Archive for the ‘Stotrams/Slokams’ Category

ஸ்ரீ லஷ்மீ ஹய வதன மந்த்ர மாலிகா ஸ்துதி -ஸ்ரீ கஸ்தூரி ரெங்காச்சார்யார் ஸ்வாமிகள் —

August 13, 2023

ஸ்ரீ லஷ்மீ ஹயக்ரீவர் விஷயமான மந்த்ரம்

ஓம் ரிக் யஜுஸ் ஸாம ரூபாய வேதா ஹரண கர்மணே
ப்ரணவ உத்கீத வபுஷே மஹா ஸ்வ ஸ்ரஸே நம–

ஓம்–ரிக்–ய–ஜுஸ்–ஸா –ம–ரூ–பா–ய–வே–தா–ஹ–ர-ண
கர்–ம–ணே–ப்ர–ண–வ–உத்–கீ–த– வ–பு–ஷே -ம–ஹா-ஸ்வ
ஸ்ர-ஸே-ந-ம-32- அக்ஷரங்கள் -அநுஷ்டுப் சந்தஸ்ஸில் ஸ்லோகம் –

ரிக் யஜுஸ் ஸாம வேதங்களைத் தன்னுடைய வடிவமாகக் கொண்டவனும்
வேதத்தை மீட்டு பிரமனுக்கு கொடுத்து அருளியவனும்
பிரணவம் என்றே குறிப்பிடப்படும் -ஸாம அவயவங்கள் ஒன்றான -உத்கீதமே வடிவு எடுத்தவனுமாகிய
அந்தப்பெரிய பரி முகனுக்கு நமஸ்காரங்கள்

இந்த அஷரங்களை முதல் எழுத்தாகாக் கொண்டு ஸ்ரக் தரா -சொல் மாலையாக -21 அக்ஷரங்கள் கொண்ட ஸ்லோகங்கள் கொண்ட மாலை

——-

ஓம் இத் யாத்மானம் அந்தர் நியமித கரணைர் த்யாயதாம் த்யாய தீ ஹாம்
ஓம் இத்யேவ ஸ்வயம் யஸ் பரிஹ்ருத விஹிதம் சித்திம் ஆதாது காம
வக்த்ரே வாஹஸ்ய தஸ்ய ஸ்துதி மதிமிதவாக் ப்ரஸ்துவே தன் மநூத்யத்
வர்ணாத்ய ஸ்ரக் தரா பிர் விம்ருதித விவிதாவத்ய தாராபிரத்ய –1-

புலன்களை அடக்கி ஓம் என்ற மா பெரும் மந்த்ரத்தைக் கொண்டு எம்பெருமானைத் த்யானம் செய்வர் பெரியோர் –
அவர்களுடைய தியானத்தினால் மகிழ்ந்து அவர்களுக்கு குதிரை முகனான எம்பெருமான்
தடைகள் எல்லாவற்றையும் நீக்கி -அவர்கள் ஸித்தி பெற்றிட விரும்பி -ஓம் என்று தானே ஸங்கல்பம் செய்து அருள்கிறான்
ஓம் -ஆமாம் -அப்படியே ஆகுக -ஸத்ய ஸங்கல்பன் அன்றோ –
அத்தகைய குதிரை முகப்பெருமானை மிகவும் குறுகிய சொல் வளமுடைய அடியேன் ஸ்ரக் தரா என்னும் வகையில் பாட விரும்புகிறேன்
இந்த ஸ்லோகங்கள் அவனைப் பற்றியவையே என்பதால்
இதில் சொல் குற்றம்- பொருள் குற்றம்- சொல்பவர் பால் உள்ள குற்றம் -சொல்லும் முறையில் உள்ள குற்றம்
இவை போன்றவை எல்லாம் வலிமையுடன் அணி வகுத்து இருந்தாலும் அவைகளை பொடி செய்து விளங்கக் கூடியவை ஆகுமே

————

ரிக்பி ஸாஸஸ்ய மானோ மஹி மஜூஷி யஜுஸ் யேஷு ஜோ குஹ்யமானோ
ஸாம் நா தோஷ் டூய மானோ முனி ஜன ஹ்ருதயாப் ஜேஜூ ராராஜ்ய மான
நீஹாரோர் வீத ராபா ப்ரதிபட ருசிபிர் கிஞ்சி பாபாஸ்ய மான
ஸ்ரேயஸ் ஸ்தேயோ விதத்தாம் மம ஹித வதன அபிக்யயா க்யாய மான –2-

குதிரை முகன் என்ற திரு நாமத்தால் குலவப்படும் பெருமான் எத்தகையவன் தெரியுமோ என்னில்
அவன் ரிக் வேத மந்திரங்களால் பல இடங்களில் சிறப்பான வகையில் போற்றப்படுபவன்
பெருமையுடைய யஜுர் வேதத்தால் அடிக்கடி சிறப்பான முறையில் பலமுறை ஸ்துதிக்கப் படுபவன்
ஸாம வேதத்தால் நன்கு ஸ்தோத்ரம் செய்யப்படுபவன்
முனிவர்களின் ஹிருதயத் தாமரையில் சிறப்பாக இடம் பெற்றுத் திகழும்படி த்யானம் செய்யப்படுபவன்
அவன் வெள்ளைப் பரி முகன்
அவன் திருமேனி பனிமலையில் ஒலியுடன் போட்டி போடும் கதிர்களை வீசுகிறது
அக்கதிர்களினால் அவன் மிகவும் சிறப்பாக ஒளிர்கிறான்
நம்பிக்கைக்கு உரியனான அவன் நமக்கு நீங்காத செல்வதை அருளும்படி செய்து அருள வேண்டும் –

———–

யச் சத்வச் சாச்ச போத ப்ரஸ்ரமிஹ ஸ நஸ் சந்த மாத்ர ப்ரக் லுப்தா
சிச் சிச் சித்ர ப்ரபஞ்சஸ் திதி கதிர் நியதிர் மூர்த்தி துங்கஸ் துரங்க
பங்க வ்யாஸங்க தூர ப்ரஸ்ரு மரஸர துத் பூதராகா ஸூ தாம் ஸூ
ஜ்யோத்ஸ் நா சச்சாய வித்யா விசர விதரணஸ் தூல லஷோ வலஷ–3-

வெள்ளைக்குதிரை முகமான உயர்ந்த தெய்வமான ஹயக்ரீவப் பெருமாள் ஞானத்தை வாரி வழங்குகிறார்
பனி அற்ற ஸரத்கால பூர்ண சந்திரன் தனது தடையில்லாத கிரணங்களை எங்கும் பரவச் செய்து அமுதை பொழிவது போல் –
உலகை உய்விக்கும் அவன் வாரி வழங்கும் ஞானச் செல்வத்தாலே
தனது நித்தியமான ஸத்ய சங்கல்பத்தினாலே ஸமஸ்த சித் அசித் நிறைந்த ப்ரபஞ்சத்தைக் காத்து அருளி
செயல்படச் செய்து அனைத்தையும் ஆள்பவன்
அப்படிப்பட்ட வள்ளலான வெள்ளைப் பரி முகன் நமக்குத் தெளிவான ஞானப் பரப்பை அளித்து அருள வேணும் –

அ பங்குர கலா தானஸ் தூல லக்ஷத் வமீயுஷே
துங்காய மஹஸே தஸ்மை துரங்காய முகே நம–நடாதூர் அம்மாள் அருளிச் செய்த ப்ரபந்ந பாரிஜாத ஸ்லோகத்தை அடி ஒற்றி அருளிய ஸ்லோகம்

——————–

ஜூஷ்டோ தேவ்யா தயா வ்யாந்தி கமஸ முதய த்ரோஹ ஸம் ரம்ப கர்ஜத்
தைதே யாரண்ய வாஹ த்விஷது திதர வன்யக் சிகீர்ஷாஸ் அகுலஸ்ய
வக்த்ரே வாஹஸ்ய ஹேஷா ஹல ஹல நிநிதே அபூத பூர்வே ப்ரவ்ருத்தே
ப்ராந்த் வோரஸ்தோ அவதீர்ய த்ருத தரம முமாஸ்விஷ்யயா விஸ்மிதாஸ் அஸ்தே –4-

அகலகில்லேன் இறையும் என்று திருமார்பில் நித்ய வாஸம் செய்யும் பிராட்டி
இவர் திருமடியிலே அமர்ந்ததுக்கு ஹேது அருளிச் செய்கிறார் இதில்

வேதங்களுக்கு சிதைவு உண்டாக்கி த்ரோஹம் செய்யும் காட்டு எருமைகளை அடக்க இவனது கனைக்கும் த்வநியே போதுமே
ஹேஷா என்றும் ஹல ஹல ஹல -என்றும் கனைக்கும் த்வநி
அதைக் கேட்டு திருமார்பில் அமர்ந்த பிராட்டி அச்சமுற்று அதிர்ந்து போனாள்
திரு மார்பில் இருந்து இறங்கி அவனை அணைத்துக் கொண்டு வியப்புடன் விளங்குகிறாள்
அனைத்துக் கொண்டே மடி மீது அமர்ந்து உள்ளாள்
இந்த மிதுன சேஷி தம்பதி நம்மை ரக்ஷித்து அருள வேண்டும் –

—————

ஸார ஸாம்நாம் உதார ஸர ஸதர ருசாம் ருத்தி ரந்திர்தி தூரா
பத்ரா வஷ்டம் பயஷ்டிர் விதி நிதி யஜுஷாம் பாக்ய மாதர்வணாநாம்
அங்காநாம் துங்க ஸ்ருங்கம் ஸகது மம துரங்கோத்த மாங்கோ அந்தரங்கே
ஸத்யோ ஹ்ருத் யாநி பத்யான் யபி பரி கலயன் விஸ்வ வித்யா நிஷத்யா –5-

உலகில் உள்ள பல கலைகளும் அளிக்கும் அங்காடி இவனே
இவனே சாம வேதத்தின் கவர்ச்சியான ஸாரம் -ரிக் வேதங்களின் செழிப்பு –
மறப்பு இல்லாதபடி யஜுர் வேதம் ஓதுவது எளிவது அல்ல –
பல இடங்களில் ஒரே மாதிரியான சொல் தொடர்கள் வரும் –
யஜுர் வேதத்தில் இப்படிச் செய்ய வேண்டும் என்னும் கட்டளைகள் நிறைந்ததாகவும் இருக்கும்
இவற்றை குறையின்றி ஓத பரி முக்கண் அருள் வேண்டும்
அவனே பாதுகாப்பான மறையாத கைத்தடி போன்றவன்
அதர்வண வேதத்தின் பாக்கியமே வடிவு எடுத்தவன்
வேதங்களை உள்ளபடி உணர
வியாகரணம் நிருத்தம் சந்தஸ்ஸாஸ்த்ரம் சீக்ஷை கல்பம் ஜ்யோதிஷம்
ஆகிய ஆறு அங்கங்களிலும் பயிற்சி வேண்டும்
வெறும் பயிற்சி போதாது -இமயமலை ஏற வேண்டிய பயிற்சியுடன் பயில வேண்டும்
இவற்றுக்கும் பரிமுகனின் அருள் வேண்டும்
எனவே இவற்றுக்கும் அவனே வான் அளாவிய முகடு என்பர்

ஸ்மாஹாரஸ் ஸாம்நாம் -என்று தொடங்கும் ஹயக்ரீவ ஸ்லோகத்தை அடி ஒற்றி அருளிச் செய்த ஸ்லோகம் இது –

ஸ்மாஹாரஸ் ஸாம்நாம் ப்ரதிபதம் ருசாம் தாம யஜுஷாம் –
லய ப்ரத்யூ ஹாநாம் லஹரி வித திர்ப்போத ஜலதே
கதா தர்ப்ப பஷூப் யத்கதககுல கோலாஹல பவம்
ஹரத் வந்தரத் வாந்தம் ஹய வதன ஹேஷா ஹல ஹல –3-

சாம வேதங்களின் தொகுதி ஆகவும் -எல்லாக் கிளைகளும் ஓன்று கூடிய வடிவாகவும் – –
ருக் வேதங்களுக்கு ஒரு பொருள் கிளவி யாகவும் -மந்திரங்களின் பொருளைக் கூறும் மற்று ஒரு சொல்லோ என்னும் படியாயும் —
யஜுர் வேதங்களுக்கு உறைவிடம் ஆகவும்-மந்திரங்களின் கருத்துக்கள் அனைத்தும் தன்னுள் அடங்கப் பெற்றதோ என்னும்படியாகவும் –
இப்படி மூன்று வேத சாரமாயும் -கல்வி கற்பதற்கு வரும் -தடைகளின் அழிவுக்குக் காரணம் ஆகவும் –
ஞானக் கடலின் அலை வரிசையாகவும் உள்ள ஸ்ரீ ஹயக்ரீவனுடைய ஹல ஹல என்னும் கனைப்பு ஒலி த்வனி
வாதம் புரிவதில் உண்டான செருக்கினால் கலங்கி நிற்கும் பிற மத வாதிகளின் கூட்டத்தின் ஆரவாரத்தால் உண்டான
அஞ்ஞான இருளை ஒழிக்க வேண்டும் –

இவனது ஹல ஹல -சப்தமே -அஞ்ஞானங்களை போக்கும் -ஞானக் கடலில் இருந்து வீசும் அலைகள் -இவையே –
தார்க்கிகள் வேத பாஹ்யர்களால் விளையும் அஞ்ஞானங்களை போக்கி அருளுபவர் –
ச கோஷ–ஸ்ரீ பாஞ்ச ஜன்ய -ஹிருதயாநி உளுத்து போகும் படி பண்ணிது போலே-
அனுகூல பிரதிகூல -ப்ரீதி பய ஹேது வாகுமே –
யஜுர் வேதம் தாரணம் -சாம வேதம்-பகவத் விஷய அனுபவ போகம்-வாக் சக்தி –
ரிக் வேதம் விநயம் —ஆராதன பொருள்
த்ரையந்தம் -வேதாந்தம் -அர்த்த அனுசரித்து பாதம் முடிந்து ரிக் வேதம் –முடியாமல் யஜுர் வேதம் —
கான ரூபம் சாமம் -மிஸ்ரமம் அதர்வண –என்றுமாம் –
ஹல அஹல -அச்சு எழுத்து அல் எழுத்து சேர்ந்த வேதம் –
லய ப்ரத்யூ ஹாநாம்–தடங்கலை போக்கி அருளி –ஸ்ரேஷ்டர் செய்யும் கார்யங்கள் தடங்கல் -நிறைய –
ராமன் -ராவணன் -கார்யங்கள் மூலம் அறிவோம் —

————-

மத்யே பிம்பம் ஸூதாம் ஸோர் த்யுமணி நிப மணிஸ்ரேணி பாராஜி ராஜத்
ஹாரைஸ் தாரை ருதாரை ரபஹஸித ஸூதா சாகரோத் ஸாரி பூரை
வா மாங்கவாஸ லீலா குதுகுல விதயா அப்யங்கித பங்கஜாஷ்யா
சங்கா தங்கம் ச பங்கம் திரயது கருணா பங்கில கஸ்சி தர்வா –6-

அமுதக்கடல் –பொங்கும் வெள்ளம் -வெண்மையாய் இருந்து நகையாடுவது போல் உள்ளது
இனிய முத்து மாலைகள் பல அணிந்து கொண்டு ஒளி கற்றைகளால் திகழ்கின்றன
கதிர் ஆயிரம் இரவி கலந்து எரிந்தால் ஒத்து அணிமணிகளை உடைய பெருமான்
ஸூர்யனே சந்த்ர மண்டலத்தில் இருப்பது போல் அமர்ந்து இருக்கிறான் –
அவன் திருமார்பில் வசிக்கும் பிராட்டியும் இடது தொடையில் வீற்று இருந்து விளையாடும் ஆர்வத்தால்
அங்கே அமர்ந்து பேர் அழகுடன் பொலிகிறாள்
இப்படி ஒப்பற்ற ஹரி வதன பிரான் எவ்வித கலக்கமும் இல்லாமல்
நம் மீது கருணை கொண்டு ஸம்சயங்கள் துயரங்கள் போன்ற அழுக்கை எல்லாம் போக்கி அருளட்டும்

———

ரூடா ப்ரவ்டாஸூ புருஷ மதி வ்யாப்ருதி வ்யாப்த்ய போடா ஸூ
ஆதா தாந்தாஸூ தாஸூ ப்ரதிஹத கதிதா த்வந்து தாவான னேர்வன்
இத்தம் ஸத்ய ப்யஹம் யத் தவ குண கண னாரம்ப ஸம் ரம்ப நீக்ன
ஸ்தானே தத் யேன பாலோப்யதி விதத புஜோ விஸ்த்ருதிம் வக்தி ஸிந்தோ-7

யதோ வாஸோ நிவர்த்தந்தே -வேதத்துக்கும் எட்டாத வைபவம் கொண்டவனே
அவற்றாலும் ஸ்துதி பண்ணி முடிக்க முடியாதே-அப்படிப்பட்ட உன்னை ஸ்துதிக்க இழிந்தேனே
கடலை அளவிட்டுக் காண இயலாது என்றாலும் ஒரு குழந்தை இரண்டு கைகளாலும் அகல விரித்துக் காட்டி
கடல் இவ்வளவு அகலம் கொண்டது என்று சொல்வது உண்டு அல்லவா –

————-

பாதா பாதால பூம் யம்பர தல நிலயா வாஸ ஜாயாஸ ஸாராத்
யாதா யாதாநு பூர் வ்யாத விகத ஜனனீ கர்ப்ப வி ப்ராந்தி யோகாத்
வேத்யா வேத்யா வமர் ஸாஸ் கலிதக தியதீ ஸான ராஜ்யா ஸ பாஜ்ய
சாந்தா சாந்தம் ஸம் ருத்திம் விதரது ஸ மம வ்யாஜ வாஜீ விராஜீ –8-

பக்தனான பிரம்மனிடம் இருந்து வேதங்களை மது கைடபர்கள் பறித்துக் கொண்டு போன போது
மீட்டுத் தரும் வ்யாஜத்தில் ஹயக்ரீவ வடிவம் கொண்ட எம்பெருமான் நமக்கு கருணை பொழியட்டும்
ப்ரயோஜனாந்த பரத்தைத் தவிர்த்து -நிரதிசய ஆனந்தம் பெற அருள வேண்டும்
நீ ரக்ஷிக்க இருக்கும் போது வேறே யாரும் வேண்டாமே –
பிறவிச் சுழலில் இருந்து மீட்டு அருளும் உனது பெருமையை அறிந்து –வேதி -கலைமகளும் போற்றுவாள்
வேதி -உபா தேய த்யாஜ்யங்களை பகுத்து அறிந்த யதிகளின் தலைவரான எம்பெருமானுடைய
சிஷ்யர்கள் அனைவரும் – -பரகால ஜீயர் -போன்றோரும் ஆராதிப்பார்கள் அன்றோ –

—————–

யஸ்மின் விஞ்ஞான வார் தாவதி ஜகதி புரோ ஜ்ரும்ப மாணே அஷ்ட மூர்த்தே
மூர்த்திஸ் ஸா தக்ஷிணாக்யா த்ரி தச பரீஷதா பிந்துரா லஷ்ய தஷா
வாணீ ஸ பத்ம சத்ம ப்ரிய தம க்ருஹணீ கா அப்ய பாணீ ஹ வேணீ
பாராசர்ய ப்ரதானோ அப்ய கணி முனி கண பல் வலம் பாது ஸோ அர்வா –9-

ஹயக்ரீவர் ஞான சாகரம் -அந்தக்கடல் தேவர்களின் சமூகத்துக்கு முன்னர் பொங்கிப் பொலியும் போது
அவர்கள் இந்தப் பரிமுக பரமனின் பெருமையை உணர்ந்தார்கள்
ஞானத்தில் சிறந்த ருத்ரன் -தக்ஷிணா மூர்த்தி ஆலமரத்துக்கு அடியில் இவனின் ஞான லவலேசம் கொண்டு உபதேசித்தார்
தாமரை மலரில் இருக்கும் பிரமனின் பத்தினியான கலைமகள் இந்தக்கடலை ஒப்பிடும் பொழுது சிறிய வாய்க்கால் போன்றவளே
வ்யாஸாதி முனிவர் குழாங்களும் சிறிய குட்டை போலவே ஆவார்கள்
அவர் நம்மைக் காத்து அருளட்டும்

இந்த ஸ்லோகம் தாஷிண்யரம்பா -என்று தொடங்கும் ஹயக்ரீவ ஸ்லோகத்தின் அடிப்படியில் வந்தது

தாக்ஷிண்ய கிரி ஸஸ்யரம்யா மூர்த்தி
தேவீ சரோஜா ஸந தர்ம பத்நீ
வ்யாசாதயோ அபி வ்யப தேஸ்ய வாச
ஸ்புரந்தி சர்வே தவ சக்தி லேஸை—7-

சிவனுடைய தெற்கு நோக்கி அமர்ந்த தக்ஷிணா மூர்த்தியும் -ஆல மலர்த்தின் நிழலில் இருந்து
அகஸ்தியர் புலஸ்தியர் தக்ஷர் மார்க்கண்டேயர் நான்கு முனிவர்களுக்கும் உபதேசித்தார் —
தாமரையில் அமர்ந்த பிரமனுடைய தர்ம பத்னியான சரஸ்வதி தேவியும் மிகப் போற்றுதலுக்கு உரிய
பேச்சை உடைய வியாசர் பராசரர் வால்மீகி முதலிய அனைவரும் உன்னுடைய
சக்தியின் திவலையால் உயர்ந்து விளங்குகின்றனர் –

தக்ஷிணா ரம்ய மூர்த்தி –தாக்ஷிண்யம் -அழகே வடிவு கொண்ட தக்ஷிணா மூர்த்தி -கிருபையால் கொடுக்கும் மூர்த்தி
கிரி ஸஸ்யரம்யா மூர்த்தி -கைலாச மூர்த்தி -வாக்குக்கு மூர்த்தி -பேச்சு வன்மை ஞானம்
தேவீ சரோஜா ஸந தர்ம பத்நீ–சரஸ்வதி –தாமரை ஆசனமாக கொண்ட நான்முகனுக்கு தர்ம பத்னி –
இவள் அனுக்ரஹம் பிரம்மன் அனுக்ரஹம் அடியாகவே என்று காட்ட –
வால்மீகி –மச்சந்தா தேவ -சங்கல்பம் அடியாகவே சரஸ்வதி உம வாக்கில்
ஆரோக்யம் பாஸ்கரன் -செல்வம் அக்னி -ஞானம் ருத்ரன் -மோக்ஷம் நாராயணன் -கலியுகம் பாஷாண்டிகள் நிறைந்து –
வாக் தேவி -சரஸ்வதி -தக்ஷிணா மூர்த்தி -இவன் அனுக்ரஹம் அடியாகவே –
வ்யாசாதயோ அபி வ்யப தேஸ்ய வாச -வ்யாஸாதிகளும் கூட
ஸ்புரந்தி சர்வே தவ சக்தி லேஸை–ஒளி விடுவது தேவரீர் சக்தியினொரு துளியாலேயே –
அந்தராத்மதயா –சர்வமும் இவன் அம்சம் -சர்வ ரஸ சர்வ கந்த

———-

வேத உத்தர ரோத்யதம் தத் ப்ரதி ஸது மிதுனம் ஸர்வ ஸர்வாதி மானாம்
சேவாஹேவாக பூ மோத்ய தஹ மிஹ மிகா குஞ்ச தன் வேஷி மூர்த்னாம்
ஸ்ரீர் ஷேஷ்வா பாந்தி யஸ்ய த்வி குண மணி லதா பாவ பாஜ கடாஷா
கல்யோத் புல்லாம் புஜாத ப்ரமத பர நிராகார நிஸ் தந்த்ர த்ருஷ்டே–10-

ஸ்ரீ லஷ்மீ சமேத ஹயக்ரீவ மிதுனம் நமக்கு மங்களங்கள் அருள வேண்டும்
வேதத்தை மீட்டு அருளியதால் தேவர்கள் நான் முன்னே நான் முன்னே என்று
இத்தைக் கண்ட மிதுன தம்பதிகள் அவர்களைக் கடாக்ஷித்து அருள்கிறார்
மிதுன கடாக்ஷமாகிற ரத்ன லதா கொடி அவர்கள் தலைகளை அலங்கரிக்கிறது –
இந்த கடாக்ஷ தேஜஸ்ஸு காலைக் கதிரவன் ஒளியால் மலர்ந்த தாமரைகள் ஒளியை விஞ்சி பீடு பெற்றவை
இந்த மிதுன திவ்ய தம்பதிகள் நமக்கு அருளட்டும் –

———

தாஷ்யம் லஷ்யதே தாது க்வ னு கலு ஜததீ ஜால நிர்மாண லீலா
ரம்பே சஞ்ஞா விதா வாப்யதே ச ததுசி தானேக மூர்த்தி ப்ரக்லுப்தவ்
தத் தத் க்ருத்ய ப்ரபஞ்சேஷ் வபி ச திவிஷதாம் தைத்ய பாஸா ஹ்ருதானாம்
ஆம்னா யாயாம் தயார்த்ரோ யதி ஹய வதனோ நோத் த்ருதிம் ஸம் விதத்யாத் –11-

நான்முகன் ஸ்ருஷ்ட்டி செய்யும் பொழுது நாம ரூபங்களைக் கொடுத்து அமைக்கத் துணை செய்யும் கையேடு வேதமே
இதே போல் இந்திராதி தேவர்களும் அவர் அவர்கள் செயல்களைச் செய்வதற்கும் வேதமே கையேடு –
இந்த வேதங்களை அபஹரித்துப் போன மது கைடபர்களை நிரஸித்து மீட்டு வந்து அருளியதும் பரி முகப் பெருமானே
இவரது அருள் இல்லாமல் எவருமே தங்கள் தங்கள் பணிகளை செய்ய முடியாதே

இந்த ஸ்லோகம் மந்தோஸ் பவிஷ்யன் -என்று தொடங்கும் ஹயக்ரீவ ஸ்லோகத்தின் அடிப்படையிலே அமைந்தது-

மந்தோஸ் பவிஷ்யன் நியதம் விரிஞ்சோ
வாசம் நிதே வஞ்சித பாகதேய
தைத்யாப நீதாந் தயயைவ பூயோ அபி
அத்யா பயிஷ்யோ நிகமான் ந சேத் த்வம்—8-

கலைகளுக்கு உறைவிடம் ஆனவனே -நீ -மது கைடவர் ஆகிய அசுரர்களால் கவரப்பட்ட வேதங்களை
கருணையாலேயே மறுபடியும் பிரமனுக்கு உபதேசிக்கா விட்டால் பிரம தேவன் பாக்யத்தை இழந்து
நிச்சயமாக மூடனாக ஆகி இருப்பான் –
மது கைடபர் அபஹரித்த வேதங்களை மீட்டு நான்முகனுக்கு உனது தயா குணம் அடியாக அன்றோ
மீண்டும் வழங்கினாய் –

மந்தோஸ் பவிஷ்யன் நியதம் விரிஞ்சோ –விரிஞ்சன்-மந்த புத்தியுடன் -நிச்சயமாக இருந்து இருப்பர்
மந்த -விவேக ஞானம் இல்லாமல் -சம்சயம் விபர்யயம் –சாஸனாத் சாஸ்திரம் -க்ருத்யமும் அக்ருத்யமும் -விதிக்கும்
வாசம் நிதே வஞ்சித பாகதேய–வாக்குக்கு நிதியே -வஞ்சிக்கப்பட்டவராய் -பாக்யம் இல்லாமல் இருப்பவராய்
தைத்யாப நீதாந் தயயைவ பூயோ அபி -அசுரர்களால் திருடி செல்லப்பட்ட –
பூயோபி –மறு படியும் -கீழே ஸ்ருஷ்ட்டி காலத்தில் அருளிச் செய்ததும் உண்டே
அத்யா பயிஷ்யோ –ப்ரஹ்மாவுக்கு சொல்லிக் கொடுத்தீர்
நிகமான் ந சேத் த்வம்–கொடுக்காமல் போயிருந்தால்
வேத அபகார குரு பாதக தைத்ய பீடா -பிரஜாபதி -பசு பதி -சசி பதி-மூவருக்கும் ஆபன் நிவாரகன் நீ அன்றோ
கபாலீத்வம் -பவிஷ்யஸி -சாபம் -ப்ரஹ்ம கபாலம் -பிண்டியார் மண்டை ஏந்தி —
இடர் கெடுத்த மணவாளன் -ஹர சாப விமோசனம் -மார்பில் விலங்கு அமுத நீர் தெளித்து

———

ஹஸ்தா லம்பாய பூயாத் ஸ மம பதி ஸதாம் ஸ்ரஸ் தவ் வ்ருத்தஸ்ய நித்யம்
ந்யஸ்தா சேஷாக மாப்தேரதி கமபி சமம் வஸ்துணீ யஸ்ய ந ஸ்த
ஸஸ்தா மஸ்தோகதீ ஸம் ஸ்துதி மபி ஜனயன் யோ நயந்மோஹ மஸ்தம்
ந்யஸ்தம் யஸ் சவ்ய ஹஸ்தே கலயதி ச முதா புஸ்தகம் மஸ்தகே அர்வா –12-

பரிமுகப்பெருமாள் இடது திருக் கையில் புஸ்தகத்தை மகிழ்ச்சியுடன் ஏந்தி உள்ளான்
புகழ் பெறக்கூடிய பரந்த ஞானம் கொண்டு ஸ்துதிகளைப் படைக்கும் திறமையை அடியோங்களுக்கு அருளுகிறான்
வேதங்களை மீட்டு பிரமனுக்கு அளித்த இவனுக்கு ஓத்தார் மிக்கார் இல்லையே
நல்ல வழியில் பயணம் செய்ய விரும்பும் அடியோங்களுக்கு இவனே கைத் தாங்கலாக இருந்து வழி நடத்துகிறான்
அடியோங்களின் பிரதிபந்தங்களைப் போக்கி அருளி அற நெறிகளில் நடத்தி அருள்கிறான்

இந்த ஸ்லோகத்தில் ஸ் -அக்ஷரம் 15 தடவை வருகிறதே
இத்தைப் பாராயணம் செய்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் ஆனந்தம் பெருகுமே –

———-

ரத்னம் யத் ப்ரத்ந வாஸாம் நிருபம ஸூஷமா காந்த ஸீமந்தி நீநாம்
ஸீ மந்தே நித்ய லால்யம் ஹ்ருதய ஸரஸிஜே அஜஸ்ர தார்யம் புதானாம்
துக் தோத வத்தனூன் ஜாகர ஜல ஜயுகீ லாலநோத் யந்ம்ருஜாதோ
நித்யம் தூத்னம் ஹ்யாஸ்யம் மம கலயது தந்நிஸ்ஸ பத்னம் ப்ரயத்னம் –13–

இந்த பரிமுக ப்ரஹ்மம் ஒப்பற்ற ரத்னம் –
வேதாந்தங்கள் இடையறாது கொஞ்சிச் சூட்டப்படும் ரத்னம்
ஸாத்விகர்கள் த்யானம் செய்து ஹ்ருதயத்தில் வைத்துக் கொள்ளும் ரத்னம் –
திருப்பாற் கடலில் பிறந்த பெண்ணமுதம் தனது திருக்கைத் தாமரைகளால் திருவடிகளை வருடி விடும் ரத்னம்
தடங்கல் அற்ற முயற்ச்சிகளைச் செய்து ஸ்தோத்ரம் பண்ணி சமர்ப்பிக்கும் படி அருள வேண்டும்

——–

ணத்வம் யத் பின்ன விருத்தாவ கடிதம் உபலப் யோத்ய மாத்ராத்ரக் விரேமு
தே தே நாராயணா க்யாம் இதர விபுத ஸாதாரணீம் கர்த்து காமா
யஸ்மின் ஸ்தன் யோக ரூட்யோர் குண மணி ஜலதவ் புஷ்கலம் வர்த்தனம் ஸ்யாத்
தேவோ மாயா தயோ அசவ் தயதி ஹ்ருதி ருஜாம் சைந்தவோ பாந்தவோ ந –14-

நமக்கு ஒழிக்க ஒழியாத நல் சுற்றம் இந்தப் பரி முகப் பெருமான்
நாராயண பர ப்ரஹ்மம் தத்வம் நாராயண பர நாராயண பரோ ஜ்யோதி ஆத்மா நாராயண பர
ண த்வம் இருப்பதால் வீர சைவர்கள் பின் வாங்கும் படி ஆனதே
இந்த நாராயண பதம் யோக அர்த்தமாகவும் ரூடி அர்த்தமாகவும் இவன் இடமே பொருந்தும்
இவனே ஸ்ரீ யபதி -நம்முடை நல் சுற்றம் –
நம்முடைய நல்ல சிந்தனைகளை வளர்த்து அருள வேண்டும் –
வடமொழியில் ண அக்ஷரம் இல்லாவிடில் ணத்வம் பத பிரயோகம் செய்யும் படி ஹயக்ரீவர் ஸ்வாமிக்கு அருள் செய்துள்ளார்
பக்தர்களின் அபீஷ்டங்களை அருளுவான் என்பதற்கு இதுவே நல்ல த்ருஷ்டாந்தம் –

———-

கர்ணா வர்ணோ ஜராஜன் முகுலதல ஸமா வர்த்தோ அனர்வணோ மே
ப்ரோர் ணூயாஸ்தம் லலாடே குடில விதிசம் உத்கீர்ண ஸங்கீர்ண வர்ணாந்
வர்ண்யேதே யாவமுஷ்ய த்ரி புவன வபுஷோ வ்யோம பாதாள ரூபவ்
பர்ணைர் வா அப்யர்ணஸா வா ஸததமபி ருசிம் பூர்ண யத்பிர் மஹத்பிர்–15-

யாராலும் வெறுக்க முடியாத ஹயகிரீவப் பெருமாள் உடைய இரண்டு காதுகளும் தாமரை மொட்டுக்கள் போல் உள்ளன
இல்லை நீர் இவற்றையே உண்டு தவம் செய்யும் மஹான்கள் மூ உலகையும் வடிவாக யுடைய
இவனுடைய ஒரு காதை வானமாகவும் மற்ற ஒன்றை பாதாளமாகவும் வர்ணிக்கிறார்கள் –
அந்தக் காதுகள் அவனை அணுகத் தயங்கி இருக்கும் அடியோங்கள் அளவும் நீண்டு
என்னுடைய தலையினிலே துரதிருஷ்ட வசமாகக் கோணலாக எழுதப்பட்டவை அனைத்தையும் அழித்து அருள வேண்டும் –
அடியோங்கள் தலை எழுத்தை நல்லதாக மாற்றி அமைத்து அருள வேண்டும்

———–

மண்டல்யா மண்டனானாம் மணி கண க்ருணி பிர் கூர்ணி தத்யோ மணிநாம்
நீரந்த்ரம் மண்டி தாங்கஸ் ஸிதகர ருசிரே புண்டரீகே நிஷண்ண
ஆம்னா யானாம் ஸிகண்டை ரவகதகரிமா கண்டிதா கண்ட லாரி
தண்டம் பாஷண்ட ஷண்டே ஷிபது ஸ தரஸா வாஜி துண்ட ப்ரகாண்ட –16–

இவன் பல திவ்ய அணிகலன்கள் அணிந்துள்ளான்
அந்த அணிகக மண்டலங்களில் இருந்து ஒளிவரும் ரத்தினங்கள் பல பல-
இவற்றின் கதிர்களினால் ஆயிரம் ஸூர்யர்களின் ஒளிகள் குன்றிப் போகின்றன-
சந்திரனைப் போன்ற குளிர்ச்சி கவர்ச்சி வெண்மை -இவைகளால் நிறைந்த வெண் தாமரைப் பூவில் அவன் வீற்று இருக்கிறான் –
அவனுடைய பெருமைகளை உபநிஷத்துக்கள் மூலமே உணர முடிகிறது –
அஸூர சக்திகளை நிரஸித்து அருள்பவன் –
பாஷண்ட சமூகங்களை நிரஸித்து உலகை ரக்ஷித்து அருள்பவன்

மணே –மண் ஏ என்று பிரித்து இதில் மண் தொடங்கி அடுத்த ஸ்லோகம் என்பதில் தொடங்கும்

ணே-தொடங்கும் எழுத்து வடமொழியில் கிடையாது என்பதால் இப்படிப் பிரித்து அருளும்படி செய்வித்து அருளுகிறார்

————

ஏகோ அக்ரே லோக மாத்ரா ஸஹ மஹித விஹ்ருத் யுன்மனாஸ் தன்முதே யோ
நாபீ பத்மே விதாதுர் ஜனி மபி கலயன் யோ நயத்யாக மாம்ஸ்தம்
லோகாம் நாயைக மூலாக்ஷர ருசிர கலா மாத்ருகா ஸா யதீயா
ஸோ அஸாவிஷ்டம் ப்ரக்ருஷ்டம் கடயிது திதி ஐஸ் போடகோ கோடகோ ந –-17–

மது கைடபர்களை சிதைத்து ஓட வைத்தவன் -ஒப்பற்றவன்
ஆதியில் திருமகளும் தானுமாக இருந்து அவளது மகிழ்ச்சிக்காக ஸ்ருஷ்ட்டியை லீலையாகச் செய்து அருள எண்ணி
தன்னுடைய கொப்பூழில் ஒரு தாமரைப் பூவை எழுவித்தான்
அதில் இருந்து நான்முகனைப் படைத்தான்
அவனுக்கு வேதங்களை உபதேசித்து அருளினான்
உலக இலக்கியங்கள் வேதம் அனைத்துக்கும் முதல் படிவம் அவன் தான்
இவன் நமக்கு அனைத்து அபீஷ்டங்களையும் அருளிச் செய்து
அதற்கும் மேல் அவனுக்கு நித்ய கைங்கர்ய பரர்களாக ஆக்கி அருளட்டும் –

————

ப்ரண்யா யேநாத் வராணாம் மனு மய தனு மாதாய விஷ்வக் வி நிர்யத்
ஜ்வாலா மாலா ஜடாலான லஹுத ஹவிஷாம் ஸாரமா ஆஸ்வாத்ய சாரும்
கீர் வாணாந் வார வாணாந் நியமித கரணாம்ஸ் தூர்ண மாப் யாய்ய காம
கல்ப்யந்தே யாஜ மானா கலயது ஸ முதம் கோ அப்யனர்வாஸ் அந நேர்வா –18-

மந்த்ரங்களாலான வடிவு யுடையவன்
பல பக்கங்களிலும் ஜ்வாலைகள் ஆகிய பின்னல்கள் நிறைந்து கொழுந்து விட்டு எரியும் அக்னியில்
அம் மந்த்ரங்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் யாகங்களை அவனே செய்விக்கிறான்
அதில் சாரமான ஹவிர்பாகத்தை தேவர்கள் சுவைத்து மகிழச் செய்கிறான்
அவர்களுக்கு இவனே அந்தர்யாமி -அவர்கள் இவனுக்கு சட்டைகள் போன்றவர்
அவர்கள் பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் எல்லாமே இவனது நியமம் படியே
இப்படி அனைவருக்கும் நன்மைகளை அளித்து அருளும் இவன் நமக்கும் ஆனந்தம் அருளிச் செய்ய வேண்டும்

போக்தாராம் யஜ்ஞ தபஸாம் -கீதா ஸ்லோகம் அடிப்படியில் அமைந்த ஸ்லோகம்

-தொடங்கும் எழுத்து வடமொழியில் இல்லாததால்
இதில் ப்ரண் -அடுத்த ஸ்லோகம் -என்று தொடங்குகிறது

———–

அவ்யா தவ்யாஹ தார்த்தோ தியமுப ஜனயன் அவ்யயோ வ்யாஜ வாஜீ
பவ்யா பவ்யா க்ருதாத் யாக்ருதி மதனுத யோ நாம ரூபத்வயஸ்ய
யோ யந்தர் யந்தம் ச மந்தம் வ்யது சிது மதி ஸஜ் ஐந்து ஜாதஸ்ய யோ வா
கல்பாந்தே அல்பான்ய லோக க்ரஸனஸ முதி தாபீனதா நந்தி துந்த –19-

தடைபடாத ஞான பிரதானம் செய்து அருளுபவர்
உலகில் பெயர் வடிவம் இரண்டிலும் மங்களமும் அமங்களமும் -ஆகிய இரண்டு நிலைகளும் உண்டு
அவற்றை அமைத்தவனும் இவனே –
அனைவரும் கட்டுப்பாடுடன் இருக்கவும் தவறுகளை அகற்றவும் ஏற்றவகையில் நெறிகளை அருள் செய்தவனும் இவனே
கல்ப காலம் முடிவில் உலகங்களை விழுங்கி மகிழ்பவன் இவனே -இதனால் பெரு வயிற்றன் -நம்மை ரக்ஷித்து அருளட்டும் –

——–

ஒதன்வந் மேகலாந்தாத் பலி நிலய யுதாத்ஷ் மாத லாதா லோகாத்
நாலீ காவாஸ வாஸா தவஹி தமன ஸா அபீஷிதே ஸ்தாஸ்னு ஜாதே
யாத் ருங்னாலஷி கஸ்சித் ஸக்ருதபி நமதாம் ஸாத்வ ஸத்வ ம் சதஷ
பக்த அனுக்ரோச லஷ்மா ஷபயது மம ஹ்ருத் ஷோபமஷ்ணா வா வாஜீ –-20-

பக்தர்களுக்கு இரங்கி அருளும் தன்மையையே இயல்பாகக் கொண்டவன் –
பாதாளத்துடன் கூடிய பூ லோகத்தில் இருந்து பிரமன் உலகம் வரை எங்கு தேடிப் பார்த்தாலும்
இவனைப் போல் அடியார்களின் அச்சத்தைப் போக்கி அருளும் ஒருவன் காணக்கிடைக்காது
அவனது கடாக்ஷம் நமது மனக் கவலைகளையும் தீர்த்து அருள வேண்டும் –

—————–

கீதே தைதேய மோஹம் கலயிது மனஸோ யஸ்ய ஹேஷா நு ஷக்தே
ப்ரக்யாதோத் கீத பக்திம் ஸ்ரீரிதவதி ஜனிதே ரோதஸீரோதகே த்ராக்
தேவாஸ் ஸம் ப்ராந்த பாவா திதிஜகுல மலம் வ்யாகுலம் தூதகர்வா
கந்தர்வா மோஹ சேஷம் சம ஜனி ஜகதீ சேஷ மேஷோ அவதான் மாம் –21-

அரக்கர்களை மயக்க இவன் கனைப்பு உண்டு
அதன் ஒலியுடன் கூடியதே உத்கீதம் என்னும் சாமம் –
அதன் அவயவங்கள் -பக்தி -பல பகுதிகளைக் கொண்டவை
அவற்றில் இரு பகுதிகள் இணைந்து வாசனையையும் பூமியையும் ஆக்கிரமிக்கும் கானம்
உண்டாகும் போது தேவர்கள் பரவசம் அடைவார்கள்
அசுரர் கூட்டம் துயரத்தால் அலைக்கழிப்பு அடையும்
கந்தர்வர்களுடைய கர்வம் பறந்தோடும்
மிஞ்சியவர்கள் மோஹம் அடைவார்கள்
இத்தகைய ஹயக்ரீவப்பெருமாள் நம்மை ரக்ஷித்து அருளட்டும் –

———

தம் கிம் சப்தஸ்ய மூர்த்தி க்வசி துதித முபஸ்ருத்ய யத் தத் பதா திஷு
அப்யேதத் யோஜயித்வா கடுர டனபடு ஸ்வைர வாஸோ அபி ஐந்தோ
ஸத்யஸ் ஸித்த்யந்தி வாண்யோ நமதமஸி ரஸ் சத்ம யத் பாத பத்ம
த்யாநாத் த்ராஷா ஸத்ருஷா கலித குரு ஸிர கம்பனா பாது ஸோ அர்வா –22-

தம் என்பது கிம் என்பதுடன் இணைந்து -கிதம் -எப்படி என்னும் பொருள்
வாதங்களில் இந்தப் பதம் அடிக்கடி பயன்படுத்தப்படும்
இது காதில் பட்டு அது எப்படியோ இது அப்படி –யதம் ததம் –
என்று உருவாக்கி வாதம் செய்பவர்களும் உண்டு
யதா ததா என்று ஆர்வத்தையும் அறியாமல் யதம் ததம் என்பார்கள்
இப்படி இலக்கண வரம்பை கருவாக உடைப்பார்கள்
இத்தகைய அரை குறை அறிவாளிகள் கூட
இவனைத் த்யானம் செய்வார்களாகில் ப்ருஹஸ்பதி கூடாது தலையாட்டிக் பாராட்டும்படி
திராட்ச்சையிலும் இனிய சுவையுடன் பேசும் திறனைப் பெறுவார்கள்
இவனைப் பல தேவர்களும் பணிந்து வணங்குகிறார்கள்
அவர்கள் முடியே இவன் இருப்பிடம் ஆகிறது
அவன் அடியோங்களை ரக்ஷித்து அருளட்டும் –

———–

வக்தும் ஸூக்தம் ஸூ தாக்தம் ப்ரதீக தக வஸோ வீசி வேகம் ச ஹர்தும்
கர்தும் காவ்யம் ச பவ்யம் ஹிதமயீ புருஷார்த்தம் ச தத்வம் ச வேத்தும்
வாஞ்சா சேன்மான சாஞ்ச ஸ்படிக மணி மயஷ் மாதார பாதரீ க்ருத்
ரோசிர் வீசி பிராராத கீலமபி ஜகாத் ப்லா வயந்தம் ஹயம் தம்–23-

மனமே உனக்கு அமுத்தினாள் நனைந்த ஸூக்தங்களைச் சொல்ல விருப்பமா
எதிரிகளின் வாத வேகத்தை எதிர்த்து வாதிட விருப்பமா
மங்களகரமான காப்பியங்களை இயற்றிட ஆசையா
தத்வ ஹித புருஷார்த்த யாதாத்ம்ய ஞானம் பெற ஆசையா
ஸ்படிக்கக் கல்லிலான மலையை வென்றிடும் வெண்மையான திருமேனியின் தேஜஸ்ஸு அலைகளினால்
சுற்றி உள்ள அனைத்தையும் வெண்மையாக்கும் வெள்ளைப் பறிமுகனைச் சரண் அடைய வேண்டும் –

——–

புஷ்ணன் ஹர்ஷம் ஸூராணாம் ஜனி மய மயதி ஸ்மேதிநோ வக்துமீஸே
ப்ராகே வாஸீத் பிரமத்தாஸூர க்ருஹ நிகரே யத் ஸூ ராணாம் ப்ரஹர்ஷ
ஸ்ருதியாவிர் பூதி ஹேது ஸ்ரவண சமுத யானந்த ரேஸ்மின் து யுக்த
தஸ்மா தஸ்மாத னன்யான் த்ருவமவிது மஸாவி விராஸ அஸ்வ பாஸா –24-

மது கைடபர் வேதங்களைக் கவர்ந்து செல்ல
ஹயக்ரீவர் அவற்றை மீட்க திரு அவதரித்தார் என்னும் செய்தி அசுரர் கூட்டங்களுக்கு எட்டியது
இவர் அவற்றை மீட்டு தேவர்களை மகிழ்ச் செய்ய வல்லரோ என்ற சங்கை அவர்களுக்கு வந்தது
இவரால் மீட்க முடியாது என்று இறுமாந்து இருந்தனர்
ஆனால் ஸ்ரவணத்தில் அவதரித்து வேதங்களை மீட்டு தேவர்களை மகிழச் செய்தார்
ஸ்ரவணம் -காதால் கேட்பது என்ற பொருளும் உண்டே
ஸ்ருதி -எழுதா மறை -ஒருவர் ஓத கேட்டு அறியுமது
ஸ்ருதியை மீட்டும் பணியை ஸ்ரவணத்தில் அவதாரம் செய்த இவன் மிக்கப் பொருத்தமாய் இருந்ததே
அநந்ய கதிகளான அடியோங்களை ரக்ஷித்து அருளவே இப்படி குதிரை ஒளியுடன் ஆவிர்பவித்தான் –
அஸ்வ பாஸா -உடனடி தேஜஸ்ஸு என்றும் குதிரை தேஜஸ்ஸு என்றும் பொருள்கள் உண்டே

பு -24 எழுத்தாய் இருக்க -இங்கு புஷ் -என்று தொடங்கி-அடுத்த ஸ்லோகம் -ஏ -தொடங்கி –புஷே -ஆகும்
-எழுத்தில் தொடங்குவது அரிது என்பதால் -இங்கு புஷ் 

———

ஏஷ ஸ்வேதோ அபி ராஜத் ரஜத கிரி வராகாரா திக்கார காரீ
வித்யுத் வித்யோதிபா ஸோத்ய தருண கிரணோன் நித்ர பத்மம் வஹந்த்யா
காவிந்தீ மந்திரேன் தீவர ருசி ருசிரா பாங்க தாராபி ராதாத்
சிஞ்சந் த்யாங்கானி தேவ்யா சதத க்ருத பரிஷ்வங்கதோ அவ்யாத் துரங்க -25-

இவன் வெள்ளி மலையின் வெண்மையையும் ஒளி மங்கத் செய்யும் தேஜஸ்ஸு கொண்டவன்
இவன் திரு மடியில் ஸ்ரீ மஹாலஷ்மீ பிராட்டி அமர்ந்து இருக்கிறாள்
அவள் மின்னலை வென்றிடும் பொன்னிறத்தனள்
அவள் தனது திருக்கையிலே அருணோதய வேளையில் மலர்ந்த செந்தாமரையை வைத்து இருப்பள்
அவளது விழிகள் மை இடாமலேயே இயற்கையாக கறுத்தவை –
அவள் மைய கண்ணாள் -அவள் கரும் தடம் கண்ணி அன்றோ –
பண்பாட்டுக்காக மையும் இட்டுக் கொண்டாள் -மைத்தடம் கண்ணி யாகி விட்டாள்
இவளது கரு விழிகளின் கடாக்ஷம் கருத்த யமுனையில் மலர்ந்த கரு நெய்தல் மலர்கள் போல் ஆயின
இவள் பார்வைகளால் ஹயக்ரீவப்பெருமானை நீராட்டுகிறாள்
மேலும் இடையறாது அணைத்துக் கொண்டும் இருக்கிறாள்
எனவே வெள்ளி மலையை வெல்லும் வெண்மையில் சில மஞ்சள் கோடுகளும் சில கரு நீலக் கோடுகளும் படிந்து இருந்தன
இத்தகைய பரிமுகப்பெருமாள் நம்மை ரக்ஷித்து அருளட்டும் –

——-

மஞ்ஜீரம் மஞ்ஜூலம் தே ஹய முக மம ஸஞ்சீவனா யாஸ்து சிஞ்ஜா
வ்யாஜேநாம் னாய வாஸாமநி தர பரதாம் வ்யஞ்ஜ யத்த்வத் பதோர்யத்
லக்னம் தத் தாரணாஸூ த்வி குண முனி ஜன ஸ்தோம ஹ்ருத் பத்ம நித்யோல்
வாஸாதி தாத்மத் வயமிவ ஸவிதே ஜாக்ரதர் கஸ்ய பிம்பம் —26-

இவருடைய இனிய சதங்கைகள் எனக்கு உயிர்ப்பளிப்பவையாக இருக்க வேண்டும்
அவை கல கல இனிய ஒலியினை எழுப்புகின்றன அல்லவா
இவை உனது திருவடிகளில் ஒட்டிக் கொண்டு அன்றோ இவ்வாறு சப்திக்கின்றன –
இவை வெறும் சதங்கை ஒலிகள் அல்ல
கல கல ஒலியால் -வியாஜ்யமாக -வேதங்களே பேசுகின்றன என்னும் கருத்தையே மொழிகின்றன –
உனது திருவடிகளைத் த்யானம் செய்யும் முனிவர்கள் ஸமூஹங்களின்
ஹ்ருதயத் தாமரைகளை நாள் தோறும் இரு மடங்காக மலர்த்திட வேண்டும் என்று ஆவல் கொள்வார்களுக்கு
இரு வடிவங்கள் ஏற்றுக்கொண்டு திருவடிகளின் மேல் ஸூர்யன் பிம்பம் படிந்தது போல் சதங்கைகள் விளங்குகின்றன –

———-

ஹாரித்ரம் கின்னு ஸூத்ரம் கருதிததி ஸூததி கண்ட பூஷார்த்த க்லுப்தம்
ஹ்ரோதஸ் சாரஸ்வதம் வாங்மய ஜனன கிரேர் நிஸ் ஸ்ருதம் வேதி சங்க்யம்
வக்த்ரே வாஹஸ்ய வாம ப்ரஸ்ருதி தலல சத்தைம ஸத் புஸ்த காந்த
தீவ்யத் ஸூத்ரம் பவித்ரம் மம கலயது ஸம் பானு பானோஸ் ஸ கோத்ரம்--27-

இடது கீழ்க் கை விரல்கள் நீட்டப்பட்ட நிலையில் உள்ளன
கைத்தலத்தில் பொன் போன்ற புஸ்தகம் உள்ளது –
அதில் சுவடிகளில் கோர்க்கும் கயிறு உள்ளது
மஞ்சள் வெயிலின் பொன் கிரணங்களை போல் -அதன் உடன் பிறப்பு போல் இருக்குமே அந்தப்பொன் கயிறு
வேதக்கூட்டங்களே ஒரு மங்கையாகவும் -அவள் கழுத்தில் கட்டுவதற்கு ஏற்ற அணியான
மஞ்சள் படுத்தின திரு மாங்கல்யக் கயிறு தான் இந்தப் பொற் கயிறோ ஏற்று ஐயம் படும்படி இருக்குமே
அன்றிக்கே
சரஸ்வதியின் வெள்ளமே மொழிகள் உண்டாகும் மலையில் இருந்து தோன்றி நூல் பிடித்தால் போல் ஓடுகின்றதோ என்று ஐயம் வரும்படியும் இருக்குமே
அத்தகைய சுவடிக் கயிறு அடியோங்களுக்கு நலன்களை அளித்து அருள வேண்டும்

———–

ஸ்வ ப்ரேஷ்வப்ரே அபி யாதாத் திதி தனு ஜனுஷோ ப்ராமயித்வா விபந்தன்
ஸீர்ணாங்காத் கீர்ண கேஸான் ப்ருஸமதிர பஸம் பாதயன் நிர்ஜராணாம்
ஸ்வா ராஜ்யம் ப்ராஜ்ய யந்யோ மிஹிர இவ ஹிமஜ் யாதாரா துஜ் ஜிஹான்
பாபாத் யஸ் வாஸ்ய வாமே தரகர வித்ருதஸ் சாகராஜஸ் ஸ தோ அவ்யாத்–28-

இவனுடைய வலது திருக்கரங்களில் உள்ள சக்ரராஜன் அசுரர்களை வானத்தில் உள்ள பள்ளங்களில் அலைக்கழித்து அவர்களை நிரஸிக்கிறார்
அவர்கள் கை கால் முதலிய அவயவங்கள் சிதைந்திட மிகுந்த விரைவில் வீழ்த்தப்படுகின்றனர்
பனிமலையில் இருந்து புறப்படும் கதிரவன் போலே அவ்வெள்ளைப் பரிமுகன் தோளில் இருந்து சக்ரராஜன் புறப்படுகிறான்
அசுரர்களை வீழ்த்தி தேவலோகத்தை பரப்பி தேவர்களுக்கு அளித்து மகிழ்கிறான்
அத்தாலேயே மிகுந்த தேஜஸ்ஸூ டன் திகழ்கிறான்
அத்தகைய சக்ரராஜன் அடியோங்களைக் காத்து அருள வேண்டும்

—————-

சிஷ்யாணாம் சித்த பூமவ் ப்ரசுர தர தம கண்ட கானி வ்யபோஹ்ய
ஆஸிஸ் யாத்யர்தம் கடாஷாம் ருதர ஸவிஸ ரைஸ் ஸாஸ்த்ர பீஜானி வப்தும்
நிர் நித்ரோ ஞான முத்ரா ருசிர கர தலே தஷிணே யோ அஷ மாலாம்
பிப்ரத் பாத்யஸ் வவக்த்ரே ஸ ஹரது நிதரா மம்ஹஸாம் ஸம் ஹதிம் மே–29-

வலது கீழ்க்கரம் ஞான முத்திரையுடன் இருந்து அழகுடன் திகழ்கிறது
அந்த ஞான முத்திரை யுடன் கூடிய கையில் அக்ஷ மாலையும் உள்ளது
ஜெப மணிக் கொட்டைகளாலான மாலை அன்றோ அந்த மாலை –
ஞான முத்திரையில் ஆள் காட்டும் விரலும் கட்டை விரலும் இணைந்து இலங்குகின்றன –
ஆக இந்த பீஜங்களால் -கொட்டைகளால் -விதைகளாலான -மாலை இரு விரல்களால் தாங்கப் பட்டுத் தொங்குகிறது –
இந்த ஹயக்ரீவப் பெருமாள் ஏதோ ஒரு விதையை விதைப்பது போல் உள்ளது –
ஆம் -சீடர்களின் நெஞ்சில் படர்ந்த அறியாமை என்னும் முட் புதர்களாகிய இருளை அகற்றி
அந்த நிலத்தைப் பண் படுத்துகிறான் பரிமுகனாம் இந்தப் பக்தி உழவன்
பிறகு வர்ணனைக்கு அப்பால் பட்ட தனது கடாக்ஷம் என்னும் அமுத நீரைப்பாய்ச்சி
ஸாஸ்த்ர ஞானப்பயிர் செழிப்பாக வளர்ந்திடும் என்று அங்கே அவர்கட்க்கு விதையை விதைக்க விளைகிறான்
விதை எடுக்க விதை மாலையை வலது கரத்தில் வைத்துள்ளான்
இரு விரல்களால் மண்ணில் புதைப்பதற்கு ஏற்ற நிலையில் விதையை எடுத்துக் கொண்டு இருக்கும்
ஹயக்ரீவன் என்னும் இந்தப் பக்தி உழவன் சோம்பாது திகழ்கிறான்
அவன் அடியோங்களின் பாபக் கூட்டங்களை அபஹரித்து அருள வேண்டும் –

——–

ரம்யம் ஸ்யாத் பிம்ப விந்தோ சர துதி தரு சேரம்பான் நிர்யதேதத்
கிம் வா டிண்டீர கண்டம் கலச ஜல நிதே கிம் வா து புண்டரீகம்
வாக் ப்ரம்மோத்தா மலீலா க்ருஹமிதி விபுதை ரூஹ்யை மானோ ஹ்யாஸ்யே
நோ பாத்த ஸவ்ய ஹஸ்தே மம பவது ஸூபா லம்பனம் கம்புராஜ--30-

பரி முகப் பெருமான் இடது மேற் கரத்தில் சங்க ராஜன் விளங்குகிறான் –
சரத்கால மேகம் போல் வெளுத்து இருக்கிறான்
சரத்கால வெண் மேகக்குவியலின் பின்னணியில் உதித்த சந்திரனோ இவன் என்று என்னும்படி இருந்தது –
வெள்ளையான பாற்கடலின் நுரை திரண்டு இப்படித் தோன்றுகிறதோ என்னலாம் படி இருக்கிறான் –
கலைமகள் ப்ரம்மா இரண்டும் குடியிருந்து நன்கு லீலை செய்ய அழகியதோர்
வெள்ளைத் தாமரைப்பூவோ என்னலாம் படியாய் இருக்கிறான்
இப்படிப்பலவிதமாகப் புலவர்கள் ஊகிக்கலாம் படியாய் உள்ள இந்தப் பாஞ்ச ஜன்யம் எனக்கு
ஹயமுகனின் வடிவைத் த்யானம் பண்ணப் பிடித்துக் கொள்ளும் துணையாக
நல்லதோர் பிடியாக இருந்து அருள வேண்டும் –

———-

ஸேவ்யா ஸர்வாதி ஸர்வத்ரி தச பரிஷதா ஸஸ்வதா ஸாஸ்வினீ ஸ்ரீ
அஸ்மாகம் யா ஸ பத்னீ லஸதி பத ஸிரோ அஸ்யதி ரூடேதி ஸேர்ஷ்யம்
ஜேதும் தாம் ஸந்ததோ தித் வர வர மஹஸா பாதி நக்ஷத்ர மாலா
தேவஸ் கந்தே ஸ்தி தேயம் ஸததமபி சாமாராத யந்தீவ ஸா அவ்யாத்–31-

வேதத்தில் நக்ஷத்திரங்கள் கிருத்திகை முதல் நக்ஷத்ரமாகப் படிக்கப் படுகிறது
அஸ்வினி -இருபத்தாறாம் நக்ஷத்ரம்
பரணி இருபத்தேழாம் நக்ஷத்ரம்
ஆனால் உலக வழக்கில் அஸ்வினி முதலாகவும் பரணி இரண்டாகவும் கார்த்திகை மூன்றாகவும் படிக்கப்படுகிறது
எப்படி அஸ்வினி முதல் இடம் பெற்றது
அது ஹயக்ரீவப் பெருமானை வழி பட்டது போலும்
அவன் அருளுடன் தனது தலையில் தூக்கி வைத்துக் கொண்டான் போலும் –

அவன் தலையில் அஸ்வினி ஸ்ரீ உள்ளது -அதாவது குதிரையின் அழகு எல்லாம் நிறைந்த அந்தப் பெரும் ஸ்ரீ -திரு –
அவன் திரு முகத்தில் உள்ளதே =ஆம் அஸ்வினீ ஸ்ரீ
குதிரைத் திருவைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டான் ஆயிற்றே
இதனால் சிவன் முதலிய தேவர் ஸமூஹம் பணிந்து இவனை வணங்குகிறது
எனவே அஸ்வினி முதல் இடம் பெற்றது போலும்

இத்தைப் பார்த்த மற்ற நக்ஷத்திரங்கள் -நம்மில் ஒன்றான இது நம்மை எல்லாம் விஞ்சி விட்டதே என்று வியந்தன
ஹயக்ரீவப் பெருமாளுக்கு அவன் உகக்கும் படி கைங்கர்யம் செய்தால் நமக்கும் இத்தகைய
பேறு ஸித்திக்கும் என்று உணர்ந்து அவன் விருப்பப்படி இயங்குகின்றன
இப்படி நக்ஷத்திரங்கள் மாலையாக அவனைப் போற்றுகின்றன
ஹயக்ரீவப் பெருமாளுடைய இந்த மாலை நம்மை ரக்ஷித்து அருள வேண்டும்

———-

நந்துஸ் ஸந்த்ரா ஸஹாரீ தததபி ஹரிதாம் சச்வதாத் மன்ய நூநாம்
யஸ்தாம் மூர்த்ன்யேவ நித்யம் ப்ரகடயதி ஹரே புருஷஸ் யாபி ஸத்யம்
ஸ்ரவ்தீம் முக்யே தரத்வாவ கதிமபி விசிஷ்டாத்வி தீயத்வ த்ருஷ்டிம்
ஸ்பஷ்டீ கர்த்தும் ஜகத்யாம் ஸ்புடயதுஸ ஜடித்யஸ்ம திஷ்டம் விஸிஷ்டம்–32-

ஹயக்ரீவன் ஹரி நாராயணனே அன்றோ
அடி பணிந்தவர்களின் அம்சங்களை எல்லாம் அபஹரிக்கிறான்
இப்படி ஹரித்தன்மை கொண்டு இருந்தாலும் குதிரை முகத்தை ஏறிட்டுக் கொள்கிறான்
மனித உடலைத் தலைக்கு கீழ் கொண்டுள்ளான்
குதிரைக்கும் ஹரி என்ற பெயர் உண்டே
ஆக இவன் தலையில் ஹரித்தன்மை உள்ளது
திருமேனியில் மனிதத்தன்மை உள்ளது
இதன் மூலம் -நமக்கு தலை வஹிக்கும் பரமாத்மா ஒருவன் உள்ளான்
அவன் ஒருவனே -தலையானவன் –
அதன் கீழ் ஜீவாத்மாக்களும் சேஷ பூதர்களாக உள்ளார்கள் என்று உணர்த்தி அருள்கிறான்
ஸத் ஏகம் ஏவ அத்விதீயம்
விஸிஷ்ட அத்வைதம்
தெளிவாக உணர்த்திய புற மத வாதங்களை தனது உருவத்தாலேயே நிரஸித்து அருள்கிறான்

————–

மஸ்தே அர்வன் விஸ்தரை கிம் விஹர மம மநோ மந்துராயா மமந்தம்
கல்பந்தே அநு ப்லவாஸ்தே மம சததமிமே ஹீந்த்ரியாஸ்வா தஸா அபி
கிம் சாத்ரா நல்ப கல்பா வஸரவி சர துச்சாவ சாகர மூர்த்தி
ஸ்பூர்த்திஸ் பீதோரு கர்ம ப்ர குணத் குண கணஸ் ச வர்ணாய ப்ரணீத--33-

பரிமுகப்பெருமாளே இனி மேல் என்ன சொல்ல இருக்கிறது
எனது மனம் என்னும் லாயத்திலே நித்ய வாஸம் செய்து அருள்வாயாக
இங்கே உனக்குத் துணையாக உன்னையே தொடர்ந்து இருக்க விரும்பும் மனத்தின்
தொண்டர்களாக பத்து குதிரைகள் உள்ளன –ஞான கர்ம இந்திரியங்கள்
இவைகள் உன்னையே தொடர இருக்கும் பாஸிடி நீயே அருள் புரிய வேண்டும்
இங்கு உனக்கு புல்லும் நிறைய உண்டு -பாலக்கோடு கல்பமாக வலிமையுடன் புஷ்டியாக செழுமையுடன்
உள்ள உயர் ரகப் புல்லான எனது கர்மாக்கள் இங்கே மண்டி உள்ளன
அவைகளே நீ மேய்த்து ஒழித்திட்டு அருள வேண்டும்

————

வஸ்தூரீ கர்து மர்சா விதிஷு சமுசிதம் நான்ய தஸ்யேதி ஜாநந்
கஸ்தூரீ ரெங்க நாதஸ் ஸ்தவம் இமம் உபதாமாதி மாஸ் வஸ்ய தத்தே
யஸ் தூனோ யோ அதிரிக்தஸ் சகலமபி ச தம் ஹ்ருத்யந்தர் தமஸ்மின்
ஸ்வ ஸ்தூலீ கார தீராம் விதரது படதாம் வாகாதீச ஸ புத்திம் –34-

ஆதியாம் ஹயக்ரீவப்பெருமாளுக்கு பூசனை செய்யப் பயன்படுத்திய இந்தச் சொல் மாலையைத் தவிர
வேறே எந்தப் பொருளும் கிஞ்சித்தும் தன்னிடம் இல்லை என்று தேறி கஸ்தூரி ரெங்காச்சார்யார் ஸ்வாமிகள் இதனைக் காணிக்கை யாக்கினார்
இதில் குறையோ நீரையோ இருக்கலாம்
அவற்றைக் கணிசியாதே அனைத்தையும் தனது திரு உள்ளத்துக்கு உகப்பாகவே ஏற்று அருளுவான்
இதனைப் படிப்பவர்களுக்கு இஹ பர லோக ஐஸ்வர்யங்கள் பெரும் ஞான பிரகாசம் அருள்வான்
ஒழிவில் காலம் எல்லாம் வழு விலா அடிமை கொண்டு அருள்வான் என்று பலம் சொல்லி இந்த ஸ்துதி நிகமனம்

———

வாஜி மஸ்தக ஸ்ரீ மனூத் த்ருத ஸ்வாதி மாரக்ஷ ஸ்லோக மாலிகாம்
தர்க்க தீர்த்த ஜாம் கும்பஜ ப்ரியாம் ஸாஸ்த்ர ஸாஹி தீ வல்லபோ அகரோத்

ஸ்ரீ தர்க்க தீர்க்க ஸ்வாமி அருளிச் செய்த இந்த மாலையை
அகஸ்தியருக்கு அன்புக்கு உரித்தான தமிழில்
ஸாஸ்த்ர சாஹீத வல்லபன் என்ற விருதுடைய கருணாகர தாஸன் அருளினான்

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கஸ்தூரி ரெங்காச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ லஷ்மீ ஸமேத ஸ்ரீ ஹய வதன  பர ப்ரஹ்மம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கமலாலயோ பல கருட சதகம் -ஸ்ரீ ஷேம காரி சதகம் –ஸ்ரீ நிதி ஸ்வாமிகள் —

August 9, 2023

ஸ்ரீ நிதி ஸ்வாமிகள் கார்த்திகையில் கார்த்திகையில் திருவவதரித்து அருளிச் செய்த
ஸ்ரீ நாச்சியார் கோயில் ஸ்ரீ கல் கருடன் மேல் 102 ஸ்லோகங்கள் கொண்ட   பிரபந்தம் இது

விஹாரம் என்ற பகுதிகளாகப் பிரித்து அருளிச் செய்துள்ளார்-விஹாரம் ஸஞ்சாரம் என்றவாறு –

கவிதா ஜித கல்லோலி கன்யகா காந்த வக்ஷஸே
கருணாதி குணடாட்யாய கமலா நிதயே நம-

பாற் கடல் கொதிக்கின்றது என்று அத்தை விட்டு திருமார்பில் அமர்ந்து
அகலகில்லேன் இறையும் என்று நித்ய வாஸம் செய்பவள்

தம்முடைய கவிதையினால் அலை மகளை மார்பில் கொண்டுள்ள எம்பெருமானை வென்றவர் என்றபடி

அவனைத் தனது கவிதைகளால் வசப்படுத்தியவர்
கருணாதி குண் டாட் யாய –கருணை முதலிய குணங்கள் நிறைந்தவர்
கமலா நிதயே நம-இவர் திரு நாமம் ஸ்ரீ நிதி -அவருக்கு பிரணாமங்கள் என்றவாறு

வைராக்ய -விஜித -ஸ்வாந்தை ப்ரபத்தி விஜி தேஸ்வரை
அநு க்ரோஸ ஏக விஜிதை இத் உபாதேஸி தேசிகை –வைராக்யம் மூலம் மனதை வெற்றி கொண்ட ஆச்சார்யர்கள்

ஆனு மானித அதிகரணத்தில் யமன் நசிகேதஸத்துக்கும் உபதேசம்
தஸ்ய ச வசீகரணம் தச் ஸரணாகதி ரேவ -சரணாகதி மூலம் அவனையும் நம் வசப்படுத்தலாம் என்கிறார்

ப்ரபத்தி விஜி தேஸ்வரை-இப்படி பிரபத்தி செய்து வெற்றி கொண்டவர்கள் நம் ஆச்சார்யர்கள்

அநு க்ரோஸ ஏக விஜிதை-
புகழ் புண்ணியம் பொருளுக்கும் வசப்படாத ஆச்சார்யர்கள் இரக்கத்தின் வசப்பட்டு உபதேசிக்கிறார்கள்

——-

ஸூபர்ணன்
தார்ஷ்யன்
வைநதேயன்
வாயு வாஹனன்
நாகாந்தகன்
ஸூதா ஹரன் –
ஸூதா கரன்
ககேஸ்வரன்
ககநேஸ்வரன்
பக்ஷி ராஜன்
ஷேம காரீ -போன்ற திரு நாமங்கள் பெரிய திருவடிக்கு உண்டே

———–

முதல் விஹாரம் -மஹா ப்ராஸ விஹாரம் –12 ஸ்லோகங்கள்
ஒவ்வொரு அடியிலும் முகப்பில் உள்ள தொடர்கள் ஒரே மாதிரியாக இருக்கும்

ஸ்ரீ லஷ்மீ ஸதநே ஸ்திதம் கலயதே ஸ்ரீ பக்ஷி ராஷாய தே
ஸ்ரீ லஷ்மீ பகவத் விவாஹ விதயே ஹேதுத்வ மாதஸ் துஷே
ஸ்ரீ லஷ்மீ பகவத் ஸூவாஹ மணயே வேதவ்க பூர்ணாத்மநே
ஸ்ரீ லஷ்மீ ஸதநாதி வாஞ்சித வராந் ஸத்யஸ் ப்ரதாத்ரே நம -1-

ஸ்ரீ நாச்சியார் கோயிலில் எழுந்து அருளி இருப்பவரும்
ஸ்ரீ நாச்சியாருக்கு ஸ்ரீ நம்பிக்கும் திருக் கல்யாணம் நடக்கக் காரணமானவரும்
இருவருக்கும் வாஹனமாக விளங்குபவசரும்
வேதமே வடிவு எடுத்தவரும்
செல்வம் வேத ஞானம் இல்லம் போன்ற அனைத்து அபீஷ்டங்களையும் அருளும் ஸ்ரீ கருட பகவானுக்கு வணக்கம் –

———-

இரண்டாம் விஹாரம் —ப்ராஸ விஹாரம்
இதில்  15 ஸ்லோகங்கள் உள்ளன
ஒவ்வொரு ஸ்லோகத்திலும் எதுகை அணி அமைந்துள்ளது
இதில் முதல் ஸ்லோகம்
ரஷஸஸ் தநு பவேந பாதிதம் ரக்ஷதஸ்தவ ததா ரகூத் வஹம்
பக்ஷ பாத விபவோ அஸ்து தாதருசஸ் ஸ ஷணாய பதகேந்த்ர மே ஸதா –இரண்டாம் எழுத்து

கருட பகவானே ராக்ஷசனான ராவணன் மகனால் வீழ்த்தப்பட்ட ராமனைக் காத்த இறக்கைகள்
உடைய கருட பகவானே அந்த வீச்சு எனக்கு எப்பொழுதும் விழாக் காலமாகவே இருக்கும்படி அருள்வதாகுக

——-

மூன்றாம் விஹாரம் –அநு ப்ராஸ விஹாரம்
இதில் 26 ஸ்லோகங்கள் -மோனை நயம் -ஒவ்வொரு அடியிலும் முதல் எழுத்து ஒன்றாகவே இருக்கும்
இதில் முதல் ஸ்லோகம்

பரஸ்ய பும்ஸ ப்ரணய ஏக பாத்ரம் பயோதிஜா பத்தன க்லுப்த வாஸ
பதோ தர ப்ராண கணாப ஹாரீ பதங்க ராஜ பரிதஸ் ஸ பாது

பரமபுருஷனின் அன்புக்குப் பாத்ரமானவரும்
திருமகளின் திரு நகரான நாச்சியார் கோயிலிலே வஸிப்பவரும்
வயிற்றையே காலாக யுடைய பாம்புகளின் உயிரை அபஹரிப்பவருமான
பக்ஷி ராஜன் அடியோங்களை எல்லாப் புறங்களிலும் இருந்து கொண்டு ரக்ஷித்து அருள வேண்டும் –

————-

நான்காம் விஹாரம் –சமத்கார விஹாரம்
இதில் 34 ஸ்லோகங்கள் -பலவிதப் பொருள் அணிகள் கொண்டது –
இதில் முதல் ஸ்லோகம்

சஷுஸ் ஸ்ருதிநாம் சரமாம் தஸாம் யந் நாஸா நிஜாக்ரேண ஸ்ருஜத்ய ஜஸ்ரம்
ஸ வைநதேயஸ் ஸ்ருதி ப்ருந்த ரூப ஸ்ருதீ ருதைஸ் ஸ்வை பரித புனாது

கருட பகவான் கண்ணையே காதாக யுடைய பாம்புகளுக்கு தனது மூக்கினாலேயே இறுதி நிலையைத் தருகிறார்
அவர் வேதமே வடிவெடுத்தவர்
நமது காதுகளை அவர்   தனது ஒலிகளால் புனிதமாக்க வேண்டும்
இந்த ஸ்லோகத்தில் கண் காது மூக்கு பற்றிய குறிப்புக்கள் உள்ளன

————-

இதில் 27 ஸ்லோகம் உரையாடல் வடிவில் அமைந்துள்ளது -எல்லே இளங்கிளி போல்

ஸ்வாமின் வஞ்சுள வல்லி -கேந பவதா நாவிஷ் க்ருதா பாஹவ
ஸத் வாரோ அத்ர புஜ த்வயம் புனரிதம் சங்காய சக்ராய ச
காந்தே பக்த தமோ மம ப்ரிய ஸூஹ்ருத் மத் வாஹநேந்த்ரோ வரோ
பாஹு த்வந்த்வ யுதோ மமாபி ததலம் –ஸ்வாமின் நமஸ்தே நம

வஞ்சுள வல்லி -பகவானே
ஸ்ரீ நிவாஸன் -வஞ்சுள வல்லி
வஞ்சுள வல்லி –நான்கு கரங்களையும் காட்டாமல் சங்கு சக்கரங்களோடு இரண்டு திருக்கைகளுடன் மட்டும் நீர் எழுந்து அருளி இருப்பது எதனால்
ஸ்ரீ நிவாஸன் -எனது சிறந்து பக்தனும் நண்பனுமான கருடன் இரண்டு திருக்கைகளோடே தானே இருக்கிறான்
எனவே நானும் அவனைப் போலவே இரண்டு கைகளோடு இருக்கிறேன்
வஞ்சுள வல்லி –எம்பெருமானே அடியார்களுக்கு ஏற்றபடி தன்னை அமைத்துக் கொள்ளும் தன்மை யுடைய உனக்கு நமஸ்காரங்கள்

நிறம் வெளிது செய்து பசிது கரிது-யுகம் தோறும் அவரவர் விரும்பியபடியே தன்னை அமைத்துக் கொள்ளுமவன்

—————

ஐந்தாம் விஹாரம் – பிரார்த்தனா விஹாரம்
இதில் 15 ஸ்லோகங்கள் -இதில் 11 வது ஸ்லோகம்

ஸ்வாமின் பஷீஸ் வராஸ்மின் குருமயி கருணா மீஷேதே தன்ம மாலம்
யேந ஸ்யுஸ்தே புஜங்க ப்ரமுக விஷ தரா கோசார நாஷி மார்கே
ஷேமோ பூய குடும்பே ஸ்வய மதி மஹிதோ வர்தமானோ மம ஸ்யாத்
ஸ்ரீ மன் நாராயணோ அபி ஸ்வய மதி குதுகீ ஸ்வைர் மமாத்கே ஸதா ஸ்யாத்

ஸ்வாமியே -பறவைகளின் தலைவனே -பாம்புகள் போன்ற விஷ ஜந்துக்களும் தீயவர்களும் அடியேனுடைய பார்வையில் படாமலும்
அடியேனுடைய குடும்பத்தில் நன்மையும் செல்வமும் சிறப்பும் செழிப்பும் ஏற்பட்டு
ஸ்ரீ மன் நாராயணன் அவனுடைய ஸமஸ்த பரிவாரங்களோடு வந்து எப்போதும்
அடியோங்களுக்குத் துணையாகும்படி நீ கருணை கூர்ந்து அநுக்ரஹிக்க வேண்டும் இதுவே போதும்

இதில் 15 வது ஸ்லோகத்தில் கருடனிடம் சரணாகதி செய்கிறார்

ஸரோஜ வாஸா ஸதநே வஸந்தம்
ஸரோஷா மாச்சின்ன ஸரீ ஸ்ரு பவ்கம்
ஸரோக மேதம் ஸூகி நம் விதாதும்
ஸரோ மஹர்ஷ சரணம் ப்ரபத்யே

நாச்சியார் கோயிலில் வசிப்பவரும்-சினத்துடன் பாம்புகளை துவம்சம் செய்பவருமான கருடன்
வியாதியுடன் கூடிய அடியோங்கள் நலம் பெறும்படி அருள் புரிய வேண்டும்
என்று பிரார்த்தித்து மயிர்க்கூச்சு எரிய அவரிடம் சரணாகதி செய்கிறேன்
ஸ்வாமி சரணாகதி செய்தவுடன் ஆம் என்று கருடன் கூறி அருளியதால் விளைவாக மயிர்க்கூச்சு எரிகிறார்

இதன் பல ஸ்ருதி ஸ்லோகம்

ஸ்ரீ நிவாஸ கவி தல்ல ஜக் லுப்தம்
ஸ்ரீ நிவாஸ வஸதே பதகேந்தோ
ஸ்ரீ நிவாஸ சதகம் படிதம் சேத்
ஸ்ரீ நிவாஸ சதகம் ப்ரததாதி

ஸ்ரீ நிதி கவி எழுதிய நாச்சியார் கோயில் கல் கருடன் பற்றிய இந்தச் செல்வம் நிறைந்த ஸ்துதியைப் படிப்பவர்கள்
செல்வம் நிறைந்த நூற்றுக் கணக்கான வீடு செல்வம் எல்லாம் பெற்று இன்புற்று வாழ்வார்கள்

———–

முதல் விஹாரம் -மஹாப்ராஸ விஹாரம் –12 ஸ்லோகங்கள்
ஒவ்வொரு அடியிலும் முகப்பில் உள்ள தொடர்கள் ஒரே மாதிரியாக இருக்கும்

ஸ்ரீ லஷ்மீ ஸதநே ஸ்திதம் கலயதே ஸ்ரீ பக்ஷி ராஷாய தே
ஸ்ரீ லஷ்மீ பகவத் விவாஹ விதயே ஹேதுத்வ மாதஸ் துஷே
ஸ்ரீ லஷ்மீ பகவத் ஸூவாஹ மணயே வேதவ்க பூர்ணாத்மநே
ஸ்ரீ லஷ்மீ ஸதநாதி வாஞ்சித வராந் ஸத்யஸ் ப்ரதாத்ரே நம -1-

மேதாவி மஹரிஷியின் மகளாக அவதரித்த ஸ்ரீ நாச்சியார் கோயிலில் எழுந்து அருளி இருப்பவரும்
ஸ்ரீ நாச்சியாருக்கு ஸ்ரீ நம்பிக்கும் திருக் கல்யாணம் நடக்கக் காரணமானவரும்
இருவருக்கும் வாஹனமாக விளங்குபவரும்
வேதமே வடிவு எடுத்தவரும்
செல்வம் வேத ஞானம் இல்லம் போன்ற அனைத்து அபீஷ்டங்களையும் –ஸத்யஸ்-விரைந்து அருளும் ஸ்ரீ கருட பகவானுக்கு வணக்கம் –

நேத்ரம் காயத்ரமூசி த்ரிவ்ருத் இதி ச சிரோ நாமதேயம் யஜும்ஷி
சந்தாம் சி அங்கானி திஷ் நியதாம் அபி அஜனி சபை விக்ரஹோ வாம தேவ்யம்
யஸ்ய ஸ்தோமாத்மந அசவ் ப்ருஹத் இதர கருத் தாத்ர்சாம்நாத புச்ச
ஸ்வா சந்த்யம் ந ப்ரஸூதாம் ஸ்ருதி சத சிகர அபிஷ்டுதாத்மா கருத்மான் —கருட பஞ்சாசஸ் -3-

சாமவேத சோமனே கருத்மான் -காயத்ரி மந்திரமே–காயந்தம் த்ராயதி இதி-அவன் திருக் கண்கள் -த்ரி விருத் மந்திரமே அவன் திரு முடி –
யஜுர் வேதமே அவன் திரு நாமம் – வேத சந்தஸ் ஸூக்களே அவன் அங்கங்கள்

“ஸ்தோமம்” என்னும் ஸாம வேத பாகமே அவரது ஆத்ம ஸ்வரூபம்.
“காயத்ரம்” என்கிற ஸாமம் அவருக்கு கண்கள்.
“த்ரிவ்ருத்” என்ற ஸாமம் அவருக்கு சிரசு.
யஜுர் வேதங்கள் அவருடைய திருநாமங்கள்.
சந்தஸ்ஸுக்கள் அவரது திருக் கரங்கள்.
“திஷ்ண்யம்” எனப்படும் வேள்வி மேடைகள் அவரது திருப்பாதங்கள்.
“வாமதேவ்யம்” என்கிற ஸாமம் அவரது திருமேனி,
“ப்ருஹத்” , “ரதந்தரம்” என்னும் ஸாமங்கள் அவருடைய இரு சிறகுகள்.
“யஜ்ஞாயஜ்ஞியம்” என்கிற ஸாமம் அவருக்கு வால்.
இவ்வாறு வேத பாகங்களெல்லாம் கருடனுடைய திருமேனிகளாய் விளங்குவதால்
கருடனை “வேத ஸ்வரூபன்” என்கிறார்கள் பெரியோர்.

——-

அம்ருத கலச சிந்தோர் அந்தரங்கே சயாநம்
அம்ருத கலச ஸிந்தோ கன்யகா முத் வஹந்தம்
அம்ருத கலச ஸிந்தும் கஞ்சித் அம்ஸே வஹந்தம்
அம்ருத கலச ஹஸ்தம் பாவயே பக்ஷி ராஜம் –2-

அம்ருத கலச சிந்தோர் அந்தரங்கே சயாநம்
அம்ருத மயமான பாற் கடலில் பள்ளி கொண்டு இருப்பவனும்
வ்யூஹ மூர்த்திகள் போலவே நறையூரிலும்
வாஸூ தேவன்
ப்ரத்யும்னன்
அநிருத்தன்
புருஷோத்தமன்
ஸங்கர்ஷணன் -என்ற ஐவராக சேவை சாதித்து அருளுவதால் இந்த பதங்கள் பிரயோகம்

அம்ருத கலச ஸிந்தோ கன்யகா முத் வஹந்தம்
வக்ஷஸ்தலத்திலும் வஞ்சுள வல்லி நித்ய வாஸம் இங்கும் உண்டே-உத் வஹந்தம்-மணந்து கொண்டவர்
சனிக் கிழமை இங்கு சேவித்தால் 16 முறை திருமலை அப்பனை சேவித்த பலம் உண்டு என்பார்கள்

அம்ருத கலச ஸிந்தும் கஞ்சித் அம்ஸே வஹந்தம்
அம்ருதம் அமரர்கட்க்கு ஈந்த மிளிர் சுடர் ஆழி நெடுமால்
அமுதினும் ஆற்ற இனியான் நிமிர் திரை நீள் கடலானே என்று நம்மாழ்வார் அருளிச் செய்தபடியே
ஆராவமுதமான எம்பேருமானைத் திருத் தோள்களில்-அம்ஸே- வஹிப்பவனும்

அம்ருத கலச ஹஸ்தம் பாவயே பக்ஷி ராஜம்
அம்ருத கலச பிரசாதம் வியாழக்கிழமை தோறும் இங்கு உண்டே

———-

இந்த ஸ்லோகத்தைக் கேட்டவுடனே -அமுதம் போல் உள்ளதே -என்று சொல்லி ரசித்தான் புள்ளரையன்
இதே போல் அமுத மயமான ஸ்லோகங்களை மேலும் இயற்ற அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்

பாக ஸாஸன சிலா மய ஆக்ருத 
பாக ஸாஸன ஸஹோதர ப்ரிய
பாக ஸாஸன திசேஹ பக்ஷிணாம்
பாக மஸ்ய கவிதாஸூ கஞ்சன –3-

பாக ஸாஸன சிலா மய ஆக்ருதே
இந்த்ர நீலக் கல் போன்ற கல்லான வடிவத்தை யுடையவனே

பாக ஸாஸன ஸஹோதர ப்ரிய
இந்திரனின் ஸஹோதரனான உபேந்த்ரனான எம்பெருமானின் நண்பனே

தாஸஸ் ஸகா வாஹநம் ஆஸநம் த்வஜோ
யஸ்தே விதாநம் வ்யஜநம் த்ரயீமய: |
உபஸ்திதம் தேந புரோ கருத்மதா
த்வதங்க்ரி ஸம்மர்த்த கிணாங்கஶோபிநா ||–ஸ்தோத்ர ரத்ன ஶ்லோகம் 41 –

வேதங்களையே அங்கங்களாக உடைய அந்த கருடாழ்வார், உனக்கு அடியவனாகவும், நண்பனாகவும், வாஹனமாகவும்,
ஆஸனமாகவும், கொடியாகவும், விதானமாகவும், சாமரமாகவும் இருக்கிறார்;
மேலும் உன்னுடைய திருவடிகள் அவருடைய தோள்களில் அழுத்தியதால் ஏற்பட்ட தழும்புகளாலே ஒளிவிடுகிறார்;
உன்னுடைய ஸன்னிதியில் இப்படிப்பட்ட கருடாழ்வாரால் நீ வணங்கப்படுகிறாய் —

பாக ஸாஸன திசேஹ பக்ஷிணாம்
பறவைகளின் இந்திரனே -அரையனே –
இன்றும் நாச்சியார் கோயில் வெளிப்பிரகாரத்தில் மாலை வேளையில் அமர்ந்தால் பறவைகள் கூட்டமாக
ஒலி எழுப்பிக் கொண்டு அவ்வழியாகச் செல்வதைக் காணலாம்
அவைகள் ஸ்தோத்ரம் செய்யும் ஒலியே இது –

பாக மஸ்ய கவிதாஸூ கஞ்சன
அடியேனுடைய கவி அனைவரும் மகிழும்படியான பாகத்தில் -நடையில் -இருக்கும்படி நீ அருள வேண்டும் –

———-

கருடன் நாகங்களை அடக்கி தனது மேனி முழுவதும் ஆபரணமாக அணிந்துள்ளான்.
பூணூல் : வாசுகி
வலது கை கங்கணம்: குளிகன்
இடது கை கங்கணம் : ஆதி சேஷன்
அரையில் அணி: தட்சகன்
மாலை: கார்கோடகன்.
வலது காது குண்டலம்: பத்மன்
இடது காது குண்டலம் : மஹா பத்மன்
திருமுடியில் : சங்க பாலன்—சங்க ஸூடன் என்றும் சொல்வர்

விடமுடைய பாம்பின் உடம்பையும் உயிரையும் உண்ணும் பறவை கருடன்.
அக்கருடனுடைய அரைக்கசையாக, கைகளில் தோள் வளைகளாக, முடி மேல், காது குண்டலங்களாக விளங்கும்
ஆபரணங்கள் எல்லாம் பாம்பு, குடையும் பாம்பு என்று பரிபாடல் கூறுகின்றது.

விடமுடை அரவின் உடலுயிர் உருங்கு உவணம் அவன்
மடிமேல் வலந்தது பாம்பு பாம்பு தொடி பாம்பு தலைமேலது பாம்பு
இறை தலையன பாம்பு படிமதம் சாய்த்தோய் பசும் பூனலை
கொடிமேலிருந்தவன் தாக்கு இரையது பாம்பு – பரிபாடல்

எல்லா கருடனிலும் அஷ்ட நாகங்கள் ஆபரணமாக விளங்கும்
ஆனால் இந்த கல் கருடனில் ஒன்பது நாகங்கள் ஆபரணமாக உள்ளன,
ஒன்பதாவது நாகம் கருடனின் வாளை அலங்கரிக்கின்றது.

பரிஷ்கார வர்ணக–

வாமே வைகுண்ட சய்யா பணிபதி கடகோ வாஸூகி ப்ரஹ்ம ஸூத்ர
ரஷேந் நஸ்தஷ கேண க்ரதித கடி தடஸ் சாரு கார்க்கோட ஹார
பத்மம் கர்ணேஸ் ப அசேவ்யே ப்ரதிமவதி மஹா பத்ம மந்யத்ர பிப்ரத்
சூடாயாம் சங்க பாலம் குளிகமபி புஜே தஷிணே பக்ஷிமல்ல -ஸ்ரீ கருட பஞ்சாசத் —36-

ஆதி சேஷனே கையில் கங்கணம் -வாஸூகி பூணூல் -தக்ஷகன் கழுத்துக்கு ஆபரணம்
கார்க்கோடன் -ஹாரம் -பத்ம மஹா பத்ம காதுகளுக்கு ஆபரணங்கள்
சங்க பாலன் திரு முடியில் -குளிகன் தோல் வளை
இப்படி முக்கிய அஷ்ட சர்ப்பங்கள் சேவை உண்டே –

நாக பாசத்தால் இந்திரஜித் இளையபெருமாளை கட்ட, அவர் மயங்கி விழுந்த போது
அந்த கட்டிலிருந்து விடுவித்தவன் கருடன். அதற்காக இராம பிரானின் தழுவுதல பெற்றவன் கருடன். ”
ககநகர கனககிரி கரிமதர நிகம்மய நிஜ கருட கருதநில லவகளித விஷவதநக்ர கதந” என்று
ஸ்வாமி தேசிகன் இவ் வைபவத்தை பாடுகின்றார்.

