Archive for the ‘ubanishads’ Category

ப்ரஶ்ண உபநிஷத் – அத்தியாயம்-1 -2-3-4-5-6-ஸ்வாமி குருபரானந்தா உபதேச விளக்கம்

December 25, 2022

ப்ரஶ்ண உபநிஷத் – அத்தியாயம்-01
ஸ்வாமி குருபரானந்தா உபதேச விளக்கம்

முகவுரை

சாஸ்திரம் மூன்று படிகளில் ஒரு விஷயத்தை நமக்கு போதிக்கும். அவைகள்

  1. உத்தேஸஹ – சாஸ்திரம் எதைக் கூற விரும்புகிறதோ அதை முதலில் தெளிவாக எடுத்து உரைக்கும்
  2. லட்சணம் – எதைக் கூறியதோ அதற்கு லக்ஷணத்தை சொல்லும்
  3. பரீக்ஷா – இந்த லக்ஷணம் இந்த அறிவுடன் பொருந்துகின்றதா என்று விசாரம் செய்யும்

ஆகியவைகளாகும்.

  • வேதாந்த சாஸ்திரத்தின் உத்தேசம் பிரஹ்ம சத்யம், ஜகத் மித்யா
  • பிரம்மத்தின் சத்யம், ஜகத்தின் மித்யா இவைகளின் லட்சணங்களை கூறுதல்
  • இவைகளை விசாரம் செய்து உறுதியான அறிவை அடைதல்

ஜகத் லட்சணம்   எவையெல்லாம் அனுபவிக்கப்படும் விஷயங்களாக இருக்கின்றதோ அவைகள் யாவும் ஜகத்தின் லட்சணம்.

மித்யா: இது ஒருவிதமான இருப்பை குறிக்கின்றது..  உ-ம் கானல் நீர்.

மித்யா லட்சணம்:

  1. அனிர்வாக்யத்வம் மித்யாத்வம்

       வாக்யம்      – வாக்கால் விளக்கப்படுவது

       நிர்வாக்யம்   – நிச்சயமாக விளக்கப்படுவது

       அநிர்வாக்யம் – வாக்கினால் நிச்சயமாக சொல்லமுடியாத தன்மை

ஸதஸத் அனதிகணத்வரூப அநிர்வாக்யத்வம் மித்யாத்வம்

   ஸதஸத் – ஸத் + அஸத்

   அனதிகரணம் – ஆதாரமற்றது

   ஸத்திற்கும் அஸத்திற்கும் ஆதாரமற்றதாக இருக்கும் ரூபம். எது இருக்கின்றது என்றும், இல்லையென்றும் கூறமுடியாதோ அதுதான் மித்யா. (உ-ம்) கயிற்றில் தோன்றும் பாம்பு. இதில் பாம்புக்கு மித்யாவாக இருக்கும் தன்மை இருக்கிறது.  இந்த பாம்பை ஸத் என்று சொல்ல முடியாது ஏனென்றால் அறிவு வந்தவுடன் பாம்பு மறைந்து விடுகிறது. எனவே பாம்பு இருத்தலுக்கு ஆதாரமாக சொல்ல முடியாது. மேலும் இல்லாமைக்கு பாம்பு அதிகரணமாக சொல்ல முடியாது.  காரணம் அது நமக்கு தெரிந்து கொண்டு இருக்கிறது.. எனவே பாம்பை அஸத் என்றும் சொல்ல முடியாது. எந்த ஒன்றை இருக்கின்றது என்றோ இல்லையென்றோ கூறமுடியாதோ அதுவே அனிர்வாக்யம் (மித்யா). இந்த லட்சணம் கயிற்றில் தோன்றிய பாம்புக்கு பொருந்துகிறது.

   இந்த உதாரணத்தை ஜகத்திற்கு பொருத்தி பார்க்க வேண்டும். ஜகத் இருக்கின்றது என்றோ இல்லையென்றோ சொல்ல முடியாது. ஆழ்நிலை உறக்கத்திலும், கனவு நிலையிலும் ஜகத் நீக்கப்படுகின்றது.  எந்த ஒன்றானது தொடர்ந்து இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோமோ, அப்படிப்பட்ட தன்மையுடைய எதுவுமே மித்யா என்று புரிந்து கொள்ள வேண்டும்.

பரிக்ஷா

பூ.ப-1     பிரம்மத்தை வாக்கால் விளக்க முடியாது என்று சொல்வதால், அதுவும் மித்யா என்றாகி விடுகிறதே!!

பூ.ப-2  இந்த லக்ஷணம் சூன்யத்திற்கும் பொருந்துகிறது, அஸத்திற்கும் பொருந்துகிறதே!  எனவே மித்யா என்ற சொல்லின் விளக்கம் தவறு.

பிரம்மன் அனிர்வாக்யம்தான், இருந்தாலும் இந்த லக்ஷணம் பிரம்மத்திற்கு செல்லாது ஏனென்றல் மித்யா ஸத்தும் அல்ல அஸத்தும் அல்ல, இப்படிபட்டதை வாக்கால் விளக்க முடியாது.

பதில்-1     பிரம்மம் எந்தக் குணமுமில்லாத நிர்குணமாக இருப்பதால் மித்யாவின் லக்ஷணம் பொருந்தாது.  எனவே எந்த லக்ஷணமும் சொல்ல முடியாமல் இருக்கும் அனிர்வாக்யத்வம், சப்தத்தால் விளக்கமுடியாத அனிர்வாக்யத்வம் பிரம்மத்தின் லக்ஷணம்.

பதில்-2  மித்யாவின் லக்ஷணம் அஸத்துக்கு செல்கின்றதே என்று கேட்டால், எது இருக்கிறதோ அதனிடத்தில்தான் விளக்க வேண்டியதாகிறது.  எது இருப்பது போல காட்சியளித்துக் கொண்டிருக்கிறதோ அதைத்தான் விளக்க வேண்டியதாக இருக்கிறது.  எனவே அஸத்திற்கு லக்ஷணம் பொருந்தாது.

 

மித்யாவின் 2வது லக்ஷணம்

  • யத் நிஷியத்தே தத்3 மித்யா – எது நீக்கப்படுகிறதோ அது மித்யா.
  • எந்த இடத்தில் நிஷேதம் பண்ண வேண்டிய அவசியம் ஏற்படுகிறது? எது இருப்பது போல் தோன்றுகிறதோ அப்போதுதான் அது இல்லை என்று சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது

 

ஜகத் பரிக்ஷா

பார்த்து கொண்டிருக்கும் இந்த உலகம் இல்லை என்று சொல்வது உண்மையா? பொய்யா? சத்தியமா (அ) மித்யாவா?

  • பொய் என்று சொன்னால் ஜகத் இருப்பது உண்மையாகி விடும்.
  • உண்மை என்று சொன்னால் ஜகத் மித்யா என்பது உறுதியாகும். இப்படி சொல்வதால் இரண்டு சத்தியங்கள் இருப்பதான நிலை ஏற்பட்டுவிடும். அதாவது பிரம்மன் சத்யம், ஜகத் சத்யம். எனவே த்வைதம் வந்துவிடும்.

நிஷேதம் – அதிகரண ரூபம்.

இது பாம்பு அல்ல – இது கயிறு

நிஷேதம் என்பதன் தாத்பர்யம் இருக்கின்றதை தெரியப்படுத்துகிறது.  ஆதாரத்தை குறிக்கின்றது.  எனவே இரண்டு சத்தியம் வருவதில்லை.

மித்யாவின் 3வது லக்ஷணம்

ஞான நிவர்த்யத்வம் மித்யாத்வம் – அடைந்த அறிவால் எது சென்று விடுமோ அதுவே மித்யா.  கயிற்றில் தெரிந்துக் கொண்டிருக்கும் பாம்பானது அது கயிறு என்ற அறிவினால்தான் மறைந்துவிடும்.  அக்ஞானத்தில் தோன்றுவது தான் ஞானத்தால் நீங்கும்.  கர்மத்தால் தோன்றுவது கர்மத்தால்தான் நீங்கும்.

பரிக்ஷா

பூ.ப    கர்மத்தினாலேயும் நான் மித்யாவை நீக்குவேன்.  பானை மித்யா என்று சொல்கிறாய், நான் அதை உடைக்கின்ற செயலால் நீக்கி விடுவேன்.  பிறகு எப்படி ஞானத்தில்தான் போகும் என்று சொல்கிறாய்?

பதில்  பானைகள் உடைவது மீண்டும் காரணத்தில் லயமடைந்து விடுகின்றது.  ஆத்யந்தக நாசம் – காரணமும் , காரியமும் நாசமடைதல், கர்மத்தால் காரண நாசத்தை ஏற்படுத்த முடியாது, மாற்றத்தைத்தான் ஏற்படுத்த முடியும். ஞானம் ஒன்றில்தான் ஆத்யந்தக நாசம் ஏற்படுத்த முடியும்.  பானையை ஒரு பொருளாக பார்த்தால் அது மித்யா.  அதன் நாம-ரூபம் மித்யாவல்ல அது சத்யம்.

எனவே பிரம்மன்தான் சத்யம், அதன் மீது தோன்றிக் கொண்டிருக்கும் இந்த ஜகத் மித்யா என்று உறுதியாகின்றது.

சாந்தி பாடம்

ஓம் ப4த்3ரம் கர்ணேபி4: ஶ்ருணுயாம தே3வா:

ப3த்3ரம் பஶ்யேமாக்ஷபி4ர்யஜத்ரா: |

ஸ்தி3ரைரங்கை3ஸ்துஷ்டுவாங் ஸஸ்தனுபி3ர்

வ்யஶேம தே3வஹிதம் யதா3யு: |

ஸ்வஸ்தி ந இந்த்3ரோ வ்ருத்3த4ஶ்ரவா:

ஸ்வஸ்தி ந: பூஷா விஶ்வ்வேதா3: |

ஸ்வஸ்தி நஸ்தார்க்ஷ்யோ அரிஷ்டனேமி:

ஸ்வஸ்தி நோ ப்3ருஹஸ்பதிர்த3தா4து ||

ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி:

ப4த்3ரம் கர்ணேபி4: ஶ்ருணுயாம தே3வா:

நாங்கள் தெய்வீகமான விஷயங்களையே கேட்க வேண்டும், உண்மையை போதிக்கும் விஷயங்களையே கேட்க வேண்டும், சாஸ்திரம் உரைக்கும் உபதேசங்களை குரு மூலம் சிரத்தையுடன் கேட்கும் வாய்ப்பை அடைய வேண்டும். அந்த உபதேசங்கள் அனைத்தும் புரிய வேண்டும், மனதில் நிற்க வேண்டும்.  இவைகள் மூலம் நாங்கள் இந்த சம்சாரத்திலிருந்து முற்றிலுமாக விடுதலையடைய வேண்டும்.

ஸ்தி3ரைரங்கை3ஸ்துஷ்டுவாங் ஸஸ்தனுபி3:

நாங்கள் உறுதியான அங்கங்களுடன் வேத மந்திரங்களால் உங்களை புகழ்ந்து கொண்டு எவ்வளவு ஆயுட்காலம் தேவர்களால் கொடுக்கப்பட்டுள்ளதோ அவ்வளவு நாட்கள் வாழ்வோமாக

ப3த்3ரம் பஶ்யேமாக்ஷபி4ர்யஜத்ரா:

தேவர்கள் எங்களை சம்சார பந்தத்திலிருந்து காப்பாற்றட்டும். ( யஜத்ரா என்ற சொல், தம்மை புகழ்பவர்களுக்கு உதவி செய்யும் ஒருவகையான தேவர்கள் என்று குறிக்கிறது.  இது ஈஸ்வரனையும் குறிப்பால் உணர்த்துகிறது.) நாங்கள் மோக்‌ஷத்தை அடைவதற்கு உதவியாக இருப்பனவற்றையே பார்க்க வேண்டும்,  மனத்தூய்மையை தரக்கூடிய விஷயங்களையே பார்க்க வேண்டும்.  பார்க்கும் அனைத்திலும் அந்த ஈஸ்வரனையே பார்க்கும் புத்தியை அடைய வேண்டும். ( வெறும் கண்ணால் பார்க்காமல், புத்தியின் துணை கொண்டு வெளி விஷயங்களை பார்க்க வேண்டும்.)

வ்யஶேம தே3வஹிதம் யதா3யு:

எங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் முழுவதும் தேவர்களை புகழ்ந்து கொண்டும், உறுதியான, நலமான, திடமான இந்திரியங்களையும், சரீரத்தையும் கொண்டு தேவர்கள் மகிழும் வண்ணம் நல்லதையே செய்து கொண்டும் வாழ வேண்டும்.

ஸ்வஸ்தி ந இந்த்3ரோ வ்ருத்3த4ஶ்ரவா:

போற்றுதலுக்கும், வணங்குதலுக்கும் உரிய தேவர்கள் எங்களுக்கு உடல்நலத்தையும், மனநலத்தையும் கொடுக்கட்டும்.

ஸ்வஸ்தி ந: பூஷா விஶ்வ்வேதா3:

அனைத்தையும் அறிகின்ற சூரியபகவான் எங்களுக்கு நல்லதையே கொடுக்கட்டும்.  அனைத்தையும் அறிகின்ற ஈஸ்வரனை சூரியனாக நினைத்து வணங்குவதால் அவருடைய அருள் முழுவதும் கிடைக்கப் பெறுவோமாக.  எங்களுடைய புத்தி பிரகாசமடைந்து அதன் மூலம் எல்லாம் வல்ல ஈஸ்வரனை புரிந்து கொள்வோமாக.

ஸ்தி3ரைரங்கை3ஸ்துஷ்டுவாங் ஸஸ்தனுபி3:

கருட பகவான் வானில் எந்தவித தடைகளில்லாமல் பறப்பது போல எங்களுக்கும் அந்த ஈஸ்வரனை அடையும் முயற்சியில் எந்தவிதமான தடைகளும் இல்லாமல் இருக்கட்டும்.

வ்யஶேம தே3வஹிதம் யதா3யு:
கருட, இந்திர தேவரின் குருவான ப்ருஹஸ்பதி எங்களுக்கு நல்லதையே அருளட்டும். ப்ருஹஸ்பதி பகவான் அறிவுக்கு கடவுளாக கருதப்படுகிறார்.  அவருடைய அனுக்கிரகமும் எங்களுக்கு கிடைக்கட்டும்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

அத்தியாயம்01
ஸ்லோகம்01
ஓம் ஸுகேஶா ச பா4ரத்வாஜ: ஶைப்3யஶ்ச ஸத்யகாம: ஸௌர்யாயணீ
ச கார்க்3ய: கௌஸல்யஶ்சாஶ்ர்வலாயனோ பா4ர்க3வொ வைத3ர்பி4: கப3ந்தீ4
காத்யாயனஸ்தே ஹைதே ப்3ரஹ்மபரா ப்3ரஹ்மநிஷ்டா: பரம்
ப்3ரஹ்மான்வேஶமாணா ஐஷ ஹ வை தத்ஸர்வம் வக்ஷதீதி தே ஹ
ஸமித்பாணயோ ப4க3வந்தம் பிப்பலாத3முபஸன்னா: || 1 ||

ஸுகேஷ பாரத்வாஜ்                 முதல் சிஷ்யர்

ஶைப்யஹ, சத்யகாம                இரண்டாவது சிஷயர்

ஸௌர்யாயணி, கார்க்ய              மூன்றாவது சிஷ்யர்

கௌஸல்ய, ஆஸ்வாலாயன         நான்காவது சிஷ்யர்

பார்கவ, வைதர்பி                    ஐந்தாவது சிஷ்யர்

கபந்தீ, காத்யாயன்                   ஆறாவது சிஷ்யர்

ஹேதே – இவர்கள்

ப்ரஹ்ம பராஹா – ஈஸ்வரனை பரமாக கொண்டவர்கள் (கர்மயோகிகள்)

ப்ரஹ்ம நிஷ்டா  – ஈஸ்வரனை உபாஸனை செய்பவர்கள்

பரம் ப்ரஹ்ம அன்வேஷமாணா: – நிர்குண பிரம்மத்தை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

முதலிரண்டின் மூலமாக வேதாந்த உபதேசத்திற்கு தகுதி உடையவர்கள் என்று புரிந்து கொள்ளலாம்.  மூன்றாவதிலிருந்து அவர்களின் முமுக்ஷுத்வத்தை அறிந்து கொள்ளலாம்.

ஏஷ ஹ வை             – இவரே

தத் ஸர்வம்              – அனைத்தையும்

வக்ஷயதி                 – சொல்வார்

இதி                      – என்று கூறிக் கொண்டு

ஸமித் பாணி             – கைகளின் சமித்தை எடுத்துக் கொண்டு

பகவன் தம் பிப்பலாதம்  – பகவான் பிப்பலாத குருவை

உபஸன்னாஹ           – அணுகினார்கள்

ஸ்லோகம்02

தான்ஹ ஸ ரிஷிருவாச பூ4ய ஈவ தபஸா ப்3ரஹ்மசர்யேண ஶ்ரத்3த4யா

ஸம்வத்ஸரம் ஸம்வத்ஸ்யத2 யதா2காமம் ப்ரஶ்னாம் ப்ருச்ச2த 

    யதி2 விக்ஞாஸ்யாம: ஸர்வம் ஹ வோ வக்ஷயாம இதி || 2 ||

ஸஹ ரிஷி தான் உவாச – அந்த முனிவர் அவர்களிடம் கூறினார்

பூய ஏவ தபஸா –                இன்னும் தவத்துடனும் (சம, தம ஆகிய தகுதிகள் வளர)

பிரம்மச்சர்யேன  –               பிரம்மசர்ய விரதத்துடனும் ( குரு குல வாச நியமங்களை பின்பற்றுதல்)

ஶ்ரத்தயா –                      சிரத்தையுடனும்

ஸம்வத்ஸரம் –                     ஒரு வருடம்

ஸம்வத்ஸ்யத ­ –                உரிய முறையில் குருவிற்கு சேவை செய்து வாருங்கள்

குருவுக்கு அருகே சென்று பணிவிடை செய்யும்போதுதான் அவர் மீது சிரத்தை வளரும்.  இதனால் அவர் கூறும் வாக்கியங்கலின் சரியான அர்த்தத்தை புரிந்து கொள்வோம்.

யதாகாமம் ப்ரஶ்னான் ப்ருச்சத      உங்கள் விருப்பப்படி கேள்விகளை கேளுங்கள்.

யதி விஞாஸ்யாம –                  எங்களுக்கு தெரிந்தால்

ஸர்வம் ஹ வை வ்க்ஷ்யாம இதி   எல்லாவற்றையும் உங்களுக்கு சொல்கிறோம்.

இது குருவிடம் இருக்கும் பணிவை காட்டுகின்றது.  அவர் ஞானநிஷ்டர் என்பதும் தெரிகின்றது.

 

ஸ்லோகம்03

அத2கப3ந்தீ4 கத்யாயன உபேத்ய பப்ரச்ச2 |

ப4க3வன் குதே ஹ வ இமா: ப்ரஜா: ப்ரஜாயந்த இதி || 3 ||

அத – ஒரு வருடத்திற்கு பிறகு கபந்தீ காத்யாயன என்ற பெயருடைய சிஷயர்

உபேத்ய ப்ப்ரச்ச    அணுகி கேட்டார்

பகவன் குதே ஹ  பகவானே! யாரிடமிருந்து, எதிலிருந்து

இமாஹா ப்ரஜா:   இந்த உயிரினங்கள்

ப்ரஜாயந்த இதி    தோன்றியுள்ளன என்று கேட்டார்.

இது ஸ்ருஷ்டியைப் பற்றியதான கேள்வி. ஸ்ருஷ்டியைப் பற்றி இரண்டு காரணத்திற்காக பேசப்படுகிறது.  அவைகள் 1. பிரம்மத்தைப் பற்றி விளக்குவது, 2. வைராக்கியத்தை அடைவது.

ஸ்லோகம்04

தஸ்னௌ ஸ ஹோவாச ப்ரஜாகாமோ வை ப்ரஜாபதி:

        தபோ  தப்யத ஸ தபஸ்தப்த்வா ஸ மிது2னமுத்பாத3யதே |

ரயிம் ச ப்ரணம் சேத்யேதௌ மே ப3ஹுதா4: கரிஷ்யத இதி || 4 ||

 

தஸ்மை ஸ உவாச              கேள்வி கேட்ட சிஷ்யருக்கு குரு பதிலளிக்கிறார்.

ப்ரஜாபதி                          எல்லா உயிரினங்களின் ஸ்ருஷ்டிக்கு காரணமானவர்

ப்ரஜாகாம:                        உயிரினங்களை படைக்க விரும்பினார்.

ஸ தப அதப்யத               அவர் தவத்தை மேற்கொண்டார்

ஸ தப: தபத்வா               தவத்தை முடித்த பிறகு, ( எப்படிபட்ட ஸ்ருஷ்டியை உருவாக்கலாம் என்று திட்டமிட்டார்.

ஸ மிதுனமுத்பாதயதே        இருமைகள் உற்பத்தியானது.

ரயிம் ச ப்ராணம் ச உத்யஹ   ரயி(தனம், நீர்), பிராணன் என்ற இரண்டையும் தோற்றுவித்தார்.

ஏதௌ மே பஹூதா            இந்த இரண்டும் எனக்கு பலவிதமான

ப்ரஜா கரிஷ்யத இதி             உயிரினங்களை உருவாக்கி கொடுக்கும் என்று

ஸ்லோகம்05

ஆதி3த்யோ ஹ வை ப்ராணௌ ரயிரேவ சந்த்3ரமா ரயிர்வா ஏதத்

        ஸர்வம் யன்முர்தம் சாமூர்தம் தஸ்மான்முர்திரேவ ரயி: || 5 ||

ரயி தத்துவம் – இருமைகள் இரண்டு வகையாக இருக்கின்றது. அவைகள் ஒன்றுக்கொன்று எதிராக இருப்பவைகள் (இன்ப-துன்பம்0, ஒன்றையொன்று சார்ந்திருக்கும் ( குரு-சிஷ்யன், ராக-துவேஷம் – எங்கே ராகம் இருக்கின்றதோ அங்கேதான் துவேஷம் இருக்கும்).  இங்கே ரயி என்பது அனுபவிக்கப்படும் பொருள்,  பிராணன் என்பது அனுபவிப்பவர் இவையிரண்டும்தான் முதன் முதலில் தோன்றியது.  இவைகள் ஹிரண்யகர்ப்பனிடமிருந்து தோன்றின.  எனவே இவைகள் ஒன்றாகத்தான் இருந்திருக்கின்றன.  (உ-ம்) சாப்பிடுபவனும் பஞ்ச-பூதத்தினாலானவன், சாப்பிடப்படும் உணவும் பஞ்ச-பூதத்திலானவைகள். இதிலிருந்து இரண்டும் ஒன்றுதான் என்று புரிந்து கொள்ளலாம்.

ஆதித்ய ப்ராணௌ      சூரியனே பிராணன் ( சக்தி)

சந்த்3ரம ரயி ரேவ      சந்திரன் சூரியனிடமிருந்து சக்தியை பெற்று ஒளி வீசுகிறது.

ரயி வை ஏதத்          ரயி என்பது உலகிலுள்ள அனைத்தும்

மூர்த்தம், அமூர்த்தம்    உருவமுடையதாகவும், உருவமற்றதாகவும் இருப்பது

தஸ்மாத் மூர்த்தி ரயி    ஆகவே உருவத்துடன் இருப்பது எல்லாம் ரயி, உருவமற்றதாக இருப்பதெல்லாம் பிராணன்.

காரண பார்வையில் இரண்டும் ஒன்று,  காரிய பார்வையில் இரண்டும் வேறானது ரயி, பிராணன் இந்த வார்த்தைகள் விஷயம், விஷயி என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

ஸ்லோகம்06

அதா2தி3த்ய உத3யன்யத்ப்ராசீம் தி3ஶம் ப்ரவிஶதி தேன

        ப்ராச்யான் ப்ராணான் ர்அஶ்மிஷு ஸன்னித4த்தே |

யத்த3க்ஷிணாம் யத் ப்ரதீசீம் யது3தீ3சீம் யத3தோ4

        யத3ந்தரா திஶோ யத் ஸர்ம்ம் ப்ரகாஶயதி தேன ஸர்வான் || 6 ||

எல்லாவற்றையும் வேற்றுமை பார்வையோடு பார்க்கும் நிலையில்தான் நம்முடைய புத்தி செயல்பட்டு கொண்டிருக்கின்றது.  ஆகவே இந்த புத்தியை அபேத புத்தியுடன் செயல்படுமாறு செய்ய வேண்டும்.  ஸர்வாத்ம பாவஹ என்ற அறிவுடன் நோக்கும் போது இந்த அபேத புத்தி சென்று விடும்.

அத ஆதித்ய உதயன்         பிறகு சூரியன் உதித்தது

யத் ப்ரசிம் திஶம் ப்ரவிஶதி   கிழக்கு திசையை தன்னுடைய கிரணங்களால் வியாபிக்கிறார்.

தேன ப்ராச்யான் ப்ராணான்  அதனால் கிழக்கிலுள்ள ஜீவன்களை

ரஶ்மிஷு ஸன்னித்த்தே       தன்னுடைய கிரணங்களால் தன்மயமாக்குகின்றார்.

யத் தக்ஷிணாம்                தெற்கு திசையில் ஒளிவீசும் போது

யத் ப்ரதீசீம்                     மேற்கு திசையில் ஒளிவீசும் போது

யத் உதீசீம்                   வடக்கு திசையில் ஒளிவீசும் போது

யத் அதஹ                     கீழே ஒளிவீசும் போது

யத் ஊர்த்வம்                   மேலே ஒளிவீசும் போது

யத் அந்தரா ச                  உட்பகுதிகளில் ஒளிவீசும் போது

ஸர்வம் ப்ரகாஶயதி           அனைத்தையும் ஒளிர செய்கிறது

தேன – அதனால்

ஸர்வான் ப்ராணன் ரஶ்மிஷு ஸன்னிதத்தே –  எல்லா ஜீவன்களையும் தன்மயமாக்குகிறார்.

ஸ்லோகம்07

ஸ ஏஷ வைஶ்வானரோ விஶ்வரூப: ப்ராணோ க்3னிரூத3யதே |

ததே3தத்3த3சாÅப்4யுக்தம் || 7 ||

ஸஹ ஏவ வைஶ்வானரஹ –  ஸர்வ ஜீவாத்மாவான இந்த ப்ராணன் ஆதித்யனாக இருக்கிறார். வைசுவானரன் என்றால் அனைத்து உயிரினங்களாக உள்ளவன், அனைத்து உயிர்களும் இயங்குவதற்கு ஆற்றலை அளிப்பதால் சூரியன் அனைத்து உயிர்களின் வடிவமாக போற்றப்படுகிறார்.

விஶ்வரூபஹ  – எல்லாமுமாக இருக்கின்றார் –  பிரபஞ்சமாக இருக்கின்றார்.

ப்ராணோ அக்னி உதயதே – அனைத்தையும் உட்கொள்கின்ற நெருப்பாக இருக்கின்றார்.

தத் ஏதத் ரிசா அப்யுக்தம்-  அது இவ்வாறு ரிக் வேத்தில் கூறப்பட்டுள்ளது

ஸ்லோகம்08

விஶ்வரூபம் ஹரிணம் ஜாதவேத3ஸம்

பராயணம் ஜ்யோதிரேகம் தபந்தம் |

ஸஹஸ்ர ரஸ்மி: ஶததா4 வர்தமான:

ப்ராண: ப்ரஜானாமுத3யத3யத்யேஶ ஸூர்ய: || 8 ||

விஶ்வரூபம்         அனைத்துமாக இருப்பவர்

ஹரிணம்            ஒளிக்கதிர்கள் நிறைந்தவர், எல்லாவற்றையும் தன்னுள்ளே எடுத்துக் கொள்பவர்.

ஜாதவேதஸம்        அனைத்தையும் அறிந்தவர்

பராயணம்           ஜீவர்களுக்கு ஆதாரமாக இருக்கிறார்.

ஜ்யோதிஹி         ஒளிமயமானவர்

ஏகம்                ஒருவரே

தபந்தம்               வெப்பத்தை கொடுத்து பாவங்களை போக்குகிறார்.

சூரியனை இவ்வாறாக மகான்கள் அறிகிறார்கள்.

ஸஹஸ்ர ரஶ்மி ஶததா வர்தமானஹ –   ஆயிரக்கணக்கான ஒளிக்கதிர்களுடன் நூற்றுக்கணக்கான வழிகளில் செயல்படுகிறார்.

ப்ராணா: ப்ரஜானாம்     எல்லா ஜீவராசிகளுக்கும் உயிராக இருக்கின்றவர்.

ஏஷ ஸூர்யஹ உதயதி  இப்படிபட்ட சூரியன் உதிக்கின்றார்.

ஸ்லோகம்09

ஸம்வத்ஸரோ வை ப்ரஜாபதிதஸ்யாயனே தக்ஷிணம் சோத்தரம் ச |

தத்3யே ஹ வை ததி3ஷ்டாபூர்தே க்ருதமித்யுபஸ்தே |

தே சாந்த்3ரமஸமேவ லோகமபி4ஜயந்தே |

த ஏவ புனராவர்தந்தே |

தஸ்மாதே3த ரிஷய: ப்ரஜாகாம தக்ஷிணம் ப்ரதிபத்3யந்தே |

ஏஷ ஹ வை ரயிர்ய: பித்ருயாண: || 9 ||

வேதம் உரைக்கும் கர்மத்தை முறையாக செய்து காலமானவர்கள் கிருஷ்ண கதி வழியாக சந்திரலோகம் செல்கிறார்கள்.  உபாஸனை செய்து காலமானவர்கள் சுக்லகதி வழியாக சூரியலோகம் (பிரம்ம லோகம்) செல்கிறார்கள்.

ஹிரண்யகர்ப்பன்தான் கால தத்துவமாக இருக்கின்றார்.  காலமே பிரஜாபதி.  அந்தக் காலத்திற்கு இரண்டு வழிகள் இருக்கின்றது.  அவைகள் தக்ஷிணாயணம், உத்தராயணம் என்பதாகும்.  மனிதர்களுக்குள் யார் இந்த விதத்தில் ஸ்ருதியில் சொல்லப்பட்ட கர்மங்களை செய்கிறார்களோ அவர்கள் கிருஷ்ணகதி வழியாக சந்திரலோகம் செல்கிறார்கள்.

இஷ்டம்:     அக்னிஹோத்ரம், தபம் (விரதத்தை முக்கியமாக கருதப்படுகிறது ), மற்றவர்களை சொல்லால் துன்புறுத்தாது இருத்தல், சத்யம் பேசுதல், பிராணிகளை பாதுகாத்தல், விருந்தினர்களை அன்புடன் உபசரித்தல், பறவைகளுக்கும், சிற்றுயிர்களுக்கும்  உணவளித்தல்

பூர்த்தம்     சமுதாய சேவை (ஏரி, குளம், கிணறு வெட்டுதல் ), கோயில்களை கட்டி பராமரித்தல், புதுப்பித்தல், அன்னதானம், தோட்டங்களை வளர்த்தல்

தத்தம்       பகிர்ந்து கொள்ளுதல், தானம் செய்தல், அபயம் அளித்தல் இது மிகப்பெரிய தானம், சரணடைந்தவர்களை பாதுகாத்தல், அஹிம்சையை கடைப்பிடித்தல், யாகம் செய்து கொடுத்தவர்களுக்கு வெகுமதி அளிப்பது

இந்த மூன்றையும் நன்றாகவும், சரியாகவும் கடைப்பிடித்து காலமானவர்கள் சந்திரலோகம் சென்று மீண்டும் பூலோகத்தில் பிறப்பார்கள்.  ஆகவே கர்மத்தில் நாட்டமுடையவர்கள், சந்ததியை நாடுபவர்கள் இதைக் கடைப்பிடிக்கிறார்கள்.

ஸ்லோகம்10

அதோ2த்தரேண தபஸா ப்ரஹ்மசர்யேண ஶ்ரத்3த4யா

        வித்3யயாத்மானமன்விஷ்யாதி3த்யமப்4ஜயந்தே |

ஏத்த்3வை ப்ராணானாமாயதனமேதத்3ம்ருதமப4யமேதத்

        பராயணமேதஸ்மான்ன புனராவர்த்தந்தே

இத்யேஷு நிரோத3ஸ்த தே3ஷ ஶ்லோக: || 10 ||

சிலர் உத்தராயனத்தின் வழியாக பிரம்மலோகத்திற்கு சென்று சுகத்தை அடைகிறார்கள்  வைராக்கியம் அதிகம் உள்ளவர்கள் அங்கிருந்தே கிரமமுக்தி அடையலாம்.  பிரம்மலோகம் செல்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இதில் விளக்கப்படுகின்றது.

அத                                மேலும்

தபஸா                            தவத்தால், (உடலைக் கொண்டு செய்யும் தவம்)

ப்ரஹ்மசர்யேண                  பிரம்மசர்யத்தை கடைப்பிடித்தால்,

ஶ்ரத்தயா                         செயல்பாட்டுடன் கூடிய நம்பிக்கையால்

வித்யயா                          தியானத்தால், தன்னையே உபாஸிக்கும் தேவதையாக பாவித்து செய்கின்ற தியானத்தை செய்தால்

ஆத்மானம் அன்விஷ்ய          ஆதித்ய பகவானை நாடி

ஆதித்யம் அபிஜாயந்தே         ஆதித்யனையே அடைகிறார்கள், பிரம்மலோகத்தை அடைகிறார்கள்.  உத்தராயணம் மார்க்கத்தின் வழியாக இவ்வுலகத்தை அடைகிறார்கள்

ஏத த் வை ப்ராணானாம் ஆயதனம் – இதுவே ஆற்றல்களின் உறைவிடம்

அம்ருதம், அபயம், பராயணம் – அழிவற்றது, பயமற்றது, லட்சியம்

ஏதஸ்மாத்         இந்த லோகத்திலிருந்து

புனராவர்த்தந்தே   மீண்டும் திரும்பி வருவதில்லை, பிறப்பதில்லை

இதி ஏஷ நிரோத   இந்தப் பாதையிக்கு உபாஸனை செய்யாத கர்மிகளால் செல்ல முடியாது

த்தேஷு ஶ்லோகஹ –  இதுபற்றி கீழ்வரும் ஸ்லோகமும் உள்ளது.

ஸ்லோகம்11

பஞ்சபாத3ம் பிதரம் த்3வாத3ஶாக்ருதிம் தி3வ ஆஹு: பரெ அர்தே4 புரீஷிணம் |

அதே2மே அன்ய உ பரெ விசக்ஷணம் ஸப்தசக்ரே ஷட3அ ஆஹுர்ர்பிதமிதி || 11 ||

இதில் காலமே சூரியனாக வர்ணிக்கப்படுகின்றது.

பஞ்சபாத3ம்  – ஐந்து பாதங்களை உடையது.  இங்கு பாதங்கள் என்பது பருவங்களை குறிக்கின்றது.  அவைகள் வசந்தம், கோடை, மழை, இலையுதிர், குளிர் ( முன்பனிக்காலம், பின்பனிக்காலம்).

பிதரம்  – தந்தையாக இருக்கிறார் ( வளர்வதற்கு காரணமாக இருக்கின்றார்)

த்3வாத3ஶ ஆக்ருதிம்          பன்னிரண்டு உருவங்களை உடையவர். இது 12 மாதங்களை குறிக்கின்றது

அர்தே4 பரம் தி3வே ஆஹு   மேற்பகுதியிலிருந்து மழை பொழிபவன் என்று சொல்கிறார்கள்.

அத2 விசக்ஷணம் ஸப்தசக்ரே மேலும் ஏழு சக்கரங்களுடன் ( இது ஏழு வர்ணங்களை கொண்ட வானவில்லாக கூறப்படுகிறது), ஆறு ஆரங்களுடன் (ஆறு பருவங்களுக்கு ஒப்பிடப்படுகின்றது) கூடிய தேரில் இருப்பவன்

இதி அன்யே இமே பரே         என்று வேறு சிலர் இவ்வாறு மேன்மையாக

ஆஹு:                            சொல்கிறார்கள்.  

ஸ்லோகம்12

மாஸோ வை ப்ரஜாபதிஸ்தஸ்ய க்ருஷ்ணபக்ஷ ஏவ ரயி: ஶுக்ல: ப்ரணஸ்தஸ்மதேத ரிஷய: ஶுக்ல இஷ்டம் குர்வந்தீதர இதரஸ்மின் || 12 ||

மாதமும் பிரஜாபதி தத்துவம், அதில் கிருஷ்ண பக்ஷமானது (தேய்பிறை) ரயி தத்துவம் என்றும், சுக்ல பக்ஷமானது (வளர்பிறை) பிராண தத்துவம் என்றும் கூறப்படுகிறது. ஆகவே சுக்லபக்ஷத்தில் யாகங்களை மேற்கொள்கிறார்கள்

ஸ்லோகம்13

அஹோராத்ரோ வை ப்ரஜாபதிஸ்தஸ்யாஹரேவ ப்ராணோ ராத்ரிரேவ ரயி: ப்ராணம் வா ஏதே ப்ரஸ்கந்தந்தி யே தி3வா ரத்யா ஸம்யுஜ்யந்தே ப்ரஹ்மசர்யமேவ தத்3யத்3ராத்ரௌ ரத்யா ஸம்யுஜ்யந்தே || 13 ||

இரவும் பகலுமே படைப்புக் கடவுள் (பிரஜாபதி). இதில் பகலே பிராணன், இரவே ஜடம் (ரயி). யார் பகலில் உடலுறவில் ஈடுபடுகிறார்களோ அவர்கள் பிராணனை வீணாக்குகிறார்கள். இரவில் உடலுறவு கொள்வது பிரம்மச்சர்யமே..

ஸ்லோகம்14

அன்னம் வை ப்ரஜாபதிஸ்த தோ ஹ வை

  தத்3ரேதஸ்தஸ்மாதி3மா: ப்ரஜா: ப்ரஜாயந்த இதி || 14 ||

பிரஜாபதியே அன்னமாக இருக்கிறார்.  உணவிலிருந்தே வீர்யமானது உண்டாகிறது, அதிலிருந்தே உயிரினங்கள் தோன்றுகின்றன

ஸ்லோகம்15

தத்3யே ஹ வை தத் ப்ரஜாபதிவ்ரஜம் சரந்தி தே மிது2னமுத்பாத3யந்தே |

தேஷாமேவைஷ ப்ரஹ்மலோகோ யேஷாம் தபோ ப்3ரஹ்மசர்யயம்

        யேஷு ஸத்யம் ப்ரதிஷ்டிதம் || 15 ||

இல்லறத்தில் இருப்பவர்கள் படைப்புக் கடவுள் உருவாக்கிய நியதியை கடைப்பிடித்து வாழ்ந்தால் அவர்களுக்கு மகன், மகள் பிறப்பார்கள். தமக்கு வேண்டிய சுகங்களை பெறுவார்கள், இறந்த பிறகு சொர்க்கலோகத்தை அடைவார்கள்

ஸ்லோகம்16

தேஷாமஸௌ விரஜோ ப்ரஹ்மலோகோ

        ந யேஷு ஜிஹ்மமந்ருதம் ந மாய சேதி || 16 ||

இவ்வாறு ஒழுக்கநெறியுடன் வாழ்பவர்களுக்கு இறந்த பிறகு சுவர்க்க லோகம் கிடைக்கிறது.  குறைகாண்கின்ற புத்தியையுடையவர்கள், .ஏமாற்றுபவர்கள், பொய் பேசுபவர்கள், வஞ்சனை உடையவர்கள் இவர்களுக்கெல்லாம் இந்த லோகத்தை அடைய முடியாது.  நற்குணமும், கர்மங்களை ஒழுங்கான முறைப்படி செய்பவர்களால்தான் சுவர்க்கத்தை அடைய முடியும்.

—-oo000oo—-

அத்தியாயம்-02

பிராண உபாஸனையின் மகிமை

முகவுரை
அபரா வித்யா = கர்மம் + உபாஸனா
பரா வித்யா   = அக்ஷரத்தை, பிரம்மத்தை அறிய உதவும் வித்யா

ஹிரண்யகர்ப்ப உபாஸனம் விளக்கப்பட்டிருக்கிறது.  சூட்சும சரீரங்களுக்கு ஆதாரமாக இருப்பவர் ஹிரண்யகர்ப்பர்.  பிராண உபாஸனையின் பெருமையும் இதில் சொல்லப்படுகிறது

ஸ்லோகம்01
அத2 ஹைனம் பா4ர்க4வோ வைதா3ர்பி4: பப்ரச்ச2 |
ப4கவன் கத்யேவ தே3வா: ப்ரஜாம் விதா4ரயந்தே ?
கதர ஏதத்ப்ரகாஶயந்தே ?
க: புனரேஷாம் வரிஷ்ட இதி || 1 ||
அதஹ – அடுத்ததாக
விதர்ப்ப நாட்டைச் சேர்ந்த பார்கவன் என்ற சிஷ்யர் பிப்பலாத முனிவரிடம் கேள்வி கேட்டார். பகவானே! ஒருவனுடைய சரீரத்தை எத்தனை தத்துவங்கள் இயங்கச் செய்கிறது

கதரஹ – அந்த தத்துவங்களில்

ஏதத் –    யார் யார் தன்னுடைய

ப்ரகாஶயந்தே – பெருமையை கூறிக் கொள்கின்றது, வெளிப்படுத்துகின்றன? சக்தியை இயங்க செய்கின்றன?

கஹ புனஹ ஏஷாம் வரிஷ்ட – இவைகளில் எது முக்கியமான தத்துவம்

  • 24 தத்துவங்கள் ( 5-ஞானேந்திரியங்கள், 5 கர்மேந்திரியங்கள், 5-பிராணன்கள், 4-அந்தக்கரணங்கள் (மனம், புத்தி, சித்தம், அகங்காரம்), 5-ஸ்தூல பூதங்கள்) இவைகள்தாம் இந்த சரீரம் இயங்குவதற்கு ஆதாரமாக இருக்கின்றன.
  • எல்லா தத்துவங்களும் தங்களுடைய பெருமைகளைப் பேசிக் கொண்டு இருக்கின்றன.
  • இவைகளுள் பிராணன்தான் மிக முக்கியமான தத்துவம்


ஸ்லோகம்02
தஸ்மை ஸ ஹோவாச ஆகாஶோ ஹ வா ஏஷ தே3வோ
        வாயுரக்னிராப: ப்ருதி2வி வாங்மனஶ்சக்ஷு: ஶ்ரோத்ரம் ச |
தே ப்ரகாஶ்யாபி4வத3ந்தி வயமேத த்3வாணமவஷ்டப்4ய விதா4ராம: || 2 ||

குருவானவர் அந்த சிஷ்யனுக்கு பதிலளிக்க தொடங்கினர்.  ஆகாசம், வாயு, தண்ணீர், அக்னி, ப்ருத்வி ஆகிய பஞ்ச பூதங்களும் அபிமான தேவதைகளாக குறிப்பிடப்-படுகின்றது.  ஐந்து கர்மேந்திரியங்களின் அபிமான தேவதைகள் தங்களுடைய முக்கியத்துவத்தை பெருமையுடன் கூறிக் கொள்கின்றன. நான்கு வகையான அந்தக்கரணஙகளும் தங்கள் பெருமையைக் கூறிக்கொள்கின்றன. நாங்கள்தான் இந்த உடலை ஒருங்கிணைந்து தாங்குகின்றோம் என்று பெருமைக் கொள்கின்றன.

ஸ்லோகம்03
தான் வரிஷ்ட: ப்ராண உவாச |
மா மோஹமாபத்3யத2 அஹமேவைதத்பஞ்சதா4த்மானம்
        ப்ரவிப4ஜ்யைதத்3 பாணமவஷ்டப்4ய
விதா4ரயாமீதிதேÅஶ்ரத்3த4தா4னா ப4பூ4வு: || 3 ||
முக்கியமான பிராண தத்துவம் மற்றவைகளை பார்த்து நீங்கள் குழப்பத்தில் ஆழ்ந்து போகாதீர்கள்.  நானே என்னை ஐந்தாக பிரித்துக் கொண்டு இந்த உடலை பாதுகாத்துக் கொண்டிருக்கின்றேன் என்று கூறியது.  இதைக் கேட்ட மற்றவைகள் பிராணனின் பேச்சை நம்பவில்லை.

ஸ்லோகம்04

ஸோÅபி4மானாதூ3ர்த்3வமுத்க்ரமத் இவ தஸ்மினுத்க்ராமத்யதே2தரே ஸர்வ

ஏவோத்க்ராமந்தே தஸ்மின்ஶ்ச ப்ரதிஷ்ட2மானே ஸர்வம் ஏவ ப்ரதிஷ்ட2ந்தே |

தத்3யதா2 மக்ஷிகா மது4கர ராஜானமுத்ரமந்தம் ஸர்வா ஏவோத்க்ரமந்தே

தஸ்மின்ஶ்ச ப்ரதிஷ்ட2மானே ஸர்வா ஏவ ப்ரதிஷ்ட2ந்த ஏவம் வாங்மனஶ்சக்ஷு:

ஶ்ரோத்ரம் ச தே ப்ரதீதா: ப்ராணம் ஸ்துன்வந்தி || 4 ||

பிராணன் தன் முக்கியத்துவத்தை காட்டுவதற்கு உடலை விட்டு வெளியேறுவது போல காட்டியது.  அது வெளியேறியதும் மற்ற புலன்கள்  அனைத்தும் செயல் இழந்துவிட்டன.  அது நிலைபெற்றதும் அனைத்தும் செயல்படத் துவங்கின.  எவ்வாறு ராணீ தேனி கூட்டை விட்டு வெளியேறினால் மற்ற தேனீக்கள் அனைத்தும் வெளியேறுகின்றனவோ, அது அமர்ந்தால் எப்படி அவைகளும் வந்தமர்கின்றனவோ அவ்வாறு இவை நிகழ்ந்தது.  பிராணனின் பெருமையை உணர்ந்த மற்ற தத்துவங்கள் அதை துதித்தன.

ஸ்லோகம்05

ஏஷோÅக்னிஸ்தபத்யேஶ ஸூர்ய ஏஷ பர்ஜன்யோ மக4வானேஷ வாயு: |

ஏஷ ப்ருதி3வீரயைர்தே3வ: ஸத3ஸச்சாம்ருதம் ச யத் || 5 ||

பிராணனின் பெருமையை புகழ்வதால் நாம் அடையும் நற்பண்புகளானவை,

  • எல்லா இந்திரியங்களும் நமக்கே நல்லதாகவும், கெட்டதாகவும் செயல்படுகின்றன. ஆனால் பிராணன் மட்டும் எப்பொழுதும் நல்லதாகவே செயல்படுகின்றது.
  • தவறான வார்த்தையை பேசுபவர்களை தவறாக நினைக்கிறோம். இவ்வாறு மற்ற இந்திரியங்கள்தான் தவறாக நடந்து கொள்கின்றன. பிராணன் என்றும் சுத்தமாகத்தான் இருக்கும். எனவே நாம் மனிதர்களை பிராணனாக பார்க்க வேண்டும். இந்திரியங்களின் செயல்களை நிராகரித்து விட வேண்டும்.
  • பிராணனால் இயக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அனைவரும் நல்லவர்களே, புலன்களின் தவறான செயல்களை வைத்து கோபப்படாமல், பரிதாபப்பட வேண்டும்.
  • பிராண ஸ்துதியால் ஸர்வாத்ம பாவம் நம்மிடத்தே ஏற்படும்.

இந்த பிராணனே நெருப்பாக இருந்துக்கொண்டு வெப்பத்தை கொடுக்கின்றது.  இதுவே சூரியனாகவும், மழையை கொடுக்கின்ற மேகமாகவும், வாயுவாகவும், இந்திரனாகவும், நிலமாகவும், சந்திரனாகவும் இருக்கின்றது.  இதுவே உருவமுடையதாகவும், உருவமற்றதாகவும் இருக்கின்றது, அதாவது கண்ணுக்கு தெரிந்தும், தெரியாமலும் இருக்கின்றது. இந்த பிராணனை ஸ்துதி செய்வதன் மூலம் கிரமமுக்தி அடையலாம்.

ஸ்லோகம்06

அரா இவ ரத2னாபௌ4 ப்ராணே ஸர்வம் ப்ரதிஷ்ட2தம் |

ரிசோ யஜூம்ஷி ஸாமானி யக்ஞ: க்ஷத்ரம் ப்ரஹ்ம ச || 6 ||

பிராணனிடத்தில் அனைத்தும் சேர்ந்திருக்கின்றது.  எப்படி தேர் சக்கரத்தின் மையப்பகுதியில் எல்லா ஆரங்களும் சேர்க்கப்பட்டிருக்கின்றதோ அதுபோல நான்கு வேதங்கள், எல்லா கர்மங்கள், யாகங்கள், வீரம், அறிவு போன்றவைகள் பிராணனில் நிலைபெற்றுள்ளன.

ஸ்லோகம்07

ப்ரஜாபதிஶ்சரஸி க3ர்பே4 த்வமேவ ப்ரதிஜாயஸே |

துப்4யம் ப்ராண ப்ரஜாஸ்த்விமா ப3லிம் ஹரந்தி ய:

ப்ராணௌ: ப்ரதிதிஷ்ட2ஸி || 7 ||

பிராணனே! கருவின் உயிராக இயங்குவதும் நீயே, பெற்றோரின் பிரதிபிம்பமாக குழந்தை வடிவில் பிறப்பதும் நீயே, உங்களுக்கு எல்லா புலன்களும் தாங்கள் கிரகிக்கும் விஷயங்களை உங்களுக்கே ஆஹுதிகளாக கொடுக்கின்றன. புலன்களில் நிலைபெற்றுள்ளதும் நீயே.

ஸ்லோகம்08

தேவானாமஸி வஹ்னிதம: பித்ரூணாம் ப்ரத2மா ஸ்வதா4 |

ரிஷீணாம் சரிதம் ஸத்யமத2ர்வாங்கி3ரஸாமஸி || 8 ||

பிராணனே! தேவர்களுக்குள் அக்னி தேவனாக இருக்கிறீர்கள். பித்ருக்களுக்கு கொடுக்கின்ற முதல் உணவாக இருக்கின்றீர்கள். அதர்வ, அங்கிரஸ முனிவர்கள் பின்பற்றும் சத்யமாக இருக்கின்றீர்கள்.

ஸ்லோகம்09

இந்த்3ரஸ்த்வம் ப்ராண தேஜஸா ருத்ரோ ஸிÅபரிரக்ஷிதா |

த்வம~ண்திரிக்ஷே சரஸி ஸூர்யஸ்த்வம் ஜ்யோதிஷாம் பதி: || 9 ||

நீங்கள் அனைத்துக்கும் தலைவனாக இருக்கின்றீர்கள், அனைத்தையும் அழிக்கும் சக்தியில் ருத்ரனாக இருக்கின்றீர்கள், அனைத்தையும் காப்பாற்றுபவராகவும் இருக்கின்றீர்கள், ஆகாயத்தில் உலா வருகின்ற எல்லா ஜோதிகளுக்கும் தலைவனாக இருக்கும் சூரியதேவனாக இருக்கின்றீர்கள்.

ஸ்லோகம்10

யதா3 த்வமபி4வர்ஶஸ்யதே2மா: ப்ராண தே ப்ரஜா: |

ஆனந்தரூபாஸ்திஷ்ட2ந்தி காமாயான்னம் ப4விஷ்யதீதி || 10 ||

எல்லா உயிரினங்களின் மகிழ்ச்சிக்கும் காரணமாக இருக்கின்றீர்கள்.  எப்பொழுது மழையைக் கொடுக்கின்றீர்களோ அப்போதெல்லாம் உயிரினங்கள் அனைத்தும் வேண்டிய அளவு உணவு கிடைக்கும் என்று ஆனந்தமாக இருக்கின்றன.

ஸ்லோகம்11
வ்ராத்யஸ்த்வம் ப்ராணைகர்ஷிரத்தா விஶ்வஸ்ய ஸத்பதி: |
வயமாத்3யஸ்ய தா3தார: பிதா த்வம் மாதரிஶ்வன: || 11 ||

பிராணனே!  நீங்கள் சாஸ்திர ஸம்ஸ்காரமற்றவன். எப்பொழுதும் தூய்மையோடு இருக்கும் உங்களுக்கு தூய்மைபடுத்த வேண்டிய அவசியமில்லை. அதர்வண வேதத்தை சார்ந்தவர்கள் பயன்படுத்தும் அக்னியாக இருந்துகொண்டு ஆஹுதிப் பொருட்களை உண்பவராக இருக்கின்றீர்கள். உலகத்துக்கே இருப்பைக் கொடுக்கின்றீர்கள்.  நாங்கள் உங்களுக்கு உணவுகளை கொடுக்கின்றோம்.  நீங்கள் ஆகாயத்தில் சஞ்சரிப்பவர், எங்களுக்கு தந்தையாக இருக்கின்றீர்கள்.

ஸ்லோகம்12
யா தே தனூர்வாசி ப்ரதிஷ்டி2தா யா ஶ்ரோத்ரே யா ச சக்ஷஷி |
யா ச மனஸி ஸந்ததா ஶிவாம் தாம் குரு மோத்க்ரமீ: || 12 ||

எங்களுடைய வாக்கில் அபான ரூபமாகவும், காதில் வியான ரூபமாகவும், கண்களில் பிராண ரூபமாகவும், மனதில் சமான ரூபமாகவும் இருந்து கொண்டிருக்கின்றீர்கள்.  இவைகள் அனைத்தும் அமைதியாகவும், நன்றாக வேலை செய்து கொண்டிருக்கட்டும், உடலை விட்டு வெளியே செல்லாமல் இருக்கட்டும்.

ஸ்லோகம்13
ப்ராணஸ்யேத3ம் வஶே ஸர்வம் த்ரிதி3வே யத் ப்ரதிஷ்டி2தம் |
மாதேவ புத்ரான் ரக்ஷஸ்வ ஶ்ரீஶ்ச ப்ரக்ஞாம் விதே4ஹி ந இதி || 13 ||

மூன்று உலகங்களிலும் எவையெல்லாம் உள்ளனவோ அவைகளனைத்தும் பிராணனின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. ஒரு தாய் பிள்ளைகளை காப்பது போல எங்களை காப்பாற்றுவாயாக! செல்வமும், தெளிவான புத்தியையும் எங்களுக்கு கொடுத்தருள வேண்டும்.

—-oo000oo—-

அத்தியாயம்-03

பிராண சக்தியின் செயல்கள்

முகவுரை
இந்த உலகத்தில் அனுபவிக்கும் அனைத்தும் நிலையானதல்ல என்ற அறிவும், மித்யா என்ற அறிவும் நமக்கு வரவேண்டும்.

 

ஸ்லோகம்01
அத2 ஹைனம் கௌஸல்யஶ்சாஶ்சலாயன: பப்ரச்ச2 |
ப4க3வன் குத ஏஷ ப்ராணோ ஜாயதே கத2மாயத்யஸ்மின் ஶரீரே?
ஆத்மானம் வா ப்ரவிப4ஜ்ய கத2ம் ப்ரதிஷ்டதே?
கேனோத்க்ரமதே ?
கத2ம் பாஹ்யமபி4த4த்தே?
கத2ம் அத்4யாத்ம்மிதி || 1 ||

கௌசல்யன் என்ற அஶ்வலர் என்பவர் பிப்பலாத முனிவரிடம் கீழ்கண்ட கேள்விகள் கேட்டார்:

  1. பகவானே! எங்கிருந்து பிராணன் தோன்றியது? எந்த உபாதான, நிமித்த காரணத்தினால் பிராணன் உருவானது?
  2. எப்படி இந்தப் பிராணன் வியஷ்டியாக உடலில் புகுந்துள்ளது?
  3. எவ்விதம் பிராணன் ஐந்தாக பிரிந்து உடலை பாதுகாக்கிறது?
  4. எதன் வழியாக, எதற்காக இது உடலிலிருந்து வெளியேறுகிறது? என்ன காரணத்தினால் உடலிலிருந்து வெளியேறுகிறது? ஐந்துவித பிராணன்களில் எந்த பிராணன் வெளியேறுகிறது
  5. ஸமஷ்டி பிராணன் வெளி உலகத்தை எப்படி காப்பாற்றுகிறது
  6. வியஷ்டி பிராணன் உடலை எப்படி காப்பாற்றுகிறது? தாங்குகின்றது?

ஸ்லோகம்02

தஸ்மை ஸ கோ3வாசாதிப்ரஶ்னான் ப்ருச்ச2ஸி

        ப்ரஹ்மிஷ்டோÅஸீதி தஸ்மாத்தேÅஹம் ப்3ரவீமி ||| ||

நீ சூட்சுமமான கேள்விகளைக் கேட்டிருக்கிறாய். உனக்கு தகுதி இருப்பதால் நான் பதிலளிக்கிறேன்.
ப்ரஹ்மிஷ்டஹ– சகுண பிரம்ம நிஷ்டையில் நீ இருப்பதால் கர்மயோக உபாஸனையால் நீ தகுதியுடையவனாக இருக்கின்றாய்.

 

ஸ்லோகம்03

ஆத்மன ஏஷ ப்ராணோ ஜாயதே |

யதை2ஷா புருஷே சா2யைதஸ்மின் ஏததா3ததம் மனோக்ருதேன || 3 ||

ஆத்மாவிடமிருந்து இந்தப் பிராணன் தோன்றியுள்ளது.  இதற்கு ஆத்மாவே உபாதான காரணமாகவும், நிமித்த காரணமாகவும் இருக்கிறது.  மனிதனும் அவனது நிழலும் போல ஆத்மாவும் பிராணனும் இருக்கிறது.

பொதுவாக ஒன்றிலிருந்து உருவாகும் அனைத்திற்கும் ஒரே இருப்புத்தான் இருக்கும்.  ஆத்மா-பிராண என்ற சம்பந்தத்தில் ஆத்மாவானது சத்தியமென்றும், பிராணன் மித்யா என்றும் அறிந்து கொள்ள வேண்டும்,  ஆத்மா விவர்த்தக் காரணமாக இருந்துகொண்டு எந்த மாற்றமும் அடையாமல் அனைத்தையும் தோற்றுவித்திருக்கிறது.

பிராணன் இந்த உடலில் வருவதற்கு காரணம் மனமே. மனம் எண்ணங்களின் (சங்கல்பங்கள்) தொகுதியாக கருதப்படுகிறது.  அதுவே ஆசையாக உருவாகின்றது. சங்கல்பம் என்பது ஒன்றை அடைவதனால் வரும் பலனை திரும்ப திரும்ப நினைத்தல்.  ஆசையானது அதை அடைய செயலில் ஈடுபடுத்துகின்றது. கர்ம பலனால், பாவ-புண்ணியங்களின் வசத்தால் பிராணனானது உடலில் புகுந்துள்ளது.

ஸ்லோகம்04
யதா2 ஸம்ராடே3வ வினியுங்க்தே |
ஏதான் க்3ராமானேதான் க்3ராமான் அதி4தி3ஷ்டஸ்வேதி
ஏவமேவைஷ ப்ராண இதரான் ப்ராணான் ப்ருத2க்ப்ருத2கே3வ
ஸன்னித4த்தே || 4 ||

எப்படி அரசன் அதிகாரிகளை நியமித்து விட்டு, அவர்களிடம் இந்தக் கிராமங்களை பாதுகாப்பீர்களாக என்று ஆணையிடுவது போல இந்தப் பிராணன் மற்ற பிராணன்களை தனித்தனியாக நியமிக்கின்றது.

ஸ்லோகம்05
பாயூபஸ்தே3 பானம் சக்ஷு: ஶ்ரோத்ரே முக2னாஸிகாப்4யாம்
        ப்ராண: ஸ்வயம் ப்ரதிஷ்டதே மத்4யே து ஸமான: |
ஏஷ ஹ்யேதத்3து4தமன்னம் ஸமம் நயதி தஸ்மாதே3தா:

ஸப்தார்விஷோ ப4வந்தி || 5 ||

அபானன் பிராணனானது கழிவுகளை வெளியேற்றுகிறது.  கண், காது, வாய், நாசி, மூச்சுவிடுதல் போன்ற முக்கிய செயல்களை பிராணனே அந்தந்த இடங்களில் இருந்து கொண்டு செயல்படுகிறது.  சமானன் உடலின் நடுபகுதியில் இருந்துகொண்டு உணவை செரிக்கும் செயலை செய்வதால் அவர் இருப்பிடம் நாபியாகும். இதுவே உடலில் பல பகுதிகளுக்கு தேவையான அளவு சக்திகளை கொண்டு செல்கிறது.  பிராணனிலிருந்து ஏழு அக்னி ஜுவாலைகள் உண்டாகின்றன.

இந்த ஏழு ஜுவாலைகள் இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு மூக்குத் துவாரங்கள் ஒரு வாய் ஆகும்.  வயிற்றில் உள்ள அக்னியிலிருந்து எழும்புகின்ற ஜுவாலைகள் இவைகளாகும்.  இந்த உறுப்புக்கள் தாங்கள் இயங்குவதற்கான ஆற்றலை வயிற்றிலுள்ள அக்னியிலிருந்து பெறுகின்றன. உணவு என்ற ஆஹுதிப் பொருட்களை அர்ப்பிக்காவிட்டால் உடலின் உறுப்புக்கள் செயல்பட முடியாது என்பது இங்கே உணர்த்தப்படுகின்றது.

ஸ்லோகம்06
இதி3 ஹ்யேஷ ஆத்மா |
அத்ரைததே3கஶதம் நாடீ3னாம் தாஸாம் ஶதம் ஶதமேகைகஸ்யாம்
த்வாஸப்ததிர்த்3வாஸப்ததி: ப்ரதிஶாகா2னடீஸஹஸ்ராணி ப3வந்த்யாஸு வ்யானஶ்சரதி3 || 6 ||

இதில் வியானன் என்ற பிராணனின் இருப்பிடத்தையும், செயல்பாட்டையும் சொல்லப்பட்டிருக்கிறது.  உடலில் இருக்கின்ற நாடிகள்தான் அது இருக்குமிடம். இந்த நாடிகள் உடலினுள்ளே உள்ள இதயத்திலிருந்து புறப்படுகின்றன.  இதன் வழியேதான் இரத்தத்தை எல்லா பகுதிகளுக்கும் எடுத்துச் செல்கிறது. சூட்சும சரீரம் குடி கொண்டிருக்கும் இடம் இருதயமாகும்.

இதயத்திலிருந்து 101 நாடிகள் புறப்படுகின்றன. ஒவ்வொரு பிரதான நாடிக்கும்  100 கிளை நாடிகள் உள்ளன. ஒவ்வொரு கிளை நாடிக்கும் 72000 கிளை நாடிகள் உள்ளன.  இந்த நாடிகள் அனைத்தின் வழியாகவும் வியானன் சஞ்சரிக்கின்றது.

ஸ்லோகம்07
அதை2கயோர்த்4வ உதா3ன: புண்யேன புண்யம் லோகம் நயதி
பாபேன பாபமுபா4ப்4யாமேவ மனுஷ்யலோகம் || 7 ||

உதானன் மற்ற பிராணன்கள் செய்வதற்கு எதிராக செயல்படுகிறது.  உடலை பாதுகாப்பதற்காக உடலிலிருந்து விஷங்களை வெளியே தள்ளுகிறது.  மரண காலத்தில் சூட்சும சரீரத்தை பிரித்து எடுத்துக் கொண்டு செல்கிறது

மரணமடைந்தவனின் சூட்சும சரீரத்தை உதானனானது சுஷும்னா நாடி வழியாக மேலுலகத்திற்கு கொண்டு செல்கிறது.  புண்ணியம் செய்தவரை புண்ணிய லோகத்திற்கோ அல்லது நல்ல மனித சரீரத்திற்கோ கொண்டு செல்கிறது.  பாவ கர்மத்தை செய்தவனை பாவலோகத்திற்கோ, கீழான பிறவிகளான தாவரங்கள், பறவைகள், விலங்குகள், ஊர்வன ஆகியவற்றிற்கு கொண்டு செல்கிறது.

ஸ்லோகம்08
ஆதி3த்யோ ஹ வை பா3ஹ்ய: ப்ராண உத3யத்யேஷ
ஹ்யேனம் சாக்ஷுஷம் ப்ராணமனுக்3ருஹ்ணான: |
ப்ருதி2வ்யாம் யா தே2வதா ஸௌஷா புருஷஸ்ய
        ஆபானமவஷ்டப்4யாந்தரா யதா2காஶ: ஸ ஸமானோ வாயுவ்யார்ன: || 8 ||

சூரியனே வெளியே உள்ள பிராணன். இதுவே நம் கண்களில் உள்ள பிராணனாகவும் செயல்பட்டு கொண்டு இருக்கிறது. பூமியாக உள்ள பிராணன் அபானன். மனித உடலிலுள்ள அபானனாக செயல்படுகிறது. இந்த ஆகாசமே சமானன் – இது மனித உடலிலுள்ள சமானனாக செயல்படுகிறது. வாயுவானது வியானன் – இது மனித உடலிலுள்ள வியானனாக செயல்படுகிறது

ஸ்லோகம்09
தேஜோ ஹ வா உதா3னஸ்தஸ்மாத்3 உபஶாந்த தேஜா:
        புனர்ப4வமிந்த்3ரியைர்மனஸி ஸம்பத்3யமானை: || 9 ||

உதானன் அக்னி தத்துவமாக இருக்கிறது.  இறந்தவரின் எல்லா இந்திரிய சக்திகளையும் மனதில் ஒடுங்கப்பெற்று மீண்டும் பிறக்கின்றான். உதானன் வெளியேறி விடுவதால் உடலிலுள்ள உஷ்ணம் வெளியேறி குளிர்ந்து விடுகிறது.

ஸ்லோகம்10
யச்சித் தஸ்தேனைஷ ப்ராணமாயாதி ப்ராணஸ்தேஜஸா யுக்த: |
ஸஹாத்மனா யதா2 ஸங்கல்பிதம் லோகம் நயதி || 10 ||

மரண காலத்தில் ஜீவன் எப்படிபட்ட எண்ணங்களுடன் இருக்கின்றானோ, எதை நினைத்துக் கொண்டு இருக்கின்றனோ அந்த எண்ணத்துடன் பிராணனை அடைகின்றான்.  மற்ற இந்திரிய செயல்களை இழந்து பிராண விருத்தியாக மட்டும் இருக்கின்றான்.  மனதில் ஓடிக் கொண்டிருக்கும் கடைசிகால எண்ணங்களுடன் பிராணனிடத்தில் ஒடுங்கியிருக்கும்.  இந்த பிராணன் உதானனுடன் சேர்ந்திருக்கிறது.  அந்த ஜீவனை, வாழ்க்கை முழுவதும் எதை சங்கல்பம் செய்து கொண்டிருந்தானோ அதன் அடிப்படையில் தகுதியுடைய உலகத்திற்கு கொண்டு செல்கிறது.

ஸ்லோகம்11
ய ஏவம் வித்3வான் ப்ராணம் வேத3 |
ந ஹாஸ்ய ப்ரஜா ஹீயதே ம்ருதோ ப4வதி ததே3ஷ ஶ்லோக: || 11 ||

எந்த உபாஸகன் இவ்விதம் பிராணனை உபாஸிக்கின்றானோ அவனுடைய சந்ததி சங்கிலி ஒருபோதும் அழிவதில்லை.  இதைப்பற்றி கீழ்வரும் ஸ்லோகமும் உள்ளது.

ஸ்லோகம்10
உத்பத்திமாயதிம் ஸ்தா2னம் விபு4த்வம் சைவ யஞ்சதா4 |
அத்4யாத்மம் சைவ ப்ராணஸ்ய விக்ஞாயாம்ருதமஶ்னுதே |
விக்ஞாயாம்ருதமஶ்னுத இதி || 12 ||

பிராணனின் தோற்றம், வரவு, இருப்பிடம், ஐந்து விதமான தலைமை செயல்கள், உடலுக்குள்ளே செயல்படும் விதத்தையும் உணர்பவன் அழிவற்ற நிலையை அடைகிறான்.

சுருக்கம்
01-02  பிராணன் எவ்வாறு செயல்படுகிறது?
03     பிராணன் எங்கிருந்து தோன்றுகிறது?
04-10  பிராணனின் செயல்பாடுகள்
11-12  பிராணனை உணர்வதனால் அடையும் பலன்

—-oo000oo—-

அத்தியாயம்-4

மனிதனின் மூன்று நிலைகள்

முகவுரை

இந்த உலகத்தில் அனுபவிக்கும் அனைத்தும் நிலையானதல்ல என்ற அறிவும், மித்யா என்ற அறிவும் நமக்கு வரவேண்டும்.

 

ஸ்லோகம்01

அத2 ஹைனம் ஸௌர்யாயணீ கா3ர்க்3ய: பப்ரச்ச2 |

ப4கவன்னேதஸ்மின் புருஷே கானி ஸ்வபந்தி?

கான்யஸ்மின் ஜாக்3ரதி?

கதர ஏஷ தே3வ: ஸ்வப்னான் பஶ்யதி?

கஸ்யைதத்ஸுக2ம் ப4வதி ?

கஸ்மின் ஸர்வெ ஸம்ப்ரதிஷ்டி2தா ப4வந்தீதி || 1 ||

 

ஸௌர்யாயணி என்கின்ற கா3ர்க்3யன் என்பவர் கீழ்கண்ட கேள்விகளை கேட்டார்:
·   பகவானே! கனவு காணும் போது எந்தெந்த இந்திரியங்கள் உறங்குகின்றன, அதாவது செயல்படுவதில்லை ?
·   எந்தெந்த இந்திரியங்கள் விழித்துக் கொண்டிருக்கின்றன. தேகத்தை பாதுகாத்துக் கொள்ள எவையெவைகள் விழித்துக் கொண்டிருக்கின்றன?
·   கனவை பார்ப்பது யார்?
·   ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள சுகமானது யாரை சார்ந்தது?
·   இவையனைத்துக்கும் ஆதாரமாக(ஸம்ப்ரதிஷ்டிதா) இருப்பது எது?

ஸ்வபந்தி               – தூங்குகின்றன

ஜாத்ரதி                  – விழித்திருக்கிறது

பஶ்யதி                  – பார்க்கிறான்

ஸம்ப்ரதிஷ்டிதா      – ஆதாரமாக இருக்கிறது

 

 

ஸ்லோகம்02

தஸ்மை ஸ ஹோவாச |

யத2 கா3ர்க்ய மரீசயோSர்கஸ்யாஸ்தம் க2ச்ச2த:

ஸர்வா ஏதஸ்மின் தேஜோமண்டல ஏகீப4வந்தி |

தா: புன: புனருத3யத: ப்ரசரந்த்யேவம் ஹ ஐ

        தத் ஸர்வம் பரெ தே3வே மனஸ்யேகீப4வதி |

தேன தர்ஹ்யேஷ புருஷோ ந ஶ்ருணோதி ந பஶ்யதி

        ந ஜிக்3ரதி ந ரஸயதே ந ஸ்ப்ருஶதே நாபி4வத3தே நாத3த்3தே3

        நானந்த3யதே ந விஸ்ருஜதே நேயாயதே ஸ்வபிதீத்யாசக்ஷேதே || 2 ||

 

கார்க்கியரிடம் பிப்பலாதர் கூறினார். “சூரியன் மறையும்போது எல்லா கிரணங்களும் சூரியனிடத்திலேயே ஒடுங்குகின்றன.  அது உதிக்கும்போது எல்லா கிரணங்களும் மீண்டும் வெளியே வந்து பரவுகின்றன.  அதுபோல, ஒருவன் தூங்கும்போது அவனது புலன்கள் அனைத்தும் தலைமை புலனான மனதில் ஒடுங்குகின்றன.  அப்போது அவன் பார்ப்பதில்லை, கேட்பதில்லை, முகர்வதில்லை, சுவைப்பதில்லை, உணர்வதில்லை, பேசுவதில்லை, எதையும் செய்வதில்லை, சுகத்தை அனுபவிப்பதில்லை, எதையும் வெளிவிடுவதில்லை, நகர்வதில்லை. அப்போது இவன் தூங்குகிறான் என்று கூறுகிறார்கள்.

 

ஸ்லோகம்03

ப்ரணாக்3னய ஏவைதஸ்மின் புரே ஜாக்3ரதி |

கா3ர்ஹபத்யோ ஹ வா ஏஷோSபானோ வ்யானோSன்வாஹார்யபசனோ

        யத்3கா3ர்ஹப்த்யாத் ப்ரணீயதே ப்ரணயனாதா3ஹவனீய: ப்ராண: || 3 ||

 

ஜீவன் ஸ்தூல சரீரத்தில் அபிமானம் வைத்து இந்த உலகத்தை அனுபவிக்கும் போது விஸ்வன் என்றும், சூட்சும சரீரத்தில் அபிமானம் வைத்து இந்த உலகத்தை அனுபவிக்கும் போது தைஜஸன் என்றும்,  காரண  சரீரத்தில் அபிமானம் வைத்து இந்த உலகத்தை அனுபவிக்கும் போது பிராக்ஞன் என்றும் அழைக்கப்படுகிறான்.  மூன்று நிலைகளிலும் மாறாது இருக்கும் அறிவு ஸ்வரூவத்தை துரியன் என்று அழைக்கப்படுகின்றது.

 

எவைகள் விழித்திருக்கின்றன என்ற கேள்விக்கு பதில் ஐந்து வித பிராணன்களும், மனமும்தான் விழித்திருக்கின்றன. இந்த ஐந்து பிராணன்களும் யாகம் செய்து கொண்டிருக்கின்றன.  பிராணன்கள் விதவிதமான அக்னிகளுக்கு உவமையாக கூறப்பட்டுள்ளன.  மனமே எஜமானனாக இருக்கிறது.  இஷ்ட பலனாக ஆழ்ந்த உறக்கம் கருதப்படுகிறது.  பிராணன் (வெளிவிடும் காற்று) ஆஹவனீய அக்னி என்றும், அபானன் (உள்ளே இழுக்கும் காற்று) கார்ஹபத்ய அக்னி என்றும், வியானன் அன்வாஹார்யபசனம் என்ற அக்னியாகவும், சமானன் யாகத்தை செய்பவனாகவும் (ஹோதா), உதானன் இஷ்ட பலனாகவும் கருதப்படுகிறது.  மனம் எஜமானனாக கற்பனை செய்யப்படுகிறது.  ஆழ்ந்த உறக்கமே சுவர்க்கலோகமாக இருக்கிறது.

 

அக்னிஹோத்ரியானவன் எப்பொழுதும் பாதுகாக்க வேண்டிய அக்னிக்கு கார்ஹபத்ய அக்னி என்று பெயர்.  இந்த அக்னியை இரண்டு நிலையில்தான் அணைக்க வேண்டும். அவைகள் ஒன்று அவன் சந்நியாசம் எடுக்கும் போது, மற்றொன்று அவன் மரணத்தின் போது. மற்ற யாகங்களுக்கு வேண்டிய அக்னியை இந்த கார்ஹபத்ய அக்னியிலிருந்துதான் எடுக்க வேண்டும். அதே உள்ளே போகும் காற்றிலிருந்துதான் வெளியே விடும் காற்று எடுக்கப்படுகிறது.

 

ஸ்லோகத்தின் பொருள்:

இந்த சரீரத்தில் அக்னிக்கு ஒப்பிடப்படுகின்ற பிராணனே நாம் தூங்கும்போதும் விழித்துக் கொண்டிருக்கிறது.  கார்ஹபத்ய அக்னி அபானனுக்கும், அன்வஹார்யபசன அக்னி வியானனுக்கும் ஒப்பிடப்படுகின்றது.  கார்ஹபத்ய அக்னியிலிருந்து உருவாக்கப்பட்டது ஆஹவனீயம். எனவே பிராணனே ஆஹவனீயமாகும்.

 

ஸ்லோகம்04

யது3ச்ச2வாஸனி:ஶ்வாஸௌ ஏதாவஹுதீ ஸமம் ஸ ஸமான: |

மனோ ஹ வாவ யஜமான் இஷ்டப2ல்மேவ உதான:

        ஸ ஏனம் ஜயமானம் அஹரஹர்ப்3ரஹ்ம க3மயதி || 4 ||

 

உள்மூச்சு, வெளிமூச்சு ஆகிய இரண்டு ஆஹுதிகளையும் சமமாக நடத்துவதால் அந்தப் பிராண சக்தி சமானன் எனப்படுகின்றது. மனமே எஜமானனாக இருக்கின்றது.  யாகத்தின் மூலம் அடையும் பலனே உதானன்.  ஏனெனில் உதானனே இந்த எஜமானனை பிரம்மத்திடம் கொண்டுபோய் சேர்க்கின்றது.  பிரம்மத்திடம் எடுத்துச் செல்வது என்பது ஆழ்ந்த உறக்கத்திற்கு எடுத்துச் செல்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும்.  ஆழ்ந்த உறக்கம்தான் பிரம்மத்தை அடைந்ததற்கு சமமாக சொல்லப்படுகின்றது.  இந்நிலையில் காரண சரீரத்தில் மட்டும் அபிமானம் இருக்கும்.

 

இந்த ஆழ்ந்த உறக்கத்தில் உண்மை நிலை (ஜீவத்வம்) வெளிப்படுவதில்லை. எனவே பிரம்ம பிராப்தி என்று சொல்கிறோம்.  இந்த நிலையில் அறியாமை இருந்து கொண்டிருப்பதால், விழித்ததும் மீண்டும் ஜீவத்வத்திற்கு வந்து விடுகிறான். ஆழ்ந்த உறக்கத்தில் காரண சரீரத்தை அடைந்திருக்கின்றான்.  காரண சரீரம் பிரம்மத்தை சார்ந்திருப்பதால், அவன் பிரம்மத்தை அடைந்ததாகும். உதாரணமாக வெயிலினால் பூமி சூடாக இருக்கும்போது நிழலை நாடிச் செல்கிறோம்.  ஆனால் உஷ்ணமும், நிழலும் பூமியைத்தான் சார்ந்திருக்கின்றன.

 

ஸ்லோகம்05

அன்னைஶ தே3வ: ஸ்வப்னே மஹிமானமனுப4வதி |

யத்3 த்3ருஷ்டம் த்3ருஷ்டமனுபஶ்யதி ஶ்ருதம் ஶ்ருதமேவார்த2மனுஶ்ருணோதி

தெஶாதி3க3ந்தரைஶ்ச ப்ரத்யனுபூ4தம் புன: புன: ப்ரத்யனுப4வதி த்3ருஷ்டம்

சாத்3ருஷ்டம் ச ஶ்ருதம் சாஶ்ருதம் சானுபூ4தம் சானனுபூ4தம் ச ஸச்சாஸச்ச

ஸர்வம் பஶ்யதி ஸர்வ: பஶ்யதி || 5 ||

 

கனவை பார்ப்பது யார்? அனுபவிப்பது யார்?

நம்முடைய மனம்தான் கனவை காண்கிறது.  கனவில் இந்த மனம் தன்னுடைய பெருமையையே அனுபவிக்கின்றது.  நம்முடைய மனதிலுள்ள ரகசியங்களை அனுபவிக்கும் கனவுகளாக வருகின்றது.  மனமே மனதை கனவில் அனுபவிக்கின்றது. மனதில் பதிந்துள்ள எண்ணங்களே கனவுகளாக வருகின்றது. விழிப்பு நிலையில் எதையெல்லாம் பார்த்தானோ அதையேதான் கனவில் பார்க்கின்றான்.  எதையெல்லாம் கேட்டானோ அதையேதான் கேட்கின்றான்.  விதவிதமான இடங்களில், திசைகளில், வெவ்வேறு காலத்தில் எதை அனுபவித்தானோ அதையே அனுபவிக்கின்றான்.  எதை மற்ற இந்திரியங்களால் அனுபவித்தானோ அதையேதான் மீண்டும் மீண்டும் அனுபவிக்கின்றான். முற்பிறவிகளில் பார்த்ததைம் கேட்டதையே கனவில் அனுபவிக்கின்றான்.  இந்தப் பிறவியில் பார்த்ததையும், பார்க்காததையும் கனவில் பார்க்கின்றான். இந்தப்பிறவியில் கேட்டதையும், கேட்காததையும் அனுபவிக்கின்றான். ஸத்தையும், அஸத்தையும் பார்க்கின்றான்.  எல்லாவற்றையும் பார்க்கின்றான், அனைத்துமாக இருந்து கொண்டு பார்க்கின்றான். நம்முடைய கர்மபலன்கள்தான் நம்மை இந்த ஆழ்நிலை உறக்கத்திற்கு கொண்டு செல்கிறது. ஒரு பிராரப்த பலன் முடிந்து வேறொன்று ஆரம்பிக்கும் இடைவெளியில்தான் நாம் ஆழ்நிலை உறக்கத்திற்கு செல்கின்றோம்.

 

ஸ்லோகம்06

ஸ யதா3 தேஜஸாபி4பூ4தோ ப4வதி அன்னைஷ தேவ: ஸ்வப்னான்

ந பஶ்யத்யத2 ததை3தஸ்மின் ஶரீரே ஏதத்ஸுக2ம் ப4வதி || 6 ||

 

சுஷுப்தி சுகத்தை அனுபவிப்பது யார்?

விழிப்பு, கனவு நிலையில் அனுபவிக்கும் சுகத்தில் துக்கமும் கலந்து இருக்கிறது.  நம்முடைய மனதிலுள்ள வாஸனைகள் எல்லாம் சில வகையான நாடிகளுக்குள் இருக்கின்றது.  மனமானது வாஸனைகள் இருக்கும் நாடிகளுக்குள் சென்று அங்குள்ள ஸம்ஸ்காரங்களை எடுத்து கொண்டு கனவு காண வைக்கிறது.

 

சுஷுப்தியில் இந்த நாடிகளுக்குள் ஜீவன் செல்ல முடியாது.  அதனால் கனவை காண முடியாது.  அவைகள் மறைக்கப்பட்டு விடுகின்றன.  அப்பொழுதுதான் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பான்.  அப்போது அவனே பிராக்ஞன் என்று அழைக்கப்படுகிறான்.  கர்மபலன்கள் இல்லாமல் இருக்கும்போதுதான் இந்நிலை ஏற்படுகிறது.  கர்மவினைதான் விஷயங்களைக் கொண்டு வந்து, நம்மை அனுபவிக்க வைக்கின்றது.  அதற்கேற்ற உலகைப்படைத்து, உடலைப்படைத்து, சூழ்நிலைகளையும் ஏற்படுத்தி கொடுக்கிறது.

 

ஸ்லோக பொருள்:

எவனொருவனுக்கு அக்னியால் (பித்தத்தினால்) நாடிகள் மறைக்கப்படும்போது, அவனது  மனமானது கனவை காண்பதில்லை. அந்த நிலையில் இந்த சரீரத்தில் சுஷுப்தி சுகத்தை அனுபவிக்கின்றான்.  ஆழ்ந்த உறக்கத்தை அனுபவிக்கும் சுகம். இந்த சுகத்தை பிரம்மானந்தத்திற்கு அருகில் உள்ளது போல கூறப்படுகிறது.

 

ஸ்லோகம்07

ஸ யதா2 ஸோம்ய வ்யாம்ஸி வாஸோவ்ருக்ஷம் ஸ்ம்ப்ரதிஷ்டந்தி

ஏவம் ஹ  வை தத் ஸர்வம் பர அத்மனி ஸம்ப்ரதிஷ்டதே || 7 ||

 

இவைகள் அனைத்தும் எதை ஆதாரமாக கொண்டுள்ளது?

பகலில் இரைத் தேடச் சென்ற பறவைகள் மாலையில் தங்கள் கூட்டை நாடுவது போல அவைகள் அனைத்தும் ஆத்ம தத்துவத்தில் ஒடுங்குகின்றன. நாம் பல இடங்களில் இருக்கும் போது சூழ்நிலைகளுக்கேற்ப நடந்து கொள்வோம்.  ஆனால் நம் வீட்டில்தான் நம்முடைய உண்மையான ஸ்வரூபத்தில், சௌகரியமாக இருப்போம்.  உலகத்திலுள்ள வேற்றுமைகள் எல்லாம் நீங்கி அமைதியாக இருக்குமிடம்தான் பரபிரம்மம்.  இந்த உதாரணத்தின் மூலம் அறிந்துக் கொள்ள வேண்டியது பர பிரம்மத்தில் ஒடுங்கும்போதுதான் நிரந்தரமான அமைதியுடன் இருக்க முடியும். கடலில் தோன்றி எழும் அலைகள் மீண்டும் கடலிலே கலந்துவிடுவது போல ஜீவாத்மா பரமாத்வாவிலிருந்து தோன்றி அதிலே கலந்துவிடுவதுதான் மோட்சம்.

 

ஸ்லோகம்08

ப்ருதி2வீ ச ப்ருதி2வீமாத்ரா சாபஶ்சாபோமாத்ரா ச தேஜஶ்ச தே ஜோமாத்ரா ச

வாயுஶ்ச வாயுமாத்ரா சாகாஶஶ்சாகாஶாமாத்ரா ச கக்ஷுஶ்ச த்3ரஷ்டவ்யம் ச ஶ்ரோத்ரம் ச ஶ்ரோதவ்யம் ச க்4ராணம் ச க்4ராதவ்யம் ச த்வக்வ

ஸ்பர்ஶயித்வ்யம் ச வாக்ச வக்தவ்யம் ச ஹஸ்தௌ சாதா3த்வ்யம்

சோபஸ்த2ஶ்சனந்த3யிதவ்யம் ச பாயுஶ்ச விஸர்ஜயிதவ்யம் ச பாதௌ ச

க3ந்தவ்யம் ச மனஶ்ச மந்தவ்யம் ச பு3த்3தி4ஶ்ச போ3த்3த4வ்யம்

சாஹம்காரஶ்சாஹம்கர்தவ்யம் ச சித்தம் ச சேதயிதவ்யம் ச தேஜஶ்ச

வித்யோதயிதவ்யம் ச ப்ராணஶ்ச விதா4ரயிதவ்யம் ச || 8 ||

 

நாம் அனுபவிக்கின்ற ஸ்தூல பூதங்களனைத்தும் முதலில் சூட்சும பூதங்களாக இருந்தன.  இந்திரியங்கள் அனைத்தும் மற்றும் அவைகளில் செயல்களும், அந்தக்கரணமும் அதனுடைய செயல்களும் ஆத்மாவிலேயே ஒடுங்குகின்றன

 

நிலமும், சூட்சும நிலமும், நீரும், சூட்சும நீரும், நெருப்பும், சூட்சும நெருப்பும், வாயுவும், சூட்சும வாயுவும், ஆகாசமும், சூட்சும ஆகாசமும் இவைகள் அனைத்தும் பரமாத்மாவில் ஒடுங்குகின்றன.  கண், பார்க்கும் செயல், காது-கேட்கும் செயல், மூக்கு-நுகரும் செயல், நாக்கு, சுவைக்கும் செயல், தோல், தொட்டுணரும் செயல் அதாவது ஞானேந்திரியங்களும் அவைகளினுடைய செயல்களும், வாய், பேசும் செயல், கைகள்-அவை செய்யும் செயல்கள், கால்கள் – நடக்கும் செயல்கள் குறி-இன்பத்தை கொடுக்கும் செயல்கள், குதம், கழிவுகளை வெளிப்படுத்தும் செயல், அதாவது கர்மேந்திரியங்களும் அவைகளின் செய்லகளும், மனமும், மனதால் நினைக்கப்படும் எண்ணங்களும், புத்தியும், புத்தியால் அறிவை அடையும் செயலும், அகங்காரமும், நான் என்ற உணர்வும், சித்தமும், எண்ணங்களை பதிய வைப்பதும், எண்ணங்களை மனதுக்கு எடுத்துக் கொடுப்பதும், ஒளி, அந்த ஒளியால் விளக்கபடுவதும், பிராணன், ஒருங்கிணைக்கப்படுவது என்ற அனைத்தும் ஆத்மாவிலேயே ஒடுங்குகின்றன.

 

ஸ்லோகம்09

ஏஷ ஹி த்3ரஷ்டா ஸ்ப்ரஷ்டா ஶ்ரோதா க்4ராதா ரஸயிதா மந்தா

        போத்3தா4 கர்தா விக்ஞானாத்மா புருஷ: |

ஸ பரேSக்ஷரே ஆத்மனி ஸம்ப்ரதிஷ்டதே || 9 ||

 

எவைகளெல்லாம் அனுபவிக்கப்படுகின்றதோ அவைகள் நானல்ல என்று சுலபமாக அறிந்து கொள்கின்றோம், அதாவது நமக்கு புறத்தே உள்ள அனைத்தும் நானல்ல என்று புரிந்து கொள்வதில் குழப்பம் இருக்காது.  ஆனால் இந்த தேகம் நானல்ல என்று புரிந்து கொள்வதுதான் மிகவும் கடினம்.

 

ஜீவனைப் பற்றிய விசாரம் த்ருக்-த்ருஷய விவேகம் (பார்ப்பவன் – பார்க்கப்படும் பொருள். இவையிரண்டும் வெவ்வேறாக இருக்கிறது என்று அறிந்து கொள்ள வேண்டும்.

ஈசனைப்  பற்றிய விசாரம் காரண-காரிய விவேகம்

 

த்ருக்-த்ருஷய விவேகம்

பார்ப்பவன் – பார்க்கப்படும் பொருள். இவையிரண்டும் வெவ்வேறாக இருக்கிறது என்பதை  அறிவோம்.  இந்த சரீரம் அறியப்படும் பொருள் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.  இந்திரியங்கள், ப்ராணன்களும் அறியப்படுவதாக இருக்கிறது.  தியானம் செய்வதற்கு மனமே கருவியாகவும், விஷயமாகவும் இருக்கிறது.  எனவே மனதை இரண்டாக பிரித்து பழக வேண்டும்.  கட்டுபடுத்தப்பட்ட மனம், கட்டுபடுத்தபடாத மனம்.  இதே மாதிரி புத்தியையும் இரண்டாக பிரித்து அறிந்து கொள்கிறார்கள். அந்தகரணத்தில் இருக்கும் சிதாபாசத்தை பிரித்து பார்ப்பது கடினம்.  இதைத்தான் ஜீவன் என்று புரிந்து கொண்டு இருக்கின்றோம்.  இதுவே சுத்த சைதன்யத்தின் பிரதிபிம்பமாகும்.

 

மனதுடன் சேர்ந்த சிதாபாசம்தான் ஜீவன்.  ஆனால் இதை பிரதிபலிக்கின்ற சுத்த சைதன்யத்தை மறந்து விடுகின்றோம்.  நானே கர்த்தாவாகவும், போக்தாவாகவும் இருக்கின்றேன் என்ற அறிவு நமது உடலையும், மனதையும் குறிக்கின்றது என்று அறிந்து கொள்ள வேண்டும்.

 

நமக்குள்ளே இரண்டு அறிபவன்கள் இருக்கின்றார்கள். இந்த இரண்டையும் பிரித்து பார்க்க வேண்டும்.  எது உண்மை என்று பிரித்துணர வேண்டும்.  எந்த ஒன்று மாற்றமடையாமல் அறிபவனை அறிந்து கொண்டிருக்கிற தத்துவமானதாக இருக்கின்றதோ அதையே ஆத்மாவாக புரிந்து கொள்ள  வேண்டும்.  ஆத்மா நிர்விகார த்ரஷ்டா, சிதாபாசன் சவிகார த்ரஷ்டா, இது பரபிரம்மத்தை சார்ந்து இருக்கின்றது. (உ-ம்) பரமாத்மா சூரியன் என்றால், நீரில் தெரியும் சூரிய பிம்பம் ஜீவன் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

 

ஸ்லோக விளக்கம்:

இந்த சிதாபாசன் (ஜீவன்) உணர்ச்சியுடையவன், கேட்பவன், சுவைப்பவன், நுகர்ந்து பார்ப்பவன், சிந்திப்பவன், மனதில் குழப்பமுடையவன், உறுதி செய்பவன், செயல் செய்பவன் (அகங்காரம்) எல்லாவற்றையும் அறிந்து கொண்டு வாழும் ஜீவன்கள் (மனிதர்கள்) இவைகள் சேதனமானது, அறிவுடையது.  இந்த அறிவுடைய ஜீவன்தான் மேலான, அழியாத பிரம்மனாக இருக்கின்றான்.

 

நான் பார்ப்பவன் அல்ல, கேட்பவன் அல்ல, சிந்திப்பவன் அல்ல, இவைகளுக்கு எல்லாம் ஆதாரமாக இருப்பவன். இவைகள் இப்படி அறிவு ஸ்வரூபமாக இருப்பதற்கு காரணமாக இருப்பவன்.  நான் பார்ப்பவனும் அல்ல, பார்க்கப்படும் பொருளும் அல்ல என்ற அறிவை அடைய வேண்டும்.

 

ஒரு பொருளின் இருப்பை சொல்ல வேண்டுமென்றால், அதைப் பற்றிய அறிவு இருக்க வேண்டும்,  எனவே இந்த உலகத்தில் இருக்கின்ற அனைத்துக்கும், மூலக்காரணமாக இருக்கின்றேன். இந்த ஸ்லோகத்தில் ஜீவன் என்பது வாக்கியார்த்தம், ஆத்மன் என்பது லட்சியார்த்தம். ஜீவ-பிரஹ்ம ஐக்கியம் தெளிவாக விளக்கப்பட்டிருக்கின்றது.

 

ஸ்லோகம்10

பரமேவாக்ஷரம் ப்ரதிபத்3யதே ஸ யோ ஹவை தத3ச்சா2யம் அஶரீரம்

அலோஹிதம் ஶுப்4ரமக்ஷரம் சேத3யதெ யஸ்து ஸோம்ய ஸ ஸர்வக்ஞ:

ஸர்வோ ப4வதி ததே3ஷ ஶ்லோக: || 10 ||

 

பரமேவ அக்ஷரம் ப்ரதிபத்3யதே – மேலானதும், அழியாததுமான அபேதத்தை அடைகின்றான்.  சிதாபாசத்திற்கு வந்து போவதெல்லாம் என்னைச் சார்ந்தது அல்ல என்ற அறிவை அடைந்திட வேண்டும். இவனே ஞானி.

ஸஹ யஹ வை – எவன் பிரம்மத்தை அடைந்தவனோ, அவனுக்கு

தத்3 அச்சா2யம் –அவித்யா என்ற இருளற்றது, அக்ஞானம் அற்றது

அஶரீரம் – சரீரமற்றது ( இது அக்ஞானமற்றது, மூன்று சரீரங்கள் அற்றது )

அலோஹிதம் –  தர்மங்களற்றது, குணங்களற்றது. இந்த உடலும் நானல்ல, அதைச் சார்ந்த தர்மங்களும் நானல்ல.

ஶுப்4ரம் அக்ஷரம் – தூய்மையானது, அழியாதது.

வேத3யதே யஸ்து – இப்படி யார் அறிகிறார்களோ

ஸஹ ஸர்வஞஹ –  இப்படி அக்ஷரத்தை அறிந்தவன் அனைத்தையும் அறிந்தவனாகின்றான்.

 

நம்முடைய புத்தி எப்பொழுதும் அதை தெரிந்து கொள்ள வேண்டும், இதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அலை பாய்ந்து கொண்டிருக்கும். இவன் எல்லாம் அறிந்தவனாகி விட்டதால்,  புத்தி அமைதி அடைகின்றது. பிறகு அடைந்த அறிவில் நிறைவடைந்தவனாகின்றான்.

 

ஸர்வோ ப4வதி –  இவனே அனைத்துமாகின்றான்.  அனைத்து ஜீவராசிகளிலும் தன்னையே பார்த்துக் கொண்டு இருக்கின்றான். இதுபற்றி மேலும் விளக்குவதற்கு கீழே மந்திரம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

 

ஸ்லோகம்11

விக்ஞானாத்மா ஸஹ தே3வைஶ்ச ஸர்வை: ப்ராணா பூ4தானி

ஸம்ப்ரதிஷ்டந்தி யத்ர தத3க்ஷரம் சேத3யதே யஸ்து ஸோம்ய

ஸ ஸர்வக்ஞ: ஸர்வமேவ ஆவிவேஶேதி || 11 ||

 

அனைத்து இந்திரியங்களுடன் (விக்ஞானாத்மா) ஜீவாத்மா (சிதாபாcaத்துடன் இருக்கும் ஜீவன்) பிராணன்கள், 5 ஸ்தூல பூதங்கள், 5 சூட்சும பூதங்கள் இவைகள் எந்த பிரம்மனிடத்தில் சார்ந்துள்ளதோ அதுவே அந்த அழியாத ஒன்றை யார் அறிகின்றார்களோ, அவன் அனைத்தையும் அறிகின்றான், அனைத்தையும் வியாபிக்கின்றான் (ஆவிவேஶேதி)

 

சுருக்கம்:

01     மூன்று நிலைகள் எவையென்று கூறப்படுகிறது
04-06  கனவு நிலை, தூக்க நிலை இவைகள் விளக்கப்படுகிறது
07-09  ஆத்மாவைப் பற்றிய விளக்கம்
10-11  ஆத்மாவின் பெருமையை கூறுகின்றது

—-oo000oo—-

அத்தியாயம்-5

ஓங்கார தியானம்

முகவுரை

இந்த உலகத்தில் அனுபவிக்கும் அனைத்தும் நிலையானதல்ல என்ற அறிவும், மித்யா என்ற அறிவும் நமக்கு வரவேண்டும்.

 

ஸ்லோக்ஸ-01

அத2 ஹைனம் ஶௌப்3ய: ஸத்யகாம: பப்ரச்ச2- ஸ யோ

ஹ வை தத்3ப4க3வன் மனுஷ்யேஷு ப்ராயணாந்தம்

ஓங்காரமபி4த்4யாயீத கதம் ஸ தேன லோகம் ஜ்யதீதி || 1 ||

 

மரணகாலம் வரை ஓங்கார உபாஸனையை செய்ய முடிந்தால் அவனது கதி என்ன?

இத்தகையவன் வைராக்கியத்தை குறைவாக அடைந்திருந்தால் அவனால் ஞானயோகத்திற்கு செல்ல முடியாது.

 

ஶௌப்3ய என்கின்ற ஸத்யகாமன் கேள்வியைக் கேட்கின்றான்.  பகவானே! மனிதர்களில் மரணகாலம் வரை (ப்ராயணாந்தம்) ஓங்காரத்தை தியானம் செய்து கொண்டிருக்கின்றானோ? (அவன் ஆத்ம விசாரம் செய்து ஞானயோகத்திற்கு வராமல்) அவன் அந்த தியானத்தால் எந்த உலகத்தை அடைகின்றான்.

 

ஓம் என்ற மந்திரத்தை விசாரம் செய்து அடையும் ஞானத்தால் பரபிரம்மத்தை அடைகின்றான்.  ஓம் என்ற மந்திரத்தை தியானம் செய்வதனால் பிரம்ம லோகத்தை அடைவான்.

 

ஸ்லோக்ஸ-02

தஸ்மை ஸ ஹோவாச |

ஏதத்3 வை ஸத்யகாம பரம் சாபரம் ச ப்ரஹ்ம யதோ3ங்கார: |

தஸ்மாத்3 வித்3வான் ஏதேனைவ ஆயதனேன ஏகதரமன்வேதி || 2 ||

 

ஓம் என்பது சகுண பிரம்மத்தையும், நிர்குண பிரம்மத்தையும் குறிக்கின்றது.  இந்த ஓங்காரமானது பர பிரம்மத்தையும், அபரா பிரம்மத்தையும் குறிக்கின்றது. எனவே ஒருவன் இந்த ஆலம்பனத்தின் துணைக் கொண்டு மேலே சொன்ன இரண்டில் ஏதோ ஒன்றை அடைகின்றான்.

 

ஸ்லோக்ஸ-03

ஸ யத்3யேகமாத்ரம் அபி4த்4யாயீத ஸ தேனைவ ஸம்வேதி3தஸ்தூர்ணமேவ

ஜக3த்யாமபி4ஸம்பத்3யதே தம்ருசோ மனுஷ்யலோகமுபனயந்தே ஸ தத்ர

தபஸா ப்ரஹ்மசர்யேண ஶ்ரத்3த4யா ஸம்பன்னோ மஹிமனமனுப4வதி || 3 ||

 

ஓம் என்ற சொல்லானது அ,உ,ம் என்ற மூன்று எழுத்துக்களின் கூட்டாகும்.  அகாரத்தை மட்டும் பிரதானமாக வைத்து ஓங்காரத்தை தியானிப்பதனால் என்ன பலன் என்று சொல்லப்படுகிறது

 

ஒருவன் அகாரத்தை மட்டும் தியானித்தால் அவன் அந்த தியானத்தில் ஸ்வரூபமாகவே ஆகிவிடுகின்றான், அதிலேயே ஐக்கியமாகி விடுகிறான்.  பிறகு சீக்கிரமாகவே இந்த பூமியில் மனிதனாக பிறக்கின்றான்.  அகாரத்திற்கு தேவதையான ரிக்வேதம் இந்த சாதகனை மனித சரீரத்தை அடைவதற்கு உதவுகிறது.  இப்படி மனித சரீரமெடுத்தவன் மீண்டும் தவம் செய்கின்றான்.  பிரம்மச்சர்யம் போன்ற தவத்தினால் இவனுக்கு சிரத்தை ஏற்படுகின்றது.  இதனால் மனித சரீரத்தினால் அடைய முடிகின்ற ஆனந்தத்தை அடைகின்றான்.  மனுஷ்யானந்தத்தை அனுபவிக்கின்றான்.

 

ஸ்லோக்ஸ-04

யதி3 த்3விமாத்ரேன மனஸி ஸம்பத்3யதெ ஸோந்தரீக்ஷம் யஜுர்பி4ருர்ஜ்ஜயதே ஸோமலோகம் ஸ ஸோமலோகே விபூ4திமனுபூ4ய புனராவர்ததே || 4 ||

 

இதில் உகாரத்தை மட்டும் தியானிப்பதால் அடையும் பலனாக சொர்க்கத்தை அடைவது கூறப்படுகின்றது.

 

இரண்டாவது எழுத்தான உகாரத்தை ஒருவன் தியானம் செய்தால் அந்த உகாரத்திலே ஐக்கியமாகி விடுவான்.  அதனால் இவனை யஜுர்வேத தேவதைகள் ஸோமலோகமான சொர்க்க லோகத்தை அனுபவிக்க தக்க உடலை கொடுக்கிறது. அதனால் சொர்க்கத்திலுள்ள சுகத்தை அனுபவிக்கின்றான்.  அவன் சொர்க்கலோகத்திலுள்ள இன்பத்தை அனுபவித்துவிட்டு மீண்டும் திரும்பி விடுகின்றான்.

 

ஸ்லோக்ஸ-05

ய: புனரேதம் த்ரிமாத்ரேண ஓமித்யேதேனைவ அக்ஷரேண பரம்

        புருஷமபி4த்4யாயீத ஸ தேஜஸி ஸூர்யே ஸம்பன்ன |

யதா2 பாதோ3த3ரஸ்த்வசா வினிர்முச்யத ஏவம் ஹவை ஸ பாப்மனா

        வினிர்முக்த: ஸ ஸாமபி4ருர்ன்னயதே ப்ரஹ்மலோகம் ஸ ஏதஸ்மாத்

        ஜீவக4னாத்ப்ராத்பரம் புரிஶயம் புருஷமீக்ஷதே ததே3தௌ ஶ்லோகௌ

        ப4வத: || 5 ||

 

இதில் மூன்று மாத்திரைகளை சேர்த்து உபாஸித்தால் அடையும் பலனான பிரம்ம லோகத்தை அடைவதை கூறுகிறது.  முழு ஓங்காரத்தை உபாஸிக்க வேண்டும்.  பிரம்மலோகத்தை அடைந்து அங்கிருந்தே கிரமமுக்தி அடைவான்.  இதனால் அவன் பாவங்களனைத்தும் நீங்கப் பெறுகின்றான்.

 

யாரொருவன் மூன்று மாத்திரைகளை அதாவது முழுமையான ஓங்காரத்தை தியானிக்கின்றானோ, மேலான புருஷனை தியானிக்கின்றானோ அவன் ஒளிப்பொருந்திய சூரியப் பாதையை (சுக்ல கதியை) அடைகின்றான்.  எவ்விதம் பாம்பானது தோல் சட்டையை உரித்து விட்டு செல்கின்றதோ அவ்விதம் அவன் பாவத்திலிருந்து விடுதலையடைந்து சாம வேத தேவதைகளால் பிரம்ம லோகத்திற்கு அழைத்து செல்லப்படுகிறான். அங்குள்ள இன்பத்தை அனுபவிக்காமல் வைராக்கியத்தை அடைந்து முக்தியடைகின்றான்.

ஜீவகனாத்    ஹிரண்யகர்ப்பனை காட்டிலும் மேலான எல்லா சரீரத்திற்குள்ளும் இருக்கின்ற பிரம்மத்தை அறிகின்றான்.

ஈக்ஷதே    இதுவரை கூறிய விஷயங்கள் இரண்டு ரிக் மந்திரங்களில் கூறப்பட்டிருக்கின்றது.

 

ஸ்லோக்ஸ-06

திஸ்ரோ மாத்ரா ம்ருத்யுமத்ய: ப்ரயுக்தா அன்யோன்யஸக்தா அனவிப்ரயுக்தா: |

க்ரியாஸு பாஹ்யாப்4யந்தரமத்4யமஸு ஸம்யக்ப்ரயுக்தாஸு ந கம்பதே ஞ: || 6 ||

 

திஸ்ரஹ மாத்ரா ம்ருத்யுமத்ய: மூன்று மாத்திரைகளான ஒங்காரத்தை தனித்தனியாக உச்சரிப்பதால், தியானிப்பதால் மரணத்தை கடக்க வைக்காது.

ப்ரயுக்தா:                          இது ஒருவனுக்கு தியானம் செய்வதற்கு உகந்த கரணமாக இருக்கிறது

அன்யோன்ய ஸக்தா              ஒன்றையொன்று சேர்த்து வைத்தல்.  ஓங்காரத்தை தனித்தனியாக பிரித்து உபாஸிக்கூடாது.

அனவிப்ரயுக்தா:               சரியாக பயன்படுத்தபட்டால்

ஞ ந கம்யத: ­                  இவ்வாறு ஓங்காரத்தை தியானம் செய்பவன் மரணத்தைக் கடக்கின்றான்.  பிரம்மலோகத்தை அடைகிறான்.

ஸம்யக் க்ரியாஸு             நன்றாக தியானம் செய்யும்போது.

பாஹ்ய அப்4யந்தரம் மத்4யமஸு – ஜாக்ரத், சுஷூப்தி, கனவு போன்ற நிலைகளில்

ப்ரயுக்தாஸு – அவன் வீழ்வதில்லை

 

ஸ்லோக்ஸ-07

ரிக்3பி4ரேதம் யஜுர்பி4ரந்தரிக்ஷம் ஸாமாபி4ர்யத்தத்கவயோ வேத3யந்தே |

தமோங்காரேணைவ ஆயதனேனான்வேதி வித்3வான் யத்தச்சா2ந்தம்

        அஜரமம்ருதமப4யம் பரம் சதி || 7 ||

 

ஓங்காரம் மந்திரம் நமக்கு என்னென்ன பலன்களை கொடுக்கின்றது என்பதை சுருக்கமாக விளக்கப்படுகின்றது.

 

அகாரத்தை உபாஸிக்கும் சாதகன் ரிக்வேத தேவதைகளால் மனிதலோகத்தை அடைகின்றான்.  உகாரத்தை தியானிக்கும் சாதகன் யஜுர் வேத தேவதைகளால் சொர்க்க லோகத்திற்கு அழைத்து செல்லப்படுகிறான்.  முழு ஓங்காரத்தையே தியானம் செய்யும் சாதகன் சாமவேத தேவதைகளால் ரிஷிகளால் அறியப்படும் பிரம்மலோகத்திற்கு அழைத்து செல்லப்படுகிறான்.  எதுவானது துயரமில்லாதாக, அழியாததாக, காலமற்றதாக, மரணமற்றதாக, பயமற்றதாக இருக்கின்றதோ அதை ஞானியானவன் அடைகின்றான்.

 

சுருக்கம்

01-02  ஓங்கார தியானத்தின் இரண்டு பரிமாணங்கள்
03-05  உயர் பரிமாண ஓங்கார தியானத்தின் வகைகளும், பலன்களும்
06-07  மூன்று வகை தியானங்களின் பலன்

—-oo000oo—-

அத்தியாயம்-6

ஆத்மாவின் பெருமை

முகவுரை

இந்த உலகத்தில் அனுபவிக்கும் அனைத்தும் நிலையானதல்ல என்ற அறிவும், மித்யா என்ற அறிவும் நமக்கு வரவேண்டும்.

 

ஸ்லோகம்-01
அத2 ஹைனம் ஸுகேஶா பா4ரத்3வாஜ: பப்ரச்ச2 |
பகவன் ஹிரண்யனாப4: கௌஸல்யோ ராஜயுத்ரௌ
        மாமுபெத்யைதம் ப்ரஶ்னமப்ருச்ச2தஷோடஶகலம்
        பாரத்3வாஜ புருஷம் வேத்த2:?
ஹமஹம் குமாரமப்ருவம் நாஹமிமம் வேத
யத்3யாஹமிமமவேதிஷம் கத2ம் தெ நாவக்ஷ்யாமிதி |
ஸமூலோ வா ஏஷ வரிஶுஷ்யதி யோÅந்ருதம்பி4வத3தி |
தஸ்மான்னார்ஹாம்யந்ருதம் வக்தும் |
ஸ தூஷ்ர்ணீம் ரத2மாருஹ்ய ப்ரவவ்ராஜ |
தம் த்வா ப்ருச்சா2மி க்வாஸௌ புருஷ இதி || 1 ||


பரத்வாஜ என்கின்ற ஸுகேஶா என்ற சிஷ்யர் குருவிடம் கேள்வி கேட்கலானார்.
பகவானே! ஹிரண்யநாப என்கின்ற கோசல நாடு இளவரசன் என்னிடம், “பதினாறு அங்கங்களுடைய புருஷனை உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்டார்.  அதற்கு நான்,  எனக்கு தெரியாது, தெரிந்திருந்தால் உங்களிடம் எப்படிச் சொல்லாமல் இருப்பேன்! எனவே பொய் சொல்வதற்கு எனக்குத் துணிவில்லை” என்று கூறினேன்.  இதைக் கேட்டதும் அவர் அமைதியாகத் தேரில் ஏறிப்போய்விட்டார்.  “அந்த நபர் யார்? அவர் எங்கே இருக்கின்றார்” என்ற அந்தக் கேள்வியை இப்போது நான் உங்களிடம் கேட்கிறேன்.

ஸ்லோகம்-02

தஸ்மை ஸ ஹோவாச |
இஹைவாந்த: ஶரீரே ஸோம்ய ஸ புருஷோ யஸ்மின்னேதா:
        ஷோடஶகலா: ப்ரப4வந்தீதீ || 2 ||


அந்த சிஷ்யருக்கு குருவானவர் கூறினார்:  “இனியவனே! அந்த நபர் ஆத்மா.  ஆத்மா இங்கே நம் உடம்பின் உள்ளேயே உள்ளது. அதனிடமிருந்தே பதினாறு பகுதிகள் தோன்றுகின்றன.

விசாரம்:
நிர்குண பிரம்மன்தான் அந்த புருஷன். இதற்கு லட்சணம் பிளவுப்படாதது, அவயவங்களற்றது. அங்கங்களுடையதெல்லாம் வரையறுக்கப்பட்டதாக இருக்கும். இந்த உலகத்தில் நாம் வேற்றுமையைத்தான் அனுபவித்துக் கொண்டு இருக்கின்றோம்.  எல்லாமே வெவ்வேறாக இருக்கின்றது.  நம்முடைய மனதில் அபேத ஸம்ஸ்காரம்தான் இருக்கிறது.  நாம் புரிந்து கொள்ள வேண்டியது பேதமற்றதைத்தான்.  இதுதான் மிகவும் கடினம்.  அனுபவித்தினால்தான் அறிவை அடைய முடியும்,  இந்த பிரம்மம் பிளவுபடாததாக இருக்கிறது என்று அறிமுகப்படுத்தினால் இது நம்முடைய அனுபவத்திற்கு முரணனானதாக இருக்கும்.  எனவே முதலில் அனுபவத்திலுள்ள உள்ளதை நீக்கிவிட்டு அதற்கு அப்புறம் பிரம்ம தத்துவமானது உபதேசிக்கப்படுகின்றது. அத்யாரோப அபவாதம் என்ற யுக்தியை பயன்படுத்தி இந்த ஞானத்தை உபதேசிக்கப்படுகின்றது.

ஸ்லோகம்-03
ஸ ஈக்ஶாம்சக்ரே |
கஸ்மித்தஷ்முத்க்ராந்த உத்க்ராந்தோ ப4விஷ்யாமி கஸ்மின்
        வா ப்ரதிஷ்டிதே ப்ரதிஷ்டாஸ்யாமீதி || 3 ||
இதில் பிரம்மன்  பதினாறு அவயவங்கள் தோன்றுவதற்கு நிமித்த, உபாதான காரணமாக இருக்கிறது என்ற கருத்து சொல்லப்படுகிறது.

அந்த புருஷன் ஆலோசனையை மேற்கொண்டார். எந்த ஒன்றினால் சரீரம் இயங்குவதற்கும், வெளியேறினால் ஜடமாகி விடுவதற்கும் தேவைப்படுமோ அதை சிந்தித்தார். இந்த உடலில் எது இருந்தால் அனைத்தும் உடலிலேயே இருக்குமோ அது வெளியே சென்றால் தானும் சேர்ந்து வெளியே சென்று விடுமோ அத்தகைய பிராணனை ஸ்ருஷ்டிப்பேன் என்று ஆலோசித்தது.

ஸ்லோகம்-04
ஸ ப்ராணமஸ்ருஜத |
ப்ராணாச்ச்2ரத்3தா4ம் க2ம் வாயுர்ஜ்யோதிராப: ப்ருதி2வீ~ண்த்3ரியம் மன: |
அன்னமன்னத்3வீர்யம் தபோ மந்த்ரா: கர்மலோகா: லோகேஷு ச நாம ச || 4 ||
முதலில் பிராணனை தோற்றுவித்தார்.  பிறகு சிரத்தையையும் அதையடுத்து சூட்சும, ஸ்தூல பஞ்ச பூதங்களான ஆகாசம், வாயு, அக்னி, நீர், நிலம் படைக்கபட்டது. பிறகு ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து கர்மேந்திரியங்கள், மனம் உணவு, சரீர இந்திரிய சக்திகள், தவம், வேதமந்திரங்கள், செயல்கள், கர்மபலன்கள், தோன்றிய எல்லாவற்றிற்கும் உள்ள பெயர் ஆகியவைகளும் படைக்கப்பட்டன

சிரத்தையானது அந்தக்கரணத்தின் எல்லா குணங்களும் நல்ல செயல்களை செய்வதற்கு காரணமாக இருப்பது. தவம் செய்ய வேண்டும் என்று எண்ணம் உருவாகுதல், இதனால் மனமானது தூய்மை அடைகின்றது. வேதமந்திரங்களானது இந்த உலகத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற அறிவை தரும் சாதனம், கர்மபலன்கள் எனப்து செய்த கர்மத்தினால் வரும் பலனாக அனுபவிக்கும் உலகம்.
யோகேஷு நாம –  ஞானி விதேஹ முக்தனானலும் அவன் பெயர் என்றும் அழிவதில்லை.

ஸ்லோகம்-05

ஸ யதேமா நத்ய: ஸ்யந்த3மான: ஸமுத்3ராயணா: ஸமுத்3ரம்

        ப்ராப்யாஸ்தம் க3ச்ச2ந்தி பி4த்3யதே தாஸாம் நாமரூபே ஸமுத்3ர

        இத்யேவம் ப்ரோச்யதே ஏவமேவாஸ்ய பரித்3ரஷ்டரிமா: ஷோடஶகலா:
        புருஷாயணா புருஷம் ப்ராப்யாஸ்தம் க3ச்ச2ந்தி பி4த்4யதே தாஸாம்
        நாமரூபே புருஷ இத்யேவம் ப்ரோச்யதே ஸ ஏஷோÅகலோÅம்ருதோ
        ப4வதீத தே3ஷ ஶ்லோக: || 5 ||


பலவிதமான பெயர்களுடைய, தன்மைகளுடைய நதிகள் கடலில் கலந்ததும் அவைகளின் பெயர்களும், தன்மைகளும் மறைந்து விடுகின்றன. இதுவே அபவாதம். ஓடிக் கொண்டிருக்கின்ற நதிகள் கடலை அடைவதையே லட்சியமாக கொண்டு ஓடி, அதை அடைந்து அவைகள் இல்லாமல் ஆகிவிடுகிறது. அந்த நதிகளுடைய நாமமும் ரூபமும், இல்லாமல் போய் விடுகின்றது.  நதியின் ஸ்வரூபமான நீர் அழிவதில்லை. இவைகள் கடலில் கலந்ததும் கடல் என்று அழைக்கப்படுகின்றது. இந்த உதாரணத்தை போல பிரம்ம சைதன்யத்தினுடைய இந்த பதினாறு அவயவங்களும், உலகில் உள்ள எல்லா படைப்புக்களும் பிரம்மத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.  அந்த பிரம்மத்தை அடைந்ததும் அனைத்தும் இல்லாமல் போகின்றது. அவைகளுடைய நாம-ரூபங்கள் சென்று விடுகின்றது, அழிந்து விடுகின்றது. புருஷன் மட்டும்தான் இருக்கிறார்.
இந்த புருஷன் அனைத்துக்கும் காரணமாக இருப்பவன். எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருப்பவன். இவனே சரீரத்திலுள்ள பதினாறு பகுதிகளுக்கும் ஆதாரமாக இருக்கின்றான். இவன் வேற்றுமைகளற்றவன், அவயவங்களற்றவனாக இருக்கிறான்.
நாம ரூபத்திற்கு இரண்டு நிலை உள்ளது.  அவைகள் வெளிதோற்றத்திற்கு வந்தது, வெளிதோற்றத்திற்கு வராதது என்பதாகும்.
பிரம்மன் சத்யம் இந்த நாம-ரூபம் மித்யா, இதற்கென்று சுதந்திர இருப்பு கிடையாது.  அவைகள் பிரம்மத்தையே ஆதாரமாக கொண்டிருக்கின்றது.  இந்த பிரம்மன் நித்யமாக, மரணமற்றதாக இருக்கின்றது.  பிரம்மத்திற்கும், ஜகத்திற்கும், உள்ள சம்பந்தம் சத்யம்-மித்யா என்ற சம்பந்தம்.  இந்த ஞானத்தை மேலும் விளக்குவதற்கு அடுத்து வரும் ரிக் மந்திரங்களில் கூறப்படுகின்றது.

ஸ்லோகம்-06
அரா இவ ரத2னாபௌ4 கலா யஸ்மின் ப்ரதீஷ்டிதா: |
தம் வேத்3யம் புருஷம் வேத3 யதா2 மா வோ ம்ருத்யு: பரிவ்யதா2 இதி || 6 ||
சக்கரத்தின் மையப்பகுதியில் எல்லா ஆரங்களும் இணைக்கப்பட்டு உள்ளது போல, எதனிடத்தில் அனைத்து படைப்புக்களும் இணைக்கப்பட்டுள்ளதோ அதை  யோக்யமானது என்று யார் அறிகிறார்களோ, அந்த அறிவினால் அவர்களை மரணமானது தீண்டாது.  தவறான அறிவுதான் இங்கு மரணத்திற்கு பொருளாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.  மனதில் உருவாகும் தவறான எண்ணத்தை இந்த ஆத்ம ஞானம் அழித்து விடுகின்றது.

ஸ்லோகம்-07
தான் ஹோவாச ஏதாவதே3வாஹமேதத் பரம் ப்ரஹ்ம வேத3 |
நாத: பரமஸ்தீதி || 7 ||
பரபிரம்மத்தைப்பற்றி இதுவரை என்ன உபதேசம் செய்தேனோ அதுவரைதான் எனக்குத் தெரியும். இதற்கு மேல் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது எதுவும் இல்லை.  இதன் மூலம் குருவானவர் சிஷயர்களுக்கு மனநிறைவை கொடுக்கின்றார்
ஸ்லோகம்-08
தே தமர்சயந்தஸ்த்வம் ஹி ந: பிதா
யோÅஸ்மாகமவித்யாயா: பரம் பாரம் தாரயஸீதி |
நம: பரமரிஷிப்4யோ நம: பரமரிஷிப்4ய: || 8 ||
சிஷ்யர்கள் குருவை வணங்கி, “எங்களுக்கு நீங்கள் தந்தைப்போல் இருக்கிறீர்கள். அறியாமைக் கடலில் மேலான மறுகரைக்கு எங்களை கூட்டிச் சென்றவர் தாங்களே என்று கூறினார்கள். உங்களுக்கும் உங்களைப் போன்ற  குரு-சிஷ்ய பரம்பரையில் வந்த ரிஷிகளுக்கும் எங்களது நமஸ்காரங்கள்.

ஓம் தத் ஸத்

ப்ரஶ்ண உபநிஷத் – அத்தியாயம்-1

ஸ்வாமி குருபரானந்தா உபதேச விளக்கம்

திருத்தம் செய்யப்பட்டது – 20/04/2022

http://www.poornalayam.org

முகவுரை
சாஸ்திரம் மூன்று படிகளில் ஒரு விஷயத்தை நமக்கு போதிக்கும். அவைகள்

  1. உத்தேஸஹ – சாஸ்திரம் எதைக் கூற விரும்புகிறதோ அதை முதலில் தெளிவாக எடுத்து உரைக்கும்
    2.        லட்சணம் – எதைக் கூறியதோ அதற்கு லக்ஷணத்தை சொல்லும்
    3.        பரீக்ஷா – இந்த லக்ஷணம் இந்த அறிவுடன் பொருந்துகின்றதா என்று விசாரம் செய்யும்
    ஆகியவைகளாகும்.
  • வேதாந்த சாஸ்திரத்தின் உத்தேசம் பிரஹ்ம சத்யம், ஜகத் மித்யா
    ·   பிரம்மத்தின் சத்யம், ஜகத்தின் மித்யா இவைகளின் லட்சணங்களை கூறுதல்
    ·   இவைகளை விசாரம் செய்து உறுதியான அறிவை அடைதல்

ஜகத் லட்சணம்   எவையெல்லாம் அனுபவிக்கப்படும் விஷயங்களாக இருக்கின்றதோ அவைகள் யாவும் ஜகத்தின் லட்சணம்.

மித்யா: இது ஒருவிதமான இருப்பை குறிக்கின்றது..  உ-ம் கானல் நீர்.

மித்யா லட்சணம்:

  1. அனிர்வாக்யத்வம் மித்யாத்வம்
    வாக்யம்      – வாக்கால் விளக்கப்படுவது
    நிர்வாக்யம்   – நிச்சயமாக விளக்கப்படுவது
    அநிர்வாக்யம் – வாக்கினால் நிச்சயமாக சொல்லமுடியாத தன்மை

ஸதஸத் அனதிகணத்வரூப அநிர்வாக்யத்வம் மித்யாத்வம்
   ஸதஸத் – ஸத் + அஸத்
அனதிகரணம் – ஆதாரமற்றது
ஸத்திற்கும் அஸத்திற்கும் ஆதாரமற்றதாக இருக்கும் ரூபம். எது இருக்கின்றது என்றும், இல்லையென்றும் கூறமுடியாதோ அதுதான் மித்யா. (உ-ம்) கயிற்றில் தோன்றும் பாம்பு. இதில் பாம்புக்கு மித்யாவாக இருக்கும் தன்மை இருக்கிறது.  இந்த பாம்பை ஸத் என்று சொல்ல முடியாது ஏனென்றால் அறிவு வந்தவுடன் பாம்பு மறைந்து விடுகிறது. எனவே பாம்பு இருத்தலுக்கு ஆதாரமாக சொல்ல முடியாது. மேலும் இல்லாமைக்கு பாம்பு அதிகரணமாக சொல்ல முடியாது.  காரணம் அது நமக்கு தெரிந்து கொண்டு இருக்கிறது.. எனவே பாம்பை அஸத் என்றும் சொல்ல முடியாது. எந்த ஒன்றை இருக்கின்றது என்றோ இல்லையென்றோ கூறமுடியாதோ அதுவே அனிர்வாக்யம் (மித்யா). இந்த லட்சணம் கயிற்றில் தோன்றிய பாம்புக்கு பொருந்துகிறது.

   இந்த உதாரணத்தை ஜகத்திற்கு பொருத்தி பார்க்க வேண்டும். ஜகத் இருக்கின்றது என்றோ இல்லையென்றோ சொல்ல முடியாது. ஆழ்நிலை உறக்கத்திலும், கனவு நிலையிலும் ஜகத் நீக்கப்படுகின்றது.  எந்த ஒன்றானது தொடர்ந்து இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோமோ, அப்படிப்பட்ட தன்மையுடைய எதுவுமே மித்யா என்று புரிந்து கொள்ள வேண்டும்.

பரிக்ஷா

பூ.ப-1     பிரம்மத்தை வாக்கால் விளக்க முடியாது என்று சொல்வதால், அதுவும் மித்யா என்றாகி விடுகிறதே!!

பூ.ப-2  இந்த லக்ஷணம் சூன்யத்திற்கும் பொருந்துகிறது, அஸத்திற்கும் பொருந்துகிறதே!  எனவே மித்யா என்ற சொல்லின் விளக்கம் தவறு.

பிரம்மன் அனிர்வாக்யம்தான், இருந்தாலும் இந்த லக்ஷணம் பிரம்மத்திற்கு செல்லாது ஏனென்றல் மித்யா ஸத்தும் அல்ல அஸத்தும் அல்ல, இப்படிபட்டதை வாக்கால் விளக்க முடியாது.

பதில்-1     பிரம்மம் எந்தக் குணமுமில்லாத நிர்குணமாக இருப்பதால் மித்யாவின் லக்ஷணம் பொருந்தாது.  எனவே எந்த லக்ஷணமும் சொல்ல முடியாமல் இருக்கும் அனிர்வாக்யத்வம், சப்தத்தால் விளக்கமுடியாத அனிர்வாக்யத்வம் பிரம்மத்தின் லக்ஷணம்.

பதில்-2  மித்யாவின் லக்ஷணம் அஸத்துக்கு செல்கின்றதே என்று கேட்டால், எது இருக்கிறதோ அதனிடத்தில்தான் விளக்க வேண்டியதாகிறது.  எது இருப்பது போல காட்சியளித்துக் கொண்டிருக்கிறதோ அதைத்தான் விளக்க வேண்டியதாக இருக்கிறது.  எனவே அஸத்திற்கு லக்ஷணம் பொருந்தாது.

 

மித்யாவின் 2வது லக்ஷணம்

  • யத் நிஷியத்தே தத்3 மித்யா – எது நீக்கப்படுகிறதோ அது மித்யா.
  • எந்த இடத்தில் நிஷேதம் பண்ண வேண்டிய அவசியம் ஏற்படுகிறது? எது இருப்பது போல் தோன்றுகிறதோ அப்போதுதான் அது இல்லை என்று சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது

ஜகத் பரிக்ஷா
பார்த்து கொண்டிருக்கும் இந்த உலகம் இல்லை என்று சொல்வது உண்மையா? பொய்யா? சத்தியமா (அ) மித்யாவா?

  • பொய் என்று சொன்னால் ஜகத் இருப்பது உண்மையாகி விடும்.
  • உண்மை என்று சொன்னால் ஜகத் மித்யா என்பது உறுதியாகும். இப்படி சொல்வதால் இரண்டு சத்தியங்கள் இருப்பதான நிலை ஏற்பட்டுவிடும். அதாவது பிரம்மன் சத்யம், ஜகத் சத்யம். எனவே த்வைதம் வந்துவிடும்.

நிஷேதம் – அதிகரண ரூபம்.
இது பாம்பு அல்ல – இது கயிறு
நிஷேதம் என்பதன் தாத்பர்யம் இருக்கின்றதை தெரியப்படுத்துகிறது.  ஆதாரத்தை குறிக்கின்றது.  எனவே இரண்டு சத்தியம் வருவதில்லை.

மித்யாவின் 3வது லக்ஷணம்
ஞான நிவர்த்யத்வம் மித்யாத்வம் – அடைந்த அறிவால் எது சென்று விடுமோ அதுவே மித்யா.  கயிற்றில் தெரிந்துக் கொண்டிருக்கும் பாம்பானது அது கயிறு என்ற அறிவினால்தான் மறைந்துவிடும்.  அக்ஞானத்தில் தோன்றுவது தான் ஞானத்தால் நீங்கும்.  கர்மத்தால் தோன்றுவது கர்மத்தால்தான் நீங்கும்.

பரிக்ஷா

பூ.ப    கர்மத்தினாலேயும் நான் மித்யாவை நீக்குவேன்.  பானை மித்யா என்று சொல்கிறாய், நான் அதை உடைக்கின்ற செயலால் நீக்கி விடுவேன்.  பிறகு எப்படி ஞானத்தில்தான் போகும் என்று சொல்கிறாய்?

பதில்  பானைகள் உடைவது மீண்டும் காரணத்தில் லயமடைந்து விடுகின்றது.  ஆத்யந்தக நாசம் – காரணமும் , காரியமும் நாசமடைதல், கர்மத்தால் காரண நாசத்தை ஏற்படுத்த முடியாது, மாற்றத்தைத்தான் ஏற்படுத்த முடியும். ஞானம் ஒன்றில்தான் ஆத்யந்தக நாசம் ஏற்படுத்த முடியும்.  பானையை ஒரு பொருளாக பார்த்தால் அது மித்யா.  அதன் நாம-ரூபம் மித்யாவல்ல அது சத்யம்.

எனவே பிரம்மன்தான் சத்யம், அதன் மீது தோன்றிக் கொண்டிருக்கும் இந்த ஜகத் மித்யா என்று உறுதியாகின்றது.

சாந்தி பாடம்
ஓம் ப4த்3ரம் கர்ணேபி4: ஶ்ருணுயாம தே3வா:
ப3த்3ரம் பஶ்யேமாக்ஷபி4ர்யஜத்ரா: |
ஸ்தி3ரைரங்கை3ஸ்துஷ்டுவாங் ஸஸ்தனுபி3ர்
வ்யஶேம தே3வஹிதம் யதா3யு: |
ஸ்வஸ்தி ந இந்த்3ரோ வ்ருத்3த4ஶ்ரவா:
ஸ்வஸ்தி ந: பூஷா விஶ்வ்வேதா3: |
ஸ்வஸ்தி நஸ்தார்க்ஷ்யோ அரிஷ்டனேமி:
ஸ்வஸ்தி நோ ப்3ருஹஸ்பதிர்த3தா4து ||
ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி:

ப4த்3ரம் கர்ணேபி4: ஶ்ருணுயாம தே3வா:
நாங்கள் தெய்வீகமான விஷயங்களையே கேட்க வேண்டும், உண்மையை போதிக்கும் விஷயங்களையே கேட்க வேண்டும், சாஸ்திரம் உரைக்கும் உபதேசங்களை குரு மூலம் சிரத்தையுடன் கேட்கும் வாய்ப்பை அடைய வேண்டும். அந்த உபதேசங்கள் அனைத்தும் புரிய வேண்டும், மனதில் நிற்க வேண்டும்.  இவைகள் மூலம் நாங்கள் இந்த சம்சாரத்திலிருந்து முற்றிலுமாக விடுதலையடைய வேண்டும்.

ஸ்தி3ரைரங்கை3ஸ்துஷ்டுவாங் ஸஸ்தனுபி3:
நாங்கள் உறுதியான அங்கங்களுடன் வேத மந்திரங்களால் உங்களை புகழ்ந்து கொண்டு எவ்வளவு ஆயுட்காலம் தேவர்களால் கொடுக்கப்பட்டுள்ளதோ அவ்வளவு நாட்கள் வாழ்வோமாக

ப3த்3ரம் பஶ்யேமாக்ஷபி4ர்யஜத்ரா:
தேவர்கள் எங்களை சம்சார பந்தத்திலிருந்து காப்பாற்றட்டும். ( யஜத்ரா என்ற சொல், தம்மை புகழ்பவர்களுக்கு உதவி செய்யும் ஒருவகையான தேவர்கள் என்று குறிக்கிறது.  இது ஈஸ்வரனையும் குறிப்பால் உணர்த்துகிறது.) நாங்கள் மோக்‌ஷத்தை அடைவதற்கு உதவியாக இருப்பனவற்றையே பார்க்க வேண்டும்,  மனத்தூய்மையை தரக்கூடிய விஷயங்களையே பார்க்க வேண்டும்.  பார்க்கும் அனைத்திலும் அந்த ஈஸ்வரனையே பார்க்கும் புத்தியை அடைய வேண்டும். ( வெறும் கண்ணால் பார்க்காமல், புத்தியின் துணை கொண்டு வெளி விஷயங்களை பார்க்க வேண்டும்.)

வ்யஶேம தே3வஹிதம் யதா3யு:
எங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் முழுவதும் தேவர்களை புகழ்ந்து கொண்டும், உறுதியான, நலமான, திடமான இந்திரியங்களையும், சரீரத்தையும் கொண்டு தேவர்கள் மகிழும் வண்ணம் நல்லதையே செய்து கொண்டும் வாழ வேண்டும்.

ஸ்வஸ்தி ந இந்த்3ரோ வ்ருத்3த4ஶ்ரவா:
போற்றுதலுக்கும், வணங்குதலுக்கும் உரிய தேவர்கள் எங்களுக்கு உடல்நலத்தையும், மனநலத்தையும் கொடுக்கட்டும்.

ஸ்வஸ்தி ந: பூஷா விஶ்வ்வேதா3:
அனைத்தையும் அறிகின்ற சூரியபகவான் எங்களுக்கு நல்லதையே கொடுக்கட்டும்.  அனைத்தையும் அறிகின்ற ஈஸ்வரனை சூரியனாக நினைத்து வணங்குவதால் அவருடைய அருள் முழுவதும் கிடைக்கப் பெறுவோமாக.  எங்களுடைய புத்தி பிரகாசமடைந்து அதன் மூலம் எல்லாம் வல்ல ஈஸ்வரனை புரிந்து கொள்வோமாக.

ஸ்தி3ரைரங்கை3ஸ்துஷ்டுவாங் ஸஸ்தனுபி3:
கருட பகவான் வானில் எந்தவித தடைகளில்லாமல் பறப்பது போல எங்களுக்கும் அந்த ஈஸ்வரனை அடையும் முயற்சியில் எந்தவிதமான தடைகளும் இல்லாமல் இருக்கட்டும்.

வ்யஶேம தே3வஹிதம் யதா3யு:
கருட, இந்திர தேவரின் குருவான ப்ருஹஸ்பதி எங்களுக்கு நல்லதையே அருளட்டும். ப்ருஹஸ்பதி பகவான் அறிவுக்கு கடவுளாக கருதப்படுகிறார்.  அவருடைய அனுக்கிரகமும் எங்களுக்கு கிடைக்கட்டும்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

——————————————————————————————————————————————

அத்தியாயம்01

ஸ்லோகம்01
ஓம் ஸுகேஶா ச பா4ரத்வாஜ: ஶைப்3யஶ்ச ஸத்யகாம: ஸௌர்யாயணீ
ச கார்க்3ய: கௌஸல்யஶ்சாஶ்ர்வலாயனோ பா4ர்க3வொ வைத3ர்பி4: கப3ந்தீ4
காத்யாயனஸ்தே ஹைதே ப்3ரஹ்மபரா ப்3ரஹ்மநிஷ்டா: பரம்
ப்3ரஹ்மான்வேஶமாணா ஐஷ ஹ வை தத்ஸர்வம் வக்ஷதீதி தே ஹ
ஸமித்பாணயோ ப4க3வந்தம் பிப்பலாத3முபஸன்னா: || 1 ||

ஸுகேஷ பாரத்வாஜ்                 முதல் சிஷ்யர்
ஶைப்யஹ, சத்யகாம                இரண்டாவது சிஷயர்
ஸௌர்யாயணி, கார்க்ய              மூன்றாவது சிஷ்யர்
கௌஸல்ய, ஆஸ்வாலாயன         நான்காவது சிஷ்யர்
பார்கவ, வைதர்பி                    ஐந்தாவது சிஷ்யர்
கபந்தீ, காத்யாயன்                   ஆறாவது சிஷ்யர்

ஹேதே – இவர்கள்

ப்ரஹ்ம பராஹா – ஈஸ்வரனை பரமாக கொண்டவர்கள் (கர்மயோகிகள்)
ப்ரஹ்ம நிஷ்டா  – ஈஸ்வரனை உபாஸனை செய்பவர்கள்
பரம் ப்ரஹ்ம அன்வேஷமாணா: – நிர்குண பிரம்மத்தை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
முதலிரண்டின் மூலமாக வேதாந்த உபதேசத்திற்கு தகுதி உடையவர்கள் என்று புரிந்து கொள்ளலாம்.  மூன்றாவதிலிருந்து அவர்களின் முமுக்ஷுத்வத்தை அறிந்து கொள்ளலாம்.

ஏஷ ஹ வை             – இவரே
தத் ஸர்வம்              – அனைத்தையும்
வக்ஷயதி                 – சொல்வார்
இதி                      – என்று கூறிக் கொண்டு
ஸமித் பாணி             – கைகளின் சமித்தை எடுத்துக் கொண்டு
பகவன் தம் பிப்பலாதம்  – பகவான் பிப்பலாத குருவை
உபஸன்னாஹ           – அணுகினார்கள்

ஸ்லோகம்02
தான்ஹ ஸ ரிஷிருவாச பூ4ய ஈவ தபஸா ப்3ரஹ்மசர்யேண ஶ்ரத்3த4யா
ஸம்வத்ஸரம் ஸம்வத்ஸ்யத2 யதா2காமம் ப்ரஶ்னாம் ப்ருச்ச2த யதி2 

    விக்ஞாஸ்யாம: ஸர்வம் ஹ வோ வக்ஷயாம இதி || 2 ||

ஸஹ ரிஷி தான் உவாச – அந்த முனிவர் அவர்களிடம் கூறினார்
பூய ஏவ தபஸா                 இன்னும் தவத்துடனும் (சம, தம ஆகிய தகுதிகள் வளர)
பிரம்மச்சர்யேன                 பிரம்மசர்ய விரதத்துடனும் ( குரு குல வாச நியமங்களை பின்பற்றுதல்)
ஶ்ரத்தயா                       சிரத்தையுடனும்
ஸம்வத்ஸரம்                     ஒரு வருடம்
ஸம்வத்ஸ்யத ­                 உரிய முறையில் குருவிற்கு சேவை செய்து வாருங்கள்

குருவுக்கு அருகே சென்று பணிவிடை செய்யும்போதுதான் அவர் மீது சிரத்தை வளரும்.  இதனால் அவர் கூறும் வாக்கியங்கலின் சரியான அர்த்தத்தை புரிந்து கொள்வோம்.

யதாகாமம் ப்ரஶ்னான் ப்ருச்சத      உங்கள் விருப்பப்படி கேள்விகளை கேளுங்கள்.
யதி விஞாஸ்யாம –                  எங்களுக்கு தெரிந்தால்
ஸர்வம் ஹ வை வ்க்ஷ்யாம இதி   எல்லாவற்றையும் உங்களுக்கு சொல்கிறோம்.

இது குருவிடம் இருக்கும் பணிவை காட்டுகின்றது.  அவர் ஞானநிஷ்டர் என்பதும் தெரிகின்றது.
 

ஸ்லோகம்03
அத2கப3ந்தீ4 கத்யாயன உபேத்ய பப்ரச்ச2 |
ப4க3வன் குதே ஹ வ இமா: ப்ரஜா: ப்ரஜாயந்த இதி || 3 ||

அத – ஒரு வருடத்திற்கு பிறகு கபந்தீ காத்யாயன என்ற பெயருடைய சிஷயர்
உபேத்ய ப்ப்ரச்ச    அணுகி கேட்டார்
பகவன் குதே ஹ  பகவானே! யாரிடமிருந்து, எதிலிருந்து
இமாஹா ப்ரஜா:   இந்த உயிரினங்கள்
ப்ரஜாயந்த இதி    தோன்றியுள்ளன என்று கேட்டார்.

இது ஸ்ருஷ்டியைப் பற்றியதான கேள்வி. ஸ்ருஷ்டியைப் பற்றி இரண்டு காரணத்திற்காக பேசப்படுகிறது.  அவைகள் 1. பிரம்மத்தைப் பற்றி விளக்குவது, 2. வைராக்கியத்தை அடைவது.

ஸ்லோகம்04
தஸ்னௌ ஸ ஹோவாச ப்ரஜாகாமோ வை ப்ரஜாபதி:
        தபோ  தப்யத ஸ தபஸ்தப்த்வா ஸ மிது2னமுத்பாத3யதே |
ரயிம் ச ப்ரணம் சேத்யேதௌ மே ப3ஹுதா4: கரிஷ்யத இதி || 4 ||

தஸ்மை ஸ உவாச              கேள்வி கேட்ட சிஷ்யருக்கு குரு பதிலளிக்கிறார்.
ப்ரஜாபதி                          எல்லா உயிரினங்களின் ஸ்ருஷ்டிக்கு காரணமானவர்
ப்ரஜாகாம:                        உயிரினங்களை படைக்க விரும்பினார்.
ஸ தப அதப்யத               அவர் தவத்தை மேற்கொண்டார்
ஸ தப: தபத்வா               தவத்தை முடித்த பிறகு, ( எப்படிபட்ட ஸ்ருஷ்டியை உருவாக்கலாம் என்று திட்டமிட்டார்.
ஸ மிதுனமுத்பாதயதே        இருமைகள் உற்பத்தியானது.
ரயிம் ச ப்ராணம் ச உத்யஹ   ரயி(தனம், நீர்), பிராணன் என்ற இரண்டையும் தோற்றுவித்தார்.
ஏதௌ மே பஹூதா            இந்த இரண்டும் எனக்கு பலவிதமான
ப்ரஜா கரிஷ்யத இதி             உயிரினங்களை உருவாக்கி கொடுக்கும் என்று

ஸ்லோகம்05
ஆதி3த்யோ ஹ வை ப்ராணௌ ரயிரேவ சந்த்3ரமா ரயிர்வா ஏதத்
        ஸர்வம் யன்முர்தம் சாமூர்தம் தஸ்மான்முர்திரேவ ரயி: || 5 ||

ரயி தத்துவம் – இருமைகள் இரண்டு வகையாக இருக்கின்றது. அவைகள் ஒன்றுக்கொன்று எதிராக இருப்பவைகள் (இன்ப-துன்பம்0, ஒன்றையொன்று சார்ந்திருக்கும் ( குரு-சிஷ்யன், ராக-துவேஷம் – எங்கே ராகம் இருக்கின்றதோ அங்கேதான் துவேஷம் இருக்கும்).  இங்கே ரயி என்பது அனுபவிக்கப்படும் பொருள்,  பிராணன் என்பது அனுபவிப்பவர் இவையிரண்டும்தான் முதன் முதலில் தோன்றியது.  இவைகள் ஹிரண்யகர்ப்பனிடமிருந்து தோன்றின.  எனவே இவைகள் ஒன்றாகத்தான் இருந்திருக்கின்றன.  (உ-ம்) சாப்பிடுபவனும் பஞ்ச-பூதத்தினாலானவன், சாப்பிடப்படும் உணவும் பஞ்ச-பூதத்திலானவைகள். இதிலிருந்து இரண்டும் ஒன்றுதான் என்று புரிந்து கொள்ளலாம்.

ஆதித்ய ப்ராணௌ      சூரியனே பிராணன் ( சக்தி)
சந்த்3ரம ரயி ரேவ      சந்திரன் சூரியனிடமிருந்து சக்தியை பெற்று ஒளி வீசுகிறது.
ரயி வை ஏதத்          ரயி என்பது உலகிலுள்ள அனைத்தும்
மூர்த்தம், அமூர்த்தம்    உருவமுடையதாகவும், உருவமற்றதாகவும் இருப்பது
தஸ்மாத் மூர்த்தி ரயி    ஆகவே உருவத்துடன் இருப்பது எல்லாம் ரயி, உருவமற்றதாக இருப்பதெல்லாம் பிராணன்.

காரண பார்வையில் இரண்டும் ஒன்று,  காரிய பார்வையில் இரண்டும் வேறானது ரயி, பிராணன் இந்த வார்த்தைகள் விஷயம், விஷயி என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

ஸ்லோகம்06
அதா2தி3த்ய உத3யன்யத்ப்ராசீம் தி3ஶம் ப்ரவிஶதி தேன
        ப்ராச்யான் ப்ராணான் ர்அஶ்மிஷு ஸன்னித4த்தே |
யத்த3க்ஷிணாம் யத் ப்ரதீசீம் யது3தீ3சீம் யத3தோ4
        யத3ந்தரா திஶோ யத் ஸர்ம்ம் ப்ரகாஶயதி தேன ஸர்வான் || 6 ||

எல்லாவற்றையும் வேற்றுமை பார்வையோடு பார்க்கும் நிலையில்தான் நம்முடைய புத்தி செயல்பட்டு கொண்டிருக்கின்றது.  ஆகவே இந்த புத்தியை அபேத புத்தியுடன் செயல்படுமாறு செய்ய வேண்டும்.  ஸர்வாத்ம பாவஹ என்ற அறிவுடன் நோக்கும் போது இந்த அபேத புத்தி சென்று விடும்.

அத ஆதித்ய உதயன்         பிறகு சூரியன் உதித்தது
யத் ப்ரசிம் திஶம் ப்ரவிஶதி   கிழக்கு திசையை தன்னுடைய கிரணங்களால் வியாபிக்கிறார்.
தேன ப்ராச்யான் ப்ராணான்   அதனால் கிழக்கிலுள்ள ஜீவன்களை
ரஶ்மிஷு ஸன்னித்த்தே       தன்னுடைய கிரணங்களால் தன்மயமாக்குகின்றார்.
யத் தக்ஷிணாம்                தெற்கு திசையில் ஒளிவீசும் போது
யத் ப்ரதீசீம்                     மேற்கு திசையில் ஒளிவீசும் போது
யத் உதீசீம்                   வடக்கு திசையில் ஒளிவீசும் போது
யத் அதஹ                     கீழே ஒளிவீசும் போது
யத் ஊர்த்வம்                   மேலே ஒளிவீசும் போது
யத் அந்தரா ச                  உட்பகுதிகளில் ஒளிவீசும் போது
ஸர்வம் ப்ரகாஶயதி           அனைத்தையும் ஒளிர செய்கிறது
தேன – அதனால்
ஸர்வான் ப்ராணன் ரஶ்மிஷு ஸன்னிதத்தே –  எல்லா ஜீவன்களையும் தன்மயமாக்குகிறார்.

ஸ்லோகம்07

ஸ ஏஷ வைஶ்வானரோ விஶ்வரூப: ப்ராணோ க்3னிரூத3யதே |

ததே3தத்3த3சாÅப்4யுக்தம் || 7 ||

ஸஹ ஏவ வைஶ்வானரஹ –  ஸர்வ ஜீவாத்மாவான இந்த ப்ராணன் ஆதித்யனாக இருக்கிறார். வைசுவானரன் என்றால் அனைத்து உயிரினங்களாக உள்ளவன், அனைத்து உயிர்களும் இயங்குவதற்கு ஆற்றலை அளிப்பதால் சூரியன் அனைத்து உயிர்களின் வடிவமாக போற்றப்படுகிறார்.
விஶ்வரூபஹ  – எல்லாமுமாக இருக்கின்றார் –  பிரபஞ்சமாக இருக்கின்றார்.
ப்ராணோ அக்னி உதயதே – அனைத்தையும் உட்கொள்கின்ற நெருப்பாக இருக்கின்றார்.
தத் ஏதத் ரிசா அப்யுக்தம்-  அது இவ்வாறு ரிக் வேத்தில் கூறப்பட்டுள்ளது

ஸ்லோகம்08

விஶ்வரூபம் ஹரிணம் ஜாதவேத3ஸம்

பராயணம் ஜ்யோதிரேகம் தபந்தம் |

ஸஹஸ்ர ரஸ்மி: ஶததா4 வர்தமான:

ப்ராண: ப்ரஜானாமுத3யத3யத்யேஶ ஸூர்ய: || 8 ||

விஶ்வரூபம்         அனைத்துமாக இருப்பவர்

ஹரிணம்            ஒளிக்கதிர்கள் நிறைந்தவர், எல்லாவற்றையும் தன்னுள்ளே எடுத்துக் கொள்பவர்.

ஜாதவேதஸம்        அனைத்தையும் அறிந்தவர்

பராயணம்           ஜீவர்களுக்கு ஆதாரமாக இருக்கிறார்.

ஜ்யோதிஹி         ஒளிமயமானவர்

ஏகம்                ஒருவரே

தபந்தம்               வெப்பத்தை கொடுத்து பாவங்களை போக்குகிறார்.

சூரியனை இவ்வாறாக மகான்கள் அறிகிறார்கள்.

ஸஹஸ்ர ரஶ்மி ஶததா வர்தமானஹ –   ஆயிரக்கணக்கான ஒளிக்கதிர்களுடன் நூற்றுக்கணக்கான வழிகளில் செயல்படுகிறார்.
ப்ராணா: ப்ரஜானாம்     எல்லா ஜீவராசிகளுக்கும் உயிராக இருக்கின்றவர்.
ஏஷ ஸூர்யஹ உதயதி  இப்படிபட்ட சூரியன் உதிக்கின்றார்.

ஸ்லோகம்09
ஸம்வத்ஸரோ வை ப்ரஜாபதிதஸ்யாயனே தக்ஷிணம் சோத்தரம் ச |
தத்3யே ஹ வை ததி3ஷ்டாபூர்தே க்ருதமித்யுபஸ்தே |
தே சாந்த்3ரமஸமேவ லோகமபி4ஜயந்தே |
த ஏவ புனராவர்தந்தே |
தஸ்மாதே3த ரிஷய: ப்ரஜாகாம தக்ஷிணம் ப்ரதிபத்3யந்தே |
ஏஷ ஹ வை ரயிர்ய: பித்ருயாண: || 9 ||

வேதம் உரைக்கும் கர்மத்தை முறையாக செய்து காலமானவர்கள் கிருஷ்ண கதி வழியாக சந்திரலோகம் செல்கிறார்கள்.  உபாஸனை செய்து காலமானவர்கள் சுக்லகதி வழியாக சூரியலோகம் (பிரம்ம லோகம்) செல்கிறார்கள்.

ஹிரண்யகர்ப்பன்தான் கால தத்துவமாக இருக்கின்றார்.  காலமே பிரஜாபதி.  அந்தக் காலத்திற்கு இரண்டு வழிகள் இருக்கின்றது.  அவைகள் தக்ஷிணாயணம், உத்தராயணம் என்பதாகும்.  மனிதர்களுக்குள் யார் இந்த விதத்தில் ஸ்ருதியில் சொல்லப்பட்ட கர்மங்களை செய்கிறார்களோ அவர்கள் கிருஷ்ணகதி வழியாக சந்திரலோகம் செல்கிறார்கள்.

இஷ்டம்:    அக்னிஹோத்ரம், தபம் (விரதத்தை முக்கியமாக கருதப்படுகிறது ), மற்றவர்களை சொல்லால் துன்புறுத்தாது இருத்தல், சத்யம் பேசுதல், பிராணிகளை பாதுகாத்தல், விருந்தினர்களை அன்புடன் உபசரித்தல், பறவைகளுக்கும், சிற்றுயிர்களுக்கும்  உணவளித்தல்

பூர்த்தம்     சமுதாய சேவை (ஏரி, குளம், கிணறு வெட்டுதல் ), கோயில்களை கட்டி பராமரித்தல், புதுப்பித்தல், அன்னதானம், தோட்டங்களை வளர்த்தல்

தத்தம்       பகிர்ந்து கொள்ளுதல், தானம் செய்தல், அபயம் அளித்தல் இது மிகப்பெரிய தானம், சரணடைந்தவர்களை பாதுகாத்தல், அஹிம்சையை கடைப்பிடித்தல், யாகம் செய்து கொடுத்தவர்களுக்கு வெகுமதி அளிப்பது

இந்த மூன்றையும் நன்றாகவும், சரியாகவும் கடைப்பிடித்து காலமானவர்கள் சந்திரலோகம் சென்று மீண்டும் பூலோகத்தில் பிறப்பார்கள்.  ஆகவே கர்மத்தில் நாட்டமுடையவர்கள், சந்ததியை நாடுபவர்கள் இதைக் கடைப்பிடிக்கிறார்கள்.

ஸ்லோகம்10
அதோ2த்தரேண தபஸா ப்ரஹ்மசர்யேண ஶ்ரத்3த4யா
        வித்3யயாத்மானமன்விஷ்யாதி3த்யமப்4ஜயந்தே |
ஏத்த்3வை ப்ராணானாமாயதனமேதத்3ம்ருதமப4யமேதத்
        பராயணமேதஸ்மான்ன புனராவர்த்தந்தே
இத்யேஷு நிரோத3ஸ்த தே3ஷ ஶ்லோக: || 10 ||

சிலர் உத்தராயனத்தின் வழியாக பிரம்மலோகத்திற்கு சென்று சுகத்தை அடைகிறார்கள்  வைராக்கியம் அதிகம் உள்ளவர்கள் அங்கிருந்தே கிரமமுக்தி அடையலாம்.  பிரம்மலோகம் செல்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இதில் விளக்கப்படுகின்றது.
அத                                மேலும்
தபஸா                            தவத்தால், (உடலைக் கொண்டு செய்யும் தவம்)
ப்ரஹ்மசர்யேண                  பிரம்மசர்யத்தை கடைப்பிடித்தால்,
ஶ்ரத்தயா                         செயல்பாட்டுடன் கூடிய நம்பிக்கையால்
வித்யயா                          தியானத்தால், தன்னையே உபாஸிக்கும் தேவதையாக பாவித்து செய்கின்ற தியானத்தை செய்தால்
ஆத்மானம் அன்விஷ்ய          ஆதித்ய பகவானை நாடி
ஆதித்யம் அபிஜாயந்தே         ஆதித்யனையே அடைகிறார்கள், பிரம்மலோகத்தை அடைகிறார்கள்.  உத்தராயணம் மார்க்கத்தின் வழியாக இவ்வுலகத்தை அடைகிறார்கள்
ஏத த் வை ப்ராணானாம் ஆயதனம் – இதுவே ஆற்றல்களின் உறைவிடம்
அம்ருதம், அபயம், பராயணம் – அழிவற்றது, பயமற்றது, லட்சியம்
ஏதஸ்மாத்         இந்த லோகத்திலிருந்து
புனராவர்த்தந்தே   மீண்டும் திரும்பி வருவதில்லை, பிறப்பதில்லை
இதி ஏஷ நிரோத   இந்தப் பாதையிக்கு உபாஸனை செய்யாத கர்மிகளால் செல்ல முடியாது
த்தேஷு ஶ்லோகஹ –  இதுபற்றி கீழ்வரும் ஸ்லோகமும் உள்ளது.

ஸ்லோகம்11
பஞ்சபாத3ம் பிதரம் த்3வாத3ஶாக்ருதிம் தி3வ ஆஹு: பரெ அர்தே4 புரீஷிணம் |
அதே2மே அன்ய உ பரெ விசக்ஷணம் ஸப்தசக்ரே ஷட3அ ஆஹுர்ர்பிதமிதி || 11 ||

இதில் காலமே சூரியனாக வர்ணிக்கப்படுகின்றது.
பஞ்சபாத3ம்  – ஐந்து பாதங்களை உடையது.  இங்கு பாதங்கள் என்பது பருவங்களை குறிக்கின்றது.  அவைகள் வசந்தம், கோடை, மழை, இலையுதிர், குளிர் ( முன்பனிக்காலம், பின்பனிக்காலம்).
பிதரம்  – தந்தையாக இருக்கிறார் ( வளர்வதற்கு காரணமாக இருக்கின்றார்)
த்3வாத3ஶ ஆக்ருதிம்          பன்னிரண்டு உருவங்களை உடையவர். இது 12 மாதங்களை குறிக்கின்றது
அர்தே4 பரம் தி3வே ஆஹு   மேற்பகுதியிலிருந்து மழை பொழிபவன் என்று சொல்கிறார்கள்.
அத2 விசக்ஷணம் ஸப்தசக்ரே மேலும் ஏழு சக்கரங்களுடன் ( இது ஏழு வர்ணங்களை கொண்ட வானவில்லாக கூறப்படுகிறது), ஆறு ஆரங்களுடன் (ஆறு பருவங்களுக்கு ஒப்பிடப்படுகின்றது) கூடிய தேரில் இருப்பவன்
இதி அன்யே இமே பரே         என்று வேறு சிலர் இவ்வாறு மேன்மையாக
ஆஹு:                            சொல்கிறார்கள்.

ஸ்லோகம்12
மாஸோ வை ப்ரஜாபதிஸ்தஸ்ய க்ருஷ்ணபக்ஷ ஏவ ரயி: ஶுக்ல: ப்ரணஸ்தஸ்மதேத ரிஷய: ஶுக்ல இஷ்டம் குர்வந்தீதர இதரஸ்மின் || 12 ||

மாதமும் பிரஜாபதி தத்துவம், அதில் கிருஷ்ண பக்ஷமானது (தேய்பிறை) ரயி தத்துவம் என்றும், சுக்ல பக்ஷமானது (வளர்பிறை) பிராண தத்துவம் என்றும் கூறப்படுகிறது. ஆகவே சுக்லபக்ஷத்தில் யாகங்களை மேற்கொள்கிறார்கள்

ஸ்லோகம்13
அஹோராத்ரோ வை ப்ரஜாபதிஸ்தஸ்யாஹரேவ ப்ராணோ ராத்ரிரேவ ரயி: ப்ராணம் வா ஏதே ப்ரஸ்கந்தந்தி யே தி3வா ரத்யா ஸம்யுஜ்யந்தே ப்ரஹ்மசர்யமேவ தத்3யத்3ராத்ரௌ ரத்யா ஸம்யுஜ்யந்தே || 13 ||

இரவும் பகலுமே படைப்புக் கடவுள் (பிரஜாபதி). இதில் பகலே பிராணன், இரவே ஜடம் (ரயி). யார் பகலில் உடலுறவில் ஈடுபடுகிறார்களோ அவர்கள் பிராணனை வீணாக்குகிறார்கள். இரவில் உடலுறவு கொள்வது பிரம்மச்சர்யமே..

ஸ்லோகம்14
அன்னம் வை ப்ரஜாபதிஸ்த தோ ஹ வை
  தத்3ரேதஸ்தஸ்மாதி3மா: ப்ரஜா: ப்ரஜாயந்த இதி || 14 ||

பிரஜாபதியே அன்னமாக இருக்கிறார்.  உணவிலிருந்தே வீர்யமானது உண்டாகிறது, அதிலிருந்தே உயிரினங்கள் தோன்றுகின்றன

ஸ்லோகம்15
தத்3யே ஹ வை தத் ப்ரஜாபதிவ்ரஜம் சரந்தி தே மிது2னமுத்பாத3யந்தே |
தேஷாமேவைஷ ப்ரஹ்மலோகோ யேஷாம் தபோ ப்3ரஹ்மசர்யயம்
        யேஷு ஸத்யம் ப்ரதிஷ்டிதம் || 15 ||

இல்லறத்தில் இருப்பவர்கள் படைப்புக் கடவுள் உருவாக்கிய நியதியை கடைப்பிடித்து வாழ்ந்தால் அவர்களுக்கு மகன், மகள் பிறப்பார்கள். தமக்கு வேண்டிய சுகங்களை பெறுவார்கள், இறந்த பிறகு சொர்க்கலோகத்தை அடைவார்கள்

ஸ்லோகம்16
தேஷாமஸௌ விரஜோ ப்ரஹ்மலோகோ
        ந யேஷு ஜிஹ்மமந்ருதம் ந மாய சேதி || 16 ||

இவ்வாறு ஒழுக்கநெறியுடன் வாழ்பவர்களுக்கு இறந்த பிறகு சுவர்க்க லோகம் கிடைக்கிறது.  குறைகாண்கின்ற புத்தியையுடையவர்கள், .ஏமாற்றுபவர்கள், பொய் பேசுபவர்கள், வஞ்சனை உடையவர்கள் இவர்களுக்கெல்லாம் இந்த லோகத்தை அடைய முடியாது.  நற்குணமும், கர்மங்களை ஒழுங்கான முறைப்படி செய்பவர்களால்தான் சுவர்க்கத்தை அடைய முடியும்.

—-oo000oo—-

ப்ரஶ்ண உபநிஷத் – அத்தியாயம்-02

பிராண உபாஸனையின் மகிமை

முகவுரை
அபரா வித்யா = கர்மம் + உபாஸனா
பரா வித்யா   = அக்ஷரத்தை, பிரம்மத்தை அறிய உதவும் வித்யா

ஹிரண்யகர்ப்ப உபாஸனம் விளக்கப்பட்டிருக்கிறது.  சூட்சும சரீரங்களுக்கு ஆதாரமாக இருப்பவர் ஹிரண்யகர்ப்பர்.  பிராண உபாஸனையின் பெருமையும் இதில் சொல்லப்படுகிறது

ஸ்லோகம்-01
அத2 ஹைனம் பா4ர்க4வோ வைதா3ர்பி4: பப்ரச்ச2 |
ப4கவன் கத்யேவ தே3வா: ப்ரஜாம் விதா4ரயந்தே ?
கதர ஏதத்ப்ரகாஶயந்தே ?
க: புனரேஷாம் வரிஷ்ட இதி || 1 ||
அதஹ – அடுத்ததாக
விதர்ப்ப நாட்டைச் சேர்ந்த பார்கவன் என்ற சிஷ்யர் பிப்பலாத முனிவரிடம் கேள்வி கேட்டார். பகவானே! ஒருவனுடைய சரீரத்தை எத்தனை தத்துவங்கள் இயங்கச் செய்கிறது
கதரஹ – அந்த தத்துவங்களில்
ஏதத் –    யார் யார் தன்னுடைய
ப்ரகாஶயந்தே – பெருமையை கூறிக் கொள்கின்றது, வெளிப்படுத்துகின்றன? சக்தியை இயங்க செய்கின்றன?
கஹ புனஹ ஏஷாம் வரிஷ்ட – இவைகளில் எது முக்கியமான தத்துவம்

  • 24 தத்துவங்கள் ( 5-ஞானேந்திரியங்கள், 5 கர்மேந்திரியங்கள், 5-பிராணன்கள், 4-அந்தக்கரணங்கள் (மனம், புத்தி, சித்தம், அகங்காரம்), 5-ஸ்தூல பூதங்கள்) இவைகள்தாம் இந்த சரீரம் இயங்குவதற்கு ஆதாரமாக இருக்கின்றன.
  • எல்லா தத்துவங்களும் தங்களுடைய பெருமைகளைப் பேசிக் கொண்டு இருக்கின்றன.
  • இவைகளுள் பிராணன்தான் மிக முக்கியமான தத்துவம்

ஸ்லோகம்-02
தஸ்மை ஸ ஹோவாச ஆகாஶோ ஹ வா ஏஷ தே3வோ
        வாயுரக்னிராப: ப்ருதி2வி வாங்மனஶ்சக்ஷு: ஶ்ரோத்ரம் ச |
தே ப்ரகாஶ்யாபி4வத3ந்தி வயமேத த்3வாணமவஷ்டப்4ய விதா4ராம: || 2 ||
குருவானவர் அந்த சிஷ்யனுக்கு பதிலளிக்க தொடங்கினர்.  ஆகாசம், வாயு, தண்ணீர், அக்னி, ப்ருத்வி ஆகிய பஞ்ச பூதங்களும் அபிமான தேவதைகளாக குறிப்பிடப்-படுகின்றது.  ஐந்து கர்மேந்திரியங்களின் அபிமான தேவதைகள் தங்களுடைய முக்கியத்துவத்தை பெருமையுடன் கூறிக் கொள்கின்றன. நான்கு வகையான அந்தக்கரணஙகளும் தங்கள் பெருமையைக் கூறிக்கொள்கின்றன. நாங்கள்தான் இந்த உடலை ஒருங்கிணைந்து தாங்குகின்றோம் என்று பெருமைக் கொள்கின்றன.


ஸ்லோகம்-03
தான் வரிஷ்ட: ப்ராண உவாச |
மா மோஹமாபத்3யத2 அஹமேவைதத்பஞ்சதா4த்மானம்
        ப்ரவிப4ஜ்யைதத்3 பாணமவஷ்டப்4ய
விதா4ரயாமீதிதேÅஶ்ரத்3த4தா4னா ப4பூ4வு: || 3 ||
முக்கியமான பிராண தத்துவம் மற்றவைகளை பார்த்து நீங்கள் குழப்பத்தில் ஆழ்ந்து போகாதீர்கள்.  நானே என்னை ஐந்தாக பிரித்துக் கொண்டு இந்த உடலை பாதுகாத்துக் கொண்டிருக்கின்றேன் என்று கூறியது.  இதைக் கேட்ட மற்றவைகள் பிராணனின் பேச்சை நம்பவில்லை.

ஸ்லோகம்-04
ஸோÅபி4மானாதூ3ர்த்3வமுத்க்ரமத் இவ தஸ்மினுத்க்ராமத்யதே2தரே ஸர்வ
ஏவோத்க்ராமந்தே தஸ்மின்ஶ்ச ப்ரதிஷ்ட2மானே ஸர்வம் ஏவ ப்ரதிஷ்ட2ந்தே |
தத்3யதா2 மக்ஷிகா மது4கர ராஜானமுத்ரமந்தம் ஸர்வா ஏவோத்க்ரமந்தே
தஸ்மின்ஶ்ச ப்ரதிஷ்ட2மானே ஸர்வா ஏவ ப்ரதிஷ்ட2ந்த ஏவம் வாங்மனஶ்சக்ஷு:
ஶ்ரோத்ரம் ச தே ப்ரதீதா: ப்ராணம் ஸ்துன்வந்தி || 4 ||

பிராணன் தன் முக்கியத்துவத்தை காட்டுவதற்கு உடலை விட்டு வெளியேறுவது போல காட்டியது.  அது வெளியேறியதும் மற்ற புலன்கள்  அனைத்தும் செயல் இழந்துவிட்டன.  அது நிலைபெற்றதும் அனைத்தும் செயல்படத் துவங்கின.  எவ்வாறு ராணீ தேனி கூட்டை விட்டு வெளியேறினால் மற்ற தேனீக்கள் அனைத்தும் வெளியேறுகின்றனவோ, அது அமர்ந்தால் எப்படி அவைகளும் வந்தமர்கின்றனவோ அவ்வாறு இவை நிகழ்ந்தது.  பிராணனின் பெருமையை உணர்ந்த மற்ற தத்துவங்கள் அதை துதித்தன.

ஸ்லோகம்-05
ஏஷோÅக்னிஸ்தபத்யேஶ ஸூர்ய ஏஷ பர்ஜன்யோ மக4வானேஷ வாயு: |
ஏஷ ப்ருதி3வீரயைர்தே3வ: ஸத3ஸச்சாம்ருதம் ச யத் || 5 ||

பிராணனின் பெருமையை புகழ்வதால் நாம் அடையும் நற்பண்புகளானவை,

  1. எல்லா இந்திரியங்களும் நமக்கே நல்லதாகவும், கெட்டதாகவும் செயல்படுகின்றன. ஆனால் பிராணன் மட்டும் எப்பொழுதும் நல்லதாகவே செயல்படுகின்றது.
  2. தவறான வார்த்தையை பேசுபவர்களை தவறாக நினைக்கிறோம். இவ்வாறு மற்ற இந்திரியங்கள்தான் தவறாக நடந்து கொள்கின்றன. பிராணன் என்றும் சுத்தமாகத்தான் இருக்கும். எனவே நாம் மனிதர்களை பிராணனாக பார்க்க வேண்டும். இந்திரியங்களின் செயல்களை நிராகரித்து விட வேண்டும்.
  3. பிராணனால் இயக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அனைவரும் நல்லவர்களே, புலன்களின் தவறான செயல்களை வைத்து கோபப்படாமல், பரிதாபப்பட வேண்டும்.
  4. பிராண ஸ்துதியால் ஸர்வாத்ம பாவம் நம்மிடத்தே ஏற்படும்.

இந்த பிராணனே நெருப்பாக இருந்துக்கொண்டு வெப்பத்தை கொடுக்கின்றது.  இதுவே சூரியனாகவும், மழையை கொடுக்கின்ற மேகமாகவும், வாயுவாகவும், இந்திரனாகவும், நிலமாகவும், சந்திரனாகவும் இருக்கின்றது.  இதுவே உருவமுடையதாகவும், உருவமற்றதாகவும் இருக்கின்றது, அதாவது கண்ணுக்கு தெரிந்தும், தெரியாமலும் இருக்கின்றது. இந்த பிராணனை ஸ்துதி செய்வதன் மூலம் கிரமமுக்தி அடையலாம்.

ஸ்லோகம்-06
அரா இவ ரத2னாபௌ4 ப்ராணே ஸர்வம் ப்ரதிஷ்ட2தம் |
ரிசோ யஜூம்ஷி ஸாமானி யக்ஞ: க்ஷத்ரம் ப்ரஹ்ம ச || 6 ||

பிராணனிடத்தில் அனைத்தும் சேர்ந்திருக்கின்றது.  எப்படி தேர் சக்கரத்தின் மையப்பகுதியில் எல்லா ஆரங்களும் சேர்க்கப்பட்டிருக்கின்றதோ அதுபோல நான்கு வேதங்கள், எல்லா கர்மங்கள், யாகங்கள், வீரம், அறிவு போன்றவைகள் பிராணனில் நிலைபெற்றுள்ளன.

ஸ்லோகம்-07
ப்ரஜாபதிஶ்சரஸி க3ர்பே4 த்வமேவ ப்ரதிஜாயஸே |
துப்4யம் ப்ராண ப்ரஜாஸ்த்விமா ப3லிம் ஹரந்தி ய:
ப்ராணௌ: ப்ரதிதிஷ்ட2ஸி || 7 ||

பிராணனே! கருவின் உயிராக இயங்குவதும் நீயே, பெற்றோரின் பிரதிபிம்பமாக குழந்தை வடிவில் பிறப்பதும் நீயே, உங்களுக்கு எல்லா புலன்களும் தாங்கள் கிரகிக்கும் விஷயங்களை உங்களுக்கே ஆஹுதிகளாக கொடுக்கின்றன. புலன்களில் நிலைபெற்றுள்ளதும் நீயே.

ஸ்லோகம்-08
தேவானாமஸி வஹ்னிதம: பித்ரூணாம் ப்ரத2மா ஸ்வதா4 |
ரிஷீணாம் சரிதம் ஸத்யமத2ர்வாங்கி3ரஸாமஸி || 8 ||

பிராணனே! தேவர்களுக்குள் அக்னி தேவனாக இருக்கிறீர்கள். பித்ருக்களுக்கு கொடுக்கின்ற முதல் உணவாக இருக்கின்றீர்கள். அதர்வ, அங்கிரஸ முனிவர்கள் பின்பற்றும் சத்யமாக இருக்கின்றீர்கள்.

ஸ்லோகம்-09
இந்த்3ரஸ்த்வம் ப்ராண தேஜஸா ருத்ரோ ஸிÅபரிரக்ஷிதா |
த்வம~ண்திரிக்ஷே சரஸி ஸூர்யஸ்த்வம் ஜ்யோதிஷாம் பதி: || 9 ||

நீங்கள் அனைத்துக்கும் தலைவனாக இருக்கின்றீர்கள், அனைத்தையும் அழிக்கும் சக்தியில் ருத்ரனாக இருக்கின்றீர்கள், அனைத்தையும் காப்பாற்றுபவராகவும் இருக்கின்றீர்கள், ஆகாயத்தில் உலா வருகின்ற எல்லா ஜோதிகளுக்கும் தலைவனாக இருக்கும் சூரியதேவனாக இருக்கின்றீர்கள்.

ஸ்லோகம்-10
யதா3 த்வமபி4வர்ஶஸ்யதே2மா: ப்ராண தே ப்ரஜா: |
ஆனந்தரூபாஸ்திஷ்ட2ந்தி காமாயான்னம் ப4விஷ்யதீதி || 10 ||

எல்லா உயிரினங்களின் மகிழ்ச்சிக்கும் காரணமாக இருக்கின்றீர்கள்.  எப்பொழுது மழையைக் கொடுக்கின்றீர்களோ அப்போதெல்லாம் உயிரினங்கள் அனைத்தும் வேண்டிய அளவு உணவு கிடைக்கும் என்று ஆனந்தமாக இருக்கின்றன.

ஸ்லோகம்-11
வ்ராத்யஸ்த்வம் ப்ராணைகர்ஷிரத்தா விஶ்வஸ்ய ஸத்பதி: |
வயமாத்3யஸ்ய தா3தார: பிதா த்வம் மாதரிஶ்வன: || 11 ||

பிராணனே!  நீங்கள் சாஸ்திர ஸம்ஸ்காரமற்றவன். எப்பொழுதும் தூய்மையோடு இருக்கும் உங்களுக்கு தூய்மைபடுத்த வேண்டிய அவசியமில்லை. அதர்வண வேதத்தை சார்ந்தவர்கள் பயன்படுத்தும் அக்னியாக இருந்துகொண்டு ஆஹுதிப் பொருட்களை உண்பவராக இருக்கின்றீர்கள். உலகத்துக்கே இருப்பைக் கொடுக்கின்றீர்கள்.  நாங்கள் உங்களுக்கு உணவுகளை கொடுக்கின்றோம்.  நீங்கள் ஆகாயத்தில் சஞ்சரிப்பவர், எங்களுக்கு தந்தையாக இருக்கின்றீர்கள்.

ஸ்லோகம்-12
யா தே தனூர்வாசி ப்ரதிஷ்டி2தா யா ஶ்ரோத்ரே யா ச சக்ஷஷி |
யா ச மனஸி ஸந்ததா ஶிவாம் தாம் குரு மோத்க்ரமீ: || 12 ||

எங்களுடைய வாக்கில் அபான ரூபமாகவும், காதில் வியான ரூபமாகவும், கண்களில் பிராண ரூபமாகவும், மனதில் சமான ரூபமாகவும் இருந்து கொண்டிருக்கின்றீர்கள்.  இவைகள் அனைத்தும் அமைதியாகவும், நன்றாக வேலை செய்து கொண்டிருக்கட்டும், உடலை விட்டு வெளியே செல்லாமல் இருக்கட்டும்.

ஸ்லோகம்-13
ப்ராணஸ்யேத3ம் வஶே ஸர்வம் த்ரிதி3வே யத் ப்ரதிஷ்டி2தம் |
மாதேவ புத்ரான் ரக்ஷஸ்வ ஶ்ரீஶ்ச ப்ரக்ஞாம் விதே4ஹி ந இதி || 13 ||

மூன்று உலகங்களிலும் எவையெல்லாம் உள்ளனவோ அவைகளனைத்தும் பிராணனின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. ஒரு தாய் பிள்ளைகளை காப்பது போல எங்களை காப்பாற்றுவாயாக! செல்வமும், தெளிவான புத்தியையும் எங்களுக்கு கொடுத்தருள வேண்டும்.

ப்ரஶ்ண உபநிஷத் – அத்தியாயம்-3

பிராண சக்தியின் செயல்கள்

முகவுரை
இந்த உலகத்தில் அனுபவிக்கும் அனைத்தும் நிலையானதல்ல என்ற அறிவும், மித்யா என்ற அறிவும் நமக்கு வரவேண்டும்.

ஸ்லோகம்-01
அத2 ஹைனம் கௌஸல்யஶ்சாஶ்சலாயன: பப்ரச்ச2 |
ப4க3வன் குத ஏஷ ப்ராணோ ஜாயதே கத2மாயத்யஸ்மின் ஶரீரே?
ஆத்மானம் வா ப்ரவிப4ஜ்ய கத2ம் ப்ரதிஷ்டதே?
கேனோத்க்ரமதே ?
கத2ம் பாஹ்யமபி4த4த்தே?
கத2ம் அத்4யாத்ம்மிதி || 1 ||

கௌசல்யன் என்ற அஶ்வலர் என்பவர் பிப்பலாத முனிவரிடம் கீழ்கண்ட கேள்விகள் கேட்டார்:

  1. பகவானே! எங்கிருந்து பிராணன் தோன்றியது? எந்த உபாதான, நிமித்த காரணத்தினால் பிராணன் உருவானது?
  2. எப்படி இந்தப் பிராணன் வியஷ்டியாக உடலில் புகுந்துள்ளது?
  3. எவ்விதம் பிராணன் ஐந்தாக பிரிந்து உடலை பாதுகாக்கிறது?
  4. எதன் வழியாக, எதற்காக இது உடலிலிருந்து வெளியேறுகிறது? என்ன காரணத்தினால் உடலிலிருந்து வெளியேறுகிறது? ஐந்துவித பிராணன்களில் எந்த பிராணன் வெளியேறுகிறது
  5. ஸமஷ்டி பிராணன் வெளி உலகத்தை எப்படி காப்பாற்றுகிறது
  6. வியஷ்டி பிராணன் உடலை எப்படி காப்பாற்றுகிறது? தாங்குகின்றது?

ஸ்லோகம்-02
தஸ்மை ஸ கோ3வாசாதிப்ரஶ்னான் ப்ருச்ச2ஸி
        ப்ரஹ்மிஷ்டோÅஸீதி தஸ்மாத்தேÅஹம் ப்3ரவீமி ||| ||

நீ சூட்சுமமான கேள்விகளைக் கேட்டிருக்கிறாய். உனக்கு தகுதி இருப்பதால் நான் பதிலளிக்கிறேன்.
ப்ரஹ்மிஷ்டஹ– சகுண பிரம்ம நிஷ்டையில் நீ இருப்பதால் கர்மயோக உபாஸனையால் நீ தகுதியுடையவனாக இருக்கின்றாய்.

ஸ்லோகம்-03
ஆத்மன ஏஷ ப்ராணோ ஜாயதே |
யதை2ஷா புருஷே சா2யைதஸ்மின் ஏததா3ததம் மனோக்ருதேன || 3 ||

ஆத்மாவிடமிருந்து இந்தப் பிராணன் தோன்றியுள்ளது.  இதற்கு ஆத்மாவே உபாதான காரணமாகவும், நிமித்த காரணமாகவும் இருக்கிறது.  மனிதனும் அவனது நிழலும் போல ஆத்மாவும் பிராணனும் இருக்கிறது.

பொதுவாக ஒன்றிலிருந்து உருவாகும் அனைத்திற்கும் ஒரே இருப்புத்தான் இருக்கும்.  ஆத்மா-பிராண என்ற சம்பந்தத்தில் ஆத்மாவானது சத்தியமென்றும், பிராணன் மித்யா என்றும் அறிந்து கொள்ள வேண்டும்,  ஆத்மா விவர்த்தக் காரணமாக இருந்துகொண்டு எந்த மாற்றமும் அடையாமல் அனைத்தையும் தோற்றுவித்திருக்கிறது.

பிராணன் இந்த உடலில் வருவதற்கு காரணம் மனமே. மனம் எண்ணங்களின் (சங்கல்பங்கள்) தொகுதியாக கருதப்படுகிறது.  அதுவே ஆசையாக உருவாகின்றது. சங்கல்பம் என்பது ஒன்றை அடைவதனால் வரும் பலனை திரும்ப திரும்ப நினைத்தல்.  ஆசையானது அதை அடைய செயலில் ஈடுபடுத்துகின்றது. கர்ம பலனால், பாவ-புண்ணியங்களின் வசத்தால் பிராணனானது உடலில் புகுந்துள்ளது.

ஸ்லோகம்-04
யதா2 ஸம்ராடே3வ வினியுங்க்தே |
ஏதான் க்3ராமானேதான் க்3ராமான் அதி4தி3ஷ்டஸ்வேதி
ஏவமேவைஷ ப்ராண இதரான் ப்ராணான் ப்ருத2க்ப்ருத2கே3வ
ஸன்னித4த்தே || 4 ||

எப்படி அரசன் அதிகாரிகளை நியமித்து விட்டு, அவர்களிடம் இந்தக் கிராமங்களை பாதுகாப்பீர்களாக என்று ஆணையிடுவது போல இந்தப் பிராணன் மற்ற பிராணன்களை தனித்தனியாக நியமிக்கின்றது.

ஸ்லோகம்-05
பாயூபஸ்தே3 பானம் சக்ஷு: ஶ்ரோத்ரே முக2னாஸிகாப்4யாம்
        ப்ராண: ஸ்வயம் ப்ரதிஷ்டதே மத்4யே து ஸமான: |
ஏஷ ஹ்யேதத்3து4தமன்னம் ஸமம் நயதி தஸ்மாதே3தா:
ஸப்தார்விஷோ ப4வந்தி || 5 ||

அபானன் பிராணனானது கழிவுகளை வெளியேற்றுகிறது.  கண், காது, வாய், நாசி, மூச்சுவிடுதல் போன்ற முக்கிய செயல்களை பிராணனே அந்தந்த இடங்களில் இருந்து கொண்டு செயல்படுகிறது.  சமானன் உடலின் நடுபகுதியில் இருந்துகொண்டு உணவை செரிக்கும் செயலை செய்வதால் அவர் இருப்பிடம் நாபியாகும். இதுவே உடலில் பல பகுதிகளுக்கு தேவையான அளவு சக்திகளை கொண்டு செல்கிறது.  பிராணனிலிருந்து ஏழு அக்னி ஜுவாலைகள் உண்டாகின்றன.

இந்த ஏழு ஜுவாலைகள் இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு மூக்குத் துவாரங்கள் ஒரு வாய் ஆகும்.  வயிற்றில் உள்ள அக்னியிலிருந்து எழும்புகின்ற ஜுவாலைகள் இவைகளாகும்.  இந்த உறுப்புக்கள் தாங்கள் இயங்குவதற்கான ஆற்றலை வயிற்றிலுள்ள அக்னியிலிருந்து பெறுகின்றன. உணவு என்ற ஆஹுதிப் பொருட்களை அர்ப்பிக்காவிட்டால் உடலின் உறுப்புக்கள் செயல்பட முடியாது என்பது இங்கே உணர்த்தப்படுகின்றது.

ஸ்லோகம்-06
இதி3 ஹ்யேஷ ஆத்மா |
அத்ரைததே3கஶதம் நாடீ3னாம் தாஸாம் ஶதம் ஶதமேகைகஸ்யாம்
த்வாஸப்ததிர்த்3வாஸப்ததி: ப்ரதிஶாகா2னடீஸஹஸ்ராணி ப3வந்த்யாஸு வ்யானஶ்சரதி3 || 6 ||

இதில் வியானன் என்ற பிராணனின் இருப்பிடத்தையும், செயல்பாட்டையும் சொல்லப்பட்டிருக்கிறது.  உடலில் இருக்கின்ற நாடிகள்தான் அது இருக்குமிடம். இந்த நாடிகள் உடலினுள்ளே உள்ள இதயத்திலிருந்து புறப்படுகின்றன.  இதன் வழியேதான் இரத்தத்தை எல்லா பகுதிகளுக்கும் எடுத்துச் செல்கிறது. சூட்சும சரீரம் குடி கொண்டிருக்கும் இடம் இருதயமாகும்.

இதயத்திலிருந்து 101 நாடிகள் புறப்படுகின்றன. ஒவ்வொரு பிரதான நாடிக்கும்  100 கிளை நாடிகள் உள்ளன. ஒவ்வொரு கிளை நாடிக்கும் 72000 கிளை நாடிகள் உள்ளன.  இந்த நாடிகள் அனைத்தின் வழியாகவும் வியானன் சஞ்சரிக்கின்றது.

ஸ்லோகம்-07
அதை2கயோர்த்4வ உதா3ன: புண்யேன புண்யம் லோகம் நயதி
பாபேன பாபமுபா4ப்4யாமேவ மனுஷ்யலோகம் || 7 ||

உதானன் மற்ற பிராணன்கள் செய்வதற்கு எதிராக செயல்படுகிறது.  உடலை பாதுகாப்பதற்காக உடலிலிருந்து விஷங்களை வெளியே தள்ளுகிறது.  மரண காலத்தில் சூட்சும சரீரத்தை பிரித்து எடுத்துக் கொண்டு செல்கிறது

மரணமடைந்தவனின் சூட்சும சரீரத்தை உதானனானது சுஷும்னா நாடி வழியாக மேலுலகத்திற்கு கொண்டு செல்கிறது.  புண்ணியம் செய்தவரை புண்ணிய லோகத்திற்கோ அல்லது நல்ல மனித சரீரத்திற்கோ கொண்டு செல்கிறது.  பாவ கர்மத்தை செய்தவனை பாவலோகத்திற்கோ, கீழான பிறவிகளான தாவரங்கள், பறவைகள், விலங்குகள், ஊர்வன ஆகியவற்றிற்கு கொண்டு செல்கிறது.

ஸ்லோகம்-08
ஆதி3த்யோ ஹ வை பா3ஹ்ய: ப்ராண உத3யத்யேஷ
ஹ்யேனம் சாக்ஷுஷம் ப்ராணமனுக்3ருஹ்ணான: |
ப்ருதி2வ்யாம் யா தே2வதா ஸௌஷா புருஷஸ்ய
        ஆபானமவஷ்டப்4யாந்தரா யதா2காஶ: ஸ ஸமானோ வாயுவ்யார்ன: || 8 ||


சூரியனே வெளியே உள்ள பிராணன். இதுவே நம் கண்களில் உள்ள பிராணனாகவும் செயல்பட்டு கொண்டு இருக்கிறது. பூமியாக உள்ள பிராணன் அபானன். மனித உடலிலுள்ள அபானனாக செயல்படுகிறது. இந்த ஆகாசமே சமானன் – இது மனித உடலிலுள்ள சமானனாக செயல்படுகிறது. வாயுவானது வியானன் – இது மனித உடலிலுள்ள வியானனாக செயல்படுகிறது

ஸ்லோகம்-09
தேஜோ ஹ வா உதா3னஸ்தஸ்மாத்3 உபஶாந்த தேஜா:
        புனர்ப4வமிந்த்3ரியைர்மனஸி ஸம்பத்3யமானை: || 9 ||

உதானன் அக்னி தத்துவமாக இருக்கிறது.  இறந்தவரின் எல்லா இந்திரிய சக்திகளையும் மனதில் ஒடுங்கப்பெற்று மீண்டும் பிறக்கின்றான். உதானன் வெளியேறி விடுவதால் உடலிலுள்ள உஷ்ணம் வெளியேறி குளிர்ந்து விடுகிறது.

ஸ்லோகம்-10
யச்சித் தஸ்தேனைஷ ப்ராணமாயாதி ப்ராணஸ்தேஜஸா யுக்த: |
ஸஹாத்மனா யதா2 ஸங்கல்பிதம் லோகம் நயதி || 10 ||

மரண காலத்தில் ஜீவன் எப்படிபட்ட எண்ணங்களுடன் இருக்கின்றானோ, எதை நினைத்துக் கொண்டு இருக்கின்றனோ அந்த எண்ணத்துடன் பிராணனை அடைகின்றான்.  மற்ற இந்திரிய செயல்களை இழந்து பிராண விருத்தியாக மட்டும் இருக்கின்றான்.  மனதில் ஓடிக் கொண்டிருக்கும் கடைசிகால எண்ணங்களுடன் பிராணனிடத்தில் ஒடுங்கியிருக்கும்.  இந்த பிராணன் உதானனுடன் சேர்ந்திருக்கிறது.  அந்த ஜீவனை, வாழ்க்கை முழுவதும் எதை சங்கல்பம் செய்து கொண்டிருந்தானோ அதன் அடிப்படையில் தகுதியுடைய உலகத்திற்கு கொண்டு செல்கிறது.

ஸ்லோகம்-11
ய ஏவம் வித்3வான் ப்ராணம் வேத3 |
ந ஹாஸ்ய ப்ரஜா ஹீயதே ம்ருதோ ப4வதி ததே3ஷ ஶ்லோக: || 11 ||

எந்த உபாஸகன் இவ்விதம் பிராணனை உபாஸிக்கின்றானோ அவனுடைய சந்ததி சங்கிலி ஒருபோதும் அழிவதில்லை.  இதைப்பற்றி கீழ்வரும் ஸ்லோகமும் உள்ளது.

ஸ்லோகம்-10
உத்பத்திமாயதிம் ஸ்தா2னம் விபு4த்வம் சைவ யஞ்சதா4 |
அத்4யாத்மம் சைவ ப்ராணஸ்ய விக்ஞாயாம்ருதமஶ்னுதே |
விக்ஞாயாம்ருதமஶ்னுத இதி || 12 ||

பிராணனின் தோற்றம், வரவு, இருப்பிடம், ஐந்து விதமான தலைமை செயல்கள், உடலுக்குள்ளே செயல்படும் விதத்தையும் உணர்பவன் அழிவற்ற நிலையை அடைகிறான்.
சுருக்கம்

01-02  பிராணன் எவ்வாறு செயல்படுகிறது?

03     பிராணன் எங்கிருந்து தோன்றுகிறது?

04-10  பிராணனின் செயல்பாடுகள்

11-12  பிராணனை உணர்வதனால் அடையும் பலன்

—-oo000oo—-

ப்ரஶ்ண உபநிஷத் – அத்தியாயம்-4

மனிதனின் மூன்று நிலைகள்

முகவுரை

இந்த உலகத்தில் அனுபவிக்கும் அனைத்தும் நிலையானதல்ல என்ற அறிவும், மித்யா என்ற அறிவும் நமக்கு வரவேண்டும்.

ஸ்லோகம்01
அத2 ஹைனம் ஸௌர்யாயணீ கா3ர்க்3ய: பப்ரச்ச2 |
ப4கவன்னேதஸ்மின் புருஷே கானி ஸ்வபந்தி?
கான்யஸ்மின் ஜாக்3ரதி?
கதர ஏஷ தே3வ: ஸ்வப்னான் பஶ்யதி?
கஸ்யைதத்ஸுக2ம் ப4வதி ?
கஸ்மின் ஸர்வெ ஸம்ப்ரதிஷ்டி2தா ப4வந்தீதி || 1 ||

ஸௌர்யாயணி என்கின்ற கா3ர்க்3யன் என்பவர் கீழ்கண்ட கேள்விகளை கேட்டார்:

  • பகவானே! கனவு காணும் போது எந்தெந்த இந்திரியங்கள் உறங்குகின்றன, அதாவது செயல்படுவதில்லை ?
  • எந்தெந்த இந்திரியங்கள் விழித்துக் கொண்டிருக்கின்றன. தேகத்தை பாதுகாத்துக் கொள்ள எவையெவைகள் விழித்துக் கொண்டிருக்கின்றன?
  • கனவை பார்ப்பது யார்?
  • ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள சுகமானது யாரை சார்ந்தது?
  • இவையனைத்துக்கும் ஆதாரமாக(ஸம்ப்ரதிஷ்டிதா) இருப்பது எது?

ஸ்வபந்தி               – தூங்குகின்றன
ஜாத்ரதி                  – விழித்திருக்கிறது
பஶ்யதி                  – பார்க்கிறான்
ஸம்ப்ரதிஷ்டிதா      – ஆதாரமாக இருக்கிறது

ஸ்லோகம்02
தஸ்மை ஸ ஹோவாச |
யத2 கா3ர்க்ய மரீசயோSர்கஸ்யாஸ்தம் க2ச்ச2த:
ஸர்வா ஏதஸ்மின் தேஜோமண்டல ஏகீப4வந்தி |
தா: புன: புனருத3யத: ப்ரசரந்த்யேவம் ஹ ஐ
        தத் ஸர்வம் பரெ தே3வே மனஸ்யேகீப4வதி |
தேன தர்ஹ்யேஷ புருஷோ ந ஶ்ருணோதி ந பஶ்யதி
        ந ஜிக்3ரதி ந ரஸயதே ந ஸ்ப்ருஶதே நாபி4வத3தே நாத3த்3தே3
        நானந்த3யதே ந விஸ்ருஜதே நேயாயதே ஸ்வபிதீத்யாசக்ஷேதே || 2 ||

கார்க்கியரிடம் பிப்பலாதர் கூறினார். “சூரியன் மறையும்போது எல்லா கிரணங்களும் சூரியனிடத்திலேயே ஒடுங்குகின்றன.  அது உதிக்கும்போது எல்லா கிரணங்களும் மீண்டும் வெளியே வந்து பரவுகின்றன.  அதுபோல, ஒருவன் தூங்கும்போது அவனது புலன்கள் அனைத்தும் தலைமை புலனான மனதில் ஒடுங்குகின்றன.  அப்போது அவன் பார்ப்பதில்லை, கேட்பதில்லை, முகர்வதில்லை, சுவைப்பதில்லை, உணர்வதில்லை, பேசுவதில்லை, எதையும் செய்வதில்லை, சுகத்தை அனுபவிப்பதில்லை, எதையும் வெளிவிடுவதில்லை, நகர்வதில்லை. அப்போது இவன் தூங்குகிறான் என்று கூறுகிறார்கள்.

ஸ்லோகம்03
ப்ரணாக்3னய ஏவைதஸ்மின் புரே ஜாக்3ரதி |
கா3ர்ஹபத்யோ ஹ வா ஏஷோSபானோ வ்யானோSன்வாஹார்யபசனோ
        யத்3கா3ர்ஹப்த்யாத் ப்ரணீயதே ப்ரணயனாதா3ஹவனீய: ப்ராண: || 3 ||

ஜீவன் ஸ்தூல சரீரத்தில் அபிமானம் வைத்து இந்த உலகத்தை அனுபவிக்கும் போது விஸ்வன் என்றும், சூட்சும சரீரத்தில் அபிமானம் வைத்து இந்த உலகத்தை அனுபவிக்கும் போது தைஜஸன் என்றும்,  காரண  சரீரத்தில் அபிமானம் வைத்து இந்த உலகத்தை அனுபவிக்கும் போது பிராக்ஞன் என்றும் அழைக்கப்படுகிறான்.  மூன்று நிலைகளிலும் மாறாது இருக்கும் அறிவு ஸ்வரூவத்தை துரியன் என்று அழைக்கப்படுகின்றது.

எவைகள் விழித்திருக்கின்றன என்ற கேள்விக்கு பதில் ஐந்து வித பிராணன்களும், மனமும்தான் விழித்திருக்கின்றன. இந்த ஐந்து பிராணன்களும் யாகம் செய்து கொண்டிருக்கின்றன.  பிராணன்கள் விதவிதமான அக்னிகளுக்கு உவமையாக கூறப்பட்டுள்ளன.  மனமே எஜமானனாக இருக்கிறது.  இஷ்ட பலனாக ஆழ்ந்த உறக்கம் கருதப்படுகிறது.  பிராணன் (வெளிவிடும் காற்று) ஆஹவனீய அக்னி என்றும், அபானன் (உள்ளே இழுக்கும் காற்று) கார்ஹபத்ய அக்னி என்றும், வியானன் அன்வாஹார்யபசனம் என்ற அக்னியாகவும், சமானன் யாகத்தை செய்பவனாகவும் (ஹோதா), உதானன் இஷ்ட பலனாகவும் கருதப்படுகிறது.  மனம் எஜமானனாக கற்பனை செய்யப்படுகிறது.  ஆழ்ந்த உறக்கமே சுவர்க்கலோகமாக இருக்கிறது.

அக்னிஹோத்ரியானவன் எப்பொழுதும் பாதுகாக்க வேண்டிய அக்னிக்கு கார்ஹபத்ய அக்னி என்று பெயர்.  இந்த அக்னியை இரண்டு நிலையில்தான் அணைக்க வேண்டும். அவைகள் ஒன்று அவன் சந்நியாசம் எடுக்கும் போது, மற்றொன்று அவன் மரணத்தின் போது. மற்ற யாகங்களுக்கு வேண்டிய அக்னியை இந்த கார்ஹபத்ய அக்னியிலிருந்துதான் எடுக்க வேண்டும். அதே உள்ளே போகும் காற்றிலிருந்துதான் வெளியே விடும் காற்று எடுக்கப்படுகிறது.

ஸ்லோகத்தின் பொருள்:
இந்த சரீரத்தில் அக்னிக்கு ஒப்பிடப்படுகின்ற பிராணனே நாம் தூங்கும்போதும் விழித்துக் கொண்டிருக்கிறது.  கார்ஹபத்ய அக்னி அபானனுக்கும், அன்வஹார்யபசன அக்னி வியானனுக்கும் ஒப்பிடப்படுகின்றது.  கார்ஹபத்ய அக்னியிலிருந்து உருவாக்கப்பட்டது ஆஹவனீயம். எனவே பிராணனே ஆஹவனீயமாகும்.

ஸ்லோகம்04
யது3ச்ச2வாஸனி:ஶ்வாஸௌ ஏதாவஹுதீ ஸமம் ஸ ஸமான: |
மனோ ஹ வாவ யஜமான் இஷ்டப2ல்மேவ உதான:
        ஸ ஏனம் ஜயமானம் அஹரஹர்ப்3ரஹ்ம க3மயதி || 4 ||

உள்மூச்சு, வெளிமூச்சு ஆகிய இரண்டு ஆஹுதிகளையும் சமமாக நடத்துவதால் அந்தப் பிராண சக்தி சமானன் எனப்படுகின்றது. மனமே எஜமானனாக இருக்கின்றது.  யாகத்தின் மூலம் அடையும் பலனே உதானன்.  ஏனெனில் உதானனே இந்த எஜமானனை பிரம்மத்திடம் கொண்டுபோய் சேர்க்கின்றது.  பிரம்மத்திடம் எடுத்துச் செல்வது என்பது ஆழ்ந்த உறக்கத்திற்கு எடுத்துச் செல்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும்.  ஆழ்ந்த உறக்கம்தான் பிரம்மத்தை அடைந்ததற்கு சமமாக சொல்லப்படுகின்றது.  இந்நிலையில் காரண சரீரத்தில் மட்டும் அபிமானம் இருக்கும்.

இந்த ஆழ்ந்த உறக்கத்தில் உண்மை நிலை (ஜீவத்வம்) வெளிப்படுவதில்லை. எனவே பிரம்ம பிராப்தி என்று சொல்கிறோம்.  இந்த நிலையில் அறியாமை இருந்து கொண்டிருப்பதால், விழித்ததும் மீண்டும் ஜீவத்வத்திற்கு வந்து விடுகிறான். ஆழ்ந்த உறக்கத்தில் காரண சரீரத்தை அடைந்திருக்கின்றான்.  காரண சரீரம் பிரம்மத்தை சார்ந்திருப்பதால், அவன் பிரம்மத்தை அடைந்ததாகும். உதாரணமாக வெயிலினால் பூமி சூடாக இருக்கும்போது நிழலை நாடிச் செல்கிறோம்.  ஆனால் உஷ்ணமும், நிழலும் பூமியைத்தான் சார்ந்திருக்கின்றன.
ஸ்லோகம்05

அன்னைஶ தே3வ: ஸ்வப்னே மஹிமானமனுப4வதி |
யத்3 த்3ருஷ்டம் த்3ருஷ்டமனுபஶ்யதி ஶ்ருதம் ஶ்ருதமேவார்த2மனுஶ்ருணோதி
தெஶாதி3க3ந்தரைஶ்ச ப்ரத்யனுபூ4தம் புன: புன: ப்ரத்யனுப4வதி த்3ருஷ்டம்
சாத்3ருஷ்டம் ச ஶ்ருதம் சாஶ்ருதம் சானுபூ4தம் சானனுபூ4தம் ச ஸச்சாஸச்ச
ஸர்வம் பஶ்யதி ஸர்வ: பஶ்யதி || 5 ||

கனவை பார்ப்பது யார்? அனுபவிப்பது யார்?
நம்முடைய மனம்தான் கனவை காண்கிறது.  கனவில் இந்த மனம் தன்னுடைய பெருமையையே அனுபவிக்கின்றது.  நம்முடைய மனதிலுள்ள ரகசியங்களை அனுபவிக்கும் கனவுகளாக வருகின்றது.  மனமே மனதை கனவில் அனுபவிக்கின்றது. மனதில் பதிந்துள்ள எண்ணங்களே கனவுகளாக வருகின்றது. விழிப்பு நிலையில் எதையெல்லாம் பார்த்தானோ அதையேதான் கனவில் பார்க்கின்றான்.  எதையெல்லாம் கேட்டானோ அதையேதான் கேட்கின்றான்.  விதவிதமான இடங்களில், திசைகளில், வெவ்வேறு காலத்தில் எதை அனுபவித்தானோ அதையே அனுபவிக்கின்றான்.  எதை மற்ற இந்திரியங்களால் அனுபவித்தானோ அதையேதான் மீண்டும் மீண்டும் அனுபவிக்கின்றான். முற்பிறவிகளில் பார்த்ததைம் கேட்டதையே கனவில் அனுபவிக்கின்றான்.  இந்தப் பிறவியில் பார்த்ததையும், பார்க்காததையும் கனவில் பார்க்கின்றான். இந்தப்பிறவியில் கேட்டதையும், கேட்காததையும் அனுபவிக்கின்றான். ஸத்தையும், அஸத்தையும் பார்க்கின்றான்.  எல்லாவற்றையும் பார்க்கின்றான், அனைத்துமாக இருந்து கொண்டு பார்க்கின்றான். நம்முடைய கர்மபலன்கள்தான் நம்மை இந்த ஆழ்நிலை உறக்கத்திற்கு கொண்டு செல்கிறது. ஒரு பிராரப்த பலன் முடிந்து வேறொன்று ஆரம்பிக்கும் இடைவெளியில்தான் நாம் ஆழ்நிலை உறக்கத்திற்கு செல்கின்றோம்.

ஸ்லோகம்06
ஸ யதா3 தேஜஸாபி4பூ4தோ ப4வதி அன்னைஷ தேவ: ஸ்வப்னான்
ந பஶ்யத்யத2 ததை3தஸ்மின் ஶரீரே ஏதத்ஸுக2ம் ப4வதி || 6 ||

சுஷுப்தி சுகத்தை அனுபவிப்பது யார்?
விழிப்பு, கனவு நிலையில் அனுபவிக்கும் சுகத்தில் துக்கமும் கலந்து இருக்கிறது.  நம்முடைய மனதிலுள்ள வாஸனைகள் எல்லாம் சில வகையான நாடிகளுக்குள் இருக்கின்றது.  மனமானது வாஸனைகள் இருக்கும் நாடிகளுக்குள் சென்று அங்குள்ள ஸம்ஸ்காரங்களை எடுத்து கொண்டு கனவு காண வைக்கிறது.

சுஷுப்தியில் இந்த நாடிகளுக்குள் ஜீவன் செல்ல முடியாது.  அதனால் கனவை காண முடியாது.  அவைகள் மறைக்கப்பட்டு விடுகின்றன.  அப்பொழுதுதான் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பான்.  அப்போது அவனே பிராக்ஞன் என்று அழைக்கப்படுகிறான்.  கர்மபலன்கள் இல்லாமல் இருக்கும்போதுதான் இந்நிலை ஏற்படுகிறது.  கர்மவினைதான் விஷயங்களைக் கொண்டு வந்து, நம்மை அனுபவிக்க வைக்கின்றது.  அதற்கேற்ற உலகைப்படைத்து, உடலைப்படைத்து, சூழ்நிலைகளையும் ஏற்படுத்தி கொடுக்கிறது.

ஸ்லோக பொருள்:
எவனொருவனுக்கு அக்னியால் (பித்தத்தினால்) நாடிகள் மறைக்கப்படும்போது, அவனது  மனமானது கனவை காண்பதில்லை. அந்த நிலையில் இந்த சரீரத்தில் சுஷுப்தி சுகத்தை அனுபவிக்கின்றான்.  ஆழ்ந்த உறக்கத்தை அனுபவிக்கும் சுகம். இந்த சுகத்தை பிரம்மானந்தத்திற்கு அருகில் உள்ளது போல கூறப்படுகிறது.

ஸ்லோகம்07
ஸ யதா2 ஸோம்ய வ்யாம்ஸி வாஸோவ்ருக்ஷம் ஸ்ம்ப்ரதிஷ்டந்தி
ஏவம் ஹ  வை தத் ஸர்வம் பர அத்மனி ஸம்ப்ரதிஷ்டதே || 7 ||

இவைகள் அனைத்தும் எதை ஆதாரமாக கொண்டுள்ளது?
பகலில் இரைத் தேடச் சென்ற பறவைகள் மாலையில் தங்கள் கூட்டை நாடுவது போல அவைகள் அனைத்தும் ஆத்ம தத்துவத்தில் ஒடுங்குகின்றன. நாம் பல இடங்களில் இருக்கும் போது சூழ்நிலைகளுக்கேற்ப நடந்து கொள்வோம்.  ஆனால் நம் வீட்டில்தான் நம்முடைய உண்மையான ஸ்வரூபத்தில், சௌகரியமாக இருப்போம்.  உலகத்திலுள்ள வேற்றுமைகள் எல்லாம் நீங்கி அமைதியாக இருக்குமிடம்தான் பரபிரம்மம்.  இந்த உதாரணத்தின் மூலம் அறிந்துக் கொள்ள வேண்டியது பர பிரம்மத்தில் ஒடுங்கும்போதுதான் நிரந்தரமான அமைதியுடன் இருக்க முடியும். கடலில் தோன்றி எழும் அலைகள் மீண்டும் கடலிலே கலந்துவிடுவது போல ஜீவாத்மா பரமாத்வாவிலிருந்து தோன்றி அதிலே கலந்துவிடுவதுதான் மோட்சம்.

ஸ்லோகம்08
ப்ருதி2வீ ச ப்ருதி2வீமாத்ரா சாபஶ்சாபோமாத்ரா ச தேஜஶ்ச தே ஜோமாத்ரா ச
வாயுஶ்ச வாயுமாத்ரா சாகாஶஶ்சாகாஶாமாத்ரா ச கக்ஷுஶ்ச த்3ரஷ்டவ்யம் ச ஶ்ரோத்ரம் ச ஶ்ரோதவ்யம் ச க்4ராணம் ச க்4ராதவ்யம் ச த்வக்வ
ஸ்பர்ஶயித்வ்யம் ச வாக்ச வக்தவ்யம் ச ஹஸ்தௌ சாதா3த்வ்யம்
சோபஸ்த2ஶ்சனந்த3யிதவ்யம் ச பாயுஶ்ச விஸர்ஜயிதவ்யம் ச பாதௌ ச
க3ந்தவ்யம் ச மனஶ்ச மந்தவ்யம் ச பு3த்3தி4ஶ்ச போ3த்3த4வ்யம்
சாஹம்காரஶ்சாஹம்கர்தவ்யம் ச சித்தம் ச சேதயிதவ்யம் ச தேஜஶ்ச
வித்யோதயிதவ்யம் ச ப்ராணஶ்ச விதா4ரயிதவ்யம் ச || 8 ||

நாம் அனுபவிக்கின்ற ஸ்தூல பூதங்களனைத்தும் முதலில் சூட்சும பூதங்களாக இருந்தன.  இந்திரியங்கள் அனைத்தும் மற்றும் அவைகளில் செயல்களும், அந்தக்கரணமும் அதனுடைய செயல்களும் ஆத்மாவிலேயே ஒடுங்குகின்றன

நிலமும், சூட்சும நிலமும், நீரும், சூட்சும நீரும், நெருப்பும், சூட்சும நெருப்பும், வாயுவும், சூட்சும வாயுவும், ஆகாசமும், சூட்சும ஆகாசமும் இவைகள் அனைத்தும் பரமாத்மாவில் ஒடுங்குகின்றன.  கண், பார்க்கும் செயல், காது-கேட்கும் செயல், மூக்கு-நுகரும் செயல், நாக்கு, சுவைக்கும் செயல், தோல், தொட்டுணரும் செயல் அதாவது ஞானேந்திரியங்களும் அவைகளினுடைய செயல்களும், வாய், பேசும் செயல், கைகள்-அவை செய்யும் செயல்கள், கால்கள் – நடக்கும் செயல்கள் குறி-இன்பத்தை கொடுக்கும் செயல்கள், குதம், கழிவுகளை வெளிப்படுத்தும் செயல், அதாவது கர்மேந்திரியங்களும் அவைகளின் செய்லகளும், மனமும், மனதால் நினைக்கப்படும் எண்ணங்களும், புத்தியும், புத்தியால் அறிவை அடையும் செயலும், அகங்காரமும், நான் என்ற உணர்வும், சித்தமும், எண்ணங்களை பதிய வைப்பதும், எண்ணங்களை மனதுக்கு எடுத்துக் கொடுப்பதும், ஒளி, அந்த ஒளியால் விளக்கபடுவதும், பிராணன், ஒருங்கிணைக்கப்படுவது என்ற அனைத்தும் ஆத்மாவிலேயே ஒடுங்குகின்றன.

