ஸ்ரீ சைல தயா பாத்ரம் தீ பக்த்யாதி குணார்ணவம்
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முனிம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் முதலாக -ஸ்ரீ எம்பெருமானார் நடுவாக -ஸ்ரீ மா முனிகள் ஈறாக -பூர்வாச்சார்ய குரு பரம்பரை
ஸ்ரீ பதரிகாஸ்ரமத்தில் திருமந்திரத்தை ஸ்வ அம்ச பூதனான நரனுக்கு நாராயணன் பிரகாசிப்பித்தான்
அவனே த்வயத்தை ஸ்ரீ விஷ்ணு லோகத்தில் பிராட்டிக்கு பிரகாசிப்பித்தான்
அவனே சரம ஸ்லோகத்தை திருத்தேர் தட்டிலே ஸ்வ ஆஸ்ரிதனான அர்ஜுனனுக்குப் பிரகாசிப்பித்தான்
அவனே தென்னாடும் வடநாடும் தொழ நின்ற திருவரங்கம் திருப்பதியிலே கோயில் கொண்டு
தெளி விசும்பு திருநாட்டை விடத் திரு உள்ளம் உகந்து பெரிய பெருமாளாய்
செங்கோலுடைய திருவரங்கச் செல்வனான திருமேனியோடே கூடியவனாய்
ரஹஸ்ய த்ரயத்தையும் ஒரு சேர ஸ்வ மஹிஷியான பெரிய பிராட்டியாராம் ஸ்ரீ ரெங்க நாச்சியாருக்கு உபதேஸிக்க
தத் சிஷ்ய ப்ரசிஷ்ய பரம்பரையாக நம் அளவும் ரஹஸ்ய த்ரயம் வர பிராப்தம் ஆகிறது –
இவ்வர்த்தம்
புனரபி ச ஏவ பகவான் ஸ்ரீ ரெங்கநாத ஸ்வ மஹிஷீ விஷ்வக்ஸேனஸ்ரீ பராங்குச நாத யமுனா ப்ரப்ருதி பூர்வாச்சார்ய முகேந
ஸ்ரீ ராமானுஜ ஸித்தாந்த நிஷ்ணா தேஷு ஸூத்தம் ரஹஸ்ய த்ரய ஸம்ப்ரதாயம் அவதாரயாமாஸ -ரஹஸ்ய த்ரய மீமாம்ஸ பாஷ்யத்தில் வியக்தம் –
நாயக ரத்னம் போல் எம்பெருமானார் ஸோபா வஹாராக பிரகாசிக்கிறார்
அமுநா தபநாதி ஸாயி பூம்நா யதிராஜேந நிபத்த நாயகி ஸ்ரீ -தேசிகன் திருவாக்கு
அர்வாஞ்சோ யத் பத ஸரஸி ஜத்வந்த்வம் ஆஸ்ரித்ய பூர்வே மூர்த்நா யஸ்ய அந்வய முபகதா தேஸிகா முக்திமாபு பூர்வார் திருவாக்கு –
இந்தப்பரம்பரையில் சரம ஆச்சார்யர் மா முனிகள்-பெரிய ஜீயர் -ஈட்டுப் பெருக்கர் -விசத வாக் ஸிகா மணி –
ஈடு கால ஷேபம் பெரிய பெருமாளுக்கு அருளினார் அன்றோ –
தென் அரங்கர் சீர் அருளுக்கு இலக்காகப் பெற்றார் அன்றோ-
மாநா தீநா மேய ஸித்தி -என்பர் பெரியோர் –
நம் தர்சனத்துக்கு பிரமாணங்கள் மூன்று -ப்ரத்யக்ஷம் -அனுமானம் -ஸப்தம்
ஸப்த பிரமாணமும் ஸ்ருதி ஸ்ம்ருதி மீமாம்ஸை கள் என்று மூன்று வகைப்படும் –
வேதத்தில் பூர்வபாகம் வேதம் என்றும் உத்தரபாகம் உபநிஷத் என்றும் ரஹஸ்ய த்ரயம் வேதாந்த ஸாரம் என்றும் கூறப்படும்
அந்த வேதாந்த சார நிஷ்கர்ஷம் பற்றிப் பார்ப்போம்-
—————-
அசாரம்-அல்ப ஸாரம்- ச ஸாரம் – சார தரம் த்யஜேத்
பஜேத் சார தமம் ஸாஸ்த்ரே ரத்நாகர இவாம்ருதம் -ஸ்ரீ வைகுண்ட தீஷிதீயோபாத்த வசனம் ப்ராமண பாவத்தை வஹிக்கும் –
