Archive for the ‘ubanishads’ Category

ஸ்ரீ நாராயணனின் ஸாத்விகம் பற்றிய பிரமாணங்கள்

November 8, 2021

வேதா சாஸ்திரம் பரம் நாஸ்தி ந தைவம் கேசவாத் பரம்.

மைதாரணீய உபநிஷத நிர்ணயம் (ஸ்ரீ வேதாந்த தேசிகர் முதலான பூர்வாச்சார்யர்களால் கையாளப்பட்டது)

ப்ரோக்தா அக்ர்யாஸ்தனவோ ப்ரஹ்மா ருத்ரோ விஷ்ணுரித்யத யோ ஹ கலு வாவாஸ்ய
ராஜஸோம்ஶோ ஸௌ ஸ யோ யம் ப்ரஹ்மாத யோ ஹ கலு வாவாஸ்ய
தாமஸோம்ஶோஸௌ ஸ யோயம் ருத்ரோ (நாலாவது ப்ரபாடகம்)

பரமாத்மா விக்கு பிரம்மன், ருத்ரன், விஷ்ணு எனும் மூன்று சரீரங்கள் உள்ளன.
பரம புருஷனானுடைய ராஜஸாமசம் பிரம்மன், ஸாத்வீகாமசம் விஷ்ணு, தாமஸாமசம் ருத்ரன் -என ஓதப்பட்டுள்ளது
ஸாத்வீக ராஜஸ தாமஸ தேவதா நிர்ணயத்திற்கு இவ்வொரு வாக்யமே போதுமானது

———-

லலாடாத கரோதஜோ ருத்ரோ ஜாயதே–ஸூபாலோபனிஷத நிர்ணயம்

பிரமனின் கோபத்தால் நெற்றியிலிருந்து உருத்திரன் உண்டானான் என்று ஓதப்பட்டது.
கோபத்தால் உண்டானது என்றதனால் ரஜஸதமோகுணமுள்ளவன் ருத்ரன் என்பது ஸித்தம்.

———-

ஸர்வஸம்ஹாரஸமர்த: பரிபவாஸஹ: ப்ரபுர்வ்யாப்த: ஸதோஜஜ்வலோऽவித்யாதத்கார்யஹீன:
ஸ்வாத்மபந்த ஹர: ஸர்வதா த்வைதரஹித ஆனந்தரூப: ஸர்வாதிஷ்டான:
ஸன்மாத்ரோ நிரஸ்தாவித்யாதமோமோஹோऽஹமேவேதி தஸ்மாதேவமேவேமமாத்மானம்
பரம் ப்ரஹ்மானுஸந்தத் யாதேஷ வீரோ ந்ருʼஸிம்ஹ ஏவேதி–ந்ருசிம்ஹதாபனீ உபனிஷத்

அனைவரையும் ஸம்ஹாரம் செய்வதில் வல்லவனாய், ஒருவராலும் அவமதிக்கவொண்ணாதவனாய்,
ஸர்வேஷ்வரனும், ஸர்வவியாபியாய, எப்போதும் பிரகாசிப்பவனாய், அஜ்ஞானமும் அதன் காரியமுமற்றவனாய்
ஜீவாத்மாவின் ஸம்ஸாரபந்தத்தை போக்குபவனாய் எப்போதும் ஒப்பற்றவனாய், ஆநந்தரூபமாய்,
எல்லாவற்றிற்கும் இருப்பிடமாய், எப்போதுமுள்ளவனாய் அவித்யத்தை யெனபடும் கருமம்,
தமோகுணம், மயக்கமற்றவனாய் இருப்பவனான இந்த வீரனே நரசிங்கன்”
என்பதன் மூலம் தமோ குணம் அணுவளவும் அண்டாதவன் அநந்தன் என்பது ஸித்தம்.

—————

புருஷ,விஷ்ணு ஸூக்தவிநிர்ணயம்

ஸாவவேதபடிதமாய், ஸாவவேதச்ரேஷ்டமாய், கபிலத்தவ ஸமபாவநாகநதரஹிதமான புருஷஸூக்தத்திலே
லக்ஷமிநாதனான பரமபுருஷனை ஓதுகையில்
‘தமஸஸ்து பாரே’, ‘தமஸ பரஸ தாத’என்றதன் மூலம் தாமஸத்துக்கு அப்பாற்பட்டவன் என அறைகிறது

————–

ருக்வேதம் ஐந்தாமஷ்டகம் ஆறாமத்யாயம் இருபத்து நாலாவது விஷ்ணுஸூக்த வாசகம்

‘தம தவா கருணமி தவஸமவதவயாந க்ஷயநதமஸ ரஜஸ பராகே’

மிகவும் முதியவனான ராஜஸூக்கு அப்பால் எழுந்தருளியிருக்கும் அப்படிபட்ட உன்னை
அதிபாலனாம யான் ஸங்கீர்தனம் செய்கிறேன் என உறைத்தது

————

‘தவம் புத்தி ஸஸ்தவம் க்ஷமாதமா'(யுத்தகாண்டம் 120:16)
‘தீர்க்க பாஹூம்மஹாஸ்தவம்'(அயோத்யாகாண்டம் 3:28)
‘ஸத்வயுகதா ஹி புருஷாஸ த்விதா புருஷாஷப அவிமருஸ்ய ந ரோஷஸய ஸஹஸா யாநதி வஸ்யதாம்(கிஷ்கிந்தாகாண்டம்35:11)
ஸத்வ குணமுள்ள முன்போன்றவர்களுக்கு விசாரியாமல் சடக்கென்று கோபவசப்படமாட்டார்கள்.
“ஸாதுரோகவிநிர்மித”(அயோத்யாகாண்டம்1:18)
ராமஸஸதபுருஷோலோகே” (அயோத்யாகாண்டம்2:29)

‘ஸ ச சர்வகுணோபேத (பாலகாண்டம்1:7)
‘ஸ்ரேஷ்டகுணாயுத (அயோத்யாகாண்டம்1:31)
‘பஹவோ நரூக கல்யாண குண புத்ரஸ்ய ஸநதிதே (அயோத்யாகாண்டம்2:26)
‘தாதூநாமிவ ஸைலேந்தரோகுணநாமாகரோமஹாந’ (கிஷ்கிந்தாகாண்டம்15:21)

சிறந்த மலைத் தாதுகளுக்கு இருப்பிடம் போல நற்குணங்களுக்கு பெருநிதியாய் இருப்பவன் இராமன்
என ஸத்வகுணத்திற்கு சான்று பகிர்கின்றது.

————–

‘ஸத்வம் வஹதி ஸூததாதமா தேவம் நாராயணம் ப்ரபும்’ (சாந்திபர்வம்307-77)

சுத்த ஸ்வரூபமான ஸத்வம் ஸர்வஸ்யாமிய் நிர்மலமானவனான நாராயணனை அடைவிக்கிறது என்று
நாராயணனை ஸத்வநிஷ்ட பராபயனாக அநுஸநித்தது.

‘ஜாயமாநம ஹி புருஷம் யம பஸ்யேன மதுஸூதன;ஸாத்விக ஸ து விஜஞேய ஸ வை மோக்ஷார்த்த சிந்தக
பஸ்யத்யேநம ஜாயமாநம ப்ரஹ்மா ருத்ரோத்வா புந;ரஜஸா தமஸா சாஸ்ய மாநஸம் ஸம்பிபலுதம'(சாந்தி பர்வம் 358-73, 77)

பிறக்கும்போது ஒரு குழந்தையை மதுஸூதனன் கடாக்ஷித்தானினால் அவனே ஸாத்வீகனானான்.
அவனே மோக்ஷபுருஷார்தத்தைப் பற்றி சிந்திப்பான்;
பிறக்கும் போது இவனை பிரமனாவது உருத்திரனாவது பார்த்தாராகில் ரஜோ குணத்தாலும் தமோ குணத்தாலும்
இவன் மனம் கலங்கி நிற்கும் என பகவான் ஸத்வபரவர்தகனாகிறபடியையும் ப்ரஹ்மருத்ரர்கள் ரஜஸதம பரவர்த்தகனாகிறபடியைைும்
அதிஸ்பஷ்டமாக அறிவித்தருளினார் வியாசர்.

ஆக இதிஹாசங்களும் ஸாத்வீகதேவதை விஷ்ணுவே என்பதும் தாமஸதேவதை ருத்ரனே என்பதும் நிர்ணயிக்கப்பட்டது.

————

ஸத்வத்யோ ந ஸந்தீயோ யதர ஹி ப்ராக்ருதோ குண| ஸ ஸூத்த ஸாவஸூத தேபய புமாநாதய பரஸீதது||’ (விஷ்ணுபுராணம்1-9-44)

ஸத்வம், ராஜஸஸீக, தாமஸஸீ எனும் ப்ராக்ருதகுணங்கள் எந்த பகவானிடமில்லையோ பரிசுத்தர்கள் அனைவரிலும் பரிசுத்தனான
அந்த ஆதிபுருஷன் உகந்தருள்வானாகஎன பரமபுருஷனின் ஸ்வரூபத்திற்குஸாத்வீகரஜோதமோகுணங்கள் கிடையாது என்று நிலை நாட்டியது.

ஜூஷந ரஜோகுணம் ததர ஸ்வயம் விஸ்வேஸ்வரா ஹரி|ப்ரஹ்மா பூதவாஸய ஜகதோ விஸருஷடெள ஸம்பரவாதத்தே||
ஸ்ருஷ்டஞ்ச பாத்யநுகம் யாவத்கல்பவிகல்பநா|ஸத்வப்ருத பகவாந விஷ்ணுரபரமேயபராக்ரமம்|
தமோதகீ ச கல்பாந்தே ருத்ரரூபீ ஜனார்தனன|மைத்ரேயாகில பூதாநி பக்ஷயதயதிதாருண||
பக்ஷயிதவா ச பூதாநி ஜகத்யேகாரணவீக்ருதே|நாகபாயங்கஸ்யநே ஸேதே ச பரமேஸ்வர|| (விஷ்ணுபுராணம் 1-2)

ஜகத் பதியான பகவான் ஹரி பரஹமயோகியாகி ரஜோகுணம் தரித்து நின்று உலகத்தை ஸ்ருடிப்பதில் ஈடுபடுகிறார்.
கல்ப காலம் முடியும் வரை யுகந்தோரும் ஸத்வகுணம் தரித்துநின்று அளவற்ற பராக்கிரமத்தை உடைய
விஷ்ணு படைக்கப்பட்ட உலகை ரக்ஷிக்கிறார். கல்ப முடிவில் ருத்ரரூபியாகி தமோகுணத்தை அதிகளவு கொண்டு
அதிபயங்கரரான ஜனார்தனன் எல்லா ஜீவராசிகளையும் புசிக்கிறார்.
புசித்த பின் உலகம் முழுவதும் ஒரே ஜலமயமானவுடன் திருவன நதாழ்வானாகிற சயனத்தில் பரமேஸ்வரரான பகவான் சயனிக்கிறார்.
என்று ஸத்வகுணத்திருமேனியை உடையவன் விஷ்ணுவெனவும் தமோகுணமுடையசரீரத்தை உடையவன் ருத்ரன் எனவும் காட்டுகிறது.

ஏகேநாமஸேந ப்ராஹ்மாஸெள வாதததேஸெளரரஜோகுண|ஏகாமஸேநாஸ்தி தோ விஷ்ணு கராதி ப்ரதிபாலநம||
ஸத்வம் குணம் ஸமாஸரிதய ஜகத் புருஷோத்தம|ஆஸ்ரீதய தமஸோ வ்ருத்திமந்தாகாலே ததா புந||
ருத்ரஸ்வரூபோ பகவாநேகாமஸேநபவத்யஜ|| (விஷ்ணுபுராணம் 1-22)

ஓரம்சத்தினால் பிரம்மனாகி ரஜோகுணமுடையவனாய் ஸ்ருஷ்டிக்கிறான் பகவான்.
ஓரம்சத்தில் விஷ்ணுவாயிருந்துகொண்டு புருஷோத்தமன் ஸத்வகுணத்தை எடுத்துகொண்டு உலகத்தை ரக்ஷிக்கிறான்.
ப்ரளயகாலத்தில் ருத்ரரூபியாய் தமோ குணத்தைகொண்டு ஓரம்சத்தால் சம்ஹரிக்கிறான். என்று
இவ்விஷயம் மற்றோர் இடத்தில் காட்டப்பட்டுள்ளது.
இவ்வளவால் இவ்விஷ்ணு புராணத்தில் ஸாத்வீகதாமஸ தேவதா நிர்ணயம் செய்யப்பட்டது.

——————

யத் ஸத்வம் ஸ ஹரிர தேவோ யோ ஹரிஸ தத பரம் பதம்|ஸத்வம் ரஜஸ தமஸசேதி த்ரியதம் சைததுசயதே ||
ஸத்வேந முசயதே ஜந்துஸ ஸத்வம் நாராயணேதமகம|ரஜஸா ஸத்வயுகதேந பவேசரீரமாந யஸோதிக||
தச்ச பைதாமஹம வ்ருத்தம் ஸாவஸாஸ்த்ரேஷூ படயதே|யத வேதபாஹ்யம் காம ஸயாந மாமுத்திஸயோபஸேவயதோ ||
தத ரெளதரமிதி விகயாதம கநிஷ்டகதிதம ந்ருணாம|யததீந்தபஸா யுக்தம் கேவலம் தாமஸம் து யத||
தத துர்க்கதிபரதம் ந்ரூணாம இஹ லோகே பரதர ச|–வராஹபுராண நிர்ணயம்

தேவனான ஹரி ஸத்வகுணமானவன். ஹரியே பரமபராபயன். ஸத்வம், ராஜஸ, தாமஸம் என்று குணங்கள் மூன்றாக கூறப்படுகின்றன.
ஸத்வகுணத்தால் ஜீவன் முக்தியடைகிறான். ஸத்வம் நாராயணஸ்வரூபமானது.
ஸத்வகுணத்தோடு கூடிய ரஜோகுணத்தால் செல்வமுள்ளவனாகவும், பெரும்புகழாளனாகவுமாகிறன்.
அது பிதாமஹனுடைய குணமாக எல்லா சாஸ்திரங்களிலும் சொல்லப்படுகிறது.
வேதத்திற்கு புறம்பான (கபாலிகம் முதலான) எந்த தாமஸம் (ருத்ரனாகிய)என்னை குறித்து அனுஷ்டிக்கப்படுகிறதோ,
அதுவே ரெளத்திரம் எனப்படுவதாய மனிதர்களுக்கு கீழான கதியை அளிக்கிறது. அது தாழ்ந்த ஆஸாரங்களையுடையது,
கேவலம் தாமஸமானது. இவ்வுலகிலும், அவ்வுலகிலும் மனிதர்களுக்கு துர்கதியைய தருவதாகும். என ருத்ரனே ஒப்புகொண்டான்.

——————-

லிங்கபுராண நிர்ணயம்

இலிங்கதிட்ட புராணம் என ஆழ்வார்களாலும் பேசப்பட்ட சைவபுராணமே இவ்விஷயத்தை ஒப்புகொண்டதை காண்போம்.

ஹிரண்யகர்ப்போ ரஜஸா தமஸா ஸங்கர | ஸ்வயம் ஸத்வேந ஸர்வகோ விஷ்ணு ஸர்வாத்மா ஸதஹந்மய||

பிரமன் ரஜோகுணத்தோடும், சங்கரன் தமோகுணத்தோடும்,ஸர்வாத்மாவும் சிதசித் ஸ்வரூபியும் ஆன விஷ்ணு ஸத்வத்தோடும் கூடியவர்
என்று பதினாலாவது அத்யாயத்திலும்,

த்வத்கோபஸம்பவோ ருத்ரஸ் தமஸா ச ஸமாவ்ருத|த்வத்ப்ரஸாதாஜ்ஜகத்தாதா
ரஜஸா ச பிதாமஹ த்வத்ஸ்வரூபாத் ஸ்வயம் விஷ்ணு ஸத்வேந புருஷோத்தம||

தமம் மூடியிருக்கும் உருத்திரன் உன் கோபத்தால் உண்டானவன்;
உன் உகப்பாலுண்டான பிரமன் ரஜோகுணமுடையவன்.
உன் ஸ்வரூபமாகவே இருக்கும் புருஷோத்தமனான விஷ்ணு ஸத்வ குணமுடையவன்
என்று இருபத்து நாலாவது அத்யாயத்திலும்

தமஸா ருத்ர ஸ்யாத ரஜஸா கந்காண்டஜ|ஸதவேந ஸாவகோ விஷ்ணு ஸர்வலோகநமஸ்கருத||

தமோகுணத்தோடு கூடியவன் ருத்ரன், ரஜோகுணத்தோடு கூடியவன் ஹிரண்யமயமான அண்டத்தில் பிறந்த
பிரமன், ஸர்வ வியாபியாய் ஸர்வலோக நமஸ்கருதனன் விஷ்ணு ஸத்வகுணத்தோடு கூடியவன் எனவும்
லிங்கபுராண வசனங்கள் ஒப்புதல் அளித்தது.

———————

மத்யஸ்யபுராண நிர்ணயம்

யஸ்மிந் கல்பேது யத்ப்ரோக்தம் புராணம் ப்ரஹ்மணாபுரா | தஸ்ய தஸ்யது மாஹாத்ம்யம் தத்ஸ்வரூபேண வர்ண்யதே ||
அக்நேச் சிவஸ்ய மாஹாத்ம்யம் தாமஸேஷு ப்ரகீர்த்திதம் | ராஜஸேஷுச மாஹாத்ம்ய மதிகம் ப்ரஹ்மனோ விது: ||
ஸம்கீர்ணேஷு ஸரஸ்வத்யா: பித்ருணாம்ச நிகத்யதே | ஸாத்விகேஷ்வத கல்பேஷு மாஹாத்ம்ய மதிகம் ஹரே|

ஆதிகாலத்தில் எந்தபுராணம் எந்த கல்பத்தில் உபதேசிக்கப்பட்டதோ அந்தபுராண மஹாத்மியம் அந்த கல்பத்தின் ஸ்வரூபத்தையொட்டி சொல்லப்படுகிறது.
அக்னியுடையதும் சிவனுடையதும் பெருமை தாமஸ கல்பங்களில் சொல்லப்பட்டது. ராஜஸகல்பங்களில் பிரம்மனுடைய பெருமை சொல்லப்பட்டது.
ஸங்கீர்ண(மிசர) கல்பங்களில் ஸரஸ்வதிக்கும் பித்ருக்களுக்கும் பெருமை சொல்லப்பட்டது.
ஸாத்வீக கல்பங்களில் பகவான் ஹரிக்கு அதிக பெருமை சொல்லப்படுகின்றன.
அவற்றை பற்றி நின்றே யோகிகள் பரமபதமடைந்தனர் .

—————

ஸ்ரீமத் பாகவத புராண நிர்ணயம்

அநேக திவ்ய சரித்திரங்கள், அநேக மத விஷயங்களைப் பற்றிய ஆராய்வு, பகவானின் கல்யாண குணங்கள்,
பகவானில் பக்தி செலுத்த மனிதன் உண்மையான நிர்குண நிலையை அடைவதற்கும் பரமபதமெனும் முக்தியை அடையும்
நோக்கு எனும் அரிய விஷயங்களைப் பற்றி இப்புராணம் அடிக்கடி வசனிக்கிறது.
இதனாலேயே இதை “பரம ஹம்ஸ ஸம்ஹிதை” என்று பெயர் பெற்றது.
இதை வேதவியாஸர் இயற்றிய காரணம், இதை வெளியிட்டதனால் அவருக்குண்டான சாந்தியையும் இதை அப்யஸித்து
ஆனந்தித்த சுகபிரம்மத்தின் பெருமையும், மரணவாயில் சிக்கிய பரிக்ஷித்தை இது கரையேற்றிய விதம் என்பவற்றை
ஆராய்வோருக்கு இதன் மேன்மைவிளங்கும். இப்புராணத்தில் சரமாரியாய் பலவிடத்தும் ஸாத்வீகதாமஸ தேவதை பற்றி பேசுகிறது.

ஸத்வம் ரஜஸ தம இதி ப்ராக்ருதோ குணஸ தைா யுகத பர புருஷ ஏக இஹாஸய தததே|
ஸதிதயாதயே ஹரிவிரிஞ்சி ஹரேதி ஸமஜ்ஞாம ஸ்ரேயாமஸி ததர கலு ஸத்வதநோ நருணம ஸயு||

ஸத்வம், ராஜஸம், தாமஸம் என்பவை ப்ரக்ருதியின் குணங்கள். இந்த மூன்று குணங்களோடு கூடிய பரமபுருஷன் ஒருவனே.
ரக்ஷணம், ஸ்ருஷ்டி, ஸம்ஹாரம் எனும் காரியங்களுக்காக ஹரி, பிரமன், ஹரன் எனும் பெயர்களை அடைகிறான்.
அவர்களுள் ஸத்வகுணமுடைய ஹரியிடத்தே நன்மையுண்டாகும். என்று ஸத்வகுணமுள்ளவன் ஹரியே என காட்டப்பட்டுள்ளது.

பேஜிரே முந்யோ தாகரே பகவந்தமதோக்ஷஜம|ஸத்வம் விஸுததம க்ஷேமாய கல்பந்தேயேநு தாஹிந||
முமுக்ஷவோ கோரரூபாந ஹிதவா பூதபதீநத |நாராயணகலா ஸாந்தா பஜநதி ஹயநஸுயவ||
ரஜஸ்தம ப்ரருக்தய ஸமஸீலாந பஜநதி வை|பித்ருபூதபரஜேஸாதீந ஸ்ரீயைஸவாயபரஜேபஸவ||

ஆதி காலத்தில் முனிவாசர்கள் ஸத்வகுண திருமேனியுடையவனும் பரிசுத்த பகவானுமான புருஷோத்தமனை பூஜித்தனர்.
அவர்களை அனுஸரித்து அவர்களை பூஜிப்பவர்கள் நன்மையடைபவர்கள், மோக்ஷத்தையடைவர்.
கோரமான உருவமுடைய பூதகணங்களுக்கு தலைவனாக இருக்கும் ருத்ராதிகளை விட்டு துவேஷமற்றவர்களாய்
சாந்தியோடு கூடிய நாராயணரை உபாஸிக்கிறனர்.
ரஜோகுணம், தமோகுணமுடையவர்கள் அதே குணங்களையுடைய பித்ருக்களையும் பூதகணங்களுக்கு தலைவர்களான
ருத்ராதிகள் பிரமன் முதலான ப்ரஜாபதிகள் வரையும் விரும்பி உபாஸிக்கின்றனர்
என்று ஸத்வகுண திருமேனியையுடைய நாராயணரையும் தாமஸகுணமுடைய சிவனையும் காட்டித் தந்தது.

சிவ ஸக்தியுகத ஸஸ்வத த்ரிலிங்கோ குணஸம்வருத|ஹரி ஹி நிர்க்குண ஸாக்ஷாத புருஷ ப்ரக்ருதே பர ||

பார்வதியேிடு கூடிய சிவன் எப்போதும் ஸாத்வீகராஜஸதாமஸ ஹங்காரத்திற்கு வசப்பட்டவன். தமோகுணமுடையவன்.
ஹரியோ எனில் முக்குணங்களுமற்றவன், ப்ரகருதிக்கு மேற்பட்ட புருஷன் அவனே.
இவ்வாறு நூற்றுகணக்கான இடங்களில் பகவானின் திருமேனி ஸாத்வீகமயமானது,
தமோகுணம் லேசமும் அற்றதென உத்கோஷிக்கின்றன.

——————-

பத்மபுராண நிர்ணயம்

ப்ருகு மஹரிஷி ஸாத்வீக பரம்பொருள் யார் என்பதை யறிய மூவுலகம் சென்று முடிவெடுத்த விஷயம்
பாகவத, பத்ம, நாரதீய புராணங்களில் பேசப்படுகிறது.
பத்மபுராண உத்தரகாண்டத்தில் இருநூற்று ஐம்பத்தைந்தாவது அதிகாரத்தில் இவ்விஷயம் விவரிக்கப்பட்டுள்ளதை காண்போம்.

திலீபன் சொன்னான்- வஸிஷ்டமஹரிஷியே! ஸாமாந்யதாகவும், விசிஷ்டதாமமாகவும் எல்லா தர்மங்களும்
ஜீவாத்ம பரமாத்ம ஸ்வரூபங்களும் ஸ்வர்கமோக்ஷங்களும் அவற்றின் ஸ்வரூபங்களும் ஒன்றுவிடாமல் தேவரீரால் கூறப்பட்டன.
ஆச்சார்யரான ப்ராமணோத்தமரே! நான் தன்யனானேன். அறிவதில் விருப்பத்தால் இன்னமும் ஒரே ஒரு கேள்வியை கேட்கிறேன்,
உமக்கு என்னிடமுள்ள வாத்சல்யப் பெருமையாலே உள்ளதை உள்ளபடியே சொல்ல வேணும்,
முதல் பாகவதனும் திரிபுரம் எரித்தவனும் மனைவியோடு கூடிய ருத்ரன் எக்காரணத்தினால் தாழ்ந்ததொரு ரூபத்தையடைந்தான்?
சிறந்தவனான அவனுக்கு லிங்கஸ்வரூபமான உருவம் எப்படி உருவாகும்?
ஐந்து முகத்தையும் முக்கண்களுமுடைய சூலபாணியாகிய அவனுக்கு இத்தாழ்ந்த உருவத்தை எப்படி அடைந்தான்?
இதையெல்லாம் எனக்கு சொல்லவேணும்.

வசிஷ்டர் கூறினார்- நீ என்னை கேட்கும் விஷயத்தை வாத்சல்யத்தால் கூறுகிறேன்.
மந்தரமெனும் மலையில் ஸ்வயம்புவா மனு முன்னொரு காலத்தில் முனிவர்களை கொண்டு தீர்க்கஸ்தரயாகம் செய்தான்.
அங்கு கூடியிருந்த முனிவர்கள் விரதநிஷ்டையுடையவர்கள், பல சாஸ்திரமறிந்தவர்கள், வேதமறிந்த அந்தணர்களாவர்.
ஸத்ரயாகம் நடக்கும் போது பரம் பொருளை தேடுவதற்காக பின்வருமாறு பேசிகொண்டனர்.
“வேதமறிந்த விபரர்களுக்கு பூஜிக்கத்தக்க தகுந்த தெய்வம் யாது?
ப்ரஹ்ம விஷ்ணு சிவனுள் யார் தன்னை துதிப்பவனுக்கு முக்தியையளிப்பான்?
எவனுடைய ஸ்ரீபாத தீர்த்தம் அருந்ததக்கது? எவன் உண்டது மிகுந்த பரிசுத்தமானது?
எவன் அழிவற்றவனும் பரஞ்சோதியாகவும் பழமையோனாக இருக்கிறான்?
எவனுடைய தீர்த்த ப்ரஸாதங்கள் பித்ருக்களுக்கு திருப்தியை அளிக்கும்? “என்று இவ் வண்ணம் மஹரிஷிகளுள் விவாதமே உண்டாயிற்று.

சில மஹரிஷிகள் ருத்ரனே பரம்பொருள் என்றனர். சில முனிஸ்ரேஷ்டர்கள் பிரமனே பூஜிக்கதக்கவன் என்றனர்.
சிலர் சூர்யனே பூஜயன் என்றனர். ஸர்வஸ்யாமியாய் செல்வம் நிறைந்தவனாய், ஸ்ரீபதியான புருஷோத்தமனான
அழிவற்ற தாமரை கண்ணணான வாஸுதேவனாய் ஆதியந்தமற்றவனாய் பரமேஸ்வரனான நாராயணரே
பூஜிக்கதக்கவன் என சில அந்தணர்களும் உரைத்தனர்.
அவர்களின் விவாதம் தொடர்ந்த கொண்டிருக்கையில் ஸ்வயம்புவாமநு பின்வருமாறு கூறலானார்.
“சுத்தஸத்வனான கல்யாணகுணமுடைய ஸர்வஸ்யாமியாய் செல்வம் நிறைந்தவனாய், ஸ்ரீபதியான புருஷோத்தமனான
உபயவிபூதிசெல்வமுடைய அச்சுதனே அந்தணர்களுக்கு பூஜயன்.
ரஜஸ தமோ குணங்கள் கலந்த மற்றய தெய்வங்கள் அவர்களுக்கு பூஜயர்களல்ல.” என்று அவர் கூறியதை கேட்ட
மஹரிஷிகள் அனைவரும் ப்ருகுமஹரிஷியை வணங்கி கோரிக்கை விடுத்தனர்.

“எங்கள் ஐயத்தை போக்க நீரே வல்லவர்.ப்ரம்ம விஷ்ணு ருத்ரர்களுக்கு அருகில் சென்று ஸத்வகுண சரீரம் கொண்டு
ப்ராஹ்மண பூஜைகுரியவர் யார்? என்பதை அறியும் லோகோபகாரத்தை செய்வீராக” .
இப்படி சொல்லப்பட்ட அவர் எருதுகொடியோனிருக்கும் கைலாஸத்திற்கு வாமதேவரோடு சென்றார்.
சங்கரனுடைய ஆலயதுவாரத்திற்கு சென்று சூலத்தையேந்திய மஹாபயங்கரனாகிய நந்தியை கண்டு பின்வருமாறு சொன்னார்.
“தேவனான ஹரனை காண ப்ருகுவான நான் வந்துள்ளேன், நான் வந்ததை சங்கரனிடம் தெரிவிப்பாயாக”.
இதைகேட்ட நந்தி கடுமையாக பின்வருமாறு கூறிற்று” எமது எஜமாமர் பார்வதிதேவியாரோடு தனிமையில் உள்ளார்,
எனவே அவரை நீர் பார்க்க இயலாது, திரும்பிசெல்”.

இவ்வாறு நிராகரிக்கப்பட்டும் ருத்ராலயத்தில் பலநாட்கள் காத்துகிடந்தார்.
ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த ப்ருகுரிஷி ‘ஸ்த்ரீஸங்கமத்தில் மயங்கிய என்னை அவமதித்த இவன் லிங்க ஸ்வரூபமாக ஆகுக.
தாமஸத்தோடு கூடி அந்தணனான என்னை அவமதித்ததால் ப்ராஹமண பூஜைக்கு அநாஹனாகி அந்தணரால் பூஜிக்கப்படாதவனாவான்,
ஆகையால் இவனுக்கு கொடுக்கும் அந்தம ஜலம், புஷ்பம், ஹவிஸ் முதலியன நிர்மாலயம் (உபயோகமில்லாதது) ஆகும்.
இதில் ஐயமில்லை. , பஸ்மத்தையும் லிங்கத்தையும் கபாளத்தை தரிக்கும் ருத்ரபக்தர்கள் பாஷாண்டிகளாக
வேதத்திற்கு புறம்பானவராவார்”என கடுமையாக சபித்துவிட்டு ப்ரஹ்மலோகம் சென்றார்.

அங்கு ஸர்வலோக தேவர்களும் பிரமனை பார்த்து கைகூப்பி வணங்கி மெளனமானார்.
முனிவர் தலைவரான அவரை பார்த்தும் ரஜோகுணத்தால் மூடப்பட்டவனாகையால் ப்ரஹ்மா வந்திருந்த முனிவரை பூஜிக்கவில்லை,
எதிர்கொண்டழைக்கவில்லை, இன்சொற் பேசவில்லை.
இதனால் கோபமடைந்த ப்ருகு ரிஷி “அதிகமான ரஜோகுணமுடையவனாகிய நீ எவராலும் பூஜிக்கப்படாதவனாகுக” என்று
இதுவரை லோஹபிதாவாக இருந்த பிரமனை சபித்துவிட்டு பகவானுடைய ஆலயத்திற்கு சென்றார்.

அங்கு ஆதிஷேஷனில் சயனித்து மலர்மகளின் மலர்கைகளால் திருவடி வருடப்பெற்றவனான கமலாபதியை கண்டார்.
இவனும் நம்மை அவமதிக்கும்வகையில் தூங்குகிறானே என்றெண்ணிய பிருகு விஷ்ணுவின் பரமமங்கள திருமார்பில் எட்டி உதைத்தார்.
(இவ்வாறு நடக்க வேண்டுமென்பதற்காகவே கள்ள நித்திரை செய்த)பகவான் உடனே எழுந்து ‘தன்யனானேன்’ என்று பேரானந்தத்தோடு
அவர் பாதங்களை தன் திருகரங்களால் வருடி இன்சொல்லால் அத்திருவடிபட்டதால் பெற்ற பேற்றினை கூறி
அபாக்ருதமான மாலை, சந்தனம் முதலானவற்றை கொடுத்து பூஜை செய்தார்.
உடனே முனிதலைவர் ஆனந்தகண்ணீர்விட்டு சிறந்த ஆஸனத்திலிருந்து எழுந்திருந்து தயாநிதியான பகவானை கைகூப்பி
வணங்கி சொல்லலானார். அஹோ! என்ன ரூபம்? என்ன சாந்தி? என்ன பொறுமை? ஹரியான உம் ஸத்வகுணத்தை என்னவென்பது?
குணக்கடலான உன்னை தவிற பிறதேவர் எவருக்குமே ஸத்வகுணமில்லை. புருஷோத்தமனான நீயே ப்ராஹ்மண பூஜயன்.
உன்னை விடுத்து வேறெந்த தேவர்களை அர்சிக்கிறார்களோ அவர்கள் பாஷாண்டிகளாய் நல்லோர்களால் இகழப்படுவர்.
சுத்த ஸத்வமுள்ள நீயே மறையவர்களால் பூஜிக்கதக்கவன். உன் ஸ்ரீ பாத தீர்தம் ஸேவிக்கதக்கது, முக்தியளிப்பது, மலத்தை நீக்குவது,

நீ புசித்து மிகுந்தத தீர்த்தமே பித்ருக்களுக்கும், தேவர்களுக்கும், அந்தணர்களுக்கும் ஸேவிக்கதக்கது,
மற்றவர்களுடையவை நிர்மால்யம் எனப்படுவது. ஆகையால் அறிவுள்ள ப்ராஹ்மணன் ஸனாதனனான உன்னை பூஜித்து
உன் தீர்த்தத்தையும், ப்ரஸாதத்தையும் ஸேவிக்கக்கடவான்.
பித்ரு ஸிராத்தத்தில் உன் தீர்த்தப்ரஸாதத்தை அந்தணன் அளிக்காவிடின் ஸிரார்தம் வீணாகிப்போய் பித்ருக்கள் நரகில் வீழ்வர்.
உன் ப்ரஸாதத்தை ஹோமம் செய்து பித்ருக்களுக்கு அளித்தால் தேவதைகளுக்கும் பித்ருக்களுக்கும் திருப்தியுண்டாகிறது.
ஆகையால் மறையவர்கள் போற்றதகுந்தவன் நீயொருவனே! தேவகீ புத்ரனே ப்ராஹ்மன்யன்(ப்ராஹ்மன பூஜயன்-ப்ராஹ்மனர்களால் பூஜிக்கப்படுபவன்),
மதுஸுதனனே ப்ராஹ்மன்யன், புண்டரிகாக்ஷேனே ப்ராஹ்மன்யன்,அச்சுதனேப்ராஹ்மன்யன்,விஷ்ணுவே ப்ராஹ்மன்யன்,
வாஸுதேவனும் அச்சுதனுமான கிருஷ்ணனே ப்ராஹ்மன்யன்,நரசிங்கனான ப்ராஹ்மன்யன்,அழிவற்ற நாராயணனே ப்ராஹ்மன்யன்,
ஸ்ரீ தரனே ப்ராஹ்மன்யன்,கோவிந்தனும் வாமனனானவனுமே ப்ராஹ்மன்யன்,யஜ்ஞவராஹனே ப்ராஹ்மன்யன்,
கேசவனான புருஷோத்தமனே ப்ராஹ்மன்யன்,திருமகளின் மணாளனும் தாமரைகண்ணனுமான ரகுகுலராமனே
ப்ராஹ்மன்யன், பத்மநாபனே ப்ராஹ்மன்யன்,மாதவனே ப்ராஹ்மன்யன்,தலைவனான திரிவிக்ரமனே ப்ராஹ்மன்யன்,
இருடிகேசனே ப்ராஹ்மன்யன், ஜனார்தனனே ப்ராஹ்மன்யன்,ப்ராஹ்மன்யதேவனும், நாராயணனும்
ஸ்ரீபதியுமான தாமரைகண்ணனான உனக்கு நமஸ்காரம்,

ப்ராஹ்மண்ய தேவனும் வாஸுதேவனும், விஷ்ணுவும், கல்யாணகுணபூர்ணனுமான பரமாத்மாவுக்கு உனக்கு நமஸ்காரம்,
ப்ராஹ்மண்யதேவனும் ஸர்வ தேவ ஸ்வரூபியும், வேதநாதனும், வராஹஸ்வரூபமான உனக்கு நமஸ்காரம்,
ப்ராஹ்மன்யதேவனும் சேஷாசாயியும், தாமரைக்கண்ணனும், ராகவனுமான உனக்கு நமஸ்காரம்.
எல்லா தேவர்களும் ரிஷிகளும் உன்னுடைய பரத்வத்தை உணர்த்தும் ஸத்வத்தை அறிவதற்கே மஹரிஷிகளால் அனுப்பப்பட்டேன் கோவிந்தா!
உன்னுடைய ஸெளசீல்யவாத்ஸல்ய காருண்யாதி குணங்களையறியவே உன் திருமார்பை காலால் உதைத்தேன் தயாநிதியே!
அப்பாதஹமான செயலை பொறுத்தருள வேண்டும் என மறுபடி, மறுபடியும் கைகூப்பி வணங்கிவிட்டு பூமியை அடைந்தார்.

வந்தடைந்த ரிஷி ருத்ர, ப்ரஹ்ம தேவர்களின் குணத்தையும் அவர்களுக்கிட்ட சாபத்தையும் கூறி பகவானின் கல்யாண குணத்தை யுறைத்தார்.
ப்ரஹ்மமான நாராயணரே மறையறிந்தவர்களால் போற்றதகுந்தவன். கண்ணனை நினைப்பதால் பாவியும் மோக்ஷம் பெறுவான்.
அவனுடைய திருவடி நீரே அருந்ததக்கது, பகவத் நிவேதனமே பித்ருக்கள், அந்தணர்களுக்குரியவை. அவையே சுவர்க்கமோக்ஷமளிப்பவை.
ஆகையால் மற்றயவர்களை விட்டு பழையோனாகிய விஷ்ணுவையே உயிருள்ளவரையும் பூஜிப்பீர்களாக. என பத்மபுராணத்தில் சொல்லப்பட்டது

மஹரிஷிசாபம் எவ்விதம் பலித்திருக்கிறது என்பதை ஆலயம்தோறும் லிங்கபூஜை நடப்பதிலிருந்தும்
ப்ரஹ்மாவுக்கு தனிகோவிலில்லாதிருப்பதையும் ப்ரத்யக்ஷமாக காண்கிறோம்.
ருத்ர பக்தர்களான ஸ்மார்த்த ப்ராஹ்மணர்களும் ஹரிபூஜையை விடுவதில்லை என்பதையும் அறிகிறோம்.
தீவிர வைணர்கள் யாரும் இடிவிழ, காளை முட்ட வருகையிலும், ஸர்பம் துரத்துகையில் கூட வேறு தேவாலயங்களுள் நுழையாமல்
“மறந்தும் புறம் தொழாதவர்களாய் வாழ்ந்தவர்கள்” என்பதையும் அறிகிறோம்.
எனவே பத்மபுராணமும் ஸத்வகுணஸ்வரூபன் நாரணனே என நிலை நாட்டியது.

இதே புராண வாயிலாகவே புராண நிர்ணயமும் பார்வதி பரமேஸ்வரனின் சம்பாஷனையினூடே தெளிவுற விவரிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்டத்திலே 263ம் அத்யாயத்தில்
“பார்வதி தேவி சிவப்பிரானைப் பார்த்து பாஷண்டர்கள் என்பது நாஸ்திகர் என்றீர். அவர்களுடன் பேசவே கூடாதென்று நீர் சென்னீர்.
அப்பாஷண்டர்களின் லக்ஷணம் என்ன என்று கேட்டாள்.
அதற்கு சிவப்பிரான் சென்னார்.
நாராயணனைக் காட்டிலும் வேறான ஒரு தேவனைப் பரமாத்மாவாக யார் கூறுகிறார்களோ,
அவருக்கு சமமாக ப்ரஹ்ம ருத்ராதியான பிரம்மா சிவன் போன்ற தேவர்களை யார் கூறுகிறார்களோ,
கபாலம், பஸ்மம் என்ற சாம்பல் எலும்பு முதலிய அவைதிகமான என்னும் சாஸ்த்திரத்திற்கு எதிரான அடையாளங்களை
யார் தரிக்கிறார்களோ ஸந்யாஸ ஆஸ்ரமத்திற்குத் தகுதியில்லாமலே சடை,மரவுரிகளை யார் தரிக்கிறார்களோ
சாஸ்த்திரத்திற்கு எதிரான பல செயல்களை யார் செய்கிறார்களோ அவர்கள் நாஸ்திகர்கள் என்று விரிவாக கூறுகினார்.

இதை கேட்ட பார்வதி இதுவே நாஸ்திகார்கள் லக்ஷணம் எனில் நீர் ஏன் கபாலம். பஸ்மம் எலும்பு முதலிய் சாஸ்த்திரத்திற்கு எதிரான
அடையாளங்களை ஏன் தாரிக்கிறீர் என்று கேட்க, இதற்கு முக்கட்பிரான் ஒருவருமில்லாத இடத்திற்கு பார்வதியை அழைத்துச் சென்று
நீ இதை எவரிடமும் சொல்லாதே என்று ஆணையிட்டு, முற்காலத்தில் நமுசி முதலான அஸூர்கள் வேத தர்ம நிஷ்டர்களாய்
விஷ்ணு பக்தர்களாய் இருந்தமையாலே வெல்லவரிய பலம் வீரங்களை பெற்றிருந்தனர்.
அவர்களால் அடக்கப்பெற்ற தேவர்கள் பரமபுருஷரான விஷ்ணுவிடம் முறையிட்டனர்.
விஷ்ணு என்னைப்பார்த்து தேவ த்வேஷிகள் என்னும் கிருஷ்ணரை நிந்தனை செய்பவர் சாஸ்த்திரத்திற்கு எதிரானவர்களாகவும்
என்னிடம் பக்தியற்றவர்களாகி பலங்குறைந்தவர்கள் ஆவதற்காக நீ நேரேயும் பல அந்தணர்களை ஆவேசித்து நின்றும்
பல பாஷண்ட சாஸ்த்திரங்களை அவர்களுக்கு உபதேசிப்பாயாக என்று நியமிக்க
இதனால் எனக்குப் பெரும் பாவம் வந்து சேருமே என்று நான் நடுங்க
தேவதைகளின் நலத்துக்கும் பாவிகளான அஸூரர்களை அழிவதற்கும் நீ இப்படி செய்தே தீரவேண்டும்.
ஆயினும் இதற்கு ப்ராயச்சித்தமாக என்னை நெஞ்சில் தியானித்து என்னுடைய தாரக மந்திரத்தை ஜபித்துக் கொண்டேயிருந்தால்
உன்னிடம் பாபம் ஒட்டாது என்று விஷ்ணு கூறியதாக சிவன் பார்வதியிடம் கூறினார்.

இதை கேட்ட பார்வதி குற்றமற்ற தேவர் தலைவனே பகவத்பக்தியற்ற அந்தணர்களாலே சொல்லப்பெற்ற
தாமஸ சாஸ்த்திரங்களை வரிசையாய் கூறுவிராக. அதற்கு சிவப்பிரான் தேவியே தாமஸ சாஸ்த்திரங்களை கூறுகிறேன் கேளாய்.
இந்தத் தாமஸ சாஸ்த்திரங்களை நினைத்தால்கூட அறிவாளிகளுக்கும் பதிதத்தன்மை ஆவான் அதாவது பாவியாக ஆவான்.
முதன்முதலில் பாசுபதம் முதலான சைவாகமங்கள் என்னும் சிவபூஜை பஸ்மம் பூசுதல் என்னால் நேரே சொல்லப்பட்டன.
என் சக்தியால் ஆவேசிக்கப்பட்ட அந்தணர்கள் தாமஸ சாஸ்த்திரங்களை உபதேசிக்கப் பட்டவைகளை இனி கேள்.

வைஸேஷிகம் என்னும் பெரிய ஸாஸ்திரம் கணாதராலே கூறப்பட்டது. கௌதமராலே ந்யாயஸாஸ்திரம் கூறப்பட்டது.
இவ்விரண்டும் பரமாணுவை ஜகத்காரணமாகச் சொல்கின்றன.
கபிலரால் மூலப்ரக்ருதி ஜகத்காரணமாகச் சொல்லும் ஸாங்க்ய ஸாஸ்திரம் செய்யப்பட்டது.
தேவ குருவான பிருஹஸ்பதியால் மிகத் தாழ்ந்ததான சார்வாக ஸாஸ்திரம் இயற்றப்பட்டது.
திரிபுராசுரர்களை அழிப்பதற்காக புத்தாவதாரம் எடுத்த விஷ்ணுவாலே நக்னம் நீலபடம் முதலான பிரிவுகளை உடைய
பௌத்தம் என்னும் தீயஸாஸ்திரம் உபதேசிக்கப்பட்டது.
மாயாவாதம் என்னும் தீயஸாஸ்திரம் மறைந்து நிற்கும் பௌத்தமதம் எனப்படுகிறது.
கலியுகத்தில் (ஆதிசங்கராக) அந்தணவுருக் கொண்ட என்னாலேயே அது சொல்லப்பட்டது.
வேதவாக்யங்களுக்கு அனைவரும் இகழத்தக்க அவப்பொருள்களை அந்த மாயாவாதம் காட்டும்.
அந்த மதத்தில் கர்மத்திற்கு ஸ்வரூபத்யாமமே சொல்லப்படும். அதில் எல்லாக் கர்மங்களினின்றும் நீங்கிய ஸந்யாஸமே சொல்லப்படும்.
அதில் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் என்னால் ஸ்வரூபைக்யம் என்னும் ஒரே தன்மையும் பரமாத்மாவுடன் ஒன்றாகிவிடுதல் கூறப்படுகிறது.
ப்ரஹ்மத்திற்கு நிர்குணஸ்வரூபம் என்ற குணமும் உருவமும் இல்லை என்று சொல்லப்பட்டது.

கலியுகத்தில் தீயவர்கள் அனைவரும் மயங்குவதற்காக சாஸ்த்திரத்திற்கு எதிரான இந்தப் பெரிய ஸாஸ்திரம்
வேதார்த்தம் போலே என்னால் வஞ்சனையால் அவர்களை அழிப்பதற்காக ரக்ஷக்கப்படப்போகிறது.
நைமிநி என்னும் அந்தணராலே பூர்வபாகமாகிற பெரிய ஸாஸ்திரம் நிரீஸ்வரவாதம் செய்யப்பெற்று அவப்பொருளுடையதாகச் செய்யப்பட்டது.
மற்றும் ஸத்வகுண புராணங்கள் விஷ்ணு சம்பந்தமானவை அவை நற்குண புராணங்கள்
1 பாகவதபுராணம் 2. விஷ்ணுபுராணம் 3. நாரதபுராணம் 4. கருடபுராணம் 5. பத்மபுராணம் 6. வராஹபுராணம்
ராஜஸகுண புராணங்கள் பிரம்மா சம்பந்தமானவை அவை அசுரகுண புராணங்கள்
1. ப்ரஹ்மாண்ட புராணம் 2. ப்ரஹ்ம வைவர்த்த புராணம் 3. மார்க்கண்டேய புராணம்
4. பவிஷ்ய புராணம் 5. வாமன புராணம் 6. ப்ரஹ்ம புராணம்
தாமஸ குண புராணங்கள் சிவன் சம்பந்தமானவை அவை அறியாமைகுண புராணங்கள்
1. மத்ஸ்ய புராணம் 2. கூர்ம புராணம் 3. லிங்க புராணம் 4. சிவ புராணம் 5.ஸ்கந்த புராணம் 6. அக்னி புராணம்
இதில் நற்குண புராணங்களே சாஸ்த்திரத்திற்கு உட்பட்டவை மற்றும் மோக்ஷத்தை
(+வாஷிஷ்டம்,ஹாரிதம், வ்யாஸம, பராசர, பரத்வாஜ, காஸ்யப ஸ்மிருதிகள்) கொடுக்கும்
மற்றையவை நரகத்தையளிப்பவை. அறிவாளிகள் அவற்றை ஒதுக்கக்கடவான்”என ஆணியடித்தாற்போல் நிலைநாட்டியது.

——————————-

ஸ்கந்தபுராண நிர்ணயம்

சைவர்களால் சிவ, லிங்க புராணங்களுக்கு அடுத்தபடியாக கொண்டாடப்படும் புராணம் ஸ்கந்தபுராணமே;
அப்புராணத்தில் புருஷோத்தம மஹாத்மியத்தில் இருபத்தோராவது அத்யாயத்தில் ஒரு ருக்வேதமந்திரம் பின்வருமாறு
உபப்ரும்ஹானம் செய்யப்பட்டுள்ளது.

ஜைமினி சொன்னார்-
இப்படி சொல்லிக்கொண்டிருக்குமவனிடம் ருக்வேதத்தில் கரைகண்டவனும் ராஜரிஷியும்,
வேதறிவு பெற்ற ஒரு இருப்பிறப்பாளன் உகப்புடன் ஒரு வார்த்தை கூறினான்.
“உன்னுடைய பாக்யத்தை என்னவென்று கொண்டாடுவேன்?
அந்த அர்சசாமூர்தியை உபாஸித்தாலே முக்தி யுண்டென சுருதியே சொல்லிற்றன்றோ!
புருஷனால் நிருமிக்கப்படாத யாதொரு மரம் கடற்கரையில் மிதக்கிறதோ
ஆராதிக்க அரியவனான அப்பரமபுருஷனை அடையவுகரிய முக்தியை முக்தியையடைகின்றனர்” என
ப்ரஹ்ம ஞானநிதியான நாரதமஹரிஷி இதை சொன்னார்.

பரம புருஷனே வேதாந்த வாக்யங்களை விட எவை நன்கறியும்?
வேதத்தையொட்டியன்றோ ஸ்ருஷ்டி, அவதாரம் என்பவற்றை பகவான் செய்கிறார்.
ஸாமவேத கீதங்களில் பாடப்பட்டவனும் வேதாந்தங்களில் சொல்லப்பட்டவனுமான மனிதர்களுக்கு நன்மையளிப்பவனும் அவனே;
அந்த புருஷனை பிரதிமை என நினைக்காதே, மிக உறுதியாக இருக்கும் தமோகுணங்கள் இவரை காண்பதாலேயே நம்மைவிட்டு நீங்கும்,
இந்த அர்ச்சையை சொல்லும் வேதவாக்யங்கள் முற்காலத்திலிருந்தே வழங்கின”. என
தாமஸ குண பரிஹாரஸாத்வீக ஸ்வரூபமாக நாராயணன் விளங்குவதை வேதத்தை கொண்டே விளக்கியது.

இதே புராணத்தில் சிவன், ஸ்கந்த சம்பாஷனையில் சிவன்
ஷிவ-ஷாஸ்த்ரேஷு தத் க்ராஹ்யம் பகவச்-சாஸ்திர-யோகி யத் பரமோ விஷ்ணுர் ஏவைகஸ் தஜ் ஜியானம்
மோக்ஷ -ஸ்தானம் ஷாஸ்திராணம் நிர்ணையஸ் தவ் ஏஷஸ் தத் அன்யன் மோஹனாய ஹி

‘சிவ சாஸ்திரங்களின் கூத்துக்கள் விஷ்ணு சாஸ்திரங்களோடு ஓத்திருக்கும்போது மட்டுமே ஏற்றுக்கொள்ளவேண்டும்.
பகவான் விஷ்ணு மட்டுமே முழுமுதற் கடவுள். மேலும், அவரை பற்றிய அறிவே விடுதலைக்கான வழி.
அதுவே எல்லா சாஸ்திரங்களின் முடிவு. பிற எல்லா முடிவுகளும் மக்களை மோகிப்பதாகாது’. என்கிறார்.
இவ்விதம் ஸ்கந்தபுராணமே ஸத்வரூபம் விஷ்ணுவுக்கே உரித்தது என்றது.

————-

‘யஸ்ய ப்ரஸாதாத தஹமச்யுதஸ்ய பூத: ப்ரஜாஸர்க்க கரோஸந்தகாரீ|
க்ரோதாச்சா ருத்ர: ஸ்திதிஹேதுபூதோ மத்யே ச யஸ்மாத் புருஷ: பரஸ்மாத்||

எந்த அச்சயுதனுடைய அருளாலே ப்ரஜைகளை ஸ்ருஷ்டிக்கும் பிரமானாகிற நானும் ஸம்ஹரிக்கும் ருத்ரனும் உண்டானோமோ
எந்தபுருஷன் எங்களுக்கு நடுவில்,ரக்ஷிக்கும் புருஷனாய் அவதரித்திருக்கிறானே
என்று விஷ்ணுபுராணத்தில் இவ்வாக்யம் நாராய பரமாக உபப்ரும்ஹணம் செய்யப்பட்டது.

—————–

‘ஈஸாநஸ் ஸர்வித்யாநாம் ஈச்வரஸ் ஸர்வபூதாநாம் பரஹ்மாதிபதிர்
பர்ஹ்மணோதிபதிர் பரஹ்மா ஸிவோ மே அஸ்து ஸதாஸிவோம்’

எல்லா வித்யைகளுக்கும் ஈசனாய் ஸர்வபூதங்களுக்கும் ஈச்வரனாய்,வேதத்தில் அதிபதாய்,பர்ஹ்மாவுக்கு அதிபதியாய்
ப்ரஜ்மாவுக்கு அந்தர்யாமியாய் சிவனுக்கு அந்தர்மியாய் ஓங்காரவாச்யனானவன் எனக்கு எப்போதும் மங்களத்தை தரக்கடவன்
என்று ந்ருஸிம்ஹதாபநீய உபனிஷத்தில் நாற்பத்து நாலாவது அநுவாகமந்திரத்திரத்தில் எடுத்தோதியது.

———————–

பிதா புத்ரணே பித்ருமாந் யோநியோநௌ நாவே தவிந்மநுதேதம் ப்ருஹந்தம்” [யஜூர் வேதம் – காடகசம்ஹிதை -3-9-55]
(அனைத்துலகுக்கும் தந்தையான பரமாத்மா தம் பிள்ளைகளுள் ஒருவனைத் தந்தையாகக் கொண்டு ஒவ்வொரு யோனியிலும் பிறக்கிறான்)

“ஸ உஸ்ரேயாந் பவதி ஜாயமாந” [யஜூர் வேதம் அஷ்டகம்- 3-6-3]
(அந்தபரமாத்மா பிறந்த பின்னே பெருமை பெறுகிறான்)

“தஸ்ய தீரா: பரிஜாநந்தி யோநிம்” [புருஷ ஸூக்தம்]
(அறிவாளிகளின் தலைவர்களே அவனுடைய பிறப்பின் ரகஸ்யத்தை அறிவார்கள்) வேதம் அறியா அறிவிலி அவனை பரமாத்மாவாக உணர மாட்டான்.

“அஜாயமாநோ பஹுதா விஜாயதே” [புருஷஸூக்தம் 2-3]
(பிறப்பில்லாதவனாக இருந்தும் பலவிதமாகப் பிறக்கிறான்)

————

ந தஸ்ய ப்ராக்ருதா மூர்த்திர் மாம்ஸமேதாஸ்தி ஸம்பவா (வராஹபுராணம்:14-41, வாயு புராணம் 34-40)

ந பூத ஸங்க ஸமஸ்தாநோ தேஹோஸ்ய பரமாத்மந (பாரதம்-சாந்தி பர்வம் 206-60)

இந்த பரமாத்மாவின் தேஹம் பஞ்சபூதங்களின் சேர்க்கையால் அமைந்ததன்று.
எனவே பரமபுருஷனின் அப்ராக்ருத திருமேனிக்கு இந்த நிற நியமம் ஏது?

ஸ்ரீமத் பாகவதத்தில் பதினோராவது ஸ்கந்தத்திலே ஐந்தாமத்யாயத்தில் இருபதாம் ஸ்லோகத்தில்

க்ருதம் த்ரேதோ த்வாபரம் ச கலிரிதயேக்ஷ கேஸவ| நாநாவாணபிதாகார நாநைவ விதிநேஜயதே ||

க்ரதம், த்ரேதா, துவாபாரம், கலி எனும் நான்கு யுகத்தில் பலவர்ணங்கள், நாமங்கள், உருவங்கள் ஆகியவற்றை உடையவனாய்,
பலவிதமான விதிகளால் உபாஸிக்கப்படுபவன் கேசவன் என்று கூறப்படுகிறது.

————————-

ருத்ரன் தானே பசுபதியாகிற வரத்தை தேவர்களிடம் பெற்றானென்பது
‘ஸோப்ரவீத் வரம்வ்ருணா அஹமேவ பஸூநாமதி பதிரஸாநீதி| தஸ்மாத் ருத்ர பஸூநா மதிபதி|

( இதைக்கேட்ட ருத்ரன் தேவர்களே! நான் உங்களிடம் ஒருவரத்தை கேட்கிறேன்.நானே பசுக்களுக்கு அதிபதியாக வேண்டும்”
என்று உரைத்தனன்.தேவர்களும் அவ்வரத்தை அருளினர்.) கிருஷ்ணயஜுர் வேதத்து (6:2) வாக்யத்தால்

‘விஷ்ணுராத்மா பகவதோ பவஸ்யாமிததேஜஸ| தஸ்மாத்தநுர்ஜ்யா ஸம்ஸர்க்கம்ஸ விஷேஹே மஹேஸ்வர||

அளவற்ற தேஜஸ்ஸையுடையவரான பகவான் சிவனுக்கு விஷ்ணுவானவர் ஆத்மாவாயிருந்ததனாலேயே வில்லை நாணேற்றுவதை
மஹேஸ்வரரான அவருக்கு பொறுக்கமுடிந்தது என்னும் கர்ணபர்வத்து (35-50) வசனமும்
திரிபுரசம்ஹாரம் திகிரியானாளேயே ருத்ரனுக்கு சாத்யமானதென்பதை சாதித்தவழி காண்க.

இவ்வர்தத்தை உணர்ந்த சங்கச் சான்றோரும்
‘….பணிவில் சீர்ச் செல்விடைப் பாகன் திரிபுரம் செற்றுழிக் கல் உயர் வென்னி இமயவில் நாணாகித்
தொல் புகழ் தந்தாரும் தாம் (பரிபாடல்) என்று பாடி வைத்தனர்

——————-

‘ ந து நாராயணாதீதாம் நாம்நாமந்யத்ர ஸம்பவ| அந்யநாம்நாம் கதிர் விஷ்ணுரேக ஏவ ப்ரகீர்த்தித|
ருதே நாராயணாதீநீ நாமிநி புருஷோத்தம:| ப்ராதாததந்யத்ர பகவான்…‌…..‌.

நாராயணன் முதலிய பெயர்கள் மற்ற தெய்வங்களை குறிக்கமாட்டா,மற்ற தெய்வங்களினன் பெயருக்கு
விஷ்ணு ஒருவனே சேருமிடமாக கீர்த்திபெற்றிருக்கிறான்.
நாராயண நாமத்தை தவிற பிறபெயர்களை அவனே பிறதேவதைகளுக்கு கொடுத்தான் என்கிற வாமனபுராண வசனம்

—————

ப்ராக்ருதமான ஸாத்வீகராஜஸதமோ குணங்களை கடந்தவனும் சுத்தஸத்வமயமான திருமேனியையும் ஸ்தானத்தையுமுடைய
பரமபுருஷன் பகவான் ஹரி ஒருவனே என்பதை
ஸ்ருதி, ஸ்மிருதி இதிஹாச புராணங்களை கொண்டு நிலைநாட்டி நிறுபவப்பட்டது.

—————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஆகம ப்ராமாண்யம்

November 8, 2021

யத்பதாம்போருஹ த்யாந வித்வஸ்தாஸேஷகல்மஷ |
வஸ்துதாமுபயாதோஹம் யாமுநேயம் நமாமி தம் | (“கீதாபாஷ்ய மங்களம்”)

எவருடைய திருவடித்தாமரைகளை தியானிப்பதால் எல்லா தோஷங்களும் நீங்கப்பெற்று யான் ஒரு பொருளாக ஆனேனோ,
அத்தகைய யமுனைத்துறைவரை வணங்குகிறேன்.

——–

ஸ்வாதயந்நிஹ ஸர்வேஷாம் த்ரய்யந்தார்தம் ஸுதுர்க்ரஹம்|
ஸ்தோத்ர யாமாஸ யோகீந்த்ர தம் வந்தே யாமுநாஹ்வயம்||

[யதிகளுக்குத் தலைவரும், மறை பொருளின் உயரிய அர்த்தங்களை எல்லோருக்கும் புரியும்படியாக
ஶ்லோகங்களாக அருளிச் செய்தவருமான ஸ்வாமி யாமுந முநியை வணங்குகிறேன்.]

—–

நிதியைப் பொழியும் முகிலென்று நீசர்தம் வாசல்பற்றி
துதிகற்றுலகில் துவள்கின்றிலேன், இனி தூய்நெறிசேர்
எதிகட்கிறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம்
கதிபெற்றுடைய, இராமானுசன் என்னைக் காத்தனனே

“ராமானுஜாங்க்ரிஸராணோஸ்மி குலப்ரீதீபஸன்
வாஸீத் ஸ யாமுனமுனேஸ் ஸச நாதவம்ஸ்ய |
வஸ்ஸ்ய பராங்குஸமுநேஸ்ஸ ச ஸோ தேவ்யா:
தாஸஸ்தவேதி வரதாஸ்மி தவேக்ஷணீய: ||-(கூரத்தாழ்வான் அருளிய “வரதராஜஸ்தவம்” ஸ்லோகம் 102).