————

கலச ஜலதி கந்யா கேஹ கேஹ லஸந்தம்
கலச ஜலதி கந்யா காந்த காந்தம்
கலச மம்ருத பூர்ணம் ஹஸ்த பத்மே ததாநம்
கலச ஜலதி கந்யா வீக்ஷிதம் ஸந் நமாமி –4-

கலச ஜலதி கந்யா கேஹ கேஹ லஸந்தம்
ஆவிர்பாவ கலச ஜலதவ் -என்று ஸ்வாமி தேசிகன் சாதித்தபடி
பாற் கடலில் தோன்றிய மஹா லஷ்மியின் திருக் கோயிலான நாச்சியார் கோயிலில்
தனிக்கோயில் ஸந்நிதியில் எழுந்து அருளி இருப்பவரை-லஸந்தம்-ஒளி வீசுகிறவரே 

கலச ஜலதி கந்யா காந்த காந்தம்
அந்தப்பிராட்டியாரின் அழகான கணவனான எம்பெருமானைத் தாங்குபவரை
க்ரீடேயம் கலு நான்ய தாஸ்ய ரஸதா ஸ்யாத் ஐகரஸ்யாத்தயா -ஆழ்வான் ஸ்ரீ ஸூக்தியின் படி
அந்யோன்ய திவ்ய தம்பதி
கொடியைத் தாங்கும் கொம்பு -அழகிய கேள்வன்
வைகுண்ட பீடி க்ருத்ஸகந்தம் –கருட தண்டகத்தில் ஸ்வாமி தேசிகன் –

கலச மம்ருத பூர்ணம் ஹஸ்த பத்மே ததாநம்
அம்ருதம் நிறைந்த கலசத்தைத் தனது கரங்களிலே ஏந்தியவர்
தோள்களிலோ ஆராவமுதம்
கரங்களிலோ தேவாம்ருதமான உப்புச் சாறு

கலச ஜலதி கந்யா வீக்ஷிதம் ஸந் நமாமி
பிராட்டியின் கடாக்ஷத்துக்கு இலக்கானவரை வணங்குகிறேன்

ஸஹ ஸ்திர பரித்ரஸ வ்ரஜ விரிஞ்சந அகிஞ்சனை:
அநோகஹ ப்ருஹஸ்பதி ப்ரபல விக்லப ப்ரக்ரியம்
இதம் ஸதஸதாத்மநா நிகிலம் ஏவ நிம்நோந்நதம்
கடாக்ஷ தத் உபேக்ஷயோ: தவ ஹி லக்ஷ்மி தத் தாண்டவம்–ஸ்ரீ குணரத்ன கோஸம்–18-

மஹா லக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! இந்த உலகில் – அசையாமல் ஒரே இடத்தில் உள்ள தாவரங்கள், அசையும் பொருள்கள்,
மிக உயர்ந்த ப்ரம்மன் – எதுவும் இல்லாத பிச்சைக்காரன், மரம் போன்றவன், ஞானம் மிகுந்த ப்ரஹஸ்பதி போன்றவன்,
பலம் மிகுந்தவன், பலம் இல்லாதவன் என்று இப்படியாக மேடும் பள்ளமும் உள்ளன. இப்படி இருக்கக் காரணம் என்ன?
இது இவ்வாறு இருப்பது – உனது கடாக்ஷம் கிடைப்பதாலும், கிடைக்காமல் இருப்பதாலும் அன்றோ?
இவை உனது ஒரு விளையாட்டாக அல்லவா உள்ளது?

இங்கு இவை அனைத்தும் இவளுக்கு நாட்டியம் ஆடுவது போன்று பொழுது போக்கு அம்சமாக அல்லவா உள்ளது?

பங்குனி உத்திர மண்டபத்தில் நம்பெருமாள் ஸ்ரீரங்கநாச்சியாருகாகக் காத்து நிற்கும் காட்சி.
இந்த உலகில் உள்ள உயிர்கள் மட்டும் இவளால் ஏற்றம் பெறுவதில்லை. நம்பெருமாளும் அப்படியேதான்.
இவள் வந்தால் அல்லவோ இந்த மண்டபத்திற்கும், இந்த உற்சவத்திற்கும் பொருளுண்டு??
நம்பெருமாள் மட்டும் இங்கு நின்றால் என்ன பெருமை உள்ளது?
இவள் இங்கு வந்து கடாக்ஷித்ததால் அன்றோ எம்பெருமானார் வாயிலாக கத்ய த்ரயம் வெளிப்பட்டது?

—————-

பத்மாலயே அதி மதுரே க்ருத நித்ய வாஸ
பத்மா பிராம மதுநாசந க்லுப்த சித்த
பத்மா பிஜாத சுப வாஹன ஹம்ஸ ஸேவ்ய
பத்ம அஸி தேஷண நிப பரிபாது பத்ரீ –5-

பத்மாலயே அதி மதுரே க்ருத நித்ய வாஸ
இங்கு நித்ய வாஸம் செய்து அருள்பவர்
சிற்பி ஒரே கல்லில் வடிக்க -தத்ரூபமாக இருந்த அது பறக்கத் தொடங்க
உளியால் சிற்பி கருடனை அடிக்க மூக்கில் அடிபட்டு விழ
மறையாரும் பெரு வேள்விக் கொழும் புகை போய் வளர்ந்து எங்கும்
நிறை யார வான் மூடும் நீள் செல்வத் திரு நறையூரில் எழிலைக் கண்டதும்
வேத ஸ்வரூபி அங்கேயே நித்ய வாஸம் செய்து அருளுகிறார் என்பர்

பத்மா பிராம மதுநாசந க்லுப்த சித்த
பிராட்டிக்கு ஆனந்தம் தந்து அருளுபவரும்
மதுவை நிரஸித்து அருளிய எம்பெருமா-ஹயகிரிவர் – இடத்திலேயே சித்தம் வைத்து விருப்பவர்
விஷ்ணு சித்தரும் பெரிய திருவடியின் அம்சமே அன்றோ
ஹயக்ரீவருக்கு பெரிய திருவடிக்கு வியாழக்கிழமை குருவாரம் மிகவும் உகந்தது
கருட மந்த்ரம் ஜபித்து யாரும் தவம் செய்த ஸ்வாமி தேசிகனுக்கு ப்ரத்யக்ஷமாக வந்து
ஹயக்ரீவ விக்ரஹத்தையும் வழிபட அருளி
ஹயக்ரீவ மந்திரத்தையும் உபதேசித்து அருளினார் அன்றோ

பத்மா பிஜாத சுப வாஹன ஹம்ஸ ஸேவ்ய
தாமரையில் தோன்றிய நான்முகனின் வாகனமான அன்னப் பறவையால் வணங்கப்படும் புள்ளரையன்
அன்னப் பறவை மற்ற எல்லாப் பறவைகளுக்கும் உப லக்ஷணம்

பத்ம அஸி தேஷண நிப பரிபாது பத்ரீ
மைத்தடம் கண்ணி என்றும் மைய கண்ணாள் என்றும் கொண்டாடப்படும் பிராட்டியுடைய திருக் கண்களைப் போல் திரு மேனி கொண்டவர்
கருடன் பொன் வண்ணத்தவரானாலும் இங்கு கல் கருடனாக ஸேவை சாதித்து அருளுவதால் இவ்வாறே கொள்ள வேண்டும்
பிராட்டி எம்பெருமானை ஸதா பஸ்யந்தி பண்ணுவதால் பெற்ற மை வண்ணம் போல்
இவரது திருமேனியும் ஸதா பஸ்யந்தி யாலேயே வந்த வர்ணம்

இப்படிப்பட்ட பெரிய திருவடி நம்மை ரக்ஷிக்கட்டும்

————

ஜகன் மாதுர் கேஹே நகர வ்ருஷபே பூர்ண விபவே
ஜகன் மாதுர் கேஹேம் பஜ யுகள மத்யம் நிஜமயம் 
ஜகன் மாதா கிருஷ்ணாஜிந பிஹி தமாஹோ ச கலயன்
ஜகன் மாநம் த்ருஷ்ட்வா பதக பதிமாநந்த மயதே –6-

ஜகன் மாதுர் கேஹே நகர வ்ருஷபே பூர்ண விபவே
வைபவ வளங்கள் நிறைந்த திவ்ய தேசம்-

ஒரே ஆழ்வார் 110 பாசுரங்கள் -பெற்ற திவ்ய தேசம் -வேறே எந்த திவ்ய தேசத்துக்கும் இந்தப்பெருமை இல்லையே

பொன் முத்தும் அரி யுகிரும் புழைக் கைம்மா கரிக்கோடும்
மின்னத்தன் திரை யுந்தும் வியன் பொன்னித் திரு நறையூர்
மின்னொத்த நுண் மருங்குல் மெல்லியளைத் திரு மார்பில்
மன்னித்தான் வைத்துகந்தான் மலரடியே அடை நெஞ்சே

ஜகன் மாதுர் கேஹேம் பஜ யுகள மத்யம்
திருமார்பில் பிராட்டியைக் கொண்டவன்

ஜகன் மாதா கிருஷ்ணாஜிந பிஹி தமாஹோ ச கலயன்
மான் தோலால் மறைத்துக் கொண்டு வாமனனாய் யாசகம் கேட்டுச் சென்றான்

மான் கொண்ட தோல் மார்வின் மாணியாய் மாவலி மண்
தான் கொண்டு தாளால் அளந்த பெருமானைத்
தேன் கொண்ட சாரல் திரு வேங்கடத்தானை
நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே

ஜகன் மாநம் த்ருஷ்ட்வா பதக பதிமாநந்த மயதே
ஓங்கி உலகளந்த பெரிய தோற்றத்தோடு பெரிய திருவடி ஸேவை
நான்கு எட்டு பேர் என்று கூட்டிக் கூட்டி 128 பேர் எழுந்து அருளச் செய்ய வேண்டும் படியான விஸ்வ ரூபம் அன்றோ

இந்தப் பெருமையை கண்டு மிதுன தம்பதிகள் மகிழ்வார்கள் அன்றோ-

————-

ஆஸ்லேஷா தார தேவான் ஹ்ருதி பய பரிதான் ஸந்ததம் குர்வதஸ்தான்
ஆஸ்லேஷா தாத்ம தார த்வயகர கலி தாத் ஆதி மூலஸ்ய பும்ஸஸ்
ஆஸ்லேஷா தூரு ஜாதத் அதிகத மஹித அநந்த யோகஸ்ய வீந்தோ
ஆஸ்லேஷம் புத்திர் ஏஷா மம சமதிகதா மோஹ மம்ஹோ ப்ரயாதி –7–

ஆஸ்லேஷா தார தேவான்–ஆயில்யம் என்ற நக்ஷத்திரத்துக்கு தேவர்களானவர்களை-நாகங்கள் நக்ஷத்ரம் -லஷ்மணன் -ஆயில்யம்
ஹ்ருதி பய பரிதான் ஸந்ததம்  குர்வதஸ்தான்–மனதில் பயத்துடன் நிரம்பினவர்களாக எப்போதும் செய்பவரும்

ஆஸ்லேஷா தாத்ம தார த்வய கர — தமது இரு மனையாளான தேவிமார் களின் இருவரின் கைகளால்
கலி தாத் –தழுவுதலாலும்
ஆதி மூலஸ்ய பும்ஸஸ் ஆஸ்லேஷாத் ஊரு ஜாதத் அதிகத மஹித -உலகிற்கு எல்லாம் ஆதி காரணமான பரம புருஷனான புருஷோத்தமனின் தொடையில் இருந்து தோன்றிய ஐந்தவான ஊர்வசியின் அணைப்பை விட பெரிய இன்பம் அடையும்
அநந்த யோகஸ்ய வீந்தோ –அடையப்பட்ட பெருமை பொருந்திய சேர்க்கையை யுடைய பஷிகளின் தலைவனான கருடனின்-வீ -பறவை
ஆஸ்லேஷம் புத்திர் –தழுவுதலே அடைந்த அடியேனது புத்தியானது
ஏஷா மம சமதிகதா மோஹம் அம்ஹோ ப்ரயாதி –மோஹத்தை அடைகிறது -இது என்ன பெரிய வியப்பு

ஊரு ஜாதர் -ஒவ்ரவர் என்னும் மகரிஷி -ஸ்ரீ வத்ஸ கோத்ரத்து ப்ரபவர் பற்றி அருளிச் செய்ததாகவுமாம்

———

கமலஸ்தித தேவதா க்ருஹே
கமல ஸ்ரீ ஹரி நேத்ர வாஹனம்
கமலம் கலயந்தம் ஆஸ்ரயே
கமல ஸ்ரீ கர ஸூத சோதரம் –8-

கமலஸ்தித தேவதா க்ருஹே-நாச்சியார் கோயிலிலே
கமல ஸ்ரீ ஹரி-தாமரைக்கண்ணன்

மிதுன திவ்ய தம்பதியை எழுந்து அருளப் பண்ணும் திருத்தேர் போன்ற வாஹனமானவர்
அனைவருக்கும் கமலாந்தமான ஐஸ்வர்யத்தை அருள்பவர்-கம் அலம் போதுமான மகிழ்ச்சி
தாமரையை மலரச் செய்யும் ஸூர்யனின் தேரோட்டியான அருணனுக்கு ஸஹோதரர்
இவரை அடியேன் ஆஸ்ரயிக்கிறேன்

————-

பத்மம் கர்ணே வஹதி ச பவான் பத்ம நாபம் ததாம்ஸே
பத்மம் கர்ணே பதக நிரூபதே தம் மஹாந்தம் பரஸ்மின்
பத்மகார ஸ்த்வமிதி யததஸ் ஸ்வ அநுரூபே பவித்ரே
பத்மா காரே நனு புரவரே ஸாதரோ வர்த்தஸே அஸ்மின் –9-

பத்மம் கர்ணே வஹதி ச பவான் -நீங்கள் பத்மம் பாம்பு அணிகலன்
பத்ம நாபம் ததாம்ஸே–தோளில் பத்ம நாபன்
பத்மம் கர்ணே பதக நிரூபதே தம் மஹாந்தம் பரஸ்மின்-இடது காதில் மஹா பத்மம் பாம்பு அணிகலன்
பத்மகார ஸ்த்வமிதி -பத்மத்துக்கு இருப்பிடமாகவே உள்ளீர்
யததஸ் -அதனாலேயே
ஸ்வ அநுரூபே பவித்ரே பத்மா காரே நனு புரவரே -இந்த ஷேத்ரத்தில்
ஸாதரோ வர்த்தஸே அஸ்மின்-உகந்து அருளி உள்ளீர்

பாம்புகளுக்கும் கருடனுக்கும் பகை மூண்டு –பாம்புகளை பூண்டோடு அழிக்க கருடன் முற்பட்டார்
இதைக் கண்ட சர்ப்ப ராஜன் கருடனிடம் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு
தினம் ஒரு பாம்பை ஆஹாரமாக அனுப்பி வைக்கிறேன் -வம்சம் முழுவதையும் அழிக்காதீர் என்று சொல்ல
கருடனும் அதுக்கு ஸம்மதித்தாராம்

தோளில் பத்ம நாபனைத் தங்கி இருக்கிறார் -அதற்குத் தக்கபடி பரிசுத்தமான திவ்ய தேச வாஸம்

கருடன் நாகங்களை அடக்கி தனது மேனி முழுவதும் ஆபரணமாக அணிந்துள்ளான்.
பூணூல் : வாசுகி
வலது கை கங்கணம்: குளிகன்
இடது கை கங்கணம் : ஆதி சேஷன்
அரையில் அணி: தட்சகன்
மாலை: கார்கோடகன்.
வலது காது குண்டலம்: பத்மன்
இடது காது குண்டலம் : மஹா பத்மன்
திருமுடியில் : சங்க பாலன்—சங்க ஸூடன் என்றும் சொல்வர்

எல்லா கருடனிலும் அஷ்ட நாகங்கள் ஆபரணமாக விளங்கும்
ஆனால் இந்த கல் கருடனில் ஒன்பது நாகங்கள் ஆபரணமாக உள்ளன,
ஒன்பதாவது நாகம் கருடனின் வாளை அலங்கரிக்கின்றது.

———–

கமடம் கரடிம் ச பஷயன்
கமலம் ஹந்த ஸதாம் விவர்த்தயன்
கமலாலய பூஷணம் ஸ மே
கமலா காந்தா தர கரோது ஸம்

கமடம் கரடிம் ச பஷயன் -கருடன் யானையையும் ஆமையையும் உண்ட சரித்ரம்

சாந்த்ரா க்ரோத அனுபந்தாத் ஸரஸி நகமுகே பாதபே கண்ட சைலே
துண்டாக்ரே கண்ட ரந்த்ரே ததனு ச ஜடரே நிர்விசேஷம் யுயுத்ஸூ
அவ்யாதஸ்மாந் அப்வ்யாத விதித நகர ஸ்ரேணி தம்ஷ்ட்ரா பிகாதவ்
ஜீவக்ராஹம் க்ருஹீத்வா கமட கரடிநவ் பக்ஷயன் பஷிமல்ல –ஸ்ரீ கருட பஞ்சாசத்-18-

விபாவசு சுப்ரதீகா -இருவரும் சகோதரர்கள் -சொத்துக்காக சண்டை போட்டு ஒருவர் ஒருவர் மேல் சாபம் –
யானை-கமட — ஆமை-கரடிநவ்–யாக பிறக்க -கோபம் தொடர -சாந்த்ரா க்ரோத அனுபந்தாத் –
இந்த பிறவியிலும் சண்டை போட ஸரஸி -சரஸுக்கு கொண்டு செல்ல அங்கும் சண்டை போட
நகமுகே பாதபே கண்டசைலே -நகத்தால் மரத்துக்கு மேலே கொண்டு செல்ல அங்கும் சண்டை போட
வாயால் கவ்வி -வயற்றில் விழுங்க அங்கும் சண்டை போட்டார்கள்
பஷிமல்ல-புள்ளரையன் -நம்மை ரக்ஷிக்கட்டும்-

கமலம் ஹந்த ஸதாம் விவர்த்தயன்
கம் -அலம் -போதுமான அளவு ஆனந்தம்
ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் என்று அறிந்து
அசன்னேவ ச பவதி அஸத் ப்ரஹ்மேதி வேத சேத்
அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத சந்தமேனம் ததோ விதுரதி
சத்துக்களுக்குப் போதுமான ஆனந்தத்தைப் பக்ஷிராஜன் வளர்த்துக் கொடுக்கிறான் –

கமலாலய பூஷணம்
நாச்சியார் கோயிலுக்கே ஆபரணம் அன்றோ பெரிய திருவடி

ஸ மே கமலா காந்தா தர கரோது ஸம்
எம்பெருமானுக்கு வாஹனமாக விளங்கும் கருடாழ்வார் அடியேனுக்கு –கரோது ஸம்-மங்களத்தை உண்டாக்கட்டும் –

————

ஸூர ஸம் ஸரஸிஜால யவத்யா
ஸூர ஸம் ச தத ஏவ ஜகத்யாம்
ஸூர ஸந் நயநம் அத்ர வஹந்தம்
ஸூர ஸாரதி ஸஹோதரம் பஜே –11-

ஸூரஸம் ஸரஸிஜால யவத்யா
தாமாரையாளான வஞ்சுள வல்லித் தாயாரை ஏந்தி இருக்கும் திரு மார்பு
திகழ்கின்ற திரு மார்பில் திரு மங்கை தன்னோடும் திகழ்கின்ற திருமால்
கழற்ற ஒண்ணாத திரு ஆபரணம் அன்றோ இவள்

ஸூரஸம் ச தத ஏவ ஜகத்யாம்
ஸூரஸம்–ஸூ உ ரஸம் -நல்ல ரஸத்தோடு கூடியவள்
உகாரம் பிராட்டிக்கு வாசகம்
அக்ரதவ் ப்ரயயவ் ராம ஸீதா மத்யே ஸூ மத்யமா
ப்ருஷ்ட தஸ்து தனுஷ் பாணி லஷ்மணோ ஆஜுஹாவ ஹ -ப்ரணவமே நடந்து சென்ற காட்சியின் விவரணம்
சுவையன் திருவின் மணாளன் -இவளுடன் சேர்ந்து இருப்பதாலேயே நல்ல ரஸத்தை யுடையவனாக எம்பெருமான் விளங்குகிறான்

ஸூர ஸந் நயநம் அத்ர வஹந்தம்
திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல்
ஸூர -ஸூர்யன் –
ஸத் -நக்ஷத்ரங்களின் தலைவனான சந்திரன்
தனது கண்களாக யுடைய எம்பெருமானுக்கு வாஹனம்

அநாதி மத்ய அந்தம் அநந்த வீர்யம் அநந்த பாஹும் சசி ஸூர்ய நேத்ரம்
பஸ்யாமி த்வாம் தீப்த ஹுதாச வக்த்ரம் ஸூவ தேஜஸா விஸ்வ மிதம் தபந்தம் –
இந்த கீதா ஸ்லோக பாஷ்யத்தில் –சசி ஸூர்ய நேத்ரம் -என்பதற்கு
சசிவத் ஸூர்யவத் ச ப்ரஸாத ப்ரதாப யுக்த ஸர்வ நேத்ரம்
தேவாதீந் அநு கூலான் நமஸ்காராதி குர்வான் ப்ரதி ப்ரஸாதவ்
தத் விபரீதான் அஸூர ராக்ஷஸாதீன் ப்ரதி ப்ரதாபவ்

அனுக்ரஹத்தையும் நிக்ரஹத்தையும் கருடாரூடனாய் இருந்தே செய்து அருள்கிறான் என்கிறார்

ஸூர ஸாரதி ஸஹோதரம் பஜே —
ஸூர்யனின் சாரதியான அருணனின் ஸஹோதரன்
இவரைப் போற்றுகிறேன் -வணங்குகிறேன் –

———–

பஷீந்த்ர ரஷேதி வதந்தி லோகா
பஷீந்த்ர பஸ்யேதி வதந்தி கேசித்
பஷீந்த்ர லஷீ க்ருத பக்தி பாவ
பஷீ க்ருதோ ரக்ஷஸி பவ்ய ஸப்த –12- 

பஷீந்த்ர ரஷேதி வதந்தி லோகா
உலகில் பல பக்தர்கள் ரக்ஷணத்துக்கு உம்மைப் பிரார்த்திக்கிறார்கள்

பஷீந்த்ர பஸ்யேதி வதந்தி கேசித்
வேறே சிலர் உமது கடாக்ஷத்தைப் பிரார்த்திக்கிறார்கள்

பஷீந்த்ர லஷீ க்ருத பக்தி பாவ
அப்படிப்பட்ட பக்தர்களுக்கு இலக்காக விளங்கும் புள்ளரையன்

பஷீ க்ருதோ ரக்ஷஸி பவ்ய ஸப்த —
தன்னுடைய மங்களமான ஒலிகளாலே அனைத்து மங்களங்களும் அருள்கிறாய்
பக்தரின் பிரார்த்தனையில் உமது திரு நாம சங்கீர்தன குரலால் மங்களங்கள் உண்டாகின்றன என்றுமாம் –

மதுரா தரணி கிரஸ்தே மது ஜிதபி ஸ்ரோதும் உத்ஸூகோ நிரதாம்
ஸ்ரவணே ஜநிமத ஸூர பத நகரீ நாதத்வ மப்யாய –வஸூ மதி ஸதக ஸ்லோகம்
பூமா தேவியின் பேச்சு தேனைப் போல் மதுரமாக உள்ளது
அது மதுவை வென்ற எம்பெருமானையே ஈர்த்து விட்டது
அந்த மதுரமான பேச்சை ஸ்ரவணம் செய்யவே ஸ்ரவண நக்ஷத்திரத்தில் திருவவதரித்தான்
ஆகாசம் ஒலிகளை நன்றாக ஊடுறவச் செய்வதால் ஆகாச நகரான திரு விண்ணகரிலே வந்து அவதரித்தான்

அதே போலவே வேத யோ விஹ்ருதம் ததங்க மதவா தத்தே ஸ தே ப்ரீதயே -என்றபடியே
வேத ஸ்வரூபியான கருடனின் மங்கள ஒலிகளைக் கேட்பதற்காகவே நம்பி இங்கு வந்து நித்ய வாஸம் செய்து அருள்கிறான்
தனது மங்கள ஒலிகளாலே உலகுக்கு மங்களங்களை அருளுகிறார் –

——————-

இரண்டாம் விஹாரம் —ப்ராஸ விஹாரம்
இதில்  15 ஸ்லோகங்கள் உள்ளன
ஒவ்வொரு ஸ்லோகத்திலும் எதுகை அணி அமைந்துள்ளது
இதில் முதல் ஸ்லோகம்
ரஷஸஸ் தநு பவேந பாதிதம்
ரக்ஷதஸ்தவ ததா ரகூத் வஹம்
பக்ஷ பாத விபவோ அஸ்து தாதருசஸ்
ஸஷணாய பதகேந்த்ர மே ஸதா -13–இரண்டாம் எழுத்து

கருட பகவானே ராக்ஷசனான ராவணன் மகனால் வீழ்த்தப்பட்ட ராமனைக் காத்த இறக்கைகள்
உடைய கருட பகவானே அந்த வீச்சு எனக்கு எப்பொழுதும் விழாக் காலமாகவே இருக்கும்படி அருள்வதாகுக

பதகேந்த்ர–ஓ கருட பகவானே
ரஷஸஸ் தநு பவேந–ராக்ஷசனான ராவணனின் மைந்தனான இந்த்ரஜித்தினால்
பாதிதம்–விழும்படி செய்த நாக அஸ்திரத்தினால் கட்டுண்ட இளைய பெருமாள் படுத்த நிலையில் இருந்தார்
ரகூத் வஹம்–ரகு குலத்தில் பிறந்த லஷ்மணரை
ததா –அப்பொழுது
ரக்ஷதஸ் தவ-ரஷிப்பதற்கு உன்னுடைய
பக்ஷ பாத விபவோ –இறக்கைகளின் வீசல் ஆகிய லீலை ஏற்படுகிறது
தாதருசஸ்–அது போன்ற லீலை
அஸ்து ஸ ஷணாய மே ஸதா–என்னுடைய பிரதிபந்தங்கள் கழிந்து நிரதிசய ஆனந்தம் பெற இருக்கட்டும் –

இராமாயண ஸ்லோகத்தில் உள்ள அதே பத பிரயோகம் இங்கும்
கம்பர் மாண்ட தீஷித புத்ரனை எழுப்பிய வ்ருத்தாந்தம்

என்று இன்ன பன்னி அழிவான் எறிந்த எரி சோதி கீற இருள் போய்
பொன் துன்னி அன்ன வெயில் வீசுகின்ற பொருள் கண்டு நின்ற புகழோன்
நின்று உன்னி உன்னி இவன் யாவன் என்று நினைகின்ற எல்லை நிமிரச்
சென்று உன்னும் முன்னர் உடன் ஆயினன் இவ் வுலகு ஏழும் மூடு சிறையான்

வாசம் கலந்த மரை நாள நூலின் வகை என்பது என்னை -மழை என்று
ஆ சங்கை கொண்ட கொடை மீளி அண்ணல் சர ராமன் வெண்ணெய் அணுகும்
நேசம் கலந்த மறை வாணர் செஞ்சொல் அறிவாளர் என்று இம் முதலோர்
பாசம் கலந்த பசி போல் அகன்ற பதகன் துரந்த உரகம்

இந்த ஸ்லோகத்தில் கருடனின் இறக்கை வீச்சுப் போலவே –மந்த்ர அக்ஷரங்கள் அமைந்து உள்ளன

இந்திரஜித் புத்தி
லஷ்மணன் ஜீவாத்மா
வேத கோஷம் கேட்டு அறிந்து புத்தியை அவன் இடம் செலுத்தி உஜ்ஜீவிப்போம்

———-

சிலா மயீ தே தனு ரத்ர பக்ஷின்
கலாபி காந்தா கவ சோஜ் ஜ்வலேயம்
மலானி மன் நேத்ர கதானி நித்யம்
விலாஸ லேசேந வினா கரோது–14-

ஓ பக்ஷி ராஜனே உம்முடைய இத் திருமேனி இவ் விடத்திலே மயில் போல் காந்தி உடையதாகவும்
கருங்கல் மயமாகவும் பிரகாசமான கவசத்தைத் தரித்துக் கொண்டும் விளங்குகிறது
என்னுடைய கண்ணில் உண்டாகிற அழுக்கை -விஷயாந்தர ப்ராவண்யத்தை –
உமது இறக்கைகளின் விலாஸத்தின் துளியால் இல்லாமல் செய்து அருள்வாய்

————-

அம்ஸா ஸ்ரயம் கஞ்சன காள மேகம்
கம்ஸாந்தகம் ரஞ்ஜயதோ நிநாதை
ஸம்ஸாஸ் பதம் விக்ரம வைகரீஸா
த்வம்ஸாய பூயாத் அக சந்த தேர்ந –15-

கருட பகவான் தனது முதுகை இருப்பிடமாகக் கொண்ட ஒரு காள மேகம் போல் விளங்குகிற
எப்பொழுதும் ப்ரசம்ஸை செய்து கொண்டு வரும் கம்சனை அழித்த பகவான் கண்ணனை
தனது சப்தங்களால் ஆனந்தப் படுத்திக் கொண்டு இருக்கிறார்
அந்தப் பராக்ரம வீர தீரச் செயல் எங்களுடைய பாப கூட்டங்களை ஒழிக்க விளங்கட்டும் –

———–

பணிதிபிர் அமலாப் ருத்தி தாங்க
மணி ரபி பாதுஸ பக்ஷிணா மயம் ந
குணி வர புருஷோத்தமஸ்ய வாஹ
பணி ரமணீ ரமணீ யதா நிராஸ–16–

அர்த்த சம விருத்தம் புஷ்பி தாக்ரா விருத்தம் – -12-13-12-13-கண்ணி நுண் சிறுத்தாம்பு -அவிதித –தனியன் போல் இதுவும்

வேதங்களால் எழுந்த வடிவம் பெற்றவனும்
பறவைகளும் சிறந்தவனும்
நற் பண்புகள் நிறைந்த புருஷோத்தமனுக்கு வாஹனம் ஆனவனும்
பாம்புகளின் மனைவிகளின்  ஸுபாக்யத்தை -அந்தப் பாம்புகளைக் கொல்வதன் மூலம் நீக்குபவனுமான
இந்த கருடன் அடியோங்களை ரக்ஷித்து அருளட்டும் –

பணிதிபி ரமலா–அமல பணிதிகளால் -தூய வாக்கான வேதம் –விசுத்தானாம் வாசாம் -தேசிகன் தயா சதகத்தில்

வேதங்களால் எழுந்த வடிவம் பெற்றவன்
ஸூபர்ணோஸி கருத்மான் த்ரி வ்ருத்தே சிரஸ் காயத்ரம் சஷுஸ் ஸ்தோம ஆத்மா ஸாம தே தனூ
வாமதேவ்யம் ப்ருஹத் ரதந்த்ரே பஷவ் யஜ்ஞாயஜ் நியம் புச்சம் சந்தாம்ஸி அங்காநி திஷ்ணியா ஸபா யஜும்ஷி நாம
காயத்ரி சந்தஸ்ஸு வேத அங்கங்களால் ஆனது என்றும்
கருடன் வேத அங்கங்களால் ஆனவன் என்றும் கொள்ளலாம் –

யஸ்ய ஸ்தோமாத்மந அசவ் ப்ருஹத் இதர கருத் தாத்ர்சாம்நாத புச்ச
ஸ்வா சந்த்யம் ந ப்ரஸூதாம் ஸ்ருதி சத சிகர அபிஷ்டுதாத்மா கருத்மான் —கருட பஞ்சாசஸ் -3-

சாமவேத சோமனே கருத்மான் -காயத்ரி மந்திரமே–காயந்தம் த்ராயதி இதி-அவன் திருக் கண்கள் -த்ரி விருத் மந்திரமே அவன் திரு முடி –
யஜுர் வேதமே அவன் திரு நாமம் – வேத சந்தஸ் ஸூக்களே அவன் அங்கங்கள்

“ஸ்தோமம்” என்னும் ஸாம வேத பாகமே அவரது ஆத்ம ஸ்வரூபம்.
“காயத்ரம்” என்கிற ஸாமம் அவருக்கு கண்கள்.
“த்ரிவ்ருத்” என்ற ஸாமம் அவருக்கு சிரசு.
யஜுர் வேதங்கள் அவருடைய திருநாமங்கள்.
சந்தஸ்ஸுக்கள் அவரது திருக் கரங்கள்.
“திஷ்ண்யம்” எனப்படும் வேள்வி மேடைகள் அவரது திருப்பாதங்கள்.
“வாமதேவ்யம்” என்கிற ஸாமம் அவரது திருமேனி,
“ப்ருஹத்” , “ரதந்தரம்” என்னும் ஸாமங்கள் அவருடைய இரு சிறகுகள்.
“யஜ்ஞாயஜ்ஞியம்” என்கிற ஸாமம் அவருக்கு வால்.
இவ்வாறு வேத பாகங்களெல்லாம் கருடனுடைய திருமேனிகளாய் விளங்குவதால்-கருடனை “வேத ஸ்வரூபன்” என்கிறார்கள் பெரியோர்.

குணி வர புருஷோத்தமஸ்ய வாஹ
கருடன் அம்ருத கலசம் கொண்டு வந்ததை பாராட்டி வேண்டிய வரம் கேட்க்கச் சொன்ன விஷ்ணு
வாஹனம் த்வஜமாக ஆக்கி அருளிய
வரம் அருளிய குணம்

தனது தாயான விநதைக்கு கொடுமை செய்த கத்ருவின் சந்ததியான பாம்புகளைக் கோரைப்பதால் கிழித்து
சித்தரவதை பண்ணி இரையாக்கிக் கொண்டதையே –
பக்ஷி தோரக என்ற பதத்தால் அடுத்த ஸ்லோகத்திலும்
இதில் –பணி ரமணீ என்று தொடங்கும் வரியாலும் குறிப்பிடுகிறார்

வக்ர யுக்தி-
பாம்புகளைக் கொல்லுபவன் என்று சொல்லாமல்—பாம்புகளின் மனைவிகளின்  ஸுபாக்யத்தை – நீக்குபவன்-என்று அருளிச் செய்தது –

——–

பக்ஷி ராஜ பவமே அஷி கோசர
பக்ஷி தோரக சுப  ஷிதாவிஹ
ரஷித அனக முனீஸ்வர ப்ரபோ
சிஷி தாமித தனூதி தோத்தம –17-ரதோத்ததா விருத்தம் -12-எழுத்துக்கள் அடி தோறும்

பறவைகளின் அரசனே
பாம்புகளைச் சாப்பிடுபவனே
குற்றமற்ற முனி ஸ்ரேஷ்டர்களை ரக்ஷிப்பவனே
பிரபுவே
நிறைய அஸுரர்களைத் தண்டித்தவனே
உத்தமனே
இந்த மங்களமான பூமியில் என் கண்ணுக்குப் புலப்படு

தேசிகருக்கு ப்ரத்யக்ஷமாகி ஹயக்ரீவ மந்த்ர உபதேஸம் அருளியது போலவே
தனக்கும் ப்ரத்யக்ஷமாக வேண்டுகிறார் –பக்ஷி ராஜ பவமே அஷி கோசர–என்ற வரியால்

கருடன் பாரசாலி -பார வாஹி –
இரையாக யானையையும் ஆமையையும் தூக்கிக் கொண்டு நைமிசாரண்யத்தில் மரக்கிளை மேல் அமர
அது முறிய ஆரம்பிக்க -அதன் கீழே வைகாசனர்கள் -வாலகில்யர்கள் -என்னும் முனிவர்கள் யாகம் செய்ய அந்த மரக்கிளையில் தலை கீழாகத் தொங்கிக் கொண்டு இருக்க
தனது அலகால் மரக்கிளையை எடுத்துக் கொண்டு யானையையும் ஆமையையும் கால் இடுக்கிலே பிடித்துக் கொண்டு வெகு தூரம் பறந்து வேறு ஓர் இடத்தில் போட்டு முனிவர்களை காத்த வ்ருத்தாந்தம்
இத்தையே ரஷிதாநக முனீஸ்வர -பதம் காட்டும்

வலகில்ய முனிவர்களின் குட்டை உருவத்தை ஏளனம் செய்ததால் அவர்களின் கோபத்துக்கு ஆளானான் தேவேந்திரன்
இன்னோர் இந்திரனை ஸ்ருஷ்ட்டி செய்ய யாகம் செய்தார்கள்
இந்திரன் காஸ்யப முனிவரின் உதவியை நாடினான் –
யாகத்தின் பலனை காஸ்யபருக்கு வழங்க அவரது மனைவி விநதைக்கு பிறந்த கருடனை பக்ஷிகளுக்கு இந்த்ரனாக்க பயன் படுத்திக் கொண்டதால் பஷீந்திரன் ஆனான்
இதையே பக்ஷி ராஜா -பஷீணாம் மணி என்று குறிப்பிடுகிறார் –

ப்ரஹ்லாதனின் குமாரன் விரோசனன் பாற் கடலில் பையத் துயின்ற பரமனின் கிரீடத்தைத் திருடி பாதாளத்துக்கு கொண்டு போக
முனிவர்களின் ஆணைப்படி கருடன் அங்கு சென்று அவனுடன் யுத்தம் செய்து கிரீடத்தை மீட்டு கண்ணன் இடம் சமர்ப்பித்த
விருத்தாந்தம் –சிஷி தாமித தனூதி தோத்தம-என்கிற வரியால் குறிப்பிடப் படுகிறது
இங்கு தானவோத்தமன் -விரோசனன் என்று கொள்ள இடம் உண்டு –

ரஷி தானக முனீஸ்வர ப்ரபோ –நாக பாசம் விடுவித்த விருத்தாந்தம் –அநகர்-சக்ரவர்த்தி திருமகனுக்கு ஸஹஸ்ர நாமங்களில் ஓன்று
அநகர்-முனிவர்களை ரக்ஷித்ததாகவுமாம்

சுப ஷிதவ் -ஒரே பதமாகக் கொண்டால் -மங்கள பூமியிலே -திரு நறையூரிலே -என்றவாறு
இரண்டு பதங்களாகக் கொண்டால் கருடன் மங்களமானவன் –
கருடனைப் பார்த்தாலும் கருட த்வனியைக் கேட்டாலும் மங்கள கரம் அன்றோ

இதே போல் தனூதி தோத்தம -ஒரே பதமானால் அசுர உத்தமனான விரோசனன்
இரண்டு பதங்களாகக் கொண்டால் -தானவர்களைத் தண்டித்தவனே உத்தமனே என்றவாறு

சிஷி தாமித தனூதி தோத்தம–சிஷித அமித தனூதித உ த்தம-மால்யவான் – மாலி -போன்ற தானவ நிரஸனம்
தானவர்கள் ராக்ஷஸர்களுக்கும் உப லக்ஷணம்

———

வருணாலய ஜா க்ருஹே ஸ்திதம்
தருணா ஸ்வர்க்க ஸதாம் ஸமக்ரமம்
அருணா வ்ரஜம் தமாஸ்ரயே
கருணா பூரித ஸுத்த மானஸம் –-18-அர்த்த சம விருத்தம் -ஸூந்தரீ என்ற பெயர் -10-11-10-11

நாச்சியார் கோயிலிலே இருப்பவனும்
வானவரின் மரத்தோடு -கற்பக மரத்தோடு -ஸமமான முறை கொண்டவனும்
அருணனுக்குத் தம்பியும்
கருணை நிரம்பிய தூய மனஸ்ஸூ உள்ளவனுமான கருடனை ஆஸ்ரயிக்கிறேன்

வருணாலய ஜா க்ருஹே ஸ்திதம் தருணா ஸ்வர்க்க ஸதாம் ஸமக்ரமம் –வரியால் -கற்பக மரம் விரும்பியதை அளித்து வியத்தற்கு உரியது ஆனால் போல்
கல் கருடனும் தனது பாரத்தால் அதிகரித்தும் குறைத்தும் வியப்பூட்டி அருளுகிறார் என்றும்
அபீஷ்ட பல அளிப்பதாலும் சமம் என்றவாறு

வக்ர யுக்தி
நாச்சியார் கோயிலில் என்று சொல்லாமல்-வருணாலய ஜா க்ருஹே ஸ்திதம் வருணனின் ஆலயமான சமுத்திரத்தில் உண்டான லஷ்மியின் க்ருஹம்-என்று அருளிச் செய்தது

———–

மருணா பவ நாம தாரிணா
குருணா தப்தம் அமும் ஜனம் ப்ருசம்
வருணாலய ஜா க்ருஹே அர்ச்சித
கருணா நிர்வ்ருதம் ஆதநோது மாம்--19-

ஸம்ஸாரமாகிய -பவம் என்னும் பெயரை ஏந்திய பாலைவனத்தில் வெகுவாகக்
கொளுத்தப்பட்டு இருக்கும் அடியேனை
கடலின் புதல்வியான திருவின் இல்லத்தில் -நாச்சியார் கோயிலில் வழி படப்படும்
புள் இறையான கருடன் தனது தகவால் வாட்டம் நீங்கி மகிழ்ச்சி பெறுவேனாகச் செய்து அருள வேண்டும் –

இந்த நெருப்புப் போன்ற பவத்தை அணைக்க கடலே தேவைப்படும் என்று குறிப்பால் உணர்த்தவே வருணாலயம் பத பிரயோகம்
கரை புரண்ட கருணைக் கடலான எம்பெருமானாலே இது சாத்தியம் என்று காட்டப்படுகிறது

———-

பயோதி கன்யா பவனே வஸந்தம்
வயோ அதிகம் கஞ்சன பாவயாமி
ரயோத்தரம் வேத மயம் யமா ஹு
ஜயோதயம் யேந ஜனா லபந்தே –20-

வேதத்தில் நிகர் இல்லாதவனாகவும் -மறைகளின் உருவகமாகவும் கூறப்படும் எவன் இடம் இருந்து
மக்கள் வெற்றியையும் எழுச்சியையும் பெறுகிறார்களோ
அப்படிப்பட்ட பாற் கடலின் மைந்தளான திருவின் இல்லத்தில் நாச்சியார் கோயிலில் வஸிக்கும்
ஓர் உயர்ந்த மிக மூத்த பறவை இறையைத் தொழுகிறேன் –

வயோதிகன்
பஞ்சவடியில் பெரிய உடையார் சீதாபிராட்டியை ரக்ஷிக்க முயன்றது போல்
இங்கும் பெரிய திருவடி மிதுன ரக்ஷணத்துக்காக -அடியார் ரக்ஷணமே மிதுனத்துக்கு உகப்பு
வயஸ் -ஆயுளையும் பறவையையும் குறிக்கும் -பறவைகளுக்கு இறைவன் என்றுமாம்
வேதமயம் தொன்மையானது முதியது
வயோ அதிகம் -வாயு போல் விரைவில் மோக்ஷம் அளிப்பவன் என்பதால் இந்தப் பத பிரயோகம்
ஜயோதயம்-ஜனங்கள் -த்ரை வர்ணிகர் என்ற நிர்பந்தம் இல்லையே -ஜெனித்தவர் அனைவருக்கும் அருள்பவர்

————

நாராயணம் யோ வஹதே ஸ ராகம்
ஸாராதிகம் யம் ஸூதியோ வதந்தி
ஆராதி தோய ஸத நேர மாயா
பாராயணம் தஸ்ய கரோமி நாம்நாம் –21-

எம்பெருமானான நாராயணனை உகப்புடன் யார் சுமக்கிறானோ
கற்றவர்கள் யாரை மிக வலிமை யுடையவனாகக் கூறுகின்றனரோ
மறைப்பொருளான யார் நாச்சியார் பி கோயிலிலே வழி படப்படுகிறானோ
அந்தக் கல் கருடனின் திரு நாமங்களை பாராயணம் செய்கிறேன் -எப்பொழுதும் படிக்கிறேன்

ஸாரம் -வலிமை -கருத்து பொருள்களில் வந்தது

மறையோனும் –மறைப்பொருளும் -மறை யுருவனும் இந்த ஸ்லோகங்களைக் கேட்டு உகந்து அருள்வார்கள் அன்றோ –

——–

பயோதி கன்யா ஸதனே விபாந்தம்
வயோ அதிகம் கஞ்சன பாவயாமி
அயோதிகோ யேந பவேத் பவே அஸ்மின்
பயோதய கோ அபி கதா அபி நஸ்யாத் –22-

பயோதி கன்யா ஸதனே விபாந்தம்
பாற் கடலில் தோன்றியவளான நாச்சியாரின் இருப்பிடமாகிய நாச்சியார் கோயிலில் பொலிவுடன் திகழும் கல் கருடன்
மலங்கும் வராலும் வாளையும் பாய் வயல் சூழ் தரு
நலம் கொள் வாய்மை அந்தணர் வாழும் நறையூரே
திர்யக்குகளும் மனிதர்களும் செழிப்புடன் விளங்கும் நாச்சியார் கோயிலிலே
நாச்சியாருடைய பூர்ண கடாக்ஷத்துக்கு இலக்காக வைநதேயர் விளங்குகிறார்

வயோ அதிகம் கஞ்சன பாவயாமி
வய -பறவைகளைக் குறிக்குந் சொல் –
அனைத்துப் பறவைகளைக் காட்டிலும் மேம்பட்டவர் -புள்ளரையன் –
அந்தக் கருடனைத் த்யானித்துப் போற்றுவோம்

அயோதிகோ யேந பவேத் பவே அஸ்மின்
யாருடைய அருளால் நமக்கு உயர்ந்த அனைத்து மங்களங்களும் உண்டாகின்றனவோ

பயோதய கோ அபி கதா அபி நஸ்யாத்
வருடைய அருளால் நமக்கு ஏந்திய பயமும் ஏற்படுவது இல்லையோ

சைகாம் பஞ்சா சதம் யா மதநுத விநதா நந்தனம் நந்தியிஷ்யன்
க்ருத்வா மவ்சவ் ததாஜ்ஞாம் கவி கதக கடா கேஸரீ வேங்கடேச
தாமே தாம் சீல யந்த சமித விஷதர வியாதி தைவாதி பீடா
காங்ஷா பவ்ரஸ்த்ய லாபா க்ருத மிதர பலைஸ் தார்ஷ்ய கல்பா ப வந்தி -கருட பஞ்சாசத் –52–பல ஸ்ருதி

பெரிய திருவடி அருள் பெற்ற ஸ்வாமி -ஹயக்ரீவர் பிரசாதம் -அருளிய இந்த பிரபந்தம்
நமக்கு பரம புருஷார்த்தம் பெறுவிக்கும்

——–

வாதஸ்ய ஜேதுர் விஹகேஸ்வரஸ்ய
தாதஸ்ய வாசா கரி கூர்ம போக்து
யாதஸ்ய நாகம் த்வம்ருதா பஹர்து
மா தஸ்ய கோ அப் யஸ்தி ஸமோ ஜகத்யாம் –23-

வாதஸ்ய ஜேதுர் –
தம்முடைய வேகத்தில் காற்றைப் போன்றவர்
சை லீம் நஸ் ஸப்த ஸைலீ லகிமத ரபஸஸ் சவ்து ஸாத்வீம் ஸூ பர்ண -கருட பஞ்சாசத்
கருடன் பறந்து செல்லும் வேகத்தில் மலைகளின் எடைகளே குறைந்து விடுகின்றனவாம்
அசையாத மலைகள் கூட நரையும் படியான வேகம்
காற்று வீச மரங்கள் மட்டுமே நகரும்
ஆகவே வேகத்தில் காற்றை வென்றவர்

விஹகேஸ்வரஸ்ய-பறவைகளின் அரசனான புள்ளரையனான கருடன்

தாதஸ்ய வாசா கரி கூர்ம போக்து
தனது தந்தையின் கூற்றை ஏற்று யானையையும் ஆண்மையையும் உண்டவர்
அமுதம் அபகரிக்கச் சென்ற போது வேடர் கூட்டத்தையே உண்டாபின்பும் பசி ஆறாது இருக்க
கஸ்யபர் ஆலோசனைப்படி யானையையும் ஆண்மையையும் உண்டு பசி ஆற்றினார்
ஜீவ க்ராஹம் க்ருஹீத்வா கமடம் கரடிம் ச பக்ஷயன் பக்ஷி மல்ல -கருட பஞ்சாசத்

யாதஸ்ய நாகம் த்வம்ருதா பஹர்து
தாயான விநதையை மீட்க்கும் பொருட்டு அம்ருதத்தை அபகரித்து வந்தவர்
ஹரித்வார் பிரயாகை நாசிக் உஜ்ஜயினி நான்கு இடங்களிலும் சிந்த கும்பமேளா நடப்பது ப்ரஸித்தம்

மா தஸ்ய கோ அப் யஸ்தி ஸமோ ஜகத்யாம்
ஒப்பார் மிக்கார் இலையாய -ந கச்சித் ஸமஸ்தே -கருட பஞ்சாசத் என்றபடி நிகரானவர் யாரும் இல்லையே

———

காரா க்ருஹாந்த கலிதாவ தாரம்
வாரா ணஸீ தாஹக சக்ர பாணிம்
தாரா தரம் கஞ்சன ஸம் வஹந்தம்
ஸாரா திகம் பக்ஷி பதிம் ப்ரபத்யே –24-

காரா க்ருஹாந்த கலிதாவ தாரம்
சிறைச்சாலையில் திரு அவதாரம் செய்த கண்ணபிரான்
நமது சம்சாரக் கட்டுக்களை உடைக்கவே உரலில் கட்டுண்டான்

வாரா ணஸீ தாஹக சக்ர பாணிம்
தன்னுடைய சக்ராயுதத்தால் காஸ்ட்டி நகரை எரித்தவன்
ஜய! பஞ்சாயுதீமுக்ய! நிர்தக்த காசீபுர! – ஹேதி புங்கவ ஸ்தவம் -2–நடாதூர் அம்மாள்

திருமாலின் ஐந்து ஆயுதங்களுள் முதன்மையானவனே! காசீ நகரத்தை எரித்தவனே! –

ஸ்யந்தநத் விரத வாஜி பதாதி ப்ராஜ்ய ஸுத பரி பாடி ஸம்ருத்தயா
சக்ர வஹ்னி விபேவேன ததா பூத் சந்த்ர சேகர விலேபந பூமா –யாதவாப்யுதம்
சாம்பலுக்கு பஞ்சம் ஏற்படாதபடி காசியை எரித்த வ்ருத்தாந்தம்

தாரா தரம் கஞ்சன ஸம் வஹந்தம்
கார் மேகங்களைப் போல் கரிய நிறத்தை யுடைய எம்பெருமானை வாஹனமாக இருந்து தாங்குபவர்

ஸாரா திகம் பக்ஷி பதிம் ப்ரபத்யே
பலம் நிறைந்தவராக பக்ஷி ராஜரை சரண் அடைகிறேன்
யஸ்மின் த்யவ் ப்ருத்வீ ச அந்தரிக்ஷம் ஓதம் மனஸ் ஸஹ பிராணைஸ் ச சர்வை –முண்டகம்
அவனையே தங்கி கைங்கர்யம் செய்பவர்

——–

காரா க்ருஹான் தர்ஜனி மாப்த வந்தம்
தாரா தரம் ஸ்வாம் ஸகதம் விதன்வன்
காரா க்ருஹான் மாம் பவ நாம தேயாத்
வீ ராஜ ராட் விஷ்ணு பதே விதத்தாம் –25-

காரா க்ருஹத்தினுள் பிறப்பை அடைந்த மேகத்தை ஒத்த ஸ்ரீ கிருஷ்ணனை முதுகில் சுமந்து செல்லும்
பக்ஷிகளின் ராஜாவாக விளங்கும் கல் கருடன்
அடியேனை சம்சாரம் என்னும் காரா க்ருஹத்தில் இருந்து எடுத்துச் சென்று ஸ்ரீ வைகுண்டத்தில் வைக்கட்டும்

காரா தாரா காரா வீரா -ப்ராஸம் ரமணீயம்

———-

வஸ்யோ விஷ்ணுர் யஸ்ய குணவ்கை
நஸ்யத் யம்ஹோ யஸ்ய த்ருஸா ந
பிரஸ்யன் த்யஸவோ யேனா ஹீனாம்
பஸ்யத் வஸ்மான் ஏஷஸ் கடாஷை –26-

எவருடைய குண கூட்டங்களால் ஸ்ரீ விஷ்ணுவானவர் வசியப்பட்டு உள்ளாரோ
எவருடைய கடாஷப் பார்வையினால் நமது பாபக் கூட்டங்கள் நசிக்கின்றனவோ
மேலும் பாம்புகளின் உயிர்கள் எவரால் பிரிந்து செல்கின்றனவோ
அப்படிப்பட்ட கருடாழ்வார் நம்மை குளிரக் கடாக்ஷித்து அருளட்டும்

இதிலும் வஸ்யோ -நஸ்யத் -பிரஸ்யன் -பஸ்யத் -ப்ராஸம் ராமணீயம்
பாபம் பாம்பின் விஷம் போல் சித்தரிக்கப்பட்டதும் மிக அழகு

——-

வஞ்சுள வல்லீ நாயக வாஹம்
அஞ்சன ஸம்மித விக்ரஹ வர்ணம்
மஞ்ஜூல ராஜத கவசம் வந்தே
ரஞ்ஜித சேவக மானஸ நேத்ரம் –27-

வஞ்சுலம் என்ற கொடியின் நடுவில் ஆவிர்பவித்ததால் வஞ்சுள வல்லி திரு நாமம்
வஞ்சுள வல்லி நாயகரான எம்பெருமானுக்கு வாஹனமானவரும்
எம்பெருமான் வர்ணமான கறுப்புக் கல்லான விக்ரஹமாதலால் கவசத்தால் அலங்கரிக்கப் பட்டவரும்
சேவார்த்திகளின் மனத்தையும் கண்ணையும் மகிழ்விப்பவரான கருடாழ்வாரை வணங்குகிறேன்

இங்கும் வஞ்சுள -அஞ்சன ம்-மஞ்ஜூல-ரஞ்ஜித–ப்ராஸம் -மிக ரஞ்சகம்

——————-

மூன்றாம் விஹாரம் -அநு ப்ராஸ விஹாரம்

பரஸ்ய பும்ஸஸ் ப்ரணய ஏக பாத்ரம்
பயோதி ஜாபத்தந க்லுப்த வாஸஸ்
பதோ தர ப்ராண கண அபஹாரீ
பதங்க ராஜ பரிதஸ் ஸ பாது –28-

பரஸ்ய பும்ஸஸ் ப்ரணய ஏக பாத்ரம்
பரம புருஷனான நறையூர் நம்பியின் அன்புக்குப் பாத்திரமானவர்
அவனது அன்பையும் அருளையும் பெற்று ஸம் ப்ரஸாதனாக விளங்கும் கருடன்
ஸர்வ காலத்திலும் ஸர்வ அவஸ்தைகளிலும் கைங்கர்யம் செய்யும் பேறு பெற்றுத் திகழ்கிறார்

தாஸஸ் ஸகா வாஹநம் ஆஸநம் த்வஜோ
யஸ்தே விதாநம் வ்யஜநம் த்ரயீமய: |
உபஸ்திதம் தேந புரோ கருத்மதா
த்வதங்க்ரி ஸம்மர்த்த கிணாங்கஶோபிநா ||-ஸ்தோத்ர ரத்னம் -41-

வேதங்களையே அங்கங்களாக உடைய அந்த கருடாழ்வார், உனக்கு அடியவனாகவும், நண்பனாகவும், வாஹனமாகவும்,
ஆஸனமாகவும், கொடியாகவும், விதானமாகவும், சாமரமாகவும் இருக்கிறார்;
மேலும் உன்னுடைய திருவடிகள் அவருடைய தோள்களில் அழுத்தியதால் ஏற்பட்ட தழும்புகளாலே ஒளிவிடுகிறார்;
உன்னுடைய ஸன்னிதியில் இப்படிப்பட்ட கருடாழ்வாரால் நீ வணங்கப்படுகிறாய் —

வேகோத்தாநாம் விதாநம் வ்யஜனமநு குணம் வைஜயந்தீ ஜயந்தீ
மித்ரம் நித்யாப்ய மித்ரம் யுதி விஜயரதோ யுக்ய யோகா நபேஷ
தாஸோ நிஷ் பர்யு தாஸோ தநு தநய பிதோ நி ஸஹாய ஸஹாய
தோ தூயே தஸ் மதீயம் துரிதம தரிதா ராதி பஷை ஸ்வ பாஷை -கருட பஞ்சாசத் -46-

வேகோத்தாநாம் விதாநம் -விதானமாகவும் கைங்கர்யம் –
வ்யஜனமநு குணம் -விசிறியாகவும் கைங்கர்யம்
வைஜயந்தீ ஜயந்தீ -வெற்றிக்கு கொடி யாகவும்
மித்ரம் நித்யாப்ய மித்ரம் -நண்பன் -விரோதி நிரசனத்துக்கு உதவி
யுதி விஜயரதோ யுக்ய யோக அநபேஷ-குதிரை வேண்டாத ரதமாகவும் கைங்கர்யம் –
தாஸோ நிஷ் பர்யு தாஸோ -விட்டு விட மாட்டாத சேஷ பூதர்
தநு தநய பிதோ நிஸஹாய ஸஹாய -வேறே சகாயம் வேண்டாத சகாவாகவும்
தோ தூயே தஸ் மதீயம் துரிதம தரிதா ராதி பஷை ஸ்வ பாஷை -பக்ஷங்களை கொண்டு விரோதி நிரசனம்
பண்ணுவது போலே நம் பிரதிபந்தகங்களை போக்கி அருளுபவர்
இதில் -வைஜயந்தி ஜெயந்தி –நிஸ் ஸஹாய ஸஹாய –பர்யு தாச தாச – சப்த பிரயோகங்கள் அனுபவிக்கத்தக்கன

பயோதி ஜாபத்தந க்லுப்த வாஸஸ்
பாற் கடலில் தோன்றிய பெரிய பிராட்டியாரின் தேசமான நாச்சியார் கோயிலிலே நித்ய வாஸம் செய்து அருளி
மிதுனத்தின் அருளை வெகு விரைவில் நமக்குத் பெற்றுத்தர வல்ல கருடன்

பதோ தர ப்ராண கண அபஹாரீ
வயிற்றையே காலாக யுடைய பாம்புகளின் உயிரை அபஹரிப்பவர்

பதங்க ராஜ பரிதஸ் ஸ பாது —
புள்ளரையன் நம்மை எல்லாப் புறங்களிலும் இருந்து கொண்டு ரக்ஷிக்க வேண்டும்
அடியார்களை நாற் புறங்களிலும் இருந்து ரக்ஷிப்பதற்காகவே
வாஸூ தேவன் -ப்ரத்யும்னன் -அநிருத்தன் -சம்கர்ஷணன் -புருஷோத்தமன் -ஐந்து உருவங்களுடன் இங்கு ஸேவை சாதித்து அருளுவது போல்
பெரிய திருவடியும் -ஸத்யன் ஸூ பர்ணன் -கருடன் -தாஷ்யன் -விஹ கேஸ்வரன் -என்று ஆகமம் சொல்லுவது போல்
ஐந்து வடிவங்களுடன் இருந்து நம்மை ரக்ஷித்து அருளுகிறார்-

————-

பதே பயோதே ப்ரிய கன்யா காயா
பதாப்ஜ ஸஞ்சார பவித்ரிதே அஸ்மின்
பதோ தரா மோத விஹார ஹாரி
பதே பதே ஸம் பதமாத நோது –29-

பதே பயோதே ப்ரிய கன்யா காயா
பாற் கடலின் அன்பு மகளான மஹா லஷ்மியின் தேசமான நாச்சியார் கோயிலிலே
பிராட்டி பாற் கடலில் நின்றும் அவதரிக்கையில்
ரதிர் மதி சரஸ்வதீ த்ருதி ஸம்ருத்தி ஸித்தி ஸ்ரீய
ஸூதா ஸகி யதோ முகம் சிசலிஷேத் தவ ப்ரூலதா —ஸ்ரீ குணரத்ன கோசம் -17என்னும்படி
அவள் கடாக்ஷம் தேவர்களுக்கு மட்டுமே கிட்டியது
இங்கு வந்து நித்யவாஸம் செய்து நம் போல்வாருக்கும் கிட்டியதால் பாற் கடலை விட இது அதி விலக்ஷணம்

பதாப்ஜ ஸஞ்சார பவித்ரிதே அஸ்மின்
பிராட்டி திருவடி ஸ்பர்சத்தால் மேன்மை பெற்ற திவ்ய தேசம்

ஸுரபித நிகமாந்தம் வந்திஷீய இந்திராயா:
தவ கமல பலாச ப்ரக்ரியம் பாத யுக்மம்
வஹதி யதுபமர்தை: வைஜயந்தீ ஹிமாம்ப:
ப்லுதிபிரிவ நவத்வம் காந்த பாஹாந்தராளே–39-

ஸ்ரீரங்கநாயகி! நீ உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் திருமார்பில் எப்போதும் அமர்ந்துள்ளாய்.
உனது திருவடிகள் படுவதால், அவன் அணிந்துள்ள வைஜயந்தி என்ற மாலை வாடாமல் உள்ளது;
அதன் மீது குளிர்ந்த நீர் தெளித்தது போன்று எப்போதும் புதிதாகவே உள்ளது.
இப்படிப்பட்ட உனது திருவடிகளைப் போற்றும் வேதாந்தங்கள், மேலும் சிறப்படைந்து மிகுந்த மணம் வீசுகின்றன.
தாமரை மலர் போன்றுள்ள உனது இத்தகைய திருவடிகளை நான் சரணம் என்று வணங்குகின்றேன். (என்னை நழுவவிடாதே).

ஸ்ரீரங்கநாச்சியார் எப்போதும் தனது திருவடிகளை அவனது மாலைகளின் மீது படும்படி வைப்பதாலேயே
அவனது மாலைகள் வாடாமல் உள்ளன என்று கருத்து.

பதோ தரா மோத விஹார ஹாரி
வயிற்றையே காலாக யுடைய பாம்புகளின் உத்ஸாஹ விளையாட்டுக்களை அபஹரித்துக் கொண்டு எழுந்து அருளி இருக்கும் கருடன்

பதே பதே ஸம் பதமாத நோது —
நம் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் வளங்களை அருளட்டும்-

————

பத்ம நிவாஸ ஸதந பரமஸ்ய வாஹ
பஷா நில ஷபித பன்னக ராஜ ராஜி
பா காரி ஸைன்ய பரி பாவுக வீர்ய லேச
பத்யானி மே திசது பத்ர ரதாவ தம்ச -30-

பத்ம நிவாஸ ஸதந
நாச்சியார் கோயிலிலே நித்யவாஸம் செய்து அருளும் கருடன்
பிராட்டி ஸ்தானம் -சாடு -இவரும் புருஷகார பூதர்
கருட மந்த்ரம் ஜெபித்து அவர் புருஷகாரத்தால் ஹயக்ரீவருடைய லாலாம்ருதம் பெற்றார் அன்றோ நம் தேசிகர் ஸ்வாமி –

பரமஸ்ய வாஹ
பரம புருஷனான நம்பிக்கு வாஹனம்

பஷா நில ஷபித பன்னக ராஜ ராஜி
தனது இறக்கை களின் காற்று அசைவாலேயே பாம்புகளின் கூட்டங்களை எல்லாம் வென்றார் –
பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி -என்று ஈடுபட்டு அருளிச் செய்கிறார்
சிறகு ஒலியே ஸாம கானம்

பா காரி ஸைன்ய பரி பாவுக வீர்ய லேச
இந்திரனுடைய ஸேனையை தனது வீரத்தின் லவ லேசத்தாலேயே வென்றவர்
ஸ்தம்பிதே ஜம்ப ஸத்ராவ் –ஸ்வாமி தேசிகன்

பத்யானி மே திசது பத்ர ரதாவ தம்ச –
அந்த புள்ளரையன் அடியோங்களுக்கு நன்மைகளை செய்து அருளட்டும்

—————–

பாதாளாந்த ப்ரவிஷ்ட பயபரமதிகம் வர்தயன் பன்ன கானாம்
பத்மா காந்தம் வஹந்தம் பதி சதி மருதாம் பஸ்யதாம் அஷி ஜாதே
பாதோ மோதாபி ஜாதம் கிமபி விகலிதம் ஷாலி தாகம் விதன்வந்
பத்மா சத்மா பிராம பதிக பரிப்ருடஸ் பாது பாஷாணா வர்ஷ்மா –31-பகாரத்தில் ஆரம்பிக்கும் பதங்கள் நிறைந்த ப்ராஸம்

பத்மா சத்மா பிராம -நாச்சியார் கோயில் திவ்ய தேசத்தில் தனது வாசத்தால் இனியதாக ஆக்கியவரும்-மிதுன ஸம்பந்தத்தால் அழகு அடைந்தவர் -என்றுமாம் –காலசோபி கௌஸ்துபம் -ஸ்ரீ மத் பாகவதம் -கழுத்தில் பிரகாசிக்கும் கௌஸ்துபம் என்றும் கொழுத்தால் பிரகாசிக்கும் கௌஸ்துபம் என்றும் கொள்ளுமா போல்
பதிக பரிப்ருடஸ்-பக்ஷிகளுக்குத் தலைவரும்
பாது பாஷாணா வர்ஷ்மா-கல்லாலான -கல்லைப் போன்ற திருமேனியை யுடையவரும்-கல்லைப் போன்று நிச்சலமான பக்தி கொண்டவர் –

பாதாளாந்த –பாதாளத்தின் முடிவில்- எல்லையில்
ப்ரவிஷ்ட –ப்ரவேசித்து
பன்ன கானாம்–பாம்புகளின்
பயபரமதிகம் வர்தயன் –பயத்தின் பாரத்தை அதிகமாக வளர்ப்பவரும்
தம் –அந்த அத்தகைய பெருமை பெற்ற
பத்மா காந்தம் -ஸ்ரீ லஷ்மீ காந்தனான எம்பெருமானை
பதி -வழியில்
வஹந்தம் –தாங்கிக் கொண்டு செல்பவரும்
சதி -நல்ல
பஸ்யதாம்–அதனைப் பார்க்கும்
மருதாம் –தேவர்களுடைய
அஷி ஜாதே சதி –கண்களின் கூட்டத்தில்
மோதாபி ஜாதம் –சந்தோஷத்தால் ஏற்பட்டதும்
கிமபி –ஒப்பற்றதும்
ஷாலி தாகம்–பாபத்தை நீக்கிய
பாத -ஆனந்தக் கண்ணீரை
விகலிதம் -விழுந்த
விதன்வந்-செய்பவருமான பெரிய திருவடி
பாது–காக்கட்டும்

பத்மா காந்தம் வஹந்தம் பதி சதி மருதாம் பஸ்யதாம் அஷி ஜாதே-என்று சேர்த்துப் பார்த்தால்
அம்ருதம் பானம் செய்தும் நாம் இவ்வாறு கைங்கர்யம் செய்யப்பெற வில்லையே
த்யாகேன ஏக ந அம்ருதத்வ மானஷு –தியாகத்தாலேயே எம்பெருமானை அடைய முடியும் என்று உணர்ந்து
பெரிய திருவடியைக் கொண்டாடி ஆனந்தக் கண்ணீர் பெருகினர் தேவர்கள் –

வஜ்ராதபி கடோராணி ம்ருதூநி குஸூமாதபி –உடல் கல்லானாலும் உள்ளம் கருணை மிக்கு
வரப்பிரஸாதி யாக திகழும் பெரிய திருவடி அடியோங்களை ரக்ஷிக்க வேண்டும்

————

பாரம்யஸ் யைக பாத்ரம் பசகதி ஜூஷாம் பன்னக ப்ராண ஹாரீ
பாரா பேதாக மாத்மா ப்ரணத ஜன மனச் சிந்திதார்த்த ப்ரதாதா
பாதோஜா க்ஷஸ்ய வாஹஸ் பதக பரிப்ரூட பாதுமாம் பாப ப்ருந்தாத்
பாரா வராத்மஜாதா சதந புர வரஸ்ரீ க்ருஹே ராஜ மாந–32-

பசகதி ஜூஷாம்-மிகவும் வேகம் யுடையவர்களுக்குள்
பாரம்யஸ் யைக பாத்ரம் –முதல் ஸ்தானம் வஹிப்பவரும்
பன்னக ப்ராண ஹாரீ–பாம்புகளின் பிராணனை அபஹரிப்பவரும்
பாரா பேதாக மாத்மா –கரையில்லா முடிவில்லா -அநந்தமான வேத வடிவானவரும்
ஸந்தோ மயேந கருடேந -ஸ்ரீ மத்பாகவதம்
ஸ்ருதி சத சிகர அபிஷ்டு தாத்ம கருத்மான் என்றும்
ஸ்ருதி ஸிந்து ஸூதோத்பாத மந்தராய -என்றும் தேசிகரும்
யஸ்ய நிஸ் ஸ்ர வஸிதம் வேதா -எம்பெருமானின் மூச்சுக்காற்றே கருடாழ்வார்
ப்ரணத ஜன மனச் சிந்திதார்த்த ப்ரதாதா–தன்னை வணங்கும் ஜனங்களின் மனத்தால் நினைக்கப் பெற்ற ஐஸ்வர்யம் அனைத்தையும் அளிப்பவரும்
பாதோஜா க்ஷஸ்ய வாஹஸ் –தாமரைக் கண்ணனின் வாஹனமானவரும்
பதக பரிப்ரூட –பக்ஷிகளின் தலைவரும்
பாரா வராத்மஜாதா சதந புர வரஸ்ரீ க்ருஹே –ஸமுத்ர கன்னிகையாய் ஆவிர்பவித்த பெரிய பிராட்டியார் யுடைய திவ்ய க்ஷேத்ரமான நாச்சியார் கோயிலிலே
ராஜ மாந–பிரகாசிப்பவரான பெரிய திருவடி
பாது மாம் பாப ப்ருந்தாத்-அடியேனை பாபக் கூட்டங்களில் இருந்து ரக்ஷிக்கட்டும்

—————–

ஜாதோ வாதோ அநு கந்தம் யமிஹ கதி பதே நோ மனாகப் யலம் ஸ
ஜாயே ருத்ரா ஸூ கீர்த்தீ கடித விகடிதே ஹ்ருஷ்யதோ யேன சீக்ரம்
ஜாலம் பாபஸ்ய மே அஃலம் ஹரது ஸ பகவானண்ட ஜானாம் ப்ரதான
ஜாநக்யா நந்தத ஸ்ரீ ரகு குலஜ மணே ஜீவிதஸ்ய ப்ரதாதா –33-

அநு கந்தம் யம் –எவரைப் பின் தொடர்ந்து
ஜாதோ வாதோ இஹ –தோன்றிய காற்றும் கூட இங்கு
கதி பதே நோ மனாகபி யலம் ஸ–வேக விஷயத்தில் லவ லேசமும் கூட ஈடு கொடுக்க முடியவில்லையோ
யேன கடித விகடிதே-எவரால் பிரிந்து சேர்ந்தால்
ஜாயே ருத்ரா ஸூ கீர்த்தீ ஹ்ருஷ்யதோ சீக்ரம்–ருத்ரா ஸூ கீர்த்தீ என்னும் அவருடைய இரண்டு பத்னிகளும் சீக்கிரமாக ஸந்தோஷப்படுகிறார்களோ
ஜாநக்யா நந்தத ஸ்ரீ ரகு குலஜ மணே ஜீவிதஸ்ய ப்ரதாதா–சீதாப்பிராட்டிக்கு ஆனந்தம் கொடுத்த சக்ரவர்த்தி திருமகனுக்கு உயிரைக் கொடுத்தவரும்
அண்ட ஜானாம் ப்ரதான ஸ பகவான–பக்ஷிகளில் முக்யமானவருமான அந்தப்பெரிய திருவடி
ஜாலம் பாபஸ்ய மே அஃலம் ஹரது –என்னுடைய பாபத்தின்–என்னைத் தாக்குவதற்குத் தேவையான கூட்டமான வலையை அபஹரிக்கட்டும்

யதா தாதம் தசரதம் யதாஜம் ச பிதா மஹம்
ததா பவந்த மாஸாத் ஹ்ருதயம் மே ப்ரஸித்தி -யுத்த -50-43-பெருமாளுக்கும் திருவடியின் தரிசனத்தால் மிக ஆனந்தம்

ந ஹி தம் பரி பஸ்யாமி யஸ் தரேத மஹோததிம்
அந்யத்ர கருடாத் வாயோர் அந்யத்ர ச ஹனுமத -யுத்த -1-3- பெருமாள் கூற்றில் கருடனே முதலில்

த்ராயண மேவ பூதா நாம் சங்ரஸ் யாஸ்ய லங்கேந
ஸக்திஸ் ஸ்யாத் வைநதேயஸ்ய தவ வா மாருதஸ்ய வா -ஸூந்தர –68-9- பிராட்டி கூற்றிலும் கருடனுக்கே முதல் ஸ்தானம்

ஹரது -பத பிரயோகம் அம்ருதம் அநாயாசேன அபஹரித்தது போல் நமது பாபங்களையும் அபஹரிக்க வல்லவர்
யதா ராஜா ததா ப்ரஜா -நியாயப்படியும் ஹரியின் செயல் போல் பெரிய திருவடியின் செயல்களும்

——————-

வஸூமதி சதகத்தில் –ம -எழுத்து 18 தடவை வரும்படி
மாந்யே மாநிதி மாரகேலிதயிதே மாராரி மாந ப்ரதே
மாயா வாரிணீ மதுரி போஸ் ஸம் மோஹிநீ ஸ்வாமிநீ
மாலா லாலித மூர்த ஜாத மஹிதே மந்தார வாஸைர்நதே
மாதர் மாதவி மஞ்ஜூளா தர தலே மந்தம் தயேதா மயி–இதே போல் வார்த்தை விளையாட்டு இதிலும் உண்டே

உபலவ புஷமீடே நாயகம் பஷ பாஜாம்
உபல முபல மஸ்மின் இந்திரா மந்திரே ந
உப லலித நிதாநம் ஸ்ரீ பவர்காத்ரு தாக்யம்
கமபி பஹு விசித்ரம் ஸ்வா பவர்க ப்ரதம் தம் –34-

உபலவ புஷமீடே நாயகம் பஷ பாஜாம்
அழகிய கல்லாலான திருமேனியோடு விளங்கும் பறவைகளின் அரசனான
கல் கருடனை வணங்குகிறேன்

உபல முபல மஸ்மின் இந்திரா மந்திரே ந
நாச்சியார் கோயிலிலே எழுந்து அருளி இருந்து நமக்கு நற் பயன்களை உறுதியாக அளிப்பவரும்
என்பது ஏவ பொருளில் வந்துள்ளது
உபாசகர்களுக்கு இவர் பலம் அளிப்பது உறுதி என்பதால் இவரை உபலர் என்கிறார்
-நாச்சியார் -இவரைப் பலமாகக் கொண்டவரும் -அவரே யாருக்குப் பலமோ அவரே உபலர் என்றபடி

உப லலித நிதாநம்
-சந்திரனையும் குறிக்கும்
ஷோடச கலாத்கமக –சந்த்ர மண்டல ரூபேண உகாரஸ்ய த்யேயத்வ உக்த்யா அபேதா உபசாராத் ஷோடச கலாத்மகே சந்த்ரே –வாசஸ்பதியை கலைக்களஞ்சியப்படி
உகாரம் பூர்ண சந்த்ரனைக் குறிக்கும் –
பா என்னும் சொல் ஒளியைக் குறிக்கும்
சந்திரனுக்கு யாரால் ஒளியோ அவர் உபர் ஆகிறார்
சந்த்ர மண்டலத்தில் கோயில் கொண்டு ஒளிரச் செய்யும் ஸ்ரீ லஷ்மீ ஹயக்ரீவனே உபர்
அவருடைய லலிதம் லீலை -அதற்க்கு காரணமானவர் உப லலித நிதானம் –
ஸ்வாமி தேசிகனுக்கு ஹயக்ரீவ மந்த்ர உபதேசம் செய்து அருளி அவர் மூலம் ஸ்ரீ லஷ்மீ ஹயக்ரீவர் உடைய லீலையாக
பல பிரபந்தங்கள் வரக்காரணமாக இருந்தவர் ஆதலால் கருடன் உப லலித நிதானம் –என்றபடி –
அன்றிக்கே
உப -இரண்டு விபூதிகளிலும் எம்பெருமான் லீலைகள் செய்து அருள வாஹனமாக -துணையாக இருப்பதால்
இவரை உப லலித நிதானம் என்கிறார்
உப என்னும் சொல் ஸமாஸங்களில் உபய என்கிற வடிவத்தில்
வ்ருத்தி மாத்ரே நித்யம் வ்யவச் -இலக்கண நெறியின் படியே உப வேதாந்தம் உப விபூதி என்னாமல்
உபய வேதாந்தம் என்றும் உபய விபூதி என்றும் கூறும் மரபு உண்டே

ஸ்ரீ பவர்காத்ரு தாக்யம்
இப்படி உபல -ப வர்க்கத்தை ப வரிசையில் உள்ள நான்கு எழுத்துக்களுடைய சொற்களால் போற்றப்படுபவர்

கமபி பஹு விசித்ரம் ஸ்வா பவர்க ப்ரதம் தம் —
பவர்க்கத்தால் போற்றப்படுபவராய் இருந்தாலும் அபவர்க்கம் என்னும் மோக்ஷத்தையும் அளிக்க வல்லவர்
அப்படி புகழ் பெற்ற ஒப்பற்ற ஆச்சார்யமான ஒருவரை

ஈடே –வணங்குகின்றேன்

————

விநதாத்மபவோ விநதா தரவாந்
விஹ்ருதம் தத்தே ததிதம் யுக்தம்
ஸூரஸஸ் ஸூதராம் ஸூர ஸாத்ம பவான்
ஹரதீத் யேதத் பாதி விசித்ரம் –35-

விநதாத்மபவோ விநதா தரவாந் விஹ்ருதம் தத்தே ததிதம் யுக்தம்
விநதை –விநயத்துடன் வணங்கியவள்
அவள் மகனான கருடன் வணக்கத்துடன் வந்து அவன் அடி பணியும் வினதர்கள் இடம் ஆதாரம் காட்டிப் பல லீலைகளை புரிவது சரியானதே

ஸூரஸஸ் ஸூதராம் ஸூர ஸாத்ம பவான் ஹரதீத் யேதத் பாதி விசித்ரம் –
ஆனால் பல ரசங்களை மிகுதியாக உடையவனாக –ஸூ ரசனாக -சுவையன் திருவின் மணாளன் -திருமாலுக்கு
அந்தரங்கனாக இருப்பதால் ஸூ ரசனாக இருந்த போதும்
நாக மாதாவாகிய ஸூரஸா வினுடைய பிள்ளைகளான பாம்புகளை வதைக்கிறாரே
இது மிகவும் விசித்திரமாக அன்றோ உள்ளது –

இதே போன்ற சமத்காரத்தை கஜேந்திர மோக்ஷம் விஷயமாக அருளிச் செய்த
குஞ்சரா ரத்னத்தின் பல ஸ்லோகங்களில் ஸ்வாமி அருளிச் செய்துள்ளார்-மாதிரிக்கு ஓன்று

விபதா ஸ்வ பத அவலம்பயா
விநதந் நார்த்தமநாஸ் ஸரோகத
விபதம் புநரா ஜூஹாவ ஹா
விரஜாதீர புவோ கஜாதிப

விபத்து ஏற்பட்ட உடன் விபத்தாகிய எம்பெருமானை -வி கருடன் -திருவடியாகக் கொண்டு விளங்குவதால் இவனே விபத்து –

குண்டு நீருரை கோளரீ மதயானை கோள் விடுத்தாய் –யானையைக் காத்த சிங்கமே –
பொதுவாக யானையைப் பகையாகக் கருதும் ஸிம்ஹமே அதனை ரக்ஷித்து அருளிற்றே

இதே போல் ஸூ ரசனாக விளங்கும் கருடனே
ஸூ ரசனாவின் பிள்ளைகளைக் கொல்கிறானே என்று
கவி நயத்துடன் முரண்பட்டு காட்டி அருள்கிறார்

————

பதங்க ராஜ பலதோ நதாநாம்
பலிஷ்ட துர்யோ பகவான் மஹாத்மா
பவர்க ஹ்ருத்யோபி விபாப வர்க
விபாப வர்கோ அப்ய வரக தாயீ--36-

பதங்க ராஜ பலதோ நதாநாம்
வரப்ரசாதியாக அடியார்களுக்கு அபீஷ்டங்களை தந்து அருளுபவர்
ஏழு வியாழக்கிழமைகள் தொடர்ந்து அர்ச்சனை செய்வோர் பெறும் பலன்கள் இன்றும் கண் கூடாகக் காண்கிறோம்

பலிஷ்ட துர்யோ பகவான் மஹாத்மா
பலசாலிகளில் சிறந்தவர் -ஷாட் குண்ய ஸ்மேர -அவனைப் போலவே பகவானாகவும் மஹாத்மாவாகவும் விளங்குபவர்

பவர்க ஹ்ருத்யோபி விபாப வர்க
ப வர்க்கத்தில் வரும் அணைத்தாலும் போற்றப்பட்டவராய் இருந்தும்
பாப வர்க்கங்கள் தீண்டப்படாமல் தூய்மையாக அபஹத பாப்மாவாக விளங்குபவர்

விபாப வர்கோ அப்ய வரக தாயீ
பாப வர்க்கங்களால் தான் தீண்டப்படாமல் இருப்பதற்கும் மேலே அபவர்க்கமான மோக்ஷத்தை அளிக்க வல்லவர்

————-

விநாத நந்தன விநாத நந்தன
ஸூரஸா பூ ஹர ஸூரஸா பூ ஸூக
கமலா வேஸ்மணி கமலா வேஸ்மச
வசதா வஹதா பவதா அஸ்மி ஸூகி –37-

விநதையின் மைந்தனே
வணங்குபவர்க்கு மகிழ்ச்சியை அளிப்பவனே
நாகங்களை அழிப்பவனே
சிறந்த ஆனந்தத்தை அளிக்கும் பூமிப்பிராட்டியாருக்கும் ஆனந்தம் அளிப்பவனே-பூமியில் உள்ள மக்களுக்கும் ஆனந்தம் அளிப்பவரும்
நாச்சியார் கோயிலில் வசிப்பவனும்
பெரிய பிராட்டியாரின் இருப்பிடமான எம்பெருமானை தாங்குபவனுமான
உன்னால் அடியேன் ஆனந்தமுடையவனாக இருக்கிறேன் –

———-

சம்பா ரமா யஸ்ய ஸ கால மேக
ஸம் ஸத்ய ஜஸ்ரம் யமிமம் வஹந்தம்
சங்காகுலம் ஸர்ப குலம் ஸ தன்வன்
ஸத் நச்சு குந்த பரமஸ் தநோது–38-

எவனுக்குப் பெரிய பிராட்டியார் மின்னல் போன்றவளோ
நீருண்ட மேகம் போன்றவனான அந்தப் பகவான்
தன்னை எழுந்து அருளப் பண்ணும்
எந்த இப்பஷி ராஜனைப் பெருமையாகக் கூறுகிறானோ
அந்தப் பக்ஷி ராஜன் பாம்புகளின் ஸமூஹத்தை ஸம்சயத்தினால் கலங்கியதாகச் செய்து கொண்டு
நமக்கு மங்களத்தைப் பரவச செய்ய வேண்டும்

———–

சகுந்தலா யத் குல லாலிதா ஸா
ச ஸாங்க தர்பம் முகதோ ஹரந்தீ
சசாங்க வம்சஸ்ய ததவ் ப்ரகாஸம்
சகுந்த ராஜஸ் ஸ தநோது சம்ந–39-

சந்திரனின் கொழுப்பினை முகத்தின் வாயிலாக போக்குபவளான
எந்த சகுந்தலை சந்த்ர வம்சத்தின் ஒளியை கொடுத்தாளோ அவள்
எந்த பக்ஷிராஜனின் குலத்தால் பேணப்பட்டாளோ
அந்தப் பக்ஷி ராஜன் நமக்கு மங்களங்களைக் கொடுக்க வேண்டும் –

————-

ஸ்ருதி ஸ்வரூபே த்வயி சந்நிவிஷ்ட
ஸ்ருதீ நிநாதை ஸூ கய த்யுதாரை
ஸ்ருத்யேக கம்யான் கலயன் அராதீந்
ஸ்ருத்யேக கம்யஸ் ஸ்வ சமான் விதத்தே–40-

தாராளமான ஒலிகளால் கேட்ப்போரின் இரு காதுகளையும் –காதுகளிலும் -இன்பம் பெருக்குபவரான
ஸ்ருதி ஸ்வரூபே -வேதாத்மா விஹகேஸ்வர -வேதத்தை சரீரமாகக் கொண்ட வேதாத்மாவான உம்மிடத்தில் உம்மை –
சந்நிவிஷ்டர் -நன்கு உறைந்தவன் -த்ருட பிராமண ஸித்தி உள்ளவன் -வேதத்தின் சுவைப் பயன் -எழுந்து அருளி இருப்பவராக -ஏறி அலங்கரிப்பவராக வேதத்தால் மட்டுமே அறியப்படுபவரான-க்ருத்ய ஏக கம்யரான -எம்பெருமான்
விரோதிகளையும் தனக்கு ஸமமாக ஸ்ருதி ஏக கம்யர்களாக
காதால் மட்டுமே கேட்கப்படும் முடிவு எய்தியவர்களாக
வேத ஸப்தங்கள் ஆஸ்திகர் செவிகளுக்கு இனிமையாய் இருக்கும் –
வேத வடிவமான கருத்மானின் த்வனியும் பக்தர்கள் செவிகளுக்கு இனிமையாகவும்
எம்பெருமான் விஸ்லேஷத்தால் வாடும் பக்தர்களுக்கு அவனது
வரவைப் பறை சாற்றும் உயிர்க்காப்பாகவும் இருக்குமே-

கண்களால் காண வரும் கொல் என்ற ஆசையால்
மண் கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்து செல்
பண் கொண்ட புள்ளின் சிறகொலி பாவித்துத்
திண் கொள் ஒர்க்கும் கிடந்து என் செவிகளே-

ஸ்ருதி என்ற சொல் -மறை என்னும் பொருளில் முதல் கடைசி வரிகளிலும்
காது என்னும் பொருளில் இரண்டாம் அடியிலும்
கேட்டல் என்னும் பொருளில் மூன்றாம் அடியிலும் பிரயோகிக்கப் பட்டுள்ளது

———-

அம்ஸே ஸ்திதஸ்ய புருஷஸ்ய பரஸ்ய காந்த்யா
அம்போத வத் கிமிஹ பாஸி சிலா கருத்மான்
அஸ்ய அங்க்ரிஜா சரிதுபா வ்ருதவத் கிமேவம்
அத்ராசி தத் ரஜத கஞ்சுக ஸம் வ்ருதாங்க –41-

ஓ கல் கருட ஸ்வாமியே -இந்த திரு நறையூர் தேஸத்தில் தோளில் இருக்கிற புருஷோத்தமனான
விஷ்ணுவுடைய திருமேனியின் கறுத்த ஒளியாலே கார் மேகம் போல் கறுத்தவனாக ஒளிர்கிறீரோ
எம்பெருமானுடைய திருவடியில் தோன்றிய கங்கையினால் சுற்றப்பட்ட -மறைக்கப்பட்டவர் போல்
இவ்வாறு அப்படிப்பட்ட வெள்ளிக் கவசத்தினால்
சாற்றப்பட்ட திருமேனி யுடையவராக வெண்மையாக இங்கே இருக்கிறீரோ

கங்கா நதியே கவசமாக ஆனாளோ
ஸாரூப்யம் அருளியது தோன்றுமே
தேவதைகளும் எம்பெருமான் அடியார்களுக்கு ஸேவை புரிவார்கள் அன்றோ –

—————

வாராசி கன்யா சதனே அதி மான்யம்
வாஸம் பஜந்தம் விஹகாதி நாதம்
வாஸாம் பரை தேஹி நமாமி ஹீனை
வாஹம் ஹரே ரத்ன ரஹம் வஹாமி –42-

அடியேன் கொண்டாடத்தக்க நாச்சியார் கோயிலிலே நித்ய வாஸம் செய்பவரும்
பக்ஷிகளுக்குத் தலைவரும்
வாஹனமாகவும் உள்ள கருடாழ்வாரை
ப்ரயோஜனாந்தரர் போல் இன்றிக்கே அநந்ய ப்ரயோஜனராய்
சொற்களின் சுமைகளால் -ஸ்துதிகளால் மனதுக்குள்ளே த்யானிக்கிறேன்

எனது உள்ளத்துக்குள்ளே பறக்கும் அவனும் நிலையாக வீற்று இருக்க
அவனுடன் மிதுன தம்பதிகளும் நித்ய வாஸம் செய்து அருளப் பெற்றேனே
கருட வாஹனனாகிய எம்பெருமான் திரு உள்ள உகப்புக்காகவே கருட தண்டகம் அருளிச் செய்ததாக
ஸ்வாமி தேசிகன் அருளிச் செய்கிறார்
ஹரியின் வாகனத்தையும் நான் வஹிக்கிறேன் என்கிறார் இவர் இங்கு

————-

சசாங்க ஸஹஜா க்ருஹே சமித ஸர்ப லீலா ரஸ
சடாரி முக ஸூக்திபிர் சதச ஆதராத் கீர்த்தித
சத க்ரது ஸரேஷ் வஹோ சலபதாம் திசன் தேஜஸா
சமத்ர மயி சன்னதே சரணமாகதே புஷ்யது –43-அனைத்துப் பாதங்களிலும் சகாரம் முதல் எழுத்து

ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஸந்நிதியில் எழுந்து அருளி இருக்கும் ஸ்ரீ கருடாழ்வார்
நாகங்களின் சேஷ்டிதங்களை அடக்கியவர்
ப்ரபந்ந ஜன கூடஸ்தரான நம்மாழ்வாரால் கொண்டாடப்பட்டவர்
தேவேந்த்ரனுடைய ஆயுதங்களை வீட்டில் பூச்சி ஆக்கியவர்
அவரை நமஸ்கரித்து சரணாகதி அடைந்து அவர் அநுக்ரஹம் பெற்றதை அருளிச் செய்கிறார்

சந்திரன் பிறப்பிடமும் பெரிய பிராட்டியார் பிறப்பிடமும் சீதளமான சமுத்ரமே
ஆஹ்லாத கரமான குணம் -அநுக்ரஹ மயீம் நித்யம் அஞ்ஞாத நிக்ரஹாம் –
அவள் அடியவரான கருடாழ்வார் குணமும் அப்படியே
கர்மங்களுக்கு அடிமைப்பட்டு இருப்பதை -பாம்புகளை நிரஸித்து அருளியது போல் -போக்கி அருள்பவர்
ஆம்நாயாநாம் ப்ரக்ருதிம பராம் ஸம்ஹிதாம் த்ருஷ்ட வந்தம் -என்று பாதுகா ஸஹஸ்ரத்தில்
திருவாய் மொழி கண்டு அருளிய ரிஷியான நம்மாழ்வார்
ப்ரதம சதகே வீஷ்ய வரதம்
அருளாழி புள் கடவீர் அவர் வீதி ஒரு நாள் என்றும்-ஓடும் புள் ஏறி சூடும் தண் துழாய் நீடு நின்றவை ஆடும் அம்மானே என்றும்
கருடாரூடனாக வரதன் தனக்கு அருள் செய்வதை அருளிச் செய்கிறார்
————-

சசி பகிநீ சரணாகதம் சரணமமும் தமஹ மகாம்
சமித மஹா பணி லலிதம் சத முக பூ சுப விஜயம்--44-அனைத்துப் பாதங்களிலும் சகாரம் முதல் எழுத்து

