் என்ற பயனை ஏற்படுத்தக்கூடியவை .
எடுத்துக்காட்டு –
ப்ரோக்ஷணாம் செய்வதால் நெல்லில் எந்த மாற்றமும் தெரியவில்லை , ஆனால் அதில் ஒரு அத்ருஷ்டம் / அபூர்வம் /
புண்யம் உண்டாகியிருக்கும். அந்த அபூர்வத்வதாடு கூடின நெல்லை அரைத்து, புரோடாசம் செய்து
தேவதைக்குக் கொடுத்தால்தான் பயன் கிடைக்கும்.
ப்ரோக்ஷணத்தால் ஏற்படும் அபூர்வம் இல்லாத நெல்லை யாகத்தில் பயன்படுத்தினால் பயனில்லை
• (3) த்ருஷ்டாத்ருஷ்டார்த்தம் – ஒரே ஸ்விஷ்டக்ருத் யாகம் என்ற செயல், ப்ரதான யாகத்தில்
உபயோகித்த நெல்லை அக்நியில் சேர்த்து ’செலவழித்தல்’ /
’ப்ரதிபத்தி’ என்ற த்ருஷ்டமான ப்ரயோஜனத்தை உடையபடியால் த்ருஷ்டார்த்தமாயும்,
அதை வேறே ஒரு தேவதைக்குக் கொடுக்கிறபடியால் அந்த யாகம் என்ற அம்சம் அத்ருஷ்டார்த்தம் தான்.
ஆகையால், இந்தச் செயல் இரண்டு வகையான பலன்களையும் ஏற்படுத்துகிறது.

யாகத்தில் இருந்து அபூர்வங்கள்
இப்பொழுது நாம் செய்யும் யாகம் தானம் முதலான செயல்கள் அனைத்தும் சில வினாடிகளில்
முடிந்துவிடக்கூடியவை , அழிந்துவிடக்கூடியவை .
ஆனால், ஸ்வர்கம் முதலான பயன்கள் பல காலம் கழித்துக் கிடைக்கின்றன. ஆகையால், யாகம் ஸ்வர்த்துக்குக்
காரணம் என்பதை மெய்ப்பிப்பதற்காக, அபூர்வம் என்று ஒன்றைக் கல்பிக்கிறோம். யாகம் முடிந்துவிட்டாலும், யாகத்திலிருந்து
உண்டான அபூர்வம் நிலைத்திருந்து பயனைக் கொடுக்கும். இதற்கு ப்ரதான அபூர்வம் அல்லது உத்பத்தி அபூர்வம் என்று பெயர்.
• அதே போல் அங்கங்கள் விஷயத்திலும் அபூர்வங்கள் தேவை
ப்ரோக்ஷணம் செய்து பல நேரம் கழித்து தான் ப்ரதான யாகம் செய்யப்படிகிறது. ஆனால், ப்ரோக்ஷணம் என்பது யாகத்திற்கு
உபகாரகம் (உதவி செய்வது) என்று கூறியுள்ளோம். ஆகையால், ப்ரோக்ஷணம் ஒரு அபூர்வத்தை ஏற்படுத்திவிட்டு தான்
முடிந்துவிடும். அந்த அபூர்வம் தான் தேவையான காலம் இருந்து உபகாரத்தைச் செய்துேவிட்டு அழியும்.
இவற்றுக்கு அங்க-அபூர்வங்கள் என்று பெயர்.
• ஸந்நிபத்ய உபகாரகங்கள், ஆராத் உபகாரகங்கள் இரண்டிலிருந்தும் அபூர்வங்கள் தோன்றி ப்ரதான யாகத்திற்குத் துணை புரிகின்றன.
ஆனால், அவை உதவி செய்யும் முறை வேறு

அங்க அபூர்வங்களின் உதவிகள்

பிரதான யாகத்துக்கு முன்னும் பின்னும் செய்ய வேண்டிய ஆராத் உபகாரங்கள் உண்டாக்கும் அபூர்வங்கள்
இவை உண்டாக்குவதால் உதவியால்
பிரதான யாகத்துக்கு முன் செய்ய வேண்டிய ஸந்நிபத்ய உபகாரங்கள் உண்டாக்கும் அபூர்வங்கள் -உதவியால் -பிரதான யாகம்
ப்ரதான யாகம்–உத்பத்தி அபூர்வம் (ப்ரதான யாகம் செய்வதனால் தோன்றுவது )–பரம அபூர்வம் -முழு யாகமும் முடிந்த உடன் ஏற்படுவது –ஸ்வர்க்கம்
பிரதான யாகத்துக்கு பின் செய்ய வேண்டிய ஸந்நிபத்ய உபகாரங்கள் உண்டாக்கும் அபூர்வங்கள் – பாது காத்தலில் உதவும்

———————–

பாடம் -13-ப்ரயோஜகத்வம்

மீமாம்ஸா சாஸ்த்ரத்தின் முதல் அத்யாயத்தின் தர்மத்தை போதிக்கும் ப்ரமாணங்களும்,
இரண்டாவது அத்யாயத்தில் தர்மங்களுக்குள் வேறுபாட்டை அறியும் முறைகளையும்
மூன்றாவது அத்யாயத்தில் எந்த கர்மம் எந்த கர்மத்துக்கு அங்கம் என்பதையும் கூறினார் ஜைமிநி மஹரிஷி.
ஸ்ரீ ஜைமினி நியாய மாலை -அத்யாய சங்கதி –

• அடுத்ததாக நான்காவது அத்யாயத்தில் ப்ரயோஜகத்வம் என்ற விஷயம் கூறப்படுகிறது.
• ஒரே செயல் / பொருள் பலவற்றுக்கு அங்கமாக இருக்கலாம்.
ஆனால் அந்த அங்கிகளுக்குள் ஏதோ ஒன்று தான் அந்த கர்மத்துக்கு ப்ரயோஜகமாக இருக்கும்,
அதாவது அநுஷ்டாபகமாக இருக்கும்.
• ஒருவர் பல செயல்களில் ஈடுபட்டிருந்தாலும், அவரது முக்கியமான கடமை என்று ஒன்று இருக்கும்.
அதைச் செய்வதற்காகத் தான் அவர் இருக்கிறார், அவர் அதிகப்படியாக வேறு பொருப்புகளையும் பார்க்கலாம்
ஆனால் அந்த முக்கிய காரியம் இல்லை என்றால் அவர் இருக்கமாட்டார்.
• அதே போல் தான், யாகங்களில் ஒரே பொருள் / செயல் பலவற்றுக்கு அங்கமாக இருக்கலாம்
ஆனால் அவற்றுள் ஒன்று தான் அதற்கு ப்ரயோஜகமாக (செய்விப்பதாக) இருக்கும்.
அதற்கு தான் ப்ரயோஜகம் என்று பெயர். இந்த கர்மத்துக்கு ப்ரயோஜ்யம் என்று பெயர்

• எடுத்துக் காட்டு –
தர்ச பூர்ணமாஸம் என்ற யாகத்தில் புரோடாசம் (தோசை ) என்ற த்ரவ்யத்தை தேவதைக்கு ஸமர்பிக்க வேண்டும்.
அதற்காக அதை சமைப்பதற்கு கபாலம் என்ற சுட்ட மண் தகடுகளைப் பயன்படுத்த வேண்டும்.
இஸத வேதம் “கபாலங்களில் புரோடாசத்தை சமைக்கவேண்டும்” என்ற விதியில் சொல்லுகிறது.
• அதே கபாலங்களைக் கொண்டுதான், நெல்லிலிருந்து பிரிந்து விழுந்த உமியை நீக்கவேண்டும் என்றும் கூறுகிறது வேதம்,
“புரோடாசத்திற்கான கபாலத்தால் துஷங்களை நீக்க வேண்டும்” என்ற கட்டளையால்.
• கபாலத்தைச் செய்வது புரோடாசத்தைச் சமைக்கத் தான்.
அதே கபாலம் உமியை நீக்கவும் பயன்படுத்தப்படுகிறது, அவ்வளவே. ஆகையால்,
புரோடாசம் செய்வது ப்ரயோஜகம் + அங்கி,
கபாலம் ப்ரயோஜ்யம் + அங்கம்.
கபாலத்துக்கு உமியை நீக்குதல் என்ற செயல் அங்கி ஆகுமே தவிற ப்ரயோஜகம் ஆகாது.
• இதன் விளைவு என்ன வென்றால், ஒரு யாகத்தில் புரோடாசம் இல்லை என்றால், அந்த யாகத்தில்
கபாலங்களைச் செய்யத் தேவையில்லை
. அந்த யாகத்தில் சரு (கஞ்சி வடிக்காத அரிசிச் சோறு), யவாகு (அரிசிக் கஞ்சி) முதலானவற்றுக்காக நெல்லைக் குத்தி உமி
உண்டாகியிருந்தாலும், அது நீக்கப்பட் வேண்டும் என்றால் வேறே ஓரு முறையில் தான் நீக்க வேண்டும்,
கபாலங்களை உபயோகிக்க முடியாது

க்ரத்வர்த்தமும் புருஷார்த்தம்
க்ரது -வைதிக கர்மங்களுக்காக செய்பவை க்ரத் அர்த்தம்
புருஷனுக்காக செய்பவை புருஷார்த்தம்
பலம் இச்சா -அடைவிக்கும் வழி -அதில் இச்சை –
புருஷார்த்தம் -க்ரத் அர்த்தம் -இரண்டும் உண்டே

அங்கங்கள் இரண்டு வகைப்பட்டுள்ளன – க்ரத்வர்தம் என்றும் புருஷார்தம் என்றும்.
• புருஷனுடைய ஒரு பயனுக்காக எந்தச் செயல் செய்யப்படுகிறதோ , அது புருஷார்த்தம் என்று
அழைக்கப்படுகிறது, எடுத்துக்காட்டு –
ஸ்வர்கத்துக்காக ஜ்யோதிஷ்டோமம் என்ற யாகம் செய்யப்படுகிறது,
மழைக்காக காரீரீ என்ற யாகம் செய்யப்படுகிறது.-இவை புருஷார்த்தங்கள்.
தானாக எந்த ஒரு பொருளில் ஆசை ஏற்படுமோ , அதற்கு ஸாதநமாக (உபாயமாக /
வழியாக) விதிக்கப்பட்ட செயல் புருஷார்த்தம் ஆகும்.
• க்ரது என்றால் யாகம் முதலான வைதிகச் செயல்கள்.
அந்த க்ரதுவின் பூர்த்திக்காகச் (முழுமைக்காகச்) செய்யப்படுவது க்ரத்வர்த்தம் ஆகும். எடுத்துக்காட்டு –
ப்ரயாஜங்கள், அநுயாஜங்கள் போன்ற பல யாகங்கள் தர்சபூர்ணமாஸத்தின் அங்கமாகச் செய்யப்படுகின்றன.
அவற்றுக்குத் தனியாகப் பலம் எதுவும் கிடையாது. தர்சபூர்ணமாஸத்தின் பூர்த்தி தான் பலம்.
இந்த அங்கங்களைச் செய்யா விட்டால் தர்சபூர்ணமாஸம் என்ற யாகம் முழுமை பெறாது, அதாவது,
அது தன் பலத்தைக் கொடுக்கும் சக்தி உடையதாக ஆகாது.

கோதோஹநம் புருஷார்த்தம்
தர்சபூர்ணமாஸ யாகம் ஒருவனுக்கு நித்ய கர்மமாக (தவறாமல் செய்ய வேண்டிய கர்மமாக) விதிக்கப்பட்டுள்ைது.
அதில், தண்ணீரை ப்ரணயனம் செய்ய (ஓரிடத்திலிருந்து மற்ற ஓரிடத்திற்கு எடுத்துச் செல்ல) சமஸம் என்ற பாத்திரம்
பயன் படுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
யாகத்துக்கு ப்ரணயனம் அங்கம், ப்ரணயனத்துக்கு சமஸம் என்ற பாத்திரம் அங்கம்.
ஆகையால், சமஸம் க்ரத்வர்த்தம் அதாவது யாகத்தின் முழுமைக்காகப் பயன்படும் பொருள் தான்.
• அதே யாகத்தைச் செய்பவன், பசுக்களைப் பெற ஆசைப்பட்டால், சமஸத்திற்கு பதிலாக கோதோஹநம் என்ற
(மாட்டைக் கறப்பதற்கான) பாத்திரத்தால் ப்ரணயனம் செய்ய வேண்டும் என்றும் வேதம் கூறுகிறது.
ஆனால், அந்த கோதோஹநம் என்ற பாத்திரம் யாகத்தின் அங்கம் அல்ல.
பசுவிற்காகச் செய்யப்படும் முயற்சியில் ஒரு கருவியாக விதிக்கப்பட்டபடியால்
கோதோஹநம் நேரடியாக பசு என்ற பலத்துக்கு தான் அங்கம். ஆகையால், அது புருஷார்த்தம் ஆகும்.
• ஆகையால், பசுவை அடைய யாகம் ஸாதநம் அல்ல, பாத்திரம் தான் ஸாதநம்.
ஆனால், தனியாக இருக்கும் பாத்திரம் எந்தப் பயனையும் ஏற்படுத்த முடியாது என்பதால் அதை
தர்சபூர்ணமாஸத்தில் ப்ரணயனத்தில் பயன்படுத்தினால் பசுமாடு கிடைக்கும்.
இத்தை-கோதோஹநத்தை- உபயோகித்தால் நித்ய கர்மம் ஆகாரம் மாறி காம்ய கர்மம் ஆகுமே –

உதிக்கும் ஸூர்யனைக் காணாமை -புருஷார்த்தம்
• வேதத்தில், குருகுலத்தில் வேத அத்யயநம் முடித்துப் புறப்படும் மாணவனின் வ்ரதங்களைச் சொல்லுகிறது.
அதில் “ந ஈவேத உத்யந்தம் ஆதித்யம்” என்று ஒரு கட்டளை உள்ளது.
• பூர்வ பக்ஷம் –
“உதிக்கும் ஸூர்யனைக் காணுதல் என்ற செயலைச் செய்யாதே ” என்று இந்த வாக்கியம் கூறுகிறது.
செய்யாதே என்று சொல்கிறபடியால் இது நிஷேதம் (மறுப்பு) ஆகும்.
ஒரு செயல் நடக்கும் வாய்ப்பு இருந்தால் தான் அதை மறுக்க முடியும்.
ஆகையால், எந்த யாகத்தில் ஸூர்யனைக் காண வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளதோ , அதே யாகத்தில் ஸூர்யனைக் காணாதே
என்று இந்த விதி கூறுகிறது. வேதமே ஒரு செயலைச் செய் என்றும் செய்யாதே என்றும் கூறினால்,
இரண்டு வேத வாக்கியங்களும் தவறாக இருக்க முடியாதபடியால், இரண்டு அநுஷ்டானமுமே சரி தான்.
காண்பதோ காணாமலிருப்பதோ நம் விருப்பத்தைப் பொருத்தது என்று புரிந்து கொள்ளலாம்.
இதற்கு விகல்பம் என்று பெயர். இந்த மறுப்பு (நிஷேதம்) யாகத்தின் அடிப்படையில் சொல்லப் பட்டபடியால் க்ரத்வர்த்தம் ஆகும்.
• ஸித்தாந்தம் –
இந்த ப்ரகரணம் வ்ரதத்தைச் சொல்ல வந்த்து. வ்ரதம் என்றால் கடைப்பிடிக்க வேண்டிய செயல்கள் தான்.
ஆகையால், அந்த ஸந்தர்பத்தில், ஒரு மறுப்பைச் செய்து, “இதைச் செய்யாமலிரு” என்று வேதம் சொல்வது ஒட்டாது.
ஆகையால், இங்கும் ஒரு விதி (கட்டளை ) தான் இருக்க வேண்டும், நிஷேதம் (மறுப்பு) அல்ல.
• ஆகையால், “உதிக்கும் ஆதித்யனைக் காணாதே ” என்று பொருள் அல்ல.
“உதிக்கும் ஆதித்யனைக் காணாமையைச் செய்” என்று தான் பொருள் கொள்ள வேண்டும்.
ஆனால், காணாமையை எப்படி ஒருவர் செய்ய முடியும்?
அதனால், “ஆதித்யனைக் காணாமையை ஸங்கல்பம் செய்” என்று பொருள் கிடைக்கிறது.
• அப்படிச் செய்யும் ஸங்கல்பமும், யாகத்துக்காகச் செய்யும் க்ரத்வர்த்தம் அல்ல.
அருகிலிருக்கும் அர்த்தவாதத்தில் ஆதித்யனைக் கண்டால் பாபம் ஏற்படும் என்று சொல்லப்பட்டபடியால்,
பாபம் விலகுவது தான் இதற்கு ப்ரயோஜநம் ஆகும்.
ஆகையால், ஆதித்யனைக் காணாமலிருக்கும் ஸங்கல்பம் புருஷார்த்தம் தான்.

ப்ரபத்தியைக் காட்டிலும் ஸம்ஸ்காரம் சிறந்தது
• ஸோம யாகத்தில் யஜமாநன் சில நியமங்களைக் கடைப்பிடிப்பதாக தீஷை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அப்பொழுது யஜமாநனிடம் ஒரு தண்டம் (தடி) கொடுக்கப்படும். ஸோம லதையை வாங்கிய உடன் அந்த
தண்டத்தை அவர் மைத்ராேருணன் என்ற ரித்விக்கிடம் கொடுக்க வேண்டும் என்றும்.
அந்த ஸமத்ராேருணர், தண்டத்தைக் கையில் வைத்துக் கொண்டு தான் யாகத்தில்
அவரது கார்யங்களைச் செய்ய வேண்டும் என்றும் வேதம் சொல்கிறது
• ஸந்தேஹம் – யஜமாநன் தான் உபயோகித்த தண்டத்தை ஸமத்ராேருணனுக்கு தானம் செய்தல் என்பது,
உபயோகிக்கப்பட்ட தண்டத்திற்கு ப்ரதிபத்தி கர்மம் (நல் வழியில் செலவழிக்கும் கர்மம்) ஆகுமா?
அல்லது தண்டத்துக்கு ஸம்ஸ்காரமா?
• பூர்வபக்ஷம் – யஜமாநனுக்கு தண்டத்தின் பயன் முடிந்து விட்டபடியால், அந்த தண்டம் சிறந்த வகையில்
செலவழிக்கப் பட வேண்டும் என்ற தேவை உள்ள படியால், தானம் செய்வது ப்ரதிபத்தி கர்மம் தான்.
ஆகையால்,எத்தனை யஜமாநர்கள் உள்ளார்களோ , அத்தனை தண்டங்களை தானம் செய்ய வேண்டும்
• ஸித்தாந்தம் – சம்ஸ்காரம் காரியத்துக்கு யோக்யம் தர பரிஷ்காரம் செய்வது தானே –
ஸம்ஸ்காரம் என்றாலே , மேலே நடக்க இருக்கும் ஒரு செயலுக்குத் தகுதி உடையதாக
ஒரு பொருளை ஆக்குவது தான். ஆகையால், யஜமாநனால் உபயோகப் படுத்தப்பட்ட தண்டத்துக்கு
தானம் ப்ரதிபத்தி வடிவமான ஸம்ஸ்காரம் என்று சொல்வதைக் காட்டிலும்,
ஸமத்ராவருன் உபயோகப் படுத்தப்போகிற தண்டத்திற்கு தானம் என்பது ஸம்ஸ்காரம் என்று கொள்ளுதல் சிறந்தது.
ஆகையால், எத்தனை யஜமாநர்களிடம் எத்தனை தண்டங்கள் இருந்தாலும், ஸமத்ராவருணன்
ஒருவனானபடியால் ஒரு தண்டத்தை அவருக்கு தானம் செய்தால் போதும்.