எம்பெருமானாரின் (இராமானுசர்) திருவடிகளை உபாயமாக உடையவனாகிறேன்.
அந்த எம்பெருமானார் யாமுநமுனியின் (ஆளவந்தார்) குலவிளக்காக இருக்கிறார்.
அந்த யாமுநமுனியாகிற ஆளவந்தார் நாதமுனிகள் திருவம்சத்தவர். அந்நாதமுனிகள் நம்மாழ்வாரின் வழி வந்தவர்.
அந்த நம்மாழ்வாரும் பெரியபிராட்டியின் (ஸ்ரீரங்க நாச்சியார்) திருவருள் பெற்றவர்.
வரதராஜரே! இவ்விதம் தேவரீருக்கு (உமக்கு) வழிவழித் தொண்டன் அடியேன் என்று
கடாக்ஷத்துக்குப் பாத்திரமாக இருக்கக் கடவேன் ஆகிறேன் என்று உரைக்கிறார் கூரத்தாழ்வான்.

விதாய வைதிகம் மார்க்கம் அகெளதஸ்குதகண்டகம் |
நேதாரம் பகவத்பக்தேர் யாமுநம் மநவாமஹை || ( ஸ்ரீ பராசர பட்டர் அருளிச்செய்த ஸ்ரீரங்கராஜஸ்தவம், ஸ்லோ.1.4)

ஏன் ஏன் என்று கேட்டு விதண்டாவாதம் செய்யும் வாதியராம் இல்லாததாக வைதிக நெறியைச் செய்து (அதில்),
அழைத்துச் செல்பவராய் பகவானிடம் தழைத்தோங்கச் செய்பவரான ஆளவந்தாரை தியானிப்போமாக.

ஆகம ப்ராமாண்யம் என்னும் நூலை எழுதியதற்குக் காரணம் ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகமங்கள் இறைவனால் வெளிவந்தவை என்றும்,
பாஞ்சராத்ர ஸாஸ்த்ரமும் வேதம் போல் அபௌருஷேயமானதும் ஒப்புயர்வற்ற அதிகார பூர்வமாகக் கொள்ளத்தக்கது
(வேதங்களோடு ஒக்க ப்ரமாணங்களாகக் கொள்ளத்தக்கது) என்றும் விக்ரஹ ஆராதனை வேத மூல ப்ராமணமானது என்றும்
அர்ச்சாவதாரமாகிய திரு உருவங்களில் பகவானுடைய சாந்நித்யம் பூர்ணமாக உண்டு என்றும் ஸ்தாபிப்பதற்காகவே ஆகும்.

மேலும் அதிகார பூர்வமான ஓர் ரக்ஷை பாஞ்சராத்ரத்திற்கு அமைக்கா விட்டால் பரம வைதிகமானதும் எம்பெருமானாலேயே
தோற்றுவிக்கப் பட்டதுமான மகோன்னதையை பாஞ்சராத்ர ஸாஸ்த்ரம் இழந்துவிடக் கூடும் என்பதாலே
ஆகம ப்ராமாண்யம் என்ற நூலை தம் ஸம்பூர்ண ப்ராஜ்ஞத்வத்தினால் அருளிச் செய்தார் ஸ்ரீ ஆளவந்தார்.

————-

மங்கள ஸ்லோகம்
ஜகத் ஜென்ம ஸ்திதி த்வம்ஸ மஹா ஆனந்த ஏக ஹேதவே
கர அமல விஸ்வம் பஸ்யதே விஷ்ணவே நம –

வைகானஸம் பாஞ்ச ராத்ரம்

வைகானஸ ஆகமம் மகாவிஷ்ணுவால் சொல்லப்பட்டது என்பது ஐதீகம்.
வைகானஸ ஆகமத்தின் மூலமந்திரங்கள், ரகசிய விவரங்கள் ஆகியவற்றை விஷ்ணு உபதேசிக்க, விகனச முனிவர் எழுதி வைத்தார்.
வைகானஸ ஆகமத்துக்கு ‘பகவத் சாஸ்திரம்’ என்ற பெயரும் உண்டு.
பாஞ்சராத்ர ஆகமமும் விஷ்ணு வழிபாட்டின் சிறப்புகளையும் முறைகளையும் விவரிக்கிறது.

உட்பிரிவுகள்

சைவ ஆகமங்களுள் காமிகம், காரணம் என்ற இரண்டும் முக்கியமானவை ஆகும்.
ஆலயம் அமைப்பதற்கு கச்சிதமான இடத்தை தேர்ந்தெடுத்தல், கட்டிடம் நிர்மாணிக்கும் முறை,
சிற்பிகள் மற்றும் அர்ச்சகர் ஆகியோரது தகுதி நிலைகள், கோவில் கட்டி முடித்து கும்பாபிஷேகம் செய்வது
போன்ற தகவல்களை இவை விரிவாக தருகின்றன.

—————-

ஆகம ப்ராமாண்யம் என்னும் நூலை எழுதியதற்குக் காரணம் ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகமங்கள் இறைவனால் வெளிவந்தவை என்றும்,
பாஞ்சராத்ர ஸாஸ்த்ரமும் வேதம் போல் அபௌருஷேயமானதும் ஒப்புயர்வற்ற அதிகார பூர்வமாகக் கொள்ளத்தக்கது
(வேதங்களோடு ஒக்க ப்ரமாணங்களாகக் கொள்ளத்தக்கது) என்றும்
விக்ரஹ ஆராதனை வேத மூல ப்ராமணமானது என்றும்
அர்ச்சாவதாரமாகிய திரு உருவங்களில் பகவானுடைய சாந்நித்யம் பூர்ணமாக உண்டு என்றும் ஸ்தாபிப்பதற்காகவே ஆகும்.

மேலும் அதிகார பூர்வமான ஓர் ரக்ஷை பாஞ்சராத்ரத்திற்கு அமைக்காவிட்டால் பரமவைதிகமானதும் எம்பெருமானாலேயே
தோற்றுவிக்கப் பட்டதுமான மகோன்னதையை பாஞ்சராத்ர ஸாஸ்த்ரம் இழந்துவிடக்கூடும் என்பதாலே
ஆகம ப்ராமாண்யம் என்ற நூலை தம் ஸம்பூர்ண ப்ராஜ்ஞத்வத்தினால் அருளிச் செய்தார் ஸ்ரீ ஆளவந்தார்.

ஸ்ரீ ஆளவந்தாருக்கு முன்னர் குமரில பட்டர் என்ற மீமாம்சகர் இந்த ஆகமங்கள் வேதத்திற்கு புறம்பானவை என்றும்,
ஆதிசங்கரர் இவைகள் வேதாந்தங்களுக்கு முரண்பட்ட சில கருத்துக்களைக் கொண்டவை என்றும் தெரிவிக்கின்றனர்.
இக் கருத்துக்களைக் களைந்து பரம காருணிகரும், ஸர்வஜ்ஞனுமான ஸ்ரீ வாசுதேவன் வாயிலாக அவதரித்த
பாஞ்சராத்ர சாஸ்திரங்கள் வேத துல்யமானது என்று ஸ்தாபித்து மேலும்
பாட்ட, பிரபாகர, நையாயிக, அத்வைத மத வாதங்களையும் கண்டித்திருக்கிறார்.

——————————————————-

நிகமம் -வேதம் அங்கு போகும் வழியைச் சொல்லும்
ஆகமம் -அவன் இங்கு வந்து நம்மை அனுக்ரஹிக்கும் வழி
ஆகமம் (ஆ+ கமம்) என்பது தூய தமிழ் சொல்.
ஆ என்பது உயிர்களை குறிக்கிறது. எனவே உயிர்கள் கடை சேருவதற்காக அருளப்பட்டது.

மார்க்கண்டேய சம்ஹிதை
ஸ்ரீ ப்ரஸ்ன சம்ஹிதை
அறியாமை இருளைப் போக்கும்
ஐந்து இரவில்
பவ்ஷ்கார சம்ஹிதை – வேதம் வேதாந்தம் புராணம் சாங்க்யம் யோகம் ஐந்து சாரம்
விஸ்மித்ர சம்ஹிதை -ஐம்புலன்களில் இருந்து காக்கும்
அஹிர்புத்யை சம்ஹிதை -பர வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சை சொல்லும்

வக்தா நாராயண ஸ்வயம் -வேதத்துடன் தொடர்பு இல்லை என்று சிலர் தயங்கி பிரமாணம் இல்லை என்பர்
வைகானச ஆகமம் யஜுர் வேத பகுதி
மீமாம்சகர் -குமாரில பட்டர் பாட்டர் -பிரபாகரர் -இரண்டு வகை -எதிர்க்கிறார்கள்
நையாயிகர்-நியாய மதம் – முழுமையாக எதிர்க்க வில்லை
அத்வைதிகள் நால்வரும் பூர்வ பக்ஷிகள்

மங்கள ஸ்லோகம்
ஜகத் ஜென்ம ஸ்திதி த்வம்ஸ மஹா ஆனந்த ஏக ஹேதவே
கர அமல விஸ்வம் பஸ்யதே விஷ்ணவே நம

முழுவதும் உடல் மிசை உயிர் எங்கும் கரந்து பரந்துள்ள -விஷ்ணு-
எல்லாவற்றையும் கை இலங்கு நெல்லிக்கனி போல் உள்ளபடி காணும் அவனுக்கு -அவனுக்கு நமஸ்காரம்
(அந்தமில் பேர் இன்பம் -அகில புவன ஜென்ம ஸ்தேம பங்காதி லீலா
விநத விரத பூத வ்ரத ரக்ஷைக தீஷே -மோக்ஷ பிரதம் தனியாக ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ பாஷ்ய மங்கள ஸ்லோகம் )
உள்ளபடி கண்டே பாஞ்சராத்ர ஸாஸ்த்ரம் அருளி உள்ளான் என்று காட்டுகிறார்
விஷ் -உள்ளே நுழைந்து -வியாபித்து -அவனுக்கு நமஸ்காரம்

தூரமான கம்பீரா சாராசாரா -விவேகம் அறிந்தவர் புகழ்வார் -பொறாமை இல்லாதவர்
சமயச -சமகாலத்தில் உள்ளவர் நான் சொல்லும் நல்ல வார்த்தைகளில் குறை
பழிக்கில் புகழ்

தத்வ விசாரம்
பாட்ட பிரபாகர் நையாயிக அத்வைதி மற்றும் வேறே சிலர் -ஐவர் -ஆளவந்தார் மறுத்து சாதிக்கிறார்
பாட்ட மீமாம்சகர் -வேதம் மட்டுமே பிரமாணம் -உபநிஷத் கூட ஒத்துக் கொள்ளார் -முழுக்கவே பாஞ்சராத்ரம் பிரமாணம் இல்லை
பிரபாகர் -முன் பாக வேதம் -இதில் கட்டளை வாக்கியம் மட்டும் கொள்வார் -இவரும் பிரமாணம் இல்லை என்பர் –
நையாயிகர்-logic – அக்ஷபாதர் நியாயமதம் -ஏற்றுக் கொள்பவர்
வேதமும் மனிதனால் கொடுக்கப் பட்டது என்பர்
வேதாந்த க்ருத் -என்று கண்ணன் கீதை அருளியதை -வேத க்ருத் இல்லை -புருஷனால் செய்யப்பட்டது இல்லையே
அனுமானத்தால் ஏற்றுக் கொள்பவர் இவர்
நிர்விசேஷ அத்வைதி –
அபிகமனம் போன்றவற்றை எதிர்க்க வில்லை –
தத்வ ரீதியான -வாசுதேவன் இடம் சங்கர்ஷணம் பிறந்தான் போன்றவற்றையும்
கைங்கர்யம் போன்றவற்றையும் மட்டும் எதிர்ப்பார்
வேறே ஆகம வாதி தங்கள் ஆகமமே பிரமாணம்
இப்படி ஐவர் பூர்வ பக்ஷம் –

கர்மம் செயலே பலன் கொடுக்குமா -அபூர்வம் கல்பித்து பாட்ட மதம் -இறைவன் கொண்டு வர வேண்டாம்
வேதமே ஸ்வயம் பிரமாணம் –
பாஞ்சராத்ரம் ஒருவரால் கொடுக்கப் பட்டதால் பிரமாணம் இல்லை
தீக்ஷை எடுத்துக் கொண்டு ஆராதனம் பண்ணி முக்தி ஒத்துக் கொள்ள முடியாதே
ப்ரத்யக்ஷம் இல்லையே என்பர்

நையாயிகர் எழுந்து -ஒருவர் சொல்வதாலேயே தப்பு ஆகுமா
ஒரு பகுதி பூமி பார்க்கிறோம்
பறவை முழுவதும் பார்க்கும்
பார்க்காத ஒன்றை ஒருவர் சொல்வதால் பொய் ஆகுமோ
microscope பார்த்து சொல்வதை ஏற்றுக் கொள்கிறோம்
அதிகமான சக்தன் -ஞானம் உள்ளவன்-பார்த்து -சொல்வதை தப்பு என்னலாமோ
இவர்கள் பர ப்ரஹ்மம் ஒத்துக் கொள்ளாதவர்

இதுக்கு பாட்ட மீமாம்சார் -இப்படிப்பட்ட ஒன்றை ப்ரத்யக்ஷமாக காண்பது ஸாத்யம் இல்லை –
அப்படி உள்ளவர் என்பதே வலிமை இல்லாத வாதம் என்பர்
அனுமானத்துக்கும் விரோதம் என்பர் -முன்பே பார்த்து இருந்தால் தானே யூகிக்க முடியும்
புகை நெருப்பு பார்க்காமல் அனுமானிக்க முடியாது
வேதத்துக்கே எதிரானது என்பர் -தனி மனிதன் பேச்சு ஏற்றுக் கொள்ள முடியாதே

அடுத்து -உபமானத்துக்கும் விரோதம் -உவமை சொல்லி விளக்க முடியாதே –
அர்த்தா பத்தி -சந்தர்ப்பத்தால் அறியும் அறிவு
தேவதத்தன் குண்டாய் உள்ளான் -பகலில் உண்ண மாட்டான்
என்றால் இரவில் உண்பான் என்று சொல்வது அர்த்தா பத்தி
நான் இத்தை தனியாக கொள்ளாமல் அனுமானத்தின் உள்ளே சொல்வோம்

நையாயிகர்-எழுந்து பேசுகிறான் -மனு ஸ்ம்ருதி -வேதம் இல்லாவிட்டாலும் கொள்கிறோம் அன்றோ –
மனு சொல்வது வேதத்துக்கு சமம் -தத் பேஷஜம் -நாமும் சொல்கிறோமே

இதுக்கு ஆறாவது வாதம் பாட்ட மீமாம்சகர் -மனு ஸ்ம்ருதிக்கு வேதத்துக்கு தொடர்பு உண்டு
இதுக்கு இல்லை –
ஜைமினி கர்ம மீமாம்ஸா ஸூத்ரம் -மனு ஸ்ம்ருதியும் வேதத்துக்கு நிகர் –
ஸ்ருதி ஸ்ம்ருதி -ஸுர்தா ஸ்மார்த்த –
பாகவதர்கள் என்று பிரித்து -ஒதுக்கி -வேதியர் கோஷ்ட்டியில் கொள்ளாமல் –
ஸம்ஸ்காரங்கள் –40-க்கு மேல் உண்டே -வேதியர் என்று கொள்ள முடியாது என்பர் –
விக்ரஹம் உடுத்துக் களைந்த மாலை அணிய மாட்டார் -பிரசாதம் கொள்ள மாட்டார்
சாண்டில்யர் -நான்கு வேதம் படித்தும் பலன் பெறாமல் பாஞ்ச ராத்ரம் பெற்று பலன் -வேத நிந்தனை என்றும் வாதம்
உப நயனம் -மட்டும் போதாது தீக்ஷை கொள்ள வேண்டும் என்று அதிகமாக
14-வித்யா ஸ்தானங்களில் இது இல்லையே
உத்பத்தி அசம்பவாத் வியாசர் தாமே ஒத்துக் கொள்ள வில்லை என்பர்

நையாயிகர் அடுத்து
வேதம் அடிப்படை இல்லை என்பதுக்காக எதுக்கு நிராகரிக்க வேண்டும்
இதை அனுக்ரகிக்காவிடில் வேதத்தையே நிராகரிக்க வேண்டும்
இரண்டும் சக்திமான் ஒருவனால் தந்தவை
அனுமான வாதிகள் -காரியம் இருக்க காரணம் இருக்க வேண்டும்
அபூர்வம் ஜடம் படைக்க முடியாதே -நன்கு அறிந்த சேதனன் தானே படைக்க முடியும்

பாட்ட மீமாம்சகன் -எழுந்து வேதத்துக்கு கர்த்தா இல்லை -சொல்லி இருந்தால் மனிதன் -கர்ம வஸ்யன்
எங்கு இருந்து கொடுத்தார் –
உலகைப் படைக்க தர்மம் தெரிய வேண்டாமே
குயவனுக்கு தண்ணீர் மண் chemical அறிவு வேண்டாமே
சரீரத்துடன் கூடி விருப்பத்துடன் உள்ளவன் தானே கார்யம் செய்வான்
தானே விளையும் வயலில் புல் -அதே போல் ஸ்ருஷ்ட்டி
எதைக்கொண்டு எங்கு இருந்து படைக்கிறான்
கருணை உடன் படைத்தால் துக்கம் சுகம் எதற்கு
பாப புண்யம் அடியாக என்றால் அது இவனை விட உயர்ந்ததா -இல்லை என்னலாம் என்கிறான்

ஆளவந்தார் –
சாஸ்த்ர யோநித்வாத் -ஸ்ருதி சிரஸ்ஸில் உள்ளவன் -சத ஸ்ருதி வாக்கியங்கள் உண்டே
வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை -சாரத்தை விட்டு சக்கையைப் பற்றுவார்களோ என்றார்

பிரபாகரர்
கர்ம மீமாம்ஸையிலும் சிலவற்றையே கொள்வார்
புல் பச்சை என்றால் ஒத்துக் கொள்ள வேண்டுமோ
மஞ்சளாக உலர்ந்து இருந்தால்
கண்ணால் பார்ப்பதில் கண் முக்கியம்
ப்ரத்யக்ஷம் போல் வேதம் சொல்வதை ஒத்துக் கொள்ள வேண்டும் நம் கொள்கை
கட்டளை வாக்கியங்களை மட்டும் கொள்ள வேண்டும் என்பர்
பசு கொண்டு வா -சொல்ல கொண்டு வருதைப்பார்க்கும் குழந்தை பசு என்ன அறியும்
ஆத்மாவால் த்ரஷ்டவ்ய-ஸ்ரோதவ்வய மந்தவ்ய நிதித்யாசிதவ்ய -விதி வாக்கியம்
கொள்ள முடியாது என்பர்
யூப ஸ்தம்பம் ஸூர்யன் -அர்த்தவாதம் சுருதி சொல்லும்
உயர்வு நவிற்று அணி –
சொந்த விருப்பு உடன் சொல்லி இருக்கலாம்

ஆளவந்தார்
முழுவதாக உபன்யாசம்
பரம பிரமாணம்
ஜ்யோதி ஷ்டோ ஹோமம் சுவர்க்கம் தரும் போல் இதையும் நம்ப வேண்டும்
நையாயினரை முதலில் நிரஸித்து
வேதத்துக்கு புறம்பானது எது கேள்வி –
ஸப்த வடிவு -ஆப்த வாக்கியம்
பாஞ்ச ராத்ரம் பர ப்ரஹ்மம் பற்றியும் சொல்லும் -அதுக்கு அடிப்படை வேதம் தானே
வேத அடிப்படை இதுக்கும் உண்டு

அடுத்து மீமாம்சகர்கள் இருவரையும் நிரசிக்கிறார்
இதம் மஹ உபநிஷத் கொண்டாடி உள்ளார்கள் ரிஷிகள்
தர்க்க ரீதியிலும்-விரோதம் இல்லை
வார்த்தையிலே முரண் -வாழ் நாள் முழுவதும் மௌன விரோதம் இருப்பேன் பேசுவது போல்
தர்மி யுக்த விரோதம் மலடியான தாய் போல் இல்லை
உலகங்கள் இல்ல எல்லா வாக்கியமும் பொய் -என்றால் இதுவும் பொய்யா உண்மையா
அஹிம்சா சர்வ பூதானாம்
யாகத்தில் பலி
இரண்டுமே வேதத்தில் உண்டு
சாமான்ய விதி -விசேஷ விதி என்று கொள்ள வேண்டும்

பேச்சு மூலம் வந்தாலே குற்றம் இல்லை
எல்லா வார்த்தைகளும் தமக்கு உள்ள அர்த்ததைக் கொடுக்கும்
பசு மாட்டைப் பார்த்தேன்
எருமை மாட்டைப்பார்த்து சொன்னாலும் அதே அர்த்தம் -சொல்லுவன் குற்றம் தானே
இங்கு ஸர்வஞ்ஞன்-காருணிகன் -சர்வ சேஷி -குற்றம் வராதே –

உனக்கு ஒரு பிள்ளை பிறந்து உள்ளான் -கட்டளை வாக்கியம் இல்லை -ஆனாலும் கேட்டு மகிழ்கிறோமே
பாதி கிழவி பாதி குமரி சொல்வது போல் கட்டளை வாக்கியம் மட்டுமே கொள்வது
மந்த்ர சக்தியால் நெருப்பு சுடாமல் இருக்கும் -எங்கும் சுடாது சொல்ல கூடாதே
சிப்பி பார்த்து வெள்ளி -கண்ணில் கோளாறு -என்று கொள்ளக் கூடாது
ஏதோ ஒரு சமயம் பிரமம் வரலாமே
வார்த்தை பொருள் சம்பந்தம் அறிந்தால் -அத்தனை வார்த்தைகளும் அர்த்தம் கொடுக்கும்

ப்ரத்யக்ஷத்துக்கு விரோதமும் இல்லை –
நம் கண்ணுக்குத் தெரியாது
கண் இல்லாமல் பார்க்கிறான் -அவன் பார்வைக்கு இலக்கு ஆகுமே
அதுவே மங்கள ஸ்லோகத்தில் பஸ்யதே விஸ்வம் என்றார்

அர்த்த வாதம் -சில இருக்கலாம் -யூப ஸ்தம்பம் ஸூர்யன்
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -நாராயணனே பரஞ்சோதி பரமாத்மா
ஞானத்தால் அறிந்து அருளிய ஸாஸ்த்ரம்
முக்தி அடைய நல்ல வழி -ஆராதனம் செய்து உஜ்ஜீவிக்க –

மற்ற ஆகமம் -கொடுத்தவர்கள் சம்சாரிகள் -குற்றம் வருமே
இங்கு சங்கை கொள்ள வேண்டாமே
ப்ரஹ்மஹத்தியும் அஸ்வமேதம் ஒன்றாகாதே
லகு உபாயம்

வேத நிந்தனை -சாண்டில்யர் -வேதம் கற்று பலன் கிடைக்க வில்லை -இதனால் உஜ்ஜீவித்தேன்
நஹி நிந்தா நியாயம் இது –
பூமா வித்யா -சாந்தோக்யம் -பெருமை சொல்வது போல்
மஹா பாரதம் -தட்டில் வேதங்களை வைக்க இது உயர்ந்தது சொல்வது போல்
தத்வ ஞானம் சொல்வதில் வேதாந்தம் போல் இல்லை என்று பாஞ்சராத்ரமே சொல்லுகிறது
தெளியாத மறை நிலங்கள் தெளிந்தோமே போல்

உப நயனம் வைதிக சம்ஸ்காரம் -basic qualification

14 வித்யா ஸ்தானம் -ப்ரஹ்ம ஸூத்ரம் ராமாயணம் இவையும் இல்லையே

வியாசர் -2-2-39-உத்பத்தி அசம்பவாத்
ஜீவாத்மா தோன்றுவது சொல்லுவதால் அத்வைதி
நிராகாரத்துக்கு சொல்ல வில்லை
உத்பத்தி சொல்ல வில்லை
வாசுதேவன் -சங்கர்ஷணன் ஜீவன் -இதில் இருந்து -தோன்றி -ப்ரத்யும்னன் மனஸ் –
அநிருத்தினான் அஹங்காரம் தோன்றினான் சொல்லி
தத்துவத்துக்கு அதிபதி என்பதால் ஜீவ சப்தம்

விசித்ர தேக சம்பந்தி
தண்ணீரில் இருந்து ஜீவாத்மா படைத்தான் வேதம் சொல்லும் -வெளிப்படுத்தும்
சரீரம் எடுத்துக் கொள்வதையே தோன்றுவது

2-2-41-ஜீவன் இடம் -திவ்ய
அத்வைதி -நால்வரும் ஸ்வ தந்தரரா -சமமா -ஒரே ஒருவர் நான்கு வடிவா
ஏக வாஸூதேவ -லீலைக்காக பல வடிவம்
ராமன் நால்வராக
பலராமன் கண்ணன் இருவராக வந்தார்
விரோதம் இல்லை
அடுத்து வேறு விதமாக ஆளவந்தார்
இந்த அதிகரணம்
முதல் இரண்டு பூர்வ பக்ஷம்
அடுத்த இரண்டு சித்தாந்தம்
வியாசர் பதில் விஞ்ஞானாதி இரண்டும் ப்ரஹ்மத்தை குறிக்கும் ஆதி யாகவும் விஞ்ஞானமாகவும்
அவனே நான்கு வடிவமாக கொள்ளும் பொழுது விரோதம் இல்லையே
விப்ரதிஷேதாத் -நீங்கள் வைத்த எதிர்ப்பு முரண்பட்டு உள்ளது
கர்த்தா கருவி -வராதா அரிவாள் தானே பண்ணி வெட்டலாம்
விஞ்ஞானம் -அவனைப்பற்றிய ஞானம் -ஆதி அதுக்கு மூல காரணம் பாஞ்ச ராத்ரம்
நாராயணன் கொள்கைக்கு முரண்பாடு இல்லை
இன்னும் ஒரு வியாக்யானம்
ஞானத்தின் உத்பத்தி வராது
கர்த்தா இடம் வராது பூர்வ பக்ஷம்
விஞ்ஞானம் அறிவுக்கு ஆதி மூல காரணம் நாராயணனே இருக்கிறான்
மயக்க அருள வில்லை விப்ரதிஷேதாத் -கருணையே வடிவானவன்
தீய சக்திகளைத் தான் மயக்குவான்
ஏமாற்ற கொடுக்க வில்லை

பரத்வாஜர் நாரதர் போல்வார் பாஞ்ச ராத்ரம் பின் பெற்ற
பாகவதர் -சாஸ்ஸ்த்ரஞ்ஞர் -வாசி
சத்வ குணம் -சாத்விகர்
பாகவதர் -விசேஷித்து சொல்வதால் முரண்பாடு இல்லை

——–

உபபத்ய சம்பவாதி கரணம்
ஸூத்ரம் –209-உபபத்ய சம்பவாத் –2-2-39-பூர்வ பக்ஷ ஸூத்ரம்
வாஸூ தேவாத் சங்கர்ஷ்னோ நாம ஜீவோ ஜாயதே -என்று
-ந ஜாயதே ம்ரியதேவா விபச்சித -போன்ற ஸ்ருதிக்கு விரோதமான ஜீவ உத்பத்தியைச் சொல்வதால்
பாஞ்சராத்ரம் பிரமாணம் இல்லை என்பர்
நான்கு வேதங்களாலும் புருஷார்த்தம் அடையப் பெறாதவர் இதனால் பெறுகிறார் என்று
வேதங்களை அலட்சியப்படுத்திச் செல்வதாலும் பிரமாணம் இல்லை என்பர்

ஸூத்ரம் –210- ந ச கர்த்து கரணம் –2-2-40-பூர்வ பக்ஷ ஸூத்ரம்
சங்கர்ஷணாத் ப்ரத்யும்ன சம்ஞ்ஞம் மநஸ் உத்பத்தே என்று
மனஸ்ஸுக்கு ஸங்கர்ஷணன் என்ற பெயர் கொண்ட கர்த்தா வாகிய
ஜீவனிடம் உத்பத்தி கூறுவது ஸ்ருதிக்கு விருத்தமாகையாலும் பாஞ்ச ராத்ரம் அப்ரமாணம்
கர்த்து கரணம் நச -கர்த்தாவான ஜீவன் இடத்திலிருந்து மனஸ் ஸர்வேந்திராணி ச என்று
மனஸ் ப்ரஹ்மத்தினிடம் இருந்து தோன்றுவதாகவே ஸ்ருதி சொல்வதால்

இந்த இரண்டு பூர்வ பக்ஷ ஸூத்ரங்களுக்கு அடுத்த இரண்டும் ஸித்தாந்த ஸூத்ரங்கள் –

ஸூத்ரம் –211-விஞ்ஞானாதி பாவே வா தத் அப்ரதிஷேத –2-41-

வா ஸப்தம் பூர்வ பஷத்தை விலக்கிக் காட்டுகிறது
விஞ்ஞானஞ்ச தத் ஆதிச விஞ்ஞானாதி -என்று விக்ரஹம்
அதனால் விஞ்ஞானாதி என்பது -ஞானமே ஸ்வரூபமாய்க் கொண்ட ஜகத் காரணமான பரமாத்வைச் சுட்டுகிறது
அதன் பாவம் -விஞ்ஞானாதி பாவம் -அவனது அவதார ரூபமாய் இருத்தலாம்
ஆகவே ப்ரத்யும்ன அநிருத்த ஸங்கர்ஷணாதிகள்
விஞ்ஞான ஸ்வரூபமாய்
ஜகத்தின் ஏக காரணமான பரப்ரஹ்மத்தின் அவதார ரூபமே என்பது ஸித்தம் –

அதைத் தடுக்க வில்லை -அந்த விஷயத்துக்கு ப்ராமாண்யத்தைத் தடுக்கவில்லை
முழு பாஞ்ச ராத்ர ஸாஸ்த்ரமும் பிராமண தமம் என்பதாகிறது
அஜயமானோ பஹுதா விஜாயதே -என்று ஸூவ இச்சையாலேயே அவதாரங்கள் தான்
வாஸூதேவாத் ஸங்கர்ஷனோ நாம ஜீவோ ஜாயதே -சங்கர்ஷணாத் ப்ரத்யும்ன ஸம்ஜ்ஞம் மனோ ஜாயதே
இத்யாதிகளால் சொல்லப்படுகிறது -ஜீவனின் உத்பாதிகளைப் பற்றிச் சொல்லவில்லை

இங்கு ஜீவாதி சப்தங்கள் விசேஷ்யங்களாயும்
ஸங்கர்ஷணாதி சப்தங்கள் விசேஷணங்களாயும் இருக்கும் என்கின்றனர் பூர்வ பக்ஷிகள்
ஸித்தாந்தத்தில் ஜீவனின் அதிஷ்டாவாதான ஸங்கர்ஷணன் என்றும் பொருள்
ஸங்கர்ஷணாதி பதங்கள் விசேஷ்யங்கள் -ஜீவாதி பதங்கள் விசேஷணங்கள் என்று கருத்து
நான்கு வேதங்களாலும் புருஷார்த்தங்கள் கிட்ட வில்லை என்பது
உதயத்துக்கு முன் ஹோமம் செய்பவர் பொய் பேசுபவராம் என்ற வேத வாக்கியம் -உதயத்துக்கு பின் அக்னி ஹோத்ரம்
செய்வதை போற்ற வந்த அர்த்த வாதம் என்பது போல் பாஞ்ச ராத்ரம் சிறந்தது என்பதைக் காட்டவே –
அதாவது
வேதாந்தத்தில் கூறப்பட்ட பரமபுருஷனின் உபாசனத்தையும் அவனை அர்ச்சிப்பதையும்
பாஞ்ச ராத்ரம் விளக்குவதால் அது முழுவதுமே பிரமாணம் என்பது சித்தம் –

ஸூத்ரம் –212–விப்ரதிஷேதாச் ச –42-
இந்த பாஞ்சராத்ரத்திலும் ஜீவனின் உத்பத்தியை விசேஷமாக நிஷேதித்து இருப்பதால்
இது வேதத்துக்கு முரண் அற்றது

அசேதநா பரார்த்த ச நித்யா சதத விக்ரியா
த்ரி குணா கர்மிணாம் க்ஷேத்ரம் ப்ரக்ருதே ரூப முச்யதே
வ்யாப்தி ரூபேண ஸம்பந்த தஸ் யாச்ச புருஷஸ் யச
ஸஹ்ய நாதி ரநத் தச்ச பரமார்த்தே நிச்சித -என்று

பாஞ்ச ராத்ரத்திலே ஜீவனுக்கு உத்பத்தி நிஷேதிக்கப்பட்டது
ஆகையால் ஸ்ருதியுடன் சிறிதும் முரண்பாடு இல்லை

கீழே பூர்வ பக்ஷிகள் கூறிய முக்தி பிரகாரத்தை விளக்க அதிகரண ஸாரா வளியில் ஸ்வாமி தேசிகன்
ஸ்வா தந்தர்யம் ப்ரஹ்மண ஐக்யம்– –கல்பதாம் ஜல்பதாம் வ-என்ற ஸ்லோகத்தின் கருத்து
ஸ்வா தந்தர்யம் பசுபதி ஸமத்வம் -இவ்விரண்டும் பாசுபத பேதங்கள் -இவை முக்தியில் பிரகாரங்கள்
ப்ரஹ்மத்துடன் ஐக்யமும் அவித்யா நிவ்ருத்தியும் அத்வைதிகள் கூறும் முக்தி பிரகாரங்கள்
புத்தமத ஒரு சாரார் விஷய வாசனை தொலைவதே அது என்பர்
பிரபாகரர் -மித்யா ஞான சந்ததியின் அழிவே அது என்பர்
நையாயிகரில் சிலர் தன் புத்தி சுகங்களை நித்யம் நெருக்கமான நிலையே முக்தி என்பர்

பாட்ட மீமாம்சகர் சித்தத்தால் தன் ஆத்ம ஸுகத்தை அனுபவிப்பதே முக்தி என்பர்
காணாதர்கள் -கல் -பாஷாணம் -போன்றதே முக்தி என்பர்
ஜைனர்களோ நித்யம் மேல் நோக்கிப் பயணம் அனைத்து மக்களின் மத்தகத்தின் கூடிய சரீர பிரவேசம் முக்தி என்பர்
சூன்ய அத்வைதமே முக்தி என்பது
கேவல ஆத்ம அனுபவமே முக்தி என்பர் சாங்க்யர்
உபாதை நிவ்ருத்தியே முக்தி -யாதவ பாஸ்கர மதஸ்தர்
தேக விச்சேதம் ஆயிரம் யுவதிகளை அனுபவிப்பதே முக்தி என்பர் சாருவாகர்
இப்படி விபரீத உக்திகளைக் கூறும் உங்களை சுருதி உபகரிக்கட்டும் என்று இகழ்ச்சியாக சொல்லும் ஸ்லோகம்
கீழ் சொன்ன யுக்திகள் எல்லாமே ஸ்ருதி ஸ்ம்ருதி அனுமானம் அனைத்துக்குமே விருத்தமானவை என்று கருத்து

—————-

விக்ரஹ பூஜையால் ஜீவனம் நடத்தக் கூடாதே இன்னும் ஒரு வாதம்
பிரார்த்தனைக்காகவே பூஜிக்கிறார்கள்
அர்ச்சகர் -சம்பாவனை -பூஜை நிறைவு பெறவே வாங்கிக் கொள்கிறார் –
ஹோதாவுக்கு தக்ஷிணை கொடுத்தால் தான் யாகம் நிறைவு பெரும்

உடுத்துக் களைந்த -பிரசாதம் கொள்ளக் கூடாது
என்றால் நீங்களே ஒத்துக் கொண்டீர்கள்
தேவதைகள் குடி இருப்பதை ஒத்துக்கொண்டே இந்த வாதம்
ஆவாஹனம் சத்யம்
நிர்மால்யம்-அவசியம் பிரசாதம் கொள்ள வேண்டும்
அடியார்கள்
மூர்க்கர்களுக்குக் கொடுக்கக் கூடாது
பாவனங்களுக்கு பாவானத்வம் கொடுக்கும் பிரசாதம்
தேவதாந்த்ர நிர்மால்யம் தான் தவிர்க்க வேண்டும்
பிராண அக்னி ஹோத்தரம் போல் விஷ்ணு பிரசாதம் –

ஸ்ரீ நாதமுனிக்கு இது ஆனந்தம் கொடுக்கும் என்றும்
அவர் அருளாலே இந்த கத்ய பத்யம் வந்தது என்றும் அருளிச் செய்து நிகமிக்கிறார் –

————–

வைகானஸ ஆகம பிரமாணம்

ஸ்ரீமத்யாயதநே விஷ்ணோஃ சிச்யே நரவராத்மஜஃ
வாக்யதஃ ஸஹ வைதேஹ்யா பூத்வா நியதமாநஸஃ என,
மேலும் வேதத்தில் கூறப்பட்ட யாக மார்கத்தை ஆச்வலாயன ரிஷி முதலானவர்கள் ச்ரௌத ஸூத்ரமாக உபதேசித்தது போல்
வேதத்தில் கூறப்பட்ட தேவபிம்பபூஜையை ஸ்ரீவைகாநஸபகவத்சாஸ்த்ரப்ரவர்தகரான ஸ்ரீவிகனஸ மஹர்ஷியு்ம்
அவருடய சிஷ்யர்களான ப்ருகு, அத்ரி, கச்யப, மரீசி மஹரிஷிகள் உபதேசித்தபடியால் இதுவும் ப்ரமாணமாகும்,
மேலும் ஆச்வலாயனரிஷி முதலானவர்கள் அமூர்தமான பூஜாநடைமுறையை மட்டும் ச்ரௌத ஸூத்ரங்களால் விளக்கினார்கள்,

ஸ்ரீவிகநஸ மஹரிஷியோவெனில் ச்ரௌதத்துடன் நிற்காமல் தர்ம க்ருஹ்ய ஸூத்ரங்களையும் உபதேசித்து
மற்றவர்களால் விடப்பட்ட ஸர்வலோகத்துக்கும் க்ஷேமத்தை பண்ணுகிற மூர்தியுடன் கூடிய பகவதாராதநத்தையும்
உபதேசித்து லோகத்ததுக்கு மஹோபகாரத்தை செய்தவராவார், ஆதலால் பிம்பத்தை பூஜிப்பது வேதத்தில் கூறப்பட்டதால் ப்ராமாணிகமாகும்.

ஆயினும் சிலரின் ஆக்ஷேபம் வருமறு,
ப்ரஹ்ம ஸூத்ரத்தில் ஸ்ரீவ்யாசமஹரிஷி பாஞ்சராத்ராகமம் ப்ரமாணம் என ஸ்தாபித்தார்,
ஸ்ரீவைகானஸத்தை குறிப்பிடவில்லை, அதுவும் ப்ரமாணமாகில் குறிப்பட்டிருப்பார்,
இது போல் ஸ்ரீயாமுனாசார்யரும் ஸ்ரீபாஞ்சராத்ராகமம் ப்ரமாணமென ஆகமப்ராமாண்யம் என்ற கரந்தத்தால் ஸாதித்தார்,
அவரும் ஸ்ரீவைகானஸத்தை குறிப்பிவில்லை ப்ரமாணமாகில் அதை உபேக்ஷிக்க காரணமென் என.

இதின் வாஸ்தவமான ஸமாதானம்,பாஞ்சராத்ராகமம் ப்ரமாணமில்லை என கூறுவதில் அநேக காரணஙகள் இருந்தன ,
அவையாவன,
நிர்மூலம்,
அஸத்பரிக்ரஹம்,
அவைதிக ஸம்ஸ்கார விதானம் . வித்யா ஸ்தானத்தில் உள் படுத்தாது ,
வைதிகஸம்ஸ்காரத்தை விட்டது, என,

ஆதலால் மந்தபுத்தியை உடையவர்கள் அதை ப்ரமாணமில்லை என கூற அவைகளுக்கு ஸமாதானம் கூறி
அதை ப்ரமாணம் என ஸாதிக்க வேண்டியிருந்தது,
அதுபோல் ஸ்ரீவைகைநஸம் ப்ரமாணமில்லை என ஆக்ஷேபம் இல்லாததால் ஸமாதானம் கூற ஆவச்யகமி்ல்லை ,
ஆதலால் அவர் அதை குறிப்பிடவில்லை,

ஆயினும் ஸ்ரீயாமுனமுனியானவர் ஸ்ரீபாஞ்சராத்ராகமத்துக்கு ப்ராமாண்யம் கூறியது போல்
ஸ்ரீவைகாநஸத்துக்கு ப்ராமாண்யம் கூறாததால் இது ப்ரமாணமில்லை என கூறுவர் என்று நினைத்தே
ஸ்வாமி தேசிகன் ந்யாய பரிசுத்தி எனும் நூலில் ஸ்ரீவைகாநஸ சாஸ்த்ரத்தை குறித்து
1,வேதாவிருத்தத்வாத்,
2.வைதிகமந்த்ரைரேவ ஸகலகர்மவிதாநாத்,
3,ஸூத்ராந்தராணாமபி குண்டஸம்நிவேசலகேஷணாதிஷு க்வசித் க்வசித் ததுபஜீவநாத்,
4.வர்ணாச்ரமதர்மாணாமனுகூலம் நாராயாணபரத்வப்ரதிபாதநாதேரபி
5.ஸத்வமூலத்வேன
6..ப்ராமாண்யைகஹேதுத்வாத்.
இந்த பகவத் சாஸ்த்ரம் வேத விருத்தமல்லாததால், வைதிக மந்த்ரங்களாலேயே எல்லா கர்மாக்களையும் அனுஷ்டிப்பதால் ,
மற்ற ஸூத்ரங்களிலும்,குண்டங்களை நிர்மாணம் செய்வதில் சிலவிடங்களில் ஸ்ரீவைகாநஸத்தை அனுஸரிப்பதால்,
வர்ணாச்ரம தர்மங்களுக்கனுகுணமாக நாராயணனே பரதேவதை என உரைப்பதால்
ஸத்வமூலமுமானபடியால் ப்ரமாணமென்பதில் மாத்ரம் இது காரணமானபடியால் இது ப்ரமாணமாகும் என,

மேலும் ஸ்ரீவைகாநஸானுஸாரிகளை குறித்து
த்ருச்யந்தே ஹி ஏதே வம்சபரம்பரயா வேதமதீயாநாஃ , வைகாநஸஸூத்ரோக்தவைதிகஸகலஸம்ஸ்காரசாலிநஃ,,
வர்ணாச்ரமதர்மகர்மடாஃ , பகவதேகாந்தா, ப்ராஹ்மணாஃ..
ஸ்ரீவைகாநஸர்கள் வம்ச பரம்பரயாய் வேதாத்யயனம் செய்தவர்களாய், வைகாந ஸஸூத்ரத்தில் கூறியபடி
எல்லா வைதிக ஸமஸ்காரங்களை உடையவர்களாய் வர்ணாச்ரம தர்ம கர்மாக்களை அனுஷ்டிப்பவர்களாய்
பகவானிடத்தில் மாத்ரம் பக்தியை உடைய ப்ராஹ்மணர்களாக காணப்படுகிறார்களல்லவா என ஸாதிக்கிறார்,

ஸ்ரீபாஷயகாரருக்கு பின்பு ஸ்ரீவைகாநஸம் ப்ரமாணமில்லை என எழுந்த ஆக்ஷேபத்தை பரிஹரித்து
ஸ்ரீவைகானஸாகமத்தை ஸம்ரக்ஷித்தவர் ஸ்வாமி தேசிகனானபடியாலேயே
ஸ்ரீவைகாநஸபகவத்சாஸ்த்ரானுயாயிகளான ஸ்ரீவைகாநஸ பட்டாசார்யர்கள் அனைவரும்,
க்ருதக்நே நிஷ்க்ருதிர் நாஸ்தி என சாஸ்த்ரம் கூறியபடி ஸ்வாமி தேசிகனின் அவதாலஸ்தலமான ஸ்
ரீதூப்புலில் கைங்கர்யம் செய்துவரும் பட்டாசார்யர்களைப்போல்,
ஸ்வாமி தேசிகனிடத்தில் பக்தி ச்ரத்தையுடன் க்ருதஞதையுடன் இருக்க ப்ராப்தம் என்பதாகிறது.

ஸ்ரீவைகாநஸாகமமானது சதுர்தச வித்யாஸ்தானத்தி்ல் ஒன்றான தர்ம சாஸ்த்ரத்தி்ல் சேர்ந்ததாகும்,
ஸ்வாமி தேசிகன் ந்யாய பரிசுத்தியில் மன்வத்ரிபார்கவாதிவத், மனு, அத்ரி, ப்ருகு முதலானவைகள் கூறியதும்
தர்மசாஸ்த்ரமாகும் என ஸாதித்தார்,
ஸ்ரீமத்பாகவதத்தில் வைதிகஸ்தாந்த்ரிகோ மிச்ர இதி மே த்ரிவிதோ மகஃ என்பதால்
ஸ்ரீவைகாநஸபகவத்சாஸ்த்ரத்தில் கூறியபடி செய்யும் ஆராதனமே வைதிகமாகும்–
பாஞ்சராத்ரோக்தாராதனம் தாந்த்ரிகமாகும்,மற்றது மிச்ரமாகும்,
மூர்தயஜனம் ஆமூர்தயஜனம் என்று இரண்டுவிதமான பகவதாராதனத்தில் ஸமூர்தமான ஆராதனத்தை குறிப்பிடும்

வைகாநஸாகமத்தில் அமூர்தமான யாகத்தில் உள்ள ஸாம்யம் வருமாறு,
எல்லா வைதிககர்மாக்களுக்கும் மூலம் அக்ந்யாதாநமாகும், அதாவது,ஓரிடத்தி்ல் அக்னியை ப்ரதிஷ்டை செய்வது,
1,அக்ந்யாயதனங்களில் ஹிரண்யத்தை வைக்க வேணும், அது போல் பிம்பத்தி்ன் பீடத்தில் ரத்னாதிகளை வைக்கிறார்கள்,,
2,யாகத்தில் அக்னி, கார்ஹபத்யம், ஆஹவனீயம், அன்வாஹார்யம்,ஸப்யம், ஆவஸத்யம் என ஐந்து விதமாகும்,
ஆகமத்தில் த்ருவபேரம், கௌதுகபேரம், உத்ஸவபேரம்,ஸ்நபநபேரம், பலிபேரமென ஐந்து வகை உள்ளது,
3.ச்ரௌதத்தில் கார்ஹபத்யத்தில் நின்றும் ஆஹவநீயத்தை எடுப்பதுபோல்
த்ருவ பேரத்தில் நின்றும் மற்ற பேரங்களில் ஆவாஹனம் செய்யப்பட்டு ஆராதநம் செய்யப்படுகிறது,
4, ச்ரௌதத்தில் சில இடங்களில் த்ரேதாக்னி ப்ரஸித்தம்,
அதுபோல் ஆலயத்திலும் சிலவிடங்களில் மூன்று பேரத்தை மாத்ரம் ஸேவிக்கலாம்,
5.ச்ரௌதத்ததில் நித்யாக்நிஹோத்ரம் போல் ஆலயத்தில் நித்யாராதனமாகும்,
தர்சபூர்ணமாஸ இஷ்டிபோல் ஸ்நபநம் , பஞ்சபர்வோத்ஸவங்கள்,
6.நித்யாக்நிஹோத்ரமும் நித்யாராதனமும் வைதீக மந்த்ரத்தால் நடைபெறுகிறதுகள், மேலும் மற்றுமுள்ள ஸாம்யம்
7.அமூர்தயாகத்தின் துல்யமான பலனும் வைதீக மந்த்ரவத்தான விக்ரஹாராதனத்தால் கிடைக்கும்,

மரீசிமஹரிஷி ஸாதிப்பது-
க்ருஹே தேவாயதனேவா பக்த்யா நாராயணமர்சயேத்,

கச்யபர் ஸாதிப்பது,
தஸ்மாதலயே நித்யம் விதிநா விஷ்ணோரர்சனம், அநாஹிதாக்நீநாமக்நிஹோத்ரஸமம்
யஸ்மாதேதச்சாக்நிஹோத்ரபலம் ததாதி,

ஆனபடியால் ஆலயத்தில் நித்யம் விதியுடன் கூடிய பகவதாராதனம் என்பது
ஆஹிதாக்னியல்லாதவர்களுக்கு அக்னி ஹோத்ர ஸமமாகும், காரணம் கூறுகிறார்
ஆராதனமானது அக்நி ஹோத்ரபலத்தை கொடுக்கும் என,

காம்ய பலத்தை விரும்பும் ஆஹிதாக்னியல்லாதவர்கள் பல ஸாதனநமான கர்மாக்களை ஆஹிதாக்னியான தீக்ஷிதன்
மூலமாக செய்வித்து அதின் பயனை அடைவதுபோல்,
உதாஹரணமாக
மழையை வேண்டி காரீரி இஷ்டி செய்வதால் நடத்தியவர்களுக்கும் பயனை காண்கிறோம்
அது போல் ஆலயத்தில் எம்பெருமானுக்கு ஆராதனம் செய்ய தகுதியற்ற மற்றவர்கள்
ஸ்ரீவைகாநஸ அர்சகர்கள் மூலமாக ஆராதனம் மற்றும் உத்ஸவாதிகளை நடத்தி ஆராதனாதிகளை செய்வதின் பயனால்
அவரவர்களின் விருப்பத்தை பெறுகிறார்கள்.

ஸ்ரீவைஷ்ணவர்கள் வேத ப்ரதிபாதிதமான யாகத்ததை செய்வதில்லை,
யாகனுஷ்டான பரம்மபரை மிகவும் குறைவு என சிலர் குறை கூறுகிறார்கள்.
ஸ்ரீபாஷ்யகாரரின் பிதா கேசவஸோமயாஜீ , ஆயினும் ஸ்ரீபாஷ்யகாரர் ஸம்ஸாரத்தில் விரக்ராய்
ஸந்யாஸம் ஸ்வீகரித்தபடியால் யாகானுஷ்டானத்தில் அவகாசமில்லை,

ஸ்வாமி தேசிகன் காலத்தில், தற்சமயம் பாரத தேசத்துக்கு சீனா ,பாகிஸ்தான் முதலிய அண்டை நாடுகளின் உபத்ரவம் போல்
ஸம்ப்தாயத்துக்கு அத்வைதிகளாலும் ஏகதேசிகளாலும் அபாயம் ஏற்பட
அதை ஸம்ரக்ஷிக்கவேண்டிய நிர்பந்தம் .வாதம் செய்வதும் பரமத நிரஸநார்தமாக க்ரந்தம் அனுக்ரஹிக்க வேண்டிவந்ததாலும்
பரமத நிரஸந பூர்வகமாக ஆலயங்களில் யாக ரூபமான திருவாராதனத்தை நடத்தி வைத்த படியால்,
பிதாமஹன் புண்டரீகாக்ஷயஜ்வாவானபடியாலும் யாகம் செய்யாவிடினும் தோஷமில்லை என்பதாலும்
யாகானுஷ்டானம் செய்ததாக ப்ரமாணம் காணவில்லை எனலாம்,
ஆயினும் சிலர் ஸ்வாமி யாகமனுஷ்டித்ததாக கூறுகிறார்கள்.
சிலர் ஸ்ரீதேசிகனுக்குப்போல் விரக்தியில்லாதபோதும் யாகம் செய்யாததில் தேசிகனே யாகம் செய்யவில்லை என்பார்கள்.

வைகாநஸர்கள், வைஷ்ணவர்களே அல்ல,
பஞ்சஸம்ஸ்காரத்தில் சேர்ந்த தப்த சங்க சக்ர தாரணத்தை- ஸமாச்ரயணம் செய்தவர்களே வைஷ்ணவர்கள்,
வைகாநஸர்களுக்கு தப்தசங்கசக்ரதாரணரூபமான கர்மா கிடையாதே என கேள்விக்கு
ஸ்வாமிதேசிகன் சரணாகதி தீபிகையில் ஸாதிக்கும் ஸமாதானம்,
த்வாம் பாஞ்சராத்ரகநயேந ப்ருதக்விதேந வைகாநஸேந ச பதா நியதாதிகாராஃ ஸம்ஞாவிசேஷநியமேந
ஸமர்சயந்தஃப்ரீத்யா நயந்தி பலவந்தி திநாநி தந்யாஃ ப்ருதக்விதேந,
நியத என்கிற பதப்ரயோகத்தால் தப்தசங்கசக்ரதாரணம் இல்லாமலே வைகாநஸர்களுக்கு
பகவதாராதனத்தில் அதிகாரம் உள்ளது என்பதை குறிப்பிட்டதாகும்,
நியதாதிகாரமென்பது அவரவர்களின் சாஸ்த்ரத்தில் கூறிய ப்ரகாரம் அதிகாரமுள்ளவர்கள்,
ஆகையால் அவர்களுக்கு பகவாதாராதனம் செய்ய யோக்யதையை பெற தீக்ஷை இல்லை.
தீக்ஷை யில்லாததே பாஞ்சராத்ரத்தை விட வேறுபட்டதாகும்,
தீக்ஷைஷயிலேயே பஞ்சஸம்ஸ்காரமும் சேருவதால் தீக்ஷையில்லாதவர்களுக்கு பஞ்சஸம்ஸ்காரமும் தேவையில்லை என்பதாம்.

அவர்களின் சாஸ்த்ரத்தில்
கர்பே மாஸி அஷ்டமே விஷ்ணுபலிம் குர்யாத்யதாவிதி
தஸ்மின் திநே ப்ரவிஷ்டோஹம் கர்பே தஸ்யாஃ சிசும் ப்ரதி,
மத்கரேஷுஸ்திதம் சக்ரம் சங்கம் சைவ ததைவ ச
மத்கரேணைவ குர்வந்தி கர்பே தஸ்யாஃ சிசோர்புஜே.
வைகாநஸாதிசாஸ்த்ரேண ஸய்தயம் கர்பவைஷ்ணவஃ
கர்பத்தின் எட்டாவது மாதத்தில் விஷ்ணு பலி என்கிற கர்மாவை அனுஷ்டிப்பதால் அந்த தினத்தில்
நான் கர்பத்தில் ப்ரவேசிப்பதால், என்கையிலுள்ள சங்க சக்ரத்தாலேயே சங்கசக்ரதாரணத்தை செய்கிறார்கள் என்பதால்
அவர்களுக்கு தப்தசங்கசக்ரதாரணம் தேவையில்லை, இதனால் சில ஆலயங்களில் தப்த சங்க சக்ர தாரணம்
செய்த வைகாநஸர்களே ஆராதனம் செய்யவேணுமென்பது அவர்களின் சாஸ்தரத்துக்கு விருத்தமாம்.

வைகாநஸரிஷி முதலாக இதுநாள் வரையில் அவர்களின் வம்சத்தில் ஜனித்தவர்களான வைஷ்ணவர்களே
ஆலயத்தில் வைகாநஸாகமப்ரகாரம் ஆராதனம் செய்யத்தகுந்தவர்கள்,
போதாயன ஸூத்ரகாரர்கள் ஆபஸ்தம்பஸூத்ரப்ரகாரம் வைதீககர்மாவை அனுஷ்டிக்க முடியாதது போல்
வைகாநஸரல்லாதவர்கள் வைகாநஸமுறைப்படி வைகாமஸஸூத்ரப்ரகாரம் ஆராதநம் செய்ய அதிகாரிகளல்ல.

ஸ்ரீவைகாநஸ ஆகமப்ரகாரம் திருவாராதனம் நடைபெறுவதில் திருவேங்கடமாகிற திவ்யதேசம் ப்ரதானமாகும்,
பிற்காலத்தில் ஸ்ரீவைகாநஸத்தை ப்ரமாணமாக்கி ஸம்ரக்ஷித்தபடியாலேயே ஸ்வாமி தேசிகனின் அவதாரஸ்தலமான ஸ்ரீதூப்புலிலும்,
மற்றும் ஸ்வாமி உகந்தருளின திருவஹீந்திரபுரம், திருவிண்ணகர் முதலிய திவ்யதேசங்களிலும்
ஸ்வாமிக்கு ஸ்ரீவைகாநஸபகவத்சாஸ்த்ரோக்தப்ரகாரம் நித்யபடி திருவாராதனம் மற்றும் உத்ஸவாதிகளும் நடைபெறுகிறது எனலாம்.

வைகாநஸாகமத்தில் அமூர்தமான யாகத்தின் ஸாம்யம் உள்ளதுபோல்
திருமலைக்கும் ஸ்வாமிதேசிகனின் அவதார ஸ்தலத்துக்கும் பல ஸாம்யங்கள் உள்ளன,
1.திருமங்கையாழ்வார் ,பொன்னை மாமனியை –வேங்கடத்து உச்சியில்–காணும் தண்காவிலே என மங்களாசாஸநம் செய்கிறார்,
இதனால் இங்கு ஸ்வாமிதேசிகனின் அவதாரம் ஸூசிதம்,
2..இருவருக்கும் ஸ்ரீவேங்கடேசன் என திருநாமம்
3.இரண்டு ஸ்தலத்திலும் வைகாநஸ பகவத் சாஸ்த்ரோக்தப்ரகாரம் திருவாரதனம் நடைபெறுகிறது,
4.இரண்டு இடத்திலும் ஒரே காலத்தில் வார்ஷீக உத்ஸவம் நடைபெறுகிறது,
5.இரண்டு ஸ்தலத்திலும் திருவாராதனத்துக்கு த்ரவ்யம் அடியார்களால் ஸமர்ப்பிக்கப்படுகிறது,
ஸம்யகாசாரயுக்தாம் என ஸ்வாமிதேசிகனால் கொண்டாடப்பட்ட திருமலையில் திருவாராதனத்தில் வைகல்யில்லாததால்
ஸம்வத்ஸரப்ராயச்சித்தரூபமான பவித்ரரோத்ஸவம் ஸமீபகாலம் வரையில் நடைபெறவில்லை.,
6.இரண்டு ஸ்தலத்திலும் திருமலை நம்பி வம்சத்தை சேர்ந்தவர்கள் திருவாராதனத்தில் ப்ரதானமான பாராயணத்தையும்
மந்த்ர புஷ்ப கைங்கர்யத்தையும் செய்து வருகிறார்கள்,

காம்ய பலத்தை விரும்பும் ஆஹிதாக்னியல்லாதவர்கள் பலஸாதனநமான கர்மாக்களை ஆஹிதாக்னியான தீக்ஷிதன்
மூலமாக செய்வித்து அதின் பயனை அடைவது போல் ஆலயத்தில் எம்பெருமானுக்கு ஆராதனம் செய்ய தகுதியற்ற மற்றவர்கள்
ஸ்ரீவைகாநஸஅர்சகர்கள் மூலமாக ஆராதனம் மற்றும் உத்ஸவாதிகளை நடத்தி ஆராதனாதிகளை செய்வதின் பயனாக
அவரவர்களின் விருப்பத்தை பெறுகிறார்கள் என்பதாக பகவத் சாஸ்த்ரம் கூறுகிறபடியால்
இந்த திருத்தண்கா திவ்யதேசத்தில் நடைபெறும் நித்ய திருவாராதன
கைங்கர்யத்தில் இதுவரை அன்வயிக்காதவர்கள் ஸ்ரீதேசிகனடியார்கள் யதாசக்தி அன்வயித்தாலும்
எம்பெருமான் மற்றும் ஆசார்ய ச்ரேஷ்டரின் அனுக்ரஹத்தால் அவரவர்களின் இஷ்டங்களை பெறலாம் என்பது திண்ணம்,

————–

நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம:
நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம:

——–

ஸ்ரீ ஆளவந்தார் வாழித்திருநாமம் :

மச்சணியும் மதிளரங்கம் வாழ்வித்தான் வாழியே
மறைநான்கும் ஓருருவில் மகிழ்ந்து கற்றான் வாழியே
பச்சையிட்ட ராமர்பதம் பகருமவன் வாழியே
பாடியத்தோன் ஈடேறப் பார்வை செய்தோன் வாழி
கச்சிநகர் மாயன் இருகழல் பணிந்தோன் வாழியே
கடக உத்தராடத்துக்குக் காலுதித்தான் வாழியே
அச்சமர மனமகிழ்ச்சி அணைந்திட்டான் வாழியே
ஆளவந்தார் தாளிணைகள் அனவரதம் வாழியே!

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பாஞ்சராத்ர-ஸ்ரீ வைகாநஸ ஆகமங்களும் வேறுபாடுகளும்–

August 28, 2021

ஸ்ரீ வைகானஸ ஆகமம் என்பது ஸ்ரீ பகவச் சாஸ்திரமாகும்.
ஸ்ரீ விகநஸ முநிவரால் சொல்லப்பட்டதால் ஸ்ரீ வைகானஸ சூத்திரம் என்று அழைக்கப்படுகின்றது.
ஸ்ரீ விகனஸரின் ஸம்பந்தமுற்றோர் ஸ்ரீ வைகானஸர் என்று அழைக்கப்படுவர்.
இவர் ஸ்ரீ மஹா விஷ்ணுவின் மாநஸ புத்திரர். இவருக்கு ஸ்ரீ மஹாவிஷ்ணு ஸ்ரீவைகானஸ சாஸ்திரத்தை உபதேசித்தார்.

ஸ்ரீ வைகானசர்கள் பிற்புரிமையால் வரும் சமூகத்தைச் சேர்ந்துள்ளனர். யாவரும் அந்தணர்கள்.
இவர்கள் ஸ்ரீவைஷ்ணவ குரு பரம்பரையில் சம்பந்தப்படாதவர்கள்.
அவர்கள் இராமாநுஜரையோ, நம்மாழ்வாரையோ தம் குல குருவாக ஏற்றுக்கொள்ளவில்லை.
அதனால் திவ்யப் பிரபந்தங்களை அவர்கள் அத்யயனம் செய்வதில்லை.
ஸ்ரீவைஷ்ணவ ஆச்சார்யர்களின் தனியன்களை அநுஸந்திப்பதும் இல்லை.
பஞ்ச ஸம்ஸ்காரம் எனும் வைஷ்ணவ தீiக்ஷயை இவர்கள் பெறுவதில்லை.
அத்தகைய தீiக்ஷயை இவர்கள் கர்ப்ப வாசத்தின்போதே மந்திர ஸம்ஸ்காரத்தால் பெற்றுவிடுகிறார்கள்.