சந்திரனுடைய ஸஹோதரி பெரிய பிராட்டியார்
அவர் சரணம் -இருப்பிடம் -நாச்சியார் கோயிலில் வீற்று இருப்பவர் கருடாழ்வார்
பெரிய சர்ப்பங்கள் கொட்டங்களை எல்லாம் அடக்கியவர்
தேவ லோகத்தை வென்றவர்
அப்படிப்பட்ட பராக்ரமத்துடனும் ஆஸ்ரிதர் மேல் கருணையுடனும் இருக்கும்
கருடாழ்வாரை சரண் அடைகிறேன்

———–

ஸர்வ மௌலி தடிநீ தட ந்ருத்யத் சர்வரீ ச பகினீ சரணஸ்தம்
ஸர்வ வாஞ்சித கரம் விஹகேந்த்ரம் ஸர்வ லோகபதி வாஹம் ஆஸ்ரயே–45-

சிவனின் முடியில் கங்கை வீற்று இருந்து நடனம் ஆடுவதை போலவே இருக்கிறாள் கங்கை
பிறை சூடி -அவள் பக்கத்திலே சந்திரனும் உள்ளான்
அவன் இரவின் தலைவன் ஆவான்
அவனுடன் பிறந்தவள் பிராட்டி
அவளுடைய கோயிலிலே இருப்பவர் ஸ்ரீ கருடாழ்வார்

பாதோதகேந வித்ருதேந சிவா பவந்தி -ருத்ரன் எம்பெருமான் திருவடி தீர்த்த ஸ்பரிசத்தால் சிவன் ஆனான்
அதே போல் சந்திரனும் அதன் அருகில் இருப்பதால் மங்களம் அடைந்தான்
மங்களம் மங்களானாம் -என்ற திருமாலுக்கும் மங்களமான பிராட்டியாருக்கு சகோதரன் ஆனதால் சந்திரன் மேலும் சிறப்பை அடைகிறான்
மிதுன தம்பதிகளுக்கு வாஹனமாய் இருக்கும் பெரிய திருவடியை ஆஸ்ரயிக்கிறார்

—————-

ஸூ பர்ணம் ஸூ சாகம் ஸூ ரௌகாபி நந்த்யம்
ஸூ பஷம் ஸூ ப்ருஷ்டம் ஸூ மேரோஸ் ஸ பக்ஷம்
ஸூ தாயாஸ் ஸூ தாப்தே ஸூ கேஹே வஸந்தம்
ஸூ கம் ப்ராப்து மாப்தாஸ் ஸூதம் கஸ்ய பஸ்ய--46-

சிறந்த இறகுகளை உடையவனும் –
அவனைக் கூட்டி வரும் போது அஞ்சிறைப்புள் –
விலக்கி அழைத்துச் செல்லும் பொழுது வெஞ்சிறைப் புள்
சிறந்த கை கால்கள் யுடையவனும்
பொரு சிறைப்புள் உவந்து ஏறும் -இருவருக்கும் உகப்பு
தன்னை வணங்க வைத்த கரணம் இவை
தங்கள் கார்யங்களை நடத்துகிறபடியால் ஸூரர்கள் எனப்படும் தேவர் கூட்டங்களால் பாராட்டத் படுபவன்
கொற்றப்புள் ஓன்று ஏறி மன்னூடே வருகின்றான்
சிறந்த பின்புறத்தை யுடையவனும்
தாஸஸ் ஸஹா ஆஸனம் வாஹனம் -என்பதற்கு ஏற்ற திருமேனி அமைப்பை யுடையவன் –
மேரு மலையின் தோழனும்
மேரு மலை போன்ற திருமேனி அளவும் அழகும் பொன்னிறமும்
பொன் மலையின் மீமிசைக் கார் முகில் போல்
பாற் கடலின் புத்ரியான பிராட்டியாருடைய நாச்சியார் கோயிலிலே நித்ய வாசம் செய்து அருள்பவனும்
கஸ்யப மஹரிஷியின் மைந்தனான அணுக்கத் தொண்டன்
இப்படிப்பட்ட பெருமைகளை யுடைய கருடாழ்வாரை சரணம் அடைகிறோம்

————

ஸரஸ்வதீ பிர் ஸததம் ஸ்திதாபி
ஸம் பூர்ண ஸர்வா வயவம் ஸூ பர்ணம்
ஸரோஜ வாஸா சதனே வஸந்தம்
ஸமாஸ்ரயே ஸாராஸ நேத்ர வாஹம்–47-

வேதத்தின் உரு -கண்ணாடி போல் தன்னையே காணும் படி எதிரில் எழுந்து அருளி இருக்கிறார்
ஸூ பர்ணோஸி கருத்மான் -சிறந்த இறக்கைகள்
வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகு என்னும் மேலாப்பின் கீழ் வருவான்
குளத்தில் தோன்றிய தாமரையை இருப்பிடமாகக் கொண்ட பிராட்டியுடைய இல்லத்தில் வசித்து
மிதுனமே சேஷி என்று உணர்ந்து
பிராட்டி நிழலில் ஒதுங்கி கைங்கர்யங்களை உகப்புடன் செய்து அருள்கிறார்
ஸாரஸம் -தாமரை ஒத்த திருக்கண்கள் கொண்ட திருமால்
தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே புள்ளைக் காடாகின்ற வாற்றைக் காணீர்-ஆழ்வார் திரு உள்ளத்தில் ஏசல் கண்டு அருள்கிறான்
இப்படிப்பட்ட கருடாழ்வாரைப் புகலாகப் பற்றுகிறேன்

———

ஸூர பதி ப்ருதநா தூனன படுனா
ஸூத நோர் விநதா ஸம்ஞாவத்யா
ஸூத இதி ஜகதி ப்ரதி தேனா அஹம்
ஸூக மிஹ நிகிலம் ப்ராப்தஸ் ஸத்யம்--48-

இந்திரனுடைய படைகளை ஆட்டி வைக்க வல்லவனும்
கொடியா வடு புள்ளுயர்த்தான்
கருடப்புட் புட் குடி சக்கரப்படை வான நாட
பகைவர்களை எதிர்த்த போதும் -அடியார்களே அஹங்காரத்தால் எதிர்த்த போதும்
அவர்களுக்குத் தக்கபடி வ்யாபாரித்துத் திருத்துபவரும்
விநதா மைந்தனும் -யன் மங்களம் ஸூ பர்ணஸ்ய விநதா கல்பயத் புரா -என்று
கௌசல்யா தேவி பெருமாளுக்கு மங்களா சாசனம் செய்ததும் த்ருஷ்டாந்தம்
இப்பெருமைகளை யுடைய கருடாழ்வாரது அனுக்ரஹத்தாலேயே
வைகுந்தமாகும் தம்மூர் எல்லாம் என்னும்படி
அங்குபோய் செய்யும் நித்ய கைங்கர்யங்களை இங்கேயே செய்யப் பெறுகிறோமே

———

ஸூரா ஸூரா நந்தித விக்ர மௌனம்
ஸூ கீர்தி லீலா ரஸ நிர் வ்ருதாங்கம்
ஸூதாப்தி கன்யா சதநாங் கணஸ்தம்
ஸூதம் ப்ரபத்யே விநதாங் கனாய--49-

தேவர்களும் அசுரர்களும் வணங்கும் பராக்கிரமத்தை உடையவர்
த்ரிதாம் நஸ் த்ரி தச ரிபு சமூ மோஹநோ வாஹ நேந்த்ர கருட பஞ்சாசத் -51–அசுரர்கள் அழித்து -இதனால் இவர்களுக்கு –
மூன்று அவஸ்தை -த்ரி தச-இளைமை -பால்யம் -யவ்வனம் -மட்டுமே –
த்ரை கால்யோபஸ்திதாத்-முக்கால பிரதிபந்தகங்களையும் போக்கி அருளுவார்
ஸூ கீர்த்தியுடன் ஸம்ஸ்லேஷ லீலா ரசத்தினால் மகிழ்பவர்
நாச்சியார் கோயிலிலே நித்யவாஸம் செய்து அருளும் விநதையின் குமாரரான சேஷியை வணங்குகிறேன் –

————

ஸூதாம்புதி ஸூத க்ருஹே ஸூர பதச்சேமூ த்ராச
ஸூதா கலச ஹாரக ஸூம சரஸ்ய வாஹ பிது
ஸூதீ மணிபி ரர்சித ஸூபக நீலமேக ப்ரபு
ஸூ பர்ண இஹ மானஸே ஸூகத ஏது வாஸம் ஸதா –50-

திருமக்களுடைய நாச்சியார் கோயிலிலே வசிப்பவரும்
இந்திரனுடைய சேனையை வென்றவரும்
அம்ருதகலசத்தை பலாத்காரமாக எடுத்து வந்தவரும்
மன்மதனுடைய தந்தைக்கு வாஹனமாயும்
சான்றோர்களால் போற்றப்படுபவரும்
மிக்க தேஜஸ்ஸை யுடையவருமான
கருடாழ்வார் எனது மனதில் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் வஸிக்க வேண்டும்
இதே கருத்துக்களை கருட பஞ்சாசத் -24-25 ஸ்லோகங்களில் உண்டே

யா ஸ்வாங்கே சங்கர அந்தர்க்கருதநில லவ ஸ்தம்பிதே ஜம்ப சத்ரவ்
குண்டாஸ்த்ரே சன்ன கண்டம் ப்ரணயதி பவயே பஷ லேசம் திதேச
சோஸ்மாகம் சம்விதத்தாம் ஸூரபதி ப்ருதாநா த்வந்த்வ யுத்தைக மல்ல
மாங்கள்யம் வால கில்ய த்விஜ வர தபஸாம் கோ அபி மூர்த்தோ விவர்த்த-24-

யா ஸ்வாங்கே சங்கர அந்தர்க்கருதநில லவ ஸ்தம்பிதே
ஜம்ப சத் ர்ரவ்-இந்திரன் ஜம்பாசுரனை வென்றதால் ஜம்பை சத்ரு என்று இந்திரனைச் சொல்லி
-வஜ்ராயுதம் இவன் சிறகு அசைவிலே சக்தி அற்று இருக்க
குண்டாஸ்த்ரே சன்ன கண்டம் ப்ரணயதி-இந்திரன் பிரார்த்தித்தவாறே சிறகின் ஒரு லேசம் அருளி
பவயே பஷ லேசம் திதேச–தேவ வஜ்ராயுத பலம் பெற்று இழந்த மதிப்பை மீண்டும் பெற அருளினான்
சோஸ்மாகம் சம்விதத்தாம்
ஸூரபதி ப்ருதாநா த்வந்த்வ யுத்தைக மல்ல–இந்திரனுடைய தேவ கணங்களுடன் யுத்தத்தில்
மாங்கள்யம் வால கில்ய த்விஜ வர தபஸாம் கோ அபி மூர்த்தோ விவர்த்த-வால கில்யாஸ் காஸ்யபருடைய
யாகத்துக்கு உதவி கைங்கர்யம் செய்ய
இந்திரன் அவர்கள் சிறு உருவை ஏளனம் பண்ண -அவர்கள் சபிக்க –
அவர்களில் வெறுப்பற்ற மிக பெரிய உருவத்துடன் -விவர்த்த மூர்த்த -வந்து இந்திரனுடைய கர்வத்தை அழித்தார்

ருத்ரான் வித்ராவ்ய சேந்த்ரான் ஹுதவஹ ஸஹிதம் கந்தவாஹம் க்ருஹீத்வா
காலம் நிஷ்கால்ய தூத்வா நிர்ருதி தநபதீ பாஸிநம் க்லேசயித்வா
ஸர்ப்பாணாம் சாத்மிகாநாம் அம்ருத மய பண ப்ராபண ப்ராப்த தர்ப்ப
நிர்ப்பாதம் க்வாபி சர்ப்பன் அபஹரது ஹரே ரௌப வாஹ்யோ மதம்ஹ–25-

ருத்ரான் வித்ராவ்ய சேந்த்ரான் -இந்திரன் ருத்ரன் போன்றோர் ஓட
ஹுதவஹ ஸஹிதம் கந்தவாஹம் க்ரு ஹீத்வா காலம் நிஷ்கால்ய தூத்வா நிர்ருதி தநபதீ பாஸிநம் க்லேசயித்வா–
ஹுதவஹ என்று அக்னி -கந்த வாஹ என்று வாயு -யமன்-
பவ்சிக என்று வருணன்- வருண பாசக்கயிற்றை ஆயுதமாக கொண்டதால் – குபேரன் -போன்றோரை வென்று
ஸர்ப்பாணாம் சாத்மிகாநாம் அம்ருத மய பண ப்ராபண ப்ராப்த தர்ப்ப–சர்ப்பங்கள் வினைதை தாயை
அடிமையை இருந்து விடுவிக்க அமிர்தம் எடுத்து வந்து
நிர்ப்பாதம் க்வாபி சர்ப்பன் அபஹரது ஹரே ரௌப வாஹ்யோ மதம்ஹ-அதுக்கும் மேலே வாஹனமாகவும் ஆகி

————

ரமா ரமண வாஹனம் ரண ஜய ஸ்ரியா ஸேவிதம்
ரவே ரதக ஸோதரம் ரகு பதே ரணே ரக்ஷகம்
ரமா சதன வாஸினம் ரயஜித அஞ்ஜனார் அஞ்ஜனம்
ரவணே க்ருத மங்கலம் ரதமனா அஹம் பாவயே –51-

ரமா தேவியான திருமகளின் பிரிய நாயகனுடைய வாஹனமாயும் –குதிரை பூட்ட வெண்டாதே திருத்தேர் அன்றோ இவன்
வேகோத்தாநாம் விதாநம் வ்யஜனமநு குணம் வைஜயந்தீ ஜயந்தீ
மித்ரம் நித்யாப்ய மித்ரம் யுதி விஜயரதோ யுக்ய யோகா நபேஷ
தாஸோ நிஷ் பர்யு தாஸோ தநு தநய பிதோ நி ஸஹாய ஸஹாய
தோ தூயே தஸ் மதீயம் துரிதம தரிதா ராதி பஷை ஸ்வ பாஷை -46-

வேகோத்தாநாம் விதாநம் -விதானமாகவும் கைங்கர்யம் –
வ்யஜனமநு குணம் -விசிறியாகவும் கைங்கர்யம்
வைஜயந்தீ ஜயந்தீ -வெற்றிக்கு கொடி யாகவும்
மித்ரம் நித்யாப்ய மித்ரம் -நண்பன் -விரோதி நிரசனத்துக்கு உதவி
யுதி விஜயரதோ யுக்ய யோக அநபேஷ-குதிரை வேண்டாத ரதமாகவும் கைங்கர்யம் –
தாஸோ நிஷ் பர்யு தாஸோ -விட்டு விட மாட்டாத சேஷ பூதர்
தநு தநய பிதோ நிஸஹாய ஸஹாய -வேறே சகாயம் வேண்டாத சகாவாகவும்
தோ தூயே தஸ் மதீயம் துரிதம தரிதா ராதி பஷை ஸ்வ பாஷை -பக்ஷங்களை கொண்டு விரோதி நிரசனம்
பண்ணுவது போலே நம் பிரதிபந்தகங்களை போக்கி அருளுபவர்
இதில் -வைஜயந்தி ஜெயந்தி / நிஸ் ஸஹாய ஸஹாய / பர்யு தாச தாச –
சப்த பிரயோகங்கள் அனுபவிக்கத்தக்கன
வெற்றித்திருமகளால் பூர்ணமாக அருளப்பெற்றவர்
ஸூர்யனுடைய தேர் போட்டியான அருணனுக்கு சகோதரர்
பெருமாளுக்கு நாகபாசம் விடுவித்து கைங்கர்யம் செய்தவர்
வாயு புத்ரனுடைய வேகத்துக்கு காரணமானவர்
பஷிகளால் மங்களா சாசனம் செய்யப்படும் புள்ளரையனை மகிழ்ச்சியுடன் எனது மனத்தால் வணங்குகிறேன்
வெஞ்சிறைப்புள்ளாய் அநிஷ்ட நிவ்ருத்தியும்
அம் சிறைப்புள்ளாய் இஷ்ட பிராப்தியும் அளிப்பவர் அன்றோ

————-

சத தல சரணாயா சத்ம ஸம் பூஷ யந்தம்
சத தல கு ஸூ மாஷம் சார்ங்க பாணிம் வஹன் ந
சத மக மணி நீல ஸார்வ பவ்ம க கானாம்
சத மக ஸஹ ஜாத ஸ்ரீ ஸூஹ்ருத் பாது பாபாத்–52-

சத தல சரணாயா சத்ம ஸம் பூஷ யந்தம்–நாச்சியார் கோயிலுக்கு பூஷணமாக இருப்பவர்
சத தல கு ஸூ மாஷம் சார்ங்க பாணிம் வஹன் ந-தாமரைக்கண்ணன சக்ரபாணிக்கு வாஹனமாயும் இருப்பவர்

த்வத் ஸ்வீகார கலா அவலேப கலுஷா: ராஜ்ஞாம் த்ருச: துர்வசா:
நித்யம் த்வத் மது பாந மத்த மதுப ச்ரீ நிர்பராப்யாம் பதிம்
த்ருக்ப்யாம் ஏவஹி புண்டரீக நயநம் வேத: விதாமாஸ தே
ஸாக்ஷாத் லக்ஷ்மி தவ அலோக விபவ: காக்வா கயா வர்ணயதே?–40-

ஸ்ரீரங்கநாயகியே! மஹாலக்ஷ்மீ! உனது கருணை மிகுந்த கடாக்ஷம் காரணமாக
இந்த உலகில் உள்ள அரசர்கள் மிகுந்த செல்வம் பெற்று, கர்வம் கொண்டுள்ளனர்.
அவர்களது கண்களில் பார்வையைக் காணவே இயலவில்லை (அத்தனை கர்வம் உள்ளது).
உனது கணவனான ஸ்ரீரங்கநாதனின் கண்கள், கருவண்டுகள் போன்று உன்னைத் தேனாக நினைத்து
எப்போதும் உன்னையே மொய்த்தபடி உள்ளன. இதனால் அவனது கண்கள் சிவந்து விட்டன.
இதன் மூலமாக மட்டுமே வேதங்கள் அவனை செந்தாமரைக் கண்ணன் (புண்டரீகாக்ஷன்) எனப் புகழ்ந்தன போலும்.
இப்படியாக பல பெருமைகள் கொண்ட உனது திருக்கண்களை நான் எவ்வாறு வர்ணிக்க இயலும்?

சத மக மணி நீல ஸார்வ பவ்ம க கானாம்
மணி வண்ணன-மன்னு மரகதக்குன்றான நம்பியை நித்தியமாக அனுசந்தித்து சா ரூப்யம் பெற்று
நீல நாயக கல் நிறத்தை எய்தினாரே
சத மக ஸஹ ஜாத ஸ்ரீ ஸூஹ்ருத் பாது பாபாத்
வாமனனுக்கு சஹா-மிக்க சீலத்துடன் -இரந்தும் நம்மை உஜ்ஜீவித்து அருள்பவர் –
இதனாலேயே வாமனனுக்கு பிரியமானவர்

—————

கல்லோலினீ காமுக கன்யகாயா
காந்தே நிசாந்தே கலயன் நிவாஸம்
காகோதர த்ராஸத கூஜிதோ ந
கரோது கம் கஸ்யப புத்ர ரத்னம் –53-

கல்லோலினீ காமுக கன்யகாயா
அமுதினில் வந்த பெண்ணமுதமான -சீதக்கடலுள் அழுத்தமான –
பாற் கடல் புத்ரியான வஞ்சுள வல்லித்தாயாருடைய
காந்தே நிசாந்தே கலயன் நிவாஸம்
அந்தப்புரமாக விளங்கும் நாச்சியார் கோயிலிலே நித்ய வாசம் செய்பவரும்
ஸ்ரீ தேவி இங்கும் -பூமா தேவி விண்ணகரிலும் -ஆண்டாள் நாச்சியார் ஸ்ரீ வில்லுபுத்தூரிலும் ஒரே ஸந்நிதி -அந்தப்புரம் போல் உண்டே
காகோதர த்ராஸத கூஜிதோ ந
தன்னுடைய திருமேனி தேஜஸ்ஸாலே பாம்புகளுக்கு அச்சம் உண்டாக்குபவர்
நாக பாசத்தால் கட்டுண்ட போது
ததோ முஹுர்த்தாத் கருடம் வைநதேயம் மஹா பலம்
வானரா தத்ருசு ஸர்வே ஜ்வலந்தம் இவ பாவகம்
தமா கதமபி ப்ரேஷ்ய நாகாஸ்தே விப்ரது த்ருவு –தேஜஸ்ஸைக் கண்டதும் நாகங்கள் அஞ்சி ஓடுனவே
கரோது கம் கஸ்யப புத்ர ரத்னம்
கஸ்யபர் பெற்று எடுத்த ரத்னம் அடியேனுக்கு கம் -ஆனந்தம் அளித்து அருளட்டும்

கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம –சாந்தோக்யம் -ஸுகம் ஆகாசம் -ஸ்ரீ வைகுண்டம்

———-

அத சதுர்த்த சமத்கார விஹார

விஹாரம் ஸஞ்சாரம் என்றவாறு -லீலை வேடிக்கை என்றுமாம்
ப்ராஸம்
அநு ப்ராஸம்
மஹா ப்ராஸம் –காவ்யா நடை அழகுடன் முதல் மூன்று விகாரங்கள்
ஸமத்காரம் -பொருள் சுவை பதிந்த விஹாரம்
பிரார்த்தனை -பக்தி பாவம் ததும்பும் விஹாரம்

சஷுஸ் ஸ்ருதீநாம் ஸரமாம் தஸாம் யத்
நாஸா நிஜாக்ரேண ஸ்ரு ஜத்ய ஜஸ்ரம்
ஸ வைந தேய ஸ்ருதி ப்ருந்த ரூப
ஸ்ருதீ ருதைஸ் ஸ்வை பரித புநாது –54-

சஷுஸ் ஸ்ருதீநாம் ஸரமாம் தஸாம் யத் நாஸா நிஜாக்ரேண ஸ்ரு ஜத்ய ஜஸ்ரம்
யாருடைய மூக்கு நுனியானது பாம்புகளுக்கு எல்லாம் முடிவு ஏற்படுத்துகிறதோ
பாம்புகளை வெல்லும் திறமையால்
தத்வீ கராரி
நாக ஹந்தா
ஆஸீ விஷாரி
ஸர்ப சந்தான ஹந்தா
காத்ரவே யாந்தகன்
புஜக குல ரிபு
வ்யாலா ஹாரன்
என்ற திரு நாமங்களால் ஸ்வாமி தேசிகன் கருட பஞ்சாசத்தில் அருளிச் செய்கிறார்
ஸ வைந தேய ஸ்ருதி ப்ருந்த ரூப
வேத ஸ்வரூபி
ஸ்ருதீ ருதைஸ் ஸ்வை பரித புநாது
தன்னுடைய ஒலிகளால் எனது காதுகளைப் புனிதம் ஆக்கட்டும்
முடியானே போல் ஸ்வாமியுடைய கரணங்களும் அபிநிவேசம் மிக்கு உள்ளன –

————

வட தரு மஹா ஸாகா லக்னான் முனீன ப்ரஷிதம்
கருட பவதா ஷுத் ஷுண்ணேனா அப்யஹோ யதனுஷ்டிதம்
ததிஹ பகவத் பக்த ப்ராந்தே மாமோதித மாகசாம்
நிசய மகிலம் தூரீ கர்தும் சரித்ர மலம் ப்ருசம்–55-

கருடனே பசியால் பீடிக்கப்பட்ட நிலையிலும் உம்மால் ஆலமரத்தின் பெரும் கிளையில் தொங்கிய
மஹா முனிவர்களை ரக்ஷிக்க எது செய்யப்பட்டதோ அந்த ஆச்சார்யமான சரிதமே
அடியேனுடைய பாகவத அபசாராதிகளாகிய
பெரிய பாபக் கூட்டங்களைப் போக்கி அருளப் போதுமானது
அல்லது
பாகவத கோஷ்ட்டியில் புகழப்படும் இந்த சரித்திரமே எனது பாபக் கூட்டத்தைப் போக்கப் போதுமானது என்றுமாம்
ஸ்ரீ மத் பாகவதத்தில் இறுதியில் -படதே வா த்விஜ கண முக்ய ஸம்ஸதி -இங்கு கருத்மான் ஸந்நிதியில் என்றவாறு

————-

உபரோ பகவானிஹ பாதி ஹரி
கமலா சதேந ச பவான்ஹி தத்
உபலா க்ருதிதாம் அதி கத்ய பராம்
உபகார ரதிம் குருதே நிதராம்–56-

நம்பியும் நீரும் உபரர்கள்-உ பெரிய பிராட்டியாரை தனக்கும் மேல் பெருமை உடையவராக ஆக்கிக் கொண்டு உள்ளீர்கள்
ஆகவே உபலமாக -கல்லாக ஆனீர் -உபரன் உபலன் -ரகாரமும் லகாரமும் -மாறலாம்
உ ப உபகாரம் செய்து அருளுகிறீர்கள் இருவரும் என்றுமாம்
கமலா குசஸூ –ஸ்லோகம் போல் இதுவும் இனிமையான ஸ்லோகம்

——–

சவ்ஷ்ம்யாத் பஸ்யதி ஸர்வமத்ர பரிதஸ் ஸ்ரீ மான் முனிஸ் கஸ்யப
தஸ்யாயம் தநயோ அநகோ விநதயா ஸத்யா ஸ்வ குஷவ் த்ருத
தஸ்மாத் ஸுஷ்ம்ய விலோகனே அதி நிபுண ஸ்ரீ வாஹகோ அயம் ஹரே
ஸுஷ்ம்யம் ஸுது மனஸ்ய முஷ்ய ஸததம் தர்மஸ்ய பஷீஸ்வர –57-

விநதையின் திரு வயிறு வாய்த்த இந்த வைநதேயன் -காஸ்யபரின் புதல்வர்
கஸ்யபர் சுற்றிலும் பார்க்க வல்லவர் -ஸூஷ்மமாகப் பார்க்க வல்லவர்
ஹரியின் வாஹனமாக ஆகும் பக்ஷி ராஜர் அடியேன் மனத்தில் தர்மங்கள் ஸூஷ்மங்களை அருளிச் செய்ய வேண்டும்
கழுகுப் பார்வை விசேஷணம் அன்றோ -கழுகை விட உயரமாக பறந்து ஸூஷ்மமாகப் பார்க்க வல்லவர்
வைநதேய கதி பரா -ஸம்பாதி கூற்று
காஸ்யப பஸ்யகோ–ஸ்ருதி
பஸ்யகர் மருவி கஸ்யபர் ஆனது –ஹிம்ஸம் என்றது ஸிம்ஹம் ஆனது போல் –
த்ருஸ்யதே த்வ க்ரியா புத்த்யா ஸூஷ்மயா ஸூஷ்ம தர்சிபி -என்னும்படி
ஸூஷ்ம ஸித்த அர்த்தமான பகவானைக் காணும் ஸூஷ்ம ஞானம் அருள வேண்டும் என்று பிரார்த்திக்கிறார் –
கஸ்யபர் போலவே விநதையும் ஸூ பர்ணீ என்ற பெயரில் வேதப் புகழ் பெற்றவள்

——–

ஆகாஸே கிரணைர் நவை ஸமுதிதை ஸூர்யஸ்ய ஹேமாயிதே
வ்ருஷாக்ரைர் ம்ருதுனா அநிலேந சலிதை ஸம்வீ ஜிதே சாமரே
மேகானாம் சகலை கதாகதி யுதை ஸம் பூஷிதே ராஜதை
அம் சாக்ரே கலையன் கனம் கமபி தம் பஷீஸ் வராக்ரே பவ –58-

இதில் தன் முன் ஆவிர்பவித்து ஸேவை சாதித்து அருளப் பிரார்த்திக்கிறார்
ஸூர்ய உதய காலத்தில் கருடனையும் கருடாரூடனான எம்பெருமானையும் தியானிக்க வேண்டும்
ஸ்வர்ண மயமான கிரணங்கள் மரங்களின் நுனியில் விழ மரங்கள் தங்கமயமாக விளங்க
காற்றும் மெதுவாக வீச -இயற்கையே -தங்க சாமரம் வீசுவது போல் இருக்குமே கருடாழ்வாருக்கு
மேகங்களும் வெண்மையாக -கருடாழ்வாருடைய திருத் தோள்களுக்கு வெள்ளித்துண்டுகள் அலங்கரிப்பது போல் இருக்குமே
இப்படிப்பட்ட கருடாழ்வார் ஸேவை சாதிக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறார் –

——–

யத் பாதால கதாஹி ஸஞ்சய பணாஸம் பேதிநாஸாக்ரத
நிர் தூதாநத பாபராசி நிகம ஸ்தோ மஸ்ய திவ்யாக்ருதி
ஸந்தோ தாம ஸூ தாம சாரதி மணே யத் ப்ராத்ருதா மாஸ்திதம்
தல் லஷ்மீ சதனே சமர்ச்சித பதம் தேஜோ மமாஸ்து ஸ்ரீ யை-59-

தேஜோ ராஸியாக அனுபவிக்கிறார்
ஜ்யோதிஷம் ஜ்யோதிஸ்ஸு
கருத்மானும் வ்யூஹ சம் கர்ஷணனே -ஆவணி ஸ்வாதி திரு நக்ஷத்திரத்தில் திருவவதாரம்

——–

ஸூகந்த கிரி மஸ்தகே மதுர வஞ்ஜூலா ஸம் யுதம்
விலோசன விநோததம் விநம திஷ்ட ஸந்தா யினம்
ஸதா மனஸி சாதரம் நயன யோச்ச குர்வன் ஸ்ருதவ்
ஸஹஸ்ர நயனோ பலாக்ருதி ரயம் ஜயத் யண்டஜ –60-

ஸூ கந்த கிரி கருடாழ்வாருக்கு மங்களா ஸாஸனம் பண்ணுகிறார்

———

அம்ஸே கம்ஸ ரிபும் வஹந்தம் அம்ருதம் ஹஸ்தே ப்ரசஸ்த அம்ருதம்
நாஸ அக்ரேண ஸதா வி பின்ன புஜகம் ஸ்ரீ கேஹ கேஹஸ்திதம்
இஷ்டா நாநதா சஞ்சயேஷு தததம் தம் பஷீணாம் ஈஸ்வரம்
ஸ்வாந்தே சந்தத மாதரேண கலயே வேதவ்க ஸத் விக்ரஹம் –61-

அம்ஸே கம்ஸ ரிபும் வஹந்தம் அம்ருதம்
ஆராவமுதனை திருத்தோள்களில் ஏந்தியவர்
அமரர் தம் அமுதே அசுரர்கள் நஞ்சே
கம்ஸ -கொள்கலனையும் குறிக்கும் -ஆராவமுதனை ஒரு கொள்கலத்துக்குள் அடக்க முடியாதே
கம்ஸ -வெண்கலத்தையும் குறிக்கும்
கம்ஸ ரிபு இங்கு இருந்தாலும் வெண்கலப் பாத்திரங்களுக்கு பிரசித்தம் இந்த திவ்ய தேசம்
நறையூரில் செண்பகப் பூக்களின் வாசனையைக் கண்டு வண்டுகள் புகுவதாக கலியனின் அனுபவம்
ஹஸ்தே ப்ரசஸ்த அம்ருதம்
ஆராவமுத்துக்கு நிகராகாத உப்புச்சசாற்றை கையில் ஏந்தி உள்ளவன்
துவாதச அக்ஷர மண்டபத்தில் ஆராவமுதனைக் கண்களால் பருகிக் கொண்டே உள்ளான் -என்பதை அம்ருத சார்தூல ஸ்லோகத்தில்

ஸ்வர்க்கே பாத்யம்ருதம் யதர்த்தம் யதபவம் யோத்தும் ச யத் நான்வித
திங்மாம் யத் ரஸநா கதம் விதநுதே கிஞ்சித் ருசிம் ஸாரூஜ
நிர் யுத்தம் ச நியத் நம் அத்ர நகரே பீதம் மயா ஸர்வதம்
தத்பாதீதி க்ருதாஞ்ஜலிர் யதம்ருதம் பஷீஸ்வரஸ் சேவதே-

நாஸ அக்ரேண ஸதா வி பின்ன புஜகம்
தனது அலகின் நுனியால் பாம்புகளைத் துண்டாக்குபவரை
ஸ்ரீ கேஹ கேஹஸ்திதம்
நாச்சியார் கோயிலிலே கோயில் கொண்டுள்ளவரை
இஷ்டா நாநதா சஞ்சயேஷு தததம் தம் பஷீணாம் ஈஸ்வரம்
தனது அடியார்களின் அபீஷ்டங்களை வழங்கும் கருடாழ்வாரை
ஸ்வாந்தே சந்தத மாதரேண கலயே வேதவ்க ஸத் விக்ரஹம் —
வேத ஸ்வரூபியாய் விளங்கும் கருடாழ்வாரை எப்போதும் உள்ளத்தில் வைத்துப் போற்றுகிறேன்

———–

ஆகாஸ ஆஸ்தே ஸ யதம்ஸ தேஸே
சாகாஸ் சமா யஸ்ய வஹந்தி தேஹே
பஷீஸ் வரோயம் பரமாத்புதாத்மா
கரோது கல்யாண பரம்பராம் ந –62-

ஆகாஸ ஆஸ்தே ஸ யதம்ஸ தேஸே
ஆகாசம் –அகில உலகுக்கும் ஆதாரமான பரமாத்மாவையே குறிக்கும் –
அஸ்ய லோகாஸ்ய கா கதிரித் யாகாச -சாந்தோக்யம்
ஆகாஸஸ் தல் லிங்காத் -ப்ரஹ்ம ஸூத்ரம்
சாகாஸ் சமா யஸ்ய வஹந்தி தேஹே
யாருடைய திருமேனியில் வேதத்தின் அனைத்து சாகைகளும் வசிக்கின்றனவோ
பஷீஸ் வரோயம் பரமாத்புதாத்மா
அத்தகைய அத்புதமான திருமேனியை யுடைய பக்ஷி ராஜர்
கரோது கல்யாண பரம்பராம் ந —
அடியேனுக்கு அனைத்து மங்கள வரிசைகளும் அளிக்கட்டும்

இதில் உள்ள சமத்காரம் பறவை வாலில் இருக்கும் -ஆகாசத்தில் இருக்கும் –
இங்கு ஆகாசம் பறவை வாலில் உள்ளது -பறவை சாகையில் இருக்கும் -இங்கு சாகைகள் பறவையின் உடலில் உள்ளன

———

கமலா பவேந கமநீ யதமே
மணி முக்தாபித தடிநீ தடகே
மணி ராஜ நிபம் மஹ நீய தமம்
பதக ப்ரவரம் வரதம் வரயே-63-

கமலா பவேந கமநீ யதமே
அழகான திவ்யதேசமான நாச்சியார் கோயிலிலே
மணி முக்தாபித தடிநீ தடகே
மணி முக்தா நதிக்கரையில்
விரோசனனை வீழ்த்தி வைரமுடியைக் கொண்டு வரும் பொழுது அந்தக்கரீடத்தில் இருந்து
செவ்வக வடிவில் ரத்னாக்கள் விழுந்ததால் இந்த திருநாமம்
வாவித் தடம் சூழ் மணி முத்தாற்று நறையூர் நெடுமாலை -கலியன் புஷ் காரணிக்கு மங்களா ஸாஸனம்
மணி ராஜ நிபம் மஹ நீய தமம்
மணிகளில் ஸ்ரேஷ்டமான இந்திரா நீலக்கல் போன்ற திருமேனி
பதக ப்ரவரம் வரதம் வரயே
வரப்ரஸாதியாய் திகழும் பக்ஷி ராஜரை வணங்குகிறேன்

————

துரகான் ஸ விதுர் நயதஸ் ஸஹஜம்
உதரா துதிதம் விநதா ஸூதநோ
உரகா நுதரே கலயந்த மஹம்
பதகாதிபதிம் சதயம் கலயே–64-

துரகான் ஸ விதுர் நயதஸ் ஸஹஜம்
ஸூர்யனின் குதிரைகளை எளிதாக ஒட்டிச் செல்லும் அருணனின் உடன் பிறப்பே
ராகு விழுங்கும் போது தன்னை யாரும் ரக்ஷிக்க வில்லை என்று கோபம் கொண்ட ஸூர்யன் உலகை தவிக்கச் செய்ய அருணன் கவசமாக இருந்து காத்தார்
அதே போல் ஸம்ஸார தாபத்தில் இருந்து கருடாழ்வார் நம்மைக் காத்து அருளுகிறார்
உதரா துதிதம் விநதா ஸூதநோ
அழகிய விநதையின் திரு வயிற்றில் உதித்தவனே
தாயாரை அடிமைச் சிறையில் இருந்து மீட்டது போல் நம்மையும் சம்சாரச் சிறையில் இருந்து மீட்டு அருளுகிறார்
உரகா நுதரே கலயந்த மஹம்
சர்ப்பங்களை விழுங்கி வயிற்றில் வைத்து இருப்பவனே
அதே போல் நமது பாபங்களையும் பயத்தையும் வேதனைகளையும் விழுங்க வல்லவராகத் திகழ்கிறார்
பதகாதிபதிம் சதயம் கலயே
இத்தகைய பெருமை பெற்ற பக்ஷிகளின் அதிபதியே உன்னை எப்போதும் நினைக்கிறேன்

———–

பஷீ கோபி வராத ஏஷ வதது ஸ்வைரம் ருதைஸ் ஸோபநம்
யத்வா ஸோபந மத்ர காநு கணநா சிந்தாதவா காமம
லஷ்மீ மந்த்ர மந்திரேதி மஹிதே ஸம் பூஜிதே ஸந்ததம்
பஷீந்த்ரே த்வயி மங்கள ஏக நிலயே மன்மா நஸே ஜாக்ரதே–65-

மிகவும் பூஜிக்கத்தக்க பிராட்டியின் கமலாலயத்தில் இருப்பவனும்
எப்பொழுதும் மங்களங்களுக்கு உறைவிடமாகப் போற்றப்படும் நீர்
எனது மனக்கடலில் உறைவதால் பறவைகளின் குரல் மங்கலமோ அமங்களமோ என்ற சிந்தனை சிறிதும் இல்லையே
சில பக்ஷிகளின் குரல் அப சகுனம் என்றும் நல்ல சகுனம் ஸாஸ்த்ர வல்லுநர் சொல்வார்கள்

——–

ரஷாம் பக்ஷிபதே கஜஸ்ய கலயன் அம்சே த்வதீயே ஸ்தித
தேநே கர்ஷண மத்ர தத்ர பவத கோதாய கிம் நா பவத்
மோதா யைவ யதார் தர க்ஷண க்ருதே வேகோஸ்ய மான்யோ குண
தேநை வாஸ்ய பதாம் புஜேஸ்மி நிதராம் தாஸ்யம் கதோ நிவ்ருத–66-

பக்ஷிகளின் தலைவனே -கஜேந்திராழ்வானை ரக்ஷிக்க உனது தோளில் அமர்ந்து விரைந்ததனால்
சற்றும் ஆயாஸம் தோன்றவில்லையா என்ற கேள்விக்கு
அடியார் ரக்ஷணத்துக்காக விரைந்த வேகம் போற்றத்தக்கதே-கரி ப்ரவர ப்ரும்ஹிதே பகவதஸ் த்வராய நம –பட்டர் –
விரைந்து வந்து ரஷித்த எம்பெருமான் திருவடிகளை பற்றி மனத்துயர் நீங்கியவனாக உள்ளேன்

உஷா தஷாந்த கஸ்ய ஸ்கலதி வலஜித குஞ்ஜர கஞ்ஜரீதி
க்லாந்தோ தாது சகுந்தோஸ்நுக இதி தயயா சாமி ருத்தஸ்ய தோ அபி
க்ராஹ் ரஸ்த த்வி பேந்த்ர ஷதி பய சகிதா குண்ட வைகுண்ட சிந்தா
நாஸீ ரோதாரா மூர்த்திர் நரக விஹதயே ஸ்தாத் வி ஹங்கேஸ்வரோ ந –-கருட பஞ்சாசத் -47-

க்ராஹ் ரஸ்த த்வி பேந்த்ர -முதலையால் பீடிக்கப்பட்ட ஸ்ரீ கஜேந்திராழ்வான்
உஷா தஷாந்த கஸ்ய ஸ்கலதி -பெரிய திருவடி வேகம் ருத்ரன் வாகனமான ரிஷபம் வேகம் ஒன்றுமே இல்லையாம் படி –
வலஜித குஞ்ஜர கஞ்ஜரீதி -இந்திரா வாஹனம் ஐராவதம் -நொண்டி போலே என்று என்னும் படி –
க்லாந்தோ தாது சகுந்தோஸ்நுக இதி -ப்ரஹ்மனின் வாஹனம் அன்னம் தளர்ந்து நடப்பது போலே –
தயயா சாமி ருத்தஸ்ய தோ அபி ஷதி பய சகிதா குண்ட வைகுண்ட சிந்தா -அவன் சங்கல்பத்துக்கு தக்க வேகம் -தடை இல்லாமல் –
நாஸீ ரோதாரா மூர்த்திர் நரக விஹதயே ஸ்தாத் வி ஹங்கேஸ்வரோ ந -கருட வாகன எம்பெருமான் நம்மை உஜ்ஜீவிக்கட்டும்

———-

ப்ராலேயா ஹார்யா கன்யா பரி ப்ருட தனுஷி ஜ்யா விமுக்தே ருஜுத்வம்
ப்ராப்தே பாணே த்வயாதோ பத்தி பகவத பாத மூலே முராரே
பக்தே ஸக்தே ம்ருதங்கே நத சிரஸி ததோ ஹந்த கங்காதர அஸ்மின்
அஸ்மத் ஸ்வாமின் கருத்மன் த்வமஸி யதுபதே ஸஸ்மித ப்ரேம பாத்ரம் –67-

பாணாசூர யுத்தத்தில் சிவ வில்லில் நாணாகிய வாஸூகி தங்களைக் கண்டவுடன் அஞ்சி ஓடி விட்டது
நாண் அற்ற வில் நேராக வளைவு அற்றதாக விளங்கி விட்டது
ஆகவே சிவன் தொடுத்த பாணம் தங்கள் திருவடிகளில் சரணம் அடைந்தது போல் விழுந்து விட்டது
பாணனும் சரண் அடைந்தவன் போல் திருவடிகளில் விழுந்தான்
பாணன்-அம்பு என்றும் பாணாசூரன் என்றும் பொருளில் வந்துள்ளது –
பாணன் தலை குனிந்து நிற்பது கண்டு சிவனும் தலை குணியுந்து நின்றான்
அந்நிலையில் யதுபதியான கண்ணனின் அன்புக்கு இலக்காக நீர் அல்லவோ திகழ்ந்தீர்

———–

ஸ்ரீ மான் வஞ்சுள வல்லிகா பரி ப்ருட ஸுகந்தி காத்ரே பதி
திஷ்டன் ஸ்ரீ மணி மௌத்திகா பரி சரே ரம்யே விசித்ரே அத்ர வை
பஸ்யன் ஸ்த்வாம் சதுரா னனேன சதுரோ வேதான் முதா அதீ தினா
தாதும் கிம் யுவயோ உதீத ஹ்ருதய பாஹு த்வயம் தத் ததவ்–68-

கருட பகவானே இந்த நாச்சியார் கோயிலிலே ஸுகந்திகா என்னும் ஸூ கந்த மலையில்
மணி முத்தா நதி என்னும் புஷ் கரணியின் கரையில் வஞ்சுள வல்லி மணாளன் ஸேவை சாதித்து அருள்கிறான்
மூலவர் இரண்டு திருக்கரங்களுடன் மட்டுமே ஸேவை சாதிக்கிறான்
இரண்டு கரங்களுடன் திகழும் உங்களுக்கும் தாயாருக்கும் வேதம் கற்றுக் கொடுத்து
தன் அருள் பெற்று அதன் மூலம் படைக்கும் ஆற்றல் பெரும் பிரமனாகிய கருவியின் மூலம் தந்து அருள எண்ணியே
இரண்டு திருக்கரங்களுடன் திகழ்கிறான்
கைகளில் சங்கு சக்கரங்கள் வைத்துக் கொண்டு அருள்கிறான் –

———-

ஆனீதே பவதா விரோசன கராத் வாஜ்ரே கிரீடே ததா
முக்திம் மௌத்திக மேக மக்ர ஸரிதி ஸ்ரீ பாஸூரம் மார்கிதம்
ஹஸ்தவ் த்வவ் ப்ர ஸ்ருதவ் விதாய சபலவ் ஸம் சாதிதும் தன் மணிம்
ஹஸ்தா வேவ ந ஹீதி கிம்நு கதயன் ஸ்வாமீ த்வி ஹஸ்தோ அபவத்–69-

இங்கு மணி முக்தா ஸரஸ்ஸில் விழுந்த மணியைத் தேடவோ
அல்லது கிடைத்த மணியை கைகளால் மறைத்துக் கொள்பவன் போல் ஸேவை சாதிக்கிறான்
தன்னிடம் கைகள் இரண்டு மட்டுமே உள்ளது
அவற்றிலும் சங்கு சக்கரங்கள் வைத்துள்ளேன்
மணி எங்கே இருக்க முடியும் என்னிடம் இல்லையே என்று காட்டுபவன் போல் உள்ளான்

———

உபலா க்ருதம் உத் பலேந துல்யம்
ரஜதாச் சத பூஷி தாங்க ஜாதம்
நபஸா ஸித மேக ஜால பாஜா
சமதா மேயுஷம் ஆஸ்ரயே அண்ட ஜாதம்–70-ஸூந்தரீ வ்ருத்த ஸ்லோகம்

உபலா க்ருதம் –கல்லிலான சரீரத்தை யுடையவரை
உத் பலேந துல்யம்-அதனாலேயே கரு நெய்தல் பூவினை ஒத்தவரை
ரஜதாச் சத பூஷி தாங்க ஜாதம்–வெள்ளியிலான கவசத்தால் அலங்கரிக்கப்பட்ட அவயவங்களை யுடையவரை
ஸித மேக ஜால பாஜா-அதனாலேயே வெளுத்த மேகங்களோடு கூடிய
நபஸா-ஆகாயத்தினோடு
சமதா மேயுஷம் -ஒப்புமையை அடைந்தவரை
அண்ட ஜாதம்-பறவையான -முட்டையில் இருந்து பிறந்தவரான கருடனை
ஆஸ்ரயே–சரணம் அடைகிறேன்
ஆகாசம் பூமியில் இல்லை அண்டத்தில் உள்ளது -அதே போல் கருடனும் அண்டத்தில் முட்டையில் தோன்றியவர்

——-

த்ரயீ மூர்தி ஸ்த்வம் மமச ஸ பகவ னம்பர மணி
த்ரி தாம்னோ தாம த்வம் மமச ஸ ரதீ நாம ஸதனம்
ததாபி த்வத் ப்ராப்தவ் சகித சகித துர்ய குண தீ
இதி ப்ராத்ரா மந்தஸ்மித மதிகத பாது ககராட்–71-சிகிரிணீ வ்ருத்த ஸ்லோகம்

தவம் -நீ
த்ரயீ மூர்தி -வேத உருவானவன்
மம அபி ச -எனக்கும்
ஸ-அந்த வேத உருவான
அம்பர மணி-ஸூர்யனும்
பகவான் -ஸ்வாமி -எஜமானன் ஆனவன் –
த்வம் –நீ
த்ரி தாம்னோ –பரமபதம் ஸூர்ய மண்டலம் திருப்பாற் கடல் -என்ற மூன்று இடங்களை சிறப்பாகக் கொண்ட விஷ்ணுவுக்கு
மூன்று உலகங்களையும் இருப்பிடமாகக் கொண்ட விஷ்ணுவுக்கு
தாம -இருப்பிடமானவன் –வாஹனமானவன்
மமச-என்னுடையவரான
ஸ –அந்த ஸூர்யனும்
ரதீ–தேருக்கு உரிமையாளரான
நாம ஸதனம்–விஷ்ணுவுக்கு இருப்பிடம் ஆனவரே
ததாபி –ஆயினும்
துர்ய குண தீ–தேர்க் குதிரைகளின் கடிவாளத்தில் புத்தியை உடையவராக அவர்
சகித சகித –நீ என்னைப் பார்க்க வரும் போது எல்லாம் மிகவும் பயந்தவராக இருக்கிறார்
இதி -இவ்வாறு
ப்ராத்ரா -சகோதரரான அருணானாலே
மந்தஸ்மிதம் -புன் சிரிப்போடு
அதிகத–நெருங்கப்பட்ட
பாது ககராட்-பறவைகளின் தலைவனான கருத்மான் நம்மைக் காப்பாற்றட்டும் –
உனக்கும் ஸூரியனுக்கும் பல ஒற்றுமைகள் இருந்தாலும் நீ எண்ணெய் பார்க்க வரும் பொழுது எல்லாம் ஸூர்யன்
நடுங்கி விடுகிறான் –
பாம்புகள் தானே அவனது தேரின் கடிவாளங்கள் -அதனால் தான் என்று அருணன் சொல்கிறான்

இதே காட்சி முதல் பாதத்தில் ஸ்வாமி தேசிகன்-

அர்யம்ணா துர்ய யோக்த்ர க்ரசந பய ப்ருதா சாந்த்விதோ அனுருபந்தாத்
கோதண்ட ஜ் யாம் ஜிக்ருஷேதி தி ஸஹித தியா சங்கீத சங்கரேணா
தல்பே கல்பேதே மா தே மதிரிதி ஹரீனா அப் யாதரேணானுநீத
பஷீந்த்ரஸ் த்ராயதாம் ந பணதரே மஹிஷீ பத்ர பங்கா பஹாரீ -27-

அர்யம்ணா-ஸூர்ய பகவான்
துர்ய யோக்த்ர–வில்லின் நாண் கயிறு
கோதண்ட ஜ்யாம்-கோதண்ட த்வனி
பத்ர பங்கா–திருமாங்கல்யம் –

———

சாகா பங்காத் வட பரி ஹ்ருதிம் க்லுப்தவான் கிம் த்வமேவத்
ஜ்ஞாத்வா ருத்ரோ வட தரு தலே நர்தனம் ஸம் விதத் தே
யத்ர பூவன் உரக நிவஹா நிர்பயா அங்க லக்னா
ந்ருத்தா நூத்யன் மணி யுத பணா லோக தூதாந்த காரா –72-மந்தாக்ராந்தா வ்ருத்த ஸ்லோகம்

சாகா பங்காத் –கிளையின் முறிவாலே
வட பரி ஹ்ருதிம் –ஆலமரத்தின் விடுகையை
த்வம் -நீ
க்லுப்தவான் -செய்தனை
ஏதத்-இதை
ஜ்ஞாத்வா கிம் -அறிந்தபடியால் தானோ
ருத்ரோ வட தரு தலே நர்தனம் ஸம் விதத் தே
-ஆலமரத்தின் அடியிலே பரமசிவன் நாட்டியத்தை செய்கிறான்
யத்ர ந்ருத்தா நூத்யன் -எங்கு நாட்டியத்தை அனுவதித்திக் கொண்டு
மணி யுத பணா லோக தூதாந்த காரா-மணியுடன் சேர்ந்த படங்களுடைய பிரகாசத்தாலே இருட்டைப் போக்கடிக்கும்
அங்க லக்னா–ருத்ரனுடைய சரீரத்தோடு சேர்ந்து இருக்கும்
உரக நிவஹா–பாம்புகளின் கூட்டங்கள்
அபூவன் நிர்பயா -பயம் அற்றவையாய் ஆயின
உத்ப்ரேஷ அலங்காரம் –

————

லஷ்மீ ஸத்ம பவான் வஹன் விஹரத ஸ்ரீ மான் பதங்க ப்ரபோ
லஷ்மீ சத்ம ச ஸதத்வம் வஹதி யத் த்வாம் தேன வித்யோ ததே
யஸ் ஸ்வம் நாம வஹத் யஹோ புவி ஜன தம் சா வஹன் யோஜன
லஷ்மீ ஸத் மச ஏவ ஸர்வ புவன ஸ்லாக்யோ பவேன் மானவ –73-

லஷ்மீ ஸத்ம பவான் வஹன் விஹரத ஸ்ரீ மான் பதங்க ப்ரபோ
அகலகில்லேன் இறையும் -என்பதையே இங்கு லஷ்மீ சத்மன்
கருடா வா குரலைக்கேட்டு உகந்து வரும் கருடாழ்வார்
இப்படிப்பட்ட சேஷ பூதன் கிட்டினானே என்று சேஷியும் மகிழ்ந்து ஏறுவான்
பொரு சிறைப் புள் உவந்து ஏறும் பூ மகளார் தனிக்கேள்வன் –
லஷ்மீ சத்ம ச ஸதத்வம் வஹதி யத் த்வாம் தேன வித்யோ ததே
இங்கு நாச்சியார் கோயிலை லஷ்மீ சத்மம் என்கிறார்
ஸத்வ குணத்தை வளர்க்கும் திவ்ய தேசம் என்றவாறு
வேத ஸ்வரூபி இங்கேயே நித்யவாஸம் செய்வதால்
வேள்வும் விழவும் வீதியில் என்றும் அறாத ஊர் நாளும் நறையூர்
யஸ் ஸ்வம் நாம வஹத் யஹோ புவி ஜன தம் சா வஹன் யோஜன லஷ்மீ ஸத் மச ஏவ ஸர்வ புவன ஸ்லாக்யோ பவேன் மானவ
லஷ்மீ சத்மனைத் தாங்கும் உம்மை லஷ்மீ சத்மம் தூங்குவதில் இருந்தே
தம்மைத் தாங்குபவரைப் பிரதியாகத் தாமும் தாங்குபவர்கள் லஷ்மீ சதமர்களாக விளங்குவார்
அதாவது அவர்கள் இடம் மஹா லஷ்மீ எப்போதும் நித்ய வாஸம் செய்து அருள் புரிவாள்
நம்மாழ்வார் —புவியும் இரு விசும்பும் நின்னகத்த நீ என்
செவியின் வழி உள் புகுந்து என்னுள்ளாய் -அவிவின்றி
யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார்
ஊன் பருகு நேமியாய் உள்ளு

———-

புராண பும்ஸோ வஹனம் விதன்வந்
வயோதிகஸ் ஸன் விந தாத்ம ஜாத
த்ருஷன் மயோ தண்ட தரோ ஸ்த்ய ஹீனாம்
ஸ்திதிம் கதஸ் ஷீரதி பூக்ர ஹான்த–74-

புராண பும்ஸோ வஹனம் விதன்வந்
தங்களுடைய முன்னோர்களை யார் தாங்குகிறார்களோ
வயோதிகஸ் ஸன் விந தாத்ம ஜாத
அவர்களுடைய வயதான காலத்திலும் கூட அவர்களுடைய பிள்ளைகள் அவர்களிடம்
பணிவுடன் இருந்து பணி விடை செய்வார்கள்
த்ருஷன் மயோ
அவர்கள் கல் போல் இருக்கலாம்
அதாவது ஓடி ஆடி வேலைகள் செய்யாமல் நிம்மதியாக ஒய்வு எடுக்கலாம்
தண்ட தரோ ஸ்த்ய ஹீனாம்
அவர்கள் கையில் தண்டம் ஏந்தி இருப்பார்கள்
தண்டத்தைப் போல அவர்களுடைய வாரிசுகள் அவர்களை
உடன் இருந்து தாங்குவார்கள்
ஸ்திதிம் கதஸ் ஷீரதி பூக்ர ஹான்த
அவர்கள் கடல் போன்ற வீட்டில் பால் பொங்கப் பொங்க வாழ்வார்கள் –
ஸ்லேஷ அலங்காரம்
கருடனுக்கும் பொருந்தும் படி அமைந்த ஸ்லோகம்
புராண பும்ஸோ வஹனம் விதன்வந்
புராண புருஷன் ஊழி முதல்வனைத் தாங்கும் கருடன்
வயோதிகஸ் ஸன் விந தாத்ம ஜாத
சிரஞ்சீவியாக நீண்ட ஆயுள் கொண்டுள்ளார்
வயம் என்னும் பறவைகளின் தலைவர்
விநதையின் மகன் –விந தாத்ம ஜாதன்
த்ருஷன் மயோ
கல்லாலான திருமேனி கொண்டவர்
தண்ட தரோ ஸ்த்ய ஹீனாம்
பாம்புகளைத் தண்டிக்கும் தண்டத்தைத் திருக்கையில் எனது உள்ளார்
ஸ்திதிம் கதஸ் ஷீரதி பூக்ர ஹான்த
பாற் கடலின் மகளான பிராட்டியின் தேசமான நாச்சியார் கோயிலிலே
சீரோடும் சிறப்போடும் எழுந்து அருளி உள்ளார்
——–

ஸஹோ தராய சதனே ஸூதாம்ஸோ
ஸூர்யஸ்ய ஸூ தஸ்ய ஸஹோ தரோ அயம்
சர்பேந்த்ர ஸந்தான ஸமாப்தி ஸாச
ஸ மே சமாம் ஸம்பத மாதநோது –75-

ஸஹோ தராய சதனே ஸூதாம்ஸோ
அமுதைப் பொழியும் சந்திரனின் சகோதரியான மஹா லஷ்மியின் இருப்பிடமான நாச்சியார் கோயிலில்
முழு நிலவைக் கண்டு கடல் பொங்குவது போல்
பிராட்டியைப் பார்த்ததும் எம்பெருமானான கருணைக்கடல் பொங்கும்
ஸ்மேரேண வர்த்தித ரஸஸ்ய முகேந்து நா தே நிஸ் பந்த தாம் விஜஹதோ நிஜயா ப்ரக்ருதியா -பூ ஸ்துதி ஸ்லோகம்
ஸூர்யஸ்ய ஸூ தஸ்ய ஸஹோ தரோ அயம்
அருணனின் ஸஹோதரன்
துர்யயோக்தா என்றபாம்பு ஸூர்யனுடைய தேருக்கு கடிவாளம் -சேணம்
கருடனால் பயந்த ஸூர்யன் அருணன் ஸஹோதரன் என்று பயம் தெளிந்தான்
இத்தையே –அர்யம்ணா துர்ய யோக்த்ர க்ரசந பய ப்ருதா சாந்த்விதோ அனுருபந்தாத்
கோதண்ட ஜ் யாம் ஜிக்ருஷேதி தி ஸஹித தியா சங்கீத சங்கரேணா
தல்பே கல்பேதே மா தே மதிரிதி ஹரீனா அப் யாதரேணானுநீத
பஷீந்த்ரஸ் த்ராயதாம் ந பணதரே மஹிஷீ பத்ர பங்கா பஹாரீ -27-

அர்யம்ணா-ஸூர்ய பகவான்
துர்ய யோக்த்ர–வில்லின் நாண் கயிறு
கோதண்ட ஜ்யாம்-கோதண்ட த்வனி
பத்ர பங்கா–திருமாங்கல்யம் –
சர்பேந்த்ர ஸந்தான ஸமாப்தி ஸாச
பாம்புகளின் தலைவனான வாஸூகி உடைய சந்ததியை முடிப்பதில் ஆசை கொண்ட கருடாழ்வார்
அஹீ நாந்தகன் -கருடனுடைய திரு நாமங்களில் ஓன்று
ஸ மே சமாம் ஸம்பத மாதநோ
அவர் அடியேனுக்கு அனைத்து சம்பத்துக்களையும் அருளட்டும்

———

ருத்ரேண ஸத்யம் பகிநீ ஹி தத்தா
நிஜங்கா பூஷா கண ரக்ஷணார்த்தம்
ருத்ரா ஹி சேயம் தவ நாயிகா யத்
விஹங்கரா ஜேதி விதர்க யாமி –76-

கருத்மானுக்கு ருத்ரா ஸூ கீர்த்தி இரண்டு தேவிமார்கள்
ருத்ரனின் இளைய சகோதரி ருத்ரா
உத்ப்ரேஷ அலங்காரத்தில்
ருத்ரன் தனது சரீரத்தில் அலங்காரமாகக் கொண்ட சர்ப்பங்களை ரக்ஷிப்பதன் பொருட்டு
தனது உடன் பிறந்தவளே உமக்கு திருமணம் செய்வித்தானோ என்கிறார்
பாற்கடலில் உண்டான விஷத்தை உண்டதும் தான் பட்ட வேதனையைத் தீர்க்க தனது உடலில்
உள்ள சர்ப்பங்களை தன்னைக் கடிக்கச் சொன்னார் -முள்ளை முள்ளால் எடுப்பது போல்
வீர்யம் அதிகமாக ஆராவமுதனைப் பருகவே கும்பேஸ்வரராக பருகி வேதனையைத் தீர்த்துக் கொண்டார்
இத்தை அம்ருத சார்தூலத்தில்
பித்வா ஹந்த விஷம் பயோதி குஹராத் ஜாயம் புராரி புரா
நாகைர் ஆபரணைச் ச ஸம் வ்ருதஸ் தநுஸ் தப்தோ நிதாந்தம் தத
பர்யாப்த்யா விதுரம் பிபன் நிஹ த்ருஸா கும்பஸ்ய கோணே ம்ருதம்
கும்பம் ஸ்வயமிதீவ ஸம் பிரகதயந் கும்பேஸ்வரோ வர்த்ததே –
ஸ்வாமி தேசிகன் கருட பஞ்சாசத்தில்
கருடன் ருத்ராவை ஆலிங்கனம் செய்த போது அவர் விடும் மூச்சுக்கு காற்றால் அவர் திருமேனியில் உள்ள பாம்புகள் எல்லாம் இறுகுவதாக
ருத்ரா காடோப கூடோச் ச்வஸநதி பிடத ஸ்தநா யோகாத் இவ -என்று அருளிச் செய்துள்ளார்

———

புஞ்ஐன் புஜங்க அநுபவீதா பூதம்
புக்தவ் து தேஷாம் அபவீத பூதம்
தம் ப்ரஹ்ம ஸூத்ரம் து ஸமீஷ்ய சர்பம்
மந்தா நசைல ஸ்மரணம் விதத்ஸே –77-

கருடனுக்கு வாஸூகி ப்ரஹ்ம ஸூத்ரமாக உள்ளது
அது வயிற்றைச் சுற்றி உள்ள நிலையைப் பார்த்தால் திருப்பாற் கடலைக் கடையும் சமயத்தில் மத்தாக இருந்த
மந்த்ரமலையின் நினைவு கருடனுக்கு ஏற்படுகிறது
திண்ணியதாக இருப்பதை சமத்காரமாக வெளியிடுகிறார் –
இந்திரஜித்தின் நாகபாசத்தால் வானர முதலிகள் மயங்கிக்கிடந்த நிலையில்
நன்பால் விளங்கு மணி கோடியோடு நளிர் போது செம் பொன் முதலாத்
தன் பால் இயைந்த நிழல் கொண்டு அமைந்த தழுவாது வந்து தழுவ
மின் பால் இயன்ற தொரு குன்றம் வானின் மிளிர்கின்றது என்ன வெயிலோன்
தென் பால் எழுந்து வடபால் நிமிர்ந்து வருகின்ற செய்கை தெரிய -என்று
மின்னலான ஒரு பெரிய மலை ஆபரணங்களும் மாலைகளும் அணிந்து கொண்டு வானில் வருவது போல்
வந்ததாக கம்பர் கூறுகிறார் –
வை கஷ்ய ஸ்ரக்வீ சேஷச் சுரண பரிணமச் சஸ்த்ர பந்தா நு பந்த
வஷஸ் பீடா திரூடோ புஜகத மயிதுர் ப்ரஹ்ம ஸூத்ராயமாண
அஸ்ராந்த ஸ்வைர நித்ரா விரசித விவிதோச்ஸ்வாச நிஸ்வாச வேக
ஷாமோச் ஸூநாக்ருதிர்ந ஷபயது துரிதம் கோ அபி கத்ரூ குமார —கருட பஞ்சாசத் -42-

புஜகத மயிதுர் ப்ரஹ்ம ஸூத்ராயமாண-வாஸூகி -பூணூல் –
புஜகத மயிதுர்-என்று பெரிய திருவடி -சர்ப்பங்களை அடக்கியவர் என்றபடி
வை கஷ்ய ஸ்ரக்வீ சேஷச் சுரண -இடது தோளில் இருந்து மாலை போலே
பரிணமச் சஸ்த்ர பந்தா நு பந்த -சஸ்திரம் பந்தம் தானே –
வஷஸ் பீடா திரூடோ அஸ்ராந்த ஸ்வைர நித்ரா -நன்றாக நிர்ப்பயமாக நிர்ப்பரமாக தூங்கும்
விரசித விவிதோச்ஸ்வாச நிஸ்வாச வேக ஷாமோச் ஸூநாக்ருதிர்ந ஷபயது துரிதம் கோ அபி கத்ரூ குமார –உஸ்வாஸ
நிஸ்வாசங்களால் -திருமேனி விரிந்தும் சுருங்கியும்
கத்ரூ குமார-வாஸூகி –

அந்த வாஸூகி கருடன் சர்ப்பங்களை உண்ணத் தொடங்கும் நிலையில் உபவீதமாகவும்
புசித்து முடித்து வயிறு பெருத்த நிலையில் அரை நாண் போல் அபவீதமாகி விடுகிறது
ஸ்வாமி தேசிகரும்
நம பன்னக நத்தாய வைகுண்ட வச வர்த்தினே ஸ்ருதி ஸிந்து ஸூ தோத் பாத மந்தராய கருத்மதே

பாற் கடல் பிராட்டி அவதரித்த இடம் -திரு நறையூர் அவள் ஆட்சி செய்யும் இடம்
நீள் நாகம் சுற்றி நெடுவரை நட்டு ஆழ் கடலைப் பேணான் கடந்து அமுதம் கொண்ட உகந்த எம்பெருமான்
இங்கே வயிறாற உண்ட கருடன் என்னும் மலையைச் சுற்றி வா ஸூ கையை வைத்து
மணி முஃதா தீர்த்தத்தைக் கடைந்து வஞ்சுள வல்லி என்னும் பெண்ணமுதத்தைப் பெற்றான்

——–

கார் கோட ஹார கபலீ க்ருதா நாம்
குஷி ஸ்திதா நாம் புஜ கோத்த மாநாம்
ஆஸ்வாஸ நார்த்தம் தவ நாபி ரந்த்ரம்
விசந் நிவா பாதி ததந்தி காஸ்ய–78-

கார்கோடன் கருடனுக்கு ஹாரமாக இருப்பதால் அதன் தலை கருடனின் நாபி தேசத்தில் வரும்
கருத்மான் விழுங்கிய சர்ப்பங்கள் வயிற்றில் உள்ளன
அவைகளுக்கு ஆஸ்வாஸம் கூறுவதன் பொருட்டு கருடனின் தொப்புள் வழியாக உள்ளே புகுவது போல்
நாபியின் சமீபத்தில் தலை உள்ளது என்கிறார்
உலகம் உண்ட பெரு வாயன் அயனைப் படைத்ததோர் எழில் உந்தியில் இருந்து உதிக்கும் தாமரையின் வாயிலாகப் படைப்பது போல்
உங்களை உண்டு தொப்புள் வழியாக வெளிக் கொண்டு வருவான் என்று ஆஸ் வாஸம் பண்ணுகிறானாம்

——–

சரதி ககநே த்வய் யம் ஸஸ்தம் விதாய ரமாதவம்
தபதி தபநே தச் சத்ரத்வம் கதஸ் தவ பாணித
தவ கடகதாம் யாதச் சேஷ பணாகணா விஸ்துத-(விஸ்த்ருத )
தவ ச ஹ்ருதயம் நஸ் ஸர்வேஷாம் திநோதி பணீஸ்வர–79-

சரதி ககநே த்வய் யம் ஸஸ்தம் விதாய ரமாதவம்
திருவின் மணாளனான எம்பெருமானைத் தோள்களில் சுமந்தபடி
வானில் நீ ஸஞ்சரிக்கிறாய்
தபதி தபநே தச் சத்ரத்வம் கதஸ் தவ பாணித -தவ கடகதாம் யாதச் சேஷ பணாகணா விஸ்த்ருத
அந்த சமயத்தில் ஸூர்யனின் வெப்பம் படாதபடி சென்றால் குடையாம் இத்யாதிப்படியே ஆதி சேஷன் குடை பிடிக்கிறான்
தவ ச ஹ்ருதயம் நஸ் ஸர்வேஷாம் திநோதி பணீஸ்வர
இத்தால் அஞ்சும் குடியான உன்னுடைய உள்ளத்துக்கும்
அடியோங்களுடைய உள்ளத்துக்கும் ஆனந்தம் தருகிறார்
ஸூர்யனுக்கு ஒளி தரும் உனக்கு வெப்பம் தாங்காது என்று பொங்கும் பரிவால் அஸ்தானே பய சங்கை பண்ணும் குடி –

——

ஸ்வாமின் வஞ்சுள வல்லி கேந பவதா நாவிஷ் க்ருதா பாஹவா
ஸத்வா ரோத்ர புஜ த்வயம் புநரிதம் சக்ராய சங்காய ச
காந்தே பக்த தமோ மம ப்ரிய ஸூஹ்ருத் மத்வாஹ நேந்த்ரோ வர
பஹு த்வந்த்வயுதோ மமாபி ததலம் ஸ்வாமின் நமஸ்தே நம–80-

இது பிராட்டிக்கு நம்பிக்கும் உரையாடல்

ஸ்வாமின் -பிராட்டி உடைய விளிச்சொல்
வஞ்சுள வல்லி -சொல்லு என்று நம்பி கூற்று
கேந பவதா நாவிஷ் க்ருதா பாஹவா ஸத்வா ரோத்ர புஜ த்வயம் புநரிதம் சக்ராய சங்காய ச
நான்கு திருக்கரங்களுடன் இல்லாமல் இரண்டு மட்டுமே எதற்க்காக
காந்தே பக்த தமோ மம ப்ரிய ஸூஹ்ருத் மத்வாஹ நேந்த்ரோ வர பஹு த்வந்த்வயுதோ மமாபி ததலம்
எனது பக்தன் கருடனுக்கு இரண்டு இருப்பதால்
ஸ்வாமின் நமஸ்தே நம
தமர் உகந்த படி அமைத்துக் கொள்ளும் உமக்கு நமஸ்காரங்கள் –

———

புஜகா பரணே ந தூர் ஐடி
கமலா வாஸ கதோ ந விஸ்வ த்ருக்
நவமேக நிபோ ந மாதவ
க இதிஹாஸ்மி ந வக்தும் ஈஸ்வர–81-

புஜகா பரணே ந தூர் ஐடி
கருடன் பரமசிவனைப் போலவே பாம்புகளை ஆபரணமாகக் கொண்டுள்ளார்
ஆனால் ஜடாமுடி கொண்டு தவம் சாதனை பண்ண வேண்டாதபடி கிங்கரனாக அவனே கொண்டானே
கமலா வாஸ கதோ ந விஸ்வ த்ருக்
கமலா ஆலயம் -நாச்சியார் கோயில் -நான்முகனும் நாபி கமலாலயத்தில் இருந்தாலும்
இவர் படைப்புத் தொழில் செய்ய வேண்டாமே
ப்ரஹ்ம ஏக நிஷ்டை இவருக்கு -உபய நிஷ்டை அவனுக்கு
நவமேக நிபோ ந மாதவ
நீல மேக ஸ்யாமளானைப் போல் திருமேனி
ஆனால் இவர் மிதுன சேஷி கொண்டவர்
க இதிஹாஸ்மி ந வக்தும் ஈஸ்வர
இப்படி மும்மூர்த்திகளை போல் இல்லாதவராக மேம்பட்டு உள்ள உம்மை எவ்வாறு ஸ்துதிப்பேன்
மூவரும் இணைந்தாலும் இவருக்கு நிகராகாதே

———–

கமலாலய மாதந நோத்யத்
வஹதே தம் கமலாலயம் நத
புஜகாபரண ப்ரமோ தேத
புஜகாந் ஹந்தி ச கோன் வயம் புமான்-82-

பிராட்டியின் நித்ய வாசஸ்தானமான ஸ்ரீ நிவாசனையே அத ஆநோதி -கீழ் ஆக்குகிறான்
த்வஜமாகவும் மேல்கட்டு விதானமாகவும் இவர் தானே மேல் உள்ளார்
வினதை சிறுவன் என்னும் மேலாப்பின் கீழ் என்னும்படி உள்ளான்
அதே சமயம் அலர் மேல் மங்கை உறை மார்பனை விநயத்தோடு வணங்கி எழுந்து அருளப் பண்ணுகிறான்
நாகங்களையே ஆபரணமாகக் கொண்டு ஆனந்தம் அடையும் கருடன்
பாம்புகளையும் கொல்கிறானே
புஜம் கச்ச தீதி புஜக –விஷ்ணு கருடன் திருத்தோளில் ஆரோஹணித்தவர் -தோள்களில் உள்ள ஆபரணத்தைக் காட்டுவது போல் மிதுனத்தையும் தாங்கிக் காட்டி அருள்கிறான்

யோ யம் தத்தே ஸ்வ நிஷ்டம் வாஹநம் அபி வர ஸ்பார்சிதோ யேன யஸ்மை
யஸ்மாத் யஸ்மை ஆஹவஸ்ரீ விததாதி பஜனம் யத்ர யத்ரேதி சந்த
பிராயோ தேவ ச இத்தம் ஹரி கருட பிதா கல்பித ஆரோஹ வாஹ
ஸ்வாபாவ்ய ஸ்வ ஆத்ம பவ்ய ப்ரதிசாது சகுனிர் ப்ரஹ்ம ச ப்ரஹ்மதாம் ந —கருடபஞ்சாசத் 4–அவன் பிரசாதத்தாலே த்வஜமாகவும் வாகனமாக

கருடம் ச ததர்ஸோ ச் சை ரந்தர்தாநகதம் த்விஜ
க்ருதச்சாயம் ஹரேர் மூர்திநி பஷாப்யாம் பஷி புங்கவம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-12-4-

பெருமாள் திருப்பாதங்கள் கருடனுக்கு கண்ட ஆபரணமாக விளங்கும்
சிலேடை நயம் -ஆலயம் -ஆசனம் -தாம் வஹதே -புஜக ஆபரணம் புஜகஸ்ய ஆபரணம்
விலக்ஷணமான கருடாழ்வாரைக் கொண்டாடுகிறார் –

————-

புஜகாபரண கமலாலயக
நவ மேக நிபோ யதயம் நதயம்
த்ரி பிரிபி தேவை ஸ்வய முதிதோ பூத்
த்ரி பிரிபி தேவை கோபி புமாந்த–83-கீழ் போல் திரிமூர்த்தி ஸாம்ய சிலேடை இதிலும்

பாம்புகளை ஆபரணமாக அணிந்தவன்
கமலாலயமான நாச்சியார் கோயில் தாமரையை அடைந்தவன்
நீருண்ட மேகம் போன்ற காந்தி உடையவன்
யதயம் ததயம் –அவன் இவ்விதம் உள்ளானோ அக்காரணங்களிலாயே
மூன்று வேதங்களாலும் எங்களுடைய ஒப்பற்ற புருஷோத்தமன் தானே போற்றுதலுக்கு உரித்தாகிறான் –
தனித்தனியே மும்மூர்திகளுடைய குணங்கள் இவனிடம் காணலாய் இருப்பதால்
அவர்களும் இவனைப் போற்றுகின்றனர்
தேவ வேத சமத்கார பிரயோகமும் ஸ்வாரஸ்யம்

———

கேது வாஹன தயைவ மித்ர தா
ஸா அவ யோத திஹ சாஸ்ய ஹீநமா
தேந சேஷ பணிராஜ மித்ரதா
வைநதேய தவ பாது ஸந்ததம்–84-

நீ எனக்கு கேது த்வஜமாகவும் -மேலானவனாகவும்-வாஹனம் -கீழானவனாகவும்
விஷ்ணுவான எனக்கும் வாகனமான உனக்கும் உள்ள இத்தகைய நட்பு மிகவும் மேலானது
இத்தகைய சங்கீதத்தின் நட்ப்பின் காரணமாகவே பணி ராஜனான -ஆதிசேஷனிடம் உனது ஸ்நேஹம்
ஸந்ததம் பாத்து -எப்போதும் விளங்கட்டும் –
அரவும் கருடனும் அன்புடன் ஏந்தும் அடி இரண்டும் -அம்ருதாஸ்வாதினீ –32-
ஸ்லிஷ்யத் போகீந்தர போக -என்று கருட பஞ்சாசத் ஸ்லோகத்திலும் இவ்விருவருடைய சேர்க்கையை அருளிச் செய்கிறார்
அஹீன மித்ரா -அஹீநதா -அஹீ நம் என்ற புண்ய யாகம் போன்றது நமது ஸ்நேஹம்
அவநம் ஸ்ரயநாம் அஹீந மாகம்–பரமார்த்த ஸ்துதி

———-

இத்ய வேத்ய பகவன் மதம் ஸ்திதம்
சேஷ தாம் வஹதி சேஷ வத் பவான்
சேஷ ஏஷ தவ ஸோ அஹமித்யதஸ்
மாம சேஷ பத கேஸ்வரோ அவதாத்–85-

இவ்வாறு பகவானுடைய அபிப்ராயம் இருக்கையில் -கருடனிடம் நட்பு உடன்படிக்கை காரணமாக –
சேஷத்வ அனுரூப கைங்கர்யத்தை நடத்தி வரும் பொழுது
சேஷ பூதர்களான அசேஷ அடியோங்களை
புள்ளரைரே நீரே ரஷித்து அருள வேண்டும்
உம்மிடம் சேஷத்வமும் அசேஷத்வமும் பொருந்தி இருக்கின்றனவே

————

புஜாந்தர விபூஷணம் பகவதீ பயோ தேஸ் ஸூதா
பவனாபி ச வாஹனம் பகவதோ அஸ்ய விஷ்ணோரிதி
வதன் கில பதே பதே வகுல பூஷண ஸ்ஸாதரம்
பஜத்யமித பக்திதை நிஜ வசஸ் ஸூதா ராஸிபி--86-

பகவானான மஹா விஷ்ணுவின் திரு மார்பிலே திரு ஆபரணமாக பாற்கடலின் திரு மகளையும்
வாஹனமாக உம்மையும் சேர்த்து அடிக்கடி நம்மாழ்வார் அன்புடன் பல பாசுரங்களால் மங்களா சாசனம் செய்து அருளி உள்ளார்
இவற்றை அனுசந்திக்கவே நமக்கு பகவத் பக்தி உண்டாகும் அன்றோ –
திகழ்கின்ற திரு மார்பில் திரு மங்கை தன்னோடும்
திகழ்கின்ற திருமாலார் சேர்விடம் தண் வாட்டாறு
புகழ்கின்ற புள்ளூர்ந்து பேர் அரக்கர் குலம் கெடுத்தான்
இகழ்வின்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே

———

விஷ்ணும் வஹன் விஷ்ணு பதைக லோல
ருத்ரா னுகூல கமலாலயே அபி
பக்த்யா மஹத்யா ஸததம் நிவிஷ்ட
த்ரி மூர்த்தி ஹ்ருதய ஸ்ருதி மூர்த்தி ரிந்தே–87-

வேதாத்மாவான கருட பகவான் ஸ்ரீ மஹா விஷ்ணுவை வைத்துக் கொண்டு விஷ்ணு பதத்தை ஆசையுடன் அனுபவிக்கிறார் –
விஷ்ணு பதம் என்பதை பரமாகாசம் என்றும் திருவடிகள் என்றும் கொள்ளலாம்
பகவானின் பாதத்தை அனுபவித்துக் கொண்டு எப்பொழுதும் இருப்பதால் ஸாயுஜ்யம் அடைந்து விஷ்ணுவைப் போலவே ஆனார்
அடியார் விரோதிகளை நிரஸித்து அருளும் பொழுது அனுகூலராக விளங்குகிறார்
பகவத் பக்தியுடன் திகழும் ருத்ரனுக்கும் அனுகூலர் என்றுமாம்
பிராட்டிக்கு வாசஸ்தானமான எம்பெருமானுக்கு வாஹனமாயும்
கமலாலயம் என்று திரு நாபி கமலத்தை வாசஸ்தானமாகக் கொண்ட நான்முகனையும் கொள்ளலாம்
இப்படிப்பத பிரயோக சாதுர்யத்தால் மும்மூர்த்திகளுக்கும் சமத்காரமாக இவரது ஒப்பீடு சொல்லப்படுகிறது

—————

அத பஞ்சம ப்ரார்த்தனா விஹார

பக்ஷி ராஜ விநாதாத் மஜ ஸேவா
விஷி பத்யக ததிம் விந தானாம்
ஸூஷிதி ஸ்ஸூஹ்ருத பூரி பாலனாம்
அஷி மத் ஸூத மணே ஸூகி குர்யாத்–88-

பறவை அரசனானவனும் -வினதாவின் மகனுமான -கருடனின் பணி புரிதலானது
ஸேவிப்பவர்களின் பாபக் கூட்டங்களை ஒழித்து விடும்
நிறையும் புண்ணிய பலன்களின் ஸ்ரேஷ்ட இருப்பிடமான அவர் எனது திருக்குமாரர்
கண்ணைக் குணப்படுத்தி அருள வேண்டும்

இரு சக்கர வண்டியில் விபத்தில் கண் பார்வை இழந்த கருணாகர ஸ்வாமிக்காக இது முதல் மூன்று ஸ்லோகங்களில் பிரார்த்தனை
அத்தை நிறைவேற்றி அருளினார் கருத்மானும்

————

பக்ஷி ராஜ புஜ கேஸ்வராலயே
பக்ஷி தாமித புஜங்க சந்ததே
ரஷி தாநக வடஸ்த சன்முநே
ஸ்வ ஷிமத் வரமமும் ஸூதம் குரு–89-

பறவை அரசனே
பாம்பின் லோகமான பாதாளத்தில் அளவற்ற பாம்புக்கு கூட்டங்களை உண்டவரே
வட வ்ருஷத்தில் அமர்ந்து இருக்கும் குற்றமற்ற வாலகில்ய முனிவர்களை ரக்ஷித்து அருளியவரே
இந்த எனது பிள்ளையை நல்ல கண் பார்வை உடையவனாக ஆக்கி அருள வேண்டும்

—————

நேத்ரம் ஹி காயத்ர முஸந்தி யஸ்ய
நேத்ரம் ககானாம் பரமம் யமா ஹு
காத்ரம் யதீயம் கனகாப த்ருஸ்யம்
நேத்ரம் ஸ புத்ரஸ்ய ஸூகீ கரோது–90-

எவருடைய கண்ணை காயதரம் என்னும் ஸாமம் என்று கூறுகிறார்களாய்
எவரை புள்ளரையன் என்று போற்றுகிறார்களோ
எவரின் திருமேனி தங்கம் போல் திகழ்கிறதோ
அவர் எனது பிள்ளையின் கண் பார்வையை முழுமையாக அருள வேண்டும்

———–

அஷவ்ஹிணீ யேன ஹதா ஸூராணாம்
குஷவ் க்ருதே பேஸ்வர கச்ச பேன
ஸ ஷவ்ம ஸம்வீத தனுர் கருத்மான்
அஷவ்க மஸ்மாகம் அகாத் புநாது–91-

அம்ருதம் கொண்டு வர தேவ லோகத்துக்கு எழுந்து அருளும் பொழுது பசியைப் போக்கிக் கொள்ள
இடையில் பரஸ்பர சாபத்தால் யானையும் குதிரையுமாகிய விபாவஸூ ஸூ ப்ரிதீர் என்கிறவர்களை அமுது செய்து அருளினார்
தம்மை எதிர்த்து வந்த தேவப்படைகளை நிரஸித்து அருளினார்
திருப்பீதாம்பரத்தால் அலங்க்ருதமான திருமேனியை யுடைய அவர் நமது இந்திரிய வசியதையைப் போக்கி அருள வேண்டும்

இதில் -அஷவ்ஹிணீ -குஷவ் க்ருதே -ஸ ஷவ்ம -அஷவ்க –ப்ராஸம் நோக்கத் தக்கது

———-

பஷீந்த்ர லஷ்மீ சதனோ பலாட்ய
பக்ஷேண நிர் தூத விபக்ஷ ஜாத
பக்ஷம் மதீயம் விஜயேன யுக்தம்
அஷீண தர்மம் தயயா விதேயா–92-

வாரீர் பெரிய திருவடி நாயனாரே -மிகுந்த பலம் பொருந்தியவரே –
நாச்சியார் திருக்கோயிலில் எழுந்து அருளி இருக்கும் தேவரீர் தயையுடன் அடியேனுடைய பக்ஷத்தை வெற்றியுடன் கூடியதாகவும்
குறைவற்ற தர்மம் உடையதாகவும் ஆக்கி அருள வேண்டும்
இதில் நான்கு பாதங்களிலும் ககார ஷகாரங்கள் ப்ராஸமாக வந்துள்ளமை காணலாம் –

————–

அதி குடிலகதிஸ் ஸன் ஆத்மனச் சாதனார்த்தம்
விசதி கிமபி ரந்த்ரம் ஹந்த வக்த்ரேண கோரம்
வமதி விஷமபி ஸ்வம் ஸர்வதா கூட வ்ருத்தி
விமத இஹ மமாயம் சிஷயே மம் ககேந்த்ர--93-

இதில் தமது எதிரிகளை சிஷித்து அருள வேண்டுகிறார்
இவருக்கு எதிரி வேத பாஹ்ய குத்ருஷ்டிகளே
வைதிக போர்வை கொண்டு வேதத்தில் ஆபாத தத -தனக்குச் சாதகமாகத் தோன்றும் சில வாக்யங்களாகிற
ரந்தரத்துக்குள் -பொந்துகளுக்குள் -நுழைந்து
எம்பெருமானுக்கு குணம் இல்லை விபூதிகள் இல்லை
போன்ற கொடிய விஷம் போன்ற வாக்கியங்களை சொல்லிக் கொண்டு திரிகிறார்கள்
வெளிப்படையாகச் சொன்னால் வைதிகர்கள் தங்களை நிரசிப்பார்கள் என்று மறைந்தே
கார்யங்களை செய்கிறார்கள் என்று முதல் மூன்று பாதங்களால் அருளிச் செய்கிறார்

குடிலமான போக்கு
தன்னை மறைத்துக் கொள்வதற்காக பொந்துக்குள் நுழைத்தாள்
வாயினால் கொடிய விஷத்தைக் கக்குதல்
எப்பொழுதும் மறைத்தே உறைதல்
போன்றவை பாம்புகளுக்கும் உண்டாகையாலே
தமது எதிரிகளான குத்ருஷ்டிகளை பாம்புகள் என்கிறார்

பாம்புகளை சிஷிக்க வல்ல பெரிய திருவடி நாயனாரை இவர்களை வெல்லுவதற்கு
வேண்டிய சக்தியை அருளிச் செய்யும் படி பிரார்திக்கிறார்

—————

பத்மா நிதிம் வஹஸி பத்ம பலாச நேத்ரம்
பத்மா நிதவ் விஹரஸே நகரே அப்யமுஷ்மின்
பத்மா நிதவ் மயி விதாய ததா ப்ரஸாதம்
பத்மாப்த ஸூத ஸஹஜா வஹ சாதரஸ் த்வம்--94-

தாமரையை வளர்த்தும் ஸூர்யனுக்கு சாரதியான அருணனுடன் பிறந்தவரே
தாமரை இதழ் போன்ற திருக்கண்களுடைய எம்பெருமானுக்கு வாஹனமாய் உள்ளீர்
நாச்சியார் கோயில் திவ்ய தேசத்தில் மகிழ்ந்து விளையாடவும் செய்கிறீர்
ஸ்ரீ நீதியான அடியேன் இடம் அப்படியே அருள் புரிந்து ஆதாரத்துடன் இருந்து அருள வேண்டும் –

அந்த பத்மா நிதியைத் தாங்குவது போல்
இந்த பத்மா நிதியையும் அருளி கைக்கொள்ள வேண்டும்
வேதாத்மா விஹாகேஸ்வரரானபடியாலே
வேதம் நான்கு ஐந்து வேள்வி அங்கம் ஆறு இசை ஏழு நடையால் வல்ல அந்தணர் வாழும் நறையூரிலே (பெரிய திருமொழி -6-10-7)உகந்து
அருளி நித்ய வாஸம் செய்வதில் வியப்பில்லையே
அருணன் தேரை ஒட்டி வந்து தாமரையை மலர்த்துவது போல்
நீரும் எம்பெருமானுடைய தாமரைக் கண்களை மலர்த்தி அவனுடைய பூர்ண கடாக்ஷங்களை
அடியோங்கள் பெற்று உஜ்ஜீவிக்கும் படி அருள வேண்டும்

இதில் பத்மம் -பதம் ஐந்து முறை வந்த அழகு நோக்கத்தக்கது –

——

பத்மாலயே புரவரே பதகேந்த்ர திஷ்டன்
பத்மாலயம் ஸ்ருதி யுகம் ஸ்ருதி ரூப தன்வன்
பத்மாலயம் வஹஸி பத்ம பலாச நேத்ரம்
பத்மாலயே மயிஸ மந்த மத்வ ப்ரஸீத--95-

வாரீர் பெரிய திருவடி நாயனாரே
நாச்சியார் திருமாளிகையில் நித்ய வாஸம் செய்து அருளி வேதாத்மாவான தேவரீர்
எல்லாருடைய காதுகளையும் மங்களத்துக்கு இருப்பிடமாகச் செய்யும் படி
மங்களகரமான வேத ஒலிகளை உடையவராய் இருந்து கொண்டு தாமரைக்கண்ணனா ஸ்ரீ யபதியைத் தாங்கி அருள்கிறீர்
இப்படிப்பட்ட தேவரீர் மந்தமாதியாய் இருக்கும் அடியோங்களை ரக்ஷித்து அருள வேண்டும்

பெரிய திருமடலில் இங்குள்ள தாயாரின் திவ்ய மங்கள விக்ரஹ வர்ணனை உண்டு
விஷ்வக் சேனர் இங்கு மட்டுமே இரண்டு திருக்கரங்களுடன் ஸேவை ஸாதிக்கிறார்
செண்பகப்பூவின் வாசனையை வெறுக்கும் வண்டுகளும் கூட இங்கு
வம்பவிழும் செண்பகத்தின் வாசமுண்டு மணி வண்டு வகுலத்தின் மலர் மேல் வைகு -6-6-1-
கந்தத்வாரம் என்று போற்றப்படும் பிராட்டியுடைய பரிமளம் இந்த க்ஷேத்ரம் முழுவதும்
பரவி இருப்பதால் நறையூர் -ஸூகந்த வனம் என்ற திரு நாமம் பெற்ற க்ஷேத்ரம்

இதில் பகாரம் பத்து முறையும்
பத்மம் பதம் ஐந்து முறையும் வரும் அழகு அனுபவிக்கத் தக்கது

———

பத ந்யாஸ க்ராந்த த்ரி புவன மிமம் வேங்கட பதிம்
பத ந்யாஸம் குர்யா மமகர யுகே சேஷகிரி ராட்
பதான் யேயம் மந்த்ரே பரி விரஸயன் பத்ர ரத ராட்
பதம் சேஷாத் ரேர் மே வ்ரண விர ஹிதம் தத் ஸூக யது–96-

தன் திருவடி வைப்புகளாலே மூவுலகையும் கடந்த திருவேங்கடத்து எம்பெருமானைக் குறித்து
ஸ்ரீ திருமலைக்கு அரசே
எனது இரு கரங்களிலே திருவடிகளை வைத்து அருள வேண்டும் என்று பிரார்த்தித்து அந்தப்பேற்றைப் பெற்ற பக்ஷி ராஜரே
என்னுடைய புதல்வனான சேஷாத்ரியின் காலில் உள்ள புண்ணை அற்றதாக்கி அத்தை ஸ்வஸ்தம் ஆக்கி அருள வேண்டும்

மான் கொண்ட தோல் மார்வின் மாணியாய் மாவலி மண்
தான் கொண்டு தாளால் அளந்த பெருமானைத்
தேன் கொண்ட சாரல் திரு வேங்கடத்தானை
நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே –நம்பியே -உலகு அளந்த திருவேங்கடமுடையான்