சமுத்திரத்தில் அடங்கியுள்ள அசாராதி சதுஷ்ட்யம் த்யாஜ்யம்
சார தமம் பஞ்சமம் அம்ருதம் உபாதேயம்
ரஹஸ்ய த்ரய ஸாரத்தில் -சார நிஷ்கர்ஷ அதிகாரத்தில் -தேசிகன் இந்த ஸ்லோக அர்த்த விவரணம் செய்து அருளுகிறார் –
பாஹ்ய குத்ருஷ்டி ஸாஸ்த்ரங்கள் -அசாரம்
வேத பூர்வ பாக ஐஹிக பல -தத் சாதன ப்ரதிபாதிக பாகம் அல்ப ஸாரம்
ஆமுஷ்மிக பல தத் சாதன ப்ரதிபாதக ப்ரதேசம் ஸாரம்
ஆத்ம பிராப்தி தத் சாதன ப்ரதிபாதக பாகம் சார தரம்
பரமாத்ம பிராப்தி தத் சாதன ப்ரதிபாதக ப்ரதேசம் சார தமம் -இதுவே விவேகிக்கு உபாதேயம்-
அதிகாரம்-2-சார நிஷ்கர்ஷ அதிகாரம் –
ஸ்ருதி பத விபரீதம் ஷ்வேள கல்பம் ஸ்ருதை ச
பிரகிருதி புருஷ போக பிராபக அம்ச ந பத்ய
தத் இஹ விபூத குப்தம் ம்ருத்யுபீதா விசின்வந்தி
உபநிஷத் அம்ருத அப்தே உத்தமம் சாரமார்யா —
(வேதங்கள் காட்டும் வழிக்கு, நேர் எதிராக , அர்த்தங்களையும் வழியையும் சொல்லும் எல்லா மதங்களும்
விஷத்துக்குச் சமமானவை. வேதங்களிலும்,இவ்வுலக சௌகர்யங்களையும், கைவல்யம் என்று சொல்லப்படும்
தனது ஆத்மாவையே அனுபவிக்கும் பொருட்டுச் சொல்லப்படும் பகுதிகள் , அனுகூலமற்றவையாகும். ஆதலால், ஸம்ஸாரத்தைக் கண்டு
அச்சப்படுகிற நல்ல விவேகமுள்ளவர்கள் ,இந்த வேதத்தில், உபநிஷத்தாகிற திருப்பாற்கடலிலிருந்தும் ,முன்பு ஆசார்யர்களால்
காப்பாற்றப்பட்டு வருகிறதுமான , மிகவும் ஸாரமானதை ( ரஹஸ்யத்ரயத்தை )–இந்த அம்ருதத்தை —-மிகவும் விரும்புகிறார்கள்.)
இந்த ரஹஸ்ய த்ரயத்தில் திரு மந்த்ரம் சர்வம் அஷ்டாஷராந்த ஸ்தம்-என்கிறபடியே
தன் அர்த்தத்தை அறிய எல்லா அர்த்தங்களையும் அறிந்து தரும்படியாய் இருக்கையாலும்
சரம ஸ்லோகம் சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்று தான் சொல்லுகிற உபாயம் ஒன்றையுமே
அவலம்பிக்க சர்வ உபாய பல சித்தி உண்டாம் என்று ஸ்தாபிக்கையாலும்
த்வயம் கட ஸ்ருத்யாதிகளில் சொல்லுகிறபடியே தன்னை ஒரு கால் உச்சரித்தவனை சர்வ பிரகாரத்தாலும்
க்ருத க்ருத்யனாக்க வல்ல வைபவத்தை யுடைத்தாய் இருக்கையாலும்
ரஹஸ்ய த்ரயமே முமுஷூ வுக்கு ஆதரணீயம் –
(ஸ்ரீமதஷ்டாக்ஷரப்ரஹ்ம வித்யை ( நாரதீய கல்பம்–1–9 ) மற்றும் ஹாரீதஸ்ம்ருதி சொல்கிறது–
ஸர்வம் அஷ்டாக்ஷராந்த :ஸ்தம் –அனைத்துமே அஷ்டாக்ஷரத்தில் உள்ளது–)
அசாரம் அல்பசாரம் ச சாரம் சாரதரம் த்யஜேத்
பஜேத் சாரதமம் சாஸ்த்ரே -ஸ்தரம் -ரத்னாகர இவாம்ருதம் —
பரம புருஷார்த்தமும் தத் உபாயமும் பிரத்யஷாதி பிரமாணங்களால் அறிய ஒண்ணாத படியாலே இவற்றுக்கு
சாஸ்த்ராத் வேதின ஜனார்த்தனம் -என்றும் –