அத்ருஷ்டார்த்தமான கர்மத்தைக் காட்டிலும் பிரதிபத்தி உயர்ந்தது
ஜ்யோதிஷ்டோமம் என்ற ஸோம யாகத்தில் ரித்விக்குகளுக்கு தக்ஷிணையைக் கொடுத்த பிறகு,
மான் கொம்பை சாத்வாலம் என்ற குழியில் எரிய வேண்டும் என்று வேதம் கூறுகிறது.
• ஸந்தேஹம் – இப்படி மான் கொம்பை எரிவது ப்ரயாஜங்கள் போல் அபூர்வத்துக்காக மட்டும் செய்யப்படும் கர்மமா,
அல்லது மான் கொம்பின் ப்ரதிபத்தி கர்மமா?
பிரதிபத்தி கர்மா என்பது யாகத்தில் உபயோகிக்கப் பட்டவற்றை சரியாக பயன்படுத்த செய்வது
• பூர்வபக்ஷம் – இது அபூர்வத்துக்காகச் செய்யப்படும் கர்மம் தான்.
இப்படி எரிவதன் மூலம் அபூர்வம் உண்டாகி, யாகத்திலிருந்து புத்ரன், பசு போன்ற பலன்கள் உண்டாக உதவும்.
இல்லை எனில், இந்தச் செயல் பயனற்றதாகப் போகும்.
• ஸித்தாந்தம் – இது ப்ரதிபத்தி கர்மம் தான். யஜமாநனுக்கு யாகத்தின் போது அரிப்பு ஏற்பட்டால்
சொறிந்து கொள்ளவே மான் கொம்பைப் பயன்படுத்த வேண்டும் என்று வேதம் கூறுகிறது.
ஆகையால், யாகத்தில் உபயோகிக்கப்பட்ட அந்த மான் கொம்பு, தான் நல்ல முறையில் செலவழிக்கப் பட வேண்டும்
என்று எதிர்பார்க்கும், அதாவாது, அதற்கு ஒரு ப்ரதிபத்தி கர்மம் தேவைப்படுகிறது.
ஆகையால், மான் கொம்பைக் குழியில் எரிவது அபூர்வத்துக்காக மட்டும் செய்யப்படும் கர்மம் அல்ல,
ப்ரதிபத்தியாகச் செய்யும் கர்மம் தான்.
அத்ருஷ்டார்த்தமான கர்மத்தைக் காட்டிலும் ப்ரதிபத்தி உயர்ந்த்து-
சம்ஸ்காரம் பிரதிபத்தியை விட உயர்ந்தது

சமமான இடத்தில் யாகம் செய் -பவ்ர்ணமி அன்று செய் -இவற்றை உண்டாக்கி செய்ய வேண்டாம் –
இவை சித்தம் அன்றோ –
முதல் இரண்டு பாத அர்த்தம் பார்த்தோம்

—————

பாடம் -14-

அங்கம் அங்கி சம்பந்தம் -மூன்றாவது அத்யாயம்
பிரயோஜகத்வம் விசாரம் நான்காவது அத்யாயம் –
அனுஷ்டாபகத்வம் -செய்வித்தல் -கீழே பார்த்தோம் -கபாலம் உண்டு செய்விப்பது புரோடாசம் செய்வதுக்காகவே –
தண்ட தானம் -பிரபத்தி காரியமா -ஸம்ஸ்கார காரியமா -எஜமானன் கொடுத்த தண்டத்தை வைத்துக் கொண்டே
மைத்ரா வருணன் யாகம் இத்தை வைத்து செய்வதால் ஸம்ஸ்காரமே பிரதானம் –
அபூர்வம் இப்பொழுது தான் வரும் -கார்யம் ச பலமாகும் –
விஷயம் விசயம் பூர்வ பக்ஷம் சித்தாந்தம் பலம் ஐந்தையும் அதிகரணத்துக்கு உண்டே –

மூன்றாவது பாகம் -பல சிந்தனை –
தர்ச பூர்ண மாசத்தால் சுவர்க்கம்-பலனைச் சொல்லி -யார் உபகாரம் எதிர் பார்ப்பு -இருப்பதால்
ப்ரயாஜா யாகங்கள் ஐந்தும் இதுக்கு அங்கம்
பிரதான கர்மமே அங்கீ -மற்றவை அங்கம் –

அங்கங்களுக்கு தனி பலன் கிடையாது

• வேதங்களில் ஸ்வர்கம், புத்ரன், பசு, மழை , செழிப்பு போன்ற பல பலன்களை நமக்கு அளிக்கக்கூடிய
பல கர்மங்கள் சொல்லப்பட்டுள்ளன.அவற்றுக்குப் ப்ரதான கர்மங்கள் என்று பெயர்.
அந்த கர்மங்களுக்கு அங்கமாகவும் பல கர்மங்கள் சொல்லப்பட்டுள்ளன.
• அங்கம் என்பது, ப்ரதான கர்மம் முழுமை பெரிவதற்காக மட்டுமே இருக்கும் ஒன்று.
ஆகையால், ப்ரதான கர்மத்தின் பூர்த்தியைத் தவிர்ந்த வேறோரு பலன் அங்கத்துக்கு இருக்க முடியாது.
• ஆனால் வேதத்தில் சில அங்கங்கஸள உபதேசித்து விட்டு, அவற்றுக்குப் பலனும் சொல்லப்படுகிறது.
எடுத்துக்காட்டு – “பர்ண மரத்தால் ஜுஹூ என்ற பாத்திரத்தைச் செய். எவன் ஒருவன் பர்ண மரத்தால்
ஜுஹூவைச் செய்கிறானோ அவன் இழிவான -வசைப் பேச்சை கேட்க வில்லை போன்ற வாக்கியங்கள்.
• பூர்வ பக்ஷம் – தனியாகப் பலன் இருக்கிறபடியால் இவை அங்கங்கள் அல்ல-
•ஸித்தாந்தம் – “பர்ண மரத்தால் ஜுஹூவைச் செய்” என்பது விதி (கட்டளை ). அதில் “வாக்யம்” என்ற
ப்ரமாணத்தால் பர்ண மரம் ஜுஹூவிற்கு அங்கம் என்று உடனடியாகத் தெரிந்து விடுகிறது.
ஆகையால், அடுத்து இருக்கும் வாக்கியம் பலத்தைச் சொல்ல முடியாது, தேவை இல்லாதபடியால்.
எனவே அது வெறும் அர்த்தவாதம் தான், பர்ண மரத்தைப் புகழ்ந்து பேசுகிறது.
மேலும், “வசைச் சொல் கேட்க மாட்டான்” என்று வருங்காலத்தில் சொன்னால் தான் அது பலம்
ஆகும், “கேட்கவில்லை” என்று நிகழ் காலத்தில் வேதம் சொல்லி யுள்ள படியால் அது பலம் ஆகாது –

விநியோக ப்ருதக்த்வம் நியாயம்

உத்பத்தி வாக்கியம் -அக்னி ஹோத்ரம் செய்
பலம் -சுவர்க்கத்தில் ஆசை இருந்தால் இத்தைச் செய்
சுவர்க்கம் -பலம் -கரணம்-அக்னி ஹோத்ரம் – –
எதற்க்கா எப்படி எத்தைக் கொண்டு -மூன்றும் உண்டே
தயிரைக் கொண்டு செய் பாலைக் கொண்டு செய் இதி கர்தவ்யம் -விகல்பம் -தனித்தனி வாக்கியம் –
ஆசைப்படி ஏதாவது ஒன்றை வைத்து செய்யலாம்
எதை வைத்து செய்கிறோமோ வாழ் நாள் முழுவதும் செய்ய வேண்டும்
இந்திரியங்கள் நன்றாக இருக்க ஆசை கொண்டவன் தயிரைக் கொண்டு ஹோமம் -இதுவும் ஒரு வாக்கியம் உண்டே

தர்ச பூர்ண மாச யோகம் சமஸம் கொண்டு நித்ய பிரயோகம்
காம்ய -கோதோஹனம் கொண்டு -இப்படி இருப்து வேறே அங்கே
ஆனால் இங்கு தயிரை வைத்தே நித்ய காம்ய இரண்டுக்கும் சொல்கிறது
சன்யோக ப்ருதக்த்வம்-விநியோக ப்ருதக்த்வம் -இதுவே

அங்கம் என்று போதித்தலுக்கு விநியோகம் செய்தல் என்று பெயர்.
ஒரே செயல் அல்லது பொருள் பல விதி வாக்கியங்களால் பலவற்றுக்கு அங்கமாக விதிக்கப்படலாம்.
இதற்கு விநியோக ப்ருதக்த்வம் என்று பெயர்.
அந்தப் பொருள் அவை அனைத்துக்கும் உதவும் ஸாமர்த்யம் உடையதாக ஆகும்.
• எடுத்துக் காட்டு – அக்நி ஹோத்ரம் என்பது நித்ய கர்மம்.
அதைச் செய்ய தயிர் என்ற த்ரவ்யத்ஸத அங்கமாக விதிக்கிறது வேதம்
“தயிரால் ஹோமம் செய்” என்ற கட்டளையால். ஆகவே, எந்த பலத்திலும் ஆசை இல்லாத போதும்,
நித்ய கர்மமாக அக்நி ஹோத்ரத்தை ஒருவன் செய்யும் போது, தயிர் அந்த ஹோமத்திற்கு அங்கம் ஆகும்.
• அதே சமயம், “அக்நி ஹோத்ரத்தில் உபயோகிக்கப்பட்ட தயிரால் இந்த்ரியங்களின் நலனை அடையலாம்” என்று
மற்ற ஓரு வேத வாக்கியம் கூறுகிறது. இதில், இந்த்ரியங்களின் நலனைக் குறித்துச் செய்யும் முயற்சியில்
தயிர் கருவியாக விதிக்கப்பட்டபடியால், தயிர் அந்த பலனுக்கு அங்கம் ஆகிறது.
இங்கு அக்நி ஹோத்ரம் பலத்தைக் கொடுக்கவில்லை , தயிர் தான் பலத்தைக் கொடுக்கும் கருவி ,
ஆனால் வெறும் தயிருக்கு அது ஒட்டாத காரணத்தால் அக்நி ஹோத்ர ஹோமம் அதன் வ்யாபாரமாக / ஆச்ரயமாக உள்ளது.
• இங்கு, இந்த்ரியங்களுக்காக ஒருவன் தயிரால் ஹோமம் செய்தால், தனியாக நித்ய கர்மமாக மறுபடியும்
ஹோமம் செய்யத் தேவையில்லை . சங்கல்பத்தில் தான் வேறு பாடு உண்டு இதில் –
இந்த்ரியங்களுக்கு அங்கமான தயிரே ஹோமத்துக்கும் அங்கமானபடியால் அதற்கும் உதவி விடும்.

அக்னி ஹோத்ரம் நித்யம் செய்து பாபங்களை போக்கி கொள்ளலாம்
பக்தி ஆரம்ப விரோதிகள் போக்க இவை உதவும்
ஒரே கார்யம் பாப ஷயத்துக்கும் பக்தி வளர்க்கவும் -விநியோக பிருத்தக்த்வம் இதுவே –
அதுவே ஸ்வர்க்கத்துக்கும் செய்தால் காம்ய கர்மா ஆகும்
வேதாந்த விசாரத்திலும் அங்க அங்கி பாவங்கள் -விநியோக பிருதக்த்வம் போன்றவை உபயோகிப்போம்
ஆகவே இது அடிப்படையான-தேவையான – ஞானம் தான் –

விஸ்வஜித் நியாயம்

வேதத்திலிருக்கும் விதிகள் (கட்டளைகள்) மனிதனின் முயற்சியை விதிக்கின்றன என்று பார்த்தோம்.
முயற்சி என்றால் அதற்கு மூன்று அம்சங்கள் இருக்கவேண்டும் –
இலக்கு (பலம்), கருவி (கரணம்), செயல்முறை (இதி கர்தவ்யதா).
வேதத்திலும் ஸ்வர்கம் முதலான பயன்களுக்குக் கருவியாக ஜ்யோதிஷ்டோமம் முதலான
யாகங்களையும், அவற்றின் செயல்முறையான அங்கங்களையும் விதிக்கிறது.
• ஆனால், சில இடங்களில், வேதம் ஒரு கர்மத்தைச் சொல்லி விட்டு, எந்த பலனையும் சொல்லாமல் விட்டுள்ளது.
அந்த கர்மங்களுக்கு எந்த பயன் இருக்கும் என்று மீமாம்ஸையில் சிந்திக்கப்படுகிறது.
• எடுத்துக்காட்டு – “விஸ்வஜித் யாகத்தைச் செய்” என்று கட்டளை உள்ளது.
ஆனால் இந்த யாகத்துக்கு எந்தப் பலமும் சொல்லப்பட வில்லை
• அந்த கர்மத்துக்கு புத்ரன், பசு, அந்நம், ஆரோக்யம் போன்ற எந்த பலத்தைக் கல்பித்தாலும் அதை
ஆசைப்படுபவர்கள் குறைவான படியால் இந்த யாகத்தைச் செய்யும் அதிகாரிகள் சிலரே ஆவர்.
• ஸ்வர்கம் தான் பலம் என்று கல்பித்தால் அதிகமாக அதிகாரிகள் கிடைக்கிறபடியால் யாகம் உயர்ந்தாகும்.
• ஆகையால், பயன் சொல்லப்படாத வைதிக கர்மங்களுக்கு எல்லாம் ஸ்வர்கம் தான் பலம் என்று முடிவாகிறது.
• இதற்கு விஸ்வஜித் ந்யாயம் என்று பெயர்.

ராத்ரி ஸத்ர நியாயம்

முன் சொன்ன விஸ்வஜித் ந்யாயத்துக்கு ஓர் அபவாதம் (விதி விலக்கு) இங்கு கூறப்படுகிறது.
• விதி வாக்கியத்தில் பலம் சொல்லப்படா விட்டாலும், அருகிலுள்ள அர்த்தவாதத்தில் ஒரு பலன்
பேசப்பட்டிருந்தால், அது வெறும் புகழ்ச்சிச் சொல்லாக இருந்தாலும் அந்த பலத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இது தான் இந்த விதி விலக்கு.
• எடுத்துக்காட்டு – ஜ்யோ தி:, கௌ:, ஆயு: என்ற முன்று யாகங்கஸள வேதம் விதிக்கிறது.
இவற்றுக்கு ராத்ரி சத்ரம் என்று பெயர்.
ஆனால், அவற்றுக்குப் பலத்தைச் சொல்லும் எந்த விதி வாக்கியமும் காணப்படவில்லை .
ஆனால், இந்த யாகங்களைப் புகழ்ந்து பேசும் அர்த்த வாதத்தில் “யார் எல்லாம் இந்த ராத்ரி சத்ர யாகத்தைச்
செய்கிறார்களோ அவர்கள் நிலை பெறுவார்கள்-ப்ரதிஷ்டிந்தி ” என்ற கூறப்படுகிறது.
ஆகையால், ராத்ரி சத்ர யாகத்திர்கு நிலை பெறுவது தான் பயன் என்று ஏற்கப்படுகிறது.
• இதற்கு தான் ராத்ரி சத்ர ந்யாயம் என்று பெயர்

விதி வாக்கியத்தில் பலனைச் சொல்லா விட்டாலும் அர்த்தவாதத்தில் சொல்லப்பட்ட பலனை
ஏற்றுக் கொள்வது தான் இந்த நியாயம்
அர்த்த வாதத்திலும் சொல்லப்படா விட்டால் சுவர்க்கம் பலன் என்று முந்திய விஸ்வஜித் நியாயம் படி கொள்ள வேண்டும்
பர்ண மரம் -அர்த்தவாதம் பலனைப் புறக்கணித்தோமே -யாகம் முழுமை பெறவே என்றோம்
அங்கு அங்கத்தவத்தைப் போதிக்கும் பிரமாணம் உண்டே -பர்ணம் ஜுஹுவுக்கு அங்கம்
இங்கே இப்படி இல்லாமல் மூன்று யாகங்களைச் செய் என்றதே

யோக சித்தி நியாயம்

தர்சபூர்ணமாஸம் என்பது ஆறு யாகங்களின் கூட்டம். அது நித்ய கர்மமாக விதிக்கப்படுகிறது –
“உயிரிருக்கும் வரை தர்சபூர்ண மாஸங்களைச் செய்” என்ற கட்டளையால்.
• அதே தர்சபூர்ண மாஸம், ஸ்வர்கத்திற்கு ஸாதநமாகவும் (வழியாகவும்) விதிக்கப்படுகிறது –
“ஸ்வர்கத்தில் ஆசை யிருப்பவன் தர்ச பூர்ண மாஸத்தைச் செய்யக்கடவன்” என்ற கட்டளையால்.
• அதே தர்சபூர்ண மாஸத்தைப் பற்றி மற்ற ஓரு விதி கூறுகிறது –
“தர்சபூர்ணமாஸம் ஆசைப்பட்ட பலன்கள் அனைத்துக்கும் ஸாதநம்” என்று.
இதனால், புத்ரன் பசு மழை ஆரோக்யம் போன்ற எந்த பலனுக்காகவும் தர்சபூர்ண மாஸம் செய்யலாம் என்று அறிகிறோம்.
இப்படி மூன்று வேத வாக்கியங்கள் இருப்பதால் சங்கை எழுமே –
• கேள்வி – பொதுவாக, ஒரு பொருள் பலவற்றுக்குக் காரணாமாக இருந்தால், அது அவை அனைத்தையும்
ஒரே காலத்தில் ஏற்படுத்தும். எடுத்துக்காட்டு –
ஒரு செடி இலைக்கும் பூவுக்கும் காரணமான படியால் இரண்டையுமே ஒரே காலத்தில் ஏற்படுத்தலாம்.
அதைப்போல், ஒரு முறை தர்சபூர்ண மாஸங்களைச் செய்தால் புத்ரன், பசு போன்ற பலன்கள் அனைத்தையும் பெறலாமா?
• பதில் – ஒரு முறை தர்சபூர்ண மாஸம் செய்த்தற்காக, புத்ரன் பசு என்ற அனைத்துப் பலன்களையும் பெற்றுவிட முடியாது.
வேதம் “ஆசைப்பட்ட பயனுக்கு ஸாதநம்” என்று சொன்னபடியால், எதை ஆசைப்பட்டு அம் முறை
தர்சபூர்ண மாஸத்தைச் செய்கிறோமா அந்த பலன் மட்டும் தான் கிடைக்கும்.
• இதற்கு தான் யோக ஸித்தி ந்யாயம் என்று பெயர்.