இவர்கள் கொள்கை லக்ஷ;மி விசிஷ்டாத்வைதம் என்று குறிப்பிடப்படுகிறது.
இராமாநுஜ ஸம்ப்ரதாயக் கோட்பாடுகளைக் கொண்டாடுகிறார்கள்.
ஆனால் பிராட்டியை ஈச்வர கோடியில் சேர்க்கிறார்கள்.
கைவல்யமும் மோக்ஷமே என்று கருதுகின்றனர்.

ஸ்ரீ பாஞ்ச ராத்ரம் என்றால் ஐந்து இரவுகள் என்று பொருள்.
ஸத்ர யாகம் ஒன்றில் ஐந்து இரவுகளில் எம்பெருமானை வழிபடும் விதம் உபதேசிக்கப்பட்டதால்
இப்பெயர் ஏற்பட்டதாக சதபத ப்ராஹ்மணத்தில் கூறப்பட்டுள்ளது.
இராத்திரியின் குணங்களான மஹாபூதம், தன்மாத்திரை, அஹங்காரம், புத்தி, அவ்யக்தம் என்ற
ஐந்தின் காரணமாக இப்பெயர் ஏற்பட்டதாக பரம ஸம்ஹிதையில் கூறப்பட்டுள்ளது.
சாங்கியம், பௌத்தம், ஆர்ஹதம், காபாலம், பாசுபதம் ஆகிய பஞ்ச சாஸ்திரங்களும் இருளடைந்து போகும்படி செய்ததால்
பாஞ்சராத்ரம் என்று பெயர் வந்ததாக பாத்ம தந்திரம் என்னும் நூல் கூறுகிறது.
ப்ரஹ்மம், முக்தி, போகம், யோகம், ப்ரபஞ்சம் என்ற ஐந்தை அடையும் வழிகளைக் கூறுவதால்
இப்பெயர் ஏற்பட்டது என்றும் கூறுவர்.
ஆனால் பரம்பொருளின் ஐந்து நிலைகளான பர, வ்யூக, விபவ, அந்தர்யாமி, அர்ச்சை எனும்
நிலைகளைப் பற்றிக் கூறுவதால் இப்பெயர் ஏற்பட்டது என்றும் கூறுவர்.
அதிலும் வ்யூஹத்தின் நிலையை விளக்குவன பாஞ்சராத்ர ஆகமங்கள் என அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிச் செய்துள்ளார்.

ஸ்ரீ பாஞ்சராத்ர ஸம் ஹிதைகள் :-
பாஞ்சராத்ர ஸம்ஹிதை சில்ப சாஸ்த்ரம், வாஸ்த்து சாஸ்த்ரம், பல்வேறு தெய்வங்களின் உருவ வர்ணனை,
அவர்களின் ஆயுதங்கள், பிம்பங்களின் அளவுகள், ஆராதனை முறை, அண்டங்களின் சிருஷ்டி க்ரமம்,
யோகம் அதாவது கடவுளை நெருங்குவதற்கான வழிகளை விவரித்தல் ஆகியவை அடங்கியது.
இவையனைத்தும்
ஜ்ஞானம் (ச்ருஷ்டி முதலியன),
யோகம் (கடவுளை அடையும் வழி),
கிரியா (ஆலய – பிம்ப நிர்மாணங்கள்),
சரியா (பூஜை செய்யும் முறை) என்ற நான்கு தலைப்புகளில் அடங்கும்.

ஸ்ரீ பாஞ்சராத்ர ஸம் ஹிதைகள் 108 என்று பொதுவாகக் கருதப்பட்டாலும், அனைத்தும் முழுமையாகக் கிடைக்கவில்லை.
ஸாத்வதம், பௌஷ்கரம், ஜயாக்யம் என்று மூன்று ஸம்ஹிதைகளும் பகவானால் சொல்லப் பட்டதால் ரத்ன த்ரயம் என்றும்,
மூல ஸம்ஹிதைகள் என்றும் சொல்லப்படுகிறது.
பௌஷ்கரத்தின் விரிவை பாரமேச்வர ஸம்ஹிதையும்,
ஸாத்வத்தின் விரிவை ஈச்வர ஸம்ஹிதையும்,
ஜயாக்யத்தின் விரிவை பாத்ம ஸம்ஹிதையும் தெரிவிக்கிறது.
இவற்றுள் ஜயாக்யம் சிறந்ததாகப் போற்றப்படுகிறது.

மேலும்
1. அஹிர் புத்ந்ய ஸம்ஹிதை
2.ஈச்வர ஸம்ஹிதை
3. ஜயாக்ய ஸம்ஹிதை
4. பாத்ம ஸம்ஹிதை
5. பாரமேச்வர ஸம்ஹிதை
6.லக்ஷ;மீ தந்த்ரம்
7. விஷ்வக்ஸேந ஸம்ஹிதை
8. ஸ்ரீப்ரச்ன ஸம்ஹிதை
9. ஸாத்வ ஸம்ஹிதை முதலிய ஸம்ஹிதைகளும் உள்ளன.

ஸ்ரீ பாஞ்சராத்ர – ஸ்ரீ வைகானஸ ஆகமங்களின் வேறுபாடுகள்

1. வைகானஸ ஆகம விதிகளின்படி வைகானஸ ப்ராம்மணர்களே கருவறையிலுள்ள
இறைவனுடைய திருமேனியை தீண்ட உரிமை பெறுகிறார்கள்.

2. வைகானஸ அர்ச்சகர்கள் திருவிலச்சினை என்ற பஞ்ச ஸம்ஸ்கார தீiக்ஷ பெறுவதில்லை.

3. குரு பரம்பரையில் ஸம்பந்தப்படாதவர்கள். ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யர்களின் தனியன்களை அநுஸந்திப்பதில்லை.

4. வழிபாட்டு முறையில் மந்திரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.

5. பலி பீடத்தின் பின்னால் கொடி மரம் இருக்கும்

6. விஷ்ணு, புருஷன், சத்யன், அச்யுதன், அநிருத்தன் முதலியோர்களை வழிபடுகின்றனர்.

மற்றும் கோயில் அமைப்புக்களிலும்
திருவாராதன முறையிலும்,
மூர்த்தியின் அமைப்பிலும் ,
நூப தீபங்கள் சமர்ப்பிப்பதிலும் வைகானஸ, பாஞ்சராத்ர ஆகமங்கள் வேறுபடுகின்றன.

————

நிர்மமே சார முத்யர்த்த ஸ்வயம் விஷ்ணு ரஸ அனுகூலம்
தத் பர வ்யூஹ விபவ ஸ்வபாவாதி நிரூபணம்
பாஞ்சராத் வயம் தந்த்ரம் மோக்ஷ ஏக பல லக்ஷணம்
ஸூ தர்சனாஹ்வயோ யோசவ் சங்கல்போ வைஷ்ணவா பரா
ஸ ஸ்வயம் பிபிதே தேந பஞ்சத பஞ்ச வக்த்ராக –அஹிர்புத்ய ஸம்ஹிதா ஸ்லோகம்

ஸூரி ஸூஹ்ருத் பாகவதா ஸாத்வத பஞ்ச கால வித்
ஏகாந்திகா தன்மயச் ச பாஞ்ச ராத்ரிக இத்யபி
ஏவமாதி ப்ராக்யாபி ஆக்யேய கமலாசன –ஸ்ரீ பத்ம ஸம்ஹிதா ஸ்லோகம் || (2-87)” -பாகவதருக்கு பர்யாய சப்தங்கள்

பஞ்ச கால வியவஸ்தியை வேங்கடேச விபாசித
ஸ்ரீ பாஞ்ச ராத்ர ஸித்தாந்த வியவஸ்தேயம் சமர்த்தித – ஸ்ரீ பாஞ்சராத்ர ரஷா ஸ்லோகம் –

இதம் மஹா உபநிஷதம் சதுர் வேத சமான விதம்
சாங்க்ய யோக க்ரதான்தேந பஞ்ச ராத்ர அனு சப்தித்தம் –(ஸ்ரீ மஹா பாரதம் 339,112).

ராத்ரா – கதி -மார்க்கம்
ராத்ரம் ச ஞான வசனம் ஞான பஞ்ச விதம் ஸ்மர்தம்
தேநேதம் பாஞ்ச ராத்ரம் ஹி ப்ரவதந்தி மனிஷினா
தத்வம் –முக்த பிரதம் –பக்தி பிரதம் -யோகம் -வைஷயிகம் -விஷயாந்தர போகம் என்றவாறு

புராணம் வேத வேதாந்தம் ததா சாங்க்ய யோக ஜம்
பஞ்ச பிரகாரம் விஞ்ஞானம் யத்ர ராத்யேதேபிஜஜ || -பவ்ஷ்கர ஸம்ஹிதை

பாஞ்சராத்ரம் – ஏகாயான சாகை -சாந்தோக்ய சாரம் -என்பர் தேசிகர் தத்வ முக்த கலாபத்தில்

—————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ. வே ,வெங்கடேஷ் ஸ்வாமிகள் – திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பகவத் கீதையும் ஸ்ரீ பகவத் சாஸ்திரமான ஸ்ரீ பாஞ்ச ராத்ரம் –ஸ்ரீ உ. வே ,வெங்கடேஷ் ஸ்வாமிகள் —

August 28, 2021

பகவத் கீதையும் பகவத் சாஸ்திரமான பாஞ்ச ராத்ரம்
1-அடியவர்கள் உகந்த உருவமும் பேரும்
2- அவதார பூர்ணத்வம்
3-அர்ச்சாவதார ஸுலப்யம் -எளிமை நீர்மை
4-ஸரணாகதி
5-திருமேனி த்யானம் உபாஸ்யம்
6-பாஞ்சராத்ர உபாஸ்யமே ஸ்ரேஷ்டம்

1-அடியவர்கள் உகந்த உருவமும் பேரும்

ஜிதந்தே ஸ்தோத்ரம் -பாஞ்ச ராத்ரம் உள்ளே அடங்கியது
ந தே ரூபம் —பக்தாநாம் ப்ரகாசதே
உனக்கு -என்ற பின்பு அனைத்தும் உண்டே –
உனக்கு என்று கொள்ளாமல் ரூபம் கல்யாண குணங்கள் எல்லாம் அடியவர்களுக்கு

யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம்யஹம்
மம வர்த்மாநுவர்தந்தே மநுஷ்யா: பார்த ஸர்வஸ:–4-11

பார்த யே மாம் யதா ப்ரபத்யந்தே-பார்த்தா! யாவர் என்னை எங்ஙனம் வேண்டுகிறார்களோ
தாந் அஹம், ததா ஏவ பஜாமி-அவர்களை நான் அங்ஙனமே சார்கிறேன்,
மநுஷ்யா: ஸர்வஸ:-மனிதர் யாங்கணும்,
மம வர்த்ம அநுவர்தந்தே-என் வழியையே பின்பற்றுகிறார்கள்.

யாவர் என்னை எங்ஙனம் வேண்டுகிறார்களோ அவர்களை நான் அங்ஙனமே சார்கிறேன்.
பார்த்தா, மனிதர் யாங்கணும் என் வழியையே பின்பற்றுகிறார்கள்.
ஸர்வஸ:-பிரியதம -பித்ரு -சாரதி -அர்ச்சாவதார -அனுபவிப்பான்

2- அவதார பூர்ணத்வம்
விஷ்வக்ஸேன ஸம்ஹிதை
நம் பெருமாள் அபிமானம்
பிராட்டி உடனே வந்து ஸந்நிஹிதன் ஆகிறேன்
ஸ்ரீ ப்ரஸ்ன சம்ஹிதை -இத்தையே சொல்லும்

அஜோऽபி ஸந்நவ்யயாத்மா பூதாநாமீஸ்வரோऽபி ஸந்
ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம்யாத்மமாயயா–4-6-

அஜ: அவ்யய ஆத்மா ஸந் அபி-பிறப்பற்றவனாகவும் அழிவற்றவனாகவும்,
பூதாநாம் ஈஸ்வர: அபி ஸந்-உயிர்களுக்கெல்லாம் ஈசனே யெனினும்,
ஸ்வாம் ப்ரக்ருதிம் அதிஷ்டாய-யான் எனது பிரகிருதியில் நிலை பெற்று,
ஆத்ம மாயயா ஸம்பவாமி-என்னுடைய மாயையால் பிறப்பெய்துகிறேன்.

ஸ்ரீ பகவான் பிறப்பற்றே னெனினும், அழிவற்றே னெனினும், உயிர்களுக்கெல்லாம் ஈசனே யெனினும்,
யான் எனது பிரகிருதியில் நிலைபெற்று ஆத்ம மாயையால் பிறப்பெய்துகிறேன்.

வனவாஸ ராமர் சேவிக்கிறோம் திருச்சேறை
மாயா சங்கல்பம் -divine will

3-அர்ச்சாவதார ஸுலப்யம் -எளிமை நீர்மை
புரிவதுவும் புகைப்பூவே –
துளஸீ -பல்லவம்–ஸப்த மாத்திரமே போதும் -பாஞ்ச ராத்ரம் சொல்வதையே
தாராயினும் வேராயினும் மண்ணாயினும்
பாலனாய் பதிகம் சொன்னாலே போதுமே
பாட்டு தோறும் திருத்துழாய் இருக்குமே
ஒவ்வொரு இலைக்கும் நூறு அஸ்வமேத யாக பலன் அளிக்கிறானாம்

பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி
ததஹம் பக்த்யுபஹ்ருதமஸ்நாமி ப்ரயதாத்மந:–9-26-

ய: பக்த்யா-எவர் அன்புடனே,
பத்ரம் புஷ்பம் பலம் தோயம்-இலையேனும், பூவேனும், கனியேனும், நீரேனும்
மே ப்ரயச்சதி-எனக்கு அளிப்பவன் ஆயின்,
ப்ரயதாத்மந:-முயற்சியுடைய அவர்,
பக்த்யுபஹ்ருதம்-அன்புடன் அளித்த,
தத் அஹம் அஸ்நாமி-அவற்றை நான் அருந்துகிறேன்.

இலையேனும், பூவேனும், கனியேனும், நீரேனும் அன்புடனே எனக்கு அளிப்பவன் ஆயின், முயற்சியுடைய
அன்னவன் அன்புடன் அளித்ததை உண்பேன் யான்.

சர்வ ஸூ லபம்
ஸர்வேஸ்வரேஸ்வரன்
அவாப்த ஸமஸ்த காமன்
மநோ ரதம் அலாப்ய லாபம் பெற்றதாக கொள்கிறானே

4-ஸரணாகதி
ந்யாஸ வித்யை
அஹிர்புத்யை ஸம்ஹிதை லக்ஷணம் சொல்லி
அங்கங்களும் காட்டும்
லஷ்மி தந்திரமும் சொல்லும்
ந்யாஸம் அதிரிக்தம்
சரம ஸ்லோகம் காட்டுமே –

ஸர்வதர்மாந்பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ
அஹம் த்வாம் ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸுச:

ஸர்வதர்மாந் பரித்யஜ்ய-எல்லா அறங்களையும் விட்டு விட்டு,
மாம் ஏகம் ஸரணம் வ்ரஜ – என்னையே சரண் புகு,
ஸர்வபாபேப்ய:-எல்லாப் பாவங்களினின்றும்,
அஹம் த்வாம் மோக்ஷயிஷ்யாமி-நான் உன்னை விடுவிக்கிறேன்,
மா ஸுச:-துயரப்படாதே.

எல்லா அறங்களையும் விட்டு விட்டு என்னையே சரண் புகு. எல்லாப் பாவங்களினின்றும்
நான் உன்னை விடுவிக்கிறேன். துயரப்படாதே.

அங்க பிரபத்தி கீதா பாஷ்யம்
ஸ்வ தந்த்ர பிரபத்தி கத்யம்
குறிப்புடன் மேவும் தர்மங்கள் -கோவலன் -கழலே அரண் என்று அடைந்து வினைத்திரள் போக்குவோம் -தேசிகன் –

5-திருமேனி த்யானம் உபாஸ்யம்
ச குண ச ஆகார
ஸ்ரீ ப்ரஸ்ன சம்ஹிதை
சதுர்புஜம் வாஸூ தேவம் –ஆனந்த ஜலாதி -பித்த வாஸஸம் -ப்ரஹ்மாதி காரணம் -கிஞ்சித் மந்தஸ்மிதம் -தேவம் புண்டரீகாக்ஷம்
குரு முகே -த்யானம்

யோகிநாமபி ஸர்வேஷாம் மத்கதேநாந்தராத்மநா
ஸ்ரத்தாவாந்பஜதே யோ மாம் ஸ மே யுக்ததமோ மத​:6-47

ய: ஸ்ரத்தாவாந்-எவனொருவன் சிரத்தையுடைய யோகியோ,
மத்கதேந அந்ராத்மநா -என்னிடம் ஈடுபாடு கொண்ட உள்ளத்தால்,
மாம் பஜதே-என்னை போற்றுகிறானோ,
ஸ: மே யுக்ததம மத​:-அந்த யோகியே மேலான யோகியென்பது என்னுடைய கொள்கை.

மற்றெந்த யோகிகளெல்லாரிலும், எவனொருவன் அந்தராத்மாவில் என்னைப் புகுத்தி என்னை
நம்பிக்கையுடன் போற்றுகிறானோ அவன், மிக மேலான யோகியென்பது என்னுடைய கொள்கை.

கத்யத்தில் ஸ்வாமி விலக்கிக் காட்டி அருளுகிறார் திவ்ய ரூபம்

மய்யாவேஸ்ய மநோ யே மாம் நித்யயுக்தா உபாஸதே
ஸ்ரத்தயா பரயோபேதாஸ்தே மே யுக்ததமா மதா:–12-2-

ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்,
மயி மந: ஆவேஸ்ய-என்னிடத்தே மனத்தைச் செலுத்தி,
நித்யயுக்தா:-நித்திய யோகிகளாய்,
யே-எந்த பக்தர்கள்,
பரயா ஸ்ரத்தயா உபேதா:-சிறந்த சிரத்தையுடன் கூடியவர்களாக,
மாம் உபாஸதே-என்னை வழிபடுகிறார்களோ,
தே யுக்ததமா-அவர்கள் யோகிகளிலேயே மேலானவர் என்று,
மே மதா:-என்னால் மதிக்கப் படுபவர்.

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: என்னிடத்தே மனத்தைச் செலுத்தி நித்திய யோகிகளாய் உயர்ந்த நம்பிக்கையுடன்
என்னை வழிபடுவோர் யாவர், அவர்களே சிறந்தோரென நான் கருதுகிறேன்.

நித்யர்களையும் திவ்ய ரூபத்துடன் உபாஸிக்க சொல்லும் பாஞ்சராத்ரம்
ஆக்கமும் இப்படியே சொல்லும்

6-பாஞ்சராத்ர உபாஸ்யமே ஸ்ரேஷ்டம்

அநந்யாஸ்சிந்தயந்தோ மாம் யே ஜநா: பர்யுபாஸதே
தேஷாம் நித்யாபியுக்தாநாம் யோக÷க்ஷமம் வஹாம்யஹம்–9-22-

அநந்யா: யே ஜநா-வேறு எதிலும் நாட்டமில்லாத எந்த பக்தர்கள்,
மாம் சிந்தயந்த:-என்னை தியானித்துக் கொண்டு,
பர்யுபாஸதே-எந்த பயனும் எதிர்பார்க்காது உபாசிக்கின்றாரோ,
நித்யாபியுக்தாநாம் தேஷாம்-இடைவிடாது என்னையே நினைத்துக் கொண்டிருக்கிற அவர்களுடைய,
யோக÷க்ஷமம் அஹம் வஹாமி-நன்மை தீமைகளுக்கு நானே பொறுப்பாவேன்.

வேறு நினைப்பின்றி என்னை வழிபடுவோர் யாவரோ, அந்த நித்திய யோகிகளின் நன்மை தீமையை நான் பொறுப்பேன்.

பர்யுபாஸதே
சர்வ கல்யாண குணாத்மகம் –சர்வ விபூதி யுக்தம் –
முழுமையாக உபாஸ்யம்
அகண்டித குணம்
வைகானஸம் பாஞ்சராத்ரம் இரண்டுமே சொல்லுமே
அர்ச்சாவதாரமே பூர்ணம் என்று உபாஸிக்க வேண்டுமே

ஸ்ரீ பாஷ்யம் இதை விளக்கிக் காட்டும்
அபார காருண்ய -ஸ்வ ஸ்வரூப –ஸ்வ விபூதி –பாஞ்சராத்ர சாஸ்திரம் ஸ்வயம் ஏவ அருளி –
இந்த வழியில் உபாஸனமே பூர்ணம்
யோகமும் க்ஷேமமும் இவர்களுக்குத் தான்
அடுத்த ஸ்லோகம் இத்தை விளக்கும்

யேऽப்யந்யதேவதாபக்தா யஜந்தே ஸ்ரத்தயாந்விதா:
தேऽபி மாமேவ கௌந்தேய யஜந்த்யவிதிபூர்வகம்–9-23-

கௌந்தேய-குந்தியின் மகனே,
யே பக்தா-எந்த பக்தர்கள்,
ஸ்ரத்தயா அந்விதா: அபி-நம்பிக்கையுடன் கூடியவர்களாக இருந்த போதிலும்,
அந்ய தேவதா: யஜந்தே-மற்ற தேவதைகளை வழிபடுகிறார்களோ,
தே அபி அவிதி பூர்வகம்- அவர்களும் விதிமுறைப்படி அல்லாமல் (அஞ்ஞானத்துடன்),
மாம் ஏவ யஜந்தி-என்னையே தொழுகின்றனர்.

அந்நிய தேவதைகளை நம்பிக்கையுடன் தொழும் அன்பரும், குந்தியின் மகனே, விதி வழுவி என்னையே தொழுகின்றனர்.

சிரத்தையோடு கூடியிருத்தல் என்பது ஆஸ்திக்ய புத்தியுடைத்திருத்தல் அல்லது தெய்வம் துணைபுரியும் என்ற
நம்பிக்கையுடனிருத்தலாம். அக்ஞானத்தால் விதிவழுவிச் செய்யும் செயல் அவிதிபூர்வகம் எனப்படுகிறது.

விதிப்படி உபாஸனமே பாஞ்சராத்மா விதிப்படி -ஸ்ரேஷ்டம்

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்– 2-2-
பாஞ்ச ராத்ரமே வேத வழி
இதுவே பரம பிரமாணம்

பக்த அபீஷ்ட
அவதரண சமய நிர்விகார ஸ்வ பாவம்
ஸுலப்யம்
ந்யாஸ வித்யாம்
ஸூபக ஸூதா தநு
யோகானாம் பாஞ்ச ராத்ரம் விதி மத மோக்ஷம் தர கீதாச்சார்ய வசனம் –
கதி அளிக்கும் நல்ல விதி இதுவே –

———-

பகவான் ஸ்ரீ வாசுதேவன் ஐந்து ராத்திரிகளில் ஐந்து நித்ய ஸூரிகளுக்கு
உபதேசம் செய்ததால் இதற்கு பாஞ்சராத்ர ஆகமம் என்று பெயர்

பாஞ்ச ராத்ர ஆகமம் மொத்தம் 5 ,00 ,000 சுலோகம் கொண்டது ஆகும் .

அஷ்டமி திதியும் ரோகிணி நட்சத்திரமும் கூடிய ஸ்ரீ பாஞ்சராத்ர ஸ்ரீஜெயந்தி என அழைக்கப்படும்
இந்த நாள் ஆவணி மாதத்தில் சிம்மம் ராசியில் சூரியன் இருக்கும் சமயம்.
இந்த தினம் ஸ்ரீ கிருஷ்ணபகவான் அவதரித்த தினமாகக் வைஷ்ணவர்களால் கொண்டாடப்_படுகிறது.

வைணவ ஆகமங்களில் பாஞ்சராத்ரம் வைகானசம் என்னும் இரண்டு விதமான ஆகமங்கள் உண்டு.
ஆகமங்கள் என்பது ஆராதனை முறைகளாகும்.
பாஞ்சராத்ரம் ஆகமம் என்பது பத்ரிகாஸ்ரமத்தில் பகவான் விஷ்ணு தானே
நரனும் நாராயணனுமாகி உபதேசித்த பூஜை முறைகளாகும்,
இந்த பூஜை முறை ஐந்து ராத்திரிகளில் சொல்லப்பட்டதால் பாஞ்சராத்ரம் என்று பெயர் பெற்றது.
வைகானச ஆகமம் என்பது பகவான் விஷ்ணு தானே வைகானச முனிவராகி சௌனகாதி முனிவர்களுக்கு
உபதேசம் செய்ததாக கூறப்படுவதால் இந்த ஆகமம் வைகானச ஆகமம் என்று கூறப்படுகிறது.

பாஞ்சராத்ர ஸ்ரீஜெயந்தி என்பது ஆவணி மாதம் சிம்மத்தில் சூரியன் இருக்கும் சமயம்
கிருஷ்ணபட்சம் அஷ்டமியன்று கொண்டாடப்படும் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி ஆகும்.
இன்று சூரிய உதயத்தில் சப்தமி அல்லது கிருத்திகை நட்சத்திரம் ஒரு வினாடி இருந்தாலும்
அது தோஷமுள்ள நாளாக கருதப்படுவதால் மறுநாள் தான் ஸ்ரீஜெயந்தியாக கொண்டாடப் படவேண்டும்.

ஸ்ரீ வைகானச ஸ்ரீஜெயந்தி ஆவணி மாதம் சிம்மத்தில் சூரியன் இருக்கும் சமயம் நடு இரவில்
ரோகிணி இருக்கும் சமயம் கொண்டாடப்படும் ஸ்ரீஜெயந்தியாகும்.
அன்று தேய்பிறை அஷ்டமி அர்த்தராத்திரிக்கு முன்பு சிறிதளவு இருந்தாலும் போதுமானது.
இவ்வாறு பலவகையிலும் பலவித ஆச்சாரியார்களின் வழிகாட்டுதலின்படி
பலவிதமான நாட்களில் பலவித பெயர்களில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

பாகவதத்தில் கண்ணனின் பிறப்பை விவரிக்கும் தசம ஸ்கந்தம் எனப்படும் பத்தாவது அத்தியாயத்தை ஒருவர் படிக்க,
குடும்பத்தில் மற்றவர்கள் கேட்க வேண்டும்.
இதனால் பகவான் கிருஷ்ணரின் ஆசீர்வாதம் நமது இல்லத்திற்கும், உள்ளத்திற்கும் கிடைக்கும்.

———————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ. வே ,வெங்கடேஷ் ஸ்வாமிகள் – திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

நமது வேதங்கள் சமஸ்கிருதத்தில் எம்பி 3 வடிவில்—

August 10, 2021

All the five Vedas in original Sanskrit from IISH: Spread all over the world to everyone.

Each member should spread to a minimum 1000 people

இதில் நமது ஐந்து வேதங்களான
ருக் வேதம்
சுக்ல யஜுர் வேதம்
கிருஷ்ண யஜுர் வேதம்
சாம வேதம்
அதர்வண வேதம் ஆகிய
அனைத்தையும் சமஸ்கிருதத்தில் எம்பி 3 வடிவில் உள்ளது.
இதை அனைத்து நண்பர்களுக்கும் பகிர்ந்து நம் வேதத்தை காப்போம்மாக.
நமது வேதங்களை ரட்சிக்க வேண்டியது நமது ஒவ்வொருவருக்கும் கடமையும் ஆகும்.
அதன் மூலம் நமக்கு வேத மாதாவின் பரிபூர்ண ஆசியும் கிடைக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கிடையாது.

Rig Veda

Krishna Yajur Veda

Shukla Yajur Veda

Atarva Veda

Sama Veda

———–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாசர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ நியாய மீமாம்ச வேதாந்த பாடங்கள்–ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்– — மீமாம்ச சாஸ்த்ரம்– பாடம் -41–

August 5, 2021

பாடம் -41-மீமாம்ச சாஸ்த்ர சுருக்கங்கள் பார்த்து –
அவை வேதாந்த பாடத்துக்கு உதவு மவற்றைப் பார்த்து நிகமிப்போம் –

————-

மீமாம்ஸா -ஞாதும் இச்சா -அறிய வேண்டும் ஆசை -பூஜ்ய விஷய ஆராய்ச்சி –
அறிய ஆசை உடையவர்கள் செய்யும் கார்யம் -வேத விசாரம்
ஒன்றைச் செய்ய செயல் முறை -இதி கர்தவ்யா –
தர்ம ஞானம் பெறவே மீமாம்ஸா ஸாஸ்த்ரம் கொண்டு வேத விசாரம் செய்து பெறுவதற்காக –

மகா ரிஷி ஜைமினி -மீமாம்ஸா ஸாஸ்த்ர ஸூத்ரங்கள் -சாம வேதம் பிரசாரம் செய்ய இவர் வேத வியாசர் சிஷ்யர்
சபரர் -சபர பாஷ்யம்
குமாரில பட்டர் -பாட்ட மதம் -ஸ்லோக வார்திகம் -தந்த்ர வார்த்திகம– டுப்டீகா
பிரபாகரர் -பிரபாகர் மதம் -லக்வீ -ப்ருஹதீ –
முராரி மிஸ்ரர் -மிஸ்ர மதம் -அங்கத்வ நிருக்தி

ஜைமினி மகரிஷி நமது நன்மைக்காக ஸூத்ரங்கள் தந்து அருளி உள்ளார்
12 அத்தியாயங்கள் -60 பாதங்கள் –907 அதிகரணங்கள் -2745 ஸூத்ரங்கள்

இதுக்கும் மேல் -சங்கர்ஷ காண்டம் தேவதா மீமாம்ஸா -நான்கு அத்தியாயங்கள் –
பூர்வ மீமாம்ஸா ஸாஸ்த்ரம் இதுவே
உத்தர மீமாம்ஸா -வேதாந்த விசாரம்
ப்ரஹ்ம காண்டத்துக்கு வேத வியாசர் ஸூத்ரங்கள் -நான்கு அத்தியாயங்கள் இதிலும் -பாதராயணர் இவரே –
இரண்டும் ஒரே ஸாஸ்த்ரம்

முதல் அத்யாயம் –
முதல் பாதம் -8 அதிகரணங்கள்
இரண்டாம் பாதம் -4 அதிகரணங்கள்
மூன்றாம்பாதம் -10-அதிகரணங்கள்
நான்காம் பாதம் -20-அதிகரணங்கள்

இரண்டாம் அத்யாயம் –
முதல் பாதம் -18 அதிகரணங்கள்
இரண்டாம் பாதம் -13 அதிகரணங்கள்
மூன்றாம்பாதம் -14-அதிகரணங்கள்
நான்காம் பாதம் -2-அதிகரணங்கள்

மூன்றாம் அத்யாயம் –
முதல் பாதம் -15 அதிகரணங்கள்
இரண்டாம் பாதம் -19 அதிகரணங்கள்
மூன்றாம்பாதம் -20-அதிகரணங்கள்
நான்காம் பாதம் -21-அதிகரணங்கள்
ஐந்தாம் பாதம் –20 அதிகரணங்கள்
ஆறாம் பாதம் -16 அதிகரணங்கள்
ஏழாம் பாதம் -23-அதிகரணங்கள்
எட்டாம் பாதம் -23-அதிகரணங்கள்

நான்காம் அத்யாயம் –
முதல் பாதம் -17 அதிகரணங்கள்
இரண்டாம் பாதம் -13 அதிகரணங்கள்
மூன்றாம்பாதம் -20-அதிகரணங்கள்
நான்காம் பாதம் -13-அதிகரணங்கள்

ஐந்தாம் அத்யாயம் –
முதல் பாதம் -18 அதிகரணங்கள்
இரண்டாம் பாதம் -12அதிகரணங்கள்
மூன்றாம்பாதம் -15-அதிகரணங்கள்
நான்காம் பாதம் -9-அதிகரணங்கள்

ஆறாம் அத்யாயம் –
முதல் பாதம் -13 அதிகரணங்கள்
இரண்டாம் பாதம் -11 அதிகரணங்கள்
மூன்றாம்பாதம் -21-அதிகரணங்கள்
நான்காம் பாதம் -14-அதிகரணங்கள்
ஐந்தாம் பாதம் –21 அதிகரணங்கள்
ஆறாம் பாதம் -7 அதிகரணங்கள்
ஏழாம் பாதம் -13-அதிகரணங்கள்
எட்டாம் பாதம் -19-அதிகரணங்கள்

ஏழாம் அத்யாயம் –
முதல் பாதம் -5 அதிகரணங்கள்
இரண்டாம் பாதம் -1அதிகரணங்கள்
மூன்றாம்பாதம் -14-அதிகரணங்கள்
நான்காம் பாதம் -3-அதிகரணங்கள்

எட்டாம் அத்யாயம் –
முதல் பாதம் -19அதிகரணங்கள்
இரண்டாம் பாதம் -6 அதிகரணங்கள்
மூன்றாம்பாதம் -8-அதிகரணங்கள்
நான்காம் பாதம் -4-அதிகரணங்கள்

ஒன்பதாம் அத்யாயம் –
முதல் பாதம் -18 அதிகரணங்கள்
இரண்டாம் பாதம் -20 அதிகரணங்கள்
மூன்றாம்பாதம் -14-அதிகரணங்கள்
நான்காம் பாதம் -15-அதிகரணங்கள்

பத்தாம் அத்யாயம் –
முதல் பாதம் -11 அதிகரணங்கள்
இரண்டாம் பாதம் -34 அதிகரணங்கள்
மூன்றாம்பாதம் -30-அதிகரணங்கள்
நான்காம் பாதம் -27-அதிகரணங்கள்
ஐந்தாம் பாதம் –26 அதிகரணங்கள்
ஆறாம் பாதம் -22 அதிகரணங்கள்
ஏழாம் பாதம் -20-அதிகரணங்கள்
எட்டாம் பாதம் -19-அதிகரணங்கள்

பதினொன்றாம் அத்யாயம் –
முதல் பாதம் -11அதிகரணங்கள்
இரண்டாம் பாதம் -16 அதிகரணங்கள்
மூன்றாம்பாதம் -16-அதிகரணங்கள்
நான்காம் பாதம் -21-அதிகரணங்கள்

பன்னிரண்டாம் அத்யாயம் –
முதல் பாதம் -21 அதிகரணங்கள்
இரண்டாம் பாதம் -15 அதிகரணங்கள்
மூன்றாம்பாதம் -16-அதிகரணங்கள்
நான்காம் பாதம் -16-அதிகரணங்கள்

ஸூத்ரம்
குறைந்த எழுத்துக்கள் கொண்டது
சந்தேகத்துக்கு இடம் இல்லாதது
ஆழ்ந்த பொருளை யுடையது
பல இடங்களிலும் பயன்படுத்தப் படுவது
பயன் அற்ற எழுத்துக்கள் இல்லாதது
பிழை இல்லாதது

ஸூத்ரங்கள்
எளிதாயும்
பல பொருள்களைக் கோடி காட்டுவதாகவும்
குறைந்த எழுத்துக்களையும் சொற்களையும் யுடையதாகவும்
ரசமாகவும் இருப்பதையே ஸூத்ரங்கள்

அதிகரணம்
ஒரே விஷயத்தை ஆராயும் ஸூத்ரங்களின் கூட்டங்கள் கொண்டது அதிகரணம்
இதில் ஐந்து பகுதிகள் உண்டு
1-விஷயம் -ஆராயப்படும் வேத வாக்கியம்
2-விஷயம் -அந்த வாக்கியத்தின் பொருளில் உள்ள சந்தேகம்
3-பூர்வ பக்ஷம் -எதிராளி கூறும் யுக்திகள்
4-சித்தாந்தம் -நாம் சொல்லும் யுக்திகளை முடிவும்
5-சங்கதி -முன் அதிகரணத்துடன் இந்த அதிகரணத்துக்குத் தொடர்பு

12 அத்தியாயங்களின் ஒரே பொருள் தர்மம் -அதில் –
சோதனா ச உபதேச ச அர்த்த -கட்டளை வாக்கியம் நன்மை ஏற்படுத்தும் -லக்ஷணம்

1-பிரமாணம் -தர்மங்களை அறியும் பிரமாணங்களை பற்றியது
2-பேதம் -தர்மங்களுக்குள் உள்ள வேறுபாட்டை அறியும் முறைகள்
3-சேஷத்வம் -ஒரு பொருள் மற்ற ஒன்றுக்கு அங்கமாக துணையாக உறுப்பாக ஆகுதல்
யாகம் -தியாகம் -ஒரு தேவதையைக் குறித்து ஒரு த்ரவ்யத்தை சமர்ப்பித்தல் தான் –
மானஸ வியாபாரம் தான் இது -மற்றவை எல்லாம் அங்கங்கள்
4-ப்ரயுக்தம் -பல இடங்களில் உபயோகப்படுத்தும் ஒரு பொருளின் முக்கியமான கார்யம் எது என்று நிரூபித்தால்
5-க்ரமம் -வைதிகச் செயல்களை செய்யும் வரிசை
6-அதிகாரம் -வைதிகச் செயல்களை செய்யத் தகுதிகள்
7-ஸாமான்ய அதி தேசம் -ஓர் இடத்தில் உபதேசிக்கப்பட்ட செயல் முறையை மற்றவர் இடத்தில் ஏறிடுதல்
8-விசேஷ அதி தேசம் -எங்கிருந்து எங்கு ஏறிட வேண்டும்
9-ஊஹம் -ஏறிடும் பொழுது செய்ய வேண்டிய சிறிய மாற்றங்கள்
10-பாதம்-ஏறிடும் பொழுது தவிர்க்கப்பட வேண்டியவை -நிறுத்தப்பட வேண்டியவை
11-தந்திரம் -பலவற்றுக்காக உபயோகப்படும் ஒரு செயலை அனைத்துக்காகவும் ஒரே முறை செய்தல்
12-பிரசங்கம் -ஒன்றுக்காகச் செய்யப்பட செயலால் மற்ற ஓன்று பயன் பெற்ற படியால் அதற்காகத் தனியாக செய்ய வேண்டாமை

அத்யாயம் -1- தர்மத்தைப் போதிக்கும் பிரமாணங்கள் எட்டும் முதல் அத்தியாயத்தில் சொல்லப்பட்டு உள்ளன
1-விதி -வேதத்தில் இருக்கும் நேரடியான கட்டளைகள்
2-அர்த்த வாதம் -செய்ய வேண்டிய செயலைப் போற்றுவதன் மூலம் செயலில் தூண்டும் சொல் தொடர்கள்
3-மந்த்ரம் -அடுத்து அடுத்து செய்ய வேண்டிய செயல்களை நினைவூட்டும் சொல் தொடர்கள்
4-ஸ்ம்ருதி -வேதத்தை அறிந்த ரிஷிகளின் நூல்கள்
5-ஆசாரம் -வேதத்தை அறிந்து அதன்படி நடப்பவர்கள் நடத்தை
6-நாமதேயம் -வைதிகச் செயல்களுக்கு கொடுக்கப் பட்ட செயல்கள்
7-வாக்ய சேஷம் -ஒரு கட்டளையை தொடர்ந்து வரும் மற்ற சொல் தொடர்கள்
8-சாமர்த்தியம் -கட்டளை இடப்படும் செயலின் தன்மை திறமை –

அத்யாயம் -2- கர்ம பேதத்தைக் காட்டும் ஆறு பிரமாணங்கள் இரண்டாம் அத்தியாயத்தில் உள்ளன
1-ஸப்தாந்தரம் -வெவ்வேறு வினைச் சொற்களால் குறிக்கப்படும் செயல்கள் வெவ்வேறு கர்மங்கள் தான்
2-அப்யாஸம் -ஒரு கட்டளையை வேறே எந்த பிரயோஜனம் இல்லா விட்டாலும் திரும்ப திரும்ப வேதம் சொன்னால்
அது வெவ்வேறு கர்மங்களை விதிக்கிறது என்றே கொள்ள வேண்டும்
3-சம்க்யா -வேதமே சில கர்மங்களின் எண்ணிக்கையை சொல்லி விடும் –
அப்போது தெளிவாக அறியலாம் இவை வெவ்வேறு கர்மங்கள் என்று –
4-ஸம்ஜ்ஞா -பெயர் மாறினால் கர்மம் மாறும் -பெயர் -நாமதேயம் -என்பது
ஒரு யாகத்தை ஸூ லபமாகக் குறிப்பிட என்று பார்த்தோம்
ஆகையால் ஒரு கர்மத்துக்கு ஒரு பெயர் போதுமானது
5-குணம் -ஒரு யாகத்தில் ஒரு த்ரவ்யம் தான் உபயோகிக்கப்பட முடியும் –
ஆகையால் முன்னமே த்ரவ்யம் விதிக்கப்பட்ட ஒரு யாகத்தில் மற்ற ஒரு த்ரவ்யத்தை நுழைக்க முடியாத படியால்
அது வேறொரு யாகத்தில் தான் பயன் பயன் படுத்தப்பட வேண்டும்
ஆகையால் கர்மங்களுக்குள் வேறுபாடு த்ரவ்யங்களைக் கொண்டும் ஏற்படலாம்
6-ப்ரகாரணாந்தரம்–ஒரு கர்மத்தை ஒரு பிரகரணத்தில் நூலின் ஒரு பகுதியில் – விதித்து விட்டு
மற்ற ஒரு ப்ரகரணத்தில் அதே பெயரை யுடைய ஒரு கர்மத்தை விதித்தாலும் அவை ஒன்றாக மாட்டா
ஏன் என்றால் பிரகரணம் மாறி விட்ட படியால் முன் கர்மத்தின் நினைவு சடக்கென ஏற்படாது –

அத்யாயம் -3- அங்கத்தவத்தைக் காட்டும் ஆறு பிரமாணங்கள்-ஸ்ருதி
மூன்றாம் அத்தியாயத்தில் சொல்லப் பட்டுள்ளன
1-ஸ்ருதி -நேரடியாக வேதமே சொற்களால் சொல்லுதல்
2-லிங்கம் -ஸப்த ஸாமர்த்யம் -ஒரு சொல்லின் திறமை –சொல்லுக்கு இருக்கும் ஸாமர்த்யம் –
தன் பொருளை அறிவிக்கும் ஸாமர்த்யம்
3-வாக்யம் -ஸமபி வ்யாஹார -இரண்டாம் வேற்றுமை முதலான ஸ்ருதி பிரமாணம் இல்லாத போது
இரண்டு பொருள்களுக்கு இருக்கும் சேர்ந்த உச்சரிப்பு
4-ப்ரகரணம் -உபய ஆகாங்ஷா -இரண்டு கர்மங்களுக்கு இடையில் -பரஸ்பரம் ஒன்றுக்கு ஓன்று இருக்கும் எதிர்பார்ப்பு
5-ஸ்தானம் -தேச ஸாமான்யம் -இடத்தில் ஒற்றுமை
6-ஸமாக்யா -யவ்கிக ஸப்த -காரணப்பெயர் –

அத்யாயம் -4-ப்ரயோஜகத்வம்
ஒரு செயல்பொருள் பலவற்றுக்கு அங்கமாக இருக்கலாம் –
அந்த அங்கிகளுக்குள் ஏதோ ஓன்று தான் அந்தக் கர்மத்துக்கு ப்ரயோஜகமாக இருக்கும்
அதாவது அனுஷ்டாபகமாக-முக்கிய பயனாக இருக்கும்
யாகங்களில் ஒரே பொருள் செயல் பலவற்றுக்கு அங்கமாக இருக்கலாம் ஆனால் அவற்றுள் ஓன்று தான்
அதற்கு பிரயோஜகமாக செய்விப்பதாக இருக்கும் -அதற்குத் தான் பிரயோஜகம் என்று பெயர் –
இந்த கர்மத்துக்கு பிரயோஜ்யம் என்று பெயர் –
எடுத்துக் காட்டு
தர்ச பூர்ண மாசம் என்ற யாகத்தில் புரோடாசம் -தோசை என்ற த்ரவ்யத்தை தேவதைக்கு சமர்ப்பிக்க வேண்டும்
அதற்காக அதை சமைப்பதற்கு கபாலம் என்ற சுட்ட மண் தகடுகளை பயன்படுத்த வேண்டும்
இதை வேதம் -கபாலங்களில் புரோடாசத்தை சமைக்க வேண்டும் -என்ற விதியில் சொல்லுகிறது
அதே கபாலங்களைக் கொண்டு தான் நெல்லில் இருந்து பிரிந்து விழுந்த உமியை நீக்க வேண்டும் என்று வேதம் கூறுகிறது –
புரோடாசத்திற்கான கபாலத்தால் துஷங்களை நீக்க வேண்டும் -என்ற கட்டளையால்
கபாலத்தைச் செய்வது புரோடாசத்தை சமைக்கத் தான் -அதே கபாலம் உமியை நீக்கவும் பயன்படுத்தப்படுகிறது அவ்வளவே
ஆகையால் புரோடாசம் செய்வது ப்ரயோஜகமும் அங்கியும்
கபாலம் பிரயோஜ்யமும் அங்கமும்
கபாலத்துக்கு உமியை நீக்குதல் என்ற செயல் அங்கி ஆகுமே தவிர ப்ரயோஜகம் ஆகாது –

அத்யாயம் -5- க்ரமம் -பூர்வ அபவ்ர்யம் -முன் பின் தன்மை -இந்தச்செயலுக்கு அடுத்து இந்தச்செயல் -க்ரமம் -வரிசை
1-ஸ்ருதி – நேரடியாக வேதமே செயல்களின் வரிசையைச் சொல்லுதல்
2-அர்த்தம் -ஒரு செயலின் ப்ரயோஜனத்தைக் கருதி அதைச் செய்ய வேண்டிய காலத்தை நிர்ணயித்தல்
3-பாடம் -வேதத்தில் செயல்களில் படிக்கப்பட்ட வரிசையிலேயே அவற்றைச் செய்தல்
4-ஸ்தானம் -வெவ்வேறு காலங்களில் செய்யப்பட வேண்டிய பல செயல்களை சில காரணங்களால்
சேர்ந்து செய்யும் பொழுது எந்தச் செயலின் இடத்திலாவற்றைச் சேர்த்து செய்கிறோமோ
அச்செயலை முதலில் செய்து விட்டு பின்னால் மற்றவற்றைச் செய்ய வேண்டும் –
5-முக்யம் -பல பிரதான கர்மங்களும் அவற்றின் அங்கங்களும் செய்யப்படும் பொழுது பிரதான கர்மங்களை
எந்த வரிசையில் செய்யப் போகிறோமோ அதே வரிசையில் தான் அங்கங்களை செய்ய வேண்டும்
6-ப்ரவ்ருத்தி -பல பிரதான கர்மங்களுக்காக ஒரே அங்கங்களைத் திரும்ப திரும்ப செய்யும் பொழுது
அவற்றுள் முதல் அங்கத்தை எந்த வரிசையில் செய்தோமோ அதே வரிசையில் தான் பின்பு உள்ளவையும் செய்ய வேண்டும் –

அத்யாயம் -6-அதிகாரம்
வைதிக கர்மங்களை செய்ய மூன்று அடிப்படைத் தேவைகள் –
இவை நேரடியாக விதி வாக்கியங்களில் சொல்லப்படா விட்டாலும் இவை இல்லாமல் கர்மங்களை
செய்ய முடியாத படியால் இவை அதிகாரத்தில் சேர்கின்றன
1-வித்யை -அத்யயனம் செய்து வேதங்களையும் அவற்றின் பொருளையும் கற்று இருக்க வேண்டும்
இது இருந்தால் தான் அடுத்து அடுத்து என்ன செயல் செய்ய வேண்டும்
என்பதையும் சொல்ல வேண்டிய மந்திரங்களையும் அறிய முடியும்
2-அக்னி -யாகம் ஹோமம் முதலியவற்றில் ஒரு த்ரவ்யத்தை அக்னியில் சேர்க்க வேண்டும் என்பதால்
அதற்காக ஆதாநம் என்ற கர்மத்தைச் செய்து
கார்ஹபத்யம் ஆஹவ நீயம் தஷிணாக்னி என்ற மூன்று அக்னிகளும் ஒருவன் இடத்தில் இருந்தால் தான்
அவன் யாகம் முதலானவற்றைச் செய்ய முடியும்
3-சாமர்த்தியம் –யாகம் முதலியவற்றை செய்யும் திறமையும் பண வசதியும் -உடல் ஆரோக்யமும்
நன்கு செயல்படக்கூடிய புலன்களும் இருந்தால் தான் ஒருவனால் யாகம் செய்ய முடியும்
ஆகையால் பார்க்க முடியாதவர்கள் பேச முடியாதவர்கள் நடக்க முடியாதவர்கள் ஆகியவர்களுக்கு
யாகம் முதலான வற்றில் அதிகாரம் கிடையாது
ஆணுக்கும் யாகம் முதலானவற்றில் அதிகாரம் உண்டு -பெண்ணுக்கும் உண்டு
ஆனால் அவர்களுக்குத் தனித்தனியே யாகம் செய்யும் உரிமை கிடையாது
இருவரும் சேர்ந்து தான் ஒரு யாகத்தைச் செய்ய வேண்டும் –

அத்யாயம் 7-8-அதி தேசம்
அதி என்றால் மீதூர்ந்து -கடந்து -தாண்டி என்று பொருள்
தேசம் என்றால் போதித்தல் அறிவித்தல்
அதி தேசம் -கடந்து போதித்தல்
ப்ரக்ருதிக்கு அங்கமாக விதிக்கப்பட்ட ஒரு கர்மத்தை அதைக் கடந்து மற்ற விக்ருதி யாகங்களும்
அங்கமாக போதிக்கும் சொல் தொடருக்குத் தான் அதி தேசம் என்று பெயர்

வேறொரு இடத்தில் சொல்லப்பட்ட காரியக்கூட்டம் -இதி கர்தவ்யதா -செயல்முறை –
தான் செய்யும் உபகாரத்தை மூலமாக வேறு இடங்களுக்குச் சென்று அடைவது தான் அதிதேசம் ஆகும்

எந்த ஒரு சொல் தொடரால் ப்ரக்ருதி என்று அழைக்கப்படும் கர்மத்தில் இருந்து அதோடு ஒத்த
ஸத்ருசமான -ஒற்றுமை யுடைய மற்ற கர்மங்களுக்கு அங்கங்கள் சென்று அடைகின்றனவோ
அந்த சொல் தொடர் அதி தேசம் என்று அழைக்கப்படுகிறது –

அத்யாயம் –9-ஊஹம்
ப்ரக்ருதி யாகத்தில் ஒன்றைக் குறித்து செய்யப்பட ஒரு செயல் விக்ருதி யாகத்தில்
வேறு ஒன்றைக் குறித்து செய்யப்படுவதற்கு ஊஹம் என்று பெயர்
ப்ரக்ருதி யாகத்தில் இருந்து ஒரு அங்கத்தை விக்ருதி யாகத்துக்கு அதி தேசம் செய்யும் பொழுது
அந்த அங்கம் விக்ருதியில் வேறொரு பொருளைக் குறித்தும் செய்யப்படலாம்
இதற்கு ஊஹம் என்று பெயர்

ஸம்ஸ்காரத்தில் ஊஹம்
மந்திரத்தில் ஊஹம்
சாமத்தின் ஊஹம்
என்று மூன்று வகைகள் உண்டு

அத்யாயம் -10-பாதம் –
ப்ரக்ருதி யாகத்துக்கு அங்கமான ஒரு செயல் விக்ருதி யாகத்துக்கு அங்கமாக இல்லாமல் போவதற்கு பாதம் என்று பெயர்
அதி தேசம் செய்யப்படும் செயலை சிறு மாற்றத்தோடு செய்வது ஊஹம்
அந்தச் செயலை முழுவதுமாக விடுவது பாதம் –
இது மூன்று காரணங்களால் ஏற்படலாம்
ப்ரத்யாம் நாநம் -முரண் பட்ட வேறே ஒரு கட்டளை
அர்த்த லோபம் -பிரயோஜனம் இன்மை
ப்ரதி ஷேதம் -செய்யாதே என்ற கட்டளை

அத்யாயம் -11- தந்திரம் -பிரயோகத்தைப் பற்றிய விசாரம்
தந்திரம் என்றால் பலவற்றைக் குறித்து ஒரு முறை அனுஷ்டித்தல்
பிரயோக விதியானது அங்கங்களையும் பிரதானங்களையும் சேர்த்து விதிக்கிறபடியால் அதிலிருந்து நமக்கு ஒரு சேர்க்கை தோற்றுகிறது
அச்சேர்க்கை ஒரே க்ஷணத்தில் அவை அனைத்தையும் செய்தால் தான் ஏற்படும் ஆனால் எங்கு அது இயலாதோ
அங்கு இடைவிடாமல் அடுத்து அடுத்து அனுஷ்டானம் செய்ய வேண்டும் என்று வேதமே கூறுகிறது
ஆனால் எங்கு எங்கு முடியுமோ அங்கெ சேர்த்தே அனுஷ்ட்டிக்க வேண்டும்
இதுவே தந்திரம்
1-பிரதான யாகங்களில் தந்திரம் -வெவ்வேறு தேவதைகளைக் குறித்து செய்யும் யாகங்களில் ஒரே நொடியிலே சேர்த்து செய்ய முடியா விட்டாலும்
ஒரே தேவதைக்காகச் செய்யப்படும் பல யாகங்களை ஒரே க்ஷணத்தில் சேர்த்து செய்யலாம் இது தந்திரம் ஆகும்
2-அங்கங்களுக்குள் தந்திரம் -பல யாகங்களை அங்கமாக ஒரே செயல் இருக்கும் பொழுது அவற்றுள்
காலத்தாலோ தேசத்தாலோ எந்த வேறுபாட்டையும் வேதம் காட்டா விட்டால் வேறுபாடு அறியாத படியாலே
அந்த செயலை ஒரே முறை செய்வதன் மூலம் அனைத்து யாகங்களும் உதவலாம்
இது அங்கங்களில் தந்த்ரம் ஆகும் –

அத்யாயம் -12–ப்ரஸங்கம்
ஒரு யாகத்துக்கு தன் அங்கம் ஒன்றில் இருந்து கிடைக்க வேண்டிய உதவி
வேறே ஒரு வழியில் கிடைத்து விட்டால் அந்த அங்கத்தைச் செய்யாமல் இருப்பது
எடுத்துக்காட்டு –
அக்னீ ஷோ மீயம் யாகம் -தர்ச பூர்ண மாசத்தில் இந்திரனுக்காகச் செய்யப்படும் தயிர் யாகத்தின் விக்ருதி ஆகும்
அந்த அக்னீ ஷோ மீயம் யாகத்துக்கு அங்கமாக புரோடாச யாகம் உள்ளது
அதுவும் தர்ச பூர்ண மாசத்தின் விக்ருதி தான்
தர்ச பூர்ண மாசங்களுக்கு எல்லாம் ப்ரயாஜங்கள் என்ற அங்கம் இருக்கிறபடியால் அதி தேசத்தின் மூலம்
இந்த அக்னீ ஷோ மீயத்துக்கும் புரோடாச யாகத்துக்கு கூட ப்ரயாஜங்கள் அங்கமாகின்றன –

பாட்ட மீமாம்சையில் ஆறு பிரமாணங்கள்
1-ப்ரத்யக்ஷம் -புலன்களுக்கும் பியருள்களுக்கும் உள்ள தொடர்பால் ஏற்படும் ஞானம்
2–அனுமானம் -ஒரு பொருள் மற்ற ஒரு பொருளை விட்டுப் பிரியாமல் இருந்தால் அதுக்கு வியாப்தி என்று பெயர்
இப்படி வியாப்தி உடைய பொருளை நாம் ஓர் இடத்தில் கண்டால் மற்ற ஒரு பொருள் இருப்பதை ஊஹித்து அறிகிறோம் –
புகை நெருப்பு மலைமேல் போல்
3- சப்தம் -சொற்களுக்கும் பொருளுக்கும் உள்ள தொடர்பு -சக்தி -பதார்த்த ஸ்மரணம்–வாக்யார்த்த ஞானம் –
4-உப மானம் -சத்ருஸ்ய ஞானம்
5-அர்த்தா பத்தி – பொருந்தாத இரண்டு பிரமாணங்களை பொருந்த வைக்க ஒரு விஷயத்தை கல்பித்து தான் அர்த்தா பத்தி
எது பொருந்தாமல் இருக்கிறதோ அது உப பாத்யம்
அதை பொருந்த வைக்க எது கல்பிக்கப் படுகிறதோ அது உப பாதகம்
6-அநுப லப்தி -முதல் ஐந்து பிரமாணங்களால் அறியப்பட முடிந்த ஒரு பொருளை பற்றின அறிவு ஓர் இடத்தில்
நமக்கு ஏற்பட வில்லை என்றால் அவ்விடத்தில் அந்தப் பொருள் இல்லை என்று அறிகிறோம்
உப லப்தி -என்றால் அறிவு
அநுப லப்தி என்றால் அறிவு தோன்றாமை
ஆகவே அறியக்கூடிய ஒரு பொருளை பற்றின அறிவு தோன்றாமல் இருப்பதே அநுப லப்தி

பாட்ட மீமாம்சையில் ஐந்து பதார்த்தங்கள்
1- த்ரவ்யம் –
ப்ருத்வீ ஜலம் தேஜஸ் வாயு ஆகாசம் காலம் திக்கு ஆத்மா மனஸ் தமஸ் ஸப்தம் என்ற 11 த்ரவ்யங்கள்
தேஜஸ் அபாவம் தமஸ் நியாய மதத்தில்
சப்தம் ஆகாச குணம் நியாய மாதத்தில்
இவர்கள் இத்தை த்ரவ்யம் என்கிறார்கள்
ஒன்பது த்ரவ்யங்கள் நியாய மாதத்தில்

2-ஜாதி சாமான்யம் என்ற பொதுத் தன்மை -குடத் தன்மை மாட்டுத் தன்மை போல்வன

3-குணம் என்ற பண்புகள் -இவர்களும் 24
நியாய -தர்மம் அதர்மம் சப்தம் மூன்றையும் விட்டு
மீதி 21 இவர்கள் கொண்டு
இவற்றுக்குப் பதில்
ப்ராகாட்யம்
த்வனி
சக்தி

மீமாம்ஸா தகர்சனத்தில் 24 குணங்கள்
1-ரூபம் -நிறம்
2-ரஸம் -சுவை
3-கந்தம் -மணம்
4-ஸ்பர்சம் -குளிர்த்தி வெப்பம் இரண்டும் இல்லாமை என்ற தொடு உணர்ச்சி
5-சம்க்யா-எண்ணிக்கை
6-பரிமாணம் -அணு மஹத் விபு போன்ற அளவுகள்
7-பிருத்தக்த்வம் -வேறுபாடு
8-சம்யோகம் -சேர்க்கை
9-விபாகம் -பிரிவு
10-பரத்வம் -தொலைவு முதுமை
11-அபரத்வம் -அருகில் இளைமை
12-குருத்வம் -எடை
13-த்ரவத்வம் -நீர்மை
14-ஸ்நேகம் -பசைத்தன்மை
15-புத்தி -அறிவு
இது நியாய மதத்தில் ப்ரத்யக்ஷம்-மனசால் அறியப்படுவது
மீமாம்சையில் இதை அனுமானம் தான் செய்யலாம்
16-ஸூகம் -ஐஹிகம் -ஆமுஷ் மிகம் -ஸ்வர்க்கம் -அப வர்கம் -மூ வகைப்பட்டது
17- துக்கம் – ஐஹிகம் -ஆமுஷ் மிகம்-நரகம் -இரண்டு வகைப்பட்டது
18-இச்சை -ஆசை
19-த்வேஷம் -வெறுப்பு
20-பிரயத்தனம் -முயற்சி
21-சம்ஸ்காரம் -வேகம் பாவனை ஸ்திதி ஸ்தாபனம் என்று மூன்று வகைப்படும்
22-த்வனி இது வாயுவின் குணம் -நம் தொண்டை வாயின் வியாபாரத்தால் வாயுவில்
இந்த குணம் ஏற்பட்டு இது தான் சப்தத்தை வெளிப்படுத்து கிறது
23-ப்ராகட்யம் -ஒரு பொருளில் உள்ள அறியப்படுதல் -பயின்ற குணம் –
இதைக் கண்டு தான் நமக்கு அறிவு ஏற்படுவதை நாம் அனுமானம் செய்யலாம்
24-திறமை -இது இரண்டு வகைப்படும்
லௌகிக சக்தி -நெருப்புக்கு எரிக்கும் சக்தி நீருக்கு நெருப்பை அணைக்கும் சக்தி போல்வன
வைதிக சக்தி ஜ்யோதிஷ்டோமம் முதலானவற்றுக்கு ஸ்வர்க்கம் கொடுக்கும் சக்தி போல் வன

4-கிரியை என்ற செயல்
கர்மம் கிரியை செயல்
இது விபு அல்லாத த்ரவ்யங்களில் மட்டும் இருக்கும்
விபு த்ரவ்யங்களால் நகர முடியாதே
இது புலன்களால் க்ரஹிக்கக் கூடியது
உத்ஷேபநம் மேலே செல்லுதல் போல்வன -நியாய மதம் போலவே
சம்யோகத்துக்கும் விபாகத்துக்கும் காரணமானது –

5-அபாவம் என்ற இன்மை
ப்ராபகரர்கள் அபாவம் ஏற்க வில்லை

ப்ராக் அபாவம்
ப்ரத்வம்ஸா அபாவம்
அத்யந்த அபாவம்
அந்யோன்ய அபாவம்

இது பிரபாகர் மீமாம்சகரால் எபிற்கப்படுவது இல்லை
பாட்ட மீமாம்ஸகர்கள் அநுப லப்தி ப்ரமாணத்தால் இது அறியப்படுகிறது -க்ரஹிக்கப் படுகிறது – என்பர்

நியாய மதத்தில் ஏற்கப்பட்ட
விசேஷம்
சமவாயம்
பதார்த்தங்களை இவர்கள் ஏற்க வில்லை –

—————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கணாதர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாசர் -பாதராயணர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நியாய மீமாம்ச வேதாந்த பாடங்கள்–ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்– — நியாய சாஸ்த்ரம்– பாடம் -40–