தஸ்மாத் சாஸ்திரம் பிரமாண்யம் கார்ய அகார்ய வ்யவச்திதௌ-என்றும்
சப்த ப்ரஹ்மணி நிஷ்ணாத பரம் ப்ரஹ்மாதி கச்சதி -என்றும் சொல்லுகிறபடியே சப்தமே பிரமாணம் –
(*சாஸ்த்ராத் வேதிந ஜநார்த்தனம் —–மஹாபாரதம் –உத்யோக பர்வம் கூறுகிறது -சாஸ்த்ரம் மூலமாக ஜநார்த்தனனை அறிகிறேன்
தஸ்மாத் சாஸ்த்ரம் ப்ரமாண்யம் கார்ய அகார்ய வ்யவஸ்திதொள — ஸ்ரீமத் பகவத் கீதை ( 16–24 )–
தஸ்மாச்சாஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்யாகார்ய வ்யவஸ்திதொள
ஜ்ஞாத்வா சாஸ்த்ர விதாநோக்தம் கர்ம கர்த்து மிஹார்ஹஸி
செய்யத் தக்கது , செய்யத் தகாதது, என்பதை முடிவு செய்வதில்,சாஸ்த்ரம் தான் ப்ரமாணம் –ஆகவே, சாஸ்த்ரத்தில் சொல்லப்பட்ட
முறையை அறிந்து, கர்மாக்களைச் செய்வாயாக ——
சப்தப்ரஹ்மணி நிஷ்ணாத : பரம் ப்ரஹ்மாதி கச்சதி –மஹாபாரதம்–சாந்தி பர்வம் (276–2 )
சப்தமாகிய வேதங்களை அறிந்தவன், ”ப்ரஹ்ம”த்தை—அதாவது– ஸ்ரீமந் நாராயணனை அறிந்தவன் ஆகிறான்)
அஸாரம் , அல்பஸாரம் —-விளக்கம்–
அவ்விடத்தில்
அனந்த பாரம் பஹூ வேதிதவ்யம் அல்பச்ச காலோ பகவச்ச விக்னா
யத் சார பூதம் ததுபாததீத ஹம்சோ யதோ ஷீரம் இவ அம்புமிச்ரம் -உத்தவ கீதையிலிருந்து -3–10 -என்கிற ஸ்லோகத்தாலே
சார பூதம் என்கிற பதத்தாலே பிரதிபன்னமான நிரூபாதிக சாரத்தை விஷயீ கரிக்கிற சார தம சப்தம் உபாதேயம் —
பாஹ்ய குத்ருஷ்டி சாஸ்திரங்கள் அத்யந்த அசாரங்கள் ஆகையாலே அனுபாதேயங்கள்
வேதத்தில் பூர்வ பாகத்தில் ஐஹிக பல சாதனமான பிரதிபாதகமான பிரதேசம் அத்யல்ப சாரமாகையாலே அநுபாதேயம் –
ஆமுஷ்கிக பல பிரதிபாதிக அம்சம் ஐஹிக பலத்தில் காட்டில் அதிசய பலத்தை யுடைத்தாகையாலே
சிலருக்கு சாரம் என்னவாய் இருந்ததே யாகிலும் துக்க மூலத்வாதி தோஷ த்ருஷ்டம் ஆகையாலே அநுபாதேயம்
ஆத்ம தத் ப்ராப்தி தத் சாதன மாத்ரத்தை பிரதிபாதிக்கும் அம்சமும் சார தரமாய் இருந்ததே யாகிலும்
அதிலும் அத்யந்த அதிசயிதமான பரமாத்மா அனுபவ சாபேஷருக்கு அநுபாதேயம்
பரமாத்ம தத் ப்ராப்தி தத் உபாயங்களை வெளியிடும் பிரதேசம் சார தமம் ஆகையாலே விவேகிக்கு உபாதேயம் –
(துக்க மூலத்வாதி தோஷம் –7
1.அல்பத்வம் —தர்ம,அர்த்த, காம ,மோக்ஷங்கள் அல்பம்;பகவானையே ஆச்ரயிக்கும்போது ,இவை அல்பமே
ஜடாயு, கேட்காமலேயே ஜடாயுவுக்கு மோக்ஷம் கிடைத்தது ( மோக்ஷம் என்பது பகவானின் திருவடியை அடைதல் ) ஜடாயு மோக்ஷத்தையும் கேட்கவில்லை.
2. அஸ்திரத்வம் —ஸம்ஸாரத்தில் உழலும்போது, புண்ய, பாவ அஸ்த்ரங்கள் — கர்மவினை என்கிற சாக்கில், நம்மீது அஸ்த்ரமாகப் பாயும்.