தூவாய புள்ளூர்ந்து வந்து துறை வேழம்
மூவாமை நல்கி முதலைத் துணித்தானைத்
தேவாதி தேவனைச் செங்கமலக் கண்ணானை
நாவாயுள்ளானை நறையூரில் கண்டேனே –கஜேந்த்ரனுடைய காலில் ரணம் போக்கி அருளியது போல் தமது குமாரனுடைய ரணம் ஆற்ற பிரார்த்தனை

———

ஸ்ரீ மன் பன்னக ஸார்வ பவ்ம நகரே ஸ்ரீ தேவ நாதாந்திகே
நாஸா க்ரேண நதீம் ஹிதாத்ருஸ ரஸாம் யத்வத் பவான் நிர்மமே
தத்வத் மத் ஸூ ஹ்ருதோ ஹ்ருதோ ஹித ரஸாம் வாஸம் கரோ தூன்ன தாம்
யேனோ பைதி முதம் மதீய க்ருஹிணீ தத் தாத பாதா அபி--97-

ஸ்ரீ மானான கருடனே
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் ஸ்ரீ மான் -22-180-222- மூன்று தடவைகள் வரும்
22-திரு நாமத்துக்கு –விருத்தா காரத்வ அபி ஸ்ரீ மான் ஸர்வ மநோ ஹர -ஸ்ரீ பட்டர் வியாக்யானம்
வ்ருத்த ஆகாரமுடைய ஸ்ரீ நரஸிம்ஹ பாரமான திரு நாமம்
அவ்வாறே நம் கல்கருடனும் அழகிய தோற்றத்தோடு ஸ்ரீ மானாக திகழ்கிறார்
180 திரு நாமத்துக்கு திவ்ய பூஷண ஸம்பத் பிர் யுக்த –பாம்புகளை ஆபரணமாக அணிந்து திகழ்கிறார்
222 திரு நாமத்துக்கு மத்ஸ்ய ரூப அவதாரேபி -ஸ்ரீ மான் கமல நேத்ர –
இவரும் நேத்ரம் காயத்ரமூஸே -காயத்ரி மந்திரமே கண்களாகக் கொண்டவர்
பன்னக ஸார்வ பவ்ம நகரே –
ஆதி சேஷன் நகரம் –திரு அஹீந்த்ர புரம் -அவ் வூரிலே
ஸ்ரீ தேவ நாதாந்திகே
தேவ நாதன் -அடியார்க்கு மெய்யன் -அவனுக்கு அருகில்
நாஸா க்ரேண நதீம் ஹிதாத்ருஸ ரஸாம் யத்வத் பவான் நிர்மமே
உன்னுடைய அலகால் நதியை உருவாக்கினாய்
கருட நதி தீர்த்தம் சமர்ப்பித்து எம்பெருமானுடைய தாக்கத்தை தீர்த்து அருளினார் புள்ளரசன்
தத்வத்
அந்தக்கல்லில் இருந்து தண்ணீரைப் பெருகி வரச் செய்தது போல்
மத் ஸூ ஹ்ருதோ ஹ்ருதோ ஹித ரஸாம் வாஸம் கரோ தூன்ன தாம்
கல் நெஞ்சம் கொண்ட என் நண்பனின் வாயில் இருந்து நல்ல உன்னதமான வார்த்தைகளாகிய நதியைப் பெருகி வரச் செய்தாயாகில்
யேனோ பைதி முதம் மதீய க்ருஹிணீ தத் தாத பாதா அபி
அதனால் என்னுடைய மனைவியும் அவளுடைய தந்தையும் ஆனந்தப்படுவார்கள்

———–

ஸ்வாமின் பஷீஸ் வராஸ்மின் குரு மயி கருணா மீஷதே தன் மமாலம்
யேன ஸ்யுஸ்தே புஜங்க ப்ரமுக விஷதரா கோஸரா நாஷி மார்கே
ஷேமோ பூயஸ் குடும்பே ஸ்வய மதி மஹிதோ வர்தமானோ மமஸ்யாத்
ஸ்ரீ மான் நாராயணோ அபி ஸ்வயமதி குதுகீ ஸ்வைர்ம மாத்கே ஸதா ஸ்யாத்–98-

ஸ்வாமின்
தான் ஸ்வம் சொத்து சேஷபூதன் என்று உணர்ந்து ஸ்வாமின் என்று விளிக்கிறார்
மேல் 101 ஸ்லோகத்தில் ஸரணாகதி செய்கிறார்
பஷீஸ் வர
நீர் பக்ஷிகளுக்கு மட்டும் ஈஸ்வரர் அல்லர் –
அடியோங்களுக்கும் தேவரீரே ஈஸ்வரர்
அஸ்மின் குரு மயி கருணா மீஷத்
தம்மை ஸமர்ப்பித்து கருணை கூர்ந்து அருள் புரிய வேண்டும் என்கிறார்
ஏதன் மமாலம் யேன ஸ்யுஸ்தே புஜங்க ப்ரமுக விஷதரா கோஸரா நாஷி மார்கே
பாம்புகள் போன்ற விஷ ஜந்துக்களும் தீயவர்களும் அடியேனுடைய பார்வையில் படாமல்
எப்போதும் எம்பெருமானுடைய அடியவர்களுடன் கூடியே இருக்க அருள் செய்ய வேண்டும்
தீதில் நன்னெறி நிற்க அல்லாது செய் நீதியாரோடும் கூடுவது இல்லை யான் –
ஷேமோ பூயஸ் குடும்பே ஸ்வய மதி மஹிதோ வர்தமானோ மமஸ்யாத்
அடியேனுடைய குடும்பத்தில் நன்மையையும் ஏற்றமும் செழிப்பும் உண்டாகும்படியும்
ஸ்ரீ மான் நாராயணோ அபி ஸ்வயமதி குதுகீ ஸ்வைர்ம மாத்கே ஸதா ஸ்யாத்
அவனுடைய ஸமஸ்த பரிவாரங்களோடு
அரவத்து அமளியினோடும் அழகிய பாற் கடலோடும் அரவிந்தப்பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து -என்றபடி
வந்து அடியேனுக்குத் துணையாகும்படி அனுக்ரஹம் பண்ணி அருள வேண்டும் –

கல் கருடன் -கற்ற கருடன் என்றும் – கற்கின்ற கருடன் என்றும் –கற்கப் போகும் கருடன் என்றும் முக்காலத்திலும் கற்று
நமக்கும் கல்வி வரத்தை அருள்பவராக விளங்குகிறார்

——–

புஜங்கா பாஸம் கில மோசயித்வா
புஜா யுகீ பஞ்ஜ ரக கராரே
புஜா ஸ்வ துண்டேன புஜங்க மானாம்
புஜாதிகம் ரக்ஷது மாமகீனம்–99-

புஜங்கா பாஸம் கில மோசயித்வா
நாக பாசத்தால் கட்டுண்ட பெருமாள் இளைய பெருமாள் வானர முதலிகள் -அனைவரையும் விடுவித்து அருளியவர்
புஜா யுகீ பஞ்ஜ ரக கராரே
கரரின் விரோதியான பெருமாளின் இரு தோள்களையும் ஆராத் தழுவிக் கொண்டார்
புஜா ஸ்வ துண்டேன புஜங்க மானாம்
தன்னுடைய அலகால் பாம்புகளை உண்ணும் கருடன்
திரிபுர சம்ஹாரத்தின் போது செவ்வனே தேரோட்டி க என்னும் பிரமனின் புதல்வர் கஸ்யபர்
அவர் புதல்வர் கருடாழ்வார்-ஆகவே இவர் -க என்ற தேரோட்டியின் மகனின் மகன்
புஜாதிகம் ரக்ஷது மாமகீனம்
இப்படிப் புகழ் பெற்ற தேரோட்டிகளின் சம்பந்தம் பெற்ற தானே பகவானின் தேராகவும் தேரோட்டியாகவும் திகழ்ந்து
நம் மனதில் எழும் சிந்தனைகளையும் ஆசைகளையும் செவ்வனே நடத்திச் சென்று
நல்ல ஆசைகளையும் நிறைவேற்றும்படி பிரார்த்திக்கிறார்

நாச்சியார் கோயிலில் நித்ய வாசம் செய்து அருளும்
கோபத்துடன் பாம்புகளை கிள்ளி எறியும் கருடாழ்வாரை
பிணியுடன் இருக்கும் நான் ஸுகம் பெற மயிர்ச்சுழிப்புடன் சரணம் அடைகிறேன்

புஜாதிகம் ரக்ஷது மாமகீனம்
அடியேனுடைய கைகள் உள்ளிட்ட அனைத்து அவயவங்களை ரக்ஷித்து அருள்வாய்

இதில் புஜ -பத பிரயோகம் ஐந்து தடவைகள்

———-

ஸூ தஸ்ய வாஹஸ் ஸூர நாத ஸூநோ
ஸூ தஸ்ய ஸூ ரஸ்ய ஸஹோதரோய
ஸூ தஸ்ய கஸ்யா அபி ஸூ தஸ்ய ஸூநு
ஸூ தஸ்ய மே பாது மனோ தரஸ்ய–100-இந்த்ர வஜ்ரா விருத்தம் -ஸூத பதம் பாதங்கள் தோறும் அமைந்த ப்ராஸ அலங்காரம் இதில்

எவன்
தேவாந்தனுடைய மகனான அர்ஜுனனுக்குத் தேரோட்டியின் வாஹனமோ
ஸூர்யனுடைய தேரோட்டியாக அருணனுக்கு ஸஹோதரனோ
க என்ற பெயருடைய தேரோட்டியாக பிரமனுக்கு மகனான காஸ்யபருக்கு மகனோ
அவன்
என்னுடைய மனதில் தோன்றும் எண்ணத்தின் -ஆசைகளின் -தேரோட்டியாக விளங்கி நல் வழியில் செலுத்தி அருளட்டும்

———

சரோஜ வாஸா சதனே வஸந்தம்
ஸரோஷ மாச்சின்ன ஸரீ ஸ்ரு பவ்கம்
ஸரோக மேதம் ஸூ கினம் விதாதும்
ஸரோ மஹர்ஷ சரணம் ப்ரபத்யே--101-

நாச்சியார் கோயிலில் நித்ய வாஸம் செய்யும் கருடாழ்வார்
சினத்துடன் பாம்புகளைக் கிள்ளி எறியும் அவர்
பிணியுடன் இருக்கும் என்னை சுகம் பெறச் செய்யுமாறு
மயிர்க்கூச்சத்துடன் சரண் அடைகிறேன்

———-

ஸ்ரீ நிவாஸ கவி தல்லஜ க்லுப்தம் ஸ்ரீ நிவாஸ வசதே பத கேந்தோ
ஸ்ரீ நிவாஸ சதகம் படிதம் சேத் ஸ்ரீ நிவாஸ சதகம் பிரததாதி--102-

ஸ்ரீ நிவாஸன் என்ற பெயருடைய கவியால்
ஸ்வாமியின் முழுப்பெயர் ஸ்ரீ நிவாஸ ராகவன்
நாச்சியார் கோயிலில் வசிக்கும் பறவை அரசரைப் பற்றிய
திருவுடைய -மங்களங்கள் உடைய நூறு ஸ்லோகங்களைப்
படிப்பவர்கள்
நூற்றுக்கணக்கான செல்வங்களுடைய ஐஸ்வர்யம் பெற்று இனிது வாழ்ந்து மோக்ஷ சாம்ராஜ்யமும் பெறுவார்கள்

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நிதி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரும் தேவி தாயார் சமேத ஸ்ரீ தேவாதி ராஜ பர ப்ரஹ்மம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஹனுமத் விம்சதி /ஸ்ரீ ஏக முக ஹனுமத் கவசம்- / ஶ்ரீ ஹனுமத் ஸ்தோத்ர-ஸ்ரீ வ்யாஸ தீர்த விரசிதம்–

July 7, 2023

கலியுகாதி 4610-விபவ வருஷம் மாசி ஸ்வாமி திருவவதாரம்

பிதா மஹஸ் யாபி பிதா மஹாய தாதேத்ய மந்த்ர கஞ்சிது வந புவி துஷித தோய பிந்தும் யயாஸே
புராய மாஹ தாதேதி பகவான் வேங்கடேஸ்வர

பூரி ஸ்ரீ சைல பூர்ணஸ்ய தஸ்ய தேஹிமே தாதா பானீயமிதி ப்ராஹ்ய மீஸ்வர
வேங்கடேசஸ் ததஹ தஸ்ய தாதாசார்யா பிதா பவத்

இந்த ஸ்வாமி தனியன்
ஸ்ரீ சைல பூர்ண குல வாரிதி பூர்ண சந்த்ரம்
ஸ்ரீ ஸ்ரீ நிவாஸ குரு வர்ய பாதாப்ஜ ப்ருங்கம்

ஜேயோ குணாம்பு நிதிம் ஆஸ்ரித பாரி ஜாதம்
ஸ்ரீ தாதயார்ய மந கம் சரணம் ப்ரபத்யே

———–

காஞ்சீபுரத்திற்கு அருகில் ஐயங்குளம் என்று இந்நாட்களில் வழங்கப் பெறும் ஐயங்கார் குளம் என்ற சிற்றூரில்
மிகப் பெரிய குளக் கரையில் எழுந்து அருளி இருக்கும் ஸ்ரீமத் ராம பக்த ஹனுமானைப் பற்றி –
16நூற்றாண்டில் எழுந்து அருளி இருந்த ஸ்ரீ காஞ்சி தேவாதிராஜன் ஸந்நிதி நிர்வாஹகரான ஸ்ரீ லஷ்மீ குமார தாதாசார்ய ஸ்வாமிகள்
அருளிச் செய்த இந்த ஸ்துதி நூல் சென்னைப் பல்கைலக் கழக ஓாியண்டல் research magazine 1948-49ல்
இந்த ஸ்லோகங்கள் வெளியிடப் பட்டுள்ளன-

குணாபிராமம் இந்திரா குமார தாதா வாரிதி
ப்ரஸித்திமாத் ரமா தடாக தீரசீம்நி மாருதிம்
முதாதி ருஹ்ய மாதவோ வ்ருஷாசலஸ்தல அதிபதி
ப்ரகல்பதே நிகாம மாத்ர பால நாய தேஹி நாம்-1

குணங்களால் அழகியவரும், லஷ்மீ ஸரஸ் என்னப்பட்ட ஸ்ரீஐயங்கார் குளத்தின் கரையில் உறைபவருமாகிய
ஸ்ரீ ஹனுமானின் மேல் திருமலை எம் பெருமான் ஸ்ரீ மாதவன் ஏறி எழுந்து அருளி
ஸ்ரீ வேங்கடாசலத்தை விட மேலான மகிழ்வுடன் இங்கு உலகில் உள்ளோரைப் பாது காக்க அமைந்துள்ளார்

ஆதி ருஹ்ய ரகூத் வஹோ ஹரிம் ப்ராக்
சிஷாம் அக்ருதா துநா து சோயம்
க்ருத தார்கா ஸமுத்ர தீர கேளிம்
தமதிஷ் தயா தநோதி தின ரக்ஷணம்–2-

முன்பு ஸ்ரீராமாவதார காலத்தில் இந்த ஹனுமானின் மேல் எழுந்து அருளி இருந்து
இலங்கையில் எதிாிகளை அழித்தார் எம் பெருமான்,
அவரே இப்போது ஸ்ரீதாத தேசிகனால் அமைக்கப் பெற்ற
குளக் கரையில் எளியவர்கைளக் காக்க எழுந்து அருளி உள்ளார்

கர்மா நுருதய வ்ருஷ பூப்ருதி யா கரோதி
ந்ர்நாம் ஹிதாநி ச து தந் நிரபேஷ ஏவ
யத் ஸர்வமிஷ் தமிஹ புஷ்யாதி வேங்கடேச
தத் வைபவம் கில ரமாத்மஜ தாத ஸிந்தோ–3-

திருமலையில் உறையும் எம்பெருமான் அவரவர் செய்த நல்வினை தீவினைகளுக்கு தக்கபடி பயன் அருள்கிறார்
ஆனால் அவரே இங்கு ஐயங்குளத்தில் வேண்டிய நற் பயன்களைஏ அருள்கிறார்
இது ஸ்ரீ தாதாச்சார்யரின் வைபவமே

krIDAsaraH kimapi tAtasamudra nAma
lakshmyAH prasannalaghu SItalamarpayantyAH |
anyadvidheyamanavekshya sutAnamushyAH
prItyai murAriravati plavagAdhirUDhaH ||–4-

ஸ்ரீ ஹநுமத் வாஹனத்தில் இங்கு எழுந்து அருளி இருக்கும் எம்பெருமான் ,
தாதா ஸமுத்ரம் என்ற பெயருள்ள
இக் குளக் கரையில் எதையும் எதிர்பாராமல் ஸ்ரீலஷ்மியின் குமாரர்களான நம் போன்றோரை –
பெரிய பிராட்டி யாாின் ப்ரீதிக்காகவே காத்து அருள்கிறார் –

SrISailapUrNamavati sma ghaTAmbu hrshTo
yaH pUrvamanjanagirau sa pumAnidAnIm |
sthitvA samIrabhuvi pAti ramAkumAratAtAmburASimudito janamaindireyam ||–5

திரு வேங்கட மா மலையில் முன்பு பெரிய திருமலை நம்பிகள் அருளிய தீர்த்தத்தால் மகிழ்வெய்திய
திரு வேங்கட முடையான்,
இப்போது ஐயங்குளத்தின் கரையில் வீற்று இருந்து லஷ்மீ குமாரர்களான நமது ரக்ஷணத்தைச் செய்து அருள்கிறார்

hariH purA mAmadhiruhya dAruNam
cakAra karmeti samIra janmanaH |
Sucam nirAkartumivASritaH sa tam
Subham nrNAm sauti ramAsarastaTe ||-6

இங்குள்ள ஹனுமான், ”முன்பு ராமாவதார காலத்தில் அடியேன் மேல் ஏறி நின்று கொடுமையான
யுத்தம் செய்து அரக்கர்களை அழித்தார்.
ஆனால் இப்போது – ஐயோ ! இப்படி அழித்தோமே !” என்று
வருத்தம் தீர இந்த ஐயங்குளக் கரையில் மக்களை அருள் பாலிக்கிறார்.

SaureH ramAtanaya tAta samudratIre
bhAvastaTAdapi bhavAtmajapushkariNyAH |
santanvate hi purushAH samadarSino’pi
prAyeNa sUnushu nijeshvapi pakshapAtam ||–7-

திரு வேங்கடமுடையானுக்குத் திருமலையில் உள்ள ஸ்வாமி புஷ் கரிணியை விட
இந்த ஐயங்குளம் உயர்ந்தது என்கிற எண்ணம் ஏன் எனில்
லஷ்மியின் குமாரர் ஏற்படுத்தியது இக் குளம்,
லஷ்மியோ எம்பெருமானின் திருத்தேவியார்
தன் மக்களிடத்தில் பெற்றோருக்கு எப்போதுமே பக்ஷ பாதம் உண்டே !

SlAghyatarakshIrAbdhi SrItAtasamudrayoriyAnbhedaH |
nidrAti tatra nityam SrIpatiranukUlamatra jAgarti ||–8-

உயர்ந்தவை களான திருப் பாற்கலுக்கும் இந்த ஐயங்குளத்துக்கும் இதுவே விசேஷம்,
திருப் பாற் கடலில் எம் பெருமான், பிராட்டியுடன் துயில் கொள்கிறார். இங்கு விழிப்புடன் உள்ளார்.

phaNisarasI taTabhagAt adhiko lakshmIsaras taTAbhogaH |
gajavaradaH kila tasmin krIDati hariratra sarvavaradAyI ||–9-

காஞ்சீபுரம் ஸ்ரீ வரதனின் அனந்த ஸரஸின் கரையைவிட இந்த ஐயங்குளத்துக்குப் பெருமை அதிகம்.
கஜேந்தர வரதர் அங்கு விளையாடுகிறார்.
இக் கோவிலில் எல்லோரு க்கும் எல்லா வகையான வரங்களையும் அளிக்கிறார்.

rAmacandrodayArambhe yaH suvelAtivartanam |
cakre samudrastam vande SrIsarastIra pAvanim ||–10-

சந்த்ரோதயம் ஆகும் நேரத்தில் கடல் பொங்கி வரும்
அதே போல் ஸ்ரீ ராமச்சந்த்ரனின் உதய காலத்தில்
(ஸ்ரீ ராமருக்கு வளர் பிறை போல் வளர்ச்சி ஏற்பட்ட போது ) எந்த ஹனுமான் மிகப் பெரிய உருவில்
வளர்ந்து ஸுவேவ மலையைக் கடந்து கடலைத் தாண்டி னாரோ – அவரே இந்த ஐயங்குளக் கரையில் விளங்குகிறார்.

taTasImani tAtasindhu bandhoramitam krIDati bhAgyamanjanAyAH |
akarot sahasA yadakshaSikshAm
niyamenaiva nijena bAhudhAmnA ||–11

ஸ்ரீ தாதாசார்யர் ஏற்படுத்திய கடைலப் போன்ற இக்குளக் கரையில் – அஞ்சனா தேவியின் பாக்யமே
உரு எடுத்து வந்ததைப் போன்றுள்ள ஸ்ரீ ஹனுமான் விளை யாடி வருகிறார்.
இவர் முன்பு அக்ஷ குமாரன் என்ற ராவணனின் மகனைத் தமது புஜ பலத்தால் அடக்கி அழித்தார்-

namata ramAkamalAkara laharI parivAha saraNi vAstavyam |
hari sArvabhauma mAnata bharaNodyata SauribhAra dhaureyam || -12

எம் பெருமானைத் தமது தோள்ள்களில் தாங்கி நிற்குமவரும்,
ஸ்ரீ லஷ்மீ ஸரஸ் என்கிற ஐயங்குளக்கரையில் உறைபவருமான குரங்கின் தலைவருமான ஸ்ரீ ஹநுமானை வணங்குவீர்

nijatanu kanakAdrimetya nAthe viharati vallabhayA samam prahrshTe |

hariravati jaganti tAtasindhoh adhitaTam Atmasu bhrtyatAnurUpam ||–13-

மேரு மலையைப் போன்ற தமது உடல் மேல் ஏறி எம்பெருமான் பிராட்டியுடன் அருள் பாலித்து வரும் போது
இந்த ஐயங்கார் குளக் கரையில் தமது தாஸ்யத்துக்குத் தக்க படி இருந்து இந்த ஹனுமான் மூ வுலகையும் பாதுகாத்து வருகிறார்

caturbhujaH SrIsarasI harIndrahastena datte varamASritAnAm |
yadarthine bhrtyamukhena dAnam
prAyaH prabhUNAm prakritiH svabhAvaH ||–14-

நான்கு தோள்களுடன் கூடிய எம்பெருமான் ஸ்ரீ லஷ்மீ ஸரஸ் என்னப்பட்ட
இந்த ஐயங்குளக்கரையில் உள்ள ஹநுமாாின் திருக் கையால் – தன்னை அண்டியவர்களுக்கு வேண்டிய வரங்களை அளிக்கிறார்.
பிரபுக்கள், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு விரும்பியதைத் தமது வேலை யாட்கள் மூலம் கொடுப்பது என்பது இயல்பே அன்றோ ?

idam prakarshAya hareryadArtAn
samrakshati SrIs-sarasI hanUmAn |
maheSvarANAm mahate guNAya
prakalpate bhrtyajanaprabhAvaH ||–15-

இந்த லஷ்மீ ஸரஸ்ஸின் கரையில் உள்ள ஹநுமான் தொல்லையில் சிக்கியவர்களை நன்கு காப்பாற்றுகிறார்
என்ற இது தகும் ஏன் எனில்
ஒரு வேலையாளுக்கே இவ்வளவு பெருமைகள் உண்டு என்றால்
தலைவர்களான தேவதைகளுக்குப் பெருமைகள் அதிகம் என்று தேறி இது பெரும் குணம் ஆகுமே –

SrI sUnutAtaguru sindhu taTAnjaneye
sampratya Sesha janatAvana jAgarUke |
lakshmyA harirviharate yadesha
sItA-viyogadinaklupta tapovilAsaH ||–16-

லஷ்மீ குமார தேசிகனால் ஏற்படுத்தப்பட்ட இந்த ஐயங்குளக்கைரயில் இருக்கும் ஸ்ரீ ஹநுமான்
விழிப்புடன் என்றும் எழுந்து அருளி இருக்கிற படியால் –முன்பு ஸ்ரீ ஸீதா தேவியைப் பிரிந்து அதனால்
ஏற்பட்ட வருத்தம் தீர ஸ்ரீ ஹாியானவர் ஸ்ரீ லஷ்மியுடன் விளையாடி வருகிறார்.

prAyaH tulyaH pAdukAyamihApi
nyAsaH sItAnAyakAnghres tathApi |
dhAtrI rakshAm sA tatA neti kim vA
lokAn pAti SrItaTAkAnjaneyaH ||–17-

ஸ்ரீ ஸீதா நாயகரான ஸ்ரீராமபிரானின் பாது கைகளிடம் பரந்யாஸம் செய்வது போன்றதே – \இந்த
ஐயங்குளத்து ஸ்ரீ ஹநுமாாிடம் செல்வது ,
உலகை எல்லாம் தாங்கும் அந்தப் பாதுகை நமக்குப் பாதுகாப்பை
அளிப்பது போன்று இந்தக் குளக்கரை ஆஞ்சநேயரும் செய்கிறார்

indirA suhrdabheda bhAvanAsantateriva tadAtmatAm vahan |
tantanIti kamalAsaras taTI
gandhavAha tanayo janAvanam ||-18-

பெரிய பிராட்டியார் வல்லபரான ஸ்ரீ மன் நாராயணனே இந்த ஹநுமான் என்று அவரோடு ஓன்றியபடி
தியானித்து வருபவராகச் சொல்லப்படும் இவர் ஸ்ரீ லஷ்மீ ஸரஸ்ஸின் கரையில் இருந்து கொண்டு
மக்களை ரசிப்பதை நன்கு செய்து வருகிறார் –

nArAyaNIyena mahobhareNa
naTatprakarsho jagatAm trayANAm |
karoti rakshAm kalaSAbdhi kanyA
sarastaTI mAruti sArvabhaumaH ||–19-

நாட்டியம் ஆடி வருவது போன்ற நிலையில் ஸேவை யாகும்-இந்த ஐயங்குளக் கரையிலுள்ள
மாருதியானவர், எம்பெருமான் நாராயணனின் அநு ப்ரவேசத்தால் மூ உலகையும் ரக்ஷித்து அருள்கிறார்

kamsAri tejobharavaibhavena
samsAriNAmesha tanoti rakshAm |
ramAsarasyAm raghuvIrasenA
nAsIra sImAbhaTa sArvabhaumaH ||–20-

ஸ்ரீராம பிரானின் ஸேனைத் தலைவரான இந்த ஹநுமான், கம்ஸனைக் கொன்ற ஸ்ரீ கண்ண பிரானின் தேஜஸ்ஸைத் தாங்கி
வருபவராய், இக் குளக்கரையில் ஸம்ஸாாிகளான நமக்குப் பாதுகாப்பை யளிக்கிறார்

itIndirA taTAkatIra vAyusUnu vimSatim
ramAkumAra tAtayAryanirmitAm paThanti ye |
dhanam yaSo balam sutAt arogatAyushI sukham
labheyureva mAnavAH krpAbharAdramApateH ||–21-

இப்படி ஸ்ரீ லஷ்மீ ஸரஸ் என்னப்பட்ட ஐயங்குளம் கரையில் உள்ள வாயு புத்ரரான ஸ்ரீஹநுமானைப் பற்றி
ஸ்ரீ லஷ்மீ குமார தாதாசார்யரால் எழுதப்பட்ட இருபது ஸ்லோகங்களை எவர் பக்தியுடன் படிக்கிறார்களோ
அவர்கள் செல்வம், புகழ், வலிமை , மக்கள், நோயற்றவாழ்வு , நீண்ட ஆயுள், நன்மைகள் ஆகிய இவற்றை
ஸ்ரீ லஷ்மீபதியான எம் பெருமானின் அருளால் அடைவர். இது திண்ணம்

yathA harirbhAsurapuNyakoTyAm
yathA ca gaurI varakAmakoTyAm |

tathA mahodArakumAratAta
kalyANakoTyAm kamalA samindhe ||–22-

ஸ்ரீ அத்திகிாிவரதர், ஒளிவீசி வரும் புண்ய கோடி விமானத்தில் விளங்கி வருவது போன்றும்
காம கோடியில் விளங்குவது போன்றும் ,
எல்லோருக்கும் விரும்பிய நல்லனவற்றை வாாி வழங்கிய கல்யாண கோடி என்ற பெயர் பெற்ற –
ஸ்ரீ லஷ்மீ குமார தாதாசார்யரால் ஏற்படுத்தப்பட்ட
இந்த இடத்தில் பெரிய பிராட்டி யாகிய ஸ்ரீ லஷ்மீதேவி விளங்கி வருகிறார்.

kurvanti brAhmaNAnAm tu kalyANa Satamanvaham |
tasmAt kalyANA koTIti satyanAmA prakASate ||23||

தினம் தோறும் அந்தணர்களுக்கு நூற்றுக் கணக்கான மங்களங்களைச் செய்து வருவதால்
கல்யாண கோடி என்ற பெயர் பொருந்தும் படி இது விளங்கி வருகிறது

————-

ஸ்ரீ ஏக முக ஹனுமத் கவசம்

ஸ்ரீ ஏக முக ஹனுமத் கவசம் [ஒரு முகத்துடன் அனுமனுக்கு கவசம்]-மொழிபெயர்த்தவர் பி.ஆர்.ராமச்சந்தர்

[இந்த கவசத்தை சிவபெருமான் பார்வதி தேவிக்கு சொல்லியிருக்கிறார்.
பகவான் முதலில் ஹனுமானிடம் பன்னிரண்டு பெயர்களைக் கொண்ட ஒரு பிரார்த்தனையைச் சொல்கிறார்,
பின்னர் விபீஷணனுக்கு ராமர் கற்பித்த ஹனுமான் கவசத்தை மேற்கோள் காட்டுகிறார்.
அனுமனின் மற்ற கவசங்களைப் போல அல்லாமல், இது ஒரு எளிய பிரார்த்தனையே தவிர தாந்த்ரீக உரை அல்ல.]

யேகத சுகமாஸ்ஸேனம் சங்கரம் லோக சங்கரம்,
பப்ரச்ச கிரிஜா காண்டம் கற்பூர தவலம் சிவம் 1

ஒரு சமயம் மக்களின் கடவுளான சிவபெருமான்,
கிரிஜாவின் மனைவியாக இருந்தவர். கற்பூரம் போன்ற வெண்மையானது
பார்வதி தேவியிடம் பின்வருமாறு கேட்கப்பட்டது.

ஸ்ரீ பார்வதியுவாச்சா:-
(பார்வதி தேவி சொன்னாள்)

ভগவாந் தேவ தேவேச, லோக நாதா, ஜகத் ப்ரபோ,
ஸோககுலநாம் லோகாநாம் கேன ரக்ஷ பவேத் த்ருவம். 2

சங்க்ரமே, சங்கதே, கோரே பூத ப்ரேதாதிகே, பயே,
துகா தாவாக்னி சந்தப்த சேத்தாசம், துக்க பாகினம், 3

ஓ கடவுளே, கடவுளின் கடவுளே, உலகத்தின் ஆண்டவரே, பிரபஞ்சத்தின் அதிபதியே,
துக்கத்தால் பீடிக்கப்பட்ட மக்கள் எப்படி என்றென்றும் பாதுகாக்கப்படுவார்கள்?

போரில், துக்கத்தில், பயந்த பேய்களிடம் இருந்து, இறந்த பயத்தில் இருந்து, துக்கத்தின் எரியும் நெருப்பில் இருந்து
எப்படித் தங்களைக் காத்துக்கொண்டு, மனதைக் கெடுத்து, துக்கத்திலிருந்து விடுபடுவார்கள்?

ஸ்ரீ மஹாதேவ உவாச்ச:- (சிவபெருமான் கூறினார்:- ) 

ஸ்ருணு தேவி ப்ரவக்ஷ்யாமி, லோகாநாம் ஹித கம்யயா, விபீஷணாய ராமேண ப்ரேமேண ததம் ச யத் பூரா. 4

உலக நன்மைக்காக,
நீண்ட காலத்திற்கு முன்பு விபீஷணனுக்கு ராமர் கூறியதைக் கேளுங்கள்.

கவச்சம் கபி நாதஸ்ய, வாயுபுத்ரஸ்ய ধீமத,
குஹ்யம் ததே ப்ரவக்ஷ்யாமி விஶேஷ ச்ருணு ஸுந்দரீ । 5

ஓ அழகானவரே, வானரப் பெருமானின் கவசத்தைக் கேள்,
அவர் வாயு பகவானின் மிகவும் வீரம் மிக்க மகனாக இருந்தார்,
இது இரகசியமானது ஆனால் சிறப்பாக என்னால் கூறப்பட்டது.

உத்யதித்ய சங்கச முதார புஜ விக்ரமம்,
கந்தர்ப கோடி லாவண்யம், சர்வ வித்யா விசாரதம். 6

அவர் ஒரு உதய சூரியனைப் போன்றவர், மிகவும் தொண்டு செய்யும் வீரராக இருந்தார்,
அவர் மிகவும் அழகாகவும், மிகவும் கற்றறிந்தவராகவும் இருந்தார்.

ஸ்ரீ ராம ஹ்ருதயானந்தம் பக்த கல்ப மஹீருஹம்,
அபயம் வரதம் தோர்ப்யாம் கலயே மருதத்மஜம், 7

ராமனின் மனதுக்கு மகிழ்ச்சியைத் தருபவன்,
பக்தர்களுக்கு விருப்பத்தைத் தரும் மரமாக இருப்பவன்,
காப்பவன், ஆசீர்வதிப்பவன், பயத்தைப் போக்குபவன்,
அவன் அன்பே, காற்றின் மகனே.

ஹனுமான் அஞ்சனி விரைவில் வாயுபுத்ரோ மஹா பலா,
ரமேஷ்தா, பால்குன சகா, பிங்காக்ஷோ, அமித விக்ரமா. 8

அவனே அனுமன், அவனே அஞ்சனாவின் மகன்,
அவனே காற்றுத் தெய்வத்தின் மகன், அவனே மிகவும் வலிமையானவன்,
அவனே இராமனுக்குப் பிரியமானவன். , அர்ஜுனனின் நண்பன் அவனே,
சிவந்த கண்களை உடையவன், அளவிலா வீரம் உடையவன்

உதாதிக்ரமணாஶ்சைவ, சீதாசோக வினாசனம்,
லக்ஷ்மணா ப்ராணா ததா ச தாச க்ரீவஸ்ய தர்ப்பஹா. 9

கடல் கடந்தவர், சீதையின் துக்கத்திற்கு முடிவு கட்டியவர்,
லட்சுமணனுக்கு உயிர் கொடுத்தவர், ராவணனின் அகந்தையை புண்படுத்தியவர்.

ஏவம் த்வாதஸ நாமாநி கபீந்த்ரஸ்ய மஹாத்மனா,
ஸ்வ காலே ப்ரபோதே ச யத்ர காலே ச படேத், 10

தஸ்ய ஸர்வ பயம் நாஸ்தி, ரணே ச விஜயீ பவேத்,
ராஜத்வாரே கஹ்வாரே ச பயம் நாஸ்தி கதாச்சனா. 11

குரங்குகளின் அரசனின் இந்தப் பன்னிரெண்டு பெயர்களையும் ஓதினால்,
நம் காலத்திலோ, எழுந்த பின்னரோ, பயணத்தின்போதோ,
நம் பயங்கள் அனைத்தும் அழிந்து, எல்லாப் போர்களிலும் வெற்றி பெறுவோம்,
வாயிலில் பயப்படமாட்டோம். ராஜா அல்லது வன குகையில்.

உள்ளங்ய சிந்தோ சலிலம் சலிலம்,
யா சோக வஹ்நிம் ஜனகத்மஜய,
ஆதாய தேனைவ தாதா லங்காம்,
நமாமி தாம் ப்ராஞ்சலிர் ஆஞ்சநேயம். 12

கடலின் பெருங்கடலைக் கடந்தவரும், சீதையின் துயரத் தீயை அணைத்தவரும், அதன்பின் இலங்கைக்குத் தீ மூட்டியவருமான

அஞ்சனாவின் மகனுக்கு நான் கைகூப்பி வணங்குகிறேன் .

ஓம் நமோ ஹனுமதே சர்வ சர்வக்ரஹன், பூத, பவிஷ்யத் வர்த்தமானன், சமீபஸ்தான் சர்வ கால துஷ்ட புத்தின் உச்சதாய உச்சதாய, பர பாலன் க்ஷோபாய க்ஷோபாய, மம சர்வ காரியணி சாதாய சாதாய.

ஓம், அனுமனுக்கு நமஸ்காரம், அனைத்து கிரகங்கள், பிசாசுகள், கடந்த, நிகழ்கால மற்றும் எதிர்காலம் மற்றும் அருகில் இருக்கும் தீய சக்திகளால் ஏற்படும் அனைத்து மோசமான விளைவுகளும் விரட்டப்படட்டும். பிறர் பலம் குறையட்டும், என் செயல்கள் அனைத்தும் வெற்றியை அடையட்டும்.

ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் பட் கே கே கீ,

ஓம் சிவ சிதிம் ஓம் ஹ்ராம் ஓம் ஹ்ரீம் ஓம் ஹ்ரூம்,
ஓம் ஹ்ரைம், ஓம் ஹ்ரௌம் ஓம் ஹ்ர ஸ்வாஹா

(இவை மந்திர மந்திரங்கள் மற்றும் மொழி பெயர்க்க முடியாது.)

பர க்ருத்ய யந்திர மந்திரம் பரஹங்கர பூத ப்ரேத பிசாச த்ருஷ்டி சர்வ விக்ன லெட்வர் ஜானய சேவநி துர் ஜனய சேவக்ரயாய

, பிறர் செய்யும் தீய வசீகரம் மற்றும் கோஷங்கள், மற்றவர்களின் பொறாமை, பேய், பிணம் மற்றும் பிசாசுகளின் விளைவு மற்றும் தீயவர்களால் உருவாக்கப்பட்ட அனைத்து தடைகளும், தீய அறிவு மற்றும் அனைத்து பெரிய பயங்களும் குணமாகட்டும், குணமாகட்டும்.

பந்தா பந்தா, லுண்ட லுண்டா, விழுஞ்ச விழுஞ்ச, கிளி கிளி சர்வக யந்த்ராணி துஷ்ட வச்சம் ஓம் பட் ஸ்வாஹா.

மற்ற வசீகரங்களின் தீய வடிவமைப்புகளைக் கட்டி, திறம்படச் செய்யட்டும். தீக்கு நீக்கம்.

ஓம் அஸ்ய ஸ்ரீ ஹனுமத் கவச்ச ஸ்தோத்ர மஹா மந்திரஸ்ய, ஸ்ரீ ராமச்சந்திர ரிஷி, ஸ்ரீ ஹனுமான் பர்மாத்ம தேவதா, அனுஷ்டுப் சந்தா, மருதாத்மஜ இதி பீஜ அஞ்சனா சூரிதி சக்தி, லக்ஷ்மண பிராண இதி கீலகம், ராம தூத கமந்த, ஹநுதயேதி அஸ்த்வ அஸ்த்வமேதி வணக்கம் மந்திரம், ஸ்ரீ ராமச்சந்திரா ப்ரேரணயா ராமசந்த்ர ப்ரீத்யர்தம் மம மானஸ ஸகல காமனா சித்யர்தம் ஜபே விநியோக,

ஓம் ஹனுமனின் கவசத்தின் பெரும் கோஷத்திற்கு, முனிவர் ஸ்ரீ ராமச்சந்திரர், கடவுளை தெய்வீக ஹனுமான், மீட்டர் அனுஷ்டுப். விதை வாயுவின் மகன், வலிமை அஞ்சனாவின் மகன், ஆணி லக்ஷ்மணனுக்கு உயிர் கொடுப்பவன், அம்பு ராமனின் தூதுவன், கவசமே கடவுள் அனுமான், மந்திரம் சிவந்த கண் உடையவன், வீரம் மிக்கவன். , ஸ்ரீராமர் மகிழ்வதற்காகவும், என் மனதின் ஆசைகள் அனைத்தும் நிறைவேறுவதற்காகவும் ராமரின் கட்டளையால் இது பாடப்படுகிறது.

அத கர ந்யாஸ
(இப்போது கை அடையாளங்கள்)

ஓம் ஹ்ராம் அஞ்சனிசுதாய அங்கஷ்டப்யம் நம
ஓம் ஹ்ரேம் ருத்ர மூர்த்தயே தர்ஜனீப்யாம் நம ஓம் ஹ்ரூம்
ராம தூதாய மத்யமாப்யாம் நம
ஓம் ஹ்ரைம் வாயு புத்ராய அனாமிகாப்யாம் நம
ஓம் ஹ்ரௌம் அக்னிஷ்த்ரபயமிகாப்யாம்
ஓம் ஹ்ரஹ் பிரம்மாஸ்திர நிவாரணாய கர தல கர ப்ருஷ்டபுயாம் நம
இதி கர ந்யாஸ

ஓம் ஹ்ராம் வணக்கம் அஞ்சனா மகனுக்கு கட்டை விரலில் ஓம்
ஹ்ரீம் நமஸ்காரம் ருத்ர மூர்த்திக்கு முன் விரல் மூலம்
ஓம் ஹ்ரூம் நமஸ்காரங்கள் ராம தூதருக்கு நடுவிரல் மூலம்
ஓம் ஹ்ரைம் குமாரனுக்கு வணக்கம் விரல்
ஓம் ஹ்ரூம் சுண்டு விரல் மூலம் தனக்குள் நெருப்பை வைத்திருப்பவருக்கு நமஸ்காரம்
ஓம் ஹ்ரஹ் வணக்கம் உள்ளங்கை முழுவதும் பிரம்மாஸ்திரத்தை குணப்படுத்துபவர்.

அதா ஹ்ருதயதி ந்யாஸ
(இப்போது இதயத்தில் உள்ள அடையாளங்கள்)

ஓம் ஹ்ராம் அஞ்சனி சுதாய ஹ்ருதயாய நம
ஓம் ஹ்ரீம் ருத்ர மூர்த்தயே சிரஸே ஸ்வாஹா
ஓம் ஹ்ரூம் ராம தூதாய ஷிகாயை வஷட்
ஓம் ஹ்ரைம் வாயுபுத்ராய கவச்சாய ஹோம்
ஓம் ஹ்ரௌம் அக்னிகர்பய நேத்ர த்ரயாய வௌஷட்
ஓம் ஹ்ரஹ் பிரம்மாஸ்திர நிவாரணய அஸ்த்ராய ஃபட்
இதி ஹ்ருதயதி ஷடங்க ந்யாஸ

ஓம் ஹ்ராம் அஞ்சனாவின் மகனே என்று உச்சரித்து இதயத்தைத் தொட்டு
ஓம் ஹ்ரீம் ருத்ரமூர்த்தி என்று ஜபித்து, ஓம் ஹ்ரீம் ருத்ரமூர்த்தி என்று உச்சரித்து, ஓம் ஹ்ரீம் ருத்ரமூர்த்தி என்ற தலையைத் தொட்டு ஓம் ஹ்ரூம் குமாரன் ராம சந்தானத்தின்
தலையைத் தொடவும்.
மற்றும் கற்பனை செய்து கொள்ளுங்கள் அது உங்கள் கவசம்
ஓம் ஹ்ரௌம் என்று கோஷமிடுங்கள் ஓம் ஹ்ரௌம் அவரில் நெருப்பு உள்ளவர் ஓம் ஹ்ரஹ் என்று ஜபிக்கவும்
பிரம்மாஸ்திர

அதா தியானம்
பிறகு தியானம்

த்யாயேத் பல திவாகர த்யுதிநிபம் தேவாரி தர்ப்பபாஹம்,
தேவேந்திர பிரமுகம், ப்ரஸத யஸ்ஸம் தேதேப்யமானம்
ஸுவ்யத்யமஸ்தாமஸ்தா ருச்ச, தத்வ பிரியம்,
ஸம்ரக்தருணா லோச்சநம் பவநஜம் பீதாம்বரலாங்க்ருধம் । 1

இளம் சூரியனைப் போன்றவனும், தேவர்களின் பகைவர்களின் பெருமையை அடக்கியவனும்,
தேவேந்திரனால் போற்றப்படுபவனும், பெரும் புகழை உடையவனும், ஒளியைப் போலப் பிரகாசிப்பவனும்,
சுக்ரீவன் உட்பட எல்லா வானரங்களோடும் இருப்பவனும், விரும்புபவனும் அவனைத் தியானிக்கிறேன். மிகவும் தெளிவான தத்துவ சிந்தனைகள்,
சிவந்த கண்கள் கொண்டவர், காற்று கடவுளின் மகன் மற்றும் மஞ்சள் பட்டு அணிந்தவர்.

உத்யாத்மார்தாண்ட கோடி பிரகட ருசி யுத்தம், சாரு வீரசனஸ்தம்,
மௌஞ்சி யஜ்ஞோபவீதாபரண ருசி ஷிகம் ஶோபிதம் குண்டலங்கம்,
பக்தானம் இஷ்டதம் தம் ப்ராந்த முனி ஜனம், வேத நாதா ப்ரமோதம்,
த்யாயேத்பத ப்லஹோ গ்வாம்থா ব்ধோ গ்ভூலஹே ব்ধாமே வர்தீம். 2

வானர குலத்தின் அதிபதியும், மண்ணுலகில் உள்ள உயிர்களுக்கு நன்மை செய்பவரும்,
ஒரு கோடி சூரியன்களின் பிரகாசம் கொண்டவரும், அழகான வீரம் மிக்க வீரரும்,
புனித நூலும், மான் தோலும் அணிந்தவருமான, பணிவான கடவுளை நான் தியானிக்கிறேன். ஒரு தும்பிக்கை உடையவன், அவன் காதில் பிரகாசிப்பவன்,
தன் பக்தர்களை விரும்புபவன், முனிவர்களால் வணங்கப்படுபவன், வேதம் ஓதுவதை விரும்புபவன்.

வஜ்ரங்கம் பிங்க கேசாத்யம், ஸ்வர்ண குண்டல மண்டிதம்,
நிகுடம் உப சங்கம்ய பரா வார பராக்ரமம் 3

ஸ்பதிகாபம் ஸ்வர்ண காந்திம் த்விபூஜம் ச க்ருதாஞ்சலிம்,
குண்டல த்வயா சம்ஷோபி முகாம்புஜம் ஹரிம் பஜே. 4

வைரம் போன்ற உடம்பை உடையவனும்,
சிவந்த கூந்தலை உடையவனும், பொன் நிறக் காதுகளை அணிந்தவனும்,
எளிதாய் பார்க்க முடியாதவனும், வீரம் மிக்கவனுமான அந்த ஹரியைப் பற்றி நான் பாடுகிறேன்.
ஸ்படிகம் போன்றவர், தங்கம் போல் பிரகாசிப்பவர்,
வணக்கம் சொல்லும் இரண்டு கைகளை உடையவர், இரண்டு காதுகளை உடையவர்,
மற்றும் மிகவும் பிரகாசிக்கும் தாமரை போன்ற முகத்தை உடையவர்.

சவ்ய ஹஸ்தே கதாயுக்தம் வாம ஹஸ்த கமண்டலும்,
உத்யத் தக்ஷிணோதோர் தண்டம், ஹனுமந்தம் விசிந்தயேத், 5

வலது கையில் சூலாயுதத்தை ஏந்தியவனும், இடது கையில் தண்ணீர் பானையை ஏந்தியவனும், தெற்கே உயர்ந்து நிற்கும்

ஹனுமானைப் பற்றி நினைக்கிறேன் .

அத மந்த பிறகு ஓம் ஹனூமதே ஷோபிதானனாய யசோலங்க்ருதய, அஞ்சனி கர்ப்ப ஸம்பூதாய, ராம லக்ஷ்மண அநதகயா, கபி சைன்ய பிரகாச பர்வதோத் படனாய சுக்ரீவ சாஹ்ய காரண பரோச்சாதனாய குமார ப்ரஹ்மச்சார்ய গம்பரேம்গ்ரயாஹம் ஓம் ஹநூமதே ஷோபிதாநாய யசோலங்ருதயா என்ற கீர்த்தனைகள் . ஸ்வாஹா

ஓம் ஹனுமான் ஜொலிப்பவர், புகழால் அலங்கரிக்கப்பட்டவர், அஞ்சனாவுக்குப் பிறந்தவர், வானரப் படையில் ஜொலிப்பவர், ராமர் மற்றும் லக்ஷ்மணர்களுக்கு இன்பம் தருபவர், மலை ஏறியவர், சுக்ரீவப் பெருமானுக்கு உதவி செய்தவர். பிரம்மச்சரியம், ஓம் ஹ்ரீம் தயவு செய்து அனைத்து கிரகங்களாலும் ஏற்படும் தோஷங்களை குணப்படுத்துங்கள்.

ஓம் நமோ ஹனுமதே யேஹி, யேஹி யேஹி ஸர்வ கிரஹ பூதாநாம், சாகினி டாகினீநாம், விஷம துஷ்டானம் சர்வேஷாம் ஆகர்ஷய ஆகர்ஷய, மர்தய மர்தாய, சேதாய சேதாதா, மாராய மாராய, ஸோஷ்ய சோஷய, பிரஜ்வாலா ப்ரஜ்வாலா மந்த்தாய ப்ரஜ்வாலா ஜ்ஞாதா ஜ்ஞாய வார சதுர்த்திக ஜ்வர, பிரம்ம ராக்ஷஸ , பிசாச சேதன க்ரியா, விஷ்ணு ஜ்வர, மஹேஸ்வர ஜ்வரன் சிந்தி சிந்தி, பிந்தி பிந்தி அக்ஷி சூலே சிரோப்யந்தரே ஹ்யாக்ஷி சூலே குல்மா சூலே பிதா சூலே பிரம்ம ராக்ஷஸ குல பிரபல நாக குல வினிர்- விஷத்ஜாதிதி.(த்வி வரம் ஜப்த்வா)

இந்த உலகத்தை ஈர்க்கவும் , அடிக்கவும், அடிக்கவும், வெட்டவும், வெட்டவும், கொல்லவும், கொல்லவும், அவர்களை பலவீனப்படுத்தவும், பலவீனப்படுத்தவும், மேலும் விரைவாக எரிக்கவும், விரைவாக எரிக்கவும், இந்த உலகத்தின் பேய்கள் அனைத்தும், இறந்தவர்களின் பேய்கள், குறும்புக்கார கெட்ட மனிதர்கள்
பிரேக், பிரேக், பியர்ஸ் பியர்ஸ், பேய்க் க்ரூப், பிசாசுக் கூட்டங்கள், பிசாசினால் ஏற்படும் காய்ச்சல், இறந்தவர்களால் ஏற்படும் காய்ச்சல், நான்காவது வகை காய்ச்சல், பிரம்மா ராக்ஷஸர்கள், பேய்களால் வெட்டப்படும் செயல், விஷ்ணுவால் ஏற்படும் காய்ச்சல், சிவனால் ஏற்படும் காய்ச்சல்.
கண், தலை வயிறு, ஆசனவாய், பித்தம் மற்றும் பிரம்ம ராட்சசர்களாலும், பிரசித்தி பெற்ற சர்ப்பங்களாலும் ஏற்படும் நோய்கள் விரைவில் குணமாகும்.(இவற்றை இரண்டு வாரங்கள் ஜபிக்கவும்)

ஓம் ஹ்ரீம் பட் க்ஹே ஸ்வாஹா
(கோஷம்)

ஓம் நமோ ஹனுமதே பவனா புத்ர வைஸ்வானர முக பாப த்ருஷ்டி, ஷோட த்ருஷ்டி , ஹனுமதே ஆக்னா புரே ஸ்வாஹா.

பாவப் பார்வையுடனும், தேடும் பார்வையுடனும் இருப்பவர்களை எரிக்கும் காற்றின் மகனான அனுமனுக்கு நெருப்பில் அர்ச்சனைகள்.

ஸ்வக்ருஹே த்வாரே பட்டகே திஷ்ட திஷ்டேதி தத்ர ரோக மாயம் ராஜ குல மாயம் நாஸ்தி தஸ்யோசரண மாத்ரேண ஸர்வே ஜ்வர நஸ்யந்தி,ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் গே গே ஸ்வாஹா.

எங்கள் சொந்த வீட்டில், கேட் அருகே, ஒரு தட்டில் வைத்து, “ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் க்ஹே ஸ்வாஹா” என்று கோஷமிடுவது. நோய்களும் காய்ச்சலும் என்றென்றும் நீங்கும்.

ஸ்ரீ ராமச்சந்திர உவாச்ச:
பகவான் ராமச்சந்திரர் கூறினார்:-

ஹனுமான் பூர்வதா பாது,
பாது தக்ஷிணே பவநாத்மஜா,
ப்ரதீச்யம் பாது ரக்ஷஸோக்ஞா,
ஸௌம்யம் சாகர பரகா. 1

கிழக்கு அனுமனால் பாதுகாக்கப்படட்டும்,
தெற்கு காற்றின் மகனால் பாதுகாக்கப்படட்டும்,
மேற்கு ராட்சசர்களைக் கொன்றவரால் பாதுகாக்கப்படட்டும்,
மேலும் வடக்கைக் கடலைக் கடந்த

உதீச்யம் ஊர்த்வாகப் பாத்து.
கேசரி ப்ரியா நந்தனா, அதஸ்து
விஷ்ணு பக்தஸ்து பாது,
பாது மத்யம் து பவனி. 2

மேற்கையும் மேலேயும் கேசரியின் செல்ல மகனால் பாதுகாக்கப்படட்டும்,
நடுப்பகுதியும் கீழ் பகுதியும் விஷ்ணுவின் பக்தனால் பாதுகாக்கப்படட்டும்.

லங்கா விதாஹக பாது ஸர்வபத்ப்யோ நிரந்தரம்,
சுக்ரீவ சசிவ பாது மஸ்தகம் வாயு நந்தன. 3

லங்காவை எரித்தவன் என்னை எல்லா இடர்களிலிருந்தும் காக்கட்டும்,
சுக்ரீவனின் மந்திரியும், காற்றின் மகனும்,
என் தலையை நிரந்தரமாக காக்கட்டும்,

ஃபாலம் பாதுமஹா வீரோ, ப்ரூவோர் மத்தியே நிரந்தரம்,
நேத்ரே சாயாபஹாரிச்ச பவனா பிளவாகேஸ்வரா. 4

நிழலைத் திருடியவனைக் கொன்றவனும், குரங்குகளின் தலைவனுடைய பரிசுத்தமானவனும் என் நெற்றியைக்
காக்கட்டும்.

புருவங்களுக்கு நடுவில் உள்ள இடத்தைப் போலவே என் கண்களையும் எப்போதும் பாதுகாக்கவும் .

கபாலே கர்ண மோளே ச பாது ஸ்ரீ ராம கிங்கரா,
நாசக்ரம் அஞ்சனி சூனு, பாது வக்த்ரம் ஹரீஸ்வரா. 5

ராமனின் அடியான் என் தலையையும்,
என் காதுகளின் வேர் பகுதியையும்,
அஞ்சனாவின் மகன் என் தொண்டை நுனியையும்,
வானர அரசன் என் கழுத்தையும் காக்கட்டும்.

வாச்சம் ருத்ர ப்ரியா பாது ஜிஹ்வாம் பிங்கல லோச்சனா,
பாது தேவா பல்குணேஷ்ட ஶுபுகம் தைத்ய தர்பஹா. 6

ருத்ரனுக்குப் பிடித்தவனே என் வார்த்தைகளைக் காக்கட்டும்,
என் நாவை சிவந்த கண் கொண்டவனே காக்கட்டும்,
அர்ஜுனனின் நண்பனான கடவுளால் என் கன்னம் பாதுகாக்கப்படட்டும்,
அதே போல் அகந்தைக்கு முற்றுப்புள்ளி வைத்தவனும். அசுரர்கள்.

பாது காண்டம் ச தைத்யாரி, ஸ்கந்தௌ பாது சுரர்ச்சித,
பூஜௌ பாது மஹா தேஜ, கரௌ ச சரணயுதா, 7

என் கழுத்தை அசுரர்களின் பகைவர் காக்கட்டும்,
தேவர்களால் வழிபடப்படுபவரால் என் தோள்கள் பாதுகாக்கப்படட்டும்
. தோள்கள், கால்களை ஆயுதமாகப் பயன்படுத்துபவரால் என் கைகள் பாதுகாக்கப்படட்டும்,

நகான் நகாயுதா பாது குக்ஷௌ பாது கபீஸ்வரா,
வக்ஷௌ முத்ராபஹாரி ச பாது பார்ஸ்வே புஜாயுதா. 8

நகங்களை ஆயுதமாகப் பயன்படுத்துபவனால் என் நகங்கள் காக்கட்டும்,
குரங்கு கடவுள் என் வயிற்றைக் காக்கட்டும்,
ராமனின் மோதிரத்தை எடுத்தவன் என் மார்பைக் காக்கட்டும்,
என் பக்கங்களை ஆயுதமேந்திய பெரியவனே காக்கட்டும்.

லக விபஞ்சன பாது ப்ருஷ்ட தேஸே நிரந்தரம்,
நாபிம் ச ராம ধூதஸ்ய, கடிம் பத்வநிலாத்மஜா ॥ 9

லங்காவை எரித்தவன் எப்போதும் என் முதுகைக் காக்கட்டும்,
ராமனின் தூதனால் என் தொப்பை காக்கட்டும்,
காற்றின் மகன் என் இடுப்பைக் காக்கட்டும்.

குஹ்யம் பாது மஹா ப்ராக்னோ, லிங்கம் பாது ஶிவ ப்ரியா,
ஊரும் ச ஜ்ஞுநி பாது லங்கா ப்ரஸாத பஞ்ஜனா. 10

பேரறிஞரால் என் அந்தரங்க உறுப்புகள் பாதுகாக்கப்படட்டும்,
சிவபெருமானை விரும்புபவரே என் ஆண்குறியைக் காக்கட்டும்,
லங்காவின் கட்டிடங்களை அழித்தவரால் என் முழங்கால்களும் தொடைகளும் பாதுகாக்கப்படட்டும்.

ஜங்கே பாது கபி ஸ்ரேஷ்டோ, குல்ஃபௌ பாது மஹா பாலா,
அச்சலோதாரக பாது பாது பாஸகர ஸந்நிபா. 11

என் கன்றுகள் மிகப் பெரிய குரங்கால் பாதுகாக்கப்படட்டும்,
என் கணுக்கால் மிகவும் வலிமையான குரங்கால் பாதுகாக்கப்படட்டும்.
மலையைத் தாங்குபவனும் சூரியனுக்கு அருகில் இருப்பவனும் என் பாதங்களைக் காக்கட்டும்.

அங்ஞாம் அமித சாத்வாத்யா பாது பதங்குலிஸ்ததா,
ஸர்வாங்கனி மஹா சூர, பாது ரோமணி சாத்மவித். 12

எல்லையில்லா ஆற்றல் கொண்டவரால் என் உடல் உறுப்புகள் அனைத்தும் பாதுகாக்கப்படட்டும்,
அவர் என் கால் விரல்களையும் காக்கட்டும்,
அனைத்தையும் அறிந்தவரால் என் உடல் அனைத்தும் பாதுகாக்கப்படட்டும்,
ஆன்மாவைக் கட்டுப்படுத்துகிறவரால் என் முடிகள் அனைத்தும் பாதுகாக்கப்படட்டும்.

ஹனுமத் கவச்சம் யஸ்து படேத் வித்வாந் விசக்ஷணா,
ஸ ஏவ புருஷ ஸ்ரேஷ்டோ பக்திம் முக்திம் ச விந்ததி. 13

அனுமனின் இந்தக் கவசத்தை எவன் ஒருவன் தெளிவாகப் புரிந்து கொண்டு படிப்பானோ,
அவன் மிகுந்த பக்தி கொண்டவன் மகிழ்ச்சியையும் முக்தியையும் அடைவான்.

த்ரிகாலம் ஏக காலம் வ பதன் மாச த்ரியம் நர,
ஸர்வாந் ரிபூந் க்ஷணாஜ்ஜித்வா ச புமாந் ஶ்ரியம் அப்நுயாத். 14

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அல்லது மூன்று முறை படித்தால்,
ஒரு நொடியில் அவர் தனது எதிரிகள் அனைவருக்கும் எதிராக வெற்றி பெறுவார்,
மேலும் அந்த மனிதர் அனைத்து செல்வங்களையும் தனக்காக ஆக்கிக் கொள்வார்.

மத்ய மாறாக ஜலே ஸ்தித்வா சப்த வரம் படேத் யதி,
க்ஷய அபஸ்மர குஷ்டதி தப த்ரய நிவாரண. 15

நள்ளிரவில் ஏழு வாரங்கள் தண்ணீரில் நின்று படித்தால்,
காசநோயால் ஏற்படும் மூன்று துன்பங்களிலிருந்து விடுபடுவார். கால்-கை வலிப்பு மற்றும் தொழுநோய்.

அஸ்வத மூலே அர்க வரே ஸ்தித்வா பததி யா பூமான்,
அச்சலாம் ஶ்ரியமாப்நோதி சங்க்ராமே விஜயம் ததா. 16

ஞாயிற்றுக்கிழமைகளில் ஆலமரத்தடியில் அதைப் படிப்பவர் அந்தப் பெரியவர்.
செல்வம் போன்ற மலையைப் பெற்று போரில் வெற்றி பெறுவான்.

புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் ஆரோகதா,
ஸுதார்த்யம் வாக் ஸ்பூரத்வாம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத். 17 அனுமனை தியானித்தால்

ஞானம், வலிமை, புகழ், தைரியம், அச்சமின்மை, நோயிலிருந்து விடுபடுதல்,
மகத்தான இருப்பு மற்றும் வார்த்தைகளில் தேர்ச்சி ஆகியவை ஒருவருடையதாக இருக்கும்.

மரணம் வைரிணம் சத்ய சரணம் ஸர்வ ஸம்பதம்,
ஸோகஸ்ய ஹரணே தக்ஷம் வந்தே தாம் ரண தாருணம். 18

பெரியவரைப் போரில் வழிபடுபவர்,
மந்திரங்களையும், பகைவர்களையும் வெல்வார்,
எல்லாச் செல்வங்களும் அவர் முன் பணிந்து,
எல்லாத் துன்பமும் அவரை விட்டு நீங்கும்.

லிகித்வா பூஜயேத் யஸ்து ஸர்வத்ர விஜயீ ভவேத்,
யா கரே தாரயே நித்யம் ஸபுமான் ஶ்ரியமாப்நுயாத். 19

அதை எழுதுபவர் அல்லது வழிபடுபவர் எங்கும் வெற்றி பெறுவார்,
அதைக் கையில் அணிபவர் பெரும் செல்வந்தராவார்.

ஸ்தித்வா து பந்தேன யஸ்து ஜபம் காரயாதி த்விஜை,
தத் க்ஷணாத் முக்தி மாப்நோதி நிகதாது தாதைவ ச. 20

ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டு, இருமுறை பிறந்தவர்களால் இதைப் படித்தால்,
அவர் உடனடியாக சுதந்திரம் பெறுவார், மேலும் தொடர்ந்து அப்படி இருப்பார்.

ய இதம் ப்ரதர் ​​உதய படேச்ச கவச்சம் சதா,
ஆயுர் ஆரோக்ய சந்தானைஸ்தஸ்ய, ஸ்தவ்ய ஸ்தவோ பவேத். 21

இதை எப்பொழுதும் காலையில் எழுந்தவுடன் படிப்பவர்
நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும், குழந்தைகளையும் பெறுவர், புகழ் பெற்றவர்களால் புகழப்படுவார்.

இதம் பூர்வம் பதித்வா து ராமஸ்ய கவச்சம் ததா,
பதநீயம் நரை பக்த்யா நைகமேவ படேத் கதா. 22

ஹனுமத் கவச்சம் சத்ர ஸ்ரீ ராம கவச்சம் வினா,
யே பதந்தி நர்ச்சத்ர பதனம் தத் வ்ருதா பவேத். 23

தஸ்மாদ் ஸர்வை பதநீயம் ஸர்வধா கவச்ச த்வயம்,
ராமஸ்ய, வாயு புத்ரஸ்ய ஸদ்ভக்தைஶ்ச விசேஷதঃ| 24

இதைப் படிக்க வேண்டும், ராமரின் கவசம் முன்பு படிக்க வேண்டும்,
இதைத் தனியாகப் படிக்காமல் பக்தி கொண்ட மனிதர்கள்.
அதற்குப் பதிலாக ராமரின் கவசத்தைப் படிக்காமல் அனுமனின் கவசத்தைப் படித்தால்,
அப்படிப்பட்ட மனிதர்களின் வாசிப்பு வீணாகிவிடும்.
எனவே படிக்க விரும்புவோர் இரண்டு கவசங்களையும் ஒன்றாகப் படிக்க வேண்டும்,
ஏனெனில், ராமர் மற்றும் அனுமன் கவசத்தை பக்தியுடன் வாசிப்பது சிறப்பாகும்.

இதி ஸ்ரீ ராம க்ருதை யேக முக ஹனுமத் கவச்சம் ஸம்பதம்

ராமர் எழுதிய ஒற்றை முகம் கொண்ட அனுமனின் கவசம் இவ்வாறு முடிகிறது.

————–

ஶ்ரீஹனுமத்ஸ்தோத்ரம் வ்யாஸதீர்த விரசிதம்

நமாமி தூதம் ராமஸ்ய ஸுகதம் ச ஸுரத்ருமம் ।
பீனவ்ருத்தமஹாபாஹும் ஸர்வஶத்ருனிபர்ஹணம் ॥ 1॥

நாநாரத்னஸமாயுக்தகுண்டலாதிவிபூஷிதம் ।
ஸர்வதாபீஷ்டதாதாரம் ஸதாம் வை த்ருடமாஹவே ॥ 2॥

வாஸினம் சக்ரதீர்தஸ்ய தக்ஷிணஸ்தகிரௌ ஸதா ।
துங்காம்போதிதரங்கஸ்ய வாதேன பரிஶோபிதே ॥ 3॥

நாநாதேஶாகதை꞉ ஸத்பி꞉ ஸேவ்யமானம் ந்ருபோத்தமை꞉ ।
தூபதீபாதிநைவேத்யை꞉ பஞ்சகாத்யைஶ்ச ஶக்தித꞉ ॥ 4॥

பஜாமி ஶ்ரீஹனூமந்தம் ஹேமகாந்திஸமப்ரபம் ।
வ்யாஸதீர்தயதீந்த்ரேண பூஜிதம் ப்ரணிதானத꞉ ॥ 5॥

த்ரிவாரம் ய꞉ படேந்நித்யம் ஸ்தோத்ரம் பக்த்யா த்விஜோத்தம꞉ ।
வாஞ்சிதம் லபதே(அ)பீஷ்டம் ஷண்மாஸாப்யந்தரே கலு ॥ 6॥

புத்ரார்தீ லபதே புத்ரம் யஶோ(அ)ர்தீ லபதே யஶ꞉ ।
வித்யார்தீ லபதே வித்யாம் தனார்தீ லபதே தனம் ॥ 7॥

ஸர்வதா மாஸ்து ஸந்தேஹோ ஹரி꞉ ஸாக்ஷீ ஜகத்பதி꞉ ।
ய꞉ கரோத்யத்ர ஸந்தேஹம் ஸ யாதி நிரயம் த்ருவம் ॥ 8॥

இதி ஶ்ரீவ்யாஸ தீர்த விரசிதம் ஹனுமத் ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ।

—————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நடாதூர் அம்மாள் ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்ரீ பரமார்த்த ஸ்லோக த்வயம்

June 2, 2023

வந்தேஹம் வரதார்யம் தம் வத்ஸாபி ஐந பூஷணம்
பாஷ்ய அம்ருத ப்ரதாநாத் யஸ் சஞ்ஜீவயதி மாமபி

ஸத் சங்காத் பவ நிஸ் ஸ்ப்ருஹோ குரு முகாத் ஸ்ரீ ஸம் ப்ரபத் யாத்மவாந்
ப்ராரப்தம் பரி புஜ்ய கர்ம சகலம் ப்ரஷீண கர்மாந்தர
ந்யாஸாதேவ நிரங்குச ஈஸ்வர தயா நிர் லூந மாய அந்வய
ஹார்த்த அநு க்ரஹ லப்த மத்ய தம நித்வாரா பஹிர் நிர்க்கத –1

முக்தோ அர்ச்சிர் திந பூர்வ பக்ஷ ஷடு தங்மா ஸாப்த வாதம் ஸூமத்
க்லவ் வித்யுத் வரு ணேந்திர தாதரு மஹித ஸீ மாந்த சிந்த் வாப்லுத
ஸ்ரீ வைகுண்டம் உபேத்ய நித்யம் அஜடம் தஸ்மிந் பர ப்ரஹ்மண
ஸா யுஜ்யம் சமவாப்ய நந்ததி சமம் தேநைவ தந்ய புமான் –2-

ப்ரதார் நித்ய அநு சந்தேயம் பரமார்த்தம் முமுஷுபி
ஸ்லோஹ த்வயேந ஸம் க்ஷிப்தம் ஸூவ்யக்தம் வரதோ அப்ரவீத்

—————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நடாதூர் அம்மாள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ வேங்கடேச ஸூப்ரபாதம்–ஸ்தோத்திரம்–பிரபத்தி–மங்களாசாசனம்–மூலமும் பொருளும் —

May 24, 2023

ஸ்ரீ வேங்கடேச ஸூப்ரபாதம் (29 பாடல்கள்),
ஸ்ரீ வேங்கடேச ஸ்தோத்திரம் (11 பாடல்கள்),
ஸ்ரீ வேங்கடேச பிரபத்தி (16 பாடல்கள்),
ஸ்ரீ வேங்கடேச மங்களாசாசனம் (14 பாடல்கள்)
ஆகிய நான்கு பகுதிகள்

———–

ஸ்ரீ வேங்கடேச ஸூப்ரபாதம்

கௌசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்–1-

உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த
உத்திஷ்ட கருடத்வஜ
உத்திஷ்ட கமலா காந்தா
த்ரைலோக்யம் மங்களம் குரு–2-

மாதஸ் சமஸ்த ஜகதாம் மது கைடபாரே
வக்ஷோ விஹாரிணி மனோகர திவ்ய மூர்த்தே
ஸ்ரீ ஸ்வாமினி, ச்ரிதஜன ப்ரிய தான சீலே
ஸ்ரீ வேங்கடேச தயிதே தவ சுப்ரபாதம்-3-

தவ சுப்ரபாதம் அரவிந்த லோசனே
பவது பிரசன்ன முக சந்திர மண்டலே
விதி சங்கரேந்திர வனிதாபிர் அர்ச்சிதே
விருஷ சைலநாத தயிதே தயாநிதே-4-

அத்ரிஆதி சப்தரிஷய சமுபாஸ்ய சந்த்யாம்
ஆகாச சிந்து கமலானி மனோகரானி
ஆதாய பாதயுகம் அர்ச்சயிதும் ப்ரபந்நா
சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்–5-

பஞ்சானன ஆப்ஜபவ சண்முக வாசவாத்யா
த்ரைவிக்ரமாதி சரிதம் விபுதா ச்துவந்தி
பாஷாபதி படதி வாசர சுத்திமாராத்
சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்–6-

ஈஷத் ப்ரபுல்ல சரசீருஹ நாரிகேள
பூகத்ருமாதி சு மநோகர பாலிகாநாம்
ஆவாதி மந்த மநிலஸ் சக திவ்யகந்தை
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–7-

உந்மீல்ய நேத்ர யுக முத்தம பஞ்ஜரஸ்தா
பாத்ரா வசிஷ்ட கதலீபல பாயசாநி
புக்த்வா சலீலமத கேளிசுகா: படந்தி
சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்–8-

தந்த்ரீ ப்ரகர்ஷ மதுர ஸ்வநயா விபஞ்ச்யா
காயத்ய நந்த சரிதம் தவ நாரதோபி
பாஷாச மக்ர அசக்ருத் கரசார ரம்யம்
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–9-

ப்ருங்காவலீ ச மகரந்த ரஸா நுவித்த
ஜங்கார கீத நிநதைஸ் சக சேவநாய
நிர்யாத்யு பாந்த சரஸீ கமலோ தரேப்ய
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–10-

யோஷா கணேன வரதத்னி விமத்ய மானே
கோசால யேஷூ ததி மந்தன தீவ்ர கோஷா
ரோஷாத் கலிம் விததே ககுபஸ்ச கும்பா
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–11-

பத்மேச மித்ர சதபத்ர கதாலி வர்க்கா
ஹர்த்தும் ச்ரியம் குவலயஸ்ய நிஜாங்க லக்ஷ்ம்யா
பேரீ நிநாத மிவ பீப்ரதி தீவ்ர நாதம்
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–12-

ஸ்ரீ மந் அபீஷ்ட வரதாகில லோக பந்தோ
ஸ்ரீ ஸ்ரீநிவாச ஜகதேக தயைக சிந்தோ
ஸ்ரீ தேவதா க்ருஹ புஜாந்தர திவ்ய மூர்த்தே
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்–13–

ஸ்ரீ சுவாமி புஷ்கரிணி- காப்லவ நிர்மலாங்கா
ச்ரேயோர் திநோ, ஹர விரிஞ்சி சனந்தன ஆத்யா
த்வாரே வசந்தி வரவேத்ர ஹதோத்த மாங்கா:
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்-14–

ஸ்ரீ சேஷசைல கருடாசல வேங்கடாத்ரி
நாராயணாத்ரி வ்ருஷபாத்ரி வ்ருஷாத்ரி முக்யாம்
ஆக்யாம் த்வதீய வசதே ரநிசம் வதந்தி
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–15–

சேவாபரா: சிவ சுரேஷ க்ருசானு தர்ம
ரக்ஷோம்பு நாத பவமான தனாதி நாதா
பத்தாஞ்ஜலி ப்ரவிலசந் நிஐ சீர்ஷ தேசா:
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்-16-

தாடீஷூதே விஹக ராஜ மிருகாதி ராஜ
நாகாதி ராஜ கஜ ராஜ ஹயாதி ராஜா
ஸ்வஸ்வ அதிகார மஹி மாதிகம் அர்தயந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–17–

ஸூர்யேந்து பவ்ம புத வாக்பதி காவ்ய சவ்ரி
ஸ்வர்பாநு கேது த்விஷத் பரிஷத் ப்ரதாநா
த்வத் தாஸ தாஸ சரமாவதி தாஸ தாஸ
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–18–

த்வத் பாத தூளி, பரித ஸ்புரித உத்தமாங்கா
சுவர்கா அபவர்க நிரபேக்ஷ, நிஜாந்த ரங்கா!
கல்ப ஆகம ஆகலநயா ஆகுலதாம் லபந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–19-

த்வத் கோபுர ஆக்ர சிகராணி, நிரீக்ஷ மாணா
ஸ்வர்கா அபவர்க பதவீம், பரமாம் ச்ரயந்த!
மர்த்யா மநுஷ்ய புவனே, மதி மாச்ரயந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்!–20-

ஸ்ரீ பூமி நாயக தயாதி குண அம்ருத ஆப்தே
தேவாதி தேவ ஜகத் ஏக சரண்ய மூர்த்தே
ஸ்ரீமந் அனந்த கருடாதிபிர் அர்ச்சி தாங்க்ரே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–21-

ஸ்ரீ பத்மநாப புரு÷ஷாத்தம வாசுதேவ
வைகுண்ட மாதவ ஜனார்த்தன சக்ர பாணே
ஸ்ரீ வத்ஸ சிஹ்ன சரணாகத பாரிஜாத
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்-22–

கந்தர்ப்ப தர்ப்ப ஹர சுந்தர திவ்ய மூர்த்தே
காந்தா குசாம் புருஹ குட்மல லோல த்ருஷ்டே
கல்யாண நிர்மல குணாகர திவ்ய கீர்த்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்-23–

மீனாக்ருதே- கமட- கோல- ந்ருசிம்ம- வர்ணிந்
ஸ்வாமிந்- பரஸ்வத தபோதன- ராமசந்திர-
சேஷாம்ச ராம- யது நந்தன- கல்கி ரூப-
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–24–

ஏலா லவங்க கனசார சுகந்தி தீர்த்தம்
திவ்யம் வியத்சரிதி ஹேம கடேஷூ பூர்ணம்
த்ருத் வாத்ய வைதிக சிகாமணய ப்ருஹ்ருஷ்டா
திஷ்டந்தி வேங்கட பதே தவ சுப்ரபாதம்–25–

பாஸ்வான் உதேதி விகசாநி சரோருகானி
சம்பூர யந்தி நினதை ககுபோ விகங்கா
ஸ்ரீவைஷ்ணவா சததம் அர்த்தித மங்களாஸ்தே
தாமாச்ரயந்தி தவ வேங்கட சுப்ரபாதம்–26–

பிரம்மா ஆதய சுரவரா ச மகர்ஷ யஸ்தே
சந்தஸ் சனந்தன முகாஸ் தவ யோகி வர்யா
தாமாந்திகே தவஹி மங்கள வஸ்து ஹஸ்தா
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–27–

லஷ்மீ நிவாச நிரவத்ய குணைக சிந்தோ
சம்சார சாகர சமுத்தர அநைக சேதோ
வேதாந்த வேத்ய நிஜ வைபவ பக்த போக்ய
ஸ்ரீவேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–28–

இத்தம் விருஷாசல பதே, இக சுப்ரபாதம்
யே மானவா, ப்ரதி தினம் படிதும் ப்ர-விருத்தா
தேஷாம் பிரபாத சமயே, ஸ்மிருதி ரங்க பாஜாம்
பிரஜ்ஞாம், பர ஆர்த்த சுலபாம், பரமாம் ப்ரசுதே–29-

***

ஸ்ரீ வேங்கடேச ஸ்தோத்ரம்

கமலா குசசூசுக குங்குமதோ நியதாருணிதாதுல நீலதநோ

கமலாயத லோசன லோகபதே விஜயீபவ வேங்கட சை’லபதே                       1

ஸ சதுர்முக ஷண்முக பஞ்சமுக ப்ரமுகாகில தைவத மௌளிமணே

ச’ரணாகத வத்ஸல ஸாரநிதே பரிபாலயமாம் வ்ருஷ சை’லபதே                 2

அதிவேலதயா தவதுர்விஷஹை: அனுவேல க்ருதை ரபராத ச’தை

பரிதம் த்வரிதம் வ்ருஷ சை’லபதே பரயா க்ருபயா பரிபாஹி ஹரே           3

அதிவேங்கட சை’லமுதாரமதே: ஜனதா பிமதாதிக தான தராத்

பரதேவதய கதிதாந்நிகமை: கமலாதயிதான ந பரம் கலயே                           4

கலவேணுரவாச’ கோபவதூ ச’தகோடி வ்ருதாத ஸ்மரகோடி ஸமாத்

ப்ரதிவல்லவிகாபிமதாத் ஸுகதாத் வஸுதேவஸுதாந் ந பரம் கலயே       5

அபிராம குணாகர தாச’ரதே ஜகதேக தநுர்தர தீரமதே

ரகுநாயக ராம ரமேச’ விபோ வரதோ பல தேவ தயாஜலதே                           6

அவநீதநயாகம நீயகரம் ரஜநீகரசாரு முகாம்புருஹம்

ரஜனீசரராஜ தமோமிஹிரம் மஹநீயமகம் ரகுராமமயே                                  7

ஸுமுகம் ஸுஹ்ருதம் ஸுலபம் ஸுகதம் ஸ்வநுஜஞ்ஞ ஸுகாய அமோகசரம்

அபஹாய ரகூத்வஹமன்யமஹம் ந கதஞ்சன கஞ்சன ஜாது பஜே                8

விநா வேங்கடேச’ம் ந நாதோ ந நாத: ஸதா வேங்கடேச’ம் ஸ்மராமி ஸ்மராமி –

ஹரே வேங்கடேச’ ப்ரஸீத ப்ரஸீத ப்ரியம் வேங்கடேச’ ப்ரயச்ச ப்ரயச்ச      –9

அஹம்தூரதஸ்தே பதாம்போஜயுக்ம ப்ரணாமேச்சயா (ஆ)கத்யஸேவாம் கரோமி —

ஸக்ருத்ஸேவயா  நித்யஸேவாபலம் த்வம் ப்ரயச்ச ப்ரயச்ச ப்ரபோ வேங்கடேச’        -10

அஜ்ஞாநினா மயா தோஷான் அசேஷான் விஹிதான் ஹரே–11

க்ஷமஸ்வ த்வம் க்ஷமஸ்வ த்வம் சே’ஷசை’ல சி’காமணே

***

ஶ்ரீ வேங்கடேஶ்வர ப்ரபத்தி

ஈஶாநாம் ஜக³தோ(அ)ஸ்ய வேங்கடபதேர்விஷ்ணோ꞉ பராம் ப்ரேயஸீம்
தத்³வக்ஷ꞉ஸ்த²லநித்யவாஸரஸிகாம் தத்க்ஷாந்திஸம்வர்தி⁴நீம் ।
பத்³மாலங்க்ருதபாணிபல்லவயுகா³ம் பத்³மாஸநஸ்தா²ம் ஶ்ரியம்
வாத்ஸல்யாதி³கு³ணோஜ்ஜ்வலாம் ப⁴க³வதீம் வந்தே³ ஜக³ந்மாதரம் ॥ 1 ॥

ஶ்ரீமந் க்ருபாஜலநிதே⁴ க்ருதஸர்வலோக
ஸர்வஜ்ஞ ஶக்த நதவத்ஸல ஸர்வஶேஷிந் ।
ஸ்வாமிந் ஸுஶீல ஸுலபா⁴ஶ்ரிதபாரிஜாத
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 2 ॥

ஆநூபுரார்பிதஸுஜாதஸுக³ந்தி⁴புஷ்ப-
-ஸௌரப்⁴யஸௌரப⁴கரௌ ஸமஸந்நிவேஶௌ ।
ஸௌம்யௌ ஸதா³நுப⁴வநே(அ)பி நவாநுபா⁴வ்யௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 3 ॥

ஸத்³யோவிகாஸிஸமுதி³த்வரஸாந்த்³ரராக³-
-ஸௌரப்⁴யநிர்ப⁴ரஸரோருஹஸாம்யவார்தாம் ।
ஸம்யக்ஷு ஸாஹஸபதே³ஷு விளேக²யந்தௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 4 ॥

ரேகா²மயத்⁴வஜஸுதா⁴கலஶாதபத்ர-
-வஜ்ராங்குஶாம்பு³ருஹகல்பகஶங்க²சக்ரை꞉ ।
ப⁴வ்யைரளங்க்ருததலௌ பரதத்த்வசிஹ்நை꞉
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 5 ॥

தாம்ரோத³ரத்³யுதிபராஜிதபத்³மராகௌ³
பா³ஹ்யைர்மஹோபி⁴ரபி⁴பூ⁴தமஹேந்த்³ரநீலௌ ।
உத்³யந்நகா²ம்ஶுபி⁴ருத³ஸ்தஶஶாங்கபா⁴ஸௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 6 ॥

ஸப்ரேமபீ⁴தி கமலாகரபல்லவாப்⁴யாம்
ஸம்வாஹநே(அ)பி ஸபதி³ க்லமமாத³தா⁴நௌ ।
காந்தாவவாங்மநஸகோ³சரஸௌகுமார்யௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 7 ॥

லக்ஷ்மீமஹீதத³நுரூபநிஜாநுபா⁴வ-
நீலாதி³தி³வ்யமஹிஷீகரபல்லவாநாம் ।
ஆருண்யஸங்க்ரமணத꞉ கில ஸாந்த்³ரராகௌ³
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 8 ॥

நித்யாந்நமத்³விதி⁴ஶிவாதி³கிரீடகோடி-
-ப்ரத்யுப்ததீ³ப்தநவரத்நமஹ꞉ப்ரரோஹை꞉ ।
நீராஜநாவிதி⁴முதா³ரமுபாத³தா⁴நௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 9 ॥

விஷ்ணோ꞉ பதே³ பரம இத்யுதி³த ப்ரஶம்ஸௌ
யௌ மத்⁴வ உத்ஸ இதி போ⁴க்³யதயா(அ)ப்யுபாத்தௌ ।
பூ⁴யஸ்ததே²தி தவ பாணிதலப்ரதி³ஷ்டௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 10 ॥

பார்தா²ய தத்ஸத்³ருஶஸாரதி²நா த்வயைவ
யௌ த³ர்ஶிதௌ ஸ்வசரணௌ ஶரணம் வ்ரஜேதி ।
பூ⁴யோ(அ)பி மஹ்யமிஹ தௌ கரத³ர்ஶிதௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 11 ॥

மந்மூர்த்⁴நி காளியப²ணே விகடாடவீஷு
ஶ்ரீவேங்கடாத்³ரிஶிக²ரே ஶிரஸி ஶ்ருதீநாம் ।
சித்தே(அ)ப்யநந்யமநஸாம் ஸமமாஹிதௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 12 ॥

அம்லாநஹ்ருஷ்யத³வநீதலகீர்ணபுஷ்பௌ
ஶ்ரீவேங்கடாத்³ரிஶிக²ராப⁴ரணாயமாநௌ ।
ஆநந்தி³தாகி²லமநோநயநௌ தவைதௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 13 ॥

ப்ராய꞉ ப்ரபந்நஜநதாப்ரத²மாவகா³ஹ்யௌ
மாது꞉ ஸ்தநாவிவ ஶிஶோரம்ருதாயமாநௌ ।
ப்ராப்தௌ பரஸ்பரதுலாமதுலாந்தரௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 14 ॥

ஸத்த்வோத்தரை꞉ ஸததஸேவ்யபதா³ம்பு³ஜேந
ஸம்ஸாரதாரகத³யார்த்³ரத்³ருக³ஞ்சலேந ।
ஸௌம்யோபயந்த்ருமுநிநா மம த³ர்ஶிதௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 15 ॥

ஶ்ரீஶ ஶ்ரியா க⁴டிகயா த்வது³பாயபா⁴வே
ப்ராப்யே த்வயி ஸ்வயமுபேயதயா ஸ்பு²ரந்த்யா ।
நித்யாஶ்ரிதாய நிரவத்³யகு³ணாய துப்⁴யம்
ஸ்யாம் கிங்கரோ வ்ருஷகி³ரீஶ ந ஜாது மஹ்யம் ॥ 16 ॥

இட் ஶ்ரீ வேங்கடேஶ்வர ப்ரபத்தி ||

***

ஸ்ரீ வேங்கடேச மங்களாசாஸனம்

ஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நித யேர்த்தி நாம்

ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்                                        1

லக்ஷ்மீஸ விப்ரமாலோக ஸுப்ரு விப்ரம சக்ஷுஷே

சக்ஷு ஷே ஸர்வலோகாநாம் வேங்கடேசாய மங்களம்             2

ஸ்ரீவேங்கடாத்ரி  ச்ருங்காக்ர மங்களா பரணாங்க்ரியே

மங்களாநாம் நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்                                   3

ஸர்வாவயவ ஸௌந்தர்ய ஸம்பதா சர்வசேதஸாம்

ஸதா ஸம்மோஹ நாயாஸ்து வேங்கடேசாய மங்களம்             4

நித்யாய நிரவத்யாய ஸத்யா நந்தசிதாத்மநே

ஸர்வாந்த ராத்மநே ஸ்ரீமத் வேங்கடேசாய மங்களம்                              5

ஸ்வதஸ் ஸர்வவிதே ஸர்வசக்தயே ஸர்வசேஷிணே

ஸுலபாய ஸுசீலாய வேங்கடேசாய மங்களம்                                        6

ப்ரஸ்மை ப்ரஹ்மணே பூர்ணகாமாய பரமாத்மநே

ப்ரயுஞ்ஜே பரதத்வாய வேங்கடேசாய மங்களம்                                      7

ஆகால தத்வ மச்ராந்த மாத்ம நாம நுபச்யதாம்

அத்ருப்த்யம்ருத ரூபாய வேங்கடேசாய மங்கலம்                                   8

ப்ராயஸ் ஸ்வ சரணௌ பும்ஸாம் சரண்யத்வேந பாணிநா

க்ருபாய திசதே ஸ்ரீமத் வேங்கடேசாய மங்களம்                                       9

தயாம்ருத்தரங்கிண்யாஸ் தரங்கைரிவ சீதலை:

அபாங்கை ஸிஞ்சதே விச்வம் வேங்கடேசாய மங்களம்                        10

ஸ்ரக்பூஷாம்பர ஹேதீதாம் ஸுஷமாவஹ மூர்த்தயே

ஸர்வார்த்தி ஸமநாயாஸ்து வேங்கடேசாய மங்களம்                            11

ஸ்ரீவைகுண்ட விரக்தாய ஸ்வாமி புஷ்கரிணீ தடே

ரமயா ரமமாணாய வேங்கடேசாய மங்களம்                                            12

ஸ்ரீமத் ஸுந்தரஜாமாத்ரு முநிமா நஸவாஸிநே

ஸர்வலோகநிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்                                       13

மங்களாசாஸ நபரைர் மதாசார்ய புரோகமை:

ஸர்வைச்ச பூர்வை ராசார்யைஸ் ஸத்க்ருதாயாஸ்து மங்களம்          14

***

ஸ்ரீ வேங்கடேச ஸூப்ரபாதம்

கௌசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்-1-

கௌசல்யா தேவி திருக்குமாரா -ஸ்ரீ ராமா -புருஷோத்தமா –
காலைப் பொழுது புலர்கிறது –
நாம் செய்ய வேண்டிய நித்ய வர்ணாஸ்ரம கர்மங்களை செய்ய வேண்டும்
எழுந்திராய்

———-

உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த
உத்திஷ்ட கருட த்வஜ
உத்திஷ்ட கமலா காந்தா
த்ரை லோக்யம் மங்களம் குரு–2-

ஆநிரை மேய்த்து மகிழ்பவனே
கருடக்கொடியை யுடையவனே
எழுந்திராய்
செந்தாமரையில் வளர் ஸ்ரீ லஷ்மீ தேவியின் நாயகனே
எழுந்திராய்
மூ உலகங்களிலும் -நித்ய முக்த பத்த -க்ருத்ய -அக்ருத்ய -க்ருத்யக்ருத்ய -ஸமஸ்த உலகங்களுக்கும்
நன்மைகள் -மங்களம் நிலவும்படியாகச் செய்வதற்காக
எழுந்திராய்

———-

மாதஸ் சமஸ்த ஜகதாம் மது கைடபாரே
வக்ஷோ விஹாரிணி மனோகர திவ்ய மூர்த்தே
ஸ்ரீ ஸ்வாமினி, ச்ரிதஜன ப்ரிய தான சீலே
ஸ்ரீ வேங்கடேச தயிதே தவ சுப்ரபாதம்–3-

ஸமஸ்த உலகங்களுக்கும் தாயைப் போன்றவளே
மது கைடபர் என்னும் அரக்கர்களை அளித்த ஸ்ரீ மஹா விஷ்ணுவின் திரு மார்பில் விளையாடுபவளே
மனம் கவரும் திவ்ய மங்கள விக்ரஹம் உடையவளே
தெய்வத் தாயே
ஆஸ்ரிதர்களின் ஸமஸ்த அபேக்ஷித்ங்களையும் அளித்து மகிழ்பவளே
ஸ்ரீ வெங்கடேசப்பெருமாளின் தயா தேவியே
உனக்கு நல்ல காலைப் பொழுதாகுக –

———-

தவ சுப்ரபாதம் அரவிந்த லோசனே
பவது பிரசன்ன முக சந்திர மண்டலே
விதி சங்கரேந்திர வனிதாபிர் அர்ச்சிதே
விருஷ சைலநாத தயிதே தயாநிதே–4-

