Archive for the ‘ubanishads’ Category

ஸ்ரீ மா முனிகள் கண்ட வேதாந்த சார நிஷ்கர்ஷம் -ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் —

May 27, 2022

ஸ்ரீ சைல தயா பாத்ரம் தீ பக்த்யாதி குணார்ணவம்
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முனிம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் முதலாக -ஸ்ரீ எம்பெருமானார் நடுவாக -ஸ்ரீ மா முனிகள் ஈறாக -பூர்வாச்சார்ய குரு பரம்பரை
ஸ்ரீ பதரிகாஸ்ரமத்தில் திருமந்திரத்தை ஸ்வ அம்ச பூதனான நரனுக்கு நாராயணன் பிரகாசிப்பித்தான்
அவனே த்வயத்தை ஸ்ரீ விஷ்ணு லோகத்தில் பிராட்டிக்கு பிரகாசிப்பித்தான்
அவனே சரம ஸ்லோகத்தை திருத்தேர் தட்டிலே ஸ்வ ஆஸ்ரிதனான அர்ஜுனனுக்குப் பிரகாசிப்பித்தான்

அவனே தென்னாடும் வடநாடும் தொழ நின்ற திருவரங்கம் திருப்பதியிலே கோயில் கொண்டு

தெளி விசும்பு திருநாட்டை விடத் திரு உள்ளம் உகந்து பெரிய பெருமாளாய்
செங்கோலுடைய திருவரங்கச் செல்வனான திருமேனியோடே கூடியவனாய்

ரஹஸ்ய த்ரயத்தையும் ஒரு சேர ஸ்வ மஹிஷியான பெரிய பிராட்டியாராம் ஸ்ரீ ரெங்க நாச்சியாருக்கு உபதேஸிக்க
தத் சிஷ்ய ப்ரசிஷ்ய பரம்பரையாக நம் அளவும் ரஹஸ்ய த்ரயம் வர பிராப்தம் ஆகிறது –

இவ்வர்த்தம்
புனரபி ச ஏவ பகவான் ஸ்ரீ ரெங்கநாத ஸ்வ மஹிஷீ விஷ்வக்ஸேனஸ்ரீ பராங்குச நாத யமுனா ப்ரப்ருதி பூர்வாச்சார்ய முகேந
ஸ்ரீ ராமானுஜ ஸித்தாந்த நிஷ்ணா தேஷு ஸூத்தம் ரஹஸ்ய த்ரய ஸம்ப்ரதாயம் அவதாரயாமாஸ -ரஹஸ்ய த்ரய மீமாம்ஸ பாஷ்யத்தில் வியக்தம் –
நாயக ரத்னம் போல் எம்பெருமானார் ஸோபா வஹாராக பிரகாசிக்கிறார்

அமுநா தபநாதி ஸாயி பூம்நா யதிராஜேந நிபத்த நாயகி ஸ்ரீ -தேசிகன் திருவாக்கு

அர்வாஞ்சோ யத் பத ஸரஸி ஜத்வந்த்வம் ஆஸ்ரித்ய பூர்வே மூர்த்நா யஸ்ய அந்வய முபகதா தேஸிகா முக்திமாபு பூர்வார் திருவாக்கு –

இந்தப்பரம்பரையில் சரம ஆச்சார்யர் மா முனிகள்-பெரிய ஜீயர் -ஈட்டுப் பெருக்கர் -விசத வாக் ஸிகா மணி –

ஈடு கால ஷேபம் பெரிய பெருமாளுக்கு அருளினார் அன்றோ –
தென் அரங்கர் சீர் அருளுக்கு இலக்காகப் பெற்றார் அன்றோ-

மாநா தீநா மேய ஸித்தி -என்பர் பெரியோர் –
நம் தர்சனத்துக்கு பிரமாணங்கள் மூன்று -ப்ரத்யக்ஷம் -அனுமானம் -ஸப்தம்
ஸப்த பிரமாணமும் ஸ்ருதி ஸ்ம்ருதி மீமாம்ஸை கள் என்று மூன்று வகைப்படும் –
வேதத்தில் பூர்வபாகம் வேதம் என்றும் உத்தரபாகம் உபநிஷத் என்றும் ரஹஸ்ய த்ரயம் வேதாந்த ஸாரம் என்றும் கூறப்படும்
அந்த வேதாந்த சார நிஷ்கர்ஷம் பற்றிப் பார்ப்போம்-

—————-

அசாரம்-அல்ப ஸாரம்- ச ஸாரம் – சார தரம் த்யஜேத்
பஜேத் சார தமம் ஸாஸ்த்ரே ரத்நாகர இவாம்ருதம் -ஸ்ரீ வைகுண்ட தீஷிதீயோபாத்த வசனம் ப்ராமண பாவத்தை வஹிக்கும் –
சமுத்திரத்தில் அடங்கியுள்ள அசாராதி சதுஷ்ட்யம் த்யாஜ்யம்
சார தமம் பஞ்சமம் அம்ருதம் உபாதேயம்

ரஹஸ்ய த்ரய ஸாரத்தில் -சார நிஷ்கர்ஷ அதிகாரத்தில் -தேசிகன் இந்த ஸ்லோக அர்த்த விவரணம் செய்து அருளுகிறார் –
பாஹ்ய குத்ருஷ்டி ஸாஸ்த்ரங்கள் -அசாரம்
வேத பூர்வ பாக ஐஹிக பல -தத் சாதன ப்ரதிபாதிக பாகம் அல்ப ஸாரம்
ஆமுஷ்மிக பல தத் சாதன ப்ரதிபாதக ப்ரதேசம் ஸாரம்
ஆத்ம பிராப்தி தத் சாதன ப்ரதிபாதக பாகம் சார தரம்
பரமாத்ம பிராப்தி தத் சாதன ப்ரதிபாதக ப்ரதேசம் சார தமம் -இதுவே விவேகிக்கு உபாதேயம்-

அதிகாரம்-2-சார நிஷ்கர்ஷ அதிகாரம் –

ஸ்ருதி பத விபரீதம் ஷ்வேள கல்பம் ஸ்ருதை ச
பிரகிருதி புருஷ போக பிராபக அம்ச ந பத்ய
தத் இஹ விபூத குப்தம் ம்ருத்யுபீதா விசின்வந்தி
உபநிஷத் அம்ருத அப்தே உத்தமம் சாரமார்யா —

(வேதங்கள் காட்டும் வழிக்கு, நேர் எதிராக , அர்த்தங்களையும் வழியையும் சொல்லும் எல்லா மதங்களும்
விஷத்துக்குச் சமமானவை. வேதங்களிலும்,இவ்வுலக சௌகர்யங்களையும், கைவல்யம் என்று சொல்லப்படும்
தனது ஆத்மாவையே அனுபவிக்கும் பொருட்டுச் சொல்லப்படும் பகுதிகள் , அனுகூலமற்றவையாகும். ஆதலால், ஸம்ஸாரத்தைக் கண்டு
அச்சப்படுகிற நல்ல விவேகமுள்ளவர்கள் ,இந்த வேதத்தில், உபநிஷத்தாகிற திருப்பாற்கடலிலிருந்தும் ,முன்பு ஆசார்யர்களால்
காப்பாற்றப்பட்டு வருகிறதுமான , மிகவும் ஸாரமானதை ( ரஹஸ்யத்ரயத்தை )–இந்த அம்ருதத்தை —-மிகவும் விரும்புகிறார்கள்.)

இந்த ரஹஸ்ய த்ரயத்தில் திரு மந்த்ரம் சர்வம் அஷ்டாஷராந்த ஸ்தம்-என்கிறபடியே
தன் அர்த்தத்தை அறிய எல்லா அர்த்தங்களையும் அறிந்து தரும்படியாய் இருக்கையாலும்
சரம ஸ்லோகம் சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்று தான் சொல்லுகிற உபாயம் ஒன்றையுமே
அவலம்பிக்க சர்வ உபாய பல சித்தி உண்டாம் என்று ஸ்தாபிக்கையாலும்
த்வயம் கட ஸ்ருத்யாதிகளில் சொல்லுகிறபடியே தன்னை ஒரு கால் உச்சரித்தவனை சர்வ பிரகாரத்தாலும்
க்ருத க்ருத்யனாக்க வல்ல வைபவத்தை யுடைத்தாய் இருக்கையாலும்
ரஹஸ்ய த்ரயமே முமுஷூ வுக்கு ஆதரணீயம் –
(ஸ்ரீமதஷ்டாக்ஷரப்ரஹ்ம வித்யை ( நாரதீய கல்பம்–1–9 ) மற்றும் ஹாரீதஸ்ம்ருதி சொல்கிறது–
ஸர்வம் அஷ்டாக்ஷராந்த :ஸ்தம் –அனைத்துமே அஷ்டாக்ஷரத்தில் உள்ளது–)

அசாரம் அல்பசாரம் ச சாரம் சாரதரம் த்யஜேத்
பஜேத் சாரதமம் சாஸ்த்ரே -ஸ்தரம் -ரத்னாகர இவாம்ருதம் —

பரம புருஷார்த்தமும் தத் உபாயமும் பிரத்யஷாதி பிரமாணங்களால் அறிய ஒண்ணாத படியாலே இவற்றுக்கு
சாஸ்த்ராத் வேதின ஜனார்த்தனம் -என்றும் –
தஸ்மாத் சாஸ்திரம் பிரமாண்யம் கார்ய அகார்ய வ்யவச்திதௌ-என்றும்
சப்த ப்ரஹ்மணி நிஷ்ணாத பரம் ப்ரஹ்மாதி கச்சதி -என்றும் சொல்லுகிறபடியே சப்தமே பிரமாணம் –

(*சாஸ்த்ராத் வேதிந ஜநார்த்தனம் —–மஹாபாரதம் –உத்யோக பர்வம் கூறுகிறது -சாஸ்த்ரம் மூலமாக ஜநார்த்தனனை அறிகிறேன்
தஸ்மாத் சாஸ்த்ரம் ப்ரமாண்யம் கார்ய அகார்ய வ்யவஸ்திதொள — ஸ்ரீமத் பகவத் கீதை ( 16–24 )–
தஸ்மாச்சாஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்யாகார்ய வ்யவஸ்திதொள
ஜ்ஞாத்வா சாஸ்த்ர விதாநோக்தம் கர்ம கர்த்து மிஹார்ஹஸி
செய்யத் தக்கது , செய்யத் தகாதது, என்பதை முடிவு செய்வதில்,சாஸ்த்ரம் தான் ப்ரமாணம் –ஆகவே, சாஸ்த்ரத்தில் சொல்லப்பட்ட
முறையை அறிந்து, கர்மாக்களைச் செய்வாயாக ——
சப்தப்ரஹ்மணி நிஷ்ணாத : பரம் ப்ரஹ்மாதி கச்சதி –மஹாபாரதம்–சாந்தி பர்வம் (276–2 )
சப்தமாகிய வேதங்களை அறிந்தவன், ”ப்ரஹ்ம”த்தை—அதாவது– ஸ்ரீமந் நாராயணனை அறிந்தவன் ஆகிறான்)

அஸாரம் , அல்பஸாரம் —-விளக்கம்–

அவ்விடத்தில்
அனந்த பாரம் பஹூ வேதிதவ்யம் அல்பச்ச காலோ பகவச்ச விக்னா
யத் சார பூதம் ததுபாததீத ஹம்சோ யதோ ஷீரம் இவ அம்புமிச்ரம் -உத்தவ கீதையிலிருந்து -3–10 -என்கிற ஸ்லோகத்தாலே
சார பூதம் என்கிற பதத்தாலே பிரதிபன்னமான நிரூபாதிக சாரத்தை விஷயீ கரிக்கிற சார தம சப்தம் உபாதேயம் —
பாஹ்ய குத்ருஷ்டி சாஸ்திரங்கள் அத்யந்த அசாரங்கள் ஆகையாலே அனுபாதேயங்கள்
வேதத்தில் பூர்வ பாகத்தில் ஐஹிக பல சாதனமான பிரதிபாதகமான பிரதேசம் அத்யல்ப சாரமாகையாலே அநுபாதேயம் –
ஆமுஷ்கிக பல பிரதிபாதிக அம்சம் ஐஹிக பலத்தில் காட்டில் அதிசய பலத்தை யுடைத்தாகையாலே
சிலருக்கு சாரம் என்னவாய் இருந்ததே யாகிலும் துக்க மூலத்வாதி தோஷ த்ருஷ்டம் ஆகையாலே அநுபாதேயம்
ஆத்ம தத் ப்ராப்தி தத் சாதன மாத்ரத்தை பிரதிபாதிக்கும் அம்சமும் சார தரமாய் இருந்ததே யாகிலும்
அதிலும் அத்யந்த அதிசயிதமான பரமாத்மா அனுபவ சாபேஷருக்கு அநுபாதேயம்
பரமாத்ம தத் ப்ராப்தி தத் உபாயங்களை வெளியிடும் பிரதேசம் சார தமம் ஆகையாலே விவேகிக்கு உபாதேயம் –

(துக்க மூலத்வாதி தோஷம் –7
1.அல்பத்வம் —தர்ம,அர்த்த, காம ,மோக்ஷங்கள் அல்பம்;பகவானையே ஆச்ரயிக்கும்போது ,இவை அல்பமே
ஜடாயு, கேட்காமலேயே ஜடாயுவுக்கு மோக்ஷம் கிடைத்தது ( மோக்ஷம் என்பது பகவானின் திருவடியை அடைதல் ) ஜடாயு மோக்ஷத்தையும் கேட்கவில்லை.
2. அஸ்திரத்வம் —ஸம்ஸாரத்தில் உழலும்போது, புண்ய, பாவ அஸ்த்ரங்கள் — கர்மவினை என்கிற சாக்கில், நம்மீது அஸ்த்ரமாகப் பாயும்.
3. துக்கமூலத்வம் —-ஒரு விஷயத்தைத் தொடங்கி, அதை அடைவதற்கு முன்பாக
அந்த முயற்சியில் ஏற்படுகிற துக்கம்
4. துக்க மிச்ரத்வம் —-அந்த விஷயத்தை அடைந்து, அனுபவிக்கிறபோது ஏற்படும் துக்கம்
5. துக்கோதர்கத்வம் –அந்த விஷயத்தை இழக்கிறபோது ஏற்படும் துக்கம்
6. மூலமஹாவிஸர்ஜனத்வம் —ப்ரக்ருதி ஸம்பந்தமான துக்கம்
7. ஸ்வாபாவிக ஆனந்த வ்ருத்தத்வம் —-பகவானின் திருவடியை அடைய தடையாக இருப்பது —எல்லாமே துக்கம்)

(ஜீவன், செயல்படுவதற்கு, பகவான் 16 கலைகளைத் தருகிறான்
1. ப்ராணன் 2. புத்தி 3.த்ரேகம் ( சரீரம் ) 4.ச்ரத்தை 5. ஐந்து பூதங்கள் 10. இந்த்ரியம் 11. மனஸ் 12. அன்னம்
13.வீர்யம் 14.தபஸ் 15.மந்த்ரம் 16.கர்மம் (ஹோமம்,யாகம் போன்றவை ) இவன் ஷோடச கல புருஷன்)

அவ் வம்சத்திலும்
பிரதான ப்ரதி தந்த்ரங்களான தத்வ ஹிதங்களுடைய சங்க்ரஹம் ஆகையாலே -மிகவும் சார தம –
உபாதேயமாய் இருக்கும் ரகஸ்ய த்ரயங்கள் -ஆகையாலே
பஹூப்யச்ச மஹத்ப்யச்ச சாஸ்த்ரேப்யோ மதிமான் நர
சர்வதஸ் சாரமாதத்யாத் புஷ்பேப்ய இவ ஷட்பத-மஹாபாரதம்—சாந்தி பர்வ-176-66 -என்கிறபடியே
ரகஸ்ய த்ரயம் முமுஷூ வான இவ்வாத்மாவுக்கு உபாதேயமாகக் கடவது
ஷட்பத -தேனீ போலே –

அமையா இவை என்னும் ஆசையினால் அறு மூன்று உலகில்
சுமையான கலவிகள் சூழ வந்தாலும் தொகை இவை என்று
இமையா இமையவர் ஏந்திய எட்டு இரண்டு எண்ணிய நம்
சமயாசிரியர் சதிர்க்கும் தனி நிலை தந்தனரே —

அறு மூன்று -18- வேதங்கள் -சிஷை வியாகரணம் சந்தஸ் நிறுத்தம் ஜ்யோதிடம் கல்பம் –
மீமாம்சை நியாயம் புராணம் தர்மம் ஆயுர் வேதம் தனுர் வேதம் காந்தர்வம் அர்த்த சாஸ்திரம் —
எட்டு இரண்டு -அஷ்டாஷரத்தையும் மற்ற இரண்டையும் -த்வயம் சரம ஸ்லோகம்

சாகா நாம் உபரி ஸ்திதேந மநுநா மூலேந லப்த ஆத்மாக
சத்தா ஹேது சக்ருத் ஜபேந சகலம் காலம் த்வயேன ஷிபன்
வேத உத்தாம்ச விஹார சாரதி தயா கும்பேந விஸ்ரம்பித
சாரஞோ யதி கச்சித் அஸ்தி புவனே நாத சயூ தஸ்ய ந லோகம்-

சேஷத்வ ஸ்வரூப அநு வ்ருத்தி -பகவத் பாகவத பர்யந்த கைங்கர்யம் —
ஆஸ்ரிதர்கள் இடம் வாத்ஸல்ய அதிசயம் கொண்ட கீதாச்சார்யன் ஆப்த தம வசனம்
பகவானே வக்தா -வக்த்ரு வை லக்ஷணம் உண்டே-கிருபையின் பரிவாஹ ரூப வசனம் -விஸ்வசநீயம்
ஸ்வரூப ஞானம் உண்டாக்கும் திருமந்திரம்
ஸக்ருத் உச்சாரண மாத்ரத்தால் சம்சாரம் தாண்டுவித்து கால ஷேப அர்த்தமாக உள்ள த்வயம்
மஹா விசுவாசம் உண்டு பண்ணும் சரம ஸ்லோகம் –ஆகிய மூன்றுமே அனுசந்தேயம் என்றதாயிற்று –
இவற்றை அனுஷ்டான பர்யந்தமாக கொண்ட ஞானவான் துர்லபம் –
அப்படிப்பட்டவனும் அவனது பரிஜனங்களும் நமக்கு நாதர்கள்-என்றவாறு –

——————————————————————–

ஆயினும் ஆராய்ந்தால் அசார பதத்துக்கு பாஹ்ய குத்ருஷ்ட்டி ஸாஸ்த்ர பரத்வம் கொள்ளுகை உசிதம் அன்று என விளங்கும்
பாஹ்ய குத்ருஷ்ட்டி ஸாஸ்த்ரங்களுக்கு ஸாஸ்த்ரத்வமே இல்லையே அன்றோ
அலௌகிக பலத்தையும் தத் சாதநாதி களையும் ப்ரதிபாதிக்குமது அன்றோ ஸாஸ்த்ரம் –
சாஸநாத் ஸாஸ்த்ரம் இறே
யா வேத பாஹ்யா ஸ்ம்ருதய யாஸ் ச காஸ் ச குத்ருஷ்ட்யா
ஸர்வாஸ்தா நிஷ் பலா ப்ரேத்ய தமோ நிஷ்டா ஹி தாஸ் ஸ்ம்ருதா -என்று இறே மநு பகவான் அருளிச் செய்தார்
வேதாத் ஸாஸ்த்ரம் பரம் நாஸ்தி -என்று பாஹ்ய குத்ருஷ்ட்டி ஸாஸ்த்ரங்களுக்கு ஸாஸ்த்ரத்வம் நிஷித்தம்
இவ்விடத்தில் பர ஸப்தம் உத்க்ருஷ்ட பரம் அன்று -பர ஸப்தம் அந்நிய வாஸி எனக்கொள்ள வேண்டும் –
வேத பின்னத்துக்கு ஸாஸ்த்ரத்வம் நிஷேதிக்கப் படுகிறது –

த்யாஜ்ய உபாதேய விபாகம் ஏக அவயவியிலே அன்றோ செய்யப்படுகிறது -சமுத்திரம் -த்ருஷ்டாந்தம் –

இனி வாஸ்த்வ அர்த்தம் பார்ப்போம்
ஐஹிக ஆமுஷ்மிக ஐஸ்வர்ய ப்ரதிபாதக பாகம் அசாரம்
ஆத்ம பிராப்தி தத் சாதன ப்ரதிபாதக பாகம் அல்ப ஸாரம்
பரமாத்ம பிராப்தி தத் சாதன பக்தி ப்ரதிபாதிக பாகம் ஸாரம்
பகவத் அனுபவ பரீவாஹ ஸ்வார்த்த கைங்கர்ய தத் சாதன பூதாத்ம சமர்ப்பண ப்ரதிபாதக பாகம் சார தரம்
பரார்த்த கைங்கர்ய தத் சாதன ஸித்த உபாய ப்ரதிபாதக பாகம் சார தமம்
என்றே வாஸ்தவார்த்தம்
ஆக
வேதாந்த பின்னமாய் -சாரத்வேந ப்ரபலமாய் -சார தமமுமான ஸாஸ்த்ரமாம் ரஹஸ்ய த்ரயமே வேதாந்த ஸாரம் எனத் தேறியது –

————

இனி மா முனிகள் கண்ட இதனுடைய நிஷ்கர்ஷத்தை நிரூபிக்கிறோம் –

வைதிகர்கள் வேதார்த்தங்களை நிர்வஹிக்கும் கட்டளைகள் வெவ்வேறு பட்டு இருக்கும் -எங்கனே என்னில்
வேதம் ஜ்யோதிஷ்டோமாதி கர்மங்களைப் பிரதானமாகத் தெரிவிக்கிறது
வேதாந்த விஷயமான ப்ரஹ்மம் ஜீவ பின்னமானதோர் தத்வம் அல்ல
யுகாதி கர்மங்களை செய்கிற ஜீவாத்மாவையே வேதாந்தங்கள் கொண்டாடுகின்றன –
ஆக கர்மபரம் வேதம் -கர்ம கர்த்ரு ஜீவ ப்ரஸம்ஸா பரம் வேதாந்தம் -என்று வேதார்த்தத்தை ஒருங்க விடுவர் சில வைதிகர்கள் –

வேதாந்தம் பக்தி ப்ரபத்திகளான பற்பல உபாயங்களை ப்ரதிபாதிக்கிறது –
நாநா ஸப்தாதி பேதாத்
விகல்ப
அவி ஸிஷ்ட பலத்வாத் -என்று இறே ஸூத்ர காரர் அருளிச் செய்தார் –
ரஹஸ்ய த்ரயமும் வேதாந்தத்தில் அடங்கியதே-பின்ன ஸாஸ்த்ரம் அல்ல –
பூர்வ பாகமான வேதத்தில் சொல்லப்பட்ட கர்மம் பகவத் கைங்கர்ய ரூபமாகும்
அதுவும் ஸ்வார்த்தம் -நம் ஆனந்ததுக்கு உறுப்பாகச் செய்யப்படுமது
பக்தியும் ப்ரபத்தியும் பகவத் ப்ராப்தி உபாயங்கள் -அதாவது பகவத் ப்ரஸாத ஜனகங்கள்
நம்முடைய பக்தி ப்ரபத்திகளாலே பகவானுக்கு அருள் பிறக்கிறதாகையாலே பகவத் ப்ரஸாதம் ஸ ஹேதுகம் என்று வேதார்த்தத்தை ஒருங்க விடுவார் சில வைதிகர்கள் –

ஸித்த உபாய பூதன் ஸர்வேஸ்வரன்
அவன் ஸஹாயாந்தர நிரபேஷ உபாய பூதன்
இவன் பண்ணும் பக்தி ப்ரபத்திகள் -தம் ஹ தேவம் ஆத்ம புத்தி ப்ரகாஸம் -என்கிறபடி பகவத் ப்ரஸாத ஜன்யங்கள்
அவன் அருளாலே விளைந்தவை
பல பூதங்கள் உபாயம் அல்ல என்றபடி
ஆத்ம புத்தே ப்ரகாஸ யஸ்மாத் ஸ ஆத்ம புத்தி ப்ரகாஸ
தத் விஷய புத்தி ஸ்புரணஸ்ய தத் அநு க்ரஹாயத் தத்வாத் -என்ற ஸ்ரீ ரெங்க ராஜ முனி பாஷ்யம் காணத் தக்கது –
என் உணர்வின் உள்ளே நிறுத்தினேன் அதுவும் அவனது இன்னருளே –
எனது ஆவி யார் யான் யார் தந்த நீ கொண்டாக்கினையே -என்ற ப்ரபந்ந ஜன கூடஸ்தரான ஆழ்வார் திருவாக்கும் –
அதவா கின்னு ஸமர்ப்பயாமி தே -என்ற ஆள வந்தார் திருவாக்கும்
வரத தவ கலு ப்ரஸாதாத்ருதே சரணமிதி வஸோ அபி மே நோதியாத் -என்ற ஆழ்வான் திருவாக்கும் இவ்விடம் அநுசந்தேயங்கள்