3. துக்கமூலத்வம் —-ஒரு விஷயத்தைத் தொடங்கி, அதை அடைவதற்கு முன்பாக
அந்த முயற்சியில் ஏற்படுகிற துக்கம்
4. துக்க மிச்ரத்வம் —-அந்த விஷயத்தை அடைந்து, அனுபவிக்கிறபோது ஏற்படும் துக்கம்
5. துக்கோதர்கத்வம் –அந்த விஷயத்தை இழக்கிறபோது ஏற்படும் துக்கம்
6. மூலமஹாவிஸர்ஜனத்வம் —ப்ரக்ருதி ஸம்பந்தமான துக்கம்
7. ஸ்வாபாவிக ஆனந்த வ்ருத்தத்வம் —-பகவானின் திருவடியை அடைய தடையாக இருப்பது —எல்லாமே துக்கம்)
(ஜீவன், செயல்படுவதற்கு, பகவான் 16 கலைகளைத் தருகிறான்
1. ப்ராணன் 2. புத்தி 3.த்ரேகம் ( சரீரம் ) 4.ச்ரத்தை 5. ஐந்து பூதங்கள் 10. இந்த்ரியம் 11. மனஸ் 12. அன்னம்
13.வீர்யம் 14.தபஸ் 15.மந்த்ரம் 16.கர்மம் (ஹோமம்,யாகம் போன்றவை ) இவன் ஷோடச கல புருஷன்)
அவ் வம்சத்திலும்
பிரதான ப்ரதி தந்த்ரங்களான தத்வ ஹிதங்களுடைய சங்க்ரஹம் ஆகையாலே -மிகவும் சார தம –
உபாதேயமாய் இருக்கும் ரகஸ்ய த்ரயங்கள் -ஆகையாலே
பஹூப்யச்ச மஹத்ப்யச்ச சாஸ்த்ரேப்யோ மதிமான் நர
சர்வதஸ் சாரமாதத்யாத் புஷ்பேப்ய இவ ஷட்பத-மஹாபாரதம்—சாந்தி பர்வ-176-66 -என்கிறபடியே
ரகஸ்ய த்ரயம் முமுஷூ வான இவ்வாத்மாவுக்கு உபாதேயமாகக் கடவது
ஷட்பத -தேனீ போலே –
அமையா இவை என்னும் ஆசையினால் அறு மூன்று உலகில்
சுமையான கலவிகள் சூழ வந்தாலும் தொகை இவை என்று
இமையா இமையவர் ஏந்திய எட்டு இரண்டு எண்ணிய நம்
சமயாசிரியர் சதிர்க்கும் தனி நிலை தந்தனரே —
அறு மூன்று -18- வேதங்கள் -சிஷை வியாகரணம் சந்தஸ் நிறுத்தம் ஜ்யோதிடம் கல்பம் –
மீமாம்சை நியாயம் புராணம் தர்மம் ஆயுர் வேதம் தனுர் வேதம் காந்தர்வம் அர்த்த சாஸ்திரம் —
எட்டு இரண்டு -அஷ்டாஷரத்தையும் மற்ற இரண்டையும் -த்வயம் சரம ஸ்லோகம்
சாகா நாம் உபரி ஸ்திதேந மநுநா மூலேந லப்த ஆத்மாக
சத்தா ஹேது சக்ருத் ஜபேந சகலம் காலம் த்வயேன ஷிபன்
வேத உத்தாம்ச விஹார சாரதி தயா கும்பேந விஸ்ரம்பித
சாரஞோ யதி கச்சித் அஸ்தி புவனே நாத சயூ தஸ்ய ந லோகம்-
சேஷத்வ ஸ்வரூப அநு வ்ருத்தி -பகவத் பாகவத பர்யந்த கைங்கர்யம் —
ஆஸ்ரிதர்கள் இடம் வாத்ஸல்ய அதிசயம் கொண்ட கீதாச்சார்யன் ஆப்த தம வசனம்
பகவானே வக்தா -வக்த்ரு வை லக்ஷணம் உண்டே-கிருபையின் பரிவாஹ ரூப வசனம் -விஸ்வசநீயம்
ஸ்வரூப ஞானம் உண்டாக்கும் திருமந்திரம்
ஸக்ருத் உச்சாரண மாத்ரத்தால் சம்சாரம் தாண்டுவித்து கால ஷேப அர்த்தமாக உள்ள த்வயம்
மஹா விசுவாசம் உண்டு பண்ணும் சரம ஸ்லோகம் –ஆகிய மூன்றுமே அனுசந்தேயம் என்றதாயிற்று –
இவற்றை அனுஷ்டான பர்யந்தமாக கொண்ட ஞானவான் துர்லபம் –
அப்படிப்பட்டவனும் அவனது பரிஜனங்களும் நமக்கு நாதர்கள்-என்றவாறு –
——————————————————————–
ஆயினும் ஆராய்ந்தால் அசார பதத்துக்கு பாஹ்ய குத்ருஷ்ட்டி ஸாஸ்த்ர பரத்வம் கொள்ளுகை உசிதம் அன்று என விளங்கும்