தாமரை மலர்களை போன்ற குளிர்ந்த திருக்கண்களை யுடையவளே
பூர்ண சந்திரன் போல் பொலியும் திரு முக விலாஸம் யுடையவளே
ப்ரஹ்மாதி தேவர்களின் பத்னிகளால் பூஜிக்கப்படுபவளே
கருணையின் உறைவிடம் போன்றவளே
விருஷாசல பதியான ஸ்ரீ திருவேங்கட நாதனின் அன்புக்கு உரியவளே
உனக்கு நல்ல காலைப் பொழுது ஆகுக

————–

அத்ரிஆதி சப்தரிஷய சமுபாஸ்ய சந்த்யாம்
ஆகாச சிந்து கமலானி மனோகரானி
ஆதாய பாதயுகம் அர்ச்சயிதும் ப்ரபந்நா
சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்–5-

அத்ரி முதலான ஸப்த ரிஷிகளும் காலைக்கடன்களை ஸந்த்யாவந்தனாதி நித்ய கர்மங்களையும்
முடித்துக் கொண்டு நின் திருப்பாத கமலங்களை அரசிப்பதற்காக
மனத்தைக் கவரக் கூடிய ஆகாச கங்கையில் மலர்ந்த தாமரை மலர்களை
சேகரித்துக் கொண்டு வந்து நிற்கின்றனர்
சேஷ மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

—————

பஞ்சானன ஆப்ஜபவ சண்முக வாசவாத்யா
த்ரைவிக்ரமாதி சரிதம் விபுதா ச்துவந்தி
பாஷாபதி படதி வாசர சுத்திமாராத்
சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்–6-

தேவர்களில் சிறந்த ப்ரஹ்மாதிகளும் சுப்பிரமணியனும் ஞானிகளுமானவர்கள்
ஓங்கி உலகளந்த சரித்திரங்கள் முதலான உனது திவ்ய சேஷ்டிதங்களைப் புகழ்ந்து நிற்கின்றனர்
பாஷா பதி -சொல்லுக்கு அரசனான -தேவ குருவாகிய ப்ரஹஸ்பதி
தூரத்தில் வணக்கத்துடன் நின்று கொண்டு நாட்களுக்குப் பறி ஸூத்தி அளிக்கக் கூடிய
பயன்களைக் கூறும் பஞ்சாங்கம் படிக்கிறார்
சேஷ மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————-

ஈஷத் ப்ரபுல்ல சரசீருஹ நாரிகேள
பூகத்ருமாதி சு மநோகர பாலிகாநாம்
ஆவாதி மந்த மநிலஸ் சக திவ்யகந்தை
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–7-

சற்றே மலர்ந்த தாமரை மலர்கள் -தென்னை பாக்கு மரங்களின் மிகவும் மனத்தைக் கவரும்
இளம் பாளைகளுடைய திவ்யமான நறு மண வாசனையை எடுத்துக் கொண்டு
குளிர்ந்த காலைக் காற்று மெதுவாக வீசுகிறது
சேஷ மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————-

உந்மீல்ய நேத்ர யுக முத்தம பஞ்ஜரஸ்தா
பாத்ரா வசிஷ்ட கதலீபல பாயசாநி
புக்த்வா சலீலமத கேளிசுகா: படந்தி
சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்–8–

இரு கண்களையும் திறந்து
கலசங்களில் வைக்கப்பட்டுள்ள வாழைப்பழம் பாயாசம் முதலிய சுவை அமுதுகளை புஜித்து விட்டு
சிறந்த கூண்டுகளில் இருப்பவையும்
கேளிக்கையான விளையாட்டு இன்பத்தை உண்டு பண்ணக் கூடியவையுமான
கிளிகள் மனக்களிப்புடன் உன்னுடைய திரு நாமங்களைப் பாடுகின்றன
சேஷ மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————-

தந்த்ரீ ப்ரகர்ஷ மதுர ஸ்வநயா விபஞ்ச்யா
காயத்ய நந்த சரிதம் தவ நாரதோபி
பாஷாச மக்ர அசக்ருத் கரசார ரம்யம்
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–9-

நல்ல தந்திகளை உடையபடியால் இனிய நாதமுடைய வீணையுடன் நாரதரும்
அழிவற்ற வனான உன்னுடைய திவ்ய சரிதங்களை
காவிய நயம் மிக்க மொழி வண்ணம் தோன்றும்படியாக
வேகமாக மீட்டிப் பாடுகிறார்
சேஷ மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————-

ப்ருங்காவலீ ச மகரந்த ரஸா நுவித்த
ஜங்கார கீத நிநதைஸ் சக சேவநாய
நிர்யாத்யு பாந்த சரஸீ கமலோ தரேப்ய
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–10-

இரவு முழுவதும் மகரந்த ரஸம் கலந்த தேனைப் பருகிவிட்டு ரீங்காரம் இடும் வண்டுகள்
அருகில் உள்ள பூம் புனல்களில் இருந்து தங்கள் மது அருந்திய தாமரை மலர்களின்
உள் புறத்தில் இருந்து வெளிப்பட்டு உன்னைத் தொழுவதற்காக வருகின்றன
சேஷ மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

———–

யோஷா கணேன வரதத்னி விமத்ய மானே
கோசால யேஷூ ததி மந்தன தீவ்ர கோஷா
ரோஷாத் கலிம் விததே ககுபஸ்ச கும்பா
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–11-

இடையர்களின் குடிசைகளில் ஆய்ச்சிகள் மத்தினால் பானைகளில் சிறந்த தயிரைக் கடையும் போது
உண்டாகும் உரத்த ஒலியை எண் திசைகளும் பொறுக்க மாட்டாமல் எதிர் ஒலிக்கின்றன
சேஷ மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

——-

பத்மேச மித்ர சதபத்ர கதாலி வர்க்கா
ஹர்த்தும் ச்ரியம் குவலயஸ்ய நிஜாங்க லக்ஷ்ம்யா
பேரீ நிநாத மிவ பீப்ரதி தீவ்ர நாதம்
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–12-

ஸூர்யனிடம் அன்புடைய தாமரை மலர்களில் தங்கி இருந்த வண்டினங்கள்
தங்களுடைய கருமையான அங்கங்களில் அழகினால் செருக்கடைந்து
கரிய நிறம் படைத்த பூக்களின் அழகை எதிர்பார்ப்பது போல் உரத்த ரீங்காரம் செய்வது முரசு கொட்டுவது போல் உள்ளது
சேஷ மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————-

ஸ்ரீ மந் அபீஷ்ட வரதாகில லோக பந்தோ
ஸ்ரீ ஸ்ரீநிவாச ஜகதேக தயைக சிந்தோ
ஸ்ரீ தேவதா க்ருஹ புஜாந்தர திவ்ய மூர்த்தே
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்–13-

திருமகள் கேள்வனே
பக்தர்கள் விரும்பிய பலன்களை அளிக்கும் பேர் அருளாளனே
ஸர்வ லோகத்தார்களுக்கும் ஸமஸ்த பந்துவாக உள்ளவனே
அழகிய ஸ்ரீ நிவாஸப் பெருமானே
உலகத்தோர் இடம் கருணை ஒன்றையே கொண்ட பெருமானே
இரண்டு தோள்களின் நடுவில் மஹா லஷ்மியின் வாஸஸ் ஸ்தானமாய் அமைந்த அழகிய திரு மார்பை யுடைய அழகிய பெருமானே
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————-

ஸ்ரீ சுவாமி புஷ்கரிணி- காப்லவ நிர்மலாங்கா
ச்ரேயோர் திநோ, ஹர விரிஞ்சி சனந்தன ஆத்யா
த்வாரே வசந்தி வரவேத்ர ஹதோத்த மாங்கா:
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்–14-

அழகிய ஸ்வாமி புஷ்கரணியில் நீராடியதால் உள்ளும் புறமும் அழுக்கு நீங்கிய மேனி உடையவர்களாய்
உலகில் சிறந்து விளங்கும் மேன்மையை விரும்பும் அரனும் அயனும் ஸநகாதி முனிவர்களும்
உனது திருக்கோயிலின் வாசலிலே வாசல் காப்பவர்களால் அடி பட்ட சிற்பங்களுடன் காத்து நிற்கிறார்கள்
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————-

ஸ்ரீ சேஷசைல கருடாசல வேங்கடாத்ரி
நாராயணாத்ரி வ்ருஷபாத்ரி வ்ருஷாத்ரி முக்யாம்
ஆக்யாம் த்வதீய வசதே ரநிசம் வதந்தி
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–15-

அழகிய
சேஷ மலை
கருட மலை
வேங்கட மலை
நாராயண மலை
விருக்ஷ மலை
என்று நீ வஸிக்கும் திருமலையின் முக்கியமான திரு நாமங்களை எப்பொழுதும் கூறியபடி
அத் தேவர்களும் ரிஷிகளும் ஸ்துதி பாடி நிற்கின்றனர்
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————

சேவாபரா: சிவ சுரேஷ க்ருசானு தர்ம
ரக்ஷோம்பு நாத பவமான தனாதி நாதா
பத்தாஞ்ஜலி ப்ரவிலசந் நிஐ சீர்ஷ தேசா:
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–16-

சிவ பெருமான்
தேவர்கள் தலைவனான இந்திரன்
அக்னி
எமன்
நிருதி
வர்ணன்
வாயு ன் குபேரன்
என்ற அஷ்ட திக் பாலர்களும் பக்தியுடன் கர மலர்கள் சிரம் மிசைக் கூப்பி
அஞ்சலி செய்தவர்களாய் உனது ஸேவைக்காகக் காத்து இருக்கின்றனர்
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

———

தாடீஷூதே விஹக ராஜ மிருகாதி ராஜ
நாகாதி ராஜ கஜ ராஜ ஹயாதி ராஜா
ஸ்வஸ்வ அதிகார மஹி மாதிகம் அர்தயந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–17-

புள்ளரையனான கருடனும்
மிருக ராஜாவான ஸிம்ஹமும்
நாக ராஜாவான ஆதி சேஷனும்
யானைகளுக்கு அரசனான ஐராவதமும்
குதிரைகளுக்கு அரசனான உச்சைஸ் சிரவஸூம்
உனது திருக்கோயில் நடை பாதைகளில் தம் தம் தகுதிக்கு ஏற்ற பெருமையைக் காட்டிலும்
அதிகமாக விரும்புபவர்களாய் உன்னைத் தரிசிக்க நான் முந்தி நீ முந்தி என்று
போட்டியிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————

ஸூர்யேந்து பவ்ம புத வாக்பதி காவ்ய சவ்ரி
ஸ்வர்பாநு கேது த்விஷத் பரிஷத் ப்ரதாநா
த்வத் தாஸ தாஸ சரமாவதி தாஸ தாஸ
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–18–

ஸூர்யன்
ஸந்த்ரன்
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
சனி
இராகு
கேது
என்று தேவ சபையில் முக்யம் பெற்ற வர்களான நவக்ரஹங்களும்
உன்னுடைய அடியார் அடியார் அடியார் என்று மிகவும் கீழ் நிலையில் உள்ள அடியவர்களாய் நிற்கும்
விருப்பம் யுடையவர்களாய் உனது திருக்கோயிலின் வாசலில் நிற்கின்றனர்
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

———–

த்வத் பாத தூளி, பரித ஸ்புரித உத்தமாங்கா
சுவர்கா அபவர்க நிரபேக்ஷ, நிஜாந்த ரங்கா!
கல்ப ஆகம ஆகலநயா ஆகுலதாம் லபந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்-19-

ஸூர்யன் முதலான நவக்ரஹ நாயகர்கள் உன்னுடைய திருப்பாத தூளிகள் பட்டு
நிறைந்து விளங்கும் சிரங்களை யுடையவர்களாய்
ஸ்வர்க்கம் மோக்ஷம் முதலான பேற்றுக்களையும் விரும்பாதவர்களாய்
இந்த யுக கல்பங்கள் முடிந்து விட்டால் தங்களுடைய வாழ்வு முடிந்து விடும் என்ற எண்ணத்தால்
மனம் கலங்கி நிற்கின்றனர்
அவ்வாறு வேறு கல்பம் வந்து விட்டால் உனது திருப்பாத ஸேவையை இழந்து
உனது திருப்பாத தூளியைத் தலையால் தரிக்கும் பாக்கியமும்
இழந்தே போவோமே என்ற பயத்துடன் இருக்கிறார்கள்
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————

த்வத் கோபுர ஆக்ர சிகராணி, நிரீக்ஷ மாணா
ஸ்வர்கா அபவர்க பதவீம், பரமாம் ச்ரயந்த!
மர்த்யா மநுஷ்ய புவனே, மதி மாச்ரயந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்!-20-

உனது திருக்கோபுர முனையில் உள்ள கலசங்களைக் கண்டவுடன் வாழ்வின் இறுதி
லஷ்யமான ஸ்வர்க்கம் மோக்ஷம் பதவி அடைந்து மேல் உலகம் செல்பவர்களும்
அவ்வின்பங்களை வெறுத்தவர்களாய் மீண்டும் மனித லோகத்தில் வாழ்ந்து
உன்னைத் தரிசித்து இருப்பதையே விரும்புகின்றனர்
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————–

ஸ்ரீ பூமி நாயக தயாதி குண அம்ருத ஆப்தே
தேவாதி தேவ ஜகத் ஏக சரண்ய மூர்த்தே
ஸ்ரீமந் அனந்த கருடாதிபிர் அர்ச்சி தாங்க்ரே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–21-

திருமகள் நில மகள் நாயகனே
அருள் முதலான கல்யாண குணங்கள் எனும் அமுதம் விளையும் கடல் போன்றவனே
மனிதர்க்குத் தேவர் போல் தேவர்களுக்கும் தேவாதி தேவனே
சர்வ லோகங்களுக்கும் ஒரே புகலிடமாக விளங்குபவனே
பெருமானே
ஆதி சேஷன் கருடன் விஷ்வக் சேனர் போல்வரால் மலர்கள் தூவி
வானவர் வானவர் கோனுடன் சிந்து பூ மகிழும் அர்ச்சிக்கப்பட்ட திருவடிகள் யுடையவனே
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————–

ஸ்ரீ பத்மநாப புருஷோத்தம வாசுதேவ
வைகுண்ட மாதவ ஜனார்த்தன சக்ர பாணே
ஸ்ரீ வத்ஸ சிஹ்ன சரணாகத பாரிஜாத
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–22-

ஸ்ரீ பத்மநாப
புருஷோத்தம
வாசுதேவ
வைகுண்ட வாஸீ
மாதவ
ஜனார்த்தன
சக்ர பாணே
ஸ்ரீ வத்ஸம் என்னும் திரு மறு அடையாளம் சிஹ்னம் உள்ளவனே
சரணாகதர்களுக்கு பாரிஜாதம் போல் ஸமஸ்த அபீஷ்ட ப்ராதனானவனே
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

—————

கந்தர்ப்ப தர்ப்ப ஹர சுந்தர திவ்ய மூர்த்தே
காந்தா குசாம் புருஹ குட்மல லோல த்ருஷ்டே
கல்யாண நிர்மல குணாகர திவ்ய கீர்த்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–23-

மன்மதனின் செருக்கை ஒடுக்கக் கூடிய மிக அழகிய திவ்ய மங்கள விக்ரஹம் கொண்டவனே
திருமகள் மருவும் ஆசை மிக்க திருக்கண்களை யுடையவனே
மங்கள கரமான குற்றம் அற்ற குணங்களுக்கு உறைவிடம் போன்றவனே
நல்ல பெருமை வாய்ந்த புகழை யுடையவனே
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————–

மீனாக்ருதே- கமட- கோல- ந்ருசிம்ம- வர்ணிந்
ஸ்வாமிந்- பரஸ்வத தபோதன- ராமசந்திர-
சேஷாம்ச ராம- யது நந்தன- கல்கி ரூப-
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–24-

ஸ்ரீ மத்ஸ்ய
ஸ்ரீ கூர்ம
ஸ்ரீ வராஹ நாயகனாக
ஸ்ரீ நரசிம்ஹ வபுவாக
ஸ்ரீ வாமனனாக
ஸ்ரீ பரசு ஏந்திய ரிஷி புத்திரனாக
ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகனாக
ஸ்ரீ ஆதி சேஷ அம்சமான ஸ்ரீ பலராமனாக
யாதவ குலத்தில் உலகோர் அனைவரையும் மகிழ்விக்கும் ஸ்ரீ கிருஷ்ணனாக
திரு அவதரித்தவனே
ஸ்ரீ கல்கியாக திரு அவதரிக்கப் போகும் இறைவனே
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

———–

ஏலா லவங்க கனசார சுகந்தி தீர்த்தம்
திவ்யம் வியத்சரிதி ஹேம கடேஷூ பூர்ணம்
த்ருத் வாத்ய வைதிக சிகாமணய ப்ருஹ்ருஷ்டா
திஷ்டந்தி வேங்கட பதே தவ சுப்ரபாதம்–25-

ஏலக்காய் -லவங்கம் -பச்சைக் கற்பூரம் முதலியவற்றின் நறு மணம் கலந்ததும்
மிகச்சிறந்ததுமான ஆகாஸ கங்கையின் தீர்த்தத்தைத் தங்கக்குடங்களில்
நிரப்பிக் கொண்டு தங்கள் தலைகளில் சுமந்தபடி வைதிக நெறிகளில் சிறந்தவர்கள்
மன மகிழ்ச்சியுடன் உனது திருக்கோயில் திருவாசலில் இப்பொழுது நிற்கின்றனர்
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

———-

பாஸ்வான் உதேதி விகசாநி சரோருகானி
சம்பூர யந்தி நினதை ககுபோ விகங்கா
ஸ்ரீவைஷ்ணவா சததம் அர்த்தித மங்களாஸ்தே
தாமாச்ரயந்தி தவ வேங்கட சுப்ரபாதம்–26-

கதிரவன் குண திசைச் சிகரம் வந்து அணைந்தான்
மது விரிந்து ஒழுகின மா மலர்கள் எல்லாம் -கமல மலர்கள் விகசிக்கின்றன
ஸ்ரீ வைஷ்ணவ அடியார்கள் உனக்கு எப்பொழுதும் நன்மை தரும் மங்களங்களை வேண்டிக் கொண்டு
உன்னுடைய திருக்கோயில் திருவாசலை வந்து அடைகின்றனர்
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

————–

பிரம்மா ஆதய சுரவரா ச மகர்ஷ யஸ்தே
சந்தஸ் சனந்தன முகாஸ் தவ யோகி வர்யா
தாமாந்திகே தவஹி மங்கள வஸ்து ஹஸ்தா
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–27-

ப்ரஹ்மாதி தேவ ஸ்ரேஷ்டர்களும்
மிகச் சிறந்த முனிவர்களும்
ஸாதுக்களான சநந்தர் முதலான யோகிகளும்
மங்கள உபகரணங்களைக் கையில் ஏந்திக் கொண்டு
உனது திருக்கோயில் திருவாசலிலே வந்து நிற்கின்றனர்
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

—————-

லஷ்மீ நிவாச நிரவத்ய குணைக சிந்தோ
சம்சார சாகர சமுத்தர அநைக சேதோ
வேதாந்த வேத்ய நிஜ வைபவ பக்த போக்ய
ஸ்ரீவேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–28–

ஸ்ரீ லஷ்மீ தேவிக்கு நிவாஸமானவனே
குற்றம் அற்றவனே
நற்குண சாகரம் போன்றவனே
பிறவிக்கடலைக் கடக்க நிகரற்ற பாலம் போன்றவனே
வேத வேதாந்தங்களால் அறியத்தக்க உண்மையான சிறப்பை யுடையவனே
பக்தர்களுக்கு இனியவனே
திருவேங்கட மலைச் சிகரத்தில் எழுந்து அருளி உள்ள பரிபூர்ணமானவனே
உனக்கு நற் பொழுது புலர்வதாகுக –

—————-

இத்தம் விருஷாசல பதே, இக சுப்ரபாதம்
யே மானவா, ப்ரதி தினம் படிதும் ப்ர-விருத்தா
தேஷாம் பிரபாத சமயே, ஸ்மிருதி ரங்க பாஜாம்
பிரஜ்ஞாம், பர ஆர்த்த சுலபாம், பரமாம் ப்ரசுதே–29-

இந்த வ்ருஷாசல நாதனான திருமலை நாதனைப் பற்றிய திருப்பள்ளி எழுச்சிப் பாடல்களை
தினம் தோறும் அதிகாலை வேளையில் பாராயணம் செய்பவர்கள்
தங்களைப் பற்றிய நினைவு துன்பம் அகன்றவர்களாய்
பரம் பொருளையே பரம புருஷார்த்தமாகக் கருதும் பரம பக்தர்கள்
மாத்ரமே அடையக்கூடிய நல்ல அறிவை -பர ஞானத்தை -அடைவார்கள் –

***

ஸ்ரீ வேங்கடேச ஸ்தோத்ரம்

கமலா குசசூசுக குங்குமதோ நியதாருணிதாதுல நீலதநோ

கமலாயத லோசன லோகபதே விஜயீபவ வேங்கட சை’லபதே                       1

கமலா குச சூசுக குங்குமதோ நியதாருணி தாதுல நீலத நோ-
பெரிய பிராட்டியார் யுடைய திரு முலைத் தடங்களில் அணிந்த குங்குமக்
குழம்பினால் எப்போதும் சிவப்புப் பெற்று ஒப்பற்று விளங்கா நின்ற நீல மேனியை யுடையாய் –
கொவ்வை வாய் மகளிர் கொங்கை குங்குமம் கழுவிப் போந்த தெய்வ நீர் கமழு நாங்கூர்

அகலகில்லேன் இறையும் என்று
அலர் மேல் மங்கை யுறை மார்பா –

இவளோடு கூடியே வஸ்துவிநிடைய உண்மை –
ஈஸ்வர ஸ்வா தந்த்ர்யத்தையும்
சேதனனுடைய அபராதத்தையும்
கண்டு அகல மாட்டாள் –
முமுஷுப்படி ஸ்ரீ ஸூ க்தி-அனுசந்தேயம் –

கமலாய தலோசன லோகபதே விஜயீ பவ வேங்கட சைலபதே –
கமலம் போன்றவையையும் ஆயதங்களையும் இருக்கும் திருக் கண்கள்
அரவிந்தம் போன்று நீண்ட கண்ணினாய்
உலகங்கட்கே எல்லாம் இறைவனே
திருவேங்கடமலைக்கு இறைவனே
நித்ய ஸ்ரீர்
நித்ய மங்களமாக விளங்குவாயாக –

——

ஸ சதுர்முக ஷண்முக பஞ்சமுக ப்ரமுகாகில தைவத மௌளிமணே

ச’ரணாகத வத்ஸல ஸாரநிதே பரிபாலயமாம் வ்ருஷ சை’லபதே                 2

ஸ சதுர்முக ஷண்முக பஞ்ச முக பிரமுகாகில தைவத மௌலிமணே –
நான்முகக் கடவுளோடு கூடிய
ஸூ ப்ரம்மண்யன் சிவன் முதலான
சகல தெய்வங்களுக்கும் சிரோ பூஷணமாக விளங்குமவனே-
யாம் கடவுள் என்று இருக்கும் எவ்வுலகில் கடவுளர்க்கும்
ஆம் கடவுள் நீ –
ஷண்முக பஞ்ச முகர்களை சதுர்முகனோடு கூடி இருப்பவர்களாக சொன்னது சமுச்சய தாத்பர்யகம்
நோலாதாற்றேன் உனபாதம் காண வென்று நுண் உணர்வின் நீலார் கண்டத்து அம்மானும் நிறை நான்முகனும்
இந்திரனும்
சேலேய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திரு வேங்கடத்தானே

சரணாகத வத்சல
அடி பணிந்தவர்கள் பக்கலிலே
வாத்சல்யம் யுடையவனே –
வாத்சல்யமே -நிகரில் புகழாய் -என்றதில் சூசகம் –
ஆஸ்ரயண சௌகர்ய ஆபாதகங்கள் -குணங்கள்
வாத்சல்யம் – ஸ்வாமித்வம் -சௌசீல்யம் -சௌலப்யம்
ஆஸ்ரித கார்ய ஆபாதன்கள் -குணங்கள் –
ஞான பல சக்தி யாதிகள் –
ஆஸ்ரித வாத்சல்யைக ஜலதே -தனிப்பட கத்யத்தில் காட்டி அருளினார் –

சார நிதே
சிறந்த நிதி போன்றவனே –
சிறந்த நிதி
சாரமான குணங்களை கொண்டவன்

அள்ள அள்ள குறை இல்லாமல் அஷயமாய் இருக்குமே
மேல் மேலும் பெருகுமே
நிதியே திரு நீர் மலை நித்திலத் தொத்தே –
நிதியினைப் பவளத் தூணை
வைத்த மா நிதியம் மது சூதனன்
நிதி கண்ணுக்கு புலப்படாத படி போலே
இவனும் -இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய்
கரந்து எங்கும் பரந்துளன் –
கண் காண நிற்கில் ஆணை இட்டு விலக்குவார்கள் என்று கண்ணுக்குத் தோற்றாத படி நின்று
என்று -ஸ்ரீ வசன பூஷன ஸூக்தி
கட்கிலியாய் இருப்பான் –
சில பாக்ய சாலிகளுக்கு புலப்படுவான் –
யானே தவம் செய்தேன்
கோர மா தவம் செய்தனன் கொல் அறியேன்
சித்த அஞ்சனம் அணிந்து கொண்டு பார்ப்பவர்களுக்கு நிதி தோன்றுமே

பரிபாலய மாம் வருஷ சைலபதே –
வ்ருஷபகிரி -என்னப் படுகிற திரு மலைக்கு இறைவனே
அடியேனைக் காத்து அருள வேணும்

———–

அதிவேலதயா தவதுர்விஷஹை: அனுவேல க்ருதை ரபராத ச’தை

பரிதம் த்வரிதம் வ்ருஷ சை’லபதே பரயா க்ருபயா பரிபாஹி ஹரே           3

திருமலை அப்பனே
கங்கு கரை இல்லாமையினாலே
தேவரீருக்கு சஹிக்க கூடாதவைகளையும்
ஷணம் தோறும் செய்யப் பட்டவையாயும் இருக்கின்ற
நூற்றுக் கணக்கான குற்றங்களினால் நிறைந்து இருக்கின்ற
அடியேனை பரம கிருபையாலே விரைந்து காத்தருள வேணும் –

வேலை -கரை – அநு வேலம் -ஷணம் தோறும்
பாப பூயிஷ்டதையைச் சொல்லிக் கொண்டு புகவே பரிஹாரம் பெறலாம்
அஸ்மத் தாதிகளின் அனுசந்தானத்திற்கு இறே பூர்வர்கள்
இங்கனே பணித்து வைத்தது –

———

அதிவேங்கட சை’லமுதாரமதே: ஜனதா பிமதாதிக தான தராத்

பரதேவதய கதிதாந்நிகமை: கமலாதயிதான ந பரம் கலயே                           4

ஔதார்யம் மிக்க திரு உள்ளம் உடையவரும்
அவரவர்கள் விரும்புவதைக் காட்டிலும் அதிகமாக அளித்து அருள வல்ல
வேதங்களால் பர தெய்வமாக ஓதப்பட்ட ஸ்ரீ லஷ்மீ பதியை
காட்டிலும் வேறு ஒரு வஸ்துவை எண்ணு கின்றிலேன்

மற்றோர் தெய்வம் மதிக்கிலேன்
உதாரன் –என்னாமல் –உதார மதி -என்றது
இன்னமும் கொடுக்க வேணும் என்று இருக்கும் ஹிருதய வைசால்யத்தைப் பற்றி –
ஓன்று உண்டு செங்கண் மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ

ஜனத அபிமத அதிக தான ரதான்-என்றது
அர்த்தி தாரத்த பரி தான தீஷிதரான தேவப் பெருமாளில் காட்டில் வாசி சொன்னபடி –
நிகமை-வேதாந்தங்கள் என்ற விவஷையால்-

——————

கல வேணுரவாச’ கோபவதூ ச’தகோடி வ்ருதாத ஸ்மரகோடி ஸமாத்

ப்ரதிவல்லவிகாபிமதாத் ஸுகதாத் வஸுதேவஸுதாந் ந பரம் கலயே       5

இந்த ஸ்லோஹம் முதல் நான்கு ஸ்லோஹகங்களினால்
திருவேங்கடமுடையானை
கண்ணபிரானாகவும் இராமபிரானாகவும் கொண்டு ஏத்துகிறார்
இதல் கண்ண பிரானாக ஸ்துதிக்கிறார்
பொங்கு புள்ளின் வாய் பிளந்த புராணர் தம்மிடம் திருவேங்கடம்
கன்றிமாரி பொழிந்திடக் கடிதா நிரைக்கு இடர் நீக்குவான் சென்று குன்றம் எடுத்தவன் திருவேங்கடம் -போலே
குரவை கோத்த குழகனை -சாஷாத் மன்மத அழகை முற்றூட்டாக கொடுத்த படி -சொல்கிறது ஸ்மர கோடி சமாத் -என்று

அதி மதுரமான வேணு நாதத்துக்கு பரவசப்பட்ட
ஆய்ச்சிகளின் திரளால் சூழப் பட்டவனும்
கோடிக் கணக்கான மன்மதர்களை ஒத்தவனும்
ஒவ் ஒரு ஆய்ச்சியும் நமக்கே கணவன் என்று அபிமானித்து இருக்கப் பெற்றவனும்
சாஷாத் தர்மியுமான
வாஸூ தேவனில் காட்டிலும்
வேறு ஒருவரை எண்ணு கின்றிலேன்

கருமலர்க் கூந்தல் ஒருத்தி தன்னைக் கடைக் கணித்து ஆங்கே ஒருத்தி தன்பால் மருவி மனம் வைத்து
மற்று ஒருத்திக்கு உரைத்து
ஒரு பேதைக்குப் பொய் குறித்து
புரிகுழல் மங்கை ஒருத்தி தன்னை புணர்த்தி –
என்பதையே பிரதி வல்லபி ச் அபிமதாத் –

ஸூஹ்ருதாத்
க்ருஷ்ணம் தர்மம் சனாதனம்
தர்மமே வடிவு எடுதவனாக
தர்ம ஸ்தாபனம் பண்ணப் பிறந்தவன்
தானே சர்வவ தர்மங்களையும் விட்டு
என்னைப் பற்று என்கையாலே
சாஷாத் தர்மம் தானே -என்கிறது -முமுஷூப்படி ஸ்ரீ ஸூ க்தி-

————————

அபிராம குணாகர தாச’ரதே ஜகதேக தநுர்தர தீரமதே

ரகுநாயக ராம ரமேச’ விபோ வரதோ பல தேவ தயாஜலதே                           6

இந்த ஸ்லோஹம் முதல் மூன்று
ஸ்லோஹங்களாலும் சக்கரவர்த்தி திரு மகனாக அனுபவிக்கிறார் –
அபிராம குணாகர
திருக் கல்யாண குணங்களுக்கு பிறப்பிடம் ஆனவனே –
சூர்பணகை-தாரை -மண்டோதரி -போல்வாரும் புகழும்படி

தாசரதே
தசரதாத் மஜானாகத் தோன்றினவனே –
மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன் மகனாம்
ஆத்மானம் மானுஷம் ராமம் தசரதாத் மாசம் –

ஜகத் ஏக தநுர்தர
உலகில் அத்விதீயனான வில்லாளியாய் விழங்கி-
புணரா நின்ற மரம் ஏழ் அன்று எய்த ஒரு வில் வலவா ஒ –

தீரமதே
துணிவு வாய்ந்த திரு உள்ளம் யுடையவனே –
சலிப்பிக்க ஒண்ணாத ஆஸ்ரித ரஷண த்தில் உறைப்பைச் சொல்கிறது –
அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் த்வாம் வா சீதே
ஸ லஷ்மணாம் ந ஹி பிரதிஜ்ஞ்ஞாம் சம்ஸ்ருத்ய ப்ரஹ்மனேப்யோ விசேஷத -என்றும்
மித்ரா பாவென சம்ப்ராப்தம் ந த்யஜெயம் கதஞ்சன -என்றும் காட்டி அருளினாரே

ரகுநாயக ராம ரமா ஈச விபோ வரதோ பவ தேவ தயா ஜலதே-
ரகுகுல திலகனே
இராமபிரானே
ஸ்ரீ லஷ்மீ பதியே
கருணைக் கடலே
திருவேங்கடமுடையானே
நீ
அடியேனுடைய அபேஷிதங்களை அளித்து அருள்பவனாக ஆக வேணும்-

—————————

அவநீதநயாகம நீயகரம் ரஜநீகரசாரு முகாம்புருஹம்

ரஜனீசரராஜ தமோமிஹிரம் மஹநீயமகம் ரகுராமமயே                                  7

அவநீ தனா கமநீயவரம்
பூமிப் பிராட்டியின் புதல்வியான சீதா பிராட்டி விரும்பத் தக்க மணவாளப் பிள்ளையும் –

ரஜநீ கர சாரு முக அப்ம்புருஹம்
அழகிய முகாரவிந்தத்தை யுடையவனும் –
சுற்றும் ஒளி வட்டம் சூழ்ந்து சோதி பரந்து எங்கும் எத்தனை செய்யிலும்
என் மகன் முகம் நேர் ஒவ்வாய் –

ரஜநீ சர ராஜ தமோ மிஹிரம்
ராஷ சேஸ்வரனான ராவணன் ஆகிற இருளை அகற்றும் ஸூர்யனும்
குன்றாத வலி யரக்கர் கோனை மாளக் கொடும் சிலை வாய்ச் சரந்துறந்து குலம் களைந்து வென்றானை –

கமநீ யம் ரகுராமம் அஹம் அயே
விரும்பத் தக்க வடிவு படைத்தவனும்
ஆன ஸ்ரீ ராமபிரானை -திருவேங்கடமுடையானை
நான் அடைகிறேன்

அயே -அய பய கதௌ-என்ற தாதுவில் தேறின ரூபம் இது-

———————

ஸுமுகம் ஸுஹ்ருதம் ஸுலபம் ஸுகதம் ஸ்வநுஜஞ்ஞ ஸுகாய அமோகசரம்

அபஹாய ரகூத்வஹமன்யமஹம் ந கதஞ்சன கஞ்சன ஜாது பஜே                8

ஸூ முகம் –
தன்னளிவே வடிவு எடுத்தவனும்

ஸூஹ்ருதம் –
சர்வ பூத ஹூஹ்ருத்தானவனும்

ஸூலபம்-
நீசர்க்கும் எளியனானவனும்

ஸூகதம் –
இன்பம் அழிப்பவனும்

ஸூகுணம் –
நற் குணங்கள் அமைந்தவனும்

ச ஸூ ஜாய-
நல்ல தேவியை யுடையவனும் –

மமோக சரம் –
பழுது படாத அம்புகளை யுடையவனும்

அபஹாய ரகூத்வம் அநயம் அஹம் ந கதஞ்சன கதஞ்சன ஜாது பஜே
இராம பிரானைத் தவிர
வேறு எந்த தேவனையும்
ஒரு விதமாகவும்
ஒரு காலும்
சேவிக்க கில்லேன்

தயரதற்கு மகன் தன்னை அன்றி மற்றிலேன் தஞ்சமாகவே -என்றும்
கற்பார் இராமபிரானை யல்லால் மற்றும் கற்பரோ -என்றும்
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவனாவான் -என்றும்
உள்ள பாசுரங்களை அடி ஒற்றி அருளிச் செய்த ஸ்லோஹம்-

———————

விநா வேங்கடேச’ம் ந நாதோ ந நாத: ஸதா வேங்கடேச’ம் ஸ்மராமி ஸ்மராமி –

ஹரே வேங்கடேச’ ப்ரஸீத ப்ரஸீத ப்ரியம் வேங்கடேச’ ப்ரயச்ச ப்ரயச்ச      –9

விநா வேங்கடேசம் ந நாதோ ந நாதோ
வேங்கடேசம் விநா நாதா ந நாத ந –
திருவேங்கடமுடையானைத் தவிர்ந்து
வேறொரு நாதன் இல்லை எனபது
சத்யம்

சதா வேங்கடேசம் ஸ்மராமி ஸ்மராமி –
திருவேங்கடமுடையானை
அனவரதமும்
நினைத்தபடியே இருக்கின்றேன் –

ஹரே வேங்கடேசம் ப்ரசீத பிரசீத-
சகல தாபங்களையும் ஹரிக்க வல்ல அப்பனே
திரு உள்ளம் மிகவும் உகந்து அருள வேணும் –

ப்ரியம் வேங்கடேச ப்ரயச்ச ப்ரயச்ச
வேங்கடேச -ப்ரியம்-ப்ரயச்ச ப்ரயச்ச –
திருவேங்கடத்தானே
நன்மையைப் பயந்து அருளின படியே
இருக்க வேணும்

ஒவ் ஒரு பாதத்திலும் த்வ்ருத்திகள்
ஆதராதிசயத்தால் ஆனவை-

——————

அஹம்தூரதஸ்தே பதாம்போஜயுக்ம ப்ரணாமேச்சயா (ஆ)கத்யஸேவாம் கரோமி —

ஸக்ருத்ஸேவயா  நித்யஸேவாபலம் த்வம் ப்ரயச்ச ப்ரயச்ச ப்ரபோ வேங்கடேச’        -10

பிரபோ வேங்கடேச
வேங்கடேச பிரபோ –
திருவேங்கடத்து எம்பெருமானே

அஹம் தூரதஸ் தே பதாம் போஜ யுகம ப்ரணாம இச்சயா ஆகத்ய சேவாம் கரோமி –
அஹம் தே பதாம் போஜ யுகம ப்ரணாம இச்சயா தூறத ஆகத்ய சேவாம் கரோமி –
அடியேன் உன்னுடைய இணைத் தாமரை அடிகளை
வணங்கும் விருப்பத்தினால்
தூர தேசத்தில் இருந்து வந்து
அத் திருவடிகளில் சேவை செய்கின்றேன் –

சக்ருத் சேவயா நித்ய சேவா பலம் தவம் ப்ரயச்ச ப்ரயச்ச
ஏதோ ஒருகால் செய்யும் சேவையினால்
நித்யமும் செவிப்பதனா ஆகும்
பலனை
நீ அவசியம் கொடுக்க வேணும்

அநந்ய பிரயோஜனமாக சேவிக்கும் அதிகாரிகள்
நித்ய சேவா பலம் ப்ரயச்ச -என்று
பலனை விரும்பக் கூடுமோ என்னில்
அத்தலையில் திரு உள்ள வுகப்பே யாயிற்று இங்கு பலனாக கருதப்படுவது

கதாஹ மைகாந்திக நித்ய கிங்கர ப்ரஹர்ஷயிஷ்யாமி சனாத ஜீவித -ஆளவந்தார்
ப்ரஹர்ஷயிஷ்யாமி -உயிரான ஸ்ரீ ஸூக்தியாகுமே-

—————————

அஜ்ஞாநினா மயா தோஷான் அசேஷான் விஹிதான் ஹரே–11

க்ஷமஸ்வ த்வம் க்ஷமஸ்வ த்வம் சே’ஷசை’ல சி’காமணே

சேஷசைலம் ஆகிற
திருவேங்கட மலை யுச்சியிலே
நீல மணி போல் விளங்கும்
எம்பெருமானே
அவிவேகியான அடியேன் செய்த குற்றங்களை எல்லாம்
நிர்ஹேதுக கிருபையினால்
ஷமித்து அருள வேண்டும் என்று
பிரார்த்திக்கிறார் ஆயிற்று-

***

ஶ்ரீ வேங்கடேஶ்வர ப்ரபத்தி

ஈஶாநாம் ஜக³தோ(அ)ஸ்ய வேங்கடபதேர்விஷ்ணோ꞉ பராம் ப்ரேயஸீம்
தத்³வக்ஷ꞉ஸ்த²லநித்யவாஸரஸிகாம் தத்க்ஷாந்திஸம்வர்தி⁴நீம் ।
பத்³மாலங்க்ருதபாணிபல்லவயுகா³ம் பத்³மாஸநஸ்தா²ம் ஶ்ரியம்
வாத்ஸல்யாதி³கு³ணோஜ்ஜ்வலாம் ப⁴க³வதீம் வந்தே³ ஜக³ந்மாதரம் ॥ 1 ॥

ஈசாநாம் ஜகதோச்ய வேங்கட பதேர்விஷ்ணோ பராம் ப்ரேயசீம்-

இவ் வுலகுக்கு எல்லாம் ஈஸ்வரியாகவும்
திருமலை யப்பானுக்கு பிராண வல்லபை யாயும் –
அஸ்யேசா நா ஜகதோ விஷ்ணு பத்நீ -ஸ்ருதி சாயையில் பணித்தது

தத் வஷஸ் ஸ்தல நித்ய வாச ரசிகாம் தத் ஷாந்தி சம்வர்த்திநீம் –
அவனது திரு மார்பிலேயே நித்ய வாசம் செய்வதில்
விருப்பம் யுடையவளாயும்
அவன் மார்பை விட்டுப் பரியில் இவ் வஷரம் விட்டுப் பிரிவது -ஸ்ரீ ஸூக்திக்கு சேர பணித்தது
அப்பெருமானுடைய ஷமா குணத்தை வளரச் செய்பவளாயும் –
புருஷகார பலத்தாலே ஸ்வா தந்த்ர்யம் தலை சாய்ந்தால்
தலை எடுக்கும் குணங்களை சொல்லுகிறது நாராயண பதம் -முமுஷூப்படி
அஸ்தி கர்மார்ஹா பலதே பத்யௌ க்ருத்யத்வயம் சரிய
நிக்ரகுஅத்வ வாரணம் காலே சத்துஷணம் அனுக்ரஹே -ஸ்ரீ தேசிகன் ஸ்ரீ ஸூ க்தி

பத்ம அலங்க்ருத பாணி பல்லவ யுகாம் பத்மாஸ நஸ்தாம் ஸ்ரியம்
தாமரை மலரால் அலங்கரிக்கப் பட்டு
பல்லவம் போன்ற இரண்டு திருக் கைகளை யுடையவளாயும்
தாமரைத் தவிசில் வீற்று இருப்பவளாயும்
பத்ம பரியே பத்மிநி பத்மஹஸ்தே -இத்யாதிகளும் அனுசந்தேயம்

வாத்சல்யாதி குண உஜ்ஜ்வலாம் பகவதீம் வந்தே ஜகன் மாதரம்
வாத்சல்யம் முதலிய குணங்களால் திகழா நின்றவளாயும்
பரம பூஜ்யையாயும்
உலகுக்கு எல்லாம் தாயாயும்
இருக்கின்ற
அலர்மேல் மங்கைப் பிராட்டியை
அடியேன் வணங்குகின்றேன் –

சஹதர்ம சரிம் சௌ ரேஸ் சம்மந்த்ரித்த ஜகத்திதாம்
அனுக்ரஹ மயீம் வந்தே நித்யம் அஜ்ஞ்ஞாத நிக்ரஹாம் -ஸ்ரீ தேசிகன் ஸ்ரீ ஸூக்தி

ஆக
இப்படிப் பட்ட பெருமை வாய்ந்த பிராட்டியைத்
தொழுகின்றமை கூறி
ஸ்தோத்ரத்தை
தலைக் கட்டினார் ஆயிற்று –

அலர்மேல் மங்கை உறை மார்பன் அடி இணைகள் வாழியே

——–

ஶ்ரீமந் க்ருபாஜலநிதே⁴ க்ருதஸர்வலோக
ஸர்வஜ்ஞ ஶக்த நதவத்ஸல ஸர்வஶேஷிந் ।
ஸ்வாமிந் ஸுஶீல ஸுலபா⁴ஶ்ரிதபாரிஜாத
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 2 ॥

நாராயணனின் கல்யாண குணங்களை அடுக்கி அருளுகிறார் நேராக இதில்
சரண் அடைந்தவர் இடம் வாத்சல்ல்யம் வினத -நத வத்சல -தலை வணங்கியவர் அனைவருக்கும் ஸ்வாமித்வம் படைத்தவன்

சுலபன் திருவேம்கடத்தான்-பாரி ஜாதம் போல் கேட்பது அனைத்தையும் கொடுக்கும் –
எட்டு குணங்கள் -அடுக்குகிறார்-
ஆஸ்ரித சௌகர்யமான குணம் நான்கு -வாத்சல்யம் ஸ்வாமித்வம் சௌசீல்யம் சௌலப்யம் —
ஞான சக்தி பிராப்தி பூர்த்தி கார்யம் பண்ண -ஆக எட்டும்-
பயம் நீங்க -ஐயம் நீங்க -உயர்ந்தவன் அவன் தாழ்ந்தவன் நாம் –
குற்றமே குணமாக கொள்பவன்-வாத்சல்யன்-எதிர் குணம் பொறாமை-குணம் குற்றமாக கொள்வது அசூயை-அனசூயை-
அவளை பார்த்து பொறாமை பட முடியாத குணம் கொண்டவள் –வசிஷ்டர் நம்மை விட ஞானி சொல்லுவாமோ
செய்த குற்றம் நாற்றமாக கொள்ளும் -அச்சம் தவிர்க்க வாத்சல்யம் -அச்சம் போன பின்பு ஐயம் வர
சம்பந்தம் உணர்த்த -ஸவாமி–

ஸவாபம் ரசிக்க -நெருப்பு சுடுவது போல தண்ணீர் குளிர்வது போல் குற்றம் பொறுத்து ரஷிகிறான் கண்ணன் பதில் அர்ஜுனனுக்கு

ஸ்வாமி-சொத்து பாவம் – சொத்தை இழக்க மாட்டான் ஸ்வாமி –நாம் சொத்து ஆக இருக்க வேண்டும் -இதற்க்கு சம்மதித்தால் போதும்

ஸ்வாமி தன ஆச்சார்யர் பிள்ளைகளை திருத்திய ஐதீகம் போல்–இவரே தூர்த்த கோஷ்ட்டி நோக்கி காஷாய வேஷத்துடன் போக –
நீர் நம்மை விட்டாலும் நாம் விடேன் -காரேய் கருணை -அனைத்து உலகும் உய்ய வந்த எதிராஜர் –ஐயம் தவிர்த்து
அதிருப்தி பட -தேவ தேவனுக்கு பண்ணுவார்-
யானை மேல் சவாரி செய்பவர் யானைமேல் இருப்பவரை தான் ரஷிப்பார்-
தாழ்ந்தவர் இடம் கலக்க தேடி வருகிறான் சௌசீல்யம் –
ஏழை எதலன் கீழ் மகன் என்னாது –திருப்தியாக –
ஈசன் வானவர்க்கு என்றால் அது தேசமோ திரு வேம்கடத்தானுக்கு நீசனேன் நிறை ஒன்றும் இலேன்
என் கண் பாசம் வைத்த பரம் சுடர் –அவர்களுக்கு தலைவன் –
ஆழ்வார் இடம் பாசம் -கிடைக்க அரியவன் அருமை-இழந்தவர்க்கு இன்று கண்கள் காண்பதற்கு அரியனாய் –
இன்று அர்ச்சையாக -ஆட்சியில் தொடர்ச்சி நன்று -அறிக்கை விட்டு-அவதரித்து நாம் சொத்து –
சொல்லி கொண்டு-சரம ஸ்லோகம் சொல்லி -சௌலப்யம் காட்டி சேர்த்து கொள்கிறான்

ஆஸ்ரித சொவ்கர்யமான குணம் இவை நான்கும்
கார்யம் பண்ண ஞானம் -ஸ்ரீ வைகுந்தம் கொடுக்க சர்வக்ஜன் பாபம் தொலைத்து –
சக்தியும் வேண்டுமே சர்வ சக்தன்-அதீத ஞானமும் சக்தியும்
தொடர்பு -பிராப்தி -நமக்கு என்று -தாய் முலை பால் கொடுக்கும் -கன்று குட்டி தன பசுமாடு நோக்கி போகுமே அது போல்
பூர்த்தி இருக்கிறது -அடைய வேண்டியது ஒன்றும் இல்லாத பூரணன் -எதையும் எதிர் பார்க்காதவன்
ஐயோ ஏங்கும் கருணையும் உண்டே –க்ருபா சமுத்ரம்
ஆக ஒன்பது குணங்கள்
கிருபா ஜலநிதே /வாத்சல்யம்/ஸ்வாமின் /சுசீலா/சுலப /நான்கும் சொல்லி சரண் அடைந்து

ஸர்வஞ்ஞன்  சக்தி ஆஸ்ரித பாரிஜாத -வாரி வழங்குபவன்-பூர்த்தி சர்வ சேஷி-பிராப்தி உண்டு

அஞ்சேல் என்று தாங்கும் தாமரை அன்ன பொன்னார் அடிகள்- ஆங்கு வென் நகரத்து அழுந்தும் பொழுது —
சரித சர்வ லோக -அனைத்தையும் படைத்தவன்
ஸ்ரீமன் -பிராட்டி ஆனந்தத்துக்கு படைத்தவன்– மயில் தோகை –திரு முகம் தலை அசைத்து அங்கீகாரம்
அவள் தூண்டுதலின் பேரில் அவள் ஆனந்தத்துக்கு
ஜகம் சிருஷ்டிக்க சரணா கதியே பயன் -அதனால் இதை சொல்கிறார் இங்கு
சர்வ சேஷின்-கைங்கர்யம் கொள்
முகப்பே கூவி பணி கொள் –தாவி அளந்தான்-அவன் ஆனததுக்கு –
அவரே தீண்டி கேட்காமாலே -நன்றி அறிவிக்காமல் காலை தட்டி விட்டாலும் –
குழந்தை தாய் போல் –உறங்கும் பிரஜை முதுகில் கட்டி கொண்டு ஆனந்த படும் தாய் போல்
மோட்ஷம் கொடுப்பதும் அவனே -அதுவும் அவனது இன் அருளே –
சரண் சொல்ல வைப்பதுமட்டுமே நாம் செய்வதும் -அவன் அனுக்ரகத்தாலே
உன் ஆனந்ததுக்காகா  உன்னால் படைக்க பட்ட -உன் சொத்தை –
உன்னால் கொடுக்க பட்ட ஞானத்தால் உன்னால் கொடுக்க பட்ட நாவால் சரண் சொல்ல வைத்து —
உன் ஆனந்தத்துக்கு நீயே மோஷம் கொடுத்து உன் திரு அடிகளில் சேர்த்து கொண்டு-உலகம் சிருஷ்டிக்க இதுவே பலன்

படைப்புக்கும் பிராட்டி-சரணாகதி -கைங்கர்யம் மூன்றுக்கும் சம்பந்தம்
சரண் சகல பலனுக்கும் -கைங்கர்யம் தான் கேட்க வேண்டும்-ஏற்று கொள்ள வேண்டுமே
சர்வ சேஷி-அனைவரும் காத்து இருக்க –கொள்ளுகிற பாக்கியம் கிட்ட வேண்டும்
கிருபை கொண்டே படைக்கிறான் -ஈடு பிரவேசமும்
ஸ்ரீ ய பதியாய் –அவாப்த சமஸ்த காமனாய் -பூரணன்-எதையும் எதிர் பார்க்காமல்-
சமஸ்த கல்யாண குண பூரணன்/சர்வேஸ்வரன்-சம்பந்தம் நான்கும் சொல்லி –அது போல் இங்கும் —
கண்ணாய் ஏழு உலகுக்கு உயிராய எம் கார் வண்ணனை
விண்ணோர் தாம் பரவும் பொழில் வேம்கட வேதியனை
திண்ணார் மாடங்கள் சூழ் திரு மங்கையர் கோன் கலியன்

பண்ணார் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே

அடிக் கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்று என்று அருள் கொடுக்கும்
படிக் கேழ் இல்லா பெருமானை பழனக் குருகூர் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்து திரு வேம்கடத்துக்கு இவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்று இருந்து பெரிய வானுள் நிலாவுவரே
அடியீர் வாழ்மின் கைங்கர்யம் ஏற்று கொள்கிறான்
——-

ஆநூபுரார்பிதஸுஜாதஸுக³ந்தி⁴புஷ்ப-
ஸௌரப்⁴யஸௌரப⁴கரௌ ஸமஸந்நிவேஶௌ ।
ஸௌம்யௌ ஸதா³நுப⁴வநே(அ)பி நவாநுபா⁴வ்யௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 3 ॥

திரு அடி பெருமை அடுத்து சொல்கிறார் இதில்
தோள்கள் இருந்து தொங்கும் திரு மாலை திரு முடி திரு தோள்கள் திரு அடி வரை உறவாடும் புஷ்ப மாலை
என்றும் என்றும் புதிதாக -சதா அனுபவத்துக்கு —
நூபுர கங்கை போல்-ஆ சேது ஹிமாசலம் வரை போல் ஆ நூபுர -ஜாதி மணம் கொண்ட புஷ்பம்

தோமாலை சேவை முக்கியம் திரு மலையில் —

குளிக்கிற ஆசார்யம் -பூப்புனை கன்னி புனிதன்-காப்பு நான் கட்ட -தீர்த்தம் ஆடி வந்தான்

தோள்களில் இருந்து தொங்கும் மாலை –மணம் ஆக இருக்க ஆசை கொண்டு தொங்குகிரதாம்–
சர்வ கந்தன் -அவன்-பரிமளம் கொடுக்கவும்–இரவல் வாங்கி கொள்கிறதாம் மணத்தை திரு அடிகளில் இருந்து -இணை தாமரை அடிகள்-சம சந்நிவேசம் -ஒன்றுக்கு ஓன்று இணை –திரு அடி சேவை கிடைப்பதே துர்லபம் –
நிஜ பாத சேவை-தன் உடைய பாத சேவை-மென்மை பரிமளம் உசத்தி போட்டி ஆசன பத்மதுக்கும் திரு அடி தாமரைக்கும் போட்டி
ஆள் கண்ட சமுத்ரம் -திரு அடி மலர்ந்து -தோத்தவர் ஜெயதிதவர் தாங்கி இருக்கும் –
மங்கள கரமான எப் பொழுதும் அனுபவிக்க -அப் பொழுதைக்கு அப் பொழுது ஆரா அமுதன் –சதா அனுபவம்-நவ அனுபவம் –
புஷ்ப கைங்கர்யம் சிந்து பூ மகிழும் திரு வேம்கடம் –ஸூத்ரவதி உடன் வானவர் கோன் வந்து சேவை–
சிந்திக் கொண்டே இருக்கும் பூ-தானே விழுமாம் கூடையில்-சுமந்து மா மலர் நீர் சுமந்து —
வேம்கட வானர்க்கு  என்னை உய்த்திடுமின் -மத்தறு மலர் குறுக்க மலர்
செண்பக மல்லிகை உடன் என்பகர் பூ -செண்பகமாய் இருக்கும் நிலை ஆசை கொண்டார்
————-

ஸத்³யோவிகாஸிஸமுதி³த்வரஸாந்த்³ரராக³-
-ஸௌரப்⁴யநிர்ப⁴ரஸரோருஹஸாம்யவார்தாம் ।
ஸம்யக்ஷு ஸாஹஸபதே³ஷு விளேக²யந்தௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 4 ॥

சாகச செயல்-சத்யா விகாசம்-அப் பொழுதே மலர்ந்த சமு தித்வர -மேலும் மேலும் மலரும்
சிவந்த -மணம் நிறைந்த மலரோடு-அடை மொழி இவை எல்லாம் –மென்மை யான /நறு மணம் உடைய -அப் பொழுதே அலர்ந்த –
ஒப்புமை இட ஆசை கொண்டு–அடை மொழி சேர்த்து பிரயத்தனம்-அடாத செயல்-
சாகாச செயல்-சாம்ய வார்த்தை-பேச ஆரம்பித்ததும்
மிக உயர்ந்த சாகச பதேஷு-எழுதி வைத்து விலேகயந்தவ் -முரட்டு தனமான எழுத்து எழுத போனது
கட்டுரைக்கில் தாமரை-நன் பொன் உன் திரு மேனி ஒளி ஒவ்வாது

பொன்–நன் பொன் -சுட்டு உரைத்த -அடை மொழி ஏற்றி -சொல்லி ஒவ்வாது —
அது போல் தாமரைக்கு -இல்லாத உவமை உவமையாக சொல்வது
திரு அடி மோஷம் கொடுக்கும் -தாமரை கொடுக்காதே –
கைங்கர்யம் கொள்ளாது தாவி உலகம் அளக்காதே –முரட்டு உபமானம்
திரு கமல பாதம் பாவனம் போக்கியம் இரண்டும் –தாமரைக்கு இல்லை-
கண்டேன் கமல மலர் பாதம் கண்டேன் விண்டே ஒழிந்தன வினை –
காலை மாலை கமல மலர் இட்டு -திருஅடி சிவந்து போனதாம் மலர் இட்டதும்-மென்மை–
ஆயிரம் நாக்கு வாங்கி கொண்டு உன் பெருமை பாட முடியாது சொல்ல -பட்டர் —

———–

ரேகா²மயத்⁴வஜஸுதா⁴கலஶாதபத்ர-
-வஜ்ராங்குஶாம்பு³ருஹகல்பகஶங்க²சக்ரை꞉ ।
ப⁴வ்யைரளங்க்ருததலௌ பரதத்த்வசிஹ்நை꞉
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 5 ॥

இலச்சினை -லஷணம் சொல்கிறார்-
ஆள வந்தார் கதா புன  வஜ்ரா லாஞ்சனம் -ஸ்லோஹம் போல்
படிக்கு அளவாக நிமிர்ந்த பாத பங்கயமே தலைக்கு அணியாய்-
ரேகை வடிவான–ஒன்பது சொல்கிறார்-
கொடி-அமிர்த கலசம்-குடை-வஜ்ரம்-அம்குசம் -சங்கு -சக்கரம் -கல்பக
ஒரு காலில் சங்கு  ஒரு காலில் சக்கரம் -இலச்சினை பட நடந்து –
பரம புருஷன் அடையாளம் பரதத்வ சிஹ்நை-அலங்க்ருதம்-பவை-பவித்ரம்
கையினார் சுரி சங்கு அனல் ஆழியார்-பெரிய பெருமாளுக்கு இரண்டு திரு கைகள்-
காட்டவே கண்டார் -ரேகை சொல்கிறார் தேசிகன்
அதிதி தேவி-போல் கௌசல்யை சந்தோஷித்தாள்-வாமனனை பெற்றது போல் ராமனை பெற்று-
வஜ்ர பாணி-இந்த்ரனை சொல்லாமல் ரேகை பொருந்திய திரு கைகள்
————–

தாம்ரோத³ரத்³யுதிபராஜிதபத்³மராகௌ³
பா³ஹ்யைர்மஹோபி⁴ரபி⁴பூ⁴தமஹேந்த்³ரநீலௌ ।
உத்³யந்நகா²ம்ஶுபி⁴ருத³ஸ்தஶஶாங்கபா⁴ஸௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 6 ॥

சத்வம் ரஜஸ் தமஸ் தாண்டி வெளி திரு அடி நீல கல்லை வெல்லும் உள் திரு அடி தாமரையை வெல்லும்
நகம் -வரிசை-சந்த்ரனை வெல்லும் மூன்றையும் வெல்லும் திரு அடிகள் -தாம்ரம்-சிவந்த உதர -உள்
பாஹ்யர் -வெளி- இந்திர நீல ரத்னம் வென்றது
அகம் அம்சுபி -ஒளி சசாங்கம் சந்தரன் ஒளி தோற்றது —
சத்வம் வெள்ளை   வென்றது
கரு நீலம்
சிகப்பு
பிராக்ருத ரஜஸ் தமோ சத்வம் வென்றது –பூர்ண சந்தரன் -கருப்பு -இருக்கும் -களங்கம் இன்றி நகம்
சுத்த சத்வ மாயம் அப்ராக்ருத
கருப்பு கடல் நுரை போல் நக கணுக்கள்
பார் கடல் வெளுப்பு நீல கடல் போல் -திரு மேனி-

——————

ஸப்ரேமபீ⁴தி கமலாகரபல்லவாப்⁴யாம்
ஸம்வாஹநே(அ)பி ஸபதி³ க்லமமாத³தா⁴நௌ ।
காந்தாவவாங்மநஸகோ³சரஸௌகுமார்யௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 7 ॥

சாஸ்திரம்–சிஷ்டாசாரம் -பிரபத்யே -மனசில் உறுதி பாடு
உப அயதே சமீபத்தில் அழைத்து செல்லுவது-பலத்துக்கு அருகில் -உபாயம்
பல பிரத்வம் வேறு-பலம் கொடுப்பவன் பகவான் ஒருவனே
சித்த உபாயம் –நம் முயற்சி இன்றி -சித்தமாக இருக்கிறான் -உபாயமும் பிராப்யமும் அவன் திரு அடிகள்
மாம் ஏகம்-என் ஒருவனையே பற்ற அவன் சொல்ல திரு அடிகளை பற்றுகிறோம்  -இதுவே அனுஷ்டானம்
ஈஸ்வரேனே கை விட்டாலும் திண் கழலாக இவை கொடுக்கும் –
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் ஏக சிந்தனையாய்
வந்து உன் அடி இணை அடைந்தேன் –
துத் சரனாரவிந்தே -துத் பாதாரவிந்த -அடி இணை வந்து அடைந்தேன் -அடிக் கீழ் அமர்ந்து
உலகம் அளந்த பொன் அடியே அடைந்து உய்ந்தேன்

லோக விக்ராந்தவ் சரணவ் சரணம்

அவன் திரு உள்ளம் படி அனுஷ்டானம்
காலில் விழ சொல்ல மாட்டான்
மித்திரன் போல் கை பிடி -நண்பன் என்று பிராட்டி அருளியது போல்
பிரிந்த தசையிலும் உபதேசிகிறாள் -அரச மரியாதை -பெருமாள் திரு உள்ளம் அறிந்து உபதேசம்
அழைக்கின்ற அடி நாயேன் -உள்ளம் குழையும்-ஆழ்வார்
கோவில் மகா ஜனம் பட்டரை-லகு சம்ப்ரோஷனம் ஐதீகம்   திரு அடி பிடிக்க கூட யோக்யதை இல்லை
மாம் ஏகம்-திரு மார்பை காட்டி கண்ணன் சொல்கிறான்
பிரார்த்தனா மதி சரணாகதி —

குழந்தை தாய் முலையில் வாய் வைப்பது போல் திரு அடி பற்றி சரண்

சந்தரன் -சசாங்கம்-கருப்பு திட்டு முயல் வடிவில்-சச =முயல்-இதனால் அடையாளம்
களங்கம் தீர பத்து விரல்களில் கைங்கர்யம் -நிஷ் களங்கமாக –
திரு வேம்கடம்-மதி தவழ குடுமி மால் இரும் சோலை –
வைப்பன் மணி விளக்காம் மா மதியை-பூர்ண சந்த்ரனை-ஆகாசத்தில் மதி –
இங்கு மா மதி -மாலுக்கு என்று எப் பொழுதும் கை நீட்டும் யானை
வேடர்கள் இவற்றை பார்த்து -வில் எடுக்கும் மலை வேம்கடம்
பகர் அல்லை பகல் செய்-இரவை பகல் ஆக்கும் –
திருஅடி  நிச்சலும் பிடித்து விட பிராட்டி ஆசை –
சொரூபம் பார்த்து ஆசை –
குணம் பார்த்து அச்சம் -இரண்டும்
சேஷத்வம் பார்த்து -அவனுக்கு பெருமை சேர்க்க – பரகத அதிசய ஆதன –சு பிரயோஜன நிவ்ருத்தி சேஷத்வ பலன் –
அவன் ஆனந்தத்துக்கு மட்டுமே பேசி செய்து நினைத்து –பயம் நீங்கும் –
இதனால் -நடந்த கால்கள் நொந்தவோ-பேசி வாழி கேசனே –கூசி பிடிக்கும் மெல் அடிகள் –
பாரதந்த்ர்யம்
திரு கைகளால் பிடித்தால் கன்னி சிவக்குமே அச்சம்-ஆசை வென்று-பிடிக்க –
சிகப்பே நம் சம்சாரம் கழித்து கொடுக்கும்
ச பிரேம பீதி-கமலா கர பல்லவம்-முகிழ் கொழுந்து போன்ற திரு கைகள் –காந்தி-ஈர்க்கும்

வாக்குக்கும் மனசுக்கும் எட்டாமல் இருக்கும் சொவ்குமார்யம் –

ரஷகன்-பார்த்து எழுப்ப -சொவ்குமார்யம் பார்த்து – அம கண் மா ஞாலம் கடாஷம் கேட்ட பின்பு ஆண்டாள்
மாரி மலை –இங்கனே போந்து அருளி–போற்றி அருளுகிறாள் அடுத்து —
வந்த திருஅடிகள் நொந்தனவோ அது போல்
அங்கும் இங்கும் வானவர் -உன்னை வேலை வாங்க -வருவார் செல்வார் –
சங்கு சுமந்து -மற்று அடியேன் உளன் ஆழ்வார்
சொரூப ரூபகுணம் வகை –மார்த்வம் சொவ்குமார்யம் இரண்டிலும் –
உள்ளத்திலும் உடம்பிலும் –விட்டு கொடுக்க மாட்டான்
சரண் அடைந்த நீசனான என்னையும் கொள்வான் -மறை முக அர்த்தம் –
பிரிந்து பல ஜன்மம் இருக்கிறோமே -கோடி காட்டினால் புரிந்து கொள்வான்
பிரிந்து கடினமாக ஆகுமே திரு அடியும் திரு உள்ளமும்
திரு ஆபரணம் பிராட்டிக்கு எங்கு சாத்தலாம் என்று தோழிமார் பார்த்தாலே கன்னி போகும் திரு மேனி சீதை பிராட்டிக்கு
நடந்து போனாலே பொன் துகள்கள் சிந்தி கொண்டே போகுமாம்
அவள் பெருமாளை தொட்டால் சிவக்கும் படியான மெல் அடிகள்
திரு காட்கரை -மருவிய மாயன்-ஆள் கொள்வான் ஒத்து என் உயிர்–ஆர் உயிர் பட்டது என் ஆர் உயிர் பட்டது –
ஆள் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயன்
தெளிந்த என் சிந்தை -காய்சின வேந்தே -கூப்பிடு தூரம் –
ராமானுஜர் கேட்டு வியந்த ஐதீகம் –கூவுதல் வருவுதல் செய்யாயே அடியேன் பிடிக்க
பூமி பாலன் திரு அடிகளை தாயார் பிடித்து விட –
கொடு வினையேனும் மெல் அடியை பிடிக்க கூப்பாடு போடா கூடாதா -ஆழ்வார் கேட்கிறார்

திரு காட்கரையில் கொடுக்கிறேன் என்றான்-
வந்தான்-ஆழ்வாரை அமர சொன்னான்
நம் ஆசை ஆணை
முகம் கன்னி போக கூடாது என்று அமர
திருஅடி பற்றி விட
பாரதந்த்ர்யம் நினைவு வர -அவனுக்கு பிடித்த படி இருக்க வேண்டுமே
அடிமை  தனம் விட அவன் திருஉள்ளம் படி நடப்பதே முக்கியம்
அடுத்த காலை நீட்ட -மலர்ந்த திரு கண்கள்-கப்யாசம் புண்டரீக அஷணீ–
தேவரீர் சொத்து -அடியேனால் அடியேன் ஆத்மா சமர்பிக்க -அதுவும் உன் சொத்தே
பதக்கம் எடுத்து நாமே சமர்ப்பித்தது போல் –
இப்படி என்ன பண்ணுவது என்ற படி-தோள் களை ஆர தழுவி -அகவிலை செய்தனை —
சம்சாரம் கண்டு பயந்து பரந்யாசம் அதுவும் அவனது செய்ய வேண்டாம் எத்தை கொண்டு சமர்பித்து –
உணர்வினுள்ளே இருதினினே அதுவும் அவனது இன் அருளே –அதுபோல் பிராட்டியும் பிரீதி பீதி இரண்டும் கொண்டு –தயிர் கடையோசை நட்டுவாங்கம் கொண்டு கண்ணன் தாண்டவம் ஆட –
கீசு கீசு என்று -மத்தினால் ஓசை -கேட்டே -ஆடி ஆடி-சிவந்த திரு அடிகள் பிராட்டி திரு கைகளால் ஆசுவாச படத்த –
பட்டர்–பெருமாள் பிராட்டி  பெருமை மாறி மாறி  பேசுவது போல்–

தளிர் புரையும் திரு அடி என் தலை மேல் –
மின் உரு பொன் உரு பின் உரு -மூன்று தத்வமும் அவன் தானே ஆழ்வாரை கொண்டதும்
சருகாக இருந்த திரு அடி தளிர் விட -பக்த ஸ்பர்சத்தால் -புஷ்ப ஹாச மலர்ந்த திருஅடிகள்–
அபிலோசன உற்று நோக்கினாலே முத்தரை குத்தினால் போல் -சந்தனம் பூசி கொண்ட கண்ணனை பார்த்த
மதுரை பெண்களின் வேல் விழி கயல் விழி  மான் விழி திரு மார்பில் பதிந்தது போல்  —
கோபால  சூடா மணி –அழியாமல் சாந்தணி தோள் சதுரன் மலை– மல்லரை மாட்டிய தேவாதி தேவன் –
கொடுத்த பரிசு மாறாமல் இருந்தான் –

———-

லக்ஷ்மீமஹீதத³நுரூபநிஜாநுபா⁴வ-
நீலாதி³தி³வ்யமஹிஷீகரபல்லவாநாம் ।
ஆருண்யஸங்க்ரமணத꞉ கில ஸாந்த்³ரராகௌ³
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 8 ॥

மூன்று தேவிமாரை பற்றி இதில் அருளுகிறார்

மகா லஷ்மி மஹீ பூமி தேவி- நீளா தேவி -திரு மகள் மண் மகள் ஆய மகள்-சிகப்பு பச்சை ஊதா நிறம்
மூவரிந்தளிர் போன்ற திரு கைகள் -ஆருன்ய சிகப்பு -அருணோதயம் –
மகர சங்கராந்தி-சங்கரமணம் -ஒன்றுடன் ஓன்று சேர்ந்து –
இதன் சிகப்பு வீசி-கரு நீல திரு அடிகள் -சிகப்பு தொற்றி கொண்டு மாற சாந்த்ர ராகவ்-சிகப்பு ஏறி-
மையார் கரும் கண்ணி கமல மலர் மேல் செய்யாள் —
மதம் கொண்டு சிகப்ப-ஐஸ்வர்யா செருக்கால் குதறி சிவக்க -ராகம்-அடியார் பற்றுவார் என்ற ஆசை உடன் -கரிய வாகி புடை பெயர்ந்து  மிளிர்ந்து –நேர் எதிர் -கருப்பு திரு மேனி கண் சிவந்து இவருக்கு
அவளுக்கு சிவந்த திரு மேனி கரிய திரு கண்கள் –எதனால்-நடந்தது –
அது போல்–கண்களால்பார்க்க இவன் திரு மேனியில் ஏற இவன் சிவந்த கண்களால் பார்க்க அவள் திரு மேனி சிவப்பு –
அதற்க்கு இது இதற்க்கு அது –மாறுதலும் நித்யம்-அபிமத அநுரூப தாம்பத்யம் -திரு மகள் மண் மகள் ஆயர்மதா மகள் என்று இவர் மூவர் —
கூந்தல் மலர் மங்கைக்கும்  மண் மடந்தைக்கும் குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் —
வார்த்தை பார்த்து -மங்கை மடந்தை கொழுந்து -பெதும்பை பேர் இளம் பெண் மங்கை-பருவ நிலைகள்-

பின்னை கொல் நில மா  மகள் கொல் திரு மகள் கொல் பிறந்திட்டாள் —
ஆழ்வாருக்கு ஒப்பு சொல்லு -கடி மா மலர் உடன் உள்ள சாம்யம்
அவளும் நின் ஆகத்து –இவளை சொல்லு-சாம்யம்-சொல்ல இவளுக்கு ஏற்றம்-
பூ மேல் இருக்கும் திரு -அத் திரு அவனை பற்றும் இத் திரு இருவரை பற்றும் –நடுவாக வீற்று இருக்கும் நாரணன் -ஸ்ரீ ரெங்க நேதா-தலைவன்-திரு அடி சிவக்க –
மௌலி சக்கரவர்த்தி கிரீட ரத்ன ஒளியாலா –அடியார் திரு உள்ளம் ஆசனமாக அமர்ந்ததாலா
ஆசையால் சிவந்த திரு உள்ளம்–கமலா கரேப்யே -மூன்றும் பட்டர் அருளியது போல் —

————

நித்யாந்நமத்³விதி⁴ஶிவாதி³கிரீடகோடி-
-ப்ரத்யுப்ததீ³ப்தநவரத்நமஹ꞉ப்ரரோஹை꞉ ।
நீராஜநாவிதி⁴முதா³ரமுபாத³தா⁴நௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 9 ॥

நித்யானவதி விதி பிரம்மா சிவன் இந்த்ரன் -போல்வார் கிரீடம் பட -ரத்னம் -தனுஷ்கோடி-ஒளி- கிரீட நுனி-ரத்ன கல்

கிரீடம் -மகுட -ஸூடவதம்சே மும் முடிக்கு பேர் அரசு–ஆதி ராஜ்ய ஜல்பிதா -பிதற்றுகிறதாம்-
யார் தலையில் உட்கார்ந்து இருக்கிறேனோ அவன் தான் ஜகத்துக்கு அதிபதி என்று சொல்லி கொண்டு—நீல கரு மேக சியாமளன் போல் உதய கிரிக்கு மேல் ஸூர்யன் போல் கிரீடம் -கோள் சொல்லி கொடுக்கும் அவனை —
எளியவன் வேஷம் போட்டு தேவாதி ராஜன் ஹஸ்த கிரிக்கு வர -கிரீடம் பராத் பரன் காட்டி கொடுக்கும் —
முத்து குடை தங்க குடை ரத்ன மேல் மூடி இருக்கும் -அபிமான பங்கமாய் சங்கம் இருப்பார் போல்-ஒளி மலர-திரு அடியில் பட்டு வளருமாம்-திரு அடிக்கு ஹாரத்தி காட்டுமாம் இந்த ஒளியால்-நீராஞ்சனம்-ஹாரத்தி-
வைகாசி விசாகம் தீர்த்தவாரி-ஆழ்வாரே இறங்கி-
மனோ ரதம் நிறைவேற்றுவார் நீராஞ்சனம் சேவித்து பெறலாம் -200  தேங்காய் மூடி விளக்காக இருக்கும் —
ஆழ்வார் மட்டும் குளிர்ந்து-பைம் கமலா தன் தெரியல்-ஆழ்வார் மாலை குளிர்ந்து இருக்கும்-அகிலாண்ட கோடி பிரம்மாண்ட கண் எச்சில் படாமல் ஹாரத்தி-திரு அந்தி காப்பு-திரு வெள்ளறை காப்பு இட்டார் பெரியாழ்வார்-
உபாதா தானவ்-ஏற்று கொள்ளும் திரு அடிகள் -மனு குல அரசர் -இஷ்வாகு திலீபன் தசரதன் பெருமாள்-பரம்பரை திரு ஆராதனம்
கிரீடம் -ராமனுக்கு சூட்டி பட்டாபிஷேகம்–நவ ரத்ன ஒளி பெரிய பெருமாள் திரு அடியில் காணலாம் இன்றும்-
அது போல் இவன் நின்று பெற்றார் அடியரோர்க்கு அகலாமோ –கிடந்ததோர் கிடந்த அழகுக்கு ஹாரத்தி

பெண் மீன் உருவம் பதிந்து இருக்குமாம்-கண் கிரீடத்தில் இருப்பது
அடுத்து அருளுகிறார்
உள் திருஅடி சேவை கிடைப்பது துர் லபம்
திரு கோளூரில் ஜன்னல் வழியாக சேவிக்கலாம்

————–

விஷ்ணோ꞉ பதே³ பரம இத்யுதி³த ப்ரஶம்ஸௌ
யௌ மத்⁴வ உத்ஸ இதி போ⁴க்³யதயா(அ)ப்யுபாத்தௌ ।
பூ⁴யஸ்ததே²தி தவ பாணிதலப்ரதி³ஷ்டௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 10 ॥

யாரும் பார்க்க முடியாத பரம பதம்-மாக வைகுந்தம் தெளி விசும்பு திரு நாடு-காண்பதற்கு
என் மகம் ஏக எண்ணும் ஆகம் சேர் நரசிங்கம் அதாகி ஓர் ஆகம் வள உகிரால் பிளந்தான் உறை
மா வைகுந்தம் காண மனம் ஏக எண்ணும் –

கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்-

புண்ணில் புலி பெய்தால் போல் திரு அடியில் மது தாரை பொழியும் என்பர்–
அதை எங்கும் தேடி போக வேண்டாம் -இங்கே அழுந்த இருக்க திரு கை காட்டி காட்டுகிறான்

எந்த திரு அடிகளில் உயர்ந்த வேதாந்த புகழும் -மது பெருகும்-போக்யதை உள்ள திரு அடி-அனுபவ தக்க –
பெருமை இனிமை இரண்டும் உண்டு–பரம போக்கியம் –ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவதே
இங்கேயே இருகிறதே வலது திரு கைகளால் காட்டுகிறேர் -சரணம்-பிராப்யம் –
அனுபவிக்க தான் திரு அடி -உபாயமாக நாம் ஆக்கி கொண்டோம் -கரு முகை மாலையை சும்மாடு போல் உபயோகித்தோம் —
அனுபவிக்க கொடுத்ததை -விதி அற்று உபாயமாக ஆக்கி கொண்டோம்.-

———–

அடுத்து பார்தந்தன் தேர் முன் நின்று அருளியதை அபிநயம் காட்டிக் கொண்டு இருக்கிறீர்

பார்தா²ய தத்ஸத்³ருஶஸாரதி²நா த்வயைவ
யௌ த³ர்ஶிதௌ ஸ்வசரணௌ ஶரணம் வ்ரஜேதி ।
பூ⁴யோ(அ)பி மஹ்யமிஹ தௌ கரத³ர்ஶிதௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 11 ॥

ஏற்ற சாரதி-பிடித்த -தேர் பாகன்-மாம் ஏகம் சரணம் விரஜ -என்று அருளியதை-
காலில் விழுந்தவரையும் கை பிடிக்கும் ஓங்கி உலகு அளந்த உத்தமன்-மறு படியும் திரு கைகளால் காட்ட பட்டன –
வலது திரு கையால் காட்டி கொண்டு இருகிறாய் –ஆர் எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய்-
சுட்டி காட்டுகிறாய் இது தான் என்று –தொட்டு காட்டுகிறார் –மாம்–மற்றவை விட்டு தன்னை

திரு மேனியில் எது -அதில் திரு அடி காட்டி மற்றவை விட்டு காட்டுகிறார்
சத்ருச சாரதி இவர் தான் -பார்த்த சாரதி-பார்த்தன் தன் தேரை ஊன்றான் –
தாழ்ந்த தஞ்சயனுக்கு -கர்மம் அறியாத -ஆகி-பஷ பாதமாக ஆகி –
மணி தின் தேர் உஊர்ந்தவன் -நர நாராயணனே அருஜுனன் கண்ணன்–ஆச்சர்ய சிஷ்ய பாவம் மாறி இருந்தார்கள்–
கருணனுக்கு பிடிக்காத சாரதி சத்யன்
சாமான்ய விசேஷ நியாயம்-மாம்-திரு அடி -காட்டி கொண்டு-
சேஷி பக்கல் சேஷ பூதன் இழியும் இடம் திரு அடி காட்டி கொண்டு இருக்கிறான்
———————

மந்மூர்த்⁴நி காளியப²ணே விகடாடவீஷு
ஶ்ரீவேங்கடாத்³ரிஶிக²ரே ஶிரஸி ஶ்ருதீநாம் ।
சித்தே(அ)ப்யநந்யமநஸாம் ஸமமாஹிதௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 12 ॥

சௌசீல்யம் -கூராளும்–தனி உடம்பன்-விஸ்வ ரூபத்தில் அனைத்தையும் காட்டி

உயர்வு தாழ்வு இன்றி ஸ்ரீ வைகுண்ட விரக்தாய -உயர்வு தாழ்வு பாராமல் -அனைவருக்கும்-சேவை சாதிகிறாய்–

பரம பக்தர் பர வேதாந்தி பரம பாமரன்-அனைவர் தலையிலும் -லோக விக்ராந்த  சரணவ் –
உலகம் அளந்த பொன் அடி-

தாள் பரப்பி மண தாவிய ஈசன் இவனே–தாவி அன்று உலகம் எல்லாம் தளவிலா கொண்ட எந்தாய்

ஆவியே அமுதே -தொண்டர் அடி பொடி ஆழ்வார்

நீசன் விலகி போக -வெள்கி போய் விலவர சிரித்திட்டேனே-உள்ளுவார் உள்ளத்து எல்லாம் உறைகின்ற —
கோவர்த்தன கிரி கீழும் அனைவரும் பண்டித பாமர விவேகம் அற–
மன் மூர்த்னி- என் தலையில்– நீசன்-வேதாந்தம் மேலும் விளங்கி –
ஆனால் அவனோ தளிர் புரையும் திரு அடி ஆழ்வார் தலையை தீண்டிய பின்பு –
அவன் வைக்கும் இடம் ஏற்றம் பெறுகிறது-பண்பும் அவன் சம்பந்தம் பெற்று நல்ல பண்பாகும் ..
அடியேன் தலையில்-காளிங்கன் பாம்பின் தலையில்/தொல் கானம்-அடர்ந்த காட்டில்-ஸ்ரீ வேம்கடாத்ரி சிகரம்-ஸ்ருதி தலை வேதாந்தம் தலையில்-அநந்ய மனச படைத்தவர் அவனையே அவனுக்காகா நினைப்பவர் –
இங்கு எல்லாம் திரு அடி வைத்தவன் ஆறு இடங்கள்-துவய சப்தம் ஆறு என்பதால் –
என் தலை தொடக்கி அநந்ய சித்தம் -நீச நிலை தொடக்கி உயர்ந்த இடம் வரை-கூரத் ஆழ்வான் வரதராஜ ஸ்தவத்தில் அருளியது போல் –வேழ மலை மேல் இருப்பதா –  –
பக்தர் ஹிருதயம்-வேத சிரஸ் -கமல- தாமரை மேல் -நம் ஆழ்வார் திரு உள்ளத்திலா –
மந்த ஸ்மிதம்-ரோம ஹர்ஷம் வேழ மலை அழகால்-புது பொலிவால் –ராச கிரீடை கோபிகள் பூமி பார்த்து கேட்டார்கள் —
முதல் அடி பூ-கவிழ்த்து அலர்த்தி –ஒரு திருஅடி கீழும் ஓன்று மேலும் –

சௌசீல்யம்-அனைவரையும் சமம் –வாத மா மகன் மர்கடம்- விலங்கு மற்று ஓர் சாதி உற்றதும் உன் அடியார்க்கு அடிமை –
திரு கண்ண புரம் திரு நறையூர் இரண்டுக்கும் நூறு பாசுரம் திரு அரங்கம் மட்டுமே ஒரே ஐம்பது பாசுரம் அருளி
திரு மங்கை ஆழ்வார் அத்வதீயம் திரு அரங்கம் காட்டி-வேருவாதால் வாய் வேறுவி வேம்கடமே வேங்கடமே என்கின்ற –
வாயு குமாரன்-மனிதன் மற்று ஓர் ஜாதி மர்கடம் சொல்லி-செருக்கு உள்ள குரங்கு என்பதால் வாய் குமரன் சொன்னார்
முலையோ முழு முற்றும் பொந்தில -கலையோ அறை இல்லை நாவோ குளறும் மிளிரும் கண்   –
கடல் வண்ணன் என்றோ விலையோ-சிறு பிராயம் அனைவரையும் சமமாக பார்க்கும் —
சைதன்யம் இருந்தும் தப்பு பண்ணி-இரு கால் மாடு போல்-அதனால் காளிங்கன் தேவலை —
ஸ்ரீ பாஷ்யம் கேட்டு தரை தட்டி இது போன்று புரிந்து கொண்டேன் சொன்ன ஐதீகம்-
அடுத்து வெம் கானம்-காலின்கனுக்கு சில அறிவு உண்டே -அதனால்-வெப்பம் குற்றம் இல்லை-
அடுத்து உயர்ந்த வேம்கடம்-உசத்தி- வேதாந்தம் முடியில்-திரு வேம்கடம் உயர்ந்தது என்று சொல்லியதால் —
அடுத்து அநந்ய மனச-சிஷ்ட பரிக்ரகம் பூர்வர் அனுஷ்டானம் வேண்டுமே -சகஸ்ர நாமம் ஏற்றம் –
வேதாந்தம்-பீஷ்மர் அறிந்த தர்மம்/வியாசர் -போல் இங்கும் அநந்ய மனஸ் ஏற்றம்

ஆழ்வார் திரு உள்ளம்-என் உச்சி உளானே–வந்து என் உச்சி உளானே–
முதலில் திரு வேம்கடம் வந்து-நின்று இருந்தால் கிளம்ப போகிறான்-மாரி மாறாத தன் அம் மலை-
தாமர பரணி நதி ஓடும்-கருணை வர்ஷம்–கமல கண்ணன் என் கண்ணின் உளான்–
திரு முடி தர்சனம் அங்கு தான்-பொலிந்து நின்ற பிரான் ஆழ்வார் திரு முடி மேல்-ஆதி  பிரான் நின்ற பெருமான்-
இருவரையும் மங்களாசாசனம் ஆழ்வார் பண்ணி கொண்டு –பட்டயம் வாசிப்பார்கள் உமக்காக தந்தோம்–கொண்ட கோவலன் விஷ்ணு சித்தன் மனத்தில் –பருபதத்து  கயல் பதித்த பாண்டியன் -மீன கொடி நாட்டியது போல்-
மலை கேட்காமல் மன்னன் வைத்தது போல்–காளியின் உச்சியில் நடனம் –பூத்த நீள் கடம்பேறி –
அவன் திரு அடி பட்டதும் பசக் பசக் பசுமை பெற்றதாம் -குரவை கூத்து குட கூத்து ராச கிரீடை –
பல வித நடனம்-போர் களமாக நிருத்தம் செய்தான் -காலால் காளியன் தலையில் மிதித்தது முதலா
பரல் கல் மேல் புளிதி சோர பெருமாள் நடந்தான் –மெல் அடி –
ஆழி அம் கையானை அம்மானை-அம்மனை தொடர்ந்து ஏத்தாமல் –ஆழ்வார் –
ராமானுஜர் அந்த இடத்தில் பக்கம் இருந்து தலையால் திரு அடி தாங்கி இருக்காமல் போனோமே

வியன் காண மரத்தின் நீழல்-கல் ஆணை மேல் துயில கற்றாயே காகுத்தா
காடு நடந்த பொன் அடி
கண்ணன் ஐந்து வயசில் மாடு மேய்க்க போனானே
குடையும் செருப்பும் கொடாமே காதில் திரி இட்டு தாமோதரனை –பசு மாடு தூசி படித்த குழல்-
பொன் தடுவுவது போல் -ப்ருந்தாவனந்த பண்டிதன்
நமக்கு நாதன் உடையவராக ஆக்குமே செடி கொடிகள் –வெம் கானம் போக்கினேனே
வேம்கட திரு மலை-க்ரீடாத்ரி விளையாட்டு மலை-ஸ்ரீ வைகுண்டமே ஆனந்த நிலைய விமானம் ஸ்வாமி புஷ்கரணி
வேம்கடத்து உச்சியில் கண்டு போய்-முதலில் திருஅடி பதிந்த இடம் சேவிக்க வேண்டும்

—————–

அம்லாந ஹ்ருஷ்ய த³வநீதல கீர்ணபுஷ்பௌ
ஶ்ரீவேங்கடாத்³ரி ஶிக²ராப⁴ரணாயமாநௌ ।
ஆநந்தி³தாகி²ல மநோநயநௌ தவைதௌ
ஶ்ரீவேங்கடேஶ சரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 13 ॥

ஸ்ரீ வேங்கடேசா -வாடா மலர்களாகத் தரை மேல் கிடக்கும் மற்ற மலர்களின் இடையே காணப்படுகின்றவையும்
திருவேங்கட மலைச்சிகரம் பெற்ற சிறந்த அணிகலன்களாக விளங்குபவையும்
சகல ஜீவன்களுடைய கண்களையும் மனங்களையும் களிப்படையச் செய்கின்றவையுமான
இந்த உன்னுடைய திருவடிகளே சரணம் என்று அடைகிறேன்

————

ப்ராய꞉ ப்ரபந்ந ஜநதா ப்ரத²மாவகா³ஹ்யௌ
மாது꞉ ஸ்தநாவிவ ஶிஶோரம்ருதாயமாநௌ ।
ப்ராப்தௌ பரஸ்பரதுலாமதுலாந்தரௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 14 ॥

ஸ்ரீ வேங்கடேசா -உன்னை வந்து அடைக்கலம் வந்து புகுந்த அநேகம் ஜனங்களுக்கு
முக்கியமாக அனுபவிக்கத்தக்க சொத்துப் போலே உள்ளவையும்
குழந்தைகளுக்குத் தாயின் மார்பகம் போல் அமுதாகின்றவையும்
ஒன்றுடன் ஓன்று இணையாக அமையப்பெற்றவையும்
தனக்கு நிகராக வேறே ஓன்று இல்லாதவையுமான
உனது திருவடிகளே சரண் என்று அடைகிறேன் –

—————

ஸத்த்வோத்தரை꞉ ஸததஸேவ்யபதா³ம்பு³ஜேந
ஸம்ஸாரதாரகத³யார்த்³ரத்³ருக³ஞ்சலேந ।
ஸௌம்யோபயந்த்ருமுநிநா மம த³ர்ஶிதௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 15 ॥

ஸ்ரீ வேங்கடேசா நற்குணம் நிறைந்தவர்களால் ஸதா காலம் வணங்கத் தக்க பாத கமலங்களை யுடையவரும்
பிறவிக்கடலைத் தாண்ட உதவும் கருணையால் குளிர்ந்த
திருக்கண்களை யுடையவருமான
ஸ்ரீ மணவாள மா முனிகளால் எனக்கு காண்பிக்கப்பட்ட
எனது திருவடிகளே சரணாக அடைகிறேன் –

———

ஶ்ரீஶ ஶ்ரியா க⁴டிகயா த்வது³பாயபா⁴வே
ப்ராப்யே த்வயி ஸ்வயமுபேயதயா ஸ்பு²ரந்த்யா ।
நித்யாஶ்ரிதாய நிரவத்³யகு³ணாய துப்⁴யம்
ஸ்யாம் கிங்கரோ வ்ருஷகி³ரீஶ ந ஜாது மஹ்யம் ॥ 16 ॥

ஸ்ரீ விருக்ஷ மலைக்கு இறைவனே
ஸ்ரீ யப்பதியே
நீ இறங்கும் பொழுது நின் திருவருள் கிடைக்கும்படி செய்து அருளுபவளும்
பிறவிக்கடல் கடந்து நான் அடையத்தக்க பயனாக நீ மாறும் காலத்து உன்னுடன் சேர்த்து
வைத்தும் அருள்பவளுமான திருமகளால் அடையப்பட்டவனும்
குற்றமற்ற குணங்களை உடையவனுமான உனக்கு நான் பணி செய்வதையே விரும்புபவனே தவிர
என்னையே நான் பெரிது என்று எண்ணி எனக்கு -என்னுடைய ஆனந்துக்காகவே
பணி செய்வேனாக இருக்க மாட்டேன் –

இட் ஶ்ரீ வேங்கடேஶ்வர ப்ரபத்தி ||

***

ஸ்ரீ வேங்கடேச மங்களாசாஸனம்

ஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நித யேர்த்தி நாம்

ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்     -1-

திருமகள் விரும்பும் நாதனும்
ஸர்வ மக்களுக்கும் நிதி போன்றவனும்
யாசிப்பவர்களுக்கு வரையாது வழங்கும் பொற் குவை போன்றவனும்
திருவேங்கட திருமலையில் நித்ய வாஸம் செய்து அருளுபனுமான
ஸ்ரீ நிவாஸப் பெருமாளுக்கு ஸர்வ மங்களங்களும் உண்டாகட்டும்