தர்ச பூர்ண மாஸங்கள் எவை -நான்காம் பாதம் -12 அதிகரணம் விஷயம் இது –

வேதம் “தர்சபூர்ண மாஸங்களால் ஸ்வர்கத்தை அடை யலாம்” என்று கூறி யுள்ளது.
இதில், தர்சபூர்ண மாஸம் என்ற சொல் எவற்றைக் குறிக்கிறது என்று சிந்திக்கப்படுகிறது.
• பூர்வபக்ஷம் – தர்சம் என்றால் அமாவாஸை , பூர்ணமாஸம் என்றால் பௌர்ணமி. அந்தந்தக் காலங்களில்
செய்யப்படும் அனைத்து யாகங்களையும் அந்தந்தச் சொல் குறிக்கிறது,
அவற்றுக்குள் வேறுபாடு ஒன்றும் இல்லாதபடியால். ஆகையால், அக்நிக்கான புரோடாச யாகங்கள் இரண்டு,
இந்த்ரனுக்கான தயிர் யாகம், இந்த்ரனுக்கான பால் யாகம், உபாம்சுயாஜம், அக்நீஷோமர்களுக்கான
புரோடாசயாகம் என்ற ஆறு மட்டுமல்ல, ப்ரயாஜங்கள் அநுயாகங்கள் ஆஜ்யபாகங்கள் என்று எவை எல்லாம்
அமாவாஸை அல்லது பௌர்ணமியன்று செய்யப்படுகின்றனவோ அவை அனைத்துமே தர்சபூர்ணமாஸம்
என்று அழைக்கப் படுகின்றன. -ஆகையால், இவை அனைத்தும் சேர்ந்து தான் ஸ்வர்கத்தைக் கொடுக்கின்றன.
இதில் உள்ள 17 யாகங்களும் அங்கி அங்க பாவம் இல்லை -அனைத்தும் சம ப்ராதான்யம் என்பர் பூர்வ பக்ஷி –
• ஸித்தாந்தம் – தர்சம் பூர்ணமாஸம் என்ற சொற்களைக் கேட்டவுடன், அந்தந்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன.
அதிலிருந்து, எந்த எந்த கர்மங்களுக்கு உத்பத்தி விதியிலேயே அமாவாஸை பௌர்ணமி என்ற காலம் சொல்லப்பட்டுள்ளதோ
அவை தான் உடனடியாக நினைவுக்கு வருகின்றன. அவை எவை எனில் – முன் சொன்ன ஆறு ப்ரதாந யாகங்கள் தான்.
ப்ரயாஜங்கள் முதலானவற்றை விதிக்கும் வாக்கியங்களில் காலம் சொல்லப்பட வில்லை .
ஆகையால், ஆறு யாகங்கள் தான் ஸ்வர்கத்தைக் கொடுக்கின்றன. மற்றவை அவற்றுக்கு உதவி செய்கின்றன
ஆறு தான் புருஷார்த்தம் -சுவர்க்கம் பலன்
மற்ற 11 க்ருத்யர்த்தம் யாகம் முழுமை பெறவே -அங்கங்களே என்று சித்தாந்தம் –

————-

பாடம் -15-
க்ரமத்தைப் போதிக்க அடுத்த ஐந்தாவது அத்யாயம் –

தர்மத்தைப் பற்றிக் கூறும் மீமாம்ஸா சாஸ்த்ரத்தில், முதல் அத்யாயத்தில்
தர்மத்தைப் போதிக்கும் ப்ரமாணங்கள் சொல்லப்பட்டன. அதற்குப் பிறகு, மூன்று அத்யாயங்களால்
ஜைமிநி மஹரிஷி தர்மத்தைப் பற்றி விளக்கினார்.
இரண்டாவது அத்யாயத்தில் கர்மங்களின் வேறுபாடு என்னும் பேதத்தையும்,
மூன்றாம் அத்யாயத்தில் அங்கத்வம் என்பதையும்,
நான்காவது அத்யாயத்தில் ப்ரயுக்தி என்பதையும் கூறுவதன் மூலம்,
அநுஷ்டேயம் அதாவது செய்யப்பட வேண்டிய செயல்களைக் கூறினார்.
• இனி, அநுஷ்டிக்கப் பட வேண்டிய செயல்கள் தெரிந்தவுடன், அடுத்து ஏற்படும் எதிர்பார்ப்பு –
“இவற்றை எந்த வரிசையில் செய்ய வேண்டும்?” என்பது தான்.
ஆகையால், அடுத்திருக்கும் ஐந்தாம் அத்யாயத்தில், அந்தச் செயல்களை எந்த க்ரமத்தில்
(வரிசையில்) செய்ய வேண்டும் என்பதை விளக்குகிறார்.

• ஒவ்வொரு வைதிகச் செயலிலும் க்ரமத்தைச் சொல்லித் தலைக் கட்ட முடியாதபடியாலும்,
அப்படிச் செய்வதன் மூலம் மாணவர்களுக்குத் தானாகச் சிந்திக்கும் திறமை ஏற்படாது என்பதாலும் ,
ஜைமிநி மஹரிஷி நேரடியாக செயல்களின் வரிசையைத் தெரிவிக்காமல்,
க்ரமத்தைக் காட்டிக் கொடுக்கும் ஆறு ப்ரமாணங்களையும்,
அவற்றின் வலிமைகளையும் காட்டுகிறார் இந்த அத்யாயத்தில்.

பிரயோக விதி –

• கீழ் பாடங்களில் உத்பத்தி விதி, அதிகார விதி, விநியோக விதி மற்றும் ப்ரயோக விதி என்று
நான்கு வகையான விதிகளைப் பார்த்தோம்.
அதிகார விதி, -ப்ரயோஜனங்களைச் சொல்லும் இது மேல் ஆறாம் அத்தியாயத்தில் பார்ப்போம்
விநியோக விதி -அங்கங்களைப் போதிக்கும் –
• அதில் முதல் மூன்று வகையான விதிகள் புதிதான கர்மங்களையும்,
அவற்றின் பயன்களையும், அவற்றின் அங்கங்களையும் அறிவிக்கின்றன, ஆனால் செய்விப்பதில்லை .
நான்காவதான ப்ரயோக விதி தான் “அனைத்து அங்கங்களோடும் கூடின ப்ரதான கர்மத்தைச் செய்” என்று நமக்கு
விதிப்பதன் மூலம் ப்ரயோகம் என்று அழைக்கப்படும் அநுஷ் டானத்தை ஏற்படுத்துகிறது.
ஆகையால் இதற்குப் ப்ரயோக விதி என்று பெயர்.
• ப்ரயோக விதி என்று ஒன்று தனியாகக் கிடையாது. அங்கங்களைப் போதிக்கும் அனைத்து வாக்கியங்களோடும்
சேர்ந்த ப்ரதான வாக்கியம் தான் ஒரு மஹா வாக்கியமாக ஆகி ப்ரயோக விதி என்று அழைக்கப் படுகிறது.
• தர்சபூர்ணமாஸம் என்ற ப்ரதானத்தை விதிக்கும் வாக்கியம் – “ஸ்வர்கத்தில் ஆசை இருப்பவன்
தர்சபூர்ணமாஸத்தைச் செய்யக்கடவன்” என்பது.
அதன் அங்கங்களான ப்ரயாஜங்கள், அநுயாஜங்கள், ஸ்விஷ்டக்ருத்,
முதலானவற்றை விதிக்கும் வாக்கியங்கள் தனித்தனியாக உள்ளன.
• இவை அனைத்தும் சேர்ந்து, “ப்ரயாஜங்களைச் செய்து, அநுயாஜங்களைச் செய்து
ஸ்விஷ்டக்ருத் செய்து, ப்ராசித்ர பக்ஷணம் செய்து, இடா பக்ஷணம் செய்து, பலீகரண ஹோமம் செய்து,
ப்ராயச்சித்த ஹோமங்கள் செய்து, இவ்வாறு தர்சபூர்ணமாஸங்களைச் செய்து ஸ்வர்கத்தை அடைவாய்” என்ற
மஹாவாக்யம் தான் அங்களோடு கூடின ப்ரதானத்தைச் செய்யும்படி விதிக்கிறபடியால் ப்ரயோக விதி ஆகிறது.

க்ரமம் என்றால் என்ன

• இப்படி அங்கங்களோடு கூடின ப்ரதானத்தைச் செய்ய வேண்டும் என்று சொல்லும்போது,
அந்த கூட்டு / சேர்க்கை என்பது ஒரே காலத்தில் அவை அனைத்தையும் அநுஷ்டித்தால் தான் ஏற்படும்,
தனித்தனியாகச் செய்யப்பட்ட செயல்களைச் சேர்ந்து செய்யப்பட்டன’ என்று உலகில் சொல்லாதபடியால்.
ஆகையால், அங்கங்களையும் ப்ரதானங்களையும் ஒரே நொடியில் செய்ய வேண்டும் என்று ஆகிறது.
•ஆனால் இது அஸாத்யமான செயல் ஆகும். ஆகையால், சற்று தளர்த்தி, “இடைவிடாமல் செய்யவேண் டும்”
என்று இந்த ப்ரயோக விதி நமக்குக் காட்டுகிறது.
ஆகையால், வைதிக கார்யங்களைச் செய்யும்போது இடையில் லௌகிக கார்யங்களைச் செய்வது தவறு.
• இடைவிடாமல், தாமதமில்லாமல் செயல்களை அடுத்தடுத்துச் செய்யவேண்டும் என்றால்,
அவற்றைச் செய்யவேண்டிய வரிசையை நாம் முன்னமே முடிவு செய்திருக்க வேண்டும்,
இல்லை என்றால் ஸந்தேகத்தால் தாமதம் ஏற்படும். ஆகையால் தான் ப்ரயோக விதி க்ரமத்தையும் விதிக்கிறது.
• க்ரமம் என் றால் பௌர்வாபர்யம் – முன் பின் தன்மை . “இந்தச் செயலுக்கு அடுத்து இந்தச் செயல்
செய்யப்பட வேண்டும்” என் பது தான் க்ரமம்/ வரிசை என்று அதழக்கப்படுகிறது.
• க்ரமத்தை போதிக்கும் ப்ரமாணங்கள் ஆறு –
(1) ச்ருதி (2) அர்த்தம் (3) பாடம் (4) ஸ் தாநம் (5) முக்யம் (6) ப்ரவ்ருத்தி என்பவை தான் அவை

ஸ்ருதி க்ரமம்

க்ரமத்தை நேரடியாகக் கூறும் சொற்கள் தான் க்ரமத்தை போதிக்கும் முதல் ப்ரமாணமான
’ச்ருதி’ என்று அழைக்கப்படுகின்றன.
’இது முதலாவது’, ’இது பத்தாவது’ என்று தனிச் சொற்களாலும் க்ரமம் சொல்லப் படலாம்.
அல்லது, “இதைச் செய்துவிட்டு இதைச் செய்” என்பது போல் ’விட்டு’ என்ற ஒரு விகுதியாலும் கூறப்படலாம்.
ஏதோ ஒரு வகையில் ஒரு வரிசையைக் காட்டும் எந்தச் சொல்லும் ச்ருதி ப்ரமாணம் ஆகும்.
• இந்த ச்ருதி இரண்டு வகைப்படும் –
• (1) முன்னமே தெரிந்த செயல்களின் க்ரமத்தை மட்டும் போதிப்பவை –
வேதம் என்ற தர்ப்ப-கட்டைச் செய்ய வேண்டும் என்பதும்,
கார்ஹபத்யத்துக்கும் ஆஹவநீ யத்துக்கும் இடையிலுள்ள்ள வேதி என் ற
பூமியைத் தயார் செய்ய வேண்டும் என்பதும் தனித்தன வாக்கியங்களால் விதிக்கப்பட்டுள்ளன.
ஆகையால் அவை நமக்குத் தெரிந்த செயல்கள். இப்படி இருக்க, “வேதத்ததச் செய்துவிட்டு வேதியைச் செய்”
என்ற வேத வாக்கியம் அவற்றுக்குள் இருக்கும் க்ரமத்தை மட்டும் போதிக்கிறது.
• (2) க்ரமத்தோடு கூடின ஒரு புதுச் செயலை போதிக்குமவை –
ஸோம யாகத்தில் யாகம் முடிந்தவுடன் மீதமிருக்கும் ஸோம ரஸத்தை ரித்விக்குகள் பருக வேண்டும்.
அதில், யாகம் செய்யும் போது யார் ’வௌஷட்’ என்று வஷட்காரம் சொன்னாரோ , அவரும் அந்த ரஸத்தைப்
பருக வேண்டும் என்றும், அவர்தான் முதலில் பருக வேண் டும் என்றும் ஒரே வாக்கியம் கூறுகிறது
“வஷட்காரம் செய்தவருக்கு முதல் பக்ஷணம்” என்று.
• இந்த ச்ருதி ப்ரமாணம் மற்றவற்றைக் காட்டிலும் வலியை யுடையது, அவற்றை
எதிர்பார்க்காமல் க்ரமத்தை போதிக்கிறபடியால்

அர்த்த க்ரமம்

அர்த்தம் என்றால் ப்ரயோஜநம் என்று பொருள். ஒரு செயலின் ப்ரயோஜநத்தைக் கருதி அதன் க்ரமத்தை
முடிவு செய்தால் அதற்கு அர்த்தக்ரமம் என்று பெயர்.
• “அக்நி ஹோத்ர ஹோமத்தைச் செய்” என்று ஒரு வேத வாக்கியம் விதிக்கிறது. அதற்குப் பிறகு உள்ள ஒரு வாக்கியம்
“அரிசிக்கஞ்சியை சமைப்பாய்” என்று கூறுகிறது. “அரிசிக் கஞ்சியால் அக்நி ஹோத்ரம் செய்ய வேண் டும்” என்ற
வேறு ஓரு வாக்கியம், அக்நிஹோத்ரத்தில் கஞ்சியைப் பயன் படுத்த வேண் டும் என்று கூறுகிறது.
• வாக்கியங்களின் வரிசையைப் பார்த்தால், அக்நி ஹோத்ரத்தைச் செய்து விட்டு தான் கஞ்சியைச் சமைக்கவேண் டும்.
ஆனால் அப்படிச் செய்தால், கஞ்சியால் அக்நிஹோத்ரத்துக்கு எந்த ஒரு த்ருஷ் டமான பயனும் இருக்க முடியாதபடியால்,
கஞ்சி சமைப்பதால் ஏற்படும் புண்ணியம் அக்நி ஹோத்ரத்துக்கு உதவுகிறது என்று அத்ருஷ்டத்தை
/ அபூர்வத்தை / புண்ணியத்தைக் கல்பித்தே ஆக வேண்டும்.
• கஞ்சியை முன்னால் சமைத்து, அக்நிஹோத்ரத்தைப் பின்னால் செய்தால், அக்நிஹோத்ரம் செய்ய ஒரு த்ரவ்யம்
தேவைப்படும் போது இந்தக் கஞ்சியையே பயன் படுத்தலாம் ஆகையால் த்ருஷ் டமான
ப்ரபயோஜநம் கிடைக்கும் கஞ்சிக்கு. இதுதான் சிறந்தது.
• ஆகையால், கஞ்சியின் ப்ரயோஜநத்தை மனதில் கொண் டு,
“கஞ்சியைச் சமைத்த பிறகு அக்நிஹோத்ரம் செய்ய வேண் டும்” என்று க்ரமத்தை முடிவு செய்கிறபடியால்
இதற்கு அர்த்த க்ரமம் என்று பெயர்.

பாட க்ரமம்

பாடம் என்றால் படித்தல். செயல்களைப் பபோதிக்கும் வாக்கியங்கள் வேதத்தில் எந்த வரிசையில் படிக்கப் பட்டுள்ளனவோ
அதே வரிசையில் அந்தச் செயல்களைச் செய்வதற்கு பாட க்ரமம் என்று பெயர்.
• இது இரண்டு வகைப்படும் – (1) ப்ராஹ் மண பாட க்ரமம் (2) மந்த்ர பாட க்ரமம்.
வேதத்தை ப்ராஹ் மணம் என்றும் மந்த்ரம் என்றும் இரண்டாகப் பிரிப்பர்.
ப்ராஹ்மணம் என்றால் “இத்தைச் செய்” என்று கட்டளையிடும் வாக்கியம்.
மந்த்ரம் என்றால், ப்ராஹ் மணத்தால் விதிக்கப்பட்ட கர்மத்தைச் செய்யும் போது நாம் உச்சரிக் வேண்டிய வாக்கியம்.
• (1) ப்ராஹ் மண பாட க்ரமம் – எந்த வரிசையில் ப்ராஹ்மண வாக்கியங்களால் செயல்கள் விதிக்கப்பட்டுள்ளனவோ ,
அதே வரிசையில் அவற்றைச் செய்தல்.
• எடுத்துக்காட்டு – “ஸமித் யாகத்தைச் செய்”, “தநூநபாத் யாகத்தைச் செய்”, “இட் யாகத்தைச் செய்”, “பர்ஹிஸ் யாகத்தைச் செய்”,
“ஸ் வாஹாகார யாகத்தைச் செய்” என்ற ஐந்து ப்ராஹ் மண வாக்கியங்கள் (கட்டளைகள்) ப்ரயாஜங்கள் என்று அழைக்கப்படும்
ஐந்து யாகங்களை விதிக்கின்றன. அவற்றை எந்த க்ரமத்தில் செய்ய வேண் டும் என்ற கேள்வி எழும் போது, எந்த வரிசையில்
கட்டளைகள் படிக்கப்பட்டுள்ளனவோ அதே வரிசையில் செய்வது உசிதமானபடியால், ஸமித் தநூநபாத் இட் பர்ஹிஸ் ஸ்வாஹாகாரம்
என்ற இந்த வரிசையில் தான் யாகங்கள் செய்யப்பட வேண்டும்.-இதற்கு ப்ராஹ் மண பாட க்ரமம் என்று பெயர்.

மந்த்ர பாட க்ரமம்

(2) மந்த்ர பாட க்ரமம் – ப்ராஹ்மண வாக்கியங்களைக் காட்டிலும் மந்த்ரங்கள் அநுஷ்டானத்துக்கு
நெருக்கமானவை – (அந்தரங்கமானவை ).
• ப்ராஹ்மண வாக்கியங்கள் “இத்தைச் செய் ” என்று கட்டளை இட்டுவிட்டு விலகி விடுகின்றன.
அநுஷ்டான வேளையில் அவற்றுக்கு உபயோகம் இல்லை –
ஆனால் மந்த்ரங்கள்தான் அநுஷ்டானம் செய்யும் போது எப்பொழுதும் உச்சரிக்கப்படுகிறபடியால் மிகவும் நெருக்கமானவை .
• ஆகையால், ப்ராஹ்மண வாக்கியங்களில் செயல்கள் கட்டளை யிடப்பட்ட வரிசைக்கும்,
அந்தச் செயல்களுக்கான மந்த்ரங்கள் படிக்கப்பட்டுள்ள வரிசைக்கும் விரோதம் இருந்தால்,
அநுஷ்டானத்துக்கு நெருக்கமான மந்த்ரங்களின் வரிசையில் (க்ரமத்தில்) தான் செயல்களைச் செய்ய வேண்டும்.
இதற்கு தான் மந்த்ர பாட க்ரமம் என்று பெயர்.
• எடுத்துக்காட்டு – தர்சபூர்ணமாஸம் என்ற கர்மத்தில் பௌர்ணமி அன்று ஆக்நேயம், உபாம்சுயாஜம், அக்நீ ஷோமீயம்
என்று மூன்று யாகங்கள் செய்யப்பட வேண் டும்.
அதில், வேதம் கட்டளையிடும் போது, முதலில் “அக்நீ ஷோமீயத்தைச் செய்” என்றும்
பின்னால் ஒரு வாக்கியத்தில் “ஆக்நேயத்தைச் செய்” என்றும் சொல்லியுள்ளது.
ஆனால், அந்தந்த யாகத்தைச் செய்யும் போது சொல்ல வேண்டிய மந்த்ரங்களைச் சொல்லும் போது,
முதலில் ஆக்நேய யாகத்தின் மந்த்ரமும் பிறகு அக்நீ ஷோமீயத்தின் மந்த்ரமும் படிக்கப்பட்டபடியால்
ஆக்நேயம் செய்த பிறகு தான் அக்நீஷோமீயம்.