பாஹ்ய குத்ருஷ்ட்டி ஸாஸ்த்ரங்களுக்கு ஸாஸ்த்ரத்வமே இல்லையே அன்றோ
அலௌகிக பலத்தையும் தத் சாதநாதி களையும் ப்ரதிபாதிக்குமது அன்றோ ஸாஸ்த்ரம் –
சாஸநாத் ஸாஸ்த்ரம் இறே
யா வேத பாஹ்யா ஸ்ம்ருதய யாஸ் ச காஸ் ச குத்ருஷ்ட்யா
ஸர்வாஸ்தா நிஷ் பலா ப்ரேத்ய தமோ நிஷ்டா ஹி தாஸ் ஸ்ம்ருதா -என்று இறே மநு பகவான் அருளிச் செய்தார்
வேதாத் ஸாஸ்த்ரம் பரம் நாஸ்தி -என்று பாஹ்ய குத்ருஷ்ட்டி ஸாஸ்த்ரங்களுக்கு ஸாஸ்த்ரத்வம் நிஷித்தம்
இவ்விடத்தில் பர ஸப்தம் உத்க்ருஷ்ட பரம் அன்று -பர ஸப்தம் அந்நிய வாஸி எனக்கொள்ள வேண்டும் –
வேத பின்னத்துக்கு ஸாஸ்த்ரத்வம் நிஷேதிக்கப் படுகிறது –
த்யாஜ்ய உபாதேய விபாகம் ஏக அவயவியிலே அன்றோ செய்யப்படுகிறது -சமுத்திரம் -த்ருஷ்டாந்தம் –
இனி வாஸ்த்வ அர்த்தம் பார்ப்போம்
ஐஹிக ஆமுஷ்மிக ஐஸ்வர்ய ப்ரதிபாதக பாகம் அசாரம்
ஆத்ம பிராப்தி தத் சாதன ப்ரதிபாதக பாகம் அல்ப ஸாரம்
பரமாத்ம பிராப்தி தத் சாதன பக்தி ப்ரதிபாதிக பாகம் ஸாரம்
பகவத் அனுபவ பரீவாஹ ஸ்வார்த்த கைங்கர்ய தத் சாதன பூதாத்ம சமர்ப்பண ப்ரதிபாதக பாகம் சார தரம்
பரார்த்த கைங்கர்ய தத் சாதன ஸித்த உபாய ப்ரதிபாதக பாகம் சார தமம்
என்றே வாஸ்தவார்த்தம்
ஆக
வேதாந்த பின்னமாய் -சாரத்வேந ப்ரபலமாய் -சார தமமுமான ஸாஸ்த்ரமாம் ரஹஸ்ய த்ரயமே வேதாந்த ஸாரம் எனத் தேறியது –
————
இனி மா முனிகள் கண்ட இதனுடைய நிஷ்கர்ஷத்தை நிரூபிக்கிறோம் –
வைதிகர்கள் வேதார்த்தங்களை நிர்வஹிக்கும் கட்டளைகள் வெவ்வேறு பட்டு இருக்கும் -எங்கனே என்னில்
வேதம் ஜ்யோதிஷ்டோமாதி கர்மங்களைப் பிரதானமாகத் தெரிவிக்கிறது
வேதாந்த விஷயமான ப்ரஹ்மம் ஜீவ பின்னமானதோர் தத்வம் அல்ல
யுகாதி கர்மங்களை செய்கிற ஜீவாத்மாவையே வேதாந்தங்கள் கொண்டாடுகின்றன –
ஆக கர்மபரம் வேதம் -கர்ம கர்த்ரு ஜீவ ப்ரஸம்ஸா பரம் வேதாந்தம் -என்று வேதார்த்தத்தை ஒருங்க விடுவர் சில வைதிகர்கள் –
வேதாந்தம் பக்தி ப்ரபத்திகளான பற்பல உபாயங்களை ப்ரதிபாதிக்கிறது –
நாநா ஸப்தாதி பேதாத்
விகல்ப
அவி ஸிஷ்ட பலத்வாத் -என்று இறே ஸூத்ர காரர் அருளிச் செய்தார் –
ரஹஸ்ய த்ரயமும் வேதாந்தத்தில் அடங்கியதே-பின்ன ஸாஸ்த்ரம் அல்ல –
பூர்வ பாகமான வேதத்தில் சொல்லப்பட்ட கர்மம் பகவத் கைங்கர்ய ரூபமாகும்
அதுவும் ஸ்வார்த்தம் -நம் ஆனந்ததுக்கு உறுப்பாகச் செய்யப்படுமது
பக்தியும் ப்ரபத்தியும் பகவத் ப்ராப்தி உபாயங்கள் -அதாவது பகவத் ப்ரஸாத ஜனகங்கள்
நம்முடைய பக்தி ப்ரபத்திகளாலே பகவானுக்கு அருள் பிறக்கிறதாகையாலே பகவத் ப்ரஸாதம் ஸ ஹேதுகம் என்று வேதார்த்தத்தை ஒருங்க விடுவார் சில வைதிகர்கள் –
ஸித்த உபாய பூதன் ஸர்வேஸ்வரன்
அவன் ஸஹாயாந்தர நிரபேஷ உபாய பூதன்
இவன் பண்ணும் பக்தி ப்ரபத்திகள் -தம் ஹ தேவம் ஆத்ம புத்தி ப்ரகாஸம் -என்கிறபடி பகவத் ப்ரஸாத ஜன்யங்கள்