———

லக்ஷ்மீஸ விப்ரமாலோக ஸுப்ரு விப்ரம சக்ஷுஷே

சக்ஷு ஷே ஸர்வலோகாநாம் வேங்கடேசாய மங்களம்             2

திருமகளும் வியந்து நோக்கத்தக்க அழகிய புருவங்கள் இணைந்து விளங்கும் திருக்கண்கள் யுடையவனும்
கண்ணாவான் மண்ணோர் விண்ணோர்க்கும் என்றபடியே
ஸகல லோகங்களுக்கும் கண் போன்றவனுமாகிய
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்

———-

ஸ்ரீவேங்கடாத்ரி  ச்ருங்காக்ர மங்களா பரணாங்க்ரியே

மங்களாநாம் நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்    3-

திரு வேங்கட மலைச் சிகரத்துக்கு மங்கள திரு ஆபரணமாக விளங்குகின்ற திருவடிகளை யுடையவனும்
ஸர்வ மங்களங்களுக்கும் இருப்பிடமானவனுமான
ஸ்ரீ நிவாஸப் பெருமாளுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்

———–

ஸர்வாவயவ ஸௌந்தர்ய ஸம்பதா சர்வசேதஸாம்

ஸதா ஸம்மோஹ நாயாஸ்து வேங்கடேசாய மங்களம்             4

அங்கங்கள் யாவுமே அழகு என்னும் செல்வத்தால் அனைவருடைய உள்ளங்களையும்
எப்பொழுதுமே மயங்கிப்போய் இருக்கும்படிச் செய்யக் கூடிய அழகிய
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்

———————

நித்யாய நிரவத்யாய ஸத்யா நந்தசிதாத்மநே

ஸர்வாந்த ராத்மநே ஸ்ரீமத் வேங்கடேசாய மங்களம்   5-

அழிவற்றவனும்
அழுக்கு அற்றவனும்
ஆனந்த ஸ்வரூபனும்
ஞான ஸ்வரூபனுமாக
எல்லார் உள்ளத்திலும் உயிராக விளங்கும்
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்

————-

ஸ்வதஸ் ஸர்வவிதே ஸர்வசக்தயே ஸர்வசேஷிணே

ஸுலபாய ஸுசீலாய வேங்கடேசாய மங்களம்        –6-

தானாகவே எல்லாமும் அறிந்தவனுக்கு
ஸர்வ சக்திகளும் பெற்றவனும்
ஸமஸ்த இதர வைலக்ஷணம் கொண்டவனும்
நல்ல ஒழுக்கம் உடையவனும்
எளிதில் சென்று அடையும்படி பின்னானார் வணங்கும் ஜோதியுமுமானவனுமான
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்

————–

ப்ரஸ்மை ப்ரஹ்மணே பூர்ணகாமாய பரமாத்மநே

ப்ரயுஞ்ஜே பரதத்வாய வேங்கடேசாய மங்களம்      -7-

எங்கும் நிறைந்த பரம் பொருளும்
எண்ணியவை யாவையும் நிறைவேற்றி வைக்கக் கூடியவனுமான
பரமாத்மாவாகவும்
எல்லாமே தம் தம் பணிகளில் இயங்கக் காரணமாய் இருப்பவனுமான
பரதத்வ உண்மைப் பொருள் அனைத்திலும் உயர்ந்தவனுமான
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

———–

ஆகால தத்வ மச்ராந்த மாத்ம நாம நுபச்யதாம்

அத்ருப்த்யம்ருத ரூபாய வேங்கடேசாய மங்கலம்    -8

காலம் உள்ளவரை அயராமல் ஸேவிக்கும் பக்தர்களுக்குத் திருப்தி அளிக்கக் கூடிய
ஆரா வமுதமாய் இருக்கக் கூடிய
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

————-

ப்ராயஸ் ஸ்வ சரணௌ பும்ஸாம் சரண்யத்வேந பாணிநா

க்ருபாய திசதே ஸ்ரீமத் வேங்கடேசாய மங்களம்     –9-

தனது திருவடிகளே சரணம் என்று சகல ஜீவன்களுக்கும்
தனது திருக்கரத்தால் அன்புடன் காட்டிக் கொடுத்து அருளும்
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

————

தயாம்ருத் தரங்கிண்யாஸ் தரங்கைரிவ சீதலை:

அபாங்கை ஸிஞ்சதே விச்வம் வேங்கடேசாய மங்களம்     -10-

கருணை என்னும் அமுதக்கடலினுடைய அலைகளைப் போலே
குளிர்ந்த திருக் கடைக் கண்களால் உலகத்தை நினைக்கின்ற
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

—————

ஸ்ரக்பூஷாம் பர ஹேதீதாம் ஸுஷமாவஹ மூர்த்தயே

ஸர்வார்த்தி ஸமநாயாஸ்து வேங்கடேசாய மங்களம்    –11

தான் அணியும் மாலைக்கும்
அணி மணிகள் உடை ஆயுதம் இவைகளுக்கும்
அழகை யுண்டு பண்ணி அருளும் திவ்ய மங்கள விக்ரஹம் உடையவனும்
சகல துக்கங்களையும் போக்கி அருள் செய்பவனுமான
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

—————

ஸ்ரீவைகுண்ட விரக்தாய ஸ்வாமி புஷ்கரிணீ தடே

ரமயா ரமமாணாய வேங்கடேசாய மங்களம்    12-

ஸ்ரீ வைகுண்டத்தில் பற்று நீங்கி
ஸ்ரீ ஸ்வாமி புஷ்கரணி தடாகத்தின் கரையில்
திருமகளோடு விளையாடி அருளும்
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

——–

ஸ்ரீமத் ஸுந்தர ஜாமாத்ரு முநி மாநஸ வாஸிநே

ஸர்வலோக நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்     –13

ஸ்ரீ மணவாள மா முனிகள் போன்ற பக்தர்களின் திரு உள்ளங்களில் நித்ய வாஸம் செய்து அருள்பவனும்
எல்லா உலகங்களில் எல்லாப் பொருள்களிலும் கன்னுக்குத் தெரியாமல்
கரந்து எங்கும் பரந்துள்ளவனுமான
ஸ்ரீ நிவாஸப் பெருமாளுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

———–

மங்களாசாஸ நபரைர் மதாசார்ய புரோகமை:

ஸர்வைச்ச பூர்வை ராசார்யைஸ் ஸத்க்ருதாயாஸ்து மங்களம்    -14-

எம்பெருமானுக்கு மங்களங்கள் உண்டாகட்டும் என்று
என்னுடைய ஆச்சார்யர்களாலும்
மற்றும் உள்ள ஆச்சார்யர்களாலும்
பூஜிக்கப் பட்டவருமான
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

***

ஸ்ரீ வேங்கடேஶ அஷ்டோத்தர சத நாமாவளி

ஓம் ஓங்கார பரமார்த்தாய நம:
ஓம் நர நாராயணாத்மகாய நம:
ஓம் மோக்ஷலக்ஷ்மீ ப்ராணகாந்தாய நம:
ஓம் வேங்கடாஶல நாயகாய நம:
ஓம் கருணாபூர்ண ஹ்ருதயாய நம:
ஓம் டேங்காரஜப ஸௌக்யதாய நம:
ஓம் ஶாஸ்த்ர ப்ரமாண கம்யாய நம:
ஓம் யமாத்யஷ்டாங்க கோசராய நம:
ஓம் பக்தலோகைக வரதாய நம:
ஓம் வரேண்யாய நம: 10

ஓம் பயநாஶநாய நம:
ஓம் யஜமாந ஸ்வரூபாய நம:
ஓம் ஹஸ்தந்யஸ்த  ஸுதர்ஶநாய நம:
ஓம் ரமாவதார மங்கேஶாய நம:
ஓம் ணாகாரஜவ ஸுப்ரியாய நம:
ஓம் யஜ்ஞேஶாய நம:
ஓம் கதிதாத்ரே நம:
ஓம் ஜகதீவல்லபாய நம:
ஓம் வராய நம:
ஓம் ரக்ஷஸ்ஸந்தோஹ ஸம்ஹர்த்ரே நம: 20

ஓம் வர்சஸ்விநே நம:
ஓம் ரகுபுங்கவாய நம:
ஓம் தாநதர்மபராய நம:
ஓம் யாஜிநே நம:
ஓம் கநஶ்யாமள நம:
ஓம் ஹராதி ஸர்வதேவேட்யாய நம:
ஓம் ராமாய நம:
ஓம் யதுகுலாக்ரணயே நம:
ஓம் ஸ்ரீநிவாஸாய நம:
ஓம் மஹாத்மநே நம: 30

ஓம் தேஜஸ்விநே நம:
ஓம் தத்வஸந்நிதயே நம:
ஓம் த்வமர்த்த லக்
ஓம் பாவநாய நம
ஓம் ஸர்வேஶாய நம:
ஓம் கமலாகாந்தாய நம:
ஓம் லக்ஷ்மீ ஸல்லாப ஸம்முகாய நம:
ஓம் சதுர்முக ப்ரதிஷ்டாத்ரே நம: 40

ஓம் ராஜராஜ வரப்ரதாய நம:
ஓம் சதுர்வேத ஶிரோரத்நாய நம:
ஓம் ரமணாய நம:
ஓம் நித்யவைபவாய நம:
ஓம் தாஸவர்க்க பரித்ராத்ரே நம:
ஓம் நாரதாதி முநிஸ்துத்யாய நம:
ஓம் யாதவாசலவாஸிநே நம:
ஓம் கித்யத் பக்தார்தி பஞ்ஜநாய நம:
ஓம் லக்ஷ்மீப்ரஸாதகாய நம:
ஓம் விஷ்ணவே நம: 50

ஓம் தேவேஶாய நம:
ஓம் ரம்ய விக்ரஹாய நம:
ஓம் மாதவாய நம:
ஓம் லோகநாதாய நம:
ஓம் லாலிதாகில ஸேவகாய நம:
ஓம் யக்ஷகந்தர்வ வரதாய நம:
ஓம் குமாராய நம:
ஓம் மாத்ருகார்ச்சிதாய நம:
ஓம் ரட்த்பாலக போஷிணே நம:
ஓம் ஶேஷஶைல க்ருதஸ்தலாய நம: 60

ஓம் ஷாட்குண்ய பரிபூர்ணாய நம:
ஓம் த்வைததோஷ நிவாரணாய நம:
ஓம் திர்யக்ஜந்த் வர்ச்சிதாங்க்ரயே நம:
ஓம் நேத்ராநந்த கரோத்ஸவாய நம:
ஓம் த்வாதஶோத்தம லீலாய நம:
ஓம் தரித்ரஜந ரக்ஷகாய நம:
ஓம் ஶத்ரு க்ருத்யாதி பீதிக்நாய நம:
ஓம் புஜங்கஸயந ப்ரியாய நம:
ஓம் ஜாக்ரதே நம:
ஓம் ரஹஸ்யாவாஸாய நம: 70

ஓம் ஶிஷ்டபரிபாலகாய நம:
ஓம் வரேண்யாய நம:
ஓம் பூர்ணபோதாய நம:
ஓம் ஜந்ம ஸம்ஸார பேஷஜாய நம:
ஓம் கார்த்திகேய வபுர்த்தாரிணே நம:
ஓம் யதிஶேகர பாவிதாய நம:
ஓம் நரகாதி பயத்வம்ஸிநே நம:
ஓம் ரதோத்ஸவ கலாதராய நம:
ஓம் லோகார்ச்சா முக்யமூர்த்தயே நம:
ஓம் கேஶவாத் யவதாரவதே நம: 80

ஓம் ஶாஸ்த்ர ஶ்ருதாநந்த லீலாய நம:
ஓம் யமஶிக்ஷா நிபர்ஹணாய நம:
ஓம் மாநஸம்ரக்ஷண பராய நம:
ஓம் நேத்ரஹீநாக்ஷிதாயிநே நம:
ஓம் மதிஹீந மதிப்ரதாய நம:
ஓம் ஹிரண்யதாந க்ராஹிணே நம:
ஓம் மோஹஜால நிக்ருந்தநாய நம:
ஓம் ததிலாஜாக்ஷதார்ச்யாய நம:
ஓம் யாதுதாந  விநாஶநாய நம: 90

ஓம் வேங்கடாய நம:
ஓம் தக்ஷிணாஸ்திதாய நம:
ஓம் ஸாரபுஷ்கரிணிதீராய நம:
ஓம் ராத்ரௌ தேவகணார்ச்சிதாய நம:
ஓம் யத்நவத் பலஸந்த்தாத்ரே நம:
ஓம் ஸ்ரீம்ஜபாத் தநவ்ருத்திக்ருதயாய நம:
ஓம் க்லீம்காரஜாபி காம்யார்த்த ப்ரதாந ஸதயாந்தராய நம:
ஓம் ஸ்வஸர்வசித்தி ஸந்தாக்ரே நம:
ஓம் நமஸ்கர்த்து ரபீஷ்டதாய நம: 100

ஓம் மோஹிதாகில லோகாய நம:
ஓம் நாநாரூப வ்யவஸ்திதாய நம:
ஓம் ராஜீவலோசநாய நம:
ஓம் யஜ்ஞவராஹாய நம:
ஓம் கணவேங்கடாய நம:
ஓம் தேஜோராஶீக்ஷணாய நம:
ஓம் ஸ்வாமிநே நம:
ஓம் ஹார்தா வித்யா நிவாரணாய நம:  108

ஸ்ரீ வேங்கடேஶ அஷ்டோத்தர சத நாமாவளி சமாப்தம்:

————–

வ்ருஷசைலாதிப ஏவ தைவதம் ந

வ்ருஷபாத்ரீச்வர ஏவ தைவதம் ந
பணி சைலாதிப ஏவ தைவதம் ந

பகவான் வேங்கட ஏவ தைவதம் ந————————–11-

—————————————————-

வ்ருஷசைலம் -என்பதும்
வ்ருஷபாத்ரி -என்பதும்
பணி சைலம் -என்பதும்
பர்யாய நாமங்கள் ஆதலால்
எல்லாவற்றாலும்
திருமலை அப்பனே அடியேன் தொழும் தெய்வம்
என்றது ஆயிற்று

—————————————————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ ஸ்ரீ நிவாச பர தைவதம் ந
ஸ்ரீ ஸ்ரீ நிவாச பரமம் தனம் ந
ஸ்ரீ ஸ்ரீ நிவாச குல தைவதம் ந
ஸ்ரீ ஸ்ரீனிவாச பரமா கதிர் ந—12

ஸ்ரீ ஸ்ரீநிவாசன
நமக்கு பர தேவதையும்
பெரும் செல்வமும்
குல தேவதையும்
பரம கதியும்
ஆவான் -என்கிறார் ஆயிற்று-

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம சாஸ்திரத்தில் உள்ள – ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் –அத்தியாயம் –33– அங்கம் உபாங்கம் மற்றும் வேறு மந்த்ரங்கள் — —

April 17, 2023

ஸ்ரீர் உவாஸ
ஸ்ருணு வத்ஸ ஸூரேசாந வித்யா யாஸ் தாரிகா க்ருதே
அங்கோ பாங்காநி மந்த்ராணி நாநா மந்த்ர மயாநி மே –1-

குழந்தாய் -தேவர்களின் தலைவனே –
தாருகா வித்யையில் உள்ள மந்த்ரங்களையும்
அங்க உப அங்க மந்திரங்களையும் இப்போது நான் கூறக் கேட்பாயாக-

கோபநம் பஞ்ச பிந்தும் சான் ஹி ஊர்ஜம் ஐராவணம் ததா
ஒவ்ர்வம் ச பஞ்சகம் சைதே ப்ரத்யேகம் வ்யாபிநாந் விதம் -2-
ப்ராண அலோ பரிஸ்தம் து க்ருத்வைதத் பிண்ட பஞ்சகம்
ஹ்ருதாநி நேத்ர பர்யந்தம் அங்க பீஜம் இதம் ஸ்மரேத் –3-

ப்ராண -ஹ -மற்றும் அநல -ர -அக்ஷரங்கள் இரண்டும்
கோபநம் -அ-என்றும் பஞ்ச பிந்து -ஈ -என்றும் -ஊர்ஜம் -ஊ-என்றும் -ஐராவணம்-ஐ -என்றும் ஒவ்ர்வம் -ஒவ் -என்றும்
உள்ள ஐந்து எழுத்துக்களுடன் தனித்தனியாக சேர்க்கப் பட்டு
இறுதியில் அநு ஸ்வரமும் இணைக்கப் படுகிறது
இவை பிண்டங்களை உருவாக்குகின்றன –
இவையே ஐந்து அங்கங்களில் ஐந்து பீஜங்களாக -ஹ்ராம் -ஹ்ரீம் -ஹ்ரூம் -ஹ்ரைம் -ஹரவ்ம் -கொள்ளப்பட வேண்டும்
இவை ஹ்ருதயம் தொடங்கி கண் முடிய உள்ளவை ஆகும்

மேலே கூறப்பட்ட ஐந்து பீஜங்கள்
ஓம் ஹ்ராம் ஹ்ருதயாய நம
ஓம் ஹ்ரீம் சிரஸே நம
ஓம் ஹ்ரூம் சிகாயை நம
ஓம் ஹ்ரைம் கவசாயை நம
ஓம் ஹரவ்ம் நேத்ராப்யாம் நம –

ஹ்ருத் பீஜாத் பரதோ யோஜ்யம் ஞான யேதி பதம் தத
ஹ்ருதயாய நமஸ் சைவ மந்த்ர அயம் தாரண பிரத –4-
ப்ரணவாதி நம அந்த அயம் மந்த்ர ஏகாதச அக்ஷர –5-1-

இதயத்தின் பீஜமான -ஹ்ராம் -என்பதைத் தொடர்ந்து -ஞானாய ஹ்ருதயாய நம -என்பதைச் சேர்க்க வேண்டும்
இந்த மந்திரமானது தாரணை நிலையை உண்டாக்குகிறது
பிரணவம் தொடங்கி -நம -முடிய உள்ள இந்த மந்திரமானது பதினோரு அக்ஷரங்களைக் கொண்டதாக உள்ளது –

பரம் ப்ரணவ பீஜாப்யாம் ஐஸ்வர்யாய பதம் ந்யசேத் –5-2-
சிரஸே ச ததா ஸ்வாஹா ஹி ஏஷ ஏகாதஸ அக்ஷர -6-1-

பிரணவம் மற்றும் இரண்டாவது பீஜத்துக்குப் பின்னர் -ஐஸ்வர்யாய–சிரஸே–ஸ்வாஹா-என்னும் மந்த்ரத்தை உச்சரிக்க வேண்டும்
இது பதினோரு அக்ஷரங்கள் கொண்டதாகும் -ஓம் ஹ்ரீம் ஐஸ்வர்யாய சிரஸே ஸ்வாஹா –

பரம் ப்ரணவ பீஜாப்யாம் சக்தயே ச பதம் ந்யசேத் -6-2-
சிகாயை வவ்ஷத் இதி ஏவம் சைக அயம் து தச அக்ஷர –7-1-

பிரணவம் மற்றும் மூன்றாவது பீஜத்துக்குப் பின்னர் -சக்தயே சிகாயை வவ்ஷத் -என்னும் மந்த்ரத்தை உச்சரிக்க வேண்டும் –
இது பத்து அக்ஷரங்கள் கொண்டதாகும் -ஓம் ஹ்ரூம் சக்தயே சிகாயை வவ்ஷத் –

பரம் ப்ரணவ பீஜாப்யாம் பலாயேதி பதம் ந்யசேத் –7-2-
கவசாய ஹும் இதி ஏவம் மந்த்ர அயம் ச தச அக்ஷர -8-1-

பிரணவம் மற்றும் நான்காவது பீஜத்துக்குப் பின்னர் -பலாய கவசாய ஹும் என்னும் மந்த்ரத்தை உச்சரிக்க வேண்டும்
இது பத்து அக்ஷரங்கள் கொண்டதாகும் -ஓம் ஹ்ரைம் பலாய கவசாய ஹும் –

பரம் ப்ரணவ பீஜாப்யாம் தேஜஸே ச பதம் ந்யசேத் -8-2-
நேத்ராப்யாம் வவ்ஷத் இதி ஏவம் நேத்ர மந்த்ர தச அக்ஷர –9-1-

பிரணவம் மற்றும் ஐந்தாவது பீஜத்திற்குப் பின்னர் தேஜஸே -என்பதைச் சேர்த்துக் கொண்டு -நேத்ராப்யாம் வவ்ஷத் என்னும் மந்த்ரத்தை உச்சரிக்க வேண்டும் –
இது பத்து அக்ஷரங்கள் கொண்ட நேத்ர மந்திரமாகும் -ஓம் ஹ்ரவம் தேஜஸே நேத்ராப்யாம் வவ்ஷத்-

ப்ராண அநல உபரிஸ்தம் து வின்யசேத் பரமேஸ்வரம் -9-2-
தஸ்மாத் ப்ரணவ பூர்வாத் து வீர்யாய வின்யசேத்
அத்ஸ்ராய ச பட் இதி ஏவம் மந்த்ர அயம் ச தச அக்ஷர -10-

பிரணவத்தை முதலில் நிறுத்தி -அஸ்த்ராய ச பட் -என்னும் மந்த்ரத்தை உச்சரிக்க வேண்டும்
இது பத்து அக்ஷரங்கள் கொண்டதாகும் -ஓம் ஹ்ரஸ் அஸ்த்ராய ச பட்

அங்க ஷட்கம் இதம் ப்ரோக்தம் உபாங்க த்ரி யுகம் ஸ்ருணு
தாரி காந்தே க்ரமாத் தத்யாத் பூர்வ வத் ஷட் குணம் பதம் -11-
ஞானாதி தேஜஸ் பர்யந்தம் ததந்தே ச க்ரமான் ந்யசேத்
உதாராய ச ப்ருஷ்டாய பாஹுப்யாம் இதி வை பதம் –12-
ஊருப்யாம் அத ஜானுப்யாம் சரணாப்யாம் இதி க்ரமாத்
நமச்ச பரதோ யோஜ்யம் உபாங்கா நாம் அயம் விதி -12-

ஆறு உப அங்க மந்த்ரங்களைக் குறித்து நான் கூறுகிறேன் -கேள்
ஒவ்வொரு மந்திரத்தின் முதலில் ஞானம் தொடங்கி தேஜஸ் முடிய ஆறு குணங்களை சேர்க்க வேணும்
இவற்றுடன் -உதாராய -ப்ருஷ்டாய -பாஹுப்யாம் -ஊருப்யாம்-ஜானுப்யாம் மற்றும் சரணாப்யாம் ஆகியவை சேர்க்கப் பட வேண்டும்
1- ஓம் ஹ்ரீம் ஞானாயா உதாராய நம –
2- ஓம் ஹ்ரீம் சக்தாய ப்ருஷ்டாய நம
3-ஓம் ஹ்ரீம் பலாய பாஹுப்யாம் நம
4-ஓம் ஹ்ரீம் ஐஸ்வர்யாய ஊருப்யாம் நம
5- ஓம் ஹ்ரீம் வீர்யாய ஜானுப்யாம் நம
6-ஓம் ஹ்ரீம் தேஜஸாய சரணாப்யாம் நம-

இதி ஏவம் அங்க உபாங்கா நாம் மந்த்ரா த்வாதஸ கீர்த்திநா
அலங்கார அஸ்த்ர மந்த்ராம்ஸ்து ப்ருவத்யா மே நிசா மய –14-

இது வரை 11 அங்கம் மற்றும் உப அங்க மந்த்ரங்கள் குறித்துக் கூறினேன்
அடுத்து ஆயுதங்கள் மற்றும் ஆபரணங்கள் குறித்துக் கூறுகிறேன் -கேள் —

கௌஸ்துபோ வ்யோம ஸம் பின்னஸ் பரமாத்மா தத பரம்
ஊர்த்வ அதஸ் அநல ஸம் பின்ன ஊர்ஜேந அபி ஸமன்விதஸ்–15-
ஸ்ருஷ்டி க்ருதஸ் ஸம்யுதோ மூர்த்நி கௌஸ்துபோ வ்யாபி ஸம் யுத
நமஸ் க்ருதிஸ் ஸ்தநஸ் பச்சாந்ததஸ் பச்சாத் ப்ரபாத்மநே -16-
கௌஸ்துபாய ததஸ் ஸ்வாஹா ப்ரணவாத் யஸ்து கௌஸ்துப
மந்த்ர ஷோடஸ வர்ண அயம் ஸர்வ கர்ம ப்ரஸாதக–17-

முதலில் கௌஸ்துபம் பற்றிக் கூறுகிறேன் -இதனால் கூறப்படுபவன் பரமாத்மா ஆவான்
அதன் மேலும் கீழும் அக்னி சமநிலையில் உள்ளது –
இது ஸ்ருஷ்டியின் பொருட்டே உள்ளது
இதன் மந்த்ரம் -ஓம் தம் ஹ்ரூர்ஹ தம் நம ப்ரபாத்மநே கௌஸ்துபாய ஸ்வாஹா என்பதாகும் –

உத்தரேத் பிரதமம் தாரம் தரேசம் தத உத்தரேத்
தததஸ் திருப்தி ஸம்ஜ்ஞம் ஸ வராஹம் தததோ ந்யசேத் –18-
மாயயா பூஷயேத் பச்சாத் வயாபிநா ச அங்க யேதத்
பஞ்சாத்மா வர்ண பிண்ட அயம் நமஸ்காரம் ததஸ் பரம் –19-
ததஸ் ஸ்தல ஜலோத்பூத பூஷிதே பதம் உத்தரேத்
வந மாலே ததஸ் ஸ்வாஹா மந்த்ரஸ் ஸர்வார்த்த ஸாதக –20-
ஏகோந விம்சத் யர்ணஸ் அயம் வந மாலா மயோ மஹான்–21-1-

முதலில் தாரகமாகிய ஓம் என்பது உள்ளது
இதனைத் தொடர்ந்து ல் என்பதும் -தொடர்ந்து வ என்பதும் உள்ளது
இதனைத் தொடர்ந்து பிந்துவும் நமஸ்காரமும் வருகின்றன
தொடர்ந்து ஸ்தல ஜலோத் பூத பூஷிதே -என்பதும்
அதன் பின்பே வந மாலே என்பதும்
இறுதியாக ஸ்வாஹா என்பதும் சேர்ந்து -சாதகனுக்கு அனைத்தும் அளிக்க வல்ல மந்த்ரம் ஆகிறது
இது -ஓம் ல்ஸ்வீம் ஸ்தல ஜலோத் பூத பூஷிதே வந மாலா ஸ்வாஹா -என்பதாகும்

378-

ஆதாயாதவ் து வைகுண்டம் ரேபம் ததுபரி ந்யசேத்
ஆனந்தே நான்விதம் பஞ்சாத் வ்யாபிநா சாங்க யேத்ததா –24-
கஸ்த கஸ்த பதம் தத்யான் நேமி த்வந்த மத பரம்
வரபாசாய வை ஸ்வாஹா ப்ரணவாத் யஸ்து பாசராட் –25
மந்த்ர பஞ்ச தசார்ண அயம் காமி நாம் க்ஷிப்ர ஸித்தி க்ருத் –26-1-

முதலில் வைகுண்ட என்பதில் உள்ள ண -மற்றும் ர -ஆகியவற்றைச் சேர்த்து- ர்ண -என்பதைக் கொள்ளவும்
அதில் பிந்துவைச் சேர்த்து -ர்ணம் -என்பதாகும்
அதன் பின்னர் கஸ்த கஸ்த என்பதைச் சேர்க்கவும்
பின் த த என்பதை இணைக்கவும்
அதனைத் தொடர்ந்து வரபாசாய ஸ்வாஹா என்பதைச் சேர்க்கவும்
14 அக்ஷரங்கள் கொண்ட இந்த பாசராட் என்னும் மந்திரமானது வெகு விரைவாகப் பலன் அளிக்கும்
இதன் முழு வடிவம் -ஓம் ர்ணம் கஸ்த கஸ்த த த வரபாசாய ஸ்வாஹா-என்பதாகும்

ப்ரண வாந்தே விராட் ஸம்ஜ்ஞம் வ்யாபி நா மூர்தி ஸம் யுதம் –26-2-
த்வயம் பிண்ட தயா யோஜ்யம் கமல மங்குசம்
வ்யாபி நா ஸம் யுதம் மூர்திநி த்ருதீயம் இதம் அக்ஷரம் –27-
பதம் நிசித கோணாய ச அங்கு சாய சாகி ப்ரியா
இதி பஞ்சத சார்ணஸ் அயமாம் குச சீக்ர ஸித்தித –28-

பிரணவத்தின் இறுதியில் விராட் மூர்த்தியைக் குறிப்பதான -ல்ரு -சேர்க்கப் பட்டு அதன் தலைப்பகுதியில் பிந்து இடப்படுகிறது –
அதன் பின்னர்- ர -என்பதும்- க்ரு- என்பதும் அதன் பின்னர் பிந்துவும் உள்ளன -இதுவே மூன்றாம் அக்ஷரமாக உள்ளது
அதன் பின்னர் -நிசித கோணாய -மற்றும் -அங்குசாய -என்பதுவும் -அதன் தலைப்பகுதியில் -ஸ்வாஹா -என்பதும் உள்ளன
இதுவே 14 அக்ஷரங்கள் கொண்ட அங்குச மந்த்ரம் ஆகும் –
இது வெகு விரைவாக பலன் அளிக்க வல்லது
இதன் முழு வடிவம் -ஓம் ல்ரும் க்ரும் நிசித கோணாய அங்குசாய ஸ்வாஹா -என்பதாகும்

அலங்காராஸ்த்ர மந்த்ராணாம் ஏதத் பஞ்சக மீரிதம்
ஆதாரஸந மந்த்ராணாம் ஸ்ருணு ரூபம் புரந்தர –29-
யத்விநா தாரிகா யாஸ்து பூரணம் நைவ ஜாயதே –30-1-

அடுத்து அலங்கார அஸ்த்ர மந்த்ரங்கள் ஐந்தும் ஒன்றும் உள்ளன
இந்திரனே ஆதார ஆஸன மந்த்ரங்களினுடைய ரூபம் குறித்து இப்போது நான் கூறக் கேட்ப்பாயாக
ஆனால் இத்துடன் தாரிகாவின் மந்த்ரங்களினுடைய ஸ்வரூபமானது பூர்ணமாக உள்ளது என்று பொருள் அல்ல –

அநல த்வயம் அத்யஸ்தஸ் ப்ராணோ மாயீ ஸ பிந்துமான் –30-2-
தத ஆதார சக்த்யை ச ப்ரணவாதிர் நமஸ் அந்திமஸ்
ஆதார சக்தி மந்த்ர அயம் விஜ்ஜே யஸ்து நவ அக்ஷர –31-

அக்னியைக் குறிக்கும் -ர -என்பதை நடுவில் கொண்டதாகவும் ப்ராணனைக் குறிக்கும் -ஈ -என்பதையைப் புள்ளியுடன் கொண்டதாகவும் –
ப்ரணவத்தைத் தொடக்கத்தில் கொண்டதாகவும் -நம என்பதை இறுதியில் கொண்டதாகவும் ஆதார சக்தி மந்த்ரம் உள்ளது –
இது ஒன்பது அக்ஷரங்கள் கொண்டதாக அறியப்படுகிறது
இந்த மந்திரத்தின் முழு வடிவம் -ஓம் ஹ்ரீம் ஆதார சக்த்யை நம -என்பதாகும் –

அநல த்வயம் அத்யஸ்தோ பிந்த்வந்த அப் யூர்ஜ ஸம் யுதஸ்
ததஸ் காலாக்நி கூர்மாய நம அந்தஸ் ப்ரணவாதிகஸ் –32
மந்த்ர காலாக்நி கூர்மஸ்ய விஜ்ஜேயஸ் அயம் தசாஷர –33-1-

இரண்டு அக்னிகளை -அதாவது இரண்டு ர என்னும் அக்ஷரம் -உள்ளடக்கியதும்
ப்ராணனுடன் கூடியதும் -ஹ
இறுதியில் உ என்பது பிந்துவுடன் -புள்ளியுடன் -சேர்க்கப்பட்டதும்
தொடர்ந்து நான்காவதாக காலாக்நி கூர்ம என்பதுடன்
நம இறுதியில் கொண்டதும்
மற்றும் ப்ரணவத்துடன் கூடியதும் -பத்து அக்ஷரங்களைக் கொண்டதாக இந்த மந்த்ரம் அறியப்படுகிறது
இந்த மந்திரத்தின் முழு வடிவம்–ஓம் ஹ்ரூம் காலாக்நி கூர்மாய நம-

கோபநே நாங்கிதம் ப்ராணம் மூர்திநி ச வ்யாபிநா யுதம் -33-2-
ப்ரணவாந்தே ஸமுத்த்ருத்ய ஹ்ய நந்தாய நமஸ் தநஸ்
அஷ்டாக்ஷரோ ஹ்யம் மந்த்ரோ நாக ராஜஸ்ய கீர்த்திதஸ் –34

அடுத்து ஹ என்னும் பிராணனை பிந்துவுடன் கூடியதும்
பிரணவம் மற்றும் நம என்பதை தொடக்கத்திலும் முடிவிலும் கொண்டதும்
அநந்தாய -என்பதைக் கொண்டதும்
எட்டு அக்ஷரம் கொண்டதும்
நாக ராஜனான ஆதி சேஷனைக் கொண்டதுமாக இந்த மந்த்ரம் உள்ளது
இந்த மந்திரத்தின் முழு வடிவம்-ஓம் ஹாம் அநந்தாய நம –

கமலம் ச அக்னி ரூபம் ச ப்ரதாநம் புருஷேஸ்வரம்
பிண்டீ க்ருத்ய சதுஷ்கம் து கோபந வ்யாபி ஸம் யுதம் –35-

வஸூ தாயை நம பச்சாத் ப்ரணவாதிர் மநுஸ் த்வயம்
விஸ்வம் பராய விஜ்ஜேய ஆதார பரி கல்ப்யதே –36-

தாமரை மற்றும் அக்னி ஆகியவற்றைக் குறிக்கும் அக்ஷரங்கள் ஒன்றாக இணைந்தும்
புருஷேஸ்வரம் என்பதைக் குறிக்கும் அக்ஷரம் சேர்ந்தும்
இத்துடன் புள்ளியும் சேர்ந்தும்
என நான்கு இணைப்புகள் இந்த மந்திரத்தின் தொடக்கத்தில் உள்ளன
அதன் பின்னர் வஸூ தாயை என்பதும்
தொடக்கத்தில் பிரணவமும் உள்ளது
இது -விஸ்வம்பரத்தின் -விஸ்வம் என்ற உலகில் -ஆதாரமாக அறியப்படுகிறது –
இந்த மந்த்ரம் ஓம் ஷம்லாம் வஸூ தாயை நம -என்பதாகும்

அம்ருதம் வருணம் ச அர்ண த்வயம் பிண்டீ க்ருதம் ஸஹ
கோபந வ்யாபி ஸம் யுதம் ப்ரண வான்தே சமுச்சரேத் –37-

ஷீரார்ணவாய ச நம ஸ அயம் மந்த்ரோ நவ அக்ஷர –38-1-

அம்ருதத்தைக் குறிக்கும் ஸ -மற்றும் வருணனைக் குறிக்கும்வ -மற்றும் புள்ளியுடன் கூடி
தொடக்கத்தில் ப்ரணவம்
அடுத்து -ஷீரார்ணவாய – நம-ஆகியவை சேர்ந்து ஒன்பது அக்ஷரங்கள் கொண்ட இந்த மந்த்ரம்
ஓம் ஸ்வாம் ஷீரார்ணவாய ச நம-

பவித்ரம் ஸோ தய வ்யாபி ஸம் யுதம் ப்ரண வாந்தகம் –38-2-

ஆதார பத்மாய நம பத்மஸ் யாயம் தச அக்ஷர
இத்தம் ஆதார ஷட் கஸ்ய மந்த்ர ஷட்கம் ப்ரகீர்த்தி தம் –39-

பவித்ரத்தைக் குறித்தும் அக்ஷரமான -ப –என்பதுடன் உ என்பதும் -இணைந்து -புள்ளி யையும் சேர்த்து
தொடக்கத்தில் ப்ரணவமும் தொடர்ந்து ஆதார பத்மாய நம சேர்ந்து பத்து அக்ஷர மந்த்ரம்
ஓம் பும் ஆதார பத்மாய நம -என்பதாகும்

இப்படி ஆறு ஆதார மந்த்ரங்கள் தொகுப்பு உள்ளது –

—-384

ஸோதயம் ஸாம்ருதம் ஹ்ரஸ்வம் ப்ரணவோபரி வின்யஸேந்
அவ்யக்த பத்மாய நமஸ் ஸ மந்த்ரஸ் அவ்யக்த பத்மகஸ் –45-

ப்ரணவத்தைத் தொடர்ந்து ஹ்ரஸ்வம் என்னும் -ப -உதயம் என்னும் உ -அம்ருதம் என்னும் ஸ மற்றும் பிந்து -புள்ளி -ஆகியவை அமைக்கப்பட்டு
தொடர்ந்து அவ்யக்த பத்மாய -என்பது வைக்கப் படுகிறது –
இம்மந்த்ரமானது அவ்யக்த பத்மகம் எனப்படும் -ஓம் ப்ஸூம் அவ்யக்த பத்மாய நம –

ஸூர்யா இந்து அக்னி பதேப்யஸ்து ப்ரத்யேகம் மண்டலாய ஸ
நம அந்தே ப்ரண வச்சாதவ் தே மந்த்ராய மண்டல த்ரயே –46

ஸூர்யன் இந்து மற்றும் அக்னி ஆகியவற்றின் மண்டல மந்த்ரங்கள் அடுத்து உள்ளன
இவற்றின் இறுதியில் நம என்பதும் -தொடக்கத்தில் ப்ரணவமும் என்பதாக இம்மூன்று மந்த்ரங்கள் உள்ளன
ஓம் ஸூர்ய மண்டலாய நம
ஓம் இந்து மண்டலாய நம
ஓம் அக்னி மண்டலாய நம –ஆகியவை –

ப்ரத்யகாத்ம பரா மர்சி ஸப்த ஸோம அத சர்கவான்
சித் பாச நாக்ய மந்த்ரஸ் அயம் த்ர்ய அக்ஷரஸ் பரிகீர்த்தித –47-

ப்ரத்யகாத்மாவை -சரீரத்தில் உள்ள ஆத்மாவை -குறிக்கும் சப்தமாக -அஹம் -என்பது உள்ளது
இதனைத் தொடர்ந்து சோமனைக் குறிக்கும் ஸ உள்ளது
இப்படியாக மூன்று அக்ஷரங்களைக் கொண்டதாக சித் பாசன மந்த்ரம் உள்ளது
அஹம் ஸ என்பதே அந்த மந்த்ரம் ஆகும்

இதி ஆச நாக்ய மந்த்ராணாம் கதிதா த்வேக விம்சதி
இதி அயம் பீட பூஜாந்தோ மந்த்ர ப்ராணோ மயேரிதி–48-

இப்படியாக ஆஸன மந்த்ரங்கள் -21 வகைகள் -அதாவது
16 ஆதா ரேச மந்த்ரங்கள்
1-அவ்யக்த பத்ம மந்த்ரம்
3 மண்டல மந்த்ரங்கள்
1-சித் பாசன மந்த்ரம் –என்பதாக 21- மந்த்ரங்கள் குறித்து உரைத்தேன் –

ரஹஸ்யம் பரமம் க்ருஹ்யம் இதா நீம் பரமம் ஸ்ருணு
க்ஷேத்ர ஸாத்யம் மந்த்ர சயம் விக்ந நிர் மதந ஷமம் –49-

இவற்றின் பின்னர் இந்த மந்திரங்களிலும் பரம ரஹஸ்யமான மந்த்ரத்தை நான் கூறுகிறேன் கேள்
ஷேத்ரபாலர்கள் குறித்த இந்த மந்த்ரங்கள் அனைத்து தடைகளையும் அழிக்க வல்லவை யாகும்

கருடம் காலமநலம் பிண்டீ க்ருத்யாங்க யேத் தத
சவ்யாபி நாதி தேவேந க்ஷேத்ர பாலயா வை நம –50-
ப்ரணவாத்யோ முநஸ் சாயம் ஷேத்ரஸ்ய நவ அக்ஷர –51-1-

கருடன் என்பதைக் குறிக்கும் -ஷ
காலத்தைக் குறிக்கும் -ம்
அக்னியைக் குறிக்கும் -ர
இவற்றைத் தொடர்ந்து எங்கும் வியாபிக்கும் தேவர்களைக் குறிக்கும் புள்ளி
இதன் பின்னர் ஷேத்ர பாலாய வை நம
தொடக்கத்தில் பிரணவம்
ஓம் ஷ்ரமாம் க்ஷேத்ர பாலாய வை நம -முழு மந்த்ரம் ஒன்பது எழுத்துக்கள் கொண்டது –

அநு தாரா ஸ்ரியை பச்சாந் நமஸ் த்வாதவ் தாரக –51-2-
ஷடக்ஷரஸ் ஸ்ரியோ மந்த்ரஸ் சண்டாதீந பராஞ்ஸ்ருணு –52-1-

தொடக்கத்தில் தாரகமான ஓம்
அதைத் தொடர்ந்து தாரகமான ஸ்ரீ
அதனைத் தொடர்ந்து ஸ்ரியை நம
இப்படியாக ஆறு அக்ஷரங்கள் கொண்ட மந்த்ரம் உள்ளது
ஓம் ஸ்ரீம் ஸ்ரியை நம

இதனைத் தொடர்ந்து சண்டாதி மந்த்ரத்தைக் கேட்ப்பாயாக

ஸ சஞ்சல அநலஸ் தாரஸ் கேவலஸ் த்வாதிநோ பவேத் –52-2-

சண்டாய நம இத்யேவ ஸப்த வர்ணோ மநூத்தம –53-1-

தொடக்கத்தில் ஓம் என்பதும்
தொடர்ந்து சஞ்சலத்தைக் குறிக்கும் ச என்பது
அக்னியைக் குறிக்கும் ர என்பது உடன் இணைந்து
சண்டாய நம என்பது -ஏழு எழுத்து மந்த்ரம் -ஓம் ஸ்ரோம் சண்டாய நம

ஸ பவித்ர அநலஸ் தார கேவலஸ் த்வாதிதோ பவேத் –53-2-

ப்ரசண்டாய நமோ மந்த்ர ப்ரசண்ட அயம் சதுர் யுக –54-1-

தொடக்கத்தில் ஓம் என்பதும்
தொடர்ந்து தூய்மையைக் குறிக்கும் ப என்பதும்
அக்னியைக் குறிக்கும் ர என்பதுடன் இணைந்து
ப்ரசண்டாய -ஓம் ப்ரோம் ப்ரசண்டாய நம -நான்கு யுகங்களிலும் எனது தீவிடமான செயல்பாடுகளைக் குறிக்கும்

ஸ ஸாஸ்வத அநலஸ் தார கேவலஸ் த்வாதிதோ பவேத்–54-2-

ஜயாய நம இத்யேவம் ஜயஸ்ய முநி வர்ணக –55-3-

தொடக்கத்தில் ஓம் என்பதும்
தொடர்ந்து சாஸ்வதத்தைக் குறிக்கும் ஜ என்பதும்
அக்னியைக் குறிக்கும் ர என்பதுடன் இணைந்து
ஜெயத்தை குறிக்கும் மந்த்ரம் -ஓம் ஜ்ரோம் ஜயாய நம -என்று முனிவர்கள் வர்ணிக்கிறார்கள் –

வராஹ அநல ஸம் யுக்தஸ் தார சுத்தஸ் ததாதிக –55-2-

விஜயாய நம ஸோயம் விஜயஸ்ய சதுர் யுக –56-1-

வராஹம் மற்றும் அக்னி ஆகியவற்றைக் குறிக்கும் ர என்பதுடன் இணைந்து
அதன் பின்னர் விஜயாய நம -ஓம் வ்ரோம் விஜயாய நம –விஜயத்தைக் குறிக்கும் மந்த்ரம்

கோவிந்த ஸ அநலோ மாயீ வ்யாபிமாந் ப்ரணவாந்தர –56-2-

கங்காயை நம இதி ஏவம் கங்காயா முனி வர்ணிக –57-2-

தொடக்கத்தில் ஓம் என்பதும்
தொடர்ந்து கோவிந்தம் என்பதைக் குறிக்கும் க என்பதும்
அக்னியைக் குறிக்கும் ர என்பதுடன் இணைந்து
தொடர்ந்து ஈ என்பது அமைந்து
ஓம் க்ரீம் கங்காயை நம -கங்கையைக் குறிப்பதாக முனிவர்கள் வர்ணிக்கிறார்கள் –

ஸமாய ஸ அநல ஸூஷ்மோ வ்யாபிமான் ப்ரணவாந்தர –57-2-

யமுனாய நமச்சாயம் யாமுனேயச் சதுர் யுக –58-1-

தொடக்கத்தில் ஓம் என்பதும்
தொடர்ந்து மாயா என்பதைக் குறிக்கும் ய என்பது
அக்னியைக் குறிக்கும் ர என்பதுடன் இணைந்து
ஓம் ய்ரீம் யமுனாயை நம-யமுனையைக் குறிப்பதாக முனிவர்கள் வர்ணிக்கிறார்கள் –

சங்கரஸ் ஸ அநலஸ் ச ஊர்ஜோ வ்யாபிமாந் ப்ரண வாந்தக ஸ் –58-2-

ததச்ச சங்க நிதயே நம சோயம் நவாக்ஷர –59-1-

ஓம் என்பதைத் தொடர்ந்து சங்கா என்பதைக் குறிக்கும் ச என்பது
அக்னியைக் குறிக்கும் ர என்பதுடன் இணைந்து
தொடர்ந்து உ என்பது நெடிலாக அமைந்து
தொடர்ந்து அ என்பதும் புள்ளியும் சேர்ந்து
அதன் பின்னர் சங்க நிதயே நம என்பது ஒன்பது எழுத்துக்கள் கொண்ட மந்திரமாக
ஓம் ஸ்ரூம் சங்க நிதயே நம

பவித்ரஸ் ஸ அநலஸ் ச ஊர்ஜோ வ்யாபிமாந் ப்ரண வாந்தக ஸ் –58-2-

ததச்ச பத்ம நிதயே நம சோயம் நவாக்ஷர –59-2-
க்ஷேத்ரே சாத் பத்ம நியந்தம் மந்த்ராணாம் தசகம் த்விதம் –60-

ஓம் என்பதைத் தொடர்ந்து தூய்மையான அக்னியைக் குறிக்கும் ர என்பதுடன் இணைந்து
தொடர்ந்து உ என்பது நெடிலாக அமைந்து
அதன் பின்னர் பத்ம நிதயே நம என்பது ஒன்பது எழுத்துக்கு கொண்ட மந்திரமாக உள்ளது
ஓம் ப்ரூம் பத்ம நிதயே நம

இப்படியாக க்ஷேத்ரம் –
ஸ்லோகம் -49 தொடங்கி –
பத்ம நிதயே-ஸ்லோகம் -60 -வரை 10 மந்த்ரங்கள் கூறப்பட்டன

—–

கணே ஸாத்யாதி ஸித்தாந்த மத மந்த்ர கணம் ஸ்ருணு
ஊர்ஜ வ்யாபி ஸமா யுக்தோ கோவிந்த ப்ரணவாந்தக–61

அடுத்து கணேச மந்த்ரம் போன்ற ஸித்தாந்த மந்த்ரங்களுடைய தொகுப்பைக் கூறக் கேட்ப்பாயாக
ப்ரணவத்தைத் தொடர்ந்து கோவிந்த என்பதைக் குறிக்கும் க என்பதுடன்
ஊ என்பதையும் இணைந்து புள்ளி

ததோ கோவிந்த வைகுண்டவ் பவித்ர ஸ்ரக்தரஸ் ததா
ஜகத் யோநி கதஸ் சாங்கோ நர காலோ விஸர்க்க வான் –62-

அதன் பின்னர் கோவிந்த என்பதைக் குறிக்கும் க
வைகுண்ட என்பதைக் குறிக்கும் ண
பவித்ர என்பதைக் குறிக்கும் ப
ஸ்ரக்தா என்பதைக் குறிக்கும் த
இறுதியாக ஜகத் யோநி என்பதை விளக்கும் ஏ என்பதுடன் சேர்ந்த ய
தொடர்ந்து நர என்பதும்
காலத்தைக் குறிக்கும் விசர்க்கமும்

நவ அஷரோ ஹி அயம் மந்த்ரோ காண பத்ய ப்ரகீர்த்தித
ஷோடா ஸம் யோஜ்ய கோவிந்தம் யுகமாத்யைர் கோப நாதி பிர் –63-

அங்க ல்ருப்திர முஷ்ய ஸ்யாந் நம ஸ்வாஹாதி ஸம் யுதா -64-1-

இப்படியாக ஒன்பது எழுத்துக்கள் கொண்ட மந்திரமாக காண பத்ய என்பதும் உள்ளது
ஓம் கூம் கண பத்யே நம
மேலும்
ஓம் என்பது கோவிந்த என்னும் க என்பதுடன் பல வகைகளிலிம் இணைந்து
இறுதியாக ஹ்ருதயம் சிரஸ் சிகை ஆகியவற்றுடன் ஸ்வாஹ என்பதுடன் சேர்கிறது
இவை ஓம் காம் ஹ்ருதயாய நம –
ஓம் கீம் சிரஸே ஸ்வாஹா –
ஓம் க்ரூம் சிகாயை வஷட் -என்பது போன்றவை ஆகும்

ரேப ஸங்காதி தேவாட்யம் ஸோமம் வ்யாபி ஸமந்விதம் –65-2
சதுர்தம் ஸம்ஸ்மரேத் பீஜம் தத் இதம் பல ஸூதந
வைராஜ அநல சங்காட்யம் கோபநம் வ்யாபி ஸம் யுதம் –66-
ஸோம வர்ணம் ஸ்மரேச் சக்ர பஞ்சமம் பரம அத்புதம்
அப்ரமேயாதி தேவாதி யாவத் கருட வர்ணகம் –67-
யதா பாடம் சமுச்சார்ய வாகீஸ் வர்யை ததோ நம
ஏக ஷஷ்ட் யர்ணகோ மந்த்ரோ வாகீஸ் வர்யா அயம் ஸ்ம்ருத –68-

அதன் பின்னர் ர என்பதுடன் ய என்பதும்
ஆதி தேவனுடைய ஆகாய வர்ணமாகிய ஸ என்பது இணைகிறது
இத்துடன் பிந்துவும் இணைந்து மூன்றாவது பீஜம் உண்டாகிறது
இது -ஸ்ரயாம் -என்று ஆகிறது
பல ஸூதநா
அடுத்தது நான்காவது பீஜம் இவ்வாறு உண்டாகிறது
வைராஜம் மற்றும் அக்னியைக் குறிக்கும் ர உடன் ய -கோப நம் என்பதன் ஆதாரமாகிய பிந்து
சோம்னைக் குறிக்கும் வர்ணம் ஆகியவை சேர்ந்து
ஸ்த்ரயாம் -என்பது உண்டாகிறது
பின்னர் அ என்பது தொடங்கி ஷ என்பது முடிய உள்ள ஐந்தாவது பீஜம் உண்டாகிறது
இப்படியாக உள்ள அக்ஷரங்களுடன் அநு ஸ்வார உச்சாரணம் செய்யப்பட்டு
வாகீஸ் வர்யை நம -என்னும் மந்த்ரம் கூறப்படுகிறது
இப்படியாக 61 அக்ஷரங்களுடன் கூடிய வளாக வாகீஸ்வரி உள்ளாள் என்று அறிய வேண்டும்

ஓம் ஷ்ரீம் ஹ்ரீம் ஸ்ரயாம் ஸ்தரயாம் –ஆகிய ஐந்து பீஜங்கள் உள்ளன
இவற்றைத் தொடர்ந்து க முதல் ம முடிய உள்ள 25 ஸ்பர்ச எழுத்துக்கள் உள்ளன
அதன் பின்னர் அ தொடங்கி விஸர்க்கம் முடிய உள்ள 16 ஸ்வர எழுத்துக்கள் உள்ளன
அதன் பின்னர் ய தொடங்கி ஷ முடிய உள்ள 9 எழுத்துக்கள் உள்ளன
அதன் பின்னர் வாகீஸ் வர்யை நம என்பதில் 6 எழுத்துக்கள் உள்ளன
இப்படியாக -61- எழுத்துக்கள் -5+25+16+9+6அக்ஷரங்களுடன் கூடியவளாக
வாகீஸ்வரி உள்ளாள் என்று அறிய வேண்டும் –

குர்யாச் சதுர்த பீஜேந கோபநாதி விபேதிநா
அந்தர் ஜாதி யுதாம் ஸம்ய கங்க க்ல்ருப்திம் விசஷண–69-

கோப நாதி விபந்நஸ்ய பீஜஸ் ஆதி அந்தர் யோந்யே ஸேத்
பிரணவம் ச நமஸ் சைவ ததோ ஜாதிம் பிரகல்பயேத் –70-

அதைத் தொடர்ந்து நான்காக உள்ள ஸ்ரயாம் -என்னும் பீஜத்தின் பின்னர்
ஹ்ருதய -என்னும் அமைப்பு உள்ளது
கோபநம் என்பதற்கு ஆதாரமாகத் தனித்தனியே பிரிந்துள்ள -ஸ்ரயாம் -என்னும் பீஜத்தின் தொடக்கத்தில் பிரணவம் வைக்கப்பட்டு
இறுதியில் நம என்பதும் உள்ளது
ஒத்து ஓம் ஸ்ரயாம் ஹ்ருதயாய நம –என்னும் ஹ்ருதய மந்த்ரமாகிறது
இதன் பின்னர் சிரஸ் முதலான மந்த்ரங்கள் உள்ளன-

ப்ரணவ த்ரி தயம் வ்யாபி ஸம்யுத சோத யச்ச க
குரவே அத நம ஸ அயம் ப்ரதிதோ குரு பூஜநே –71-

அடுத்து மூன்று முறை பிரணவம் -எங்கும் வியாபித்து உள்ள பிந்து என்னும் புள்ளி –
க வர்ணத்தின் உகாரம் சேர்ந்து குரவே நம -என்பது உள்ளது
இது குருவைப் பூஜிக்கும் மந்த்ரம் ஆகிறது -ஓம் ஓம் ஓம் கும் குரவே நம

ப்ரணவ த்ரிதயஸ் யாந்தே பவித்ரோ வ்யாபி ஸம்யுத
பரம குரவே நம பிரதிதஸ்து குரோர் குரு –72-

அடுத்து மூன்று முறை பிரணவம்
எங்கும் வியாபித்துள்ள பிந்து -புள்ளி
பவித்ரத்தைக் குறிக்கும் பம் -என்பதன் பின்னர்
பரம குரவே நம -என்பது அமைகிறது
இது குருவின் குருவைப் பூஜிப்பதாகும் -ஓம் ஓம் ஓம் பம் பரம குரவே நம –

ப்ரணவ த்ரித யஸ் யாந்தே வ்யாப்ய ஆநந்த யுதஸ்து
பரமேஷ்டி மேநே அத ச நமோ மந்த்ரோ குரு குரோர் குரு –73-

அடுத்து மூன்று முறை பிரணவம் –
எங்கும் வியாபித்து உள்ள பிந்து புள்ளி
ஆனந்தத்தின் ஆகாரத்தைக் குறிக்கும் ப என்பதுடன்
பின்னர் பரமேஷ்டிநே நம -என்பது அமைகிறது
இதுவே குருவின் குருவைப் பூஜிப்பதாகும்
ஓம் ஓம் ஓம் பாம் பரமேஷ்டிநே நம

தார பஞ்சக மாஹ்ருதாம் வ்யோம ப்ராணோ பரி ந்யசேத்
கால அனலவ் து தததஸ் ஸர்வ லோகேஸ்வரோ பரி –74-
யதா க்ரம உதிதை வர்ணை பிண்டம் க்ருத்வா தத ஸ்வதா
பித்ருப்ய அத நம ஸ அயம் பித்ரு சங்கஸ்ய மந்த்ர ராட் –75-

அடுத்து
ஐந்து முறை பிரணவம்
தொடர்ந்து ஹ
அதன் முன்னாக ட
இவை இரண்டும் வ்யோம ஸூன்யத்தைக் குறிக்கும் பிந்துவுடன் அமைகிறது
அதனைத் தொடர்ந்து காலம் மற்றும் அக்னியைக் குறிக்கும் ம மற்றும் ர அமைகிறது
இது ஸர்வேஸ்வரனைக் குறிக்கும் உ என்பதுடனும்
பிந்துவுடனும் உள்ளது
இந்த வரிசையில் உத்பத்தியாகும் எழுத்துக்களின் பின்னே ஸ்வதா எண்பதுடனும்
தொடர்ந்து பித்ருப்ய நம -என்பது அமைகிறது
இது பித்ரு மந்திரங்களில் உயர்ந்ததாகும்
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ட் ஹ்ம் ரூம் ஸ்வதா பித்ருப்ய நம –

ஷட் தாரா ஆதி தேவ அத வ்யோம வான் கேவல அத ஸ
ராமவான் தம நச்சாத சித்தேப்ய அத ததோ நாம –76-

மந்த்ர அயம் இதி ஸித்தா நாம் பகவத் பாவி தாத்ம நாம்
க்ஷேத்ரே ஸாத்யாதி சித்தாந்தான் வித்ந நிர்மத ந ஷமான் –77

அடுத்து ஆறு முறை பிரணவம்
அதன் பின்னர் எங்கும் வியாபித்துள்ள பிந்து புள்ளி –
ஆதிதேவனைக் குறிக்கும் ஆ என்பதுடன்
பிந்து இணைந்து
ஸித்தேப்யோ நம
இது பகவானை ஆத்மாவாகக் கொண்டு பூஜிப்பதாகும்
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஆம் ஆதி ஸித்தேப்யோ நம

ப்ராண காலாதி தேவைச்ச வ்யாபி நாபி ச பிண்டகம்
அக்நேய நம இதி ஏவம் யமாய நம இதி அபி –71–

ப்ராணனைக் குறிக்கும் -ஹ
காலத்தைக் குறிக்கும் -ர
ஆதிதேவ ஆகாரத்தைக் குறிப்பதாக புள்ளி பிண்டகம் ஆகியவற்றுடன்
நம என்பது இணைந்து
ஓம் ஹ்ராம் அக்நேய நம மற்றும்
ஓம் ஹ்மாம் யமாய நம –ஆகிய மந்த்ரங்கள் உள்ளன –

நரஸ் ஸ பகவான் வ்யாபீ பிண்டோ நிர்ருதயே நம
யாது தாநேச மந்த்ரஸ் அயம் ஜலசஸ் யாவதாரய

நர என்பதைக் குறிக்கும் ந
பகவானைக் குறிக்கும் ல்ரு
தொடர்ந்து புள்ளி
தொடர்ந்து நிர் ருதயே நம –என்பது அமைகிறது
இது
ஓம் ந்ல்ரும் நிர் ருதயே நம –என்று ஜல அதிபதியான வருண மந்திரமாகும் –

ப்ராணம் வருணம் ஆனந்தம் வ்யாபிநம் பிண்டயேத் புத
வருணாய நம பச்சாத் வருணா அயம் மநூத்தம –73-

ப்ராணனைக் குறிக்கும் ஹ
வருணனைக் குறிக்கும் வ
ஆனந்தத்தைக் குறிக்கும் ஆ
தொடர்ந்து புள்ளி
இதன் பின்னர் வருணாய நம -மிகவும் உத்தமமான மந்திரமாகும் -ஓம் ஹ்வாம் வருணாய நம

ப்ராணம் ஸூஷ்மம் தத் ஆனந்தம் வ்யாபிநம் பிண்டயேத் புத
வாயவே நம இதி ஏவம் வாயவீயோ மநூத்தம –74-

ப்ராணனைக் குறிக்கும் ஹ
ஸூஷ்மத்தைக் குறிக்கும் ய
ஆனந்தத்தைக் குறிக்கும் ஆ
தொடர்ந்து புள்ளி -வாயவே நம -ஓம் ஹ்யாம் வாயவே நம

கர்மாம்சு வருண ஆனந்தான் வ்யாபிநா ஸஹ பிண்டயேத்
ஸோமாய நம இதி ஏவம் ஸும்யோ மநு ருதா ஹ்ருத –75

கர்மத்தின் அம்சமான த
வருணனைக் குறிக்கும் வ
ஆனந்தத்தைக் குறிக்கும் ஆ
தொடர்ந்து புள்ளி -ஸோமாய நம -கொண்டாடத்தக்க மந்த்ரம் -ஓம் த்வாம் ஸோமாய நம

ஸூர்யம் ஊர்ஜம் ததா சக்ரிணம் பிண்ட யேத் க்ரமாத்
ஈஸாநாய நம பச்சாத் ஈஸா நஸ்ய மநூத்தமம் –76-

ஸூர்யனைக் குறிக்கும் ஹ
மேற்பாகத்தைக் குறிக்கும் உ
சக்ரியைக் குறிக்கும் ச
தொடர்ந்து புள்ளி -பின்னர் ஈஸா நாய நம -உத்தமமான மந்த்ரம் -ஓம் ஹ்ஸூம் ஈஸா நாய நம

ப்ராணம் வைகுண்டம் ஆனந்தம் வ்யாபி நா பிண்டயேத் க்ரமாத்
அநந்தாய நம பச்சாத் நாக ராஜம் அநுஸ் த்வயம் –77

ப்ராணனைக் குறிக்கும் ஹ
வைகுண்டத்தைக் குறிக்கும் ண
ஆனந்தத்தைக் குறிக்கும் ஆ
தொடர்ந்து புள்ளி -அநந்தாய நம –நாகராஜனுக்கு அமைந்த உத்தமமான மந்த்ரம் -ஓம் ஹ்ணாம் அநந்தாய நம

ப்ராணம் கர்வம் தத் ஆனந்தம் வ்யாபி நா பிண்டயேத் க்ரமாத்
ப்ரஹ்மணே நம இதி ஏவம் ப்ரஹ்மணோ மநுத்தமம் -78

ப்ராணனைக் குறிக்கும் ஹ
கர்வத்தைக் குறிக்கும் க
ஆனந்தத்தைக் குறிக்கும் ஆ
தொடர்ந்து புள்ளி ப்ரஹ்மணே நம -என்பது ப்ரஹ்மத்தின் பொருட்டு அமைந்த
உத்தமமான மந்திரமாகும் -ஓம் ஹ்காம் ப்ரஹ்மணே நம

ஸர்வேஷாம் ப்ரணவ பூர்வம் ஆயுதா நாமதோ ஸ்ருணு
அநலம் ஜந்ம ஹந்தாரம் ப்ரதாநம் அநலோர்ஜகவ் –79
சர்கேண பிண்டயேத் ஸம்ஜ்ஞானம் நமஸ் குசில மந்த்ராட் –80-1

அக்னியைக் குறிக்கும் ர
பிறவிகளைப் போக்குதலைக் குறிக்கும் ஐ
பிரதானத்தைக் குறிக்கும் ம
அக்னியைக் குறிக்கும் ர
மேலே எழும்புதலைக் குறிக்கும் ஊ
முதலிலே பிரணவம்
அதன் பின்னர் குசிலாய நம
இப்படியாக குசில மந்த்ர ராஜ மந்த்ரம் -ஓம் ஜ்ரூம் குசிலாய நம

ஊர்ஜம் விஹாய தத் ஸ்தாநே மாயயா பரி பூஷிதம் –80-2-
ததேவ பிண்டம் ஸம்ஜ்ஞா ச நம ஸக்தி மநுஸ் த்வயம் –81-1-

மேலே கூறப்பட்ட மந்திரத்தில் தொடக்கத்தில் உள்ள ஊ என்ற இடத்தில் மாயயைக் குறிக்கும் ஈ அமைகிறது
அதன் பின்னர் வருகின்ற நம என்பதுடன்
சக்தி மந்த்ரம் உள்ளது -ஓம் ஜ்ரீம் சக்த்யே நம

அகண்ட விக்ரமம் காலம் லோகேஸம் பரமேஸ்வரன் -81-2-
பிண்டீ க்ருத்ய தத ஸம்ஞ்ஞா நமோ தண்டம் அநுஸ் த்வயம் -82-1-

பூர்ணமான வீரத்தைக் குறிக்கும் ட
காலத்தைக் குறிக்கும் ம
லோகத்துக்கு ஈசனாக உள்ளதைக் குறிக்கும் ஊ
பரமேஸ்வரனைக் குறிக்கும் விஸர்க்கம்
இத்துடன் தண்டாய நம என்பது இணைந்து ஓம் ட்மூ தண்டாய நம -என்னும் தண்ட மந்த்ரம் உண்டாகிறது

விஸ்வாப் யாயகரம் காலம் க்லேசம் பரமேஸ்வரம் –82-2
பிண்டீ க்ருத்ய ததஸ் ஸம்ஜ்ஞா நமஸ் கட்கம் அநுஸ் த்வயம் –83-1-

விஸ்வம் உண்டானதைக் குறிக்கும் ல
காலத்தைக் குறிக்கும் ம
லோகத்துக்கு ஈசனாக உள்ளதைக் குறிக்கும் ஊ
பரமேஸ்வரனைக் குறிக்கும் விஸர்க்கம்
இத்துடன் கட்காய நம என்பது இணைந்து ஓம் ட்ரூம் கட்காய நம -என்னும் வாளைக் மந்த்ரம் உண்டாகிறது

சந்த்ரீ சாந்த ஆதி தேவவ் ச ஸ்ருஷ்ட்டி க்ருத பிண்டிதா இமே –83-2-
பாசாய நம இதி ஏவம் பாச மந்த்ர அயம் அத்புத –84-2-

சந்த்ரியைக் குறிக்கும் ட
சாந்தத்தைக் குறிக்கும் ச
ஆதி தேவனைக் குறிக்கும் ஆ
ஸ்ருஷ்ட்டியைக் குறிக்கும் விஸர்க்கம்
இத்துடன் ஓம் பாசாய நம இணைந்து ஓம் ட் சா பாசாய நம -என்னும் பாசத்தைக் குறித்த அற்புதமான மந்த்ரம் உண்டாகிறது

அஜிதோ வருண ஆநந்தவ ஸ்ருஷ்ட்டி க்ருத் பிண்டிதா இமே –84-2-
த்வஜாய நம இதி ஏவம் த்வஜ மந்த்ர உதீரதே –85-1–

வேறே யாராலும் வெல்ல இயலாததைக் குறிக்கும் -ஜ
வருணனைக் குறிக்கும் வ
ஆனந்தத்தைக் குறிக்கும் ஆ
ஸ்ருஷ்ட்டியைக் குறிக்கும் விசர்க்கம்
இத்துடன் த்வஜாய நம -என்பது இணைந்து -ஓம் ஜ்வா த்வஜாய நம -என்னும் வெற்றிக்கொடியைக் குறித்த மந்த்ரம்

பரமாத்மா அநல உத்தாமாந் பிண்டித ஸ்ருஷ்டி க்ருதான் –85-2-
முஸலாய நம பச்சான் மௌஸல அயம் மநூத்தம –86-1-

பரமாத்மாவைக் குறிக்கும் ஹ
அக்னியைக்குறிக்கும் ர
தொடர்ந்து ஊ
ஸ்ருஷ்ட்டியைக் குறிக்கும் விஸர்க்கம்
இத்துடன் முஸலாய நம இணைந்து -ஓம் ஹ்ரு முஸலாய நம என்னும் மந்த்ரம்

அநலம் ஜன்ம ஹந்தாரம் உதயம் ஸ்ருஷ்டி க்ருதம் –86-2
பிண்டீ க்ருத்ய ததஸ் ஸம்ஜ்ஞா நம சூலம் அநுஸ் த்வயம் –87-1-

அக்னியைக் குறிக்கும் ர
ஜென்மத்தை வெட்டுவதைக் குறிக்கும் ஜ
தொடர்ந்து ஊ-விசர்க்கம் -சூலாய நம இணைந்து ஓம் ர்ஜூ சூலாய நம -என்னும் உத்தமமான மந்த்ரம்

கராலம் அநலா ரூட மோத நம் ஸ்ருஷ்ட்டி க்ருதம் –87-2-
பிண்டீ க்ருத்ய தத ஸம்ஜ்ஞா நமஸ் ஸீரம் அநுஸ் த்வயம் –88-1-

அக்னியைக் குறிக்கும் ர -தொடர்ந்து க -ஊ-விஸர்க்கம் -ஸி ராய நம சேர்ந்து
ஓம் க்ரோ ஸி ராய நம -என்னும் உத்தமமான மந்த்ரம் உண்டாகிறது

வருணம் ச நரம் சைவ ஸ்ருஷ்டி க்ருதம் –88-2-
பிண்டீ க்ருத்ய தத் ஸம்ஜ்ஞா நம பத்மம் அநு ஸ்தவம் –89-1–

வருணனைக் குறிக்கும் வ -நரனைக் குறிக்கும் ந -ஆ -விஸர்க்கம் -பத்மாய நம இணைந்து
ஓம் ந்வா பத்மாய நம -உத்தமமான மந்த்ரம் உண்டாகிறது

ஸர்வேஷாம் ப்ரணவ பூர்வோ விஷ்வக் சேந மநும் ஸ்ருணு –99-2-

அநல ப்ராண லோகேஸாந் வ்யாபிநா பிண்டியேத் க்ரமான்
வருணம் பூதாம் சைவ வ்யாபிநா பிண்டியேத் க்ரமான்–100-

பிண்டி அயம் ஜ்ஞாநத பஸ்ஸாத் விஷ்வக் ஸேநஸ்ய மந்த்ர ராட்
ப்ரணவாதி ஸ்த்வயம் மந்த்ர ஸர்வார்த்த க்ருது தீரித–101

இதுவரை ப்ரணவத்தை முதலில் கொண்ட மந்த்ரங்களைக் கூறினேன்
இனி விஷ்வக் சேனர் குறித்த மந்த்ரங்களைக் கேட்ப்பாயாக
அக்னியைக் குறிக்கும் -ர –ப்ரணவத்தைக் குறிக்கும் ஹ -தொடர்ந்து உ -புள்ளி –
அடுத்து வருணனைக் குறிக்கும் வ பூதரமாகிய ஒவ் -புள்ளி -ஜ்ஞானதாய நம என்பது
மந்திரங்களில் அரசனான விஷ்வக் சேன மந்திரமாகும்
இந்த மந்த்ரம் அனைத்துப் பொருள்களையும் அளிக்க வல்லதாகும்
இதன் முழு வடிவம் -ஓம் ர்ஹும் வவ்ம் ஜ்ஞானதாய நம -என்பதாகும்

ஊர்ஜ ஹீநம் தும் யத் பூர்வம் தேந ஆனந்தாதி யோகிநா
அங்க க்லுப்தி அமுஷ்ய ஸ்யாஜ்ஜாதி முத்ரா ஸமந்விதா –102-

இதற்கு முன்பாக ஹ்ரூம் என்பது பற்றி நான் உரைத்தேன்
அதில் உள்ள ஊ என்பது ஹ என்பதுடன் இணைந்து ஆ -ஆனந்தத்தைக் குறிக்கும்
இது விஷ்வக் சேனருடைய அங்க ந்யாஸ மந்திரமாகும்
இதன் முழு வடிவம் -ஓம் ஹ்ராம் ஹ்ருதாய நம -என்பதாகும்

ஸோமம் வருணம் ஈகாரம் வ்யாபிநா பிண்ட யேத் க்ரமாத்
ஸூரப்யை நம இதி ஏவம் தார பூர்வோ மனுஸ் த்வயம் –103
ஸூ ரப்யாஸ் கதிதஸ் ஸர்வ போக ஸம் பூர்ணார்த்தக –104-1

சோமனைக் குறிக்கும் ஸ -வருணனைக் குறிக்கும் வ -தொடர்ந்து ஈ -புள்ளி -தொடக்கத்தில் ஓம் -இறுதியில் ஸூரப்யை நம என்பது ஸூரபி மந்திரமாகும்
இதன் முழு வடிவம் -ஓம் ஹ்ராம் ஸூ ரப்யை நம
இந்த ஸூரபி மந்த்ரம் அனைத்து போகங்களையும் பூர்ணமாக அளிக்கும் –

ப்ரணவ த்வித யஸ் யாந்தே தாரிகா த்வயம் உத்தரேத் –104-2
தத பரம தாமா ச அவஸ்திதே மத் அநுக்ரஹா
அபியோ கோத்யதே ச இஹ ததைவா வதரேதி ச –105
இஹம் அபிமத ஸப்தம் ச ஸித்தேதி இதி ச த்ரயம்
ததோ மந்த்ர சரீரே ச தாரஸ் தரா நமோ நம -106-
பஞ்ச ஸத் வாரிம் சதர்ணோ மந்த்ர ஆவாஹ நார்த்தக –107-1-

இரண்டு பிராணவங்கள் தொடர்ந்து இரண்டு தாரக மந்த்ரங்கள் -அதனைத் தொடர்ந்து
பரம தாமா ச அவஸ்திதே மத் அநுக்ரஹ–அபியோ கோத்யதே ச –இஹ அவதரேஹ அபிமத ஸித்ததே மந்த்ர சரீரே –என்பதும்
அதனைத் தொடர்ந்து ப்ரணவமும் -அதன் பின்னர் ஹ்ரீம் நமோ நம என்பதும் கூறப்படுகிறது
இது 45 அக்ஷரங்கள் கொண்ட ஆவாஹந மந்திரமாகும்
இதன் முழு வடிவம்
ஓம் ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் பரம தாமா ச அவஸ்திதே மத் அநுக்ரஹ–அபியோ கோத்யதே ச –இஹ அவதரேஹ அபிமத ஸித்ததே மந்த்ர சரீரே –ஹ்ரீம் நமோ நம -என்பதாகும்

ப்ரணவ தாரிகா ப்ராணஸ்த்ரய ஸவ்யாபி நஸ் ததஸ்–107-2-
தஸ் த்ரச்ச தாரிகா பச்சாத் இதம் ஸப்தம் த்ரி உச்ச ரேத்
ஸ்ருணு வஹ்னி ஜாயா ச போக தானம் அநுஸ் த்வயம் –108-

ஓம் என்னும் பிரணவம் -அதனைத் தொடர்ந்து ஹ்ரீம் என்னும் தாரிக மந்த்ரம் -தொடர்ந்து பிராணனைக் குறிக்கும் ஹ ஹ ஹ -இவற்றில் புள்ளிகள்
தொடர்ந்து மீண்டும் மூன்று தாரிக மந்த்ரம் ஹ்ரீம் -தொடர்ந்து ஹிதம் ஹிதம் ஹிதம் -தொடர்ந்து அர்க்யம் க்ரஹாண -அமைகிறது
இது அர்க்க்ய மந்திரமாகும் -இதன் முழு வடிவம்
ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹம் ஹம் ஹம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹிதம் ஹிதம் ஹிதம் அர்க்யம் க்ரஹாண ஸ்வாஹா -என்பதாகும்

ஓங்காரம் உத்தரேத் பூர்வம் விஷ்ணு வ்யோம அந்விதம் ததஸ்
தாரிகாம் உத்தரேத் பச்சாத் அபயோ விஷ்ணும் ததாவிதம்–109-
ததோ வ்யோம அந்விதம் ப்ராணம் ஸோம நாம ஸமந்விதம்
பரே ச பரமேச ச ப்ரஸீத ப்ரணவம் ததஸ் –110-
தாரிகா ச நமஸ் அந்தே ப்ரஸாத நமஸ் த்வயம் –111-1

முதல் ஓம் -தொடர்ந்து வ்யோமம் ஆகாசம் சூன்யம் ஆகிய இரண்டும் இணைந்த விஷ்ணுவைக் குறிக்கும் ஈ
அதனைத் தொடர்ந்து தாரிகையைக் குறிக்கும் ஹ்ரீம் -அதன் பின்னர் மீண்டும் விஷ்ணுவைக் குறிக்கும் ஈ
அதன் பின்னர் பிராணனைக் குறிக்கும் ஹம் -சோம்னிக் குறிக்கும் ஸ அதன் பின்னர் பரே பரமேச ப்ரஸீத
அதன் பின்னர் ஓம் -ஹ்ரீம் -நம -சிறந்த ப்ரஸாத மந்திரமாகும்
இதன் முழு வடிவம்
ஓம் ஈம் ஹ்ரீம் ஈம் ஹம்ஸ பரே பரமேச ப்ரஸீத ஓம் ஹ்ரீம் நம -என்பதாகும் –

ப்ரணவ தாரிகா சைவ ததோ பகவத் இதி ச –111-2-
மந்த்ர மூர்த்தே அத ஸ்வ பதம் ஸமா சாதய தத் த்வயம்
க்ஷமஸ்வ இதி த்விருச்சார்ய தாரஸ் தாரா நமோ நம –112-

முதலில் ப்ரவணமாகிய ஓம் -பின் தாரிகையைக் குறிக்கும் ஹ்ரீம் -அதன் பின்னர்
பகவதி மந்த்ர மூர்த்தே ஸ்வ பதம் ஸமா சாதய ஸமா சாதய-அதன் பின்னர்
இரண்டு முறை க்ஷமஸ்வ -ஓம் -ஹ்ரீம் நமோ நம -இது விஸர்ஜ மந்திரமாகும்
இதன் முழு வடிவம்
ஓம் ஹ்ரீம் பகவதி மந்த்ர மூர்த்தே ஸ்வ பதம் ஸமா சாதய ஸமா சாதய க்ஷமஸ்வ க்ஷமஸ்வ ஓம் ஹ்ரீம் நமோ நம –என்பதாகும்

வை சர்ஜ நம நுஸ் ஸ அயம் இதி ஏதே மந்த்ர நாயகா
கதிதா ஸூர சார்தூல ஸர்வ பாப மல அபஹா –113-

இந்திரனே இப்படியாக இந்த மந்த்ரங்களுடைய நாயகியாக உள்ள நான் அனைத்து மந்திரங்களையும் கூறினேன்
இவை அனைத்து தோஷங்களையும் பாபங்களையும் அபஹரிக்கும்

அபக்தாநாம் ச யே ந ஏவ ப்ரதேயோ க்ரூர கர்மணாம்
நாஸ்திகா நாம் அஸாதுநாம் தூர்தா நாம் வஞ்ச ஜூஷாம் –114

குரூரமான கர்மம் கொண்டவர்கள் -நாஸ்திகர்கள் -ஸாதுக்கள் அல்லாதவர்கள் -மற்றவர்களை தூஷிப்பவர்கள்
வஞ்சகர்கள் ஆகிய பலரும் பக்தர்கள் அல்லாதவர்களே ஆவர் -அவர்களுக்கு இதுவரை கூறியதை உபதேசம் செய்யக்கூடாது

பக்தாநாம் ஆஸ்திகா நாம் ச ஸ்ரத்தா ஸம்ய சேவிநாம்
மதீய க்ரம ஸக்தா நாம் ஸம்ஸ்க்ருதா நாம் விசேஷத –115
தத்வத ச உப ஸந்தா நாம் த்ருட ஸ்ரத்தா அவலம்பி நாம்
வைஷ்ணவா நாம் இதம் வாஸ்யம் அவாஸ்யம் இதரேஷு –116-

பக்தர்களாக உள்ளவர்கள் ஆஸ்திகர்களாகவும் வேதங்களை சிரத்தையுடன் கைக் கொள்ளுபவர்களாயும் வணங்கியவர்களாயும் உள்ளனர்
அவர்களுக்கு என் மீது பக்தியானது நிரந்தரமாக உள்ளது -அவர்கள் எப்போதும் என்னை சரியான முறையில் ஆராதிக்கும் விஷயங்களை அறிந்தபடி உள்ளனர்
சாஸ்திரங்களில் கூறப்பட்ட விதங்களில் எனது திருவடிகளை ஆடுகிறார்கள்
உறுதியும் ஸ்ரத்தையும் சேர்ந்துள்ள அவர்கள் ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்று கூறப்படுகிறார்கள்
மற்றவர்கள் அவ்விதம் கூறப்படுகிறவர்கள் அல்லர்

அந்யதா வக்தி யோ மோஹாத் லோபாத் காமாத் அதாபி வா
அஞ்ஞாநாத் பால பாவாத் சா ஸ யாதி நரகான் பஹுன் –117–

மற்றவர்கள் மயக்கம் சுய நலம் காமம் அஞ்ஞானம் போன்ற பல தோஷங்களை அடைந்தவர்களாக
பலவிதமான நரகங்களிலும் புகுகிறார்கள்

தஸ்மாதா லஷ்யா வை ஸர்வம் குண ஜாதம் யதோதிதம்
ப்ரப்ரூயாத் உப சன்னாயா தர்மேண ந்யாய தஸ்ததா –118-

மற்ற சிஷ்யர்களுடைய குணங்களைக் குறித்து நான் கூறுகிறேன்
அவர்களுக்கு ஞானத்தின் மீது விருப்பம் -சரணம் புகும் பக்தி தர்ம நியாய வழியில் நிற்பது போன்றவை உள்ளன

ப்ரப்ரூ யாத்யோ ஹி அதர்மேண யோ வாதர்மேண ப்ருச்சதி
தாவுபவ் நரகம் கோரம் ருச்சத காலம க்ஷயம் –119-

சிலர் அதர்ம மந்திரங்களையும் அல்லது அதர்ம மார்க்கங்களையும் கைக் கொள்ளக் கூடும்
அவர்கள் காலம் முடிந்தவுடன் நரகம் புகுகிறார்கள்

ப்ருதிவீம் ரத்ன ஸம் பூர்ணம் தத்யாத் யத்யபி வாஸவ
நைவ தேயம் ஹி அபக்தாய நாப ரீக்ஷித சீலேந –120-

இந்திரனே இந்த உலகத்தில் உள்ள பக்தி அற்றவர்களுக்கு அவர்களைச் சோதிக்காமல் இந்த மந்த்ரங்களை உபதேசம் செய்தல் கூடாது

இதி மே பவதோ பக்திர் மயி சக்ர மஹீ யஸீ
தத்த்வதச் சோப ஸத் ரஸ்ய மயேஹ ப்ரீய மாணாய –121-

அங்க உப அங்காதி மந்த்ராணாம் மந்த்ர கோச ப்ரகாசித
முத்ரா கோசம் இதாநீம் த்வம் கதந்த்யா மே நிஸாமய –122-

இந்திரனே இதுவரை உனக்கு நான் மிகுந்த பக்தி தத்வம் உண்மையான ரூபம் உண்மையான அறிவதில் உள்ள ஆர்வத்தின் தன்மை
என்னைச் சரணம் புகுதல் போன்ற பலவற்றையும் கூறினேன் -அடுத்து அங்க உப அங்கத்துடன் கூடிய மந்த்ரங்களைக் கூற உள்ளேன்

—————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருவடி மாலை–ஸ்ரீ ரா. இராகவையங்கார்‌ ஸ்வாமிகள்–

March 6, 2023

ஸ்ரீ திருவடி மாலை அண்ணாமலைப்‌ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்‌ சேது சமத்தான மகாவித்துவான்‌ பாஷா கவிசேகரர்‌ ஸ்ரீ  ரா. இராகவையங்கார்‌

மகாவித்துவான்‌ ரா. இராகவையங்கார்‌ மாலையின்‌ தொடக்கத்தில்‌ உள்ள வாழ்த்தில்‌,
‘திருவினிய பொய்கை’ . என்று பொய்கையாழ்வார்‌
முதலாக குருகைமகிழ்‌ மாறன்‌ பெரிய சடகோபன்‌” ஆகிய குரவர் தாள்‌ சேர்குவர்‌ அடிமையானே’ என்று
குறித்தல்‌ அவர்‌ தம்‌ அடியார்க்கு அடியனாகும்‌ பத்தி நிலையைக்‌ காட்டும்‌.

திருவடிமாலையில்‌ சிலபாடல்கள்‌ திருமால்‌ திருவடி களைப்‌ போற்றுகின்றன. ௪ட கோபரைச்‌ சில பாடல்கள்‌ து.திக்கின்‌றன. பலபா டல்கள்‌ கிருஷ்ணாவதாரம்‌, இராமாவதாரம்‌, நரசிங்காவ வதாரம்‌ முதலிய அவதாரங்கள்‌ பற்றியவையே= திருவேங்கடம்‌, திருவரங்கம்‌, திருமாவிருஞ
சோலை, – திருப்புல்லாணி: முதலிய திருப்பதிகளில்‌ எழுந்தருளிருள்ள எம்‌ பெருமான்‌ களைப்‌ பற்றியவை பல.
திருமால்‌ அருள்‌ வேண்டும்‌ பாடல்கள்‌, மாயோனிடம்‌ முறையிடும்‌ பாடல்கள்‌ சிற்சில, இவ்வாறு திருவடி மாலை பத்தி ரசம்‌ கனிய அமைந்த இன்னிசைப்‌ பாடல்களாகும்‌.

திருவடிமாலையின்‌ இறுதியில்‌ இராமநாம மகமை உரைக்கும்‌ *சீராமநாமப்‌ பாட்டு என்னும்‌ பகுதி உள்ளது.
கல்லாரும்‌ கற்றாரும்‌ கற்கும்‌ நாமம்‌ கங்‌.கை முதல்‌ தீர்த்த பயன்‌ காட்டு நாமம்‌ வில்லாரும்‌ வீரர்‌ செயம்‌ வேண்டும்‌ நாமம்‌ மெய்ம்மைக்கே பரியாயம்‌ வேண்டும் நாமம்‌ என்று இவ்வாறு இராம நாம மகிமை பேசுதலை இப் பகுதியில்‌ காணலாகும்‌.
இந்தப்‌ பக்திப்‌ பனுவல்‌ மகாவித்துவான்‌ வாழ்  நாளி லேயே 1983ஆம்‌ ஆண்டு முதன்‌ முறையாக வெளிடப்‌ பெற்றது. 66 ஆண்டுகளுக்குப்‌ பின்‌ வெளியாகும்‌ இப்‌ பதிப்பினைத்‌ தமிழார்வலர்கள்‌ பெற்றுப்‌ பயன் பெறுவாார்களாக.

————–

வாழ்த்து
‘திருவினிய பொய்கை கருவினொளிர்‌ பூதன்‌
செகமுழுவ தும்பே யெனவகலு நன் பேய்‌
மருவினிய பாணன்‌ வளர்மழிசை பூரன்‌
மசிழ்புதுவை நாதன்‌ மதுரகவி கோதை
அரசினுயர்‌ கொங்கர்‌ மகிபகுல துங்கள்‌
அடியர் பத தூளி யணி குறைய லாளி
குருகைமகழ்‌ மாறன்‌ பெரியசட கோபன்‌.
குரவரிவர்‌ தாள்சேர்‌ குவரடிமை யானே,

விதியோர்தர வியலாத மு குந்தன் மிசை யன்பின்‌
விதுரற்கொரு சபரிக்கெழு பதினாயிர மதிகன்‌
மதியோர் புகழ்‌ குருகூர் மகிழ்‌ மாறன் சட கோபன்‌
மதுரத் தமி ழமிழ்தைப் பொரு மறையைப் பொழி முகிறாள்‌
துதியோர் குரு வழிபாடு செய்‌ கோளூர் மறை வாணன்‌
றுகடீர் மது ரகவீச னிணைச் செம்பத பதுமங்‌
கதியோர் தரு பூதூரெதி ராசன் பத கஞ்சங்‌
கலை தேர் வர வர யோகிகள்‌ கழலே தொழுவோமே.

நூல்

பொருள் கொடுத்து வசை கேட்கும்‌ புல்லர்க்‌ கேயும்‌
பொறுக்கரிதாய்ச்‌ செலிசுடும்வெம்‌ புன்சொல்‌ பெய்தாற்‌
கருள்கொடுத்து மீளாவீ டாங்கே நல்கு
மம்மானின்‌ திருவுளத்துக்‌ காகு மென்றே
தெருள்கொடுத்த பெரியவர்க்குந்‌ தெளிய லாகாத்‌
தெய்வங்கள்‌ தெய்வதமாஞ்‌ செம்மா லுன்னை
யிருள்கொடுத்த நெஞ்சினொடு மேத்து வேன்போ
லிழித்துரையிற்‌ பழித்துரைப்பா னெண்ணினேனே..–1–

மறை யெடுத்துன்‌ குணத்தொன்று வழுத்தப்‌ புக்கு
மனம் வாக்குக்‌ கெட்டாத மகிமைத்‌ தென்றே
யிறையெடுத்துச்‌ சொல மாட்டா தீண்டு மீண்ட
வேற்றமுள போற்றுமுளச்‌ சோதீ யுன்னைத்‌
துறையெடுத்த நெறி தோன்றா நாயேனெய்தச்‌
சொல்லாலே கூவுகின்ற தெல்லாம்‌ பாலர்‌
பிறையெடுத்து விளையாட வாவா வென்று
பிதற்றுகின்‌ற தன்மையினும்‌ புன்மைத்‌ தம்மா.–2-

ஏரி தான்‌ மாரியினுக்‌ கேது வாயி
னிருவிழிநோக்‌ கிரவிவரற்‌ கேது வாயிற்‌
சீரிதா நின்னருட்கு நாயேன்‌ செப்புஞ்‌
சிறுசொல்லு மேதுவெனச்‌ சிறக்கு மம்மா
பாரினீ யருள் செய்வாய்‌ செய்யா யானோ
பயன்கருதேன்‌ பருகுபவன்‌ பருகா துய்யா
னோரில்யா னவனாக வுன்னை யேத்தா
துய்யாமை யேத்தினே னுடைய கோவே.–3-

சொல்லாலே மேலாப்புச்‌ செய்து வானிற்‌
.றிகழ்சோலை மலை மேய தேவ தேவே
சொல்லாலே யுனை வழுத்தத்‌ துணிவ தெல்லாந்‌
துகிலாலே யெரிய விக்கத்‌ துணிவ தாகும்‌
வில்லாலே யாகாய மெய்வ தாகும்‌
விரலாலே வளி யளக்க. மேவ லாகுங்‌
கல்லாலே பெருங்கடனீர்‌ கடத்த லாகுங்‌
காலாலே வானேறக்‌ கற்ப தாமே.–4-

5. அவியாத்‌ தருப்பைவெஞ்‌ சாயக
மாஞ்சிலை யாரணங்காந்‌
தவியாக்‌ கரியர சாகுந்‌
தயிர்க்குடத்‌ தங்குமுத்தி செவியாற்‌ கனவினுந்‌ தெய்வக்‌
கவிகை தெரிந்திலெனைக்‌
கவியாக்கி யாண்ட முழுமுதற்‌று ஓன்மைக்‌ கடவுளுக்கே.

6. ஏழு லோகமும்‌ வாழ வென்று ஓரு
சோழ  மண்டல மீதுதன்‌
னிணையில் காவிரி நடுவி லேயர
வணையிலே வளர்‌ தெய்வதம்‌
மாழை மாதகலாது மின்னென
மார்பிலே யொளி ரருண் முகில்‌
வள மிகுந்தமிழ்‌ மறை மொழிந்துயர்‌
பதின்ம ராடு குணக் கடல்‌
வேழ மென்பதன் வாயினால் வெளி
யாகி வந்த விழுப்பரம்‌
வேத முள்ளன யாவையும் முத
லீறு மோதும்‌ வியன் சுடர்‌
ஊழி யின்னுயிர்‌ முழுதை யுந்தன துதரம்‌ வைத்த தனிப் பொருள்‌
உம்ப ரிம்பரெ லாமு நாபியி
தய மாமுழு முதலரோ.

7. கடன்மிசைக்‌ கிடந்த கருணை வா ரிதியைக்‌
கன் மழை தடுத்த கார்‌ முகிலை
யடன் மிசைத்‌ தேவர்க்‌ கமுது பெய்‌ யாரா
வமுதினை யலர் மகட்‌ கணியை
மடன் மிசைத்‌ தேன் பாய்‌ மாலிருஞ்‌ சோலை
மலை மிசை மரகத மலையை
யுடன் மிசைச்‌ சுழலும்‌ புன் பிறப்‌ பொழிவா
னுள்ளினே னெள்ளினே னுலகே.