ஸ்லோகம்09
ஏஷ ஹி த்3ரஷ்டா ஸ்ப்ரஷ்டா ஶ்ரோதா க்4ராதா ரஸயிதா மந்தா
        போத்3தா4 கர்தா விக்ஞானாத்மா புருஷ: |
ஸ பரேSக்ஷரே ஆத்மனி ஸம்ப்ரதிஷ்டதே || 9 ||

எவைகளெல்லாம் அனுபவிக்கப்படுகின்றதோ அவைகள் நானல்ல என்று சுலபமாக அறிந்து கொள்கின்றோம், அதாவது நமக்கு புறத்தே உள்ள அனைத்தும் நானல்ல என்று புரிந்து கொள்வதில் குழப்பம் இருக்காது.  ஆனால் இந்த தேகம் நானல்ல என்று புரிந்து கொள்வதுதான் மிகவும் கடினம்.

ஜீவனைப் பற்றிய விசாரம் த்ருக்-த்ருஷய விவேகம் (பார்ப்பவன் – பார்க்கப்படும் பொருள். இவையிரண்டும் வெவ்வேறாக இருக்கிறது என்று அறிந்து கொள்ள வேண்டும்.
ஈசனைப்  பற்றிய விசாரம் காரண-காரிய விவேகம்

த்ருக்-த்ருஷய விவேகம்
பார்ப்பவன் – பார்க்கப்படும் பொருள். இவையிரண்டும் வெவ்வேறாக இருக்கிறது என்பதை அறிவோம்.  இந்த சரீரம் அறியப்படும் பொருள் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.  இந்திரியங்கள், ப்ராணன்களும் அறியப்படுவதாக இருக்கிறது.  தியானம் செய்வதற்கு மனமே கருவியாகவும், விஷயமாகவும் இருக்கிறது.  எனவே மனதை இரண்டாக பிரித்து பழக வேண்டும்.  கட்டுபடுத்தப்பட்ட மனம், கட்டுபடுத்தபடாத மனம்.  இதே மாதிரி புத்தியையும் இரண்டாக பிரித்து அறிந்து கொள்கிறார்கள். அந்தகரணத்தில் இருக்கும் சிதாபாசத்தை பிரித்து பார்ப்பது கடினம்.  இதைத்தான் ஜீவன் என்று புரிந்து கொண்டு இருக்கின்றோம்.  இதுவே சுத்த சைதன்யத்தின் பிரதிபிம்பமாகும்.

மனதுடன் சேர்ந்த சிதாபாசம்தான் ஜீவன்.  ஆனால் இதை பிரதிபலிக்கின்ற சுத்த சைதன்யத்தை மறந்து விடுகின்றோம்.  நானே கர்த்தாவாகவும், போக்தாவாகவும் இருக்கின்றேன் என்ற அறிவு நமது உடலையும், மனதையும் குறிக்கின்றது என்று அறிந்து கொள்ள வேண்டும்.

நமக்குள்ளே இரண்டு அறிபவன்கள் இருக்கின்றார்கள். இந்த இரண்டையும் பிரித்து பார்க்க வேண்டும்.  எது உண்மை என்று பிரித்துணர வேண்டும்.  எந்த ஒன்று மாற்றமடையாமல் அறிபவனை அறிந்து கொண்டிருக்கிற தத்துவமானதாக இருக்கின்றதோ அதையே ஆத்மாவாக புரிந்து கொள்ள  வேண்டும்.  ஆத்மா நிர்விகார த்ரஷ்டா, சிதாபாசன் சவிகார த்ரஷ்டா, இது பரபிரம்மத்தை சார்ந்து இருக்கின்றது. (உ-ம்) பரமாத்மா சூரியன் என்றால், நீரில் தெரியும் சூரிய பிம்பம் ஜீவன் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

ஸ்லோக விளக்கம்:
இந்த சிதாபாசன் (ஜீவன்) உணர்ச்சியுடையவன், கேட்பவன், சுவைப்பவன், நுகர்ந்து பார்ப்பவன், சிந்திப்பவன், மனதில் குழப்பமுடையவன், உறுதி செய்பவன், செயல் செய்பவன் (அகங்காரம்) எல்லாவற்றையும் அறிந்து கொண்டு வாழும் ஜீவன்கள் (மனிதர்கள்) இவைகள் சேதனமானது, அறிவுடையது.  இந்த அறிவுடைய ஜீவன்தான் மேலான, அழியாத பிரம்மனாக இருக்கின்றான்.

நான் பார்ப்பவன் அல்ல, கேட்பவன் அல்ல, சிந்திப்பவன் அல்ல, இவைகளுக்கு எல்லாம் ஆதாரமாக இருப்பவன். இவைகள் இப்படி அறிவு ஸ்வரூபமாக இருப்பதற்கு காரணமாக இருப்பவன்.  நான் பார்ப்பவனும் அல்ல, பார்க்கப்படும் பொருளும் அல்ல என்ற அறிவை அடைய வேண்டும்.

ஒரு பொருளின் இருப்பை சொல்ல வேண்டுமென்றால், அதைப் பற்றிய அறிவு இருக்க வேண்டும்,  எனவே இந்த உலகத்தில் இருக்கின்ற அனைத்துக்கும், மூலக்காரணமாக இருக்கின்றேன். இந்த ஸ்லோகத்தில் ஜீவன் என்பது வாக்கியார்த்தம், ஆத்மன் என்பது லட்சியார்த்தம். ஜீவ-பிரஹ்ம ஐக்கியம் தெளிவாக விளக்கப்பட்டிருக்கின்றது.

ஸ்லோகம்10
பரமேவாக்ஷரம் ப்ரதிபத்3யதே ஸ யோ ஹவை தத3ச்சா2யம் அஶரீரம்
அலோஹிதம் ஶுப்4ரமக்ஷரம் சேத3யதெ யஸ்து ஸோம்ய ஸ ஸர்வக்ஞ:
ஸர்வோ ப4வதி ததே3ஷ ஶ்லோக: || 10 ||

பரமேவ அக்ஷரம் ப்ரதிபத்3யதே – மேலானதும், அழியாததுமான அபேதத்தை அடைகின்றான்.  சிதாபாசத்திற்கு வந்து போவதெல்லாம் என்னைச் சார்ந்தது அல்ல என்ற அறிவை அடைந்திட வேண்டும். இவனே ஞானி.
ஸஹ யஹ வை – எவன் பிரம்மத்தை அடைந்தவனோ, அவனுக்கு
தத்3 அச்சா2யம் –அவித்யா என்ற இருளற்றது, அக்ஞானம் அற்றது
அஶரீரம் – சரீரமற்றது ( இது அக்ஞானமற்றது, மூன்று சரீரங்கள் அற்றது )
அலோஹிதம் –  தர்மங்களற்றது, குணங்களற்றது. இந்த உடலும் நானல்ல, அதைச் சார்ந்த தர்மங்களும் நானல்ல.
ஶுப்4ரம் அக்ஷரம் – தூய்மையானது, அழியாதது.
வேத3யதே யஸ்து – இப்படி யார் அறிகிறார்களோ
ஸஹ ஸர்வஞஹ –  இப்படி அக்ஷரத்தை அறிந்தவன் அனைத்தையும் அறிந்தவனாகின்றான்.

நம்முடைய புத்தி எப்பொழுதும் அதை தெரிந்து கொள்ள வேண்டும், இதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அலை பாய்ந்து கொண்டிருக்கும். இவன் எல்லாம் அறிந்தவனாகி விட்டதால்,  புத்தி அமைதி அடைகின்றது. பிறகு அடைந்த அறிவில் நிறைவடைந்தவனாகின்றான்.

ஸர்வோ ப4வதி –  இவனே அனைத்துமாகின்றான்.  அனைத்து ஜீவராசிகளிலும் தன்னையே பார்த்துக் கொண்டு இருக்கின்றான். இதுபற்றி மேலும் விளக்குவதற்கு கீழே மந்திரம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

ஸ்லோகம்11
விக்ஞானாத்மா ஸஹ தே3வைஶ்ச ஸர்வை: ப்ராணா பூ4தானி
ஸம்ப்ரதிஷ்டந்தி யத்ர தத3க்ஷரம் சேத3யதே யஸ்து ஸோம்ய
ஸ ஸர்வக்ஞ: ஸர்வமேவ ஆவிவேஶேதி || 11 ||

அனைத்து இந்திரியங்களுடன் (விக்ஞானாத்மா) ஜீவாத்மா (சிதாபாcaத்துடன் இருக்கும் ஜீவன்) பிராணன்கள், 5 ஸ்தூல பூதங்கள், 5 சூட்சும பூதங்கள் இவைகள் எந்த பிரம்மனிடத்தில் சார்ந்துள்ளதோ அதுவே அந்த அழியாத ஒன்றை யார் அறிகின்றார்களோ, அவன் அனைத்தையும் அறிகின்றான், அனைத்தையும் வியாபிக்கின்றான் (ஆவிவேஶேதி)

சுருக்கம்

01     மூன்று நிலைகள் எவையென்று கூறப்படுகிறது

04-06  கனவு நிலை, தூக்க நிலை இவைகள் விளக்கப்படுகிறது

07-09  ஆத்மாவைப் பற்றிய விளக்கம்

10-11  ஆத்மாவின் பெருமையை கூறுகின்றது

ப்ரஶ்ண உபநிஷத் – அத்தியாயம்-5

ஓங்கார தியானம்

முகவுரை
இந்த உலகத்தில் அனுபவிக்கும் அனைத்தும் நிலையானதல்ல என்ற அறிவும், மித்யா என்ற அறிவும் நமக்கு வரவேண்டும்.

ஸ்லோக்ஸ-01
அத2 ஹைனம் ஶௌப்3ய: ஸத்யகாம: பப்ரச்ச2- ஸ யோ
ஹ வை தத்3ப4க3வன் மனுஷ்யேஷு ப்ராயணாந்தம்
ஓங்காரமபி4த்4யாயீத கதம் ஸ தேன லோகம் ஜ்யதீதி || 1 ||

மரணகாலம் வரை ஓங்கார உபாஸனையை செய்ய முடிந்தால் அவனது கதி என்ன?
இத்தகையவன் வைராக்கியத்தை குறைவாக அடைந்திருந்தால் அவனால் ஞானயோகத்திற்கு செல்ல முடியாது.

ஶௌப்3ய என்கின்ற ஸத்யகாமன் கேள்வியைக் கேட்கின்றான்.  பகவானே! மனிதர்களில் மரணகாலம் வரை (ப்ராயணாந்தம்) ஓங்காரத்தை தியானம் செய்து கொண்டிருக்கின்றானோ? (அவன் ஆத்ம விசாரம் செய்து ஞானயோகத்திற்கு வராமல்) அவன் அந்த தியானத்தால் எந்த உலகத்தை அடைகின்றான்.

ஓம் என்ற மந்திரத்தை விசாரம் செய்து அடையும் ஞானத்தால் பரபிரம்மத்தை அடைகின்றான்.  ஓம் என்ற மந்திரத்தை தியானம் செய்வதனால் பிரம்ம லோகத்தை அடைவான்.

ஸ்லோக்ஸ-02
தஸ்மை ஸ ஹோவாச |
ஏதத்3 வை ஸத்யகாம பரம் சாபரம் ச ப்ரஹ்ம யதோ3ங்கார: |
தஸ்மாத்3 வித்3வான் ஏதேனைவ ஆயதனேன ஏகதரமன்வேதி || 2 ||

ஓம் என்பது சகுண பிரம்மத்தையும், நிர்குண பிரம்மத்தையும் குறிக்கின்றது.  இந்த ஓங்காரமானது பர பிரம்மத்தையும், அபரா பிரம்மத்தையும் குறிக்கின்றது. எனவே ஒருவன் இந்த ஆலம்பனத்தின் துணைக் கொண்டு மேலே சொன்ன இரண்டில் ஏதோ ஒன்றை அடைகின்றான்.

ஸ்லோக்ஸ-03
ஸ யத்3யேகமாத்ரம் அபி4த்4யாயீத ஸ தேனைவ ஸம்வேதி3தஸ்தூர்ணமேவ
ஜக3த்யாமபி4ஸம்பத்3யதே தம்ருசோ மனுஷ்யலோகமுபனயந்தே ஸ தத்ர
தபஸா ப்ரஹ்மசர்யேண ஶ்ரத்3த4யா ஸம்பன்னோ மஹிமனமனுப4வதி || 3 ||

ஓம் என்ற சொல்லானது அ,உ,ம் என்ற மூன்று எழுத்துக்களின் கூட்டாகும்.  அகாரத்தை மட்டும் பிரதானமாக வைத்து ஓங்காரத்தை தியானிப்பதனால் என்ன பலன் என்று சொல்லப்படுகிறது

ஒருவன் அகாரத்தை மட்டும் தியானித்தால் அவன் அந்த தியானத்தில் ஸ்வரூபமாகவே ஆகிவிடுகின்றான், அதிலேயே ஐக்கியமாகி விடுகிறான்.  பிறகு சீக்கிரமாகவே இந்த பூமியில் மனிதனாக பிறக்கின்றான்.  அகாரத்திற்கு தேவதையான ரிக்வேதம் இந்த சாதகனை மனித சரீரத்தை அடைவதற்கு உதவுகிறது.  இப்படி மனித சரீரமெடுத்தவன் மீண்டும் தவம் செய்கின்றான்.  பிரம்மச்சர்யம் போன்ற தவத்தினால் இவனுக்கு சிரத்தை ஏற்படுகின்றது.  இதனால் மனித சரீரத்தினால் அடைய முடிகின்ற ஆனந்தத்தை அடைகின்றான்.  மனுஷ்யானந்தத்தை அனுபவிக்கின்றான்.

ஸ்லோக்ஸ-04
யதி3 த்3விமாத்ரேன மனஸி ஸம்பத்3யதெ ஸோந்தரீக்ஷம் யஜுர்பி4ருர்ஜ்ஜயதே ஸோமலோகம் ஸ ஸோமலோகே விபூ4திமனுபூ4ய புனராவர்ததே || 4 ||

இதில் உகாரத்தை மட்டும் தியானிப்பதால் அடையும் பலனாக சொர்க்கத்தை அடைவது கூறப்படுகின்றது.

இரண்டாவது எழுத்தான உகாரத்தை ஒருவன் தியானம் செய்தால் அந்த உகாரத்திலே ஐக்கியமாகி விடுவான்.  அதனால் இவனை யஜுர்வேத தேவதைகள் ஸோமலோகமான சொர்க்க லோகத்தை அனுபவிக்க தக்க உடலை கொடுக்கிறது. அதனால் சொர்க்கத்திலுள்ள சுகத்தை அனுபவிக்கின்றான்.  அவன் சொர்க்கலோகத்திலுள்ள இன்பத்தை அனுபவித்துவிட்டு மீண்டும் திரும்பி விடுகின்றான்.

ஸ்லோக்ஸ-05
ய: புனரேதம் த்ரிமாத்ரேண ஓமித்யேதேனைவ அக்ஷரேண பரம்
        புருஷமபி4த்4யாயீத ஸ தேஜஸி ஸூர்யே ஸம்பன்ன |
யதா2 பாதோ3த3ரஸ்த்வசா வினிர்முச்யத ஏவம் ஹவை ஸ பாப்மனா
        வினிர்முக்த: ஸ ஸாமபி4ருர்ன்னயதே ப்ரஹ்மலோகம் ஸ ஏதஸ்மாத்
        ஜீவக4னாத்ப்ராத்பரம் புரிஶயம் புருஷமீக்ஷதே ததே3தௌ ஶ்லோகௌ
        ப4வத: || 5 ||

இதில் மூன்று மாத்திரைகளை சேர்த்து உபாஸித்தால் அடையும் பலனான பிரம்ம லோகத்தை அடைவதை கூறுகிறது.  முழு ஓங்காரத்தை உபாஸிக்க வேண்டும்.  பிரம்மலோகத்தை அடைந்து அங்கிருந்தே கிரமமுக்தி அடைவான்.  இதனால் அவன் பாவங்களனைத்தும் நீங்கப் பெறுகின்றான்.

யாரொருவன் மூன்று மாத்திரைகளை அதாவது முழுமையான ஓங்காரத்தை தியானிக்கின்றானோ, மேலான புருஷனை தியானிக்கின்றானோ அவன் ஒளிப்பொருந்திய சூரியப் பாதையை (சுக்ல கதியை) அடைகின்றான்.  எவ்விதம் பாம்பானது தோல் சட்டையை உரித்து விட்டு செல்கின்றதோ அவ்விதம் அவன் பாவத்திலிருந்து விடுதலையடைந்து சாம வேத தேவதைகளால் பிரம்ம லோகத்திற்கு அழைத்து செல்லப்படுகிறான். அங்குள்ள இன்பத்தை அனுபவிக்காமல் வைராக்கியத்தை அடைந்து முக்தியடைகின்றான்.
ஜீவகனாத்    ஹிரண்யகர்ப்பனை காட்டிலும் மேலான எல்லா சரீரத்திற்குள்ளும் இருக்கின்ற பிரம்மத்தை அறிகின்றான்.
ஈக்ஷதே    இதுவரை கூறிய விஷயங்கள் இரண்டு ரிக் மந்திரங்களில் கூறப்பட்டிருக்கின்றது.

ஸ்லோக்ஸ-06
திஸ்ரோ மாத்ரா ம்ருத்யுமத்ய: ப்ரயுக்தா அன்யோன்யஸக்தா அனவிப்ரயுக்தா: |
க்ரியாஸு பாஹ்யாப்4யந்தரமத்4யமஸு ஸம்யக்ப்ரயுக்தாஸு ந கம்பதே ஞ: || 6 ||

திஸ்ரஹ மாத்ரா ம்ருத்யுமத்ய: மூன்று மாத்திரைகளான ஒங்காரத்தை தனித்தனியாக உச்சரிப்பதால், தியானிப்பதால் மரணத்தை கடக்க வைக்காது.

ப்ரயுக்தா:                               இது ஒருவனுக்கு தியானம் செய்வதற்கு உகந்த கரணமாக இருக்கிறது

அன்யோன்ய ஸக்தா              ஒன்றையொன்று சேர்த்து வைத்தல்.  ஓங்காரத்தை தனித்தனியாக பிரித்து உபாஸிக்கூடாது.

அனவிப்ரயுக்தா:                சரியாக பயன்படுத்தபட்டால்

ஞ ந கம்யத: ­                  இவ்வாறு ஓங்காரத்தை தியானம் செய்பவன் மரணத்தைக் கடக்கின்றான்.  பிரம்மலோகத்தை அடைகிறான்.

ஸம்யக் க்ரியாஸு             நன்றாக தியானம் செய்யும்போது.

பாஹ்ய அப்4யந்தரம் மத்4யமஸு – ஜாக்ரத், சுஷூப்தி, கனவு போன்ற நிலைகளில்

ப்ரயுக்தாஸு – அவன் வீழ்வதில்லை

ஸ்லோக்ஸ-07
ரிக்3பி4ரேதம் யஜுர்பி4ரந்தரிக்ஷம் ஸாமாபி4ர்யத்தத்கவயோ வேத3யந்தே |
தமோங்காரேணைவ ஆயதனேனான்வேதி வித்3வான் யத்தச்சா2ந்தம்
        அஜரமம்ருதமப4யம் பரம் சதி || 7 ||

ஓங்காரம் மந்திரம் நமக்கு என்னென்ன பலன்களை கொடுக்கின்றது என்பதை சுருக்கமாக விளக்கப்படுகின்றது.

அகாரத்தை உபாஸிக்கும் சாதகன் ரிக்வேத தேவதைகளால் மனிதலோகத்தை அடைகின்றான்.  உகாரத்தை தியானிக்கும் சாதகன் யஜுர் வேத தேவதைகளால் சொர்க்க லோகத்திற்கு அழைத்து செல்லப்படுகிறான்.  முழு ஓங்காரத்தையே தியானம் செய்யும் சாதகன் சாமவேத தேவதைகளால் ரிஷிகளால் அறியப்படும் பிரம்மலோகத்திற்கு அழைத்து செல்லப்படுகிறான்.  எதுவானது துயரமில்லாதாக, அழியாததாக, காலமற்றதாக, மரணமற்றதாக, பயமற்றதாக இருக்கின்றதோ அதை ஞானியானவன் அடைகின்றான்.

சுருக்கம்

01-02  ஓங்கார தியானத்தின் இரண்டு பரிமாணங்கள்

03-05  உயர் பரிமாண ஓங்கார தியானத்தின் வகைகளும், பலன்களும்

06-07  மூன்று வகை தியானங்களின் பலன்

ப்ரஶ்ண உபநிஷத் – அத்தியாயம்-6

ஆத்மாவின் பெருமை

முகவுரை

இந்த உலகத்தில் அனுபவிக்கும் அனைத்தும் நிலையானதல்ல என்ற அறிவும், மித்யா என்ற அறிவும் நமக்கு வரவேண்டும்.

ஸ்லோகம்-01
அத2 ஹைனம் ஸுகேஶா பா4ரத்3வாஜ: பப்ரச்ச2 |
பகவன் ஹிரண்யனாப4: கௌஸல்யோ ராஜயுத்ரௌ
        மாமுபெத்யைதம் ப்ரஶ்னமப்ருச்ச2தஷோடஶகலம்
        பாரத்3வாஜ புருஷம் வேத்த2: |
ஹமஹம் குமாரமப்ருவம் நாஹமிமம் வேத
யத்3யாஹமிமமவேதிஷம் கத2ம் தெ நாவக்ஷ்யாமிதி |
ஸமூலோ வா ஏஷ வரிஶுஷ்யதி யோÅந்ருதம்பி4வத3தி |
தஸ்மான்னார்ஹாம்யந்ருதம் வக்தும் |
ஸ தூஷ்ர்ணீம் ரத2மாருஹ்ய ப்ரவவ்ராஜ |
தம் த்வா ப்ருச்சா2மி க்வாஸௌ புருஷ இதி || 1 ||

பரத்வாஜ என்கின்ற ஸுகேஶா என்ற சிஷ்யர் குருவிடம் கேள்வி கேட்கலானார்.
பகவானே! ஹிரண்யநாப என்கின்ற கோசல நாடு இளவரசன் என்னிடம், “பதினாறு அங்கங்களுடைய புருஷனை உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்டார்.  அதற்கு நான்,  எனக்கு தெரியாது, தெரிந்திருந்தால் உங்களிடம் எப்படிச் சொல்லாமல் இருப்பேன்! எனவே பொய் சொல்வதற்கு எனக்குத் துணிவில்லை” என்று கூறினேன்.  இதைக் கேட்டதும் அவர் அமைதியாகத் தேரில் ஏறிப்போய்விட்டார்.  “அந்த நபர் யார்? அவர் எங்கே இருக்கின்றார்” என்ற அந்தக் கேள்வியை இப்போது நான் உங்களிடம் கேட்கிறேன்.

ஸ்லோகம்-02
தஸ்மை ஸ ஹோவாச |
இஹைவாந்த: ஶரீரே ஸோம்ய ஸ புருஷோ யஸ்மின்னேதா:
        ஷோடஶகலா: ப்ரப4வந்தீதீ || 2 ||

அந்த சிஷ்யருக்கு குருவானவர் கூறினார்:  “இனியவனே! அந்த நபர் ஆத்மா.  ஆத்மா இங்கே நம் உடம்பின் உள்ளேயே உள்ளது. அதனிடமிருந்தே பதினாறு பகுதிகள் தோன்றுகின்றன.

விசாரம்:
நிர்குண பிரம்மன்தான் அந்த புருஷன். இதற்கு லட்சணம் பிளவுப்படாதது, அவயவங்களற்றது. அங்கங்களுடையதெல்லாம் வரையறுக்கப்பட்டதாக இருக்கும். இந்த உலகத்தில் நாம் வேற்றுமையைத்தான் அனுபவித்துக் கொண்டு இருக்கின்றோம்.  எல்லாமே வெவ்வேறாக இருக்கின்றது.  நம்முடைய மனதில் அபேத ஸம்ஸ்காரம்தான் இருக்கிறது.  நாம் புரிந்து கொள்ள வேண்டியது பேதமற்றதைத்தான்.  இதுதான் மிகவும் கடினம்.  அனுபவித்தினால்தான் அறிவை அடைய முடியும்,  இந்த பிரம்மம் பிளவுபடாததாக இருக்கிறது என்று அறிமுகப்படுத்தினால் இது நம்முடைய அனுபவத்திற்கு முரணனானதாக இருக்கும்.  எனவே முதலில் அனுபவத்திலுள்ள உள்ளதை நீக்கிவிட்டு அதற்கு அப்புறம் பிரம்ம தத்துவமானது உபதேசிக்கப்படுகின்றது. அத்யாரோப அபவாதம் என்ற யுக்தியை பயன்படுத்தி இந்த ஞானத்தை உபதேசிக்கப்படுகின்றது.

ஸ்லோகம்-03
ஸ ஈக்ஶாம்சக்ரே |
கஸ்மித்தஷ்முத்க்ராந்த உத்க்ராந்தோ ப4விஷ்யாமி கஸ்மின்
        வா ப்ரதிஷ்டிதே ப்ரதிஷ்டாஸ்யாமீதி || 3 ||

இதில் பிரம்மன்  பதினாறு அவயவங்கள் தோன்றுவதற்கு நிமித்த, உபாதான காரணமாக இருக்கிறது என்ற கருத்து சொல்லப்படுகிறது.

அந்த புருஷன் ஆலோசனையை மேற்கொண்டார். எந்த ஒன்றினால் சரீரம் இயங்குவதற்கும், வெளியேறினால் ஜடமாகி விடுவதற்கும் தேவைப்படுமோ அதை சிந்தித்தார். இந்த உடலில் எது இருந்தால் அனைத்தும் உடலிலேயே இருக்குமோ அது வெளியே சென்றால் தானும் சேர்ந்து வெளியே சென்று விடுமோ அத்தகைய பிராணனை ஸ்ருஷ்டிப்பேன் என்று ஆலோசித்தது.

ஸ்லோகம்-04
ஸ ப்ராணமஸ்ருஜத |
ப்ராணாச்ச்2ரத்3தா4ம் க2ம் வாயுர்ஜ்யோதிராப: ப்ருதி2வீ~ண்த்3ரியம் மன: |
அன்னமன்னத்3வீர்யம் தபோ மந்த்ரா: கர்மலோகா: லோகேஷு ச நாம ச || 4 ||

முதலில் பிராணனை தோற்றுவித்தார்.  பிறகு சிரத்தையையும் அதையடுத்து சூட்சும, ஸ்தூல பஞ்ச பூதங்களான ஆகாசம், வாயு, அக்னி, நீர், நிலம் படைக்கபட்டது. பிறகு ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து கர்மேந்திரியங்கள், மனம் உணவு, சரீர இந்திரிய சக்திகள், தவம், வேதமந்திரங்கள், செயல்கள், கர்மபலன்கள், தோன்றிய எல்லாவற்றிற்கும் உள்ள பெயர் ஆகியவைகளும் படைக்கப்பட்டன

சிரத்தையானது அந்தக்கரணத்தின் எல்லா குணங்களும் நல்ல செயல்களை செய்வதற்கு காரணமாக இருப்பது. தவம் செய்ய வேண்டும் என்று எண்ணம் உருவாகுதல், இதனால் மனமானது தூய்மை அடைகின்றது. வேதமந்திரங்களானது இந்த உலகத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற அறிவை தரும் சாதனம், கர்மபலன்கள் எனப்து செய்த கர்மத்தினால் வரும் பலனாக அனுபவிக்கும் உலகம்.
யோகேஷு நாம –  ஞானி விதேஹ முக்தனானலும் அவன் பெயர் என்றும் அழிவதில்லை.

ஸ்லோகம்-05
ஸ யதேமா நத்ய: ஸ்யந்த3மான: ஸமுத்3ராயணா: ஸமுத்3ரம்
        ப்ராப்யாஸ்தம் க3ச்ச2ந்தி பி4த்3யதே தாஸாம் நாமரூபே ஸமுத்3ர
        இத்யேவம் ப்ரோச்யதே ஏவமேவாஸ்ய பரித்3ரஷ்டரிமா: ஷோடஶகலா:
        புருஷாயணா புருஷம் ப்ராப்யாஸ்தம் க3ச்ச2ந்தி பி4த்4யதே தாஸாம்
        நாமரூபே புருஷ இத்யேவம் ப்ரோச்யதே ஸ ஏஷோÅகலோÅம்ருதோ
        ப4வதீத தே3ஷ ஶ்லோக: || 5 ||

பலவிதமான பெயர்களுடைய, தன்மைகளுடைய நதிகள் கடலில் கலந்ததும் அவைகளின் பெயர்களும், தன்மைகளும் மறைந்து விடுகின்றன. இதுவே அபவாதம். ஓடிக் கொண்டிருக்கின்ற நதிகள் கடலை அடைவதையே லட்சியமாக கொண்டு ஓடி, அதை அடைந்து அவைகள் இல்லாமல் ஆகிவிடுகிறது. அந்த நதிகளுடைய நாமமும் ரூபமும், இல்லாமல் போய் விடுகின்றது.  நதியின் ஸ்வரூபமான நீர் அழிவதில்லை. இவைகள் கடலில் கலந்ததும் கடல் என்று அழைக்கப்படுகின்றது. இந்த உதாரணத்தை போல பிரம்ம சைதன்யத்தினுடைய இந்த பதினாறு அவயவங்களும், உலகில் உள்ள எல்லா படைப்புக்களும் பிரம்மத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.  அந்த பிரம்மத்தை அடைந்ததும் அனைத்தும் இல்லாமல் போகின்றது. அவைகளுடைய நாம-ரூபங்கள் சென்று விடுகின்றது, அழிந்து விடுகின்றது. புருஷன் மட்டும்தான் இருக்கிறார்.

இந்த புருஷன் அனைத்துக்கும் காரணமாக இருப்பவன். எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருப்பவன். இவனே சரீரத்திலுள்ள பதினாறு பகுதிகளுக்கும் ஆதாரமாக இருக்கின்றான். இவன் வேற்றுமைகளற்றவன், அவயவங்களற்றவனாக இருக்கிறான்.

நாம ரூபத்திற்கு இரண்டு நிலை உள்ளது.  அவைகள் வெளிதோற்றத்திற்கு வந்தது, வெளிதோற்றத்திற்கு வராதது என்பதாகும்.

பிரம்மன் சத்யம் இந்த நாம-ரூபம் மித்யா, இதற்கென்று சுதந்திர இருப்பு கிடையாது.  அவைகள் பிரம்மத்தையே ஆதாரமாக கொண்டிருக்கின்றது.  இந்த பிரம்மன் நித்யமாக, மரணமற்றதாக இருக்கின்றது.  பிரம்மத்திற்கும், ஜகத்திற்கும், உள்ள சம்பந்தம் சத்யம்-மித்யா என்ற சம்பந்தம்.  இந்த ஞானத்தை மேலும் விளக்குவதற்கு அடுத்து வரும் ரிக் மந்திரங்களில் கூறப்படுகின்றது.

ஸ்லோகம்-06
அரா இவ ரத2னாபௌ4 கலா யஸ்மின் ப்ரதீஷ்டிதா: |
தம் வேத்3யம் புருஷம் வேத3 யதா2 மா வோ ம்ருத்யு: பரிவ்யதா2 இதி || 6 ||

சக்கரத்தின் மையப்பகுதியில் எல்லா ஆரங்களும் இணைக்கப்பட்டு உள்ளது போல, எதனிடத்தில் அனைத்து படைப்புக்களும் இணைக்கப்பட்டுள்ளதோ அதை  யோக்யமானது என்று யார் அறிகிறார்களோ, அந்த அறிவினால் அவர்களை மரணமானது தீண்டாது.  தவறான அறிவுதான் இங்கு மரணத்திற்கு பொருளாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.  மனதில் உருவாகும் தவறான எண்ணத்தை இந்த ஆத்ம ஞானம் அழித்து விடுகின்றது.

ஸ்லோகம்-07
தான் ஹோவாச ஏதாவதே3வாஹமேதத் பரம் ப்ரஹ்ம வேத3 |
நாத: பரமஸ்தீதி || 7 ||

பரபிரம்மத்தைப்பற்றி இதுவரை என்ன உபதேசம் செய்தேனோ அதுவரைதான் எனக்குத் தெரியும். இதற்கு மேல் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது எதுவும் இல்லை.  இதன் மூலம் குருவானவர் சிஷயர்களுக்கு மனநிறைவை கொடுக்கின்றார்

ஸ்லோகம்-08
தே தமர்சயந்தஸ்த்வம் ஹி ந: பிதா
யோÅஸ்மாகமவித்யாயா: பரம் பாரம் தாரயஸீதி |
நம: பரமரிஷிப்4யோ நம: பரமரிஷிப்4ய: || 8 ||

சிஷ்யர்கள் குருவை வணங்கி, “எங்களுக்கு நீங்கள் தந்தைப்போல் இருக்கிறீர்கள். அறியாமைக் கடலில் மேலான மறுகரைக்கு எங்களை கூட்டிச் சென்றவர் தாங்களே என்று கூறினார்கள். உங்களுக்கும் உங்களைப் போன்ற  குரு-சிஷ்ய பரம்பரையில் வந்த ரிஷிகளுக்கும் எங்களது நமஸ்காரங்கள்.

ஓம் தத் ஸத்

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

தைத்திரீய உபநிஷத் அத்தியாயம்-1-2-3-(சீக்ஷாவல்லி)-அத்தியாயம்-1-2-3(ப்ரஹ்மானந்தவல்லி)-அத்தியாயம்-1(பிருகுவல்லி)-

December 25, 2022

தைத்திரீய உபநிஷத்

அத்தியாயம்-01(சீக்ஷாவல்லி )

முகவுரை
மனனம்
சிரவணத்தை தொடர்ந்து செய்வது மனனம் என்ற சாதனம்.  சிரவணம் செய்தவன் ஜீவ-ஈஸ்வர ஐக்கியத்தை நன்கு புரிந்து கொண்டு, ஆத்மாவாகிய நான் பூரணமானவன், ஆனந்த ஸ்வரூபமானவன், ஸத் ஸ்வரூபமானவன், ஞான ஸ்வரூபமானவன் என்ற நிலையில் இருப்பான். இந்த உலகமும் மித்யா என்ற அறிவும் ஏற்பட்டிருக்கும்.

  • யுக்திபூர்வமாக சிந்தித்தலே இவ்வாறு அழைக்கப்படுகின்றது.  சிரவணத்தில் அடைந்த அறிவில் இருக்கும் சந்தேகங்களை நீக்கிக் கொள்வதற்காக செய்யப்படும் விசாரமே இதுவாகும்.
  • இதை ஏன் செய்ய வேண்டுமென்றால், சிரவணத்தால் அடைந்திருக்கும் அறிவில் நிச்சயமாக சில சந்தேகங்கள் இருக்கும்.  இவைகளை நீக்கி அடைந்த அறிவில் உறுதியாக இருக்க இந்த சாதனம் உதவும். எப்பொழுதும் சந்தேகங்களில்லாத அறிவே நிலையான, மாறாத, சரியான அறிவாக இருக்கும்.
  • சந்தேகம் எப்படி எழுகின்றதென்றால், ஒரு விஷயத்தில் ஒரு பிரமாணத்தின் மூலமாக அடையும் அறிவும், அதே விஷயத்தில் வேறொரு பிரமாணம் மூலம் வேறொரு அறிவை அடைவதன் மூலம் சந்தேகம் எழுகின்றன.  உபநிஷத் பிரமாணம் நான் பூரணமானவன், ஆனந்த ஸ்வரூபமானவன் என்று கூறுகிறது, ஆனால் நம்முடைய அனுபவ பிரமாணம் மூலமாக துக்க ஸ்வரூபமாகவும், அழிவுக்குட்பட்டவனாகவும் இருக்கின்ற நிலையை அறிந்திருக்கின்றோம்.  ஜகத் மித்யா என்பது உபநிஷத் ஞானம், நம்முடைய பிரத்யக்‌ஷ பிரமாணம் ஜகத் உண்மை என்று உணர்த்துகின்றது.  இந்த முரண்பாட்டை தீர்த்துக் கொள்ள வேண்டும்.
  • சங்கராச்சாரியார் ஜீவனும் ஈஸ்வரனும் ஒன்றுதான் என்று உபதேசிக்கின்றார் ஆனால் வேறு சில ஆச்சார்யார்கள் ஜீவனும் ஈஸ்வரனும் வேறு என்று உபதேசிக்கின்றனர். இவர்கள் அனைவரும் உபநிஷத்தைத்தான் பிரமாணமாக கொண்டு இவ்வாறு கூறுகின்றார்கள். இந்த முரண்பாட்டை இந்த சாதனத்தின் மூலமாகத்தான் தீர்த்துக் கொண்டு, அடைந்த அறிவில் நிலைப்பட முடியும்

சாஸ்திர அறிவுக்கு விரோதமாக அனுபவ அறிவு இருப்பதை பற்றிய விசாரம்:
உபநிஷத் நாம் ஏற்கனவே சம்சாரியாக இருக்கிறோம் என்று தெரிந்தே நீ பூரணமானவன் என்று சொல்கின்றது.  அவ்விதம் சொல்லும்போது மூன்று சரீரத்தை நீக்கித்தான் நமக்கு உபதேசிக்கின்றது.  ஆனால் நாம் இந்த சரீரத்தைத்தான் நான் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.  உபநிஷத் நம்மை இந்த மூன்று சரீரங்களை நீக்கி விட்டு, நீ யார் என்று புரிந்து கொள் என்று உபதேசிக்கின்றது.  இவ்விதம் இந்த முரண்பாட்டை நீக்கி கொள்ள வேண்டும்.

இந்த உலகம் மித்யா, நாம-ரூபமானது.  நம்முடைய அனுபவத்தில் எல்லாமே நன்றாக ஸ்தூலமாக தெரிந்து கொண்டிருக்கின்றது.  இவைகள் எனக்கு எப்படி நிறைவை கொடுக்க முடியாது?  என்னால் அனுபவிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது, சுக-துக்கங்களை கொடுத்துக் கொண்டு இருக்கின்றது.  அனுபவத்தில் சத்யமாக தெரிகின்றது.  இந்த சந்தேகத்தை இரண்டு விதத்தில் நீக்கி கொள்ளலாம்.  சாஸ்திரம் உலகம் இல்லை என்று சொல்லவில்லை, இருப்பது போல் தோன்றி கொண்டிருக்கின்றது என்று கூறுகின்றது., அதை விசாரம் செய்துதான் மித்யா என்று புரிந்து கொள்ள வேண்டும்.

நம் இந்திரியங்களை உண்மையை உரைக்கும் பிரமாணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.  உபநிஷத்தைத்தான் பிரமாணமாக இந்த விஷயத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.  ஒரு பிரமாணம் கொடுக்கும் அறிவை வேறொரு பிரமாணத்தால் நிரூபிக்க முடியாது.  கண்ணால் பார்ப்பவைகளை காதால் நிரூபிக்க முடியாது.  மாற்ற முடியாது.  அல்லது கண்ணுக்கு துணை புரியவும் முடியாது.  ஒரு பிரமாணத்திற்கு, வேறொரு பிரமாணம் ஆபாஸமாக இருக்கும் போது சந்தேகம் வரும்.  எனவே விசாரம் செய்து பிரமாண ஆபாஸத்தை கண்டுபிடித்து தெரிந்து கொள்ள வேண்டும்.  உபநிஷத்தான் உண்மையான பிரமாணம், ஞானேந்திரியங்கள்தான் பிரமாண ஆபாஸம் என்று விசாரம் மூலமாக புரிந்து கொள்ள வேண்டும்.

ஞானேந்திரியங்கள் உண்மையான பிரமாணம்தான்.  கண் ஒரு பொருளை பார்க்கின்றது.  அதன் வடிவம் மனதில் பதிவாகின்றது.  கண் பொருளின் இருப்பை காட்டுகின்றது.  நம் மனம் அதை தீர்மானிக்கின்றது.  அது சத்யமா, மித்யாவை என்பதை மனம்தான் தீர்மானிக்கின்றது..  கண் கானல் நீரையும், உண்மையான நீரையும் காட்டுகின்றது.  எது உண்மையான நீர், எது பொய்யான நீர் என்பதை மனம்தான் புத்தி துணைக்கொண்டு தீர்மானிக்கிறது.  எனவே ஞானேந்திரியங்கள் உலகத்தை வெறும் காட்சியாகத்தான் காட்டுகின்றது.  மனம் காண்பது சத்யம் என்று சொல்வதை சாஸ்திரம் பொய் என்று நிரூபித்து அவைகளை நீக்குகின்றது.  இதிலிருந்து நாம் நம் அனுபவத்திற்கும் சாஸ்திர உபதேசத்திற்கும் முரண்பாடு எதுவும் இல்லை என்று புரிந்து கொள்ளலாம்.

நிதித்யாஸனம் (விபரீதபாவனா நிவிருத்தி)
அடைந்த ஞானம் சந்தேகமற்றதாக இருந்தாலும், நம்முடைய ஸம்ஸ்காரங்கள் இதில் நிலைபெறவிடாமல் தடுக்கும்.  மனதை எப்படி புத்தி பழக்கி வைத்திருக்கின்றதோ அதன்படிதான் மனமானது செயல்படும்.  ஆனால் புத்தியால் மனதை அடக்கியாள முடியாது.  புத்தியின் சொற்படி நடக்காது.  புத்தியானது மனதை சம்சாரத்தில் இருக்குமாறு காலம் காலமாக பழக்கி வைத்திருக்கின்றது;  மனமானது காம, க்ரோதங்களால் பழக்கப்படுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது.  சாதன சதுஷ்டயத்தை அடைந்தவர்களுக்கு நிதித்யாஸனத்தை சிறிது காலம் செய்தாலே போதும்.

இந்த சாதனையை செய்யும்போது மனதை பக்குவப்படுத்தவேண்டும்.  அடைந்த ஞானத்தில் மனம் இருக்குமாறு பழக்கப்படுத்த வேண்டும்.  பண்புகளில்லாத ஞானம் மோட்சத்தைக் கொடுக்காது.  பண்புகளை நமது சுபாவமாக மாற்ற வேண்டும்.  ஞானத்திற்கு முரண்பாடாக செயல்படுவது விபரீத பாவனை என்று கூறப்படுகிறது.  பிரஹ்மமே எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் ஆத்மாவாக இருக்கின்றது. ஆனால் நாம் இந்த உடல்தான் நான் என்று திடமாக நினைத்துக் கொண்டிருக்கின்றோம். சில சூழ்நிலைகளினால் நான் சுகமாக இருக்கின்றேன் என்று வரையறுக்கக்கூடாது.  இதிலிருந்து நாம் விடுபட வேண்டும்.  சூழ்நிலைகள் மாறினாலும் நம் மனம் பாதிக்க கூடாது.

உபநிஷத் என்ற சொல்லின் பொருள் விளக்கம்:
உப + நிஷத் = மிக அருகில் + இருக்கின்றது (அமர்ந்துள்ளது)  எதற்கு மிக அருகில் இருக்கின்றது என்ற கேள்வி எழும்போது எனக்கு அருகில் இருக்கின்றது. அதுவே ஆத்மா என்று புரிந்து கொள்ள வேண்டும்.,  ஆத்மா மீது ஏற்றி வைக்கப்பட்டிருக்கின்ற மூன்று சரீரங்களும் அதற்கும் இடைவெளியே கிடையாது.  இந்த ஆத்ம ஞானத்தை கொடுப்பதே உபநிஷத் என்ற நூலாகும்

தைத்தரீய உபநிஷத்தின் முகவுரை:
இது யஜூர் வேதத்தின் ஆரண்ய பாகத்தின் இறுதியல் இருக்கின்றது.  முழு வேதமானது மந்திரம், பிராமனம், ஆரண்யம், உபநிஷத் என்று நான்காக பிரிக்கப்பட்டிருக்கின்றது.  முதன் மூன்று பாகங்கள் கர்ம காண்டம் என்றும், நான்காவது பாகம் ஞான காண்டம் என்று அழைக்கப்படுகின்றது.  உபநிஷத் இந்த நான்கு பாகங்களிலும் இருக்கும். இந்த உபநிஷத் ஆரண்ய பாகத்தின் இறுதியில் அமைந்திருக்கின்றது. இது மூன்று அத்தியாயங்களை (வல்லி) கொண்டது.  முதல் பகுதியில் விதவிதமன உபாஸனைகள் கூறப்பட்டிருக்கின்றது. இதற்கு சீக்‌ஷாவல்லி என்று பெயர். முதல் மந்திரம் சீக்‌ஷா என்று தொடங்குவதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றது.  இரண்டவது பகுதிக்கு பிரஹ்மவல்லி என்று பெயர்.  இது பிரம்ம வித்யாவை உபதேசிக்கின்றது. இதில். ஆனந்த ஸ்வரூபத்தை பற்றி விரிவாக உபதேசிப்பதால் இதற்கு ஆனந்தவல்லி என்றும் அழைக்கப்படுகிறது.  இதில் மிகத்தெளிவாக பஞ்சகோச விவேகம் விசாரம் செய்து பிரஹ்மமானது விளக்கப்படுகின்றது.  மூன்றாவது பகுதி ப்ருகு என்று தொடங்கும் மந்திரத்தை உடையதால் இதற்கு ப்ருகுவல்லி என்று பெயர்.  இதில் சில தியானங்கள், பண்புகள் விளக்கப்படுகின்றன.

இந்த உபநிஷத் உரைநடையில் இருப்பதால், இதை பத்திகளாக பிரிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த பத்திகளை அனுவாகம் என்று அழைக்கப்படுகின்றது;
————————————————————————

அத்தியாயம்-01(சீக்ஷாவல்லி)


அனுவாகம்01 ( சாந்தி பாடம்)
ஶன் நோ மித்ர: ஶன் வருண: |
ஶன் நோ ப4வத்வர்யமா |
ஶன் நோ இந்த்3ரோ |
ஶன் நோ விஷ்ணுருக்ரம: நமோ ப்3ரஹ்மணே |
நமஸ்தே வாயோ |
த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்3ரஹ்மாஸி
  த்வாமேவ ப்ரத்யக்ஷம் ப்3ரஹ்ம வதி3ஷ்யாமி ரிதம் வதி3ஷ்யாமி |
ஸத்யம் வதி3ஷ்யாமி தன்மாமவது |
தத்3வக்தாரமவது | அவது மாம் | அவது வக்தாரம் ||
ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி:

குரு சிஷ்யர்களான எங்களுக்கு மித்ரன் என்கின்ற தேவதை மங்கலத்தைக் கொடுக்கட்டும், சுகத்தை கொடுக்கட்டும்.  மித்ரன் என்பவர் வெளியே விடும் காற்றான பிராணனுக்கும், பகல் நேரத்திற்கும் அதிஷ்டான தேவதையாக இருப்பவர்.  வருண தேவன் இவர் உள்ளே செல்கின்ற பிராணனனுக்கும், இரவு நேரத்திற்கும் அதிஷ்டான தேவதையாக இருப்பவர்.  இவரும் எங்களுக்கு மங்கலத்தையும், சுகத்தையும் கொடுக்கட்டும்.  கண்ணுக்கும், சூரியனுக்கும் அதிஷ்டானமான தேவதையாக இருக்கும் அர்யமா என்பவர் எங்களுக்கு நன்மையை தந்தருளட்டும்.  இந்திரதேவன், கைகளின் பலத்திற்கு அதிஷ்டான தேவதையாக இருப்பவர், ப்ருஹஸ்பதி, வாக்கு, புத்தி இவற்றிற்கு அதிஷ்டான தேவதையாக இருப்பவர், விஷ்ணு, பாதத்திற்கு அதிஷ்டான தேவதையாக இருப்பவர், இவர்களும் எங்களுக்கு நன்மையை கொடுக்கட்டும்.

உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு ப்ராண சக்திதான் காரணம்.  எனவே பிராணனின் அதிஷ்டான தேவதையை துதிக்கின்றார்கள்.  பிறகு அரியமாவிடமிருந்து எல்லா ஞானேந்திரியங்களும் நலமாக இருக்கட்டும் என்றும், நல்ல புத்திக்கும், நல்வாக்குக்கும் பிருஹஸ்பதியை வேண்டுகின்றார்கள்.  கர்மேந்திரியங்களின் நலத்திற்கு விஷ்ணுவை வேண்டுகின்றார்கள்.

எல்லா சூக்‌ஷும பிரபஞ்சத்திற்கும் ஆதாரமாக இருப்பவர், எல்லா தேவதைகளுக்கும் ஆதாரமாகவும் இருப்பவர், முதன்முதலில் ஈஸ்வரனிடமிருந்து தோன்றியவர் ஹிரண்யகர்ப்பன் என்றும், சகுண பிரம்மன் என்றும் அழைக்கபடுகின்றார். இவருக்கும் நமஸ்காரம் செய்கின்றனர்.  வாயுவாகவும் இருக்கும் ஹிரண்யகர்ப்பனுக்கு நமஸ்காரம் செய்கின்றனர்.  எல்லா சூட்சும சரீரங்களுக்கும் முக்கியமானதாக கருதப்படுகின்றது வாயு.  எனவே அவரை வாயு ஸ்வ்ரூபமாக அழைக்கின்றார்கள்.

த்வமேவ ப்ரதியக்‌ஷம் பிரஹ்ம அஸி – நீங்களே நேரிடையாக அறியப்படுகின்ற பிரம்மனாக இருக்கின்றீர்கள்.
த்வமேவ பிரத்யக்‌ஷ பிரஹ்மன் வதிஷ்யாமி – நீங்களே நேரிடையாக தெரிகின்ற பிரம்மனாக இருக்கின்றீர்கள் என்று அழைக்கின்றோம்.
ரிதம் வதிஷ்யாமி ஸத்யம் வதிஷ்யாமி – சரியான ஞானத்தை கொடுக்க கூடியவர் என்றும், ஸத்யமாக இருப்பவர் என்றும் உங்களை அழைக்கின்றோம்.

ஹிரண்யகர்ப்பர் கர்ம பலனை தந்து கொண்டிருப்பவர்.
ரிதம் என்ற சொல்லுக்கு சரியாக புரிந்து கொள்ளும் திறமை என்று பொருள்.
ஸத்யம் என்ற சொல்லுக்கு சரியாக புரிந்து கொண்டதை வாக்கில் சொல்வது என்று பொருள்.

சாஸ்திரத்தை படிக்கும் நான் அது போதிக்கின்ற சரியான அறிவை அடைய வேண்டும். அவ்வாறு அடைந்த அறிவு என்னிடத்தில் நிலை பெற வேண்டும். அதை வாக்கினாலே சரியாக சொல்ல வேண்டும்.  ஹிரண்யகர்ப்பன் அருள் இருந்தால்தான் நம்மால் ஆத்ம ஞானத்தை அடைய முடியும்.

தத் மாம் அவத். தத் வக்தாரம் அவத் – என்னை காப்பாற்று, என் குருவையும் காப்பாற்று என்று ஹிரண்ய கர்ப்பனிடம் வேண்டுகின்றனர்.  இங்கே என்னை காப்பாற்று என்பது ஞானத்தை அடைவதற்கு இடையூறாக இருப்பவகளை நீக்கி அதை அடைவதற்கும், சாதன சதுஷ்டய சம்பத்தியையும் அடைந்திட அருள் புரிய வேண்டும் என்று வேண்டுவதாக புரிந்து கொள்ள வேண்டும்,. அதேபோன்று குருவுக்கு நீண்ட ஆயுளை கொடுத்தும், அடைந்த அறிவை சரியாக உபதேசிக்கும் திறமையை கொடுத்தும் காப்பாற்று என்று வேண்டுகின்றான்.

அனுவாகம்02
ஸீக்ஷாம் ஓயாக்யாஸ்யாம: வர்ண: ஸ்வர: மாத்ரா
  ப3லம் ஸாம ஸந்தான: இத்யுக்த: ஶீக்ஷாத்4யாய:
வேதத்தை படிக்கும் போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் என்று இங்கு சொல்லப்பட்டிருக்கின்றது.
ஸீக்ஷாம் ஓயாக்யாஸ்யாம – எழுத்துக்களை உச்சரிக்கும் முறையை சொல்கின்ற  சீக்‌ஷா சாஸ்திரத்தை நாங்கள் சொல்கின்றோம்.
வர்ண: – எழுத்து – சரியாக உச்சரிக்க வேண்டும்.
ஸ்வரம்: – மூன்று விதமாக எழுத்தை உச்சரித்தல், உயர்த்தி படித்தல் (உதாத), கீழே இறக்கிப் படித்தல் (அனுதாத்த), சமமாக படித்தல் (சொரிதஹ)
மாத்ர – மாத்திரை – உச்சரிக்கும் கால அளவு (குறில், நெடில், ப்லுதம்)
3லம் – அழுத்தம்,
ஸாம – படிக்கும் வேகம்;
ஸந்தானம் – இடைவெளி
இதி உக்த – ஆகியவை கூறப்பட்டுள்ளது.
ஶீக்ஷாத்4யாய – சீக்‌ஷா அத்தியாயத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

அனுவாகம்3.1
இங்கு தியானம் ஒன்று கூறப்படுகின்றது.  இதற்கு ஸம்ஹிதா தியானம் என்று பெயர். முதலில் சிஷ்யனின் பிரார்த்தனையுடன் தொடங்குகிறது

ஸஹ நௌ யஸ: ஸஹ நௌ ப்3ரஹ்மவர்சஸம் அதா2த:
உபநிஷத3ம் வ்யாக்2யாஸ்யாம: பஞ்சஸ்வதி4கரணேஷு
அதி4லோகமதி4ஜ்யௌதிஷமதி4வித்3யமதி4ப்ரஜமத்4யாத்மம்
தா மஹாஸம்ஹிதா இத்யாசக்ஷதே ||

இந்த உபாஸனையானது சிஷ்யனால் உபாஸிப்பதால், குருவால் உபதேசிக்கப்படுவதால் வரும் புகழ் எங்களை அடையட்டும், தேஜஸ் இருக்கட்டும்.  வேதாந்த படிக்க வந்த மாணவன் இங்கு தனக்கு புகழ் என்று குறிப்பிடுவது ஸ்வாத்யாயம்- வேதாந்தத்தை படித்தல், ப்ரவசனம் – கற்றதை சொல்லிக் கொடுத்தல் என்பதையும், குருவினுடைய புகழால் அவரது உபதேசத்தை கேட்டு பயனடைவதற்கு சீடர்கள் வெவ்வேறு பகுதியிலிருந்து வருவார்கள் என்ற அர்த்தத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.  சீடன் தான் கற்றதை பிறருக்கு கற்றுக் கொடுக்க வேண்டும், தான் பெற்ற அறிவை பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.  அதனால் அவன் பெற்ற அறிவு மென்மேலும் வளரும், நிதித்யாஸனத்திற்கு பயன்படும்.  குரு-சிஷ்ய பரம்பரை (சம்பிரதாய ரக்‌ஷணம்) தொடர்ந்து வரும்.  ரிஷிகளுக்கு நாம் கடன்பட்டிருக்கின்றோம். அந்த கடனை அடைப்பதற்கு இந்த புகழ் உதவி புரியும்.

ஸம்ஹிதா என்ற பெயருடைய உபாஸனையை ஐந்துவிதமான விஷயங்களுடன் தெளிவாக விளக்கப்படுகின்றது.  அவைகளாவது இந்த உலக சம்பந்தப்பட்ட நான்கு தேவதைகளைக் குறித்து தியானித்தல், ஒளி சம்பந்தமான தேவதைகளைப் பற்றியதான உபாஸனை, அறிவு சம்பந்தமான தேவதைகளைப் பற்றியதான உபாஸனை, இனபெருக்கம் சம்பந்தமான தேவதைகளைப்பற்றியதான உபாஸனை , உடல் சம்பந்தமான தேவதைகளைப் பற்றியதான உபாஸனை. இவைகள் யாவும் மேலான ஸம்ஹிதா என்று வேதத்தை அறிந்தவர்கள் கூறுகின்றார்கள்.

விசாரம்:-
ஸம்ஹிதா – இரண்டு எழுத்துக்களுக்கிடையே இடைவெளியில்லாமல் இருப்பது.

உபாஸனை மூன்று பகுதிகளை உடையது.

  1. உபாஸகன்          – உபாஸனை செய்பவன்,
  2. உபாஸன தேவதை   – எந்த தெய்வத்தை குறித்து தியானிக்கின்றோமோ அதை குறிக்கின்றது,
  3. ஆலம்பனம்          – ஏதாவது ஒரு உருவத்தை (அ) குறியை வைத்துக்கொண்டு அதன் மூலமாக கண்ணுக்கு தெரியாத அந்த தேவதையை தியானித்தல்.

இந்த உபாஸனையில் நான்கு எழுத்துக்களை ஆலம்பனமாக வைத்து நான்கு தேவதைகளை உபாஸனை செய்யப்படுகின்றது. சந்தி என்பது இரண்டு சொற்களின் சேர்க்கையாகும். நம்மை, சார்ந்தது என்ற இந்த இரண்டு வார்த்தைகளை சேர்க்கும்போது “நம்மைச்சார்ந்தது” என்று ஒரு சொல்லாக வருகின்றது.  முதல் சொல்லின் கடைசி எழுத்து பூர்வ ரூபம், இரண்டாவது சொல்லின் முதல் எழுத்து உத்தர ரூபம்.  இதற்கிடையில் உள்ள இடைவெளி சந்தி என்றும், இரண்டையும் சேர்க்கின்ற எழுத்து சந்தானம் என்றும் அழைக்கப்படுகின்றது.

இஷேத்த்வா – இஷே + த்வா
இஷே என்ற சொல்லின் கடைசி எழுத்து ” ஏ “ – பூர்வ ரூபம்
த்வா என்ற சொல்லின் முதல் எழுத்து “ த் ”   – உத்தர ரூபம்

இரண்டிற்குமிடையே உள்ள இடைவெளி சந்தி என்று பெயர்.
த் என்ற எழுத்து இரண்டையும் இணைக்கும் இதுவே சந்தானம்.
ஒவ்வொன்றிலும் ஆலம்பனமாக வைத்து ஒவ்வொரு தேவதைகளை உபாஸிக்க வேண்டும்.  இதுபோல ஐந்து விதமான உபாஸனைகளைப் பற்றி விளக்கப்படுகின்றது.

அத2 – பிறகு (வர்ண, ஸ்வர முதலியவற்றை உச்சாடனம் செய்த பிறகு )
அத  – ஆகவே 1. உபாஸனை செய்வதால் மனம் ஒருமுகப்படும், 2. மேலே குறிப்பிட்ட சப்தங்களை பயிற்சி செய்வதற்கு சப்தக்ரகணம்.

ஞானத்தை அடைவதற்கு இரண்டு படிகள் 1. சப்தக்ரகணம், 2. அர்த்தக்ரகணம்.  முதலில் சொல்லைத் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு அதன் அர்த்தத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.  சப்த ஞானத்தை உபாஸனை செய்த பிறகு அர்த்த ஞானத்திற்கு சென்றால் விரைவாக அர்த்தத்தை தெரிந்து கொள்வோம்.
அனுவாகம்3.2
அதா2தி4லோகம் |
ப்ருதி2வீ பூர்வரூபம் |
த்3யௌரூத்தரரூபம் |
ஆகாஶ: ஸந்தி4: :
வாயு: ஸந்தா4னம் |
இத்யாதி4லோகம் ||

இப்பொழுது உலக சம்பந்தமான உபாஸனை துவங்குகின்றது.  பூர்வ எழுத்தில் நிலத்தை வைத்து தியானிக்க வேண்டும்.  உத்தர எழுத்தில் சுவர்க்கத்தை தியானிக்க வேண்டும்.  இடைவெளியில் ஆகாசத்தை தியானிக்க வேண்டும்.  சேர்க்கும் எழுத்தில் வாயுவை தியானிக்க வேண்டும். இவ்வாறு உபாஸனை செய்வதால் மனம் ஒருமுகப்படுவதோடு-மட்டுமல்லாமல் விரிவடையவும் செய்கின்றது,

அனுவாகம்3.3
அதா2தி4ஜ்யௌதிஷம் |
அக்3னி: பூர்வரூபம் |
ஆதி3த்ய உத்தரரூபம் |
அப: ஸந்தி4: வைத்3யுத: ஸந்தா4னம் |
இத்யதி4ஜ்யௌதிஷம் ||
இப்பொழுது ஒளி சம்பந்தமான உபாஸனை துவங்குகின்றது.  பூர்வ எழுத்தில்  நெருப்பை தியானிக்க வேண்டும்.  உத்தர எழுத்தில் சூரியனை தியானிக்க வேண்டும்.  இடைவெளியில் மழைநீரை தியானிக்க வேண்டும்.  சேர்க்கும் எழுத்தில் மின்னலை தியானிக்க வேண்டும். இவ்விதம் ஒளி சம்பந்தமான இரண்டாவது வகை தியானம் முடிவடைகின்றது

அனுவாகம்3.4
அதா2தி4வித்3யம் |
ஆசார்ய: பூர்வரூபம் |
அந்தேவாஸ்யுத்தர்ரூபம் |
வித்3யா ஸந்தி4: ப்ரவசனம் ஸந்தா4னம் |
இத்யாதி4வித்3யம் ||
இப்பொழுது அறிவு சம்பந்தமான உபாஸனை துவங்குகின்றது.  பூர்வ எழுத்தில்  குருவை தியானிக்க வேண்டும்.  உத்தர எழுத்தில் சிஷ்யனை தியானிக்க வேண்டும்.  இடைவெளியில் அறிவை தியானிக்க வேண்டும்.  சேர்க்கும் எழுத்தில் உபதேசித்தலை தியானிக்க வேண்டும். இவ்விதம் அறிவு சம்பந்தமான இரண்டாவது வகை தியானம் முடிவடைகின்றது

அனுவாகம்3.5
அதா2தி4ப்ரஜம் |
மாதா பூர்வரூபம் |
பிதோத்தர்ரூபம் |
ப்ரஜா ஸந்தி4: ப்ரஜனனம் ஸந்தா4னம் |
இத்யதி4ப்ரஜம் ||
இப்பொழுது சந்ததி சம்பந்தமான உபாஸனை துவங்குகின்றது.  பூர்வ எழுத்தில் தாயை தியானிக்க வேண்டும்.  உத்தர எழுத்தில் தந்தையை தியானிக்க வேண்டும்.  இடைவெளியில் குழந்தையை தியானிக்க வேண்டும்.  சேர்க்கும் எழுத்தில் புணர்ச்சியை தியானிக்க வேண்டும். இவ்விதம் சந்ததி சம்பந்தமான இரண்டாவது வகை தியானம் முடிவடைகின்றது

அனுவாகம்3.6
அதா2த்4யாத்மம் |
அத4ரா ஹனு: பூர்வரூபம் |
உத்தரா ஹனுருத்தர்ரூபம் |
வாக் ஸந்தி4: |
ஜிஹ்வா ஸந்தா4னம் |
இத்யத்4யாத்மம் ||

இப்பொழுது உடல் சம்பந்தமான உபாஸனை துவங்குகின்றது.  பூர்வ எழுத்தில்  கீழ்வாய்க்கட்டையை தியானிக்க வேண்டும்.  உத்தர எழுத்தில் மேல்வாய்க்-கட்டையை தியானிக்க வேண்டும்.  இடைவெளியில் பேசும்திறனை தியானிக்க வேண்டும்.  சேர்க்கும் எழுத்தில் நாக்கை தியானிக்க வேண்டும். இவ்விதம் உடல் சம்பந்தமான இரண்டாவது வகை தியானம் முடிவடைகின்றது

அனுவாகம்3.7
இதீமா மஹாஸம்ஹிதா: |
ய ஏவமேதா மஹாஸம்ஹிதா ஓயாக்2யாதா
  வேத3 ஸம்தீயதே ப்ரஜயா பஶுபி4: |
ப்3ரஹ்மவர்சஸேனான்னாத்3யேன ஸுவர்க்3யேண லோகேன ||

இவ்விதம் இந்த மேலான உபாஸனைகள் விளக்கப்பட்டிருக்கின்றது. யாரொருவன் மேலே விளக்கிய முறைப்படி இந்த மேலான உபாஸனைகளை செய்கின்றானோ அவனுக்கு இந்த உலகில் செல்வங்களையும், ஒளிபொருந்திய தேகத்தையும், வயிறார உணவும் கிடைக்கப்பெற்றவனாக இருப்பான். இறந்தபிறகு சுவர்க்கம் போன்ற உயர்ந்த லோகத்தை அடைந்து சுகித்து இருப்பான்.


oo000oo—-

தைத்திரீய உபநிஷத்
அத்தியாயம்-01(சீக்ஷாவல்லி)-பகுதி-2

அனுவாகம்4.1
யஶ்ச2ந்த3ஸம்ருஷபோ4 விஶ்வரூப: |
ச2ந்தோ3ப்4யோÅத்4யம்ருதாத்ஸம்பூ4வ |
ஸ மேந்த்3ரோ மேத4யா ஸ்ப்ருணோது |
அம்ருதஸ்ய தே3வ தா4ரணோ பூ4யாஸம் |
ஶரீரம் மே விசர்ஷணம் |
ஜிஹ்வா மே மது4மத்தமா |
கர்ணாப்4யாம் பூ4ரி விஶ்ருவம் |
ப்3ரஹ்மண: கோஶோÅஸி மேத4யா பிஹித: |
ஶ்ருதம் கோ3பாய ||

இது ஒரு பிரார்த்தனை, மேதா பிரார்த்தனை என்று அழைக்கப்படுகின்றது. வேதாந்த மாணவர்களுக்கு இது மிக முக்கியமான பிரார்த்தனை. இது ஓங்காரத்தை ஆலம்பனமாக கொண்டு ஈஸ்வரனிடம் சில வேண்டுதல்களை அடைவதற்காக செய்யப்படுகின்ற உபாஸனை. ஓங்காரம் ஏன் உயர்ந்ததாக கருதப்படுகின்றது என்றால் இது எல்லா சப்தத்திற்கும் ஆதாரமாக இருக்கின்றது, வேதத்திற்கே ஆதாரமாக இருக்கின்றது.  பதார்த்தமில்லாமல் பதங்கள் கிடையாது. எனவே இது பதார்த்தத்திற்கும் ஆதாரமாகவே இருக்கின்றது.  ஓம் = அ + உ + ம் இவைகள் முறையே தோற்றம், ஸ்திதி, லயம் இவைகளை குறிக்கின்றது.

  1. ஓங்காரம் வேத மந்திரங்களில் சிறந்தது மேலும் அனைத்துமாகவும் விளங்குகின்றது.
  2. இதை ஆலம்பனமாக கொண்டு தியானிக்கும் ஈஸ்வரன் எனக்கு அடைந்த அறிவில் நிலைப்படுத்துவதன் மூலம் வலிமைப்படுத்து,காப்பாற்று.  கற்றதை நினைவில் வைக்கும் சக்தி, ஞாபக சக்தியை கொடு.
  3. ஒங்கார ரூபமாக இருக்கும் இறைவா,மரணமில்லா பெருவாழ்வு தரும் பிரம்ம ஞானத்தை உடையவனாக இருப்பேனாக. என்னுடைய உடல் ஆரோக்கியமாக இருக்கட்டும், பிரம்மஞான முயற்சிக்கு ஒத்துழைக்கும் அளவுக்கு சக்தியுடையதாக இருக்கட்டும்.
  4. என்னுடைய நாவிலிருந்து வெளி வரும் வாக்கானது இனிமையாக,மிருதுவாக இருக்கட்டும்.  நாம் நம்மையறியாமல் மற்றவர்களை சொல்லால் துன்புறுத்திவிடுகின்றோம். என் நாவிலிருந்து வரும் வார்த்தைகள் யாரையும் துன்புறுத்தாத வகையில் இருக்கட்டும். மனதில் இருக்கும் அறிவை தெளிவாக மற்றவர்களுக்கு வாக்கின் மூலமாக சொல்லும் திறமை வேண்டும்.
  5. என்னுடைய இரண்டு செவிகளினால் வேத சாஸ்திரத்தை பலமுறை எனக்கு புரியும் வரை,சரியான அறிவு அடையும் வரை கேட்க வேண்டும்.
  6. பிரம்மத்திற்கு உறையாக இருக்கும் ஒங்காரமே!நான் உன்னை விசாரம் செய்வதன் மூலம் மறைத்துக் கொண்டிருக்கும் பிரம்மத்தை நான் அறியும் வகையில் மறைப்பை எடுத்து விடு.  ஓங்காரமே ஆலம்பனமாக இருப்பதால் அது பிரம்மத்தை மறைத்துக்கொண்டிருக்கும் உறையாக கூறப்படுகின்றது.
  7. குருமுகமாக நான் பெற்ற வேத சாஸ்திர உபதேசம் என்னிடமே நிலையாக இருக்கட்டும்.

 

இந்த பிரார்த்தனைகளை ஜபம் மூலமாக ஈஸ்வரனிடம் கேட்க வேண்டும்.  இந்த ஸ்லோகத்தை மனப்பாடம் செய்து பிறகு பலமுறை ஒவ்வொரு நாளும் ஜபம் செய்ய வேண்டும்.  இதை விரதமாகவும் எடுத்துக்கொண்டு இவைகளை அடையும் வரை ஜபத்தை செய்து கொண்டிருக்க வேண்டும்.

அனுவாகம்4.2
அவஹந்தி விதன்வானா |
குர்வாணாசீரமாத்மன: |
வாஸாம்ஸி மம கா3வஶ்ச |
அன்னபானே ச ஸர்வதா3 |
ததோ மே ஶ்ரியமாவஹ |
லோமஶாம் பஶுபி4: ஸஹ ஸ்வாஹா ||
இது ஸ்ரீகாமாஸ்ய ஹோமம் என்றும் ஆவஹந்தி ஹோமம் என்றும் அழைக்கப்படும்.
முன்பு சொல்லப்பட்ட பிரார்த்தனையின் பலனை அடைந்த பிறகு, நற்பண்புகளை அடைந்தபிறகு எனக்கு நிறைய செல்வங்களையும், செழிப்பையும் அடைய அருள் புரிவாயாக.  ஜீவனின் உண்மையான லட்சியத்தை அறிந்த பிறகு ஆத்ம ஞானத்தை அடைந்த பிறகு இந்த செல்வங்கள் அலங்காரமாக இருக்கும்.  ஆத்ம ஞானத்தை அடையாமல் வரும் செல்வங்கள் அவனை அழித்து விடும்.  எல்லா காலங்களிலும் எனக்கு ஆடைகளையும், பசுக்களையும், செல்வங்களையும், உணவையும், நீரையும், ரோமங்களுடன் கூடிய ஆடுமாடுகளையும் என்னிடம் தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்க வேண்டும், அதிக காலம் இருக்க வேண்டும் அதுவும் உடனே கிடைத்திட வேண்டும்.

எதற்காக இந்த செல்வங்களை கேட்டு பெற வேண்டும்?

  • கர்மத்தை செய்வதற்காகத்தான் இவைகளை பயன்படுத்த வேண்டும், தன்னுடைய போகத்திற்கு பயன்படுத்தக்கூடாது.  உபாஸனம் சுதந்திரம், கர்மம் தனதந்திரம்.  தியானம் செய்ய வேண்டுமென்றால் எதுவும் தேவை கிடையாது.  ஆனால் யாகம் செய்ய வேண்டுமென்றால் பணமும், மற்றவர்கள் உதவியும் தேவைப்படுகின்றது.  சத்துவகுண பிரதானமுடையவர்களால்தான் தியானம் செய்ய முடியும். இந்த மனத்தூய்மையை அடைவதற்காக கர்மம் செய்ய வேண்டும். இந்த கர்மத்தை செய்வதற்காகத்தான் செல்வத்தை வேண்டுகின்றான்.
  • கர்மம் எதற்கு செய்ய வேண்டும்?  மனத்தூய்மையை அடைவதற்கு கர்மம் செய்தாக வேண்டும். போகத்திலிருந்து விடுபட தானம் செய்ய வேண்டும், இவைகளுக்காக செல்வம் தேவை. பணமிருந்தும் தானம் செய்யாதவனையும், பணமில்லாமல் இருந்து செய்யாதவனையும் கல்லைக்கட்டி நீரில் போட வேண்டும்.
  • மனத்தூய்மை எதற்காக பயன்படும்?  இது ஆத்ம ஞானத்தை அடைவதற்காக தேவை.  குருவின் உபதேசம் ஞானமாக மாற வேண்டுமானால் மனத்தூய்மை வேண்டும்.

 

அனுவாகம்4.3
ஆ மா யந்து ப்3ரஹ்மசாரிண: ஸ்வாஹா |
வி மா யந்து ப்3ரஹ்மசாரிண: ஸ்வாஹா |
ப்ர மா யந்து ப்3ரஹ்மசாரிண: ஸ்வாஹா |
த3மாயந்து ப்3ரஹ்மசாரிண: ஸ்வாஹா |
ஶமாயந்து ப்3ரஹ்மசாரிண: ஸ்வாஹா |
யஶோ ஜனேÅஸானி ஸ்வாஹா |
ஶ்ரேயான் வஸ்யாஸோÅஸானி ஸ்வாஹா |
யதா2ப: ப்ரவதா யந்தி |
யதா2 மாஸா அஹர்ஜரம் |
ஏவம் மாம் ப்3ரஹ்சாரிண: |
தா4தராயன்து ஸர்வத: ஸ்வாஹா |

வேதம் படிக்க விரும்பும் மாணவர்கள் என்னை நோக்கி வரட்டும்.  விதவிதமான தேசத்திலிருந்து, விதவிதமான தகுதிகளை உடையவர்கள் என்னிடன் வர வேண்டும். புத்திக்கூர்மையுடைவர்கள், அறிவுத்திறமையுடைவர்கள் என்னிடம் வரட்டும். இந்திரிய ஒழுக்கமுடையவர்கள், மனக்கட்டுபாடுடையவர்கள் என்னிடம் வரட்டும். .புகழ் பெற்ற ஆசிரியனாக இருப்பேனாக.  செல்வந்தர்களுக்குள் மேலானவனாக இருப்பேனாக.  எப்படி நீரானது கீழேயுள்ள பிரதேசத்தை நோக்கி இயற்கையாக ஒடுகின்றதோ அதுபோல மாணவர்கள் விரும்பி, வேகமாக ஓடிவர வேண்டும்.  எவ்விதம் மாதங்கள் வருடத்தை நோக்கி ஓடுகிறதோ, அதுபோல மாணவர்கள் என்னைத்தேடி வரவேண்டும்.  இறைவா எல்லா திசைகளிலிருந்து என்னிடம் வரட்டும்.

இதுவரை பார்த்த பிரார்த்தனைகள் அனைத்தும் சாதனா பிரார்த்தனை என்று கூறப்பட்டுள்ளது.  ஏனென்றால் இவைகள் வெறும் சாதனங்கள்தான் இதைக்கொண்டுதான் சாத்தியத்தை அடைய வேண்டும். இவைகளை சாத்தியமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

அனுவாகம்4.4
தம் த்வா ப4க3 ப்ரவிஶனி ஸ்வாஹா |
ஸ மா ப4க3 ப்ரவிஶ ஸ்வாஹா |
தஸ்மின்த்ஸஹஸ்ரஶாகே2 |
நி ப4காஹம் த்வாயி ம்ருஜே ஸ்வாஹா |
ப்ரதிவேஶோÅஸி ப்ர மா பாஹி ப்ர மா பத்3யஸ்வ ||

இது சாத்திய பிரார்த்தனை: நாம் அடைய வேண்டியதை பிரார்த்திக்கப்படுகின்றது.  இது ஜீவ-ஈஸ்வர ஐக்கிய பிரார்த்தனையாக கருதப்படுகின்றது.  சாதனங்கள் அடைந்தாலும் அவைகளை பயன்படுத்தி சாத்தியத்தை அடைவதற்கு மிகவும் கடினம்.  எனவே சாத்தியத்தையையும் இறைவனிடம் வேண்டுகின்றேன்.  ஆத்மஞானம் சாதனம் என்றால், சாத்தியம் என்பது மோட்சம் (ஜீவ-ஈஸ்வர ஐக்கியம்)
கர்மஜ தாதாத்மியம் – கர்மவசத்தினால் நான் என்ற அகங்காரம்
மோகஜ தாதாத்மியம் – மோகவசத்தினால் நான் என்ற அகங்காரம்

ஓங்கார ரூபமாக இருக்கின்ற இறைவா நான் உங்களிடத்தில் நுழைந்து விடுவேனாக, கலந்துவிடுவேனாக, அப்படிபட்ட நீங்களும் என்னிடத்தில் கலந்து விடுவீர்களாக, நுழைந்து விடுவீர்களாக.  இது ஜீவ-ஈஸ்வர ஐக்கியத்தை வேண்டுவதாக புரிந்து கொள்ள வேண்டும்.  ஆயிரக்கணக்கான ரூபங்களாகவும், அனைத்து ரூபங்களாகவும் உள்ள உங்களிடத்தில் இறைவா, நான் தூய்மையடைய வேண்டும்.  இந்த பிரார்த்தனையால் உலகத்தின் மீதுள்ள ராக-துவேஷம் நீங்கிவிடும். (ஈஸா வாக்கியம் இதம் ஸர்வம்).  நீங்கள்தான் நான் ஓய்வெடுக்க உதவும் இடமாக இருக்கின்றீர்கள். என்னுடைய லட்சியத்தை அடைய முயற்சிக்கும்போது தோல்வியுற நேர்ந்தால், உங்களிடம் வந்து மீண்டும் சக்தி பெற வேண்டும், நம்பிக்கை குறையும் போது உங்களிடம் வந்து புதிய சக்தி பெற்று திரும்ப வேண்டும்.  எனக்கு உங்களைப்பற்றி விளக்குங்கள், உங்கள் ஸ்வரூபத்தை விளக்குங்கள். நீங்கள் என்னிடத்தில் வர வேண்டும்.

அனுவாகம்5.1
பூர்பு4வ: ஸ்வரிதி வா ஏதாஸ்திஸ்ரோ வ்யாஹ்ருதய: |
தாஸாமு ஹ ஸ்மைதாம் சதுர்தீ2ம் |
மாஹசமஸ்ய: ப்ரவேத3யதே |
மஹ இத |
தத்3ப்3ரஹ்ம |
ஸஹ ஆத்மா |
அங்க3ன்யன்யா தே3வதா: ||

இது ஒரு வகையான உபாஸனையை கூறுகின்றது. இதற்கு வ்யாஹிருதி என்று பெயர்.  இந்த உபாஸனையில் தேவதை ஹிரண்யகர்ப்பர், ஆலம்பனமாக வ்யாஹிருதிகள் வைத்துக் கொள்ளப்படுகின்றது.  பிரம்ம தேவர் மூன்று சப்தங்கள் எழுப்பினார்.  அவைகள் பூ, புவ, ஸுவ இவைகளே மூன்று வ்யாஹிருதிகள்.  மஹாசமஸ்யர் என்ற ரிஷி மஹ என்ற நான்காவது வ்யாஹிருதியை வெளிப்படுத்தினார்.

வ்யாஹிருதி என்ற சொல்லுக்கு நான்கு அர்த்தங்கள் உண்டு.  அவைகள்:

  1. உச்சாரணம் – பிரம்மாவின் வாயினால் உச்சரிக்கப்பட்ட்தால் இவ்வாறு அழைக்கப்படுகிறது.
  2. விதவிதமான கர்மங்களில் உபயோகப்படுத்தபட்டிருக்கும்.
  3. ஹரதி பாபானி – இதை உச்சரிப்பதால் நமது பாவங்கள் நீங்கி விடுகின்றது
  4. பொருளற்ற மங்கல சப்தம்.

மந்திர விளக்கம்:-
பூ, புவ, ஸுவ என்ற இந்த மூன்று வ்யாஹிருதிகள். இவைகளுடன் நான்காவதாக ஒரு வ்யாஹிருதியை மஹாசமஸ்யர் என்ற ரிஷி வெளிப்படுத்தினார்.  ”மஹ” என்பதே அந்த வ்யாஹிருதி, இது மிகப்பெரியதாக இருக்கின்றது., ஆத்மாவை வியாபித்திருக்கின்றது, மற்றவைகள் அதனுடைய அங்கங்களாக இருக்கின்றது.

அனுவாகம்5.2

பூ4ரிதி வா அயம் லோக: | பு4வ இத்யந்தரிக்ஷம் |
ஸுவரித்யஸௌ லோக: மஹ இத்யாதி3த்ய: |
ஆதி3த்யேன வாவ ஸர்வே லோகா மஹீயந்தே ||
இது அதிலோக தியானம்.  பூ என்ற வ்யாஹிருதியில் இந்த உலகத்தையும்,  புவ என்பதில் இடையிலுள்ள உலகங்களையும், ஸுவ என்பதில் சுவர்க்க லோகத்தையும், மஹ என்பதில் சூரியனையும் தியானிக்க வேண்டும்..

அனுவாகம்5.3
பூரிதி வா அக்3ன: | பு4வ இத வாயு: | ஸுவரித்யாதி3த்ய: |
மஹ இத சந்த3மா: | சந்த்3ரமஸா வாவ ஸர்வாணி ஜ்யோதீம்ஷி மஹீயந்தே ||
இது அதிதெய்வ தியானம்.  பூ என்ற வ்யாஹிருதியில் அக்னியையும்,  புவ என்பதில் வாயுவையும், ஸுவ என்பதில் சூரிய தேவதையையும், மஹ என்பதில் சந்திரனையும் தியானிக்க வேண்டும்..

அனுவாகம்5.4
பூ4ரிதி வா ரிச: |
பு4வ இத ஸாமானி |
ஸுவரிதி யஜும்ஷி |
மஹ இதி ப்3ரஹ்ம |
ப்3ரஹ்மணா வாவ ஸர்வே வேதா3 மஹீயந்தே ||

இது அதிவேத தியானம்.  பூ என்ற வ்யாஹிருதியில் ரிக் வேதத்தையும்,  புவ என்பதில் சாம வேதத்தையும், ஸுவ என்பதில் யஜுர் வேதத்தையும், மஹ என்பதில் பிரம்மத்தையே ஓங்காரமாக அங்கியாக தியானிக்க வேண்டும்..

அனுவாகம்5.5
பூ4ரிஹி வை ப்ராண: |
பு4வ இத்யபான: |
ஸுவரிதி வ்யான: |
மஹ இத்யன்னம் ||

இது அதிப்ராண தியானம்.  பூ என்ற வ்யாஹிருதியில் பிராணனையும் (வெளியே செல்லும் காற்று),  புவ என்பதில் அபானனையும் (உள்ளே செல்லும் காற்றையும்), ஸுவ என்பதில் வியானனையும் (ரத்தத்தை உடல் முழுவதும் எடுத்து செல்லும் காற்று), மஹ என்பதில் அன்னத்தையே அங்கியாக தியானிக்க வேண்டும்..

அனுவாகம்5.6
அன்னேன வாவ ஸர்வே ப்ராண மஹீயந்தே |
தா வா ஏதாஶ்சதஸ்ரஶ்சதுர்தா4 |
சதஸ்ரஶ்சதஸ்ரோ வ்யாஹ்ருதய: |
தா யோ வேத3 |
ஸ வேத3 ப்3ரஹ்ம |
ஸர்வேÅஸ்மை தே3வா ப3லிமாவஹந்தி ||

இவைகளெல்லாம் நான்கு வியாஹிருத்திகள் நான்கு விதமாக அமைந்துள்ளது.  ஒவ்வொரு தியானத்திலும் நான்கு வ்யாஹிருதிகள் நான்கு விதமாக தியானிக்கப்படுகின்றது.  இங்கே எந்த வரிசைப்படி சொல்லப்பட்டிருக்கின்றதொ அதே வரிசையில்தான் தியானம் செய்ய வேண்டும்.
எந்த உபாஸகர்கள் இந்த வ்யாஹிருதிகளை அறிந்து உபாஸனை செய்கின்றார்களோ அவர்கள் ஹிரண்யகர்ப்பனை அறிவார்கள்.  இந்த உபாஸனைகளோடு அடுத்த உபாஸனையும் சேர்த்து செய்ய வேண்டும்.  அப்போதுதான் இது முழுமையடையும். இந்த உபாஸகனுக்கு எல்லா தேவதைகளும் பொருளைக் கொடுப்பார்கள்.  ஏனென்றால் இவன் உபாஸனை முடிவில் ஹிரண்யகர்ப்பனிடத்தில் ஐக்கியமாகி விடுகின்றான்.  ஹிரண்யகர்ப்பர் எல்லா தேவதைகளுக்கும் தலைவனாக இருப்பதால் அவருக்கு எல்லா தேவதைகளும் பொருட்களை கொடுப்பார்கள்.

அனுவாகம்6.1
ஸ ய ஏஷோந்தரஹ்ருத3ய ஆகஶ: |
தஸ்மின்னயம் புருஷோ மனோமய: |
அம்ருதோ ஷ்ரிண்மய: |
அந்தரேண தாலுகே |
ய ஏஷ ஸ்தன இவாவலம்ப3தே |
ஸேந்த்3ரயோனி: |
யத்ராஸௌ கேஶாந்தோ விவர்த்தே |
வ்யபோஹ்ய ஶீர்ஷகபாலே ||

இது ஹிரண்யகர்ப்ப உபாஸனையை விளக்குகின்றது. இதற்கு அந்தர்ஹ்ருதய உபாஸனை, அஹங்கிரக உபாஸனை என்றும் அழைக்கப்படுகின்றது.  மாயையுடன் கூடிய பிரம்மம் ஈஸ்வரன், சூக்‌ஷூம பிரபஞ்சத்திற்கு ஆதரமானவராக இருப்பவர் ஹிரண்யகர்ப்பர்.  இந்த உபாஸனைக்கு இவரே தேவதையாக இருக்கின்றாr. இது மனதை ஆலம்பனமாகக் கொண்டது.

விசாரம்:
இருமையில்தான் பயம் ஏற்படும். இதுவரை செய்த உபாஸனைகள் அனைத்தும் பேத உபாஸனம்.  இதில் உபாஸகனும், உபாஸ்ய தேவதைகளும் வெவ்வேறாக இருக்கின்றது.  இந்த உபாஸனைக்கு அபேத உபாஸனை என்று பெயர்.  இதில் இரண்டும் ஒன்றாக இருக்கின்றது.  உபாஸகனே ஆலம்பனம், பிறகு அவனே ஹிரண்யகர்ப்பனாக உபாஸிப்பான். இதில் ஹிரண்யகர்ப்பனின் லட்சணம், ஆலம்பனம், உபாஸகன் இறந்த பிறகு எந்த வழியாக ஹிரண்யகர்ப்பனை அடைவான், உபாஸனையின் பலன் ஆகியவைகள் கூறப்பட்டிருக்கின்றது.

நம்முடைய இதயத்திற்குள் இருக்கின்ற ஆகாசமே ஆலம்பனமாக கொள்ள வேண்டும். அதில் ஹிரண்யகர்ப்பன் இருப்பதாக பாவித்து தியானிக்க வேண்டும்.  இவரே எல்லா தேவதைகளுக்கும் தலைவராக இருக்கின்றார்.  அத்தகையவர் நம் இதயத்திற்குள் இருக்கின்றார் என்று பாவிக்க வேண்டும்.  இவர் நம்முடைய மனதில் வெளிப்படுபவர், மனதாலே அறியப்படுபவர், எல்லா  ஜீவராசிகளுக்குள்ளும் இருக்கின்றார். எல்லா உலகங்களையும் வியாபித்திருப்பவர்.  அறிவு ஸ்வரூபமானவர், எல்லா மனங்களையும் தன்னுடையாதாக அபிமானம் கொண்டிருப்பவர். மனதாலே அறியப்படுபவராக இருப்பவர்.  அதிக காலம் இருப்பவர், இந்த ஸ்ருஷ்டி இருக்கும்-வரை இருப்பவர்.  பிரளயத்தின் போதுதான் ஈஸ்வரனோடு ஐக்கியமாகி விடுவார்.  இவர் ஞான ஸ்வரூபமாகவும் இருக்கின்றார்.  இப்படிபட்ட ஹிரண்யகர்ப்பனை நம்முடைய இதயத்திற்குள் இருப்பதாக நினைத்து உபாஸிக்க வேண்டும். தொண்டை பகுதியில் பசுவின் பால்காம்பு போல் மாமிச பிண்டமானது தொங்கிகொண்டு இருக்கின்றது.  அதன் நடுவே ஸூஷும்னா நாடி செல்கிறது. இது தலையில் உள்ள ஒரு முடியின் அடிப்பகுதி வரை சென்று மண்டை ஓட்டை துளைத்து வெளியே வருகின்றது.  இந்த நாடியானது ஹிரண்யகர்ப்பனை அடைவதற்கு மார்க்கமாக இருக்கின்றது.

அனுவாகம்6.2
பூரித்யக்3னௌ ப்ரதிதிஷ்த்தி |
பு4வ இதி வாயௌ |
ஸுவரித்யாதி3த்யே |
மஹ இதித ப்3ரஹ்மணி |
ஆப்னோதி ஸ்வாராஜ்யம் |
ஆப்னோதி மனஸஸ்பதிம் |
வாக்பதிஶ்சக்ஷுஷ்பதி |
ஶ்ரோத்ரபதிர்விக்3ஞானபதி: |
ஏதத்ததோ ப4வதி |
ஆகஶ்ஶ்ரிரம் ப்3ரஹ்ம |
ஸத்யாத்ம ப்ராணாரமம் மன ஆனந்தம் |
ஶாந்திஸம்ருத்3த4மம்ருதம் |
இதி ப்ராசீனயோக்3யோபாஸ்ஸ்வ ||

பூ என்ற வ்யாஹிருதியில் அக்னி தேவதையை உபாஸிப்பவன் அந்த தேவதையுடன் கலந்து விடுகின்றான்.  புவ என்ற வ்யாஹிருதியில் உபாஸிக்கப்பட்ட வாயு தேவதையுடன் கலந்து விடுகின்றான்.  ஸுவ என்ற வ்யாஹிருதியில் உபாஸிக்கப்பட்ட சூரிய தேவதையுடன் கலந்து விடுகின்றான். மஹ என்ற வ்யாஹிருதியில் உபாஸிக்கப்-பட்ட ஹிரண்யகர்ப்பனாக மாறி விடுகின்றான். தனக்குத் தானே அதிபதியாக இருக்கும் நிலைமையை அடைகின்றான்.  அனைத்துக்கும் அதிபதியாகின்றான்.  எல்லா மனங்களுக்கும் அதிபதியாக இருக்கும் நிலையை அடைகின்றான்.  எல்லா வாக்கிற்கும் தலைவனாகின்றான்.  எல்லோருடைய கண்களுக்கும் தலைவனாகின்றான். எல்லோருடைய செவிகளுக்கும் தலைவனாகின்றான். எல்லோருடைய புத்தியிலும் இருந்து கொண்டு அறிவை அடைகின்றான்.  இறந்ததிற்குப்பிறகு மேலும் சிலவற்றை அடைகின்றான்.  ஹிரண்யகர்ப்பனின் லட்சணங்களனைத்தும் இந்த சாதகனுக்கு வந்து விடுகின்றது.  ஆகாசத்தைப் போல சூக்‌ஷூமமான உடலையடைகின்றான், எங்கும் வியாபித்து இருப்பான். உருவமாகவும் அருவமாகவும் இருக்கின்றான்.  இந்திரியங்கள் விளையாட்டு மைதானமாக இருக்கின்றது.  எல்லா இந்திரியங்களும் இவனை சார்ந்து இருக்கின்றது.  எல்லா மனங்களையும் தனக்கு ஆனந்தம் தருவதாக வைத்திருக்கின்றார்.   அமைதியாகவும், செழிப்பாகவும் இருக்கின்றான். இருமைகளற்றவனாகவும், செழிப்பை உடையவனாகவும் இருக்கின்றான்.  மன அமைதியால் செழிப்பான அந்த பிரம்மத்தை அடைகின்றான்.  நீண்ட காலம் இருப்பான். பிரளயம் வரும் வரை இருப்பான். இவ்வாறு உபாஸனை செய்வீராக.

அனுவாகம்7
ப்ருதி2வ்யந்தரிக்ஷம் த்3யௌர்தி3ஶோÅவாந்தரதி3ஶா: |
அக்3னிர்வாயுராதி3த்யஶ்சந்த்3ரமா நக்ஷத்ராணி |
அப ஒஷத3யோ வனஸ்பதய ஆகஶ ஆத்மா |
இத்யதி4பூ4தம் |
அத2த்4யாத்மம் |
ப்ராணோ வ்யானோÅபான உதா3ன: ஸமான: |
சக்ஷு: ஶ்ரோத்ரம் மனோ வாக் த்வக் |
சர்ம மாம் ஸம் ஸ்ராவஸ்தி2 மஜ்ஜா |
ஏதத3தி4விதா4ய ரிஷரவோசத் |

பாங்கம் வா இத3ம் ஸர்வம் |
பாங்கேனைவ பாங்கம் ஸ்ப்ருணோதீதி ||

இது ஒரு பாங்க்தம் உபாஸனம்.  இதுவும் அபேத உபாஸனம்.  சமஷ்டி-வியஷ்டி ஐக்கிய உபாஸனம்.  இதில் மூன்று வெளிவிஷயங்கள் சரீரத்திலுள்ள விஷயத்திற்கும் ஐக்கியப்படுத்தி உபாஸனை சொல்லப்பட்டு இருக்கின்றது.
பாங்கம் – ஐந்து வகையானவைகளின் சேர்க்கை, யாகங்களையும் இவ்வாறு அழைக்கப்படுகின்றது.  யாகத்திற்கு ஐந்து விஷயங்கள் உண்டு அவைகள் எஜமானன், பத்தினி, புத்திரன், மானுஸ வித்தம் (செல்வம்), தெய்வ வித்தம் (மந்திரங்கள்).
லோக பாங்கம் – ஐந்து விதமான உலகங்கள்
தேவதா பாங்கம் – ஐந்து விதமான தேவதைகள்
பூதா பாங்கம் – ஐந்து விதமான பூதங்கள்
ப்ராண, இந்திரிய, தாது பாங்கம் என்பவைகளும் உண்டு.

ஐந்து லோக பாங்கம் – பிரபஞ்சம், ஆகாசம், சுவர்க்க லோகம், திசைகள், திசைகளுக்கு இடையே உள்ள திசைகள்.
தேவதா பாங்கம் – அக்னி, வாயு, சூரியன், சந்திரன், நட்சத்திரம்
பூத பாங்கம் – தண்ணீர், தாவரங்கள், மரங்கள், ஆகாசம், விராட், பிறகு உடல் சம்பந்தப்பட்டவைகள்
பிராண பாங்கம் – பிராணன், வியானன், அபானன், வியானன், உதானன்
இந்திரிய பாங்கம் – கண், காது, மனது, சொல், தோல்
சர்ம பாங்கம் – உள்தோல், சதை, தசைகள், எலும்பு, எலும்புக்குள் உள்ள திரவம்
இவைகளை ரிஷி ஒருவர் எடுத்து சொல்லிவிட்டு மேலும் கூறலானார்.  இவைகள் அனைத்தும் ஐந்து அங்கங்களின் சேர்க்கையாக இருக்கின்றன.  வியஷ்டி பாங்கம் மூலம் சமஷ்டி பாங்கத்தை தியானிக்க வேண்டும் என்று கூறினார். இதன் பலனாக மனம் விரிவடைகின்றது, பொதுநோக்கு பார்வை வருகின்றது.  பிறகு ஹிரண்ய-கர்ப்பனோடு ஐக்கியமாகி விடுவான்.

அனுவாகம்8 – (ஓங்கார உபாஸனை)
ஓமிதி ப்3ரஹ்ம |
ஓமிதித3ம் ஸர்வம் |
ஓமித்யேதத3னுக்ருதிர்ஹ ஸ்ம வா
   அப்யோ ஶ்ரவயேத்யாஶாவயந்தி |
ஓமிதி ஸாமானி கா3யந்தி |
ஓம் ஶோமிதி ஶஸ்த்ராணி ஶஸ்த்ராணி ஶம்ஸந்தி |
ஓமித்யத்4வர்யு: ப்ரதிக3ரம் ப்ரதிக்3ருணாதி |
ஓமிதி ப்3ரஹ்ம ப்ரஸௌதி |
ஓமித்யக்3னிஹோத்ரமனுஜானாதி |
ஓமிதி ப்3ரஹ்மண: ப்ரவக்ஷ்யன்னாஹ
   ப்3ரஹ்மைவோபாப்னோதி ||

உபாஸ்ய தேவதை ஹிரண்யகர்ப்பன் அல்லது ஈஸ்வரன்.  ஓம் என்ற சொல்லில் பிரம்மத்தை தியானம் செய்ய வேண்டும்.  இங்கு பிரம்ம என்பது ஹிரண்யகர்ப்பனையோ அல்லது ஈஸ்வரனையோ உபாஸன தேவதையாக கருதப்படுகின்றது.  ஓம் என்ற சொல்தான் முக்கியம்.  இந்த ஒங்காரத்திற்கும் பிரம்மத்திற்கும் ஒரு ஒற்றுமை சொல்லப்படுகின்றது.  ஏன் இதை ஆலம்பனமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றது என்றால் அது மேலானதாகவும், சிறப்பானதாகவும் கருதப்படுவதால்தான்.  மேலும் இந்த சொல் எல்லா சொற்களையும் வியாபித்திருக்கின்றது.  ஈஸ்வரனே எல்லா பொருட்களிலும் வியாபித்திருக்கின்றார்.  எல்லாப் பொருட்களையும், சொற்களால் அழைக்கப்படுகின்றது.  எனவே சொற்களை வியாபித்திருக்கும் ஒங்காரம் ஈஸ்வரனையே குறிக்கின்றது.  இந்த உலகமே ஓங்காரமாக கருதப்படுகின்றது; ஓம் இதம் ஸர்வம்.

இந்த அனுவாகத்தில் மற்ற சொற்களெல்லாம் ஒங்காரத்தின் பெருமையை எடுத்து உரைக்கின்றது.

  • ஓம் இத்யேத் அனுக்ருதி – இது நமக்கு அனுமதியை குறிக்கின்றது
  • அபி ஓம் ஸ்ராவய – மேலும் ஓம் நீ தெரிவிப்பாயாக, ( தேவர்களுக்கு அவிஸ் கொடுக்க வேண்டிய காலம் வந்தவுடன்) இவ்வாறு ஆணையிடப்படுகின்றது.
  • ஓம் இதி ஸாமானி கா3யந்தி – சாம வேதத்தை உச்சரிப்பவர்களும் ஓம் என்று சொல்லித்தான் உச்சரிக்கின்றார்கள்.
  • ஓம் ஶோமிது ச2ம்ஸந்தி – ரிக் மந்திரங்களை ஓதுபவர்களும் ஒம் என்றும் சோம் என்ற சொல்லை உச்சரிக்கின்றார்கள்.
  • ஓம் இதி அதி3வாயு – யஜூர் வேதம் ஒதுபவர்களும் இந்த சொல்லின் மூலம் தங்கள் அனுமதியை குறிக்கின்றார்கள்.
  • அதர்வண வேதம் ஒடுபவர்களும் ஓம் என்று சொல்லித்தான் ஆணையிடுகின்றார்கள்.
  • அக்னிஹோத்ர யாகத்தை செய்யலாம் என்று அனுமதி அளிப்பதையும் ஓம் என்ற சொல்லினால் குறிப்பிடுகின்றார்கள்..
  • வேதத்தை படிக்க ஆரம்பிக்கின்ற பிராமணன் ஓம் என்று சொல்லிய பிறகுதான் தொடங்குகின்றான்.  வேதத்தை நான் அடைவேனாக என்ற குறிக்கோளுடன் வேதத்தை உச்சரிக்கின்றான்.  அவன் கண்டிப்பாக அடைவான் என்று வேதமே உறுதி செய்கின்றது.

பிரம்மத்தை அடைய வேண்டும் என்று விரும்பும் சாதகர்கள் ஓம் என்று சொல்லித்தான் அதை அடைய முயற்சிக்கின்றார்கள்.  அவன் பிரம்மத்தை அடைவான் என்று வேதம் உறுதி கூறுகின்றது.

—-oo000oo—-

தைத்திரீய உபநிஷத்
அத்தியாயம்-01 (சீக்ஷாவல்லி)-பகுதி-3
அனுவாகம்9
ரிதம் ச ஸ்வாத்4யாயப்ரவசனே ச |
ஸத்யம் ச ஸ்வாத்4யாயப்ரவசனே ச |
தபஶ்ச ஸ்வாத்4யாயப்ரவசனே ச |
3மஶ்ச ஸ்வாத்4யாயப்ரவசனே ச |
ஶமஶ்ச ஸ்வாத்4யாயப்ரவசனே ச |
அக்னயஶ்ச ஸ்வாத்4யாயப்ரவசனே ச |
அக்3னிஹோத்ரம் ச ஸ்வாத்4யாயப்ரவசனே ச |
தித2யஶ்ச ஸ்வாத்4யாயப்ரவசனே ச |
மானுஷம் ச ஸ்வாத்4யாயப்ரவசனே ச |
ப்ரஜா ச ஸ்வாத்4யாயப்ரவசனே ச |
ப்ரஜனஶ்ச ஸ்வாத்4யாயப்ரவசனே ச |
ப்ரஜாதி ஸ்வாத்4யாயப்ரவசனே ச |
ஸத்யமிதி ஸத்யவசா ராதீ2தர” |
தப இத தபோநித்ய: பௌருஶிஷ்டி: |
ஸ்வாத்4யாயப்ரவசனே ஏவேதி நாகோ மௌம்ல்ய: |
தத்3தி4 தபஸ்தத்3தி4 தப: ||

இதில் சில பண்புகளும், கர்மங்களும் சொல்லப்பட்டிருக்கின்றது.  மேலே கூறிய உபாஸனைகளனைத்தும் நற்பண்புகளுடனும், செயல்களுடனும் செய்தால்தான் அதன் பலனை அடைய முடியும்.

வேதத்தை கற்றல், பிறருக்கு கற்றுக்கொடுத்தல், கற்றதை சரியாக புரிந்து கொள்ளுதல், உண்மையை பேசுதல், தவம், விரதம், போகத்தை அனுபவிக்காதிருத்தல், உணவில் கட்டுப்பாடு, உடலுக்கும், மனதுக்கும் நன்மையை கொடுக்கக்கூடியதை சாப்பிடவேண்டும்.  அளவுடன் சாப்பிட வேண்டும்.  புதியதாக சமைத்து சாப்பிட வேண்டும், புலனடக்கம், மனவடக்கம், யாகத்திற்கு பயன்படுத்தும் அக்னியை பாதுகாத்தல், இல்லறத்தில் இருப்பவர்களுக்கு விதிக்கப்பட்ட யாகங்களை செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்படுகின்றது.  அக்னிஹோத்ரம் காலையும், மாலையும் செய்ய வேண்டும். விருந்தினரை உபசரிக்க வேண்டும், மனிதர்களுக்கு சேவை செய்ய வேண்டும், சந்ததியை வளர்த்தல், தன் புத்திரனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை தவறாது செய்தல், சந்ததி உற்பத்திக்கு கணவன்-மனைவி சேர்தல், பேரக்-குழந்தைகளை அடைவதற்கு புத்திரர்களுக்கு மணம் செய்வித்தல் போன்ற விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்.  மேலும் ராதீதரன் என்ற ரிஷி வாய்மையே மேலானதாக கருதுகின்றார் என்றும், தவத்தில் ஈடுபட்டுள்ள பௌருஷ்டி என்ற ரிஷி தவத்தை மேலானதாக கூறுவதாகவும் இங்கு சொல்லப்பட்டிருக்கின்றது.  நாக என்கின்ற ரிஷி வேதத்தை கற்றலும், கற்பித்தலும்தான் மேலான தவமாக கருதுவாக சொல்லப்பட்டிருக்கின்றது.

அனுவாகம்10
அஹம் வ்ருக்ஷஸ்ய ரேரிவா |
கீர்தி: ப்ருஷ்டம் கி3ரரிவ |
ஊர்த்4வபவித்ரோ வாஜினீவ ஸ்வம்ருதமஸ்மி |
த்3ரவிணம்ஸவர்சஸம் |
ஸுமேதா4 அம்ருதோக்ஷித: இதி த்ரிஶங்கோர்வேதா3னுவசனம் ||

ஆத்ம ஞானத்தை அடைந்த பிறகு திரிசங்கு என்ற ரிஷி கூறியவைகள் இந்த அனுவாகத்தில் கூறப்பட்டுள்ளது. இதை ஜபம் செய்ய நல்ல ஸம்ஸ்காரங்கள் மனதில் வந்து சேரும்.  த்வைத வாஸனைகள் மீது அத்வைத வாஸனைகள் எழுதப்படும்.  நம்மிடத்தே இருக்கின்ற சம்சார பாவனைகள் நீங்கி திரிசங்கு வசனங்கள் நமக்கு ஆத்ம ஞான பாவனைகள் வந்து சேரும்.  பிறகு இது கண்ணுக்கு தெரியாத பாவங்களையும் நீக்கிவிடும்.  இந்த பாவங்கள் வேதாந்தம் தொடர்வதற்கு தடையாக வந்து சேர்ந்திருக்கலாம்.  இதை சிரத்தையுடன் ஜபம் செய்வதால் நமக்கு வரும் தடைகள் நீங்கும். அர்த்தத்தை புரிந்து கொண்டு ஜபம் செய்ய வேண்டும்.

  • நானே அனைத்து பிரபஞ்சத்திற்கும், சம்சாரத்திற்கும் ஆதாரமாக இருக்கின்றேன்.  நான் சம்சாரத்தை நாசம் செய்தவன், வைராக்கியம், ஆத்மஞானத்தினால் இதை செய்திருக்கின்றார்.
  • என்னுடைய புகழானது மலை உச்சி அளவுக்கு ஓங்கி இருக்கின்றது.  தேவலோகம் வரை என்னுடைய புகழ் வளர்ந்த்திருக்கின்றது.  இது இவரிடத்தில் உள்ள மனநிறைவை எடுத்துக் காட்டுகின்றது.  எவனொருவன் தன்னையே நேசிக்கின்றானோ அவனுக்கு மற்றவர்கள் தன்னை புகழ வேண்டும் என்ற எண்ணமே வராது. உதாரணமாக கர்ணன் தான் சத்திரியன் என்று குந்திதேவி மூலம் அறிந்து கொண்டபின் மற்றவர்கள் அவனை தேரோட்டி என்று சொல்லும் போது அவனுக்கு வருத்தமேற்படவில்லை.
  • நான் முழுமையானவனாகவும், தூய்மையானவனாகவும் இருக்கின்றேன்.
  • சூரிய தேவதைபோல நான் அழியாத ஆத்ம தத்துவமாக இருக்கின்றேன்.
  • ஒளிப்பொருந்திய பிரம்ம தத்துவமாக இருக்கின்றேன், அதை அடைந்தவனாக இருக்கின்றேன்.
  • நான் பிரம்ம ஸ்வரூபம் என்ற அறிவுடனே செயல்படுகின்றேன்.  எப்பொழுதும் பிரம்ம ஞானத்தில் நிலைபெற்று இருக்கின்றேன்.
  • மரணமற்றவனாகவும், மாற்றமில்லாதவனாகவும் இருக்கின்றேன்.
  • நான் மரணமற்ற நிலையில் ஆழ்ந்திருக்கின்றேன்.

அனுவாகம்11.1
வேத3மனுச்யாசார்யோÅந்தேவாஸினமனுஶாஸ்தி |
ஸத்யம் வத3 |
4ர்ம சர |
ஸ்வாத்3யாயன்மா ப்ரமத3: |
ஆசார்யாய ப்ரியம் த4னமாஹ்ருத்ய ப்ரஜாதந்தும் மா வ்யவச்சே2த்ஸீ: |
ஸத்யான்ன ப்ரமதி3தவ்யம் |
4ர்மான்ன ப்ரமதி3தவ்யம் |
குஶலாஜ்ஜ ப்ரமதிதவ்யம் |
பூ4த்யை ந ப்ரமதி3தவ்யம் |
ஸ்வாத்4யாயப்ரவசனாப்4யாம் ந ப்ரமதி3தவ்யம் |
தேவாபித்ருகார்யாப்4யாம் ந ப்ரமதி3தவ்யம் |
மாத்ருதே3வோ ப4வ |
பித்ருதேவ ப4வ |
ஆசார்யதே3வோ ப4வ |
அதிதி2தே3வோ ப4வ ||

இதில் சில பண்புகள், கடமைகள் கூறப்பட்டிருக்கின்றன்.  இந்த பண்புகள் இருந்தால்தான் ஆத்ம ஞானத்தை அடைய வேண்டும் என்ற ஆசையே மனதில் எழும். வேதத்தை ஓதும் முறையை புகட்டியபின் மாணவனிடத்தில் கீழ்க்கண்டவாறு உபதேசிக்கின்றார்.

உண்மையை பேசு, தர்மத்தை பின்பற்று, வேதத்தில் கூறப்பட்டுள்ள தர்மத்துடன் வாழ்ந்து கொண்டிரு. அதர்மத்தை செய்யாதே. வேதத்தில் விதிக்கப்பட்டுள்ள கர்மங்களை செய், நிஷித்த கர்மங்களை செய்யாதே.  சாஸ்திரம் படிக்கும்போது கவனக்குறைவாக இருக்காதே.  குருவிடம் கேட்ட சாஸ்திரத்தை கவனக்குறைவாக கூட படிக்காமல் இருந்து விடாதே.  குருவுக்கு தேவைப்படும் பொருட்களை கொடுக்க வேண்டும். வம்சத்தொடரை அறுத்துவிடாதே.  உண்மை பேசுவதிலும் கவனக்குறைவாக இருந்து விடாதே.  வேதத்தில் விதிக்கப்பட்ட கடமைகளிலிருந்து விலகி விடாதே.  உன்னைப் பாதுகாத்துக் கொள்வதில் கவனக்குறைவாக இருந்து விடாதே.  வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டிரு.  வாழும் வாழ்வின் தரத்தை உயர்த்தி கொண்டிரு.  சாஸ்திரத்தை கற்பதிலிருந்தும், கற்றதை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்காமலும் இருந்து விடாதே.  தேவர்களுக்கும், பித்ருகளுக்கும் செய்ய வேண்டிய காரியங்களை தவறாமல் செய்ய வேண்டும்.  தாயையும், தந்தையையும், ஆசிரியரையும், விருந்தினரையும் கடவுளாக கருதுபவனாக இரு.  இவர்களிடன் என்ன குறைகள் இருந்தாலும் அவைகளை கவனத்துக்கு எடுத்துக்கொள்ளாமல் எந்தவித நிபந்தனையின்றி இவர்களை தெய்வமாக வணங்க வேண்டும். இவர்களிடமிருந்துதான் பலவிதமான பலன்களை அடைகின்றோம். சொல்லாமல் வரும் விருந்தினர்களையும் தெய்வமாக கருத வேண்டும்.

அனுவாகம்11.2
யான்யதவத்3யானி கர்மாணி |
தானி ஸேவிதவ்யானி |
நோ இதராணி |
யான்யஸ்மாகம்ஸுசரிதானி |
தானி த்வயோபாஸ்யானி நோ இதராணி |
யே கே சாஸ்மச்சே2யாம்ஸோ ப்3ரஹ்மணா: |
தேஷாம் த்வயாஸனேன ப்ரஶ்வஸிதவ்யம் ||

எது தர்மம், எது அதர்மம் என்பதை அறிந்து கொள்ள மூன்று வழிகள் உண்டு. அவைகள்,

  1. வேத சாஸ்திரத்தில் சொல்லப்பட்டது
  2. ரிஷிகளால் எழுதப்பட்ட ஸ்மிருதிகள், தர்ம சாஸ்திரங்கள், புராணங்கள், இதிகாசங்கள், இவைகளில் சொல்லப்பட்டது
  3. இப்பொழுது உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் சான்றோர்களின், மகான்களின் வாழ்க்கை முறை என்ற இந்த மூன்று வழிகளாலும் தர்ம அதர்ம நெறிகளை அறிந்து கொள்ளலாம்.
  • எந்தச் செயல்கள் குற்றமற்றதாக இருக்கின்றதோ, மேற்கூறிய மூன்று பிரமாணங்களினாலும் நிந்திக்கபடாததாக இருக்கின்றதோ அவைகளை மட்டும் பின்பற்ற வேண்டும், மற்றவற்றை பின்பற்ற கூடாது.
  • பெரியோர்களிடத்தில், சான்றோர்களிடத்தில் காணப்படும் நல்ல விஷயங்களை மட்டுமே பின்பற்ற வேண்டும். மற்றவற்றை பின்பற்ற கூடாது.
  • நம்மை காட்டிலும் வயதிலும், அனுபவத்திலும்,, அறிவிலும் பெரியோர்கள், பண்பாளர்கள் வந்தால், அவர்களுக்கு அமர இருக்கை கொடுத்து, அவர்கள் களைப்பை போக்க வேண்டும்.
  • அவர்களோடு அதிகம் பேசாமல், அவர்கள் கூறும் நல்ல விஷயங்களினால் அறிவை அடைய வேண்டும்.

அனுவாகம்11.3
ஶ்ரத்3த4யா தேயம் |
அஶ்ரத்3த4யாதே3யம் |
ஶ்ரியா தே3யம் |
ஹ்ரியா தே3யம் |
ஸம்விதா3 தே3யம் ||

இல்லறத்தில் இருப்பவர்கள் எப்படி தானம் செய்ய வேண்டும் என்று இங்கு கூறப்படுகின்றது.

  • சிரத்தையுடன் தானம் செய்ய வேண்டும், மனமுவந்து கொடுக்க வேண்டும்.
  • சிரத்தையில்லாமல் தானம் செய்யக்கூடாது.
  • அதிகமாக கொடுக்க  வேண்டும்.
  • வெட்கத்துடன் கொடுக்க வேண்டும், இவ்வளவுதான் கொடுக்க முடிகின்றது என்ற சங்கோஸத்துடன் கொடுக்க வேண்டும்,
  • அக்கறையுடன், பயந்து கொண்டு கொடுக்க வேண்டும்.
  • சரியான அறிவுடன் தானம் செய்ய வேண்டும்.  அதாவது தேவைப்படும் இடத்தில், காலத்தில், தகுதியுடையவருக்கு தானம் செய்ய வேண்டும்.,

அனுவாகம்11.4
அத2 யதி3 தே கர்மவிசிதித்ஸா வ வ்ருத்தவிசிகித்ஸா வா ஸ்யாத் |
யே தத்ர ப்3ரஹ்மணா: ஸம்மர்ஶின: |யுக்தா ஆயுக்தா: |
அலூக்ஷா த4ர்மகாமா: ஸ்யு: |
யதா2 தே தத்ர வர்கே3ரன் |
ததா2 தத்ர வர்கே3தா2 |
அதா2ப்4யாக்2யாதேஷு |
யே தத்ர ப்3ரஹ்மணா: ஸம்மர்ஶின: |
யுக்தா ஆயுக்தா: அலூக்ஶா த4ர்மகாமா: ஸ்யு: |
யதா2 தே தேஷு வர்தேரன |
ததா2 தேஷு வர்தேதா2: |
ஏஷ ஆதே3ஶ: |
ஏஷ உபதேஶ: |
ஏஷா வேதோ3பநிஷத் |
ஏதத3னுஶாஸனம் |
ஏவமுபாஸிதவ்யம் |
ஏவமுசைத்து3பாஸ்யம் ||

ஒருவேளை கடமையைப் பற்றிய சந்தேகம் வந்தால், வாழ்க்கையில் கையாளும் விஷயத்தில், விவகாரத்தில் சந்தேகம் வந்தால், அந்த நேரத்தில் சான்றோர்கள், சாஸ்திரத்தை நன்கு அறிந்தவர்கள், கற்றதை தமது வாழ்வில் கடைபிடிப்பவர்கள், எப்பொழுதும் நடுநிலைமையோடு வாழ்பவர்கள், தீய பண்புகள் இல்லாதவர்கள், மென்மையான மனதையுடையவர்கள், தர்மத்தில் நிலை பெற்றவர்கள், தர்மத்தை பின்பற்றுபவர்கள், இப்படிப்பட்ட குணங்களையுடையவர்களிடம் அந்த சூழ்நிலையில் எப்படி நடந்து கொள்வர்களோ அவ்விதம் நீ நடந்து கொள்ள வேண்டும். மேலும் அதர்மப்படி வாழ்பவர்களிடத்திலும் மேற்கூறிய பண்புகளையுடையவர்கள் எப்படி நடந்து கொள்வார்களோ அதேமாதிரி நடந்து கொள்.  உதாரணமாக நம்மை உதாசீனப்படுத்து-பவர்களை நாமும் உதாசீனப்படுத்த நினைப்போம், நமக்கு தீமை செய்பவர்களுக்கு நாமும் தீமை செய்ய நினைப்போம் இந்த நிலையில் நம்முடைய எண்ணத்தை நீக்கி, சான்றோர்கள் எவ்வாறு நடந்து கொள்வார்களோ அதேபோல நடந்து கொள்ள வேண்டும்.  இதுதான் வேதத்தினுடைய கட்டளை (ஆதேஷம்).  இதுவே ஸ்மிருதியின் உபதேசம்.  இதுதான் வேதத்தினுடைய ஸாரம் (சுருக்கமான நீதி).  இது (அனுசாஸனம்) இறைவனுடைய கட்டளை.  இவ்விதத்தில் நம்முடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டு செல்ல வேண்டும்.

அனுவாகம்12
இது முதலில் கூறப்பட்ட சாந்தி பாடமே கடைசியிலும் சொல்லப்பட்டிருக்கின்றது.  இது நம் நன்றியை தெரிவிக்கின்றது போல வந்திருக்கின்றது

—————————————————————————————-

சீக்‌ஷாவல்லி முடிவுற்றது.

தைத்திரீய உபநிஷத்

அத்தியாயம்-02 – பகுதி-1

ப்ரஹ்மானந்தவல்லி

சங்கரரின் விசாரம்: (பரம புருஷார்த்த ஸாதன விஷய சிந்தா)
பரம புருஷார்த்தமான மோட்சத்தை அடையும் ஸாதனத்தை பற்றிய விசாரம்.  கர்மம், வித்யா இரண்டைப்பற்றிய விசாரம்.
கர்ம காண்டத்தில் கர்மமே சாதனமாக சொல்லப்படிருக்கின்றது
ஞான காண்டத்தில் ஞானமே சாதனமாக சொல்லப்படிருக்கின்றது
இந்த இரண்டிலும் சாத்தியம் என்ன?
கர்மம் செயலில் ஈடுபட தூண்டுவது, செய்யாதே என்று தடுப்பது.  கர்மம் என்ற சாதனத்தின் மூலமாக ஆத்ம ஞானத்தை அடைவதற்கு தகுதிபடுத்தப்படுகிறது. ஞானத்தின் சாத்தியம் நேரடியாக மோட்சத்தையடைவது.  இதுதான் சங்கரர் விளக்க வருகின்ற சித்தாந்தம்.
கேள்வி : காம்ய, நிஷித்த கர்மங்கள் செய்யாமல் இருந்தாலே பாவ-புண்ணியங்கள் வராது. விதிக்கப்பட்ட கர்மங்கள் செய்வதனால் பிராரப்த கர்மபலன்களை தீர்த்து விடலாம் அல்லவா?

பதில்     சஞ்சித கர்மபலன்களை எவ்வாறு தீர்க்க முடியும்.  கர்மங்கள் பாவ-புண்ணியத்தை கொடுக்க கூடியது.  ஞானத்தில் மட்டும்தான் புண்ணியங்களை சேர்க்காமல் இருக்கலாம், மோட்சத்தை அடையலாம்.

கேள்வி   முழு வேதமே கர்மத்திற்காகவே எழுதப்பட்டிருக்கின்றது.  முழு வேதத்தையும் படிக்க வேண்டும் என்ற நியமம் இருக்கின்றது.  வித்துவான் யாகம் செய்விக்கின்றான்.  எனவே முழு வேதத்தையும் படித்தவன் யாகத்தின் மூலமாக மோட்சத்தை அடைய முடியும்.  உபநிஷத் மூலமாகத்தான் மோட்சத்தை அடையலாம் என்றால், வேதத்தை முழுமையாக படி என்று சொல்லாமல், கர்ம காண்டத்தை மட்டும் படி என்று சொல்லியிருக்கலாமே?

பதில்     வேதம் மேலும் மனனம், நிதித்யாஸனம் என்ற இரண்டு சாதனங்களை சொல்லியிருக்கின்றது.  கர்மத்தை மட்டும் செய்து மோட்சத்தை அடையலாம் என்றால் இந்த இரண்டும் பயனற்றதாகி விடும்.  வேதம் பயனற்ற எதையும் உபதேசிக்காது. மேலும் கர்மம் நிலையற்ற பொருட்களைக் கொண்டு செய்யப்படுவது.  இதனால் எப்படி நிலையான நித்யமான மோட்சத்தை அடைய முடியும்.

கேள்வி   கர்மத்துடன் ஞானத்தையும் சேர்த்துக்கொண்டு மோட்சத்தை அடையலாம்’

பதில்     செய்யப்பட்டது என்றால் அது அநித்யம்.  எது செய்யப்பட்டதோ அது அழியக் கூடியது.  வேதாந்தம் இருப்பதைத்தான் சொல்லும் புதியதாக ஒன்றை தோற்றுவிக்காது. ஞானம் எதையும் தோற்றுவிக்காது, இருப்பதைத்தான் காட்டும்.

கேள்வி   விதவிதமான உபாஸனைகள் மூலமாக பிரம்மலோகத்தை அடையலாமே?

பதில்     இதன்மூலம் சகுண பிரம்மனை அடையலாம், நிர்குண பிரம்மத்தை அடைய முடியாது.

கேள்வி   ஞான-கர்ம ஸமுச்சயத்தின் மூலமாக மோட்சத்தை அடையலாமே?

பதில்     ஞான-கர்ம ஸமுச்சயமே நடக்க முடியாது. இந்த இரண்டையும் சேர்க்கவே முடியாது.  கர்மத்தின் ஸ்வரூபம் வேறு, ஞானத்தின் ஸ்வரூபம் வேறு.  ஞானத்தின் ஸ்வரூபம் அகர்த்தா, இது பேதத்தை ஏற்படுத்திவிடும். அதனால்தான் கர்மத்தை விட்டுவிட்டுதான் ஞானத்திற்கே செல்ல வேண்டும்.  எனவே ஞான-கர்ம ஸமுச்சயம் ஒரே நேரத்தில் நடக்க முடியாது. கர்ம காண்டம் அக்ஞானிகளுக்கு பயன்படும், முமுக்‌ஷுகளுக்கு மனத்தூய்மையை கொடுக்கும்.

கேள்வி   ஞானத்தோடு கர்மத்தையும் துணையாக வைத்துக் கொள்ளலாமே?

பதில்     மோட்சத்திற்கு தடையாக இருப்பது அக்ஞானம்தான்.  இந்த அக்ஞானத்தை நீக்குவதற்கு ஞானம் மட்டும் போதும்.  கர்மத்தின் துணை தேவையில்லை.  உலகில் அனாத்மாவை பார்த்துக் கொண்டிருப்பவனுக்கு ஆசை வரும், அதை நிறைவேற்றுவதற்கு கர்மத்தை செய்வான்.  ஆத்மாவை பார்ப்பவனுக்கு ஆசையே எழுவதில்லை அதனால் கர்மத்தை செய்ய வேண்டிய தேவையில்லை.

வேதாந்தத்தை படிக்க வந்து விட்டால், கர்மத்தை விட்டுவிட்டு, சிரவணம், மனனம், நிதித்யாஸனம் மூலம் மோட்சத்தை அடைந்து விடலாம்.  கர்ம காண்டம் ஒருவனை ஞான காண்டத்திற்கு எடுத்துச் செல்லும் பிறகு அந்த சாதகன் கர்மத்தை விட்டு விட்டு ஆத்ம விசாரம் செய்து மோட்சத்தை அடைய வேண்டும்.

 

முகவுரை:

ஜீவ-ஈஸ்வர ஐக்கியம் ஆனந்தத்தின் அடிப்படையில் விளக்கபடுகின்றது. ஆனந்தமானது விசாரம் செய்யப்படுகின்றது. எனவே இந்த வல்லியில் எல்லா அனுவாகங்களும் முக்கியமானவை. இதில் ஆத்ம விசாரம் செய்யப்படுவதால் இன்னொரு சாந்தி-பாடத்துடன் தொடங்குகிறது

சாந்தி பாடம்:
ஸஹ நாவவது |
ஸஹ நௌ பு4னக்து |
ஸஹ வீர்யங் கரவாவஹை |
தேஜஸ்விநாவதீ4தமஸ்து வா வித்3விஷாவஹை |
ஓம்! ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி:

அந்த ஈஸ்வரன் உறுதியாக குரு-சிஷ்யனான எங்கள் இருவரையும் காப்பாற்றட்டும். இங்கு காப்பாற்று என்பது சிஷ்யனான என்னை அக்ஞானத்திலிருந்து விடுவித்து ஆத்மஞானத்தை கொடு என்றும்,  குருவுக்கு ஆயுளையும், ஆரோக்கியத்தையும் கொடு என்று பொருள் கொள்ள வேண்டும்,
அந்த ஈஸ்வரன் எங்களிருவரையும் காப்பாற்றட்டும். இங்கே காப்பாற்று என்பது ஞானத்தை அடைந்து அதன் பலனை அனுபவிப்பவனாக இருக்க வேண்டும், அதாவது ஞான நிஷ்டை அடைந்திட வேண்டும் என்று பொருள் கொள்ள வேண்டும்.

நாங்கள் இருவரும் சேர்ந்து முயற்சி செய்வோமாக.  இங்கே சிஷ்யனின் முயற்சி என்பது வித்யாவை கவனமாக கேட்டல், சிந்தித்தல் பிறகு நன்கு புரிந்து கொள்வது, குருவின் முயற்சி பிரம்ம வித்யாவை சரியாக உபதேசித்தல், சிஷ்யர்கள் நன்றாக புரிந்து கொள்ளும் வகையில் உபதேசித்தல்.
எங்கள் இருவரால் படிக்கப்பட்டது ஒளி பொருந்தியதாக இருக்கட்டும், நினைவில் நன்றாக பதிய வேண்டும்.

நாங்கள் ஒருவரையொருவர் வெறுக்காமல் இருப்போமாக.  சிஷ்யனின் வெறுப்பு படிப்பில் கவனக்குறைவை கொடுக்கும்.  குருவின் வெறுப்பு சிஷ்யர்களுக்கு மன அழுத்தம் கொடுக்கும்.
ஓம்! ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி:

அனுவாகம்-1.1
பிரஹ்மவித்3 ஆப்னோதி பரம் |
ததே3ஷாப்4யுக்தா |
ஸத்யம் ஞானமனந்தம் ப்3ரஹ்ம |
யோ வேத3 நிஹிதம் கு3ஹாயாம் வ்யோமன் |
ஸோஶ்னுதே ஸர்வான் காமான் ஸஹ ப்3ரஹ்மணா விபஶ்சிதேதி ||
 

பிரஹ்மவித்3 ஆப்னோதி பரம் – பிரஹ்மத்தை அடைந்தவன் மேலானதை அடைகின்றான்.”, இது இந்த உபநிஷத்தின் மையக்கருத்து. எனவே இதற்கு சூத்ர வாக்கியம் என்று கூறலாம்.  முழு உபநிஷத்தின் சாரமாக இருக்கின்றது

இதில் மூன்று கருத்துக்கள் இருக்கின்றது. அவைகள்

  1. விஷயம்– இது எதை குறித்து பேசுகின்றதோ,
    2. சாதனம்  – அந்த விஷயத்தை அறிய உதவும் கருவி,
    3. பலன்    – விஷயத்தை அறிவதனால அடையும் பலன்
    ஆகியவைகளாகும்.

இந்த அனுவாகத்தில்

  1. விஷயம் – பிரம்மம் – பெரியது என்று பொருள், வரையறுக்கப்படாதது. நிரதிஸய வ்ருத்தி – எதனோடும் வரையறுக்கபடாத பெரிய ஒன்று.
  2. சாதனம் – வித் (வேதனம்) – அறிதல், அந்த பெரிய ஒன்றை அறிந்து கொள்ள வேண்டும்.
  3. பலன் -பரம் ஆப்னோதி – பிரம்மத்தை அடைகின்றான்

ஒரு இடத்தை அடைவதற்கு அதை அடையும் வழி மட்டும் தெரிவதால் அடைய முடியாது, ஏனென்றால் அது வரையறுக்கப்பட்டது.  ஆனால் பிரம்மம் வரையறுக்கப்படாததாக இருப்பதால் அதை அறிந்தவுடனே அதை அடைந்து விடுவோம்.  ஞானத்திற்கும், மோட்சத்திற்கும் சாதன-சாத்தியம் சம்பந்தம் பேசப்படுகின்றது.

 

கேள்வி-1. பிரம்மம் என்பது எது, அதன் லட்சணம் என்ன>
கேள்வி-2. அதை எப்படி அறிந்து கொள்வது?
கேள்வி-3. பலன் என்றால் அது எத்தகையானது?

இந்த கேள்விகளுக்கு ஒரு ரிக் மந்திரத்தின் மூலமாக பதிலளிக்கப்படுகின்றது.

பதில்-1 சத்யம், ஞானம், அனந்தம் ப்ரஹ்ம என்ற இந்த வாக்கியம் பிரம்ம லட்சணத்தைக் குறிக்கின்றது. சத்யம் என்றால் என்றும் இருப்பது, ஞானம் என்பது அறிவு ஸ்வரூபம், அனந்தம் என்பது எல்லையற்றது. இந்த லட்சணம் அனாத்மாக்களிலிருந்து பிரம்மத்தை பிரித்துக் காட்டுகின்றது.

 

இரண்டு விதத்தில் ஒரு பொருளை பிரித்துக் காட்ட முடியும்.

  1. தடஸ்த லட்சணம் ஒருபொருளை அறிவதற்கு துணைப்புரியும் வேறொரு பொருளை கொண்டு அறிதல், ஆனால் அது அறியும் பொருளை சார்ந்ததல்ல. உதாரணமாக காகம் அமர்ந்துள்ள வீடுதான் ராமன் வீடு, என்று சொல்லுதல், காகம் பறந்து சென்றாலும், இருந்தாலும் அந்த வீட்டை அடையாளம் கண்டு கொள்வது.
  2. ஸ்வரூப லட்சணம்எதாவதொரு பொருளை கூறி அதன் மூலம் மற்றொன்றை விளக்குதல், அந்தப் பொருள் அறியப்படும் பொருளிடத்தே இருக்கின்றது.  அதன் தன்மையாகவே இருக்கின்றது. இங்கு பிரமத்தை விளக்கக்கூறும் லட்சணம் ஸ்வரூப லட்சணம்.

ஸத்யம் பிரம்மஹ:
வாச்யார்த்தம் என்பது ஒரு சொல்லை கேட்டவுடனே மனதில் தோன்றும் அர்த்தம்.  எல்லா விவகாரங்களும் இதன் அடிப்படையில்தான் இருக்கும். சில சமயம் வாச்யார்த்தம் பயன்படாமல் போகலாம் அந்த நேரத்தில் அதற்கு சம்பந்தபட்ட வேறு ஒன்றை எடுத்துக் கொண்டு புரிந்து  கொள்கின்றோம்.  இதையையே லட்சியார்த்தம் என்று கூறப்படுகின்றது;  ஸத்யம் பிரஹ்ம என்ற வாக்கியத்தில் வாச்யார்த்தத்தை எடுத்து கொள்ளக்கூடாது, லட்சியார்த்தத்தை வைத்து புரிந்து கொள்ள வேண்டும்.  எல்லா பொருட்களிடத்தும் ஸத்+நாமரூபம் என்ற இரண்டு அம்சங்கள் உள்ளது.  மாற்றமடையும் பொருட்களின் நாமரூபங்கள் மாறிக் கொண்டிருந்தாலும் இருத்தல் என்ற அம்சம் என்றும் நிலையாக இருக்கும்.  ஆகவே இந்த வாக்கியத்தின் அர்த்தம் நிலையாக இருத்தல் என்று லட்சியார்தத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.  இங்கு ஸத்யம் என்பது ஸத்-இருத்தல் என்பதைக் குறிக்கின்றது.  காரணம் எப்போதும் ஸத்யம், காரியம் மித்யா. களிமண்ணிலிருந்து உருவான பொருட்கள் அனைத்தும் மித்யா, களிமண் ஸத்யமாக, காரணமாக இருக்கின்றது.  அதேபோல இந்த பிரபஞ்சத்திற்கு காரணமாக இருப்பது பிரம்மன், எனவே அது ஸத்யமாக இருக்கின்றது.

ஞானம் பிரம்மஹ:-
பிரம்மன் ஸத்யமாகவும் இருக்கின்றது அதே சமயம் அறிவு ஸ்வரூபமாகவும் இருக்கின்றது.  வாச்யார்த்தமாக பார்க்கும் போது ஞானம் என்பது மனதில் வரும் ஒன்றைபற்றிய அறிவு.  இதற்கு விருத்தி ஞானம் என்று அழைக்கப்படும்.  மனதில் தோன்றும் ஒரு பொருளைப்பற்றிய எண்ணம்.  நம் மனதில் தோன்றும் எண்ணங்கள் இரண்டு அம்சங்களாக உள்ளது.  1. அறிவு (சித்) 2. நாம-ரூபங்கள்(பொருட்கள்) (அ) எண்ணங்கள்(விஷயங்கள்).  இதில் அறிவானது எல்லா நிலைகளிலும் தொடர்ந்து இருந்துகொண்டிருக்கின்றது.  எனவே இதுவே பிரம்மத்தின் ஸ்வரூபமாக லட்சணமாக புரிந்து கொள்ள வேண்டும். எல்லா எண்ணங்களுக்கும் சாட்சியாக இருப்பது, எல்லா அறிவுக்கும் அறிவு ஸ்வரூபமாக இருக்கின்றது.

அனந்தம் பிரம்மஹ:-
அனந்தம் என்பது எல்லையற்றது, பூரணமானது, வரையறுக்கப்படாதது என்று பொருட்கொள்ளப்படுகிறது.  இந்த வாச்யார்த்தமே அதன் ஸ்வரூபத்தை உறுதிபடுத்துகிறது.  ஒரு பொருள் மூன்று விதத்தில் வரையறுக்கப்படலாம். அவைகள் இடம், காலம், மற்றும் வஸ்து.

  1. தேச பரிச்சேதஹ – ஒரு பொருள் தேசத்தினல் வரையறுக்கப்படும். அதாவது ஒரு பொருள் ஒரே நேரத்தில் வெவ்வேறிடத்தில் இருக்க முடியாது
  2. எல்லாப்பொருட்களுக்கும் தோற்றம்-மறைவு இருப்பதால் அவைகள் காலத்தால் வரையறுக்கப்பட்டிருக்கின்றது
  3. ஒரு பொருளுக்கு குணங்கள் கொடுக்க கொடுக்க அதனுடைய வியாபிக்கும் விஸ்திரம் குறைந்து கொண்டே போகும்.  உதாரணமாக வெறும் மனிதர்கள் என்று கூறும்போது உலகிலுள்ள எல்லா மனிதர்களை குறிக்கும்.  இந்தியர்கள் என்று சொல்லும் போது இந்தியாவில் வசிக்கும் மக்களை மட்டும் குறிக்கின்றது. தமிழர்கள் என்று சொல்லும்போது தமிழ்நாட்டில் வசிப்பவர்களை மட்டும் குறிக்கின்றது.  இவ்வாறு எண்ணிக்கை குறைந்து கொண்டே போகின்றது.

பிரம்மத்தை தவிர வேறொரு பொருள் இருந்தால் அது வரையறுக்கப்பட்டதாகி விடும். அது வரையறுக்கப்படாதது என்றால் அதைத் தவிர்த்து வேறொன்றும் இல்லை என்று நிரூபிக்க வேண்டும்.  ஸத்துக்கு வேறாக இருக்கின்றது என்றாலே அதை அஸத் என்று எடுத்துக் கொண்டால் அது மாதிரி ஒன்றில்லை புரிந்து கொள்ளலாம்.  ஸத்தும் அல்ல, அஸத்தும் அல்ல என்ற நிலையையே மித்யா என்று கூறப்படுகின்றது. இந்த பிரபஞ்சம் மித்யா அது இருப்பது போல காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது. அதனால் இந்த பிரம்மத்தை ஒன்றும் செய்ய முடியாது எப்படி கயிற்றில் தோன்றும் பாம்பினால் கயிற்றுக்கு எந்த பாதிப்பும் இல்லையோ அது போல.

 

இந்த மூன்று குணங்களை உடையதாக இருப்பது இந்த பிரம்மம்.  அனந்தம் என்பது முடிவற்று இருத்தலையே குறிக்கின்றது.  நாம் அடைய வேண்டிய அறிவுதான் இந்த அனந்தம்.  இதை தெளிவாக உறுதியுடன் புரிந்து கொள்ள வேண்டும். இந்த அனந்தம் முழு மன நிறைவு என்றும் புரிந்து கொள்ளலாம்.

 

பிரம்மத்தை எப்படி, எங்கே, எதுவாக அறிய வேண்டும். என்ற வினவினால் அதை ஸத்யம், ஞானம், அனந்தமாக அறிய வேண்டும், தன்னுடைய புத்தியில், மனதில் அறிய வேண்டும், நானாக அறிய வேண்டும் என்று பதிலளிக்கப்படுகின்றது

யோ வேத நிஹிதம் கு3ஹாயாம் பரமே வ்யோமன் ஸோஷ்னுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபஸ்சிதேத்

எவனொருவன் பிரம்மத்தை மேலான ஹ்ருதய ஆகாசத்திற்குள் இருக்கின்ற அந்தக்கரணத்திற்குள் இருப்பதாக அறிகின்றானோ அவன் ஆசைப்படுகின்ற எல்லா பொருட்களையும் அடைந்தவனாகின்றான்.  இவன் அறிவு ஸ்வரூபமான பிரம்மனாக இருந்து உடனடியாக எல்லா ஆசைகளையும் நிறைவேற்றிக் கொண்டவனாகின்றான்.  பிரம்மத்தை அறிந்தவன் அதுவாகவே இருப்பதால், எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் இருப்பதால் ஒரே சமயத்தில் எல்லா ஆசைகளையும் நிறைவேற பெற்றவனாகின்றான்

மனதில் இருப்பிடமாக நம்முடைய ஹ்ருதயத்திலுள்ள ஆகாசம் இருக்கின்றது.  புத்திக்கு குஹா என்று கூறக்காரணம், அந்தக் காலத்தில் மனிதான் புதையலை குகைக்குள் ஒளித்து வைத்திருந்ததை போல, போகமும், மோட்சமும் இந்த புத்தியில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதால் இவ்வாறு குறிப்பிடப்படுகின்றது.

பிரம்மத்தை அறிபவனாக (பிரமாதாவாக) அறிய வேண்டும் அறியப்படும் பொருளாக (பிரமேயமாக) அறியக்கூடாது.  நம் புத்தியில் பிரம்மத்தை தவிர எல்லாவற்றையும் அறியப்படும் பொருளாகத்தான் அறிகின்றோம்.  பிரம்ம அறியப்படும் பொருளாக இல்லாததற்கு நான்கு காரணங்கள் இருக்கின்றது.  அவைகள்

  1. அது எதனாலும் வரையறுக்கப்படாதது.
  2. அது இருமையற்றதாக இருப்பதால்,பிரமேயமாக அறிய முடியாது. இருமை முதலில் அறிபவன், அறியப்படும்பொருள் என்பதிலிருந்துதான் தொடங்குகிறது.  நேஹ நானாஸ்தி கிஞ்சன என்ற உபநிஷத் வாக்கியம் இதை புரிய வைக்கின்றது.
  3. இதன் ஸ்வரூபம் அறிபவனாக இருப்பதால் அது அறியப்படும் பொருளாக இருக்க முடியாது.
  4. சேதனவாத்-அறிவு ஸ்வரூபமாக இருப்பதால் அறியப்படும் பொருளாக இருக்க முடியாது.  எப்பொழுதும் எது அறியப்படுகின்றதோ அது ஜடமாகத்தான் இருக்க முடியும்

 

கேள்வி  பிரம்மன் ஏன் இரண்டாக இருக்க கூடாது? நான் என்னையே (ஸ்தூல உடலை) பார்க்கின்றேனே!!!

பதில்    இந்த உடல் நீயல்ல என்று தெரிந்துக்கொள், பிரம்மன் அவயங்களற்றது எனவே சாத்தியமல்ல.  மேலும் பிரம்மன் அறியப்படும் பொருளல்ல என்ற திடமான அறிவை அடைய வேண்டும்.

 

கேள்வி  பிரம்மன் அறிபவனாக (பிரமாதாவாக)  இருக்க முடியாதா?

பதில்    அறிபவன் என்றும் சொல்ல முடியாது. அப்படி சொன்னால் அதில் குறையுண்டு. அறிபவன் விதவிதமான பொருட்களை அறியும் போது அவனிடத்தில் மாற்றம் இருந்து கொண்டே இருக்கும். எனவே இது மாற்றத்திற்கு உட்பட்டதாக இருக்கின்றது.

 

சாஸ்திரத்தில் இரண்டு வகையான அறிபவன்கள் கூறப்பட்டிருக்கின்றது. அவைகள்

  1. நம்முடைய புத்தி – இதுதான் எண்ணங்களினால் மாற்றங்கள் அடைந்து அறிவை அடைகின்றது.  சிதாபாசத்தின் உதவியால் இது நடைபெறுகின்றது.
  2. சாஸ்திரத்தின் உபதேசப்படி புத்தியும் ஜடம்தான், ஆனால் அறிவுடன் எப்படி செயல்படுகின்றது.  இந்த புத்தியை அறிந்து கொண்டிருப்பவன் இன்னொரு பிரமாதா. இந்த ஆத்மா என்ற பிரமாதாவிற்கு புத்தியானது அறியப்படும் பொருளாகின்றது. புத்தியானது விகாரமடைந்து பிரமாதாவாக இருக்கின்றது.  ஆத்மாவானது நிர்விகாரமாக இருந்து கொண்டு பிரமாதவாக இருக்கின்றது. எனவே அறிபவன் நான் என்று சொல்லும்போது புத்தியை புரிந்து கொள்ளாமல் அதை பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஆத்மாதான் அறிபவன் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

விசாரம்:-

கேள்வி  எங்கும் இருக்கின்ற பிரம்மத்தை எப்படி அடைய முடியும்?

பதில்    ஒன்றை அறியாமலிருந்தால் அதை அடையாமல் இருத்தலாகும், அதே சமயம் அதை அறிந்து கொண்டால் அதை அடைந்தவனாகின்றான். உதாரணமாக பத்தாவது மனிதனை தெரிந்தவுடன் அவனை அடைந்தவனாகின்றான்.

 

  • எல்லா பொருட்களையும் அடைந்து விட்டான் என்பதற்கு அவன் முழு மனநிறைவை அடைந்து விட்டான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.  நானேதான் எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் இருந்து கொண்டு எல்லா ஆசைகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றேன். நம்மிடத்தே இருக்கும் பொறாமை, கோபம் நமக்கே தெரியாமல் இருக்கும்.  வெளிப்பட வேண்டிய நேரத்தில் நம்மையும் மீறி வெளியே வந்து நம்மை துயரத்தில் ஆழ்த்தி விடும், மூடனாகி மாற்றி விடும், தகாத செயலுக்கு தூண்டி விடும்.
  • அவனுடைய மனதிலிருக்கும் எல்லா ஆசைகளும் நீக்கப்படுகின்றது. உதாரணமாக கார் வாங்க வேண்டும் என்ற ஆசை அதை வாங்கியவுடன் அதன் மீதுள்ள ஆசை நீங்கி விடுகின்றது.  அதேபோல பணத்தை அடைய வேண்டும் என்ற ஆசை அதை அடைந்ததும் நீங்கிவிடுகின்றது.  இவ்வாறு எல்லா பொருட்களும் அவைகளை அடைந்தவுடன் நீங்கிவிடுகின்றன.
  • ஆத்ம ஞானத்தால் எல்லா ஆசைகளும் நீங்கி விடும்.
  • ஆசை எழுவதற்கு காரணம் மனதிலுள்ள நிறைவற்ற நிலை.  இந்த மனநிறைவற்ற தன்மைக்கு காரணம் நம் உடல், மனம், புத்தியில் இருக்கின்ற நான் என்ற அபிமானத்தினால்தான்.  இந்த சரீரத்தின் தேவைகள், மனதின் தேவைகள் என்னுடையதாகின்றது.  இந்த தேவைகள் எப்பொழுதும் இருந்துக் கொண்டுதான் இருக்கும்.  இதனால்தான் நம் மனம் எப்பொழுதும் நிறைவின்மையுடன் இருக்கின்றது.  ஆத்மாவை பற்றிய அறியாமை இந்த மனநிறைவற்ற நிலையில் வைத்திருக்கின்றது, மனநிறைவற்ற நிலை ஆசைகளை உருவாக்குகின்றது.  எனவே ஆசைகளின் மூலமான அறியாமை நீங்கிவிட்டால் அவைகளும் நீங்கிவிடும்.  பசியானது சாப்பிட்டவுடன் நீங்கிவிடுவது போல, ஆசையானது ஆத்ம ஞானம் வந்தவுடன் நீங்கிவிடும்.
  • ஆசைகள் இரண்டு வகை 1. பந்தப்படுத்துகின்ற ஆசைகள், 2. பந்தப்படுத்தாத ஆசைகள். எந்த ஆசைகள் நிறைவேறாவிட்டால் நாம் துயரம் அடைகின்றோமோ அவைகள் பந்தப்படுத்துகின்ற ஆசைகள். எந்த ஆசைகள் நிறைவேறினாலும், நிறைவேறாவிட்டாலும் மனநிறைவுடன் இருக்கின்றோமோ அவைகள் பந்தப்படுத்தாத ஆசைகள்..
  • பிராரப்த கர்மமானது சரீர அபிமானத்தில் வைத்திருக்கும், ஆனால் சரீரத்திற்கு வரும் நலம், கேடு அவனை பாதிப்பதில்லை
  • ஞானியிடத்து வரும் ஆசையானது ஈஸ்வரனின் சங்கல்பமாக இருக்கும்.

 

இவ்விதம் ரிக் மந்திரம் முடிவடைகின்றது.  சூத்திரம் என்பது சுருக்கமான வாக்கியம், விருத்தி என்பது சுருக்கமான விளக்கம், வியாக்யானம் என்பது விரிவான விளக்கம்.

அனுவாகம்-1.2
தஸ்மாத்3வா ஏதஸ்மதா3த்மன ஆகாஶ: ஸம்பூ4த: |
ஆகாஶத்3வாயு: |
வாயோரக்3னி: |
அக்3னேராப: |
அத்3ப்4ய: ப்ருதி2வீ |
ப்ருதிவ்யா ஔஷத4ய: |
ஔஶதீ4ப்4யோÅன்னம் |
அன்னாத் புருஷ: ||

இதில் பிரம்மத்தை பற்றி விரிவாக விளக்கப்படுகின்றது.  அத்யாரோப அபவாத நியாயம் என்ற முறையில் சிஷ்யர்களுக்கு விளக்கப்படுகின்றது.  அத்யாரோபம் என்பது தெரிந்தே ஒன்றின் மீது வேறொன்றை ஏற்றி வைத்தல், அபவாதம் என்பது ஏற்றி வைத்ததை இல்லையென்று நீக்கி விடுதல்.  அத்யாஸம் என்பது அறியாமையினால் ஒன்றின் மேல் வேறொன்றை பார்த்தல். அத்யாரோபம் ஏன் செய்ய வேண்டும் என்றால், ஒரு பொருள் ஏற்கனவே தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பதால் அதை விளக்க வேண்டுமென்றால் முதலில் தவற்றை புரிய வைக்க வேண்டும், பிறகு சரியானதை அறிய வைக்க வேண்டும். உதாரணமாக கயிற்றில் பாம்பை பார்த்து கொண்டிருப்பவனுக்கு முதலில் பார்த்து கொண்டிருக்கும் பாம்பு உண்மையானதல்ல என்று புரிய வைக்க வேண்டும், பிறகு அது கயிறு என்று அறிய வைக்க வேண்டும்.  அதாவது பாம்பை இருப்பதை ஏற்றுக் கொண்டு பிறகு அது பாம்பு காட்சியளிக்கும் கயிறு என்று என்று உபதேசிக்க வேண்டும்.  ஒருவனிடத்தில் இருக்கும் விபரீத ஞானத்தை போக்குவதற்கு இந்த முறையை தவிர வேறொன்றும் இல்லை.

அதேபோல நாம் அனுபவிக்கும் இந்த பிரபஞ்சத்தை இருக்கின்றது என்று ஒத்துக் கொண்டு அதை பிரம்மத்தில் ஏற்றி வைத்து பிறகு அதை நீக்குகின்றது;  பிரம்மம் பிரஞ்சத்திற்கு ஆதாரம் என்று முதலில் ஏற்றி வைக்கின்றது அதாவது முதலில் இவ்வாறு அத்யாரோபம் செய்கின்றது.  பிரபஞ்சத்திற்கு காரணமாக பிரம்மத்தை சொல்கின்றது.  அதனால் அடையும் பயன்கள் கீழே கொடுக்கபட்டுள்ளன.

  1. பிரம்மன் சத்யம் என்பது நிலை நாட்டப்படும். சத்யமாக இருப்பது மூன்று காலத்திலும் இருக்கும்.  களிமண்-காரணம்-ஸத்யம்.  பானையின் தோற்றத்துக்கு முன்னும், இருக்கும்போதும், உடைந்த பிறகும் களிமண் இருந்து கொண்டு இருக்கும்.
  2. பிரம்மன் அனந்தம் என்று நிலை நாட்டப்படும். தேச, கால, வஸ்துவினால் வரையறுக்கபடாதது.
  3. தேசத்தினால் வரையறுக்கப்படாதது – பிரம்மத்திலிருந்து முதலில் தோன்றியது ஆகாசம், இதிலிருந்து பிரம்மன் தேசத்தினால் வரையறுக்கப்பட முடியாதது என்று புரிந்து விடும்.
  4. காலமும் பிரம்மத்திலிருந்து தோன்றியதால், அதனாலும் வரையறுக்கப்பட முடியாதது.
  5. குணங்கள் அதிகமாகும்போது அதன் வியாபிப்பு குறைகின்றது.  குணங்கள் உள்ள பொருட்கள் எல்லாம் வரையறுக்கப்படலாம்.
  6. காரண காரியம் என்று சேரும்போது காரணத்தை மட்டும்தான் இருக்கின்றது என்று கூறமுடியும்.  பிரம்மன் காரணம், பிரபஞ்சம் காரியம் இரண்டும் ஒன்று புரிந்து கொண்டால் அங்கு பிரம்மன் மட்டும்தான் இருக்கும்.  அதற்கு வேறாக ஒன்றும் இல்லை. எனவே வஸ்துவால் வரையறுக்க முடியாது.
  7. அத்யாரோப முறையை பயன்படுத்துவதற்கு உதவும்
  8. அத்வைதமானது நிலை நாட்டப்படுகின்றது. உதாரணமாக பானைகள் பலவாக இருந்தாலும் அவைகள் மித்யாவாக இருப்பதால் அதற்கு ஆதாரமான களிமண் மட்டும் இருப்பது போல, ஜகத் மித்யாவாக இருக்கின்றது, பிரம்மன் ஒன்றுதான் இருக்கின்றது.

 

பிரம்மமானது மாற்றமடையாமல் இந்த ஜகத்திற்கு காரணமாக இருப்பது மாயையின் சக்தியால்தான். இந்த மாயை இல்லாத ஒன்றை இருப்பதாக காட்சியளிக்க செய்கிறது. அதன் சக்தி.  இது பிரம்மத்தின் சக்தியாக இருக்கின்றது. மாயையுடன் கூடிய பிரம்மம்தான் ஈஸ்வரன் என்று அழைக்கப்படுகின்றது.

காரணம் இரண்டு வகையாக இருக்கின்றது. அவைகள் 1. உபாதான காரணம், 2. நிமித்தக் காரணம்.  இங்கே பிரம்மனானது உபாதான காரணமாக அறிமுகப்படுத்தப்படுகின்றது. ஸ்ருஷ்டி முதலில் சூட்சுமமாக வரும் பிறகு அதிலிருந்து ஸ்தூலமான படைப்புக்கள் தோற்றுவிக்கப்படும்.  இங்கு இரண்டும் சேர்ந்து தோன்றுவதாக கூறப்படுகின்றது.

மந்திர விளக்கம்

பிரம்மத்தினிடமிருந்து, ஆத்மாவாக அறியப்படுகின்ற இதனிடமிருந்து ஆகாசம் தோன்றியது.  மாயையுடன் சப்த குணத்தை சேர்த்து ஆகாசமாக தோன்றுகிறது. இங்கு ஈஸ்வரனே ஆகாசமாக காட்சியளிக்கின்றார். உபாதான காரணமே காரியமாக காட்சியளித்து கொண்டிருக்கும்,  ஆகாசத்துடன் ஸ்பர்சம் என்ற குணத்தை சேர்த்தவுடன் வாயு உருவாகின்றது. இப்போது ஈஸ்வரன் வாயுவாகவும் காட்சியளிக்கின்றார்.  வாயுவிடமிருந்து அக்னியானது தோன்றியது, உருவம் என்ற குணம் இதனுடன் சேர்ந்திருக்கின்றது.  அக்னியிடமிருந்து நீர் தோன்றியது, இதனுடன் சுவை என்ற குணம் இருக்கின்றது. நீரோடு மணம் என்ற குணம் சேர்ந்தவுடன் நிலமாக தோன்றியது. நிலத்திலிருந்து தாவரங்கள் தோன்றியது, தாவரங்களிலிருந்து உணவு தோன்றியது. உணவிலிருந்து ஜீவராசிகளின் ஸ்தூல சரீரம் தோன்றியது. ஈஸ்வரனே ஜீவராசிகளின் ஸ்தூல உடலாக காட்சியளிக்கின்றார்.  தன்னுடைய ஸ்வரூபத்தை இழக்காமல் மாயையின் சக்தியால் இவ்வாறெல்லாம் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது.

 

அனுவாகம்-1.3
ஸ வா ஏஷ புருஷோÅன்னரஸமய: |
தஸ்யேத3மேவ ஶிர: |
அயம் த3க்ஷிண: பக்ஷ: |
அயமுத்தர: பக்ஷ: |
அயமாத்மா |
இத3ம் புச்ச2ம் ப்ரதிஷ்டா |
தத3ப்யேஶ ஸ்லோகோ ப4வதி |

இதில் அபவாதம் செய்யப்பட்டுள்ளது. அபவாதம் என்றால் நிராகரித்தல், நீக்குதல், ஒடுக்குதல்.  அத்யரோபம் : காரணம் + நாமரூபம் = காரியம். சூக்‌ஷூமத்திலிருந்து ஸ்தூலமாக மாறுதல்.  அபவாதம் : காரணம் = காரியம் –  நாமரூபம், ஸ்தூலத்திலிருந்து சூக்‌ஷூம நிலைக்கு மாற்றுதல். ஸத்தை ஒரிடத்திலிருந்து வேறொன்றிற்கு மாற்றுதல். உதாரணமாக பஞ்சுàநூல்àதுணிàஆடை.  ஆடை இருக்கின்றது என்பதில் உள்ள இருத்தலை துணிக்கு கொடுத்து விட்டால் துணி இருக்கின்றதாகி விடும், நூல் இருக்கின்றது—பஞ்சு இருக்கின்றது.

அதேபோல பிரம்மன்àஆகாசம்àவாயுàஅக்னிàநீர்àப்ருதிவி, இவைகளிலுள்ள இருத்தல் கடைசியில் பிரம்மத்தை அடைகின்றது. இந்த அபவாதம் மனதில்தான் நடக்கும்.  காரியம் இருக்கின்றது என்று சொல்வதை விட்டுவிட்டு காரணம் இருக்கின்றது என்று சொல்வதுதான் அபவாதம்.  காரியமான ஆடையில் இருக்கும் ஸத்தை துணிக்கு கொடுக்கும்போது ஆடையில் இருத்தலை நிஷேதம் செய்யப்படுகின்றது.  இப்படியே அந்த இருத்தல் கடைசியில் மூலக்காரணமான பஞ்சுக்கு சென்று விடும்.  அதுபோல கிரமமாக தோற்றுவிக்கப்பட்டிருக்கும் ஸ்ருஷ்டியை அதே கிரமத்தில் நிஷேதம் செய்துக் கொண்டு சென்றால் பிரம்மத்தை அடைவோம்.

 

இந்த அபவாதம் பஞ்ச கோசங்களை வைத்து செய்யப்படுகின்றது.. ஸ்தூல சரீரம் அன்னமய கோஷம் என்றும், சூட்சும சரீரம் ப்ராணமய, மனோமய, விக்ஞானமய கோஷங்கள் என்றும், காரண சரீரம் ஆனந்தமய கோஷம் என்றும் பிரிக்கப்பட்டு இருக்கிறது,  ஆத்மாவானது இந்த கோஷங்களால் மறைக்கப்பட்டிருக்கின்றது;  இந்த ஐந்து நிலைகளில் நான் என்று புத்தியானது அபிமானம் கொண்டு ஆத்மாவை அறிய விடாமல் செய்கின்றது.

 

ஏன் பஞ்சபூதங்கள் வழியாக அபவாதம் செய்யாமல் ஐந்து கோஷங்களின் மூலமாக அபவாதம் செய்யபட்டு பிரம்ம ஞானமானது கொடுக்கப்படுகின்றது.?

பஞ்ச பூதங்களை வைத்து அபவாதம் செய்தால் வெளியே உள்ள விஷயமாக அறிந்து கொள்ள நேரிடும்.  பிரம்மத்தை தன்னிடத்திலுள்ள ஆத்மாவாக புரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புவதால் இவ்வாறு பஞ்ச கோஷத்தின் வழியாக அபவாதம் செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த இடத்தில் நான் என்ற அபிமானம் இருக்கின்றதோ அவைகளை நீக்கித்தான் நமக்கு அறிவை புகட்ட வேண்டும் என்பதால் இந்த முறையை உபநிஷத் கையாண்டிருக்கின்றது.  இவ்வாறு செய்யும் போது எவ்வளவு ஸ்தூல சரீரங்கள் இருக்கின்றதோ அவ்வளவு ஆத்மாக்கள் இருக்கின்றதா என்ற சந்தேகம் வந்துவிடும்.

 

அன்னமய கோஷமும், அன்னமய பிரபஞ்சமும் ஒன்றுதான் என்ற அறிவை கொடுத்து நம்முடைய ஸ்தூல சரீரத்தை நீக்கும்போது ஸ்தூல பிரபஞ்சத்தை நீக்கி விடுவோம். இவ்வாறு ஒவ்வொரு கோஷத்திற்கும் ஸமஷ்டி கோஷத்திற்கும் உள்ள ஐக்கியத்தை எடுத்துக்காட்டி இந்த சந்தேகமானது நீக்கப்படுகின்றது;.

 

சமஷ்டி-வியஷ்டி ஐக்கிய விசாரம்:

இந்த இரண்டுமே ஒன்றுதான்.  பலமரங்கள் உள்ள இடத்திற்கு வனம் என்று கூறப்படுகின்றது.  இந்த மரங்கள் அழிந்து விட்டால் வனம் இல்லாது போகும். அதுபோல மரம் போன்ற ஸ்தூல சரீரத்தை நீக்கினால் அதிலுள்ள அபிமான நீங்கி விடும்.  பிறகு சமஷ்டி பிரபஞ்சம் இல்லாமல் போய்விடும். கனவு நிலையில் இந்த ஸ்தூல சரீரத்தின் மேல் உள்ள அபிமானம் நீங்கி விடுவதால் இந்த பிரபஞ்சமே மறைந்து விடுகின்றது.  ஆனால் சூட்சும ஸரீர அபிமானம் காரணமாக சூட்சும பிரபஞ்சம் தோன்றி விடுகின்றது. ஒரு விஷயம் புரியவில்லையென்றால், அதையே திரும்ப திரும்ப விசாரம் செய்யும் போது கொஞ்ச கொஞ்சமாக நமக்கு புரிய தொடங்கும். இதற்கு உபாஸனம் என்று பெயர்.  இந்த முறையையும் உபநிஷத் விளக்குகின்றது.  இந்த உபாஸனைக்கு ஆலம்பனமாக ஸ்தூல சரீரத்தை எடுத்துக் கொண்டு இந்த ஸ்தூல பிரபஞ்சத்தை (விராட் புருஷனை) தியானிக்க வேண்டும்.  இதேபோல ஒவ்வொரு கோஷமும் ஆலம்பனமாக இருக்கும் அதன் சமஷ்டியை தியானித்து இரண்டுக்குமுள்ள ஐக்கியத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

 

அனுவாக விளக்கம்:

ஸ வா எஷ புருஷோ அன்னரஸமய: இது அன்னமய கோஷத்தை ஆத்மாவாக அறிமுகப்படுத்துகின்றது.  இந்த ஆத்மாதான் அன்னமய கோஷமாக இருக்கின்றது. அன்னத்தை சுவைப்பதினால் அடைகின்ற ஸ்தூல உடல், அன்னமயமான மனித உடல் இதையை ஆத்மாவாக கற்பனை செய்யப்படுகின்றது.

 

ஆலம்பனத்தை தயார் செய்வதற்குதான் இந்த உடலை ஐந்தாக பிரிக்கப்படுகின்றது. அன்னமயமான இவனுக்கு தலையே தலைப்பாகம், வலது கை வலதுபாகம், இடது இடது பாகம், கழுத்திலிருந்து வயிறு வரை உள்ள பாகம் மத்திய பாகம், இடுப்பிலிருந்து பாதம் வரை உள்ள பாகம் இந்த உடலைத் தாங்கும் பாகம் என்று ஐந்தாக பிரிக்கப்படுகின்றது. அன்னமய விஷயத்தில் இனி வரும் ரிக் மந்திரம் விளக்குகின்றது.

ப்ரஹ்மானந்தவல்லி 

அனுவாகம்-2.1
அன்னத்4வை ப்ரஜா: ப்ரஜாயந்தே |
யா: காஶ்ச ப்ருதி2வீம் ஶ்ரிதா: |
அதோ2 அன்னேனைவ ஜீவந்தி |
அதை2ந்த3பியந்த்யந்தத: |
அன்னம் ஹி பூ4தானாம் ஜ்யேஷ்டம் |
தஸ்மாத்ஸர்வௌஷத4முச்யதே |
ஸர்வம் வை தேÅன்னமாப்னுவந்தி |
யேÅன்னம் ப்3ரஹ்மோபாஸதே |
அன்னம் ஹி பூ4தானாம் ஜ்யேஷ்டம் |
தஸ்மாத்ஸர்வௌஷத4முச்யதே |
அன்னாத்3பூ4தானி ஜாயந்தே |
ஜாதான்யன்னேன வர்த4ந்தே |
அத்3யதேÅத்தே ச பூ4தனி தஸ்மாத3ன்னம் தது3ச்யத இதி ||

இதில் முதலில் அன்னமய வியஷ்டியும், சமஷ்டியும் ஒன்றுதான் என்று கூறுகின்றது. இந்த உடலும் மற்றனைது உடல்களும் ஒன்றுதான் என்று உபாஸனை செய்ய வேண்டும் என்று உபதேசிக்கப்படுகின்றது. இங்கு அன்னம்-சமஷ்டி, அன்னமயம்-வியஷ்டி. அன்னத்திலிருந்து (விராட்) தனித்தனி அன்னமய கோஷம் தோன்றியது அதாவது இந்த பூமியை சார்ந்திருக்கின்ற அனைத்து விதமான உயிரினங்களூம் தோன்றியது. அவைகள் உணவினாலேயே காக்கபட்டு வருகின்றது.  வாழ்வின் முடிவில் இந்த சமஷ்டி அன்னத்தையே அடைகின்றது.  இந்த சமஷ்டி உடலும், வியஷ்டி உடலும் ஒன்றுதான் என்ற கருத்தை புரிந்து கொள்ள வேண்டும்.  ஈஸ்வரன் உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளிலும் தானாகவே இருக்கின்றார் என்றும் புரிந்து கொள்ள வேண்டும்.

அனுவாக விளக்கம்:-
விராட், இந்த ஸ்தூல பிரபஞ்சம் எல்லா ஜீவராசிகளுக்கும் காரணமாக, முதன்மையாக இருக்கின்றது.  எனவே உணவே எல்லா ஜீவராசிகளுக்கும் மருந்தாக சொல்லப்படுகின்றது. யார் உணவை பிரம்மனாக உபாஸிக்கின்றார்களோ அவர்களுக்கு அனைத்து விதமான உணவுகளையும் அடைகின்றார்கள். நிஷ்காம பலனானது இந்த உடலின் மீதுள்ள அபிமானம் சென்றுவிடும்.  உணவினால் தோன்றி, அதனாலே காக்கப்பட்டு கடைசியில் அதினிடத்தே லயம் அடைகின்றது, உணவாகவே மாறி விடுகின்றது.  அன்னம் என்ற சொல் அப்படி வந்தது என்று இப்போது விளக்கப்படுகின்றது. எவைகள் எல்லாம் நம்மால் சாப்பிடப்படுகின்றதோ அவைகள் அன்னம் என்று கூறப்படுகின்றது.  இறந்தபிறகு இந்த ஸ்தூல சரீரத்தை பூதங்களால் சாப்பிடப்படுதல் அன்னம் என்று சொல்லப்படுகின்றது.  இவ்வாறு ரிக் மந்திரத்தால் விளக்கப்படுகின்றது.

அனுவாகம்-2.2
தஸ்மாத்3வா ஏதஸ்மாத3ன்னரஸமயாத் |
அன்யோÅந்தர ஆத்மா ப்ராணமய: |
தனைஷ பூர்ண: |
ஸ வா ஏஷ புருஷவித4 ஏவ |
தஸ்ய புருஷவித4தாம் |
அன்வயம் புருஷவித: |
தஸ்ய ப்ராண ஏவ ஶிர: |
வ்யானோ தக்ஷிண: பக்ஷ: |
அபான உத்தர: பக்ஷ: |
ஆகாஶ ஆத்மா |
ப்ருதி2வி புச்ச2ம் ப்ரதிஷ்ட |
தத3ப்யேஷ ஶ்லோகோ ப4வதி ||
முன்னே சொல்லப்பட்ட அந்த அன்னமயத்திலிருந்து வேறாகவும் ஸ்தூல சரீரத்திற்கும் உள்ளேயும் இருக்கின்ற பிராணமயம்தான் ஆத்மா.

விசாரம்:-
சமஷ்டியாக இருக்கின்ற வியஷ்டியாகவும் இருக்கின்ற அன்னமயத்திலிருந்து வேறாக
ஸ்தூல உடலுக்குள் இருக்கின்ற பிராணமயம்தான் ஆத்மா என்று சொல்லும்போது
அன்னமய கோஷம் ஆத்மா இல்லையென்றாகின்றது, அது மித்யாவாகவும், காரியமாகவும், அனாத்மாவாகவும் உள்ள நிலைக்கு சென்று விடுகின்றது.  அன்னமயம் ஆத்மாவல்ல என்று உறுதி செய்து அதைக்காட்டிலும் வேறாக ஒன்றை சொல்லுகின்றது.  இது அன்னமயத்தை விட ஆத்மாவுக்கு அருகிலும், சூட்சுமமாகவும், அதிகமாகவும் வியாபித்து இருக்கின்றது.  ஒரு பொருள் சூட்சுமமாகும் போது அதிகமான இடத்தை வியாபிக்கும். இது அன்னமயத்தைக் கட்டுபடுத்தும் நிலையில் இருக்கின்றது.  ஸ்தூல உடல் சரியில்லையென்றால் பிராணனை சரி செய்தால் அது உடலை நல்ல நிலைக்கு கொண்டு வரும்.

ஆத்மா என்ற சொல் தோன்றிய விதம்.  இது அத3 என்ற வினையடியிலிருந்து வந்திருக்கின்றது.  ஆத்மா என்றால் வியாபித்தல், ஆதாரமாக இருத்தல், பார்த்துக் கொண்டிருத்தல் (சாக்‌ஷி), என்றும் இருத்தல் என்று பல அர்த்தங்களை குறிக்கின்றது.  அன்னமய கோஷம் ஆத்மாவல்ல என்று சொல்லும்போது அன்னத்தை அதாவது இங்கு எல்லா ஸ்தூல சரீரங்களையும் சேர்த்து புரிந்து கொள்ள வேண்டும்,.  அதேபோல நம்முடைய பிராணமயமும், சமஷ்டி பிராணமயமும் ஒன்றுதான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.  இந்த அறிவு ஏற்படவில்லையென்றால் இதை உபாஸனை செய்து அடைய வேண்டும். ஆலம்பனமாக இந்த உபாஸனையில் இருப்பது பிராணமயம், ஆனால் இது கண்ணுக்கு தெரியாமல் இருப்பதால் இதற்கு உருவத்தைக் கொடுக்கின்றது உபநிஷத்.

பிராணன் உடலுக்கு செல்வதால் அது உடலின் உருவத்தை அடைவதாக எண்ணிக் கொள்ள வேண்டும், பிராணன் ஐந்துவகையாக இருக்கின்றது. பிராணமயம் உடலாக இருக்கின்றது. இதில் வெளியே விடும் மூச்சுக்காற்றான பிராணன் தலைப்பாகமாகவும், வியானன், (சக்தியை, ரத்தத்தை உடல் முழுவதும் எடுத்துச் செல்கின்ற காற்று) உடலின் வலதுபாகம், அபானன் (உடலிலிருந்து வெளியேறும் காற்று) உடலின் இடது பாகமாகவும், சமானன் (சாப்பிடுகின்ற உணவை செரிக்க உதவுவது) நடுப்பாகமாகவும், உதானன் (எதிர்மறையாக வேலை செய்வது, வாந்தி வருவது, கண்ணில் நீர் வருவது, இறந்த பிறகு சூட்சும உடலை வெளியே எடுத்துச் செல்வது) வாலைப்போல பிராணமய உடலுக்கு ஆதாரமாக இருக்கின்றது.  இவ்வாறு உபநிஷத் சொல்வதை சிரத்தையோடு எடுத்துக் கொள்ள வேண்டும்.  இந்த பிராணமய  கோஷத்தை பின்வரும் ரிக் மந்திரம் விளக்குகின்றது.

அனுவாகம்-3.1
ப்ராணம் தே3வா அனு ப்ராணந்தி |
மனுஷ்யா: பஶவஶ்ச யே |
ப்ராணோ ஹி பூ4தானாமாயு: |
தஸ்மாத்ஸர்வாயுஷமுச்யதே |
ஸர்வமேவ த ஆயுர்யந்தி |
யே ப்ராணம் ப்3ரஹ்மோபாஸதே |
ப்ராணே ஹி பூ4தானாமாயு: |
தஸ்மத்ஸர்வாயுஷமுச்யத இதி |
தஸ்யைஷ ஏவ ஶாரீர ஆத்மா |
ய: பூர்வஸ்ய |

சமஷ்டி பிராணனும், வியஷ்டி பிராணமயமும் ஒன்றுதான் என்று கூறுகின்றது.  நம்மிடத்து இருக்கும் பிராணமயமும் உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளில் இருக்கும் பிராணமயமும் ஒன்றுதான்.என்று உணர்ந்து செயல்பட வேண்டும். பசி-தாகம் பிராணனின் செயல்பாடுகள்.  நமக்கு ஏற்படும் இவைகளே அனைத்து ஜீவராசிகளுக்கும் ஏற்படுகின்றது.  இந்த ஐக்கியத்தை புரிந்து கொள்ள முடியாவிட்டால், இதை மனதில் தியானம் செய்ய வேண்டும். இந்த தியானத்தின் பலன் இந்த ஐக்கியத்தை உணர்ந்து கொள்ளுதல், அனுபவமாக இருக்க வேண்டும், நடைமுறையில் இது நம்முடைய சுபாவமாகவே மாறிவிடும். சகாம பலன் விதிக்கப்பட்ட முழு ஆயுளையும் அடைகின்றார்கள், துர்மரணம் ஏற்படாது.  இவ்வாறு ரிக் மந்திரம் விளக்கத்தை முடிக்கின்றது. இந்த பிராணமயத்தை சாரீர ஆத்மா என்றும் அழைக்கப்படுகின்றது.  எவனொருவன் இதற்கு முன் உள்ள அன்னமய கோஷத்தினுடைய சாரீர ஆத்மாவாக இருக்கின்றானோ அவனே பிராணமயன்.

அனுவாகம்-3.2
தஸ்மாத்3வா ஏதஸ்மாத்ப்ராணமயாத் |
அன்யோ
அன்யோÅந்தர ஆத்மா மனோமய: |
தனைஷ பூர்ண: |
ஸ வா ஏஷ புருஷவித4 ஏவ |
தஸ்ய புருஷவித4தாம் |
அன்வயம் புருஷவித4: |
தஸ்ய யஜுரேவ ஶிர: |
ரிக்3 த3க்ஷிண: பக்ஷ: |
ஸாமொத்தர: பக்ஷ: |
ஆதே3ஶ ஆத்மா |
அத2ர்வாங்கி3ரஸ: புச்ச2ம் ப்ரதிஷ்டா |
தத3ப்யேஷ ஶ்லோகோ ப4வதி ||

முன் சொல்லப்பட்ட பிராணமயத்திலிருந்து வேறாகவும், உள்ளேயும் உள்ள ஆத்மா மனோமயம். .  இதன் மூலம் பிராணமய அனாத்மா என்று நீக்கப்படுகின்றது. அதனால் மனோமய கோஷத்தினால் பிராணமயமானது வியாபிக்கப்படுகின்றது.  இந்த மனோமயம் ஸ்தூல உடலை போன்றவன். அந்த பிராணமயனுடைய உடலமைப்பை ஒட்டியே இந்த மனோமயனுடைய உடலும் அமைகின்றது.  யஜீர்வேதமே தலைப்பாகம், ரிக்வேதம் வலதுபாகம், சாமவேதம் இடதுபாகம், வேதத்தின் கட்டளைகள் நடுப்பாகம், அதர்வண வேதம் உடலை தாங்கும் பாகமாக அமைகின்றது.  பின்வரும் ரிக்மந்திரம் இதை விளக்குகின்றது

அனுவாகம்-4.1
யதோ வாசோ நிவர்தந்தே |
அப்ராப்ய மனஸ ஸஹ |
ஆனந்த3ம் ப்3ரஹ்மணோ வித்3வான் |
ந பி3ப்4தி கதா3சனேதி |
தஸ்யைஷ ஏவ ஶாரீர ஆத்மா |
ய: பூரவஸ்ய ||

வியஷ்டி மனோமயமும் சமஷ்டி மனோமயமும் ஒன்றுதான் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  ஏனென்றால் உபநிஷத் இதை மறைமுகமாகத்தான் கூறுகிறது.

வாக்கானது மனதுடன் சென்று ஹிரண்யகர்ப்பனை அடையமுடியாமல் திரும்பி வந்து விடுகின்றது.  சூட்சும பிரபஞ்சத்தின் உருவமாக இருக்கின்ற ஹிரண்யகர்ப்பனை விளக்க முடியாமல் வியஷ்டி மனமானது திரும்பி வந்து விட்டது.  இதிலிருந்து வியஷ்டியானது சமஷ்டியை விளக்க முடியாது என்று தெரிகின்றது.  தனிமரம் தோப்பாகாது என்பது போல இது என்று புரிந்து கொள்ள முடிகின்றது.  இதிலிருந்து இரண்டும் ஒன்றுதான் என்ற அறிவு புகட்டப்படுகின்றது.  எனவே உபாஸகன் ஹிரண்யகர்ப்பனை ஆனந்த ஸ்வரூபமாக தியானிப்பதனால், அவனுக்கு எப்பொழுதும், எதனிடத்திலும் பயமில்லை. அதாவது பயமற்ற நிலையை அடைந்திடுவான்.  நிஷ்காம பலனானது மனோமயம் ஆத்மாவல்ல என்று புரிந்து கொண்டு அடுத்த கோஷ விசாரத்திற்கு செல்வான்.  முன் சொன்ன பிராணமயத்திற்கு யார் ஆத்மாவாக உள்ளே இருக்கின்றானோ அவனே இந்த மனோமயன்.  இத்துடன் ரிக் மந்திரம் முடிவடை-கின்றது

அனுவாகம்-4.2
தஸ்மாத்3வா ஏதஸ்மான்மனோமயாத் |
அன்யோÅந்தர ஆத்மா விக்3ஞானமய: |
தனைஷ பூர்ண: |
ஸ வா ஏஷ புருஷவித4 ஏவ |
தஸ்ய புருஷவித4தாம் |
அன்வயம் புருஷவித4: |
தஸ்ய ஶ்ரத்3தை4 ஶிர: |
ரிதம் தக்ஷிண: பக்ஷ: |
ஸத்யமுத்தர: பக்ஷ: |
யோக்3 ஆத்மா |
மஹ: புச்ச2ம் ப்ரதிஷ்டா |
தத3ப்யேஷ ஶ்லோகோ ப4வதி ||

முன் சொல்லப்பட்ட மனோமயத்திலிருந்து வேறாகவும் உள்ளேயும் உள்ள ஆத்மா விக்ஞானமயன்.  இதனால் மனோமயமானது முழுவதுமாக வியாபிக்கப்பட்டுள்ளது.  எனவே இது மனித உடலைப் போன்றது. அந்த மனோமயன் உடலமைப்பை ஒட்டியே இந்த விக்ஞானமயனின் உடலமைப்பும் அமைகின்றது.  இதனுடைய தலைப்பாகம் சிரத்தை, இது புத்தியை குறிக்கின்றது ஆதலால் அறிவை அடைவதற்கு தலையாக இருக்கும் சிரத்தை அவசியமாகின்றது.  சரியான அறிவு வலதுபாகம், சரியாக புரிந்ததை செயல்படுத்துதலான வாய்மையே இடது பாகம். மனவொருமுகப்பாடு நடுப்பாகம். ஹிரண்யகர்ப்பன் வாலைப் போல் ஆதாரமாக இருக்கின்ற பாகம். இதை விளக்குவதற்கு பின்வரும் ரிக் மந்திரம் கூறப்படுகின்றது.

காரண சரீரம் –  ஆனந்தமய கோஷம்
ஸ்தூல சரீரம் –  அன்னமய கோஷம்
சூட்சும சரீரம் –  பிராண, மனோ, விக்ஞானமய கோஷங்கள்.
சூட்சும சரீரத்தில் ஐந்துவகை பிராணன்கள், ஐந்துவகை ஞானேந்திரியங்கள், ஐந்துவகை கர்மேந்திரியங்கள், மனம், புத்தி போன்றவைகள் அங்கங்களாக இருக்கின்றன.
பிராணமய கோஷம்    – 5 பிராணன்கள், 5 கர்மேந்திரியங்கள்
மனோமய கோஷம்    – மனமும் 5 வகை ஞானேந்திரியங்கள்
விக்ஞானமய கோஷம் – புத்தியும் 5 வகை ஞானேந்திரியங்கள்

விசாரம்:-

நான் என்று நாம் குறிப்பிடும் சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளது. 1. சாஸ்திரம் கொடுக்கும் அர்த்தம், 2. நாம் புரிந்து கொண்டிருப்பது.

  1. சாஸ்திரம் நான் என்ற சொல்லுக்கு ஆத்மா என்று பொருள் சொல்கிறது. இந்த ஆத்மாவானது ஸத்யம், ஞானம், அனந்தம் என்ற குணங்களை உடையது.  இந்த நிலையில் எப்பொழுதும் மனநிறைவுடனும், முழுமையாகவும் இருக்கின்றாய் என்று சாஸ்திரம் உரைக்கிறது
  2. நாம் புரிந்து கொண்டிருக்கும் இந்த நான் கீழே விளக்கப்படுகின்றது
  3. அறிவு ஸ்வரூபத்துடனும் உணர்வுடனும் உள்ள இருக்கின்ற ஒன்றைத்தான் குறிப்பிடுகின்றோம்.
  4. இந்த அறிவுடன் மூன்று சரீரங்களையும் சேர்த்து நாம் புரிந்து கொண்டிருக்கின்றோம்.  உதாரணமாக நான் நடக்கின்றேன் என்று சொல்லும் போது ஸ்தூல சரீரத்தையும், நான் மகிழ்ச்சியுடன் இருக்கின்றேன் என்று சொல்லும் போது சூட்சும சரீரத்தையும் குறிக்கின்றோம்.
  5. இவ்வாறு ஸ்தூல சரீரத்தையொட்டி செய்யும் செயலின் போது ஸ்தூல சரீரத்தையும், மனதுடன் கூடிய இந்திரியங்களை பயன்படுத்தும்போது சூட்சும சரீரத்தையும் குறிக்கின்றோம்.
  6. எப்பொழுதெல்லம் மூன்று சரீரத்தில் அபிமானம் வைக்கின்றோமோ அப்பொழுதெல்லாம் அவைகளின் குணங்கள் நான் என்பதின் குணங்களாகின்றன.
  7. ஸ்தூல சரீரம் பல மாற்றங்களையுடையது, அழிவிற்குட்பட்டது ஆகவே அதனுடன் சம்பந்தம் வைக்கும் இந்த நான் அழிவிற்குட்பட்டதாகின்றது.
  8. ஸூக்‌ஷும சரீரம் பல குணங்களையுடைதாக இருப்பதால், இந்த நான் என்ற சொல்லிலும் பல குணங்கள் இருப்பதாக தோன்றுகிறது.
  9. சாஸ்திரம் சொல்லும் நான் நிலையானது, குணங்களற்றது எனவே இதை அசம்சாரி என்று குறிப்பிடப்படுகின்றது
  10. நாம் குறிப்பிடும் “நான்” அழிவுடையதாகவும், குணங்களுடையதாகவும் இருக்கின்றது.  இதனால் நாம் பலவித சுக-துக்கங்களை அனுபவிக்கின்றோம். எனவே இதை சம்சாரி என்று குறிப்பிடப்படுகின்றது.
  11. தேவையில்லாமல் நாம் சேர்த்து புரிந்து கொண்டிருக்கும் இந்த மூன்று சரீரங்களையும் நீக்கி சரியான அறிவை நமக்கு கொடுப்பதுதான் சாஸ்திரத்தின் நோக்கம். சாஸ்திரம் இந்த மூன்று சரீரங்களை ஐந்து கோசங்களாக பிரித்து பிறகு நீக்குகின்றது.  ஒவ்வொரு கோசமாக எடுத்துக்கொண்டு அது ஆத்மா என்று முதலில் ஏற்றுக்கொண்டு பிறகு அதிலுள்ள தோஷங்களை எடுத்துக்காட்டி அதை நீக்கி விடும். இவ்வாறாக ஒவ்வொன்றாக நீக்கி இறுதியில் நான் என்ற சொல்லின் உண்மையான பொருளை நமக்கு புரிய வைக்கின்றது
  12. நாமும் சாஸ்திரத்தை பின்பற்றி ஒவ்வொரு கோஷத்தின் மீதுள்ள அபிமானத்தை நீக்கி வர வேண்டும்.  இது அவ்வளவு சுலபத்தில் நடக்காது, முழு முயற்சியுடன் இடைவிடாமல் விசாரம் செய்து இந்த நிலையை அடைய வேண்டும்.
  13. முதலில் நமக்கு எந்த கோஷத்தின் அதிக அபிமானம் இருக்கின்றது என்பதை கண்டு பிடிக்க வேண்டும்., அதை தெரிந்து கொண்டால்தான் அடுத்த கோஷத்திற்கு செல்ல முடியும்.
  14. சாதாரணமாக நாம் எல்லா கோஷத்திலும் அபிமானம் வைத்துக் கொண்டிருப்போம்.  ஆனால் அதிகமாக எந்த கோஷத்தின் அபிமானம் வைத்திருக்கின்றேன் என்பதை சிந்தித்து பார்த்து கண்டு பிடிக்க வேண்டும்.  இதற்கு இரண்டு வழிகள் உண்டு.
  15. நம் மனம் எதைக்குறித்து அதிக கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றது என்பதை பார்க்க வேண்டும்.
  16. எனக்கு வருகின்ற சுக-துக்கங்கள் எங்கிருந்து வருகின்றது என்பதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும், உதாரணமாக உடலைச் சார்ந்து வருகின்றதா, மனதைச் சார்ந்து வருகின்றதா, பிராணன் மூலமாக வருகின்றதா ( நல்ல உணவு கிடைக்காததால் வரும் துன்பம் ) அறிவு சம்பந்தமாக வருகின்றதா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். இதை தெரிந்து கொண்ட பின்னர் அதிலிருந்து விடுபட முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
  17. அன்னமய கோஷம் – உடல் அலங்காரம், உடலுக்கு வரும் கஷ்ட-நஷ்டங்களால் வருத்தத்தை அடைபவன், உடலின் தோற்றத்தில் வயதாகும் போதும், நோயினால், விபத்தினால் ஏற்படும் மாற்றத்தினால் வருந்துபவன்
  18. பிராணமய கோஷம் – உணவில் யாருக்கு அதிக கவனம் இருக்கின்றதோ அவர்கள் இந்த கோஷத்தில் இருப்பவர்கள். விரதங்களை மேற்கொண்டு இந்த அபிமானத்தை நீக்க வேண்டும்.  ஏதாவது வேலை செய்து கொண்டு இருக்க வேண்டும் என்று நிலையை உடையவர்களும் இந்த கோஷத்தின் இருப்பவர்கள்தான்.
  19. மனோமய கோஷம் – மற்றவர்கள் என்னை நேசிக்க வேண்டும், அன்பாக நடத்த வேண்டும், தான் அன்பு செலுத்துவதற்கு யாராவது வேண்டும் என்று நினைப்பவர்கள்  இந்த கோஷத்தில் இருப்பவர்கள்
  20. விக்ஞானமய கோஷம் – மனம் மிக நுண்ணியதாக சிந்திக்கும்.  யாராவது சிறிது திட்டினாலோ, அறிவில் குறை கண்டாலோ வருத்தைமடைபவர்கள் இதில் இருப்பவர்கள்
  21. ஆனந்தமய கோஷம் –  நான் எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டும் என்ற ஆர்வம்.

இவ்விதம் நம் மனம் விதவிதமான நிலையில் இருக்கின்றது.  அதை தெரிந்து கொண்டு அதை நீக்குவதற்கு சாஸ்திரம் உபதேசிக்கும் வழிமுறைகளை கடைப்பிடித்து ஒவ்வொரு கோஷமாக நீக்கி அடுத்த நிலைக்கு சென்று விட வேண்டும்.  கடைசியில் ஆனந்தமய கோஷத்தையும் தாண்டி ஆத்ம ஞானத்தை அடைய வேண்டும்.

அனுவாகம்-5.1
விக்3ஞானம் யக்3ஞானம் தனுதே |
கர்மாணி தனுதேÅபி ச |
விக்3ஞானம் தே3வா: ஸர்வே |
ப்3ரஹ்ம ஜ்யேஷ்டபுமாஸதே |
விக்3ஞானம் ப்3ரஹ்ம சேத்3வேத3 |
தஸ்மாச்சேன்ன ப்ரமாத்3யதி |
ஶரீரே பாப்மனோ ஹித்வா |
ஸர்வன்காமன்ஸமுஶ்னுத இதி |
தஸ்யைஷ ஏவ ஶாரீர ஆத்மா |
ய: பூர்வஸ்ய ||

விக்ஞானமய கோஷமானது (புத்தி – கர்த்ரு ஆத்மா) யாகங்களை, வைதீக கர்மங்களை சிரத்தையுடன் செய்வது, மற்ற லௌகீக கர்மங்களையும் செய்வது. இந்த கருத்தின் மூலம் வியஷ்டி, சமஷ்டி விக்ஞானமயங்கள் ஒன்றுதான் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.  எல்லா தேவர்களும் விக்ஞானமய கோஷத்தை முக்கியமாகவும், முதன்மையாகவும் உள்ள பிரஹ்மனாக (ஹிரண்யகர்ப்பனாக) உபாஸனை செய்கின்றார்கள்.  நாமும் இவ்வாறு உபாஸனை செய்ய வேண்டும்.  நிஷ்காம பலன் இது நம்மை அடுத்த கோஷத்திற்கு எடுத்துச் செல்லும். இந்த உபாஸனம் கடினமானது, இதில் தோல்வியடைவதற்கு வாய்ப்புக்கள் அதிகம்.  நம்மையறியாமலே பலனை பெற முடியாமல் போய்விடும்.

விக்ஞானமய கோஷத்தை ஹிரண்யகர்ப்பனாக ஒருவன் தியானித்தால் அவன் தவறு எதுவும் செய்யாமல் இருந்தால் அதாவது நமது அபிமானம் வெவ்வேறு கோஷத்திற்கு சென்று விடாமல் இருந்தால் அவனுக்கு பின்வரும் பலன்களை அடைவான் என்று சொல்லப்படுகிறது.  சரீர சம்பந்தபட்ட பாவங்கள் நீங்கப்பெற்று, எல்லா ஆசைகளையும் அடைகின்றான்.  இத்துடன் ரிக் மந்திரம் முடிவடைகின்றது.

நாம் எப்பொழுதெல்லாம் பாவம் செய்கின்றோமோ அப்பொழுதெல்லாம் அன்னமய கோஷத்திற்கு வந்து விடுகின்றோம்.  எனவே சரீர சம்பந்தத்தில் இருக்கும்போது பாவங்கள் செய்ய நேரிடுகின்றது. இதையே சரீர சம்பந்தபட்ட பாவங்கள் என்று இங்கே குறிப்பிடப்படுகின்றது.  புண்ணியத்தினால் இவ்வுலகில் இருக்கும் போது எல்லா இன்பங்களையும் அடைகின்றான்.  இறந்த பிறகு ஹிரண்யகர்ப்பனின் ஒரு அங்கமாக ஐக்கியமாகி விடுவான்.  மீண்டும் சம்சாரியாக பிறக்க மாட்டான். இந்த விக்ஞானமய கோஷத்தை சாரீர ஆத்மா என்றும் அழைக்கப்படுகின்றது.  இந்த கோஷம் மனோமயத்திற்குள் இருப்பதால் அதனுடைய உடலாக ஆத்மா கூறப்படுகின்றது.

அனுவாகம்-5.2
தஸ்மாத்3வா ஏதஸ்மாத்3விக்3ஞானமயாத் |
அன்யோÅந்தர ஆத்மாÅÅனந்த3மய: |
தனைஷ பூர்ண: |
ஸ வா ஏஷ புருஷவித4 ஏவ |
தஸ்ய புருஷவித4தாம் |
அன்வயம் புருஷவித4: |
தஸ்ய ப்ரியமேவ ஶிர: |

மோதோ3 தக்ஷிண: பக்ஷ: |
ப்ரமோத3 உத்தர: பக்ஷ: |
ஆனந்த3 ஆத்மா |
ப்3ரஹ்ம புச்ச2ம் ப்ரதிஷ்டா |
தத3ப்யேஷ ஶ்லோகோ ப4வதி ||

முன் சொல்லப்பட்ட விக்ஞானமயத்திலிருந்து வேறாகவும், உள்ளேயும் உள்ள ஆத்மாவே ஆனந்தமயன். இதை போக்த்ரு ஆத்மா என்றும் அழைக்கலாம்.  ஆனந்தமய கோஷத்திற்கு வியஷ்டி, சமஷ்டி கிடையாது, உபாஸனையும் கிடையாது. ஆனந்தமய கோஷம் காரண சரீரத்தை சார்ந்தது.  காரண நிலையில் வேற்றுமைகள் கிடையாது அதனால் ஐக்கியமும், உபாஸனையும் கிடையாது.

இதுவரை முன்னேயுள்ள கோஷத்தை நீக்கித்தான் அடுத்த கோஷத்தை அறிமுகப்படுத்தப்பட்டது.  ஆனால் இங்கு அதுபோல செய்யவில்லை.  எனவே இந்த கோஷத்தை நீக்காமல் அதை வைத்துக்கொண்டே ஆத்மாவை அறிமுகப்படுத்துகின்றது.  ஆத்ம தத்துவத்தை உணர்ந்தவுடன் தானாகவே இந்த கோஷத்திலிருந்து வெளியே வந்து விடுவோம். ஆகாசத்தை விளக்குவதற்கு குடத்திலுள்ள ஆகாசத்தை காட்டி இதுதான் எங்கும் நிறைந்திருக்கின்றது என்று புரிய வைக்கலாம்.  ஆகாசம் புரிந்தவுடன் இனி இந்தப் பானை தேவையில்லை.  அதுபோல ஆத்மாவை விளக்குவதற்கு ஆனந்தமய கோஷம் உபயோகப்படுத்தப்படுகின்றது.  ஆத்மாவை உணர்ந்தவுடன் இந்த கோஷம் தானாகவே மறைந்து விடுகின்றது.  ஆத்மாவிற்கு குறிப்பிட்ட குணமும் எதுவும் இல்லாததால் அதை விளக்க முடியாது. ஆதலால் இந்த கோஷம் ஆத்மாவை விளக்குவதற்கு பயன்படுத்தப்படுகின்றது.

ஆனந்தமய என்பது ஆனந்த விகாரத்தை குறிக்கின்றது.  இதை போக்த்ரு ஆத்மா என்றும் அழைக்கப்படுகின்றது.  மனதில் எழும் உணர்ச்சிகளுடன் கூடிய எண்ணங்கள் மனோமயத்தைக் காட்டுகின்றது.  இந்த எண்ணங்களில் எது நான் செய்தேன் என்று உபயோகிக்கும்போது அது விக்ஞானமய கோஷத்தை குறிக்கின்றது.  சில எண்ணங்களால் நான் சுகத்தை அனுபவிக்கின்றேன் என்று உணரும்போது அது ஆனந்தமய கோஷத்தில் இருப்பதை குறிக்கின்றது.  இதிலிருந்து எண்ணங்கள் மூன்று வகையாக பிரிக்கப்படுகின்றது. கரண ரூபமாக இருக்கும் எண்ணங்கள் மனோமயத்தில் இருப்பதையும், கர்த்துரு ரூபமாக இருக்கும் எண்ணங்கள் விக்ஞானமய கோஷத்தில் இருப்பதையும், போக்த்ரு ரூபமாக இருக்கும் எண்ணங்கள் ஆனந்தமய கோஷத்தில் இருப்பதையும் குறிக்கின்றது.  மனதிற்கு ஆத்மாவை பிரதிபலிக்கும் குணம் உடையது.  அதனால்தான் ஜடமான மனது உணர்வுடன் செயல்படுவது போல தோன்றுகின்றது. நிலைக்கண்ணாடியில், தூய நீரில் பிரதிபலிக்கும் சூரியனைபோல ஆத்மா மனதில் பிரதிபலிக்கின்றது.  ஆத்மா ஆனந்த ஸ்வரூபமானது. இந்த ஆனந்த ஸ்வரூபம் மனதில் பிரதிபலிக்கும்போது நாம் இன்பத்தை அனுபவிக்கின்றோம், ஆனந்தமய கோஷத்தில் இருக்கின்றோம் என்று உணர்ந்து கொள்ள முடிகின்றது.

நாம் பார்த்து அனுபவிக்கும் பொருளில் உண்மையிலெ சுகம் கிடையாது. அதேப்பொருள் வேறொரு சூழ்நிலையில் துக்க ஸ்வரூபமாக மாறிவிடுகின்றது.  உலகத்திலுள்ள எந்தப் பொருளிலும் சுகம் என்பது கிடையாது. பிறகு சுகம் எங்கிருந்து வருகின்றது என்ற ஆராய்ந்து பார்த்தால், ஏண்ணங்கள் சூட்சுமமாகும் போது மனது ஆத்மாவினுடைய ஆனந்தஸ்வரூபத்தை  பிரதிபிம்பிக்கின்றது. நாம் அடையும் சுகத்தில் ஏற்றத்-தாழ்வையும் பார்க்கின்றோம்.  இதற்குக் காரணம் மனதில் எழும் சுகத்தைக் கொடுக்கும் எண்ணங்கள்தான்.  ஆத்மாவின் ஆனந்த ஸ்வரூபம் எண்ணங்களை பொறுத்து ஏற்றத்-தாழ்வுடன் பிரதிபலிக்கின்றது.  உதாரணமாக தூசிபடிந்த கண்ணாடியில் பிரதிபலிக்கும் சூரிய ஒளியைவிட தூய்மையான கண்ணாடியில் பிரதிபலிக்கும் ஒளியின் பிரகாசம் அதிகமாக இருப்பதைப் போல மனத்தூய்மையை பொறுத்து பிரதிபலிக்கும் ஆத்மாவின் ஆனந்தஸ்வரூபம் இருக்கின்றது.

மனதின் சூட்சுமத்தன்மை மூன்று வகையாக பிரிக்கப்படுகின்றது.
அவைகள் 1, ப்ரியவ்ருத்தி, 2. மோத வ்ருத்தி, 3. பிரமோத வ்ருத்தி ஆகும்.

ஒன்றைவிட ஒன்று மிக சூட்சுமமானது.  எண்ணங்கள் சூட்சுமம் அதிகமாகும்போது ஆனந்த நிலையும் அதிகரிக்கும்.

  1. ப்ரிய வ்ருத்தி    – விருப்பமான பொருளைப் பார்ப்பதினால் தோன்றும் எண்ணம்
  2. மோத வ்ருத்தி- விரும்பிய பொருளை அடையும்போது தோன்றும் எண்ணங்கள்
  3. பிரமோத வ்ருத்தி– அடைந்த பொருளை அனுபவிக்கும்போது எழும் எண்ணங்கள்

இந்த மூன்று விதமான சூட்சுமமான எண்ணங்கள் (வ்ருத்திகள்) பிரதிபிம்ப ஆனந்தத்துடன் சேரும்போது அதுவே ஆனந்தமய கோஷம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

உண்மையில் உலகத்தில் உள்ள பொருட்களிலிருந்துதான் இந்த எண்ணங்கள் எழுகின்றது.  எனவே பொருட்களில் சுகமில்லை என்று புரிந்து கொள்ள முடியும்.  ஆழ்ந்த உறக்கத்தில் நாம் அனுபவிக்கும் சுகம் எந்தப் பொருட்களினாலும் வருவதில்லை.  ஆழ்ந்த உறக்கத்தில் மிகவும் சூட்சுமமான எண்ணங்கள் தோன்றுகின்றது அதில் ஆத்மாவில் ஆனந்த ஸ்வரூபம் அதிகமாக பிரதிபலிப்பதால் அதிகமான சுகத்தை அனுபவிக்க முடிகின்றது.  இதிலிருந்து ஆனந்தமய கோஷம் என்பது மனதில் இருக்கின்ற சூட்சுமமான எண்ணங்கள் அதில் பிரதிபலிக்கின்ற ஆத்மானந்தம். மனதில் எழும் இந்த எண்ணங்களுக்கு சுகம் கொடுக்கும் சக்தி கிடையாது, ஏனென்றால் அவைகள் வெறும் ஜடம்தான் என்று சாஸ்திரம் கூறுகின்றது.  இதில் பிரதிபலிக்கும் ஆத்மாவின் ஆனந்தம்தான் நாம் அனுபவிக்கின்றோம். ஆனால் ஆத்மாவில் இருக்கும் ஆனந்தத்தில் எந்தவிதமான ஏற்றத்தாழ்வுகள் கிடையாது, இது பூரணமானது, முழுமையானது.

ஆனந்தமய கோஷத்தினால் விக்ஞானமய கோஷம் வியாபிக்கப்பட்டிருக்கின்றது.  இந்த ஆனந்தமயன் மனிதனைப்போல உடலை உடையவன்.  அந்த விக்ஞானமய உடலமைப்ப ஒட்டி இந்த ஆனந்தமயனின் உடல்வடிவம் அமைகின்றது.  இந்த சரீர கற்பணை உபாஸனைக்காக கூறவில்லை. ஆனந்தமயத்தின் தலைப்பாகம் பிரிய விருத்தியாகவும், வலதுபாகம் மோதமாகவும், இடதுபாகம் பிரமோத விருத்தியாகவும், ஆனந்தமே நடுப்பாகமாகவும், பிரஹ்மமே வாலைப்போல் அதை தாங்குவதாகவும் கூறப்படுகின்றது.

ஆனந்தமய கோஷத்தில் உள்ள ஆனந்தமானது மூன்றுவிதமான ஏற்றத்தாழ்வுகளை உடையது என்பதைக் காட்டுவதற்காக இவ்வாறு சொல்லப்படுகின்றது.  எங்கிருந்து ஜடமான இந்த எண்ணங்களில் ஆனந்தமானது வருகின்றது. இந்த ஏற்றத்தாழ்வான ஆனந்தத்திற்கு உபாதான காரணமாக இருப்பது ஆனந்த ஸ்வரூபமான ஆத்மாதான் என்றும் பூரணமானதும், முழுமையானதுமான, இருமையற்ற பிரம்மன் தான் இதற்கு ஆதாரமாக உள்ளது. இதை விளக்குவதற்கு பின்வரும் ரிக் மந்திரம் சொல்லப்படுகின்றது.

அனுவாகம்-6.1
அஸன்னேவ ஸ ப4வதி |
அஸத்3 ப்3ரஹ்மோதி வேத3 சேத் |
அஸ்தி ப்3ரஹோதி சேத்3வேத3 |
ஸந்தமேனம் ததோ விது3ரிதி |
தஸ்யைஷ ஏவ ஶாரீர ஆத்மா |
ய: பூர்வஸ்ய |

ஒருவன் பிரம்மத்தை இல்லையென்று கருதினால் அவன் இல்லாதவன் போல் ஆகின்றான்.  இவன் சம்சாரத்தை அனுபவித்துக் கொண்டிருப்பான். எப்பொழுதும் துயரத்தை அனுபவித்துக் கொண்டிருப்பான்.  பிரம்மம் இருக்கின்றதென்று ஒருவன் கருதினால் அவனை ஸத்புருஷனாகவும், மேலோனாகவும், புருஷார்த்தத்தை அடைந்தவனாகவும் ரிஷிகள் கருதுகின்றார்கள்.  இவ்வாறு ரிக் மந்திரம் சொல்லுகிறது.  முன் சொன்ன விக்ஞானமயத்திற்கு உள்ளேயுள்ள ஆத்மாவாக இருக்கின்றானோ அவனே இந்த ஆனந்தமயன்.

அனுவாகம்-6.2
அதா2தோÅனுப்ரஶ்னா: |
உதாவித்3வானமும் லோகம் ப்ரேத்ய |
கஶ்சன க3ச்ச2தி |
ஆஹோ வித்3வானமும் லோகம் ப்ரேத்ய |
கஶ்சித்ஸமஶ்னுதா உ |
இவ்விதம் உபதேசம் செய்ததற்கு பிறகும் சந்தேகம் இருப்பதனால் அதை ஒட்டிய கேள்விகள் எழுகின்றன.  அவைகள்
1. பிரம்மன் இருக்கின்றதா அல்லது இல்லையா?
2. ஞானி பிரம்மத்தை அடைகின்றானா, இல்லையா?
3. அக்ஞானி பிரம்மத்தை அடைகின்றானா இல்லையா?

ஞானியும், அக்ஞானியும் இருக்கும்போதும், இறந்தப்பிறகும் பிரம்ம ஸ்வரூபமாகவே இருக்கின்றார்கள். எனவே இந்த இரண்டு கேள்விகளும் தவறு.  இவர்கள் அடைவதற்கு தேவையே இல்லை. ஆத்ம ஞானத்தை அடைந்தவன் ஆத்மாகவே இருந்து கொண்டு ஆனந்தமாக இருக்கின்றான்.  ஆத்ம ஞானத்தை அடையாதவன் அறியாமையில் இருந்து கொண்டு கர்ம பலன்களான சுக-துக்கங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றான்.  ஞானியானவன் பஞ்ச கோஷத்தை கடந்து பிரம்மத்தை அறிகின்றான்.  அக்ஞானி பஞ்ச கோஷத்திலேயே அபிமானம் கொண்டு அறியாமையில் இருந்து கொண்டு பிரம்மத்தை அறிவதில்லை.

அனுவாகம் 6.3லிருந்து அனுவாகம் 7 வரையுள்ள பகுதிகளில் சங்கரர் ஏழு காரணங்களால் இதை விளக்குகின்றார்.

அனுவாகம்-6.3
ஸோÅகாமயத |
ப3ஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி |
ஸ: தபோÅதப்யத |
ஸ: தபஸ்தப்த்வா |
இத3ம் ஸர்வமுஸ்ருஜத |
யதி3தம் கிஞ்ச ||

இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்கு பிரம்மன் நிமித்த காரணமாக இருப்பதால் அது இருக்கின்றது என்ரு உணர்த்தப்படுகின்றது.

காரணம்1 (ஜகத் காரணத்வாத்)
பரம்பொருள் ஈஸ்வரன் (மாயையுடன் கூடிய பிரம்மன்) ஆசைப்பட்டார். நான் பலவாக  பிறப்பேனாக என்று தவம் செய்தார். அவர் தவத்தை செய்து எவைகள் முன்பு இருந்ததோ அவைகள் அனைத்தையும் தோற்றுவித்தார்.
அகாமயத  – ஆசைப்படுவதிலிருந்து சேதன தத்துவம்தான் நிமித்தக்காரணம் என்பதை நாம்  புரிந்து கொள்ளலாம்.  இங்கு ஆசை என்பது அவரிடமிருந்து ஒரு எண்ணம் தோன்றியது என்பதுதான்.
பஹூஸ்யாம் – என்னையே பலவாக பிறப்பித்துக்கொள்வேனாக என்று சங்கல்பம் செய்து கொண்டார்.
ஸஹ தப அதப்யஹ – அதற்கு அவர் தவம் செய்தார்.  இது எப்படி படைக்கலாம் என்று சிந்தித்தார்.  இது அவருடைய ஞானமய தவம், ஈஸ்வரன் மனது மாயா, ஸ்ருஷ்டிக்கு தயாராக இருக்கும் நிலை.  ஈஸ்வரனின் சங்கல்பமே செயலாகி விடும்.