அவன் அருளாலே விளைந்தவை
பல பூதங்கள் உபாயம் அல்ல என்றபடி
ஆத்ம புத்தே ப்ரகாஸ யஸ்மாத் ஸ ஆத்ம புத்தி ப்ரகாஸ
தத் விஷய புத்தி ஸ்புரணஸ்ய தத் அநு க்ரஹாயத் தத்வாத் -என்ற ஸ்ரீ ரெங்க ராஜ முனி பாஷ்யம் காணத் தக்கது –
என் உணர்வின் உள்ளே நிறுத்தினேன் அதுவும் அவனது இன்னருளே –
எனது ஆவி யார் யான் யார் தந்த நீ கொண்டாக்கினையே -என்ற ப்ரபந்ந ஜன கூடஸ்தரான ஆழ்வார் திருவாக்கும் –
அதவா கின்னு ஸமர்ப்பயாமி தே -என்ற ஆள வந்தார் திருவாக்கும்
வரத தவ கலு ப்ரஸாதாத்ருதே சரணமிதி வஸோ அபி மே நோதியாத் -என்ற ஆழ்வான் திருவாக்கும் இவ்விடம் அநுசந்தேயங்கள்
ஆக பக்தி ப்ரபத்திகள் ஈஸ்வர கிருபா பலம் எனத் தேறியது –
பூர்வ பாக யுக்த கர்மம் பகவத் கைங்கர்ய ரூபம் -அதுவும் பரார்த்தமே -அவன் முக மலர்த்திக்கு உறுப்பானது –
உத்தர பாக யுக்த பக்தி ப்ராப்ய ருசி ஆகலாம் -பிரபத்தி ஸ்வரூப யாதாத்ம்ய ஞான ரூபமாகலாம்
ப்ரஸாத விசிஷ்டனே உபாய பூதன் -அவன் ப்ரஸாதம் நிர் ஹேதுகம் –
பலத்துக்கு வேண்டுவது ஆத்ம ஞானமும் அப்ரதி ஷேதமுமே என்று வேதார்த்தத்தை ஒருங்க விடுவர் பரம வைதிகரான நம் பூர்வர்கள் –
இவ்வர்த்த நிஷ்கர்ஷம் வேதாந்த சார லப்தம்
வேத பூர்வ பாகத்தில் ப்ரதிபாதிதமான கர்மங்களுடைய யாதாத்ம்யம் -வாஸ்த்வ ரூபம் -பகவத் கைங்கர்யத்வம் ஆகும் –
வேதாந்த ப்ரதிபாத்யமான பக்தியினுடைய உண்மை நிலை ப்ராப்ய ருசித்வம் -அதாவது
பகவத் அனுபவ கைங்கர்யங்கள் விஷயமான ப்ரீதி ரூபமாய் இருக்கை –
வேதாந்த ப்ரதிபாத்ய ப்ரபத்தியினுடைய உண்மையான ஆகாரம் ஸ்வரூப யாதாத்ம்ய ஞானத்வம் -அதாவது
ஜீவாத்மாவின் இயல்பான நிலையான பகவத் அத்யந்த பாரதந்தர்யத்தை விஷயமாக யுடைய ஞானமாய் இருக்கை –
இவையும் இவ்வதிகாரிக்கு ப்ராப்யமான பகவத் கைங்கர்யத்தினுடைய பாராரத்வம் முதலானவையும் வேதாந்த சார வேத்யங்கள் ஆகும்
அதாவது ரஹஸ்ய த்ரய வேத்யம் என்றபடி –
———-
இவ்வர்த்தத்தை சில உதாஹரணங்களாலே விளக்குகிறார்
1-கட படாதி பேதம் ப்ரத்யக்ஷ ஸித்தம்
அப்ராப்தே ஹி ஸாஸ்த்ரம் அர்த்தவத் -என்கிற நியாயத்தாலே பேதம் வேதாந்த வேத்யம் அன்று
ஜீவ பரா பேதமே வேதாந்தார்த்தம் என்பர் ம்ருஷ வாதிகள்
இக்கூற்றுக்கு சமாதானம் அருளிச் செய்கிறார் தத்வ சாரத்தில் நடாதூர் அம்மாள் என்று ஸூ ப்ரஸித்தரான வாத்ஸ்ய வரதாச்சார்யர் ஸ்வாமிகள்
ப்ரத்யஷாதி தரஸ்து ஸாஸ்த்ர விஷய பேத த்வதத் வைதவத்-என்று
அதாவது
ப்ரத்யக்ஷ ஸித்த பேதம் ஸ்வ தந்த்ர பேதம்
பொருள்கள் பகவத் சேஷம் யுடையவை என்று அறியப்படாதே ஸ்வ தந்த்ரங்களாகவே அறியப்படுமவையாய் இருக்கும்-
இது ப்ரத்யக்ஷ ஸித்தம்
இனி ஸாஸ்த்ர ஏக வேத்யமான அர்த்தம் என்ன வென்றால்