————

பாடம் -16-ஸ்தான க்ரமம் –

ஐந்தாம் அத்யாயத்தில்
முதல் பாதத்தில் ஆறு பிரமாணங்கள் க்ரமத்தைப் போதிக்கும்
இரண்டாம் பாதம் -அவற்றின் சிறப்பு விசேஷங்கள் -சங்கை போக்க –
மூன்றாம் பாதம் -வ்ருத்தி அவர்த்தனம் -செயல் வளர்ச்சி குறைவு பற்றி –
நான்காம் -பலம் பொருந்தியவை எவை என்று சொல்லும்

க்ரமத்தைப் போதிக்கும் பிரமாணங்களுக்குள் நான்காவது ஸ்தாநம்–
ஸ்தாநம் என்றால் உபஸ்திதி / நினைவு என்று பொருள். பல செயல்களை ஒரே காலத்தில் செய்ய வேண்டிய போது,
எது தவறாமல் முதலில் நினைவுக்கு வருகிறதோ அதை முதலில் செய்வதற்குத் தான் ஸ்தாந க்ரமம் என்று பெயர்.
• எடுத்துக்காட்டு – ஸோம யோகம் ஐந்து நாட்கள் செய்யப் படுவது.
அதில் தைக்ஷம் என்ற யோகம் நான்காவது நாளிலும், ஸவநீயம் என்ற யாகம் ஐந்தாவது நாள் நடுவிலும்,
ஆநு பந்த்யம் என்ற யாகம் ஐந்தாம் நாள் இறுதியிலும் செய்யப்பட வேண்டும்.
• மற்ற ஓரு ஸோம யாகத்தில் இந்த மூன்று யாகங்களையும் சேர்த்து ஒரே காலத்தில் செய்ய வேண்டும் என்று சொல்கிறது.
அப்பொழுது எந்த யாகத்தின் இடத்தில் மூன்றையும் செய்யலாம் என்று பார்த்தால், பிரதாந யாகமான ஸோம யோகத்துக்கு
அருகிலுள்ள படியாலும், ஸ்தாந அதிக்ரமம் (தங்கள் தங்கள் இடத்தை விட்டு நகருதல்) குறைவாக உள்ள படியாலும்,
நடுவான ஸவநீயம் என்ற யாகத்தின் இடத்தில் தான் செய்ய வேண்டும்.
• அப்படி ஸவநீய யாகத்தின் இடத்தில் மூன்று யாகங்களையும் செய்யும் போது எதை முதலில் செய்ய வேண் டும்
என்ற கேள்வி எழும் பொழுது, அவ்விடத்தில் முதலில் ஸவநீயம் தான் நினைவுக்கு வரும் –
ஆகையால் அதைச் செய்து விட்டு, பிறகு தைக்ஷத்தையும் ஆநு பந்த்யத்தையும் செய்ய வேண்டும்.
இது தான் ஸ்தாந க்ரமம் –

முக்ய க்ரமம் –
•முக்யம் என்றால் பிரதாநம் என்று பொருள் .
சேர்த்து செய்யப்படும் பிரதாந யாகங்களின் வரிசையில் அவற்றின் அங்கங்களைச் செய்வதற்கு முக்ய க்ரமம் என்று பெயர்.
•பிரயோக விதியில் ’அங்கங்களோடு கூட பிரதாந யாகத்தைச் செய் ’ என்று சொன்ன படியால்
அங்கங்களையும் பிரதாநத்தையும் சேர்த்துச் செய்ய வேண்டும். அது முடியாத படியால் இடைவிடாமல் செய்ய வேண்டும்.
அதுவும் முடியா விட்டால் ஸமமான ஆனால் குறைவான இடைவெளி விட்டுச் செய்ய வேண்டும்.
அதற்காகத் தான் முக்ய க்ரமம் பின் பற்றப் படுகிறது.
• பிரதாநம் 1 பிரதாநம் 2 என்று இரண்டு பிரதாநங்களும், அவற்றுக்கு அங்கம் 1 அங்கம் 2 என்று இரண்டு அங்கங்களும் இருந்தால்,
அங்கம் 1 – அங்கம் 2 – பிரதாநம் 1 – பிரதாநம் 2 என்ற வரிசையில் செய்தால் தான் ஒவ்வொரு அங்கத்துக்கும் அதன் பிரதாநத்துக்கும்
ஸமமான இடைவெளி இருக்கும். இது தான் முக்ய க்ரமம்.
• இதை மாற்றி, அங்கம் 2 – அங்கம் 1 – பிரதாநம் 1 – பிரதாநம் 2 என்று செய்தால் ,
முதல் அங்கத்துக்கும் முதல் பிரதாநத்துக்கும் இடைவெளியே இல்லாமலும், இரண்டாம் அங்கத்துக்கும் இரண்டாம் பிரதாநத்துக்கும்
அதிக இடைவெளியும் உள்ள படியால், பிரயோக விதியில் சொல்லப் பட்ட இடைவிடாமையைத் தகர்த்த தாகும்–
எடுத்துக்காட்டு –
தர்ஸ பூர்ணமாஸத்தில் பிரயாஜங்கள் செய்து மீதமிருக்கும் நெய்யை மூன்று பிரதாந யாகங்களின்
ஹவிஸ்ஸுகளிலும் சேர்க்கும் போது, அந்த பிரதாந யோகங்களைச் செய்யப் போகும் க்ரமம் எதுவோ
அதே க்ரமத்தில் செய்ய வேண்டும்.
• இந்த முக்ய க்ரமத்தில், பிரதாநங்களின் க்ரமத்தை அறிந்தால் தான் அங்கங்களின் க்ரமத்தை அறியலாம் என்பதால்
இது நேரடியாக அங்கங்களின் க்ரமத்தைச் சொல்லும் பாட க்ரமத்தைக் காட்டிலும் துர் பலமானது.
• எடுத்துக்காட்டு –
தர்ஸ பூர்ண மாஸத்தில் பவ்ர்ணமி அன்று ஆக்நேயம், உபாம்சுயாஜம், அக்நீ ஷோமீயம் என்ற மூன்று
யாகங்கள் இதே வரிசையில் செய்யப் படுகின்றன. ஆகையால்,முக்ய க்ரமத்தின் படி பார்த்தால் இதே வரிசையில் தான்
அந்தந்த யாகத்துக்கு வேண்டிய த்ரவ்யத்தை (நெல், நெய், நெல்) நிர்வாபம் செய்ய வேண்டும்
(மூட்டை / பாத்திரத்திலிருந்து யாகத்துக்குத் தேவையான அளவை மட்டும் எடுத்து வைத்தல்) நிர்வாபம் ஆகும்).
ஆனால், மந்த்ரங்களைப் படிக்கும்பொழுது ஆக்நேயத்துக்கும் அக்நீ ஷோமீயத்துக்கும் நிர்வாபம் செய்வதை அடுத்தடுத்து
வேதம் சொல்லியுள்ள படியால், பாட க்ரமத்தால் ஆக்நேயத்துக்கு, பிறகு அக்நீ பஷோமீயத்துக்கு, பிறகு உபாம்சுயாஜத்துக்கு
என்று தான் நிர்வாபம் செய்யவேண்டும்.

ப்ரவ்ருத்தி க்ரமம்
ஒரே காலத்தில் பல யாகங்கள் செய்யப்படும் போது அனைத்து ஹவிஸ்ஸுகளுக்கும் ஒரே ஸம்ஸ்காரங்களைச்
செய்யும் பொழுது, முதல் ஸம்ஸ்காரத்தை த்ரவ்யங்களின் எந்த க்ரமத்தில் செய்தோமோ அதே
க்ரமத்தில் தான் இரண்டாவது முதலான ஸம்ஸ் காரங்களையும் செய்யவேண்டும். இதுவே பிரவ்ருத்தி க்ரமம்.
• எடுத்துக்காட்டு – பிரஜா பத்யம் என்ற கர்மத்தில் பிரஜாபதி என்ற தேவதைக்கு
ஒரே ஸமயத்தில் 17 யாகங்கள் செய்யப் பட வேண் டும்.
ஒவ்வொரு யாகத்திற்கும் தனித்தனியாக ஒரு த்ரவ்யத்தை தயார் செய்யவேண்டும்.
அவற்றுக்குச் செய்யும் ஸம்ஸ் காரங்களையும் தனித்தனியாக செய்யவேண்டும்.
• அதில், முதல் த்ரவ்யத்துக்கு அனைத்து ஸம்ஸ் காரங்களையும் முடித்துவிட்டு பிறகு அடுத்ததுக்கு அனைத்ததையும்
செய்தால் சில அங்கங்கள் தங்கள் பிரதாநங்களிலிருந்து வெகு தொலைவிலும் ,
சில வெகு அருகிலும் இருக்குமாகையாலே அப்படி செய்யாமல், முதல் ஸம்ஸ்காரத்தை அனைத்து த்ரவ்யங்களுக்கும்
செய்துவிட்டு, பிறகு இரண்டாவது ஸம்ஸ்காரத்தைத் தொடங்க வேண்டும்.

இது முக்ய க்ரமம் விட துர்லபம்
தயிர் தயார் பண்ண முன்பே தொடங்க வேண்டும்
ப்ரவ்ருத்தி க்ரமம் படி தயிருக்கு உள்ளவற்றை எல்லாம் பண்ணி தோசை பால் செய்யாமல் இல்லாமல்
தயிர் உண்டு செய்ய வேண்டியதை மட்டுமே செய்து விட்டு
அக்னிக்கு தோசை -இந்திரனுக்கு தயிர் -இந்திரனுக்கு பால் -இந்த க்ரமத்திலே செய்ய வேண்டும்

• அப்படி இரண்டாவது ஸம்ஸ்காரம் செய்யும் பொழுது, ஏதோ ஒரு வரிசையில் 17 த்ரவ்யங்களுக்கு அதைச் செய்தால்,
மறுபடியும் அந்தந்த த்ரவ்யத்தின் அடுத்தடுத்த ஸம்ஸ்காரங்களுக்குல்ள் உள்ள இடைவெளி மாறிவிடும்.
ஆகையால், த்ரவ்யங்களின் எந்த வரிசையில் முதல் ஸம்ஸ்காரம் செய்யப் பட்டதோ அதே வரிசையில் தான்
இரண்டாவதையும் செய்ய வேண்டும். இது தான் பிரவ்ருத்தி க்ரமம் ஆகும்

உத்கர்ஷம் அபகர்ஷம்
வேதத்தில் சில இடங்களில், ஒரு காலத்தில் செய்யப்பட வேண்டிய செயலை சற்று
தாமதித்து, பின் ஒரு காலத்தில் செய்யச் சொல்கிறது. இதற்கு உத்கர்ஷம் என்று பெயர்.
•அதே போல் , ஒரு காலத்தில் செய்யப்பட வேண்டிய செயலை முன்னால் இழுத்து,
முன் ஒரு காலத்திலேயே செய்யச் சொல்கிறது – இதற்கு அப கர்ஷம் என்று பெயர் –

பதார்த்த அநு சமயம் -காண்ட அநு சமயம்
பல த்ரவ்யங்களுக்கு ஒரே ஸம்ஸ்காரத்தைச் செய்யும் இடத்தில், முதல் ஸம்ஸ்காரத்தை அனைத்துக்கும்
செய்துவிட்டு, பிறகு அடுத்த ஸம்ஸ்காரத்தைத் தொடங்க வேண்டும் என்று பார்த்தோம்.
• பவ்ர்ணமி அன்று இரண்டு புரோடாசங்கள் தேவைப்படுகின்றன .
முதலுக்கு நெல்லை எடுத்தல், இரண்டாவதுக்கு நெல்லை எடுத்தல், முதலுக்கு நெல்லை ப்ரோக்ஷித்தல்,
இரண்டாவதுக்கு நெல்லை ப்ரோக்ஷித்தல், முதலுக்கு நெல்லைக் குத்துதல், இரண்டாவதுக்கு
நெல்லைக் குத்துதல் என்ற வரிசையில் தான் செய்யவேண் டும்.
இதற்கு பதார்த்த அநுஸமயம் என்று பெயர்.
பதார்த்தம் என்று அழைக்கப்படும் ஒவ்வொரு செயலையும் அனைத்துக்கும்
செய்துவிட்டு அடுத்த செயலைச் செய்கிற படியால்.

• நெல்லைக் குத்துதல் என்ற ஒரு செயலுக்குள் மான் தோலை விரித்தல் -உரலை வைத்தல் நெல்லைச் சேர்த்தல்
என்று பல கார்யங்கள் உள்ளன. அவற்றையும் பதார்த்த அநுஸமயமாகச் செய்ய வேண்டுமோ? என்றால் – அல்ல.
நெல்லைக் குத்துவது என்ற ஒரு முழுமையான செயல் ஸாஸ்த்ரத்தில் விதிக்கப்பட்டுள்ளது,
ஆகையால் அதத முழுவதுமாக ஒரு த்ரவ்யத்துக்கு முடித்துவிட்டு தான் அடுத்ததுக்குச் செல்லலாம்.
இதற்கு காண்ட அநுஸமயம் என்று பெயர்.
ஒரு காண் டத்தில் சொல்லப் பட்டது போலே ஒரே செயலின் பகுதிகளான அங்கங்கள் அனைத்தையும்
சேர்த்துத் தான் செய்யவேண்டும்.

விவ்ருத்தி
• சில இடங்களில் கர்மங்களை வளர்க்க வேண்டும் என்று வேதம் சொல்லும்.
வளர்ப்பது மீண் டும் மீண் டும் அநுஷ்டிப்பதால் தான்.இதற்கு ஆவ்ருத்தி என்று பெயர்.
• தர்ச பூர்ண மாஸங்களில் 5 பிரயாஜங்கள் சொல்லப்பட்டு உள்ளன –
வேறே ஒரு . யாகத்தில் 11 பிரயாஜங்கள் செய்ய வேண்டும் என்று சொல்லப் படுகிறது
ஐந்தை வைத்துக் கொண்டு பதினொன்று என்ற எண்ணை எப்படிச் செய்வது என்றால் ஒவ்வொரு
பிரயாஜத்தையும் இரு முறை செய்து, கடைசி பிரயாஜத்தை மட்டும் மும்முறை செய்தால் 11 முறை
பிரயாஜம் செய்ததாக ஆகும்
• அப்படி செயல்களை ஆவ்ருத்தி செய்யும் பொழுது, ஒரு முறை ஐந்தையும் முடித்துவிட்டு, பிறகு
ஐந்தையும் செய்தால் அதற்கு தண்ட-கலிதவத்-ஆவ்ருத்தி என்று பெயர்.
அதோவது 1 2 3 4 5 1 2 3 4 5 5 என்ற வரிசையில் பிரயாஜங்களைச் செய்தல்.
•ஆனால் இப்படிச் செய்தால் ’முதல் பிரயாஜத்துக்கு அடுத்து இரண்டாவது பிரயாஜம்’ என்ற க்ரமம் பாதிக்கப்படும்.
ஆகையால், இப்படிச் செய்யாமல் தன் தன் இடத்திலேயே அந்தந்த பிரயாஜத்தை ஆவ்ருத்தி செய்ய வேண்டும்.
அதாவது 1 1 2 2 3 3 4 4 5 5 5 என்ற வரிசையில் செய்ய வேண்டும்.
இதற்கு ஸ்வ-ஸ்தாந விவ்ருத்தி என்று பெயர்.

——–

பாடம் –17-ஆறாம் அத்யாயம் -அதிகாரம்

கீழ் ஐந்து அத்யாயங்களில் அநுஷ் டிக்கப்படவேண்டிய கர்மங்ள் எல்லாம் சொல்லப்பட்டன,
அவற்றைச் செய்யவேண்டிய வரிசையும் சொல்லப்பட்டன. அடுத்து இயற்கையாக ஏற்படும் எதிர்பார்ப்பு –
“இவற்றைச் செய்யப்போகுமவர்(அநுஷ் டாதா) யார்?” என்ற கேள்வி எழுகிறபடியால், அதிகாரம்
என்பதை அடுத்திருக்கும் ஆறாவது அத்யாயத்தில் கூறுகிறார் மஹர்ஷி ஜைமிநி
• அதிகாரம் என்றால் பல-ஸ் வாம்யம் அதாேது பலத்தை அநுபவித்தல் என்று பொருள்.
ஒரு யாகத்தின் பலத்தை அநுபவிப்பவன் தானே அதைச் செய்ய முயற்சிப்பான்.
ஆகையால், பலத்தை அநுபவிப்பது தான் அதிகாரம் ஆகும்.
•ஆனால் இப்படிச் சொன்னால் , மகன் செய்யும் ஸ்ரார்தத்தின் பலத்தை அநுபவிக்கும் பித்ருக்களுக்கு
அதிகாரம் கிடைத்து விடும், மகனுக்குக் கிடைக்காது. ஆகையால், பலத்தின் அநுபவமும், யாகம்
என்கிற செயலும் எவரிடம் உள்ளதோ அவரே அதிகாரி என்று மாற்றிக் கொள்ள வேண் டும்.
•ஆனால், அப்படிக் கொண்டாலும், மகனின் நலனுக்காக செய்யப்படும் ஜாதேஷ்டி என்ற யாகத்தில்
தந்தைக்கு அதிகாரம் இல்லாமல் போகும், அவர் பலத்தை அநுபவிக்காதபடியால்.
ஆகையால், யாகத்தில் முயற்சிக்குக் காரணமான பலத்தைப் பற்றின ஆசையும்,
யாகம் என்கிற செயலும் எவரிடத்திலுள்ளனவோ அவரே அதிகாரி ஆவார்.

சொல்லப் படாத அதிகாரங்கள்

யாகம் முதலான வைதிக கர்மங்ளைச் செய்ய, மூன்று அடிப்படையான தேவைகள் உள்ளன.
இவை நேரடியாக விதி வாக்கியங்களில் சொல்லப்படாத போதும், இவை இல்லாமல்
கர்மங்களைச் செய்ய முடியாதபடியால் இவை அதிகாரத்தில் சேர்கின்றன
1. வித்யை – அத்யயநம் செய்து, வேதங்களையும் அவற்றின் பொருளையும் கற்றிருக்க வேண்டும்.
இது இருந்தால் தான், அடுத்தடுத்து என்ன செயல்கள் செய்யவேண்டும் என்பதையும்,
சொல்லவேண்டிய மந்த்ரங்களையும் அறிய முடியும்.
2. அக்நி – யாகம் ஹோமம் முதலானவற்றில், ஒரு த்ரவ்யத்தை அக்நியில் சேர்க்க வேண்டும் என்பதால்,
அதற்காக ஆதாநம் என்ற கர்மத்தைச் செய்து கார்ஹபத்யம் ஆஹவநீயம் தக்ஷிணாக்நி
என்ற மூன்று அக்நிகளும் ஒருவனிடத்தில் இருந்தால் தான், அவன் யாகம் முதலானவற்றைச் செ ய்ய முடியும்
3. ஸாமர்த்யம் – யாகம் முதலானவற்றைச் செய்யும் திறமையும், பண வசதியும், உடல் ஆரோக்யமும்,
நன்கு செயல்படக்கூடிய புலன் களும் இருந்தால்தான் ஒருவனால் யாகம் செய்ய முடியும்.
ஆகையால், பார்க்கமுடியாதவர்கள், பேச முடியாதவர்கள், நடக்க முடியாதவர்கள் ஆகியவர்களுக்கு
யாகம் முதலானவற்றில் அதிகாரம் கிடையாது.