8. பல்லா யிரம் பழி சூழ்கின்ற யானுன்‌ பதுமபத
மல்லாற்‌ றொழுது துதித்தறி யேனகி லாண்டமுத
லெல்லாம்‌ வயிற்றி னடக்கி யளிக்கின்ற வின்னருட்கு
நல்லார்‌ பொல்லாரென்‌ றிருகூறு செய்யு நவையுமுண்டே..

9. பிள்ளைப்‌ பருவத்‌ ‘தொரு குழவி
பெரியோர்‌ கையாற்‌ றொழது தொழுது பேணி யவர் தாமுரைத்த மொழி
பிதற்றி யிருக்கும்‌ பெற்றியைப்போ
லுள்ளத்‌ துருகு மன்பர் தொழி
லுதனை நடிக்க“வுவந்துன சீர்‌
உள்ள படி யொன்‌ றுணரும்வலி
யொழிந்த விழிந்த நாயடியேன்‌
எள்ளத்‌ தனையு மிளகாத
விருப்பு மனத்தாற்‌ பொய்ந் நாவா
லீயா திவறுங்‌ கொடுங்கையா
லெண்ணி யியம்பித்‌ தொழலெல்லாங்‌
கொள்ளத்‌ தினையுந்‌ திருவுளத்துக்‌ குறித்த லுளதோ கோகனகக்‌
கோயில்‌ வளர்ந்த கொடி படர்ந்த
கொடைக் கற்‌ பகமே குணக் கடலே.

10. வெருவித்‌ துயர் படு கடலைப்‌ பொரு பிற
வியினிற்‌ சுழல் வரும்‌ வினை தீர
மருவித்‌ தொழு மன மதனைத்‌ தருவதுன்‌
மகிமைத்‌ திருவரு ணெறியாமே
குருவிற்‌ பொலி குல முழுதுக்‌ கொருபதி
குருகைப்‌ பதி வளர்‌ தமிழ் மாறர்‌
பெருவிற்‌ பன மறை யமிழ்தைப்‌ பருகிய
பெருமைப்‌ புயலெனு நெடுமாலே.

17. கத்து கடல் சூழ்‌ புலி
கண்டா கருணன்‌ முனமெதிர்ந்து
செத்த வுடலை நிவேதனஞ்செய்‌
திறத்துக்‌ குகந்தே யவற்குமவன்‌
சித்த முவத்தல்‌ காரணமாத்‌
தீய தம்பி தனக்குமுயர்‌
முத்தி கொடுத்த திருவருளே
மூட னேனை யாண்டதுவே.

12. பத்தி செய்து பகைத்த கண்‌டா கர்‌ணன்‌
பாழி வெள்ளிப்‌ பருப்பத வாணனை
முத்தி யெய்த விழைந்து வணங்கவு
முகுந்த னன்றி யுகந்தது வல்லமோ
புத்தி செய்தரி பொங்கரு டங்குமா
புரிக வென்ற புராரி யிடத்துநீ
நத்தி யெய்தி மகப் பெறு மாயமென்‌
நான்முகப் பிர மற்கொரு தந்தையே.

13-. கூவத்தே வீழ்ந்த சிறு குழவியை நம்‌.
றாயெடுக்கக்‌ குதித்தாற்‌ போலப்‌
பாவத்தே மனக் கலம்போய்ப்‌ பவக் கடல் வாய்ப்‌
பட்டாரைப்‌ பரமன்‌ றானே
யாவத்தே யில்லாத பெருவீட்‌.டை.
யடைவிப்பா னருளா லிச்சை
மேவத்தே கம்படைத்துத்‌ தோன்‌ றுவனிம்‌
மெய்யுணர்ந்தோர்‌ வினைதீர்ந்‌ தோரே.

14, காயா மலருங்‌ கருவிளையுங்‌
காருங்‌ கடலுங்‌ கமழுமெழின்‌
மாயா மதுசூ தன முகுந்த
வர மாதவ வாமன வெனவா
யோயா தலற்றி யகங்கரைய
யுள்ளே ததும்பி யின்பவெள்ளம்‌
பாயா வழிந்து வினைக் கோடை.
பாற்று நாளு முளதேயோ.

15. மனைவிட்டிலன்‌ மகவிட்டிலன்‌
வலிவிட்டிலன்‌ மாலே
‘தனைவிட்டில னிலம்விட்டிலன்‌
றனம்விட்டில னாசை
‘தினைவிட்டிலன்‌ வினைவிட்டிலன்‌
திருவற்றவ னேனும்‌
உனைவிட்டில னெனின்‌ மற்றவ
னொளி பெற்றவ னாமே.

16. நின்ன தாகுமால்‌ விண்ணு மண்ணொடும்‌
நிலைய தாகிய வீடு மேயெனின்‌
என்ன தாக யாதுள்ளதோ தெரி
கிற்கிலே னுடற்‌ செனன மோடுயிர்‌
உன்ன தாகலானிற்கு நல்குதற்‌
கொன்று மில்லையா னேழை யேனுமென்‌
தன்ன தாக வென்‌ கையி லுள்ளதஞ்‌
சலி நினாதுகை தனிலி லாததே.

17. நெய்யிற்‌ றனியே யெரியாத
நெருப்புத்‌ திரியின்‌ மிசை யதையே
பெய்யிற்‌ சுடர் விட்‌ டொளி கிளரும்‌
பெற்றி யேய்ப்ப மலவுயிரை
மெய்யிற்‌ புகுவித்‌ திரண்டனையு.
மேவிப்‌ பொலியும்‌ விழுச்சுடர்‌ நீ
கையிற்‌ கனி போற்‌ காட்டினல்லாற்‌
காணா தெவர்க்கு மகக் கண்ணே.

18. காமாந்த காரமடுக்‌ காரிகையார்‌ வேட்கைக்‌
கராவாயிற்‌ கண்ணிழந்து கன்‌மனவெங்‌
றேமாந்து வீழ்ந்துகரை யேறவலி யில்லா களிறு ஓன்‌
தெந்தையுனை யுன்னாது நொந்தழிவ தருள்வாய்‌
பூமாந்து வண்டுலவு பொய்கையிடைப்‌ புக்குப்‌
போற்று கரி காத்ததினு மேற்றமிதற்‌ குண்டால்‌
தீமாந்து மெழுகு பொரத்‌ தினமுருகு மன் பர்‌
சிந்தை குடி கொண்டிருலகு முந்தை முழு முதலே.

19. பாபத்தாற்‌ காழ்த்தறிவு
பாழ்த்ததனான்‌ வெளிறியடுங்‌
கோபத்ததாற்‌ சிவப்புற்றுக்‌
கொடுஞ்செருக்கா னனியிருண்டே
யாபத்தா னிளைப் பெய்தி
யழுக்காற்றாற்‌ றடிக்கு மனம்‌
சாபத்தேற்‌ குயிர்ப் பிணியாய்த்‌
தழைப்பது காண்‌ டனி முதலே.

20. பழுவிருக்கத்‌ தோல் வேய்ந்த பாவை நெஞ்சப்‌
பாம்பிருக்கும்‌ பாழ்ங்குடங்கர்‌ பற்பல்‌ கோடிப்‌
புழுவிருக்கப்‌ போர்த்தமலப்‌ பொதியே யைந்து
புலப் பேய்கள்‌ குடியிருக்கும்‌ புக்கில்‌ புண்ணாய்‌
குழுவிருக்கத் தொக்கமுடை யிரைமெய்‌ யென்று
குறித்திருக்கப்‌ பெற்றபெருங்‌ குணத்தோர்க்‌ கல்லா
லெழுவிருக்க மொருகணையா ஸனெய்து பத்த
ரெழுபிறப்பு மறுப்பவனை யேத்த லாமே.

21. பணவாசைப்‌ பேய் கண்‌ டுயில விடா
தெனைப்‌ பாவையராம்‌
பிணவாசைப்‌ பூதங்‌ கனவும்‌
புகுந்து பிடித்துடற்று
முணவாசைக்‌ கூளி யெஞ்‌ ஞான்றுந்‌
தெறுமிவைக்‌ கோய்வுமுண்‌டோ
குணவாசைப்‌ பாநுவைப்‌ போன்றுள
னோங்மென்‌ குலதெய்வமே.

22. பொன்னினைக்கும்‌ புகழ் நினைக்கும்‌
பூமியெலா நினைக்கும்‌
பூணினைக்கு மூணினைச்கும்‌
பூவை மொழி யாரை
மன்னினைக்குந்‌ தன்னினைக்கும்‌ மற்றையர்க்குத்‌ தீது
வர நினைக்கும்‌ பழி மறைக்கும்‌
வழி நினைக்குந்‌ தன்ன
தின்னினைக்கு நென்னினைக்கு
மிருள் புகுத்த வல்ல தெது நினைக்க வென்றாலு
மதுநினைக்கு நெஞ்ச
நின்னினைக்க லாகாது
நீநினைத்தல்‌ வேண்டு
நீடொளிய சேடகிரி
நின்ற பெருமாளே.

23-மாட்டாலும்‌ மயக்காலும்‌ மகிழாலும்‌
புகழாலும்‌ வாட் கண்‌ மாதர்‌
கூட்டாலு முணைவாலுங்‌ குடியாக் கொண்
மடியாலுங்‌ கோபத்‌ தாலும்‌
பீட்டாலு மழுக்காற்றுப்‌ பேயாலு
நாயேன் செய்‌ பிழைக ளெல்லாம்‌
பாட்டாலு நிரம்பாது கேட்டாலும்‌
பாவபெனப்‌ பகர்வ ரெந்தாய்‌.

24-ஏழாலே அளந்திட்ட புன் பிறப்பின் எத் துணைக்கோ வினைவேன் எந்தாய் ே
ஊழாலே ஒரு கோடி உடலாலே யுரையாலே யுடறுங்‌ காமப்‌
பாழாலே கூழாலே பகையாலே பசியாலே பயத்தாற்‌ பாவச்‌
சாழாலே திணிந்த மனக்‌ கல்லாலே படுவல் எலாங்‌ கணிக்கலாமே.

25. சற்றேனு மிரங்கீரோ வெனப் பசித்தார்‌
தழங்குரைமுன்‌ றலைக் கேட்‌ டோர்கைத்‌
துற்றேனு மீவறியாச்‌ சுமடனேன்‌
சுடும்வறுமை தொலையத்‌ தம்மை
விற்றேனு முதவுகொடை வீரர்முன
மென்னாவேன்‌ வியாள மேய
புற்றேனு மொவ்வாவென்‌ புல்லுடலே
புவியினெடும்‌ பொறையா மெத்தாய்‌.

26. அருகிருக்கும்‌ புல்லாணி யமர்ந்திருக்கும்‌
வில்லாளிக்‌ கன்பு பூண்டு
பெருகிருக்கு முறையானே பேசறியே
னந்தணரிற்‌ பிறந்தேன்‌ வாளா
முருகிருக்குங்‌ குழலார்க்கு முனைந்திருக்குங்‌ காமத்தீ மூள நாளும்‌
வெருகிருக்கு மாறிருளை விழைந்திருக்கும்‌
வெய்யனருண்‌ மேவ லுண்டே.

27. அனைபடைத்த வுயிர்க்கெல்லா மயன் படைத்த
‘தில்லை யுட லடியார்க்‌ காக்க
முனை படைத்த வறவாழி முதல்வனடி.
முளரியினை முன்னு மெண்ணந் தினை படைக்க மாட்டாது தீ நரகு
படைப்பார்தாஞ்‌ செய்த முன்னை
வினை படைத்த தல்லாது வேறுண்டோ
மெய்யுணர்ந்து விள்ளுங்‌ காலே.

28-குழலோம்பு மினியவிசைக்‌ குயிலோம்பு
குரன் மடவார்‌ கொடிய காமத்‌
தழலோம்பி யேயபணி தலையோம்பிப்‌
பெற்றவற்ப சார மென்னும்‌
விழலோம்பி யதனானோய்‌ மிக வோம்பி
மெலிவெல்லாம்‌ வீடாண்‌ மாயன்‌
கழலோம்பு மாறறியாக்‌ கசடோம்பி
நின்ற வெய்ய காட்சி யாமே.

29-பாடு பட்டுத்‌ தேறி நிதிப்‌ பரப்பு நாளும்‌
பகை விளைக்கு நிலனும் பெண்‌ பாலார்‌ கொங்கைக்‌
கோடு பட்டுச்‌ சிதைந்த புல வுடம்பும்‌ வாழ் நாள்‌
குறை பட்டுப்‌ போம் வழிக்குத்‌ துணையோ சொல்லாய்‌
காடு பட்டுப்‌ போகாமே காக்குங்‌ கார் போற்‌
கருணை மழை பொழிகின்ற கமலக்‌ கண்ணந்‌
கீடுபட்டு வீடுபெற்று வாழ வெண்ணா
திரும்பிறவிக்‌ கடற்பட்ட வேமை நெஞ்சே.

30-எல்லணைத்த பிறைபோலு மெழிலணைத்த
இரு நுதலா ரிரண்டு கொங்கைக்‌
கல்லணைத்துக்‌ கண்ட சுகங்‌ கனவலைத்த
கனி சுவைத்த காட்சித்‌ தென்று
வில்லணைத்து நீல முகின்‌ மிளிர் பச்சைப்‌
பாயன் மிசை மேயினாற் போற்‌
புல்லணைக்கட்‌ சாய்ந்தவன் பேர்‌ புகன்‌ மிருப்பார்‌
பேர் புகன்று புகுவர்‌ வீடே

31-மலைபோ னிதியு மணுவா மதித்து வறுமை கொளுங்‌
கலையோ துளியுங்‌ கடலா நினைத்துக்‌ கருவமுறு
நிலையோ பெறாது நரகு படைக்கின்‌ற நெஞ்சிற்கியான்‌
விலையோ வருளு மிலையோ வடமலை மேலவனே.

32-குடி பிடிக்கு மானப் பேய்‌ குலம் பிடிக்கு
மகங்காரக்‌ கூளி யோடு
செடி.பிடி.க்கும்‌ பேராசைச்‌ செந்நாயு
மனக் குரங்குத்‌ தினமு மென்னை
மடிபிடிக்கும்‌ விடியலும்‌ வழி மறிக்கு
நரக நெறி வகுக்கு மூன்னை
யடி பிடிக்க வொட்டா விவ்‌ வல்லலெலாம்‌
வெல்ல வரு ளரங்கத்‌ தெந்தாய்‌.

33-பாட்டா னளி கண்‌ முரலுமெழிற்‌
பங்கே ருகத்தின்‌ மிசை யமர்ந்து
சூட்டா ரேகினம்‌ பெடைதிளைக்குந்‌
துறை சேர் மல்லி வளதாடி
தாட்டா மரைப்  போதுளப்போதிற்‌
றணவார்‌ பிறவச்‌ சலதி பட
மாட்டார்‌ முடிப்போ தவாவுமுதல்‌
வன்றாட்‌ பிணைந்‌ தெடுத்தலினே.

34-குலை யெடுத்த மரக் கொம்பிற்‌ குதித்துத்‌ தாவும்‌
குரங்கனைத்து நீ முன்னர்க்‌ குறித்த வாறே
மலை யெடுத்து மலை கடந்தும்‌ வாழ்ந்த வென்றன்‌
மனக்குரங்கு மட்டுமுனை வணங்க லில்லாத்
தலையெடுத்து நிமிர்‌ ந்திருளின்‌ வீழ்த லெல்லாத்‌
தயா வுளத்திழற் குறியாத தன்மை யென்னோ
சி லை யெடுத்த நீல முகில்‌ போற் புல்‌லாணித்‌
திருப்பதியின்‌ மேவி வளர்‌ தேவ தேவே,

35. செகத்துக்க ணவதரிக்குத்‌ தெய்வதச் சீர்‌
கேட்டுரையாச்‌ செவிட்டு மூங்கை
முகத்துக்கண்‌ விழித்திருக்க வகத்துக் கண்‌
குருடுபட்ட மூட னல்லா
லிகத்துக் கண்‌ வாழ் வனைத்து மிருங்கான
னீரனைத்தென்‌ றெண்ணா தேபெண்‌
அகத்துக் கண்‌ வந்துழல வாழ் நரக
மமிழப்போ மாதன்‌ யானே.

36. மருவேட்ட குழலார்க்கு மனம் வேட்ட
மயலானே வையத்‌ தென்றுங்‌
கருவேட்ட விடர்க்கடலிற்‌ சரைவே.ட்ட
வுடை கலம்போற்‌ கவிழ்கின்‌ றேற்குச்‌
செரு வேட்ட. தென்னிலங்கை தீ வேட்டஞ்‌
செயம் பொருத செல்வன்‌ கஞ்சத்‌
திருவேட்ட முழு முதல்வன்‌ சீர் வேட்ட
சேவடியே சேம மாமே.

37-ஆற்றைக் கடவா திருஞ்சழிவா
வாழ்த்த விரைவு மடு மரம் போன்
வாற்றைக் கடவா தீ குண முகில்
மாட்‌ட . விரையு மா மிவிடநீ .
றூற்றைக்‌ களைந்து வேர றுக்குத்‌
துகடீ ரருள்வா டருவை கொலோ
சேற்றைக்‌ கழுவ முடையளறு
திளைப்பேற்‌ கொருநாட்‌ டிருமாலே.

38. தெருளாசைப்‌ பட்டறிந்து செங்கண்மால்‌
சேவடிக்கே சேர்ந்த நெஞ்சா
லருளாசைப்‌ பட்டிருக்கு மடியார்முன்‌
செடிநாயேனவனிமீது பொருளாசைப்‌ பட்டிவறிப்‌ புன்பழியே
நனி யிட்டிப்‌ பொரு கண்‌ மானார்‌ மருளாசைப்‌ பட்டதனா னிருளாசைப்‌
பட்டெய்த வதிகின்‌ றேனே.

39-கறையடிக்குள்‌ வெதுப்பொழியக்‌ கலுழன்‌ மிசைக்‌
கார் மழைபோற் கடிது போந்த
விறை யடிக்குத்‌ தினை யுருகா விரும்புமன
மெமனெனும்பேர்‌ யார் சொற்‌ றாலும்‌
மறை படிக்கும்‌ பதைபததைக்கும்‌ பல்கோடி
நினை நினைந்து பரிவு கூரு
மறையடிக்கு முடிக்குமிக வழுத்து மரி
யெழுத்துமெண்ண மாட்டா தந்தோ.

40-தேக நிலை யாத நிலை செத்தபிண மோதுஞ்‌
செல்வ நிலை யாதபடி சொல்வரிர வாளர்‌
போக நிலை யாமை வலி போமுதுமை கூறும்‌
புத்திநிலை யாதமுறை பித்தர்மொழி வாரான்‌
மோக நிலை யாமைசொல மூடமன முண்டு
முற்று நிலை யாமை மறை கற்றவர்கள்‌ சொல்வார்‌
சோக நிலை யாத நிலை சொல்லி யருள்‌ வாரார்‌
சோலை மலை மேவி வளர்‌ நீல நெடு மாலே.

41-முடியிருக்கு நெடுமாலுக்‌ கடிமைசெய
முயலாத மூடமூர்க்கச்‌
செடியிருக்கு மனக்குரங்கு குடி.யிருக்கு முடையாக்கை சிதையா தேயிப்‌
படியிருக்கு மெனநினைக்கும்‌ பாமரர்க்குச்‌
செத்த பிணம்‌ பறை யாற்‌ சாற்றி
நொடியிருக்கு மெனக் கருதீர்‌ நுமக்குமிது
வழியென்று நுவலு மாலோ.

42. ‘குகை கண்டு தனி யிருந்து குல தெய்வம்‌
வரானாக்காக்‌ குருட்டு நெஞ்சாற்‌
பகைசண்டு சினந்துமுறு பணங்கண்டு
விழைந்தும் விழிப்‌ பான லார்புன்‌
னகை கண்டு மருண்டுமவர்‌ நடங்கண்டு
வியந்‌து மொழி நாள்க ளெல்லாந்‌
தொகை கண்டு துறவார்க்குச்‌ சுடுகாட்டிற்‌
புகை கண்டு சொல்லு மெய்யே.

43. மறி கேட்டு வாங்கியதை மலைக் கடவுட்‌ கென்று
வதைத்திட்டுக்‌ கொலை படை.த்து வருள் படைத்த வேலன்‌
குறி கேட்டுக்‌ களியாட்டுக்‌ குணக் கூத்து மாடிக்‌
கும்பிட்டுப்‌ பெற்ற பயன்‌ றுன்பத்தின்‌ வேறோ
செறி கேட்டுப்‌ பவக் கடலிற்‌ றிரையிடர்க்கு நொந்து
தீ வினைக்‌ கரா வாயிற்‌ சிக்குவது தீர்ந்து
நெறி கேட்டுப்‌ பெரு வீட்டி னிலைத்தினிது வாழ
நீர் நினைதி ராயினரி பேர் நினைதிர்‌ மாதோ.

44. தீவினைப்‌ பெருக்காற்‌ பொருடனைப்‌ பெருக்கிச்‌
சிறு புகழ்க்‌ கொரு சில விடுவீர்‌
கோவினைத்‌ தொலைத்துச்‌ செருப்பினைக்‌ கொடுக்குங்‌
கொள்கைநுங்‌ கொள்கையே யம்மா
காவினைச்‌ சயித்த கொடையினா லடியர்‌
கருதிய தன்னையு மளிக்குத்‌
தேவினைப்‌ பழிச்சி யாவையுங்‌ கழித்துச்‌
சிறப்பினை யுறப் பெறா தீரே.

45. மா கனக மேருவென நிதியி ௫ந்தென்
மகிழ் பெண்டிர்‌ மக்களொடு வாழ்விருந்தென்‌
றேக நக மெனவிருந்தென்‌ றெளித்த தாலென்‌
செக முழுது மடிமை புகுஞ்‌ செயத்தி னாலென்‌
போக நகராதிபதி யாயி னாலென்‌
பொல்லாத விரணியரா வணர் போன்‌ மாள்வர்‌
கோகனக மலர்ந்தருணீர்‌ கோத்த கொண்டல்‌
கோதண்ட கோளரியைக்‌ கூறா தோரே.

46-திரவியமொன்‌ றுறுமாயிற்‌ றிரைமேற்‌ செல்வர்‌
தீ மலையின்‌ மிசைச் சேர்வர்‌ சீயத்‌ துஞ்சா
‘திரவியல்வெங்‌ கான்சுரம்போ யிளைப்பர்‌ வையத்‌
தினைப்பிளந்து பாதாளத்‌ திடையும்‌ பார்ப்பர்‌
உரவிய கார்‌ வானத்தும்‌ பறப்பர்‌ பூத
மொன்றுக்கு மஞ்சார்த முயிரு மாய்ப்பர்‌
விரவிய விவ்‌ வினையினொரு தினையும்‌ தெய்வ
விழுப் பொருளைப்‌ பெறப்புரிய விழைவோர்‌ யாரே.

47-அன்புருக்கொ ளசோதைத்தாய்க்‌ கெளிய னாகி
யழனுருக்கொள் வஞ்சத்தாய்க்‌ கெமனே யாகித்‌
துன்புருக்கொள் பொரு களிற்றை மாய்த்துத்‌ தாய
தொழு களிற்றைத்‌ துயர்‌.தீர்த்துத்‌ துகடீ ருள்ளத்‌
தின்புருக்கொள்‌ சேடன் மிசை யினிது சாய்தந்தன்‌
றிடருருக்கொள்‌ காளியனை யடர்த்த லானே
வன் புருக்கொள்‌ கொடியார்க்கு மடியா ருக்கு
மன்னிறைவ னருண் முறைமை மதிக்க லாமே.

48-கங்கைக்‌ கரைக்குக்‌ குகப் பெருமான்‌
கருதும்‌ பம்பைக்‌ கரைக்கநுமான்‌
சங்கம்‌ கடலின்‌ பெருங்கரைக்குச்‌
சார்ந்த வொருவீ டணனிவரைப்‌
பங்கத்‌ துறையும்‌ பள்ள நிலம்‌
பாயும்‌ புனல் போற்‌ கலந்த விறை
துங்கத்‌ தினிய திருவருளே
தொலையாப்‌ புணையாந்‌ துயர்க் கடற்கே.

49-ஓலை கட்டித்‌ தூதேகிப்‌ பாண்டவர்க்கா
வூரிரந்தா னுவந்து சாத்த மாலை கட்டிக்‌ கருள் புரிந்‌தான்‌ மண்ணினுற்றார்‌
புண்ணியத்தின்‌ வாழச்‌ சேது
வேலைகட்டி வைத்த பிரான்‌ யருள் கடலிற்‌
குளித்தற்கு விரகி லாமே
சேலை கட்டி விழி வலைக்கொள்்‌ தெரிவையர்கா
தலின்மூழ்குஞ்‌ சிதடன்‌ யானே.

50-பிரமனை முன்‌ படைத்தவற்குப்‌ பெரு மறையைப்‌
பிறக்குவித்த பிரம மென்றே
பரமனை முன்‌ றுதிக்கறியாப்‌ பாழ்ம் பிறப்பு
மானிடமாய்ப்‌ பார்க்கப்‌ பட்ட
கரமனைத்துக்‌ கழுகனைத்துக்‌ கழுதனைத்துக்‌
கல்லனைத்துக்‌ கனியு நஞ்சா
மரமனைத்தென்‌ றெண்ணி விடா மதியுடையேற்‌
குவமையிந்த வையத்‌ துண்டே.

51-தனக்கு மே லொருவருள ரென வெறுக்குஞ்‌ _
சழக்குயிரின்‌ மமதையினைச்‌ சாற்றி னுற்றா
ருனக்குமேற்‌ கடவளுள னென்ற போதும்‌
உருத்தவரைக்‌ கொலை சூழு முதற்குச்‌ சான்று
சினக்குமே லுலகமெலா நடுங்கா நிற்குந்‌
,தீயவிர ணியனென்று தெளிவா ரன்னா
னெனக்குமே லில்லை யென வகங்கரிப்பி
னெல்லையினின்‌ றேற்கிறைவ வென்செய்‌ வாயே.

52-முற்றத்‌ துறந்த முனிவரரு முதல்வா நின்பான்‌ முறையிட்டுச்‌
செற்றக்‌ காம மயக்கமெலாந்‌
தீரு மாறு வரங்கிடப்பக்‌ குற்றக்‌ கலமா யுளவடியேன்‌
குறைவேண்‌ டுவது முறையோதான்‌
தெற்றத்‌ தெளிந்த சடகோபர்‌
தெவிட்டா தருந்துந்‌ தெள்ளமுதே.

53-அரனைப்‌ படைக்குந்‌ திசைமுகனை
யலரிற்‌ படைக்குந்‌ திரு நாபி
வரனைப்‌ படைக்கு மனப் பெரியார்‌
மலர்ந்த செழுந் தாமரைப் பதத்துச்‌
சிரனைப்‌ படைக்க மாட்டாத
தேகம்‌ படைக்குந்‌ தீய வினை
மரனைப்‌ படைத்து வளர்க்கின்‌ ற
மதியைப்‌ படை.த்தேற்‌ கருளுளதோ.

54-காலமெலாங்‌ கணிகையரிற்‌ கழித்து மூத்த
காரிகையாள்‌ காந்தனைப்பின காண லுற்றுச்
சீலமெலாஞ்‌ திறந்த குணத்‌ தெரிவை யொப்பச்‌
செய்த பிழை பொறுக்குவென்று செப்பல்‌ போல
வாலமெலாந்‌ திரண்டனையே னந்தோ வாசைக்‌
காளாகி நாடொலைத்தே னன்ப ரேய்ப்ப
வோலமெலா மிடுகின்றே னிதற்கு நீயு
முற்றருள்வையோ வறியேன்‌ பெற்ற தேவே.

55-கிளை யெலா நச்சுக்‌ கனி பழுத்‌ திருக்குங்‌
கெட்ட தீ மரத்தையும்‌ வித்து
முளையெலாங்‌ கெடுத்துப்‌ புனலெலாம்‌ வீணாய்‌
முடித்து நல்‌ லெருவெலாந்‌ தீத்துக்‌
களையெலாம்‌ விளைக்‌ குங்‌ களரையு மனையேன்‌
காண்பனோ நின்னையு மாயர்‌
அளையெலா மடிய ரன்புபோ லருந்து
மய்யனே தெய்வ நா யகனே.

56.மறப்பினுக்கோ ரறையா குமை யிருட்டுச்‌
சிறையாகு மயற்கூ டாகும்‌
இறப்பினுக்கும்‌ பிறப்பினுக்கும்‌ படியாகும்‌
நரகினுக்கோ ரேணி யாகுந்‌
துறப்பினுக்குப்‌ பகையாகுந்‌ துர்க் குணத்துக்‌
குறவாகுந்‌ துகடீ ரெந்தாய்‌ சிறப்பினுக்குச்‌ செல்லாது செய் சுவராந்‌
தீமனமென்‌ செயத்தத்‌ தாயே.

57-ஓழுக்கினா னீத்த வுயர் முனி வரரு
முள்ளமுக்‌ கறவுனை யுள்வா
ரிமுக்கினா னளறே யெனுங்குடும்‌ பத்தோ
டிரண்டறப்‌ பொருந்தழுக கிருநீர்‌ முழுக்கினாற்‌ போமோ வுன்‌ றிரு வருளின்‌
மூழ்கினா னல்லது வினையைப்‌
புழுக்கினான்‌ முளைக்கா வித்தெனப்‌ புரிந்து
போற்றினார்க்‌ காற்றுமா தவனே.

58-உடலிந்தே யிடரினுக்கொன்‌ றுன்ன லெல்லா
முரலிருந்தே யுலக்கையினுக்‌ கஞ்சல்‌ போலாங்‌
குடலிருந்த தொடக்கறுத்துக்‌ கோத்த சுற்றக்‌
கொடும்பாசப்‌ பிணிப்பவிழ்த்துக்‌ கொண்ட பெண்ட
மடலிருந்த பெரும்பேயி னாசை யோட்டி
யகப்பற்றும்‌ புறப்பற்று மனைத்தும்‌ வீட்டி
மடலிருந்த துளவலங்கன்‌ மாயன்‌ நூய
மலரடிக்கீ ழ்ப்‌ புக்கொடுங்கா மடமை நெஞ்சே.

59-சரிந்த குழ றாங்கிய கண்‌ கரமும்‌ பற்றத்‌
தளர்ந்த வுடை பிடித்த மலர்க்‌ கரமும்‌ விட்டுத்‌
தெரிந்த வுளத்‌ தொளிர்கின்ற தேவே யுன்னைத்‌
தேர்ந்தொருகாற்‌ கூப்புதலைச்‌ செய்யும்‌ போழ்‌தே விரிந்த குணப்‌ பாண்டவர்தம்‌ வென்றி போல
விளங்குதவக்‌ கொடிமான மெய்யே காத்துப்‌
புரித்தபெரும்‌ பாரதமும்‌ போதா தென்று
புலம்பியதுன்‌ றிருவருளின்‌ பொலிவே யம்மா.

60-துட்டவிரா வணனாவாற்‌ சுடுகென்‌ றோதத்‌
துனைந்தெழுந்து புகுந்தன்பாற்‌ றொழுது தீயர்‌ கிட்டவிரா முழு முதலே சரண மென்று
கிளத்திரங்கும்‌ வீடணனைத்‌ கய னென்னப்‌
பட்டவிராக்‌ கதன்றம்பி நம்பாற்‌ கொள்ளப்‌
படாதென்ற கவி வேந்தை மறுத்து நல்கி
யுட்டவிரா வன்பின்வரி விராவ ணற்கு
முற்ற பய மளிப்பலென்ற வுரையே தஞ்சம்‌.

61-பிரமாண்ட கோடியெலாம்‌ பெற்றுக்‌ காக்கும்‌ பிரமநீ யவரித்த பெற்றி தேறா
துரமாண்ட கவியளனத்து முவரிக்‌ கூலத்‌
துறுகணுனக்‌ கெய்தாமை யளிக்க வோர்ந்து
கரமாண்ட வால்பிணைத்துக்‌ கவிந்து கொண்டு
கடி மதில்போ னின்றிளைப்பாற்‌ கண்க டுஞ்சச்‌
சரமாண்ட வில்லினொடுத்‌ தம்பி யோடுத்‌
தாண்டியவை காத்தவரு டமியேன்‌ றஞ்சம்‌.

62-திசைக்கும்‌ வெப்ப வினைத் துயரைத்தெறு இடத்த வச்ச வரிப் பெ ணருத்திய
திருக்க னிக்கு மணித் துணை கட்டிய
செவிக்க சட்ட னளித்த மூடைச்சவக்‌
தசைக்கு மற்பி னுருக் கொளுத்தருள்‌
தழைத்த பத்த ருடற் புள கத்தொடு
தழற்கணுற்ற வரக்கை நிகர்த்துளன்‌
தனித்து ருக்க முறத்தமி மிற்பொழி
றிசைக்கும்‌ வெற்றி யுருக்கு மிணிக்குயி லெழிற் கை பற்றி யதற்கு வெறுத்தர வெனக் கொ தித்த செருக்க னிடைக் குலத்‌
‘திலச்சை யற்ற சழக்க னெனச்சொலும்‌
வசைக்கு முத்தி கொடுத்து மறைச்சிரம்‌
வழுத்த நிற்கு மடிப்பது மத்தலான்‌ மனத்தை வைக்க நினைப்ப கொல்‌ கற்றவர்‌
மயக்க மிக்க பவக்கடல்‌ வற்றவே.

63. விது வைத்த தலைச் சிவ னுக்குமலர்‌
மிசைவைத்த மறைந்பிர மற்குமிறை
புதுவைத்தல முற்ற முதுக் குறைவி புனை புத்தமிழ்‌ தத்தமி மிற்குமுடி மது வைத்த விதழ்த் தொடை யற்கு மகிழ்‌
மனம் வைத்து மணத்தைய ஸித்தபுயல்‌
பொது வைத்த நிதிக்கு நிகர்த்தவருள்‌
டொழியத்‌ தழைகிற்பது முற்றுமரோ.

64. சேப்படைத்த சவனயனே யெனலான
தெய்வதங்கள்‌ திகழ் மந்‌ தாரக்‌
காப்படைத்த விந்தரனே தலையாய
தேவர்நரர்‌ கனக மேரு
தேப்படைத்த பலகாடி யண்டமுதற்‌
பூதமெலாந்‌ திருமால்‌ நாபிப்‌
பூப்படைத்த தென்‌ றவன்பேர்‌ நாப்படைத்த
பயன்கொள்ளப்‌ புகல்வர்‌ மேலோர்‌ .

65. பரகாலனை முதலாகிய பழையோ ரருளானே
கரவாதுள மறவாதுன கழலே தொழு வேனே
நரநாரண வரிவாமன நளினாசனி நாதா
வரகாரண சகன்மோகன மதுசூதன மாலே.

66-துருவனுக்குயர்‌ நிலைகொடுத்தன
துருபதைக் கவிழ்‌ துகில் வளர்த்தன
சுமுக னுக்குள பயமொ ழித்தன வுலகாளும்‌
ஒருவ னுக்கெழில்‌ வளை தரித்தன
வுரைக ரிக்குயர்‌ கதி படைத்தன
வுலம ழைக்கொரும லையெ டுத்தன வுமை கேளவன்‌
சருவனுக்கிர வொழிய விட்டன
தசமுகற்கடு கணை தொ டுத்தன
சகல ருக்குநல்‌ வரம்விளைப்பன வடி நீழன்‌
மருவெனக்கிக பரம ளிப்பன
வடம லைக்குறு கடவு ணற்பொல
வரை யெனத் தரு தரு வெனப்படு புயமாதோ.

67-முறை க டந்து பிறர் ம டந்தை
முலை புணர்ந்த பழுதெலாந்‌
தறை கி டந்து புனல் படிந்து
தழலி னின்று மொழியுமோ
சிறை கி டந்த செனனம்‌ விஞ்சி
நரகு ழந்து தவிருமோ
மறை க டந்த வரமு குந்த மனமி ரங்கி யருள்வையே.

68-தானே வழங்க வறியாத
சலவா ரியையுன்‌ றயையினுக்கு
நானே யுவமை நவில்வதையு
நயந்துந்‌ தன்னை நல்கலிலா
வானே வளருங்‌ கற்பக மா
மரத்தை நினக்கொப்‌ புரைப்பதையுங்‌
கோனே நிளையுந்‌ தொறுமெனது
கொடிய மனமுங்‌ குலைவுறுமே.

69.மாறு பட்டுரிய கொழுந னுக்கியைய
வாழ்த லற்று மயல்‌ மனைகளில்‌
வயிறு பட்ட பசி தணிய லுற்றுவினை
வழியி யற்றிவரு கூலி கொண்‌
டூறு பட்டசிறு நிலையி னிற்குமவ
ளொருவ னுக்கென முன்‌ னாளினி
லுடைமை பட்டு மண முடிய லுற்றதனை
யுணர்வின்‌ வைத்து நிறை தன் மனம்‌
வேறு ட்டிலளு பட்‌ மாகி மற்ழெதையும்‌
விழைத லற்ற வளு மாயினால்‌
மெலியு மத் தெரிவை குணனை மெச்சிவரன்‌
மேவு காலமுள தாகுமால்‌
தூறு பட்டவினை யேனு னக்கடிமை
தொடர் விலிட்டுமுனை யல்லது
தொழ நி னைத்தவனு மிலையெ னத்தெரிவை
துளவு தொட்ட .முடி மாயனே.

70-தாயிருந்தும்‌ முலையினிற்பால்‌ தழைத்திருந்துந்‌ தரைக் கிடக்குந்‌ தருணந்‌ தானே
வாயருந்த மாட்டாத மகவினுக்கு
வாயின் முலை மடுக்குந்‌ தாய் போல்‌
நீயிருந்து நின் கணருள்‌ நிறைந்திருந்தும்‌
யானருந்தா நிலை கண்‌ டென்கண்‌.
மேயிருந்து நீயூட்டா வெளின்‌ மெலிவேன்‌
வசையுநினை மேவு மெந்தாய்‌.

71-அனும னுக்கு நளிர்க வென ச்சொலி
யழலின்‌ வெப்ப மகற்றி யளித்தவள்‌
அடல ரக்கர்‌ சிறையை யறுப்பதற்‌
கணுமு யற்சியு முற்றில எற்றென முனும யற்கு முதுமறை சொற்றவன்‌ முழுது யிர்க்கு முலகு படைத்தவன்‌
முதிரி ருட்கொர்‌ பரிதி யளித்தவன்‌
முகிலி டர்க்கு மலைமயை யெடுத்தவன்‌
தனுவெ வைக்கும்‌ நிறுவி வளர்ப்பவன்‌
தனய ருக்குண்‌ முலையை யமைப்பவன்‌
தழை. பயிர்க்கு மழையை விடுப்பவன்‌
தரணி துக்க மொழிய வுதிப்பவன்‌
இனும னுக்கு கொடிய பவக் கடல்‌
இழிய வைப்ப னெடுப்ப னெனக்கவன்‌
எழின்மி குத்த வருளின்‌ முறைப்படி .
இனிதி ருப்பதை யல்லது மொல்லுமே.

72. பொற்றை யுடலைப்‌ புறங்கழுவிப்‌
பொழுதே புசித்துப்‌ புனையர வப்‌
புற்றை விழைந்து புணர்ந்துறங்கும்‌ புன்மை யலது புவியினிடை
மற்றை யெதுவு மின்பமென
மதியேன்‌ பரமா வுனைத் துதியேன்‌
இற்றை நாளுன்‌ னடி யெண்ணி
யிருப்பேற்‌ கென்னீ யெண்ணுவதே.

73. கரியுந்‌ திருவீ டணனுமடத்‌
காகா சுரனுந்‌ துருபதையும்‌
பரியு மிடரா னு ளதநடுங்கிப்‌
பகவ னுனையே பற்றியபோ
துரிய தூய்மை முறை புரிய
வுணர்ந்து .மிலரா லன்னவர்க்கு
விரியு மரிய பெருங்கருணை
வினையேன்‌ தனக்கு முளதாமே.

74. பாந்தண்‌ மணிவாய்‌ விடமருத்திப்‌
படரு மழலி னிடைவீழ்த்திப்‌
படையி னறுத்து மலையுருட்டிப்‌
பதைக்க வதைக்கும்‌ படி.புரிந்துந்‌
தேந் தண்‌ டுளவத்‌ தொடைகமழுஞ்‌
செழுந்தாண்‌ மலரி னழுந்துமனந்‌
திறம்பாச்‌ சிறுவன்‌ மொழி காக்கத்‌
திருத் தூ ணுதித்துத்‌ தனைக்குவிக்குங்‌ காந்தண்‌ மெலியும்‌ விரற்கரத்தான்‌
கருத்தோன்‌ றிடங்காண்‌ டலைவேட்டுக்‌
கனக னுரங்கீண்‌ டுடற்றொடக்காற்‌
கரிய குடரு மெடுத்தணிந்து பூந்தண்‌ மாரி சுரருவந்து பொழிய வெல்லா வுயிர்க்குமளி
பொங்கி வழியுஞ்‌ சிங்கப்பிரான்‌
புகழே நினைவேற்‌ கிகழ்வுளதோ

75. எல்லா வுயிரு மெம்பெருமாற்‌
கினிய வுடலா யிருக்குமுடல்‌
பொல்லா தொருநோ யுறினதனைப்‌
போக்க முயற லுயிர்க்கன்‌ றித்‌
கல்லா வுடற்கு முளதாமோ
கடவுள்‌ கழற்கே யறத் தீர்ந்த
நல்லார்‌ தமக்குத்‌ தாமுயலார்‌
நங்கோ னருளி னடப்பாரே.

76. நம்பிரான்‌ காளிங்க நடன மாடி
நயந்ததனை யநுகரிக்க நயந்தார்‌ தம்மு
ளெம்பிரான்‌ றிருவேட மியைந்தா டன்னி
னிருங்காளி யன்வடிவ மெய்தி னாளே
அம்பிரா னடிக்கமலஞ்‌ சிரமேற்‌ றாங்கு
மருமையினாற்‌ பெருமை மிகப்‌ படைத்தாளன்னாள்‌
வெம்பிரா மனம் பழுத்த விழுத்த பத்தி வினையேற்குத்‌ இனையேனு மேவு மேயோ.

77–வாள் பிடித்த கண்ணியர் தம்‌ மயற்பேயின்‌
பேழ்வாயின்‌ மயங்கி வீழ்ந்து
தேள்பிடித்த கரப்பினுருச்‌ சிதைவேற்குச்‌
சேண்முழுதுஞ்‌ சென்று தாஅய
தாள்பிடித்து வழுத்தவிடாக்‌ கோள்பிடித்‌
சழக்குவிதி தணப்ப தெந்த நாள்பிடித்து நண்ணுறுமோ நண்ணாது
நரகிலெனை நாட்டு மேயோ.

78-ஆசையெலாம்‌ புகவல்ல மனமீ காம
னல்வழியிற்‌ செலவுய்க்கு மாக்கை நாவாய்‌
மாசையெலாம்‌ பண்டமெனச்‌ சுமந்தவாவாம்‌
வன்காற்றான்‌ மறுகுபவ வாரி யோடத்‌
தேசையெலா மிழந்ததன்கண்‌ வினையை யீட்டச்‌
சிறுநாய்க னெனநாயேன்‌ செறிந்தேன்‌ கண்டா
ரோசையெலா மிடவெமனாம்‌.பாறை தாக்கி
யுடையும்போ தென்னாவே னுடைய தேவே.

79-தாழியினுக்குமூயர்‌ வீடு கொ டுத்த முதல்‌ தாமரை யுற்ற திரு மா மகளுக் கழகன்‌
வேழ ம ழைக்குமுன மேவிய ளித்தவரன்‌
வேதமு தற்கலைகள்‌ யாவுமு யிர்த்தபரன்‌
ஏழும ரத்தினையு மூடுரு வச்சிலையின்‌
ஏவை விடுத்தபுய லீரடி யைப்பிடியார்‌
ஆழும்‌ வினைப்பிறவி யாகு மிடர்க்கடலில்‌
ஆவி திகைக்கவுழல்‌ வாரிது சத்தியமே,

80-ஒருகூற னுமை கேள்வ னொளிர்நாபி
யுறையாதி மறை வாண னொடு மாதவர்‌
புருகூதன்‌ முதலாய சுரர்யாரு
மறியாத பொருளாய தனிமாமுதல்‌
குருகூரர்‌ பரகாலர்‌ குளிர்கோதை
யதிராசர்‌ வரயோகி குருதாள்களின்‌
முருகூரு நறைவீசு தமிழோத ,
வெனையாள முனமே செய்‌ தவமேதரோ.

81-எய்தாலும்‌ வால்குழைக்கு மிருஞ்சுணங்கன்‌
பெருங்குணனு மில்லே னின்றேன்‌
பெய்தாலுங்‌ கைப்பறாப்‌ பேய்ச்சுரைக்காய்‌
போல்கின்றேன்‌ பெரு நூறம்மேற்‌
செய்தாலு மீவறியாச்‌ செல்வர்கடைக்‌
குழன்றிடர்கொ டீய னேற்கு
வைதாலும்‌ வீடளிக்கு மால் பதத்தை
முடிசூடி வழுத்த லாமே.

82-தூய நீயுயிர்‌, யாவும்‌ வீடு
துலங்கு மாறருள்‌. செய்யினுஞ்‌
சுத்த சத்துவ ருக்க.லாதொரு
துட்ட னேற்கது கிட்டுமோ
தீய ராவண னேனு நம்மொடு
சேர்க வென்ற தினத்திலே
சீல வீடண னன்றி மற்றெவர்‌
தேவ நின்னடி. சூடினார்‌
பாய மாமுகி லேழும்‌ வாழிய
பாரி லேமழை பெய்யினும்‌
பைந்த ருக்குல மல்ல தங்குள
பட்ட தாருத ழைக்குமே
ஆய யாவ முண்ண நல்குறு
மன்ன சாலையு ளாயினும்‌
அறப்ப சித்தவ ரன்றியேவ
ரருந்தி யின்புறு வாரரோ..

83–நீழலொன்று மிலாத பாலை
நெஞ்சு ரத்தி னிருந்ததோர்‌ நிறை குழைத்தரு வடிய டுத்தவர்‌ நெடு வெ யிற்றுயர்‌ தீர்பபோற்‌:
கேழ லென்றொரு ஞான மேனி
கிளர்ந்து கொண்டுல கங்களைக்‌
கீறு வெண்பிறை மாற மைந்தொளிர்‌
கேடில்‌ கொம்பிடை யேந்தினார்‌
வீழ லென்றும்‌ விழாமை யென்றுமிம்‌
மேதி னிக்கண்‌ மிடைந்த
தீ வினை ந ருங்கெடு குணமெ னுங்கறை
விரவு றாம லிருப்பரால்‌ –
தாழ லொன்றுமி லாது போயவர்‌
தாள்‌ டைந்தவர்‌ யாவருஞ்‌
சார்கொ டும்பவ நோயொ. ழித்துயர்‌
தணவி லின்படை வாரரோ.

84-‘திலத்தளவும்‌ பிறர்க்குதவாத்‌ தீயமன னாலே
சிதலைதின்‌ ற மதலையெனத்‌ இனமெலிந்து சாய்வேன்‌
சலத்தையடை தொறும்வேதத்‌ தனிக்கடவுள் யுன்னைத்‌
தயாவிலியென்‌ பேனென்றன்‌ சழக்குவினை யென்னேன்‌
நலத்த நெறி நடக்கறியா தடி யிழுக்கி வீழ்ந்து நனி துயரான்‌ முனி வெய்தி நடுங்குகர மோச்‌சத்‌
தலத்தை யறை குற்ற தளர்‌ நடைப் பருவக்‌ குழவி
தன்மதியென்‌ றுன்மதியிற்‌ சாலவழ கிற்றே.

85-தேனும்‌ பாலுங்‌ கன்னலும்போற்‌
றெவிட்டாச்‌ சுவைய தீந்தமிழின்‌
யானும்‌ பாட வல்லனென
ஞாலம்‌ புகழ்த னனிவிருப்போ
வானும்‌ பாரு மளந்தசெந்தா
மரைத்தாள்‌ விருப்போ நீயறிவை
மீனும்‌ பாழி யாமையுமாம்‌
விமலா நின்சீர்‌ விளம்புதற்கே.

86. தழலை நிகர்த்த துயர்ப் பிறவி
தழைக்கு நிலனா யயன்‌ றிருத்து
மழலை மொழிப்பெண்‌ மயிலனையார்‌
மயற்பேய்‌ பிடித்த மனக்குரங்குன்‌
கழலை வழுத்தி யமுது சுவை
காணா தினிய கரும்பிருக்க
விழலை வளர்க்கு மாத ரைப் போன்‌
மெலிதல்‌ விதியோ விழுப் பொருளே.

87. விள்ளற்‌ கரிய தொரு வீடும்‌
வேண்டா விறலின்‌ விழுப் பெரியார்‌
கொள்ளக்‌ குறையாப்‌ பெருங்கருணைக்‌
குவாலை முகந்து கொளவளிக்கும்‌
வள்ளல் கடவுள் திருவடிப்பூ மணக்காப் பனுவல் மாலை எலாம்
தள்ளப்‌ படுமா லீமம்சைத்‌
தயங்கு மாலை தனை நிகர்த்த

88-பவத்தைப்‌ புகுவேன்‌ பர மாயான்‌
பாவிற்‌ குழல் போ லுழல்‌வேனோ
தவத்தைப்‌ புகுவார்க்‌ குளதாமுன்‌
றயைதான்‌ றமியேற்‌ கிலதாமே.

89. நீயிருக்குங்‌ கோயிலென.நினையாம
லுடம்பிதனை நெடிய காலம்‌
பேயிருக்கும்‌ பாழ் மனையிற்‌ பெருங்கேடு
பெறவிகழ்ந்து பிறருக்‌ கச்ச
மாயிருக்குந்‌ இீயவினைத்‌ தூறுமண்டி
யழியவிட்டே னந்தோ சேய்க்குத்‌
தாயிருக்கு மாறிருக்குந்‌ தடங்கருணைப்‌
பெருங்கடலே தம்பி ரானே.

90. முத்த மிரங்கு முறுவனல்லார்‌
முலைக்கண்‌ மோத முரணழிந்து
நித்த மிரங்கும்‌ வகையுடைந்த
நெஞ்சப்‌ புணையே துணையாய்ப் போய்‌
நத்த மிரங்கும்‌ பவக்கடலி. னனிமூழம்‌ குவதொன்‌ றல்லாதுன்‌
சித்த மிரங்கும்‌ படிவேறென்‌
செயவ லேன் யான்‌.தெய்வதமே.

91. தேறா வொருவன்‌ றெங்கிளநீர்‌
செவ்வே நிறைந்த தீங்காயைச்‌
செங்கை வருந்த வசைத்த சைத்துச்‌
சிறிதுந்‌ தளும்பா வகையோர்ந்து
மாறா மிதுநீ ரிலதென்று
மருண்டு மாந்த முயலாது வறிதே யிகழ்ந்து விட்டாங்கு
வைய முழுது நிறைந்தெவர்க்கும்‌
பேறா யருளுக்‌ குருவான
பெருந்தே வூனப்‌ பேய்விழிக்குப்‌
பிறங்கா வியல்பா னிலையென்‌ று
பேணா திகழ்ந்து பெரும்பிறிதாய்‌
நீறாய்‌ நிலத்து விளிவேனை
நெடுமாற்‌ கேநீ யடிமையென
நினைவித்‌ தெடுத்தாண்‌ டதுஞான
நிதி போன்‌ மாற னெறித்தமிழே.

92. நெஞ்ச மென்ற கருங்கல்‌ கொண்டிடர்‌
நீர வெம்பவ வாரியி
னீடு செல்ல நினைந்து மூழ்குறு
நீச னேனகி லேசனே
தஞ்ச மென்றன னஞ்ச லென்‌ றரு
டந்தி டாயெனி னின்னையே
தந்தை தாய்கதி யென்று வேதம்‌
விதந்த துந்தவ றாகுமே கஞ்ச நாண்மல ரந்த ணன்றரு
கங்கை மோலிய ஸிந்திரர்‌
காசி லாதப ராச ராதியர்‌
காண வாசைகொள்‌ சேவடி
வஞ்ச னேனும வாவி னாலது
மாறெ னாநினை வாயெனின்‌
மாசு ளேற்கென வேறு பாதம்‌
வகுத்தி லாதென்‌ மாயனே.

93. முழுதுந்‌ தெளிந்து சலனங்கொ ளாது
முதுகுன்‌ றிருந்த சுனையிற்‌ பழுதின்‌ றிருந்த புனலின் கண்‌ வந்து படர்திங்க ணீழல்‌ படல்போற்‌று
ஓழுதொன்று தூய ருளமீது வந்து
சுடர்கின்ற சோதி யெனையே
கழுதென்று நின்ற கடையே னெனாது
கழறந்து வீடு தருமே.

94. வெருடருங்‌ கூற்ற மேற்றவெத்‌ நரகின்‌
விமுமமே கெழுமியும்‌ பல்கா
லுருட.ரும்‌ பிறவி யெனைப்பல கோடி
யுறுவதே பெறுவதாய்ப்‌ பொல்லா
இருடரு ஞாலத்‌ திடராலா முழந்து மிம்மியுங்‌ கழிந்திலா தந்தோ.
தெருடருந்‌ தேவுன்‌ னருளையு மறிக்குந்‌
திறத்‌த்‌ தென்‌ தீவினைத்‌ திரளே.

95. வான் மறந்த காலத்தும்‌ வழங்கு புனற்‌
பேராறு மான நின்னின்‌
றூன்மறந்த யோகியர் தமுளமறந்து
பருகவரு ளொழுகஈ நிற்ப: ,
தான்மறந்து நாவற்று நலிவெல்லா
முணர்ந்திலையே நற்றாய்‌ பி
‘தான்மறந்துந்‌ தான் மறவாள் எனல் பொய்யோ
தரைகடந்த சரணத்‌ தாயே.

96. உனக்குரிய வருட்கடலிற்‌ றிளைக்கும்‌ போதா
வொருதுளியிற்‌ றுளியெடுத்திங்‌ குரைக்கப்‌ புக்க
தெனக்கினிப்ப தென்னுமந்த வேது வன்றி
யாதுமோர்‌ பயன்கருஇ யில்லை கண்டாய்‌
‘தனக்கினிக்கு மெனத்தாய்ப்பா லுண்ப தல்லாற்‌
றன்னுடலம்‌ வளர்ப்பதெனச்‌ சற்றுப்‌ பிள்ளை ‘
மனக்கணினைப்‌ பில்லாத வாறு போல்வேன்‌
வரத்தவத்த ரமுதமென மடுக்குந்‌ தேவே.

97. மத்தேறு முதலாகப்‌ படாதனபட்‌
டுயிர்க்கருள வருமாத்‌ தெய்வம்‌
பித்தேறு மகவுக்கும்‌ பெரிதிடருற்‌
றுணவருத்தும்‌ பெற்றாண்‌ மான
தத்தேறு திருக்கரத்தான்‌ ஞாலமெலா நனியூட்டு நன்றி தேறார்‌ செத்தேறு பாடைமரஞ்‌ செய்பாவ
மென்னென்று செப்பு மாறே.

98-நலத்து மருந்தீங்கே நயக்கும் வெந்தீயேனாக
நாட்டமுதமே பெய்த கலத்துளும் கயப்பே சுவைக்குறும் இயல்பேன்
கண்ணநின்‌ கோயிலைச்‌ சூழும்‌
வலத்துளு நின்னை மதித்திடா துலக
வாழ்க்கையே மனக்கொள்வேன்‌ வைகு
நிலத்துளு மினிப்போ நீணர குளும்யா
னெடும்பொறை யாகுவே னம்மா.

99. மையோ மணியோ வெனுமேனி
மாயோனடித் தா மரை வாழ்த்தி
மெய்யோ புளக மரும்பவுளம்‌
வெந்தீ மெழுகின்‌ விரைந்துருகக்‌
கையோ தலைமேற்‌ குவித்தொருகாற்‌
கண்ணீர்‌ கலுழக்‌ கண்டறியேன்‌
ஐயோ வவன்ற னருட்பேரா
ற்ருந்த விழைந்தே னழகிதன்றே.

100. எள்ளற்‌ குரிய மனப்பேயார்க்‌
கேவற்‌ றொழில் செய்‌ திளைப்பேனைக்‌
கொள்ளக்‌ கருதிற்‌ -கொடும்பாவக்‌
கோட்டை யகத்தேன்‌ குணமிலென் று
தள்ளக்‌ கருதி னவன்றாளே
சரணம்‌ புகுந்தே னிவையிரண்டால்‌
விள்ளற்‌ கரிய விழுக்கடவுட்‌
கடியே னிடரே விளைத்தேனே.

101. தாய்வ யிற்றிடை வைத்த தார்கரு
தான ருத்தி வளர்த்ததார்‌ தலையி னிற்பொறி யிட்ட தார்நல
தரையி னிற்பெற விட்டதார்‌
பாய்வ யிற்றுயர்‌ போது தாய்முலை
பால்பி லிற்ற விழைத்ததார்‌
பளக றப்பயி றற்கெ னப்பல
பாடை மைப்புவி நட்டதார்‌
நோய்வ யிற்புக லுற்ற காலையி
னொய்தெ டுத்து நிறுத்ததார்‌  நுவலுக்கடை யுதரம்‌ வைத்துயிர்‌
நுதலி யற்பொ டணைத்ததார்‌
நாய்வ யிற்றிகழ்‌ குணமி லேனையும்‌
நன்னெறிச் செல  வுய்த்ததார்‌
நான்மு. கத்தொரு சேய்படைத்தொளிர்‌
நாபி மெய்ப்பொரு ளன்‌ றியே.

102. விழிவழியே தெரிகின்ற பேய்த்தேரை
நீரென்று விழைவுற்‌ நாரும்‌ குழிவழியாய்‌. வழிகுழியாங்‌ குருட்ருநல்‌ லொளியரெனக்‌ குறித்துக்‌ கூறப்‌
பழிவழியே யொழுகியிருட்‌ பாழ்ங்குழியில்‌
வீழ்கிற்பேன்‌ பரமா நிற்கே
வழிவழியா யுளவடியார்‌ மாந்துதிரு
வருட்காசை வைக்க லாமே.

103. பத்திச்‌ சுவையே பழுத்தமனப்‌
பகவ ரமுதப்‌ பழம்பாடல்‌
நத்திச்‌ சுவைதேர்‌. திருச்செவிக்கு
‘நவில்வார்‌ நாவுங்‌ கயக்கும்வெஞ்சொல்‌
வித்திச்‌ சுவையே நவையாக
விளைத்த வருத்த மித்தனைக்கு
முத்துச்‌ சுவைநல்‌ கருட்கடவுண்‌
முனியா யிதுவ முன்னருளே.

104. பீட்டைப்‌ புரிந்த பெருந்தமிழிற்‌
பிறவா நெறியே நனிகாட்டி
நாட்டைப்‌ புரிந்த தெருட்பெரியார்‌
நயந்த கடவுட்‌ பத்திமைதான்‌
கேட்டைப்‌ புரிந்தேற்‌ கணுவேனுங்
இடையா திவைகொண்‌் டுளதெனின்யான்‌
பாட்டைப்‌ புரிந்து படி.றியற்றிப்‌
பாரை மயக்கும்‌ பாதகனே.

105.– செகத்தைப்‌ புரக்கக்‌ கவித்த முடி
இருந்த வெழுதித்‌ தேசெழுதேன்‌
செந்தா மரைக்க ணெழுதியருட்‌
டேனார்‌ வெள்ளந்‌ தெரித்தெழுதேன்‌
முகத்தைப்‌ புதுக்கி யெழுதிமணி
மூறுவ னிலவை முகிழ்த்தெழுதேன்‌
மொய்யா ரகல மெழுதிமலர்‌
முதல்வி கோயின்‌ முடித்தெழுதேன்‌.

106. அகட்டைப்‌ புனைய வெழுதியூல
கனைத்து மடங்கு மாறெழுதேன்‌
அணியார்‌ நாபி யெழுதிமறை
வவனார்‌ வரவை யமைத்தெழுதேன்‌
இகத்தைப்‌ பரத்தை யளிககுமடி வயெழுதி யெமைக்காப்‌ பதையெழுதேன்‌
எழுதா மறைக்கு மரியவனை
யெழுதி யேமாந்‌ திருந்தேனே

707. தன்னையே தந்தையெனச்‌ சார்ந்தார்க்கோர்‌ தந்‌ தையையும்‌
பின்னையே நல்காப்‌ பெருங்கடவுள்‌–முன்னையே
தன்னையே தந்தையெனச்‌ சாரார்க்‌ கநந்தபிதா
என்னையோ நல்கு மியல்பு.

108, கொலைக்களிற்றிற்‌ கொண்ட குளிர்முத்தை யுப்பு
விலைக்குக்‌ கொடுத்த. விதமே–நிலைத்ததமிழ்ப்‌
பாவைப்‌ பிறர்க்குப்‌ பகர்ந்த பிழை, தீர
நாவைக்‌ கழுவினே னான்‌.

109. கற்ற நயித்துருவ காகுபனி. ராகவன்யான்‌.
சொற்ற தமிழ்க்குச்‌ *சுவைதேறார்‌–உற்ற
ஒருங்குலக மெல்லா மொருவாயி னுண்ட
பெருங்கடவுள் அல்லாற்‌*பிற்‌:

*கேள்வியாற்‌. செவிகண்முற்றுந்‌’ தோட்டவருணர்‌
வினுண்ணு மமுதத்தின்‌… சுவையாய்‌ நின்றான்‌” என்பது
கம்பநாடர்‌. . திருவாக்கு… (இராமாவதாரம்‌. ஆரணிய.சவரி பிறப்‌. 7)

——————-

ஸ்ரீ ராமப்பாட்டு

மதியிருக்குஞ்‌ சடைச்சிவனார்‌ மனைவியினுக்‌
குபதேசம்‌ வகுத்துக்‌ கங்கை
நதியிருக்குந்‌ தண்காசி நகர்மரிக்கு
மூயிர்க்கெல்லா நல்கக்‌ கஞ்சப்‌
பொதியிருக்கு மறைமுதல்வன்‌ பொறியழித்து
வீடளிக்கும்‌ பொற்பிற்‌ றென்று
விதியிருக்கு முடிவழுத்து மெய்ந்நாமம்‌
ராமவென விளம்பு வாயே.

2-தாதையார்‌ நாரதற்குத்‌ தந்த நாமம்‌
தவமுனிவன்‌ வான்மீகி சாற்று நாமம்‌
மேதையார்‌ ஞானியார் தாம்‌ விள்ளு நாமம்‌
விபீடணற்குப்‌ பேறருள மிக்க நாமம்‌
தீதையா ருற்றாலுந்‌ தீர்க்கு நாமம்‌
தேவரெலாஞ்‌ செபிக்கின்ற தெய்வ நாமம்‌
சதையா ருயிர் தளிர்க்கச்‌ செய்க நாமம்‌
சீராம நாமமெனச்‌ செப்பு வாயே.

3. குரு வடிவ வசிட்டன் மகிழ்‌ கூர்ந்த நாமம்‌
கோசிகனார்‌ வழிபட்டுக்‌ கொண்ட நாமம்‌
கருவடியிற்‌ புகாநெறியே காட்டு நாமம்‌
கவந்தனொடு விராதனுயிர்‌ களிக்கு நாமம்‌
மருவடிய ரெல்லாரும்‌ வாழ்த்து நாமம்‌
மந்திரங்கட்‌ கரசெனவே வகுத்த நாமம்‌
திருவடிக்கின்‌ னமுதாத்தித்‌ திக்கு நாமம்‌
சீராம நாமமெனச்‌.செப்பு வாயே.

4. இகத்துக்கும்‌ பரத்துக்கு மேற்ற நாமம்‌
* இருக்கனைத்து நாந்தியினி னியம்பு நாமம்‌
மகத்துக்குப்‌ புகல்கின்‌ற மகிமை நாமம்‌
மாதவயோ கியருளத்தே வரைந்த நாமம்‌
முகத்துக்கின்‌ சுவைத்தாக முளைத்த நாமம்‌
மூன்னொரு புள்‌ சிறை முளைக்க மொழிந்த நாமம்‌
செகத்துக்குந்‌ திவியினுக்குஞ்‌ சிறந்த நாமம்‌
சீராம நாமமெனச்‌ செப்பு வாயே.

* – ராமபத்ரன்‌ விஷயமான “பத்ரங்கர்ணேபி’ என்னுஞ்‌
சுருதியே நாந்தியாதலால்‌ இங்ஙனங்‌ கூறியது.

5. உலகினிலெட்‌. டைந்தினுக்கு ளூயிரா நாமம்‌
உறங்காத வில்வியுளத்‌ துறைந்த நாமம்‌
பலகலைதேர்‌. சரபங்கர்‌ பன்னு நாமம்‌ பாய புகழ்க்‌ கவியரசர்‌ பாடு நாமம்‌
இலகலைவாமழ்‌ வருணன்மகிழ்ந்‌ தேத்து நாமம்‌
இத்திரசித்‌ தனை வதைக்க வெண்ணு நாமம்‌
சிலவிலங்குஞ்‌ செப்பவருள்‌ செய்த நாமம்‌
சீராம நாமமெனச்‌ செப்பு வாயே.–எட்டு -திருமந்திரம்-அஷ்டாக்ஷரம் ஐந்து சிவ பஞ்சாக்ஷரம்

6. கல்லாருங்‌ கற்றாருங்‌ கற்கு நாமம்‌
* கங்கை முதற்‌ நீர்த்தபலன்‌ காட்டு நாம
வில்லாரும்‌ வீரர் செயம்‌ வேண்டு நாமம்‌
மெய்ம்மைக்கே பரியாய மேய நாமம்‌
சொல்லாருஞ்‌ சொலவேட்குந்‌ தூய நாமம்‌
தோமரக்க ரளத்தச்சந்‌ தோற்று நாமம்‌
செல்லாரு மழையினருள்‌ சிறக்கு நாமம்‌
சீராம நாமமெனச்‌ செப்பு வாயே.—*-தீர்த்த ஸ்நாநம் அநந்த கோடி பலதம் ஸ்ரீ ராம நாம அம்ருதம்

7-அரிய குகப்‌ பெருமாளா தரித்த நாமம்‌
ஆயிர நா மப்பயனு மளிக்கு நாமம்‌
பெரியதிரு வடி.பரவும்‌ பெரிய நாமம்‌
பெரும் புண்ணி யப் பயனாப்‌ பிறங்கு நாமம்‌
உரியதந்தை யங்கதனுக்‌ கோது நாமம்‌
ஓன்னாரும்‌ வழுத்துபுக முற்ற நாமம்‌
தெரியவழற்‌ தடவுள் முனந்‌ தெளித்த நாமம்‌
சீராம நாமமெனச்‌ செப்பு வாயே.

* “நிற்கின்ற செல்வம்‌ வேண்டி நெறி நின்ற வுயிர்க ளெல்லாங்‌ கற்கின்ற திவன்ற னாமங்‌ கருதுவ திவனைக்‌
சுண்டாய்‌’” என்று அங்கதனுக்‌ குரைப்பது காண்க.

8.–இசையியற்கண்‌ வாயார-வேத்து நாமம்‌
இம்மையே நன்மை தரு மினிய நாமம்‌
தசையறச் சு தீக்கணற்கு நயக்கு நாமம்‌
நமபட.ரு மிறைஞ்சி யகல்‌ நல்ல நாமம்‌
பசையறுத்த பரதனுளம்‌ பதித்த நாமம்‌
பனிமொழியா ளகலிகைநற்‌ பயன்கொ ணாமம்‌
திசையனைத்துந்‌ தொழவுரைத்துத்‌ திருந்து நாமம்‌
ராம நாமமெனச்‌ செப்பு வாயே.–இசைக்கண்ணும்‌ இயற்கண்ணும்‌ என்க.

9. மலய முனி யுலகறிய வழுத்து நாமம்‌
மலரயனே முதற்றேவர்‌ வாழ்த்து நாமம்‌
அலையுமுயிர்க்‌ கெலாமபய மளிக்கு, நாமம்‌
அத்திரி மா முனியறித்த வமுத நாமம்‌
நிலையில் பிறுப்‌ யற வெருவை நினைந்த நாமம்‌
நீண் நகரம் புகுவார் தாம் நினையா நாமம்
சிலைவலவன்‌ சத்துகுக்கன்‌ தேறு தாமம்‌
சீராம நாமமெனச்‌ செப்பு வாயே.

10. எத்திக்கு மெழுமுனிவ ரேத்து நாமம்‌
எவ்வுயிர்க்குஞ்‌ சீவனமா வெண்ணு நாமம்‌
பத்திக்கு மூலமெனப்‌ பன்னு நாமம்‌
பரமசிவ னுமையவட்குப்‌ பகர்ந்த நாமம்‌ முத்திக்கு வித்தாக முன்னு நாமம்‌
முதியவரு மிளையவரு மொழியு நாமம்‌
சித்திக்கு மந்திரமாத்‌ தேர்ந்த நாமம்‌
சீராம நாமமெனச்‌ செப்பு வாயே.

17, * தாரணியிற்‌ கலிதெறுவே தாந்த நாமம்‌
சபரிநெடுங்‌ காலமுளஞ்‌ சமைத்த நாமம்‌
பேரணியி னவர்க்குநலம்‌ பேணு நாமம்‌
பிரிய வந சூயை புகழ்‌ பேசு நாமம்‌
ஏரணியுந்‌ திரிசடைக்கு மினிய நாமம்‌
யான்சொலவு மெளிவந்த வின்ப நாமம்‌
சீரணியு முமையவள்முன்‌ றெளிந்த நாமம்‌
சீராம நாமமென்று சேர்க வீடே.

காராரு மேனிக்‌ கருணாகர மூர்த்திசக்
காரா தனையிதுவா வாதரித்து–நாரானே
சீராம நாமத்‌ திருப்பாட்‌ டிவணுரைத்தான்‌-மாரா கவன் கவிஞர் மன்

வரி சிலை நெடியேபன் பேர் படைத்தவர்க்கு
அடியவர்க்கு அடியரும் பெறுவார்
வேர் படைத்த எம் பிறவி யாற்றுவக் குணா வீடு -கம்பர்

————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ரா. இராகவையங்கார்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

பிரசித்தமான பிரமாணங்கள் –

February 26, 2023

ஸ்ரீமந் நாத முநிகள் நம்மாழ்வாரைப் பற்றி இந்த ஸ்லோகத்தை அருளியுள்ளார்:

யத்கோ ஸஹஸ்ரமபஹந்தி தமாம்ஸி பும்ஸாம், நாராயணோ வஸதி யத்ர ஸசங்கசக்ர | யந் மண்டலம் ஸ்ருதி கதம் ப்ரணமந்தி விப்ரா: தஸ்மை நமோ வகுள பூஷண பாஸ்கராய|| “

யாவருடைய ஆயிரம் கிரணங்கள் (ஆயிரம் திருவாய்மொழி பாசுரங்கள்) மனிதர்களின் அறியாமையை அகற்றுகிறதோ,
யாவருடைய திருமேனியில் நாராயணன் தன்னுடைய சங்குடனும் சக்கரத்துடனும் விளங்குகிறானோ,
யாவருடைய வசிப்பிடத்தின் பெருமையை சாஸ்த்ரங்கள் கூறுவதால் நன்கு படித்தவர்களால் வணங்கப்படுகிறதோ,
வகுள மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அந்த நம்மாழ்வாராகிற சூரியனை நான் வணங்குகிறேன்-

“த்யேயஸ் ஸதா ஸவித்ரு மண்டல மத்ய வர்த்தீ நாராயண: ஸரஸிஜாஸந ஸந்நிவிஷ்ட: கேயூரவாந் மகர குண்டலவாந் கிரீடீ ஹாரீ ஹிரண்மய வபு: த்ருத சங்க சக்ர: “

இந்த ஸ்லோகத்தில் சொல்லப்படுவது, அழகாக அலங்கரிக்கப்பட்ட நாராயணன் சங்க சக்கரங்களை தரித்துக் கொண்டு
ஸவித்ர மண்டலத்தில் எழுந்தருளியுள்ளான். அவனே எப்பொழுதும் த்யானிக்கத் தகுந்தவன்.
நாதமுநிகள் இங்கே நம்மாழ்வாரை எம்பெருமான் ஆனந்தத்துடன் எழுன்தருளியிருக்கும் ஸவித்ரு மண்டலமாகவும் சூரியனாகவும் சொல்கிறார்.
ஆழ்வாரின் ஆயிரம் பாசுரங்களை ஆயிரம் கிரணங்களாக விளாக்குகிறார்.
ஆழ்வார் தன்னுடைய ஒளியால் (பாசுரங்களால்) மதுரகவி ஆழ்வாரை வடக்கிலிருந்து ஈர்த்து திருக்குருகூருக்கு வரவழைத்தார்.
ஸவித்ரு மண்டலத்திலிருந்து வரும் கிரணங்களுக்கு ஸாவித்ரம் என்று பெயர் –
ஆதலால் திருவாய்மொழிக்கு இங்கே ஸாவித்ரம் என்ற பெயர் ஏற்பட்டுள்ளது

“ஆதித்ய ராம திவாகர அச்யுத பாநுக்களுக்குப் போகாத வுள்ளிருள் நீங்கி ஶோஷியாத பிறவிக் கடல் வற்றி
விகஸியாத போதிற் கமல மலர்ந்தது வகுள பூஷண பாஸ்கரோதயத்திலே”–ஆசார்ய ஹிருதய சூத்ரம் இங்கு கவனிக்கத்தக்கது:

————–

வ்ருஷார்த்தம் அஷ்டவ் ப்ரயதேத மாசான் நிஸார்த்த மர்த்தம் திவசம் யதேத வார்த்தக்ய ஹேதோர் வயஸா நவேந
பரத்ர ஹேதோர் இஹ ஜந்மனா ச —
எட்டு மாதங்கள் உழைத்து மழைக்காலம் நான்கு மாதங்கள் நிம்மதியாகவும்
பகலில் உழைத்து இரவில் நிம்மதியாகவும்
இளமையில் உழைத்து முதுமையில் நிம்மதியாகவும் இருப்பது போலே
அவ்வுலக நிம்மதிக்கு இஹ லோகத்தில் பிரயத்தனம் செய்ய வேண்டுமே

————–

யத்ராஷ்டாக்ஷரஸம் ஸித்தோ மஹா பாகோ மஹீயதே –
ந தத்ர ஸஞ்சரிஷ்யந்தி வ்யாதி துர்ப்பிக்ஷ தஸ்கரா; என்று
திருவெட்டெழுத்து வல்லனொருவனிருந்த நாடு ஸம்ருத்தமாயிருக்கும்

——-

தஸ்மை ராமானுஜார்யாய நம பரமயோகிநே
யஸ்ஸ்ருதிஸ்ம்ருதி ஸுத்ராநாம் அந்தர்ஜ்வர அஸீஸமது

ஸ்ரீமாதாவ்ங்க்ரி ஜலஜத்வய நித்யசேவா
ப்ரேமா விலாசய பராங்குச பாதபக்தம்
காமாதி தோஷகரம் ஆத்ம பதாஸ்ருதாநாம்
ராமாநுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா – (யதிராஜவிம்சதி – ஸ்ரீமணவாள மாமுனிகள்)

இதிகாச புராணாப்யாம் வேதம் செளபப்ரம்மயேது
விபேத்யல்பத் ஸ்ருதாத் வேதஹா மாமயம் ப்ரதரிஷ்யதி-

பாராசர்ய வசஸ்ஸுதாம் உபநிஷத் துக்தாத்பி மத்யோத்ருதாம்
சம்சாராக்னி விதீபனப் வியபகதப் ப்ராணாத்ம சஞ்சீவனி
பூர்வாச்சார்ய ஸுரக்ஸிதாம் பகுமதி வ்யாகாத தூரஸ்திதாம்
ஆநீதாந்து நிஜாச்ஷரைஹி சுமனசஹா பெளமாஃப் பிமவ்துன்வகம்

வியாசம் வஷிஷ்ட நப்தாரம் சக்தே பெளத்ரம கல்மஸம்
பராசராத்மஜம் வந்தே சுகதாந்த தபோநிதிம்

சம்யங் ஞாய கலாபேந மகதா பாரதேநச
உபப்ரம்மித வேதாய நமோ வியாசாய விஷ்ணவே

எதிகாஸ்தீத தன்யத்ர எந்நேகாஸ்தீ நதக்கொஸிது தர்மேச அர்த்தேச காமேச மோக்ஷ்சேச பரத ரிஷப,

அமுனா தபநாதிசாயு பூம்னா எதிராஜேன நிபக்த நாயகஸ்ரீஹி
மஹதி குருபந்திஹாரயட்டிஹி விபுதானாம் ஹ்ருதயங்கமா விபாதி

ஸ்வஸ்திஹஸ்திகிரி மஸ்தசேகரஹா சந்ததோது மயிசந்ததம் பரிஹி
நிஸ்சவாப்யதிக மப்யதத்தயந்தேவம் ஒளபநிஷதீ சரஸ்வதீ
ஸ்ரீநிதிம் நிதிமபார மர்த்தினாம் அர்த்திதார்த்த பரிதான தீக்ஷ்சிதம்
சர்வபூத ஸுர்தம் தயாநிதிம் தேவராஜ மதிராஜ மாஸ்ரயே

ஸ்ரீரங்கம், கரிசைலம் அஞ்சனகிரிம் தார்க்‌ஷாத்திரிசிம்மாசலவ்
ஸ்ரீகூர்மம் புருஷோத்தமஞ்ச பதரீ நாராயணம் நைமிசம்
ஸ்ரீமத்த்வாரவதி ப்ரயாக் மதுரா அயோத்தியா கயா புஷ்கரம்
சாளக்ராமகிரிம் நிஷேவ்ய ரமதே இராமானுஜோயம் முநிஹி

ஸத்யம் ஸத்யம் புனஸ்ஸத்யம் உத்ருச்சபுதமுச்சதே எதிராஜோ ஜகத்குருஹு
நாத்ர சம்சயஹா சயேவ சமுத்ரத்தா நாத்ர சம்சயஹா

———————-

வேதம் -வேதயதி -தர்ம அதர்மங்களை அறிவிக்கின்றதால் வேதம்
ப்ரத்யக்ஷ அநுமித்யா வா யஸ்து உபாயோ ந வித்யதே
ஏநம் விதந்தி வேதோ தஸ்மாத் வேதஸ்ய வேத தா

—–

ஸம்யக் ந்யாய கலாபேன மஹதா பாரதேன ச
உபப்ருஹ்ம்ஹித வேதாய நமோ வ்யாஸாய விஷ்ணவே ||

இது ஶ்ருதப்ரகாஶிகையில் ஸ்வாமி ஸுதர்சன ஸூரியினால் அனுக்ரஹிக்கப்பட்ட ஶ்லோகமாகும்.
நன்றாகச் செய்யப்பட்ட ந்யாய கலாபத்தினாலும் (ப்ரஹ்ம மீமாம்ஸையினாலும்),
பெரியதான (அல்லது) வைபவத்தையுடையதான பாரத்தினாலும், யாவர் விஷ்ணுவினுடைய ஆவேசாவதாரமான
வேதவ்யாஸ பகவான், வேதத்திற்க்கு உபப்ருஹ்மணங்களைச் செய்தாரோ
அவரின் பொருட்டு நம: என்பது இந்த ஶ்லோகத்தின் அர்த்தம்.

உபப்ருஹ்மணங்கள் உதவி கொண்டு வேதார்த்தங்கள் நிஶ்சயிக்கப்படாத பொழுது, அவை சரியாக இருப்பதில்லை
என்பது * இதிஹாஸபுராணப்யாம் வேதம் ஸமுமபப்ருஹ்மயேத் * என்ற ப்ரமாண வசனத்தினால் தோற்றும்.

———–

சாரீரக மீமாம்ஸா 4 அத்யாயங்களைக் கொண்டது. ஒவ்வொரு அத்யாயத்திற்கும் 4 பாதங்கள்.
அதனால் மொத்தம் 16 பாதங்கள். ஒவ்வொரு பாதம் தன்னிலும் ஒரு குணம் ப்ரதிபாதிக்கப்படுகிறது.
எனவே * ஶ்ருதிஸிரஸி விதீப்தனான * எம்பெருமானுக்கு மொத்தம் 16 திருக்குணங்கள்
சாரீரக மீமாம்ஸையினால் ப்ரதிபாதிக்கப்பட்டுள்ளன.
அதனை அடைவே ஸ்வாமி தேஶிகன் * ஸாராவளியில் * ஶ்லோகமாக அருளிச் செய்தார்.

ஸ்ரஷ்டா தேஹீ ஸ்வநிஷ்ட: நிரவதிகமஹிமாபாஸ்தபாத: ஶ்ரிதாப்த:
காத்மாதே: இந்த்ரியாதே: உசிதஜநநக்ருத்ஸம்ஸ்ருதௌ தந்த்ரவாஹீ |
நிர்த்தோஷத்வாதிரம்ய: பஹுபஜநபதம் ஸ்வார்ஹகர்மப்ரஸாத்ய:
பாபச்சித் ப்ரஹ்மநாடீகதிக்ருததிவஹந் ஸாம்யதஶ்ச அத்ரவேத்ய: || (19)

ஸ்ரஷ்டா – உலகைப் படப்பவன்(1-1), தேஹீ – தன்னையொழிந்த அனைத்தையும் தனக்குச் சரீரமாகக் கொண்டவன் (1-2);
ஸ்வநிஷ்ட: – தன்னையே ஆச்ரயமாகக் கொண்டவன் (1-3); நிரவதிமஹிமா – எல்லையற்ற பெருமைகளை உடையவன் (1-4);
அபாதஸப்தபாத: – ஸாங்க்யாதி ஸ்ம்ருதிகளால் கலக்கமுடியாதவன் (2-1); ச்ரிதாப்த: – அண்டியவர்களுக்கு நண்பன் (2-2);
காத்மாதே: உசிதஜநநக்ருத் (2-3) – ஆகாசம் ஆத்மா முதலியவற்றினுடையவும் தக்கபடி படைப்பவன் – இந்திரியாதே: உசிதஜநநக்ருத் (2-4)-
இந்த்ரியம் முதலியவற்றினுடையவும் தக்கபடி படைப்பவன்; ஸம்ஸ்ருதௌ தந்த்ரவாஹீ – ஜாக்ரத் ஸ்வப்ந ஸுஷூப்திமூர்ச்சா மரணம் ஆகியவைகளை நிர்வஹிப்பவன் (3-1); நிர்தோஷத்வாதி ரம்ய: (3-2) – தோஷங்கள் தட்டாதவன் ரம்யன்; பஹுபஜனபதம் (3-3) –
பல உபாஸநத்திற்கு இருப்பிடமாக அறியத்தக்கவன்; ஸ்வார்ஹகர்மப்ரஸாத்ய: (3-4) –
ஜீவர்கள் தம் தம் ஆச்ரமங்களுடன் அநுஷ்டிக்கப்படும் கர்மாக்களால் ஸந்தோஷப்படுத்தப்படுபவன்; பாபச்சித் (4-1) –
பாபங்களை நீக்குபவன்; ப்ரஹ்மநாடீகதிக்ருத் (4-2)- மோக்ஷத்தை அடைவிப்பவன்; அதிவஹந் (4-3) –
அழைத்துச் செல்பவன்; ஸாம்யத: (4-4)- தனக்கு ஸமமான யோகத்தைத் தருபவன்.
இப்படி மொத்தம் 16 திருக்குணங்கள் சொல்லப்பட்டுள்ளன.

* வேத வேத்ய * ந்யாயத்தால் வேத்யனான எம்பெருமான் பெருமாளாக (ஸ்ரீ ராமபிரானாக) திருவவதாரம் செய்தருளின பொழுது,
வேதமும் ஸ்ரீராமாயணமாக அவதாரம் செய்தது. ஸ்ரீராமாயணமும் பெருமாளுக்கு * குணவாந் கச்ச வீர்யவாந் * என்று
16 திருக்குணங்களே இருப்பதாகப் ப்ரதிபாதித்தது!

———-

ப்ரபத்யே ப்ரணாவாகரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் –
ப்ரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே –

இது ஸுதர்ஸன ஸூரியினாலே அருளிச் செய்யப்பட்டது. ஸ்ரீரங்கவிமாநமான ப்ரணவாகார விமானத்தைப் போல்
ஸ்ரீபாஷ்யம் விளங்குகிறது என்கிறார்.

———-

காஸார ஸம்யமி முகா: கமலா ஸஹாய
பக்தா: ப்ரபத்தி பதவீ நியதா மஹாந்த: |
யஸ்யாபவந் அவயவா இவ பாரநந்த்ர்யாத்
தஸ்மை நமோ வகுளபூஷண தேசிகாய ||

பொய்கையாழ்வார் முதலான ஶ்ரிய:பதியின் பக்தர்களும், ப்ரபத்தி மார்க்கத்தில் நிலைநின்றவர்களுமான மகான்களும்,
பாரதந்த்ர்யத்தாலே யாவர் நம்மாழ்வாருக்கு அவயவங்கள் போன்று இருந்தார்களோ,
அந்த மகிழ்மாலை மார்பினரான சடகோபனுக்கே நான் உரியேனாவேன். (பராங்குச பஞ்ச விம்சதி – 2)

———————

வேதவேத்யே பரே பும்ஸி ஜாதே தஶரதாத்மஜே |
வேத: ப்ராசதேஸாதாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மநா||–இது ஸ்காந்த புராணத்தில் உள்ள வசனம்

———-

ப்ரஹ்மஸூத்ரமும் திருவாய்மொழியும்

“புரா ஸூத்ரைர் வியாஸ: ஶ்ருதிஶதசஶிரோர்த்தம் க்ரதிதவாந்
விவவ்ரே தத் ஶ்ராவ்யம் வகுளதரதாமேத்ய ஸ புந: |
உபாவேதௌ க்ரந்தௌ கடயிதுமலம் யுக்திபிரஸௌ
புநர் ஜஜ்ஞே ராமாவரஜ இதி ஸ ப்ரஹ்மமுகுர: ||”

வேதாபஹாரிணம் தைத்யம் மீனரூபி நிராகரோத் |
ததர்தஹாரிணஸ்ஸர்வாந் வ்யாஸரூபி மஹேஶ்வர: ||

வேதங்களை அபஹரித்த பொழுது மீனாகத் திருவவதாரம் செய்து மீட்டருளின ஸர்வேச்வரனே,
அவ்வேதங்களுக்கு அபார்த்தங்களைச் சொன்ன பொழுது வ்யாஸராகத் திருவவதாரம் செய்து
உண்மையான அர்த்தங்களை நிலைநாட்டியருளினான் . என்பது இந்த ஶ்லோகத்தின் திரண்ட பொருள்.
அப்படி நிலைநாட்டியது சாரீரக மீமாம்ஸையான உத்தரமீமாம்ஸையைக் கொண்டேயாகும்.

அந்த வ்யாஸரே நம்மாழ்வாரகத் திருவவதாரம் பண்ணியருளி திருவாய்மொழி மூலமாக சாரீரக மீமாம்ஸா ஶாஸ்த்ரத்தை விவரித்து அருளினார்.

பின்பு அவரே எம்பெருமானார் மூலம் இரண்டையும் ஸமன்வயப்படுத்தி அருளினார் – என்பது
கீழ் உதாஹரித்த *புரா ஸூத்ரைர் * என்கிற ஶ்லோகத்தின் அர்த்தமாகும்.
இதனை * பாஷ்யகாரர் இது கொண்டு ஸூத்ரவாக்யங்கள் ஒருங்கவிடுவர் * (65) என்று காட்டியருளினார்
ஆசார்யஹ்ருதயத்திலே அழகியமணவாளப்பெருமாள் நாயனார்.

————–

7-வது காண்டத்தில், 5-வது ப்ரஸ்நத்தில் மேற்கண்டவற்றைக் காண்கிறோம்.
இங்கு, வேதேப்யஸ்ஸ்வாஹா) என்று வருகிறது. உடனே, காதாப்யஸ்ஸ்வாஹா) என்கிறது.
ஸம்ஸ்க்ருத வேதத்தையும், த்ராவிட வேதமான திவ்ய ப்ரபந்தத்தையும் முறையே வேத மற்றும் காதா என்கிற சொற்கள் குறிக்கின்றன.
ஸ்வாமி தேசிகன் காதா இவ்வார்த்தையை த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளியில் பலமுறை
திவ்ய ப்ரபந்தத்தைக் குறித்து உபயோகப் படுத்தியிருப்பது தெரிகிறது.
உதாரணமாக, தாத்பர்ய ரத்னாவளியின் இரண்டாவது பாசுரம் காண்க:

ப்ரஜ்ஞாக்யே மந்தசைலே ப்ரதிதகுணருசிம் நேத்ரயந் ஸம்ப்ரதாயம்
தத்தல்லப்தி-ப்ரஸக்தை: அநுபதி-விபுதை: அர்த்திதோ வேங்கடேச: |
கல்பாந்தயூந: சடஜிதுபநிசத்-துக்த-ஸிந்தும் விமத்நந்
க்ரத்நாதி ஸ்வாது-காதா-லஹரி-தச-சதீ-நிர்கதம் ரத்நஜாதம்)||

பொருள் –
காலத்தைக் கடந்த இளமையுடையரான ஸ்ரீமந்நாராயணின் திருக்கல்யாண குணங்களாகிற ரத்தினங்களைத்
தன்னில் கொண்டதாய், அவன் துயிலும் பாற்கடல் போன்றதாய், ஆயிரம் அலைகள் போல் எழும் இனிமையான
ஆயிரம் பாடல்(காதா)களைக் கொண்டதாய், சடகோபரின் திருவாயிலிருந்து புறப்பட்ட மொழிக்கடலை,
வேங்கடேசனாகிய நான், இதில் அடங்கியுள்ள அமுதப் பொருள்களை அநுபவிக்க வேண்டும் என்று ஆசையுற்ற
அடியார்களால் வேண்டப்பட்டு, பெரியோர்கள் வழிவந்த அறிவின் மத்தைக்கொண்டு கடைகிறேன்.
இத்துடன் த்ராவிட வேதாந்தத்தின் பெருமைகளை ஸம்ஸ்க்ருத வேதத்தின் மூலம் கண்டறியும் விசாரம் முற்றிற்று.