August 5, 2021

பாடம் -40-நியாய சாஸ்த்ர சுருக்கங்கள் பார்த்து –
அவை வேதாந்த பாடத்துக்கு உதவு மவற்றைப் பார்த்து நிகமிப்போம் –

அறிவின்மை இருளைப் போக்கவே வேதம் -மானம் ப்ரதீதி
த்யாஜ்ய உபாதேய விபாகம் பெறுவதற்கு உதவும்
ஸாஸனாத் -ஸாஸ்த்ரம்
18-வித்யா ஸ்தானங்கள் -நான்கு வேதங்கள் -ஆறு அங்கங்கள் -எட்டு உப அங்கங்கள்

நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களும்
ருக் யஜுஸ் சாமம் அதர்வணம்
வேதத்தின் சொற்களை காக்க
1-சிஷா -எழுத்துக்களின் உருவாக்கம் உச்சரிப்பு கற்க
2-சந்தஸ் -செய்யுள்களின் எழுத்துக்களின் அளவு மற்றும் தன்மைகளை பயில

வேதத்தின் பொருளைக் காக்க
3-வியாகரணம் -சொல்லின் பகுதிகளையும் அவற்றின் பொருள்களையும் அறிய
4-நிருக்தம் -வேதத்தில் கடினமான பதங்களுக்குப் பொருள் தெரிய

வைதிக கர்மங்களின் பிரயோகத்தைக் காக்க
5-கல்பம் -வைதிக கர்மங்களை செய்யும் முறையைப் புரிய
6-ஜ்யோதிஷம் -வைதிக கர்மங்களை செய்யும் காலத்தை நிர்ணயிக்க

வேதங்களின் எட்டு உப அங்கங்கள்
1-புராணங்கள் -நற் பண்புகளை வளர்க்க
2-நியாயம் -பொருள்களின் தன்மைகளை அறிய -தர்க்க சாஸ்திரம் என்றும் இதற்கு பெயர்
3-மீமாம்ஸை -வேதங்களை ஆராய
4-தர்ம சாஸ்திரம் -ஆசாரம் கடைப்பிடிக்க
5-ஆயுர் வேதம் -உடலைப் பராமரிக்க
6-தனுர் வேதம் -அரசர்கள் நாட்டைக் காக்க
7-காந்தர்வ வேதம் -சங்கீத சாஸ்திரம் -மனசை சாந்தமாக்க
8–அர்த்த ஸாஸ்த்ரம் -அரசர்கள் ராஜ்ஜியம் செய்ய –

நியாயத்தின் முக்யத்வம்
காணாதாம் பாணி நீயம் ச ஸர்வ ஸாஸ்த்ர உபகாரகம்

நியாமமும் வியாகாரணமும் அனைத்து சாஸ்திரங்களுக்கும் உதவுகின்றன

ஆர்ஷம் தர்ம உபதேசம் ச வேத ஸாஸ்த்ர அவிரோதி நா
யஸ் தர்கேண அநு சந்தத்தே ச தர்மம் வேத ந இதர -மனு ஸ்ம்ருதி -2-106-

ஆர்ஷம் என்னும் வேதத்தையும் -ஸ்ருதிகளையும்-
தர்ம உபதேசம் என்னும் ஸ்ம்ருதிகளையும்
வேதத்தோடு முரண்படாத தர்க்கத்தைக் கொண்டு எவன் ஆராய்கிறானோ அவன் தான் தர்மத்தை அறிகிறான்
மற்றவன் அறிவது இல்லை

வைசேஷிக மதம்
ப்ராஸீன நியாய மதம்
மற்றும் நவீன நியாய மதம்

வைசேஷிக மதம்
கணாத மகரிஷி -வைசேஷிக ஸூத்ரங்கள்
ப்ரசஸ்தா பாதர் -பதார்த்த தர்ம ஸங்க்ரஹம்

ப்ராஸீன நியாய மதம்
கௌதம மகரிஷி -நியாய ஸூத்ரங்கள்
வாத்ஸ்யாயனர் -நியாய பாஷ்யம்
உத்யோதகரர் -நியாய வார்த்திகம்
வாசஸ்பதி மிஸ்ரர் -நியாய வார்திக தாத்பர்ய டீகா
உதயநாச்சார்யர் -நியாய வார்திக தாத்பர்ய டீகா பரிசுத்தி

நவீன நியாய மதம்
கங்கேச உபாத்யாயர் –தத்வ சிந்தாமணி
ரகுநாத சிரோமணி -தத்வ சிந்தாமணி தீதிதி
ஜகதீச தர்க்க அலங்காரர் -ஜகதீச
கதாதர பட்டாச்சார்யார் -தீதிதி பிரகாசிகை

நியாய சாஸ்திரத்தின் செயல்முறை
பொருள்களை பிரித்து ஆராய்வதன் பயிற்சி
அதன் படிகள்
1-உத்தேசம் -பெயராலே பொருள்களைக் குறிப்பிடுதல்
2- லக்ஷணம் -பொருள்களின் லக்ஷணத்தை -தனித் தன்மையை உரைத்தல் -அசாதாரணம் –
3–பரீஷா –பொருள்களையும் அவற்றின் தனித் தன்மையையும் சோதித்து நிலை நாட்டுதல்

ஒரு பொருளின் தனித் தன்மையை அதன் லக்ஷணம் ஆகிறது
லக்ஷணம் என்பதில்
அசம்பவம்
அவ்யாப்தி அதிவ்யாப்தி -மூன்று தோஷங்களும் இல்லாமல் இருக்க வேண்டும்

அசம்பவம் -ஒரு பொருளின் லக்ஷணம் அந்தப் பொருளில் இல்லாமை
அவ்யாப்தி –ஒரு பொருளின் லக்ஷணமாக அந்தப் பொருளின் சில எடுத்துக் காட்டுக்களில் இருந்து சிலவற்றில் இல்லாமை
அதிவ்யாப்தி -ஒரு பொருளின் லக்ஷணம் அந்தப் பொருளிலும் இருந்து வேற பொருள்களில் இருத்தல்

ஏழு பதார்த்தங்கள்
பதார்த்தம் என்னும் சொல் உலகில் உள்ள அனைத்தையும் கூறும்
ஒரு சொல்லின் பொருளாக இருத்தல் -ஒரு சொல்லாலே குறிப்பிடுதல் தான் உலகில் உள்ள அனைத்துக்கும் -பதார்த்தத்துக்கு -லக்ஷணம் –

பதார்த்தங்கள் ஏழு வகைப்படும்
1-த்ரவ்யங்கள் -நாம் காணும் கல் மண் போன்ற வஸ்துக்கள்
2- குணம் -நிறம் சுவை மணம் போன்ற பண்புகள்
3-கர்ம -செயல்கள்
4-சாமான்யம் -பொதுத்தன்மை -பலபொருள்களில் மாடு குடம் என்று ஒரே மாதிரியான புத்தி ஏற்படக் காரணமாய் இருப்பது
5- விசேஷம் –சிறப்பு -தனித்துவம் -வேறு எந்த முறையிலும் பிரித்து அறிய முடியாத பரம அணுக்களுக்குள் வேறு பாட்டைக் காட்டுவது
6-சமவாயம் -த்ரவ்யம் குணம் கர்ம சாமான்யம் விசேஷம் ஆகியவை ஒரு த்ரவ்யத்தை அண்டி இருக்கும் போது அவற்றுக்குள் இருக்கும் தொடர்பு
7-அபாவம் -இன்மை இல்லாமை

1-த்ரவ்யங்கள் ஒன்பது வகைப்படும்
1-பிருத்வீ -நிலம் -கந்தவதி பிருத்வி -மணம் உள்ளது
2-அப்பு -நீர் -குளிர்ந்த ஸ்பர்சம் இதுக்கு லக்ஷணம்
3-தேஜஸ்ஸூ -நெருப்பு -வெப்பமாக- உஷ்ண ஸ்பர்சவத் இருப்பதே லக்ஷணம் –
4-வாயு -காற்று -நிறம் அற்றதாக(இத்தால் கீழ் சொன்ன மூன்றும் தள்ளுபடி ) ஸ்பர்சம் உள்ளதாக இருப்பது –
5-ஆகாசம் -ஆகாயம் -விபு என்பர் இத்தை -அணுக்கள் கிடையாது -ஸப்த குணகம் ஆகாசம் -பிரிக்க முடியாதது
6-காலம் -காலம் -அதீத வியவஹார ஹேது -அனைத்துக்கும் ஆதாரம் இது
மாலையில் சென்னையில் ராமன் இருந்தான் -ஏழாம் வேற்றுமை -அனைத்தையும் தாங்கும் -அதிகரணம் தேசம் போல் காலமும் –
7-திக்கு -திசை
8-ஆத்மா -ஆன்மா -ஞானம் உடையவர் -ஞான அதிகரணம் ஆத்ம லக்ஷணம் -அறிவின் அளவில் வாசி இருக்கும்
9-மனஸ் -மனது -மனசால் நினைக்கிறேன் -கருவி அந்தக்கரணம் –

பரமாணு காரணத்வாதிகள் இவர்கள் -பிருத்வீ -நிலம் மண் செடி பஞ்சு -பூமியில் வந்த அனைத்தும்
இவை சேர்ந்து த்வி -மூன்று த்ரி -சேர்ந்து கண்ணால் பார்க்கும் பொருள்கள் உண்டாக்கப்படுகிறது
நியாயம் படி பரமாணுக்கள் நித்யம் -அழிவோ உத்பத்தியோ இல்லை –
ஆக பரமாணு -கார்ய த்ரவ்யங்கள் இரண்டும் இவற்றுக்கு உண்டு

2-குணங்களின் வகைகள் –24-வகைப்படும்
1-ரூபம் -நிறம் -பிருத்வி அப்பு தேஜஸ் மூன்றுக்கும்
2-ரஸம் -சுவை -ஆறு சுவை -பிருத்வி -நீர் மட்டுக்கும்-மதுர ரசம் நீருக்கு
3-கந்தம் -மணம் -பிருத்வி மட்டுக்கும்
4-ஸ்பர்சம் -தொடு உணர்வு -உஷ்ணம் தேஜஸ் சீதம் ஜலத்துக்கு நடுநிலை பிருத்விக்கும் வாயுவுக்கும்
5-சம்க்யா -எண்ணிக்கை
6-பரிமாணம் -அளவு
7-ப்ருதக்த்வம் -வேறுபாடு
8-ஸம்யோகம் -சேர்க்கை -மோதிரம் கையில் –
9-விபாகம் -பிரிவு
10-பரத்வம் -தொலைவு -வயசாலும் பழைமை
11-அபரத்வம் -அருகாமை
12-குருத்வம் -எடை -பிருத்விக்கும் ஜலத்துக்கும் மட்டும் –
13-த்ரவத்வம் -த்ரவத் தன்மை
14-ஸ்நேஹம் -பசைத் தன்மை
15-ஸப்தம் -ஒலி -ஆகாச தன்மை -வர்ணாத்மகம் எழுத்து –அவர்ணாத்மகம் -கை தட்டும் ஓசை இரண்டு வகை
16-புத்தி -அறிவு
17-ஸூகம் -இன்பம்
18-துக்கம் -துன்பம்
19-இச்சா -ஆசை
20-த்வேஷம் -வெறுப்பு
21-பிரயத்தனம் -முயற்சி
22-தர்மம் -நல் வினை
23-அதர்மம் -தீ வினை
24-சம்ஸ்காரம் -பதிவு

3-கர்மங்களின் வகைகள் -ஐந்து
1-உத்க்ஷேபணம்–மேலே செல்லுதல்
2-அப ஷேபணம்–கீழே செல்லுதல்
3-ஆகுஞ்சனம் -மடித்தல்
4-ப்ரசாரணம் -விரித்தல்
5-கமநம் -பக்கவாட்டில் செல்லுதல்

4-சாமான்யம் -பொதுத்தன்மை
பல பொருள்களில் ஒரே மாதிரியான புத்தியானது அந்தப்பொருள்களில் பொதுவான ஒரு தன்மை இல்லாமல் ஏற்படாது
கருப்பான மாடு -கருப்பான ஆடு என்னும் அறிவு கருமை என்னும் பண்பு மாட்டிலும் ஆட்டிலும் இல்லாவிடில் ஏற்படாது

பண்புகளால் வேறுபட்ட பல பொருள்களில் ஒரே மாதிரியான அறிவு ஏற்படுவதைப் பார்க்கிறோம்
இது கருப்பான மாடு வெள்ளையான மாடு -இரண்டிலும் பொதுவான -மாட்டுத்தன்மை -என்று
ஓன்று இல்லாமல் இந்த அறிவு ஏற்படாது
ஆகவே மாட்டுத் தன்மை என்னும் ஸாமான்யத்தை -ஜாதியை கல்பிக்கிறோம் -அனுமானிக்கிறோம் –

குடத்தன்மை –இதுக்கும் மேல் -நிலத் தன்மை –இதுக்கும் மேல் த்ரவ்யத்வம் –

5-விசேஷம்
பரமாணு போன்ற எந்த த்ரவ்யத்துக்கு பகுதிகள் -அவயவங்கள் இல்லையோ –
அதை மற்ற த்ரவ்யங்களில் இருந்து வேறுபடுத்த வேறு வழி இல்லாத படியால்
அந்த த்ரவ்யத்தில் விசேஷம் என்ற ஒரு பதார்த்தம் கல்பிக்கப் படுகிறது

அப்படி அவயவங்கள் இல்லாத த்ரவ்யங்கள் எவை
நித்தியமான த்ரவ்யங்கள் தான்

நித்யம் என்றால் எப்போதும் இருப்பது -அதாவது உண்டாக்குவதும் அழிவும் இல்லாதது –

பகுதிகள் அவயவங்கள் கொண்ட ஒரு த்ரவ்யம் கட்டாயம் ஒரு நாள் அவற்றின் சேர்க்கையால் உண்டாகி இருக்கும் –
வேறே ஒரு நாள் அவற்றின் பிரிவால் அழிந்து போகும்

ஆகவே நித்யமான பொருள்கள் தான் -பகுதிகள் அவயவங்கள் இல்லாமல் இருக்கும்
ஆகவே விசேஷம் என்பது நித்ய த்ரவ்யங்களில் மட்டும் இருக்கும் என்று அறியலாம் –

6-சமவாயம்
ஒரு த்ரவ்யத்துக்கும் -அதில் இருக்கும் த்ரவ்யம் குணம் செயல் சாமான்யம் விசேஷம் ஆகியவற்றுக்கும்
உள்ள சம்பந்தம் சம்யோகமாக இருக்க முடியாது -த்ரவ்யங்களுக்கு இடையில் மட்டுமே சம்யோகம் இருக்கிற படியால்
மேலும் ஸம்யோகத்தால் சேர்ந்த இரு பொருள்களை பிரிக்க முடியும்
ஆனால் குணமோ செயலோ சாமான்யமோ விசேஷமோ அவற்றின் இருப்பிடமான த்ரவ்யத்தின் இடம் இருந்து பிரிக்க முடியாது
ஆகையால் சாமான்யம் என்ற ஒரு புதிய தொடர்பைக் கல்பிக்கிறோம் –

அபாவம்
த்ரவ்யம் குணம் செயல் சாமான்யங்களைப் பார்ப்பது போல் இன்மையையும்
இங்கு குடம் இல்லை த்ரவ்ய அபாவம்
இது சிவப்பாக இல்லை -குண அபாவம்
இது நகரவில்லை -செயல் அபாவம்
இதில் மாட்டுத்தன்மை இல்லை -சாமான்ய அபாவம்
குடத்தில் விசேஷம் இல்லை -விசேஷ அபாவம்
இரு த்ரவ்யங்களுக்கும் சமவாயம் இல்லை -சமவாய அபாவம்
ஆகையால் அபாவம் என்று ஏழாவது பதார்த்தம் கல்பிக்கப்படுகிறது

இது நான்கு வகைப்படும்
1-ப்ராக் அபாவம்
2-ப்ரத்வம்ஸ அபாவம்
3-அத்யந்த அபாவம்
4-அந்யோன்ய அபாவம்

ஞானத்தின் வகைகள் இரண்டு
1-ஸ்ம்ருதி நினைவு
2-அனுபவம்
ஒரு பொருளை பார்க்கும் பொழுது கேட்க்கும் பொழுது ஆத்மாவில் சம்ஸ்காரம் பதிவு ஏற்படுத்தி விட்டுச் செல்கிறது
அதனுடன் தொடர்வு உள்ள வேறே ஒன்றைக் கண்டால் கேட்டால் இந்த ஸம்ஸ்காரத்தால் தூண்டப்பட்டு நினைவு ஏற்படுகிறது
அனுபவம் புதிதாக ஒரு பொருளை காண்பது கேட்பது

இது இரண்டு வகை
யதார்த்தம்
அயதார்த்தம்

ஒரு தன்மையை உண்மையாகவே யுடைய ஒரு பொருளை அந்தத் தன்மையை யுடையதாக அறியும் அனுபவம்
குடத்தைப் பார்த்து குடம் என்று அறிதல்
ஒரு தன்மை இல்லாத ஒரு பொருளை அந்தத்தன்மை யுடையதாக அறிவது அயதார்த்தம்
ஒரு கயிற்றைப் பார்த்து பாம்பு என்று அறிதல் –

யதார்த்த அறிவு நான்கு வகை
1-ப்ரத்யக்ஷம் புலன்களால் அறிவது
2-அநு மிதி -ஊகத்தால் ஏற்படும் ஞானம்
3-உப மிதி -சொல்லுக்கும் பொருளுக்கும் உள்ள தொடர்பு
4-சாப்த போதம் -சொல் தொடரைக் கேட்டவுடன் ஏற்படும் அறிவு

அயதார்த்தம் மூன்று வகை
1-சம்சயம்
2-விபர்யயம்
3-தர்க்கம்

யதார்த்த அனுபவம் ப்ரமா என்றும் சொல்லுகிறோம்
அறிவுக்கு விஷயம் ப்ரமேயம்
ஞானம் உடைய ஆத்மா ப்ரமாதா
அறிவுக்கு -ப்ரமாவுக்கு காரணம் பிரமாணம்
கரணம் அறிய காரணம் அறிய வேண்டும் -காரணம் அறிய காரியம் அறிய வேண்டும் –

ப்ரத்யக்ஷம் -பிரதி முன்னால் -அக்ஷம் -கண் -புலன்களால் ஏற்படும் அறிவு -ப்ரத்யக்ஷ ப்ரமா
இந்த்ரியத்துக்கும் க்ரஹிக்கப்படும் பொருளுக்கும் -அர்த்தத்துக்கும் -இடையில் உள்ள தொடர்பால் ஏற்படும் ஞானம்
அப்படிப்பட்ட ப்ரத்யக்ஷம் என்ற ப்ரமாவுக்கு -ஞானத்துக்கு அஸாதிகாரணமான காரணம் இந்திரியங்கள்
அவற்றுக்கும் ப்ரத்யக்ஷ பிரமாணம் என்று பெயர்

அநு மிதிக்கு காரணம் அனுமானம்
அடுப்பு விளக்கு இவற்றைப் பார்த்து-நெருப்பையும் புகையும் சேந்து இருப்பதை பார்த்து
எங்கு எங்கு புகை உள்ளதோ அங்கு நெருப்பு இருக்க வேண்டும்
பின்பு மலையில் புகையைப் பார்த்து நெருப்பு இருக்க வேண்டும் என்று -முன்பு அறிந்து வைத்த தகவல் நினைவுக்கு வர
நெருப்பை விட்டு பிரியாத புகை உடையது இந்த மலை என்ற அறிவு ஏற்படுமே இதுவே பரமார்சம்
இந்த மலையில் கண்டிப்பாக நெருப்பு உள்ளதே என்று அறிவதே அநு மிதி ஆகும் –

அனுமானம் முக்கியம் இந்த நியாய சாஸ்திரத்தில் ஆன்மிஷிகி -என்றே இதற்குப் பெயர்

உப மிதிக்கு -காரணம் உப மானம்
நாட்டில் கோ என்ற மாட்டைப் போல் உள்ளதே காட்டில் உள்ள கவயம் என்பது போல்
ஸாத்ருஸ்யத்தைக் கண்ணால் கண்டு அறியும் அறிவு

ஸப்த பிரமாணம்
ஆப்த வாக்யம் ஸப்த -என்பதே லக்ஷணம் ஆப்தனால் சொல்லப்பட்ட சொல் தொடரே ஸப்தம்
உள்ளபடி அறியாதவர் நன்மையைச் செய்ய முடியாது
உள்ளபடி அறிந்து இருந்தாலும் வஞ்சனையுடன் இருந்தாலும் நன்மை ஏற்படாதே
பொருளை உள்ளபடியே அறிந்து அப்படியே கூறுபவர் ஆப்தர்

வாக்கியம் -பத ஸமூஹம் -சொல் தொடர்
சக்தம் பதம் -சக்தியை யுடைய ஒன்றே சக்தம்
பொருளை போதிக்கும் சக்தியை திறனை உடைய சொல்லுக்குப் பதம் என்று பெயர்
சொல் தொடர் ஒலிகளின் வரிசை -ஒலிகள் ஆகாசம் மூலம் பரவி நம் காதை அடைகின்றன –
காது இந்திரியம் ஒலியை கிரஹிக்கும் அறிவு ப்ரத்யக்ஷம்
ஒவ்வொரு சொல்லின் பொருளையும் ஸ்மரணம் ஸ்ம்ருதி

ராமன் மாரீசனைக் கொன்றான்
ராமன் மாரீசன் கொலை கடந்த காலம் ஒருமை ஆண் பால் என்ற நினைவு ஏற்படவே
சப்தத்துக்கும் அர்த்தத்துக்கும் உள்ள தொடர்பை சக்தியை அறிந்து இருக்க வேண்டும்
இவற்றின் பொருளையும் இவற்றின் சம்பந்த ஞானமும்-பற்றிய அறிவே
வாக்யார்த்த ஞானம் சாப்த போதம் ஆகும் –

இது ஏற்பட தேவைகள்
1-ஆகாங்ஷை -எதிர்பார்ப்பு -எந்த பதங்களோடு சேர்ந்தால் மட்டும் விஷயத்தைப் போதிக்குமோ
அந்த ஆகாங்ஷையை அறிந்தால் தான் சாப்த போதம் ஏற்படும்
2- யோக்யதா -சொல் தொடரின் அர்த்தம் சாத்தியமாக இருக்க வேண்டுமே
நெருப்பால் நனைகிறான் சொல் தொடரில் சாப்த போதம் ஏற்படாதே – நனைதல் என்ற செயலில்
கருவியாக நெருப்பு ஆகாதே என்ற புரிதல் ஏற்படுகிற படியால்
3-சந்நிதி -சொற்களில் இடைவெளி இல்லாத உச்சரிப்பு
சொற்கள் அடுத்து அடுத்து உச்சரிக்கப்பட்டு ஒரே சமயத்திற்க்கேட்பவரின் மனதில் இருக்க வேண்டும்
4-தாத்பர்யம் -பேசுபவரின் இச்சை கருத்து -ஒரே சொல்லுக்குப்பல பொருள்கள் இருக்கக் கூடுமாகையால்
பேசுபரின் கருத்தை அறிந்தால் தான் சொல் தொடரின் பொருளை அறிய முடியும் –

அயதார்த்த அனுபவம்
1-சம்சயம் -கயிறா பாம்பா -கிளிஞ்சலா வெள்ளியா -சந்தேகம்
2-விபர்யயம் -மஞ்சக் காமாலையால் வெள்ளையான சங்கை மஞ்சள் என்று ட்தப்பாக தீர்மானித்தல்
3- தர்கம்-பொருள்களின் தன்மைகளை பார்த்து இந்தப்
பொருள் இப்படிப்பட்டதாக இருந்து இருந்தால் கண்டிப்பாக
அதற்கு அந்தத் தன்மையும் இருந்து இருக்கும் என்ற வாதம் செய்வதே தர்கம் என்று பெயர் –

இந்த ப்ரமாணங்களால் -அறிவின்மை போக்கி –ஆசை வெறுப்பு கழிந்து -பாபம் புண்யம் கழிந்து –
மறு ஜென்மம் இல்லாமல் – துக்க நிவ்ருத்தி -முத்தி அடையலாம் என்பர் நியாய ஸாஸ்த்ரத்தில் –

—————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கணாதர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாசர் -பாதராயணர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நியாய மீமாம்ச வேதாந்த பாடங்கள்–ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்–பகுதி -3 –வேதாந்த சாஸ்த்ரம்– பாடங்கள் -31-39 —

August 5, 2021

பாடம் -31–பரமாத்மா யார்

தத்வம் புருஷார்த்தம் ஹிதம் -மூன்றையும்
வஸ்துக்கள் உண்மைப்பொருள்கள் இலக்கு வழி-அறிய வேண்டும்
ஞான த்ரயம் உபாதேயம் -ஸ்வ ஞானம் ப்ராப்ய ஞானம் ப்ராபக ஞானம் -மூன்றையும் அறிய வேண்டுமே –
தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு
கடல் நதிகளுக்கு இலக்கு -பூ கதிரவனையே நோக்கும் -உயிர் எம தர்ம ராஜனையே நோக்கும் –

ஜீவாத்மா தன்னுடைய ஞானத்தைக் கொண்டு அறிய வேண்டிய பொருள்களில் முக்கியமானவர் பரமாத்மா
அவரை அறிவதே அறிவின் பயன் என்று ஸாஸ்திரங்கள் கூறுகின்றன
பரமாத்மா என்று ஒருவரை ஏற்பதையும் ஏற்காததையும் வைத்து
ஆஸ்திக தர்சனங்கள் என்றும் நாஸ்திக தர்சனங்கள் என்றும் பிரிக்கப் படுகின்றன
பரமாத்மாவை ஏற்கும் தர்சனங்களிலும் கூட அவரைப் பற்றி பலவிதமான கருத்துக்கள் உள்ளன –

சாங்க்யர்கள்
பரமாத்மா என்பவர் ஸ்ருஷ்டிக்கு காரணமாய் எட்டு ஸித்திகளையும் பெற்றவர் என்கிறார்கள்
அணிமா –ஈஸித்வம்-வஸித்வம் -அஷ்ட மஹா சித்திகள்

யோக மதத்தைச் சேர்ந்தவர்கள் –
பரமாத்மா -அவித்யா அஸ்மிதா ராகம் த்வேஷம் அபி நிவேசம் என்ற ஐந்து கிலேசங்களும்
கர்மங்கள் பிறப்பு ஆயுஸ் போகம் என்ற மூன்று விபாகங்களும்
பாப புண்யங்கள் என்ற ஆசயங்களும்-
அற்றவர் பரமாத்மா
அவரே வேதத்தை இயற்றி அதை உலகுக்குக் கொடுத்தார் என்று கூறுகிறார்கள் –

பாசுபத மதம் -ருத்ரன்

புராண -நான்முகன்

புத்தர்கள்
உலகம் க்ஷணிகம் என்றும் பொய்யானது என்றும் அறிந்தவரே ஈஸ்வரன் என்கிறார்கள்

ஜைனம் -தர்மங்கள் அதர்மங்கள் உடல் மூன்றும் ஆவரணங்கள் மூடி
மேல் நோக்கி பிரயாணம் ஜீவாத்மா இயற்கையில்

சாருவாகர்கள் -மிகுந்த யுக புருஷர்கள் -ராஜாக்கள் -வடிவில் கடவுள் என்பர்

நியாய மாதத்தில்
ஜடமாய்-அளவற்ற ஞானம் உடையவராய்-ஸூகம் துக்கம் பாபம் புண்ணியம் அற்றவராய்
உலகைப் படைப்பவர் பரமாத்மா என்கிறார்கள்

மீமாம்ஸையில் யாகங்களில் உச்சரிக்கப்படும் மந்திரங்களே கடவுள்
யஜ்ஜை ரூபியே ஈஸ்வரன் என்றும் சிலர் மீமாம்ஸா

அத்வைத மதத்தின் படி
குற்றம் அற்றவராய் ஞானம் ஆனந்த வடிவமாய் இருப்பவர் பரமாத்மா –
சச்சிதானந்த ஸ்வரூபன் நிர்மலன் -ஸத் -சித் -ஆனந்தம் —
அவித்யையால் மறைக்கப்பட்டு ப்ரஹ்மத்துக்கே பிரமம்
ஆச்சாத்தான சக்தி மறைக்கும்

விசிஷ்டாத்வைத ஸ்ரீ வைஷ்ணவ சித்தாந்தத்தின் படியே
இவனே புருஷோத்தமன்
அகில ஹேய ப்ரத்ய நீகன் -கல்யாணை ஏக –
ஸர்வஞ்ஞன் -சர்வ சக்தன் -சர்வ அந்தர்யாமி –
ஞான பல இத்யாதி
அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டன்
ஸூ பாஸ்ரயம்
ஸ்ரீ யபதி
ஞான ஆனந்த வடிவமாய்
உலகைக் காத்து படைத்து அழிப்பவராய்
உலகத்தில் உள்ள அனைத்துப் பொருள்களுக்கும் இருப்பவராய்
குற்றங்களே அற்றவராய்
கணக்கற்ற கல்யாண குணங்களை யுடைய ஸ்ரீ மன் நாராயணன் பரமாத்மா —

ப்ரஹ்மம் என்றால் என்ன
வேதங்களில் பரம் பொருளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட சொற்களில் முக்கியமானது ப்ரஹ்மம் என்கிற சொல்
எந்தச் சொல்லும் ஒரு தன்மையை முதலில் உணர்த்தி பின் அந்தத் தன்மையை யுடைய பொருளைக் குறிக்கும்
அதே போல் ப்ரஹ்மம் என்ற சொல் -உயர்வு அல்லது பெரிதாய் இருத்தல் – என்ற தன்மையை யுடைய பொருளையே குறிக்கும்
இந்தச் சொல் பிரகிருதி -முக்த ஆத்மா மற்றும் பரமாத்மா-மூவரையும் குறிக்கவும் வேதத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளது
இவை மூன்றுக்குமே ஒவ்வொரு படியால் உயர்வு உள்ள படியாலேயோ அவை பெரியதாய் இருக்கும் படியாலேயோ அது பொருந்தும்
ஆனால் இவற்றுள் முக்கியமான பொருள் எது என்று அறிய வேண்டும்

ஒரு சொல்லால் உணர்த்தப்படும் தன்மை பல பொருள்களில் இருந்தால் அவை அனைத்துமே அந்தச் சொல்லின் பொருள் ஆகும் –
ஆனால் அந்தத்தன்மை எந்தப்பொருளில் முழுமையாக -அதிகமாக -உள்ளதோ -அதுவே அந்தச் சொல்லின் முக்கிய பொருள் ஆகும்
அந்த முறையில் பார்த்தால் ஸ்வரூபத்தாலும் தன்னுடைய குணங்களாலும் பரமாத்மா தான் மற்ற இரண்டையும் காட்டிலும் மிக மிக உயர்ந்தவர்
எனவே ப்ரஹ்மம் என்ற சொல்லுக்கு பரமாத்மாவே முக்கிய பொருள் ஆவார் –
பகவான் -சப்த பிரயோகம் போல் -ஆறு குணங்களும் பூர்ணம் -அவனுக்கு -மற்றவர்களுக்கு கௌணம் போல் ப்ரஹ்மம் சப்தமும் –
எனவே ப்ரக்ருதி அல்லது முக்தாத்மாவைக் குறிக்க ப்ரஹ்மம் என்ற சொல்லை உபயோகித்தால் அது தவறு அல்ல
ஆனால் அது இரண்டாம் பக்ஷ பொருள் தான் -முக்கியம் அல்ல -இதுக்கு அமுக்யம் கௌணம் என்று பெயர் –

ப்ரஹ்மத்தின் லக்ஷணம் என்ன
லக்ஷணம் -தனித்தன்மை -பலவும் பரமாத்மாவுக்குச் சொல்லலாம்
ஸர்வேஸ்வரத்வம் -அனைத்தையும் இயக்குதல்
ஸர்வ சேஷித்வம் -அனைத்துக்கும் ஸ்வாமி
ஸர்வ கர்ம ஸமாராதித்யம் -எல்லா வைதிக செயல்கஜலாலும் பூஜிக்கப்படுத்தல்
ஸர்வ கர்ம பல பிரதத்வம்
ஸர்வ ஆதாரத்வம்
ஸர்வ ஸரீரத்வம் –போன்ற பலவும் சொல்லலாம் –

லக்ஷணங்கள் இரண்டு வகைப்படும்
ஸ்வரூப லக்ஷணம் -தன்மைகளை வைத்தே லக்ஷணம் சொல்லுதல் –
தடஸ்த லக்ஷணம் -வேறே ஒரு பொருளைக் கொண்டு வேறே ஒரு பொருளுக்கு லக்ஷணம் சொல்லுதல்
கரையில் நின்று நதியைக் காட்டுவது போல் –

ப்ரஹ்மத்தின் தடஸ்த லக்ஷணம்
உலகு அனைத்தையும் காத்து படைத்து அழிப்பவர்
இங்கு உலகம் என்ற வேறே ஒரு பொருளைக் கொண்டு ப்ரஹ்ம லக்ஷணம்
தைத்ரியம் -வருணன் தன் பிள்ளைக்கு உபதேசம்
ஜென்மாதிகரணம் –
ஸ்ரீ விஷ்ணு புராணம் -இத்தையே சொல்லும் –

ஸ்வரூப லக்ஷணம்
ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம்
என்றுமே மாறாமல் ஒரே மாதிரி உள்ளபடியால் பிரக்ருதியைக் காட்டிலும் வேறுபட்டதாகவும்
என்றுமே குறைவில்லாத ஞானம் யுடையவர் -பக்த முக்த வ்யாவ்ருத்தம்
தேச கால வஸ்து–த்ரிவித அபரிச்சேத்யம்-அளக்க முடியாத படியால் நித்யர்களில் வேறுபாடு –
இந்த மூன்று தன்மைகளின் சேர்க்கையே ப்ரஹ்மத்தின் ஸ்வரூப லக்ஷணம் –

———-

பாடம் -32-பரமாத்ம ஸ்வரூபம்
ஸ்ரீ சரணாகதி கத்யத்தில் ஸ்ரீ ராமானுஜர் -பகவத் ஸ்வரூபம் –
இன்றியமையாத தன்மைகள் என்ன என்று அருளிச் செய்கிறார் –

அகில ஹேய ப்ரத்ய நீக -கல்யாண ஏக ஸ்தான –ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணன் –
அநந்த -ஞான ஆனந்த ஏக ஸ்வரூப –

இவையே ஸ்வரூப நிரூபக தர்மங்கள் –

1- அகில ஹேய ப்ரத்ய நீக
எல்லாவித தோஷங்களுக்கும் எதிர்த் தட்டானவர்
அசேதனங்களுக்கு விகாரம் என்கிற தோஷமும்
பத்தர்களுக்கு சம்சார சம்பந்த தோஷமும் -துக்க அஞ்ஞானம் மலம் –தோஷங்கள் பிரகிருதி சம்பந்தத்தால் -விஷ்ணு புராணம்
முக்தர்களுக்கு முன்பு ஒரு நாள் சம்சார சம்பந்தம் இருந்தது என்கிற தோஷமும்
நித்யர்களுக்கு பரிச்சேத -அளவுபட்டு இருத்தல் -வேறே ஒருவருக்கு ஆள்பட்டு இருத்தல் போன்ற தோஷங்கள் உண்டே
இவை எவையும் பரமாத்மாவிடம் இருக்க முடியாதே –
இருட்டுக்கு தேஜஸ்ஸூ விரோதியாய் இருக்குமா போலே இந்த தோஷங்களுக்கு பரமாத்மா எதிரி என்றவாறு –

தத்வ த்ரயம் -சர்ப்பத்துக்கு கருடன் போலவும் -தமஸூக்கு தேஜஸ்ஸூ போலவும் -அகில ஹேய ப்ரத்ய நீக –
ஆஸ்ரயிப்பார் விகாராதி தோஷங்கள் வரவிடாமல் செய்பவர் என்றுமாம் –
சர்வ பூத ப்ரக்ருதிம் -விகாரான் -அபஹத பாப்மா -வி ஜர -வி மிருத்யு -வி சோக -இத்யாதி –
நித்யம் -அஜம்–பிறப்பிலி -அஷயம்- அவ்யயம் ஏக ஸ்வரூபம் -நிர்மலம் -பவித்ரானாம் பவித்ரம்

2–கல்யாண ஏக ஸ்தான
தன்னோடு தொடர்பு பட்டவர்களுக்கு நன்மையைக் கொடுக்கக் கூடிய மங்களமான குணங்கள்
அனைத்துக்கும் ஒரே இருப்பிடம் பரமாத்மா –
ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவ ஸ்லோகம் இவற்றை விளக்கும் –
பரமாத்மாவின் குணங்கள் நித்யங்கள் -என்றுமே அழியாதவை
நிஸ் ஸீமங்கள் -எல்லை அற்றவை -உயர்வற உயர் நலம் உடையவன் –
நிஸ் சங்க்யங்கள் -எண்ணிக்கை அற்றவை -எண்ணில் தொல் புகழ் வானவர் ஈசன்
நிருபாதிகங்கள்–இயற்கையானவை
நிர்தோஷம் -தோஷங்களோடே சேர்ந்து ஓர் இடத்தில் இருக்காமல் -தோஷத்தின் சேர்க்கையே இல்லாமல் -இருப்பவை
ஸமான அதிக ரஹிதங்கள் -தனக்கு நிகராகவோ உயர்ந்தோ இல்லாத குணங்கள்

ஞானம் பலம் ஐஸ்வர்யம் வீர்யம் சக்தி தேஜஸ் மூலமான கல்யாண குணங்கள்
கருணை ஞான வடிவம் போல் -அனைத்தும் இந்த ஆறு குணங்களுக்குள் அடங்கும் –
வஸீ -இத்யாதி ஸ்தோத்ர ரத்னம் -கத்ய த்ரயம் இந்த குணங்கள் பட்டியல் காட்டும் –
நிரலேபம் -தோஷ சம்பந்தம் இல்லாமல்
உபதா -உபாதை மூலம் இல்லாமல்
இயற்கையாக
நிகரற்ற ஸ்ரீ விஷ்ணு புராணம் சொல்லும் –

3–ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணன்
இப்படி தோஷங்களுக்கு எல்லாம் எதிர்த்தட்டாய் இருத்தல்
கல்யாண குணங்களுக்கு எல்லாம் ஒரே இருப்பிடமாக இருத்தல்
என்ற இரண்டு அறிகுறிகளால் -உபய லிங்கங்களால் பரமாத்மா
தன்னைத் தவிர்ந்த அனைத்துப் பொருள்களைக் காட்டிலும் உயர்ந்தவராக உள்ளார்
ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் -ஆழ்வார் –

உபய லிங்க அதிகரணம்–3-2-11-
வ்யாப்த கத தோஷம் தட்டாத ப்ரஹ்மம்
ந ஸ்தான தோபி பரஸ்ய -உபய லிங்கம் -சர்வ சுருதி சொல்வதால் –

4-அநந்த
அந்தம் என்றால் முடிவு -எல்லை -அளவு
அநந்தன் -என்றால் -எல்லை அற்றவர் -என்று பொருள்
பரமாத்மாவை எந்த வகையாலும் அளவுபடுத்த இயலாது
அவர் நித்யமான படியால் அவரைக் காலத்தால் அளவுபடுத்த முடியாது
அவர் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறபடியால் அவர் விபு ஆவார்
அவர் இல்லாத இடமே கிடையாது
எனவே தேசத்தாலும் அளவு படுத்த முடியாது
அவருக்கு இணையான எந்தப்பொருளும் உலகில் இல்லாத படியால் –
பரமாத்மா இந்தப் பொருளைப் போன்றவர் என்று சொல்ல ஒரு பொருள் இல்லாத படியால்
அவர் பொருளாலும் அளவு படாதவர்
மேலும் அவரே உலகம் அனைத்துமாக இருக்கிற படியால் -இந்தப்பொருள் பரமாத்மா அல்ல –
என்று சொல்ல முடியாதே
ப்ரஹ்மாத்மகம் இல்லாத பொருளே இல்லையே
இதனால் எந்த வஸ்துவாலும் அளவு படாதவர்
இப்படி காலம் தேசம் வஸ்து -மூன்று அளவுகளும் அற்றவர்
த்ரிவித பரிச்சேத ரஹிதன் என்றவாறு –

ஒரு பொருளை உபமானம் சொல்லி –வஸ்துவால் அளவுபடுத்துதல் இல்லாமல் என்றும்–
கட்டுரைக்குள் தாமரை -கண் ஒவ்வா –சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனிக்கு ஒவ்வா -ஒட்டு உரைத்து
உலகு எல்லாம் உன்னை புகழ்வது எல்லாம் –கட்டுரையாய் –
வஸ்துவில் அளவு படுத்த முடியாதவன் என்றும் -இது குடம் துணி இல்லை என்பது போல் சொல்ல முடியாதே
அந்தர்யாமித்வம் மேலே பார்ப்போம் –

5-ஞான ஆனந்த ஏக ஸ்வரூபம்
ஞானமே வடிவானவர்
ஆனந்தமே வடிவானவர்
ஆனந்தம் என்பது அனுகூலமான ஞானம் -அதாவது நமக்குத் பிடித்ததாக ஏற்பனதாக ஞானம்
பரமாத்மா ஞானமே வடிவானவர் -அந்த ஞானத்துக்குத் தான் மட்டுமே விஷயம் –
தான் தனக்குப் பிடித்தவர் ஆகையாலே தன்னைப் பற்றிய ஞானமும் தனக்குப் பிடித்ததே
ஆகையால் பரமாத்மா என்கிற ஞானம் இயற்கையாகவே பிடித்த விஷயத்தைப் பற்றின
ஞானமே யாகையாலே அதுவே ஆனந்தமும் ஆகிறது –
எனவே பரமாத்மா ஆனந்த வடிவமான ஞானம் ஆகிறார் –
தத்வ த்ரயம் -ஆனந்த ரூப ஞான வடிவாய் இருக்கும் –
கட்டடங்க ஞானம் பிரகாசம்-கட்டடங்க அனுகூலம் –
ஜீவாத்மாவும் ஞான ஸ்வரூபம் -ஞானம் த்ரவ்யம் –

நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் -சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம்
ஸூ த்தம் பரம் நிர்மலம் ஏக ரூபம்
ப்ரஹ்மம் அறிவதே ஞானம்

——

பாடம் –33-சரீர ஆத்ம பாவம் –
நம் சம்ப்ரதாயம் -பிரதான பிரதிதந்தரம் -இதுவே

அபேத பேத கடக ஸ்ருதிகள்
வேதங்களில் –ஸர்வம் கலு இதம் ப்ரஹ்ம (சாண்டில்ய வித்யை )-இந்த உலகம் அனைத்தும் ப்ரஹ்மமே -போன்ற இடங்களில்
பரமாத்வாவும் கல் போன்ற அசேதனப் பொருள்களும் ஒன்றே என்று சொல்லப்படுகிறது

அதே போன்று அஹம் ப்ரஹ்மாஸ்மி –தத் த்வம் அஸி -போன்ற இடங்களில்
பரமாத்மாவும் ஜீவாத்மா-சேதனப் பொருள்களும் ஒன்றே கூறப்படுகிறது –
இவற்றுக்கு அபேத ஸ்ருதிகள் என்று பெயர்
பேதம் -வேறுபாடு -வேறுபாடு இல்லை யுரன்கிறபடியால் இவை அபேத ஸ்ருதிகள்

போக்தா போக்யம் ப்ரேரிதாரம் ச மத்த்வா
ஷரம் பிரதானம் அம்ருத அக்ஷரம் பர –ஈசத தேவ ஏக
பிரதான ஷேத்ரஞ்ஞன் பதி குணே ஸஹ -முதலானவற்றில் தெளிவாக
சேதன அசேதன ஈஸ்வர -மூன்றையும் வேதம் சொல்வதால் இவை பேத ஸ்ருதிகள் ஆகும்

இந்த முரண்பாட்டைத் தீர்க்க கடக ஸ்ருதிகள் –
கடகம் -சேர்த்து வைக்கும் -முரண்பட்டவை போன்ற ஸ்ருதி வாக்யங்களை சேர்த்து வைக்கும்
யஸ்ய ப்ருத்வீ சரீரம்
யஸ்ய ஆத்மா சரீரம் -அந்தர்யாமி ப்ராஹ்மணம் -ப்ருஹதாரண்யம்
ஏஷ ஸர்வ பூத அந்தராத்மா அபஹத பாப்மா –இத்யாதி
அந்த ப்ரவிஷ்டா ஸாஸ்தா ஜனா நாம் ஸர்வாத்ம-
இந்த கடக ஸ்ருதிகள் அனைத்தும் சரீர ஆத்ம பாவம் சொல்லும்
உலகம் அனைத்தும் சரீரம் உடல் – உடல் உயிர் தொடர்பு இருக்கிறபடியால் அவை
வெவ் வேறாக இருந்தாலும் ஒன்றே என்றும் சொல்லப் படலாம் –

சரீரம் என்றால் என்ன
ஸ்ரீ பாஷ்யத்தில் ஸ்ரீ ராமானுஜர்
யஸ்ய சேதனஸ்ய யத் த்ரவ்யம் ஸர்வாத்மநா ஸ்வார்த்தும் நியந்தும் தாரயிதும் ச சக்யம்
தத் சேஷதைக ஸ்வரூபஞ்ச ச தத் தஸ்ய சரீரம் -என்று -மூன்று

எந்த ஒரு அறிவாளியாலே எந்த ஒரு த்ரவ்யம் அது இருக்கும் வரை
எப்பொழுதும் தாங்கப்படுவதற்கும்
அதுக்கு இயன்ற செயல்களிலே செலுத்தப்படுவதற்கும்
தகுதி யுடையதோ
மேலும்
அவருடைய மேன்மைக்காகவே உள்ளதோ
அந்த த்ரவ்யம் அந்த அறிவாளியின் சரீரம் -அந்த அறிவாளி தான் ஆத்மா –

இதை நம் உடல் நாம் என்கிற ஜீவாத்மா இடம் பொருத்திப் பார்ப்போம்
நாம் அறிவாளி -இந்த மாம்ச பிண்டம் த்ரவ்யம்
இந்த மாம்ச பிண்டம் நான் என்கிற அறிவாளியால் தங்கப்படுவதற்கும் செலுத்தப் படுவதற்கும் தகுதியானது தான்
நான் என்கிற ஆத்மா வெளியே சென்று விட்டால் இந்த மாம்ச பிண்டம் எழுந்து நிற்காது -எந்தச் செயலும் செய்யாது –
இந்த மாம்ச பிண்டம் என்னுடைய நன்மைக்காகவே உள்ளது
இத்தை சரீரம் என்றும் -நம்மை ஆத்மா என்றும் கூறுகிறோம் –

இதே போலே ஸமஸ்த சேதன அசேதனங்கள் அனைத்துமே ப்ரஹ்மத்துக்கு உடல் ஆகும் -பகவான் அறிவாளி –
இவை அனைத்தும் அவராலேயே தாங்கப்படுகின்றன -இயக்கப்படுகின்றன –
அவருடைய மேன்மைக்காகவே இவை அனைத்தும் உள்ளன
எனவே உலகையே சரீரம் என்றும் ப்ரஹ்மத்தை ஆத்மா என்றும் கூறலாம் –

திட விசும்பு –முழுவதுமாய் அவை அவை தோறும்
உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் -சுடர் மிகு சுருதி -ஆழ்வார்

ஒரு ஆத்மா அதன் உடலுக்குச் செய்யும் உதவிகள் இரண்டு
1- சத்தா ஹேதுத்வம்
அந்த உடல் சத்தை -இருப்பு பெறுவதற்கு ஆத்மா தான் காரணம்
அதாவது ஆத்மா உள்ளே இல்லாவிட்டால் அதன் பெயரே மாறி விடும்
சரீரத்தின் சத்தை ஆத்மாவின் சத்தையைப் பொறுத்தது -இதற்கு ஆத்மா விழித்து இருக்க வேண்டும்
தன் அறிவைக் கொண்டு ஒன்றும் செய்யத் தேவை இல்லை உள்ளே ஆத்மா இருந்தால் மட்டுமே போதுமானது

2-உடல் இயங்குவதற்கும் காரணமாக ஆத்மா இருக்கிறார் —
இது அறிவால் செய்யக் கூடிய செயல் —
எனவே ஆத்மா விழித்து இருக்கும் பொழுது தான் இதை ஆத்மா செய்வதை நாம் உலகில் பார்க்கிறோம்

இந்த இரண்டு செயல்களையும் பரமாத்மா
தன்னுடைய சரீரமான உலகு அனைத்தைக்கும் செய்கிறார்

1- பரமாத்மா விபு -எல்லாவற்றையும் விட மிகப் பெரியவராக எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கிறார் –
அப்படி இருந்து கொண்டு அனைத்தையும் தாங்குகிறார்
பூமி அனைத்தையும் தாங்குவது போலே அவர் உலகம் அனைத்தையும் தாங்குகிறார்
ஏஷ சேது விதுரண
ஏதத் ஸர்வம் ப்ரஞ்ஞானே ப்ரதிஷ்டிதம் –
யதா ரத –நாபி -குச்சி -இத்யாதி –போன்ற
ஸ்ருதி வாக்கியங்கள் இத்தைக் காட்டும்
வாஸூதேவ வீர்யேண விதுர் தாணி -சங்கல்ப ஸஹஸ்ர ஏக தேசத்தாலே தாங்குகிறான் –
அவர் ஆசைப்பட்டு -விபுவான ஸ்வரூபத்தால் தாங்குகிறேன் -என்பதால்
சங்கல்பம் ஸ்வரூபம் இரண்டும் தாங்கும் என்பதில் தவறு இல்லை
தார்யமாகைவது -ஸ்வரூப சங்கல்பம் ஒழிந்த போது தன் சத்தை இல்லாத படி இருக்கை –தத்வ த்ரயம் 39-

2-பெரியதாக அனைத்தும் தாங்குவதைத் தவிர மிகச் சிறியவராகவும் இருந்து அனைத்து ஜீவாத்மாக்குள்ளும் இருக்கிறார் –
அங்கு இருந்து கொண்டு அனைத்து செயல்களையும் அனுமதித்து இயக்குகிறார் –
இப்படி உள்ளே புகுந்து இயக்குகிற படியால் அந்தராத்மா -என்றும் பெயர்
அந்த ப்ரவிஷ்டா ஸாஸ்தா ஜனா நாம் ஸர்வாத்ம -ஸ்ருதி இத்தைக் காட்டும் –
நியாம்கை யாவது -புத்தி அதீனமாக எல்லா வியாபாரங்களும் உண்டாம்படி இருக்கை –தத்வ த்ரயம் 38-

தர்ம பூத ஞானம் -அறிவைக் கொண்டே -ஸுபரி -50 சரீரங்களையும் – இயக்கினார் அது போல் இல்லை இல்லாமல்
ப்ரஹ்மம் -உள்ளே இருந்து -அகடி கட நா சாமர்த்தியம் -ஒன்றும் குறையாமல் இங்கும்
சேஷத்வம்–பரகத அதிசய ஆதேய -அவனுக்காகவே -இதுவே இயற்க்கை –
ஆத்மா தாஸ்யம்-ப்ரஹ்மம் ஸ்வாமி – தாஸ்ய பூதா ஸ்வத-இங்கும் அங்கும் –

—–

பாடம் –34-ஜகத் காரணத்வம்

யன் மய ஜகத் ஸர்வம் -கேள்வி ஸ்ரீ விஷ்ணு புராணம்
யதஸ்ய ஏதஸ்ய சராசரம் யார் இடம் இருந்து வந்தது
எங்கே லயித்தது
விஷ்ணு உத்ப்பூதம் -அவன் இடமே ஒன்றி -ஸ்திதி ஸம்யமம் -காத்து -இயக்குகிறார் –
ஜகத் ச ஸஹ -அவரே ஜகத்தாக உள்ளார் -பராசரர்
கீழே அந்தர்யாத்மாவாக இருந்து இயக்குகிறார் பார்த்தோம்
ஸர்வ ஸப்த வாஸ்யன் -பர்யவசானாம்
ஜகத் ஜன்மாதி காரணம் -லக்ஷணம் ப்ரஹ்மதுக்கு

புத்த ஜைன தர்க்க மதம் மூன்றிலும் நுண்ணிய பரம அணுக்கள் சேர்ந்தே உலகில் காணும் பொருள்கள் உண்டாகின்றன
பரம அணுக்களே காரணம் என்பர்
தார்க்கிகர் -வைசேஷிக நியாய மதம் -கொஞ்சம் வாசி இரண்டுக்கும் உண்டு
இவர்களே தார்க்கிகர்
இவர்கள் பரமாத்மாவை ஒத்துக் கொண்டு பரம அணுக்களை உலகமாக உருவாக்குகிறார் -குயவன் ஸ்தானத்தில் –

ஆனால் இது சரி இல்லை
சுருதி விரோதம் –
புலன்களுக்கு அப்பால் பட்ட பரம அணு இருக்க பிரமாணமே இல்லையே
பிரகிருதி மிகப்பெரியது
2-2-தர்க்க பாதம்

சாங்க்ய மதத்தில்
முக்குண -வசத்தில் உள்ள பிரக்ருதியே உலகமாக என்பர்
ஆனால் இது சுதந்திரமாக தானாகவே ஸ்ருஷ்டிக்கும் என்பர்
சேதனன் துணை வேண்டாம் என்பர்
பால் தயிராக தானாகவே மாறுவது போல் என்பர்
காரணத்துக்கும் காரியத்துக்கும் ஒற்றுமை இருக்க வேண்டுமே
உலகில் முக்குண மய பொருள்களைப் பார்ப்பதால் இப்படி சொல்வர்

இதுவும் சரி இல்லை -அறிவற்ற ஒன்றால் இது முடியாதே -அறிவுள்ள சேதனன் வேண்டும்
தானாகவே செய்யும் என்றால் எப்பொழுதும் ஸ்ருஷ்ட்டி அல்லது எப்பொழுதும் பிரளயமாக ஆய்க்கொண்டே இருக்க வேண்டும்
ஸ்ருஷ்ட்டி சம்ஹார வியவஸ்தை கூடாதே
இத்தையே பிள்ளை லோகாசசார்யார் தத்வ த்ரயத்தில் காட்டி அருளுகிறார் –
ஈஸ்வரன் அதிஷ்டானம் இல்லாமல் இது கூடாதே
இது என்னுடையது என்று பயன் படுத்தா விட்டால் பரிமாணம் அடையாதே

ஆகவே பிரகிருதி பிரதானம் தானாகவே மாற முடியாதே
வேதம் ஸ்பஷ்டமாக இத்தைக் காட்டும்

சிலர் நான்முகன் போல் சிறந்த புண்ணியம் செய்த ஆத்மாவே காரணம் என்பர்
இதுவும் கூடாதே
கர்மவசப்பட்டவர் -துக்கப்படுபவர் 0ஆகவே இதுவும் சரியில்லை –

உபநிஷத்துக்கள்
ஸத் -இருக்கும் பொருளே காரணம்
சதேவ சோம்ய-இதம் அக்ரே-சதேவ ஆஸீத் –
சிலர் உண்டாவதும் முன்பு அபாவம் -அஸத் கார்ய வாத நிராசனத்துக்கு சொன்னதே

மேலும் உபநிஷத் ப்ரஹ்மம் காரணம் -ஆத்மா காரணம் -என்றும் சொல்லும்
இவற்றுக்கு முரண்பட்டு இல்லை
சாமான்ய விசேஷ நியாயம்
விலங்கைக் கூட்டி வா மாட்டைக் கூட்டி வா -இரண்டுக்கும் வாசடி இல்லாதது போல்
பொதுவாக சொல்லி பின்பு விசேஷித்து சொல்லலாமே

அதே போல்
இருக்கும் பொருளே காரணம் -ஸத்
பெரிய பொருளே காரணம் -ப்ரஹ்மம்
ப்ரஹ்மம் ஏக அக்ர ஆஸீத்
அதுக்கும் மேலே அறிவுடைய பொருளே காரணம் என்றும் சொல்லும்
ஆத்மா வா இதம் ஏகமே வ அக்ர ஆஸீத்
ஏகோ வை நாராயணா ஆஸீத்
பின்பு நாராயணனே ஒருவராக முன்பு இருந்தார் என்றது –

நிமித்த காரணம் ப்ரஹ்மம் என்னும் இதில் பல கேள்விகள் எழும்
1-உலகில் ஒரு பொருளை படைக்கும் போது –
அவித்யை அறிவின்மை -கர்மம் பாபம் புண்யம் -பர நியோகம் பிறரால் ஏவப்பட்டு படைக்கிறார்கள்
பரமாத்மாவும் அப்படியேயோ

பதில் -ப்ரஹ்மம் நிர் அவத்யம் -நிரஞ்சனம் -அறிவின்மை அற்றவர்
அபஹத பாப்மா -கர்மங்கள் அற்றவர்
ந தஸ்ய ஈசே கச்சன் -யாராலும் ஏவப்படாதவர்
தன்னுடைய இச்சை ஆசையாலேயே ஸ்ருஷ்டிக்கிறார் –

2- இவ்வளவு பெரிய உலகைப் படைக்க சிரமமோ களைப்போ அடைவாரா

சங்கல்ப ஏக தேசத்தாலே படைக்கிறார் -நிஜ இச்சையால் மட்டுமே
நினைத்த எல்லாப் பொருள்களுக்கும் வித்தாய் -முதலில் சிதையாமே -தனக்கு மாறுபாடு விகாரம் இல்லாமல்
மனம் செய் ஞானத்து உன் பெருமை -ஆழ்வார் –

3-அவாப்த ஸமஸ்த காமனாய் இருந்தும் எந்த ப்ரயோஜனத்துக்காகப் படிக்கிறார்
ஜீவர்கள் உலகில் படும் துன்பங்களைக் கண்டால் அவர்கள் நன்மைக்காகப் படைக்கிறார் என்று சொல்ல முடியாதே

லீலை -அச்சமய போகத்துக்காகவே -வேறே பலனை
எதிர்பார்க்காமல்
அரசன் தோட்டத்தில் பந்து விளையாடி வேறே பலனுக்காக இல்லாமல் மகிழ்வது போல்
ந ப்ரயோஜனத்வாத் -ப்ரஹ்ம ஸூத்ரம்
லோகவத் லீலா கைகைவல்யம் –2-1-32-
பாலன க்ரீடநகைரிவ–வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன்
பல பல மாய மயக்குகளால் இன்புறும் இவ்விளையாட்டு உடையான்

4-முக்தி பெற படைக்கிறார் என்றால் எப்படி இது லீலை ஆகும்

உண்மையே தான்
வெகு சிலரே முக்தர் ஆவதால்
லீலையே அதிகமாக கிடைக்கும் பலன்

ஒரு பொருள் எதற்க்காக படைக்கப்பட்டது அதுக்காக இல்லாமல் இருந்தால் சிரிப்பு வருமே
நன்றாக செய்தால் அது போகமாக இருக்கும்
சிரிக்கும் பொழுது கேட்க சொன்ன கதை
எண்ணெய் வாங்க கோணிப்பை எடுக்க சிரிக்க
ஊதியம் உயர்வு கேட்டான்
ஆழ்வாராதிகளைக் கண்டால் போக ரசம் பெறுவான்

லீலா கைவல்யம் -லீலையே பிரயோஜனம்
நின்று நின்று பல நாள் உய்க்கும் இவுடல் நீங்கிப் போய் சென்று சென்று ஆகிலும் கண்டு
உண்டியே உடையே உக்காந்து போகிறவன் எப்பொழுதாவது
ஜென்மம் கழிப்பான் என்று எண்ணி சோம்பாது ஒன்றி ஒன்றி உலகம் படைக்கிறான் -உத்ஸாகத்துடன் –

பிரதானம்-முக்கியம் வேறே –
பிரசுரம் அதிகம் வேறே –
இரண்டு பிரயோஜனங்களும் உண்டு -இரண்டுக்கும் பிரமாணங்கள் உண்டு
முக்தனாக்குவதே பிரதானம் –
ஆசைப்பட்டது எல்லாம் கிடைக்காதே
பிரசுரம் மிகுதி லீலா ரசம் -தான் அடைகிறான் –

5-உலகை அழிப்பது எப்படி லீலை ஆகும்

குழந்தை மண் வீடு கட்டி அழிப்பது போல்

6-ஏற்றத் தாழ்வுகள் காண்கிறோம்
வைஷம்யம் -பாகுபாடு
நைர் க்ருண்யம் -கருணை இன்மை வாராதோ

சா பேஷத்வாத் -தானாகவே செய்ய வில்லையே -கர்மம் அடியாகவே ஏற்றத்தாழ்வுகள்
தவறு செய்யும் குழந்தையை தாய் அடித்துத் திருத்துவது போல்
ஸமோகம் ஸர்வ பூதேஷு அவன் –
கர்மம் அடியாக செய்வதாலும் மண் தின்னும் பிரஜை -நாக்கில் குறி இட்டு அஞ்சப் பண்ணும் மாதாவைப் போல்
ஹித பரன் –
பிரதான காரணம் ஜீவர்களுடைய கர்மங்கள் தான்
நிமித்த காரணம் -பொதுவான காரணம் ப்ரஹ்மம்
குற்றங்கள் வராதே

———–

பாடம் -35-அபின்ன நிமித்த காரணம்
உபாதானமாகவும் ப்ரஹ்மம்
இத்தை மேலே பார்ப்போம்

த்ரிவித–மூன்று வித – காரணங்கள்
1-உபாதான காரணம்
நிலை மாறி கார்யமாவது
உருண்டை வடிவில் இருக்கும் மண் குடம் ஆவது போல் –
மண் உருண்டையை குடத்துக்கு உபாதான காரணம் ஆகும்

சமவாய காரணம் -இத்தை நியாய மதம் சொல்லுவார்
ஸத் கார்ய வாதம் வேதாந்தம்
ப்ராக் பாவம் அபாவம் -நியாய மதஸ்தர்