ஆக பக்தி ப்ரபத்திகள் ஈஸ்வர கிருபா பலம் எனத் தேறியது –
பூர்வ பாக யுக்த கர்மம் பகவத் கைங்கர்ய ரூபம் -அதுவும் பரார்த்தமே -அவன் முக மலர்த்திக்கு உறுப்பானது –
உத்தர பாக யுக்த பக்தி ப்ராப்ய ருசி ஆகலாம் -பிரபத்தி ஸ்வரூப யாதாத்ம்ய ஞான ரூபமாகலாம்
ப்ரஸாத விசிஷ்டனே உபாய பூதன் -அவன் ப்ரஸாதம் நிர் ஹேதுகம் –
பலத்துக்கு வேண்டுவது ஆத்ம ஞானமும் அப்ரதி ஷேதமுமே என்று வேதார்த்தத்தை ஒருங்க விடுவர் பரம வைதிகரான நம் பூர்வர்கள் –

இவ்வர்த்த நிஷ்கர்ஷம் வேதாந்த சார லப்தம்
வேத பூர்வ பாகத்தில் ப்ரதிபாதிதமான கர்மங்களுடைய யாதாத்ம்யம் -வாஸ்த்வ ரூபம் -பகவத் கைங்கர்யத்வம் ஆகும் –
வேதாந்த ப்ரதிபாத்யமான பக்தியினுடைய உண்மை நிலை ப்ராப்ய ருசித்வம் -அதாவது
பகவத் அனுபவ கைங்கர்யங்கள் விஷயமான ப்ரீதி ரூபமாய் இருக்கை –
வேதாந்த ப்ரதிபாத்ய ப்ரபத்தியினுடைய உண்மையான ஆகாரம் ஸ்வரூப யாதாத்ம்ய ஞானத்வம் -அதாவது
ஜீவாத்மாவின் இயல்பான நிலையான பகவத் அத்யந்த பாரதந்தர்யத்தை விஷயமாக யுடைய ஞானமாய் இருக்கை –
இவையும் இவ்வதிகாரிக்கு ப்ராப்யமான பகவத் கைங்கர்யத்தினுடைய பாராரத்வம் முதலானவையும் வேதாந்த சார வேத்யங்கள் ஆகும்
அதாவது ரஹஸ்ய த்ரய வேத்யம் என்றபடி –

———-

இவ்வர்த்தத்தை சில உதாஹரணங்களாலே விளக்குகிறார்
1-கட படாதி பேதம் ப்ரத்யக்ஷ ஸித்தம்
அப்ராப்தே ஹி ஸாஸ்த்ரம் அர்த்தவத் -என்கிற நியாயத்தாலே பேதம் வேதாந்த வேத்யம் அன்று
ஜீவ பரா பேதமே வேதாந்தார்த்தம் என்பர் ம்ருஷ வாதிகள்
இக்கூற்றுக்கு சமாதானம் அருளிச் செய்கிறார் தத்வ சாரத்தில் நடாதூர் அம்மாள் என்று ஸூ ப்ரஸித்தரான வாத்ஸ்ய வரதாச்சார்யர் ஸ்வாமிகள்
ப்ரத்யஷாதி தரஸ்து ஸாஸ்த்ர விஷய பேத த்வதத் வைதவத்-என்று
அதாவது
ப்ரத்யக்ஷ ஸித்த பேதம் ஸ்வ தந்த்ர பேதம்
பொருள்கள் பகவத் சேஷம் யுடையவை என்று அறியப்படாதே ஸ்வ தந்த்ரங்களாகவே அறியப்படுமவையாய் இருக்கும்-
இது ப்ரத்யக்ஷ ஸித்தம்
இனி ஸாஸ்த்ர ஏக வேத்யமான அர்த்தம் என்ன வென்றால்
இவை எல்லாம் பகவத் விபூதிகள் -பகவத் பரதந்த்ரங்கள் -பகவானுக்கு சொத்தாய் இருக்குமவை என்பதேயாம்
ஆக பிரத்யஷத்தால் இவற்றின் ஸ்வா தந்தர்யம் ஞானமானாலும் ஸாஸ்த்ரம் கொண்டே இவற்றினுடைய பாரதந்தர்யம் ஆகிற ஸ்வரூப யாதாத்ம்யம் அறியப்படுமா போலேயும்

2- கட படாதி ஸப்தங்கள் -வ்யுத்புத்தி நிகண்டு ப்ரப்ருதிகளாலே குடம் வஸ்திரம் முதலான வஸ்துக்களுக்கு மாத்ரம் வாசகங்களாகத் தோற்றுகின்றன
ஆயினும் ஸகல ஸப்தங்களும் பகவத் பர்யந்தமாகச் சொல்லி அல்லது நில்லாது என்னும் அர்த்தம்
வஸஸாம் வாஸ்யம் உத்தமம் -இத்யாதி ஸாஸ்த்ரம் கொண்டே அறிய வேணும் –
அது போலவும்
பக்தி ப்ரபத்திகள் உபாயம் இத்யாத் யர்த்தங்கள் வேதாந்தங்களைக் கொண்டு நாம் அறிந்து இருந்தாலும் பக்தி ப்ரபத்திகளின் யல்பான ஸ்வரூபத்தை வேதாந்த சார பூத ரஹஸ்ய த்ரயம் கொண்டே அறிய வேணும் என்றபடி –


கர்ம ப்ராதான்ய வாதிகள் வேத பூர்வ பாக அர்த்த நிஷ்டர்கள்
அவர்களை -பக்தி ப்ரபத்திகள் உபாயம் -ஸ்வார்த்த கைங்கர்யம்புருஷார்த்தம் -என்று சொல்லி வேதாந்த வித்துக்கள் கண்டித்தார்கள்
அந்த வேதாந்திகளையும் பக்தி ப்ரபத்திகள் அதிகாரி விசேஷணங்கள் -பகவத் கிருபா பல பூதங்கள் -பரார்த்த கைங்கர்யமே பரம புருஷார்த்தம் -என்று
சொல்லி வேதாந்த சார நிஷ்டர்கள் கண்டிக்கிறார்கள்
ஆக வேதாந்தங்களைக் காட்டிலும் பின்னமாயும் உயர்ந்ததாயும் -உள்ள வேதாந்த ஸாரமான ரஹஸ்ய த்ரயம்
பரார்த்த கைங்கர்யம் பலம்
பக்தி ப்ரபத்திகள் பகவத் ப்ரஸாத பலம் -என்று செய்யும் நிஷ்கர்ஷமே வேதாந்த சார நிஷ்கர்ஷம்
இவ்வர்த்தமே பஞ்சமம் சார தமம்
இதுவும் இதற்கு ப்ரதிபாதிக வேதாந்த ஸாரமுமே உபாதேயம் என்றதாயிற்று –

அர்த்த தத்வம் இப்படி இருக்க -ஸ்ருதி பத விபரீதம் -என்று தேசிகன் அருளிச் செய்ய ஹேது என் என்ன
வீத ராக வ்யதிரிக்தாநாம் கர்மணி அஸ்ரத்தா நிவாரணர்த்தம் அன்வாருஹ்ய வாத -என்கிறபடியே
சில அதிகாரிகளுக்கு கர்மங்களில் அஸ்ரத்தையைத் தடுக்க ஜைமினி
ப்ரஹ்ம ஸாஸ்த்ரத்தை கர்ம ஸாஸ்த்ர சேஷமாக வர்ணித்தது எப்படி அன்வாருஹ்ய வாதமோ
அப்படியே ஆத்ம யாதாத்ம்ய ஞான விரஹிகளுக்கு ஸாத்ய உபாய ஸாஸ்த்ரத்தில் அஸ்ரத்தையைத் தடுக்க
ஸித்த உபாய ஸாஸ்த்ரம் -ரஹஸ்ய த்ரயம் -அதிரிக்தமாய் இருக்கச் செய்தேயும்
சாதன பக்தி பிரபத்தி ஸாஸ்த்ர ரூப வேதாந்தங்களில் அந்தர்பூதம் என்று அன்வாருஹ்ய வாதமாக அருளிச் செய்தார் தேசிகன் என்று கொள்ள வேண்டும்

இங்கே
விஷய சார பாகோ அயம் வேதாந்தாத் பர இஷ்யதே
பரத்வம் சார ஸாஸ்த்ரஸ்ய ஹி அஸாரம் இதி மாநத -இத்யாதி வசனங்களை அனுசந்திப்பது –
இதனால் தேறிய பொருளாவது
வேதத்தை வேதாந்த அனுகுணம் நயனம் செய்யுமா போலே
வேதாந்தத்தை வேதாந்த சார அனுகுணம் நயனம் பண்ண வேணும் என்று
ஆகையால் சாரீரக ஸாஸ்த்ர அனுகுணம் ரஹஸ்ய த்ரய நயனம் என்கை உசிதம் அன்று
ரஹஸ்ய த்ரய அனுகுணம் சாரீரக பாஷ்யாதி நயனம் உசிதம் என்றதாயிற்று
ரஹஸ்ய த்ரய ப்ரஸ்தானம் சார தமம் ஆகையாலே என்றபடி –


ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாஸ புராண பாஞ்சராத்ர ரூப ஸகல சாஸ்த்ரார்த்த நிர்ணாயகம் சாரீரகம் என்று கூறவும் முடியாது
ஸ்ருத்யர்த்த நிர்ணாயகம் சாரீரகம் ஆயினும் ஸ்ம்ருதி யாதி யர்த்தம் சாரீரகம் என்ன ஒண்ணாது
வேத வியாசர் ஓர் அதிகரணத்தில் ஸ்ருதி அர்த்தங்களில் ஓர் அர்த்தத்தை நியாய மார்க ஸஞ்சாரம் செய்து அறுதியிட்டு அதற்கு ஸம்வாத பிரமாணமாக
ஸ்ம்ருதேஸ் ச
ஸ்மரந்தி ச-என்று ஸ்ம்ருதி யாதிகளை உதாஹரிக்கிறார்
ஸுத்ரீ தர்க்கா ப்ரதிஷ்டா -என்ற தேசிகன் திருவாக்கையும்
த்வயம் கலு தர்க்க ஜாதம் ஸ்ருதி விருத்தம் அவிருத்தம் சேதி -தேந தர்க்கா ப்ரதிஷ்டா வசனம் -என்றும்
ஆர்ஷம் தர்மோபதே சஞ்ச இத்யாதி பிரகாரேண வேத விருத்த தர்க்க விஷய தயா யோஜ்யம்
ந புந வேத இதி கர்த்தவ்யதா ரூப தர்க்க விஷயம் -என்ற தேசிகன் திருக்குமாரர் திரு வாக்கையும் இங்கே அனுசந்திப்பது –
அதீத சாகார்த்த நிர்ணா யகம் நியாயம்
அந தீத சாகார்த்த நிர்ணா யகம் ஸ்ம்ருதியாதி என்று இறே நிஷ் கர்ஷம்
ஸ்ருதியிலும் சார்வத்ரிகமாக நியாய சஞ்சாரம் இல்லை
அஸ்பஷ்ட ஸ்தல மாத்ரத்திலே இறே நியாய சஞ்சாரம்
நியாய நிரபேஷமாக ஸித்தம் -என்ற ரஹஸ்ய த்ரய சார பரிகர விபாகாதிகார வாக்கியத்தையும் காணலாம்
ஸ்ருதிகளில் போலே ஸ்ம்ருதிகளிலும் நியாய ஸஞ்சாரம் கொண்டால் உப ப்ரும்ஹ்ய உப ப்ரும்ஹண பேதமே அற்றுப் போம்
நியாயங்களைக் கற்றுத் தெளிந்த ஸ்ரீ மைத்ரேயன் ஸ்ரீ பராசர பகவானைக் கிட்டினார் புராண ஸ்ரவணம் செய்ய என்று இறே ஸ்ரீவிஷ்ணு புராண உபக்ரமம் –
பாஷ்யகாரர்

இது கொண்டு ஸூத்ர வாக்கியங்கள் ஒருங்க விடுவர் -என்று நாயனாரும்
செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித் தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே -என்று தேசிகனும் அருளிச் செய்தவை அனுசந்தேயம்
அருளிச் செயல்களைக் கொண்டு அன்றோ சரீரக அர்த்த நிர்ணயம் என்று அருளிச் செய்யப்பட்டது
சாரீரகத்தைக் கொண்டு அருளிச் செயல் அர்த்தங்களை அறுதியிடுவது என்று அருளிச் செய்திலரே
ஆகையால் உப ப்ரும்ஹணங்களுக்கு சாரீரக நியாய அபேக்ஷை பொருந்தாது

ஆக வேதாந்த சார பூத ரஹஸ்ய த்ரய அனுகுணம் சாரீர காதி நயநம் கார்யம் என்றதாயிற்று

ஆக வேதாந்த சாரீரகாதி ப்ரதிபாத்ய பக்தி ப்ரபத்திகள் பலம்
ப்ரஹ்மம் ஒன்றே உபாயம்
பூர்வ பாக உதித கர்மம் பரார்த்த கைங்கர்ய ரூபம் -என்று
வேதாந்த சார நிஷ் கர்ஷம் -என்றதாயிற்று

ஸ்ரீ மதே ரம்ய ஜாமாத்ரு முனீந்த்ராய மஹாத்மனே
ஸ்ரீ ரெங்க வாஸிநே பூயாத் நித்ய ஸ்ரீர் நித்ய மங்களம் –

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ உ வே வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

ஸ்ரீ மந்த்ர புஷ்பம் வேதாரம்பம் –ஸ்ரீ மந்தர புஷ்பம்–

January 1, 2022

ஸ்ரீ மந்த்ர புஷ்பம் வேதாரம்பம்

ஹரி: ஓம். அக்நிமீளே புரோஹிதம் யஜ்ஞஸ்ய தேவம் ருத்விஜம் |
ஹோதாரம் ரத்நதாதமம் || ஹரி: ஓம். (ரிக் வேதம்)

ஹரி: ஓம். இஷே த்வோர்ஜே த்வா வாயவஸ் ஸ்தோபாயவஸ் ஸ்த தேவோ வஸ்ஸவிதா
ப்ரார்ப்பயது ச்ரேஷ்டதமாய கர்மணோ || ஹரி: ஓம். (யஜுர் வேதம்)

ஹரி: ஓம். அக்ந ஆயாஹி வீதயே க்ருணாநோ ஹவ்யதாதயே |
நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி || ஹரி: ஓம். (ஸாம வேதம்)

ஹரி: ஓம். சம் நோ தேவீரபிஷ்டய ஆபோ பவந்து பீதயே
சம் யோ ரபிஸ்ரவந்து ந: || ஹரி: ஓம் ஹரி: ஓம். (அதர்வண வேதம்)

ஓமித்யக்ரே வ்யாஹரேத் |
நம இதி பஸ்சாத் |
நாராயணாயேதி உபரிஷ்டாத் |

ஓமித்யேகாக்ஷரம் |
நம இதி த்வே அக்ஷரே |
நாராயணாயேதி பஞ்சாக்ஷராணி |

ஏதத் வை நாராயணஷ்யாஸ்டாக்ஷரம் பதம் |
யோ ஹ வை நாராயணஷ்யாஸ்டாக்ஷரம் பதமித்யேதி |

அநபப்ருவ: ஸர்வமாயுரேதி |
விந்ததே ப்ராஜாபத்யம் ராயஸ்போஷம் கௌபத்யம் |
ததோ அம்ருதத்வம் அச்நுதே ததோ அம்ருதத்வம் அச்நுத இதி |

ய யேவம் வேத |
இத்யுபநிஷத் | (உபநிஷத்)

அத கர்மாந்யாகாராத்யாநி க்ருஹ்யந்தே| உதகயந பூர்வ
பக்ஷரஹ: புண்யாஹேஷு கார்யாணி| யஞ்ஞோபவீதிநா ப்ரதக்ஷிணம் |

இச்சாமோ ஹி மஹாபாஹும் ரகுவீரம் மஹாபலம் |
கஜேந மஹதா யாநதம் ராமம் சத்ராவ்ருதாநநம் || (ஸ்ரீ ராமாயணம்)

தம் த்ருஷ்ட்வா சத்ரு ஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸுகாவஹம் |
பபூவ ஹ்ருஷ்ட்வா வைதேஹீ பர்த்தாரம் பரிஷஸ்வஜே || (ஸ்ரீ ராமாயணம்)

தாஸாமாவிரபூச்சௌரி: ஸ்மயமான முகாம்புஜ: |
பீதாம்பரதர: ஸ்ரக்வீ ஸாக்ஷாந் மந்மத மந்மத: || (ஸ்ரீ பாகவதம்)

ஏஷ நாராயண ஸ்ரீமாந் க்ஷீரார்ணவ நிகேதந: |
நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் || (ஸ்ரீ விஷ்ணு புராணம்)

வைகுண்டேது பரே லோகே ச்ரியா ஸார்த்தம் ஜகத்பதி |
ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ || (லிங்க புராணம்)

———————-

ஸ்ரீ மந்தர புஷ்பம்–

ஓம் யோபாம் புஷ்பம் வேத/ புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான் பவதி/ சந்த்ரமா வா
அபாம் புஷ்பம்/ புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான் பவதி/ ய ஏவம் வேத (1)

யாரொருவன் நீரின் மலரை அறிகிறானோ,
அவன் மலர்களை உடையவனாக, மிருகங்களை உடையவனாக, சந்ததிகளை உடையவனாக ஆகிறான்.
நிலவே நீரின் மலர். யார் இவ்வாறு அறிகிறானோ
அவன் சந்ததிகளை உடையவனாக, மிருகங்களை உடையவனாக ஆகிறான்.

எவனொருவன் நீரின் ஆதாரத்தை புரிந்து கொள்கிறானோ
அவன் பசு மற்றும் மிருகங்கள், புத்திர செல்வங்கள், மலர்கள் எல்லாவற்றையும் பெறுவான்.

————–

“ஓம் யோபாம் புஷ்பம் வேத புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான் பவதி”

“எவனொருவன் நீரின் மலரை அறிகிறானோ அவன் சர்வ ஐசுவரியங்களையும் பெற்றவனாகிறான்.”

இதில் இரண்டு வார்த்தைகள் முக்கியமானவை.
நீர் மற்றும் மலர்.

‘ஆபா’என்றால் நீர்.நீரின் குணம் இடைவிடாமல் ஒழுகிக்கொண்டிருப்பது; ஓடிக்கொண்டிருப்பது; எழும்பி எழும்பி அடங்குவது.
மழை இடை விடாமல் பெயர்தது என்கிறோம் நீர்வீழ்ச்சி நின்று நின்று வருவதில்லை. நதி ஓடிக்கொண்டேயிருக்கிறது.
கடலலைகள் ஒன்றன்பின் ஒன்றாக எழும்பி அடங்குகிறது.

நமது வாழ்வும் அதே போல்த் தான்.நமது அனுபவங்கள் புலன்கள் கொண்டு வரும் செய்திகளை அடிப்படையாகக் கொண்டது
என்று முன்னால் கண்டோம். புலன்கள் ஒரு நொடி கூட ஓய்ந்திருப்பதில்லை.
உண்ணும் பொழுதும் உறங்கும் பொழுதும் அவை தகவல்களை சேகரித்துக் கொண்டேயிருக்கிறது;
மூளை அவைகளை அலசி ஆராய்ந்து உருவம் கொடுக்கிறது.

இந்த இடைவெளியில்லாத நீரொழுக்கு தான் , நீரோட்டம் தான் நமது வாழ்க்கை.
பிறப்பிலிருந்து இறப்பு வரையும் பிறகு மறு பிறப்பும் அதன் பின் மறுபடியும் இறக்கும் வரையும் இந்த நீரோட்டம் நிலைப்பதில்லை.
எண்ண அலைகள் நம் உலகிற்கு உருக்கொடுக்கிறது. அதைத்தவிர வேறு உலகம் கிடையாது.
உலகமே நம் மனத்தில் தான் நிலைகொள்கின்றது. அதற்கென்று தனி இருப்பு கிடையாது.இது தான் உண்மை.
இந்த உண்மையை அறிதல்தான் இந்த நீரோட்டத்தில், நீர் வீழ்ச்சியில், சம்சாரக்கடலில் மலரும் மலர்.இது தான் ஞானம்.

எவனொருவன் இந்த உண்மையை அறிகிறானோ அவன் சர்வ ஐசுவரியங்களையும் பெற்றவனாகிறான்.
இது தான் முதல் பாகத்தில் பொருள்.நமது முன்னோர்கள் ஞானிகள் இதைத் தான் பூடகமாக சொல்லியுள்ளார்கள்.

புத்திர பாக்கியம், செடி- கொடிகள், மலர்கள், பசு மற்றும் கால்நடை செல்வங்கள்
மனிதன் இச்சிக்கும் ஐசுவரியங்கிளுக்கு உதாரணங்கள்.
மேலே சொன்ன உண்மையை அறிந்தவன் எல்லா செல்வங்களும் பெற்றவன் பெறும்
ஆனந்தத்தை விட மேலான ஆனந்தம் கிடைத்தவனாகிறான்.

சந்த்ரமா வா அபாம் புஷ்பம் புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான் பவதி

நிலவே நீரின் மலர். யார் இவ்வாறு அறிகிறானோ அவன் சந்ததிகளை உடையவனாக, மிருகங்களை உடையவனாக ஆகிறான்.

நிலவின் இயற்கை தன்மை ஒளி தருவது.எது மனிதனுக்கு ஒளி தருகிறது? மனம் தான்.
மனம் புலன்கள் பெற்றுத் தரும் தகவல்களை் மூளைக்குள் ஆராய்ந்து பதிவு செய்யவில்லை என்றால் நமக்கு எந்த அறிவும் இராது.
நாம் வெறும் ஜடமாகத்தான் இருப்போம்.

ஆகவே நமக்கு ஒளி தரும் நிலவு தான் மனம்.

இன்னொரு ஒற்றுமை என்னவென்றால் நிலவு இன்று இருந்தது போல் நாளை இராது.
ஒன்று வளர்ந்து கொண்டேயிருக்கும் அல்லது தேய்ந்து கொண்டேயிருக்கும்.
மனமும் எப்பொழுதும் ஒரே போல் இருப்பதில்லை.
மனம் ஒரு நிமிடம் ஆனந்தத்தில் ஆறாடும்; மறுநமிடமே துயரங்கள் எனும் மேகக் கூட்டத்தில் மறைந்து துன்பப்படும் .
இதற்கெல்லாம் காரணம் அது கடந்து போகும் அனுபவங்கள். அது தான் உலக வாழ்க்கை.
அந்த அனுபவங்களில் பூத்த மலர் தான் மனம்.

மனம் என்பதற்கு பௌதிக உருவம் கிடையாது.
அது மூளையிலேயோ வேறு எங்கோ இருக்கிறது என்று குறிப்பிட்டு கூற முடியாது.
அது புலன்கள் கொண்டுவரும் தகவல்களை சேகரித்து வைக்கும் ஒரு கிடங்கு அவ்வளவு தான்.

உலகம் என்பது எண்ணற்ற மனிதர்களின் மனங்கள் சேகரித்து வெவ்வேறு விதமாக புரிந்து கொண்டு
பதிவு செய்துள்ள தகவல்கள் தான்.
ஒவ்வொருவரின் உலகமும் வேறு வேறு விதமாக இருக்கிறது.
ஆகவே மனம் என்பது ஒரு சத்தியமல்லாத ஒன்று.
அதன் கட்டளைகளை நிராகரித்து விட்டு ஆத்மா சொல்வது படி நடந்து கொண்டால்
விஷய வாசனைகள் அறவே அழிந்து தூய்மை யடைந்தவனாவான்.
அவன் பசு, புத்திரர்கள், மலர்கள் போன்ற எல்லா செல்வங்களையும் பெறுவான்.

இந்த உண்மையை புரிந்து கொண்டவன் சர்வ ஐசுவரியங்களையும் பெறுகிறான்.

——————

மந்திரம் இரண்டு

யோபாமாயதனம் வேத ஆயதனவான் பவதி
அக்னிர்வா அபாமாயதனம் ஆயதனவான் பவதி

யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.
நெருப்பே நீரின் ஆதாரம். எவன் நெருப்பின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.
நீரே நெருப்பின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.

நதி மணல்மீது ஓடும்போது ஒழுகும் பொழுது ஒரு நிறத்திலிருக்கும்;
களிமண்ணிலும் சேற்றிலும் ஓடும் பொழுது வேறொரு நிறத்திலிருக்கும்;
பாறை மீது ஓடி வரும் பொழுது வேறொரு நிறத்திலிருக்கும.
சில நேரங்களில் தெளிந்த நீரோடை; மற்று சில நேரங்களில் கலக்கலான நீரோட்டம்.
இவைக்கெல்லாம் ஆதாரம் அது எதன் மீது ஒழுகுகின்றதோ அந்த மண்.
அது போல் நமது அனுபவங்களுக்கும் ஒரு ஆதாரம் வேண்டுமல்லவா? அது எது?

ப்ரஹ்மம் அல்லது பரப் ப்ரஹ்மம் அல்லது பரமாத்மா அல்லது அனந்தாவபோதம் தான் நம் வாழ்க்கை எனும் நீரோட்டத்திற்கு ஆதாரம்.
வாசனைகளற்ற, மாசற்ற, தூய பிரம்மம் நமது வாழ்வின் ஆதாரம்.
இந்த ப்ரஹ்மம் அல்லது அவபோதம் இல்லையென்றால் நாம் எதையும் அனுபவிக்க முடியாது.
நமது புலன்களும், மனமும், புத்தியும் வேலை செய்யாது

இந்த உண்மையை அறிந்தவன் ஆத்ம சாஷாத்கார மடைந்தவனாகிறான்.
அவனிலிருந்த எல்லா விருப்பு- வெறுப்புக்களுக்கும வாசனைகளும் ஒழிந்து போய் விடுகின்றன.
அவன் ப்ரஹ்மமே ஆகிவிடுகிறான். அவன் எதாலும் பாதிக்கப்படமாட்டான். அவனுக்கு இன்ப- துன்பங்கள் கிடையாது.