இவை எல்லாம் பகவத் விபூதிகள் -பகவத் பரதந்த்ரங்கள் -பகவானுக்கு சொத்தாய் இருக்குமவை என்பதேயாம்
ஆக பிரத்யஷத்தால் இவற்றின் ஸ்வா தந்தர்யம் ஞானமானாலும் ஸாஸ்த்ரம் கொண்டே இவற்றினுடைய பாரதந்தர்யம் ஆகிற ஸ்வரூப யாதாத்ம்யம் அறியப்படுமா போலேயும்
2- கட படாதி ஸப்தங்கள் -வ்யுத்புத்தி நிகண்டு ப்ரப்ருதிகளாலே குடம் வஸ்திரம் முதலான வஸ்துக்களுக்கு மாத்ரம் வாசகங்களாகத் தோற்றுகின்றன
ஆயினும் ஸகல ஸப்தங்களும் பகவத் பர்யந்தமாகச் சொல்லி அல்லது நில்லாது என்னும் அர்த்தம்
வஸஸாம் வாஸ்யம் உத்தமம் -இத்யாதி ஸாஸ்த்ரம் கொண்டே அறிய வேணும் –
அது போலவும்
பக்தி ப்ரபத்திகள் உபாயம் இத்யாத் யர்த்தங்கள் வேதாந்தங்களைக் கொண்டு நாம் அறிந்து இருந்தாலும் பக்தி ப்ரபத்திகளின் யல்பான ஸ்வரூபத்தை வேதாந்த சார பூத ரஹஸ்ய த்ரயம் கொண்டே அறிய வேணும் என்றபடி –
கர்ம ப்ராதான்ய வாதிகள் வேத பூர்வ பாக அர்த்த நிஷ்டர்கள்
அவர்களை -பக்தி ப்ரபத்திகள் உபாயம் -ஸ்வார்த்த கைங்கர்யம்புருஷார்த்தம் -என்று சொல்லி வேதாந்த வித்துக்கள் கண்டித்தார்கள்
அந்த வேதாந்திகளையும் பக்தி ப்ரபத்திகள் அதிகாரி விசேஷணங்கள் -பகவத் கிருபா பல பூதங்கள் -பரார்த்த கைங்கர்யமே பரம புருஷார்த்தம் -என்று
சொல்லி வேதாந்த சார நிஷ்டர்கள் கண்டிக்கிறார்கள்
ஆக வேதாந்தங்களைக் காட்டிலும் பின்னமாயும் உயர்ந்ததாயும் -உள்ள வேதாந்த ஸாரமான ரஹஸ்ய த்ரயம்
பரார்த்த கைங்கர்யம் பலம்
பக்தி ப்ரபத்திகள் பகவத் ப்ரஸாத பலம் -என்று செய்யும் நிஷ்கர்ஷமே வேதாந்த சார நிஷ்கர்ஷம்
இவ்வர்த்தமே பஞ்சமம் சார தமம்
இதுவும் இதற்கு ப்ரதிபாதிக வேதாந்த ஸாரமுமே உபாதேயம் என்றதாயிற்று –
அர்த்த தத்வம் இப்படி இருக்க -ஸ்ருதி பத விபரீதம் -என்று தேசிகன் அருளிச் செய்ய ஹேது என் என்ன
வீத ராக வ்யதிரிக்தாநாம் கர்மணி அஸ்ரத்தா நிவாரணர்த்தம் அன்வாருஹ்ய வாத -என்கிறபடியே
சில அதிகாரிகளுக்கு கர்மங்களில் அஸ்ரத்தையைத் தடுக்க ஜைமினி
ப்ரஹ்ம ஸாஸ்த்ரத்தை கர்ம ஸாஸ்த்ர சேஷமாக வர்ணித்தது எப்படி அன்வாருஹ்ய வாதமோ
அப்படியே ஆத்ம யாதாத்ம்ய ஞான விரஹிகளுக்கு ஸாத்ய உபாய ஸாஸ்த்ரத்தில் அஸ்ரத்தையைத் தடுக்க
ஸித்த உபாய ஸாஸ்த்ரம் -ரஹஸ்ய த்ரயம் -அதிரிக்தமாய் இருக்கச் செய்தேயும்
சாதன பக்தி பிரபத்தி ஸாஸ்த்ர ரூப வேதாந்தங்களில் அந்தர்பூதம் என்று அன்வாருஹ்ய வாதமாக அருளிச் செய்தார் தேசிகன் என்று கொள்ள வேண்டும்
இங்கே
விஷய சார பாகோ அயம் வேதாந்தாத் பர இஷ்யதே
பரத்வம் சார ஸாஸ்த்ரஸ்ய ஹி அஸாரம் இதி மாநத -இத்யாதி வசனங்களை அனுசந்திப்பது –
இதனால் தேறிய பொருளாவது
வேதத்தை வேதாந்த அனுகுணம் நயனம் செய்யுமா போலே
வேதாந்தத்தை வேதாந்த சார அனுகுணம் நயனம் பண்ண வேணும் என்று
ஆகையால் சாரீரக ஸாஸ்த்ர அனுகுணம் ரஹஸ்ய த்ரய நயனம் என்கை உசிதம் அன்று