ஜீவாத்மா நித்யம் -அதுக்கு உபாதானம் என்ன கேட்க வேண்டாமே
அசித் தான் பரிமாணம் அடையும் –

2-நிமித்த காரணம் -யார் ஒருவர் உபாதான காரணத்தை மாற்றுகிறாரோ அவர் –
குயவன் தானே மண்ணை குடம் ஆக்குகிறார்

3-ஸஹ காரி காரணம் -கார்யம் பண்ண உதவும் கருவிகள் -சக்கரம் போல்வன

ப்ரஹ்மமே நிமித்த காரணம் முன்பு பார்த்தோம்

உலகில் நாம் காணும் அனைத்தும் முக்குண வசமாய் இருப்பதால்
உபாதான காரணமும் அப்படியே தானே இருக்க வேண்டும் என்று தோன்றும்
மூலப் பிரக்ருதியே மஹான் இத்யாதிகளாக ஆகிறது என்றும் ஸ்ருதிகள் சொல்லும்
எனவே பிரக்ருதியே தான் உலகுக்கு உபாதான காரணம் என்று சொல்லத் தோன்றும்
ஆனால் வேத வியாசர் இத்தை ஏற்க வில்லை

ப்ரக்ருதிச் ச ப்ரதிஞ்ஞா த்ருஷ்டாந்த அநு பரோ தாத் —1-4-23-

ப்ரக்ருதி ச -உபாதான காரணமும் அவனே
முன்பே நிமித்த காரணம் முடிவானதால்
ப்ரதிஞ்ஞா த்ருஷ்டாந்த-இரண்டு காரணங்களாலும்
இரண்டுடன் முரண்பாடு இல்லாமல் இருக்கும்

கீழே நிமித்த காரணமாக சொன்ன பரமாத்மாவே உபாதான காரணமாக உள்ளார்
அப்பொழுது தான் ப்ரதிஞ்ஜை யோடும் –
எடுத்துக் காட்டும் முரண்பாடு இல்லாமல் இருக்கும்

சாந்தோக்யம் -ஆறாவது அத்யாயம் ஸத் வித்யை –
உத்தாலகர் தனது பிள்ளை ஸ்வேதகேதுவுக்கு உபதேசம்

ஏக விஞ்ஞானம் ஸர்வ விஞ்ஞானம் –ப்ரதிஞ்ஜை-
ஆதேசம் -உலகு அனைத்தையும் இயக்கம் அவனை அறிந்தாயா –
இவனை அறிந்தால் அனைத்தையும் அறிந்தவனாக ஆவாய்
இவனைப் பற்றி கேட்டாயானால் அனைத்தையும் கேட்டதாக ஆகும்

உலகை இயக்கக் கூடிய ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்தது ஆகும் -எடுத்துக் காட்டு-
மண் உருண்டையை அறிந்தால் அதில் இருந்து உண்டாகும் அனைத்தையும் அறிந்தால் போலே
அதே போல் ப்ரஹ்மத்தை அறிந்தால் அனைத்தையும் அறிந்தது ஆகும் என்றால்
ப்ரஹ்மமே உபாதான காரணம் என்றதாகும் –

காலையில் குயவன் வீட்டில் மண் உருண்டையைப் பார்த்து
பின்னால் மதியம் அங்கு இருக்கும் குடம் மடக்கு போன்றவற்றைப் பார்த்து
இவை அனைத்தும் காலையில் பார்த்த மண் உருண்டையை என்று கூறுவதால்
மண் உருண்டையை உபாதான காரணம் என்றதாயிற்று
மேலும் தங்க காசு ஆபரணங்கள் எடுத்துக் காட்டுகளும் சொன்னார்

அதே போல் மரம் கல் துணி நீர் -போன்ற பல பெயர்களோடும் வடிவங்களோடும்
இருக்கும் உலகம் அனைத்தும்
முன்பு ஸத் -ப்ரஹ்மம் -ஆத்மா -நாராயணன் -என்று சொல்லப்படும்
பரமாத்மாவே -வேறே யாரும் முன்பு இல்லை
எனவே அவரே உபாதான காரணமாகவும் நிமித்த காரணமாகவும் உள்ளார் என்று கிடைக்கிறது

ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம்

இதம் அக்ர ஆஸீத்-இவை அனைத்தும் முன் ஸ்ருஷ்டிக்கு முன்னால் –
மண் உருண்டையாகவே இருந்தது போல் இங்கும் -ஸதேவ -ஸத் -பரமாத்மாவேயாக இருந்தன

ஏகமேவ -ஒன்றாகவே இருந்தது -உபாதான காரணம் இதுவே -குடம் தட்டு இவை எல்லாம்
காலையில் மண் உருண்டை பெயர் வடிவத்துடன் இருந்தது போல் -நாம ரூப வேறுபாடுகள் இல்லாமல் –

அத்விதீயம் -இரண்டாவது இல்லாமல் இருந்தது –
மண்ணை அறிந்தால் மண்ணால் உண்டான அனைத்தையும் அறியலாம் -குயவனை அறிய முடியாதே
அது போல் இல்லை
மாற்ற குயவன் போல் தனியாக வேறே ஒருவர் நிமித்த காரணம் இல்லை
இவரைத் தவிர வேறே இல்லை
அபின்ன நிமித்த ப்ரஹ்மம் என்றவாறு

மேலும் குயவன் இந்த மண் உருண்டையை குடம் மடக்கு போன்றவாறாக மாற்றுவேன்
என்று சங்கல்பம் கொள்வான்
பரமாத்மாவோ
நான் பலவாக ஆகப் போகிறேன் -அதற்காக படைக்கப் போகிறேன் -என்று
சங்கல்பம் செய்து கொள்வான் என்று மகன் இடம் கூறினார்

தத் ஐஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேய
நான் இந்த மூலப்பிரக்ருதியைக் கொண்டு பலவற்றையும் ஸ்ருஷ்ட்டிக்கப் போகிறேன் என்று சொல்லாமல்
அந்த பரமாத்மா நானே பலவாக ஆகக் கடவேன் அதுக்காக ஸ்ருஷ்ட்டி செய்யக் கடவேன் -என்றவாறு

தானே -ஸ்வயம் -நிமித்தம்
தன்னை -ஆத்மநாம் -உபாதானம்
தானே தன்னை உலகமாக ஸ்ருஷ்டித்துக் கொள்கிறார்

முதல் தனி வித்தேயோ முழு மூ உலகாதிக்கு எல்லாம் -திருவாய் -10-10-
வித்து
முதல் வித்து
தனி வித்து

உபாதான காரணம் காரியமாக உரு மாற வேண்டுமே
பரமாத்மாவோ அவிகாராயா -விகாரம் மாறுபாடு அற்றவர் அன்றோ
அவிகாராய விகாராய ஸூத்தாயா நித்யாய
நிரஞ்சனம்
அகில ஹேய ப்ரத்யநீகன் -பரிணாமம் அற்றவன்
எவ்வாறு உபாதான காரணம் ஆக முடியும்
இதுக்குப் பதிலாக சிலவற்றைப் பார்ப்போம்

1-மண் உருண்டை குடமாக உரு வாகிறது

2-சிறுவன் முதிர்ந்தவர் ஆகிறான்
சிறியவனாக இருந்த நானே முதிர்ந்தவனாக உள்ளேன் என்பான்
உருவ வேறுபாடு உடலிலே தானே
உள்ளே இருக்கும் ஜீவாத்மாவின் உருவ வேறு பாடு இல்லையே
நிலை வேறுபாடு மட்டுமே உள்ளது
பால்ய அவஸ்தை கொண்ட சரீர விஸிஷ்ட ஜீவாத்மாவே –
யுவா அவஸ்தை கொண்ட சரீர விஸிஷ்ட ஜீவாத்மாக ஆனேன்
ஸ்வரூப மாற்றம் இல்லை -ஸ்வபாவ மாற்றமே

3-ப்ரஹ்மமும் -ஏஷ சர்வ பூத அந்தராத்மா –
இந்த உலகம் அனைத்துமே
பரமாத்மாவால் தாங்கப்பட்டு
இயக்கப்பட்டு
அவருடைய மேன்மைக்காகவே இருக்கிறபடியால்
அவருடைய உடலாகும் என்று பார்த்தோம்

பிரகிருதி மஹானாக ஆகும் பொழுது
ப்ரக்ருதிக்கு அந்தர் ஆத்மாவான ப்ரஹ்மமே மஹானுக்கும் அந்தர் ஆத்மாவான ப்ரஹ்மம் ஆகிறார் -அன்றோ
இதே போல் ஒவ்வொன்றுக்கும் கொள்ள வேண்டும்
காரணமும் காரியமும் ப்ரஹ்மமே
இது தான் சரீர ஆத்ம பாவ ஆச்சார்யம்

எனவே பரமாத்மாவே உலகமாக ஆகிறார் என்றால்
ஸூஷ்ம சேதன அசேதன விஸிஷ்ட ப்ரஹ்மம் —
ஸூஷ்ம சேதன அசேதனங்களை உடலாகக் கொண்ட ப்ரஹ்மமே
ஸ்தூல சேதன அசேதன விஸிஷ்ட ப்ரஹ்மம் –
ஸ்தூல சேதன சேதனங்களை உடலாகக் கொண்ட ப்ரஹ்மம் ஆகிறார் -என்று பொருள்

இங்கு உருவ வேறுபாடு அசேதனப் பொருள்களுக்கே
பரமாத்மாவுக்கு நிலை மட்டுமே வேறுபாடு
உபாதான காரணமாக இருந்தாலும் அவர் அவிகாராயா -விகாரமும் உருவ வேறுபாடும்
இல்லாமலேயே இருக்கிறார் -என்று தெளிவு –

ப்ரஹ்மமே -அபின்ன நிமித்த காரணம் -ஒருவரே உபாதானமாகவும் நிமித்தமாகவும் உள்ளார்
1– யதா ஊர்ண நாபி ஸ்ருஜதே க்ருஹ்ணதே ச (முண்டக உபநிஷத் சொல்லும் )
சிலந்திப் பூச்சி வலை கட்டுகிறது
தானே சங்கல்பித்து முடிவு செய்து பின்னுகிறபடியால் -செய்வதால் நிமித்த காரணம்
அதன் எச்சிலே வலையாக மாறுவதால் அதுவே உபாதான காரணம்

2-பராசர பட்டர் காட்டும் உதாரணம்
ஆண் மயில் பெண் மயிலை மகிழ்விக்க தானே முடிவு செய்து தனது-சரீர ஏக தேசம் -தோகை விரித்து ஆடுகிறது
விளையாட்டு முடிந்த பின் தோகையைச் சுருக்கிக் கொள்கிறது
விரிந்த தோகைக்கு மயிலே நிமித்த உபாதான காரணம்

இதே போல்
ஸ்வம் சரீர ஏவ தேசம் -ஸ்வ இச்சையால் விஸ்திருத –
பரமாத்மாவும் பிராட்டி மகிழ்ச்சிக்காக தானே முடிவு செய்து விளையாட்டாகப் படைத்து –
விளையாட்டு முடிந்ததும் பிரளயம் -தன்னிடமே லயம் அடையச் செய்கிறார் –

ஆக
1-சேதன அசேதன பொருள்களை உடலாகக் கொண்ட –
சேதன அசேதன விஸிஷ்ட பரமாத்மாவே உபாதான காரணம் ஆவார்
2-சங்கல்ப விசிஷ்ட ப்ரஹ்மமே நிமித்த காரணம் ஆவார்
3-ஞான சக்த்யாதி குண விசிஷ்டா ப்ரஹ்மமே ஸஹ காரி காரணம் ஆவார்

————

பாடம் –36- பரமாத்மாவின் பெருமைகள்

யஸ்மாத் பரம் ந பரம் அஸ்தி கிஞ்சித் -அசையாத மரம் போல் ஸ்ரீ வைகுண்டத்தில்
உயர்வு அற -மற்றவர்களின் உயர்வு அறும் படி என்றுமாம்
உலகம் பூர்ணமாக வியாபிக்கப்படுகிறது
விபு ஸ்வரூபம் –
ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன்
ஸ்வரூபம் விபு
அனைத்தையும் தாங்கி
அளவுபட்டு ஆத்மாவுக்குள்ளும் அந்தர்யாமி யாகவும் பூர்ணனாக ஒன்றுமே குறையாமல் வியாபிக்கிறார்
இவரே ஜகத் காரணம் -முன்பு பார்த்தோம்

அகில ஹேய ப்ரத்ய நீக -கல்யாணை ஏக தாமம் -ஸமஸ்த இதர வஸ்து விலக்ஷணன்
விசிஷ்டம் என்றால் சேர்ந்தது
அத்வைதம் -இரண்டாவது இன்மை
சேதன அசேதன விஸிஷ்ட ப்ரஹ்மம்
ப்ரஹ்மத்தைக் காட்டிலும் வேறே உயர்ந்த பொருள் உண்டு என்கிற அதிசங்கை -ப்ரஹ்ம ஸூத்ரத்தில் விசாரம்
ப்ரஹ்மத்தை சேது என்பதாலும்
அவருக்கு அளவுண்டு என்பதாலும்
அம்ருதம் எனப்படும் பரமாத்மாவை அடைய ப்ரஹ்மமே வழி என்பதாலும்
உயர்த்தத்தைக் காட்டிலும் உயர்ந்தவர் என்பதாலும்
ப்ரஹ்மம் வேறே பரமாத்மா வேறே என்று அதிசங்கை வருமே

பராதிகரணம் –3-1-விசாரம்
3-1-30- நான்கு காரணங்களையும் காட்டும்
ப்ரஹ்மம் சேது என்பது பாலம் என்ற பொருளில் இல்லை
உலகம் அனைத்தையும் அதன் அதன் இடத்தில் நிலை நிறுத்தி வைப்பவர் என்கிற பொருளில் வந்ததே
அணை -நதிகளை -இரண்டு புறத்திலும் உள்ளவற்றை கலக்காமல் இருப்பது போல்
ஸமஸ்த வஸ்துக்களும் அவை அவை நிற்க காரணமே இவனே -யேஷாம் லோகான் அசம்பாவத
ப்ரஹ்ம் அளவுபட்டு தன்னை அமைத்துக் கொள்வது தியானத்துக்கு உதவுவதற்கே
உன்மானம் -நான்கு கால் -16 கலைகள் -இத்யாதி இதற்காகவே
புத்யர்த்தா பாதவத் –த்ரிபாத் விபூதி -லீலா விபூதி சொல்வது போல் –
ஐஸ்வர்யம் சொல்லவே வந்தது
சம்பந்தம் –அம்ருதம் -இவர் சேது வழி
அம்ருதஸ்ய ஏஷ சேது -தன்னை அடைய தானே வழி என்கிறது
வழி என்பதால் மட்டும் அடையப்படும் வஸ்து வேறே என்பது இல்லை
பேத அபேதம் சொல்ல வந்தது இல்லை
பராத்பரன் -புருஷன் உபைதி
அனைத்தையும் காட்டிலும் உயர்ந்தவர்

சர்வ கர்ம ஸமாராத்யாம்
பரமாத்மாவை மகிழ்விக்கவே அனைத்தும் –
அனைத்து தேவதைகளுக்கும் அந்தராத்மாவாக இருந்து
வாசனைக்கு ஏற்ப –கர்மம் அடியாக -லௌகிக விஷயங்களில் செல்ல -பசு மாடு வீடு வாசல் சுவர்க்கம் ஆசை –காம்ய கர்மங்கள்
அந்த அந்த தேவதையை ஆராதனம் செய்து அல்ப பலன்கள் பெறுகிறார்கள்
அவற்றுக்கு அந்தர்யாமியாக பரமாத்மா இருப்பதை அறிந்து த்யானத்தில் முக்தர் ஆகிறார்கள்
அஹம் ஹி சர்வ யஞ்ஞானாம் போக்தா ச பிரபுரேவ ச
அனைத்து யாகங்களாலும் இவனே பூஜிக்கப்படுகிறான் -இவனே பலன்களையும் அளிக்கிறான்
பலம் அத உப பத்தே –3-2-37-
அனைத்து பலன்களையும் ப்ரஹ்மமான பரமாத்மாவே வழங்குகிறார் -என்கிறார் வேத வியாசர் –
சர்வ தேவ நமஸ்கராம் கேசவன் கச்சதி -நதிகள் கடலில் சேருவது போல்
3-2-40-சேது வியாபதேசாத் –
வாயு தேவதை வேகமாக பலன் கொடுக்கிறார் வேதம் சொல்லும்
அபூர்வம் மட்டும் பலன் என்ன கூடாது
அந்தர்யாமியாக இருக்கும் ப்ரஹ்மமே பலன் அளிப்பார் இந்த்ராதிகள் அல்ப ஆயுஸ் -அன்றோ –
புண்யம் அபுண்யம் அவனது ப்ரீதியும் அப்ரீதியும்

ப்ரஹ்மம் நிர்குணம் என்றும்
ச குணம் -ஸர்வஞ்ஞன்
ஞான பல ஐஸ்வர்யா வீர்ய சக்தி தேஜஸ் கருணை உதாரம் சவ்ஸீல்யாதி குணங்கள் உண்டு என்றும் ஸ்ருதிகள் கூறும்
சமுச்சயமாக கொள்ளக் கூடாது இவை இரண்டையும்
விகல்பம் -என்றும் கொள்ள முடியாது
பொய் சொல்லக்கூடாது
கல்யாணத்துக்கு பொய் சொல்லலாம்
ஓன்று விதி -உத்சர்க்கம்
மற்ற ஓன்று அபவாதம் -விதி விலக்கு
கல்யாணம் போன்ற இடங்களில் தவிர பொய் சொல்லக்கூடாது என்றே கொள்ள வேண்டும்
உத்சர்க்க அபவாத நியாயம்
அதே போல் தீய குணங்கள் கிடையாது -நிர்குணம் -அபஹத பாப்மா -இத்யாதிகள்
ஆனந்தம் வள்ளல் தன்மை இத்யாதி இருந்தால் தானே பலன்களைக் கொடுக்க முடியும்

திவ்ய மங்கள விக்ரஹம் உண்டு
ஹிரண்மயம் -கப்யாஸம் புண்டரீக அக்ஷிணீ
ஸ்வரூப ரூப குணங்களைக் காட்டிலும் அத்யந்த அபிமதமாய் இருக்குமே -பிள்ளை லோகாச்சார்யார்
கருணை- -ஆத்ம குணம்
ஸ்வ அனுரூபமாய்
நித்தியமாய் ஏக ரூபமாய் ஸூத்த ஸத்வமாய்
சேதன தேகம் போலே ஞான மயமான ஸ்வரூபத்தை மறைக்கை அன்றிக்கே
மாணிக்கச் செப்பிலே பொன்னை இட்டு வைத்தால் போலே இருக்க
பொன்னுருவமான திவ்யாத்ம ஸ்வரூபத்துக்கு ப்ரகாசமாய்
நிரவதிக தேஜோ ரூபமாய்
ஸுகுமார்யாதி கல்யாண குண கண நிதியாய்
யோகி த்யேயமாய்
சகல ஜன மோஹனமாய் -பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரமாய்
ஸமஸ்த போக வைராக்ய ஜனகமாய் -சிற்றின்பம் நீயும் அவளும் நிற்க கண்ட சதிர் கண்டு ஒழிந்தேன்
ருசி ஜனக விபவ லாவண்யம்
நித்ய முக்த அனுபாவ்யமாய்
வாசத்தடம் போலே சகல தாப ஹரமாய் -ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்த –
அநந்த அவதார கந்தமாய்
ஸர்வ ரக்ஷகமாய்
சர்வ ஆஸ்ரயமாய்
அஸ்திர பூஷண பூஷிதமாய் இருக்கும் –

இதில் ஐந்து நிலைகள் உண்டே
1-பரத்வம் -ஸ்ரீ வைகுண்டத்தில் -தர்மாதி பீடம் -வீற்று இருந்த -திரு மேனி -பாட்டு கேட்க்கும் இடம் – நாராயண ஸ்ரீ மான்

2-வ்யூஹம் -திருப்பாற்கடலில் ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹாரம்
வாசுதேவன் -சங்கர்ஷணன் -ப்ரத்யும்னன் -அநிருத்தனன் -தன்னையே வ்யூஹித்து பிரித்து ஸேவை
உந்தித்தாமரையில் நான்முகனைப்படைத்து -கூப்பீடு கேட்க்கும் இடம் -ஷீராப்தி நிகேதன

3-விபவம் -ராமர் கிருஷ்ணன் -ஆகாதா மதுராம் புரீம் -அவதார ரஹஸ்யம் —
இச்சா க்ருஹீத -அப்ராக்ருதம் -சம்பவாமி யுகே யுகே -பூதானாம் ஈஸ்வரோபிசன் –
பரித்ராணாம் ஸாதூ நாம் –தொழும் காதல் களிறு அளிப்பான்
விநாசாய துஷ்க்ருதாம்
தர்ம சமஸ்தானநார்த்தம் -தானே தர்மம் -என்று காட்டி அருளி -கிருஷ்ணம் தர்மம் சனாதனம் -ராமோ விக்ரஹவான் தர்ம –
ஜென்ம கர்ம மே திவ்யம்

4-அந்தர்யாமி
உதாசீனம் -அனுமதி -சர்வ நியந்தா –
இரண்டு வகை
த்யானிப்பவர் -எளிதில் தியானிக்க சின்னவடிவில் ஹ்ருதய புண்டரீகாக்ஷம்
அங்குஷ்ட மாத்ர புருஷ
அகம்படி வந்து புகுந்து
கருட உத்சவம் நம்மாழ்வார் உள்ளத்தில்
த்யானம் மனிதர்களுக்குள் சிலருக்கு மட்டுமே

5-அந்தர்யாமி -சத்தை நியாந்தாவாக அனைத்திலும் உருவம் இல்லாமல்
இப்படி இரண்டு வகை
அர்ச்சை –
கோயில்களிலும் க்ருஹங்களிலும்
அர்ச்சனை பராதீனன்
ப்ரதிமா அப்ரதிபத்தி -சம தர்சனம் -ஒவ்வொரு ஜீவர்களுக்குள்ளும் பரமாத்மா இருப்பதை உணர்வார்கள் இல்லாதாருக்காக
பரதவ ஸுலப்யம் இரண்டிலும் எல்லை அர்ச்சையிலே

———

பத்து அத்ரவ்யங்கள் -மேல் பார்ப்போம்
உண்மை பொருள்கள் ஆறு வகை த்ரவ்யங்கள் இவை தான்
தத்வம் அறிந்து
புருஷார்த்தம் நிஷ்கர்ஷித்து
ஹிதம் பார்த்து
வேதாந்தம் நிகமிப்போம்

———

பாடம் -37-அத்ரவ்யங்கள்
இது வரை ஆறு த்ரவ்யங்கள்
1-ப்ரக்ருதி
2-ஸூத்த ஸத்வம்
3-காலம்
4-ஜீவாத்மா
5-பரமாத்மா
6-இருவடைய தர்ம பூத ஞானம் -பார்த்தோம்
முக்காலத்திலும் உள்ளவற்றை – யுகபத் -ஸர்வ -ஸூத இயற்கையாக அறியும்
ஸர்வஞ்ஞன்-பரமாத்மாவுக்கு தர்ம பூத ஞானம் உண்டே

இனி அத்ரவ்யங்கள் -த்ரவ்யம் அல்லாதவை
நியாய மாதத்தில் இவற்றையே குணங்கள் என்று -சொல்கிறார்கள்
குணமானது த்ரவ்யத்தை விட வேறு பட்டது என்பர் அவர்கள்
வேதாந்தத்தில் அப்படி அல்ல
குணமானது எப்பொழுதும் வேறே ஒரு பொருளை அண்டியே இருக்கும் –
ஆஸ்ரயத்து பிரிக்க முடியாமல் இருக்கும் –
அது த்ரவ்யமாகவோ அத்ரவ்யமாகவோ இருக்கலாம்
தர்ம பூத ஞானம் த்ரவ்யமாக இருந்தாலும் ஆத்மாவை ஆஸ்ரயித்து இருக்கும்
ஸத்வாதி முக்குணங்கள் -அத்ரவ்யங்கள் -பிரக்ருதியை ஆஸ்ரயித்து இருக்கும்

விசிஷ்டாத்வைத மதத்தில் 10 அத்ரவ்யங்கள்
1-ஸத்வம்
2-ரஜஸ்
3-தமஸ்
4-ஸப்தம் -ஒலி
5-ஸ்பர்சம் -வெப்பம்
6-ரூபம் -நிறம்
7-ரஸம் -சுவை
8-கந்தம் -மணம்
9-ஸம்யோகம் -சேர்க்கை
10-சக்தி -திறன்-potency -ஆகியவை இவை –

பிரகிருதியின் பண்புகள்
1-ஸத்வம்
ஞானம் ஸூகம் பாரமின்மை ஆகிய தன்மைகளுக்குக் காரணமான –
புலன்களுக்கு அப்பால் பட்ட – சக்தியைக் காட்டிலும் வேறுபட்ட ஒரு அத்ரவ்யம் தான் ஸத்வம்
ப்ரகாஸம் -ஸூகம் -லாகவம் -மூன்றுக்கும் காரணம் —அதீந்த்ரியம் -திறமை -சக்தி -அத்தை விட வேறு பட்ட -அத்ரவ்யமாய் இருக்கும்
மனஸூக்கும் இவை ஒத்து வரும் -ஆகவே அத்ரவ்யமாக என்று லக்ஷணம்
இது ஸூத்த ஸத்வம் என்னும் அசேதனப் பொருளில் தனியாக இருக்கும்
மிஸ்ர தத்வம் -ப்ரக்ருதி -என்ற அசேதனப் பொருளில் ரஜோ தமோ குணங்கள் உடன் கூடி இருக்கும் –

2- ரஜஸ் –
ராக த்ருஷ்ணா ப்ரவ்ருத்தி -ஆசை பற்று முயற்சி -மற்றும் பேராசை முதலானவற்றுக்குக் காரணமாயும்
புலன்களுக்கு அப்பால் பட்ட சக்தியைக் காட்டிலும் வேறுபட்ட ஒரு த்ரவ்யம் தான் ரஜஸ்

3- தமஸ்
பிரமாத மோஹாதி நிதானம் -கவனமின்மை சோம்பல் தூக்கம் முதலானவற்றுக்குக் காரணமாயும்
புலன்களுக்கு அப்பால் பட்ட சக்தியைக் காட்டிலும் வேறுபட்ட ஒரு த்ரவ்யம் தான் தமஸ்

இவை மூன்றும் பிரகிருதியின் குணங்கள் -ப்ரக்ருதியுடன் தொடர்பு கொண்ட ஆத்மாவையும் தாக்கக் கூடியவை
இவை -ப்ரவாஹதோ நித்யம் -அழியக் கூடியவையாக இருந்தாலும் தொடர்ச்சியாக எல்லாப் பொருள்களிலும் இவை இருக்கும்
பிரளயத்தில் ஸமமான திசையிலும்
ஸ்ருஷ்டியில் ஏற்றத் தாழ்வுகளுடன் இருக்கும் –

சாங்க்ய மாதத்தில் இவை த்ரவ்யங்கள்
நம் சித்தாந்தத்தில் இவை அத்ரவ்யங்கள் -பிரகிருதியின் பண்புகள் தான்

பஞ்ச பூதங்களின் பண்புகள்
4-ஸப்தம் -நம் காதால் கேட்கப்படும் அத்ரவ்யம்
இது ஆகாசத்தில் குணம்
பஞ்சீ கரணத்தால் மற்றவற்றிலும் உள்ளது
ஆகாசத்தோடு தோன்றி மறையும் பொருள்

நித்யர்களுக்கு அப்படி அல்லவே
ஆகவே அஸ்மதாதி நம் போல்வாருடைய காதால் கேட்கப்படும் என்று லக்ஷணம்
ஸப்தம் நித்ய விபூதியிலும் உண்டு -அப்ராக்ருத பஞ்ச உபநிஷத் –
இங்கு இருப்பவரால் க்ரஹிக்கப்படும் சப்தத்வம்
வேறு பட்டத்தைக் காட்டிலும் வேறுபட்டது -விஜாதீயம் -ரூபாதிகளை காட்டிலும் வேறு பட்டதாய் அங்குள்ள ஸப்தம்
விஜாதீய வ்யாவ்ருத்தம் –என்று லக்ஷணம்

இது இரண்டு வகைப்படும்
வர்ணம் -எழுத்தாக இருக்கும் ஒலி
அவர்ணம் -எழுத்து அல்லாத ஒலி -மிருதங்க ஒலி போல்வன –
தொலைவில் உள்ள ஒலியை காது சென்று க்ரஹிக்கிறது என்றும்
அவ்வொலி வாயு மூலம் பயணித்து நம் காதை அடைகிறது என்றும் இரண்டு கருத்துக்கள் உள்ளன –
தொலைவில் ஒலி கேட்க்கிறது -அருகில் -கிழக்கில் இருந்து ஒலி வருகிறது என்கிறோம் –
ஸ்ரோத்ரிய இந்திரியம் பிரயாணித்து அறிகிறது என்றே கொள்ள வேண்டும் –

5-ஸ்பர்சம் -நமது ஸ்பர்ச இந்த்ரியத்தால் -தோலால் -அறியப்படும் அத்ரவ்யம்
இங்கும் விஜாதீய வ்யாவ்ருத்தம் என்பதை அப்ராக்ருத ஸ்பர்சம் சொல்ல லக்ஷணம் –
வெப்பம் என்ற ஸ்பர்சம் நெருப்பிலும்
குளிர்ச்சி என்ற ஸ்பர்சம் நீரிலும்
நடுவான ஸ்பர்சம் பிருத்வியிலும் வாயுவிலும் இருக்கும்
மென்மை -கடினத் தன்மை -ஆகியவையும் ஸ்பர்சத்தின் வகைகள் தான்
நியாய மதத்தில் -கடினம் மென்மை- ஸம்யோகம் என்பர் -சேர்க்கையும் சேர்க்கை இன்மையுமே என்பர்
பிருத்வியாலான பொருள்களில் வெப்பத்தின் தாக்கத்தால் ஸ்பர்சம் மாறக்கூடும் -இதற்கு பாகம் -என்று பெயர் –
மாங்காய் அரிசிக்குள் வைத்தால் மாம்பழம் ஆவது போல் -பால் தயிர் ஆவது போலவும் –

6-ரூபம் -நம் கண்ணால் மட்டும் அறியப்படும் அத்ரவ்யம்
இங்கும் விஜாதீய வ்யாவ்ருத்தம் என்பதை அப்ராக்ருத ரூபம் சொல்ல லக்ஷணம்
வெளுப்பு கருப்பு சிவப்பு மஞ்சள் -என்று நான்கு நிறங்கள் உண்டு
மஞ்சள் சிவப்பின் ஒரு வகை என்பாரும் உண்டு –
த்ரிவிக்கரணம் -என்பதால் இம் மூன்றும் -வெளுப்பு கருப்பு சிவப்பு –
மேலும் ஒளி விடக்கூடியது -ஒளி விடாதது -என்றும் பாகுபாடு உண்டு
நெருப்பில் ஒளி விடும் –lustrous -சிவப்பு
நீரில் ஒளி விடும் வெள்ளை
பிருத்வியில் ஒளி விடாத நான்கு (மூன்று)நிறங்களும் இருக்கும்
சித்ர ரூபம் -கலந்த நிறம் நியாய மாதத்தில் உண்டு என்பர்

7-ரஸம்-நமது ரசன இந்த்ரியத்தால் -நாக்கால் -அறியப்படும் அத்ரவ்யம்
இங்கும் விஜாதீய வ்யாவ்ருத்தம் என்பதை அப்ராக்ருத ரஸம் சொல்ல லக்ஷணம்
இனிப்பு புளிப்பு உவர்ப்பு கார்ப்பு துவர்ப்பு கசப்பு -என்று ஆறு வகைகள்
இது பிருத்வீ ஜலம் இரண்டிலும் இருக்கும் –

8-கந்தம் -நம் க்ராண இந்த்ரியத்தால் அறியப்படும் அத்ரவ்யம்
இங்கும் விஜாதீய வ்யாவ்ருத்தம் என்பதை அப்ராக்ருத கந்தம் சொல்ல லக்ஷணம்
ஸூரபி-நறு மணம் -துர் நாற்றம் என்று இரண்டு வகைகள்
இது பிருத்வியில் மட்டும் இருக்கும் –

பஞ்சீ கரணத்தால் எல்லாவற்றிலும் எல்லாமும் பார்க்கிறோம்

அனைத்து த்ரவ்யங்களின் பண்புகள்
9-ஸம்யோகம்
இரண்டு த்ரவ்யங்களின் இடையில் இருக்கும் சேர்க்கை
சம்யுக்த ப்ரயுக்த நிமித்தம் -ஸம்யோகம்
இது
1-உண்டாகக் கூடியது
இரண்டு அளவு பட்ட பொருள்கள் அல்லது
ஒரு அளவு பட்ட பொருள் மற்ற ஒரு அளவு படாத பொருள் –
இடையே இருக்கும் தொடர்பு –
காலம் -எங்கும் உள்ளது -இங்கு ஸம்யோகம் -நான் நகர்ந்து -அங்கு ஸம்யோகம்
ஒரு நாள் உண்டாகும் -ஒரு நாள் அழியும்
2-உண்டாகாதது
இரண்டு அளவற்ற பொருள்களுக்கு இடையே தொடர்பு -என்பது எப்பொழுதும் இருக்கும்
பரமாத்மா காலம் ஸம்யோகம் நித்யம்

உண்டாகக் கூடிய ஸம்யோகம் இரண்டு வகைப்படும்
1-இருவரின் செயலால் உண்டானது -உபய க்ரியா ஜன்ய ஸம்யோகம்
இரண்டு மிருகங்கள் மோதிக் கொள்ளும் போது ஏற்படும் சேர்க்கை போல்வன
2-ஒருவர் செயலால் உண்டாவது
பறவை பறந்து வந்து ஒரு தூணில் அமர்ந்தால் ஏற்படும் ஸம்யோகம்

ஸம்யோகம் என்பது அனைத்து விதமான த்ரவ்யங்களிலும் உண்டு –
ஸம்யோகம் இல்லாத ஒரு பொருள் த்ரவ்யமாகவே இருக்க முடியாது
அத்ரவ்ய லக்ஷணமே ஸம்யோகம் இல்லாத பொருள்
நிறம் பொருளில் தொடுவது வேறே– இரண்டு த்ரவ்யங்கள் சேர்க்கை வேறே தானே

10-சக்தி
ஒரு பொருளுக்கு -காரணத்துக்கு -மற்ற ஒரு பொருளை -காரியத்தை -உண்டாக்கும் திறன் தான் சக்தி
ஸர்வ காரணத்வம் -மல்லிகைப் பூ மணம் -போல் ஒவ் ஒன்றிலும் சக்தி உண்டு
இது தர்க்கத்தாலும் வேதத்தாலும் நிரூபிக்கப் படுகிறது

நெருப்பு காகிதத்தை எரிக்கும்
சந்த்ர காந்த மணியை அருகில் எடுத்து வந்தால் நெருப்பால் காகிதத்தை எரிக்க முடியாமல் போகும்
நெருப்பில் இருந்த அந்த எரிக்கும் சக்தி திறன் சந்த்ர காந்த மணியால் அழிக்கப் படுகிறது
இப்படி தர்க்கத்தால் சக்தி என்று ஓன்று உண்டு என்று அறியலாம்
ஸாஸ்த்ரங்களும்
சக்த்ய ஸர்வ பாவாநாம் அசிந்த்ய ஞான கோசரா –
அனைத்துப் பொருள்களுக்கும் சக்தி என்கிற விசித்ர தன்மை -நம்மால் எண்ணிப் பார்க்க முடியாததாய் உள்ளது

நியாய மதம் –மணி பிரதிபந்தகம் தடை தான் சக்தி என்று ஒன்றைக் கொள்ள வேண்டாம் என்பர்
சுருதி சொல்வதால் நாம் ஒத்துக் கொள்கிறோம்
இது அதீந்த்ரியம் -கார்யம் பார்த்து சக்தி இருப்பதை அனுமானிக்க வேணும்

இது த்ரவ்யங்களில் மட்டும் அல்லாமல்
அத்ரவ்யங்களிலும் கூட இருக்கும்
அவையும் ஏதோ ஒரு கார்யத்தைச் செய்கிறபடியால் –

நியாய மாதத்தில் 24 குணங்கள் உண்டு என்று முன்பு பார்த்தோம்
இவை அனைத்தையும் இந்த ஆறு த்ரவ்யங்கள் பத்து அத்ரவ்யங்களில் அடக்கலாம்

புத்தி -ஸூகம் -துக்கம் -இச்சா -த்வேஷம் -ப்ரயத்னம் -தர்மம் -அதர்மம் -ஸம்ஸ்காரங்கள் —
ஆகிய எட்டும் ஞானம் என்ற த்ரவ்யத்தின் வெவ்வேறு நிலைகள்
புத்தி -ஸூகம் -துக்கம் -இச்சா -த்வேஷம் -ப்ரயத்னம்-ஆத்மாவின் தர்மபூத ஞான வகை
தர்மம் -அதர்மம்-ப்ரீதி கோபம் -அவனது ஞானம் வகை
ஸம்ஸ்காரங்கள்-பாவனா -பதிவு -வேகம்-ஸ்திதி ஸ்தாபனம் elasticity -ஸம்யோகம் -சேர்க்கையின் தன்மை தானே

விபாகம் ப்ருதக்த்வம் -இவை ஸம்யோகத்தின் இன்மை தான்

பரத்வம் அபரத்வம் இரண்டுமே ஒரு பொருளுக்கு காலத்தோடும் தேசத்தோடும் உள்ள தொடர்பு -ஸம்யோகம் -தவிர வேறு இல்லை

சம்க்யை -எண்ணிக்கை -பரிமாணம் -அளவு -த்ரவத்வம் -த்ரவத்தன்மை -ஸ்நேஹம் பசைத்தன்மை பிசுபிசுப்பு ஆகியவை
அந்த அந்தப் பொருள்கள் தான் தவிர தனியாக அத்ரவ்யங்கள் அல்ல

குருத்வம் -எடை -என்பது சக்தியின் ஒரு வகை தான்

ரூபம் ரஸம் கந்தம் ஸ்பர்சம் ஸப்தம் ஸம்யோகம் ஆகியவை அப்படியே ஏற்கப் பட்டுள்ளன

———-

பாடம் –38-புருஷார்த்தங்கள்

தத்வம் ஒன்றாகவும் ஏகோ மஹா யோகி –
தத்வ த்ரயம் – விஸிஷ்ட அத்வைதம் –
அவனையே ஆஸ்ரயத்து ப்ரஹ்மாத்மகமாக சேதன அசேதனங்கள்
தத்வம் பற்றி முன்பு பார்த்தோம்

புருஷன் எனப்படும் ஜீவாத்மாவால் -ஆசைப்பட்டு -வேண்டப்பட்டு -பெறப்படுவது
புருஷார்த்தம் என்று சொல்லப் படுகிறது
அர்த்தம் பிரயோஜனம் என்றுமாம் –
இவை தர்மம் அர்த்தம் காமம் மோக்ஷம் என்று நான்கு வகைப்படும்

தர்மமாவது –
தர்மம் -வேதம் சொன்னபடி -செய்வது -யாகம்-செயல் தானே அதுவே பயனாகுமோ -என்னில்
பிராணிகளின் ரக்ஷணத்துக்காகப் பண்ணும் செயல்கள் தர்மமாவது-
குளம் வெட்டுவது அன்னதானம் போல்வன –
தார்மிகர்
தன்னைப் பற்றி நினைக்காமல் பிராணி ரக்ஷணம் -அதுவே பிரயோஜனம்
கியாதி லாபமாக கருதாமல் தர்மமே பயனாக செய்பவர் –
அறம் -என்றாலே தனக்குச் செய்வது இல்லையே

அர்த்தமாவது –
பொருள் -தனம் -அத்தைக் கொண்டு தானே அனுபவிப்பத்தைச் சொல்ல வில்லை –
அவரவர் வர்ணாஸ்ரம தர்மத்துக்கு ஏற்ப செல்வம் தான்யம் முதலான வற்றைக்
நியாயமான முறையிலே ஈட்டி -தேவதைகளுக்கோ பித்ருக்களுக்கோ பிராணிகளுக்கோ
உத்க்ருஷ்டமான தேச கால பாத்ரங்களை அறிந்து -தர்ம புத்யா –
நன்மை செய்யும் வகையில் தர்ம புத்தியுடன் செலவிடுகை

காமமாவது
ஐஹ லௌகிகம் என்றும் பார லௌகிகம்-என்றும் இரண்டு வகைப்படும் –

இஹ லோகத்தில் காமமாவது –
தந்தை தாய் ரத்னம் செல்வம் தான்யம் வஸ்த்ரம் உணவு மக்கள் நண்பர்கள்
மனைவி மாடு வீடு நிலம் சந்தனம் வெற்றிலை மலர்கள் முதலான பொருள்களைக் கொண்டு
ஸப்தம் ஸ்பர்சம் ரூபம் ரஸம் கந்தம் ஆகியவற்றை அனுபவித்து ஸூகப்படுகை –

பர லோகத்தில் காமமாவது –
இதில் விலக்ஷணமாய் -தேஜோ ரூபமான –
ஸ்வர்க்காதி லோகங்களுக்குச் சென்று பசி தாகம் சோகம் மோஹம் மூப்பு மரணம் முதலானவை இல்லாமல்
சேர்த்து வைத்த புண்யத்துக்கு ஈடாக ஸப்தம் முதலான விஷயங்களை அனுப்பவிக்கை

மோக்ஷம் -விடுபடுதல்
உடல் -சம்சாரம் -பிரகிருதி -கர்மங்கள் -பிறவி சுழலில் இருந்து
அடையும் இடத்தைப் பொறுத்து இரண்டாக
கைவல்ய ப்ராப்யம்
பகவத் ப்ராப்யம்
ஆக ஐந்து புருஷார்த்தங்கள் என்றும் சொல்லலாம் –

ஆத்ம அனுபவமாவது –
ஸம்ஸாரத்தைத் தொலைத்து-துக்க நிவ்ருத்த மாத்ரமான –
ஸூக வசிவமான ஆத்மா தன்னைத் தானே அனுபவித்துக் கொண்டு
தனிமையில் உடல் கூட இல்லாமல் என்றும் இருத்தல்

பகவத் அனுபவம் என்று சொல்லப்படும் உயர்ந்த புருஷார்த்தமான மோக்ஷமானது
கர்மங்கள் ஸம்ஸாரம் முதலானவற்றை துறந்து லீலா விபூதியைக் கடந்து நித்ய விபூதிக்குச் சென்று
அங்கு ஸ்ரீ வைகுண்டம் என்ற இடத்தில் ஸ்ரீ மன் நாராயணனை அனுபவித்துக் கைங்கர்யம் செய்வது –

ஜீவனம் salvation -மட்டுமே
உஜ்ஜீவனமே நமக்கு -பரம புருஷார்த்தம்
திரு நாராயணன் தாள் காலம் பெற சிந்தித்து இருமின்

மோக்ஷம் இஷா முமுஷு
ப்ராப்யம் ப்ராபகம் -பயன் -வழி -பேறும் ஆறும் -விருந்தும் மருந்தும்
பயனை அறிந்த பின்பே வழிகளை அறிய வேண்டும் –

மோக்ஷம் அடையும் முறை
ஜீவன் ஏதோ ஒரு உபாயத்தைப் பற்றி மோக்ஷம் அடைய முயற்சிக்கும் பொழுது
அவனுடைய பாபங்கள் பகவானால் நீக்கப் படுகின்றன

4-1-13-தத் அதிகமே -உத்தர அக பூர்வ அக யோகோ அஸ்லேஷ விநாச

தத் அதிகமே-உபாயம் கைகூடி விட்டால்

நாம் செய்த புண்ய பாபங்களில்
பயன் கொடுக்கவே தொடங்காதவற்றுக்கு ஸஞ்சித கர்மம் -என்றும் பெயர்
இந்த மூட்டையில் இருந்து சிலவற்றை -ஆரப்தம் -தொடங்கப்பட்டவை –
பலன் கொடுக்கத் தொடக்கி விட்டதை பிராரப்த கர்மம் என்றும் –

இவற்றில் தீயில் இட்ட பஞ்சு போலே -சஞ்சித கர்மத்தை -பூர்வ அகத்தை -பகவான் அழிக்கிறார்

உபாயம் செய்த பிறகு மேல் உள்ள காலத்தில் இவன் செய்யும் பாபங்களை -உத்தர அகத்தை
அந்த ஜீவனிடம் ஒட்டாதபடி செய்கிறார் –

பிராரப்த கர்மத்தை அவர் அழிப்பது இல்லை –
பல பிறவிகள் ஆனாலும் அதன் பயனை அந்த ஜீவன் அனுபவித்தே முடிக்க வேண்டும் –

அடுத்த ஸூ த்ரம் –இதர பாதே து –புண்யங்களையும் போக்கி அருளுகிறார்
மோக்ஷத்துக்கு விலக்கு -பொன் விலங்கு இவையும் முமுஷுக்கு

அநாரப்த கார்யே -சஞ்சித ஒன்றுமே
போகேந -அனுபவித்தே போக்க வேண்டும் பிராரப்த கர்மாக்களை
ஒரு பிறவியே பலவோ-பக்தி யோக நிஷ்டனுக்கு
பிராரப்த கர்மம் இருந்தால் தான் -மரணம் அடைந்தால் முக்தி -மரணம் அடைவித்து முக்தி இல்லையே

அந்த ஜீவனிடம் இருந்து விலகுகிற சஞ்சித கர்மாவில்
புண்யங்களை இவனுடன் பிரியத்தோடு அனுகூலராய் இருப்பவர்களையும்
பாபத்தை இவனை வெறுப்பவர்கள் -பிரதிகூலராய் இருப்பவர்களையும் அடையும்
3-3-26-இத்தைச் சொல்லும் –

எப்பொழுது போகும் –
குதிரை சிலிர்த்து மயிர்களை தள்ளி
ராகு இடம் பிடிப்பில் இருந்து சந்த்ர ஸூர்ய விடுபடுவது போல்
உடல் நீங்கும் பொழுது பாப புண்யங்கள் போகும் என்றும்
விரஜையில் நீராடிய பின்பே அனைத்தும் நீங்கும்
இரண்டும் சுருதியில் உண்டே

கடைசி உடல் எப்பொழுது விழுகிறதோ அப்பொழுது தான் அனைத்து கர்மங்களும் தொலைக்கப் படுகின்றன
அதற்குப் பிறகு இந்த உலகத்தைக் கடந்து முக்தி அடைய இந்த ஜீவாத்மா உபயோகிக்கும்
ஸூஷ்ம சரீரம் -நுண்ணிய உடல் – இவன் செய்த பக்தி -சரணாகதியின் பெருமையால் ஏற்பட்டதே தவிர கர்மத்தால் அல்ல

ஜீவாத்மா புறப்பட வேண்டிய வேளையிலே இவன் செய்த உபாயத்தால் சந்தோஷம் அடைந்த பரமாத்மா
இருதயத்தில் இருந்து கொண்டு இருட்டான ஹிருதயத்தில் இந்த ஜீவாத்மா செல்ல வேண்டிய பாதையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்
4-2-14-லோக அக்ர ஜ்வலனம் -ஹார்த்தமான பகவத் அனுக்ரஹம் –
உடலில் இருக்கும் 101-நாடியான ஸூஷ்ம்நா நாடி மூலமாக தலையின் உச்சி வழியே ஜீவாத்மா வெளியே புறப்பட்டு
அர்ச்சிராதி கதி -மார்கம் -மூலமாகப் பரம பதத்தை நோக்கிச் செல்கிறார் –

ஒளி உலகம் -பகல் உலகம் -வளர்பிறை உலகம் -உத்தராயண உலகம் -ஆண்டு உலகம் -ஸூர்ய உலகம் -சந்த்ர உலகம் –மின்னல் உலகம் –
முதலானவற்றைக் கடந்து -அங்கு இருக்கும் தேவர்களால் வழி நடத்தப்பட்டு
லீலா விபூதிக்கும் நித்ய விபூதிக்கும் இடையில் உள்ள விராஜா நதியில் நீராடி -அதுவரை இருந்த ஸூஷ்ம உடலையும் தொலைத்து
நித்ய விபூதிக்குள் புகுந்து அங்கே திவ்யமான அழகிய திருமேனியைப் பெறுகிறான் –

இதுவரை சம்சாரத்தாலும் கர்மங்களாலும் ஜீவாத்மாவின் இயற்கையான பல குணங்கள் மூடப்பட்டு இருந்தன
அவை இப்பொழுது விளங்குகின்றன –
ஸ்வேன ரூபேண அவி நிஷ்பத்யதே -சேற்றில் விழுந்த வைரம் போல் கீழே ப்ரக்ருதி விஸிஷ்ட ஆத்மா –
ஸ்வரூப ஆவிர்பாவம் -ஸூ ர்யன் கிழக்கு திக்கில் தோன்றுவது போல் –
எனவே ஜீவாத்மாவும் அக் குணங்களில் பரமாத்வாவுக்கு நிகராகிறார் –

அந்த முக்தன் தான் ஆசைப் பட்டத்தைச் செய்ய முடியும் -அஸ்ய சங்கல்ப ஏவ -ஸத்ய ஸங்கல்பம் -ஸத்ய காமத்வம் -உண்டே –
தன் பித்ருக்களைக் காண வேண்டும் என்று நினைத்தாலே உடனே அவர்கள் அங்கேயே தோன்றுவார்கள் –

முக்தி அடைந்த ஜீவன் எட்டு கல்யாண குணங்களிலும் ஆனந்தத்தில் மட்டுமே பரமாத்மாவுக்கு நிகராவார்
ஜகத் வியாபார வர்ஜம் -ப்ரகரணாத் அசந்நிஹித்வாத்
போக மாத்ர சாம்யா லிங்காத் -நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி
ஜகத்தைப் படைப்பது காப்பது அழிப்பது முதலான தொழில்கள் பரமாத்மாவுக்கே உண்டு

ப்ரஹ்ம அலங்காரம் சதம் மாலா அஞ்சன ஹஸ்தா இத்யாதி -திரு மா மணி மண்டபம்
நடுவாக வீற்று இருக்கும் -அஹம் அன்னம் –அஹம் அந்நாத –அநா வ்ருத்தி சப்தாத்-4-4-22 -நச புந ஆவர்த்ததே

ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து கொண்டு மற்ற முக்தர்களோடும் நித்யர்களோடும் சேர்ந்து பகவானை அனுபவித்து
அந்த ஆனந்தத்தால் அவருக்கு கைங்கர்யம் செய்து கொண்டு இருப்பதே மிகச் சிறந்த புருஷார்த்தமான பகவத் ப்ராப்தி ஆகும்

இப்படி முக்தி அடைந்த ஜீவன் என்றும் திரும்பி வருவதே கிடையாது -நச புந ஆவர்த்ததே -என்று வேதங்கள் கூறுகின்றன –

இந்த வுடல் விட்டு இரவி மண்டலத்தூடு ஏகி
இவ்வண்டம் கழித்து இடையில் ஆவரணம் ஏழ் போய்
அந்தமில் பாழ் கடந்து அழகார் விரசை தனில் குளித்து அங்கு
அமானவனால் ஒளிக் கொண்ட சோதியும் பெற்று அமரர்
வந்து எதிர் கொண்டு அலங்கரித்து வாழ்த்தி வழி நடத்த
வைகுந்தம் புக்கு மணி மண்டபத்துச் சென்று
நம் திருமால் அடியார்கள் குழாங்களுடன் கூடும்
நாள் எனக்குக் குறுகும் வகை நல்கு என் எதிராசா–23-

சரீர பாத சமே து கேவலம் மதீயயைவ தய்யா அதிபர புத்த
மாமேவா வலோகயன் அப்ரச்யுத
பூர்வ சம்ஸ்கார மநோரத
ஜீர்ண மிவ வஸ்த்ரம் ஸூ கேன இமாம் ப்ரக்ருதிம்
ஸ்தூல ஸூ ஷ்ம ரூபாம் விஸ்ருஜ்ய
ததா நீமேவ மத பிரசாத லப்த
மச் சரணார விந்த யுகளை
காந்திகாத் யந்திக பரபக்தி பரஜ்ஞான பரம பக்தி க்ருத
பரி பூர்ண அநவரத நித்ய விசததம
அநந்ய பிரயோஜன அநவதிக அதிசய ப்ரிய
மத் அனுபவ ஸ்தவம்
ததாவித மத் அனுபவ ஜனித
அநவதிக அதிசய ப்ரீதி காரிதா
அசேஷ அவஸ்த உசித
சேஷ சேஷ தைக ரதி ரூபா
நித்ய கிங்கரோ ப விஷ்யசி–ஸ்ரீ சரணாகதி கத்யம்—சூரணை -20-21-22-23

————-

உபாயம் வழி ஹிதம் பார்த்து
நியாய மீமாம்ஸ சுருக்கங்கள் பார்த்து –
அவை வேதாந்த பாடத்துக்கு உதவு மவற்றைப் பார்த்து நிகமிப்போம் –

பாடம் -39—மோக்ஷ உபாயங்கள் –

முமுஷு க்களுக்கு மட்டும் அல்லாமல் அனைவருக்கும்
ஸூவ ஞானம் ப்ராப்ய ஞானம் ப்ராபக ஞானம் -மூன்றும் அறிய வேண்டும்
தன்னைப் பற்றிய அறிவு -பிரகிருதி உடலை விட வேறுபட்ட -அறிவுடைய -சேஷ பூதன் –
ஆத்மாவைப் பற்றி முன்பே பார்த்தோம் –

ப்ராப்யம் -புருஷார்த்தங்கள் முன்பு பார்த்தோம் –
தர்மம் அர்த்தம் காமம் மோக்ஷம் -நான்குக்கும் வழிகள்
உத்புத யாகம் பசு அடைய
செழிப்புக்கு வாயு தேவதை
ப்ரஹ்ம தேஜஸ்ஸூ ஸுர்ய தேவதை பற்றி யாகம் –
ஜ்யோதிஷ்டோம ஹோமம் ஸ்வர்க்கம் –
இவை அனைத்துக்கும் உபாயங்களை ஸ்ருதி சொல்லும் –

பரம புருஷார்த்த லக்ஷணத்துக்கு உபாயம்
பலத்துக்கு அருகில் அழைத்துச் செல்லப்படுவதே உபாயம் –

உபாயங்கள் வேறு -பல பிரதம் -ப்ரஹ்மமே -ரக்ஷகம் –
ஆசைப்படும் பலனை அறிந்து கொடுக்க பரம சேதனன் வேண்டுமே –

பக்த்யா ப்ரபத்யா -மஹா முனே–வேறே வழி இல்லை -கைங்கர்யம் செய்ய -ஸம்ஹிதை சொல்லும்
ப்ரஹ்ம வித் ஆப் நோதி பரம் -தைத்ரியம்
ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி -சாம்யா பத்தி கீழே பார்த்தோம் –

விஞ்ஞாய -அறிந்து பிரஞ்ஞாம் அறிந்து கொண்டு -அறிந்து அறிந்து தேறி தேறி -பல நிலைகள் உண்டே

ஸ்ருதி உபாயம் பற்றித் தெளிவாக
ப்ரஹ்மத்தை அறிந்தால் அவரை அடையலாம் -என்று சொல்லும்
அறிதல் இங்கு ஓர் இரண்டு முறை அறிவது அல்ல
ஸ்ருதியே -ப்ரஹ்மத்தைத் தியானிக்க வேண்டும் -என்றும் சொல்லும்
ஆக அறிதல் -இடைவிடாமல் தியானித்தல் என்றபடி
தைல தாராவத் -அவிச்சின்ன ஸ்ம்ருதி சந்தான ரூபம்

ஆத்மா அரே த்ரஷ்டவ்யா -ஸ்ரோதவ்யா-மந்தவய-நிதித்யாஸி தவ்ய –
மேலும் அந்த த்யானம் நீடிக்க நீடிக்க -நேரே காண்பது போல் த்யானிக்கப் பெறுவோம்
இது தான் தர்சன சமானா கார த்யானம்
தர்சனமே புருஷார்த்தம் -அந்த அளவுக்கு தெளிவாக த்யானம் வேண்டுமே –

இது சாதாரணம் அல்ல -தன் இடம் பக்தி உள்ளோருக்கு மட்டும் தானே தன்னைக் காட்டிக் கொடுக்கிறார் என்றும் ஸ்ருதி சொல்லும்
நாயமாத்மா ஸ்ருதி –பேசியோ -கேட்டோ ஆலோசனையாலோ த்யானத்தாலோ அறிய முடியாது
யாரைத் தேர்ந்து எடுக்கிறானோ அவனே காண்பான்
விஸ்வரூபம் காண திவ்ய சஷுஸ் கொடுத்து காணும் படி அனுக்ரஹித்தால் போல்

நான் ஞானிகளுக்கு பிரியமாக இருக்கிறேன் -அப்படிப்பட்ட ஞானிகளை நானும் விருன்புக்கிறேன் -கீதை
ப்ரியதம வரணம் -ஸ்=வயம் வரம் போல் -தேர்ந்து எடுப்பது பக்தர்களையே
தேர்ந்து எடுத்துக் காட்டிக் கொடுத்து -அவர்களே தனக்கு ஆத்மா -மே மதம் –
வேதனம்–உபாசனம் -த்யானம் -நிதித்யா சனம் -இவை அனைத்தும் – ஸ்நேக பூர்வ அநு த்யானம்

கீதார்த்த ஸங்க்ரஹம் முதல் ஸ்லோகம் —ஸூவ தர்மம் –ஞானம் -வைராக்யம் -சாத்ய பக்தி ஏக கோசர
பக்தி யோகம் வேறே -பக்தி வேறே -நியமத்துடன் செய்வது -அங்கங்கள் உடன்
வேதார்த்த ஸங்க்ரஹம் –ஜீவ பர யாதாத்மா ஞான பூர்வக -வர்ணாஸ்ரம கர்மங்களை செய்து -த்யான -அர்ச்சன -ப்ரணாம –
ஸ்மரணம் கீர்த்தனம் பாத சேவகம் அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் -அஷ்ட வித பக்தி

எனவே தியானத்தை பக்தியுடன் செய்ய வேண்டும் -இதுவே பக்தி யோகம் ஆகும் –
பக்தி யோகம் ஏற்பட வேண்டுமானால் அதற்கு முன் கர்ம யோகமும் ஞான யோகமும் கை கூட வேண்டும் –

கர்ம யோகம்
ஜீவாத்மா பரமாத்மா இருவரையும் உண்மையாக அறிந்து
மூன்று வித த்யாகங்களுடன் -வர்ணாஸ்ரம தர்மத்தை பகவத் ஆராதனமாகவே நினைத்து செய்தல்

அந்த மூன்று வித தியாகங்கள்
1- கர்த்ருத்வ புத்தி தியாகம் -நான் தான் இந்தச் செயலைச் செய்கிறேன் -என்ற எண்ணத்தை விடுதல்
2- மமதா தியாகம் -இது என்னுடைய கர்மம் என்ற எண்ணத்தை விடுதல்
3-பல சங்க தியாகம் -அந்த கர்ம பலன்களில் ஆசையை விடுதல்

தபஸ்ஸூக்கள் -தீர்த்த யாத்திரை -தானம் யஜ்ஞம் -முதலியவற்றைச் செய்தல் எல்லாமே கர்ம யோகம் ஆகும்
கீதார்த்த ஸங்க்ரஹ ஸ்லோகம் இவற்றைக் காட்டும்

இப்படி கர்மயோகம் செய்து கொண்டே வந்தால்
அந்தக் கர்மங்கள் அவன் சேர்த்து வைத்து இருக்கும் பழைய பாபங்களை எல்லாம் போக்கும்
அவை குறைந்தால் மனசில் ஸத்வ குணம் வளரும்
அதன் மூலம் மனத்தை ஒருமித்து ஒரு விஷயத்தைத் த்யானிக்கத் தகுதி உடையதாகும்

இந்த கர்ம யோகம் ஞான யோகம் மூலமாகவும் பக்தி யோகத்தை ஏற்படுத்தும்

ஜனக மஹாராஜர் போல்வார் கர்ம யோகத்தாலேயே நேராக பக்தி யோகம் போவதையும் கீதையில் உண்டு

1-யஜமான சம்ஹ்யா -ஆமை போல் விஷயங்களில் இருந்து இந்திரியங்களை திருப்பி
2-வியதிரேக சம்ஹ்யா
3-ஏகேந்த்ரிய சம்ஹ்யா-மனசைக் கட்டுப்படுத்துதல்
4-வசீகர சம்ஹ்யா
இப்படி வைராக்யம் வளர வேண்டும்

ஞான யோகம்
மனதைக் கட்டுப்படுத்தி -புலன்களையும் கட்டுப்பாட்டில் வைத்து -ப்ரக்ருதியில் காட்டில் விலக்ஷணமான
பரமாத்மாவின் உடலான -சேவகனான ஜீவாத்மாவை தியானித்தல் –

பக்தி யோகம்
அன்போடு நேரே காண்பது போல் தெளிவாக அறியும் அளவுக்கு பகவானை இடைவிடாமல் தியானித்தல்
பக்திஸ் ச ஞான விசேஷ -ஞானம் கனிந்த நலமே பக்தி