ப்ரஹ்மம் நெருப்பு. அது எல்லா மாசுக்களையும், வாசனைகளையும் எரித்து சாம்பலாக்கி விடுகிறது.
இந்த ப்ரஹ்மமெனும் நெருப்பு தான் வாழ்க்கை அல்லது உலகமெனும் நீரோட்டத்திற்கு ஆதாரம்.
இந்த உண்மையை அறிந்தவன் பரம சாந்தியை அடைகிறான்..

மந்திரம் இரண்டு (தொடர்கிறது)

அக்னிர்வா அபாமாயதனம் ஆயதனவான் பவதி
யோக்னேராயதனம் வேத ஆயதனவான் பவதி
ஆபோ வா அக்னேராயதனம் ஆயதனவான் பவதி ய ஏவம் வேத (2)

அக்னி என்றால் எது ஒன்று இடைவிடாமல் மேல் நோக்கி போய்க் கொண்டிருக்கிறதோ அது அக்னி.
’ அக்னி’ உண்டாவது உண்மையான பரமாத்மாவைத் மறைத்து – மறந்து , புலன்கள் கொண்டு வரும் தகவல்களை் மெருகேற்றி
பரமாத்மாவின் மீது பதித்து பொய்யான ஒரு ‘நானை’ உருவாக்குகிறது.
அந்த அக்னி – ஜீவாத்மா இந்த ‘மாய நான்’ தான் ‘உண்மையான நான்’ என்று நம்ப ஆரம்பிக்கிறது.

உண்மையான ‘ நான்’ விருப்பு வெறுப்பில்லாத, ஆதியும் அந்தமும்்இல்லாத சர்வ வியாபி!
ஆனால் புலன்கள் தரும் தகவல்களை நம்பி,தன் விஷய வாசனைகளால் மாசுற்று, அஞ்ஞானத்தில் உழலுகின்றது ஜீவாத்மா!
இந்த மாய நான் ஒரு விதத்தில் பார்த்தால் அக்னியே!

இந்த அக்னி தான் வாழ்க்கை எனும் நீரோட்டத்திற்கு லௌகீக பார்வைக்கு ஆதாரமாக இருக்கிறது.
இந்த அவித்யை நீங்கிவிட்டால் மாசற்ற தூய பரப் பிரம்மத்தை உணர முடியும்.
ஆகவே அக்னிக்கு ஆதாரம் புலன்கள் தரும் தகவல்களால் உருவான, காணப்படும் உலகம்.
அந்த நீரிற்கு ஆதாரம் இந்த அக்னி. அக்னி- தானும் எரிந்து, அனுபவங்களையும் எரித்து துன்பத்திற்காளாகிறது.

இந்த உண்மையை உணர்ந்தவன் எல்லா செல்வங்களுக்கெல்லாம் அதிபதியாவான்

இந்த அக்னிக்கும் ஆதாரம் புலன்கள் தரும் தகவல்களின் அடிப்படையில் உளவான அனுபவங்கள்.
ஆக, அக்னிக்கும் ஆதாரம் நீரே! இப்படி ஒன்றுக்கொன்று ஆதரவு அளித்து மாய நானை உயிருடன் வைத்துக் கொள்கிறது.
அனுபவங்கள் அழிந்தால் பொய்யான இந்த நான் அழிந்து விடும்.
இந்த பொய்யான நான் அழிந்து மெய்யான நான் உணரப்பட்டுவிட்டால் அனுபவங்கள் இராது.

யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில்( ப்ரஹ்மத்தில், அனந்தாவபோதத்தில்) நிலை பெற்றவன் ஆகிறான்.

நெருப்பே நீரின் ஆதாரம். எவன் நெருப்பின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் ( ப்ரஹ்மத்தில்)நிலை பெற்றவன் ஆகிறான்.

நீரே நெருப்பின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.

சுருக்கமாக சொல்லப் போனால் அப்படிப் பட்டவன் சத்திய சாஷாத்காரம் அடைந்தவனாகிறான்.

————-

மந்திரம் 3

யோபாமாயதனம் வேத ஆயதனவான் பவதி
வாயுர்வா அபாமாயதனம் ஆயதனவான் பவதி
யோ வாயோராயதனம் வேத ஆயதனவான் பவதி
ஆபோ வை வாயோராயதனம் ஆயதனவான் பவதி ய ஏவம் வேத (3)

யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.
காற்றே நீரின் ஆதாரம்.
யார் காற்றின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.
நீரே காற்றின் ஆதாரம்.
யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (3)

நீரின் ஆதாரத்தை அறிந்தவன் பிரம்மத்தில் நிலைத்து நிற்கிறான்.நீரின் ஆதாரம் காற்றே!
காற்று அல்லது வாயு இல்லையென்றால் பிராணன் இல்லை.
பிராணன் இல்லையென்றால் புலன்கள் செயல்பட மாட்டா!
புலன்கள் செயல்படவில்லையென்றால் மனதிற்கும் புத்திக்கும் தகவல்கள் கிடைக்காது.
அனுபவங்களும் இல்லையென்றாகிவிடும். ஆகவே லௌகீக வாழ்விற்கு, அனுபவங்கள் எனும் நீர் வீழ்ச்சிக்கு ஆதாரம் காற்றே.
இந்த உண்மையை அறிந்தவன் பிரம்மம் எனும் சத்தியத்தை அறிந்து அதில் நிலை கொள்ள முடியும்.

ஆத்மா அல்லது பரமாத்மா அல்லது அனந்தாவபோதம் விருப்பு வெறுப்பில்லாதது. வாசனைகள் இல்லாதது.
அப்படிப்பட்ட ஆத்மா வெளியுலக வஸ்துக்களுடன் தொடர்பு ஏற்பட்டு புலன்கள் மூலம் தகவல்களை சேகரித்து
அனுபவங்களாக மாற்ற பிராணனின் உதவி தேவை.
ஆக பிராணன் அல்லது வாயு தான் அனுபவங்களின் ஆதாரம்.

காற்றிற்கு என்ன ஆதாரம்?

அனுபவங்களே பிராணனின் ஆதாரம். அனுபவங்கள் இல்லையென்றால், புலன்கள் செயல் படவில்லையென்றால்
பிராணன் இருந்தும் பயனில்லை. ‘ கோமா’ நிலையிலிருப்பார்கள் பிராணனுடன் தான் இருக்கிறார்கள்.
ஆனால் அவர்களுக்கு, புலன்கள் வேலை செய்யாத்தால் தங்களைச் சுற்றியுள்ள உலகம் என்ன என்ற அனுபவம் கிடையாது.
அனுபவங்கள் இருந்தால் தான் பிராணனுக்கும் பயனுண்டு. ஆகவே பிராணனுக்கு ஆதாரம் அனுபவங்கள் எனும் நீரோட்டமே! .

இந்த உண்மைகளை எவனொருவன் அறிகிறானோ அவன் ப்ரஹ்மனை அறிகிறான்.-ப்ரஹ்மத்தில் நிலைத்து நிற்கிறான்.
ஆத்ம சாஷாத்காரம் அடைகிறான்.

————-

மந்த்ரம் 4

யோபா மாயதனம் வேத ஆயதனவான் பவதி
அஸெள வை தபன்னபாமாயதனம் ஆயதனவான் பவதி
யோமுஷ்ய தபத ஆயதனம் வேத ஆயதனவான் பவதி
ஆபோ வா அமுஷ்ய தபத ஆயதனம்
ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத (4)

யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.
கொதிக்கும் சூரியனே நீரின் ஆதாரம்.
யார் கொதிக்கும் சூரியனின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.
நீரே அந்த தகிக்கும் சூரியனின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ,
அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (4)

எவனொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் பிரம்மத்தை அறிந்து அதில் நிலை கொள்கிறான்.
அதாவது ப்ரஹ்ம சாஷாத்காரம் அடைந்தவனாகிறான்.தன்னையே அறிந்தவனாகிறான்.
ஆத்ம சாஷாத்காரம் அடைந்தவனாகிறான்.

நீர் என்பது புலன்கள் சேகரித்துத் தரும் தகவல்களின் அடிப்படையில்
மனம் உருவகப்படுத்தும் உலகானுபவங்கள்தான் என்று முன்னே கண்டோம்.
அந்த உலக அனுபவங்கள் உருவாக வேண்டும் என்றால் பரமனின் அருள் இல்லாமல் முடியாது.

அந்த பரமனோ, தகிக்கிம் சூரியனாக விளங்குகிறான்.
அந்த சூரியன்- ப்ரஹ்மன் தான் நீரின் ஆதாரம் எனப் புரிந்து கொண்டவன்
அந்த ப்ரஹ்மத்தில் நிலைத்து நிற்கிறான்.

பிரம்மன் உலக அனுபவங்களுக்கெல்லாம் சாட்சி மாத்திரமாக நிலை கொள்கிறான்.
சூரியனின் தாபமோ, நீரின் குளிர்மையோ பரமாத்மாவைத் பாதிப்பதில்லை.
ஆனால் அவனில்லை யென்றால் உயிரோட்டம் கிடையாது.
உலக அனுபவங்களும் கிடையாது.ஆகவே உங்களுடைய அனுபவங்களெனும் நீரிற்கும் இந்த ப்ரஹ்மன் தான் ஆதாரம்.
இதை அறிந்தவன் ப்ரஹ்மனில் நிலை கொள்கிறான்.

ஆக உலகமாகின்ற அனுபவங்கள். எனும் நீரிற்கு சூரியன் ஆதாரம். அந்த சூரியனுக்கு அந்த நீரே ஆதாரம்.
அனுபவங்கள் இல்லையென்றால் சூரியனை எப்படி அறிவது?

————-

மந்த்ரம் 5

யோபாமாயதனம் வேத ஆயதனவான் பவதி
சந்த்ரமா வா அபாமாயதனம் ஆயதனவான் பவதி
யச் சந்த்ரமஸ ஆயதனம் வேத ஆயதனவான் பவதி
ஆபோ வை சந்த்ரமஸ ஆயதனம் ஆயதனவான் பவதி ய ஏவம் வேத (5)

யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் ( ஆத்மாவில்) நிலை பெற்றவன் ஆகிறான்.
நிலவே நீரின் ஆதாரம். யார் நிலவின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.
நீரே நிலவின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (5) )

எவனொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் சர்வ ஐசுவரியங்களையும் பெற்றவனாகிறான்.
அவன் பிரம்மத்தை அறிந்தவனாகிறான்.நீர் என்றால் அனுபவங்கள் என்று முன்னால் கண்டோம்.
இந்த அனுபவங்களோ மனதின் செயல்பாட்டினால் உளவாகிறது.
இந்த மனம் நிலவை ஒத்ததாகவே உள்ளது என்றும் கண்டோம்.
நிலவில் அமுது கலசம் உள்ளது. அது போல் மனம் தான் எல்லா அனுபவங்களையும் அனுபவிக்கின்றது.

நிலவு ஒளிக்கும் இருளிற்கும் இடையில் ஊஞ்சலாடுகிறது.

மனமும் இன்ப- துன்பங்களிடையே ஊஞ்சலாடுகிறது.

மனம் அல்லது நிலவு சூரியனைப் போல் ஸ்திரத் தன்மையோடு இருப்பதில்லை.
மனமும் பிரம்மனைப் போல் உறுதியாக எதாலும் பாதிக்கப் படாமல் நிலை கொள்வதில்லை.

நிலவிற்கு தனதான ஒளி கிடையாது. சூரியனின் ஒளியின் பிரதிபலிப்பு தான் அதன் ஒளி! .
அது போல் மனதிற்கும் தனியாக இருப்பு கிடையாது.அது வெறும் ஜடமே!

மனம் பலதரப்பட்ட உணர்ச்சிகளை உணருகிறது, சாஷி மாத்திரமாயுள்ள பிரம்மனின் சைதன்யத்தால்த் தான்.

மனம் உலகப் பொருட்களை அனுபவிப்பது பரமாத்மாவின் சைதன்யத்தால்த்தான் என்றிருந்தாலும்,
அது மனம் பரமாத்மாவிலிருந்து தனியானது என்று கற்பனை செய்து பௌதிக இன்பங்களைத் தேடி ஓடுகிறது.

மனம் அனுபவிக்கின்ற எல்லா சுகங்களும் அந்த பரமாத்மாவிற்கே உரித்தானது.
ஏனென்றால் அந்த பரமாத்மாவின் ஆதாரத்தில் தான் மனம் நிலை கொள்கின்றது. ஆனால் மனம் அவித்யையினால் மயக்கமுற்று
அதே இன்ப அனுபங்களை வெளியுலக ஜடப்பொருட்களில் தேடுகிறது.

இப்படிப்பட்ட மனம் தான் எல்லா அனுபங்களுக்கும் ஆதாரம். ஆகவே நிலவு தான் நீரிற்கு ஆதாரம்.

ஆனால் எல்லா அனுபவங்களும் மனதில் மையங்கொண்டுள்ளது.மனம் உருவாவதே அனுபவங்களை சேகரிப்பதற்குத்தான்.
ஆகவே அனுபவங்களே மனதிற்கு ஆதாரம்.அனுபவங்கள் இல்லையென்றால் மனம் இல்லை.

நிலவும் நீரும் ஒன்றிற்கொன்று ஆதரவாக நிலை கொள்கின்றது. இந்த உண்மையை அறிந்தவன் பிரம்மத்தை அறிந்தவன்.
அவன் அந்த பரம சத்தியத்தை அறிந்தவனாகிறான்.அவன் செல்வத்தின் ஐசுவரியங்களையும் அடைகிறான்

——————

மந்த்ரம் 6

யோபாமாயதனம் வேத ஆயதனாவான் பவதி॥
நக்ஷத்ராணி வா அபாமாயதனம் ஆயதனவான் பவதி
யோ நக்ஷத்ராணாமாயதனம் வேத ஆயதனவான் பவதி
ஆபோ வை நக்ஷத்ராணா மாயதனம் ஆயதனவான் பவதி ய ஏவம் வேத (6)

யார் நட்சத்திரங்களின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.
நீரே நட்சத்திரங்களின் ஆதாரம்.
யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (6)

நக்ஷத்திரம். என்றால் என்ன? எது ஒன்று மாற்றத்திற்கு ஆட்படாமல் அழிவில்லாமல் இருக்கிறதோ அது நக்ஷத்திரம்.
நக்ஷத்திரங்கள் இடம் மாறுவதில்லை–ஒரே இடத்தில் நிலை கொள்கின்றான!
அவை ப்ரஹ்மனால் – சிருஷ்டி கர்த்தாவால் நிர்ணயிக்கப் பட்ட நியதிகள்.
ப்ரஹ்மன் தான் எல்லா உயிரினங்களின் ஒட்டு மொத்தமான மனம்.

அவன் ஹிரண்யகர்பத்தின் ஈசன்.அவன் தன் சிருஷ்டிகளின் எல்லா அனுபவங்களையும் அனுபவிப்பவன்.
ஆனால் எப்பொழுதும் சாஷி மாத்திரமாக நிலை கொள்கிறான்.எந்த அனுபவங்களாலும் பாதிக்கப்படுவதில்லை.
தனது சிருஷ்டி விருப்பத்தை தனது எண்ணப்படி பிரபஞ்சத்தை சிருஷ்டிப்பதின் மூலம் திருப்திப் படுத்திக் கொள்கிறான்.
தனது சிருஷ்டிகளுக்கான சட்ட திட்டங்களை அவனே வகுத்துக் கொள்கிறான்.அப்படிப் பட்ட பிரம்மனின் எண்ணங்களே

எல்லா சிருஷ்டிகளின் அனுபவங்களுக்கும் ஆதாரம்.
ஆகவே அனுபவங்களாகப்பட்ட நீரிற்கு பிரம்மனால் வகுக்கப்பட்ட சட்டதிட்டங்களான நட்சத்திரங்களே ஆதாரம்.
சிருஷ்டிகளோ பிரம்மனின் சிருஷ்டி வாசனைகளை பூர்த்தி செய்வதற்காக தோன்றியவையாகும்.
ஆகவே சிருஷ்டிகளின் அனுபவங்கள் தான் பிரம்மன் வகுத்துக் சட்டதிட்டங்களுக்கு ஆதாரம்.
நக்ஷத்திரங்களுக்கு ஆதாரம் அனுபவங்களே!
இந்த உண்மையை உணர்ந்தவன் பிரம்மனின்- தன்னில்- ஆத்மாவில் நிலைகொள்கிறான்.
அவன் ஆத்ம சாக்ஷத்காரம் அடைந்தவனாகிறான்.

————–

மந்த்ரம் 7

யோபாமாயதனம் வேத ஆயதனவான் பவதி
பர்ஜன்யோ வாஅபாமாயதனம் ஆயதனவான் பவதி
ய: பர்ஜன்யஸ்யாயதனம் வேத ஆயதனவான் பவதி
ஆபோ வை பர்ஜன்யஸ்யாயதனம் ஆயதனவான் பவதி ய ஏவம் வேத (7)

யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.
மேகமே நீரின் ஆதாரம்.
யார் மேகங்களின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.
நீரே மேகங்களின் ஆதாரம்.
யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.

நீரின்- அனுபவங்களின் ஆதாரத்தை எவனொருவன் அறிகிறானோ,
அவன் ப்ரஹ்மத்தை அறிந்தவனாகிறான். ப்ரஹ்மத்துடன் ஐக்கியமாகிறான்.

அனுபவங்களின்- நீரின் ஆதாரம் யாது? மேலோட்டமாக பார்க்கின்ற பொழுது
மழை பொழிகின்ற மேகம் தான் நீரின் ஆதாரம் என்று
நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்று தோன்றும்.
மேகத்திலிருந்து நீர் வருகிறது என்று சொல்வதற்கு ரிஷி வரவேண்டியதில்லை.சாமானியர்களுக்கே புரியும்.

பிறகு அவர்கள் என்னதான் சொல்ல வருகிறார்கள்?

பர்ஜன்யா என்றால் நீர் நிறைந்த மேகம்.
இடி முழக்கமிடும் மேகம்.
எப்பொழுது வேண்டுமானாலும்
நீர் திவளைகளை கொட்டித் தீர்த்துவிட தயாராக இருக்கின்ற மேகம்.

‘வெளிவராத வாசனைகள் ‘ எப்பொழுது வேண்டுமானாலும் ஜீவாத்மாவை பயன்படுத்தி அனுபவங்களை
சிருஷ்டிக்கத் தயாராய் இருக்கின்ற மேகம் தான் நீரின் ஆதாரம்.
அதற்கு கால- இடம் கட்டுப்பாடு உண்டு.
பரம சாந்தியுடைய பிரமனிலிருந்து ஜீவன் மாறுபடுவது எப்பொழுதும் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கின்ற வாசனைகள் நிறைந்த
இடி மேகங்களால்  தான்.ஜீவாத்மா எப்பொழுதும் ஒலிகளாலும் உருவங்களாலும் கட்டப்ட்டிருக்கின்றது.
நாம- ரூப வேற்றுமைகளால் கவரப்பட்டு அல்லல் படுகிறது..

இந்த வாசனைகள் நிறைந்த மேகங்கள் தான் ஜீவாத்மாவின் அனுபவங்கள் எனும் நீரிற்கு ஆதாம்.

ஜீவாத்மாவின் வாசனைகள் அனுபவங்களாக மாறுகிறது. புலன்களின் வாசனைகளுக்கு அறுதி கிடையாது.
ஒன்று நிறைவேறும் பொழுது இன்னொன்று முளைத்தெழுகிறது.
ஒவ்வொரு அனுபவமும் தனித் தனிதான் என்றிருந்தாலும்
ஒன்றிலிருந்து முளைத்தது தான் மற்றொன்று.

மழைத் துளிகள் தனித் தனி தான் என்றாலும் ஒரே நீர்வீழ்ச்சி போல் தோன்றுகிறதல்லவா!
ஒரு நீர்த்துளி தான் இன்னொரு நீர்த்துளிக்கு ஆதாரம்.
ஆகவே மேகங்கள் உருவாவதற்கு நீர்த்துளிகளே காரணம்.
பூமியில் விழுகின்ற நீர் ஆவியாகி மேலே போய் மேகங்கள் உருவாகின்றன.
மீண்டும் மழைத் துளிகளாக பூமியை வந்தடைகின்றன.

அவ்வாறு மேகங்களுக்கும் ஆதாரம் நீரே தான்.
இந்த உண்மையை – இந்த சாக்கிரியத்தை எவனொருவன் அறிகிறானோ அவன்
ப்ரஹ்ம சத்தியத்தை அறிந்தவனாகிறான்.அவன் மேற்கொண்டு வாசனைகளுக்கு இடம் தரான்.
அவன் சர்வ ஐசுவரியங்களுக்கும் அதிபதியாகிறான். அவன் ப்ரஹ்மமேமாகி விடுகிறான்

——————

மந்த்ரம் 8

யோபாமாயதனம் வேத ஆயதனாவான் பவதி
ஸம்வத்ஸரோ வா அபாமாயதனம் ஆயதனவான் பவதி
யஸ் ஸம்வத்ஸரஸ்யாயதனம் வேத ஆயதனவான் பவதி
ஆபோ வை ஸம்வத்ஸரஸ்யாயதனம் ஆயதனவான் பவதி ய ஏவம் வேத (8)

யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.
காலமே நீரின் ஆதாரம்.
யார் காலத்தின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.
நீரே காலத்தின் ஆதாரம்.
யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (8)

‘ஸம்வத்ஸரம்’ தான் நீரின் ஆதாரம். நீர் என்றால் உலக அனுபவங்கள். இந்த அனுபவங்கள் பொறிகள்( இந்திரியங்கள்)
சேகரித்து வழங்கும் வெளியுலக தகவல்களை ஆதாரமாக்கி மனம் நெய்தெடுத்த கற்பனைகள்.இவைகளுக்கு ‘ ஸம்வத்ஸரம்’ தான் ஆதாரம்.

‘ ஸம்வத்ஸரம்’ என்றால் -பருவங்கள் இணைந்து உருவானது ஸம்வத்ஸரம். இது வருடம் என்றும் கூறப்படுகிறது.
மழைக்காலம், குளிர்காலம் , இலையுதிர்காலம், வஸந்த காலம், வேனல்காலம் இப்படி பல காலங்கள் இணைந்து உருவாவது வருடம்.
இது ஒரு காலயளவு.அந்த காலயளவில் பருவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வருகின்றன.

இந்த கால யளவிற்குள் உயிரினங்களின் வாசனைகளும் மாறி மாறி வருகிறது. உயிரினங்கள் தங்கள் உடலில் ஏற்படுகின்ற
மாற்றங்களை கணக்கிடுவதற்கு பயன்படுத்தும் ஒரு அளவு கோல் இது.
பிறப்பு, குழந்தைப் பருவம், பால்யம், இளைமை, வளர்ச்சி, முதுமை, இறப்பு என்ற மாற்றங்கள் உடலிற்கேறபடுகின்றன்.
இவைகளை கணக்கிடுவதற்கான அளவுகோல் வருடம் .

இந்த பருவ மாற்றங்களுக்கேற்ப மனம் உருவாக்கும் அனுபவங்களின் குணங்களும் மாறுகின்றன.
குழந்தைப் பருவத்தில் கண்டு மகிழ்நதவை இளைமையில் பொருளற்றதாக தோன்றுகிறது.
இளைமையில் தன்னை வசீகரத்தவை முதுமையில் வேண்டாதவையாகின்றன.
உயிரினங்களுக்கு ஏற்படும் இன்ப- துன்பங்களும் பருவத்திற்கேற்ப மாறுகின்றன.

ஆகவே பருவங்கள் சேர்ந்து உருவாகும் வருடம் என்ற காலயளவு தான் அனுபவங்கள் எனும் நீரோட்டத்திற்கு ஆதாரம்.

இந்த உண்மையை உணர்ந்தவன், அனுபங்களின் அநித்தியத்தை உணர்ந்தவன் தன்னில்- உண்மையான ‘நான்’ நிலை கொள்கின்றான்.
ப்ரஹ்மத்தை அறிந்தவனாகிறான்.

ப்ரஹ்மன் வாசனைகளின் விதைகளை தாங்கி நிற்கும் விருட்சம்.
அந்த மரத்தில் உருவாகின்ற விதைகள் முளைத்து வாசனைகளாகின்றன.,
அந்த வாசனைகளை பூர்த்தி செய்வதற்காக உயிரினங்கள் ( ஜீவாத்மாக்கள்) தங்கள் புலன்கள் மூலம் ஆற்றும் கர்மங்கள் அனுபவங்களாக மாறுகின்றன.
ஆனால் அனுபவங்கள் காலத்திற்கேற்ப மாறுகின்றன.
மாறுகின்ற அனுபவங்களை ஆதாரமாக்கி கொண்டு நாம் காலத்தை இளைமை என்றோ முதுமை என்றோ பால்யம் என்றோ கூறுகிறோம்.
ஆகவே அனுபவங்கள் தான் காலத்திற்கு ஆதாரம்.