காரணம்2 (ஜீவரூபேனே பா4ஸமானவாத்)
தத்ஸ்ருஷ்டவா | ததே3வானுப்ராவிஶத் |

ஜீவ வடிவத்தில் வெளிப்படுவதால் பிரம்மன் உபாதான காரணம், ஈஸ்வரன் நிமித்த காரணம்.  ஜடமான மாயை இந்த பிரபஞ்சத்திற்கு காரணமாக சொல்லலாம்.  இது ஈஸ்வரனிடமிருந்து பிரிக்க முடியாதது, மூன்று குணங்களை உடையது.  இதிலிருந்து தோன்றியது பஞ்ச பூதங்கள் கொண்ட பிரபஞ்சம்.  மாயை ஜடமாக இருப்பதால், இதிலிருந்து தோன்றியவைகள் அனைத்தும் ஜடமாகத்தான் இருக்க வேண்டும்.  உதாரணமாக மனித உடல், கல், மலை போன்ற அனைத்தும் ஜடமானவை. ஆனால் மனித உடல் அறிவு பூர்வமாக இயங்குவதற்கு காரணம் அதில் பிரதிபலிக்கும் சேதனமான பிரம்மத்தின் இருப்பை புரிந்து கொள்ளலாம்.

தத் ஸ்ருஷ்ட்வா – இந்த பிரபஞ்சத்தை படைத்து,
தத்3 ஏவ அனுப்ரவிஶஸ்ய – அதற்குள் நுழைந்தார்.
இதை ப்ரவேச ஸ்ருதி என்று அழைக்கப்படுகின்றது.  இதைப்பற்றி சுருக்கமான விளக்கம் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றது.

ஈஸ்வரன் எந்த ரூபத்தில் ஜீவனுக்குள் நுழைந்தார்?

இந்த பிரபஞ்சமாகவே ஈஸ்வரன் மாறியிருக்கும்போது எப்படி இதற்குள் நுழைய முடியும்! எனவே தன்னுடைய ஸ்வரூபமாக உள்ளே சென்றிருக்க முடியாது.  பிறகு எப்படி சென்றிருக்கலாம் என்று கேள்வி எழும்போது அதைப் பற்றி இவ்வாறு விசாரம் செய்யப்படுகின்றது.

  • பிரம்மனுக்கு இரண்டு உருவம் அவைகள் ஈஸ்வரன், ஜீவன்.  ஈஸ்வரன் பிரபஞ்சமாக இருக்கின்றார், ஜீவன் அதற்குள் நுழைந்தது என்று எடுத்துக் கொண்டால், .பிரம்மன் இரண்டற்றது எனவே இது சாத்தியமில்லை.
  • இரண்டு அவயங்கள் உடையது என்றும் எடுத்துக் கொள்ள முடியாது.  ஏனெனில் இது நிரவ்யமாக இருப்பதனாலும், எல்லாவிடத்திலும் வியாபித்து இருப்பதாலும் இதுவும் சாத்தியமில்லை.
  • ஈஸ்வரன் ஜீவ ரூபமாக பரிணாம அடைந்தார் என்றும் எடுத்துக் கொள்ள முடியாது.

இவ்வாறு விசாரித்து விட்டு பிரம்மன் புத்தியில் வெளிப்படுகின்றார், புத்தியில் அறியப்படுகின்றது என்று புரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக தாய் சமையலறையை நோக்கி போய் கொண்டிருப்பதை பார்த்த மகனிடம், உன் தாய் எங்கே இருக்கின்றாள் என்று கேட்டால், சமையலறைக்கு போனதை பார்த்தேன் என்று கூறுவான், இதிலிருந்து அங்கு இருக்கின்றாள் என்று புரிந்து கொள்ளலாம் அல்லவா.

காரணம்3   ( ஜகத்ரூபேனே பா4ஸமானவாத்)
ஸச்ச த்யச்சாப4வத் |
நிருக்தம் சாநிருக்தம் ச |
நிலயனம் சாநிலயனம் ச |
விக்3ஞானம் சாவிக்3ஞானம் ச |
ஸத்யம் சாந்ருதம் ச ஸத்யமப4வத் |
யதி3தம் கிஞ்ச |
தத்ஸத்யமித்யசக்ஷதே |
தத3ப்யேஷ ஶ்லோகோ ப4வதி ||

ஜகத் வடிவத்தில் தோன்றி கொண்டிருப்பதால் பிரம்மன் இருக்கின்றதை அறிந்து கொள்ள முடியும். இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமாக ஈஸ்வரன் இருந்து கொண்டிருக்-கின்றார்.  இது போ4க்ய பிரபஞ்சம், அதாவது அனுபவிக்கப்படும் பிரபஞ்சமாக கருதப்படுகின்றது.

பிரம்மன் புத்தியில் வெளிப்படுபவராக இருந்து கொண்டு, உருவமுடைய, நம்மால் பார்க்கக் கூடிய மூன்று பூதங்களாகவும் (நீர், நிலம், நெருப்பு) தோன்றி கொண்டிருக்கின்றது. உருவமற்ற மற்ற இரு பூதங்களாகவும் ( வாயு, ஆகாசம் ) தோன்றி கொண்டிருகின்றது. தெளிவாக விளக்க கூடியததாகவும், விளக்க முடியாததாகவும், தாங்குவதாகவும், தாங்கப்படுவதாகவும், அறிவுடையதாகவும் (சேதனம்), அறிவற்றதாகவும் (ஜடம்), உண்மையாகவும் (வியாவஹார சத்யம் – எல்லோராலும் அனுபவிப்பது) பொய்யானதாகவும், (பிராதிபாஸிக சத்யம் – கனவு – ஒருவனுக்கு மட்டும் உண்மையாக இருப்பது, கயிற்றில் தோன்றும் பாம்பு ), இவ்வாறெல்லாம் பிரம்மன் மாறியிருக்கின்றது.  எவைகளெல்லாம் இருக்கின்றதோ அவைகளெல்லாம் மாறியது.  ஆகவே பிரம்மனை சத்யம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.  இந்த விஷயத்தை பின்வரும் ரிக் மந்திரம் மேலும் விளக்குகின்றது.

அனுவாகம்-7
அஸத்3வா இத3மக்3ர ஆஸீத் |
ததோ வை ஸத3ஜாயத |
ததா3த்மானம் ஸ்வயமகுருத |
தஸ்மாத்தத்ஸுக்ருதமுச்யத இதி |

காரணம்4
சாஸ்திரத்தில் பிரம்மத்திற்கு பிரசித்தமான ஸுக்ருதம் ( சுயம்பு ) என்ற வேறொரு பெயரும் உண்டு.
அஸத்3வா இத3ம் அக்3ர ஆஸீத் – நாம் பார்த்து கொண்டிருக்கும் இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன் அஸத்தாக இருந்தது, அதாவது வெளித்தோற்றத்திற்கு வராத நிலையில் இருந்தது.  வெளித்தோற்றத்திற்கு வந்த நாமரூபங்கள் எதையாவது ஒன்றை சார்ந்துதான் இருக்கும்.  வெளித்தோற்றத்திற்கு வராத நாம ரூபங்கள் (அஸத்) பிரம்மத்தை சார்ந்து இருக்கும். நாமரூபத்தை வெளிப்படுத்தாத பிரம்மன் என்பது இறுதியான பொருள்.

அப்படிபட்ட பிரம்மனிடமிருந்து வெளித்தோற்றத்திற்கு வந்த விதவிதமான நாமரூபங்கள் கூடிய ஜகத்தானது தோன்றியது. அது தன்னைத்தானே தோற்றுவித்துக் கொண்டது.  அதே பிரம்மன் தானே தோற்றுவிப்பவர் என்று சொல்லப்படுகின்றது. இவ்விதம் ரிக் மந்திரத்தின் விளக்கம் முடிவடைகின்றது. இதிலிருந்து பிரம்மனே இந்த உலகமாக காட்சியளித்துக் கொண்டிருப்பதால், பிரம்மன் இருக்கின்றது என்று நிரூபணமாகின்றது.

காரணம்5
யத்3வை தத்ஸுக்ருதம் |
ரஸோ வை ஸ: |
ரஸம் ஹ்யேவாயம் லப்3த்4வானந்தீ ப4வதி |

பிரம்மத்திற்கு ரஸஹ (ஆனந்தம்) என்ற வேறொரு பெயராலும் வேதம் குறிக்கின்றது.  மனிதன் இந்திரியத்தின் துணைக்கொண்டு விஷயங்களிலிருந்து அதனோடு சம்பந்தம் வைப்பதால் ஆனந்தத்தை அடைகின்றான்.  ஆனால் ஆழ்ந்த உறக்கத்திலும் சுகம் இருக்கின்றது.  இந்த இரண்டு நிலைகளிலும் சுகத்தை அனுபவிக்கின்றான் ஞானி.  இவ்வாறாக சுகம் மூன்று விதமாக இருப்பதாக எடுத்துக்காட்டப்பட்டது. ஆழ்நிலை உறக்கத்தில் சுகத்தோடு ஒப்பிடும்போது வெளி விஷயங்கள்தான் சுகத்தைக் கொடுக்கும் என்ற கருத்து பொய்யாகிவிடும். ஏனெனில் ஆழ்நிலை உறக்கத்தில் விஷயங்கள் எதுவும் இல்லை ஆனால் சுகத்தை அனுபவிக்கின்றோம்.  ஞானி எந்த விஷயங்களோடும் சம்பந்தம் இல்லாமல் திருப்தியுடன் இருக்கின்றான். இந்த நிலைக்கு காரணம் அவன் அடைந்த ஆத்ம ஞானத்தினால்தான்.  இதிலிருந்து அறிந்து கொள்வது பிரம்மன்தான் திருப்திக்கு காரணமாக இருக்கின்றது எனவே பிரம்மன் இருக்கின்றது என்று நிலை நாட்டப்பட்டது.

யத்4வை தத் ஸுக்ருதம் | ரஸோ வை ஸஹ |
எந்த ஒன்று ஸக்ருதம் என்று அழைக்கப்படுகின்றதோ அதுவே ஆனந்த ரஸம் என்றும் அழைக்கப்படுகின்றது
ரஸம் ஹி ஏவ அயம் –இந்த பிரம்மத்தை (ரஸத்தை)
லப்த்வானந்தீ ப4வதி – அடைந்து திருப்தியுடன் இருக்கின்றான்.
இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது பிரம்மன் என்ற ஒன்று இருக்கின்றது என்பதாகும்..

காரணம்6
கோ ஹ்யேவான்யத்க: ப்ராண்யாத் |
யதே3ஷ ஆகாஶ ஆனந்தோ3 ந ஸ்யாத் |
 

நமது மனம், உடல், இந்திரியங்கள் செயல்படுவதிலிருந்து பிரம்மத்தின் இருப்பை நிலைநாட்டலாம்.  பல பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ரதமானது அதன் எஜமானனுக்குத்தானே தவிர  அந்தப்பொருட்களுக்காக அல்ல.  அதுபோல பல உறுப்புக்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த உடல் வேறு ஒன்று பயன்படுத்தத்தான் என்று புரிந்து கொண்டால் அந்த வேறு ஒன்று என்பது அறிவுடைய பிரம்மம்தான் என்று அறிந்து கொள்ள முடியும்.  பிரம்மத்தின் இருப்பு மீண்டும் நிலைநாட்டப்பட்டது.

யாரால் மூச்சுக்காற்றை உடலுக்குள்ளே இழுக்க முடியும்,  யாரால் மூச்சுக்காற்றை வெளியே விட முடியும். இந்த ஆனந்த ரூபமான பிரம்மன் மட்டும் ஆகாசத்தில் இல்லை என்றால், இங்கே ஆகாசம் என்பது ஹ்ருதய ஆகாசத்தைக் குறிக்கின்றது.  இந்த பிரம்மம்தான் ஒருவனை மகிழ்விக்கின்றது, திருப்திபடுத்துகின்றது.

காரணம்7
யதா3 ஹ்யேவைஷ ஏஜஸ்மின்னத்3ருஶ்யேÅனாத்ம்யேÅநிருக்தேÅநிலயனேÅப4யம் ப்ரதிஷ்டாம் விந்த3தே |
அத2 ஸோப4யம் ததோ ப4வதி |
யதா3 ஹ்யேவைஷ ஏதஸ்மின்னுத3ரமந்தரம் குருதே |
அதா2 தஸ்ய ப4யம் ப4வதி |
தத்த்வேவ ப4யம் விது3ஷோÅமன்வானஸ்ய |
தத3ப்யேஷ ஶ்லோகோ ப4வதி |
 

4ய-அப4ய ஹேதுத்வாத் – பயத்திற்கும்-அபயத்திற்கும் காரணமாக இருப்பது பிரம்மன்தான்.

கயிற்றில் தோன்றும் பாம்பை பார்த்து பயப்படுகின்றோம்.  அதற்குக் காரணம் கயிறுதான், இதுதான் பாம்பு தோன்றுவதற்கு காரணமாக இருக்கின்றது.  கயிற்றை அதுவாக பார்க்கும்போது பயம் ஏற்படுவதில்லை அதற்கும் கயிறுதான் காரணமாக இருக்கின்றது.  அதேபோல பிரம்மனை புரிந்து கொண்டால் பயம் ஏற்படுவதில்லை, ஞானி அபயத்தை அடைவதற்கு காரணம், அவர் பிரம்மத்தை அறிந்து கொண்டதால்தான். பிரம்மத்தை புரிந்து கொள்ளாதவனுக்கு எப்பொழுதும் ஏதாவது ஒரு விஷயத்தில் பயந்து கொண்டிருக்கும்.  அத்யாஸம், அக்ஞானம் இரண்டும் சேர்ந்து நமக்கு பயத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கும்.  நாமே நம்முடைய பயத்திற்கும், அபயத்திற்கும் காரணமாக இருக்கின்றோம்.

நம்முடைய பயத்திற்கு காரணமாக ஏதோ ஒன்று இருக்கும் என்றால் அது பிரம்மனாகத்தான் இருக்கும். ஏனென்றால் இந்த ஜகத்தில் உள்ள அனைத்தும் பிரம்ம ஸ்வரூபமாக இருக்கின்றது.  அதுபோல அபயத்திற்கு காரணமாக இருப்பதும் பிரம்மன்தான்.  ஏனென்றால் பிரம்மனாக நம்மை உணர்ந்து விட்டால் எதற்கும் நாம் பயப்படமாட்டோம்.

ஒருவன் எந்தக்காலத்தில் பிரம்மனிடத்தில் நிலைப் பெறுகின்றானோ, அந்தக்காலத்தில் பிரம்மத்தில் பயமற்ற ஆத்ம பாவத்தை அடைகின்றான் அல்லது உறுதியான ஆத்ம பாவத்தை, பிரம்ம நிஷ்டையை அடைகின்றான்.  பார்க்கப்படாத தன்மையுடையதும், மாற்றமடையாததும், பிரதியக்‌ஷ பிரமாணத்திற்கு விஷயமாக இல்லாததும், சரீரமற்றதும், அனுமான பிராமானத்தினால் அறிய முடியாததும், ஆதாரமற்றதும், எதையும் சார்ந்தில்லாமல் இருப்பதாகவும் உள்ள பிரம்மத்தை உறுதியாக அறிந்தவன் பயத்திலிருந்து நீங்கியவனாகின்றான்.  எப்பொழுது இந்த அக்ஞானி பிரம்மனிடத்தில் சிறிதளவாவது வேற்றுமையை பார்க்கின்றானோ அவனுக்கு பயம் வந்தடைகின்றது. சாஸ்திரங்களை கற்றறிந்தும் ;ஆத்ம ஞானத்தை அடையாவிட்டால் அவனுக்கும் பிரம்மன் பயத்தை கொடுக்கின்றது. இந்த விஷயத்தில் பின்வரும் ரிக் மந்திரம் விளக்குகின்றது.

தைத்திரீய உபநிஷத்

அத்தியாயம்-02 – பகுதி-3

ப்ரஹ்மானந்தவல்லி

அனுவாகம்-8.1
பீ4ஷாஸ்மாத்3வாத: பவதே |
பீ4ஷோதே3தி ஸூரய: |
பீ4ஷாஸ்மாத3க்3னிஶ்சேந்த்3ரஶ்ச |
ம்ருத்யுர்தா4வதி பஞ்சம் இதி |

பிரம்மனிடத்தில் கொண்ட பயத்தினால் காற்று வீசுகின்றது.  சூரியனும் உதிக்கின்றது. அக்னியும், இந்திரனும் தத்தம் வேலையை செய்து கொண்டிருக்கின்றனர். யமதர்மனும் பயந்து தன் வேலையை செய்வதற்கு ஓடுகின்றார். இவ்வாறு கூறி ரிக் மந்திரம் முடிக்கின்றது.
ஸைஷானந்த3ஸ்ய மீமாம்ஸா ப4வதி |
கீழ்கண்ட பகுதியில் ஆனந்தத்தைப் பற்றிய விசாரம் செய்யப்படுகின்றது.
சுருக்கம்:-

  1. இந்த விசாரம் எதற்காக செய்யப்படுகின்றது?
    2.இதன் மூலம் எதை சொல்ல விரும்புகின்றது!
    3. இதனால் அடையும் பலன்கள்.
  2. ஆனந்தம்– பிரஹ்ம ஸ்வரூபம், ஆத்ம ஸ்வரூபம் என்ற அறிவை அடைவோம்
  3. வைராக்கியத்தின் முக்கியத்துவத்தை,மேன்மையை அறிந்து கொள்வோம்.
  4. ஜீவ-ஈஸ்வர ஐக்கியத்தை அறிந்து கொள்வோம்

 

ஆனந்தம் பிரஹ்ம ஸ்வரூபம்:

அக்னி உஷ்ண ஸ்வரூபம் என்ற வாக்கியத்தின் பொருள் அது உஷ்ணமாக இருப்பதற்கு எதையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை.  அதுபோல ஆத்மா ஆனந்தமாக இருப்பதற்கு எதையும் சார்ந்திருக்க தேவையில்ல.  நானே ஆத்மாவாக இருப்பதால், நான் யாரையும் சார்ந்திருக்க தேவையில்லை.

 

நாம் எதற்காக இந்த விசாரம் செய்ய வேண்டுமென்றால், நம் அனுபவத்தில் ஆனந்தம் வெளியே உள்ள பொருட்களிலிருந்து வருவதாக உணர்ந்திருக்கின்றோம்.  அதனால் அந்தப் பொருட்களைச் சார்ந்திருக்கின்றேன்.  நான் சுபாவமாக ஆனந்தமாக இருக்கின்றேன் என்று உணரவில்லை.  இதை உணர்த்துவதற்குத்தான் இந்த விசாரம் தேவைப்படுகின்றது.

ஸுபாவத்தை நிரூபித்தல்:

  • நான் ஆனந்தத்தை ஏற்றத்தாழ்வுகளுடன் அனுபவிக்கின்றோம்.
  • இந்த ஏற்றத்தாழ்விற்கு காரணம் எது என்று வினவும்போது விஷயங்கள்தான் இதை உருவாக்குகின்றது என்று புரிந்து கொள்ளலாம்.
  • சுகத்தின் ஏற்றத்தாழ்வு விஷயத்தின் நிமித்த காரணமா அல்லது உபாதான காரணமா, பொருளின் காரணமா அல்லது பொருளின் நிமித்தமாக உண்டாகின்றதா என்று வினவினால், பொருளே காரணம் என்று எடுத்துக் கொண்டால் அந்தப் பொருள் எல்லோருக்கும் ஒரே அளவுள்ள சுகத்தை கொடுக்க வேண்டும்.  ஆனால் அனுபவத்தில் அப்படி இல்லை.  எனவே பொருளின் நிமித்தமே வேறுபாட்டிற்கு காரணம் என்று அறிந்து கொள்ளலாம்.
  • நம்முடைய மனம்தான் உபாதியாக இந்த ஏற்றத்தாழ்வான சுகத்திற்கு காரணமாக இருக்கின்றது.  நம் மனதில் அமைதி அதிகரிக்கும்போது சுகமானது அதிகரிக்கிறது. மனம் சூட்சுமத்தன்மை அதிகரிக்கும்போது இன்பமும் அதிகரிக்கின்றது.
  • எப்பொழுது மனம் அமைதியடையும், சூட்சுமமாகும்? இதற்கென்ன வழி என்று கேள்விகளுக்கு உபநிஷத் இரண்டு உபாயங்கள் கூறுகின்றது. அவைகள் அறிவு, வைராக்யம். மனதில் ஆத்மஞானம் வளர வளர மனம் சூட்சுமாகின்றது, அமைதியும் அடைகின்றது. அதற்கேற்றவாறு சுகத்தின் அளவும் அதிகரிக்கின்றது.
  • மனம் சூட்சுமமாகும்போது மிக மிக நுண்ணிய விஷயங்களை கிரகிக்கின்றது. இது அடையும் அறிவினால் நிகழ்கின்றது
  • மனம் அமைதியாக இருக்கும்போது, சூட்சுமமாக இருக்கும்.  வைராக்கியம் அதிகரிக்கும்போது மனம் அமைதியடைகின்றது.
  • இந்த ஆனந்தம் எங்கிருந்து வருகின்றது என்று கேட்கும்போது நம் மனதிலிருந்து தான் வருகின்றது என்று சொன்னால் தவறு..  மனம் சுகத்தின் உற்பத்தி ஸ்தானம் கிடையாது. மனம் ஒடுங்கி செயல்படாமல் இருக்கும்போது ஆனந்தம் வரக்கூடாது, ஆனால் ஆழ்ந்த உறக்கத்தில் மனம் ஒடுங்கிய நிலையில் ஆனந்தத்தை அனுபவிக்கின்றோம். எனவே மனம் ஆனந்தத்தின் உற்பத்தி ஸ்தானமல்ல என்று நிரூபணமாகின்றது
  • இவ்வாறு எல்லாவற்றையும் நீக்கிக் கொண்டு வந்தால், அதை பார்த்துக் கொண்டு இருப்பவன்தான் ஆத்மா. என்றும், மனமானது ஆனந்தத்தை பிரதிபிம்பிக்கின்ற தன்மையுடன் இருக்கின்றது என்று புரிந்து கொள்ள முடிகின்றது.  உதாரணமாக நிலைக்கண்ணாடிக்கு அதன் எதிரே வரும் பொருளை பிரதிபிம்பிக்கும் தன்மையுடையது.  தூசிபடிந்த கண்ணாடியில் பிம்பம் தெளிவாக இருக்காது. சுத்தப்படுத்திப் பார்க்கும்போது அதுவே தெளிவாக தெரியும்.  இதிலிருந்து நாம் அறிய வேண்டியது மனதின் சூட்சும தன்மை அதிகரிக்கும் போது அதில் பிரதிபலிக்கும் ஆனந்தமும் அதிகரிக்கும்.  ஆத்மா ஆனந்த ஸ்வரூபமாக இருப்பதால், மனமானது அதை பிரதிபிம்பிக்கும்போது ஆனந்தம் ஏற்படுகின்றது.  இதிலிருந்து நம்மால் ஆத்மா ஆனந்த ஸ்வரூபம் என்று தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

வைராக்கியத்தின் பெருமை:-

மனதில் அனுபவிக்கும் ஆனந்தத்தின் ஏற்றத்தாழ்வு வைராக்கியத்தின் அளவை பொறுத்திருக்கின்றது.  ஆசைகள் குறைய குறைய ஆனந்தம் அதிகரிக்கின்றது.  காமத்தியாகம் இரண்டு விதத்தில் ஏற்படுகின்றது. எப்படி ஆசைகளை மனதிலிருந்து நீக்க வேண்டும் என்று கேட்டால், விரும்பிய பொருளை அடையும் போது அதிலுள்ள குறையை ஆராய்ந்து அறிந்து அந்த ஆசையை நீக்கி விடுதல்.

  • அடையும் பொருள் கொடுக்கும் சுகத்தைவிட அதை விலக்குவதால அடையும் இன்பம நூறுமடங்காக இருக்கும்.
  • வைராக்கியத்தினல் இரண்டுவிதமான பலன்களை அடையலாம். அவைகள்

o லௌகீக வாழ்க்கையிலே அதிக இன்பத்தை அனுபவிக்கலாம், பிரதிபிம்பானந்தத்தை அனுபவிக்கலாம்.  வைராக்கியத்தின் அளவு அதிகரிக்கும்போது இன்பமும் அதிகரிக்கின்றது. இதனால் மனம் அதிகமாக அமைதியடையும், சூட்சுமமடைகின்றது.

o வைராக்கியத்தின் அளவு அதிகரிக்கும்போது மோட்சத்தை அடைவதற்கு தகுதியை கொடுக்கின்றது.

பிரம்மானந்தம் : நானே சுபாவமாக பிரம்மனாகவே இருக்கின்றேன் என்ற நிலையை அடையும்போது அனுபவிக்கின்ற இன்பம்.  இந்த இன்பத்தை அனுபவிக்க எதையும் சார்ந்திருக்கத்தேவையில்லை. ஏனென்றால் ஆத்மாவின் ஸ்வரூபமே ஆனந்தமாக இருக்கின்றது. தன்னிடத்திலே திருப்தியுடன் இருப்பவன் தான் நிலையான இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருப்பான் என்று பகவான் கீதையில் கூறியிருக்கின்றார். இந்த பிரம்மானந்த்த்தை அடைவதற்கு வைராக்கியம் மிக முக்கியமானதாக கருதப்படுகின்றது.

அனுவாகம்-8.2
யுவா ஸ்யாத்ஸது4யுவாத்4யாயக: | ஆஸிஷ்டோ த்3ருடி4ஷ்டோ ப3லிஷ்ட: \
தஸ்ய்யேயம் ப்ருதி2வீ ஸர்வா வித்தஸ்ய பூர்ணா ஸ்யாத் | ஸ ஏகோ மானுஷ ஆனந்த: |
தேயே ஶதம் மானுஷா ஆனந்தா: |
ஸ ஏகோ மனுஷ்யகந்த4ர்வாணாமானந்த3: | ஶ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய |
தே யே ஶதம் மனுஷ்யகந்த4ர்வாணாமானந்த3 | ஸ ஏகோ தேவகந்த4ர்வாணாமானந்த3: |
ஶ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய | தே யே ஶதம் தே3வகந்த4ர்வாணாமானந்த3 |
ஶ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய | தே யே ஶதம் பித்ருணாம் சிரலோகானாமானந்த3 |
ஸ ஏக ஆஜானஜானாம் தே3வனாமானந்த: | ஶ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய |
தே யே ஶதமாஜானஜானாம் தே3வனாமானந்த: | ஸ ஏக கர்மதே3வானாம் தே3வனாமானந்த: |
யே கர்மணா தேவானபியந்தி | ஶ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய |
தே யே ஶதம் கர்மதே3வானாம் தே3வனாமானந்த: | ஸ ஏகோ தே3வனாமானந்த: |
ஶ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய | தே யே ஶதம் தே3வனாமானந்த: |
ஶ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய | தே யே ஶதமிந்த்3ரஸ்யானந்தா: |
ஸ ஏகோ ப்3ருஹஸ்பதேரானந்த: | ஶ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய |
தே யே ஶதம் ப்3ருஹஸ்பதேரானந்த: |
ஸ ஏகோ ப்ரஜாபதேரானந்த: | ஶ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய |
தே யே ஶதம் ப்ரஜாபதேரானந்த: | ஸ ஏகோ ப்3ரஹ்மண் ஆனந்த: |
ஶ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய |

மனித லோகத்தில் அடையக்கூடிய அதிக சுகங்களை கற்பனை செய்யப்படுகிறது. இதையெல்லாம் அடைந்தால் அனுபவிக்கும் ஆனந்தத்தைவிட நூறு மடங்கு ஆனந்தத்தை இந்த சுகங்களை நீக்குவதால் அடையலாம்.

இளம்வயதுடைய ஒருவன் சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட கர்மங்களை செய்பவன், நன்னெறியை பின்பற்றுகின்றவன், நன்கு சாஸ்திரங்களை கற்றவன், விரைவில் செயல்படும் திறமையுடையவன், மூவரிடம் நன்கு முறையாக உபதேசத்தை பெற்றவன் அவர்களுடைய அனுக்கிரகத்தைப் பெற்றவன், உறுதியான உள்ளமுடையவன், மனோ தைரியமுடையவன், நிச்சயமாக முடிவெடுப்பவன், உடல் வலிமையுடையவன், ஆரோக்கியமாக இருப்பவன் அவன் செழிப்பான இந்த முழு பூமியே அடைந்தவனாக இருக்கின்றான். இதுதான் ஒரு மனிதனுக்கு கிடைக்கக்கூடிய அதிகபட்ச ஆனந்தம். இது ஒருபங்கு ஆனந்தம் என்று வைத்து கொள்வோம்.

மனிதனுடைய நூறுபங்கு ஆனந்தம் எவையோ அவை மனித கந்தர்வர்களுடைய ஒரு பங்கு ஆனந்தம்.  ஸ்ரோத்ரியஸ்ய, அகாமஹதஸ்ய – மனிதர்களாக பிறந்து சாஸ்திரங்களை கற்றறிந்து மனித லோகத்தில் வைராக்கியம் உடையவனுக்கும் இதே நூறு மடங்கு இன்பத்தை அனுபவிக்கின்றான்.
மனித கந்தர்வனுடைய நூறுமடங்கு ஆனந்தம் தேவகந்தர்வனுடைய ஒரு மடங்கு ஆனந்தம். மனித கந்தர்வ லோகத்தில் வைராக்கியமுடைய மனிதனுக்கு அதே அளவு ஆனந்தத்தை அனுபவிக்கின்றான்.
தேவ கந்தர்வனுடைய நூறு மடங்கு ஆனந்தம் = பித்ரு லோகத்தில் இருக்கின்றவர்களின் ஒரு பங்கு ஆனந்தம். தேவகந்தர்வ லோகத்தில் வைராக்கியமுடைய மனிதனுக்கும் இதே அளவு ஆனந்தம்.
பித்ருக்களுடைய 100 ஆனந்தம் = ஸ்மார்த்த தேவலோகத்தில் உள்ளவர்களின் ஒரு பங்கு ஆனந்தம். பித்ரு லோகத்தில் வைராக்கியம் உள்ள மனிதனுக்கும் இதே அளவு ஆனந்தம். ஸ்மார்த்த தேவலோகத்தில் உள்ள  100 ஆனந்தம் = கர்ம தேவலோகத்தில் உள்ளவர்களின் ஒரு பங்கு ஆனந்தம். ஸ்மார்த்த தேவ லோகத்தில் வைராக்கியம் உள்ள மனிதனுக்கும் இதே அளவு ஆனந்தம்.
தேவ லோகத்தில் உள்ள 100 மடங்கு ஆனந்தம் = இந்திரனின் ஆனந்தம், தேவ லோகத்தில் வைராக்கியம் உள்ள மனிதனுக்கும் இதே அளவு ஆனந்தம்.
இந்திரனின் நூறு மடங்கு ஆனந்தம் = பிருகஸ்பதியின்  ஆனந்தம். இந்திரனின் ஆனந்தத்தில் வைராக்கியம் உடைய மனிதனுக்கும் இதே அளவு ஆனந்தம்.
பிருகஸ்பதியின் நூறு மடங்கு ஆனந்தம். பிரஜாபதியின் (விராட் புருஷன்) ஆனந்தம்.  பிருகஸ்பதியில் ஆனந்தத்தில் வைராக்கியம் உள்ள மனிதனுக்கும் இதே அளவு ஆனந்தம். பிரஜாபதியின் நூறு மடங்கு ஆனந்தம் = பிரம்மாவின் (ஹிரண்யகர்ப்பன்) ஆனந்தம் =
பிரஜாபதியின் ஆனந்தத்தில் வைராக்கியம் உள்ள மனிதனுக்கும் இதே அளவு ஆனந்தம்.

அனுவாகம்-8.3
ஸ யஶ்சாயம் புருஷே | யஶ்சாஸவாதி3த்யே | ஸ ஏல” | ஸ ய ஏவம்வித் |
ஸ்மால்ல்லோகாத்ப்ரேத்ய | ஏதம் ப்ராணமயமாத்மானமுபஸங்க்ராமதி |
ஏதம் மனோமயமாத்மானுமுபஸங்க்ராமதி | ஏதம் விக்3ஞானமயமாத்மானமுபஸங்க்ராமதி |
ஏதமானந்த3மயமாத்மானமுபஸங்க்ராமதி | தத3ப்யேஷ ஶ்லோகோ ப4வதி ||

ஆனந்த மீமாம்ஸத்தின் மூலமாக பிரதிபிம்பானந்தம் எடுத்துரைக்கப்பட்டது  ஜீவ-ஈஸ்வர ஐக்கியம் ஆனந்தத்தின் மூலமாக நிரூபிக்கபட்டிருக்கின்றது.

மனிதனிடத்தில் இருக்கும் ஆனந்தமும், ஹிரண்யகர்ப்பனிடத்தில் இருக்கும் ஆனந்தமும் ஒன்றே. இந்த ஆனந்தத்திற்கு காரணம் ஆனந்த ஸ்வரூபமாக இருக்கும் ஆத்மாவேதான். அது இரண்டற்றது என்று புரிந்து கொள்ள முடிகின்றது.  இந்த ஞானத்தை அடைந்தவனுக்கு வரும் மனநிறைவே மோட்சம் என்று கூறப்படுகின்றது. இங்கே ஆனந்தம் அனுபவமாக இருக்காது, ஸ்வரூபமாக இருக்கும்.  ஹிரண்யகர்ப்பனின் ஆனந்தத்தை வைராக்கியத்தோடு ஒதுக்கி விட்டால் அடைவது பிரம்ம ஞானம், இதுவே ஜீவன் முக்தி என்றும் கூறப்படுகின்றது.

மனிதனின் இதயக்குகையில் இருக்கின்ற ஆத்மா, நம்முடைய அனுபவத்தில் இருக்கின்ற நான் என்ற ஆத்மா, உடலுக்குள் நுழைந்து இருக்கின்ற ஆத்மா.  இதுவும் மாயைக்கு ஆதாரமாக இருக்கின்றதும், இந்த ஜகத்துக்கு ஆதாரமாக இருக்கின்றதும், ஹிரண்ய-கர்ப்பனிடத்திலும் இருக்கின்றதுமான ஆத்மாவும் ஒன்றுதான் என்று ஐக்கியப்படுத்தப்பட்டுள்ளது.

எவனொருவன் இவ்விதம் ஜீவ-ஈஸ்வர ஐக்கியத்தை அறிகின்றனோ, அவன் இந்த உலகத்திலிருந்து விலகி, அதன் மீது வைராக்கியம் அடைந்து, உலகத்து விஷயங்களை சார்ந்தில்லாமல் என்னுடையது என்ற புத்தியை விட்டுவிடுகின்றான். தான் உபயோகிக்கும் பொருள் என்னுடையது என்ற புத்தியில்லாமல் அனுபவிக்கின்றான்.; இந்த ஸ்தூல சரீரத்தை ஆத்மா என்று நினைத்துக் கொண்டிருந்த அகங்காரத்தை துறக்கின்றான். ஸ்தூல பிரபஞ்சத்தையே துறக்கின்றான். இது மித்யா என்று புரிந்து கொள்கின்றான், இந்த ஜகத் உண்மைபோல் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது என்ற அறிவுடன் இருக்கின்றான்;.  மேலும் பிராணமயம், மனோமயம், விக்ஞானமயம் ஆனந்தமயம் இவைகளிலுள்ள அகங்காரத்தை விட்டவனாக இருக்கின்றான்.  இறுதியில் பிரம்மத்தையே அடைகின்றான், பிரம்மனாகவே இருக்கின்றான்.  இந்த விஷயத்தில் ரிக் மந்திரம் பின்வருமாறு விளக்குகின்றது.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது ஞானிதான் பிரம்மத்தை அடைகின்றான். அக்ஞானி பிரம்ம ஸ்வரூபமாக இருந்தாலும் அதை அறியாமையிலிருப்பதால் பிரம்மத்தை அடைவதில்லை.

எல்லோரும் உலகத்தை இரண்டாக பிரித்திருக்கின்றனர். அவைகள் 1. என்னுடையது, 2.என்னுடையதல்ல என்பதாகும்.. இதில் இரண்டாவதுதான் மிகப்பெரியதாக இருக்கின்றது.  இந்த பிரிவினால்தான் நாம் துயரத்தை அனுபவித்து கொண்டிருக்கின்றோம்.

அனுவாகம்-9.1
யதோ வாசோ நிவர்தந்தே | அப்ராப்ய மனஸா ஸஹ |
ஆனந்தம் ப்3ரஹ்மணோ வித்3வான் | ந பி3பே4தி குதஶ்சனதி |

வாக்கும் மனமும் பிரம்மத்தை அடைய முடியாமல், விளக்க முடியாமல் திரும்பி வந்து விட்டது.  இதிலிருந்து நாம் அறிவது வாக்காலும், மனதாலும் இதை அடைய முடியாது என்பதாகும். வாச்யார்த்தம் என்பது நேரிடையாக புரிய வைக்கும், லட்சியார்த்தமானது மறைமுகமாக புரியவைக்கும்.  பிரம்மத்தினுடைய ஆனந்த ஸ்வரூபத்தை அறிபவன், ஆத்மாவிலிருந்து வேறுபடாத தன்னுடைய ஆனந்த ஸ்வருபத்தை அறிந்தவன், பயத்தைக் கொடுக்கும் காரணம் சென்று விடுவதால் எதைக்கண்டும் பயமில்லாதவனாகவும், பயம் என்பதே இல்லாதிருப்பவனாகவும் இருப்பான்.  இவ்விதம் ரிக் மந்திரம் முடிவடைகின்றது

அனுவாகம்-9.2
ஏதம்ஹ வாவ ந தபனி கிமஹம் ஸாது4 நாகரவம் |
கிமஹம் பாபமகரவமிதி | ஸ ய ஏவம் வித்3வானேதே ஆத்மானம் ஸ்ப்ருணுதே |

உபே4 ஹ்யேவைஷ ஏதே ஆத்மானம் ஸ்ப்ருணுதே |
ய ஏவம் வேத3 | இத்யுபநிஷத் ||

ஞானியானவன், நான் ஏன் நல்லது செய்யவில்லை, நான் ஏன் பாவத்தை செய்தேன் போன்ற எண்ணங்களால் வருகின்ற துயரங்கள் வாட்டுவதில்லை.  இவன் தன்னிடத்திலே திருப்தியாக இருப்பவன், தன்னிடத்திலே குறையை பார்க்காமலிருப்பவன்.  பாவ-புண்ணியங்களை தன்னிடமிருந்து வேறாக பார்ப்பதில்லை. த்வைத ஞானம் அவனிடத்தில் இல்லாததால் அவனால் இவ்வாறாக நினைக்க முடிகின்றது.  அதனால் எந்த துயரத்தையும் அனுபவிப்பதில்லை.  நாம் நம்மையே நேசிக்க ஆரம்பித்துவிட்டால் யாருடைய அன்பையும் எதிர்ப்பார்க்கமாட்டோம், கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் மகிழ்ச்சியோ, வருத்தமோ அடைய மாட்டான். அவன் அடைந்த ஞானத்தில் நிலைத்து நிற்கும் அளவுக்கு மனோபலத்தை அடைந்திருக்கின்றான்.

ஞானியின் அந்தக்கரணம் ராக-துவேஷங்களால் பாதிக்கப்படுவதில்லை.  மேலும் அப்படி வெளிப்படும் இவைகள் தன்னுடையதல்ல, அது அந்தக்கரணத்தைச் சார்ந்தது, நான் வெறும் சாட்சியாக மட்டும் இருக்கின்றேன் என்ற மனநிலையில் இருப்பான். எப்படி வேறொருவன் மனிதில் வெளிப்படும் ராக-துவேஷங்கள் நம்மை பாதிப்பதில்லையோ அதேப்போன்று இருக்கும் ஞானியின் மனநிலை.
முடிவுரை:

  • பிரஹ்மவித் ஆப்னோதி பரம் என்ற சூத்திர வாக்கியம் கூறப்பட்டது.
  • விருத்தி வாக்கியமான “ஸத்யம், ஞானம், அனந்தம் பிரஹ்ம….ப்ரஹ்மனா விபஸ்சிதா” விளக்கப்பட்டது.
  • அத்யாரோப-அபவாதம் முறையில் பிரம்மம் விளக்கப்பட்டது.

o    ஸ்ருஷ்டியானது பிரம்மத்தின் மீது ஏற்றி வைக்கப்பட்டது.

o    ஏற்றி வைத்ததையெல்லாம் ஒவ்வொன்றாக பஞ்சகோஷம் விவேகம் மூலமாக நீக்கப்பட்டது.  இதில் சமஷ்டி-வியஷ்டி இரண்டையும் நீக்குதலையும் உபதேசிக்கபட்டது.

o    இந்த பிரபஞ்சத்தை நீக்கி நிர்குண பிரம்மத்தை உபதேசித்தது.

o    ஜகத் மித்யா என்பதையும் பிரம்மம் ஸத்யம் என்பதையும் நிரூபிக்க இந்த முறையை கையாளப்பட்டது.

  • பிரம்மன் இருக்கின்றது என்பதை ஏழு விதத்தில் உபதேசிக்கப்பட்ட்து.
  • ஆனந்த மீமாம்ஸா அதாவது ஆனந்த விசாரம் செய்யப்பட்ட்து.

o    ஆத்மா ஆனந்த ஸ்வரூபம் என்று நிலை நாட்டுவதற்கும், நம் அனுபவத்தில் ஆனந்தம் வெளியேயிருந்து வருகின்றது என்று தெரிவதால் இந்த விசாரம் செய்யப்பட்ட்து

o    வைராக்கியத்தின் பெருமையை உணர்த்துவதற்காக மனதில் ஆசைகள் நீங்க நீங்க அமைதியும் அதிகரிக்கும், அதனால் ஆனந்தம் அதிகரிக்கும் என்று கூறப்பட்ட்து.  ஆனந்தமே விஷயானந்தம், வைராக்கியானந்தம், ஆத்மானந்தம் என்று மூன்று வகையாக பிரிக்கப்பட்டது

o    ஜீவ-ஈஸ்வர ஐக்கியமும் உபதேசிக்கப்பட்ட்து.

  • இதன் பலனாக எதைக் கண்டும் பயப்படுவதில்லை.  பயமும் அதற்கான காரணமும் சேர்ந்து நீங்கி விடுகின்றது.

ப்ரஹ்மானந்தவல்லி முடிவுற்றது


oo000oo—-

தைத்திரீய உபநிஷத்

அத்தியாயம்-03

பிருகுவல்லி

அனுவாகம்-01
ப்4ருகு3ர்வை வாருனி: | வருணம் பிதரமுபஸஸார | அதீ4ஹி ப4வதி ப்3ரஹ்மேதி |
தஸ்மா ஏதத்ப்ரோவாச | அன்னம் ப்ராணம் சக்ஷு: ஶ்ரோத்ரம் மனோ வாசமிதி |
தம் ஹோவாச | யதோ வா இமானி பூ4தானி ஜாயந்தே |
யேன ஜாதானி ஜீவந்தி | தத்3விஜிக்3ஞாஸஸ்வ தத்3 ப்3ரஹ்மேதி |
ஸ தபோÅதப்யத | ஸ தபஸ்தப்த்வா ||

வருணரின் மகனான வாருணி என்கின்ற ப்ருகு ரிஷி, தந்தையாகிய வருணரை அணுகினார். இறைவா, எனக்கு பிரம்மத்தை உபதேசியுங்கள் என்று கேட்டார். இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது, வேதாந்தம் படிப்பதற்கு குரு மிகவும் அவசியம், ஞானத்தின் பெருமையும் உணர்த்தப்படுகின்றது, தவத்தில் சிறந்த ரிஷியான இவரே ஞானத்தை அடைவதற்கு விரும்பினார் என்பதிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம். சில சாதனங்களை இந்தக் கதை மூலம் அறிந்து கொள்ளலாம்.  தந்தையையே குருவாக பாவித்து, அவரை இறைவா என்று அழைத்தது அவரிடம் உள்ள பணிவை காட்டுகின்றது.

ப்ருகுவுக்கு சில தத்துவங்களை உபதேசித்தார்.  ஜீவாத்மாவை அடைய சில வழிகளை உபதேசித்தார், த்வம் பதத்தை அறிந்து கொள்ள சில உபாயங்களை உபதேசித்தார். அவைகள் அன்னமயகோசம், பிராணமயகோசம், கண், காது, மனம், வாக்கு (மனோமயகோசம்).  எதனிடமிருந்து இந்த ஜீவராசிகள் தோன்றியுள்ளதோ, எதனால் இவைகள் வாழ்கின்றனவோ, எதனிடத்தில் இறந்ததும் சென்றடைகின்றனவோ அதை தெளிவாக அறிய முயற்சிப்பாயாக, அதுவே பிரம்மன் என்ற் கூறினார்.

இவ்விதம் கேட்டபிறகு ப்ருகு தவத்தை மேற்கொண்டார். தவத்தை செய்துவிட்டு மீண்டும் குருவை அடைந்தார்.

விசாரம்:

  • அவரே ரிஷியாக இருப்பதால் இதை தவம் செய்துதான் அறிந்து கொள்ள முடியும் என்று அறிந்திருக்கின்றார்,  எதை அடைய வேண்டுமென்றாலும் தவம் செய்து முயற்சிக்க வேண்டும். நாம் செய்யும் தியாகங்களையும் தவத்தில் சேர்க்கலாம்.  எனவே அவர் தவத்தை மேற்கொண்டார்.
  • தவம் என்றால் என்ன?  ஒவ்வொரு ஆசிரமத்திலும் அவரவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கர்மங்கள் சொல்லப்பட்டிருகின்றது.  இவைகளையே தவம் என்று அழைக்கப்படுகின்றது.
  • பிரம்மச்சர்ய ஆஸ்ரமம் – ஸ்வாத்யாயம் – சாஸ்திரங்களை படித்தல்
  • கிருஹாஸ்ரமம் – தானம் செய்வதுதான் தவம்.
  • வானப்ரஸ்தாசிரமம் – விரதம் இருப்பதைக்காட்டிலும் பெரிய தவம் வேறெதுவும் இல்லை.
  • சந்நியாசம் – மனம், இந்திரியங்கள் கட்டுப்பாடு மேலான தவம்.

இந்த கதையில் ப்ருகு ரிஷி இந்திரியங்கள் மனம் இவைகளைக் கட்டுபடுத்தும் தவத்தில் ஈடுபட்டார். மீண்டும், மீண்டும் சிந்தித்தார், விசாரத்தில் ஈடுபட்டார்.

அனுவாகம்-02
அன்னம் ப்3ரஹ்மேதி வ்யஜானாத் |
அன்னாத்3த்4யேவ க2ல்விமானி பூ4தானி ஜாயந்தே |
அன்னேன ஜாதானி ஜீவந்தி |
அன்னம் ப்ரயந்த்யபி4ஸம்விஶந்தீதி |
தத்3விக்3ஞாய  | புனரேவ வருணம் பிதரமுபஸஸார |
அதீ4ஹி ப4கவோ ப்3ரஹ்மேதி |
தம் ஹோவாச |
தபஸா ப்3ரஹ்ம விஜிக்3ஞாஸஸ்வ |
தபோ ப்3ரஹ்மேதி | ஸ தபோÅதப்யத | ஸ தபஸ்தப்த்வா ||

அன்னம்தான் பிரம்மனென்று முடிவு செய்தார். இங்கே அன்னம் என்பதை விராட் தத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும்..  இந்த ஸ்தூல பிரபஞ்சத்தை அவர் குறிபிட்டதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.  உணவிலிருந்துதான் இந்த ஜீவராசிகளின் சரீரங்கள் தோன்றுகின்றன.  உணவினால் தோன்றி வாழ்கின்றன.  உணவிடத்தில் இறுதியாக லயத்தை அடைகின்றன. இவ்விதமாக பிரம்மத்தை அன்னமாக கருதினார். பிறகு அதையே மீண்டும் விசாரம் செய்து அன்னத்திற்கு இந்த பிரம்ம ஸ்வரூப லக்ஷணம் பொருந்தவில்லை என்று உணர்ந்தார்.  அன்னமானது மாற்றத்தை அடைவதை உணர்ந்தார். இது வரையறுக்குட்பட்டது ஆகவே இது பிரம்மனாக இருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தார், மீண்டும் தந்தையான குருவை அடைந்தார்.  பகவானே, மீண்டும் பிரம்மனை உபதேசிப்பீர்களாக என்று வேண்டினார். அவரும் தவத்தை செய்து தெரிந்து கொள்.  தவமே பிரம்மத்தை அடைய உதவும் சாதனம் என்று உணர்த்தினார். இங்கே தவம் என்ற சொல் மனக்கட்டுப்பாட்டை குறிக்கின்றது, வெளியே செல்கின்ற மனதை உட்புறமாக திருப்ப வேண்டும்.  ப்ருகு தவத்தை மேற்கொண்டார்.

அனுவாகம்-03
ப்ராணோ ப்3ரஹ்மேதி வ்யஜானாத் |
ப்ராணத்3த்4யேவ க2ல்விமானி பூ4தானி ஜாயந்தே |
ப்ராணேன ஜாதானி ஜீவந்தி |
ப்ராணம் ப்ரயந்த்யபி4ஸம்விஶந்தீதி |
தத்3விக்3ஞாய | புனரேவ வருணம் பிதரமுபஸஸார |
அதீ4ஹி ப4கவோ ப்3ரஹ்மேதி |
தம் ஹோவாச |
தபஸா ப்3ரஹ்ம விஜிக்3ஞாஸஸ்வ |
தபோ ப்3ரஹ்மேதி | ஸ தபோÅதப்யத | ஸ தபஸ்தப்த்வா ||

பிராணனே (சூட்சும சரீர அபிமானி ஹிரண்யகர்ப்பன்) பிரம்மன் என்று முடிவுக்கு வந்தார். பிராணனிலிருந்து ஜீவராசிகள் தோன்றுகின்றன.  பிராணனினால் வாழ்கின்றன, இறுதியில் பிராணனை அடைகின்றன. என்ற ஸ்வரூப லட்சணை விசாரம் செய்தார்.  இந்த லட்சணம் பிராணனில் பொருந்தவில்லை எனவே இது பிரம்மன் அல்ல என்ற முடிவுக்கு வந்தார். எனவே மீண்டும் தந்தையை அணுகினார். மீண்டும் உபதேசம் செய்யுமாறு கேட்க, அவரும் மீண்டும் தவம் செய்து அறிந்து கொள் என்பதையே அவரும் சொல்லியனுப்பினார்.

அனுவாகம்-04
மனோ ப்3ரஹ்மேதி வ்யஜானாத் |
மனஸோ ஹ்யேவ க2ல்விமானி பூ4தானி ஜாயந்தே |
மனஸா ஜாதானி ஜீவந்தி |
மன: ப்ரயந்த்யபி4ஸம்விஶந்தீதி |
தத்3விக்3ஞாய | புனரேவ வருணம் பிதரமுபஸஸார |
அதீ4ஹி ப4கவோ ப்3ரஹ்மேதி |
தம் ஹோவாச |
தபஸா ப்3ரஹ்ம விஜிக்3ஞாஸஸ்வ |
தபோ ப்3ரஹ்மேதி | ஸ தபோÅதப்யத | ஸ தபஸ்தப்த்வா ||

மனமே பிரம்மன் முடிவுக்கு வந்தார். பிரம்ம தடஸ்த லட்சணத்தை பொருத்திப் பார்த்து இதுவல்ல என்ற முடிவுக்கு வந்தார்.  மீண்டும் விசாரம் செய்து இதுவும் பிரம்மனல்ல என்று அறிந்து கொண்டார்.

அனுவாகம்-05
விக்3ஞானம் ப்3ரஹ்மேதி வ்யஜானாத் |
விக்3ஞானத்3த்4யேவ க2ல்விமானி பூ4தானி ஜாயந்தே |
விக்3ஞானேன ஜாதானி ஜீவந்தி |
விக்3ஞானம் ப்ரயந்த்யபி4ஸம்விஶந்தீதி |
தத்3விக்3ஞாய | புனரேவ வருணம் பிதரமுபஸஸார |
அதீ4ஹி ப4கவோ ப்3ரஹ்மேதி |
தம் ஹோவாச |
தபஸா ப்3ரஹ்ம விஜிக்3ஞாஸஸ்வ |
தபோ ப்3ரஹ்மேதி | ஸ தபோÅதப்யத | ஸ தபஸ்தப்த்வா ||

விக்ஞானமயமே பிரம்மன் என்ற முடிவுக்கு வந்தார். இவ்வாறு மீண்டும் உபநிஷத் சொல்வதற்குக் காரணம், தவத்தின் பெருமையை எடுத்துரைப்பதற்கு இந்த முறையில் உபதேசிக்கபடுகின்றது. இதேபோல ஆனந்தமயத்தை தவத்தின் மூலம் பிரம்மன் என்ற முடிவுக்கு வந்தார். ஆனால் இது போக்தாவாக இருப்பதால் இதுவும் பிரம்மனல்ல என்று அறிந்து கொண்டார். போக்தாவும் விகாரத்திற்கு உட்பட்டதாக இருப்பதால் பிரம்மனல்ல என்று தெரிந்து கொண்டார்.

அனுவாகம்-06
ஆனந்தோ3 ப்3ரஹ்மேதி வ்யஜானாத் |
ஆனந்தா3த்3த்4யேவ க2ல்விமானி பூ4தானி ஜாயந்தே |
ஆனந்தே3ன ஜாதானி ஜீவந்தி |
ஆனந்த3ம் ப்ரயந்த்யபி4ஸம்விஶந்தீதி |
ஸைஷா பா4ர்க3வி வாருணீ வித்3யா |
பரமே வ்யோமன் ப்ரதிஷ்டிதா |
ஸ ஏவம் வேத3 ப்ரதிதிஷ்டதி |
அன்னவானன்னதோ3 ப4வதி |
மஹான்ப4வதி ப்ரஜ்யா பஶுபி4ர்ப்3ரஹ்மவர்சஸேன |
மஹான்கீர்த்யா |

ஆனந்தமே பிரம்மன் என்று புரிந்துக் கொண்டார்.  இந்த ஜீவராசிகள் ஆனந்தத்திலிருந்து தோன்றின.  அதிலேயே வாழ்கின்றன.  இறுதியில் அதிலேயே லயமடைகின்றது, ஒடுங்குகின்றது.  இவ்விதம் ப்ருகு புரிந்து கொண்டார்.  இந்த ப்ரஹ்மஞானம் ப்ருகு என்பவரால் புரிந்து கொள்ளப்பட்டது.  வருணரால் உபதேசிக்கபட்டது.  மனிதனின் ஹ்ருதயத்தில் உள்ள மேலான ஆகாசத்தில் இருக்கின்ற பிரஹ்மத்தினிடத்தில் பிரம்ம வித்யாவானது அறிந்தவுடன் முடிவடைகின்றது.  யாரொருவன் ப்ருகு புரிந்து கொண்டதைப்போல அறிகின்றார்களோ அவர்கள் ப்ரம்மனிடத்தில் நிலைபெறு-கின்றார்கள், தன்னிடத்திலே நிலைபெறுகின்றார்கள்.  அவனுக்கு நல்ல உணவு வேண்டிய அளவு கிடைக்கும். உணவை நன்கு உட்கொள்ளும் சக்தியுடையவனாகவும் இருக்கின்றான்.  மேன்மையை அடைகின்றான்.  நல்ல சந்ததிகளினாலும், சிஷ்யர்களாலும் பெருமையடைவான். செல்வங்களை உடையவனாகவும், தேஜஸ் உடையவனாகவும், புகழினாலும் மேன்மையை அடைகின்றான்.
அனுவாகம்-07
அன்னம் ந நிந்த்3யாத் | தத்3 வ்ரதம் | ப்ராணே வா  அன்னம் |
ஶரீரமன்னாத3ம் | ப்ராணே ஶரீரம் ப்ரதிஷ்டிதம் |
ஶரீரே ப்ராண: ப்ரதிஷ்டித: | ததே3தத3ன்னமன்னே ப்ரதிஷ்டிதம் |
ஸ ய ஏதத3ன்னமன்னே ப்ரதிஷ்டிதம் வேத3 ப்ரதிதிஷ்டதி |
அன்னவானன்னாதோ3 ப4வதி |
மஹான்ப4வதி ப்ரஜ்யா பஶுபி4ர்ப்3ரஹ்மவர்சஸேன | மஹான்கீர்த்யா |

அக்ஞானிகளுக்கான உபாஸனையும், சில நல்ல பண்புகள் இதில் சொல்லப்பட்டிருக்கின்றது. உணவை அவமதிக்கக்கூடாது.  அதை விரதமாக பின்பற்ற வேண்டும்,  அன்னம் என்பது விராட் ஸ்வரூபம், ஸமஷ்டி ஸ்தூல சரீரத்தையுடைய ஈஸ்வரன்.  அன்னத்தின் உதவியால்தான் அன்னமயகோசம் இருக்கின்றது.  இந்த கோசம் பிரம்மத்தை அடைவதற்கு ஒரு படியாக இருக்கின்றது.

உபாஸனை:
இந்த உலகத்திலுள்ள அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றது. எந்தவொரு தத்துவமும் சுதந்திரமாக இருக்க முடியாது.  உதாரணமாக சரீரமானது பிராணனை சார்ந்திருக்கின்றது, அதேபோல பிராணனானது சரீரத்தை சார்ந்திருக்கின்றது என்று தியானிக்க வேண்டும்,.  இந்த உலகத்தின் மித்யாத்வம் உணராதவர்களுக்கு இந்த ஞானம் பயன்படுகின்றது.  இந்த தியானத்தின் மூலம் இந்த பிரபஞ்சம் மித்யா என்று உணர்ந்து கொள்வான்.  எது ஒன்றை சார்ந்திருக்கின்றதோ அது மித்யாவின் லக்‌ஷணம். இந்த நிலை அடைந்ததும் வேதாந்தம் புரிய ஆரம்பிக்கும்.  இது நிஷ்காம உபாஸகன் அடையும் பலன்.  காம்ய உபாஸகனுக்கு வேறு வகையான பலன்கள் கிடைக்கின்றது.  நல்ல உணவு கிடைக்கும், உணவு உட்கொள்ளும் சக்தி கிடைக்கும், தேஜஸ், புகழ் கிடைக்கும்.

அன்ன-அன்னாத உபாஸனை:
அன்னம் – எது சாப்பிடப்படுகின்றதோ – உணவு
அன்னாத – எது சாப்பிடுகின்றதோ – சாப்பிடுபவர்,
இதில் இரண்டு தத்துவங்கள் எடுத்துக்கொண்டு விளக்கப்படுகின்றது. அவைகள் சரீரம்-பிராணன்.

பிராணன் என்பது அன்னம், சரீரம் அன்னாதம், உடலானது பிராணனை சாப்பிடுகின்றது, இதற்கு பொருள் சரீரம் பிராணனை சார்ந்திருக்கின்றது.  பிராணனை தனக்குள்ளே வைத்திருப்பதால் சரீரம் ஒரு பாத்திரமாக இருக்கின்றது, பிராணன் அதில் வைக்கப்படும் பொருளாக இருக்கின்றது.

சரீரம் என்பது அன்னம், பிராணன் அன்னாதம், பிராணன் உடலை சாப்பிடுகின்றது, பிராணன் உடலை சார்ந்திருக்கின்றது. இதில் பிராணன் ஒடுக்குபவராகவும், சரீரம் ஒடுங்குகின்ற பொருளாகவும், இருக்கின்றது.  இதனால் பிராணமயகோசம் அன்னமய கோசத்தை நீக்கி விடுகின்றது.

ஒரு பொருள் இருக்கும்போதும், இல்லாதபோதும் நம்முடைய மனமானது எந்த பாதிப்பும் அடையாமலிருந்தால் அந்தப்பொருளின் மித்யாத்வத்தை உணர்ந்துள்ளோம் என்று அறிந்து கொள்ளலாம்.

பிரதிஷ்டா – பிரதிஷ்டித உபாஸனை:
பிராணத்தினால் சரீரம் தாங்கப்படுகின்றது. பிராணனானது உடலுக்கு உயிரூட்டுகின்றது. எனவே இது பிரதிஷ்டா, சரீரம் உயிரை அடைவதால் அது பிரதிஷ்டிதம்.

சரீரத்தினால் பிராணன் தாங்கப்படுகின்றது.  சரீரமானது பிராணன் இருப்பதற்கு பாத்திரமாக இருப்பதால் அது பிரதிஷ்டா, பிராணனானது சரீரத்திற்குள்ளே இருப்பதால் அது பிரதிஷ்டிதம்.

இவ்விதம் சரீர ரூபமாக இருக்கின்ற அன்னம், பிராண ரூபமாக இருக்கின்ற அன்னத்தினால் தாங்கப்படுகின்றது. யார் இந்த அன்னம் அன்னத்தை சார்ந்திருக்கின்றது என்பதை அறிகின்றார்களோ, அவர்கள் நீண்ட ஆயுளுடன் இருப்பார்கள். நிஷ்காமமாக இந்த உபாஸனை செய்தால் இந்த ஜகத் மித்யா என்ற அறிவை அடையலாம். காம்யமாக செய்பவர்களுக்கு அதிகமான உணவு கிடைக்கும், அதை சாப்பிடும் சக்தியும் கிடைக்கும்,  நல்ல சந்ததிகளாலும், செல்வங்களாலும், புகழினாலும் மேன்மையை அடைகின்றான்.

அனுவாகம்-08
அன்னம் ந பரிசக்ஷீத | தத்3 வ்ரதம் | ஆபோ வா அன்னம் |
ஜ்யோதிரன்னாத3ம் | அப்ஸ ஜ்யோதி: ப்ரதிஷ்டிதம் |
ஜ்யோதிஷ்யாப: ப்ரதிஷ்டிதா: | ததே3தத3ன்னமன்னே ப்ரதிஷ்டிதம் |
ஸ ய ஏதத3ன்னமன்னே ப்ரதிஷ்டிதம் வேத3 ப்ரதிதிஷ்டதி |
அன்னவானன்னாதோ3 ப4வதி |
மஹான்ப4வதி ப்ரஜ்யா பஶுபி4ர்ப்3ரஹ்மவர்சஸேன | மஹான்கீர்த்யா |

உணவை வீணாக்கக்கூடாது அதை ஒரு விரதமாக எடுத்துக் கொள்ள வேண்டும். நீரானது அன்னமாக (சாப்பிடப்படுகின்ற உணவாக) இருக்கின்றது. நெருப்பானது அன்னாதமாக (சாப்பிடுபவராக) இருக்கின்றது.  பிரளய காலத்தில் நீரானது நெருப்பினால் விழுங்கப்படுகின்றது. நெருப்பானது அன்னமாக (சாப்பிடப்படுகின்ற உணவாக) இருக்கின்றது, நீரானது அன்னாதமாக ( சாப்பிடுபவராக ) தியானிக்கபடுகின்றது;  வயிற்றில் பசி எடுக்கும்போது தோன்றும் நெருப்பானது நீரினால் அமைதிப்படுத்தபடுகின்றது. நீரினால் நெருப்பானது கட்டுப்படுத்தப்படுகின்றது. அப்போது நீர் பிரதிஷ்டாவாகவும் (கட்டுபடுத்துபவர்), நெருப்பு பிரதிஷ்டிதமாகவும் ( கட்டுப்படுத்தபடுவதால்) இருக்கின்றது. நெருப்பினால் நீர் கட்டுபடுத்தப்படுகின்றது. இதில் நெருப்பானது பிரதிஷ்டாகவும், நீரானது பிரதிஷ்டிதமாகவும் இருக்கின்றது.

இவ்வாறு தியானம் செய்வதால் முன் அனுவாகத்தில் சொல்லப்பட்ட பலன்களையே அடைவார்கள்.

அனுவாகம்-09
அன்னம் ப3ஹு குர்வீத | தத்3 வ்ரதம் | ப்ருதி2வீ வா அன்னம் |
ஆகாஶோÅன்னாத: | ப்ருதி2வ்யாமாகாஶ: ப்ரதிஷ்டித: |
ஆகாஶே ப்ருதி2வீ ப்ரதிதிஷ்டதா |
ஸ ய ஏதத3ன்னமன்னே ப்ரதிஷ்டிதம் வேத3 ப்ரதிதிஷ்டதி |
அன்னவானன்னாதோ3 ப4வதி |
மஹான்ப4வதி ப்ரஜ்யா பஶுபி4ர்ப்3ரஹ்மவர்சஸேன | மஹான்கீர்த்யா |

உணவுப் பொருட்களை அதிகமாக சேகரித்து, அதிகமாக சமைக்க வேண்டும்.
இங்கு நிலமும், ஆகாசமும் தியானத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

நிலம்   – அன்னம்    – ஒடுங்குபவர் – பிரளய காலத்தில் நிலம் ஆகாசத்தில்
ஆகாசம் – அன்னாதம் – ஒடுக்குபவர்  –  ஒடுங்குகின்றது
ஆகாசம் – அன்னம்   – ஒடுங்குபவர் – வயிற்றுக்குள் இருக்கும் ஆகாசம்
நிலம்   – அன்னாதம்  – ஒடுக்குபவர் –  நிலத்தினால் தாங்கப்படுகின்றது

நிலம்     பிரதிஷ்டா   – தாங்குபவர்
ஆகாசம்   பிரதிஷ்டிதம் – தாங்கப்படுவது
நிலம்     பிரதிஷ்டிதம் – காரியம்
ஆகாசம்   பிரதிஷ்டா    – காரணம்

இப்படி தியானிப்பதால் அனுவாகம்-7 ல் கூறப்பட்ட பலன்களையே அடைவர்.

அனுவாகம்-10.1
ந கஞ்சன வஸதௌ ப்ரஜ்யார்சக்ஷீத | தத்3 வ்ரதம் |
தஸ்மாத்3யய கயா ச வித்4யா ப3ஹ்வன்னம் ப்ராப்னுயாத் |
அராத்4யஸ்மா அன்னமித்யாசக்ஷதே | ஏதத்3வை முக2தோÅன்னம் ராத்3த4ம் |
மத்4யதோÅஸ்மா அன்னம் ராத்4யதே | ஏதத்3வா அந்ததோÅன்னம்ராத்3த4ம் |
அந்ததோÅஸ்மா அன்னம்ராத்4யதே | ய ஏவம் வேத3 ||

ஒருவர் நம்மிடம் இருப்பிடம் நாடி வந்தால் நாம் மறுக்காமல் அவருக்கு உதவ வேண்டும். இதை விரதமாக கொள்ள வேண்டும், அவருக்கும் தங்க இடமும், சாப்பிட உணவும் கொடுக்க வேண்டும்.  ஆகவே ஏதாவது ஒரு விதத்தில் தர்மப்படி அதிகமான உணவை சேகரிக்க வேண்டும்.  இவருக்கு உணவு தயாராக உள்ளது என்று இல்லறத்தோர் கூறுகிறார்கள்.  உயர்ந்த வித்த்தில் உணவை தயாரித்து கொடுத்தால் அவனுக்கும் உயர்ந்த வித்த்தில் உணவானது கிடைக்கின்றது.  இடைநிலை தரத்தில் தயாரித்து கொடுத்தோமானல் அதே தரத்தில்தான் உணவும் திரும்ப கிடைக்கும். ஒருவேளை மோசமாக உணவை தயாரித்து கொடுத்தோமானால் நமக்கும் மோசமான உணவே கிடைக்கும். இங்கு உணவு ஒரு உதாரணத்திற்கு கூறப்பட்டுள்ளது.  இந்த கருத்தை எல்லாவற்றிற்கும் பொருத்திப் பார்த்து புரிந்து கொள்ள வேண்டும்.  யார் இந்த உண்மையை அறிந்து அவ்விதம் நடந்து கொள்கிறார்களோ அவர்கள் புண்ணியத்தை அடைகின்றார்கள்.

இந்த உலகத்திற்கு நாம் எதைக் கொடுக்கின்றோமோ அதை இந்த உலகம் நமக்கு திருப்பிக் கொடுக்கும். எப்படி கொடுத்தோமோ அப்படியே திருப்பி கொடுக்கும். உணவைக் கொடுத்தால் நமக்கு உணவு கிடைக்கும், அன்பைக் கொடுத்தால் நமக்கும் அன்பு கிடைக்கும்.

அனுவாகம்-10.2 – பிரஹ்ம உபாஸனம்
க்‌ஷேம இதி வாசி | யோகஷேம இதி பிராணாபானயோ: |
கர்மேதி ஹஸ்தயோ: | க3திரிதி பத3யோ: |
விமுக்திரிதி பாயோ | இதி மானுஷீ: ஸமாக்3ஞா |
அத2 தை3வீ: | த்ருப்திரிதி வ்ருஷ்டௌ |
3லமிதி வித்3யுத | யஸ இதி  பஶுஷு |
ஜ்யோதிரிதி நக்ஷத்ரேஷு |
ப்ரஜாபதிரம்ருதமனந்த3 இத்யுபஸ்தே2 |
ஸர்வமித்யாகாஶே ||

மாயையுடன் கூடிய பிரம்மன் சகுணபிரம்மன் என்றும், ஈஸ்வரன் என்றும் அழைக்கப்படுகின்றது.  உபாஸனை வரும் இடத்தில் பிரம்மன் என்பதை ஈஸ்வரன் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.

நம்முடைய சரீரத்தில் உள்ள ஒவ்வொரு அங்கத்திற்கும் ஒவ்வொரு சக்தி இருக்கின்றது. இந்த சக்திகள் என்னைச் சார்ந்தது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் இவையனைத்தும் ஈஸ்வரனுடைய சக்தி என்று தியானிக்க வேண்டும்.

  1. க்‌ஷேம இதி வாசி:நம்முடைய வாக்கில் தூய்மை ரூபமாக ஈஸ்வரன் இருக்கின்றார் என்று தியானிக்க வேண்டும்.  ஒரு மனிதனுடைய உயர்வும், தாழ்வும் அவனுடைய சொல்லில்தான் இருக்கின்றது என்ற உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.
  2. யோகஷேம இதி பிராண-அபானயே:பிராணன் – அபானன் இவைகளில் யோகஷேமமாக இருப்பதாக தியானிக்க வேண்டும். யோகம் என்பது பொருள் ஈட்டுதல், ஷேமம் என்பது சேர்த்தை பாதுகாத்தல்
  3. நமது இரண்டு கைகளில் செயல் வடிவமாக ஈஸ்வரன் இருப்பதாக தியானிக்க வேண்டும்.
  4. நமது இரண்டு கால்களில் நடக்கின்ற சக்தியாக ஈஸ்வரன் இருப்பதாக தியானிக்க வேண்டும்,
  5. மலத்தை வெளியே தள்ளும் இந்திரியத்தில் வெளித்தள்ளும் சக்தியாக தியானிக்க வேண்டும்,
  6. கருவாயில் உற்பத்தி செய்யும் சக்தியாகவும்,அம்ருதமாகவும், சந்ததி உருவாகுவதற்கு காரணமாகவும், சரீர ஆனந்தத்தை தருகின்ற சக்தியாகவும் தியானிக்க வேண்டும்.

இவ்விதம் மனிதர்களுடைய உறுப்புக்கள் சம்பந்தமான உபாஸனைகள் சொல்லப்பட்டு உள்ளது.

அனுவாகம்-10.3
தத்ப்ரதிஷ்டித்யுபாஸீத | ப்ரதிஷ்டாவான் ப4வதி |
தன்மஹ இத்யுபாஸீத | மஹான்ப4வதி |
தன்மன் இத்யுபாஸீத | மஹான்ப4வதி |
தன்னம் இத்யுபாஸீத | நம்யந்தேÅஸ்மை காமா: |
தத்3ப்3ரஹ்மேத்யுபாஸீத | ப்3ரஹ்மவான் ப4வதி |
தத்3 ப்3ரஹ்மண: பரிமர இத்யுபாஸீத |
பர்யேணம் ம்ரியந்தே த்3விஷந்த: ஸபத்னா: |
பரி யேÅப்ரியா ப்4ராத்ருவ்யா: ||

பிரம்மனை மழையில் திருப்தியாகவும், மின்னலில் சக்தியாகவும், செல்வத்தில் புகழாகவும், நட்சத்திரங்களில் (சூரியன், சந்திரன் இரண்டும் நட்சத்திரங்களுடன் சேர்த்து பார்க்க வேண்டும்) ஒளிவடிவமாக இருக்கின்றதாகவும், ஆகாசத்தில் பிரம்மத்தை அனைத்துமாக இருக்கின்றதாகவும் தியானிக்க வேண்டும்.

நாம் எதை, எப்படி உபாஸிக்கின்றோமோ அது சம்பந்தமான பலனை அடைவோம். யாரோடு உறவு வைத்திருக்கின்றாயோ, யாராக உயர விரும்புகின்றாயோ அவராக நாம் மாறுவோம்.  இது இயற்கையின் விதி.
*   ஆகாசத்திலிருந்து வேறுபடாத பிரம்மன் (ஈஸ்வரன்) அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கின்றார் என்று தியானித்தால் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்வதற்கான எல்லாமும் கிடைக்கும், எல்லாவிதத்திலும் உதவி கிடைக்கும்.

*   பிரம்மத்தை மேன்மையானதாக உபாஸித்தால் மகானாக உயர்கின்றான்

*   பிரம்மத்தை சிந்திக்கும் சக்தியாக உபாஸித்தால் சிந்திக்கும் திறனுடையவனாகின்றான்

*   பிரம்மத்தை வணங்கத்தக்கதாக தியானிப்பதாலும், வசீகரிக்கும் தன்மையுடையதாக தியானித்தாலும் ஆசைப்படும் பொருட்கள் யாவும் வந்தடையும்

*   மிகவும் பெரியதாக தியானித்தால் உயர்ந்த நிலைக்கு செல்கின்றான்

*   அழிக்கக்கூடிய சக்தியாக தியானித்தால், தன்னை அழிக்க நினைக்கும் பகைவர்கள் அழிந்து போவார்கள்

மேற்கூறிய தியானங்களை நிஷ்காமமாக செய்தால் இந்த உலகம் மித்யா என்று புரிந்து கொள்ளப்படும்

அனுவாகம்-10.4
ஸ யஶ்சாயம் புருஷே | யஶ்சாஸவதி3த்யே | ஸ ஏக: |
ஸ ய ஏவம்வித் | அஸ்மால்லோகாத்ப்ரேத்ய |
ஏதமன்னமயமாத்மானமுபஸங்க்ரம்ய |
ஏதம் ப்ராணமயமாத்மானமுபஸங்க்ரம்ய |
ஏதம் மனோமயமாத்மானமுபஸங்க்ரம்ய |
ஏதம் விக்3ஞானமயமாத்மானமுபஸங்க்ரம்ய |
ஏதமானந்த3மயமாத்மானமுபஸங்க்ரம்ய ||

எந்தவொரு. ஆனந்தம் மனிதனிடத்தில் இருக்கின்றதோ அதுவும், ஹிரண்யகர்ப்-பனிடத்தில் இருக்கும் ஆனந்தமும் ஒன்றேயாகும்.  யார் இவ்வாறு அறிகின்றார்களோ அவர்களுக்கு வெளியே உள்ள பொருட்களிலிருந்து பற்றை விட்டுவிட்டு ஒவ்வொரு கோசத்திலிருக்கும் அபிமானத்தை நீக்கி விடுவான்.  இந்த அன்னமயம்தான் ஆத்மா என்ற அபிமானத்தை விட்டு, பிராணமயத்திலிருந்தும் இந்த அபிமானத்தை விட்டு, மனோமய, விக்ஞானமய, ஆனந்தமயத்திலிருந்தும் அபிமான்ங்களை விட்டுவிடுவான்.

அனுவாகம்-10.5 –  ( மோட்ச பலன் – ஜீவன்முக்த நிலை )
இமாம்ல்லோகான்காமான்னி காமரூப்யனுஸஞ்ச்ன் |
ஏதத்ஸாஸ் கா3யன்னஸ்தே | ஹா(3) வு ஹா(3) வு |
அஷ்மன்னமஹமன்னமஹமன்னம் |
அஷ்மன்னதோ3Å(3)மன்னதோ3(3)ஹமன்னத3: |
அஹம் ஶ்லோக்க்ருதஹம் ஶ்லோக்க்ருதஹம் ஶ்லோக்க்ருத் |
அஷ்மஸ்மி ப்ரத2மஜா ரிதா(3)ஸ்ய |
பூர்வம் தேவேப்4யோÅம்ருதஸ்ய நா(3)பா4யி |
யோ மா த3தா3தி ஸ இதே3வ மா(3)வா: |
அஷ்மன்னமன்னமத3ந்தமா(3)த்3மி |
அஹம் விஶ்வம் பு4வனமப்4யப4வா(3)ம் |
ஸுவர்னஜ்யோதீ: | ய ஏவம் வேத3: | இத்யுபநிஷத் ||

ஜீவன் முக்தன் இந்த உலகத்தில் திரிந்து கொண்டும், உலவிக் கொண்டும் இருக்கின்றான்.  விருப்பப்படி உணவை சாப்பிட்டுக் கொண்டு இருக்கின்றான்.  ஏதோ ஒரு பாடலை இசையுடன் பாடிக் கொண்டிருக்கின்றான்.

  • நாம் சாப்பிடும் உணவு அந்தக்கரணத்தைப் பாதிக்கின்றது.  ஞானிக்கு இந்த நிலை கிடையாது.  உணவு விஷயத்தில் அவனுக்கு எந்த நியமமும், நிஷேதமும் கிடையாது
  • ஞானியானவன் உலகமே நான் என்ற பாவனையில் இருப்பவன்.  எனவே நானே எல்லா உருவமாக இருக்கின்றேன் என்று கருதுவான்.  தான் விரும்பிய வாழ்க்கையை வாழ்வான். பிராரப்தத்தின் செயலை ஏற்றுக் கொள்வான்.
  • பிரம்மத்தை பாடிக் கொண்டும், உபதேசித்துக் கொண்டும் வாழ்ந்து கொண்டிருப்பான்
  • இந்த உலகத்தை அவன் ஆச்சரியமாக பார்க்கின்றான்.  நடக்க முடியாத விஷயத்தை பார்த்து ஆச்சரியத்தை அடைவது போல இருக்கும் அவனது பார்வை.  இந்த உலகில் நான் ஒருவன் மட்டும்தான் இருக்கின்றேன். நானே உணவாகவும், உணவை உட்கொள்பவனாகவும் இருக்கின்றேன் என்று ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டு இருப்பான்.
  • நானே சாப்பிடும் பொருளாக இருக்கின்றேன் என்று ஆச்சரியத்துடன் பார்க்கின்றான்
  • நானே உணவை சாப்பிடுபவனாகவும் இருக்கின்றேன் என்றூ ஆச்சரியத்துடன் பார்க்கின்றான்.
  • நானே இந்த இரண்டையும் சேர்த்து வைக்கின்றேன் என்றும் எண்ணிக் கொள்வான்

 

இது ஞானியிடத்திலுள்ள ஸர்வாத்ம பாவத்தை குறிக்கின்றது என்று சங்கரர் கூறுகின்றார்.

உலகத்திற்கு நானே ஹிரண்யகர்ப்பனாக இருக்கின்றேன். தேவர்களுக்கு முன் தோன்றிய விராட் ஸ்வரூபமாகவும் இருக்கின்றேன். அம்ருதத்தின் மையமாக இருக்கின்றேன்.  பிரம்மத்தை அடைய விரும்பும் முமுக்‌ஷுக்களுக்கு ஆதாரமாக இருக்கின்றேன். உணவு ரூபமாக இருக்கின்ற என்னை யார் கொடுக்கின்றார்களோ அவர்களை நான்  காப்பாற்றுகின்றேன்.அவர்கள் உணவு தொடர்ந்து கிடைக்கப்பெற்று வாழ்வார்கள்..  அன்னரூபமான என்னை பகிர்ந்து உண்ணாதவர்கள் அழிந்து விடுவார்கள். சூரியனின் ஒளியைப் போல நான் அனைத்துலகத்தையும் வியாபிக்கின்றேன்.  ஞானியானவன் எப்பொழுதும் முழு மனநிறைவுடன் இருக்கின்றான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

யார் இவ்விதம் அறிகின்றானோ அவன் முக்தியடைந்தவனாக கருதப்படுகின்றான்.  இத்துடன் உபநிஷத் உபதேசம் முடிவடைகின்றது.

பிருகுவல்லி முடிவுற்றது
ஓம் தத் ஸத்

———————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

சாந்தோக்ய உபநிஷத்-அத்தியாயம்-6 -7-8-ஸ்வாமி குருபரானந்தா உபதேசம் விளக்கம்

December 25, 2022

சாந்தோக்ய உபநிஷத்-அத்தியாயம்-6
ஸ்வாமி குருபரானந்தா உபதேசம் விளக்கம்

வேதாந்தத்தின் லக்ஷணம் எதுவென்றால் உபநிஷத்தான். உபநிஷத் என்றால் பிரம்மஞானம்.  உபநிஷத்தான் பிரம்ம ஞானத்தை அடைவதற்கு சரியான பிரமாணம்(கருவி).

 

காண்டம்1
ஸர்வம்கலு இதம் ப்ரஹ்ம தத்ஜலான் (சிருஷ்டி, ஸ்திதி, லயம்)
இதி சாந்தஹ உபாஸிதஹ

பிரம்ம தத்துவத்தையும், ஆத்ம தத்துவத்தையும் (ஆதேஷம்) பற்றி குருவிடம் கேட்டாயா? எந்த ஒன்றை அறிந்தால் எல்லாமும் அறிந்துக் கொள்ள முடியுமோ அதை அடைந்தாயா? என்று அருணி, தம் மகன் ஸ்வேதகேதுவிடம் கேட்டார்.
ஒரு விஷயம் புத்தியில் நிலை பெற வேண்டுமென்றால் கீழே கொடுத்துள்ள நான்கு படிகளைத் தாண்டித்தான் வர வேண்டும்.

  1. ஸம்ஸயஹ    – சந்தேகம்
  2. ஸம்பாவனா     – இருக்கலாம்
  3. நிஸ்சயஹ      – சரிதான், நிச்சயமானதுதான்
  4. நிஷ்டா          – சரியென்பதிலே நிலைபெறுதல்

 

இதற்கு உதாரணமாக 4,5,6 ஸ்லோகங்கள்.

காரண-காரிய தத்துவத்தில் காரணத்தையறிந்தால் எல்லா காரியங்களும் அறிந்ததாகும். (விக்ஞாதேன – அறியபட்டால்) காரணமும் காரியமும் வேறாக இல்லாத காரணத்தினால் காரணத்தை அறிவதன் மூலம் எல்லா காரியத்தையும் அறிந்து கொள்ளலாம். காரியமும், காரணமும் வேறல்ல என்பது உண்மையானால் விவகாரத்தில் ஏன் வேறு வேறாக உபயோகிக்கிறோம்?  காரணம் என்கின்ற தத்துவத்தில் ஏதோ ஒரு மாற்றத்தை (விகாரம்) செய்வதால் அதன் விளைவாக அது காரியமாக உருவாகிறது.  (உ-ம்) ஒரு களிமண் துண்டானது விதவிதமான பாத்திரங்களை செய்ய உதவுகிறது.
எனவே காரணம்+விகாரம் = காரியம்.  விகாரத்தின் மூலம் பலவிதமான பெயர்கள் வந்து விட்டது.  இந்த பெயர்கள் (நாமம்) வாக்கிலிருந்து தோன்றுகிறது.  எனவே விகாரமே பெயர் (நாமம்) என்றாகிறது.  அதனால் காரணம் + நாமம் = காரியம்.  காரணத்துடன் சில சொற்கள் இணைவதன் மூலம் காரியங்கள் உண்டாகின்றது.

விகாரஹ = நாமதேயம் – வாக்கிலிருந்து தோன்றிய பெயரே மாற்றமடைகிறது.  வாக்கினுடைய வெளிப்பாடு, வாக்கிலிருந்து உருவாகிய பெயர்தான் மாற்றம் என்றாகிறது, இது காரணத்துடன் சேரும்போது பல காரியங்களாக வெளிப்படுகிறது.

ம்ருதிகா இத ஏவ சத்யம் – களிமண் மட்டும்தான் சத்யம்.  காரியத்துக்குள் காரணமும், நாமதேயமும் (ரூபம்) இருக்கிறது.  இதில் காரணம் சத்யமாக இருக்கிறது.  ஆனால் நாம் விவகாரத்தில் நாம ரூபத்தில் ஸத்யத்தை ஏற்றி வைத்திருக்கிறோம். நாமதேயம் அஸத்யமாக இருக்கிறது.
காண்டம்2– << ஸத்-வித்யா >>
சூத்ர வாக்கியம்:
ஸதே3வ ஸோம்ய இத3ம் அக்3ரஹ ஆஸீத்3 ஏகம் ஏவ அத்விதீயம்
 |

காரியத்தை காரணமாக பார்க்கும்போது அது சத்யம், இதை நாம் நாமரூபமாக பார்க்கும்போது மித்யா. ஜகத்-ஒரு காரியம்- இது ஸத் பிரம்மமாக இருந்தது, இப்பவும் ஸத்தாகத்தான் இருக்கிறது ஆனால் நாமரூபத்துடன் இருக்கிறது.  நாமரூபம் எப்படி வந்தது? எங்கிருந்து வந்தது? அதனுடைய இருப்பு என்ன? நிலையானதா, நிலையற்றதா, வெறும் தோற்றமா?.

எது ஒன்றை சார்ந்து இருக்கிறதோ அது மித்யா. நாமரூபம் வெளித்தோற்றதிற்கு வராத நிலை மாயா.  ஸத் என்பதுடன் நாம ரூபங்களை சேர்த்தவுடன் உலகமாக தெரிகிறது.  களிமண்ணுடன் நாமரூபங்கள் சேர்க்கும்போது பானைகளாக தோற்றமளிக்கிறது. நாமரூபங்கள் வெளியே இருந்து வருவதில்லை. அவைகள் வெளிதோற்றத்திற்கு வராமல் காரணத்துக்குள்ளே இருக்கிறது.

மாயா – அவ்யக்தம் – வெளிதோற்றத்திற்கு வராத நாமரூபம்
வ்யக்த – ஸ்ருஷ்டி – வெளிதோற்றத்திற்கு வந்த நாமரூபம்

  • ஸத்தை மட்டும் பார்க்கும் நிலை – நிர்குண பிரம்மம்
  • ஸத்தையும் வெளிதோற்றத்திற்கு வராத நாமரூபத்தையும் சேர்த்து பார்த்தல் – சகுண பிரம்மம் – மாயா
  • ஸத்தையும் வெளிதோற்றத்திற்கு வந்த நாமரூபத்தையும் சேர்த்து பார்ப்பது – உலகம்

 

ஸவிசேஷம் – நாம் அனுபவிக்கும் விஷயங்கள் அஸ்தி மாத்திரமே

ஸத் மட்டும் உள்ள லட்சணங்கள்

  • நிர்விசேஷம் – குணங்களற்றது
  • ஸர்வகம் – எல்லாவிடத்திலும் வியாபித்திருக்கிறது, எல்லா இடத்திலும் ஊடுருவி இருக்கிறது
  • நிரஞ்சனம் – தூய்மையானது (நாம ரூபம் வெளிவந்தாலும், வெளிவராவிட்டாலும் தூய்மையாகவே இருக்கும்)
  • நிர் அவயவம் – அவயவங்களற்றது, பிளவுகளற்றது, பகுதிகளற்றது.

 

சாஸ்திரம் மூன்று விதமான வேற்றுமைகளை செல்கிறது.

  1.     ஸ்வகதபேதம் – தனக்குள்ளே இருக்கிற வேற்றுமை, மரம் ஒன்றுதான் ஆனால் அதற்குள்ளே விதவிதமான பகுதிகள் இருக்கிறது.
  2.     ஸஜாதீய பேதம் – தன்னுடைய ஜாதிக்குள்ளே வேற்றுமை இருத்தல், மரம் என்ற ஒரே ஜாதி, ஆனால் விதவிதமான மரங்கள் இருத்தல்
  3.     விஜாதீய பேதம் – முற்றிலும் வேறுபட்டது, மரம், விலங்கு, மனிதன்

 

இந்த மூன்று வேற்றுமைகளும் பிரம்மத்தில் கிடையாது. இது ஒன்றாகவே இருப்பதால் முதல் பேதம் கிடையாது, இது தவிர வேறொன்று கிடையாது என்பதால், அதனுடைய வேறு ஜாதி கிடையாது.

அத்விதீயம்   – இரண்டற்றது.
மித்யா        – இல்லாதது ஆனால் இருப்பதுபோல் காட்சியளிக்கிறது.

இல்லாததிலிருந்து இருத்தல் வராது, இல்லாததும் வராது, எனவே இருப்பது போல் தெரிவதெல்லாம் மித்யா. எனவே இவைகளெல்லாம் தோன்றுவதற்குமுன் ஸத்தாகவே இருந்தது, அது ஏகம் ஏவம் அத்விதீயம்.

விக்ஞேயம் – ஞான யோக்யம் – இந்த உலகில் நாம் அறிவதற்கு யோக்யமானது – ஸத் (பிரஹ்மம்), மற்றதெல்லாம் மித்யாதான். அபரா வித்யா என்ற அனைத்தும் அவித்யாதான் என்று  அறிவது (அயதார்த்தம்). புத்தியில் வருகிற அமைதிதான் மோட்சம், மனதில் வருகிற அமைதி சோக நிவிருத்தி.  இந்த பிரதிக்ஞை (ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகும்) காரண, காரிய விசாரத்தின் மூலம் அடையலாம்..
காரண, காரிய விசாரம்:

  • காரணம் என்கிற தன்மை ஒரு வஸ்துவிற்கு கொடுக்கப்படுகிறது.
  • காரியங்கள் தோன்றுகின்றன (ஸ்ருஷ்டி)
  • காரண காரியங்களை ஐக்கியபடுத்துதல் என்ற அறிவை புகட்டுதல்
  • காரியம் என்பது ஒன்றில்லை என்று நிச்சயப்படுத்துதல்
  • காரணமும் கிடையாது

 

ஸ்ருஷ்டி (படைப்பு)
ஸ்ருஷ்டி என்பது மித்யா என்று நிரூபித்தல்.
சகுண பிரம்மனான ஈஸ்வரன், ஸ்ருஷ்டியை ஆரம்பிக்க ஆலோசனை செய்யும்போது மாயா வந்து சேர்ந்து கொள்கிறது.  நான் பலவாக ஆவேனாக, நான் என்னை பலவாக பிறப்பித்துக்கொள்வேனாக என்று ஈஸ்வரன் நினைத்தார்.  ஸத் நிமித்த காரணமாகவும், உபாதான காரணமாகவும் இருக்கிறது.

அது அக்னியாக பிறப்பெடுக்கிறது, அக்னியானது நீராக பிறப்பெடுக்கிறது.

 

காண்டம்3
ஸ்தூல சரீரங்கள் மூன்று வகையாக தோன்றுகிறது.  அவைகள் ஒன்று முட்டையில் இருந்து (பறவை, பாம்பு மற்றும் பல), இரண்டவாது கர்ப்பத்திலிருந்து (மனிதன், விலங்குகள்), மூன்றாவது பூமியிலிருந்து (மரம், செடி, கொடிகள் மற்றும் பல).  இந்த சூட்சும பூதங்களுடன் சித் ஸ்வரூபமாக (அறிவு ஸ்வரூபமாக) இதற்குள் நுழைவேன், பிறகு நாமரூபங்களை தோற்றுவிப்பேனாக என்று ஆலோசனை செய்தது. இவ்வாறாக ஜீவன் பல நாமரூபங்களுடன் தோன்றியது. அவைகளுடன் மூன்று தன்மைகளையும் சேர்த்துகொண்டது. பிறகு ஸ்தூல பூதமாக மாறுகிறது,
.

காண்டம்4
எப்படி ஒரு ஸ்தூல பூதத்துக்குள் மற்ற ஸ்தூல பூதங்கள் சேர்ந்துள்ளன.
அபவாதம்– நீக்குதல் (நாம ரூபங்களை நீக்குதல்)

அத்யாரூப அபவாத நியாயம்- ஒரு வஸ்துவானது பலவாக தோன்ற வேண்டும். (உ-ம்) பருத்தியிலிருந்து நூல், துணி என்ற பலவாக தோற்றமெடுத்துள்ளது.  உண்மையில் எல்லா நாம ரூபத்திலும் இருப்பாக இருப்பது பருத்திதான்.
அபவாதங்கள்

  • பார்க்கின்ற ஸ்தூல விஷயங்கள் அனைத்தும் ஸ்தூல பஞ்ச பூதங்கள் என்று நிச்சயித்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் இருக்கின்ற பஞ்ச சூட்சும பூதங்களையும் நீக்க வேண்டும்
  • பிருத்வியை நீரிலும், நீரை நெருப்பிலும், நெருப்பை காற்றிலும், காற்றை ஆகாசத்திலும் ஒடுக்க வேண்டும்.
  • கடைசியாக ஆகாசத்தை பிரம்மத்தில் ஒடுக்க வேண்டும்.
  • ஸ்தூல அக்னியானது மூன்று சூட்சுமமான பூதங்களுடைய சேர்க்கை என்பதால் அதுவே மித்யா.  ஸ்தூல அக்னியில் உள்ள மூன்று சூட்சுமமான பூதங்கள் மூன்று நிறங்களால் குறிக்கப்படுகிறது
  • சிவப்பு நிறம் – அக்னி; வெண்மை நிறம் – நீருக்கும்; கருமை நிறம் – நிலத்துக்கும்; உவமையாக்கப்படுகிறது.
  • அக்னியில் தோன்றும் மூன்று நிறங்களானது மூன்று சூட்சுமமான பூதங்கள். இவைகளெல்லாம் வெறும் நாம ரூபங்களே அதாவது வெறும் வார்த்தைகள்தான்.  ஆகவே ஸத்யமாக இருப்பது மூன்று சூட்சுமமான பூதங்கள்தான்.
  • எனவே ஸ்தூல அக்னியானது அறிவினால் நீக்கப்படுகிறது.  இவ்விதமாக மற்ற ஸ்தூல பூதங்களையும் நீக்கி விட வேண்டும்.

இந்த மூன்று பூதங்களே திரிவிதகரணம் மூலமாக ஜீவனை அடைந்து ஸ்தூல சரீரத்தை அடைவதைப்பற்றி இனி விளக்கப்படுகிறது.
காண்டம்5 (ஸ்தூல, சூட்சும சரீரத்தைப்பற்றி)

  • மாயையானது மூன்று குண வடிவானது.  இதிலிருந்து ஆகாசம், வாயு, அக்னி, நீர், நிலம் என ஐந்து பூதங்கள் தோன்றியது.  இந்த ஐந்து பூதங்களிலும் மூன்று குணமும் இருக்கிறது.
  • சூட்சுமமான பூதங்களிடமிருந்து சத்துவகுணமான மனம் போன்ற ஞானேந்திரியங்கள், ரஜோ குணமான பிராண தத்துவம், தமோ குணமான ஸ்தூல சரீரங்கள் தோன்றுகின்றன.
  • நாம் உண்ணும் உணவும் மூன்று வகையாக உள்ளது. ஸ்தூலமானவைகள் மலமாக வெளியே போகிறது, இடையில் உடல் தசைகளாகிறது, சூட்சும நிலை மனதுக்கு போகிறது, அதன் போக்கை மாற்றுகிறது. இது பிருத்வி தத்துவத்தை உணர்த்துகிறது.
  • நாம் நீரை அருந்தும் பொழுது அது மூன்று பாகமாக பிரிகின்றது.  அந்த நீரிலிலுள்ள ஸ்தூலமானது சிறுநீராக வெளியேறுகிறது.  மத்தியமாக இருக்கும் பாகமானது ரத்தமாக மாற்றப்படுகிறது.  சூட்சுமமான பாகமானது பிராணனாக மாறுகிறது.
  • நெய், வெண்ணெய், எண்ணெய் – அக்னி வகையறாவாக கூறப்படுகிறது.

ஸ்தூலமான பாகம் – எலும்புக்கு சக்தியாகிறது
இடைப்பகுதியானது – எலும்புக்குள் உள்ளே திரவம், மஜ்ஜையாகிறது
சூட்சும பாகமானது – நாம் பேசும் சக்தியாகிறது.
காண்டம்‍6
தயிரிலுள்ள சூட்சும பாகம், கடையும்போது வெண்ணெயாக வெளிப்படுகிறது. அதேபோல திட உணவு சாப்பிட்ட பிறகு அதை உடலிலிருக்கும் வெப்பமானது வாயுவின் உதவியுடன் ஜீரணித்து அதிலிருக்கும் சூட்சுமமான பகுதியை மனதுக்கு அனுப்புகிறது, இதனால மனமானது சக்தியை பெறுகிறது. அதேமாதிரி குடிக்கும் நீரிலிருந்து சூட்சுமமான பகுதியானது வெளிப்பட்டு பிராணனுக்கு செல்கிறது. சாப்பிடும் உஷ்ணமான பொருட்களிலிருக்கும் சூட்சுமமான பகுதியானது நாம் பேசும் பேச்சாக வெளிப்படுகிறது. அடுத்த பகுதியில் உணவானது எப்படி மனதுக்குள் செல்கிறது என்பதைப் பற்றி விளக்குகிறது.
 

காண்டம்‍7

  1.      மனிதர்கள் பதினாறு வகையான சக்திகளை கொண்டவர்கள். அதாவது மனதுக்கு இந்த சக்திகள் உள்ளன.  அவைகள் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் போன்றவை.  பதினைந்து நாட்களுக்கு உணவும் எதுவும் உட்கொள்ளாமல், வெறும் நீரை மட்டும் அருந்த வேண்டும் என்று தந்தையான குரு மகனுக்கு கட்டளையிட்டார். நீரானது பிராணனுக்கு அத்தியாவசியமானது அது உடலை உயிரோடு வைத்துக்கொண்டிருக்கும்.
  2.      விரதம் முடித்து வந்த ஸ்வேதகேது, நான் தாங்கள் சொல்லியபடி விரதத்தை முடித்து விட்டேன், இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டான். “நீ இப்போது மூன்று வேதங்களையும் சொல்.”என்று குரு கூறினார். அதைக்கேட்டு அதிர்ந்த ஸ்வேதகேது, “என்னிடத்தில் இப்போது சக்தி எதுவும் இல்லை, அதனால் ஒன்றும் சொல்ல முடியாது” என்று பதிலளித்தான்.
  3.      கொழுந்து விட்டு எரியும் தீயில் எது போட்டாலும் பஸ்பமாகி விடும், ஆனால் சிறிய நெருப்பினால் அதைவிட பெரிய பொருட்களை எரிக்க முடியாது.  அதுபோல உன்னுடைய பதினாறு சக்திகளெல்லாம் அடங்கிப் போய் ஒரு சக்திதான் இருக்கிறது, அதை வைத்துக் கொண்டு உன்னால் வேதங்களையெல்லாம் சொல்ல முடியாது
  4. இப்போது சென்று சாப்பிட்டு வா, அப்போது உனக்கு நான் சொன்னதெல்லாம் புரியும் என்று கூறினார். உணவை உண்டு விட்டு வந்து அவர் கேட்ட எல்லா  வேதங்களை சொன்னான்.
  5.      சிறிய நெருப்பை பெரிதாக்கினால், அதில் எதைப்போட்டாலும் எரித்து விடும்.  அதுபோல் உன்னிடமிருந்த ஒரு சக்தியை வைத்து உணவை உண்ட பின் உனக்கு எல்லா சக்திகளும் திரும்ப வந்ததால்தான் உன்னால் வேதங்களை தெளிவாக சொல்ல முடிந்தது.
  6.    இதிலிருந்து அன்னமானது மனம் செயல்படுவதற்கு அவசியமாகிறது என்று நிரூபிக்கப்படுகிறது
  7.    இதிலிருந்து நீரானது பிராணமயம், அக்னியானது வாக்குமயம் என்பதும் அவனுக்கு புரிந்து விட்டது.

 

காண்டம்8(ஆத்ம விசாரம்)
த்ருக்-திருஷ்ய விவேகம், பஞ்சகோச விவேகம், அவஸ்தாத்திரய விவேகம், தேகத்திரியா விவேகம் இவைகளெல்லாம் ஆத்ம விசாரத்திற்கு உதவும்.  ஆழ்ந்த உறக்கத்தின் மூலமாக ஆத்ம தத்துவம் விசாரம் செய்யப்படுகிறது.

  1. ஒரு ஜீவன் ஆழ்ந்து உறங்கும்போது காரண சரீரத்திற்கு சென்றுள்ளான் என்று அறிந்து கொள்ள வேண்டும்.  கனவு உறக்கத்திலிருக்கும்போது சூட்சும சரீரத்திற்கு சென்றுள்ளான். அதாவது ஆழ்ந்த உறக்கத்தில் ஜீவனுக்கு பிரம்ம பிராப்தி கிடைக்கிறது, தன் ஸ்வரூபத்திலே நிலைபெறுகிறான்.  இதிலிருந்து பிரம்மமும், ஜீவனும் ஒன்றே என்று குறிப்பாக உணர்த்தப்படுகிறது.  காரண சரீரத்தை அடைவதை பிரம்மத்தை அடைகிறான் என்று எப்படி சொல்ல முடியும்.  பிரம்மம் சம்சாரமற்றது, ஆழ்ந்த உறக்கத்திலும் சம்சாரம் கிடையாது, எனவே இது பிரம்மத்தை அடைந்ததற்கு ஒப்பாகும்.  உதாரணமாக நிழலில் நிற்கிறேன் என்று கூறினாலும் அவன் நிலத்தில்தான் நிற்கிறான், அதேபோல காரண சரீரத்தை அடைகிறான் என்பது அதனை சார்ந்திருக்கும் பிரம்மத்தைதான் அடைகிறான். ஒரு பொருள் காரணத்தில் இருக்கும்பொழுது அதை இல்லையென்றுதான் சொல்லுவோம். (உ-ம்) களிமண் இருக்கும்போது பானை இல்லை என்கின்றோம்
  2. பறவையை கயிற்றால் நடுக்கடலில் போய்க்கொண்டிருக்கும் கப்பலிலுள்ள ஒரு தூணில் கட்டுகிறோம்.  பறவை பறந்து போக பல தடவை முயற்சி செய்து, பிறகு துவண்டு போய் மீண்டும் கட்டப்பட்ட இடத்திற்கே வந்து அமர்ந்து கொள்ளும்.  அதேபோல ஜீவன் விழிப்பு நிலையிலும், கனவிலும் மனதைக்கொண்டு இன்பமான, துன்பமான அனுபவங்களை தன் விருப்பத்தாலும், அறியாமையினாலும் அடைகிறான். பின்பு எதிலும் அமைதியை அடையாமல் திரும்பவும் பிராணனிடமே வந்து விடுகிறான். எங்கு சென்றாலும் அமைதியை பெற முடியாது, தன்னிடத்திலேயேதான் நிரந்தரமான அமைதியை அடையலாம், அடையமுடியும். ஏனென்றால் அது பிராணனால் கட்டப்பட்டிருக்கிறது.  பிராண பந்தனம் – ஜீவன் பிரம்மத்தை சார்ந்து இருப்பவன்.  ஆஸ்ரயம் – கட்டுபடுதல், ஜீவன் விழிப்பு நிலையில், ஸ்வப்னத்தில் அமைதியற்று இருக்கிறான்.  ஆழ்ந்த உறக்கத்தில் பிரம்மத்தில் ஐக்கியமானவுடன் அமைதியாக இருக்கிறான்.
  3. ஜீவனுடைய ஆத்மா – பிரம்மஸ்வரூபம், அஸனாய – பசி, பிபாஷா – தாகம்; பசிக்கு அன்னம் காரியம், தண்ணீர் காரணம், தாகத்துக்கு தண்ணீர் காரியம், அக்னி காரணம். பசிக்கும்போது நாம் உண்ணும் உணவானது நீர் தத்துவமானது, ஸ்தூலமான உணவை திரவமாக்கி உடலின் பல பகுதிகளுக்கு அனுப்புகிறது. தாகமானது அக்னியான நீரை வாயுவாக்கி விடுவதால் தாகம் மீண்டும் எடுக்கிறது.  எனவே அக்னி காரணம் என்று உறுதிபடுத்துகிறது.
  4. ஸ்தூல சரீரத்திற்கு மூல காரணம் அன்னம்தான், இதைத்தவிர வேறெதுவும் இருக்க முடியாது.  இவ்வாறாக இந்த அனைத்து படைப்புக்களும் ஸத்தை மூலமாக கொண்டுள்ளது. ஸத்மூலாஹ-ஸத் மூலமாக உள்ளது; ஸத்தாயதனஹ– ஸத்தைச் சார்ந்துள்ளது; ஸத் ப்ரிதிஷ்டா-ஸத்தில் லயம் அடைகிறது.
  5. இந்த ஸ்லோகத்தில் நீர் காரியம், தேஜஸ் காரணம்.  ஜீவன் குடிக்கும் நீரை, உஷ்ணமானது எடுத்துக்கொண்து ரத்தம் போன்ற திரவ பொருளாக மாற்றி விடுவதால் அவனுக்கு நீர் குடிக்க வேண்டுமென்ற தாகம் ஏற்படுகிறது.  எனவே அக்னியானது “உதானன்” என்று அழைக்கப்படுகிறது.
  6. உயிர் போகும் நிலையிலுள்ள மனிதனுடைய பேச்சானது மனதில் ஒடுங்குகிறது.  மனமானது பிராணனில் ஒடுங்குகிறது. பிராணன் தேஜஸில் ஒடுங்குகிறது, தேஜஸானது ஸத் பிரம்மத்தோடு ஒடுங்குகிறது.
  7. சூட்சுமமான இவையனைத்தும் ஸத்தையே ஆதாரமாகக் கொண்டுள்ளது. அதுவே உண்மையாகும், அதுவே ஆத்மாவாகும். அதுவே நீயாக இருக்கிறாய். அனிமா: சூட்சுமம் எந்தக்காரணத்தினால் ஸத்தை சூட்சுமம் என்று சொல்லப்படுகிறது.  அதற்கு நான்கு காரணங்கள் உண்டு. அவைகள்
  8. நிர்குணவாத – நிர்குணமாக இருப்பதனால் குணங்கள் குறைய குறைய சூட்சுமாகிக் கொண்டே போகும்.
  9. அவ்யக்தவாத – வெளித்தோற்றத்திற்கு வராததால்
  10. ஆத்மத்வாத், அவிஷயத்வாத் – இந்த ஸத் நானாக இருப்பதால், அல்லது விஷயமாக இல்லாததால்
  11. காரணவாத் – அனைத்திற்கும் காரணமாக இருப்பதால்

ஸத்தில் ஸ்வரூபம் – அனந்தம், இது பெரிதுமில்லை, சிறியதுமில்லை.

 

ஐதாத்மியம்– இதையே சாரமாக கொண்டுள்ளது. அதாவது எல்லா ஸ்ருஷ்டிகளும் ஸத்தையே சாரமாக கொண்டுள்ளது.  உதாரணமாக எல்லா தங்க நகைகளுக்கும் தங்கமே ஆதாரமாக இருப்பதைப்போல.  தங்கம் இல்லாமல் ஆபரணமில்லை, ஆனால் ஆபரணமில்லாமல் தங்கம் மட்டும் இருக்கும். இவ்வாறாக பிரம்மம் சத்யம், மற்றதெல்லாம் மித்யா என்றறியலாம்.

ஸத்யம், இதற்கு இரண்டு லக்ஷணங்கள் உண்டு. ஒன்று அபாத்யம்- நீக்க முடியாதது (ஞானத்தால்), அபாவத் த்ரய சூன்யம்- மூன்று விதமான இல்லாமை அற்றது.  மூன்று காலங்களிலும் இருப்பது – நித்யம் என்று பொருள்.
ஆத்மா என்பது சைதன்ய ஸ்வரூபம்; ஸத் – சித் ஸ்வரூபம், ஸத் சித்தாகத்தான் இருக்க வேண்டும், இல்லையென்றால் அது ஜடமாக இருக்கும்.  எதுவெல்லாம் ஜடமாக இருக்கிறதோ அதுவெல்லாம் த்ருஷயம் (பார்க்கப்படுவது).  எதையாவது சார்ந்திருக்கும், இவையெல்லாம் மித்யாவின் லட்சணமாக இருப்பதால், ஸத் மித்யாவாகி விடும். எனவே ஸத்தானது சித்தாகத்தான் இருந்தாக வேண்டும். இது அறிவு ஸ்வரூபம்சைதன்யம். இந்த சைதன்யத்தை நீக்க முடியாது என்று நிரூபிக்க வேண்டும். சைதன்யம்தான் எல்லா-வற்றையும் நீக்க முடியும், இதை எதனாலும் நீக்க முடியாது.  எனவே ஸத்தை நீக்க முடியாததாக இருப்பதால், இது ஸத்தாக இருக்கிறது.

 

த்வம் – இதுவரை விளக்கப்பட்ட ஸத்துதான் அஹம் என்று புரிந்து கொள்ள வேண்டும். நான் என்று சொல்லும்போது என்ன தோன்றுகிறது? ஏதோ ஒரு அறிவை உணர்த்துகிறது.  என்னுடையது, இருக்கிறது என்பதை பார்க்கிறேன் என்று அறிவினால் நீக்கினால் பின்பு ஸத் மட்டும்தான் இருக்கும் அதுதான் நான் என்று தெளிவடைய வேண்டும். இந்த உடல், மனம், புத்தி எல்லாமே த்ருஷ்யம் (பார்க்கப்படுவது) என்று உணர வேண்டும்.

 

இந்த ஞானத்தின் பலன் ஜீவன் முக்தி அடைதல், அனைத்துவிதமான சம்சார நிவிருத்தி.  மனதிலுள்ள குழப்பங்கள் நீங்கி அமைதியடையலாம்.

பிரயோஜன விசாரம்
நான் ஸத்தாக இருக்கிறேன் என்ற அறிவை அடைவதால் என்ன பயன்?
பிரம்மஞானத்தால் புதியதாக ஒன்றும் அடையப்படுவதில்லை.  ஆனால் ஏதோவொன்று நம்மை விட்டு போய் விடுகிறது. அவை இரண்டாக இருக்கிறது. ஒன்று கர்த்ருத்வம் மற்றொன்று போக்த்ருத்வம்.
வார்த்தைகள்தான் சம்சாரம், ஏனெனில் வெவ்வேறு வகையில் இந்த வார்த்தைகள் நம்மை கட்டுப்படுத்துகின்றன. ஆனால் தத்வமஸி என்ற வார்த்தை இவ்வகையில் கட்டுபடுத்திக் கொண்டிருக்கும் தளைகளிலிருந்து நம்மை விடுவிக்கின்றது.  நான் எந்தப்பொருளோடும் சங்கமற்றவனாக இருக்கிறேன் என்ற அறிவை அடைகிறோம்.  மற்ற வாக்கியங்கள் நம்மை கர்த்தாவாகவோ அல்லது போக்தாவாகவோ ஆக்கிவிடும். நான் பிறரது ஆணைக்கு கட்டுபட்டவன், மாற்றத்திற்கும், அழிவுக்கும் உட்பட்டவன் என்பதிலிருந்து விடுதலை பெற்று விடுவோம்.

பூர்வபக்ஷ விசாரம்

  • அதத்வமஸி – நீ ஸத்தாக இல்லை என்றும் பொருட்கொண்டால், நான் பிரம்மம் இல்லையென்று எனக்குத் தெரிகிறது. அதனால் இது உபதேசமாகாது.  நான் ஏற்கனவே சம்சாரி என்று அறிந்துள்ளேன் அதனால் திரும்பவும் நீ சம்சாரி இல்லையென்று வேதம் சொல்ல வேண்டிய அவசியமில்லை
  • தத் த்வம் அஸி– அதனுடையதாக நீ இருக்கிறாய்.  அந்த ஈஸ்வரனுடைய அங்கமாக நீ இருக்கிறாய் என்று சொல்வதால், அங்கம், அங்கி என்ற பந்தம் வந்து விடுகிறது.  எனவே ஈஸ்வரன் எல்லா சம்சாரிகளையெல்லாம் அங்கமாக வைத்திருக்கிறார் என்றாகி விடும்.

 

சூரியனும், யாகத்தில் உள்ள கம்பும் ஒன்றுதான் என்று உபாஸிக்க வேண்டும். மனதையும், பிரம்மமாக பாவித்து உபாஸிக்க வேண்டும். உபசாரஹ: நீ அங்கமாக இருக்கிறாய், ஏனெனில் இரண்டுக்கும் சமமான குணமாக இருப்பதால் இப்படி சொல்லலாம். அதேபோல ஈஸ்வரனுக்கும், ஜீவனுக்கும் சில சமமான குணங்கள் இருப்பதால் நீ அதுவாக இருக்கிறாய்.  இந்த உபசாரத்தில் பந்த நிவிருத்தம் கிடைக்காது

  • ஸ்துதி வாக்யம் – வேதத்தில் சில இடங்களில் நீ இந்திரனாக இருக்கிறாய் என்று புகழாரம் சூட்டுவது போல் இருக்கிறது இந்த வாக்கியம்

பதில்: இது உபாஸன பிரக்ரணம் அல்ல, இது ஞான பிரக்ரணம். அதாவது நமக்கு தெரியாத அறிவு நான் பிரம்மமாக இருக்கிறேன் என்று தெரியபடுத்துகிறது.

காண்டம்‍9
ஆழ்ந்த உறக்கத்தில் பிரம்மத்தில் ஐக்கியமாதி விடுகிறோம் என்று ஜீவர்களால் எதனால் அறிய முடியவில்லை? அந்த அக்ஞானத்திற்கு என்ன காரணம்?

தேனியானது விதவிதமான மலர்களிலிருந்து தேனைக்கொண்டு வந்து தேன்கூட்டில் சேர்க்கிறது.  அப்படி சேர்ந்துள்ள தேனில் எந்த மலரிலிருந்து கொண்டு வந்த தேன் எந்த பகுதியில் இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியாது.  அதுபோல ஜீவர்கள் பிரம்மத்தோடு சேரும்போது அவர்களது தனித்தன்மையை இழந்து விடுவதால் எங்கிருந்து நான் இங்கு வந்தேன் என்ற அறிவு ஏற்படாது.

அவன் எப்படி திரும்பவும் அதே தனித்தன்மையோடு விழித்தெழுகிறேன் என்றால், அவனுடைய கர்மவசத்தாலும், ஆத்ம அக்ஞானத்தாலும் இது சாத்தியமாகிறது.
காண்டம்‍10
நான் பிரம்மத்திலிருந்து வந்தவுடன், ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழித்தவுடன், ஏன் என்னால் பிரம்மத்திலிருந்து வந்தேன் என்று தெரியவில்லை?

பிரம்மத்தை அடையும்போது நம் தனித்தன்மையை இழந்து விடுவதால், நம்மால் சொல்ல முடியவில்லை. (உ-ம்) நதிகள் கடல்நீரால்தான் மழையாகி உருவாகின்றன். ஆனால் அவைகள் திரும்பவும் கடலிலே கலந்து விட்ட பிறகு அதனதன் தனித் தன்மையை இழந்து விடுகின்றது.

காண்டம்‍11
உயிருள்ள மரத்தை எங்கு வெட்டினால், வெட்டிய இடத்திலிருந்து நீர் வருகின்றது.  ஆனால் வெட்டி காய்ந்து கீழே இருக்கும் கிளையை மீண்டும் வெட்டினால், நீர் வருவதில்லை.  ஜீவனுக்கு இநத சரீரம் அவன் சுகத்தையும், துக்கத்தையும் அனுபவிப்பதற்கும், உலக போதங்களை அனுபவித்து பாவ புண்ணியங்களை தீர்ப்பதற்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது.  ஆனால் நாம் இந்த உடலையே ஜீவனாக பார்க்கிறோம். ஜீவன் இந்த உடலில் இருக்கும்வரை உயிருடன் இருக்கிறது அது வெளியேறியதும் உடல் ஜடமாகி விடுகிறது.

ஜீவன் என்பவன் யார்? மூன்று தத்துவத்தின் சேர்க்கையாக இருப்பவன் ஜீவன். அவைகள் அறிவு ஸ்வரூபம் (ஸத்-சித், சுத்த சைதன்யம்), சூட்சும சரீரம் (மனம்), சிதாபாசம் (மனதில் பிரதிபலிக்கும் ஸத்).  எப்போது ஜீவன் இந்த உடலில் இருக்கிற அபிமானத்தை எடுத்து விடுகிறதோ அப்போது மரணம் சம்பவிக்கின்றது. எனவே உபநிஷத் கூறுகிறது, இந்த சரீரம் உனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது, எனவே இந்த உடல் மரணத்தால் அழிந்தாலும் நீ அழிவதில்லை.  மரமானது வெட்டிய கிளையிலிருந்து அபிமானத்தை எடுத்து விடுவதால் அது காய்ந்து போய் விடுகிறது. எனவே மரத்திலுள்ள காய்ந்த கிளைகளிலிருந்து அதிலிருக்கும் ஜீவன் தன் அபிமானத்தை எடுத்து விடுவதால் அந்த கிளை அந்த நிலையிலிருக்கிறது. முழு மரமும் காய்ந்து போயிருந்தால், ஜீவன் அந்த மரத்திலிருந்தே தன் அபிமானத்தை எடுத்து விட்டிருக்கிறான் என்று புரிந்து கொள்ளலாம். அதுபோல ஜீவன் உடலிலிருந்து முழுவதுமாக தன் அபிமானத்தை எடுத்து விடுவதால் அது மரணமடைகிறது.

காண்டம்‍12
காரணத்திலுள்ள குணங்கள்தான் காரியத்தில் இருக்கும் என்பது விதி, ஆனால் நிஷ்கலம், நிர்குணமாக உள்ள பிரம்மத்திலிருந்து வெளிப்பட்ட பிரபஞ்சம் விதவிதமான குணங்களுடன் இருப்பது ஏன்?  சூட்சுமமான பிரம்மத்திலிருந்து ஸ்தூலமான உலகம் எப்படி வந்தது?

ஆல்மரத்தின் பழத்தை உடைத்து பார்த்தால், அதில் சிறிய சிறிய விதைகள் இருக்கும். அந்த விதையை உடைத்து பார்த்தால் ஒன்றும் தெரியாது.  ஒன்றுமே இல்லாத விதையிலிருந்து எப்படி இவ்வளவு பெரிய ஆலமரம் வந்ததோ, அதுபோல சூட்சுமமான பிரம்மத்திலிருந்து ஸ்தூலமான பிரபஞ்சம் தோன்றியது.  விதையில் இல்லாத குணங்களை மரத்தில் பார்க்கிறோம்.  காரியத்தில் இருக்கும் குணங்கள் காரணத்தில் இருந்தும், வெளித்தோற்றதிற்கு வராமலிருக்கலாம். அதாவது எப்படி ஆலமரம் விதையிலிருந்து வளர்ந்து பெரிய மரமாக வளர்ந்திருக்கிறதோ அதுபோல சூட்சுமமான பிரம்மத்திலிருந்து வெளிவந்த ஸ்தூலமான பிரபஞ்சத்தில் தோன்றும் குணங்கள் வெளித்தோற்றத்திற்கு வராமல் இருந்து இருக்கிறது.  அதைத்தான் மாயை என்று அழைக்கிறோம்.  மாயைக்கும் இந்த உலகத்திற்கும் சம்பந்தம் ஆலமர விதைக்கும், ஆலமரத்திற்குமிடையே உள்ள சம்பந்தம் போன்றதுதான்.  பிரம்மத்திற்கும் பிரபஞ்சத்திற்கும் உள்ள சம்பந்தம் கயிற்றுக்கும் அதில் தோன்றிய பாம்புக்கும் உள்ள சம்பந்தம் போன்றது.  எனவே ஒன்று எதனைச் சார்ந்திருக்கிறதோ அது மித்யா என்று அறியலாம்

காண்டம்‍13
ஒரு பொருள் இருந்தால் அது நமக்கு தெரியவரும்.  ஒரு பொருள் தெரியவில்லை, அதே சமயம் அது இல்லை என்று உறுதி செய்கின்ற மாதிரி ஏதாவது ஒரு பிரமாணம் இருந்தால் அதை உபயோகித்து உறுதி செய்ய வேண்டும். ஒரு பொருள் தெரியவில்லை என்ற ஒரு பிரமாணத்தை வைத்து சொல்லிவிடக்கூடாது, வேறொரு பிரமாணத்தையும் உபயோகித்து முடிவுக்கு வரவேண்டும்.

உதாரணமாக நீரில் கரைக்கும் முன் கண் என்ற பிரமாணத்தின் மூலம் தெரிந்த உப்பானது, அதை நீரில் கரைத்ததும் கண் மூலம் அதன் இருப்பை அறிய முடியாது, அதனால் இந்த அந்த ஒரு பிரமாணத்தை வைத்து உப்பு நீரில் இல்லை என்று முடிவுக்கு வரக்கூடாது, சுவையறியக்கூடிய மற்றொரு பிரமாணமான நாக்கை கொண்டு நீரை சுவைத்துப் பார்த்தால் உப்பின் இருப்பை அறிந்து கொள்ளலாம்.  அதுபோல ஸத்தானது எங்கும் உள்ளது அதை சரியான பிரமாணத்தில் மூலம் உணர்ந்து கொள்ளமுடியும்.  இதை புலன்களால் அறிய முடியாது வேறொரு பிரமாணம் மூலம்தான் அறிந்து கொள்ள முடியும்.
காண்டம்14
ஸத்தை அறிவதற்கு வேதாந்த சாஸ்திரமும், அதை உபதேசிக்கும் குருவுமே சரியான பிரமாணமாகும்.

காந்தார தேசத்திலிருந்து ஒருவனை திருடர்கள் கண்ணைக்கட்டி தூக்கிக்கொண்டு வந்து மரங்கள் அடர்ந்த காட்டில் விட்டுவிட்டார்கள். அவன் கூக்குரலிட்டு உதவிக்கு யாராவது வாருங்கள் என்று அழைத்தான்.  யாரோ வருவது போலிருந்ததால் திருடர்கள் அவனை அப்படியே விட்டுவிட்டு ஓடி விட்டார்கள்.  அவன் போட்ட சத்தத்தைக் கேட்டு வந்த ஒருவர், அவனுடைய கண்ணை கட்டியிருந்த துணியை அவிழ்த்து, அவன் போக வேண்டிய தேசத்தின் வழியையும் கூறினார்.  அவனும் அவர் காட்டிய வழியிலே சென்று தன் நாட்டை அடைந்தான்.
அடர்ந்த காடு                        – சம்சாரம்
திருடன்                             – பாவ, புண்ணியங்கள்
கட்டியிழுத்துவரப்பட்டவன்           – ஜீவாத்மா
கண் கட்டை அவிழ்த்து விடுபவர்     – குரு

காந்தாரம்                           – அவன் சொந்த ஊர் – பிரம்ம ஸ்வரூபம்

ஒரு ஜீவனை பிரம்மத்திலிருந்து பிரித்தெடுத்துக்கொண்டு வந்து இந்த ஸ்தூல சரீரத்திலுள்ளே விட்டு விட்டார்கள்.  ஜீவன் தான் பிரம்மம் என்றுணராமல் தேகம் என்ற அபிமானத்துடன் இருக்கிறான்.  இந்தக் கதையில் கண்ணை துணியால் கட்டியிருப்பது, விவேகமானது மோகத்தால் (அவித்யாவால்) மூடப்பட்டிருப்பதை குறிக்கிறது. மோகம் என்பது எது நமக்கு துன்பத்தைக் கொடுக்கும் விஷயத்தை சுகமானது என்று நினைத்து அதில் ஈடுபட வைக்குமோ அதுதான் மோகம் என்று அறிந்து கொள்ளலாம்.

ஒருவனை சொந்த ஊரிலிருந்து கண்ணைக்கட்டி தூக்கிக்கொண்டு வந்து மரங்கள் அடர்ந்த காட்டில் விட்டுவிடுவது, ஜீவனை மோகத்தால் விவேகத்தை மறைத்து பிரம்மத்திலிருந்து (சொந்த ஸ்வரூபத்திலிருந்து) பிரித்தெடுத்துக்கொண்டு வந்து விடப்பட்டிருப்பது போன்றதாகும். கண் கட்டை அவிழ்த்து விடுபவர் குருவுக்கு ஒப்பிடப்படுகிறது. குருவானவர் மோகத்தை நீக்கி இது ஸத் இது அஸத் என்ற அறிவை கொடுக்கிறார்.  சொந்த ஊருக்கு செல்லும் வழியை கூறுவது சம, தம,  வைராக்கியம் போன்ற தகுதிகளை போதிப்பதற்கு ஒப்பிடலாம்.

பிரவிருத்தி வழி என்பது உள்ளத்திலுள்ள ஆசைகளையெல்லாம் வெறும் அறிவினால் நீக்க முடியாமல் இருக்கும் நிலையில் இருந்தால் அதை தர்ம வழியில் அதை அனுபவித்தால், விரைவில் சித்தமானது தூய்மையடைந்து பிறகு ஞான வழியை பின்பற்றுவான்.

நிவிருத்தி வழி என்பது ஸம, தம, வைராக்யம் போன்ற தகுதிகளை அடைந்து பிறகு ஞான வழியை பின்பற்றுவான்.

கதையில் வந்த மனிதன் இன்னொருவர் காட்டிய வழியிலே சென்று தன் சொந்த ஊரை அடைந்தான். அதேமாதிரி குரு உபதேசத்தைக் கொண்டு நிவிருத்தி மார்க்கத்திலே சென்று ஞானத்தை அடைய வேண்டும்.

அக்ஷம்       – கண்;
அபிநதம்      – கட்டப்பட்ட;
விஸ்ருஜேதி  – விட்டுவிட்டான்
பிரத்மாயீத    – சத்தம் போடுகிறான்;
பண்டிதன்     – உபதேசத்தை பெற்றவன் (சரியான லட்சியத்தை அடையும் பாதையை தெரிந்து கொண்டவன்)
மேதாவி      – உபதேசம் செய்ததை மனதில் பதிய வைத்துக் கொண்டவன்
ஆசார்யவான்- குருவை அடைந்தவன், பிரம்ம ஞானத்தை அடைகிறான்

வேதாந்தம் என்பது அத்யாரோப அபவாதம் என்கின்ற முறையில் ஞானத்தை உபதேசிக்கும்.

அத்யாரோபம் – த்வைதத்தை ஸத்யம் என்ற பாவனையோடு ஏற்றுக் கொள்ளுதல்
அபவாதம்- நீக்குதல்; (எதையெல்லாம் ஸத்யம் என்று ஏற்றுக்கொண்டாரோ, சிஷ்யனுடைய மனதில் ஏராளமான விஷயங்கள் ஒத்துக் கொண்டு விவகாரம் செய்து கொண்டிருப்பது, அதையெல்லாம் ஒவ்வொன்றாக நீக்கி சரியான அறிவை கொடுத்தல்)

ஞானத்தின் பலன்
குருவையடைந்த சிஷயன் அவரது உபதேச்த்தின் மூலமாக பெறும் ஞானத்தின் பலனை அடகிறான். இது ஜீவன் முக்தி, விதேஹ முக்தி என்று இரண்டாக பிரிக்கப்படுகிறது.
விதேஹ முக்தி:      ஸரீரத்திலிருந்து பிரிந்த ஜீவன் மீண்டும் பிறவாத நிலை
ஜீவன் முக்தி:        ஞானம் அடைந்த பின் மீண்டும் பிறவாத நிலை. ஞானம் அடைந்த பின்னர் அவன் எதற்காகவும் காத்துக்கொண்டிருக்க மாட்டான்.  ஆனால் மரணத்திற்காக மட்டும்தான் காத்துக்கொண்டிருப்பான்.  அதுவரை அவன் ஜீவன் முக்தி நிலையிலே இருப்பான்.  அதாவது மரணத்தில் விருப்பமில்லாதவன் அதே சமயம் வாழ்வதிலும், விருப்பமில்லாதவன்.  மனநிறைவுடன் நாட்களை கழித்துக்கொண்டிருப்பான்.  மரணத்திற்கு பின்னர் அவன் பிரம்மத்தில் ஐக்கியமாகிறான்.

காண்டம்‍15
ஞானியின் மரணத்திற்கும், அக்ஞானியின் மரணத்திற்கும் வித்தியாசம் ஒன்றுமில்லை.  ஆனால் ஞானியானவன் மரணத்திற்குப்பின் பிறப்பதில்லை, அக்ஞானி மரணத்திற்குப்பின் அவனது பாவ புண்ணியத்திற்கேற்ப மீண்டும் பிறப்பான்.  மரணப்படுக்கையில் இருப்பவனைச் சுற்றி உறவினர்கள் என்னைத் தெரிகிறதா என்று கேட்பார்கள், அவனும் தெரிகிறது என்பான்.  பேச்சானது மனதில் ஒடுங்கும், மனதானது பிராணனில் ஒடுங்கும், பிராணன் உஷ்ணத்தில் ஒடுங்கும், உஷ்ணமானது பிரம்மத்தில் ஒடுங்கும்.
காண்டம்‍16
அந்தக்காலத்தில் திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டவனிடமிருந்து உண்மையை வரவழைக்க ஒரு சூடான கம்பியை பிடிக்க சொல்லுவார்கள். அவன் உண்மையான திருடனாக இருந்தால் அவன் கையானது கம்பியிலுள்ள சூட்டினால் புண்ணாகி விடும், அவன் நிரபராதியாக இருந்தால், அவனுடைய கைக்கு ஒன்றும் நேராது. அதுபோல பிரம்மத்தை அறிந்தவன் உலகபோகங்களில் கட்டுபடாதவன், துயரத்தை அனுபவிக்காமல் என்றென்றும் அமைதியாக ஆனந்தமாக இருப்பான். ஆனால் அக்ஞானியானவன் இந்த சம்சார பந்தத்தில் சிக்கிக்கொண்டிருப்பான்.  அதனால் இன்ப துன்பத்தை மாறி மாறி அனுபவித்துக் கொண்டிருந்து. பிறகு இறந்ததும் அவன் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்றபடி மீண்டும் பிறப்பெடுப்பான்.
—–0000—–

சாந்தோக்ய உபநிஷத்-அத்தியாயம்-

பூம வித்யா

 

இந்த அத்தியாயத்தில் சொல்லப்படும் கருத்துக்களின் சாரம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

  • சாகா சந்திர நியாயம்: மூன்றாம் பிறையை மரக்கிளையைக் காட்டி பிறகு தெரிய வைக்கும் உத்தி
  • ஆனந்தம்தான் பிரம்மஸ்வரூபம் என்று எடுத்துக்கொண்டு பிரம்மத்தை உணர வைத்தல்
  • பிரம்ம ஞானத்தை அடைய வேண்டுமென்றால் குருவின் உபதேசம் மூலமாகத் தான் முயற்சி செய்ய வேண்டும்.
  • நடுநிலை அதிகாரிகளுக்கு சில பண்புகள் தேவை, அதையும் இந்த அத்தியாயத்தில் விளக்கப்படுகிறது.
  • குருவிடம் எப்படிப்பட்டவனாக செல்ல வேண்டும் என்பதையும் எடுத்துரைக்கிறது

காண்டம்1
பகுதி 1-15     பிரம்ம பிராப்தி ஸோபானம் – பிரம்மத்தை அடைவதற்கு உதவும் பதினைந்து படிகள் கூறப்படுகிறது.
பகுதி 16-22         அதிகாரத்துவ குணங்கள்
பகுதி 23-26         பூம வித்யா பற்றிய விளக்கம்

  1.     நாரதர் சனத்குமார் என்கின்ற குருவை அடைந்து, “பகவானே ஆத்ம ஞானத்தை உபதேசம் செய்யுங்கள்”, என்று வேண்டிக்கேட்டார்.சனத்குமாரரும் அதற்கு இசைந்து, “முதலில் நீ எதையெல்லாம் அறிந்து வைத்திருக்கிறாயென்று எனக்கு சொல், நான் அவையெல்லாம் தவிர்த்து அதற்கு மேலானதையெல்லாம் உபதேசிக்கிறேன்” என்று கூறினார்.
  2.     நாரதர் அவருக்கு தெரிந்ததையெல்லாம் கூறத்தொடங்கினார். எனக்கு நான்கு வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், மொழி இலக்கணம், கணிதசாஸ்திரம், சகுண அறிவு, தர்க்கம், நீதி சாஸ்திரம், வான சாஸ்திரம், சொல் இலக்கணம், வேதத்தை புரிந்து கொள்ளக்கூடிய அங்கங்கள், ஜோதிடம் மற்றும் ஆய கலைகள் அறுபத்திநான்கு ஆகியவைகளெல்லாம் தெரியும் என்று முடித்தார்
  3.     இவைகளெல்லாம் வெறும் வார்த்தைகள்தான் என்று அறிந்திருக்கிறேன். ஆனால் ஆத்ம ஞானத்தை இன்னும் அடையாதவனாக இருக்கிறேன். உங்களைப் போன்ற ஞானிகளின் மூலமாக ஆத்மாவை அறிந்தவன் எல்லா துயரங்களையும் வென்றவன்.  நான் மிகவும் ஆழ்ந்த துயரத்தில் இருக்கிறேன். என்னை இந்த துயரத்திலிருந்து காப்பாற்றுவீர்களாக என்று நாரதர் வேண்டினார்.

 

சனத்குமாரர் கூறத்தொடங்கினார்,”நீ எதையெல்லாம் அறிந்து வைத்து இருக்கிறாயோ அவையெல்லாம் வெறும் வார்த்தைகள்தான், சப்தங்கள்தான்.

 

ஆத்ம ஸ்துதி – இந்த ஞானத்தை அடைய வேண்டும் என்ற உந்துதல் வேண்டும். நம்மிடம் இருக்கின்ற அறிவினால் எல்லா துயரங்களையும் நிரந்தரமாக போக்கி ஆனந்தத்தை தர இயலாது என்று மனதார அறிய வேண்டும். இவ்வாறே நாரதரின் மனநிலை இருந்தது.  குருவிடம் செல்லும் போது நம்மிடையே உள்ள அறிவை எல்லாம் நீக்கி விட்டு செல்ல வேண்டும். ஒருவன் ஒரு பிறவியில் ஒரு விஷயத்தில்தான் நிஷ்டையடைய முடியும்.

 

ஆத்மாவை அறிந்தவன் துயரத்தை அனுபவிப்பதில்லை.  அக்ஞானம்தான் சோகத்திற்கு காரணம், தன்னை அறியாததுதான் அக்ஞானம் என்று கூறப்படுகிறது.  சோகம் என்பது எதிலும் நிறைவின்மை, அடைய வேண்டியது நிறைய இருக்கிறது என்று நினைத்தல்.  ஆத்மாவை அறிந்தவன் இந்த நிறைவின்மையை நீக்கி விடுகிறான்

  1.     நாமத்தை பிரம்மமாக உபாஸனை செய்ய வேண்டும். நாமத்தின் தாத்பர்யம் அது ஒரு சப்தம், அது அர்த்தத்தை கொடுக்கிறது, விவகாரத்திற்குட்பட்டது. விகாரம் என்பது காரியம், காரியம் மித்யா.  நாரதரின் அறிவெல்லாம் வெறும் சப்தமே.
  2.     யார் நாமத்தை பிரம்மமாக உபாஸனை செய்கிறார்களோ அவர்கள் இரண்டு விதமான பலன்களை அடைவார்கள். ஒன்று நிஷ்காம உபாஸனை இது அடுத்த படிக்கு எடுத்துச் செல்லும் அதுதான் முமுக்ஷுத்வம். இரண்டாவது சகாம உபாஸனை – இது யார் பிரம்மத்தை நாமமாக உபாஸனை செய்கிறார்களோ அவர்களுக்கு எந்த அளவுக்கு செய்தார்களோ அந்த அளவுக்கு பலன் கிடைக்கும்.

 

நாரதர் – நாமத்தை விட பெரியதாக ஏதாவது இருக்கிறதா?
குரு   – இருக்கிறது
நாரதர் – அதை எனக்கு உபதேசம் செய்யுங்கள்.
குரு   – செய்கிறேன்

பூ4ய – பெரியது;
ஸத்யம் உத்கிருஷ்  – தத்துவம் மேலானது;
பிரம்மன ஸாமீப்யம் – பிரம்மத்திற்கு அருகில்

 

காண்டம்‍2

  1.      நாமத்தை விட பெரியதாக இருப்பது வாக்கு (பேச்சு).  வாக்கினால்தான் எநத அறிவையும் அடைய முடியும். இதன்மூலம்தான் இன்ப துன்பங்களை அடைய முடியும்.  நாம் அடையும் அறிவானது கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்படுகிறது.
  2. வேத, இதிகாச, புராணங்களிலிருந்து அறிவை அடைதல்
  3. பஞ்ச பூதங்களைப்பற்றிய அறிவை அடைதல்
  4. தேவ, மனித, விலங்குகள், பறவைகள், மரச்செடி, கொடிகள், புழு மற்றும் பூச்சிகள் பற்றிய அறிவை அடைதல்
  5. தர்ம-அதர்மம், உண்மை-பொய், இன்ப-துன்பம் ஆகியவற்றின் அறிவை அடைதல்

வாக்கு இல்லாமலிருந்தால் இவைகளையெல்லாம் நம்மால் அடைந்திருக்க முடியாது.  வாக்குதான் இவையனைத்தையும் பற்றிய அறிவை கொடுக்கிறது. எனவே வாக்கை பிரம்மமாக உபாஸனை செய்வாயாக என்று குரு கூறினார். இதனால் அடைகின்ற சகாம பலனானது எதையும் சாராதிருக்கும் சக்தியை அடைவதாகும்.

 

நாரதர் – வாக்கை விட பெரியதாக ஏதாவது இருக்கிறதா?
குரு   – இருக்கிறது
நாரதர் – அதை எனக்கு உபதேசம் செய்யுங்கள்.
குரு   – செய்கிறேன்

 

காண்டம்‍3

வாக்கை காட்டிலும் மேலானது மனம்தான். இதனுடைய லட்சணம் சங்கல்ப, விகல்பம் உடையது. மனதில் அதை பேசலாம், இதை செய்யலாம் போன்ற விருப்பங்கள் இவைகள் வந்துகொண்டே இருக்கும்.. இவைகள் நான்கு நிலைகளாக இருக்கலாம். அவைகள்,

  • ஆசையாக மட்டும் இருத்தல்
  • சிந்தனையை மட்டும் தூண்டி விட்டுவிட்டு அப்படியே அடங்கி விடுதல்
  • வாக்கிலே வெளிபடுதல்
  • செயலிலே வெளிப்படுதல்

போன்றவைகளாகும்.
நமது உள்ளங்கையில் இரண்டு சிறிய பழங்கள் வைத்திருக்க முடிகிறதென்றால் அந்தளவுக்கு உள்ளங்கையில் இடமானது என்று அறியமுடிகிறது.  அதுபோல மனமானது அதிகமாக வியாபித்திருப்பதால், வாக்கையும், நாமத்தையும் மனமானது அனுபவிக்கிறது.

  • ஒருவன் மந்திரத்தை உச்சரித்துக்கொண்டிருப்பேன் என்று இச்சைக்கொண்டு அதை செய்து கொண்டிருப்பான்.
  • சிலர் அகர்த்தவாகவும், அபோக்தாவாகவும் உள்ள நான் இந்த இச்சா மனதினால் கர்த்தாவாகவும், போக்தாவாகவும் இருந்துகொண்டு இன்ப துன்பங்களை அனுபவிக்கிறேன்.
  • ஒவ்வொருவருடைய மனதில் எந்த உலகத்தை அடைய வேண்டும் என்ற ஆசை உள்ளதோ அதை இந்த இச்சா காரணமாக அடைந்தே தீருவோம். இங்கே இச்சை சாதனம், நாம் எதை அடைந்தோமோ அது சாத்தியமாக இருக்கிறது.
  • நாம் எதை அனுபவித்துக்கொண்டிருக்கிறோமோ அது ஒரு காலத்தில் நம்மால் ஆசைபடப்பட்டதாகும்.

சகாம பலன் எவ்வளவு தீவிரமாக உபாஸிக்கிறோமோ அவ்வளவு தூரம் வியாபிக்க முடியும்.  அதனால் விரும்பியதை அடையலாம்.
நிஷ்காம பலன்  அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும்.

காண்டம்‍4
மனதை விட பெரியது சங்கல்பம். இப்படி செய்யலாம் அல்லது செய்ய வேண்டாம் என்று பார்க்கின்ற சக்தியுடைய மனதிலுள்ள எண்ணம். நல்லது எது கெட்டது எது என்று பிரித்துப்பார்க்கும் சக்தி. இதன் அடிப்படையில்தான் கிரமமாக பிரவிருத்தியில் ஈடுபடுவோம்.  எனவே எது செய்ய வேண்டும் என்று விரும்புகிறோமோ அதை சங்கல்பம் செய்து விட வேண்டும். இதை வைத்துத்தான் மனதானது செயலில் இறங்கும்.

உபசாரம் – கற்பனை செய்து விளக்குதல்

இந்த உலகத்தில் உள்ள பொருட்கள் எல்லாம் நான் இப்படித்தான் இருப்பேன் என்ற சங்கல்பத்தினால்தான் அவைகள் அப்படி தோன்றுகின்றன. மழை நான் இப்படித்தான் நீராக பொழிவேன் என்ற சங்கல்பத்தினால் அது அவ்வாறாக பெய்து கொண்டிருக்கிறது. அதேபோல பஞ்சபூதங்கள் அவைகளது சங்கல்பத்தினால்தான் அந்தந்த குணங்களைப் பெற்று தோற்றமளிக்கிறது.

எல்லோருக்கும் அறிந்தோ, அறியாமலோ அவர்கள் செய்த சங்கல்பத்தினால்தான் அவர்கள் வாழ்க்கை முறை அமைந்திருக்கிறது. எனவே நாம் உயர்ந்த தர்ம வாழ்க்கை வாழ வேண்டுமென்றால் முதலில் சங்கல்பத்தை செய்தாக வேண்டும்.  பிறகு எல்லாமே கிரமமாக நிறைவேற்றப்பட்டு நினைத்த மாதிரி வாழ்க்கை நெறியை அமைத்துக் கொள்ளலாம்.

சகாம பலன் இப்படி சங்கல்பத்தை பிரம்மம் என்று எண்ணி தியானித்தால், நாம் சங்கல்பம் செய்ததை அடைந்தே தீருவோம்.
காண்டம்‍5
சங்கல்பத்தை விட பெரியது சித்தம். சித்தம் என்றால் சரியாக புரிந்து கொள்ளுதல் (Understanding the environments and  things).  நமக்கு துன்பம் வருவது நாம் சரியாக சூழ்நிலையை புரிந்து கொள்ளாததே காரணமாகும்

  1. அந்த நேரத்தில் அமைந்த சூழ்நிலைக்கேற்றவாறு விஷயங்களை புரிந்து கொள்ளுதல்,  சூழ்நிலைக்கேற்றவாறு நடந்து கொள்ளுதல்
  2. அதீதம், அனாகம விஷய பிரயோஜன நிரூபணஹ.. கடந்தது, வரப்போவது இவைகளின் பயனை உணரும் சக்தி.

 

ஒருவன் பலநூல்களைக் கற்று வித்வானாக இருந்தாலும், தாம் கற்றதின் சாராம்சத்தை அறியாதவராகவும், அதை சூழ்நிலைக்கேற்றவாறு மற்றவர்களுக்கு எடுத்துரைக்க இயலாவிட்டால் அவன் கற்றதினால் ஒன்றும் பயனில்லை. ஒருவன் கற்றது சிறியதாக இருந்தாலும் அதை சரியாக புரிந்து கொண்டு மற்றவர்களுக்கு தெளிவாக விளக்கும் திறனிருந்தால் அவனை வித்வானாக ஒப்புக்கொள்ளப்படுகிறது.

சகாம பலன் இப்படி சித்தத்தை பிரம்மமாக தியானித்து கொண்டு இருப்பவர்கள் நிலையான பயமற்ற, சித்தத்தை நன்கு புரிந்து கொண்டும் அப்படியே வாழ்ந்து கொண்டும் இருப்பவர்கள் உலகத்தை அடைவார்கள்.
காண்டம்‍6
சித்தத்தை விட மேலானது தியானம். தியானம் என்பது உற்று நோக்கும் திறன், மனதை ஒருமுகப்படுத்துதல். ஒருவன் சூழ்நிலையை சரியாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால் மனம் அமைதியாக இருக்க வேண்டும். இந்த மன அமைதி தியானத்தினால்தான் கிடைக்கும்.  நம் மனதில் அமைதி இருக்கும்போது பார்க்கும் பொருட்களெல்லாம் அமைதியாக இருப்பது போல் தோற்றமளிக்கும்.
Contemplate means Think intently and at length, as for reflection of certain Duties mentioned in the Scriptures.  This is what is called concentration.  The greatness of contemplation is actually is seen in its results.

பதவி, பொன், பொருளால் புகழுடன் விளங்குபவர்கள் அனுபவிக்கும் இன்பமானது, தியானத்தின் மூலம் அடைகின்ற பலனில் சிறு துளிதான் என்று உபநிஷத் தியானத்தின் பெருமையை உபதேசிக்கிறது.

தியானம் செய்யாதவர்கள் கலகத்தில் ஈடுபடுவார்கள், சண்டை போடுபவர்களாக இருப்பார்கள், மற்றவர்களை குறைக் கூறிக் கொண்டேயிருப்பார்கள். மற்றவர்களிடம் இருக்கும் குறையை அறிவது ஞானம், ஆனால் அதைப் பற்றியே பேசி மகிழ்ந்து கொண்டிருப்பவர்கள், பொய் கூறி ஏமாற்றுபவர்களாக அல்லது மற்றவர்களை துன்பத்தில் ஆழ்த்தி மகிழ்ந்து கொண்டிருப்பவர்களாக இருப்பார்கள்.  எனவே தியானத்தை பிரம்மம் என்று தியானிக்க வேண்டும்.
சகாம பலன் இப்படி தியானிப்பவர்கள் அடையும் பலன், அவர்கள் அறிவும், ஞானமும் உள்ள உலகத்தை அனுபவிப்பார்கள்.  ஞானம் என்பது வேதங்கள் உபதேசிக்கும் தத்துவ ஞானம்.

காண்டம்‍7
தியானத்தை காட்டிலும் மேலானது விக்ஞானம்.
விக்ஞானம்:  தியானம் போன்றவற்றை எப்படி முறையாக செய்ய வேண்டும் என்ற ஞானம். பிறகு அதனால் கிடைக்கும் பலன், கிடைக்காத பலன், எவ்வளவு நாள் செய்ய வேண்டும் என்ற அறிவும் இருக்க வேண்டும்.

எந்த சாதனையை உபயோகிக்க வேண்டுமென்றாலும், முதலில் அதை சரியாக உபயோகிக்கும் முறையைப் பற்றிய அறிவை அடைந்த பின்னர்தான் அதை உபயோகிக்க ஆரம்பிக்க வேண்டும்.
இந்த ஞானத்தை அடைந்தவர்கள் அடையும் பலனானது என்னவென்றால், அறிவும், வேத ஞானமும் உடைய மனிதர்கள் வாழும்  இடத்தில் வசிப்பார்கள்.
காண்டம்‍8
பரிசரன் – சேவை
உபஸத்த – குருவுக்கு பிரியமானவன்

விக்ஞானத்திற்கு மேலானது சக்திதான்.

தேகம்பலத்தோடு இருந்தால்தான் உலக விவகாரங்களில் ஈடுபட முடியும். மனோபலம் நம்மை தீய சக்திகளிடமிருந்து காத்துக்கொள்ள உதவுகிறது. புத்திபலம் சூட்சும விஷயங்களை புரிந்துக்கொள்ள உதவுகிறது. எவையெல்லாம் விக்ஞானத்தை அடைவதற்கு உதவி புரிகின்றதோ அவையெல்லாம் இந்திரியபலம். எல்லா பலத்தையும் உடைய ஒருவன் நூறு அறிவுடையவர்களை பயமுறுத்தும் சக்தியுடையவர்களாக இருப்பான்.  தேகம் பலத்தோடு இருந்தால்தான், குருவைத்தேடி அவரிருக்கும் இடத்தை அடைந்து பணிவிடை செய்ய முடியும்.  குருவுக்கு சேவை செய்வது மூலம் தன்னுடைய பணிவை உணர்த்துவதன் மூலம் அவருடைய பிரியமான சிஷ்யனாகிறான்.

குரு உபதேசிக்கும்போது முழு கவனத்துடன் கேட்க வேண்டும்.  இப்படி கவனத்துடன் கேட்டவற்றை சிந்தித்துப்பார்த்து அதில் நிலைப்பட வேண்டும்.

மந்தா      குருவின் வார்த்தையை மீண்டும் மீண்டும் சிந்தித்தல்
போத்தா    சரியாக புரிந்து கொண்டவனாகிறான், மீண்டும் மீண்டும் சிந்திப்பதால் அறிவை அடைகிறான்.
கர்த்தா     இவ்விதம் அறிந்த அறிவின் மூலம் அதனை செயல்படுத்த தொடங்குவான்.
விக்ஞாதா  செயல் மூலம் பலனை அடைகிறான்.

 

இவையெல்லாம் கிரமமாக செய்வதற்கு சக்தி வேண்டும்.

காண்டம்‍9
உணவே சக்தியைக்காட்டிலும் மேலானது.  இது எல்லாவகையான சக்திக்கும் காரணமாக இருக்கிறது. இது பிருத்வி பூதத்தை குறிப்பாக உணர்த்துகிறது. பத்து நாட்களுக்கு உணவு உண்ணாமல் உயிரோடு இருக்கும் ஒருவனால் பார்க்க முடியாது, கேட்க முடியாது, எதையும் புரிந்துக்கொள்ளும் சக்தியை இழந்திருப்பான்.  ஆனால் உணவை உண்டபின் அவனுக்கு இழந்த சக்தியெல்லாம் திருமப அடைந்தவனாகிறான்.  உணவையே பிரம்மமாக தியானித்து கொண்டு இருப்பவர்கள் நல்ல உணவும், நீர் வகைகள் உள்ள உலகத்தை அடைந்து இன்பமாக இருப்பார்கள்.
காண்டம்‍10
உணவைக் காட்டிலும் மேலானது நீராகும்.

இது நீர் தத்துவத்தை குறிக்கும். மேலும் நீரானது உணவுக் கிடைப்பதற்கு காரணமாகிறது. இது உலகத்திலுள்ள அனைத்துனுடைய தோற்றம் உருவாவதற்கு காரணமாகவும் இருக்கிறது.  இப்படிபட்ட நீரை பிரம்மமாக தியானித்து கொண்டு இருப்பவர்களுக்கு எல்லா விருப்பங்களும் நிறைவேறும்.

காண்டம்‍11
நீரைக் காட்டிலும் மேலானது நெருப்பாகும். இது நீருக்கு காரணமாக இருக்கிறது. இது  வாயுவை சூடாக்குவதால் மக்கள் காற்று மண்டலம் சூடாக இருப்பதாக உணர்ந்து இன்று மழை வரலாம் என்று கூறுவர். மேலும் இடி, மின்னல் உருவாகி மழை வருவதற்கு காரணமாகிறது.  இப்படிப்பட்ட சக்தியை உடைய அக்னியை பிரம்மமாக உபாஸனை செய்தால், அவர்கள் தேஜஸான உடலைப்பெற்று, தேஜஸான உலகத்தை அடைந்து இன்பமாக இருப்பார்கள்.

காண்டம்‍12
அக்னியைக் காட்டிலும் மேலானது ஆகாயம்.  மற்ற நான்கு பூதங்களும் இதிலிருந்துதான் தோன்றியுள்ளது.  சூரியனும், சந்திரனும் ஆகாசத்தில்தான் காட்சியளிக்கிறது. ஆகாசத்தின் இருப்பினால்தான் நாம் பேசுவது பிறரால் கேட்க முடிகிறது. நாம் அனுபவிக்கும் சுக, துக்கங்களுக்கும், உயிரினங்கள் தோன்றி மறைவதற்கும் காரணமாக இருப்பதும் இதுவேதான்.  எனவே ஆகாசத்தை பிரம்மமாக உபாஸிக்க வேண்டும். இதை உபாஸிப்பவர்கள் அடையும் பயனாவது மிகவும் பெரிய இடத்தையும், ஒளியுடன் கூடியதும், எந்த குறைகளும் இல்லாத உலகத்தை அடைந்து இன்பமாக இருப்பார்கள்.

காண்டம்‍13
ஞாபகசக்தி ஆகாசத்தை காட்டிலும் மேலானது.

நம்மைச்சுற்றி நமக்கு நன்கு தெரிந்தவர்கள் இருந்தாலும் நினைவு இல்லையென்றால் அவர்களிடம் உரையாட முடியாது, யாரென்றும் அறியவும் முடியாது, சிந்திக்க முடியாது. ஆனால் ஞாபகசக்தி வந்துவிட்டால் எல்லாமும் நன்றாக தெரியவரும்.

எனவே ஞாபகசக்தியை பிரம்மமாக உபாஸிக்க வேண்டும். இதை உபாஸிப்பவர்கள் அடையும் பயனாவது இது எவ்வளவு தூரம் வியாபித்திருக்கிறதோ அவ்வளவு தூரம் வியாபிக்கும் திறனடைவார்கள்.
காண்டம்‍14
ஆசையானது ஞாபகசக்தியை காட்டிலும் மேலானது. ஆசையின் தூண்டுதலால்தான் எதுவும் நம் நினைவுக்கு வரும்.  பிறகு அதை நிறைவேற்ற செயலில் இறங்குவோம். அதன் பலனை அடைவோம்.  ஆசையினால்தான் எல்லா விருப்பங்களும் நிறைவேறுகின்றது.

எனவே ஆசையைப் பிரம்மமாக உபாஸிக்க வேண்டும். இதை உபாஸிப்பவர்கள் அடையும் பயனாவது இது எவ்வளவு தூரம் வியாபித்திருக்கிறதோ அவ்வளவு தூரம் வியாபிக்கும் திறனடைவார்கள்.

காண்டம்‍15
ஆசையை காட்டிலும் மேலானது பிராணன். ஹிரண்யகர்ப்பன், அனைத்து சூட்சும பூதங்களுக்கு ஆதாரமாக இருக்கிறார். இவரே ஸர்வாத்மாவாக இருக்கிறார். விராட் அனைத்து ஸ்தூல ஆதாரமாக இருக்கிறார். இந்த உலகிலுள்ள ஜீவர்கள் அனைவரும் ஹிரண்யகர்ப்பனாகவே பாவிக்கப்படுகிறது. (உ-ம்) மாதா, பிதா, சகோதரன், போன்றவர்கள் எல்லாமே ஒன்றுதான்.

பெரியவர்களை மரியாதையின்றி பேசுவது அவர்களை கொன்று விடுவதற்கு சமமாக கருதப்படும்.  இப்படிப்பட்டவர்களை சான்றோர்கள் ஒதுக்கி வைப்பார்கள்.  ஆனால் இறந்து விட்ட தாய், தந்தை இவர்களின் உடலை தீயிலிட்டு கொளுத்தினால் யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.  ஏனென்றால் பிராணனானது உடலை விட்டு சென்று விட்டதால் இறந்த உடலுக்கு அந்த மரியாதை கொடுக்காவிட்டால் குறையேதும் இல்லை.
பார்த்தல், பிறகு சிந்தித்தல் அதனால் நிச்சயம் செய்யப்படுவது, அனைத்து அனாத்மா விஷயங்களை தாண்டி பேசுபவன் அதிவாதி என்று அழைக்கப்படுவான்.  யாராவது அதிவாதியைப் பார்த்து, “நீங்கள் உங்கள் நிலையிலிருந்து எங்கள் நிலைக்கு இறங்கி வந்து பேச வேண்டும்”, என்று கேட்டால், நான் இந்த நிலையிலிருந்துதான் பேசுவேன் என்று பதிலளிக்க வேண்டும்.

காண்டம்‍16
முமுக்ஷுத்வம் தீவிரமாகி விட்டால்தான் அது செயலுக்கு வருகிறது. எவ்வளவு கஷ்டம் வந்தாலும் பொறுத்துக்கொள்ளுதல், எவ்வளவு தடைகள் வந்தாலும் முயற்சி செய்து அதை நீக்கி முன்னேறுதல், இதற்காக தியாகங்களை செய்தல் போன்றவை பரபிரம்மத்தை அடைவதில் உள்ள தீவிரத்தை காட்டுகிறது.  யார் பிரம்மத்தை அறிந்து பேசுகிறாரோ அவரை அதிவாதி என்று அழைப்பர்.  பிரம்மத்தை அடைவதுதான் முடிவான இலட்சியமாக கொண்டிருக்க வேண்டும்.

காண்டம்‍17
விஞ்ஞானத்தை அடைய முயற்சி செய்யவேண்டும்.  விஞ்ஞானம் என்பது பிரம்மத்தைப் பற்றிய அறிவாகும். அதை அறிந்தவனால்தான் சத்தியத்தைப்பற்றி பேச முடியும். இதை அடைவது எப்படி? அதற்குரிய சாதனம் என்ன? என்று கேட்டால், விசாரம்தான் ஞானத்தை அடைய உதவும் சாதனம். ஏன் விசாரம் தேவை? எதை, எப்பொழுது விசாரம் செய்ய வேண்டும்?

காண்டம்‍18
விசாரத்தின் தேவை:
நான் சம்சாரியா, அசம்சாரியா என்று சந்தேகம் வந்தால் நம் அனுபவத்தின் அடிப்படையில் அறிந்து கொள்ளலாம்.  வேதம் ஜீவர்களை பூரணமானவர்கள், அழிவற்றவர்கள் என்று உரைக்கிறது.  அதே வேதம் கர்ம காண்டத்தில் சம்சாரி என்ற பாவனையில் சில இடங்களில் போதிக்கிறது. இதைத்தான் விசாரம் செய்தறிய வேண்டும்.  நான் என்னை யார் என்று நினைக்கிறேன்.  நம் அனுபவம் நம்மை சம்சாரி என்று உணர்த்துகிறது. எனவே இரண்டு பிரமாணங்கள் இரண்டு விதமான அர்த்தத்தை கொடுக்கும்போது விசாரம் அவசியமாகிறது.

எதை விசாரம் செய்வது:
வாச்யார்த்த விசாரம்:  வாக்கியத்தின் அர்த்தத்தை விசாரம் செய்தல். எந்த அடிப்படையில் உபதேசம் செய்கிறது என்று வேதாந்த வாக்கியத்தை விசாரம் செய்ய வேண்டும்.  விசாரம் செய்யாமல் ஒருவனுக்கு அறிவு கிடைக்காது.  புத்தியிலுள்ள தமஸானது செய்யவிடாது, புத்திக்கூர்மை விசாரம் செய்ய உதவும்.  ஆனால் அதை செயல்படுத்த மனதானது தமஸாக இருக்கக்கூடாது

காண்டம்‍19
விசாரம் செய்வதற்கு சாதனம் என்ன?
அது சிரத்தை என்கின்ற குணமாகும். சிரத்தையானது வேதாந்த வாக்கியத்திலும், குரு வார்த்தையிலும் நம்பிக்கை வைத்தல்.  இதுதான் பயனை அடைவதற்கு முன் அதைத் தரக்கூடிய செயலை செய்ய வைக்கும்.  ஞானம் வந்தவுடன் சிரத்தையின் அவசியம் முடிந்து விடுகிறது.  எனவே சிரத்தையுடன் இருக்க வேண்டும்.  ஒருவன் வேதாந்த குரு வார்த்தையின் மீது சிரத்தையுடன் இருக்கும்போதுதான் ஞானமடைய விசாரம் செய்து கொண்டிருப்பான்.  சிரத்தையில்லாதவன் விசாரத்தில் ஈடுபடமாட்டான். எனவே சிரத்தைத்தான் நம்மால் அடையப்பட வேண்டும்.

காண்டம்‍20
இந்த சிரத்தையை வளர்த்துக்கொள்ள நிஷ்டா என்ற சாதனம் தேவை. குருவுக்கு செய்யும் சேவையில் சிரத்தை வரும். ஞானத்தை பலனை அடைந்தவரை நாடினால் சிரத்தை தானாக வரும்.  பிரம்ம நிஷ்டை உள்ள குருவையடைய வேண்டும். அவர் ஸ்ரோத்ரனாகவும் இருக்க வேண்டும். அதனால் அப்படிப்பட்ட குருவினுடைய அருகில் செல்ல சேவை (நிஷ்டா) உதவுகிறது. இந்த சேவை மூலம் பணிவு என்ற குணம் வந்து விடுகிறது.  இதனால் விக்ஞானமய கோசத்திலிருந்து விடுபட முடியும்.  எந்தவித பலனும் எதிர்ப்பார்க்காமல், மனம் கோணாமல் தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.  இப்படி செய்யும் போது சிரத்தை வந்து விடுகிறது.  சேவை செய்யாதவர்களுக்கு சிரத்தை வராது.
காண்டம்21
க்ரிதி:- சமஹ(மனக்கட்டுப்பாடு), தமஹ(இந்திரியக்கட்டுப்பாடு)
சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மட்டும் போதாது மனக்கட்டுப்பாடும், இந்திரியக்கட்டுப்பாடும் தேவை.

காண்டம்‍22
ஒருவன் எந்தவிதமான காரியத்தில் ஈடுபட்டாலும், அதில் சுகம் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தினால்தான் ஈடுபடுவான்.  யோகியும் சுகத்தை நாடித்தான் ஒரு காரியத்தில் ஈடுபடுகிறான்.

மனக்கட்டுப்பாடு, இந்திரியக்கட்டுப்பாட்டினால் அடையும் இன்பம் நூறு மடங்கு இருக்கும். எனவே இந்தவகையான இன்பத்தினைத்தான் நாட வேண்டும்.

காண்டம்‍23
பூமா, மஹத் – பரபிரம்மம், நிரதிஷ்யம் – முழுமையானது, பூர்ணம் – நிறைந்தது.

எது பூமாவோ அதுதான் சுகம்.  சுகம் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. ஒன்று ஆபாஸ சுகம், மற்றொன்று சுபாவமாக உள்ளது. (உ-ம்) காபியில் இருக்கும் இனிப்பு ஆபாஸ சுகம், ஆனால் அதில் இருக்கும் சர்க்கரையில் இருக்கும் இனிப்பானது சுபாவமானது, இயற்கையானது.

நாம் அனுபவிக்கும் சுகமானது, அனுபவிக்கும் விஷயத்தினுடைய சுபாவமானதல்ல.  அல்பமான அனைத்து விஷயங்களில் அனுபவிக்கும் சுகத்தை நாம் அடைய விரும்புகிறோம், சுகத்தை பார்க்கிறோம்.  உண்மையில் அந்த சுகமானது திருப்தியைக் கொடுக்காமல் மேலும் அதைவிட மேலான சுகத்தை அடைய வேண்டும் என்ற ஆசையை தூண்டி விடுகிறது. எனவே இதையெல்லாம் தவிர்த்து பூமாவைத்தான் நாட வேண்டும் அதுதான் சுகத்தின் இருப்பிடம். பூமாவை அடைந்தால் நீ சுகத்தை அடைவாய்.  அனாத்மாவில் சுபாவ சுகம் இருக்கிறதென்றால் அதை எல்லோருக்கும் சுக புத்தியை உண்டு செய்யும். ஆனால் உண்மையில் அப்படி இல்லை. எனவே அதில் தெரியும் சுகம் வெறும் தோற்றமாகும். உதாரணமாக சிலருக்கு சுகம் கொடுக்கும் விஷயமே மற்றவருக்கு துக்கத்தைக் கொடுக்கும்.
காண்டம்‍24நான் என்ற சொல்லில் ஆத்மாவும், அனாத்மாவும் சேர்ந்து குறிக்கிறது. இங்கே அனாத்மாவை மட்டும் நீக்கி விட்டால் ஆத்மா தானாகவே புரிந்துவிடும். ஆத்மாவைப் பற்றி அனுபவம் இருக்கிறது ஆனால் அறிவில்லை.

யத்ர – எதனிடத்தில்;
அன்யத் – வேறொன்றை;
ந பஷ்யதி – பார்க்கவில்லையோ; அதுவே பூமாவாகும்.
ஒருவன் அதாவது எதனிடத்தில் ஒன்றை ஒன்றினால் பார்ப்பது இல்லையோ அல்லது வேறொன்றை அறிவதில்லையோ அதுவே பூமாவாகும்.
யத்ர நான்ய பஷ்யதி, நான்ய விஜானாதி,  நான்ய ஸ்னோதி, தத்ர பூமா.

  • நாம ரூபங்கள் நிஷேதம் செய்யப்படுகிறது
  • எல்லா இந்திரியங்களின் விஷயங்களும் நிஷேதம் செய்யப்படுகிறது
  • பூமா என்பது தெரிவதில்லை, உணரப்படவேண்டியது.
  • அறிபவனொருவன் (சிதாபாசன்) இந்திரியங்களை பயன்படுத்தி விஷயங்களை அறிந்துக்கொண்டிருக்கிறான்.
  • சிதாபாசன், அந்தக்கரணம், பிரபஞ்சம் இவையெல்லாம் எதில் ஒடுங்குகிறதோ அதுவே சைதன்யம்
  • பார்ப்பவன் பார்க்கும்பொருள், பார்க்க உதவும் கருவி இவையெல்லாம் நீக்கி விட்டால் பிறகு உணரப்படுவது பரப்பிரம்மம்
  • எது காட்சி மாதிரி தோன்றிக்கொண்டிருக்கிறதோ அதைத்தான் நீக்க முடியும்.

 

பிரம்ம லக்ஷணங்கள்:-

  1.    பிரம்மஸ்வரூபம் – விவகாரத்திற்குள் வருவதில்லை.  நாம் அனுபவிக்கின்ற பிரபஞ்சம்  மித்யா, இதுதான் விவகாரத்திற்கு வருகிறது. இவை ஞான விவகாரம், கர்ம விவகாரம் என இருவகையாக பிரிக்கப்படுகிறது.
  2. நிர்விகல்பம் – பேதமற்றது – பிரம்மத்தில் பேதமற்றது.
  3. விகல்பம் – பேதம்
  4. ஞான விவகாரத்திற்கு தேவையான விகல்பம். அறிபவன்(பிரமாதா), பிரமாணம் (கருவி), பிரமேயம் (அறியப்படும் பொருள்). இந்த மூன்றும் இருந்தால்தான் ஞானம் ஏற்படும்.
  5. கர்ம விவகாரத்திற்கு தேவையான விகல்பம். கர்த்தா, கரணம் கர்ம (பொருள்)

 

காரக பேதங்கள் : கர்ம விவகாரத்தில் இருக்கும் பேதங்கள் நிர்விகல்பம் என்றால் ஞானபேதமும் இல்லாதது, கர்மபேதமும் இல்லாதது

நிர்விகல்ப விசாரம்
ஆழ்ந்த தூக்கத்திலும், மயக்கமடைந்த நிலையிலும் யோகிகளின் சமாதி நிலையிலும் . வேறொன்றையும் பார்ப்பதில்லை அறிவதுமில்லை. இது பிரம்ம லட்சணைக்கு பொருந்தி இருந்தாலும் இது அநித்யமாக இருப்பதாலும், காலவரையறைக்குட்பட்டதாலும் இது பிரம்ம லக்ஷணையில் சேராது.

அவஸ்தை (காலவரையறைக்குட்பட்ட அனுபவம்) என்பது வேறொரு அவஸ்தையால் நீக்கப்படும் ஆனால் ஸ்வரூபம் என்பது நிலையானது, நித்தியமானது இதுவே பூமா என்றழைக்கப்படுகிறது.

சவிகல்ப அவஸ்தை, நிர்விகல்ப அவஸ்தை இந்த இரு அவஸ்தைகளுக்கும் இடையே நிலையாக இருப்பது நிர்விகல்பமாக இருப்பது பூமா என்ற பிரம்மம். இப்படி நிர்விகல்ப ஸ்வரூபமாக இருப்பது நான் என்று உணர்ந்து விட்டால் பிரம்மஞானியாகி விடுவோம்.

சவிகல்ப அவஸ்தை ஒரு லட்சியமில்லை, சாத்தியமுமில்லை சம்சாரத்திலிருந்து தற்காலிகமாக ஓய்வில் இருக்கிற நிலை, திரும்பவும் சம்சாரத்திற்கு வந்து விடும். இது ஒரு சாதனையுமில்லை, சாத்தியமுமில்லை. ஆனால் சவிகல்ப அவஸ்தை நிர்விகல்ப ஸ்வரூபத்தை அடைவதற்கு சாதனையாக கொள்ளலாம்.

சில பொருட்கள் அனுபவத்தில் இருந்தாலும் அறிவில்லையென்றால் அதையறிய முடியாது. உதாரணமாக பத்தாவது மனிதனை தேடும் ஒருவன், தன்னை விட்டு விட்டு மற்ற ஒன்பது பேர்களை எண்ணி, பத்தாவது மனிதன் தொலைந்து விட்டான் என்று கவலைப்படும்போது வேறொருவன் அவனை பார்த்து நீதான் அந்த பத்தாவது மனிதன் என்று கூறியவுடன் அவன் தன்னை உணர்ந்து கொண்டது போல.  ஜாக்ர அவஸ்தையில் இருந்துதான் ஞானத்தை அடைய வேண்டும். இந்த ஞானம் நிர்விகல்ப ஸ்வரூபம் (சாத்தியம்) இதை நிச்சயம் செய்பவர்தான் முமுக்க்ஷு.

கர்ம கர்த்துரு தோஷம்: அறிபவனும் அறியப்படும் பொருளும் எப்போதும் நடக்காது. தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் தெரியும் போதும், அதை அனைத்தப்பிறகு எதுவும் தெரியாத இருந்தாலும் அது அப்படியேதான் இருக்கும். எவன் ஒன்றை பார்க்கிறானோ, கேட்கிறானோ, அறிகிறானோ அது அனாத்மா, மாயை, சவிகல்ப நிலை.
காரணம்-1 பூமாவை அம்ருதம் என்று சொல்வதால் அது நித்யமானது
காரணம்-2  சவிகல்ப அவஸ்தை நிகழ்காலத்தில் அனுபவிப்பது. அதேமாதிரி பூமாவும் இருந்துக்கொண்டிருக்கும். உதாரணமாக, கயிற்றில் பாம்பு பார்ப்பது போல இரண்டும் ஒரே காலத்தில் நிகழ்வது.

வேறொன்றில்லை, பார்க்கவில்லை, கேட்கவில்லை, அறியவில்லை என்ற வார்த்தைகள் அதை மட்டும் பார்க்கிறோம் என்று பொருள் கொள்ளலாம் அதே போல வேறொன்று இருக்கிறது ஆனால் இப்பொழுது அது தெரியவில்லை என்றும் பொருள் கொள்ளலாம். இதிலிருந்து பார்ப்பவன், கேட்பவன் என்ற த்வைதம் தெரிகிறது.

1.        கர்ம கர்த்திரு தோஷத்தின்படி பார்ப்பவனும், பார்க்கப்படும் பொருளும் எப்பொழுதும் ஒன்றாக இருக்காது
2.        அவித்யை அடிப்படையிலே இந்த மாதிரி சொல்லியிருக்கிறது.  பிரம்மத்தில் ஏற்றி வைக்கப்பட்ட விஷயங்களை நீக்குகிறோம்.

அறியாமை இருக்கும்வரை த்வைதம் தெரிந்து கொண்டேயிருக்கும். அக்ஞானம் இருக்கும் வரை இந்த உலகம் தெரிந்து கொண்டேயிருக்கும். ஞானம் வந்தபின் கயிற்றில் தோன்றிய பாம்பு மறைவதைப்போல மறைந்து விடும்.

ஸ்ருஷ்டி – நாமரூப வெளிப்பாடு
பிரளயம் – நாமரூப ஒடுங்குதல்
நிஷேதம் – நாமரூபம் ஒன்றுமில்லை என்று நீக்குவது
விஜானாதி – மனம் கிரகிக்கக்கூடிய விஷயங்கள், அனுபவமாக ஏற்படுதல்

மனதினால் அடையமுடியாது என்றால், ஒரு பொருளாக அடைய முடியாது.  மனதினால் அறிவது என்றால், சவிகல்ப அவஸ்தையை சாதனமாக கொண்டு அறிவது. கனவில் பார்க்கும் விஷயங்கள், பொருட்கள் எல்லாம், அனுபவிக்கும் விஷயங்கள் யாவும் நான்தான். கனவு முடிந்ததும் அவைகள்  மறைந்து விடுகிறது, ஆனால் நான் மட்டும் இருக்கிறேன். இது கானல் நீரை பற்றிய அறிவு வந்ததும், அதைப்பார்த்தாலும் அதை அனுபவிக்கக் கூடியதல்ல என்று உதாசீனபடுத்துகிறோம்.

த்வைதம் நீக்கம் என்பது சம்சாரம் அழிவதைக் குறிக்கிறது, மோட்சத்தை அடைவதை காட்டுகிறது. எது அல்பமோ அது அழிவடையக் கூடியது.  பூமாவோ நித்யமானது.

நாரதர்: அந்த பூமா எதில் இருக்கிறது? எது தாங்கிக்கொண்டிருக்கிறது? எதை சார்ந்திருக்கிறது? அதற்கு எது அதிஷ்டானமாக இருக்கிறது?
சனத்:   இதற்கு ஆதாரம் எதுவும் கிடையாது. அதன் சக்தியிலே அது இருக்கின்றது.
நாரதர்: அது எப்படி ஒரு பொருளுக்கு ஆதாரமாக அதுவாகவே இருக்க முடியும்?
சனத்:   அதற்கு ஆதாரமாக எதுவும் இல்லை.

ஒரு புத்தகம் இருக்கிறது, அதை கிழித்து விட்டால் புத்தகம் போய் விடுகிறது குப்பை என்று அழைக்கப்படுகிறது. அதை எரித்து விட்டால் குப்பை என்ற நாமரூபம் போய் சாம்பல் என்றாகிறது. இங்கு இருத்தல் எல்லா நிலையிலும் இருக்கிறது. எனவே இருத்தல் என்பது சுதந்திரமாக இருக்கிறது எதையும் சார்ந்து இல்லை என்று தெளிவாகிறது.

பூமா என்பது அத்வைதம் என்று நிலைநாட்டப்பட்டது. இனி அதை எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். ஒருவனுடைய புகழும் பெருமையும் பணத்தால் அல்லது இருக்கும் பதவியால் வந்தவையாக இருக்கும். இதிலிருந்து ஒருவன் எதையாவது ஒன்றை சார்ந்துதான் இருக்கிறான்.

காண்டம்‍25 —பரபிரம்ம லக்ஷணம் / பிரயோஜனம்
ஒரு பொருள் பூரணமாக உள்ளது என்று உறுதி செய்ய வேண்டுமென்றால் அதற்கு இணையாக வேறொன்று இருக்கக்கூடாது

பூமாவுக்கு வேறுபட்டதாக இரண்டு தத்துவங்கள் தோன்றிக்கொண்டிருக்கிறது. ஜகத்தும், ஜீவனும் வேறாக (விலக்ஷணம்) இருப்பதாக நினைக்கிறோம். ஜகத்தானது ஜடமாக பூமாவுக்கு வேறாக தோன்றுகிறது. ஜீவன் அறிவு ஸ்வரூபம் இது பூமா போன்றதாக உள்ளது. இது இரண்டும் இல்லையென்று நிரூபிக்க வேண்டும். காரிய காரண தத்துவத்தை பயன்படுத்தி நீக்கப்படும். ஜீவனிடத்திலுள்ள மூன்று சரீரங்கள் ஜகத்துடன் சேர்த்து விட்டு அறிவையும், பிரம்ம ஸ்வரூபத்துடன் ஐக்கியப்படுத்திட வேண்டும்.

ஜகத்தை நிஷேதம் செய்யும் இரண்டாவது உபாயம்
ஒரு சொற்றொடரில் உள்ள எல்லா சொற்களும் பொருளைக் குறிக்கிறது. வாக்யம் எப்பொழுதும் த்வைதத்தை போதிக்கிறது. ஆனால் சில வாக்கியங்கள் ஒரே பொருளை மட்டும் குறிக்கலாம். உதாரணமாக தயாள குணமுள்ள, தசரத புதல்வன், மனித அவதாரம், தர்மத்தை ரக்ஷிக்கும் ராமபிரான். இந்த வாக்கியத்தில் உள்ள எல்லா சொற்களும் ஒரே பொருளான ராமரை மட்டும் குறிக்கிறது. இதற்கு சாமான அதிகரணம் என்று பெயர். எனவே ஒரு வாக்கியம் சாமானதிகரண்யமாக இருப்பதால் அது இருமையைக் குறிக்காது.

1.        ஐக்கிய சாமானாதி கரணம் – ஒரு சொல்லிலுள்ள இரண்டு சொற்களை ஐக்கியப்படுத்தி ஒன்றை சமானப்படுத்துதல், உதாரணமாக தத்துவம்-அஸி, மொட்டையுடன் இப்போது காட்சியளிக்கும் இவர், முன்பு தாடி மீசையுடன் இருந்தார்.
2.        பாதாய சாமானாதி கரணம் – தூணில் தெரிந்த திருடன் என்ற வாக்கியத்தில், திருடன் என்ற சொல்லின் பொருள் நீங்கி தூண் மட்டும் நான் இருக்கிறேன் என்பதைக்காட்டுகிறது.  அதுபோல ஜகத்தானது பிரம்மம்தான், என்ற சொற்றொடரில் ஜகத்தானது நீக்கப்பட்டு பிரம்மத்திடம் மட்டும் பொருள் கொள்கிறது.

அதிகரணம்: ஒரு சொல் எந்தப்பொருளை குறிக்கிறதோ அதற்கு அதிகரணம் என்று பெயர். (உ-ம்) புத்தகம் – இந்தச்சொல் புத்தகத்தை மட்டும் குறிக்கிறது.
சாமானதிகரணம்: ஒரு சொற்றொடரில் உள்ள எல்லாச் சொற்களும் அதற்குரிய அதிகரணத்தை குறிப்பதால் இது இவ்வாறு அழைக்கப்படுகிறது.

ஸ ஏவ இத3ம் ஸர்வம் – ப்3ரஹ்ம ஏவ ஸர்வம் கர்ம:
மரத்தினால் செய்யப்பட்ட யானை பொம்மையில், அதன் உருவத்தை பார்க்கும்போது மரம் மறைந்து விடுகிறது.  மரத்தை பார்க்கும்போது யானை உருவம் மறைந்துவிடும்.  அதேபோல பிரம்மத்தின்மீது ஏற்றி வைக்கப்பட்ட ஜகத்தை நீக்கி பிரம்மத்தை மட்டும் பார்க்க வேண்டும்.  அதுவே இவையனைத்துமாக இருக்கிறது.
அஹம் ஏவ இத3ம் ஸர்வம் – நானே இவையனைத்துமாக இருக்கிறேன் என்று புரிந்து கொள்ள வேண்டும். இங்கே நான் என்பது ஆத்மாவை குறிக்கிறது.
ஆத்மா ஏவ இத3ம் ஸர்வம்– ஆத்மா மட்டும்தான் எங்கும் வியாபித்திருக்கிறது

ஆத்மாவிடமிருந்து வேறுபடாத விஷயம்தான் நான். பார்க்கிறதெல்லாம் நான்தான் “அது” என்பதை “நான்” என்று அழைக்கக் காரணம் அனாத்மாவை ஆத்மாவோடு சேர்த்துப்பார்ப்பதால்தான்.  இங்கு அனாத்மாவை நீக்கி ஆத்மாவை நான்தான் என்று உணர வேண்டும். நான் என்பதை அழித்துவிட வேண்டும் என்று யாரும் விரும்ப மாட்டார்கள். இவ்வாறு பிரம்மமே நான் என்று அறிந்தவுடன் அதன் உண்மை ஸ்வரூபத்தை அடைகிறோம். இதுவே மோட்சத்தை அடைதல் என்று கூறுகிறோம். எந்த ஜீவன் இவ்விதமாக அறிகிறானோ (சிரவணம்), இவ்விதமாக சிந்திக்கின்றானோ (மனனம்), பிறகு அந்தச் சிந்தனையில் நிலைபெற முயற்சி செய்து கொண்டு இருக்கிறானோ(நிதித்யாஸனம்) அவன் இந்த மாதிரியான பலனை அடைகிறான். இதுதான் ஜீவன்முக்தி நிலை. நம் ஆனந்தத்திற்கு வெளியே உள்ள பொருட்களை நாடுதல், நமக்கு நாமே சில நிபந்தனைகளை போட்டுக்கொண்டு அதன் அடிப்படையில் இன்பத்தை நாடுகிறோம், தேடுகிறோம்.

ஆத்ம மிதுனஹ – தன் ஆனந்தத்தை, பற்றை தேடுதல்
ஆத்மானந்தஹ  – ஆனந்தம் தன்னிடத்திலேதான்
ஸ்வராட்        – தனக்குத்தானே ராஜாவாக இருக்கிறான்.

ஜீவன் முக்தன் மீதமுள்ள வாழ்நாள் முழுவதும் இப்படியே இருக்கிறான். உயிர் வாழ்வதற்கு பிறவற்றை சார்ந்திருக்க வேண்டும். அதாவது அன்னம், நீர், வாயு போன்றவற்றின் உதவி தேவைப்படுகிறது. ஆனால், தன்னிடத்தில் ஆனந்தமாக இருப்பதற்கு எதையும் சார்ந்திருக்க தேவையில்லை.  எல்லா உலகத்திலும் தன் விருப்பப்படி வாழலாம். எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லை. உலகத்திலுள்ள எல்லா பொருட்களின் மீது ஆசையில்லாமன் இருக்கிறான்.

அக்ஞானியின் நிலை:
யார் இந்த அறிவை அடையாமல் இருக்கிறார்களோ அவர்கள் மற்றவர்களை சார்ந்திருக்கிறார்கள். இவர்கள் அழியக்கூடிய உலகத்தில் அழியக்கூடிய உடலைப்பெற்று வாழ்வார்கள். இவர்கள் எல்லா உலகத்திலும் மற்றவர்களுக்கு கட்டுப்பட்டு இருப்பார்கள்.  அதாவது ஆசைவசப்பட்டு துன்பத்தில் உழன்று கொண்டிருப்பார்கள்.

காண்டம்‍26
இவ்விதம் படிப்படியாக தாண்டி ஞானத்தையடைந்த ஞானியானவனுக்கு இந்தப்படிகள் எல்லாம் அவன் மீது ஏற்றி வைத்துப்பார்க்கப்பட்டதுதான். எல்லாமே என்னிடமிருந்துதான் தோற்றுவிக்கப்பட்டது. அனைத்து ஸ்ருஷ்டியும், லயமும் என்னிடத்தில் இருந்துதான் வந்தது, ஒடுங்குகிறது.

பார்ப்பவன் பார்ப்பதில்லை – ஆத்மாவை பார்ப்பவன், மரணத்தைப் பார்ப்பதில்லை. நோயை பார்ப்பதில்லை, துயரத்தை பார்ப்பதில்லை. இவன் எல்லாவற்றையும் தானாக பார்ப்பான், எல்லாவிதத்திலும் தன்னையே அடைகிறான்.

மனதுக்கு இந்திரியங்கள் மூலம் நல்ல விஷயங்களை கொடுத்தால் சித்த ஸுத்தி ஏற்பட்டு அடைய வேண்டிய ஞானத்தை அடைவதில் வெற்றியடையலம்.
—-0000—-

சாந்தோக்ய உபநிஷத்-அத்தியாயம்-6–(பிரஜாபதி வித்யா – தகர வித்யா)

காண்டம்‍1

இதயத்துக்குள் உள்ள சிறிய வெற்றிடம் உள்ளது, அதை ஆகாசம் என்று குறிக்கப்படுகிறது (தகராகாசம்) அந்த ஆகாசத்தில் ஈஸ்வரனை உபாஸிக்க வேண்டும். இது இருவகையாக பிரிக்கப்படுகிறது, அவை பேத உபாஸனம், அபேத உபாஸனம். இது உயர்ந்ததாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் இது பிரம்மத்திற்கு அருகே எடுத்துச்செல்கிறது. இதில் ஆலம்பனம் தியானிப்பவன் இடத்தே இருக்கிறது. தன்னையே தியானிக்கிறான். சகுண பிரம்மமாக உபாசிக்கப்படுகிறது. ஞான யோக அதிகாரத்துவத்தை வளர்ப்பதற்கு இந்த தியானமானது உபதேசிக்கப்படுகிறது. இந்த தியானத்தை விடாமுயற்சியுடன் செய்து ஞானயோக அதிகாரத்துவத்தை வளர்க்க வேண்டும். இங்கு ஈஸ்வரனை உபாஸன தேவதையாக உபாஸிக்கப்படுகிறது. ஈஸ்வரனுக்கு எட்டு வகையான குணங்களை கொடுத்து உபாஸிக்க சொல்கிறது. இது அதிகாரத்துவத்தை வளர்த்து விட்டால் இங்கேயே ஞானத்தை அடையலாம், இல்லையென்றால் “கிரமமுக்தி” மூலமாகத்தான் பிரம்மலோகத்திற்கு சென்று பிறகு மோட்சம் அடையலாம்.

 

பிரம்மம் வசிக்கும் சிறிய நகரமான நம் உடலில் உள்ள சிறிய தாமரை போன்ற ஒரு அரண்மனை இருக்கிறது அதுதான் இதயம்.  அதற்குள்ளே சிறிய ஆகாசம் இருக்கிறது. அந்த ஆகாசத்துக்குள்ளே ஒன்றை தேட வேண்டும். அதையையே அறிய வேண்டும், அதை தியானிக்க வேண்டும். அந்த ஆகாசம் ஈஸ்வரனை குறிக்கிறது.  அப்படி எடுத்துக்கொண்டு நம் இதயத்துக்குள் ஆகாசமாக ஈஸ்வரன் இருக்கிறார், அவரை சகுண பிரம்மமாக தியானிக்க வேண்டும்.

 

காண்டம்‍2

இந்த சிறிய இதயத்திற்குள் இருக்கும் சிறிய ஆகாசத்தில் எதை தேட வேண்டும்? அங்கு தேடுவதற்கு என்ன இருக்கிறது? பின்பு எதை தியானிக்க வேண்டும்?

ஆகாசம் என்பது எல்லாவற்றையும் அடக்கிக்கொண்டு இருக்கிறது.  ஆகாசம் பிளவுபடாதது. வெளியே தெரியும் ஆகாசம் எவ்வளவு பெரியதோ அதேபோலத்தான் இதயத்துக்குள் இருக்கிற ஆகாசமும். இதயம் சிறியதாக இருக்கலாம் ஆனால் ஆகாசம் பிளவுப்படாமல் அங்கே இருக்கிறது. சொர்க்கமும் பூமியும் இந்த ஆகாசத்துக்குள் இருக்கிறது. அந்த ஆகாசம் இதயத்துக்குள் இருக்கிறது. எனவே அனைத்தும் என்னுள்ளேதான் இருக்கிறது. மூன்று காலத்திலும் தோன்றி அழியும் அனைத்தும் இதனுள் இருக்கிறது.
உடல் அழிந்து விட்டால், அதனுள் இருக்கும் ஆகாசமும் அழிந்து விடும் அல்லவா?

உடல் அழிவால் ஆகாசத்திற்கு அழிவு கிடையாது. அது ஸத்யமானது, எங்கும் வியாபித்திருக்கிறது, அதுவே ஆத்மா, அதுவே பிரம்மம். உள்ளே இருக்கும் ஈஸ்வரனுக்கு எட்டு வகையான குணங்கள் இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.  அவைகள்

  1. பாவமற்றது
  2. வயதற்றது
  3. மரணமற்றது
  4. துயரமற்றது
  5. பசியற்றது
  6. தாகமற்றது
  7. நிறைவேறுகின்ற ஆசை
  8. நிறைவேறுகின்ற சங்கல்பம்

 

ஆசையானது சங்கல்பத்திலிருந்து உருவாகுவது. நாம் பலவிதமான சங்கல்பங்கள்  செய்வோம். அதாவது இதை செய்ய வேண்டும், அதை செய்ய வேண்டும் என்று நினைப்பதாகும். ஆனால் அதில் ஒரு சிலதான் ஆசையாக மாறி அதை அடைய முயற்சி செய்யப்படுகிறது. ஆனால் ஈஸ்வரனது சங்கல்பம் உடனே நிறைவேறுகிறது.  இப்படிப்பட்ட ஈஸ்வரனைத் தான் இதய ஆகாசத்தில் வைத்து தியானிக்க வேண்டும். இதை புரிந்து விட்டால் ஞானம் அடைந்து விடலாம். இப்படி தியானத்தை செய்யாமலிருந்தால் எல்லாவற்றுக்கும் அடிமையாகி இருக்க வேண்டியதுதான்

இந்த உலகத்தில் நாம் அடையும் அனைத்தும் அழியக்கூடியது, அதுபோல் சொர்க்கலோகமும் நிலையற்றது. அதனால் இங்கேயே முயற்சி செய்து ஞானத்தை அடைந்து விட வேண்டும். இங்கு கர்மத்தினால் அடையப்பட்ட போகங்கள் அழிந்து விடுகிறது, அதுபோல எல்லா விஷயத்திலும் புண்ணியத்தினால் அடைந்த லோகங்களும் அழியக்கூடியவை. இந்த மனித ஜென்மத்தில் ஞானத்தை அடையாமல் இறந்து விட்டால், அவனது பாவ புண்ணியத்திற்கு ஏற்ப சுக துக்கத்தை அனுபவித்துக்கொண்டிருப்பான். அக்ஞானிக்கு ஆசைகளை பூர்த்தி செய்ய முடியாமல் சோகத்தை அனுபவிக்கிறான்.  ஞானிக்கு ஆசை வந்தாலே அது பூர்த்தியாகி விடும்.

யாரொருவர் இங்கேயே ஆத்மாவை அறிந்து கொள்கிறார்களோ அவர்கள் எல்லா உலகத்திலும் முக்தனாகவே இருப்பார்கள். எனவே இந்த மனித ஜென்மத்தை நாம் நன்கு பயன்படுத்திக்கொண்டு ஞானத்தை அடைவதற்கான முயற்சி செய்து அடைந்து விட வேண்டும்.

சங்கல்பம் என்பது ஆழ்மனதில் தோன்றும் ஆசை, அதாவது ஆசையின் விதை.  ஈஸ்வரனுக்கு எழும் சங்கல்பங்கள் யாவும் பூர்த்தியாகிவிடும். இப்படி ஈஸ்வரனை உபாஸித்தால், நமது சங்கல்பமும் நிறைவேறிவிடும். இதற்கு சத்ய சங்கல்பம் என்று பெயர். உதாரணமாக இறந்து போன தந்தையை பார்க்க நினைத்தால் கூட அது நிறைவேறி விடும். எந்தப்பொருளை அனுபவிக்க நினைத்தாலும், அந்த ஆசை நிறைவேறி விடும்.

காண்டம்‍3
ஈஸ்வரனின் சத்ய சங்கல்பத்தைப்பற்றிய விளக்கம்:
நாம் அடைய நினைக்கும் அனைத்தையும் பொய்யான மறைப்பால் மறைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அவை சத்யமாக இருக்கிறது. அந்தப்பொய் திரையை நீக்கினால் சத்ய சங்கல்பம் வந்து விடும். உடலுக்கு வெளியே உள்ள பொருட்களின் மீதுள்ள ஆசை, அதை அடைவதில் தீவிர முயற்சி. இதற்கு மித்யாஞானம்தான் காரணமாக இருக்கிறது. சிறிய ஆசைகளை பெரியதாக்கி அதை அடைவதில் முயற்சி, இவ்விதம்தான் அல்பமான விஷயங்களை நோக்கி இழுக்கப்பட்டு விடுவதால் நம்முள்ளே உள்ள உயர்ந்த விஷயங்களில் நாட்டமின்றி இருக்கிறோம்.

இந்த பகிர்முகத்துவம்தான் பொய்யான திரை. மோட்சத்தை அடைய வேண்டும் என்ற இச்சை வராததற்கு காரணம் வெளிமுகமாயுள்ள மற்ற அல்ப ஆசையினால் மூடப்பட்டிருப்பதால், உள்முகமாயுள்ள சத்ய சங்கல்பத்தை அடைய முடியவில்லை.
அன்ருத அபிதானம் – வெளி விஷயங்களை அடைவதில் ஆசை,

ஈஸ்வரன் ஸ்வரூபம் (பெருமை)
ஹிரண்யநிதி: எல்லா நலனும் வளமும் உடையவர். எல்லாவித ஐஸ்வர்யமும் உடையவர், இப்படிப்பட்டவரை இதய ஆகாசத்துக்குள் வைத்து தியானித்தால் எல்லா ஐஸ்வர்யமும் நம்முள்ளே இருப்பதை உணரலாம். தங்கப்புதையல் புதைக்கப்பட்டிருக்கும் நிலத்தின் மீது வசிப்பவனுடைய அல்லது அதன் மீது சென்று வந்து கொண்டிருப்பவனுடைய புதையலைப் பற்றிய அறியாமையினால், அதை அடையாதவனாக இருக்கிறான்.

ஹ்ருதயம்: (ஹ்ருதி-இதயத்திற்குள் + அயம்-வீற்றிருப்பவன்)
ஈஸ்வரன் எல்லா ஜீவர்களின் இதயத்துக்குள்ளும் இருக்கிறார். இந்த உண்மையை உணர்ந்து உபாஸிப்பவர்கள் ஒவ்வொரு நாளும் அவரை பார்த்துக் கொணடே இருக்கிறார்கள். நிர்குண பிரம்மத்தை அறிந்த ஞானிகள் போல ஈஸ்வரனை உபாஸித்து அந்த நிலையை அடையலாம். இது ஜீவ-பிரம்ம ஐக்கியத்தை விளக்குகிறது.

ப்ராக்ஞன்-சம்பிரஸாதஹ – அறிவினால் பிரம்மத்துடன் ஒன்றானவன், ஐக்கியமானவன்
அஸ்மாத் சரீராத் ஸமுத்தாய –  இந்த உலகத்தின் மீது இருக்கும் அபிமானத்தை விட்டு
பரம் ஜோதிஹி –  ஞான ஸ்வரூபமாக
உபஸம்பத்ய – தன்னை தானாகவே உணர்ந்து
ஸ்வேனரூபேன – தன்னுடைய உண்மையான ஸ்வரூபமாகவே
அபினிஸ்வத்யதே – விளங்குகின்றான் (வெளிப்படுகிறான்)
அஸரீர தயாதிஷ்டதி – உடலற்றவனாக இருக்கின்றான், ஆத்மாவாகவே இருக்கின்றான்.

சத்யம் என்ற சொல்லுக்கு உள்ள அர்த்தங்கள்
சத்யம் – உண்மை பேசுதல்
சத்யம் – எல்லா காலத்திலும் இருப்பது – நிர்குண பிரம்மம்
சத்யம் – ஈஸ்வரனை விளக்குகின்ற சொல்

இந்த ஆத்மாதான் பிரம்மம் என்று கூறினார் குருவானவர். இந்த பிரம்மம் அம்ருதமாக, நித்தியமானதாக இருக்கின்றது. எனவே பயமற்றவனாகிறான் (அபயம்). இப்படிபட்ட பிரம்மத்திற்கு ஸத்யம் என்று கூறப்படுகிறது.

சத்யம் – ச+த்+யம் (அம்ருதம்+அழியக்கூடியது+இந்த இரண்டையும் கட்டுப்படுத்துபவன்) மாயாவாகவும், அழியக்கூடியதாகவும், பிரம்ம ஸ்வரூபமாகவும் இருப்பவர்.

இவ்விதம் ஈஸ்வரனை யார் உபாஸிக்கிறார்களோ அவர்கள் பிரம்மத்தையடைகிறார்கள்.

காண்டம்‍4
அபஹதபாப்மா –  பாமற்றவர்; ஸேது – பாலம், குளம், வரப்பு

ஹிருதயத்தில் உபாஸிக்கும் ஈஸ்வரன் (ஆத்மா என்று இந்த மந்திரத்தில் குறிப்பிடப் பட்டிருக்கிறது) ஸேது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறார். இந்த சொல்லுக்கு நம்மை பாதுகாப்பவர் என்று பொருள் கொள்ள வேண்டும். இந்த உலக மக்களுக்கு தீங்கு நேராமல் இருக்க பாதுகாப்பாக இருக்கிறார். உலகத்திலுள்ள எந்தப்பொருளுக்கும் நம்மை பாதுகாக்கும் தன்மை கிடையாது அது ஈஸ்வரனிடத்தில் மட்டும்தான் இருக்கிறது. இப்படி ஈஸ்வரனை வழிபட வேண்டும்.

இந்த ஈஸ்வரனை எதுவும் நெருங்க முடியாது, அழிக்க முடியாது. காலத்தின் அழிவுக்கும் உட்படமாட்டார், வயதற்றவர், மரணமற்றவர், துயரமற்றவர், பாவபுண்ணியமற்றவர். எல்லா பாவங்களும் ஈஸ்வரனை கண்டு ஓடி விடுகின்றது. ஆகவே இந்த ஈஸ்வரன் பாவத்தினால் தீண்டப்படாதவர். நமக்கு பாதுகாப்பளிப்பவர், என்றும் பாவமற்றவர் என்று தியானிக்க வேண்டும்.

இப்படி ஈஸ்வரனை உபாஸித்து அவனை அடைந்தவர்கள், கண் பார்வையற்றவர்களாக இருந்தாலும், பார்வை பெறுவார்கள், உடலில் எங்கேயாவது காயமடைந்திருந்தவர்களாக இருந்தால், காயமெல்லாம் நீங்கப்பெறுவார்கள். இருளாகிப்போன வாழ்க்கையிலும் ஒளி வீசும். இப்படிப்பட்ட ஈஸ்வரன் என்றும் ஒளி வீசிக்கொண்டிருப்பவர்.

சாதாரணமான மக்கள் இந்த பலனை ஆழ்ந்த உறக்கத்தில் அடைவார்கள். உபாஸகர்கள் இறந்தபின்தான் இந்த பலனை அடைவார்கள்.  ஞானிகள் எல்லா அவஸ்தைகளிலும் இந்த பலனை அடைவார்கள்

இப்படிப்பட்ட ஈஸ்வரனை அடைந்த உபாஸகர்கள் உபயோகித்த சாதனை பிரம்மச்சரியம். இந்த சாதனையை பின்பற்றி வெற்றி அடைந்தவர்கள் பிரம்மலோகத்தை அடைவார்கள். இவர்கள் எல்லா உலகத்திலும் விரும்பும்படி வாழ்க்கை அமைகிறது.

காண்டம்‍5
பிரம்மசர்ய சாதனையின் பெருமை
·         குருவுக்கு சேவை செய்தல்
·         வேதங்களை படித்தல், மனனம் செய்தல்
·         குருகுலத்தில் உணவு பரிமாறுதல்
·         எளிமையான வாழ்க்கை வாழ்தல்
·         சிற்றின்பத்தை துறத்தல்

இறைவனை வழிபடுவதனால் அடையும் பலனை பிரம்மச்சர்ய விரதத்திலேயே அடைந்து விடுகிறான். பிறகு இங்கிருந்து பிரம்மலோகத்திற்கு சென்று கிரமமாக முக்தியாக பிரம்மத்தை அடைகிறான்

யக்ஞம்         – இறைவனை வழிபடுதல்
இஷ்டம்        – பிரம்மசர்யத்திலே அவன் ஆத்மாவை அடைகிறான்
ஸத்ராயண     – ஈஸ்வரனுடைய பாதுகாப்பு கிடைக்கிறது.
மௌனம்       – இதனால் அடையும் பலன்
அநாஸகாயனம் – உபவாசம்
அரண்யாயனம்  – வனத்தில் வாழ்தல்

இந்த ஆறு சாதனங்களின் மூலம் அடையும் பலன்கள் யாவும் பிரம்மச்சர்ய விரதத்திலேயே அடைந்து விடுகிறான்

பிரம்மலோகத்தில் அரா, ந்யா என்ற இரண்டு கடல்கள் உள்ளன, அதில் இருக்கும் நீரை குடித்தால் மயக்கத்தை தரும். அஸ்வத்தா என்ற மரமானது போதை தரும் விஷயங்களை தரக்கூடியது.  யாராலும் வெல்லமுடியாத தங்கத்திலான நகரத்தில் வசிக்கலாம்.

காண்டம்‍6
சாதகன் பிரம்மலோகத்தை அடையும் வழி விளக்கப்படுகிறது.

நமது உடலிலுள்ள நாடிகள் வெள்ளை, நீலம், மஞ்சள், சிவப்பு என பல வர்ணங்களில் இருக்கின்றது. இதேப்போன்று சூரியனின் கதிர்களிலும் இந்த மாதிரி வர்ணங்கள் இருக்கிறது.  சூரியனில் உள்ள ஒளிக்கதிர்கள் சூரியமண்டலத்திலும் இருக்கிறது. உடலிலுள்ள நாடிகளிலும் பரவி இருக்கிறது. ஜீவன் ஆழ்ந்த உறக்கத்தில் இந்த நாடி வழியாக போகிறான். எல்லாவிதமான இந்திரிய விவகாரங்களிலிருந்து விடுபட்டு ஒன்றாகி அமைதியடைவான். கனவும் இல்லை. இந்த நாடிக்குள் செல்லும்போது இவனுக்கு கனவுகள் இல்லை, எந்த பாவமும் ஏற்படுவதில்லை. ஏனென்றால் அப்போது ஈஸ்வரனிடத்தில் ஐக்கியமாகி விடுகிறான்.

இறக்கும் தருவாயில் இருக்கும் ஒருவன் எல்லா சக்தியையும் இழந்திருக்கிறான். அவனைச்சுற்றியிருப்பவர்கள் “என்னை தெரிகிறதா?” என்று கேட்கிறார்கள். இவன் சரீரத்தை விட்டு போகாதவரை அவர்களை அறிகிறான், அவன் நாடிக்குள் சென்று விட்டால் யாரையும் அடையாளம் கண்டு கொள்வதில்லை. உடலில் இருந்து உயிர் பிரியும்போது அந்த உபாஸகன் ஓம் என்று தியானித்துக்கொண்டிருந்தானேயானால் அவனது சூட்சும உடலானது சூரிய கிரணங்கள் வழியே பிரம்மலோகத்தை அடைந்து கிரம முக்தியடைவான்.  அப்படி இல்லையென்றால் அவன் எதை தியானித்துக் கொண்டிருந்தானோ அதற்கு தகுந்த பிறவியையெடுப்பான். இந்த பிரம்மலோகத்தை அடைவதற்காகும் நேரமானது ஒரு எண்ணத்திற்கும் அடுத்து வரும் எண்ணத்திற்கும் இடையே உள்ள நேரமேயாகும். அவ்வளவு விரைவாக சென்றடைந்து விடுவான். இவன் போதும் பாதை சூரியனின் ஒளிக்கதிர்கள், ஆனால் உபாஸனை செய்யாதவர்களுக்கு இந்தப்பாதை மூடியிருக்கும்.

நம் இதயத்திலிருந்து 101 நாடிகள் பிரிந்து செல்கின்றன. அதில் சுசும்னா நாடி தலையை பிளந்து சென்று கொண்டு இருக்கிறது. அதன் வழியாகத்தான் பிரம்மலோகத்தை அடைகிறான். மற்ற நாடிகள் வழியே செல்லும் உயிரானது மறுப்பிறப்பை அடைகிறது. இந்த பூமியிலே மறுஜென்மம் எடுக்கிறது.
காண்டம்‍7 (பிரஜாபதி வித்யா)

  • ஞானி என்பவர் யார்?
  • எதன் மூலமாக இந்த ஞானம் கிடைக்கின்றது?
  • ஞானத்துக்கு பொருளான ஆத்ம தத்துவம் என்றால் என்ன?
  • எப்படி ஆத்மா சரீரமற்றது என்று விளக்கப்படுகிறது?
  • ஆத்மாவை அறிவதன் மூலம் என்ன பலன் கிடைக்கும்?

 

ஸ்லோகம்-1

மூன்றுவிதமான கருத்துக்கள் இந்த ஸ்லோகத்தில் கூறப்பட்டிருக்கிறது.

  1. ஆத்ம ஸ்வரூபம்
  2. ஞானத்தை அடையும் வழி
  3. ஆத்ம ஸ்வரூபத்தினை அறிந்தால் அடையும் பலன்

ஆத்மாவானது தர்ம, அதர்மங்களற்றது. கர்மம்தான் தர்ம-அதர்மங்களை உற்பத்தி செய்கிறது. இங்கே தர்ம-அதர்மம் என்பது பாவ-புண்ணீயத்தை குறிக்கிறது. இந்த பாவ-புண்ணியங்கள் சுக-துக்கத்தை கொடுத்துவிட்டு நீங்குகின்றன. பல ஜென்மங்களில் சேர்த்த பாவ-புண்ணியங்கள் காரண சரீரத்தில் இருக்கிறது. அதனால் ஆத்மாவுக்கு காரண சரீரம் இல்லை அல்லது போக்தாவாக இருப்பதில்லை, சுக துக்கங்களை அனுபவிக்காதது, வயதற்றது, அதாவது ஸ்தூல சரீரமற்றது. உடலுக்கு வரும் ஆறு விகாரங்களும் இல்லாதது.

அபஹதபாப்மா   ஆத்மா காரண சரீரமற்றது
விஜரஹ         ஸ்தூல சரீரமற்றது
விம்ருத்யு        மரணமற்றது, சாசுவதமானது, ஸத் ஸ்வரூபமானது
விஷோகஹ      துயரமற்றது, மனதில்தான் சுக துக்கங்கள் அனுபவிக்கப்படுகிறது. எனவே சூட்சும சரீரமற்றது
விஜிதாத்ய       பசியற்றது, பிராணமய கோசத்தில் நடைபெறுவது
அபிபாக          தாகமுமில்லை.

எனவே ஆத்மா காரண, ஸ்தூல, சூட்சும ஸரீரமற்றது என்று அதன் லட்சணமாக, நிர்குண ஸ்வரூபத்தை குறிக்கிறது.
இந்த ஆத்மாவானது மாயாவின் துணைக்கொண்டு ஈஸ்வரனது குணங்களாக கூறப்படுகிறது. அவை எட்டு குணங்களாக பிரிக்கப்படுகிறது. இது சகுண ஸ்வரூபத்தைக் குறிக்கிறது. இதை அடைய இரண்டு வழிகள் கூறப்பட்டுள்ளன.  அவைகள்

  1.    அன்வேஷனம் – ஞானத்3வார பிராப்தம் இச்சேத் – அறிவின் மூலம் அடைவதற்கு ஆசைப்பட வேண்டும். உபநிஷத் மிகத் தெளிவாக சொல்கிறது, இந்த ஆத்மஞானத்தை கர்மங்களின் மூலமாகவோ, செல்வத்தாலோ, மற்ற எதனாலும் அடையமுடியாது. எனவே இவைகளெல்லாம் சாதனங்கள் அல்ல அறிவின் மூலமாகத்தான் அடைய முடியும். ஆகவே அறிவின் மூலமாகத்தான் அடைய வேண்டும் என்று ஆசைக்கொள்ள வேண்டும். பிறகு சரியான குருவின் துணைக் கொண்டு உபநிஷத் மூலமாக ஞானத்தை அடைய வேண்டும்.