ரஹஸ்ய த்ரய அனுகுணம் சாரீரக பாஷ்யாதி நயனம் உசிதம் என்றதாயிற்று
ரஹஸ்ய த்ரய ப்ரஸ்தானம் சார தமம் ஆகையாலே என்றபடி –
ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாஸ புராண பாஞ்சராத்ர ரூப ஸகல சாஸ்த்ரார்த்த நிர்ணாயகம் சாரீரகம் என்று கூறவும் முடியாது
ஸ்ருத்யர்த்த நிர்ணாயகம் சாரீரகம் ஆயினும் ஸ்ம்ருதி யாதி யர்த்தம் சாரீரகம் என்ன ஒண்ணாது
வேத வியாசர் ஓர் அதிகரணத்தில் ஸ்ருதி அர்த்தங்களில் ஓர் அர்த்தத்தை நியாய மார்க ஸஞ்சாரம் செய்து அறுதியிட்டு அதற்கு ஸம்வாத பிரமாணமாக
ஸ்ம்ருதேஸ் ச
ஸ்மரந்தி ச-என்று ஸ்ம்ருதி யாதிகளை உதாஹரிக்கிறார்
ஸுத்ரீ தர்க்கா ப்ரதிஷ்டா -என்ற தேசிகன் திருவாக்கையும்
த்வயம் கலு தர்க்க ஜாதம் ஸ்ருதி விருத்தம் அவிருத்தம் சேதி -தேந தர்க்கா ப்ரதிஷ்டா வசனம் -என்றும்
ஆர்ஷம் தர்மோபதே சஞ்ச இத்யாதி பிரகாரேண வேத விருத்த தர்க்க விஷய தயா யோஜ்யம்
ந புந வேத இதி கர்த்தவ்யதா ரூப தர்க்க விஷயம் -என்ற தேசிகன் திருக்குமாரர் திரு வாக்கையும் இங்கே அனுசந்திப்பது –
அதீத சாகார்த்த நிர்ணா யகம் நியாயம்
அந தீத சாகார்த்த நிர்ணா யகம் ஸ்ம்ருதியாதி என்று இறே நிஷ் கர்ஷம்
ஸ்ருதியிலும் சார்வத்ரிகமாக நியாய சஞ்சாரம் இல்லை
அஸ்பஷ்ட ஸ்தல மாத்ரத்திலே இறே நியாய சஞ்சாரம்
நியாய நிரபேஷமாக ஸித்தம் -என்ற ரஹஸ்ய த்ரய சார பரிகர விபாகாதிகார வாக்கியத்தையும் காணலாம்
ஸ்ருதிகளில் போலே ஸ்ம்ருதிகளிலும் நியாய ஸஞ்சாரம் கொண்டால் உப ப்ரும்ஹ்ய உப ப்ரும்ஹண பேதமே அற்றுப் போம்
நியாயங்களைக் கற்றுத் தெளிந்த ஸ்ரீ மைத்ரேயன் ஸ்ரீ பராசர பகவானைக் கிட்டினார் புராண ஸ்ரவணம் செய்ய என்று இறே ஸ்ரீவிஷ்ணு புராண உபக்ரமம் –
பாஷ்யகாரர்
இது கொண்டு ஸூத்ர வாக்கியங்கள் ஒருங்க விடுவர் -என்று நாயனாரும்
செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித் தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே -என்று தேசிகனும் அருளிச் செய்தவை அனுசந்தேயம்
அருளிச் செயல்களைக் கொண்டு அன்றோ சரீரக அர்த்த நிர்ணயம் என்று அருளிச் செய்யப்பட்டது
சாரீரகத்தைக் கொண்டு அருளிச் செயல் அர்த்தங்களை அறுதியிடுவது என்று அருளிச் செய்திலரே
ஆகையால் உப ப்ரும்ஹணங்களுக்கு சாரீரக நியாய அபேக்ஷை பொருந்தாது
ஆக வேதாந்த சார பூத ரஹஸ்ய த்ரய அனுகுணம் சாரீர காதி நயநம் கார்யம் என்றதாயிற்று
ஆக வேதாந்த சாரீரகாதி ப்ரதிபாத்ய பக்தி ப்ரபத்திகள் பலம்
ப்ரஹ்மம் ஒன்றே உபாயம்
பூர்வ பாக உதித கர்மம் பரார்த்த கைங்கர்ய ரூபம் -என்று
வேதாந்த சார நிஷ் கர்ஷம் -என்றதாயிற்று
ஸ்ரீ மதே ரம்ய ஜாமாத்ரு முனீந்த்ராய மஹாத்மனே
ஸ்ரீ ரெங்க வாஸிநே பூயாத் நித்ய ஸ்ரீர் நித்ய மங்களம் –
—————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–