இந்த அனுபவங்கள், வாசனைகளை பூர்த்தி பண்ணுவதற்கான கர்மங்களிலிருந்து உருவான அனுபவங்கள்,
அதனாலுண்டாகின்ற வேதனைகள் எல்லாவற்றையும் அனுபவிப்பது ஜீவாத்மா.
அந்த அனுபவங்களின் ஆழம்
ஜீவாத்மாவின் அவித்யைக் பொறுத்துள்ளது.இருளில் காணப்படும் பேயைப்போல், சரீரம் எனும் பேய்
ப்ரஹ்மனின்- பரமாத்மாவின் உண்மை சொரூபத்தையும் மறைத்து பூதாகார வடிவம் எடுக்கிறது.

இவ்வாறு ஸ்தூல உருவம் எடுக்கின்ற அல்லது ஸ்தூல சரீரத்துடன் தன்னை
ஐக்கியப்படுத்திக் கொள்கின்ற ஜீவாத்மா தான் எல்லாவித அனுபவங்களுக்கும் ஆதாரம்.
ஸ்தூல ரூபம் நீராகவும் மலராகவும்,
காற்றாகவும் மேகங்களாகவும்
காலமாகவும் தோற்றமளிக்கின்றன.

நீர் அனுபவங்களையும்
மலர் தகவல்களையும்
தொடர்புகள் காற்றாகவும்,
வெளிவராத ஆசைகளும் வாசனைகளும் மேகங்களாகவும்,
தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்ற மாற்றங்கள் காலமாகவும் உணரப்படுகிறது.

இம்மாதிரி தோன்றுகின்ற மாயத்தோற்றங்களின் உண்மையை உணர்ந்தவன் ப்ரஹ்மனை உணர்ந்தவன்.
அவன் தன்னிலேயே நிலை கொள்ள முடிகிறது.

ப்ரஹ்மத்தின் உண்மையை அஞ்ஞானம் மறைத்து கொண்டிருக்கின்றது.
ஞானம் எனும் தோணியின் உதவியுடன் தான்
அதன் சத்திய சொரூபத்தை அறியமுடியும்.

———–

மந்த்ரம் 9–

யோப்ஸு நாவம் ப்ரதிஷ்டிதாம் வேத
ப்ரத்யேவ திஷ்டதி (9)

யாரொருவன் நீரில் நிலைபெற்றுள்ள ஓடத்தை அறிகிறானோ,
அவன் அதிலேயே நிலை பெறுகிறான். (9)

எவனொருவன் பரமனின் உண்மையை அறிகிறானோ அவன் பரமனே ஆகிறான். எல்லா ஆத்மாவும் பரமாத்மாவே!
ஜீவாத்மா என்பது வாஸனைகளால் உளவான மாயத் திரையினால் மூடப்பட்ட பரமாத்மாவே! அந்த மாயத்திரை தான் அவித்யை!
அந்த அவித்யை எனும் மாயத்திரை விலகி விட்டால் பரமாத்மா வெளிப்படும்.

அது ப்ரஹ்ம சாஷாத்காரம் அல்லது ஆத்ம சாஷாத்காரம்.அந்த ஞானம் பெற்றுவிட்டால் அவனை லௌகீக வாசனைகள் எதுவும் பாதிக்காது.
எவ்வாறு ஓடத்தில் பயணிக்கும்பொழுது ஒருவனை வெளியிலுள்ள நீர் நனைக்காதோ
அது போல் ப்ரஹ்ம சாஷாத்காரம் அடைந்தவனை அவனை சுற்றி நடக்கும் எதுவும் பாதிக்காது.
அவன் ப்ரஹ்ம நிலையில் உறுதியாக நிலை கொள்கிறான்.

———–

மந்த்ரம் 10

ஓம் ராஜாதி ராஜாய ப்ரஸஹ்ய ஸாஹினே
நமோ வயம் வைச்ரவணாய குர்மஹே
ஸ மே காமான் காமகாமாய மஹ்யம்
காமேச்வரோ வைச்ரவணோ ததாது
குபேராய வைச்ரவணாய மஹா ராஜாய நம: (10)

தலைவர்களுக்கெல்லாம் தலைவனும், பெரும் வெற்றிகளைக் கொடுப்பவனுமான குபேரனை நாங்கள் வணங்குகிறோம்.
விருப்பங்களை நிறைவேற்றுபவனும், செல்வத்தின் தலைவனான அவன், என் விருப்பங்கள் நிறைவேறுவதற்கு
எனக்குத் தேவையான செல்வத்தைக் கொடுக்கட்டும். செல்வத்தின் தலைவனான குபேரனுக்கு,மன்னாதிமன்னனுக்கு வணக்கங்கள்.

ஸாஷாத் காரத்துக்குப் பின்பு
அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்ய செல்வ பிரார்த்தனையுடன் தலைக் கட்டுகிறது –

ஸ்ரீ மந்த்ர புஷ்பம் நிறைவுற்றது

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ நீளா ஸூக்தம் (ஸ்ரீ தைத்ரீய ஸம்ஹிதை, 4-வது காண்டம், 4-வது ப்ரபாடகம், 12-வது அனுவாகம்)

December 31, 2021

ஸ்ரீ நீளா ஸூக்தம்

(ஸ்ரீ தைத்ரீய ஸம்ஹிதை, 4-வது காண்டம், 4-வது ப்ரபாடகம், 12-வது அனுவாகம்)

ஓம் நீளா தேவீம் ஸரணம் அஹம் ப்ரபத்யே
க்ருணாஹி

க்ருதவதீ ஸவிதராதி பத்யை: பயஸ்வதீர் அந்திராஸானோ அஸ்து
த்ருவா திஸாம் விஷ்ணு பத்ன்ய-கோரா ஸ்யேஸானா ஸஹஸோயா

மனோதா ப்ருஹஸ்பதிர்-மாதரிஸ் வோத வாயுஸ்-ஸந்துவானா வாதா அபி
நோ க்ருணந்து விஷ்டம்போ திவோதருண: ப்ருதிவ்யா

அஸ்யேஸானா ஜகதோ விஷ்ணு பத்னீ

ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:

—————————

க்ருதவதீ –புருஷகாரம்
ஸவிதராதி பத்யை -நெருக்கம் போகும் தலைமை இவளுக்கே
பயஸ்வதீ -நெய் பால் அனைத்தும் அளிப்பவள்
அந்திராசா நோ அஸ்து -ஸர்வ அபீஷ்டங்களையும் அளிப்பவள்
த்ருவா திசாம் -வழி -நிலை பெற்ற திசை காட்டி அருளுபவள்
விஷ்ணு பத்ந்யகோரா -கோரா பார்வை இல்லை -ஸ்ரீ விஷ்ணு பத்னீ
ப்ருஹஸ் பதிர் மாதரிஸ் வோதா வாயுஸ் –ப்ருஹஸ்பதியும் வாயுவும் -அடங்கி வழிபடுபவர் –

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ ஸூக்தம்-(ஸ்ரீ ருக்வேத ஸம்ஹிதை, 4-வது அஷ்டகம், 11-வது ஸூக்தம்)

December 31, 2021

ஸ்ரீ ஸூக்தம்

ஓம் ||
ஹிர’ண்யவர்ணாம் ஹரி’ணீம் ஸுவர்ண’ரஜத ஸ்ர’ஜாம் |
சம்த்ராம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||
தாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ லக்ஷ்மீமன’பகாமினீ”ம் |–1-

ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம் ஸுவர்ண-ரஜ-தஸ்ரஜாம் சந்த்ராம்
ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ

ஜாத வேத -எல்லாவற்றையும் அறியும் அக்னி தேவனே ,
ஹிரண்ய வர்ணாம் -பொன் நிறத்தவளும்.
ஹரிணீம் -பாவங்களைப் போக்குபவளும் ,
ஸ்வர்ண ரத ஸ்ரஜாம்-தங்கம் மற்றும் வெள்ளி மாலைகளை அணிந்தவளும் ,
சந்த்ராம்- நிலவு போன்றவளும் ,
ஹிரண்மயீம் -பொன்னே உருவானவளும்,
லக்ஷ்மீம்…
மே ஆவஹ -என்னிடம் எழுந்து அருளச் செய்வாயாக

——-

தாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ லக்ஷ்மீமன’பகாமினீ”ம் |
யஸ்யாம் ஹிர’ண்யம் விம்தேயம் காமஶ்வம் புரு’ஷானஹம் ||–2-

தாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீ-மநப-காமிநீம் யஸ்யாம்
ஹிரண்யம் விந்தேயம் காமஸ்வம் புருஷானஹம்

ஜாத’வேதோ -அக்னி தேவதையே
ஹிர’ண்யம் -பொன்னையும்
காம் -பசுக்களையும்
அஶ்வம்-குதிரைகளையும்
புரு’ஷான் -உறவினரையும்
அஹம் விந்தேயம் -நான் பெறுவேனோ
தாம் -அந்த ஸ்ரீ லஷ்மியை
ம ஆவ’ஹ -என்னிடம் எழுந்து அருள்ச செய்வாயாக
லக்ஷ்மீமன’பகாமினீ”ம் யஸ்யாம் -அந்த மஹா லஷ்மியை-என்னிடம் இருந்து விலகாமல் இருக்கும் படி செய்வாயாக –

————-

அஶ்வ பூர்வாம் ர’தமத்யாம் ஹஸ்தினா”த-ப்ரபோதி’னீம் |
ஶ்ரியம்’ தேவீமுப’ஹ்வயே ஶ்ரீர்மா தேவீர்ஜு’ஷதாம் ||–3-

அஸ்வபூர்வாம் ரத-மத்யாம் ஹஸ்திநாத ப்ரபோதிநீம்
ஸ்ரியம் தேவீ- முபஹ்வயே ஸ்ரீர்மா தேவீர் ஜுஷதாம்

அஶ்வ பூர்வாம் -முன்னால் குதிரைகளும்
ர’த மத்யாம் -நடுவில் ரதங்களும்
ஹஸ்தினா”த-ப்ரபோதி’னீம் -களிறுகளின் பிளிறல் களை தனக்கு அறிகுறியாகக்கொண்ட வளுமான
ஶ்ரியம்’ தேவீம் -மனதுக்கு உகந்தவளுமான ஸ்ரீ தேவியை
உப’ஹ்வயே -அழைக்கின்றேன்
ஶ்ரீர்மா தேவீர் ஜு’ஷதாம் –ஸ்ரீ தேவியே அடியேனை விட்டுப் பிரியாமல் நித்ய வாஸம் செய்து அருளுவாயாக –

————-

காம் ஸோ”ஸ்மிதாம் ஹிர’ண்யப்ராகாரா’மார்த்ராம் ஜ்வலம்’தீம் த்ருப்தாம் தர்பயம்’தீம் |
பத்மே ஸ்திதாம் பத்மவ’ர்ணாம் தாமிஹோப’ஹ்வயே ஶ்ரியம் ||–4-

காம் ஸோ ஸ்மிதாம் ஹிரண்ய ப்ராகாரா மார்த்ராம் ஜ்வலந்தீம் த்ருப்தாம் தர்ப்பயந்தீம்
பத்மே ஸ்திதாம் பத்ம வர்ணாம் தாமிஹோப ஹ்வயே ஸ்ரியம்

ஸ்மிதாம் -மந்தஹாஸம் தவழ்பவள்
ஹிர’ண்ய ப்ராகாராம் -பொன் மயமான கோட்டையில் திகழ்பவளும்
ஆர்த்ராம்-கருணை நிறைந்தவளும்
ஜ்வலம்’தீம் -தேஜஸ் மிக்கவளும்
த்ருப்தாம் -மனம் நிறைந்து இருப்பவளும்
தர்பயம்’தீம் -தன்னை ஸ்துதிப்போர்க்கு ஆனந்தம் ஊட்டுபவளும்
பத்மே ஸ்திதாம் -தாமரையில் நிலை பெற்றவளும்
பத்ம வ’ர்ணாம் -தாமரை நிறத்தவளும்
காம் -யாரோ
தாம் ஶ்ரியம் -அந்த மனத்துக்கு உகந்த ஸ்ரீ லஷ்மியை
இஹ-இங்கே
உ ப’ஹ்வயே -வேண்டுகிறேன் –

——

சந்த்ராம் ப்ர’பாஸாம் யஶஸா ஜ்வலம்’தீம் ஶ்ரியம்’ லோகே தேவஜு’ஷ்டாமுதாராம் |
தாம் பத்மினீ’மீம் ஶர’ணமஹம் ப்ரப’த்யே‌ அலக்ஷ்மீர்மே’ னஶ்யதாம் த்வாம் வ்ரு’ணே ||–4-

சந்த்ராம் ப்ரபாஸாம் யஸஸா ஜ்வலந்தீம் ஸ்ரியம் லோகே தேஜுஷ்டா-முதாராம்
தாம் பத்மினீமீம் ஸரண-மஹாம் ப்ரபத்யே அலக்ஷ்மீர்மே நஸ்யதாம் த்வாம் வ்ருணே

லோகே -உலகோர்க்கு
சந்த்ராம் -குளிர்ச்சி வழங்குவதில் நிலவைப் போன்றவளும்
ப்ர’பாஸாம் -பரந்த தேஜஸ்ஸூ மிக்கவளும்
யஶஸா ஜ்வலம்’தீம் -தனது மகிமையால் சுடர் விட்டு ஒளிபவளும்
ஶ்ரியம்’ தேவஜு’ஷ்டாம் -தேவர்களால் ஸ்துதிக்கப்படுபவளும்
உதாராம்–வண்மை மிக்கவளும்
தாம் பத்மினீ’ம் -தாமரைப் பூவை ஏந்திக் கொண்டு இருப்பவளும்
ஈம் -ஈம் என்ற பீஜ மந்த்ரத்த்தின் பொருளாகத் திகழ்பவளும்
தாம் ஸ்ரீ யம் -அந்த மனதிற்கு உகந்த ஸ்ரீ மஹா லஷ்மியை
ஶர’ணமஹம் ப்ரப’த்யே‌–அடியேன் சரணமாகப் பற்றுகிறேன்
த்வாம் வ்ரு’ணே –உன்னை வேண்டுகிறேன்
அலக்ஷ்மீர் மே நஶ்யதாம் -என்னிடம் உள்ள அலஷ்மிகள் நசிக்கட்டும் –

————

ஆதித்யவ’ர்ணே தபஸோ‌உதி’ஜாதோ வனஸ்பதிஸ்தவ’ வ்றுக்ஷோ‌உத பில்வஃ |
தஸ்ய பலா’னி தபஸானு’தம்து மாயாம்த’ராயாஶ்ச’ பாஹ்யா அ’லக்ஷ்மீஃ ||–5-

ஆதித்ய-வர்ணே தபஸோ திஜாதோ வனஸ்பதிஸ்தவ வ்ரு÷க்ஷõத பில்வ:
தஸ்ய பலானி தபஸா நுதந்து மாயாந்தராயாஸ்ச பாஹ்யா அலக்ஷ்மீ:

ஆதித்ய-வர்ணே -ஸூர்யனின் நிறத்தவளே
தவ தபஸோ-உன்னுடைய அருளாலே
வனஸ்பதி பில்வ: வ்ருக்ஷ அ திஜாதோ – கான தலைவனான வில்வ மரம் உண்டாயிற்று
தஸ்ய பலானி -அதே போல் உனது அருளின் பலத்தாலேயே
மாயா அந்தராயாஸ்-அறியாமையாகிய உள் இருட்டையும்
பாஹ்யா அலக்ஷ்மீ:–வெளியில் உள்ள அமங்களங்களையும் அழிக்கட்டும் –

———–

உபைது மாம் தேவஸகஃ கீர்திஶ்ச மணி’னா ஸஹ |
ப்ராதுர்பூதோ‌உஸ்மி’ ராஷ்ட்ரே‌உஸ்மின் கீர்திம்ரு’த்திம் ததாது’ மே ||–6-

உபைது மாம் தேவஸக: கீர்த்திஸ்ச மணினா ஸஹ
ப்ராதுர் பூதோ ஸ்மி ராஷ்ட்ரே-ஸ்மின் கீர்த்திம்ருத்திம் ததாது மே

தேவஸக: -செல்வத்துக்குத் தலைவனான குபேரனும்
கீர்த்திஸ்ச –புகழின் தேவனும்
மணினா ஸஹ –என்னை நாடி வர வேண்டும்
அஸ்மின் ராஷ்ட்ரே-இந்த நாட்டிலே
ப்ராதுர் பூத அஸ்மின் -அடியேன் பிறந்திருக்கிறேன்
கீர்த்திம் ருதிம் ததாது மே-அடியேனுக்கு பெருமையையும் செல்வமும் வழங்கி அருள்வாய்

———-

க்ஷுத்பி’பாஸாம’லாம் ஜ்யேஷ்டாம’லக்ஷீம் னா’ஶயாம்யஹம் |
அபூ’திமஸ’ம்ருத்திம் ச ஸர்வாம் னிர்ணு’த மே க்ருஹாத் ||-7-

க்ஷúத்-பிபாஸா மலாம் ஜ்யோஷ்டா-மலக்ஷ்மீம் நாஸயாம்யஹம்
அபூதி-மஸம்ருத்திம் ச ஸர்வான் நிர்ணுத மே க்ருஹாத்–7-

க்ஷúத்-பிபாஸா மலாம் -பசியினாலும் தாகத்தினாலலும் இளைத்து
ஜ்யோஷ்டா-மலக்ஷ்மீம் யஹம்-செல்வத்தினில் இருந்து விலகிய மூதேவியை நான்
மே க்ருஹாத்-நாஸயாம்-எனது இல்லத்தில் இருந்து விலக்குகிறேன்
அபூதி-மஸம்ருத்திம் ச ஸர்வான் நிர்ணுத -அனைத்து ஏழ்மையையும் வறுமையையும் அகற்றி அருளுக –

———

கம்தத்வாராம் து’ராதர்ஷாம் னித்யபு’ஷ்டாம் கரீஷிணீ”ம் |
ஈஶ்வரீக்ம்’ ஸர்வ’பூதானாம் தாமிஹோப’ஹ்வயே ஶ்ரியம் ||–8-

கந்த-த்வாராம் துராதர்ஷாம் நித்ய புஷ்டாம் கரீஷிணீம்
ஈஸ்வரீ ஸர்வ-பூதானாம் தாமி-ஹோபஹ்வயே ஸ்ரியம்

கந்த-த்வாராம் -பரிமளமே வடிவானவளும்
துராதர்ஷாம் -வெல்ல முடியாதவளும்
நித்ய புஷ்டாம் -நித்ய வலிமை தருபவளும்
கரீஷிணீம் -அனைத்தும் நிறைந்தவளும்
ஈஸ்வரீ ஸர்வ-பூதானாம் -அனைவருக்கும் ஸர்வேஸ்வரியுமான
தாம் -அந்த மஹா லஷ்மியை
இஹ உபஹ்வயே -இங்கே எழுந்து அருளப் பிரார்த்திக்கிறேன் –

———-

மன’ஸஃ காமமாகூதிம் வாசஃ ஸத்யம’ஶீமஹி |
பஶூனாம் ரூபமன்ய’ஸ்ய மயி ஶ்ரீஃ ஶ்ர’யதாம் யஶஃ’ ||–9-

மனஸ: காம-மாகூதிம் வாச: ஸத்யமஸீமஹி
பஸூனாம் ரூப மன்னஸ்ய மயி ஸ்ரீ: ஸ்ரயதாம் யஸ:

ஸ்ரீ:
மனஸ: காமம் -மனதில் எழும் ஆசைகளையும்
ஆகூதிம் -தர்மத்துக்கு முரண் ஆகாத மகிழிச்சிகளையும்
வாச: ஸத்யம் -வாக்கில் உண்மையையும்
பஸூனாம் ரூப மன்னஸ்ய -பசுக்களாலும் அழகாலும் அன்னத்தாலும் வரும் மகிழ்ச்சிகளை
அஸீமஹி -அனுபவிக்க வேண்டும் படி அருள வேண்டும்
மயி ஸ்ரயதாம் யஸ:-எனக்கு பெருமை உண்டாகும் படி அருள வேண்டும்

——–

கர்தமே’ன ப்ர’ஜாபூதா மயி ஸம்ப’வ கர்தம |
ஶ்ரியம்’ வாஸய’ மே குலே மாதரம்’ பத்மமாலி’னீம் ||–10-

கர்தமேன ப்ரஜா பூதா மயி ஸம்பவ கர்தம
ஸ்ரியம் வாஸய மே குலே மாதரம் பத்ம-மாலிநீம்

கர்தமேன ப்ரஜா பூதா கர்தம -கர்தம முனிவரே உமக்கு மகளாகத் தோன்றிய மஹா லஷ்மீ தேவி
மயி ஸம்பவ-என்னிடம் தோன்ற வேண்டும்
பத்ம-மாலிநீம்-தாமரை மாலை அணிந்தவளும்
ஸ்ரியம் மாதரம் -அன்னையான ஸ்ரீ தேவி
மே குலே வாஸய-என்னுடைய குலத்திலே தங்கச் செய்து அருள வேண்டும் –

———-

ஆபஃ’ ஸ்றுஜம்து’ ஸ்னிக்தானி சிக்லீத வ’ஸ மே க்றுஹே |
னி ச’ தேவீம் மாதரம் ஶ்ரியம்’ வாஸய’ மே குலே ||–11-

ஆப: ஸ்ருஜந்து ஸ்நிக்தானி சிக்லீத வஸ மே க்ருஹே
நி-சதேவீம் மாதர ஸ்ரியம் வாஸய மே-குலே

சிக்லீத -மஹா லஷ்மியின் திருமகனான சிக்லீதர முனிவரே
ஆப: -தண்ணீர்
ஸ்ருஜந்து ஸ்நிக்தானி -சிறந்த உணவுப் பொருள்களை விளைக்கட்டும்
வஸ மே க்ருஹே-எனது இல்லத்தில் வசிக்க வேண்டும்
ச-மேலும்
தேவீம் மாதர ஸ்ரியம் -உலகுக்கும் உனக்கும் அன்னையான ஸ்ரீ தேவி
நிவாஸய மே-குலே-என்னுடைய குலத்திலே எப்பொழுதும் நித்ய வாஸம் செய்து அருள வேண்டும் –

———

ஆர்த்ராம் புஷ்கரி’ணீம் புஷ்டிம் ஸுவர்ணாம் ஹே’மமாலினீம் |
ஸூர்யாம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||–12-

ஆர்த்ராம் புஷ்கரிணீம் புஷ்டிம் ஸுவர்ணாம் ஹேமமாலினீம்
ஸூர்யாம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ

ஜாதவேதோ -அக்னி தேவனே –
ஆர்த்ராம் -கருணை மிக்கவளும்
புஷ்கரிணீம் -தாமரைத் தடாகத்தில் வசிப்பவளும்
புஷ்டிம் -உணவூட்டி அனைவரையும் வளர்க்கும் தாயானவளும்
ஸுவர்ணாம் -பசும் பொன் நிறம் உடையவளும்
ஹேமமாலினீம்-பொன் மாலை அணிந்தவளும்
ஸூர்யாம் -பகலவன் போல் தேஜஸ்ஸூ மிக்கவளும்
ஹிரண்மயீம் -பொன் மயமானவளும்
லக்ஷ்மீம் ம ஆவஹ-ஸ்ரீ மஹா லஷ்மியை என்னிடம் எழுந்து அருளச் செய்து அருள வேண்டும்

————

ஆர்த்ராம் யஃ கரி’ணீம் யஷ்டிம் பிம்கலாம் ப’த்மமாலினீம் |
சம்த்ராம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||–13-

ஆர்த்ராம் ய: கரிணீம் யஷ்டிம் பிங்கலாம் பத்மமாலினீம் சந்த்ராம்
ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ

ஜாதவேதோ -அக்னி தேவனே
ய:
ஆர்த்ராம் -கருணை மிக்கவளும்
கரிணீம் -செயல் திறத்தில் கம்பீரம் உள்ளவளும்
யஷ்டிம் -தர்மம் நிலை நிறுத்த செங்கோல் ஏந்தியவளும்
பிங்கலாம் -குங்குமத்தின் நிறத்தை உடையவளும்
பத்மமாலினீம் –தாமரை மாலை அணிந்தவளும்
சந்த்ராம்-நிலவைப் போன்றவளும்
ஹிரண்மயீம் -பொன் மயமானவளுமான
லக்ஷ்மீம் -ஸ்ரீ தேவியை
ம ஆவஹ-என்னிடம் எழுந்து அருளச் செய்து அருள வேண்டும் –

————

தாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ லக்ஷீமன’பகாமினீ”ம் |
யஸ்யாம் ஹிர’ண்யம் ப்ரபூ’தம் காவோ’ தாஸ்யோ‌உஶ்வா”ன், விம்தேயம் புரு’ஷானஹம் ||–14-

தாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீ-மனபகாமினீம்
யஸ்யாம் ஹிரண்யம் ப்ரபூதம் காவோ தாஸ்யோ-ஸ்வாம் விந்தேயம் புருஷானஹம்

ஜாதவேதோ-அக்னி தேவனே
யஸ்யாம் -யாரால்
ப்ரபூதம்-அளவிட முடியாத
ஹிரண்யம் -பொன்னும்
காவோ -பசுக்களும்
தாஸ்ய-பணிப்பெண்டிரும்
அஸ்வான் -குதிரைகளும்
புருஷான-பணியாட்களும்
அஹம்-நான்
விந்தேயம் -பெறுவேனோ
தாம் ம லக்ஷ்மீ- -அந்த ஸ்ரீ தேவியை
அனபகாமினீம் ம ஆவஹ-என்னிடம் இருந்து விலகாது இருக்குமாறு செய்து அருள வேண்டும் –