 

  1.    விஜிக்ஞாஸிதவ்ய– தனி ஸ்வரூபமாக்க வேண்டும். அதாவது ஞான நிஷ்டையை அடைய வேண்டும். சிஷ்ய பிரயத்தனம் – தன் உதவியையே நாட வேண்டும். இதனால் அடையும் பலன்கள் இரண்டு, ஒன்று அனைத்து உலகங்களிலும், தானே முழுவதுமாக வியாபித்து மனநிறைவை அடைகிறான்., இரண்டாவதாக எல்லா ஆசைகளையும் பூர்த்தி செய்து கொள்கிறான், எல்லா ஆசைகளும் அவனை விட்டு விலகுகின்றன பிறகு மனநிறைவை அடைகிறான்.

ஸ்லோகம்-2
வித்யா க்ரகணம், வித்யா சம்பிரதானம், விநிபிரதஷனார்தம், பிரஜாபதியின் இந்த வார்த்தைகள் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் எட்டியது. ஞானத்தின் பலனாக எல்லா உலகங்களையும் அடையலாம், ஆசைகளெல்லாம் நிறைவேறும் என்ற பேராசையால் தேவர்களின் தலைவன் இந்திரனும், அசுரர்களின் தலைவனான விரோசனனும் தஙளுடைய பொறுப்பை மற்றவர்களிடம் ஒப்படைத்துவிட்டு இந்த ஞானத்தை அடைய பிரஜாபதியிடம் சென்று அடைந்தார்கள்.

இவர்கள் இந்த அறிவை அடைய மிகப்பணிவுடன் குருவிடம் சென்றார்கள். இதன் மூலம் பணிவும், அறிவும் மற்ற செல்வங்களை விட உயர்ந்தது என்று உணர்த்தப்படுகிறது. இந்த ராஜாக்களும் மூன்று உலகங்களை ஆள்கின்ற மிகப்பெரிய பதவியும், செல்வாக்கையும், சுகபோக வாழ்க்கையையும் விட்டுவிட்டு குருவுக்கு சேவை செய்து அறிவை பெற வந்திருக்கிறார்கள். இவர்கள் இங்கு வருவதை ஒருத்தருக்கொருவர் தெரிவிக்காமலே வந்தடைந்து இருக்கின்றனர். இதற்கு இவர்களிடையே உள்ள பொறாமை குணத்தையே காட்டுகிறது. இருவரும் சமித் கட்டைகளுடன் பிரஜாபதியின் முன் நின்றார்கள்.

இவர்கள் வந்த நோக்கத்தை கேட்டறிந்த குருவானவர் அவர்களை 32 வருடங்கள் இந்த குருகுலத்தில் பிரம்மசாரியாக இருங்கள் என்று பணித்தார். பிறகு 32 வருடங்கள் கழிந்த பின்னர் அவர்களிடம், “நீங்கள் எதை அறிவதற்காக என்னிடம் வந்தீர்கள்?” என்று கேட்டார். அவர்களும் தாங்கள் கூறிய ஆத்ம தத்துவத்தை அறிய விரும்புகிறோம் என்று பதிலளித்தனர்.

பிரஜாபதி அவர்களுக்கு ஆத்ம தத்துவ உபதேசத்தை கூற ஆரம்பித்தார். கண்ணிலிருந்து ஒருவன் பார்த்துக்கொண்டிருக்கிறான் அவனை யாரொருவன் பார்க்கின்றானோ அதுதான் ஆத்மா, அழிவற்றது, பயமற்றது. அதை அறிந்தவன் எல்லாவற்றையும் அறிந்தவனாவான்

கண், காது போன்ற புலன்கள் அனைத்தும் ஜடம், அவைகளுக்குள்ளே ஆத்மாவானது அறிவு ஸ்வரூபமாக இருந்து கொண்டு பார்க்கிறது, கேட்கிறது. இந்த சிதாபாசம் முதலில் அறிய வேண்டும். பிறகு இதையும் நீக்கி அதற்கு ஆதாரமாக இருக்கும் பிரம்மத்தை அறிய வேண்டும்.

கண்ணில் தெரியும் உருவமே ஆத்மா என்ற அறிவுடன் இருவரும் ஒருத்தரையொருத்தர் கண்களில் தெரிந்த தங்கள் உருவத்தை பார்த்து இந்த ஸ்தூல சரீரமே ஆத்மா என்று புரிந்துக் கொண்டார்கள். அதையே குருவிடம் கூறி இது சரியா என்று கேட்டார்கள். தெளிவான நீரில் நாம் பார்த்தால் அது காட்டும் உருவமும், நிலை கண்ணாடியின் முன் நின்று பார்த்தால் அது காட்டும் உருவமும் தன்னையேதான் எனவே இந்த ஸ்தூல உடலே ஆத்மாவா என்று கேட்டார்கள்.

குருவும் அதை ஆமோதித்தார், ’ஆமாம் அதைத்தான் உபதேசித்தேன், எந்தெந்தப் பொருட்களிலெல்லாம் உன் உருவத்தின் பிரதிபிம்பத்தை பார்க்கிறீர்களோ அதுதான் ஆத்மா என்று கூறினார். இவ்வாறு சிஷ்யர்களின் தவறான கருத்தை கொண்டிருந்தாலும் அதை அனுமதிக்கிறார்.

சங்கராச்சாரியார் இந்த இடத்தில் ஒரு கேள்வியை எழுப்பி அதற்கு பதிலும் கூறுகிறார்.
கேள்வி: குருவானவர் எப்படி தவறான அறிவை சரியென்று கூறி சிஷ்யர்களை அனுப்பலாம்?
பதில்: பொதுவாக யாருமே தான் கொண்ட கருத்துக்கு மறுப்பு சொல்வோர் மீது வெறுப்பு அடைவார்கள். மீண்டும் சந்தேகம் வரும்போது அவர்களிடம் செல்லமாட்டார்கள். அதுவும் அந்த இருவரும் நன்கு கற்றுத்தேர்ந்த அறிவாளிகள். இவர்களிடம், நீங்கள் நினைத்தது தவறு என்று கூறினால் குருவின் மீது வெறுப்படைந்து சென்று விடுவார்கள் திரும்பவும் வரமாட்டார்கள். எனவே அவர்களை இழக்க விரும்பாத பிரஜாபதி முதலில் அவர்கள் சொன்ன கருத்தை சரியென்று கூறிவிட்டார்.  பின்னால் இவர்கள் இதைப்பற்றி மேலும் சிந்தித்து தவறை உணர்ந்து தம்மிடம் வருவார்கள் என்ற எண்ணத்துடன்தான் தப்பான கருத்தை சரியென்று கூறி அனுப்பி விட்டார்.
காண்டம்‍8
தவறாக ஆத்மாவை புரிந்துக் கொண்டிருக்கிற சிஷ்யர்களுக்கு அவர்களாகவே தங்கள் தவறை உணரச்செய்ய வேண்டும் என்று ஆதங்கத்துடன் குருவானவர், அவர்கள் இருவரையும் அழைத்து நீர் நிரப்பப்பட்ட ஒரு பெரிய பாத்திரத்தில் அவர்களை திரும்பவும் பார்க்கச் சொன்னார். பிறகு அப்படி பார்க்கும்போது எது புரியவில்லையோ அதை தம்மிடம் வந்து கேளுங்கள் என்று கூறினார். இருவரும் பார்த்துவிட்டு வந்து, “நாங்கள் எங்களையே பார்க்கிறோம், எங்களுடைய முடியும் நகங்களும்கூட தெளிவாக தெரிகிறது என்று கூறினர். குரு திரும்பவும், “உங்கள் உருவத்தை நீரில் பார்க்கும்போது உங்களுக்கு ஏதாவது புரியாமல் இருக்கிறது என்று தோன்றுகிறதா? என்று வினவினார். இருவரும் தாங்கள் எடுத்த முடிவில் உறுதியாக நின்று, எதுவும் எங்களுக்கு புரியாமல் இல்லை, எங்கள் பிரதிபிம்பம்தான் ஆத்மா என்று நாங்கள் உறுதியாக நினைக்கிறோம், எனவே தேடி வந்த ஞானம் கிடைத்து விட்டது என்ற திருப்தியுடன் இருந்து விட்டார்கள்.

குருவானவர், இன்னொரு குறிப்புக் கொடுத்து அவர்களின் தவறான முடிவை உணர வைக்க முயன்றார். அவர்களிடம், “நீங்கள் உங்களை நன்றாக உடை அலங்காரம் செய்து கொள்ளுங்கள், தலைமுடி, நகங்களை வெட்டி அழகு படுத்திக்கொள்ளுங்கள். பிறகு திரும்பவும் உங்களை அந்த நீரில் சென்று பாருங்கள். அவர்களும் தங்களை நன்கு அழகுப்படுத்திக்கொண்டு நீரில் சென்று பார்த்தார்கள். இப்பொழுது என்ன பார்க்கிறீர்கள் என்று குரு கேட்டார். குரு அதன் மூலம் என்ன உணர்த்த நினைத்தார் என்றால், அலங்காரம் செய்வதற்குமுன் தெரியாத ஆபரணங்கள் இப்பொழுது தெரியவரும், அதனால் இந்த ஆபரணங்களை உடலில் போடும்போது இதன் உருவமும் நீரில் பிரதிபிம்பமாக தெரிகிறது அதனால் இந்த உடம்புதான் நீரில் பிரதிபிம்பமாக தெரிகிறது, முடியும், நகமும் நீக்கியப்பின்னர் அவைகள் தெரியவில்லை. எப்படி நகமும், முடியும் அழியக்கூடியவை, மாற்றதிற்குட்பட்டவையாக இருக்கிறதோ அதேப்போன்று இந்த உடலும் மாறுதலுக்குட்பட்டவை அழிவை அடையக்கூடியவை, ஆனால் ஆத்மா நித்தியமானது என்று குரு கூறியிருப்பதை வைத்து நீரில் தெரியும் தங்கள் உருவம் ஆத்மா அல்ல என்று உணரவேண்டும் என்று குரு நினைத்தார். இப்பொழுது என்ன பார்க்கிறீர்கள் என்று கேட்டார்.

இருவரும் முன்பு சொன்னபடியே, நாங்கள் எப்படி இருக்கிறோமோ அப்படியேதான் நீரில் தெரியும் எங்களது உருவமும் இருக்கிறது என்று கூறினார்கள். அவர்கள் கொண்டிருந்த ஆத்மாவைப்பற்றிய தவறான அறிவிலேதான் இருக்கிறார்கள், புதியதாக கொடுக்கப்பட்ட குறிப்பினாலும் தங்கள் தவற்றை உணர்ந்து கொள்ளாமல ஆத்மாவை அறிந்துவிட்டோம் என்ற திருப்தியான மனதுடன் குருவிடம் விடைப்பெற்று சென்று விட்டார்கள். இனியும் குறிப்பு கொடுத்து அவர்களை கஷடப்படுத்த விரும்பாத பிரஜாபதி, அவர்கள தானாக தங்களது தவறை உணர்ந்தால்தான் அவர்களால் முழுமனதுடன் கவனிக்க முடியும் என்று எண்ணி அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பினார். ஆத்மாவின் முதல் லட்சணத்தையே வைத்துக்கொண்டு முடிவுக்கு வந்து விட்டார்கள், மற்ற லட்சணங்களான நித்யமானது, பயமற்றது போன்றவற்றை சோதிக்காமல் விட்டு விட்டார்கள் என்று எண்ணினார்.

அனுபலப்4யா – சரியாக புரிந்து கொள்ளாமல்
ப்ரோவாசா   – உபதேசம் செய்தல்
பரிசர்ய       – காக்கப்படவேண்டும்

இப்படி தவறாக ஆத்மாவைப் பற்றி புரிந்து கொண்டு செல்கின்ற இருவரையும் பார்த்து, அவர்களில் காதுகளில் விழும்படி, “ஆத்மாவைப்பற்றி தவறாக புரிந்து கொண்டும், நான் கூறிய ஆத்மாவின் எல்லா லட்சணங்களையும் சோதிக்காமல், சரியாக புரிந்து கொள்ளாமல் இருவரும் செல்கின்றனர். இவ்வாறு தவறாக யார் புரிந்து கொண்டாலும் அவர்கள் ஆத்மாவின் ஸ்வரூபத்தை அறிந்து கொள்ளும் பாதையிலிருந்து விலகிச் செல்கிறார்கள் என்று கூறினார். அதை லட்சியம் செய்யாமல் இவர்கள் தங்கள் இருப்பிடத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தார்கள்.

விரோசனன் தன் இருப்பிடத்தை அடைந்தவுடனே எல்லோருக்கும் தான் புரிந்து கொண்ட தவறான ஆத்ம தத்துவத்தை உபதேசம் செய்யத் தொடங்கினான். அதாவது ஸரீரம்தான் ஆத்மா, அதைத்தான் வழிபட வேண்டும், நன்கு கவனிக்கப்பட வேண்டும், அதைத்தான் வணங்க வேண்டும். இப்படி செய்வதால் நாம் எல்லா உலகங்களையும் அடைந்து விடுவோம், எல்லா ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று உபதேசித்தான்.

இப்பொழுதும் விரோசனனின் இந்த உபதேசத்தை பின்பற்றுவர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் தான தர்மங்களை செய்ய மாட்டார்கள், நல்ல காரியங்களை செய்ய மாட்டார்கள், இறை வழிபாடு செய்ய மாட்டார்கள், எதையும் தியாகம் செய்ய மாட்டார்கள், இவர்களை அசுரர்கள் என்று சொல்லலாம் அல்லது அந்த பரம்பரையில் வந்தவர்கள் என்றும் சொல்லலாம். இந்த அசுரர்கள் பிணமாகப் போகும் இந்த உடலை நன்கு அலங்கரித்துக் கொள்வார்கள், நறுமணம் பூசி, ஆபரணங்கள் அணிந்துகொண்டு சுவையான உணவுப் பண்டங்களை உண்டு நன்கு பராமரித்து, அழகான ஆடைகளை அணிவித்து மகிழ்வார்கள். இப்படி செய்வதால் எல்லா உலகங்களையும் அடைந்து விடலாம் என்று எண்ணுவார்கள்.

காண்டம்‍9
ஆனால் தேவர்களின் தலைவன் இந்திரன் தன் இருப்பிடத்தை அடைவதற்கு முன்னே குருவின் உபதேசத்தை தீவிரமாக சிந்தித்து பார்க்கலானான். இயற்கையிலே அவனிடத்தில் உள்ள தெய்வீக குணங்களால் அவன் மனம் இவ்வாறு சிந்தித்தது. அவன் தீர்மானித்த ஆத்ம தத்துவத்தில் அதாவது இந்த உடல்தான் ஆத்மா என்று புரிந்து கொண்டதில் ஏதோ குறை இருப்பதாக உணர்ந்தான்.  நீரில் தெரிந்த தன் உருவத்தைப்பற்றி விசாரம் செய்ய சொன்ன குருவின் உபதேசன் அவனுக்கு கொஞ்ச கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது. எப்படி நீரில் தெரிந்த தன் உருவம், தன் ஸரீரத்தை எப்படியெல்லாமோ மாற்றுகிறோமோ அப்படியே காட்சியளிக்கிறது. ஒரு கண் போனாலும் அல்லது கால் போனாலும் அதிலும் அப்படியே காட்சியளிக்கிறது, இந்த உடலே அழிந்து போனாலும் அந்த உருவமும் அழிந்துதான் போகும் என்று குழம்பிப்போனான். எனவே தான் கொண்ட முடிவில் ஏதோ குறை இருக்கிறது என்ற முடிவுக்கு வந்தான். ஸ்தூல ஸரீரமே ஆத்மா என்ற விஷயத்தில் குறையைக் கண்டான்.

குண ஆதானம்     – நற்குணத்தை சேர்க்கிறோம்
தோஷ அபனயனம் – குறைகளை நீக்குதல்
தோஷ தரிசனம்    – குறையைக் கண்டு கொண்டால்
நிஷேதம் ஹேது   – அதை நீக்கி விடுவோம்.

ஆத்மாவை மூன்று விதமான திரைகள் மறைத்துக் கொண்டிருக்கின்றன. அவைகள் ஸ்தூல, சூட்சும மற்றும் காரண ஸரீரம்.

மற்றவர்களிடம் குறையைக் காணலாம் ஆனால் அதைப்பற்றி மற்றவர்களிடத்திலே விமர்சிக்கக் கூடாது அல்லது அவரிடத்திலேயே கூறி அவரை அவமதிக்கக்கூடாது. எல்லாவற்றிலும் தோஷத்தைக் காண்பதில் தவறில்லை, குறையை கண்டால்தான் அதை நீக்க முடியும்.

குருவானவர் ஒரு நிலை வரைதான் உபதேசம் செய்வார். சிஷ்யன்தான் முயற்சி செய்து அவர் செய்த உபதேசத்தை விசாரித்து பின் அறிவை அடைய வேண்டும். குருவிடம் பெற்ற ஞானத்தை தானே சுயமாக மேலும் மேலும் சிந்தித்து அந்த ஞானத்தில் நிலை பெற வேண்டும்.

ஒவ்வொருவருடைய சித்தசுத்தியும், நற்குணங்களும் அவன் தவறாக ஒன்றை நினைக்கும் போது, அது தவறு என்று புத்தியைக் கொண்டு சரியான நேரத்தில் எச்சரிக்கும். சரியான அறிவை அடைய வேண்டுமென்றால் மற்றவர்களை ஹிம்சை பண்ணக்கூடாது. சித்தஸுத்திதான் நம் புத்தியை, ஸ்ம்ருதியை சரியான நேரத்தில் தூண்டுவதற்கு காரணமாக இருக்கும்
இந்திரனின் விசாரங்கள்:
இந்த உடலில் நல்லாடைகளை உடுத்தினால், நீரில் தெரியும் பிம்பத்திலும் அதேமாதிரி இருக்கிறது. ஆபரணங்களை அணிந்தாலும் அப்படியே காட்டுகிறது. இரண்டு கண்களை இழந்தாலும் அல்லது ஏதாவது அங்கங்களை இழந்தாலும் அப்படியே அதுவும் காட்டும். முதுகு வளைந்து இருந்தால் அதிலும் அப்படியே இருக்கும். இந்த உடல் அழிந்து போனால் அதிலும் அழிந்து போகும். இப்படி விசாரம் செய்து இரண்டு தோஷத்தை அவன் கண்டான்.

தோஷம்-1:    இந்த பிரதிபிம்பம் சுதந்திரமாக இல்லை, அது உண்மைப்பொருளை சார்ந்திருக்கிறது.
தோஷம்-2:    உடலில் ஏற்படும் மாற்றங்கள் (தேய்மானங்கள்)
தோஷம்-3:    உடலின் அழிவையும் உணர்கின்றான்.

நான் இந்த அறிவில் போக்யத்தை பார்க்கவில்லை என்று இந்திரன் சிந்தித்தான்.

இந்த தோஷத்தை நீக்கிக்கொள்ள மீண்டும் சமித்பாணியுடன் குருவை சென்றடைந்தான். குரு அவனைப்பார்த்து, “நீங்கள் இருவரும் நன்றாக புரிந்து விட்டது என்று சென்று விட்டீர்கள், பின் எதை அறிவதற்காக திரும்பவும் வந்திருக்கிறாய்?” என்று கேட்டார். இந்திரன் தான் புரிந்து கொண்டதில் தோஷம் இருப்பதாகவும், அதை நீக்கிக் கொள்வதற்காக வந்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டு, தான் யோசித்ததையெல்லாம் அவரிடம் பகிர்ந்து கொண்டான். நான் இப்போது ஸ்தூல ஸரீரம் ஆத்மாவல்ல என்பதை உணர்ந்து கொண்டேன், ஆனால் அதை நீக்கும் வழி தெரியாமல் இருப்பதை எடுத்துரைத்தான்.

குருவும் இந்திரன் சொன்னதை சரிதான் என்று ஆமோதித்து, உன்னுடைய சரீரம் ஆத்மா அல்ல என்று நினைத்தது சரிதான், உனக்கு மேலும் உபதேசம் செய்கிறேன் ஆனால், “நீ ஸித்தசுத்தி உடையவனாக இருந்திருந்தால் நான் முன்பு உபதேசித்ததை உடனடியாக புரிந்து கொண்டிருப்பாய். எனவே உன்னிடத்தில் உள்ள குறைகளை நீக்கி மீண்டும் தெளிவான அறிவையடைய இன்னும் 32 வருஷங்கள் குருகுலத்தில் இருந்து சேவை செய்து கொண்டிரு” என்று கூறினார். 32 வருஷங்கள் கழிந்தது அவனது குறைகள் எல்லாம் நீங்கப்பெற்றது. குருவானவர் உபதேசத்தை ஆரம்பித்தார்.

காண்டம்‍10
எதிலிருந்து துக்கமும், துயரமும் வருகிறது என்று ஆராய்ந்து பார்த்தால், நாம் எந்த கோசத்தில் இருக்கிறோம் என்று தெரிந்து விடும்.  எவனொருவன் கனவில் விவகாரங்களை செய்து கொண்டிருக்கிறானோ அவன்தான் ஆத்மா (தைஜஸன்), இந்த ஆத்மா மரணமற்றது, பயமற்றது.

குரு உபதேசித்த கருத்து : தைஜஸனும், சூட்சும உலகின் அதிபதியாக இருக்கும் ஹிரண்யகர்ப்பனும் ஒன்றே என்று ஐக்கியப்படுத்துதல். 

தைஜஸன் வாக்யார்த்தம்: அந்தப் பிரக்ஞன் – நம் ம்னதிற்குள் இருக்கும் எண்ணங்களை பார்த்துக்கொண்டிருப்பவன், ஆத்மாவுடன் சூட்சும சரீரத்தில் அபிமானம் வைத்து கொண்டு இருப்பவன்.
தைஜஸன் லட்சியார்த்தம்: ஸ்தூல பஞ்சபூதங்கள் ஜடமானது என்றால், சூட்சும பஞ்ச பூதங்களும் ஜடமானதுதான்.  ஜடமான மனம் எதனால் அறிவை, உணர்வை அடைகிறது? ஜடமான மனதை பிரகாசிக்கச் செய்வது ஆத்மாதான். எனவே ஆத்ம வேறு மனம் வேறு. இங்கே அறிபவன் ஆத்மா, அறியப்படுவது மனது.

இந்திரன் புரிந்து கொண்டது: எந்த அறிவு ஸ்வரூபம் என் மனதை பிரகாசிக்கின்றதோ அதுதான் அனைத்து மனங்களையும் பிரகாசிக்கிறது. கனவில் விளங்கிக்கொண்டிருக்கும் சூட்சும ஸரீரம்தான், அதாவது மனம்தான் ஆத்மா என்று இந்திரன் தவறாக புரிந்து கொண்டான். எனவே தனக்கு நன்றாக புரிந்துவிட்டது என்று கூறிவிட்டு திரும்பவும் சென்றுவிட்டான்.

ஆனால் அவன் தேவலோகத்தை அடைவதற்கு முன், தான் புரிந்து கொண்ட ஆத்ம தத்துவத்தில் திரும்பவும் தோஷத்தைக் கண்டான். அவன் இவ்வாறாக எண்ணினான். ஸ்தூல சரீரத்தில் கண்கள் இல்லையென்றாலும், சூட்சும சரீரம் பார்வை இழப்பதில்லை. ஸ்தூல சரீரத்தில் ஒரு கண் இல்லையென்றாலும், சூட்சும சரீரம் ஒரு கண் இழப்பதில்லை. ஸ்தூல சரீரத்திற்கு எந்த குறை வந்தாலும் அது சூட்சும சரீரத்தை பாதிப்பதில்லை. இவையெல்லாம் ஸ்தூல சரீரத்தின் மீதுள்ள அபிமானம் நீங்கினால் இப்படி தெரியவரும். ஸ்தூல சரீரம் இறந்தாலும் மனம் இறப்பதில்லை. அது வேறு ஜென்மத்தை எடுக்கிறது. இந்த மனமானது துயரப்படுகிறது, துரத்தப்படுகிறது. இது குருவின் உபதேசத்திற்கு எதிராக இருக்கிறது. எனவே புரிந்து கொண்டதில் எதோ தவறு இருக்கிறது என்று உணர்ந்த அவன் மீண்டும் சமித் பாணியுடன் குருவை வந்தடைந்தான்.

குரு அவனைப் பார்த்து, எனக்கு புரிந்து விட்டது என்று சென்று விட்டாய், பிறகு திரும்ப ஏன் வந்திருக்கிறாய்? என்று கேட்டார். இந்திரன் தான் புரிந்து கொண்ட சூட்சும சரீரத்தில் உள்ள  தோஷத்தை சொல்ல ஆரம்பித்தான். இந்த ஸ்தூல சரீரம் அழிந்தாலும், சூட்சும சரீரம் அழிவதில்லை, இதற்கு நோய் வந்தால், அதற்கு வருவதில்லை, சூட்சும சரீரம் தாக்கப்படுகிறது, துயரப்படுகிறது, கஷ்டங்களை கண்டு அழுகிறது. ஆகவே நான் சூட்சும சரீரமே ஆத்மா என்று நினைத்ததில் குறை இருப்பதாக உணர்கிறேன் என்று கூறினான். குருவும் நீ நினைத்தது சரிதான் என்று ஆமோதித்தார். நான் மீண்டும் உனக்கு உபதேசம் செய்கிறேன் ஆனால் நீ இன்னும் 32 வருஷங்கள் குருகுல வாசத்தில் இருந்து ஸித்தசுத்தி அடைவாயாக என்று கூறினார். 32 வருஷங்கள் முடிந்ததும் உபதேசத்தை ஆரம்பித்தார்.

காண்டம்‍11
எவனொருவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறானோ, இந்திரியங்களிலிருந்து விலகி இருக்கின்றானோ, சூட்சும சரீரத்திலிருந்து விலகியிருக்கின்றானோ, எப்பொழுதும் சாந்தமாக இருக்கிறானோ, கனவுகளில்லாதவனாக இருக்கிறானோ, உள் மற்றும் வெளி விஷயங்களின் சம்பந்தத்தினால் விக்ஷேபங்கள் இல்லாமல் இருக்கிறானோ, அவன்தான் ஆத்மா என்று அறிந்து கொள், அது நித்தியமானது, பயமற்றது, அதுவே பிரம்மம்.

காரண சரீரத்தை நீக்கி அதை பிரகாசிக்கிற சைதன்யத்தை எடுத்துக்கொண்டு காரண பிரபஞ்சம், மாயையே ஆதாரமாக கொண்டிருக்கிற சைதன்யமும் ஒன்று என்று புரிந்து கொண்டால் அது மகாவாக்கியமாகும்.

இப்பொழுது இந்திரன் காரண சரீரத்தை ஆத்மா என்று புரிந்து கொண்டு திருப்தியாக சென்று விட்டான். ஆனால் தேவலோகத்தை அடைவதற்கு முன் தான் கொண்ட முடிவில் திரும்பவும் தோஷத்தைக் கண்டான்.

அறியாமையால் துக்கம் இல்லை, ஆனால் துக்கத்தின் விதை இருக்கிறது. ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவன் தன்னையே அறியாதவனாக இருக்கிறான், இந்த உலகத்தையே அறியாதானாக இருக்கிறான். எனவே தன்னையே இழந்து விட்டவனாக இருக்கிறான். இவன் நாசத்தையே கொடுப்பது போல இருப்பதால், நான் எடுத்த முடிவில் எந்த பயனும் இல்லை. சங்கரர் கூறுகிறார், “அறிவு இருக்கும்போது அறிபவனுடைய இருப்பு அறியப்படுகிறது, அறிவற்று இருக்கும்போது அறிபவனுடைய இருப்பை அறிய முடியாது”

இவ்வாறு காரண சரீரத்திலும் குறையைக் கண்டு திரும்பவும் சமித்பாணியுடன் குருவிடம் திரும்பவும் வந்தான்.  குரு அவனைப் பார்த்து, எனக்கு புரிந்து விட்டது என்று சென்று விட்டாய், பிறகு திரும்ப ஏன் வந்திருக்கிறாய்? என்று கேட்டார். இந்திரன் தான் தவறாக புரிந்து கொண்டதில் உள்ள குறையைக அவரிடம் கூறினான். ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவன் தன்னையும் அறியவில்லை, தன்னை சுற்றியுள்ள உலகத்தையும் அறியவில்லை. இந்த அறியாமை அழிவிற்குத்தான் கொண்டு செல்லும் எனவே அவன் எடுத்த முடிவில் குறையிருப்பதாக கூறி மேலும் உபதேசிக்குமாறு வேண்டினான்.

உன்னுடைய சிந்தனை சரிதான், நான் மீண்டும் உனக்கு உபதேசம் செய்கிறேன் ஆனால் உன்னிடத்தில் இன்னும் கொஞ்சம் குறை இருப்பதால் மறுபடியும் ஐந்து வருடங்கள் குருகுலவாசம் செய்யும்படி பணித்தார். ஐந்து வருடங்கள் கழிந்ததும் மீண்டும் அவர் உபதேசத்தை ஆரம்பித்தார். இந்திரன் இதைச் சேர்த்து மொத்தம் 101 வருடங்கள் குருகுலத்தில் கழித்தான்.

காண்டம்‍12
சரீரமே சம்சாரம்: சம்சார அனுபவம் விஸ்வனுக்கும், தைஜஸனுக்கும் இருக்கிறது. காரண சரீரத்தில் சம்சாரம் இல்லை, மோட்சமும் இல்லை. ஆனால் சம்சாரத்தின் விதை இருக்கிறது.

இந்த மந்திரத்தில் மூன்று சரீரங்களை நிஷேதம் செய்யப்படுகிறது. அதுவும் நேரிடையாக நீக்குகிறார். சரீரமற்ற  நிலை மோக்ஷம், சரீரத்துடன் இருப்பது சம்சாரம். சரீர ஸ்வரூபம், ஆத்ம ஸ்வரூபம், ஆத்மாவுக்கும் சரீரத்திற்கும் உள்ள சம்பந்தம், சரீர அபிமான பலன், எப்பொழுது ஆத்ம சரீரமற்றதாக இருக்கிறது ஆகியவைகளெல்லாம் விளக்கப்படுகிறது.

சரீர ஸ்வரூபம்: இந்த உடலானது மரணத்திற்குட்பட்டது. இது மரணத்தால் வியாபிக்கப்பட்டிருக்கிறது. எல்லா நேரத்திலேயும் மரணம் அடைந்துக்கொண்டே இருக்கிறது. இதைத்தெரிந்து கொண்டால்தான நமக்கு வைராக்கியம் வரும். பிறகு சரீரத்தின் மேல் உள்ள அபிமானம் சென்று விடும். இறப்பை ஒவ்வொரு க்ஷணமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் என்று உணர்ந்துகொண்டால் நாம் மரணத்தைக் கண்டு பயப்படமாட்டோம். சரீரம் மாற்றத்தை அடைந்துக் கொண்டேயிருப்பது, இதை ஆழ்ந்துணர்ந்து கொண்டால் அதை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனப்பக்குவம் வரும். சரீரம் துயரத்துக்குட்பட்டது, சுக-துக்கங்களுக்கு உட்பட்டது இதன் சுபாவமே அப்படி இருப்பதுதான். எனவே சரீர அபிமானம் தான் அதன் இருப்பு. இந்த சரீரத்தின் தோற்றம் நாம் செய்த தர்ம-அதர்மத்தின் மூலமாக அடைவது.

ஆத்ம ஸ்வரூபம்: இது மரணமற்றது, சரீரமற்றது, சரீரத்திற்கு அதிஷ்டானமாக விளங்குவது, பயமற்றது, துக்கமற்றது, மாற்றத்திற்குட்படாதது, சுக-துக்கங்களுக்கு அப்பாற்பட்டது, நித்தியானந்த ஸ்வரூபம்

ஆத்ம-சரீர சம்பந்தம்:

இது சத்யமான பொருளுக்கும், மித்யாவான பொருளுக்கும் உள்ள உறவை போன்றது. சரீரம் மாற்றத்தையடைந்து பின் அழிகிறது. ஆனால் ஆத்மா நித்யமானது, மாற்றத்திற்குட்படாதது. இந்த சம்பந்தத்தை  அதிஷ்டானம் என்ற சொல்லால் விளக்கப்படுகிறது. இந்த சொல்லுக்கு மூன்று அர்த்தங்களை சங்ராச்சாரியார் கூறியிருக்கிறார்.

  1. ஆத்மாவின் போகத்திற்காக இருக்கும் இடமாக சரீரம் உள்ளது. ஸ்தூல சரீரம் ஜடமாக இருப்பதால் அது எதையும் அனுபவிக்காது. எனவே ஆத்மா சூக்ஷ்ம சரீரத்தையும், ஸ்தூல சரீரத்தையும் உலக விஷயங்களை அனுபவிப்பதற்கு கருவியாக பயன்படுத்திக்கொள்கிறது. ஆத்மா சிதாபாச ரூபத்தில் இருந்து இந்த உலகத்தை அனுபவிக்கின்றது.
  2. ஜீவ ரூபமாக இந்த உடலில் பிரவேசித்து தலைவனாக இருக்க இருப்பிடமாக உடலை பயன்படுத்திக்கொள்கிறது.
  3. ஆத்மாவிடமிருந்து தோன்றியதுதான் சரீரம். (உ-ம்) கயிற்றில் தோன்றிய பாம்பு.

 

சரீர அபிமான பலன்:
சரீரத்தில் அபிமானம் வைப்பதால் அடையும் பிரயோஜனம் அல்லது ஏற்படும் விளைவு சம்சாரம், சுக-துக்கங்களை அனுபவித்தல். சரீரத்தில் அபிமானம் இல்லாதிருப்பதால் அடையும் விளைவு மோக்ஷம். நான், என்னுடையது என்ற சரீர அபிமானத்தை உடையவன் ராக-துவேஷத்தால் ஆட்கொள்ளப்படுகிறான், விருப்பு-வெறுப்புக்களால் பிடிபட்டவனாக இருப்பான். தேகத்தில் அபிமானம் வைத்துக்கொண்டிருக்கும்வரை விருப்பு-வெறுப்புகளிலிருந்து விடுதலை கிடையாது.

தினமும் நமக்கு சுக-துக்க அனுபவங்கள் வருகிறது. சம்சாரம் எதைக் குறிக்கிறது என்றால், உடல் அனுபவிக்கும் இந்த சுக-துக்கங்கள்தான். இதை நீக்கும் உபாயத்தை உபநிஷத் கூறவில்லை. நாம் இதை அனுபவித்துத்தான் தீர்க்க வேண்டும்.  வெளியில் இருந்து வரும் துக்கத்திலும் சுகத்தைக்காணலாம், சுகத்திலும் துக்கத்தைக் காணலாம். எனவே இந்த சுக-துக்கங்களிலிருந்து விடுதலையடைவது மோக்ஷமல்ல, சம்சாரமும் அல்ல.

நாம்தான் இது எனக்குப்பிடித்தது, பிடிக்காதது என்று பிரித்து வைக்கிறோம். பிடிக்காததை அனுபவிக்கும்போது மனதில் ஏற்படும் தாக்கம்தான் சம்சாரம் என்று கூறப்படுகிறது, எனவே வெளியில் இருக்கும் சுக-துக்கங்களை கொடுக்கக்கூடிய பொருட்கள் சம்சாரம் இல்லை என்று உறுதியாகிறது. ஒருவர் நம் மனத்தை புண்படுத்தும் சொற்களைக் கொண்டு திட்டினால் அவைகள் நமக்கு புரியாத விஷயமாக இருக்கும் போது நமக்கு கோபமோ, வெறுப்போ வருவதில்லை. இந்திரியங்கள் ஒரு விஷயத்தோடு சேர்ந்து சுகத்தை அனுபவிக்கலாம். ஆனால் அது துக்கதிற்கான விதை என்று அறிந்து கொள்ள வேண்டும். நாம் அந்தப்பொருளை இழக்கும் போது அதுவே நமக்கு துக்கத்தை கொடுக்கும்.
இந்த விருப்பு-வெறுப்புக்கள் வரக்காரணம் என்ன? அதை எப்படி நீக்குவது?
சரீரத்தில் அபிமானம் வைக்கும்போதுதான் பிரியம்-அபிரியம் நமக்கு தோன்றும். இந்த அபிமானம் நீங்கினால் இதுவும் விலகி விடும்.

கேள்வி-1
ஆழ்ந்த உறக்கத்தில் இந்த விருப்பு-வெறுப்புக்கள் வரவில்லையே, துரியனாக இருந்து ஏன் இதை அடைய வேண்டும்?
பிரியம் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது, அவைகள்
1.சம்சாரப்பிரியம்,
2.ஞானியின்பிரியம்.
சம்சாரம் பிரியமானது விஷயமாகவும் அனுபவிப்பவன் விஷயி என்ற நிலையை உடையவனாகவும் இருக்கிறான். இங்கே பிரியம் வஸ்துவாக இருக்கிறது, வந்து போகும் தன்மையுடையது. ஞானியின் பிரியம் பேதமற்றது, இங்கே அவனே பிரியமாக இருக்கிறான் எனவே பிரியம் நிரந்தரமானது.

கேள்வி-2
ஆத்மாவை அறிந்தால், எல்லா உலகங்களையும் அடையலாம். எல்லா ஆசைகளும் நிறைவேறும் என்று பிரஜாபதி முதலில் கூறினார், ஆனால் எல்லா ஸ்தூல வஸ்துவையும் விட்டுவிட வேண்டும் என்பது இந்திரனை ஏமாற்றுவது போல இருக்கிறதே?
குருவானவர் இந்திரனின் சித்தஸுத்தியைப் பார்த்துவிட்டு அவனுக்கு மோட்சத்தை அடைய உதவி செய்வதின்மூலம் அவனுக்கு மிகப்பெரிய நன்மையை செய்ய நினைத்தார். எனவே அவன் எதிர்பார்த்த ஆசையை நிறைவேற்றவில்லை. சரீரத்தில் அபிமானம் இல்லாமல் இருந்து கொண்டேயிருப்பவன் இந்த விருப்பும் வெறுப்பும் அவனை தொடுவதில்லை, பாதிக்காது.

வேண்டும், வேண்டாமை இரண்டுமே ஆசையை குறிக்கும். எந்த ஆசையானது பூர்த்தியாக வேண்டும் என்று நிபந்தனையுள்ளதாக இருக்கிறதோ அதற்கு பந்த ஆசை என்று பெயர். மற்றொன்று நிபந்தனையற்ற ஆசை, பந்தமற்ற ஆசை அதுதான்  ஞானியின் ஆசை.

அறிவினால் மட்டுமே சரீரத்தின் மீதுள்ள அபிமானத்தை விடமுடியும். இந்த நிலையில் நம்மை விருப்பு வெறுப்பு தாக்காது. ஏனென்றால் அது நிபந்தனைக்குட்பட்டதாக இல்லை.

ஆத்மா சரீரத்துடன் சேர்ந்து உருவமற்று இருக்கிறது. பின்பு சரீரத்தை விட்டு பிரிந்தவுடன் தன் சொந்த ஸ்வரூபத்துடன் ஆகாசத்தில் கலந்து விடுகிறது. சரீரமற்ற வாயு, ஆகாசம், இடி மின்னல் யாவும் சூரியனின் சக்தியால் தன் சுய ரூபத்துடன் வெளிப்படுகிறது.

விஸ்வன் – வியாக்ருத புருஷ – வெளிதோற்றத்துக்கு வந்து விவகாரத்தில் இருப்பவன்
ப்ராக்ஞன் – அவ்யாக்ருத புருஷ- வெளிதோற்றத்துக்கு வராமல் விவகாரம் இல்லாது இருப்பான்.  இந்த இரண்டு விதமான புருஷர்களை தவிர்த்து, உத்தம புருஷனான சம்சாரமற்றவன் ஞானி என்று அழைக்கப்படுவான். இந்த உத்தம புருஷன் உடலில் மீது உள்ள அபிமானத்தை விட்டுவிட்டு பரஞ்சோதியில் கலந்து,தன் சொந்த ஸ்வரூபமாகத் தோன்றுகிறான். அவன் மரணமடைவதில்லை, பிராரப்த கர்மம் இருக்கும்வரை இந்த உடலில் இருந்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறான்.

அக்ஞானி சரீரத்துடன் எல்லாவற்றையும் அனுபவிக்கின்றவனாக இருக்கிறான்.  ஞானியானவன் சரீர அபிமானமேயில்லாமல் அனுபவிப்பான். ஞானி எல்லோரையும் போல விளையாடுவான், மகிழ்ச்சியோடு இருப்பான், பெண்கள், குழந்தைகள், வாகனங்கள், உறவினர்கள் இவர்களோடும் விளையாடுவான் ஆனால் உடல் மீதுள்ள அபிமானம் முழுவதுமாக விட்டுவிட்ட நிலையில் இருப்பான்.  எந்தப்பொருட்களெல்லாம் நமக்கு போகப் பொருட்களாக இருந்ததோ அவைகளெல்லாம் ஞானமடைந்தவுடன் அப்படியிருக்காது. எப்படி குதிரையானது வண்டியோடு இணைக்கப்பட்டிருக்கிறதோ அதுபோல இந்த ஆத்மா சரீரத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. ஞானியானவன் தன்னுடல் என்ற அபிமானம் இல்லாமல் உலக விவகாரங்களில் ஈடுபடுகிறான் ஆனால் பந்தப்படுவதில்லை. இது ஜீவன் முக்தன் நிலையென்று விளக்கியிருக்கிறது உபநிஷத்.

ஆத்மா உடல், உடலிலுள்ள இந்திரியங்களிலிருந்து வேறுபட்டது, அறிபவனை அறிவது, எது இந்த உலகத்தை அறிந்து கொண்டிருக்கிறதோ அதை அறிவது,

இங்கு ஒரு நியதி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பல சிறிய விதவிதமான பொருட்களை கொண்டு ஒரு முழுப்பொருள் உருவாகிறது, இதற்கு சம்ஹதம் என்று பெயர் அதாவது பல உறுப்புக்களின் சேர்க்கையாலான ஒரு பொருள். இந்த முழுப்பொருள் (Finished Product) பயன்பாடு அதனை உபயோகப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. அதுபோல உடல் பல அங்கங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது இவைகள் இதற்கு வேறான ஆத்மாவுக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது.

[ஸ்வ-விலக்ஷணம் – தனக்கு வேறான உள்ள ஒன்றுக்காக உருவாக்குவது ]

இந்திரியங்கள் அறிவுடையதாக இருந்தாலும், இந்த இந்திரியங்களை அறிபவன் நான்(ஆத்மா). இந்திரியங்கள் உலக விஷயங்களை அனுபவிக்கத்தான் படைக்கப்பட்டுள்ளது. ஒரு பொருளை அறிய மனம் இந்திரியங்கள் வழியாக அந்த பொருளை முழுவதுமாக வியாபித்து மாறுதலடைந்து அறிவைக்கொடுக்கின்றது. ஆனால், ஆத்மா எந்தவித மாறுதலடையாமல் மனதை அறிகிறது.

கண்கள் என்ற ஆகாசம் வழியாக பார்க்கும் சக்தி, வெளி விஷயங்களை பார்ப்பதறகாக படைக்கப்பட்டிருக்கிறது. அந்த கண்களை யார் அறிகிறாரோ அதுதான் ஆத்மா என்று கூறப்படுகிறது. எந்த ஆத்மா சாட்சியாக நின்று நான் வாசனையை நுகர்கிறேன் என்று அறிபவனை அறிகிறது. இதேப்போன்று இதை நான் உச்சரிக்கிறேன் என்று யார் நினைக்கிறாரோ அவரை அறிகிறது ஆத்மா. நான் கேட்கிறேன் என்று சொல்லாமல் அறிபவனை அறிபவன் ஆத்மா…

ஆத்மா – நிர்விகாரவேதா – மாற்றமடையாமல் அறிபவன்
மனது – சவிகாரவேதா – மாற்றமடைந்து அறிபவன்.

யார் நான் இதை நினைக்கிறேன் என்று அறிகிறானோ அவனை அறிபவன் ஆத்மா. மனமானது தெய்வீக கண் என்று வர்ணிக்கப்படுகிறது. இந்திரியங்கள் இப்பொழுது இருக்கும் பொருளை மட்டும் காட்டும். மனமானது மூன்று கால விஷயங்களை மனக்கண் மூலமாக பார்ப்பது இயல்பு. இந்த மனதையும் அறிபவன் ஆத்மா. இந்த தெய்வீக கண்ணாக விளங்குகின்ற மனதாலே இங்கே இருக்கின்ற பொருட்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டே அனுபவிக்கிறான், மகிழ்ச்சியுடன் இருக்கின்றான்.

பிரஜாபதியின் உபதேசத்தை நன்கு புரிந்து கொண்ட தேவேந்திரன் அந்த ஆத்ம தத்துவத்தை தேவலோகத்திலுள்ள எல்லா தேவர்களுக்கும் உபதேசித்தான். அனைவரும் ஆத்மாவை தியானித்து உணர்ந்து கொண்டார்கள். அதனால் எல்லா உலகத்தையும் அடைந்தாற் போன்றும், எல்லா ஆசைகளையும் அடைந்தாற் போலவும் உணர்ந்து மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். நானே எல்லாமுமாக இருக்கிறேன் என்ற உணர்வானது எல்லாவற்றையும் அடைந்ததற்கு ஈடாக கூறப்படுகிறது. இப்படி யாரொருவர் ஆத்மாவை அறிந்து உணர்கிறார்களோ அவர்களும் இந்திரனைப்போன்று எல்லா உலகத்தையும் அடைந்தது போலவும் மனதிருப்தியுடன் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். பொதுவாக இது மனிதர்களாகிய நமக்கும் பொருந்தும் என்று பிரஜாபதி முடிக்கிறார்.

காண்டம்‍13 (பிரார்த்தனை)
ஒளிப்பொருந்திய பிரம்மலோகத்திலிருந்து இருளாக உள்ள இதயம் என்கிற பிரம்மலோகத்தை வந்தடைந்து விட்டேன். இப்பொழுது நான் இருக்கும் இருள் பொருந்திய இருதய ஆகாசமான பிரம்மலோகத்திலிருந்து மீண்டும் ஒளிபொருந்திய பிரம்மலோகத்திற்கு  செல்ல விரும்புகிறேன். என்னிடத்திலிருக்கிற எல்லா பாவங்களும் நீங்கிவிட வேண்டும், களைப்படைந்த குதிரை உடலை குலுக்கும்போது சில ரோமங்கள் உதிர்வதை போல என் பாவங்களும் நீங்கி விட வேண்டும். ராகு என்ற பாம்பின் வாயிலிருந்து சந்திரன் விடுதலையடைந்ததை போன்று என் பாவங்களும் நீங்கி விட வேண்டும். பிறகு நான் செய்ய வேண்டிய கடமைகள் எல்லாம் செய்து முடித்து விட்டு சரீரத்தை துறந்து பிரம்மலோகத்தை அடைந்து கிரம முக்தி அடைய வேண்டும்.

காண்டம்‍14
இந்த பகுதியில் மூன்று விஷயங்களான பிரம்ம லக்ஷணம், எல்லா பெருமைகளையும் அடைதல், மீண்டும் பிறவாமை பற்றி பேசப்படுகிறது.

ஆகாசம் என்று அழைக்கப்படுகின்ற பரபிரம்மம் நாம ரூபங்களை (சிருஷ்டியை) தோற்றுவிக்கிறது. இந்த நாம ரூபங்கள் எதில் இருக்கிறதோ அது பிரம்மம். இது சத்ய ஸ்வரூபம், நித்தியமானது. இதுவே ஆத்மாவாக இருக்கிறது. பிரம்மன்-ஹிரண்யகர்ப்பன் பிரஜாபதியின் இருப்பிடத்தை அடைவேனாக. பிராமணர்களின் பெருமைகள் எல்லாம் என்னுடையதாகட்டும். வைசியர்களின் பெருமைகள் எல்லாம் என்னுடையதாகட்டும். எனக்கு மறுஜென்மம் வேண்டாம். நான் மீண்டும் பிறப்பை அடைய வேண்டாம்.

காண்டம்‍15
பிரம்மாவானவர் ஆத்ம வித்யாவையும், அதனை அடையும் சாதனத்தையும் பிரஜாபதிக்கும் கற்றுக் கொடுத்தார். எந்த மனதினால் இந்த விசாரத்தை செய்ய முடியும் என்ற அறிவையும் கொடுத்தார். பிரஜாபதி – விராட் தத்துவத்தை குறிக்கிறது. பிரஜாபதி மனுவுக்கு உபதேசித்தார், மனு மற்றவர்களுக்கு உபதேசித்தார். இவ்விதம் இந்த உபதேசம் பரம்பரையாக வந்துள்ளது.

  1.     ஆசிரியரிடமிருந்து வேதத்தை படித்தல்
  2.     முறைப்படி ஆசிரியருக்கு செய்ய வேண்டிய சேவைகளை செய்துக் கொண்டே படிக்க வேண்டும்
  3.     சேவை செய்து விட்டு மீதி இருக்கும் நேரத்தில் வேதத்தை படிக்க வேண்டும்.
  4.     இல்லறத்திற்கு சென்று படித்தறிந்த தர்ம சாஸ்திரப்படி வாழ்க்கையை நடத்த வேண்டும். தூய்மையானதாக வீட்டை வைத்திருக்க வேண்டும். மேலும் சாஸ்திர படிப்பை தொடர வேண்டும். தர்மப்படி வாழ்கின்ற குழந்தைகளையும், சிஷ்யர்களையும் உருவாக்க வேண்டும்.
  5.     அனைத்து இந்திரியங்களை விஷயங்களிலிருந்து விலக்கி (சம, தம போன்ற பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்) மனக்கட்டுப்பாடு, புலன்களில் கட்டுப்டுத்தி வாழ வேண்டும். பிறகு மன அமைதிக்கான தியானம் செய்து கொண்டிருக்க வேண்டும்.
  6.     எந்த ஜீவராசிகளையும் ஹிம்சை செய்யாமல் இருக்க  வேண்டும். சாஸ்திரம் அனுமதித்த ஹிம்சையை தவிர வேறெதுக்காகவும் மற்ற உயிர்களை கஷ்டப்படுத்தக் கூடாது.

 

ஒருவன் இவ்விதம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் அவன் இறந்த பின் பிரம்மலோகத்திற்கு சென்ற பின் அவர்கள் மீண்டும் பிறப்பதில்லை.

ஓம் தத் ஸத்

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

கேனோ உபநிஷத் ஸ்வாமி குருபரானந்தா உபதேசம் விளக்கம்

December 25, 2022

கேனோ உபநிஷத்

ஸ்வாமி குருபரானந்தா உபதேசம் விளக்கம்

முகவுரை
கர்ம காண்டம்
கர்ம தத்துவம் என்பது என்ன? கர்ம காண்டத்தில் பேசப்படும் கருத்துக்கள் என்ன? என்பதை தெரிந்து கொள்வோம்.  உடலை பிரதானமாக கொண்டு செய்யும் செயல், சொல்லை பிரதானமாக கொண்டு செய்யும் செயல் (பேசுதல், வேதம் ஓதுதல் ) மனதிலிருந்து செய்யும் செயல் ( சிந்தித்தல் – மானஸம்) என்று மூன்று நிலையிலிருந்து கர்மம் உற்பத்தியாகின்றது.  இந்த செயல்களினால் விளையும் பலன்கள் இரண்டாக பிரிக்கப்படுகின்றது. ஒன்று கண்ணுக்கு தெரியும் பலன்கள், மற்றொன்று நமக்கே தெரியாத பலன்கள்(அதிருஷ்ட பலன்) ஆகும்.  நமக்கு தெரியாத பலன்களே பாவ-புண்ணியங்கள் என்று கூறுவர்.  இந்த அதிருஷ்ட பலன்களான பாவம் துயரத்தையும், புண்ணியம் சுகத்தையும் கொடுத்து நீங்குகின்றது. இவையிரண்டும் உபாதியாக இருக்கின்ற நமது உடல் மூலமாக நமக்கு சுக-துக்கங்களை கொடுத்து அனுபவிக்க வைக்கின்றது. மேலும் உலகத்தில் படைக்கப்பட்ட அனுபவிக்கப்படும் பொருட்கள் மூலமாகவும், உபாதியும், விஷயமும் சேர்ந்திருக்கின்ற இடத்தின் மூலமாகவும், சூழ்நிலைகள் மூலமாகவும் இந்த அதிருஷ்ட பலன்கள் அனுபவிக்கப்படுகின்றது.  சுக-துக்கங்கள் கொடுக்கக்கூடிய பொருட்கள் தனித்தனியாக கிடையாது.  ஒரே பொருள் சுகமும் கொடுக்கலாம், துக்கத்தையும் கொடுக்கலாம்.

எப்படிபட்ட கர்மமானது இவையிரண்டையும் கொடுக்கிறது?
சுகத்தை தருவது புண்ணியத்தை தரக்கூடிய செயல்கள், துன்பத்தை தருவது பாவத்தை தரக்கூடிய செயல்கள். இதிலிருந்து புண்ணியத்தை தருகின்ற செயல்களையும், பாவத்தை தரக்கூடிய செயல்களையும் நாம் தெரிந்து கொள்ளலாம். தர்மத்திற்குட்பட்ட செயல்கள் புண்ணியத்தையும், அதர்மத்திற்குட்பட்ட செயல்கள் பாவத்தையும் கொடுக்கின்றது..

கர்மங்கள் மூன்று வகையாக சாஸ்திரம் பிரித்திருக்கின்றது. அவைகள்

  1. நியத கர்மங்கள்   – செய்ய வேண்டிய கர்மங்கள்
  2. நிஷித்த கர்மங்கள் –  செய்யக்கூடாத கர்மங்கள், தவிர்க்க வேண்டிய கர்மங்கள். இவைகள் நம்மையறியாமலே செய்ய வைத்துவிடும் சக்தியுடையது
  3. பிராயசித்த கர்மங்கள் – செய்த பாவ கர்மத்தின் பலனிலிருந்து விடுபட செய்பவைகள்.

தாய், தந்தை மற்றும் குரு இவர்களை தெய்வமாக மதிக்க வேண்டும்.  நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இதையெல்லாம் சாஸ்திரம் ஏன் சொல்கின்றது என்று பார்க்கும் போது பாவச் செயல்களை தவிர்ப்பதன் மூலம் கஷ்டத்திலிருந்து விடுபடவும், புண்ணிய செயல்களை செய்வதன் மூலம் சுகத்தை அனுபவிக்கவும், அல்லது பலனை அனுபவிக்காவிட்டால் மனத்தூய்மையையும் கொடுக்கும் என்ற கருத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.   மனத்தூய்மையே ஒருவனை ஞான காண்டத்திற்கு செல்லும் தகுதியை கொடுக்கின்றது

ஞான காண்டம்

இதில் ஞானமே பிரதானம். அழியாததும், என்றும் இருப்பதும், பூரணமானதும் போன்ற லட்சணங்களை உடைய ஒன்றை பற்றிய அறிவை கொடுக்கின்றது.  இந்த அறிவை அடைந்தவுடனே அதன் பலனை அடைந்து விடுவோம். உதாரணமாக பத்தாவது மனிதனை அறிவதும், துயரம் நீங்குவதும் ஒரே சமயத்தில் நடக்கின்றது. கர்ம ஞானம் அடைந்தால் மட்டும் போதாது, அதை செயல்படுத்தினால்தான் பலனை அடைய முடியும்.  உதாரணமாக சொர்க்கத்திற்கு செல்லக்கூடிய யாகத்தை செய்யும் முறையை அறிந்தால் மட்டும் போதாது, அந்த யாகத்தை செய்தால்தான் அதன் பலனை அடைய முடியும்.

இந்த நித்ய வஸ்துவிற்கு பிரம்மன் என்று பெயர்.  இதனால் நாம் அனுபவித்துக் கொண்டு இருக்கும் சம்சாரம் நீங்கி விடும்.  நான் என்பதற்கும், பிரம்மத்திற்கும் உள்ள சம்பந்தத்தை வேதம் சொல்கின்றது.

  1.      பிரம்மன் படைப்பவர்,நான் படைக்கப்பட்டவன்.  இந்த உடல் நாம் அல்ல, நமக்குள்ளே அறிவு ஸ்வரூபமாகவும், சாட்சி ஸ்வரூபமாகவும் ஆத்மா இருக்கின்றது.  இந்த ஆத்மாவும், பிரம்மனும் ஒன்றேதான் என்ற அறிவு.  இதுவே ஜீவ-ஈஸ்வர ஐக்கியம்.  இந்த ஞானத்தின் பலன் மோட்சமாகும்
  2.     ஜகத்தை பற்றிய விசாரம்,அதன் இருப்புத்தன்மை, அதன் உண்மையான நிலை என்ன என்பதையும் விவரிக்கின்றது.  இந்த ஜகத் மித்யா என்று புரிந்து கொள்ள வேண்டும். இந்த மித்யா அறிவானது பல படிகளாக சென்றுதான் புரிந்து கொள்ள முடியும்

2.1.   இது அநித்யம்- நிலையற்றது

2.2.   அஸாரம் – இதில் எந்த ஒன்றும் சாரமாக இல்லை.  எதற்கும் ஆதாரமாக இல்லை

2.3.   துக்க ஸ்வரூபம் – துயரத்தைக் கொடுக்க கூடியது. உலகத்திலுள்ள அனைத்தும் துயரத்தைக் கொடுக்க கூடியது என்ற அறிவினால் அதை விட்டு விலகி செல்லும் அறிவை அடைவோம்.

2.4.   உதாசீனம் – இந்த உலகமும் எனது லட்சியம் அல்ல என்று அறிந்து அதை நாடி செல்லமாட்டோம், விலகியே இருப்போம்.  அப்போதுதான் அது மித்யா என்று புரியத்தொடங்கும்.  உபநிஷத் இதையே ஜகத் மித்யா என்று உரைக்கிறது. பிறகு பிரம்மன் மட்டும்தான் ஸத்யம் என்ற அறிவையும் புகட்டுகின்றது.

உபநிஷத் என்பதை உப + நி + ஷத் என்று பொருள் கொள்ளலாம்.
உப = ஆத்மா ( நமக்கு மிக அருகில் இருப்பதுஆத்மா) நாமாக இருப்பது.  ஆத்மா மீதுதான் அகங்காரம் ஏற்றிவைக்கப்பட்டிருக்கிறது.
நி – நிச்சய ஞானம்.  இறுதியான, உறுதியான அறிவு, ஆத்மாவைப் பற்றிய உறுதியான அறிவு
ஷத் – நாசத்தை செய்வது.  உறுதியான ஆத்ம ஞானத்தின் மூலமாக சம்சாரத்தை அது கொடுக்கின்ற துயரங்களை நாசம் செய்தல்

இந்த உபநிஷத் கேன என்று ஆரம்பிப்பதால் இதை கேனோபநிஷத் என்று அழைக்கப்படுகின்றது.  இது சாம வேதத்தைச் சேர்ந்தது.  இது 35 மந்திரங்களைக் கொண்டது.  நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றது. முதல் இரண்டு பகுதியில் ஆத்ம வித்யாவும், அடுத்த இரண்டு பகுதியில் சில உபாஸனைகள், பண்புகள் கூறப்படுகின்றன.

சாந்தி பாடம்

ஆப்யாந்து மமாங்க3னி வாக்ப்ராணஶ்சக்ஷு: 

ஶ்ரோத்ரமதோ2 ப3லமிந்த்3ரியாணி ச ஸர்வாணி 

ஸர்வ ப்3ரஹ்மைபானிஷத3ம் மாஹம் ப்3ரஹ்மநிராகுர்யாம் 

மா மா ப்3ரஹ்ம நிரகரோத3னிரதரனமஸ்த்வனியகரணம் 

மேஸ்து ததா3த்மனி நிரதே ய உபநிஷஸ்து த4ர்மஸ்தே 

மயி ஸந்து  தே மனி ஸந்து ||

இதில் சரீர இந்திரியங்களின் சக்தியும், ஆரோக்கியமும் வேண்டப்படுகின்றது, சிரத்தையை வேண்டப்படுகின்றது, இறைவனுடைய அருள் வேண்டப்படுகின்றது, ஆத்ம ஞானத்திற்கு தகுதிகள் வேண்டப்படுகின்றது.

மம அங்காணி – என்னுடைய உடலுறுப்புக்கள்
ஆப்யாயந்து – ஆற்றலை அடையட்டும், சக்தியை அடையட்டும்
வாக், பிராணஹ, சக்ஷு, ஸ்ரோத்ரம் – எல்லா கர்ம இந்திரியங்களும், ஞான இந்திரியங்களும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

அதோ2 ப3லம் இந்திரியாணி, ஸர்வாணி  – எல்லா இந்திரியங்களும் பலமாக இருக்கட்டும்.  பிரம்ம ஞானம் வளர்வதற்காக இவைகளின் சக்தி இருக்க வேண்டும் என்று வேண்டப்படுகின்றது.
ஸர்வம் பிரம்மவோபநிஷதம் – இந்த உலகத்திலுள்ள அனைத்து பொருட்களும் உபநிஷத்தினால் அறியப்படுகின்ற பிரம்மனாக இருக்கின்றது.
மா அஹம் பிரஹ்மம் நிராகுர்யாம் – நான் அந்த பிரம்மத்தை நீக்காமல் இருப்பேனாக. இது சிரத்தையை காட்டுகின்றது
மா மா பிரஹ்ம நிரகரோத் – பிரம்மன் என்னை நீக்காமல் இருக்கட்டும்.

அனிரா கரணமஸ்த் – என்னால் பிரம்மன் நிராகரிக்காமல் இருக்கட்டும்

அனிரா கரணம் மே அஸ்து – பிரம்மன் என்னை நிராகரிக்காமல் இருக்கட்டும்

  • இந்த பிரம்மனிடத்தில் எனக்கு இருக்கும் நம்பிக்கை சிரத்தை என்னை விட்டு போகாமல் இருக்க வேண்டும்.
  • என்னுடைய லட்சியம் பிரம்மத்தை அடைவது என்ற குறிக்கோள் என்னை விட்டு நீங்காது இருக்கட்டும்
  • என்னுடைய முமுக்‌ஷுத்துவம் என்னை விட்டு போக வேண்டாம்
  • உதாசீன புத்தி என்னிடத்தில் வரக்கூடாது.  மோட்ச மார்க்கத்தில் எனக்கு அவநம்பிக்கை வந்து விடக்கூடாது.

மா பிரஹ்ம மா நிராகரோதி: நான் எப்பொழுதும் ஈஸ்வரனுடய கருணைக்கு தகுதியானவனாக இருக்க வேண்டும்.  ஈஸ்வரனுடைய அனுக்கிரஹம் என்றென்றும் எனக்கு கிடைக்க வேண்டும்.  மோட்சத்தை அடையும் லட்சியத்தில் மாறாமல் இருக்க வேண்டும்.
ததா3மனி நிரதே ய உபநிஷஸ்து த4ர்மாஸ்தே மயி ஸந்து தே மயி ஸந்து:
அந்த பிரம்மத்தை அறிகின்ற மார்க்கத்தில் முழுமையாக ஈடுபட்டுள்ள என்னிடத்தில் உபநிஷத்தில் என்னென்ன தகுதிகள் சொல்லியிருக்கின்றதோ அவைகள் இருக்கட்டும்
உபநிஷத்தில் கூறப்பட்டுள்ள தர்மங்கள், சாதன-சதுஷ்டய-சம்பத்தி என்ற தகுதிகள் என்னிடத்தில் நிலை பெறட்டும்.

  1. விவேகம் – உலகத்திலுள்ள அனைத்தும் நிலையற்றவை அவைகள் என்னுடைய லட்சியமல்ல என்று அறிந்து கொள்ளுதல்
  2. வைராக்கியம்   – இந்த லட்சியத்தில் நிலையாக இருக்க உதவுகிறது
  3. முமுக்ஷுத்வம்  – அந்த லட்சியத்தை நாடி செல்ல உதவுகிறது
  4. சம                            – மன அமைதியாக வைத்திருத்தல், கட்டுபாட்டுடன் வைத்திருத்தல்
  5. 3ம                         –  இந்திரியங்களை அமைதியாக வைத்திருத்தல்
  6. உபரதி                    –  இந்த சம, தமத்தை தொடர்ந்து கடைப்பிடிக்க உதவுவது
  7. திதிக்ஷா                –  இருமைகளை சகித்து கொள்ளுதல், பொறுத்துக் கொள்ளுதல்
  8. சமாதானம்          –  நாம் அடைய நினைக்கும் லட்சியத்தில் ஈடுபாட்டுடன் இருத்தல்

———————————————————————————————————————————————-

காண்டம் – 1

மந்திரம்1

கேனேஷிதம் பததி ப்ரேஷிதம் மன: கேன ப்ராண: ப்ரத2ம: ப்ரௌதி யுக்த: |

கேஷிதாம் வாசமிமாம் வத3ந்தி சக்ஷு: ஶ்ரோத்ரம் க உ தே3வோ யுனக்தி ||

கேன இஷிதம்                            யாரால் ஆசைப்பட்டு,

ப்ரேஷிதம் மனஹ பததி       பலவந்தபடுத்தப்பட்டதாக மனது செயல்படுகிறது

கேன யுக்த                                    யாரால் பொருந்தியவனாக

ப்ரதம ப்ராணஹ ப்ரைதி      நம்முடைய மூச்சுக்காற்று செயல்பட்டு கொண்டிருக்கின்றது

கேன இஷிதாம்                         யாருடைய ஆணையால்

இமாம் வாசம் வதந்தி           இந்த வாக்கானது பேசப்படுகின்றது

தேவோ யுனக்தி                       எந்த தேவனின் ஆணையினால்

சக்ஷு ஸ்ரோத்ரம்                   கண்ணும், காதும் செயல்படுகிறது

இந்த ஸ்தூல, சூட்சும சரீரத்திற்கு வேறான ஒரு சேதன சக்தி இருக்க வேண்டும் என்று தெரிகின்றது.  இதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த கேள்வி கேட்கப்பட்டிருக்கின்றது.  அதனுடைய ஸ்வரூபம் என்ன என்பதை அறிந்து கொள்ள சிஷ்யன் நினைக்கின்றான்

  •       ஸ்தூல சரீரமானது மரணத்திலும்,முக்தி நிலையிலும், ஆழ்ந்த உறக்கத்திலும் ஜடமாகி விடுகின்றது.  எனவே வேறு ஏதோ ஒன்று சேதனமாக இருந்து கொண்டு இந்த ஸ்தூல சரீரத்தை இயக்குகிறது
  • சூட்சும சரீரமும் ஜடமாகத்தான் இருந்தாக வேண்டும் என்ற அறிவுடன் இருக்கின்றான்
  • மனம் ஜடம் என்று அறிந்து கொள்வது கடினம். சூட்சும சரீரமானது சூட்சும பூதத்திலிருந்து உருவானது.  சூட்சும சரீரம் அந்தக்கரணமாக இருக்கின்றது.  எந்தவொரு கரணத்திற்கும் அதை இயக்க ஒரு கர்த்தா இருந்தாக வேண்டும், அது தானாக இயங்க முடியாது.  எனவே இந்திரியங்களை, அந்தக்கரணத்தை இயக்குவதற்கு ஒரு கர்த்தா நிச்சயமாக இருந்தாக வேண்டும்,
  • தேரானது பலவிதமான பொருட்களை கொண்டு உருவாக்குகிறார்கள். ஆனால் அதில் கடவுளை வைத்து இழுத்து வீதி உலா வருகிறார்கள்.
  • இந்த கர்த்தாவானது உடலுக்கு வேறுபட்டதா அல்லது உடலோடு ஒட்டியிருக்கிறதா?இதனுடைய உண்மையான ஸ்வரூபமென்ன ?
  •       நமது சக்திக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒன்று மனதை செயல்படுத்தி கொண்டிருக்கின்றது.
  •       ஏதோவொரு தத்துவத்தின் இருப்பினால்தான் நம் மனமானது செயல்படுகிறது?நமது புலன்களையும் வேறொரு சக்தியானது இயக்குகின்றது.
  •       நாம் உணர்வுமயமாக இருப்பதற்கு எது காரணமாக இருக்கிறது?.

இந்த வினாக்களுக்கெல்லாம் அடுத்த மந்திரத்தில் விளக்கம் தரப்படுகின்றது.

மந்திரம்2

ஶ்ரோத்ரஸ்ய ஶ்ரோத்ரம் மனஸோ மனோ

யத்3வாசோ ஹ வாசம் ஸ உ ப்ராணஸ்ய ப்ராண: |

சக்ஷுஷஶ்சக்ஷுரஹிமுச்ய தீரா:

ப்ரேத்யாஸ்மால்லோகாத3ம்ருதா ப4வந்தி ||

 

ஸ்ரோத்ரஸ்ய ஸ்ரோத்ரம்         காதுக்கு காதாக இருப்பது எதுவோ

மனஸஹ மனோ யத்3                  மனதிற்கும் மனதாக இருப்பது எதுவோ

வாசோ ஹ வாசம்                           சொல்லுக்கும் சொல்லாக இருப்பது எதுவோ

ஸஹ ப்ராணஸ்ய ப்ராண          பிராணனுக்கு பிராணனாக இருப்பது எதுவோ

சக்‌ஷுஷ்2ச சக்‌ஷூஹு               கண்ணுக்கு கண்ணாக இருப்பது எதுவோ

தீரா                                                         அதுவே ஆத்மா என்று புரிந்து கொண்டிருக்கும் புருஷர்கள்

அஸ்மாத் லோகாத்3 அதிமுச்ய    இந்த உலகினின்றும் விடுபட்டு

ப்ரேத்ய                                                 உடலை கடந்து சென்று

அம்ருதா ப4வந்தி                          அழிவற்றவர்களாகிறார்கள்.


அதுதான் இவைகள் இயங்குவதற்கு காரணமாக இருக்கிறது.  இதை அறிந்த தீரர்கள் இந்த உடலின் நான் என்ற புத்தியையும், அபிமானத்தையும் விட்டுவிடுகிறார்கள். உணர்வற்ற ஜடமான இந்த உடலின் மீது நான் என்ற புத்தியை விட்டுவிடுகிறார்கள்..  இந்த மூன்று சரீரத்திற்கும் வேறான சேதன தத்துவமான ஆத்மாதான் முதல் மந்திரத்தில் கேட்ட கேள்விக்கு பதிலாகும்.

விசாரம்:
சைதன்யத்தை சார்ந்துதான் நமது உடலிருக்கிறது. ஆனால்  இது நமது அனுபவத்திற்கு முரணாக இருக்கிறது. ஒன்றுமே தெரியாத விஷயத்தை நேரிடையாக தெரிய வைத்து விடலாம்.  ஆனால் ஒரு விஷயத்தை தவறாக புரிந்து கொள்ளும் போது இரண்டு நிலைகளில் அதை புரிய வைக்க வேண்டும். உதாரணமாக கயிற்றை பார்த்து பாம்பு என்று சொல்லும்போது இதில் கயிற்றை பற்றிய அறிவும் இருக்கிறது, பாம்பும் தெரிகிறது.  இந்த விஷயத்தில் முதலில் பாம்பை அவன் எண்ணத்திலிருந்து நீக்க வேண்டும், பிறகு அது கயிறுதான் அது என்று சொல்ல வேண்டும்.

ஆத்ம தத்துவம்:
நாம் நம் உடல் உணர்வுடையதாக இருக்கின்றது என்று நினைத்துக் கொண்டு இருக்கின்றோம். இதை முதலில் மனதிலிருந்து நீக்க வேண்டும். பிறகு ஆத்மாவைப் பற்றி புரிய வைக்க வேண்டும். இந்த முறையையே அத்யாஸ-அபவாதம் என்று அழைக்கப்படுகின்றது.  ஆத்மாவின் ஸ்வரூபம் சேதனம், அனாத்மாவின் ஸ்வரூபம் ஜடம். நாம் ஆத்மாவின் உணர்வு ஸ்வரூபத்தை ஜடமான உடலில் ஏற்றி வைத்து இந்த உடல் சேதனமானது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.  உடலின் தர்மத்தை ஆத்மாவில் ஏற்றி வைத்திருக்கின்றோம்.

நம் உடலின் தர்மம் மாற்றம் அடைந்து கொண்டிருப்பது. மேலும் உடலின் எந்த பகுதி அறிவுடன் செயல்படுகின்றதோ அதற்கு பின்னே சேதனத்வம் இருக்கின்றது. காதால் கேட்கப்படும் சக்தியானது அதற்கு பின்னே இருந்து கொண்டிருக்கும் ஆத்மாவினால்தான் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. காதுக்கு காதாக இருப்பது ஆத்ம தத்துவம். கண்ணுக்கு கண்ணாக இருப்பதற்கு காரணமாக இருப்பது அதற்கும் வேறாக உள்ள ஒரு சேதன தத்துவம் அதுவே ஆத்மா என்று அறிந்து கொள்ள வேண்டும்.  இவைகள் நமக்கு அனுபவமாக இருந்தாலும் உண்மையான அந்த ஆத்மாவை புரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக ஆகாசம் நீல வர்ணமாக அனுபவத்தில் தெரிகின்றது, ஆனால் ஆராய்ந்து பார்த்து அடையும் அறிவைக் கொண்டு அனுபவம் தவறு என்று புரிந்து கொள்கிறோம்.

காதுக்கு கேட்கக்கூடிய குணத்தையும், கண்ணுக்கு பார்க்க கூடிய குணத்தையும் கொடுப்பது சைதன்ய ஸ்வரூபமான ஆத்மாதான்.  ஸ்ரோத்ரஸ்ய ஸ்ரோத்ரம் என்ற வாக்கியத்தில் ஸ்ரோத்ரஸ்ய என்பது ஆபாஸ சைதன்யத்தையும், ஸ்ரோத்ரம் என்பது ஸ்வரூப சைதன்யத்தையும் குறிக்கின்றது.  கண்ணாடியில் தெரியும் சூரியபிம்பத்தை வைத்து சூரியனை குறிப்பிட, சூரியனுக்கு சூரியன் என்று சொல்வது போல புலன்கள் வெளிபடுத்தும் சக்தியை ஆத்மாவினுடையது என்று புரிந்து கொள்ள வேண்டும்.
 

  • ஆத்மா கரணங்களிலிருந்து வேறுபட்டிருப்பதை இதை வைத்து புரிந்து கொள்ளலாம்.
  • கரணங்களை வியாபித்துள்ளது தனியாக வேறெங்கும் இல்லை
  • கரணங்களுடைய செயல்களுக்கு காரணமாகவும் இருக்கிறது
  • கரணத்திலிருக்கும் சேதனத்வம் ஆத்மாவைச் சேர்ந்தது.

மந்திரம்3

ந தத்ர சக்ஷுர்கா3ச்ச2தி ந வாக்3க3ச்ச2தி நோ மனோ ந வித்3மோ நவிஜானேமோ யதை2தத3னுஶிஷ்யாத3ன்யதே3வத்தத்3விதி3தாத3தோ2 அவிதி3தாத3தி4 |

இதி2 ஶுஶ்ரமபூர்வேஷாம் யே நஸ்தத்3வ்யாசக்ஷிரே ||

ஆத்மாவுக்கு அப்பிரமேயம் என்ற லக்‌ஷணம் கொடுக்கப்படுகின்றது. அப்பிரமேயம் என்றால் எந்த பிரமாணத்தினாலும் அறிய முடியாது.

ந தத்ர                        இந்த ஆத்மாவிடத்தில்

சக்ஷு ந கச்சதி       கண்களால் இதைப் பார்க்க முடியாது. இந்த இடத்தில் அனைத்து ஞான இந்திரியங்களாலும் ஆத்மாவை கிரகிக்க முடியாது என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

ந வாக்3 க3ச்சதி –    சொற்களாலும் கிரகிக்க முடியாது.  இப்படி சொல்லும் போது அனைத்து கர்மேந்திரியங்களாலும் கிரகிக்க முடியாது என்று புரிந்து கொள்ள வேண்டும்,  வேத பிரமாணம் ஆத்மாவாக இல்லாததையெல்லாம் நீக்கி விடுகிறது எனவே அது தானாகவே விளங்கி விடுகின்றது, நாம் உணர்ந்து கொள்கின்றோம்.

ந மனஹ                     மனதாலும் கிரகிக்க முடியாது இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது ஆத்மா தானாகவே விளங்கிக் கொண்டு இருக்கிறது.  அதை விளக்க எதுவும் தேவையில்லை

ந வித்3மஹ              நான் ஆத்மாவை அறியவில்லை

ந விஜானீமஹ       எங்களுக்கு தெரியவில்லை, பார்க்கவில்லை

யதா2 தத்3 அனுஸி2ஷ்யாத் – இதை எப்படி விளக்குவது என்றும் தெரியாது.

 

ஆத்மாவை அனுபவிக்கப்படும் பொருளாக சிஷ்யன் நினைத்துக் கொண்டிருப்பது இந்த ஸ்லோகத்தில் தெரிகிறது.  எனவே அது அனுபவிக்கப்படும் பொருளல்ல, விஷயமல்ல அதை காட்டிக்கொடுக்கவும் முடியாது என்று குரு ஆத்மாவின் லக்ஷணத்தை தெளிவாக்குகிறார்.

 

ஆத்மா அனுபவிக்க கூடிய விஷயமுமல்ல, பொருளுமல்ல என்று புரிந்து கொள்வதே இறுதியான ஞானம்.  அனாத்மாக்களான ஸ்தூல, சூக்ஷும பஞ்ச பூதங்கள், காரண, காரிய வெளித்தோற்றத்திற்கு வந்தது, வராதது, அறிந்தது, அறியப்படாதது.

 

விதி3த3ம்:         எவையெல்லாம் அறியக்கூடியதோ, அனுபவித்து அறியபட்டதோ, பொதுவாக மனிதர்களால் அறியமுடிவது, அறிந்து கொண்டு இருப்பது.

அவிதிதம்:        யாராலும் அறிய முடியாதது, சூன்யம்.  எவையெல்லாம் விதித தத்துவமாக இருக்கிறதோ அவற்றிற்கு வேறானது.  அறியாததைக் காட்டிலும் வேறானது.

விதிதத்திற்கும், அவிதிதத்திற்கும் வேறானது ஆத்மதத்துவம்.

அன்யதேவ தத் விதிதாத்      இந்த ஆத்மா அறிந்ததைக் காட்டிலும் வேறானது.

அதோ2 அவிதிதாத் அதி4       அறியாததைக் காட்டிலும் வேறானது ஆத்மா.

 

நான் என்று அறியாமலில்லை எனவே அவிதத்தில் சேர்க்க முடியாது.  நான் என்னை அறிந்துள்ளேன் என்றால் எதன் மூலம் அறிந்தேன், எதை அறிந்தேன் என்று கேள்வி எழுகின்றது.  எனவே நான் அறிந்ததைக் காட்டிலும், அறியாததைக் காட்டிலும் வேறானவன்.  இந்த நான் ஆத்மாவை குறிக்கின்றது.

இதி ஷுஸ்ரும பூர்வேஷாம்:      இந்த தத்துவமானது இவ்விதம் எங்களுக்கு உபதேசிக்கப்பட்டது; ( எங்களுடைய குருவின் மூலமாக கூறப்பட்டது)

யே ந தத் வ்யாச சக்ஷிரே              எந்த குருமார்கள் இந்த தத்துவத்தை அறிந்திருந்தார்களோ அவர்களிடமிருந்து எங்களுக்கு உபதேசிக்கபட்ட்து.


வெளிச்சம் இருந்தால்தான் கண்ணுக்கு பார்க்கும் சக்தி உண்டு.  அது போல சிஷ்யர்களுக்கு உபநிஷத்தின் மந்திர உபதேசம் பெறுவதற்கு குரு என்கின்ற வெளிச்சம் தேவை. தண்ணீர் கொண்டு வர உதவும் பாத்திரம் போல குரு விளங்குகின்றார். எனவே குருவின் துணை மிகவும் அவசியம். குருவானவர் மந்திரத்தினுடைய சரியான பொருளை சொல்லக்கூடியவர், பரம்பரையாக சொல்லபட்டதை சொல்லக்கூடியவர்

மந்திரம்4

யத்3வாசாÅனப்யுதி3தம் யேன வாக3ப்யூத்3யதே   |

ததே3வ ப்ரஹ்ம த்வம் வித்3தி4 நேத3ம் யதி3த3முபாஸதே ||

யத்3 வாசா அனப்யுதிதம்       –    எந்தவொரு தத்துவமானது நம்முடைய சொற்களால் விளக்கப்படாதது. ஆனால்

யேன வாக்3 அப்யூத்3யதே             –  எதனால் வாக்கு விளக்கப்படுகின்றதோ

ததே3வ ப்ரஹ்ம த்வம் வித்3தி4  –  அதுவே பிரம்ம தத்துவம் என்று அறிவாயாக.

ந இதம் யத்3 இத3ம் உபாஸதே  –  தேவதைகளை வழிபட்டுக் கொண்டிருந்தாலும் அதுவே பிரம்மனல்ல.


எந்தவொரு அறிவு ஸ்வரூபம் நம் உடலுக்குள் இருந்து கொண்டு ஐம்புலன்களையும் பிரகாசப்படுத்திக் கொண்டிருக்கின்றது ஆனால் புலன்களால் விளக்க முடியாததாக இருக்கின்றது அதுவே பிரம்மன் என்று அறிந்து கொள்.  அதாவது ஜீவனும் பிரம்மனும் ஒன்றே என்று புரிந்து கொள்வாயாக என்று இது உணர்த்துகின்றது.  ஜீவனை பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஆத்மாவும், உலகத்தை பிரகாசித்துக் கொண்டிருக்கும் பிரம்மனும் ஒன்றே என்று அறிந்து கொள்ள வேண்டும்.  இதுவே உபநிஷத்தின் மையக் கருத்து.  இது ஜீவ-ஈஸ்வர ஐக்கியத்தை பேசுகின்ற மந்திரமாக இருக்கின்றது.

மாயையுடன் கூடிய நிர்குண பிரம்மன்தான் சகுண பிரம்மன்.  ஈஸ்வரன் அனைத்து படைப்புக்கும் காரணமானவர், பிரம்மன் மாயையின் துணையற்ற ஈஸ்வரன்.
நிர்குணபிரம்மன் à சகுண பிரம்மன் (மாயை + ஈஸ்வரன்) à இஷ்ட தேவதை ( நமக்கு பிடித்தமான தெய்வ ரூபம் ) à அதிஷ்டான தேவதை ( ஒவ்வொரு ஐஸ்வர்யத்திற்கும் அதிஷ்டானமாக ஒரு சாஸ்திரம் அறிமுகப்படுத்தி இருக்கின்றது )  அதிஷ்டான தேவதையை வழிபடுவதால் அடையும் பலனாக நாம் சிரத்தைய வளர்க்க வேண்டும். இதிலிருந்து ஈஸ்வரனை தியானிக்கும் நிலைக்கு செல்ல வேண்டும். பிறகு இவைகளை எல்லாம் கடந்து நிர்குண பிரம்மனை தியானித்து அடைய வேண்டும்,

மந்திரம்5
யன்மனஸா ந மனுதே யேனாÅÅஹுர்மனோ மதம் |
ததே3வ ப்3ரஹ்மத்வம் வித்3தி4 நேத3ம் யதி3த3முபாஸதே ||
பிரம்மத்தை ஒரு பொருளாக, விஷயமாக மனதால் கிரகிக்க முடியாது,  ஆனால் மனதை எது அறிகின்றதோ அதுவே பிரம்மன் என்று அறிந்து கொள்.

மந்திரம்6

யச்சக்ஷுஷா ந பஶ்யதி யேன சக்ஷூம்ஷி பஶ்யதி |

ததே3வ ப்3ரஹ்மத்வம் வித்3தி4 நேத3ம் யதி3த3முபாஸதே ||

கண்களால் பார்க்க முடியாது, ஆனால் எது கண்களை பார்க்கின்றதோ, அதுவே பிரம்மன் என்று அறிந்து கொள்.


மந்திரம்7
யச்சோ2த்ரேண ஶ்ருணோதி யேன ஶ்ரோத்ரமித3ம்ஶ்ருதம் |
ததே3வ ப்3ரஹ்மத்வம் வித்3தி4 நேத3ம் யதி3த3முபாஸதே ||
காதால் கேட்க முடியாதது, ஆனால் எது காதை வியாபித்து இருக்கின்றதோ அதுவே பிரம்மன் என்று அறிந்து கொள்.

மந்திரம்8
யத்ப்ரணேன ந ப்ராணிதி யேன ப்ராண: ப்ரணீயதே |
ததே3வ ப்3ரஹ்மத்வம் வித்3தி4 நேத3ம் யதி3த3முபாஸதே ||
எதை நுகர்ந்து பார்த்து அறிய முடியாததாக இருக்கின்றதோ ஆனால் அந்த சக்தியை விளக்கி கொண்டிருக்கின்றதோ அதுவே பிரம்மன் என்று அறிந்து கொள்.

———————————————————————————————————————————————-

காண்டம் – 2

மந்திரம்1

யதி3 மன்யஸே ஸுவேதேதி த3ப்4ரமேவாபி
  நூனம் த்வம் வேத்த2 ப்3ரஹ்மணோ ரூபம் |
யத3ஸ்ய த்வம் யத3ஸ்ய தே3வேஷ்வத2 நு
  மீமாம்ஸ்யமேவ தே மன்யே விதி3தம் ||

யதி3 மன்யஸே – ஒருவேளை இவ்விதம் நினைத்தால்

ஸுவேதே இதி – நான் பிரம்மனை நன்கு அறிகிறேன்.

நான் பிரம்மனை நன்கு அறிகிறேன் என்று ஒருவேளை இவ்விதம் நினைத்தால் இப்படி நினைப்பது பிரம்மத்தை ஒரு பொருளாக அறிந்திருப்பது போல் இருக்கிறது. இது தவறான அறிவு. பிரம்மத்தை உன் ஸ்வரூபமாக நினைத்திருக்க வேண்டும்.

3ப்4ரம் ஏவ நுனம்  –  தவறாக, முழுமையற்ற ஸ்வரூபத்தைத்தான்

த்வம் வேத்த2             – நீ அறிந்திருக்கிறாய்

ப்ரஹ்ம ரூபம்            – பிரம்மத்தின் ஸ்வரூபத்தை

யத்3 அஸ்ய                 –  எந்த பிரம்மத்தின் ரூபத்தை

த்வம் தேவேத்4வத2  – மனிதரிடத்திலும், விலங்கிலும் தேவர்களிடத்திலும் வியாபித்திருக்கின்ற பிரம்மத்தை நீ பூரணமாக அறிந்திருக்கமாட்டாய்.

அதனு தே                    – ஆகவே உன்னுடைய அறிவானது

மீமாம்ஸாமேவ      – விசாரத்திற்குட்பட்டது.

மன்யே விதி3தம்     –  நான் பிரம்மனை அறிகின்றேன்.  பிரம்மன் என்னால் நன்கு அறியப்பட்டதாக  கருதுகின்றேன்.

மந்திரம்2
நாஹம்  மன்யே ஸுவேதே3தி நோ ந வேதே3தி வேத3 ச |
யோ நஸ்த3வேத3 த3த்3வேத நோ ந வேத3 ச ||
நான் பிரம்மத்தை அறிகின்றேன் என்று நினைக்கவில்லை, அதேசமயம் பிரம்மத்தை அறியவில்லை என்றும் நினைக்கவில்லை.

ந அஹம் ஸு வேத3 இதி.  நான் பிரம்மத்தை நன்கு அறிகின்றேன்

ந மன்யே –                 என்று கருதவில்லை

ந வேத3 இதி நோ வேத3   அறியவில்லை என்றும் கருதவில்லை என்று இவ்விதம் அறிகிறேன்.

யோ நஹ த்த3 வேத3      சிஷ்யர்களான எங்களுக்குள் எவனொருவன் முதலில் கூறியவாறு அறிந்துள்ளானோ அவனே பிரம்மத்தை சரியாக புரிந்து கொண்டு இருக்கின்றான்.

நோ ந வேதேதி வேத3 ச   நான் அறிகின்றேன் என்றும் கருதவில்லை, அறியவில்லை என்றும் கருதவில்லை என்று புரிந்து கொண்டுள்ளான்.

மந்திரம்3

யஸ்யாமதம் தஸ்ய மதம் மத2ம் யஸ்ய ந வே3த3 ஸ: |

அவக்ஞாதம் விஜானதாம் விக்ஞானதமவிஜானதாம் ||

யஸ்ய அமதம் தஸ்ய மதம்         யாருக்கு பிரம்மன் பொருளாக அறியப்படவில்லையோ அவருக்கு அறியப்பட்டது..

மதம் யஸ்ய ந வேத ஸஹ          யாருக்கு அறியப்பட்டதாக இருக்கின்றதோ, அவர்களுக்கு அறியப்படவில்லை.

அவக்3ஞானதாம் விஜாதம்        அக்ஞானிகளுக்கு அறியப்பட்டதாகவும்

விக்ஞானதம் அவிஜானதாம்    ஞானிகளுக்கு அறியப்படாததாகவும் இருக்கிறது

மந்திரம்4
ப்ரதிபோ3த4விதி3தம் மயம்ம்ருதத்வம் ஹி விந்த3தே |
ஆத்மனா விந்த3தே வீர்யம் வித்3யா விந்த3தேÅம்ருதம் ||

  • பிரம்மத்தை எந்த மாதிரியான விசாரத்தினால் அறிந்து கொள்ள முடியும்.
  • அது எங்கு இருக்கின்றது என்று அறிதல்.
  • எந்த மாதிரியான ஸ்வரூபத்தை உடையதாக இருக்கின்றது.
  • நம்முடைய எண்ணங்களுக்குள் ஆத்மாவை கண்டு கொள்ள வேண்டும்.
  • நம்முடைய ஒவ்வொரு எண்ணங்களையும் சாட்சி ஸ்வரூபமாக பார்க்க வேண்டும்.

எண்ணங்களின் மூலமாகத்தான் ஒன்றைப்பற்றிய அறிவை அடைகின்றோம்.  மனமும் அதற்குப்பின்னே உள்ள சைதன்யம்தான் அறிபவன். அறிய உதவும் கருவியை பயன்படுத்தி, அறியப்படும் பொருளை வியாபித்து அந்த பொருளாக எண்ணங்கள் உருவாகின்றது.  அந்த எண்ணத்தைத்தான் மனம் பார்க்கின்றது. அப்போது அந்த பொருளைப் பற்றிய அறிவு ஏற்படுகிறது. எண்ணத்தில் தோன்றிய அறிவும், பார்த்த பொருளும் ஒன்றாக இருந்தால் அது சரியான அறிவு.  பொருளை பார்த்த பிறகு ஏற்படும் எண்ணங்களின் மூலமாக அறிவை அடைகிறோம்.  அந்த எண்ணங்களில் தவறிருந்தால் அதுதான் அறிவாக இருக்குமேயொழிய பார்த்த பொருள் இருக்காது. (உ-ம்) கயிற்றை சில சமயம் பாம்பாக பார்த்தல்

இந்த எண்ணத்திற்கு அறிவை கொடுக்கும் சக்தி எப்படி வந்தது?

மனமும் ஜடம், அதில் எழும் எண்ணங்களும் ஜடம்.  ஜடமான எண்ணங்களினால் எப்படி அறிவை அடைகிறோம். மனம் உடலின் மீது அபிமானம் வைத்திருக்கும் உணர்வுடையதாக இருக்கிறது.  ஜடமான மனதிலிருந்து எண்ணங்களை பிரகாசப்படுத்தும் அறிவு ஸ்வரூபம் ஒன்று இருக்க வேண்டும். அதனால்தான் அறிவை அடைய முடியும்.  பானைப் பற்றிய எண்ணத்தை அறிவாக மாற்றுவதற்கு ஒரு அறிவு ஸ்வரூபம் இருந்து கொண்டு அதை அறிவாக மாற்ற வேண்டும்.

எண்ணங்களின் ஸ்வரூபம்: எத்தனை பொருட்களை பார்க்கிறோமோ அத்தனை எண்ணங்கள் நம் மனதில் தோன்றுகிறது. ஒவ்வொன்றும் வேறு வேறு தன்மையுடையதாக இருக்கும். எனவே தோன்றும் எண்ணங்கள் எல்லாம் தனித்தன்மையுடையதாக இருக்கும்.  இதற்கு சவிசேஷம் என்று சாஸ்திரம் விருத்தியின் ஸ்வரூபமாக கூறுகின்றது.

ஞானத்தின் ஸ்வரூபம்: சவிசேஷ எண்ணங்களை விளக்குவதற்கு, அறிவாக மாற்றுவதற்கு ஒரே ஒரு ஞானம்தான் இருக்கும்.  (உ-ம்) அறையில் இருக்கும் வெளிச்சம் வெவ்வேறு பொருட்களை காட்டிக் கொடுப்பது போல இந்த ஞானம் இருக்கின்றது.  எனவே ஞானமானது நிர்விசேஷ தன்மையுடையது.

சவிசேஷ ஞானம் = சவிசேஷ விருத்தி + நிர்விசேஷ ஞானம்.

வேற்றுமைகளான எண்ணங்களும் வேற்றுமையற்ற ஞானமும் சேர்ந்து வேற்றுமையான அறிவைக் கொடுக்கின்றது.  எண்ணங்களின் தன்மையான வேற்றுமையை ஞானத்தில் போட்டு விட்டு விதவிதமாக அறிவை அடைந்து விட்டோம் என்று நினைக்கின்றோம்.  நாம் ஒருவரை பார்க்கும் போது கோபம் வந்தால் க்ரோதம் என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது. இன்னொருவரைப் பார்க்கும் போது அன்பு கொண்டால் கருணை என்கின்ற எண்ணம் தோன்றி இருக்கிறது. நான் கோபமடைந்துள்ளேன், அன்பு கொண்டுள்ளேன் என்று எண்ணங்களின் தன்மையை நம் மீது ஏற்றிவைத்திருக்கிறோம்.  சாஸ்திரம் நிர்விசேஷமான அறிவு என்று உபதேசிக்கிறது.  இதை உணர்ந்து விட்டால் அதுவே மோட்ச நிலை.

  எண்ணங்கள் ஞானம்
1 ஜடமானது அறிவு ஸ்வரூபமானது
2 தோன்றி மறைவது (அநித்யம்) நித்யமானது-தோன்றுவதுமில்லை, அழிவதுமில்லை
3 மாற்றத்திற்குட்பட்டது (விகாரம்) நிர்விகாரம் – மாற்றத்திற்குட்படாதது
4 பல எண்ணங்கள் ஒன்றே ஒன்றுதான்
5 சுத்த-அசுத்த குணங்களையுடையது குணங்களற்றது
6 எண்ணங்கள் மூலமாக சுக-துக்கங்களை அனுபவிக்கின்றோம் அசம்சாரியான ஸ்வரூபம்

இதன் மூலம் அறிவது எண்ணங்களின் தன்மைகளை நான் என்று எண்ணிக்கொண்டு சுக-துக்கங்களை அனுபவிக்கின்றோம்.  நான் உணர்வுடன் இருக்கின்றேன் என்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.  இதை உணர்ந்து கொண்டு எண்ணங்களின் தன்மைகளை நானல்ல என்றும் நான் அறிவு ஸ்வரூபம், நானே ஆத்மா என்ற நிலையை அடைந்திட வேண்டும்.  நான் மனதையே பிரகாசிக்கும் சாட்சி, ஆத்மா என்ற உறுதியான நிலையை அடைய வேண்டும்.

மந்திர விளக்கம்:

பிரதி போ4தம்            ஒவ்வொரு எண்ணங்களுக்குள்ளும் வெளிப்பட்ட சைதன்யத்தை

விதிதம்                         அறிவதன் மூலம் ( அது நான் என்ற அறிவதன் மூலம்)

மதம்                               ஆத்மா அறியப்பட்டதாகிறது.

அம்ருதத்வம் ஹி விந்ததே   – இந்த ஞானத்தினால் அடையும் பலன் மரணமற்ற நிலையை அடைதலாகும்

ஆத்மனா                     ஒருமுகப்படுத்தப்பட்ட தூய்மையான மனதினால்

வீர்யம்                           உண்மையை கிரகிக்கும் சக்தியை, அதை காப்பாற்றி வைத்து இருக்கும் சக்தியை, புரிந்தது நிலை பெற்றிடும் சக்தியை.

விந்ததே                      அடைகின்றான்

வித்யயா                     ஞான பலத்தால், அறியாமையை நீக்குகின்ற பலம்

அம்ருதம் விந்ததே       மரணமற்ற நிலையை அடைகின்றான்.

சக்தியை தரும் பொருட்கள் – பணம், மந்திரம், ஔஷதம், ஆள்பலம் ( தன்னைச் சுற்றியிருப்பவர்களின் எண்ணிக்கை) இவற்றை துறக்கும் சக்தியைத்தான் பெரும் சக்தி என்று சங்கரர்  கூறுகின்றார்.

மந்திரம்5
இத3ம் சேத3வேதீ3த3த2 மத்யமஸ்தி ந சேதி3ஹாவேதீ3ன்மஹதீ விஅனஷ்டி |
பூ4தேஷு பூ4தேஷு விசித்ய தீ4ரா: ப்ரேத்யாஸ்மால்லோகாத3ம்ருதா ப4வந்தி ||
ஒருவேளை இந்தப்பிறவியில் ஆத்ம தத்துவத்தை புரிந்து கொண்டால், இந்தப் பிறவியை நன்கு பயன்படுத்திக் கொண்டவனாகின்றான்.  இவ்வாறு அறியவில்லை என்றால் பெரும் நஷ்டத்தை  அடைந்தவனாகின்றான்.

இஹ அவேதி3த் சேத் – இந்த பிறவியிலே இந்த பிரம்மத்தை அறிந்து கொண்டால்
அதஸத்யம் அஸ்தி – பிறவியெடுத்ததற்கு அர்த்தம் உண்டாகின்றது, பிறந்ததற்கு உண்மையான பலனாக இருக்கும்.
இஹ  சேத் அவேதி  – ஒருவேளை இந்த பிரம்மத்தை அறியவில்லை என்றால்
மஹத் வினஷ்டி           – அவன் மிகப்பெரிய இழப்பை அடைகிறான்.

எனவே நமக்கு கிடைத்த இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உண்மைப்பொருளை அடைந்து இந்த பிறவி சக்கரத்திலிருந்து விடுபட்டு விட வேண்டும்.  இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டால் மிகப்பெரிய நஷ்டத்தை அடைந்ததற்கு சமமாகும்.  சந்தனக்கட்டையை விறகு கட்டையாக பயன்படுத்துவது போல நம் சரீரத்தை பயன்படுத்தக் கூடாது. என்ற் கூறுகிறார்கள் பிரம்மத்தை அறிந்த தீரர்கள், பண்டிதர்கள், சான்றோர்கள்

பூதேஷு பூதேஷு – எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் ஒரே ஒரு தத்துவம்தான் இயங்கிக் கொண்டு இருக்கின்றது என்று அறிந்துக் கொண்டவர்கள் பிறப்பு, இறப்பற்றவர்களாகின்றார்கள்.

 

———————————————————————————————————————————————-

காண்டம்3

முகவுரை

  • கர்வத்தை நீக்க வேண்டும், எதைக் குறித்தும் நமக்கு கர்வம் வந்து விடக்கூடாது
  • நாம் அடையும் எதுவும் நிலையானதல்ல என்றுணர்ந்து கொண்டால் நமக்கு கர்வம் வராது
  • நாம் வாழ்க்கையில் அடையும் பெருமைகள் அனைத்தும் இறைவனுடைய பிரசாதமாகவும் அவருடைய கருணையால் அடைந்தது என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • ஸ்ரத்தா, சாதன சதுஷ்டய சம்பத்தி ஆகிய தகுதிகளை அடைந்திட வேண்டும்.
  • தன்னை அறிவதற்கு அதை உபதேசம் செய்வதற்கு தனக்கு வேறாக உள்ள குரு தேவை,
  • பரமாத்மாவினுடைய இருப்பு எடுத்துக் காட்டப்படுகிறது. பிரமாணங்களால் அறியப்படாததாக இருக்கிறது. எனவே இது அபிரமேயம்
  • இந்த பிரம்மத்தை அறிந்து கொள்வது மிக மிகக் கடினம்.
  • இந்த பிரம்மமானது மிகவும் சூட்சுமமாக இருக்கிறது.  இதற்கு அவயவங்கள் இல்லை, குணங்களில்லாதது, அதைக் காட்டிக் கொடுக்கக் கூடிய எதுவும் இல்லாதிருப்பதால் இதன் பெருமை பேசப்படுகின்றது.
  • சொர்க்கத்தை அடைவதோ, தேவதையாக மாறுவதோ மோட்சமல்ல, அவைகள் நம்முடைய லட்சியமுமல்ல.
  • சிலவகையான தியானங்கள் சொல்லப்பட்டிருக்கின்றது.

மந்திரம்1

ப்3ரஹ்ம ஹ தே3வேப்4யோ விஜிக்3யே தஸ்ய ஹ
  ப்3ரஹ்மணோ விஜயே தே3வா அமஹீயந்த |
த ஐக்க்ஷந்தாஸ்மாகமேவாயம் விஜய: அஸ்மாகமேவாயம் மஹிமேதி ||
பிரம்மனே ( ஈஸ்வரனே ) தேவர்கள் வெற்றி அடைவதற்கு சக்தியை கொடுத்திருக்கிறது. அந்த பிரம்மத்தின் வெற்றியால் தேவர்கள் பெருமை அடைந்தனர்.  ஆனால் தேவர்கள் இந்த பெருமை எங்களைத்தான் சார்ந்தது என்று நினைத்தார்கள்

மந்திரம்2
தத்3தை4ஷாம் விஜக்3ஞோ தேப்4யோ ஹப்ராது3ர்ப3பூ4வ |
தத்ர வ்யஜானத் கிமித3ம் யக்ஷமதி ||
தேவர்கள் அடைந்த கர்வத்தை பிரம்மன் தெரிந்து கொண்டார்.  அவர்களுடைய கர்வத்தை அடக்கி உண்மையை உணர்த்துவதற்கு யட்சனாக (தெரிந்தும் தெரியாமலும் தோற்றமளிக்கும் யக்ஷ ரூபம் ) அவர்கள் முன் தோன்றியது. அந்த உருவத்தை அவர்களால் அறிய முடியவில்லை.  யார் இந்த யக்ஷன் என்று வியந்தனர்.

மந்திரம்3
தேÅக்3னிமப்3ருவன் ஜாதவேத3 ஏஜத்3விஜானீஹி கிமேதத்3யக்ஷமதி ததே2தி ||
தேவர்கள் அக்னிதேவரிடம் எல்லாம் அறிந்தவரே நம்முன் காட்சியளிக்கும் இந்த யக்ஷன் யாரென்று அறிந்து வாரும் என்று கூறினார்கள்.  அவரும் அப்படியே ஆகட்டும் என்று புறப்பட்டார்.

மந்திரம்4
தத3ப்4யத்3ரவத்தமப்4யவத3த் கோÅஸீதி அக்3னிர்வா
   அஹமஸ்மீத்யப்3ரவீத்3 ஜாதவேதா3 வா அஹமஸ்மீதி ||
அக்னிதேவர் யக்ஷன் அருகில் சென்றார்.  யக்ஷன் அவரை பார்த்து, நீ யார் என்று கேட்டது.  என்னை அக்னிதேவன் என்று அழைப்பார்கள். நான் எல்லாம் அறிந்தவன் என்ற புகழை உடையவனாக இருக்கிறேன் என்று பதிலளித்தார்.

மந்திரம்5
தஸ்மிம்ஸ்த்வயி கிம் வீர்யமிதி அபீத3ம்ஸர்வம்
  த3ஹேயம் யதி3தம் ப்ருதி2வ்யாமிதி ||
உன்னிடத்தில் எத்தகைய சக்தி இருக்கின்றது என்று யக்ஷன் கேட்டது. அதற்கு அக்னிதேவன் இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் எரித்து விடும் சக்தியுடையவன் என்று கூறியது.

மந்திரம்6
தஸ்மை த்ருணம் நித3தா4வேதத்3த3ஹேதி  தது3பப்ரேயாய
  ஸர்வஜவேன தத்ர ஶ்ஶாக் த3க்3து4ம் ஸ தத ஏவ
  நிவவ்ருதே நைததஶகம் விக்3ஞாதும் யதே3தத்3யக்ஷமிதி ||
அக்னிதேவன் முன்னே காய்ந்த புல்லை யக்ஷன் வைத்துவிட்டு இதை எரித்துவிடு பார்க்கலாம் என்று கூறினார்.  தன்னுடைய முழு சக்தியையும் பயன்படுத்தி அதை எரிக்க முயற்சி செய்தார். ஆனால் அவரால் புல்லை எரிக்க முடியவில்லை.  அந்த இடத்திலிருந்து உடனே திரும்பி விட்டார். என்னால் அந்த யக்ஷனை அறிந்து கொள்ள முடியவில்லை என்று கூறிவிட்டார்.

மந்திரம்7
அத2 வாயுமப்3ருவன் வாயவேதாத்3விஜானீஹி கிமேதத்3யக்ஷமதி ததே2தி ||

பிறகு வாயுதேவர் அந்த யக்ஷனை அறிந்து கொண்டு வா என்று அனுப்பினார்கள். அவரும் அப்படியே ஆகட்டும் என்று கூறிவிட்டு சென்றார்.

மந்திரம்8
தத3ப்4யத்3ரவத்தமப்4யவத3த் கோÅஸீதி வாயுர்வா
   அஹமஸ்மீத்யப்3ரவீத்3 மாதரிஶ்வா வா அஹமஸ்மீதி ||
யக்ஷனருகில் சென்றதும் அது வாயுதேவனை நீ யார் என்று கேட்டது.  நான் வாயுதேவன், ஆகாசத்தில் தடையின்றி சஞ்சரிப்பவன் என்ற பெயர் பெற்றவனாக இருக்கின்றேன்.

மந்திரம்9
தஸ்மிம்ஸ்த்வயி கிம் வீர்யமிதி அபீத3ம்ஸர்வமாத3தீ3ய
  யதி3தம் ப்ருதி2வ்யாமிதி ||
அப்படிபட்ட உன்னிடத்தில் எத்தகைய சக்தி இருக்கிறது? அதற்கு அவர் இந்த பூமியில் உள்ள எதையும் தூக்கிவிட முடியும் என்று கூறினார்.

மந்திரம்10
தஸ்மை த்ருணம் நித3தா4வேதத்3த3ஹேதி  தது3பப்ரேயாய
  ஸர்வஜவேன தத்ர ஶ்ஶாகாதா3தும் ஸ தத ஏவ
  நிவவ்ருதே நைதத3ஶாமம் விக்3ஞாதும் யதே3தத்3யக்ஷமிதி ||

அவர் முன் புல்லை வைத்து, இதை தூக்கு பார்க்கலாம் என்று யக்ஷன் கூறினார்.  தன்னுடைய முழுசக்தியையும் பயன்படுத்தியும் அவரால் தூக்க முடியவில்லை. அவரும் அங்கிருந்து திரும்பிவிட்டார். யார் இது என்று அறிய முடியாதவனாக இருக்கிறேன்.

மந்திரம்11
அதே2ந்த்3ரமப்3ருவன் மக4வன்னேதத்3விஜானீஹி கிமேதத்3யக்ஷமிதி
  ததே2தி தத3ப்4யத்3ரவத்தஸ்மாத் திரோத3தே4 ||
தேவர்கள் இந்திரனை பார்த்து, “சக்தி பொருந்தியவரே நீங்களே சென்று அறிந்து வர வேண்டும். என்று வேண்டினார்கள்.  அவரும் அப்படியே ஆகட்டும் என்று கர்வத்துடன் யக்ஷனை அணுகினார். அதை நெருங்கியதும் யக்ஷன் மறைந்து விட்டான்.

மந்திரம்12
ஸ தஸ்மின்னேவாகாஶே ஸ்த்ரியாமாஜகா3ம்
  பஹுஶோப4மானாமுமாம்ஹைமவர்திம் தாம்
  ஹோவாச கிமேதத்3யக்ஷமிதி ||
இந்திரன் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தார்.  யக்ஷன் மறைந்து விட்டான் என்று திரும்பி விடாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தார்  அந்த நேரத்தில் ஒரு பெண் வடிவத்தில் பிரகாசமான தோற்றத்துடன் உமாதேவி காட்சியளித்தாள். அவளிடம் அந்த யக்ஷன் யார் என்று கேட்டார்.

———————————————————————————————————————————————-

காண்டம்– 4

மந்திரம்1
ஸஹ ப்3ரஹ்மேதி ஹோவாச ப்3ரஹ்மணோ வா
 ஏதாத்3விஜயே மஹீயத்4வமிதி ததோ ஹேவ
 விதாஞ்சகார ப்3ரஹ்மேதி ||
அவள் அந்த யக்ஷன் பிரம்மன் என்று கூறினாள்.  நீங்களடைந்த வெற்றி பிரம்மனுடைய பெருமையினால்தான் என்று கூறினாள்.  உமாதேவியின் உபதேசத்தின் மூலம் இந்திரன் புரிந்து கொண்டான்.

மந்திரம்2
தஸ்மாத்3வா ஏதே தே3வா அதி3தராமிவான்யான் தே3வான்
  யத3க்3னிர்வாயுரிந்த்ரஸ்தே ஹ்யேனன்னேதி3ஷ்டம் பஸ்பர்ஶு:
  தே ஹ்யேனத் ப்ரத2மோ விதா3ஞ்சகார ப்3ரஹ்மேதி ||
யக்ஷனுடன் தொடர்பு கொண்ட காரணத்தால்தான் இந்த தேவர்கள் மற்ற தேவர்களை விட உயர்ந்தவர்களாக கருதப்பட்டார்கள். அக்னி, வாயு, இந்திரன் இவர்கள் மட்டும்தான் யக்ஷனோடு மிக அருகில் தொடர்பு கொண்டார்கள். இதுவே பிரம்மன் என்று அறிந்து கொண்டார்கள்.

மந்திரம்3
தஸ்மாத்3வா இந்த்3ரோÅதிதராமிவன்யான் தே3வான் ஸ ஸ்யேனன்னேதி3ஷ்டம் யஸ்பர்ஶ ஸ ஹ்யேனத் விதா3ஞ்சகார ப்3ரஹ்மேதி ||
யக்ஷ ஸ்வரூபத்தை அறிந்ததால்தான், இந்திரன் மற்ற தேவர்களை விட உயர்ந்தவர் என்று கூறப்படுகிறது.  ஏனென்றால் அவர்தான் முதலில் யக்ஷனை பிரம்மனாக அறிந்து கொண்டார்.

மந்திரம்4
தஸ்யைஷ ஆத்ஶ: யதே3தத்3வித்3யுதோ வ்யத்3யுததா3 3
  இதின்ன்யமிமிஷதா3 3 இத்யதி4தை3வதம் ||
ஆதேஶ – உபதேசம்;
ஏஷ – பின்வருமாறு
உபாஸனம் – உப + ஆஸனம் = அருகில் இருத்தல்
யாரை நாம் தியானிக்கின்றோமோ அவரருகில். இருத்தல், மனதில் நினைத்து கொண்டு இருத்தல். ஒரே எண்ணமே மனதில் ஓடிக் கொண்டிருப்பதை கவனித்தல்.

உபே + ஆதானம் – எடுத்துக் கொள்ளுதல் – ஆலம்பன ஆதானம்
இஷ்ட தேவதையை தியானிப்பதற்கு லிங்கமாக ஒன்றை தேர்ந்தெடுத்து வைத்துக் கொண்டு அதன் மூலம் தியானம் செய்தல்
எதுவுமே சாதனமாக இருக்கும்போது துயரமடைவதில்லை, அதையே சாத்தியமாக கொண்டால் துயரத்தை அடைகின்றோம்.

முதல் தியானம்
ஒப்புமையற்ற பிரம்மத்திற்கு கற்பனையாக உவமை ஒன்று கொடுக்கப்-படுகிறது.  உபதேசமாக சொல்லப்படுகிறது.  மின்னலினுடைய பிரகாசத்தை ஈஸ்வரனுக்கு ஒப்பிடப்படுகிறது.  மின்னலானது தனது வெளிச்சத்தால் பொருட்களை காட்டிக் கொடுக்கின்றது.  அது மறைந்ததும் மீண்டும் இருள் சூழ்ந்து கொண்டு பொருட்கள் மறைந்து விடுகின்றது.  அதேபோல ஈஸ்வரன் ஒரு க்ஷணத்தில் ஸ்ருஷ்டியை தோற்றுவித்து பிறகு மீண்டும் தனக்குள் இழுத்துக் கொள்கிறார்.  இப்படி தியானித்தால் ஈஸ்வரனை அறியும் தகுதியை அடைவோம்.  இந்த உலகத்தில் காட்சியளிக்கும் எல்லாமே நிலையற்றவை, எனவே அதன் மீதுள்ள விவகாரத்தை விலக்கிவிட வேண்டும்.

இரண்டாவது தியானம்

இந்த உலகத்தை இருட்டாக்க வேண்டுமென்றால் நம் கண்ணை மூடிவிட்டால் போதும், கண் திறந்து விட்டால் இந்த உலகம் ஸ்ருஷ்டியாகின்றது, கண் மூடி விட்டால் அதுவே லயம் அடைந்து விடுகின்றது. எனவே கண் இமைத்தலை ஆலம்பனமாக கொண்டு ஈஸ்வரனை தியானிக்க வேண்டும்.

மந்திரம்5

அதா2த்4யாத்மம் யதே3தத்3 க3ச்ச2தீவ ச மனோÅனேன 

  சைத்து3யஸ்மரத்யபீ4க்ஷணம் ஸங்கல்ப: ||

அத்யாத்ம – ஜீவன் சம்பந்தப்பட்ட உபாஸனை.
நம்முடைய எண்ணங்களே ஆலம்பனம்.  நம்முடைய ஒவ்வொரு எண்ணங்களும் பிரம்மத்தை விளக்குகின்றது என்று தியானிக்க வேண்டும்.  ஜடமான எண்ணங்களை உணர்வுடன் இருப்பதாக எண்ணுவதற்கு காரணமாக பிரம்மன் இருப்பதை உணர வேண்டும்.  இதனால் நமது மனப்பக்குவம் அடைந்து பிரம்மத்தை அறிந்து கொள்ள உதவும்.  மனமானது எண்ணங்கள் மூலமாக சைதன்ய ஸ்வரூபத்தை அறிய உதவுகிறது.  புகையானது நெருப்பின் இருப்பைக் காட்டிக் கொடுப்பது போல மனதானது பிரம்ம ஞானத்தை அறிய உதவுகிறது.

மந்திரம்6
தத்3த4 தத்3வனம் நாம தத்3வின்மித்யுபாஸிதவ்யம்
  ஸ ய ஏததேவம் வேதா3பி4ஹைனம் ஸர்வாணி
  பூ4தானி ஸம்வாஞ்ச2ந்தி ||
பரஹ்மனை எல்லோராலும் அறியத்தக்கவர் என்று தியானிக்க வேண்டும்.  இதனால் மோட்சத்தை அடைய வேண்டும் என்ற ஆசை நம்மிடத்தில் உருவாகும்.  அதுவே நம்மை பிரஹ்மனை அடையும் செயலில் ஈடுபடுத்தும்.  இப்படியாக ஈஸ்வரனை பூஜிக்க.வேண்டும் என்று தியானித்தால் அவாந்திர-அமுக்ய பலனாக எல்லோராலும் வணங்கக்கூடியவராக இருப்போம்.
வனம் – போற்றதலுக்குரியவர்
நாம – பெயர் பெற்றவர்
உபாஸிதவ்யம் – தியானிக்கப்பட வேண்டும்.
யஹ ஏவம் ஏதத் வேத3 – யார் இவ்வாறு இதை தியானிக்கிறானோ
ஏனம் ஹ ஸ்ர்வாணி பூதானி – அவனை எல்லா ஜீவராசிகளும்
அபிஸம்வாச்சந்தி – பூஜிக்கும்

மந்திரம்7
உபநிஶத3ம் போ4 ப்3ரூஹித்யுக்தா த உபநிஷத்3
  ப்3ராஹ்மீம் வவ த உபநிஷத்3மப்3ரூமேதி ||
போ4 – குருவே!
உபநிஷத3ம் ப்ரூஹி இதி – உபநிஷத்தை எனக்கு கூறுங்கள் என்று சிஷ்யன் கேட்டான்.
தே உபநிஷத் உக்தா – உனக்கு உபநிஷத் என்னால் கூறப்பட்டது.
தே ப்ராஹ்மீம் வாவ – இதுவரை உனக்கு ப்ரஹ்மணை விளக்குகின்ற
உபநிஷதம் அப்ரூம இதி – உபநிஷத்தைத்தான் கூறினேன் என்று குரு முடித்தார்.

மந்திரம்8
தஸ்யை தபோ த3ம: கர்மேதி ப்ரதிஷ்டா:
  வேதா3: ஸர்வாங்கா3னி ஸ்த்யமாயதனம் ||
உபநிஷத்தை குருவின் மூலம் கேட்பதுதான் சரியான முறையில் அறிவை அடைய முடியும்.

தப:- தவம் –    நம்முடைய மனதை சத்துவ குணத்திற்கு உயர்த்த எடுக்கும் முயற்சி. இதை அடைவதால் ஆத்ம ஞானத்தை புரிந்து கொள்ளும் மனதை அடைவோம்.  இப்படிபட்ட மனதினால் ஆத்ம ஞானத்தை அடைய முடியும்.  இதனால் சம்சாரத்தில் இருந்து விடுதலை அடைகிறோம்.

கர்ம           கர்ம யோகமாக செயல்களை செய்தல்

ப்ரதிஷ்டா     ஆதாரங்கள் – உபநிஷத்தை உபதேசமாக குருமுகமாக கேட்டல்

 

அந்த ப்ரஹ்ம ஞானத்திற்கு தவம், புலனடக்கம், கடமையை ஆற்றுதல் ஆகியவைகள் ஆதாரங்கள். வேதங்கள் அதனுடைய எல்லா உறுப்புக்கள்.  வாய்மை அதனுதைய இருப்பிடம் என்று அறிந்து கொள்ள வேண்டும்.

 

மந்திரம்9

யோ வை ஏதாமேவம் வேதா3பஹத்ய பாப்மானமனந்தே

  ஸ்வர்கே3 லோகே ஜ்யேயே ப்ரதிதிஷ்டதி ப்ரதிதிஷ்டதி ||

யஹ வா ஏவம் ஏதாம் வேத3 – யார் இவ்வாறு இந்த உபதேசத்தை புரிந்து கொள்கிறார்களோ

பாப்மான அபஹத்ய – அவன் பாவங்களை நீக்கி

அனந்தே ஜ்யேயே – எல்லையற்றதும், மிக உயர்ந்ததுமாகிய

ஸ்வர்கே லோகே – மோக்ஷத்தில்

ப்ரதிதிஷ்டதி – நிலைபெறுகிறான்.

 

யார் இவ்வாரு இந்த உபதேசத்தை புரிந்து கொள்கிறார்களோ அவர் பாவங்கள் எல்லாம் நீங்கப்பெற்று எல்லையற்றதும், மிக உயர்ந்ததுமாகிய மோட்சத்தை அடைகிறான்.

 

ஓம் தத் ஸத்

ooo000ooo–

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

கடோ உபநிஷத் ஸ்வாமி குருபரானந்தா உபதேசம்

December 25, 2022

கடோ உபநிஷத்

ஸ்வாமி குருபரானந்தா உபதேசம்

முகவுரை

நம்முடைய செயல்களின் மூலம் நாம் இரண்டு வகையான பொருட்களை அடைகின்றோம்.  அவைகள் நிலையான பொருட்கள் (நித்ய வஸ்து), நிலையற்ற பொருட்கள் (அநித்ய வஸ்து).  இவைகளின் விளக்கத்தை கீழே காண்போம்.

 

அநித்ய வஸ்து :     நிலையற்ற பொருளின் லக்‌ஷணம் இது முதலில் இல்லாமல் இருந்து, பிறகு இருப்புக்கு வந்து, அதற்கப்புறம் இல்லாமல் போவது.  இது மூன்று காலங்களிலும் இல்லாதது ( துச்சம் ). இவைகளை முயற்சி செய்து செயல் மூலம்தான் அடைகின்றோம்.  இதை கர்ம சாதனம் என்றும் கூறுவர்.  நம்முடைய உடல்கூட கர்மபலனத்தினால்தான் அடைந்திருக்கின்றோம். எனவே இந்த உடலும் நிலையற்றதாக இருக்கின்றது.  உணவையும், இருக்குமிடத்தையும் நாம் முயற்சி செய்து செயல் மூலம்தான் அடைகின்றோம் இவைகள் அநித்யம் என்று தெரிந்தும் இவைகளிலிருந்து நித்யமான சுகம் கிடைக்கும் என்று நினைக்கின்றோம். இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது எவைகளெல்லாம் அடையப்பெறுகின்றதோ அவைகளெல்லாம் அழிவுக்குட்பட்டது, நிலையற்றது என்ற உண்மைதான்.

 

நித்ய வஸ்து:          நிலையானது, எப்பொழுதும் இருப்பது, இதை செயல் மூலம் அடைய முடியாததால் இது கர்ம சாதனமல்ல.  மேலும் இதை அடைய வேண்டிய அவசியமும் இல்லை.  இதன் இருப்பை உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே இதை ஞான சாதனம் என்று அழைக்கப்படுகிறது.  அநித்ய வஸ்தை அடைந்தாலும் அது அடையாததற்கு சமமானதே,  ஆனால் இதை அறிந்து கொண்டாலே முழு மன நிறைவை கொடுக்கக்கூடியது.  தர்மப்படி வாழ்பவனுக்கு இதை அடைய வேண்டும் என்ற வைராக்கியம் தானாகவே ஏற்படுகின்றது.  இதை அறிய வேண்டும் என்ற உறுதியுடன் இருப்பவர்களை முமுக்‌ஷூ ( அ ) ஜிக்னாஸூ என்று கூறுவர்.

 

இதை எப்படி தெரிந்து கொள்வது என்ற கேள்வி எழுகின்றது.  எந்த அறிவும் தானாக ஏற்படாது அந்த அறிவை அடைய உதவும் ஒரு கரணம் ( கருவி ) தேவைப்படுகின்றது.  அறிவை அடைபவனை பிரமாதா என்று கூறுவர்.  எந்தப்பொருளைப் பற்றிய அறிவை அடைய விரும்புகின்றோமோ அந்தப் பொருளுக்கு பிரமேயம் என்று பெயர்.  அடையும் அறிவுக்கு பிரமா என்று பெயர்.  சாஸ்திரம் ஆறு வகையான பிரமாணங்கள் இருப்பதாக கூறுகின்றது.   அவைகள் 1. பிரத்யக்‌ஷ பிரமாணம் ( முதன்மையான பிரமாணம் ), 2. அனுமான பிரமாணம் ( யூகம் ), 3. அர்த்தாபத்தி பிரமாணம், 4. உபமான பிரமாணம், 5. அனுபலப்தி பிரமாணம், 6. சப்த பிரமாணம் ஆகியவைகளாகும்.

 

ப்ரத்யக்‌ஷம்:            இதை ஜேஷ்ட பிரமாணம் என்றும் அழைப்பர்.  ஐந்து ஞானேந்திரியங்கள் மூலமாக நேரிடையாக ஒன்றைப்பற்றி அறிந்துக் கொள்ளும் முறைக்கு ப்ரத்யக்‌ஷ பிரமாணம் என்று கூறப்படுகின்றது.  (உ-ம்) கண்கள் ஒரு பொருளின் வர்ணத்தை தெரிந்துக் கொள்வதற்கு பிரத்யக்‌ஷ பிரமாணமாக எடுத்துக் கொள்ளலாம்.

 

அனுமானம்             பிரத்யக்‌ஷ பிரமாண மூலமாக நிறைய விஷயங்களை தெரிந்து வைத்திருப்போம்.  அதை ஆதாரமாக ஒன்றைப்பற்றி தெரிந்து கொள்வது. உதாரணமாக எங்கெல்லாம் புகை இருக்கின்றதோ அங்கேயெல்லாம் நெருப்பு இருக்கின்றது என்ற அறிவை அடைவது.  இவ்வாறு யூகத்தின் மூலமாக அறிவை அடைவதற்கு இந்த முறை பயன்படுத்தப்படுகின்றது.

 

அர்த்தாபத்தி           காலையில் எழுந்து நீரினால நனைந்த தெருவை பார்க்கும் போது நேற்று இரவு மழை பெய்திருக்கின்றது என்று யூகித்து அறியும் முறைக்கு அர்த்தாபத்தி என்று பெயர்.

 

உபமானம்                ஒன்றைப்போல இன்னொன்று இருக்கின்றது என்று அறியும் முறையை இவ்வாறு அழைப்பர்.  உதாரணமாக வீட்டில் உள்ள எருமை மாடு போல காட்டெருமை இருக்கும் என்று கூறுவது.

 

அனுபலப்தி              நாமிருக்கும் அறையில் பூனை இருக்கின்றதா என்று கேட்டால் இல்லை என்று சொல்லலாம்.  இது நாம் ஒன்றை நன்கு ஆராய்ந்து பார்த்து அடையும் அறிவை குறிக்கின்றது.

 

சப்த பிரமாணம்    இது இரண்டு வகையாக இருக்கின்றது.  அவைகள் லௌகீக பிரமாணம், வைதீக பிரமாணம்.  படித்தோ அல்லது மற்றவர்களின் வார்த்தைகள் மூலமாக ஒன்றை பற்றி தெரிந்து கொள்வது.  லௌகீக பிரமாணத்தின் மூலமாக ஒன்றை பற்றி அடையும் அறிவை வேறொரு பிரமாணம் கொண்டு உறுதி செய்து கொள்ளலாம். ஆனால் வேதத்தின் மூலமாக அடையும் அறிவை வேறொன்றின் மூலமாக உறுதி செய்ய முடியாது. அதை அப்படியே முழுமையாக நம்ப வேண்டும்.

 

நித்ய வஸ்துவை வேத பிரமாணத்தின் மூலமாகத்தான் அறிந்து கொள்ள முடியும்.  வேதமானது இரண்டாக பிரிக்கப்பட்டிருக்கின்றது.  அவைகள் கர்ம காண்டம், ஞான காண்டம் ஆகும். கர்மத்தை ஸாதனமாக வைத்துக் கொண்டிருப்பது கர்ம காண்டம், ஞானத்தை ஸாதனமாக கொண்டிருப்பது ஞான காண்டம்.

கடோ உபநிஷத் கிருஷ்ண-யஜூர் வேதத்தில் இருக்கின்றது.  யஜூர் வேதம் இரண்டு பிரிவுகளாக இருக்கின்றது. 1. சுக்ல பகுதி, 2. கிருஷ்ண பகுதி.  சுக்ல பகுதியில் ஈஸாவாஸ்ய உபநிஷத்தும், ப்ருஹதாரண்ய உபநிஷத்தும் இருக்கின்றது.  கிருஷ்ண பகுதியில் கடோ உபநிஷத்தும், தைத்திரீய உபநிஷத்தும் இருக்கின்றது.  கடோ உபநிஷத் கட் என்ற முனிவரால் எழுதப்பட்டிருப்பதால் இந்த பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது.

உபநிஷத் – வார்த்தை விளக்கம்:-
உபநிஷத் = உப + நி + ஷத் என்று பிரிக்கலாம்.
உப – அருகில் (குரு-சாஸ்திரத்தின் அருகில் செல்லுதல்)
நி  – அமர்தல் – கீழே அமர்தல்.  இது பணிவைக் குறிக்கின்றது.
ஷத் – நாசம் – இந்த வித்யாவானது சம்சாரத்தை நீக்கி விடுகின்றது. சுக-துக்கத்தை நீக்கி விடுகின்றது.
சாந்தி பாடம்
சாந்தி – இடையூறுகள் நீக்குதல் – விக்ன நிவிருத்தி
பாடம் – மீண்டும் மீண்டும் கூறுதல் – பிரார்த்தனை செய்தல்
உபநிஷத் படிக்க வந்திருக்கும் மாணவர்கள் இந்த பிரார்த்தனையை செய்கின்றார்கள்.

ஸஹ நாவவது |
ஸஹ நா பு4னக்து |
ஸஹ வீர்யங் கரவாவஹை |
தேஜஸ்வினாவதீ4த2மஸ்து மா வித்3விஷாவஹை |
ஓம் ஶாந்தி, ஶாந்தி, ஶாந்தி ||

ஸஹ – சேர்ந்து;  நௌ – எங்கள் இருவரையும்;  அவது– காப்பாற்றட்டும்.
ஸஹ = ஸ + ஹ = அவன் (ஈஸ்வரன்) + நிச்சயமாக
நௌ அவது – எங்களிருவரையும் (குரு, சிஷ்யன்) காப்பாற்றட்டும்.
ஸஹ நௌ பு4னக்து – அவன் நிச்சயமாக எங்களிருவரையும் காப்பாற்றட்டும்.
ஸஹ வீர்யங் கரவாவஹை – நாங்களிருவரும் சேர்ந்து தேவையான முயற்சி செய்வோமாக.
தேஜஸ்வி + நௌ + அதீதம் + அஸ்து – எங்களிருவருக்கும் வேதாந்த பாடமானது ஒளி பொருந்தியதாக இருக்கட்டும்.
மா வித்விஷாவஹை – நாங்கள் ஒருவரையொருவர் வெறுக்காமலிருப்போமாக.

விசாரம்:-
காப்பாற்று : எதிலிருந்து, யாரிடமிருந்து காப்பாற்ற வேண்டும்.  அவரவர்கள் எதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள விரும்புகின்றார்களோ அதிலிருந்துதான் காப்பாற்றப்படுவார்கள்.  இங்கு சிஷ்யர்கள் தங்களுடைய அறியாமையை போக்கி ஞானத்தை அடைய வந்திருக்கின்றார்கள்.  எனவே இந்த இடத்தில் அறியாமையை நீக்கி ஞானத்தை கொடுத்து காப்பாற்று என்று பொருட்கொள்ள வேண்டும்.  ஞானத்தில் பலனை கொடுத்து காப்பாற்று, அடைந்த ஞானத்தில் நிலைத்தி நிற்க காப்பாற்று.
குரு செய்ய வேண்டிய முயற்சி

  • குருவானவர் தான் எப்படி தன்னுடைய குருவிடமிருந்து கற்றாரோ அதேமாதிரி கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற முயற்சி.
  • சிஷ்யனுடைய மனநிலை, மனப்பக்குவம் இவைகளை புரிந்து கொண்டு உபதேசிக்க வேண்டிய முயற்சி.
  • சிஷ்யன் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதிலை கொடுக்கும் முயற்சி,
  • சிஷ்யன் தெளிவில்லாமல் கேட்கும் கேள்விகளை புரிந்து கொண்டு பதில் சொல்ல வேண்டிய முயற்சி,
  • கிரமமாக உபதேசம் செய்ய வேண்டிய முயற்சி

 

சிஷ்யன் மேற்கொள்ள வேண்டிய முயற்சி:

  • சொல்வதை புரிந்து கொள்ளும் முயற்சி,
  • குரு-சாஸ்திர சிரத்தையுடன் இருக்க வேண்டிய முயற்சி
  • மன ஒருமுகப்பாட்டுடன் பாடத்தை கவனிக்க எடுக்க வேண்டிய முயற்சி
  • நிலைத்து நிற்க காப்பாற்று.

எங்களுடைய படிப்பானது ஒளிப்பொருந்தியதாக இருக்கட்டும்.  நாங்கள் கேட்கும் உபதேசம் எங்களுக்கு நன்கு புரியவும் வேண்டும், மறக்காமலும் இருக்க வேண்டும். எங்களிருவருக்குள் வெறுப்பு உண்டாகமலிருக்கட்டும்.
ஸ்லோகம்1
உஶன்ஹ வை வாஜஸ்ரவஸ: ஸர்வவேத3ஸ த3தௌ3 |
தஸ்ய ஹ நசிகேதா நாம புத்ர ஆஸ ||
முன்னொரு காலத்தில் அன்னத்தை தானமாக கொடுத்து புகழடைந்தவரின் மகன் வாஜஸ்ரவ என்பவர் கர்ம பலனை அடைய விரும்பி செய்கின்ற யாகத்தில் எல்லா பொருட்களையும் கொடுத்துக் கொண்டிருந்தார். அவருக்கு நசிகேதன் என்ற பெயருடைய மகன் இருந்தான்.
ஸ்லோகம்2
தம் குமாரம் ஸந்தம் தக்‌ஷீணாஸூ நியமனாஸு ஸ்ரத்3தா4விவேஶ ஸௌ மன்யத ||
அவன் சிறு வயதுடைய குமாரனாக இருந்த போதிலும் சிரத்தையுடன் இருந்தான்.  தன் தந்தை தட்சணையை கொடுத்துக் கொண்டிருக்கும்போது அவன் சிந்திக்கலானான்.
ஸ்லோகம்3
பீதோத3கா ஜக்3க4த்ருணா து3க்3த4தோ3ஹா நிரிந்த்3ரியா |
அனந்தா3 நாம தே3 லோகாஸ்தான்ஸ க4ச்ச2தி தா த3த3த் ||
இனிமேல் நீர் குடிக்கும் சக்தியில்லாத நிலையில் உள்ளதுமான, புல்லை மேய்ந்து முடித்த நிலையிலுள்ளதுமான. பால் கொடுக்கும் சக்தியை இழந்த நிலையிலுள்ள, கன்று ஈனும் சக்தியை இழந்த நிலையிலுள்ள இப்படிபட்ட பசுவை தானமாக கொடுப்பதன் மூலம்
அநந்தா (சுகமற்ற) என்ற பெயருடைய உலகத்தை தந்தை அடைந்து விடுவார் என்று எண்ணினான்..
ஸ்லோகம்4
: ஹோவாச பிதரம் தத கஸ்மை மாம் தாஸ்யஸிதி |
த்விதீயம் த்ருதீயம் தம் ஹோவாச ம்ருத்யவே த்வா த3தா3மிதி ||
இவ்வாறு சிந்தித்து விட்டு நசிகேதன் தன் தந்தையை பார்த்து, “என்னை யாருக்கு தானமாக கொடுக்கப்போகிறீர்கள் என்று மூன்று முறை கேட்டான்”  பொறுமையிழந்த அவர் உன்னை யமனுக்கு தானமாக கொடுக்கின்றேன் என்று கோபத்துடன் கூறினார்.
ஸ்லோகம்5
பஹூனாமேமி ப்ரத4மோ பஹூனாமேமி மத்யம: |
கிம் ஸ்வித்3யமஸ்ய கர்தவ்யம் யன்மயாத்3ய கரிஷ்யதி ||
பலருக்கும் நான் உத்தமமான சிஷ்யனாக இருந்திருக்கின்றேன், சிலருக்கும் இடைநிலைப்பட்டவனாக இருந்திருக்கின்றேன். ஆனால் எதிலேயும் நான் கடைநிலையில் இல்லையே, பிறகு எதனால என்னை யமனுக்கு கொடுக்கின்றேன் என்று சொன்னார்.  எமனுக்கு செய்ய வேண்டியது என்ன இருக்கின்றது? ஒன்றும் செய்ய வேண்டியதில்லையே!
என்னை கொடுப்பதன் மூலம் எதை அடையப்போகின்றார்.  நசிகேதன் இவ்வாறு சிந்தித்தான்.
ஸ்லோகம்6
அனுபஶ்ய யதா2 பூர்வம் ப்ரதிபஶ்ய ததா2பரே |
ஸஸ்யமிவ மர்த்ய: பச்யதே ஸஸ்யமிவஜாயத் புன: ||
நசிகேதன் இவ்வாறு சிந்தித்தான்.  முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று நினைத்து பாருங்கள் இப்பொழுது இருக்கின்ற சான்றோர்கள் எப்படி வாழ்கின்றார்கள் என்பதையும் சிந்தித்து பாருங்கள்.  மனிதர்கள், தாவரங்கள் அழிகின்றன, மீண்டும் தாவரங்களாகவே பிறக்கின்றார்கள்.  தன் தந்தையின் வாக்கு பொய்யாக்க் கூடாது என்று நசிகேதன் தந்தைக்கு உணர்த்துகின்றான்.  உங்கள் வாக்கு காப்பாற்றப்பட வேண்டும்.  ஆகவே தங்கள் வாக்குப்படி நான் எமலோகம் செல்கின்றேன்.
ஸ்லோகம்7
வைஶ்வனர: ப்ரவிஶத்யதிதி2ர்ப்3ரஹ்மணோ க்3ருஹான் |
தஸ்யைதா ஶாந்திம் குர்வந்தி ஹர் வைவஸ்வதோத3கம் ||
யமதர்ம ராஜா, நெருப்பைப் போல பிராமண விருந்தினர் நம் வீட்டை அடைந்திருக்கின்றார். அவருக்கு மனிதர்கள் இப்படிபட்ட உபசாரத்தை செய்கின்றார்கள்.  எனவே அவரை உபசரிக்க  நீரைக் கொண்டு வாருங்கள் என்று அங்கிருந்தவர்கள் அவரிடம் கூறினர்.

ஸ்லோகம்-8
ஆஶாப்ரதீஞே ஸங்க3தம் ஸூந்ருதாம் சேஷ்டாபூர்தே புத்ரபஶூம்ஶ்ச |
ஏதத்3வ்ருங்க்தே புரூஷஸ்யால்பமேத3ஸோ ய்ஸ்யானஶ்னன்வஸதி
ப்3ரஹ்மணோ க்3ருஹே ||
பிராமண விருந்தினரை சரியாக உபசரிக்காவிட்டால் ஏற்படும் நஷ்டங்களை இந்த ஸ்லோகம் எடுத்துரைக்கின்றது.

எவருடைய வீட்டில் ஒரு பிராமண விருந்தினர் உணவு உட்கொள்ளாமல் இருக்கின்றானோ அந்த அறிவற்ற மனிதனுடைய அனைத்து விருப்பத்தையும், எதிர்பார்ப்பையும் ஸத்ஸங்கத்தினால் வந்த புண்ணியத்தையும் நல்ல சொற்களால் தேடிய புண்ணியத்தையும், யாகத்தாலும், சேவையாலும் அடைந்த புண்ணியத்தையும், மக்கட்செல்வத்தையும், பசுக்களையும் அந்த பிராமணன் அழிக்கின்றான்.

விருந்தோம்பலின் பெருமையை யமதேவரிடம் அங்கிருந்தோர் கூறுகிறார்கள், விருந்தினரை சரியாக உபசரிக்க விட்டால் என்ன இழப்பு ஏற்படும் என்று இங்கு கூறப்படுகின்றது.  விருந்தினராக வந்தவனே புண்ணியங்கள் அனைத்தையும் அழித்து விடுவான் என்று கூறப்படுகின்றது.

ஸ்லோகம்9
திஸ்ரோ ராத்ரீர்யத3வாத்ஸீர்க்3ருஹே மேனஶ்னன்ப்3ரஹ்மன்னாதிதி2ர்தமஸ்ய: |
நமஸ்தேஸ்து ப்3ரஹ்மன்ஸ்வஸ்தி மேஸ்து தஸ்மாத்ப்ரதி த்ரீன்வரான்வ்ருணீஷ்வ ||

ஓ பிராமணனே, போற்றத்தக்க விருந்தினராக உணவு உட்கொள்ளாமல் என்னுடைய வீட்டில் மூன்று இரவுகள் வசித்த காரணத்திற்காக முதலில் உனக்கு என்னுடைய வணக்கம் உரித்தாகுக.  பிராமணனே எனக்கு மங்கலம் இருக்கட்டும், எந்த குறையும் என்னை வந்து சேராமல் இருக்கட்டும்.  உணவின்றி மூன்று இரவுகள் எனக்காக காத்திருந்ததற்காக மூன்று வரங்களை கொடுக்கிறேன் அவைகளை கேட்பாயாக. என்று எமதர்மக் நசிகேதனை பார்த்து கூறினார்.

ஸ்லோகம்10
ஶாந்தஸங்கல்ப: ஸுமனா யதா2 ஸ்யத்3வீதமன்யுர்கௌ3தமோ மாபி4 ம்ருத்யோ |
த்வத்ப்ரஸ்ருஷ்டம் மாபி4வதே3த்ப்ரதீத ஏதத்ரயாணாம் ப்ரத2மம் வரம் வ்ருணே ||
யமதேவரே, என் தந்தை கௌதமர் கவலையற்ற மனதையுடையவராகவும், கோபமற்றவராகவும் என்னிடத்தில் அன்பான மனதை உடையவராகவும் எவ்விதம் ஆவாரோ அவ்விதம் அருள்வீராக. உங்களால் திருப்பி அனுப்பப்படும் என்னை அடையாளம் கண்டுகொண்டவராக என்னிடத்தில் பேச வேண்டும்.  இதை மூன்று வரங்களுக்குள் முதல் வரமாக தேர்ந்தெடுக்கின்றேன்.

ஸ்லோகம்11
யதா2 புரஸ்தாத்3ப4விதா2 ப்ரதீத ஔத்3யாலகிர்ருணிர்மத்ப்ரஸ்ருஷ்ட |
ஸுக2ம் ராத்ரீ: ஶயிதா வீதமன்யு: த்வாம் த3த்3ருஶிவான் ம்ருத்யுமுகா2த் ப்ரமுக்தம் ||
எமதர்ம ராசாவின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட உன்னைக்கண்டு உன் நினைவு பெற்றவராக முன் எப்படி இருந்தாரோ அப்படியே இருப்பார்.  ஆருணியின் மகனான உத்தாலகர் என்னால் திருப்பி அனுப்பப்பட்ட உன் மீது கோபமற்றவராக இரவில் சுகமாக உறங்குவார்.

ஸ்லோகம்12
ஸ்வர்கே3 லோகே ந ப4யம் கிஞ்சனாஸ்தி ந தத்ர த்வம் ந ஜரயா பி3பே4தி |
உபே4 தீர்த்வாஶனாயபிபஸே ஶோகாதிகோ3 மோத3தே ஸ்வர்க3லோகே ||
சுவர்க்க லோகத்தில் பயம் சிறிதும் கூட இருக்காது. அங்கே நீங்கள் (மனிதர்கள்) இல்லை வயோதிக பயமும் கிடையாது.  பசி-தாகம் என்ற இந்த இரண்டும் இருப்பதே தெரியாமல் மக்கள் சோகத்தை கடந்து மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.

ஸ்லோகம்13
ஸ த்வமக்3னிம்ஸ்வர்க்3யமத்3யேஷி ம்ருத்யோ ப்ரப்3ரூஹி த்வம்ஸ்ரத்3த3னாய மஹயம் |
ஸ்வர்க3லோகா அம்ருதத்வம் ப4ஜந்தே ஏதத்3 த்3விதீயேன வ்ருணே வரேண ||
எமதர்ம ராஜா சொர்க்கத்தில் இருப்பவர்கள் நீண்ட காலம் இன்புற்று இருக்கின்றனர் அந்த சொர்க்கத்தை அடைய உதவும் யாகத்தை பற்றி நீங்கள் அறிவீர்கள், அதை சாஸ்திரத்தில் சிரத்தையுடைய எனக்கு சொல்லுங்கள்.  இது என்னுடைய இரண்டாவது வரமாக இருக்கட்டும்.

ஸ்லோகம்14
ப்ர தே ப்3ரவீமி தது3 மே நிபோ3த4 ஸ்வர்க்3யமக்3னிம் நசிகேத: ப்ரஜானன் |
அனந்தலோகப்திமதோ2 ப்ரதிஷ்டாம் வித்2தி4 த்வமேதம் நிஹிதம் குஹாயாம் ||
நசிகேதனே, நான் இதை ஞாபகப்படுத்திக் கொண்டு பிறகு சொர்க்கத்தை அடைய உதவும் இந்த யாகத்தை செய்யும் முறையை உனக்கு தெளிவாக கூறுகிறேன். அதை என்னிடமிருந்து கவனமாக கேட்டு தெரிந்து கொள்.  இந்த யாகமானது நீண்ட ஆயுளை கொடுக்கக்கூடியதும், எண்ணற்ற உலகங்களை அடைவதற்கான சாதனமாகவும், இந்த உலகத்திற்கு ஆதாரமானதாகவும் மேலும் உபாஸகர்களின் மனதிலும் இருப்பதாகவும் நீ அறிவாயாக.

எமதர்மர் உபாஸனையை சேர்த்தே இந்த யாகத்தை செய்யும் முறையை உபதேசித்தார்.  இங்கே உபாஸன தேவதையாக ஸ்தூல பிரபஞ்சத்திற்கு ஆதாரமாக இருக்கும் தேவதை (விராட்).  இந்த பிரபஞ்சமே விராட்டின் சரீரம்.  அதற்கு ஆலம்பனமாக சொர்க்க காம இஷ்டா யாகத்தில் உள்ள அக்னியை கொள்ள வேண்டும்.  ஆலம்பனமே தேவதையாக நினைத்து உபாஸனை செய்ய வேண்டும்.
சமுத்திரம் – சமஷ்டி;  அலைகள் – வியஷ்டி
சமஷ்டி – வியஷ்டிக்கு ஆதாரமாக இருக்கும்.
பிரதிஷ்டா – விராட் தேவதையை குறிக்கின்றது, அதற்கு ஆலம்பனமாக இருக்கும் அக்னியை குறிக்கின்றார்.

ஸ்லோகம்15
லோகாதி3மக்3னிம் தமுவாச தஸ்யௌ யா இஷ்டகா யாவதீர்வா யதா2 வா |
ஸ சாபி தத்ப்ரத்யவத3த்3யதௌ2க்த2மதா2ஸ்ய ம்ருத்யு: புனரேவாஹ துஷ்ட: ||
அந்த யாகத்தை செய்யும் முறையை நசிகேதனுக்கு கூறினார்.  எப்படிபட்ட செங்கற்கள் எவ்வளவு இருக்க வேண்டும் எவ்வாறு அடுக்கி வைக்க வேண்டும் போன்ற விவரங்களை விளக்கினார்.  அவற்றை உன்னிப்பாக கேட்டு அவனும் அவர் கூறியபடி திருப்பி கூறினான்.
அதை கேட்ட எமதர்மராஜா மீண்டும் மனதிருப்தியுடன் பேசினார்.

ஸ்லோகம்16
தமப்3ரவீத்ப்ரீயமாணோ மஹாத்மா வரம் தவைஹாத்3யா பூ4ய: |
தவைவ நாம்தா ப4விதாயமக்3னி: ஸ்ருங்காம் வேமாமனேகரூபாம் க்3ருஹான் ||
மகிழ்ச்சியடைந்த எமதர்ம ராஜா மீண்டும் நசிகேதனை பார்த்து இதற்காக இன்னொரு வரமும் இங்கேயே இப்போதே தருகின்றேன் கேட்டு பெற்றுக்கொள் என்று கூறினார்.  இனிமேல் இந்த யாகமானது உன்னுடைய பெயரிலே அழைக்கப்படும் என்று கூறிவிட்டு பல்வேறு வடிவங்களையுடைய மிக சிறப்பான மாலையை பரிசாக பெற்றுக் கொள் என்று கூறினார்.

ஸ்லோகம்17
த்ரிணசிகேதஸ்த்ரிபி4ரேத்ய ஸந்தி4ம் த்ரிகர்மக்ருத்தரதி ஜன்ம்ம்ருத்யூ |
ப்3ரஹ்மஜக்3ஞம் தே3வமீட3யம் விதி3த்வா நிசாய்யேமாம் ஶாந்திமத்யந்தமேதி ||
இந்த யாகத்தை மூன்று முறை செய்தவன் (இதிலிருந்து இந்த யாகத்தை மூன்று முறை செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்,) மூவர்களுடன் (தாய், தந்தை, ஆசிரியர்) நல்ல சம்பந்தத்தை அடைந்தவன். அதாவது தாயிடமிருந்து அன்பையும், தந்தையிடமிருந்து ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும், குருவிடமிருந்து அறிவையும், அன்பையும் அடைந்திருக்க வேண்டும்.  மூன்று கர்மத்தை செய்தவன். யாகம், இறைவழிபாடு, சாஸ்திரத்தை படித்தல், தானம் செய்தல் ஆகிய மூன்று கர்மங்களையும் செய்தவன் தற்காலிகமாக பிறப்பு இறப்பிலிருந்து விடுபடுகின்றான்.

சூட்சும பிரபஞ்சமாக இருக்கின்ற ஹிரண்யகர்ப்பனிடமிருந்து தோன்றிய, எல்லாமும் அறிகின்ற, அக்னியாக இருக்கின்ற விராட் ஸ்வரூபத்தை குறிக்கின்றது. ப்ரஹ்ம என்ற சொல் சூட்சுமமான பிரபஞ்சத்திற்கு ஆதாரமாக இருப்பதைக் குறிக்கின்றது.  அந்த ஈஸ்வரனை குறிக்கின்றது.  அவரே எல்லாவற்றையும் அறிபவர்.  ஒவ்வொரு சரீரத்திற்கு உள்ளேயிருந்து கொண்டு எல்லாவற்றையும் அறிந்து கொண்டிருப்பவர். வணங்கத்தக்கவராகிய அந்த ஈஸ்வரனை உபாஸனை தேவதையாக வைத்து தியானம் செய்பவன் இங்கேயே நிலையான சாந்தியை அடைகின்றான்.  சுவர்க்க லோகத்தில் மேலான அமைதியை அடைகின்றான்.

ஸ்லோகம்18
த்ரிணாசிகேதஸ்த்ரயமேதத்3விதி3த்வா ய ஏவ வித்3வம்ஸ்ரிசனுதே நாசிகேதம் |
ஸ ஸ்ருத்யுபாஶான் புரத: ப்ரணௌ த்3ய ஶோகாதிகோ3 மோத3தே ஸ்வர்க3லோகே ||
.யார் மும்முறை நாசிகேத யாகத்தை செய்திருக்கின்றார்களோ. இந்த மூன்றையும் இவ்வாறு முறையாக அறிந்த எந்த வித்வான் நான் கூறியபடி இந்த நாசிகேத யாகத்தை செய்கின்றானோ
அவன் மரணத்தினுடைய பிடியிலிருந்து உடல் விடும் முன்பே வென்று சோகத்தை கடந்தவனாக சுவர்க்கத்தை அடைந்து மகிழ்ச்சியாக இருப்பான்.  இதை உபாஸனையாக செய்தால் பிரஹ்மலோகத்தை அடைந்து மகிழ்ச்சியுடன் இருப்பான்.

ஸ்லோகம்19
ஏஷ தேத்3னிர்நசிகேத: ஸ்வர்க்3யோ யமவ்ருணீதா2 த்3விதீயேன வரேண |
ஏதமக்3னிம் தவைவ ப்ரவஞ்யந்தி ஜனாஸஸ்த்ருதீயம் வரம் நசிகேதோ வ்ருனீஷ்வ ||
நசிகேதா! எந்த வரத்தை இரண்டாவதாக கேட்டாயோ அதாவது சுவர்க்கத்தை அடைகின்ற யாகத்தை உனக்கு கூறிவிட்டேன். இந்த யாகமானது உன்னுடைய பெயராலே இனி மக்கள் அழைப்பார்கள். இனி நசிகேதா, மூன்றாவது வரத்தை கேட்பாயாக.

ஸ்லோகம்20
யேயம் ப்ரேதே விசிகித்ஸா மனுஷ்யேஸ்தீத்யேகே நாயமஸ்தீதி சைகே |
ஏதத்3வித்3யாமனுஶிஷ்தஸ்த்வயாஹம் வராணாமேஷ வரஸ்த்ருதீய: ||
எமதர்மராஜா இந்த உலகில் இறந்த மனிதர்களை பற்றி இப்படிபட்ட ஒரு சந்தேகம் இருக்கின்றது.  அவர்கள் இறந்த பிறகும் இருக்கின்றார்கள் என்று சிலர் கூறுகின்றார்கள். இல்லையென்றும் சிலர் கூறுகின்றார்கள்.  இதை நான் தங்களிடமிருந்து அறிய வேண்டும்.
இதுவே வரங்களுக்குள் மூன்றாவதாக வரமாகும்.

ஸ்லோகம்21
தேவைரத்ராபி விசிகித்ஸிஜம் புரா ந ஹி ஸுவிக்3ஞேயமணுரேஷ த3ர்ம: |
அன்யம் வரம் நசிகேதே வ்ருணிஷ்வ மா மோபரோத்ஸீரதி மா ஸ்ருஜைனம் ||
ஆத்ம ஞானத்தை அடைவதற்கு தகுதி நசிகேதனுக்கு இருக்கின்றதா என்று சோதனை செய்ய நினைத்து இவ்வாறு கூறுகின்றார்.  நசிகேதனுக்கு முமுக்‌ஷூத்வம், வைராக்கியம் இருக்கின்றதா என்று சோதிக்கவும் விரும்புவது இந்த ஸ்லோகத்தில் தெரிகின்றது.

இந்த விஷயத்தில் தேவர்களும்கூட முன்பே சந்தேகம் அடைந்தார்கள்.  இது எளியதாக அடையக்கூடியதல்ல.  இந்த ஆத்ம தத்துவத்தை பற்றிய அறிவானது மிகவும் சூட்சுமமானது. எனவே வேறு ஏதாவது வரத்தை தேர்ந்தெடு. இதனை எனக்காக விட்டுவிடு. என்னை நிர்பந்தப்படுத்தாதே என்று எமதர்மராஜா நசிகேதனிடம் கூறினார்.

ஸ்லோகம்22
தேவைரத்ராபி விசிகித்ஸிதம் கில த்வம் ச ம்ருத்யௌ யன்ன ஸுவிஞேயமாத்தா2 |
வக்தா சாஸ்ய த்வாத்3ருக்3ன்யோ ந லப்4யோ நான்யோ வரஸ்துல்ய ஏதஸ்ய கஸ்சித் ||
இந்த ஆத்ம விஷயத்தில் தேவர்களுக்கும் கூட சந்தேகம் உள்ளதோ!  அதை நீங்களும் அறிந்து கொள்வது சுலபமல்ல என்று சொல்கிறீர்கள். எனவே இதற்கு வேறெந்த வரமும் சமமாகாது. இந்த ஆத்ம தத்துவத்தை எடுத்துரைப்பதற்கு உங்களைத் தவிர வேறொருவர் எனக்கு கிடைக்க மாட்டார்

ஸ்லோகம்23
ஶதாயுஷ: புத்ரபௌத்ரான்வ்ருணிஷ்வ ப3ஹுன்பஶூன்ஹஸ்திஹிரராயமஶ்வான் |
பூ4மர்மஹதா3யதனம் வ்ருணிஷ்வ ஸ்வயம் ச ஜீவ ஶரதோ3 யாவதி3ச்ச2ஸி ||
நூறு வருடம் ஆயுளுள்ள புத்திரனையும், பௌத்திரனையும் கேள்.  நிறைய பசுக்கள் போன்ற செல்வத்தைக் கேள்.  தங்கம், யானைகள், குதிரைகள் இவைகளை கேட்டுப் பெற்றுக்கொள்.  இந்த பூமியில் பெரிய ராஜ்ஜியத்தை கேள்.  எவ்வளவு காலம் வாழ விரும்புகிறாயோ அவ்வளவு காலம் வரை வாழ்ந்து கொள். இவ்வாறாக பலவித போகப் பொருட்களை கொடுப்பதாக கூறுகிறார் எமதர்மராஜா.

ஸ்லோகம்24
ஏதத்துல்யம் யதி3 மன்யஸே வரம் வ்ருணீஷ்வ வித்தம் சிரஞ்ஜீவிகாம் ச |
மஹபூமௌ நஸிகேதஸ்த்வமேதி4 காமானாம் த்வா காமபா4ஜம் கரோமி ||
இதுவரை கொடுப்பதாக கூறியவற்றிற்கு இணையாக வேறு ஏதாவது இருக்கின்றது என்று நீ கருதினால் அதையும் கேள்.  நிறைய செல்வங்கள், இந்த பூமியின் பெரும் பகுதியை அடைவாய்.  இந்த பூமிக்கே அரசனாகவும் இருக்கலாம். நீ எவையெல்லாம் விரும்புகின்றாயோ அவையெல்லாம் தடையில்லாமல் அனுபவிப்பவனாக உனக்கு வரம் தருகின்றேன்

ஸ்லோகம்25
யே யே காம து3ர்லபா4 மர்த்யலோகே ஸர்வன்காமான்ஶ்ச2ந்த3த: ப்ரார்த2யஸ்வ |
இமா ராமா: ஸரதா2: ஸ்தூர்யா ந ஹீத்3ருஶா ல்ம்ப4னீயா மனுஷ்யை: |
அபி4ர்மத்ப்ரத்தாபி4: பரிசாரயஸ்வ நசிகேதோ மரனம் மானுப்ராக்3ஞீ: ||
எந்த வகையான போக இந்த உலகத்தில் அடைவதற்கு கடினமோ அவைகளையெல்லாம் விருப்பம் போல அனுபவிப்பாயாக.  இந்த தேவ லோகத்தில் உள்ள பெண்கள் ரதத்துடன் இசைக்கருவிகளையும் உடையவர்கள்.  இவர்களை மனிதர்களால் அடைய முடியாது.  அவர்களை உனக்கு பணிவிடை செய்ய கொடுக்கின்றேன் பெற்றுக்கொள்.  ஆனால் மரணத்தைப்பற்றி மட்டும் என்னிடம் கேட்காதே.

ஸ்லோகம்26
ஶ்வோபா4வா மர்த்யஸ்ய யத3ந்தகைதத்ஸ்ர்வேந்த்3ரியணாம் ஜரயந்தி தேஜ: |
அபி ஸர்வம் ஜீவிதமஸ்பமேவ தவைவ வாஹஸ்தவ ந்ருத்யகீ3தே ||
நசிகேதன் மூன்று காரணங்களினால் எமதர்மர் கொடுக்கும் எல்லாவற்றையும் நிராகரித்து விடுகின்றான்.  நீங்கள் கொடுப்பதாக உறுதியளிக்கப்பட்டவைகளில் உள்ள சுக-துக்கங்களை நான் நன்கு அறிவேன். இவைகள் 1. நிலையற்றவை, 2. என்னை பலவீனப்படுத்திவிடும், 3. மனநிறைவைக் கொடுக்காது.

இவைகள் இன்று இருப்பது போல் நாளை இருக்குமா என்று நிர்ணயித்து கூற முடியாத நிலையற்றவைகள்.  நிலையற்ற பொருட்களை அனுபவிப்பதனால் அதற்கு அடிமையாகி விவேகத்தை இழந்து விடுவோம், அனுபவிக்க அவைகள் இல்லாத போது துயரத்தை அடைவோம்.  மனிதர்களின் இறப்புக்கு காரணமான எமதர்ம ராஜா, இந்திரிங்களின் சக்தியை இந்த நிலையற்ற பொருட்களை கொஞ்ச கொஞ்சமாக இழக்க செய்து விடும்.  அதிக சுகம் உடல் பலத்தை குறைத்து விடும், மனமும் சக்தியை இழந்து விடும், அலைபாய்ந்து கொண்டே இருக்கும்.  புத்தியையும் சரியாக தீர்மானிக்கும் சக்தியை இழக்க செய்து விடும்.  நீங்கள் எவ்வளவு ஆயுளைக் கொடுத்தாலும் அவைகள் உண்மையில் சிறியதுதான்.  உங்களுடைய வாகனங்கள், குதிரைகள், ஆடல் பாடல்கள் அனைத்தும் உங்களிடமே இருக்கட்டும்.

ஸ்லோகம்27
ந வித்தேன தர்பணீயோ மனுஷ்யோ லப்ஸ்யாமகே3 வித்தமத்ரீக்ஷ்ம சேத்த்வா |
வீவிஷ்யாமோ யாவதீ3ஶிஷ்யஸி த்வம் வரஸ்த மே வர்ணீய: ஸ ஏவ ||
எந்தப்பொருளும் ஒருவனுடைய மனதை திருப்தி படுத்த முடியாது.  செல்வங்கள் மனிதனை திருப்திபடுத்த முடியாது.  உங்களை பார்த்ததினாலேயே எல்லா செல்வங்களையும் அடைந்ததற்கு ஈடாகும்.  நீங்கள் எவ்வளவு காலம் வரை வாழ்வீர்களோ அதுவரைதான் நாங்கள் வாழ முடியும்.  எனவே எனக்கு வேண்டிய வரம் நான் கேட்ட ஆத்ம தத்துவம்தான்.

ஸ்லோகம்28
அஜீர்யதமம்ருதானாமுபேத்ய ஜீர்யன்மர்த்ய: க்வத4:ஸ்த2: ப்ரஜானன் |
அபி4த்4யாயன்வர்ணரதிப்ரமோதா3னதிதீ3ர்கே4 ஜீவிதே கோ ரமேத ||
அழிவுக்குட்படாத, மரணமற்ற உங்களை நான் அடைந்திருக்கின்றேன்.  அழியக்கூடிய மனிதன்,  பூலோகத்தில் வாழ்கின்ற நான் இவைகளையெல்லாம் ஆழ்ந்து சிந்தித்து புரிந்து கொண்டேன்.  ஆடல் பாடல் போன்றவற்றிலிருந்து வரும் இன்பங்கள், நீண்ட கால வாழ்க்கை இவற்றில் யார் சுகத்தை அனுபவிப்பார்கள்.

ஸ்லோகம்-29
யஸ்மின்னித3ம் விசிகித்ஸந்தி ம்ருத்யோ யத்ஸாம்பராயே மஹதி ப்3ரூஹி நஸ்தத் |
யோயம் வரோ கூ3ட4மனுப்ரவிஷ்டோ நான்யம் தஸ்மான்னசிகேதா வ்ருணீதே ||
ஓ எமதர்ம ராஜா! எந்த ஆத்ம தத்துவ விஷயத்தில் மனிதர்கள் இவ்விதத்தில் சந்தேகப்படுகின்றார்களோ, பரலோக விஷயத்தில் மோட்சப் பலனுடையதாக எது இருக்கின்றதோ அதை எனக்கு கூறுங்கள். எந்த வரமானது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கின்றதோ அதை விட வேறொரு வரத்தை நசிகேதன் கேட்கவில்லை.

இரண்டாம் பாகம்

ஸ்லோகம்01 – ஆத்ம ஞானத்தின் பெருமைப் பேசப்படுகிறது
அன்யச்சே2யோன்யுது3தைவ ப்ரேயஸ்தே உபே4 நானார்தே2 புருஶம் ஸினீத: |
தயோஜ் ஶ்ரேய ஆத3தா3னஸ்ய ஸாது4 ப4வதி ஹியதேர்தா2த்3ய உ ப்ரேயோ வ்ருணிதே ||
ஸ்ரேயஸ் – மேலானது, அடையத்தக்கது ( இது மோக்‌ஷத்தை குறிக்கின்றது)
ப்ரேயஸ் –  உலக விஷயங்களிலிருந்து அடையும் இன்பத்தை குறிக்கின்றது
இவையிரண்டும் மனிதனால் அடையக்கூடிய சாத்தியங்கள்.  சம்சாரம் என்பது மானஸதாபம் அதாவது காம, க்ரோதாதிகளுடன் கூடியது. இவைகளை விட்டுவிடுதல் மோட்சத்தைக் குறிக்கின்றது.  மேலும் தன்னிடத்திலே இன்பத்தை காணும் தன்மை உடையது, பூரண மனநிறைவை அடைந்துள்ள நிலையை குறிக்கின்றது.
ஸ்ரேயஸுக்கு செல்லும் பாதை ஸ்ரேயஸ்பாதை என்றும், ப்ரேயஸுக்கு செல்லும் பாதைக்கு ப்ரேயஸ்பாதை என்றும் கூறுவதுண்டு.  ஒருவன் இதிலிரண்டிலொன்றைத்தான் தேர்ந்தெடுக்க முடியும்.  கர்மத்தினால் அடைவது ப்ரேயஸ், ஞானத்தினால் அடைவது ஸ்ரேயஸ்.

ஸ்ரேயஸுக்கு செல்லும் பாதை வேறு, ப்ரேயஸுக்கு செல்லும் பாதை வேறு, இவையிரண்டும் வெவ்வேறு பலனை கொடுக்கக்கூடியது.  இவற்றுள் ஸ்ரேயஸை தேர்ந்தெடுப்பவனுக்கு முக்தி கிடைக்கின்றது, முழு மனநிறைவை கிடைக்கின்றது.  இதை விடுத்து ப்ரேயஸை எவனொருவன் தேர்ந்தெடுக்கின்றானோ அவன் மோட்சத்தை அடைவதிலிருந்து விலகி விடுகின்றான்.  மோட்சத்திற்கு செல்லும் பாதையிலிருந்து விலகி விடுகின்றான்.  சம்சாரம் என்கின்ற பந்தத்தில் வீழ்ந்து விடுகின்றான்.

ஸ்லோகம்02
ஶ்ரேயஸ்ச ப்ரேயஸ்ச மனுஷ்யமேதஸ்தௌ ஸம்பரீத்ய விவினக்தி தீ4ர: |
ஶ்ரேயோ ஹி தீ4ரோபி4 ப்ரேயஸோ வ்ருணீதே
ப்ரேயோ மந்தோ3 யோக3க்ஷேமாத்3 வ்ருணீதே ||
ஸ்ரேயஸும், ப்ரேயஸும் மனிதனை அணுகுகின்றன. விவேகமுள்ளவன் ஸ்ரேயஸை தேர்ந்தெடுக்கின்றான்.  மூடன் ப்ரேயஸை தேர்ந்தெடுக்கின்றான்.  அறிவாளி இவையிரண்டையும் ஆழ்ந்து சிந்தித்து பாகுபடுத்துகின்றான்.  சுயமாக சிந்தித்து ஆராயும் புத்தியில்லாதவனுக்கு சாஸ்திரம் பயன்படாது.  குருடனுக்கு நிலை கண்ணாடியால் எப்படி பயனில்லையோ அது போல வேதாந்த சாஸ்திரம் பயன்படாது.  விவேகமற்ற மூடன் உடல் சுகத்தையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு ப்ரேயஸை தேர்ந்தெடுக்கின்றான். அறிவுடையவன் ப்ரேயஸை விட்டுவிட்டு ஸ்ரேயஸை தேர்ந்தெடுக்கின்றான்.
[ யோக ஷேமம் –  யோகம் என்பது இதுவரையில் அடையாததை அடைவது, ஷேமம் என்பது அடைந்ததை பாதுகாத்தல் ]

ஸ்லோகம்03
ஸ த்வம் ப்ரியான்ப்ரியரூபாம்ஶ்ச காமானபி3த்3யாயன்னசகேதோத்யஸ்ராக்ஷி: |
நைதாம் ஸ்ருங்காம் வித்தமயீமவாப்தோ யஸ்யாம் மஜ்ஜந்தி ப3ஹகோ3 மனுஷ்யா: ||
நசிகேதா, நீ இன்பத்தை கொடுக்கின்ற, இன்பத்தின் வடிவமாக இருக்கின்ற, ஆசையை தூண்டுகின்ற பொருட்களை நன்றாக சிந்தித்து அதிலுள்ள குறைகளை நன்கு உணர்ந்து அவைகளை தியாகம் செய்து விட்டாய்,  ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டாய்.  இந்த விலை மதிப்பில்லாத மாலையையும் ஏற்றுக்கொள்ளவில்லை.  இந்த விஷயத்தில் பெரும்பாலான மனிதர்கள் மூழ்கி விடுகின்றார்கள், மூழ்கி இருக்கின்றார்கள்.

ஸ்லோகம்04
தூ3ரமேதே விபரீதே விஷூசீ அவித்3யா யா ச வித்3யேதி ஞாதா |
வித்3யாபீ4ப்ஸினம் நசிகேதஸம் மன்யே ந த்வா காமா ப3ஹவோலோலுபந்த ||

இவையிரண்டும் வேறுபட்டவை, வெவ்வேறு இலக்கை நோக்கி செல்லும் இரு பாதைகள். எது அறியாமை ( சம்சாரத்தில் இருத்தல்) எது ஆத்ம ஞானம் என்று அறியப்படுகிறதோ இவைகள்தான் ஒருவனை அந்தந்த இலக்கை நோக்கி செல்லும் பாதைக்கு அழைத்து செல்கின்றது.  ஸ்ரேயஸை அடைவதற்கு உதவும் பாதை ஆத்ம ஞானத்தை அடைவதற்கு எடுக்கும் முயற்சி அதாவது குருவை அடைந்து வேதாந்த சாஸ்திரத்தை படித்தல் (சிரவணம்), மனனம், நிதித்யாஸனம் ஆகிய சாதனங்களை பயன்படுத்தி முக்தி அடைதல்.  ப்ரேயஸை அடைவதற்கு உதவும் பாதை செயலில் ஈடுபடுதல்.  ஆனால் ஞானத்தை அடைவதற்கு உதவும் பண்புகளை அடைவதற்கு செய்யும் செயல்கள் அனைத்தும் ஸ்ரேயஸ் பாதைக்கு கொண்டு செல்லும்.  கர்மத்தை அவித்யா என்று கூறக் காரணம் கர்த்தா என்ற புத்தி எப்பொழுதும் இந்த சரீரத்தில் இருந்து கொண்டிருக்கின்றது.  ஞானத்தை விரும்புபவனாக இருக்கும் உன்னை பலவித ஆசைகளும் சலனப்படுத்தவில்லை என்று கருதுகின்றேன்.

ஸ்லோகம்05
அவித்3யாயாமந்தரே வர்த்மானா: ஸ்வயம் தீ4ரா: பண்டி3தம்மன்யமானா: |
த3ந்த்4ரம்யமாணா: பரியந்தி மூடா4 அந்தேனைவ நீயமானா யதா2ந்தா4: ||
சரீரமே நான் என்று நினைத்துக் கொண்டிருப்பவனை அறியாமைக்குள் இருப்பவனாக கூறப்படுகின்றது.  இவர்கள் ஆத்ம ஞானத்தை அடைய வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இருக்கின்றார்கள்.  ஆனால் தன்னை அறிவுடையவன் என்றும் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.  இவ்வாறு நானே அறிவாளி, பண்டிதன் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் கீழான நிலையை அடைகிறார்கள், சம்சாரத்திலே அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றார்கள்.  மூப்பு, மரணம், நோய் என்ற துன்பத்தில் சிக்கி துன்புறுகின்றார்கள்.  இவர்களின் நிலை குருடனால் வழிநடத்தி செல்லப்படும் குருடர்களின் நிலைக்கு சமமாக இருக்கின்றது.

ஸ்லோகம்06
ந ஸாம்பராய: ப்ரதிபா4தி பா3லம் ப்ரமாத்3யந்தம் வித்தமோகே3ன மூட4ம் |
அயம் லோகோ நாஸ்தி பர இதி மானி புன: புனர்வஶாமாபத்3யதே மே ||
ஆத்ம ஞானம் என்ற ஒன்று இருப்பதை அறியாமல் இருப்பவர்கள் மனப்பக்குவம் இல்லாதவர்கள், அறியாமையிலுள்ளவர்கள் இவர்கள் வேத கர்மங்களை கடைப்பிடித்து வாழ்தல், தர்மநெறிப்படி வாழ்தல் ஆகிய சாதனங்களை அறியாமல் இருக்கின்றார்கள். கவனமின்மையுடனும், மூடர்களாகவும் இருக்கின்றார்கள்.  மேலும் பணத்தாசையினால் அறிவிழந்தவர்களாகவும் இருக்கின்றார்கள். இதுதான் உலகம், வாழ்க்கையென்ற அறியாமையிலும் இருக்கின்றார்கள். இதைத்தவிர வேறெதுவும் இல்லை என்ற கர்வத்துடனும் இருக்கின்றார்கள்.  இவர்கள் மீண்டும் மீண்டும் என்(எமதர்மர்) வசத்திற்கே வருகின்றார்கள்.

ஸ்லோகம்07
ஶ்ர்வணாயாபி ப3ஹுபி4ர்யோ ந லப்4ய: ஶ்ருண்வந்தோÅபி ப3ஹகோ3 யம் ந வித்4யு: |
ஆஶ்சர்யோ வக்தா குஶலோÅஸ்ய லப்3தா4ஶ்சர்யோ ஞாதா குஶலானுஶிஷ்ட: ||
மனிதரில் பலருக்கு ஆத்ம தத்துவத்தை பற்றி கேட்பதற்கே வாய்ப்பு கிடைப்பதில்லை. குருவை அடைந்து வேதாந்தத்தை கேட்பவர்களில் பலருக்கும் அதை புரிந்து கொள்ள முடியவில்லை.  ஆத்ம தத்துவத்தை உபதேசிக்கும் குருவானவர் ஆச்சரியமானவர், அபூர்வமானவர். ஆத்ம தத்துவத்தை உபதேசிக்கும் குருமார்களும் மிகக்குறைவாகவே இருக்கின்றனர்.  ஆத்ம ஞானத்தை அடைந்தவனும் மிகக்குறைவு. சாமர்த்தியமான, தகுதியான குருமூலம் உபதேசம் பெறுபவர்களும் மிகக்குறைவு.
ஸ்லோகம்08
ந நரேணாவரேணா ப்ரோக்த ஏஷ ஸுவிக்3ஞேயோ ப3ஹுதா4 சிந்த்யமான: |
அனன்யப்ரோக்தே க3திரன்ன நாஸ்த்யணீயான்ஹ்யதர்க்யமணூப்ரமாணாத் ||
தகுதியற்ற ஆசிரியர்களால் இந்த ஆத்ம ஞானத்தை உபதேசிக்கப்பட்டால் இதை நன்கு புரிந்து கொள்ள முடியாது. ஆத்மாவை பற்றி பலவிதமான கருத்துக்கள், சிந்தனைகள் இருப்பதால், இவைகளையெல்லாம் நீக்கி சரியான அறிவை புகட்ட தகுதியான ஆசிரியரால்தான் முடியும். இவர் எதை உபதேசம் செய்கின்றாரோ அதன்வழி வாழ்ந்து கொண்டிருப்பவர்.  ஆத்ம ஞானத்தை அடைந்து அதில் நிலைபெற்றிருப்பவர்., முறைப்படி உபதேசம் பெற்று ஞானத்தை அடைந்தவராக இருப்பவர்.  இப்படிபட்ட குருவிடம் படிப்பவன் ஆத்ம் ஞானத்தை சந்தேகம் இல்லாமல் புரிந்து கொள்வான்.  சம்சார கதியிலிருந்து விடுபடுவான்.  இவன் வேறெதையும் அடையத்தேவையில்லை.  இவனால் புரிந்து கொள்ளாமல் இருக்க முடியாது. ஆத்மா என்பது அணுவைக்காட்டிலும் மிக மிக சூட்சுமமானது,, இதை தர்க்கத்தினாலும், வாதத்தினாலும், புத்தியினாலும் அடைய முடியாது.

ஸ்லோகம்09

நைஷா தர்கேண மதிராபனேயா ப்ரோக்தான்யேனைவ ஸுஞானாய ப்ரேஷ்ட |
யாம் த்வமாப: ஸத்யத்4ருதிர்னதாஸி த்வாத்3ருங்னோ பூ4யான்னசிகேத: ப்ரஷ்டா ||
இந்த ஆத்ம ஞானமானது தர்க்கத்தினாலும், வாதத்தினாலும் அடைய முடியாது. நம் புத்திக்கு அப்பாற்பட்ட நம்மை காட்டிலும் வேறான தகுதியான ஒருவரால் உபதேசிக்கப்பட்டால்தான் புரிந்து கொள்ள முடியும்.  என் அன்பிற்குரியவனே! எந்த ஆத்ம ஞானத்தை அடையப்போகின்றாயோ சத்யமான அதை அறியும் விஷயத்தில் நீ மிகவும் உறுதியாக இருக்கின்றாய்.

ஏன் இந்த அறிவை தர்க்கத்தினால் அடைய முடியாது என்றால் புத்தியின் துணைக்கொண்டு யூகத்தினால் சில அறிவை அடைய முடியும்.  உதாரணமாக மலையில் தெரியும் புகையைப் பார்த்தே அங்கு நெருப்பு இருக்கிறது என்று அறிகின்றோம்.  இந்திரியங்களின் துணையில்லாமல் மனதைக் கொண்டு அடையும் ஞானத்திற்கு அனுமான ஞானம்.  நேரிடையாக அடையும் அறிவுக்கு பிரதியக்‌ஷ ஞானம்.  நம் அனுபவத்திற்கும் வராததை வைத்து அனுமானம் செய்ய முடியாது.  ஆத்மா நம் அனுபவத்திற்கு வராதது, அதாவது பிரத்யக்‌ஷ ஞானத்திற்கு வரவே வராது எனவே அதை அனுமானத்தினால் அடைய முடியாது. ஆத்மாவை இல்லையென்றும் நிரூபிக்க முடியாது.  என்போன்ற குருவுக்கு உன் போன்ற சிஷ்யர்கள் கிடைக்கட்டும்.

ஸ்லோகம்10
ஜானாம்யதம் ஶேவத்4ட்ரித்யனித்யம் ந ஹ்யத்4ருவை: ப்ராப்யதே ஹி த்4ருவம் தத் |
ததோ மயா நசிகேதாஶ்சிதோÅக்னிரனித்யைர்த்3ரவ்யை: ப்ராப்தவானஸ்மி நித்யம் ||
கர்ம பலன்கள் நிலையற்றவை, அநித்யமானது என்றும், நிலையற்றவைகளைக் கொண்டு நிலையானதை அடைய முடியாது என்றுm நான் அறிவேன்.  ஆனாலும் என்னால் நசிகேத யாகம் செய்யப்பட்டது, அதன் பலனாக இந்த பதவியும் கிடைத்தது, நீண்ட காலம் வாழக்கூடிய நிலையையும் அடைந்தேன்.

ஸ்லோகம்11
காமஸ்யாப்திம் ஜக3த்: ப்ரதிஷ்டாம் க்ரதோரானந்த்யமப4யஸ்ய பாரம் |
ஸ்தோமமஹது3ருகா3யம் ப்ரதிஷ்டாம் த்3ருஷ்ட்வா த்4ருத்யா தீ4ரோ நசிகேதோÅத்யஸ்ராக்ஷி ||

இந்த தேவலோகம் ஆசைகளின் எல்லையாக இருக்கின்றது. இந்த பூலோகத்திற்கே ஆதாரமாக இருக்கின்ற உலகம், உபாஸனையில் அடையக்கூடிய முடிவான பலன் இந்த உலகம், பயமற்ற நிலையின் எல்லையாக இருக்கின்றது இந்த உலகம், பூஜிக்கத்தக்கதாகவும் இருக்கின்றது, பெருமைக்குரிய அனிமா போன்ற ஐஸ்வர்யங்களை உடைய உலகம், அதிகமாக வியாபிக்கப்பட்டிருக்கின்ற உலகம்,  அதிக ஆயுளைக் கொடுக்கும் உலகம்.  இப்படிபட்ட பெருமைகளை உடைய இந்த உலகத்தை நன்கு அறிந்தும் அதிலுள்ள குறைகளை, நிலையற்ற தன்மையையும் அறிந்து புத்திசாலியான நீ மனவுறுதியுடன் வேண்டாம் என்று துறந்து விட்டாய், மறுத்து விட்டாய்.

 

ஸ்லோகம்12

தம் து3ர்த3ர்ஶம் கூ3ட4மனுப்ரவிஷ்டம் கு3ஹாஹிதம் புராணம் |
அத்4யாத்மயோகா3தி4க4மேன தேவம் மத்வா தீ4ரோ ஹர்ஷஶோகௌ ஜஹாதி ||
இந்த ஸ்லோகத்தில் மூன்று கருத்துக்கள் சொல்லபட்டிருக்கின்றது.  அவைகள்
1. ஆத்மாவின் லக்‌ஷணம்,
2. அதை அடையும் வழி ( எதைக்கொண்டு அதை அறிந்து கொள்ள முடியும்)
3. ஆத்மாவை அடைவதால் வருகின்ற பலன்.

இது அனுபவிக்கப்படுகின்ற ஒன்றாக இல்லாததால் அதை அவ்வளவு சுலபமாக அறிந்து கொள்ள முடியாது.  இதற்கு குணங்களும் கிடையாததால் மிகவும் சூட்சுமமாக இருக்கின்றது எனவே அறிந்து கொள்வது மிகக்கடினமாக இருக்கின்றது. இது மிகவும் ரகசியமாகவும், மறைக்கப்பட்டுள்ளதாகவும் இருக்கின்றது.  புத்தியில் பிரதிபலிக்கும் இந்த ஆத்மாவை சிதாபாசம் என்று கூறப்படுகின்றது, இதுவே ஆத்மாவை மறைத்து கொண்டிருக்கின்றது. வெள்ளைத்திரையில் பார்க்கும் காட்சியானது எப்படி அந்த திரையையே மறைத்துக் கொண்டிருக்கின்றதோ அதே போன்று புத்தியில் தோன்றும் அறிவானது உண்மையான அறிவை மறைத்துக் கொண்டிருக்கின்றது;  இது புத்தியில்தான் வைக்கப்பட்டிருக்கின்றது. குகையில் எப்படி எப்பொழுதும் இருட்டு இருக்கின்றதோ அதுபோல புத்தியில் எப்பொழுதும் அக்ஞானம் இருந்து கொண்டிருக்கின்றது ஆனால் இதன் துணைக் கொண்டுதான் ஆத்மாவை அறிய வேண்டும். இது சம்சாரத்தினுள்ளே இருக்கின்றது, துயரத்திற்குள்ளே ஆனந்த ஸ்வரூபமாக இருந்து கொண்டிருக்கின்றது.  எப்பொழுதும் மாறாமல் இருக்கின்றது.

அத்4யாத்மயோக3:       அனாத்மாவிலிருந்து ஆத்மாவை நோக்கி நம்முடைய கவனத்தை திருப்புதல், அதாவது நாம ரூபத்திலிருந்து அவைகளுக்கு ஆதாரமான பரம்பொருளை நோக்கி மனதை செலுத்துதல்.

அதிக3மன:                       குருமூலம் சாஸ்திரத்தை படிப்பதன் மூலம்,  ஆத்மாவை அறிந்து, உணர்ந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு ஆத்ம ஞானத்தை அடைந்து, அதில் நிலைப்பெற்று சுக-துக்கங்களை கடந்து விடுகின்றான்.

ஸ்லோகம்13
ஏதச்ச்2ருத்வா ஸம்பரிக்3ருஹ்ய மர்த்ய: ப்ரவ்ருஹ்ய த4ர்ம்யமணுமேதமாப்ய |
ஸ மோத3தே மோத3னீயம் ஹி லப்3த்4வா விவ்ருதம் ஸத்3ம நசிகேதஸம் மன்யே ||
ஆத்ம தத்துவத்தை கேட்டு (சிரவணம்), சந்தேகமில்லாமல் புரிந்து கொண்டு (மனனம்),  மனிதனானவன்  அனாத்மாலிருந்து ஆத்மாவை நன்றாக புரிந்து கொண்டு எப்பொழுதும் கவனம் முழுவதும் ஆத்மாவிலேயே நிலைத்து நிற்க வேண்டும் (நிதித்யாஸனம்).  ஆத்ம ஸ்வரூபம் மிக சூட்சுமமானது அதை அடைந்தவன் எப்பொழுதும் மனநிறைவுடன் இருக்கின்றான்.  சுகத்தின் காரணத்தை அடைந்து விட்டவனாக இருக்கின்றான்.  ஆனந்தம் நிறைந்த ஆத்மாவை அடைந்தவனுக்கு மோட்சத்தின் கதவு திறக்கப்பட்டுள்ளது என்று நான் கருதுகின்றேன்.

ஸ்லோகம்14
அன்யத்ர த4ர்மாத3ன்யத்ராத4ர்மத3ன்யத்ரஸ்மாத்க்ருதாக்ருதாத் |
அன்யத்ர பூ4தாச்ச ப4வ்யாச்ச யத்தத்பஶ்யஸி தத்3வத்3 ||
தர்மத்தைக் காட்டிலும் வேறானதும், அதர்மத்திற்கும் வேறானதாகவும் உள்ளது.  அதாவது இருமைக்கும் அப்பாற்பட்டதாக உள்ள ஒன்றை இது சுட்டிக்காட்டுகின்றது.  இது காரண-காரியத்திலிருந்தும் வேறாக உள்ளது.  உலகத்திலுள்ள எல்லா பொருட்களும் காரண காரியமாகவும் இருக்கின்றது. (உ-ம்) தந்தை – மகன் – பேரன்.  கடந்த காலத்திலிருந்தும், வருங்காலத்திலிருந்தும் வேறானதாகவும் உள்ளது.  இவ்வாறு எந்த ஒன்று உள்ளதோ அல்லது நீங்கள் அறிந்திருக்கின்றீர்களோ அதை எனக்கு கூறுவீர்களாக.

ஸ்லோகம்15
ஸர்வே தே3வா யத்பத3மாமனந்தி தபாம்ஸி ஸர்வாணி ச யத்3வத3ந்தி |
யதி3ச்ச2ந்தி ப்3ரஹ்மசர்யம் சரந்தி தத்தே பத3ம் ஸங்க்3ரஹேண ப்3ரவீம்யோமித்யேதத் ||
எல்லா வேதங்களும் எந்த லட்சியத்தைப் பற்றி உபதேசிக்கின்றதோ, அதை இறுதியாக அடைய வேண்டும் என்று கூறுகின்றதோ, எல்லா தவங்களும் எதை அடைவதற்காக கூறப்பட்டிருக்கின்றதோ, எந்தவொன்றை அடைய விரும்பி பிரம்மசர்யத்தை கடைப்பிடிக்கின்றார்களோ அந்த லட்சியத்தை உனக்கு சுருக்கமாக சொல்கிறேன்.  அந்த பதம் ஓம் என்பதுதான்.

ஸ்லோகம்16
ஏதத்3த்4யேவாக்ஷரம் ப்3ரஹ்ம ஏதத்3த்3யேவாக்ஷரம் பரம் |
ஏதத்3த்4யேவாக்ஷரம் ஞாத்வா யோ யதி3ச்ச2தி தஸ்ய தத் ||
ஓம் என்ற சொல் மாயையுடன் கூடிய ஈஸ்வரனையும் (சகுண பிரஹ்மன்), குணங்களற்றதாக உள்ள பிரஹ்மத்தையும் (நிர்குண பிரஹ்மன்) என்ற இரண்டையும் குறிக்கின்றது.  சப்த ரூபமாக இருக்கும் ஓம் சகுண பிரம்மத்தையும், ஓங்காரத்தை விசாரம் செய்யும்போது நிர்குண பிரம்மத்தையும் குறிக்கின்றது.  இந்த சகுண பிரஹ்மத்தை குறிக்கின்ற ஓங்காரத்தை தியானிப்பவன் எதை விரும்புகின்றானோ அதை அடைகின்றான்.  இந்த ஒங்காரத்தை பரம்பொருளாக விசாரம் செய்து அறிந்தவன் அதை அடைகின்றான்

ஸ்லோகம்17

ஏதத்3லம்ப3னம் ஶ்ரேஷ்டமேததா3ல்ம்ப3னம் பரம் |

ஏதத்3லம்ப3னம் ஞாத்வா ப்3ரஹ்மலோகே மஹீயதே ||

எதை வைத்துக் கொண்டு இந்திரியங்களுக்கப்பாற்பட்ட தேவதைகளை தியானிக்கின்றோமோ அதற்கு ஆலம்பனம் என்று பெயர்.  இது இருவகையாக இருக்கின்றது.

  1. பிரதிமா ஆலம்பனம்– குறிப்பிட்ட உருவத்துடன் கூடியது, சிவபெருமான், முருகர்
  2. ப்ரதீகம் ஆலம்பனம்– குறிப்பிட்ட உருவமில்லாதது. (உ.ம்) ஓம் என்ற சொல்

நாம் ஒங்காரத்தை தியானிக்கும் போது நமது மனம் ஒம் என்ற சப்தத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும்.  இந்த ஓங்காரம் பரபிரம்மத்தையும், சகுண பிரம்மத்தையும் குறிப்பதனால்தான் இதை தியானம் செய்தவன் இறந்த பிறகு பிரம்ம லோகத்திற்கு சென்று சிறப்புடன் இருக்கின்றான்.  இதை பரம்பொருளாக விசாரம் செய்து அடையும் அறிவினால் பிரம்மத்தையே அடைவன், அதன் ஸ்வரூபமாகவே தன்னை உணர்ந்து கொள்வான்.
ஸ்லோகம்18 (ஆத்ம தத்துவ விளக்கம் 18-22)
ந ஜாயதே ம்ரியதே வா விபஶ்சின்னாயம் குதஶ்சின்ன ப3பு4வ கஶ்சித் |
அஜோ நித்ய: ஶாஶ்வதோÅயம் புராணோ ந ஹன்யதே ஹன்யமானே ஶரீரே ||
சைதன்ய ஸ்வரூபமான ஆத்மா பிறப்பதுமில்லை, இறப்பதும் இல்லை.  எதனிடமிருந்தும் தோன்றவில்லை, எதுவுமே இதனிடத்திருந்தும் தோன்றவில்லை.  இதற்கு காரணம் எதுவுமில்லை, காரியமாகவும் இல்லை.  இது பிறப்பற்றது, தேய்வற்றது, எல்லா காலத்திலும் இருப்பது, நிலையானது, வளர்ச்சியற்றது, பழமையானது, உடல் அழிந்தாலும் இது அழிவதில்லை.

ஸ்லோகம்19
ஹந்தா சேன்மன்யதே ஜந்தும் ஹதஶ்சேன்மன்யதே ஹதம் |
அபௌ4 தௌ ந விஜானீதோ நாயம் ஹந்தி ந ஹன்யதே ||
இது எந்தவிதமான செயலையும் செய்வதில்லை, அனுபவிக்கப்படும் பொருளாகவும் இருப்பதில்லை.  கொலைகாரன் நான் கொலை செய்கிறேன் என்று நினைப்பதும், கொலை செய்யப்படுபவன் நான் கொலை செய்யப்படுகின்றேன் என்று நினைப்பதும் அவர்களது அறியாமையை குறிக்கின்றது. உண்மையில் அவர்கள் ஆத்மாவை அறியவில்லை, இது அழிக்கப்படுவதுமில்லை, அழிவதுமில்லை.
ஸ்லோகம்20
அணோரணியான்மஹதோ மஹீயானத்மாஸ்ய ஜந்தோர்நிஹிதோ கு3ஹாயாம் |
தமக்ரது: பஶ்யதி வீதஶோகோ தா4து: ப்ரஸாதான்மஹிமானமாத்மன: ||
இந்த ஸ்லோகத்தில் நான்கு கருத்துக்கள் கூறப்பட்டுள்ளது.

  1. ஆத்மாவை எப்படி புரிந்து கொள்ள வேண்டும்,
  2. ஆத்மாவை புரிந்து கொள்கின்ற இடம்,
  3. எப்படிபட்டவர்களால் புரிந்து கொள்ளப்படுகின்றது
  4. ஆத்மாவை அடைவதால் அடையும் பலன்.

ஆத்ம லக்‌ஷணம்: இது அணுவைக்காட்டிலும் அணுவானது, சிறியதைக் காட்டிலும் சிறியது.  பெரியதைக் காட்டிலும் பெரியது.  இந்த கருத்து ஆத்மா பார்க்கப்படும் பொருளல்ல என்று உணர்த்துகின்றது.  இந்த லக்‌ஷணம் அனாத்மா விஷயங்களை நீக்கி விடுகின்றது.  குணங்களால் வரையறுக்கப்படாதது.  இதிலிருந்து எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருப்பதாகவும் புரிந்து கொள்ள வேண்டும்.  எந்த ஒன்றையும் கால, தேச வஸ்து இவைகளால் வரையறுக்கப்படலாம். ஆனால் ஆத்மா இவைகளால் வரையறுக்கப்பட முடியாது.

ஆத்மாவானது எங்கும் இருக்கின்றது ஆனால் அதை புரிந்து கொள்கின்ற இடம் நம்முடைய புத்திதான். நாம் பார்க்கும் உயிரினங்களின் மனதிற்குள் அமர்ந்திருக்கின்றது, வெளிப்படுகின்றது.

இந்த ஆத்மாவை, ஆசையற்றவன் (சுகத்தை நாடும் ஆசைகள் இல்லாதவன்) தன்னுடைய உண்மையான ஸ்வரூபமாகவே அறிகின்றான்..  நம்முடைய இந்திரியங்களின் அமைதியினால் ஆத்மாவை அடைகின்றான்.  ஈஸ்வரனின் அனுக்கிரகத்தாலும் ஆத்மாவை அடைகின்றான்.

ஆத்மாவை அடைந்தவன் சோகத்திலிருந்து விடுபடுகின்றான், துயரத்திலிருந்து விடுதலை அடைகின்றான்.  இந்த நிலை ஜீவன் முக்தியை குறிக்கின்றது.

ஸ்லோகம்21
அஸீனோ தூ3ரம் வ்ரஜதி ஶயனோ யாதி ஸர்வத: |
கஸ்தம் மதா3மத3ம் தேவம் மத3ன்யோ ஞதுமர்ஹதி ||
அறிவு ஸ்வரூபமான ஆத்மாவானது அனாத்மாவான இந்த சரீரத்தோடு இணைந்து இருக்கின்றது.  இதனால் ஜடமான நம் உடலும், மற்ற உறுப்புக்களும் செயல்படுகின்றன.  ஆத்ம தத்துவத்தை இரண்டு விதமாக பிரிக்கலாம்.  அதை தனியே பார்த்தல், உடலோடு சேர்ந்து பார்த்தல். ஆத்மா தன்னளவில் செயலற்று இருக்கின்றது.  ஆனால் அனாத்மாவுடன் சேரும்போது செயல்படுவதுபோல் இருக்கின்றது.  உதாரணமாக பானையானது ஒரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு செல்லும் போது அதிலிருக்கும் ஆகாசமும் செல்வது போல் தோன்றுகின்றது.  ஆனால் ஆகாசம் எங்கும் வியாபித்திருப்பதால் அது நகர்வதில்லை.
ஆத்மாவானது அமர்ந்து கொண்டே வெகுதூரம் செல்கின்றது. அதாவது அது தன்னளவில் அசையாமல் இருக்கின்றது, ஆனால் உடலோடு, மனதோடு சேர்ந்து பார்க்கும்போது அதுவும் வெகுதூரம் செல்வது போல் தோன்றுகிறது. உறங்கிக்கொண்டே வெகு தூரம் செல்கின்றது.  இதையும் உபாதிகளுடன் சேர்ந்து பார்க்கும்போது இதுமாதிரி தோன்றும்.  ஆனந்தமாகவும் அதற்கப்பாற்கப்பட்டதாகவும் இருக்கின்ற இந்த ஆத்மாவை என்னைத் தவிர வேறு யார் அறிய தகுந்தவர்.
ஸ்லோகம்22
அஶரீரம் ஶரீரேஷ்வனவஸ்தே2ஷ்வவஸ்தி2தம் |
மஹாந்தம் விபு4மாத்மானம் மத்வா தீ4ரோ ந ஶோசதி ||
இது உடலற்றது, உடலுக்குள்ளே இருந்து கொண்டு உடலற்றதாக இருக்கின்றது.  அழியக்கூடியதில் அழியாததாக இருக்கின்றது.  மிகப்பெரியது, மேலானது, அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கின்றது, எங்கும் வியாபித்திருக்கின்றது.  இந்த ஆத்மாவை இவ்வாறாக உணர்ந்திருக்கும் சான்றோர்கள் துயரப்படுவதில்லை.

ஸ்லோகம்23
நாயமாத்ம ப்ரவசனேன லப்4யோ ந மேத4யா ந ப3ஹுனா ஶ்ரதேன |
யமேவைஷ வ்ருணுதே தேன லப்4யஸ்தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தனூம்ஸ்வாம் ||
இதில் ஆத்ம ஞானத்தை அடைய உதவும் இரண்டு சாதனங்களை கூறப்பட்டிருக்கின்றது. அவைகள்

  1. ஈஸ்வரன் அனுக்கிரகம்,
  2. முமுக்‌ஷுத்வம்(மோக்‌ஷ இச்சா).

வேத பாராயணத்தால் மட்டும், வேதத்தை உச்சரிப்பதால் மட்டும் இதை அடைய முடியாது. வேதத்தில் படித்ததை நினைவில் வைத்திருந்தாலும் அதை அடைய முடியாது.  அதை பலமுறை கேட்பதாலும் பயனில்லை.  ஆத்மா எந்த மனிதனை தேர்ந்தெடுக்கின்றதோ அவனால் மட்டும்தான் அடைய முடியும்.  அவர்களுக்கு ஆத்மா தன்னுடைய ஸ்வரூபத்தை விளக்கி காட்டுகின்றது, உணர வைக்கின்றது.  இங்கே ஆத்மா என்பதை மாயையுடன் கூடிய ஆத்மாவை (ஈஸ்வரனை) எடுத்துக் கொள்ள வேண்டும்.  ஈஸ்வரன் எதன் அடிப்படையில் மனிதனை ஆத்ம ஞானம் அடைவதற்கு தேர்ந்தெடுப்பார் என்றால் எவனொருவன் மோட்சத்தை அடைவதில் தீவிர வைராக்யத்துடன் இருக்கின்றானோ அவனைத்தான் தேர்ந்தெடுக்கின்றார்.  அவர்களுக்குத்தான் ஆத்ம ஞானத்தை அடைவதற்கு அனுக்கிரகம் செய்கின்றார்.
ஸ்லோகம்24
நாவிரதோ து3ஶ்சரிதான்னஶாந்தோ நாஸ்மாஹித: |
நாஶாந்தமானஸோ வாபி ப்ரஞனேனௌனமாப்னுயாத ||
இந்த ஸ்லோகத்தில் நான்கு விதமான சாதனங்கள் கூறப்பட்டிருக்கின்றது.
அதர்மமான வாழ்க்கை முறையிலிருந்து தன்னை விலக்கி கொள்ளாதவன், புலன்களில் அமைதியில்லாதவன், புலனடக்கம் இல்லாதவன், எடுத்துக்கொண்ட லட்சியத்தில் மனத்தை வைக்காதவன், மன ஒருமுகப்பாடு இல்லாதவன், மன அமைதியை அடையாதவன் இப்படிப்பட்ட நிலையில் உள்ளவர்களால் ஞானம் வந்தாலும் அதில் நிலைபெற முடியாது. எனவே இவர்களால் ஆத்மாவை அடைய முடியாது
ஸ்லோகம்25
யஸ்ய ப்3ரஹ்ம ச க்ஷேத்ரம் சோபே4 ப4வத ஓத3ன: |
ம்ருத்யுர்யஸ்யோபஸேசனம் க இத்தா2 வேத3 யத்ர ஸ: ||
ஆத்மாவே எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருக்கின்றது.  பிரளய காலத்தில் அனைத்தும் அதற்குள் ஒடுங்கி விடுகின்றது.  இந்த அகில பிரபஞ்சமே ஆத்மாவுக்கு உணவாக இருக்கின்றது.  மரணத்தை ஊறுகாயாக பயன்படுத்தி உணவை உட்கொள்கின்றது.  பிறகு அதையையும் சாப்பிட்டு விடுகின்றது.

ஆத்மாவிற்கு பிராமணர்களும், சத்திரியர்களும் சாப்பிடும் அன்னமாகின்றது.  இது இந்த பிரபஞ்சமே சாப்பிடும் உணவாகின்றது என்று புரிந்து கொள்ள வேண்டும்.  மரணம் இதற்கு ஊறுகாய் போன்று இருக்கின்றது.  இவ்விதமாக எங்கு இந்த ஆத்மா இருக்கிறது என்று யார் அறிவார்.

மூன்றாம் பாகம்

ஸ்லோகம்01
ரிதம் பிப3ந்தௌ ஸுக்ருதஸ்ய லோகே கு3ஹாம் ப்ரவிஷ்டௌ பரமே ப்ரார்த4 |
சா2யாதபௌ ப்3ரஹ்மவிதோ3 வத3ந்தி பஞ்சாக்3ரயோ யே ச த்ரிணாசிகேதா: ||
பரமார்த்தாவும், ஜீவாத்மாவும் நிழலும் ஒளியும் போல் கர்ம பலன்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள், தன்னால் செய்யப்பட்ட கர்மத்தால் அடைந்த பாவ-புண்ணியங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். உடலில் உள்ள புத்தியில் நுழைந்திருக்கின்றார்கள்.  மேலானதாக இருக்கின்ற ஆத்மாவில் இருப்பிடம் புத்திதான்.  ஜீவனும், பிரம்மனும் நிழலும் ஒளியும் போல் இருக்கின்றார்கள் என்று பிரம்மத்தை அறிந்தவர்கள் கூறுகின்றார்கள்.  இதை இல்லறத்தில் இருந்து கொண்டு ஐந்துவிதமான யாகங்களை செய்தவர்களும், மூன்று முறை நாசிகேத யாகத்தை செய்தவர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள்.

இங்கு நுழைந்திருக்கின்றது என்பதை அவர்களுடைய இருப்பிடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.  அங்கு சென்றால் அவர்களை தரிசிக்கிலாம். பிரவேசம் என்பது அறியப்படுகின்ற இடம் என்று பொருள் கொள்ள வேண்டும்.  ஜீவன் சம்சாரியாக இருக்கின்றான், அவன் அனுபவிப்பதை பிரம்மத்தில் ஏற்றி வைத்திருக்கின்றோம்.
ஸ்லோகம்02
ய: ஸேதுரீஜானானாமக்ஷரம்  ப்3ரஹ்ம யத்பரம் |
அப4யம் திதீர்ஷதாம் பாரம் நாசிகேதம் ஶகேமஹி ||
யாகத்தை செய்கின்றவர்களுக்கு இகலோக, பரலோகத்தை அடைய ஆசையுள்ளவர்களுக்கு நாசிகேத யாகம் பாலமாகவோ, மார்க்கமாகமோ இருக்கின்றது.  அதேபோன்று சம்சார கடலின் பயமற்ற அக்கரையை அடைய விரும்புபவர்களுக்கு அழிவற்ற, உயர்ந்த பிரம்மமானது மார்க்கமாக, பாலமாக அமைகின்றது.
ஸ்லோகம்03,04
ஆத்மானம் ரதி2னம் வித்3தி4 ஶரீரம் ரத2மேவ து |
பு3த்3தி4ம் து ஸாரதி2ம் வித்3தி4 மன: ப்ரக்4ரஹமேவ || 3 ||
இந்த்3ரியாணி ஹயானாஹுர்விஷயாம்ஸ்தேஷு கோ3சரான் |
ஆத்மேந்த்3ரியமனோயுக்தம் போ4க்தேஜ்யாஹுர்மனீஷிண: || 4 ||
வாழ்க்கை என்ற பயணத்திற்கு ஸ்தூல சரீரம் ரதமாக கற்பனை செய்யப்பட்டிருக்கிறது.  ரதத்தில் அமர்ந்திருப்பவராக ஜீவாத்மா கூறப்படுகின்றார்.  புத்தியானது தேரோட்டியாகவும் மனம் கடிவாளமாகவும், விஷயங்களே பாதையாகவும், ஐந்து இந்திரியங்கள் குதிரைகளாகவும் கற்பனை செய்யப்பட்டிருக்கின்றது.
சரீரம் ஜடமாக இருப்பதால், அதை இயக்குவதற்கு ஏதோ ஒரு சக்தி உள்ளே இருக்க வேண்டும்.  சரீரத்திற்கு உரிமையாளன் ஜீவாத்மா

எப்படி எஜமானன் போக விரும்பும் இடத்தை அடைய சரியாக செலுத்துவதற்கு சாரதி என்பவன் இருப்பானோ அதுபோல வாழ்க்கையில் நாம் அடைய நினைக்கும் லட்சியத்தை அடைவதற்கு உதவுவது புத்திதான். ரத சாரதிக்கு தன் எஜமானனை அவர் விரும்பும் இடத்திற்கு கொண்டு செல்ல குதிரைகள் தேவையாக இருக்கின்றது.  அதுபோல புத்திக்கு குதிரைகள் போன்று இந்திரியங்களின் துணை தேவைப்படுகின்றது.  குதிரைகள் தேரை இழுப்பது போல இந்திரியங்கள் சரீத்தை இயக்குகின்றது.  தேரோட்டிக்கு குதிரைகளை கட்டுப்பாட்டுடன் செலுத்துவதற்கு கடிவாளம் தேவைப்படுவது போல புத்திக்கு இந்திரியங்களை கட்டுபடுத்துவதற்கு மனம் தேவைப்படுகின்றது.  ரதம் செல்லும் பாதையானது நாம் அனுபவிக்கும் விஷயங்களுக்கு உவமானமாக கூறப்படுகின்றது.  ஜீவாத்மாவை ரதத்தின்  எஜமானனாக எடுத்துக் கொள்ள வேண்டும்.  இந்த உடலானது ரதத்திற்கு ஒப்பிடப்படுகின்றது. புத்தியை தேரோட்டியாகவும், மனதை கடிவாளமாகவும், இந்திரியங்கள் குதிரைகளாகவும், தேர் செல்லும் பாதையானது விஷயங்களாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும்.  ஸ்தூல இந்திரியங்கள் மனதுடன் கூடிய போக்தாவாக இருக்கின்றது. இவ்விதம் ஞானிகள் கூறுகின்றார்கள்.

ஸ்லோகம்05
யஸ்த்வ்விக்ஞானவான்ப4வத்யயுக்தேன மனஸா ஸதா3 |
யஸ்யேந்த்3ரியாண்யவஶ்யானி து3ஷ்டாஶ்வா இவ ஸாரதே2: ||
எவனொருவன் புத்தியில் அறியாமையோடு இருக்கின்றானோ, கட்டுபடுத்த முடியாத மனதை உடையவனாக இருக்கின்றானோ அவனுடைய இந்த்ரியங்கள் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் இருக்கும்.  தேரோட்டிக்கு அடங்காத குதிரைகள் போல் புத்திக்கு இந்திரியங்கள் கட்டுப்படாமல் இருக்கும்.

ஸ்லோகம்06
யஸ்து விக்ஞானவான்ப4வதி யுக்தேன மனஸா ஸதா3 |
ஹஸ்யேந்த்3ரியாணீ வஶ்யானி ஸத3ஶ்வா இவ ஸாரதே2: ||
எவனொருவனுடைய புத்தியில் அறிவுடனும், கட்டுபடுத்தபட்ட நெறிபடுத்தபட்ட மனதுடன் இருக்கின்றானோ அவனுக்கு இந்திரியங்கள் அவனது கட்டுக்குள், வசத்தில் இருக்கும்.  தேரோட்டிக்கு அடங்கிய குதிரைகள் போல இந்திரியங்கள் அவனுக்கு அடங்கியிருக்கும்.
ஸ்லோகம்07
யஸ்த்வக்ஞானவான்ப4வத்யுமனஸ்க: ஸதா3ஶுசி: |
ந ஸ தத்பத3மாப்னோதி ஸம்ஸாரம் சாதி4க3ச்ச2தி ||
யாரொருவன் விவேகமில்லாமலும், அடங்காத மனதுடனும், தூய்மையற்ற மனதுடனும் இருக்கின்றானோ அவன் ஆத்மாவை அடைய வேண்டும் என்ற லட்சியத்தை அடைவதில்லை, சம்சாரத்தைதான் அவன் அடகின்றான்.
ஸ்லோகம்08
யஸ்து விக்ஞானவான்ப4வதி ஸமனஸ்க: ஸதா3ஶுசி: |
ஸ து தத்பத3மாப்னோதி யஸ்மாத்3பூ4யோ ந ஜாயதே ||
எந்த ஒரு விவேகியானவன், கட்டுப்படுத்தபட்டு, தூய்மையாக வைத்திருக்கும் மனதுடன் இருக்கின்றானோ அவன் மேலான லட்சியத்தை அடைகின்றான் அதனால் மீண்டும் பிறப்பதில்லை.
ஸ்லோகம்09
விக்3ஞானஸாரதி2ர்யஸ்து மன: ப்ரக்3ர ஹவான்னர: |
ஸோத்4வன: ப்ர்ரமாப்னோதி த3த்3விஷ்ணோ: பரம் பத3ம் ||
எந்த மனிதன் புத்தியான சாரதியையும், கடிவாளம் போன்ற மனதை கட்டுக்குள் வைத்திருக்கின்றானோ அப்படிபட்டவன் பயணத்தினுடைய முடிவை அடைகின்றான். இறைவனின் மேலான இருப்பிடமான பர பிரம்மத்தை அடைகின்றான்..