இதற்கு -சாதன ஸப்தகம் -ஏழு காரணங்கள் உண்டு
1-விவேகம் -குற்றமற்ற உணவால் உடலை ஸூத்தமாக வைத்துக் கொள்ளுதல் -ஆகார ஸூத்தி -ஸத்வ சித்தி
ஜாதி- வெங்காயம் போல்வன – ஆஸ்ரய -யார் பொருள் -நிமித்த-தலை முடி விழுந்த – துஷ்டங்கள் இல்லாமல் –
2-விமோகம் -எந்தப் பொருளிலும் அதிகமாக ஆசை வையாது இருத்தல்
3-அப்யாஸம் -பகவானின் திருமேனியை எப்பொழுதும் -எந்தத் தொழில்களை செய்து கொண்டு இருந்தாலும் நினைக்கை
த்யானம் -யோக காலம் -அவனை தியானிப்பது போல் மற்ற சமயங்களிலும் நினைக்க வேண்டும் ஸூபாஸ்ரயம் -அன்றோ
த்யானம் போல் ஆசன நியமாதிகள் வேண்டாம் -ஆலம்பநம்
4-க்ரியா -வர்ணாஸ்ரம தர்மங்களை இயன்ற அளவும் செய்கை
5-கல்யாணம் -உண்மை பேசுதல் நேர்மை தயை தானம் அஹிம்சை போன்ற குணங்கள்
சத்யம் ஆர்ஜவம் தயா தானம் அஹிம்சை போன்ற குணங்கள்
6-அந வாஸம் -எந்தக் காரணத்துக்காகவும் மிகவும் வருந்தாமை
7-அநுத் தர்சம் -எந்தக் காரணத்துக்காகவும் மிகவும் மகிழ்ச்சி அடையாமை –
ஸூக துக்க சாம்ய புத்தி வேண்டுமே –

இந்த பக்தி யோகத்தில் மூன்று நிலைகள் உண்டு
1-பர பக்தி -பகவானைக் காண வேண்டும் என்ற ஆசை மிகுந்து அவரை தியானித்தல்
2-பர ஞானம் -நேரே காண்பது போல் பகவானை தியானிக்கும் நிலை
3-பரம பக்தி -பகவானைக் காண வேண்டும் என்ற ஆசை மிகுந்து அவரை தியானித்தல் –

பர ஏகாந்த ப்ரீத்யா –
ஞானம் தர்சனம் பிராப்தி நிலைகள் இவை-

பக்தி யோகம் கொண்டு ஐஸ்வர்யமும் கைவல்யமும் -பகவத் ப்ராப்தி-மூன்றும் பெறலாம்
உண்மையான ஸ்வரூபம் அறிந்து முமுஷுவான பின்பு பகவத் பிராப்தி –
அனுபவ ஜனித்த ப்ரீதி கார்ய கைங்கர்யம் ஒன்றையே பிரார்த்திப்பார்கள் அன்றோ –

சாதன பக்தி
ஸாத்ய பக்தி
ஸஹஜ பக்தி -இவையும் உண்டே

சரணாகதி
பக்தி யோகம் செய்ய சக்தி இல்லாதவர்களுக்கு சரணாகதி
சக்தி இருந்தாலும் கூட -பிராப்தி -ஜீவாத்மாவின் உண்மையை தெளிவாக அறிந்து –
பக்தி யோகம் செய்வது கூடாது என்று சரணாகதி செய்வார் நம் பூர்வாச்சார்யர்கள்
ஜீவாத்மா பகவானுக்கு அடிமை -சொத்து -என்று புரியப் புரிய
ஸூய யத்னம் ஒன்றும் இல்லாமல் அவனே நம்மைக் கைக்கொள்ளுவார் என்று மஹா விச்வாஸமும்
அவன் நம்மைக் கைக்கொள்ளும் போது அவனை விலக்காமையும் போதும் என்கிற
புரிதல் வந்தபின்பு பக்தி யோகம் செய்வது தவறு என்று உணர்ந்து சரணாகதியை ஒரே வழி என்று அறிகிறோம் –

நான் ஆசைப்படும் பொருளை அடைய வேறே வழிகள் இல்லாத போது –
ஒருவர் இடம் மஹா விஸ்வாஸம் வைத்து வேண்டுதல் தான் சரணாகதி என்று சாஸ்திரங்கள் கூறும்

எனவே சரணாகதி என்பது
பரமாத்மாவே நமக்கு முக்தி அடைய உபாயம் என்ற உறுதி மட்டுமே –
அதற்குள் நாம் பரமாத்மாவிடம் வைக்கும் பிரார்த்தனையும் அடங்கி இருக்கும்

அநந்ய சாத்யே –மஹா விஸ்வாஸ பூர்வகம்– ததேக உபாய தயா யாஸ்மிதா —
இதி -ப்ரார்த்தனா கர்ப்பமான மதி சரணாகதி –
அவனே உபாயம் -மாம் ஏகம் அர்த்தம் -குஹ்ய தமம்

ஒருவன் சரணாகதி செய்து விட்டால்
அவனுக்குத் தானாகவே ஏற்படும் சில ஸ்வ பாவங்கள் உள்ளன -அவகாத ஸ்வேதம் போல் –
1-அனுகூல்ய சங்கல்பம் -பரமாத்மாவுக்கு பிடித்தத்தை மட்டுமே செய்வேன்
2-பிராதி கூல்ய வர்ஜம் -அவருக்குப் பிடிக்காததை தவிர்த்தல்
3-ரஷிஸ்யதி விஸ்வாச -அவர் கண்டிப்பாக காப்பாற்றுவார் என்ற உறுதி
4-கோப்த்ருத்வ வரணம் ததா -அவரே காக்க வேண்டும் என்று தேர்ந்து எடுத்தல்
5-கார்ப்பண்யம் -கர்வம் இன்மை
6-ஆத்ம நிஷேபம் -ஆத்மாவைக் காக்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைப்பது –

ஆச்சார்ய அபிமானம் -நம் சம்பிரதாய -விசிஷ்டாத்வைத அசாதாரணம் இது

(ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் அருளிச் செய்த அர்த்த பஞ்சகம் –
ஆச்சார்ய அபிமானம் ஆவது -இவை ஒன்றுக்கும் சக்தன் இன்றிக்கே ஒருவனைக் குறித்து –
இவனுடைய இழவையும் -இவனைப் பெற்றால் ஈஸ்வரனுக்கு யுண்டான ப்ரீதியையும் அனுசந்தித்து
ஸ்த நந்த்ய பிரஜைக்கு வியாதி யுண்டானால் அது தன் குறையாக நினைத்து
ஔஷத சேவை பண்ணும் மாதாவைப் போலே இவனுக்காகத் தான்
உபாய அனுஷ்டானம் பண்ணி ரஷிக்க வல்ல பரம தயாளுவான மஹா பாகவதன் அபிமானத்திலே ஒதுங்கி
வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டும் -நாச்சியார் -10-10-என்று சொல்லுகிறபடியே –
சகல ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளையும் அவனிட்ட வழக்காக்குகை –
எம்பெருமான் தனித்து நித்ய சித்த ப்ராப்யனாகா நிற்கச் செய்தே
சகல தேவதாந்த்ர்யாமியாயாய்க் கொண்டு ப்ராப்யன் ஆகிறாப்
இவ்வாச்சார்ய அபிமானமும் தனியே உபாயமாகா நிற்கச் செய்தேயும்
எல்லா உபாயங்களுக்கும் சஹ காரியுமாய் ஸ்வ தந்த்ரமுமாய் இருக்கும் )

சரணாகதி செய்யும் பொழுது பகவான் கண்டிப்பாக ரக்ஷிப்பார் என்கிற மஹா விச்வாஸம் வேண்டுமே
அது ஏற்படுவது மிகவும் துர்லபம்
நாம் சேர்த்து வைத்து இருக்கும் பாபங்கள் கனத்தைப் பார்த்தாலும்
ஈஸ்வரன் நிரங்குச ஸ்வ தந்த்ரர் என்பதைப் பார்த்தாலும்
ஒரு வேளை கைக் கொள்ளாமல் போவாரோ என்கிற சந்தேகம் ஏற்படலாம்
அதனால் சரணாகதி செய்ய சக்தி இல்லாதவர் களுக்காக உள்ள ஒரே உபாயம் தான் ஆச்சார்ய அபிமானம்

நம்முடைய இயலாமையைக் கண்ட ஒரு பக்தர்
நம்மை அடைந்தால் பகவான் பெரும் ஆனந்தமே ஹேதுவாக திரு உள்ளம் பற்றி
நம்மால் செய்ய முடியாத சரணாகதியை நமக்காக அவர் செய்கிறார்
பால் குடிக்கும் குழந்தைக்கு உடல் நிலை சரி இல்லை என்றால் தாய் தானே மருந்தைக் குடிப்பது போலே
நம் இயலாமையால் அவர் நமக்காக பகவான் இடம் சரணாகதி செய்கிறார்

அப்படி தயையுடைய பக்தரின் நிழலில் ஒதுங்கி
அவருடைய அபிமானத்துக்கு இலக்காகி
நாம் இருப்பதே ஆச்சார்ய அபிமானம் ஆகும்
அவர் உபதேசித்தபடி வாழ்க்கையை அமைத்துக் கொண்டு –
அவர் இட்ட வழக்காக நாம் வாழ்ந்து வந்தால்
அதற்காகவே பகவான் உகந்து நமக்கு முக்தி அளிக்கிறார் என்று ஸாஸ்த்ரங்கள் கூறும்

பசுர் மனுஷ்ய பஷீ வா யே ச வைஷ்ணவ சம்ஸ்ரயா
தேநை வ தே ப்ரயாஸ் யந்தி தத் விஷ்ணோ பரமம் பதம்
அதாவது
விலங்கோ மனிதனோ பறவையோ ஒரு ஸ்ரீ வைஷ்ணவனை அண்டி வாழ்ந்து வந்தால் –
அதனாலேயே அவர்கள் பரமபதத்தை அடையலாம்
அளியல் நம் பையல் என்று அபிமானம் ஒன்றே வேண்டுவது –

இதுவே நாம் அனைவருக்காகவும் பகவான் ஏற்படுத்தியுள்ள சிறந்த எளிய நெறி ஆகும் –

—————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கணாதர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாசர் -பாதராயணர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நியாய மீமாம்ச வேதாந்த பாடங்கள்–ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்–பகுதி -3 –வேதாந்த சாஸ்த்ரம்– பாடங்கள் -21-30 —

August 5, 2021

பாடம் -21-ஆத்மா –
ஆத்மா பொதுச்சொல்லை அறிந்து பின்பு ஜீவாத்மா பரமாத்மா பாகுபாட்டை அறிவோம் –
ஆத்மா -நான் என்கிற அறிவுக்கும் பேச்சுக்கும் விஷயமாக இருப்பவர் -இலக்காக இருப்பவர் –
நான் என்கிற அறிவும் சொல்லும் ஆத்மாவைக் குறிக்கும் –நம் உடலை அல்ல
தேக ஆத்மா விபாகம் விரிவாக பின்பு பார்ப்போம்
ஆத்மா ஞானம் என்ற பொருளால் ஆக்கப்பட்டது —
மண்ணால் குடங்களும் -தங்கத்தால் ஆபரணங்களும் -பஞ்சால் துணிகளும் -ஆக்கப்பட்டவை போலே ஆத்மா ஞானத்தாலேயே ஆக்கப்பட்டது –
உப்புக்குக் கட்டி எங்குமே உப்பு மயமாக இருப்பது போல் ஆத்மாவும் முழுவதுமே ஞான மயமாகவே இருக்கும் –
நியாய மதத்தின் படி ஞானம் குணமே-தன்மையே தவிர – த்ரவ்யம்-பொருள் – அல்ல –
ஆனால் வேதாந்தப்படி ஞானம் தனியாக த்ரவ்யம்
ஞானம் – ஞானம் நகரு கிறது -விரிகிறது சுருங்குகிறது –இது போல் செயல்கள் த்ரவ்யத்துக்குத் தானே இருக்க முடியும்
தன்மை குணத்துக்கு கூடாதே –ஆகவே மண் தங்கம் பஞ்சு போல் இதுவும் த்ரவ்யமே
ஆத்மாக்கள் கோடிக்கணக்கானவை –
தங்க துகள்கள் தங்கத்தாலே ஆனது போல் ஆத்மா ஞானத்தால் ஆன ஸூஷ்மமான -நுண்ணியதாக பொருள் –

ஆத்மா ஸ்வயம் ப்ரகாஸம் ஆனவர் –
ஜடம் -தானாக பிரகாசிக்காது
அஜடம் -தானாகப் பிரகாசிக்கக் கூடியது -இதுவே ஸ்வயம் பிரகாசம் –
இங்கு பிரகாசம் -ஒளி விடுதல் என்கிற பொருளில் இல்லை -தோற்றுதல் என்கிற பொருளில் உண்டு –
குருவின் உபதேசத்தால் எனக்கு அர்த்தம் பிரகாசிக்கிறது தோற்றுகிறது -என்னுமா போலே -தெளிவாக தோற்றுகிறது என்று பொருள்
தோற்றுதல் -வ்யவஹார யோக்யத்வம் -தகுதி உடையதாக இருத்தல் -வியவஹாரம் பேச்சு செயல் –
குடத்தைப் பற்றி வ்யவஹாரம் செய்கிறேன் என்றது குடத்தைப் பற்றி பேசுகிறேன் -அல்லது குடத்தை கையிலே வைத்து உள்ளேன் போல் –
அறியாத பொருளைப் பற்றி வியவஹாரம் செய்ய முடியாதே –
அறியப் படுவதாவது -அறிவுக்கு விஷயமாதல் -இலக்கு ஆதல் –
ஆக
1- ஒரு பொருள் முதலில் அறிவுக்கு விஷயம் ஆகிறது
2- இதனால் அது பிரகாசம் அடைகிறது -தோற்றுகிறது -வியவஹாரம் செய்ய தகுதி யாகிறது –
3- அந்த வியவஹாரம் செய்யப்படுகிறது -பேசப்படுகிறது -கையாளப் படுகிறது –

எனவே ஒரு பொருள் பிரகாசிக்க -அது முதலில் அறியப்பட வேண்டும் –
ஒரு குடம் அறியப்பட வேண்டும் என்றால் ஒரு ஜீவாத்மா தன்னுடைய ஞானத்தை
கண் மூலமாக வெளியே செல்ல வைத்து –
வெளிச்சத்தின் உதவியோடு அத்தை அறிய வேண்டும் –
ஆகவே ஒரு குடத்துகை அறிய கண் வெளிச்சம் ஞானம் போன்றவற்றின் உதவி தேவை
ஆகவே குடம் ஜடம் -தானாகாத் தோற்றாத த்ரவ்யம் -பொருள்
உலகப் பொருள்கள் அனைத்துமே இப்படி ஜடம் -தானாகாத் தோற்றாதவை –

இப்பொழுது ஞானம் -என்ற த்ரவ்யத்தை எடுத்துக் கொண்டால்
அறிவைப்பற்றிய வ்யவஹாரம் -எனக்கு இந்த அறிவு ஏற்படுகிறது -நான் இதை அறிகிறேன் போன்ற பேச்சு வர
அறிவு முதலில் பிரகாசிக்க தோற்ற வேண்டும் –
அறிவு அறியப்பட வேறே ஒரு பொருளின் உதவி வேண்டாம் -அறிவு தோன்றும் போது அத்துத்தானாகவே தன்னையும் அறிவிக்கிறது
விளக்கு இருட்டையும் போக்கி -தன்னைத்தானே பிரகாசிப்பது போல் -அறிவும் மற்றப் பொருள்களையும் பிரகாசப்படுத்தி தானும் பிரகாசிக்கும் –
ஆகவே அறிவு அஜடம் -ஸ்வயம் பிரகாசம் -தானாகவே தோற்றுவது –
ஆத்மாவும் ஞானத்தால் ஆக்கப்பட்ட பொருள் ஆதலால் -ஸ்வயம் பிரகாசம் -அஜடம் –

ஆத்மா ப்ரத்யக்
உலகப்பொருள்கள் ப்ரத்யக் பராக் இரண்டு வகைப்படும் –
பராக் -வேறே ஒருவருக்குத் தோற்றம் அளிக்கும் பொருள்
ப்ரத்யக் -தனக்குத் தானே தோற்றம் அளிக்கும் பொருள் –
குடம் துணி போன்றவற்றை அறிவைக் கொண்டே ஆத்மா அறிகிறார் -குடம் தன்னைத்தானே குடம் என்று அறியாது –
ஆத்மா தன்னைத்தானே அறிகிறார் -நான் -நாம் -சொல்வதால் =நம்மை நாம் அறிகிறோம் -என்பது விளங்கும் –
ஆகவே ஆத்மா ப்ரத்யக் –
ஒரு பொருள் பேசப்பட வேண்டும் என்றால் அது அறியப்பட வேண்டும் –அறிவுக்கு விஷயமாக வேண்டும் –
நான் நாம் சொல்லும் பொழுது -நம்மைப் பற்றியே பேசுகிறோம் –
இதற்கு முன் ஆத்மா என்ற ஆத்மா அறிவுக்கு விஷயமாக ஆகி இருக்க வேண்டும் —
அது வேறே ஒரு அறிவு அல்ல -ஆத்மா என்ற அறிவு தான்
ஆத்மாவே அறிவு வடிவமானவர் –
ஞானம் என்றால் அதற்கு விஷயம் இருக்க வேண்டும்
ஆத்மா என்ற ஞானத்துக்கு எது விஷயம் என்றால் தான் மட்டுமே தான் விஷயமாக ஆகிறது –

ஆத்மா சேதனர் –
சைதன்யம் என்றால் அறிவு -ஞானம் என்று பொருள்
சைதன்யம் உடைய பொருள் சேதனம் என்று சொல்லப்படுகிறது –
ஆத்மா ஞானமே வடிவானவர் என்று பார்த்தோம் -இனி ஆத்மா ஞானத்தையும் உடையவர் என்பதையும் பார்ப்போம் –
பஞ்ச பூதங்களில் தேஜஸ்ஸூ ஓன்று -நெருப்பு தீபம் -போன்றவை தேஜஸ்ஸால் ஆனவை –
தீபம் ஓர் இடத்தில் இருந்தாலும் -ஒளி சுற்றும் பரவுகிறது –
ஒளி விளக்கின் குணம் என்று சொல்ல முடியாதே – குணம் ஓர் இடத்தை விட்டு நகராதே –
சுற்றி இருக்கும் ஒளி -பிரபா -அதுவும் தேஜஸ்ஸாலே ஆன த்ரவ்யம் –
எனவே தீபம் பிரபை -இரண்டு த்ரவ்யங்கள் -இரண்டுமே தேஜஸ்ஸாலேயே ஆனவை –
பிரபை எப்பொழுதும் தீபத்தையே அண்டி இருக்கும் -தனியாக இருக்க முடியாது –
தீபம் அழிந்தால் சுற்றி இருக்கும் பிரபையும் அழிந்து விடுமே –
அதே போல் இங்கும் ஞானம் -என்று ஒருவகையான த்ரவ்யம் -அதனால் ஆக்கப்பட்ட இரண்டு பொருள்கள் –
முதல் பொருள் தீபத்தை தனது ஸ்தானத்தில் கொண்ட ஆத்மா -அணுவாக ஓர் இடத்தில் இருப்பார் –
தீபத்தை அண்டி இருக்கும் பிரபை போலே ஆத்மாவையே ஆஸ்ரயித்து இருக்கும் – மற்றை ஓரு ஞானப் பொருள் –
அது தான் தர்ம பூத ஞானம் –ஆத்மாவின் அறிவு -சைதன்யம் –
இந்த அறிவு த்ரவ்யமாக இருந்தாலும் ஆத்மாவினுடையபிரிக்க முடியாத தன்மை ஆகும்
ஞானமே வடிவான ஜீவாத்மா ஞானத்தையும் உடையவராகவும் இருக்கிறார் –

அறிவு -தர்ம பூத ஞானம் -சைதன்யம் -ஞானம் வடிவு -ஸ்வயம் பிரகாசம் -பராக் -அசேதனம் –
ஆத்மா -ஞானமே வடிவானவர் -அதனாலே -ஸ்வயம் பிரகாசம் -ப்ரத்யக் –சேதனம் –
ஆத்மா ஞானத்தை உடையவர் –அதனால் சேதனம் –
தன்னைத்தானே அறிபவர் -ஆகவே ப்ரத்யக்
அறிவு என்பதும் ஞானமே வடிவானது -எனவே இதுவும் ஸ்வயம் பிரகாசம் –
அது ஞானத்தை உடையது அல்ல -எனவே அசேதனம்
அறிவு தானே அறியாது-ஆத்மாவுக்கு அறிவிக்கும் -ஆகவே பராக்
குடம் ஞான வடிவம் ஆனது அல்ல -எனவே அஸ்வயம் பிரகாசம் –
அது ஞானத்தை உடையது அல்ல –எனவே அசேதனம் –
குடம் தான் தன்னை அறியாது – ஆத்மாவால் தான் அறியப்படும் -ஆகவே பராக் –

ஆத்மாவின் லக்ஷணம்
இப்படிப்பட்ட ஆத்மாவின் லக்ஷணங்கள்
1-ப்ரத்யக்காய் இருத்தல் -தன்னைத்தானே அறிதல்
2-சேதனனாய் இருத்தல் -அறிவுடைய பொருளாக இருத்தல்
3-சரீரத்வம் -உடலைக் கொண்டதாக இருத்தல்

இந்த லக்ஷணங்கள் அனைத்துக்கும் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கு பொதுவானவை –

ஜீவாத்மாவின் தனிப்பட்ட லக்ஷணம் என்ன என்றால்
1- அணுவாக இருந்து கொண்டு சேதனமாய் இருத்தல் -அணுத்வே சதி சேதனத்வம்
பரமாத்மா அணு அல்ல -விபு -உலகில் அனைத்து இடங்களிலும் இருக்கக் கூடியவர் -எனவே அவருக்கு இது பொருந்தாது –
2- இயற்கையான அடிமையாக இருந்து கொண்டு சேதனமாய் இருத்தல் -ஸ்வாபாவிக சேஷத்வே சதி சேதனத்வம் –
பரமாத்மா தன்னிடம் அதிகமான பக்தி உடையவர்களுக்குத் தான் ஆசைப்பட்டு அடிமை செய்கிறான்
ஆனால் அது பக்தியால் வந்த அடிமைத்தனமே தவிற இயற்கையானது அல்ல –

எனவே இயற்கையான அடிமைத் தனத்தை உடைய அறிவாளி ஜீவாத்மா மட்டுமே –

————-

பாடம் –22- ஜீவாத்மாவின் தனித்தன்மை

ஸ்வாமி ஆளவந்தார் ஸ்ரீ ஸித்தி த்ரயத்தில் ஆத்மாவின் தனித் தன்மையை விளக்கி அருளுகிறார்

சித்தி த்ரயம் -ஜீவாத்மா -ஞானம் -ஈஸ்வரன் மூன்றையும் ஆத்ம சம்வித் ஈஸ்வர-காட்டி அருளும்
ஆத்ம சித்தியில் -ஸங்க்ரஹ ஸ்லோகம்
தேக இந்திரிய மன பிராண தீ–அந்நிய
அநந்ய சாதன

அறிவால் ஆக்கப்பட்ட ஆத்மாவே தானே
தீ -ஸம்விக் -இரண்டு வகை ஞானம்
விளக்கு பிரபை போல்
ஆத்மா -தர்மி ஞானம் தர்ம பூத ஞானம்
ஞானமும் ஒரு த்ரவ்யம் தகானே வேதாந்தத்தில்

நான் -என்று குறிக்கப் படுபவர் ஜீவாத்மா என்பதில் சந்தேகம் இல்லை –
அவர் எப்படிப்பட்டவர் என்பதிலே பல விவாதங்கள் உண்டு
உடலே ஜீவாத்மா
புலன்களே ஜீவாத்மா –
மனதே ஜீவாத்மா
பிராண வாயுவே ஜீவாத்மா
உலகப் பொருள்களின் அறிவே ஜாவாத்மா
இந்த வாதங்களை முறி அடித்து அருளவே ஸ்வ இதர விலக்ஷணன் ஜீவாத்மா என்கிறார் ஸ்ரீ ஆளவந்தார்
தேகம் என்றால் உடல்
இது என்னுடைய உடல் என்பதால் உடலை விட்டு வேறுபாடு தெளிவு
பிராணன் என்பது நம்முடைய மூச்சுக் காற்று -ஆகவே ஆத்மா பிராணனை விட பிராணனை விட வேறுபட்டது என்பது தெளிவு
நான் கண்ணால் காண்கிறேன் மூக்கால் முகர்கிறேன் என்பதால் புலன்களில் இருந்து வேறுபட்டது என்பது தெளிவு –
தீ -என்றால் அறிவு -நான் அறிவு என்று சொல்லாமல் -அறிவுடையவன் நான் என்கிறோம் -ஆகவே அறிவும் ஜீவாத்மாவும் வேறு

அடுத்து -அநந்ய சாதன -என்கிறார்
அந்நியம் -என்றால் வேறே ஓன்று
அநந்யம் -என்றால் வேறே அல்லாதது -அதாவது தானே -என்று பொருள் –
சாதன -என்றால் அதனால் பிரகாசிப்பது
எனவே அநந்ய சாதன -என்றால் வேறே ஒரு பொருளின் உதவி இல்லாமல் தானாகவே பிரகாசிக்கக் கூடிய வஸ்து -என்றதாயிற்று
இத்தையே ஸ்வயம் பிரகாசம் -அஜடம் -என்கிறோம் –
ஒரு குடம் அறியப் பட வேண்டும் என்றால்
அறிவு -கண் -வெளிச்சம் இவை அனைத்தும் தேவை -ஆகவே அது ஜடம்-தானாகப் பிரகாசிப்பது இல்லை
ஆனால் ஆத்மா அப்படி அல்ல
தானாகவே பிரகாசிக்கிறார்
நான் நான் என்று தோற்றிக் கொண்டே இருக்கிறார் -ஆகவே ஆத்மா தோற்ற எந்தப் பொருள்களின் உதவியும் தேவை இல்லை –
இதை அறிய பல பிரமாணங்கள் உள்ளன
1-ப்ரத்யக்ஷம் –
நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் பொழுது உள் புலன்களோ வெளிப்புலன்களோ இயங்காது
அப்போதும் நான் நான் என்று தோற்றிக் கொண்டே இருப்பார்
2-ஸாஸ்த்ரம்
அத்ர அயம் புருஷ ஸ்வயம் ஜ்யோதி என்று வேதம் கூறும்
ஸ்வயம் ஜ்யோதி என்றால் தானாகவே பிரகாசிக்கும் என்றதாயிற்று –
3-அநு மானம்
ஆத்மா ஸ்வயம் ப்ரகாசமானவர் -ஞானமான படியால் -நம் அறிவைப் போலே -என்கிற
அனுமானத்தாலும் இத்தை அறியலாம்
ஸ்வாமி வேதாந்த தேசிகன் ஸ்லோகம்
தத்வ முக்த கலாபம்
கிஞ்ச வேதாந்த த்ருஷ்ட்யா ஞானத்வாத் ஏஷ தீ வத்– ஸ்வ விஷய த்ருஷ்ணா
நிரபேஷ ஸ்வ ஸித்தி –அறிவு பிரகாசம் -வியவஹாரத்துக்கு தகுதி ஆவதே
தன்னைப் பற்றிய அறிவு தானாகவே வெளிக்காட்டும்
இரண்டு ஞானங்கள் உண்டே –
வேதாந்த ஸாஸ்த்ரத்தில் ஞானம் என்று வழங்கப் படுபவை எல்லாம் ஸ்வயம் ப்ரகாசங்கள்
ஆத்மாவும் ஞானம் எனப்படுகிறார்
ஆகவே அவரும் அப்படியே —

——-

பாடம் –23- ஜீவாத்மாவின் பண்புகள்

நியாய கலாபம் -ப்ரஹ்ம ஸூ த்ரம் -நியாயக் கூட்டம் -வேத வியாசர் –தீர்ப்பை எங்குமே கொள்ளலாமே –
சகல உபநிஷத்துக்களையும் பொருத்தி பார்த்து -சம்யக் நியாய க்லாபேண மஹதா பாரதம் –
உப ப்ரும்ஹத வேத வேதார்த்த விஷயீ கரணம்

ஆத்மா நித்யமானவர்
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ சித்தி த்ரய ஸ்லோகம் முதல் பாதி கீழே பார்த்தோம் –
தேக இந்திரிய மன பிராண தீ–அந்நிய
அநந்ய சாதன (ஸ்வயம் பிரகாசம் -)

இரண்டாம் பாதியில் ஆத்மாவின் குணங்களை அருளிச் செய்கிறார்

நித்யோ வ்யாபி பிரதி க்ஷேத்ரம் பிரதி சரீரம் பின்ன ஸ்வத ஸூகீ–

புத்த மதத்தில் ஆத்மா க்ஷணிகமான -ஒரு நொடியில் அழிந்து விடக்கூடிய அறிவுகளின் தொடர் தான் ஆத்மா என்பர்
ஆகவே இதுவும் அழியக் கூடியது என்பர்
இத்தை மறுக்கவே -ஆத்மா நித்யம் -பிறப்பு இறப்பு அற்றவர் என்கிறார் ஸ்ரீ ஸ்வாமி ஆளவந்தார்
முதலில் ஆத்மா க்ஷணிகம் அல்ல -நிலையானது என்பதற்கு பிரமாணம் பார்ப்போம்
நேற்று குடத்தைப் பார்த்த நானே இன்று அதைத் தொடுகிறேன் -என்கிற அறிவு ஏற்படுகிறது –
ப்ரத்யபிஞ்ஞா என்கிற இந்த அறிவால் நேற்று பார்த்தவருக்கு இன்று தொடுபவரும் ஒருவரே -என்று அறிகிறோம்
ஆகவே ஆத்மா நிலைத்து நிற்கும் ஒரு பொருளே என்பது தெளிவு –

ஸ்ரீ வேத வியாசர் ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரத்தில் –ஆத்ம அதிகரணம் இது –
ந ஆத்மா ஸ்ருதே –நித்யத் வாச்ச தாப்ய–2-3-18-
ந ஆத்மா-ஆத்மா உண்டாவது இல்லை —
ஸ்ருதே–அவ்வாறு ஸ்ருதி சொல்லுகிறபடியால் —
நித்யத் வாச்ச தாப்ய–ஸ்ருதிகளில் இருந்து ஆத்மா நித்தியமான படியாலும் –

ஆத்மா உண்டாவது இல்லை என்று வேதம் நேராக நேரடியாகக் கூறுகிறது –
ந ஜாயதே ம்ரியதே வா விபஸ்சித்
ஞாஜ்ஜ்வ த்வவ் அஜவ் -முதலிய இடங்களில் -(அறிவு உள்ளார் அறிவு குறைவாளர் இருவரையும் பிறப்பிலிகள் )
ஸ்ரீ கீதையில் இதே போல் வாக்கியம் உண்டே –
ந ஜாயதே ம்ரியதே கதாசித்–நாயம் பூத்வா –அஜ நித்ய ஸாஸ்வத புராண –புரா அபி நவ- இத்யாதி
ஸத் கார்ய வாதம் -அவஸ்தா பேதங்கள் உண்டே அசேதனங்களுக்கு

மேலும் ஆத்மா நித்யமானவர் என்றும் கூறுகிறது –
நித்யோ நித்யாநாம்
அஜ நித்ய ஸாஸ்வத அயம் புராண -போன்ற சுருதி வாக்கியங்கள் மூலம் ஆத்மா உண்டாவது இல்லை என்று அறியலாம் –
உடலோடு தொடர்பு படுவதே பிறப்பு -அதை விட்டுப் பிரிவதே இறப்பு என்று உலகில் சொல்லுகிறோம் –

ஆத்மா அணுவானவர்
குடம் புத்தகம் போல் நடுவாக அளவாகக் கொண்டால் அது பகுதிகளால் ஆக்கப்பட்டு இருக்க வேண்டும் –
எனவே அழிந்தே தீரும்
இது ஒவ்வாத படியால் ஆத்மா நடுவாக அளவு கொண்டது இல்லையே –

உத் க்ராதி-கதி -ஆகதிநாம் –2-3-20—ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் –ஆத்மா இவ்வுடலில் இருந்து புறப்படுகிறார் என்பதை
தேந ப்ரத்யோ தேந ஏஷ ஆத்மா நிஷ் க்ராமதி -என்றும்
வேறு உலகங்களுக்குச் செல்கிறார் என்பதை
யே வை கே ச அஸ்மாத் லோகாத் ப்ரயந்தி சந்த்ர மசமேவ தே ஸர்வே கச்சந்தி -என்றும்
அங்கு இருந்து மறுபடியும் திரும்பி வருகிறார் என்பதை
தஸ்மாத் லோகாத் புந ஏதி அஸ்மை லோகாய கர்மணே என்றும் வேதம் கூறுகிற படியால்
புறப்படுதல் செல்லுதல் வருதல் ஆகியவை விபுவான -எங்கும் பரந்துள்ள -பொருளுக்குக் கூடாத படியால் ஆத்மா விபு அல்ல

மேலும்
ஸ்வ ஸப்த உன் மாநாப்யாம் –2-3-23-ஸூத்ரத்தில் கோருகிறார்

வேதம் நேரடியாக ஜீவாத்மா அணு என்று கூறுகிறது
ஏஷ அணு ஆத்மா
ஸ்வரூபம் அணு மாத்ரம் ஸ்யாத் –முதலானவற்றில்

மேலும்
ஆராக்ர மாத்ரோ ஹ்யவரோபி த்ருஷ்ட
வாலாக்ர சத பாகஸ்ய சததா கல்பிதஸ்ய ச பாகோ ஜீவஸ் ஸ விஜ்ஜேய -என்பனவற்றில்
தலைமுடியின் நுனி ஊசியின் நுனி –முதலியவற்றுக்கு சிறியது ஆத்மா என்கிறது –

அவிரோத சந்தனவத்
சந்தானம் ஒரு இடத்தில் பூச உடம்பு முழுவதும் குளிர்வது போல்
இது நம் சித்தாந்தம் அல்ல
வேறே ஒருவர் சித்தாந்தம்
நம் சித்தாந்தம்-
குணாத்வா ஆலோக வத் –2-3-26- அணுவான ஆத்மா உடலில் ஓர் இடத்தில் இருந்தாலும்
அவருடைய தர்ம பூத ஞானம் உடல் முழுவதும் பரவி இருக்கிற படியால் உடல் முழுவதும் உள்ள இன்ப துன்பங்களை அறிகிறார்
ஆபாசத்துக்கு ஸுவ்ரி –50 உடல்களை கொண்டாரே –
இதே போல் முக்தி அடைந்த ஆத்மாவின் அறிவும் உலகம் முழுவதும் பரவி இருந்து அனைத்தையும் அறிகிற படியால்
ச ச அநந்த -அளவற்ற தர்ம பூத ஞானம் விரியும் –
ஸ்ரீ ஸ்வாமி ஆளவந்தார் ஸ்லோகத்தில் -வ்யாபி -என்று அருளிச் செய்கிறார்
விளக்கு ஓர் இடத்திலே இருந்து கொண்டு தன் ஒளியாலே வியாபித்து போலே
ஆத்மா அணுவாக இருந்தாலும் தன் அறிவால் வியாபிக்கிறார் —

ஆத்மாக்கள் பலர்
அடுத்து ஸ்லோகத்தில் பிரதி சரீரம் பின்ன -என்பதாக
ஆத்மாக்கள் பலர் உள்ளனர் -உலகில் ஆத்மா ஒன்றே என்று சொல்ல முடியாது
வேதம் -தேவ திர்யக் மனுஷ்யேஷு புமான் ஏக வ்யவஸ்தித –என்று
தேவ உடலிலும் மனுஷ்ய உடலிலும் மிருக உடலிலும் ஒரே ஆத்மா உள்ளார் -என்பதின் பொருளை உள்ளபடி அறிய வேண்டும்
எந்த உடலில் எந்த ஜீவாத்மா இருந்தாலும் -அவர்
ஞான வடிவாகவும்
நித்யமாகவும்
அணுவாகவும்
ஸ்வயம் ப்ரகாசராயும் இருப்பர்
சமமான ஒத்தவராக வேறு பாடு இன்றி இருப்பதால் ஒரே ஆத்மா உள்ளார் என்கிறது –
அரிசி மண்டியில் பல வகை மூட்டைகள் அரிசி இருக்க இது ஒரு அரிசி 52 ரூபாய் இது ஒரு அரிசி -60 ரூபாய் –
ஒரே தரத்தோடும் தன்மையோடும் உள்ளதால் ஒரே அரிசி என்கிறோம்
அதே போல் அனைத்து உடல்களிலும் உள்ள ஆத்மாவும் ஒரே தன்மை களைக் கொண்டவையே
தேஷாம் ஆதித்யவத் ஞானம் ப்ரகாசயதி தத் பரம் -முதலான வற்றால் முக்தர்களை பன்மையில் கூறும் –
ஆகவே ஆத்மா பலர் என்பது ஸித்தம்
ஸ்லோகத்தில் பிரதி சரீரம் பின்ன என்பதால் சரீரம் தோறும் வேறு பட்டவர் -என்றதாயிற்று –
அனைத்து சரீரங்களிலும் ஒரே ஆத்மா இருந்தால் அவரே உலகில் இருக்கும்
அனைத்து இன்ப துன்பங்களை எல்லாம் அனுபவிக்க நேரிடும் –

ஆத்மா ஆனந்த வடிவானவர்
ஸ்லோகத்தில் கடைசியில் ஸ்வத ஸூகீ -இயற்கையாகவே ஆனந்தமாகவே இருப்பவர் -என்று பொருள்
ஆத்மா ஞானமே வடிவானவர் என்று பார்த்தோம்
ஞானம் என்று ஓன்று இருந்தால் அதுக்கு விஷயமாக ஓன்று இருக்க வேண்டும்
அது பிடித்ததாக இருந்தால் அந்த ஞானம் ஸூகம்
பிடிக்காததாக இருந்தால் அதுவே துக்கம்
அதே போல் பயம் வெட்கம் கோபம் சந்தேகம் உறுதி போண்டாவை ஞானத்தின் வெவ்வேறு நிலைகள் தான்
எனவே ஆத்மா என்பவர் ஞானமே வடிவானவர் என்றால் அந்த ஞானத்துக்கு ஏதாவது ஒரு விஷயம் இருக்க வேண்டும் –
ஆத்மா என்கிற ஞானத்துக்கு உலகப் பொருள்கள் விஷயம் ஆக மாட்டா -அதுக்கு தான் மட்டுமே விஷயமாக இருக்கும்
எனவே ஆத்மா என்பது தன்னையே எப்பொழுதும் அறியக்கூடிய ஒரு ஞானம் என்று சொல்ல வேண்டும்
தான் தனக்கு எப்பொழுதும் விரும்பக் கூடியவராக அனுகூலராகவே இருப்பார்
யாரும் தன்னையே வெறுப்பது இல்லையே
எனவே ஆத்மா என்பது தன்னைப் பற்றிய ஒரு ஞானம் -தான் தனக்கு எப்பொழுதும் விருப்பமானவர் –
ஆகவே ஆத்மா என்பது விரும்பப்படும் பொருளை பற்றிய ஞானம்
இதுவே ஸூ கம் -ஆனந்தம்
எனவே ஆத்மா ஆனந்தமே வடிவானவர் என்கிறோம்
நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் பொழுது எந்தப் பியருளையும் அறிவது இல்லை
ஆனால் விழித்ததும் ஸூகமாகத் தூங்கினேன் என்கிறோம்
தூங்கும் பொழுது எந்த ஸூகத்தை அனுபவித்து இருக்க முடியும் –ஆத்மா என்கிற ஸூகத்தை மட்டும் தான் –
அதனால் தான் ஆத்மா இயற்கையிலே ஸூகமாய் இருப்பவர் என்று சொல்கிறார்
துக்கம் எல்லாம் சம்சாரத்தால் தான் வருகிறது –

———

பாடம் -24—ஜீவாத்மாவின் ஞாத்ருத்வம்

ஞானமே வடிவானவர் என்றும் ஞானம் -அறிவுடையவர் என்றும் பார்த்தோம் -அந்தர் ஜோதி புருஷ –
சாங்க்யர் -கபிலர் -புத்தர் -இருவரும் ஞானம் வடிவானவர் மட்டும் தான் என்பர் -ஞானம் என்ற பண்பு கிடையாது என்பர்
நியாய மதத்தின் படி ஞான வடிவானவர் அல்ல
கல் கட்டை போல் ஜடமான பொருள் தான் -ஆனால் ஞானம் என்ற பண்பு-குணம் -உண்டு என்பர் –
இவை இரண்டுமே தவறு -ஆத்மா ஞான வடிவானவரும் ஞானம் உடையவருமாகவே உள்ளார் என்று
வேத வியாசர் ப்ரஹ்ம ஸூத்ரத்தில் கூறுகிறார்
ஞா அத ஏவ –2-3-19-(ஞாதி கரணம் -இந்த ஸூத்ரம் -பெயரால் இந்த அதிகரணம் )
எந்த வேதத்தின் அடிப்படையில் நித்யமானவர் என்று கூறப்படுகிறாரோ அதே வேத அடிப்படையில்
ஆத்மா அறிவாளி அறிவுடையவர் ஞாதா

1-அத யோ வேத இதம் ஜிக்ராணி இதி ஸ ஆத்மா-
எவன் நான் நுகர்கிறேன் என்று அறிகிறானோ அவன் ஆத்மா
2-ய அயம் விஞ்ஞான மய ப்ராணேஷூ ஹ்ருதி அந்தர் ஜ்யோதி புருஷ
ஆத்மா ஞானம் என்ற குணத்தை யுடையவராய் ஹ்ருதயத்தில் உள்ளே ஞான வடிவாகவே இருக்கிறார் –
ஜ்யோதி என்று ஸ்வயம் பிரகாசம்
இவை போன்ற வேத வாக்கியங்கள் ஆத்மா அறிவுடையார் – என்று கூறுகின்றன
உலக வாழ்விலும் நான் அறிவுடையான் என்று தானே அறிகிறோம் –

இந்த பிரமாணங்கள்
ஞானம் வேறு -ஆத்மா வேறு -ஞானத்தை யுடையவர் ஆத்மா என்று ஸ்பஷ்டமாகக் கூற வில்லை –
எனவே ஞானமே ஆத்மா என்று சிலர் கேள்வி எழுப்பலாம் –
அதற்கு பதில் உரைக்கிறார் வேத வியாசர்
வியதிரேக கந்தவத் ததா ச தர்சயதி–2-3-27-
மணம் உடையது ப்ருத்வீ என்று சொல்லும் பொழுது
ஆறாம் வேற்றுமை மணத்துக்கும் பிருத்வீயுக்கும் உள்ள தொடர்பைக் காட்டுகிறது –
அதே போல்
ஞாநாதி ஏவ அயம் புருஷ–முதலான வேத வாக்கியங்களில் ஞானம் யுடையவர் ஆத்மா – என்று சொல்லுகிற படியால்
ஞானம் வேறு என்றும் ஆத்மா வேறு என்றும் ஞானத்தை யுடையவர் ஆத்மா என்றும் அறிகிறோம் –

இதே போல் ப்ரஹ்மம் ஆனந்த மயன் என்றும் வேதம் சொல்லும் ப்ரஹ்மத்தின் ஆனந்தம் அளவிட முடியாதே –

இங்கே பராசர பட்டர் —
நான் அறிவுடையவன் என்னும் பொழுது ஆத்மாவும் அறிவும் வெவ்வேறாகவே தோற்றினாலும் இரண்டே ஒன்றே என்று கொண்டால்
குடத்தை நான் அறிகிறேன் -என்னும் பொழுது நானும் குடமும் ஒன்றே-வேறுபோராடு தோற்றம் பொய்யானது என்றும் சொல்லலாமே –
ஆகவே ஆத்மாவுக்கும் அறிவுக்கும் உள்ள வேறுபாட்டை ஏற்றுக் கொள்ளவே வேண்டும்

இதுவும் ஸ்பஷ்டமாக இல்லை என்று நினைத்தால் -மேலும் வேத வியாசர் கூறுகிறார்
ப்ருதக் உபதேசாத் –2-3-28-
நேரடியாகத் தன் சொல்லைப் பயன்படுத்தியே அறிவானது ஆத்மாவைக் காட்டிலும் வேறுபட்டதாகச் சொல்லப் பட்டுள்ளது வேதத்தில்
ந விஞ்ஞாது விஞ்ஞாதே விபரி லோபோ வித்யதே
அறிவு வடிவமான ஆத்மாவினுடைய அறிவுக்கு அழிவே கிடையாது என்று இதற்குப் பொருள் –

இங்கு ஒரு கேள்வி எழலாம்
ஆத்மா அறிவுடையவராக இருந்தால் ஆத்மாவை அறிவு என்றே பல இடங்களில் கூறுவது எதனால் –
யோ விஞ்ஞானே திஷ்டன்
ஞானம் எனப்படும் ஆத்மாவின் மேல் எந்த பரமாத்மா இருக்கிறாரோ -என்றும்
விஞ்ஞானம் யஜ்ஜம் தநுதே
ஞானம் யாகத்தைச் செய்கிறது
போன்ற இடங்கள் உண்டே —
ஞான ஸ்வரூபம் ஆத்மா விஷ்ணு புராணமும் சொல்லுமே
இங்கு அறிவு என்றே -அறிவாளி -என்று சொல்லாமல் உள்ளதே –

இதற்கு வேத வியாசர் பதில் உரைக்கிறார் –
தத் குண சாரத்வாத் து தத் வியபதேச ப்ராஞ்ஞ வத் –2-3-29-
ஞானத்தை சாரமான குணமாக ஆத்மா கொண்டு இருக்கிறபடியால் ஆத்மாவை ஞானம் என்றே கூறலாம் –
தவறு இல்லை என்றவாறு –

ஒருவருக்கு ஸாரமான குணம் எதுவோ அவரை அக் குணம் என்றே உலகில் சொல்கிறோமே
நம்மாழ்வாரை கிருஷ்ண பக்தர் என்று சொல்லாமல் க்ருஷ்ண த்ருஷ்ண தத்வம் -கிருஷ்ண பக்தியே உருவானவர் –
அதே போலவே இங்கும் ஆத்மாவை அறிவே என்பதில் தவறு இல்லை
இங்கே ஸாஸ்த்ரீயமான எடுத்துக்காட்டு காட்டுகிறார் வேத வியாசர்
ப்ராஞ்ஞவத்–என்று பரமாத்வையே
பிரகர்ஷேண ஞானம் -சர்வஞ்ஞன்-அவனையே ப்ராஞ்ஞ என்று வேதம் சொல்லும் –
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் சொல்லும் சுருதி -அறிவுடையார் என்று சொல்லாமல் ஞானம் என்றே சொல்லும்
ஆனந்த வல்லி -மேலே மேலே சொல்லி திரும்பிற்றே –
ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் -ப்ரஹ்மத்தினுடைய ஆனந்தை என்று -எவ்வளவு என்று அறிய முடியாதோ
என்று அறிபவன் -ஸ்பஷ்டமாக தன்மை வேறே ப்ரஹ்மம் வேறே என்றும் சொல்லும்
அவன் ஆனந்தம் உடையவராக இருந்தாலும் அவனை ஆனந்தம் என்றே வேதம் பல இடங்களில் கூறும் –
அதே போல் ஞானம் உடையவராக இருந்தாலும் ஞானம் என்றே கூறும்
அவ்விடங்களில் போல் இங்கும் ஸாரமான குணத்தைக் கொண்டே அழைக்கப் படுகிறது –

இங்கு இன்னும் ஒரு கேள்வி எழும்
தூங்கும் பொழுது ஆத்மாவுக்கு ஞானம் இல்லையே -எவ்வாறு இது ஸாரம் என்று சொல்ல முடியும் –
இதுக்கு வேத வியாசர் பதில் அளிக்கிறார்
யாவதாத்ம பாவித்வாத் ச ந தோஷ தத் தர்ச நாத் –2-3-30-என்று
ஆத்மாவிடம் ஞானம் எப்பொழுதும் உண்டு
விழித்து இருக்கும் பொழுது உலகப் பொருள்களை அறிய அது உதவுகிறது தானும் அறியப்படுகிறது

நாம் தூங்கும் பொழுது இந்திரியங்கள் செயல் படாமையால் நாம் வெளிப்பொருள்களை அறிவது இல்லை –
அக்காலத்தில் நம்மிடம் இருக்கும் அறிவு தொற்றுவது இல்லை –
இதற்கு ஒரு எடுத்துக் காட்டு வேத வியாசர் காட்டுகிறார்
பும்ஸ்த்வாதிவத் து அஸ்ய சத அபி வியக்தி யோகாத் –2-3-31-
என்று எப்படி பிறந்த குழந்தை இடமே ஆண் தன்மை பெண் தன்மை இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட வயசிலே
தான் வெளித் தோன்றுகின்றனவோ
அதே போல் ஆத்மாவிடம் எப்பொழுதுமே இருக்கும் ஞானம் நாம் விழித்து இருந்து மற்றப் பொருள்களை
அறியும் பொழுது மட்டும் தான் தோற்றுகிறது
மற்றப் பொழுதில் தோற்றுவது இல்லை -ஆகவே ஸாரமான குணம் என்று சொல்லத் தட்டில்லை

முன் சொன்ன ஸூத்ரத்தில் –ச -என்ற சொல் –
இது மட்டும் சமாதானம் இல்லை -வேறே ஒன்றும் உண்டு அது என்ன என்றால்
ஆத்மா அறிவுடையவனாக இருந்தால் ஆத்மாவை அறிவு என்றே எதனால் சொல்ல வேண்டும் என்ற கேள்விக்கு
இப்படி சுற்றி வந்து சமாதானம் சொல்லத் தேவை இல்லை –
ஆத்மா அறிவுடையவராக இருந்து கொண்டு -தானும் ஞானமே வடிவுடையவராக இருக்கிற படியால்
வேதம் அப்படிச் சொல்கிறது என்று எளிமையாக சமாதானமும் சொல்லலாம் -என்று காட்டும் –

—–

பாடம் –25- ஜீவாத்மாவின் கர்தவ்யம் –

ஞாத்ருத்வம் வந்தாலே
கர்த்ருத்வமும்
போக்த்ருத்வமும் வருமே
ஹேய உபாதேய ஞான மூலம் -தத் கர்த்ருத்வ – சிகீர்ஷா -செய்வதில் ஆசை
ஞானம் இச்சா க்ருதி–மூன்றும் உண்டே

கர்த்ருத்வம் -செயல்களை செய்பவராக இருக்கும் தன்மை
போக்த்ருத்வம் -செயல்களின் பயனை அனுபவிப்பராக இருக்கும் தன்மை
முதலில் ஒரு பொருளை அறிகிறோம்
அறிந்து அதில் ஆசையோ வெறுப்போ தோன்றி -பெறுவதற்கோ பிளாக்குவதற்கோ முயல்கிறோம் –
அடுத்து அம் முயற்சியின் பயனை அனுபவிக்கிறோம்
ஆத்மா அறிவுடையவராய் இருப்பதால் கொள்ளத்தக்கது என்றோ தள்ளத்தக்கதோ என்றோ அறிகிறார்
அவரே கர்த்தாவான படியால் பிடித்ததை அடையவும் பிடிக்காதத்தை விலக்கவும் முடியும் –
ஆகவே ஆத்மா -ஞாதா -கர்த்தா -போக்தா என்பதே நம் சம்பிரதாய சித்தாந்தம் –

பூர்வ பக்ஷம் ஆத்மா கர்த்தா அல்ல
கபிலர் -சாங்க்ய மதம் -ஆத்மா கர்த்தா அல்ல -போக்தா மட்டும் தான் –
முக்குணங்களால் ஆக்கப்பட்ட பிரக்ருதியே அனைத்து செயல்களும் செய்கிறது
குணங்களே கார்யங்களை செய்கின்றன என்றும் சொல்வர்
சாங்க்ய மதத்தில் முக்குணம் என்று கொள்ளாமல் -மூன்று த்ரவ்யங்களே -தன்மை அல்ல
ப்ரக்ருதி த்ரவ்யமே மூன்று த்ரவ்யங்களின் கலவை என்பர் –
அவர்கள் வாதங்கள் பின்வருமாறு –

ஹந்தா சேத் மந்யதே ஹந்தும் ஹத: சேத் மந்யதே ஹதம் |
உபவ் தௌ ந விஜாநீத: நாயம் ஹந்தி ந ஹந்யதே ||(கட உப நிஷத் 2 – 19)
இதன் பொருள் – “கொலை செய்யும் ஒருவர் தன்னைக்
கொலை காரன் என்று நினைத்தாலோ கொலை செய்யப்படும் ஒருவர்
தன்னைக் கொல்லப்பட்டவராக நினைத்தாலோ , அவர்கள் ஆத்மாவின் தன்மையைப் புரிந்து கொள்ளவில்லை
என்று பொருள் ஏன் என்னில் ஆத்மா கொள்வதும் கிடையாது கொல்லப்படுவதும் கிடையாது –
இதிலிருந்து ஆத்மா எந்தச் செயல்களையும் செய்வது இல்லை என்று தேருகிறது

ப்ரக்ருதே க்ரிய மாணாநி குணை கர்மணி ஸர்வஸ
அஹங்கார விமுடாத்மா கர்த்தா அஹம் இதி மன்யதே –ஸ்ரீ கீதை –3-27-
இதன் பொருள் -பிரகிருதியின் குணங்களால் செய்யப்படும் செயல்களை தானே செய்கிறான்
என்று நினைப்பவன் அஹங்காரத்தால் மூடப்பட்டு மயங்குகிறான்

கார்ய காரண கர்த்ருத்வே ஹேது ப்ரக்ருதே உச்யதே
புருஷ ஸூக துக்கா நாம் போக்த்ருத்வே ஹேதுர் உச்யதே –13-20-
உடலும் இந்திரியங்களும் செயல்படுவதற்கு பிரகிருதி காரணமாகும்
ஸூக துக்கங்கள் அனுபவிக்க ஆத்மா காரணம் ஆவார் –

இப்படி பல பிரமாணங்களால் ஆத்மா கர்த்தா அல்ல பிரகிருதி தான் கர்த்தா என்றும்
ஆத்மா போக்தா மட்டுமே என்றும்
கூறப்பட்டுள்ள படியால் இதுவே சரியானது என்று சாங்க்ய மதம் –

இனி சித்தாந்தம்
இதற்கு பதில் உரைக்கிறார் வேத வியாசர்
கர்த்தா சாஸ்த்ரார்த்த வத்த்வாத் –2-3-33–(கர்த் அதிகரணம் )
ஆத்மா தான் கர்த்தா -ஸாஸ்த்ரம் என்று சொல்லப்படும் வேதங்கள் பயன் உடையவை ஆவதற்காக –
அறிதல் -செயல் படுதல் -பயனை அனுபவித்தல் -இவை மூன்றும் ஒருவர் இடம் தான் இருக்க முடியும்
என்பதை வைத்து சாங்க்ய மத நிரஸனம் செய்கிறார்
சுவர்க்கத்தில் ஆசை இருப்பவன் ஜ்யோதிஷ்டோம ஹோமம் செய்ய வேண்டும்
முக்தியை ஆசை இருப்பவன் ப்ரஹ்மத்தை தியானிக்க வேண்டும்
போன்ற கட்டளைகள் போக்தாவே கர்த்தா என்பதைக் காட்டும்
ஆத்மா போக்தா என்பதை அனைவரும் ஒத்துக் கொள்கிறார்கள்
எனவே வேதம் பயன் உள்ளதாக வேண்டும் என்றால் போக்தாவான ஆத்மாவே கர்த்தாவாகவும் இருக்க வேண்டும் –
ஸாஸனாத் ஸாஸ்த்ரம் –கட்டளை இடுவதால் இந்தப்பெயர் -ஒரு செயலில் மூட்டுதல் -ஈடுபடுத்துதல் –
எவர் அறிவுள்ளவரோ அவரைத்தான் வேதம் இத்தைச் செய் இதம் குரு இத்தைச் செய்யாதே -என்று கட்டளை இட வேண்டும்
பிரகிருதி அறிவுடையது அல்ல -எனவே அறிவுடைய ஆத்மா தான் கர்த்தாவாகவும் இருக்க வேண்டும் –

தத்வ த்ரயம் -யதீந்த்ர மத தீபிகை போன்றவை இவற்றை சொல்லும்
கர்த்ருத்வம் இல்லை என்றால் இவனுக்கு சஸ்த்ர வஸ்யத்தையும் போக்த்ருத்வமும் குலையும்
சக்தி விபர்யதயாத் –2-3-37- என்றும் இத்தையே சொல்லும் –

பூர்வ பஷத்துக்கு சமாதானம்

ஹந்தா சேத் மந்யதே ஹந்தும் ஹத: சேத் மந்யதே ஹதம் |
உபவ் தௌ ந விஜாநீத: நாயம் ஹந்தி ந ஹந்யதே ||(கட உப நிஷத் 2 – 19)
இதில் ஆத்மா எந்தச் செயலையும் செய்வது இல்லை என்ற கருத்தில் சொன்னது அல்ல
ஆத்மா நித்யமானவர் –அவரை யாராலும் அழிக்க முடியாது
கொல்வது உடலை மாத்திரம் தான் -கொலை செய்பவர் உடலைத்தான் அழிக்கிறார் ஆத்மாவை அல்ல
கொல்லப்படுபவரின் உடல் தான் அழிகிறது ஆத்மா அல்ல -என்பதே இதன் பொருள் –

ப்ரக்ருதே க்ரிய மாணாநி குணை கர்மணி ஸர்வஸ
அஹங்கார விமுடாத்மா கர்த்தா அஹம் இதி மன்யதே –ஸ்ரீ கீதை –3-27-
இதிலும் கண்ணன் சொல்ல வருவது ஆத்மா கர்த்தாவே அல்ல என்பது அல்ல
ஆத்மா தான் கர்த்தா -ஆனால் சம்சாரத்தில் நாம் செய்யும் தினசரி செயல்களுக்கு எல்லாம்
ஆத்மா இயற்கையாக கர்த்தா அல்ல செயற்கையாகத் தான் இவற்றை எல்லாம் செய்கிறார் என்றே இதற்குப் பொருள் –
ஏன் என்றால் இயற்கையாக பாப புண்யங்கள் இல்லாமல் உடல் இல்லாமல் இருக்கும் ஆத்மாவுக்கு
பசி தாகம் துக்கம் போன்றவை இல்லையே -ஆகவே இந்தச் செயல்களைச் செய்யத் தேவை இல்லை
ஒரு உடலை எடுத்துக் கொண்டு முக்குண சேர்க்கை ஏற்படும் பொழுது தான் இவற்றைச் செய்கிறார் என்பதைக் காட்டவே இந்த ஸ்லோகம்

கார்ய காரண கர்த்ருத்வே ஹேது ப்ரக்ருதே உச்யதே
புருஷ ஸூக துக்கா நாம் போக்த்ருத்வே ஹேதுர் உச்யதே –13-20-
இங்கும் உடலும் புலன்களும் செயல்பட ப்ரக்ருதியுடன் தொடர்புடைய ஆத்மாவே காரணம் –
இயற்கை நிலையில் இருக்கும் ஆத்மா அல்ல

ஆத்மா ஸ்வ தந்த்ரரா -பர தந்த்ரரா –
தன் இச்சையால் செயல்படுகிறாரா -வேறே ஒருவருக்கு கட்டுப்பட்டு செயல் படுகிறாரா –

பூர்வ பக்ஷம்
தானாக யோசித்து -தன் இச்சையால் முடிவு எடுத்து செயல் படுபவர்க்குத் தான் ஸாஸ்த்ரம் கட்டளை இட முடியும்
வேதம் பயன் உள்ளவையாக இருக்க வேண்டும் என்றால் ஆத்மா ஸ்வ தந்த்ரராகவே இருக்க வேண்டும் –

ஸித்தாந்தம்
இதற்கு வேத வியாஸர் பதில் அளிக்கிறார்
பராத் து தத் ஸ்ருதே –2-3-40-(பராயத்தா அதிகரணம் )
ஜீவாத்மாவின் கர்த்ருத்வம் -செயல்பாடும் தன்மை பரமாத்மாவுக்குக் கட்டுப் பட்டதே -வேதம் கூறுகிறபடியால்

அந்த ப்ரவிஷ்ட ஸாஸ்தா ஜநாநாம் ஸர்வாத்மா
பரமாத்மா ஜீவாத்மாக்குள் புகுந்து அவரை நியமிக்கிறார் -இயக்குகிறார்
சாஸ்தா விஷ்ணு அசேஷ ஜகத் -உன்னைக் கேட்க செய்தவனும்
என்னை திரு நாமம் சொல்லக் செய்தவனும் அவனே -பிரகலாதன் –

ய ஆத்மநி திஷ்டன் ஆத்மந அந்தர -யம் ஆத்மா ந வேத
யஸ்ய ஆத்மா சரீரம் ய ஆத்மாநம் அந்தர யமயதி
எவர் ஆத்மாவின் மேல் உள்ளாரோ -எவர் ஆத்மாவுக்குள் உள்ளாரோ -எவரை ஆத்மா அறிவது இல்லையோ –
ஆத்மா யாருக்கு சரீரமோ -எவர் ஆத்மாவை உள் இருந்து இயக்குகிறாரோ அந்த பரமாத்மா

இவை போன்ற பல வேத வாக்கியங்கள் ஜீவாத்மாவுக்குள் பரமாத்மா இருக்கிறார் என்றும் –
அவரே ஜீவாத்மாவை இயக்குகிறார் என்றும் -சொல்லப்பட்டுள்ள படியால்
ஜீவாத்மா ஸ்வ தந்த்ரர் அல்ல பர தந்த்ரரே –
தனது இச்சையாக செயல்படுவது இல்லை –
பரமாத்மாவுக்கு கட்டுப்பட்டு அவரால் இயக்கப்பட்டு தான் செயல்படுகிறார் என்பது தெளிவு –

மனதில் எழும் கேள்விகள்
இப்படி பரமாத்மாவே இயக்குகிறார் என்றால் பல சங்கைகள் எழுமே
1–தன் இச்சையால் செயல்படாத ஜீவாத்மாவுக்கு எதனால் வேதங்கள் உபதேசிக்க வேண்டும் —
எதையும் முடிவு செய்து செயல் பட முடியாதே -வேதங்களுக்கு பிரோயோஜனம் இல்லாமல் போகுமே —

2- பரமாத்மா தூண்டுவாராகில் அந்தச் செயலின் பயனையும் அவரே அனுபவிப்பாரா –
பாப புண்யங்களும் அவருக்குத் தானே சேர வேண்டும் –
ஜீவாத்மாவுக்கு கர்மங்கள் எப்படி ஏற்படுகின்றன