————

ஓம் மஹாதேவ்யை ச’ வித்மஹே’ விஷ்ணுபத்னீ ச’ தீமஹி |
தன்னோ’ லக்ஷ்மீஃ ப்ரசோதயா”த் ||–15-

ஸ்ரீ மஹா லஷ்மியை அறிந்து கொள்வோம்
திருமாலின் கேள்வியைத் தியானிப்போம்
அந்த திருமகள் நம்மைத் தூண்டி அருளுவாளாக –

————

பல ஸ்ருதிகள் –

ய: ஸுசி: ப்ரயதோ பூத்வா ஜுஹுயா-தாஜ்ய-மன்வஹம்
ஸூக்தம் பஞ்சதஸர்சம் ச ஸ்ரீ காம: ஸததம் ஜபேத்

பத்மாநனே பத்ம ஊரூ பத்மாக்ஷீ பத்ம – ஸம்பவே தன்மே
பஜஸி பத்மாக்ஷீ யேந ஸெளக்யம் லபாம்யஹம்

அஸ்வதாயீ கோதாயீ தனதாயீ மஹாதனே தனம்-மே
ஜுஷதாம்-தேவி ஸர்வ காமாம்ஸ்ச தேஹி மே

பத்மாநனே பத்ம-விபத்ம-பத்ரே பத்ம-ப்ரியே பத்ம-தலாயதாக்ஷி
விஸ்வ-ப்ரியே விஸ்வ மனோ-நுகூலே த்வத்பாத – பத்மம் மயி ஸந்நிதத்ஸ்வ

புத்ர-பௌத்ர-தனம் தான்யம் ஹஸ்த்-யஸ்வாதிகவே-ரதம்
ப்ரஜானாம் பவஸீ மாதா ஆயுஷ்மந்தம் கரோது மே

தன-மக்நிர்-தனம் வாயும்-தனம் ஸூர்யோ-தனம் வஸு: தனம்
இந்த்ரோ ப்ருஹஸ்பதிர்-வருணம் தனமஸ்து தே

வைநதேய ஸோமம் பிப ஸோமம் பிபது வ்ருத்ரஹா ஸோமம்
தனஸ்ய ஸோமினோ மஹ்யம் ததாது ஸோமிந:

ந க்ரோதோ ந ச மாத்ஸர்யம் ந லோபோ நாஸுபா மதி:
பவந்தி க்ருத-புண்யானாம் பக்தானாம் ஸ்ரீஸுக்தம் ஜபேத்:

ஸரஸிஜ-நிலயே ஸரோஜ-ஹஸ்தே தவலதராம்ஸுக-கந்தமால்ய-
ஸோபே பகவதி-ஹரிவல்லபே மனோஜ்ஞே த்ரிபுவன-பூதிகரி ப்ரஸீத மஹ்யம்

விஷ்ணு-பத்நீம் க்ஷமாம் தேவீம் மாதவீம் மாதவ-ப்ரியாம்
லக்ஷ்மீம் ப்ரிய-ஸகீம் தேவீம் நமாம்யச்யுத-வல்லபாம்

மஹாதேவ்யை ச வித்மஹே விஷ்ணு-பத்ன்யை ச தீமஹி
தந்நோ லக்ஷ்மீ: ப்ரசோதயாம்

மஹாதேவ்யை ச வித்மஹே ருத்ர-பத்ன்யை ச தீமஹி
தந்நோ கௌரீ ப்ரசோதயாத்

ஸ்ரீர்-வர்சஸ்வ-மாயுஷ்ய-மாரோக்ய-மாவிதாச்-சே
õபமாநாம்- மஹீயதே தான்யம் தனம் பஸும்
பஹுபுத்ர-லாபம் ஸத-ஸம்வத்ஸரம் தீர்கமாயு:

ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:

ஶ்ரீ-ர்வர்ச’ஸ்வ-மாயு’ஷ்ய-மாரோ”க்யமாவீ’தாத் பவ’மானம் மஹீயதே” |
தான்யம் தனம் பஶும் பஹுபு’த்ரலாபம் ஶதஸம்”வத்ஸரம் தீர்கமாயுஃ’ ||

ஓம் ஷாந்தி ஃ ஷாந்தி ஃஷாந்தி ஃ’ ||

—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பூ ஸூக்தம் (ஸ்ரீ தைத்ரீய ஸம்ஹிதை, முதல் காண்டம், 5-வது ப்ரபாடகம், 3-வது அனுவாகம்)

December 31, 2021

ஸ்ரீ பூ ஸூக்தம்

(ஸ்ரீ தைத்ரீய ஸம்ஹிதை, முதல் காண்டம், 5-வது ப்ரபாடகம், 3-வது அனுவாகம்)

பூமிர்பூம்னா-த்யௌர்-வரிணா-ந்தரிக்ஷம்
மஹித்வா உபஸ்தே தே தேவ்யதிதே-க்னி-மன்னாத

மன்னாத்யாயாததே ஆயங்கௌ: ப்ருஸ்னிரக்ரமீ தஸனன்
மாதரம் புன: பிதரம் ச ப்ரயந்த்ஸுவ: த்ரி ஸத்தாம விராஜதி வாக்

பதங்காய ஸிஸ்ரியே ப்ரத்யஸ்ய வஹ த்யுபி: அஸ்ய
ப்ராணாதபானத்-யந்தஸ்சரதி ரோசனா வ்யக்யன் மஹிஷ: ஸுவ:

யத்த்வா க்ருத்த: பரோவபமன்யுனா யதவர்த்யா ஸுகல்ப-மக்னே
தத்தவ புனஸ்-த்வோத்தீபயாமஸி யத்தே மன்யு பரோப்தஸ்ய ப்ருதிவீ-

மனுதத்வஸே ஆதித்யா விஸ்வே தத்தேவோ வஸவஸ்ச ஸமாபரன்
மனோஜ்யோதிர்-ஜுஷதா-மாஜ்யம் விஸ்சின்னம் யஜ்ஞ ஸமிமம் ததாது
ப்ருஹஸ்பதிஸ்-தனுதாமிமம் நோ விஸ்வே தேவா இஹ மாதயந்தாம்

மேதினீ தேவீ வஸுந்தரா ஸ்யாத்-வஸுதா தேவீ வாஸவீ
ப்ரஹ்மவர்ச்சஸ: பித்ருணா ஸ்ரோத்ரம் சக்ஷúர்மன: தேவீ ஹிரண்ய-
கர்பிணீ தேவீ ப்ரஸோதரீ ரஸனே ஸத்யாயனே ஸீத

ஸமுத்ரவதீ ஸாவித்ரீஹ நோ தேவீ மஹ்யகீ மஹாதரணீ
மஹோர்யதிஸ்த ஸ்ருங்கே ஸ்ருங்கே யஜ்ஞே யஜ்ஞே விபீஷணீ
இந்த்ரபத்னீ வ்யாஜனீ ஸுரஸித இஹ

வாயுபரீ ஜலஸயனீ ஸ்வயந்தாரா ஸத்யந்தோபரி மேதினீ
ஸோபரிதத்தங்காய

விஷ்ணு-பத்னீம் மஹீம் தேவீம் மாதவீம் மாதவ-ப்ரியாம்
லக்ஷ்மீம் ப்ரிய-ஸகீம் தேவீம் நமாம் யச்யுத வல்லபாம்

தனுர்தராயை ச வித்மஹே ஸர்வ ஸித்த்யை ச தீமஹி
தந்நோ தரா ப்ரசோதயாத்

இஷு-ஸாலி-யவ-ஸஸ்ய-பலாட்யாம் பாரிஜாத ரு-ஸோபித-மூலே
ஸ்வர்ண ரத்ன மணி மண்டப மத்யே சிந்தயேத் ஸகல-லோக-தரித்ரீம்

ஸ்யாமாம் விசித்ராம் நவரத் பூஷிதாம் சதுர்புஜாம்
துங்கபயோதரான்விதாம் இந்தீவராக்ஷீம் நவஸாலிமஞ்ஜரீம் ஸுகம்
ததானாம் வஸுதாம் பஜாமஹே

ஸக்துமிவ தித உனா புனந்தோ யத்ர தீரா மனஸா
வாசமக்ரத அத்ரா ஸகாய: ஸக்யானி ஜானதே
பைத்ரஷாம் லக்ஷ்மீர்-நிஹிதா திவாசி

ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:

இதி பூ ஸூக்தம்

———–

பூமி -மிக பெரியவள் –அனைத்தையும் அடக்கி -விஸ்வம் பர -அவனையும் தரிக்கும் ஸ்ரீ பாதுகை -அத்தையும் தரிக்கும் –
பூம் நா பரந்து விரிந்து சப்த த்வீபங்கள் -ஜம்பூத் த்வீபம் நாம் –
மேருவின் தக்ஷிண திக்கில் நாம் உள்ளோம்
லக்ஷம் யோஜனை நடுவில் உள்ள ஜம்பூத் த்வீபம்
கடல் அதே அளவு -அடுத்த த்வீபம் -இரண்டு லக்ஷம் -இப்படியே -பூ லோகம்
மேலே ஆறு லோகங்கள் -கீழே ஏழு லோகங்கள் –
அண்டகடாகங்கள் -ஒவ் ஒரு அண்டத்துக்கும் ஒரு நான்முகன் –
யவ்ர்வரிணா– மேன்மை -ஆகாசம்
கர்ப்பத்துக்குள் உதைக்கும் குழந்தை -தாய் மகிழ்வது போலே நாம் பண்ணும் அபசாரங்களை கொள்கிறாள் –
தாங்கும் ஆதாரம் –
தேசோயம் ஸர்வ காம புக் –ஷேத்ரங்களே அபேக்ஷிதங்களைக் கொடுக்கும் –
ஸ்ரீ தேவி சாஸ்த்ர காம்யம் -இவளை ஸ்பர்சிக்கலாமே -தாய் நாடு தாய் மொழி –கர்ம பூமி -சாதனம் செய்து அவனை அடைய –

யவ்ர்வரிணா–ஆகாசமாகவே -ஸ்வர்க்கமும் சேர்த்து
அந்தரிக்ஷம் மஹீத்வா -அந்தரிக்ஷமும் பூமி பிராட்டியே
உபஸ்தே தே தே – வ்யதிதே அக்நி மந் நாத மந் நாத் யாயததே -ஜீவாத்மா சோறு -அருகில் சேர்ப்பது -அவனை தருவாள்
ஆயங்கவ் பிரதிஸ் நிரக்மீத -ஸூர்ய மண்டல மத்திய வர்த்தீ -நாராயணன் –
செய்யாதோர் ஞாயிற்றை காட்டி ஸ்ரீ தரன் மூர்த்தி ஈது என்னும் -அந்தர்யாமியாக வரிக்க
சநத் மாதரம் புந பித்தராஞ்ச ப்ரயன் ஸூவ -இவளைப் பற்ற வேண்டும் -பிராட்டி பரிகரம் என்றே உகப்பான் அன்றோ –

மேதி நீ தேவீ வஸூந்தரா ஸ்யாத் வஸூதா தேவீ வாஸவீ
திரு நாமங்கள் வரிசையாக -அருளிச் செய்கிறார் –
மேதிநீ -நம் மேல் ஆசை -மேதஸ்-மதம் மது கைடபர் இருந்ததால் -குழந்தை அழுக்கை தான் தாங்கி
பாசி தூர்த்துக் கிடந்த பார் மகள் –
தேவீ –காந்தி -பிரகாசம் -அழுக்கு கீழே சொல்லி -அதனாலே ஓளி –விடுபவன்
ஹிரண்ய வர்ணாம் -பெருமையால்
ராமன் குணங்களால் பும்ஸாம் சித்த அபஹாரி –கண்ணன் தீமையால் தோஷங்களால் ஜெயித்தவன் -கண்டவர் மனம் வழங்கும் –
வஸூந்தரா -தங்கள் வெள்ளி ரத்னம் அனைத்தும் கொடுப்பவள் -வஸூ செல்வம்
வஸூ தா -வாஸவீ–போஷித்து வளர்க்கிறாள் –அன்னம் இத்யாதி
தரணீ -தரிக்கிற படியால்
பிருத்வி –பிருத் மஹா ராஜா -காலம் -பஞ்சம் வர -தநுஸ் கொண்டு துரத்த —
என்னை வைத்துக் கொண்டே வாழ -பசு மாட்டு ஸ்தானம் -இடைப்பிள்ளையாக பிறந்து கரந்து கொள்
கடைந்து அனைத்தும் வாங்க பட்டதால் பிருத்வீ
அவனி –சர்வம் சகேத் சகித்து கொள்வதால்

ஸ்ரீ விஷ்ணு சித்த கல்ப வல்லி–சாஷாத் ஷமா -கருணையில் ஸ்ரீ தேவியை ஒத்தவள் -இரண்டையும்
ஸ்ரீ வராஹ பெருமை -பட்டர் –
மீன் சமுத்திரத்தில் அவரே
கூர்மம் மந்த்ரம் அழுத்த
நரசிம்மம் கழுத்துக்கு மேல்
வாமநன் வஞ்சனை
கண்ணன் ஏலாப் பொய்கள் உரைப்பான்
சம்சார பிரளயம் எடுக்க ஸ்ரீ வராஹம் –
சத ரூபை என்பவள் -ஸ்வயம்பு மனு கல்யாணம் -ஸ்ரீ வராஹ அவதாரம் -சப்புடா பத்ர லோசனன் -அப்பொழுதும் தாமரைக் கண்ணன்
ஆமையான கேசனே -கேசமும் உண்டே -ப்ரஹ்ம வர்ச்சஸ பித்ரூணாம் ஸ்ரோத்ரம்
ஈனச் சொல் ஆயினுமாக -பிரியம் ஹிதம் அருளும் மாதா பிதா -ஆழ்வார் -நைச்ய பாவம்–கிடந்த பிரான் –
இரு கற்பகம் சேர் வானத்தவர்க்கும் -தன்னையே கொடுக்காதே -அதுவும் –
ஞானப் பிரானை அல்லால் இல்லது இல்லை – -நான் கண்ட நல்லதுவே –
அந்த ஞானப் பிரான் -பூமி பிராட்டியை இடம் வைத்து நமக்கு இவள் திருவடிகளைக் காட்டி அருளுகிறார் –
தானே ஆசன பீடமாக இருந்து காட்டிக் கொடுத்து அருளுகிறார் –
அவன் இடம் உபதேசம் பெற்று நம்மிடம் கொடுத்து அருளினாள் ஆண்டாள் –
கீர்த்தனம் -பிரபதனம் -ஸ்வஸ்மை அர்ப்பணம் -முக்கரணங்கள் -வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்துக் கை தொழுது
ஸூ கரம் சொன்ன ஸூ கர உபாயம் –
அப்பொழுது தானே இவள் நடுக்கம் போனது –
அப்பொழுதைக்கு இப்பொழுதே சொல்லி வைத்தேன் -அஹம் ஸ்மராமி –நயாமி மத் பக்தம்-
திரு மோகூர் ஆத்தன் இவன் வார்த்தையை நடத்தி காட்டி அருளுகிறார் -ஆப்தன் -காள மேகப் பெருமாள் –
சரண்ய முகுந்தத்வம் ஸுரி பெருமாள் –
கிடந்து இருந்து நின்று அளந்து இடந்து உண்டு உமிழ்ந்து பார் என்னும் மடந்தையை -மால் செய்யும் –
ஜீவனாம்சம் போலே மார்பில் ஏக தேசம் கொடுத்து –இவள் இடம் -மால் –
திரு மால் – திருவின் இடம் மால் -திரு இடம் மால் -வேறே இடத்தில் மால் -என்றுமாம்
விராடன் -அரவாகி சுமத்தியால் –எயிற்றில் ஏந்திதியால்–ஒரு வாயில் ஒளித்தியால்-ஓர் அடியால் அளத்தியால்-
மணி மார்பில் வைகுவாள் இது அறிந்தால் சீறாளோ-சா பத்னி –நிழல் போலே –
லஷ்மீர் -ராஜ ஹம்சம் -பஷி-ஆனந்த நடனம் -சாயா இவ -இவர்கள் –
நிழல் தானே நிழல் கொடுக்க முடியும் -இவள் மூலமே நமக்கு –சேர்ந்து கைங்கர்யம் –
திரு மகளும் மண் மகளும் ஆய் மகளும் சேர்ந்தால் திரு மகளுக்கே–வருந்தி அழ வில்லை –
கடல் அசையும் நானே ஸ்திரம் -கால மயக்கம் துறை -பட்டர் நிர்வாகம்
மழை காலம் வருவேன் சொன்னவன் வர வில்லை -தோழி சமாதானம் -மழை இல்லை -ஸ்ரீ தேவி -கூட போனதால் பூமி பிராட்டி அழுகை –
வருத்தம் -இல்லை -பொய்யான விஷயம் சொல்லி சமாதானம் –
சஜாதீயை பூமி தேவதை –ஸ்ரீ தேவி விஜாதீயை -விஷ்ணு -வைஷ்ணவி -ஸ்ரீ வைஷ்ணவி ஆக முடியாதே அவள் –
குணம் அவள் -மணம் இவள் -செல்வம் அவள் -செல்வம் விளையும் ஸ்தானம் இவள்
அழகு கொண்டவள் -புகழ் கொண்டவள் -ஆதரவு -ஆதாரம் –
அஹந்தை-கோஷிப்பாள் -போஷிப்பவள் இவள் –

சமுத்ராவதீ ஸாவித்ரீ -ஆடை சமுத்திரம் நெற்றி திலகம் ஸூரியன்- சுடர் சுட்டி சீரார் –
மலைகள் திரு முலைத் தடங்கள் -புற்று -காது -வால்மீகி -24000-ஸ்லோகங்கள் -பூமி பிராட்டியே சாஷாத் திருப்பாவை –
கோதாவுக்காகவே தக்ஷிணா -ஸ்ரீ அரங்கன் -தேசிகன் -தந்தை சொல்ல மாட்டார்களே -அதனால் விபீஷணனுக்காக
கூந்தல் -மழை –த்ரி வேணி சங்கம் –
படி எடுத்து காட்டும் படி அன்று அவன் படிவம் –தோற்றிற்று குரங்கை கேட்க -ஆண்டாள் -சங்கரய்யா உன் செல்வம் சால அழகியதே –
த்ரிஜடை கனவால் அவள் -ஆயனுக்காக தான் கண்டா கனவு
சங்கொலியும் சாரங்க வில் நாண் ஒலியும் சேர்த்து வேண்டும் இவளுக்கு –
தெளிந்த சிந்தைக்கு போக்ய பாக துவரை–பூமியில் நின்றும் இருந்தும் கிடந்தும் -என் நெஞ்சுள்ளே –
அரங்கன் இடமும்-ஸேவ்யமான அம்ருதம் நம் பெருமாள் –
தொட்டிலுலும் -ராமன் கிருஷ்ணன் -கிடந்தவாறும் -நின்றவாறும் -இருந்தவாறும் –

ஓம் தநுர்த் தராயை வித்மஹே ஸர்வ சித்தயைச தீ மஹீ
தந்நோ தரா ப்ரசோதயாத் –தனுர் திருக்கையில் வைத்து நம் -ஞானம் -தூண்டி விடுகிறாள்
குற்றம் இல்லையே –அவள் பொறுக்க சொல்ல -இவள் யாருமே குற்றம் செய்ய வில்லை -இருவர் இருக்க நமக்கு என் குறை –

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ விஷ்ணு ஸூக்தம் – ஸ்ரீ ரிக்வேதம்

December 31, 2021

ஸ்ரீ விஷ்ணு ஸூக்தம் – ஸ்ரீ ரிக்வேதம்

ஸ்ரீ ரிக்வேதம் முழுவதிலும் ஸ்ரீ மஹாவிஷ்ணு பல இடங்களில் துதிக்கப் பட்டாலும்,
அவருக்கென்று முழுமையாக சில துதிகள் மட்டுமே உள்ளன.அவற்றிலிருந்து தொகுக்கப்பட்டது இந்த ஸுக்தம்.

ஓம்

விஷ்ணோர் நுகம் வீர்யாணி ப்ரவோசம்
ய: பார்த்தி வானி விமமே ரஜாக்ம்ஸி
யோ அஸ்க பாயதுத் தரகம் ஸதஸ்தம்
விசக்ர மாணஸ் த்ரேதோருகாய: –1-

யார் பூமியையும் அதிலுள்ள அனைத்தயும் உருவாக்கி உள்ளாரோ,
மேலே உள்ள விண்ணுலதைத் தாங்கியுள்ளாரோ, மூன்றடியால் மூன்று உலகங்களையும் அளந்தாரோ,
சான்றோரால் போற்றப் படுகிறாரோ அந்த மஹாவிஷ்ணுவின் மகிமை மிக்க செயல்களைப் போற்றுவோம்.

———

விஷ்ணோரராடமஸி விஷ்ணோ: ப்ருஷ்ட்டமஸி
விஷ்ணோ: ச்ஞப்த்ரேஸ்தோ விஷ்ணோஸ் ஸ்யூரஸி
விஷ்ணோர் த்ருவமஸி வைஷ்ணவ மஸி
விஷ்ணவே த்வா –2-

யாக மண்டபத்தின் வாசல்படி விட்டமே, நீ விஷ்ணுவின் நெற்றியாக விளங்குகிறாய். பின்புறமாக இருக்கிறாய்.
வாசற்கால்களே, நீங்கள் அவரது இரண்டு கால்களாக உள்ளீர்கள்.
கயிறே, நீ அவரது நாடிகளாக இருக்கிறாய்.
முடிச்சுகளே, நீங்கள் விஷ்ணுவின் முடிச்சுகளாக இருக்கிறீர்கள்.
யாக மண்டபமே, நீ விஷ்ணுமயமாகவே இருக்கிறாய்.
விஷ்ணுவின் அருளைப் பெறுவதற்காக உன்னை வணங்குகிறேன்.

——–

ததஸ்ய ப்ரியமபிபாதோ அச்யாம்
நரோ யத்ர தேவயவோ மதந்தி
உருக்ரமஸ்ய ஸ ஹி பந்துரித்தா
விஷ்ணோ: பதே பரமே மத்வ உத்ஸ: –3-

எங்கே தேவர்கள் மகிழ்கிறார்களோ, எங்கே மனிதர்கள் போக விரும்பு கிறார்களோ,
எது விஷ்ணுவின் மனத்திற்கு உகந்த இருப்பிடமோ, எங்கே அமுதத் தேனூற்று பெருகுகின்றதோ,
விஷ்ணுவின் மேலான அந்தத் திருவடிகளை நான் அடைவேனாக.

———–

ப்ரதத்விஷ்ணு: ஸ்தவதே வீர்யாய
ம்ருகோ ந பீம: குசரோ கிரிஷ்ட்டா:
யஸ்யோருஷு த்ரிஷுவிக்ரமணேஷு
அதிக்ஷியந்தி புவனானி விச்வா
பரோ மாத்ரயா தனுவா வ்ருதான
ந தே மஹித்வமன்வச்னுவந்தி –4-

மலைமீது திரிகின்ற பெரிய யானை போல் சுதந்திரமானவரும்,
மூன்று பெரிய அடிகளில் எல்லா உலகங்களையும் அடக்கியவருமான அந்த விஷ்ணுவை
அவரது மகிமைகளுக்காகப் போற்றுவோம்.

———–

உ பே தே வித்வ ரஜஸீ ப்ருதிவ்யா விஷ்ணோ
தேவத்வம் பரமஸ்ய வித்ஸே
விசக்ரமே ப்ருதிவீமேஷ ஏஷாம்
க்ஷேத்ராய விஷ்ணுர் மனுஷே தசஸ்யன் –5-

உமது மணம் நிறைந்ததான பூமி மற்றும் விண்ணுலகம் இரண்டையே நாங்கள் அறிவோம்.
ஒளி பொருந்திய திருமாலே, நீர் மட்டுமே மேலான உலகை அறிவீர்.
இந்த பூமியில் நீர் நடந்து, அதனை இருப்பிடமாகக் கொள்வதற்கு மனிதர்களுக்குக் கொடுத்துள்ளீர்.

—————

த்ருவாஸோ அஸ்ய கீரயோ ஜனாஸ:
ஊருக்ஷிதிக்ம் ஸுஜனிமாசகார த்ரிர் தேவ:
ப்ருதிவீமேஷ ஏதாம் விசக்ரமே சதர்ச்சஸம் மஹித்வா
ப்ரவிஷ்ணுரஸ்து தவஸஸதவீயான்
த்வேஷக்ம் ஹ்யஸ்ய ஸ்தவிரஸ்ய நாம –6-

பணிவு மிக்க ஜனங்கள் அவரில் பாதுகாப்பான உறைவிடத்தைத் தேடுகிறார்கள்.
அவர் இந்த பூமியை அவர்களுக்காக பரந்த வாழ்விடமாகச் செய்துள்ளார்.
எண்ணற்ற அழகுகள் பொருந்திய இந்த பூமியை விஷ்ணு தமது மகிமையினால் மூன்று முறை அளந்துள்ளார்.
மஹா விஷ்ணுவே! உமது மேலான பெருமை காரணமாக நீர் விஷ்ணு என்று பெயர் பெறுகிறீர்.
மேலும், இது உமது மகிமைக்குப் பொருத்தமாகவே உள்ளது.