ஸ்லோகம்10
இந்த்3ரியேப்4ய: பரா ஹ்யர்தா2 அர்தேப்4யஶ்ச பரம் மன: |
மனஸஸ்து பரா பு3த்3தி4ர்பு3த்3தே4ராத்மா மஹான்பர: ||
பஞ்சகோச விசாரம்:-

  1. அன்னமய கோசம்:    நான், என்னுடையது என்ற பற்றை விட்டுவிட வேண்டும்.
  2. பிராணமய கோசம்:  பசி, தாகம், இந்திரியங்களை பயன்படுத்தி ஏதாவது செய்து கொண்டிருத்தல்.
  3. 3.மனோமய கோசம்:             யாருடைய அன்பிற்காகவும் ஏங்கியிருக்கக்கூடாது, யாரையாவது நேசிக்க வேண்டும் என்ற மனப்பான்மையோடு இருத்தல்
  4. விக்ஞானமய கோசம்:      தன்னை மதிக்க வேண்டும்.மரியாதை கொடுக்க வேண்டும். தன்னிடத்திலுள்ள திறமையை போற்ற வேண்டும் என்ற மனப்பான்மையோடு இருத்தல்
  5. ஆனந்தமய கோசம்:           எதிலும் இன்பத்தை நாடிக்கொண்டிருத்தல்

 

பரம் என்ற சொல்லுக்கு நான்கு அர்த்தங்கள் கூறப்படுகின்றது.  அவைகள்,

  1. சூட்சுமம்– ஒவ்வொரு கோசமும் அதற்கு முன்னே உள்ளதை விட மிகவும் சூட்சுமமானது.
  2. வ்யாப்தி– ஒரு பொருள் சூட்சுமமாக ஆக அது வியாபிக்கும் இடமும் அதிகமாகும்.
  3. நியந்தா–  ஒன்று அதற்கு முன்னே உள்ளதை கட்டுப்படுத்தும்,
  4. ஆத்ம சமீபம்– ஒன்று அதற்கு முன்னே உள்ளதை விட ஆத்மாவுக்கு அருகில் இருக்கும்.

இந்திரியங்களைக் காட்டிலும் வெளியிலுள்ள விஷயங்கள் மேலானது.  வெளியிலுள்ள விஷயங்களை காட்டிலும் மனம் மேலானது..எந்த இந்திரியத்தை பயன்படுத்த வேண்டும் என்று வெளியிலுள்ள விஷயத்தை பொறுத்துத்தான் அமைகிறது.  எனவே வெளியிலுள்ள பொருட்கள் மேலானதாக கருதப்படுகின்றது.  விஷயங்கள் என்பது எண்ணங்களை குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.  மனதைக் காட்டிலும் புத்தி மேலானது, சூட்சுமமானது  வியஷ்டி புத்தியை காட்டிலும் சமஷ்டி விக்ஞானமய கோசம் (புத்தி) மிகவும் மேலானது, சூட்சுமமானது.
ஸ்லோகம்11
மஹத: பரமவ்யக்தமவ்யக்தாத்புருஷ: பர: |
புருஷான்ன பரம் கிஞ்சித்ஸா காஷ்டா ஸா பரா க3தி: ||
சமஷ்டி விக்ஞானமய கோசத்தை விட காரண சரீரம், ஆனந்தமய கோசம் மேலானது.  ஆனந்த மய கோசத்தைக் காட்டிலும் பரபிரம்மம் மேலானது.  புருஷனைக் காட்டிலும் மேலானது வேறெதுவுமில்லை.  அதுவே முடிவானது, மேலான இருப்பிடம், இறுதி லட்சியமாகும்.
ஸ்லோகம்12

ஏஷ ஸர்வேஷு பூ4தேஷு கூ3டோ4த்மா ந ப்ரகாஶதே |
த்3ருஶ்யதே த்வக்3ரயயா பு3த்3த்4யா ஸூக்ஷ்மயா ஸூக்ஷ்மத3ர்ஶிபி4: ||
இந்த ஜீவராசிகளுக்குள் இருந்தாலும் அது மறைக்கப்பட்டுள்ளதால் நம்மால் அதை உணர முடியவில்லை.  கயிற்றில் தெரியும் பாம்பை பார்க்கும்போது உண்மையில் நாம் கயிற்றைத் தான் பார்க்கின்றோம் ஆனால் பாம்புதான் கண்களுக்கு தெரிகின்றது.  இது பாம்பு இல்லை என்று தெரிந்தவுடன் பாம்பு மறைந்து ஆதாரமான கயிறு தெரிகின்றது.  இது பாம்பு என்று சொல்லும் போது கயிற்றைத்தான் காட்டுகின்றோம் ஆனால் பாம்பு என்று அறியாமையால் சொல்கின்றோம்.

இந்த ஆத்மா எல்லா உயிர்களிலும் மறைந்திருக்கின்றது.  அதனால் தெரிவதில்லை, வெளிப்படுவதில்லை ஆனால் சூட்சுமமான தத்துவத்தை அறிந்தவர்களால்.  ஒருமுகப்படுத்தப்பட்ட நுண்ணிய புத்தியால் மட்டும் உணரப்படுகின்றது, பார்க்கப்படுகின்றது/
ஸ்லோகம்13
யச்சே2த்3வாங்மனஸீ ப்ராக்ஞஸ்தத்3யச்சேஜ்ஜான ஆத்மனி |
ஞானமாத்மனி மஹதி நியச்சே2த்தத்3யச்சேசே2ந்த ஆத்மனி ||


சிரவணம்:-
நான் இந்த ஐந்து கோசங்களுக்கு அப்பாற்பட்ட ஆத்மா என்ற அறிவை கேட்பதின் மூலம் அறிவது சிரவணம்.  சாஸ்திரம் உரைக்கின்ற கருத்தை கேட்டு புரிந்து கொள்வது சிரவணம். இந்த மூன்று சரீரமே நான் என்ற் அறியாமையில் இருப்பதால் இந்த சரீரத்திற்கு ஏதாவது தீங்கு வந்தால் துன்பமடைகின்றோம். அவமானபடுத்தினாலோ, தீய வார்த்தைகளால் திட்டினாலோ கோபம் வருகின்றது.  இந்த சரீரத்திலுள்ள அபிமானம் நீங்கி விட்டால், இதற்கு வரும் சுக-துக்கங்கள் நம்மால் அனுபவிக்கப்படமாட்டாது.  சாஸ்திரத்தை பல வருடங்களாக கேட்பதன் மூலம் நமக்கு நான் யார் என்ற உண்மை தெரிய வருகின்றது.  நான் பஞ்ச கோசங்களுக்கு அப்பாற்பட்டவன் என்ற அறிவை அடைகின்றோம்.  ஆத்ம-அனாத்மா விஷய ஞானம் ஏற்படுகின்றது.  நான் ஆத்மா, மனம், புத்தி, பிராணன் இவைகளை சாட்சியாக பார்த்து கொண்டு இருக்கின்றேன்.  இவைகளுக்கு வரும் சுக-துக்கங்கள் என்னைச் சேர்ந்ததல்ல என்று அறிந்து கொள்வதுதான் சிரவணம்.

மனனம்:-
இந்த ஞானம் வந்தால் அதில் நமக்கு பலவிதமான சந்தேகங்கள் வரும்.  இந்த சந்தேகங்கள் அனைத்தையும் போக்க உதவும் சாதனம் மனனமாகும்.  சாஸ்திர அறிவானது அனுபவ அறிவுக்கு முரண்பாடாக இருக்கும் இதை குரு-சாஸ்திரத்தின் மூலமாக நீக்கி விட வேண்டும்.
இப்படி அடைந்த ஞானத்தினால் உடலுக்கு எந்த தீங்கு வந்தாலும், புகழ் வந்தாலும் அது என்னைச் சேர்ந்ததல்ல என்று உறுதியாக இருக்க வேண்டும், சாட்சியாக பார்த்து கொண்டிருக்க வேண்டும். நம்முடைய மனநிலை எப்பொழுதும் ஒரே நிலையில் இருக்க வேண்டும்.  தீய குணங்கள் நம்மை விட்டு நீங்கி இருக்க வேண்டும்.  ஆனாலும் பல நேரத்தில் நாம் அவ்வாறு இருப்பதில்லை. இதனை விபரீத பாவனை என்று கூறப்படுகின்றது.  அதாவது ஞானம் அடைந்தாலும் அதற்கேற்ற மாதிரி மனநிலை முன்பு இருந்ததை போன்று மாறி விடுகின்றது.  இந்த நேரத்தில்தான் நிதித்யாஸனம் என்ற சாதனம் தேவைப்படுகின்றது.  இது விபரீத பாவனையை நீக்க உதவும்.  அடைந்த ஞானத்தில் நிலைபெறுவதற்கு இந்த சாதனம் உதவுகின்றது.

மந்திர விளக்கம்:-

நம்முடைய இந்திரியங்கள் புத்தியில் உள்ள அறிவுப்படி செயல்படுவதில்லை. இந்திரியங்களை மனதில் ஒடுக்க வேண்டும். இந்திரியங்களின் மீதுள்ள அபிமானத்தை எடுத்து மனதில் வைக்க வேண்டும்.  அதனால் இந்திரியங்கள் நம் சொற்படி செயல்படும்.  தேவையான விஷயங்களுக்கு மட்டும் அவைகளை பயன்படுத்த பழக வேண்டும். மனதில் உள்ள அபிமானத்தை எடுத்து புத்தியில் வைக்க வேண்டும்.  மனதில் இருக்கின்ற சங்கல்ப-விகல்பங்களை நீக்கி புத்திக்கு வரவேண்டும்.   புத்தியில் உள்ள அபிமானத்தை எடுத்து அனைத்து ஜீவராசிகளின் புத்தியில் வைக்க வேண்டும், இந்த சமஷ்டி புத்தியை சத்சிதானந்த ஸ்வரூபமாக இருக்கின்ற ஆத்மாவில் ஒடுக்க வேண்டும்.  இவைகளுக்கெல்லாம் ஆதாரமாக இருக்கின்ற பரமாத்மாவே நான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

ஸ்லோகம்14
உத்திஷ்டத ஜாக்3ரத ப்ராப்ய வரான்னிபோ3த4த் |
க்ஷுரஸ்ய தா4ரா நிஶிதா து3ரத்யயா து3ர்க3ம் பத2ஸ்தத்கவயோ வத3ந்தி ||
உத்திஷ்டத – எழுந்திருங்கள் ( ஆத்ம ஞானத்தை அடைய வாருங்கள் )
ஜாக்ரத – விழித்துக்கொள்ளுங்கள் ( ஆத்மா ஒன்று இருப்பதை தெரியாமல் உறங்கிக் கொண்டிருக்கும் நிலையிலிருந்து விழித்துக் கொள்ளுங்கள்)
ஆத்ம ஞானத்தை அடைய விழித்துக் கொள்ள இரண்டு படிகள் தாண்டி வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.  அவைகள்

  1. இந்த உலகத்தை துறக்க வேண்டியதற்கு காரணம் தெரியவில்லை.
  2. நாம் அடையும் துயரத்திற்கும், சுகத்திற்கும் இந்த உலகம்தான் காரணம் என்று தவறாக எண்ணிக் கொண்டிருத்தல்.

என்னுடைய அறியாமைதான் நான் அனுபவிக்கும் சுக-துக்கங்களுக்கு காரணம் என்று அறிந்து கொள்ளுங்கள்.  இந்த அறியாமையிலிருந்து விடுபடுங்கள், இந்த அறியாமை என்னும் உறக்கத்திலிருந்து விழித்தெழுங்கள். குருவை அடைந்து சரியான, நிச்சயமான அறிவை அடையுங்கள். இந்த ஞானத்தை அடையும் பாதையானது மிகக்கடினமானது, கூர்மையான கத்தியின் மீது நடந்து செல்வது போன்று கடினமானது  என்று ஞானிகள், ரிஷிகள் கூறுகின்றனர்.

ஸ்லோகம்15
அஶப்3த3மஸ்பர்ஶமரூபமவ்யயம் ததா2ரஸம் நித்யமக3ந்த4வச்ச யத் |
அன்னத்3யனந்தம் மஹத: பரம் த்4ருவம் நிசாய்ய தம்ம்ருத்யுமுகா2த்ப்ரமுச்யதே ||
ஆத்ம ஸ்வரூபம் இதில் கூறப்படுகின்றது.  ஆத்மா நிர்குணமாக இருப்பதால் அது மிகவும் சூட்சுமமானது, சப்தமற்றது எனவே காதுக்கு விஷயமாக இல்லை.  தொட்டுணரக்கூடியதல்ல, உருவமற்றது, சுவையற்றது, மணமற்றது, இவ்வாறு ஐந்து புலன்களுக்கும் விஷயமாக இல்லாமல் இருக்கின்றது.  இது மாற்றங்களற்றது, என்றும் இருப்பது ( காலத்திற்குட்படாதது), என்றும் மாறாமல் இருப்பது, எந்த காரணத்திடமிருந்து தோன்றவில்லை (அநாதி), இதிலிருந்தும் எதுவும் தோன்றவில்லை (அனந்தம்) சமஷ்டி பிரபஞ்சத்திற்கும் அப்பாற்பட்டது..  இப்படிபட்ட ஆத்மாவை உணர்ந்து கொள்வதால் மரணத்திலிருந்து விடுபடுகின்றான்.  அறியாமை, காமம், கர்ம பலன்கள் ஆகியவற்றிலிருந்து விடுதலையடைகின்றான்.

ஸ்லோகம்16
நாசிகேதமுபாக்2யானம் ம்ருத்யுப்ரோக்தம் ஸனாதனம் |
உஹத்வ ஶ்ருத்வா ச மேதா4வீ ப்3ரஹ்மலோகே மஹீயதே ||
இதில் விதேஹ முக்தியை பற்றி கூறுப்படுகின்றது.  ஆத்ம தத்துவ உபதேசத்தினால் நசிகேதனால் அடையப்பெற்ற ஆத்ம ஞானம், எமதர்ம ராஜாவினால் உபதேசிக்கபட்ட ஞானம், எப்பொழுதும், எங்கும் இருக்கின்ற ஞானம், பரம்பரையாக உபதேசிக்கபட்டு வருகின்ற ஞானம், அழிவற்ற ஞானம்.  இந்த ஞானத்தை கேட்டு புரிந்து கொண்டவர்கள் பிரம்ம ஸ்வரூபமாகவே இருக்கின்றார்கள்.  இந்த ஞானத்தை உபதேசிக்கின்றவர்களும் பிரம்ம ஸ்வரூபமாகவே இருக்கின்றார்கள்.

ஸ்லோகம்17
ய இமம் ப்ரமம் கு3ஹ்யம் ஶ்ரவயேத்3ப்3ரஹ்மஸம்ஸதி3 |
ப்ரயத: ஶ்ராத்3த4காலேவா ததா3னந்த்யாய கல்பதே ததா3னந்த்யாய கல்பத இதி2 ||
இந்த உபநிஷத்தை அர்த்தம் புரியாமல் பாராயணம் செய்பவர்கள் இறந்த பிறகு பிரம்மலோகத்திற்கு சென்று அங்கிருந்து முக்தியடைவதற்கு வாய்ப்பு உண்டு.  யாரொருவர் இந்த மேலான, ஆழமான, ரகசியமான ஆத்ம த்த்துவத்தை தன்னை நன்கு தூய்மைபடுத்திக் கொண்டு (உடல், மனம் இரண்டையும்), சிரார்த்தம் செய்கின்ற காலத்தில் பிராமணர்கள், சத்திரியர்கள் சபையில் மற்றவர்கள் கேட்பதற்காக சொன்னால் அப்பொழுதே அவர்கள் மோட்சத்தை அடைவதற்கு தகுதியடைகின்றார்கள்.

முதல் அத்தியாயம் முடிவடைகின்றது

இரண்டாவது அத்தியாயம் – முதல் வல்லி

முகவுரை:-

இந்த அத்தியாயத்தில் மூன்று கருத்துக்கள் கூறப்பட்டுள்ளது.  அவைகள்

  1. ஜீவ-ஈஸ்வர ஐக்கியம்,
  2. அதை அடைய சில சாதனங்கள்,
  3. ஆத்ம ஞானத்தினால் அடையும் பலன்கள்.

ஜீவ-ஈஸ்வர ஐக்கியத்தை பற்றி புதிய முறையில் விளக்கப்படுகின்றது.  அவஸ்தாத்ரயம் (சரீராத்ரயம் ) விசாரமும் செய்யப்படுகின்றது.  ஆத்ம பலனை வெவ்வேறு வகையாக கூறப்பட்டுள்ளது.

ஸ்லோகம்01
பராஞ்சி கா2னி வ்யத்ருணத்ஸ்வயம்பூ4ஸ்த்ஸ்மத்பராங் பஶ்யதி நாந்தராத்மன |
கஶ்சித்3தீ4ர: ப்ரத்யகா3த்மானமைக்ஷதா3வ்ருத்தசக்ஷுரம்ருதத்வமிச்ச2ன: ||
நமது ஞானேந்திரியங்கள் இயற்கையாகவே வெளி விஷயங்களை நோக்கி செல்வதாகவே ஈஸ்வரன் படைத்துள்ளார்.  அதனால்தான் இவைகளை வெளியுலகை நாடியே செல்கின்றது.  பகவானே இவ்வாறு ஒரு கஷ்டத்தை ஜீவனுக்கு கொடுத்து விட்டார்.  இந்திரியங்களை பயன்படுத்திதான் ஆக வேண்டும் ஆனால் இவைகளுக்கு அடிமையாகி விடக்கூடாது.  அவைகள் கொடுக்கும் இன்பத்திற்கு மயங்கி விடக்கூடாது.  இவைகளை உள்முகமாக திருப்பினால், புத்தியில் ஒடுக்கப்பட்டால் புத்தியானது மிகவும் சூட்சுமமாகின்றது.  யாரோ ஒரு விவேகிதான் அந்தராத்மாவை பார்க்கின்றான்.  இவ்வாறு இந்திரியங்களை உட்புறமாக திருப்பியவன் மரணத்திலிருந்து விடுபட விரும்புபவன், சம்சாரத்திலிருந்து விடுதலைப் பெற விரும்புபவன், மோட்சத்தை அடைவதில் தீவிர நாட்டமுடையவனாக இருக்கின்றான்..
ஆத்மா என்ற சொல் நான்கு வினையடிகளிலிருந்து தோன்றியது.

  1. ஆப்னோதி இதி ஆத்மா– எது எங்கும் வியாபித்திருக்கின்றதோ அதுவே ஆத்மா
  2. ஆத4த்தே– எது எல்லவற்றிற்கும் ஆதாரமாக இருக்கின்றதோ அதுவே ஆத்மா
  3. அத்3தி– எது ஜீவ-ஸ்வரூப விஷயத்தில் சாட்சியாக இருக்கின்றதோ அதுவே ஆத்மா
  4. அத்தே– மூன்று காலத்திலும் அழியாமல் எது இருக்கின்றதோ அதுவே ஆத்மா

 

ஸ்லோகம்02
பராச: காமனனுயந்தி பா3லாஸ்தே ம்ருத்யோர்யந்தி வித்தஸ்ய பாஶாம் |
அத2 தீ4ரா அம்ருதத்வம் விதி3த்வா த்4ருவமுத்4ருவேஷ்விஹ ந ப்ரார்த2யந்தே ||
குழந்தைத்தன்மையுடையவர்கள், விவேகமில்லாமல் வீணாக காலத்தை கழிப்பவர்கள், வெளியுலக இன்பம் தரும் பொருட்களை நாடுகின்றார்கள்.  அவர்கள் மரணத்தின் (அறியாமை, ஆசை, சம்சாரம்) பிடியில் சிக்கிக் கொள்கிறார்கள், சம்சாரம் என்னும் பிறப்பு-இறப்பு என்ற வலையில் விழுந்து விடுகின்றார்கள்  இந்த நிலையில் இருப்பவர்களின் மனம் போகத்திலே இருக்கும்.  வயதாக ஆக இந்திரியங்களின் சக்தி குறைந்து கொண்டே போகும் அதனால் அனுபவிக்கும் சக்தியும் குறைந்து கொண்டே போகும் எனவே மனதுயரத்தை அடைவார்கள்.  ஆனால் சான்றோர்கள் எங்கும் இருக்கின்ற, கால ஸ்வரூபியாக இருக்கின்ற நிலையான மனநிறைவை கொடுக்கின்ற மோட்சத்தை அறிந்து கொண்டு இவ்வுலகில் நிலையற்ற பொருட்களில் நாட்டம் கொள்வதில்லை, வேண்டுவதில்லை.

 

ஸ்லோகம்03
யேன ரூபம் ரஸம் க3ந்த4ம் ஶப்3தா3ன்ஸ்பர்ஶாம்ஶ்ச மைது2னான் |
ஏதேனைவ விஜானாதி கிமத்ர பரிஶிஷ்யதே ஏஜத்3வை தத் ||
த்ருக் த்ருஷ்ய விவேகம் – பார்ப்பவன் வேறு, பார்க்கப்படும் பொருள் வேறு என்ற அறிவு
உதாரணமாக இந்த உடலை நான் பார்க்கின்றேன் என்று சொல்லும் போது நான் பார்ப்பவனாக இருக்கின்றேன்.  இந்த உடல் பார்க்கப்படும் பொருளாக இருப்பதால் அது வேறாக இருக்கின்றது.  ஆகவே அறிகின்ற நான் வேறு அறியப்படும் விஷயங்கள் வேறு என்று புரிந்து கொள்ள முடிகின்றது.  எந்த வெளி விஷயங்களில் எனக்கு அபிமானம் இருக்கின்றதோ அதற்கு வரும் நஷ்டம் எனக்கு துயரத்தை கொடுக்கின்றது.  அதேபோல இந்த உடலுக்கு ஏதாவது கஷ்டம் வரும்போது எனக்கு துயரம் உண்டாகின்றது.

எந்த சைதன்யத்தால் மட்டும் உருவம், சுவை, மணம், சப்தம், தொட்டுணர்தல் ஆகியவைகளெல்லாம் அறியப்படுகின்றதோ, இந்திரியங்கள் விஷயத்தில் சம்பந்தம் வைப்பதால் வருகின்ற சுகம், துக்கம் கூட எந்த சைதன்யத்தால் அறியப்படுகின்றது.  பிறகு அறிய எஞ்சியுள்ளது ஒன்றுமில்லை.  இதிலிருந்து ஆத்மாவால் அறியப்படாதது எதுவுமே இல்லை என்று அறியப்படுகின்றது.  இப்படிபட்ட சித் ஸ்வரூபம்தான் அந்த ஆத்மாவாகிய பிரஹ்மம்.  இதுவேதான் எல்லா பிரபஞ்சத்திற்கும் ஆதாரமாக இருக்கின்றது.

த்ருக் த்ருஷ்ய விவேக விசாரம்:-
எது என்னால் அனுபவிக்கப்படுகின்றதோ அது நானல்ல.  இந்திரியங்களின் செயல்கள் என்னுடையதாக நினைக்கப்படுகின்றது.  (உ-ம்) நான் பார்க்கின்றேன், நான் நடக்கின்றேன் என்ற இந்த வாக்கியங்களில் கண் பார்க்கின்றது, அது பார்க்கின்ற விஷயங்கள் என்னால் அறியப்படுகின்றது.  இந்திரியங்களின் செயல்கள் எனக்கு அனுபவமாகவும், அறிவுபூர்வமாக அறிந்து கொள்ளுவதாலும் அவைகள் நானல்ல.  நம் மனதில் எண்ணற்ற எண்ணங்கள் ஓடிக் கொண்டிருப்பதை பார்க்கின்றோம். நம்முடைய உணர்ச்சிகளும் எண்ணங்கள்தான். நான் விரும்புகின்றேன், கோபத்துடன் இருக்கின்றேன் என்பதெல்லாம் எண்ணங்கள்தான்.  இவ்வாறு என் மனதிலுள்ள எண்ணங்களை நான் அறிகின்றேன்.  எனவே த்ருக்-த்ருஷ்ய விவேகத்தின் நியதிப்படி அவைகள் வேறு என்று தெளிவாக அறியப்படுகின்றது.  தோன்றுகின்ற எண்ணங்களை வெளிப்படுத்தும் மனம் நானல்ல என்று தெரிகின்றது. புத்தியின் செயல்களும் நம்மால் அனுபவிக்கப்படுவதால் அதுவும் நானல்ல என்று அறிந்து கொள்ள முடிகின்றது.  இதிலிருந்து எல்லாவித அனுபவங்களுக்கும் சாட்சியாக இருக்கின்ற ஆத்மாதான் பிரஹ்மம் என்று புரிந்து கொள்ள முடிகின்றது
இந்த உடல் நானல்ல என்று சொல்லும்போது ஒரு சந்தேகம் எழுகின்றது.  இந்த உடலை நான் அனுபவிக்கின்றேன், இந்த உடலுக்கு ஏதாவது துன்பம் வந்தால் நான் பாதிக்கப்படுகின்றேன்.  பிறகு எப்படி நான் வேறாக இருக்க முடியும் என்ற ஐயம் வரும்போது இந்த அனுபவங்கள் எல்லாம் பொய், ஏனென்றால் அனுபவம் எப்பொழுதும் பொய்யாகத்தான் இருக்கும். நீலவானம், சூரியோதயம் இவை அனுபவத்தில் வானம் நீலவர்ணமாகவும், சூரியன் கிழக்கில் உதிப்பது போலவும் இருக்கின்றது ஆனால் நம் அறிவில் இவைகள் பொய் என்று தெரிகின்றது.  எனவே அறிவுதான் எப்பொழுதும் உண்மை என்று ஏற்றுக்கொண்டு அனுபவம் ஒரு அத்யாஸம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
அனுபவம் பொய்யென்று எப்படி புரிந்து கொள்வது?  இந்த சரீரத்தில் நான் என்ற அபிமானம் வைப்பதனால் இது நான் என்று எண்ணிக் கொண்டு இதற்கு வரும் கஷ்ட நஷ்டங்கள் அனைத்தும் எனக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்று உணர்கின்றோம். வெளி விஷயங்களுக்கு ஏதாவது நேர்ந்தால் உண்மையில் நம்மை பாதிக்கக்கூடாது ஆனால் நாம் அபிமானிக்கும் விஷயமாக இருந்தால் அதனால் பாதிக்கப்படுகின்றோம்.  உதாரணமாக நம்முடைய நெருங்கிய உறவினர்க்கோ, நண்பருக்கோ ஏதாவது துன்பம் வந்தால் நாமும் பாதிக்கப்படுகின்றோம், ஏனென்றால் அவர்கள் மீது நாம் அபிமானம் வைத்திருக்கின்றோம்.  ஆகையால் ஏதாவது ஒரு பொருள் மீது பற்று வைக்கும் போது அதற்கு வரும் நலம்-கேடு என்னைப் பாதிக்கின்றது.  நாம் நம் உடலின் மீது அபிமானம் வைத்திருப்பதால் அதனால் பாதிப்பை அடைகின்றோம்.  த்ருக்-த்ருஷ்ய விவேகம் முக்தியை கொடுக்காது, ஆனால் நம்மை இந்த சரீரத்திலிருந்து விடுவித்து விடும்.  அதேபோல மனம், புத்தி அனைத்தும் நானல்ல என்று நீக்க வேண்டும்.

ஸ்லோகம்04
ஸ்வப்னாந்தம் ஜாக3ரிதாந்தம் சோபௌ4 யேனானுபஶ்யதி |
மஹாந்தம் விபு4மாத்மானம் மத்வா தீ4ரோ ந ஶோசதி ||

இந்த ஸ்லோகத்தில் அவஸ்தா த்ரயம் மூலம் ஆத்ம தத்துவம் விளக்கப்படுகின்றது.  நாம் ஒவ்வொருவரும் மூன்று விதமான அனுபவங்களை உடையவராக இருக்கின்றோம். அவைகள்

  1. விழிப்பு நிலை (ஜாக்ரத் அவஸ்தா) – வெளியே இருக்கும் உலகத்தை அனுபவிக்கின்றோம்.
  2. கனவு நிலை (ஸ்வப்ன அவஸ்தா) – இந்திரியங்களின் துணையில்லாமலே மனதினாலே ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கி அனுபவிக்கின்றோம்.
  3. ஆழ்ந்த உறக்கம் (சுஷூப்தி அவஸ்தா) – இந்த நிலையில் அறியாமையுமிருக்கின்றது, சுகத்தையும் அனுபவிக்கின்றோம்.

 

ஆத்மாவானது விழிப்புநிலை பதார்த்தங்களையும், கனவுநிலை பதார்த்தங்களையும் பார்த்து கொண்டு இருக்கின்றது.  இவைகளுக்கு சாட்சியாக இருந்து கொண்டு எந்தவிதமான அவஸ்தைகளையும் அனுபவிப்பதில்லை, அதற்கென்று எந்த அனுபவமும் கிடையாது.  கனவுலகில் அனுபவிக்கும்போது விழிப்புநிலை பொருட்கள் எதுவும் நமக்கு பயன்படாது, அதேபோன்று கனவுலகில் அனுபவிக்கும் எந்த விஷயமும் விழிப்புநிலையில் பயன்படாது.  இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது எது வந்து போகின்றதோ அது அநித்யம் என்றும் எது தொடர்ந்து இருக்கின்றதோ அதுதான் நித்யம் ( நிலையானது ) என்பதாகும்.  இந்த மூன்று நிலைகளிலும் வந்து போவது விழிப்புநிலை பிரபஞ்சமும், கனவுநிலை பிரபஞ்சமும்தான், தொடர்ந்து இருந்து கொண்டிருப்பது நான் என்கின்ற ஆத்மா என்று தெளிவாக அறிந்து கொள்ள முடிகின்றது.

 

நாம் காலம், தேசம், வஸ்து இவைகளைக் கண்டு பயந்து கொண்டிருக்கின்றோம், நானேதான் ஆத்மா என்று புரிந்து கொண்டால் நமக்கு இவைகளால் எந்தவிதமான பயமும் வராது.

 

கனவுநிலையில் தோன்றுகின்ற காலம், தேசம், பொருட்கள், விழிப்பு நிலையில் தோன்றுகின்ற காலம், தேசம், பொருட்கள் இந்த இரண்டும் எந்த சைதன்யத்தால் பார்க்கப்பட்டு கொண்டிருக்கின்றதோ அது எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கும், பூரணமான ( தேச, கால, வஸ்து பரிச்சேத ரஹிதம்) ஆத்மாவாக விவேகிகள் அறிந்து கொண்டு துன்பத்தை அனுபவிப்பதில்லை.

ஸ்லோகம்05
ய இமம் மத்4வத3ம் வேத3 ஆத்மானம் ஜீவமந்திகாத் |
ஈஶானம் பூ4தப4வ்யஸ்ய ந ததோ விஜுகு3ப்ஸதே ஏதத்3வை தத் ||

இந்த ஸ்லோகத்தில் ஈஸ்வரனை பற்றிய விசாரம் செய்யப்படுகின்றது.  இரண்டு தத்துவங்களின் சேர்க்கைதான் ஈஸ்வரன் என்று அறிந்துள்ளோம்.  களிமண்ணால் செய்யப்பட்ட பானைகள் வெவ்வேறாக இருந்தாலும் எல்லாவற்றிலும் களிமண் என்ற ஒன்றே இருப்பது போல ஈஸ்வரன் என்ற விஷயத்தில் ஸத்யமான ( என்றும் இருப்பது ) பிரம்மம் என்ற ஒன்றுதான் மித்யாவாக தோன்றி கொண்டிருக்கும் இந்த பிரபஞ்சத்திற்கு காரணமாக இருக்கின்றது.  நாம ரூபங்களாக இருக்கும் இந்த பிரபஞ்சமே மித்யா, பொய்யான தோற்றம் என்று கூறப்படுகின்றது.  வெளித்தோற்றத்திற்கு வராத பிரபஞ்சமே மாயா என்றும், அதுவே காரண பிரபஞ்சம் என்றும் அழைக்கபடுகின்றது.  இந்த பிரம்மமானது காரண பிரபஞ்சத்தோடு சேரும்போது அது ஈஸ்வரன் என்று கூறப்படுகின்றது.  அதேபோன்று ஜீவனிடம் என்றும் இருப்பது ஆத்மாதான், அதுவே காரண சரீரத்தோடு சேர்ந்திருப்பதால் ஜீவன் என்று அழைக்கப்படுகின்றது.

பிரம்மம் + காரண பிரபஞ்சம் = ஈஸ்வரன்.
ஆத்மா   + காரண பிரபஞ்சம் = ஜீவன்
பொய்யான காரண பிரபஞ்சமும்,  காரண சரீரமும் நீக்கினால் பிரம்மமும், ஆத்மாவும் ஒன்றாகி விடுகின்றது.

ஸத்      – மூன்று காலத்திலும் இருப்பது
சித்       – அறிவு ஸ்வரூபமாக இருப்பது
ஆனந்தம் – பூரணமாக இருப்பது

இதுதான் பிரம்மத்தின் லக்‌ஷணம், இது அநாதி, அதேப்போன்று மாயாவும் அநாதி. இது இரண்டும் சேர்ந்து பார்க்கும்போது ஈஸ்வரன் என்று அறியப்படுகின்றது.  மூன்று விதமான பார்வையில் ஈஸ்வரனுக்கு மூன்றுவிதமான பெயர்கள் உள்ளது.

  1.      மாயையோடு இருக்கும் பிரம்மமான ஈஸ்வரனுக்கு அந்தர்யாமி என்று பெயர்.மாயைக்கு இருத்தல் என்ற தன்மையை கொடுப்பவர் ஈஸ்வரன்.
  2.    மாயைக்கு காரண பிரபஞ்சம் என்றும் கூறுவர். இதுவே இந்த உலகத்திற்கு காரணமாக இருக்கின்றது.  சூட்சும பிரபஞ்சம் முதலில் மாயையிலிருந்து தோன்றியது.  இதிலிருந்து நம்முடைய சூட்சும சரீரமும் தோற்றுவிக்கப்படுகின்றது.  இப்பொழுது சூட்சும பிரபஞ்சத்தோடு சேர்ந்து பார்க்கும்போது ஈஸ்வரனுக்கு ஹிரண்யகர்ப்பன் என்று பெயர்.
  3.     சூட்சும பிரபஞ்சத்திலிருந்து ஸ்தூல பிரபஞ்சம் தோன்றியது. சூட்சும பஞ்ச பூதங்கள் ஸ்தூலமாக மாற்றும் முறைக்கு பஞ்சிகரணம் என்று பெயர்.  ஸ்தூல பிரபஞ்சத்தோடு பிரம்மத்தை ஈஸ்வரனாக பார்த்தால் அதற்கு விராட் என்று பெயர்.

 

இதேபோன்று ஜீவனுக்கும் மூன்று சரீரத்தின் அடிப்படையில் மூன்று பெயர்கள் உண்டு. அவைகள்

  1.     ஆத்மா என்றழைக்கப்படும் பிரம்மமே மூன்று சரீரத்திற்கும் ஆதாரமாக இருக்கின்றது. காரண சரீரத்தோடு இந்த ஆத்மாவை பார்த்தால் அதற்கு ஜீவன் என்று பெயர். இதில் அறியாமை நிறைந்திருப்பதால் காரண சரீரத்தை அவித்யா என்றும் கூறுவர்.  ஆழ்ந்த உறக்கத்திலும் அறியாமை இருக்கின்றது, இந்த அவஸ்தையில் உள்ள ஜீவனுக்கு பிராக்ஞன் என்று பெயர்.
  2.     காரண சரீரத்திலிருந்து சூட்சும சரீரம் தோன்றுகிறது. இந்த சூட்சும சரீரத்தோடு பார்க்கும் போது அதற்கு தைஜஸன் என்று பெயர்.
  3.    ஸ்தூல சரீரத்தோடு ஆத்மாவை பார்த்தால் அதற்கு விஸ்வன் என்று பெயர்.

ஜாக்ரத் அவஸ்தையில் உள்ள ஜீவனுக்கு விஸ்வன் என்று பெயர். கனவு நிலையில் உள்ள ஜீவனுக்கு தைஜஸன் என்று  பெயர்.  ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள ஜீவனுக்கு பிராக்ஞன் என்று பெயர்.  மூன்று நிலைக்கும் பொதுவாக இருப்பவன் ஜீவன்.

  • சமஷ்டி மாயைக்கு அந்தர்யாமி என்று பெயர், வியஷ்டி மாயைக்கு பிராக்ஞன் என்று பெயர்.
  • சமஷ்டி சூட்சும மாயைக்கு ஹிர்ண்யகர்ப்பன், வியஷ்டி சூட்சும மாயைக்கு தைஜஸன்
  • சமஷ்டி ஸ்தூல மாயைக்கு விராட், வியஷ்டி ஸ்தூல மாயைக்கு விஸ்வன்.

 

மந்திர விளக்கம்:
யாரொருவர் இந்த ஜீவனை ( கர்ம பலனை அனுபவிப்பவன் ) மூன்று காலத்திலும் இருக்கின்ற ஈஸ்வரனிடத்திலிருந்து வேறுபாடில்லாமல் அறிகின்றானோ அவர் இந்த அறிவுக்கு பிறகு தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற ஆசையிலிருந்து விடுபடுகின்றான் ( ந விஜுகுப்ஸதே ).  இந்த ஆத்மாதான் அந்த ஈஸ்வரன்.
.
ந விஜுகுப்ஸதே – பலன் விசாரம்:-
எல்லோரும் தன்னுடைய பாதுகாப்பை நாடித்தான் எல்லா செயல்களையும் செய்கின்றார்கள்.  அதனால் தான் துயரத்தை அனுபவிக்கின்றார்கள். எல்லோரும் பயத்தின் நடுவில்தான் வாழ்கின்றோம் என்று சங்கரர் சொல்கிறார்.  நம்மால் எந்தப்பொருளை காப்பாற்ற முடியும்?  உலகத்திலுள்ள எல்லா பொருட்களும் அழிவை அடையக்கூடியது, எனவே அவைகளை காப்பாற்ற எடுக்கும் முயற்சியால் எந்த பலனும் கிடைக்காது.  அழியாத பொருட்களை காப்பாற்றத் தேவையில்லை.  இந்த அறிவால் அழியப்போகும் இந்த உடலை காப்பாற்ற வேண்டும் என்ற பயம் நீங்குவதுடன், அதை காப்பாற்ற எடுக்கும் முயற்சிக்கு எந்த பலனும் கிடைக்காது என்று உணர்ந்தவுடன், அதிலிருந்து வரும் துயரங்களிலிருந்து விடுபடுகின்றோம். நானே ஆத்மா என்று அறிந்தவுடன், நான் அழியாதவன் அதனால் என்னைக்காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற பயம் நீங்கயவனாக இருந்து கொண்டிருப்பேன்.  ஆத்மா ஒன்றுதான் எனவே எனக்கு பயமும் கிடையாது, துயரமும் கிடையாது.  இந்த ஞானம் வந்தவுடன் எந்தப் பொருட்களிடத்திலும் வெறுப்போ, அருவெறுப்போ வருவதில்லை.  நானே அனைத்துமாக இருப்பதால் யாரையும் வெறுக்க முடியாது, அருவெறுப்பு கொள்ள முடியாது.

ஸ்லோகம்06
ய: பூர்வம் தபஸோ ஜாத்மத்3ப4ய: பூர்வமஜாயத |
கு3ஹாம் ப்ரவிஶ்ய திஷ்தந்தம் யோ பூ4தேபி4ர்வ்யபஶ்யத ஏதத்3வை ||
அந்தர்யாமியின் தவத்தின் பலனாக ஸ்தூலமான நீர் போன்ற பஞ்ச பூதங்களுக்கு முன் ஹிரண்யகர்ப்பன் தோன்றினார்.  ஒவ்வொரு ஜீவராசியின் புத்தியில் நுழைந்து சூட்சும சரீர அங்கங்களில் இருக்கின்றார் என்று யார் அறிகின்றார்களோ அவர்களுக்கு.  இந்த ஹிரண்யகர்ப்பன்தான் அந்த பிரம்மம் என்ற அறிவும் கிடைக்கின்றது

ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து கர்மேந்திரியங்கள், ஐந்து பிராணன்கள், மனம், புத்தி, சித்தம் மற்றும் அகங்காரம் இவைகளின் ஒன்றுசேர்ந்த தொகுப்பையே சூட்சும சரீரம் என்று அழைக்கப்படுகின்றன. இதனை பிராண சரீரம் என்றும் கூறுவர்

ஸ்லோகம்07
யா ப்ரணேன ஸம்ப4வத்யதி3திர்தே3வதாமயீ |
கு3ஹாம் ப்ரவிஶ்ய தி2ஷ்டந்தீம் யா பூ4தேபி4ர்வ்யஜாயத ஏதத்3வை ||
யார் பிராண ரூபமாக தோன்றியுள்ளாரோ, அவரே ஞானேந்திரியங்களின் வழியாக உலகத்திலுள்ள விஷயங்களை அனுபவித்துக் கொண்டிருப்பவர்.  இவ்வாறு எல்லா சூட்சும சரீரங்களில் இருந்து கொண்டு இந்த உலகத்தை அனுபவிக்கும் ஹிரண்யகர்ப்பர் எல்லா தேவதைகளுமாக இருப்பவர்.  ஒவ்வொரு இந்திரியத்தையும் தேவதையாக எடுத்துக் கொண்டால் எல்லா தேவதைகளுமாக இவர் இருக்கின்றார் என்ற அறிவும் கிடைக்கின்றது.  இவர் ஒவ்வொரு ஜீவராசிகளின் இதயத்தில், புத்தியில், மனதில் வீற்றிருக்கின்றார். இந்த ஹிரண்யகர்ப்பனே அந்த பிரம்மம்.  ஐந்து சூட்சும பூதங்களிலிருந்து ஸ்தூல பூதங்கள் தோன்றுகின்றது.

ஸ்லோகம்08
அரண்யோர்நிஹிதோ ஜாதவேதா3 க3ர்ப4 இவ ஸுப்4ருதோ க3ர்பி4ணீபி4: |
தே3வே தி3வ ஈட3யோ ஜாக்3ருவத்3பி4ர்ஹவிஷ்மத்3பி4ர்மனுஷ்யேபி4ரக்3னி: ஏதத்3வை ||
அக்னியை விராட் என்று அழைக்கப்படுகின்றது, இதுதான் நம்மால் பார்க்கக்கூடிய பஞ்ச பூதங்களில் முதலில் இருப்பது. அரணி என்ற இரண்டு மரக்கட்டைகளுக்குள் இருக்கின்ற அக்னியானது கருவுற்ற பெண்களால் காக்கப்படுகின்ற கருவைப்போல உபாஸனை செய்கின்ற மனிதர்களால் யாகம் செய்கின்ற மனிதர்களால் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து வழிபடப்படுகின்றது. அரணி கட்டையும், வயிறும் விராட்டின் மறுபெயர்களாகும். இந்த விராட் பிரம்ம ஸ்வரூபமாகவே இருக்கின்றார்.  இதன் மூலம் இந்த உலகிலுள்ள எல்லா ஜீவராசிகளின் ஸ்தூல உடல்களிலும் நான் இருக்கின்றேன் என்ற ஸர்வாத்மா புத்தி ஏற்பட வேண்டும்.

ஸ்லோகம்09
யதஶ்சேதே3தி ஸூயோÅஸ்தம் யத்ர ச க3ச்ச2தி |
தம் தே3வா: ஸர்வேர்பிதாஸ்தது3 நாத்யேதி கஶ்சன ஏதத்3வை தத் ||

இதில் ஹிரண்யகர்ப்ப தத்துவத்தை விளக்கி ஐக்கியம் கூறப்படுகின்றது. எந்த தத்துவத்திலிருந்து ( ஹிரண்யகர்ப்பன்) சூரியன் உதிக்கின்றானா, அஸ்தமனம் ஆகின்றானோ  எல்லா தேவதைகளும் அந்த தத்துவத்தையே சார்ந்திருக்கின்றார்கள்.  எந்த ஒன்றும் அந்த தத்துவத்தை மீறுவதில்லை.  அந்த ஹிரண்யகர்ப்ப தத்துவமே பிரம்மம் என்று தெரிந்து கொள்

ஸ்லோகம்10
யதேவேஹ தத3முத்ர யத3முத்ர தத3ன்விஹ |
ம்ருத்யோ: ஸ ம்ருத்யுமப்னோதி ய இஹ நானேவபஶ்யதி ||
இதில் ஜீவ-ஈஸ்வரன் ஐக்கியம் சொல்லப்படுகின்றது. எந்த ஒன்று இங்கு இருக்கின்றதோ அதுவே அங்கும் இருக்கின்றது. எது அங்கேயிருக்கின்றதோ அதுவே மிக அருகில் இங்கே இருக்கின்றது.

எந்த தத்துவம் ஜீவ சம்சாரத்தை அடைந்தது போல் இருக்கின்றதோ அதுவே சம்சாரத்தை கடந்ததாக இருக்கின்றது. சம்சாரியாக தெரிகின்ற ஜீவனும், சம்சாரமற்ற ஈஸ்வரனும் ஒன்று இங்கு சொல்லப்படுகின்றது என்று புரிந்து கொள்ள வேண்டும்.  எப்படி இருவரும் ஒன்றாக இருக்க முடியும் என்று கேள்வி எழும் போது கடல்-அலை உதாரணத்தை பார்த்து புரிந்து கொள்ளலாம்.  அலைகள் கடலிலே தோன்றி பின்பு அதிலேயே அழிந்து விடுகின்றது. கடலில் இருப்பதும் நீர்தான், அலைகளில் இருப்பதும் நீர்தான். நீர் என்ற ஒன்று அலைகள் என்று கூறுவது வியஷ்டியை குறிக்கின்றது, கடலை குறிப்பிடும்போது சமஷ்டியை குறிக்கின்றது. ஜீவனுக்கும் ஈஸ்வரனுக்கும் பிரம்மத்தின் அடிப்படையில் வேறுபாடில்லை, ஆனால் நாம-ரூபத்தில் வேறுபட்டிருக்கின்றது.  அலைகள் கடலில் தோன்றி அதிலேயே மறைந்து விடுவது போல ஜீவன் ஈஸ்வரனிட்த்திலிருந்து தோன்றி அவரிடமே லயமடைந்து விடுகின்றான்.  சரீரத்தில் அபிமானம் இருந்து கொண்டிருக்கும்வரை ஜீவ-ஈஸ்வரனுக்குமிடையே த்வைத புத்தி இருந்து கொண்டேயிருக்கும். அதாவது ஈஸ்வரன் படைப்பவன், நான் படைக்கப்பட்டவன் என்ற இருமை புத்தி இருந்து கொண்டேயிருக்கும்.

மந்திர விளக்கம்:
யாரொருவன் ஜீவ-ஈஸ்வர விஷயத்தில் வேறுபாடு இருப்பது போல் பார்க்கின்றானோ அவன் மரணத்திலிருந்து மரணத்தை அடைகின்றான்.  அதாவது எவனொருவன் ஈஸ்வரனை தனக்கு வேறாக பார்க்கின்றானோ அவன் சம்சார சுழலிலேயே இருக்கின்றான், பிறவி பெருங்கடலை கடக்காமல் இருக்கின்றான்.

ஸ்லோகம்11
மனஸைவேத3மாப்தவ்யம் நேஹ நானாஸ்தி கிஞ்சன |
ம்ருத்யோ: ஸ ம்ருத்யும் க3ச்ச2தி ய இஹ நானேவ பஶ்யதி ||
இந்த உலகம் சத்யம் என்ற எண்ணத்தை நீக்கி பிரம்மம் ஒன்றுதான் சத்யம் என்று அறிந்திட வேண்டும்.  இதில் ஈஸ்வரனுக்கு இந்த உலகத்திற்குமிடையே உள்ள வேறுபாட்டை நீக்குகின்றது.

நேஹ நானாஸ்தி கிஞ்சன:-. (விசாரம்)
இந்த உலகில் மிக சிறிதளவு கூட வேறுபாடு கிடையாது.  இந்த உலகம் நாம் அனுபவிக்கவில்லையென்றால் அது இல்லை என்று சொல்ல தேவையில்லை.  உலகமே இல்லையென்றால் அது இல்லை என்று சொல்லவும் தேவையில்லை.  இல்லாத ஒன்றில் இருக்கின்றது என்ற அறிவு இருக்கும்போதுதான் இல்லை என்று நீக்க முடியும். உதாரணமாக பிளாஸ்டிக் மலரை நிஜம் என்று நினைக்கும் போது அது நிஜமில்லை என்று  சொல்வது போல இருக்கிறது.  தோன்றிக் கொண்டிருக்கும் இந்த உலகம் உண்மையிலே வெறும் தோற்றமே உண்மையான தோற்றம் கிடையாது. பிரம்மம் மட்டும்தான் இருக்கின்றது என்ற அறிவை அடைந்திட வேண்டும். நான் மட்டும்தான் இருக்கின்றேன் என்ற உணர்வை அடைந்திட வேண்டும். தூய்மையான மனதினால்தான் இந்த அறிவை அடைந்திட முடியும்.

சில உபநிஷத்தில் மனதினால் ஞானத்தை அடைந்திட முடியாது என்று கூறப்பட்டிருக்கின்றது.  ஆனால் இங்கோ தூய்மையான மனதினால்தான் அடைய முடியும் என்று கூறப்படுகின்றது.  இந்த முரண்பாட்டை விசாரம் செய்து நீக்க வேண்டும். ஆத்ம ஞானத்திற்கு மனம் தேவையா இல்லையா என்ற கேள்விக்கு இப்பொழுது விடை காண்போம்.

சாதாரண அறிவு எப்படி ஏற்படுகின்றது என்றால் மனமானது கண் பார்க்கும் பொருளின் வடிவமாக மாறுகின்றது இதற்கு விருத்தி (எண்ணம்) என்று பெயர். எண்ணம் பார்க்கும் பொருளை  முழுவதுமாக வியாபித்தல் என்பதற்கு விருத்தி வியாப்தி என்று பெயர்.  நம்முடைய மனதில் உள்ள எண்ணங்களும் வெறும் ஜடம். சைதன்யத்தின் பிரதிபிம்பத்தால் (சிதாபாசம்) விருத்தியை வியாபிக்கும்போது நமக்கு அந்த விருத்தி வியாபித்த பொருளை பற்றிய அறிவு ஏற்படுகின்றது. இதற்கு பல-வியாப்தி என்று பெயர்.  விருத்தி வியாப்தியும், பல வியாப்தியும் சேர்ந்து நடைபெறுவதால்தான் நமக்கு அறிவு வருகின்றது.

ஆத்மாவை அறியும் விஷயத்தில் பல-வியாப்தி தேவையில்லை வெறும் வியாப்தி மட்டும் இருந்தால் போதும். உதாரணமாக இருட்டான அறையில் உள்ள புத்தகத்தை எடுப்பதற்கு கதவை திறக்க வேண்டும், பிறகு வெளிச்சத்தை கொண்டு வர வேண்டும்.  அப்போதுதான் புத்தகத்தை எடுக்க முடியும். ஆனால் எரிந்து கொண்டு இருக்கும் மெழுகு வர்த்தியை எடுப்பதற்கு கதவை திறந்தால் மட்டும் போதும், வெளிச்சம் தேவையில்லை, ஏனென்றால் அந்த மெழுகுவர்த்தியே வெளிச்சத்தை தந்து கொண்டிருக்கின்றது.  அதுபோல ஆத்ம விஷயத்தில் சிதாபாசத்தினுடைய பல வியாப்தி தேவையில்லை.

ஆகவே மனம் தேவையில்லை என்று சொல்லும் போது பல வியாப்தி தேவையில்லை என்றும், மனம் தேவை என்று சொல்லும்போது விருத்தி வியாப்தி தேவையென்றும் புரிந்து கொள்ள வேண்டும்.

மந்திர விளக்கம்:-
யார் இங்கு ஈஸ்வரனுக்கும், உலகத்திற்குகிடையே வேறுபாட்டை பார்க்கின்றார்களோ அவர்கள் மரணத்திலிருந்து மரணத்தை அடைகின்றார்கள். இது நம்மை துயரத்தில் ஆழ்த்தி கொண்டிருக்கும்.  இங்கு மரணம் என்பதற்கு காம, க்ரோதம், போன்றவற்றிலிருந்து அடைகின்ற துன்பத்தை குறிக்கின்றது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
ஸ்லோகம்12
அங்கு3ஷ்டமாத்ர: புருஷோ மத்4ய ஆத்மனி தி2ஷ்டதி |
ஈஶானோ பூ4தப4வ்யஸ்ய ந ததோ விஜுகு3ப்ஸதே ஏதத்3வை தத்3 ||
இதயத்திற்குள் இருக்கும் ஆகாசத்தைத்தான் கட்டைவிரல் அளவுள்ள ஆத்மா என்று இங்கு குறிப்பிடப்படுகிறது.  இதயமே மனதின் இருப்பிடம், இதயத்திற்குள் இருக்கும் ஆகாசத்தில்தான் அந்தக்கரணம் இருக்கின்றது.  இந்த ஆகாசம் நமது கட்டைவிரலில் அளவு உள்ளது.  இப்படிபட்ட மனதை உபாதியாகவும், அதற்கு ஆதாரமாகவும் இருப்பதுதான்.ஆத்மா.

இந்த உடலின் மையப்பகுதியான இதயத்திற்குள் ஆத்மா இருக்கின்றது.  இந்த ஆத்மாவே எல்லா காலத்திலும் இருக்கின்ற ஈஸ்வரனாகவும் இருக்கின்றது. இந்த ஐக்கிய ஞானத்தை புரிந்து கொண்டபிறகு எதற்கும் கவலைப்பட தேவையில்லை, பாதுகாப்பை தேடிக் கொள்ள தேவையில்லை, எந்த ஜீவராசிகளையும் வெறுக்க மாட்டோம்.
ஸ்லோகம்13
அங்கு3ஷ்டமாத்ர: புருஷோ ஜ்யோதிரிவாதூ4மக: |
ஈஶானோ பூ4தப4வ்யஸ்ய ஸ இவாத்3ய ஸ உ ஶ்வ: ஏதத்3வை தத்3 ||
கட்டைவிரல் அளவுள்ள ஆத்மாவானது ஒளியைப் போல இருக்கின்றது. இருளில் மறைந்துள்ள பொருட்களை அறிய உதவுவது போல உபநிஷத் அறியாமையை நீக்கி ஞானத்தை கொடுக்கின்றது. இந்த ஆத்மாவினால்தான் அனைத்துமே அறியப்படுகின்றது. நான் என்னை எதனுடைய உதவியில்லாமலே அறிகின்றேன். புகை நெருப்பை மறைக்கலாம், ஆனால் அறியாமை இந்த ஆத்மாவை மறைக்க முடியாது.  ஆத்மா அறியாமையையும், அறிவையும் பிரகாசிக்கின்றது  எல்லா காலத்திற்கும் அதிபதியாக இருக்கின்ற ஈஸ்வரனே இப்பொழுதும் இருக்கின்றார், நாளையும் இருப்பார். என்றும் இருப்பதும், எல்லாகாலத்திலும் இருப்பதுமான இந்த ஆத்மாதான் அந்த பிரம்மமேயாகும்.

ஸ்லோகம்13
யதோ2த3கம் து3ர்கே3 வ்ருஷ்டம் பர்வதேஷு விதா4வதி |
ஏவம் த4ர்மான்ப்ருத3க் பஶ்யம்ஸ்தானேவானுவிதா4வதி ||
இருமைதான் நம்மை சம்சாரத்தில் வைத்திருக்கின்றது.  மழை மலை உச்சியில் பொழியும் போது நீரானது மலைகளிலிருந்து கீழே ஓடி வந்து மறைந்து விடுகின்றது. அதுபோல ஜீவர்களை வேறுபாட்டுடன் யார் பார்க்கின்றார்களோ அவர்கள் அந்த தவறான அறிவினால் சம்சாரத்தில் வீழ்ந்து துன்பமடைகின்றார்கள்.  உடல், மனம் என்று யார் ஜீவர்களை பார்க்கின்றார்களோ அவர்கள் மீண்டும் மீண்டும் பிறக்கின்றார்கள்.  ஈஸ்வர புத்தியோடு இந்த உலகத்தை பார்த்தால் அது நமக்கு இன்பத்தை கொடுக்கும்.

ஸ்லோகம்14
யதோ2த3கம் ஶுத்3தே4 ஶுத3த4மாஸிக்தம் தாத்3ருகே3வ ப4வதி |
ஏவம் முனேர்விஜானத ஆத்மா ப4வதி கௌ3தம ||

எவ்வாறு தூய்மையான நீரானது தூய்மையான நீரில் கலந்தால் வேற்றுமையின்றி இருக்கின்றதோ அதுபோல  இந்த தத்துவத்தை அறிகின்ற முனிவனுக்கு ( சிரவணம், மனனம் இவைகளை தாண்டி நிதித்யாஸனத்தில் இருப்பவன்) ஆத்மாவாக எல்லாமும் இருக்கின்றது. தூய்மையான நீரோடு தூய்மையான நீரை சேர்க்கும்போது இரண்டும் ஒன்று சேர்ந்து விடுவது போல ஆத்மாவை அறிந்தவன் ஆத்மாகவே இருப்பதை உணர்கின்றான், அந்த பிரம்மமாகவே மாறி விடுகின்றான்.

 

இரண்டாவது அத்தியாயம் – முதலாவது வல்லி முடிவுற்றது.

இரண்டாவது அத்தியாயம் 2வது வல்லி

ஸ்லோகம்01

பரமேகாத3ஶத்3வாரமஜஸ்யாவக்ரசேதஸ: |
அனுஷ்டாயந ஶோசதி விமுக்தஶ்ச விமுச்யத தத்த்3வை தத் ||
இந்த உடலானது பதினொன்று வாயில்களை உடையதாக வருணிக்கப்படுகின்றது.  நாபியும், தலையுச்சியில் இருக்கின்ற இரண்டு துவாரங்கள் சேர்த்து ஏற்கனவே உள்ள ஒன்பது துவாரங்களான இரண்டு கண்கள், இரண்டு மூக்கு துவாரங்கள், இரண்டு காதுகள், ஒரு வாய், ஒரு ஆசன துவாரம், ஒரு மூத்திர துவாரம் ஆகியவைகள்.  சில துவாரங்கள் வழியே வெளி விஷயங்கள் உள்ளே தள்ளப்படுகின்றது, சில துவாரங்கள் வழியே விஷயங்கள் வெளியே தள்ளப்படுகின்றது.  கோளகம் என்பது இந்திரியங்களின் இருப்பிடமாக கூறப்படுகின்றது. உறங்கும் போது அவைகள் இருதயத்திற்கு சென்று விடுகின்றது.  உடலுக்கு அரசனாக இருப்பது ஜீவாத்மா.

வேறுபாடுகளற்ற சைதன்ய ஸ்வரூபமாக இருக்கின்ற பிறப்பு-இறப்புகளில்லாத இந்த உடல் ஆத்மாவினுடையது என்று நிதித்யாஸனம் செய்ய வேண்டும். அதாவது இந்த ஞானத்தை நன்கு தியானம் செய்வதனால் அடையப்பெறும் ஞானநிஷ்டையினால் துயரங்கள் வருவதில்லை.  இந்த நிலையே மோட்சம், இதை அடைவதினால் சம்சாரத்திலிருந்து விடுதலையடைந்து ஜீவன் முக்தனாகின்றான்.  ( சம்சாரம் என்பது ராக, துவேஷ, மத, மாச்சர்ய போன்ற குணங்கள் சேர்ந்த நிலையேயாகும் ).  மீண்டும் அவன் பிறப்பதில்லை, இறப்பதுமில்லை, பிறப்பு-இறப்புகளில்லாத நிலையை அடைகின்றான்.
ஸ்லோகம்02
ஹம்ஸ: ஶுசிஷத்3வஸுரந்தரிக்ஷஸத்3தோ4 விதி3ஷத3திதி2ர்து3ரோணஸத் |
ந்ருஷத்3வரஸத்3ருதஸத்3வ்யோமஸத3ப்3ஜா கோ3ஜா ரிதஜ ஆத்3ரிஜா ரிதம் ப்3ருஹத் ||
எல்லாவிடத்திலும், எல்லா சரீரங்களிலும் இருந்து கொண்டிருக்கின்றது ஆத்மா.  இதுவே சொர்க்கத்தில் சூரியனாகவும், சொர்க்கத்திற்கும் பூமிக்குமிடையே உள்ள ஆகாசத்தில் வாயுவாகவும், பூமியில் அக்னியாகவும் இருக்கின்றது. நம்முடைய வீட்டில் விருந்தினராக இருப்பது போல எல்லா மனிதர்களிடத்திலும், தேவர்களிடத்திலும் இருக்கின்றது..  யாகங்களிலும், ஸத்யத்திற்குள்ளும் இருக்கின்றது.  ஆகாசத்திலும், நீர்வாழ் பிராணிகளிடத்தில், நிலத்தில் உள்ள தாவரங்கள் அனைத்திலும், விதவிதமான யாகங்களின் அங்கங்களிடத்திலும், மலைகளிலிருந்து உருவாகும் நதிகளிலும் இருக்கின்றது.  மூன்று காலத்திலும் இருப்பது, மிகப்பெரியது, பூரணமானது இந்த ஆத்மா.
ஸ்லோகம்03
ஊர்த்4வம் ப்ராணமுன்னயத்யபானம் ப்ரத்யக3ஸ்யதி |
மத்3யே வாமனமாஸீனம் விஶ்வேதே3வா உபாஸதே ||
ஆத்மா இருப்பதினால் இந்த உடல் செயல்படுகின்றது.  அது இல்லாவிட்டால் உடல் ஜடமாகத்தான் இருக்கும்.
அன்வய-வ்யதிரக நியாயம்: எது இருந்தால் மற்றொன்றும் இருக்குமோ, எது இல்லாமலிருந்தால் மற்றொன்றும் இல்லாமல் இருக்குமோ அதுவே அதற்குக் காரணம்.
உதாரணமாக களிமண் இருந்தால் பானை இருக்கின்றது. அது இல்லையென்றால் பானையும் இருக்காது எனவே களிமண் பானைக்கு காரணமாக இருக்கின்றது/  அதுபோல ஆத்மா இருப்பதால்தான் பிராணன், மனம் ஆகியவை செயல்படுகின்றது, அது இல்லையென்றால் இவைகள் செயல்படுவதில்லை, எனவே ஆத்மாதான் இந்த உடலுக்கு காரணம் என்ற கருத்து இந்த மந்திரத்தில் விளக்கப்படுகின்றது.

பிராணனை மேல்நோக்கி இழுக்கின்றது, மேல் நோக்கி செல்ல காரணாமாக இருக்கின்றது, அபானனை கீழ்நோக்கி தள்ளுகின்றது. இதயத்தை இருப்பிடமாக கொண்டிருக்கின்ற , இதயத்தில் வெளிப்படுகின்ற, வணங்கதக்கதாகவும் இருக்கின்ற ஆத்மாவை, எல்லா இந்திரியங்களும் வணங்குகின்றன. எல்லா இந்திரியங்களும் அந்தந்த விஷயங்களை கிரகித்து ஆத்மாவிடம் சமர்ப்பிக்கின்றது என்பதையே வணங்குதல் என்ற சொல்லின் பொருளாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஸ்லோகம்04
அஸ்ய விஸ்ரம்ஸமானஸ்ய ஶரீரஸ்த2ஸ்ய தேஹின: |
தே3ஹாத்3விமுச்யமானஸ்ய கிமத்ர பரிஶிஷ்யத ஏதத்3வை தத் ||
இந்த உடலில் உள்ள உயிரானது, உடலை விட்டுப் பிரிந்து விட்டால், வெளியேறிய பிறகு அங்கு என்ன எஞ்சியிருக்கின்றது, ஒன்றுமில்லை என்று குறிப்பிடப்படுகின்றது. இதுவே அந்த பிரம்ம தத்துவம்.
ஸ்லோகம்05
ந ப்ராணேன நாபானேன மர்த்யே ஜீவதி கஶ்சன |
இதரேண து ஜீவந்தி யஸ்மின்னேதாவுபாஶ்ரிதௌ ||
பிராணன் இருக்கும் வரைதான் இந்த உடல் செயல்படுகின்றது. எனவே அனவய-வ்யதிரேக நியாயப்படி பிராணன்தானே இந்த உடலுக்கு காரணம் என்ற சந்தேகத்திற்கு பதிலாக அமைகின்றது இந்த மந்திரம்.

மனிதர்கள் ஒருகாலும் பிராணனாலும் வாழ்வதில்லை, அபானனாலும் வாழ்வதில்லை.  இவைகளுக்கும் வேறான ஒன்றினால்தான் வாழ்கின்றார்கள்.  ஆத்மாவை இந்த பிராணன்கள் சார்ந்திருக்கின்றது
விசாரம்:-
ஆத்மாவின் ஸத் ஸ்வரூபம் எல்லாவிடத்திலும் இருக்கின்றது.  அது இருக்குமிடம் ஜடமாகவும் இருக்கலாம், அறிவுள்ளதாகவும் இருக்கலாம்.  அதேபோல சித் ஸ்வரூபம் உயிரினங்களில் அறிவுபூர்வமாக இயங்குகிறது.  மனதில் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்ற ஆத்மாதான் அவைகள் இயங்குவதற்கு உதவுகின்றது.  உடலிலிருந்து ஆத்மா வெளியேறுவது என்று குறிப்பிடுவது அதனுடைய பிரதிபிம்பமான சிதாபாஸத்தின் அழிவைத்தான்.  உயிரற்ற உடலிலும் ஆத்மா ஸத் ஸ்வரூபத்துடன் இருந்து கொண்டுதான் இருக்கும்.

ஸ்லோகம்06
ஹந்த த இத3ம் ப்ரவக்ஷ்யாமி கு3ஹ்யம் ப்3ரஹ்ம ஸனாதனம் |
யதா2 ச மரனம் ப்ராப்ய ஆத்மா ப4வதி கௌ3தம ||
உனக்கு மிகவும் ரகசியமானதும், எப்பொழுதும் இருக்கின்ற இதைப்பற்றி மேலும் சொல்கிறேன்.  அறியாமையில் இருக்கின்ற ஒரு ஜீவன் மரணத்தை அடைந்தால் அவனிடத்தில் உள்ள ஆத்மா என்னவாகும் என்பதையும் உனக்கு நான் சொல்கிறேன்.

ஸ்லோகம்07
யோனிமன்யே ப்ரபத்3யந்தே ஶரீரத்வாய தே3ஹின: |
ஸ்தா2ணுமன்யேÅனுஸம்யந்தி யதா2கர்ம யதா2ஶ்ரதம் ||
சில ஜீவாத்மாக்கள் வேறொரு மனித உடலை எடுப்பதற்கு கர்ப்பத்தை அடைகிறது.  வேறு சில உயிர்கள் தாவரங்களாகவும், விலங்குகளாகவும் பிறப்பெடுக்கின்றன.  அவரவர்களுடைய வினைப்பயனுக்கேற்பவும், அவர்கள் செய்த உபாஸனைகளின் அடிப்படையிலும் அடுத்த ஜென்மத்தில் அதற்கேற்றாவாறு சரீரத்தை எடுக்கின்றான்.  கர்ப்பத்திலிருந்து பிறப்பவைகள், முட்டையிலிருந்து பிறப்பவைகள், வியர்வையிலிருந்து பிறப்பவைகள், பூமியை பிளந்து வரும் உயிர்கள் இவைகளில் ஏதாவது ஒரு வகையில் மறுபிறப்பையடைகிறான்.

ஸ்லோகம்08
ய ஏஷ ஸுப்தேஶு ஜாக3ர்தி காமம் காமம் புருஷோ நிர்மிமாண: |
ததே3வ ஶுக்ரம் தத்3ப்3ரஹ்ம ததே3வாம்ருதமுர்யதே
தஸ்மின்ல்லோகா: ஶ்ரிதா: ஸர்வே தது3 நாத்யேதி கஶ்சன ஏதத்3வை ||
ஆத்மா எந்தவிதமான அவஸ்தைகளுக்குள்ளும் வருவதில்லை.  மூன்று அவஸ்தைகளும் மனதை சார்ந்தது.  இது எப்பொழுதும் விழித்துக் கொண்டிருக்கின்றது.  இந்திரியங்கள் உறங்கும்போதும் கூட ஆத்மாவானது விதவிதமான விருப்பமான பொருட்களை உருவாக்கியபடி விழித்துக் கொண்டிருக்கின்றது.  அதுவேதான் தூய்மையான பிரம்மம்.  ஆனால் இந்த அவஸ்தைகளோடு சம்மந்தப்படாமலிருப்பதையே தூய்மையானது என்று குறிப்பிடப்படுகின்றது.  அதுவே மரணமற்றதாகவும், எல்லாகாலத்திலும் இருக்கின்றதாகவும் உள்ளது.  எல்லா உலகங்களும் அதையே சார்ந்திருக்கின்றது. இதற்கு அப்பாற்பட்டு  வேறொன்றும் கிடையாது.

ஸ்லோகம்09
அக்3னிர்யதௌ2கோ பு4வனம் ப்ரவிஷ்டோ ரூபம் ரூபம் ப்ரதிரூபோ ப3பு4வ |
ஏகஸ்ததா2 ஸர்வபுதாந்தராத்மா ரூபம் ரூபம் ப்ரதிரூபோ ப3ஹிஶ்ச ||
எப்படி ஆத்மா பலவாக தெரிகின்றது என்ற கேள்வி எழும்போது விதவிதமான மண்பாண்டங்களுக்குள் தெரிகின்ற ஆகாசமும் அவைகளுக்கு வெளியேயுள்ள ஆகாசமும்  ஒன்றுதான் என்ற உதாரணத்துடன் ஒப்பிட்டு புரிந்து கொள்ள வேண்டும். மண்பாண்டங்களின் கொள்ளளவு அவைகளுக்குள் உள்ள ஆகாசத்தின் அளவை பொறுத்து அமைகின்றது.  இப்போது ஆகாசமானது வெவ்வேறு அளவுடைய ஆகாசம் இருப்பது போல தோன்றுகிறது/  இந்த வேறுபாடு மண்பாண்டத்தினுடைய வேறுபாட்டால் தோன்றுகின்றது.  இங்கு இந்த மண்பாண்டத்தை உபாதி என்று கூறப்படுகின்றது.  இது ஆகாசத்தை பலவாக இருப்பது போல் தோற்றமளிக்க செய்கின்றது.  அதேபோல பலவாக இருக்கும் சரீரத்தின் இருக்கும் ஆத்மா பலவாக இருப்பது போல் காட்சியளிக்கின்றது.

இந்த மந்திரத்தில் இதை விளக்க அக்னியை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்கிறார் எமதர்ம ராசா.  அக்னியானது எந்த பொருளை வியாபிக்கின்றதோ அதன் வடிவமாகவே காட்சியளிப்பது போல் ஆத்மாவும் எந்த சரீரத்தை வியாபிக்கின்றதோ அதனிடத்தில் இருப்பதாக நினைக்க தோன்றுகின்றது
உபாதி:-      எந்தவொன்று தன்னுடைய தன்மையை வேறொன்றிற்கு பொய்யாக கொடுக்கின்றதோ அதற்கு உபாதி என்று பெயர்.

உபஹிதம்:-   எந்தவொன்று பொய்யாக வேறொன்றின் தன்மையை பிரதிபலித்து அல்லது ஏற்றுக் கொண்டு காட்சியளிக்கின்றதோ அதற்கு இந்த பெயர்.

இந்த மூன்று சரீரங்களும் உபாதி, ஆத்மா உபஹிதம்.  சரீரம் த்வைதமாக இருக்கின்றது, சரீரத்தில் உள்ள குணங்கள் பொய்யாக ஆத்மாவுக்கு சென்று விட்டதால்,  ஆத்மா பலவாக காட்சியளிக்கின்றது.  ஆனால் அது ஒன்றாகத்தான் இருக்கின்றது.  எவ்வாறு ஒன்றாக இருக்கும் அக்னியானது உலகத்திலுள்ள பொருட்களை வியாபிக்கும் போது அந்தந்த பொருட்களின் வடிவத்தை அடைகின்றதோ அவ்வாறு ஒன்றாக இருக்கின்ற ஆத்மா, எல்லா ஜீவராசிகளுடைய மனதிலும், சரீரங்களிலும் வெளிப்படுகின்ற ஆத்மா அந்தந்த சரீரத்தில் நுழைந்து அநதந்த சரீரத்தினுடைய ரூபத்தை அடைகின்றதோ அதுவேதான் சரீரத்திற்கு  வெளியிலும் இருக்கின்றது.

ஸ்லோகம்10
வாயுர்யதை2கோ பு4வாம் ப்ரவிஷ்டோ ரூபம் ப்ரதிரூபோ ப3பு4வ |
ஏகஸ்ததா2 ஸர்வபூ4தாந்தராத்மா ரூபம் ரூபம் ப்ரதிரூபோ ப3ஹிஶ்ச ||
எவ்வாறு வாயுவானது உலகத்திலுள்ள பொருட்களில் நுழைந்து அந்தந்த பொருட்களின் வடிவத்தை அடைகின்றதோ அதுபோல ஒன்றாக இருக்கும் ஆத்மா எல்லா ஜீவராசிகளின் மனதில் நுழைந்து அதன் வடிவத்தை அடைகின்றது.

ஸ்லோகம்11
ஸூர்யோ யதா2 ஸர்வலோகஸ்ய சக்ஷுர்ன லிப்யதே சாக்ஷுஷைர்பா3ஹ்யதோ3ஷை: |
ஏகஸ்ததா2 ஸர்வபூ4தாந்தராத்மா ந லிப்யதே லோகது3:கே2ன பா3ஹ்ய: ||
சூரியன் அனைத்து உலகிற்கும் கண்களாக  இருந்து கொண்டும், நம்முடைய கண்களின் அதிஷ்டான தேவதையாக இருந்து கொண்டும் அருள் கொடுக்கின்றான்.  நம்முடைய கண்களில் இருக்கும் குறைகளால் சூரியன் பாதிக்கபடுவதில்லை. வெளியே உள்ள பொருட்களின் குறைகள் அதை பாதிப்பதில்லை.  அதுபோல ஒன்றாக இருக்கும் ஆத்மா, எல்லா ஜீவராசிகளின் உடலில் நுழைந்திருந்தாலும், மனதிற்கு, உடலுக்கு வரும் துயரங்களினால் பாதிப்பதில்லை.  இவைகளையெல்லாம் கடந்திருக்கின்றது ஆத்மா.  இதிலிருந்து ஆத்மா வேறு, மனம் என்பது வேறு என்று புரிந்து கொள்ள முடிகின்றது.
ஸ்லோகம்12
ஏகோ வர்ஶீ ஸர்வபூ4தாந்தராத்மா ஏகம் ரூபம் ப3ஹுதா4 ய: கரோதி |
தமாத்மஸ்த2ம் யேÅனுபஶ்யந்தி தீ4ராஸ்தேஷாம் ஸுக2ம் ஶாஸ்வதம் நேதரேஷாம் ||
ஒன்றாக இருப்பதும், அனைத்தையும் தன் கட்டுபாட்டுக்குள் வைத்திருப்பதுமான ஆத்மா எதையும் சார்ந்தில்லாதிருப்பதால் துயரங்களை அனுபவிப்பதில்லை. பரதந்திரம் என்பது ஒன்று மற்றொன்றை சார்ந்திருக்கும் நிலைமை, இந்த நிலையில் துன்பங்களை அனுபவிக்க நேரிடும்.  சுதந்திரம் என்பது எதையும் சார்ந்தில்லாதிருக்கும் நிலைமை இந்த நிலையில் எதனிடமிருந்தும் துன்பத்தை அனுபவிக்க நேரிடாது.  ஆத்மா சுதந்திரமாக இருப்பதால் துயரங்கள் எதுவும் அது அனுபவிக்காது.  எல்லா அனுபவத்திற்கும் காரணம் இருமைதான்.  ஆத்மா ஒன்றாக இருப்பதால் எந்த அனுபவமும் அதற்கு கிடையாது அதனால் துயரமும், சுகமும் வருவதில்லை.

உத்க்ருஷ்டத்வம் என்பது என்னைக் காட்டிலும் மற்றவர்களிடத்தில் ஏதோ ஒன்று அதிகமாக இருக்கிறது என்று எண்ணி துயரப்படுவதை குறிக்கின்றது.  ஆத்மா எல்லாவிடத்திலும் சமமாக இருப்பதால் இந்தவிதத்தில் துயரங்கள் வருவதில்லை  இது ஒன்றாக இருந்து கொண்டு பலவிதமாக இருப்பதுபோல் தன்னை தோற்றுவித்து கொண்டிருக்கின்றது.

எந்தவொரு விவேகி ( சாதன சதுஷ்டய சம்பத்தியை அடைந்தவன் ) பிரம்மத்தை தன்னிடத்தில் இருப்பதாக ( குரு-சாஸ்திரத்தின் துணைக்கொண்டு ) பார்க்கின்றானோ அவனுக்கு நிலையான சுகம் கிடைக்கின்றது, அவனைத் தவிர மற்றவர்களுக்கு இந்த நிலையான சுகம் கிடைக்காது.

அறியாமையில் அடையும் சுகம்-துக்கம் ஏதோ ஒன்றின் காரணத்தால்தான் வருகின்றது.  அந்த ஒன்று மாற்றத்திற்கு உட்பட்டதாக இருக்கிறது.  எனவே இந்த சுக-துக்கம் மாறி மாறி வருகின்றது.  ஆனால் மாறாத ஆத்ம தத்துவத்தை உணர்வதால் அவன் எப்போதும் சுகமாக,  ஆனந்தமாக இருக்கின்றான்.

ஸ்லோகம்13
நித்யோÅநித்யானாம் சேதனஶ்சேதனானாமேகோ ப3ஹுனாம் யோ வித3தா4தி காமான் |
தமாத்மஸ்த2ம் யேÅனுபஶ்யந்தி தீ4ராஸ்தேஷாம் ஶாந்தி: ஶாஶ்வதீ நேதரேஷாம் ||
நிலையற்றவைகளில் நிலையானதாகவும், அறிவுக்கு அறிவாகவும், ஒன்றாகவும் இருக்கின்ற ஈஸ்வரன் (பிரம்மம்) எல்லோருக்கும் அவரவர்களுடைய ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார், கர்ம பலன்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.  இப்படிபட்ட பிரம்மத்தை தானேயென்று எந்த விவேகிகள் உணர்கின்றார்களோ அவர்களுக்கு நிலையான மன அமைதி கிடைக்கின்றது.  மற்றவர்களால் இதை அடைய முடியாது.

ஸ்லோகம்14
ததே3ததி3தி மன்யந்தேÅநிர்தேஶ்யம் பரமம் ஸுக2ம் |
கத2ம் நு தத்3விஜானீயாம் கிமு பா4தி விபா4தி வா ||
அந்த பிரம்மம்தான் இந்த ஆத்மா என்று சொல்கிறார்கள்.  இது மேலான சுகமாக இருப்பது, நிலையான சுகமாக இருப்பது, இப்படிபட்ட தன்மையுடையது என்று வாக்கால் குறிப்பிட முடியாததாகவும், அனுபவத்திற்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கின்றது இந்த சுகம்.  நான் எவ்வாறு இதை தெரிந்து கொள்வது?  அது தானாகவே ஒளிர்கின்றதா?  தெளிவாக அறியக்கூடியதா அல்லது வேறொன்றால் ஒளிர வைக்கப்படுகின்றதாக இருக்கின்றதா?  சந்தேகமில்லாமல் அறியக்கூடியதாக இருக்கின்றதா?

ஸ்லோகம்15
ந தத்ர ஸூர்யோ பா4தி ந சந்த்3ரதாரகம் நேமா வித்3யுதோ பா4ந்தி  கதோயமக்னி: |
தமேவ பா4ந்தமனுபா4தி ஸர்வம் தஸ்ய பா4ஸா ஸர்வமித3ம் விபா4தி ||
இதை சூரியனும் விளக்காது, ஒளிர்விக்காது, சந்திரனாலும், நட்சத்திரங்களாலும் ஒளிர்விக்க முடியாது. இதை மின்னலாலும் ஒளிர்விக்க முடியாது. இந்த அக்னியானது எவ்வாறு ஒளிர முடியும்.  ஒரு பொருள் இருக்கின்றது என்றால் அது அனுபவத்திற்கு வந்து இருக்க வேண்டும்.  அந்த ஆனந்தமயமான ஆத்மா சுயபிரகாசமாக மற்றவர்களால் அறியப்படுகின்றது. அதனுடைய பிரகாசத்தினால்தான் உலகிலுள்ள அனைத்தும் பிரகாசிக்கின்றன.

அறிவை அடைய உதவுகின்ற ஞானேந்திரியங்களால் ஆத்மாவை விளக்க முடியாது.  ஆனால் ஆத்மாவினால்தான் அனைத்தும் செயல்பட்டு அறிவை அடைய உதவுகின்றது.

விசாரம்:-  ( நாம் அடையும் சுகம் எப்படி அடையப்படுகின்றது ).
நாம் கண்ணால், காதால் அடையும் இன்பம், அதை அடைய உதவும் விஷயத்தை பொறுத்து இருக்கின்றது என்று பொதுவாக சொல்வோம்.  ஆனால் அந்தப்பொருட்கள் எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் சுகத்தைக் கொடுக்காது. இதிலிருந்து பொருட்களிலிருந்து சுகத்தை நாம் அடைவதில்லை என்று புரிந்து கொள்ளலாம்.  பிறகு இந்த சுகம் எங்கிருந்து வருகின்றது என்ற கேள்விக்கு சாஸ்திரம் ஆத்மாவிடமிருந்து வருகின்றது என்று விடையளிக்கிறது.  நமது மனம் அமைதியுடன் இருக்கும்போது ஆத்மாவின் சுகம் அதில் பிரதிபலிக்கின்றது அதனால் சுகத்தை அடைகின்றோம்.  எல்லோரும் தன்னுடைய ஆசையை பூர்த்தி செய்து கொள்ளவே விரும்புகின்றார்கள்.  விரும்பியதை அடைந்ததும் அந்த ஆசையானது மறைந்து மேலும் பல ஆசைகள் வந்து சேர்ந்து விடுகின்றன.
இரண்டாவது அத்தியாயம் – 2வது வல்லி முடிவடைகிறது.

———-———-———-———-———-———-———-———-———-———-———-———-——–

இரண்டாவது அத்தியாயம்
3வது வல்லி 

ஸ்லோகம்01
ஊர்த்4வமூலோÅவாக்ஶாக2 ஏஷோÅஶ்சத்த2: ஸனாதன: |
ததே3வ ஶுக்ரம் தத்3ப்3ரஹ்ம ததே3வாம்ருதமுச்யதே |
தஸ்திம்ல்லோகா: ஶ்ரிதா: ஸர்வே தது3 நாத்யேதி கஶ்சன ஏதத்3வை ||
இந்த மந்திரத்தில் பிரஹ்ம ஸ்வரூபம் விளக்கப்படுகின்றது. சம்சாரம் என்பது நாம் மனதில் அனுபவிக்கும் சுக-துக்கமேயாகும்.  ஈஸ்வரனை வேராக கொண்டுள்ளது இந்த சம்சாரம்  என்கின்ற மரம்.  இந்த மரத்தின் கிளைகள் கீழ்நோக்கி செல்கின்றன.  இந்த அரசமரம் பிரபஞ்சத்தை குறிக்கின்றது.  மரத்திற்கு வேர் ஆதாரமாக இருப்பது போல சம்சாரத்திற்கு, பிரபஞ்சத்திற்கு ஈஸ்வரன் ஆதாரமாக இருக்கின்றார் என்று அறிந்து கொள்ள வேண்டும்.
மரத்திற்கும், சம்சாரத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமைகள்:

  1.     மரம் நிலையாக இருப்பதற்கு அதன் வேர்கள் காரணமாக இருக்கின்றது அதுபோல சம்சாரத்தின் வேராக இருப்பவர் ஈஸ்வரன். வேர்கள் மறைந்து இருப்பது போல அவரும் நம் இந்திரியங்களுக்கு தெரியாமல் இருக்கின்றார்.
  2.     மரத்தின் நடுப்பகுதியானது ஹிரண்யகர்ப்பனுக்கு ஒப்பிடப்படுகின்றது.முதலில் தோன்றிய சூட்சும சரீரம் அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பவர்.
  3.     மரத்தில் உள்ள இலைகள் வேதத்தினுடைய கர்ம காண்டத்திற்கு உதாரணமாக கூறப்படுகின்றது. மரம் நன்கு வளர்வதற்கு இலைகள் காரணமாக இருப்பது சம்சாரம்  நன்கு வளர்வதற்கு கர்ம காண்டம் உதவுகின்றது.  இதில் கர்ம பலன்களை அடைவதற்குரிய சாதனங்களைக் கூறி மனிதனை சம்சாரத்திலே வைத்திருக்கின்றது
  4.     மரம் வளர்வதற்கு உதவும் நீரானது,ஆசைகளுக்கு உவமையாக கூறப்படுகின்றது.  நம்மை சம்சாரத்தில் வைத்திருப்பதற்கு இந்த ஆசைகள்தான் காரணம்.
  5.     மரத்தினால் அடையும் பலன்கள் நாம் அனுபவிக்கும் சுக-துக்கங்களுக்கு உவமையாக கூறப்படுகின்றது
  6.     மரத்திலுள்ள பழங்களை முதலில் அனுபவிப்பது பறவைகள்,அதுபோல சம்சார பலனை அனுபவிப்பது ஜீவர்களான நாம்தான்.
  7.     இந்த பறவைகள் அந்த மரத்திலே கூடுகட்டி வாழ்வது போல நாமும் இந்த உலகத்தில் வீடுகட்டிக் கொண்டு வாழ்ந்து வருகின்றோம்.
  8.     மரத்தை வெட்டி வீழ்த்தக்கூடிய பெரிய அரிவாளாக வைராக்கியம் கூறப்படுகின்றது.மரத்தை வெட்டுவதற்கு, முதலில் கிளைகளை வெட்டுவோம், பிறகு நடுமரத்தை வெட்டி கடைசியில் வேரோடு பிடுங்கி எறிவது போல நாமும் ஞானத்தால் சம்சார என்கின்ற மரத்தை வேரோடு நீக்க வேண்டும்.

 

நாளை இருக்குமோ என்ற சந்தேகத்தில் இருக்கின்ற அரசமரம். நதிக்கரையில் அமர்ந்து நீரை பார்க்கும் போது உண்மையில் சென்று கொண்டிருக்கும் நீரானது அசைவற்று இருப்பது போல தோற்றமளிக்கும்.  அதுபோல மாறிக்கொண்டிருக்கும் சம்சாரத்திலிருந்து விடுபட இரண்டு வழிகள் உபதேசிக்கப்படுகின்றது.  அவைகள்
1. வைராக்கியம்,
2. ஆத்ம ஞானம்.

பிரம்மமானது தூய்மையானது, மாயையோடு சம்பந்தப்படாதது.  ஏதாவது ஒரு சம்பந்தத்தால்தான் எதுவுமே அசுத்தமாகின்றது. மேலும் அது பூரணமானது, நிறைவானது, என்றும் மாறாமல் எப்பொழுதும் இருப்பது, மரணமற்றது, அழிவற்றது இவ்வாறு பிரம்மத்தின் ஸ்வரூபத்தை ரிஷிகளால், பிரம்மத்தை உணர்ந்தவர்களால் கூறப்படுகின்றது. கயிற்றின் மீது பொய்யாக தோற்றமளிக்கும் பாம்பு அந்த கயிற்றை சார்ந்திருக்கின்றதோ அதுபோல பிரம்மனிடத்தில் எல்லா உலகங்களும் சார்ந்து இருக்கின்றது..  இதை தவிர்த்து வேறொன்றுமில்லை, இதுதான் நீ கேட்ட அந்த உண்மை தத்துவம்.

 

ஸ்லோகம்02

யதி3தம் கிம் ச ஜக3த்யஸர்வம் ப்ராண ஏஜதி நி:ஸ்ருதம் |
ஸஹத்3ப4யம் வஜ்ரமுத்3யதம் ய ஏதத்3விது3ரம்ருதாஸ்தே ப4வந்தி ||
எவையெல்லாம் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றதோ அவையெல்லாம் தோற்றுவிக்கப்பட்டவைகள். படைக்கப்பட்ட உலகங்கள் அனைத்தும் பிரம்மத்திலிருந்து தோன்றியதால்தான் அவைகள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.  இதுவே எல்லோருக்கும் மிகப்பெரிய பயத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது.  வஜ்ராயுதத்தை கையில் ஏந்தியிருப்பதுபோல் பய ஸ்வரூபமாக காட்சியளித்து கொண்டிருக்கும் ஈஸ்வரனை யார் பிரம்மன் என்று தெரிந்து கொள்கிறார்களோ அவர்கள் மரணமற்ற தன்மையை அடைகிறார்கள்.
ஸ்லோகம்03
ப4யாத3ஸ்யாக்3னிஸ்தபதி ப4யாத்தபதி ஸூர்ய: |
ப4யாதி3~ண்த்4ரஶ்ச வாயுஶ்ச ம்ருத்யுர்தா4வதி பஞ்சம: ||
ஈஸ்வரனிட்த்தில் கொண்டுள்ள பயத்தினால்தான் எல்லா சக்திகளும் அவருக்கு கட்டுபட்டு செயல்பட்டு கொண்டிருக்கின்றன.  எல்லா தேவதைகளும் ஒன்று சேர்ந்து காட்சியளிப்பது ஹிரண்யகர்ப்பனைத்தான்.  ஈஸ்வரனிடத்தில் உள்ள பயத்தினால்தான் அக்னியானது உஷ்ணத்தை வெளிப்படுத்துகிறது, சூரியனும் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றது, இந்திரனும் அவருக்கு பயந்து தன் வேலையை தவறாமல் செய்து கொண்டிருக்கின்றான்.  வாயு பகவானும், எமதர்மனும் தத்தம் வேலையை செய்து கொண்டிருக்கின்றார்கள்.  இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது எல்லா சக்திகளும் அவர் விதித்த நியமத்தின்படி செயல்பட்டு கொண்டிருக்கின்றது.

ஸ்லோகம்04
இஹ சேத3ஶகத்3போ3த்3த4ம் ப்ராக்ஶரீரஸ்ய விஸ்ரஸ: |
தத:: ஸர்கே3ஷு லோகேஷு ஶரீரத்வாய கல்பதே ||
இந்த மனித சரீரத்தில் இருக்கும் போதே பரம்பொருளை அறிந்து கொண்டால் உடல் வீழ்வதற்கு முன்னே முக்தியை அடைந்து விடலாம்.  ஒருவேளை அறியவில்லையென்றால் இறந்த பிறகு படைக்கப்பட்ட இந்த உலகத்திற்குள் வேறு சரீரத்தை அடைய நேரிடும்.

ஸ்லோகம்05
யதா2த3ர்தே2 ததா2த்மனி யதா2 ஸ்வப்னே ததா2 பித்ருலோகே |
யதா2ப்ஸு பரீவ த3த்3ருஶே ததா2 க3ந்த4ர்வலோகே சா2யாதபயோரிவ ப்3ரஹ்மலோகே ||

மனித உலகத்தை தவிர வேறெந்த உலகத்திலும் ஆத்மஞானத்தை அடைய முடியாது.

  • மனித லோகத்தில் ஆத்ம ஞானம் அடையலாம். நம்மை கண்ணாடியில் பார்த்தால் நம் உருவம் தெளிவாகவும்,சரியாகவும் தெரிவது போல ஆத்ம, அனாத்ம விவேகத்தை மிகத்தெளிவாக அடையலாம்.
  • பித்ரு லோகத்தில் கனவில் காணும் தெளிவற்ற உலகத்தைப் போல ஆத்ம-அனாத்ம விவேகம் தெளிவற்று இருக்கும்.
  • கந்தர்வ லோகத்தில் அசைந்து கொண்டிருக்கும் நீரில் தெரியும் உருவத்தைப்போல இந்த விவேகம் வேறுபாடு தெளிவாக தெரியாமல் இருக்கும்.
  • பிரஹ்ம லோகத்தில் இந்த அறிவு தெளிவாக அறியப்படும். நிழலும்-நிஜமும் எவ்வாறு தெளிவாக தெரியுமோ அதுபோலதான் இருக்கும். இந்த லோகத்திற்கு செல்வது மிகவும் கடினம். அதிக உபாஸனை செய்தும், வேதாந்தம் படிக்க முடியாமல் போனவர்களால் அடையப்படும் உலகம்.

இவைகளைத் தவிர வேறெந்த உலகத்திலும் இந்த அறிவை அடைய முடியாது.  இந்த அறிவை அடைவதற்கு மனித லோகமே மிக மிக உயர்ந்தது.

எப்படி கண்ணாடியில் உருவம் தெளிவாக தெரியுமோ அவ்விதமாக நம் மனதில், புத்தியில் ஆத்மாவினுடைய தரிசனம் கிடைக்கும், ஆத்ம-அனாத்ம வேறுபாடு மிகத்தெளிவாக புரியும்.
எப்படி கனவில் உள்ள பொருட்கள் அனைத்தும் தெளிவற்றதாக இருக்கின்றதோ அதுபோல பித்ருலோகத்தில் தெளிவற்றதாக இருக்கும்.  எப்படி நீரில் தெரியிம் உருவம் தெளிவற்றதாக இருக்குமோ அதுபோல கந்தர்வலோகத்தில் இருக்கும்.  இதுவே பிரம்ம லோகத்தில் நிழலும், நிஜமும் போல தெளிவாக இருக்கும்.

ஸ்லோகம்06
இந்த்3ரியாணாம் ப்ருத2க்3பா4வமுத3யாஸ்தமயௌ ச யத் |
ப்ருத2கு3த்பத்3யமானானாம் மத்வா தீ4ரோ ந ஶோசதி ||
ஆத்மாவை இந்திரியங்களிலிருந்து வேறாக புரிந்து கொள்ள வேண்டும்.  நம்மை யாராவது முட்டாள் என்று யாராவது திட்டினால் நான் புத்தி என்று நினைத்தால் கோபம் வரும்.  ஆனால் நான் ஆத்மா என்று நினைத்தால் நமக்கு கோபம் வராது.  எல்லா இந்திரியங்களையும் அந்தக்கரணத்தையும் நான் என்ற ஆத்மாவிலிருந்து பிரித்து விட்டால் நமக்கு என்றென்றும் சோகம் கிடையாது.  இரண்டு யுக்திகள் மூலம் நாம் இந்திரியங்களல்ல என்று புரிந்து கொள்ளலாம்.  புலன்கள் ஆத்மாவிலிருந்து வேறுபட்டிருக்கின்றது ஏனென்றால் அவைகள் தனித்தனியாக தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றது..  எது தோற்றுவிக்கப்படுகிறதோ அது நிலையற்றவை.  ஆத்மா என்றும் இருப்பது, அதிலிருந்து தோன்றியவைகள்தான் அனைத்தும். இவைகள் நானல்ல என்று புரிந்து கொள்ள வேண்டும்.  இந்திரியங்கள் எழுச்சியும் (விழிப்பு நிலை ) பெறுகின்றது, ஒடுங்கியும் (கனவு நிலை) இருக்கின்றது  நான் என்ற ஆத்மா இரண்டு நிலையிலும் சாட்சியாக இருக்கின்றேன்.  ஆகவே இவைகள் என்னிடமிருந்து வேறுபட்டவை என்று உணர வேண்டும்.  இவ்விதம் அறிந்த விவேகியானவன் துயரத்தை அடைவதில்லை.

ஸ்லோகம்07
இந்த்ரியேப்4ய: பரம் மனோ மனஸ: ஸத்த்வமுத்தமம் |
ஸத்த்வாத3தி4 மஹானாத்மா மஹதோÅவ்யக்தமுத்தமம் ||
புலன்களை விட மனம் மேலானது.  பரம் என்பதற்கு சூட்சுமமானது, எங்கும் வியாபித்துள்ளது என்று பொருட்கொள்ளலாம், ஆத்ம சமீபம் என்றும் பொருட்கொள்ளலாம்.  மனதை விட புத்தி மேலானது, புத்தியைக் காட்டிலும் சமஷ்டி புத்தி மேலானது.  ஹிரண்யகர்ப்பனை விட மாயை மேலானது.

ஸ்லோகம்08
அவ்யக்தாத்து பர: புருஷோ வ்யாபகோÅலிங்க3 ஏவ ச |
யம் ஞாத்வா முச்யதே ஜந்துரம்ருதத்வம் ச க3ச்ச2தி ||
மாயைக் காட்டிலும் ஆத்மா மேலானது.  எங்கும் வியாபித்திருக்கும் புருஷனே மாயை விட மேலானது.  ஆத்மா அடையாளமெதுவுமற்றது.  ஆத்மாவை யூகித்து அறிய முடியாது. இந்த புருஷனை உணர்ந்த ஜீவன் சம்சாரத்திலிருந்து விடுபடுகின்றான், ஜீவன் முக்தி அடைகின்றான்.  மரணமில்லா நிலையையும் அடைகின்றான். இறந்த பிறகு விதேக முக்தியை அடைகின்றான் பிறப்பு-இறப்பிலிருந்து விடுபடுகின்றான்.

ஸ்லோகம்09
ந ஸந்த்ருஶோ திஷ்டதி ரூபமஸ்ய ந சக்ஷுஶா பஶ்யதி கஶ்சனைனம் |
ஹ்ருதா3 மனீஷீ மனஸாபி4க்ல்ருப்தோ ய ஏதாத்3விது3ரஸ்ருதாஸ்தே ப4வதி ||
பிரம்மத்தினுடைய தன்மை இந்திரியத்தினுடைய வசத்துக்குள் வராது.  புலன்களால் பிரம்மத்தை அறியமுடியாது.  பிரம்மத்தை யாருடைய கண்களாலும் காணப்படுவதில்லை. தெளிவான சிந்தனையால், மனதினால் அறியப்படுகின்ற, இருதயத்திற்குள் இருக்கின்ற விழிப்புற்ற புத்தியால் எவர்கள் இந்த தத்துவத்தை அறிகின்றார்களோ அவர்கள் மரணமற்றவர்களாகின்றார்கள்.
ஸ்லோகம்10
யதா3 பஞ்சாவதிஷ்டந்தே ஞானானி மனஸா ஸஹ |
பு3த்3தி4ஶ்ச ந விசேஷ்டதி ஹாமாஹு: பரமாம் க3திம் ||

நிதித்யாஸன விசாரம்:-
நான் ஆத்மா என்ற நிலையில் முதலில் வாழ பழக வேண்டும்.  அதற்கு முதலில் உலக விவகாரங்களிலிருந்து விலகி கொஞ்ச நாள் தனிமையில் வாழ்ந்து பழக வேண்டும்.  இந்திரியங்கள் மனம், புத்தி இவைகளை துறந்து நான் ஆத்மா என்ற நிலையில் வாழ்ந்து பழக வேண்டும்.
சஜாதீய விருத்தி  – ஆத்ம தத்துவத்திற்கு உகந்த எண்ணங்கள்
வியாதீய விருத்தி – ஆத்ம தத்துவத்திற்கு முரண்பாடான எண்ணங்கள்
தியானம்         – மனப்போராட்டங்கள் இல்லாமல் செய்தல்

சஜாய விருத்தி நிலை அடைதல் என்பது முதிர்ந்த நிலை.  இதுவே சமாதானம், சமாதி யோகம் என்று சொல்லப்படுகின்றது.

எப்பொழுது ஞானேந்திரியங்கள் மனதோடு சேர்ந்து ஒருமுகப்பட்டு நிற்குமோ, அமைதியுடன் இருக்குமோ (சஜாதீய விருத்தி நிலை), அப்பொழுது புத்தியானது அமைதியடைந்துவிடும.  புத்தியில் ஏதாவது சந்தேகமிருந்தால் அது அமைதியடையாது.  எனவே மனனத்தின் மூலம் சந்தேகங்களை நீக்கி தெளிவடைந்துவிட வேண்டும்.  இந்த நிலையே மேலான நிலை என்று சொல்லப்படுகின்றது.

ஸ்லோகம்11
தாம் யோக3மிதி மன்யந்தே ஸ்தி2ராமி~ண்த்3ரியதா4ரணாம் |
அப்ரமத்தஸ்ததா3 ப4வதி யோகோ3 ஹி ப்ரப4வாப்யயௌ ||
இந்த நிலையில் இந்திரியங்கள் உறுதியாக ஒடுக்கப்பட்டிருக்கும். இதை யோகசமாதி, சமாதானம் என்றும் மனம் அமைதியடைந்திருத்தல் என்றும் சொல்லப்படுகின்றது.  நிதித்யாஸனம் செய்யும் காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.  இந்த யோகமானது மேலே செல்வதற்கும், கீழே வீழ்வதற்கும் காரணமாக இருக்கும்.  இந்திரிய விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.  எந்த சமயத்தில் வேண்டுமானாலும் அவைகள் நம்மை வீழ்த்தி விடும்.  தியானம் செய்யும்போது தமோ குணத்தினால் தூக்கமும், ரஜோ குணத்தினால் மன சிதறல்களும் ஏற்படும்.

ஸ்லோகம்12
நைவ வாசா ந மனஸா ப்ரப்தும் ஶக்யோ ந சக்ஷுஷா |
அஸ்தீதி ப்3ருவதோÅன்யத்ர கத2ம் த3து3பல்ப்4யதே ||
வாக்கினால் அந்த பிரம்மத்தை அடைய முடியாது என்று சொல்லும்போது ஞானேந்திரியங்களால் பிரம்மத்தை அடைய முடியாது என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.  அதேபோன்று கண்களால் பிரம்மத்தை அறிய முடியாது என்பதை கர்மேந்திரியங்களாலும் அதை அறிய முடியாது என்று புரிந்து கொள்ள வேண்டும்.  மனதாலும் அறிய முடியாது, அந்தக்கரணத்தின் உதவியாலும் அறிய முடியாது.  இந்த பிரம்மம் இருக்கிறது என்று மற்றவர்களால் சொல்லப்படுகின்றது அதை நாம் எப்படி உணர முடியும்.

ஸ்லோகம்13
அஸ்தீத்யேவொபலப்4த4வ்யஸ்தத்த்வபா4வேன சோப4யோ: |
அஸ்தீத்யேவொபலப்3த4ஸ்ய தத்த்வபா4வ: ப்ரஸீத3தி ||
பரோக்‌ஷ ஞானம் என்பது பிறர் மூலம் கேள்விபட்டு அடைந்த அறிவை குறிக்கிறது. பிரத்யக்ஷ ஞானம் என்பது நாமே நேரிடையாக அடைகின்ற அறிவாகும்.  வேத வாக்கியப்படி அடையும் ஞானம் பரோக்‌ஷ ஞானம்.  இதை பிரத்யக்‌ஷ ஞானத்தினால் அறிய முடியாது, ஏனென்றால் அது இந்திரியங்களுக்கும் அப்பாற்பட்டு இருக்கின்றது.  இந்திரியங்களின் மூலம் அடையும் அறிவுக்கு இந்திரியங்களே பிரமாணமாக இருக்கின்றது.  பிறகு வேதத்தின் உபதேசமான மகாவாக்கியமான ஜீவ-ஈஸ்வர ஐக்கியத்தினால் அபரோக்‌ஷ ஞானத்தை அடைகின்றோம். அந்த பிரம்மத்தை நான் என்று புரிந்து கொள்ளும் போது அடையும் ஞானம் அபரோக்‌ஷ ஞானம்.  எனவே அந்த பிரம்மத்தை இருக்கின்றது என்று அறிய வேண்டும், ஆத்ம ஸ்வரூபமாக உணரப்பட வேண்டும், நான் பிரம்மமாகவே இருக்கின்றேன் என்று உணர வேண்டும்.  இவ்விரண்டில் யார் இருக்கின்றது என்று புரிந்து கொள்கிறார்களோ அவர்கள் தான் பிரம்மமாகவே இருக்கின்றேன் என்ற ஞானத்தை அடையலாம்.

ஸ்லோகம்14
யதா3 ஸர்வே ப்ரமுச்யந்தே காமா யேÅஸ்ய ஹ்ருதி3 ஶ்ரிதா: |
அத2 மர்த்யோÅம்ருதோ ப4வத்யத்ர ப்3ரஹ்ம ஸமஶ்னுதே ||
எப்பொழுது மனதிலுள்ள ஆசைகளெல்லாம் நீங்குகின்றதோ அப்பொழுதுதான் பிரம்மஞானத்தை அடைகின்றான்.  ஞானியானவன் தன்னிடத்திலே நிறைவுடன் இருப்பவன். மனம் நிறைவுடன் இருக்கும்போது ஆசைகள் எதுவும் தோன்றாது.  ஆசைகள் இருவகையாக இருக்கின்றது. அவைகள் 1. பந்தப்படுத்துகின்ற ஆசை, 2. பந்தப்படுத்தாத ஆசை என்பதாகும்.,

ஒருவனுடைய மனதில் உள்ள ஆசைகளெல்லாம் எப்பொழுது நீங்குகின்றதோ , விடுபட்டு போகின்றதோ அப்பொழுதே சம்சாரியாக இருக்கும் மனிதன் மரணமற்றவனாகின்றான். நிலையான மனநிறைவை அடைகின்றான்.

ஸ்லோகம்15
யதா3 ஸர்வே ப்ரபி4த்3யந்தே ஹ்ருதயஸ்யேஹ க்3ரந்த2ய: |
அத2 மர்ஹ்யோÅம்ருதோ ப4வத்யேதாவத்3த்4யனுஶாஸனம் ||
மனதிலுள்ள அறியாமை எப்பொழுது நீங்குகின்றதோ அப்போதுதான் பிரம்மத்தை அடைவோம். அறியாமையிலிருந்து தோன்றுவது அத்யாஸம் (அனாத்மாவை ஆத்மாவாக பார்த்தல்). அத்யாஸத்திலிருந்துதான் ஆசைகள் பிறக்கின்றது.

எப்பொழுது ஒருவனுடைய இருதயத்திலுள்ள எல்லா முடிச்சுகளும் ( அறியாமையும், அத்யாஸமும், ஆசைகளும்) அவிழ்க்கபடுகின்றதோ, அதாவது அறியாமை நீங்குகின்றதோ அப்பொழுதே சம்சாரியான மனிதன் மரணமற்ற நிலையை அடைகின்றான்.  இதுவே நான் உனக்கு கூறும் ஆத்ம தத்துவ உபதேசங்கள்.

ஸ்லோகம்16
ஶதம் சைகா ஹ்ருத3யஸ்ய நாத3ஸ்யஸ்தாஸாம் மூர்தா4னமபி4னி:ஸ்ருதைகா |
தயோர்த்4வமாயன்னம்ருதத்வமேதி விஷ்வங்ஙன்யா உத்க்ரமணே ப4வந்தி ||
ஞானத்தை அடையாதவர்களின் மரணகதியைப் பற்றி இந்த மந்திரத்தில் கூறப்படுகின்றது.  இருதயத்திலிருந்து 101 நாடிகள் உடலிலிருந்து வெளியே செல்கின்றன,  அவற்றில் ஒன்று உச்சந்தலைக்குள் நுழைகின்றது. அதன் வழியாக மேலே செல்பவன் மரணமற்ற நிலையை அடைகின்றான்.  மற்ற நாடிகளின் வழியே செல்பவர்கள் மீண்டும் பிறப்பெடுக்கின்றார்கள்

ஸ்லோகம்17
அங்கு3ஷ்டமாத்ர: புருஷோÅந்தராத்மா ஸதா3 ஜனானாம் ஹ்ருத3யே ஸம்னிவிஷ்ட” |
தம் ஸ்வாச்ச2ரீராத்ப்ரவ்ருஹேன்முஞ்ஜாதி3வேஷீகாம் தை4ர்யேண |
தம் வித்3யாச்சு2க்ரமம்ருதம் தம் வித்3யாச்சு2க்ரம ம்ருதமிதி ||
இருதய ஆகாசத்தில் வெளிப்படுகின்ற ஆத்மாதான் நம்முடைய உண்மையான சைதன்ய ஸ்வரூபம், அந்தர்யாமி.  அது எல்லா ஜீவராசிகளின் இதயத்தில் எப்பொழுதும் வசிக்கின்றது.  அந்த ஆத்மாவை நம்முடைய சரீரத்திலிருந்து முஞ்சை புல்லிலிருந்து தண்டை பிரிப்பதை போல கவனமாக பிரித்தெடுக்க வேண்டும்,.  அப்படி பிரித்தெடுத்த ஆத்மாவானது தூய்மையானதாகவும், நிலையானதாகவும் இருப்பதாக அறிந்து கொள்.

ஸ்லோகம்18
ம்ருத்யுப்ரோக்தோ நசிகேதோÅத2 லப்3த்4வா வித்3யாமேதாம் யோதவிதி4ம் க்ருத்ஸ்ரம் |
ப்3ரஹ்மப்ராப்தோ விரஜோபூ4த்3விம்ரித்யுரன்யோÅப்யேவம் யோ வித3த்4யாத்ம்மேவ ||
எமதர்மரால் சொல்லப்பட்ட, நசிகேதனால் கேட்கப்பட்ட இந்த ஆத்ம வித்யாவை, எவனொருவன் ஞானத்தை அடைய உதவும் சாதனங்களை முழுமையாக பயன்படுத்தி மனத்தூய்மையுடன் கேட்கின்றானோ அவன் பிரம்ம நிலையை அடைகின்றான, மரணமற்ற நிலையை அடைகின்றான்.  மற்றவர்களும் கூட இவ்வாறு அறிந்து பிரம்மத்தை அடைகின்றார்கள்.

                                இரண்டாவது அத்தியாயம் – 3வது வல்லி முடிவடைகிறது

———-———-———-———-———-———-———-———-———-———-———-———-——–

கடோபநிஷத்தின் சுருக்கம்:

1.1. நசிகேதன் தன் தந்தையிடம் தன்னை யாருக்கு தட்சணையாக கொடுக்க போகிறீர்கள் என்று கேட்க, அவர் எமனுக்கு கொடுக்கப்போகிறேன் என்று சொல்ல அவனும் எமலோகத்திற்கு செல்கின்றான்.  அங்கே எமதர்மராஜா இல்லாததால் 3 நாட்கள் காத்துக் கொண்டிருந்தான்.  அவன் தன்னை சந்திக்க 3 நாட்கள் காக்க வைத்தற்காக் 3 வரங்கள் தாம் தருவதாக அவர் கூறுகிறார்.

நசிகேதன் முதல் வரமாக தன் தந்தை தன் பிரிவால் வருந்தக்கூடாது எனவும், தான் திரும்பி செல்லும்போது என்னைக்கண்டு பயப்படாமல் மகிழ்ச்சியடைய வேண்டும் என்றும் கேட்டான்.  இரண்டாவது வரமாக சொர்க்கலோகத்தை அடைய உதவும் யாகத்தை செய்யும் முறையை தனக்கு சொல்லித்தர வேண்டுமென்று கேட்டான்.  மூன்றாவது வரமாக ஜீவன் இறந்ததற்கு பிறகு எங்கு செல்கின்றான் என்பதை தனக்கு சொல்லுமாறு கேட்டான்.

எமதர்மராஜாவும் அவன் கேட்ட முதல் இரண்டு வரங்களையும் அளித்துவிட்டார்.  மூன்றாவது வரமாக அவன் கேட்டது ஆத்ம தத்துவத்தை பற்றியதாக இருப்பதால் அதற்கு அவன் தகுதியானவனாக இருக்கின்றானா என்று பரிசோதிக்கின்றார்.  இது புரிவதற்கு மிகமிகக்கடினம் என்று சொல்லிப்பார்க்கின்றார். ஆனால் நசிகேதன் அப்படியென்றால அதைத்தான் தாம் அறிய விரும்புவதாக கூறுகின்றான்.

பலபோகங்களை தருவதாக ஆசையை தூண்டுகின்றார், அவைகளை அனுபவிக்க நீண்ட ஆயுளும் தருகின்றேன் என்றும் கூறினார்.  ஆனாலும் நசிகேதன், நிலையற்ற  அந்த போகங்களை தாங்களே வைத்துக்கொள்ளுங்கள் எனக்கு தேவையில்லை என்றூ உறுதியாக கூறினான்.

1.2 இதில் 7 தலைப்புக்கள் பேசப்படுகின்றது அவைகள்

  1.     இரண்டுவிதமானமார்க்கத்தை கூறுகின்றார்,  அதற்கான சாதனத்தையும் கூறுகின்றார்.  அவைகள் ஸ்ரேயஸ் (மோட்சம்), ப்ரேயஸ் ( சம்சார போகம்) என்பதாகும்.
  2.     விவேகியானவன்ஸ்ரேயஸ் பாதையைத்தான் தேர்ந்தெடுக்கின்றான்.  ப்ரேயஸை தேர்ந்தெடுப்பவர்களின் துயர நிலையைக் கூறி அவர்களை நிந்திக்கின்றார்.  இவையிரண்டும் வெவ்வேறு பாதைகளை கொண்டிருப்பதால் ஏதாவது ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க முடியும் என்றும் கூறுகின்றார்.
  3.     ஸ்ரேயஸ்சைதேர்ந்தெடுப்பவர்கள் வெகுசிலரே, அதை சொல்லி கொடுக்கும் குருவும் வெகு சிலரே என்று கூறுகிறார்.  குருவின் லட்சணமாக அவர் எதை சொல்லிக் கொடுக்கின்றாரோ அதுமாதிரியேதான் நடந்து கொள்வார் என்று விவரித்தார்.
  4.     சாஸ்திரத்தைகேட்டல், சிந்தித்தல், பிறகு அதை தியானித்தல் ஆகியவற்றை ஞானயோகம் என்று உரைத்தார்.
  5.     தர்ம-அதர்மத்திற்கும்காலத்திற்கும் அப்பாற்பட்ட ஆத்ம தத்துவத்தை நசிகேதன் உபதேசிக்க வேண்டும் என்று வேண்டினான்.
  6.     ஆத்மதத்துவத்தை உபதேசிக்க ஆரம்பிக்கின்றார். இந்த அத்தியாத்தில் இந்த பாகத்தில் உள்ள 18-22 மந்திரங்கள் மிக முக்கியமானவை. மனப்பாடம் செய்து அதை நிதித்யாஸனம் செய்ய வேண்டியவை.
  7.     சிலசாதனங்களை சொல்கின்றார். முமுக்‌ஷூத்வம் ஒரு மோட்ச சாதனம், தார்மீக வாழ்க்கையை வாழ்வதற்கு சம, தம போன்ற சாதனங்களை பரிந்துரைக்கின்றார்.

 

1.3 சரீரத்தை தேராக உருவகப்படுத்தி சில உபதேசங்களை சொல்கின்றார்.  மனத்தூய்மையை கொடுக்கும் விவேகம், சம, தம ஆகிய மூன்று சாதனங்களை முக்கியமாக கூறுகின்றார்.  புத்திக்கு ஸ்ரேயஸ், ப்ரேயஸ் இவைகளுக்கிடையே உள்ள வேற்றுமைகளையும் அதன் பலன்களையும் தெரிந்திருக்க வேண்டும்.  ஐம்புலன்களையும் அடக்கி கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றும், மனதை கடிவாளமாக உருவகப்படுத்தி அதை நம் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றார்.

 

ஆத்ம தத்துவத்தை பஞ்சகோசங்களை வைத்து விளக்குகின்றார்.  ஒவ்வொரு கோசத்திலும் நான் என்ற புத்தியை விட்டுவிட வேண்டும். இறுதியில் நானே ஆத்மா என்று உணர வேண்டும் என்றும் கூறுகின்றார்.  நம்முடைய பஞ்ச கோசங்களின் சமஷ்டியான பிரபஞ்சங்களையும் நீக்க வேண்டும்.  இதை அறிந்து கொள்வதற்கு இரண்டு சாதனங்கள் கூறப்படுகின்றது. இதை அறிவதற்கு நமது புத்தியானது மிகவும் சூட்சுமமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றார். நிதித்யாஸனத்தையும் விவரிக்கின்றார்.

 

2.1 மற்றொரு சாதனத்தை பற்றியும் கூறுகின்றார்.  இந்த பகுதியில் உள்ள எல்லா மந்திரங்களும் முக்கியமானது.  எதனால் சூட்சும புத்தியை இழக்கின்றான் என்று கேட்கும் போது படைப்பிலே இந்திரியங்கள் வெளியே செல்வதாக இருக்கின்றது.  வெகு சிலரே  இந்திரியங்களை உள்நோக்கி செல்லுமாறு பழக்கி வைத்திருகின்றார்கள்.  இதனால் சூட்சும புத்தியை அடைகின்றார்கள்.  விதவிதமான கோணங்களில் ஆத்ம தத்துவமானது விளக்கப்படுகின்றது;  த்ருக்-த்ருஷ்ய விவேகம் மூலம் ஆத்ம ஞானம் விளக்கப்படுகின்றது.  அறிபவன் – அறியப்படும்பொருள் இந்த தத்துவமும், ஜீவ-ஈஸ்வர ஐக்கியத்தையும் விளக்குகின்றது. இருமையானது நிந்திக்கப்படுகின்றது.  இருமை புத்தியை உடையவன் சம்சாரத்தில் சிக்கி பிறப்பு-இறப்பு என்ற சக்கரத்திலே சுழன்று கொண்டிருப்பான் என்று எச்சரிக்கின்றார்.

2.2 ஆரம்பத்தில் ஆத்ம தத்துவம் விவரிக்கப்படுகின்றது. உடலை ஒரு நகரத்திற்கு ஒப்பிட்டு விவரிக்கப்படுகின்றது.  அன்வய-வியதிரேக தத்துவத்தின் மூலமாக இது விளக்கப்படுகின்றது. இறந்ததற்கு பிறகு அக்ஞானிகளினுடைய நிலை என்ன என்பதையும் கூறுகின்றார்.  உறங்கும்போது ஆத்மா உறங்குவதில்லை சாட்சியாக இருந்து கொண்டு எல்லா அவஸ்தைகளிலும் நடப்பதை பார்த்து கொண்டிருக்கின்றது. சரீரம் ஆத்மாவுக்கு உபாதியாக கூறப்படுகின்றது. ஸ்படிகத்தின் அருகின் உள்ள சிவப்பு மலரின் நிறம் அதில் பிரதிபலிப்பது போல சரீரத்தின் செயல்கள் அனைத்தும் ஆத்மாவிற்கு செல்கின்றதாக விளக்குகின்றார்.  ஆத்மா ஆனந்த ஸ்வரூபம் என்றும், சுயமாக பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது என்றும் விளக்குகின்றார்.

 

2.3 சம்சார வர்ணனை கூறப்பட்டுள்ளது. சம்சாரம் அரச மரத்திற்கு உதாரணமாக கூறப்பட்டு மரத்தைப்போல் அநித்யமானது என்றும் அதற்கு ஆதாரமாக எப்படி வேர் இருக்கின்றதோ அதுபோல சம்சாரத்திற்கு ஆதாரமாக பிரம்மம் இருக்கின்றது என்று தெளிவுபடுத்துகின்றார்.  ஈஸ்வரனே அனைத்துமாக இருக்கின்றார், அவருக்கு கட்டுபட்டுத்தான் எல்லா இயற்கை சக்திகளும் இயங்குகின்றன என்று சுட்டிக் காட்டுகின்றார்.

 

மனித சரீரத்தின் மேன்மையை கூறி இதன் மூலம்தான் ஆத்ம தத்துவத்தை தெளிவாக அறிந்து கொள்ள முடியும் என்று உறுதி கூறுகின்றார். ஆத்ம தத்துவத்தை மீண்டும் வேறு வகையில் விளக்குகின்றார்.  அதை அறிவதற்கு வேறு சில சாதனங்களையும் கூறுகின்றார்.

 

சூட்சுமான புத்தியின் அவசியத்தை வலியுறுத்துகின்றார்.  நிதித்யாஸனத்தை பற்றி கூறியிருக்கின்றார்.  அறிவை அடைந்தாலும் பழக்க தோஷத்தால் நம் மனம் மீண்டும் பழைய நிலைக்கு செல்ல தூண்டும் எனவே அடைந்த அறிவில் நிலைபெற்று இருக்க வேண்டும்.  எப்பொழுது மனமும், புலன்களும் அமைதியாக இருக்கின்றதோ அதுவே நாம் அறிவை அடைந்ததற்கான அறிகுறியாக சொல்கின்றார்.  மேலும்சிரத்தையை உடையவன்தான் மோட்சத்தை அடைவான் என்றும் உறுதிபடக் கூறுகின்றார்.   முதலில் இருக்கின்றது என்று உறுதியாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.  பிறகு இருக்கின்றேன் என்ற அறிவை அடைய வேண்டும்.

 

ஆத்ம பலன்களை கூறுகின்றார்.

நம்முடைய மனதிலுள்ள ஆசைகளெல்லாம் அழிந்துவிடும், புதிதான எந்த ஆசைகளும் தோன்றாது, அப்படி தோன்றினாலும் அது நம்மை பந்தப்படுத்தாது.

நம்முடையஅறியாமை நீங்கி விடும். மனிதன் அமரத் தன்மையை இங்கேயே, இப்போதே அடைகின்றான். பூரணமான ஆத்மாவை அறிகின்றான்.

தன்னிடத்தேயுள்ள அறியாமை, அத்யாஸம் இவைகள் நீங்கப் பெற்று ஆத்ம ஞானத்தை அடைகின்றான்

நசிகேதன் மட்டுமில்லாமல் மற்றவர்களாலும் இந்த ஞானத்தை அடையப்படும் என்று உபநிஷத் உறுதிகூறுகிறது –

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

மாண்டூக்ய உபநிஷத் – ஸ்வாமி குருபரானந்தா உபதேச விளக்கம்

December 24, 2022

மாண்டூக்ய உபநிஷத் – பகுதி-1

ஸ்வாமி குருபரானந்தா உபதேச விளக்கம்

 

முகவுரை
வேதம் என்பது ஆத்ம ஞானத்தை அடைய உதவும் பிரமாணமாக கருதப்படுகின்றது.  இது இரண்டு விதமான ஞானத்தை கொடுக்கின்றது.  அவைகள்
1. கர்மத்தை, தர்மத்தைப் பற்றிய ஞானம்,
2. பிரம்ம ஞானம்
ஆகியவைகளாகும்.

கர்மஞானம்:
கர்மமானது மூன்று வகையாக பிரிக்கப்பட்டிருக்கின்றது. அவைகள்

  1. காயிகம்- உடலினால் செய்யப்படுவது,
  2. வாசகம்- வாக்கினால் செய்யப்படுவது,
  3. மானஸம் – மனதினால் செய்யப்படுவது.  மனதினால் செய்யப்படும் செயலானது உபாஸனை, தியானம் ஆகியவைகளாகும்.

கர்மத்தை வேதமானது ஒரு சாதனமாக கூறுகின்றது.  சில கர்மங்களை செய்ய வேண்டுமென்றும், சில கர்மங்களை செய்யக்கூடாதென்றும் அறிவுறுத்துகின்றது.  இதனால் அடையும் பலன்கள் என்ன என்று கேள்வியெழும்போது நேரிடையான பலன் பாவ-புண்ணியங்களாகும். புண்ணியத்தால் சுகத்தை அனுபவிப்பான் அல்லது சுகத்தைக் கொடுக்கின்ற சூழ்நிலைகள், உடல் கிடைக்கின்றது.   பாதுகாப்பையும்,  மகிழ்ச்சியை அனுபவிக்கும்  நிலையை ஏற்படுத்துகின்றது.  வாழும்போது மட்டுமல்ல இறந்த பிறகும் வேறு நல்ல உலகத்தையடைந்து மகிழ்ந்து இருக்கின்றான்.

இதே புண்ணியத்திற்கு வேறு சில பலனைக் கொடுக்கும் தகுதியும் உண்டு.  சிலருக்கு போகத்தினால் தன்னை திருப்திபடுத்த முடியாது எனவே இவைகள் மீது வைராக்கியம் எற்படுகின்றது. தர்மவழியில் வாழ்ந்து வந்தாலும் அதனால் விளையும் புண்ணியத்தினால் வரும் போகத்தை விரும்புவதில்லை.  இந்த விவேகம், வைராக்கியம் வளர்வதற்கு புண்ணியம் உதவுகின்றது.  கர்மத்தை யோகமாக செய்யும்போது மனதில் தூய்மையேற்பட்டு இந்த விவேகம், வைராக்கியம் வளர்வதற்கு உதவுகின்றது.  ஒரு சிறிய வாயுவானது தீயை வளர்வதற்கும், அதை அழிப்பதற்கும்  உதவுவது போல புண்ணியம் கொடுக்கும் போகத்தை அனுபவித்தால்,  விவேக,  வைராக்கியம் மறைந்து விடும். ஆனால் அனுபவிக்காமல் விட்டுவிட்டால் அது முழு மனநிறைவை அடைவதற்கும், சம்சாரத்திலிருந்து விடுதலை அடைவதற்கும் குருவை நாடி பிரம்ம ஞானத்தை அடையவும் முயற்சியை மேற்கொள்ள வைக்கும்.  வேதாந்த உபதேசத்தை பெற குருவை அணுகுவான்.

 கர்மத்தை உபதேசிக்கும் வேதாந்தத்தின் முதற்பகுதி கர்ம காண்டம் என்றும், ஆத்ம ஞானத்தை உபதேசிக்கும் கடைசிப்பகுதி ஞான காண்டம் என்றும் கூறப்படுகின்றது.  கர்ம காண்டத்தின் மூலம் விவேக, வைராக்கியம், முமுக்‌ஷுத்வம் அடைந்தவுடன் அதனுடைய வேலை முடிந்து விடுகின்றது.

பிரம்ம ஞானம்:
வேதத்தின் ஞான காண்டம் பிரம்ம ஞானத்தை அடைய உபதேசிக்கிறது.  பிரம்மம் என்பது என்றும் இருக்கின்ற பூரணமான ஒரு தத்துவம்.  இந்த உபதேசத்தை குருவின் மூலமாக கேட்டறிந்து பிரம்மஞானத்தை அடைந்து விடவேண்டு.ம்.  இதுவரை அறிவைத்தான் அடைந்து இருக்கின்றான்.  பிரம்மத்தை அறிவதும்,  அடைவதும் ஒரே சமயத்தில் நடக்கின்றது..  பிரம்மன் எங்கும் இருப்பதால் அதை அடைய தேவை இல்லை.  அதுவே நான்தான் என்று அறிந்தாலே போதும்.

பிரம்ம ஞானத்தை எப்படி அடைய முடியும் என்று வினவினால் அதை அடைய உதவும் பிரமாணத்தின் மூலமாகத்தான் அடைய முடியும் என்பதே பதிலாகும்.  எந்த ஒன்றை அறிய வேண்டுமானாலும் அதை அறிய உதவுகின்ற கருவியை பயன்படுத்த வேண்டும்.  ஒரு பொருளை பார்க்க வேண்டுமானால் கண்ணைத்தான் பயன்படுத்த வேண்டும். அதேபோல பரம்பொருளை அறிவதற்கு அதை உபதேசிக்கக்கூடிய பிரமாணத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.  அந்த பிரமாணம் வேதாந்தம்தான்.  இதை உபநிஷத் என்றும் அழைப்பர்.  இது ஒரு சப்த பிரமாணம்.

சப்த பிரமானம்:
சப்தம் இருவகையாக இருக்கின்றது. அவைகள்
1. த்வனி – ஒலி வடிவமாக இருத்தல்,
2. அர்த்தமுள்ள வாக்கியத்தை உச்சரிக்கும் சப்தமாக இருப்பது.

சப்தமானது அர்த்தத்தை கொடுத்தால் அதற்கு சப்த பிரமாணம்.  இந்த பிரமாணத்தை லௌகீக சப்தபிரமாணம்,  வைதீக சப்த பிரமாணம் என்று இதை இருவகையாக கூறுவர்.  நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் பேசுகின்ற வார்த்தைகளால் அடைய உதவும் சப்த பிரமாணங்கள். லௌகீக சப்தபிரமாணமாகும்.  வேதத்தின் சப்த பிரமாணத்தின் மூலமாக அடைகின்ற சப்த பிரமாணமானது வைதீக சப்த பிரமாணகும். இதன் மூலமாகவும் அறிவானது அடையப்படுகின்றது.   இந்த அறிவே பிரம்ம ஞானம்.  இந்த சப்த பிரமாணம் எந்த இடத்தில் நமக்கு துணைப்புரியும் என்று விசாரம் செய்யப்படுகின்றது.;  ஒரு வாக்கியத்தை உச்சரித்து அடையும் அறிவுக்கு சப்த பிரமாணம்.  தெரிந்த விஷயத்தில்தன் இந்த  பிரமாணத்தினுடைய பயன் அடையப்படும்.  உதாரணமாக ராமன் காட்டிற்கு சென்றார்.  இந்த வாக்கியத்திலுள்ள அனைத்து சொற்களினுடைய அர்த்தம் நமக்கு தெரிந்திருப்பதால் அந்த வாக்கியம் நமக்கு அறிவை கொடுக்கின்றது.  நமக்கு புரியாத மொழியிலுள்ள வாக்கியத்தை உச்சரிப்பதால் எந்த அறிவும் நமக்கு ஏற்படாது. எனவே சப்த பிரமாணம் தெரிந்த விஷயத்தைத்தான் புரிய வைக்கும்.  இதை வேறு பிரமாணத்தினாலும் சரிபார்த்து கொள்ள முடியும்.  சப்தமானது செயல்பட காரணங்களாக இருப்பவைகளை ஐந்து விதமாக பிரித்திருக்கின்றனர். அவைகள்

  1. திரவியம்  – அனுபவிக்கப்படுகின்ற பொருள்
  2. குணம்       – அந்தப்பொருளின் தன்மை, நிறம் போன்றவை
  3. செயல்      – அது செயல்படும் விதம்
  4. ஜாதி          –  பொதுவான பிரிவு
  5. சம்பந்தம் – ஏதாவது ஒரு உறவை கொண்டிருப்பது.

ஆகியவைகளாகும். சப்தத்தினால் ஒன்றை விவரிக்க வேண்டுமென்றால் மேலே கூறப்பட்டுள்ள ஐந்தில் ஒன்றாவது அதற்கு இருக்க வேண்டும்.

  1.      திரவியம்– நம் அனுபவத்தில் பார்க்கப்படும் பொருள். புலன்களால் அனுபவிக்கப்படுகின்ற ஒரு பொருள் அல்லது விஷயமாக இருக்க வேண்டும்.
  2. குணம் – திரவியத்தினுடைய நிறம், உருவத்தின் அளவு போன்ற தன்மைகளை கூறுதல்.  உதாரணமாக நீலமலர், சிறிய பானை.
  3.      க்ரியா – திரவியத்தின் செயல்பாட்டை குறிப்பது. (உ-ம்) கையை ஆட்டிக்கொண்டு பேசுபவர், அவன் சமையல்காரன், காரோட்டி
  4.      ஜாதி – பிரிவு, மனிதன், விலங்கு
  5.      சம்பந்தம்– பொருள்களுக்குமிடையே உள்ள உறவுமுறை, உறவை சொல்லி ஒன்றை புரியவைத்தல்.  (உ-ம்) பசுவை போல, அவருடைய மகன்

சப்த பிரமாணம் எப்படி பிரம்மத்தை விளக்க முடியும் என்று கேள்வியெழும்போது இதை விளக்குவதற்கு சப்தபிரமாணம் மூன்று வகையான நெருக்கடியை சந்திக்கின்றது.  அவைகள்

  1. சாதகனுக்கு பிரம்மத்தைப்பற்றிய அறிவு இல்லாமல் இருப்பது, தெரியாத விஷயமாக இருப்பது
  2. சப்த பிரமாணம் அறிவைக் கொடுக்க வேண்டுமென்றால் மேற்கூறிய ஐந்து நிபந்தனைகளுக்குட்பட்ட ஏதாவது ஒரு வகையை பிரம்மம் சார்ந்திருக்க வேண்டும். பிரம்மன் திரவியமில்லை,  குணங்களற்றது, செயலற்றது,  ஒன்றாக இருப்பதால் எந்த பிரிவும் இதற்கு கிடையாது, எதனோடும் உறவற்றது.  எனவே சப்த பிரமாணத்தினால் பிரம்மத்தை விளக்குவதில் இந்த நெருக்கடிக்குள்ளாகின்றது.  பிரமேயம் என்பது வரையறுக்கப்பட்டதாக இருக்கும்.
  3. சப்த பிரமானம் பிரம்மத்தை விளக்கிவிட்டால் அது பிரமேயமாகி விடும். அபூர்ணமாகி விடும்.  அப்படி விளக்க முடியாவிட்டால் அதை பிரமாணமாக கூற முடியாது,

இந்த நெருக்கடியை உபநிஷத் எப்படி சமாளிக்கின்றது என்பது விளக்கப்படுகின்றது;.

  1. பிரம்மன் தெரியாததாகவும் இருக்கின்றது அதேசமயம் தெரிந்ததாகவும் இருக்கின்றது.  உதாரணமாக பத்தாவது மனிதனை தேடிக்கொண்டிருப்பதால் அந்த பத்தாவது மனிதன் தெரியாதவனாகவும், தெரிந்தவனாகவும் இருக்கின்றான்.  கயிற்றில் தோன்றும் பாம்பில் கயிறானது தெரிந்தும் தெரியாததாக இருக்கின்றது. அதேபோல இந்த பிரம்மமானது ஆத்மாவாக நான் என்று குறிப்பிடப்படுகின்றது.  இந்த விஷயத்தின் நான் என்ற சப்தம் ஆத்மாவை அறியாமல், உடலை அறிகின்றது.  சப்த பிரமாணத்தினால் தவறாக புரிந்ததை நீக்கி தெரிந்ததை விளக்குகின்றது
  2. பிரம்மன் சப்த பிரமாணம் செயல்படக்கூடிய ஐந்து நிபந்தனைகளைத்தாண்டி இருக்கின்றது.  இந்த பிரமாணம் பிரம்மத்தை நேரிடையாக விளக்கவில்லை. விருத்தி என்பது ஒரு விஷயத்தை பற்றிய அறிவை கொடுக்கும் ஒரு வழியாகும்.  இது இரண்டு வகையாக இருக்கின்றது. 1. அபிதா விருத்தி – படிக்கும் வாக்கியத்திலிருந்து நேரிடையாக அடையும் அறிவு (உ-ம்) நீர் கொண்டு வா, 2. லக்‌ஷணா விருத்தி – வாக்கியமானது மறைமுகமாக அறிவை கொடுப்பது.   (உ-ம்) கிரிக்கெட் விளையாட இந்தியா இலங்கை செல்கிறது. இந்த வாக்கியத்தில் இந்தியா என்பது இந்திய கிரிக்கெட் அணியை குறிக்கின்றது.  இங்கு நேரிடையாக பொருள் கொள்ளாமல், அதற்கு சம்பந்தபட்ட சரியான பொருளை எடுத்துக் கொள்கிறோம்.  வாச்யார்த்தம் என்பது வாக்கியம் நேரிடையாக பொருளைக் கொடுப்பது.  இது எங்கு செயல்படவில்லையோ அந்த இடத்தில் லட்சியார்தத்தை பயன்படுத்தி பொருளை புரிந்து கொள்ளலாம். இந்த லட்சியார்த்தம் மூன்று வகையாக இருக்கின்றது.  அவைகள்
  3. ஜகல் லக்‌ஷணம்– கங்கையில் கிராமம் இருக்கின்றது என்ற வாக்கியத்தை படிக்கும் போது கங்கை என்ற சொல்லை விட்டு விட்டு கங்கை கரையை எடுத்துக் கொண்டு பொருள் புரிந்து கொள்கின்றோம்.
  4. அஜகல் லக்‌ஷணம்– சிவப்பு ஒடுகின்றது என்ற வாக்கியத்தில் குதிரை என்ற சொல்லை சேர்த்துக் கொண்டு சிவப்பு குதிரை ஒடுகின்றது என்று புரிந்து கொள்கின்றோம்
  5. ஜகலஜகல் லக்‌ஷணம்(அ) பாகத்யாக லக்‌ஷணம். – ஐந்து வயதில் பார்த்த ஒருவரை 20 வயதில் பார்க்கும் போது அவன் தான் இவன் என்று கூறும் போது வயதை விட்டுவிட்டு உடலை மட்டும் எடுத்துக் கொண்டு புரிந்து கொள்கின்றோம்.

உபநிஷத் பிரம்மத்தை விளக்குவதற்கு லட்சியார்தத்தைதான் பயன்படுத்துகின்றது. உபநிஷத் நம்மைப்பார்த்து “நீ அதுவாக இருக்கிறாய்” என்று சொல்லும்போது இதில் நீ என்பது ஜீவாத்மாவையும், அது என்பது பரமாத்மாவையும் என்று சொல்கின்றது. இதில் ஜீவனிடத்தில் உள்ள மூன்று சரீரங்களை நீக்கி விட்டு சாட்சியாக இருக்கின்ற சுத்த சைதன்யத்தை எடுத்துக்கொண்டு, ஈஸ்வரனிடத்தில் உள்ள மூன்று பிரபஞ்சங்களையும் நீக்கி விட்டு சாட்சியாக இருக்கின்ற சைதன்யத்தை எடுத்துக் கொண்டு ஐக்கியத்தை நிலை நாட்டுகின்றது. இங்கு லட்சியார்தத்தின் மூலமாகத்தான் விளக்குகின்றது.

  1. பிரம்மன் சப்த பிரமாணத்தால் விளக்கப்பட்டு விட்டால் அது பிரமேயமாகி விடும்.  அது வரையறைக்குட்பட்ட பொருளாகி விடும், அநித்யமான வஸ்துவாகி விடும். உபநிஷத் நீ பிரம்மத்தை இது என்று தெரிந்து கொள் என்று சொல்லவில்லை, அதாவது பிரமேயமாக சொல்லவில்லை ஆனால் பிரமாதாவாக சொல்கின்றது.  அறியப்படும் பொருளாக உபதேசிக்கவில்லை. பிரமாதா என்று சொன்னாலும் அதுவும் வரையறைக்கு உட்பட்டதாகின்றது.  அதனால் பிரமாதாவும் இல்லை என்று நிஷேதம் செய்கின்றது.  இதனால் பிரம்மன் அறிவு ஸ்வரூபம் என்றும்,  அறியப்படும் பொருளில்லை என்று சொல்லும்போது அறிபவனும் இல்லையென்று ஆகின்றது,  பிறகு அறிவு ஸ்வரூபம் மட்டும் எஞ்சியிருக்கின்றது,  இதுவே பிரம்மன் என்று புரிய வைக்கின்றது.

உபநிஷத் முகவுரை:
இந்த உபநிஷத் அதர்வன வேதத்தைச் சார்ந்தது. இதற்கு மாண்டூக்ய உபநிஷத் என்று பெயர்.  இது பன்னிரண்டு மந்திரங்களைக் கொண்டது. ஆனால் கௌடபாதர் (ஆதிசங்கரரின் குருவான கோவிந்தபாதருடைய குரு) இதற்கு ஸ்லோக வடிவில் விளக்கத்தை எழுதியிருக்கின்றார்.  225 ஸ்லோகங்களில் நான்கு அத்தியாயமாக பிரித்து விளக்கம் எழுதியிருக்கின்றார்.

அத்தியாயம்-01 ஆகம பிரகரணம் – ஆகமம் என்பதற்கு வேதம் என்ற வேறு பெயரும் உண்டு.  இது பரம்பரையாக சொல்லபட்டு வந்திருக்கின்றது. உபநிஷத் மந்திரமும் அதன் விளக்கமும் சேர்ந்து வரும் 29 ஸ்லோகங்களை கொண்டது.

அத்தியாயம்-02 வைத்திய பிரகரணம் – இதில் இந்த பிரபஞ்சம் பொய் என்று நிலை நாட்டுகின்றார்.

அத்தியாயம்-03 அத்வைத பிரகரணம் – பிரம்மன் ஒன்றுதான் என்பதை நிலை நாட்டுகின்றார்.

அத்தியாயம்-04 அலாதிசாந்தி பிரகரணம் – அத்வைதத்திற்கு எதிராக உள்ள கருத்துக்களை எடுத்துக் கொண்டு அவைகளை நிராகரிக்கின்றார்.  பிரம்மன் சத்யம், ஜகத் மித்யா என்று நிலை நாட்டுகின்றார்.

சாந்தி பாடம்:

மிக உயர்ந்த ஒன்றை அடைய முயற்சிக்கும்போது மிக அதிகமான தடைகள் வரும் இந்த தடைகள் விலகுவதற்கு சாந்தி பாடங்கள் படிக்கப்படுவதுண்டு.  யாருமே மற்றவர்கள் சுதந்திரமாக இருப்பதை சகித்துக் கொள்ள மாட்டார்கள்.  நம்மைச் சார்ந்து இருப்பவர்கள் நம்மை விட்டுப் போவதை விரும்பமாட்டார்கள். தேவர்களுக்கு மனிதன் ஒருவன் ஞானம் அடைந்து விட்டால் அவனிடமிருந்து வரும் பலன் நின்று விடும்.  இந்திரியங்களுக்கு ஞானம் வந்தவுடன் போகத்தை அனுபவிக்கும் விஷயங்கள் கிடைக்காது எனவே அவைகள் தடைகளை ஏற்படுத்தும்.  எனவே தடைகள் நம்மிடமேயிருந்து வரும்.

  • தேவர்களே நல்லதையே, வேதாந்தத்தையே எங்கள் காதுகளால் கேட்போமாக, எவைகள் எல்லாம் எங்கள் காதுகளினால் கேட்கப்படுகின்றதோ அவைகள் நல்லவைகளாக இருக்கட்டும்.
  • கண்களினால் நல்லதையே பார்ப்போமாக.
  • இவைகளிரண்டும் நல்ல ஆரோக்கியமான உறுதியான மனதை அடைவதற்கு வேண்டுகிறார்கள்.  நம்முடைய மனதிற்கு இந்திரியங்கள் வழியாக எதைக் கொடுக்கின்றோமோ அதைப்பொறுத்துதான் அதனுடைய நிலையும் அமையும், அதாவது அது அமைதியுடனும், சஞ்சலமின்றியும் உறுதியுடனும் இருக்கும் வகையில் விஷயங்கள் இருக்க வேண்டும்.
  • கர்மேந்திரியங்கள் உறுதியாக இருக்க வேண்டும்.
  • நாங்கள் உங்களை போற்றிக்கொண்டு இருப்பவர்களாக இருக்க வேண்டும்.  வேத மந்திரங்களால் ஸ்துதி செய்து கொண்டிருக்க வேண்டும். உறுதியான உடலுடன் இருக்க வேண்டும்.  பிராரப்தத்தை மீறி துர்மரணம் ஏற்படக்கூடாது
  • இறைவனால் கொடுக்கப்பட்ட முழு ஆயுளுடன் வாழ்வோமாக. இங்கே சிஷ்யர்கள் ஸ்தூல, சூட்சும சரீரத்தின் ஆரோக்கியத்தை வேண்டுகிறார்கள்.  உடலும் மனமும் எடுத்துக் கொண்ட இலட்சியத்தை அடைவதற்கு உறுதியுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும்.
  • ஓங்கி உயர்ந்த புகழுடைய இந்திரதேவன் சிஷ்யர்களான எங்களுக்கு மங்கலத்தை வழங்கட்டும்.
  • அனைத்தையும் அறிகின்ற சூரியபகவான் எங்களுக்கு மங்கலத்தை கொடுக்கட்டும்
  • தடையின்றி வானில் பறக்கின்ற கருடபகவான் போல தடையின்றி எங்கள் இலட்சியத்தை அடைவதற்கு அருள் புரியட்டும்.
  • புத்திக்கு அதிஷ்டான தேவதையாக இருக்கின்ற பிருகஸ்பதி எங்களுக்கு நன்மையை கொடுக்கட்டும், புத்திக் கூர்மையை கொடுக்கட்டும்.

ஸ்லோகம் – 1

விசாரம்:

இதில் ஓங்கார விசாரம் செய்யப்படும் என்று உறுதிக் கூறுகின்றது.  வேதாந்தத்தின் ஸாரம் பிரம்ம ஸத்யம், ஜகத் மித்யா என்பதேயாகும்.  பிரம்மத்தை தவிர வேறொன்றுமில்லை இதுவே அத்வைதமாக இருக்கின்றது.  நாம் த்வைதத்தை அனுபவிக்கக் காரணம் என்ன என்று வினவினால் நம்முடைய அறியாமையினால் தான் தவறுதலாக இருமையை அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம் என்பது பதிலாகும். வஸ்து ஒன்று பார்வை இரண்டு விதமாக இருக்கின்றது. ஞானியின் பார்வையில் பிரம்மம் மட்டும்தான் தெரிகின்றது,  அக்ஞானியின் பார்வையில் இருமை தெரிகின்றது.  இந்த உலகம் தெரிகின்றது. இதில் எது உண்மையானது?

  1. பிரம்மனை மட்டும் பார்ப்பதால் அவன் அடைவது முழு மனநிறைவு.  ஜகத்தை மட்டும்பார்ப்பதால் பயமும், துயரமும் அனுபவிக்கின்றோம், சம்சாரத்தை அனுபவிக்கின்றோம்.
  2. எது நீக்கப்படுகின்றதோ அது பொய்யான பார்வை, எது தொடர்ந்து இருக்கின்றதோ அதுதான் உண்மையான பார்வை. க யிற்றில் பாம்பை ஒருவர் பார்க்கின்றார், வேறு ஒருவர் கயிற்றை மட்டும் பார்க்கிறார்.  அறிவினால் பாம்பை பொய் என்று நீக்கிவிட்டால் அங்கு கயிறு மட்டும் தெரியும். அதுபோல ஆத்ம ஞானம் வந்தவுடன் பார்த்து கொண்டிருக்கும் ஜகத் பொய்யென்று உணர்ந்து, பிரம்மனே உண்மையென்று அறிகின்றான்
  3. அறியாமையில் இருக்கும்போது பிரம்மத்தை பார்க்கின்றானா இல்லையா என்று வினவினால் இரண்டு பார்வையும் இருக்கின்றது.  அறியாமையில் பூரண ஞானத்தோடு ஜகத்தை பார்க்காததால் அது இருப்பதாக உணர்கின்றோம்.
  4. தவறான ஞானத்திலிருந்து சரியான ஞானத்திற்கு எப்படி செல்ல முடியும்.  பாம்பிடம் இருந்துதான் விசாரத்தை ஆரம்பிக்க வேண்டும்.  எதை தவறாக பார்த்து கொண்டு இருக்கின்றோமோ அதை விசாரம் செய்தால் உண்மையானதை அறிந்து கொள்ளலாம். இயற்கை நியதிப்படி அதிஷ்டானம் இல்லாமல் தவறு நடக்காது.  அதாவது கயிறு இல்லாமல் பாம்பை பார்க்க முடியாது. அதிஷ்டானமும், அத்யாஸமும் பிரிக்க முடியாது.  இந்த நியதிப்படி ஜகத் என்ற பிராந்தி திருஷ்டிக்கு ஆதாரமாக பிரம்மன் இருக்கின்றது.  எனவே நமது விசாரத்தை ஜகத்திலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்.  பானையை பார்க்கும்போது களிமண்ணைத்தான் பார்க்கின்றோம். ஆனால் நாம் நாம-ரூபங்களைத்தான் உண்மையென்று பார்க்கின்றோம்.  ஜகத்தில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் பிரம்மத்தை அறிவதற்கு இந்த ஜகத்தை விசாரம் செய்தால்தான் பிரம்ம சத்யம் என்ற அறிவை அடைய முடியும்.  ஓங்கார விசாரத்தினால் பிரம்மத்தை அறிய முடியும் என்று கூறுவதன் மூலம் ஒங்காரம் ஜகத்தை குறிக்கின்றது. இதிலிருந்து ஜகத்தும், ஓங்காரமும் ஒன்று என்று புரிந்து கொள்ளலாம்.

ஓங்காரமே ஜகத் என்று எவ்வாறு கூறப்படுகின்றது?
இந்த ஜகத்தை நாம் இரண்டு கோணத்தில் பார்க்கலாம்.
1. பதார்த்த பிரபஞ்சம்,
2. பத பிரபஞ்சம்.
பதார்த்த பிரபஞ்சம் என்பது பார்க்கும் அனைத்து பொருட்களையும் இது குறிக்கின்றது.   ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு பெயர் இருக்கிறது.  இந்த உலகத்தில் எவ்வளவு பொருட்களிருக்கின்றதோ அவ்வளவு பெயர்கள் (பதங்கள்) இருக்கும்.  பதத்துக்கும் பதார்தத்துக்கும் உள்ள சம்பந்தம் நாம-நாமி சம்பந்தம் என்று அழைக்கப்படுகின்றது.   அபிதான (நாம) – அபிதேயம்(நாமி) என்றும் அழைக்கப்படுகின்றது.  ஆனால் வெவ்வேறாக இருக்கின்றது.  நெருப்பு என்று சொன்னால் வாயை சுட்டு விடாது.

இரண்டும் ஒன்றுதான் என்று நிச்சயிக்க போகின்றோம். பதார்த்த பிரபஞ்சம் என்பது இல்லை வெறும் பதம் மட்டும்தான் இருக்கின்றது என்று நிரூபிக்கப் போகின்றோம். (உ-ம்) ஒரு கிலோ தங்கத்தில் 20 விதவிதமான ஆபரணங்கள் செய்யப்படுகின்றன.  முதலில் தங்கம் என்ற சொல் மட்டும் இருந்தது. அதிலிருந்து 20 ஆபரணங்கள் செய்த பிறகு 20 நாமங்கள் வந்து விட்டன, 20 பதார்த்தங்கள் வந்து விட்டன. தங்கத்தில் 20 நாமங்களும், 20 உருவங்களும் கொடுக்கப்பட்டன.  ஒரு பதார்த்தமான தங்கமானது நாம-ரூபங்களுடன் சேர்ந்து காட்சியளிக்கும் போது  20  பதங்களும், 20 பதார்த்தங்களும் இருந்தாலும் அவைகள் இரண்டும் ஒன்றுதான்.  காரியமாக இருக்கும் பொருட்கள் அனைத்தும் நாம-ரூபங்களுக்கு வேறல்ல ஒன்றுதான் என்ற ஐக்கியத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.  காரியமான பதார்த்தம் பதத்திற்கு வேறில்லை.  காரணத்திலிருந்து படைக்கப்பட்டது வெறும் பெயர் மட்டும்தான்.  ஒரு பொருளை காரியம் என்று நிரூபித்து விட்டால் அப்போது காரியம் வெறும் பதம்தான் என்று நிரூபிக்கபட்டதாகிறது.  இந்த ஜகத் பிரம்மத்திடமிருந்து தோன்றியது என்று உபநிஷத் ஜகத்தை அறிமுகப்படுத்துகின்றது; இந்த ஜகத் காரியம் என்று சொல்வதால் இது பத-பிரபஞ்சமாகவும்,  பதார்த்த-பிரபஞ்சமாகவும் இருக்கின்றது. இந்த ஜகத்திலுள்ள அனைத்தும் வெறும் பதங்கள்தான் என்று நிரூபிக்கபட்டுவிட்டது.

பதபிரபஞ்சம்:
எல்லா பதங்களுக்கும் உபாதானமாக இருப்பது ‘அ’ என்ற சப்தம்.  இதுவே மற்ற சப்தங்களுக்கு மூலமாக இருக்கின்றது.  ‘ம்’ என்ற சப்தம் எல்லா சப்தங்களுக்கும் முடிவாக காரணமாகின்றது.  ‘உ’ என்ற சப்தம் எல்லா சப்தங்களையும் சேர்த்து எடுத்துக் கொள்ளப்படுகின்றது. இந்த மூன்று சப்தங்களும் சேர்ந்து ஓம் என்று உருவாகின்றன.  இது பதபிரபஞ்சத்திற்கு உபாதான காரணமாக இருப்பதால் ஓம் என்ற சொல்லும் அனைத்து பத பிரபஞ்சங்களும் ஒன்றுதான்.  இதுவே ஓம் என்ற சொல் பதார்த்த பிரபஞ்சத்துடன் ஐக்கியமாகின்றது.  பதார்த்த பிரபஞ்சமே ஜகத் என்று குறிப்பதால் ஓங்கார விசாரமும், ஜகத் விசாரமும் ஒன்றுதான் என்று புரிந்து கொள்ளலாம். ஓம் என்ற சொல்லும் ஜகத் என்ற சொல்லும் ஒன்றுதான்.  எனவே ஓங்கார விசாரத்தினாலும் பிரம்மத்தையே அடையலாம்.

மந்திர விளக்கம்:
ஓம் என்கின்ற இந்த எழுத்து (அழியாத பிரம்மன்)  நம்மால் பார்க்கப்படுகின்ற இவைகள் அனைத்தும் (பதார்த்த பிரபஞ்சம்)  ஓங்காரத்தினுடைய விளக்கம் ஆரம்பிக்கபடுகின்றது. ஓம் என்ற சொல் தியானம், விசாரம் என்ற விஷயங்களுக்கும் பயன்படுத்தபடுகின்றது.  விசாரம் செய்வதன் மூலம் பிரம்மத்தை நாம் அடைகின்றோம்.  ஒங்காரம் பிரம்மத்திற்கு அருகில் இருக்கிறது.  பிரபஞ்சத்தை அடைய உதவும் தெளிவான முழுமையான விசாரம்.

கடந்த காலத்தில் இருந்த அனைத்தும், இப்பொழுது இருக்கின்ற அனைத்தும் இனி வரப் போகின்ற அனைத்தும் ஓம் என்ற எழுத்து மட்டும்தான்.  எந்தவொன்று மூன்று காலத்திற்கும் வேறாக இருக்கின்றதோ, கடந்து இருக்கின்றதோ (இது மாயையை குறிக்கின்றது)  அதுவும் ஓங்காரம்தான்.  மாயையிலிருந்து தோன்றியது காலமும், தேசமும், ஈஸ்வரன்தான் ஓங்காரம்.  ஓம் என்பது காரண காரிய பிரபஞ்சங்களை குறிக்கின்ற தத்துவம்.

ஸ்லோகம்2
இது பதார்த்த பிரதானமாக கொண்ட மந்திரம்.  பதார்த்தம் என்பது வெறும் உருவம்.  இது அருவமான பிரம்மத்தில் ஏற்றி வைத்து விசாரம் செய்யப்படுகின்றது.  பதமும், பதார்த்தமும் ஒன்றுதான் என்ற ஐக்கியத்தை விசாரம் செய்து உறுதி செய்யப்பட்டதால் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டு பிரம்மத்தை அடையலாம்.  நாமமும், உருவமும் பிரிக்க முடியாதது. வட்ட வடிவமான வளையல் என்ற பெயருடைய தங்க நகையை வேறொரு உருவமாக மாற்றி அமைத்தால், வளையல் என்ற சப்தம் மறைந்து விடுகின்றது.  வேறொரு நாம ரூபம் தோன்றி விடுகின்றது.  இவை இரண்டும் ஒன்றாக இருப்பதால் இதிலிருந்து ஏதாவது ஒன்றை பிரம்மத்தில் ஒடுக்கி விட்டால் போதும் நாம் நிர்குண பிரம்மத்தை அடைந்து விடலாம். இந்த ஸ்லோகத்தில் அனைத்து பதங்களும் பதார்தத்தில் ஒடுக்கப்படுகின்றது).

ஆத்மாவும் ஜகத்தும் ஒன்றுதான் என்று ஐக்கியப்படுத்துகின்றது.  எனவே ஜகத்தை விசாரம் செய்வது ஆத்மாவை விசாரம் செய்வதற்கு சமமாகும்.  இவைகள் அனைத்தும் பிரம்மன் என்றும்,  பிரம்மனும் ஆத்மாவும் ஒன்று என்று சொன்னால்,  ஆத்மாவே அனைத்தும் என்று புரிந்து கொள்ளலாம்.

இந்த ஸ்லோகத்தில் மூன்று விதமான கருத்துக்கள் இருக்கின்றது. அவைகள்
1. ஸர்வம் ஹ்யேதத் பிரஹ்ம
2. அயம் ஆத்மா பிரஹ்ம
3. ஸோ அயமாத்மா சதுஷ்பாத்

  1. ஸர்வம் ஹி ஏதத் பிரஹ்ம– அனைத்தும் உண்மையில் இந்த பிரம்மனே.  அனைத்தும் என்பது காரண, காரிய பிரபஞ்சம் இரண்டையும் குறிக்கின்றது.  முதல் ஸ்லோகத்தில் கூறிய ஸர்வம் என்ன சொல்கின்றதோ அதையே இங்கும் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த வாக்கியம் ஜகத்தும், பிரம்மனும் ஒன்று என்று கூறுகின்றது.  ஜகத்தானது இந்த பிரம்மத்திடம் ஏற்றி வைக்கப்பட்டுள்ளது.   களிமண்ணால் செய்யப்பட்ட விதவிதமான பானைகள் உண்மையில் வெறும் நாம-ரூபங்களோ. ஆனால் இவைகள் களிமண்ணின் மீது ஏற்றி வைக்கப்பட்டிருக்கின்றது. அதுபோல இந்த நாம-ரூபமான ஜகத் பிரம்மத்தின் மீது ஏற்றி வைக்கப்பட்டிருக்கின்றது.  மாயைக்கும், அதிலிருந்து வெளிவந்த அனைத்துக்கும் பிரம்மமே ஆதாரமாக இருக்கிறது.  பிரம்மன் காரண காரிய பிரபஞ்சத்திற்கும் ஆதாரமாக இருக்கின்றது.
  2. அயம் ஆத்மா பிரஹ்மன்– இந்த ஆத்மாதான் பிரம்மன்.  முதல் பகுதியில் கூறப்பட்ட அந்த பிரம்மன்தான் இந்த ஆத்மாவாக இருக்கின்றது.  இது ஒரு மகாவாக்கியம்.  இங்கு ஆத்மா என்பது ‘நான்’ என்ற சொல்லினுடைய உண்மையான பொருள்.  இந்த என்ற சொல் ஜீவனை சுட்டிக்காட்டி சொல்வதாக இருக்கின்றது.  நானே இந்த பிரம்மனாக இருக்கின்றேன்.  நானே இவைகள் அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கின்றேன்.  ரிக் வேதத்திலுள்ள அய்த்தரேய உபநிஷத்தில் “பிரக்ஞானம் பிரம்ம” என்பதும், யஜூர் வேதத்திலுள்ள ப்ருஹதாரண்ய உபநிஷத்தில் “அஹம் பிரஹ்மாஸ்மி” என்ற வாக்கியமும், சாம வேதத்திலுள்ள சாந்தோக்ய உபநிஷத்தில் உள்ள :”தத்துவமஸி” என்ற வாக்கியமும் அதர்வன வேதத்திலுள்ள மாண்டுக்ய உபநிஷத்தில் உள்ள  “அயம் ஆத்மா பிரஹ்ம” என்ற வாக்கியமும் மகாவாக்கியங்களாகும்.   இந்த நான்கு வாக்கியங்கள் மட்டுமல்ல எவ்வளவு உபநிஷத்துக்கள் உள்ளனவோ அவ்வளவு மகாவாக்கியங்கள் உள்ளது.  பிரதிக்ஞா மகாவாக்கியம் என்பது உபநிஷத்தின் ஆரம்பத்தில் சொல்லப்படும் வாக்கியம்.  பிறகு அதை விசாரம் செய்து நிரூபிக்கின்றது.
  3. ஸோ அயமாத்மா சதுஷ்டாத்:  இதில் ஆத்மாவைப்பற்றிய விசாரம் செய்யப்படுகின்றது.  எப்பொழுதெல்லாம் நான் என்று சொல்லுகிறோமோ அப்போது நாம் எதைக் குறிக்கின்றோம் என்றால் ஆத்மாவோடு சேர்த்து அனாத்மாவான மூன்று சரீரங்களைத்தான்.  அதாவது பிரம்மனோடு ஜகத்தையும் சேர்த்து புரிந்து கொண்டு இருக்கின்றோம்.  உண்மையில் ஆத்மாவையும் அனாத்மாவையும் பிரித்து புரிந்து கொள்ள வேண்டும்.  எனவே இவையிரண்டையும் சேர்த்து விசாரம் செய்ய வேண்டும்.  நாம் எவ்வாறு புரிந்து கொண்டிருக்கின்றோமோ அதிலிருந்துதான் உபநிஷத் விசாரத்தை ஆரம்பிக்கின்றது.

ஆத்மாஅனாத்மா விசாரம்:

ஸஹ அயம் ஆத்மா – அந்த இந்த ஆத்மா.  இதில் அந்த என்ற சொல் பிரம்மத்தை குறிக்கின்றது.  பிரம்மனே இந்த ஆத்மா என்று பொருள் கொள்ளப்படுகின்றது.

சதுஷ்பாத் – நான்கு பாதங்களுடன் (பகுதிகளை) கூடியது.  அறியாமையில் ஜீவன் ஆத்மாவை எப்படி தவறாக புரிந்து கொண்டிருக்கின்றானோ அதன் அடிப்படையில் நான்கு பாதங்களாக உபநிஷத் பிரித்துள்ளது.  இதில் மூன்று பாதங்கள் ஆத்மா மீது ஏற்றி வைக்கப்பட்ட ஜகத், நான்காவது அதிஷ்டானமாக இருக்கின்ற ஆத்மா.  விவகாரத்திற்கு நம்முடைய வசதிக்காக ஒன்றை நாம் பிரிக்கின்றோம். அதுபோல பிரிக்க முடியாத ஆத்மாவை நான்காக பிரித்து விசாரம் செய்யப்படுகின்றது.

ஸ்லோகம் – 3
அவஸ்தாத்ரயம் மூலம் ஆத்ம விசாரம் செய்யப்படுகின்றது.  ஆத்மாவை நான்காக பிரித்து,. அதில் முதல் பாதம் இதில் கூறப்படுகின்றது. அவஸ்தாத்ரயம் மூலம் ஆத்மாவின் முதல் மூன்று பாதங்களை விளக்குகிறது.  நான்காவது பாதத்தில் அதை விசாரம் செய்கின்றது.  இந்த ஜகத்தை மூன்று அவஸ்தைகளுக்குள் அடக்கப்படுகிறது எனவே அவஸ்தாத்ரய விசாரமும், ஜகத் விசாரமும் ஒன்றாகின்றது.  நான்காவது பாதம் மூன்று அவஸ்தைகளுக்கும், ஜகத்துக்கும் அதிஷ்டானமாக எது இருக்கின்றதோ அதை பற்றிய விசாரம்.

ஜகத்தானது காரண பிரபஞ்சம்,  சூட்சும பிரபஞ்சம்,  ஸ்தூல பிரபஞ்சம் என்று மூன்று வகையாக பிரிக்கப்படுகின்றது.  உலகத்தில் நாம் பார்த்து அனுபவிக்கும் பிரபஞ்சம் ஸ்தூல பிரபஞ்சம்.  இது சூட்சும பிரபஞ்சத்திலிருந்து தோன்றியிருக்கின்றது;  காரண பிரபஞ்சம் மாயையை குறிக்கின்றது. ஸ்தூல பிரபஞ்சம் ஜாக்ரத் பிரபஞ்சம் என்றும் அழைக்கப்படுகின்றது ஸ்தூல பிரபஞ்சம் ஜாக்ரத் அவஸ்தையில் அனுபவிக்கப்படுகின்றது.  நாம் விழித்துக் கொண்டிருக்கும்போது அனுபவிக்கும் பிரபஞ்சமே ஸ்தூல பிரபஞ்சம்.  கனவில் அனுபவிக்கும் விஷயங்கள் அனைத்தும் சூட்சுமாக இருக்கிறது எனவே அதை சூட்சும பிரபஞ்சம் என்று அழைக்கப்படுகின்றது. ஆழ்ந்த உறக்கத்தில் அனுபவிக்கும் பிரபஞ்சம் காரண பிரபஞ்சம்

ஆத்மாவுக்குத்தான் இந்த விழிப்பு நிலை என்று கூறப்படுகின்றது.  ஆத்மா அப்பொழுது தன்னுடைய அபிமானத்தை ஸ்தூல சரீரத்தில் வைக்கும்போது விழிப்பு நிலையில் இருக்கின்றது.  விழிப்பு பிரபஞ்சத்தை அனுபவிக்கின்றது. சூட்சும சரீரத்தில் அபிமானிக்கும் போது சூட்சும பிரபஞ்சத்தை அனுபவிக்கின்றது; காரண சரீரத்தில் அபிமானிக்கும்போது காரண பிரபஞ்சத்தை அனுபவிக்கின்றது.  நான்தான் இந்த ஆத்மா என்று புரிந்து கொண்டு இந்த விசாரத்தை செய்ய வேண்டும்.

ஜாக்ரத் பிரபஞ்சம் மூன்றாக பிரிக்கப்படுகின்றது. அவைகள்
1. அனுபவிப்பவன்,
2. அனுபவிக்க உதவும் கருவி,
3. அனுபவிக்கப்படும் பொருள்.
ஆகியவைகளாகும்.

ஜாக்ரத் பிரமேயம் பார்த்து அனுபவிக்கும் பொருட்கள், ஜாக்ரத் பிரமாணம் ஞானேந்திரியங்கள்,  ஜாக்ரத் பிரமாதா என்பவன்,  மனதில் பிரதிபலிக்கும் ஆத்மாவுடன் (சிதாபாசம்) கூடிய மனம்.  ஆத்மாவும், ஜாக்ரத் பிரமாதாவும், ஞானேந்திரியங்களான பிரமாணமும் சேர்ந்து விஸ்வன் என்று அழைக்கப்படுகின்றது.  ஆத்மாவையும், அனைத்து ஜாக்ரத் பிரபஞ்சமும் சேர்ந்து விராட் என்று அழைக்கப்படுகின்றது.  இந்த விஸ்வன், விராட் என்ற இரண்டிலும் ஆத்மா என்பது பொதுவாக இருக்கின்றது.  விஸ்வன் தனிப்பட்ட ஜீவனையும், விராட் சமஷ்டி சரீரத்தைக் குறிக்கின்றது.  விஸ்வன் மூன்று சரீரத்திலும் அபிமானம் வைத்திருப்பதால்  அவ்வாறு அழைக்கப்படுகிறது.  ஆத்மாவில் முதல் பாதத்தில் விஸ்வன்,  விராட் என்ற இரண்டை எடுத்துக் கொண்டு விசாரம் செய்யப்படுகின்றது.  விஸ்வனை மட்டும் எடுத்துக் கொண்டால் ஒரு விஸ்வனுக்கு ஒரு ஆத்மா என்று தவறாக புரிந்து கொள்ள வேண்டும் எனவே இரண்டும் சேர்ந்து எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

அவஸ்தாத்ரய விசாரம்,  த்வம் பத விசாரத்திற்காக உதவுகின்றது.  இது ஆத்ம ஸ்வரூபத்தை அறிய உதவுகின்றது.  ஆனால் இந்த உபநிஷத்தில் இந்த விசாரம் ஜீவ-பிரம்ம ஐக்கியத்தை புரிந்து கொள்ள பயன்படுத்தபடுகின்றது.  இந்த விசாரத்தில் மூன்று சரீரத்திற்கு அப்பாற்பட்டதும்,  மூன்று பிரபஞ்சத்திற்கும் அப்பாற்பட்டதுமான பிரம்ம தத்துவத்தை எடுத்துக் காட்டப்படுகின்றது

ஜாக்ரத் ஸ்தானஹ:
விஸ்வனும், விராட்டும் ஜாக்ரத் அவஸ்தையே இருப்பிடமாகக் கொண்டது.  ஆத்மா. ஸ்தூல சரீரத்தை உபாதியாக கொண்டது.  ஆத்மா என்பது இறுதியான பொருள்.  இது ஸ்தூல சரீரத்தை அபிமானிக்கும் போது ஜாக்ரத் அவஸ்தையில் இருக்கின்றது.  ஒரு உடலை எடுத்துக்கொண்டு ஸ்தூல சரீரத்தை அபிமானிக்கும் போது அதற்கு விஸ்வன் என்றும்,  ஸ்தூல பிரபஞ்சத்தை அபிமானிக்கும்போது அதுவே விராட் என்றும் அழைக்கப்படுகிறது.

3ஹிஷ்ப்ரக்ஞஹ:
இது விஸ்வனைக் குறிக்கின்றது, வெளி விஷயமான அறிவை உடையவன் என்ற அர்தத்தைக் கொண்டது. ஆத்மா  வெளியே உள்ள விஷயங்களை அறிந்தவனாக இருக்கின்றது.  இங்கு வெளியே என்பது ஸ்தூல சரீரத்திற்கு வெளியே என்று எடுத்துக்கொள்ள வேண்டும். நம் மனதிலுள்ள எண்ணங்களைத்தான் நாம் பார்க்கின்றோம், அனுபவிக்கின்றோம்.  உண்மையில் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் விஷயங்களை, உலகத்தை அனுபவிக்கவில்லை.  எனவே உலகம் ஒன்றாக இருந்தாலும் வெவ்வேறு அனுபவங்களை ஜீவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.  ஆகவே சைதன்யம் எப்பொழுதும் உள்ளே இருந்து கொண்டு மனதில் உள்ள விருத்திகள் மூலமாக அனுபவத்தை உண்டாக்குகின்றது..  எந்தவொரு எண்ணமானது வெளி விஷயங்களிலிருந்து உண்டானதோ அதை பிரகாசப்படுத்திக்கொண்டு இருக்கின்றது.  விராட்டிற்கு இந்த நிலை ஏற்படாது. ஏனென்றால் அனைத்து ஸ்தூல சரீரங்களும் ஒன்றேதான் ஸ்தூல பிரபஞ்சம் முழுவதும் அவரது சரீரம்.

ஏகோனவிம்ஷதிமுக: (ஏகம் + ஊனம் + விம்ஷதி + முக)
இருபதில் ஒன்று குறைந்த(பத்தொன்பது ) துவாரங்களை உடையது இந்த ஆத்மா.  அவைகள் ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து கர்மேந்திரியங்கள், ஐந்து பிராணன்கள்,  சித்தம்,  மனம்,  புத்தி,  அகங்காரம் ஆகியவைகளாகும். இவைகள் சூட்சும சரீரத்தின் அங்கங்களாகும்.  இவைகளின் வழியாக வெளி விஷயங்களை எண்ணங்களாக மாற்றி பிரகாசப்படுத்திக் கொண்டிருக்கின்றது.   உண்மையில் ஞானேந்திரியங்களின் வழியாகத்தான் எண்ணங்கள் தோன்றுகின்றன.  மற்றவைகள் இந்த இந்திரியங்களுக்கு உதவியாக இருப்பதால் இவைகளையும்  துவாரங்களாக குறிப்பிடப்படுகின்றது.

ஸ்தூல பு4க்3: ஸ்தூலமான பொருட்களை அனுபவிப்பவன், உலகத்தை அனுபவிப்பவன்.

நான் (ஆத்மா) வெளி விஷயங்களை பத்தொன்பது துவாரங்களின் வழியாக அனுபவிக்கின்றேன்.  இந்த நிலையில் அறிவும் வெளியே இருப்பதை அறிய வைக்கின்றது.  எந்தவொரு சைதன்ய ஸ்வரூபம் அனைத்து ஸ்தூல ஜீவ சரீரங்களையும் நான் என்று அபிமானிக்கின்றதோ அதற்கு விராட் என்று பெயர்.  எனவே அவருக்கு சம்சாரம் என்பதே கிடையாது.  இந்த விராட்டை மனித உருவமாக கற்பணை செய்து அதற்கு ஏழு அங்கங்கள் ( ஸப்தாங்கஹ ) இருப்பதாக கூறப்படுகின்றது.  அதாவது அனைத்து ஸ்தூல பிரபஞ்சத்தையே விராட்டின் உடலாக கற்பனை செய்யபடுகின்றது.  விராட்டின் ஏழு அங்கங்களானது,

  1. தலை        – சொர்க்க லோகம்
  2. கண்கள்    – சூரியன்
  3. வாய்         – அக்னி
  4. பிராணன்    –  வாயு
  5. மூத்ரஸ்தானம் – கடல் ( Kidney Bladder )
  6. மத்ய உடல்       – ஆகாசம்
  7. கால்கள்             – நிலம்

வைஸ்வாநரன்:  இது விராட்டை குறிக்கின்றது.  விராட்டை தியானம் செய்வதற்கு அக்னியை ஆலம்பனமாக கொண்டிருக்கின்றோம்.  அனைத்து மனிதர்களையும் விதவிதமாக இழுத்துக் கொண்டு செல்கின்றான்.  அவரவர் கர்ம பலனுக்கேற்ப அந்தந்த சூழ்நிலைக்கு கொண்டு செல்பவர்.  ஜீவர்களின் பாவ-புண்ணியத்திற்கேற்ப கர்ம பலனை கொடுப்பவர்.  அவர் சர்வேஸ்வரனாகவும் இருப்பதால் இது சாத்தியமாகின்றது. இவர் உலகமாகவும்,  மனிதர்களாகவும் இருக்கின்றார். அதாவது அனைத்துமாக இருக்கின்றார். அனைத்து ஜீவராசிகளில் சரீரத்திற்கு ஆதாரமாக இருக்கிறார்.

பிரதம பாதஹ:  இதுதான் ஆத்மாவினுடைய முதல் பாதம். விஸ்வம்-விராட் சேர்ந்த தத்துவம்.  நாம் நம்முடைய ஸ்தூல சரீரத்தை அபிமானத்தை விட்டுவிடும் போது இந்த ஸ்தூல பிரபஞ்சத்தையே விலக்கி விடுகின்றோம்.

ஸ்லோகம் – 4
ஆத்மாவினுடைய இரண்டாம் பாதம் இதில் விளக்கப்படுகின்றது.  கனவு-பிரபஞ்சம்: கனவு-பிரமாதா, கனவு-பிரமானம், கனவு-பிரமேயம்.  கனவு உலகத்தை அறிபவன், அறிய உதவும் கருவி, அறியப்படும் விஷயம்.  ஆத்மாவோடு சூட்சும பிரமாதா சேர்ந்தால் அதற்கு தைஜசன் என்று பெயர்.  ஆத்மாவோடு சமஷ்டி கனவு பிரபஞ்சம் சூட்சும பிரபஞ்சத்தோடு சேர்ந்தால் அதற்கு ஹிரண்யகர்ப்பன் என்று பெயர்.

ஸ்வப்ன ஸ்தானஹ – இது தைஜசனையும் ஹிரண்யகர்ப்பனையும் குறிக்கின்றது.  தைஜசன் சூட்சும சரீரத்தை உபாதியாக கொண்டது.  ஹிரண்யகர்ப்பன் அனைத்து சூட்சும சரீரத்தையும் உபாதியாக கொண்டது.
அந்த ப்ரக்ஞஹ: ஜென்ம-ஜென்மாந்திரமாக அனுபவிக்கப்பட்ட ஸம்ஸ்காரங்கள் அந்தக்கரணத்தில் இருக்கின்றது.  அவைகள்தான் கனவு பிரபஞ்சத்தை தோற்றுவிக்கின்றது அதைத்தான் அனுபவிக்கின்றோம்.  கனவுலகிலும் இந்திரியங்கள் படைக்கப்படுகின்றன இவைகள் மூலம்தான் நம்மால் கனவுலகத்தை அனுபவிக்க முடியும்.  கனவில் தோன்றிய பொருட்கள், எண்ணங்களால் உற்பத்தியாகவில்லை. உள்ளேயிருக்கின்ற ஸம்ஸ்காரத்தினால் தோற்றுவிக்கப்பட்டு அறிவை அடைவதால் அதற்கு அந்தபிரக்ஞன் என்று கூறப்படுகின்றது.
ஸப்தாங்கஹ: ஏழு அங்கங்களையுடைய ஹிரண்யகர்ப்பன், சூட்சும சரீரங்களை அங்கங்களாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஏ கோனவிம்ஷதிமுக: கனவுலக விஷயங்களை அனுபவிக்க 19 இந்திரியங்கள் உடையதாக இருக்கின்றது.
ப்ரவிவிதபுக்சூட்சுமமான விஷயத்தை அனுபவிப்பவன். (பிரவி விக்தம் – வேறொன்று)
தைஜஸஹ – ஞானத்தை பிரதானமாக உடையவன் – சூட்சும சரீரத்தின் அபிமானமுள்ள ஆத்மாவிற்கு இந்த பெயர்.  இது ஆத்மாவின் இரண்டாவது பாதமாகும்.  ஆத்ம ஜோதியின் உதவியால் கனவுலகிலுள்ள பொருட்களெல்லாம் பார்க்கப்படுகின்றது.   அதே ஆத்மஜோதியின் உதவியால்தான் விழிப்பு நிலை பிரபஞ்ச பொருட்களையும் நாம் பார்க்கின்றோம்.

ஸ்லோகம் – 5
ஆத்மாவில் மூன்றாவது பாதம் இதில் விளக்கப்பட்டுள்ளது. இதில் வியஷ்டியை மட்டும் எடுத்துக் கொண்டு சொல்லப்படுகின்றது.  காரண சரீரத்தில் அபிமானம் வைக்கும்போது அனுபவிக்கின்ற ஆழ்ந்த உறக்க நிலையை சுஷூப்தி அவஸ்தா என்று அழைக்கப்படுகின்றது.   இதிலும் ஆத்மா சாட்சியாக இருக்கின்றது.

ஆத்மாவும் காரண பிரபஞ்சம் சேர்ந்து பிராக்ஞன் என்று அழைக்கப்படுகின்றது.  வெளி பிரபஞ்சமும், சூட்சும பிரபஞ்சமும் இல்லாமலிருந்தால்தான் ஆழ்ந்த உறக்கம்.  அதனோடு ஆத்மாவை பற்றி அறியாமையும் சேர்ந்து இருக்கும்.
ஆத்ம அக்ஞானம் + வெளி உலகத்தை அனுபவித்தல்   = ஜாக்ரத் அவஸ்தா
ஆத்ம அக்ஞானம் + சூட்சும உலகத்தை அனுபவித்தல்  = ஸ்வப்ன அவஸ்தா
ஆத்ம அக்ஞானம் + எந்த பிரபஞ்சமும் இல்லாத நிலை = சுஷுப்தி அவஸ்தா

இதில் ஆழ்ந்த உறக்கத்தின் லட்சணம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.  எந்த காலத்தில், எந்த இடத்தில் உறங்கிக்கொண்டிருந்தாலும் இந்திரியங்களை தனக்குள் ஒடுக்கியிருப்பவன். எந்த ஒன்றிலும் ஆசை கொள்வதில்லை.  ஆசை வயப்படுத்துகின்ற ஜாக்ரத் அவஸ்தையில் உள்ள பொருட்கள் எதிலும் ஆசை கொள்வதில்லை.  இதில் ஜாக்ரத் அவஸ்தை நிஷேதம் செய்யப்பட்டு விட்டது.  எந்தவிதமான கனவும் பார்ப்பதில்லை. அதுதான் சுஷுப்தி அவஸ்தை.  இது காரண சரீரத்தை உபாதியாக கொண்டது.

ஆழ்ந்த உறக்கத்தில் ஸ்தூல, சூட்சும பிரபஞ்சம் காரண பிரபஞ்சத்தில் ஒடுங்கி விடுகின்றது.   இதேபோல இந்த இரண்டு சமஷ்டி பிரபஞ்சங்களும் காரண பிரபஞ்சத்தில் ஒடுங்கி விடுகின்றது.  இந்த அவஸ்தையில் இருமைகளை இழக்காமல் ஒன்றாகிவிட்டிருக்கும்.  இவைகள் அந்தந்த அவஸ்தையை அனுபவிக்கும்போது வெளிப்பட்டுவிடும்.  இந்த காரண சரீரத்தில் அபிமானம் வைக்கும் ஆத்மாவை ஒன்றாக இருப்பவன் என்று அழைக்கப்படுகின்றது.

ஜாக்ரத் அவஸ்தையில் ஸ்தூல பொருட்கள், விருத்திகளாக இருக்கின்றன. கனவு  அவஸ்தைல் எவ்வளவு பொருட்கள் தோன்றுகின்றனவோ அவ்வளவு எண்ணங்கள் இருக்கின்றன.  இந்த இரண்டு ஞானங்களும் உறக்கத்தில் குவிந்து இருக்கின்றன.  நிர்விசேஷ ஞானங்களாகிவிட்டன.   உதாரணமாக அறையில் உள்ள பொருட்கள் இருளில் ஒன்றாகி விடுகின்றது.  வெளிச்சம் வந்ததும் அவைகள் தத்தம் நிலைக்கு வந்து விடுகின்றன.  அதுபோல காரண சரீரத்தில் இருக்கின்ற இருள் போன்ற அக்ஞானம் இருப்பதால் எல்லா பிரபஞ்சங்களும் மறைக்கப்பட்டு விட்டன.

ஆனந்தமய: இந்த நிலையில் ஆனந்தம் அதிகமாக இருக்கின்றது. காரண அவஸ்தையில் மனம் ஒடுங்கியிருப்பதால் ஆனந்தம் அதிகமாக இருக்கின்றது.  மற்ற இருநிலைகளிலும் மனம் இரு பிரபஞ்சங்களில் உள்ள விஷயங்களில் சென்று விடுகின்றது.

ஹி ஆனந்தபுக் – பிராக்ஞன் ஆனந்தத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றான்.
சேதோமுகஹ – ஜாக்ரத், ஸ்வப்ன அவஸ்தகளின் வாசல்.
விழிப்பு நிலையிலிருந்து ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுதான் கனவு நிலைக்கு செல்வான்.  அதேபோல கனவு நிலையிலிருந்து ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுதான் விழிப்பு நிலைக்கு வருவான்.  இதிலிருந்து ஆழ்ந்த உறக்கம் இரு அவஸ்தகளுக்கும் வாசலாக இருக்கின்றது என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது.

ப்ராக்ஞன்: – இந்த ப்ராக்ஞன் அறியாமையில் இருக்கின்றான். காரண நிலையில் சமஷ்டி-வியஷ்டி பேதத்தை சொல்ல முடியாது.  இரண்டும் ஒன்றாக இருக்கின்றது.  எனவே ஈஸ்வரனாகவே கருதப்படுகின்றான்.   உதாரணமாக இருள் சூழ்ந்த வனத்தில் சமஷ்டி-வியஷ்டி என்ற வேறுபாடே கிடையாது.  எல்லா தனி மரங்களும் இருளால் மறைக்கப்பட்டுள்ளதால்,  வியஷ்டியும் சமஷ்டியும் ஒன்றாகின்றது.  பிராக்ஞன் பிரம்மத்தில் ஒடுங்கியிருப்பதாக சொல்லப்படுகின்றது.  எனவே இந்த நிலையில்தான் அவனை எல்லாம் அறிந்தவன் என்று கூறப்படுகின்றது.

த்ருதீய பாதம் – இதுதான் ஆத்மாவின் மூன்றாம் பாதம்.  எதனால் ஒரு இடத்தை அடைவதற்கு உதவுகின்றதோ அதற்கு பாதம் என்று பெயர்.

ஸ்லோகம் – 6
இதில் ஈஸ்வரனின் லக்‌ஷணம் கூறப்படுகிறது. காரண பிரபஞ்சத்தில் வேறுபாடு தெரியாத நிலையானது  விதைக்குள் இருக்கும் மரத்தின் முழு உருவம் தெரியாத நிலைக்கு ஒப்பிட்டுப் பார்த்து புரிந்து கொள்ள உதவுகின்றது.

ஏஷ ஸர்வேஷ்வரஹ – இந்த பிராக்ஞன்தான் அனைத்து உலகங்களுக்கும் தலைவனாக இருக்கின்றான்.
ஏஷ ஸர்வக்ஞஹ – அனைத்தையும் அறிபவர்.
ஏஷ அந்தர்யாமி – உள்ளேயிருந்து கொண்டு அனைத்தையும் கட்டுபடுத்துபவர்,  அனைத்தையும் வியாபித்திருப்பவர், அனைத்துக்கும் இருத்தல் என்ற நிலையை கொடுப்பவர்.
ஏஷ ஸர்வஸ்ய யோனிஹி – அனைத்திற்கும் உபாதான காரணமாக இருப்பவர்.
ப்ரபவ அப்யயஹ ஹி பூதானாம் – எல்லா ஜீவராசிகளுடைய பிறப்பு-இறப்பிற்கும் காரணமாக இருப்பவர்.

எது உற்பத்திக்கும், இருப்புக்கும் (ஸ்திதி), அழிவுக்கும் காரணமாக இருக்கின்றதோ, அதுவே உபாதான காரணமாக இருக்கின்றது.  நிமித்த காரணம் வெறும் உற்பத்திக்கு மட்டும் காரணமாக இருக்கின்றது.

மாண்டூக்ய உபநிஷத் – பகுதி-2

ஸ்வாமி குருபரானந்தா உபதேச விளக்கம்

கௌடபாதரின் விளக்கம்:

மேலே கூறப்பட்ட ஆறு ஸ்லோகங்களை கௌடபாதர் விளக்கி கூறியிருக்கின்றார்.  மூன்று ஸ்லோகங்களின் விளக்கம் ஐந்து ஸ்லோகங்களில் விளக்கியிருக்கின்றார்.

ஆத்மாவின் அபிமானம் ஸ்தூல சரீரத்தில் இருக்கும்போது அதற்கு விஸ்வன் என்றும் வெளி விஷயத்தை பார்த்துக் கொண்டிருப்பவனாக இருப்பவர்(பஹூ பிராக்ஞன் ) என்றும் அழைக்கப்படுகின்றார்.  எங்கும் வியாபித்திருப்பவர் விராட் (விபுஹூ).   சூட்சும சரீரத்தில் அபிமானம் வைத்திருக்கும் போது ஆத்மாவை தைஜஸன் என்று அழைக்கப்படுகிறார்.  இவர்  மனதிற்குள் உள்ள சூட்சுமமான விஷயத்தை பார்த்துக் கொண்டிருப்பவர். ஜாக்ரத்-ஸ்வப்னம் இவற்றில் வருகின்ற ஞானங்கள் அனைத்தும் ஒன்றாக குவிந்து இருப்பதை கன-பிரக்ஞன் என்றும் கூறுகிறார்.

இவ்வாறு பிராக்ஞன் எல்லாவிதமான பொருட்களுக்கு நிர்விசேஷமாக இருந்து கொண்டு இருப்பவன்.   இந்த மூன்றும் ஒன்றுதான் ஆனால் மூன்றாக கருதப்படுகின்றது,  பிரித்து பேசப்பட்டிருக்கின்றது.  விவேகிகள் இவ்வாறு உபதேசம் செய்வதற்காக பிரித்து இருக்கின்றார்கள்.
காரிகை1

ஏக ஏவ த்ரிதா ஸ்ம்ருதஹ (விசாரம்)

கேள்வி:  மூன்று அனுபவங்களை அனுபவிக்கின்ற என்னை எப்படி ஒருவன் என்று கூற முடியும்?

பதில்      ஒரே மீன் இரண்டு குளத்தில் தாவி, தாவி இருப்பதைப் போல. அருகருகே இருக்கும் இரண்டு குளத்தில் ஒரு சமயத்தில் ஒரு குளத்திலிருக்கும், பிறகு அருகே உள்ள வேறொரு குளத்திற்கு தாவி அதிலேயும் இருப்பதை போல, ஒருவனேதான் இந்த மூன்று அனுபவங்களையும் அனுபவிக்கின்றான் என்பதை புரிந்து கொள்ளலாம்.  இந்த அனுபவங்கள் வரிசையாக இருப்பதனாலும் இது சாத்தியமாகின்றது.  ஒரு ஜீவன் மூன்று அவஸ்தைகளை சேர்ந்து அனுபவிப்பதில்லை.  அதனாலும் ஒருவனேதான் இந்த மூன்று நிலைகளையும் கிரமமாக அனுபவிக்கின்றான்.  பறவைகள் ஆகாசத்திலே கொஞ்சநேரம் பறந்து விட்டு களைத்த பிறகு தன் கூட்டிற்கு வந்து ஓய்வு எடுக்கின்றது.  அதைப்போல ஜீவன் ஜாக்ரத் அவஸ்தையில் விஷயங்களை அனுபவித்து விட்டு, ஆழ்நிலை உறக்கத்திற்கு சென்று ஓய்வெடுக்கின்றான்.  எனவே ஒருவனேதான் மூன்று நிலைகளிலும் விஷயங்களை மாறி மாறி அனுபவிக்கின்றான் என்று நிரூபிக்கப்படுகின்றது  இதிலிருந்து ஜீவன் ஒருவனாக மட்டும் இருக்கின்றான்,  அதேசமயம் மூன்று நிலைகளிலும் வேறுபட்டவனாகவும் இருக்கின்றான்.   அவஸ்தைகள் வந்து செல்வதால் அதிலிருந்து வேறுபட்டவன் என்று சங்கரர் கூறுகின்றார்.

இதைத் தவிர வேறு இரண்டு கருத்துக்களையும் சங்கரர் கூறுகின்றார். அவைகள்
1.  சுத்தமானவனாக இருக்கின்றான்,
2.  அஸங்கமாக இருக்கின்றான்.
என்பதாகும்.

சுத்தமானவன்

அவஸ்தையில் அனுபவிக்கின்ற விஷயங்களால் பாதிக்கப்படாமல் இருக்கின்றான்.  உதாரணமாக கனவில் ஏதாவது ஒரு பாவத்தை செய்தால் அவன் விழிப்பு நிலைக்கு வரும் போது அந்த பாவ பலனை அனுபவிக்க மாட்டான்.  அதேப்போல விழிப்பு நிலை அனுபவத்தால் கனவு நிலையில் பாதிக்கமாட்டான்.  விழிப்பு நிலையில் உள்ள பணக்காரனின் செல்வங்கள் கனவுலகில் பயன்படாது.  இதிலிருந்து அறிந்து கொள்ள வேண்டியது அந்தந்த அவஸ்தையில் அனுபவிக்கும் தர்ம-அதர்மங்கள் அந்தந்த அவஸ்தையை சேர்ந்தது. எனவே அசுத்தங்கள் அவஸ்தையை சார்ந்தது, அனுபவிப்பனாக உள்ள ஜீவனை சார்ந்ததல்ல. ஆகவே அவன் சுத்தமானவன்.

அஸங்கத்வம்
மூன்று அவஸ்தைகளிலும் இருக்கின்ற ஆத்மாவுக்கு எந்தவிதமான ஒட்டுதலும் இல்லை.   கயிற்றில் தெரியும் பாம்பிலிருந்து கயிறானது எந்த சங்கமும் இல்லாதது.   ஏனென்றால் பாம்பானது அதன் மீது ஏற்றி வைக்கப்பட்டிருக்கின்றது.  அதே போல மூன்று அவஸ்தைகளும் ஆத்மாவில் ஏற்றி வைக்கப்பட்டிருப்பதால் இது அஸங்கம் என்று புரிந்து கொள்ளலாம்.  ஆத்மா பார்ப்பவனாக மட்டும் இருப்பதால் பார்க்கப்படும் பொருட்களிலிருந்து வேறுபட்டிருக்கின்றது.

காரிகை2
இதில் இரண்டு விதமாக விளக்கப்படுகின்றது.

  1. மூன்று அவஸ்தைகளிலும் இருப்பவன் ஒருவன்தான் என்று நிலை நாட்டப்படுகின்றது.  இங்கு ஜாக்ரத் அவஸ்தையிலே விஸ்வனையும், தைஜஸனையும்,  பிராக்ஞனையும் பார்க்கலாம் என்று கூறப்படுகின்றது.  இந்திரியங்கள் வழியாக வெளி விஷயத்தை அனுபவிக்கும்போது அது விஸ்வன் என்று அறிந்திருக்கின்றோம். மூன்று விதமாக தெரிகின்ற ஜீவனுக்கு இருப்பிடம் ஸ்தூல சரீரத்தில் இருக்கின்றது.  விழிப்பு நிலையில் உள்ள வலது கண் விஸ்வனுடைய இருப்பிடம், நம் மனதிலுள்ள சித்தம்,  வாஸனாமயமான மனம்தான் தைஜஸனின் இருப்பிடம்,, மனதினுடைய இருப்பிடம் ஹ்ருதயத்திலுள்ள ஆகாசம்தான்.  அதுவே பிராக்ஞனின் இருப்பிடம்.  வலது கண் வழியாக உலகத்தை அனுபவிக்கும்போது விஸ்வனாக இருக்கின்றான். பார்த்தப்பொருளை பற்றி மனதில் நினைத்துப்பார்க்கும்போது தைஜஸனாக இருக்கின்றான்.  தியானகாலத்தில் மனம் அமைதியாக வைத்திருக்கும்போது பிராக்ஞனாக இருக்கின்றான்  இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது மூன்று அவஸ்தைகளிலும் ஒருவன்தான் என்பதாகும்.
  2. வியஷ்டி-சமஷ்டி ஐக்கியத்தை புரிந்து கொள்ளாதபோது இதைக்குறித்து உபாஸனை செய்ய வேண்டும்.  அவ்வாறு விஸ்வனையும், விராட்டையும் ஒன்று என்று புரிந்து கொள்ள முடியாவிட்டால் வலது கண்ணில் விராட்டை தியானிக்க வேண்டும். தைஜஸன் ஹிரண்யகர்ப்பன் ஐக்கியத்தை மனதில் ஆலம்பனமாக கொண்டு தியானிக்க வேண்டும்.  அதே போன்று பிராக்ஞன்– அந்தர்யாமி ஐக்கியத்தை ஹ்ருதயத்தை ஆலம்பனமாக கொண்டு தியானிக்க வேண்டும்.

 

தர்ஷண சக்‌ஷூ முகம் விஸ்வஹ – திறந்த நிலையிலுள்ள வலது கண் விஸ்வனுடைய இருப்பிடம்.  இங்கு கண்ணை மட்டும் சொல்லப்படுவதற்கு காரணம் அதிகமான ஞானம் கண் மூலமாகத்தான் அடைகின்றோம்.  பொதுவாக ஞானேந்திரியங்களின் வழியாக அறிவை அடைகின்றோம்.  வலதுகண் அதிக சக்தியை உடையது.
மனஸி அந்தஸ்து தைஜஸ: – ஆழ்ந்த மனதுக்குள்ளே இருக்கின்ற வாஸனாமய சித்தம்தான் தைஜஸனுடைய இருப்பிடம்.
ஆகாஷே ச ஹ்ருதி பிராக்ஞஹ: – நமது ஸ்தூல ஹ்ருதயத்திற்குள்ளே இருக்கின்ற ஆகாசம்தான் பிராக்ஞனுடைய இருப்பிடம்.
த்ரிதா தேஷே வ்யவஸ்திதஹ இவ்வாறு நம் தேகத்தில் மூன்று இடத்தில் மூன்று பேரும் அமர்ந்திருக்கின்றனர்.

இந்த விளக்கத்திலிருந்து ஒருவன்தான் அந்தந்த அவஸ்தைகளை அனுபவிக்கும்போது அதற்குரிய பெயரில் அழைக்கப்படுகின்றான் என்பதை அறிய முடிகிறது.
காரிகை3

விஸ்வனும், தைஜஸனும், கர்த்தாகவும், போக்தாவாகவும் இருக்கின்றார்கள். பிராக்ஞன் போக்தாவாக மட்டும் இருக்கின்றான்.
விஸ்வஹி ஸ்தூல புக் நித்யம் – விஸ்வன் எப்பொழுதும் ஸ்தூல பிரபஞ்சத்தையே அனுபவிப்பான்.
தைஜஸ பிரவிவிக்த புக் – தைஜஸன் சூட்சும பிரபஞ்சத்தையே அனுபவிக்கின்றான்.
பிராக்ஞன் ஆனந்தத்தை மட்டும் அனுபவிக்கின்றான்.  அனுபவிக்கப்படும் நிலை மூன்று விதமாக இருக்கின்றதை அறிந்து கொள்ள வேண்டும்.
காரிகை4
மூன்று விதமான சுகமானது பேசப்படுகின்றது.  விஸ்வனுக்கு ஸ்தூல பிரபஞ்சமானது சுக-துக்கத்தை கொடுக்கின்றது.  சூட்சும பிரபஞ்சமானது தைஜஸனுக்கு சுக, துக்கத்தைக் கொடுக்கின்றது.  ஆனந்தமானது பிராக்ஞனுக்கு திருப்தியை கொடுக்கின்றது. இவ்விதத்தில் சுகமானது மூன்று விதத்தில் அறிந்து கொள்ளுங்கள்
காரிகை5
1.   போக்தாவானவன் மூன்றாக இருந்தாலும் அனுபவிக்கப்படும் பொருட்கள் ஒன்றுதான்.
2.   இந்த மூன்று அவஸ்தைகளை மட்டும் தெரிந்து கொள்வதால் அடையும் பலன்.

த்ரிஷு தா4மஸு யத்போ4ஜ்யம் ப்ரகீர்திதஹ – மூன்று அவஸ்தைகளில் எந்த விஷயங்கள் அனுபவிக்கப்படுவதாக இருக்கின்றதோ, அவைகள்  அனைத்தும் ஒன்றுதான் என்று உபநிஷத்தினால சொல்லப்படுகின்றது.  ஸ்தூல, சூட்சும விஷயங்களிலிருந்தும் ஆனந்தம்  அனுபவிக்கப்படுவதாக இருக்கின்றது)
யஹ போக்தா –  யாரொருவன் மூன்று நிலைகளிலும் போக்தாவாக இருக்கின்றான்

வேத ஏதத் உபயம் யஸ்து – இவ்வாறு இந்த இரண்டையும் அறிகின்றானோ, அதாவது அனுபவிக்கப்படும் பொருள் வேறு, அனுபவிப்பவன் வேறு என்று யார் அறிகின்றானோ
ஸஹ புஞ்ஜானஹ ந லிப்யதே – அவன் மூன்று அவஸ்தைகளினால் எந்தப்பாதிப்பும் அடைய மாட்டான். அவனுக்கு ஓரளவு மன அமைதியுடன் இருப்பான்.  இது வேதாந்த சாதனத்தை தொடர்ந்து பயன்படுத்துவதற்கு உதவி செய்யும்.

காரிகை6

ஈஸ்வரன் இதில் நன்கு விளக்கப்படுகின்றது.  யோனி என்பது உபாதான காரணத்தையும்,  சர்வக்ஞன்,  சர்வேஸ்வரன் என்பது நிமித்த காரணத்தையும், காரியமாக ஜகத்தையும் விளக்குகின்றது.

  • காரணத்திலிருந்து காரியம் தோன்றுகிறது
  • காரியத்திற்கு முன் காரணம் இருந்தது.
  • காரியம் தோன்றுவதற்கு முன் அது காரணத்தில் இருந்ததா, இல்லையா என்ற விசாரம் செய்யப்படுகின்றது. யோக சாஸ்திரமும், ஸாங்கிய சாஸ்திரமும் காரியமானது காரணத்தில் இருந்தது என்ற ஸத்காரிய வாதம், பரிணாம வாதம் மூலம் உறுதிபடுத்துகின்றார்கள்.  நையாய, வைசேஸிக வாதிகள் காரியமானது காரணத்தில் இல்லை என்று அஸத் காரியவாதம், ஆரம்பவாதம் மூலம் உறுதியாக கூறுகிறார்கள்

காரியமானது காரணத்திலிருந்து கொண்டு பிறகு வெளித்தோற்றத்திற்கு வருகின்றது.   காரணத்தில் காரியமானது வெளித்தோற்றத்திற்கு வராத நிலையில் இருக்கின்றது.

ப்ரபவ ஸர்வபாவானாம் ஸதாம் இதி வினிஸ்சய:

அனைத்து விஷயங்களின், விஷயிகளின் தோற்றம் முதலில் இருந்து கொண்டுதான் பிறகு தோன்றியிருக்கின்றது.  இது சாஸ்திரத்தினால் தெளிவாக நிச்சயிக்கப்பட்டிருக்கின்றது.  போக்தாவும் தோன்றியுள்ளது, போஜ்யமும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.  ஈஸ்வரனுடைய மாயா தத்துவத்திலிருந்து தோன்றியுள்ளது. பிரம்ம தத்துவத்திலிருந்து அறிவு தத்துவமாக இருக்கின்ற ஜீவன்கள் தோன்றியிருக்கின்றது.

ஸர்வம் ஜனயதி ப்ராணஹ – அனைத்து ஜடபிரபஞ்சங்களை தோற்றுவிக்கின்றார்,  மாயையை பிரதானமாக கொண்டவர் ஈஸ்வரன்.  அவர் தன்னிடத்திலுள்ள ஜட அம்சத்தையே உலகமாக படைத்திருக்கின்றார்.  இந்த கருத்து ஈஸாவாஸ்ய இதம் ஸர்வம் என்ற உபநிஷத் வாக்கியம் குறிக்கின்றது.
சேதோம் ஸூன்புருஷ ப்ருதக் – சைதன்ய பிரதானமான ஈஸ்வரனை புருஷன் என்று குறிப்பிடுகின்றார்.  சிதாபாசனுடன் கூடிய ஜீவர்களை தோற்றுவிக்கின்றார்.  ஈஸ்வரன் சைதன்ய அம்சத்தைக் கொண்டு ஜீவர்களை தோற்றுவித்தார்.  இவ்வாறு ஜட தத்துவம், அறிவு தத்துவம் என்ற தனித்தனியாக படைத்திருக்கின்றார்.

காரிகை7
அன்யே மன்யந்தே – சிலர் நினைக்கின்றார்கள்.
ஸ்ருஷ்டி சிந்தகாஹா – ஸ்ருஷ்டியை பற்றி சிந்தித்து முடிவுக்கு வர விரும்புபவர்கள்,
விபூதிம் ப்ரஸவம் – ஸ்ருஷ்டியை ஈஸ்வரனுடைய ஐஸ்வர்யமாக நினைக்கின்றார்கள்.   ஈஸ்வரன் தன்னுடைய பெருமையை, சக்தியை வெளிப்படுத்துவதற்காக ஸ்ருஷ்டியை தோற்றுவித்தார்.  இந்தக் கருத்தையுடையவர்கள் அவர் வெறும் நிமித்தக்காரணம் என்று நம்புகின்றவர்கள்
அன்யே ஸ்ருஷ்டி விகல்பிதா – சிலரால் இந்த ஸ்ருஷ்டியை இவ்வாறு மனதினால் சிந்திக்கின்றார்கள்.
ஸ்வப்ன மாயா ஸ ரூபே இதி – கனவில் வரும் மாயை தோற்றங்கள் போல இந்திரஜால வித்தையில் தோன்றுபவைகள் என்று கூறுகின்றார்கள். இந்த உலகம் இருக்கின்றது விவகாரத்திற்காக மட்டும் இதனை வியவகார ஸ்ருஷ்டி என்றும் கூறுவர்.  கனவுலகமானது   நான் பார்ப்பதினால் அது இருப்பதாக தோன்றுகின்றது.  இதையே பிராதிபாஸிக பிரபஞ்சம் என்று கூறுவர்,  த்ருஷ்டி ஸ்ருஷ்டி என்றும் அழைப்பர்.

காரிகை8
இச்சா மாத்திரம் ப்ரபோ ஸ்ருஷ்டி – பகவானுடைய விருப்பத்தினால்தான் இந்த ஸ்ருஷ்டி தோன்றியது
இதி ஸ்ருஷ்டௌ வினிஸ்சிதா – இந்த ஸ்ருஷ்டி விஷயத்தில் இவ்வாறு சிலர் நிச்சயமான கருத்தை உடையவர்களாக இருக்கின்றார்கள்.
கால் சிந்தகா – காலத்தை கணிப்பவர்கள், ஜோதிடத்தில் முக்கியம் கொடுப்பவர்கள், காலம் தான் இந்த ஸ்ருஷ்டியை தோற்றுவித்திருக்கின்றது என்று சொல்கிறார்கள்.
காலாதி ப்ரஸுதிம் பூதானாம் மன்யந்தே – காலத்திலிருந்துதான் எல்லா ஜீவராசிகளும் தோன்றியிருக்கின்றது என்று கருதுகின்றார்கள்.
காரிகை9
போகார்தம் ஸ்ருஷ்டிஹி அன்யே – சிலர் போகத்திற்காக ஸ்ருஷ்டி தோற்றுவிக்கப்பட்டது.
க்ரீடா சிந்தகா – சிலர் விளையாட்டிற்காக படைத்திருக்கின்றார் என்று சொல்கிறார்கள்.
ஆப்த காமஸ்ய – எல்லா ஆசைகளும் அடையப்பட்டுவிட்டது அல்லது ஒரு ஆசையும் இல்லாத நிலை.
கா ஸப்ருஹா – எதற்கு ஆசை வரும், எப்படி ஆசை வரும், போகமும் தேவைப்பட்டது
தேவஸ்ய – ஈஸ்வரனுக்கு
அயம் – இந்த ஸ்ருஷ்டியானது
ஸ்வபாவஹ மாயா நிர்மிதா – அநாதியான மாயாயிலிருந்து தோற்றுவிக்கப்பட்டது.

ஸ்லோகம் – 7
ஏற்கனவே தெரிந்ததை திரும்பவும் சொல்வதை அனுவாதம் என்று கூறப்படுகின்றது.   என்னைப்பற்றித்தான் சாஸ்திரம் எனக்கு தெரிந்ததைத்தான் இதுவரை சொல்லியிருக்கிறது.   இந்த மந்திரத்தில் என்னைப்பற்றி எனக்குத் தெரியாததையும் சொல்கின்றது.  இதில் ஆத்மாவின் நான்காவது பாதத்தை சொல்கிறது.  இதை பிரமான வாக்கியம் என்றும் கூறலாம்.  நமக்கு தெரியாததை உபதேசிக்கும் வாக்கியத்திற்கு பிரமான வாக்கியம் என்று பெயர்.  இந்த நான்காவது பகுதியை நேரிடையாக விளக்க முடியாத காரணத்தினால் வேறு விதமாக உபதேசிக்கின்றது.  நான்காவது பாதத்திற்கு துரியம் என்று பெயர். அதுவும் நான்தான் என்று அறிந்து கொள்ள வேண்டும்.
துரியம் என்றால் என்ன?

முதலில் துரியம் என்பது எவைகளெல்லாம் இல்லை என்று பார்க்கப்படுகின்றது.  எந்தவிதமான உபாதிகளுக்கும் சம்பந்தம் இல்லாதது துரியன்.  இங்கு உபாதி என்பது சரீரத்தைக் குறிக்கின்றது.   எந்த அவஸ்தகளையும் அனுபவிக்காதவன் துரியன்.  சமாதி அவஸ்தையில் இருப்பதும் துரியமல்ல.  சமாதி என்பது தியானத்தின் பலனாக வருவது தான்.  ஜாக்ரத் அவஸ்தையில்தான் சமாதியை அடைய முடியும்.  சமாதி நிலையில் எல்லா விஷயங்களும் மனதில் ஒடுங்கி அமைதியுடன் இருக்கின்றது.  ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் நிலையை முயற்சி செய்து ஜாக்ரத் அவஸ்தையில் அடைவதுதான் சமாதி.