பெண்ணின் அதிகாரம்

• பூர்வபக்ஷம் – யாகம் முதலான வைதிக கர்மங்களில் பெண்களுக்கு அதிகாரம் கிடையாது, ஏன் என்றால்
1. யாகங்களைச் சொல்லும் விதிகளில் “இந்த பலத்தில் ஆசை யிருப்பவன் இந்தக் கர்மத்தைச் செய்ய வேண்டும்”
என்று ஆண்பால் தான் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.
2. பெண்களுக்கு அத்யயநம் மூலம் பெற்ற ஞாநம் இல்லை , அதாநம் மூலம் பெற்ற அக்நிகள் இல்லை, சொத்து
இல்லாதபடியால் ஸாமர்த்யமும் இல்லை -அதனால்
• ஸித்தாந்தம் – பெண் களுக்கும் யாகம் முதலானவற்றில் அதிகாரம் உண்டு.
1. “தர்மத்திலும், செல்வத்திலும் விஷய அநுபவத்தில் மனைவியைக் கணவன் மீறக்கூடாது” என்றும்
“பாணிக்ரஹணம் செயததால் தர்ம கார்யங்களிலும் அவற்றின் பலன்களிலும் சேர்ந்து தான் பங்கு உள்ளது”
என்றும் ஸ்ம்ருதிகள் சொல்கிறபடியால் அதிகாரம் நிச்சயம் உண்டு. இரண்டு பால்களில் ஏதோ
ஒன்றைச் சொல்ல வேண் டியபடியால் வேதம் ஆண் பாலால் சொன்னது.
2. பெண் களுக்குத் தனியாக வேத ஞாநமோ அக்நிகளோ தேவையில்லை -கணவனின் ஞாநமும் அக்நிகளும் போதும்.
கணவனின் செல்வமும் அவனது மட்டுமல்ல, மனைவிக்கும் சொந்தமானது என்று வேதம் சொல்கிற படியால் அவளிடம் பணமும் உள்ளது

தம்பதியின் அதிகாரம்

ஆணுக்கும் யாகம் முதலானவற்றில் அதிகாரம் உண்டு, பெண்ணுக்கும் உண்டு என்று பார்த்தோம்.
ஆனால், அவர்களுக்குத் தனித்தனியே யாகம் செய்யும் உரிமை கிடையாது.
• வேதம், ஒரே யாகத்தில் கணவன் செய்யவேண்டிய சில செயல்களையும், அவனுடைய மனைவி செய்ய வேண்டிய
செயல்களையும் சொல்கிறது. கணேவனோ மனைவியோ தனியாக யாகம் செய்தால், மற்ற ஒருவர் செய்ய வேண் டிய செயல்களைச்
செய்ய முடியாதபடியால், யாகத்தின் சில அங்கங்களைச் செய்யாதபடியால் யாகம் நிறைவு பெற முடியாது, பலம் கிடைக்காது.
• ஆகையால், இருவரும் சேர்ந்து தான் ஒரு யாகத்தைச் செய்ய வேண் டும்.
• ஒருவருக்கு உடல் நலம் சரியில்லாத போதோ , வேறு சில ஸந்தர்பங்களிலோ மட்டும், கணவன் அல்லது மனைவியின்
ஸ்தாநத்தில் வே றே ஒருவரை வைத்து யாகம் செய்யலாம் என்று வேதம் அநுமதிக்கிறது.
• யாகம் செய்யும் புருஷனுக்கு ’யஐமாநன்’ என்ற பெயரையும், யாகம் செய்யும் மனைவிக்கு ’பத்நீ’ என்ற பெயரையும் வேதம்
கொடுத்துள்ளது. ஆகையால், பத்நீ என்ற சொல்லில் இருந்தே அறியலாம் – பெண்களுக்கு யாகம் முதலானவற்றில் அதிகாரம் உண்டு என்று.

அத்யாயம் -6- பாதம் -2-
தொடங்கியதை முடித்தல்

•ஒரு பலத்தில் ஆசையால் ஒரு கர்மத்தைத் துவங்கிவிட்டு, அந்த கர்மம் முடிவதற்குள் அந்த ஆசை விலகிவிட்டால்,
தொடங்கப்பட்ட கர்மத்தை முடிக்க வேண்டுமா, அப்படியே நிருத்த வேண்டுமா என்று கேள்வி.
•முயற்சிக்குக் காரணம் ஆசை , அது இல்லாதபடியால் யாகத்தைத் தொடர்ந்து செய்யத் தேவையில்லை என்பது பூர்வ பக்ஷம்.
•முதலில் இருந்த ஆசையால் யாகத்தைத் தொடங்கி விட்டபடியால், அழைக்கப்பட்ட தேவதைகளுக்கு
ஹவிஸ்ஸை அளிக்காமல் அனுப்புவது தவறாகும்.
ஆகையால், மீதமிருக்கும் யாகத்தை ஆசை இல்லாவிட்டாலும் செய்து முடிக்க வேண்டும் என்பது ஸித்தாந்தம்.
•அப்படி ஒருவன் யாகத்தை முடிக்கத் தவறினால், அவன் தேவதைகளிடம் அபசாரம் செய்தவன் ஆவான் , ஆகையால்
த்ரைதாதவீயம் என்ற யாகத்தை ப்ராயச்சித்தமாகச் செய்ய வேண்டும் என்று வேதமே கூறுகிறது.

அங்க குண விரோத நியாயம்
இது ஐந்தாவது அத்தியாயத்தில் சொல்லப்பட்டு உள்ளது

ஒரு ப்ரதாந கர்மத்துக்குப் பல அங்கங்கள் இருக்கலாம். அந்த அங்கங்களுக்கும் எத்தனையோ குணங்கள் / அங்கங்கள் இருக்கலாம்.
ஒரு ப்ரதானத்தின் அங்கத்துக்கும், ஒரு அங்கத்தின் அங்கத்துக்கும் முரண்பாடு ஏற்பட்டால் எதைச் செய்ய வேண்டும்?
•ஜ்யோதிஷ்டோமம் என்ற ஸோம யாகம் ஐந்து நாட்கள் செய்யப்படுவது.
அதில் ஐந்தாவது நாளில் தான் ஸோம ரஸத்தை வைத்து ப்ரதாந யாகத்தைச் செய்யவேண்டும்.
அதற்கு முன் இருக்கும் நான்கு நாட்களில் வேறு சில அங்க யாகங்கள் விதிக்கப்பட்டுள்ளன, எடுத்துக்காட்டுக்கு
முதல் நாள் தீக்ஷணீயா என்ற ஒரு யாகம் சொல்லப்பட்டுள்ளது.
• வேதத்தில் ஒரு விதி வாக்கியம் “எந்த யாகத்தைச் செய்தாலும் அதை பர்வ காலத்தில்
(பௌர்ணமி அன்றோ அமாவாஸை அன்றோ ) செய்ய வேண்டும்” என்றுவிதிக்கிறது.
• ஆகையால், ஜ்யோதிஷ்டோமம் என்ற ப்ரதாந யாகமும், தீக்ஷணீயா என்ற அங்க யாகமும் பர்வ காலத்தில்
செயப்படவேண்டும். ஆனால் இது அஸாத்யமானது. தீக்ஷணீயா யாகத்தை பர்வ காலத்தில் செய்தால்,
ஜ்யோஷ்டோம யாகத்தைச் சதுர்த்தி அன்று தான் செய்ய முடியும். ஸோம யாகத்தை பர்வ காலத்தில் செய்ய வேண்டும்
என்றால் தீக்ஷணீயா யாகத்தை ஏகாதசி அன்று தான் செய்ய வேண்டும்.
• இப்படி ப்ரதாந கர்மத்தின் ஒரு குணத்துக்கும் அங்கத்தின் குணத்துக்கும் விரோதம் ஏற்பட்டால், ப்ரதாநத்தின் குணத்தைத் தான்
செய்ய வேண்டும், அங்கத்தின் குணத்தை விட்டுவிட வேண்டும், ஏன் என்றால் அங்கம் இருப்பதே ப்ரதாநத்துக்காகத் தான்,
அங்கத்தைக் குறைவில்லாமல் செய்து, ப்ரதாநத்தைக் குறையோடு செய்தால் எந்தப் பலனும் கிட்டாது.

அத்யாயம் -6- பாதம் -3-
யதா சக்தி நியாயம்

• ஒரு யாகத்தைச் செய்யும் பொழுது அனைத்து அங்கங்களையும் செய்து தான் ஆக வேண்டுமா என்று கேள்வி.
• ஒரு பலனில் ஆசையால் செய்யப்படும் கர்மங்களுக்கு காம்ய கர்மங்கள் என்று பெயர்.
• அப்படிப்பட்டவையை விதிக்கும் ஸாஸ் த்ரம் “இந்த கர்மத்தால் இந்த பலனை அடையலாம்” என்று சொல்லும் பொழுது,
தனியாக அந்த யாகத்துக்கு மட்டும் அந்தப் பலனை ஏற்படுத்தும் சக்தி இல்லாதபடியால், அனைத்து அங்கங்களோடு கூடிய இந்த
யாகத்தால் இந்த பலனை அடையலாம் என்று தான் கூறவேண்டும்.
ஆகையால், காம்ய கர்மங்கள் ஒரு அங்கத்தில் குறை ஏற்பட்டாலும் பலன் கிடைக்காது.
• வேறு சில கர்மங்களை ஒருவன் கண்டிப்பாகச் செய்தே ஆக வேண்டும் என்று வேதங்கள் சொல்கின்றன.
அவற்றுக்கு நித்ய கர்மங்கள் என்று பெயர்.
• அவ்விடங்களில், அனைத்து அங்கங்களோடும் கூடின ப்ரதாந கர்மத்தைக் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று வேதம் சொல்ல
முடியாது, ஒருவனுக்கு அப்படி செய்ய சக்தி இல்லாமல் போகலாம் ஆகையால்.
ஆகையால், ப்ரதாநங்களைக் கண்டிப்பாகச் செய்யவேண்டும், அங்கங்களை அவரவர் சக்திக்கு ஏற்பச் செய்ய வேண்டும்
என்று தான் வேதம் கூறுகிறது. இதற்கு தான் யதா சக்தி ந்யாயம் என்று பெயர் –

யாவத் ஜீவன் அக்னி ஹோமம்
ஸ்வர்க்க காம ஜோயிதிஷ்டோமேன யஜேதே ஸ்ருதி வாக்கியங்கள் -இந்த வேறுபாட்டை உணர்த்தும்
மூன்றாம் வேற்றுமை -ஆல் -என்றாலே உப கரணங்கள் தானாகவே சேரும் –
ஆகவே எல்லா அங்கங்களும் சேர்ந்து செய்தால் தான் பலன் கிட்டும்
விட்டால் பிராயச்சித்தங்கள் செய்து பூர்த்தி செய்ய வேண்டும்

பிரதிநிதி நியாயம்

யாகம் என்றால் ஒரு தேவதைக்கு ஒரு த்ரயத்தை த்யாகம் செய்வது .
ஆகையால், யாகம் என் றாலே ஏதோ ஒரு த்ரவ்யம் வேண்டும் என்று நாம் அறிந்தபடியால், ஒரு யாகத்தின்
விதியைப் பார்த்தவுடன் தானாகவே நாம் அதில் உபயோகிக்கக்கூடிய அனைத்து த்ரவ்யங்களையும் நினைப்போம்.
அப்பொழுது, வேறே எந்த த்ரயத்தையும் உபயோகப்படுத்தக் கூடாது
என்பதற்காக வேதமே ஒரு த்ரவ்யத்தை விதிக்கும் “நெல்லால் யாகத்தைச் செய் ” என்பது போல்.
• ஆனால், ஒரு வேளை அந்த த்ரவ்யம் நமக்குக் கிடைக்காவிட்டால், அதற்காக யாகத்தையே செய்யாமல் இருப்பது சரி அல்ல –
ஓர் அங்கம் இல்லாததுக்காக ப்ரதாநத்தை விடுவது சரியல்ல. ஆகையால், அதற்கு பதிலாக உபயோகிக்கூடிய த்ரவ்யங்களையும் வேதமே சொல்லும்.
அவற்றுக்குப் ப்ரதிநிதி என்று பெயர்.
• எடுத்துக்காட்டு – தர்பூர்ணமாஸத்தில் நெல் கிடைக்காவிட்டால் நீ வாரம் என்ற காட்டு அரிசியைப் பயன் படுத்தலாம் என்று வேதம் சொல்கிறது.
• விதிவிலக்கு –
ஒரு தேவதைக்குப் பதிலாக மற்ற ஓரு தேவதையையோ ,
கார்ஹபத்யம் முதலான மூன்று அக்நிகளுக்கு பதிலாக ஸாதாரண அக்நியையோ ,
வேதம் அந்த யாகத்துக்காகச் சொன்ன மந்த்ரத்தை விட்டு வேறே ஓரு மந்த்ரத்தையோ ,
ப்ரயாஜம் முதலான ஆராதுபகாரகங்களுக்கு பதிலாக வேறு ஆராதுபகாரகங்களையோ செய்ய இயலாது,
அதாவது அவற்றுக்குப் ப்ரதிநிதி கிடையாது. ஏன் என்றால்,
இவற்றால் வரும் பயன் மற்ற வற்றைச் செய்தால் ஏற்படும் என்பதற்கு எந்தப் ப்ரமாணமும் இல்லை ,
இவை அனைத்தும் அத்ருஷ்டம் / அபூர்வம் / புண்ணியம் மூலம் யாகத்திற்கு உதவுகின்றன.
ஆனால், நெல் இல்லாவிட்டால் நீ வாரம் அதே போல் பயன் படுத்தலாம் என்பது தெரிந்தது.
• ஒரு த்ரவ்யம் கிடைக்காவிட்டால், அதற்கு பதிலாக வேறு எந்த த்ரவ்யத்தை வேண்டுமானாலும் பயன் படுத்தலாம்
என்பது கிடையாது. அந்த த்ரவ்யத்துக்கு ஒப்பான வேறே ஒன்றைத் தான் உபயோகிக்க வேண்டும்.
• “நெல்லால் யாகம் செய்” என்ற கட்டளையில் நெல் தன்மை என்ற ஸாமாந்யம், நெல் மணி என்ற அவயவி,
அதன் அவயவங்கள் என்ற மூன்றுக்கும் யாகத்தைக் குறித்து ஸாதநத்வம் (காரணத்வம்) தெரிகிறது.
• ஒரு வேளை நெல் கிடைக்காமல் போனால், சாமான்யத்தையோ அவயவியையோ யாகத்தில் உபயோகிக்க முடியாமல் போனாலும்,
நெல்லின் அவயங்களை மட்டுமாவது பயன் படுத்த வேண்டும்.
• நெல் இல்லாமல் நெல் அவயவங்களை எப்படி உபயோகிப்பது? நெல்லை போன்ற வேறே ஒரு தானியத்தை எடுப்பதன் மூலம் தான் –
ஸத்ருஸமான அதாவது ஒப்பான பொருட்களில் பொதுவான அவயவங்கள் இருக்கவேண்டும்.
ஆகையால், நீவாரம் போன்ற தான்யங்களில் நெல்லின் சிறு அவயவங்கள் இருக்கும்.
•ஆகையால், நாம் நீவாரத்தை உபயோகித்தால் அதிலிருக்கும் நெல் அவயவங்களை உபயோகித்ததாக ஆகிறபடியால்,
“நெல்லால் யாகம் செய்” என்ற விதியை குறைந்த பக்ஷம் கடைப்பிடித்து விட்டோம் என்று ஆகும்.
•ஆகையால், ஒரு த்ரவ்யம் கிடைக்காத போது, அதற்கு ஸத்ரு ஸமான (ஒப்பான) வேறே ஓரு த்ரவ்யத்தைத் தான் பயன் படுத்தவேண்டும்

————–

பாடம் -18–

ஆறாம் அத்யாயத்தின் எட்டு பாதங்களில் சொல்லப்பட்ட அர்த்தங்கள் –
•(1) அதிகாரீ– யாகத்தைச் செய்யத் தகுதி உடையவன் யார் என்பது
•(2) தர்மா: – அந்த அதிகாரியின் சில தர்மங்கள்
•(3) ப்ரதிநிதி: – ஒரு அங்கம் இல்லாதபோது அதற்கு ப்ரதிநிதியை உபயோகித்தல்
•(4) அர்த்தலோபநம் – சில யாகங்களில் சில கர்மங்கள் இல்லாமல் போகுதல்
•(5) தீக்ஷா – ஸோம யாகத்தில் செய்யப்பட வேண்டிய தீஷை யைப்பற்றி
•(6) ஸத்ரம் – பலர் சேர்ந்து செய்யும் சத்ரம் என் ற ஒரு யாகத்தில் அதிகாரத்தைப்பற்றி
•(7) தேயம் – யஜமாநன் ரித்விக்குகளுக்குக் கொடுக்கும் தக்ஷிணையைப்பற்றி
•(8) வஹ்நி – கார்ஹபத்யம் முதலான அக்நிகளைப்பற்றி சில விசாரங்கள்-

அத்யாயம் -6- பாதம் -4-

யாகத்திற்காகச் செய்யப்பட்ட ஹவிஸ்ஸிலிருந்து இரண்டு துண்டுகளை எடுக்க வேண்டும். இதற்கு அவதாநம் என்று
பெயர். அவதாநம் செய்யப்பட்ட துண்டுகளில் நெய் சேர்த்து அக்நியில் போட வேண்டும். ஒரு வேளை அவதாநம்
செய்யப்பட்ட துண்டுகள் அழிந்துவிட்டாலோ , தொலைந்து விட்டாலோ , கெட்டுவிட்டாலோ , அந்த த்ரவ்யத்துக்கு
ப்ரதிநிதியாக நெய்யைப் பயன் படுத்த வேண்டும்
அவத்த ஹவிஸ்ஸூ -அவதானம் செய்யப்பட்டது –
• த்ரவ்யம் என்பது யாகத்துக்கு அங்கம், அங்கம் இல்லாததற்காகப் ப்ரதாந கர்மமான யாகத்தை விடக்கூடாது.
ஆகையால், நெய்யால் செய்ய வேண்டும்
• நேர் மாறாக, யாகத்தில் உபபயாகப்படுத்திய ஹவிஸ்ஸின் மீதத்தை செலவழிப்பதற்காக இடாமக்ஷணம்
ப்ராசித்ரபக்ஷணம் முதலான உண்ணும் செயல்கள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றுக்கான த்ரவ்யம் ஒரு வேளை
அழிந்துவிட்டால், வேறே ஒரு த்ரவ்யத்தை உண்ண வேண்டும் என்ற தேவை இல்லை .
•இந்த செலவழிக்கும் கர்மங்கள் தான் ஹவிஸ்ஸில் மீதமிருக்கும் பகுதிக்கு அங்கங்கள், ஆகையால் ப்ரதாநமான
அந்த த்ரவ்யமே இல்லாதபோது இவற்றைச் செய்யத் தேவையில்லை

ஹவிரார்த்தி நியாயம்

• தர்ஸ பூர்ணமா ஸத்தில் அமாவாஸை அன்று பாலாலும் தயிராலும் இந்த்ரனுக்கு யாகம் செய்ய வேண்டும்.
அப்பொழுது, பால் கெட்டுவிட்டால் ஒரு ப்ராயச் சித்தத்தையும், தயிர் கெட்டுவிட்டால் ஒரு ப்ராயச் சித்தத்தையும்
செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு “யாருக்கு இரண்டு ஹவிஸ் ஸூகளும் கெட்டுவிடுகின்றனவோ அவன்
இந்த்ரனுக்காக ஐந்து பாத்திரங்கள் அளவுள்ள அரிசிச் சோறால் யாகம் செய்ய வேண்டும்”
என்று ப்ராயச் சித்தம் சொல்கிறது வேதம்.
•ஹவிஸ்ஸின் அழிவு என்ற நிமித்தம் ஏற்பட்டால், இந்த ப்ராயச் சித்தம் என்ற நைமித்திக கர்மத்தைச் செய்ய வேண்டும்.
• இங்கு நிமித்தம் என்ன என்று விசாரிக்கப்படுகிறது.
இரண்டு ஹவிஸ் ஸூகளும் அழிதல் தான் நிமித்தம் என்று பூர்வ பக்ஷம்.
•ஸித்தாந்தம் – குறைந்த பஷமான நிமித்தம் கிடைத்தவுடன், அதற்கு மேலும் சிறப்பிக்கக்கூடாது.
• வெறும் ’அழிவு’ நிமித்தம் ஆக முடியாது, ஏன் என்றால் ஏதோ ஒரு பொருள் எப்பொழுதுமே உலகில் அழிந்து
கொண்டுதான் இருக்கும், ஆனால் நிமித்தம் என் பது அவ்வப்போது ஏற்படும் ஒன்றாக இருக்க வேண்டும்.
• ’ஹவிஸ்ஸின் அழிவு’ என்று கொண்டால் அது அவ்வப்போது ஏற்படுவதுதான், ஆதகயால் அது தான் நிமித்தம்.
அதற்கு ஒரு படி மேல் சென்று ’இரண்டு ஹவிஸ் ஸூகளின் அழிவு’ என்று கொள்ளுதல் சரி அல்ல.
ஆகையால், இரண்டு ஹவிஸ்ஸூகளில் எது அழிந்தாலும் இந்த ப்ராயச் சித்தத்தைச் செய்ய வேண்டும்.