———-

அதோ தேவா அவந்து நோ யதா விஷ்ணுர் விசக்ரமே
ப்ருதிவ்யாஸ் ஸப்த தாமபி: இதம் விஷ்ணுர் விசக்ரமே
த்ரேதா நிததே பதம் ஸமூடமஸ்ய பாக்ம் ஸுரே –7-

எந்த பூமியின் ஏழு பகுதிகளிலும் விஷ்ணு நடந்தாரோ அந்த பூமியின் பாவங்களிலிருந்து தேவர்கள் நம்மைக் காக்கட்டும்.
விஷ்ணு நடந்த போது தமது திருவடிகளை மூன்று முறை வைத்தார். அவரது திருப்பாத தூசியால் பூமி மூடப்பட்டது.

——————

த்ரீணி பதா விசக்ரமே விஷ்ணுர் கோபா அதாப்ய:
ததோ தர்மாணி தாரயன் விஷ்ணோ கர்மாணி பச்யதோ
யதோ வ்ரதானி பஸ்பசே இந்த்ரஸ்ய யுஜ்யஸ்ஸகா — 8-

விஷ்ணு அனைத்தையும் காப்பவரும் யாராலும் ஏமாற்றப்பட முடியாதவரும் ஆவார்.
அவர் தமது மூன்று அடிகளால் உலகை அளந்து இங்கே தர்மங்களை நிறுவியுள்ளார்.
இந்திரனின் நெருங்கிய நண்பரான விஷ்ணுவின் செயல்களைப் பாருங்கள்.
அவற்றின் மூலம் வாழ்க்கை நியதிகளை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

———-

தத் விஷ்ணோ பரமம் பதக்ம் ஸதா பச்யந்தி ஸூரய:
திவீவ சக்ஷுராததம் தத் விப்ராஸோ விபன்யவோ
ஜாக்ருவாக்ம் ஸஸ்ஸமிந்ததே விஷ்ணோர்யத் பரமம் பதம் -9-

பரந்த வானம் போல் கண்களை உடையவர்களான ரிஷிகள் விஷ்ணுவின் மேலான உறைவிடத்தை
எப்போதும் காண்கிறார்கள். கவிதையை விரும்புபவர்களும், முனிவர்களும்,
விழிப்புற்றவர்களுமான இவர்களே விஷ்ணுவின் மேலான அந்த உறைவிடத்தை ஒளிபெறச் செய்கிறார்கள்.

——————–

பர்யாப்த்யா அனந்தராயாய ஸர்பஸ்தோமோ(அ)திராத்ர
உத்தம மஹர் பவதி ஸர்வஸ்யாப்த்யை ஸர்வஸ்ய
ஜித்யை ஸர்வமேவ தேனாப்னோதி ஸர்வம் ஜயதி –10-

அளவற்ற வற்றாத செல்வம் பெறுவதற்கும், மங்கா புகழ் பெறுவதற்கும் அதிராத்ரம் எனப்படும் யாகமே
மிக மேலான யாகம் ஆகிறது. அந்த யாகத்தால் எல்லாம் கிடைக்கிறது,
எல்லா வெற்றியும் கிடைக்கிறது, எல்லாமே அடையப் படுகிறது. எல்லாமே வளம் பெறுகிறது.

———–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

————-

ஸ்ரீ நாராயண ஸூக்தம் – ஸ்ரீ தைத்திரீய ஆரண்யகம் 4.10.13

December 31, 2021

ஸ்ரீ நாராயண ஸூக்தம் – ஸ்ரீ தைத்திரீய ஆரண்யகம் 4.10.13

ஸ்ரீ புருஷஸுக்தத்துடன் பாராயணம் செய்யப்படும் இந்த ஸுக்தம் தியானத்தின் செயல் முறையை விளக்குகிறது.
இந்த ஸூக்தத்தை ஓதி பொருளைச் சிந்தித்து பின்னர் தியானம் செய்வது மிக்க பலனைத் தரும்.

தியானம் என்பது இறைவனின் திரு சன்னிதியில் இருப்பது. ஒரு படத்தையோ உருவத்தையோ கற்பனை செய்து
கொண்டிருப்பதோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதோ அல்ல.
அவரது திரு சன்னிதியில் நாம் இருப்பதை உணர வேண்டும். அவர் பேரொளியுடன் திகழ்வதை மனத்தளவில் காண வேண்டும்.

———-

ஓம் ஸஹ நாவவது ஸஹ நௌ புனக்து ஸஹ வீர்யம் கரவாவஹை
தேஜஸ்வி நாவதீதமஸ்து மா வித்விஷாவஹை

ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

ஓம்

——–

ஸஹஸ்ர சீர்ஷம் தேவம் விச்வாக்ஷம் விச்வ சம்புவம்
விச்வம் நாராயணம் தேவமக்ஷரம் பரமம் பதம் -1-

ஆயிரக் கணக்கான தலைகள் உடையவரும், ஒளிமிக்கவரும், எல்லாவற்றையும் பார்ப்பவரும்,
உலகிற்கெல்லாம் மங்கலத்தைச் செய்பவரும், உலகமாக இருப்பவரும், அழிவற்றவரும்,
மேலான நிலை ஆனவரும் ஆகிய நாராயணன் என்னும் தெய்வத்தை தியானம் செய்கிறேன்.

——————-

விச்வத: பரமான் நித்யம் விச்வம் நாராயணக்ம் ஹரிம்
விச்வமே வேதம் புருஷஸ் தத் விச்வ முபஜீவதி -2-

இந்த உலகைவிட மேலானவரும், என்றும் உள்ளவரும், உலகமாக விளங்குபவரும்,
பக்தர்களின் துன்பங்களைப் போக்குபவருமாகிய நாராயணனை தியானம் செய்கிறேன்.

————–

பதிம் விச்வஸ் யாத்மேச்வரக்ம் சாச்வதகம் சிவமச்யுதம்
நாராயணம் மஹாஜ்ஞேயம் விச்வாத்மானம் பராயணம் -3-

உலகிற்கு நாயகரும், உயிர்களின் தலைவரும், என்றும் உள்ளவரும், மங்கல வடிவினரும், அழிவற்றவரும்,
சிறப்பாக அறியத் தக்கவரும், எல்லாவற்றிற்கும் ஆன்மாவாக இருப்பவரும்,
சிறந்த புகலிடமாக இருப்பவருமான நாராயணனை தியானம் செய்கிறேன்.

—————–

நாராயண பரோ ஜ்யோதி ராத்மா நாராயண பர:
நாராயணம் பரம் ப்ரஹ்ம தத்வம் நாராயண பர:
நாராயண பரோ த்யாதா த்யானம் நாராயண பர: -4-

நாராயணனே சிறந்த ஒளி. நாராயணனே பரமாத்மா. நாராயணனே பரப் பிரம்மம். நாராயணனே மேலான உண்மை.
நாராயணனே தியானம் செய்பவர்களுள் சிறந்தவர். நாராயணனே சிறந்த தியானம்.

—————

இவ்வளவு மகிமைகளுடன் திகழ்கின்ற இறைவன் நம்முள்ளேயே இருக்கிறார் என்பதை அடுத்த மந்திரம் கூறுகிறது.

இது தியானத்தின் அடுத்தபடி. முதலில் மனம் எல்லையற்று பரந்த தெய்வத்தை நினைப்பதில் ஈடுபட்டது.
இப்போது எல்லை சுருக்கப்பட்டு பரந்திருந்த மனம் நம்மில் ஒன்று சேர்க்கப்படுகிறது.

யச்ச கிஞ்சிஜ் ஜகத் ஸர்வம் த்ருச்யதே ச்ரூயதே(அ)பி வா
அந்தர் பஹிச்ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண: ஸ்தித: –5-

உலகம் முழுவதிலும் காணப்படுவது எதுவாயினும் கேட்கப்படுவது எதுவாயினும் அவை அனைத்தையும்
உள்ளும் புறமும் வியாபித்தபடி நாராயணன் இருக்கிறார்.

————-

தியானத்தின் இறுதிப் படியாக மனம் இதயத்தில் குவிக்கப் படுவதுபற்றி இந்த மந்திரம் கூறுகிறது

அனந்த மவ்யயம் கவிகம் ஸமுத்ரே(அ)ந்தம் விச்வ சம்புவம்
பத்ம கோச ப்ரதீகாசகம் ஹ்ருதயம் சாப்யதோமுகம் –6-

முடிவற்றவரும், அழிவற்றவரும், அனைத்தும் அறிந்தவரும், சம்சாரப் பெருங்கடலின் இறுதியில்
(அதாவது, ஆசைகள் உணர்ச்சி வேகங்கள் போன்ற அலைகள் கொந்தளிக்கின்ற சம்சாரப் பெருங்கடலின்
இறுதியில் என்பது ஆசைகள் அடங்கி மனம் அமைதியுற்றபின்) இருப்பவரும்,
உலகிற்கெல்லாம் மங்கலத்தைச் செய்பவரும் ஆகிய நாராயணனை
கீழ் நோக்கிய மொட்டுப் போல் இருக்கின்ற இதயத்தில் தியானம் செய்கிறேன்.

———-

அதோ நிஷ்ட்ட்யா விதஸ்த் யாந்தே நாப்யா முபரிதிஷ்ட்டதி
ஜ்வால மாலாகுலம் பாதீ விச்வஸ் யாயதனம் மஹத் –7-

குரல் வளைக்குக் கீழே தொப்புளுக்கு மேலே ஒரு சாண் தூரத்தில் இதயம் இருக்கிறது.
உலகிற்கெல்லாம் சிறந்த அந்த உறைவிடம் சுடர்வரிசையால் சூழப்பட்டாற் போல் பிரகாசிக்கிறது.
( நமது உடலில் இடது புறத்தில் இருக்கும் பௌதீக இதயம் அல்ல.
இந்த நாடிகளால் சூழப்பட்டு ஒளிரும் இந்த ஆன்மீக இதயத்தில்தான் நாராயணனை தியானம் செய்ய வேண்டும்)

————–

ஸந்ததக்ம் சிலாபிஸ்து லம்பத் யாகோச ஸன்னிபம் தஸ்யாந்தே
ஸுஷிரக்ம் ஸூக்ஷ்மம் தஸ்மின் ஸர்வம் ப்ரதிஷ்ட்டிதம் –8-

தாமரை மொட்டுப் போன்ற இதயம் நாற்புறங்களிலும் நாடிகளால் சூழப்பட்டு தொங்குகிறது.
அதனுள்ளே நுண்ணிய ஆகாசம் உள்ளது. அனைத்தும் அதில் நிலை பெற்றுள்ளன.
(இந்த உலகில் என்னென்ன உண்டோ என்னென்ன இல்லையோ அவையெல்லாம்
இதனுள் உள்ளன – சாந்தோக்கிய உபநிஷதம்.)

—————-

ஆகாசத்தினுள் பிராணன் அல்லது உயிர் உறைகிறது.

தஸ்ய மத்யே மாஹானக்னிர் விச்வார்ச்சிர் விச்வதோமுக:
ஸோக்ரபுக் விபஜன் திஷ்ட்டன்னா ஹாரமஜர: கவி: –9-

எங்கும் ஒளி வீசுவதாகவும், எல்லாத் திக்கிலும் செல்வதாகவும் உள்ள சிறந்த அக்கினி
அந்த ஆகாசத்தின் நடுவில் உள்ளது. பிராணனாகிய அந்த அக்கினி முதலில் உண்பதாகவும்,
உணவைப் பிரித்துக் கொடுப்பதாகவும், நிலைத்து நிற்பதாகவும், தான் பழுது படாததாகவும்,
அனைத்தையும் காண்பதாகவும் உள்ளது.

————–

பிராணனின் சுடராக ஜீவான்மா உள்ளது.

திர்ய கூர்த்வமத: சாயீரச் மயஸ் தஸ்ய ஸந்ததா
ஸந்தாபயதி ஸ்வம் தேஹமாபாத தலமஸ்தக:
தஸ்ய மத்யே வஹ்னிசிகா அணீயோர்த்வா வ்யவஸ்தித: -10-

அந்தப் பிராணனின் கிரணங்கள் குறுக்கிலும் மேலும் கீழும் பரவி எங்கும் வியாபித்திருக்கின்றன.
உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை இது சூடுள்ளதாகச் செய்கிறது.
இதன் நடுவில் மெல்லியதான அக்கினிச் சுடர் மேல் நோக்கி அமைந்திருக்கிறது.
(மேல் நோக்கிப் பிரகாசிக்கும் இச்சுடரே ஜீவான்மா)

———–

நீல தோயத மத்யஸ்தாத்வித்யுல்லேகேவ பாஸ்வரா
நீவார சூகவத் தன்வீ பீதா பாஸ்வத்யணூபமா -11-

கருமேகத்தின் நடுவிலிருந்து ஒளி வீசுகின்ற மின்னல் கொடி போலவும்,
நெல்லின் முளைபோல் மெல்லியதாகவும், பொன்னிறமாகவும், அணுவைப் போல் நுண்ணியதாகவும்
அந்த ஆன்மா பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.

——————

அந்த இறைவனைப் போற்றுதல்.

தஸ்யா: சிகாயா மத்யே பரமாத்மா வ்யவஸ்தித: ஸ ப்ரஹ்ம
ஸ சிவ: ஸ ஹரி: ஸேந்த்ர: ஸோ(அ)க்ஷர: பரம: ஸ்வராட் -12-

அந்தச் சுடரின் நடுவில் இறைவன் வீற்றிருக்கிறார். அவரே பிரம்மா, அவரே சிவன், அவரே விஷ்ணு,
அவரே இந்திரன், அவர் அழிவற்றவர், சுய ஒளியுடன் பிரகாசிப்பவர். தனக்குமேல் யாரும் இல்லாதவர்.

———–

ரிதக்ம் ஸத்யம் பரம் ப்ரஹ்ம புருஷம் க்ருஷ்ணபிங்கலம்
ஊர்த்வரேதம் விரூபாக்ஷம் விச்வரூபாய வை நமோ நம: -13-

காணும் பொருட்களின் அழகாகவும், காட்சிக்கு ஆதாரமாகவும் உள்ள பரம் பொருளை,
உடல் தோறும் உறைபவனை, கருமேனித் திருமாலும் செம்மேனிச் சிவனும் ஒன்றாக இணைந்த வடிவை,
முற்றிலும் தூயவனை, முக்கண்ணனை, எல்லாம் தன் வடிவாய்க் கொண்டவனை பலமுறை வணங்குகிறேன்.

இவ்வாறு நம்மை அகமுகமாக்கி இறைவனின் சன்னிதியில் விடுகிறது இந்த ஸூக்தம்.
இனி தொடர்ந்து அவர் சன்னிதியில் இருப்பதே உண்மையான தியானம்.

——–

விஷ்ணு காயத்ரி

ஓம் நாராயணாய வித்மஹே வாஸுதேவாய தீமஹி
தன்னோ விஷ்ணு; ப்ரசோதயாத்

நாராயணனை அறிந்து கொள்வோம். அதற்காக அந்த வாசுதேவனை தியானிப்போம்.
அந்த விஷ்ணு நம்மை இந்த தியான முயற்சியில் தூண்டட்டும்.

ஓம் ஸஹ நாவவது ஸஹ நௌ புனக்து
ஸஹவீர்யம் கரவாவஹை தேஜஸ்வி நாவதீதமஸ்து
மா வித்விஷாவஹை

ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

—————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ புருஷ ஸூக்தம் – ஸ்ரீ ரிக்வேதம் 10.8.90–

December 30, 2021

ஸ்ரீ புருஷ ஸூக்தம் – ஸ்ரீ ரிக்வேதம் 10.8.90

ஓம் தச் சம்யோரா வ்ருணீமஹே காதும் யஜ்ஞாய காதும் யஜ்ஞ பதயே தைவீ ஸ்வஸ்தி ரஸ்து ந:
ஸ்வஸ்திர் மானுஷேப்ய: ஊர்த்வம் ஜிகாது பேஷஜம் சன்னோ அஸ்து த்விபதே | சம் சதுஷ்பதே

ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

———-

முன் செல்பவன் புருஷன் (புரதி அக்ரே கச்சதி ய:)
அனைத்தையும் தன் சக்தியால் நிரப்புபவன் புருஷன் (பிப்ரதி பூரயதி பலம் ய:)
அனைத்தையும் நிறைத்தும், மறைந்திருப்பவன் புருஷன் (புரி சே’தே ய:)
ஒளிமயமானவன் புருஷன் (புர்+உஷ: )
அழியாத இன்பத்தால் நிறைந்தவன் புருஷன் (புரு+ஷ:)

————

ஓம் ஸஹஸ்ர சீர்ஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத்
ஸ பூமிம் விச்வதோ வ்ருத்வா அத்ய திஷ்ட்டத் தசாங்குலம் -1-

முதலில் இறைவனின் மகிமை போற்றப்படுகிறது.
இறைவன் ஆயிரக்கணக்கான தலைகள் உடையவர். ஆயிரக் கணக்கான கண்களை உடையவர்.
ஆயிரக் கணக்கான பாதங்களை உடையவர். அவர் பூமியை எங்கும் வியாபித்து, பத்து அங்குலம் ஓங்கி நிற்கிறார்.
(தியான வேளையில் இதய வெளியில்).

“ஆயிரம் சிரங்கள், விழிகள், பாதங்கள்” என்ற வாசகம் ஆயிரம் என்ற எண்ணிக்கையை அல்ல,
அளவிட முடியாமையை, அனந்தத்தைக் குறிக்கிறது. புருஷன் ஒவ்வொரு உயிரின் விழிகளாலும் பார்க்கிறான்,
ஒவ்வொரு உயிரின் பாதங்களாலும் நடக்கிறான் என்பது கருத்து.
உபநிஷதமும், புருஷனே எல்லா உயிர்களின் முகமும் (விஸ்வதோமுக:) என்று கூறுகிறது.

தோள்களாயிரத்தாய்! முடிகளாயிரத்தாய்!
துணைமலர்க் கண்களாயிரத்தாய்!
தாள்களாயிரத்தாய்! பேர்களாயிரத்தாய்
தமியேன் பெரிய அப்பனே

————

புருஷ ஏவேதக்ம் ஸர்வம். யத் பூதம் யச்ச பவ்யம்
உதாம் ருதத் வஸ்யேசான: யதன்னேனாதி ரோஹதி -2-

முன்பு எது இருந்ததோ, எது இனி வரப் போகிறதோ, இப்பொழுது எது காணப் படுகிறதோ எல்லாம் இறைவனே.
மரணமிலா பெரு நிலைக்குத் தலைவராக இருப்பவரும் அவரே. ஏனெனில் அவர் இந்த ஜட வுலகைக் கடந்தவர்,

———-

ஏதாவானஸ்ய மஹிமா அதோ ஜ்யாயாக்ம்ச்ச பூருஷ:
பாதோ(அ)ஸ்ய விச்வா பூதானி த்ரிபாதஸ்யாம்ருதம் திவி -3-

இங்கு காணப்படுவதெல்லாம் இறைவனின் மகிமையே. ஆனால் அந்த இறைவன் இவற்றை விடச் சிறப்பு மிக்கவர்.
தோன்றியவை எல்ல்லம் அவருடைய கால் பங்கு மட்டுமே. அவரது முக்கால் பங்கு அழிவற்ற தான விண்ணில் இருக்கிறது.

————-

த்ரிபாதூர்த்வ உதைத் புருஷ: பாதோ(அ)ஸ்யேஹா(அ)(அ)பவாத் புன:
ததோ விஷ்வங் வ்யக்ராமத் ஸாசனானசனே அபி –4-

முதலாவது படைப்பு:–பரம்பொருளின் முக்கால் பங்கு மேலே விளங்கிகிறது,
எஞ்சிய கால்பங்கு மீண்டும் இந்தப் பிரபஞ்சமாகத் தோன்றியது.
பிறகு அவர் உயிர்கள் மற்றும் ஜடப்பொருள்களில் எல்லாம் ஊடுருவிப் பரந்தார்.

———-

தஸ்மாத் விராடஜாயத விராஜோ அதி பூருஷ: ஸ ஜாதோ
அத்யரிச்யத பச்சாத் பூமி மதோ புர: –5-

முதலாவது படைப்பு:-அந்த ஆதி புருஷனிடமிருந்து பிரம்மாண்டம் உண்டாயிற்று.
பிரம்மாண்டத்தைத் தொடர்ந்து பிரம்மா உண்டாகி எங்கும் வியாபித்தார். பிறகு அவர் பூமியைப் படைத்தார்.
அதன்பிறகு உயிர்களுக்கு உடலைப் படைத்தார்.

————

பிரபஞ்ச சக்திகளான தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான கூட்டுச் செயல்பாடு யக்ஞம்.
இந்தக் கருத்தையே கீதையிலும் (3.10-11) நாம் காண்கிறோம் –

”முன்பு பிரம்மதேவன் வேள்வியுடனே உயிர்க்குலத்தை ஒருமிக்கப் படைத்துச் சொல்லினான்:
“இதனால் பல்குவீர்கள், நீங்கள் விரும்பும் விருப்பங்களையெல்லாம் உங்களுக்கிது கறந்து தரும்.
இதனால் தேவர்களைக் கருதக் கடவீர்; அந்த தேவர் உங்களைக் கருதக் கடவர்.
(இங்ஙனம்) பரஸ்பரமான பாவனை செய்வதனால் உயர்ந்த நலத்தை எய்துவீர்கள்.”

தொடக்கத்தில் புருஷன் ஒருவரே இருக்கிறார். இந்த ஒன்று பலவாக ஆவதே சிருஷ்டி. அதை நிகழ்த்துவது காலம்.
எனவே, காலத்தின் மூன்று பரிமாணங்களான வசந்தம், கோடை, சரத்ருது ஆகியவை முறையே
நெய், விறகு, அவி என்று ஆகி இந்த வேள்வி நிகழ்வதாக மந்திரம் கூறுகிறது.
வேத அழகியலின் படி இந்த மூன்று பருவகாலங்களும் முறையே
இந்திரன், அக்னி, வாயு ஆகிய மூன்று தேவதைகளைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.

—-

யத் புருஷேண ஹவிஷா தேவா யஜ்ஞ மதன்வத வஸந்தோ
அஸ்யா ஸீதாஜ்யம் க்ரீஷ்ம இத்ம: சரத்தவி: –6-

இரண்டாம் படைப்பு:-இறைவனை ஆஹுதிப் பொருளாகக் கொண்டு தேவர்கள் செய்த வேள்விக்கு
வசந்த காலம் நெய்யாகவும், கோடைக்காலம் விறகு ஆகவும், சரத்காலம் நைவேத்தியமாகவும் ஆயிற்று.

————

ஸப்தஸ்யாஸன் பரிதய: த்ரி: ஸப்த ஸமித: க்ருதா:
தேவா யத்யஜ்ஞம் தன்வானா: அபத்னன் புருஷம் பசும் -7-

இரண்டாம் படைப்பு:-இந்த வேள்விக்கு பஞ்ச பூதங்கள், இரவு, பகல், ஆகிய ஏழும் பரிதிகள் ஆயின.
இருபத்தொரு தத்துவங்கள் விறகுகள் ஆயின. தேவர்கள் யாகத்தை ஆரம்பித்து,
பிரம்மாவை ஹோமப் பசுவாகக் கட்டினார்கள்,

இதில் மிருகங்களைக் குறிக்க வரும் “பசூ’ன்” என்ற சொல்லுக்கு ஞானம் என்றும் பொருள் கொள்வர்.
பரிகள் (அச்’வா:), பசுக்கள் (காவ:) ஆடுகள் (அஜாவய:) ஆகிய சொற்களுக்கு
குறியீட்டு ரீதியாக பொருள் கூறும் விளக்கங்களும் உண்டு.

———-

தம் யஜ்ஞம் பர்ஹிஷி ப்ரௌக்ஷன் புருஷம் ஜாதமக்ரத:
தேன தேவா அயஜந்த ஸாத்யா ரிஷயச்ச யே –8-

வேள்வி தொடங்குகிறது:-முதலில் உண்டான அந்த யஜ்ஞ புருஷனான பிரம்மாவின்மீது தண்ணீர் தெளித்தார்கள்.
அதன் பிறகு சாத்தியர்களும் தேவர்களும் ரிஷிகளும் இன்னும் யார் யார் உண்டோ அவர்களும் யாகத்தை நடத்தினார்கள்.

————-

தஸ்மாத் யஜ்ஞாத் ஸர்வஹுத: ஸம்ப்ருதம் ப்ருஷதாஜ்யம்
பசூக்ம்ஸ்தாக்ம்ச் சக்ரே வாயவ்யான் ஆரண்யான் க்ராம்யாச்ச யே -9-

பிரபஞ்ச வேள்வியாகிய அந்த யாகத்திலிருந்து தயிர் கலந்த நெய் உண்டாயிற்று.
பறவைகளையும், மான், புலி போன்ற காட்டு விலங்குகளையும், பசு போன்ற வீட்டு மிருகங்களையும் பிரம்மா படைத்தார்.

———–

தஸ்மாத் யஜ்ஞாத் ஸர்வஹுத: ரிச: ஸாமானி ஜஜ்ஞிரே
சந்தாக்ம்ஸி ஜஜ்ஞிரே தஸ்மாத் யஜுஸ் தஸ்மாத ஜாயத –10-

பிரபஞ்ச வேள்வியாகிய அந்த யாகத்திலிருந்து ரிக் வேத மந்திரங்களும், சாம வேத மந்திரங்களும்,
காயத்ரீ முதலான சந்தஸ்களும் உண்டாயின. அதிலிருந்தே யஜுர் வேதம் உண்டாயிற்று.