3-தீய செயல்களை செய்விப்பான் ஆகில் -அதனால் துன்பப்பட வைப்பான் ஆகில் அவனுக்கு கருணை இல்லையா

4-ஒரு சிலரை நல்ல செயல்களில் தூண்டி புண்யம் பெற வைத்து –
ஒரு சிலரை தீய செயல்களில் தூண்டி பாபம் பெற வைப்பான் ஆகில்
ஒரு தலைப் பக்ஷ செயல் ஆகாதா -ஏன் இந்தப்பாகுபாடு -இது பரமாத்மாவுக்குப் பொருந்துமா

5-இப்படி பரமாத்மாவே இயக்குகிறார் என்றால் தானாகவே யோசித்து மாறுவதற்கு வாய்ப்பே இல்லையா
எனக்கு உள்ள அறிவு வீணாகப் போகுமே

இவை அனைத்துக்கும் பதில் அளிக்கவே அடுத்த ஸூத்ரம்
க்ருத ப்ரயத்ன அபேஷஸ்து விஹித ப்ரதி ஷித்த அவை யர்த்யாதிப்ய –2-3-41–

இதற்கு ஸ்ரீ பாஷ்யத்தில் ஸ்வாமி ராமானுஜர்
எல்லாச் செயல்களிலும் ஜீவாத்மா எடுக்கும் முதல் முயற்சியை எதிர்பார்த்து தான் அந்தர்யாமியாய் இருக்கும்
பரமாத்மா தனது அனுமதியை வழங்குவதில் மூலம் அச்செயலில் நம்மை மூட்டுகிறார் –
இந்த ஒரு ஸ்ரீ ஸூ க்தி நமது அனைத்து சங்கைகளையும் தீர்க்கும் –

ஜீவாத்மா கர்மம் அடிப்படையில் ஒரு உடலை எடுக்கிறார் –
அப்பிறவியில் எத்தனையோ பொருள்களைப் பார்க்கிறார்
முன் பிறவியில் அனுபவித்த விஷயங்களை பொறுத்து அவருக்கு ருசி -விருப்பு வெறுப்புக்கள் -உள்ளன –
அதன் அடிப்படியில் விருப்பமோ வெறுப்போ அடைகிறார்
அடையவோ விலக்கவோ முயற்சி செய்கிறார்
பின்பு அடுத்து அடுத்த முயற்சிகளில் செயல்களில் ஈடுபடுகிறார் –

இந்தச் சங்கிலியில் ஒவ்வொரு இலக்கையும் குறித்து முயல் முயற்சியில் -அந்தர்யாமியாக இருந்து
உதாசீனனாக -அலட்சியமாக இருந்து விடுகிறார்
அடுத்த நொடியில் அது ண்பல்ல செயலா தீய செயலா என்று பார்க்காமல் அதைத் தான் அனுமதிக்கிறார்
அவர் அனுமதி இல்லாமல் எந்தச் செயலும் நடக்க முடியாதே –
இந்த இரண்டாவது நிலை -அநுமந்த்ருத்வம் -அனுமதி கொடுத்தல் –

நம் சங்கைகளுக்கு பதில்கள் —
பதில்-1-முடிவு எடுத்து செயல் படும் ஸ்வா தந்தர்யம் நமக்கு உண்டு –
எனவே வேதங்கள் நமக்கு கட்டளை இடுவது சரியே -வீணாகாது

பதில்-2-இருவருக்குப் பொதுவாக ஒரு சொத்து உள்ளது -அதில் ஒருவர் அந்தச் சொத்தில் இருந்து ஒரு பகுதியை எடுத்து
மற்ற ஒரு உரிமையாளரின் அனுமதியைப் பெற்று -அந்த நாட்டின் அரசருக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார்
அந்த அரசர் மகிழ்ந்து பல நன்மைகளை செய்தார் -அதை அனுபவிக்கும் உரிமை முயற்சி எடுத்தவருக்கே உண்டு –
அனுமதி கொடுத்தவருக்கு கிடையாதே –
அதே போல் செயலைச் செய்ய முடிவு செய்த ஜீவாத்மாவுக்கு கர்மங்கள் சேரும்
அனுமதி கொடுத்த மற்ற ஒருவருக்கு கிட்டாதே –பரமாத்மாவுக்கு ஒரு குற்றமும் வராதே –

பதில் -3-தீய செயலை செய்யவும் அனுமதி கொடுப்பதால் கருணை அற்றவர் ஆக மாட்டார் –
ஜீவாத்மா தவறான செயலில் ஈடுபட்டது ஸாஸ்த்ர விரோதமாக உள்ளதால் தண்டனை வழங்க வேண்டுமே –
தண்டனை வழங்கும் முறையில் தான் அனுமதி வழங்குகிறார்

பதில் 4-பக்ஷபாதி என்று பரமாத்மாவை சொல்ல முடியாது
ஜீவாத்மா அவரவர் சுதந்திரத்தைப் பயன்படுத்தி முடிவு எடுத்து செய்யும் எந்தச் செயலையும் அனுமதிக்கிறார்
இவரே எந்தச் செயலிலும் மூட்டவில்லையே

பதில் 5–சுதந்திரமாக முடிவு எடுத்து செயல்படும் சக்தி ஜீவாத்மாவுக்கு இருப்பதால்
அவர் அறிவு யுடையவராய் இருக்கும் தன்மை வீண் ஆகாது –

ஆகவே பகவான் அனைத்தையும் இயக்குகிறார் என்பதற்குப் பொருள்
ஜீவாத்மா ஸ்வ தந்திரமாக முடிவு எடுத்து செயல் படத் தொடங்கும் வரை அவர் உதாஸீனமாக அலட்சியமாக இருந்து
அதற்குப் பின் தான் அனுமந்தாவாக -அனுமதி அளிப்பவராகவே இருக்கிறார் என்பதே —

1-பரமாத்மா அனைத்துக்கும் காரணம் –
2-ஜீவாத்மா முதல் முயற்சி செய்ய ஸ்வாதந்தர்யம்
3-அனுமதிப்பதால் பலன் அவனைத் தீண்டாதே
4-பார பக்ஷம் காடடாதவன்
5-காருண்யம் மிக்கவனே -நிர்தயத்வம் அல்லவே -அனைத்துமே பொருந்துமே

இதற்கு விதி விலக்கும் உண்டு –
ஏஷ ஏவ சாது கர்ம காரயதி தம் யம் ஏப்ய-லோகேப்ய உந்நிநீஷதி
ஏஷ ஏவ அசாது கர்ம காரயதி தம் யம் அதோ நிநீஷதி -என்று கூறும்
யாரை மேலே உயர்த்த பகவான் ஆசைப்படுகிறாரோ அவர்களை நல்ல செயல்களை பண்ணும்படி தூண்டுகிறார் –
யாரைத் தாழ்வடைய வைக்க ஆசைப்படுகிறாரோ அவர்களை தீய செயல்களை செய்யும் படி தூண்டுகிறார் –

இங்கு கீழ் போல் அனுமதி மட்டும் அல்ல -தூண்டுதலும் உண்டு
இது ஒரு சிலருக்கே -ஸ்ரீ கீதையில் இத்தை தெளிவாக்க காட்டி அருளுகிறார்
யார் எல்லாம் என்னிடத்தே மிகுந்த பக்தியுடன் என்னை அடைய விரும்புகிறார்களோ அவர்களை நற் செயல்களில் தூண்டுகிறேன்
யார் எல்லாம் என்னை வெறுக்கிறார்களோ அவர்களை வேறே வழி இல்லாமல் தாழ்ந்த பிறவிகளில் தள்ளுகிறேன்
எனவே ப்ரயோஜகத்வம் -மறைமுகமாகத் தூண்டுதல் – என்ற மூன்றாவது நிலையில் பகவான் இருப்பது
பொதுவான நிலை அல்ல -ஒரு சிலருக்குத் தான் –

ததாமி புத்தி யோகம் -என்றும்
ஷிபாமி –ந க்ஷமாமி–ஆஸூர யோனியில் தள்ளுகிறேன் -என்றும் கீதையில் உண்டே
அதிமாத்ர அனுகூலர்களுக்கும் -தேஷாம் சததி யுக்தானாம் -ப்ரீதி உந்த இருப்பர்களுக்கு –
அதிமாத்ர பிரதி கூலர்களுக்கும்

———

பாடம் -26- ஜீவாத்மாவின் வகைப்பாடு –

ஜீவாத்மா -மூன்று வகை -பத்தர்கள் -முக்தர்கள் -நித்யர்கள் –
பத்தர்கள் -பாப புண்ய -கர்மங்களில் கட்டுப்பட்டு -பந்தப்பட்டு -இந்த அண்டத்துக்குள்ளே ஏதோ ஒரு இடத்தில்
இருந்து துன்பப்பட்டுக் கொண்டே இருக்கும் ஜீவாத்மா
அஜோகி ஏக பிறக்காத நித்தியமான ஆத்மா ப்ரக்ருதி சம்பந்தத்தால் -பந்தம் -கட்டுப்பட்டு -ஆசை உடன் -சேர்ந்து
போகம் அனுபவித்து – -ஜகாதி- வெறுத்து முக்தன் ஆக

இவர்கள் நான்கு வகைப்பட்ட பிறவி கொண்டவர்கள்
தேவர்கள் -மனிதர்கள் -விலங்குகள் -ஸ்தாவரங்கள் –
அசுரர்கள் கிங்கரர்கள் கந்தர்வர்கள் இவர்கள் தேவர்கள் சப்தத்தில் அடங்கும் -33 கோடி -ஒரு வகை பிறவி இது
திதி அதிதி -பிள்ளைகள் -கஸ்யபர்
ராக்ஷசர் மனிதரில் ஒரு வகை போல்
தேவர்களுக்குள்ளும் மனிதர்களுக்கும் யோனிஜர் அயோனிஜர் உண்டே -நான் முகன் அஜன் அயன்
ஸ்வேதர் வியர்வை மூலம் வந்தவர் போல் உண்டு

செடி கொடிகளும் சில செயல்களைச் செய்வதால் அவற்றுக்குள்ளும் ஜீவர்கள் உண்டு –
கண்ணன் திருவடி பெற்ற கதம்ப மரம் புண்ணியம் நமக்கு இல்லையே –
இவற்றுள் விலங்குகளும் ஸ்தாவரங்களும் ஸாஸ்த்ரத்துக்குக் கட்டுப் பட்டவை அல்ல —
அதாவது -அவர்களுக்கு ஸாஸ்த்ரம் எதையும் -விதிக்காது
அவை ஸாஸ்த்ரம் சொல்லியதை செய்யா விட்டாலும் பாபம் இல்லை
தேவர்கள் மனிதர்கள் -ஸாஸ்த்ர வஸ்யர் -அதன் படியே நடக்க வேண்டும் –

இவர்களில் –
புபுஷுக்கள் முமுஷுக்கள் -இரண்டு வகையாகப் பிரிக்கலாம்
ஸம்ஸாரத்திலே இருந்து ஸூக துக்கங்களையே அனுபவிக்க ஆசைப்பட்டவர்கள் புபுஷுக்கள்
போகம் ஸூ க துக்க அனுபவம் -இதையே உண்ண ஆசைப்பட்டவர்கள் புபுஷு –
ஸம்ஸாரத்தில் இருந்து விடுபட ஆசைப்படுபவர்கள் முமுஷுக்கள் –

புபுஷுக்களை
அர்த்த காம பரர்கள் என்றும்
தர்ம பரர்கள் -என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம்

அர்த்த காம பரர்கள்
உடலையே ஆத்மா என்று நினைத்தும் வேறே உலகங்கள் இல்லை என்று நினைத்தும்
இவ்வுலக போகங்களையும் செல்வங்களையும் ஆசைப்படுபவர்கள்

தர்ம பரர்கள் –
உடலைக் காட்டிலும் ஆத்மா வேறுபட்டவர் என்று உணர்ந்து ஸாஸ்த்ரம் படி செயலைச் செய்து
புண்யம் சேர்த்து வேறே லோகங்களை அடைந்து ஸூகப்படலாம்
ஐஹிக ஆமுஷ்மிக ஸூகங்கள் -இவ்வுலக இவ்வுலக இன்பங்கள் —
என்று உணர்ந்து யாகம் தானம் தபஸூக்கள் செய்பவர்கள்
இவர்கள் பரமாத்மாவை அறியாமல் நிலையான ஸூகத்தை அடைய மாட்டாதவர்கள் என்று ஸ்ரீ கீதையில் உண்டே –

இந்த தர்ம பரர்களை
தேவதாந்த்ர பரர்கள்
பகவத் பரர்கள் என்றும் இரண்டு வகை பட்டவர்கள் –

தேவதாந்த்ர பரர்கள் –
இதர தேவர்களைக் குறித்து -பரமாத்மா இவர்களுக்கும் ஆத்மா– நியாந்தா என்று அறியாமல்
மேலோட்டமாக கர்மங்களை செய்து பலன்களைப் பெறுவார்கள் –
பூ போல் பேசி -காயோ பழமோ தராது -வேத வாத ரதர்கள் -ஸ்வர்க்க பரர்கள் கிரியா விசேஷ பஹுளாம் —
என்கிறார் கீதாச்சார்யர் –

பகவத் பரர்கள் –
எந்த பலன்களைப் பெற வேண்டிலும் பரமாத்மாவையே பற்றி அடைபவர்கள்
ஆனால் செல்வம் போகங்களையே விரும்பி பெறுவதால் இவர்களும் புபுஷுக்கள் தான் –

அர்த்தார்த்திகள் அபூர்வ ஐஸ்வர்ய காமன்
இழந்த அர்த்தம் பெறவும் –
அண்டக்குலத்துக்கு அதிபதி -பாசுரத்தியல் இருவரையும் குறித்து —
அண்டாதிபதி -ராக்ஷஸர்கள் அசுரர்களை-இண்டக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகேசன் –
இவர்களையும் உதாரர் என்று கொண்டாடுகிறான் கீதாச்சார்யர் —

முமுஷுக்கள் இரண்டு வகை
கைவல்ய பரர்கள்
பகவத் பிராப்தி பரர்கள்

கைவல்ய பரர்கள் –
சம்சாரத்தில் இருந்து விடுபட்டு -உடல் இல்லாத நிலையில் -ஆனந்தமாக இருக்க –
ஆனந்த வடிவமான ஆத்மாவையே அனுபவித்துக் கொண்டு –
பரமாத்மாவை அடைய ஆசைப்படாமல் இருந்து இழந்து போகிறவர்கள் –

பகவத் பிராப்தி பரர்கள் –
சேஷத்வ ஞானம் அறிந்து பரமாத்மாவையே அடைந்து ப்ரீதி கார்ய கைங்கர்யம்
ஒன்றே உயர்ந்த புருஷார்த்தம் என்று அறிந்து அதற்கு ஆசைப்படுபவர்கள் –
இவர்களை
பக்தர்கள் -உபாசகர்கள்
சரணாகதர்கள் -ப்ரபன்னர்கள் -என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம் –

பக்தர்கள் -மிகுந்த அன்புடன் பகவானை இடைவிடாமல் த்யானம் செய்து அதன் மூலம் முக்தி அடைபவர்கள்
சரணாகதர்கள் -தங்கள் முயற்சி ஒன்றுமே இல்லாமல் -அவன் திருவடிகளையே பற்றி அவரே நம்மை
அவருடன் சேர்த்துக் கொள்வார் என்று மஹா விச்வாஸத்துடன் இருப்பவர்கள் –

இவர்களையும்
ஏகாந்திகள்
பரம ஏகாந்திகள் -என்று இரண்டாக பிரிக்கலாம்
ஏகாந்திகள் -அவனை சரண் அடைந்து அவரை அடைய ஆசைப்படுவதோடு
இவ்வுலக இன்பங்களையும் அவர் இடம் பிரார்த்திப்பவர்கள்
பரம ஏகாந்திகள் -வேறே பயன்களை ஒன்றுமே எதிர்பார்க்காமல் அவனையே அடைந்து
கைங்கர்யம் செய்வதே பரம புருஷார்த்தகம் என்று இருப்பவர்கள் –

பரம ஏகாந்திகளும் இரண்டு வகை
ஆர்த்தர்கள்
திருப்தர்கள்
ஆர்த்தர்கள் சம்சாரத்தில் வெறுப்பால் இனி இங்கே சிறுது நேரமும் இருக்க முடியாமல்
உடனே அவனை அடைந்து கைங்கர்யம் செய்ய பார்க்கும் ஆழ்வார்கள் போல்வார்

திருப்தர்கள் -சரணாகதி செய்த பிறவி எப்பொழுது முடிகிறதோ அப்பொழுது இனி மறு
பிறவி எடுக்காமல் அவனை அடைந்து கைங்கர்யம் செய்ய ஆசைப்படும் நம் போல்வார் –

——–

பாடம் -27-
சம்சாரத்தின் காரணம்
ப்ரம்மா தொடங்கி பீபிலி வரை அனைத்தும் கர்மம் அடியாகவே சம்சாரத்தில் கட்டுப்பட்டு உள்ளன
ஆத்மா இயற்கையிலே ஞானமே வடிவானவர் -ஆனந்தமே வடிவானவர் -குற்றங்கள் அற்றவர் –
பிரகிருதி இயற்கையிலே துக்கமாயும் குற்றம் உடையதாகவும் ஞானத்துக்கு எதிராகவும் உள்ளது
அதில் கட்டுப்பட்டு ஆத்மாவும் செயற் கையாக அஞ்ஞானம் குற்றங்கள் துக்கங்கள் அனுபவிக்கிறது –
என்று ஸ்ரீ விஷ்ணு புராணம் சொல்கிறது –
ஆகவே சம்சாரத்துக்கு மூலம் கர்மம் -கர்மம் என்றால் நாம் செய்த செயல்களால் ஏற்படும் பாப புண்யங்கள் –
பல பிறவிகளில் சேர்த்து வைத்துள்ளோம் இப்போதும் சேர்த்துக் கொண்டே இருக்கிறோம்
அனுபவித்தே கழிக்க வேண்டும் என்பதால் மேலும் பல பிறவிகளை எடுக்கிறோம் –
பாபங்கள் தீய பிறவிகளில் பிறப்பித்து சம்சாரத்தில் கட்டுப்பட வைக்கின்றன
புண்யங்கள் நல்ல பிறவியில் பிறப்பித்து சம்சாரத்தில் கட்டுப்படுத்துகின்றன –

கர்மத்தின் காரணம்
நாம் பாப புண்யங்களை சேர்ப்பதற்கு காரணம் அவித்யை தான் -அவித்யை என்றால் அறிவின்மை -தவறான அறிவு
அதன் வடிவத்தை ஸ்ரீ பராசர முனிவர் ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் கூறுகிறார்
வேதார்த்த ஸங்க்ரஹம் -பவ பயம் -கோரம் ஸம்ஸாரம் -அநாதி அவித்யா சஞ்சிதா –
அநாத்மனி ஆத்ம புத்தியே அஹங்காரம்
நான் என்பது ஆத்மாவையே குறிக்கும்-உடலில் நின்றும் வேறு பட்டவர் – -இத்தை அறியாமல் உடலே நான் என்று நினைத்து
ஆத்மாவைக் காட்டிலும் வேறே ஒரு பொருளை ஆத்மா என்று நினைக்கிறோம் –
இதுவே தேக ஆத்ம ப்ரமம் -என்றும் அஹங்காரம் என்றும் பெயர்
இது அவித்யையின் ஒரு வடிவம்
இவ்வுலகம் அனைத்தும் பகவானால் படைக்கப்பட்டு ரக்ஷிக்கப்பட்டு -அவரது சொத்தாகவே உள்ளது
நான் தவறாக சில பொருள்களை நம்மது என்று நினைத்தால் அதற்கு மமகாரம் என்று பெயர்
இது அவித்யையின் இன்னொரு வடிவம்
ஆத்மா ஸ்வதந்த்ரன் என்ற நினைவும் அவித்யையின் ஒரு வடிவமே –
இவ்வாறு பிறவி எடுத்த ஒருவர் அஹங்கார மமகார -இரண்டு வித அவித்யைகளால் -மயங்கி செயல்களை செய்து –
அதன் பலனாக பாப புண்யங்களை அடைகிறார்
அவற்றைக் கழிப்பதற்கு மறுபடியும் பிறவி எடுக்கிறார் —

ஸம்ஸார சக்கரம்
இப்படி ஒரு சமயத்தில் அவித்யை இருந்து கர்மங்களை சேர்த்து இப்போது பிறவி எடுக்கிறோம் என்பதோடு நிற்க வில்லை
அப்படி எடுக்கும் பிறவிகளில் மறுபடியும் கர்மங்களை சேர்க்கிறோம் -அதனால் மறுபடியும் பிறவி எடுக்கிறோம்
எனவே சம்சாரம் என்பது அவித்யையும் கர்மமும் மாறி மாறி வரும் சக்கரம் ஆகும்
கர்மம் அடியாக எடுத்த பிறவியில் மீண்டும் எதனால் கர்மங்கள் சேர்க்கிறோம் என்றால் அதுக்கு அடி வாசனைகளும் ருசிகளும் –
நான் செய்யும் செயல்களால் பாப புண்யங்கள் ஏற்படுவது போலவே வாசனையும் ருசியும் ஏற்படுகின்றன –
வாசனை என்றால்
முன் செய்த செயல்களால் நம்மிடம் உண்டான பதிவுகள்
நான் எந்தச் செயலை அடிக்கடி செய்கிறோமோ அவற்றைப் பற்றிய பதிவுகள் நம்மிடம் அடிக்கடி ஏற்படும் –
எனவே மறுபடியும் அந்தச் செயலை செய்வது எளியதாக இருக்கும் –
அதே போல் பிறவியை எடுத்த பின்பு உலகப் பொருள்களை அனுபவிப்பதே நமக்குத் பழக்கப் பட்டது என்பதால்
மறுபடியும் மனஸூ அதிலேயே செல்லும் –
பரமாத்மாவை பற்றிய சிந்தனையில் ஈடுபடாது -அதனால் மறுபடியும் அவித்யையே ஏற்படுகிறது
ருசி என்றால்
முன் ஜென்மங்களில் ஏற்பட்ட அனுபவங்களால் இயற்கையாக ஏற்படும் விருப்பு வெறுப்புகள்
அவற்றின் அடிப்படையில் தான் இப்பிறவியில் நமக்கு இயற்கையாக எது பிடித்து இருக்கும் என்பது முடிவாகிறது
அதனால் உலகப் பொருள்களின் மேல் ஈடுபாடு இயற்கையாகவே ஏற்படும் -பரமாத்மா இடம் அல்ல –
இதனாலும் மேலும் அவித்யையே ஏற்படுகிறது –

ப்ரவாஹ அநாதித்வம் -பீஜாங்குர நியாயம் –

பிறவியின் ஏற்றத் தாழ்வுகள்
நாம் எடுக்கும் பிறவிகளில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன
அவனே ஸ்ருஷ்டிக்கிறார் -கர்மம் அடியாகப் பிறக்கிறோம்
ஏற்றத்தாழ்வுகளை இவர்களில் யார் காரணம்
ஸ்ரீ விஷ்ணு பூரணம்சொல்லும் -அவன் நிமித்த மாத்ரமாகவே உள்ளான் -பொதுவான காரணம் ஆகிறார்
பிறவிகளுக்கு விசேஷ முக்ய காரணம் அந்த அந்த ஜீவனின் பாபமும் புண்ணியமும் தான்
ப்ரஹ்ம ஸூத்ரத்தில்
வைஷம்ய நைர் க்ருண்யே ந சாபேஷாத் வாத் –2-1-34-
அவனுக்கு பாகுபாடு பார்ப்பது என்னும் குற்றமோ கருணை இன்மை என்னும் குற்றமோ வாராது –
அவன் ஸ்ருஷ்டிக்கும் பொழுது அந்த அந்த ஜீவனின் கர்மத்தை எதிர்பார்த்து அதன் அடிப்படையிலே
ஸ்ருஷ்டிப்பதால் -என்கிறார் வேத வியாசர் இதில் –

முக்தர்களும் நித்ய ஸூரிகளும்
முக்தர்கள் -ஜீவாத்மாகில் இரண்டாவது வகை –
பல நாள்கள் சம்சாரத்திலே கட்டுப்பட்டு இருந்து –
பகவானின் அருளால் -பக்தி சரணாகதி -முதலான உபாயங்களில் ஒன்றை அனுஷ்ட்டித்து –
அதன் மூலம் கர்மங்களைத் தொலைத்து
சம்சாரத்தை நீத்து
தங்கள் இயற்கையான தன்மைகளை விளங்கப் பெற்று
பகவானை அடைந்து -அனுபவித்து -அதனால் ஏற்படும் மகிழ்ச்சி உந்த கைங்கர்யம் செய்பவர்கள்

நித்யர்கள்
என்றுமே பாப புண்யங்களின் தொடர்பே இல்லாமல்
அதனால் சம்சாரத்தில் என்றுமே கர்மம் அடியாகப் பிறக்காமல்
பரமபதத்தில் அவனுடன் எப்போதும் சேர்ந்தே இருந்து
என்றுமே அடிமைத்தனத்தைப் புரிந்து கொண்டு -அதற்கு ஏற்ப தொண்டு செய்து கொண்டு இருக்கும்
ஆதி சேஷன் கருடன் விஷ்வக்ஸேனர் போல்வார் –

———

ப்ரக்ருதி நித்ய விபூதி காலம் ஜீவாத்மா
பரமாத்மா தர்ம பூத ஞானம் மேலே பார்த்து த்ரவ்யங்கள் பார்த்து முடிப்போம்
மேலே அத்ரவ்யங்கள் பார்த்து முடிப்போம் –

பாடம் -28- தர்ம பூத ஞானம்

இவர் குணசாலி -குணம் இவர் இடம் உள்ளது -அறிவாளி -அறிவு என்பதே தர்ம பூத ஞானம் –

ஐந்தாவது த்ரவ்யம்
இதன் லக்ஷணம்
ஸ்வயம் ப்ரகாஸமாகவும் –அசேதனமாகவும் –விஷயம் உடையதாகவும் -இருக்கும் த்ரவ்யம்
ஸ்வயம் பிரகாசம் -என்பதால் ப்ரக்ருதி -காலம் -இவற்றில் இருந்து வேறுபாடு காட்டப் பட்டது
அசேதனம் என்பதால் ஜீவாத்மா பரமாத்மா இவற்றில் இருந்து வேறுபாடு காட்டப்பட்டது –
விஷயம் உடையது என்பதால் நித்ய விபூதியில் இருந்து வேறுபாடு ஸித்தம்
மற்ற ஒரு லக்ஷணம்
அர்த்த ப்ரகாஸத்வம்
அதாவது பொருள்களை ஆத்மாவுக்குக் காட்டிக் கொடுத்தல் –
ஆத்மா வேறு –அவர் இடம் உள்ள அறிவு வேறு –
ஆத்மா அணுவாக தனக்குத் தான் தோற்றம் அளிப்பவராக -தன்னை மட்டுமே விஷயமாகக் கொண்டு உருவம் மாறாமல் இருக்கும்
தர்ம பூத ஞானம் விபுவாக தனக்குத் தானே தோற்றம் அளிக்காமல் -ஆத்மாவுக்கே தோற்றம் அளிப்பதாய் –
உலகப் பொருள்களையும் விஷயமாகக் கொண்டு தன் உருவம் மாறாக் கூடியதாகவும் இருக்கும்
நான் அறிகிறேன் என்று உலகில் அனைவரும் உணருவதாலும்
வேதங்களிலும் ஆத்மாவை விஞ்ஞாதா -சேதனன் -என்று எல்லாம் சொல்லுகிறபடியாலும்
விஞ்ஞாதா -அறிவாளி -அறிவு உடையவன் –
ஆத்மாவைத் தவிர அவருடைய அறிவு என்று வேறு ஓன்று என்று தனியாக இருப்பது தெரிகிறது –

தர்மம் பொது சொல்- குணம் நிறம் செயல் த்ரவ்யம் இவற்றைச் சொல்லும் -இவை -தர்மியை அண்டி இருக்கும் –
தர்மி ஞானம் தர்ம ஞானம் -இரண்டும் அறிவு -இது ஆத்மாவை அண்டி இருக்கும்-
தர்மி ஞானம் -ஆத்மாவைச் -சேதனனைச் சொல்லி– தர்ம பூத ஞானம் சேதனன் இடம் உள்ள சைதன்யத்தைச் சொல்லும் –

தர்ம பூத ஞானத்தின் செயல்பாடு
ப்ரஞ்ஞா ச தஸ்மாத் ப்ரஸ்ருதா புராணீ -முதலான பல இடங்களில் சாஸ்திரங்களில் சொல்லப்படுகிற படியால்
ஆத்மாவின் தர்ம பூத ஞானம் பரவத் தொடங்கும்
ப்ரஸ்ருதா-ஓடுகிறது -ப்ரவாஹம் போல் ஞானம் ஓடும்-
ஒரு இந்திரியம் ஓடினால் -அதன் மூலம் அறிவு வெளியே ஓடும் -அனைத்தையும் கட்டுப்படுத்து -கீதாச்சார்யர்
கண் முதலான இந்திரியங்கள் மூலம் உடலில் இருந்து வெளியே சென்று வெளியில் உள்ள பொருள்களை அடைந்து
அவற்றை ஆத்மாவுக்குக் காட்டிக் கொடுக்கிறது –
ஒரு ஜீவாத்மா விழித்து இருக்கும் பொழுது அதன் ஞானம் புறப்பட்டு வெளியே சென்று பொருள்களைக் காட்டும்
ஜீவாத்மா தூங்கும் பொழுது இந்திரியங்கள் இயங்காத படியாலும்
தமோ குணம் அதிகமான படியாலும் தர்ம பூத ஞானம் வெளியே செல்ல இயலாது –

அதனால் நாம் பொருள்களை அறிவது இல்லை –
இந்திரியம் மட்டும் செல்வது இல்லை -அறிவும் செல்கிறது —
இதனால் தான் தூக்கம் ஸ்வப்னம் அவஸ்தைகள் -மனஸ் மட்டும் வேலை -ஆழ்ந்த உறக்கம் மனசும் வேலை செய்யாமல் –
சங்கோசம் விகாசம் அறிவுக்கு -உண்டே
இப்படிக் கட்டுப்படுத்துவதே தமோ குணம் -ஞானம் இயற்கையாகவே பரவக்கூடியது –

இப்படி விரிதல் சுருங்குதல் முதலான நிலைகளையும் -வெளியே செல்லுதல் முதலான செயல்களையும் கொண்டபடியால்
தர்மபூத ஞானம் ஒரு த்ரவ்யமாகவே கொள்ளப் படுகிறது –
நியாய சாஸ்திரத்தில் ஞானம் -புத்தி -என்பது ஆத்மாவின் ஒரு குணம் மட்டுமே -த்ரவ்யம் அல்ல என்று சொல்லுகிறார்கள்
நம் விஸிஷ்டாத்வைத சித்தாந்தத்தில் ஞானம் ஒரு த்ரவ்யம் ஆகும்
ஒரு பொருள் எப்பொழுதும் மற்ற ஒரு பொருளையே அண்டி இருந்தால் அது அதற்கு குணம் என்று சொல்லப்படுகிறது –
எனவே ஞானம் த்ரவ்யமாக இருந்தாலும் அத்தை ஆத்மாவின் குணம் என்று சொல்வதிலும் ஒரு தவறும் இல்லை
தீபம் என்னும் தேஜஸ்ஸூ த்ரவ்யத்தை பிரபை என்னும் தேஜஸ்ஸூ த்ரவ்யம் அண்டி இருப்பது போல்
ஜீவாத்மா என்ற ஞான த்ரவ்யத்தை தர்ம பூத ஞானம் என்னும் ஞான த்ரவ்யம் அண்டி உள்ளது –

நான் உயரமாக இருக்கிறேன் மோதிரம் அணிந்து இருக்கிறேன்
அண்டியே இருப்பதே குணம் -த்ரவ்யமாகவும் இருக்கலாம்
நடத்தல் செயல் நடப்பவனை அண்டியே இருக்கும் -செயல் குணம்
வெண்மை நிறம் வேஷ்ட்டிக்கு குணம்
மோதிரம் கழற்றி விடலாம்
ஆத்மாவுக்கும் தர்ம பூத ஞானத்துக்கும் விட்டுப் பிரியாத -அப்ருதக் ஸித்த விசேஷணம் –
எனவே குணம் என்றும் த்ரவ்யம் என்றும் சொல்லலாமே
ஆத்மாவை -ஆஸ்ரயம் -விட்டு பிரியாமல் -வெளியில் போயும் இருக்கும் தர்ம பூத ஞானம் –
இதனால் குண பூத ஞானம் என்று சொல்லாமல் -தர்ம பூத ஞானம் – என்கிறோம் –

தர்ம பூத ஞானத்தின் தன்மைகள்
ஆத்மா எப்படி நித்யமானவரோ அதே போலே ஆத்மாவின் தன்மையான தர்ம பூத ஞானமும் நித்யம் என்று வேதம்
ந விஞ்ஞாது விஞ்ஞாதே விபரி லோபோ வித்யதே
ததா ஹேய குண த்வம்சாத் அவ போதய குண ப்ரகாஸந்தே ந ஜன்யந்தே நித்யா ஏவ ஆத்மநோ ஹி தே -என்ற இடத்திலும்
(ப்ரகாஸந்தே ந ஜன்யந்தே-விளங்குகின்றன ஒழிய பிறப்பது இல்லை-நித்யா ஏவ-நித்யமாகவே இருக்கும் )
ஒரு ஜீவாத்மா முக்தி அடையும் பொழுது அவருக்கு புதிதாக அறிவு உண்டாவது இல்லை –
இயற்கையாக அவரிடம் உள்ள அறிவு முழுவதுமாக வெளிப்படுகிறது அவ்வளவே என்று சொல்லப் படுகிறது –
எனக்கு அறிவு உண்டானது -அறிவு நஷ்டமானது என்று உலகில் நாம் சொல்வது எல்லாம் உண்மையில்
தர்ம பூத ஞானத்தின் உத்பத்தியையோ அழிவையோ குறிக்கவில்லை
தர்மபூத ஞானம் உடலில் இருந்து பரவி வெளியே வந்து ஒவ்வொரு பொருளின் தொடர்பை அடைந்து
அதைக் காட்டிக் கொடுக்கும் பொழுது அந்தப் பொருளைப் பற்றின ஞானம் உண்டானது என்று சொல்கிறோம் –
உண்மையில் தொடர்பு மட்டுமே புதிதாக உண்டாகியது
இந்த ஞானம் இயற்கையாக விபுவாக -உலகு எங்கும் பரவியதாக -இருக்க வேண்டும்
நித்ய ஸூரிகளுக்கும் முக்தர்களுக்கும் அப்படித்தான் இருக்கும் –
பத்தர்களான சம்சாரிகளுக்கு மட்டும் அவர்கள் செய்த பாப புண்யங்களைப் பொருத்து அதனுடைய பரவும் தன்மை தடுக்கப்படும்
கல்லுக்குள் உள்ள தர்ம பூத ஞானம் வெளியே வர முடியாது –செடி கொடிகளில் சிறிது வரலாம் –
மனிதனாக இருந்தால் அதிகமாக வரலாம் -தேவர்களுக்கு இன்னும் அதிகம் –

தர்ம பூத ஞானத்தின் நிலைகள்
தர்ம பூத ஞானம் தான் -ஞானம் -சைதன்யம் -மதி -ப்ரஞ்ஞா- ஸம்வித் -திஷணா -தீ -மநீஷா –சேமுஷீ –மேதா –புத்தி –
முதலான சொற்களால் வழங்கப்படுகிறது
நியாய சாஸ்திரத்தின் படி நமக்குத் பிடித்த பொருளைப் பற்றின அனுபவம் ஏற்பட்டால் அதனால்
ஸூகம் என்ற தனி குணம் ஆத்மாவுக்கு உண்டாகும் -அது அனுபவிக்கப்படும் –
ஆனால் இப்படி தனியாக ஒரு குணத்தை நம் ஸித்தாந்தத்தில் ஏற்க வில்லை
ஸூகம் என்பது ஞானத்தைக் காட்டிலும் வேறான பொருள் இல்லை –
இஷ்டமான விஷயத்தின் அனுபவம் என்கிற ஞானம் தான் ஸூகம் ஆகும் –
பிடிக்காத விஷயத்தின் அனுபவம் என்கிற ஞானம் தான் துக்கம் ஆகும்
காமம் ஆசை -சங்கல்பம் முடிவு -விசிகித்சா சந்தேகம் -ஸ்ரத்தை -அஸ்ரத்தை -உறுதி உறுதியின்மை -வெட்கம் -அறிவு -பயம்
முதலான அனைத்துமே மனத்தின் மாறுபாடுகளே என்று ஸாஸ்த்ரம் சொல்லும்
அதன் பொருள் யாது என்னில் இவை எல்லாம் மனத்தின் தாக்கத்தால் தர்ம பூத ஞானத்தின் மாறுபாடுகள் என்பதே –
ஞானத்தின் வேறுபாடுகள் தான் -மனசின் துணையால் தர்ம பூத ஞானம் இத்தனை மாற்றங்கள் என்றபடி –

தர்ம பூத ஞானம் பற்றி பல மதஸ்தர்கள் உடைய க்யாதி வாதம் மேலே பார்ப்போம்

———

பாடம் –29-க்யாதி வாதம்

எந்த தரிசனமாக இருந்தாலும் உலகத்தின் உண்டாக்கும் அழிவு பிராணிகளின் பிறப்பு இறப்பு
முதலானவை எப்படி நடக்கின்றன என்பதை ஆராய்வது போல்
அறிவு என்றால் என்ன
நாம் அறிவு பெறுவது எப்படி
ஒரு அறிவு சரியாதனதா தவறானதா என்று எப்படி அறியலாம்
முதலான கேள்விகளுக்கும் பதில் உரைக்க வேண்டும் –
இதற்குத் தான் க்யாதி வாதம் என்று பெயர்

கியாதி என்றால் அறிவு
வாதம் -ஆராய்ச்சி

தன்மைகளையும் சேர்த்தே அறிகிறோம் -வெண்மை அளவு சுவை செயல் இவற்றைச் சேர்த்தே பொருளை –
ச விசேஷ -இது என்றாலே அருகில் -அது -உது-போல் – அறிகிறோம் –
பொருள் பதார்த்தம் -என்றே அறிகிறோம் -ஒரு ஏகத்துவம் அறிகிறோம் —
இங்கு ஒரு பொருள் உள்ளது -சத்தை உடன் இருப்பதையே சுருக்கமாக இது ஒரு பொருள் என்கிறோம் –
இது பொருள் தன்மை -விசேஷணங்கள் -இரண்டையும் அறிந்து வேறே ஒன்றில் இருந்து வேறுபடுத்திக் காட்டும்
விசேஷ்யம்–பிரகாரம் விசேஷணம் இவற்றை அறிகிறோம் –

அதில் முக்கியமாக பிரமம் -தவறான அறிவு ஏற்ப்படி ஏற்படுகிறது என்பதே முக்யமாகப் பேசப்படுகிறது –
அந்த முறையில் நம் விசிஷ்டாந்த சித்தாந்தத்தில் ஏற்ப்படி என்று பார்ப்போம்

அதற்கு முன்பு மற்ற தரிசனத்தில் எப்படி என்பதை முதலில் பார்ப்போம் –
ஸ்லோகம் ஐந்து கியாதி வாதங்களை சொல்லும்
1- ஆத்ம க்யாதி -புத்தர்களால் முன் வைக்கப்படுகிறது
2-அஸத் க்யாதி -சாருவாகர்களால் தழுவப்பட்டது
3-அக்யாதி -மீமாம்ஸகர்களில் ஒரு பிரிவினரான ப்ரபாகரர்களால் சொல்லப்படுகிறது
4-அந்யதா க்யாதி -நியாய மாதத்தில் ஒப்புக் கொள்ளப்படுகிறது
5-அநர்வசநீய க்யாதி -அத்வைத மதத்தால் ஏற்கப் படுகிறது
6-யதார்த்த கியாதி -விசிஷ்டாத்வ மதத்தில் ஏற்கப் படுகிறது –

ஆத்ம க்யாதி
புத்தர்கள் -யோகாச்சார்கள் -ஞானமே வடிவான ஆத்மாவைத் தவிர உலகில் எதுவுமே உண்மை அல்ல என்பர் –
குடம் சுவர் கயிறு போன்ற பொருள்கள் உலகில் இல்லை -எல்லாம் அறிவின் வெவ்வேறு வடிவங்களே
அந்த அறிவே தான் ஆத்மா
எனவே ஞான வடிவமான ஆத்மாவே கூடமாகவும் சுவராகவும் துணி யாகவும் அறியப்படுகிறார் –
இதுவே ஆத்ம க்யாதி
அவிபாகோபி புத்தயாத்மா விபர்யாசித தர்வநை
க்ராஹ்ய க்ராஹக ஸம் வித்தி பேதவாந் இவ லஷ்யதே –என்பதே அவர்கள் கூற்று –
கிரஹணம் க்ரஹீதா க்ராஹ்யம் -மூன்றும் -அறிவும் அறிவாளியும் அறியும் பொருளும் ஒன்றே –
ஞானத்தொடர் ஆத்மா க்ஷணிகம் அனைத்தும் -வேறு பாடு இருப்பது போல் தோற்றும் என்பர் –
சேர்ந்தே தோற்றம் அளிக்கிறது -அறிவு தான் பொருள் -ஸஹ ஆலம்பநம் –
உண்மையில் ஞானம் மட்டுமே உள்ளது –
அதுவே தான் நம் தோஷங்களின் காரணமாக
அறியப்படும் பொருள் என்றும் —
அறிவு என்றும் –
அறிபவன் என்றும் மூன்றாகத் தோற்றுகிறது என்பதே அவர்கள் மதம் –

அஸத் க்யாதி
இது சாருவாகர்கள் சொல்வது
இவர்கள் ப்ரத்யக்ஷம் என்கிற ஒரே பிரமாணத்தை ஏற்கிறார்கள் –
புலன்களால் அறியப்படுவது மட்டும் உண்மை என்பர்
கயிற்றைப் பார்த்து பாம்பு என்று பிரமிக்கும் பொழுது இல்லாத பாம்பு தான் தோற்றம் அளிக்கிறது
எனவே பிரமம் ஏற்படும் இடங்களில் -அஸத் -இல்லாத பொருள் தான் தோற்றம் அளிக்கிறது என்பது அவர்கள் மதம் –

அந்யதா க்யாதி -இது நியாய மாதத்தில் சொல்லப்படுவது -மீமாம்சை -பாட்ட மதம் -இதே போல்–
சில சந்தர்ப்பங்களில் கண் முன்னாள் இருக்கும் கிளிஞ்சல் நமக்கு வெள்ளியாகத் தோற்றும்
அங்கு கண்ணுக்கும் கிளிஞ்சலுக்கும் தொடர்பு ஏற்படுகிறது –
ஆனால் கண்ணில் இருக்கும் தோஷத்தால் அது கிளிஞ்சல் என்று அறியவில்லை
பளபளப்பான ஏதோ ஒரு பொருள் உள்ளது என்று மட்டும் அறிகிறேன் –
உடனே கடையில் என்றோ பார்த்த வெள்ளியின் நினைவு ஏற்பட்டு அதே போன்ற வெள்ளி தான்
நம் கண் முன் இருக்கிறது என்று நினைக்கிறேன்
அதனால் ஒரு பொருள் மற்ற ஒரு பொருளாக அறியப்படுகிறது –
இதுவே அந்யதா -வேறு மாதிரியான க்யாதி அறிவு எனப்படுகிறது –

அக்யாதி -இது மீமாம்சை ப்ரபாகர மதத்தில் சொல்லப்படுகிறது –
இவர்களும் கண் கிளிஞ்சலைப் என்றும் -அது கிளிஞ்சல் என்று தெரியவில்லை என்றும்
பளபளப்பாக இருப்பதைக் கண்டு வெள்ளியின் நினைவு ஏற்படுகிறது என்றும் ஒப்புக் கொள்கிறார்கள்
ஆனால் அதற்குப் பிறகு கிளிஞ்சலை வெள்ளி என்று கிரஹிக்கும் ஓர் அறிவு ஏற்படுகிறது என்று அவர்கள் ஏற்க வில்லை
கண் முன் இருக்கும் பொருளுக்கும் நினைவுக்கு வந்த வெள்ளிக்கும் உள்ள வேறுபாட்டை அறியாத படியால் தான் பிரமம் ஏற்படுகிறது
இரண்டும் ஓன்று என்று அறியத் தேவையில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்
ஆகவே இரண்டும் ஒன்றே என்ற அறிவு தோன்றுவதாகக் கொண்டால் அது அந்யதா க்யாதி
அவை வேறு என்ற அறியாமை மட்டுமே போதுமானது என்று சொன்னால் அக்யாதி –
அசம்சர்க்க அக்ரஹா தொடர்பு இல்லாமை அறியாமை இது –
ஞானம் உண்மையாகவே இருக்கும் -தவறாகவே இருக்காது என்பர் –
வெள்ளியும் கிளிஞ்சாலும் வேறே வேறே என்று அறியாமல் போனேன் என்பர் –

அநிர்வசநீய க்யாதி -இது அத்வைதிகளால் சொல்லப்படுவது -உலகமே பொய்யானது என்பர் –
பரமாத்மாவையே அவித்யை மூடிக் கொண்டு இருப்பதால் உலகம் தோற்றுகிறது
நாம் ஒரு கிளிஞ்சலை வெள்ளி என்று நினைக்கும் இடத்தில் அங்கு இருக்கும் அவித்யை என்ற பொருள்
உருமாறி வெள்ளியின் வடிவத்தை அடைகிறது –
அந்த வெள்ளிக்கு அநிர்வசநீயமான வெள்ளி என்று பெயர் -ஏன் என்றால் அது இருக்கும் பொருள் என்று சொல்ல முடியாது –
பின் ஒரு காலத்தில் பொய் என்று அறியப்படுகிற படியால் இல்லாத பொருள் என்றும் சொல்லப்பட முடியாது
தோற்றம் அளிக்கிற படியால் -அநிர்வசநீயம் -சொல்லப்பட முடியாதது என்றே அது சொல்லப்படுகிறது –

வேதாந்த பரிபாஷை -கிளிஞ்சல் வடிவில் அவித்யை
பளபளப்பை கண்டு -வெள்ளி நினைவு -பதிவு ஆத்மா இடம் உள்ளது
ஸாதர்சம் -தூண்டப்பட்டு -கண்ணில் காமாலை தோஷம் -அறியாமல் -அவித்யையே வெள்ளியாக உருவம் –
பார்க்கும் பொழுது தான் இது தோன்றும் -இந்தவித வெள்ளி உண்டாகிறது –
அவித்யையே வெள்ளியாக -ஸத் என்றும் அஸத் என்றும் சொல்ல முடியாதே இதை –

யதார்த்த க்யாதி –இது நமது விசிஷ்டாத்வைத சித்தாந்தம் -இதன் படி அனைத்து பரிவும் சரியானது தான்
தவறான அறிவு என்று ஒன்றே கிடையாது
கிளிஞ்சலை வெள்ளி என்று காட்டும் அறிவும் கூட இல்லாத பொருள் எதையும் காட்டவில்லை –
ஸ்ருஷ்டியின் தொடக்கத்தில் பகவான் பஞ்சீ கரணம் செய்து பஞ்ச பூதங்களையும் கலந்த படியால்
ப்ருத்வியாலான கிளிஞ்சலிலும் வெள்ளியை உருவாக்கும் தேஜஸ்ஸின் சிறு அவயவங்கள் உள்ளன
எனவே நாம் அந்த வெள்ளியின் அவயவங்களை அதிகமாகவும் கிளிஞ்சலின் அவயவங்களை குறைவாகவும் அறிந்தால்
அது வெள்ளி என்று சொல்லி விடுகிறோம் –
அந்த அறிவு தவறானது அல்ல -இல்லாத எந்தப் பொருளையும் க்ரஹிக்க வில்லை -யதார்த்தம் சர்வஞ்ஞாம் –
உண்மையை முழுமையாகக் கிரஹிக்க வில்லை என்பது மட்டுமே –
அது அறிவின் தோஷம் ஆகாது -இப்படி ஒரு அறிவு ஏற்பட்டால் அதனால் ஏற்படும் செயல் வீணாகப் போகும் –
முழுமையான உண்மையை அறிந்தால் அதனால் ஏற்படும் செயல் பயன் உள்ளதாகும் என்பதே வேறுபாடு –

பிரதி நியதி நியாயம்
நெல் இல்லா விட்டால் சத்ருசமாக வ்ருஹீ கொள்ளலாம் -நீவாரங்கள் கொண்டு யாகம் செய்யலாம் –
ததேவ சத்ருசம் தஸ்ய -த்ரவ்ய -ஏக தேச பாவாத் -சில அவயவங்கள் அதிலும் இருக்குமே –
கானல் நீர் மணலிலும் நீரின் அவயவங்கள் உண்டே -பஞ்சீ கரணத்தால் –
கயிறு பாம்பு -இங்கு இரண்டுமே பிருத்வியாலே ஆனவையே -இங்கு பிரதி நியாயம் -உண்டே
சர்வம் ஞானம் யதார்த்தம் இதனாலே -செயல் வீணாக போனால் தானே பிரமம் ஆகும் –

——————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கணாதர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாசர் -பாதராயணர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நியாய மீமாம்ச வேதாந்த பாடங்கள்–ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்–பகுதி -3 –வேதாந்த சாஸ்த்ரம்– பாடங்கள் -13-20 —

August 5, 2021

பாடம் -13-ஸத்வம் -ரஜஸ் -தமஸ்

ஸத்த்வம் ரஜஸ் தம இதி குணா: ப்ரக்ருதி ஸம்பவா:
நிபத்நந்தி மஹா பாஹோ தேஹே தேஹிநமவ்யயம் -ஸ்ரீ பகவத்கீதை-14-5-

மஹாபாஹோ-பெருந்தோளாய்,
ஸத்த்வம் ரஜ: தம இதி-சத்வம், ரஜஸ், தமஸ் இந்த குணங்கள்,
ப்ரக்ருதிஸம்பவா: குணா:-பிரகிருதியில் எழுவன,
தேஹே-இவை உடம்பில்,
அவ்யயம் தேஹிநம்-அழிவற்ற ஆத்மாவைப்,
நிபத்நந்தி-பிணைக்கின்றன.

சத்வம், ரஜஸ், தமஸ் இந்த குணங்கள் பிரகிருதியில் எழுவன. பெருந்தோளாய்,
இவை உடம்பில் அழிவற்ற ஆத்மாவைப் பிணிக்கின்றன.

ஸத்வம் -ரஜஸ் -தமஸ் -என்ற முக்குணங்களும் ப்ரக்ருதி என்று அழைக்கப்படும் அசேதனப் பொருளில் இருந்து உண்டாகக் கூடியவை –
அவை ப்ரக்ருதி என்கிற த்ரவ்யத்தின் தன்மைகளே -இவை மூன்றும் சம்சாரத்தில் உடலோடு இருக்கும் ஜீவாத்மாவை உடலோடு காட்டுகின்றன -அதாவது
மேலும் மேலும் சம்சாரத்தில்பிறவிகளை எடுக்க வைத்து சம்சாரத்திலேயே கட்டுப்படுத்துகின்றன –

சத்வம் லகு ப்ரகாசகம் இஷ்டம் -மேல் நோக்கி செல்லும் நெருப்பு வாயுவில் இவை இருக்கும் –
லகுத்த்வம் -உண்டே இவற்றுக்கு -அறிவை ஏற்படுத்தும் -நியாய சாஸ்திரம் சொல்லும்
வேதாந்த வ்ருத்தமானவையாக இருந்தால் இவையும் உபா தேயம்

ஸத்வ குணமானது லகு -லேசாக இருக்கும் தன்மையைக் கொடுக்கும் –
அதனால் நம்முடைய இந்திரியங்கள் எளிதில் வெளியே சென்று பொருள்களை கிரஹித்து வர முடியும்
அதனால் ஸத்வ குணம் -ப்ரகாஸகம் -ஞானத்தை ஏற்படுத்தும் எனப்படுகிறது

உபஷடம்பகம் சலம் -ரஜஸ் -உத்ஸாகம் பண்ண வைக்கும்
ரஜஸ் குணமானது -சலம் -எப்பொழுதும் நிலையாக நில்லாமல் நகர்ந்து கொண்டே இருக்கும் தன்மையைக் கொடுக்கிறது –
இதனால் இது உபஷ்டம்பகம் -ஸத்வ குணத்தையும் தமோ குணத்தையும் ஊக்குவித்து அதனதன் கார்யங்களை செய்விக்கிறது –

குரு வரணகம் ஏவ தமஸ் -குருத்வம் -24 குணங்களில் ஒன்றாக நியாய சாஸ்திரத்தில் பார்த்தோம் –
ஆவரணம் மூடி -மறைக்க தடுக்கக் கூடியவை –
மனஸ் பாரமாய் இருக்கு சொல்வது போல் களைப்பு போன்றவற்றை சொல்லும் -எடை கூடுவதை சொல்ல வில்லை –
தமோ குணம் -குரு -பாரமாய் இருக்கும் தன்மையைக் கொடுக்கும்
அதனால் வரணகம் -இந்திரியங்கள் எளிதில் வெளியே செல்ல விடாமல் தடுத்து மூடி விடும் –

முரண்பட்ட ஸ்வ பாவங்கள் -மூன்றுக்கும் -ப்ரதீப வச்ச அர்த்ததோ வ்ருத்தி –
புருஷார்த்தம் குறித்து மூன்றும் செயல்படும் -இதுக்கு த்ருஷ்டாந்தம் –
த்ரி -எண்ணெய் -நெருப்பு
வாதம் -பித்தம் -ஸ்லேஷ்மம் -போல்
இம் மூன்று குணங்களும் வேறுபட்டாலும் சேர்ந்தே செயல்படுகின்றன –

பிரகாசம் -பிரவிருத்தி -நியமனம் இம்மூன்றும் முறையே ஸத்வ -ரஜோ -தமோ -குண கார்யங்கள்

முக் குணங்கள் செயல்பாடு
ப்ரீதி -என்கிற ஸூகத்துக்குக் காரணம் ஸத்வம்
அப்ரீதி என்கிற துக்கத்துக்கு காரணம் ரஜஸ்
விஷாதம் என்கிற மயக்கத்திற்கு காரணம் தமஸ்

ஸத்வ குணம் அறிவை உண்டாக்கும்
ரஜோ குணம் செயலை உண்டாக்கும்
தமோ குணம் அவற்றைக் கட்டுப்படுத்தும்

அந்யோன்ய அபிபவ வ்ருத்ய –
இவற்றில் ஒவ்வொரு குணமும் மற்ற இரண்டு குணங்களையும்
அழுத்திக் கொண்டு -அபி பவம் -செய்து தான் வளரும்

அந்யோன்ய ஆஸ்ரய ஜனன வ்ருத்ய –
ஒவ்வொரு குணமும் மற்ற இரண்டின் செயலை எதிர்பார்த்துத் தான் தன் கார்யத்தைச் செய்யும்
ஸத்வ குணம் அறிவை ஏற்படுத்த வேண்டும் என்றால் ரஜோ குணத்தால் உந்தப்பட வேண்டும்
அதே போல் தான் தமோ குணமும் -ரஜோ குணத்தின் காரியமே மற்ற இரண்டின் குணங்களை ஊக்குவிப்பது என்கிறபடியால்
அது மற்ற இரண்டின் குணங்களை எதிர்பார்க்கிறது –

அந்யோன்ய மிதுன வ்ருத்ய –
பிரக்ருதியிலும் அதன் காரியங்களிலும் இந்த முக் குணங்கள் என்றுமே பிரியாமல் சேர்ந்தே இருக்கும் –

சாங்க்ய மத காரிகை இது
விட்டுப்பிரியாமல் இருப்பது இங்கே பிராகிருத மண்டலத்தில் தானே
அவர்கள் நித்ய விபூதியை ஒத்துக் கொள்வது இல்லை
ஆகவே நாம் இவற்றை லீலா விபூதிக்கே கொள்ள வேண்டும் –

முக் குணங்களால் நாம் கட்டுப்படுத்தல்
தத்ர ஸத்த்வம் நிர்மலத்வாத் ப்ரகாஸகம் அநாமயம்
ஸுக ஸங்கேந பத்நாதி ஜ்ஞாந ஸங்கேந சாநக–14-6-

அநக-பாவமற்றவனே,
தத்ர ஸத்த்வம் நிர்மலத்வாத் ப்ரகாஸகம்-அவற்றுள்ளே சத்வம், நிர்மலத் தன்மையால் ஒளி கொண்டது,
அநாமயம்-நோவற்றது,ரோகங்கள் வாராமல் தடுக்கும் –
ந சத்வாத் ஆரோக்யம் -தேசிகன்
ஸுக ஸங்கேந-அது இன்பச் சேர்க்கையாலும்,
ஜ்ஞாந ஸங்கேந ச-ஞானச் சேர்க்கையாலும்,
பத்நாதி-கட்டுப்படுத்துவது.

அவற்றுள்ளே சத்வம், நிர்மலத் தன்மையால் ஒளிகொண்டது; நோவற்றது, பாவமற்றோய் அது
இன்பச் சேர்க்கையாலும் ஞானச் சேர்க்கையாலும் கட்டுப்படுத்துவது.
சத்வ குணமானது –
குற்றம் கலக்கம் அற்றபடியால் ப்ரகாஸம் என்கிற அறிவை ஏற்படுத்துகிறது — உடலில் நோய்கள் வராமல் தடுக்கிறது
அது மேலும் மேலும் அறிவையும் ஸூகத்தையும் அடைய வேண்டும் என்கிற ஆசையை ஏற்படுத்தி –
அதற்காக பல செயல்களில் ஈடுபட வைத்தும் -அதன் மூலம் நம்மை உடலோடு கட்டுகிறது –

ரஜோ ராகாத்மகம் வித்தி த்ருஷ்ணா ஸங்க ஸமுத்பவம்
தந்நி பத்நாதி கௌந்தேய கர்ம ஸங்கேந தேஹிநம்–14-7-

கௌந்தேய-குந்தி மகனே,
ராகாத்மகம் ரஜ:-விருப்ப இயல்புடையது ரஜோகுணம்,
த்ருஷ்ணா ஸங்க ஸமுத்பவம் வித்தி-அவாவின் சேர்க்கையால் பிறப்பது என்று அறிந்து கொள்,
தத் தேஹிநம் கர்மஸங்கேந-அது ஆத்மாவைத் தொழிற் சேர்க்கையால்,
நிபத்நாதி-கட்டுகிறது.
ராகம் த்ருஷ்ணா சங்கம் -மூன்றும் -இந்த ஸ்லோகத்தில் ஆசைக்கு பத பிரயோகம் –
ஆண் பெண் சேர்க்கை ஆசை ராகம்
த்ருஷ்ணா -பொருள்களின் மேல் ஆசை -அவர்களுக்கு பிடித்தவற்றின் மேல் -கண்டு –ஐம்கருவி இன்பம்
சங்கம் -அபிமானத்தால் வரும் ஆசை

ரஜோ குணம் விருப்ப இயல்புடையது; அவாவின் சேர்க்கையால் பிறப்பது. குந்தி மகனே,
அது ஆத்மாவைத் தொழிற் சேர்க்கையால் கட்டுகிறது.

ரஜோ குணம் ராகம் எனப்படும் காம ஸூகத்தில் இருந்து தோன்றுகிறது –
உலக விஷயங்களில் -த்ருஷ்ணா -ஆசை -மற்றும்
நம்முடையவர்களாக அபிமானிக்கப்பட்ட மக்கள் இடம் உண்டான ஆசை-சங்கம் -என்ற இரண்டையும் இது ஏற்படுத்துகிறது –
அதற்காக நம்மை செயல்களில் ஈடுபடுத்தி -அதன் மூலமே நம்மை உடலோடு கட்டுகிறது –

தமஸ்த்வ அஜ்ஞாநஜம் வித்தி மோஹநம் ஸர்வ தேஹிநாம்
ப்ரமாதா லஸ்ய நித்ராபிஸ் தந்நி பத்நாதி பாரத–14-8-

பாரத-பாரதா!
ஸர்வதேஹிநாம் மோஹநம் தம:-உடற்பற்றுடைய எல்லாரையும் மயக்கக் கூடிய தமோ குணமோ,
அஜ்ஞாநஜம் வித்தி-அஞ்ஞானத்திலிருந்து உண்டாவதாக தெரிந்து கொள்,
தத் ப்ரமாத ஆலஸ்ய நித்ராபி-அது தவறுதலாலும் சோம்பலாலும் உறக்கத்தாலும்,
நிபத்நாதி-கட்டுப் படுத்துகிறது.

தமோ குணம் அஞ்ஞானத்தில் பிறப்பதென்றுணர். இதுவே எல்லா ஜீவர்களையும் மயங்கச் செய்வது.
தவறுதலாலும் சோம்பலாலும் உறக்கத்தாலும் அது கட்டுப்படுத்துகிறது. பாரதா!

தமோ குணம் அஞ்ஞானம் என்கிற அறிவின்மையால் தோன்றுகிறது -அது மேலும் மயக்கத்தை நமக்கு ஏற்படுத்துகிறது –
கவனம் இன்மை -பிரமாதம் -சோம்பேறித்தனம் -ஆலஸ்யம் -தூக்கம் -நித்ரா –
ஆகிய இவற்றின் மூலம் நம்மைக் – கட்டுப் படுத்துகிறது

ஸத்த்வாத்ஸஞ்ஜாயதே ஜ்ஞாநம் ரஜஸோ லோப ஏவ ச
ப்ரமாதமோஹௌ தமஸோ பவதோऽஜ்ஞாநமேவ ச-14-17-

ஸத்த்வாத் ஜ்ஞாநம் ஸஞ்ஜாயதே-சத்வத்திலிருந்து ஞானம் பிறக்கிறது,
ரஜஸ: லோப ஏவ ச-ரஜோ குணத்தினின்றும் அவாவும்,
தமஸ: ப்ரமாத மோஹௌ ச-தமோ குணத்திலிருந்து தவறுதலும், மயக்கமும்,
அஜ்ஞாநம் ஏவ பவத:-அஞ்ஞானமும் தோன்றுகின்றன.