மூன்றாம் அத்யாயம்
கிரஹம் சோமா யாகத்துக்கு கொண்ட பாத்திரம் –
கிரஹம் தொடைக்க வேதம்
பூர்வ பக்ஷம் ஒரு பாத்திரம்
சித்தாந்தம் -ஒன்றை மட்டும் அல்ல -ஒருமையை கணிசிக்காமல் அனைத்தையும் என்றே கொள்ள வேண்டும்
அதே போல் இங்கு ஹவிஸ்ஸூ அழிவு -ஏதோ ஓன்று அழிந்தாலும் செய்ய வேண்டும்

ஹவிரார்த்தி நியாயத்தின் விதி விலக்கு

யாருக்கு மூன்று அக்நிகளும் அழிந்து விடுகின்றனவோ ,அவன் மறுபடியும் ஆதாநம் செய்து கொள்ளுதல்
ப்ராயச் சித்தம்’ என்று வேதம் கூறுகிறது.
•முன் சொன்ன ஹவிரார்தி ந்யாயத்தின் படி பார்த்தால், ’மூன்று’ என்ற சொல்லைக் கணிசிக்கக் கூடாது,
கார்ஹபத்யம் ஆஹவநீயம் தக்ஷிணாக்தி என்ற மூன்று அக்நிகளில் ஏதோ ஒன்று அழிந்தாலும் மறுபடியும்
ஆதாநம் செய்து கொள்ள வேண்டும் என்று தோன்றும்.
•ஆனால், விதிக்கப்படும் ஆதாநத்தின் தன்மை யாதெனில் – மூன்று அக்நிகளையும் உருவாக்குவது. ஆகையால், ஒரு
அக்நி அழிந்தவுடன் இதைச் செய்தால், தேவையில்லாமல் மற்ற இரண்டு அக்நிகளும் புதிதாக உருவாக்கப்படுகின்றன.
•ஆகையால், விதிக்கப்படும் ஆதாநத்தின் தன்மையைப் பார்த்து, ஹவிரார்தி ந்யாயத்ததயும் மீறி, மூன்று என்ற
சொல்லையும் சேர்த்து தான் நிமித்தத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். ஆகையால், மூன்று அக்நிகளும்
அழிந்தால்தான் மறுபடியும் ஒருவன் ஆதாநம் செய்து கொள்ள வேண்டும்.

உபக்ரம நியாயம் –

மூன்றாம் அத்யாயத்தின் மூன்றாம் பாதத்தில் சொல்லப்பட்ட ஒரு ந்யாயம் – உபக்ரம ந்யாயம்.
உபக்ரமம் என்றால் தொடக்கும்.உப ஸம்ஹாரம் என்றால் முடிவு.
• வேதத்தில் ஓரிடத்தில், “அக்நியிடமிருந்து ரிக்வேதம் தோன்றியது” என்ற ஒரு அர்த்தவாதமும்,
அதற்குப் பிறகு “உரத்த குரலில் ரிக்கால் செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
• தொடக்கத்தில் ரிக்வேதம் சொல்லப்பட்டபடியால் முடிவிலிருக்கும் ரிக் என்ற சொல்லுக்கு ரிக்வேதம்
என்று பொருளா? அல்லது முடிவில் ரிக் மந்த்ரம் சொல்லப்பட்டபடியால் தொடக்கத்திலும் ரிக்வேதம் என்ற சொல்
ரிக் மந்த்ரத்தைத் தான் சொல்லுகிறதா?
• பூர்வபக்ஷம் – தொடக்கத்திலிருப்பது அர்த்தவாதம், முடிவில் இருப்பது விதி. அர்த்தவாதத்தைக் காட்டிலும்
விதி முக்கியமானது. ஆகையால், விதியில் ரிக் என்ற சொல் உள்ளபடியால், தொடக்கத்திலும் ரிக்வேதம்
என்ற சொல் ரிக்மந்த்ரத்தைத் தான் குறிக்கிறது.
•ஸித்தாந்தம் – தொடக்கத்தில் இருப்பது அர்த்தவாதமாக இருந்தாலும், அது தான் முதலில் படிக்கப்படுகிறது.
அதைப் பார்த்தவுடன் ஏற்படும் அறிவுக்கு முரண்பட்ட எந்த அறிவும் நம்மிடம் இல்லை .
பின்னாலிருக்கும் வாக்கியம் விதியாக இருந்தாலும், அதைப் படிக்கும் பொழுது,
அர்த்தவாதத்தால் முன் ஏற்பட்ட அறிவுக்கு முரண்படாத
பொருளாகத்தான் அதற்குக் கொள்ள வேண்டும்.
ஆகையால், அஸஞ்சாத விரோதம் வராமைக்காக -இறுதியில் இருக்கும் ரிக் என்ற சொல்லுக்கு ரிக்வேதம் என்று பொருள்.
• முதலில் இருப்பது அதிக பலமுடையது என்பது தான் உபக்ரம ந்யாயம்-

சேஸ்வர மீமாம்ஸை
தேவதை ஒத்துக் கொள்ளாதவர்களும் உண்டு
அக்னி என்ற சொல்லையே வேதம் சொல்லும் -தேவதையை அல்ல என்பர்
ஜைமினி சேஸ்வர மீமாம்சகர் என்றும் பின்னால் வந்தவர் மாற்றினார்கள் என்பாரும் உண்டு
இதன் விசாரம் ஒன்பதாம் அத்தியாயத்தில் பார்ப்போம்

அபச்சேத நியாயம் –
இது ஸ்ரீ பாஷ்ய காரர் முதலிலே எடுத்து காட்டிய நியாயம் –
மூன்றாம் அத்யாயத்தில் சொல்லப் பட்ட உபக்ரம ந்யாயத்திற்கு விதிவிலக்காக அபச்சேத ந்யாயம் என்ற
மற்ற ஓரு ந்யாயம் சொல்லப் படுகிறது–ஆறாம் அத்யாயத்தில்
• ஸோம யாகத்தில் பஹிஷ் பவமாநம் என்ற ஸ்தோத்ரம் பாடும் பொழுது, உத்காதா ப்ரஸ் தோதா ப்ரதிஹர்தா
ஆகியவர்கள் மண்டபத்தைச் சுற்றி நடந்து வர வேண்டும். அப்பொழுது, முன்னால் செல்பவரின் கச்சத்தைப்
பின்னால் செல்பவர் பிடித்துக் கொள்ள வேண்டும். ஒரு வேளை நடக்கும் பொழுது ஒருவர்
அந்த கச்சத்தை விட்டு விட்டால், அதற்கு ப்ராயச் சித்தம் சொல்லப்படுகிறது.
• உத்காதா கச்சத்தை விட்டால் – அந்த யாகத்தை முடித்து, ரித்விக்குகளுக்கு எந்த தக்ஷிணையும் கொடுக்காமல்,
மறுபடியும் அதே யாகத்தைச் செய்து, அது முடியும் பொழுது முன் கொடுக்க இருந்த தக்ஷிணையைக் கொடுக்க வேண்டும்.
• ப்ரதிஹர்தா கச்சத்தை விட்டால் – யஜமாநன் தன்னிடமிருக்கு செல்வம் அனைத்தையும் ரித்விக்குகளுக்குக் கொடுத்து விட வேண்டும்.
• இருவரும் ஒரே ஸமயத்தில் கச்சத்தை விட்டால் – இரண்டு நிமித்தங்களும் உள்ளபடியால், இரண்டு ப்ராயச்சித்தங்கதளயும்
செய்ய வேண்டும். ஆனால், (1) செய்து கொண்டிருக்கும் யாகத்தில் தக்ஷிணை கொடுக்காமலிருப்பது
(2) தன்னிடமிருக்கும் அனைத்தையும் கொடுப்பது என்ற இரண்டையும் சேர்த்து செய்யவே முடியாது.
ஆகையால், விகல்பம் ஏற்படுகிறது – இரண்டு ப்ராயச்சித்தங்களில் ஏதோ ஒன்றை நம் இஷ்டப்படி செய்து கொள்ளலாம்

ஒரே யாகத்தில் வரிசையாக இருவரும் கச்சத்தை விட்டால் என்ன செய்ய வேண்டும் என்று விசாரம் செய்யப்படுகிறது.
• பூர்வபக்ஷம் –
உபக்ரம ந்யாயத்தின் படி பார்த்தால், முதலில் எதை அறிகிறோமோ அது ப்ரபலமானது,
ஏன் என்றால் அப்பொழுது அதற்கு முரணாக நம்மிடம் எந்த அறிவும் இல்லை . ஆகையால், முதலில் ஒருவர்
கச்சத்தை விட்டவுடன், அதற்காக விதிக்கப்பட்ட ப்ராயச்சித்தத்தை நாம் அறிந்து விடுகிறோம்.
அது முதலில் ஏற்படுகிறது. அதற்குப் பிறகு இரண்டாவதாக ஒருவர் கச்சத்தை விட்டால், அப்பொழுது முன் அறிவுக்கு
முரண் இல்லாதபடி தான் நடக்க வேண்டும் என்பதால், முன் ப்ராயச் சித்தத்தை விட்டு இரண்டாவது ப்ராயச் சித்தத்தைச்
செய்ய முடியாது. ஆகையால், முதலில் யார் கச்சத்தை விடுகிறாரோ , அவருக்காக விதிக்கப்பட்ட
ப்ராயச் சித்தத்தைத்தான் செய்ய வேண்டும்.
• ஸித்தாந்தம் –
உபக்ரம ந்யாயம் என்பது முன்னும் பின்னும் உள்ள வாக்கியங்கள் ஒன்றை ஒன்று எதிர்பார்த்து அறிவை உண்டு
செய்யும்போது மட்டும் தான் செயல்படும். விதியும் அர்த்தவாதமும் அப்படிப்பட்டவை
ஆனால் இங்கு, முதல் ப்ராயச் சித்தத்தைச் சொல்லும் வாக்கியமும் இரண்டாம் ப்ராயச் சித்தத்தைச் சொல்லும் வாக்கியமும்
ஒன்றை ஒன்று எதிர்பார்க்க வில்லை .ஆகையால், உபக்ரம ந்யாயம் இங்கு செயல்படாது.
• முதலில் ஒருவர் கச்சத்தை விட்டவுடன் , அதற்கான ப்ராயச் சித்தத்தைச் செய்ய வேண்டும் என்று நமக்குத் தோன்றும்.
பிறகு, இரண்டவதாக ஒருவர் கச்சத்தை விடும் பொழுது அதற்கான ப்ராயச் சித்தத்தைப் பற்றின அறிவு
ஏற்படும் பொழுது, முன் ஏற்பட்ட ஜ்ஞாநத்தைத் தவறாக்கிக் கொண்டு தான் உண்டாக முடியும்.
ஆகையால், பின்னால் ஏற்படும் அறிவு தான் ப்ரபலமானது என்பது அபச்சேத ந்யாயம்

அத்யாயம் -6- பாதம் -6-

ஆறாம் அத்யாயத்தின் ஆறாவது பாதத்தில் சத்ரம் என்ற ஒரு வகையான யாகத்தைப் பற்றி விசாரம் செய்யப் படுகிறது.
• சத்ரம் என் பது பல யஜமாநர்கள் சேர்ந்து செய்யும் ஒரு யாகம். இந்த யாகத்தில் ரித்விக்குகள் கிடையாது.
யஜமாநர்களே தான் ரித்விக்குகளின் கார்யங்களைச் செய்ய வேண்டும்.
• அந்த சத்ரம் என்ற கர்மத்தில் அங்கமாக ப்ரயாக்ஜங்கள் செய்யப் படுகின்றன.
ப்ரயாஜங்கள் என்பவை தர்ஸ பூர்ணமாஸம் என்ற கர்மத்தில் உபதேசிக்கப்பட்டுள்ளன.
ஸமித், தநூநமாத், இடா, பர்ஹி ஸ் , ஸ்வாஹாகாரம் என்ற ஐந்து தேவதைகளுக்காகச் செய்யப்படும் ஐந்து
யாகங்கள் தான் ப்ரயாஜங்கள்.
• ஸத்ரத்தைப்பற்றிச் சொல்லும் பொழுது வேதம், “வாஸிஷ்ட கோத்ரத்தைச் சேர்ந்தவர்கள் நாராஸம்ஸம் என்பது
இரண்டாவது ப்ரயாஜகமாகச் செய்ய வேண்டும். மற்றவர்கள் தநூநபாத் என்பதைச் செய்ய வேண்டும்” என்று.
• ஸத்ரத்தில் சில யஜமாநர்கள் வாஸிஷ்ட கோத்ரத்தைச் சேர்ந்தவராகவும், சிலர் மற்றவராகவும் இருந்தால்,
சிலருக்காக நாராஸம்ஸத்தைச் செய்தால் மற்றவரால் செய்யப்பட வேண்டிய அங்கம் விட்டுப்பபோகும்.
பலருக்காக தநூநபாத் ப்ரயாஜத்தைச் செய்தால், சிலருக்காகச் செய்யப்பட வேண்டிய
தநூநபாத் ப்ர்பயாஜம் செய்யப் படாமல் போகும்.
• ஆகையால், துல்யமான கல்பத்தில் இருப்பவர்களுக்கு தான் ஸத்ரத்தில் அதிகாரம் உண்டு. அதாவது,
அனைவரும் வாஸிஷ்ட கோத்ரத்தைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது மற்ற கோத்ரத்தைச் சேர்ந்தவராகவோ தான்
இருக்க வேண்டும்.

அத்யாயம் -6- பாதம் -7-
• விஸ்வஜித் என் ற யாகத்தில் யஜமாநன் தன்னிடமிருக்கும் சொத்து அனைத்தையும் ரித்விக்குகளுக்கு தக்ஷிணையாகக் கொடுக்க வேண்டும்
என்று வேதம் கூறுகிறது. சொத்து என்னும் சொல் எவற்றைக் குறிக்கிறது என்று விசாரம் செய்யப் படுகிறது
• ’யஜமானம் தன்னுடையது அனைத்தையும் கொடுக்க வேண்டும்’ என்று கட்டளை உள்ளது.
’தன்னுடையது’ என்ற சொல் யஜமாநனான தன்னையும், தனது தந்தை முதலானவர்களையும், பங்காளிகளையும், தன்னுடைய
சொத்தையும் குறிக்கக்கூடிய சொல். ஆகையால், இவை அனைத்தையும் கொடுக்க வேண்டுமா? அல்ல. ஒரு சொல்லுக்கு பல பொருள்கள் இருந்தால்,
ஒரு முறை உச்சரிக்கப்பட்ட போது ஒரு பொருளைத்தான் அது குறிக்கும். ஆகையால், இங்கு தக்ஷிணை கொடுப்பதைப் பற்றிப் பேசுகிறபடியால்,
தக்ஷிணை பொதுவாக சொல்வத்தைக் கொண்டு கொடுக்கப் படுகிறபடியால், இங்கு யஜமாநன் தன் செல்வத்தைத் தான் கொடுக்க வேண்டும்.
• ராஜா யாகம் செய்தால், தன் சொத்தான ராஜ்யத்தைக் கொடுக்க வேண்டுமா? இல்லை . ராஜ்யம் என்ற பரந்து பூமி
ராஜாவினுடைய சொத்து அல்ல, அவரிடம் காப்பதற்காகக் கொடுக்கப் பட்டுள்ளது. ஆகையால், அதைக் கொடுக்கக் கூடாது
• கடந்த காலத்திலிருந்த சொத்தையோ வருங்காலத்தில் வரப் போகும் சொத்தையோ கொடுக்கத் தேவையில்லை ,
யாகம் முடிந்து தக்ஷிணை கொடுக்கும் சமயத்தில் என்ன உள்ளதோ , அதைக் கொடுக்க வேண்டும்.
• யாகம் தொடங்கும் பொழுது, யஜமாநன் தன் சொத்தை (1) தன் வாழ்கைக்காக (2) யாகத்துக்காக (3) தக்ஷிணைக்காக
என்று மூன்றாகப் பிரிக்க வேண்டும். ஸர்வ ஸ்வ தாநம் என்றால் தக்ஷிணைக்காக வைக்கப் பட்ட
செல்வம் முழுவதையும் கொடுப்பது தான். அனைத்தையும் அல்ல.

அத்யாயம் -6- பாதம் -8-

இந்த பாதத்தில் இருக்கும் ந்யாயங்களில் முக்கியமானது – ஸாமாந்ய விசேஷ ந்யாயம் என்றும்
ஸாக-பசு-ந்யாயம் என்றும் சொல்லப் படுகிறது.
• ஒரு பொதுச் சொல்லை உபயோகித்து விட்டு, பின் ஒரு சிறப்புச் சொல்லை உபயோகித்தால், அந்தப் பொது சொல்லுக்கும்
அந்த சிறப்புச் சொல்லின் பொருள் மட்டும் தான் பொருள் ஆகும்.
• எடுத்துக்காட்டு – “அந்த விலங்கை அழைத்து வா” என்று சொல்லி விட்டு, பிறகு “பசுவை அழைத்து வா”
என்று சொன்னால், முதலில் ’விலங்கு’ என்று சொல்லப்பட்டது வேறொரு விலங்கு,
இப்பொழுது பசு சொல்லப்படுகிறது என்று பொருள் அல்ல.
பொதுவாக உள்ள விலங்கு என்று சொல்லும் இவ்விடத்தில் பசுதவத் தான் குறிக்கிறது. இதற்கு
தான் ஸாமாந்ய விபஷ ந்யாயம் என்று பெயர் –

சத் -ப்ரஹ்மம் -ஆத்மா-சிறப்புச் சொற்கள் -சொல்வதையே -நாராயண பொதுச் சொல் குறிக்கும்
உபதேச ஷட்கம் பார்த்தோம்
அதி தேச ஷட்கம் -மேல் ஆறும் –

————–

பாடம் -19-அத்யாயம் -7

•மீமாம்ஸா சாஸ்த்ரத்தின் முதல் ஆறு அத்யாயங்களால் தர்மத்தின் ப்ரமாணங்கள், தர்மங்களுக்குள் வேறுபாடு,
அங்கத்வம், ப்ரயுக்தி, க்ரமம், அதிகாரம் ஆகிய ஆறு விசாரங்களின் மூலம் தர்மங்களளப் பற்றி வேதத்தில்
இருக்கும் உபதேசங்கள் (நேரடியான கூற்றுகள்) காண் பிக்கப்பட்டன.
இனி, அதிதேசம் என்பது ஏழாவது அத்யாயம் தொடங்கி கூறப்படுகிறது.
•அதிதேசம் என்றால் ஓரிடத்தில் சொல்லப்பட்ட விஷயங்களை ஒற்றுமை யுடைய மற்ற இடங்களில்
தருவித்துக் கொள்ளுதல். ஆகையால், உபதேசம் செய்யப்பட்டதை தான் அதிதேசம் செய்ய இயலும்
என்றபடியால் அதிதேசம் என்றுமே உபதேசத்தை நம்பியே இருக்கக் கூடியது.