—————

தஸ்மாத்ச்வா அஜாயந்த யே கே சோபயாதத: காவோ ஹ
ஜஜ்ஞிரே தஸ்மாத் த்ஸ்மாஜ்ஜாதா அஜாவய: –11-

அதிலிருந்தே குதிரைகளும், இருவரிசைப் பற்கள் உடைய மிருகங்களும், பசுக்களும், வெள்ளாடுகளும், செம்மறியாடுகளும் தோன்றின.

————–

யத் புருஷம் வ்யதது: கதிதா வ்யகல்பயன் முகம் கிமஸ்ய
கௌ பாஹூ காவூரு பாதா வுச்யேதே –12–

ப்ரம்மாவை தேவர்கள் பலியிட்ட போது அவரை எந்தெந்த வடிவாக ஆக்கினார்கள்? அவரது முகம் எதுவாக ஆயிற்று ?
கைகளாக எது சொல்லப்படுகிறது ? தொடைகளாகவும் பாதங்களாகவும் எது கூறப் படுகிறது ?

————-

ப்ராஹ்மணோ(அ)ஸ்ய முகமாஸீத் பாஹூ ராஜன்ய: க்ருத:
ஊரூ ததஸ்ய யத்வைச்ய: பத்ப்யாக்ம் சூத்ரோ அஜாயத –13-

அவரது முகம் ப்ராமணனாக ஆயிற்று. கைகள் க்ஷத்ரியனாக ஆயின. தொடைகள் வைசியனாக ஆயின.
அவரது பாதங்களிலிருந்து சூத்திரன் தோன்றினான்.

———–

சந்த்ரமா மனஸோ ஜாத: சக்ஷோ: ஸூர்யோ அஜாயத
முகாதிந்த்ரச் சாக்னிச்ச ப்ராணாத் வாயுரஜாயத –14-

மனத்திலிருந்து சந்திரன் தோன்றினான். கண்ணிலிருந்து சூரியன் தோன்றினான்.
முகத்திலிருந்து இந்திரனும் அக்கினியும் தோன்றினர். பிராணனிலிருந்து வாயு உண்டாயிற்று.

————-

நாப்யா ஆஸீதந்தரிக்ஷம் சீர்ஷ்ணோ த்யௌ: ஸமவர்த்தத
பத்ப்யாம் பூமி திச: ச்ரோத்ராத் ததா லோகாக்ம் அகல்பயன் –15-

தொப்புளிலிருந்து வானவெளி தோன்றியது. தலையிலிருந்து சொர்க்கம் தோன்றியது.
பாதங்களிலிருந்து பூமியும் காதிலிருந்து திசைகளும் தோன்றின. அவ்வாறே எல்லா உலகங்களும் உருவாக்கப் பட்டன.

————

வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம்
ஆதித்ய வர்ணம் வர்ணம் தமஸஸ்து பாரே
ஸர்வாணி ரூபாணி விசித்ய தீர: நாமானி
க்ருத்வா(அ)பிவதன் யதாஸ்தே –16-

எல்லா உருவங்களையும் தோற்றுவித்து, பெயர்களையும் அமைத்து, எந்த இறைவன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறாரோ,
மகிமை பொருந்தியவரும் சூரியனைப் போல் ஒளிர்பவரும் இருளுக்கு அப்பாற்பட்டவருமான அந்த இறைவனை நாம் அறிவேன்.

—————

தாதா புரஸ்தாத்யமுதா ஜஹார சக்ர: ப்ரவித்வான்
ப்ரதிசச் சதஸ்ர: தமேவம் வித்வானம்ருத இஹ பவதி
நான்ய: பந்தா அயனாய வித்யதே –17-

அப்படி அந்த இறைவனை அறிவதால், அடைவதால் என்ன கிடைக்கும் ?
எந்த இறைவனை பிரம்மா ஆதியில் பரமாத்மா என்று கண்டு கூறினாரோ, இந்திரன் நான்கு திசைகளிலும் எங்கும்
நன்றாகக் கண்டானோ அவரை இவ்வாறு அறிபவன் இங்கேயே அதாவது இந்தப் பிறவியிலேயே முக்தனாக ஆகிறான்.
மோட்சத்திற்கு வேறு வழியே இல்லை.

———-

யஜ்ஞேன யஜ்ஞ மயஜந்த தேவா: தானி தர்மாணி ப்ரதமான்யாஸன்
தே ஹ நாகம் மஹிமா: ஸசந்தே யத்ர பூர்வே ஸாத்யா: ஸந்தி தேவா: 18

தேவர்கள் இந்த வேள்வியால் இறைவனை வழிபட்டார்கள். அவை முதன்மையான தர்மங்கள் ஆயின.
எங்கே ஆரம்பத்தில் வேள்வியால் இறைவனை வழிபட்ட சாத்தியர்களும் தேவர்களும் இருக்கிறார்களோ,
தர்மங்களைக் கடைப்பிடிக்கின்ற மகான்கள் அந்த மேலான உலகை அடிவார்கள்.

————-

இதுவரை கண்ட 18 மந்திரங்களுடன் புருஷஸூக்தம் நிறைவு பெறுகின்றது.
ஆனால் தென்னாட்டில் பொதுவாக இத்துடன் உத்தர நாராயணம், நாராயண ஸூக்தம்,
விஷ்ணு ஸூக்தத்தின் முதல் மந்திரம் இவற்றுடன் சேர்த்தே பாராயணம் செய்கிறார்கள்.
அவை பின்வருமாறு:

அத்ப்ய: ஸம்பூத: ப்ருதிவ்யை ரஸாச்ச விச்வ கர்மண: ஸமவர்த்ததாதி
தஸ்ய த்வஷ்ட்டா விததத் ரூபமேதி தத் புருஷஸ்ய விச்வமாஜானமக்ரே — 19

தண்ணீரிலிருந்தும் சாரமான அம்சத்திலிருந்தும் பிரபஞ்சம் உண்டாயிற்று. பிரபஞ்சத்தை உருவாக்கிய இறைவனிடமிருந்து
சிறந்தவரான பிரம்மா தோன்றினார். இறைவன் அந்த பிரம்மாவின் (பதினான்கு உலகங்களும் நிறைந்ததான)
உருவை உருவாக்கி அதில் வியாபித்திருக்கிறார். பிரம்மாவின் இந்தப் பிரபஞ்ச வடிவம் படைப்பின் தொடக்கத்தில் உண்டாயிற்று.

———

வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமஸ: பரஸ்தாத்
த்மேவம் வித்வானம்ருத இஹ பவதி நான்ய: பந்தா வித்யதே(அ)யனாய — 20

மகிமை பொருந்தியவரும், சூரியனைப் போல் ஒளிர்பவரும், இருளுக்கு அப்பாலும் இருப்பவருமாகிய
இந்த இறைவனை நான் அறிவேன். அவரை இவ்வாறு அறிபவன் இங்கே இந்தப் பிறவியிலேயே முக்தனாக ஆகிறான்,
முக்திக்கு வேறு வழி இல்லை.

———-

ப்ரஜாபதிச்சரதி கர்பே அந்த: அஜாயமானோ பஹுதா விஜாயதே
தஸ்ய தீரா: பரிஜானந்தி யோனிம் மரீசீனாம் பதமிச்சந்தி வேதஸ: –21-

ஒருவன் ஏன் இறையனுபூதியை நாட வேண்டும் ?
இறைவன் பிரபஞ்சத்தில் செயல்படுகிறார். பிறக்காதவராக இருந்தும் அவர் பல்வேறு வடிவங்களில் தோன்றுகிறார்.
அவரது உண்மையான வடிவத்தை மகான்கள் நன்றாக அறிகிறார்கள்.
பிரம்மா போன்றவர்கள் கூட மரீசி முதலிய மகான்களின் பதவியை விரும்புகிறார்கள்.

———-

யோ தேவேப்ய ஆதபதி யோ தேவானாம் புரோஹித: பூர்வோ
யோ தேவேப்யோ ஜாத: நமோ ருசாய ப்ராஹ்மயே –22-

யார் தேவர்களிடம் தேஜஸாக விளங்குகிறாரோ, தேவர்களின் குருவாக இருக்கிறாரோ,
தேவர்களுக்கு முன்பே தோன்றியவரோ அந்த ஒளிமயமான பரம்பொருளுக்கு நமஸ்காரம்.

——–

ருசம் ப்ராஹ்மம் ஜனயந்த: தேவா அக்ரே ததப்ருவன்
யஸ்த்வைவம் ப்ராஹ்மணோ வித்யாத் தஸ்ய தேவா அஸன் வசே –23-

பரம் பொருளைப் பற்றிய உண்மைகளை அளிக்கும் போது தேவர்கள் ஆதியில் அதைப் பற்றி
“ யாராக இருந்தாலும் பரம்பொருளை நாடுபவன் இவ்வாறு அறிவானானால் அவனுக்கு தேவர்கள் வசமாக இருப்பார்கள்“
என்று கூறினார்கள்.

———

ஹ்ரீச்ச தே லக்ஷ்மீச்ச பத்ன்யௌ அஹோராத்ரே பார்ச்வே
நக்ஷத்ராணி ரூபம் அச்வினௌ வ்யாத்தம் –24-

நாணத்தின் தலைவியாகிய ஹ்ரீ தேவியும், செல்வத்தின் தலைவி யாகிய லட்சுமி தேவியும் உமது மனைவியர்.
பகலும் இரவும் உமது பக்கங்கள். நட்சத்திரங்கள் உமது திருவுருவம். அசுவினி தேவர்கள் உமது மலர்ந்த திருவாய்.

———–

இஷ்ட்டம் மனிஷாண அமும் மனிஷாண ஸர்வம் மனிஷாண –25-

எம்பெருமானே நாங்கள் விரும்புவதைக் கொடுத்தருள்வாய். இவ்வுலக இன்பத்தைக் கொடுத்தருள்வாய்.
இகத்திலும் பரத்திலும் அனைத்தையும் தந்தருள்வாய்.

——–

ஓம் தச்சம்யோரா வ்ருணீமஹே காதும் யஜ்ஞாய காதும் யஜ்ஞ பதயே தைவீ ஸ்வஸ்தி ரஸ்து ந:
ஸ்வஸ்திர் மானுஷேப்ய: ஊர்த்வம் ஜிகாது பேஷஜம் சன்னோ அஸ்து த்விபதே | சம் சதுஷ்பதே

ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

——–————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ விஷ்ணு ஷோடச நாம ஸ்தோத்திரம் /ஸ்ரீராமபிரான் ஸ்ரீ திருவடிக்கு உபநிஷத் பற்றி ஸ்ரீ ஸூக்திகள் —

December 30, 2021

ஸ்ரீ விஷ்ணு ஷோடச நாம ஸ்தோத்திரம்.

ஒளஷதே சிந்தயேத் விஷ்ணும் போஜநே ச ஜனார்தனம்
சயனே பத்மநாபஞ்ச விவாஹே ச பிரஜாபதிம்.

யுத்தே சக்தரம்தேவம் ப்ரவாஹே ச த்ரிவிக்ரமம்
நாராயணம் தனுத்யாகே ஸ்ரீதரம ப்ரியசங்கமே.

துஸ்வப்னே ஸ்மரகோவிந்தம் ஸங்கடே மதுஸூதனம்
காநரே நாரசிம்ஹஞ்ச பாவகே ஜலசாயினம் .

ஜலமத்யே வராஹஞ்ச பர்வதே ரகுநந்தனம்
கமனே வாமனஞ்சைவ ஸர்வகாலேஷு மாதவம்.

ஷோடசை தானி நாமானி ப்ராத ருத்தாய யஹ் படேத்
ஸர்வாபாப விநிர்முக்தோ விஷ்ணுலோகே மஹீயதே.

———————–

நம்மைப்போல சிரித்தவர் நம்மைப்போலே அழுதவர்
நம்மைப்போலே காதலித்து காதலோடு வாழ்ந்தவர்
இழப்புகளைக் கண்டவர் மீண்டெழுந்து வந்தவர்
உறவுகளைப் பிரிந்திருக்கும் சோகங்களை அறிந்தவர்
செல்வத்தையும் கண்டவர் ஏழ்மையையும் கண்டவர்
செல்வத்திலும் ஏழ்மையிலும் செம்மையாக வாழ்ந்தவர்

விதியென்னும் புயலிலே ஆடாத மரமல்லர்
அத்தனை புயலிலும் வீழாத மரமவர்
தன்னுயிராம் சீதையை தியாகம்செய்த மேன்மையர்
இதயத்தில் சீதையை இழக்காத ஆண்மையர்
புரிதலில்லா மக்களை பொறுத்துக்காத்த பூமியர்
புரிந்தபின் இதயத்தில் உயிரான சாமியர்

என்னுயிரும் ராமரே என்மூச்சும் ராமரே
என்னிதயம் ராமரே என்வாழ்க்கை ராமரே
என்கண்கள் ராமரே கண்மணியும் ராமரே
என் மனத்திரையில் எப்பவும் மலருமவர் ரூபமே
என் மூளை எப்பவும் துதிப்பதவர் பாதமே!

ராமர் ராமர் ஜெய ராஜா ராமர்
ராமர் ராமர் ஜெய சீதா ராமர்
ராமர் ராமர் ஹரே ரகுவர ராமர்
ராமர் ராமர் ஹரே ரவிகுல ராமர்

கொழு கொழு குழந்தை கௌசல்ய ராமர்
துறு துறு சிறுவன் தசரத ராமர்
கல்விகள் கற்ற வசிஷ்ட ராமர்
ஆற்றல்கள் பெற்ற கௌசிக ராமர்

இணை பிரியாதவர் லக்ஷ்மண ராமர்
ராஜ குருவாம் பரத ராமர்
தந்தை போன்றவர் சத்ருக்ன ராமர்
அன்புள்ள கணவன் சீதா ராமர்

உற்ற தோழன் குகனின் ராமர்
உதவும் நண்பன் சுக்ரீவ ராமர்
தெய்வ உருவாம் அனுமத் ராமர்
ஞான சூரியன் ஜாம்பவ ராமர்

மூத்த மகனாம் சுமித்ர ராமர்
மன்னவன் பிள்ளை சுமந்தர ராமர்
மன்னித்தருளும் கைகேயே ராமர்
மகனே போன்றவர் ஜனக ராமர்

எளிய விருந்தினர் சபரியின் ராமர்
அபயம் அளிப்பவர் விபீஷண ராமர்
கடன்கள் தீர்ப்பவர் சடாயு ராமர்
பாப வினாசனர் கோதண்ட ராமர்

ஆண்கள் போற்றும் ஆதர்ஷ ராமர்
பெண்கள் போற்றும் கற்புடை ராமர்
மக்கள் மகிழும் அரசுடை ராமர்
பக்தர் நெகிழும் பண்புடை ராமர்

வேள்விகள் காக்கும் காவலன் ராமர்
சாபங்கள் போக்கும் அகல்ய ராமர்
இரு மனம் இணைக்கும் கௌதம ராமர்
திருமண நாயகன் ஜானகி ராமர்

சிவ வில் முறித்த பராக்ரம ராமர்
ஹரி வில் தரித்த சத்ரிய ராமர்
கடலை வென்ற வருண ராமர்
பாலம் கண்ட சேது ராமர்

மரம் ஏழு துளைத்த தீர ராமர்
மறு நாள் வரச்சொன்ன வீர ராமர்
குறையற்ற குணமகன் வீர்ய ராமர்
குலப் புகழ் காத்த சூர்ய ராமர்

சீதையைப் பிரிந்த மக்களின் ராமர்
காதலை மறவா சீதையின் ராமர்
தாயுமானவர் லவகுச ராமர்
தாயாய்க் காக்கும் விஷ்ணு ராமர்

கீதை தந்த கண்ணன் ராமர்
கண்ணனே வணங்கும் கண்ணிய ராமர்
சிவனை வணங்கும் பக்த ராமர்
சிவனே ஜபிக்கும் புண்ணிய நாமர்

முனிவர்கள் போற்றும் பிரம்மம் ராமர்
தவசிகள் நினைக்கும் நித்திய ராமர்
காந்தியின் கடவுள் சத்திய ராமர்
அறப் போர் பணித்த ஆண்டவன் ராமர்

ராம் ராம் என்றால் நல்லது நடக்கும்
ராம் ராம் என்றால் அமைதி கிடைக்கும்
ராம் ராம் என்றால் குணங்கள் சிறக்கும்
ராம் ராம் என்றால் மகிழ்ச்சி பிறக்கும்

ராம் ராம் என்றால் உள்ளம் உருகும்
ராம் ராம் என்றால் உவகை பெருகும்
ராம் ராம் என்றால் அறிவுத் தெளியும்
ராம் ராம் என்றால் தர்மம் புரியும்

ராம் ராம் என்றால் வீரம் விளங்கும்
ராம் ராம் என்றால் வெற்றி விழையும்
ராம் ராம் என்றால் செல்வம் செழிக்கும்
ராம் ராம் என்றால் கதவுகள் திறக்கும்

ராம் ராம் என்றால் மனது அடங்கும்
ராம் ராம் என்றால் புலன்கள் ஒடுங்கும்
ராம் ராம் என்றால் யோகம் நிலைக்கும்
ராம் ராம் என்றால் மோட்சம் கிடைக்கும்

ஸ்ரீ ராமர் புகழை தினமும் ஜபித்தால்
ஒரு வைரம் போல மனதில் பதித்தால்
துன்பம் எல்லாம் தொலைவில் ஓடும்
இன்பம் எல்லாம் விரைவில் கூடும்
ஸ்ரீராமபுண்யஜெயம்

—–

ஓம் நமோ ப்ரஹ்மாதிப்யோ ,ப்ரஹ்மவித்யா ஸம்ப்ரதாய–கர்த்ருப்யோ வம்ச –ரிஷிப்யோ ,மஹத்ப்யோ நமோ குருப்ய :

ப்ரஹ்மா போன்றவர்கள் ப்ரஹ்மவித்யா ஸம்பிரதாயத்தை அருளினார்கள் கோத்ர ப்ரவர்த்தகர்களான மஹரிஷிகள் ,
மஹான்கள் —-இவர்கள், இந்த ஸம்ப்ரதாயத்தை வளர்த்தார்கள். அப்படிப்பட்ட ஆசார்யர்களுக்கு நமஸ்காரம்

யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதா (கும்) சப்ரஹிணோதி தஸ்மை |
த (கும்)ஹ தேவ–மாத்ம –புத்தி–ப்ரகாஸம் முமூக்ஷூர்வை சரணமஹம் ப்ரபத்யே ||

முதன் முதலில் ப்ரஹ்மாவைப் படைத்து, அவருக்கு வேதங்களைக் கொடுத்து, அருளியவர் எவரோ,
நமது உள்ளத்திலே இருந்துகொண்டு நமது புத்தியைப் ப்ரகாசிக்கச் செய்பவர் எவரோ,
அந்தத் தேவனை மோக்ஷத்தில் விருப்பமாக இருக்கிற முமுக்ஷூவான அடியேன்
சரணமடைகிறேன்

ஸ்ரீராமபிரான், அநுமனுக்குச் சொல்கிறார்;–

1.ருக்வேதாதி –விபாகேன வேதாச்–சத்வார ஈரிதா : |
தேஷாம் சாகா –ஹ்யனேகா : ஸ்யுஸ்தாஸூபநிஷதஸ்–ததா ||
2. ருக்வேதஸ்ய து சாகா : ஸ்யு –ரேக விம்சதி சங்க்யகா : |
நவா திகசதம் சாகா யஜூஷோ மாருதாத்மஜ ||
3. சஹஸ்ர–சங்க்யயா ஜாதா :சாகா :ஸாம்ந : பரந்தப |
அதர்வணஸ்ய சாகா :ஸ்யு :பஞ்சாசத்பேத தோஹரே ||
4. ஏகைகஸ்யாஸ்து சாகாயா ஏகைகோபநிஷன் மதா |
மாண்டூக்ய –மேக –மேவாலம் முமுக்ஷுணாம் விமுக்தயே ||
ததாப்–யஸித்தஞ்சேஜ்—ஜ்ஞானம் தசோபநிஷதம் பட
5. ஈச–கேன–கட–ப்ரச்ன -முண்ட மாண்டோக்ய தித்திரி : |
ஐதரேயஞ்ச சாந்தோக்யம் ப்ருஹதாரண்யகம் ததா ||
6. ஸர்வோப நிஷதாம் மத்யே ஸார மஷ்டோத்தரம் சதம் |
ஸக்ருச் –ச்ரவண– மாத்ரேண ஸர்வா கௌக நிக்ருந்தனம் ||
7. மயோபதிஷ்டம் சிஷ்யாய துப்யம் பவன நந்தன |
இத –மஷ்டோத்தர சதம் நதேயம் யஸ்ய கஸ்யசித் ||

இவைகளின் சுருக்கமான பொருளாவது:–

1.ருக் வேதம் முதலிய வேதங்கள், வ்யாஸ பகவானால் நான்காகப் பிரிக்கப்பட்டது.
அவற்றில் பல சாகைகள் (கிளைகள்) உள்ளன ; உபநிஷத்துக்கள் உள்ளன
2. மாருதி புத்ர ! —-அநுமனே !ருக் வேத சாகைகள் 21; யஜுர் வேத சாகைகள் 109
3. எதிரிகளைத் தகிப்பவனே !சாம வேதத்தில் சாகைகள் ஆயிரக்கணக்காக இருக்கின்றன. அதர்வண வேதத்தில் 50 சாகைகள் உள்ளன.
4. ஸ்லோகம் 4ம் 5ம் சொல்வதாவது—ஒவ்வொரு சாகையிலும் உபநிஷத் உள்ளது.
மோக்ஷத்தை அபேக்ஷிக்கும் முமுக்ஷுக்களுக்கு மாண்டூக்ய உபநிஷத்தே போதுமானது.
அப்படியும் ஜ்ஞானம் வரவில்லையெனில்,
1-ஈசாவாஸ்ய ,
2-கேன,
3-கட ,
4-ப்ரச்ன ,
5-முண்டக,
6-மாண்டூக்ய ,
7-தைத்திரீய ,
8-ஐதரேய,
9-சாந்தோக்ய ,
10-ப்ருஹதாரண்ய உபநிஷத்துக்களான இந்தப் பத்து உபநிஷத்துக்களையும்,
ஆசார்ய முகேன தெரிந்துகொள்ள வேண்டும்.

இவை தசோபநிஷத்என்று ப்ரஸித்தி பெற்றவை.

மேலும் -8 உபநிஷத்துக்கள்
11. ச்வேதாச்வதரோபநிஷத்
12.அதர்வசிர உபநிஷத்
13.அதர்வசிகோபநிஷத்
14.கௌஷீ தகி உபநிஷத்
15. மந்த்ரிகோபநிஷத்
16. ஸுபாலோபநிஷத்
17.அக்நி ரஹஸ்யம்
18. மஹோபநிஷத்

உபநிஷத் என்றால்
ஆசார்யனின் அருகில் சென்று உபதேசமாகக் கேட்பது. இதனால் துன்பங்கள் தொலைந்து பேரின்பம் நிலைக்கும்.
ஆதலால், உபநிஷத் எனப்பட்டது. இது லௌகிக வார்த்தை என்று சொல்வர்.
உபநிஷத்துக்கு வேதாந்தம் என்றும் பெயர். பரப்ரஹ்மத்திடம் நெருங்கி இருப்பதாலே உபநிஷத் எனப்பட்டது
6. உபநிஷத்துக்கள் நிறைய உள்ளன. அவற்றுள் முக்ய ஸாரமாக இருப்பது—-108.

இவற்றை ஒருமுறை ச்ரவணம் (கேட்பது) செய்த உடனேயே எல்லாப் பாவங்களும் நசித்துவிடும்.
7. பவன நந்தன ! இந்த 108ம் , என்னுடைய சிஷ்யனான உனக்கு, உபதேசிக்கப்பட்டது.
இதை ஆராயாமல் எவருக்கேனும் உபதேசிக்கக் கூடாது.

ஸ்ரீ ராமபிரான் மேலும் சொல்கிறார் —–

ஸேவாபராய சிஷ்யாய ஹித–புஷ்டாய மாருதே |
மத்பக்தாய ஸுசீலாய குலீநாய ஸுமேத ஸே ||

ஸம்யக் பரீக்ஷ்ய தாதவ்ய –மேவ –மஷ்டோத்த்ரம் சதம் |
ய: படேச் –ச்ருணுயாத் வாபி ஸ மாமேதி ந ஸம்சய : ||

இவற்றின் அர்த்தமாவது—-
ஹே—-மாருதி ! கைங்கர்யத்தைச் செய்பவனும், பிறருக்கு உதவுவதில் விருப்பம் உள்ளவனும் என்னிடம் பக்தி உள்ளவனும்
நல்ல குலத்தில் உதித்தவனும் நல்ல புத்தியும் உடைய சிஷ்யனுக்கு அவனை நன்கு பரீக்ஷை செய்தபிறகே
இந்த 108 உபநிஷத்துக்களையும் உபதேசிக்கவேண்டும்.
இவற்றைப் படிப்பவன், கேட்பவன், அவன் என்னையே அடைகிறான். இதில் சந்தேகமில்லை.