சத்வத்திலிருந்து ஞானம் பிறக்கிறது; ரஜோ குணத்தினின்றும் அவாவும், தமோ குணத்திலிருந்து தவறுதலும்,
மயக்கமும், அஞ்ஞானமும் தோன்றுகின்றன.

ஸத்வ குணத்தில் இருந்து அறிவும்
ரஜோ குணத்தில் இருந்து பேராசையும்
தமோ குணத்தில் இருந்து கவனம் இன்மை -மயக்கம் -அறிவின்மை -ஆகிடாவையும் தோன்றுகின்றன –
மூன்று குணங்களும் ஏதோ ஒரு வகையில் நம்மை சம்சாரத்தில் கட்டுப் படுத்து கின்றன –

முக்குணங்களைப் புரிந்து கொள்ளுதல் –

ப்ரக்ருதே: க்ரியமாணாநி குணை: கர்மாணி ஸர்வஸ:
அஹங்கார விமூடாத்மா கர்த்தா அஹமிதி மந்யதே–3-27-

ப்ரக்ருதே: குணை: ஸர்வஸ:-இயற்கையின் குணங்களால் எங்கும்,
கர்மாணி க்ரியமாணாநி-தொழில்கள் செய்யப்படுகின்றன,
அஹங்கார விமூடாத்மா-அகங்காரத்தால் மயங்கியவன்,
கர்தா அஹம் இதி மந்யதே-“நான் செய்கிறேன்” என்று நினைக்கிறான்.

தத்த்வ வித்து மஹா பாஹோ குண கர்ம விபாகயோ:
குணா குணேஷு வர்தந்த இதி மத்வா ந ஸஜ்ஜதே-3-28-

து மஹா பாஹோ-ஆனால் பெருந்தோளாய்!
குண கர்ம விபாகயோ:-குணம், செய்கை இவற்றினுடைய பிரிவுகளின்,
தத்த்வவித்-உண்மையறிந்தோன்,
குணா குணேஷு வர்தந்த-குணங்கள் குணங்களில் செயல்படுகின்றன,
இதி மத்வா ந ஸஜ்ஜதே-என்று கருதி பற்றற்றிருப்பான்.

குணம், செய்கை இவற்றினுடைய பிரிவுகளின் உண்மை யறிந்தோன், குணங்கள்
குணங்களில் இயலுகின்றன’ என்று கருதி பற்றற்றிருப்பான்.
எங்கும் தொழில்கள் இயற்கையின் குணங்களால் செய்யப்படுகின்றன.
அகங்காரத்தால் மயங்கியவன், “நான் செய்கிறேன்” என்று நினைக்கிறான்.

இப்படி பிரகிருதியின் தன்மைகளான இந்த முக் குணங்களும் நம்மை எத்தனையோ செயல்களில் ஈடுபடுத்துகின்றன –
ஜீவாத்மா இயற்கையாகவே மிகத் தூய்மை யானவர் -குறைகள் அற்றவர் –
அவர்க்கு பசி தாகம் துக்கம் வியாதி கிழட்டுத்தன்மை முதலான அனைத்துமே இந்த உடலோடு தொடர்பு உள்ள படியால் தான் ஏற்படுகின்றது –
அதற்காக நாம் உண்ணுதல் -உறங்குதல் -சம்பாதித்தல் -தர்ம கார்யங்களைச் செய்தல் போன்ற எத்தனையோ செயல்களைச் செய்கிறோம் –
ஆனால் இவை நமக்கு இயற்கையானவை அல்ல -பிரகிருதியின் தொடர்பால் தவிர்க்க முடியாமல் வந்து சேர்ந்தவை என்று புரிந்து கொள்ள வேண்டும் –
இது புரிந்து விட்டால் அந்தச்செயல்களில் பற்று இல்லாமல் நாம் வாழலாம் –

ஆனால் நானே தான் உடல் என்று தவறாக நினைத்தால் அதற்கு அஹங்காரம் என்று பெயர் –
அப்படி ஒரு மயக்கத்தில் இருக்கும் ஆத்மா இந்த முக்குணங்கள் தன்னுடைய இயற்கையான குணங்கள் என்று நினைத்து –
அவற்றால் தான் செய்யும் செயல்கள் தான் தன்னுடைய இயற்கையான செயல்கள் என்று நினைத்து –
எனவே தானே அவற்றைச் செய்கிறேன் என்று தவறாக நினைத்து விடுகிறான்
எவன் முக்குணங்களைப் பற்றிய உண்மையை அறிகிறானோ அவன் -குணங்கள் தான் இந்தச் செயல்களைச் செய்கின்றன –
இதில் நான் செய்ய என்ன உள்ளது என்று பற்று அற்று இருந்து முக்தி அடைகிறான் –

முக்குணங்களைக் கட்டுப்படுத்துதல் –

த்ரை குண்ய விஷயா வேதா நிஸ்த்ரை குண்யோ பவார்ஜுந
நிர் த்வந்த்வோ நித்ய ஸத்த்வஸ்தோ நிர் யோக÷க்ஷம ஆத்மவாந்–2-45-

வேதா-வேதங்கள்,
த்ரை குண்ய விஷயா-மூன்று குணங்களுக்குட்பட்டன,
நிஸ்த்ரை குண்யோ-மூன்று குணங்களையும் கடந்தோனாக,
நிர் த்வந்த்வ-இருமைகளற்று,
நித்ய ஸத்த்வஸ்த-எப்போதும் உண்மையில் நின்று,
நிர்யோக÷க்ஷம-யோக ஷேமங்களைக் கருதாமல்
ஆத்மவாந் பவ-ஆத்மாவை வசப் படுத்தியவனாகுக.

மூன்று குணங்களுக்குட்பட்டன வற்றைக் குறித்து வேதங்கள் பேசுகின்றன. அர்ஜுனா, நீ மூன்று குணங்களையும் கடந்தோனாகுக.
இருமைகளற்று, எப்போதும் உண்மையில் நின்று, யோக ÷க்ஷமங்களைக் கருதாமல், ஆத்மாவை வசப் படுத்தியவனாகுக.
முக் குணத்தில் இரண்டு அவை அகற்றி ஒன்றினில் ஒன்றி நின்று

வேதங்கள் அனைவருக்கும் பொதுவானது –
ஸத்வ குணம் அதிகமாக இருப்பவர்கள் ஆசைப்படுவதையும் வேதம் உபதேசிக்கும் –
ரஜோ குணம் மிகுதியாக இருப்பவர்களுக்காகவும் பல செயல்களை உபதேசிக்கும் –
தமோ குணம் மிக்கவர்களுக்கும் உபதேசிக்கும் –
அனைவரையும் ஆஸ்திகர்கள் ஆக்கிப் படிப்படியாகப் பக்தர்கள் ஆக்குவதே வேதத்தின் நோக்கமாகும்
ஆனால் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளவை என்ற ஒரே காரணத்துக்காக நாம் அந்தக் கர்மங்கள் அனைத்தையுமே செய்யத் தேவையில்லை –
நாம் ரஜோ குணத்தையும் தமோ குணத்தையும் குறைத்து – ஸத்வ குணத்தையே வளர்த்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும் –
அது தான் நமது உஜ்ஜீவனத்துக்கு வழி வகுக்கும் –

———–

பாடம் –14- ஸ்ருஷ்ட்டி –படைப்பு –

ஸ்ருஷ்டியின் தொடக்கம்
ப்ரக்ருதி என்ற த்ரவ்யம் முக்குணங்களை உடையது என்று பார்த்தோம் –
அந்தப் பிரக்ருதியைக் கொண்டு தான் உலகம் படைக்கப் படுகிறது -மண்ணைக் கொண்டு குடம் செய்வது போலே –
ஆனால் பிரக்ருதிக்கும் இவ்வுலகுக்கு வேறுபாடு உண்டு –
இவ்வுலகத்தில் உள்ள பொருள்களில் ஸத்வம் ரஜஸ்ஸூ தமஸ்ஸூ என்ற இவை ஏற்றத் தாழ்வுகளோடே இருக்கும்
ஆனால் பிரகிருதி என்ற பொருளில் முக்குணங்களும் சமமான நிலையில் எந்த மாறுபாடுகளும் இல்லாமல் இருக்கும்
பிரளய காலத்தில் அந்த ப்ரக்ருதி என்ற பொருள் மட்டும் தான் இருக்கும் -நாம் இப்போது பார்க்கும் பொருள்கள் அனைத்துமே
தன் தன் காரணப் பொருளில் ஒன்றாக கடைசியாக ப்ரக்ருதி என்ற நிலையில் தான் மிஞ்சி நிற்கும் –
பிரளய காலம் முடிந்து ஸ்ருஷ்ட்டியைத் தொடங்கும் பொழுது முதலில் ப்ரக்ருதி என்கிற த்ரவ்யத்தில்
குணங்கள் மாறுபட்டு ஏற்றத் தாழ்வுகள் அடைகின்றன -இந்த நிலைக்கு அவ்யக்தம் என்று பெயர் –
மேலே மேலே உலகம் முழுவதும் உண்டாவதற்கு முன்னால் அக்கார்யத்தை எதிர் நோக்கித் தயாராக இருக்கும்
பொருள் தான் அவ்யக்தம் என்று பொருள் -கார்ய உன்முக அவஸ்தை –

மஹான் என்ற தத்வம்
அடுத்து அவ்யக்தத்தில் இருந்து முதலில் மஹான் என்ற தத்வம் படைக்கப்படுகிறது -இதற்கு புத்தி தத்வம் என்ற பெயரும் உண்டு –
பிரகிருதி அவ்யக்தமாகி -அவ்யக்தம் மஹானாக ஆகும் பொழுது அந்த அந்தப்பொருள் முழுவதுமாக மாறி விடாது –
ஒரு பகுதியே மஹான் என்ற நிலையை அடையும் என்று கருத்தில் கொள்ள வேண்டும் –
எனவே அவ்யக்தம் என்ற பொருளை சுற்றிலும் மூடிக் கொண்டு ப்ரக்ருதி என்ற தத்வம் இப்பொழுதும் உள்ளது –
மஹான் என்ற தத்துவத்தை சுற்றிலும் மூடிக் கொண்டு தான் அவ்யக்தம் என்கிற தத்வம் உள்ளது –

உலகில் முதலில் ஒரு பொருளை அறிகிறோம் -இதற்கு ஆலோசநம் -என்று பெயர்
அடுத்து இது என்னுடையது -நான் இத்தை அடைய வேண்டும் -என்ற எண்ணம் ஏற்படுகிறது -இதற்கு அபிமானம் என்று பெயர்
கடைசியாக இந்தப் பொருளை அடைய நான் இந்தச் செயலைச் செய்யப் போகிறேன் என்ற உறுதி பிறக்கும் -இதற்கு அத்யவசாயம் என்று பெயர் –
நம் மனதைக் கொண்டு நாம் அத்யவசாயத்தை -உறுதியை -எடுக்க வேண்டும் என்றால் -அதற்கு இந்த மஹான் உதவுகிறது –

பொருளை மனசால் அறிந்து கொள்வது -முதல் நிலை –
அதிக்ருதி -அபிமானம் -இத்தை அடைய -அதிகார ஞானம் -அடுத்த நிலை –
இத்தை அடைய அத்யவசாயம் உறுதி -கண்டிப்பாக செய்வது -மஹான் புத்தி தத்வம் இதுக்கு துணையாகிறது –

மஹான் செய்யும் செயல்கள்
மஹான் என்ற தத்வத்தை சாத்வீகம் ராஜஸம் தாமஸம் என்ற பாகுபாடு உண்டு -சாத்வீகமான பகுதியின் தன்மைகள்
தர்ம -நாம் தர்மம் செய்ய எடுக்கும் முயற்சிகளில் உதவுகிறது
ஞானம் -ஜீவாத்மா வேறு ப்ரக்ருதி வேறு என்ற பகுத்தறிவை ஏற்படுத்த உதவுகிறது
விராகம் -உலக விஷயங்களில் பற்றின்மை -வைராக்யம் -ஏற்பட உதவுகின்றது –
ஐஸ்வர்யம் –யமம் நியமம் ஆசனம் இத்யாதி அஷ்ட-கொண்டு அடையும் அஷ்ட மஹா ஸித்திகளையும் நாம் பெற உதவுகிறது -அவை
அணிமா -மிகச் சிறியதாக ஆகும் சக்தி –
லகுமா -மிகச் லேசாக ஆகும் சக்தி
மஹிமா -மிகப் பெரியதாக ஆகும் சக்தி
பிராப்தி -எவ்விடத்தையும் அடையும் சக்தி
ப்ராகம்யம் -கல் சுவர் முதலானவற்றில் மோதாமை
வஸித்வம் -உலகப் பொருள்களை இயக்குவது
ஈஸித்வம் -உலகப் பொருள்களைப் படைத்து அழிப்பது
காம அவாஸாயித்வம் –நினைத்தத்தை எல்லாம் ஸாதித்தல் -ஸத்ய ஸங்கல்பத்வம் என்று வேதாந்தம் சொல்வது இத்தையே –

தாமஸமான பகுதி இதற்கு முரண்பட்ட தன்மைகள் அனைத்தையும் கொண்டு இருக்கும்

அஹங்காரம் என்ற தத்வம்
மஹான் என்பதில் இருந்து அஹங்காரம் என்ற தத்வம் உண்டாகிறது —
ஆவரணம் என்று இத்தையே சொல்லும் -ஒரு பகுதி தான் மாறும் -ஆவரணம் என்று மூடி போல் –
அஹங்காரம் -கர்வம் -நான் என்கிற புத்தி -அறிவுக்கு இலக்கு -அஞ்ஞானம் என்றும் உண்டு –
இங்கு ஒரு த்ரவ்யத்தைக் குறிக்கிறது
அதின் முக்கியமான செயல் கீழ் சொல்லப்பட்ட அபிமானம் என்கிற புத்தியை ஏற்படுத்த இது -உதவும்
உடலையே ஆத்மா என்று நினைத்தல் -ஆத்மாவை ஸ்வ தந்த்ரன் என்று நினைத்தல் போன்ற
தவறான புரிதல்களும் இந்த அஹங்காரம் காரணம் ஆகும் –
இந்த அஹங்காரமும் ஸாத்விகம் ராஜஸம் தாமஸம் என்ற மூவகைப்படும் –

சாத்வீகமான அஹங்காரத்துக்கு -வைகாரிகம் -என்று பெயர் -அதில் இருந்து தான் -11- இந்திரியங்களும் தோன்றுகின்றன –
ராஜஸமான அஹங்காரத்துக்கு தைஜஸம் என்று பெயர் -இதற்கு தனியாக எந்த செயலும் கிடையாது –
ஸாத்விக அஹங்காரமும் தாமஸ அஹங்காரமும் தங்கள் தங்கள் செயல்களை செய்வதற்கு உதவுவதே இதன் வேலை –
தாமஸமான அஹங்காரத்துக்கு பூதாதி என்று பெயர் -அதில் இருந்து தான் ஐந்து தன்மாத்திரைகளும் பஞ்ச பூதங்களும் தோன்றுகின்றன –

நியாய மதம் படி-ஐந்து பூதங்களில் இருந்து தோன்றும் –பவ்திகம் இவை என்பர் -ஆனால் நாம்
வேதாந்தத்தில் அஹங்காரத்தில் இருந்து தோன்றுபவை இவை என்கிறோம் –

இந்திரியங்கள்
ஞான இந்திரியங்கள் -அறிவை ஏற்படுத்தும் புலன்கள் -அவை
சஷுஸ் -நிறத்தைக் காண கண்ணில் உள்ளது
க்ராணம்-மணத்தை அறிய மூக்கில் உள்ளது
ரஸனம் -சுவையை அறிய நாக்கில் உள்ளது
த்வக் -ஸ்பர்சத்தை அறிய தோலில் உள்ளது
ஸ்ரோத்ரம் -ஒலியை அறிய காதில் உள்ளது
கர்ம இந்திரியங்கள் -செயல்கள் செய்வதற்கான புலன்கள் அவை –
வாக் -பேசுவதற்கான இந்திரியம் நாக்கில் உள்ளது
பாணி -பொருள்களைக் கையாள கைகளில் உள்ளது
பாதம் -எங்கும் திரிய கால்களில் உள்ளது
பாயு -மலம் கழிக்கும் இந்திரியம்
உபஸ்தம் -ஜலம் கழிக்கும் இந்திரியம்
மனது -மேல் சொன்ன இந்திரியங்களை எல்லாம் இயக்கும் புலன் –சிந்திப்பதற்கும் -ஆசைப்படுவதற்கும் -முடிவு எடுக்கவும் உதவுகிறது

மனதையே -புத்திக்கு எட்டுகிறது என்றும் -அஹங்காரம் -நான் என்ற நினைவு -சித்தம் -என்றும் சொல்லுகிறோம்
வெவ்வேறே வகார்யங்களை செய்வதால்
ஆலோசனை சிந்தனம் -சித்தம்
அபிமானிக்கும் பொழுது அஹங்காரம் என்கிறோம் – அகங்கார த்ரவ்யம் தத்வம் துணை கொண்டு
அத்யவசாயம் செய்யும் பொழுது மஹான் துணை கொண்டு முயடிவு எடுக்கும் பொழுது புத்தி
மனசு சஞ்சலம் -புத்தி உறுதி -புத்திமான் -மனோவான் சொல்லுவது இல்லையே –

இந்திரியங்கள் அனைத்துமே அணுவானவை -நுண்ணியவை -கண்ணுக்குத் தெரிய மாட்டா –
ஒரு ஜீவன் ஒரு சரீரத்தில் இருந்து மற்ற ஒரு சரீரத்துக்கு போகும் பொழுது –
இந்த 11 இந்திரியங்களை அழைத்துக் கொண்டு செல்கிறான் என்று வேதம் கூறுகிறது –
பிராண வாயு -இந்திரியங்கள் -இவை அனைத்தும் ஜீவாத்மா உடனே செல்லும் -வாயு மணத்தை எடுத்துச் செல்லுமா போல் –

பிரகிருதி -கார்யம் -மூல பிரகிருதி -அவிக்ருதி
பிரகிருதி விக்ருதிகள் ஏழு -காரணமாயும் காரியமாகவும் -மஹான் -அஹங்காரம் -தன்மாத்ரங்கள் -இவை நாடு நிலை
விக்ருதி – -16–ஷோடச -விகாரம் மட்டும் -11- ஐந்து பூதங்கள் -காரியப் பொருள்களாகவே இருக்கும் —
25 தத்வங்கள் -சாங்க்யம் -நிரீஸ்வர சாங்க்ய மதம் –
ந பிரகிருதி ந விக்ருதி ஜீவ தத்வம்
26 தத்வம் ஈஸ்வரன் -வேதாந்தம்
முரண்பாடு இல்லாத சாங்க்ய கொள்கைகளை கொள்ளுவோம் –

————-

பாடம் -15- ஐந்து பூதங்கள்

ப்ரக்ருதியில் முக்குணங்களும் சமமாக இருக்கும்
தார தாம்யம் -அவ்யக்தம் -மஹான் அஹங்காரம் -ஸூஷ்மம் -புலன்களுக்கு தென்படாதவை –
நுண்ணியவை அல்ல -அளவால் பெரியதாக இருந்தாலும்
ஆகாசம் போல் -பெரியதாக இருந்தாலும் புலன்களுக்கு அப்பால் பட்டவை -இவை-
நியாய மதம் போல் வேறே த்ரவ்யம் என்பது இல்லை
ஒரே த்ரவ்யம் -நிலை அவஸ்தைகள் மாறும் –
தத்வம் என்பது உண்மைப் பொருள் என்றவாறு –
தன்மைகள் மாறுவதால் 24-தத்வங்கள் -வகையாக அவஸ்தா பேதம் -என்றவாறு –

பூதங்களும் தன் மாத்ரங்களும்
பிரக்ருதியில் இருந்து மஹான் தோன்றி -அதில் இருந்து அஹங்காரம் தோன்றுகிறது –
ஸாத்விகமான அஹங்காரத்தில் இருந்து 11 இந்த்ரியங்கள் உண்டாகிறது என்று பார்த்தோம்
தைஜஸம் என்கிற ராஷஸ அஹங்காரம் தனியாக எந்தக் காரியத்தையும் செய்யாது –
ஸாத்விக தாமஸ அஹங்காரங்கள் தம் தம் கார்யங்களைச் செய்ய உதவும்

தாமஸ அஹங்காரம் -பூதாதி என்று அழைக்கப்படும் –
இதில் இருந்தே பஞ்ச பூதங்களும் பஞ்ச தன் மாத்தரங்களும் தோன்றுகின்றன –
பூதங்கள் -என்றால் விசிஷ்ட ஸப்தாதி விஷய அதி கரணம்-அதாவது
சிறப்பு வாய்ந்த ஸப்தம் – ரூபம் -ரஸம் -கந்தம் -என்ற விஷயங்களை உடையது எதுவோ அதுவே பூதம் –

ஸப்தம் முதலானவற்றுக்கு சிறப்பு ஆவது எது என்றால்-
1-ஸத்வ ரஜஸ் தமஸ் குணங்களால் வரும் -ஸாந்தத்வம் -ஆனந்தம் அளித்தல் -கோரத்வம் -துக்கம் அளித்தல்-மூடத்தவம் -மயக்குதல் –
ஆகிய தன்மைகள் ஸப்தங்கள் முதலானவற்றில் உண்டு –
2- நமது புலன்களால் அறியப்படுவதும் அடுத்த சிறப்பு –ஸப்தாதி குணங்களையும் அவற்றின் தன்மைகளான
சாந்தத்வம் இத்யாதிகளை நாம் புலன்களைக் கொண்டு அறியலாம் –

தன் மாத்ரம் -என்றால் அது மட்டும் -என்று பொருள் -அதாவது எந்தப் பொருள்களில் ஸப்தம் முதலான குணங்கள் மட்டுமே இருக்குமோ –
ஆனால் அவற்றில் உள்ள ஸாந்தத்வம் கோரத்வம் மூடத்தவம் என்ற சிறப்புகள் இருக்காதோ
அதே போல் எந்தப் பொருள்களில் இருக்கும் ஸப்தம் முதலானவற்றை நம்மால் புலன்களைக் கொண்டு அறிய இயலாதோ
அவை தன் மாத்ரங்கள் ஆகின்றன –

தத்வ முக்த கலாபத்தில் இப்படி தன் மாத்ரைகள் பூதங்கள் ஸ்ருஷ்ட்டி பற்றி ஸ்லோகம் அருளிச் செய்கிறார்

பூதங்களின் ஸ்ருஷ்ட்டி
இந்தப் பூதங்களும் தன் மாத்ரங்களும் ஸமமாக ஒரே காலத்தில் தாமஸ அஹங்காரத்தில் இருந்து தோன்றுபவை அல்ல
அவற்றில் வரிசை உள்ளது
முதலில் -தாமஸ அஹங்காரத்தில் இருந்து -ஸப்த தன் மாத்ரம் தோன்றும் -அதில் ஸப்தம் என்ற குணம் இருக்கும்
ஆனால் முன் சொன்ன விசேஷம் இல்லாமல் –

அந்த ஸப்த தன் மாத்திரத்தில் இருந்து ஆகாசம் என்ற முதல் பூதம் தோன்றும் —
அதில் ஸப்தம் இருக்கும் -முன் சொன்ன விசேஷங்களும் இருக்கும் அந்த ஸப்தத்தை நம்மால் காதால் கேட்கவும் முடியும் –

அடுத்து ஆகாசத்தில் இருந்து ஸ்பர்ச தன் மாத்ரம் தோன்றும் -ஆகாசத்தில் இல்லாத குணமான ஸ்பர்சம் அதில் இருக்கும் –
ஆனால் வெளிப்படாமல் இருக்கும்

அடுத்து ஸ்பர்ச தன் மாத்திரத்தில் இருந்து வாயு தோன்றும் -அதில் இருக்கும் ஸ்பரிசத்தை நாம் தோல் என்ற புலனைக் கொண்டு அறிகிறோம் –

அடுத்து வாயுவில் இருந்து ரூப தன் மாத்ரம் தோன்றும் -இதில் புதிதாக ரூபம் -நிறம் -என்ற குணம் இருக்கும் —
ஆனால் வெளிப்படாமல் இருக்கும் -நம்மால் அறிய முடியாது –

ரூப தன் மாத்ரத்தில் இருந்து தேஜஸ் தோன்றும் -அதன் நிறத்தை நாம் அறியலாம்

தேஜஸ்ஸில் இருந்து ரஸ தன் மாத்ரம் பிறக்கும் -அதில் புதிதாக ரஸம் என்ற குணம் இருக்கும் –
ஆனால் முன் சொன்ன எந்தச் சிறப்பும் இல்லாமலே இருக்கும் –

ரஸ தன் மாத்ரத்தில் இருந்து நீர் தோன்றும் -அதில் உள்ள ரஸத்தை நாம் அறியலாம்
நீரில் இருந்து கந்த தன் மாத்ரம் பிறக்கும் -அதில் புதிதாக கந்தம் -மணம் -என்ற குணம் இருக்கும் –
ஆனால் அதில் சிறப்புகள் இல்லாத படியால் நம்மால் அறிய முடியாது –

கடைசியாக அந்த கந்த தன் மாத்திரத்தில் இருந்து பிருத்வீ தோன்றும் –
அதில் இருக்கும் கந்தத்தை -மண் வாசனையை நாம் புலன்களால் அறிகிறோம்
இதுவே தன் மாத்ரங்களும் பூதங்களும் தோற்றும் வரிசை –

பூதங்களின் தன்மைகள்
பால் தயிராக மாறும் பொழுது நடுவில் பாலாவும் தயிராகவும் இல்லாமல் -கலவமாக -இருப்பது போல்
ஒவ்வொரு பூதமும் தன் காரணத்தில் இருந்து உண்டாகும் பொழுது நடுவில் உள்ள நிலையே தன் மாத்ரங்கள் –

ஆகாசம் -ஸப்தம் மட்டும் உடையது –
ஸ்பர்சம் இல்லாததாயும் சிறப்பு வாய்ந்த ஸப்தம் உடையதாயும் இருப்பதே ஆகாசம் என்று அதன் லக்ஷணம்
இது மற்றப் பொருள்களுக்கும் தன்னுள் இடம் அளிக்கும் –
நியாய மதத்தில் சொல்வது போல் இது நித்தியமானது அல்ல -உண்டாகி அழியக் கூடியது தான் –

வாயு -ஸப்தமும் ஸ்பர்சமும் உடையது -ரூபம் அற்றதாயும் சிறப்பு வாய்ந்த ஸ்பர்சம் உடையதாயும் இருப்பதே இதன் லக்ஷணம்
நம் உடலை இயக்க உதவும் பிராண வாயுக்களும்-சரீர தாரண ஹேதுவான – ஒரு வகை வாயுவே தான் –
வாயுவை புலன்களால் அறிகிறோம்

தேஜஸ் -ஸப்தம் -ஸ்பர்சம் -ரூபம் -உடையது –
வெப்பமான ஸ்பர்சத்தை உடையது -ஒளி விடும் நிறத்தை உடையது –
ரஸம் அற்றதாயும் சிறப்பு வாய்ந்த ஸ்பர்சம் உடையது என்று பல லக்ஷணங்கள் சொல்லலாம்

இது நான்கு வகைப்படும்
1-பவ்மம் -பிருத்வியை எரி பொருளாகக் கொண்டது
2-திவ்யம் -நீரை எரி பொருளாகக் கொண்டது –மின்னல் போல்வன –
3-உதர்யம் -நீரையும் நிலத்தையும் எரி பொருளாகக் கொண்டு நம் வயிற்றில் இருக்கும் நெருப்பு -ஜாடராக்னி –
4-ஆகரஜம்-எரி பொருளே இல்லாமல் சுரங்கத்தில் தோன்றும் தேஜஸ்

இது மேலும் ப்ரபா -வெளிச்சம் -என்றும்-ப்ரபாவான் -வெளிச்சத்தை உடையது என்று இருவகைப் படும் –
தீபத்தின் ஜ்வாலை ப்ரபாவான் -அதன் வெளிச்சம் பிரபா

தீபம் -வெளிச்சம் -ப்ரபாவான் -பிரபா –
தடை இருக்கும் வரை-பரவிக் கொண்டே விரிந்து கொண்டே இருக்கும் – –
ஜ்வாலை -வெளிச்சம் -குணம் த்ரவ்யத்தை விட்டு இருக்காதே –
இந்த த்ருஷ்டாந்தம் முக்கியம் -இவை இரண்டும் வேறே வேறே த்ரவ்யங்கள்
தீபத்தை விட்டு வெளிச்சம் பிரியாதே – ரத்னம் ஒளி -பிராட்டி பெருமாள் -போல்

நீர் -ஸப்தம் ஸ்பர்சம் ரூபம் ரஸம் உடையது -மணம் அற்றதாயும் சிறப்பு வாய்ந்த கந்தத்தை உடையதாயும் இருப்பதே இதன் லக்ஷணம்

நிலம் -ஸப்தம் ஸ்பர்சம் ரூபம் ரஸம் கந்தம் உடையது -சிறப்பு வாய்ந்த கந்தத்தை உடையதாய் இருப்பதே இதன் லக்ஷணம் –
நறு மணம் இயற்கை –
தமஸ் -நெருப்பின் அபாவம் -தனி த்ரவ்யம் மீமாம்ஸையில்
நியாய மாதத்தில் தரவ்யம் அல்ல
வேதாந்தத்தில் -தனி த்ரவ்யம் அல்ல பிருத்வியில் ஒரு வகை என்கிறோம்

——————

பாடம் –16- அண்டங்களின் ஸ்ருஷ்ட்டி
தாமஸ அஹங்காரத்தில் இருந்து ஐந்து பூதங்கள் ஸ்ருஷ்ட்டிக்கப் படுவதைக் கீழே பார்த்தோம் –
இந்த பஞ்ச பூதங்களைக் கொண்டே பகவான் இவ்வுலகங்களை எல்லாம் ஸ்ருஷ்டிக்கிறார் –
ஆனால் இவற்றைக் கொண்டு நேரடியாக ஸ்ருஷ்டிக்க இயலாது –
மண் மணல் தண்ணீர் இவற்றை தனித்தனியாகப் படுத்தி சுவர் கட்ட முடியாதே -மூன்றையும் கலந்தே சுவர் எழுப்ப முடியும் –
அதே போல் பஞ்சீ கரணம் செய்தே ஸ்ருஷ்டிக்க முடியும் –
ஒவ்வொரு பூதத்திலும் ஒரு பாதியை விட்டுவிட்டு மீதம் உள்ள பாதியை நான்கு பங்காக்கி
ஒவ்வொரு அரைக்கால் பகுதியையும் ஒவ்வொரு பூதத்தில் கலந்து
இவ்வாறு பஞ்சீ கரணத்துக்குப் பின்னர் பிருத்வீ பூதத்தில் பாதி பிருத்வீயிலும்
அரைக்கால் பிருத்வீ பகுதி நீர் நெருப்பு காற்று ஆகாசம் -இருக்கும் ‘
இவ்வாறு ஒரு பூதத்தின் குணனும் மற்றவற்றில் தோன்றும்
இதனாலே தான் ஆகாசத்துக்கு இயற்கையாகவே நிறம் இல்லை என்றாலும் பிருத்வீ கலந்து இருக்கிற படியாலேயே –
நீலமான ஆகாசம் கண்ணில் படுகிறது –
உபநிஷத்துக்களில் சில இடங்களில் பிருத்வீ -நீர் -தேஜஸ் -மூன்றையும் கொண்டு த்ரீவித் கரணம்
சில இடங்களில் பஞ்ச பூதங்களையும் கொண்டு பஞ்சீ கரணமும்
இவற்றுடன் மஹான் அஹங்காரம் இவற்றையும் சேர்த்து சப்தீ கரணமும் சொல்லப்படுகின்றன
இவற்றில் விரோதம் எதுவும் இல்லை -அவர் ஏழு தத்வங்களையுமே கலக்குகிறார் –

பூ மண்டலம் -14 லோகங்கள் -ஏழு கடல்கள் -ஏழு தீவுகள் ஒன்றுக்கு ஓன்று சூழ்ந்து கொண்டு உள்ளன
இது தாமரை வடிவில் இருக்கும் -நடுவில் மேரு மலை –
அத்தைச் சுற்றி முதலில் உள்ள நிலம் ஜம் பூத் வீபம் -அதில் ஒன்பது நிலப்பகுதிகள் -வர்ஷங்கள் -உள்ளன

மேருவுக்குத்
தெற்கில் நாம் இருக்கும் பாரத வர்ஷம் -கிம்புருஷ வர்ஷம் -மற்றும் ஹரி வர்ஷம் மூன்றும்
வடக்கில் ரம்யகம் -ஹிரண்யகம் குரு மூன்றும்
கிழக்கே பத்ராஸ்வ வர்ஷம்
மேற்கே கேதுமால வர்ஷம்
நடுவில் இலாவ்ருத வர்ஷம்

இதில் இருக்கும் தீவுகளும் கடல்களும்
1- ஐம்பூத்வீபம் -1- உப்புத் தண்ணீர்க் கடல்
2-ப்லஷ வர்ஷம் -2- கரும்புச்சாருக் கடல்
3-சால்மலி த்வீபம் –3-கள் கடல்
4-குச த்வீபம் 4- நெய்க்கடல்
5-கிரௌஞ்ச த்வீபம் –5-தயிர்க்கடல்
6-சாக த்வீபம் –6-பால் கடல்
7-புஷ்கர த்வீபம் –7-ஸூ த்தமான நீர்க்கடல்

முதல் தீவும் கடலும் ஒரே அளவாய் இருக்கும் -அடுத்த தீவும் இவற்றில் இரண்டு மடங்கு இருக்கும்
ஏழாவது கடலைத் தாண்டினால் தமஸ் ஸூ -இருள் -இருக்கும்
பின்பு கர்த்தோதகம் -என்ற நீர் இருக்கும்
பின்பு அண்ட கடாஹம் என்ற அண்டச் சுவர் இருக்கும் –

கீழ் உலகங்கள்
அதலம்-விதலம் -நிதலம் -தலா தலம் என்கிற கபஸ்திமத் -மஹா தலம் -ஸூ தலம் -பாதாலம்
இவை வெள்ளை கருப்பு அருண நிறம் மஞ்சள் மணல் பாரங்கல் தங்கம் இவற்றால் ஆனவை
இவற்றில் தானவர்கள் கிங்கரர்கள் சர்ப்பங்கள் வாழுகிறார்கள்
இவற்றிலும் மாளிகைகள் மண்டபங்கள் கோபுரங்கள் உண்டு
இவற்றைத் தாண்டி -21 -நரக உலகங்கள்
அதற்குப் பின் தமஸ் இருட்டு
அதைத் தாண்டி கர்த்தோதகம் நீர்
கடைசியில் அண்டச்சுவர் இருக்கும்

மேல் உலகங்கள்
பூ மண்டலத்துக்கு மேல் ஆறு உலகங்கள்
1-புவ லோகம் -ஒரு லக்ஷம் யோஜனை உயரம் -நமக்கும் ஸூர்யனுக்கும் இடைப்பட்ட பகுதி -கந்தர்வர்கள் வாழும் இடம் –
2-ஸூவ லோகம் -இந்திரன் வருணன் அக்னி குபேரன் போன்ற ஆதி காரிக புருஷர்கள் வாழும் இடம் –
3-மஹ லோகம் -அதிகாரத்தில் இருந்து நீங்கி அடுத்த பதவியை எதிர்பார்த்து இருப்பவர் வாழும் இடம் -ஒரு கோடி யோஜனை உயரம்
4-ஜன-சனகன் ஸனத் குமாரன் -யோகிகள் வாழும் இடம் -2 யோஜனை உயரம்
5-தப லோகம் -ப்ரஜாபதிகள் வாழும் இடம் 8 கோடி யோஜனை உயரம்
6- ஸத்ய லோகம் -ப்ரம்மா விஷ்ணு சிவன் -அவர்களை உபாசித்தவர்கள் வாழும் இடம் -48-
இவற்றுக்கும் மேல்
தமஸ் என்ற இருளும் -அதைத் தாண்டி கர்த்தோதகம் நீர்
கடைசியில் அண்டச்சுவர் இருக்கும்

விளாம் பழத்தை ஓடு மூடிக் கொண்டு இருப்பது போல் இந்த அண்டத்தை 1 கோடி யோஜனை பருமனான அண்டச்சுவர் மூடிக் கொண்டு இருக்கும்
இந்த அண்டத்தை ஜலம் நெருப்பு வாயு ஆகாசம் அஹங்காரம் மஹான் அவ்யக்தம் என்கிற ஏழு தத்வங்கள் அடுத்தடுத்து சூழ்த்துக் கொண்டு உள்ளன
முன் தத்வத்தைக் காட்டிலும் அடுத்த தத்வம் பத்து மடங்கு பெரியதாய் இருக்கும் –
பத்து பத்து மடங்கு ஒவ்வொன்றும்
மஹானை சுற்றி முடிவில்லாத -சூழ்ந்து -முடிவில் பெரும் பாழ் -சூழ்ந்து ஆழ்ந்து அகன்று உயர்ந்து பரந்த -பல dimentions
சஹஸ்ராணாம் -அநந்த அண்டங்கள் இப்படி உண்டே –
அண்டங்கள் அனைத்தும் ஒரே சமயத்தில் ஸ்ருஷ்டிக்கப்பட்டு அழிக்கப் படுகின்றன – வரிசையில் அல்ல

சமஷ்டி ஸ்ருஷ்ட்டி தானே நேராகச் செய்து அருளி
நான்முகனைக் கொண்டு வியஷ்ட்டி ஸ்ருஷ்ட்டி
காலம் நித்யவிபூதி ஞானம் ஜீவன் பரமாத்மா –ஆறு த்ரவ்யங்களையும்
அத்ரவ்யங்களையும் மேலே பார்ப்போம்

———-

பாடம் -17-காலம் –
ஆறு த்ரவ்யங்களுக்குள் முதலான ப்ரக்ருதியைப் பார்த்தோம்
ஸ்ருஷ்டிக்க வேண்டிய பொழுதை உணர்த்துவது காலம் –
ஆறு -த்ரவ்யங்கள் -நித்ய விபூதி -பரமாத்மா ஜீவாத்மா -அவர்களுடைய ஞானம் இவை மற்ற நான்கு த்ரவ்யங்கள்
அஜடமான ஸ்வயம் ப்ரகாசமானவை இவை நான்கும்
மற்றவை அத்ரவ்யங்கள்

காலத்தின் லக்ஷணம் –
முக் குணங்கள் அற்றதான ஜட த்ரவ்யம் காலம் -குண த்ரய ரஹித -ஜட த்ரவ்ய விசேஷ –
அஸ்வயம் பிரகாசம் -ஜடம் –
வெறுமனே முக்குணங்கள் அற்றதான என்று மட்டும் சொன்னால் அது ஜீவாத்மா பரமாத்மா இவர்களுக்கும் பொருந்தும் -ஆகையால் அதி வியாப்தி வரும் –
ஜட த்ரவ்யம் மட்டும் சொன்னால் அது பிரக்ருதிக்கும் பொருந்தும் -எனவே முக் குணங்கள் அற்ற ஜட த்ரவ்யம் என்றே சொல்ல வேண்டும் –
காலம் -நித்யம் -அநாதி -விபு -எல்லா இடங்களிலும் இருக்கக் கூடியது —
மாறிக் கொண்டே இருக்கும் -காலமே இல்லாத காலமே இல்லையே
பிரளயத்தில் அழியாதே -ஸ்ருஷ்டிக்க காலமே உணர்த்தும் -காலே ஸம்சயதி யோக்யதே -பராசர பட்டர் –
லீலா விபூதி நித்ய விபூதி முழுவதும் பரந்து விரிந்து உள்ளது –
உலகில் உள்ள அனைத்துப் பொருள்களுக்கும் காலம் ஒரு காரணம் ஆகும்
அது தான் வினாடி நிமிஷம் நாழிகை பகல் இரவு நாள் பக்ஷம் மாஸம் அயனம் வருஷம் என்று பல பிரிவுகளைக் கொண்டது –

உருவத்தில் மாறு பாடு அல்ல
அவஸ்தா பேதம் இல்லை -குடம் மண் போல் அல்ல
காலம் அனைத்துக்கும் அதிகரணம் -தேசம் இடம் போல் –

காலக் கணக்கு
அனைவருக்கும் ஒரே மாதிரி நிகருவது இல்லை
மனிதர் -பித்ருக்கள் -தேவர் -நான்முகன் -போல் வெவ்வேறே காலக் கணக்குகள் உண்டு
நம்முடைய மாதம் -பித்ருக்களின் ஒரு நாள் -அமாவாசை -அவர்களது மதியம் -உச்சிக் காலம் -பவுர்ணமி நடு ராத்திரி –
நம்முடைய வருஷம் தேவர்களுக்கு ஒரு நாள்
உத்தராயணம் -தை முதல் ஆனி -அவர்களுக்குப் பகல்
தஷிணாயினம் -அவர்களுக்கு இரவு –
தேவ வருஷம் -நமது -365 வருஷங்கள்
சதா யுவர்வை புருஷ அனைவருக்கும் -அவரவர் கணக்குகள் படி
அவர்கள் ஆயுஸ்ஸூ -அவர்கள் வருஷப் படியே 100-நம் கணக்கில் 36500 வருஷங்கள் –

தேவர்கள் கணக்குப்படி 12000 வருஷங்கள் ஒரு சதுர் யுகம்
க்ருத யுகம் -4000-வருஷங்கள் -பூர்வ சந்தி -400 வருஷங்கள் -உத்தர சந்தி -400 வருஷங்கள்
த்ரேதா யுகம் -3000 வருஷங்கள் -பூர்வ சந்தி -300 வருஷங்கள் -உத்தர சந்தி -300 வருஷங்கள்
த்வாபர யுகம் –2000 வருஷங்கள் -பூர்வ சந்தி -200 வருஷங்கள் -உத்தர சந்தி -200 வருஷங்கள்
கலியுகம் -1000 வருஷங்கள் -பூர்வ சந்தி -100 வருஷங்கள் -உத்தர சந்தி -100 வருஷங்கள்

உத்தர சந்தி காலமும் பூர்வ சந்தி காலமும் -இடைப்பட்ட காலம்
க்ருத யுக த்ரேதா யுக இடைப்பட்ட சந்தி காலம் -700 வருஷங்கள்

இப்படி 1000 சதுர் யுகங்கள் முடிந்தால் நான்முகனுக்கு ஒரு பகல் -அதே கால அளவுக்கு இரவு –
அப்பொழுது அண்டத்தில் மஹ லோகத்துக்கு கீழ் உள்ள 10 லோகங்களும் அழியும் -பிதுவே நைமித்திக பிரளயம்
அந்த நான்முகன் வருஷ கணக்குப்படி அவனுக்கு 100 வருஷம் ஆயுஸ்ஸூ முடிந்த பின்பு
அனைத்து உலகங்களையும் பகவான் அழித்து விடுவார் -இதுவே பிராகிருத பிரளயம்
தினமும் பிராணிகள் மரிப்பது நித்ய பிரளயம்
கர்மங்கள் விடுபட்டு முக்தி அடைவது ஆத்யந்திக பிரளயம் –

பிரளயம் -காரியப் பொருளில் லயம் அடைவது என்று பெயர்
14 மனுக்கள் படைக்கிறார் நான்முகன் -ஒரு மனுவுக்கு 71 சதுர்யுகம் -ஆட்சிக் காலம்

தர்மத்துக்கு நான்கு கால்கள்
தபஸ் -உடலை வறுத்திச் செய்யும் செயல்கள்
சவுசம் -தூய்மை
தயை -இரக்கம்
சத்யம் -உண்மை
க்ருத யுகத்தில் தர்மத்துக்கு நான்கு கால்களும் இருக்கும்
அடுத்த அடுத்த யுகத்தில் ஒவ்வொன்றாகக் குறைந்து கலி யுகத்தில் சத்யம் என்ற ஒரே காலோடு இருக்கும்
அத்தையும் கலி திருடப் பார்க்கும் -என்கிறது ஸ்ரீ மத் பாகவத புராணம் –
காலம் நித்ய விபூதியிலும் உண்டு -ஆனால் இங்கு போல் அங்கு -ஆட்சி செய்வது இல்லை –
ந கால தத்ரைவ பிரபு
காலத்தைக் கணிசியாமல் இஷ்டப்படி கைங்கர்யங்கள் செய்யலாம்

காலம் தமோ குணம் அதிகமான மஹான் என்ற தத்வம் தான் என்பர் சிலர் -அது பொருந்தாது –
ஸ்ருஷ்ட்டி நிகழ்ந்தால் தான் மஹான் தத்வம் உண்டாகும்-காலமோ ஸ்ருஷ்டிக்கு முன்பே உள்ளது என்று வேதங்கள் கூறும்
காலத்தை புலன்களைக் கொண்டு அறிகிறோம் -இப்பொழுது வருகிறார் -இங்கு குடம் உள்ளது போன்ற
பேச்சுக்கள் அறிவுகள் அனைத்தும் காலத்தையே காட்டுகின்றன -எனவே காலம் புலன்களால் அறியப்படுவதே –

——–

பாடம் -18- நித்ய விபூதி –
ஸூத்த ஸத்வம்
வேதாந்தத்தில் பொருள்களை எல்லாம் த்ரவ்யம் என்றும் அத்ரவ்யம் என்றும் இரண்டாக்கப் பிரித்து
த்ரவ்யம் லக்ஷணம் -அவஸ்த்தா நிலைகளை அடைவது –
குணம் -இத்யாதிகள் அத்ரவ்யம்
அவற்றில் ஆறு த்ரவ்யங்கள் -ப்ரக்ருதி -காலம் -நித்ய விபூதி -ஜீவாத்மா -பரமாத்மா -ஞானம் —

பிரகிருதி -முக்குண மயம் -மிஸ்ர ஸத்வமானது –

காலம் -மூன்று குணங்களும் இல்லாத பொருள்
நியாயம் -மீமாம்சை வேதாந்தம் மூன்றிலும் இத்தை த்ரவ்யமாகவே கொண்டு உள்ளார்
எங்கும் பரந்து இருக்கும்
ஆகாசமும் பரந்து இருக்கும் -ஆனால் -லீலா விபூதியில் மட்டுமே –இங்கும் பிரகிருதி மஹான் இருக்கும் இடங்களில் இல்லை- –

நித்ய விபூதி -ஸத்வ குணம் ஒன்றுமே உள்ள பொருள் –மண்ணால் வீடு ஆக்கப் படுவது போல் –
ஸூத்த ஸத்வ குணம் ஒன்றாலேயே ஆக்கப்பட்டது –
எனவே இதன்-ஸூத்த ஸத்வத்தின் – லக்ஷணம் -முக்குண மயமான ப்ரக்ருதியில் இருந்து வேறு பட்டதாயும் –
ஆனால் காலம் ஜீவாத்மாவின் இருந்து வேறுபடுத்த – ஸத்வ குணம் மட்டுமே உடையதாய் இருக்கும் –

நித்ய விபூதியின் லக்ஷணம் -மிச்சம் இல்லாமல் அவித்யை என்னும் கர்மம் தொலையும் பூமி என்று சொல்லப் படுகிறது –
அசேஷ -நிஸ் சேஷ அவித்யா நிவ்ருத்தி தேஸம் -அவித்யா இங்கு கர்மம் என்ற பொருள்
மாயா அவித்யை பிரக்ருதிக்கும்
தேக ஆத்மா அபிமானத்துக்கும் அவித்யா -அஞ்ஞானம் என்று பெயர்
ஒருவன் முக்தி அடைந்து நித்ய விபூதியை அடைந்த போது தான் அனைத்துக் கர்மங்களையும் தொலைக்கிறான் –
தத்வஞ்ஞர்கள்-முஸ்யந்தே சர்வ கில்மிஷங்கள் –

தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி ஸூரயா -விஷ்ணுவின் அந்த உயர்ந்த இடத்தை
நித்ய ஸூரிகள் எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள் -என்பதால்
முக்தி அடைபவன் ஒரு இடத்தை -பகவானை மட்டும் அல்ல –
நியாய மதத்தில் கல் போல் இருப்பதே முக்தி –
பகவானை அடைவது -ஸ்ரீ வைகுண்டம் அடைவது -கர்மங்கள் போக்கி -மூன்றாலும் பரமபதம் அடைவது சொன்னாலும் –
விஷ்ணு வாகிய ஸ்தானம் இல்லை -விஷ்ணுவுடைய ஸ்தானம் என்கிறது –

நித்ய விபூதியின் தன்மைகள் –
ஸூத்த ஸத்வத்தால் ஆக்கப் பட்டுள்ளது -பஞ்ச உபநிஷத் மயம் -பஞ்ச சக்தி மயம் –
உபநிஷத் என்றால் இங்கு ரஹஸ்யம் என்று பொருள் –
வேதங்களில் பரமேஷ்டீ -புமான் -விச்வ-நிவ்ருத்தி -ஸர்வ -என்று ஐந்து ரஹஸ்யமான பொருள்கள் –
ஐந்து அப்ராக்ருத பூதங்கள் -என்பதால் பஞ்ச உபநிஷத் மயம் –
அந்த அப்ராக்ருதமான ஐம் பூதங்களுக்கும் சக்திகள் என்றும் பெயர் -ஆகவே பஞ்ச சக்தி மயம் என்றும் சொல்வர் –
லீலா விபூதியில் நீர் நிலம் தீ காற்று ஆகாயம் -பஞ்ச பூதங்கள் போல் அவை அங்கு –
ஸப்தம் ஸ்பர்சம் ரூபம் ரஸம் கந்தம் -இவை போன்ற குணங்களும் அங்கும் உண்டு -ஆனால் அவை திவ்யம் —
இங்கு போல் சாதாரணம் ஆனவை அல்ல –
இங்கு ஸூத்த ஸத்வமே இருக்கிற படியால் -ஞானத்தையும் ஆனந்தத்தையும் வளர்க்கும் என்பதால்
இந்த உலகமே ஞானத்தையும் ஆனந்தத்தையும் கொடுக்கும் உலகம் என்றும் சொல்லப்படுகிறது –

நித்ய விபூதி பஞ்ச சக்தி மயே -திவ்யே -ஸூத்த சத்வே -ஸூகா தரே-ஸூகத்துக்கு இருப்பிடம் – –
ஞானமும் ஆனந்தமும் வளர்க்கும் –
ஞான ஆனந்த மயா லோகாகா இருப்பிடங்கள் -பாஞ்ச ராத்ர சாஸ்திரம் சொல்லும் –

நித்ய விபூதியின் இடமும் அளவும் –
இந்த நித்ய விபூதி அளவற்றது என்று உபநிஷத்துக்கள் கூறுகின்றன
நமது லீலா விபூதியும் அளவற்றது என்றும் பல இடங்களில் சொல்லப் பட்டுள்ளது –
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில் பெரும் பாழ் –
தமஸ் என்ற ப்ரக்ருதிக்கு மேலே நித்ய விபூதி உள்ளது -தமச பரஸ்தாத் –
நித்ய விபூதிக்கு மேலேயும் பக்க வாட்டிலும் அளவே கிடையாது -முடிவில்லாமல் போகும் -ஆனால் அதன் கீழ் எல்லை லீலா விபூதி யாகும் –
லீலா விபூதிக்கு கீழேயும் பக்க வாட்டிலும் அளவே கிடையாது -ஆனால் அதன் மேல் எல்லை நித்ய விபூதி யாகும் –

பாத அஸ்ய விச்வா பூதாநி -கால் பகுதி
திரிபாதி அம்ருதம் திவி -முக்கால் பகுதி
இந்த லீலா விபூதி பகவானின் சொத்தில் கால் பகுதி –பாதோஸ்ய நித்ய விபூதி மூன்று பங்கு -த்ரிபாத் விபூதி
ஆகவே அளவற்றதாக இருந்தாலும் லீலா விபூதி மிகச் சிறியது -நித்ய விபூதி மிகப் பெரியது என்பதைக் காட்டவே
இவ்வாறு சொல்லப்படுகிறது -மும்மடங்கு என்பது அல்ல –

மண்ணும் தங்கமும் பிருத்வி தான்
மண்ணால் ஆக்கப் பட்ட பொருள்களும் எண்ணிறந்தவை
தங்கத்தால் ஆக்கப்பட்ட பொருள்களும் எண்ணிறந்தவை
மண்ணால் ஆக்கப் பட்டவை காட்டிலும் பிருத்வியால் ஆக்கப் பட்டவை அதிகம் தானே –
மண் தங்கம் பஞ்சு எல்லாம் இத்தில் அடங்கும் -அதே போல் தான் இங்கும் இது சிறியது அது பெரியது என்றவாறு –

இந்த நித்ய விபூதி ஆயிரம் ஆயிரம் ஸூர்யன்களை விட மிகுந்த தேஜஸ்ஸூ கொண்டது –
நிரவதிக தேஜோ ரூபம் —துஷ் ப்ரேஷ்யம் தேவ தானவ —
ஆகவே தேவர்கள் அசுரர்கள் காண முடியாத விபூதி -என்று வேதம் கூறுகிறது –

யத் வைஷ்ணவம் ஹி பரமம் பதம் ஆம நந்தி
கம் வா யதேவ பரமம் தமஸ பரஸ்தாத்
தேஜோ மயம் பரம சத்வ மயம் த்ருவம் யத்
ஆனந்த கந்தம் அதி ஸூந்தரம் அத்புதம் யத் -ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் –41-

———

பாடம் -19-நித்ய விபூதி

காலாதீதம் -காலத்தால் வரை அறுக்க முடியாதது
அநாதி அந்தம் –ஆதி அந்தம் இல்லாமல் என்றுமே இருக்கும்
அப்ராக்ருதம் -திவ்யம் –
ஸூத்த ஸத்வ மயம்
அ சஞ்சலம்
ப்ராப்யம்
அர்ச்சிராதி மூலம் –
அவன் திரு உள்ளத்தால் நித்தியமாக உள்ளது –

ஸூத்த ஸத்வ மயம் -நித்தியமானது -உண்டாகி அழிவது இல்லை -ப்ரக்ருதியைக் காட்டிலும் வேறுபட்டு -குறையாமலும் அசையாமலும்
சரணாகதர்களால் மட்டுமே அர்ச்சிராதி கதி மூலம் அடையப் படுகிறது –
லீலா விபூதி -அவனது விளையாட்டுக்காக -உண்டாக்கப்பட்டு அழிக்கப் பட்டு இருக்கும் –
நித்ய விபூதியோ அவனுக்கு போகத்துக்கு மட்டுமே -அழியாமல் நித்தியமாக இருப்பது –
நித்யம் என்பதால் மாறுபாடுகள் அல்ல என்று சொல்ல முடியாது -நித்ய முக்தர்கள் பகவானுக்கு ஆசைக்கு இணங்க
பல பல உருவங்களை எடுத்துக் கொண்டு கைங்கர்யம் செய்கிறார்கள்

கூர்மாதீன் திவ்ய லோகான் -போக ஸ்தானம்
இச்சா க்ருஹீதாம்
தத் அனு மணி மயம் மண்டபம்
தத்ர சேஷம்
தர்மாதி பீடம்
ததுபரி கமலேசம்
சாமர க்ராஹணீச் ச விஷ்ணும் தேவிஹி விபூஷா ஆயுத கணம்
ச ஏகதா பவதி இத்யாதி -பல உடல்களை ஆசைப்படும் படி கொள்ளலாம் –
உடல் இருக்கும் வரை சுக துக்கம் வரும் -சரீரம் இல்லை என்பர் சிலர் -இது கர்மத்தால் வந்த சரீரம் பற்றியே
அங்கு அழுக்கு உடம்பு இல்லையே
திவ்ய மங்கள விக்ரஹம் -பல பரிணாமங்கள் அங்கும் உண்டே -இச்சாதீனம் –

ஆனந்தம் அனுபவிக்க -அனுபவிக்கப்படும் பொருள் -போக்யம் -அனுபவத்துக்கு கருவி -போக உபகரணம் –
அனுபவிக்கும் இடம் போக ஸ்தானம் -மூன்றுமே வேண்டுமே –
பரம பதத்தில் போக்யம் பகவானின் திரு மேனி
போக உபகரணங்கள் சந்தனம் மாலை போல்வன
போக ஸ்தானங்கள் கோபுரம் பிரகாரங்கள் தோட்டங்கள் போல்வன
இவை நம் ஆசைக்கு ஏற்ப நித்ய விபூதியில் தோன்றுகின்றன என்று வேதங்கள் கூறுகின்றன –
முக்தி அடைந்த ஆத்மாவும் வேண்டிய சரீரம் எடுத்துக் கொண்டு கைங்கர்யம் செய்யலாம் –
அந்த உடலும் ஸூத்த ஸத்வ மயம்-கர்ம வஸ்யம் அல்ல
கர்மத்தால் வந்த உடல் தான் தள்ளத் தக்கது -கைங்கர்யத்துக்காக எடுத்துக் கொள்ளும் சரீரம் கொள்ளத் தக்கதே –

பிரக்ருதியில் இருந்து –24 தத்வங்கள் மாறுவதை கீழே பார்த்தோம்
லீலா விபூதியில் இவை இருந்தாலும் ஒரே தத்வமாகவே கொள்ள வேண்டும் -இவை அனைத்தும் நித்யம் –
ஒன்றில் இருந்து மற்ற ஓன்று உண்டாவது இல்லையே –

இந்த நித்ய விபூதி -த்ரிபாத் விபூதி -பரம வ்யோமம் -பரம ஆகாசம் -பரம பதம் -அம்ருதம் —
நாகம்-துக்கம் இல்லாத இடம் -அப்ராக்ருத லோகம்
ஸ்ரீ வைகுண்டம் -அயோத்யா -அபராஜிதா -ஜெயிக்க முடியாத ஸ்தானம் –
போன்ற பல பெயர்களால் அழைக்கப்படும் –

இந்த ஸூத்த ஸத்வ த்ரவ்யம் -அஜடமா -தானாகாத் தோற்றக் கூடியதா -ஜடமா -மற்றவற்றில் உதவியால் அறியப் படுகிறதா
சிலர் இது ஜடம் -தானாகாத் தோற்றாது -ஜீவாத்மா தன்னுடைய ஞானத்தைக் கொண்டே அறிய வேண்டும் என்பர்
ஆனால் உண்மையில் இது அஜடம் -அதாவது ஸ்வயம் ப்ரகாஸம் -வேறே ஒன்றை எதிர் பார்க்காமல் தானே தோற்றும் –
நான்-தன்னை அறிய ஞானம் வேண்டாமே -என்னுடைய அறிவு -கொண்டு பாஹ்ய விஷயம் அறிய
தர்ம பூத ஞானம் -தர்மி ஞானம் இரண்டும் உண்டே –
ஆத்மா தன்னைத்தானே அறிந்து கொள்ள எப்படி அறிவை எதிர்பார்க்காமல் தானாகாத் தோற்றுகிறாரோ
அதே போலவே நித்ய விபூதியை அறியவும் தன்னுடைய ஞானத்தை உபயோகிக்கத் தேவை இல்லை –
தானாகவே அறியலாம்
ஸ்வ சத்தா பாஸகம் -இருப்பதாலேயே தோன்றிக் கொண்டே இருக்கும்-ஸ்வயம் பிரகாசம்-

ஆனால் இப்பொழுது நமக்கு ஏன் தோன்ற வில்லை என்னில்
அது முக்தி அடைந்தவர்களுக்குத் தானாகவே தோற்றும் -சம்சாரிகளுக்கு அல்ல –

நான் என்கிற ஆத்மா எனக்கு ஸ்வயம் பிரகாசம்
மற்றவர் ஜீவாத்மாவை அறிய வில்லையே -நாம் ஸ்வயம் பிரகாசமாக இருந்தாலும் –
தான் தனக்கு மட்டுமே ஸ்வயம் பிரகாசம் –
அனுமானம் மூலம் அறிகிறோம் -உடலை இயக்கம் ஆத்மா இருக்க வேண்டும் -அறிவு மூலமே அறிகிறோம்
ஆகவே ஸ்வயம் பிரகாஸம் என்றால் எல்லாருக்கும் எப்பொழுதும் அறிய வேண்டும் என்பது இல்லையே –

மிஸ்ர தத்வம் -காலம் -ஸூத்த சத்வம் -இது இது என்று தோற்றம் அளிக்கும்
ஜீவாத்மா –நான் நான் என்று தோற்றம் அளிக்கும் –
அறிவு -என்ற தன்மை -குடத்தை அறிய ஞானம் மூலம் –
தன்னுடைய ஞானத்தை -அறிய இதுவும் ஸ்வயம் பிரகாசம்
பரமாத்மா –
ஞானம் -இதுவும் ஸ்வயம் பிரகாச வஸ்து -அதுவே பல பொருள்களாக ஆகாது
ஆனால் ஸூ த்த சத்வம் பலவாக அங்கு -ஆகவே இது வேறே
ஸப்தாதி குணங்களும் ஞானத்துக்கு இல்லை –
அறிவு ஒளியை கிரகிக்கும் –
ஸூத்த சத்வம் இதனாலும் வேறு பட்டது
ஆறு த்ரவ்யங்கள் –

தத்வ த்ரயம் -யதீந்த்ர தீபிகா –நியாய சித்தாஞ்சம் -இவற்றை விரிக்கும் –
சம்வித்யா நிரவத்ய ஞான ஆனந்தமே வடிவானது -நிஷ் க்ருஷ்ட சத்வம் -அவன் இச்சையால் போகத்துக்காக –
சிந்தா தூரதயா மனசுக்கு எட்டாதது -சாஸ்திரம் கொண்டே அறிய முடியும்
கர்மங்கள் முழுவதும் போனாலே அறிய முடியும் —

————–

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கணாதர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாசர் -பாதராயணர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்