தங்க வளையலும், தங்கமும் ஒன்று என்று சொல்லும்போது வளையல் அழிந்தாலும் தங்கம் இருக்கும்.  அதே சமயம் இரண்டும் வெவ்வேறு என்று சொல்லும்போது இரண்டையும் தனித்தனியாக பிரிக்க முடியாது.  இந்த இரண்டில் ஒன்று சத்யமாகவும், இன்னொன்று மித்யாவாகவும் இருக்கின்றது.  எனவே இந்த இரண்டில் ஒற்றுமையையும் சொல்ல முடியாது,  வேற்றுமையையும் சொல்ல முடியாது.  சத்யமான தங்கத்துடன் ஒரு நாம-ரூபத்தை ஏற்றி வைக்கும்போது ஒரு தோற்றம் உருவாகின்றது.  வளையலில் சத்யமும், மித்யாவும் கலந்து இருக்கின்றது.   இதில் உள்ள மித்யாவான நாம-ரூபத்தை மனதளவில் நீக்கினால் தங்கம் தெரிகின்றது.  எனவே தங்கம் வளையலுக்கு ஆதாரமாகவும் ஆனால் வளையலுக்கு அப்பாற்பட்டும் இருக்கின்றது.

துரியம் என்பதை சைதன்யம் என்று எடுத்துக்கொண்டால் விஸ்வன், தைஜஸன், பிராக்ஞன் என்பது துரியம் + நாமரூபங்கள்.   நாம-ரூபத்தை சார்ந்தில்லாமல் இருக்கும் சைதனயம்தான் துரியம்.  இது மூன்று உடல்களுக்கும் ஆதாரமாகவும், மூன்று அவஸ்தைகளுக்குள்ளும் இருக்கின்றது. ஆனால் அதற்கப்பாற்பட்டும் இருக்கின்றது.  ஜாக்ரத் பிரபஞ்சம் இல்லாத விஸ்வன் துரியம், கனவு பிரபஞ்சம் இல்லாத தைஜஸன் துரியம்தான்,  காரண பிரபஞ்சம் இல்லாத பிராக்ஞன் துரியனும் ஒன்றுதான்.  இந்த பிரபஞ்சங்கள் அனைத்தும் மித்யா, வெறும் நாம-ரூபங்கள் மட்டும்தான் என்று அறியப்படுகின்றது.  துரியம் என்பது ஞான ஸ்வரூபம், சித் ஸ்வரூபம்.

துரியம் + ஸ்தூல சரீரம் =  விஸ்வன் –  ஸ்தூல சரீரம் என்கின்ற நாம-ரூபம்
துரியம் + சூட்சும சரீரம் =  தைஜஸன் –  சூட்சும சரீரம் என்கின்ற நாம-ரூபம்
துரியம் + காரன சரீரம் =   பிராக்ஞன் –  காரண சரீரம் என்கின்ற நாம-ரூபம்

விஸ்வனிடத்தில் உள்ள உபாதியான ஸ்தூல சரீரத்தை நீக்கி விட்டால் துரியம் மட்டும்தான் இருக்கும்.  தைஜஸனிடத்தில் உள்ள நாம-ரூபத்தை நீக்கிவிட்டாலும் துரியம் மட்டும்தான் இருக்கும். அதேபோல பிராக்ஞனிடத்தில் உள்ள நாம-ரூபத்தை நீக்கிவிட்டாலும் துரியம் மட்டும்தான் இருக்கும்.
எப்படி இந்த உபாதிகள் நீக்கப்படுகின்றன?
எப்படி இந்த உபாதிகள் வந்தது என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.  நாம-ரூபங்கள் துரியத்தின் மீது ஏற்றி வைக்கப்பட்டிருக்கின்றது,  வெறும் தோற்றமாகத்தான் இருக்கின்றது என்ற அறிவே நாம-ரூபங்களை நீக்கி விடுகின்றது.  வெறும் துரியம் மட்டும்தான் இருக்கும்.  இதுதான் துரியத்தை அடையும் வழி. ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் விஷயங்கள் அதற்கு ஆதாரமாக இருப்பதை ஒன்றும் செய்ய முடியாது.  எனவே துரியம் எல்லா நிலைகளிலும் ஒன்றாக இருக்கின்றது. எந்த அவஸ்தைகளோடும், சரீரங்களோடும் ஒட்டாமல் இருக்கின்றது.

துரியம் என்ற ஆத்மாவிடம் நாம-ரூபங்கள் இல்லாமல் எப்படி புரிந்து கொள்வது?  புரிந்து கொள்ள மூன்று அவஸ்தகளுக்குப்பாற்பட்டு வேறொரு அவஸ்தை தேவையா?  வேறொரு அவஸ்தை தேவையில்லை. ஒரு அவஸ்தை மட்டும் போதும் அதைப் புரிந்துக் கொள்ளலாம்.

ஆழ்ந்த உறக்கத்திலும் கனவிலும் நம்மால் துரியனை புரிந்து கொள்ள முடியாது.  நாம் விஸ்வனாக இருந்து கொண்டுதான் துரியனை புரிந்து கொள்ள முடியும்.  விஸ்வனாக இருந்து கொண்டுதான் நாம் விஸ்வனும் அல்ல, தைஜஸனும் அல்ல பிராக்ஞனும் அல்ல என்று புரிந்து கொள்ள வேண்டும்.  இந்த அறிவை சாஸ்திரம், குரு மூலம்தான் அடைய முடியும்.  நீ விஸ்வன் அல்ல துரியம் மட்டும்தான் என்று நாம-ரூபங்களை நீக்கி உபதேசிக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு சாஸ்திரம் துணைக்கொண்டுதான் குருமுகமாக துரியத்தை புரிந்து கொள்ள முடியும்.
சாஸ்திரம் இருவிதத்தில் ஆத்ம ஞானத்தை உபதேசிக்கின்றது. அவைகள்

  1. விதிமுகம் – நேரிடையாக உபதேசித்தல் அதாவது தத் த்வம் அஸி – நீ பிரம்மனாக இருக்கின்றாய்,
  2. நிஷேதமுகம் – நேரிடையாக சொல்லாமல் ஆத்மாவை தவிர மற்ற அனைத்தையும் நீக்கி புரிய வைக்கின்றது.  நீ வெளி விஷயத்தை பார்ப்பவன் அல்ல என்று நீக்குகின்றது.  இல்லாததை இருப்பது போல் நினைத்துக் கொண்டிருப்பதைத்தான் நீக்குகின்றது.  இதன் உபகருத்து அவைகளுக்கு அதிஷ்டானமாக இருப்பதைக் காட்டுவதற்கு இந்த முறையை உபதேசிக்கிறது.

மந்திர விளக்கம்:-
ந பஹிஷ் ப்ரக்ஞம் – துரியம் என்பது வெளி விஷயங்களை அனுபவிப்பவனும் அல்ல,  பார்ப்பவனும் அல்ல.  அதாவது வெளிவிஷயங்களைப் பார்க்கும் அறிவாக இல்லை. விஸ்வன் அல்ல.  துரியம் விஸ்வனுக்குள்ளும் இருக்கின்றது.  ஆனால் மாறாமல் தொடர்ந்து இருக்கின்றது.  மூன்று அவஸ்தைகளுக்குள் இருக்கின்ற ஆத்மாவை துரியமாக விளக்க உபநிஷத் விரும்புகின்றது.  இந்த வார்த்தையின் தாத்பர்யம் என்ன என்று பார்க்க வேண்டும்.  விஸ்வன் – மூன்று சரீரங்களை உபாதியாகக் கொண்ட ஆத்மாவைத்தான் குறிக்கின்றது.   விஸ்வன் இல்லை என்ற வாக்கியம் மூன்று சரீரங்களான உபாதிகள் இல்லை என்று சொல்ல விரும்புகின்றது.  உபாதிகளை நீக்குவதற்கு காரணம், அவைகள் தோன்றி மறையும் தன்மையுடையதாக இருக்கின்றது.  மூன்று அவஸ்தைகளுக்குள் என்றும் மாறாமல் இருக்கும் சைதன்யத்தை நீக்க முடியாது.
ந அந்த பிரக்ஞம்     துரியம் என்பது உள்முகமாக இருக்கின்ற மனதிற்குள் விஷயங்களை அனுபவிப்பனும் அல்ல.

ந உபயத பிரக்ஞம்    துரியம் என்பது விழிப்பு நிலையில் அனுபவிக்கும் கனவு விஷயங்களும் அல்ல.

ந ப்ரக்ஞான கனம்    துரியம் என்பது ப்ராக்ஞனும் அல்ல.

ந ப்ரக்ஞம் ந ஸர்வத ப்ரக்ஞம் – மூன்று அவஸ்தைகளையும், ஒரே நேரத்தில் அனுபவிப்பவனும் அல்ல.  சமஷ்டி ப்ரக்ஞம் விராட், ஹிரண்யகர்ப்பன் இவர்களும் துரியம் அல்ல.

ந அப்ரக்ஞம்        துரியம் வெறும் ஜடமல்ல, அறிவற்றதல்ல, அது அறிவுஸ்வரூபம் துரியம் என்பது அறிபவனும் அல்ல, அறியப்படும் பொருளும் அல்ல, ஜடமும் அல்ல.  அது அறிவு ஸ்வரூபம்.

அதிருஷ்டம்        அனுபவிக்கப்படுவது அல்ல, பார்க்கப்படுவதல்ல. இந்த சொல் ஐந்து ஞானேந்திரியங்களுக்கு அப்பாற்பட்டதாகவும், கிரகிக்க முடியாததாகவும் இருக்கின்றது.  அதாவது குணங்களற்றது.

அவ்யவஹார்யம்  விவகாரத்திற்கு அப்பாற்பட்டது ( ஹானம், உபாதான ரஹிதம் ).  விவகாரம், செயல்கள் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.  ஹானம் என்றால் தவிர்த்தல், நீக்குதல், விலக்குதல்.  உபாதானம் என்றால் ஏற்றுக்கொள்ளுதல், சேர்த்தல்.  நாம் செய்யும் செயல்கள் இந்த இரண்டு வகையாகத்தான் இருக்கும்.

அக்ராஹ்யம்       கர்மேந்திரியங்களினால் கிரகிக்கப்படாதது.

அலக்ஷணம்      அனுமானத்தினால் அறிய முடியாதது

அசிந்தியம்         எண்ணங்களுக்கும் அப்பாற்பட்டது. எண்ணங்களினால் அறிய முடியாதது. மனதிலிருக்கும் உணர்வுகள் அல்ல.

அவ்யபதேஷ்யம்   வாக்கினால் விளக்க முடியாதது.  சப்த பிரமானத்தினாலும் விளக்க முடியாது.

ஏகாத்ம பிரத்யயஸாரம் – ஆத்மா ஒன்றுதான் என்ற எண்ணம்.

ப்ரத்யயஹ         மனதில் தோன்றும் எண்ணங்கள்.

எண்ணங்களே நான்,  இது என்று இருவகையாக இருக்கின்றது.  அவைகள்

  1. அஹம் ப்ரத்யயம் – என்னைப்பற்றி நினைக்கும் போது நான் என்ற எண்ணங்கள் .
  2. இதம் ப்ரத்யயம்   – வெளி விஷயங்களைப் பற்றிய எண்ணங்கள்.

எவ்வளவு அஹம் ப்ரத்யயம் வந்தாலும் நான் என்ற ஒன்றுதான் இருக்கும்.

ஸாரம் :

  1. அதிஷ்டானம், ஆதாரம், மூலம்– நான் என்ற எண்ணத்திற்கு ஆதாரமாக இருப்பது துரியம்.  2. பிரமானம் – ஏகாத்ம ப்ரத்யயமே துரியத்தை அறிவதற்கு பிரமானமாக இருக்கின்றது.

ப்ரபஞ்சோபஷமம்:

ப்ரபஞ்சம் – இந்த உலகம்.

உபஸ்ஸமம் – இல்லாமை, நிவிர்த்தி (அபாவம்).

துரியம் என்பது உலகம் இல்லாத இடத்தில் இருப்பது,  இது உலகம் மித்யா என்று புரிய வைக்கின்றது.  துரியத்தில் உலகம் என்பதே இல்லை. எப்படி கயிறானது பாம்பாக இல்லாமல் இருக்கின்றதோ அதுபோல இந்த துரியத்தில் இந்த பிரபஞ்சமில்லை. இந்த சொல்லின் அர்த்தம் இந்த பிரபஞ்சத்தையே நீக்கி விடுகின்றது.
சாஸ்திரம் இரண்டு தவறுகளை இருப்பதாக கூறுகின்றது. அவைகள் ஸோபாதிக பிரமா,  நிருபாதீக ப்ரமா ஆகும்.
ஸோபாதிக ப்ரமா – ஸ்படிகத்தின் அருகே வைக்கப்பட்டுள்ள சிவப்பு மலரின் நிறம் ஸ்படிகத்தில் பிரதிபலிப்பதால் அது சிவப்பாக இருப்பது போல காட்சியளிக்கின்றது.   இயற்கையில் ஸ்படிகம் தூய்மையாக இருந்து கொண்டு சிவப்பாக காட்சியளிக்கின்றது.  இந்த பிரமைக்கு ஸோபாதிக ப்ரமா என்று பெயர். இங்கு மலருக்கு உபாதி என்றும், ஸ்படிகத்தை உபஹிதம் என்று அழைக்கப்படுகின்றது.  இந்த உதாரணத்தில் ஸ்படிகம், மலரும் உண்மை,  ஸ்படிகத்தில் தோன்று மலரின் நிறம் பொய்யானது. ஸ்படிகம் பிரம்மத்திற்கு உதாரணமாகவும்,  பிரபஞ்சம் மலருக்கு உதாரணமாக எடுத்துக்கொண்டால் இரண்டும் ஸத்யமாக இருக்கின்றது.  ஆனால் பிரபஞ்சத்தின் குணங்கள் பிரம்மத்தில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கின்ரது.  எனவே இந்த குணங்களை நீக்கி இரண்டையும் தனித்தனியாக ஸத்யமாக புரிந்து கொள்வதுதான் தாத்பர்யம்.
நிருபாதிக ப்ரமா – கடலின் நிறம் நீலமாக தெரிகின்றது.  ஆனால் உண்மையில் அது நிறமற்றது.   உண்மையில் ஆகாசத்தின் நிறத்தை இது பிரதிபலிப்பதால் இவ்வாறாக தெரிகின்றது.  நிறமற்ற ஆகாசத்தில் தெரியும் நீலவானமும் பொய் இந்த பிரபஞ்சம் என்கின்ற உபாதியே பொய் என்று இந்த உதாரணம் மூலம் புரிந்து கொள்ளலாம்.  பிரம்மத்தில் தெரிவதாக அறியப்படும் பிரபஞ்சத்தின் குணங்களும் பொய், பிரபஞ்சமும் பொய் என்று புரிந்து கொள்ளலாம்.   உண்மையாக இல்லை ஆனால் பொய்யாக இருந்து கொண்டு அதன் தன்மைகளை வேறொன்றிற்கு தருவதாக புரிந்து கொண்டால்,  ஏற்றி வைக்கப்பட்டு இருக்கும் அதன் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ளலாம்.

வேறொரு உதாரணம் கனவு பிரபஞ்சம்.  இதில் நான் என்பது உபஹிதம், கனவு பிரபஞ்சம் என்பது உபாதி.  கனவுலகை அனுபவிப்பதால் இந்த ஆத்மாவை தைஜசன் என்று அழைக்கப்படுகின்றது.  இங்கு கனவு பிரபஞ்சம் பொய்யானது ஆனால் இது பொய்யாக இருந்து கொண்டு அதன் தன்மைகளை ஆத்மாவில் ஏற்றி வைத்திருக்கின்றது.  இந்த தவறுக்கு நிருபாதிக ப்ரமா என்று பெயர்.  இந்த தவறை வைத்து ஜாக்ரத் பிரபஞ்சமும் பொய்யென்று புரிந்து கொள்ளலாம்.  இதிலிருந்து மூன்று பிரபஞ்சங்களும் இல்லாமல் இருப்பது ஆத்மாவாகும். பிரபஞ்சங்கள் அனைத்தும் மித்யாவாகும்.  இது இருப்பதாக தெரிந்து கொண்டு இருக்கின்றது.  இருப்பதைத்தான் இல்லை என்று சொல்ல முடியும் இதைத்தான் மித்யா என்று கூறப்படுகின்றது.
ஶாந்தம்    – அமைதி ஸ்வரூபம், துரியத்தின் ஸ்வரூப லக்ஷணம்

ஸிவம்     – ஆனந்தம், மங்கலம், துயரமற்ற நிலை

அத்வைதம் – இரண்டற்றது, இருமைகளற்றது.

ஸ்ருஷ்டி காலத்திலும் பிரளய காலத்திலும், த்வைதமாக தெரிந்து கொண்டிருந்தாலும் அது இருமைகளற்றதாக இருக்கின்றது.  அறியாமை என்ற இருளினால், மோகத்தினால் பார்க்கப்படும் எல்லாம் மறைக்கப்படுவதனால் வருவது உறக்கம்.  ஞானத்தினால் மறைக்கப்படாமல் பார்க்கப்படுவது ஆத்மா,  அதுவே துரியம்.

சதுர்தம் மன்யந்தே   நான்காவது பாதமாக சொல்லப்பட்ட ஆத்மா போல கருதப்படுகின்றது என்று சொல்வதனால் அது இல்லை என்று மறைமுகமாக கூறப்படுகின்றது.

ஸஹ ஆத்மா         இதுவரை சொன்னதுதான் ஆத்மா என்று அறிந்து கொள்ள வேண்டும்.

ஸஹ விக்ஞேயஹ   இதைத்தான் அறிந்து கொள்ளக்கூடியது.  ஆத்மாவை மேற்கூறியவாறு அறிந்து கொள்ள வேண்டும்.

விக்ஞேயஹ          இப்படிபட்ட ஆத்மா அடைவதுதான் பரம ப்ருஷார்த்தம்.  இதுதான் நம்மால் அடையப்பட வேண்டிய பரம லட்சியமாகும்.

காரிகை10
துரிய ஸ்வரூபமான ஆத்ம ஸ்வரூபத்தை இங்கே கூறுகின்றார்.  ஆத்மா துயரமில்லாதது. துரியத்திடம் துக்கமும் இலை,  துயரத்தினுடைய விதையும் இல்லை.
நிவ்ருதே ஸர்வ துக்கானாம் – துரியனிடத்தில் விஸ்வன், தைஜஸன், பிராக்ஞன் அனுபவிக்கும் அனைத்து துயரங்களும் நீங்குகிறது.

ஈஷானஹ பிரபு – துயரங்களை நீக்குவதில் தலைவனாக இருக்கின்றது என்று கூறுகிறார்.

துரியத்தை அறிந்து கொண்டால் அது சுகத்திற்கு காரணமாக இருக்கின்றது,  அறியவில்லை என்றால் அதுவே துயரத்திற்கு காரணமாக இருக்கின்றது.

அவ்யயஹ – அழிவற்றது – தன்னிடத்திருந்து வருவது, வெளியிலிருந்து வருவது என்ற இந்த இரண்டு நிலைகளிலும் அழிவை அடையாதது.  அவயவங்கள் இல்லாததால் உள்ளிருந்து அழிவு இல்லை.  பிரபஞ்சம் மித்யா என்பதால் வெளியிலிருந்தும் அழிவு ஏற்படாது.
அத்வைத ஸர்வபா4வானாம் – பலவிதமான உள்ள அனைத்துக்குள்ளும்  ( விஸ்வன்,  தைஜஸன்,  பிராக்ஞன்)  ஒன்றாக இருக்கின்றது.  பல ஆபரணங்களில் தங்கம் என்பது ஒன்றாக இருக்கின்றது போல இருக்கின்றது..

தேவ – அறிவு ஸ்வரூபம் – ஏகாத்ம ப்ரத்யயத்வாத்
துர்யஹ – துரியம், நான்காவது பாதமான இது மேற்கூறிய தன்மைகளை உடையதாக இருக்கின்றது.
விபு4 – விதவிதமாக எதிலிருந்து தோன்றியதோ அதை இவ்வாறு அழைக்கப்படுகின்றது.  விஸ்வன், தைஜசன், பிராக்ஞன் தோன்றியதை எடுத்துக் கொள்ள வேண்டும். (உ-ம்) விதவிதமான ஆபரணங்களுக்கு விபுவாக இருப்பது தங்கம்,  இது அனைத்திலும் வியாபித்து இருக்கின்றது.
ஸ்ம்ருத – இவ்விதம் துரியத்தின் லட்சணங்கள் சொல்லப்பட்டிருக்கின்றது.
காரிகை-11
துரிய தத்துவத்தை நிச்சயம் செய்ய விசாரம் செய்யப்படுகின்றது.  இந்த மந்திரத்தில் காரணம் என்பது அறியாமையையும், காரியம் என்பது அத்யாஸத்தையும் குறிப்பிடுகின்றது.  எந்த இடத்திலெல்லாம் காரியம் இருக்கின்றதோ அங்கேயெல்லாம் காரணம் இருந்தே தீர வேண்டும்.  எங்கேயெல்லாம் காரணம் இருக்கின்றதோ அங்கேயெல்லாம் காரியம் இருக்க வேண்டுமென்று அவசியமில்லை.  அதேபோல எங்கேயெல்லாம் அறியாமை இருக்கின்றதோ அங்கேயெல்லாம் அத்யாஸம் இருக்க வேண்டிய அவசியமில்லை. எங்கே எல்லாம் அத்யாஸம் இருக்கின்றதோ அங்கேயெல்லாம் அறியாமையும் இருக்கும்.
பிராக்ஞனிடம் அறியாமை மட்டும் இருக்கின்றது.  விஸ்வன்,  தைஜஸனிடத்தில் இரண்டும் இருக்கின்றது.  அந்த விஸ்வனும், தைஜஸனும் காரியத்தினாலும், காரணத்தினாலும் பந்தப்பட்டவர்களாக சந்தேகமின்றி ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.  காரியம்-அனாத்மா,  அத்யாஸம், காரணம் – துரியனை பற்றிய அறியாமை.  பிராக்ஞனிடம் அறியாமை மட்டும் தான் இருக்கின்றது.  எந்த அனாத்மாவையும் ஏற்றி வைக்கவில்லை.  துரியத்திடம் இந்த இரண்டும் இல்லை.
காரிகை12
பிராக்ஞனாக இருக்கும் போது பிரபஞ்சத்தையும் அறிவதில்லை.  தன்னையும் அறிவதில்லை.   மற்ற இரண்டு அவஸ்தைகளிலும் இரண்டையும் அறிகின்றான்.
பிராக்ஞன் ந ஆத்மானாம் ஸம்வேத்தி – தன்னை அறியவில்லை
பிராக்ஞன் ந ப்ராஞ்ஶ்ச – மற்ற பொருட்களையும் அறியவில்லை.
ந ஸத்யம் – சத்தியமான துரியத்தையும் அறியவில்லை
ந அபி அந்ருதம் – இந்த பொய்யான ஜகத்தையும் அறியவில்லை
ச கிஞ்சன ஸம்வேத்தி – எதையும் அறிவதில்லை.
இவைகள் அனைத்தும் அறியாமல் இருக்கும்படி பிராக்ஞன் அறியாமையினால் பிணைக்கப்பட்டிருக்கின்றான்
தத் துரியம் ஸர்வ த்3ருக் ஸதா – அந்த துரியம் எப்பொழுதும் எல்லாவற்றையும் அறிகின்றான்.
ஸர்வ த்3ருக் – அனைத்தையும் பார்ப்பவன், அக்ஞானத்தையும் பிரகாசப்படுத்துகின்றான்.
ஸதா ஸர்வம் ச் த்ருக் ச – அது அனைத்துமாக இருக்கின்றது, அதுவே அறிபவனாகவும் இருக்கின்றது.   இதுவே அனைத்துமாக இருப்பதால் அதைத்தவிர வேறெதுவும் இல்லாததால் அதை எதுவும் பந்தப்படுத்துவதில்லை
காரிகை13
உப4யோ – இருவருக்கும் உள்ள
துல்யம் – ஒற்றுமை
அத்வைத கிரகணம் – இருமையை அனுபவிக்காமலிருத்தல்
ப்ராக்ஞ துர்ய யஹ – அவைகள் பிராக்ஞன், துரியன்
இவைகளுக்குமிடையே உள்ள வேற்றுமை
பீஜநித்ராயுத பிராக்ஞ – பிராக்ஞன் ஆத்ம அக்ஞான உறக்கத்துடன் கூடியவன்
பீஜ நித்ரா – வித விதமான இருமைகளுக்கு காரணமாக இருக்கின்ற ஆழ்ந்த உறக்கம்
ஸா ச துரியே ந வித்யதே – பீஜ ரூபமான அக்ஞானம் துரியனிடத்தில் கிடையாது;
துரியம் என்பது ஆத்ம தத்துவம் அல்லது ஞானியை குறிக்கும்.

காரிகை14
காரியம் – ஜாக்ரத்; ஸ்வப்னம்

காரணம் – நித்3ரா
அத்யௌ – முதலிரண்டு
ஸ்வப்ன நித்ராயுதாவாத்யௌ – விஸ்வனும் தைஜஸனும் கனவு,  விழிப்புநிலை, ஆழ்ந்த உறக்க நிலை ஆகியவற்றுடன் பிணைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
பிராக்ஞ து அஸவப்னம் நித்ரா – பிராக்ஞனிட்த்தில் ஸ்வப்னமும்,  ஜாக்ரத்தும் கிடையாது,  உறக்கத்தில் மட்டும் இருக்கின்றான்.
ந நித்ராம் நைவ ச ஸ்வப்னம் துரியே – துரியம் ஸ்வப்னத்தையும், உறக்கத்தையும் உடையவனாக இல்லை.
நிஶ்சிதா ந பஷ்யந்தி –  ஆத்ம ஞானத்தை அடைந்தவர்கள் தன்னிடத்தில் அவைகளை நிச்சயமாக பார்ப்பதில்லை.                   –
காரிகை15
அன்யதா க்ருஹ்ணத ஸ்வப்னஹ – துரியத்தை தவறாக புரிந்து கொண்டவனுக்கு கனவு தோன்றுகின்றது.  கயிற்றை பார்த்தல் க்ரஹணம், கயிற்றில் பாம்பை பார்த்தல் அன்யதா க்ருஹணம், கயிற்றையே பார்க்காதிருத்தல் – அக்ரஹணம்.  துரியத்தை புரிந்து கொள்ளாமல், துரியமாக வேறொன்றை புரிந்து கொள்ளுதலே அன்யதா க்ரஹணம். இந்த நிலையில் கனவு தோன்றுகின்றது.

நித்ரா தத்வம் அஜானதஹ – துரியத்தை கிரகிக்காதவனுக்கு, பிராக்ஞனுக்கு உறக்கம் தோன்றுகின்றது. பிராக்ஞன் துரியத்தையும் புரிந்து கொள்ளவில்லை, அதன் மீது எதையும் அத்யாஸம் செய்யாத நிலைதான் உறக்கம்.
விபர்யாஸே தயோ க்ஷீணே – அந்த இருவரிடத்திலும் உள்ள தவறானது நீங்கும்போது
துரியம் பத3மஶ்னுதே – துரீயம் அடையப்படுகிறது.
இருவர் என்பது ஸவப்னம் (விஸ்வன், தைஜஸன்), பிராக்ஞன். விஸ்வ, தைஜஸனிடத்தில் அன்யதா க்ரஹணம், அக்ரஹணம் என்கின்ற இரண்டு தவறுகள் நடக்கின்றது. பிராக்ஞனிடத்தில் அக்ரஹணம் மட்டும் தான் இருக்கிறது.

காரிகை16
இதில் துரிய பிராப்தி விளக்கப்படுகின்றது.
மூன்று அவஸ்தைகளிலும் ஜீவன் உறங்கிக் கொண்டு இருக்கின்றான், அறியாமையுடன் இருக்கின்றான். எப்பொழுதும் ஜீவன் மாயையினால் உறங்கிக் கொண்டு இருக்கின்றான்,  அதாவது ஆத்ம தத்துவத்தை புரிந்து கொள்ளாமல் சம்சாரத்தில் இருக்கின்றான்.  அனாதி என்ற சொல் பிரம்மத்தை குறிக்கும்போது தோற்றமில்லாதது என்று பொருள்படும், மாயையை குறிக்கும்போது அது முதலில் தோன்றிய காலத்தை குறிக்கும்.
இந்த ஜீவன் எப்பொழுது விழித்துக் கொள்கின்றானோ, குரு-சாஸ்திரத்தின் துணைக் கொண்டு அக்ஞானம் நீங்கப்பெற்று ஞானத்தை அடைகின்றானோ அப்பொழுது அவன் பிறப்பற்றதும்,  அக்ஞானத்தை நீக்குவதும், பிரபஞ்சங்கள் மித்யா என்று அறியவைப்பதுமான என்றும் ஒன்றாக இருக்கும் அத்வைதத்தை அறிகின்றான்.
காரிகை17
பிரபஞ்சோ யதிவித்4யேத – ஒருவேளை பிரபஞ்சம் இருந்திருந்தால்
நிவர்தேத ந ஸம்ஶய: – அது சந்தேகமில்லாமல் போயிருக்கும்
மாயாமாத்ரமிதம் த்வைதம் – மாயா ஜாலத்தினால் மட்டும் தோற்றுவிக்கப்பட்டதாக இந்த பிரபஞ்சம் இருக்கின்றது.  மாயாஜாலம் என்பது இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டும் வித்தையாகும்.  இந்த பிரபஞ்சம் வெறும் தோற்றம் அது உண்மையில் இல்லை.  ஆனால் அத்வைதம் உண்மையில் இறுதியாக இருக்கின்றது.
காரியம் இரண்டு விதமாக இருக்கின்றது.
1.  காரண அதீத காரியம் – காரணத்தை சார்ந்திருப்பது – தயிர் காரியம், அது பாலை சார்ந்திருக்கின்றது.
2.  கல்பித காரியம் – கயிற்றில் தெரியும் பாம்பு காரியமாக இருக்கின்றது, இது நமது மனதினால் மட்டும் கற்பணை செய்யப்பட்ட பொய்யான காரியம்.
பிரம்ம-ஜகத் காரண-காரியம் இரண்டாவது வகையை சார்ந்தது.
காரிகை18
ஜீவன் பிரம்மத்தின் மீது ஜகத்தை ஏற்றி வைக்கும் தவறை செய்யலாம்,  ஆனால் வேதம் இந்த தவறை செய்யாது. இருந்த போதிலும் கர்ம காண்டத்தில் உள்ள மந்திரங்களில் விதவிதமான த்வைதங்கள் பேசப்பட்டிருக்கின்றது.  எனவே சாஸ்திரம் எவ்வாறு இந்த தவறை செய்ய முடியும்?  குரு-சிஷ்யன் என்று எப்படி இருமையை உபதேசிக்கின்றது?  என்று கேள்வி எழுகின்றது.

அதற்கு பதிலானது சாஸ்திரம் தெரிந்தே இந்த இருமைகளை உபதேசிக்கின்றது, உண்மையை புரிய வைப்பதற்காக முதலில் இருமையை ஏற்றுக்கொள்கிறது இதை அத்யாரோபம் என்று அழைப்பர்.  பிறகு அபவாதம் என்ற முறையில் ஏற்றி வைத்ததெல்லாம் நீக்கிவிடும்.   இருமையை தெரியாமல் பார்ப்பது அத்யாஸம், தெரிந்தே பார்ப்பது அத்யாரோபம்.   அத்யாரோபத்தை பிறகு அபவாதம் மூலம் நீக்கப்பட்டு உண்மையை எடுத்துக் காட்டும்.

யதிகேனசித் கல்பிதஹ விகல்பத வினிவர்தேத– ஒருவேளை யாராவது இந்த இருமைகளை கற்பணை செய்திருந்தால் அவைகள் சென்றிருக்கலாம்.
உபதேஶாதயம் வாதோ ஞாதே த்வைதம் வ வித்யதே – சாஸ்திரம் உண்மை அறிவை புரிய வைப்பதற்காகவும், உணர்த்துவதற்காகவும் முதலில் இருமைகளை பற்றி பேசுகின்றது.   உண்மையை உணர்ந்தபின் அவைகள் இல்லை என்பது அறியப்பட்டுவிடும்.
—-ooo000ooo—-

மாண்டூக்ய உபநிஷத் – பகுதி-3

ஸ்வாமி குருபரானந்தா உபதேச விளக்கம்

ஸ்லோகம் – 8
காரியம் என்பது நாம ரூபத்துடன் கூடிய அதிஷ்டானம்.  நாம என்பது பதம், ரூபம் என்பது பதார்த்தம், பத பிரபஞ்சமும், பதார்த்த பிரபஞ்சமும் ஒன்றுதான் என்று நிரூபிக்கப்பட்டது.  இதன் அடிப்படையில் நாமமும்-ரூபமும் ஒன்றுதான் நிலைநாட்டப்பட்டது. . நாமத்தை சொல்லும் போது அதன் ரூபத்தில் இதை ஒடுக்குகின்றோம்.  ஓங்கார விசாரம் பதத்தை பிரதானமாக கொண்ட அனைத்து பிரபஞ்சத்தை பற்றிய விசாரம்.  அனைத்து பதங்களும் ‘ஓம்’ என்ற சொல்லோடு ஐக்கியப்படுத்தப்படுகின்றது.  நம் கண்முன்னே இருக்கும் ஜகத்தை இதிலுள்ள பதார்த்தங்கள் அனைத்தும் பதங்களில் ஒடுக்கப்பட்டுள்ளது.  அனைத்து பதங்களுக்கும்  ‘ உபாதான காரணமாக இருக்கின்றது.  மற்ற சப்தங்கள் இதை ஆதாரமாக கொண்டிருக்கின்றது.  அவைகளை  ‘  என்ற எழுத்தால் குறிப்பிடப்படுகின்றது.  பின்பு அனைத்து சப்தங்களும் ‘ம் என்ற சப்தத்தில் லயமடைகின்றது.  இதன் அடிப்படையில் பார்த்தால் ஓம் என்பது ஜகத்தைக் குறிக்கின்றது.  ஓம் என்ற சொல் ஜகத்தைக் குறித்தால் அதற்கு அதிஷ்டானமான பிரம்மமும் இதனுடன் இருக்கின்றது.
ஸஹ அயம் ஆத்மா – நம்மால் விசாரம் செய்யப்பட்ட இந்த ஆத்மா, அனாத்மாதான் ஓம் என்ற சொல்லால் குறிக்கப்படுகின்றது.  ஓங்காரம் இரண்டு ஸ்வரூபமாக இருக்கின்றது.  அவைகள்

  1. ஓம் என்ற சொல் ஒரு எழுத்தாக எடுத்துக் கொள்கின்றோம்.
  2. அ, உ, ம் என்று மூன்றாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

மாத்திரை என்பது ஒரு எழுத்தை உச்சரிக்கும் கால அளவு, அமாத்திரம் என்பது சப்தமற்ற நிலை.  அத்யக்ஷரம், அதிமாத்ரம் இவைகள் ஓங்காரத்தை விளக்குகின்றது.  அத்யக்ஷரம் என்பது ஒரு எழுத்தாக இருக்கின்ற ஓங்காரம்.  இதுவே ஆத்மா,  அதிமாத்ரம் என்பது நான்கு மாத்திரைகளாக தனித்தனிப்பாகங்களாக இருக்கின்ற ஓங்காரம்.  இதுவும் ஆத்மா.  இதேபோல ஆத்மாவை மூன்றாகவும், நான்கு பாகங்களாகவும் நம்மால் பார்க்கப்பட்டது.  இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கும்போது ஒரு ஆத்மா அத்யக்ஷரம் என்ற ஓரெழுத்து ஓங்காரத்தை குறிக்கின்றது.  நான்கு பாதங்களுடைய ஆத்மா நான்கு மாத்திரைகளுடைய ஓங்காரத்துடன் ஒப்பிட்டு பார்க்கப்படுகின்றது.  ஆத்மாவின் நான்கு பாகங்கள் எந்த வரிசையில் இருக்கின்றதோ அதே வரிசையில் நான்கு மாத்திரைகள சேர்த்து பார்க்க வேண்டும். முதல் பாதம் – அகாரம், இரண்டாவது பாதம் – உகாரம், மூன்றாவது பாதம் – மகாரம்,  நான்காவது பாதம் – அமாத்திரம்.

பாதாஹா மாத்ராஹா –  ஆத்மாவின் நான்கு பாதங்களே நான்கு மாத்திரைகள்.
மாத்ரா ச பாதாஹ – ஓங்காரத்தின் நான்கு மாத்திரைகளும் நான்கு பாதங்கள்
இவ்வாறூ கூறுவதன் காரணம் அந்த வரிசைப்படி ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
அகாரஉகாரமகார இதி – அ, உ, ம் என்ற மாத்திரைகள்.
ஸ்லோகம்09

இதில் முதல் மாத்திரையும், ஆத்மாவின் முதல் பாதமும் ஒன்று என்று கூறப்படுகின்றது.  இதனாl இரண்டு பலன் கிடைக்கின்றது. avaikaL,

  1. ஓங்காரத்தினுடைய விசாரம்,
  2. நான்காவது மாத்திரையான அமாத்ராவை அறிவது.

ஓங்காரத்திலுள்ள ‘அ’ என்ற எழுத்து ஜாக்ரத் பிரபஞ்சத்தை ஒடுக்கியிருக்கிறது.  ‘உ’ என்ற எழுத்து கனவு பிரபஞ்சத்தை ஒடுக்கி இருக்கின்றது.  ‘ம்’ என்ற எழுத்து ஆழ்நிலை உறக்கdதிலுள்ள சப்த பீஜத்தை குறிக்கின்றது.  இதில் அகாரத்தை ஆலம்பனமாகக் கொண்டு வைஷ்வாநரனை தேவதையாக சொல்கின்றது.  இந்த இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை, இப்படி தியானிப்பதால் அடையும் பலன் கூறப்படுகிறது. இந்த பலன் இருவகையானது. அவைகள்,

  1. நிஷ்காம பலன்– சித்தஸுத்தி அடையலாம்.
  2. சகாம பலன்.

ஆகியவைகளாகும்.

ஜாகரித ஸ்தானஹ வைஷ்வாநரன் – விழிப்பு நிலையை இருப்பிடமாக கொண்ட விராட்  என்கின்ற வைஷ்வாநரன்
அகாரஹ பிரதமா மாத்ரா – இவர்தான் ஒங்காரத்தின் முதல் மாத்திரையான அகாரமாக இருக்கின்றார். இது வைஷ்வாநரனை தியானிப்பதற்கு ஆலம்பனம் என்று கூறுகின்றது.
ஆப்தே – ( வியாபித்து இருத்தல் ), வியாபித்து இருக்கின்ற காரணத்தால்
ஆதிமத்வா – ( முதலில் இருப்பது ), முதலில் இருக்கின்ற காரணத்தால்

இந்த இரண்டு காரணத்தினால் வைஷ்வாநரனும், அகாரமும் ஒன்று என்று புரிந்து கொள்ள வேண்டும். இவையிரண்டும் சமமாக கருதப்படுகின்றது.

  • எது உபாதான காரணமாக இருக்கின்றதோ அதுதான் எல்லா காரியங்களிலும் வியாபித்திருக்கும்.  அனைத்து சொற்களுக்கும் உபாதான காரணமாக இருப்பதால் அதற்கு வியாபித்திருக்கும் குணம் இருக்கின்றது.  எழுத்துக்களில் முதலில் இருப்பது அதேபோல வைஷ்வாநரன் என்கின்ற ஈஸ்வரன் ஸ்தூல பிரபஞ்ச முழுவதையும் வியாபித்திருக்கின்றார். எனவே இவருக்கும் வியாபித்திருக்கும் குணம் இருக்கிறது.
  • லய கிரமத்தில் எது கடைசியாக தோன்றியதோ அதுதான் முதலில் அபவாதம் செய்வோம்.  எனவே விராட்தான் இந்த வகையில் முதலில் இருப்பவர்.

சகாம பலன்
ஆப்னோதி ஹ வை ஸர்வான் காமான் – ஆசைப்படுகின்ற அனைத்து பொருட்களையும் அடைந்து விடுவான்.  எல்லா ஆசைகளும் நிறைவேறுகின்றன.
ஆதிஷ பவதி – எல்லா விஷயத்திலும் முதன்மையாக இருப்பான்.
யஹ ஏவம் வேத3 – எவனொருவன் இங்கு சொல்லியபடி இந்த உபாஸனையை செய்கின்றானோ அவன் மேலே கூறிய பலன்களை அடைகின்றான்.

ஸ்லோகம்10
ஸ்வப்ன ஸ்தானஹ தைஜஸஹ – கனவு நிலையை உடைய ஆத்மாவாகிய தைஜஸனாகவும்,  சூட்சும பிரபஞ்சத்திற்கு ஆதாரமாக உள்ள ஹிரண்யகர்ப்பனையும் இதில் குறிப்பிடப்படுகின்றது.
உகாரே த்வீதியா மாத்ர – ஓம் என்ற சொல்லிலுள்ள இரண்டாவது மாத்திரை உகாரம், இது ஹிரண்யகர்ப்பனோடு ஒப்பிடப்படுகின்றது. உகாரத்தை ஆலம்பனமாக கொண்டு ஹிரண்யகர்ப்பனை தியானம் செய்ய வேண்டும்.
உத்கர்ஷாத் – மேலானதாக இருக்கின்றதால், உயர்ந்ததாக இருப்பதனால். இதில் ஹிரண்யகர்ப்பன் விராட்டை விட உயர்ந்தவர், ஏனென்றால் விராட் அவரிடம்தான் ஒடுங்குகின்றார்.  அதேபோல உகாரமும் அனைத்து சப்தங்களுக்குள்ளும் உயர்ந்ததாக இருக்கின்றது.  ஏனென்றால் எல்லா சப்தங்களையும் குறிக்கின்றதாக இருக்கின்றது, இந்த காரணத்தால் இரண்டும் (ஹிரண்யகர்ப்பன், உகாரம்) சமமாக கருதப்படுகின்றது.
உப4யத்வாத் – இடையில் இருத்தல்,  ஹிரண்யகர்ப்பன் விராட்டிற்கும், அந்தர்யாமிக்கும் இடையில் இருக்கின்றார்.   உகாரம் அகாரத்திற்கும், மகாரத்திற்கும் இடையில் இருக்கின்றது.   இந்த காரணத்தாலும் இரண்டும் சமமாக கருதப்படுகின்றது.

உத்கர்ஷதி ஹ வை ஞான ஸந்ததிம் – அறிவுள்ள பரம்பரையை வளர்ப்பான்.
ஸமானஹ ச பவதி – நண்பர்களையும், பகைவனையும் சமமாக நோக்கும் மனதை அடைவான்.
ந அஸ்ய அப்ரஹ்மவித் குலே பவதி – இந்த உபாஸகனுடைய குருகுல பரம்பரையில் பிரம்ம ஞானத்தை அடையாதவர்கள் இருக்க மாட்டார்கள்.
யஹ ஏவம் வேத3 – யார் இந்த மாதிரி உபாஸிக்கின்றார்களோ அவர்கள் மேலே கூறப்பட்ட பலன்களை அடைவார்கள்.

ஸ்லோகம்11
ஸுஷுப்த ஸ்தானஹ ப்ராக்ஞஹ மகார த்ருதீயா மாத்ரா – ஆழ்நிலை உறக்கத்தில் உள்ள வியஷ்டியில் ஆத்மா பிராக்ஞன், சமஷ்டியில் அந்தர்யாமி,  இவரை ஓம் என்ற சொல்லில் உள்ள மூன்றாவது மாத்திரையான மகாரத்தோடு ஒப்பிட்டு பார்க்கப்படுகின்றது.

மிதேஹ (அளக்கும் பாத்திரம்) – நெல் முதலிய தானியங்களை அளக்க உதவும் அளவுப்பாத்திரம்.  மகாரம் அளக்கும் குணத்தை உடையது, பிராக்ஞனும் அளக்கும் குணம் உடையவன். அளக்கும் கருவியானது தானியங்களை உள்வாங்கி பிறகு வெளியே விட்டு விடுகின்றது.  அதுபோல பிராக்ஞனும் ஒரு வாயிலாக இருக்கின்றான். விழிப்பு நிலையில் இருந்து இந்த வாயிலாகத்தான் கனவு நிலைக்கு செல்வோம், பிறகு கனவு நிலையிலிருந்து இந்த வாயில்வழியேதான் விழிப்பு நிலைக்கு வருவோம்.  பிராக்ஞன் விஸ்வனையும்,  தைஜஸனையும் உள்வாங்கி வெளியே விடுகின்றான். அதேபோல அகாரமும், உகாரமும் ஓம் என்ற சொல்லி முடிக்கும்போது மகாரத்தில் ஒடுங்குகின்றன. மீண்டும் ஓம் என்று சொல்லும் போது அதிலிருந்துதான் வெளியே வருவது போல இருக்கின்றது.  இந்த குணம் இரண்டிலும் ஒன்றாக இருக்கின்றது.
அபிதேஹ – லயம் ஸ்தானமாக இருக்கின்ற காரணத்தினால், அந்தர்யாமியானவன் விராட்டும்,  ஹிரண்யகர்ப்பனும் லயம் அடைவதற்கு இருப்பிடமாக இருக்கின்றார். அதேபோல பிராக்ஞனிடம்   விஸ்வனும், தைஜஸனும் லயம் அடைவதற்கு இருப்பிடமாக இருக்கின்றார்.   அகாரமும், உகாரமும் மகாரத்தில் ஒடுங்குவதற்கு இருப்பிடமாக இருக்கின்றது.

இந்த இரண்டு காரணத்தினால் மகாரத்தை ஆலம்பனமாக கொண்டு அந்தர்யாமியை தியானம் செய்ய வேண்டும்.
மினோதி ஹ வா இதம் ஸர்வம் –  இவைகள் அனைத்தையும் சரியாக புரிந்து கொண்டவன்,  உலகத்தை சரியாக புரிந்து கொள்ளும் திறமையை உடையவனாக இருப்பான்.
அபீதிஸ்ச ப4வதி –  மேலும் இறந்த பிறகு மீண்டும் பிறக்காமல் பிரகிருதியில் மாயையுடன் லயத்தில் இருப்பான். அடுத்த ஸ்ருஷ்டியின்போதுதான் பிறப்பான்
யஹ ஏவம் வேத3 – இவ்வாறு யாரொருவன் உபாஸிக்கின்றானோ அவனடையும் பலன்கள் மேலே கூறப்பட்டுள்ளன.

காரிகை19
விஸ்வஸ்ய அத்வ்விவக்ஷ்யாம் – விஸ்வனை, வைஷ்வாநரனை அகாரம் என்ற சப்தமாக பாவிக்கும் போது
மாத்ரா ஸம்ப்ரதிபத்தௌ –  முதல் மாத்திரையை ஆத்மாவின் முதல் பாதமாக புரிந்து கொண்டு ஒப்பிடும்போது
ஆதி சாமான்யம் உத்கடம்– அகாரத்திற்கும் – விஸ்வ-வைஷ்வாநரனுக்கும் முதலாக இருக்கும் நிலை ஒற்றுமையாக இருப்பது தெளிவாக தெரிகின்றது.
ஆப்தி சாமான்யம் ஏவ ச ஸ்யாத் – வியாபித்தல் என்ற ஒற்றுமையும் தெளிவாக தெரிகிறது.

காரிகை-20
தைஜஸ்ய உத்வ விக்ஞானே – தைஜஸன், ஹிரண்யகர்ப்பன் உகாரமாக இருக்கின்றதால்
மாத்ரா ஸம்ப்ராபத்தௌ – இரண்டாவது மாத்திரையை, இரண்டாவது பாதத்திற்கு சமமாக எடுத்துக் கொள்ளும்போது
உத்க்ர்ஷம் த்ருஷ்யதே ஸ்பூடம் – உகாரமும், ஹிரண்யகர்ப்பனும் உயர்ந்ததாக இருப்பது தெளிவாக தெரிகின்றது.
உபயத்வம் ததாவிதம் – இரண்டும் இடையில் இருக்கின்றது என்பது நன்றாக தெரிகின்றது.
இந்த இரண்டு காரணங்களினால் இரண்டுமே ஒன்றாக கருதப்படுகின்றது.

காரிகை21
மகார பாவே ப்ராக்ஞஸ்ய – பிராக்ஞனை மகாரமாக பாவிக்கும்போது
மாத்ர ஸம்ப்ரதிபத்தௌ – மூன்றாவது மாத்திரையும், மூன்றாவது பாதமும் ஒன்றேன பார்க்கும்போது
மானஸா மான்ய உத்கடம் – தானியங்களை அளக்கும் பாத்திரம் போல இரண்டும் இருப்பது தெளிவாக தெரிகின்றது’
லய ஸாமான்யமேவ  –  இரண்டும் மற்ற இரண்டிற்கும் லயமடைவதற்கான இருப்பிடமாக இருக்கின்றது.

காரிகை22
த்ரிஷு தாமஸு – மூன்று அவஸ்தைகளிலும்
யத் துல்யம் ஸாமான்யம் வேதி நிஸ்சிதஹ – சரியான ஒற்றுமையை எவனொருவன் நிச்சயமாக அறிகின்றானோ
ஸஹ பூஜ்யஹ – அவன் வணங்கதக்கவன்
ஸர்வ பூதானாம் வந்த்யதே – எல்லா ஜீவராசிகளாலும் வணங்கதக்கவன்
மஹா முனிஹி – அவரே ஒரு பெரிய முனிவராக இருக்கின்றார்.

காரிகை23
அகாரஹ விஸ்வம் நயதே –  அகாரமானது உபாஸகனை இறந்த பிறகு வைஷ்வாநரனிடம் சென்று சேர்ந்து விடும்.
உகார ச அபி தைஜஸம் – உகாரமானது உபாஸகனை இறந்த பிறகு ஹிரண்யகர்ப்பனிடம் கொண்டு சேர்க்கின்றது
மகாரஹ புன பிராக்ஞன் –  மகாரமானது அவனை இறந்த பிறகு அந்தர்யாமியிடம் கொண்டு சேர்க்கின்றது
ந அமாத்ரே வித்யதே கதி – ஓங்காரத்தின் நான்காவது மாத்திரையான அமாத்ரத்தில் எதாவது ஓரிடத்தில் கொண்டு சேர்க்கும் நிலை கிடையாது.
ஸ்லோகம்12

ஓங்காரத்தின் நான்காவது மாத்திரை (அமாத்திரை) மாத்திரயற்றதாகும், இதையும் ஆத்மாவின் நான்காவது பாதமாகிய துரீயத்தையும் சமpபடுத்திப் பார்க்கப்படுகிறது.  அமாத்ரா என்பது அசப்தத்தை குறிக்கின்றது.  இந்த அசப்தம் ( வாக்கினாலும், மனதினாலும் ) என்பது அமைதி இதை துரீயத்துடன் ஒப்பிடப்படுகின்றது.  எல்லா சப்தங்களுக்கும் ஆதாரமாக இருக்கின்றது அசப்தம்.  எல்லா சப்தங்களும் ஒடுங்குவதற்கும், தோன்றுவதற்கும் காரணமாக இருப்பது இந்த அசப்தம்.  இவ்வாறு அசப்தம் அதிஷ்டானமாக இருப்பது போல துரீயமும் அதிஷ்டனாமாக இருக்கின்றது.  அமாத்ரம் நான்காவது மாத்திரையல்ல, ஆனால் அப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.  வாயால் பேசினாலும், மனதில் எதையாவது நினைத்துக் கொண்டிருந்தாலும் அது சப்தமாகத்தான் கருதப்படுகின்றது.  இந்த இரண்டு விதத்திலும் அமைதியாக இருப்பதைத்தான் அசப்தம் என்று கூறப்படுகின்றது.  இதை மூன்று வகையாக பிரிக்கப்படுகின்றது. அவைகள்,

  1. வந்து செல்வது,
  2. அபாவமாக இருப்பது ( இல்லாத தன்மை )
  3. இருமை ஸ்வரூபம் சப்தத்திற்கு விரோதமாக இருக்கின்றது.

இவைகள் அமாத்ரா என்ற சொல்லுக்கு பொருளாகக் கூறவில்லை.  எது சப்தத்தையும்,  அசப்தத்தையும் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றதோ அதுவே அசப்த ரூபம்,  இதுவே அமாத்ராவை குறிக்கின்றது.   சப்தத்திற்கும், அசப்தத்திற்கும் சாட்சியாக இருக்கின்ற சைதன்ய ஸ்வரூபமே அமாத்ராவின் உண்மையான அர்த்தமாகும்.  எவ்வளவு சப்தங்கள் இருந்தாலும் அதனால் நான் பாதிக்கப்படாமல் அசப்தமாக இருக்கின்றேன்.
சப்தத்திற்கு மூன்று நிலைகள் உண்டு. அவைகள்,

  1. ஸ்தூல அவஸ்தை, இதை கலா என்று அழைக்கப்படுகின்றது,  இது வாக்கு என்கின்ற கர்மேந்திரியத்தால் உருவாக்கப்படுவது.
  2. சூட்சும அவஸ்தை, இதை நாதம் என்ற சொல்வதுண்டு,  நாம் சொல்ல நினைக்கின்ற சொல்லின் விருத்தியே (எண்ணங்கள்), மனதில் எழும் எண்ணங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும், அதற்கு காரணம் அவரவர்களிடத்தே உள்ள ஸம்ஸ்காரங்கள் வெவ்வேறாக இருப்பதுதான்.
  3. காரண அவஸ்தை இதை பிந்து என்றும் சொல்லப்படுகின்றது.

காஷ்ட மௌனம் என்பது வாயால் பேசாதிருத்தல், மனதில் எதையும் சிந்திக்காதிருத்தல்,  சூட்சுமமான அமைதி மனதில் இருக்கும். இந்த நிலையில் காரண அவஸ்தையில் இருக்கின்றோம், அறியாமையில்தான் இருக்கின்றோம்.  அமைதியான மனதினைக் கொண்டு நான் சைதன்ய ஸ்வரூபம், என்றுமே அசப்த ஸ்வரூபம் என்று நினைக்க வேண்டும். இதனால் வெளியிலுள்ள சப்தத்தினாலும், அசப்தத்தினாலும் பாதிக்கப்படாமல் இருக்கின்றோம்.  இதுவே மோட்சத்தை அடைந்த நிலை.   நான் சப்தம்-அசப்தம் இவைகளை பார்த்துக் கொண்டிருக்கும் சாட்சி ஸ்வரூபம், அசப்த ஸ்வரூபம்.  வாக்கினாலும், மனதினாலும் மௌனமாக இருப்பதை முயற்சியால் அடைந்தாலும், அவைகளுக்கு பீஜமான காரண அவஸ்தையில் இருக்கின்றதால்,  மீண்டும் சிறிது நாள் கழித்து அமைதியிலிருந்து வெளிவந்தவுடன் சப்தம் போடத் தொடங்கி விடும்.  ஏனென்றால் மீண்டும் இந்திரியங்களில் அபிமானம் இருந்து கொண்டிருக்கின்றது.

மந்திர விளக்கம்:
அமாத்ரவா சதுர்த4 – ஓங்காரத்தின் அமாத்ர ஸ்வரூபம், ஆத்மாவின் நான்காவது பாதமான துரீயமாக இருக்கின்றது.
ஓம் என்ற சொல்லின் வாச்யார்த்தம் அக்ஷரமாக இருக்கின்றது.  லட்சியார்த்தமாக அமாத்ர ஸ்வரூபத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.  துரீயனானது விஸ்வன், தைஜஸன், பிராக்ஞன் இவர்களுக்குள்ளும் இருக்கின்றது, தனியாக வெளியேயும் இருக்கின்றது;  அதேபோல அமாத்ரமான அசப்தம் அனைத்து சப்தங்களுக்கு ஆதாரமாகவும் இருக்கின்றது, அதற்கு அப்பாலும் இருக்கின்றது.  இதிலிருந்து இரண்டும் (துரீயன், அமாத்ரா) சமமாக கருத முடிகின்றது.

அவ்யவஹார்யஹ – விவகாரத்திற்கு விஷயமாக இல்லை, எந்த செயல்களுக்கும் விஷயமாக இல்லாமல் இருக்கின்றது.  வாக்கும், அர்த்தமும் நாசமடைந்த நிலை.
பிரபஞ்சோபஶமம் – சப்த ரூபமான பிரபஞ்சத்தின் ஆதாரம்.  சப்தம் இல்லாத இடம்.
ஶிவஹ – அனர்த்தம்
அபாவஹ – துக்கம் இல்லாதது, மங்கலமானது,  ஆனந்த ஸ்வரூபமானது
அத்வைதஹ – இருமையற்றது.  பிரபஞ்சங்கள் இல்லாமல் போய்விட்டதால் இந்த நிலை.
ஏவம் ஒங்காரஹ ஆத்மா ஏவ – இவ்விதம் ஓங்காரம் ஆத்மாதான் என்று விளக்கப்பட்டு இருக்கின்றது.
ஆத்மனா ஆத்மானம் ஸம்விஶதி – தன்னால் தன்னை அடைகின்றான்
யஹ ஏவம் வேத – எவனொருவன் இவ்விதம் அறிகின்றானோ அவன் தன்னையே அடைகின்றான்.

காரிகை-24
இதில் நிதித்யாஸனம் என்ற சாதனத்தைப் பற்றி கூறுகின்றார்.
ஓங்காரம் பாதஶோ வித்யாத் – ஓங்காரத்தை ஆத்மாவின் பாதங்களாக தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.
பாதா மாத்ரா ந ஸம்ஶயஹ – ஆத்மாவின் பாதங்கள்தான் மாத்திரைகளாக சந்தேகமின்றி புரிந்து கொள்ள வேண்டும்.
ஓங்காரம் பாதஶோ ஞாத்வா –  ஓங்காரத்தை ஆத்மாவின் பாதங்களாக அறிந்த பிறகு
ந கிஞ்சித் அபி சிந்தயேத் – வேறெதையும் நினைத்துக் கொண்டிருக்கக்கூடாது.  எதையும் நினைக்கக்கூடாது என்பது எந்த பலனையும் எதிர்ப்பார்க்கக்கூடாது என்று குறிப்பிடபடுகின்றது.  த்ருஷ்ட பலன், அத்ருஷ்ட பலன் எதையும் எதிர்ப்பார்க்கக்கூடாது.  அடைந்த இந்த அறிவிலே நிலைத்து நிற்க வேண்டும்.

காரிகை-25
யுஞ்ஜித ப்ரணவே சேதஹ – ப்ரணவ தத்துவத்தில் நம்முடைய மனதை பொருத்த வேண்டும்.  அனாத்மா விஷயங்களில் விழுந்து இருக்கும் மனதை ப்ரணவ தத்துவத்தில் நிறுத்தி பழக வேண்டும்.
ப்ரணவோ ப்ரஹ்ம – ப்ரணவம்தான் பிரம்மன், ப்ரணவம் என்பது ஓங்காரத்தை குறிக்கின்றது
நிர்பயம் – பயமற்ற ஸ்வரூபமாக இருக்கின்ற பிரம்மன்
ப்ரணவே நித்ய யுக்தஸ்ய – ப்ரணவத்தில் எப்பொழுதும் மனதை பொருத்தியிருப்பவனுக்கு
ந பயம் வித்யதே க்வசித் – எதைக்குறித்தும் பயம் கொள்வதில்லை.

உலகத்திலுள்ள எதுவும் நமக்கு அபயத்தைக் கொடுக்காது.  பிரம்மன் ஒன்றுதான் நிர்பய ஸ்வரூபமாக இருக்கின்றது.  அதை அடைவதினால்தான் அபயத்தை அடைய முடியும்.  நானே பிரம்மன் என்று உணர்வதுதான் பிரம்மத்தை அடைதல் என்று கூறுகிறோம்.  யாக்ஞவல்கியர் ஜனகரை பார்த்து நீ அபயத்தை அடைந்து விட்டாய் என்று ப்ருஹதாரண்ய உபநிஷத்தில் கூறுவது அவர் பிரம்மனை அடைந்து விட்டார் என்பதை குறிக்கின்றது.

காரிகை-26
ப்ரணவ – எதனால் (ஓங்காரம்) பிரம்மமானது நன்கு புகழப்படுகின்றதோ அதுவே ப்ரணவம்.  ஓங்காரம் சகுண பிரம்மத்தையும், நிர்குண பிரம்மத்தையும் குறிக்கின்றது.   தியானதிற்குரியதாக இருப்பது சகுண பிரம்மத்தை குறிக்கும்.  ஞானத்தை அடைவதற்கு உதவியாக இருப்பது நிர்குண பிரம்மத்தை குறிக்கும்.

ப்ரணவோ ஹி அபரம் ப்ரஹ்ம – ப்ரணவம் அபரமான பிரம்மத்தை குறிக்கின்றது.  அபரம் என்பது மாயையுடன் கூடிய ஈஸ்வரன்.
ப்ரணவ ச பர ஸ்ம்ருதஹ –  பிரணவம் பர பிரம்மத்தையும் குறிக்கின்றது என்று உபநிஷத்தின் மூலம் நினைத்துப்பார்க்கலாம்.
அபூர்வஹ – காரணமற்றது, அதற்கு காரணம் கிடையாது.
அனந்தரம் – அதற்குள்ளே ஒன்றும் கிடையாது
அபாஹ்யஹ – அதற்கு வெளியேயும் ஒன்றும் கிடையாது
அனபரஹ – அதனிடமிருந்து எதுவும் தோன்றவில்லை.
ப்ரணவஹ அவ்யயஹ – ப்ரணவத்தோடு ஒப்பிடுகின்ற பிரம்மமானது அழிவற்றது
காரிகை-27
ஸர்வஸ்ய ப்ரணவ ஹி ஆதி – அனைத்திற்கும் காரணமாக முதலில் இருப்பவர் ப்ரணவம்
மத்யம் அந்தம் ததைவ ச – இடையிலேயும், முடிவிலேயும் காரணமாக இருப்பது ப்ரணவம்
ஏவம் ஹி ப்ரணவம் ஞாத்வா – இவ்விதம் ப்ரணவத்தை அறிந்து கொண்டால்
வ்யஶ்னுதே தத் அனந்தரம் – அதை அப்போதே அடைகின்றான். (அறிதலே அடைதல்)

இவ்விதம் ப்ரணவத்தை அறிந்து கொண்டால், அதை அப்போதே அடைகின்றான்.  அதாவது பிரம்மத்தை அறிந்தவுடனேயே அதை அடைந்தவனாகின்றான்.  அடையப்படும் பிரம்ம ஞானம் பலனை கொடுக்க வேறெதனுடைய உதவியும் அதற்கு தேவையில்லை.  மற்ற அறிவுகள் எதை அடைந்தாலும் அவை பலனைக் கொடுக்க ஏதாவது ஒன்றின் உதவி தேவை.  உதாரணமாக யோகாசனம் எப்படி செய்ய வேண்டும் என்ற அறிவே பலனை கொடுக்காது, அதை தினமும் பயிற்சி செய்தால்தான் பலன் கிடைக்கும்.  பிரம்ம ஞானத்தை அடைவதற்கு இரண்டு முக்கியமான உதவிகள் தேவை.  ஞானத்தை அடைவதற்கு உதவும் பிரமாணம், அதை அடைவதற்குரிய தகுதிகள் இவையிரண்டும் இருந்தால்தான் இந்த ஞானத்தை அடைய முடியும்.  சாதன சதுஷ்டய சம்பத்தி என்ற தகுதி அடைபவன்  பிரமாதா,  பிரமாணமானது வேதாந்தமும், குருவும்.

காரிகை-28
ஓங்கார லட்சணமும், அதன் பலனும் கூறப்படுகின்றது.  ஜீவ-ஈஸ்வர ஐக்கியமும் கூறப்படுகின்றது.
ப்ரணவம் ஹி ஈஸ்வரன் வித்யாதி –  ப்ரணவத்தை ஈஸ்வரனாக உறுதியாக அறிந்து கொள்ள வேண்டும்.
ஸர்வஸ்ய ஹ்ருதி ஸம்ஸ்திதம் – எல்லா ஜீவராசிகளின் மனதிலும் சாட்சியாக இருப்பதாகவும் அறிந்து கொள்ள வேண்டும்.
ஸர்வ வ்யாபினம் ஓங்காரம் – ஓங்காரமே அனைத்தையும் வியாபித்திருக்கின்றது
தீரஹ மத்வா ச ஶோசதி – விவேகியானவன் இதை அறிந்திருப்பதால் துயரத்தை அடைவதில்லை.
ஞானத்தின் பலனானது துக்க நிவிருத்தி, பய நிவிருத்தி என்று அறிந்து கொள்ள வேண்டும்.

காரிகை-29
அமாத்ரஹ – ஓங்காரம் அமாத்திரைகளற்றதாக இருக்கின்றது.  இது அசப்த ஸ்வரூபமாகவும்,  ஸத்யமாகவும் இருக்கின்றது.
அனந்த மாத்ரஹ – எண்ணிக்கையற்ற மாத்திரைகளை உடைய ஸ்வரூபமாகவும் இருக்கின்றது.  அதாவது அனைத்து சப்தங்களின் ஸ்வரூபமாகவும் இருக்கின்றது. இது மித்யா என்று அறிந்து கொள்ள வேண்டும்.
த்வைதஸ்ய உபஶமஹ – இந்த ஓங்காரம் இருமைகள் இல்லாத இடமாக இருக்கின்றது.  த்வைதங்கள் லயமடைகின்ற ஸ்தானமாக இருக்கின்றது.  அனைத்து சப்தங்களும் ஒடுங்குகின்ற இடமாகவும் இருக்கின்றது.
ஶிவஹ – மங்கலமாகவும் இருக்கின்றது, அசப்தமாக இருப்பதே மங்கலம்.
ஓங்கார விதிதோயேன – யாரால் ஓங்காரத்தை இவ்விதம் அறிந்திருக்கின்றாரோ
ஸஹ முனிஹி – அவரே முனிவர்
ந இதர ஜனஹ – மற்றவர்களெல்லாம் முனிவர்களல்ல.

இத்துடன் கௌடபாதரின் ஆத்ம பிரகரணம் முடிவடைகின்றது.
உபநிஷத் சுருக்கம்
மந்திரம்1
ஓம் என்ற அக்‌ஷரம் அனைத்துமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.  அனைத்தும் ஓம் என்று சொல்லப்பட்டதால் அதைப்பற்றிய விசாரம் செய்யப்படும் என்று உறுதி கூறப்பட்டது.  ஸர்வம் என்பதை காரிய பிரபஞ்சம், காரண பிரபஞ்சம் ( மாயா ) என்று விளக்கப்பட்டது.  ஓம் என்ற சொல்லின் வாச்யார்த்தம்தான் ஸர்வம் என்று குறிப்பிடுகின்றது.  காரிய-காரண ரூபமாக இருத்தல், லட்சியார்த்தம் அதற்கு அதிஷ்டானமாக இருக்கும் நிலையை குறிக்கின்றது.
மந்திரம்2
ஆத்மாவே இவைகள் அனைத்தும் என்று சொல்லப்பட்டு அதைப் பற்றிய விசாரம் செய்யப்படும் என்று உறுதி கூறப்பட்டது.  மகாவாக்கியம் பிரதிக்ஞா ரூபத்தில் வந்திருக்கின்றது. அயம் ஆத்மா பிரம்ம – இந்த ஆத்மாதான் பிரம்மமாகவே இருக்கின்றது.  இந்த ஆத்மா நான்கு விதமாக பிரித்து விசாரம் செய்யப்பட்டுள்ளது.

மந்திரம்3-6
இவைகளில் ஆத்ம விசாரம் செய்யப்பட்டது. இதில் அவஸ்தா த்ரய விவேகம் என்ற முறையில் ஆத்ம விசாரம் செய்யப்பட்டது. மூன்று அவஸ்தைகளை அனுபவிக்கின்ற ஆத்மா மூன்று பாதங்களாக உடையது.  நான்காவது பாதமாக துரீயம் என்று அறிமுகப்படுத்தியுள்ளது.   முதல் பாதம் சைதன்யம் ஸ்தூல பிரபஞ்சம், ஸ்தூல சரீரம் இவைகள் சேர்ந்தது, இரண்டாவது பாதம் சைதன்யம் சூட்சும பிரபஞ்சம், சூட்சும சரீரம் இவைகள் மூன்றும் சேர்ந்தது, மூன்றாவது பாதமானது சைதன்யம், காரண சரீரம், காரண பிரபஞ்சம் இவை மூன்றும் சேர்ந்தது என்று எடுத்துக் கொள்ளப்பட்டது.  நான் என்பது எப்போதும் ஆத்மாவையே குறிக்கின்றது.  நான் ஸ்தூல சரீரத்தின் துணைக்கொண்டு ஸ்தூல பிரபஞ்சத்தை விழிப்பு நிலையிலே அனுபவித்துக் கொண்டிருப்பவன். அதேபோல கனவு, உறக்கம் இவைகளிலும் இருக்கின்றேன்.  காரண அவஸ்தையில் அறியாமையும் இருக்கின்றது, சுகமும் இருக்கின்றது.  இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது சைதன்யம் என்று ஒன்றுதான் மூன்று நிலைகளிலும் மாறாமல் தொடர்ந்து இருக்கின்றது.  அனாத்மா இரண்டாக பிரிக்கப்படுகின்றது.  ஸ்தூல சரீரமும், ஸ்தூல பிரபஞ்சமும் பஞ்ச பூதங்களினால் உருவாக்கப்பட்டது.  இதன் அடிப்படையில் இரண்டும் ஒன்றுதான்.  ஸ்தூல சரீரத்தின் நான் என்ற அபிமானம் வைத்திருக்கின்றோம். இதன் அடிப்படையில் அனுபவிப்பவன், அனுபவிக்கப்படும் பொருள் என்று பிரிக்கப்படுகின்றது. ஸ்தூல சரீரம் – அனுபவிப்பவன், ஸ்தூல பிரபஞ்சம் – அனுபவிக்கப்படும் பொருளாக கூறப்பட்டது.   சைதன்யத்தின் உபாதியாக இருக்கும் அனாத்மா அனுபவிப்பவன்  (விஸ்வன்,  தைஜஸன்,  பிராக்ஞன்) என்ற நிலையும், அனுபவிக்கப்படும் பொருளாக ஸ்தூல, சூட்சும பிரபஞ்சங்கள் என்ற நிலையும் இருப்பதால், அனாத்மா இரண்டாக இருப்பது போல் தோன்றுகிறது.

மந்திரம்-7
காரண பிரபஞ்சத்திற்கு அதிஷ்டானமாக இருக்கின்ற ஈஸ்வர தத்துவம் விவரிக்கப்பட்டது.   சமஷ்டியில் வைஷ்வாநரன், ஹிரண்யகர்ப்பன், அந்தர்யாமி என்று ஒப்பிடப்பட்டது.  விஸ்வனாகிய அனாத்மாவை நான் என்று தவறாக ஏற்றி வைத்திருப்பதால் விஸ்வனாக இருக்கின்றாய், அதேபோல தைஜஸனுக்கும், பிராக்ஞனுக்கும் பொருந்தும்.  எனவே இந்த அனாத்மாவை நீக்கிவிட்டால் சைதன்ய தத்துவமாக இருக்கின்றாய். மூன்று நிலைகளில் சைதன்யத்தின் மீது எவைகளெல்லாம் ஏற்றி வைக்கப்பட்டதோ அவைகள் எல்லாம் நீக்கி, நீ ஆத்ம ஸ்வரூபம்தான் என்று உரைக்கின்றது.  மூன்று சரீரங்களை நீக்கிவிட்டது.   நீ வெளி விஷயங்களை அனுபவிப்பவன் அல்ல என்று சுட்டிக்காட்டி அவைகளை நீக்க வேண்டும் என்று உபதேசிக்கின்றது.
ஸ்தூல சரீரம் பார்க்கின்றதாகவும், பார்க்கப்படுபவதாகவும் இருக்கின்றது.  அதனால் இது நீயல்ல என்று புரிந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகின்றது. ஆத்மா பார்ப்பவனும் அல்ல, பார்க்கப்படுபவனும் அல்ல என்று புரிந்து கொள்ள என்று வலியுறுத்துகின்றது.  எனவே உன்னை அத்வைத சைதன்ய ஸ்வரூபம் என்று அறிந்து கொள் என்று உபதேசிக்கின்றது.

பிரபஞ்சோஶமம் – இந்த அனாத்மாக்கள் எல்லாமே மித்யா, இல்லாதவைகளை தன்மீது ஏற்றி வைத்திருக்கின்றோம் என்று கூறி நம்மை தெளிய வைக்கின்றது.  அனாத்மாக்கள் இருப்பது போல தோற்றமளித்துக் கொண்டிருப்பவைகள்.  இந்த ஆத்மாவை இப்படி அறியப்பட வேண்டும்.
மந்திரம்-8    (ஓங்கார விசாரம்)
ஒங்கார விசாரமும், ஆத்மா விசாரமும் ஒன்றுதான்.  நமது பார்வையில் உள்ள வேறுபாட்டின் காரணமாக வேறு விதத்தில் ஓங்கார விசாரம் என்ற முறையில் செய்யப்படுகின்றது.   உலகத்தை சப்தமாக உருவகப்படுத்தி நாமத்தை பிரதானமாகக் கொண்டு இவைகளுக்கு அதிஷ்டானமாக இருக்கின்ற  ஆத்மா உணர்த்தப்படுகின்றது.  ஓம் என்பது சப்த ரூபம், இது அ, உ, ம என்று பிரித்து மூன்று சரீர, பிரபஞ்சங்களுக்கு ஒப்பிட்டு, ஆத்மாவின் மூன்று பாதங்களுக்கும் ஒப்பிட்டு நான்காவதாக அமாத்ரா, அசப்தமாக கூறி அதை துரீயத்திற்கு ஒப்பிட்டு விளக்கி ஆத்மாவுடன் சமப்படுத்தப்பட்டது. ஆத்மா அசப்த ஸ்வரூபம் என்று விளக்கப்பட்டது.
காரிகை சுருக்கம்

  • மூன்று அவஸ்தைகளிலும் தொடர்ந்து இருப்பது ஆத்மா ஒன்றுதான்
  • வியஷ்டி,சமஷ்டி உபாஸனைக்காக விஸ்வ, தைஜஸன் இருப்பிடத்தைப் பற்றி பேசப்பட்டது
  • விஸ்வனும், தைஜசனும் கர்த்தாவாகவும், போக்தாவாகவுமாக இருக்கின்றார்கள், ஆனால் பிராக்ஞன் போக்தாவாக மட்டும் இருக்கின்றான்.
  • இந்த மூன்றையும் தெரிந்து கொண்டாலே அதிக சுகங்களை அடையலாம்.
  • துரீயமானது துயரங்களற்றது, சம்சாரம் இல்லாத இடம் என்று கூறினார்.
  • விஸ்வன், தைஜஸன், பிராக்ஞன் இவைகளை ஒன்றையொன்று ஒப்பிட்டு விளக்கம் அளிக்கப்பட்டது
  • காரியம் – அத்யாஸம் – ஏற்றி வைக்கப்பட்டது, காரணம் – அக்ஞானம். விஸ்வனும், தைஜஸனும் காரண-காரியத்துடன் இருக்கின்றார்கள். ஆனால் பிராக்ஞன் காரணத்துடன் மட்டும் இருக்கின்றார்.  துரியம் இரண்டுமே இல்லாதவன்.  அன்யதா கிரகணம் – வேறு விதமாக புரிந்து கொள்வது, அகிரகணம் – புரிந்து கொள்ளாதிருத்தல்
  • துரீயத்தை அறிவினால்தான் அடையமுடியும் என்று கூறினார்
  • பிரபஞ்சம் மித்யா என்றும் விளக்கப்பட்ட்து
  • உபநிஷத் உபதேசத்திற்காகத்தான் இருமைகளை பயன்படுத்தி இருக்கின்றது.  குரு-சிஷ்யன், ஜகத் என்ற இருமைகள்.
  • நிதித்யாஸனம் என்ற சாதனத்தையும் கூறியுள்ளார்.
  • ஆத்மாவின் நான்கு பாதங்களையும், நான்கு மாத்திரைகளாக நன்றாக புரிந்து கொள்ள வேண்டும், வேறெதையும் நினைக்க கூடாது
  • பிரம்மன் நிர்பயமாக இருப்பது, எனவே நாம் அதை அடைந்தால் அபயத்தை அடைவோம் என்றும் கூறப்பட்டது
  • அமாத்ர அனந்தமாத்ர – சப்தமும், அசப்தமும் ஒங்காரம்
  • இருமைகள் இல்லாதன் நிலை ஶிவம், ஶாந்தம்
  • இதையறிந்தவந்தான் முனிவன் என்றும் கூறினார்.

—-oo000oo—-

மாண்டூக்ய உபநிஷத் – பகுதி4

காரிகை – 2வது அத்தியாயம் (வைதத்ய பிரகரணம்)

பிரபஞ்சோபஶமம் – பிரபஞ்சம்(ஜகத்) + உபஶம(இல்லாமை) – பிரபஞ்சம் இல்லாத இடம் அதுவே துரீயம் ,பிரம்மம், ஆத்மா.  இரண்டு விதமான இல்லாமை அபாவம் இருக்கின்றது.  அவைகள்,

  1. நீரில் உப்பைபோட்டு கலந்து விட்டால் உப்பின் இருப்பு தெரியாது,வெளித்தோற்றத்திற்கு வராத நிலைக்கு சென்று விட்டது..
  2. கயிற்றில் தெரிந்த பாம்பு இல்லாமை அடைந்து விட்ட நிலை.

அத்வைதத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் பிரபஞ்சம் பிரம்மத்திலே மறைந்து இருக்கின்றது என்று பொருள் சொல்கிறார்கள்.  ஆனால் அத்வைதிகள் பிரபஞ்சம் உண்மையில் இல்லை ஆனால் இருப்பது போல தோன்றி  கொண்டிருக்கின்றது, இந்த நிலையே மித்யா என்று கூறுகிறார்கள். பிரபஞ்சம் மித்யா என்ற உபதேசம் நமது அனுபவத்திற்கு எதிராக இருப்பது போல சந்தேகம் வருகின்றது.  எதை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் சாஸ்திரம் சொல்வதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.  இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

  1.     பிரத்யக்ஷம் எப்போதும் உண்மையைதான் காட்டுகின்றது என்ற நியதி கிடையாது.உதாரணமாக கானல் நீர், பூமி தட்டையாக இருப்பது போல் தோன்றுவது.  இது போல இந்த உலகமும் பொய் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
  2.     பிரத்யக்ஷ பிரமாணத்தால் எப்போதும் ஒரு பொருள் சத்யமா அல்லது மித்யாவா என்று சொல்ல முடியாது. கண் கானல் நீரை பார்க்கின்றது, அது உண்மையா, பொய்யா என்று சொல்வது கிடையாது.  புத்திதான் இதை நிர்ணயம் செய்கின்றது.  இதேபோல நம் அனுபவம் உலகம் சத்யமா, மித்யாவா என்று சொன்னது கிடையாது. நம் அறிவினால்தான் உண்மையை அறிந்து கொள்ள முடியும்.

நம் அனுபவம் உலகத்தின் இருப்பைத்தான் காட்டுகின்றது.  ஆனால் அது உண்மையா, பொய்யா என்று உறுதி செய்யாது.  புத்திதான் இதை நிர்ணயம் செய்கின்றது.  இந்த அத்தியாயத்தில் கௌடபாதர் அனுமானம் என்ற பிரமாணத்தை ஜகத் மித்யா வைத்து சாஸ்திரம் சொல்கின்ற உண்மையை என்று நிலை நாட்டுகின்றார்.  அனுமானத்தை இரண்டு விதமாக பயன்படுத்தலாம். அவைகள்,

  1. தனிப்பட்ட முறையில் பயன்படுத்தலாம்,சாஸ்திரத்தின் துணையில்லாமல் தர்க்கத்தை உபயோகித்தல்-ஸ்வதந்திர தர்க்கத்தை பயன்படுத்தலாம்.
  2. சாஸ்திர பிரதானமாக கொண்டு பயன்படுத்துகின்ற அனுமானம்.

இந்த இரண்டாவது வகை அனுமானத்தை கௌடபாதர் கையாண்டு விளக்குகின்றார்.

அனுமான விசாரம் (யூகம் – Inference )

அனுமானம் என்பது பிரத்யக்‌ஷ பிரமாணம் பயன்படாத போது அறிவை அடைய பயன்படுத்தும் ஒருவகையான முறை. இந்த பிரமாணம் பிரத்யக்‌ஷ பிரமாணத்தின் துணைக் கொண்டுதான் செயல்படும்.  பிரத்யக்‌ஷத்தினால் அறியாததை அனுமானத்தினாலும் அறிய முடியாது.  மலையில் பகல்நேரத்தில் புகையை பார்த்தால் அந்த இடத்தில் நெருப்பு இருக்கின்றது என்ற கூறுவோம். இந்த அறிவையடைய நம் கண்ணை பயன்படுத்தவில்லை.  இது பிரத்யக்ஷ த்தினால் வரவில்லை.  இந்த அறிவை அடைவதற்கு உதவிய பிரமாணம்  அனுமானம். இதில் ஐந்து தத்துவங்கள் இருக்கின்றது.  அவைகள்,

  1. பக்ஷம்        – மலையை குறிக்கின்றது.
  2. ஸாத்யம்     – நெருப்பு (வன்னி, அக்னி)
  3. ஹேது        – புகை (தூமஹ)
  4. வ்யாப்தி      – எங்கெல்லாம் புகையுண்டோ அங்கெல்லாம் நெருப்பு இருக்கும்     என்கின்ற உண்மை
  5. த்ருஷ்டாந்தம் – சமையலறை, யாகசாலை

 

  1. பக்ஷம் – இதன் லட்சணம் எங்கு சாத்தியம் சந்தேகிக்கப்படுகின்றதோ அந்த இடத்திற்கு  பக்ஷம் என்று பெயர். (உ-ம்) நெருப்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் இடம் மலை
  2. சாத்தியம் – எது என்று நிச்சயிக்கபட வேண்டிய விஷயம், ஸாதனீயம், நிரூபிக்கப்பட வேண்டியது
  3. ஹேது – ஒன்றை (சாத்தியத்தை) அறிய உதவும் சாதனம் , கரணம், லிங்கம் (புகை)
  4. வியாப்தி – ஹேதுவுக்கும், சாத்தியத்திற்கும் இடையே உள்ள பிரியாத, இணைந்திருக்கின்ற சம்பந்தம் – ஹேது ஸாத்ய ஸாஹச்சர்ய நியமஹ.  (உ-ம்) புகையும், நெருப்பும் எப்போதும் சேர்ந்தே இருக்கும்.  எப்போதெல்லாம் ஒன்று இருக்கின்றதோ அப்போதெல்லாம் இணைந்திருக்கின்ற மற்றொன்றும் சேர்ந்திருக்கும்.  எங்கேயெல்லாம் புகையிருக்கின்றதோ அங்கேயெல்லாம் புகை இல்லாமையும் இருக்கலாம். எனவே ஹேதுவுடன் இணைந்திருக்கும் சத்யம்
  5. திருஷ்டாந்தம் – உதாராணம் – அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயம்.

அனுமானம் என்பதும் அறிவை கொடுக்கும் கருவியாக இருக்கின்றது.  மேலே கூறப்பட்ட ஐந்தின் துணைக்கொண்டு அடையப்படும் அறிவானது அனுமானத்தினால் அடைந்த அறிவாகின்றது.  அனுமானம் என்பது வியாப்தியுடன் கூடிய ஹேதுவை பக்ஷத்தில் பார்ப்பது அனுமானத்தை சொல்லும் முறை: பக்ஷம், ஸாத்யம், ஹேது, த்ருஷ்டாந்தம், வியாப்தி
மலையில் நெருப்பு இருக்கின்றது புகை இருப்பதனால் யாகசாலையை போல, எங்கெல்லாம் புகை இருக்கின்றதோ அங்கேயெல்லாம் நெருப்பான ஸாத்யம் இருக்கும்.

அனுமான வாக்கியம்1
உடல் அழிவுக்கு உட்பட்டது அது காரியமாக இருக்கின்ற காரணத்தினால் பானையை போல.
இந்த உதாரணத்தில்,
பக்ஷம் – உடல்; ஸாத்யம் – அழியக்கூடியது; ஹேது – காரியம் (உருவாக்கப்பட்டதால்)
த்ருஷ்டாந்தம் – பானையப்போல;
வியாப்தி – எதுவெல்லாம் உருவாக்கப்படுகின்றதோ அதுவெல்லாம் அழியக்கூடியது
வியாப்தி ஞானத்துடன் ஹேதுவைப் பக்ஷத்தில் பார்த்தால்தான் ஸாத்யம் புரிய வரும்.
ஜகத் (பக்ஷம்) மித்யா (ஸாத்யம்) என்பதை அனுமானத்தின் துணைக்கொண்டு நிலைநாட்ட வேண்டும். ஹேது பார்க்கப்படுவதனால், அனுபவிக்கப்படுவதனால், த்ருஷ்டாந்தம் – கனவு பிரபஞ்சத்தைப் போல

காரிகை1ஹேது1
இதில் ஸ்வப்னம் மித்யா என்று நிரூபித்தல்.  த்ருஷ்டாந்தத்திலிருந்து வியாப்தி ஞானம் நமக்கு ஏற்படும்.  யாகசாலையில் நாம் புகையுடன் கூடிய நெருப்பை பார்க்கின்றோம்.  இதை வைத்துத்தான் எங்கேயெல்லாம் புகை இருக்கின்றதோ அங்கேயெல்லாம் நெருப்பு இருக்கும் என்ற வியாப்தி ஞானத்தை உறுதி செய்கின்றோம்,  எனவே திருஷ்டாந்தத்திற்கு இன்னொரு பெயர் வியாப்தி பூமி என்று உண்டு.  அனுமானத்தின் மூலம் அடையும் அறிவிற்கு திருஷ்டாந்த ஸித்தி முக்கியம்,

வைதத்யம் ஸர்வபாவானாம் ஸ்வப்ன ஆஹு மனீஷிணஹ – கனவில் காணும் அனைத்துப் பொருட்களும் மித்யா என்று அறிவாளிகள், பிரமாணத்தை நன்கு உபயோகிப்பவர்கள்  சொல்கிறார்கள். இது பக்ஷம்.
பாவானாம் அந்த ஸ்தானாத் ஸம்வ்ருதத்வேன ஹேதுனா – கனவில் காணும் அனைத்து பொருட்களும் நமக்குள்ளே இருப்பதனாலும், அந்த இடம் சிறிய இடமாக இருக்கின்ற காரணத்தினால், இது ஹேதுவாக இருக்கின்றது.

காரிகை2 ஹேது-2
அதீ3ர்க4த்வாத் காலஸ்ய – காலம் குறைவாக இருக்கின்ற காரணத்தால்
3த்வா தே3ஶான்ன வ பஶ்யதி – வேறு இடத்திற்கு சென்று (கனவில் பார்க்கும் இடத்திற்கு)
கனவை பார்ப்பதில்லை
இதுவரை அனுமான முறையில் கனவு பிரபஞ்சம் மித்யா என்று நிலை நாட்டினார்.  இனி அனுபவத்திலே இது மித்யா என்று புரிய வைக்கின்றார்.
ஸர்வ பிரதிபு3த்3த4ஹ – விழித்துக் கொண்ட அனைவரும்
தஸ்மின் தேஶே ந வித்யதே – அந்த நேரத்தில் அங்கு இருப்பதில்லை.
எந்த இடத்தில் இருப்பதாக கனவு காண்கின்றோமோ விழித்தவுடன் அந்த இடத்தில் நாம் இருப்பதில்லை. எனவே இதன் மூலம் கனவு பிரபஞ்சம் மித்யா என்று புரிந்து கொள்ளலாம்.

காரிகை3
இதில் ஸ்ருதி பிரமாணத்தில் மூலம் கனவு பிரபஞ்சம் மித்யா என்று நிரூபிக்கின்றார்.
அபாவாத் ரதாதினாம் ஸ்ருயதெ ந்யாயபூர்வகம் – கனவில் தோன்றும் ரதம் போன்றவைகள் இல்லாததை யுக்திமூலமாக, நியாயமாக ஸ்ருதியானது நிரூபிக்கின்றது.
வைதத்யம் தேன வை ப்ராப்தம் – பொய்யாக இருக்கின்ற நிலையானது தர்க்கத்தின் மூலமாகவும், இதுவரை செய்த விசாரம் மூலமாகவும் அடையப்பட்ட்து.
ப்ரகாஶிதம் – உபநிஷத்தின் மூலமும் இதை அறிய முடிந்தது.

கனவில் தோன்றும் பொருட்கள் அனைத்தும் அனுமானம், அனுபவம் இவைகள் மூலமாக பொய்யென்று அறிந்தோம்.  உபநிஷத் மூலமும் இந்த அறிவை அடைந்தோம். இவ்வாறு சாஸ்திரத்தை நன்கு கற்றறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

காரிகை4
பக்‌ஷம் – ஜாக்ரத் பிரபஞ்சம்; ஸாத்யம் – மித்யா; த்ருஷ்டாந்தம் – கனவு பிரபஞ்சம்
யதா தத்ர ததா4 ஸ்வப்னே – கனவில் எப்படியோ அப்படியே ஜாக்ரத் அவஸ்தையிலும்
கனவில் பார்க்கப்படும் பொருட்கள் எப்படி பொய்யாக இருக்கின்றதோ, அப்படியே ஜாக்ரத் அவஸ்தையிலும் தோன்றும் பொருட்களும் பொய்யாக இருக்கின்றது.
தஸ்மாத் பேதானாம் ஜாகரிதே ஸ்ம்ருதம் – ஆகவே பொருட்களுடைய பொய்யான நிலை ஜாக்ரத் அவஸ்தையிலும் நிலை நாட்டப்பட்டது.
அந்த ஸ்தானாத் – பொருட்கள் உள்ளே இருக்கின்றது என்ற விஷயமும்
ஸம்வ்ருத த்வேன – ஆனால் குறைவான இடம் இருக்கின்றது என்ற விஷயமும்
பித்யதே – வேறுபடுகின்றன.
ஜாக்ரத் அவஸ்தையில் உள்ள பொருட்களுக்கு போதுமான இடம் இருக்கின்றது.  ஆனால் கனவில் குறைவான இடம் இருக்கின்றது என்ற வேற்றுமையும் புரிந்து கொள்ள வேண்டும்.

காரிகை5
ப்ரஸித்தே4னைவ ஹேதுனா – பிரசித்தமான காரணத்தினால் பார்க்கப்படுவதானால்
வியாப்தி – எங்கேயெல்லாம் பார்க்கப்படுவது இருக்கின்றதோ அங்கேயெல்லாம் மித்யாவாக இருக்கின்றது.
ஸ்வப்ன ஜாக்ரத் ஸ்தானே ஹி ஏகம் – கனவு நிலையும், ஜாக்ரத் நிலையும் இரண்டும் ஒன்றுதான் என்று
ஆஹூ மனீஷனஹ – அறிவாளிகள் சொல்கின்றார்கள்.
பே4தானாம் ஹி சமத்வேன – இரண்டு நிலைகளில் உள்ள பொருட்களின் தன்மை ஒரே மாதிரியாக இருப்பதனால்
இந்த இரண்டு நிலையில் உள்ள பொருட்கள் பார்க்கப்படுவதால் இரண்டும் ஒரே தன்மையை அடைகின்றது. அதனால் இரண்டும் ஒன்றுதான் என்று அறிந்து கொள்ள முடிகின்றது.  இதிலிருந்து கனவு பிரபஞ்சம் மித்யா என்று நிரூபிக்கப்பட்டிருப்பதால் விழிப்பு நிலை பிரபஞ்சமும் மித்யா என்று புரிந்து கொள்ளலாம்.

காரிகை6
ஜாக்ரத் பிரபஞ்சம் மித்யா என்பதற்கு இரண்டாவது ஹேது சொல்லப்படுகின்றது.
பார்க்கப்படுவதெல்லாம் மித்யா என்று தெளிவாக சந்தேகமின்றி புரிந்து கொள்ள முடியாமல் இருக்கின்றது.  அழியாத ஒன்றை யாரும் பார்த்திருக்க முடியாது.  எவையெல்லாம் பார்க்கப்படுகின்றதோ அவைகள் மாற்றத்திற்கும், அழிவிற்கும் உட்பட்டதாக இருக்கின்றது.  இவைகள் முதலில் இல்லாமல் இருந்து பின்பு இருப்புக்கு வந்து பின்பு மீண்டும் இல்லாத நிலைக்கு சென்று விடுகின்றது.
ஹேது – ஆதி-அந்த வடிவம் – தோற்றமும் முடிவும் இருப்பதனால், தோன்றி மறையும் தன்மை உடையதனால், அநித்யமாக இருப்பதால், தற்காலிகமாக இருக்கின்றதோ அதுவே பார்க்கப்படுவதாகவும் இருக்கின்றது.  இதையே மித்யா என்றழைக்கப்படுகின்றது.
ஆதாவந்தே யத் ந அஸ்தி – தோன்றுவதற்கு முன்னும், அழிவிற்கு பின்னும் எந்த ஒரு பொருள் இல்லையோ
வர்த்தமானே அபி தத் ததா4 – அந்தப் பொருள் தோன்றிக்கொண்டிருக்கும்போதும், தோன்றிய பின்னரும், அழிவிற்கு பின்பும் கூட இல்லாத நிலையில்தான் இருக்கின்றது.
விததை2ஹி ஸத்ருஷா ஸந்தஹ அவிததா2 இவ லக்‌ஷிதா – நம்மால் அனுபவிக்கப்படும் பொருட்கள் மித்யாவாக இருந்த போதும் உண்மையாக தோன்றுவது போல அறியாமையில் உள்ளவர்களால் கருதப்படுகின்றது

காரிகை7

பூ.ப1 – எது பலனைக் கொடுக்கின்றதோ அவைகள் ஸத்யம், பலனைக் கொடுக்காதவைகள் எல்லாம் மித்யா.  உதாரணம் கானல் நீர் மித்யா, கனவில் காணும் பொருட்கள் அனைத்தும் மித்யா.  ஆனால் விழிப்பு நிலை பொருட்களுக்கு ஆதியும், அந்தமும் இருக்கின்றது, பலனும் இருப்பதால் அவைகள் ஸத்யம்

பதில்  விழிப்பு நிலை பொருட்கள் கனவில் பயன் தராது.  கனவில் காணும் பொருட்கள் விழிப்பு நிலையில் பயன்படுவதில்லை.  ஜாக்ரத் அவஸ்தையில் நன்கு சாப்பிட்ட ஒருவன் கனவில் பசியோடு இருப்பதாக காண்கிறான்.  அதனால் பயனைக் கொடுப்பது மித்யாவல்ல என்று கருத்து ஏற்றுக் கொள்ள முடியாது. அது தவறான கருத்து என்று அறிந்து கொள்ள வேண்டும்.  கனவில் காணும் பொருட்களும், ஜாக்ரத் அவஸ்தையில் காணும் பொருட்களூம் அந்தந்த அவஸ்தையில் பயன்படுகின்றது ஆனால் மற்ற அவஸ்தையில் பயன்படவில்லை. அதனால் அவைகள் பயனை அளித்தாலும் மித்யாதான்.

பூ.ப2   ஜாக்ரத் பிரபஞ்சத்தில் உள்ள பொருட்கள் அந்த அவஸ்தையில் பயனுடையதாக இருக்கின்றது.  ஏன் இதை கனவு நிலைக்கு எடுத்து செல்கிறீர்கள்?

பதில்  ஸ்வப்ன பிரபஞ்சத்தில் காணும் பொருட்கள் பயன்படுவதில்லை என்று நீ கூறுவதற்கு ஜாக்ரத் அவஸ்தையை எடுத்துக் கொள்கின்றாய்.  ஆனால் அவைகள் அந்த பிரபஞ்சத்தில் பயன்படுகின்றது.  அதேபோல நாங்கள் கனவு பிரபஞ்சத்தை எடுத்துக் கொண்டு ஜாக்ரத் அவஸ்தை பொருட்கள் பயனளிக்காது என்று கூறுகிறோம்.  எனவே உனது கொள்கையின்படி ஜாக்ரத் பொருட்கள் பயன்படவில்லை அதனால் அவைகள் மித்யா என்று புரிந்து கொள்.  உன்னுடைய முதல் ஹேது கனவில் காணும் பொருட்கள் பயன்படுவதில்லை என்று சொன்னதும் தவறு. அவைகள் அந்தந்த அவஸ்தையில் பயன்படுகின்றது, வேறு அவஸ்தையில் பயனற்றதாகவும் இருக்கின்றது.

தேஷாம் ஸப்ரயோஜனதா – அவைகளுடைய (ஜாக்ரத்தில் அனுபவிக்கின்ற பொருட்கள்)
பயனளிக்கக்கூடியது என்ற தன்மை
ஸ்வப்னே விப்ரதிபத்யதே – கனவில் வேறுபடுகின்றது, பயனற்றதாக இருக்கின்றது.
தஸ்மாத் ஆத்யந்தவத்த்வேன.- ஆகவே ஆதியும், அந்தமும் கூடியதான ஹேதுவினால்
மித்யா ஏவ கலு தே ஸ்ம்ருதா – அவைகள் மித்யாதான் என்று கருதப்படுகின்றது.

காரிகை8

பூ.ப1   இந்த உதாரணம் சரியாக பொருந்தவில்லை.  ஸ்வப்ன பிரபஞ்சம் மித்யாவல்ல.  நம் மனதிலுள்ள ஸம்ஸ்காரங்கள்தான் கனவில் வருகின்றன.  ஜாக்ரத் அவஸ்தையில் அனுபவங்கள் ஸம்ஸ்காரங்களாக நம் மனதில் பதிந்திருக்கின்றன.  இவைகளின் உதவியால் ஒரு உலகத்தை படைத்து அனுபவிக்கின்றோம்.  எனவே இந்த ஸம்ஸ்காரத்தை ஆதாரமாக கனவு பிரபஞ்சம் இருப்பதால் அவைகள் மித்யா என்று சொல்கிறீர்கள்.  ஆனால் ஜாக்ரத் அவஸ்தையில் அனுபவிக்காத, பார்க்காத பொருட்களும், புதிய பொருட்களும் கனவில் தோன்றுகின்றன. இவைகள் ஸம்ஸ்காரத்திலிருந்து உருவானதில்லையே! எனவே அவைகள் ஸத்யமாகத்தானே இருக்க வேண்டும்.  எனவே கனவு பிரபஞ்சம் மித்யா என்ற உதாரணம் சரியல்ல.

பதில்  இந்த ஜென்மத்திலேயோ அல்லது முற்பிறவியில் ஜாக்ரத் அவஸ்தையில் பார்த்திருப்பாய், அல்லது இந்த ஜென்மத்தில் பார்த்ததையே மறந்திருப்பாய். எனவே கனவில் காண்பது அனைத்தும் அபூர்வ தரிசனமே கிடையாது. ஸம்ஸ்காரத்தில் இருந்துதான் அவைகள் உருவாக முடியும்.

பூ.ப    இப்படி சொல்வதனால் கனவு பிரபஞ்சம் மித்யா என்று சொல்வது சரியாக இருக்கும். ஆனால் இந்த ஹேது ஜாக்ரத் பிரபஞ்சத்தில் பார்ப்பவைகள் அனைத்தும் வாஸனையில் இருந்து வராததாலும், நாம் முன்பு பார்க்காததாலும் அவைகள் ஸத்யம் மித்யாவல்ல.

பதில்  கனவில் அபூர்வமான பொருட்களை பார்க்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.  அப்படியிருந்தும் அவைகளும் மித்யாதான்.  ஒரு மலரை பத்து ஜீவராசிகள் பார்க்கின்றன ஆனால் அந்த மலர் ஒவ்வொரு ஜீவராசிக்கும் விதவிதமாக காட்சி அளிக்கும்.  ஒரு பொருள் நமக்கு எப்படி தெரிகின்றதோ அப்படி தெரிவதற்கு காரணம் நாம் அப்படி பார்ப்பதாலா அல்லது மலர் அப்படி தெரிகின்றதா?  மலர் தோற்றம் பார்க்கும் கண்களைப் பொறுத்திருக்கின்றது. அதேமாதிரி இந்த உலகம் நம் பார்வைக்கு இது மாதிரி காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது.  உண்மையில் உலகம் எப்படி இருக்கும் என்று கேட்டால், அதற்கு பதில் சொல்ல முடியாது. நாம் நம் கண்ணுக்கு தோன்றுவதை வைத்துத்தான் சொல்கின்றோம். ஒரே பொருள் விதவிதமாக புதியதாக தெரிவதற்கு காரணம் அது ஸத்யமாக இருப்பதால் அல்ல.  அபூர்வ தர்ஷனத்திற்கு காரணம் ஸத்ய-மித்யாவல்ல, பார்ப்பவனுடைய இந்திரியங்களின் தர்மம்.  நம்மால் அனுபவிக்கப்படுகின்ற விஷயங்களின் நம்முடைய பிரமாணங்களான இந்திரியங்களை சார்ந்திருக்கின்றது.  பிரமேயமானது பிரமாணத்தை சார்ந்துதான் இருக்கின்றது.  ஒரு பொருள் அப்படி தெரிவதற்கு காரணம் பார்க்கும் கண்ணை பொறுத்திருக்கின்றது.  பிரமாணம் -பிரமாதவை சார்ந்திருக்கின்றது. பிரமாதா ஆத்மாவை சார்ந்திருக்கின்றான்.  எது சுதந்திரமாக இருக்கின்றதோ அது ஸத்யம், எது பரதந்திரமாக (ஒன்றை சார்ந்திருக்கின்றதோ) அது மித்யா.  இதன் அடிப்படையில் நம்மால் பார்க்கப்படுகின்ற அனைத்தும் நம்முடைய கண்ணை சார்ந்திருப்பதால் அவைகள் மித்யா என்று புரிந்து கொள்ளலாம்.

அபூர்வம் ஸ்தானி தர்மஹ – புதியதாக பார்க்கும் பொருள் அப்படி தெரிவதற்கு காரணம் பார்ப்பவனுடைய இந்திரியங்கள், உபாதிகள்தான் காரணம்
யதா4 ஸ்வர்க நிவாஸினாம் – சொர்க்கத்தில் வசிப்பவர்களைப் போல
சொர்க்கத்தில் வசிப்பவர்கள் நாம் பார்க்காத பொருட்களைப் பார்க்கின்றார்கள். ஏனென்றால் அவர்களுடைய உபாதிகள் நம்முடைய உபாதிகளை விட வேறாக இருப்பதினால்.
இந்திரியங்களைப் பொறுத்துதான் இந்த உலகம் நமக்கு காட்சியளிக்கின்றன.  நம் மனம் பக்குவமடைவதை பொறுத்து இந்த உலகம் நமக்கு காட்சியளிக்கின்றது. நாம் எப்படி இந்த உலகத்தை விளக்குகின்றோமோ, விமர்சிக்கின்றோமோ அதுதான் நம்முடைய குணம்.  இந்த உலகம் ஈஸ்வரனாகவே காட்சியளிக்க வேண்டும். நம் மனம் பக்குவமடைந்திருக்கின்றது என்று உணர்ந்து கொள்ளலாம்.

தானயம் ப்ரேக்ஷதே கத்வா – இந்த ஜீவன் கனவு பிரபஞ்சத்திற்குள் சென்று அங்குள்ள அபூர்வ காட்சிகளை பார்க்கின்றான்.
தான் – கனவில் தோன்றுகின்ற புதிய பொருட்கள், காட்சிகள்
அயம் – கனவை பார்ப்பவன், தைஜஸன்
ப்ரேக்ஷதே –  பார்க்கின்றான்
4த்வா – கனவு நிலைக்கு சென்று
யதா4 ஏவ ஹி – எப்படி இந்த ஜாக்ரத் அவஸ்தையில் இருப்பவன்
ஸுஶிக்ஷித – மனிதன் ( நன்கு உபதேசம் செய்யப்பட்டவன்)
வேறு பொருட்களைப்பற்றி தெரிந்து கொள்வதற்கு எங்கு சென்று பார்க்க வேண்டும் என்ற அறிவை அடைந்தவன், அந்த இடத்திற்கு சென்று பார்ப்பதை போல விழிப்பு நிலையில் இருப்பவன் கனவு பொருட்களை பார்க்க வேண்டுமானால் அங்கு சென்றுதான் பார்க்க வேண்டும்.

காரிகை9

பூ.ப3  எல்லோராலும் பொதுவாக அனுபவிக்கப்படுவது சத்யம்.  ஒருவன் மனதினுள்ளே அனுபவிப்பதெல்லாம் மித்யா.  இதன் அடிப்படையில் கனவில் பார்ப்பதெல்லாம் மனதிலிருந்து தோற்றுவிக்கபட்டது எனவே அவைகள் மித்யா.  ஆனால் வெளியே ஜாக்ரத் அவஸ்தையில் நமக்கு வெளியே அனுபவிப்பதெல்லாம் உண்மையானதே

பதில் கனவு பிரபஞ்சம் மித்யா என்று ஒத்துக்கொண்டால். கனவில் பிரபஞ்சத்திலும் உள்ளே வெளியே என்ற அனுபவம் இருக்கின்றது. அது மித்யா என்றும் கூறுகின்றாய். அதே நிலைதான் ஜாக்ரத் அவஸ்தையிலும் உள்ளே-வெளியே என்ற நியமம் இருப்பதனால் இவைகளும் மித்யாவாகத்தானே இருக்க வேண்டும்.  விஸ்வனாக இருந்து கொண்டு தைஜஸன் காண்பதெல்லாம் மித்யா நீ சாட்சியாக இருந்து கொண்டு விஸ்வனைப் பார்த்தால் அவன் காண்பதெல்லாம் மித்யா.

ஸ்வப்ன வ்ருத்தாவபி – கனவு நிலையிலும் கூட
அந்தஹ சேதஸா கல்மிஷம் – உள்ளே மனதில் கற்பனை செய்யப்பட்டதும்
த்வந்த து அஸத் – பொய்யாக இருக்கின்றது
பஹிஹி சேதே க்3ருஹீதம் ஸத் – கனவுக்கு வெளியே மனதினால் அனுபவிக்கப்பட்ட து உண்மையானது
புத்தியினால் கனவிற்கு வெளியே அனுபவிக்கப்படும் விஷயங்கள் உண்மையானது.  ஏனென்றால் வெளியே பார்க்கும் சிங்கம் பயமுறுத்துகின்றது. இவ்வாறு இருக்கும் கனவு பிரபஞ்சத்தை பொய்யென்று ஒத்துக் கொள்கின்றாய்
ஏதத் த்ருஷ்டம் வைதத்2யம் – உள்ளே-வெளியே என்பது கனவிலும் அனுபவிப்பது விழிப்பு நிலையில் பொய்யென்று நன்கு தெரிகின்றது.

சாட்சியாக நான் அனுபவிப்பவனும் அல்ல, ஜகத் அனுபவிக்கப்படும் பொருளும் அல்ல என்று உணர்ந்தவன்தான் ஞானத்தை அடைந்தவன்.

காரிகை10
விழிப்பு நிலையிலும் உள்ளே மனதினால் பார்க்கப்படுவது பொய்யாக இருக்கின்றது.  வெளியே புத்தியினால் அனுபவிக்கப்படுவது உண்மையாக தெரிந்தாலும், யுக்தியினால் பொய்யென்று நினைப்பது சரிதான்.

காரிகை11

பூ.ப4   மித்யா என்று ஒன்றை சொல்ல வேண்டுமென்றால், அதற்கு அதிஷ்டானமாக ஒன்று இருக்க வேண்டும், அதை பார்ப்பவன் ஒருவன் இருந்தாக வேண்டும்.  ஜாக்ரத் அவஸ்தையில் இருக்கும் பிரமாதா, பிரமாணம், பிரமேயம் மித்யா என்று சொல்வதால் ஜாக்ரத் பிரபஞ்சத்தை பார்ப்பவன் யார். இவைகள் உருவாகுவதற்கு ஆதாரமாக இருப்பது எது என்று கேள்வி கேட்கும்போது சூன்யத்தில்தான் வந்து முடியும்.

கனவு நிலை, விழிப்பு நிலை என்ற இரு அவஸ்தைகளிலும் இருக்கின்ற பொருட்கள் அனைத்து பொய்யென்று எடுத்துக் கொண்டால், இந்த பொருட்களை யார்தான் பார்ப்பார்கள் அல்லது அறிவார்கள், யார்தான் இந்த பொருட்களை படைப்பார்கள்.

காரிகை12

பதில் அறிவு ஸ்வரூபமான ஆத்மா அனைத்தையும் இருப்பது போல தோற்றுவித்து இருக்கின்றது.  தன்னையே தன்னிடத்திலே கற்பனை செய்திருக்கின்றது.  இவைகளனைத்தும் தன்னுடைய மாயையினால் செய்திருக்கின்றது. அதுவே அனைத்தையும் அறிகின்றது.  இது வேதாந்தத்தால் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

காரிகை13
ஆத்மாவில் எல்லா ஸ்ருஷ்டிகள் எந்த வரிசையில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கின்றது என்பதை இதில் விளக்கப்பட்டிருக்கின்றது.  முதலில் சூட்சுமமான ஸ்ருஷ்டிகள், பிறகு ஸ்தூலமான பிரபஞ்சம்.

ஆத்மாவானது சூட்சுமமான பிரபஞ்சத்தை முதலில் படைத்தது.  இது மாயையின் துணைக் கொண்டு படைக்கப்பட்டது.  பிரபுவாக (ஈஸ்வரன்) மாறிய ஆத்மா, மாயையை மனமாக கொண்டு இருக்கின்றது.  மனதிற்குள் இருக்கின்ற சூட்சுமமான வஸ்துக்களை ஈஸ்வரன் படைக்கின்றார். நம் சித்தத்தினுள்ளேயிருந்து படைக்கப்படுவது கனவு பிரபஞ்சம்.  ஸ்தூல பிரபஞ்சம் பிறகு படைக்கப்பட்டது.  ஆத்மா மாயையில் அபிமானம் வைக்கும்போது வெளிமுகமாக செயல்படுகின்றார்.  இந்த நிலையிலும் அசம்சாரியாக இருக்கின்றார்.  மாயையிடம் ஆவரணம், விக்ஷேபம் என்கின்ற இரண்டு சக்திகள் இருக்கின்றது. இந்த கிரமத்தில் ஸ்ருஷ்டியானது ஈஸ்வரனால் கற்பனையாக படைக்கப்பட்டது.
காரிகை14

பூ.ப5   கனவு மித்யா என்பது சரி, ஆனால் ஜாக்ரத் மித்யாவல்ல.  கனவில் காணும் பொருட்களின் இருப்பு கனவு கண்டுகொண்டிருக்கும் காலம் வரைதான்.  ஆகவே மித்யா.  ஆனால் ஜாக்ரத் அவஸ்தையில் நாம் பார்க்கின்ற பொருட்கள் அப்படியே இருக்கின்றன, தொடர்ந்து இருந்து கொண்டிருக்கின்றன.  எனவே இது சத்யம்.  சித்த காலம் என்பது ஒரு கனவு காணும் காலம்.  ஜாக்ரத் அவஸ்தையில் இரண்டு காலங்கள் உண்டு.  அவைகள் அனுபவித்த காலம், அனுபவிக்கின்ற காலம். எந்த பொருளுக்கும் இரண்டு காலங்களில் இருக்கின்றதோ அவை தொடர்ந்து இருக்கின்றது என்று நிரூபிக்கின்றது.

பிரத்யபிக்ஞா – ஏற்கனவே பார்த்த ஒன்றை மீண்டும் பார்த்தல்.  ஜாக்ரத் பிரபஞ்சம் பிரதிய பிக்ஞாவிற்கு விஷயமாக இருப்பதால் அது மித்யாவல்ல. இந்த உலகம் தொடர்ந்து இருக்கின்றது எனவே அது சத்யம்.

பதில்-1 கனவிலும் பிரத்யபிக்ஞா இருக்கின்றது.  கனவில் நாம் ஒருவர் வீட்டிற்கு சென்று ஒருவரை பார்க்கின்றோம்.  அவரிடம் காபி வேண்டும் என்று கேட்டு அவர் கொண்டு வந்து கொடுக்கும்போது அந்த நேரத்தில் பிரத்யபிக்ஞா இருக்கின்றது.  அதை நீ மித்யா என்று ஒத்துக் கொள்வதால் ஜாக்ரத் அவஸ்தையில் பிரத்யபிக்ஞா இருந்தாலும், இல்லாவிட்டாலும் மித்யாதான்.  பிரத்யபிக்ஞாவிற்கு ஒரு விருத்தி இடைவெளி போதும் ஒருநாள் இடைவெளி வேண்டும் என்ற அவசியம் இல்லை.

பதில்-2 கனவுக்கு பிராதிபாஸிக சத்யம், விழிப்பு நிலைக்கு வ்யவஹாரிக சத்யம் என்று விழிப்பு நிலை பொருட்களுக்கு அதிக சத்யத்வம் கொடுத்திருக்கின்றோம். ஆனால் முழுமையான சத்யம் கிடையாது.

சித்த காலஹ – கனவில் தோன்றும் பொருட்கள் இருக்கும் காலம், மனதிலிருக்கின்ற எண்ணங்கள் தோன்றி மறையும் காலம்
யே அந்தஹ – மனதுக்குள் பார்க்கும் பொருட்கள்
த்வய கலஹ யே பஹிஹி – ஜாக்ரத் அவஸ்தையில் இருக்கும் பொருட்களுக்கு இரண்டு காலங்கள் ( அனுபவித்தது, அனுபவித்ததையே அனுபவிக்கின்ற காலம்)
கல்பிதா ஏவ தே ஸர்வே – இரண்டும் கற்பனைதான்
விஶேஷ ந அன்ய ஹேதுகஹ – பிரத்யபிக்ஞா என்ற விசேஷமானது ஜாக்ரத் அவஸ்தையில் இருக்கின்றது என்பது சத்யத்தை நிர்ணியிக்கின்ற காரணமாக இல்லை.

கனவு பிரபஞ்சம் அதைக் காண்பவனால் அவை தெரிகின்றது. ஜாக்ரத் நிலையில் நாம் பார்ப்பதால் அவை இருக்கின்றதா அல்லது அவை இருப்பதால் நாம் பார்க்கின்றோமா என்று கேட்டால் இருப்பதால்தான் நாம் பார்க்கின்றோம். அதற்கு இருத்தல் அதிகமாக இருக்கின்றது.  வியாவஹாரிக சத்யம் என்று இதற்குப் பெயர், இதுவும் மித்யாதான்.  பார்க்கப்படுவது அனைத்திற்கும் ஆதியும் அந்தமும் இருப்பதால் அவைகள் மித்யா.  சாஸ்திரப்படி கனவு பிரபஞ்சம், ஜாக்ரத் பிரபஞ்சம் இரண்டுமே ஒன்றுதான்.  இது உத்தம அதிகாரிகளுக்கு ஏற்புடையதாக இருக்கும்.
காரிகை15

பூ.ப6   எது தெளிவாக தெரிகின்றதோ அது சத்யம், தெளிவற்றதாக இருக்கின்றதோ அது மித்யா.

பதில்  கனவு காணும்போது அவைகள் தெளிவாக தெரிகின்றது.  ஆனால் அவைகள் ஜாக்ரத் அவஸ்தையில் பார்க்கும்போது தெளிவற்றதாக இருக்கின்றது.  கனவில் காணும் பொருட்களை பார்ப்பதற்கு தேவையான இந்திரியங்கள் மனதால் உருவாக்கப்பட்டவை அதனால் கனவு பொருட்கள் தெளிவாக தெரியவில்லை. ஜாக்ரத் அவஸ்தையில் இந்திரியங்கள் இயற்கையாக இருக்கின்றதால் பொருட்கள் தெளிவாக தெரிகின்றது.  எனவே சத்ய-மித்யாவினால் இவ்வாறு தெளிவாகவும், தெளிவற்றதாகவும் தெரியவில்லை.

தெளிவாக தெரியாத பொருட்கள் நமக்குள்ளே இருக்கின்றது.  வெளியே இருக்கும் பொருட்கள் தெளிவாக தெரிகின்றது.  அவைகள் அனைத்தும் கற்பனையான காட்சிகள்தான்.  இந்த வேறுபாடு இந்திரியங்களின் வேற்றுமையினால் ஏற்படுகின்றது

காரிகை16
இந்த பிரபஞ்சம், போக்தாவின் அடிப்படையில் போக்தா, போக்யம் என்று இரண்டு விதமாக படைக்கப்பட்டிருக்கிறது. அவைகள் அனுபவிப்பவன்(ஜீவன்), அனுபவிக்கப்படும் பொருள்(ஜகத்)

முதலில் ஜீவன் படைக்கப்படுகின்றான். பிறகு அனுபவிக்கப்படும் விதவிதமான பொருட்கள் படைக்கப்பட்டன.  ஜீவன் என்ற ஆத்மதத்துவத்தின் மீது சூட்சும சரீரம் படைக்கப்படுகின்றது. வெளியே இருப்பது உலகம், உள்ளேயிருக்கும் உலகம் மனதில் இருக்கும் உணர்வுகள். இவ்வாறு இரண்டு விதமான உலகங்கள் படைக்கப்பட்டன. இந்த இரண்டு உலகங்களும் ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றது. மனம் நாம் இருக்கின்ற சூழ்நிலைகளை பொறுத்து இருக்கின்றது.  அதேப்போன்று நாம் இருக்கும் சூழ்நிலை நம் மனதை பொறுத்திருக்கின்றது.  எப்படிபட்ட அறிவு ஒருவனுக்கு இருக்கின்றதோ அதற்கேற்றவாறு சிந்திப்பான்.  எந்தவிதமான சிந்தனைகள் இருக்கின்றதோ, எந்தவிதமான ஸம்ஸ்காரங்கள் இருக்கின்றதோ அதற்கேற்ற வெளிசூழ்நிலையை நோக்கி செல்வோம்.  ஒருவனுக்கு எப்படிபட்ட அறிவு ஏற்படுகின்றதோ, அது வெளி விஷயங்களை அனுபவிப்பதனால் ஏற்படுகின்றது.  அதற்கேற்றபடியான ஸம்ஸ்காரங்கள் அவன் மனதில் பதிவாகின்றது. இதேமாதிரி ஸம்ஸ்காரத்திற்கேற்றவாறு வெளி சூழ்நிலைகள் அமைகின்றது.  இவ்வாறு இரண்டும் ஒன்றையொன்று சார்ந்து இருக்கின்றது.  இந்த உலகத்தை ஒருவன் எப்படி பார்க்கின்றானோ அதிலிருந்து அவனைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

காரிகை17

மங்கலான வெளிச்சத்தில் கயிறானது பாம்பு, நீர்க்கோடு, பூமியின் வெடிப்பு என்று பலவிதமாக கற்பனை செய்யப்படுகின்றது, அதனால் இத் கயிறு என்று நிச்சயம் செய்யாமல் இருக்கின்றோமோ  அதுபோல ஆத்மாவை பலவிதமாக கற்பனை செய்து கொண்டு அதன் உண்மை தன்மையை அறியாமையினால் நிச்சயம் செய்யாமல் இருக்கின்றோம்.

காரிகை18
எவ்வாறு இது கயிறு என்று நிச்சயம் செய்யும்போது அதில் காணப்பட்ட கற்பனை தோற்றங்கள் சென்று விடுகின்றன கயிறு மட்டும் அத்வைதமாக எஞ்சி இருக்கின்றது. அவ்வாறு ஆத்ம விஷயத்தில் அத்வைதத்தை அடைய வேண்டும்,

காரிகை19
என்ன காரணத்தினால் ஆத்மா மீது இத்தனை வகையான கற்பனைகள் செய்யப்பட்டு இருக்கின்றன என்று பார்க்கும்போது அது மாயையினால்தான் என்று புரிந்து கொள்ள வேண்டும். மாயையின் சக்தியினால் ஆத்மாவை பலவிதமாக கற்பனை செய்யப்படுகின்றது. இந்த மாயைதான் அனைத்து விகல்பங்களுக்கும் காரணமாக இருக்கின்றது. ஆத்மாவினுடைய இந்த மாயையினால் ஆத்மாவே மோகத்திற்குட்பட்டு இருக்கின்றது, சம்சாரியாக காட்சியளிக்கின்றது.

காரிகை20
ஈஸ்வரனை அறிபவர்கள் அவரை ஆத்மாவில் ஏற்றி வைக்கின்றார்கள். இவர்கள் ஹிரண்யகர்ப்ப உபாஸகர்கள்.  இங்கே நிமித்த காரணமாக மட்டும் இருக்கின்ற ஈஸ்வரனை அறிபவர்கள். நான்கு பூதங்களான நீர், நிலம், காற்று, நெருப்பு இவைகளை ஸத்யம் என்று நினைப்பவர்கள், குணங்களை அறிந்தவர்கள் குணங்களையும்,  ஆத்மா, அவித்யா, சிவன் என்ற மூன்று தத்துவங்களை அறிந்த சைவ சித்தாந்தகளும் ஆத்மாவை இவ்வாறாகவே கற்பனை செய்து கொண்டிருக்கின்றார்கள்.

காரிகை21
நான்கு பாதங்களான விஸ்வன், தைஜஸன், பிராக்ஞன், துரீயன் இவைகளை அறியாதவர்கள், நாம் அனுபவிக்கின்ற பொருட்கள்தான், விஷயங்கள்தான் ஸத்யம் அவைகள்தான் அதிஷ்டானம் என்று நினைக்கிறார்கள், பூர், புவ, ஸ்வ என்ற மூன்று உலகங்கள்தான் ஸத்யம் என்று நினைக்கிறார்கள், மேலும் தேவர்கள்தான் ( இந்திரன், வாயு, அக்னி ) ஸத்யம் என்று நினைக்கிறார்கள்

காரிகை22
வேதங்களை ஓதுபவர்கள் அதையே ஆத்மா என்று நினைக்கின்றனர்.  இவர்கள் ஓதும் மந்திரத்தின் பொருள் தெரியாமல் உச்சரிப்பவர்கள்.  யாகங்களை செய்பவர்கள் அவைகள்தான் ஆத்மா என்று கூறுகிறார்கள்.  போக்தாவான ஆத்மாதான் அனைத்தும் என்று கூறுகின்றனர்.  அனுபவிக்கப்படுகின்றவைகளே ஆத்மா என்றும் சிலர் சொல்லுகின்றார்கள்.

காரிகை23
அணுவைப் போன்று சூட்சுமமாக இருப்பது ஆத்மா, ஸ்தூல உடல்தான் ஆத்மாவாக
இருக்கின்றது. சிவன், விஷ்ணு, பிரஹ்மா இவர்களில் ஒருவர்தான் ஆத்மா, சூன்யமே

ஆத்மாவாக இருக்கின்றது. இவ்வாறாக ஆத்மாவை சொல்கிறார்கள்.

காரிகை24
காலம்தான் ஆத்மா என்ற கொள்கையுடைவர்கள், திசைகள் (ஆகாசம்) ஆத்மா என்றும், வாதங்கள்தான் ஆத்மாவென்றும், பதினான்கு லோகங்கள்தான் ஸத்யம் அதிஷ்டானம் என்றும் சிலர் ஆத்மாவை சொல்கிறார்கள்

காரிகை25
மனம்தான் ஆத்மா என்றும், புத்திதான் ஆத்மா என்றும், வெளியே பொருட்கள் எதுவும் கிடையாது, மனதில்தான் எல்லாம் இருக்கின்றது.  தர்ம-அதர்ம விதிகள்தான் ஸத்யம்.

காரிகை26
25  தத்துவங்கள்தான் ஸத்யம் என்று ஸாங்க்யர்கள் கூறுகிறார்கள்.  26 தத்துவங்கள்தான் ஸத்யம் என்று யோகமதவாதிகள் கூறுகிறார்கள்.  31 தத்துவங்கள்தான் ஸத்யம் என்றும், கணக்கிலடங்கா தத்துவங்கள்தான் என்று வேறு சிலர் கூறுகிறார்கள்.

காரிகை27
உலகத்தை நன்றாக அனுபவிப்பதுதான் ஸத்யம் என்றும், நான்கு ஆசிரமங்களின் நெறிகள் ஸத்யம் என்றும், மூன்று பால்களை உடைய சப்தங்களின் தத்துவம்தான் ஸத்யம் என்றும், சிலர் பர-அபர பிரம்மன் என்று இரண்டு தத்துவம்தான் ஸத்யம் என்று கூறுகிறார்கள்.

காரிகை28
ஸ்ருஷ்டிதான் உண்மையான தத்துவம் என்றும், லயம்தான் உண்மையான தத்துவம் என்றூம், இருத்தல்தான் உண்மையான தத்துவம் என்றும் வெவ்வேறாக கற்பனையான கருத்துக்கள் ஆத்மாவை பற்றி எல்லா காலத்திலும் இருக்கின்றது.

காரிகை29
எந்த சிஷ்யனுக்கு குருவானவர் எந்த ஒன்றை உண்மையென்று காட்டுகின்றாரோ, அதைதான் அவன் பார்ப்பான், பிறகு அதை பிடித்துக் கொள்வான்.  அது அவனை காப்பாற்றுகின்றது, வேறொரு தவறான கருத்துக்கு செல்ல மாட்டான். குரு சொன்ன கருத்தே சிஷ்யனாகவே மாறி விட்டது.  சிஷ்யன் குரு சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டு மனதில் புரிந்து கொண்டான்.  அந்த தத்துவம் அவனிடம் உறுதியாக மனதில் பதிந்து விட்டது.  அவனிடம் இரண்டற கலந்து விடுகின்றது.  இதிலிருந்து குருவிடம் சிஷ்யன் வைக்க வேண்டிய சிரத்தையை அறிந்து கொள்ள வேண்டும்.

காரிகை30
இந்த ஆத்மாவானது அதனிடமிருந்து வேறுபடாத பொருட்களாக இருந்தாலும், வேறுபடுவது போல கருதப்படுகின்றது, அறியாமையில் இருப்பவர்களுக்கு இவ்வாறு தோன்றுகிறது. உதாரணமாக பாம்பு, பூமியில் வெடிப்பாக தோன்றும் இவைகள் கயிற்றுக்கு வேறாக இல்லை, ஆனால் வேறுபட்ட மாதிரி தெரிகின்றது.  அதுபோல ஆத்மாவின் மீது ஏற்றி வைத்து அனுபவிப்பதெல்லாம் வேறுபட்டதாக இல்லை என்று புரிந்து கொள்ள வேண்டும். ஆத்மாவை புரிந்து கொள்ளாதவர்கள் அறியாமையில் இருப்பவர்களால் இவைகளனைத்தும் வேறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.  இந்த விதத்தில் எவனொருவன் சரியாக ஸ்ருதி, யுக்தி மூலமாக அறிகின்றானோ அவன் வேதத்தின் முழு உபதேசத்தை அறிந்தவனாக ஆகின்றான்.  அவன் வேதாந்தத்தின் பொருளை சந்தேகமில்லாமல் அறிகின்றான்.  வேதத்தின் ஞான காண்டம் உபதேசிக்கின்ற மோட்சத்தை, பிரம்மத்தை அடைகின்றான்.

ஞான காண்டம் – வஸ்து பரம் – ஞானத்தை போதிக்கின்றது
கர்ம காண்டம் – இந்த ஞானத்தை அடைவதற்கு தகுதிபடுத்துகிறது.
இந்த ஞானத்தை அடைவதனால் ஒருவன் முழு மன நிறைவை அடைகின்றான்.  இனி அறிவதற்கு ஒன்றும் இல்லை என்ற நிறைவை அடைகின்றான்.

காரிகை31
இதில் ஸ்ருதி நிச்சயித்த ஜகத் மித்யா என்பதைத்தான் நாம் அனுமானத்தின் மூலமாக நிச்சயித்தோம்.  இந்த உபநிஷத்தின் முடிவை மேலும் நம் புத்தியில் உறுதியாக்க செய்யும் யுக்திக்கு ஸ்ருதி ஸம்மத யுக்தி என்று கூறுவர்.
உதாரணமாக:-
நேஹ நானா அஸ்தி கிஞ்சன – இங்கு ஆத்மாவை தவிர வேறொன்றுமில்லை,
நது தத் த்வீதியம் அஸ்து -இங்கு இருமைகள் கிடையாது.
இந்திரஹ புருரூபஹ மாயாபிஹி – ஈஸ்வரன் மாயையினால் இருமைகளை தோற்றுவித்திருக்கின்றார்.

கனவு பிரபஞ்சத்தை இந்திர ஜாலத்துடன் ஒப்பிட்டு அதை  மித்யா என்று உறுதி செய்தோம்.  கந்தர்வ நகரமும், பொய்யாக பார்க்கப்படுகின்றது என்று பேசப்பட்டது என்று உறுதி செய்தோம்.  அவ்விதம் இந்த உலகம் நம்மால் பார்க்கப்படுகின்றது. அது போல இந்த ஜகத்தும் மித்யா என்று உறுதி செய்தோம். வேதாந்தத்தின் மூலமாக ஞானம் அடைந்த ஞானிகளால் ஜகத்தானது இவ்விதம் பார்க்கப்படுகின்றது.  இவ்விதம் ஜகத் மித்யா என்று ஸ்ருதி மூலமாகவும், யுக்தி மூலமாகவும் உறுதி செய்யப்படுகின்றது.

காரிகை32 (***)
இறப்பு, பிரளயம், லயம் என்பது இல்லை.  பிறப்பு என்பதும் இல்லை. சம்சாரி என்பவன் யாரும் இல்லை, பந்தப்பட்டவனாகவும் யாருமில்லை.  சாதகனும் இல்லை, முயற்சி செய்பவன் யாருமில்லை. முமுக்ஷு என்பவனும் கிடையாது, மோட்சத்தை அடைய விரும்புவனும் இல்லை, முக்தனும் உண்மையில் கிடையாது. இருமைகள் என்பது எதுவும் கிடையாது என்று குறிப்பிடுகின்றார்.  அனைத்து வைதீக, லௌகீக விவகாரங்கள் எதுவும் கிடையாது.  அப்படி ஏதாவது இருக்கிறது என்று நினைத்தால் அறியாமையில் இருக்கின்றோம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

பிறப்பும், இறப்பும் உண்மையில் நடக்கவில்லை. எனவே துயரம் என்பது வருவதற்கு வாய்ப்பே இல்லையென்றாகிறது.  நம்மை பந்தப்படுத்துவதற்கு எந்தவித காரணமும் இல்லை.  துயரம் இருந்தால்தானே அதை நீக்குவதற்கு ஏதாவது ஸாதனத்தை உபயோகிக்க வேண்டும்.  ஆனால் துயரமே இல்லையென்றாகி விட்டபிறகு ஸாதகனும் இருக்க மாட்டான்.  மேலும் இவைகள் இல்லை ஆதலால் முமுக்ஷுவும் இல்லை, முக்தனும் இல்லை.  இதுதான் அடிப்படையான உண்மை. உத்பத்தி இல்லை என்று சொல்வதற்கு காரணம் இருமை இல்லாததினால் (த்வைத அபாவத் உத்பத்தி அபாவத்).

சங்கரரின் த்வைதம் மித்யா என்ற கூற்றின் விளக்கம்:

  •       மன அதீனவாத்– மனதை சார்ந்து அவைகள் இருப்பதனால் இருமை மித்யா.  பொதுவாக எந்தவொன்று மற்றொன்றை சார்ந்திருக்கின்றதோ அது மித்யா.  நிழல் நிஜத்தின் மித்யா.  இதன் அடிப்படையில் பார்க்கும்போது பார்க்கின்றவைகள் மித்யா என்று தெளிவாகின்றது.  மனம் விழித்திருக்கும்போதுதான் இந்த ஜகத் தோன்றி கொண்டிருக்கின்றது.  அது உறங்கிவிட்டால் ஜகத் மறைந்து விடுகின்றது.  மனம் சாட்சி சைதன்யமான ஆத்மாவை சார்ந்திருக்கின்றது.  எனவே மனமும் மித்யா என்று தெரிகின்றது. ஆகவே இந்த ஜகத் உண்மையில் இல்லை.
  •       இந்த பிரபஞ்சத்தை சாதன-சாத்தியம் என்று இருவகையாக பிரித்துவிடலாம். ஒருவன் சாதன, சாத்தியம் என்று எதுவும் இந்த பிரபஞ்சத்தில் இல்லையென்று உணர்ந்து விட்ட நிலையில் அவன் முக்தனாக இருப்பான்.  அவனுக்குத்தான் இந்த பிரபஞ்சம் மித்யாவாகி விட்டது. இந்த தத்துவத்தை புரிய வைப்பதற்காக கௌடபாதர் இவ்வாறு கூறியிருக்கின்றார். இவைகள் நமக்கு சத்தியமாக தெரியும் வரையில் அவைகள் மித்யா என்று கூறமுடியாது.
  •       மூன்றுவிதமான உண்மைகள் உண்டு. அவைகள்

பிரதிபாஸிகம் – எது ஒன்றை மட்டும் சார்ந்திருக்கின்றதோ அவைகள் பிராதிபாஸிக உண்மையாகும், (உ-ம்) கனவு அதை அனுபவிக்கும் ஒருவனை சார்ந்திருக்கின்றது, கயிற்றில் தோன்றும் பாம்பானது கயிற்றை சார்ந்திருக்கின்றது

வியாவஹாரிக – அனைவரையும் சார்ந்திருப்பதாக இருந்தால் அவைகள் வியாவஹாரிக சத்தியம் என்று அழைக்கப்படும். (உ-ம்) ஜாக்ரத் பிரபஞ்சம். இவையிரண்டும் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் உண்மைகள்,

பாரமார்த்திகம் – சுதந்திரமாக இருத்தல், எதையும் சாராமல் தனித்து இருந்து கொண்டு இருத்தல்.  நீ இருக்கின்றாயா என்று கேட்டால், நான் இருக்கின்றேன் என்று சொல்லும் போது எந்த பிரமாணத்தையும் நாம் உபயோக்கிக்கவில்லை.  அந்த நான் என்கின்ற ஆத்மா ஒன்றுதான் பாரமார்த்திக சத்யம். ஒரு பொய் தெரிவதற்கு ஆதாரம் இருக்க வேண்டும், அந்த ஆதாரம்தான் பாரமார்த்திக சத்யம்.  இந்த பொய்யான ஜகத் மெய்யான ஆத்மாவை நிரூபிக்கின்றது.

காரிகை33
அஸத் பிஹி பா4வைஹி – இல்லாத  பிரபஞ்சத்தினால்
அயம் கல்பிதஹ – இந்த ஆத்மாவானது கற்பனை செய்யப்பட்டிருகின்றது.
அத்வையேன – இரண்டற்றதாகவும் கற்பனை செய்யப்பட்டிருக்கின்றது
இந்த ஆத்மாவானது இந்த உலகத்துக்கு ஆதாரமாகவும், இரண்டற்றதாகவும் கற்பனை செய்யப்பட்டிருக்கின்றது
பாவாஹ அபி – பொய்யான இந்த பொருட்கள்
அத்வையேன ஏவ – ஆத்மாவிடத்தில் அத்வைதமாக இருக்கின்றது
தஸ்மாத் அத்வயதா ஶிவா – அந்த பரம்பொருளே மங்கலம், முடிவானது, பயமற்ற நிலை

பூ.பக்ஷம் – த்வைதம், அத்வைதம் இரண்டும் உண்மையென்று வைத்து கொள்ளலாம்.  ஆத்மா சாமான்யமாகவும், விசேஷமாகவும் இருக்கின்றதாக வைத்துக் கொள்ளலாம்.
பதில் – அப்படி இருக்க முடியாது.  விசேஷமானவைகள் மித்யா, சாமான்யவைகளும் மித்யா

காரிகை34
ந ஆத்ம பாவேன நான இதம் – நமக்கு தெரிகின்ற இருமையானது ஆத்மாவுடன் சேர்ந்து இல்லை.
ச ஸ்வேன அபி ச கதஞ்சன – எந்த விதத்திலும் அது தனித்தும், சுதந்திரமாகவும் இல்லை.
ந ப்ருதக் – ஆத்மாவுக்கு வேறாகவும்
ந அப்ருதக் – ஆத்மாவுக்கு வேறில்லாதவாகவும் இருமைகளை சொல்ல முடியாது
எதை விளக்க முடியாதோ அது மித்யா என்று புரிந்து கொள்ள வேண்டும்.
இதி தத்விதஹ விதுஹு– உணமையை அறிந்தவர்கள்தான் இவ்வாறு புரிந்து கொள்வார்கள்.

காரிகை35
வீத ராக பய க்ரோதம் – ஆசை, பயம், க்ரோதம் இப்படிபட்ட குணங்கள் நீங்கியிருப்பவர்களால்தான் மேலே சொன்ன கருத்தை புரிந்து கொள்ள முடியும். இந்த குணங்களை நீங்கிய அந்தக்கரணத்தினால் தகுதி அடைந்தவர்கள்தான் இந்த கருத்தை புரிந்து கொள்ள முடியும்.
ராகம் – நம்மால் விருப்பமானது என்று நினைக்கப்பட்ட பொருளை பார்க்கும்போது வருவது
பயம் – விரும்பிய ஒன்று கிடைக்குமோ, கிடைக்காதோ என்று நினைக்கும்போதும், அடைந்த ஒன்று நம்மை விட்டு சென்று விடுமோ என்ற நிலையில் வரும் உணர்ச்சி
க்ரோதம் – நாம் ஆசைப்பட்ட பொருளை அடைய தடையாக இருப்பவர்கள் மீது வரும் உணர்ச்சி.
முனிபிஹி – முனிவர்களால், உபநிஷத்தை மனனம் செய்பவர்களால்
வேதபாரகை4ஹி – வேதத்தை கற்றுணர்ந்தவர்கள், உபநிஷத்தை சிரவணம் செய்பவர்களால்
நிவிகல்பஹ அயம் த்ருஷ்ட – பூரணமான இந்த ஆத்மாவை அவர்களால் பார்க்கப்படுகின்றது
ப்ரபஞ்ச உபஶமஹ – இந்த ஜகத் மித்யா என்றும் பார்க்கப்படுகின்றது.
அத்வயஹ – இரண்டற்ற ஆத்மா பார்க்கப்படுகின்றது.

காரிகை36
தஸ்மாத் ஏவம் விதித்வா ஏனம் – ஆகவே இங்கு கூறியபடி ஆத்மாவை சரியாக இவ்விதம் அறிந்து
அத்வைதே யோஜயேத் ஸ்ம்ருதிம் – நம்முடைய மனதை அத்வைத தத்துவத்தில் நிறுத்த வேண்டும்
இந்த உலகத்திலுள்ள அனைத்தும் மித்யா என்பது மனதில் உறுதியாக இருக்க வேண்டும்.  புத்தியில் பதிந்த அத்வைத தத்துவத்தை மனதிற்குள் கொண்டுவர வேண்டும்.
அத்வைதம் ஸம் அனுப்ராப்ய – அத்வைத தத்துவத்தை நன்கு உணர்ந்தவனாக, அடைந்தவனாக நிதித்யாஸனத்திற்கு பிறகு பலனை அடைந்தவனாக
ஜடவத் லோகம் அசரேத் – ஒரு ஜடம் போன்று இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிரு.
ஜடம் போன்று என்பது அறியாமையில் இருக்கின்றதை போன்று என்று குறிப்பிடுகின்றார்.

காரிகை37
நிதித்யாஸனம் செய்து முடித்த பிறகு இதுவரை பயன்படுத்திய சாதனங்களையெல்லாம் விட்டுவிட வேண்டும்.  பிராரப்தத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டவனாக இருக்க வேண்டும்.  பிரம்ம ஞான நிஷ்டை அடைந்தவன்
நிஸ்துதிஹி – அனைத்து பிரார்த்தனைகளையும் விட்டுவிட வேண்டும்
நிர்நமஸ்காரஹ – யாரையும் வணங்கத்தேவையில்லை, யாகங்கள், பூஜைகள் செய்ய தேவையில்லை
நிஹ்ஸ்வதாகார ஏவ ச – மேலும் கர்மங்களையும் செய்ய வேண்டாம்
யதிஹ – இந்த முக்தன்
யாத்ருச்சிகோ பவேத் – எது கிடைக்கின்றதோ அதில் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றான்

காரிகை38
பிரமாத – கவனக்குறைவு,
அப்பிரமாத – கவனக்குறைவாக இருக்கக்கூடாது
தத்வம் ஆத்யாத்மிகம் த்ருஷ்ட்வா – ஜீவனுக்குள் இருக்கின்ற உண்மையான ஆத்மாவை உணர்ந்து
தத்வம் த்ருஷ்டா து பாஹ்யதஹ – வெளியே இருக்கின்ற பிரம்மத்தை அறிந்து உணர்ந்து
தத்வீபூதஹ – அந்த தத்துவ ஸ்வரூபமாகவே மாறியவனாக
ததா3ராமஹ – அதிலேயே மகிழ்ந்திருப்பவனாக
தத்வாதி அப்ரச்யுதஹ பவேத் – அதிலிருந்து கவனக்குறைவால் வீழ்ந்துவிடாதவனாக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
 

அத்தியாயத்தின் சுருக்கம்

ஜகத் மித்யா என்று நிலைநாட்டுவதற்கு பிரதானமாக அனுமானம் பயன்படுத்தபட்டது.  இதை நிச்சயம் செய்வதற்கு கனவு பிரபஞ்சம் உதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட்டது.  கனவு பிரபஞ்சம் மித்யா என்று நிரூபிக்கப்பட்டது.  ஜகத் மித்யா என்பதை நிரூபிக்க இரண்டு ஹேது கொடுக்கப்பட்டது.  பார்க்கப்படுவதெல்லாம் மித்யா என்றும், ஆதியும்-அந்தமும் உடையவை எல்லாம் மித்யா என்பது அவைகள். ஆறு சந்தேகங்களுக்கு பதிலளிக்கப்பட்ட து.

  •       எவையெல்லாம் பயனுடையதோ அவைகள்தான் சத்யம் என்று எடுத்துக் கொள்ளவும் என்ற கேள்விக்கு,கனவில் காணும் பொருட்கள் கனவிலும் பயனளிக்கின்றது, கனவு மித்யா என்று நீயே ஒத்துக் கொள்வதால், விழிப்பு நிலையிலுள்ள பொருட்களும் மித்யா என்று உறுதியாகின்றது.
  •       கனவில் நாம் புதியதாக பொருட்களைப் பார்க்கின்றோம் எனவே அது ஸத்யம். எவை எல்லாம் புதியதாக தெரிகின்றதோ அவைகள் பார்ப்பவனின் தர்மத்தை பொறுத்திருப்பதால் எனவே இந்த கேள்வியும் சரியல்ல
  •       எவைகள் வெளியே இருக்கின்றதோ அவைகள் ஸத்யம்,உள்ளே தெரிந்தால் மித்யா என்று சொன்னால், உள்ளே, வெளியே என்ற நிலை கனவிலும் இருப்பதால் இந்த வாதமும் சரியல்ல
  •       எல்லாமே மித்யா என்று கூறினால்,சூன்யவாதம் வந்து விடுமே என்று கேட்டால், வேதாந்தம் எல்லாவற்றிற்கும் ஆதாரமாக ஆத்மா இருக்கின்றது என்று கூறியிருப்பதால், இந்த சூன்யவாதமும் சரியல்ல
  •       கனவில் காணும் அனைத்துப் பொருட்களும் நாம் பார்க்கும் காலத்தில் மட்டும்தான் இருக்கின்றது. ஜாக்ரத் நிலையில் முதலில் ஒன்றை பார்க்கின்றோம், கொஞ்ச நாள் கழித்து அதையே பார்ப்பதால் அதன் தொடர்ச்சி இருப்பதால் அவைகள் சத்யம் என்று சொன்னால் கனவிலும் இந்த நிலை இருக்கின்றது என்பதுதான் பதில்.
  •       கனவில் பொருட்கள் தெளிவாக தெரியவில்லை எனவே மித்யா,ஜாக்ரத் அவஸ்தையில் தெளிவாக இருக்கின்றது எனவே ஸத்யம் என்று சொன்னால், தெளிவு-தெளிவற்றது என்ற பேதங்கள் பயன்படுத்தும் இந்திரியங்களின் சக்தியை பொறுத்திருக்கின்றது என்பதுதான் பதிலாக இருக்கின்றது.

 16-18  ஸ்ருஷ்டியின் கிரமம் சொல்லப்பட்ட்து.  அக்ஞானத்தை நீக்க ஆத்ம ஞானம்தான் சாதனம்.

19-28  ஆத்மா மீது ஏற்றி வைக்கப்பட்ட விதவிதமான கற்பனைகள் சொல்லப்பட்டது

29     மித்யா ஞானம் – தவறான அறிவு. 1. இந்த தவறான அறிவு மற்ற தவறான அறிவிலிருந்து காப்பாற்றுகின்றது. 2. உண்மையான அறிவு, ஆத்ம ஞானத்தை அடைவதற்கு தடையாக இருப்பது மட்டுமில்லாமல், சம்சாரத்திலேயே வைத்திருக்கும்.

30     ஸம்யக் ஞானத்தின் பலன் – சரியான அறிவு – மோட்சத்தைக் கொடுக்கும், சந்தேகமின்றி வேதாந்தத்தை அறிகின்றான்.  மனநிறைவை அடைகின்றான்

31     ஸ்ருதியே ஜகத் மித்யா என்று அறிந்து கொள்வதற்கு மூலமாக இருக்கின்றது.

32-34   உபஶம்ஹார – எதுவும் இல்லை என்றுக்கூறி ஆத்மா ஒன்றுதான் ஸத்யம் என்று சொல்லப்பட்ட து.

35-38  இந்த ஞானத்தை அடைவதற்கு எந்த சாதனத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை விவரித்திருக்கின்றார். அதிகாரித்வம், சிரவணம், மனனம், நிதித்யாஸனம் என்ற சாதனங்களை கூறியிருக்கின்றார். ஞான நிஷ்டன் எப்படி வாழ்வான் என்பதை கூறியிருக்கின்றார்.  நான் ஞானி என்று யாரிடமும் காட்டிக் கொள்ளக்கூடாது.  ஞானம் அடைந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

மாண்டூக்ய உபநிஷத் – பகுதி5

அத்தியாயம் 3 (அத்வைத பிரகரணம்)

முகவுரை
ஆத்மா காரணமாகவும் இல்லை என்று கூறுகிறார்.
 காரிகை1
இருமையை விலக்குதல். உபாஸகன், உபாஸக தேவதை(பிரம்மன்) என்கின்ற இந்த த்வைதம் நீக்கப்படுகின்றது.  உபாஸனையின் பலன் மனம் ஒருமுகப்படுத்தப்படும்.  சித்த ஏகாக்ரகத்திற்காக இந்த த்வைதத்தை நிந்தனை செய்யவில்லை.  இது மோட்சத்தை அடைவதற்கு ஒரு படியாக கருதப்படுகின்றது.
 பூ.பக்ஷம் பரம்பொருள் இரண்டு தன்மைகளுடன் இருக்கின்றது.  1. காரண ரூபம், பிறப்பற்றது (அஜம்), 2. இதிலிருந்து பிரபஞ்சம் தோன்றியது. பரம்பொருளே பிரபஞ்சமாக பரிணாமத்துடன் இருக்கிறது. பிறப்புடைய பரம்பொருள் இப்போது தோன்றிய பிரம்ம ஸ்வரூபத்துக்குள் இருக்கின்றன.  இதுவே சம்சாரம் இதிலிருந்து விடுபட்டு அஜாத பிரம்மத்தை அடைய வேண்டும்.  அதற்காக அந்த பிரம்மத்தை உபாஸனை செய்து அதை அடைய வேண்டும்.  இதுதான் மோட்சம்.  என்னுடைய உண்மையான ஸ்வரூபம் அஜாத பிரம்மம். அதை அடைய உபாஸனை மூலம் ஜாத பிரம்மத்திலிருந்து விடுபட வேண்டும். ஒருவன் எதை குறித்து தியானிக்கின்றானோ அந்த ஸ்வரூபமாக மாறி விடுகின்றான்.  மீமாம்ஸயில் இது ஏற்றுக் கொள்ளபட்ட நியாயம்.

உபாஸான ஆஸ்ரிதோ த4ர்மஹ – உபாஸகர்கள் உபாஸனையை சார்ந்திருக்கின்றான், உபாஸனையை சாதனமாக எடுத்துக்கொண்டவன், பரம புருஷார்த்த்த்தை அடைவதற்கான சாதனமாக உபாஸனை செய்பவர்கள்.
ஜாதே பிரஹ்மணி வர்த்தே – பிறந்த பிரம்மனிடத்தில் இருக்கின்றான். தோன்றிய இந்த உலகமாக இருக்கின்ற பிரம்மத்திடம் அபிமானமுடையவனாக இருக்கின்றான்.
ப்ராக் உத்பத்தேஹே – இந்த தோன்றுவதற்கு முன்பு
ஸர்வம் அஜம் – அனைத்தும் பிறப்பற்றதாக இருந்தது, பிறவாத பிரம்மனாக இருந்தது.
நான் உபாஸனையில் மூலமாக பிறவாத பிரம்மத்தை அடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் த்வைத புத்தியுடன் இருக்கின்றார்கள்.
தேன– ஆகவே; இப்படிபட்ட பொய்யான அறிவை கொண்டிருக்கும்
அஸௌ – இந்த உபாஸகன்
க்ருபணஹ ஸ்ம்ருத – பரிதாபத்திற்குரியவனாக கருதப்படுகின்றான்.
கார்பண்யம் – பரிதாபத்துக்குரிய தன்மையுடன் இருப்பது, மனநிறைவின்மையுடன் இருப்பது

காரிகை2
அதஹ – ஆகவே, என்ன காரணத்தினால் தோன்றிய இந்த உலகத்தின் மீது அபிமானத்துடன் இருப்பவன், பரிதாபத்துக்குரியவனாக இருக்கின்றான் என்பதை
வக்ஷ்யாமி – நான் சொல்லப்போகிறேன்.
அகார்பண்யம் – பிரம்மம் கார்பண்யமற்றது, சம்சாரமற்றது
அஜாதி – பிறப்பற்றது
ஸமதாம் கதம் – பூரணமாக இருப்பது, நிர்குண ஸ்வரூபமாக இருப்பது.

அஜாதியின் விசாரம்:

பிரம்மன் பிறப்பற்றது என்று நிலை நாட்டப்படுகின்றது.  அஜாத வாதம் இங்கு பயன்படுத்தப்படுகிறது.  பிரம்மன் அத்வைதம் என்றூ நிரூபிப்பதற்கு இரண்டு தன்மைகள் இருக்கின்றது என்று நிலை நாட்ட வேண்டும். அவைகள்,

  1. அகாரணம் பிரஹ்ம– பிரம்மத்திற்கு காரணம் எதுவும் இல்லை, அது தானாகவே இருக்கின்றது, எதிலிருந்தும் தோன்றவில்லை.  எந்த பிரம்மத்திற்கு பிறப்பில்லையோ அதற்கு அஜாதி என்று பெயர்.
  2. எந்த பிரம்மனிடமிருந்து எதுவும் தோன்றவில்லையோ அது அஜாதி என்றழைக்கப்படும்.

பிரம்மத்திடமிருந்து எதுவும் தோன்றவில்லை என்று நிரூபித்து விட்டால் இந்த த்வைதம் நீங்கி பிரஹ்மன் அத்வைதம் என்று உறுதியாகி விடும்.  அதுதான் இந்த அத்யாயத்தில் செய்யப்படுகின்றது.  பிரம்மத்திடமிருந்து எதுவும் தோன்றவில்லையென்றால் தோன்றிக் கொண்டிருக்கும் இந்த உலகத்தை பற்றி என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டால், அதன் இருப்பு இல்லையென்றும் அனுபவம் இருந்து கொண்டுதான் இருக்கின்றது.  ஸ்ருஷ்டியின் இருப்பை நீக்கினால் அதை எப்படி அனுபவிக்க முடியும்.  கயிற்றில் தோன்றும் பாம்பு இருக்கின்றது, அதையும் அனுபவிக்கின்றோம்.  உண்மையில் பாம்பு இல்லை, அதேபோல ஸ்ருஷ்டியும் இல்லை ஆனால் அனுபவிக்கின்றோம். இதைத்தான் மித்யா என்று கூறப்படுகின்றது.

யதா கிஞ்சித் ந ஜாயதே – எவ்விதத்தில் எதுவும் தோன்றவில்லையோ அது விளக்கப்படுகின்றது.
ஜாயமானம் – தோன்றியது போல தெரிந்து கொண்டிருக்கும் அனைத்தும்
ஸமந்ததஹ – நம்மை சுற்றி எல்லாவிடத்திலும்
‘நம்மை சுற்றி எல்லாவிடத்திலும் தோன்றியது போல தெரிந்துக் கொண்டிருக்கும் அனைத்தும் எவ்விதத்திலும் தோன்றவில்லை என்பதை விளக்கப்படுகின்றது.

காரிகை3
தோன்றியது போல் காட்சியளித்துக் கொண்டிருப்பதை, போக்த்ரு பிரபஞ்சம் என்றும், போக்யம் ப்ரபஞ்சம் என்றும் இரண்டாக பிரிக்கப்படுகின்றது.  ஜீவன் போக்த்ருவாகவும், உலகம் போக்யமாக இருக்கின்றது.
பக்ஷம் – ஜீவன்
சாத்தியம் – தோன்றவில்லை
ஹேது – பிரம்மத்திடமிருந்து வேறாக இல்லாத காரணத்தினால்
த்ருஷ்டாந்தம் – ஆகாசம். இது ஒன்றுதான்.  இதற்கு சிறியது, பெரியது என்ற குணங்கள் கிடையாது. விதவிதமான சிறியதும், பெரியதுமான பானைகள் இருக்கின்றன.  எல்லா பானைகளுக்குள்ளும் ஆகாசம் இருந்தாலும் அதனுடைய கொள்ளளவு வைத்து சிறிய ஆகாசம், பெரிய ஆகாசம் என்று தோன்றுகிறது.  பானை தோன்றியதும்தான் அது சிறியதாகவும், பெரியதாகவும் நம் அனுபவத்திற்கு வருகின்றது.  ஆனால் உண்மையில் அது ஒன்றாகத்தான் இருக்கின்றது. பானைகளுக்கு வெளியே இருக்கும் ஆகாசம் மகாகாசம் என்று அழைக்கப்படுகின்றது.

முழுமையான ஒன்றாக இருக்கும் ஆகாசம்  – பிரம்மன்

                                பானைகள்  – ஜீவன்

           பானைக்குள் இருக்கும் ஆகாசம்  – ஜீவனுக்குள் இருக்கும் ஆத்மா.

பானைக்குள் ஆகாசம் எப்படி தோன்றியதோ அதுபோல ஜீவன் தோன்றிய போது அதற்குள் பிரம்ம சைதன்யம் இருப்பதாக தோன்றுகிறது.


ஆகாஶ கடாகாஶை இவ உதிதஹ – மகாகாசமானது பானைக்குள் இருக்கின்ற ஆகாசமாக தோன்றியது போல் இருக்கின்றது.
ஆத்மா ஹி ஜீவைஹி – பரமாத்மாவானது ஜீவர்களுக்குள் தோன்றியது போல் இருக்கின்றது.
க3டாத்வத்     – பானைகளைப்போல் ஆகாசம் காட்சியளிக்கின்றது.
சங்கா4தைஹி – ஸ்தூல சூட்சும சரீரங்களாக பரமாத்மா காட்சியளிக்கின்றது.
ஜாதாவ்        – பிறப்பைப்பற்றிய விஷயத்தில்
ஏதத் நிதர்ஶனம்– இதுதான் உதாரணத்தில் விளக்குகின்றது

இங்கு பானைகள் ஜீவர்களையும், ஆகாசமானது பரமாத்வையும் குறிக்கின்றது.  பானைதான் தோன்றியுள்ளது ஆகாசமல்ல அதுபோல ஜீவர்கள்தான் தோன்றியிருக்கின்றார்கள் பரமாத்மாவல்ல என்று புரிந்து கொள்ள வேண்டும்.

நம் உடலை உலகமாக எடுத்துக் கொண்டு அது இல்லை என்று நிரூபித்துவிட்டால் இந்த உலகமும் இல்லை என்று நிரூபணமாகி விடும்.  இதற்கு முதலில் பானை தோன்றவில்லை என்று நிரூபிக்க வேண்டும்.  காரணம் + நாமரூபம் = காரியம் என்ற நியதி இருக்கின்றது.  காரணம் காரியத்திற்கு வேறாக இல்லை.  காரியத்தை ஒரு பொருளாக கருதமுடியாது. களிமண்ணில் சில பானைகள் செய்யப்பட்டுள்ளன.  இவைகளனைத்திலும் களிமண்தான் இருக்கின்றது, ஆனால் அதனுடன் நாம, ரூபங்கள் வந்துள்ளது.

ஆத்மா தன்னுடைய மாயா சக்தியினால் ஆகாசத்தை தோற்றுவித்தது.  ஸ்ருஷ்டி கிரமப்படி ஆகாசம் முதலில் தோன்றியது எனவே இது கடைசியில் தோன்றிய ஜடமான ப்ருதிவிக்கு காரணமாக இருக்கின்றது. இதிலிருந்து காரியமான ப்ருதிவி இல்லை அதனால் ஜடமான களிமண்ணும் இங்கு கிடையாது என்று நிரூபணமாகின்றது. ப்ருதிவி ஆகாசத்திலிருந்து வேறாக இல்லாததால், ஆகாசமே பானையாக காட்சியளிக்கின்றது.  இதைப்போல பரமாத்மாவிலிருந்துதான் மாயையின் சக்தியினால் இந்த சரீரங்கள் தோன்றியுள்ளது  உண்மையில் சரீரங்களும் கிடையாது, ஆத்மாவே இவ்வாறு காட்சி அளிக்கின்றது. நாம-ரூபமே மாயை என்று புரிந்து கொள்ள வேண்டும். இந்த ஆத்மாதான் ஜகத்தாக காட்சியளிக்கின்றது.

காரிகை4
ஜீவன் இறப்பதில்லை என்பதுதான் இதில் சொல்லப்படுகின்றது.
4டாதிஷு ப்ரலீனேஷு – பானை போன்ற உபாதிகள் அழிவை அடையும்போது
கடகாஶ ஆதயஹ      – பானைக்குள் இருக்கின்ற ஆகாசம்
யதா ஆகாஶே          – மகாகாசத்திற்குள்
ஸம்ப்ரலீயந்தே         – எப்படி அவைகள் ஒன்றாகி விடுகின்றதோ
தத்வத்                  – இதை போல
ஜீவா இஹா ஆத்மனி   – ஜீவர்கள் இந்த பரமாத்மாவிடம் ஒடுங்குகின்றார்கள்
சரீரங்கள் அழியும் போது அதற்குள் இருக்கின்ற ஆத்மா பரமாத்வோடு ஒன்றாகி விடுகின்றது.  இதிலிருந்து ஜீவன் தோன்றவுமில்லை, அழியவுமில்லை என்று புரிந்து கொள்ளலாம்.

காரிகை5
பரமாத்மாவே எல்லா ஜீவர்களிடம் இருக்கின்றார். ஆனாலும் ஒவ்வொரு ஜீவனுக்கும் விதவிதமான அனுபவங்கள் இருக்கின்றதே? என்ற சந்தேகம் எழுகின்றது.  வெவ்வேறு இடங்கள், விதவிதமாக அனுபவிக்கின்றோமா?. உதாரணமாக அசுத்தமான பானையில் இருக்கும் ஆகாசம் ஒருவிதமாகவும், சுத்தமாக இருக்கும் பானையில் இருக்கும் ஆகாசம் ஒருவிதமாகவும் இருப்பதாகவும் காண்கின்றோம்.  இது உபாதிகளின் குணத்தை ஆகாசத்தில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கின்றது.  அதேபோல சரீரத்தில்தான் சுக-துக்கங்கள் இருக்கின்றது, ஆத்மாவுக்கு கிடையாது.

யதா ஏகாஸ்மின் கடாகாஶே – எவ்வாறு ஒன்றாக இருக்கின்ற பானைக்குள் இருக்கும் ஆகாசம்
ரஜஸ் தூமாதிபிஹி – அழுக்கும், புகைகள் போன்றவை உள்ள பானைக்குள்
யுதே – சம்பந்தப்பட்டிருந்தாலும்
ந ஸர்வே ஸம்ப்ரயுஜயந்தே – எல்லா ஆகாசத்திலும் இதே சம்பந்தம் இருக்கும் என்று சொல்ல மாட்டோம்.  ஏனென்றால் அழுக்கு, புகை இவைகளெல்லாம் பானையை சேர்ந்தது.  எனவே அவைகளுக்கும் ஆகாசத்திற்கும் சம்பந்தமில்லை என்று சொல்வதை போல
தத்வத் – இதுபோல,
ஜீவா – ஜீவர்களின்
ஸுகாதிவி – சுக-துக்கங்கள் ஜீவனைச் சேர்ந்தது
ஜீவர்களிடத்தில் உள்ள சுக-துக்கங்களை ஆத்மா பிரகாசப்படுத்துகின்றது.  ஆனால் எந்தவித சம்பந்தம் இல்லாததாகவும் இருக்கின்றது.

காரிகை6

பூ.பக்ஷம்  அனுமான பிரமானத்தின் மூலமாக ஜீவர்களிடையே பேதம் இருக்கின்றது என்று நிரூபிக்க முடியும்..  பக்ஷம் – ஜீவன்; ஸாத்யம் – ஜீவன் – ஈஸ்வரன் வெவ்வேறானவர்கள்..  ஹேது – வேறுபாட்டை உடைய ( ரூப, காரிய ஸமாக்யா வஸாத், நாம்-ரூப-கர்ம பேதா4த் ) இரண்டு பொருட்களுக்குமிடையே உள்ள வேறுபாடு பெயர், உருவம், குணங்கள் பயன்பாடு இவைகளினால் வேறுபட்டிருப்பதால் அவைகள் வெவ்வேறு என்று கூறமுடிகின்றது. அதேபோல இரண்டு ஜீவர்களை எடுத்துக் கொண்டாலும் இந்த மூன்றும் வெவ்வேறாக இருப்பதைப் பார்க்க முடிகின்றது.  எனவே அவர்களுகிடையே வேறுபாடு தெரிகின்றது.  ஜீவ-ஈஸ்வரனுக்குமிடையே இந்த மூன்று வேறுபாடுகளும் தெரிகின்றது. எனவே இருவரும் வெவ்வேறானவர்கள், அத்வைதம் என்பதே கிடையாது.

பதில்     ஆகாசம் அது எங்கு இருக்கின்றதோ அதற்கேற்ற பெயரோடு அழைக்கப்படுகின்றது.  உதாரணமாக பானக்குள் இருக்கும் ஆகாசம், அறைக்குள் இருக்கும் ஆகாசம் இவைகளுக்குள் பெயர்கள் வேறுபட்டிருந்தாலும் அது ஆகாசம் என்ற ஒன்றைத்தான் குறிக்கின்றது.  விதவிதமான  அளவுடன் கூடிய பானைகளுக்குள் இருக்கும் ஆகாசமானது சிறிய, பெரிய ஆகாசம் என்று வெவ்வேறு குணங்களையுடையது போல் தோன்றுகின்றது.  இருந்தாலும் ஆகாசம் ஒன்றாகத்தான் இருக்கின்றது. என்று ஏற்றுக்கொள்கின்றோம்.  அதேபோன்று படிக்கும் அறையிலுள்ள ஆகாசம், படுக்கையறையிலுள்ள ஆகாசம் என்று விதவிதமான பயன்பாடுடைய ஆகாசமாக இருந்தாலும், ஆகாசம் ஒன்றுதான் என்று ஏற்றுக்கொள்கிறோம்.  இதிலிருந்து நாம-ரூப-கர்ம வேறுபாடுகள் இருந்தாலும் ஆகாசம் ஒன்றாக இருக்கின்றது என்று நிரூபிக்கப்பட்டுவிட்டதால், பூர்வபக்ஷியினுடைய உதாரணம் தவறு என்று சுட்டிக் காட்டப்பட்டது.  அதனுடைய உபாதிகளின் வேறுபாடு ஆகாசத்திற்கு வந்து விட்டது.  இதேபோல ஜீவர்களிடையே வேறுபாடுகள் இருந்தாலும் அவைகள் ஆத்மாவின் தர்மங்கள் அல்ல, அவைகள் சரீரங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகள், அவைகள்  ஆத்மாவில் ஏற்றி வைக்கப்பட்டுள்ளது.  இந்த நியதியை ஜீவ-ஈஸ்வரனக்குமிடையே ஒப்பிட்டு பார்த்தால் வேறுபாடில்லை என்று புரிந்து கொள்ளலாம்.


ரூப காரிய ஸமாக்யாஸ்ச     ஆகாசத்திற்கு உருவம், குணங்கள், செயல்கள், பயன்பாடு, பெயர் ஆகியவைகள்
பி4த்யந்தே தத்ர தத்ர வை     அந்தந்த இடத்திற்கேற்ப வேறுபாடுடன் இருக்கின்றது
ஆகாஶஸ்ய ந பேதஹ         ஆகாசத்தினிடத்தில் இந்த வேறுபாடுகள் இல்லை.
த த்வத் ஜீவேஷூ நிர்ணயஹ  அதுபோல ஜீவர்கள் விஷயத்தில் இதை நிச்சயம் பண்ண வேண்டும்.
ஜீவர்களிடத்தே உள்ள வேறுபாடுகள் அந்தந்த உடலையும், மனதையும் சேர்ந்தது.  அதற்குள் இருக்கும் ஆத்மாவுக்குமிடையே எந்த வேறுபாடும் கிடையாது.  இது ஜீவ-ஈஸ்வரன் இருவருக்கும் இடையேயும் ஒப்பிட்டு பார்த்து அபேத புத்தியை அடைய வேண்டும்.

காரிகை7

பூ.பக்ஷம்  பரமாத்மா ஜீவாத்மாவின் பிறப்பிற்கு காரணமாக இருக்கின்றது

பதில்     காரண-கார்ய சம்பந்தம், அவயவ-அவயவி சம்பந்தம்.  இருபொருட்களுக்குமிடையே உள்ள சம்பந்தம் இவ்வாறு இரண்டு விதமாக இருக்கின்றது.  ஸ்தூல உடல் காரணம், அன்னம் காரணம், காரணத்திலிருந்து சில மாற்றங்களுடன் உருவாகுவது காரியம்.  அவயவம் – உறுப்புக்கள், அவயவி – உறுப்புக்களை உடையவன். இங்கே அவயவி மனித உடல்; அவயவம் – கை-கால்கள் போன்ற உறுப்புக்கள்.


கடாகஶ ந ஆகாஶஸ்ய – பானைக்குள் இருக்கின்ற ஆகாசமும், வெளியே உள்ள மகாகாசமும்
ந விகார அவயவஹ யதா – எப்படி அதனுடைய விகாரமும் இல்லை, அவயவமும் இல்லையோ
ததா – அதுபோல
நைவாத்மனஹ ஜீவா ந விகார அவயவஹ ஸதா – ஜீவாத்மா, பரமாத்மாவினுடைய மாற்றமும் இல்லை, உறுப்பும் அல்ல. ஸ்ருஷ்டி தோன்றிக் கொண்டிருந்தாலும், பிரளய காலத்திலும் எந்தவிதமான வேற்றுமைகளும் இல்லை.
எனவே ஜீவாத்மாவுக்கும், பரமாத்மாவுக்கும் இடையே எந்தவிதமான சம்பந்தமுமில்லை.  அவைகள் இரண்டும் ஒன்றே என்ற காரணத்தினால் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

காரிகை8
அறியாமையினால் சரீரத்தின் தன்மைகள் ஆத்மாவில் ஏற்றி வைக்கின்றோம். அறியாமைக்கு காரணம் சொல்ல முடியாது.  எனவே அதை அநாதி என்று கூறப்படுகின்றது. அநாதி என்றால் அதனுடைய தோற்றத்தை சொல்ல முடியாது. ஆனால் ஞானம் வந்தவுடன் அது சென்று விடும், மீண்டும் வராது.

யதா ககணம் மலைஹி மலினம் – எவ்வாறு ஆகாசம் அசுத்தங்களுடன் சேர்ந்து அசுத்தமாக தோன்றுகின்றது.
பாலானாம் – சிறுவர்களுக்கு, அறியாமையில் உள்ளவர்களுக்கு,அறிவு வளர்ச்சியற்றவர்களுக்கு
ஆத்மா அபி மலினஹ மலைஹி – அசுத்தங்களுடன் சேர்ந்து ஆத்மாவும் அசுத்தமாக தோன்றுகிறது
அபுத்தானம் – அறியாமையிலுள்ளவர்களுக்கு இவ்வாறு தோன்றுகிறது.

காரிகை9
மரணே சம்ப4வே ச ஏவ – மரண விஷயத்திலும், பிறக்கின்ற விஷயத்திலும் ஆகாசத்தை  துணை கொண்டு மரணமும் இல்லை, பிறப்பும் இல்லை என்று புரிந்து கொள்ள வேண்டும்.
கதி ஆகமன அபி – செல்லுதல், திரும்பி வருதல் விஷயத்திலும் கூட இதே மாதிரி இல்லையென்று புரிந்து கொள்ள வேண்டும்.
ஸர்வ ஸரீரேஷு ஸ்திதௌ – எல்லா உடல்களுக்குள்ளும் ஆத்மா இருக்கின்றது என்பதையும் இதேமாதிரி புரிந்து கொள்ள வேண்டும்.
ஆகாஶேன அவிலக்ஷண – ஆகாச உதாரணத்தில் எப்படி இருக்கின்றதோ அதேபோல ஆத்மா விஷயத்திலும் வேறுபடுவதில்லை.

இப்படி இருக்கும்போது ஆகாசம்தான் பரமாத்மாவாக தோன்றுகின்றது என்று சந்தேகம் வரும். இவையிரண்டுக்கும் இடையே வேற்றுமைகள் உண்டு. அவைகள்,

  1. ஆகாசம் ஜடமானது,பரமாத்மா அறிவு ஸ்வரூபமானது,
  2. பரமாத்மாவிலிருந்துதான் ஆகாசம் தோன்றியது.
  3. ஆகாசத்திற்கு சப்தம் என்ற குணம் இருக்கின்றது,பரமாத்மா நிர்குணமானது,
  4. பரமாத்மா சஜாதீய,விஜாதீய, ஸ்வகத பேதம் என்ற மூன்று விதமான வேற்றுமைகளும் அற்றது. 

இதிலிருந்து ஆகாசம் பரமாத்மாவல்ல என்று புரிந்து கொள்ள முடிகின்றது.

காரிகை10
இதில் சரீரமும் தோன்றவில்லை என்று கூறப்பட்டிருக்கின்றது.  இங்கு சரீரம் என்பதை ஜகத்தாக எடுத்துக் கொள்ளலாம்.  சூட்சுமமான ஆகாசமே ஸ்தூலமான பானையாக மாறியிருக்கின்றது. எனவே பானை என்று ஒன்று இல்லை.  விஸ்வனாக இருக்கின்ற நாம் நித்திரை என்ற சக்தியின் துணைக் கொண்டு கனவுலக பிரபஞ்சத்தை படைக்கின்றோம். வெவ்வேறு பொருட்களையும் படைக்கின்றோம், அனுபவிக்கின்றோம்.  உண்மையில் கனவில் தோன்றும் உடல்களும், உலகமும் மித்யா என்று உணர்ந்துள்ளோம்.  இதேபோன்றுதான் இந்த ஸ்தூல பிரபஞ்சமும், உடல்களும் உண்மையில் இல்லை.

ஸர்வே ஸங்காதா ஸ்வப்னவத் – உடல்கள் எல்லாம் கனவில் தோன்றும் உடல்களைப்போல
ஆத்மா மாயா விஸர்ஜிதா – ஆத்மாவில் இருக்கின்ற மாயையினால் தோற்றுவிக்கப்பட்டது, கற்பனை செய்யப்பட்டுள்ளது.
 கேள்வி உடல் பொய்யென்று சொல்லிவிட்டால், பிரம்ம, விஷ்ணு, சிவன், தேவதைகளின் உடல்களும் பொய்யானதா? அவர்களின் உடல்கள் உண்மையானதாகத்தான் இருக்க வேண்டும்.

பதில்    எந்த உடலாக இருந்தாலும் சரி, அவைகள் எல்லாமே மித்யாதான்.  தேவதைகளின் உடல்கள் பூஜிக்க தகுந்ததாக இருந்தாலும் அவைகளும் மித்யாதான்.


ஆதி4க்யே – பூஜைக்குரிய உடல்களாக இருந்தாலும்
ஸர்வ ஸாம்யே வா – மற்ற அனைத்து சாதாரண உடல்களாக இருந்தாலும்
ந உபபத்தி ஹி வித்யதே – அவைகள் சத்யமா, மித்யாவா என்று உறுதி செய்வதற்கு உடலின் சிறப்பு தன்மை காரணமாக இல்லை.

காரிகை11
ரஸாதய ஹி யே கோஶா – அன்னமய கோசத்திலிருந்து ஆரம்பித்து மீதியுள்ள நான்கு கோசங்களும்
வ்யாக்யாதா தைத்திரியகே – தைத்திரிய உபநிஷத்தில் விளக்கப்பட்டுள்ளது
தேஷாம் ஆத்மா – இந்த ஐந்து கோசங்களுக்குள்ளும் இருக்கும்
ஜீவாஹ பரஹ – ஜீவாத்மாவே பரமாத்மா என்று விளக்கப்பட்டுள்ளது.
கம் யதா4 ஸம்ப்ரகாஶிதஹ – எப்படி ஆகாசத்தை வைத்து விளக்கபட்டதோ அதேமாதிரி விளக்கப்பட்டு உள்ளது.
இதிலிருந்து ஜீவ-ஈஸ்வர ஐக்கியத்தினால ஜீவன் தோன்றவில்லை என்று நிலை நாட்டப்பட்டுள்ளது.

காரிகை12
இதில் ப்ருஹதாரண்ய உபநிஷத்தில் உள்ள மது பிராஹ்மன பகுதியில் கூறப்பட்ட வாக்கியத்தை மேற்கோள் காட்டி ஜீவன் பிறக்கவில்லை என்று நிலை நாட்டுகின்றார்.

படைக்கப்பட்ட அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றது. எவைகள் ஒன்றையொன்று சார்ந்து இருக்கின்றதோ அவைகளனைத்தும் மித்யா என்று கூறப்பட்டிருக்கின்றது.  இதன் அடிப்படையில் படைக்கப்பட்ட அனைத்தும் மித்யா என்று புரிந்து கொள்ளலாம்.

  • இந்த ஜகத்தானது ஜீவர்களுக்கு போக்யமாக இருக்கின்றது என்று கூறுகின்றது.  இப்படிபட்ட உலகம் தோன்றுவதற்கு காரணம் ஜீவர்கள்தான்.  ஆகவே உலகம் காரியமாகவும், போக்யமாகவும் இருக்கின்றது
  • இந்த உலகத்திற்கு எல்லா ஜீவராசிகளும் காரியமாகவும், போக்யமாகவும் இருக்கின்றது என்று கூறி உலகத்தை காரணமாக காட்டுகின்றது
  • ஸ்ருஷ்டி மூன்றாக பிரிக்கப்பட்டது. 1. அதிபூதம் – ஸ்தூல சரீரங்கள், 2. அதிதெய்வம் – தேவதைகள், 3. அத்யாத்மம் – சரீரத்திலுள்ள இந்திரியங்கள் (உ-ம் 1. சூரியன், 2. சூரிய தேவதை, 3. கண்)
  • ஜீவனும் ஜகத்தும் ஒருவரையொருவர் சார்ந்திருக்கின்றார்கள், ஜீவனும் தேவதைகளும் ஒருவரையொருவர் சார்ந்திருக்கின்றார்கள், ஜீவர்களும் தமக்குள் ஒருவரையொருவர் சார்ந்து இருக்கின்றார்கள்
  • இவ்வாறு அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்திருப்பதால் அவைகள் மித்யா.


த்வையோ த்வையோ மதுக்ஞானே – பிருஹதாரண்ய உபநிஷத்தில் உள்ள மது பிராமனத்தில் இரண்டிரண்டாக ஸ்ருஷ்டியை எடுத்துக்கொண்டு அவைகள் ஒன்றையொன்று சார்ந்திருப்பதால் அவைகள் மித்யா என்று கூறியுள்ளது.
பரம் ப்ரஹ்ம ப்ரகாஶிதம் – பரமாத்மாவாக விளக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சமஷ்டி, வியஷ்டி இரண்டுமே ஒரே பிரம்மமாக இருக்கின்றது.  எனவே ஜீவன் தோன்றவில்லை என்று புரிந்து கொள்ளலாம்.
ப்ருதிவ்யாம் உதரே – வெளியே தெரிகின்ற மகாகாசத்திலும், வயிற்றுக்குள் இருக்கின்ற ஆகாசமும்
யதா ஆகாஶஹ ப்ரகாஶிதஹ  – எப்படி ஆகாசம் ஒன்று என்று விளக்கப்பட்டதோ அவ்வாறே ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒன்றுதான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
 

காரிகை13

ஆறுவிதமான குறிப்புக்களைக் கொண்டு உபநிஷத்தின் மையக்கருத்தை நிச்சயிக்கலாம். அவைகள்

  1. ஆரம்பத்திலும், முடிவிலும் சொல்லப்படும் கருத்து
  2. திரும்ப திரும்ப கூறும் விஷயம்
  3. பலனை தருவதாக கூறப்படும் விஷயம்
  4. அனுபவத்திற்கு விரோதமாக இருக்கும் கருத்து
  5. அந்த கருத்தை புகழ்ந்திருக்க வேண்டும்
  6. அந்த கருத்து மட்டும் குறிப்பாக, விசேஷமாக சொல்லப்பட்டிருக்க வேண்டும்


ஜீவாத்மனோ – ஜீவனுக்கும், பிரம்மத்திற்கும்
அனன்யத்வம் –  ஒன்றாக இருக்கும் தன்மை
அபேதேன – மகாவாக்கியங்களால் ( வேறாக இல்லாத தன்மை )
ப்ரஶஸ்யதே –  புகழப்பட்டிருக்கின்றது
யச்ச நானாத்வம் நிந்தயதே – எந்த காரணத்தினால் ஜீவாத்மாவுக்கும், பரமாத்மாவுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை நிந்தனை செய்யப்பட்டிருக்கின்றதோ
த த் ஏவம் ஹி ஸமஞ்ஜஸம் – அந்த காரணத்தினால் இந்த உபதேசமானது, அத்வைதமானது சரியானது.

காரிகை14
உபநிஷத்தில் அத்வைதம்தான் மையக்கருத்து என்று எப்படி சொல்லுகிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலாக இந்த காரிகை அமைந்திருக்கின்றது.

முதலில் கேட்ட வாக்கியத்தில் முக்கியமானது அதற்கடுத்த வாக்கியத்தைப் பொறுத்து அமைகின்றது. உதாரணமாக சிங்கம் போல் இருக்கின்றான்.. அவன் மிகவும் தைரியசாலி.  இந்த வாக்கியங்களில் இரண்டாவது வாக்கியத்தின் பொருள்படி முதல் வாக்கியத்தில் கூறப்பட்ட சிங்கம் என்ற சொல் இரண்டாவது வாக்கியத்தில் கூறப்பட்டவனை குறிக்கின்றது.

ஜீவாத்மனோ ப்ருதக்த்வம் – ஜீவாத்மாவுக்கும், பரமாத்மாவுக்குமிடையே உள்ள வேற்றுமைகள்
ப்ராக்4 உத்பத்தே ப்ரகீர்திதம் – அறிவை கொடுக்கின்ற ஞானகாண்டத்திற்கு முன்னே காட்டப்பட்டது, உபதேசிக்கப்பட்டது.
தத் கௌனம் – அந்த வேற்றுமையானது முக்கியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது
பவிஷ்யத் வ்ருத்த்யா – வரப்போகின்ற ஒன்றின் அடிப்படையில்
முக்யத்வம் ந ஹி யுஜ்யதே – அந்த வேற்றுமைகள் உள்ள வாக்கியத்திற்கு முக்கியத்துவம் கிடையாது
 

காரிகை15 ***

பூ.பக்ஷி ஸ்ருஷ்டி இருக்கின்ற காலத்தில் த்வைதம் இருக்கட்டும், பிரளய காலத்தில் அத்வைதம்தான் இருக்கின்றது.  ஸ்ருஷ்டி முக்கியமில்லையென்றால் எதற்கு உபநிஷத் அதைப்பற்றி பேசுகின்றது.

பதில்    எல்லா உபநிஷத்துகளிலும் ஸ்ருஷ்டியை ஒரே மாதிரியாக சொல்லவில்லை. ஏனென்றால் அது முக்கியமானதாக கருதவில்லை.


ம்ருத்லோக விஸ்புலிங்காத்யை– களிமண், உலோகம், தீப்பொறிகள் இவைகளை உதாரணமாக கொண்டு
யா ஸ்ருஷ்டி அன்யதா ச உதி3தா – எந்த ஸ்ருஷ்டியானது விதவிதமாக, வெவ்வேறு வகையில் சொல்லப்பட்டதோ, உபதேசிக்கப்பட்டதோ
யஹ உபாய அவதாராய – இவைகள் உபாயத்திற்காக ஐக்கிய புத்தியை நிச்சயம் செய்வதற்காக, அத்வைதத்தை உறுதிபடுத்துவதற்கான வழி இவைகள்
பேதஹ கதஞ்சன நாஸ்தி – வேற்றுமைகள் எந்தவிதத்திலும் இல்லை.
 

பூ.பக்ஷி இந்த ஸ்ருஷ்டி எப்படி அத்வைத நிச்சயத்திற்கு மார்க்கமாக எடுத்துக் கொள்ள முடியும்?

பதில்    ஸ்ருஷ்டியை விளக்கினால்தான் அதன் காரணத்தை தெரிந்து கொள்ள முடியும்.  விதவிதமான ஸ்ருஷ்டிகள் எல்லாம் ஒன்றிலிருந்துதான் தோன்றியுள்ளது என்று புரிந்து கொள்ள முடியும்.  பிறகு தோன்றியவைகள் எல்லாமே அந்த ஒன்றுதான் என்று கூறினால் அந்த ஒன்றுதான் ஸத்யம் என்றும், ஸ்ருஷ்டி மித்யா என்று நன்றாக புரிந்து கொள்ள முடியும்.  ஸ்ருஷ்டியானது அதன் மித்யாத்வத்தை புரிய வைப்பதற்காகவும், காரண-காரிய ஐக்கிய ஞானத்தை புரிய வைப்பதற்காகவும் உபதேசிக்கப்படுகின்றது.

 காரிகை16

பூ.பக்ஷி வேதம் உபாஸனையை உபதேசிப்பதால் த்வைதத்தை தானே உபதேசிக்கின்றது?

பதில்    மோட்சத்தை அடைய விரும்பும் ஸாதகர்களை மூன்று விதமாக பிரிக்கப்படுகின்றது.  அவைகள் 1. ஆரம்ப நிலையில் உள்ளவர்கள், 2. இடைநிலையில் உள்ளவர்கள், 3. உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் இவர்களின் அடிப்படையில் உபநிஷத் விதவிதமாக உபதேசிக்கின்றது.


ஆஸ்ரமாஹ த்ரிவிதாஹா – ஸாதகர்கள் (மோட்சத்தை அடைய முயற்சிப்பவர்கள்0 மூன்று விதமாக இருக்கின்றார்கள்.
ஹீன மத்யம் உத்க்ருஷ்ட த்ருஷ்டயஹ – ஆரம்ப நிலை, இடைநிலை, உயர்நிலை
ஹீன த்ருஷ்டி        – சகுண பிரம்மத்தை உபாஸிப்பவர்கள் (ஜகத் மித்யா என்று உணராதவர்கள்)
மத்யம் த்ருஷ்டி       – காரண பிரம்மனை – ஈஸ்வரனை உபாஸிப்பவர்கள்
உத்க்ருஷ்ட த்ருஷ்டி   – நிர்குண பிரம்மத்தை நிதித்யாஸனம் செய்பவர்கள்
 

  • ஆரம்ப நிலை சாதகர்களுக்கு உபாஸனைகளை விதவிதமாக கூறியிருப்பது,, அவர்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதற்காகத்தான். இந்த த்வைத உபாஸனைகளை தெரிந்தே உபதேசிக்கின்றது
  • இடைநிலை சாதகன் – காரண பிரம்மனை (ஈஸ்வரனை) உபாஸிப்பவர்கள்.  இவர்களுக்கு காரியங்கள் மித்யா என்றும் இவைகளுக்கு காரணம் ஈஸ்வரன் என்று உபாஸிப்பவர்கள்
  • உயர்நிலை சாதகன் – ஜகத் மித்யா என்று தெளிவாக உணர்ந்தவன்.  அடைந்த பிரம்ம ஞானத்தையே நிலைத்து நிற்பதற்கு நிதித்யாஸனம் என்ற உபாஸனை செய்பவன்.


தத3க்தம் அனுகம்பயா இயம் உபாஸனா உபதிஷ்டா – இந்த அதிகாரிகளுக்கு கருணையினால் இந்த உபாஸனை கர்மங்களையும் உபதேசிக்கப்பட்டது

காரிகை17
சம்சாரத்தை நீக்காத எந்த உபதேசமும் சரியானதல்ல. த்வைதிகளிடம் சம்சாரம் இருப்பதால் அவர்கள் சாஸ்திரத்தை முழுமையாக புரிந்து கொள்ளவில்லை.

ஸ்வஸித்தா4ந்த வ்யவஸ்தாஸு – த்வைதிகளின் முடிவான கருத்தின் அடிப்படையில் அவர்கள் கொண்டுள்ள சாஸ்திர அறிவு சாஸ்திரத்தை புரிந்து கொண்டுள்ள முறையான விஷயத்தில்
த்வைதினஹ த்ருடம் நிஸ்சிதா – இருமைதான் ஸத்யம் என்ற கொள்கையுடையவர்கள், அதில் திடமான முடிவையுடையவர்களாக இருக்கின்றார்கள். (நிஸ்சிதா – அபிநிவேஷம் – [ முரட்டு பிடிவாதத்துடன் இருப்பவர்கள் ]
பரஸ்பரம் விருத்4யந்தே – ஒருவருக்கொருவர் விரோதமாக இருக்கின்றார்கள்
நைஹி அயம் ந விருத்4யதே – த்வைதிகளுடன் அத்வைதிகள் பகைமை கொள்வதில்லை.
 

காரிகை18

அத்வைதிகள் ஏன் த்வைதிகளிடன் பகைமை கொள்வதில்லை, வெறுப்பதில்லை என்பதை இந்த காரிகையில் விளக்குகின்றார்.

  • த்வைதத்தை ஒரு படியாக ஏற்றுக்கொண்டிருக்கின்றோம், சாத்தியமாக ஏற்றுக் கொள்வதில்லை. அவர்கள் அத்வைதத்திற்கு செல்லும் படியில் நிற்கின்ற காரணத்தினால் அவர்களை வெறுப்பதில்லை.
  • அத்வைதத்தில் எல்லாமே மித்யா என்ற அறிவு திடமாக இருப்பதால் அவனுக்கு யாருமே விரோதிகள் இல்லை.  அத்வைதமும் மித்யா என்று நினைக்கின்றார்கள். நான் அத்வைதி என்றும் நினைப்பதில்லை.
  • அத்வைதியினிடத்தில் ராக-துவேஷம் என்பது கிடையாது அதனாலும் த்வைதிகள் மீது வெறுப்பு கொள்வதில்லை.
  • த்வைதமானது அத்வைதத்தினுடைய காரியமாக இருக்கின்றது.  இது கௌடபாதரின் கருத்து.


அத்வைதம் பரமார்த்தஹ – அத்வைதம்தான் மூலகாரணம், அதிஷ்டானம்
த்வைத த த்பே4த உச்யதே – த்வைதமானது அத்வைதத்தினுடைய காரியம்தான், மாற்றம்தான் என்று சொல்லப்படுகின்றது
தேஷாம் உப4யதாம் த்வைதம் – த்வைதிகளுக்கு இரண்டு விதத்திலும் த்வைதம்தான் ஸத்யமாக இருக்கின்றது.  இரண்டு விதம் என்பது படியாகவும், முடிவாகவும் இருக்கின்றது.
தேன அயம் ந விருத்4யதே – இந்த காரணத்தினால் அத்வைதிகள் அவர்களிடம் விரோதம் கொள்வதில்லை.

காரிகை19
ஏதத் அஜம் மாயயா பித்3யதே – பிறப்பற்ற இந்த அத்வைத தத்துவம், மாயையினால் இரண்டாக தெரிகின்றது.
ந அன்யதா கதஞ்சன – இதை தவிர்த்து வேறெந்த விதத்திலும் வேறுபடுவதில்லை.
தத்வதஹ பித்4யமானே ஹி – உண்மையாகவே வேறுபட்டிருந்தால்
அம்ருதம் மர்த்யதாம் வ்ரஜேத் – மரணமற்ற பிரம்மன் மரணமடையும் நிலையை அடைந்து விடும்.

காரிகை20
அஜாதஸ்ய ஏவ பா4வஸ்ய ஜாதிம் இச்சந்தி வாதி3னஹ – எதனிடமிருந்தும் தோன்றாத, பிறப்பற்ற இந்த பிரம்மத்திடம் இருமையை வாதிப்பவர்கள் பிறப்பை விரும்புகிறவர்கள்
அஜாத அம்ருத பா4வ – பிறப்பற்ற, மரணமற்ற இந்த பிரம்மன்
மர்த்யதாம் கதம் ஏஷ்யத் – எப்படி மரணத்தை அடையும்?

பிரம்மத்திலிருந்து ஒன்று தோன்றியது என்று சொல்வது பிரம்மன் அழிவைத்தான் கூறுகிறார்கள். இயற்கை நியதிப்படி ஒன்றின் அழிவிலிருந்துதான் வேறொன்று பிறக்கின்றது.
 

காரிகை21

அழியாத பிரம்மனே அழியக்கூடிய உலகமாக மாறி காட்சியளிக்கின்றது என்று எடுத்துக் கொள்ளலாமே என்றால், இயற்கை நியதிப்படி ஒரு பொருள் இன்னொரு பொருளாக மாறவே முடியாது. அந்தப் பொருளினுடைய குணங்கள், தன்மைகள் காலப்போக்கில் மாற்றமடைந்து வேறொன்றாக தோன்றலாமே தவிர அதுவே வேறொன்றாக மாற முடியாது. உதாரணமாக மனிதன் காலப்போக்கில் அவன் தோற்றம், குணங்கள் மாறலாம் ஆனால் அவன் மனிதனாகவே இருப்பான்.  ஒரு பொருளின் ஸ்வரூபம் மாறிவிட்டால் அது அதனுடைய அழிவைக் குறிக்கின்றது, மாற்றத்தை குறிக்கவில்லை.


ந பவதி அம்ருதம் மர்தியம்  – அழியாத பிரம்மன் அழிகின்ற உலகமாக மாறாது
மர்த்யம் அம்ருதம் த்தா4     – அதுபோல அழிகின்ற ஒன்று அழியாததாக மாற முடியாது.
ப்ரக்ருதே அன்யதா பா4வஹ – ஒரு பொருளின் ஸ்வரூபத்திற்கு வேறாக மாறுதல் என்பது
கதஞ்சித் ந ப4விஷ்யதி       – எந்த விதத்திலும் நடைபெறாது. ஏனென்றால் அது அழிந்து விடும்.
 

காரிகை22

  1. அனிர்மோக்ஷ பிரஸங்கஹ– மோட்சத்தை அடையமுடியாது என்ற நிலை ஏற்படும். மேற் சொன்ன கருத்தை ஏற்றுக்கொண்டோமேயானால் இந்த குறை ஏற்படும்
  2. ப்ரதிக்ஞா ஹானி– முதலில் அழியாதது என்று பிரம்மத்தை கூறிவிட்டு பிறகு அழியக்கூடியது என்று சொல்வது முதல் கூறிய கருத்துக்கு எதிராக இருக்கும்

யஸ்ய – இந்த கருத்துப்படி
ஸ்வபாவேன அம்ருதஹ பா4வஹ – இயற்கையாகவே மரணமற்ற தத்துவம் என்று கூறப்பட்டது.
கச்சதி மர்த்யதாம் – மரணமடைகின்ற தன்மையுடன் மாறுகின்றது என்று கூறப்படுகின்றது.
தஸ்ய – இப்படிபட்ட கருத்தை உடையவனுக்கு ( அழியாதது அழிவுடையதாக மாறுகின்றது, பிறகு மீண்டும் அழியாததாக மாறுகின்றது )
க்ருதகேன அம்ருதஹ – மரணமடையாத தன்மையாக மாறுகின்ற காரணத்தினால்
கத4ம் நிஸ்சல ஸ்தாஸ்யதி – எப்படி அது மீண்டும் மரணமடையாகததாக இருக்கும்.
இவ்வாறு யுக்தி மூலம் உலகம் தோன்றவில்லை என்று நிரூபணமாகின்றது.

காரிகை23
உபநிஷத்தில் விதவிதமான ஸ்ருஷ்டியை பற்றி பேசப்பட்டிருக்கின்றது.  ஆனால் அந்த இடத்திலேயே ஏன் அவைகள் மித்யா என்று சொல்லவில்லை?
அந்த இடத்திலேயே ஸத்யம் என்றும் சொல்லவில்லை என்று தெரிந்து கொள்ள வேண்டும்.  ஆகவே ஸ்ருஷ்டியை பற்றி பேசும் வாக்கியங்களை மித்யா என்றும் சொல்லவில்லை, ஸத்யம் என்றும் சொல்லவில்லை.  எனவே அந்த வாக்கியங்களை நன்கு விசாரம் செய்துதான் உண்மையை உணர்ந்து கொள்ள முடியும்.

ஸ்ருஜ்யமானே ஸ்ருதி ஸமாஹா – படைப்பைப் பற்றி பேசும் வாக்கியங்களில் உபநிஷத் சமமாகவே இருக்கின்றது.
பூததஹ வா ஆபூததஹ – ஸத்யமாக இருக்கின்றதா, பொய்யாக இருக்கின்றதா என்ற விஷயத்தில்
யத் – எப்படிபட்ட படைப்பு
யுக்தியுக்தம் நிஸ்சிதம் – யுக்திக்கு பொருந்தியதாக எதை நிச்சயம் செய்திருக்கின்றதோ
தத் பவதி ந இதரத – அதுதான் சரியானதாக இருக்கின்றது, மற்றவைகள் அல்ல.

காரிகை24
நேஹ நாநா” இதி ஆம்நாயாத் – “நேஹ நாநா” என்று ஒரு உபநிஷத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது.
நேஹ நாநா – இந்த ஆத்ம விஷயத்தில் எந்த வேற்றுமையும் இல்லை.  ஜகத் இல்லை என்று புரிய வைக்கின்றது.
இந்திர மாயாபிஹி – இந்த வாக்கியாம் பிருஹதாரண்ய உபநிஷத்தில் கூறப்பட்டிருக்கின்றது. இதன் பொருள் இந்த ஜகத்தானது இந்திர ஜாலத்தில் தோன்றுகின்ற பொருட்கள் போல மாயையினால் பிரம்மமானது பொய்யாக பலவிதமான ரூபங்களாக காட்சியளிக்கின்றது
அஜாயமானஹ பஹூதா – என்று புருஷ ஸுக்தம் உபநிஷத்தில் கூறப்பட்டிருக்கின்றது.  பிரம்மன் பிறக்காமல் இருந்து கொண்டு விதவிதமாக தோன்றி கொண்டிருக்கின்றது.
மாயயா ஜாயதே து ஸஹ – இந்த பிரபஞ்சமானது பொய்யாக காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது.

உபநிஷத்தில் ஆரம்பத்தில் ஸ்ருஷ்டியை சொல்வதை அத்யாரோபமாக எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அவைகளை அபவாதம் செய்து நீக்கிவிடும்.

காரிகை25
இதில் உபநிஷத் காரண-காரிய நிஷேதம் செய்வதை மேற்கோள்காட்டி விளக்கப்படுகின்றது.  காரண-காரிய நிஷேதம் ஸ்ருஷ்டியை நீக்குகின்றது.

ஈஸா உ.நி- 12-14 மந்திரங்களை எடுத்துக் கொள்ளப்படுகின்றது.  அதில் ஸம்பூதி உபாஸனம் (ஹிரண்யகர்ப்ப உபாஸனம்), அஸம்பூதி உபாஸனை (வெளித்தோற்றத்திற்கு வராத தத்துவத்தை உபாஸித்தல்) சொல்லப்படுகின்றது.

ஸம்பூதே – ஹிரண்யகர்ப்பனை
அபவாதாத் – நீக்கிய காரணத்தால், உண்மையான பொருளல்ல என்று
ஸம்பவ – படைக்கப்பட்டது, காரியமானது
ப்ரதிஷித்4யதே – நீக்கப்படுகின்றது
இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டியது தோன்றியவைகளெல்லாம் உபநிஷத்தால் நீக்கப்பட்டிருக்கின்றது.

ப்ருஹதாரண்யஹ உ.நி 3.9.28
“கோன்வேனம் ஜனயேத்”
கஹ ஏனம் ஜனயேத்– யார்தான் இந்த ஆத்மாவை தோற்றுவிப்பார்கள்.
இதி காரணம் ப்ரதிஷித்யதே – இவ்வாறு காரணமும் நீக்கப்படுகின்றது.

காரிகை26
ப்ரு.உநி – 3.9.26 மேற்கோள் காட்டப்பட்டிருக்கின்றது.
“ஸ ஏஷ நேதி நேதி” இதுவல்ல
பிரபஞ்சம் – மூர்த்த-அமூர்த்தம் என்று அறிமுகப்படுத்தி பிறகு அவைகள் இல்லை என்று ஒவ்வொன்றாக நீக்குகின்றது. அனைத்துக்கும் ஆதாரமாக இருக்கின்ற ஆத்மா, சரீரத்திற்குள் இருக்கின்ற ஆத்மா இதுவல்ல இதுவல்ல என்று நிஷேதம் செய்கின்றது.
வ்யாக்யாதம் ஸர்வம் நிஹ்ன்னுதே – முன்னே விவரிக்கபட்ட அனைத்தும் நீக்குகின்றது (நேதி, நேதி என்று சொல்வதன் மூலம் )
யத: – என்ற காரணத்தினால் இவ்வாறு நீக்குகின்றதோ அதனால் அனைத்தும் மித்யா, உண்மையல்ல.
ஹேதுனா அக்ராஹ்ய பாவேன – எந்த காரணத்தால் விட்டுவிடுதல் என்ற நோக்கத்துடன்
எவையெல்லாம் அறிமுகப்படுத்தினோமோ அவைகளையெல்லாம் விட்டுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் நிஷேதம் செய்கின்றது.
அஜம் ப்ராகஶதே – பிறப்பற்ற ஆத்மாதான் விளங்கிக் கொண்டிருக்கின்றது.

காரிகை27
ஸத ஹி – ஸத் வஸ்துவிடமிருந்து; ஸத் ஸ்வரூபமாக இருக்கின்ற பிரம்மனிடமிருந்து
மாயயா ஜன்ம யுஜ்யதே – பொய்யாக தோன்றுதல் என்பது சரியானது.
பிரம்மத்திடமிருந்து பொய்யாக ஸ்ருஷ்டி வந்தது என்பது சரியானதாக இருக்கும்.  இது நிமித்த காரணம்
ந து தத்வதஹ – உண்மையாகவே பிறப்பு என்பது தவறானது.

இன்னொரு பொருள்: பிரம்மத்தினுடைய தோற்றம் பொய்யானது என்பது சரியாகும், உண்மையாக தோன்றியது என்பது தவறானது.

## பொய்யான இந்த ஸ்ருஷ்டியிலிருந்து ஸத் ஸ்வரூபமான பிரம்மம் காட்டிக் கொடுக்கப்படுகின்றது ##
 

யஸ்ய த்த்வதஹ ஜாயதே, தஸ்ய ஜாதம் ஹி ஜாயதே – எவருடைய கருத்துப்படி உண்மையாக தோன்றியுள்ளதோ அந்த கருத்துப்படி தோன்றியதே தோன்றுகின்றது.

 

  1. பிறவாத பிரம்மத்திடமிருந்து இந்த ஜகத் தோன்றியுள்ளது என்று எடுத்துக்கொண்டால் இதில் வியாகாத தோஷம் இருக்கின்றது. கண் தெரிகின்ற ஒருவன் நான் குருடன் என்று சொல்வது போல பிறவாத என்பது இல்லாத ஒன்றிலிருந்து எப்படி ஒன்று தோன்ற முடியும்?
  2. பிறந்த ஒன்றிலிருந்து இந்த ஜகத் தோன்றியுள்ளது என்று எடுத்துக் கொண்டால் இதிலும் ஒரு குறை இருக்கின்றது. அனவஸ்தா தோஷம் முட்டையிலிருந்து கோழி வந்ததா, கோழியிடமிருந்து முட்டை வந்ததா என்பது போல எதிலிருந்து பிறந்தது என்று கேட்டால் அது வேறொன்றிலிருந்து பிறந்தது என்று இப்படியே போய்க்கொண்டிருக்கும் எனவே இது சரியான கருத்தல்ல.  இதிலிருந்து தோன்றி கொண்டிருக்கும் இந்த ஜகத் மித்யாவாகத்தான் இருக்க முடியும் என்று உறுதியாக புரிந்து கொள்ள முடியும்.


காரிகை28
பொய் கூட உண்மையிலிருந்துதான் வரமுடியும்.  பொய்யிலிருந்து பொய் வர முடியாது.  பொய்யாக காட்சியளிக்கும் இந்த ஜகத் உண்மையான பிரம்மத்தை காட்டிக் கொடுத்து கொண்டிருக்கின்றது.

அஸதஹ மாயயா ஜன்ம தத்வதஹ ஜன்ம ந ஏவ யுஜ்யதே – இல்லாமையிலிருந்து பொய்யான தோற்றமும், உண்மையான தோற்றமும் உருவாகும் என்பது இருக்க முடியாது
வந்த்4யா புத்ர ந த்த்வேன, மாய யா வா அபி ந ஜாயதே – மலடியின் மகன் உண்மையாகவோ, பொய்யாகவோ பிறப்பதில்லை.


காரிகை29
கனவில் தோன்றும் பிரபஞ்சம் எப்படியோ அதேபோல விழிப்புநிலை பிரபஞ்சம் பொய்யானது என்று புரிந்து கொள்ள வேண்டும்.

யதா ஸ்வப்னே த்வயாபாஸம் – எவ்வாறு கனவில் தோன்றும் இருமை தோற்றங்கள்
ஸ்பந்ததே மாய யா மனஹ – மனமானது பொய்யாக இவைகளை தோற்றுவிக்கின்றது
ததா ஜாக்ரத் த்வயாபாஸம் ஸ்பந்த்தே மாய்யா மனஹ – அவ்வாறு விழிப்பு நிலையில், இருமை தோற்றங்களை மனமானது பொய்யாக காட்டிக் கொண்டிருக்கின்றது. இங்கே சமஷ்டி மனதை எடுத்துக் கொள்ள வேண்டும்.

காரிகை30
அத்வயம் ச மனஹ த்வயாபாஸம் ஸ்வப்னே ந ஸம்ஶயஹ – மனம் ஒன்றுதான் ஆனால் கனவில் பலவிதமாக தோன்றிக் கொண்டிருக்கின்றது, இதில் சந்தேகமில்லை.
ததா – அவ்வாறு’
ஜாக்ரத் அத்வயம் ச த்வயாபாஸம் ச ஸம்ஶயஹ – விழிப்பு நிலையில் ஒன்றான மனமானது பலவிதமாக  காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது, இதிலும் சந்தேகமில்லை.

இத்துடன் அஜாதவாதம் முடிவடைகிறது.  இனி வரப்போகின்ற காரிகைகளில் நிதித்யாசனம் என்ற சாதனத்தைப் பற்றி விளக்கப்படுகின்றது

நிதித்யாசன விசாரம்:-
நம் மனதில் அனுபவிக்கும் நிறைவின்மையே சம்சாரம் எனப்படும். இந்த நிறைவின்மையின் வெளிப்பாடு விதவிதமான தீய உணர்ச்சிகளான காம, க்ரோதம் போன்றவைகள்தான். பகவான் கிருஷ்ணர் தன்னிடத்திலே திருப்தியுடையவன்தான் ஸ்திதப்ரக்ஞன் என்று கீதையில் கூறி இருக்கின்றார்.

நம்முடைய இந்த மனநிறைவின்மைக்கு காரணமாக இருப்பது எது?  யோகிகள் இந்த உலகமே காரணமாக இருக்கின்றது என்று கூறுகின்றனர்.  இருமையை பார்த்து கொண்டிருக்கும் போதுதான் மனநிறைவின்மையை அனுபவிக்கின்றோம். உலகத்தை மறந்தால் துயரங்கள் சென்று விடுகின்றது. கனவு பிரபஞ்சமும், ஜாக்ரத் பிரபஞ்சமும் தான் துயரத்திற்கு காரணங்கள்.  இந்த உலகத்தை நம்மால் நீக்க முடியாது ஆனால் மனதை உலகத்திலிருந்து நீக்கிவிட்டால் மன அமைதியடையலாம் என்று அவர்கள் முடிவுக்கு வந்தார்கள். சித்த விருத்தி நிரோதஹ –மனோநாசம் மோட்சக் காரணம் என்று முடிவுக்கு வந்தார்கள்.

வேதாந்திகள் இந்த உலகம் துக்கம் ஸ்வரூபமுடையதல்ல ஏனென்றால் ஜீவன் முக்தனும் இந்த உலகத்தில்தான் இருக்கின்றான் அவனுக்கு சுக-துக்கங்களை கொடுப்பதில்லை.  எனவே சுக-துக்கங்கள் ஜகத்தின் ஸ்வரூபமல்ல என்று புரிந்து கொள்ளலாம்.  யோகிகள் மனமே துக்க ஸ்வரூபம் என்று கூறுகிறார்கள். அதே மனதில்தான் சுகத்தையும் அனுபவிக்கின்றோம்.  எனவே மனமே சம்சார ஸ்வரூபமல்ல.  ஞானிக்கும் இந்த மனம் இருக்கின்றது அது நிறைவுடன் இருக்கின்றது.  இதிலிருந்து மனம் துக்க ஸ்வரூபமல்ல என்று புரிந்து கொள்ள வேண்டும்.

வேதாந்தியின் சித்தாந்தம்:-
ஜகத்தும், மனமும் நமக்கு துயரத்தை கொடுத்து கொண்டிருக்கின்றது.  பிறக்கும் போது இந்த மனம் ஆத்மதத்துவத்தை அறியாமல் இருக்கின்றது.  இந்த ஜகத்தைப்பற்றிய அறியாமையுடன் இருக்கின்றது.  நம்மைப்பற்றிய அறியாமையோடு பிறந்திருக்கின்றோம்.  பிரம்ம ஞானம் இல்லாத காரணத்தால் சரீரத்தையும், சரீரங்கள் அனைத்தையும் நான் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம். இப்படிபட்ட மனதுடன் ஜகத்தோடு சம்பந்தம் வைக்கும்போது சம்சாரத்தை அனுபவிக்க நேரிடுகின்றது.