வேதத்தில், நமகம், சமகம் என்று இரண்டு இருக்கிறது.
நமகம் என்பது,பகவானை ஸ்தோத்தரிக்கும்படியான மந்த்ரம்.
சமகம் என்பது நம்முடைய வேண்டுதல்களை பகவானிடம் சமர்ப்பிக்கும்படியான மந்த்ரம்.
நமக்கு வேண்டியவை எவை எவை என்று சமகம் சொல்லிக் கொடுக்கிறது. இவைகளில் எண்கள் வருகின்றன

ஏகாச மே திஸ்ரச்ச மே பஞ்ச ச மே ஸப்த ச மே நவ ச ம
ஏகாதச ச மே த்ரயோதச ச மே பஞ்சதச ச மே ஸப்ததச ச மே
நவதச ச ம ஏக விகும்சதிச் ச மே த்ரயவிகும் சதிச் ச மே பஞ்சவிகும் சதிச் ச மே ஸப்தவிகும் சதிச்ச மே நவவிகும் சதிச்ச மே ஏகத்ரிகும் சச்ச மே த்ரயஸ்த்ரிகும் சச்ச மே சதஸ்ரச்ச மே –ஷ்டௌ ச மே த்வாதச மே ஷோடச ச மே விகும் சதிச் ச மே சதுர்விகும் சதிச் ச மே –ஷ்டாவிகும் சதிச் ச மே த்வாத்ரிகும் சச்ச மே ஷட்த்ரிகும் சாச்ச மே சத்வாரிகும் சச்ச மே சதுச்சத்வாரிகும் சச்ச மே –ஷ்டாசத் வாரிகும் சச்ச மே வாஜச்ச ப்ரஸவச்சா –விஜச்ச க்ரதுச்ச ஸுவச்ச மூர்த்தாச வ்யச்நியச்சா-ந்த்யாயநச்சா–ந்த்யச்ச பௌவநச்ச புவநச்சா –திபதிச்ச

வேதங்களில் , எண்கள் எவ்வளவு விரிவாகச் சொல்லப்பட்டு இருக்கின்றன என்பது வியக்க வைக்கும்

————————————————–

புராணம் என்றால் பழைய கதைகள் என்று பொருள்.
அதாவது ‘’புரா அபி நவம்’’ என்று வடமொழியில் விளக்கம் தருவர். பழையது ஆனால் என்றும் புதியது.

அஸ்ய மஹதோ பூதஸ்ய நிச்வசித்
மேதத் ருக்வேதோ யஜூர்வேதஸ்ஸாம
வேத சுதர்வாங்கிரச இதிஹாச
புராணம் வித்யா உபநிஷத் —என்று பிருஹதாரண்யம் கூறுகிறது.

இருக்கு, யஜூர், சாமம், அதர்வணம், இதிஹாசம், புராணம், வித்தை, உபநிடதம் முதலியவை பரம்பொருளின் சுவாசம்.

18 புராணங்களில் உள்ள ஸ்லோக எண்ணிக்கையைப் பார்க்கலாம்:-
பிரம்ம புராணம் சுமார் 13000 ஸ்லோகங்கள்
பத்மம் சுமார் 55000 ஸ்லோகங்கள்
விஷ்ணு -சுமார் 23000 ஸ்லோகங்கள்
சிவ -சுமார் 24000 ஸ்லோகங்கள்
பாகவதம்- சுமார் 18000 ஸ்லோகங்கள்
பவிஷ்யம் -சுமார் 14500 ஸ்லோகங்கள்
மார்க்கண்டேயம் சுமார் 9000 ஸ்லோகங்கள்
ஆக்னேயம்- சுமார் 15000 ஸ்லோகங்கள்
நாரதீயம் – சுமார் 25000 ஸ்லோகங்கள்
பிரம்ம வைவர்த்தம் சுமார் 18000 ஸ்லோகங்கள்
லிங்கம் சுமார் 11000 ஸ்லோகங்கள்
வராஹம் சுமார் 24000 ஸ்லோகங்கள்
ஸ்காந்தம் சுமார் 81000 ஸ்லோகங்கள்
வாமனம் சுமார் 2400 ஸ்லோகங்கள்
கூர்ம சுமார் 5246 ஸ்லோகங்கள்
மத்ஸ்யம் சுமார் 1402 ஸ்லோகங்கள்
காருடம் சுமார் 19000 ஸ்லோகங்கள்
பிரம்மாண்டம் சுமார் 12000 ஸ்லோகங்கள்

ஆக சுமார் 370541 ஸ்லோகங்களுடன் தேவி பாகவதத்தில் உள்ள 18000 ஸ்லோகங்களையும்
கணக்கிட்டால் 388548 ஸ்லோகங்கள் ஆகின்றன!
இது தவிர மஹாபாரதம் ஒரு லட்சம் சுலோகங்களாலும்
வால்மீகி ராமாயணம் சுமார் 24000 ஸ்லோகங்களாலும் ஆகி இருப்பதை சேர்த்துக் கொண்டால் 512548 ஸ்லோகங்கள் ஆகின்றன.

——————-

ஸ்ரீராம காயத்ரி

ஓம் தாசரதாய வித்மஹே
சீதா வல்லபாய தீமஹி
தந்நோ ராம ப்ரச்சோதயாத்

ஸ்ரீ சீதா காயத்ரி

ஓம் ஜனகபுத்ரியை வித்மஹே
ராமப்ரியாய தீமஹி
தந்நோ சீதா ப்ரச்சோதயாத்

ஸ்ரீ ராம பாத காயத்ரி

ஓம் ராமபாதாய வித்மஹே ஸ்ரீராமபாதாய தீமஹி
தந்நோ ராமபாதப் ப்ரச்சோதயாத்

ஸ்ரீராமராம ராமேதி ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே! -ஸ்ரீ சிவபெருமான்

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம வென்ற யிரண்டெழுத்தினால்-ஸ்ரீ கம்பர்

நாடிய பொருள்கை கூடு ஞானமும் புகழு முண்டாம்
வீடியல் வழியு மாக்கும் வேரியன் கமலை நோக்கு
நீடிய வரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை
சூடிய சிலையிராமன் றோளவலி கூறு வோர்க்கே-ஸ்ரீ கம்பர்

மும்மை சால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை முற்றும்
தம்மையே தமக்கு நல்கும் தனிப் பெரும் பதத்தைத் தானே
இம்மையே மறுமை நோய்க்கு மருந்தினை ராம எனும்
செம்மைசேர் நாமம் தன்னைக் கண்களால் தெரியக் கண்டான்-ஸ்ரீ கம்பர்

நன்மை நேர்மை இனிமை எளிமை
கனிவு வலிவு பணிவு துணிவு
வீரம் வீரியம் வல்லமை வெற்றி
ஞாபகம் நம்பகம் நாயகம் நாணயம்
ஈரெட்டு குணங்களும் இன்னும் பலவும்
ஈரெழுத்து மந்திரம் சீராமம் தந்திடும்

அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே.
-சிவவாக்கியர்

கதாவுபஞ்ச பாதகங்க ளைத்துறந்த மந்திரம்
இதாம்இதாம் அதல்லஎன்று வைத்துழலும் ஏழைகள்
சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாம்இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே.
-சிவவாக்கியர்

நானதேது? நீயதேது? நடுவில்நின்றது ஏதடா?
கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே!
ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது? ராமராம ராமஎன்ற நாமமே!
-சிவவாக்கியர்

போதடா எழுந்ததும் புனலதாகி வந்ததும்
தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும்
ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றைத்தான வக்கரம்
ஓதடா இராமராம ராமவென்னும் நாமமே
-சிவவாக்கியர்

ஒழியத்தான காசிமீது வந்து தங்குவோர்க்கெலாம்
வெளியதான சோதிமேனி விஸ்வநாதனானவன்
தெளியு மங்கை உடன் இருந்து செப்புகின்ற தாரகம்
எளியதோர் இராம ராம ராமவிந்த நாமமே!!!
-சிவவாக்கியர்

காரகார கார கார காவல் ஊழி காவலன்
போரபோர போர போர போரில் நின்ற புண்ணியன்
மாரமார மார மார மரங்கள் எழும் எய்தஸ்ரீ
ராமராம ராமராம ராம என்னும் நாமமே!!
-சிவவாக்கியர்

நீடுபாரிலே பிறந்து நேயமான காயந்தான்
வீடுபேறு இது என்றபோது வேண்டி இன்பம் வேண்டுமோ
பாடி நாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ
நாடு ராம ராமராம ராம என்னும் நாமமே !!!
-சிவவாக்கியர்

ஒரேழுத்து உலகெலாம் உதித்த அட்சரத்துளே
ஈரெழுத்து இயம்புகின்ற இன்பமேது அறிகிலீர்
மூவெழுத்து மூவரை மூண்டெழுந்த மூர்த்தியை
நாளேழுந்து நாவிலே நவ்வின்றதே சிவாயமே!
-சிவவாக்கியர்

ஒன்பதான வாசல்தான் ஒழியுநாள் இருக்கையில்
ஒன்பதாம் ராம ராம ராம என்னும் நாமமே
வன்மமான பேர்கள்வாக்கில் வந்து நோய் அடைப்பராம்
அன்பரான பேர்கள் வாக்கில் ஆய்ந்தமைந்து இருப்பதே!
-சிவவாக்கியர்

திருமாலுக்கு அடிமை செய்
அரனை மறவாதே
-ஔவைப் பாட்டி

———-

அரக்கனே ஆக; வேறு ஓர் அமரனே ஆக; அன்றிக்
குரக்கு இனத்து ஒருவனேதான் ஆகுக;‘ கொடுமை ஆக;
இரக்கமே ஆக; வந்து, இங்கு, எம்பிரான் நாமம் சொல்லி,
உருக்கினன் உணர்வை; தந்தான் உயிர்; இதின் உதவிஉண்டோ

——–

அகரத்தில் ஓர் இராமாயணம்
இராமாயண கதை முழுதும்
‘அ’ என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால்
வடிவமைக்கப் பட்டுள்ளது.
” இதுவே தமிழின் சிறப்பு..”
அனந்தனே
அசுரர்களை
அழித்து,
அன்பர்களுக்கு
அருள
அயோத்தி
அரசனாக
அவதரித்தான்.
அப்போது
அரிக்கு
அரணாக
அரசனின்
அம்சமாக
அனுமனும்
அவதரித்ததாக
அறிகிறோம்.
அன்று
அஞ்சனை
அவனிக்கு
அளித்த
அன்பளிப்பு
அல்லவா
அனுமன்?
அவனே
அறிவழகன்,
அன்பழகன்,
அன்பர்களை
அரவணைத்து
அருளும்
அருட்செல்வன்!
அயோத்தி
அடலேறு,
அம்மிதிலை
அரசவையில்
அரசனின்
அரியவில்லை
அடக்கி,
அன்பும்
அடக்கமும்
அங்கங்களாக
அமைந்த
அழகியை
அடைந்தான் .
அரியணையில்
அமரும்
அருகதை
அண்ணனாகிய
அனந்தராமனுக்கே!
அப்படியிருக்க
அந்தோ !
அக்கைகேயி
அசூயையால்
அயோத்தி
அரசனுக்கும்
அடங்காமல்
அநியாயமாக
அவனை
அரண்யத்துக்கு
அனுப்பினாள்.
அங்கேயும்
அபாயம்!
அரக்கர்களின்
அரசன் ,
அன்னையின்
அழகால்
அறிவிழந்து
அபலையை
அபகரித்தான்
அங்கேயும்
அபாயம்!
அரக்கர்களின்
அரசன் ,
அன்னையின்
அழகால்
அறிவிழந்து
அபலையை
அபகரித்தான்
அந்த
அடியார்களில்
அருகதையுள்ள
அன்பனை
அரசனாக
அரியணையில்
அமர்த்தினர்.
அடுத்து
அன்னைக்காக
அவ்வானரர்
அனைவரும்
அவனியில்
அங்குமிங்கும்
அலைந்தனர்,
அலசினர்.
அனுமன்,
அலைகடலை
அலட்சியமாக
அடியெடுத்து
அளந்து
அக்கரையை
அடைந்தான்.
அசோகமரத்தின்
அடியில் ,
அரக்கிகள்
அயர்ந்திருக்க
அன்னையை
அடிபணிந்து
அண்ணலின்
அடையாளமாகிய
அக்கணையாழியை
அவளிடம்
அளித்தான்
அன்னை
அனுபவித்த
அளவற்ற
அவதிகள்
அநேகமாக
அணைந்தன.
அன்னையின்
அன்பையும்
அருளாசியையும்
அக்கணமே
அடைந்தான்
அனுமன்.
அடுத்து,
அரக்கர்களை
அலறடித்து ,
அவர்களின்
அரண்களை ,
அகந்தைகளை
அடியோடு
அக்கினியால்
அழித்த
அனுமனின்
அட்டகாசம் ,
அசாத்தியமான
அதிசாகசம்.
அனந்தராமன்
அலைகடலின்
அதிபதியை
அடக்கி ,
அதிசயமான
அணையை
அமைத்து,
அக்கரையை
அடைந்தான்.
அரக்கன்
அத்தசமுகனை
அமரில்
அயனின்
அஸ்திரத்தால்
அழித்தான்.
அக்கினியில்
அயராமல்
அர்பணித்த
அன்னை
அவள்
அதி
அற்புதமாய்
அண்ணலை
அடைந்தாள்.
அன்னையுடன்
அயோத்தியை
அடைந்து
அரியணையில்
அமர்ந்து
அருளினான்
அண்ணல் .
அனந்தராமனின்
அவதார
அருங்கதை
அகரத்திலேய
அடுக்கடுக்காக
அமைந்ததும்
அனுமனின்
அருளாலே

———-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ கேநோபநிஷத்

December 30, 2021

ஸ்ரீ கேநோபநிஷத்
॥ அத² கேநோபநிஷத் ॥
ௐ ஆப்யாயந்து மமாங்கா³நி வாக்ப்ராணஶ்சக்ஷு:
ஶ்ரோத்ரமதோ² ப³லமிந்த்³ரியாணி ச ஸர்வாணி ।
ஸர்வம் ப்³ரஹ்மௌபநிஷத³ம்
மாऽஹம் ப்³ரஹ்ம நிராகுர்யாம் மா மா ப்³ரஹ்ம
நிராகரோத³நிராகரணமஸ்த்வநிராகரணம் மேऽஸ்து ।
ததா³த்மநி நிரதே ய
உபநிஷத்ஸு த⁴ர்மாஸ்தே மயி ஸந்து தே மயி ஸந்து ।
ௐ ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: ॥
ௐ கேநேஷிதம் பததி ப்ரேஷிதம் மந:
கேந ப்ராண: ப்ரத²ம: ப்ரைதி யுக்த: ।
கேநேஷிதாம் வாசமிமாம் வத³ந்தி
சக்ஷு: ஶ்ரோத்ரம் க உ தே³வோ யுநக்தி ॥ 1॥
ஶ்ரோத்ரஸ்ய ஶ்ரோத்ரம் மநஸோ மநோ யத்³
வாசோ ஹ வாசம் ஸ உ ப்ராணஸ்ய ப்ராண: ।
சக்ஷுஷஶ்சக்ஷுரதிமுச்ய தீ⁴ரா:
ப்ரேத்யாஸ்மால்லோகாத³ம்ரு’தா ப⁴வந்தி ॥ 2॥
ந தத்ர சக்ஷுர்க³ச்ச²தி ந வாக்³க³ச்ச²தி நோ மந: ।
ந வித்³மோ ந விஜாநீமோ யதை²தத³நுஶிஷ்யாத் ॥ 3॥
அந்யதே³வ தத்³விதி³தாத³தோ² அவிதி³தாத³தி⁴ ।
இதி ஶுஶ்ரும பூர்வேஷாம் யே நஸ்தத்³வ்யாசசக்ஷிரே ॥ 4॥
யத்³வாசாऽநப்⁴யுதி³தம் யேந வாக³ப்⁴யுத்³யதே ।
ததே³வ ப்³ரஹ்ம த்வம் வித்³தி⁴ நேத³ம் யதி³த³முபாஸதே ॥ 5॥

யந்மநஸா ந மநுதே யேநாஹுர்மநோ மதம் ।
ததே³வ ப்³ரஹ்ம த்வம் வித்³தி⁴ நேத³ம் யதி³த³முபாஸதே ॥ 6॥
யச்சக்ஷுஷா ந பஶ்யதி யேந சக்ஷூँஷி பஶ்யதி ।
ததே³வ ப்³ரஹ்ம த்வம் வித்³தி⁴ நேத³ம் யதி³த³முபாஸதே ॥ 7॥
யச்ச்²ரோத்ரேண ந ஶ்ரு’ணோதி யேந ஶ்ரோத்ரமித³ம் ஶ்ருதம் ।
ததே³வ ப்³ரஹ்ம த்வம் வித்³தி⁴ நேத³ம் யதி³த³முபாஸதே ॥ 8॥
யத்ப்ராணேந ந ப்ராணிதி யேந ப்ராண: ப்ரணீயதே ।
ததே³வ ப்³ரஹ்ம த்வம் வித்³தி⁴ நேத³ம் யதி³த³முபாஸதே ॥ 9॥
॥ இதி கேநோபநிஷதி³ ப்ரத²ம: க²ண்ட:³ ॥
யதி³ மந்யஸே ஸுவேதே³தி த³ஹரமேவாபி var த³ப்⁴ரமேவாபி
நூநம் த்வம் வேத்த² ப்³ரஹ்மணோ ரூபம் ।
யத³ஸ்ய த்வம் யத³ஸ்ய தே³வேஷ்வத² நு
மீமாँஸ்யமேவ தே மந்யே விதி³தம் ॥ 1॥
நாஹம் மந்யே ஸுவேதே³தி நோ ந வேதே³தி வேத³ ச ।
யோ நஸ்தத்³வேத³ தத்³வேத³ நோ ந வேதே³தி வேத³ ச ॥ 2॥
யஸ்யாமதம் தஸ்ய மதம் மதம் யஸ்ய ந வேத³ ஸ: ।
அவிஜ்ஞாதம் விஜாநதாம் விஜ்ஞாதமவிஜாநதாம் ॥ 3॥
ப்ரதிபோ³த⁴விதி³தம் மதமம்ரு’தத்வம் ஹி விந்த³தே ।
ஆத்மநா விந்த³தே வீர்யம் வித்³யயா விந்த³தேऽம்ரு’தம் ॥ 4॥
இஹ சேத³வேதீ³த³த² ஸத்யமஸ்தி
ந சேதி³ஹாவேதீ³ந்மஹதீ விநஷ்டி: ।
பூ⁴தேஷு பூ⁴தேஷு விசித்ய தீ⁴ரா:
ப்ரேத்யாஸ்மால்லோகாத³ம்ரு’தா ப⁴வந்தி ॥ 5॥
॥ இதி கேநோபநிஷதி³ த்³விதீய: க²ண்ட:³ ॥
ப்³ரஹ்ம ஹ தே³வேப்⁴யோ விஜிக்³யே தஸ்ய ஹ ப்³ரஹ்மணோ
விஜயே தே³வா அமஹீயந்த ॥ 1॥

த ஐக்ஷந்தாஸ்மாகமேவாயம் விஜயோऽஸ்மாகமேவாயம் மஹிமேதி ।
தத்³தை⁴ஷாம் விஜஜ்ஞௌ தேப்⁴யோ ஹ ப்ராது³ர்ப³பூ⁴வ தந்ந வ்யஜாநத
கிமித³ம் யக்ஷமிதி ॥ 2॥
தேऽக்³நிமப்³ருவஞ்ஜாதவேத³ ஏதத்³விஜாநீஹி
கிமித³ம் யக்ஷமிதி ததே²தி ॥ 3॥
தத³ப்⁴யத்³ரவத்தமப்⁴யவத³த்கோऽஸீத்யக்³நிர்வா
அஹமஸ்மீத்யப்³ரவீஜ்ஜாதவேதா³ வா அஹமஸ்மீதி ॥ 4॥
தஸ்மிꣳஸ்த்வயி கிம் வீர்யமித்யபீத³ꣳ ஸர்வம்
த³ஹேயம் யதி³த³ம் ப்ரு’தி²வ்யாமிதி ॥ 5॥
தஸ்மை த்ரு’ணம் நித³தா⁴வேதத்³த³ஹேதி ।
தது³பப்ரேயாய ஸர்வஜவேந தந்ந ஶஶாக த³க்³து⁴ம் ஸ தத ஏவ
நிவவ்ரு’தே நைதத³ஶகம் விஜ்ஞாதும் யதே³தத்³யக்ஷமிதி ॥ 6॥
அத² வாயுமப்³ருவந்வாயவேதத்³விஜாநீஹி
கிமேதத்³யக்ஷமிதி ததே²தி ॥ 7॥
தத³ப்⁴யத்³ரவத்தமப்⁴யவத³த்கோऽஸீதி வாயுர்வா
அஹமஸ்மீத்யப்³ரவீந்மாதரிஶ்வா வா அஹமஸ்மீதி ॥ 8॥
தஸ்மிँஸ்த்வயி கிம் வீர்யமித்யபீத³ँ
ஸர்வமாத³தீ³ய யதி³த³ம் ப்ரு’தி²வ்யாமிதி ॥ 9॥
தஸ்மை த்ரு’ணம் நித³தா⁴வேததா³த³த்ஸ்வேதி
தது³பப்ரேயாய ஸர்வஜவேந தந்ந ஶஶாகாதா³தும் ஸ தத ஏவ
நிவவ்ரு’தே நைதத³ஶகம் விஜ்ஞாதும் யதே³தத்³யக்ஷமிதி ॥ 10॥
அதே²ந்த்³ரமப்³ருவந்மக⁴வந்நேதத்³விஜாநீஹி கிமேதத்³யக்ஷமிதி ததே²தி
தத³ப்⁴யத்³ரவத்தஸ்மாத்திரோத³தே⁴ ॥ 11॥
ஸ தஸ்மிந்நேவாகாஶே ஸ்த்ரியமாஜகா³ம ப³ஹுஶோப⁴மாநாமுமாँ
ஹைமவதீம் தாँஹோவாச கிமேதத்³யக்ஷமிதி ॥ 12॥
॥ இதி கேநோபநிஷதி³ த்ரு’தீய: க²ண்ட:³ ॥
ஸா ப்³ரஹ்மேதி ஹோவாச ப்³ரஹ்மணோ வா ஏதத்³விஜயே மஹீயத்⁴வமிதி

ததோ ஹைவ விதா³ஞ்சகார ப்³ரஹ்மேதி ॥ 1॥
தஸ்மாத்³வா ஏதே தே³வா அதிதராமிவாந்யாந்தே³வாந்யத³க்³நிர்வாயுரிந்த்³ரஸ்தே
ஹ்யேநந்நேதி³ஷ்ட²ம் பஸ்பர்ஶுஸ்தே ஹ்யேநத்ப்ரத²மோ விதா³ஞ்சகார
ப்³ரஹ்மேதி ॥ 2॥
தஸ்மாத்³வா இந்த்³ரோऽதிதராமிவாந்யாந்தே³வாந்ஸ
ஹ்யேநந்நேதி³ஷ்ட²ம் பஸ்பர்ஶ ஸ ஹ்யேநத்ப்ரத²மோ விதா³ஞ்சகார
ப்³ரஹ்மேதி ॥ 3॥
தஸ்யைஷ ஆதே³ஶோ யதே³தத்³வித்³யுதோ வ்யத்³யுததா³3

இதீந் ந்யமீமிஷதா³3 இத்யதி⁴தை³வதம் ॥ 4॥
அதா²த்⁴யாத்மம் யத்³தே³தத்³க³ச்ச²தீவ ச மநோऽநேந
சைதது³பஸ்மரத்யபீ⁴க்ஷ்ணँஸங்கல்ப: ॥ 5॥
தத்³த⁴ தத்³வநம் நாம தத்³வநமித்யுபாஸிதவ்யம் ஸ ய ஏததே³வம் வேதா³பி⁴
ஹைநꣳ ஸர்வாணி பூ⁴தாநி ஸம்வாஞ்ச²ந்தி ॥ 6॥
உபநிஷத³ம் போ⁴ ப்³ரூஹீத்யுக்தா த உபநிஷத்³ப்³ராஹ்மீம் வாவ த
உபநிஷத³மப்³ரூமேதி ॥ 7॥
தஸை தபோ த³ம: கர்மேதி ப்ரதிஷ்டா² வேதா:³ ஸர்வாங்கா³நி
ஸத்யமாயதநம் ॥ 8॥
யோ வா ஏதாமேவம் வேதா³பஹத்ய பாப்மாநமநந்தே ஸ்வர்கே³
லோகே ஜ்யேயே ப்ரதிதிஷ்ட²தி ப்ரதிதிஷ்ட²தி ॥ 9॥
॥ இதி கேநோபநிஷதி³ சதுர்த:² க²ண்ட:³ ॥
ௐ ஆப்யாயந்து மமாங்கா³நி வாக்ப்ராணஶ்சக்ஷு:
ஶ்ரோத்ரமதோ² ப³லமிந்த்³ரியாணி ச ஸர்வாணி ।
ஸர்வம் ப்³ரஹ்மௌபநிஷத³ம்
மாऽஹம் ப்³ரஹ்ம நிராகுர்யாம் மா மா ப்³ரஹ்ம
நிராகரோத³நிராகரணமஸ்த்வநிராகரணம் மேऽஸ்து ।
ததா³த்மநி நிரதே ய
உபநிஷத்ஸு த⁴ர்மாஸ்தே மயி ஸந்து தே மயி ஸந்து ।

ௐ ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி: ॥
॥ இதி கேநோபநிஷத் ॥

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.