ப்ரக்ருதி விக்ருதி
• வேதத்தில் நூற்றுக்கணக்கான யாகங்கள் சொல்லப்பட்டுள்ளன.
ஆனால், அவை அனைத்துக்கும் உள்ள அங்கங்கள் ஒவ்வொன்றையும் வேதம் தனித்தனியாக மறுபடியும் மறுபடியும்
சொல்லவில்லை . ஓரிடத்தில் அனைத்து அங்கங்களளயும் உபதேசம் செய்துவிட்டு, மற்ற யாகங்களிலும்
இதே போல் செய்யவேண்டும் என்று சொல்லி நிருத்தியுள்ளது.
• எந்த கர்மங்களினுடைய அங்கங்கள் அனைத்தும் விரிவாக நேரடியாக வேதத்தால் போதிக்கப்பட்டுள்ளனவோ, அவற்றுக்கு
ப்ரக்ருதி என்று பெயர். எடுத்துக்காட்டு – அக்நி ஹோத்ரம் என்ற ஹோமம், தர்சபூர்ணமாஸம் என் ற யாகம், ஜ்யோதிஷ்டோமம்
என்று அழைக்கப்படும் ஒரு ஸோம யாகம் ஆகிய மூன்று யாகங்களுக்குமுள்ள அங்கங்களை வேதமே நேரடியாக
உபதேசிக்கிறது.ஆகையால் இவை ப்ரக்ருதிகள்.
• எந்த கர்மங்களின் அங்கங்கள் அனைத்தையும் வேதம் உபதேசிக்காமல், “முன்னால் சொல்லப் பட்ட கர்மத்தைப் போல்
இதுவும் செய்யப்படவேண்டும்” என்று வேதம் சொல்கிறதோ , அவை விக்ருதிகள் ஆகின்றன. எடுத்துக்காட்டு – ஸூர்யனுக்காக சருவை
(வடிக்காத அரிசிச் சோற்றை) கொடுக்கும் யாகமானது, தர்சபூர்ணமாஸத்தில் செய்யப்படும் எட்டு கபாலங்களில்
சமைக்கப்பட்ட புரோடாசத்ளத அக்நிக்கு தானம் செய்யும் யாகத்தின் விக்ருதி ஆகும்.

அதிதேசம்
அதி என்றால் மீதூர்ந்து / கடந்து / தாண்டி என்று பொருள்.
தேசம் என்றால் போதித்தல் / அறிவித்தல்.
ஆகையால், அதிதேசம் என்ற சொல், “கடந்து போதித்தல்” என்ற பொருளைக் குறிக்கிறது.
• ப்ரக்ருதிக்கு அங்கமாக விதிக்கப்பட்ட ஒரு கர்மத்தை , அதைக் கடந்து, மற்ற விக்ருதி யாகங்களுக்கும்
அங்கமாக போதிக்கும் சொல் தொடருக்குத் தான் அதிதேசம் என்று பெயர்.
• வேறு ஓரு இடத்தில் சொல்லப்பட்ட காரியக்கூட்டம் (இதி கர்தவ்யதா / செயல்முறை ) தான் செய்யும் உபகாரத்தின்
வயிலாக வேறு இடங்களளச் சென்று அடைவது தான் அதிதேசம் ஆகும்
• எந்த ஒரு சொல் தொடரால் ப்ரக்ருதி என்று அழைக்கப்படும் கர்மத்தில் இருந்து அதோடு ஒத்த (ஸத்ருசமான /
ஒற்றுமையுடைய) மற்ற கர்மங்களுக்கு அங்கங்கள் சென்று அடைகின்றனவோ அந்தச் சொல் தொடர்
அதிதேசம் என்று அழைக்கப்படுகிறது.

ப்ரக்ருதியும் விக்ருதியும் அங்கத்தை ஏற்கும் முறை
முதலில் ப்ரக்ருதி யாகம் வேதத்தால் விதிக்கப்படுகிறது.
• அதே யாகத்துக்கு தனக்கு உதவக்கூடிய அங்கங்ளின் தேவை ஏற்படுகிறது
• அப்பொழுது அருகிலேயே ப்ரயாஜம் முதலானவை உபதேசிக்கப்பட்டு, தங்களுக்கு ஒரு பயனை எதிர்பார்க்கின் றன.
•ஆகையால், ஒன்றுக்கு ஓன்று எதிர்பார்ப்பு இருப்பதால், இதே ப்ரக்ருதி யாகத்துக்கு ப்ரயாஜம் முதலானவை அங்கங்கள் ஆகின் றன.
• அடுத்து, விக்ருதி யாகம் ஒன்று விதிக்கப்படுகிறது. அதற்கும் தனக்கு உதவக்கூடிய அங்கங்களின் தேவை ஏற்படுகிறது
• அதே விக்ருதிக்கு அருகிலேயே சில அங்கங்கள் உபதேசிக்கப்பட்டு இருந்தாலும், அந்த வாக்யங்களை நாம் இன்னும்
அடையாதபடியால் அவை எந்த வகையில் உதவக்கூடியவை என்று நமக்குத் தெரியாது.
ஆகையால், முன்னமே உதவியாளர்கள் என்று பெயர் எடுத்த ப்ரக்ருதியின் அங்கங்கள் தான்
முதலில் விக்ருதி யாகத்தால் க்ரஹிக்கப்படுகின்றன.
அப்பொழுதும், ப்ரயாஜம் முதலானவைக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாதபடியால், ஒரு பக்ஷமான எதிர்பார்ப்பால் தான் ப்ரயாஜம்
முதலானவை விக்ருதி யாகத்துக்கு அங்கங்கள் ஆகின்றன. இதுதான் அதிதேசம் ஆகும்
• இறுதியாக, விக்ருதிக்கு அருகில் படிக்கப்பட்ட அங்கங்கள், தாங்கள் பயனை எதிர்பார்க்கிற படியால், விக்ருதிக்கு
அங்கங்கள் ஆகின்றன.இப்பொழுது அந்த விக்ருதிக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை –

அதிதேசம் இரண்டு வகைப்படும் – வசன அதிதேசம் என்றும் நாம அதிதேசம் என்றும்.
அதில் வசன அதிதேசமானது ப்ரத்யக்ஷ வசன அதிதேசம் என்றும்
கல்பித வசன அதிதேசம் என்றும் மேலும் இரண்டு வகைப்படும்

ஏழாம் அத்யாயத்தின் நான்கு பாதங்களில் சொல்லப்படும் விஷயங்கள்:
•முதல் பாதம் – ப்ரத்யக்ஷ வசன அதிதேசம்
•இரண்டாம் பாதம் – ப்ரத்யக்ஷ வசன அதிதேசத்தின் ஒரு வகையான ஸாம அதிதேசம்
• மூன்றாம் பாதம் – நாம அதிதேசம்
•நான்காம் பாதம் – கல்பித வசன அதிதேசம்

ப்ரத்யக்ஷ வசநம் என்றால் நாம் வேதத்தில் காணக்கூடிய / படிக்கக்கூடிய சொல் தொடர். அப்படிப்பட்ட சொல் தொடர்
நேரடியாக ஒரு யாகத்தின் அங்கத்தை மற்ற ஓரு யாகத்துக்கும் அங்கமாக்க வேண்டும் என்று
அதிதேசத்தை போதித்தால் அதற்கு ப்ரத்யக்ஷ வசன அதிதேசம் என்று பெயர்
• எடுத்துக்காட்டு – ஜ்யோதிஷ் டோமம் என் ற யாகம் தான் அனைத்து ஸோம யாகங்களுக்கும் ப்ரக்ருதியானது.
ச்யேநம் என்ற ஒரு யாகமும் இஷு என்ற மற்ற ஓரு யாகமும் அதன் விக்ருதிகள். ஆகையால்,
ஜ்யோதிஷ் டோமத்தின் அங்கங்கள் அனைத்தும் ச்யேநத்தையும் இஷுவையும் சென்று அடைகின்றன.
• அப்படி ப்ரக்ருதியிலிருந்து அங்கங்களைப் பெற்ற பிறகு, ச்யேந யாகத்தில் சில சிறப்பு அங்கங்களும் விதிக்கப்படுகின்றன –
ரித்விக்குகள் சிவப்பு நிற தலைப்பாகை அணிந்து கொண்டு கார்யம் செய்யவேண்டும், முதலானவை .
• அதே போல் இஷு என்ற யாகத்திலும் ப்ரக்ருதியில் இருந்து அங்கங்கள் வந்து அடைந்த
பிறகு சில சிறப்பு அங்கங்கள் விதிக்கப்பட்டுள்ளன.
• அதற்குப் பிறகு – “மற்றவை ச்யேந யாகத்தோடு ஒக்கும்” என்று ஒரு வேத வாக்கியம் உள்ளது. இதன்மூலம்,
இஷு என் ற யாகத்தில் விதிக்கப்பட்ட சிறப்பு அங்கங்களளத் தவிற, ச்யேந யாகத்தில் விதிக்கப்பட்ட சிறப்பு
அங்கங்களும் இஷு யாகத்தில் சேர்த்துக் கொள்ளப் பட வேண் டும் என்று தெரிகிறது.
• ஆக, “மற்றவை ச்யேந யாகத்வதாடு ஒக்கும்” என்ற சொல் தொடர் , ச்யேந யாகத்தின் அங்கங்களள இஷு யாகத்தில்
சென்று சேர்க்கிற படியால் ப்ரத்யஷ வசந அதிதேசம் ஆகும் –

ஸாமத்தின் அதிதேசம்
ப்ரத்யக்ஷ வசன அதி தேசத்தில் மற்ற ஓரு வகை தான் ஸாமங்களின் அதிதேசம்.
•ஸாமம் என் பது இசை வடிவ மானது. ஸாம வேதத்தில் ஸாமங்கள் படிக்கும் பொழுது, வெறும் இசையைப் படிக்க முடியாத படியால்,
ருக் என்ற ஸாஹித்யத்தோடு சேர்த்து தான் படிக்கப்பட்டுள்ளன. ஒரு ஸாமம் முதன்முதலில் வேதத்தில் உபதேசிக்கப் படும் பொழுது எந்த
ருக்கோடு சேர்த்துப் படிக்கப்பட்டுள்ளதோ அது யோனி ருக் என்று அழைக்கப் படுகிறது –
• அதற்குப் பிறகு, இதே ஸாமத்தை மற்ற ருக்குகளோடும் சேர்த்து பாட வேண்டும் என்று வேதம் சொல்கிறது, ஆனால் மறுபடியும்
மறுபடியும் இதே ஸாமத்தை அந்தந்த ருக்கோடு சேர்த்து பாடிக்காட்டு வதில்லை .
• “கவதி என் ற ருக்குகளில் ரதந்தரம் என் ற ஸாமத்தைப் பாடவேண்டும்” என் ற கட்டளையின்மூலம், ஒரு ருக்கோடு
படிக்கப்பட்ட ஸாமத்தை மற்ற ஓரு ருக்கோடு சேர்க்கிறது. ஆகையால், இதற்கு ஸாமத்தின் அதிதேசம் என்று பெயர்.
• அதே போல், “யோநி ருக்கில் படிக்கப்பட்ட ஸாமத்ளத உத்தரா என்ற பெயருளடய இரண் டு ருக்குகளோடும் சேர்த்தும் படிக்க வேண்டும்”
என்று ஒரு வேத வாக்கியம் உள்ளது. இவை எல்லாம் ஸாமத்தின் அதிதேசத்தைக் கூறுகின் றன

நாமத்தால் அதிதேசம்

பெயரைக் கொண்டும் அதிதேசம் ஏற்படுவதுண்டு. பொதுவாக , ஒருவருக்குப் ப்ரபலமாக இருக்கும் பெயரை இட்டு மற்ற ஓருவரை
அழைத்தால், அவருக்கும் இவருக்கும் ஏதோ ஒற்றுமை உள்ளது என்று நாம்அறிந்து கொள் வோம்.
• எடுத்துக்காட்டு – ஒருவரைப் பார்த்து, “இவர் ஹநுமான்” என்று சொன்னால், அவர் ஹநுமானைப் போல் மிகுந்த் ராம பக்தி உடையவர்
என்று பொருள். ஆகையால், நாம் ஒருவருக்கு இடும் பெயரை வைத்து , அவரது தன்மை களை அறியலாம்.
• அதே போல் தான் வேதத்திலும் ஒரு கர்மத்தின் பெயரை வைத்து அது எந்த கர்மத்தோடு ஒற்றது என்று அறியலாம்.
• எடுத்துக்காட்டு – நாம் தினமும் செய்யவேண் டிய ஒரு ஹோமத்துக்கு அக்நி ஹோத்ரம் என்று பெயர்
என்று முன்னால் படித்தோம். அதே பெயரை உடைய வேறே ஒரு கர்மமும் விதிக்கப்படுகிறது –
“ஒரு மாதத்திற்கு அக்நி ஹோத்ரம் செய்யவேண்டும்” என்று. ஆகையால், ப்ரஸித்தமான அக்நி ஹோத்ரத்தின் பெயரால் இந்த புது
ஹோமம் குறிக்கப்படுவதால் நாம் அறியலாம் – “ப்ரஸித்தமான அக்நி ஹோத்ரத்தைப் போன்ற தன்மைகளை உடையது இந்த
ஹோமம்” என்று. ஒரு வைதிக கர்மத்தின் தன்மைகள் என்ன ? அதன் அங்கங்கள் தான். ஆகையால், இந்த புது கர்மமானது ப்ரஸித்தமான
அக்நி ஹோத்ரத்தின் அங்கங்களையே அங்கங்களாக உடையது என்று இந்தப் பெயரைக் கொண் டு அறிகிறோம். இதுவே நாம அதிதேசம் –

கல்பித வசன அதிதேசம்
இப்படி ப்ரக்ருதி யாகத்தின் அங்கங்களைக் கொண்டு வந்து விக்ருதி யாகத்தில் சேர்க்கக்கூடிய
ஒரு கட்டளை ஒருவேளை ஒரு விக்ருதி யாகத்தில் இல்லை என்றால்,நாமாக அப்படி ஒரு வசனதைக்
கல்பிக்க வேண்டும். ஏன் என்றால், இதி கர்தவ்யதா / செயல் முறை / உதவியாளர்கள் /
அங்கங்கள் இல்லாமல் ஒரு யாகத்தால் மட்டும் எந்த பயனயும் கொடுக்க முடியாது.
•இப்படி கல்பிக்கப்படும் வாக்யத்துக்கு கல்பித வசன அதிதேசம் என்று பெயர்.
•“ஆக்நேய யாகத்தைப் போல் ஸௌர்ய யாகத்தைச் செய்ய வேண்டும்”, “ப்ரக்ருதி யாகத்தைப் போல்
விக்ருதி யாகத்தைச் செய்ய வேண்டும்”என்பது போல் இந்த வசனம் கல்பிக்கப்படுகிறது-

————–
பாடம் -20-
•ஏழாவது அத்யாயத்தில் கடைசி பாதத்தில் கல்பித வசந அதிதேசம் என்பது அறிமுகப்படுத்தப்பட்டது –
பொதுவாக விவரிக்கப் பட்டது. அதைப் பற்றிச் சொல்ல வேண்டிய சிறப்பு அம்சங்கள் இந்த எட்டாவது அத்யாயத்தில்
சொல்லப்படுகின்றன.
•அதிலும் நான்கு பாதங்களில் –
•முதல் பாதம் – ஸ்பஷ்டமான அறிகுறியை வைத்து கல்பிக்கப்படும் வசநத்தால் ஏற்படும் அதி தேசத்தையும்
•இரண்டாவது பாதம் – ஸ் பஷ்டம் அல்லாத அறிகுறியை வைத்து கல்பிக்கப்படும் வசநத்தால் ஏற்படும் அதி தேசத்தையும்
•மூன்றாவது பாதம் – பல அறிகுறிகள் இருந்தால் அவற்றில் எதைக் காட்டிலும் எது பலம் பொருந்தியது என்பதையும்
•நான்காவது பாதம் – அதிதேசம் ஏற்படாது விதி விலக்குகளையும் கூறுகின்றன

கல்பித வசன அதிதேசத்தின் முறை –
• ஸூர்யனுக்காக சரு என்று அழைக்கப்படும் கஞ்சி வடிக்காத அரிசி சோற்றைக் கொண்டு யாகம் செய்ய வேண்டும்
என்று ஒரு வேத வாக்கியம் கூறுகிறது. இதற்கு ஸௌர்ய யாகம் என்று பெயர்
• இந்த யாகத்தின் செயல்முறை முழுமையாக சொல்லப் படவில்லை , ஆகையால் இந்த யாகம் அங்கங்களை
எதிர்பார்க்கிற படியால் அதிதேசம் கல்பித்து அங்கங்களைக் கொண்டு வர வேண்டும்.
• ஒரு நியதி இல்லாமல் ஏதோ ஒரு யாகத்திலிருந்து ஏதோ ஒரு யாகத்துக்கு அங்கங்களை அதிதேசம் செய்யலாம் என்பது சரியல்லை .
சாஸ்த்ரத்தின் பொருள் என்பது ஒரு ந்யாயத்தோடும் நியமத்தோடும் தான் இருக்க வேண்டும்.
ஆகையால், ஏதோ ஒரு யாகத்தின் அங்கங்கள் தான் இங்கு கொண்டு வரப்பட வேண்டும்.
அந்த யாகம் ஸௌர்ய யாகத்ததாடு ஒற்றுமை யுடையதாக இருந்தால் எளிது.
• ஸௌர்ய யாகத்தை விதிக்கும் வேத வாக்கியத்தைப் பார்த்தவுைன் நமக்குத் தெரியும் விஷயங்கள்:
• இதில் ஒரு தேவதை தான்
• இது நெல்லைக் கொண் டு செய்யப் படுகிறது
• இதில் தத்திதம் என்ற ப்ரத்யயம் உபயோகப் படுத்தப் பட்டுள்ளது
(தாசாரதி -தசரதன் தொடர்பு -ஜனகன் -ஜானகி -இவை தத்வித ப்ரத்யயங்கள் )
• இதில் நிர்வாபம் என்ற செயல் உள்ளது
• இவற்றைப் பார்த்தவுடன் நமக்கு சடக்கென முதலில் நினைவுக்கு வரக் கூடியது தர்சபூர்ணமாஸத்தில் செய்யப்படும் ஆக்நேய யாகம் தான்.
ஏன் என்றால் மேற் சொன்ன நான்கு தன்மைகளும் அதற்கும் உள்ளன.
• ஆகையால், ஸௌர்ய வாக்கியத்தைப் பார்த்தவுடன் முதலில் நினைவுக்கு வரும் ஆக்நேய யாகத்தின் அங்கங்களையே தான்
ஸௌர்ய யாகத்திலும் செய்ய வேண்டும் என்று ஒரு விதியை கல்பிக்கிறோம். இது தான் கல்பித வசந அதிதேசம் ஆகும் –