ஈஸ்வர ஸ்ருஷ்டி இந்த ஜகத். அதே போன்று ஜீவர்களும் ஸ்ருஷ்டியை செய்திருக்கின்றார்கள்.  ஈஸ்வர ஸ்ருஷ்டியான மனிதனை ஜீவர்கள் தந்தையாகவும், மகனாகவும், சகோதரனாகவும் ஸ்ருஷ்டித்திருக்கிறார்கள். ஈஸ்வர ஸ்ருஷ்டி நமக்கு துயரத்தை கொடுக்காது.  ஆனால் ஜீவ ஸ்ருஷ்டிகள்தான் துயரத்தை கொடுக்கின்றது. இந்த ஜீவ ஸ்ருஷ்டியை உருவாக்கியது நம்முடைய மனம்தான்.  இந்த உலகத்தின் மீது அறியாமையோடு அத்யாஸம் செய்து துயரத்திற்கு காரணமாக இருப்பது மனம். எனவே மனதிலிருக்கும் அறியாமையையும், அத்யாஸத்தையும் நீக்கினாலே போதும். இத்துடன் மனதிலிருக்கும் ஸம்ஸ்காரத்தையும் நாசம் செய்ய வேண்டும். அப்போதுதான் மனம் என்றும் நிறைவுடன் இருக்கும்.

சம்சாரம் என்பது மனநிறைவின்மையும், பயமும்தான். த்வைத ரூபமாக இருக்கும் ஜகத்தான் இதற்கு காரணம். இருமையை நீக்கினால் சம்சாரம் தானாக சென்று விடும்.  இருமையாக தோன்றிக் கொண்டிருக்கும் ஜகத்தை அனுபவிப்பது மனம்தான்.  மனதை நாசம் செய்தால்தான் த்வைத ஜகத்தை நீக்க முடியும், சம்சாரமும் நீக்கப்படும்  இது சரியான கருத்தல்ல.  மனதின் ஸ்வரூபம் சம்சாரம் அல்ல.  ஆனால் காலம் காலமாக சம்சாரத்தை மனம் அனுபவித்துக் கொண்டு வருவதால் அவை அதனோடு ஒட்டிக் கொண்டிருக்கின்றது.  அறியாமையுடனும், அத்யாஸத்துடனும் இருக்கின்ற மனம் பார்க்கின்ற உலகத்திற்கு ராக-துவேஷம், பயம் போன்ற உணர்ச்சிகளை அனுபவிக்கின்றது.  ஆனால் அறியாமையும் அத்யாஸமும் நீங்கப்பெற்ற மனம் ஜகத்தினால் எந்த சம்சாரத்தையும் அனுபவிப்பதில்லை. இங்கே மனம் அழியவில்லை ஆனால் அத்யாஸமும், அறியாமையும் நீங்கி விடுகின்றது.

காரிகை31
மனோத்ருஷ்யம் – மனதினால் பார்க்கப்படுவது
இதம் த்வைதம் – இந்த இருமைகளான ஜகத்தும் அனைத்து படைப்புக்களும்
யத் கிஞ்சித் ஸசராசரம் – எவைகளெல்லாம், அசைந்து கொண்டும், அசையாமலும் இருக்கின்றதோ,  அவைகளைனைத்தும்
மனஸஹ ஹி அமனீபா4வே – மனதினுடைய நாசம் ஏற்படும் போது
த்வைதம் ந ஏவ உபலப்யதே – இருமைகள் அனுபவிக்கப்படுதில்லை, அறியப்படுவதில்லை, சம்சாரம் நீங்கப்பெறும்
** அமனீபா4வ – மனம் இல்லாத தன்மையை அடையும் போது
 

காரிகை32

இதில் அமனீபா4வ – மனமற்ற நிலையை விளக்கப்படுகின்றது. மூன்று விதத்தில் மனமற்ற நிலை ஏற்படுகின்றது. அவைகள்,

  1. ஆழ்ந்த உறக்கத்தில்,
  2. நிர்விகல்ப சமாதியில்,
  3. பா4த ரூப அபா4வஹ– இந்த உலகத்தை மித்யா என்று புரிந்து கொள்வதினால் அடையப்படுவது.  வைராக்கியத்தினாலும், விவேகத்தினாலும் ஜகத் மித்யா என்று புரிந்து கொள்ள வேண்டும்,


த்வைத ரூபமான இந்த உலகத்தினுடைய ஸ்வரூபம் பார்க்கப்படுதல் ( அறிவுடனும், சம்பந்தத்துடனும்), விஷயத்வம்.  பச்சிளங்குழந்தைக்கு இந்த உலகம் வெறும் பார்க்கப்படுவதாக மட்டும் இருக்கின்றது.  நமக்கு வேண்டாதவர் கண்ணில்பட்டால் அவர் விஷயமாக இருக்கின்றார். மூன்றாவதாக ஸத்யத்வமாகவும் இருக்கின்றது.  அதாவது இந்த உலகம் நிலையானது, எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கின்ற தன்மையுடையது. இப்படிபட்ட உலகத்தை அறியாமையில் இருக்கின்ற மனம் அனுபவிக்கின்றது.  ஞானத்துடன் கூடிய மனதிற்கு வெறும் த்ருஷ்யமாக மட்டும்தான் இருக்கும்.  எனவே ஜகத் நாசம் என்பது அதிலுள்ள விஷயத்வமும், சத்யத்வமும் நாசம் அடைவதைதான் குறிக்கின்றது.  இதனால் அதனோடு சம்பந்தபட்ட மனமும் இல்லாத நிலையை அடைகின்றது.  உலகத்திலுள்ள எதுவுமே எனக்கு சுகத்தையோ, துக்கத்தையோ கொடுக்காது என்ற உறுதியான அறிவைக் கொடுக்கின்றது ஆத்ம ஞானம்.  இது வெறும் தோற்றம்தான், சத்யமல்ல என்று நினைத்துக் கொண்டிருக்க வைக்கும்.

த்ருஷ்யத்வம் என்பது ஐம்புலன்களுக்கு ஜகத் அனுபவமாக இருப்பது.  கானல் நீரின் தன்மை தெரியாத போது மூன்று விதமாக தெரிந்தவுடன் வெறும் த்ருஷ்யத்வம்தான் இருக்கும். அதேபோல இந்த ஜகத்தை வெறும் தோற்றம் என்று த்ருஷ்யத்துடன் பார்க்கப்படுவதே மனமற்ற நிலையாகும். இதுவே அமனீபாவம் என்றும், த்வைத அபாவத் என்று அழைக்கப்படுகின்றது.

ஆத்ம ஸத்யம் – ஆத்மாவே உண்மையானது, நிலையானது, மற்றவைகள் எல்லாம் மித்யா
அனுபோதேன – என்ற அறிவினால் (சாஸ்திரம்-குரு மூலமாக அடைந்த அறிவினால்)
யதா – எப்பொழுது மனமானது
ச ஸங்கல்பயதே – சங்கல்பத்தை மேற்கொள்ளாமல் இருக்கின்றதோ
ததா3 அமனஸ்தாம் – அப்போது மனமற்ற நிலையை அடைகின்றது, அமைதியுடன் இருக்கின்றது.
க்ராஹ்ய அபா4வே – விஷயமாக எதையும் எடுத்துக்கொள்ளாத போது, தன்னுடன்  சம்பந்தப்படுத்தி கொள்ளாத போது,
தத்3 அக்ரஹம் –  மனமும் கிரகிக்காத நிலையை அடைகின்றது. புலன்கள் விஷயங்களுடன் சம்பந்தப்பட்டாலும், மனம் சம்பந்தப்படாத நிலையில் இருக்கும்.

காரிகை33
இதில் ஆத்மஞான நிலையையும், மூன்றுவிதமான த்வைதம் இல்லாத நிலையும் விளக்கப்படுகின்றது.
அகல்பகம் – பிளவுபடாத ( அறிபவன், அறிய உதவும் கருவி, அறியப்படும் பொருள்0
அஜம் ஞானம் – பிறப்பற்ற ஆத்மஞானம்
ஞேய அபின்னம் – அறியப்படும் பொருளிலிருந்து வேறுபடாதது,
பிரஹ்மஞேயம் அஜம், நித்யம் – பரம் பொருளை அறியக்கூடிய பொருளாக கொண்ட ஆத்மஞானம்  பிறப்பற்றதாகவும், நிலையானதாகவும் இருக்கிறது,
அஜேன அஜம் – பிறவாத பிரம்மத்தை, பிறவாத ஆத்மஞானத்தால்
விபுத்யதே – அடைகின்றான், அறிகின்றான்

ப்ரசக்ஷதே – என்று கூறுகிறார்கள்.  பிரம்மத்தை அடைந்தவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்

துரிய ஆத்மாவில் இந்த மூன்றும் (விஸ்வன், தைஜஸன், பிராக்ஞன்) ஒன்றாக இருக்கின்றது.  இதைத்தவிர மற்ற அறிவில் இந்த மூன்றும் தனித்தனியாக இருக்கும்.

காரிகை34
நிக்ருஹீதஸ்ய மனஸஹ – ஒழுங்குபடுத்தப்பட்ட மனதையுடைய
நிர்விகல்பஸ்ய தீ4மதஹ – ஆத்ம ஞானத்தை அடைந்த மனதையுடைய
ஸஹ ப்ரசாரஹ விக்ஞேய – தன்மையை அறிந்து கொள்ள வேண்டும்.
ஸுஷுப்தெ அன்யஹ – ஆழ்ந்த உறக்கத்தில் வேறுவிதமான தன்மை உடையது மனம்
ந தத் ஸமஹ – ஞானநிஷ்டையுடையவனின் மனம், ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் மனதிற்கு இணையானதல்ல.
 

ப்ரசாரஹ என்ற சொல்லின் விளக்கம்:

ஆத்ம ஞானம் அடைந்த மனம் எப்படியிருக்கும் என்பதை விசாரம் செய்யப்படுகின்றது.  காரில் இருக்கும்  பின்னால் வரும் வண்டிகளை பார்க்க உதவும் கண்ணாடியை 1. பின்பக்கம் வரும் வண்டிகளை பார்க்கவும், 2. ஒரு பொருளாக பார்ப்பதற்கு, 3. தன்னுருவையே பார்ப்பதற்கு என்று  மூன்று வகையாக பயன்படுத்துகின்றோம்.  இதேபோல மனமும் மூன்று நிலைகளாக செயல்படுகின்றது. அவைகள்

  1. பிற விஷயங்களை தெரிந்து கொள்வதற்கும்
  2. தியானத்தின்போது ஒரு பொருளாகவும்’
  3. அக்ஞானத்தின் போது மனமே நாமாக எண்ணிக் கொண்டு இருக்கின்றோம்.


இந்த மூன்று நிலைகளிலும் மனமானது இன்ப-துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும்.
ஆத்ம ஞானியின் மனம் செயலற்றதாக இருக்கும். ஏனென்றால் அவன் தன்னை பிரம்மனாகவே உணர்ந்திருக்கின்றான், அவனுக்கு தன்னுடைய மனதுடன் எந்த சம்பந்தமும் இல்லாதவனாக இருக்கின்றான்.


காரிகை35
லீயதே ஹி ஸுஷுப்தே தத் – ஆழ்ந்த உறக்கத்தில் மனமானது ஒடுங்கியிருக்கின்றது, உறங்கிக் கொண்டிருக்கின்றது
நிக்ருஹீதம் ந லீயதே – ஞானத்தினால் ஒடுக்கப்பட்ட மனமானது உறங்கவில்லை.
ஆழ்ந்த உறக்கத்தில் மனம் அறியாமை என்ற இருளினால் மூடப்பட்டிருக்கின்றது, பிரம்மத்தினிடம் இருந்து கொண்டிருக்கும்
ததேவ நிர்பயம் ப்ரஹ்ம – ஞானியின் இந்த மனமே பயமற்ற பிரம்மன்தான்.  பிரம்மத்தை அறிந்தவன், உணர்ந்தவன் பிரம்மனாகவே இருக்கின்றான்.
ஸமந்ததஹ ஞான ஆலோகம் – ஞான என்கின்ற ஒளி வியாபித்து இருக்கின்றது

காரிகை36
அஜம் – பிறப்பற்றது ( நான் பிறப்பற்றவன் ) – ஸ்தூல சரீரம் அற்றவன்
அநித்ரம் – உறக்கமற்றது ( நான் உறக்கமற்றவன் ) – அறியாமை நீங்கப் பெற்றது
அஸ்வப்னம் – கனவுகளில்லாதது,
அவித்யா காரிய ரஹிதம் – விக்க்ஷேபமில்லாதவன்
அநாமகம் அரூபகம் – இந்த நாம ரூபமுடைய ஜகத்தும் இல்லை
ஸக்ருத்விபாதம் – எப்பொழுதும் ஒளிவீசுகின்ற தத்துவம்
ஸர்வக்ஞம் – அனைத்தையும் அறிந்தவன், அனைத்துமாகவும், அறிவு ஸ்வரூபமாகவும் இருக்கின்றது. தனக்கு வேறாக எதுவும் இல்லாதது.
ந உபசார கத2ஞ்சன – ஞான நிஷ்டை அடைந்தவனுக்கு செய்ய வேண்டியது ஒன்றுமில்லை.

காரிகை37
இதில் ஞானியினுடைய லக்ஷணம் கூறப்படுகின்றது
ஸர்வ அபிலாபவிகதஹ – இந்திரியங்கள் எதுவும் இல்லாதது.
அபிலாபஹ – வாக்கு கரணம்;
விகதஹ – இல்லாதது.
அக்ஞானிக்கு எல்லா இந்திரியங்களிடம் அபிமானம் வைத்திருப்பதால் அதற்கு வரும் இன்ப-துன்பங்கள் அவனை பாதிக்கின்றது.  ஞான நிஷ்டை அடைந்த ஜீவன் முக்தன் எதிலும் அபிமானமற்றவனாக இருப்பதால் எதனாலும் பாதிப்பதில்லை.
ஸர்வ சிந்தா ஸமுத்தி2தஹ – அந்தக்கரணமும் இல்லாதவனாக இருக்கின்றான்.
ஸுப்ரஶாந்தஹ – எப்பொழுதும் முழுமையான அமைதி வடிவுடையவன்
ஸக்ருத் ஜோதிஹி – எப்பொழுதும் ஒளி வீசிக்கொண்டிருப்பவன்.  அறிவு ஸ்வரூபமாக இருப்பவன்
ஸமாதி4ஹி – ஜீவனும், ஜீவனுடைய உபாதிகளும் எதில் வேற்றுமையின்றி கலந்திருக்கின்றதோ அதுவே பிரஹ்ம நிலை
அசலஹ – மாற்றமற்றவன்; மாற்றங்கள் எதுவுமில்லாதவன்
அபயஹ – பயமற்றவன்

காரிகை38
ஞானிக்கு செய்ய வேண்டிய கடமைகள் எதுவுமில்லை. அது ஏனென்று இதில் விளக்கப்படுகின்றது.  நம்முடைய செயல்கள் இரண்டாக பிரிக்கப்பட்டிருக்கின்றது.  முதலாவது எதையாவது அடைதல், சேர்த்து கொள்ளுதல், எடுத்துக் கொள்ளூதல், இரண்டாவது விலக்குதல், நீக்குதல்.  இந்த இரண்டில் ஒன்றில்தான் நாம் செய்யும் அனைத்து செயல்களும் அடங்கி இருக்கின்றது.  நம்முடைய அபிமானம் இந்திரியங்கள், அந்தக்கரணத்தில் இருக்கும்வரை நம்மை செயலில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கும். ஞானிக்கு இவைகளிடத்தில் உள்ள அபிமானம் நீங்கப்பெற்றவனாக இருக்கின்றான்.  பிரம்மனாகவே இருக்கின்றான்.  எனவே செயல்கள் எதுவும் செய்ய தேவையில்லாத நிலையில் இருப்பான்.  பிரம்மனிடத்தில் எதையும் சேர்க்கவும் தேவையில்லை, நீக்கவும் தேவையில்லை.  எனவே பிரம்மனாகவே இருக்கும் அவன் செயல்கள் எதுவும் செய்ய தேவையில்லாதவனாக இருக்கின்றான்.

க்ரஹ ந த்த்ர ந உத்ஸர்கஹ – அந்த பிரம்மனிட்த்தில் எதையும் சேர்க்கவோ, நீக்கவோ முடியாது.  அதனால் பிரம்மனாக தன்னை உணர்ந்த ஞானிக்கு செயல்கள் எதுவும் செய்ய வேண்டிய தேவை இருக்காது.
சந்தா யத்ர ந வித்யதே – மனம் அதிலுள்ள எண்ணங்கள் எதுவும் பிரம்மனிடத்தில் இல்லை
ஆத்ம ஸம்ஸ்தம் த்தா ஞானம் – பிரம்ம ஞான நிஷ்டையில் இருக்கும் ஞானியின் அறிவு ஆத்மவிடத்திலே, தன்னிடத்திலே ஒடுங்கியிருக்கும்.
அஜாதி ஸமதாம் கதம் – பிறப்பற்ற நிலையை அடைந்து விட்டான்.

காரிகை39
அஸ்பர்ஶயோகஹ வை நாம – ஆத்ம ஞானத்திற்கு, பிரம்மத்திற்கு அஸ்பர்ஶயோகம் என்று பெயரிடப்படுகின்றது
யோகஹ – ஆத்ம ஞானம், ஜீவனை பிரம்மனாக ஐக்கியப்படுத்தும் ஞானம்
அஸ்பர்ஶ – சம்பந்தமற்றது,
அஸங்கஹ – எதனோடும் ஒட்டாதது
ஞானியை எதனோடும் சம்பந்தப்படுத்தும் சக்தி எதற்கும் கிடையாது. அவன் எங்கிருந்தாலும் எதனோடும் சம்பந்தப்படாமல் அஸங்கனாக இருப்பான்.  பாரிவிராஜன் என்கின்ற சந்நியாஸி மூன்று இரவுக்கு மேல் ஒரு இடத்தில் தங்கி இருக்க கூடாது. இது சந்நியாஸியாக இருப்பவனுக்கு இருக்கின்ற முக்கியமான நியமம்.  இது ஞான நிஷ்டையடைந்த பிறகு இந்த நியமம் அவனுக்கு கிடையாது.
துர்தர்ஶஹ – மிகவும் கடினம்
ஸர்வயோகிபிஹி – எல்லா யோகிகளும், சாதகர்களும் இந்த ஞானத்தை அடைந்து நிலை பெறுவது
யோகினோ பிப்யதி அஸ்மாத் – இந்த ஆத்ம ஞானத்தின் சம்பந்தமற்ற நிலையை கண்டு யோகிகள் பயப்படுகிறார்கள்
அபயே பயதர்ஶினஹ – பயமற்ற நிலையை தரும் ஞானத்தைக் கண்டு பயப்படுகின்றார்கள். பயமற்ற பிரம்மனிடத்தில் பயத்தை பார்க்கின்றார்கள்.

காரிகை40
ஞானப்பலனை அடைவதற்கு மனக்கட்டுப்பாடு மிக மிக அவசியம் என்று கூறப்படுகின்றது.  மேலும் இத அடைவதற்கு வேறு மார்க்கம் இல்லை.
மனோ நிக்ரஹம் – மனத்தூய்மை, நுண்ணியமனம், மன ஒருமுகப்பாடு இந்த மூன்றும் ஒன்று சேர்ந்து இருக்கும் மனதினால்தான் இந்த ஞானத்தை அடைய முடியும்
மனஸஹ நிக்ரஹ ஆயத்தம் – மனதினுடைய கட்டுப்பாட்டை சார்ந்திருக்கின்றது ஆத்ம ஞானமும் அதில் நிலை பெறுவதும்
ஸர்வயோகினாம் – எல்லா ஸாதகர்களுக்கும் பொருந்தும். இதில் விதிவிலக்கு யாருக்கும் கிடையாது.

ஞானத்தின் பலன்கள்:
அபயம் – பயமற்ற நிலை;
துக்க க்ஷயம் – துயரமற்ற நிலை
ப்ரபோ3த4ச – ஸ்திதப்ரக்ஞன் – அடைந்த ஞானத்தில் உறுதியாக இருக்கும் நிலை
அபி அக்ஷய ஶாந்தஹ ஏவ ச – மேலும் என்றும் அழியாத மன அமைதியும் கூட இவைகள் அனைத்தும் மனோநிக்ரஹத்தினால் அடையப்படுகின்ற பலன்கள்.

காரிகை41
மனோ நிக்ரஹத்தை அடைய முக்கிய நிபந்தனை சொல்லப்படுகின்றது.  விடாமுயற்சியினால்  இதை அடைய முடியும்.  இந்த முயற்சியில் அடையும் பலன் இறுதியில்தான் கிடைக்கும்.  எனவே மனம் தளராமல் இடையில் விட்டுவிடாமல் தொடர்ந்து பலன் அடையும் வரை முயற்சி செய்து கொண்டிருக்க வேண்டும்.

யத்வத் உத்தே உத்ஸேக – எவ்விதம் கடல் நீரை வற்றிபோக செய்ய முயற்சி செய்கின்றதோ
குஶ அக்ரேன ஏக பிந்துகா – சிறிய புல்லினுடைய நுனியில் ஒரு துளி கடல் நீரை கொண்டு வந்து நிலத்தில் விட்டு, கடல் நீரை வற்ற வைக்கும் முயற்சியை
பவேத் அபரிகே2தஹ – இடைவிடாத முயற்சி செய்யப்பட்டதோ
த த்வத் – அதுபோல இடைவிடாத முயற்சியினால்
மனஸஹ நிக்ரஹ பவேத் – மனக்கட்டுப்பாட்டை அடைய முடியும்
 

காரிகை42

மனதை கட்டுபடுத்தும் முயற்சிக்கு, தியானத்திற்கு தடையாக வருபவைகளை நீக்குவதைத்தான் நாம் விடாமல் செய்து கொண்டிருக்க வேண்டும்.  யோக சாஸ்திரத்தில் நான்கு வகையான தடைகள் கூறப்பட்டிருக்கின்றது.  அவைகள்

  1. விக்ஷேபம்,
  2. லயம்,
  3. கஷாயம்,
  4. ரஸாஸ்வாதஹ.

இந்த காரிகையில் இரண்டு தடைகளை பற்றி கூறுகின்றது.

  1. விக்ஷேபம்– மன சஞ்சலம் – நாம் எதை மறக்க வேண்டுமென்று நினைக்கின்றோமோ அதுதான் திரும்ப திரும்ப நினைவுக்கு வந்து கொண்டிருக்கும்.  இரண்டு விதத்தில் இந்த விக்ஷேபம் வரும். அவைகள்
  2.    காமக்ருதஹ – காமத்தினால் வரும் விக்‌ஷேபம்.  ஒரு பொருளை அனுபவிப்பதற்கு முன்னாலே அதன் மீது இருக்கும் ஆசை மனதை அலைகழிக்கும். 
  3.    போக க்ருதஹ – நாம் அனுபவித்ததையே சிந்தித்து கொண்டிருத்தல், வாஸனா ரூபமாக இருந்து கொண்டு மனதை அலைகழிக்கும்.

உபாயேன நிக்ருணீயாத் விக்ஷிப்தம் காம போ4கயோ – சொல்ல போகின்ற விஷயத்தை சரியான முயற்சியுடன் செய்து காமத்தினாலும், போகத்தினாலும் விக்‌ஷேபம் அடைந்த மனதை கட்டுபடுத்தி அமைதியடைய செய்ய வேண்டும்.

  1. லயம்:சோம்பல், உறக்கம், விருப்பமற்ற நிலை

ஸுப்ரஸன்னம் லயே – சோம்பலினாலும், உறக்கத்தினாலும் மனம் அமைதியடைந்து விடும். இதையும் விடாமுயற்சியுடன் சரியான வழியில் முயற்சி செய்து நீக்க வேண்டும்.

யதா காமோ லயஸ்ததா2 – எவ்விதம் ஆசையானது நமக்கு துயரத்திற்கு காரணமாக இருக்கின்றதோ அவ்விதமும் லயம் துயரத்திற்கு காரணமாகின்றது.

 

காரிகை43
இதில் விக்‌ஷேபம் என்ற தடையை நீக்குவதற்கான வழி சொல்லப்படுகிறது. வைராக்கியமும்,  ஞானமும் வழிகளாக சொல்லப்படுகின்றது. உலகத்திலுள்ள பொருட்களின் மீதுள்ள பற்று, மற்றவர்களிடமிருந்து, எதையாவது எதிர்ப்பார்த்தல் ஆகியவைகளிலிருந்து வைராக்கியம் அடைய வேண்டும். இதை எப்படி அடைய வேண்டும் என்றும் கூறப்படுகின்றது.

துக்கம் ஸர்வம் – உலகத்திலுள்ள அனைத்தும் துயரமானது, துயரத்தைக் கொடுக்கக்கூடியது
அனுஸ்ம்ருத்ய – இதை திரும்ப திரும்ப நினைத்துப் பார்க்க வேண்டும்.
இன்று சுகத்தைக் கொடுக்க கூடிய பொருள் வேறொரு காலத்தில் துயரத்தை கொடுப்பதாக இருக்கும் என்ற விஷயத்தை நினைத்துப் பார்க்க வேண்டும்.  இதிலிருந்து எந்த பொருளுக்கும் நிரந்தரமாக சுகத்தை கொடுக்கும் சக்தி கிடையாது என்று புரிந்து கொள்ளலாம்
காம போ4கா4த நிவர்தயேத் – ஆசைகளை அனுபவிப்பதிலிருந்து நம்மை விலக்கி கொள்ள வேண்டும்
இதேப்போன்று பொருட்களின் நிலையற்ற தன்மையையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.  சுகத்தைக் கொடுக்கின்ற பொருட்களுக்கு அடிமையாகி விடுவோம், நம்முடைய சுதந்திரத்தை பறித்து விடும். எவ்வளவு அனுபவிக்கின்றோமோ அதேயளவு துயரத்தையும் அனுபவிக்க நேரிடும்.

காம-போகாத் விசாரம்
காமம்       – ஆசைபட்ட விஷயத்திலிருந்தும்
போ4கா3த்    – அனுபவிக்கபட்டு கொண்டிருக்கும் விஷயத்திலிருந்தும்
காம போகாத் – ஆசையினால் தூண்டபட்டு அனுபவிக்க நினைக்கும் விஷயத்திலிருந்தும் நம்மை நீக்கி கொள்ள வேண்டும்.
எந்தப்பொருள் மீது நமக்கு பற்றில்லையோ அதிலிருந்து நமக்கு எந்த துயரமும் வராது.  வைராக்கியத்தை அடைந்தாலும் மனது விக்‌ஷேபத்தை அடையலாம்.  இதை நீக்குவதற்கு ஞான அப்யாஸத்தினால் பார்க்கும் எல்லாமே ஈஸ்வரம் ஸ்வரூபம், பிரஹ்ம ஸ்வரூபம் என்று நினைத்து பழக வேண்டும்.
அஜம் ஸர்வம் – அனைத்தும் பிறப்பற்ற பிரஹ்ம ஸ்வரூபமே என்று
அனுஸ்ம்ருத்ய – மீண்டும், மீண்டும் நினைத்து பார்க்க பழக வேண்டும்
ஜாதம் ந ஏவ பஷ்யதி – பொய்யாக தோன்றிக் கொண்டிருக்கும் உலகத்தை அவன் நிலையென்று பார்ப்பதில்லை, ஏனென்றால் அது ஈஸ்வர ஸ்வரூபமாக அவனுக்கு தெரிந்து கொண்டிருக்கும்.
 

காரிகை44

லயே ஸம்போ4தயே சித்தம் – மனதை உறக்கம் வரும் நேரத்தில் எழுப்ப வேண்டும். தியானம் செய்யும் போது நான்கு தடைகள் வரும். அவைகள் நித்ரா சேஷஹ, அஜீரம், பஹூஅஸனம், ஸ்ரமஹ.

  1. நித்ரா சேஷஹ – தேவையான அளவு உறக்கத்தை இல்லாமல் தியானத்தை செய்தல்
  2. அஜீரம் – உண்ட உணவு செரிக்காமல் இருந்தாலும் இந்த நிலை
  3. பஹூ அஸனம் – அதிக அளவு சாப்பிட்டாலும் இந்த நிலை
  4. ஸ்ரமஹ – அதிகமாக உழைத்து விட்டும் தியானம் செய்யக்கூடாது

சங்கரரின் 5வது காரணம் – விருப்பமின்றி தியானம் செய்ய அமரும் போதும் தடை வரும்
விக்ஷிப்தம் ஶமயேத் புனஹ – மீண்டும் மனது விக்‌ஷேபத்தை அடைந்தால் அதை மேற்கூறியவாறு ஒழுங்குபடுத்த வேண்டும்.
 

மனமானது எப்பொழுதும் இரண்டு நிலைகளில் இருந்து கொண்டிருக்கும். அவைகள்

  1. விருப்பு-வெறுப்புக்களுடன் வாஸனா ரூபமாக ஸம்ஸ்காரமாக இருந்து கொண்டு இருக்கும்
  2. நாமிருக்கும் சூழ்நிலைகளுக்கேற்றவாறும் இருக்கும்


மனமானது வாஸனா ரூபமாக இருக்கும் ராக-துவேஷத்துடன் சம்பந்தப்பட்டு ஒருவிதமான மந்த நிலைக்கு வந்திருக்கும்போது விக்‌ஷேபமும், லயமும் இருக்காது ஆனால் எதையும் செய்ய விருப்பமில்லாமல் மந்தமாக இருக்கும்.  எதனால் மனம் இப்படி இருக்கிறது என்றும் நம்மால் அறிய முடியாது. இந்த நிலையையே கஷாயம் என்று கூறப்படுகின்றது. இது மூன்றாவது தடையாக இருக்கிறது. 


ராக பிரதிபந்தம் – வாஸனா ரூபமாக இருந்து கொண்டிருக்கும் ராக-துவேஷங்களின் பிடியில் மனம் கட்டுண்டு இருக்கும் நிலை.
ஸகஷாயம் – மனதானது கஷாயம் என்ற நிலையில் இருக்கும் போது

விஜானீயாத் – அந்த நிலையை புரிந்து கொள்ள வேண்டும்.

  • இந்த நிலையையே சமாதி, சரியான தியானம் என்று தவறாக புரிந்து கொள்ளக்கூடாது.  ஏனென்றால் இந்த நிலையில் நாம் எதையும் செய்யாமல் மந்தமாக இருப்பதால் இவ்வாறு நினைக்க தோன்றும்.
  • இந்த நிலையிலிருந்து வெளிவர முடியாது என்றும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். மனமானது அதுவாக வெளிவரும் வரை பொறுமையாக இருந்து கொண்டுதான் இருக்க வேண்டும்.

ஸமப்ராப்தம் ந சாலயேத் – இந்த மூன்று தடைகளிலிருந்து விடுபட்டு மனம் அமைதியடைந்தால் அந்த நிலையில் உறுதியாக இருக்கும்வரை வைத்து பழக வேண்டும்.

காரிகை45
நான்காவது தடையான ரஸா ஆஸ்வாதஹ ( சுகத்தை அனுபவித்தல்). தியானத்தில் கிடைக்கும் சுகத்தையே அனுபவிப்பதையே தடையாக கூறப்படுகின்றது.  இந்த தடையை மேற்கூறிய மூன்று தடைகளிலிருந்தும் விடுபட்டவனால்தான் அனுபவிக்க நேரிடும்.  தியானத்தில் மூன்று தடைகளை நீக்கிய ஒருவனுக்கு நான் பிரம்மன் என்ற அறிவோடு அமைதியாக இருப்பான்.  இந்த நிலையில் மனம் ஒருமுகப்பட்டு இருக்கும்.  இதுவே மனதிற்கு அமைதியை, சுகத்தை, ஆனந்தத்தை கொடுக்கும்.  இந்த சுகத்தையே ரஸம் என்று இங்கு குறிப்பிடப்படுகின்றது. இதை மனது அனுபவிக்க ஆரம்பித்து விட்டால் அதுவே தியானத்திற்கு தடையாக இருக்கும்.

நானே ஆனந்த ஸ்வரூபம், நான் ஆனந்தத்துடன் இருப்பதற்கு வேறெதுவும் தேவையில்லை என்ற ஞானத்துடன் தியானத்திலே இருக்கும். மனம் ஒருமுகப்பட்டு ஆனந்தம் ஏற்படும் போது அதை அனுபவிக்க ஆரம்பித்துவிட்டால் ஸ்வரூபமான நிலையிலிருந்து போக்தாவாக மாறி விடுகின்றோம்.  தியானத்தின் குறிக்கோளை அடையும் முற்சியில் இருந்து விலகி விடுகின்றோம்.

ந ஆஸ்வாதயேத் ஸுகம் தத்ர  – தியான நேரத்தில் வரும் சுகத்தை அனுபவிக்க கூடாது.
நிஸங்கஹ பவேத் – அந்த சுகத்திலிருந்து விலகி இருக்க வேண்டும்.
ப்ரக்ஞயா – விவேகத்தினால், அறிவின் துணைக் கொண்டு இந்த சுகமும் நிலையற்றது, தற்காலிகமானது என்ற அறிவுடன்

இத்துடன் தியானத்திற்கு வரும் தடைகளையும் அதிலிருந்து விடுபடுவதற்கான வழியையும் சொல்லி முடித்து விட்டார்.

நிஸ்சலம் நிஸ்சரத் சித்தம் – அமைதியை அடைந்து அசைவற்றிருக்கும் மனமானது வெளியே சென்றால், சஞ்சலமடைந்தால்
ப்ரயத்தனதஹ – விடாமுயற்சியுடன், சரியான முயற்சியுடன்
ஏகி குர்யாத் – மீண்டும் ஒருமுகப்படுத்த வேண்டும்.

காரிகை46
இதில் மனதில் அமைதியான ஸ்வரூபம் சொல்லப்படுகின்றது.
யத ந லீயதே சித்தம் – எப்பொழுது மனமானது உறங்கவில்லையோ, லயம் என்ற தடையற்ற நிலையில் இருக்கும்போது, கஷாய தடையும் நீங்கி இருக்கும் நிலையில்
ந விக்‌ஷிப்யதே புனஹ – எந்தவித சஞ்சலமில்லாமல் இருக்கும் நிலையில், அமைதியான சுகத்தையும் அனுபவிக்காத நிலையில் இருக்கும்போது
அனிங்கனம் – அசைவற்று இருக்கின்ற மனம், ( தீபத்தின் சுடர் காற்றில்லாத இடத்தில் எவ்வாறு அசைவற்று இருக்குமோ அதுபோல இருக்கும் மனது )
அனாபாஸம் – எந்த விஷயத்தோடும் சம்பந்தப்படாமல் இருக்கும்
ததா தத் – அப்பொழுது அந்த மனமானது
நிஷ்பன்னம் பிரஹ்ம – பிரம்ம ரூபமாக இருக்கின்றது
 

காரிகை47
இதில் நிதித்யாஸன சாதனத்தையும், அதில் வெற்றியடைந்த சாதகன் எப்படி இருப்பான் என்றும் கூறப்படுகின்றது
உத்தமம் சுகம் – மேலான சுகம், பேரின்பம்
ஸ்வஸ்தம் – தன்னிடத்திலே இருத்தல் (இந்த நிலையில் அனுபவிக்கும் சுகமே மேலானது)
ஶாந்தம் – அமைதி, துயரமற்ற நிலை, அனைத்து துயரங்களும் சென்றுவிட்ட நிலை
ஸ நிர்வாணம் – மோக்ஷ ஸ்வருபமானது, மோட்ச நிலை
அகத்யம் – வாயால் சொல்ல முடியாத சுகத்தை அனுபவித்தல், இந்த சுகத்தை அனுபவிப்பவர்களால்தான் உணர முடியும்.
அஜம் – பிறவாத பிரஹ்ம சுகமானது இந்த நிலை
அஜேன ஞேயன அபின்னம் – பிறப்பற்றதும், அறியத்தக்கதுமான பரம்பொருளுடன் வேறுபடாத நிலை
ஸர்வக்ஞம் (ஸர்வம் ச ஞம் ச ) – அறிவுமாகவும், அனைத்துமாகவும் இருக்கின்ற பரம்பொருளாகவே இருக்கும் நிலை
பரிசக்ஷதே – பிரம்மத்தை உணர்ந்த ஞானிகள் இவ்வாறு விவரிக்கின்றார்கள்.
 

காரிகை48
ஏதத் தது உத்தமம் ஸத்யம் – இதுவரையில் விளக்கப்பட்ட பிரம்மமானது மேலான ஸத்யமாக இருக்கின்றது
கஸ்சித் ஜீவஹ ந ஜாயதே– எந்தவொரு ஜீவனும் பிறக்கவில்லை
ஸம்பவஹ அஸ்ய ந வித்யதே – இந்த ஜீவனுக்கு காரணம் இல்லை
யத்ர கிஞ்சித் ந ஜாயதே – எதனிடத்தில் எதுவும் பிறக்கவில்லையோ அதுதான் உத்தமமான ஸத்யம்
பிரம்மன் எதற்கும் உபாதான, நிமித்த காரணமாக இல்லை, அதேபோல அதற்கு எதுவும் உபாதான, நிமித்த காரணமாகவும் இல்லை.

 

நிதித்யாஸனம்:

  • அமனீபாவஹ – மனதை மனமற்றதாக மாற்றுதல், இதனால் சம்சாரம் விலகிவிடும்
  • ஞானத்தினால் அமனீபாவம் – இந்த மனமற்ற தன்மையை ஆத்மஞானத்தினால்தான் அடைய முடியும்
  • உறக்கம், சமாதி இவைகளுக்கும், அமனீபாவத்திற்கும் உள்ள வேற்றுமை
  • ஞானியின் ஸ்வருபமும், பிரம்மத்தினுடைய ஸ்வரூபமும் ஒன்றே
  • ஞானத்தை அடைந்த நிலைபெற்ற ஞானிக்கு செய்ய வேண்டியது ஒன்றுமில்லை
  • அஸ்பர்ஷ யோகஹ என்ற பெயரால் பிரம்மம் அழைக்கப்பட்டது
  • விடாமுயற்சி தேவை, நான்கு தடைகளும் அதை நீக்கும் வழிகளையும் விளக்கப்பட்டது
  • மோட்சத்தை அடைந்த ஞானியின் மனநிலை

—-oo000oo—-

மாண்டூக்ய உபநிஷத் – பகுதி6

4வது பிரகரணம் – அலாதி ஶாந்தி – மனன கிரந்தம்

 அலாதம் – தீப்பந்தம்

அலாத ஶாந்தம்  – தீப்பந்தம் செயல்படாமல் இருந்து விட்டால் அதிலிருந்து எந்த உருவங்களையும் தோற்றுவிக்க முடியாது

ஜகத்தின் மித்யாத்வத்தை மீண்டும் இதில் விளக்கப்படுகின்றது.  மற்ற பிரகரணத்தில் செய்யப்பட்ட அத்வைத ஸித்தி இதிலும் வேறு முறையில் செய்யப்படுகின்றது.  த்வைதிகளின் கருத்துக்களை நீக்கி அதன்மூலம் இது நிச்சயிக்கப்படுகின்றது.

மூன்றுவித அறிவினால் அடைந்த அறிவில் உறுதியாக இருக்க முடியும். அவைகள்

  1. எது சரி, எது தவறு என்ற அறிவு
  2. எதனால் இது சரியான அறிவு என்று தெரிந்து கொள்ள வேண்டும்
  3. எப்படி இது தவறு என்ற அறிவு

 சிரவணத்தினால் எது சரி (அத்வைதம்) எது தவறு (த்வைதம்) என்ற அறிவு வரும். இதற்கு சிரத்தை மிகவும் அவசியம்.  எந்தவொரு அறிவுக்கும் இரண்டு தடைகள் வருவதுண்டு.  அவைகள் சம்ஸ2யஹ (சந்தேகம்), விபர்யயஹ ( விபரீத பாவனை – ஸம்ஸ்காரங்கள்)

  • சந்தேகத்தை நீக்குவதற்கு மனனம் என்ற சாதனத்தை பயன்படுத்த வேண்டும்.  சந்தேகமற்ற அறிவு திடமானதாக இருக்கும்.
  • விபரீத பாவனையை நீக்குவதற்கு நிதித்யாஸனம் என்ற சாதனத்தை பயன்படுத்த வேண்டும்.  அவிவாதம் – தேவையில்லாத வாதம், வாதத்தினால் எந்த அறிவையும் கொடுக்க முடியாது
  • அறிவுடையவனுக்கு வாதிபயம் இருந்து கொண்டிருக்கும், இந்த பயத்தை மனனம் மூலம் போக்கி விட முடியும்
  • மனனம் மூலம் தவறான கருத்துடையவர்களை திருத்த வேண்டும் என்ற உந்துதல் இருக்காது
  • யாரிடமும் வாதம் செய்து கொண்டிருக்கக்கூடாது.

 காரிகை1

எந்த ஞான ரூபமான ஈஸ்வரன் எங்கும் வியாபித்திருக்கின்ற ஆகாசத்தை போல உள்ள ஞானத்தினால் ஜீவர்களை அறிகின்றாரோ, அறிய வேண்டியவைகளை சரியான அறிவினால், அறிய உதவுவது ஆத்மஞானம் ஒன்றுதான் இருக்கின்றது என்று புரிய வைக்கின்றார்.  அந்த ஈஸ்வரனை மேலான இரண்டு கால்களையுடைய மனிதர்களுக்குள் உத்தமனாக இருக்கின்றவர் (புருஷோத்தமன் என்பதே இவ்வாறாக அழைக்கப்படுகின்றது ) அவரை வணங்குகின்றேன்

 ஞானரூபமான நாராயணன் ஞானரூபமான ஜீவனை அறிந்திருக்கின்றார்.  ஜீவனை தனக்கு வேறாக கருதாமல் தன் ஸ்வரூபமே அவர்கள் என்று அறிகின்றார்.  அந்த நாராயணனை மனிதர்களில் உத்தமரான புருஷோத்தமனை வணங்குகின்றேன்.

 காரிகை2

இந்த காரிகையில் அத்வைத நாமத்தை நமஸ்கரிக்கின்றார்.

அஸ்பர்ஷ யோகம் என்ற பெயருடைய ஆத்ம ஞானம்.  இது அனைத்து ஜீவர்களுக்கும் சுகத்தை கொடுப்பது, ஞான யோகம் என்கின்ற சாதனத்தை பயன்படுத்தும்போதும் சுகமாக இருக்கும், அதனால் கிடைக்கும் பலனும் சுகமான இருக்கும்.  உதாரணமாக சாப்பிடும் போதும் சுகம், பசி அடங்கியது சுகமாக இருக்கும்.  எவைகளெல்லாம் சுகத்தை கொடுக்கின்றதோ அவைகளெல்லம் நன்மையைக் கொடுக்காது.  ஆனால் ஆத்மஞானம் சுகத்தையும், நன்மையையும் கொடுக்கும். இது விவாதத்திற்கு அப்பாற்பட்டது, வாதத்தினால் அடைய முடியாது.  எதற்கும் முரண்படாதது, எதனுடன் விரோதம் கொள்ளாது. சாஸ்திரம் மூலமாக குரு-சிஷ்ய பரம்பரையாக உபதேசிக்கப்படுகின்றதுமான இதை வணங்குகின்றேன்.

 காரிகை3

ஸத்காரிய வாதம் – இருப்பது தோன்றியதா? 

அஸத்காரிய வாதம் – இல்லாதது தோன்றியதா?

 இருப்பதினுடைய பிறப்பை கொள்கையாக உடையவர்கள், விரும்புபவர்கள் இருக்கின்றார்கள்

சிலர்தான் இவ்வாறு சொல்கின்றார்கள் அவர்களை சாங்கியர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள்.  வேறு சில அறிவுடையவர்கள், இல்லாததிலிருந்து தோன்றுகின்றது என்று சொல்கிறார்கள்.  இவ்வாறு ஒருவருக்கொருவர் வாதிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

 காரிகை4

அஸத்கார்யவாதி சொல்கின்றான், எந்தவொன்றும் ஏற்கனவே இருக்கின்ற நிலையிலிருந்து பிறக்காது. ஏற்கனவே அது இருப்பதனாலேயே அது பிறப்பதில்லை, உதாரணமாக பிரம்மன்.  இல்லாததிற்கு பிறப்பு என்பது கிடையாது என்று ஸத்காரியவாதி வாதிடுகின்றான்.  அது இல்லாமல் இருக்கின்ற காரணத்தினாலே பிறப்பு என்பது ஒன்று நிகழாது உதாரணமாக முயல்கொம்பு போல என்று வாதிக்கின்றான்.  மேற்கண்டவாறு விவாதித்து கொண்டிருப்பவர்கள் இருமைவாதிகள், த்வைதிகள் அவர்களுக்கே தெரியாமல் பிறப்பற்ற தத்துவத்தைத்தான் நிலை நாட்டுகின்றார்கள்.

 காரிகை5

இருமைவாதிகளின் வாதத்தினால் நிரூபிக்கபட்ட எதுவும் தோன்றவில்லை என்ற முடிவை அத்வைதிகளான நாம் சரியென்று ஏற்றுக் கொள்கின்றோம்.  அவர்களுடன் வாதம் செய்யமாட்டோம். மேலும் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும், எதுவும் பிறக்கவில்லை என்பதை வாதத்தினால் நிலை நாட்ட முடியாது.

 காரிகை6

அஜாதஸ்ய ஏவ பா4வஸ்ய ஜாதிம் இச்சந்தி வாதி3னஹ – எதனிடமிருந்தும் தோன்றாத, பிறப்பற்ற இந்த பிரம்மத்திடம் இருமையை வாதிப்பவர்கள் பிறப்பை விரும்புகிறவர்கள்

அஜாத அம்ருத பா4வ – பிறப்பற்ற, மரணமற்ற இந்த பிரம்மன்

மர்த்யதாம் கதம் ஏஷ்யத் – எப்படி மரணத்தை அடையும்?

 பிரம்மத்திலிருந்து ஒன்று தோன்றியது என்று சொல்வது பிரம்மன் அழிவைத்தான் கூறுகிறார்கள். இயற்கை நியதிப்படி ஒன்றின் அழிவிலிருந்துதான் வேறொன்று பிறக்கின்றது.

 காரிகை7

அழியாத பிரம்மனே அழியக்கூடிய உலகமாக மாறி காட்சியளிக்கின்றது என்று எடுத்துக் கொள்ளலாமே என்றால், இயற்கை நியதிப்படி ஒரு பொருள் இன்னொரு பொருளாக மாறவே முடியாது. அந்தப் பொருளினுடைய குணங்கள், தன்மைகள் காலப்போக்கில் மாற்றமடைந்து வேறொன்றாக தோன்றலாமே தவிர அதுவே வேறொன்றாக மாற முடியாது. உதாரணமாக மனிதன் காலப்போக்கில் அவன் தோற்றம், குணங்கள் மாறலாம் ஆனால் அவன் மனிதனாகவே இருப்பான்.  ஒரு பொருளின் ஸ்வரூபம் மாறிவிட்டால் அது அதனுடைய அழிவைக் குறிக்கின்றது, மாற்றத்தை குறிக்கவில்லை.

 ந பவதி அம்ருதம் மர்தியம்  – அழியாத பிரம்மன் அழிகின்ற உலகமாக மாறாது

மர்த்யம் அம்ருதம் த்தா4     – அதுபோல அழிகின்ற ஒன்று அழியாததாக மாற முடியாது.

ப்ரக்ருதே அன்யதா பா4வஹ – ஒரு பொருளின் ஸ்வரூபத்திற்கு வேறாக மாறுதல் என்பது

கதஞ்சித் ந ப4விஷ்யதி       – எந்த விதத்திலும் நடைபெறாது. ஏனென்றால் அது அழிந்து விடும்.

 காரிகை8

  1. அனிர்மோக்ஷ பிரஸங்கஹ– மோட்சத்தை அடையமுடியாது என்ற நிலை ஏற்படும். மேற் சொன்ன கருத்தை ஏற்றுக்கொண்டோமேயானால் இந்த குறை ஏற்படும்
  2. ப்ரதிக்ஞா ஹானி– முதலில் அழியாதது என்று பிரம்மத்தை கூறிவிட்டு பிறகு அழியக்கூடியது என்று சொல்வது முதல் கூறிய கருத்துக்கு எதிராக இருக்கும்

யஸ்ய – இந்த கருத்துப்படி

ஸ்வபாவேன அம்ருதஹ பா4வஹ – இயற்கையாகவே மரணமற்ற தத்துவம் என்று கூறப்பட்டது.

கச்சதி மர்த்யதாம் – மரணமடைகின்ற தன்மையுடன் மாறுகின்றது என்று கூறப்படுகின்றது.

தஸ்ய – இப்படிபட்ட கருத்தை உடையவனுக்கு ( அழியாதது அழிவுடையதாக மாறுகின்றது, பிறகு மீண்டும் அழியாததாக மாறுகின்றது )

க்ருதகேன அம்ருதஹ – மரணமடையாத தன்மையாக மாறுகின்ற காரணத்தினால்

கத4ம் நிஸ்சல ஸ்தாஸ்யதி – எப்படி அது மீண்டும் மரணமடையாகததாக இருக்கும்.

இவ்வாறு யுக்தி மூலம் உலகம் தோன்றவில்லை என்று நிரூபணமாகின்றது.

 காரிகை9

பிரக்ருதியின் குணத்தை இதில் கூறுகின்றார்

ஸாம்ஸித்3தி4ஹி – என்றுமுள்ளது, அடையப்படாதது.  சில யோகிகள் பிறக்கும்போது சில சக்திகளுடன் பிறந்திருப்பார்கள்.  அதை அவர்கள் எந்த முயற்சி செய்தும் அடையவில்லை.  அது அவர்களுடைய சுபாவமாக இருக்கும் அதற்குதான் ஸாம்ஸித்தி என்று பெயர்.

ஸ்வாபவிகி – எப்பொழுதும் ஒன்றோடு இயற்கையிலே இருந்து கொண்டுவருவது.  உதாரணமாக நெருப்பிடம் இருக்கும் சுடும் தன்மை எப்பொழுதும் அதனோடு இருந்து கொண்டிருப்பது போல

ஸ்ஹஜா – சேர்ந்தே இருப்பது ( பறவைகளிடத்தில் இருக்கும் பறக்கும் சக்தி )

அக்ருதா – செய்யப்படாதது (உ-ம்) நீரானது பள்ளத்தை நோக்கி ஒடுவது போல

சயா – இப்படி இருக்கும் எந்தவொன்று

ப்ரக்ருதி இதி விஞேய – ப்ரகிருதி என்று அறிந்து கொள்ள வேண்டும்.

யா ஸ்வபாவம் ந ஜஹாதி – இதன் அந்த தன்மை மாறாமல் என்றுமிருக்கும்

 காரிகை10

ஜீவர்கள் உண்மையில் ஸ்வரூபமாக வயோதிகம், மரணம் போன்ற எதுவும் இல்லாதவர்கள், அதாவது சம்சாரம் அற்றவர்கள்.  ஆனால் வயோதிகமும், மரணமும் இருப்பதாக நினைக்கின்றார்கள்.  அந்த தவறான எண்ணத்தினால் வீழ்ச்சி அடைந்து சம்சாரத்தை அனுபவிக்கின்றார்கள்.

காரிகை11

  1. இல்லாததிலிருந்து தோன்றியது இந்த ஸ்ருஷ்டி என்பது அஸத்காரியவாதம்
  2. நான்கு காரணங்களைக்கூறி இது தவறு என்று நிரூபிக்கப்படுகின்றது. அவைகள்,

2.1.   ஸ்ருதி பிரமாண அபாவாத் – வேதாந்த பிரமாணம் இதற்கு கிடையாது.  அஸத்திலிருந்து எப்படி ஸத் தோன்ற முடியும்.

2.2.   நம் உடல் ஆறுவித மாறுதல்களை அடையக்கூடியது அவைகள் அஸத்-இருத்தல், ஜாயதே-பிறத்தல், வர்ததே-வளர்தல், விகாரஹ-மாறுகின்றது, தேய்கின்றது, விநஷ்யதி-அழியக்கூடியது  பா4வ விகாரங்கள் இருக்கின்ற ஒன்றினுடைய விகாரங்கள் பிறத்தல் இருக்கின்ற ஒன்றுக்குத்தான் சொல்லப்பட்டிருக்கின்றது

2.3.   இலக்கணத்தில் அடிப்படையிலும் நீக்கப்படுகின்றது.  இலக்கணத்தில் உள்ள வினைச்சொல் கர்த்தாவோடு சேர்ந்துதான் பொருள் கொடுக்கும்.  எனவே செயலுக்கு கர்த்தா கட்டாயம் தேவை.  பிறந்தது என்ற வினைச்சொல் கர்த்தாவை சொல்ல வேண்டும்.  கர்த்தா என்பது இல்லாதது என்று சொல்ல முடியாது, இருப்பதைத்தான் சொல்ல முடியும்

2.4.   வ்யாகாத தோஷம் – முரண்பாடாக பேசுவது. இல்லாதது, இருக்கின்றது

இந்த நான்கு காரணங்களால் அஸத்காரிய வாதம் நீக்கப்படுகின்றது

 ஸத்காரியவாத விளக்கம்:

  • இருப்பதுதான் பிறக்கின்றது.. ஏற்கனவே இருப்பது ஏன் பிறக்க வேண்டும். என்ற கேள்விக்கு இருத்தல் என்பது இரண்டு விதத்தில் இருக்கும்.  அவைகள் வெளித்தோற்றத்திற்கு வராதது, வெளித்தோற்றத்திற்கு வந்தது.  இதனால் இது சாத்தியமாகின்றது
  • தோன்றிய உலகமான இந்த காரியம், அவ்யக்தமாக காரணத்தில் இருந்தது
  • வெளித்தோற்றத்திற்கு வந்ததைதான் பிறக்கின்றது என்று கூறுகின்றோம்.
  • இது பரிணாம வாதத்தோடு ஒத்துப்போகின்றது
  • காரண காரியம் இரண்டும் ஒன்றுதான், ஆனால் இரண்டு அவஸ்தைகள் உண்டு.

 அத்வைதியின் ஸத்காரியவாத பார்வை

  • எல்லா நிலைகளிலும் இதை நீக்கவில்லை, சிலவற்றைத்தான் ஏற்றுக்கொள்கின்றோம்.
  • ஜகத்-மாயா இரண்டுக்குமிடையே உள்ள சம்பந்தம் ஸத்காரிய வாதத்தை ஒத்து இருக்கின்றது
  • காரியமான இந்த உலகம் மூன்றுவிதமான குணங்களை உடையது.  சத்வ, ரஜஸ், தமஸ் என்கின்ற இந்த மூன்று குணங்கள் மாயையில் உண்டு.  ஏனென்றால் காரியத்தில் எவ்வளவு குணங்கள் உண்டோ அதே அளவுதான் காரணத்திலிருக்கும் என்பது நியதி
  • ஜகத்துக்குள்ளே காரண-காரியம் என்ற நியதியை பார்க்கின்றோம். அதுவும் ஸத்காரியத்தை ஒத்துதான் இருக்கின்றது.
  • மாயை பிரம்மத்தை சார்ந்திருக்கின்றது.  எனவே இந்த இரண்டுக்கும் உள்ள சம்பந்தம் என்ன என்ற கேள்விக்கு அஜாதி வாதத்தை முன்வைக்கின்றோம்.
  • பிரம்மம்-மாயை என்கின்ற விஷயத்தில் ஸத்காரிய வாதத்தை பயன்படுத்தினால், பிரம்மமே பரிணாமத்தை, மாற்றத்தை அடைந்து மாயையாக மாறிவிடும் நிலை ஏற்படும்.  இது பிரம்மத்தின் உண்மையான ஸ்வரூபத்திற்கு முரணாக உள்ளதால் இது சரியாக இருக்காது. எனவே இந்த சம்பந்தம் விவர்த்த சம்பந்தம் என்று அழைக்கப்படுகின்றது.  எந்தவொன்று தன்னுடைய ஸ்வரூபத்தை இழக்காமல், தன் மீது வேறொன்றை தோற்றுவிக்கின்றதோ அதற்கு விவர்த்த வாதம் என்று பெயர். கயிற்றில் தோன்றும் பாம்பு இதற்கு உதாரணமாக இருக்கின்றது.  எனவே பிரம்மம் விவர்த்த காரணமாக இருக்கின்றது.  எது ஏற்றி வைக்கப்பட்டிருக்கின்றதோ அதை மித்யா என்று சொல்கின்றோம்.  மாயையிலிருந்து தோன்றிய அனைத்தும் மித்யாவாகத்தான் இருக்க முடியும். இதிலிருந்து ஜகத்தும் மித்யா என்று புரிந்து கொள்ளலாம்.
  • ஸாங்கிய மதத்தின் கொள்கை
  • ஜகத் என்பது படைக்கபட்டது
  • படைக்கப்பட்ட ஜகத் சத்யம்,தோன்றி கொண்டிருக்கின்ற இந்த உலகம் உண்மை
  • காரணம் என்பது ஒரு பிரதானம்
  • பிரதானத்திற்கு இரண்டு தன்மைகள் உண்டு. 1.பிறப்பற்றது, 2. நித்யம்
  • காரிய-காரணமும் ஒன்றுதான்,ஆனால் அவஸ்தா பேதங்கள் உண்டு.

 காரிகையின் விளக்கம்:

எவர்களுடைய (சாங்கியர்கள்) மதக்கொள்கைப்படி காரணமே காரியமாக இருக்கின்றதோ அப்படிபட்ட கொள்கையின்படி காரணமானது பிறந்ததாக இருக்கின்றது.  இது அந்த கொள்கைக்கே முரண்பாடாக இருக்கின்றது.  காரியம் பிறந்தது என்றும், காரியமும் காரணமும் ஒன்று என்று சொன்னால் காரணமும் பிறந்ததாகத்தான் இருக்க வேண்டும்.  அப்படிபட்ட பிறக்கின்ற காரணம் (பிரதானம்) எப்படி பிறப்பற்றது என்று சொல்கின்றாய்? இது பிறப்பற்றதாகத்தான் இருக்க முடியும்.  அந்த மாற்றத்தை அடைகின்ற பிரதானம் எப்படி நிலையானதாக இருக்க முடியும், இருக்க முடியாது.

 

  • ஸத்காரிய வாதத்தில் காரணம் மாற்றத்தை அடையலாம்
  • எது மாற்றத்தை அடைகின்றதோ அது பிறப்பற்றது என்று கூறமுடியாது
  • அது நித்யம் என்றும் சொல்ல முடியாது.

 

காரிகை12

காரணத்திலிருந்து ஒருவேளை காரியம் வேறுபடாமல் இருந்தால், காரியமானது பிறப்பற்றதாகி விடும். ஒருவேளை பிறக்கின்ற காரியத்திலிருந்து காரணம் வேறுபடவில்லையென்றால் உன்னுடைய காரணம் எப்படி பிறப்பற்றதாகும், நித்யமாக இருக்கும்.

 

காரிகை13

காரண-காரிய வாதத்திற்கு மூன்று நிலைகள் இருக்கலாம். அவைகள்

  1. காரணம் பிறப்பற்றது – காரியம் பிறப்பற்றது
  2. காரணம் பிறப்பற்றது – காரியம் பிறப்பது
  3. காரணம் பிறப்பது – காரியமும் பிறப்பது

முதல் நிலையில் உள்ளது இயலாத காரியம். இரண்டாவதும் தவறு என்று நீக்கப்படுகின்றது. மூன்றாவதிற்கு இதன் மூலகாரணம் அடையவே முடியாது என்று நீக்கப்படுகின்றது.

 ஸாங்கியர்களின் கொள்கைப்படி பிறப்பற்ற காரணத்திலிருந்து இந்த உலகம் தோன்றுவதாக எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு எந்தவித பிரமாணமும் இதை உறுதிசெய்வதற்கு இல்லை.  பிறக்கின்ற காரணத்திலிருந்து காரியம் பிறக்கின்றது.  இதை தொடர்ந்து சென்று கொண்டேயிருக்கும்.  மூலகாரணத்தை அடையவே முடியாது.

 காரிகை14

கேள்வி      கர்மபலன்கள் – சரீரம்- காரண-காரியமாகத்தான் இருக்கின்றது.  இந்த சரீரம் தோன்றுவதற்கு காரணம் கர்மபலன்கள்தான். சரீரத்திலிருந்து பாவ-புண்ணியங்கள் தோன்றியது. சாஸ்திரத்தின் அடிப்படையில்தான் இவ்வாறு கூறப்படுகிறது. இந்த கர்ம சரீரம் அநாதியாக இருக்கின்றது.  இந்த இரண்டின் அடிப்படையில்தான் தோன்றியிருக்கும் பிரபஞ்சம் சத்யமானது.  எந்த இரண்டு பொருளுக்குமிடையே காரண-காரியம் என்ற சம்பந்தமே இருக்க முடியாது என்பது சித்தாந்தம்.

 

பதில்   கர்ம-சரீரம், காரண-காரிய சம்பந்தம் அநாதி என்று நிலை நாட்ட முடியாது.  எவர்களுடைய கருத்துப்படி கர்மத்திற்கு (கர்ம பலன்கள்) காரணம் உடல்தான் என்றும், சரீரத்திற்கு காரணம் கர்மபலன்கள் என்றும் இருக்கின்றதனால், கர்மத்திற்கும், உடலுக்கும் அநாதி என்று எப்படி அவர்களால் கூறமுடியும்..  எனவே உடலும், கர்மமும் அநாதியல்ல அவைகள் தோன்றிக் கொண்டிருக்கின்றன. உடலிலிருந்து கர்மபலனும் கர்மபலனிலிருந்து உடலும் தோன்றிக் கொண்டிருப்பதால் அநாதி என்று சொல்ல முடியாது.

 

காரிகை15

கர்மத்திற்கு காரணம் உடலாகவும், உடலுக்கு காரணமாக அதே கர்மபலன்கள் இருக்கின்றது என்ற கருத்துக்கு மகனிடமிருந்து தந்தை பிறந்தார் என்ற நிலை ஏற்படும்

 

காரிகை16

கர்மத்திற்கும் சரீரத்திற்கும் அல்லது காரண-காரியமானது சம்பவிக்க வேண்டுமென்றால் ஸ்ருஷ்டி கிரமமானது உன்னால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.  ஒருவேளை இந்த கிரமத்தை ஏற்றுக் கொள்ளாமல் இரண்டும் சேர்ந்தே தோன்றியது என்று சொன்னால் இந்த இரண்டிற்கும் காரண-காரிய இருக்கின்றது. மாட்டின் இரண்டு கொம்புகள் சேர்ந்து ஒன்றாக தோன்றுவது போல

 

காரிகை17

பலாது உத்பத்யமானஹ ஸன் – இப்பொழுது இருக்கின்ற சரீரத்திலிருந்து,  வரப்போகின்ற கர்மம் என்ற இப்போது இல்லாமலிருக்கின்ற நிலையிலிருந்து

தே ஹேது ந ப்ரஸித்4யதி – உன்னுடைய கர்மம் இன்னும் தோன்றவில்லை

அப்ரஸித்3த4ஹ கர்த ஹேது – தோற்றத்திற்கு வராத கர்மபலன்

கத4ம் பலம் உத்பாயிஷ்யதி – எப்படி சரீரத்தை தோற்றுவிக்கும்.

 

காரிகை18

ஒருவேளை உடலிலிருந்து கர்மத்தினுடைய தோற்றம், கர்மத்திலிருந்து உடலின் தோற்றம் இந்த மாதிரி கொள்கையிருந்தால் இரண்டில் எது முதலில் தோன்றியது.  எந்த கர்மத்தினுடைய இருத்தலை முன்னிட்டு சரீரத்தின் தோற்றத்தை நீ கூறமுடியும் அல்லது எந்த உடலினுடைய இருத்தலை வைத்து கர்மத்தின் தோற்றத்தை சொல்ல முடியும்.

 

காரிகை19

உனக்கு பதில் சொல்வதற்கு சக்தி இல்லை.  போதுமான அறிவில்லாததால் இந்த நிலை.  மாற்றி மாற்றி பேசுகின்றாய்.  மீண்டும் மீண்டும் இதற்கு இவ்விதம் இருக்கின்ற காரணத்தால் எல்லாநிலைகளிலும் அறிவாளியான உங்களால் பிறப்பற்ற தத்துவமானது விளக்கப்பட்டுள்ளது

 

காரிகை20

விதை-செடி உதாரணம் எப்பொழுதும் சந்தேகத்திற்குரியது. நிச்சயம் செய்யப்பட வேண்டியதாக இருக்கின்றது.  மூலகாரணத்தை முடிவு செய்யப்பட முடியாது. நிச்சயம் செய்ய முடியாத உதாரணத்தை காரணத்தை நிரூபிக்க வேண்டிய விஷயத்தில் பயன்படுத்தக்கூடாது.  இந்த பீஜாந்திர உதாரணம் உன்னுடைய கொள்கைக்கு பொருந்தி வராது.

 

காரிகை21

இது முன்னே வந்தது, இது பின்னே வந்தது.  இந்த அறிவே அஜாத வாதமானது அரைகுறை ஞானத்தை நிரூபிக்கின்றது.  காரண-காரிய இந்த இரண்டை பற்றிய ஞானம் இருந்தால் இந்த சம்பந்தத்தை சொல்லக் கூடாது.

 

காரிகை22

மூலகாரணம் தெரியாமலே இந்த உலகம் காரியம் என்று சொல்கிறார்கள்.  பிறக்கின்ற காரியத்திற்கு முன் இருப்பது காரணம் அறியப்படவில்லை என்று எப்படி நீ சொல்ல முடியும்.

தன்னிடத்திலிருந்து ஒன்றை தோற்றுவிக்க முடியுமா? தனக்கு வேறாக உள்ள ஒன்றிலிருந்து தோன்ற முடியுமா?  இரண்டிலுமிருந்தும் தோன்ற முடியுமா? எந்த பொருளும் தோன்ற முடியாது, பிறக்காது. இருத்தல், இல்லாதது, இருந்தும் இல்லாததும் இவை மூன்றிலிருந்தும் எந்த பொருளும் தோன்றாது, பிறக்காது.  இருப்பது பிறக்காது, இல்லாததலிருந்து எதுவும் தோன்ற முடியாது.  இருப்பதும் இல்லாததும் சேர்ந்து எதையும் தோற்றுவிக்க முடியாது.

 

காரிகை23

காரணமானது பிறக்கவில்லை, தோன்றவில்லை, இல்லாததினால் மித்யாவை குறிக்கின்றது. என்றும் இருப்பதையும், எப்பொழுதும் இல்லாததும் குறிக்கின்றது.  காரணத்தினுடைய தன்மையாக காரியம் இருப்பதால் காரியமும் தோன்றவில்லை.  எனவே யாருடைய கருத்துப்படி காரணம் என்பது இல்லையோ அவருடைய கருத்துப்படி பிறப்பும் இல்லை என்ற கருத்து நிலை நாட்டபடுகின்றது.

 

காரிகை24

புத்த மதத்தில் உள்ள நான்கு பிரிவுகளின் விளக்கம்:

  1. ஹீனயானம் – வெளியே உள்ள உலகம் உண்மையாக இருக்கின்றது

1.1.   வைபாஸிகம் – வெளியே உள்ள பொருட்கள் பிரத்யக்‌ஷ பிரமாணத்தினால் அறியப்படுகின்றது

1.2.   சௌத்ரந்திகம் – வெளியே உள்ள பொருட்கள் அனுமான பிரமாணத்தினல் அறியப்படுகின்றது

  1. மஹாயானம் – வெளியே உள்ள பொருட்கள் உண்மையில் கிடையாது.

2.1.   யோகாச்சாரஹ –  இவர்களே ஷணிகவிக்ஞானவாதிகள் – வெளி விஷயத்தை பார்த்துக் கொண்டிருக்கும் நம்முள்ளே இருக்கும் சைதன்யம், விக்ஞானம் உண்மையானது.  அந்த விக்ஞானத்தின் ஸ்வரூபம் ஷணிகம். அது ஒவ்வொரு நொடிக்கும் அது மறைந்து தோன்றுகிறது. ஓடிக்கொண்டிருக்கும் நதியில் பார்த்துக் கொண்டிருக்கும் நீர் மாறிக் கொண்டே இருக்கின்ரது.  இந்த விக்ஞானம் உருவத்துடன் கூடியது.  மனதில் தோன்றும் மாறிக் கொண்டிருக்கின்ற எண்ணங்கள் உருவத்துடன் கூடியதாக இருக்கின்றது.

2.2.   ஸூன்யவாதி – பிரமாணம், பிரமாதா, பிரமேயம் ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றது.  வெளியே உள்ள பொருட்கள் இல்லையென்று சொல்லும்போது மற்ற இரண்டும் சேர்ந்து இல்லாது போவதால் ஒன்றுமே இல்லாத நிலை ஏற்படுகின்றது.  கற்பூரம் எவ்வாறு எரிந்து முடிந்ததும் ஒன்றுமே இல்லாததாக போகின்றதோ அதுபோல என்று கூறுகிறார்கள்.

 

இந்த காரிகையில் ஹீனயான மதவாதிகளின் கொள்கையை கூறப்பட்டிருக்கின்றது.

ஹேது1: விருத்திக்கு விஷயம் இருந்தாக வேண்டும், என்ற நியமித்தினால்

ஹேது2: விதவிதமான சுக-துக்கங்களை அனுபவிப்பதனால் வெளியே உள்ள விஷயங்கள் சத்யமாக இருந்தாக வேண்டும்,

ப்ரக்ஞப்தே ஸனிமித்த்வம் அன்யதா த்வயனாசஶதஹ – மனதில் எழும் எண்ணங்களுக்கு வெளியே விஷயங்கள் காரணமாக இருந்தாக வேண்டும்.  இதிலிருந்து வெளியே இருக்கும் விஷயங்கள் சத்யமாக இருக்க வேண்டும்.

ஸங்க்லேஷேயஸ்ய உபலப்தே – துயரங்கள் முதலிய அனுபவங்கள் இருப்பதாலும் வெளியே இருக்கும் பதார்த்தங்களும் சத்யமாகத்தான் இருக்க வேண்டும்,

பரதந்த்ரம் – வேறு மதங்களால் ( ஹீனயான மதத்தினரால் கருதப்படுகின்ற)

அஸ்திதா மதா – வெளியே பொருட்கள் இருக்கின்றது என்ற கொள்கை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

 

காரிகை25

ப்ரக்ஞப்தே ஸனிமித்த்வம் இஷ்யதே – எண்ணத்திற்கு, மனதில் எழும் எண்ணங்களுக்கு வெளியே விஷயங்கள் காரணமாக இருந்தாக வேண்டும்.  இதிலிருந்து வெளியே இருக்கும் விஷயங்கள் சத்யமாக இருக்க வேண்டும்.

யுக்தி தர்ஷனாத் – ஓரளவு அறிவை பயன்படுத்தி இதை தெரிந்து கொள்ளலாம்.

நிமித்தஸ்ய அநிமித்தத்வம் இஷ்யதே – அந்த விஷயங்களே வெளி விஷயங்களுக்கு இல்லாத தன்மை என்ற கருத்தும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.

பூத தர்ஶனாத் – உண்மையின் அடிப்படையில் ஆராய்ந்து பார்த்தால் பானையில் தோற்றதின் அடிப்படையில் எவ்வளவு பானை இருக்கின்றதோ அத்தனை எண்ணங்கள் இருக்கின்றன. ஆனால் களிமண் என்ற வஸ்துவின் அடிப்படையில் ஒரு விஷயம்தான் பல விஷயங்களாக இருக்கின்றது.  எனவே எண்ணங்களுக்கு விஷயங்களே இல்லை என்று நிரூபணமாகின்றது.  அதேப்போன்று கனவில் பார்க்கும் விஷயங்கள் உண்மையில் இல்லை ஆனால் எண்ணங்கள் மட்டும்தான் இருக்கின்றது.

 

காரிகை26

பூ.பக்ஷி அறியப்பட வேண்டிய விஷயம் இல்லையென்றால் அறிவும் இருக்காது.  அறிவானது பொருளை சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை.

பதில்:   விக்ஞானம் (ஷனிக விக்ஞானிகளின் சைதன்யம்) வெளிப்பொருட்களை தொடுவதில்லை.  வெளி விஷயங்கள் போன்று தோன்றுவதையும் தொடுவதில்லை.  எந்த காரணத்தினால் வெளிவிஷயங்கள் கிடையாதோ, பொய்யான வெளி விஷயங்கள் கிடையாதோ, தெரிகின்ற அனைத்தும் சைதன்யத்தில் இருந்து வேறாக எதுவும் கிடையாது.  கனவில் பார்க்கப்படும் பொருட்கள் இருந்தாலும் பார்ப்பவனை தவிர வேறெதுவுமில்லை.

 

காரிகை27

பூ.பக்ஷி கனவில் பார்க்கும் பொருட்கள் கயிற்றில் பார்க்கும் பாம்பை போல பொய்யானவை.  கனவில் தோன்றும் பொருட்கள் விழிப்பு நிலையில் அனுபவித்த பொருட்களின் பொய்யான தோற்றங்கள்.  இதிலிருந்து உண்மையான பொருட்கள் அனுபவித்ததனால்தான் பொய்யாக அவைகள் தெரிகின்றது இல்லையென்றால் அவ்வாறு தோன்ற முடியாது. விழிப்பு நிலை பொருட்களும் பொய்யென்று சொன்னால் அதற்கு அதிஷ்டானமாக அதைப்போல் உண்மையான பொருட்கள் எங்கேயோ இருக்க வேண்டும்.

பதில்    இது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.  ஆனால் இதற்கு விதிவிலக்கும் இருக்கின்றது.  ஒரு பொய்யிக்குபின் பொய்யும் இருக்கலாம்.  உதாரணமாக இருளில் நடந்து செல்லும்போது வழிகாட்டி மரத்தை பேய் என்று நினைத்து பயந்துவிடுவது.  இந்த பயத்திற்கு மூலகாரணமான பேயும் பொய்யான ஒன்றாக இருக்கின்றது.  எனவே ஜாக்ரத் விஷயங்கள் பொய்யாக இருக்கின்றது அவற்றிற்கு மூலகாரணம் பொய்யான பொருட்களும் இருக்கலாம்.

 

காரிகையின் விளக்கம்:  சைதன்யத்திடம் தவறுதல் என்பது கிடையாது.  உண்மையாகவோ அல்லது பொய்யாகவோ பார்த்திருப்பதால்தான் தவறு நேரிட முடியும்.  உதாரணமாக குருடனுக்கு இந்த உலகத்தை சரியாக, தவறாக பார்க்கின்றான் என்ற கருத்துக்கே இடமில்லை.

நிமித்தம் ச ந ஸதா3 சித்தம் ஸம்ஸ்ப்ருஶதி – சைதன்யம் பொருட்களை எப்பொழுதும் தொட்டதில்லை, தொடுவதுமில்லை.

அதவசு த்ரிஷு – மூன்று காலங்களிலும்

அனிமித்தஹ விபர்யாஸஹ – தவறு நேரிடுவதற்கு பொருட்களே கிடையாது

கதம் தஸ்ய ப4விஷ்யதி – அதற்கு எப்படி தவறுதல் ஏற்படும்?

 

காரிகை28

தஸ்மாத் – ஆகவே

ந ஜாயதே சித்தம் – சைதன்யம் பிறக்கவில்லை, பிறப்பதுமில்லை

சித்த த்ருஷ்யம் ந ஜாயதே – சைதன்யத்தினால் அனுபவிக்கும் பொருட்களும் பிறக்கவில்லை; அதாவது வெளியே உள்ள பொருட்களும் தோன்றவில்லை. அவைகள் உண்மையில் தோன்றவில்லை. இருப்பது போல காட்சியளித்துக் கொண்டு இருக்கின்றது.  எனவே அவைகளை மித்யா என்ற வேதாந்தம் கூறுகின்றது.  ஒன்றுக்கொன்று வேறுபட்டு இருக்கின்றது என்றாலும், ஒன்றைப்போல் வேறொன்று இருக்கின்றது என்றாலும்.  இவைகளை வேறொன்று பார்த்துக் கொண்டிருக்கும்.  அதுதான் என்றும் மாறாமல் நித்யமாக இருக்கின்ற சைதன்யம்.  நீங்கள் சொல்கின்ற சைதன்ய லட்சணம் எண்ணங்களைத்தான் குறிக்கின்றது. சைதன்யம்தான் பிறந்து, இறக்கின்றது, மீண்டும் பிறக்கின்றது என்று சொல்வது எண்ணங்களைத்தான் குறிக்கின்றது.

 

தஸ்ய பஶ்யந்தி யே ஜாதிம் – க்ஷணிக விக்ஞானிகளில் குறிப்பிடுகின்ற சைதன்யத்தின் பிறப்பைப் பார்க்கின்றார்களோ

கே வை பஶ்யந்தி பதம் – அவர்கள் மார்க்கத்தைதான் ஆகாசத்தில் பார்க்கின்றார்கள்.  அதாவது ஆகாசத்தில் பறந்து செல்லும் பறவைகள் சென்ற அடையாளத்தை பார்க்கின்றார்கள். உண்மையில் இது சாத்தியமில்லை.  வெறும் கற்பனையில்தான் இவ்வாறு நினைக்க முடியும்.  அதேபோல பிறப்பற்ற சைதன்யத்திடம் பிறப்பை பார்ப்பவன் வெறும் கற்பனையாகத்தான் இவ்வாறு சொல்ல முடியும்.

 

காரிகை29

அஜாதம் ஜாயதே யஸ்மாத் – எதனால் பிறப்பற்ற சைதன்யம் பிறக்கின்றது என்று சொல்பவர்களால் கருதப்பட்டு வருகின்றதோ

தத அஜாதி ப்ரக்ருதி – அதனால் பிறப்பற்றது என்பது அதன் ஸ்வருபம்

ப்ரக்ருதி அன்யதா பாவ – ஒரு பொருளின் ஸ்வரூபம் மாற்றமடைதல்

ஸ கதஞ்சன பவிஷ்யதி – ஒருபொழுதும் நடைபெறாது.

 

காரிகை30

பந்தமும் மோக்ஷமும் மித்யா என்று விளக்கப்படுகின்றது.

விசாரம்:

பந்தமும், மோக்ஷமும் ஸத்யம் என்று சொல்வதால் இரண்டு வகையான தோஷங்கள் வரும்.

  1. ஸம்சார அநிவிருத்தி – சம்சாரம் நீங்காது இருத்தல்
  2. மோட்சம் நிவிருத்தி பிரசங்கஹ – மோட்சம் நீங்காதிருத்தல்

 

இந்த குறைகள் நீங்க வேண்டுமென்றால் இந்த இரண்டையும் மித்யா என்று ஒத்துக் கொள்ள வேண்டும். இவை இரண்டிற்கும் கிரமம் சொல்ல வேண்டும்.  எது முதல், எது இரண்டாவது என்ற வரிசை சொல்ல வேண்டும், சம்சாரம் முதலில் வந்தது, மோட்சம் பிறகு வந்தது என்ற கிரமத்தைத்தான் சொல்ல முடியும்.  இந்த சம்சாரம் காரணத்திற்குட்பட்டு வந்ததா அல்லது எந்த காரணமில்லாமல் வந்ததா?  எந்தவொன்றிற்கும் ஏதாவது காரணம் இருக்க வேண்டும்.  எனவே சம்சாரத்திற்கு காரணம் இருந்தாக வேண்டும்,  காரணமில்லாமல் எதுவும் நடக்காது.

எவையெல்லாம் காரணத்தினால் வந்திருக்கின்றதோ அவைகளெல்லாம் அதனுடைய ஸ்வரூபம் அல்ல.  சூடான நீர் எப்படி சுடுகின்றது என்றால் நெருப்பினால் சூடேற்றப்பட்ட பிறகுதான் அதில் உஷ்ணம் வருகின்றது.  எனவே உஷ்ணம் என்பது நீரின் ஸ்வரூபம் அல்ல என்று தெரிகின்றது.  ஜீவனிடம் இருக்கும் பந்தமானது காரணத்தால் வந்திருந்தால் பந்தம் என்பது அவனுடைய ஸ்வரூபம் அல்ல, பந்தம் சத்யமில்லாததாகி விடும்.  இதற்கு பந்தம் என்பது அநாதி என்று வாதம் செய்தால், அநாதியான பந்தம் நீங்கினால் மோட்சம் கிடைக்கின்றது.  எனவே மோட்சம் தோன்றுகின்றது என்ற நிலை ஏற்படும்.  இப்படி சொல்வதால் ஒரு குறை வரும்.  அநாதியாக இருக்கும் ஒன்றிற்கு அழிவே வராது. எனவே சம்சாரம் நீங்காது.  மோட்சம் தோன்றுகிறது என்று சொல்வதால் மோட்சம் அழிந்து விடும்.

 

அனாதே அந்தவத்வம் ச ஸம்ஸாரஸ்ய ந ஸேத்ஸ்யதி – அநாதி காலமாக சம்சாரத்திற்கு முடிவு என்பது ஏற்படாது.

அனந்ததா ச அதிமதஹ மோக்‌ஷஸ்ய ந பவிஷ்யதி – தோற்றத்தை உடைய மோட்சத்திற்கு என்றும் இருத்தல் என்பது நடைபெறாது

எனவே இரண்டும் மித்யாவாகத்தான் இருக்க முடியும்.  சம்சாரம் என்பது மித்யா என்ற அறிவே மோட்சத்தைக் கொடுக்கும்.

 

காரிகை31

ஆதாவந்தே ச யது நாஸ்தி – தொடக்கத்திலும் முடிவிலும் இல்லாதது

வர்தமானெ அபி தத் ததா  – இப்பொழுதும் இல்லை.

விததைஹி ஸ்த்ருஶாஹா – பொய்யான பொருட்களுக்கு சமமாக

அவித்தா இவ லக்ஷிதாஹ – அக்ஞானிகளால் உண்மையாக இருப்பது போல

கருதப்படுகின்றது

இங்கு பந்தம், மோட்சம் இல்லாததென்று நிரூபிக்கப்படுகின்றது. பந்தத்திற்கு முடிவும், மோட்சத்திற்கு தோற்றம் இருப்பதால் அவைகள் உண்மையாக இல்லை.  ஆனால் பொய்யாக இருப்பது போல் தோற்றமளிக்கின்றது.

 

காரிகை32

பூ.பக்ஷி கனவில் அனுபவிக்கபடும், பார்க்கப்படும் பொருட்கள் நமக்கு பயன்படுவதில்லை. பயனை கொடுப்பது ஸத்யம், பயனைக் கொடுக்காதது மித்யா என்று எடுத்துக் கொள்ளலாம்

பதில்    கனவில் பொருட்கள் கனவுநிலையில் பயன்படுகிறது.  ஆனால் விழிப்பு நிலையில் பயன்படுவதில்லை.  அதேபோல விழிப்பு நிலையில் உள்ள பொருட்கள் கனவு நிலையில் பயன்படுவதில்லை.  எனவே பொருளின் பயன்பாட்டை வைத்து ஸத்யம்-மித்யாவை நிரூபிக்க முடியாது.

பூ.பக்ஷி  மோட்சம் அனுபவிப்பதற்குரிய விஷயமாக இருக்கின்றது. அதேபோல பந்தம் துக்கம் என்ற பலனை உடையது, மோட்சத்தினால் சுகம் என்ற பலனை அடைகின்றோம். எனவே அவைகள் மித்யா என்று எப்படி சொல்ல முடியும்.

பதில்    பந்தமும், மோட்சமும் பலனைக்கொடுத்தாலும் அவைகள் ஸத்யமல்ல.

 

ஸப்ரயோஜனதா தேஷாம் ஸ்வப்னே விப்ரதிபத்யதே – ஜாக்ரத் நிலையில் உள்ள பொருட்கள் பயனை உடையது என்ற தன்மை கனவு நிலையில் முரண்பாடாக இருக்கின்றது. அவைகள் பயன்படவில்லை.

தஸ்மாத் ஆத்யந்தவத்த்வே மித்யைவ கலு தே ஸ்ம்ருதா – ஆகவே எந்த பொருளுக்கு ஆதியும், அந்தமும் இருக்கின்றதோ அவைகள் மித்யாவாக கருதப்படுகின்றது.

 

காரிகை33

கனவை உதாரணமாக கொண்டு சைதன்யத்திற்கு விஷயமேதுமில்லை என்றும், அது மட்டும் தான் இருக்கின்றது என்றும் விளக்கபடுகின்றது.  த்ருக்-த்ருஷ்யம் என்ற விசாரத்தில் இறுதியாக த்ருஷ்யம் என்பது கிடையாது. த்ருக்தான் த்ருஷ்யமாக காட்சியளிக்கின்றது என்று புரிந்து கொள்ள வேண்டும்.  கனவில் தோன்றும் பொருட்கள் அனைத்தும் பார்ப்பவனை தவிர வேறில்லை. இவனே அனைத்துமாக தெரிந்து கொண்டிருக்கின்றான்.  விழித்தவுடன் அவைகள் அவன் சித்தத்தில் ஒடுங்கி விடுகின்றன.  அதேபோலதான் ஜாக்ரத் அவஸ்தையில் உள்ள பொருட்களும் பார்ப்பவனையும் ஒப்பிட்டு பார்த்து புரிந்து கொள்ள வேண்டும்.

 

ஸர்வே தர்மா ஸ்ம்ருஷா ஸ்வப்னே – கனவில் இருக்கின்ற எல்லா பொருட்களும் பொய்யானவை (மித்யா)

காயஸ்ய அந்தஹ நிதர்ஶனாத் – ஸ்தூல ஸரீரத்திற்குள்ளே பார்க்கப்படுவதனால்

ஸம்வ்ருதே அஸ்மின் ப்ரதேஶே வை – குறுகிய இந்த உடலுக்குள்

பூதானாம் தர்ஶனம் குதஹ – விதவிதமான ஜீவராசிகளின் தோற்றம் எப்படி காட்சியளிக்க முடியும். எனவே இவைகள் அனைத்தும் மித்யா.

 

காரிகை34

பூ.பக்ஷம்  கனவில் பார்க்கும் பொருட்களை நாம் நம் உடலுக்குள் பார்க்கவில்லை ஆனால் அவைகள் இருக்கும் இடத்திற்கு சென்று பார்த்து விட்டு வந்திருக்கலாம் அல்லவா?

பதில்     இது சாத்தியமில்லை. தேவையான காலம் இல்லாத காரணத்தினால் இது சாத்தியமில்லை.  மேலும் கனவில் எங்கு சென்றிருந்தாலும், எழுந்திருக்கும்போது எங்கு கனவு கொண்டு இருந்தோமோ அங்கேதான் இருக்கின்றோம்.

 

ந யுக்தம் தர்ஶனம் கத்வா – கனவில் வேறொரு இடத்திற்கு சென்று பொருட்களை பார்ப்பது சாத்தியமில்லை, பொருந்தாது.

காலஸ்ய அனியமாத் கதௌ – பயணம் மேற்கொள்வதற்கு தேவையான காலம் குறைவாக இருப்பதனால்

பிரதிபுத்தஶ்ச வை ஸர்வஹ – விழித்துக்கொண்ட அனைவரும்

தஸ்மின் தேஶே ந ப்ரபத்யதே – கனவு நடந்த இடத்தில் இருப்பதில்லை.

 

காரிகை35

மித்ராத்யைஹி ஸஹ ஸம்மந்த்ரய – அவன் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தான்

ஸம்பூத்தோ ந ப்ரபத்யதே – விழித்ததும் அவர்களை அவன் பார்ப்பதில்லை.

க்ருஹீதம் ச அபி யத் கிஞ்சித் – எந்தப்பொருட்களையாவது கனவில் வாங்கியிருந்தால்

பிரதிபுத்த ந பஶ்யதி – விழித்ததும் அவைகள் அவனிடம் இருப்பதில்லை.

 

காரிகை36

ஸ்வப்னே ச அவஸ்துகஹ காயஹ – கனவில் காணும் உடல்கள் உண்மையல்ல

ப்ருதக் அன்யஸ்ய தர்ஶனாத் – அதற்கு வேறான ஜாக்ரத் உடல்களை பார்க்கின்றோம்.

யதா காயஹ ஸதா ஸர்வம் – எப்படி கனவு பொருட்களோ அப்படித்தான் அனைத்தும்

சித்தம் த்ருஶ்யம் அவஸ்துகம் – சைதன்யத்தினால் பார்க்கப்படுகின்ற அனைத்தும் உண்மையல்ல சைதன்யம் மட்டும்தான் உண்மையானது.

 

காரிகை37

பூ.பக்ஷம் காரணம் ஸத்யம், காரியம் மித்யா என்று கூறப்பட்டது.  பானையில் காரணமாக இருக்கும் களிமண் ஸத்யம், பானை மித்யா. ஸ்வப்ன பிரபஞ்சத்திற்கு காரணமாக இருப்பது ஜாக்ரத் பிரபஞ்சம். எனவே ஜாக்ரத் காரணமாக இருப்பதால் அவை ஸத்யமாகத்தானே இருக்க வேண்டும்.

பதில்     ஜாக்ரத் பிரபஞ்சம் காரணமாக இருப்பினும் அது மித்யாதான். உதாரணமாக துணிக்கு காரணம் நூல், அது துணிக்குத்தான் ஸத்யமாக இருக்கின்றது ஆனால் அதே நூல் பஞ்சிற்கு காரியமாக இருப்பதால் அது மித்யாவாகின்றது.  எனவே ஒன்று மூலகாரணமாக இருந்தால் அது ஸத்யமாக இருக்கும்.,  இடைப்பட்ட காரணமாக இருந்தால் அது மித்யா.  அதுபோல ஸ்வப்னத்திற்கு காரணமாக இருக்கும் ஜகத் ஸ்வப்னத்துக்கு ஸத்யம் ஆனால் அதுவே பிரம்மத்திற்கு காரியமாக இருப்பதால் மித்யாவாகும்.

 

தத் தேது ஸ்வப்ன இஷ்யதி – ஜாக்ரத் பிரபஞ்சத்தை காரணமாக கொண்டது ஸ்வப்ன பிரபஞ்சம் என்பது ஏற்றுக் கொள்ளப்படுகிறது

ஜாகரிதவத் க்ருஹணாத் – ஜாக்ரத் பிரபஞ்சத்தை போல கனவானது அனுபவிக்குப்படுவதால்

தத் தேத்வாத் – கனவுக்கு மட்டும் காரணமாக இருப்பதனால்

தஸ்யைவ – கனவுக்கு மட்டும்

ஸத் ஜாக்ரதிம் இஷ்யதே – ஜாக்ரத் சத்யம் என்று ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.  இதிலிருந்து அறிந்து கொள்வது ஜாக்ரத் எல்லாவற்றிற்கும் காரணமாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால் பிரம்மத்திற்கு இது காரியமாக இருக்கின்றது என்று உபநிஷத் கூறுவதால் அது மித்யாவாகின்றது.  பிரம்மத்தின் பார்வையில் இது மித்யா என்று புரிந்து கொள்ள வேண்டும்.

 

காரிகை38

ஜாக்ரத் பிரபஞ்சம் கனவு பிரபஞ்சத்திற்கு காரணமே இல்லை என்று நிலை நாட்டப்படுகிறது. எந்த இரண்டிற்கும் காரண-காரிய சம்பந்தம் சத்யமானதல்ல என்று நிலை நாட்டப்பட்டது.

உத்பாதஸ்ய – பிறப்பிற்கு, தோற்றத்திற்கு

அப்ரஸித்த4த்வாத்3 – நிலைநாட்டபடாத காரணத்தினால், ஜாக்ரத் சத்யம் அல்ல

அஜம் ஸர்வம் உதா3ஹ்ருதம்– அனைத்தும் பிறப்பற்ற பிரம்ம தத்துவம் என்று விளக்கப்பட்டது.

பூதாத் அபூதஸ்ய சம்பவஹ – இருப்பதிலிருந்து இல்லாததனுடைய தோற்றமானது

கதஞ்சன ந அஸ்தி – எந்த விதத்திலும் நடக்காது

 

காரிகை39

பூ.பக்ஷி ஜாக்ரத் பிரபஞ்சம் காரணம் என்று சொல்கிறீர்கள், பிறகு காரணம் இல்லை என்றும் சொல்கிறீர்கள், இதில் எது சரி?

பதில்    ஜாக்ரத் பிரபஞ்சம் காரணம் என்று சொல்லும்போது அதை மித்யாவான காரணம் என்றுதான் சொல்கின்றோம்.  காரணம் இல்லை என்று சொல்லும்போது அது பிரம்மனுக்கு காரியமாக இருக்கின்றது என்று சொல்கின்றோம்.

 

அஸத் ஜாக்ரிதே திருஷ்டவாத் – ஜாக்ரத் அவஸ்தையில் பொய்யான பொருட்களை பார்த்து

ஸ்வப்னே பஷ்யதி தன்மயஹ – இந்த பொய்யான பொருட்களையே அதன் ஸ்வரூபமாக கனவில் பார்க்கின்றோம்.

இதிலிருந்து பொய்யான ஜாக்ரத் பிரபஞ்சத்தை கனவிலும் பார்க்கின்றோம் என்று தெரிய வருகின்றது.

 

.பூ.பக்ஷி பொய்யான கனவு பிரபஞ்சத்தை ஏன் ஜாக்ரத் அவஸ்தையில் பார்க்கவில்லை?

பதில்    அதுபோல நாம் அனுபவிப்பதில்லை. கனவு பிரபஞ்சத்தை பிராதிபாஸிக சத்யம் என்றும் ஜாக்ரத் பிரபஞ்சத்தை வியாவஹாரிக சத்யம் என்று ஸத்தா பேதத்தை விளக்கி இருக்கின்றோம்.

 

அஸத் ஸ்வப்னே அபி த்ருஷ்ட்வா ச – பொய்யானதை கனவில் பார்த்தாலும் கூட

ப்ரதிபுத்தோ4 ந பஷ்யதி – வித்துவான்கள் ஜாக்ரத் அவஸ்தையில் பார்ப்பதில்லை.

 

காரிகை40

எந்த விதத்திலும் எந்த பதார்த்தத்திற்கும் காரண-காரிய சம்பந்தத்தை நிலை நாட்ட முடியாது.

இந்த காரிகையில் நான்கு விதமான காரண-காரிய சம்பந்தத்தை கூறுகின்றார். இவைகள் சாத்தியமில்லை என்று அறிய முடிகின்றது.

  1. அஸத் காரணம் – அஸத் காரியம் – முயல் கொம்பிலிருந்து ஆகாய தாமரை தோன்றியது
  2. அஸத் காரணம் – ஸத் காரியம் – இதுவும் சம்பவிக்காது.  இல்லாத களிமண்ணிலிருந்து பானைகள் தோன்ற முடியாது.
  3. ஸத் காரணம் – ஸத் காரியம் – ஸத் காரிய வாதத்தில் நீக்கிய விசாரத்தில் இது நடக்காது என்று நிரூபிக்கபட்டது. களிமண் இருக்கின்றது, களிமண்ணை எடுத்துவிட்டால் காரியமான பானைகள் அங்கு இருக்காது.
  4. ஸத் காரணம் – அஸத் காரியம் – இது சம்பவிக்காது.  பிரம்மன் ஸத்யம் காரணம் – காரியமான ஜகத் மித்யா.

பிரம்மன் எதற்கும் காரணமல்ல ஏனென்றால் அதனிடமிருந்து எதுவும் தோன்றவில்லை என்று உபநிஷத் கூறியுள்ளது.

 

நாஸ்தி அஸத்தே4துகம் அஸத் – இல்லாததை காரணமாக கொண்ட இல்லாத ரூபமான காரியம் சம்பவிக்காது.

ததா4 அஸத்தே4துகம் ஸத் – அதேபோல இல்லாத காரணத்திலிருந்து இருக்கின்ற காரியம் சம்பவிக்காது.

ஸத் ச ஸத்தே4துகம் நாஸ்தி – இருக்கின்ற காரணத்திலிருந்து இருக்கின்ற காரியம் தோன்ற முடியாது

ஸத்தே4துகம் அஸத்தே4ஹ – இருக்கின்ற காரணம் – இல்லாத காரியம் சம்பவிக்காது;

மேலே கூறப்பட்ட கருத்துக்களிலிருந்து காரண-காரிய சம்பவம் என்பதே நடக்காது என்று அறிந்து கொள்ளலாம்.

 

காரிகை41

விபர்யாத் – அத்யாஸம் – காட்சிபிழை;

அசிந்தியான் – சிந்திக்கவே முடியாத பொருட்கள்

விபர்யாஸாத் யதா4 ஜாக்ரத் அசிந்தியான் –  எவ்வாறு விழிப்பு நிலையில் தவறுதலினால் பொய்யான (மித்யா) பொருட்களை ( கானல் நீர், கயிற்றில் தோன்றும் பாம்பு)

பூதவத் ஸ்ப்ருஷேத் – உண்மையாக இருப்பது போல அனுபவிக்கிறார்களோ

ததா ஸ்வப்னே விபர்யாஸாத் – அதுபோல கனவிலும் தவறுதலினால்

தர்மான் தத்ர ஏவ பஷ்யதி – கனவுப்பொருட்களை கனவில் மட்டும் உண்மையாக இருப்பது போல பார்க்கின்றான்.

 

காரிகை42

இந்த உலகம் தோன்றியது விதம், ஸ்ருஷ்டியை சொல்வதற்கு என்ன காரணம் என்று விளக்கப்படுகின்றது.

 

நம்முடைய இந்திரியங்களின் மூலமாக அடையும் அனுபவங்களை உறுதியாக நம் மனம் ஏற்றுக்கொண்டிருக்கின்றது.  பிரத்யக்‌ஷ பிரமானத்தின் மூலமாக அறிவை அடைந்து கொண்டிருப்பதை மனம் ஏற்று பழகியிருப்பதால் உபநிஷத் ஆத்ம ஞானத்தை நேரிடையாக உபதேசிக்காமல் முதலில் பழகிய விஷயமான இந்த ஜகத்தை உபதேசித்து பிறகு அதை நீக்கி ஞானத்தைக் கொடுக்கின்றது.  பிரத்யக்‌ஷ பிரமாணத்தில் உள்ள சிரத்தையை எடுத்து உபநிஷத் பிரமாணத்தில் வைத்தால்தான் ஆத்ம ஞானம் புரிய ஆரம்பிக்கும்.  புத்தியின் ஸ்வரூபமே ஒரு தோஷமாக இருக்கின்றது.  ஒன்று நமக்கு புரியவில்லையென்றால் நாம் குழப்பத்தில் இருப்போம்.  புரிந்து விட்டால் அது அமைதியாகி விடும்.  எனவே காரண காரிய சம்பந்தத்தை சார்ந்திருப்பதாக புத்தி படைக்கப்பட்டிருக்கின்றது.  இந்த உலகம் ஒரு நியதியுடன் இயங்கி கொண்டிருக்கிறது எனவே புத்தி அதை அப்படியே ஏற்றுக் கொண்டு இருக்கின்றது.  கனவு பிரபஞ்சத்தில் எந்தவித நியதியும் இல்லாததால் அதை புத்தி ஏற்றுக் கொள்ளவில்லை.

 

உபலம்பா4த் – பிரத்யக்‌ஷ பிரமாணத்தினால் அடையும் அனுபவத்தினால்

ஸமாசாராத் – முறையாக, நியதியுடன் உலகம் இயங்கி கொண்டிருப்பதை அனுபவிப்பதனால், காரண காரிய சம்பந்தத்துடன் இந்த ஜகத் இருப்பதை புத்தி அறிந்து கொண்டததால்தான்

அஸ்தி வஸ்து வாதினாம் – இந்த உலகம் இருக்கின்றது என்று கருதுபவர்களுக்கு

ஜாதிஸ்து தேஸி2தா – ஸ்ருஷ்டி உபதேசிக்கப்படுகின்றது

புத்தைஹி – ஞானிகளால்

ஸதா அஜாதே ஸ்த்ரஸதாம் – எப்பொழுதும் அத்வைதத்தை கண்டு பயந்து கொண்டு இருப்பவர்களுக்கு

பிரம்மன் ஒன்றுதான் என்று சொல்வதனால் நான் அழிந்து விடுவேன் என்ற பயத்தினால்; ஸ்ருஷ்டியை இல்லையென்று சொல்வதில்லை.

 

காரிகை43

அஜாதேஸ்த்ரஸதாம் தேஷாம் – அவர்கள் பிறப்பற்ற வாதத்தை கண்டு பயப்படுகிறார்கள்.

உபலம்பாத் யே வியந்தி – அனுபவிக்கப்படுவதால் தவறான முடிவை, உலகம் இருக்கின்றது வாதம் செய்கின்றார்கள் பிறப்பற்ற பிரம்மத்தை கண்டு பயப்படுகிறார்கள்.

ஜாதி தோஷ ந ஸேத்ஸ்யண்டி – பிறப்பை ஏற்றுக் கொள்வதால் ஏற்படும் குறைகளால் எந்தவித இடையூறும் ஏற்படுத்தாது, பாதிப்பும் ஏற்பட்து.

தோஷோ அபி அல்பஹ பவிஷ்யதி – அப்படி இருக்கும் குறைகள் மிகக்குறைவாக இருக்கும்.

 

காரிகை44

பூ.பக்ஷி உபலம்பம் (அனுபவிப்பதால்), ஸமாசாரதி (நியதியுடன் இயங்குவதால்) இந்த இரண்டு காரணங்களால் இந்த ஜகத் உண்மையாக இருக்கின்றது.

பதில்    இந்த காரணங்கள் பொய்யான வஸ்துக்களுக்கும் பொருந்தும். எனவே ஜகத் பொய்யானது.  பொய்யான மாயாஜாலத்தில் தோற்றுவிக்கப்பட்ட யானையும் நியதியுடன் இயங்குகிறது. எனவே இந்தக்காரணங்கள் சத்யத்துவத்தை நிலை நாட்ட முடியாது.

 

உபலம்பாத் ஸமாசாராத் – அனுபவிப்பதனால், முறையாக செயல்படுவதாலும்

மாயாஹஸ்தி யதா2 உச்யதே – எப்படி மாயாஜாலத்தில் தோற்றுவிக்கும் பொய்யான யானை இருக்கின்றது என்று சொல்கின்றோம்.

உபலம்பாத, ஸமாசாராத் அஸ்தி வஸ்து உச்யதே – மேற்சொன்ன விதமாக இந்த உலகத்தில் உள்ள இருக்கின்ற பொருட்கள் தோன்றிக் கொண்டிருக்கின்றது.

 

காரிகை45

ஜாத்யாபாஸம் – பொய்யான தோற்றம்

சலாபாஸம் – அசைவது போன்ற தோற்றம்

ததேவ ச – அவ்விதமே

வஸ்துவாபாஸம் – உலகத்தில் உள்ள பொருட்களின் தோற்றம்

அஜ அசைல, அவஸ்துத்வம் – பிறக்காத, அசைவற்ற நிர்குண ஸ்வரூபம்

வஸ்து – எது குணத்தையுடையதோ அதை திரவியம் என்று சொல்லக்கூடாது.

விக்ஞானம் – சைதன்யத்தின் மீது ஏற்றி வைக்கப்பட்டிருக்கின்றது.

ஸா2ந்தம் – அனைத்து தோற்றங்களூம் ஒடுங்கிய நிலை

அத்வயம் – இரண்டற்றது

 

காரிகை46

ஏவம் ந ஜாயதே சித்தம் – இவ்வாறு (மேலே சொல்லிய கருத்துப்படி) சைதன்யம் பிறப்பதில்லை.

ஏவம் தர்மாஹா அஜாஹ ஸ்ம்ருதா – இவ்வாறு ஜீவர்கள் பிறப்பற்றவர்கள் என்று சொல்லப்படுகின்றது.

ஏவம் ஏவ விஜானந்தஹ ந பதந்தி விபர்யதே– இவ்விதமாகவே அறிபவர்கள் சம்சாரத்தில் வீழ்வதில்லை.

 

காரிகை47

தீப்பந்தத்தை சுழற்றி விதவிதமான உருவங்களை உருவாக்குவார்கள். இந்த அலாதத்தை சைதன்யத்திற்கும்; தோற்றுவிக்கப்படுக் தோற்றங்களை ஜகத்திற்கும் ஒப்பிட்டு ஜகத் மித்யா என்று நிரூபிக்கப்படுகின்றது.  ஆத்மாவை தவறாக புரிந்து கொள்ளும்போது ஜகத் உண்மையாக இருக்கின்றது என்ற எண்ணம் ஏற்படுகின்றது.  அலாதத்தினுடைய அசைவற்ற தன்மை சாந்தி என்றும் அதை அத்வைதத்திற்கும் ஒப்பிடுகின்றார்.

 

யதா அலாதஸ்பந்திதம் – எவ்வாறு தீப்பந்தத்தின் அசைவு

ரிஜுவக்ராதிகாபாஸம் – நேர்கோடு, வளைந்த கோடுகள் முதலிய உருவத்தை தோற்றுவிக்கின்றதோ

ததா விக்ஞான ஸ்பந்தி தம் – அவ்விதம் சைதன்யத்தின் அசைவு, ஆத்மாவை தவறாக புரிந்து கொள்ளப்படுகின்றது

க்ரஹண, க்ராஹகா ஆபாஸம் – அனுபவிக்கப்படும் பொருட்கள், அனுபவிப்பவன் என்ற விஷயங்களை பொய்யாக தோற்றுவிக்கப்படுகின்றது.

 

  • தீப்பந்தம் ஒன்று அதிலிருந்து தோற்றுவிக்கப்படும் உருவங்கள் பலவாக இருப்பது போல அத்வைதமே த்வைதமாக காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது
  • அலாதத்திற்கும் விதவிதமான தோற்றத்திற்கும் சம்பந்தம் எதுவும் கிடையாது
  • தோற்றுவிக்கப்பட்ட வடிவங்கள் தீப்பந்தத்தை சார்ந்திருப்பதால் அது மித்யா.
  • இந்திரியங்கள் எந்த ஒரு பொருளையும் முழுமையாக கிரகிக்காது. கண்கள் உருவத்தை மட்டும்தான் பார்க்கின்றது.  தீப்பந்தத்தால் உருவாக்கப்படும் வடிவங்கள் மறைவதால் இந்த ஜகத்தில் உள்ள அனைத்தும் மறைந்து விடும்.  எனவே இந்த ஜகத்தும் மித்யா என்று புரிந்து கொள்ள வேண்டும்.

 

காரிகை48

அஸ்பந்தமானம் அலாதம் – அசைவற்ற தீப்பந்தம்

அனாபாஸம் அஜம் யதா – அந்த நிலையில் எந்தவிதமான வடிவங்களும் தோன்றவில்லை

ததா அஸ்பந்தமானம் விக்ஞானம் – அவ்விதம் சைதன்யத்தை தவறாக புரிந்து கொள்ளாத போது

அனாபாஸம் அஜம் – அதிலிருந்து எதுவும் தோன்றவில்லையென்று புரிந்து கொள்ள முடியும்.

சமாதி நிலையை அத்வைத அனுபவமாக புரிந்து கொள்ள வேண்டும்.  ஆழ்ந்த உறக்கத்திலும் இதை அனுபவிக்கின்றோம். இந்த நிலையில் அக்ஞானம் இருந்து கொண்டிருக்கின்றது ஆனால் இருமைகள் இல்லை.

 

காரிகை49

அலாதே ஸ்பந்தமானே வை – தீப்பந்தம் அசைந்து கொண்டிருக்கின்ற போது

ஆபாஸா ஹ – விதவிதமான உருவங்கள்

ந அன்யதோபூவஹ – வேறிடத்திலிருந்து வரவில்லை

ந ததஹ அன்யத்ர நிஸ்பந்தாத் – தீப்பந்தம் அசையாமலிருக்கும்போது அதிலிருந்து அவைகள் வேறிடத்திற்கு செல்லவில்லை

ந அலாதம் ப்ரவிஸந்தி தே – அந்த வடிவங்கள் அசைவற்ற தீப்பந்தத்திற்குள்ளும் செல்லவில்லை

 

காரிகை50

அலாதத்திலிருந்து எந்த காரணத்தினால் விதவிதமான வடிவங்கள் தோன்றவில்லை என்று இதில் விளக்குகின்றார்.

ந நிர்கதா அலாதாத் தே – அந்த விதவிதமான உருவங்கள் தீப்பந்தத்திலிருந்து உருவாகவில்லை, தோன்றவில்லை

த்ரவ்யத்வ அபாவ யோகதஹ – ஒரு பொருளாக இருக்கின்ற தன்மையில்லாதது இருப்பதினால் இதற்கு பிறப்பே என்பது இருப்பதில்லை. நாம ரூபங்களுக்கும், அதிஷ்டானத்திற்கும் எந்தவிதமான சம்பந்தத்தையும் சொல்ல  முடியாது.

விக்ஞானே அபி ததை2வ ஸ்புர – இப்படியேதான் சைதன்ய விஷயத்திலும் இருக்கின்றது

ஆபாஸஸ்ய அவிஸே2ஸ2தஹ – இந்த தோற்றங்களில் வேற்றுமை இல்லை.  தீப்பந்தத்திலிருந்து தோன்றிய உருவங்களும் தெரிகின்றது, இந்த ஜகத்தும் தெரிகின்றது.  இது தோற்றங்களில், தோன்றும் பொருட்களில் வேற்றுமையில்லை என்று கூறியிருக்கின்றார்.  விதவிதமான உருவங்கள் அலாதத்தை சார்ந்து இருப்பதைபோல, இந்த ஜகத்தும் பிரம்மத்தை சார்ந்திருக்கின்றது என்று அறிந்து கொள்ள வேண்டும்.

—-oo000oo—-

மாண்டூக்ய உபநிஷத் – பகுதி-7

காரிகை-51
விக்ஞானேன ஸ்பந்தமானே வை – சைதன்யத்தை தவறாக புரிந்து கொள்ளும் போது
ந ஆபாஸஹ அன்யதோ பு4வஹ – இந்த ஜகத் வேறிடத்திலிருந்து வந்து தோன்றி கொண்டிருக்கவில்லை.
ந ததா அனயத்ர நிஸ்பந்தாத் – சரியாக புரிந்து கொள்ளும்போது இந்த ஜகத்தும் வேறிடத்திற்கு செல்வதில்லை
ந விக்ஞானம் விஸா2ந்தி தே – இந்த ஜகத் சைதன்யத்திற்குள்ளும் செல்லவில்லை.
மோட்சம் அடைந்ததும், பிரம்மத்தை சரியாக புரிந்து கொண்டதும் இந்த ஜகத் தோன்றி கொண்டுதான் இருக்கும், வேறெங்கும் செல்லாது. பிரம்மத்திற்கு உள்ளேயும் செல்லாது.  சூரியன் உதயத்தையும், நீலவானத்தையும் பார்க்கின்றோம். இந்த இரண்டு தோற்றமும் உண்மையானது இல்லை என்ற அறிவுடன் அதை பார்த்து கொண்டிருக்கின்றோம். அது போல ஜகத்தின் மித்யாத்வத்தை புரிந்து கொண்டவுடன் அது தோன்றி கொண்டிருந்தாலும் அது நமக்கு வெறும் காட்சிதான்.

காரிகை-52
ந நிர்கதாத் தே விக்ஞானாத் – இந்த உலகத்தில் நாம் பார்க்கும் பொருட்கள் சைதன்யத்திடமிருந்து தோன்றவில்லை
த்ரவியத்வ அபா4வாத் யோகதஹ – இவைகளுக்கு பொருளாக இருக்கும் தன்மை இல்லாத காரணத்தினால்

ஜகத் மித்யா என்று கூறுவதற்கு மூன்று காரணங்கள் கொடுக்கப்படுகின்றது.  அவைகள்

  1. த்ரவியத்வ அபாவாத் – பொருளுக்குரிய தன்மை இல்லாத காரணத்தினால், பானை மித்யாவாக இருப்பது போல இதுவும் நாம ரூபம்
  2. காரிய காரண அபாவாத் – தோன்றிக் கொண்டிருக்கும் பொருட்களுக்கு எந்தக் காரணமும் சொல்ல முடியாததினால், காரண-காரிய சம்பந்தத்தை சொல்ல முடியாததினால்
  3. தே ஸதா ஏவ யதஹ அசிந்தியாஹா – அவைகளை எல்லா காலத்திலும் மனதிலேயும் சிந்திக்க முடியாது, வாயால் விளக்க முடியாது

காரிகை-53
ஒரு பொருள் இன்னொரு பொருளுக்கு காரணமாகலாம். பொருளுக்கும் நாம-ரூபங்களுக்கும் காரண-காரிய சம்பந்தம் சொல்ல முடியாது.  பல பொருட்கள் அவயங்கள் ஒன்று சேர்ந்து புதிய பொருளாக வடிவெடுக்கலாம்.  இதில் காரண-காரிய பாவத்தை சொல்லி விடலாம்.

அன்யத் த்ரவியம் அன்யத் த்ரவ்யஸ்ய ஸ்யாத் ச ஏவ ஹி – ஒரு பொருள் வேறொரு பொருளுக்கு காரிய-காரணமாக இருக்கலாம்.
தர்மானாம் த்ரவியத்வம் ந உப்பத்யதே – ஜீவர்களுக்கு ஒரு அவயமாக இருக்கும் தன்மை சம்பவிக்காது, கிடையாது
அன்யாவஹ ந உபபத்யதே – சைதன்யத்திற்கு வேறாக இருக்கும் தன்மையும் கிடையாது
எனவே சைதன்யம் மட்டும்தான் ஸத்யம், இந்த ஜகத் வெறும் காட்சிப்பொருள் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

காரிகை-54
ஏவம் ந சித்தஜா தர்மா – ஜீவர்கள், பிரபஞ்சம் இவைகள் சைதன்யத்திடமிருந்து தோன்றவில்லை
சித்தம் வா அபி ந தர்மஜம் – பிரபஞ்சத்திலிருந்து சைதன்யமும் தோன்றவில்லை
ஏவம் ஹேதுபல அஜாதி பிரவிஸ2ந்தி மணீஷிணஹ – இவ்விதம் காரணமும் காரியமும் தோன்றவில்லை என்று ஞானிகள் நிச்சயித்திருக்கின்றார்கள்

காரிகை-55
யாவத் ஹேதுபல ஆவேஸ2 – எதுவரை புத்தியில் இருக்கின்ற காரண-காரிய விஷயத்தினுடைய உறுதியான எண்ணம் இருக்கின்றதோ
தாவத் ஹேதுபல உத்பவஹ – அதுவரை காரிய-காரண பா4வம் இருந்து கொண்டு இருக்கும்
க்ஷீணே ஹேதுபல ஆவேஸ2 – இந்த காரண காரிய உறுதியான எண்ணம் நம் புத்தியிலிருந்து நீங்கும்போது
நாஸ்தி ஹேதுபல உத்பவ – காரண-காரிய தோற்றமானது இருக்காது

காரிகை-56
யாவத் ஹேதுபல ஆவேஸ2 – எதுவரை காரண-காரிய பா4வம் இருக்கின்றதோ
தாவத் ஸம்சார ஆயதஹ – அதுவரை சம்சாரம் தொடர்ந்து கொண்டிருக்கும்
க்ஷீணே ஹேதுபல ஆவேஸ2 – காரண காரிய புத்தியானது நீங்கும்போது
ஸம்சாரம் ந பிரபத்யதே – சம்சாரத்தை நீங்கியவனாக இருப்பான்.
காரிகை-57

  1. புத்தியில் இருக்கும் காரண காரிய அறிவு அக்ஞானத்தினால் வந்ததாகும்.
  2. அறியாமையில் நாம் செய்கின்ற விவகாரத்தினால் இந்த எண்ணம் உறுதியாக நிற்கின்றது. ஸம்விருத்தி- விவகாரம்; அறியாமை, அறியாமையிலிருந்து தோன்றுகின்ற விவகாரம்

ஸம்வ்ருத்தியா ஜாயதே ஸர்வம் – விவகாரத்தினால் அனைத்தும் தோன்றியிருக்கின்றது
ஶாஶ்வதம் நாஸ்தி தேன வை – அதனால் இவைகள் நிலையாக இருப்பதில்லை
ஸத்பாவேன ஹி அஜம் ஸர்வம் – அனைத்தும் பிரம்மஸ்வரூபமாக பார்த்தால் அவைகள் பிறக்காதவைகள்’
உச்சேதஹ தேன நாஸ்தி வை  – அதுவென்று இல்லை

இந்த உலகத்தை நாம ரூபமாக பார்த்தால் அவைகள் நிலையாக இருப்பதில்லை.  நாம ரூபங்கள் சார்ந்திருக்கும் காரணமாக இருத்தல் என்ற நிலையில் ஸத் ஸ்வரூபமாக பார்த்தால் அதற்கு அழிவில்லை.

காரிகை-58
யே தர்மாஹா இதி ஜாயந்தே – எந்த அனாத்மாக்கள் இவ்விதம் மேலே சொல்லியபடி அறியாமையினால் தோன்றியுள்ளனவோ
தே தத்வத் ந ஜாயந்தே – அவைகள் உண்மையாக தோன்றவில்லை
தேஷாம் ஜனம் மாயை உபமம் – இவைகள் தோற்றத்திற்கு மாயாஜாலம்தான் காரணம்
ஸா ச மாயா ந வித்யதே – அந்த மாயை உண்மையிலே இல்லாதது

காரிகை-59
யதா மாயாமயாதி பீஜாதி ஜாயதே – எவ்விதம் மாயமான விதை தோன்றியதோ
தன்மய அங்ரே – அதிலிருந்து மாயமான தளிராக வெளிவந்தது
நா அசௌ நித்யா – அது நிலையானதல்ல
ந சோச்சேதி – அதை அழிக்க முடியாது
தத்வத் தர்மேஷு – அதுபோல எல்லா அனாத்மாக்களிலும்
யோஜனா – இந்த உதாரணத்தை ஒப்பிட்டு புரிந்து கொள்ளுங்கள்

காரிகை-60
அனிர்வசனீயம் – வாயால் விளக்கமுடியாது, வாக்கால் விளக்க முடியாது
அபிதா – சொல்லுதல்
ஶாஶ்வதம் – என்றுமுள்ளது;
அஶா2ஶ்வதம் – நிலையற்றது, அழிவற்றது

ந அஜேஷு ஸர்வ தர்மேஷு – பிறக்காத அனைத்து பொருட்களிடத்தில் அவைகள் பயனற்றவை என்று விளக்க முடியாது
பிறக்கவேயில்லாத அனைத்து தத்துவங்களுக்கும் நிலையான,  நிலையற்றவை என்று சொல்லுதல் தேவையற்றது. பிரம்மன், அஸத், மித்யா இவைகள் பிறக்கவேயில்லை எனவே அவைகள் நிலையானவையா,  நிலையற்றவையா என்று சொல்ல தேவையில்லை.

யத்ர வர்ணா: ந வர்தந்தே – எந்த இடத்தில் சொற்கள், எழுத்துக்கள் செயல்படாமல் போகின்றதோ
தத்ர விவேகஹ ந உச்யதே – அந்த இடத்தில் வேறுபடுத்துதல் சம்பவிக்காது
எங்கேயெல்லாம் சொற்கள் பயன்படாமல் போகின்றதோ அங்கேயெல்லாம் எந்த லட்சணமும் சொல்ல முடியாது, பிரித்து பார்த்தல் என்ற செயலே நடைபெறாது.

காரிகை-61
சித்தம் சலதி மாயயா – மனதினால் பொய்யாக தோற்றுவிக்கபட்டதும்,  நித்ரா என்ற மாயா  சக்தியினால்
யதா ஸ்வப்னே த்வயாபாஸம் – எவ்விதம் கனவில் தோன்றுகின்ற இருமைகள்
ததா ஜாக்ரத் த்வயாபாஸம் – அவ்விதம் விழிப்பு நிலையில் பொய்யாக காட்சியளிக்கின்ற இருமைகள்
சித்தம் சலதி மாயயா – ஸமஷ்டி மனதினால் மாயையின் துணைக்கொண்டு தோற்றுவிக்கப்பட்டது.
எனவே இதிலிருந்து பிரம்மன் அத்வைதம் என்று அறிந்து கொள்ள முடியும்

காரிகை-62
அத்வயம் ச த்3வயாபாஸம் – இரண்டற்றதை இருமைகளாக
சித்தம் ஸ்வப்னே ந ஸம்ஶயஹ – மனமானது கனவை தோற்றுவிக்கின்றது, இதில் நமக்கு சந்தேகமில்லை.
ததா அத்வயம் சித்தம் – அதுபோல இரண்டற்ற சமஷ்டி மனமானது
த்3வயாபாஸம் ந ஸம்ஶ்யஹ – இங்கேயிருக்கின்ற இருமைகளானது தோற்றுவிக்கப்பட்டது, இதிலும் சந்தேகமில்லை

காரிகை-63
கனவில் பார்ப்பவைகள் மனதிற்கு வேறாக இல்லை.  அதுபோல மனமானது பார்ப்பவனிடம் இருந்து வேறாக இல்லை.
ஸ்வப்னே த்3ருக் – கனவை பார்ப்பவனிடத்தில் இருக்கும் மனம்.
கனவில் பார்க்கும் பொருட்களனைத்தும் மனதிற்கு வேறாக இல்லை.  நம் மனதிலுள்ள ஸம்ஸ்காரங்களே கனவு விஷயங்களாக தெரிகின்றது.  எனவே கனவு விஷயங்கள் அனைத்தும் மனதில் ஒடுங்குகின்றது.  அந்த மனம் சைதன்யத்திற்குள் ஒடுங்குகின்றது.

ஸ்வப்னே த்ருக் – கனவை பார்க்கின்ற சைதன்யம்
ஸ்வப்னே பிரசரன் – அனைத்து விஷயங்களையும் பார்த்துக் கொண்டு
திக்ஷு வை தஸ2ஸு ஸ்திதான் – பத்து திசைகளிலும் இருக்கின்ற
அண்டஜான்ஸ்வேதஜான் – முடையிலிருந்து பிறந்தவைகள்,  வியர்வையிலிருந்து பிறந்தவைகள்
வா அபி ஜீவான் ஸதா பஷ்யதி – இது போன்ற மற்ற ஜீவராசிகளை எப்பொழுதும் பார்க்கின்றான்.

காரிகை-64
கனவை பார்ப்பவனுடைய மனதினால் பார்க்கப்படுகின்ற அனைத்து பொருட்களைக் காட்டிலும் மனம் வேறாக இல்லை.  அதுபோல கனவை பார்ப்பவனால் பார்க்கப்படுகின்றது. இந்த கனவை பார்ப்பவனுடைய மனமானது மனம் என்று ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.  மனதை பார்க்கும் போது அதிலிருந்து விடுபடுகின்றோம்.  சப்தத்திலிருந்து விடுதலையடைய அதையே கவனிக்க வேண்டும், இந்த நிலையில் அந்த சப்தம் நம்மை தொந்தரவு செய்யாது.

காரிகை-65
ஜாக்ரத் நிலையில் பார்க்கும் விஷயங்களனைத்தும் ஈஸ்வரனுடைய மனம்தான் தோற்றுவித்திருக்கிறது. விழிப்பு நிலையில் இருந்து கொண்டு அந்த நிலையை பார்ப்பவனான விஸ்வன். பத்து திசைகளிலும் இருக்கின்ற முடையிலிருந்து பிறந்தவைகள், வியர்வையிலிருந்து பிறந்தவைகள் இது போன்ற மற்ற ஜீவராசிகளை எப்பொழுதும் பார்க்கின்றான்.

காரிகை-66
ஜாக்ரத் அவஸ்தையில் மனதால் பார்க்கப்படுகின்ற அனைத்தும் அதைப் பார்க்கின்ற மனதிற்கு வேறானதல்ல.  அதுபோல அந்த மனதை பார்க்கின்ற சைதன்யத்திற்கு வேறானதாக மனம் இல்லை என்று ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.

காரிகை-67
மனதையும் அதனால் பார்க்கப்படும் விஷயங்களுடைய தன்மையை கிடையாது.  வெளியே இருக்கும் பானை நம் மனதில் இருக்கும் பானை விருத்தியை சார்ந்திருக்கின்றது.  அதே சமயம் பானை விருத்தியும், ஜட பானையை சார்ந்து இருக்கின்றது.  த்ருஶ்யமும்,  விருத்தியும் ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றது. திருஶ்யமும், சித்தமும், வெளியே இருக்கின்ற விஷயங்களும், மனதில் இருக்கின்ற எண்ணங்களும் ஒன்றையொன்று சார்ந்து இருக்கின்றது.  அவைகள் இருக்கின்றதா என்று கேட்டால் இல்லையென்றுதான் சொல்லப்படுகின்றது.  இவைகளிரண்டிற்கும் எந்தவித குணங்களும் கிடையாது.

பிரம்மத்தை நேரிடையாக விளக்கமுடியாது, அதேபோல சூன்யத்தையும் விளக்க தேவை இல்லை. இருத்தல், இல்லாமை என்ற லட்சணத்தைக் கொண்ட மித்யாவையும் வார்த்தைகளால் விளக்க முடியாது.  ஒன்றின் அறிவால் மற்றொன்று அறியப்படுகின்றது.  விஷயத்தை அறிய விருத்தி தேவைப்படுகின்றது.  அதுபோல விருத்தியை அறிய விஷயம் தேவைப்படுகிறது.

காரிகை-68
எவ்வாறு கனவில் தோன்றும் மனிதர்கள் பிறக்கின்றார்கள், பிறகு கனவு முடிந்ததும் மறைந்தும் விடுகின்றார்கள். அதேபோல விழிப்பு நிலையிலுள்ள மனிதர்களும் பிறக்கின்றார்கள், பிறகு இறக்கின்றார்கள். கனவு மனிதர்கள் எப்படி பொய்யோ, அப்படியே விழிப்புநிலை மனிதர்களும் பொய்யென்று புரிந்து கொள்ளலாம்.

காரிகை-69 & 70

எவ்வாறு இந்திரஜாலத்தினால் தோற்றுவிக்கப்பட்டவைகள் தோன்றி மறைந்து விடுகின்றது. அதேபோல ஜாகரத் ஜீவர்களும் தோன்றி மறைந்து விடுகின்றார்கள். எவ்வாறு மந்திரங்களாலும், மூலிகைகளாலும் சில உயிர்கள் தோற்றுவிக்கப்படுகின்றது, பிறகு மறைந்துவிடுகின்றது.  அதுபோலதான் ஜாக்ரத் அவஸ்தையில் உள்ள ஜீவர்களின் நிலை.

காரிகை-71
எந்த ஜீவனும் பிறப்பதில்லை அவனுக்கு பிறப்பதற்கு காரணம் இல்லை.  இதுதான் உத்தமமான உண்மை. இந்த உலகத்தில் எதுவும் தோன்றவில்லை. ஜகத்தே தோன்றவில்லை,  பிரம்மனிடத்திலிருந்து எதுவுமே தோன்றவில்லை

காரிகை-72
சைதன்யமே போக்தாவாகவும், போக்கியமாகவும் இருக்கின்றது.  சிதாபாஸமாக உள்ள வஸ்து போக்தா,  சிதாபாஸம் இல்லாத வஸ்து போக்கியம், அனுபவிக்கப்படும் பொருள்.
சைதன்யத்தை தவறாக புரிந்து கொண்டால்தான் இந்த இருமைகள் தெரிந்து கொண்டிருக்கும்.  இது அனுபவிப்பவன், அனுபவிக்கப்படும் பொருட்கள் என்று தோன்றி கொண்டிருக்கும். சைதன்யம் என்றும் எந்த விஷயமுமற்றதாக இருக்கின்றது.  அதனால் இது எதனோடும் சங்கமற்றது என்று சொல்லப்படுகின்றது.

காரிகை-73

பூ.பக்ஷி   சைதன்யம் நிரவயம் அல்ல;  விஷயம் இருக்கின்றது.

பதில்       அக்ஞானியிடத்து இருக்கும் த்வைதம் ஸத்யமாக இருக்கின்றது.  ஞானியிடத்து இருக்கும் த்வைதம் ஸத்யமில்லாதது, உபதேசத்திற்காக எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

யஹ அஸ்தி – எந்த இருமைகள் இருக்கின்றதோ ( சாஸ்திரம், குரு, சிஷ்யன் )
கல்பித ஸம்வ்ருத்யா – அவைகள் கற்பனை செய்யப்பட்டு, உபதேசம் செய்வதற்காக இருக்கின்றது
பரமார்தேன நாஸ்த்யசௌ – அந்த இருமைகள் பாரமார்த்திக த்ருஷ்டியில் இல்லை
பரதந்திர அபி ஸம்வ்ருத்யா ஸ்யாத்– மற்ற அக்ஞானிகளின் கொள்கை அடிப்படையில் இருமைகள் இருக்கின்றது
நாஸ்தி பரமார்த்தஹ – ஆனால் உண்மையில் இல்லை, பாரமார்த்திக த்ருஷ்டியின் அடிப்படையில் இல்லை.

காரிகை-74
அஜஹ கல்பிதா ஸம்வ்ருத்யா–  ஆத்மா பிறப்பற்றது என்று சொல்வதும் கற்பனையான லக்ஷணம், உபதேசம் செய்வதற்காகவும், ஆத்மாவை தவறாக புரிந்து கொண்டிருக்கின்ற அறிவை நீக்குவதற்காகத்தான் இவ்வாறு கூறப்படுகிறது.  ஆகவே பிறப்பற்றது என்பது ஆத்மாவின் ஸ்வரூபமல்ல.
பரமார்தேன ந அபி அஜஹ – உண்மையில் ஆத்மா பிறப்பற்றது என்று சொல்வதும் தவறு
பரதந்திர –  மற்ற மதத்தை சார்ந்தவர்கள்
அபிநிஷ்பத்ய ஸம்வ்ருத்யா – அடைந்த பொய்யான முடிவினால், கருத்துப்படி
ஸஹ து ஜாயதே – ஆத்மா பிறக்கின்றது.

காரிகை-75
அபூத அபிநிவேஶஹ அஸ்தி – ஆசை உச்சநிலைக்கு சென்று விடும் நிலைக்கு அவிநிவேஶம் என்று பொருள்.  இந்த அபிநிவேஶம் இல்லாததான த்வைதத்தில் உறுதியாக அடைய வேண்டும் என்ற ஆசை ஏற்படுதல், இருத்தல்
த்வயம் த த்ர ந வித்யதே –  ஆத்மாவிடத்தில் இருமை கிடையாது.
த்3வயாபா4வம் ஸஹ புத்தவா ஏவ – இருமையினால் இல்லாமையை ஒருவன் அறிந்துதான்
நிர்நிமித்தஹ ந ஜாயதே – ( சம்சாரம் பிறப்பதற்கு காரணம் இல்லாததால் ), எந்த தேவையும் இல்லாமல் இருப்பதால் அவன் பிறப்பதில்லை

காரிகை-76
நிர்நிமித்தம் என்ற சொல்லின் பொருள் விளக்கப்படுகின்றது.
யதா3 ந ஹேதுன் லப4தே – ஒருவன் எப்பொழுது காரணங்களை பார்க்கவில்லையோ
உத்தமஅத4மத்4யமான் – புண்ணிய, பாவ இவைகளின் சேர்க்கை
ஒருவன் எப்பொழுது காரணங்களையும், பாவ-புண்ணியங்களையும் பார்க்கவில்லையோ,
அப்பொழுது பிறப்பற்ற சைதன்யத்தை அடைகின்றான்.  காரணங்கள் இல்லையென்றால் காரியங்கள் எப்படி தோன்றும், தோன்றாது.

காரிகை-77
ஹேது அபாவம் விளக்கப்படுகின்றது.  ஆத்மாவிடம் காரணம் இல்லாத தன்மை வந்து போவதா அல்லது அதன் ஸ்வரூபமா என்று கேட்டால் அது இல்லை என்று உணர்ந்து விட்டால் திரும்பவும் வராது.  ஏனென்றால் ஆத்மாவின் ஸ்வரூபமே காரணமற்றது.  வாழ்க்கையில் எது அடைந்தாலும் அதை மீண்டும் இழந்துவிடலாம்.  ஆனால் ஆத்மாவை அடைந்துவிட்டால் அதை இழக்க மாட்டோம்.

அநிமித்தஸ்ய சித்தஸ்ய – பிறப்பற்ற சைதன்யத்திற்கு, காரணமற்ற தன்மையுதைய ஆத்மாவுக்கு
யா அனுபத்தி – எந்தவொன்றிற்கு தோன்றாத தன்மை, எதையும் தோற்றுவிக்காத தன்மை
ஸமா அத்வயா – என்றுமுடையது, நிலையானது, எப்பொழுதும் இருப்பது, பூரணமானது
அஜாதஸ்ய ஏவ ஸர்வஸ்ய – பிறக்காமலிருக்கின்றதும், அனைத்துமாகவும் தெரிந்து கொண்டிருக்கின்றதும்
தத் சித்தம் த்ருஶ்யம் ஹி யதஹ – சைதன்யத்தின் மீது ஏற்றிவைக்கப்பட்ட இவைகள் அனைத்தும் காரணமற்ற சைதன்யம்தான்.

காரிகை-78
புத்வா அநிமித்ததாம் ஸத்யாம் – காரணமில்லாத தன்மையை உண்மையானது என்று அறிந்து
ஹேதுன் ப்ருதக் ந ஆப்னுவன் – எந்தவொரு காரணத்தையும் பிரம்மத்திற்கு வேறாக பார்க்காமலிருந்தால்
பதம் அஶ்னுதே – அந்த நிலையையே அடைகின்றான்.
வீத ஶோகம் – சோகத்திலிருந்து விடுதலையை அடைகின்றான்
ததா அகாமம் அபயம் –  அதேபோல ஆசையற்ற, பயமற்ற நிலையை அடைகின்றான்.

காரிகை-79
அபூத அபிநிவேஶாத் – இல்லாத விஷயத்தில் உச்சநிலை ஆசையானது
தத் ஸத்ருஶே ப்ரவர்ததே – நம்முடைய மனம் எதை பார்க்கின்றதோ அதை அடைய செயலில் ஈடுபடுகின்றது
வஸ்து அபாவம் – பொருட்கள் எதுவும் இல்லை
பு3த்3வா ஏவ – அறிந்து கொண்ட பின்புதான்
நிஸங்கம் – விடுபட்டவனாக, அபிநிவேஶத்திலிருந்து விடுபட்டவனாக
வினிவர்ததே – இருமையிலிருந்து திரும்பி விடுகின்றான்.

காரிகை-80
அபயத்தை அடைந்தவனின் நிலை, யாருக்கு இந்த நிலை கிடைக்கின்றது,  பிரம்ம ஸ்வரூபம் இவைகள் இதில் விளக்கப்படுகின்றது
ததா – அப்போது, ஞான நிஷ்ட நிலையில்
ஸ்திதிநிஸ்சல – அவனுடைய மனம் சஞ்சலமில்லாமல் இருக்கும். எதனாலும் பாதிக்கப்படாத மனமாக இருக்கும்.
நிவ்ருத்தஸ்ய அப்ரவ்ருத்தஸ்ய – எல்லாவற்றிலிருந்து, எல்லா பொறுப்புக்களிலிருந்தும் விலகிக் கொண்டவனாக இருக்கும்.  இது ஜீவன்முக்தி நிலையாகும். எதிலும் மனம் செல்லாமல் இருக்கும் நிலையை உடையவன். இவன் நிவிருத்தி,  ப்ரவிருத்தி இவைகளைக் கடந்த நிலையில் இருக்கின்றான்.  சாதாரண அவஸ்தையில் நிவிருத்தியில் இருக்கின்ற ப்ரவ்ருத்திகளை விட்டுவிட்டவன்

ஸஹ விஷய ஹி புத்தானாம் – ஞானத்தை அடைந்தவர்களுக்கு இந்த நிலைதான் விஷயமாக இருக்கும்.
தத் ஸாம்யம் அஜம் அத்வயம் – அந்த பிரம்மமானது சமமாகவும், என்றும் ஒரே நிலையிலும், பிறப்பற்றதாகவும், இரண்டற்றதாகவும் இருக்கின்றது.

காரிகை-81
இந்த ஆத்மா பிறப்பற்றது, ஸ்தூல சரீரமற்றது, காரண சரீரமற்றது, சூட்சும சரீரமற்றது, கனவுகளற்றது, தானாக ஒளிர்ந்து கொண்டிருக்கின்றது, என்றும் விளங்கிக் கொண்டு இருக்கின்றது.  இவையெல்லாம் அதனுடைய ஸ்வரூபமாக இருக்கின்றது.

காரிகை-82
பிரம்மமானது எப்பொழுதும் மிக எளிதில் மறைக்கப்பட்டுவிடும், பிரம்மத்தை மறைத்திருக்கும் திரையை நீக்குவது மிகவும் கடினம். இது கயிற்றை பாம்பினால் மறைக்கப்படுவது போல பிரம்மத்தின் மீது இந்த பிரபஞ்சம் தோன்றிக்கொண்டு மறைத்துக் கொண்டிருக்கின்றது.  ஏதாவது ஒரு விஷயத்தை மிகவும் ஆசையுடன் சத்தியமாக கிரகிக்கும்போது, உணரும் போது பிரம்மம் மறைக்கப்படுகின்றது.  அத்யாஸம்தான் அதிஷ்டானத்தை மறைத்துக் கொண்டிருக்கின்றது.  மேலும் பிராரப்த வசத்தினாலும் அடைந்த ஞானத்திலிருந்து விலகி சம்சாரத்தில் விழுந்து விடலாம்.

காரிகை-83
இந்த பிரம்மமானது சாதாரண மக்களுக்கு மட்டுமில்லாது, சாஸ்திரத்தை நன்கு படித்த பண்டிதர்களுக்கும் மறைக்கப்பட்டு இருக்கின்றது. இது இருக்கின்றதென்று சிலரும், இல்லையென்று பலரும் கூறுகின்றார்கள்.  இருப்பது சரீரம்தான், ஜடமான வஸ்துக்குள் அது இல்லவே இல்லை என்றும் கூறுகிறார்கள். இது அசைவது போலவும் இருக்கின்றது, அசையாதது போலவும் இருக்கின்றது.  இவ்வாறு குழந்தைகளுக்கு பொம்மைகளை மறைத்து வைத்திருப்பது போல பிரம்மமானது மறைக்கப்பட்டிருக்கின்றது.

காரிகை-84
மேற்கூறிய கருத்துக்களை பிடித்துக் கொள்வதினால் எப்பொழுதும் மறைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த ஆத்ம தத்துவம் இப்படிபட்ட கருத்துக்களோடு சம்பந்தபடாமல் இருக்கின்றது.  இப்படி எவரால் பார்க்கப்படுகின்றதோ, அவர் எல்லாவற்றையும் பார்த்து கொண்டிருப்பவராக இருக்கிறார்.

காரிகை-85
ப்ராப்ய ஸர்வக்ஞதாம் க்ருத்ஸ்னாம் – அனைத்தையும் முழுமையாக அறிகின்ற தன்மையை அடைந்தவன், சந்தேகமில்லாமல் பிரம்ம ஞானத்தை அடைந்தவனாகின்றான்.
ப்ராஹ்மண்யம் – பிரம்மனாக இருக்கின்ற தன்மை, பிரஹ்ம ஞான நிஷ்டை அடைந்த நிலை
பதம் அத்3வயம் – இந்த நிலையே இரண்டற்றது, அதை அடைந்து
அனாபன்னம் ஆதி மத்ய அந்தம் – துவக்கம், இடைநிலை, முடிவு இவைகளுக்கு அப்பாற்பட்ட பிரஹ்ம நிலை.
கிம் அதஹ பரம் ஈஹதே –  இந்த ஞானநிஷ்டை அடைந்த பிறகு எதனைக் கண்டு ஆசைப் படுவான், எந்த செயலை செய்ய தூண்டப்படுவான், அவனுக்கு செயல் செய்வதற்கு ஒன்றும் இல்லை.

காரிகை-86****
விப்ராணம் ஏஷ வினயஹஶமஹ தமஹ – ஞானநிஷ்டர்களிடம் பணிவு இருக்கும், பிரம்மனிடத்தில் ஒடுங்கியிருத்தல், பிரம்மனாகவே இருத்தல், முழுமையான மன அமைதி இருக்கும், புலன்களும் அவன் வசத்தில் இருக்கும்.
ப்ரக்ருதஹ உச்யதே – இவைகள் அவர்களுக்கு சுபாவமாகி இருக்கும்.
ப்ரக்ருதி தாந்தத்வாத் – இயற்கையாகவே ஒடுங்கியிருக்கின்ற காரணத்தினால்
ஏவம் வித்வாஞ்ஶமம் வ்ரஜேத் – இவ்வாறு முழுமையான மனநிறைவை, அமைதியை ஞானி அடைந்து விட்டான்.

காரிகை-87
ஸ்வஸ்து ஸோபலம்பம் – வியாவகார பொருட்களும், அனுபவத்துடன் கூடிய விஷயங்களும்
த்3வயம் லௌகிகம் இஷ்யதே – ஜாக்ரத் அவஸ்தை என்று கருதப்படுகிறது
அவஸ்து ஸோலம்பம் – பொருட்கள் இல்லை ஆனால் அனுபவம் மட்டும் இருக்கின்ற
ஶுத்தம் லௌகிகம் இஸ்யதே – ஸ்வப்ன அவஸ்தை என்று கூறப்படுகிறது

காரிகை-88
லோகாத்தரம் – ஆழ்ந்த உறக்க நிலை
அவஸ்து – பொருட்கள் கிடையாது
அனுபலம்பம் ச – அனுபவமும் கிடையாது; பொருட்களை அனுபவிக்கும் நிலையும் இல்லை,
இதி ஸ்ம்ருதம் – என்று கருதப்படுகின்றது.
ஞானம் – மனோ விருத்தி ஞானம்; மூன்று நிலையை அனுபவிப்பவன் (பிரமாதா)
ஞேயம் – இவர்கள் அனுபவிக்கும் விஷயங்கள் (பிரமேயம்)
விக்ஞேயம் – இந்த அவஸ்தைகளுக்குள்ளும் பொதுவாக இருக்கின்ற துரீயம்.  இதுவே அறியத்தக்கது; அறியப்படவேண்டியது.
பூத்தைஹி ஸதா – என்று ஞானிகளால் எப்பொழுதும்
ப்ரகீர்த்தம் – பேசப்படுகின்றது.

காரிகை-89
ஞானே ச த்ரிவிதே4 ஞேயே – முன்றுவிதமான ஞானங்களும், மூன்றுவிதமான அறியப்படும் பொருட்களும்
மூன்று அவஸ்தைகளிலும் தனித்தனியாக மூன்றுவிதமன அறிவு வருகின்றது; ஆழ்ந்த உறக்கத்தில் ஆனந்தத்தை அனுபவித்தேன் என்ற அறிவு ஏற்படுகின்றது. மூன்று அவஸ்தைகளில் உள்ள பொருட்கள் மூன்றுவிதமான அறியப்படும் பொருட்கள் கனவு, ஜாக்ரத் அவஸ்தையில் பொருட்கள், ஆழ்ந்த உறக்கத்தில் அக்ஞானமும், ஆனந்தமும் இருக்கின்றன.
க்ரமேன விதி3தே – முறையாக அறியப்படுகின்றது.
மூன்று அவஸ்தைகளும் தனித்தனியாக அனுபவிக்கப்படுகின்றது.  ஆனால் மூன்று நிலைகளிலும் தொடர்ந்து இருப்பது துரீயம் என்றழைக்கப்படும் ஆத்ம தத்துவம்.  இதையும் அறிந்து கொள்ள வேண்டும்.
மஹாதி4யஹ – மேலான அறிவுடையவனுக்கு
ஸ்வயம் – அவன் தானாக
ஸர்வக்ஞதா ப4வதி – அனைத்துமாக இருக்கின்ற நிலையை அடைகின்றான்; எல்லாவற்றையும் அறியக்கூடிய நிலையை அடைகின்றான்
ஸர்வத்ர இஹ – இங்கேயே இப்போதே அந்த நிலையை அடைகின்றான்

காரிகை-90
மோட்சத்தை அடைய விரும்புபவன் முதலில் நீக்க வேண்டியதை நீக்கிட வேண்டும். அறியத்தக்கதையும் அறிந்திட வேண்டும், அடையத்தக்கதையும் அடைந்திட வேண்டும், விலக்கத்தக்கதுமான விஷயங்களை விலக்கிட வேண்டும்
நீக்க வேண்டியது        வேண்டியவைகளானது தீய எண்ணங்கள், தீய குணங்கள், விஸ்வன், தைஜஸன், பிராக்ஞன் என்பதில் உள்ள அபிமானம்.

அறியத்தக்கது           துரீயம், பரமார்த்த தத்துவம், ஜீவ-பிரஹ்ம ஐக்கியம்.

அடையத்தக்கது         நற்குணங்கள்,சாதன-சதுஷ்டய சம்பத்தி, சிரவண-மனன-நிதித்யாஸனம்

எரிக்க வேண்டியவைகள் ஆசைகளை நம்மை பந்தப்படுத்தாத அளவுக்கு எரித்தல்; தர்மத்திற்குட்பட்ட ஆசைகள், பலனை கொடுக்காத அளவுக்கு வறுக்கப்பட்டு விட்டது.  ஆசைகள் இருந்தாலும் அதை அடையவில்லையென்றாலும் பாத்திக்கப்படாமல் இருத்தல்.

இந்த நான்கில் மூன்று மித்யா, அறியத்தக்கதான பிரம்மன் ஒன்றுதான் சத்யம் இதை அடைவதற்கு மற்ற மூன்றும் சாதனமாக இருந்து பின் சென்று விடுகின்றது.

காரிகை-91
சுபாவமாக அனைத்து ஜீவர்களும் பிறப்பற்றவர்கள், என்றுமுள்ளவர்கள் என்று அறிய வேண்டும், ஆகாசத்தைப்போல ஸ்வருபத்திலே தூய்மையாக இருக்கின்றார்கள். இருமைகள் என்பது இவர்களிடையே கிடையாது. கால, தேசம், வஸ்து ஆகியவைகளில் எந்த விதத்திலும், வேற்றுமையற்றவர்கள்.

காரிகை-92
ஸர்வே தர்மா ப்ரக்ருதியா ஏவ ஆதிபுத்தா4 – எல்லா ஜீவர்களுக்கும் இயற்கையிலே எப்பொழுதும் பிரம்மன் அறியப்பட்டதாகவே இருக்கின்றது
நிஸ்சிதாஹா – இவ்வாறு நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஸ்வயம் ப்ரகாசமாகவே இருக்கின்றது
யஸ்ய ஏவம் பவதி க்ஷாந்தி – இவ்வாறு அறிந்து கொண்டால் மன அமைதி ஏற்படும், மன நிறைவை அடைந்து விடுவான்.
ஸஹ அம்ருதத்வாய கல்பதே – அவன் மரணமற்ற பெருவாழ்வுக்கு தகுதி அடைகின்றான்

காரிகை-93
ஸர்வே த4ர்மாஹா – அனைத்து ஜீவர்களும்
ஆதி ஸா2ந்தாஹா – எப்பொழுதும் பூரண ஆனந்த ரூபமாக இருப்பவர்கள், முழுமையான மனநிறைவுடன் இருப்பவர்கள். இது அடையப்படுவதில்லை அறியப்படுவது.
அனுபன்னாஹா – பிறப்பற்றவர்களாக
ப்ரக்ருதயா – இயற்கையிலே, சுபாவமாக
ஸுநிர்வ்ருதா – சம்சாரமற்றவர்கள், எதனோடும் சம்பந்தப்படாதவர்கள், என்றென்றும் தன்னிடத்திலே இருப்பவர்கள்
ஸமாபின்னஹ – தனக்குள்ளே எந்த வேறுபாடுமற்றவர்கள்
அஜம் – பிறப்பற்றவர்கள்
ஸாம்யம்விஶாரதம் – எந்தவித வேறுபாடும் அற்றதாகவும், தூய்மையாகவும் இருக்கின்றார்கள்.
இந்த தன்மைகள் அனைத்தும் ஆத்மாவின் ஸ்வரூபத்தையே குறிக்கின்றது.

காரிகை-94
வைஶாரத்யம் ந அஸ்தி – தூய்மை கிடையாது
பேதே விசரதாம் ஸதா – எப்பொழுதும் வேற்றுமையை காண்பவர்களுக்கு, இருமையை உணர்ந்து கொண்டிருப்பவர்களுக்கு மனத்தூய்மை என்பதே இருக்காது.
பே4தநிம்னாஹா – பொய்யான வேற்றுமையில் மூழ்கியிருப்பவர்கள்; ஸ்ருஷ்டியில் மூழ்கி இருப்பவர்கள்
ப்ருதக்வாதா– வேற்றுமைகள் உண்மையென்று திடமாக நம்பிக் கொண்டிருப்பவர்கள்
தஸ்மாத் தே க்ருபணாஹா ஸ்ம்ருதாஹா– இப்படி அவர்கள் இருப்பதனால் பரிதாபத்திற்கு உரியவர்களாக கருதப்படுகிறார்கள்.

காரிகை-95
அஜே ஸாம்யே து – பிறப்பற்ற, பேதமற்ற தத்துவத்தில்
யே கேசித் ஸு நிஸ்சிதாஹா பவிஷ்யந்தி – எந்த சிலர் அதை திடமாக உறுதி செய்தவர்களாக இருக்கின்றார்களோ
தே ஹி லோகே மஹாஞானாஹா – அவர்கள் இந்த உலகத்திலிருக்கும் மேலான ஞானத்தை உடையவர்களாகவும், மகான்களாகவும் இருக்கின்றார்கள்
தத் லோகந காஹதே – இதை உலகம் புரிந்து கொள்வதில்லை
ஞானிகளால் அறியப்பட்ட ஆத்ம தத்துவத்தை, ஞானிகளின் வாழ்க்கை முறையையும் உலகம் புரிந்து கொள்ளாது.

காரிகை-96
அஜேஷூ தர்மேஷு – பிறப்பற்ற ஜீவர்களிட்த்தில் இருக்கின்ற ஞானம், அறிவு ஸ்வரூபம்
அஜம் – பிறப்பற்றது;
அஸங்கிராந்தம் – எதனோடும் சம்பந்தப்படாதது.
யதோ ந க்ரமதே ஞானம் – எந்த காரணத்தால் ஞானம் எதனோடும் சம்பந்தம் வைப்பதில்லையோ, அதனால்
அஸங்கம் தேன கீர்த்திம் – இந்த அறிவு எதனோடும் சம்பந்தப்பட்டதில்லை கூறப்படுகின்றது.

காரிகை-97
ஆத்மா அஸங்கம் என்பதை அத்வைதத்தில் மட்டும்தான் நிலை நாட்ட முடியும்.
அணுமாத்ரே அபி வைத4ர்மே – அணுவை விட சிறிய வேற்றுமை தோன்றினாலும்
அவிபஸ்2சதி – அக்ஞானிகளுக்கு
அஸங்கதா ஸதா நாஸ்தி – எப்பொழுதும் ஆத்மா அஸங்கமற்றது என்பது கிடையாது
கிமுதா ஆவரணச்யுதிஹி – எப்படி அறியாமை அழியும், மறைந்து விடும்.

காரிகை-98
ஸர்வே தர்மாஹா – அனைத்து ஜீவர்கள் உண்மையில்
அலப்3தா4 ஆவரணா – அறியாமையால் மறைக்கப்படாதவர்கள்
ப்ரக்ருதி நிர்மலாஹா – சுபாவமாகவே தூய்மை ஸ்வரூபமானவர்கள்
ஆதௌ பு3த்தாஹா – ஆரம்பித்தலே அனைத்தையும் அறிந்தவனாக இருக்கின்றான்
ததா முக்தா – அதுபோல ஜீவர்கள் என்றுமே முக்தியடைந்தவர்கள்தான்
புத்யந்த இதி நாயகா – ஞானிகள் விவகாரத்தில் நாங்கள் அறிகின்றோம்.

காரிகை-99
தாயினஹ – மேன்மைக்குரிய, பூஜைக்குரிய, எங்கும் வியாபித்துள்ள
புத்தஸ்ய ஞானம் – வணக்கத்துக்குரிய ஞானிகளினுடைய ஞானம்
தர்மேஷு – எந்த பொருட்களிடத்தும்
ந ஹி க்ரமதே – சம்பந்தபடுவதில்லை
ததா ஸர்வே தர்மாஹா – அதுபோலவே அனைத்து ஜீவர்களும்
ஏதத் ஞானம் – இந்த ஆத்ம தத்துவம்
புத்தேன ந பா4ஷிதம் – புத்தியினால் விளக்கப்படவில்லை

காரிகை-100
துர்தர்ஷம் – புரிந்து கொள்வதற்கு மிகவும் கடினமானது
அதிகம்பீரம் – மிக கம்பீரமாக இருப்பது எனவே இதில் நுழைவதற்கு மிக கடினம்
அஜம் ஸாம்யம் – பிறப்பற்றது, பேதமற்றது
விஶாரதம் –  பரிசுத்தமானது
புத்3த்4வா பத3ம் – இந்த தத்துவத்தை அறிந்து
அனானாத்வம் –  வேற்றுமைகளற்ற, இருமைகளற்ற, அத்வைதம்
நமஸ்குர்மோ யதா பலம் –  இப்படிபட்ட ஆத்ம தத்துவத்தை வணங்குகிறோம்.
எதை மனப்பூர்வமாக வணங்குகின்றோமோ, அதனுடைய நற்குணங்கள் நம்மை வந்தடையும்,
எவர்களை மனப்பூர்வமாக வணங்குகின்றோமோ, அவர்களுடைய நற்குணங்கள் நம்மை வந்தடையும்.

இந்த உபநிஷத்தில் ஆகம, ப்ரபஞ்சோஸம, வைதத்யம், அத்வைதம் என்று அழைக்கப்படுகின்ற நான்கு பிரகரணங்கள் உள்ளன.
அமனீபாவம் – நிதித்யாஸனம்,
அஸ்பர்ஸயோகம் – ஞானயோகம் – இது எதனோடும் சம்பந்தப்படாத நிலைக்கு நம்மை வைத்து கொள்ளுதல்
தொகுப்புரை

மந்திரம்-1  ஓம் என்ற எழுத்தின் துணைக்கொண்டு ஆத்ம தத்துவம் விளக்கப்பட்டிருக்கின்றது. காரிய ரூபமாக இருக்கின்ற பிரபஞ்சம், காரண ரூபமாக இருக்கின்ற மாயை இவைகளை கடந்து இருக்கின்ற பிரஹ்ம ஸ்வரூபத்தை விளக்குகின்றது. எனவே இதைப்பற்றிய விசாரம் ஆரம்பிக்கப்படுகின்றது.  ஓங்காரம் இந்த பிரபஞ்சத்துடன் ஒப்பிடப்படுகின்றது.  இந்த பிரபஞ்சமே வெறும் நாம ரூபங்களே, காரியங்கள் அனைத்தும் நாம-ரூபங்களே. எல்லா ருபங்களிலும் நாமத்தில் அடக்கி வெறும் நாமம் மட்டும் என்றும் கூறிவிடலாம் அல்லது நாமங்களை ரூபத்தில் ஒடுக்கி விடலாம்.  அனைத்து உருவங்களும் சப்தத்திற்குள் அடங்கி விடுகின்றது.  சப்த ரூபமான இந்த பிரபஞ்சம் அதற்கு காரணமாக இருக்கின்ற ஒங்காரமே என்று கூறப்படுகின்றது.

 

மந்திரம்-2  ஆத்ம விசாரம் ஆரம்பிக்கப்படுகின்றது. ஆத்ம-பிரம்ம ஐக்கியம் விளக்கப்படுகின்றது.  ஆத்மாவே அனைத்துமாக இருக்கின்றது. எனவே இதை விசாரம் செய்து அடைந்திட வேண்டும். நான் என்பதே ஆத்மா என்று குறிப்பிடப்படுகின்றது.  எனவே இந்த நான் என்ற சொல் விசாரம் செய்யப்படுகின்றது.  நாம் இந்த சொல்லின் பொருளை எப்படி புரிந்து கொண்டுள்ளோமோ அதிலிருந்து விசாரம் ஆரம்பிக்கப்படுகின்றது. இயற்கையாக இந்த ஸ்தூல உடலை, மனதை நாம் நான் என்று குறிப்பிடுகின்றோம். இவையிரண்டும் தோன்றுவதற்கு காரணமாக இருப்பது காரண சரீரம். எனவே மூன்று சரீரத்தையே நான் என்று குறிப்பிடுகின்றோம். இந்த மூன்றையும் அறிகின்ற நான்காவதாக ஒரு அறிவு தத்துவம் மறைந்திருக்கின்றது.  நான் என்ற சொல்லின் உண்மையான, சரியான பொருளை அறிவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.  அதை முதலில் ஆத்ம-அனாத்மா என்று முதலில் பிரிக்க வேண்டும். நான் என்ற சொல்லில் நான்-இல்லாததும் (அனாத்மா) கலந்திருக்கின்றது. அதை பிரித்து அவைகள் பொய்யானவை என்று நிரூபித்து நீக்க வேண்டும். இதை அவஸ்தாத்ரய விவேகம் என்ற முறையில் அனாத்மாவை ஆத்மாவிலிருந்து பிரித்து அவைகள் மித்யா என்று நீக்கி ஆத்மாவை மட்டும் உணர வேண்டும்.  ஜாக்ரத், கனவு, சுஷுப்தி என்ற மூன்று அனுபவங்களிலிருந்து எந்தவிதமான அறிவை அடைய வேண்டும் என்று விளக்குவதே இந்த அவஸ்தாத்ரய முறை.  அனுபவமே அறிவை கொடுக்காது, ஆனால் அதை ஆராய்ச்சி செய்து அடைந்தாக வேண்டும். சந்தேகமே வராத அளவுக்கு இந்த அறிவு புத்தியை அடைய வேண்டும்.           எப்பொழுது நாம் ஸ்தூல சரீரத்தில் அபிமானம் வைக்கின்றோமோ அப்பொழுது ஜாக்ரத் அவஸ்தையை அனுபவிக்கின்றோம். சூட்சும சரீரம் வரை அபிமானம் வைக்கும் போது கனவு நிலையையும், காரண சரீரத்தில் அபிமானம் வைக்கும் போது சுஷுப்தி நிலையையும் அனுபவிக்கின்றோம்.  இந்த மூன்று நிலைகளின் மூலம் நாம் அடைய வேண்டிய அறிவானது,  இந்த அனுபவங்களில் அனுபவிக்கும் பொருட்களிலிருந்து நான் வேறுபட்டவன் என்பதாகும்.  இதை அனுபவிக்கின்ற சேதனமாக ஒன்று மூன்று நிலைகளிலும் தொடர்ந்து மாறாமல் இருக்கின்றது, ஆனால்  பொருட்கள் மாறுகின்றது

  • நான் ஒருவனாக இருந்து கொண்டு மூன்று நிலைகளிலுள்ளதை அனுபவித்துக் கொண்டு இருப்பவன்
  • நான் தொடர்ந்து, ஒருவனாகவும், மாறாதவனாகவும் இருக்கின்றேன்.
  • எது மாறுகின்றதோ அது அநித்யம், மாறாமல் இருப்பது நித்யம்
  • இந்த அறிவு ஸ்வரூபமான சேதனத்தின் மீது இரண்டு அத்யாஸங்கள் ஏற்றி வைக்கப்படுகின்றன.
  • அனுபவிக்கப்படும் பொருட்களின் தன்மைகளை அனுபவிப்பவன் மீது ஏற்றி வைக்கப்பட்டிருக்கின்றது.  ஸ்தூல சரீரத்தின் தன்மைகளை ஆத்மாவில் ஏற்றி வைத்து அதுவே நான் என்று அறிந்து கொண்டிருக்கின்றோம்.  கண்ணாடியில் இருக்கும் பிம்பத்தையே நான் என்று நினைத்து கொண்டு இருப்பதைப் போல சிதாபாசத்தையும் நான் என்று நினைத்துக் கொண்டு இருக்கின்றொம். புத்தியில் பிரதிபலிக்கும் ஆத்மாவான சிதாபாசமானது அறிதல் என்ற செயலை செய்து கொண்டிருக்கின்றது.
  • உன்னுடைய உண்மையான ஸ்வரூபமானது எந்தவொரு பொருளுமல்ல, எதையும் அனுபவிப்பவனான சிதாபாஸமும் நீ அல்ல என்று நீக்குகின்றது

மந்திரம்-3   இதில் ஜாக்ரத் அவஸ்தை விளக்கப்படுகிறது.  இதில் பார்க்கப்படும் பொருட்கள் உடலுக்கு வெளியே இருக்கின்றது.  ஸ்தூல பிரபஞ்சத்தையும் சேர்த்து எடுத்துக் கொள்ளப்படுகின்றது.  அதுவும் நீக்கப்படுகின்றது. இதை அனுபவிப்பவன் பெயர் விஸ்வன்.

மந்திரம்-4   சூட்சும சரீரத்தில் அபிமானம் வைக்கும்போது கனவு பிரபஞ்சத்தை நாம் அனுபவிக்கின்றோம்.  சமஷ்டியில் இதை ஹிரண்யகர்ப்பன் என்றும், வியஷ்டியில் இதை அனுபவிப்பவனை தைஜஸன் என்று அழைக்கப்படுகின்றது.

மந்திரம்-5   காரண சரீர அபிமானத்தால் ஆழ்ந்த உறக்கம் அனுபவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் ஜீவனை பிராக்ஞன் என்று அழைக்கப்படுகின்றது.

மந்திரம்-6   சமஷ்டியான அந்தர்யாமி-ஈஸ்வரன் இதில் விளக்கப்படுகின்றது.  இதிலிருந்து நாம் நான் என்று குறிப்பிடுவது ஆத்மா என்று புரிந்து கொள்ள வேண்டும்.

மந்திரம்-7   நம்முடைய சிதாபாசமும் நீக்கப்படுகின்றது.  நிலைக்கண்ணாடியில் தெரியும் நம் உருவ பிம்பத்தை நான் என்று நினைத்துக் கொள்வதைப்போல புத்தியில் பிரதிபலிக்கும் சேதனமான சிதாபாசத்தை ஆத்மா என்று புரிந்து கொள்ளாதே.  ஆத்மா அறிவும் அல்ல, ஜடமும் அல்ல அறிவு ஸ்வரூபம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.  இது அவ்விவகாரம், அதிருஷ்யம், அலக்ஷணம், அசிந்தியம் என்ற குணங்களை உடையதாக இருக்கின்றது.  அனாத்மா மித்யா என்றும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மந்திரம்-8   ஓங்காரம் விசாரம் செய்யப்படுகின்றது.  ஓங்காரத்தில் உள்ள அகாரம் ஜாக்ரத் அவஸ்தை அனுபவிக்கும் விஸ்வனையும், உகாரமானது கனவு பிரபஞ்சத்தை அனுபவிக்கும் தைஜஸனையும், மகாரமானது பிராக்ஞனையும் குறிக்கின்றது என்று ஒப்பிட்டு ஒங்காரமானது விளக்கப்படுகின்றது.

மந்திரம்-12 மந்திரம்-7ன் சாரமே இந்த மந்திரத்தில் விளக்கப்படுகின்றது.  அசப்தமே ஆத்மாவாக இருக்கின்றது என்று புரிய வைக்கின்றது. இது நாம் அனுபவிக்கின்ற சப்தமற்ற நிலையான அசப்தத்தை குறிக்கவில்லை. இங்கு குறிப்பிடும் அசப்தமானது எது சப்தத்தையும், அசப்தத்தையும் உணர்த்துகின்றதோ அதுவே என்று சொல்லப்படுகின்றது. இது அசப்த ஸ்வரூபம், அமாத்ர ஸ்வரூபம்.

 

ஓம் ஸத் தத்

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

முண்டக உபநிஷத் ஸ்வாமி குருபரானந்தா உபதேச விளக்கம் அத்தியாயம்-01-02-03–

December 24, 2022

முண்டக உபநிஷத்–ஸ்வாமி குருபரானந்தா உபதேச விளக்கம்–அத்தியாயம்01

முகவுரை
உபநிஷத் என்ற சொல்லுக்கு பிரம்ம வித்யா என்று பொருளாகும். மேலும் இந்த சொல்லை உப+நி+ஷத் என்று பிரித்துப் பார்த்தால், உப என்பது குருவின் அருகே செல்லுதல் என்றும், நி என்பது நிச்சய ஞானத்தை அடைய வேண்டும் என்றும் ஷத் என்பதற்கு துயரங்களை நாசம் செய்வது, சம்சாரத்தை அழிப்பது என்றும் பொருட் கொள்ளலாம்.
குருவினிடத்து சென்று நிச்சயமான பிரம்மஞான அடைந்து சம்சாரத்தை நீக்கிக் கொள்ளுதல் என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது.

இந்த சாஸ்திரத்தில் முண்டகத்தை பிரதானமாக வைத்து யாகம் சொல்லப்பட்டுள்ளது. எனவே இதற்கு முண்டக உபநிஷத் என்று அழைக்கப்படுகிறது. இது அதர்வண வேதத்தில் இருக்கிறது.

சாந்தி பாடம்
ப4த்3ரம் கர்ணிபி4: ஶ்ருணுயாம தே3வா: |
ப்4த்3ரம் பஶ்யேமாக்ஷிபி4ர்யஜத்ரா: |
ஶ்தி2ரைரங்க3ஸ்துஷ்டுவாம்ஸஸ்தனுபி4: |
வ்யஶேம தே3வஹிதம் யதா3யு: |
ஸ்வஸ்தி ந இந்த்3ரோ வ்ருத்3த4ஶ்ரவா: |
ஸ்வஸ்தி ந பூஷா விஶ்வவேதா3: |
ஸ்வஸ்தி நஸ்தார்க்ஷ்யோ அரிஷ்டநேமி: |
ஸ்வஸ்தி நோ ப்3ருஹஸ்பதிர்த3தா4து |
ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: |

ப4த்3ரம் கர்ணிபி4: ஶ்ருணுயாம தே3வா: |
நாங்கள் தெய்வீகமான விஷயங்களையே கேட்க வேண்டும், உண்மையை போதிக்கும் விஷயங்களையே கேட்க வேண்டும், சாஸ்திரம் உரைக்கும் உபதேசங்களை குரு மூலம் சிரத்தையுடன் கேட்கும் வாய்ப்பை அடைய வேண்டும். அந்த உபதேசங்கள் அனைத்தும் புரிய வேண்டும், மனதில் நிற்க வேண்டும்.  இவைகள் மூலம் நாங்கள் இந்த சம்சாரத்திலிருந்து முற்றிலுமாக விடுதலையடைய வேண்டும்.

ப்4த்3ரம் பஶ்யேமாக்ஷிபி4ர்யஜத்ரா: |
தேவர்கள் எங்களை சம்சார பந்தத்திலிருந்து காப்பாற்றட்டும். (யஜத்ரா என்ற சொல், தம்மை புகழ்பவர்களுக்கு உதவி செய்யும் ஒருவகையான தேவர்கள் என்று குறிக்கிறது.  இது ஈஸ்வரனையும் குறிப்பால் உணர்த்துகிறது.) நாங்கள் மோட்சத்தை அடைவதற்கு உதவியாக இருப்பனவற்றையே பார்க்க வேண்டும்,  மனத்தூய்மையை தரக்கூடிய விஷயங்களையே பார்க்க வேண்டும்.  பார்க்கும் அனைத்திலும் அந்த ஈஸ்வரனையே பார்க்கும் புத்தியை அடைய வேண்டும். (வெறும் கண்ணால் பார்க்காமல், புத்தியின் துணை கொண்டு வெளி விஷயங்களை பார்க்க வேண்டும்.)

ஶ்தி2ரைரங்க3ஸ்துஷ்டுவாம்ஸஸ்தனுபி4:
நாங்கள் உறுதியான அங்கங்களுடன் வேத மந்திரங்களால் உங்களை புகழ்ந்து கொண்டு எவ்வளவு ஆயுட்காலம் தேவர்களால் கொடுக்கப்பட்டுள்ளதோ அவ்வளவு நாட்கள் வாழ்வோமாக

வ்யஶேம தே3வஹிதம் யதா3யு: |
எங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் முழுவதும் தேவர்களை புகழ்ந்து கொண்டும், உறுதியான, நலமான, திடமான இந்திரியங்களையும், சரீரத்தையும் கொண்டு தேவர்கள் மகிழும் வண்ணம் நல்லதையே செய்து கொண்டும் வாழ வேண்டும்.

ஸ்வஸ்தி ந இந்த்3ரோ வ்ருத்3த4ஶ்ரவா: |
போற்றுதலுக்கும், வணங்குதலுக்கும் உரிய தேவர்கள் எங்களுக்கு உடல்நலத்தையும், மனநலத்தையும் கொடுக்கட்டும்.

ஸ்வஸ்தி ந பூஷா விஶ்வவேதா3: |
அனைத்தையும் அறிகின்ற சூரியபகவான் எங்களுக்கு நல்லதையே கொடுக்கட்டும்.  அனைத்தையும் அறிகின்ற ஈஸ்வரனை சூரியனாக நினைத்து வணங்குவதால் அவருடைய அருள் முழுவதும் கிடைக்கப் பெறுவோமாக.  எங்களுடைய புத்தி பிரகாசமடைந்து அதன் மூலம் எல்லாம் வல்ல ஈஸ்வரனை புரிந்து கொள்வோமாக.

ஸ்வஸ்தி நஸ்தார்க்ஷ்யோ அரிஷ்டநேமி: |
கருட பகவான் வானில் எந்தவித தடைகளில்லாமல் பறப்பது போல நாங்கள் அந்த ஈஸ்வரனை அடையும் முயற்சியில் எந்தவிதமான தடைகளும் இல்லாதிருக்கட்டும்.

ஸ்வஸ்தி நோ ப்3ருஹஸ்பதிர்த3தா4து |
இந்திர தேவரின் குருவான ப்ருஹஸ்பதி எங்களுக்கு நல்லதையே அருளட்டும். ப்ருஹஸ்பதி பகவான் அறிவுக்கு கடவுளாக கருதப்படுகிறார்.  அவருடைய அனுக்கிரகமும் எங்களுக்கு கிடைக்கட்டும்.

ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: |
 நமக்கு மூன்று வழிகளில் தடைகள் வரலாம். அந்த தடைகளெல்லாம் நீங்கிட வேண்டும் என்பதற்காக வேண்டப்படுகிறது. அவைகள் அதிதெய்விகம், ஆதிபௌதிகம், ஆதியாத்மிகம் ஆகும்

  1. நமது சக்திக்கு அப்பாற்பட்ட இயற்கையிலிருந்து வரும் தடைகள். அதாவது அதிக மழை, வெள்ளம், பூகம்பம், அதிகவெப்பம் போன்றவை.
  2. நம்மை சுற்றியுள்ள தடைகளான, சூழ்நிலை தடைகள், எதிர்பாராமல் வருகின்ற தடைகள்
  3. நம்மிடத்திலிருந்தே வரும் தடைகளான உடல்நிலை சரியில்லாமல் போகுதல், வேதாந்தம் படிப்பதில் திடீரென்று ஆர்வமில்லாது போகுதல் போன்றவைகள்

அத்தியாயம்–01

ஸ்லோகம்-01
ப்3ரஹ்மா தே3வானாம் ப்ரத2ம: ஸம்ப3பூ4வ
        விஶ்வஸ்ய கர்தா பு4வனஸ்ய கோ3ப்தா |
ஸப்3ரஹ்மவித்3யாம் ஸர்வவித்3யாப்ரதிஷ்டா2ம்
        அத2ர்வாத ஹ்தேஷ்ட2புத்ராய ப்ராஹ || 1 ||

பிரம்மதேவர் எல்லா தேவர்களுக்குள்ளும் முதன்மையானவராக தோன்றினார்.  அவர் உலகத்தைப் படைத்து  அதைக் பாதுகாத்துக் கொண்டும் வருகிறார்.  அவர் அனைத்து அறிவிற்கும் ஆதாரமாக உள்ள பிரம்ம வித்யாவை தன்னுடைய மூத்தமகனான அதர்வனுக்கு உபதேசித்தார்.

பிரம்ம வித்யா என்பது பிரம்மதேவனிடமிருந்து வந்த அறிவு, அவரால் உபதேசம் செய்யப்பட்ட அறிவு என்றும், பரம்பொருளைப் பற்றிய அறிவு, நிர்குண பிரம்மத்தைப் பற்றிய அறிவு என்றும் அறிந்து கொள்ள வேண்டும். இந்த அறிவானது மற்ற அனைத்து அறிவைவிட மேலானதாகவும், அவைகளுக்கு ஆதாரமாகவும் இருக்கிறது.  இந்த ஞானம்தான் மோட்சத்தை, மேலான பலனை கொடுப்பதால் இதை புனிதமான, மேலான ஞானம் என்று கருதப்படுகிறது.


ஸ்லோகம்-02
அத3ர்வணே யாம் ப்ரவதே3த ப்3ரஹ்மா
        அத2ர்வா தாம் புரோவாசாங்கி3ரே ப்ரஹ்மவித்3யாம் |
ஸ பா4ரத்3வாஜாய ஸத்யவஹாய ப்ராஹ
        பா4ரத்3வாஜோSங்கி3ரஸே பராவராம் || 2 ||

பிரம்மா எந்த பிரஹ்ம வித்யாவை அதர்வனுக்கு முன்பு உபதேசித்தாரோ, அதை அதர்வன் அங்கிர் என்பவருக்கு உபதேசித்தார்.  அங்கிரானவர் அதை பரத்வாஜ குலத்தில் தோன்றிய ஸத்யவஹருக்கு உபதேசித்தார். பரம்பரையாக வந்த இந்த வித்யாவை பரத்வாஜர் அங்கிரஸுக்கு உபதேசித்தார். இதிலிருந்து இந்த வித்யாவானது குருவின் மூலமாக சிஷ்யனுக்கு உபதேசிக்கும் பரம்பரையாக வந்திருக்கிறது என்றும் இந்த வித்யாவிடத்தில் சிரத்தையும் இருக்க வேண்டும் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

ஸ்லோகம்-03
ஶௌனகோ ஹ வை மஹாஶால: அங்கி3ரஸம்
விதி4வது3பஸன்ன: பப்ரச்ச2 |
கஸ்மின்னு ப4க3வோ விக்ஞாதே ஸர்வமித3ம்
விக்ஞாதம் ப4வதீதி || 3 ||

பெரிய யாகசாலையை கொண்டிருக்கும் சௌனகர் என்பவர் அங்கிரஸ் என்பவரை முறைப்படி அணுகினார். பகவானே! எந்த ஒன்றை அறிந்தால் நாம் அனுபவிக்கும் அனைத்தையும் அறிந்ததாகுமோ அதை எனக்கு உபதேசிப்பீர்களாக என்று கேட்டார். இவருடைய கேள்வியானது தனக்கு ஆத்மஞானத்தை உபதேசியுங்கள் என்பதை குறிப்பால் உணர்த்தப்படுகிறது.

இங்கு பெரிய யாகசாலையை உடையவர் என்பது இல்லறத்தில் இருந்து கொண்டு வேத நெறிப்படி வாழ்ந்து, கர்மயோகப்படி செயல்களை செய்துகொண்டு அதன் மூலம் வேதாந்த உபதேசத்தை பெறும் தகுதியை அடைந்தவர் என்று அறியப்படுகிறது.


ஸ்லோகம்-04
தஸ்மை ஸ ஹோவச |
த்3வே வித்3யே வேதி3தவ்யே இதி ஹ ஸ்ம
யத்3 ப்3ரஹ்மாவிதோ3 வத3ந்தி பரா சைவாபரா ச || 4 ||

தஸ்மை – அவரிடம் (சௌனகரிடம்)
வேதி3தவ்யே – அறியத்தக்கது
த்3வே வித்3யே – இரண்டு விதமான அறிவானது
ப்ரஹ்மவித்3 வதந்தி – வேதத்தை அறிந்தவர்கள் கூறுகிறார்கள்
பரா ச ஏவ அபரா  – அவைகள் பரா வித்யாவும், அபரா வித்யாவும் ஆகும்.

அங்கிரஸ் சௌனகரிடம் இவ்விதம் கூறினார். இரண்டுவிதமான அறிவுகளான பரா வித்யா, அபரா வித்யா இவைகள்தான் அறியத்தக்கது என்று வேதத்தை அறிந்தவர்கள் கூறியிருக்கிறார்கள். ஏன் அபரா வித்யாவையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற கேள்வி எழும்போது இந்த அறிவானது நமக்கு பராவித்யாவை அறிந்து கொள்ள துணைபுரியும் என்று புரிந்து கொள்ள வேண்டும். தர்ம-அதர்ம வித்யாவும் அபரா வித்யாதான். எனவே இதைப்போன்ற அபராவித்யாவையும் அறிந்து கொள்ள வேண்டும். மேலும் இவைகளை படிப்படியாக விட்டுவிடுவதற்கும் துணை புரியும்.

ஸ்லோகம்-05
தத்ராபரா ரிக்3வேதோ3 யஜுர்வேத3: ஸாமவேதோ3Sத2ர்வவேத:
        ஶிக்ஷா கல்போ வ்யாகரணம் நிருக்தம் ச2ந்தோ3 ஜ்யோதிஷமிதி |
அத2 பரா யயா தத3க்ஷரமிதி4க3ம்யதே || 5 ||

இந்த இரண்டு வித்யாவில் ரிக்வேதம், யஜுர்வேதம், ஸாமவேதம், அதர்வணவேதம், உச்சாரண சாஸ்திரம், யாகவிதியைப் பற்றிய சாஸ்திரம், இலக்கணம், சொல்லின் தோற்றத்தை ஆராயும் சாஸ்திரம், செய்யுள், ஜோதிடம் ஆகியவைகள் அபரா வித்யாவாகும். ஆனால் எந்தவொன்றினால் அந்த அழிவற்ற பரம்பொருளை அடையப்படுகிறதோ அதுவே பராவித்யாவாகும்.

வேதத்தின் கர்மகாண்டம் அபராவித்யா என்றும், ஞானகாண்டத்தை பராவித்யா என்றும் புரிந்து கொள்ளலாம்.  வேதத்தின் சப்த ஞானம் அபரா வித்யா, அர்த்தஞானம் பராவித்யா என்றும் அறியலாம்.

சிக்ஷா – ஒரு சொல்லை உச்சரிக்கும் விதத்தை சொல்லும் சாஸ்திரம்
கல்பஹ – எந்த மந்திரத்தை எங்கு பயன்படுத்த வேண்டும் என்று சொல்லும் சாஸ்திரம். எந்த யாகத்தை எந்த சூழ்நிலையில் பயன்படுத்த வேண்டும் என்பதையும் சொல்கின்ற சாஸ்திரம்
வியாகரணம் – இலக்கணம் – அர்த்த நிச்சயம்.
நிருக்தம் – ஒரு சொல் எப்படி உருவெடுக்கிறது என்பதை சொல்வது
சந்தஹ – செய்யுள் அமைப்பு
ஜ்யோதிட3ம் – யாகங்கள் செய்வதற்கான உரிய காலத்தை நிர்ணயம் செய்ய உதவும் சாஸ்திரம்
அக்ஷரம் – அழியாதது, மாற்றமடையாதது, நிலையானது இது பரபிரம்மத்தை குறிக்கிறது.
யயா அதி4க3ம்யதே – எதனால் அறியப்படுகிறதோ அதுவே பராவித்யா

ஸ்லோகம்-06
யத்த த3த்3ரேஶ்யமக்3ராஹ்யமகோ3த்ரமவர்ணமசக்ஷு:ஶ்ரோத்ரம்
       தத3பாணிபாத3ம் |
நித்யம் விபு4ம் ஸர்வக3தம் ஸுஸூக்ஷ்மம் தத3வ்யயம்
       யத்3பூதயோனிம் பரிபஶ்யந்தி ||

யத்3 தத்3 அத்3ரேஶ்யம் – எது நம்முடைய கண்களால் கிரகிக்க முடியாததோ,
எவைகளெல்லாம் அரூபமாக இருக்கிறதோ அவைகளெல்லாம் அதிருஶ்யம் என்று கூறப்படும். ஐந்து ஞானேந்திரியங்களால் அறியவும், கிரகிக்கவும் முடியாதவைகளே அதிருஶ்யம் என்றும் புரிந்து கொள்ளலாம்
அக்3ராஹ்யம் – கைகளால் அதைப் பிடிக்கமுடியாது. அனைத்து கர்மேந்திரியங்களின் உதவியாலும் கிரகிக்க முடியாதது
அகோ3த்ரம் – எந்த பரம்பரையும் கிடையாது. இதற்கு காரணம் கிடையாது, பிறப்பற்றது, எதிலிருந்தும் தோன்றாதது.
அவர்ணம் – குணங்களற்றது, நிர்குணமானது, தர்ம-அதர்மங்களற்றது. எந்தவிதமான பிரமாணங்களாலும் அறிய முடியாதது என்று உணர்த்தப்படுகிறது அனுபவிக்கவும் முடியாது
அசக்ஷு: அஶ்ரோத்ரம் – கண்களுமில்லை, காதுகளுமில்லை. ஞானேந்திரியங்கள் எதுவும் கிடையாது
தத்3 பாணி பாத3ம் – கை, கால்களும் கிடையாது. கர்மேந்திரியங்கள் கிடையாது
நித்யம் – எல்லா காலத்திலும் இருப்பது. தேச,காலங்களாலும் வரையறுக்கப்படாதது.
விபு4ம்  – விதவிதமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.
ஸர்வக3தம் – எல்லா இடங்களிலும் வியாபித்திருப்பது
ஸுஸூக்ஷமம் – மிகவும் நுட்பமானதாக இருக்கிறது. நிர்குணமாக இருப்பதால் மிகவும் சூட்சுமமாக இருக்கிறது.
தத்3 அவ்யயம் – மாற்றமடையாமல் இருப்பது, ஆறுவிதமான விகாரங்களற்றது
யத்3 பூதயோனிம் – இந்த பிரபஞ்சத்திற்கு உபாதான காரணமாக இருக்கிறது
தீ4ரா பரிபஶ்யந்தி – தீரர்கள், ஆத்ம தத்துவமறிந்தவர்கள் இந்த அக்ஷரத்தை எல்லா இடங்களிலும், எல்லாவற்றிலும் பார்க்கிறார்கள். தீரர்கள் என்பதற்கு தகுதியை உடையவர்களையும, ஞானத்தை அடைந்த ஞானியையும் குறிக்கின்றது

ஸ்லோகம்-07
யதோ2ர்ணநாபி4: ஸ்ருஜதெ க்3ருஹ்ணதே
  ச யதா2 ப்ருதி2வ்யாமோஷத4ய: ஸம்ப4வந்தி |
யதா2 ஸத: புருஷாத்கேஶலோமானி
  ததா2க்ஷராத்ஸம்ப4வதீஹ விஶ்வம் || 7 ||

அக்ஷராத் இஹ விஶ்வம் ஸம்ப4வத் – பிரம்மத்திலிருந்து இந்த உலகம் தோன்றியது. இந்த பிரபஞ்சம் பிரம்மத்திலிருந்து வெளிவந்தது. பிரம்மன் காரணம், இந்த பிரபஞ்சம் காரியாமாகும்.  உபாதான காரண லட்சணம் என்பது ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயம் இவைகளுக்கு காரணமாக இருப்பது.  பானை என்ற காரியமானது களிமண் என்ற உபாதான காரணத்திலிருந்து வந்தது.  எல்லா காலத்திலும் இருப்பது உபாதான காரணம்.  ஈஸ்வரனே உபாதான காரணமாகவும், நிமித்த காரணமாகவும் இருக்கின்றார்.  இந்த கருத்தை உதாரணம் மூலமாக இந்த மந்திரத்தில் கூறப்பட்டு இருக்கின்றது.

சிலந்தி பூச்சியானது தான் கட்டிய வலைக்கு தானே உபாதான காரணமாகவும் நிமித்த காரணமாகவும் இருக்கிறது.  இந்த உதாரணத்தில் ஒன்றேதான் இரண்டு காரணமாகவும் இருக்கின்றது. மரம், செடி, கொடிகள் பூமியிலிருந்து வளர்கின்றன.  பூமியே இரண்டு காரணமாகவும் இருக்கிறது. இந்த உதாரணத்தில் பூமி என்ற ஒன்றிலிருந்து தாவரங்கள் விதவிதமாக இருக்கின்றது.  காரணம் ஒன்று ஆனால் காரியங்கள் பலவாக இருக்கின்றது.  காரணமானது சாமான்ய காரணம், விசேஷ காரணம் என்று இருவகையாக பிரிக்கலாம்.  இங்கு பூமியே சாமான்ய காரணம், விதைகள் விசேஷ காரணம்.  அதேபோல விசேஷ காரணம் கர்மவினைகள், உபாதான காரணம் ஈஸ்வரன். மனிதன் உடலில் தோன்றும் ரோமங்களுக்கு மனித உடலே இரண்டு காரணமாகவும் இருக்கின்றது. பொதுவாக காரணத்தின் குணம் காரியத்திலும் இருக்கும்.  அறிவு ஸ்வரூபமான மனிதனிடத்திலிருந்து எப்படி ஜடமான முடிகள் தோன்றுகின்றன. அறிவு ஸ்வரூபமான ஈஸ்வரனிடத்திலிருந்து எப்படி ஜடமான இந்த உலகம் தோன்றியது.

மேற்கூறிய உதாரணங்கள் மூன்றிலும் மாறுபடாமல் இருப்பது உபாதான காரணம்
மந்திர விளக்கம்
யதா2 ஊர்ணநாபி4: ஸ்ருஜதே – எவ்வாறு சிலந்தி தனது வலையை பின்னுகிறது
க்3ருஹ்ணதே ச – அதையையே விழுங்கியும் விடுகிறது.
யதா2 ப்ருதி3வ்யாம் – எவ்வாறு பூமியிலிருந்து
ஔஷத4ய: ஸம்ப3வந்தி – தாவரங்கள் வளர்கின்றதோ
யதா2 ஸத: புருஷாத் – எவ்வாறு அறிவுடைய மனிதனிடத்திலிருந்து
கேஶலோமானி – முடிகள் வளர்கின்றனவோ
ததா2 அக்ஷராத் ஸம்ப4வத் இஹ விஶ்வம் – அதுபோல அந்த அக்ஷரத்திலிருந்து நமது அனுபவத்திலிருக்கும் இந்த உலகமானது தோன்றியது

ஸ்லோகம்-08
தபஸா ஜீயதே ப்3ரஹ்ம ததோSன்னமபி4ஜாயதே |
அன்னாத்ப்ராணோ மன: ஸத்யம் லோகா: கர்மஸு சாம்ருதம் || 8 ||

காரணமானது நாம, ரூபங்களாக இருக்கும்போது அவைகளை காரியம் என்று அறிவோம்.  இந்த நாம-ரூபங்கள் எங்கிருந்து வந்தது என்றால் அது ஏற்கனவே காரணத்திற்குள்ளேயே இருக்கின்றது என்று புரிந்து கொள்ள வேண்டும்.  அவைகள் வெளித்தோற்றத்திற்கு வந்தால் அவைகளே காரியமாகின்றது.  வெளித்தோற்றத்திற்கு வராத நிலைக்கு அவ்யக்தம் என்று பெயர்.  விதைக்குள் மரத்தினுடைய எல்லா குணங்களும் வெளித்தோற்றத்திற்கு வராத நிலையில் இருக்கின்றது.

இந்த பிரபஞ்சம் அக்ஷரத்திடமிருந்து வந்திருக்கின்றது. இதற்கு முன்னால் இது நாம, ரூபங்களாக அவ்யக்தமாக இருந்திருக்கிறது.  இந்த அவ்யக்தமான நாம ரூபங்களே மாயை அல்லது பிரகிருதி என்று அழைக்கப்படுகிறது.

பிரம்மம் படைக்க வேண்டும் என்று ஆசைப்படும் நிலையில் மாயை தயாரான நிலைக்கு வந்து விடுகிறது. முதலில் சூட்சுமமான பஞ்ச பூதங்கள், சரீரங்கள் தோன்றுகின்றன. பிறகு அவைகளிலிருந்து ஸ்தூல பூதங்களும், உலகங்களும், சரீரங்களும் தோன்றுகின்றன. சரீரங்களிலிருந்து கர்மங்களும், அதிலிருந்து கர்மபலன்களும் தோன்றுகின்றன.  மாயைக்கு வெளித்தோற்றத்திற்கு வராத நிலை, வெளித்தோற்றத்திற்கு வருவதற்கு தயாராக இருக்கும் நிலை என்று இருவகையான நிலைகள் உண்டு.

தபஸா ஜீயதே ப்ரஹ்ம – அவ்யக்த மாயையுடன் கூடிய பிரம்மன் ஸ்ருஷ்டி செய்ய தயாராகின்றது. சங்கல்பம் செய்கிறது
ததஹ – அதைத் தொடர்ந்து
அன்னம் அபிஜாயதே – மாயை தயாரான நிலைக்கு வருகின்றது
அன்னாத் பிராணஹ – மாயையின் இந்த நிலையிலிருந்து பிராணன் (ஹிரண்யகர்ப்பன்,
ஸமஷ்டி சூட்சும பிரபஞ்சம்) முதலில்  தோன்றுகிறது,
மனஹ – பிறகு ஸமஷ்டி சூட்சும சரீரங்கள் தோன்றுகிறது
ஸத்யம் – பிறகு ஸ்தூல பூதங்கள், உலகங்கள் தோன்றுகிறது
லோகோ: – இந்த ஸ்தூல உலகங்கள், சரீரங்கள் தோன்றிய பிறகு
கர்மஸு  அம்ருதம் – கர்மங்களும், அதனுடைய பலன்களும் தோன்றின

ஸ்லோகம்-09
ய: ஸர்வக்ஞ: ஸர்வ்வித்3யஸ்ய ஞானமயம் தப: |
தஸ்மாதே3தத்3ப்3ரஹ்ம நாம ரூபமன்னம் ச ஜாயதே || 9 ||

அனைத்தையும் அறியும் சக்தி கொண்ட ஈஸ்வரன் ஸ்ருஷ்டிக்கு நிமித்த காரணமாக இருக்கின்றார்.  ஈஸ்வரனுடைய மனம் மாயை, அதுதான் எண்ணங்களின் மாறுதலுக்கு உட்படுகிறது. எண்ணங்களின் மாற்றத்தினால்தான் அறிவு ஏற்படும்.

யஹ ஸர்வக்ஞஹ – அந்த அக்ஷரமானது எல்லாவற்றையும் அறியக்கூடியது
ஸர்வவித்3 – எல்லா காரியங்களையும் அறிந்தது.
யஸ்ய ஞானமய தபஹ – இந்த ஸ்ருஷ்டியை இப்படி செய்யலாம் என்று எண்ணியது
நம்முடைய கனவுகளானது நம்முடைய எண்ணங்களாலே ஸ்ருஷ்டி செய்யப்பட்டது. இவைகள் யாவும் பொய்யானது. அதேபோல ஈஸ்வரனுடைய சங்கல்பத்தாலே இந்த ஸ்ருஷ்டி தோன்றியுள்ளதால் இவைகள் யாவும் மித்யா.
தஸ்மாத் – அந்த பிரம்மத்திலிருந்து
ஏதத்3 பிரஹ்ம – இந்த சூட்சுமஸ்ருஷ்டி அபிமானி ஹிரண்யகர்ப்பன்
நாம ரூபம் – விதவிதமான பெயர்கள், உருவங்கள் தோன்றின
அன்னம் – உணவு, போக்ய வஸ்துக்கள்
ச ஜாயதே – இவைகளும் தோற்றுவிக்கப்பட்டன.
தொகுப்புரை

01-02  பரம்பரையாக வந்த ஞானத்தை புகழ்ந்துரைக்கிறது

03     சிஷ்யனுடைய கேள்வி, எதை அறிந்தால், எல்லாம் அறிந்ததாகும்>

04     பரா வித்யா, அபரா வித்யா அறிமுகம்

05     பராவித்யா, அபரா வித்யா லட்சணம்

06     பராவித்யாவானது விரிவாக விளக்கப்பட்டது

———-———-———-———-———-———-———-

அத்தியாயம்01

பகுதி-2

முகவுரை
கர்மம், உபாஸனை இவையிரண்டும் சேர்த்து அபரா வித்யா என்று அழைக்கப்படுகிறது.  இவைகள் மோட்சத்திற்கு அழைத்து செல்கின்ற பாதைக்கு வருவதற்கு உதவுகின்றது. கர்மம் என்பது உடலாலும், சொல்லாலும் செய்யப்படுகின்ற வைதீக செயல்கள். உபாஸனை என்பது மனதினால் செய்யப்படும் கர்மங்கள், தியானம், ஜபம். இவைகளைப்பற்றி விரிவாக விளக்கப்படுகிறது. வேதங்களில் விதிக்கப்பட்ட கர்மத்தை செய்வதினால் அடைய முடிவதையும், அடைய முடியாததையும் பற்றி பேசப்படுகிறது. அதேபோல உபாஸனையால் அடைய முடிவது, முடியாததை பற்றி பேசப்படுகிறது.

கர்மத்தினால் அடையும் பலன்கள்
1.     இகலோக ஐஸ்வர்யம் (தனம், அறிவு, உடல்நலம்)
2.     யாகங்களின் மூலம் பரலோக பலன்-சுவர்க்கம்
3.     இகலோக, பரலோக பலனில் பற்றற்று செய்வதால் மனத்தூய்மை அடையலாம். பராவித்யாவை தெரிந்து கொள்வதற்கான தகுதிதான் இது

கர்மபலனில் குறை
1.     இகலோக, பரலோக பலன்கள் யாவும் நிலையற்றவை
2.     மோட்சத்தை கொடுக்காது, மனநிறைவை கொடுக்காது

உபாஸனை
இதுவும் கர்மம்தான் ஆனால் மனதினால் செய்வது. இதன் மூலம் இகலோகத்தில் அதிக பலன்களை அடையலாம்.  பரலோகத்தில் உள்ள அதிக பலனை கொடுக்க கூடிய பிரம்மலோகத்திற்கு செல்லலாம்.  இந்த இரண்டிலும் பற்றற்று செய்தால் மன ஒருமுகப்போடு அடையலாம். சம, தமத்தினாலும் அடைந்து விடலாம். இதன் மூலம் பராவித்யாவை அடைய தகுதி அடைகின்றோம்.

இரண்டு அபரா வித்யாவான கர்மங்கள், உபாஸனை எடுத்துக் கொண்டு விளக்கப்படுகிறது. இவையிரண்டும் ஞானகாண்டத்திற்கு தகுதிக்கு உதவுகிறது.
1.     கர்மகாண்டத்தில் பல கர்மங்கள் விளக்கப்படுகிறது
2.     ரிஷிகள் மூலமாக இவைகள் வெளிப்பட்டது
3.     கூறியுள்ள பலன்கள் நிச்சயமாக அடையலாம்
4.     நாம் பலனில் விருப்பம் உடையவர்கள், கர்மத்தை விதிப்படி செய்துதான் அடையமுடியும்.

ஸ்லோகம்-01
ததே3தத்ஸத்யம் மந்த்ரேஷு கர்மாணி கவயோ
    யான்யபஶ்யம்ஸ்தானி த்ரேதாயாம் ப3ஹுதா4 ஸந்ததி |
தான்யாசரத2 நியதம் ஸத்யகாமா ஏஷ வ: பந்தா2:
    ஸுக்ருதஸ்ய லோகே || 1 ||

ததே3தத்ஸத்யம் – இனி சொல்லப்படுகின்ற யாகங்கள், கர்மங்கள் கண்டிப்பாக பலனைத் தரும்
கவயஹ – ரிஷிகள்
யானி கர்மாணி மந்த்3ரேஷு – எந்தவிதமான கர்மங்களை மந்திரத்திற்குள்
பஷ்யன் – பார்த்தார்களோ
தானி – அந்த கர்மங்களை
த்ரேதாயாம் – மூன்று வேதங்களில்
பஹுதா ஸந்ததானி – பலவிதமாக பலன்களை கொடுக்கிறது என்று சொல்லப்பட்டு இருக்கிறது.
ஸத்யகாமாஹா – கர்மபலன்களில் ஆசையுள்ளவர்களே
தானி ஆசரத: – அந்தக் கர்மங்களை செய்யுங்கள்
நியதம் – முறையாக தொடர்ந்து செய்யுங்கள்
ஸுக்ருதஸ்ய லோகே – தன்னால் செய்யப்பட்ட கர்மங்களின் பலனாக புண்ணிய லோகங்களை அடையலாம்.
ஏஷஹ பந்தா2ஹா – உங்களுக்கு இவ்விதம் கர்ம மார்க்கம் காட்டபட்டது
ஸ்லோகம்-02
யதா3 லேலாயதே ஹ்யர்சி: ஸாமித்3தே4 ஹவ்யவாஹனே |
ததா3ஜ்யபா4கா3வந்தரேணாஹுதீ: ப்ரதிபாத3யேத் || 2 ||

நித்ய கர்மங்கள் என்பது கண்டிப்பாக செய்ய வேண்டியவைகள். நைமித்திக கர்மங்கள் என்பது ஏதாவது ஒரு காரணத்தை முன்னிட்டு செய்பவைகள், காம்ய கர்மங்கள் என்பது பலன் மேல் கொண்ட பற்றினால் செய்பவைகள், பிராயசித்த கர்மங்கள் என்பது செய்த தவறுக்கான பலனிலிருந்து விடுபடுவதற்கு செய்பவைகள், நிஷித கர்மங்கள் என்பது செய்யக்கூடாதவைகள் என்று செயல்களின் பலவகையானதை அறிந்து கொள்ள வேண்டும். நித்ய கர்மத்தை செய்வதனால் அடையும் பலன் சொர்க்கமாகும்.  இதை முறையாக செய்தால்தான் அடைய முடியும். அக்னிஹோத்ரம் என்பது காலை, மாலை என்கின்ற இருவேளைகளிலும் செய்ய வேண்டிய ஒரு சிறிய யாகமாகும்.

யதா2 – எப்பொழுது
அர்சிஹி – தீ ஜுவாலை (அக்னியின் தலைப்பகுதி)
ஹவ்யவாஹன – அக்னிஹோத்ர யாகத்தில் இருக்கின்ற அக்னியின் பெயர்
ஸமித்தே – நன்கு தூண்டிவிடப்படும் நெருப்பில்
லேலாயதே – மேல்நோக்கி எரிந்து கொண்டிருக்கும்போது
ததா3 – அப்பொழுது
ஆஜ்யபாகோ அந்தரண – வடதெற்கு பகுதியின் மத்தியில்
ஆஹுதிஹி – அர்ப்பணம் செய்ய விரும்பும் பொருட்களை
ப்ரதிபாத3யேத் – அர்ப்பணிக்க வேண்டும்.

ஸ்லோகம்-03
யஸ்யாக்3னிஹோத்ரமத3ர்ஶமபௌர்ணமாஸம்
  அசாதுர்மாஸ்யமனாக்3ரயணமதிதி2வர்ஜிதம் ச |
அஹுதமவைத்4வதே3வமவிதி4னா ஹுதமாஸப்தமாம்ஸ்தஸ்ய
  லோகான்ஹினஸ்தி || 3 ||

அக்னிஹோத்ர யாகம் மட்டும் செய்தால் போதாது.  சொல்லப்பட்ட மற்ற யாகங்களையும் முறையாக செய்தால்தான் அதன் பலனை அடைய முடியும்.
யஸ்ய அக்னியோத்ர – யாருடைய அக்னிஹோத்ர யாகமானது
அதர்ஶம் – தர்ஶம் என்கின்ற யாகம் செய்யாதிருத்தல்
அபௌர்ணமாஸம் – பௌர்ணமி மாதம் என்கின்ற யாகம் செய்யாதிருத்தல்
அசாதுர்மாஸ்யம் – சாதுர்மாஸ்யம் என்கின்ற யாகம் செய்யாதிருத்தல்
அனாக்ரயணம் – ஆக்ரயணம் என்கின்ற யாகம் செய்யாதிருத்தல்
அதிதி2 வர்ஜிதம் – விருந்தினர்களை நன்றாக கவனிக்காதிருத்தல்
அஹூதம் – சரியான காலத்தில் செய்யாதிருத்தல்
அவைத்4வ தேவம் – அவைத்4வ தேவம் செய்யாதிருத்தல்
அவதி4னாஹுதம் – அவிதி4னாஹுதம் செய்யாதிருத்தல்
இவ்வாறு அக்னிஹோத்ரத்தை மட்டும் செய்துவிட்டு மற்ற யாகங்களை செய்யாதிருத்தல், ஏழு உயர்ந்த உலகத்தை அடைய உதவும் புண்ணியங்கள் அழிந்து விடும்.
ஸ்லோகம்-04
காலீ கராலீ ச மனோஜவா ச ஸுலோஹிதா யா ச ஸுதூ4ம்ரவர்ணா |
ஸ்பு2லிங்கி3னீ விஶ்வருசீ ச தேவீ லேலாயமானா இதி ஸப்த ஜிஹ்வா: || 4 ||

இதில் அக்னி ஜுவாலைக்கு ஏழு பெயர்களை கூறுகிறது.
காலி கராலீ – கறுப்பு நிறமாக இருக்கிறது, மிகவும் உஷ்ணமானது
மனோஜவா – மனதின் வேகம்
ஸுலோஹிதா – அடர்த்தியான சிவப்பு
ஸுதூ4ம்ரவர்ணா – பலநிறங்களுடன் கூடிய புகை
ஸ்பு2லிங்கி3னி – தீப்பொறி
தேவீ விஶ்வருசீ – ஒளிமயமான, விதவிதமான வர்ணத்தில் ஒளிக்கற்றைகள்
லேலாயமானஹா ஸப்த ஜிஹ்வா – அக்னியின் ஜுவாலைக்கு ஏழுவிதமான நாக்குகள் இருக்கிறது

ஸ்லோகம்-05
ஏதேஷு யஶ்சரதே ப்4ராஜமானேஷு
    யதா2காலம் சாஹுதயோ ஹ்யாத3தா3யன் |
தம் நயந்த்யேதா: ஸூர்யஸ்ய ரஶ்மயோ
    யத்ர தே3வானாம் பதிரேகோSதி4வாஸ: || 5 ||

ஏதேஷு – இந்த ஏழு ஜுவாலைகள்
ப்4ராஜமானேஷு – நன்கு ஒளிவிட்டு இருக்கும்போது
யஶ்சரதே – யார் யாகத்தை செய்கிறார்களோ
யதா2 காலம் – குறிப்பிட்ட கால நியமப்படி
தம் நயந்தி – அவர்களை அழைத்து செல்கிறது
ஏதே ஆஹுதயஹ – ஆஹுதிகள்
ஆத3தா3யன் – நம்மை அழைத்து செல்கின்றது
சூர்யஸ்ய ரஷ்மயே – இந்த ஆஹுதிகள் சூரியனின் கிரணங்களாக மாறி
யத்ர – எந்த இடத்தில்
தேவானாம் பதி – தேவர்களுடைய தலைவன்
ஏகஹ – ஒருவன்
அதி4வாஸ: – வசிக்கின்ற இடத்திற்கு கொண்டு செல்லும்

ஸ்லோகம்-06
ஏஹ்யேஹீதி தமாஹுதய: ஸுவர்சஸ:
        ஸூர்யஸ்ய ரஶ்மிபி4ர்யஜமானம் வஹந்தி |
ப்ரியாம் வாசமபி4வத3ந்த்யோSர்சயந்த்ய ஏ
        வ: புண்ய: ஸுக்ருதோ ப்3ரஹ்மலோக: || 6 ||

ஏஹி ஏஹி இதி – வாருங்கள், வாருங்கள்
தம் யஜமானம் – யாகத்தை நன்றாக செய்து முடித்தவனை
ஸுவர்சஸ: ஆஹுதயஹ – ஓளி பொருந்திய ஆஹுதிகள்
ஸூர்யஸ்ய ரஶ்மிபி4 – சூரியகதிராகவும் இருந்துக் கொண்டு
வஹந்தி – அழைத்து செல்கிறது
ப்ரியாம் வாசம் – இனியமான, பிரியமான வார்த்தைகளால் சொல்லிக் கொண்டு
அபி4வத3ந்த்யஹ – அழைத்து செல்கிறார்கள்
அர்சயந்த்ய – அவரை பூஜித்துக் கொண்டு
ஏஹ லோகஹ வஹ – இந்த உலகம் உங்களுடையது
புண்ய: லோகஹ ஸுக்ருதோ – புண்ணியங்களின் பலனாக இந்த மேலான உலகத்திற்கு வந்திருக்கிறீர்கள்
ப்3ரஹ்ம லோகஹ – இதுதான் ஸ்வர்க்க லோகம்.

ஸ்லோகம்-07
ப்லவா ஹ்யேதே அத்3ருடா4 யக்ஞரூபா அஷ்டாத3ஶோக்தமவரம் யேஷு கர்ம |
ஏதச்ச்2ரேயோ யேSபி4னந்த3ந்தி மூடா4 ஜராம்ருத்யும் தே புனரேவாபி யந்தி || 7 ||

கர்மத்தை பற்றிய நான்கு கருத்துக்கள். அவைகள்,

  1. கர்மத்திற்கு வரையறுக்கப்பட்ட பலன் உண்டு.
  2. கர்மம் அவித்யா காம காரியம் –  அறியாமையினால் உருவானது.
  3. கர்ம அசாரம் – இது ஆதாரமற்றது, நிலையற்றது.
  4. துக்க மூலம் – நம் அனுபவிக்கும் துயரத்தின் விதையாக இருக்கிறது.
  1. கர்மத்தை உண்டு செய்யும் காரகங்கள் ஸ்திரமற்றது, அநித்தியமானது. செயல் செய்ய உதவும் காரகம் என்று அழைக்கப்படுகின்ற கர்த்தா, கரணம், போன்றவைகள் அனைத்தும் அநித்யம்
  2. கர்மமும் அநித்யமானது. இது பலமற்ற படகைப் போன்றது
  3. இந்தக் கர்மத்தை மோக்ஷ சாதனமாக கொள்கிறார்களோ அவர்கள் மீண்டும் சம்சாரத்தில் வீழ்கிறார்கள்

மந்திர விளக்கம்
ஏதோ – இந்த
யக்ஞரூபா – யாகம் என்ற கர்மத்தை பூர்த்தி செய்வதற்கு உதவும் காரணமாக இருக்கின்றது
அஷ்டாதஶ – பதினெட்டு காரகங்கள்
ப்லவாஹா – சிறு படகு போல
ஏஷு கர்ம அவரம் – இந்த யாகம் என்கின்ற கர்மம் கீழானது
ப்ரோக்தம் – என்று சொல்லப்பட்டது
ஏதத் ஶ்ரேயஹ – இந்த கர்மம் மோட்ச சாதனமாக
ஏயே மூடாஹா அபினந்தந்தி – எந்த மூடர்கள் எண்ணுகிறார்களோ
தே – அவர்கள்
ஜராம்ருத்யும் யந்தி – சம்சாரத்திலேயே இருப்பார்கள். பிறப்பு – இறப்பு என்கின்ற சக்கரத்திலேயே சுழன்று கொண்டிருப்பார்கள்
புனஹ ஏவ அபி – மீண்டும், மீண்டும் இந்த நிலையை அடைகிறார்கள்

ஸ்லோகம்-08
அவித்3யாயாமந்தரே வர்தமானா: ஸ்வயம் தீ4ரா: பண்டிதம் மன்யமானா: |
ஜங்க4ன்யமானா: பரியந்தி மூடா4 அந்தே4னைவ நீயமான யதா2ந்தா4: || 8 ||

நாம் அனுபவிக்கின்ற துயரங்களுக்கு காரணம் நம்முடைய அறியாமைதான் என்று அறிந்து கொள்ள வேண்டும்.  பிறகு அதை நீக்குவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.  தான் அறியாமையிலிருக்கிறேன் என்று உணராமல் இருக்கிறார்கள் மனிதர்கள் என்று உபநிஷத் பரிதாபப்படுகிறது

தெரியாது என்பதை உணராதவர்கள், தெரியாது என்பதை அறிந்தவர்களே மாணவர்கள், தெரியும் ஆனால் தெரியம் என்பதை அறியாதவர்கள், தெரியும் என்பதை அறிந்துள்ளவர்கள், தெரியாது ஆனால் தெரியும் என்று தவறாக நினைத்துக் கொண்டிருப்பவர்கள் என்று பலவிதமாக இருக்கிறார்கள் மனிதர்கள்

அவித்யா அந்தரே – அறியாமைக்கு உள்ளே, அவித்யாவுக்கு காரணமான மனம், உடல் இவைகளுக்குள்ளே
வர்த்தமானஹ – அவர்கள் இருக்கிறார்கள்
சரீரம், மனம்,புத்திக்குள் இருந்து கொண்டு, இவைகளை நான் என்ற அறியாமையில் இருக்கின்றனர் மனிதர்கள்
ஸ்வயம் – தன்னை
தீரன், பண்டிதன் மன்யமானாஹ – தீரன், அறிவாளி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்
ஜங்கன்யமானாஹ மூடாஹா – மீண்டும், மீண்டும் துயரத்தால் தாக்கப்பட்ட மூடர்களாக இருக்கிறார்கள்
பரியந்தி – அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள்
அந்தாஹா அந்தேவ ஏவ – எப்படி குருடர்களுக்கு குருடர்களாலே
நீயமானா யதா2 – வழிக்காட்டபடுவது போல இருக்கிறார்கள்

ஸ்லோகம்-09
அவித்3யாயாம் ப3ஹூதா4 வர்தமான வயம்
     க்ருதார்தா2 இத்யபி4மன்யந்தி பா3லா: |
யத்கர்மினோ ந ப்ரவேத3யந்தி ராகாத்தேனாதுரா:
     க்ஷீணலோகாஶ்சயவந்தே || 9 ||

அவித்யாம் பஹூதா – அறியாமை பலவிதமாக இருக்கிறது
வர்த்தமானாஹ – அந்த நிலையிலே இருக்கிறார்கள்
வயம் – நாங்கள்
க்ருதார்தா2ஹா – வாழ்க்கையில் அடைய வேண்டிய பலனை அடைந்துவிட்டதாக நினைக்கிறார்கள்
இதி அபி3மன்யந்தி – என்று இவ்விதம் எண்ணுகிறார்கள்
பா3லா  – சிறு குழந்தைகள் போல
யத் கர்மிண்ணஹ – எந்த காரணத்தினால் கர்மம் செய்பவர்கள்
ந ப்ரவேத3யந்தி – அறியவில்லை
ராகாத் – ஆசையினால்
தேன – இவர்கள்
ஆதுராஹா– துயரப்பட்டவர்களாக
க்ஷீணலோகாஹா – கர்மபலன்கள் தீர்ந்து விட்டவர்களாக
ஸ்வயந்தி – இன்பத்திலிருந்து விழுந்துவிடுகிறார்கள்

ஸ்லோகம்-10
இஷ்டாபூர்தம் மன்யமானா வரிஷ்ட2ம்
    நான்யச்ச்2ரேயோ வேத3யந்தி ப்ரமூடா4: |
நாகஸ்ய ப்ருஷ்டே2 தே ஸுக்ருதேSனுபூ4த்வேமம்
    லோகம் ஹீனதரம் வா விஶந்தி || 10 ||

மோட்சம்தான் லட்சியம் என்று அறியாதவர்கள் அதை அடையும் வழியை அறிய மாட்டார்கள். வேறெதாவது செய்து கர்ம பலனை அனுபவிப்பார்கள்.

இஷ்டா பூர்தம் – வேதத்தில் சொல்லப்பட்ட கர்மங்களை, யாகங்களை, ஸ்ம்ருதிகளில் சொல்லப்பட்ட கர்மங்களான சமுதாய சேவை போன்றவைகளை
வரிஷ்டம் மன்யமானாஹ – இவைகளையே மேலான சாதனங்கள் என்று நினைத்துக் கொண்டு அதையே செய்கிறார்கள்
ந அன்யத் ஶ்ரேயஹ – இவைகளுக்கு வேறான ஆத்மஞானம் என்ற
ந வேதயந்தஹ – தத்துவத்தை அறிவதில்லை

ப்ரமூடாஹா – இவர்கள் அதிமூடர்கள்
நாகஸ்ய ப்ருஷ்டே – சொர்க்கத்தில் மேலான நிலையில்
தே ஸுக்ருதே – அவர்கள் கர்மபலனாக கிடைத்த
அனுபூத்வா – சுகங்களை அனுபவித்து விட்டு
இமம் லோகம் – சொர்க்கலோகத்திலிருந்து இந்த லோகத்திற்கு
ஹீனதரம் வா விஶந்தி – கீழான பிறவியிலே பிறப்பெடுப்பார்கள்

ஸ்லோகம்-11
தப:ஶ்ரத்3த4 யே ஹ்யுபவஸந்த்யரண்யே
    ஶாந்தா வித்3வாம்ஸோ பை4க்ஷசர்யாம் சரந்த: |
ஸூர்யத்3வாரேண தே விரஜா: ப்ரயாந்தி
    யத்ராம்ருத: ஸ புருஷோ ஹ்யவ்யயாத்மா || 11 ||

தப ஶ்ரத்தே யே – வானபிரஸ்தாசிர கர்மங்களான மௌனம், தவம், ஈஸ்வர தியானம் ஆகிய சாதனங்களை
அரண்ய – காட்டில்
உபவஸந்தே –செய்கிறார்கள்
ஶாந்தாஹா – எல்லா இந்திரியங்களும் கட்டுக்குள் வைத்துக் கொண்டு அமைதியுடன் இருக்கிறார்கள்
பை4க்ஷசர்யாம் சரந்தஹ – பிக்ஷை எடுத்து வாழ்பவர்களாக இருப்பார்கள்
வித்வாம்ஸஹ – இல்லறத்திலே இருந்து கொண்டு அதிக காலம் தியானம், தவம் ஆகியவற்றில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள்
இவ்வாறு விதவிதமான வைதீக சாதனங்களை பின்பற்றி உபாஸனைகளை செய்து கொண்டிருப்பார்கள்
தே விரஜா – பாவங்களைப் போக்கிக் கொண்ட இவர்கள்
சூர்யத்வாரேண – பிரம்ம லோகத்திற்கு சுக்லகதியின் வழியாக
ப்ரயாந்தி – செல்கிறார்கள்
யத்ர – அவர்கள் செல்லுமிடம்
அம்ருதஹ ஸஹ புருஷ –என்றும் இருக்கின்ற ஹிரண்யகர்ப்பன்
ஹவ்யயாத்மா – முதன் முதலில் தோன்றிய பிரம்ம இருக்குமிடத்திற்கு செல்கிறார்கள்

ஸ்லோகம்-12
பரீக்ஷ்ய லோகான்கர்மசிதான்ப்3ராஹ்மணோ
     நிர்வேதமாயான்னாஸ்த்யக்ருத: க்ருதேன |
தத்3விக்3ஞானார்த2ம் கு3ருமேவாபி4க3ச்சே2த்
     ஸமித்பாணி: ஶ்ரோத்ரியம் ப்3ரஹ்மநிஷ்ட2ம் || 12 ||

இதில் ஆறு கருத்துக்கள் பேசப்படுகின்றது. அவைகள்
1.        பரா வித்யைக்கு தகுதியுடையவர்கள் யார்?
2.        எப்படி அந்த தகுதியை ஒருவன் அடைகிறான்?
3.        அடையவேண்டிய தகுதிகள் யாவை?
4.        தகுதியடைந்தவுடன் பிறகு என்ன செய்ய வேண்டும்
5.        எப்படிபட்ட குருவை நாட வேண்டும்? குருவின் லட்சணங்கள் என்ன?
6.        எப்படிபட்ட மனநிலையுடன் குருவை நாட வேண்டும்
என்பதாகும்.

ப்ராமணஹ – சத்துவகுண பிரதானமான மனதை உடையவன்.  எந்த சூழ்நிலையிலும் விருப்பு-வெறுப்பற்ற நிலையில் இருக்க வைத்து அறிவை கொடுப்பது சத்துவ குணம். கர்மயோகத்தினால் விவேகம், வைராக்கியம் போன்றவற்றை வளர்த்துக் கொண்டவன். எதிலேயும் போதும் என்ற மனதை உடையவன். இந்த தகுதிகளை உடையவன்தான் பிராமணன் என்று கூறப்படுகிறது.
பரீக்ஷய லோகான் கர்மசிதான் – நம்முடைய செயலினால் அடையப்பட்ட உலகங்களை ஆராய்ந்து பார்த்து, விசாரம் செய்து தகுதியை அடைய முடியும்.
லோகான் – எது நம்மால் அனுபவிக்கப்படுகின்றதோ அவைகளை லோகம் என்று குறிப்பிடப்படுகிறது.  பொருட்கள், சூழ்நிலைகள், மனிதர்கள் இவைகளை அனுபவிப்பது போன்றவைகள்
கர்மசிதான் – செய்த கர்மத்தால் அடைந்தது. செய்த கர்மத்தின் பலனாகத்தான் அனுபவிக்கும் பொருட்களும், சூழ்நிலைகளும், பழகவேண்டிய மனிதர்களும் ஒருவனுக்கு வாய்க்கிறார்கள்.
பரீக்ஷய – ஆராய்ந்து பார்த்தல், ஒருபொருளினுடைய உண்மையான ஸ்வரூபத்தை, தன்மையை நிர்ணயம் செய்வது, உறுதி செய்வது. நம்முடைய அனுபவத்திலிருக்கும் உலகத்தை மட்டும் விசாரம் செய்தல்.  விசாரம் செய்வதற்கு மூன்று வழிகள் கூறப்பட்டிருக்கிறது. அவைகள்

  1. நம் அனுபவத்தையே பாடமாக கொண்டு அறிவை அடைதல். உலகத்திலுள்ள எதுவும் என்னை திருப்திபடுத்த முடியாது என்ற அறிவை அடைய வேண்டும்.  நம்மால் அடையப்படும் பொருட்களனைத்தும் நிலையற்றது என்று உறுதியான அறிவை அடைய வேண்டும்.
  2. அனுமானம் மூலமாகவும் விசாரம் செய்யலாம். எவையெல்லாம் உருவாக்கப்படுகின்றதோ அவையெல்லாம் அழியக்கூடியவை. அதேபோல இந்த உலகமும் உருவாக்கப்பட்டுள்ளதால் அழியக்கூடியதே என்ற அறிவை அடைதல்
  3. சாஸ்திர அறிவைக் கொண்டும் விசாரம் செய்யலாம்.  கர்மபலன்கள் தீர்ந்து விட்டால் சொர்க்கத்திலிருந்து இந்த லோகத்திற்கு மீண்டும் வந்துவிடுவோம்.

நிர்வேதம் ஆயாத் – இந்த உலகத்தின் மீது வைராக்கியத்தை அடைகின்றான்.
நிர்வேதம் என்பது வைராக்கியத்தை குறிக்கிறது. இது விவேகத்துடன் கூடிய ஆழ்ந்த விசாரத்தினால்தான் அடைய முடியும்.  விவேகம் காய் என்றால், வைராக்கியம் பழம் என்று புரிந்து கொள்ளவேண்டும். காயிலிருந்துதான் பழம் வரும் அதேபோல விவேகத்தில் இருந்துதான் வைராக்கியம் கிடைக்கும்.  வைராக்கியமற்ற விவேகம் பயன் தராது.  விவேகம் வைராக்கியமாக மாறவேண்டுமென்றால் அதையே மீண்டும் மீண்டும் சிந்தித்து பார்த்துக் கொண்டிருக்கவேண்டும்.  வைராக்கியம் எதில் வரவேண்டும் என்று கேட்டால், இந்த உலகத்தின் மீது வரவேண்டும் என்பதுதான் பதில். இதை பகவத்கீதையில் (2,52) பகவான் கிருஷ்ணர் விளக்கியுள்ளார்.  எப்பொழுது உன்னுடைய புத்தியானது மோகத்திலிருந்து விடுதலையடைகிறதோ அப்போதுதான் வைராக்கியத்தை அர்ஜுனா நீ அடைவாய் என்று பகவான் கூறியுள்ளார். உன்னால் இதுவரை கேட்டதிலும், இனி கேட்கபோவதிலும் வைராக்கியத்தை அடைய வேண்டும்.

ந அஸ்தி அக்ருதஹ க்ருதஹ – இந்த மோட்சத்தை(அக்ருதஹ) கர்மத்தினால் (க்ருதஹ) அடையமுடியாது ( ந அஸ்தி).  வைராக்கியம் வந்தவுடன் மேலும் சில விஷயங்களை தெரிந்து கொள்ளவேண்டும்.  கர்மத்தினால் அடைவது சாத்தியம். எனவே சாத்தியம் என்பது அடையப்படுவது. எவையெல்லாம் சாத்தியங்களோ அவைகளெல்லாம் நிலையற்றவைகள். ஒரு பொருள் ஏற்கனவே இருக்கிறது, அது எதனாலும் உருவாக்கப்பட்டதல்ல, நம்மிடத்திலேயே இருக்கின்றது. அதை அறியாமையினால் இழந்திருக்கின்றோம். எனவே அதை அடைய வேண்டுமென்றால் அறியாமை நீங்கி அறிவு பெற வேண்டும். அந்த ஸித்த வஸ்துவை அடைவதற்கு ஞானத்தை அடைய வேண்டும்.  இந்த ஞானத்தை அடைய அதற்குரிய கருவியை (பிரமாணத்தை) பயன்படுத்த வேண்டும்.  அந்தக் கருவி உபநிஷத் என்று புரிந்து கொள்ள வேண்டும்., இந்த உபநிஷத்தை தகுதியுள்ள குருமுகமாகத்தான் அறிந்து கொள்ள வேண்டும்.  அப்போதுதான் சரியாக புரிந்து கொண்டு அறிவை அடைய முடியும்.  நாமே புத்தகத்தின் மூலம் படித்து சரியான அறிவை அடைய முடியாது.  எனவே குருவை அணுகி உபநிஷத் உபதேசத்தை பெறவேண்டும்.

ஸஹ – அந்த முமுக்ஷுவானவன்
தத்3 – அந்த பிரம்மத்தை
விக்ஞானார்தம் – அறிந்து கொள்வதற்காக
குரு ஏவ அபிகச்சேத் – குருவை மட்டும் நாடி செல்ல வேண்டும்

ஸ்ரோத்ரியம், பிரஹ்ம நிஷ்டம் – இவையிரண்டு குருவின் லட்சணங்களாக கூறப்படுகின்றன.
த்ருணாதி – யார் உபதேசம் செய்கிறார்களோ அவர்தான் குரு, அவர் செய்யும் உபதேசம் ஆத்ம தத்துவம். எப்படி வாழவேண்டும் என்பதையும் உபதேசிக்கிறார். அவருக்கு இருக்க வேண்டிய தகுதிகளாவது:
ஸ்ரோத்ரியம் – முறைப்படி சாஸ்திரம் படித்தவராக இருக்க வேண்டும். குருபரம்பரையில் வந்த குருவிடம் தொடர்ந்து, முறையாக சாஸ்திரம் படித்திருக்க வேண்டும். சிரவணம், மனனம், நிதித்யாஸனம் என்கின்ற ஞானசாதனங்களை பின்பற்றி ஆத்மவித்யாவை படித்திருக்க வேண்டும்.
பிரம்ம நிஷ்டன் – பிரம்ம ஞானத்தை அடைந்ததுமில்லாமல், அதில் நிலைப்பெற்று இருக்க வேண்டும்.

ஸ்ரோத்ரிய குருவினால்தான் முறையாக சீடனுக்கு புரியும் விதத்தில் சாஸ்திரத்தை உபதேசிக்க முடியும். அவருடைய உபதேசம் சீடனால் நன்றாக புரியும் விதத்தில் இருக்கும். குருவானவர் ஏன் பிரம்ம நிஷ்டனாக இருக்க வேண்டுமென்றால், நான் சம்சாரி என்ற அறிவுடன் வந்திருக்கும் சீடனிடம் நீ அசம்சாரி என்று உபதேசம் செய்யும்போது அது எப்படி உண்மையாக இருக்க முடியும் என்று அவன் சந்தேகித்து கொண்டிருப்பான். இந்த சந்தேகத்தை பிரம்மநிஷ்டனாக இருக்கின்ற குருவின் வாழும் விதத்தைப் பார்த்துத்தான் நீக்கி கொள்வான். யாரையும் துவேஷிக்காமல், காம-க்ரோதங்கள் எதுவும் இல்லாமல் இருக்கின்ற குருவை பார்க்கின்றான்.  இன்ப-துன்பங்களை சமமாக பாவிக்கும் நிலையை பார்க்கும் போது கற்றதில் பெற்ற அறிவில் இருக்கும் சந்தேகங்கள் எல்லாம் நீங்கப்பெற்று அவனும் குருவைப் போன்ற நிலையை அடைகிறான்.

குருவிடம் இருக்க வேண்டிய இந்த லட்சணங்களை எப்படி கண்டுபிடிப்பது?

  1. குருவிடம் சென்று அவரது குருவின் பெயரை அறிந்துக் கொள்ள வேண்டும். அதிலிருந்து அவர் ஸ்ரோத்திரன் என்பதை கண்டு கொள்ளலாம்
  2. பிரம்மநிஷ்டன் என்பதை தெரிந்து கொள்வது மிக கடினம்.  அவரிடம் நற்பண்புகள் சுபாவமாக இருப்பதால் அவர் பிரம்மநிஷ்டனாகத்தான் இருக்க வேண்டும் என்று யூகித்து அறிந்து கொள்ளலாம்
  3. குருவின் லட்சணங்கள்
  4. சாஸ்திரத்தை முறைப்படி கற்றவர். அதன்படியே வாழ்பவர் இத்தகையவர் உத்தம குருவாக இருக்க முடியும்
  5. வெறும் ஸ்ரோத்திரியனாக மட்டும் இருப்பவர் மத்திமமான குரு. இவரிடம் இருந்து சாஸ்திர அறிவை பெறலாம, ஆனால் இவர் வாழ்க்கை முறையில் இருந்து எதையும் கற்றுக் கொள்ள முடியாது
  6. கேவல பிரம்ம நிஷ்டனாக இருப்பவர் முறைப்படி சாஸ்திரத்தை படித்து இருக்க மாட்டார். பூர்வஜென்ம புண்ணியத்தால் பிரம்ம ஞானத்தையும் அடைந்து அதில் நிஷ்டையும் அடைந்திருப்பார்.  அதனால் இவரால் ஆத்ம உபதேசத்தை புரியும் வகையில் இருக்காது.

எப்படிபட்ட மனநிலையுடன் சிஷ்யன் குருவை நாட வேண்டும்?
சமித்பாணி ஸஹ – அவன் கையில் சமித்பாணியை எடுத்துக் கொண்டு குருவிடம் செல்லவேண்டும்.. இது சிரத்தையை குறிக்கிறது.  அவருக்கு பணிவிடை செய்கின்ற மனநிலையுடன் செல்கின்றான்.  இது அவனிடத்தில் இருக்கின்ற பக்தியையும், . சேவை செய்கின்ற மனப்பான்மையையும், பணிவையும் குறிக்கின்றது

குருவினுடைய உபதேசம் ஞானமாக வேண்டுமானால் அவர் மீது சிரத்தை வைத்திருக்க வேண்டும்.  யாரிடம் பக்தியிருக்கிறதோ அவரிடம் நாம் ஒளிவு மறைவின்றி இருப்போம் அவரது உபதேசத்தை ஆர்வத்துடன் கேட்போம்.  நாம் ஏற்கனவே படித்துவைத்திருந்தால் அதை குருவின் உபதேசத்தோடு ஒப்பிட்டு பார்த்து கொண்டிருப்போம்,  புதியதாக அறிவை அடைய வேண்டும்.  எனவே மனதை தெளிவாக வைத்திருக்க வேண்டும்.  சேவை செய்வதனால் நம்முடைய அகங்காரம், கர்வம் குறைந்துவிடும் பிறகு இல்லாமல் போய்விடும். அறிவில் பணிவு இருக்க வேண்டும்.  பணிவான பாவனையுடன் அணுகவேண்டும். குருவிடம் பணிவான கேள்விகளைக் கேட்க வேண்டும்.

எனவே உலகத்தை விசாரம் செய்து, வைராக்கியம் அடைந்தவுடன் குருவை அணுக வேண்டும்.  இப்படிபட்ட குருவிடம் செல்ல வேண்டும். குருவிடம் மட்டும்தான் செல்ல வேண்டும் வேறு மார்க்கம் எதுவும் இல்லை

ஸ்லோகம்-13
தஸ்மை ஸ  வித்3வானுபஸன்னாய ஸ்ம்யக்
     ப்ரஶாந்தசித்தாய ஶமான்விதாய |
யேனாக்ஷரம் புருஷம் வேத3 ஸத்யம் ப்ரோவாச
     தாம் தத் த்வதோ ப்ரஹ்மவித்3யாம் || 13 ||

தஸ்மை – இப்படி அணுகிய சீடனுக்கு
ஸஹ வித்3வான் – அந்த குரு
ஸம்யக் உபஸன்னாய – முறைப்படி தகுதியுடைய அணுகிய சீடனுக்கு
ப்ரஶாந்த சித்தாய – அமைதியடைந்த மனதையுடையவன் (ராக-துவேஷங்கள் நீங்கிய அமைதியான மனதையுடைய சீடனுக்கு, சமஹ என்ற தகுதியை அடைந்தவனுக்கு)
ஶமான்விதாய – ஞானேந்திரியங்களை தன் வசத்தில் கொண்டுள்ள சீடனுக்கு, தமம் என்கின்ற தகுதியை அடைந்த சீடனுக்கு
தாம் ப்ரஹ்மவித்3யாம் – அந்த பிரஹ்ம வித்யாவை
தத்வதஹ – எப்படி அறிந்தாரோ அதேமாதிரி
யேன அக்ஷரம் ஸத்யம் புருஷம் சேத – எந்த ஞானத்தால் இப்படிபட்ட தத்துவத்தை, அறிவாரோ, அழியாததுமான மூன்று காலத்திலும் மாறாதிருக்கின்ற பிரம்மத்தை, எல்லாவிடத்திலும் வியாபித்துள்ளவர், உடலில் சாட்சியாக இருந்து கொண்டிருக்கின்ற புருஷனை

ப்ரோவாச – உபதேசம் செய்ய வேண்டும்

—-ooo00ooo—-

அத்தியாயம்–02

பகுதி-1

 ஸ்லோகம்-01

ததே3தத்ஸத்யம் யதா2 ஸுதீப்தாத்பாவகாத்3

    விஸ்புலிங்கா: ஸஹஸ்ரஶ: ப்ரபவந்தே ஸரூபா: |

ததா3க்ஷராத்3விவிதா4: ஸோம்ய பா4வா:

    ப்ரஜாயந்தே தத்ர சைவாபி யந்தி || 1 ||

ஸோம்ய  – நல்ல மனதையுடைய சீடனே
தத் ஏதத் ஸத்யம் – முன்பு சொன்ன பிரம்மனும் சத்யம், எந்த அக்ஷரத்தைப்பற்றி சொல்லப் போகிறேனோ அதுவும் சத்யம் ( என்றும் இருப்பது )
யதா2 – எப்படி
ஸுதீ3ப்தாத்பாவகாத் – கொழுந்துவிட்டு நன்கு எரிகின்ற நெருப்பிலிருந்து
ப்ரப4வந்தே – தோன்றுகின்ற
சஹஸ்ரஶஹ – ஆயிரக்கணக்கான,
விஸ்புலிங்காஹா – தீப்பொறிகள்
ஸ்வரூபா: – அக்னியின் தன்மையை உடையதாக இருக்கிறதோ
ததா3 – அவ்விதமே
அக்ஷராத் – அக்ஷரத்திலிருந்து
விவிதா4: பா4வாஹா – விதவிதமான ஜீவராசிகள்
ப்ரஜாயந்தே – தோன்றுகிறது
தத்ர ச ஏவ அபி யந்தி – இவைகள் அக்ஷரத்திலேயேதான் ஒடுங்குகிறது. அக்ஷரமே இவைகளுக்கு உபாதான காரணமாக சொல்லப்பட்டிருக்கிறது.

ஸ்லோகம்-02
தி3வ்யோ ஹ்யமூர்த: புருஷ: ஸபா3ஹ்யாப்4யந்தரோ ஹ்யஜ: |
அப்ரணோ ஹ்யமனா: ஶுப்4ரோ ஹ்யக்ஷராத்பரத: பர: || 2 ||

திவ்யஹ – சைதன்ய ஸ்வரூபமானது, சித் ஸ்வரூபமானது

அமூர்த: – உருவமற்றது, அவயவங்களற்றது

புருஷஹ – எல்லாவிடத்திலும் நிறைந்திருப்பது, பூரணமானது, உடலில் சாட்சியாக இருப்பதாலும் இவ்வாறு கூறப்படுகிறது

ஸ பா3ஹ்யம் – வெளியேயும் உள்ளது
ஸ அப்4யந்தரோ – உள்ளேயும் உள்ளது. எதனாலும் வரையறுக்கப்படாதது
ஹி அஜஹ – உண்மையில் பிறப்பற்றது, எந்தவித மாற்றமும் இல்லாதது
அப்பிராணஹ – பிராணனும் இல்லாதது
அமனாஹ – மனது கிடையாது. அதாவது சூட்சும சரீரமுமற்றது
ஶுப்4ரஹ – தூய்மையானது, காரண சரீரமற்றது. அறியாமையற்றது.
மாயை ஸ்தூல சூட்சுமமான ஜகத்தை காட்டிலும் மேலானது.  அக்ஷரம் இந்த மாயையை காட்டிலும் மேலானது
அக்ஷராத் ப்ரதஹ பர – ஜகத்தைக் காட்டிலும் மேலான மாயைவிட மேலானது இந்த பிரம்மன்.
விசாரம்:

பிரம்மன் அனாதி, அதாவது எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கிறது. மாயையின் தோற்றமும் அனாதி. இவையிரண்டுக்குமுள்ள சம்பந்தமானது விசாரம் செய்யப்படுகிறது இரண்டும் தனித்தனியான பொருளாக எடுத்துக் கொண்டால், அவ்வாறு இருக்க முடியாது ஏனென்றால் சாஸ்திரம் பிரம்மத்தை ஆனந்த ஸ்வரூபமாகவும், பூரணமானதாகவும், இரண்டற்றதாகவும் இருக்கின்றது என்று கூறியிருப்பதால் இது சாத்தியமில்லை. மாயை பிரம்மத்தின் அங்கமாக எடுத்துக் கொண்டால் ஒரு பொருளில் உள்ள அங்கத்திற்கு வரும் எந்த மாற்றமும் அந்தப் பொருளையும் பாதிக்கும், மாற்றத்திற்குள்ளாக்கும் ஆனால் சாஸ்திரம் பிரம்மன் நிர்விகாரம், அவயவங்களற்றது என்று கூறியிருப்பதால் இதுவும் சரியாக இருக்காது. மாயையானது பிரம்மத்தை சார்ந்திருக்கிறது. இதுதான் இவை இரண்டுக்குமுள்ள சம்பந்தம்.  உதாரணமாக பகலில் சூரியஓளியால் நம்முடைய நிழல் கீழே இருக்கிறது.  நிழல் என்னைச் சார்ந்திருக்கிறது, அது என்னுடைய அங்கமல்ல, தனித்தனியாகவும் இல்லை. இரண்டுக்குமுள்ள சம்பந்தம், சத்யம்-மித்யா சம்பந்தம்.  ஆதாரமாக இருக்கின்ற அனைத்தும் சுதந்திரமாக இருக்கிறது. எனவே சத்யத்தைச் சார்ந்துள்ள அனைத்தும் மித்யாவாக இருக்கிறது

ஸ்லோகம்-03
ஏதஸ்மாஜ்ஜாயதே ப்ராணோ மன: ஸர்வேந்த்3ரியாணி ச |
க்2ம் வாயுர்ஜோதிராப: ப்ருதி2வீ விஶ்வஸ்ய தா4ரிணீ || 3 ||

இந்த பிரபஞ்சம் நான்கு படிகளாக தோன்றியது. பிரம்மன் மாயையோடு கூடியது முதல் நிலை. சூட்சுமமான ஐந்து பூதங்கள் தோன்றியது. சூட்சுமமான பிரபஞ்ச, சரீரங்கள் தோன்றியது.  சூட்சும பூதங்களின் கலப்பினால் ஸ்தூல பஞ்சபூதங்கள் தோன்றியது.  ஸ்தூல பிரபஞ்சம், ஸ்தூல சரீரங்கள் தோன்றியது,

கம்         – ஆகாசம் – மாயையுடன் கூடிய சப்தம்
வாயு     – காற்று – தொடுதல்
ஜோதி   – அக்னி – ரூபம்
ஆபஹ  – நீர் – சுவை
ப்ருதவி – நிலம் – வாசனை
இவைகளெல்லாம் சூட்சுமமான பூதங்கள்
ஏதஸ்மாத் – இதனிடமிருந்து, மாயையுடன் கூடிய அக்ஷரத்துடன்
பிராணஹ, மனஹ – பிராணன்களும், மனதும்
சர்வ இந்திரியானி ச – எல்லா இந்திரியங்களும்
ஜாயதே – தோன்றியது

 

ஸ்லோகம்-04
அக்னிர்மூர்த4ம் சக்ஷுஷீ சந்த்3ரஸூர்யை
    திஶ: ஶ்ரோத்ரே வாக்விவ்ருதாஶ்ச வேதா3: |
வாயு: ப்ராணோ ஹ்ருத3யம் விஶ்வமஸ்ய
    பத்த்4யாம் ப்ருதி2வீ ஹ்யேஷ ஸர்வபூ4தாந்தராத்மா || 4 ||

இந்த பிரபஞ்சமே ஈஸ்வரனின் ஸ்தூல சரீரம்.
அந்தர்யாமி – மாயையுடன் கூடிய ஈஸ்வரன்
ஹிரண்யகர்ப்பன் – சூட்சுமமான பிரபஞ்சமாக, சரீரங்களாக இருக்கும் உருவம்
விராட் – ஸ்தூலமான பிரபஞ்சமாகவும், ஸ்தூல சரீரங்களாகவும் இருக்கும் உருவம்
அக்னிர்மூர்தா4 – விராட்டின் தலை சொர்க்கம்
சக்ஷுஷீ சந்த்3ரஸூர்யை – சந்திரனும், சூரியனும் இரண்டு கண்கள்
தி3ஶ: ஶ்ரோத்ரே – திசைகளே காதுகளாக இருக்கிறது
வாக்3 வேதா3ஹா – வேதங்களே அவருடைய பேச்சு
விவ்ருதாஹ வேதாஹா – பிரசித்தமான வேதங்கள்
வாயுஹு பிராணஹ – காற்றே அவரது பிராணன்
விஶ்வம் ஹ்ருதயம் – பிரபஞ்சமே இதயமாக
யஸ்ய – அந்த விராட்
பத்3த்4யாம் ப்2ருதிவி – பாதங்கள் இந்த பூமி
ஏஷஹ – இவர்
ஸர்வபூ4த் அந்தராத்மா – எல்லா ஜீவராசிகளின் இதயத்திலும் இருக்கிறார்.

ஸ்லோகம்-05
தஸ்மாத3க்னி: ஸமிதோ4 யஸ்ய ஸூர்ய:
    ஸோமாத்பர்ஜன்ய ஔஷத4ய: ப்ருதி2வ்யாம் |
புமான் ரேத: ஸிஞ்சதி யோஷிதாயாம்
    ப3ஹ்வீ ப்ரஜா: புருஷாத்ஸம்ப்ரஸூதா: || 5 ||

தஸ்மாத் – மாயையுடன் கூடிய அந்த பிரம்மத்திடமிருந்து
அக்னி – சொர்க்கலோகம் தோன்றியது
ஸமித4ஹ யஸ்ய ஸூர்ய: – சூரியனால் அது பிரகாசிக்கிறது.
ஸோமஹ – சந்திரன் தோன்றியது
பர்ஜன்ய – அதிலிருந்து மேகங்கள் உருவாகியது, மழையாக பொழிகின்றது
ஔஷதஹ ப்ருதி2வ்யாம் – தாவரங்கள் பூமியில் வளர்கின்றது
புமான் – மனிதன்
ரேதஹ – அவனுடைய விந்து சக்தியை
யோஷிதாயாம் ஸிஞ்சதி – பெண்ணுக்குள் செலுத்துகிறான்
பஹுவிஹி – பலவிதமான
ப்ரஜாஹா – ஜீவராசிகள்
புருஷாதி ஸம்ப்ரஸுதாஹா – பிரம்மத்திடமிருந்து தோன்றியது
இவ்வாறு ஜீவனின் ஸ்தூல சரீரம்தான் உருவாகிறது. அது மனிதனாக இருக்கலாம் அல்லது வேறு ஜீவராசியாகவும் இருக்காலாம். அவனது சூட்சும சரீரம் அப்படியேதான் இருக்கும்

ஸ்லோகம்-06
தஸ்மாத்3ருச: ஸாம யஜூம்ஷி தீக்ஷா
    யக்3ஞாஶ்ச ஸர்வே க்ரதவோ தக்ஷிணாஶ்ச |
ஸம்வத்ஸரஶ்ச யஜமானஶ்ச லோகா:
    ஸோமோ யத்ர பவதே யத்ர ஸூர்ய: || 6 ||

தஸ்மாத்3 – அந்த பிரம்மத்திடமிருந்து
யஜூம்ஷி – வேத மந்திரங்கள்
ரிச: ஸாம, யஜூ – ரிக், சாம, யஜூர் வேதங்கள்
தீ3க்ஷா – யாகம் செய்வதற்காக எடுத்துக் கொள்ளும் விரதங்கள்
யக்ஞா – யாகங்கள் தோன்றியது
ஸர்வே க்ரதஹ – பல விலங்குகளை பலி கொடுக்கின்ற
த3க்ஷிணாஶ்ச – யாகத்தில் கொடுக்கப்படும் தானங்கள்
ஸம்வத்ஸரஶ்ச – காலங்கள் தோன்றியது
யஜமானஶ்ச – யாகத்தை செய்யும் எஜமானன்
லோகாஹ – விதவிதமான லோகங்கள்
யத்ர ஸோமஹ – சந்திரதேவன் வழிக்காட்டுகின்ற உலகங்கள்
யத்ர சூர்யஹ – சூரியன் வழிகாட்டும் லோகங்கள்
இவைகள் யாவும் பிரம்மத்திடமிருந்து தோன்றியது. ஜீவன் இறந்த பிறகு அடையும் கதிகள்

  1. முறையாக கர்மங்களை செய்த மனிதனின் முதல் கதி – கிருஷ்ண கதி – சொர்க்கம்
  2. அதிக உபாஸனைகளின் மூலம் சுக்லகதி வழியாக பிரம்ம லோகத்திற்கு செல்கின்றான்
  3. அவரவர்கள் விருப்பு-வெறுப்பு வாழ்பவர்களுக்கு எந்தக்கதியும் கிடையாது. இவர்கள் நரகத்திலோ அல்லது பூமியில் விலங்குகளாகவோ பிறப்பார்கள்
  4. அகதி – எந்தக் கதியும் கிடையாது.  மோட்சம் அடைந்தவர்களின் அடையும் கதியானது மீண்டும் பிறவியெடுக்க மாட்டார்கள்

சொர்க்கலோகம், பிரம்ம லோகம் இருக்கிறது என்று நம்புபவர்களுக்கு ஶ்ருதி ஆதாரமாக இருக்கிறது. இல்லையென்போர்களுக்கு அவர்களது நம்பிக்கைதான் ஆதாரம்.

ஸ்லோகம்-07

 

தஸ்மாச்ச தே3வா ப3ஹுதா4 ஸம்ப்ரஸூதா:
        ஸாத்4யா மனுஷ்யா பஶவோ வயாம்ஸி |
ப்ராணாபானௌ வ்ரீஹியவௌ தபஶ்ச
        ஶ்ரத்3தா4 ஸத்யம் ப்ரஹ்மசர்யம் விதி4ஶ்ச || 7 ||

தஸ்மாத்3 – அந்த பிரம்மத்திடமிருந்து
தேவாஹா – தேவர்கள்
பஹுதா4 ஸ்ம்ப்ரஸூதாஹா – பலவிதமான தேவதைகள்
ஸாத்4யா மனுஷ்யா – விசேஷமான தேவதைகள் மனிதர்கள்
பஶவஹ, வயாம்ஸி – மிருகங்கள், பறவைகள்
ப்ராணா அபானௌ – பிராணனங்கள் தோன்றின
வ்ரீஹி, யவௌ – நெல், பார்லி போன்ற தானியங்கள்
தபஹ, ஸ்ரத்3தா4 – தவங்களும், சிரத்தையும்
ஸத்யம் – உண்மை உரைத்தல்
ப்ரஹ்மசர்யம் – பிரம்மச்சர்ய வாழ்க்கை முறை
விதி4ஶ்ச – நம்முடைய கர்மங்கள், வாழ்க்கை நெறிமுறைகள் தோன்றின

ஸ்லோகம்-08
ஸப்த ப்ராணா: ப்ரப4வந்தி தஸ்மாத்
        ஸப்தார்சிஷ: ஸமித4: ஸப்த ஹோமா: |
ஸப்தே இமே லோகா யேஷு சரந்தி ப்ராணா
        கு3ஹாஶயா நிஹிதா: ஸப்த ஸப்த || 8 ||

யாகத்தில் உள்ள அங்கங்கள் ஹோமகுண்டம், அக்னி, அக்னிஜுவாலை, அக்னியில் சமர்ப்பிக்கும் பொருட்கள் (சமீத்) ஆகியவைகளாகும். அக்னியும், சமித்தும் ஒன்றாகி பஸ்பமாகிவிடுகிறது.
ஹோமகுண்டம் – இந்திரியங்கள் இருக்குமிடம்
அக்னி – இந்திரியங்கள்
அக்னி ஜுவாலை – இந்திரியங்களின் வெளிப்பாடு
சமித் – இந்திரியங்களின் விஷயங்கள்; உலகத்திலுள்ள விஷயங்கள்; அனுபவிக்கும் விஷயங்கள்
அக்னி-சமித் சம்பந்தம் – ஞானம்
தஸ்மாத் – அந்த பிரம்மத்திடமிருந்து
ஸப்த ப்ராணா: – ஏழு பிராணன்கள், இந்திரியங்கள் தோன்றியது
ஸப்த அர்சிஹ – இந்திரிய சக்திகளும்
ஸப்த இமே லோகா – இந்த ஐந்து இந்திரியங்கள்
ஸமித4ஹ, ஹோமா – பல விஷயங்களும், அறிவை அடைவதும் சமித்துக்கு ஒப்பிடப்படுகிறது.
ஏஷு ப்ராணன் சரந்தி – இந்த கோளகத்தில் இந்திரியங்கள், பிராணன்கள் செயல்படுகின்றது.
கு3ஹாஶயா – இந்திரியங்கள் மனதில் ஓய்வெடுக்கின்றது. மனம் இருதயத்தில் ஓய்வெடுக்கின்றது.
நிஹிதா: ஸப்த ஸப்த – இந்த ஏழு ஏழு இந்திரியங்கள் எல்லா ஜீவராசிகளுக்கும் கொடுக்கப்பட்டு இருக்கிறது

ஸ்லோகம்-09
அத: ஸமுத்3ரா கி3ரயஶ்ச ஸர்வேSஸ்மாத்ஸ்யந்த3ந்தே
    ஸிந்த4வ: ஸர்வரூபா: |
அதஶ்ச ஸர்வா ஓஷத4யோ ரஸஶ்ச யேனைஷ
    பூ4தைஸ்திஷ்ட2தே ஹ்யந்தராத்மா || 9 ||

அதஹ – பிரம்மத்திடமிருந்து
ஸர்வே ஸமுத்3ரா, கி3ரய – எல்லா கடல்கள், மலைகள் தோன்றின
அஸ்மாத் – அந்த பிரம்மத்திடமிருந்து
ஸர்வரூபா: ஸிந்த4வ: – நதிகள் பலவிதமாக தோன்றின
ஸர்வா ஓஷத4யஹ – விதவிதமான மரம், செடி, கொடிகள்
ரஸஶ்ச – தாவரங்களில் இருக்கும் சக்திகள்
யேன – இந்த சக்திகள்
ஏஷ அந்தராத்மா – சூட்சும சரீரத்திலிருக்கும் அந்தராத்மா
பூதை திஷ்டதே – ஸ்தூல சரீரத்தில் இருக்க உதவுகிறது.

ஸ்லோகம்-10
புருஷ: ஏவேத3ம் விஶ்வம் கர்ம தபோ ப்ரஹ்ம பராம்ருதம் |
   ஏதத்3யோ வேத3 நிஹிதம் கு3ஹாயாம்
ஸோSவித்3யாக்3ரந்தி2ம் விகிரதீஹ ஸோம்ய || 10 ||

இதில் மூன்று கருத்துக்கள் கூறப்பட்டுள்ளது. அவைகள்
1. பிரஹ்ம ஸ்வரூபம்,
2. ஜீவ-பிரஹ்ம ஐக்கியம்,
3. ஞானபலன்

ஸோம்ய – மிகவும் விருப்பத்திற்குரியவனே!
புருஷஹ ஏவ இத3ம் விஶ்வம் – நம்முடைய அனுபவத்திலிருக்கின்ற உலகத்தில் உள்ள அனைத்தும் பிரம்ம ஸ்வரூபமாகவே இருக்கிறது
கர்ம தபஹ – கர்ம பலனாலும், உபாஸனை பலனாலும் கிடைத்த உலகத்தை நாம் அனுபவிக்கிறோம்
ப்ரஹ்ம பராம்ருதம் – புருஷனான பிரம்மன் மேலானது, அழிவற்றது.
யஹ ஏதத் – எவனொருவன் இவ்வாறு வெளியே ஸத் ரூபமாக உள்ள பிரம்மத்தை
குஹாயாம் – மனதில் உள்ள சித் (ஆத்மாவாக) ஸ்வரூபமாக
வேத நிஹிதே – இருப்பதாக அறிகின்றானோ
இது ஜீவ-பிரஹ்ம ஐக்கியத்தை எடுத்துக் காட்டுகிறது. நான் இருக்கின்றேன் என்பதற்கு எந்த இந்திரியங்களின் துணையும் தேவையில்லை.

யஹ ஏத ஸஹ – இவ்வாறு யார் அறிகிறார்களோ
இஹ – அவர்கள் உயிரோடு இருக்கும்போதே, இங்கேயே, இப்போதே
அவித்யா க்ரந்தி விக்ரதி – அறியாமை என்ற முடிச்சிலிருந்து விடுபடுகிறார்கள்.

நம்முடைய மனதால் நாம் உலகத்தோடு கட்டிப்போடப்பட்டிருக்கின்றோம். இதுவே அறியாமை என்ற முடிச்சு இது மிக உறுதியாக நம்மை நாம ரூபத்தோடு கட்டி வைத்திருக்கிறது. இந்த உலகத்திலுள்ள பொருட்கள், விஷயங்கள் எல்லாம் நம் மனதில் வாசனைகளாக இருந்து கொண்டிருக்கிறது.  இதிலிருந்து நம் மனம் விடுபடுகிறது. அதாவது சம்சார பந்தத்திலிருந்து விடுபடுகிறோம்.

விசாரம்:
பாம்பும் கயிறும் ஒரே நேரத்தில் இருவருக்கு வெவ்வேறாக தெரிகிறது. கயிற்றைப் பார்ப்பவர், பாம்பை பார்ப்பவரிடம், நீ பார்ப்பது பாம்பல்ல,கயிறு என்று சொல்வது போல இந்த உலகத்தை பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு, அது உலகமல்ல பிரம்மம் என்று உபநிஷத் உபதேசிக்கிறது. எனவே நாம் உலகத்தை சத்யமாக நினைத்துக் கொண்டிருக்கும் நிலையை விலக்கி அதில் பிரம்மத்தைத்தான் பார்க்க வேண்டும். இந்த பிரபஞ்சத்திற்கு பிரம்மன் உபாதான காரணமாக உபதேசிக்கப்பட்டது. தோற்றம், இருத்தல், அழிதல் காரணமாக இருப்பது உபாதான காரணம்.

இந்த உலகத்தில் எந்த விதத்தில் பிரம்மன் உபாதான காரணமாக இருக்கிறது என்பதை ஆராய்வோம். மூன்று லட்சணங்கள் உபாதான காரணத்திற்கு உண்டு.
1.  காரிய முழுவதும் வியாபித்திருக்கும். பானை முழுவதும் களிமண் இருப்பது
2.  காரியத்தில் ஏற்படும் மாற்றம் காரணத்தை பாதிக்காது
3.  அவினாசி – அழிவற்றது
இந்த லட்சணங்களை வைத்துக் கொண்டு பிரம்மத்தை கண்டுபிடிக்க வேண்டும்.  பிரம்மன் ஸத் ஸ்வரூபமாக இருந்தால் கீழ்கண்ட மூன்றும் பொருந்தி வரும்.

  1. ஸத் என்பது எல்லாவிடத்திலும் வியாபித்திருக்கிறது. எதை கேட்டாலும், அது இருக்கின்றது, இது இருக்கின்றது என்று சொல்வதிலிருந்து இதை புரிந்து கொள்ளலாம்
  2. மாற்றமடையாதது – புத்தகம் இருக்கின்றது என்பதில் உள்ள இருத்தல், அது தூள்தூளாக கிழிந்தாலும், காகிதங்கள் இருக்கின்றது என்பதிலும் மாற்றமடையாமல் இருக்கின்றது. அது போலவே பிரம்மனும் எங்கும் வியாபித்து இருந்தாலும், மாற்றமடையாமல் இருந்து கொண்டிருக்கிறது
  3. அழிவற்றது – புத்தகத்திற்கு அழிவிருக்கிறது, ஆனால் இருத்தல் என்பது எல்லா நிலைகளிலும் அழிவேயில்லாமல் தொடர்ந்து இருந்து கொண்டேயிருக்கிறது

இதிலிருந்து பிரம்மனானது இருத்தல் என்ற ஸ்வரூபமாகவே இருக்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது

 

இந்த இருத்தலை எப்படி தெரிந்து கொள்ள முடியும் என்றால் கண்ணால் புத்தகம் இருக்கிறது என்று தெரிந்து கொள்கிறோம். இதில் புத்தகத்தில் பெயர்-உருவம் இருக்கின்றது என்று அறிகிறோம்.  இந்த ஐம்புலன்களால் நாம் எது இருக்கின்றது என்பதை புரிந்து கொள்கிறோம்.  அதோடு நாம் உருவத்தையும் சேர்த்துதான் புரிந்து கொண்டுள்ளோம்.  நாம் இதில் அந்த இருத்தலை மட்டும்தான் புரிந்து கொள்ள வேண்டும். பெயர், உருவத்தில் கவனத்தை செலுத்தாமல், இருத்தலை மட்டும் பார்க்கவே முடியாது. இந்திரியங்களால் இரண்டும் சேர்ந்தால்தான் தெரிந்து கொள்ள முடியும்.  புலன்களின் துணையில்லாமல் எந்தப்பொருளையாவது நம்மால் அறிந்து கொள்ள முடியுமா என்று யோசித்தால் அறிவு ஸ்வரூபமான ஆத்மாவை அவ்வாறு அறிந்து கொள்ள முடியும் என்று தெரிய வரும்.  இது ஒன்றுதான் நாம-ரூபம் இல்லாமல் இருப்பது.

——————————————————————–

அத்தியாயம்–02

பகுதி-2


ஸ்லோகம்-01
ஆவி: ஸன்னிஹிதம் கு3ஹாசரன்னாம
    மஹத்பத3மத்ரைதத்ஸமர்பிதம் |
ஏஜத்ப்ராணன்னிமிஷச்ச யதே3தஜ்ஜானத2
    ஸத3ஸத்3வரேண்யம் பரம் விக்ஞானத்3யத்3வரிஷ்ட2ம் || 1 ||

ஆவிஹி         சைதன்ய ஸ்வரூபம், பிரகாச ஸ்வரூபம் பிரம்மன், பிரகாசம் ஞானத்திற்கு காரணமாவதால், இது பிரம்மனை குறிக்கிறது.

ஸன்னிஹிதம்   ஜீவ ஸ்வரூபமாக இருதயத்தில் இருக்கிறது. மிக மிக அருகில் இருக்கிறது. விழிப்புணர்வில் பார்ப்பவனாகவும், கேட்பவனாகவும் இருக்கிறது

கு3ஹாசரன்     புத்தியில் நகர்வது போல் இருக்கின்றது. நாம் பார்க்கும் பொருள் இந்திரியங்கள் வழியாக அதை வியாபித்து அதன் உருவமாகவே எண்ணங்களாக மாறுகிறது.  அதில் ஆத்மா சித் ஸ்வரூபமாக இருந்து அதுவும் மாறுவது போல் தோன்றுகிறது. இது புத்தியின் செயலுக்கேற்ப செயல்படுவது போல் இருக்கின்றது.

நாம             பெயரளவில்தான் அப்படி உணர்கிறோம்.

மஹத்பதம்      மேலான லட்சியம், மேலான குறிக்கோள், எல்லாவற்றையும் தாங்குவது, ஆதாரமாக இருக்கிறது.

அத்ர ஏதத் ஸமர்ப்பிதம் – இந்த உலகம் இதை சார்ந்திருக்கின்றது

ஏஜத்            நகர்கின்ற ஜீவராசிகள்

பிராணன்        சுவாசிக்கின்ற ஜீவராசிகள் (மனிதர்கள் போன்றவைகள்)

நிமிஷத ச       கண்ணை சிமிட்டுகின்ற ஜீவராசிகள் மேலும் மற்ற ஜீவராசிகளும் அந்த பிரம்மத்தை சார்ந்திருக்கின்றது

யத்3 ஸதஸத்3  எந்த பிரம்மன் வெளிதோற்றத்திற்கு வந்ததாகவும் (ஸத்தாகவும்),     வெளித்தோற்றத்திற்கு வராமலும் (அஸத்தாகவும்) இருக்கின்றதோ அதாவது மூர்த்த – அமூர்த்தமாக ஸ்வரூபமாகவும் இருக்கிறதோ

யத் வரிஷ்டம் வரேண்யம் –        எது மிகமிக மேலானதாகவும், தேர்ந்தெடுக்கப்பட வேண்டியதாகவும் இருக்கிறதோ

யத் ப்ரஜானாம் விக்ஞானாத் பரம் ஜீவராசிகளுடைய அறிவுக்கு அப்பாற்பட்டதாக இருக்கின்றதோ, இந்திரியங்களின் சக்திக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறதோ.

ஏதத்3 ஜானத4                    சிஷ்யர்களே, நீங்கள் அதை அறிய வேண்டும், அறிய இருக்கிறீர்கள்

ஸ்லோகம்-02
யத3ர்சிமத்3யத3ணுப்3யோSணு ச யஸ்மில்லோகா நிஹிதா லோகினஶ்ச |
    ததே3தத3க்ஷரம் ப்3ரஹ்ம ஸ ப்ராணஸ்தது3 வாங்மன:
ததேதத்ஸத்யம் தத3ம்ருதம் தத்3வேத்3த4வ்யம் ஸோம்ய வித்3தி4  || 2 ||

யத்3 அர்சிமத் – எந்த சூரியகதிர் சைதன்ய ஸ்வரூபமாக இருக்கின்றதோ

யத்3 அணுப்3யஹ அணு    எது மிகமிக சிறியதைக் காட்டிலும் சிறியதாக இருக்கின்றதோ, பெரியதைக் காட்டிலும் பெரியது. இப்படி சொல்வது காரணம். அது உருவமற்றது, முழுமையானது, நிறைவானது, பூரணமானது, பெரியது, சிறியது என்பது நாம-ரூபத்தைக் குறிக்கிறது.

யஸ்மின் லோகாஹா      எந்த பிரம்மத்தை இந்த உலகம்

நிஹிதா                   சார்ந்திருக்கின்றதோ

லோகினஹ ச             உலகத்தில் வசிக்கின்ற ஜீவராசிகளும் அதையே சார்ந்து இருக்கிறது

தத் ஏதத் அக்ஷரம் பிரம்ம  அதுவேதான் அக்ஷரம் என்றழைக்கப்படுகின்ற பிரம்மன்.

ஸஹ பிராணஹ          அதுவே பிராணனாக இருக்கின்றது

தத்3 வாங் மனஹ         அது வாக்காகவும், மனதாகவும் இருக்கின்றது

தத்3 ஏதத் ஸத்யம்         அது என்றும் சத்யமாகவும் இருக்கின்றது

தத்3 அம்ருதம்             அதுவே நிலையானதாகவும், மரணமற்றதாகவும் இருக்கிறது

தத்3 வேத்4யம்             அந்த பிரம்மத்தை மனதால் துளைக்க வேண்டும். மனதால் பிரம்மத்தையே ஆழ்ந்து சிந்தித்து கொண்டிருக்க வேண்டும்.

ஸோம்ய                   பிரியமானவனே

வித்3தி4:                   பிரம்மத்தை அடைய வேண்டும் என்று மனதில் குறி வைக்க வேண்டும்.

ஸ்லோகம்-03
தனுர்க்3ருஹீத்வௌபனிஷத3ம் மஹாஸ்த்ரம்
        ஶரம் ஹ்யுபாஸானிஶிதம் ஸந்த4யீத |
ஆயம்ய தத3பா4வக3தேன சேதஸா லக்ஷயம்
        ததே3வாக்ஷரம் ஸோம்ய வித்3தி4 || 3 ||

வில் என்ற வேதாந்த சாஸ்திரத்தில் ஜீவாத்மா என்கின்ற அம்பை பொருத்தி பிரம்மா  என்கின்ற இலக்கை நோக்கி செலுத்த வேண்டும். இதனால் பரமாத்மாவை அடையலாம். வில்லில் அம்பை தொடுத்து காட்டும் இலக்கில் சரியாக அடிக்க வேண்டும் என்றால், அம்பு நேராக இருக்க வேண்டும், வளைந்து நெளிந்து இருக்க கூடாது, அம்பு முனை கூராக இருக்க வேண்டும், அம்பை வில்லில் சரியாக பொருத்த வேண்டும், இலக்கை நோக்கி அம்பானது இருக்க வேண்டும், வில்லின் நாணை இலக்கின் தூரத்திற்கேற்ப இழுத்து அம்பை விட வேண்டும்.

அம்பு – ஜீவாத்மாவை குறிப்பதால், ஜீவாத்மா மனத்தூய்மை அடைந்தவராக இருக்க வேண்டும். தர்மப்படி வாழ்ந்து கொண்டு இருப்பவராக இருக்க வேண்டும்.
அம்பின் கூர்மை – மன ஒருமுகப்பாட்டை குறிக்கப்படுகிறது. உபாஸனையினால் மனதை நன்கு தீட்டி கூர்மையாக இருக்க வேண்டும், ஒருமுகப்பட்டிருக்க வேண்டும்.
ஜீவர்களாகிய நாம் உபநிஷத்தை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு உபநிஷத்தின் மீது சிரத்தை இருக்க வேண்டும்.  இது ஞானத்தை கொடுக்கும் கருவி என்று உறுதியாக நம்ப வேண்டும். குருமுகமாக இதை படிக்க வேண்டும்.
முமுக்ஷுத்வம் – நம்முடைய இலக்கு பிரம்மத்தை மட்டும் அறிவதுதான். பிரம்மத்தை அடைவதாக இருக்க வேண்டும்.

வெளிவிஷயங்களிலிருந்து நம்முடைய புலன்களை உள்ளுக்குள் இழுத்துக் கொள்ள வேண்டும். இது வைராக்கியம் என்ற சாதனத்தின் மூலம் அடையப்படுகிறது.
இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது, எப்படி வில்லானது இலக்கை அழித்து, துளைத்து அதனோடு ஐக்கியமாவது போல, ஜீவாத்மாவுடன் பரமாத்வோடு இணைந்து விடும்.

ஸ்லோக விளக்கம்
தனுர் மஹா அஸ்திரம் – வில் என்ற மிக மேலான ஆயுதம்
ஔபநிஷதம் – உபநிஷத்தில் உள்ள ஓங்கார விசாரம்
ஷரம் நிஷிதம் – கூர்மையாக்கப்பட்ட அம்பு
உபாஸானிஶிதம் – உபாஸனையால் ஒருமுகப்படுத்தப்பட்ட, கூர்மையாக்கப்பட்ட மனதினால்
ஸந்த4யீத – அம்பை வில்லில் பொருத்த வேண்டும்
அயம்ய – பிறகு உள்ளே இழுத்துல், எல்லா இந்திரியங்களையும் உள்ளே இழுத்து
சேதஸா – அறிவினால்
தத3பா4வக4தேன – பிரம்மத்தையே இலக்காக கொண்ட மனதினால்

லக்ஷயம் – இலக்கான
தத்3 ஏவ அக்ஷரம் – ஏற்கனவே விளக்கப்பட்ட இலக்கான பிரம்மத்தை
வித்3தி4 – நோக்கி அடிக்க வேண்டும்.

ஸ்லோகம்-04

ப்ரணவோ த3னு: ஶரோ ஹ்யாத்மா ப்ரஹ்ம தல்லக்ஷயமுச்யதே |
அப்ரமத்தேன வேத்3த4வ்யம் ஶரவத்தன்மயோ ப4வேத் || 4 ||

ப்ரணவஹ தனு: – ஓங்காரமென்கின்ற வில்
ஶரஹ ஹி ஆத்மா – ஜீவாத்மா
ப்ரஹ்ம தத்3 லக்ஷ்யம் உச்யதே – பிரம்மனே அடைய வேண்டிய லட்சியம் என்று சொல்லப்படுகிறது
அப்ரமத்தேன – முழு கவனத்துடன்
வேத்3த4யம் – இலக்கை நோக்கி செலுத்த வேண்டும்
ஷரவத் – அம்பு இலக்கோடு ஒன்றிப் போவதுபோல
தன்மயோ ப4வேத் – லட்சியத்தோடு ஒன்றுபட வேண்டும். பிரம்ம ஸ்வரூபமாக இணைந்து விட வேண்டும்
அம்பை வில்லில் ஏற்றி இலக்கை நோக்கி சரியாக அடிப்பவன் ஒருவன் இருக்க வேண்டும். அந்த ஒருவன் குருவாகத்தான் இருக்க முடியும்

ஸ்லோகம்-05
யஸ்மின்த்3யௌ: ப்ருதி2வீ சாந்தரிக்ஷமோதம்
    மன: ஸஹ ப்ராணைஶ்ச ஸர்வை: |
தமேவைகம் ஜாரத2 ஆத்மானமன்யா
    வாசோ விமுஞ்சதா2ம்ருதஸ்யைஷ ஸேது: || 5 ||

யஸ்மின் – எந்தப் பிரம்மத்திடமிருந்து
த்3யௌ: ப்2ருதிவி – சொர்க்கலோகம், பூலோகம்
அந்தரிக்ஷம் – இரண்டுக்குமிடையே உள்ள லோகங்கள்
ஓதம் – எதனிடத்தில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது, எதனைச் சார்ந்திருக்கிறது
ஸர்வை: ஹி ப்ராணை ச – எல்லா பிராணன்களும் இந்திரியங்களும்
மனஹ – மனதும் சார்ந்திருக்கிறது
தம் – அதை (அந்த பிரம்மத்தை) மட்டும்
ஏவ ஏகம் ஜாரத2 ஆத்மானம் – ஆத்மாவாக ஒன்றானதாக தெரிந்து கொள்ளுங்கள், நானே ஆத்மா என்று தெரிந்து கொள்ளுங்கள்
அன்யஹ – அபர வித்யா ஸ்வரூபமான அனாத்மாவை, ஆத்மாவை விட்டு வேறாக இருக்கின்ற
வாசஹ – பேச்சுக்களை
விமுஞ்சத – விட்டு விடுங்கள்
அம்ருதஸ்ய ஏஷ: ஸேது: – இந்த மாதிரி இருந்து ஆத்மாவை அறிவதானல் மோட்சத்திற்கு பாலமாக அமையும்.

இதற்கு மௌனம் என்று பொருட்கொள்ளலாம். ஞானத்திலிருந்து அதில் நிஷ்டை அடைய வேண்டுமென்றால் நிதித்யாஸனத்தின் போது அனாத்மா விஷயங்களை முற்றிலுமாக தவிர்த்துவிட வேண்டும் சாஸ்திரம் பலன் கொடுக்க வேண்டும் என்றால் பிரம்மத்தைத் தவிர வேறெதையும் பேசுவதில்லை என்று உறுதியாக இருக்க வேண்டும்.:

  1. அனாத்மா விஷயங்களை பேசப்பேச அதுவே திடமாகி விடுகிறது
  2. இப்படி பேசுவதால் விருப்பு-வெறுப்பு, காம-க்ரோதம்-துவேஷம் உள்ளத்தில் உருவாகும்
  3. அஸங்கத்தைப் பற்றி சாஸ்திரம் பேசுகிறது. நாம் வைக்கும் சம்சார சம்பந்தமே துன்பத்தைக் கொடுக்கும்

இவைகளை கருத்தில் கொண்டு அனாத்மா விஷயங்களை பேசுவதில் விட்டுவிட்டு மௌனமாக இருக்க வேண்டும். பேசினால் ஆத்மா சம்பந்தமானவற்றை பேச வேண்டும்.

ஸ்லோகம்-06
அரா இவ ரத2னாபௌ4 ஸம்ஹதா யத்ர நாட்3ய:
    ஸ ஏஷோSந்தஶ்சரதே ப3ஹுதா4 ஜாயமான: |
ஓமித்யேவம் த்4யாயத2 ஆத்மானம் ஸ்வஸ்தி
    வ: பாராய தமஸ: பரஸ்தாத் || 6 ||

இந்த மந்திரம் நிதித்யாஸனத்தைப் பற்றி பேசுகிறது
ஸஹ ஏஷஹ அந்தரஹ சரதே – அந்த பிரம்மனே ஆத்மாவாக மனதிற்குள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது
ப3ஹுதா4 ஜாயமானஹ இவ – விதவிதமாக தோன்றுவது போல இருக்கிறது.

ஜடமான மனதினால் விதவிதமான அறிவை அடைகின்றோம். பல எண்ணங்கள், உணர்ச்சிகள் உண்டாகின்றன. இதற்கு காரணம் ஆத்மாவின் பிரதிபிம்பத்தால் உண்டாகின்றது. இந்த ஆத்மாவே மனதில் பிரதிபலித்து விதவிதமாக தோன்றுவது போல காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது எண்ணங்களில் வருகின்ற மாற்றங்கள், அதனால் வருகின்ற உணர்ச்சிகள் இவைகளெல்லாம் வெறும் எண்ணங்கள். ஆனால் நான் இவைகளுக்கு அப்பாற்பட்டவன் என்று புரிந்து கொள்ள வேண்டும்.  மனதுக்கு கோளகம் இதயம், அதில் விதவிதமான எண்ணங்கள் தோன்றுகிறது. அறியாமையில் இருக்கும் போது அவைகள் நான் என்று எண்ணுகிறோம்.  அறியாமை நீங்கிய உடன் அவைகள் நானல்ல என்று உணர்வோம்.

யத்ரஹ – எந்த இதயத்திலிருந்து
நாட்3ய: – நாடிகள்
ஸம்ஹதா – சேர்க்கப்பட்டுள்ளது

ஒரு சக்கரத்தில் இருக்கும் ஆரக்கால்கள் அதன் மையப்பகுதியில் இணைக்கப்பட்டிருக்கும். அதேபோல ஸ்தூல சரீரத்தில் உள்ள நாடிகள் அனைத்தும் இதயமான மையப்பகுதியோடு இணைக்கப்பட்டிருக்கிறது.  மனதில் எழுகின்ற எண்ணங்கள் நானல்ல என்று நன்கு புரிந்து கொள்ள வேண்டும்

ஓம் இதம் ஏவம் – ஓங்காரத்தின் துணைக் கோண்டு
ஆத்மானாம் த்யாயத் – ஆத்மாவே நான்தான் என்று தியானம் செய்ய வேண்டும்.
வஹ ஸ்வஸ்தி – உங்களுக்கு மங்கலம் இருக்கட்டும். ஆசிர்வாதம் செய்கின்றேன்.
தமஸஹ ப்ரஸ்தாத் ப்ராய –  அறியாமைக்கு அப்பாலுள்ள கரையை கடக்க எங்களுடைய ஆசிகள் இருக்கட்டும்.  எல்லா தடைகளை எல்லாம் நம்மிடமிருந்து வருவதால் அவைகளை தாண்டி வெற்றிபெற வேண்டும்.

ஸ்லோகம்-07
ய: ஸர்வக்ஞ: ஸர்வவித்3யஸ்யைஷ மஹிமா பு4வி |
தி3வ்யே ப்ரஹ்மபுரே ஹ்யேஷ வ்யோம்ன்யாத்மா ப்ரதிஷ்டித: ||

யஹ – எந்த பரமாத்மா
ஸர்வக்ஞ – பொதுவாக எல்லாம் அறிந்தவர்
ஸர்வவித்3 –  விசேஷமாக எல்லாம் அறிந்தவர்

இரண்டு வார்த்தைகளும் ஒரே அர்த்தம் கொடுத்தாலும் அவற்றுக்குள் விசேஷமான வேறுபாடும் உண்டு. பானைகள் பொறுத்தமட்டில் காரணத்தை அறிவது பொது அறிவு. முதல் வகை ஸர்வக்ஞன், இரண்டாவது வகை ஸர்வவித் ஆகும்.  ஸர்வக்ஞன் என்பது காரண ஞானம், ஸர்வவித் என்பது காரியத்திலுள்ள அறிவு.  இங்கே ப்ரா-வித்யா, அபராவித்யா. அபராவித்யாவின் அடிப்படையில் ஸர்வவித்தாக இருக்கிறார். ஈஸ்வரனே எல்லா ஜீவர்களின் மனதாகவும் இருப்பதால் அவர் ஸர்வவித். ஸர்வக்ஞர் நிமித்தக்காரணம், ஸர்வவித் என்பது உபாதான காரணம்.
யஸ்ய பு4வி – யாருக்கு இந்த உலகத்தில்
ஏஷ மஹிமா – இந்த பெருமையை உடையவராக இருப்பது ஈஸ்வரனே
இப்படி புரிந்து கொள்வதால் நாம் நம்மிடம் இருக்கும் பெருமையை குறித்து அகங்காரம் கொள்ளமாட்டோம். ஏனென்றால் இவைகள் எல்லாம் ஈஸ்வரனுடையதே.
திவ்யே ப்ரஹ்மபுரே – நம்முடைய ஹ்ருதயத்தில் உள்ள
வ்யோம்ன்ய – மனதிற்குள்
தீ ஏஹ ஆத்மா ப்ரதிஷ்டதஹ – இந்த ஆத்மா அமர்ந்திருக்கிறார், வெளிப்படுகிறார்
இதிலிருந்து நாம் அறிவது கொள்வது மனதிற்குள் ஈஸ்வரனை, ஆத்மாவை நானாக புரிந்து கொள்ள வேண்டும்.

ஸ்லோகம்-08
மனோமய: ப்ராணஶரீரனேதா ப்ரதிஷ்டிதோSத்ரே ஹ்ருத3யம் ஸன்னிதா4ய |
தத்3விக்ஞானேன பரிபஶ்யந்தி தீ4ரா ஆனந்தரூபமம்ருதம் யத்3விபா4த || 8 ||

மனோமய: – மனதிலுள்ள எண்ணங்களினால் அறியப்படுகின்ற வஸ்து பிரம்மத்திற்கு இந்த பெயர்
ப்ராண ஶரீர நேதா – சூட்சும சரீரத்தை ஸ்தூல சரீரத்தை அழைத்துச் செல்வது இந்த ஆத்மா
பிராண சரீரம் – சூட்சும சரீரம், இது ஜடமானது. ஆனால் அதை செயல்படுத்துவது ஆத்மா
அன்னே ஹ்ருதயம் ஸன்னிதா4ய – இந்த ஸ்தூல சரீரத்திலுள்ள சூட்சும சரீரத்தில்
ப்ரதிஷ்டிதஹ – வெளிப்படுகிறார்
தீரர் பரிபஶ்யந்தி – அதிகாரித்துவத்தை உடையவர்கள், இந்த தத்துவத்தை முழுமையாக தெளிவாக அறிகிறார்கள்
தத் அக்ஞானேன – ஆத்ம தத்துவத்தை பூரணமாக அறிந்ததினால், அறிவினால், குருமுகமாக சாஸ்திரத்தை உபதேசத்தினால் அடைந்த அறிவினால், சம, தம ஆகியவைகளை முதலிய சாதனங்களுடன் கூடிய மனதினால்
ஆனந்த ரூபம் – பூரண ஸ்வரூபம்
அம்ருதம் – மரணமற்றது என்று
விபா4தி – ஸ்வயம் பிரகாசமாக இருக்கிறது. நாம, ரூபங்களுடன் விதவிதமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது

ஸ்லோகம்-09
பி4த்3யதே ஹ்ருதயக்3ரந்தி2ஶ்சி2த்3யந்தே ஸர்வஸம்ஶயா: |
க்ஷீயந்தே சாஸ்ய கர்மாணி தஸ்மின் த்3ருஷ்டே பராவரே || 9 ||

இதில் மூன்று விதத்தில் பலன்கள் கூறப்பட்டுள்ளது. அவைகள்

  1. பி4த்3யதே ஹ்ருதயக்3ரந்தி –  ஹிருதயத்திலுள்ள முடிச்சுக்கள் (அறியாமை, ஆசைகள்) வெட்டப்படுகின்றன.  ஆத்மாவையும், அனாத்மாவையும் ஒன்றாக காட்சியளிக்க வைப்பது அறியாமை என்ற முடிச்சு வெட்டப்படுகிறது.. மனதில் ஓடும் ஆசைகளெல்லாம் நீங்கிவிடும். ஆசையிருக்கும் வரை மனநிறைவு வராது. வரும் ஆசையை நீக்க வேண்டும்தான் என்று எல்லோரும் முயற்சிக்கிறோம்.  எனவே அதை அடைந்து ஆசையை தற்காலிமாக நீக்குகிறோம். எனவே ஆசைகளை அனுபவிக்காமலே நம்மிடமிருந்து சென்று விடும். பொருளையும் மனதையும் ஒன்றாகக் கட்டுவதுதான் ஆசை.
  2. புத்தியிலே சந்தேகங்கள் இருந்து கொண்டிருக்கும். இந்த ஞானத்தினால் சந்தேகங்கள் எல்லாம் நீங்கி புத்தி அமைதியடையும், நிறைவை அடையும்.
  3. ஞானம் அடைந்து அதில் நிலைபெற்ற ஜீவன் முக்தன், உயிரோடிருக்கும்போதே அவனுடைய சஞ்சித கர்மபலன்கள், ஆகாமி கர்மபலன்கள் எல்லாம் அழிந்துவிடும். இறந்த பிறகு கர்மபலன்கள் அழிந்துவிட்டதால் வேறு பிறவி இருப்பதில்லை, அதுவே விதேஹ முக்தி

தஸ்மின் பராவரே – அந்த பிரம்மத்தை
த்ருஷ்டே – அறிவதன் மூலமாக
பராவரே – பர – நிர்குண பிரம்மன், அவரா – சகுண பிரம்மன்
சகுண – மாயையுடன் இருக்கும் பிரம்மன்
நிர்குணம் – மாயையற்ற பிரம்மன்
பி4த்யதே ஹ்ருதய க்ரந்திஹி – இருதயத்திலுள்ள முடிச்சுகள் அவிழ்ந்து விடுகிறது
சித்3யந்தே ஸர்வஸம்ஹயஹ – புத்தியிலுள்ள சந்தேகங்களும் அழிக்கப்படுகிறது, நீக்கப்படுகிறது
க்ஷீயந்தே ச அஸ்ய கர்மாணி – அவன் சேர்த்து வைத்த கர்ம பலன்கள் அனைத்தும் அழிந்து விடும்.

ஸ்லோகம்-10
ஹிரண்மயே பரே கோஶே விரஜம் ப்3ரஹ்ம நிஷ்கலம் |
தச்சு2ப்4ரம் ஜ்யோதிஷாம் ஜ்யோதிஸ்தத்3யதா3த்மவிதோ3 விது3: ||

ஹிரண்மயே – தங்கத்தைப்போல பிரகாசிக்கின்ற விக்ஞானமயமான புத்தியை
பரே கோஶே – மேலான மறைப்பானது
விரஜம் – எதனாலும் கறைப்படுத்த முடியாதது, பாதிக்கப்படாதது, மனதில், புத்தியில் உள்ள அழுக்குகளாலும் பாதிக்கப்படாதது
நிஷ்கலம் – அவயவங்களற்றது
தத்3 சு2ப்4ரம் – அது தூய்மையானது
ஜ்யோதிஷாம் ஜ்யோதி – ஒளிகளுக்கெல்லாம் ஒளியாகவும், பிரமாணங்கள் உடையவர்களுக்கு பிரமாணமாக இருக்கிறது
யத் – எது எப்படியிருக்கிறதோ
தத்3 ஆத்மவித3ஹ – அதை ஆத்மாவாக அறிந்தவர்கள்
விது3:: – அறிகிறார்கள்
இதிலிருந்து ஜீவ-பிரஹ்ம ஐக்கியத்தை புரிந்து கொள்ளலாம்

ஸ்லோகம்-11
ந தத்ர ஸூர்யோ பா4தி ந சந்த்3ரதாரகம்
    நேமா வித்3யுதோ பாந்தி குதோSயமக்3னி: |
தமேவ பா4ந்தமனுபா4தி தஸ்ய
   பா4ஸா ஸர்வமித3ம் விபா4தி || 11 ||

தத்ர –  ஆத்ம ஸ்வரூபமான பிரம்மத்தை
சூர்யஹ ந பா4தி – சூரியனாலும் அதை பிரகாசிக்க முடியாது, விளக்க முடியாது. இங்கே சூரியன் என்பதை ஞானத்தைக் கொடுக்கின்ற இந்திரியங்களாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
ந சந்த்3ர தாரகம் – சந்திரனும், நட்சத்திரங்களும்
இமாஹ வித்யுதஹ – மின்னல்களும், வெளிச்சத்தை தருகின்ற விளக்குகளாலும்
குதஹ அயம் அக்னி பாந்தி – எப்படி இந்த அக்னியை விளக்க முடியாது
இப்படிபட்ட பிரமாணங்களால் ஆத்மாவை விளக்க முடியாது.
தஸ்ய பா4ஸா – இத்தகைய ஜோதி
ஸர்வம் பா4தி – எல்லாவற்றையும் விளக்குகிறது
தம் பாந்தம் அனு பா4தி – ஆத்ம ஸ்வரூபம், சுயபிரகாசமாக இருப்பது தொடர்ந்து அனைத்தும் விளக்கப்படுகிறது
இதம் ஸர்வம் விபா4தி – இவ்வாறு எல்லாமும் விளக்கப்படுகிறது
எந்தவொன்று பிரமாணங்களை விளக்குகிறதோ அதை எந்த பிரமாணத்தாலும் விளக்க முடியாது

ஸ்லோகம்-12
ப்ரஹ்மைவேத3மம்ருதம் புரஸ்தாத்3ப்ரஹ்ம
   பஶ்சாத்ப்ரஹ்ம தக்ஷிணதஶ்சோத்தரேண |
அத4ஶ்சோர்த்4வம் ச ப்ரஸ்ருதம் ப்ரஹ்மைவேத3ம்
   விஶ்வமித3ம் வரிஷ்டம் || 12 ||

இந்த உலகம் வெறும் தோற்றம் என்று விளக்கப்படுகிறது. மித்யா வெறும் நாம-ரூபம் என்று உரைக்கிறது.  மாயையின் இருத்தல் அடிப்படையில் இந்த உலகத்தை ஈஸ்வரனின் உருவாக்கியது என்றும் நாம-ரூபம் அடிப்படையில் மித்யா என்றும் புரிந்து கொள்ள வேண்டும்.

உபநிஷத் எப்படி இந்த உலகத்தை நீக்குகிறது. பிரஹ்ம இதம் விஶ்வம் என்பது பிரம்மன்தான் இந்த உலகம் என்று பொருள் கொள்ளும் போது ஐக்கியத்தை சொல்லவில்லை.  இங்கே நிராகிக்கிறது.  உதாரணமாக மங்கலமான வெளிச்சத்தில் வழிகாட்டி தூணை திருடன் என்று ஒருவன் நினைத்துக் கொள்கிறான். வேறொருவர் அந்த வழிக்காட்டி மரம் மனிதனல்ல என்று சொன்னவுடன் அவனுக்கு திருடன் நீங்கி தூண் தெரிகிறது. அதேப்போல அதை ஜகத் என்று பார்த்துக் கொண்டிருக்கிறோமோ. அது வெறும் நாம-ரூபம் என்றும் அதுவும் பிரம்மன் என்று  உபநிஷத் தெரிவிக்கிறது.

ப்3ரஹ்மை ஏவ அம்ருதம் – எப்பொழுதும் இருக்கின்ற பிரம்மனே
இதம் புரஸ்தாதி – நமக்கு முன்னாடி தோன்றுவது அதுவேதான்
பஶ்சாத் – பின்னாடி இருப்பதும் அதுவே
தக்ஷிண, உதஶ்சேத்தரண – வடக்கு, தெற்கு என்ற எல்லா இடங்களிலும் பிரம்மன்தான் இருக்கிறது. வேறெதும் காட்சியளிக்கவில்லை
அதஹ ஊர்த்4வம் ச ப்ரஸ்ருதம் – மேலும், கீழும் அதுவேதான் இருக்கிறது
வரிஷ்டம் பிரஹ்ம ஏவ இதம் விஶ்வம் – சத்ய ஸ்வரூபமான பிரம்மன்தான் இந்த உலகமாக காட்சியளிக்கின்றது

—-oo000oo—-

அத்தியாயம்–03 / பகுதி-1

 
ஸ்லோகம்-01
த்3வா ஸுபர்ணா ஸயுஜா ஸகா2யா
    ஸமானம் வ்ருக்ஷம் பரிஷஸ்வஜாதே தயோரன்ய: |
பிப்பலம் ஸ்வாத்3வத்த்யனஶ்னன்னன்யோ அபி4சாகஶீதி || 1 ||

ஏற்கனவே ஜீவ-பிரம்ம ஐக்கியம் விளக்கப்பட்டது. அதில் நிலை பெற நிதித்யாஸனம் தேவை என்றும் கூறப்பட்டது. அந்த நிதித்யாஸனத்தை நன்றாக செய்வதற்கு தேவையான சாதனங்கள் என்னென்ன என்பது இங்கு கூறப்படுகிறது. இவ்வாறு சங்கராச்சாரியர் கூறியிருக்கிறார்

த்3வா ஸுபர்ணா –அழகான இறக்கைகளுடைய இரண்டு பறவைகள்
ஸகா2யா – நண்பர்களை போல
ஸயுஜா – என்றும் சேர்ந்திருக்கின்றது

ஜீவாத்மா, பரமாத்வாவின் பிரதிபிம்பம் சிதாபாசமாக இருக்கிறது.  இவையிரண்டும் சேர்ந்தேயிருக்கும். ஜீவாத்மா பரமாத்வை சார்ந்திருப்பதால் அதை பரமாத்மாவிடம் இருந்து பிரிக்க முடியாது. ஒரே சரீரத்தில் ஜீவாத்மாவும், பரமாத்மாவும் இருப்பதைப் போல ஒரே மரத்தில் இரண்டு பறவைகள் இருக்கின்றது. பிம்பம், பிரதிபிம்பம் போன்று சேர்ந்திருக்கின்றது.

ஸமானம் வ்ருக்ஷம் – ஒரே மரத்தில்
பரிஷஸ்வஜாதே – அமர்ந்துள்ளது
தயோ: அன்யஹ – அந்த இரண்டு பறவைகளில் ஒன்று
பிப்பலம் அத்தி – மரத்திலுள்ள பழங்களை
ஸ்வாது – மெய்மறந்து, அந்த சுவையில் மூழ்கி சாப்பிட்டு கொண்டிருக்கிறது
இது ஜீவாத்மா கர்ம பலன்களை சுக-துக்கங்களாக அனுபவித்துக் கொண்டு இருக்கின்றான் என்பதை சுட்டிக் காட்டுகிறது
அன்யஹ அனன்யஹ – வேறொரு பறவை எதையும் சாப்பிடாமல்
அபிசாகஶீதி – பார்த்துக் கொண்டிருக்கிறது, சாட்சியாக மட்டும் இருக்கிறது. இது பரமாத்மாவை சுட்டிக் காட்டுகிறது
சம்சாரத்திற்கு காரணம் கர்த்தாகவும், போக்தாவாகவும் இருப்பதுதான் என்பது இதன் மூலம் தெரிகிறது.

ஸ்லோகம்-02
ஸமானே வ்ருக்ஷே புருஷோ நிமக்3னோSனீஶயா ஶோசதி முஹ்யமான: |
ஜுஷ்டம் யதா3 பஶ்யத்யன்யமீஶமஸ்ய மஹிமானமிதி வீதஶோக: || 2 ||

ஸமானே வ்ருக்ஷே – இந்த சரீரத்தில்
புருஷ: – சம்சாரியான ஜீவாத்மா
நிமிக்3னஹ – சரீரம் நான் என்று எண்ணத்தில் மூழ்கி விட்டான்.

உடலை மரத்திற்கு ஒப்பிடுவதற்கு காரணம் இரண்டுமே மாற்றங்களையுடையது. பறவைகள் சாப்பிட ஏதாவது ஒரு மரத்தில் அமர்ந்துதான் சாப்பிட வேண்டும். அதேபோல ஜீவன் சம்சாரம் அனுபவிக்க சரீரம் ஆதாரமாக இருக்கிறது.

அனீஶயா ஶோசதி – துயரப்படுகிறான்; துயரத்திற்குள்ளாகின்றான்
நாம் அனுபவிக்கும் துயரங்களெல்லாம் வேறு வழியில்லாமல் தவிர்க்க முடியாமல் அனுபவிப்பதுதான். நாம் இதை தேர்ந்தெடுத்து அனுபவிப்பதில்லை

முஹ்யமான: – அவன் மோகத்துக்கு ஆட்பட்டுள்ளான்
மோகம் – எதைக் கொடுத்தாலும் அனுபவிக்க தயாராக இருப்பது.
ஒரு பொருளுக்கு தகுந்த விலைக்கு மேலாக விலைக்கு வாங்க தயாராக இருப்பது,
தூரத்துக்கு பச்சை கண்ணுக்கு அழகு. எனவே இந்த உலகத்தை வேடிக்கை பார்க்க வேண்டும்.  தவிர அதை அனுபவிக்க வேண்டுமென்று விரும்புவது சோகத்தை அனுபவிக்க வேண்டுமென்று விரும்புவது போலாகும்..

யதா – எப்பொழுது
அன்யம் ஜுஷ்டம் ஈஷம் – வேறொரு பறவையை வணங்குவதற்குரிய மேலான ஈஸ்வரனாக,
அஸ்ய மஹிமானம் – என்னுடைய தன்மைதான் அந்த ஈஸ்வரன் என்றும் மற்றொரு பறவையை தான்தான் என்று
பஶ்யதி – பார்க்கின்றானோ, புரிந்து கொள்கின்றானோ
மஹிமானம் – அப்போது சம்சாரத்திலிருந்து விடுபட்டுவிடுவான்.
வீதஶோக இதி – அதனால், சோகத்திலிருந்து விடுபட்டு விடுவான்

ஸ்லோகம்-03
யதா3 பஶ்ய: பஶ்யதே ருக்மவர்ணம் கர்தாரமீஶம் புருஷம் ப்ரஹ்மயோனிம் |
ததா3 வித்3வான்புண்யபாபே விதூ4ய நிரஞ்ஜன: பரமம் ஸாம்யமுபைதி || 3 ||

யதா3 பஶ்யஹ – எப்பொழுது பார்ப்பவன் (நித்ய-அநித்ய வஸ்துவை பார்ப்பவன்)
ருக்மவர்ணம் – ஞான ஸ்வரூபம் – தங்கத்தில் வர்ணம் போன்றது, சுய பிரகாசமாக இருக்கும் தன்மையை
ஜகத் கர்தாரம் ஈஶம் – ஜகத்தை உருவாக்கியவராக ஈஸ்வரனாக இருக்கின்றார்
ப்ரஹ்ம யோனிம் – அவரே நிர்குணமாகவும், மாயையோடு சேர்ந்து ஜகத்துக்கு காரணமாகவும் இருக்கின்றார்
பஶ்யதே – என்று பார்க்கின்றானோ? அறிகின்றானோ
ததா3 – அப்பொழுது
வித்வான் – பிரம்ம தத்துவத்தை அறிந்தவனாகின்றான்
புண்யபாபே விதூ4ய – பாவ-புண்ணியத்தை நீக்கிவிட்டு
நிரஞ்ஜனஹ – தூய்மையடைந்தவனாக
ஸாம்யம் – சமமான தன்மை, ஒன்றாக இருக்கின்ற தன்மை
உபைதி – அடைகின்றான்
பரமம் – மீண்டும் திரும்ப வராத ஞானநிலை

ஸ்லோகம்-04
ப்ராணோ ஹ்யேஷு ய: ஸர்வபூ4தைர்விபா4தி
    விஜானன்வித்3வான்ப3வதே நாதிவாதீ3 |
ஆத்மக்ரீட ஆத்மரதி: க்ரியாவனேஷ ப்3ரஹ்மவிதா3ம் வரிஷ்ட: || 4 ||
 
ப்ராணஹ – பிராணனாக உள்ள பரபிரம்மன்
ஏஷஹ யஹ – நமக்கு அருகிலிருக்கின்ற இந்த பிரம்மன்
ஸர்வ பூதைஹி விபா4தி – எல்லா ஜீவராசிகளாக காட்சியளிக்கின்றது
விஜானஹ – என்பதை அறிந்து கொண்டவனாக
வித்3வான் – இருக்கின்ற ஞானியானவன்
நாதிவாதீ3 ப4வதி – பேசாதவனாக ஆகின்றான்
பேசுவதற்கு விஷயம் எதுவும் இல்லாததனால் அவன் இவ்வாறு பேசாதவனாக இருக்கின்றான். மௌனமாக இருப்பான், விவாதம் செய்ய மாட்டான்.

ஆத்ம க்ரீடஹ – தன்னிடத்திலேயே மகிழ்ச்சியுடன் இருக்கின்றான்
ஆத்மரதி – தன்னிடத்திலேயே நிறைவுடன் இருக்கின்றான்.
அவன் சுகத்திற்காக வெளிவிஷயங்களை சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. வெளிவிஷயங்களை மனதிலும் நினைத்துக் கொண்டிருப்பதுமில்லை.

க்ரியவான் – செயலை செய்பவன், தியானம், வைராக்கியமாக இருத்தல் போன்ற செயல்களை செய்பவன், ஆத்மரதி என்ற செயலை செய்பவன், உலக நன்மைக்காகவும் செயல்களை செய்து கொண்டிருப்பன்
ஏஷஹ – இந்த ஞானியானவன்
பிரஹ்மவிதா3ம் – பிரம்மத்தை அறிந்தவர்களுக்குள்
வரிஷ்டஹ – மிகமிக மேலானவன், ஞான நிஷ்டையை அடைந்தவன்
ஞானிகளுக்குள்ளே அடைந்த ஞானத்திலே ஏற்றத்தாழ்வு கிடையாது. ஞானம் அடைந்தவுடன் அது பலனைக் கொடுப்பதற்கு தடையாக இருப்பவைகளெல்லாம் நீங்கப்பெற்று அதில் நிஷ்டை அடைகின்றான்

ஸ்லோகம்-05
ஸத்யேன லப்4யஸ்தபஸா ஹ்யேஷ
    ஆத்மா ஸம்யத்4க்3ஞானேன ப்3ரஹ்மசர்யேண நித்யம் |
அந்த:ஶரீரே ஜ்யோதிர்மயோ ஹி ஶுப்4ரோ
    யம் பஶ்யந்தி யதய: க்ஷீணதோஷா:  || 5 ||

சில செயல்களிலிருந்து விலக்கிக் கொள்ள வேண்டிய சாதனங்களை கூறுகிறது. அவைகள்,
1.சத்யம்,
2.தவம்,
3.ஸம்யக் ஞானம்,
4. பிரம்மச்சர்யம்
என்கின்ற நான்கு சாதனங்களாகும். இவைகளினால் பிரம்மத்தை அறிந்து கொள்ள முடியும். பொய் பேசுவதை விட்டால்தான் ஞானத்தை அடையும் தகுதியுடையவனாக இருக்கின்றான். மனதையும், இந்திரியங்களையும் ஒருமுகப்படுத்துவதுதான் மிகமேலான தவங்கள், சந்தேகமின்றி ஞானம் அடையும்வரை மனதை தூய்மையுடனும், சிரத்தையுடனும், கேட்டது போதும் என்று மனம் திருப்தி அடையும் வரை சிரவணம். பிரம்மச்சர்யம்

ஏஷஹ ஆத்மா – இந்த ஆத்மஞானமானது
சத்யேன – சத்யம என்ற சாதனத்தால்
லப்யதே – அடையக்கூடியது
தபஹ – தவத்தினாலும் அடையப்படுதல்
ஸம்யக் ஞானேன – சாஸ்திரத்தை கேட்டல் (சிரவணம்), சிரத்தையுடனும், மனம் ஒருமுகத்தோடு கேட்டல்
பிரம்மச்சர்யம் – ஒழுக்கமான வாழ்தல்
நித்யம் – இவைகள் எப்பொழுதும் கடைப்பிடிக்க வேண்டும். இதன் மூலம் ஆத்ம ஞானத்தை அடைதல்
அந்த: ஶரீரே – சரீரத்தினுள் ( உடலுக்குள்ள மனதிலேயேதான் சிதாபாஸனாக ஆத்மா இருக்கிறது )
ஜ்யோதிர்மயஹ – ஞான ஸ்வரூபமாக இருக்கிறது
ஷூப்3ரஹ – எப்பொழுதும் தூய்மையானது
யதயஹ – இந்த ஞானத்தை அடைய முயற்சி செய்பவர்கள் இங்கு கூறப்பட்ட சாதனங்களை கடைபிடிக்கின்றவர்கள்
யம் பஷ்யந்தி – இந்த ஆத்மஸ்வரூபத்தை அறிகிறார்கள்
க்ஷீண தோ3ஷா – அந்தகரணத்திலுள்ள அசுத்தங்கள் நீங்கப்பெற்றவர்கள், அந்தகரண தூய்மையடைந்தவர்கள்

ஸ்லோகம்-06
ஸத்யமேவ ஜயதே நாந்ருதம் ஸத்யேன பந்தா2 விததோ தேவயான: |
யேனாக்ரமந்த்ய்ருஷயோ ஹ்யாப்தகாமா யத்ர தத்ஸத்யஸ்ய பரமம் நிதா4னம் ||6||

ஸத்யம் ஏவ ஜயதே – சத்யம் மட்டும் வெல்கிறது
மூன்று காலத்திலும் மாறாது இருப்பது அதுவே சத்யம். இங்கு குறிப்பிடுவது விவகார ஸத்யம். இது ஒருபடியாக குறிப்பிடப்படுகிறது. சத்தியத்தை பின்பற்றுபவன் வெற்றி அடைவான்.

ந அந்ருதம் – பொய் என்றும் தோற்றுவிடும், வெற்றி பெறாது.
சத்யேன விததஹ – ஸத்யம் என்ற சாதனமானது பிரம்மலோகத்திற்கே அழைத்துக் செல்கின்றது.
தேவயானஹ பந்தா4ஹா – சுக்லகதி – பிரம்மலோகத்திற்கு அழைத்து செல்லும் பாதை
ரிஷியஹ – உபாஸனை செய்கின்ற ரிஷிகள்
யேன அக்ரமந்த்ய – செல்லும் பாதையிலேதான்
ஆப்தகாமா – ஓரளவு ஆசையை நீக்கியவர்கள்
யத்ர – எந்த லோகத்தில்
ஸத்யஸ்ய – சத்தியம் என்ற சாதனையால்
பரமம் நிதானம் அஸ்ய – மேலான பிரம்மன் இருக்கின்றான்
லௌகீக வாழ்க்கையிலும், ஆன்மீக வாழ்க்கைக்கும், ஆரோக்கியமான மனதுதான் முக்கியம்

ஸ்லோகம்-07
ப்3ருஹச்ச தத்3தி3வ்யமசிந்த்யரூபம் ஸூக்ஷ்மாச்ச தத்ஸூக்ஷ்மதரம் விபா4தி |
தூராத்ஸுதூ3ரே ததி3ஹாந்திகே ச பஶ்யத்ஸ்விஹைவ நிஹிதம் குஹாயாம் ||7||

ப்3ருஹச்ச – எல்லாவிடத்திலும் வியாபித்திருக்கின்ற ஸ்வரூபம்,பூரண ஸ்வரூபம்
த்வயம் – ஸ்வயம் பிரகாசம், ஸ்வயம் ஜ்யோதி, புலன்களால் அறியப்படாதது.
அசிந்த்யரூபம் – மனதினால் அறியமுடியாது, தர்க்கத்தினாலோ, அனுமானத்தினாலோ அறியமுடியாது, யுக்தியினாலும் அறிய முடியாது
ஸூக்ஷ்மாச்ச தத் ஸூக்ஷ்மதரம் – நுண்ணியத்தைக் காட்டிலும் நுண்ணியமானது
விபா4தி – விதவிதமான பிரமாணங்களுடன் காரியமாக இருக்கிறது. சூரிய, சந்திரன் இவைகளை பிரகாசிக்கின்றது.
தூராத்ஸுதூரே – அக்ஞானிகளுக்கு வெகு தொலைவில் இருக்கிறது
தத் இஹ அந்திகே – ஆனால் அதுவே ஞானிகளுக்கு மிக அருகிலும் இருக்கிறது
ஆத்மா தூரத்திலும் இல்லை, அருகிலும் இல்லை. இது நானாக இருப்பதால் இவ்வாறு உபநிஷத் கூறுகிறது.
பஶ்யந்தி – ஜீவர்களிடத்தில்
இவ ஏஹ – இங்கேயே
கு3ஹா – புத்தியிலே ( மனதில் )
நிஹிதம் – வெளிப்படுகிறது. அறியப்படுகிறது.

ஸ்லோகம்-08
ந சக்ஷுஷா க்3ருஹ்யதே நாபி வாசா
   நான்யைர்தே3வைஸ்தபஸா கர்மணா வா |
ஞானப்ரஸாதே3ன விஶுத்3த4ஸத்த்வஸ்ததஸ்து
   தம் பஶ்யதே நிஷ்கலம் த்4யாமான: || 8 ||

ந சக்ஷுஷா க்ருஹ்யதே – கண் என்ற இந்திரியத்தால் ஆத்ம தத்துவத்தை அறிந்து கொள்ள முடியாது
நாபி வாசா – வாக்கினாலும், இந்த பரம்பொருளை அறிந்து கொள்ள முடியாது. கர்மேந்திரியங்களாலும் இதை அறிந்து கொள்ள முடியாது
ந அன்யைஹி தே3வைஹி – மற்ற இந்திரியங்களாலும் அறிய முடியாது. மனதினாலும் அடையமுடியாது
பிரத்யக்ஷ பிரமாணத்தால் அறிய முடியாது. நேரிடையாக இதை விளக்க முடியாது. லட்சணையாகத்தான் விளக்க முடியும். அனுமானத்தாலும், சொல்லாலும் விளக்க முடியாது, அடைய முடியாது
ந தபஹ – தவத்தாலும் அடைய முடியாது
கர்மணா வா – கர்மங்களினாலும் அடைய முடியாது, அறிய முடியாது
ஞானப்ரஸாதே3ன – இங்கு ஞானம் என்பதற்கு புத்தி என்று அர்த்தம் கொள்ள வேண்டும், புத்தியுடைய பிரகாசத்தினால் அமைதியடைவதாலும், கருணையினால் புத்திக்கு ஆத்மாவை தெரிந்து கொள்ளும் சக்தி இயற்கையாக இருந்தாலும், வெளி விஷயங்களிலுள்ள ராக-துவேஷ என்ற தோஷத்தினல் பாதிக்கப்பட்டு ஆத்மாவை அறியும் சக்தி இழந்து விடுகிறது. (கலுமிஷம் – அழுக்கடைந்து விட்டது). புத்தி அசைவற்றதும், தூய்மையானதாகவும் இருந்தால்தான் ஆத்மாவை அறிய முடியும்.
புத்தியினுடைய காரியம் – நிச்சயம் செய்வது
மனதினுடைய செயல்கள் – சந்தேகத்துடன் இருத்தல், அலைபாய்தல், உணர்ச்சிகளை உடையது
புத்தியுடைய தூய்மை புருஷார்த்த நிச்சயம், அப்படி நிச்சயம் செய்த புத்தியானது தூய்மையானதாகிறது.  நிச்சயித்த அந்தப்பாதையில் கவனம் சிதறாமல் லட்சியத்தை நோக்கி இருத்தல், அசைவற்ற இருத்தல்
விஶுத்3த4  ஸத்வம் – தூய்மையான மனதை அடைந்து விட்டவனாக சூட்சுமமான புத்தியால்தான் பிரம்மத்தை அறிய முடியும்.  ஏனென்றால் ஆத்ம தத்துவமும் சூட்சுமமாக இருப்பதால்
ததஹ – இந்த தகுதியை அடைந்ததற்கு பிறகு
தம் – அந்த ஆத்மாவை
பஶ்யதே – அறிகின்றான்
நிஷ்கலம் – பூரணமான, முழுமையான பிரம்ம தத்துவத்தை
த்4யாயமானஹ – விசாரம் செய்தவனாக இருப்பவன் அறிகின்றான்

ஸ்லோகம்-09
ஏஷோSணுராத்மா சேதஸா வேதி3தன்யோ
   யஸ்மின்ப்ரண: ப்ரஞ்சதா4 ஸம்விவேஶ |
ப்ராணைஶ்சித்தம் ஸர்வமோதம் ப்ரஜானாம்
   யஸ்மின்விஶுத்3தே4 விப4வத்யேஷ ஆத்மா || 9 ||

ஏஷஹ – இந்த ஆத்ம ஸ்வரூபம்
அணுஹு ஆத்மா – மிக மிக சூட்சுமமானது, இப்படிபட்ட இந்த ஆத்மா
சேதஹ – புத்தியினால் , மனதினால்
வேதி3தன்யஹ – அறியப்படும் அருகதையை உடையது
யஸ்மின் – இந்த ஸ்தூல சரீரத்தில்
ப்ராணஹ – நம் பிராணனானது
பஞ்சதா – ஐந்துவிதமாக
ஸம்விவேஶ – பிரவேசித்தள்ளது
அப்படிபட்ட உடலில் இந்த மனமும் இருக்கின்றது. இந்த சைதன்யத்தினால்தான் அனைத்தும் வியாபிக்கப்பட்டுள்ளது.
பிராணைஹ ஸர்வ ஸித்தம் ப்ரஜானாம் – எல்லா ஜீவராசிகளினுடைய மனங்களும் பிராணனுடன்
ஓதம் – ஆத்மாவால் இணக்கப்பட்டிருக்கிறது
யஸ்மின் விஶுத்தே4 – எந்த தூய்மையான மனதில்
ஏஷ ஆத்மா – இந்த ஆத்மா
விப4வதே – நன்கு தெளிவாக தெரிய வருகிறது

ஸ்லோகம்-10
யம் யம் லோகம் மனஸா ஸம்விபா4தி
    விஶுத்3த4ஸத்வ: காமயதே யாம்ஶ்ச காமான் |
தம் தம் லோகம் ஜயதே தாஶ்ச
    காமாம்ஸ்தஸ்மாதா3த்மக்ஞம் ஹ்யர்சய்த்3 பூ4திகாம: || 10 ||

விசுத்த ஸத்வ – ஞானியானவன்
யம் யம் லோகம் மனஸ ஸம்விபா4தி – எந்தெந்த லோகத்தை மனதினால் அடைய விரும்புகிறானோ
யாஶ்ச காமயதே – எந்த பொருளை அடைய விரும்புகின்றானோ
தம் தம் லோகம் ஜயதே – அந்தந்த லோகங்களை அடைகின்றான்
தஸ்மாத்3 – இந்த பெருமைகள் இருப்பதால்
ஆத்மக்3ஞம் – ஞானியை
பூ4த்காம அர்சயேத்3 – அனாத்மாவை விரும்புவர்கள் வணங்க வேண்டும்
இங்கு ஞானியை ஈஸ்வரனாகவே வர்ணிக்கப்படுகிறது

—-oo000oo—-

——————————————————————————————————————————

அத்தியாயம்–03 / பகுதி-2

ஸ்லோகம்-01
ஸ வேதை3தத்பரமம் ப்4ரஹ்ம தா4ம
        யத்ர விஶ்வம் நிஹிதம் பா4தி ஶுப்4ரம் |
உபாஸதே புருஷம் யே ஹ்யாகாமாஸ்தே
        ஶுக்ரமேதத3திவர்தந்தி தீ4ரா || 1 ||

யேஹி அகாமாஹ – யார் ஆசையற்றவர்களாக இருக்கிறார்களோ
புருஶம் உபாஸதே – ஞானியை வழிபட வேண்டும். உபாஸனை செய்ய வேண்டும். அவரிடம் சென்று மோட்சத்தை அடைவதற்கான உபதேசத்தை கேட்க வேண்டும்.  பணிவுடனும், சிரத்தையோடும் அவரை அணுக வேண்டும்.
ஏதத் பரம தா4ம ப்ரஹ்மம் – இந்த மேலான இருப்பிடமாக உள்ள பரபிரம்மத்தை
ஸஹ வேத – அந்த ஞானி அறிந்துள்ளான்
யத்ர – எந்த பிரம்மத்தை
விஶ்வம் நிஹிதம் – இந்த உலகம் சார்ந்திருக்கின்றதோ
ஶுப்4ரம் பா4தி – அந்த பிரம்மம் மிகத்தெளிவாக பிரகாசித்துக் கொண்டிருக்கிறது, ஞான ஸ்வரூபமாக இருந்து கொண்டிருக்கின்றது.
தே தீ4ராஹா – ஞானியை குருவாக அடைந்த தீரர்கள்
ஶுக்ரம் – பிறப்பு-இறப்பை
அதிவர்தந்தே – கடந்து செல்கின்றார்கள்

ஸ்லோகம்-02
காமான்ய: காமயதே மன்யமான:

ஸமானம் வ்ருக்ஷம் பரிஷஸ்வஜாதே தயோரன்ய: |

பிப்பலம் ஸ்வாத்3வத்த்யனஶ்னன்னன்யோ அபி4சாகஶீதி || 1 ||

ஏற்கனவே ஜீவ-பிரம்ம ஐக்கியம் விளக்கப்பட்டது. அதில் நிலை பெற நிதித்யாஸனம் தேவை என்றும் கூறப்பட்டது. அந்த நிதித்யாஸனத்தை நன்றாக செய்வதற்கு தேவையான சாதனங்கள் என்னென்ன என்பதை இங்கு கூறப்படுகிறது. இவ்வாறு சங்கராச்சாரியர் கூறியிருக்கிறார்

ஸ காமபி4ர்ஜாயதே தத்ர தத்ர |
பர்யாப்தகாமஸ்ய க்ருதாத்மனஸ்து
இஹைவ ஸர்வே ப்ரவிலீயந்தி காமா: || 2 ||

முமுக்ஷூக்கள் ஆசைகளைத் துறக்க வேண்டும். தியாகம் செய்ய வேண்டும்.
யஹ – எவனொருவன்
காமான் மன்யமானஹ காமயதே – பார்த்த விஷயங்களையும், கேட்ட விஷயங்களையும் சிந்தித்துக் கொண்டு ஆசைப்படுகின்ற, விஷயங்களில் கிடைக்கும் சுகத்தை சிந்தித்துக் கொண்டிருக்கின்ற
ஸஹ – அவன்
காமபிஹி – ஆசைகளுடன், அதனோடு சம்பந்தப்பட்ட விஷயங்களோடு
ஜாயதே – பிறக்கின்றான்
தத்ர தத்ர – அந்தந்த இடத்தில்
தர்ம-அதர்ம பிரவிருத்தி ஹேது – தர்மத்தையும், அதர்மத்தையும் செய்வதற்கு காரணமான ஆசையுடனும், விஷயத்துடனும் ஒருவன் பிறக்கின்றான்
பர்யாப்த காமஹ – எல்லா ஆசைகளையும் துறந்தவன், ஆசைகளனைத்தும் நீங்கிய  நிலையிலிருப்பவன்
க்ருதாத்மனஹ – தனக்கு செய்ய வேண்டியதை எல்லாம் செய்து முடித்தவன். தன்னைப்பற்றி அறிய வேண்டியதை அறிந்து கொண்டவன். அதை அறிய செய்ய வேண்டியதெல்லாம் செய்தவன்
ஸர்வே காமாஹா – எல்லா ஆசைகளும்
இஹைவ – உயிருடன் இருக்கும்போது, இங்கேயே
ப்ரவிலீயதே – அழிந்து விடுகிறது
ஆசைகளைத் தியாகம் செய்வது சாதனம்.  ஞானம் அடைந்தவுடன் ஆசைகள் அழிந்து விடுகிறது பலனாகும்.  ஆசைகளை துறந்தாலும் அதன் வேர் இன்னும் இருந்துக் கொண்டு இருக்கும்.  ஆசையை துறந்தாலும் அதை தியாகம் செய்து இருக்கிறோம் என்ற நினைவு இருந்து கொண்டிருக்கும்.

ஸ்லோகம்-03
நாயமாத்மா ப்ரவசனேன லப்4யோ
    மேத4யா ந பஹூனா ஶ்ருதேன |
யமேவைஷ வ்ருஷுதே தேன லப்4யஸ்தஸ்யைஷ
    ஆத்மா விவ்ருணுதே தனூம் ஸ்வாம் || 3 ||

ஆத்மாவை அறிந்து கொள்வதை லட்சியமாக கொள்வது ஆத்மவரணம் என்று குறிப்பிட்டிருக்கிறது.  ஈஸ்வரனின் அனுகிரகத்தைப் பெற முயற்சிக்க வேண்டும்.

ஆத்மவரணம் – ஆத்மாவை தேர்ந்தெடுத்தல்
அயம் ஆத்மா – இந்த ஆத்ம ஞானத்தை
ப்ரவசனம் – வேதத்தை ஓதுவதனால், பிரவசனத்தினால், வேத சாஸ்திரத்தை ஸ்வரத்துடன் அத்யயனம் செய்தாலும்
ந மேத4யா – மனதில் ஞாபகம் வைத்துக் கொள்கின்ற சக்தி, கிரந்தத்தின் அர்த்தத்தை  மனதில் வைத்துக் கொள்கின்ற சக்தி, உபநிஷத் மனப்பாடம் செய்தாலும்
ந பஹுனா ஶ்ருதேன – மீண்டும், மீண்டும் கேட்பதனாலும்.
ந லப்யதே – அடைய முடியாது
முமூக்ஷுத்வம் இல்லாமல் மேற்கூறியவைகள் பயனற்றது. ஆத்ம ஞானத்திற்கு அடைவதற்கு பயன்படாது.

யம் ஏவ ஏஷஹ வ்ருணுதே – யார் இந்த ஆத்மாவை மட்டும் லட்சியமாக கொள்கின்றானோ, தேர்ந்தெடுக்கின்றானோ,
தேன லப்யஹ – அவரால் அடையப்படும்
ஏஷஹ – இந்த ஆத்மா – (இதுதான் புருஷார்த்தமாக தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்)
யம் ஏவ வ்ருணுதே – யாரை தேர்ந்தெடுக்கின்றதோ
தேன லப்யஹ – அவனால் அடையப்படுகிறது.
யார் ஆத்மாவை தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்களைத்தான் ஆத்மாவும் தேர்ந்தெடுக்கிறது..  ஆத்மா தேர்ந்தெடுத்ததில் ஈஸ்வரனின் அனுகிரகத்தை பெற்ற
தஸ்ய – அந்த அதிகாரிக்கு, அவனுக்கு
ஏஷஹ ஆத்மா – இந்த ஆத்மாவானது
ஸ்வாம் தனும் – தன்னுடைய ஸ்வரூபத்தை
விவ்ருணுதே – வெளிப்படுத்துகிறது, அறிய வைக்கிறது

ஸ்லோகம்-04
நாயமாத்மா ப3லஹீனேன லப்4யோ ந ச
    ப்ரமாதாத்தபஸோ வாப்யலிங்கா3த் |
ஏதைருபாயைர்யததே யஸ்து வித்3வாம்ஸ்
    தஸ்யைஷ ஆத்மா விஶதே ப்ரஹ்மதா4ம || 4 ||

இதில் மூன்று சாதனங்கள் சொல்லப்படுகிறது. இவைகளை ஆத்மவரணத்துடன் செய்ய வேண்டும். அவைகள்,
1.  மனோபலம்,
2.  அப்பிரமாத (கவனமாக இருத்தல்),
3.  .வைராக்கியத்துடன் கூடிய ஞானம்

மனோபலம்:
இதை இரண்டு விதத்தில் அடையலாம். உடல் சக்தி, நல்ல ஆகாரம் தேவையற்றவைகளை சாப்பிடாமல் இருத்தல், அதேபோல மனதிற்கு நல்ல விஷயங்களை கொடுக்க வேண்டும். சத்யம், சம, தம இவைகளை கடைப்பிடித்து கொண்டிருந்தாலும், நற்பண்புகளை பின்பற்றுவதாலும் அடையப்படும். காம-க்ரோதம், பேராசை போன்ற தீய பண்புகளை உடைய மனிதர்களிடம் கோபப்படாமல் பரிதாபப்பட வேண்டும். ஆத்மஞான நிஷ்டை அடைந்ததும், மனோபலம் உறுதிப்படும். இந்த ஜகத் மித்யா என்று துறந்து விடமுடியும்.
அயம் ஆத்மா – இந்த ஆத்மாவானது
பலஹீன – மன பலமற்றவானல்,
ந லப்யஹ – அடைய முடியாது

கவனமாக இருத்தல்
விஷய ஸங்க நிமித்தி பிரமாதயா – நம்மை சுற்றியுள்ள பொருட்களில், விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். இல்லையென்றால் அதனால் ஈர்க்கப்பட்டு திசைமாறி போய்விடுவோம். புகழ், பொருட்கள் இவைகளை சேர்ப்பதினால் நம் லட்சியத்திலிருந்து விலகிவிடுவோம்.
பிரமாதாத் – கவனக்குறைவு இல்லாமல் இருக்க வேண்டும்
அலிங்காத் தபஸ – வைராக்கியம் இல்லாத ஞானத்தினல் ஆத்மாவை அடைய முடியாது

யஹ வித்வான் – இந்த முமூக்ஷுவானவன்
ஏதைஹி உபாயைஹி – மேலே சொன்ன மூன்று உபாயத்துடன்
யததே – முயற்சி செய்ய வேண்டும்
தஸ்ய ஏஷ ஆத்மா – இந்த அவனுடைய ஆத்மா
ப்ரஹ்ம தாமம் விஷதே – மேலான இருப்பிடமான பிரம்மத்தை சென்று அடைகிறது

ஸ்லோகம்-04
ஸம்ப்ராப்யைனம்ருஷயோ ஞானத்ருப்தா; க்ருதாத்மானோ வீதராகா3: ப்ரஶாந்தா: |
தே ஸர்வக3ம் ஸர்த: ப்ராப்ய தீ4ரா யுக்தாத்மான: ஸர்வமேவாவிஶந்தி || 5 ||

ஸம்ப்ராப்ய ஏனம் – இந்த ஆத்ம தத்துவத்தை முழுமையாக அடைந்த
ரிஷயஹ – ரிஷிகள், ஞானிகள்
ஞானத்ருப்தாஹா– ஞானத்தினால் மனதிருப்தியை, மன நிறைவை அடைந்தவர்கள். மற்ற விஷயங்களை அறிவதால் ஆசைகள் ஏற்படும், ஆசை நிறைவேறாவிட்டால் கோபமும், வெறுப்பும் வரும், ஆத்ம ஞானம் மட்டும் இருக்கின்ற ஆசைகள் ஒழிந்துவிடும். மனதில் திருப்தி வந்துவிடும்.
க்ருதார்மானஹ – ஆத்மாவை பூரணமாக அறிய வேண்டியவற்றை செய்து பரமாத்மாவாக, பிரஹ்ம ஸ்வரூபமாக மாறிவிட்டார்கள்.
வித ராகாஹா – ஆசை முதலிய தீய குணங்கள் அனைத்தும் அவனை விட்டு சென்றுவிட்டன.
ப்ரஶாந்தாஹா – இந்திரியங்களெல்லாம் அமைதியை அடைந்து விட்ட நிலையில் உள்ள
தே – அவர்கள்
ஸர்வகம் – எல்லா இடத்திலும் வியாபித்துள்ள ஆத்மாவை
ஸர்வதஹ ப்ராப்ய – முழுமையாக அடைந்து இருப்பவர்கள்
தீரா – தீரர்கள்
யுக்தாத்மான: – ஆத்மாவுடன் நன்கு பொருந்திய மனதுடையவர்களாக, மனவமைதியுடையவர்களாக
ஸர்வம் ஏவ ஆவிஷந்தி – அனைத்தையும் வியாபிக்கிறார்கள்
மரணத்திற்கு பிறகு பிரம்ம ஸ்வரூபமாக மாறிவிடுகிறார்கள். உயிரோடிருக்கும் போது உலகத்திலுள்ள அனைத்தும் நானென்று அபிமானத்துடன் இருப்பார்கள்

ஸ்லோகம்-06
வேதாந்தவிக்3ஞானஸுநிஷ்சிதார்தா2: ஸந்யாஸயோகா3த்3யதய: ஶுத்3த4ஸத்த்வா: |
தே ப்3ரஹ்மலோகேஷு பராந்தகாலே பராம்ருதா: பரிமுச்யந்தி ஸர்வே || 6 ||

யத் யஹ – இவ்வாறு முயற்சி செய்பவர்கள்
ஸந்யாஸ யோக – சந்நியாசம் என்கின்ற சாதனம், ஞானயோகம் என்ற சாதனத்தை பயன்படுத்துகிறார்கள்.
ஶுத்3த4 ஸத்த்வாஹா – தூய்மையான மனம் அடைகிறார்கள். ராக-துவேஷம் நீங்கிய தூய்மை, எல்லா அசுத்தங்களையும் நீக்குகின்ற அறியாமை நீங்குதல், அதனால் அடையப்பட்ட ஞானத்தை, பரம்பொருளை
அனிஶ்சித – நிச்சயம் செய்யப்பட்டது
தே பராம்ருதஹ – அவர்கள் முக்தர்களாக மாறினார்கள். உயிரோடிருக்கும் போதே மரணமற்ற நிலையை அடைகிறார்கள். மேலான அம்ருதத்தை அடைந்தார்கள்.
பராந்தகாலே – கடைசிகாலத்தில், மரணமடைந்த நேரத்தில்
பிரம்மலோகேஷு – பிரம்மத்திலே
ஸர்வே பரிமுச்யந்தி – எல்லோரும் ஒன்றாகி விடுகிறார்கள், கலந்து விடுகிறார்கள்
ஸர்வே பரிமுச்யந்தி – எல்லோரும் ஒன்றாகி விடுகிறார்கள், கலந்து விடுகிறார்கள்

ஸ்லோகம்-07
க3தா: கலா: பஞ்சதஶ ப்ரதிஷ்டா தே3வாஶ்ச ஸர்வே ப்ரதிதே3வதாஸு |
கர்மாணி விஞானமயஶ்ச ஆத்மா பரேSவ்யயே ஸர்வம் ஏகீப3வந்தி || 7 ||

சஞ்சித கர்மத்திலிருந்து வெளிவந்து செயல்பட்டு கொண்டிருப்பது பிராரப்த கர்மம், புதிதாக சேர்க்கப்பட்ட ஆகாமி கர்மபலனில் சேர்க்கப்படுகிறது..ஞானி விஷயத்தில் சஞ்சித கர்மமும், ஆகாமி கர்மங்களும் அழிந்துவிடுகின்றன. மரணமடையும்போது ஸ்தூல சரீரம்தான் அழிகிறது. அக்ஞானியின் சூட்சும சரீரம் வெளிப்படுகின்ற பிராரப்த கர்மத்திற்கேற்றவாறு வேறுடலை எடுக்கின்றது. ஞானியின் சூட்சும சரீரம் அந்தந்த சூட்சும பூதங்களில் கலந்து விடுகின்றது. அகங்காரம் அழிந்தவுடன் சஞ்சித, ஆகாமி கர்மங்கள் அழிந்து விடுகின்றது.

க3தா பஞ்சத3ஶா கலா: – கலந்து விடுகிறது பதினைந்து அம்சங்கள்
பிரதிஷ்டாஹா – அந்தந்த தேவதைகளை அடைந்து விடுகிறது.
ஸர்வே தேவா: – எல்லா இந்திரியங்களும்
ப்ரதிதேவதா3ஸு – அந்தந்த இந்திரிய தேவதைகளிடம் சென்று விடுகின்றது
கர்மாணி – சஞ்சித, ஆகாமி கர்மங்களும்
விக்ஞானமய ஆத்மா – சிதாபாசனும்
பர அவ்யயே – அழியாத பரம்பொருளிடத்தில்
ஸர்வே ஏகி ப4வந்தி – எல்லாமும் ஒன்றாக கலந்து விடுகின்றது

ஸ்லோகம்-08
யதா2 நத்4ய: ஸ்யந்தமானா: ஸமுத்3ரேSஸ்தம் க3ச்ச2ந்தி நாமரூபே விஹாய |
ததா2 வித்3வான் நாமரூபாத்3விமுக்த: ப்ராத்பரம் புருஷமுபைதி தி3வ்யம் || 8 ||

விதவிதமான நதிகள் கடலில் கலந்து விட்டால் தங்களது பெயர்களை இழந்து கடலோடு ஒன்றாகி விடுகிறது
ஸ்யந்தமானா: – ஓடிக்கொண்டிருக்கும்
யதா2 நதியா – எப்படி நதிகளானது
ஸமுத்3ரே அஸ்தம் க3ச்ச2ந்தி – சமுத்திரத்தில் ஒன்றாகி
நாமரூபே விஹாயே – நாம ரூபத்தை இழந்து விடுகிறது
ததா2 வித்வான் – அவ்விதமே ஞானியானவன்
நாம ரூபாத் விமுக்த: – நாம ரூபத்திலிருந்து விடுதலையடைகிறான். இது ஜீவன் முக்தியை குறிக்கிறது. உடல் மீதுள்ள அபிமானத்தை தியாகம் செய்தவனாகிறான்.
பராத்பரம் – மாயைக் காட்டிலும் மேலான
த்வயம் புருஷம் உபைதி – சுய பிரகாசமான பிரம்மத்தை அடைகின்றான்

பானைகளை நாம ரூபங்களாக பார்க்கும்போது அதில் வேற்றுமைகளை பார்க்கிறோம்.  களிமண்ணை பார்க்கும் போது ஒன்றைத்தான் பார்க்கிறோம். ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தைத்தான் கவனிப்போம். அதனால் நாமரூபத்தை பார்க்கும்போது  அதிஷ்டமான களிமண்ணை மறந்து விடுகிறோம்.  பிறகு களிமண் என்ற பார்வையில் நமக்கு எல்லாமே ஒன்றுதான் என்று விளங்குகிறது. இது ஜீவன் முக்தியை குறிக்கிறது.  நாம ரூபத்திலிருந்து விடுதலையடையும் போது இறுதி காலத்தில் இதற்கு அதிஷ்டானமான பிரம்மத்தில் கலந்து விடுகின்றான்.

ஸ்லோகம்-09
ஸ யோ ஹ வை தத்பரமம் ப்3ரஹ்ம வேத3 ப்ரஹ்மைவ
    ப4வதி நாஸ்யாப்ரஹ்மவித்குலே ப4வதி |
தரதி ஶோகம் தரதி பாப்மானம் கு3ஹாக்3ரந்தி4ப்4யோ
    விமுக்தோSம்ருதோ ப4வதி || 9 ||

ஸஹ யஹ – எவனொருவன்
தத் பரமம் ப்ரஹ்ம வேத3 – அந்த மேலான பிரம்மத்தை அறிகின்றானோ
ப்ரஹ்ம ஏவ ப4வதி – அவன் பிரம்மனாகவே ஆகின்றான்
அறியாமைதான் நமக்கு பிரம்மத்திற்கு உள்ள இடைவெளி எனவே அறியாமை நீங்கினால் நாம் பிரம்மத்தோடு ஐக்கியமாகி விடுவோம். நாம் ஏற்கனவே பிரஹ்ம ஸ்வரூபமாக இருப்பதால்தான் இது சாத்தியமாகிறது.

ந அஸ்ய அப்ரஹ்ம வித்குலே ப4வதி – பிரம்மத்தை அறியாதவர்கள் இவன் பரம்பரையில் யாரும் இருக்கமாட்டார்கள்
தரதி ஶோகம் – சோகத்தை கடக்கின்றான், மானஸ சந்நியாஸம், மனவேதனைகள்
தரதி பாப்மானம் – பாவ-புண்ணியங்களை கடந்து செல்கின்றான்
கு3ஹ க்ரந்தி – மனதிலிருக்கின்ற முடிச்சுக்களை
விமுக்தஹ – அறுக்கப்பட்டு விடுதலை அடைகின்றான்
அம்ருதஹ – மரணமற்ற நிலையை அடைகின்றான்

ஸ்லோகம்-10
க்ரியாவந்த: ஶ்ரோத்ரியா ப்ரஹ்மநிஷ்டா;
    ஸ்வயம் ஜுஹ்வத ஏகர்ஷிம் ஶ்ரத்3த4யந்த: |
தேஷாமேவைதாம் ப்ரஹ்மவித்3யாம் வதே3த
    ஶிரோவ்ரதம் விதி4வத்3யைஸ்து சீர்ணம் || 10 ||

ததேதத் –  கீழ்கண்ட மந்திரம்
அப்3ரூதம் – யாருக்கு சொல்ல வேண்டும்
க்ரியாவந்தஹ – கர்மயோகத்தில் இருப்பவர்கள், தர்மப்படி வாழ்பவர்கள்.
கர்மயோகத்தினால் மனம் தூய்மையடையும், இதனால் மனதிலுள்ள விருப்பு, வெறுப்புக்கள் நீங்கிவிடுகின்றது.  இதன் தொடர்ச்சியாக விவேக, வைராக்கியத்தை அடையச் செய்யும்
ஶ்ரோத்ரியஹ – வேத சாஸ்திரத்தை படித்தவர்கள், சாஸ்திரத்தில் சிரத்தை உடையவர்கள்
பிரஹ்மநிஷ்டா – சகுண பிரம்மத்தில் மனதை நிலைபெற்றிருப்பவர்கள்
ஈஸ்வரனிடம் பக்தியுடையவர்கள், உபாஸனை செய்தவர்கள். இதன் பலனாக சம, தமத்தை அடைந்திருப்பார்கள்
ஶ்ரத்3த4யந்தஹ – உபநிஷத் உபதேசத்தில் நம்பிக்கை வைத்திருப்பவர்கள்
இது நேரிடையாக ஞானத்தை கொடுக்கும் கருத்து என்று முழுமையாக நம்பிக்கை வைக்க வேண்டும்.
ஏகர்ஷின் ஸ்வயம் ஜுஹ்வத –  ஏகர்ஷின் என்ற யாகத்தை செய்துள்ளவர்களுக்கு
ஷிரோவிரதம் – இது ஒருவிதமான விரதம், இதை
விதி4வத் சீர்ணம் – சரியாக செய்துள்ளவர்களுக்கு
தேஷாம் ப்3ரஹ்ம வித்யாம் – அவர்களுக்கு இந்த பிரம்ம வித்யாவை
வதே3த – உபதேசம் செய்ய வேண்டும்.
ஸ்லோகம்-10
ததே3தத்ஸத்யம்ருஷிரங்கிரா: புரோவாச நைதத3சீர்ணவ்ரதேSதீ4தே |
நம: பரமக்ரிஷிப்4யோ நம: பரமக்ருஷிப்4ய: || 11 ||

ததே3தத்ஸத்யம் – இதுவரை சொல்லப்பட்ட உபதேசங்கள் யாவும் உண்மையானது
அங்கிரஸஹ புரா உவாச – அங்கிரஸ் என்ற ரிஷியால் வெகு காலத்திற்கு முன்பே சொல்லப்பட்டது
ந அதீதஹ – தகுதியில்லாதவர்கள் இதைப்படிக்க வேண்டாம்
நமஹ பரம ரிஷிப்4யஹ – இந்த ஞான பரம்பரையில் வந்தவர்களுக்கு நமஸ்காரம் செய்யப்படுகிறது

——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மா முனிகள் கண்ட வேதாந்த சார நிஷ்கர்ஷம் -ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் —

May 27, 2022

ஸ்ரீ சைல தயா பாத்ரம் தீ பக்த்யாதி குணார்ணவம்
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முனிம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் முதலாக -ஸ்ரீ எம்பெருமானார் நடுவாக -ஸ்ரீ மா முனிகள் ஈறாக -பூர்வாச்சார்ய குரு பரம்பரை
ஸ்ரீ பதரிகாஸ்ரமத்தில் திருமந்திரத்தை ஸ்வ அம்ச பூதனான நரனுக்கு நாராயணன் பிரகாசிப்பித்தான்
அவனே த்வயத்தை ஸ்ரீ விஷ்ணு லோகத்தில் பிராட்டிக்கு பிரகாசிப்பித்தான்
அவனே சரம ஸ்லோகத்தை திருத்தேர் தட்டிலே ஸ்வ ஆஸ்ரிதனான அர்ஜுனனுக்குப் பிரகாசிப்பித்தான்

அவனே தென்னாடும் வடநாடும் தொழ நின்ற திருவரங்கம் திருப்பதியிலே கோயில் கொண்டு

தெளி விசும்பு திருநாட்டை விடத் திரு உள்ளம் உகந்து பெரிய பெருமாளாய்
செங்கோலுடைய திருவரங்கச் செல்வனான திருமேனியோடே கூடியவனாய்

ரஹஸ்ய த்ரயத்தையும் ஒரு சேர ஸ்வ மஹிஷியான பெரிய பிராட்டியாராம் ஸ்ரீ ரெங்க நாச்சியாருக்கு உபதேஸிக்க
தத் சிஷ்ய ப்ரசிஷ்ய பரம்பரையாக நம் அளவும் ரஹஸ்ய த்ரயம் வர பிராப்தம் ஆகிறது –

இவ்வர்த்தம்
புனரபி ச ஏவ பகவான் ஸ்ரீ ரெங்கநாத ஸ்வ மஹிஷீ விஷ்வக்ஸேனஸ்ரீ பராங்குச நாத யமுனா ப்ரப்ருதி பூர்வாச்சார்ய முகேந
ஸ்ரீ ராமானுஜ ஸித்தாந்த நிஷ்ணா தேஷு ஸூத்தம் ரஹஸ்ய த்ரய ஸம்ப்ரதாயம் அவதாரயாமாஸ -ரஹஸ்ய த்ரய மீமாம்ஸ பாஷ்யத்தில் வியக்தம் –
நாயக ரத்னம் போல் எம்பெருமானார் ஸோபா வஹாராக பிரகாசிக்கிறார்

அமுநா தபநாதி ஸாயி பூம்நா யதிராஜேந நிபத்த நாயகி ஸ்ரீ -தேசிகன் திருவாக்கு

அர்வாஞ்சோ யத் பத ஸரஸி ஜத்வந்த்வம் ஆஸ்ரித்ய பூர்வே மூர்த்நா யஸ்ய அந்வய முபகதா தேஸிகா முக்திமாபு பூர்வார் திருவாக்கு –

இந்தப்பரம்பரையில் சரம ஆச்சார்யர் மா முனிகள்-பெரிய ஜீயர் -ஈட்டுப் பெருக்கர் -விசத வாக் ஸிகா மணி –

ஈடு கால ஷேபம் பெரிய பெருமாளுக்கு அருளினார் அன்றோ –
தென் அரங்கர் சீர் அருளுக்கு இலக்காகப் பெற்றார் அன்றோ-

மாநா தீநா மேய ஸித்தி -என்பர் பெரியோர் –
நம் தர்சனத்துக்கு பிரமாணங்கள் மூன்று -ப்ரத்யக்ஷம் -அனுமானம் -ஸப்தம்
ஸப்த பிரமாணமும் ஸ்ருதி ஸ்ம்ருதி மீமாம்ஸை கள் என்று மூன்று வகைப்படும் –
வேதத்தில் பூர்வபாகம் வேதம் என்றும் உத்தரபாகம் உபநிஷத் என்றும் ரஹஸ்ய த்ரயம் வேதாந்த ஸாரம் என்றும் கூறப்படும்
அந்த வேதாந்த சார நிஷ்கர்ஷம் பற்றிப் பார்ப்போம்-

—————-

அசாரம்-அல்ப ஸாரம்- ச ஸாரம் – சார தரம் த்யஜேத்
பஜேத் சார தமம் ஸாஸ்த்ரே ரத்நாகர இவாம்ருதம் -ஸ்ரீ வைகுண்ட தீஷிதீயோபாத்த வசனம் ப்ராமண பாவத்தை வஹிக்கும் –
சமுத்திரத்தில் அடங்கியுள்ள அசாராதி சதுஷ்ட்யம் த்யாஜ்யம்
சார தமம் பஞ்சமம் அம்ருதம் உபாதேயம்

ரஹஸ்ய த்ரய ஸாரத்தில் -சார நிஷ்கர்ஷ அதிகாரத்தில் -தேசிகன் இந்த ஸ்லோக அர்த்த விவரணம் செய்து அருளுகிறார் –
பாஹ்ய குத்ருஷ்டி ஸாஸ்த்ரங்கள் -அசாரம்
வேத பூர்வ பாக ஐஹிக பல -தத் சாதன ப்ரதிபாதிக பாகம் அல்ப ஸாரம்
ஆமுஷ்மிக பல தத் சாதன ப்ரதிபாதக ப்ரதேசம் ஸாரம்
ஆத்ம பிராப்தி தத் சாதன ப்ரதிபாதக பாகம் சார தரம்
பரமாத்ம பிராப்தி தத் சாதன ப்ரதிபாதக ப்ரதேசம் சார தமம் -இதுவே விவேகிக்கு உபாதேயம்-

அதிகாரம்-2-சார நிஷ்கர்ஷ அதிகாரம் –

ஸ்ருதி பத விபரீதம் ஷ்வேள கல்பம் ஸ்ருதை ச
பிரகிருதி புருஷ போக பிராபக அம்ச ந பத்ய
தத் இஹ விபூத குப்தம் ம்ருத்யுபீதா விசின்வந்தி
உபநிஷத் அம்ருத அப்தே உத்தமம் சாரமார்யா —

(வேதங்கள் காட்டும் வழிக்கு, நேர் எதிராக , அர்த்தங்களையும் வழியையும் சொல்லும் எல்லா மதங்களும்
விஷத்துக்குச் சமமானவை. வேதங்களிலும்,இவ்வுலக சௌகர்யங்களையும், கைவல்யம் என்று சொல்லப்படும்
தனது ஆத்மாவையே அனுபவிக்கும் பொருட்டுச் சொல்லப்படும் பகுதிகள் , அனுகூலமற்றவையாகும். ஆதலால், ஸம்ஸாரத்தைக் கண்டு
அச்சப்படுகிற நல்ல விவேகமுள்ளவர்கள் ,இந்த வேதத்தில், உபநிஷத்தாகிற திருப்பாற்கடலிலிருந்தும் ,முன்பு ஆசார்யர்களால்
காப்பாற்றப்பட்டு வருகிறதுமான , மிகவும் ஸாரமானதை ( ரஹஸ்யத்ரயத்தை )–இந்த அம்ருதத்தை —-மிகவும் விரும்புகிறார்கள்.)

இந்த ரஹஸ்ய த்ரயத்தில் திரு மந்த்ரம் சர்வம் அஷ்டாஷராந்த ஸ்தம்-என்கிறபடியே
தன் அர்த்தத்தை அறிய எல்லா அர்த்தங்களையும் அறிந்து தரும்படியாய் இருக்கையாலும்
சரம ஸ்லோகம் சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்று தான் சொல்லுகிற உபாயம் ஒன்றையுமே
அவலம்பிக்க சர்வ உபாய பல சித்தி உண்டாம் என்று ஸ்தாபிக்கையாலும்
த்வயம் கட ஸ்ருத்யாதிகளில் சொல்லுகிறபடியே தன்னை ஒரு கால் உச்சரித்தவனை சர்வ பிரகாரத்தாலும்
க்ருத க்ருத்யனாக்க வல்ல வைபவத்தை யுடைத்தாய் இருக்கையாலும்
ரஹஸ்ய த்ரயமே முமுஷூ வுக்கு ஆதரணீயம் –
(ஸ்ரீமதஷ்டாக்ஷரப்ரஹ்ம வித்யை ( நாரதீய கல்பம்–1–9 ) மற்றும் ஹாரீதஸ்ம்ருதி சொல்கிறது–
ஸர்வம் அஷ்டாக்ஷராந்த :ஸ்தம் –அனைத்துமே அஷ்டாக்ஷரத்தில் உள்ளது–)

அசாரம் அல்பசாரம் ச சாரம் சாரதரம் த்யஜேத்
பஜேத் சாரதமம் சாஸ்த்ரே -ஸ்தரம் -ரத்னாகர இவாம்ருதம் —

பரம புருஷார்த்தமும் தத் உபாயமும் பிரத்யஷாதி பிரமாணங்களால் அறிய ஒண்ணாத படியாலே இவற்றுக்கு
சாஸ்த்ராத் வேதின ஜனார்த்தனம் -என்றும் –
தஸ்மாத் சாஸ்திரம் பிரமாண்யம் கார்ய அகார்ய வ்யவச்திதௌ-என்றும்
சப்த ப்ரஹ்மணி நிஷ்ணாத பரம் ப்ரஹ்மாதி கச்சதி -என்றும் சொல்லுகிறபடியே சப்தமே பிரமாணம் –

(*சாஸ்த்ராத் வேதிந ஜநார்த்தனம் —–மஹாபாரதம் –உத்யோக பர்வம் கூறுகிறது -சாஸ்த்ரம் மூலமாக ஜநார்த்தனனை அறிகிறேன்
தஸ்மாத் சாஸ்த்ரம் ப்ரமாண்யம் கார்ய அகார்ய வ்யவஸ்திதொள — ஸ்ரீமத் பகவத் கீதை ( 16–24 )–
தஸ்மாச்சாஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்யாகார்ய வ்யவஸ்திதொள
ஜ்ஞாத்வா சாஸ்த்ர விதாநோக்தம் கர்ம கர்த்து மிஹார்ஹஸி
செய்யத் தக்கது , செய்யத் தகாதது, என்பதை முடிவு செய்வதில்,சாஸ்த்ரம் தான் ப்ரமாணம் –ஆகவே, சாஸ்த்ரத்தில் சொல்லப்பட்ட
முறையை அறிந்து, கர்மாக்களைச் செய்வாயாக ——
சப்தப்ரஹ்மணி நிஷ்ணாத : பரம் ப்ரஹ்மாதி கச்சதி –மஹாபாரதம்–சாந்தி பர்வம் (276–2 )
சப்தமாகிய வேதங்களை அறிந்தவன், ”ப்ரஹ்ம”த்தை—அதாவது– ஸ்ரீமந் நாராயணனை அறிந்தவன் ஆகிறான்)

அஸாரம் , அல்பஸாரம் —-விளக்கம்–

அவ்விடத்தில்
அனந்த பாரம் பஹூ வேதிதவ்யம் அல்பச்ச காலோ பகவச்ச விக்னா
யத் சார பூதம் ததுபாததீத ஹம்சோ யதோ ஷீரம் இவ அம்புமிச்ரம் -உத்தவ கீதையிலிருந்து -3–10 -என்கிற ஸ்லோகத்தாலே
சார பூதம் என்கிற பதத்தாலே பிரதிபன்னமான நிரூபாதிக சாரத்தை விஷயீ கரிக்கிற சார தம சப்தம் உபாதேயம் —
பாஹ்ய குத்ருஷ்டி சாஸ்திரங்கள் அத்யந்த அசாரங்கள் ஆகையாலே அனுபாதேயங்கள்
வேதத்தில் பூர்வ பாகத்தில் ஐஹிக பல சாதனமான பிரதிபாதகமான பிரதேசம் அத்யல்ப சாரமாகையாலே அநுபாதேயம் –
ஆமுஷ்கிக பல பிரதிபாதிக அம்சம் ஐஹிக பலத்தில் காட்டில் அதிசய பலத்தை யுடைத்தாகையாலே
சிலருக்கு சாரம் என்னவாய் இருந்ததே யாகிலும் துக்க மூலத்வாதி தோஷ த்ருஷ்டம் ஆகையாலே அநுபாதேயம்
ஆத்ம தத் ப்ராப்தி தத் சாதன மாத்ரத்தை பிரதிபாதிக்கும் அம்சமும் சார தரமாய் இருந்ததே யாகிலும்
அதிலும் அத்யந்த அதிசயிதமான பரமாத்மா அனுபவ சாபேஷருக்கு அநுபாதேயம்
பரமாத்ம தத் ப்ராப்தி தத் உபாயங்களை வெளியிடும் பிரதேசம் சார தமம் ஆகையாலே விவேகிக்கு உபாதேயம் –

(துக்க மூலத்வாதி தோஷம் –7
1.அல்பத்வம் —தர்ம,அர்த்த, காம ,மோக்ஷங்கள் அல்பம்;பகவானையே ஆச்ரயிக்கும்போது ,இவை அல்பமே
ஜடாயு, கேட்காமலேயே ஜடாயுவுக்கு மோக்ஷம் கிடைத்தது ( மோக்ஷம் என்பது பகவானின் திருவடியை அடைதல் ) ஜடாயு மோக்ஷத்தையும் கேட்கவில்லை.
2. அஸ்திரத்வம் —ஸம்ஸாரத்தில் உழலும்போது, புண்ய, பாவ அஸ்த்ரங்கள் — கர்மவினை என்கிற சாக்கில், நம்மீது அஸ்த்ரமாகப் பாயும்.
3. துக்கமூலத்வம் —-ஒரு விஷயத்தைத் தொடங்கி, அதை அடைவதற்கு முன்பாக
அந்த முயற்சியில் ஏற்படுகிற துக்கம்
4. துக்க மிச்ரத்வம் —-அந்த விஷயத்தை அடைந்து, அனுபவிக்கிறபோது ஏற்படும் துக்கம்
5. துக்கோதர்கத்வம் –அந்த விஷயத்தை இழக்கிறபோது ஏற்படும் துக்கம்
6. மூலமஹாவிஸர்ஜனத்வம் —ப்ரக்ருதி ஸம்பந்தமான துக்கம்
7. ஸ்வாபாவிக ஆனந்த வ்ருத்தத்வம் —-பகவானின் திருவடியை அடைய தடையாக இருப்பது —எல்லாமே துக்கம்)

(ஜீவன், செயல்படுவதற்கு, பகவான் 16 கலைகளைத் தருகிறான்
1. ப்ராணன் 2. புத்தி 3.த்ரேகம் ( சரீரம் ) 4.ச்ரத்தை 5. ஐந்து பூதங்கள் 10. இந்த்ரியம் 11. மனஸ் 12. அன்னம்
13.வீர்யம் 14.தபஸ் 15.மந்த்ரம் 16.கர்மம் (ஹோமம்,யாகம் போன்றவை ) இவன் ஷோடச கல புருஷன்)

அவ் வம்சத்திலும்
பிரதான ப்ரதி தந்த்ரங்களான தத்வ ஹிதங்களுடைய சங்க்ரஹம் ஆகையாலே -மிகவும் சார தம –
உபாதேயமாய் இருக்கும் ரகஸ்ய த்ரயங்கள் -ஆகையாலே
பஹூப்யச்ச மஹத்ப்யச்ச சாஸ்த்ரேப்யோ மதிமான் நர
சர்வதஸ் சாரமாதத்யாத் புஷ்பேப்ய இவ ஷட்பத-மஹாபாரதம்—சாந்தி பர்வ-176-66 -என்கிறபடியே
ரகஸ்ய த்ரயம் முமுஷூ வான இவ்வாத்மாவுக்கு உபாதேயமாகக் கடவது
ஷட்பத -தேனீ போலே –

அமையா இவை என்னும் ஆசையினால் அறு மூன்று உலகில்
சுமையான கலவிகள் சூழ வந்தாலும் தொகை இவை என்று
இமையா இமையவர் ஏந்திய எட்டு இரண்டு எண்ணிய நம்
சமயாசிரியர் சதிர்க்கும் தனி நிலை தந்தனரே —

அறு மூன்று -18- வேதங்கள் -சிஷை வியாகரணம் சந்தஸ் நிறுத்தம் ஜ்யோதிடம் கல்பம் –
மீமாம்சை நியாயம் புராணம் தர்மம் ஆயுர் வேதம் தனுர் வேதம் காந்தர்வம் அர்த்த சாஸ்திரம் —
எட்டு இரண்டு -அஷ்டாஷரத்தையும் மற்ற இரண்டையும் -த்வயம் சரம ஸ்லோகம்

சாகா நாம் உபரி ஸ்திதேந மநுநா மூலேந லப்த ஆத்மாக
சத்தா ஹேது சக்ருத் ஜபேந சகலம் காலம் த்வயேன ஷிபன்
வேத உத்தாம்ச விஹார சாரதி தயா கும்பேந விஸ்ரம்பித
சாரஞோ யதி கச்சித் அஸ்தி புவனே நாத சயூ தஸ்ய ந லோகம்-

சேஷத்வ ஸ்வரூப அநு வ்ருத்தி -பகவத் பாகவத பர்யந்த கைங்கர்யம் —
ஆஸ்ரிதர்கள் இடம் வாத்ஸல்ய அதிசயம் கொண்ட கீதாச்சார்யன் ஆப்த தம வசனம்
பகவானே வக்தா -வக்த்ரு வை லக்ஷணம் உண்டே-கிருபையின் பரிவாஹ ரூப வசனம் -விஸ்வசநீயம்
ஸ்வரூப ஞானம் உண்டாக்கும் திருமந்திரம்
ஸக்ருத் உச்சாரண மாத்ரத்தால் சம்சாரம் தாண்டுவித்து கால ஷேப அர்த்தமாக உள்ள த்வயம்
மஹா விசுவாசம் உண்டு பண்ணும் சரம ஸ்லோகம் –ஆகிய மூன்றுமே அனுசந்தேயம் என்றதாயிற்று –
இவற்றை அனுஷ்டான பர்யந்தமாக கொண்ட ஞானவான் துர்லபம் –
அப்படிப்பட்டவனும் அவனது பரிஜனங்களும் நமக்கு நாதர்கள்-என்றவாறு –

——————————————————————–

ஆயினும் ஆராய்ந்தால் அசார பதத்துக்கு பாஹ்ய குத்ருஷ்ட்டி ஸாஸ்த்ர பரத்வம் கொள்ளுகை உசிதம் அன்று என விளங்கும்
பாஹ்ய குத்ருஷ்ட்டி ஸாஸ்த்ரங்களுக்கு ஸாஸ்த்ரத்வமே இல்லையே அன்றோ
அலௌகிக பலத்தையும் தத் சாதநாதி களையும் ப்ரதிபாதிக்குமது அன்றோ ஸாஸ்த்ரம் –
சாஸநாத் ஸாஸ்த்ரம் இறே
யா வேத பாஹ்யா ஸ்ம்ருதய யாஸ் ச காஸ் ச குத்ருஷ்ட்யா
ஸர்வாஸ்தா நிஷ் பலா ப்ரேத்ய தமோ நிஷ்டா ஹி தாஸ் ஸ்ம்ருதா -என்று இறே மநு பகவான் அருளிச் செய்தார்
வேதாத் ஸாஸ்த்ரம் பரம் நாஸ்தி -என்று பாஹ்ய குத்ருஷ்ட்டி ஸாஸ்த்ரங்களுக்கு ஸாஸ்த்ரத்வம் நிஷித்தம்
இவ்விடத்தில் பர ஸப்தம் உத்க்ருஷ்ட பரம் அன்று -பர ஸப்தம் அந்நிய வாஸி எனக்கொள்ள வேண்டும் –
வேத பின்னத்துக்கு ஸாஸ்த்ரத்வம் நிஷேதிக்கப் படுகிறது –

த்யாஜ்ய உபாதேய விபாகம் ஏக அவயவியிலே அன்றோ செய்யப்படுகிறது -சமுத்திரம் -த்ருஷ்டாந்தம் –

இனி வாஸ்த்வ அர்த்தம் பார்ப்போம்
ஐஹிக ஆமுஷ்மிக ஐஸ்வர்ய ப்ரதிபாதக பாகம் அசாரம்
ஆத்ம பிராப்தி தத் சாதன ப்ரதிபாதக பாகம் அல்ப ஸாரம்
பரமாத்ம பிராப்தி தத் சாதன பக்தி ப்ரதிபாதிக பாகம் ஸாரம்
பகவத் அனுபவ பரீவாஹ ஸ்வார்த்த கைங்கர்ய தத் சாதன பூதாத்ம சமர்ப்பண ப்ரதிபாதக பாகம் சார தரம்
பரார்த்த கைங்கர்ய தத் சாதன ஸித்த உபாய ப்ரதிபாதக பாகம் சார தமம்
என்றே வாஸ்தவார்த்தம்
ஆக
வேதாந்த பின்னமாய் -சாரத்வேந ப்ரபலமாய் -சார தமமுமான ஸாஸ்த்ரமாம் ரஹஸ்ய த்ரயமே வேதாந்த ஸாரம் எனத் தேறியது –

————

இனி மா முனிகள் கண்ட இதனுடைய நிஷ்கர்ஷத்தை நிரூபிக்கிறோம் –

வைதிகர்கள் வேதார்த்தங்களை நிர்வஹிக்கும் கட்டளைகள் வெவ்வேறு பட்டு இருக்கும் -எங்கனே என்னில்
வேதம் ஜ்யோதிஷ்டோமாதி கர்மங்களைப் பிரதானமாகத் தெரிவிக்கிறது
வேதாந்த விஷயமான ப்ரஹ்மம் ஜீவ பின்னமானதோர் தத்வம் அல்ல
யுகாதி கர்மங்களை செய்கிற ஜீவாத்மாவையே வேதாந்தங்கள் கொண்டாடுகின்றன –
ஆக கர்மபரம் வேதம் -கர்ம கர்த்ரு ஜீவ ப்ரஸம்ஸா பரம் வேதாந்தம் -என்று வேதார்த்தத்தை ஒருங்க விடுவர் சில வைதிகர்கள் –

வேதாந்தம் பக்தி ப்ரபத்திகளான பற்பல உபாயங்களை ப்ரதிபாதிக்கிறது –
நாநா ஸப்தாதி பேதாத்
விகல்ப
அவி ஸிஷ்ட பலத்வாத் -என்று இறே ஸூத்ர காரர் அருளிச் செய்தார் –
ரஹஸ்ய த்ரயமும் வேதாந்தத்தில் அடங்கியதே-பின்ன ஸாஸ்த்ரம் அல்ல –
பூர்வ பாகமான வேதத்தில் சொல்லப்பட்ட கர்மம் பகவத் கைங்கர்ய ரூபமாகும்
அதுவும் ஸ்வார்த்தம் -நம் ஆனந்ததுக்கு உறுப்பாகச் செய்யப்படுமது
பக்தியும் ப்ரபத்தியும் பகவத் ப்ராப்தி உபாயங்கள் -அதாவது பகவத் ப்ரஸாத ஜனகங்கள்
நம்முடைய பக்தி ப்ரபத்திகளாலே பகவானுக்கு அருள் பிறக்கிறதாகையாலே பகவத் ப்ரஸாதம் ஸ ஹேதுகம் என்று வேதார்த்தத்தை ஒருங்க விடுவார் சில வைதிகர்கள் –

ஸித்த உபாய பூதன் ஸர்வேஸ்வரன்
அவன் ஸஹாயாந்தர நிரபேஷ உபாய பூதன்
இவன் பண்ணும் பக்தி ப்ரபத்திகள் -தம் ஹ தேவம் ஆத்ம புத்தி ப்ரகாஸம் -என்கிறபடி பகவத் ப்ரஸாத ஜன்யங்கள்
அவன் அருளாலே விளைந்தவை
பல பூதங்கள் உபாயம் அல்ல என்றபடி
ஆத்ம புத்தே ப்ரகாஸ யஸ்மாத் ஸ ஆத்ம புத்தி ப்ரகாஸ
தத் விஷய புத்தி ஸ்புரணஸ்ய தத் அநு க்ரஹாயத் தத்வாத் -என்ற ஸ்ரீ ரெங்க ராஜ முனி பாஷ்யம் காணத் தக்கது –
என் உணர்வின் உள்ளே நிறுத்தினேன் அதுவும் அவனது இன்னருளே –
எனது ஆவி யார் யான் யார் தந்த நீ கொண்டாக்கினையே -என்ற ப்ரபந்ந ஜன கூடஸ்தரான ஆழ்வார் திருவாக்கும் –
அதவா கின்னு ஸமர்ப்பயாமி தே -என்ற ஆள வந்தார் திருவாக்கும்
வரத தவ கலு ப்ரஸாதாத்ருதே சரணமிதி வஸோ அபி மே நோதியாத் -என்ற ஆழ்வான் திருவாக்கும் இவ்விடம் அநுசந்தேயங்கள்

ஆக பக்தி ப்ரபத்திகள் ஈஸ்வர கிருபா பலம் எனத் தேறியது –
பூர்வ பாக யுக்த கர்மம் பகவத் கைங்கர்ய ரூபம் -அதுவும் பரார்த்தமே -அவன் முக மலர்த்திக்கு உறுப்பானது –
உத்தர பாக யுக்த பக்தி ப்ராப்ய ருசி ஆகலாம் -பிரபத்தி ஸ்வரூப யாதாத்ம்ய ஞான ரூபமாகலாம்
ப்ரஸாத விசிஷ்டனே உபாய பூதன் -அவன் ப்ரஸாதம் நிர் ஹேதுகம் –
பலத்துக்கு வேண்டுவது ஆத்ம ஞானமும் அப்ரதி ஷேதமுமே என்று வேதார்த்தத்தை ஒருங்க விடுவர் பரம வைதிகரான நம் பூர்வர்கள் –

இவ்வர்த்த நிஷ்கர்ஷம் வேதாந்த சார லப்தம்
வேத பூர்வ பாகத்தில் ப்ரதிபாதிதமான கர்மங்களுடைய யாதாத்ம்யம் -வாஸ்த்வ ரூபம் -பகவத் கைங்கர்யத்வம் ஆகும் –
வேதாந்த ப்ரதிபாத்யமான பக்தியினுடைய உண்மை நிலை ப்ராப்ய ருசித்வம் -அதாவது
பகவத் அனுபவ கைங்கர்யங்கள் விஷயமான ப்ரீதி ரூபமாய் இருக்கை –
வேதாந்த ப்ரதிபாத்ய ப்ரபத்தியினுடைய உண்மையான ஆகாரம் ஸ்வரூப யாதாத்ம்ய ஞானத்வம் -அதாவது
ஜீவாத்மாவின் இயல்பான நிலையான பகவத் அத்யந்த பாரதந்தர்யத்தை விஷயமாக யுடைய ஞானமாய் இருக்கை –
இவையும் இவ்வதிகாரிக்கு ப்ராப்யமான பகவத் கைங்கர்யத்தினுடைய பாராரத்வம் முதலானவையும் வேதாந்த சார வேத்யங்கள் ஆகும்
அதாவது ரஹஸ்ய த்ரய வேத்யம் என்றபடி –

———-

இவ்வர்த்தத்தை சில உதாஹரணங்களாலே விளக்குகிறார்
1-கட படாதி பேதம் ப்ரத்யக்ஷ ஸித்தம்
அப்ராப்தே ஹி ஸாஸ்த்ரம் அர்த்தவத் -என்கிற நியாயத்தாலே பேதம் வேதாந்த வேத்யம் அன்று
ஜீவ பரா பேதமே வேதாந்தார்த்தம் என்பர் ம்ருஷ வாதிகள்
இக்கூற்றுக்கு சமாதானம் அருளிச் செய்கிறார் தத்வ சாரத்தில் நடாதூர் அம்மாள் என்று ஸூ ப்ரஸித்தரான வாத்ஸ்ய வரதாச்சார்யர் ஸ்வாமிகள்
ப்ரத்யஷாதி தரஸ்து ஸாஸ்த்ர விஷய பேத த்வதத் வைதவத்-என்று
அதாவது
ப்ரத்யக்ஷ ஸித்த பேதம் ஸ்வ தந்த்ர பேதம்
பொருள்கள் பகவத் சேஷம் யுடையவை என்று அறியப்படாதே ஸ்வ தந்த்ரங்களாகவே அறியப்படுமவையாய் இருக்கும்-
இது ப்ரத்யக்ஷ ஸித்தம்
இனி ஸாஸ்த்ர ஏக வேத்யமான அர்த்தம் என்ன வென்றால்
இவை எல்லாம் பகவத் விபூதிகள் -பகவத் பரதந்த்ரங்கள் -பகவானுக்கு சொத்தாய் இருக்குமவை என்பதேயாம்
ஆக பிரத்யஷத்தால் இவற்றின் ஸ்வா தந்தர்யம் ஞானமானாலும் ஸாஸ்த்ரம் கொண்டே இவற்றினுடைய பாரதந்தர்யம் ஆகிற ஸ்வரூப யாதாத்ம்யம் அறியப்படுமா போலேயும்

2- கட படாதி ஸப்தங்கள் -வ்யுத்புத்தி நிகண்டு ப்ரப்ருதிகளாலே குடம் வஸ்திரம் முதலான வஸ்துக்களுக்கு மாத்ரம் வாசகங்களாகத் தோற்றுகின்றன
ஆயினும் ஸகல ஸப்தங்களும் பகவத் பர்யந்தமாகச் சொல்லி அல்லது நில்லாது என்னும் அர்த்தம்
வஸஸாம் வாஸ்யம் உத்தமம் -இத்யாதி ஸாஸ்த்ரம் கொண்டே அறிய வேணும் –
அது போலவும்
பக்தி ப்ரபத்திகள் உபாயம் இத்யாத் யர்த்தங்கள் வேதாந்தங்களைக் கொண்டு நாம் அறிந்து இருந்தாலும் பக்தி ப்ரபத்திகளின் யல்பான ஸ்வரூபத்தை வேதாந்த சார பூத ரஹஸ்ய த்ரயம் கொண்டே அறிய வேணும் என்றபடி –


கர்ம ப்ராதான்ய வாதிகள் வேத பூர்வ பாக அர்த்த நிஷ்டர்கள்
அவர்களை -பக்தி ப்ரபத்திகள் உபாயம் -ஸ்வார்த்த கைங்கர்யம்புருஷார்த்தம் -என்று சொல்லி வேதாந்த வித்துக்கள் கண்டித்தார்கள்
அந்த வேதாந்திகளையும் பக்தி ப்ரபத்திகள் அதிகாரி விசேஷணங்கள் -பகவத் கிருபா பல பூதங்கள் -பரார்த்த கைங்கர்யமே பரம புருஷார்த்தம் -என்று
சொல்லி வேதாந்த சார நிஷ்டர்கள் கண்டிக்கிறார்கள்
ஆக வேதாந்தங்களைக் காட்டிலும் பின்னமாயும் உயர்ந்ததாயும் -உள்ள வேதாந்த ஸாரமான ரஹஸ்ய த்ரயம்
பரார்த்த கைங்கர்யம் பலம்
பக்தி ப்ரபத்திகள் பகவத் ப்ரஸாத பலம் -என்று செய்யும் நிஷ்கர்ஷமே வேதாந்த சார நிஷ்கர்ஷம்
இவ்வர்த்தமே பஞ்சமம் சார தமம்
இதுவும் இதற்கு ப்ரதிபாதிக வேதாந்த ஸாரமுமே உபாதேயம் என்றதாயிற்று –

அர்த்த தத்வம் இப்படி இருக்க -ஸ்ருதி பத விபரீதம் -என்று தேசிகன் அருளிச் செய்ய ஹேது என் என்ன
வீத ராக வ்யதிரிக்தாநாம் கர்மணி அஸ்ரத்தா நிவாரணர்த்தம் அன்வாருஹ்ய வாத -என்கிறபடியே
சில அதிகாரிகளுக்கு கர்மங்களில் அஸ்ரத்தையைத் தடுக்க ஜைமினி
ப்ரஹ்ம ஸாஸ்த்ரத்தை கர்ம ஸாஸ்த்ர சேஷமாக வர்ணித்தது எப்படி அன்வாருஹ்ய வாதமோ
அப்படியே ஆத்ம யாதாத்ம்ய ஞான விரஹிகளுக்கு ஸாத்ய உபாய ஸாஸ்த்ரத்தில் அஸ்ரத்தையைத் தடுக்க
ஸித்த உபாய ஸாஸ்த்ரம் -ரஹஸ்ய த்ரயம் -அதிரிக்தமாய் இருக்கச் செய்தேயும்
சாதன பக்தி பிரபத்தி ஸாஸ்த்ர ரூப வேதாந்தங்களில் அந்தர்பூதம் என்று அன்வாருஹ்ய வாதமாக அருளிச் செய்தார் தேசிகன் என்று கொள்ள வேண்டும்

இங்கே
விஷய சார பாகோ அயம் வேதாந்தாத் பர இஷ்யதே
பரத்வம் சார ஸாஸ்த்ரஸ்ய ஹி அஸாரம் இதி மாநத -இத்யாதி வசனங்களை அனுசந்திப்பது –
இதனால் தேறிய பொருளாவது
வேதத்தை வேதாந்த அனுகுணம் நயனம் செய்யுமா போலே
வேதாந்தத்தை வேதாந்த சார அனுகுணம் நயனம் பண்ண வேணும் என்று
ஆகையால் சாரீரக ஸாஸ்த்ர அனுகுணம் ரஹஸ்ய த்ரய நயனம் என்கை உசிதம் அன்று
ரஹஸ்ய த்ரய அனுகுணம் சாரீரக பாஷ்யாதி நயனம் உசிதம் என்றதாயிற்று
ரஹஸ்ய த்ரய ப்ரஸ்தானம் சார தமம் ஆகையாலே என்றபடி –


ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாஸ புராண பாஞ்சராத்ர ரூப ஸகல சாஸ்த்ரார்த்த நிர்ணாயகம் சாரீரகம் என்று கூறவும் முடியாது
ஸ்ருத்யர்த்த நிர்ணாயகம் சாரீரகம் ஆயினும் ஸ்ம்ருதி யாதி யர்த்தம் சாரீரகம் என்ன ஒண்ணாது
வேத வியாசர் ஓர் அதிகரணத்தில் ஸ்ருதி அர்த்தங்களில் ஓர் அர்த்தத்தை நியாய மார்க ஸஞ்சாரம் செய்து அறுதியிட்டு அதற்கு ஸம்வாத பிரமாணமாக
ஸ்ம்ருதேஸ் ச
ஸ்மரந்தி ச-என்று ஸ்ம்ருதி யாதிகளை உதாஹரிக்கிறார்
ஸுத்ரீ தர்க்கா ப்ரதிஷ்டா -என்ற தேசிகன் திருவாக்கையும்
த்வயம் கலு தர்க்க ஜாதம் ஸ்ருதி விருத்தம் அவிருத்தம் சேதி -தேந தர்க்கா ப்ரதிஷ்டா வசனம் -என்றும்
ஆர்ஷம் தர்மோபதே சஞ்ச இத்யாதி பிரகாரேண வேத விருத்த தர்க்க விஷய தயா யோஜ்யம்
ந புந வேத இதி கர்த்தவ்யதா ரூப தர்க்க விஷயம் -என்ற தேசிகன் திருக்குமாரர் திரு வாக்கையும் இங்கே அனுசந்திப்பது –
அதீத சாகார்த்த நிர்ணா யகம் நியாயம்
அந தீத சாகார்த்த நிர்ணா யகம் ஸ்ம்ருதியாதி என்று இறே நிஷ் கர்ஷம்
ஸ்ருதியிலும் சார்வத்ரிகமாக நியாய சஞ்சாரம் இல்லை
அஸ்பஷ்ட ஸ்தல மாத்ரத்திலே இறே நியாய சஞ்சாரம்
நியாய நிரபேஷமாக ஸித்தம் -என்ற ரஹஸ்ய த்ரய சார பரிகர விபாகாதிகார வாக்கியத்தையும் காணலாம்
ஸ்ருதிகளில் போலே ஸ்ம்ருதிகளிலும் நியாய ஸஞ்சாரம் கொண்டால் உப ப்ரும்ஹ்ய உப ப்ரும்ஹண பேதமே அற்றுப் போம்
நியாயங்களைக் கற்றுத் தெளிந்த ஸ்ரீ மைத்ரேயன் ஸ்ரீ பராசர பகவானைக் கிட்டினார் புராண ஸ்ரவணம் செய்ய என்று இறே ஸ்ரீவிஷ்ணு புராண உபக்ரமம் –
பாஷ்யகாரர்

இது கொண்டு ஸூத்ர வாக்கியங்கள் ஒருங்க விடுவர் -என்று நாயனாரும்
செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித் தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே -என்று தேசிகனும் அருளிச் செய்தவை அனுசந்தேயம்
அருளிச் செயல்களைக் கொண்டு அன்றோ சரீரக அர்த்த நிர்ணயம் என்று அருளிச் செய்யப்பட்டது
சாரீரகத்தைக் கொண்டு அருளிச் செயல் அர்த்தங்களை அறுதியிடுவது என்று அருளிச் செய்திலரே
ஆகையால் உப ப்ரும்ஹணங்களுக்கு சாரீரக நியாய அபேக்ஷை பொருந்தாது

ஆக வேதாந்த சார பூத ரஹஸ்ய த்ரய அனுகுணம் சாரீர காதி நயநம் கார்யம் என்றதாயிற்று

ஆக வேதாந்த சாரீரகாதி ப்ரதிபாத்ய பக்தி ப்ரபத்திகள் பலம்
ப்ரஹ்மம் ஒன்றே உபாயம்
பூர்வ பாக உதித கர்மம் பரார்த்த கைங்கர்ய ரூபம் -என்று
வேதாந்த சார நிஷ் கர்ஷம் -என்றதாயிற்று

ஸ்ரீ மதே ரம்ய ஜாமாத்ரு முனீந்த்ராய மஹாத்மனே
ஸ்ரீ ரெங்க வாஸிநே பூயாத் நித்ய ஸ்ரீர் நித்ய மங்களம் –

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ மந்த்ர புஷ்பம் வேதாரம்பம் –ஸ்ரீ மந்தர புஷ்பம்–

January 1, 2022

ஸ்ரீ மந்த்ர புஷ்பம் வேதாரம்பம்

ஹரி: ஓம். அக்நிமீளே புரோஹிதம் யஜ்ஞஸ்ய தேவம் ருத்விஜம் |
ஹோதாரம் ரத்நதாதமம் || ஹரி: ஓம். (ரிக் வேதம்)

ஹரி: ஓம். இஷே த்வோர்ஜே த்வா வாயவஸ் ஸ்தோபாயவஸ் ஸ்த தேவோ வஸ்ஸவிதா
ப்ரார்ப்பயது ச்ரேஷ்டதமாய கர்மணோ || ஹரி: ஓம். (யஜுர் வேதம்)

ஹரி: ஓம். அக்ந ஆயாஹி வீதயே க்ருணாநோ ஹவ்யதாதயே |
நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி || ஹரி: ஓம். (ஸாம வேதம்)

ஹரி: ஓம். சம் நோ தேவீரபிஷ்டய ஆபோ பவந்து பீதயே
சம் யோ ரபிஸ்ரவந்து ந: || ஹரி: ஓம் ஹரி: ஓம். (அதர்வண வேதம்)

ஓமித்யக்ரே வ்யாஹரேத் |
நம இதி பஸ்சாத் |
நாராயணாயேதி உபரிஷ்டாத் |

ஓமித்யேகாக்ஷரம் |
நம இதி த்வே அக்ஷரே |
நாராயணாயேதி பஞ்சாக்ஷராணி |

ஏதத் வை நாராயணஷ்யாஸ்டாக்ஷரம் பதம் |
யோ ஹ வை நாராயணஷ்யாஸ்டாக்ஷரம் பதமித்யேதி |

அநபப்ருவ: ஸர்வமாயுரேதி |
விந்ததே ப்ராஜாபத்யம் ராயஸ்போஷம் கௌபத்யம் |
ததோ அம்ருதத்வம் அச்நுதே ததோ அம்ருதத்வம் அச்நுத இதி |

ய யேவம் வேத |
இத்யுபநிஷத் | (உபநிஷத்)

அத கர்மாந்யாகாராத்யாநி க்ருஹ்யந்தே| உதகயந பூர்வ
பக்ஷரஹ: புண்யாஹேஷு கார்யாணி| யஞ்ஞோபவீதிநா ப்ரதக்ஷிணம் |

இச்சாமோ ஹி மஹாபாஹும் ரகுவீரம் மஹாபலம் |
கஜேந மஹதா யாநதம் ராமம் சத்ராவ்ருதாநநம் || (ஸ்ரீ ராமாயணம்)

தம் த்ருஷ்ட்வா சத்ரு ஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸுகாவஹம் |
பபூவ ஹ்ருஷ்ட்வா வைதேஹீ பர்த்தாரம் பரிஷஸ்வஜே || (ஸ்ரீ ராமாயணம்)

தாஸாமாவிரபூச்சௌரி: ஸ்மயமான முகாம்புஜ: |
பீதாம்பரதர: ஸ்ரக்வீ ஸாக்ஷாந் மந்மத மந்மத: || (ஸ்ரீ பாகவதம்)

ஏஷ நாராயண ஸ்ரீமாந் க்ஷீரார்ணவ நிகேதந: |
நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் || (ஸ்ரீ விஷ்ணு புராணம்)

வைகுண்டேது பரே லோகே ச்ரியா ஸார்த்தம் ஜகத்பதி |
ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ || (லிங்க புராணம்)

———————-

ஸ்ரீ மந்தர புஷ்பம்–

ஓம் யோபாம் புஷ்பம் வேத/ புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான் பவதி/ சந்த்ரமா வா
அபாம் புஷ்பம்/ புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான் பவதி/ ய ஏவம் வேத (1)

யாரொருவன் நீரின் மலரை அறிகிறானோ,
அவன் மலர்களை உடையவனாக, மிருகங்களை உடையவனாக, சந்ததிகளை உடையவனாக ஆகிறான்.
நிலவே நீரின் மலர். யார் இவ்வாறு அறிகிறானோ
அவன் சந்ததிகளை உடையவனாக, மிருகங்களை உடையவனாக ஆகிறான்.

எவனொருவன் நீரின் ஆதாரத்தை புரிந்து கொள்கிறானோ
அவன் பசு மற்றும் மிருகங்கள், புத்திர செல்வங்கள், மலர்கள் எல்லாவற்றையும் பெறுவான்.

————–

“ஓம் யோபாம் புஷ்பம் வேத புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான் பவதி”

“எவனொருவன் நீரின் மலரை அறிகிறானோ அவன் சர்வ ஐசுவரியங்களையும் பெற்றவனாகிறான்.”

இதில் இரண்டு வார்த்தைகள் முக்கியமானவை.
நீர் மற்றும் மலர்.

‘ஆபா’என்றால் நீர்.நீரின் குணம் இடைவிடாமல் ஒழுகிக் கொண்டிருப்பது; ஓடிக் கொண்டிருப்பது; எழும்பி எழும்பி அடங்குவது.
மழை இடை விடாமல் பெயர்தது என்கிறோம் நீர் வீழ்ச்சி நின்று நின்று வருவதில்லை. நதி ஓடிக் கொண்டே யிருக்கிறது.
கடலலைகள் ஒன்றன்பின் ஒன்றாக எழும்பி அடங்குகிறது.

நமது வாழ்வும் அதே போல்த் தான்.நமது அனுபவங்கள் புலன்கள் கொண்டு வரும் செய்திகளை அடிப்படையாகக் கொண்டது
என்று முன்னால் கண்டோம். புலன்கள் ஒரு நொடி கூட ஓய்ந்திருப்பதில்லை.
உண்ணும் பொழுதும் உறங்கும் பொழுதும் அவை தகவல்களை சேகரித்துக் கொண்டேயிருக்கிறது;
மூளை அவைகளை அலசி ஆராய்ந்து உருவம் கொடுக்கிறது.

இந்த இடைவெளி யில்லாத நீரொழுக்கு தான் , நீரோட்டம் தான் நமது வாழ்க்கை.
பிறப்பிலிருந்து இறப்பு வரையும் பிறகு மறு பிறப்பும் அதன் பின் மறுபடியும் இறக்கும் வரையும் இந்த நீரோட்டம் நிலைப்பதில்லை.
எண்ண அலைகள் நம் உலகிற்கு உருக் கொடுக்கிறது. அதைத் தவிர வேறு உலகம் கிடையாது.
உலகமே நம் மனத்தில் தான் நிலை கொள்கின்றது. அதற்கென்று தனி இருப்பு கிடையாது.இது தான் உண்மை.
இந்த உண்மையை அறிதல் தான் இந்த நீரோட்டத்தில், நீர் வீழ்ச்சியில், சம்சாரக் கடலில் மலரும் மலர்.இது தான் ஞானம்.

எவனொருவன் இந்த உண்மையை அறிகிறானோ அவன் சர்வ ஐசுவரியங்களையும் பெற்றவனாகிறான்.
இது தான் முதல் பாகத்தில் பொருள்.நமது முன்னோர்கள் ஞானிகள் இதைத் தான் பூடகமாக சொல்லியுள்ளார்கள்.

புத்திர பாக்கியம், செடி- கொடிகள், மலர்கள், பசு மற்றும் கால்நடை செல்வங்கள்
மனிதன் இச்சிக்கும் ஐசுவரியங்கிளுக்கு உதாரணங்கள்.
மேலே சொன்ன உண்மையை அறிந்தவன் எல்லா செல்வங்களும் பெற்றவன் பெறும்
ஆனந்தத்தை விட மேலான ஆனந்தம் கிடைத்தவனாகிறான்.

சந்த்ரமா வா அபாம் புஷ்பம் புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான் பவதி

நிலவே நீரின் மலர். யார் இவ்வாறு அறிகிறானோ அவன் சந்ததிகளை உடையவனாக, மிருகங்களை உடையவனாக ஆகிறான்.

நிலவின் இயற்கை தன்மை ஒளி தருவது.எது மனிதனுக்கு ஒளி தருகிறது? மனம் தான்.
மனம் புலன்கள் பெற்றுத் தரும் தகவல்களை் மூளைக்குள் ஆராய்ந்து பதிவு செய்யவில்லை என்றால் நமக்கு எந்த அறிவும் இராது.
நாம் வெறும் ஜடமாகத்தான் இருப்போம்.

ஆகவே நமக்கு ஒளி தரும் நிலவு தான் மனம்.

இன்னொரு ஒற்றுமை என்னவென்றால் நிலவு இன்று இருந்தது போல் நாளை இராது.
ஒன்று வளர்ந்து கொண்டே யிருக்கும் அல்லது தேய்ந்து கொண்டே யிருக்கும்.
மனமும் எப்பொழுதும் ஒரே போல் இருப்பதில்லை.
மனம் ஒரு நிமிடம் ஆனந்தத்தில் ஆறாடும்; மறு நிமிடமே துயரங்கள் எனும் மேகக் கூட்டத்தில் மறைந்து துன்பப்படும் .
இதற்கெல்லாம் காரணம் அது கடந்து போகும் அனுபவங்கள். அது தான் உலக வாழ்க்கை.
அந்த அனுபவங்களில் பூத்த மலர் தான் மனம்.

மனம் என்பதற்கு பௌதிக உருவம் கிடையாது.
அது மூளையிலேயோ வேறு எங்கோ இருக்கிறது என்று குறிப்பிட்டு கூற முடியாது.
அது புலன்கள் கொண்டுவரும் தகவல்களை சேகரித்து வைக்கும் ஒரு கிடங்கு அவ்வளவு தான்.

உலகம் என்பது எண்ணற்ற மனிதர்களின் மனங்கள் சேகரித்து வெவ்வேறு விதமாக புரிந்து கொண்டு
பதிவு செய்துள்ள தகவல்கள் தான்.
ஒவ்வொருவரின் உலகமும் வேறு வேறு விதமாக இருக்கிறது.
ஆகவே மனம் என்பது ஒரு சத்தியமல்லாத ஒன்று.
அதன் கட்டளைகளை நிராகரித்து விட்டு ஆத்மா சொல்வது படி நடந்து கொண்டால்
விஷய வாசனைகள் அறவே அழிந்து தூய்மை யடைந்தவனாவான்.
அவன் பசு, புத்திரர்கள், மலர்கள் போன்ற எல்லா செல்வங்களையும் பெறுவான்.

இந்த உண்மையை புரிந்து கொண்டவன் சர்வ ஐசுவரியங்களையும் பெறுகிறான்.

——————

மந்திரம் இரண்டு

யோபாமாயதனம் வேத ஆயதனவான் பவதி
அக்னிர்வா அபாமாயதனம் ஆயதனவான் பவதி

யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.
நெருப்பே நீரின் ஆதாரம். எவன் நெருப்பின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.
நீரே நெருப்பின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.

நதி மணல் மீது ஓடும் போது ஒழுகும் பொழுது ஒரு நிறத்திலிருக்கும்;
களி மண்ணிலும் சேற்றிலும் ஓடும் பொழுது வேறொரு நிறத்திலிருக்கும்;
பாறை மீது ஓடி வரும் பொழுது வேறொரு நிறத்திலிருக்கும.
சில நேரங்களில் தெளிந்த நீரோடை; மற்று சில நேரங்களில் கலக்கலான நீரோட்டம்.
இவைக்கெல்லாம் ஆதாரம் அது எதன் மீது ஒழுகுகின்றதோ அந்த மண்.
அது போல் நமது அனுபவங்களுக்கும் ஒரு ஆதாரம் வேண்டுமல்லவா? அது எது?

ப்ரஹ்மம் அல்லது பரப் ப்ரஹ்மம் அல்லது பரமாத்மா அல்லது அனந்தாவபோதம் தான் நம் வாழ்க்கை எனும் நீரோட்டத்திற்கு ஆதாரம்.
வாசனைகளற்ற, மாசற்ற, தூய பிரம்மம் நமது வாழ்வின் ஆதாரம்.
இந்த ப்ரஹ்மம் அல்லது அவபோதம் இல்லையென்றால் நாம் எதையும் அனுபவிக்க முடியாது.
நமது புலன்களும், மனமும், புத்தியும் வேலை செய்யாது

இந்த உண்மையை அறிந்தவன் ஆத்ம சாஷாத்கார மடைந்தவனாகிறான்.
அவனிலிருந்த எல்லா விருப்பு- வெறுப்புக்களுக்கும வாசனைகளும் ஒழிந்து போய் விடுகின்றன.
அவன் ப்ரஹ்மமே ஆகிவிடுகிறான். அவன் எதாலும் பாதிக்கப்படமாட்டான். அவனுக்கு இன்ப- துன்பங்கள் கிடையாது.

ப்ரஹ்மம் நெருப்பு. அது எல்லா மாசுக்களையும், வாசனைகளையும் எரித்து சாம்பலாக்கி விடுகிறது.
இந்த ப்ரஹ்மமெனும் நெருப்பு தான் வாழ்க்கை அல்லது உலகமெனும் நீரோட்டத்திற்கு ஆதாரம்.
இந்த உண்மையை அறிந்தவன் பரம சாந்தியை அடைகிறான்..

மந்திரம் இரண்டு (தொடர்கிறது)

அக்னிர்வா அபாமாயதனம் ஆயதனவான் பவதி
யோக்னேராயதனம் வேத ஆயதனவான் பவதி
ஆபோ வா அக்னேராயதனம் ஆயதனவான் பவதி ய ஏவம் வேத (2)

அக்னி என்றால் எது ஒன்று இடைவிடாமல் மேல் நோக்கி போய்க் கொண்டிருக்கிறதோ அது அக்னி.
’ அக்னி’ உண்டாவது உண்மையான பரமாத்மாவைத் மறைத்து – மறந்து , புலன்கள் கொண்டு வரும் தகவல்களை் மெருகேற்றி
பரமாத்மாவின் மீது பதித்து பொய்யான ஒரு ‘நானை’ உருவாக்குகிறது.
அந்த அக்னி – ஜீவாத்மா இந்த ‘மாய நான்’ தான் ‘உண்மையான நான்’ என்று நம்ப ஆரம்பிக்கிறது.

உண்மையான ‘ நான்’ விருப்பு வெறுப்பில்லாத, ஆதியும் அந்தமும்்இல்லாத சர்வ வியாபி!
ஆனால் புலன்கள் தரும் தகவல்களை நம்பி,தன் விஷய வாசனைகளால் மாசுற்று, அஞ்ஞானத்தில் உழலுகின்றது ஜீவாத்மா!
இந்த மாய நான் ஒரு விதத்தில் பார்த்தால் அக்னியே!

இந்த அக்னி தான் வாழ்க்கை எனும் நீரோட்டத்திற்கு லௌகீக பார்வைக்கு ஆதாரமாக இருக்கிறது.
இந்த அவித்யை நீங்கிவிட்டால் மாசற்ற தூய பரப் பிரம்மத்தை உணர முடியும்.
ஆகவே அக்னிக்கு ஆதாரம் புலன்கள் தரும் தகவல்களால் உருவான, காணப்படும் உலகம்.
அந்த நீரிற்கு ஆதாரம் இந்த அக்னி. அக்னி- தானும் எரிந்து, அனுபவங்களையும் எரித்து துன்பத்திற்காளாகிறது.

இந்த உண்மையை உணர்ந்தவன் எல்லா செல்வங்களுக்கெல்லாம் அதிபதியாவான்

இந்த அக்னிக்கும் ஆதாரம் புலன்கள் தரும் தகவல்களின் அடிப்படையில் உளவான அனுபவங்கள்.
ஆக, அக்னிக்கும் ஆதாரம் நீரே! இப்படி ஒன்றுக்கொன்று ஆதரவு அளித்து மாய நானை உயிருடன் வைத்துக் கொள்கிறது.
அனுபவங்கள் அழிந்தால் பொய்யான இந்த நான் அழிந்து விடும்.
இந்த பொய்யான நான் அழிந்து மெய்யான நான் உணரப்பட்டுவிட்டால் அனுபவங்கள் இராது.

யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில்( ப்ரஹ்மத்தில், அனந்தாவபோதத்தில்) நிலை பெற்றவன் ஆகிறான்.

நெருப்பே நீரின் ஆதாரம். எவன் நெருப்பின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் ( ப்ரஹ்மத்தில்)நிலை பெற்றவன் ஆகிறான்.

நீரே நெருப்பின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.

சுருக்கமாக சொல்லப் போனால் அப்படிப் பட்டவன் சத்திய சாஷாத்காரம் அடைந்தவனாகிறான்.

————-

மந்திரம் 3

யோபாமாயதனம் வேத ஆயதனவான் பவதி
வாயுர்வா அபாமாயதனம் ஆயதனவான் பவதி
யோ வாயோராயதனம் வேத ஆயதனவான் பவதி
ஆபோ வை வாயோராயதனம் ஆயதனவான் பவதி ய ஏவம் வேத (3)

யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.
காற்றே நீரின் ஆதாரம்.
யார் காற்றின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.
நீரே காற்றின் ஆதாரம்.
யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (3)

நீரின் ஆதாரத்தை அறிந்தவன் பிரம்மத்தில் நிலைத்து நிற்கிறான்.நீரின் ஆதாரம் காற்றே!
காற்று அல்லது வாயு இல்லை யென்றால் பிராணன் இல்லை.
பிராணன் இல்லை யென்றால் புலன்கள் செயல் பட மாட்டா!
புலன்கள் செயல் பட வில்லை யென்றால் மனதிற்கும் புத்திக்கும் தகவல்கள் கிடைக்காது.
அனுபவங்களும் இல்லை யென்றாகி விடும். ஆகவே லௌகீக வாழ்விற்கு, அனுபவங்கள் எனும் நீர் வீழ்ச்சிக்கு ஆதாரம் காற்றே.
இந்த உண்மையை அறிந்தவன் பிரம்மம் எனும் சத்தியத்தை அறிந்து அதில் நிலை கொள்ள முடியும்.

ஆத்மா அல்லது பரமாத்மா அல்லது அனந்தாவபோதம் விருப்பு வெறுப்பில்லாதது. வாசனைகள் இல்லாதது.
அப்படிப்பட்ட ஆத்மா வெளியுலக வஸ்துக்களுடன் தொடர்பு ஏற்பட்டு புலன்கள் மூலம் தகவல்களை சேகரித்து
அனுபவங்களாக மாற்ற பிராணனின் உதவி தேவை.
ஆக பிராணன் அல்லது வாயு தான் அனுபவங்களின் ஆதாரம்.

காற்றிற்கு என்ன ஆதாரம்?

அனுபவங்களே பிராணனின் ஆதாரம். அனுபவங்கள் இல்லை யென்றால், புலன்கள் செயல் படவில்லையென்றால்
பிராணன் இருந்தும் பயனில்லை. ‘ கோமா’ நிலையிலிருப்பார்கள் பிராணனுடன் தான் இருக்கிறார்கள்.
ஆனால் அவர்களுக்கு, புலன்கள் வேலை செய்யாததால் தங்களைச் சுற்றி யுள்ள உலகம் என்ன என்ற அனுபவம் கிடையாது.
அனுபவங்கள் இருந்தால் தான் பிராணனுக்கும் பயனுண்டு. ஆகவே பிராணனுக்கு ஆதாரம் அனுபவங்கள் எனும் நீரோட்டமே! .

இந்த உண்மைகளை எவனொருவன் அறிகிறானோ அவன் ப்ரஹ்மனை அறிகிறான்.-ப்ரஹ்மத்தில் நிலைத்து நிற்கிறான்.
ஆத்ம சாஷாத்காரம் அடைகிறான்.

————-

மந்த்ரம் 4

யோபா மாயதனம் வேத ஆயதனவான் பவதி
அஸெள வை தபன்னபாமாயதனம் ஆயதனவான் பவதி
யோமுஷ்ய தபத ஆயதனம் வேத ஆயதனவான் பவதி
ஆபோ வா அமுஷ்ய தபத ஆயதனம்
ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத (4)

யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.
கொதிக்கும் சூரியனே நீரின் ஆதாரம்.
யார் கொதிக்கும் சூரியனின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.
நீரே அந்த தகிக்கும் சூரியனின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ,
அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (4)

எவனொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் பிரம்மத்தை அறிந்து அதில் நிலை கொள்கிறான்.
அதாவது ப்ரஹ்ம சாஷாத்காரம் அடைந்தவனாகிறான்.தன்னையே அறிந்தவனாகிறான்.
ஆத்ம சாஷாத்காரம் அடைந்தவனாகிறான்.

நீர் என்பது புலன்கள் சேகரித்துத் தரும் தகவல்களின் அடிப்படையில்
மனம் உருவகப்படுத்தும் உலகானுபவங்கள்தான் என்று முன்னே கண்டோம்.
அந்த உலக அனுபவங்கள் உருவாக வேண்டும் என்றால் பரமனின் அருள் இல்லாமல் முடியாது.

அந்த பரமனோ, தகிக்கிம் சூரியனாக விளங்குகிறான்.
அந்த சூரியன்- ப்ரஹ்மன் தான் நீரின் ஆதாரம் எனப் புரிந்து கொண்டவன்
அந்த ப்ரஹ்மத்தில் நிலைத்து நிற்கிறான்.

பிரம்மன் உலக அனுபவங்களுக்கெல்லாம் சாட்சி மாத்திரமாக நிலை கொள்கிறான்.
சூரியனின் தாபமோ, நீரின் குளிர்மையோ பரமாத்மாவைத் பாதிப்பதில்லை.
ஆனால் அவனில்லை யென்றால் உயிரோட்டம் கிடையாது.
உலக அனுபவங்களும் கிடையாது.ஆகவே உங்களுடைய அனுபவங்களெனும் நீரிற்கும் இந்த ப்ரஹ்மன் தான் ஆதாரம்.
இதை அறிந்தவன் ப்ரஹ்மனில் நிலை கொள்கிறான்.

ஆக உலகமாகின்ற அனுபவங்கள். எனும் நீரிற்கு சூரியன் ஆதாரம். அந்த சூரியனுக்கு அந்த நீரே ஆதாரம்.
அனுபவங்கள் இல்லை யென்றால் சூரியனை எப்படி அறிவது?

————-

மந்த்ரம் 5

யோபாமாயதனம் வேத ஆயதனவான் பவதி
சந்த்ரமா வா அபாமாயதனம் ஆயதனவான் பவதி
யச் சந்த்ரமஸ ஆயதனம் வேத ஆயதனவான் பவதி
ஆபோ வை சந்த்ரமஸ ஆயதனம் ஆயதனவான் பவதி ய ஏவம் வேத (5)

யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் ( ஆத்மாவில்) நிலை பெற்றவன் ஆகிறான்.
நிலவே நீரின் ஆதாரம். யார் நிலவின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.
நீரே நிலவின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (5) )

எவனொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் சர்வ ஐசுவரியங்களையும் பெற்றவனாகிறான்.
அவன் பிரம்மத்தை அறிந்தவனாகிறான்.நீர் என்றால் அனுபவங்கள் என்று முன்னால் கண்டோம்.
இந்த அனுபவங்களோ மனதின் செயல்பாட்டினால் உளவாகிறது.
இந்த மனம் நிலவை ஒத்ததாகவே உள்ளது என்றும் கண்டோம்.
நிலவில் அமுது கலசம் உள்ளது. அது போல் மனம் தான் எல்லா அனுபவங்களையும் அனுபவிக்கின்றது.

நிலவு ஒளிக்கும் இருளிற்கும் இடையில் ஊஞ்சலாடுகிறது.

மனமும் இன்ப- துன்பங்களிடையே ஊஞ்சலாடுகிறது.

மனம் அல்லது நிலவு சூரியனைப் போல் ஸ்திரத் தன்மையோடு இருப்பதில்லை.
மனமும் பிரம்மனைப் போல் உறுதியாக எதாலும் பாதிக்கப் படாமல் நிலை கொள்வதில்லை.

நிலவிற்கு தனதான ஒளி கிடையாது. சூரியனின் ஒளியின் பிரதிபலிப்பு தான் அதன் ஒளி! .
அது போல் மனதிற்கும் தனியாக இருப்பு கிடையாது.அது வெறும் ஜடமே!

மனம் பலதரப்பட்ட உணர்ச்சிகளை உணருகிறது, சாஷி மாத்திரமாயுள்ள பிரம்மனின் சைதன்யத்தால்த் தான்.

மனம் உலகப் பொருட்களை அனுபவிப்பது பரமாத்மாவின் சைதன்யத்தால்த்தான் என்றிருந்தாலும்,
அது மனம் பரமாத்மாவிலிருந்து தனியானது என்று கற்பனை செய்து பௌதிக இன்பங்களைத் தேடி ஓடுகிறது.

மனம் அனுபவிக்கின்ற எல்லா சுகங்களும் அந்த பரமாத்மாவிற்கே உரித்தானது.
ஏனென்றால் அந்த பரமாத்மாவின் ஆதாரத்தில் தான் மனம் நிலை கொள்கின்றது. ஆனால் மனம் அவித்யையினால் மயக்கமுற்று
அதே இன்ப அனுபங்களை வெளியுலக ஜடப்பொருட்களில் தேடுகிறது.

இப்படிப்பட்ட மனம் தான் எல்லா அனுபங்களுக்கும் ஆதாரம். ஆகவே நிலவு தான் நீரிற்கு ஆதாரம்.

ஆனால் எல்லா அனுபவங்களும் மனதில் மையங்கொண்டுள்ளது.மனம் உருவாவதே அனுபவங்களை சேகரிப்பதற்குத்தான்.
ஆகவே அனுபவங்களே மனதிற்கு ஆதாரம்.அனுபவங்கள் இல்லையென்றால் மனம் இல்லை.

நிலவும் நீரும் ஒன்றிற்கொன்று ஆதரவாக நிலை கொள்கின்றது. இந்த உண்மையை அறிந்தவன் பிரம்மத்தை அறிந்தவன்.
அவன் அந்த பரம சத்தியத்தை அறிந்தவனாகிறான்.அவன் செல்வத்தின் ஐசுவரியங்களையும் அடைகிறான்

——————

மந்த்ரம் 6

யோபாமாயதனம் வேத ஆயதனாவான் பவதி॥
நக்ஷத்ராணி வா அபாமாயதனம் ஆயதனவான் பவதி
யோ நக்ஷத்ராணாமாயதனம் வேத ஆயதனவான் பவதி
ஆபோ வை நக்ஷத்ராணா மாயதனம் ஆயதனவான் பவதி ய ஏவம் வேத (6)

யார் நட்சத்திரங்களின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.
நீரே நட்சத்திரங்களின் ஆதாரம்.
யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (6)

நக்ஷத்திரம். என்றால் என்ன? எது ஒன்று மாற்றத்திற்கு ஆட்படாமல் அழிவில்லாமல் இருக்கிறதோ அது நக்ஷத்திரம்.
நக்ஷத்திரங்கள் இடம் மாறுவதில்லை–ஒரே இடத்தில் நிலை கொள்கின்றான!
அவை ப்ரஹ்மனால் – சிருஷ்டி கர்த்தாவால் நிர்ணயிக்கப் பட்ட நியதிகள்.
ப்ரஹ்மன் தான் எல்லா உயிரினங்களின் ஒட்டு மொத்தமான மனம்.

அவன் ஹிரண்ய கர்பத்தின் ஈசன்.அவன் தன் சிருஷ்டிகளின் எல்லா அனுபவங்களையும் அனுபவிப்பவன்.
ஆனால் எப்பொழுதும் சாஷி மாத்திரமாக நிலை கொள்கிறான்.எந்த அனுபவங்களாலும் பாதிக்கப்படுவதில்லை.
தனது சிருஷ்டி விருப்பத்தை தனது எண்ணப்படி பிரபஞ்சத்தை சிருஷ்டிப்பதின் மூலம் திருப்திப் படுத்திக் கொள்கிறான்.
தனது சிருஷ்டிகளுக்கான சட்ட திட்டங்களை அவனே வகுத்துக் கொள்கிறான்.அப்படிப் பட்ட பிரம்மனின் எண்ணங்களே

எல்லா சிருஷ்டிகளின் அனுபவங்களுக்கும் ஆதாரம்.
ஆகவே அனுபவங்களாகப்பட்ட நீரிற்கு பிரம்மனால் வகுக்கப்பட்ட சட்டதிட்டங்களான நட்சத்திரங்களே ஆதாரம்.
சிருஷ்டிகளோ பிரம்மனின் சிருஷ்டி வாசனைகளை பூர்த்தி செய்வதற்காக தோன்றியவையாகும்.
ஆகவே சிருஷ்டிகளின் அனுபவங்கள் தான் பிரம்மன் வகுத்துக் சட்டதிட்டங்களுக்கு ஆதாரம்.
நக்ஷத்திரங்களுக்கு ஆதாரம் அனுபவங்களே!
இந்த உண்மையை உணர்ந்தவன் பிரம்மனின்- தன்னில்- ஆத்மாவில் நிலைகொள்கிறான்.
அவன் ஆத்ம சாக்ஷத்காரம் அடைந்தவனாகிறான்.

————–

மந்த்ரம் 7

யோபாமாயதனம் வேத ஆயதனவான் பவதி
பர்ஜன்யோ வாஅபாமாயதனம் ஆயதனவான் பவதி
ய: பர்ஜன்யஸ்யாயதனம் வேத ஆயதனவான் பவதி
ஆபோ வை பர்ஜன்யஸ்யாயதனம் ஆயதனவான் பவதி ய ஏவம் வேத (7)

யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.
மேகமே நீரின் ஆதாரம்.
யார் மேகங்களின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.
நீரே மேகங்களின் ஆதாரம்.
யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.

நீரின்- அனுபவங்களின் ஆதாரத்தை எவனொருவன் அறிகிறானோ,
அவன் ப்ரஹ்மத்தை அறிந்தவனாகிறான். ப்ரஹ்மத்துடன் ஐக்கியமாகிறான்.

அனுபவங்களின்- நீரின் ஆதாரம் யாது? மேலோட்டமாக பார்க்கின்ற பொழுது
மழை பொழிகின்ற மேகம் தான் நீரின் ஆதாரம் என்று
நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்று தோன்றும்.
மேகத்திலிருந்து நீர் வருகிறது என்று சொல்வதற்கு ரிஷி வரவேண்டியதில்லை.சாமானியர்களுக்கே புரியும்.

பிறகு அவர்கள் என்னதான் சொல்ல வருகிறார்கள்?

பர்ஜன்யா என்றால் நீர் நிறைந்த மேகம்.
இடி முழக்கமிடும் மேகம்.
எப்பொழுது வேண்டுமானாலும்
நீர் திவளைகளை கொட்டித் தீர்த்து விட தயாராக இருக்கின்ற மேகம்.

‘வெளிவராத வாசனைகள் ‘ எப்பொழுது வேண்டுமானாலும் ஜீவாத்மாவை பயன்படுத்தி அனுபவங்களை
சிருஷ்டிக்கத் தயாராய் இருக்கின்ற மேகம் தான் நீரின் ஆதாரம்.
அதற்கு கால- இடம்- கட்டுப்பாடு உண்டு.
பரம சாந்தியுடைய பிரமனிலிருந்து ஜீவன் மாறுபடுவது எப்பொழுதும் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கின்ற வாசனைகள் நிறைந்த
இடி மேகங்களால்  தான்.ஜீவாத்மா எப்பொழுதும் ஒலிகளாலும் உருவங்களாலும் கட்டப்ட்டிருக்கின்றது.
நாம- ரூப வேற்றுமைகளால் கவரப்பட்டு அல்லல் படுகிறது..

இந்த வாசனைகள் நிறைந்த மேகங்கள் தான் ஜீவாத்மாவின் அனுபவங்கள் எனும் நீரிற்கு ஆதாரம்.

ஜீவாத்மாவின் வாசனைகள் அனுபவங்களாக மாறுகிறது. புலன்களின் வாசனைகளுக்கு அறுதி கிடையாது.
ஒன்று நிறைவேறும் பொழுது இன்னொன்று முளைத்தெழுகிறது.
ஒவ்வொரு அனுபவமும் தனித் தனிதான் என்றிருந்தாலும்
ஒன்றிலிருந்து முளைத்தது தான் மற்றொன்று.

மழைத் துளிகள் தனித் தனி தான் என்றாலும் ஒரே நீர் வீழ்ச்சி போல் தோன்றுகிறதல்லவா!
ஒரு நீர்த் துளி தான் இன்னொரு நீர்த் துளிக்கு ஆதாரம்.
ஆகவே மேகங்கள் உருவாவதற்கு நீர்த் துளிகளே காரணம்.
பூமியில் விழுகின்ற நீர் ஆவியாகி மேலே போய் மேகங்கள் உருவாகின்றன.
மீண்டும் மழைத் துளிகளாக பூமியை வந்தடைகின்றன.

அவ்வாறு மேகங்களுக்கும் ஆதாரம் நீரே தான்.
இந்த உண்மையை – இந்த சாக்கிரியத்தை எவனொருவன் அறிகிறானோ அவன்
ப்ரஹ்ம சத்தியத்தை அறிந்தவனாகிறான்.அவன் மேற்கொண்டு வாசனைகளுக்கு இடம் தரான்.
அவன் சர்வ ஐசுவரியங்களுக்கும் அதிபதியாகிறான். அவன் ப்ரஹ்மமேமாகி விடுகிறான்

——————

மந்த்ரம் 8

யோபாமாயதனம் வேத ஆயதனவான் பவதி
ஸம்வத்ஸரோ வா அபாமாயதனம் ஆயதனவான் பவதி
யஸ் ஸம்வத்ஸரஸ்யாயதனம் வேத ஆயதனவான் பவதி
ஆபோ வை ஸம்வத்ஸரஸ்யாயதனம் ஆயதனவான் பவதி ய ஏவம் வேத (8)

யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.
காலமே நீரின் ஆதாரம்.
யார் காலத்தின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.
நீரே காலத்தின் ஆதாரம்.
யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (8)

‘ஸம்வத்ஸரம்’ தான் நீரின் ஆதாரம். நீர் என்றால் உலக அனுபவங்கள். இந்த அனுபவங்கள் பொறிகள்( இந்திரியங்கள்)
சேகரித்து வழங்கும் வெளியுலக தகவல்களை ஆதாரமாக்கி மனம் நெய்தெடுத்த கற்பனைகள்.இவைகளுக்கு ‘ ஸம்வத்ஸரம்’ தான் ஆதாரம்.

‘ ஸம்வத்ஸரம்’ என்றால் -பருவங்கள் இணைந்து உருவானது ஸம்வத்ஸரம். இது வருடம் என்றும் கூறப்படுகிறது.
மழைக்காலம், குளிர்காலம் , இலையுதிர்காலம், வஸந்த காலம், வேனல்காலம் இப்படி பல காலங்கள் இணைந்து உருவாவது வருடம்.
இது ஒரு காலயளவு.அந்த காலயளவில் பருவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வருகின்றன.

இந்த கால யளவிற்குள் உயிரினங்களின் வாசனைகளும் மாறி மாறி வருகிறது. உயிரினங்கள் தங்கள் உடலில் ஏற்படுகின்ற
மாற்றங்களை கணக்கிடுவதற்கு பயன்படுத்தும் ஒரு அளவு கோல் இது.
பிறப்பு, குழந்தைப் பருவம், பால்யம், இளைமை, வளர்ச்சி, முதுமை, இறப்பு என்ற மாற்றங்கள் உடலிற்கேறபடுகின்றன்.
இவைகளை கணக்கிடுவதற்கான அளவுகோல் வருடம் .

இந்த பருவ மாற்றங்களுக்கேற்ப மனம் உருவாக்கும் அனுபவங்களின் குணங்களும் மாறுகின்றன.
குழந்தைப் பருவத்தில் கண்டு மகிழ்நதவை இளைமையில் பொருளற்றதாக தோன்றுகிறது.
இளைமையில் தன்னை வசீகரத்தவை முதுமையில் வேண்டாதவையாகின்றன.
உயிரினங்களுக்கு ஏற்படும் இன்ப- துன்பங்களும் பருவத்திற்கேற்ப மாறுகின்றன.

ஆகவே பருவங்கள் சேர்ந்து உருவாகும் வருடம் என்ற காலயளவு தான் அனுபவங்கள் எனும் நீரோட்டத்திற்கு ஆதாரம்.

இந்த உண்மையை உணர்ந்தவன், அனுபங்களின் அநித்தியத்தை உணர்ந்தவன் தன்னில்- உண்மையான ‘நான்’ நிலை கொள்கின்றான்.
ப்ரஹ்மத்தை அறிந்தவனாகிறான்.

ப்ரஹ்மன் வாசனைகளின் விதைகளை தாங்கி நிற்கும் விருட்சம்.
அந்த மரத்தில் உருவாகின்ற விதைகள் முளைத்து வாசனைகளாகின்றன.,
அந்த வாசனைகளை பூர்த்தி செய்வதற்காக உயிரினங்கள் ( ஜீவாத்மாக்கள்) தங்கள் புலன்கள் மூலம் ஆற்றும் கர்மங்கள் அனுபவங்களாக மாறுகின்றன.
ஆனால் அனுபவங்கள் காலத்திற்கேற்ப மாறுகின்றன.
மாறுகின்ற அனுபவங்களை ஆதாரமாக்கி கொண்டு நாம் காலத்தை இளைமை என்றோ முதுமை என்றோ பால்யம் என்றோ கூறுகிறோம்.
ஆகவே அனுபவங்கள் தான் காலத்திற்கு ஆதாரம்.

இந்த அனுபவங்கள், வாசனைகளை பூர்த்தி பண்ணுவதற்கான கர்மங்களிலிருந்து உருவான அனுபவங்கள்,
அதனாலுண்டாகின்ற வேதனைகள் எல்லாவற்றையும் அனுபவிப்பது ஜீவாத்மா.
அந்த அனுபவங்களின் ஆழம்
ஜீவாத்மாவின் அவித்யைக் பொறுத்துள்ளது.இருளில் காணப்படும் பேயைப்போல், சரீரம் எனும் பேய்
ப்ரஹ்மனின்- பரமாத்மாவின் உண்மை சொரூபத்தையும் மறைத்து பூதாகார வடிவம் எடுக்கிறது.

இவ்வாறு ஸ்தூல உருவம் எடுக்கின்ற அல்லது ஸ்தூல சரீரத்துடன் தன்னை
ஐக்கியப்படுத்திக் கொள்கின்ற ஜீவாத்மா தான் எல்லாவித அனுபவங்களுக்கும் ஆதாரம்.
ஸ்தூல ரூபம் நீராகவும் மலராகவும்,
காற்றாகவும் மேகங்களாகவும்
காலமாகவும் தோற்றமளிக்கின்றன.

நீர் அனுபவங்களையும்
மலர் தகவல்களையும்
தொடர்புகள் காற்றாகவும்,
வெளிவராத ஆசைகளும் வாசனைகளும் மேகங்களாகவும்,
தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்ற மாற்றங்கள் காலமாகவும் உணரப்படுகிறது.

இம்மாதிரி தோன்றுகின்ற மாயத் தோற்றங்களின் உண்மையை உணர்ந்தவன் ப்ரஹ்மனை உணர்ந்தவன்.
அவன் தன்னிலேயே நிலை கொள்ள முடிகிறது.

ப்ரஹ்மத்தின் உண்மையை அஞ்ஞானம் மறைத்து கொண்டிருக்கின்றது.
ஞானம் எனும் தோணியின் உதவியுடன் தான்
அதன் சத்திய சொரூபத்தை அறியமுடியும்.

———–

மந்த்ரம் 9–

யோப்ஸு நாவம் ப்ரதிஷ்டிதாம் வேத
ப்ரத்யேவ திஷ்டதி (9)

யாரொருவன் நீரில் நிலைபெற்றுள்ள ஓடத்தை அறிகிறானோ,
அவன் அதிலேயே நிலை பெறுகிறான். (9)

எவனொருவன் பரமனின் உண்மையை அறிகிறானோ அவன் பரமனே ஆகிறான். எல்லா ஆத்மாவும் பரமாத்மாவே!
ஜீவாத்மா என்பது வாஸனைகளால் உளவான மாயத் திரையினால் மூடப்பட்ட பரமாத்மாவே! அந்த மாயத்திரை தான் அவித்யை!
அந்த அவித்யை எனும் மாயத் திரை விலகி விட்டால் பரமாத்மா வெளிப்படும்.

அது ப்ரஹ்ம சாஷாத்காரம் அல்லது ஆத்ம சாஷாத்காரம்.அந்த ஞானம் பெற்று விட்டால் அவனை லௌகீக வாசனைகள் எதுவும் பாதிக்காது.
எவ்வாறு ஓடத்தில் பயணிக்கும் பொழுது ஒருவனை வெளியிலுள்ள நீர் நனைக்காதோ
அது போல் ப்ரஹ்ம சாஷாத்காரம் அடைந்தவனை அவனை சுற்றி நடக்கும் எதுவும் பாதிக்காது.
அவன் ப்ரஹ்ம நிலையில் உறுதியாக நிலை கொள்கிறான்.

———–

மந்த்ரம் 10

ஓம் ராஜாதி ராஜாய ப்ரஸஹ்ய ஸாஹினே
நமோ வயம் வைச்ரவணாய குர்மஹே
ஸ மே காமான் காமகாமாய மஹ்யம்
காமேச்வரோ வைச்ரவணோ ததாது
குபேராய வைச்ரவணாய மஹா ராஜாய நம: (10)

தலைவர்களுக்கெல்லாம் தலைவனும், பெரும் வெற்றிகளைக் கொடுப்பவனுமான குபேரனை நாங்கள் வணங்குகிறோம்.
விருப்பங்களை நிறைவேற்றுபவனும், செல்வத்தின் தலைவனான அவன், என் விருப்பங்கள் நிறைவேறுவதற்கு
எனக்குத் தேவையான செல்வத்தைக் கொடுக்கட்டும். செல்வத்தின் தலைவனான குபேரனுக்கு,மன்னாதிமன்னனுக்கு வணக்கங்கள்.

ஸாஷாத் காரத்துக்குப் பின்பு
அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்ய செல்வ பிரார்த்தனையுடன் தலைக் கட்டுகிறது –

ஸ்ரீ மந்த்ர புஷ்பம் நிறைவுற்றது

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ நீளா ஸூக்தம் (ஸ்ரீ தைத்ரீய ஸம்ஹிதை, 4-வது காண்டம், 4-வது ப்ரபாடகம், 12-வது அனுவாகம்)

December 31, 2021

ஸ்ரீ நீளா ஸூக்தம்

(ஸ்ரீ தைத்ரீய ஸம்ஹிதை, 4-வது காண்டம், 4-வது ப்ரபாடகம், 12-வது அனுவாகம்)

ஓம் நீளா தேவீம் ஸரணம் அஹம் ப்ரபத்யே
க்ருணாஹி

க்ருதவதீ ஸவிதராதி பத்யை: பயஸ்வதீர் அந்திராஸானோ அஸ்து
த்ருவா திஸாம் விஷ்ணு பத்ன்ய-கோரா ஸ்யேஸானா ஸஹஸோயா

மனோதா ப்ருஹஸ்பதிர்-மாதரிஸ் வோத வாயுஸ்-ஸந்துவானா வாதா அபி
நோ க்ருணந்து விஷ்டம்போ திவோதருண: ப்ருதிவ்யா

அஸ்யேஸானா ஜகதோ விஷ்ணு பத்னீ

ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:

—————————

க்ருதவதீ –புருஷகாரம்
ஸவிதராதி பத்யை -நெருக்கம் போகும் தலைமை இவளுக்கே
பயஸ்வதீ -நெய் பால் அனைத்தும் அளிப்பவள்
அந்திராசா நோ அஸ்து -ஸர்வ அபீஷ்டங்களையும் அளிப்பவள்
த்ருவா திசாம் -வழி -நிலை பெற்ற திசை காட்டி அருளுபவள்
விஷ்ணு பத்ந்யகோரா -கோரா பார்வை இல்லை -ஸ்ரீ விஷ்ணு பத்னீ
ப்ருஹஸ் பதிர் மாதரிஸ் வோதா வாயுஸ் –ப்ருஹஸ்பதியும் வாயுவும் -அடங்கி வழிபடுபவர் –

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.