தர்ச பூர்ண மாச ஆறு யாகங்களை இஷ்டிகள் என்றும் அழைப்பர் –

ஸோம யாகங்கள்
ஸோம யாகங்கள் அனைத்துக்கும் ஜ்யோதிஷ் டோமம் என்ற ஸோம யாகம் தான் ப்ரக்ருதி,
அதிலிருந்து தான் அனைத்து ஸோம யாகங்களுக்கும் அங்கங்கள் சென்று அடைகின்றன.
• “விச்வஜித் யாகத்தைச் சேய்”,”அபிஜித் யாகத்தைச் செய்”, “எதிரிகளைக் கொலை செய்பவன் ச்யேந யாகத்தைச்
செய்ய வேண்டும்” என்று பல விதிகளால் பல யாகங்கள் விதிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு எல்லாம் எங்கிருந்து
அங்கங்களைக் கொண்டு வர வேண்டும் என்று யோசிக்க வேண்டும்.
• இவற்றின் விதி வாக்கியத்தைப் பார்த்தால் ஒன்று தெரியும் – எந்த தேவதைக்காக இந்த யாகம் செய்யப்படுகிறது என்று இந்த
வாக்கியத்தில் இல்லை .-அதே போல் வேறே யாகம் உள்ளதா என்று பார்த்தால் – “ஸோமேந யஜேத” / “ஸோம லதையைக் கொண்டு
யாகம் செய்” என்று ஜ்யோதிஷ் டோமம் என் ற யாகத்தை விதிக்கும் வாக்கியத்திலும் தேவதை சொல்லப்டவில்லை , ஆனால்
ஜ்யோதிஷ் டோமத்தின் அனைத்து அங்கங்களும் விவரிக்கப் பட்டுள்ளன.
•ஆகையால், உத்பத்தி வாக்கியத்தில் தேவதை சொல்லப்படாமை என்ற ஒற்றுமையைக் கொண்டு விச்வஜித், அபிஜித், ச்யேநம்
முதலான யாகங்கள் ஜ்யோதிஷ் டோமத்தின் விக்ருதிகள் தான் என்று முடிவு செய்து, அதன் அங்கங்களை இங்கு கொண்டு வந்து சேர்க்கும்
அதிதேச வாக்கியத்தைக் கல்பிக்கலாம். ஆகையால், இவையும் ஸோம ரஸத்தால் செய்யும் யாகங்கள் ஆகின்றன

அதி தேசம் ஆகாதவை
• ஒரு யாகத்திலிருந்து மற்ற ஓரு யாகத்துக்கு அங்கங்களை அதிதேசம் செய்யும் பொழுது,
கீழ்க் கண்டவற்றை அதிதேசம் செய்யக் கூடாது :
• (1) பலம் – ப்ரக்ருதி யாகத்துக்கு என்ன பலம் வேதத்தால் சொல்லப் பட்டதோ , அதையும் விக்ருதிக்கு எடுத்துச் சென்று,
விக்ருதிக்கும் அதே பலம் தான் என்று சொல்லக் கூடாது, ஏன் என்றால் விக்ருதியை போதிக்கும் வாக்கியத்திலேயே
அதற்குத் தனியாக பலம் சொல்லப்பட்டுள்ளது.
ஆகையால், ஆக்நேயம் என்ற ப்ரக்ருதி யாகம் ஸ்வர்கத்துக்காக செய்யப்பட்டாலும், அதன் விக்ருதியான
ஸௌர்ய யாகத்துக்கு ப்ரஹ்ம வர்சஸம் என்ற பலம் இருக்கலாம்
• (2) நியமம் – தர்சபூர்ணமாஸம் என் ற கர்மம் வாழ்நாள் முழுவதும் செய்யப்பட வேண் டும் என்று வேதம் உபதேசிப்பதால்
அது நித்ய கர்மம் ஆகிறது. ஆனால், அதிலிருந்து ஸௌர்ய யாகத்துக்கு அதிதேசம் செய்யும் பொழுது,
’வாழ்நாள் முழுவதும் செய்தல் வேண்டும்’ என்ற நியமத்தை எடுத்துச் செல்லக் கூடாது. ஸௌர்ய யாகத்தை ஒரு முறை செய்தாலே
ப்ரஹ் மவர்சஸம் என்ற பலம் கிட்டும்.
• (3) கர்த்தா – தர்சபூர்ணமாஸத்தைச் செய்பவன் ஸ்வர்ககாமன், அதாவது ஸ்வர்கத்தில் ஆசை இருப்பவன் என்று வேதம் கூறுகிறது.
அந்த கர்த்தாவை அதிதேசம் செய்து, ஸௌர்ய யாகத்தையும் ஸ் வர்கத்தில் ஆசை இருப்பவன் தான் செய்ய வேண் டும் என்று கூற முடியாது.
ஸௌர்ய யாகத்தின் பலத்தில் ஆசை இருப்பவன்,அந்த யாகத்தின் கர்த்தா ஆவான்.
• (4) ஸங்கம் – ஸங்கம் என் றால் சேர்க்கை என்று பபாருள். ஆக்நேய யாகம் தனியாக ஸ்வர்கத்தைக் கொடுக்காது,
தர்சபூர்ணமாஸத்தில் இருக்கும் மற்ற ஐந்ததோடு சேர்ந்து தான் கொடுக்கும். ஆனால் அதே போல் அதன் விக்ருதியான
ஸௌர்ய யாகமும் வேறு ஐந்து யாகங்களை எதிர்பார்க்க வேண்டும் என்று தேவை இல்லை
, அதாவது ப்ரக்ருதி யாகத்துக்கு இருக்கும் சேர்க்கைகளை அதிதேசம் செய்யக்கூடாது.

அதே போல் ப்ரக்ருதியில் காம்யமாக விதிக்கப்பட்ட குணங்களுக்கும் அதிதேசம் கிடையாது.
• தர்சபூர்ணமாஸ யாகத்தை நித்ய கர்மமாகச் செய்யும் பொழுது, தீர்த்தத்தை ஓர் இடத்திலிருந்து மற்ற ஓர் இடத்திற்கு
மாற்றும் ப்ரணயநம் என்ற கார்யத்துக்காக சமஸம் என்ற பாத்திரத்தை உபயோகிக்க வேண்டும்.
ஆனால், நித்ய கர்மமாக இல்லாமல், பசுக்கள் வேண்டும் என்ற ஆசை இருந்தால், அதத ப்ரணயநத்தை கோதோஹநம்
என் ற பாத்திரத்தால் செய்ய வேண்டும் என்று பார்த்திருக்கிறோம்.
இதில் சமஸம் என்பது தர்சபூர்ணமாஸ யாகத்தின் அங்கம், அதற்கு உதவுகிறபடியால். கோதோஹநம் என்பது நேரடியாக
பசு என்ற பலத்தின் அங்கம், தர்சபூர்ணமாஸத்தின் அங்கம்அல்ல.
• அதிதேசம் என் பது, ஒரு விக்ருதி யாகத்துக்கு அங்கங்களின் எதிர்பார்ப்பு, அதைத் தீர்ப்பதற்காக வேறே ஒரு ப்ரக்ருதி
யாகத்திலிருந்து அங்கங்களைக் கொண் டுவந்து சேர்ப்பது தான்.
ஆகையால், ப்ரக்ருதி யாகத்தின் அங்கங்களை மட்டும் தான் அதிதேசம் செய்யமுடியும்.
• கோதோஹநம் என்பது தர்சபூர்ணமாஸத்தின் அங்கமே அல்ல, பசு என்ற பலத்தின் அங்கம். ஆகையால், கோதோஹநத்தை
ஸௌர்ய யாகத்திற்கு அதிதேசம் செய்ய முடியாது. சமஸத்தை மட்டும் தான் அதிதேசம் செய்ய முடியும்.
• ஆகையால், ஸௌர்ய யாகத்தில் சமஸத்தால் மட்டும் தான் ப்ரணயநம் செய்யலாம்.
ஸௌர்ய யாகத்தில் கோதோஹநத்தால் ப்ரணயநம் செய்தால் பசுக்களைப் பெற முடியாது

எது எதற்கு விக்ருதி
பதிதனாரு கபாலங்களில் சமைக்கப்பட்ட புரோடாசத்தைக் கொண்டு இந்த்ரனுக்கு யாகம் செய்ய வேண்டும் என்று வேதம் விதிக்கிறது.
இப்பொழுது இந்த யாகம் எந்த யாகத்தின் விக்ருதி, அதாவது, எந்த யாகத்தின் அங்கங்களை இதில்
கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்ற ஸந்தேஹம் எழுகிறது.
• நேரடியாக அதிதேசத்தைப் போதிக்கும் எந்த வாக்கியமும் இல்லாதபடியால், இந்த யாகத்துக்கு வேறு எந்த யாகத்ததாடு
ஒற்றுமை உள்ளது என்று பார்த்து தான் அதிதேசம் செய்ய வேண்டும்.
• (1) இந்தனுக்காகச் செய்யப்படுதல் என்ற ஒற்றுமையை வைத்து தர்சபூர்ணமாஸத்தில் இந்த்ரனுக்காகச் செய்யப்படும்
பால் அல்லது தயிர் யாகத்தின் அங்கங்களைக் கொண்டுவரலாம்
• (2) பதினொரு கபாலங்களில் சமைக்கப்பட்ட புரோடாசத்தைக் கொண்டு செய்யப் படுதல் என்ற ஓற்றுமையை வைத்துப் பார்த்தால்,
தர்சபூர்ணமாஸத்தில் பதினொரு கபாலங்களில் சமைக்கப் பட்ட புரோடாசத்தைக் கொண்டு
செய்யப்படும் அக்நீ ஷோமீயம் என் ற யாகத்தின் அங்கங்களைக் கொண்டுவரலாம்
• பூர்வ பக்ஷம் –
யாகத்தில் ப்ரதானமானது தேவதை தான், அவருக்காக யாகம் செய்கிறபடியால். ஆகையால், தேவதையில் ஒற்றுமையைக் கொண்டு தான்
அதிதேசம் செய்ய வேண்டும்.
• ஸித்தாந்தம் –
யாகம் என் றால் ஒரு தேவதையைக் குறித்து ஒரு த்ரவ்யத்தைத் த்யாகம் செய்வது. த்ரவ்யம் கண் முன் உள்ளது,
த்யாகத்துக்கு மிகவும் தேவையானதாக இருக்கிறது. தேவதையோ மனதால் நினைக்கப் படுகிறார்,
அவ்வளவுதான், ஆகையால் த்யாகத்திற்கு நெருக்கமானவர் அல்ல. ஆகையால், த்யாகம் என்ற யாகத்துக்கு தேவதையைக் காட்டிலும்
அந்தரங்கமானது த்ரவ்யம் தான். ஆகையால், மேற் பசொன்ன இரண் டாவது பக்ஷத்தைத் தான் பின் பற்ற வேண்டும்

வேதத்தில் “தயிர், தேன், நெய், நீர் , சோளம், அரிசி, இவற்றால்
ப்ரஜாபதிக்கு யாகம் செய்ய வேண்டும்” என்ற வாக்கியம் 6 யாகங்களை விதிக்கிறது.
• இதில் தயிர் யாகம் தர்ச பூர்ண மாஸத்திலிருக்கும் இந்த்ரனுக்கான தயிர் யாகத்தின் விக்ருதி என்பதையும்,
நெய் யாகம் தர்சபூர்ணமாஸத்தில் பௌர்ணமி அன்று நெய்யை வைத்து செய்யப் படும்
உபாம்சுயாஜத்தின் விக்ருதி என்பதையும், சோளம் மற்றும் அரிசியை வைத்துச் செய்யும் யாகங்கள் தர்சபூர்ணமாஸத்திலிருக்கும்
ஆக்நேய யாகத்தின் விக்ருதிகள் என்பதையும் எளிதில் அறியலாம்.
• ஆனால் தேன் யாகமும் நீ ர் யாகமும் எவற்றின் விக்ருதிகள் என்று ஆராய வேண்டும்.
• பூர்வபக்ஷம் –
த்ரவமான த்ரவ்யத்தைக் கொண்ட து என்ற ஒற்றுமையைக் கொண் டு தர்சபூர்ணமாஸத்தில் இந்த்ரனுக்காகச்
செய்யப் படும் பால் அல்லது தயிர் யாகத்தின் விக்ருதிகள் தான் இவை
•ஸித்தாந்தம் –
நெய்யும் நெருப்பின் ஸம்பந்தத்தால் த்ரவமாக ஆகக் கூடியதான படியால் அதோடும் இவை இரண் டுக்கும் ஒற்றுமை
உள்ளது. மேலும், நெய்யோடு மற்ற ஓரு ஒற்றுமையும் உள்ளது -தேனுக்கு நீருக்கும் – அவற்றின் வழியே ஒளி புக முடியும் என்பது.
ஆகையால், மிகுந்த ஒற்றுமை இருக்கிறபடியால், தேன் யாகமும் நீ ர் யாகமும்,
தர்சபூர்ணமாஸத்தில் நெய்யால் செய்யப்படும் உபாம்சுயாஜத்தின் விக்ருதிகள் தான்.

• வேதத்தில் ஆமிக்ஷா என் ற த்ரவ்யத்தைக் கொண்டு செய்ய வேண்டிய யாகம் விதிக்கப்பட்டுள்ளது. அது எதன் விக்ருதி?
எந்த யாகத்தின் அங்கங்களை இதில் கொண்டு வர வேண்டும் என்று ஸந்தேஹம் ஏற்படுகிறது.
• ஆமிக்ஷா என்ற த்ரவ்யம் எந்த த்ரவ்யத்தோடு தொடர்பு / ஒற்றுமை உடையதோ , அந்த த்ரவ்யத்தால் செய்யப்படும் யாகத்தின்
விக்ருதியாகத் தான் இந்த ஆமிக்ஷா யாகம் இருக்க வேண்டும்.
• கொதிக்கும் பாலில் தயிரை சேர்த்து அதைத் திரிய வைத்தால் கிடைக்கும் கெட்டிப் பகுதிக்கு தான் ஆமிக்ஷா என்று பெயர்.
• பூர்வ பக்ஷம் 1 –
பால் தயிர் இரண் டிலிருந்தும் ஆமிக்ஷா தோன்றுகிற படியால், தர்சபூர்ணமாஸத்தில் இந்த்ரனைக் குறித்து
தயிராலும் பாலாலும் செய்யப் படும் யாகங்களின் அங்கங்களைத் தான் இந்த ஆமிக்ஷா யாகத்தில் சேர்க்க வேண்டும்
• பூர்வ பக்ஷம் 2 –
ஆமிக்ஷா என் பது தயிர் பால் என் ற இரண் டிலிருந்தும் தோன்றியிருந்தாலும், ஆமிக்ஷா கெட்டியாக இருக்கிறபடியால் அதற்கும்
தயிருக்கும் தான் மிகுந்த ஒற்றுமை உள்ளது. ஆகையால், தர்சபூர்ணமாஸத்தில் இந்த்ரனுக்காக செய்யப்படும் தயிர் யாகத்தும் விக்ருதி தான் இது
•ஸித்தாந்தம் –
ஆமிக்ஷா தயிர் பால் என் ற இரண் டிலிருந்தும் தோன்றியிருந்தாலும், பால் தான் முக்கியமானது. கெட்டி பாகம் த்ரவமான
பாகம் என்ற பிரிவை ஏற்படுத்த மட்டுமே தயிர் உதவுகிறது. ஆகையால் ஆமிக்ஷா யாகத்தில் பால் யாகத்தின் செயல் முறையைத்தான்
பின் பற்ற வேண்டும்-

அக்நாவிஷ்ணு என்ற தேவதைக்கு பதினொரு கபாலங்களில் சமைக்கப் பட்ட புரோடசத்தாலும் , ஸரஸ்வதி என்ற
தேவதைக்கு சரு என்ற த்ரவ்யத்தாலும், ப்ருஹஸ்பதி என்ற தேவதைக்கு சரு என் ற த்ரவ்யத்தாலும்
யாகம் செய்ய வேண்டும் என்று வேதம் சொல்கிறது .
• பூர்வ பக்ஷம் –
இங்கு மூன்று யாகங்கள் உள்ளன.
தர்சபூர்ணமாஸத்தில் பௌர்ணமி அன்றும் மூன்று யாகங்கள் உள்ளன. ஆகையால், இங்கிருக்கும் முதல் யாகம்
தர்சபூர்ணமாஸத்தில் முதல் யாகமான ஆக்நேய யாகத்தின் விக்ருதி தான்
•ஸித்தாந்தம் –
யாகங்களின் இடத்தில் ஒற்றுமையைக் காட்டிலும் அவற்றின் தேவதைகளின் ஒற்று மையைப் பார்ப்பது முக்கியம்.
இவ்விடத்தில் முதல் யாகம் அக்நி விஷ்ணு என்பவர்களைச் சேர்த்து ஒரு தேவதையாக உடையது. தர்சபூர்ணமாஸத்தில் முதல் யாகமான
ஆக்நேய யாகம் ஒரே ஒரு அக்நியை மட்டும் தேவதையாக உடையது.
ஆகையால் தேவதைப் பொருத்தம் இல்லை . தர்சபூர்ணமாஸத்தில் மூன் றாவது யாகம் ஆக்நீ ஷோமீயம், அதாவது அக்நி ஸோமன்
என்பவர்களைச் சேர்த்து ஒரு தேவதையாகவே உடையது. ஆகையால், அது தான் இங்கு சொல்லப்பட்ட யாகத்ததாடு அதிகமான ஒற்றுமை
உடையது. ஆகையால் இந்த முதல் யாகம் அங்கிருக்கும் மூன்றாவது யாகத்தின் விக்ருதி தான்

யாகம் -தேவதையைக் குறித்து த்ரவ்யம் தியாகம் -அதுக்கு அங்கமாக -அக்னியில் ஒரு பகுதியை சேர்ப்பது
ஹோமம் -அங்க அங்கி பாவம் இல்லை -மூன்றுக்கும் சமமான ப்ராதான்யம்

தர்வி ஹோமங்கள்
இது வரை அதிதேசம் ஏற்படும் இடங்களைப் பார்த்தோம். எட்டாவது அத்யாயத்தின் கடைசி பாதத்தில்
அதிதேசமே இல்லாத இடமான தர்வி ஹோமங்களைப் பற்றிச் சொல்லப் படுகிறது
• ‘ஜுஹோதி’ / ’ஹோமம் செய்ய வேண்டும்’ என்ற சொல்லால் விதிக்கப்படுபவை தர்வி ஹோமங்கள்.
பல தர்வி ஹோமங்கள் ஸ்ம்ருதி நூல்களிலும் ச்ருதி என்ற வேதத்திலும் சொல்லப் பட்டுள்ளன.
• பூர்வ பக்ஷம் –
தர்விஹோமங்களை விதிக்கும் வாக்கியங்களிலும் தேவதை சொல்லப் படாதபடியால், இவை ஸோம யாகத்தின் விக்ருதிகள்
•ஸித்தாந்தம் –
விதி வாக்கியத்தில் தேவதை சொல்லப்படாமை என் ற ஒற்றுமை இருந்தாலும், ஸோம யாகங்கள் யாகங்கள், இவை ஹோமங்கள்.
யாகங்களுக்கும் ஹோமங்களுக்கும் மிகுந்த வேறுபாடு உள்ளது.
யாகங்களில் “வௌஷட் ” என்று சொல்ல வேண்டும், ஹோமங்களில் ஸ்வாஹா என்று சொல்ல வேண்டும். மேலும், தர்வி ஹோமங்களில்
“ப்ருதிவிக்கு ஸ்வாஹா அந்தரிக்ஷத்துக்கு ஸ்வாஹா” போன்ற மந்த்ரங்கள் சொல்லப் படுகிறபடியால், இவற்றில் தேவதைகள் உள்ளன, ஆகையால்
ஸோம யாகத்ததாடு ஒற்றுமையும் இல்லை .
• ஆகையால், ஒற்றுமையைக் காட்டிலும் வேற்றுமைகள் அதிகமாக உள்ளபடியால் எந்த யாகத்தின் செயல்முறையையும் இவற்றில் அதிதேசம்
செய்ய முடியாது.
• ஆகையால், தர்வி ஹோமங்களில் அதி தேசமே செய்ய முடியாது.
அவ்விடத்தில் எந்த அங்கங்கள் சொல்லப் பட்டுள்ளனவோ அவற்றை மட்டும் தான் செய்ய வேண்டும்.

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கணாதர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்