—————–

எம்பெருமானார் ப்ரஹ்மம் எனும் சொல்லை ஆழ்வார் வழியில் விளக்குவதாவது:
உயர்வற=அநவதிகாதிசய
உயர்=அஸங்க்யேய
நலம் உடையவன்=கல்யாண குண கண
யவனவன்=புருஷோத்தமன்

—————-

பகவந் –
“மைத்ரேய! பகவச் சப்தஸ் ஸர்வகாரண காரணே! ஸம்பார்த்தேதி ததா பர்த்தா பகாரோர்த்த்வயாந்வித:
நேதாகமயிதா ஸ்ரஷ்டா ககாரார்த்தஸ் ததாமுநே. ஐச்வர்யஸ்ய ஸமக்ரஸ்ய வீர்யஸ்ய யசஸச்ஸ்ரீய:
ஜ்ஞாநவைராக்ய யோச்சைவ, ஷண்ணாம் பக இதீரணா. வஸந்தி தத்ர பூதாநி பூதாத்மந்யகிலாத்மநி,
ஸச பூதேஷ்வசேஷேஷு வகாரார்த்தஸ் ததோவ்யய:ஜ்ஞாந சக்தி பலைச்வர்ய வீர்ய தேஜாம்ஸ்ய சேஷத:
பகவத்சப்தவாச்யாநி விநா ஹேயைர் குணாதிபி: ஏவமேஷ மஹாசப்தோ மைத்ரேய! பகவாநிதி,
பரப்ரஹ்ம பூதஸ்ய வாஸுதேவஸ்ய நாந்யக: தத்ர பூஜ்ய பதார்த்தோக்தி பரிபாஷா ஸமந்வித:
சப்தோயம் நோபசாரேண த்வந்யத்ர ஹ்யுபசாரத:” (விஷ்ணுபுராணம் 6-5-72)

[ மைத்ரேயரே! ‘பகவான்’ என்னும் சப்தம் ஸர்வ காரணங்களுக்கும் காரண பூதனான ஸர்வேச்வரன்
விஷயத்தில் சொல்லப் பெறுகிறது. ‘(ப்ரக்ருதியை) கார்யதசை அடையச்செய்பவன்,
‘ஸ்வாமி’ என்னும் இரண்டு அர்த்தங்களுடன் கூடியது பகாரம்; முனிவரே!
அவ்வாறே ‘ரக்ஷிப்பவன், ஸம்ஹரிப்பவன், ஸ்ருஷ்டிப்பவன்’ என்பது ககாரத்தின் அர்த்தம்.
ஸம்பூர்ணமான ஐச்வர்யம், வீர்யம், யசஸ், ஜ்ஞாநம், வைராக்யம் என்னும் இந்த ஆறு குணங்களுக்கும்
‘பக’ என்னும் பதம் வாசகமாயிருக்கிறது.
பூதங்களை சரீரமாகக்கொண்டவனும், எல்லாவற்றுக்கும் ஆத்மாவாயிருப்பவனுமான அவனிடத்தில் பூதங்கள் வஸிக்கின்றன.
அவனும் அகில பூதங்களிலும் வஸிக்கின்றான். ஆகையால் அழிவற்றவனான பகவான் வகராத்துக்கு அர்த்தமாகிறான்.
கீழானவையான முக்குணங்கள் முதலியவற்றுடன் சேராத
‘ஜ்ஞாநம், சக்தி, பலம், ஐச்வர்யம், வீர்யம், தேஜஸ் என்னும் எல்லா குணங்களும்
‘பகவாந்’ என்னும் சப்தத்தினால் சொல்லப்படுகின்றன. மைத்ரேயரே! இம்மாதிரியாக பகவான் என்னும்
இந்த மஹாசப்தம் பரப்ரஹ்மமான வாஸுதேவனுக்கே உரித்தானது. வேறொருவரையும் குறிக்காது.
‘பூஜிக்கத்தக்க பொருளைக் குறிப்பது’ என்னும் பரிபாஷையுடன் கூடிய இந்த சப்தம் அவன் விஷயத்தில்
ஔபசாரிகமாகச் சொல்லப் பெறுவதில்லை. மற்ற விஷயங்களில் ஔபசாரிகமாக அமுக்யமாகச் சொல்லப் பெறுகிறது.]

————-

பசுர் மனுஷ்யப் பக்ஷிர்வா ஏ ச வைஷ்ணவ ஸமாச்ரயா:
தேநைவ தே ப்ரயாஸ்யந்தி தத்விஷ்ணோ: பரமம் பதம்

ஒரு விலங்கோ, மனிதனோ, பறவையோ ஒரு வைஷ்ணவனிடம் புகல் பெற்றால்
அந்தத் தொடர்பினாலேயே அவ்வுயிர் மிக உயர்ந்த பரமபதம் அடைகிறது-

பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரியவானுள் நிலாவுவரே” (திருவாய்மொழி 6-10-11)
“எமர் கீழ் மேல் எழுபிறப்பும் விடியா வெந்நரகத்து என்றும் சேர்தல் மாறினரே”

———————-

அகில-புவந-ஜந்ம-ஸ்தேம-பங்காதிலீலே
விநத-விவித -பூத-வ்ராத-ரக்ஷைக-தீக்ஷே
ச்ருதி -சிரஸி-விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீநிவாஸே
பவது மம பரஸ்மின் சேமுஷீ பக்திரூபா

“அகில-புவந-ஜந்ம-ஸ்தேம-பங்காதிலீலே” எனும் சொற்கள் ப்ரஹ்ம ஸூத்ரத்தில்
இரண்டாவதான “ஜன்மாத்யஸ்ய யத:” என்பதும்,
அந்த ஸூத்ரமே “யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே” என்கிற உபநிஷத் வாக்யம் அடியானது

ஸ்ருதப் பிரகாசிகா பட்டரும்,“ஜகதுத்பவ-ஸ்திதி-பிரணாச-ஸம்ஸார விமோசன” என ஆளவந்தாரை உதாஹரிக்கிறார்.

விநத விவித வ்ராத ரக்ஷைக தீக்ஷே” என்றதில் ரக்ஷணம் என்பது பொதுவானதன்று
மோக்ஷ ப்ரதத்வத்தை அடக்கியது என்று தெரிகிறது
அணைவதரவணை மேல்”லில் மோக்ஷ ப்ரதத்வத்தை அனுபவிக்கிறார்-

——————-

எம்பெருமானார் கிரீட, மகுட, சூடாவதம்ச என்ற மூன்று சொற்களால்
எம்பெருமானின் பரதவ, சௌலப்ய, பிரணயித்வமாகிற மூன்று அரசு நிலைகளைக் காட்டியருளுகிறார்.
பாரளந்த பேரரசே என்பதில் சௌலப்யத்தில் அரசன் என்றபடி.த்ரிவிக்ரம அவதாரம் எடுத்தபோது
அவன் தன் திருவடியை ஒவ்வொருவர் தலையிலும் வைத்தருளினான்.
எம் விசும்பரசே என்றதில் பரத்வம் சொன்னபடி. அவன் ஸ்ரீவைகுண்டத்தில் நித்யசூரிகளின் தலைவனைத் திகழ்கிறான்.
எம்மை நீத்து வஞ்சித்த ஓரரசே என்றதில் அவன் கலப்பதும் பிரிவதுமாக ஆழ்வார் பால் பூண்ட பிரணயித்வம் தெரிகிறது.

————————

தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகமேவமக்ஷிணீ”–

”கம்பீராம்பஸ்சமுத்பூத சம்ருஷ்ட நாள ரவிகரவிகசித புண்டரீக தலாமலாயதேக்ஷண”–வேதார்த்த சங்க்ரஹம்

(i)கம் பிபதி இதி கபி:=ஆதித்ய: தேன அஸ்யதே க்ஷிப்யதே விகாஸ்யதே இதி கப்யாசம்-சூரியனால் மலர்த்தப்பட்ட தாமரை

(ii)கம் பிபதி இதி கபி:=நாளம்,தஸ்மின் அஸ்தே இதி கப்யாசம்-கொழுத்த தண்டுகளுடன் கூடிய தாமரைகள்

(iii)கம் ஜலம் ஆச உபவேசனேஇதி ஜலேபி ஆஸ்தே இதி கப்யாசம் -[ தண்ணீரால் தாங்கப்படும் தாமரை ]

கம்பீராம்பஸ்ஸமுத்பூத புண்டரீக – தாமரை ஜலஜம், அல்லது அம்புஜம் அல்லது நீரசம் எனப்படும்
தாமரையை அலர்த்தக் கடவ ஆதித்யன் தானே நீரைப் பிரிந்தால் அத்தை உலர்த்துமாபோலே” என்கிறார்
சிறிய திருமடலில், திருமங்கை மன்னன், ”நீரார் கமலம்போல் செங்கண் மால் என்றொருவன்” என்கிறார்.
எம்பெருமானின் சிவந்த கண்கள் அழகியநீர்த் தாமரை போலுள்ளன.
மேலும் திருவிருத்தத்தில் ஆழ்வார் “அழலலர் தாமரைக் கண்ணன்” என்கிறார் இதே பொருளில்.
இவ்விடத்து வ்யாக்யானத்தில் ஸ்வாமி நம்பிள்ளை கப்யாச ஸ்ருதியை நன்கு மேற்கோள் காட்டி விளக்குகிறார்.
இதில் முதற்பதம் “கம்பீர” எனும் அடைமொழி நீரின் விரிவைக் குறிப்பது ஆழ்வாரின் திருவாய்மொழியில்
“தண் பெருநீர் தடந்தாமரை மலர்ந்தால் ஒக்கும் கண் பெருங்கண்ணன்” என வருகிறது.
தாமரை பெரிய குளிர்ந்த தடாகத்தில் பூத்துள்ளது, எம்பெருமானின் திருக் கண்களும் அவ்வாறுள்ளன.
”ஸம்ர்ஷ்ட நால புண்டரீக” – தாமரை எவ்வாறு நீரைச் சார்ந்தே உள்ளதோ அதே அளவு தன் தடித்த செவ்விய தண்டையும் சார்ந்துள்ளது
தண்டு பற்றிய குறிப்பும் ஆழ்வார் பாசுரங்களிளிருந்தே கிடைக்கிறது.
திருவிருத்தத்தில் ஆழ்வார், “எம்பிரான் தடங்கண்கள் மென்கால் கமலத் தடம்போல் பொலிந்தன”
எம்பெருமானின் அழகிய திருக் கண்கள் எழிலார்ந்த தண்டின்மீது துலங்கும் தாமரைபோல் பொலிந்தன.

”ரவிகர விகசித” – நீரில் தண்டால் தாங்கப்படும் தாமரை மலர்வது சூரியனின் கிரணங்களால் சொல்லமுடியாத
பேரழகுள்ள பெருமானின் திருக்கண்களோடு ஓரளவாகிலும் ஒப்பு சொல்லக் கூடியது தண்டோடு அழகாய்
நீரில் நிற்கும் மலர்ந்த தாமரையே ஆகும். சூரியனின் கிரணங்களே அவனது கைகள்.
”செஞ்சுடர்த் தாமரை” எனும் ஆழ்வார் பாசுரத்தில் இவ்வுவமை கிடைக்கிறது.
பெருமானின் கணங்களுக்கும் தாமரைக்குமுள்ள சம்பந்தம் கூறப் படாவிடினும்,
குலசேகரப் பெருமாள் சூரியனுக்கும் தாமரைக்குமுள்ள தொடர்பைத் தம் பெருமாள் திருமொழியில்
“செங்கமலம் அந்தரம் சேர் வெங்கதிரோர்க்கல்லால் அலராவால்” என்று அருளிச் செய்கிறார்.

புண்டரீக தளாமலா யதேக்ஷணா – மூலத்தில் “புண்டரீகமேவமக்ஷிணீ “என்று இவ்வளவே உள்ளதை
எளிதாகத் தாமரைபோலும் கண்களை உடையவன் என்றோ புண்டரீகேக்ஷணன் என்றோ சொல்லி விடலாம்.
ஆனால் ஸ்வாமி தள, ஆமல, ஆயத எனும் மூன்று சொற்களை
புண்டரீக மற்றும் ஈக்ஷண எனும் இரண்டு சொற்களின் நடுவில் சேர்த்துள்ளார்.
இது ஆழ்வார்களின் பாசுரங்களின் தாக்கத்தாலேயே ஆகும்.

ஆழ்வார்கள் “தாமரைத் தடங்கண்ணன்”, “கமலத் தடம் பெருங்கண்ணன்” என்பன போன்ற சொற்களைப் பயன்படுத்துகின்றனர்.
தமிழில் “தட”வும் வடமொழியில் “தள”வும் ஒன்றே.
வடமொழியின் “ள” தமிழில் “ட” ஆகிறது. ள, ட இரண்டுக்கும் வேறுபாடு இல்லை.
இக்கொள்கையைத் தமிழ்ப்புலவோர் “எழுத்துப்போலி” என்பர்.
பூர்வாசார்யர்கள் தம் வியாக்யானங்களில் “தடம்” எனும் சொல்லை, “பெரிய”, ”குளம்”, ”இதழ்” என்று விளக்குகிறார்கள்.
இவ்விடத்தில் இதழ் எனும் பொருள் பொருந்துவதாகும்.

ஆழ்வாரின் “கமலக் கண்ணன்…அமலங்களாக விழிக்கும்” – எம்பெருமானின் கருணை நோக்கு
எல்லாப் பாவங்களையும் நீக்கும். எம்பெருமானின் நோக்கின் தன்மை “அமல” என்பதால் தெரிய வருகிறது
ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு “ஆயத “ என்ற சொல் எங்கிருந்து வருகிறது எனக்காண்பது எளிது.
திருப்பாணாழ்வாரின் “கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்டவப் பெரியவாய கண்கள்” எனும்
அவர் சொற்கள் நம் நினைவில் உடனே தோன்றும்.

————–

உக்த்லக்ஷண-தர்மசீலா வைஷ்ணவாக்ரேஸர: மத் ஸமாச்ரயேண ப்ரவ்ருத்தா:
மந்நாமகர்ம-ஸ்வரூபாணாம் வாங்மநஸாகோசாரதயா மத்தர்சநேந விநா ஸ்வாத்மதாரணபோஷநாதிகமலபமாநா:
க்ஷண மாத்ர காலம் கல்ப ஸஹஸ்ரம் மந்வாநா ப்ரசிதில-ஸர்வ-காத்ரா பவேயுரிதி
மத்ஸ்வரூப சேஷ்டிதாவலோகநாலாபாதிதாநேந தேஷாம் பரித்ராணாய”

தர்மசீலா: =அவர்கள் நியமிக்கப்பட்ட தர்மத்தைத் தங்கள் தகுதியாக உடையவர்கள்.
“தர்மம்” என்ற சொல் பொதுப்படையான தர்மத்தைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்,
அல்லது விசேஷமாக வைஷ்ணவ தர்மத்தைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.
முன் ஸ்லோகத்தில் “யதா யதாஹி தர்மஸ்ய” என்றிருப்பதால் முதலில் சொன்ன பொருளும்,
இவ்வுரையில் அடுத்த சொல் “வைஷ்ணவாக்ரேசரா:” என்றுள்ளதால் பின் சொன்ன பொருளும் ஒக்கும்.

வைஷ்ணவாக்ரேசரா: – இவர்கள் வைஷ்ணவர்களில் முதன்மையானோர். இதுதான் இங்கு மிக முக்யமான குறிப்பு.
ஸ்வாமி இராமானுசரின் சம்ப்ரதாயத்தில் ஆழ்வார்களே உயர்ந்த ஸ்ரீவைஷ்ணவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
வைஷ்ணவாக்ரேசரா: என்கிற சொல் அவர்களின் உயர்ந்த ஸ்தானத்தைக் காட்டுகிறது.

மத் ஸமாஸ்ரயேண பவித்ரா: – என்னையே அடைக்கலமாகக் கொண்டவர்கள்.
இக் குறிப்பு, “துயரறு சுடரடி தொழுது”,
“ஆழிவண்ண நின் அடியினை அடைந்தேன்” போன்ற ஆழ்வார்களின் திருவாக்குகளால் கிளர்த் தப்பட்டது.

மந்நாம கர்ம ஸ்வரூபாணாம் வாங் மனஸாகோசாரதயா –
“என் சொல்லிச்சொல்லுகேன்?”
“நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச்சொல்லே” என்று ஆழ்வார்கள் எம்பெருமானின்
திவ்ய நாமங்கள், திவ்ய சேஷ்டிதங்கள் முதலானவை நினைவையும் சொல்லையும் கடந்தவை என்று உணர்ந்தவர்கள்.

மத் தர்சநேன வினா ஸ்வாத்ம தாரணபோஷணாதிகம் அலபமாநா: –
ஆழ்வார்களால் எம்பெருமானைக் காணாமலும் உணராமலும் நிற்கவோ தரிக்கவோ இயலாது.
“தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு கழிவதோர் காதலுற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே”,
“காண வாராய் என்றென்று கண்ணும் வாயும் துவர்ந்து” போன்ற பாசுரங்களில் இது தெளிவு.

க்ஷண மாத்ர காலம் கல்ப சஹச்ரம் மன்வானா: – எம்பெருமானோடு ஒரு நொடிப் பிரிவும்கூட ஆழ்வார்களால்
ஆயிரம் ஊழிக் காலப் பிரிவாகவே உணரப்படுகிறது. இதை அவர்கள் சொற்களிலேயே காணலாம்.
“ஒரு பகல் ஆயிரம் ஊழியாலோ”,
“ஊழியில் பெரிதாய் நாழிகை என்னும்”,
“ஓயும் பொழுதின்றி ஊழியாய் நீண்டதால்” போல்வன,

ப்ரசிதில-சர்வ-காத்ரா: –
எம்பெருமானோடு பிரிந்தபோதும், சேர்ந்தபோதும் ஆழ்வார்களின் திருமேனி களைத்தும் இளைத்துமே போந்தன.
கூடலில், சேர்த்தி இன்பத்தால் களைப்பு. பிரிவில், துயரத்தால் களைப்பு.
“காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும்”,
“காலும் எழா கண்ண நீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கிக் குரல் மேலுமெழா மயிர்க் கூச்சமறா”,
“உள்ளெலாம் உருகிக் குரல் தழுத்தொழிந்தேன்”,
மற்றும் “உரோம கூபங்களாய்க் கண்ண நீர்கள் துள்ளஞ் சோரத் துயிலணை கொள்ளேன்” என்பன போல்வன.

சுருங்கச் சொல்லில், “ஒரு ஸாது வைஷ்ணவர்களில் தலைவராய் இருப்பார், தர்ம ஒழுக்கத்தில் நிலை நிற்பவர்,
கண்ணனான என்னையே புகலாய் நினைத்திருப்பார், என் நாமங்களும் சேஷ்டிதங்களும் திவ்யமானவை,
மனதையும் சொல்லையும் கடந்தவை என்றிருப்பார், இவற்றின் அனுபவமின்றித் தரித்திலராவார்,
என் காட்சியும் உனர்வுமின்றித் தரித்திலர், என் பிரிவு ஒரு கணமும் ஓர் ஊழியாய் நினைப்பார்”
ஒரு சாது எம்பெருமானோடு கொண்டுள்ள உறவு இப்படி நெருக்கமும் நுட்பமும் கொண்டது .

————

மன்மனா பவ மத பக்தோ மத்யாஜி மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யசி யுக்த்வைவமாத்மானம் மத்பராயணா:

மன் மனா பவ – மயி ஸர்வேச்வரே நிகில ஹேயப்ரத்யநீக கல்யாணைகதாந ஸர்வஞ்ஞே ஸத்யஸங்கல்பே
நிகிலஜதேககாரணே பரஸ்மிந் ப்ரம்மணி பு௫ஷோத்தமே புண்டரீகதலாமலாயதேக்ஷணே ஸ்வச்சநீலஜீமுதஸங்காக்ஷே
யுகபதுதிததினகரஸஹஸ்ர ஸத்ருசதேஜஸி லாவண்யாம்௫தமஹோததே உதாரபீவரசதுர்பாஹோ அத்யுஜ்ஜவலபீதாம்பரே
அமலகிரீடமகரகுண்டலஹாரகேயுரகடகபூஷிதே அபரகா௫ண்யஸெளசீல்யஸெளந்தர்யமாதுர்ய காம்பீர்ய ஔதார்ய
வாத்ஸல்யஜலதௌ அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்யே ஸர்வஸ்வாமினி தைலதாராவதவிச்சேதேன நிவிஷ்டமநா பவ)

ஸர்வேச்வரேச்வரனான என் மேல் மனதை வை, என் மேல் = ஒரு குறையுமில்லாத, எல்லா மங்கலங்களும்
விரும்பத்தக்க கல்யாண குணங்களும் மிக்க, ஸர்வ வியாபி ஸத்ய சங்கல்பன், ஸர்வ காரணன், பரப்ரம்மம்,
அப்போதலர்ந்த அரவிந்தம் போன்ற செந்தாமரைக்கண்ணன், காள மேகம்போலும் கவின் மிகு கருணைத் தோற்றமுள்ளவன் ,
கதிராயிரம் இரவி கலந்தெரித் தாற் போல் தேஜோமயன், வண்ணப் பீதகவாடை தரித்தவன், பலபலவே ஆபரணமும் முடியும்
குண்டலமும் ஆரமும் கங்கணமும் தோள்வளையும் பூண்டு கருணையும் அன்பும் உடையனாய் எளிவரும் இயல்வினனாய்
சுலபனாய் எவர்க்கும் புகலாய் உள்ள என் மேல் அர்ஜுனா உன் அன்பை இடையீடின்றி வை என்கிறான்.

பண்டருமாறன் பசுந்தமிழ்ஆனந்தம் பாய் மதமாய் விண்டிட எங்களிராமானுசமுனி வேழம் ….என்றும்

கலிமிக்க செந்நெற்கழனிக்குறையல் கலைப்பெருமான் ஒலிமிக்க பாடலையுண்டு தன்னுள்ளம் தடித்து
அதனால் வலிமிக்க சீயம் இராமானுசன் ….என்றும் போற்றினார்

————-

ஸ்ரீ யாமுநாரயஸமோ வித்வான் ந பூதோ ந பவிஷ்யதி என்று உறுதியாகக் கூறுவர்.
ஸ்வாமியைப் போன்று ஒரு மஹாவித்வான் பிறந்ததும் இல்லை இனி பிறக்கப் போவதும் இல்லை.
திருவரங்கத்தமுதனாரும் ஸ்வாமியை ‘யதிகட்கிறைவன் யமுனைத்துறைவன்’ என்று இவரை
யதிகளுக்கு, அதாவது ஸந்யாஸிகளுக்கு இறைவன் என்றே போற்றுகிறார்.

ந வயம் கவ்யஸ்து கேவலம்,ந வயம் கேவல-தந்த்ர-பாரகா:, அபிது ப்ரதிவாதிவாரண-ப்ரகடாடோப-விபாடந-க்ஷமா:)

“நாம் வெறும் கவி மட்டும் அல்ல; வெறும் ஆகம தந்த்ரங்கள் அறிந்த வித்வான்கள் மட்டும் அல்ல;
நாம் அதற்கும் மேல், யானை போன்ற ப்ரதிவாதிகளின் ஆணவப் பிளிறல்களை அடக்கும் வல்லமைப் பெற்றவர்கள்” என்றார்.

வேத வேதாந்தத்தின் ரஹஸ்யமான மறைபொருளின் அர்த்தத்தை ஸ்ரீ பராசர மஹரிஷியை விட
ஸ்வாமி நம்மாழ்வார் நன்றாக விளக்கியுள்ளார். மேலும், ஆழ்வாரின் இனிமையான பாசுரங்கள்
எம்பெருமானுக்கு மிகவும் உகப்பாகவும், உலகுய்ய வைப்பதாகவும் உள்ளது. ஆழ்வார் பரம க்ருபையால்
நமக்கருளிச்செய்த பகவத் விஷயத்தை மனத்திற்கொண்டு, ஸ்வாமி ஆளவந்தார் ஆழ்வாரையும்,
கோடானுகோடி ஜீவன்களுக்கு தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையால் அருளிய எம்பெருமானையும் சமநிலையில் காண்கிறார்.
எப்படி வேதாந்தமானது, பரம்பொருள் ஸ்ரீமந்நாராயணனை எல்லோருக்கும் தாய், தந்தை, எல்லாம் என்று சொல்கிறதோ,
அதேபோல், ஸ்வாமி ஆளவந்தார் வகுள மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்வாமி நம்மாழ்வாரின் திருவடியே
தமக்கு எல்லாம் என்று சரணடைந்தார்” – வகுளாபிராமம் ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் மூர்த்நா ப்ரணமாமி

—————————

விஷ்ணோர் தேஹானுரூபாம் வை கரோத் யேஷாத் மநஸ்தநூம்–
எம்பெருமான் திவ்ய மங்கள விக்கிரகத்துக்கு அனுரூப திருமேனி கொள்கிறாள் பிராட்டியும் –
ராகவத்வே பவத் சீதா ருக்மிணீ கிருஷ்ண ஜன்மனி-அன்யேஷூ சாவதாரேஷூ விஷ்ணோ ரேஷா அநபாயநீ –

காவேரீ விராஜா சேயம் வைகுண்டம் ரங்க மந்திரம் -ச வாஸூ தேவோ பகவான் ப்ரத்யக்ஷம் பரமம் பதம் –
ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்க மிவா பரம்

பரஸ்ய ப்ரஹ்மானோ யத்ர சேஷித்வம் ஸ்ப்புடம் ஈஷ்யதே-ஸ்ருதி பிரகாசிகாகாரர் ஸ்ரீ ஸூக்தி
திங்நாகை ரர்ச்சிதஸ் தத்ர புரா விஷ்ணுஸ் சநாதன-ததோ ஹஸ்தி கிரீர் நாமக்க்யாதி ராசீன் மஹா கிரே-புராண பிரமாணம்-
திக்கஜங்களால் பூஜிக்கப் பட்டதால் ஹஸ்திகிரி
ராமோ விக்ரஹவான் தர்ம –கிருஷ்ணம் தர்மம் சனாதனம் —

தஸ்மை ராமாநுஜார்ய நாம பரம யோகிநே யா ஸ்ருதி ஸ்ம்ருதி சூத்ராணாம் அந்தர் ஜுரம் அஸீஸமத் —

சத்யம் சத்யம் புனஸ் சத்யம் யதிராஜோ ஜகத் குரு-ச ஏவ சர்வ லோகாநா முத்தர்த்தா நாத்ர சம்சய -ஸ்ரீ கூரத் தாழ்வான்-

நசேத் ராமாநுஜத் யேஷா சதுரா சதுரஷரீ காவஸ்தாம் பிரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ருஸ –
தஸ்மிந் ராமாநுஜார்யே குருரிதி பதம் பாதி நான்யத்ர –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை –

இராமானுஜம் லஷ்மண பூர்வஜம் ச –
தேவதாயா குரோஸ்ஸாபி மந்த்ரஸ்யாபி ப்ரகீர்த்த நாத் ஐஹிக ஆமுஷ்மிகீ சித்தி த்விஜஸ் யாஸ் தே ந சம்சய —
தேவதை குரு மந்த்ரம் இவற்றை கீர்த்தனம் செய்வதால் இம்மை மறுமை பயன்கள் உண்டு -ஐயம் இல்லையே –

குரோர் நாம சதா ஜபேத் –
பவபயாபி தப்த ஜன பாகதேய வைபவ பாவிதா வதரணேந பகவதா பாஷ்ய காரேண–ஸ்ருத பிரகாசிகை ஸ்ரீ ஸூக்தி-
சம்சார பயத்தால் தவித்து கொண்டு இருக்கும் மக்களின் பாக்கியத்தின் வைபவத்தினால் நேர்ந்தது ஸ்ரீ பாஷ்யகாரர் திருவவதாரம் –
சாஷான் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்யமயீம் தநூம் மக்நான் உத்தரதே லோகான் காருண்யாச் சாஸ்த்ர பாணிநா-
விஷ்ணுச் சேஷீ ததீயச்சுப குணநிலயோ விக்ரஹ ஸ்ரீ சடாரி –
ஸ்ரீ மான் ராமாநுஜார்ய பாத கமல யுகம் பாதி ரம்யம் ததீயம் – -மாறன் அடி பணிந்து உய்ந்தவர் அன்றோ –

ஸ்ரீ ராமாநுஜாய முநயே நம யுக்தி மாத்ரம் காமா துரோ அபி குமதி கலயன் நபீஷ்ணம் –
யாமாமநந்தி யமினாம் பகவஜ் ஜனாநாம் தாமேவ விந்ததி கதிம் தமஸ பரஸ்தாத் –
புத்தி கேட்டு காமத்தால் பீடிக்கப் பட்டவனாக இருப்பினும் ஸ்ரீ ராமாநுஜாய நாம என்று சொல்லுமவன் மோக்ஷம் அடைகின்றனர் –

உத்யத்தி நேச நிப முல்லச தூர்த்த்வ புண்ட்ரம் ரூபம் தவாஸ்து யதிராஜ த்ருசோர் மமாக்ரே –உதய சூர்யன் ஒத்து
திருமண் காப்பு துலங்கும் ஸ்வாமி உமது அழகிய திருமேனி காட்டி அருளுவாய் –
சரீர ஆத்ம லஷணம் ஆவது-யஸ்ய – சேதனஸ்ய- யஸ்ய த்ரவ்யம் -சர்வாத்மனா ஸ்வார்த்தே -நியந்தும் தாரயிதும் சக்யம்-
தத் சேஷை தைக ஸ்வரூப பஞ்ச தஸ்ய சரீரம் -சர்வாத்மனா –

லஷ்மீ நாதாக்கய சிந்தவ் சடரிபு ஜலத ப்ராப்ய காருண்ய நீரம் -நாத அத்ரவ் அப்யஷிஞ்சத் ததநு ரகுவராம் போஜ சஷூர்ஜ் ஜராப்யாம்
கத்வா தாம் யாமு நாக்க்யாம் சரிதம் அத யதீந்த்ராக்க்ய பத்மா கரேந்த்ரம் சம்பூர்ய ப்ராணிச ஸயீ ப்ரவஹதி சததம் தேசிகேந்த்ர ப்ரமவ்கை —

ஸ்வ ஜ்ஞானம் ப்ராபக ஜ்ஞானம் முமுஷூபி ஜ்ஞான த்ரயம் உபாதேயம் ஏதத் அந்யத் ந கிஞ்சன –
ஆசிநோதிஹி சாஸ்த்ரார்த்தாந் ஆஸாரே ஸ்த்தாபயத்யபி ஸ்வயம் ஆசரதே யஸ்மாத் தமாசார்யம் ப்ரசக்ஷதே –ஆச்சார்ய லக்ஷணம் –

ந்ருதேஹ மாத்யம் ப்ரதிலப்ய துர்லபம் ப்லவம் ஸூ கல்யம் குரு கர்ண தாரம் -மயாநுகூலேன நபஸ்வதேரித புமான் பவாப்திம் நதரேத்ச ஆத்மஹா —
முதன்மை வாய்ந்த -கிடைத்தற்கு அரிய -திறமை வாய்ந்த -குருவை ஓட காரனாக கொண்டதுமான மானிட உடல் ஆகிய ஓடத்தை பெற்று –
அனுகூலமாய் இருக்கும் என்னை – ஈஸ்வரனான -காற்றினால் தூண்டப்பட்டு சம்சாரக் கடலை தாண்டாதவன் தற்கொலை செய்து கொண்டவன் ஆவான் –

ஸக்ருத் ஸ்ம்ருதோபி கோவிந்த ந்ருணாம் ஜன்ம சதைச் சிதம்-பாபராசிம் தஹத்யாச தூலராசி மிவாநல–கோவிந்தனை ஒருகால் நினைத்தாலும்
சேதனர் நூறு பிறவிகளில் சேர்த்த பாப குவியலை நெருப்பு பஞ்சு குவியலை போலே உடனே கொளுத்தி விடுகிறான் –

வரம் ஹூதவஹ ஜ்வாலா பஞ்ச ராந்தர் வ்யவஸ்த்திதி -ந ஸவ்ரி சிந்தா திமுக ஜன சம்வாச சைவசம் —
கண்ணன் பால் சிந்தனை இல்லா மனுஷர் உடன் வாசம் செய்யும் கொடுமை கொழுந்து விட்டு எரியும் நெருப்பு கூண்டுக்களுள் இருப்பதை விட கொடியது

மன ஏவ மனுஷ்யானாம் காரணம் பந்த மோக்ஷயோ –
ஆரியன் -சமதி சர்வ சாஸ்த்ரரர் –அதத்வேப்யோ தூராத்யாதா புத்தி யேஷாம் தே ஆர்யா —
சாஸ்திரங்கள் அனைத்தும் அறிந்தவர் -தத்வம் அல்லாதவற்றவைகள் நின்றும் தூரஸ்தர்
யஸ்மாத் தாதுபதேஷடாசவ் தஸ்மாத் குருத்ரோ குரு –உபதேசம் பண்ணும் ஆச்சார்யன் உபதேசிக்கப் படும் எம்பெருமானை விட மேம்பட்டவர்
நாராயணோ அபி விக்ருதிம் யாதி குரோ ப்ரஸியு தஸ்ய துர்புத்தே கமலம் ஜலாத பேதம் சோஷயதி ரவிர் ந போஷயதி –

தத்தேரங்கீ நிஜமபி பதம் தேசிகா தேச காங்ஷி-வ்யாஸ திலகம் -அரங்கன் தன் பாதத்தை ஆச்சார்யர் கட்டளையை எதிர்பார்த்து அளிக்கிறான்
த்ருணீக்ருத விரிஞ்யாதி நிரங்குச விபூதய ராமானுஜ பதாம் போஜ ஸமாச்ரயண சாலிந
மஹதோ வேத வ்ருஷஸ்ய மூல பூதஸ் சனாதன ஸ்கந்த பூதா ருகாத் யாஸித்தே சாகா பூதாஸ் ததாபரே —
கிருதயுகம் வேதம் மரம் -தர்மம் வேர் -ருகாதிகள் தண்டு -மற்றவை கிளைகள் –
விஷ்ணோர் பூதாநி லோகாநாம் பாவநாய சரந்திஹி–ஸ்ரீமத் பாகவதம் –1–2–28-திரிந்து புனிதமாக்கும் முதல் ஆழ்வார்கள்
சிர நிர்வ்ருத்தம் அப்யேதத் ப்ரத்யக்ஷம் இவ தர்சிதம் -பால காண்டம் -முன்பே நிகழ்ந்து இருந்தும் நேரில் நிகழ்வது போல் காட்டப்பட்டது –
யாவன் சரனவ் ப்ராது பார்த்திவ வ்யஞ்ஜ நான்விதவ் சிரஸா தாரயிஷ்யாமி ந மே சாந்திர் பவிஷ்யதி —
ஸ்ரீ பரதன் அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசன் மேல் அவா –

நைவ சப்தே ஸ்வதோ தோஷா ப்ராமாண்ய பரிபந்தின–சந்தி கிந்து ஸ்வதஸ் தஸ்ய ப்ரமாணத்வமிதிஸ்த்திதி –
வக்து ராசய தோஷேண கேஷூ சித்ததபோத்யதே–
சப்தத்தில் பிரமாணம் ஆவதற்கு தடங்கலான குற்றங்கள் இயல்பாக இல்லை -பின்னையோ எனில் பிரமாணம் ஆகும் தன்மையே –
அதன் இடத்தில் இயல்பாய் அமைந்து
உள்ளது என்பது தான் உண்மை நிலை -இயல்பான அந்த பிராமணத் தன்மை சொல்லுகிறவனுடைய கருத்தில் உள்ள குற்றத்தால்
சில இடங்களில் வேறுபடுகிறது -ஆகம ப்ராமாண்யம் –ஆளவந்தார் –

ததாஸ்துதே மதுபித ஸ்துதி லேசவச்யாத் கர்ணாம்ருதை ஸ்து திசதை ரநவாப்தா பூர்வம் த்வன் மௌலி கந்த ஸூபகா முபஹ்ருத்ய மாலாம் லேபே மஹத் தர
பதாநுகுணம் பிரசாதம் –ஸ்ரீதேசிகன் -பெரியாழ்வார் என்ற பெயர் பெற்றது சூடிக் கொடுத்த இவள் திரு மாலை சமர்ப்பித்ததாலே என்றவாறு –

பரம ஸூஹ்ருதி பாந்தவே களத்ரே ஸூததநயா பித்ரு மாத்ருப் ருத்ய வர்க்கே சடமதி ருபயாதியோ அர்த்த த்ருஷ்ணாம்
தமதமசேஷ்ட மவேஹி நாஸ்ய பக்தம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7–30–சடமதி உடன் உள்ளவன் ஸ்ரீ விஷ்ணு பக்தன் அல்லன் –

அசேஷ ஜகத்திதா நுஸாசந ஸ்ருதி நிகர சிர –உலகு அனைத்துக்கும் ஹிதம் கற்பிக்கும் வேதாந்தம் -வேதாந்த சங்க்ரஹம் –
மாதா பித்ரு ஸஹஸ்ரேப்யோ வத்சல தரம் ஹி சாஸ்திரம்

கிருஷ்ண கிருஷ்ண மஹா பாஹோ ஜாநேத்வாம் புருஷோத்தமன் –சிவன் வாணனை ரஷித்து அளிக்க பெருமாளை வேண்டிக் கொண்டான் –
உன்னை புருஷோத்தமனாக அறிகிறேன் என்றபடி -கிருஷ்ண கிருஷ்ண ஜகந்நாத –தற்கால பாடம்

தேஜஸ் -துர்ஜனை அநபிபவ நீயத்வம்–ஸ்ரீ கீதா பாஷ்யம் -தீயோரால் அடர்க்கப் படாமை –
கலவ் ஜகத் பதிம் விஷ்ணும் சர்வ ஸ்ரஷ்டாரம் ஈஸ்வரம் நார்ச்சயிஷ்யந்தி மைத்ரேய பாஷாண்டோ பஹாதா ஜநா –
கலிகாலம் பாஷாண்டிகள் மலிந்து இருப்பார்களே –
யத் ப்ரஹ்ம கல்ப நியதா அநுபவேப்ய நாஸ்யம் தத் கில்பிஷம் ஸ்ருஜதி ஐந்துரிஹா க்ஷணார்த்தே–
அரை நொடியில் -பதினாயிரம் ப்ரஹ்ம கர்ப்ப காலம் அனுபவித்தாலும் தீராத பாபங்களை சம்பாதிக்கிறோம் –
வாஸூ தேவம் பரித்யஜ்ய யோந்யம் தேவ முபாஸதே த்ருஷிதோ ஜாஹ்நவீ தீரே கூபம் கநதி துர்மதி –
-விடாய் தீர கங்கை கரையில் கிணறு வெட்டுவது போலே தேவதாந்த்ர பஜனம் –

வால்மீகி கிரி ஸம்பூதா ராம சாகரகாமிநீ புநாதி புவனம் புண்யா ராமாயண மஹாநதீ –
-வால்மீகி மலையில் தோன்றி -பெருமாள் என்னும் கடலை நோக்கிச் செல்லும் புண்ய நதி ஸ்ரீ ராமாயணம் –
ஸ்லோக சார சமாகீர்ணம் சர்க்க கல்லோல சங்குலம் காண்டக்ராஹ மஹாமீநம் வந்தே ராமாயனார்ணவம் — –
ஸ்லோகங்கள் -சார நீர் -சர்க்கம் அலைகள் -காண்டம் -முதலை / பெரிய மீன்கள் / ஸ்ரீ ராமாயணம் கடல் –
ய பிபன் சததம் ராம சரிதாம்ருத சாகரம் அதிருப்தஸ்தம் முனிம் வந்தே ப்ராசேதசம கல்மஷம் — ஸ்ரீ ராம சரிதம் அமுத கடலை பருகி
போதும் என்று திருப்தி அடையாத குற்றம் அற்ற வால்மீகி -பக்தி வெள்ளம் குடி கொண்ட கோயில் இராமானுசன் போலே –

சம்யக் நியாய கலாபேந மஹா பாரதேநச உப ப்ரும்ஹித வேதாய நமோ வியாஸாய விஷ்ணவே
-ஸ்ரீ சுருதி பிரகாசர் -ஸ்ரீ வேத வியாசர் மஹா பாரதத்தையும் பரம கிருபையால் அருளிச் செய்கிறார்

சீல க ஏஷ தவ ஹந்த தயைகஸிந்தோ ஷூத்ரே ப்ருதக் ஜநபதே ஜகதண்ட மத்யே ஷோதீய ஸோபிஹி ஜனஸ்ய க்ருதே
க்ருதீத்வ மத்ராவதீர்ய நநு லோசந கோசரோ பூ —
அதிமானுஷ ஸ்தவம் -அருளே நிறைந்த கடலே –அற்ப சகல மனுஷ நயன விஷயமாகும் படி திரு அவதரித்து
அருளும் உன் ஷீலா குணத்தை என் என்பது –
ஜடரா குஹரே தேவஸ் திஷ்டன் நிஷ்தவர தீர்க்கா நிபதித நிஜா பாத்யாதித் சாவ தீர்ண பித்ருக்ரமாத் -ரஹஸ்ய த்ரயசாரம் –
அளற்று ஓடையில் விழுந்த குழந்தை எடுக்கவே –
கம்சத்தவமே நம் சரணம் சரண்யம் புருஷர்ஷபா -என்று மார்க்கண்டேயன் உபதேசிக்க -திரௌபத்யா சஹிதாஸ் சர்வே நமஸ் சக்ருர் ஜனார்த்தனம் –

அநதிகத பத வாக்ய ஸ்வரூப ததர்த்த யாதாத்ம்ய ப்ரத்யஷாதி சகல பிராமண ததிதி கர்த்தவ்யதா ரூப சமீசி
நந்யாய மார்காணாம்–ஸ்ரீ பாஷ்யம் மஹா சித்தாந்தம் –
சொல் வாக்கியங்களின் ஸ்வரூபம் பொருளின் உண்மை கருத்து ப்ரத்யக்ஷம் முதலிய பிரமாணங்களை உணர்த்துவது
அதற்கு உறுப்பான நேரிய யுக்தி வலிகள் இவற்றை அறியாதவர்கள் -பேதையர் –

கலவ் ஜகத் பதிம் விஷ்ணும் சர்வ ஸ்ரேஷ்டாரம் ஈஸ்வரம் -நார்ச்சயிஷ்யந்தி மைத்ரேய பாஷண்டோ பஹதா ஜநா –
ஸ்வ ஜ்ஞானம் ப்ராபக ஜ்ஞானம் ப்ராப்ய ஜ்ஞானம் முமுஷூபி ஜ்ஞான த்ரயம் உபாதேயம் ஏதத் அந்நிய ந கிஞ்சன –
யஸ் த்வயா ஸஹ ச ஸ்வர்க்கோ நிரயோ யஸ் த்வயா விநா –பெருமாள் உடன் கூடி சுவர்க்கம் பிரிந்தால் நரகம் -பிராட்டி –
நலம் என நினைமின் நரகு அழுந்தாதே –திருவாய் -2–10-7-
பசவ பாசிதா பூர்வம் பரமேண ஸ்வலீலயா தேநைவ மோசநீயாஸ்தே நாநயைர் மோசயிதும் ஷமா –
கன்ம பாசக்கயிற்றால் கட்டப்பட்டு -அவனாலே விடுவிக்கப் படத் தக்கவர்கள் -பிறரால் அல்ல –
யா ப்ரீதிர விவேகா நாம் விஷயேஷ்வ நபாயிநீ -த்வம் அநு ஸ்மரத்தாஸ் சாமே ஹ்ருதயா ந்நாபசர்ப்பது -ஸ்ரீ விஷ்ணு புராணம் –1–20–13-
சம்சாரிகள் விஷயாந்தரங்களில் ப்ரீதி நீங்காது இருப்பது போலே உன்னை தொடர்ந்து நினைந்த வண்ணம் இருக்கும்
என் இருதயத்தின் நின்றும் நீங்காது நிலைத்து இருந்து அருள்வாய் –
கிருஷ்ண ஏவஹி லோகா நாம் உத்பத்திர் அபிசாப்யய—

பஹி ரந்தஸ் தமச்சேதி ஜ்யோதிர் வந்தே ஸூ தர்சனம் யேநாவ் யாஹத சங்கல்பம் கஸ்து லஷ்மீ தரம் விது –மாயவனுக்கு மஹிமை ஸூ தர்சனம்
சர்வ பாபாநி வேம் ப்ராஹூ கடஸ் தத்தாஹ உச்யதே –பிரமாணம் – வேம் -பாபங்களை -அவற்றை கொளுத்துவதால் கட–எனவே வேங்கடம் –
யேநைவ குருணா யஸ்ய ந்யாஸ வித்யா பிரதீயதே -தஸ்ய வைகுண்ட துக்தாப்தி த்வாரகாஸ் சர்வ ஏவ ச –சரணாகதி வித்யை அளித்த ஆச்சார்யனே
ஸ்ரீ வைகுண்டமும் திருப் பாற் கடலும் ஸ்ரீ மத் த்வாரகையும் எல்லாம் வகுத்த இடமே –
யோந்யதா சாந்த மாத்மாநம் அந்யதா பிரதிபத்யதே கிம் தேந நக்ருதம் பாபம் சோரேணாத் மாப ஹாரிணா–ஆத்ம அபஹாரமே மிக பெரிய பாபம் –
அநாத்மன் யாத்மா புத்திர்யா அஸ்வே ஸ்வமிதி யாமதி –அவித்யாதரு சம்பூதி பீஜ மேதத் த்விதாஸ்த்திதம் –சம்சார வ்ருஷத்துக்கு வித்து-
சதுர் வேததாரோ விப்ரோ வாஸூ தேவம் ந விந்ததி வேதபார பராக்ரஅந்த ச வை ப்ராஹ்மண கர்தபா — வாஸூ தேவனை அறியாமல் குங்குமம் சுமந்த கழுதை –
அந்நியம் தேஹி வரம் தேவ பிரசித்தம் சர்வ ஜந்துஷூ மர்த்யோ பூத்வா பவாநேவ மாமாராதய கேசவ –
மாம் வஹவா ச தேவேச வரம் மத்தோ க்ருஹாணாச யேநாஹம் சர்வ பூதா நாம் பூஜ்யாத் பூஜ்யத்ரோஸ் பவம் –
கேசவன் அனைவரும் அறியும்படி நீ வரம் வாங்கி கொள்ள வேண்டும் -அனைவரும் பூஜிக்க உரியவனாக ஆகும் படி அருள வேணும் -என்றதும்
த்வம்ச ருத்ர மஹா பாஹோ சாஸ்த்ராணி காரயா -மோஹ சாஸ்திரங்களை செய்விக்க வேண்டும் -மருள் சுரந்த பசுபதி ஆகமம் –

சதேவ சோம்யே இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் –
த்வயோர்பாவ–த்விதா- த்விதைவ- த்வைதம்- நத்வைதம் அத்வைதம் –
இதம் சர்வம் யத் அயமாத்மா -ப்ருஹ–6–5–7-
ம்ருத்யோஸ் சம்ருத்யும் ஆப்நோதி ய இஹ நாநேவ பஸ்யதி –ப்ருஹ –6–4–19-
சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்ம –தைத்ய -ஆனந்த வல்லி -1–1-
நிஷ்களம் நிஷ்க்ரியம் –
ப்ரஹ்ம வேத ப்ரஹ்மய்வ பவதி -முண்டகம் –3–2–6-
தத் ஸ்ருஷ்ட்வா -ததேவ அநு ப்ராவிசத் தத் அநு பிரவிச்ய சச்ச த்யச்சா பவேத் –
ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய பிரசாசநே கார்க்கி ஸூர்யா சந்தமசவ் வித்ருதவ் திஷ்டத–ப்ருஹ –5-8–8–நியமனம் ஆதாரம்
ஐததாத்ம் யமிதம் சர்வம்–சாந்தோக்யம் –6–8-7-
தத்வமஸி —
நித்யோ நித்யானாம் சேதனச் சேதனானாம் ஏகோ பஹு நாம் யோவிததாதி காமான் –கட-2–5–12- / ஸ்வேதா -6-13-
அஹமாத்மா குடாகேச சர்வ பூதாசய ஸ்த்தித—ஸ்ரீ கீதை –18-20-
சர்வம் ஸமாப்நோஷி ததோ அஸி சர்வ –ஸ்ரீ கீதை –11–40-
ஏஷ சம்பிரசாதோ அஸ்மத் சரீராத் சமுத்தாய பரம் ஜ்யோதி ரூப சம்பத்ய ஸ்வேந ரூபேண அபி நிஸ்பத்யதே –
ய ஆத்மாநம் அந்தரோ யமயதி–ப்ருஹதாரண்யகம் –
தத பூத பவ்ய ஈஸ்வரத்வா தேவ வாத்சல்யா திசயாத் தேகதா நபி தோஷான் போக்யதயா பஸ்ய தீத்யர்த்த –வாத்சல்ய குணத்தால்
தோஷங்களை போக்யமாக ஈஸ்வரன் கொள்கிறான் –
யதோ வா இமானி பூதானி ஜாயந்தே -யேன ஜாதானி ஜீவநதி -யத் பிரத்யந்த்யபி சம்விசந்தி தத் விஜிஞ்ஞாச ஸ்வ தத் ப்ரஹ்ம -தைத்ரியம் பிருகு வல்லி –
சதேவ சோம்ய இதமக்ர ஆஸீத் –ததைஷத பஹூஸ்யாம் பிரஜா யே யே தி –சாந்தோக்யம் -6-2-1-
சந்மூலாஸ் சோம்யே மா பிரஜா –என்று தொடங்கி-ச ஆத்மா -6-8-6-
தஸ்ய தாவதேவ சிரம் யாவன் ந விமோஷ்யதே அத சம்பத்ஸ்யே —6-14-2-
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா வித்யதே அயனாய -என்பதாலும் இவ்வர்த்தமே நிலை நாட்டப் படுகிறது
ஏஷ ஹேவ அனந்யாதி-என்கிற சுருதி வாக்யத்தில் அந்வய முகனே தெரிவிக்கப் பட்ட அர்த்தமே நான்ய பந்தா வித்யதே அனயனாய
-ஸ்ருதியில் வ்யதிரேக முகேன தெரிவிக்கப் படுகிறது
ச யச்சாயம் புருஷே யச்சாசா வாதித்யே ச ஏக -என்று ஆதித்ய மண்டலத்தில் உள்ள புண்டரீ காஷனே ஆனந்த மயன் என்கிறது –
யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனசா சஹ-ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபிபேதி குதச்சன-
அபஹத பாப்மா-விஜரோ-விம்ருத்யூர் -விசோக–விபாஸ -சத்யகாம -ஸத்யஸங்கல்ப –
தஸ்மாத்வா ஏதச்மாத் விஞ்ஞான மயாத்-அந்யோந்தர ஆத்மா ஆனந்தமய—சைஷா ஆனந்தச்ய மீமாம்ச பவதி–
தே யே சதம் பிரஜாபதேர் ஆனந்தா ச ஏகோ ப்ரஹ்மண ஆனந்த ச்ரோத்ரியச்ய சாகா மகாதச்ய —
கோஹ்யேவான்யாத் கே ப்ராண்யாத் யதேஷ ஆகாச ஆனந்தோ ந ஸ்யாத் ஏஷஹயேவா நந்தயாதி —
என்று ஒதப்படுகிறது -கோ வா அன்யாத்-எந்த ஜந்து தான் ப்ராக்ருதமான ஆனந்தத்தை அடைய முடியும் –
கோ வான் ப்ராண்யாத் -எந்த ஜந்து தான் மோஷ ஆனந்தத்தை அடைய முடியும் -ஏஷ ஏவ ஹி -இந்த ஆனந்தமயமான ஆத்மாவே அன்றோ-
அத யா ஏஷோந்தர் ஆதித்யே ஹிரண்மய புருஷோ த்ருச்யதே -சாந்தோக்யம் -என்று தொடங்கும் அந்தராதித்ய வித்தை-
அதில் -ஹிரண்யமஸ்ரூர் ஹிரண்யகேச ஆப்ரணகாத் சர்வ ஏவ ஸூ வர்ண தஸ்ய யதா கப்யாசம் புண்டரீக மேவ அஷீணீ
தஸ்ய உதிதி நாம ச ஏஷ சர்வேப்ய பாப்மப்ய உதித உதேதி ஹ வை வர்வேப்ய பாப்மப்யோ யா ஏவம் வேத –
–ஏஷ சர்வ பூத அந்தராத்மா அபஹதபாப்மா திவ்யோ தேவ எகோ நாராயண -ஸூ பால உபநிஷத் –
-தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி -புருஷ சூக்தம்-
யத் ஊர்த்வம் கார்க்கிதிவோ யதர்வாக் ப்ருதிவ்யா –ப்ரு-3–8–6-மூன்று காலங்களில் உண்டாக்கப்பட்ட அனைத்தும் அவற்றுக்கு
காரண பூதமான ஆகாசத்தில் சேர்க்கப்பட்டு அதனையே ஆதாரமாக கொண்டு உள்ளன –
கஸ்மின் நு கல்வாகச ஒதச்ச ப்ரோதச்ச –ப்ரு–5–8–7-இந்த ஆகாசத்துக்கு காரண பூதம் எது என்னில்-
ஏதஸ்மிந் து கல் வஷரே கார்க்கி ஆகச ஒதச்ச ப்ரோதச்ச–ப்ரு –3–8–7- அக்ஷரமே ஆதாரம் -இதுவே பிரதானம் –

ந தஸ்ய பிராணா உத்க்ராமந்தி –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த்ரம் -4–4–6-

—————-

கறந்த பாலுள் நெய்யே போல் இவற்றுள் எங்கும் கண்டு கொள் இறந்து நின்ற பெருமாயா-8-5-10-
கண்களால் காண்கிற பாலினுள்ளே நெய் உண்டாய் இருக்க காண அரிதானாப் போலே-
கடைந்த பால் இல்லை -கறந்த பால் என்கிறார் –
எல்லா பொருள்களிலும் நின்று வைத்து காண ஒண்ணாதபடி-நிற்கிற மிக்க ஆச்சர்யத்தை உடையவனே-
பலவகைப்பட்ட நிறங்களை உடைய பசுக்கள் உடைய பாலோ என்னில் –ஒரே நிறம் உடையது –
அது போலே ஞான ஸ்வரூபமான ஆத்துமா பார்க்கத் தக்கது
தேவர்கள் முதலான சரீர பேதங்கள் பசுக்களைப் போன்றவை –
எப்படி பாலில் நெய் மறைந்து இருக்கிறதோ–அது போன்று கடவுள் எல்லா பொருள்களிலும் வசிக்கிறார் –
மனம் என்னும் மத்தினால் எப்போதும் கடைய வேண்டும் –

கவாம் அநேன வர்ணானாம் ஷீரச்யது ஏக வர்ணதா–ஷீரவத் பஸ்யதி ஜ்ஞானம் லிங்கி நஸ்து கவாம் யதா
க்ருதமிவ பயஸி நிகூடம் பூதே பூதே ச வசதி விஜ்ஞ்ஞானம்–சத்தம் மந்தே தவ்யம் மனஸா மந்தாந பூதேன
சர்வ பூதாதி வாசம் யத் பூதேஷு ச வசத்யபி–சர்வா நுஹ்ரஹகத்வேன தத் அஸ்மி அஹம் வாசுதேவ இதி -பிரமவித் உபநிஷதம்

எந்தப் பொருளானது எல்லாப் பிராணிகளுக்கும் இருப்பிடமோ-எல்லா பூதங்களிலும் எந்தப் பொருள் வசிக்கின்றதோ
அந்தப் பொருள் எல்லாவற்றுக்கும் சத்தியை உண்டாக்குகிறது-அந்த வாசுதேவன் நான் ஆகிறேன் -எனபது உபநிடதம் –

காலத்தாலும்
கடைதல் முதலிய செயல்களாலும்–மதன பூர்வ பாவி தோய்ப்பதை சொல்லும் -முதலிய என்பதால் –
தோற்றுகிற நெய் -கறந்த காலத்தில் தோற்றாதே அன்றோ –
ஆதலால் கறந்த பால் -என்று விசேடிக்கிறார் -என்கை
உன் பக்கல் பாரத்தை வைத்தவன் ஆகிற செயலால் –ரஷாபாரத்தை அவன் பக்கலில் வைக்கும் சம்ஸ்காரம் –அல்லது-காண அரியை -என்றவாறு-

—————

எல்லியும் பிரவேசம் –
மாயக் கூத்தா -திருவாய்மொழி யிலே
ஆழ்வார் தமக்கு ஓடின விடாய் பேச்சுக்கு நிலம் ஆகையாலே பேசினார் –
சர்வேஸ்வரனுக்கு ஓடின விடாய் பேச்சுக்கு நிலம் அல்லாமையாலே பேசிற்று இல்லை-
ஒரு மாதத்துக்கு மேல் உயிர் வாழ மாட்டேன் -என்கிறபடியே-
இத் தலையில் விடாய்-ஒரு கண நேரத்துக்கு மேல் உயிர் வாழேன் நான் -என்று அன்றோ அத்தலையில் விடாய் இருப்பது-
ஜீவிதம் தாரயிஷ்யாமி மாசம் தசரராத்மஜா-ஊர்த்த்வம் மாசாத் ந ஜீவிஷ்யே சத்யேன அஹம் ப்ரவீமி தே -சுந்த -38-68-
சிரம் ஜீவதி வைதேஹீ யதி மாசம் தரிஷ்யதி-ந ஜீவேயம் ஷணமபி விநாதாம் அஸி தேஷணம்-66-10-

————

“மத்‌பக்தம்‌ ங்வபசம்‌ வாபி நிரந்தரம்‌ குர்வந்தி யே நரா: | பத்வகோடிர௱தேநாபி ௩ க்ஷமாமி வஸுந்த,ரே |” [பூகேவியே! சண்டாளனாயிருக்கபோதிலும்‌ என்னுடைய பக்தனை எந்த ஜனங்கள்‌ நிந்தை செய்கிறார்களோ,
அவர்‌களைக்‌ கோடிக்கணக்கான பத்மகாலங்களானாலும்‌ பொறுக்க மாட்டேன்‌.

| ஸ்ம்ருதிர்‌ மமைவாஜ்ஞா யஸ்தாமுல்லங்க்‌,ய வர்த்ததே | ஆஜ்ஞாச்சசே,தீ, மம த்‌,ரோஹீ (05२11456 509 ந த வைஷ்ணவ: || [ ஸ்ருதியும்‌, ஸ்ம்ருதிகளும்‌ என்னுடைய ஆஜ்ஞைகளே. அவற்றை எவன்‌ மீறி ஈடக்கறுனோ அவன்‌ என்‌ ஆணையை மீறி நடக்கிறவனாகையால்‌ எனக்கு த்ரோஹம்‌ செய்தவ னாதறான்‌. என்னுடைய பக்தனாயிருந்தபோதிலும்‌ அவன்‌ வைஷ்னவனல்லன்‌. ] “மநீஷீ வைதி,காசாரம்‌ மஸா5$5பி ௩ லங்க,யேத்‌” [ ஈல்ல மனத்தையுடையவன்‌ வேததர்மத்தை மனத்தினாலேயும்‌ மீறக்கூடாது. ]

“ய: மாஸ்த்ரவிதி,முத்ஸ்ருஜ்ய வர்த்ததே காமகாரத: | ® नण ஸித்‌;திமவாப்நோதி ௩ ஸாுகழம்‌ ௩ பராங்க;திம்‌’ [ எவனொருவன்‌ சாஸ்திரவிதியை வீட்டுத்‌ தன்‌ இஷ்டப்படி நடக்கறானோ அவன்‌ சித்தியையும்‌, ஸுகத்தையும்‌ மேலான கதியையும்‌ அடைவதில்லை. ] “தாகஹம்‌ த்‌,விஷத: க்ரூராம்‌ ஸம்ஸாரேஷு நராதழமார்‌| க்ஷிபாம்யஜஸ்ரமமரப,ாநா ஸாரீஷ்வேவ யோ நிஷா ||” [என்னை த்‌வேஷிப்பவர்களும்‌, கொடூரமானவர்களும்‌, மனிதர்களுள்‌ இழ்மையானவர்களும்‌, சபமற்றவர்களுமான அவர்களை ஸம்ஸாரத்தில்‌ ௮ திலும்‌ அஸுரயோனிகளில்‌ (ஏப்போதும்‌ தள்ளுகிறேன்‌.]

“யதபராத,ஸஹஸ்ரமஜஸ்ர ஜம்‌ த்வயி முரண்ய ஹிரண்ய உபாவஹத்‌ | வரக, தேர சிரம்‌ த்வமவிக்ரியோ விக்ருதிம்‌ அர்ப்ப,க நிர்பஜநாத,க;ா: 1″ [சரண்யனே! உன்‌ வீஜயத்தில்‌ ஹிரண்யன்‌ இடைவீடா து செய்த ஆயிரக்கணக்கான அபரா தங்களினாலும்‌ வெகுநாள்‌ விகாரமடையாத நீ; சிறவனான ப்ரஹ்லாதனைத்‌ தன்‌ புறத்தியதால்‌ விகாரமடைந்தாய்‌] என்‌ று பாகவதாபசாரம்‌ செய்தவர்களில்‌ தலைவனாக எண்ணப்படும்‌ ஹிரண்யனே.

“வர்ணாஸ்ரமா சாரவதா புருஷேண பர: புமாந்‌ | விஷ்ணுராராத்‌,யதே பந்தள நரந்யஸ்‌ தத்‌ தோஷகாரக: ॥” ‘[வர்ணாங்ரம தர்மப்படி நடக்கும்‌ புருஷனா லேயே பரம புருஷனான விஷ்ணு ஆரா திக்கப்படுகிறான்‌ . அவனை உ௨௧ப்‌ பிப்பது வேறொன்றுமன்று.] என்று ஸ்ரீவீஷ்ணுபுராணத்‌ தில்‌ சொல்லப்பட்ட தன்றோ. (தவ தர்மா) உன்னை அடைவ தற்கு ஸாதனமாகச்‌ சொல்லப்பட்ட தர்மங்களை *யஜ்ஞோ த,நேக தபஸா ऽना ८०७९ விவிதி,ஷந்தி ப்ராஹ்மணா:” , [யஜ்ஞத்தினாலும்‌. தானத்தினாலும்‌. சீபஸ்ஸினாலும்‌ ப்ராஹ்‌ மணர்கள்‌ பரமா ப்மாவை அறிய விரும்புகிறோர்கள்‌.] என்று சொல்லப்பட்ட கன்றோ. (தவ தர்மா) “யஜ்ஞதாநதப: கர்ம ௩ த்யாஜ்யம்‌ கார்யமேவ தத்‌” [யஜ்ஞம்‌, தானம்‌. தபஸ்‌ | ஆகிய கர்மங்கள்‌ வீடத்தக்கவையல்ல; செய்யத்தக்கவையே. | என்‌ ¢ உன்‌ னாலேயே விதிக்கப்பட்ட தர்மங்களை. (தர்மா) தர்மாணி’ என்னும்‌ பதத்தின்‌ சளந்தஸரூபம்‌. (யத்‌ யுபேோ பிம) யாகொரு சாரணத்தினால்‌ லோபம்‌ செய்தோமோ “ ம்ருத்யோ: பதம்‌ யோபயந்த: “ என்றவீடத்திற்போலே “யோபயதி’ என்னும்‌ தாது லோபம்‌ செய்வது என்னும்‌ பொருளிலே வந்துள்ளது. (தேவ ) வாஸுகேவனே! (தஸ்மாத்‌ ஏநஸ;) அந்த அந்தப்‌ பாபங்களினால்‌. (மா ந ரீரிஷ:) எங்களை ஹிம்ஸிக்கவேண்டாம்‌. ரிஷதி’ தாது ஹிம்ஸை என்னும்‌ பொருளையுடையது. (ஏஈஸ:) “ஏதி கர்த்தாரம்‌ இதி ஏஈ:” [தன்னைச்‌ செய்பவனை வந்து அடைகிற தாகையால்‌ “कः என்று பாபம்‌ சொல்லப்படுகிறது. ] என்று வ்யுத்பத்தி,

“யத தே,நுஸஹஸ்ரேஷு வத்ஸோ விந்த,தி மாதரம்‌ | தத பூர்வக்ருதம்‌ கர்ம கர்த்தாரமதி,க,ச்ச,தி ॥” [ ஆயிரக்கணக்கான பசுக்களில்‌ எப்படிக்‌ கன்றுக்குட்டி தாயை அடைகிறதோ, அப்படியே முன்‌ செய்யப்பட்ட கர்மமும்‌ செய்தவனை அடைறெது

“ய ஏஷோ அந்தராதி,த்யே ஹிரண்மய: புருஷோ த்‌,ருங்யதே…. தஸ்ய யதா கப்யாஸம்‌ புண்ட கமேவமக்ஷிணீ”’ [ ஆதித்யமண்டலத்தின்‌ நடுவில்‌ யாவனொரு ஸுவர்ண மயனான புருஷன்‌ காணப்படுகிறொனோ, அவனுக்கு ஸூர்ய னல்‌ ८०००१८५ தாமரைபோன்ற இரு கண்கள்‌ உள.]

“ஏஷ நாராயண: ஸ்ரீமாந்‌ க்ஷீரார்ணவ நிகேதந: | , நாக, பர்யங்கமுத்ஸ்ருஜ்ய ஹ்யாக,தோ மது,ராம்‌ புரீம்‌ | [பாற்கடலில்‌ பையத்தயின்ற பரமனான இந்த ஸ்ரீமந்‌ நாராயணனேசேஷயயனத்தைவீட்டு மதராபுரிக்குக்‌கண்ணனாய்‌ வந்துள்ளான்‌.]

“தத்‌, விப்ராஸோ விபந்யவோ ஜாக்‌,ருவாம்ஸஸ்‌ ஸமிந்த,தே” [ஸர்வஜ்ஞர்களாய்‌, அதிப்பதையே தொழிலாகக்‌ கொண்ட வர்களாயுள்ள நித்யஸூரிகள்‌ அப்பரமபதத்தில்‌ (எப்போ அம்‌) வீழிப்புடன்‌ வீளங்குகறார்கள்‌.]

“தத்‌, யதள இவஷீகதூலமக்‌ரெள ப்ரோதம்‌ ப்ரதூ,யேத | ஏவம்‌ ஹாஸ்ய ஸர்வே பாப்மா௩: ப்ரதூ,யந்தே |”
[அக்னியில்‌ இட்ட டஞ்சு எப்படிக்‌ கொளுத்தப்படு கிறதோ அப்படியே இவனுடைய எல்லாப்‌ பாபங்களும்‌ தஹிக்கப்படுகின்‌ றன. ]
தத்‌, யதள புஷ்கரபலாரய ஆபோ ए ங்லிஷ்யந்தே | ஏவம்‌ ஏவம்விதி, பாபம்‌ கர்ம ® ங்லிஷ்யதே || `
[எப்படித்‌ தாமரை யிலையில்‌ தண்ணீர்‌ ஓட்டுவதில்லையோ: அப்படியே இம்மாதிரி ௮றிபவனீடத்தில்‌ பாபகர்மம்‌ ஓட்டாது..] என்று வேதங்களிலும்‌.
“ தத.தி,கம உத்தர பூர்வாக,யோரமங்லேஷவிகாமொள ”
[ப்ரஹ்ம வித்யையைத்‌ தொடங்கியவுடன்‌ உத்தராகங்கள்‌ ஓட்டமாட்டா; பூர்வாகங்‌ கள்‌ நசித்துவிடும்‌.] என்று பாதராயணராலும்‌.

நீலதோயத, மத்யஸ்தஎ வித்வுல்லேகேவ பளஸ்வரா ‘ ^” ப்ரஸந்நாதி,த்ய வர்ச்சஸம்‌” -சந்த்பூ,ாஸ்கர வர்ச்சஸம்‌” [குளிர்ச்சியிலே சந்திரன்‌ போன்‌ றதாய்‌, ஒளியிலே ஸூர்யன்‌. போன்றதான காந்தியை உடையவல்‌ ]

“க்ருஷ்ண க்ருஷ்ணேதி க்ருஷ்ணேதி யோ மாம்‌ ஸ்மரதி நித்யமா: | ஜலம்‌ பி,த்வா யதஏ பத்மம்‌ ஈரகாது,த்‌,தராம்யஹம்‌ |” [க்ருஷ்ணா! க்ருஷ்ணா! என்று எவனொருவன்‌ . என்னை எப்போதும்‌ நினைக்கறொனோ அவனை, ஜலத்தைப்‌ பிளந்து கொண்டு தாமரையை எடுப்பதுபேரல்‌ நான்‌ ` நரகத்தி லிருந்து தூக்கிவிழுகிறேன்‌.] என்று ஸ்ரீ விஷணுதர்மத்தி லும்‌ சொல்லப்படுகின்‌ றது.

“ தே,வதிர்யங்மநுஷ்யேஷு புந்நாமா ப,க,வாந்‌ ஹரி: | ஸ்த்ரீாம்நீ லக்ஷமீர்‌ மைத்ரேம ஈாநயோர்‌ வித்‌,யதே பரம்‌ ॥ ग [மைத்ரேயரே ! தேவர்‌, திர்யக்‌, மநுஷ்யர்‌ ஆகிய இவற்றில்‌, ஆணாயிருப்பது பகவான்‌ ஹரியாகவும்‌, டெண்ணாயிருப்ப.து லக்ஷ்மீ தவியாகவும்‌ உள்ளனர்‌. இவ்விருவர்க்கும்‌ மேலான தொன்றுமில்லை.]

நாயமாத்மா ப்ரவசநேந லப்‌,யோ ந மேதயா ௩ பூஹுநா ங்ருதேந | யமேவைஷ வ்ருணுதே தே௩ லப்‌,யஸ்‌ தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம்‌ ஸ்வாம்‌ ||” [இப்பரமாத்மா (பக்தியற்ற) ங்ரவண (0/5 தியானங்களால்‌ அடையத்தக்கவனல்லன்‌ ; எவனை இப்பரமபுருஷன்‌ வரிக்‌ கிரறானோ அவனாலேயே அடையத்தக்கவன்‌; அவனுக்கு இப்பரமாத்மா தன்‌ திவ்யரூத்கை-(ஸ்வரூபத்தை )-காட்டு கிறான்‌.] என்று சுடர்மிகுசருதியில்‌ சொல்லப்பட்டது.

“ஆபோ நாரா இதி ப்ரோக்தா ஆபோ வை நரஸ௩்வ: | தா யதஸ்யாய௩ம்‌ பூர்வம்‌ தேக நாராயண: ஸ்ம்ருத: ॥ ‘ [ஜலம்‌ ஈரனாகிற பகவானால்‌ ஸ்ருஷ்டி. செய்யப்பட்ட தாகை. யால்‌ நாரமெனப்படுகிறது அது ப்ரளயகாலத்தில்‌: இவ னுக்கு இருப்பீடமாயிருக்கையால்‌ இவன்‌ நாராயணனெனப்‌ படுகிறான்‌ ] என்று மனுஸ்ம்ருதி

“ ப்ருஹத்த்வாத்‌; ப்‌ரும்ஹணத்வாச்ச தத்‌; ப்‌;ரஹ்மேத்யபி,தி,யதே [பெரியதாயிருக்கையாலும்‌, பிறரைப்‌ பெரியவர்களாகச்‌ செய்வதாலும்‌ ப்ரஹ்மமென்று அப்பரம்பொருள்‌ சொல்லப்‌ படுகிறது.] என்று ப்ரஹ்ம சப்தார்த்தம்‌ சாஸ்திரங்களில்‌ சொல்லப்பட்டது

தத்வம் ஹிதம் புருஷார்த்தம்—“நாராயண பரம் ப்ரஹ்ம தத்துவம் நாராயண பர
நாராயண பரோ ஜ்யோதி ராத்மா நாராயண பர-4
யச்ச கிஞ்சித் ஜகத் யஸ்மின் த்ருச்யதே ஸ்ரூய தேபி வா
அந்தர் பஹிச்ச தத் சர்வம் வ்யாப்ய நாராயணஸ் ஸ்தித-5”

இவனே பரஞ்சோதி –பர தத்வம் -பரமாத்மா பர ப்ரஹ்மம் –
கிருஷ்ண கிருஷ்ண மஹா பாஹோ ஜாநே த்வாம் புருஷோத்தமம்-பரேசம் பரமாத்மநாம் அநாதி நிதானம் பரம் –
த்வம் ஹி ப்ரஹ்ம பரம் ஜ்யோதி கூடம் ப்ரஹ்மணி வாங்மயே-

“க இதி ப்‌,ரஹ்மணோ நாம ஈமேரா5ஹம்‌ ஸர்வதே,ஹிநாம்‌ | . ஆவாம்‌ தவாங்கே, ஸம்பூ,தெள தஸ்மாத்‌ கேமுவநாமவார்‌ ||” [‘க:’ என்று ப்ரஹ்மாவுக்குப்பெயர்‌; தேஹத்தில்‌ அபிமான முள்ள எல்லாருக்கும்‌ நான்‌ ஈசன்‌; ப்ரஹ்மருக்ரர்களாகய நாங்கள்‌ இருவரும்‌ உன்னுடைய சரீரத்தனின்‌ றும்‌ பிறந்‌ தாம்‌; ஆகையால்‌ நீ கேசவன்‌ என்னும்‌ திருநாமத்தை உடையவனாயிருக்கிறாய்‌. ] என்‌ று ஹரிவம்ச த்தில்‌ பேசநின்ற சிவனாலும்‌ பேசப்பட்டது.

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ ராகவ யாத வீயம்–ஸ்ரீ ராமாயணம் ஸ்ரீ மஹா பாரதம் மகிமைகள் –

February 24, 2023

வைணவன் என்ற சொல்லிற்கு அர்த்தம் ஐந்து குறள் பாக்களில் சொல்லப் படுகிறது )
1. தைவத்துள் தைவம் பர தெய்வம் நாராயணனையே தெய்வம் எனப் போற்றுபவன் வைணவன்
2. எல்லா உயிர்களையும் தன்னுயிர் போலே பேணுபவனே எல்லோரிலும் சாலச் சிறந்த வைணவன் .
3. உடுக்கை இழந்தவன் கை போல் மற்றவர்களின் இடுக்கண் களைபவனே வைணவன் .
4. மது, புலால் நீக்கி ஸாத்விக உணவினைத் தவிர வேறு எதுவும் விரும்பாதவன் வைணவன் .
5. தெய்வத்திலும் மேலானவன் நம் ஆச்சார்யரே என்று மெய்யாக வாழ்பவனே வைணவன் .

————-

இன்றைய ஆய்வறிஞர்கள் வேதம், ஸூக்தம், ஸாஸ்த்ரம் முதலிய நூல்களை நன்கு ஆய்ந்து, விஸ்வ கர்ம குலம் ப்ருகு குலம் என தெளிந்துள்ளனர். வாயு புராணத்தின் நான்காவது அத்தியாயத்தில், இந்த நெடிய பரம்பரை சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட சில பகுதிகள் மட்டும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

த்ரிஷிரா விஸ்வரூபஸ்து த்வஸ்டு: புத்ராவ பவதாம்|
விஷ்வரூபானுஜஸ்சாபி விஸ்வகர்மா ப்ரஜாபதி:||

விஸ்வகர்ம மஹத்பூதம் விஷ்வகர்மானாம் மதங்கேஷூ ச ஸம்பூதா|
புத்ரா பஞ்ச ஜடாதரா:ஹஸ்ய கெளசல ஸம்பஔர்ணா பஞ்ச பிரண்மரதா ஸதா||

இவ்வழியிலான மரபுப்படம் தரப்பட்டுள்ளது:

தரன், துருவன், சோமன், அஹன், அனிலன், அனலன், ப்ரத்யுஸன், பிரபாசன் ஆகியோரே அஷ்ட வசுக்கள் ஆவர். இவர்கள் பிரஜாபதியின் புத்திரர்கள் ஆவார்கள்.

பஞ்ச கர்ம குலங்களின் வம்சாவளி:

1) மனு :

விஸ்வகர்மாவின் தலைமகன். அங்கீரஸ் என்ற முனிவரின் மகளாகிய காஞ்சனையை மணந்தவர். மனித குலத்தின் சிருஷ்டிகர்த்தா. பிற்காலத்தில் மனுவின் பெயரினால் அறியப்பட்ட அரசன் நீதிபரி பாலனையில் தன்னிகரில்லாது திகழ்ந்ததனால் நீதிக்கே இலக்கணம் வகுத்து, மனுநீதி என்னும் பெரும் நூலை சிருஷ்டித்தார்.

2) மயன் :

விஸ்வகர்மாவின் இரண்டாம் மகன் இந்திரஜால சிருஷ்டி கர்த்தா என்று புகழப்படுபவர். பராசர முனிவரின் மகளாகிய சுசனை இவரது மனைவி.

3) த்வஷ்டா:

விஸ்வகர்மாவின் மூன்றாவது மகன். கெளசிக மஹரிஷியின் மகளான ‘ஜெயந்தி’யை மணந்தார்.

4) சில்பி :         ப்ருஹூ முனிவரின் புத்ரி கருணாவை மணந்தவர்.

5) தைவக்ஞர் (அ) விஷ்வக்ஞர் :

ஜைமினி முனிவரின் மகளான சந்திரிகா இவரது மனைவி. இவரது வழித்தோன்றலான ஸூபர்ண ரிஷி, விநதையின் மகனான கருடனுக்கு பொன்னொளியை வழங்கி, ஸ்ரீமந் மஹாவிஷ்ணுவின் வாஹனமாகும்படி அனுக்ரஹம் செய்தார். கருடன் அங்கிரஸ குலத்தில் உதித்த கன்வ முனிவரின் மகனாவார்.

இந்துமதத்திற்கு அடிப்படையாகவும், ஆதாரமாகவும் கொள்ளப்படும் ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களில் விஸ்வகர்மாவினைப் பற்றி ஏராளமான விஷயங்கள், சுலோகங்கள் காணப்படுகின்றன. இவற்றிலெல்லாம் விஸ்வகர்மா முழுமுதற் பிரம்மனாகவும், அனைத்துலகத்தையும் வடிவமைத்த சிறந்த கலைஞனாகவும், வித்தையின் (கல்வி) வடிவமாகவும், அனைத்துத் திறன்களிலும் நிபுணனாகவும், கலைகளின் தலைவனாகவும், எல்லா இடங்களிலும் நிறைந்தவராகவும், சிறந்த கலைஞர்களின் மனத்திலும், அவர்கள் உருவாக்கும் கலைப்பொருட்களில் வாஸம் செய்பவராகவும், யாரையும்-எவற்றையும் சாராது விளங்கும் தனிப்பெரும் பொருளாகவும், பூர்ணத்வமுடையவராகவும், ஸூர்ய ஒளி பொருந்தியவராகவும், ஸத்வ குணமுடைவராகவும் இன்னும் பலப்பல புகழொலிகளால் அலங்கரித்துப் போற்றப்படுகிறார். எப்போது ஆதியில் நீரும், நெருப்பும், காலநிலையும், அறிவும் (ஞானமும்), மணமும், உணர்வும், ப்ரம்மனும், விஷ்ணுவும், ருத்ரனும் இல்லையோ, வெற்றிடம் மட்டுமே இருந்தபோது தானே தோன்றியவர் விஸ்வகர்மா என்றும் விஸ்வகர்மா தோன்றிய விதத்தை வேதம் விவரிக்கின்றது.

கோத்திரங்கள்பஞ்ச கம்ஸலர்கள் எனவும் கம்மாளர்கள் எனவும் விஸ்வகர்ம பெருமக்கள் எனவும் அழைக்கப்படுகின்ற குலத்தினருக்கு ஐந்துவித கோத்திரங்கள் (பூர்வீக ரிஷிகள்) உள்ளன. இன்று பலருக்கும் தங்களின் கோத்திரம் தெரியாது. தங்கள் செய்யும் தொழிலைப்பொருத்து தங்கள் கோத்திரத்தை அவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

1) மனுவின் வழித்தோன்றல்கள் (இரும்பு தொடர்பான வேலையில் ஈடுபடும் கலைஞர்கள்) – சானக ரிஷி கோத்திரம் – ரிக் வேதம்

2) மயன் வழித்தோன்றல்கள் (மர வேலைக் கலைஞர்கள்) – ஸநாதன ரிஷி கோத்திரம் – சாம வேதம்

3) த்வஷ்டா வழித்தோன்றல்கள் – (உலோகத்தில் தேர்ந்த கலைஞர்களுக்கு) – அபுவனஸ ரிஷி கோத்திரம் – யஜூர் வேதம்

4) சில்பி வழித்தோன்றல்கள் (கல்லில் கலைவண்ணம் காண்போருக்கு) – ப்ரத்னஸ ரிஷி கோத்திரம் – அதர்வ வேதம்

5) விஷ்வக்ஞர் வழித்தோன்றல்கள் – (பொன்னில் எண்ணத்தைப் பொறிப்போருக்கு) – ஸூபர்ணஸ ரிஷி கோத்திரம் – ப்ரணவ வேதம்

வாஸ்த்து சாஸ்திரம் (கலை) தொடர்பான விதிமுறைகளையும், அக்கலையினது நுணுக்கங்களையும் சாக்ஷாத் சிவபெருமானே பராசர ரிஷிக்கு உபேதசம் செய்தருளினார். பராசரர் ப்ருஹத்ரதனுக்கும், ப்ருஹத்ரதன் தேவசில்பியான விஸ்வகர்மாவிற்கும் உபதேசம் செய்தனர். விஸ்வகர்ம பரப்ரஹ்மனே இன்றளவும் இக்கலையை காத்து, வளர்த்து வருவதாய் ஐதிஹம்.

ஆர்ஷபாரத கலாச்சாரத்துடன் தொடர்புடையவர்கள் விஸ்வகர்மாக்கள். இவர்களே முன்பு சிந்து நதி தீரத்தில் மொஹஞ்சதாரோ, ஹரப்பன் நகரங்களை நிர்மாணித்து, வாழ்ந்து சிந்துச் சமவெளி எனும் சீரிய நாகரிகத்தை உருவாக்கினார்கள். சிந்துச்சமவெளி நாகரிகமே பின்னாட்களில் மருவி இந்து என்னும் மதமாகியது.

வாயுபுராணத்தின் நான்காம் அத்யாயம், மத்ஸ்ய புராணத்தின் 252ஆம் அத்யாயம், மஹாபாரதம் அனுசாஷன பர்வம் 85ஆம் அத்யாயம் முதலியவற்றில் ஸ்ரீ விராட் விஸ்வகர்ம வம்சாவளியின் குலங்கள் விளக்கப்பெற்றுள்ளன.இரும்பு, மரம், கல், உலோகம், தங்கம் முதலிய பொருட்களைக் கொண்டு படைக்கும் தொழிலைச் செய்யும் கைவினைஞர்கள் “விஸ்வகர்மா” என பொதுப்பெயர் கொண்டுள்ளனர். உலகம் முழுவதிலும் இக்குலத்தோர் பரவி இருந்தாலும் ஆசியா கண்டத்தில் இவர்களின் பரவல் அதிகம் என புள்ளி – விவரங்கள் கூறுகின்றன. இந்தியாவில் வாழும் விஸ்வகர்மாக்கள் குறித்து அறிவோம்.

1) தமிழகம் :

தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் விஸ்வகர்மாக்கள் வாழ்கின்றார்கள், தச்சர், பொற்கொல்லர், ஆச்சாரி, விஸ்வபிராமணர், சில்பி, கன்னார், தட்டார், கம்மாளர் என பலவகையாக அழைக்கப்படுகின்றனர், பெரும்பான்மையோர் தமிழும், சிலர் தெலுங்கையும் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர்.

2) ஆந்திர மாநிலம் :

விஸ்வபிராமணர்கள் என்றும், கம்ஸலர்கள் என்றும் ஆந்திராவில் பொதுவாய் அழைக்கப்படும் இவர்கள் கம்சாலி, முசாரி, வத்ராங்கி, காசி, சில்பி என உட்பிரிவுகள் பலவற்றைக் கொண்டுள்ளனர்.

3) கேரளம் :

கேரள தேசத்தில் ஆச்சாரிகள் எனவும், விஸ்வ பிராமணர்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர்.

4)கர்நாடகம்:

கர்நாடக மாநிலத்தில் விஸ்வகர்மா என பொதுப் பெயரினையும், குசாலர், சிவாச்சார், சத்தராதி என உட்பிரிவுகளையும் கொண்ட இவர்களின் சிலர் அசைவ உணவு வகைகளை உண்ணும் பழக்கம் கொண்டவர்கள். வட கர்நாடகத்தில் உள்ளவர்கள் சிலர் ‘லிங்காயத்’ என்னும் வழிபாட்டு முறையைப் பின்பற்றி வருகிறார்கள்.

5) கோவா:

கோவாவில் விஸ்வகர்மாக்கள் ‘சாரி’கள் என அழைக்கப்படுகிறார்கள், மனு மய பிராமணர்கள் எனவும் இவர்கள் அறியப்படுகிறார்கள், போர்ச்சுகீசியர்களின் காலத்தில் இவ்வினத்தினர் சிலர் கிறிஸ்தவ மதத்தினைத் தழுவியுள்ளனர்.

6) ராஜஸ்தான்:

ராஜஸ்தானத்தில் ஜங்கித் பிராமணர்கள் என அழைக்கப்படும் இவர்கள் இன்றளவும் இறைவனின் உருவங்களையும் ரதங்களையும் வடிவமைத்துப் புகழ் சேர்க்கிறார்கள்.பெரும்பாலும் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் வாழும் இவர்கள் உயர் பொருளாதார நிலை முதல் மிகவும் ஏழ்மையான நிலைவரை தங்களது வாழ்க்கை நிலையைக் கொண்டுள்ளார்கள். பொதுவாக இந்திய சமூகத்தில் இவர்கள் குறிப்பிடக்கூடிய சமுதாய-பொருளாதார நிலையினை பெற்றுள்ளனர்.

சமூக-பொருளாதார நிலைகளில் உயர்ந்தும் தாழ்ந்தும் விளங்கும் இவர்கள் கிராமப்புற பொருளாதாரத்தில் சிறப்பான பங்கினை வகிக்கின்றனர். தற்போது தொழிற்புரட்சி மற்றும் தானியங்கி இயந்திரப்புரட்சி ஆகியவற்றின் ஆதிக்கத்தினால் வேலைவாய்ப்பை இழக்கும் இவர்கள் தங்களது குலத்தொழில்களை விடுத்து மற்ற வேலைகளுக்கும் செல்கின்றனர்.

எழுத்தாளர் ஆனந்த் கே.குமாரசாமி ஹிந்து மற்றும் புத்தமதத்தினரின் தொன்மங்கள் (ஆங்கிலம்) என்ற தனது புத்தகத்தில் கம்மாளர்கள் விஸ்வபிராமணர்கள் எனவும், வேதகம்மாளர்கள் எனவும் அறியப்படுகிறார்கள். அவர்கள் தெற்கு நோக்கிப் புலம் பெயர்ந்து, சிலோன், பர்மா, ஜாவா தீவுகள் போன்ற இடங்களில் வாழ்கிறார்கள். ஆன்மீகத்திலும், கல்வியிலும் தங்களை முன்னோடிகளாகக் கருதுகிறார்கள். இவர்கள் தங்களின் சடங்குகளைத் தாங்களே நடத்துகிறார்கள். பிராமர்களைச் சார்ந்து நிற்பதில்லை. என்று பதிவு செய்து இருக்கிறார்.

டாக்டர் கிருஷ்ணராவ் தனது நூலில், உயர்ந்த தொழில் நிலையையும், சமூக அந்தஸ்தையும் பெற்றவர்களாக இரும்பு வேலை, மரவேலை செய்வோரும், கைவினைஞர்களும் இருந்தனர். எட்டு மற்றும் ஒன்பதாம் நூற்றாண்டுகளில் இவர்கள் மிகச் சிறப்பானதொரு சமூக-பொருளாதார நிலையைப் பெற்றிருந்தனர். பவித்ரமான பூநூல் அணிந்தும், தங்களை விஸ்வகர்ம பிராமணர்கள் என பிரகடனப்படுத்தியும் வாழ்ந்தனர். இவர்களின் புகழும் பெருமையும் வளர மிக முக்கிய காரணம், இவர்கள் தங்களது கலைத் திறமைகளின் மூலம் இந்தியப் பண்பாட்டினை, குறிப்பாக இந்து மத கலாச்சாரத்தை உலகினுக்கு உணர்த்தி, உணர்த்தியதுதான் என்று ஆய்ந்து கூறியிருக்கிறார்.

மறைக்கப்பட்ட வரலாறு:

சமுதாயத்திற்கான பெரும்பாலானத் தேவைகளை நிறைவேற்றியும், சமுதாயத்திற்குக் குருமார்களாய் இருந்து வழிகாட்டியும் வந்த விஸ்வகர்ம இனம் பேஷ்வாக்கள் ஆட்சிக்காலத்தில் ஒரு மிகப்பெரும் கொடுமைக்கு ஆளானது. இந்த வரலாறு பெரும்பாலும் ஆய்வறிஞர்கள் கூட அறியாதது. வரலாற்றின் ஆழ்ந்த ஏடுகளித் தேடிப்பார்த்தால் கிடைக்கும் இந்த அவலத்தின் சில துளிகள் இதோ…

பாஞ்சாலர்கள் என அழைக்கப்பட்ட விஸ்வகர்ம இனத்தவர்களின் சமூக முக்கியத்துவத்தையும், அபார வளர்ச்சியையும் கண்ட பிராமணர்கள் இவர்களை சமுதாயத்தினின்றும் ஒதுக்க ஆவல் கொண்டவர்களாய், பொறாமை மேலிட, இவர்கள் விஸ்வகர்மாக்கள். பிராமணத் தகுதியுடையவர்கள் அல்ல என்று கூறி பிராமணர்களாக ஏற்க மறுத்தனர்.இதனால் பிராமண-விஸ்வபிராமணர்களிடையே பல காலங்களாக விரோத மனப்பான்மை இருந்து வந்தது.

பேஷ்வாக்கள் எனப்படும் ஒரு இனத்தவர் மன்னர்களாக அரசாண்ட காலத்தில், விஸ்வகர்மாக்கள் பல வகையிலும் கொடுமைப்படுத்தப்பட்டனர். ஏனெனில், பேஷ்வாக்கள் பிராமண சமுதாயத்தைத் தழுவியவர்கள். இவர்கள் பாஞ்சாலர்களை இடுப்பில் வேட்டி கட்ட அனுமதிக்க வில்லை. வேறுசில காலத்தில் பஞ்ச கச்சம் போன்ற ஆடைகளை (பிராமணர்களுக்கு உரியது) அணிய தடை செய்தனர். சிகையை பாரம்பரிய வழக்கப்படி (மரபுப்படி) வளர்க்கவோ, கட்டவோ அனுமதிக்கவில்லை. இன்னும் நாம் அறியாத பல கொடுமைகளும் நடந்திருக்க வாய்ப்புள்ளது.

வேதகால நாகரிகத்தின் தோற்றுவாய்களாய் திகழ்ந்த இனம் ஒடுக்கப்பட்ட இந்த வரலாறு இன்று பெரும்பாலும் தேய்ந்து, மறைந்து வெளியில் தெரியாமல் போய்விட்டது.

——————

ராமாயண, மஹாபாரதம்
ஹிந்து தர்மத்தின் அற்புதமான இதிஹாஸங்களாக இலங்குபவை ராமாயணமும் மஹாபாரதமும். வேதத்தின் சுருக்கமே ராமாயணம் என்றும் ஐந்தாவது வேதம் தான் மஹாபாரதம் என்றும் தொன்று தொட்டு இந்த நாட்டில் போற்றப்பட்டு வருகிறது.உலகில் முதல் முதல் எழுந்த காவியம் என்பதால் ஆதி காவியம் என ராமாயணம் கருதப்படுகிறது. 644 ஸர்க்கங்களில் 24000 சுலோகங்களில் ஏழு காண்டங்களில் தர்மத்தின் திரு உருவான ராமனின் கதையை சம்ஸ்கிருதத்தில் மஹரிஷி வால்மீகி தருகிறார்.

18 பர்வங்களில் (100 உப பர்வங்களில்) ஒரு லட்சம் சுலோகங்களில் 2314 அத்தியாயங்களில் மஹரிஷி வேத வியாஸரால் மஹா பாரதம் இயற்றப்பட்டுள்ளது.

காலம் காலமாக இந்த இரு இதிஹாஸங்களும் உலகின் எல்லாப் பகுதிகளிலும் ஏராளமானோரை பல்லாயிரக்கணக்கில் கட்டுரைகள், நூல்கள் மற்றும் காவியங்களை வெவ்வேறு மொழிகளில் இயற்ற ஊக்குவித்திருப்பதை உலகமே அறியும்.

———————-

தைவக்ஞர் சூரிய கவி-கவி வேங்கடாத்வரி -ஸ்ரீ ராம யாத வீயம் -ஸ்ரீ ராம கிருஷ்ண விலோம காவ்யம்
ஆனால் பாரதத்தைச் சேர்ந்த மூன்று அதிசயக் கவிஞர்கள் இந்த இரு இதிஹாஸங்களை வைத்து ஒரு அற்புதமான அதிசயமான செயலை சம்ஸ்கிருத மொழியில் சாதித்துள்ளனர்.
தைவக்ஞர் சூரிய கவி என்பவர் பெரும் சம்ஸ்கிருத விற்பன்னர், கவிஞர்! அவர் 36 ஸ்லோகங்கள் அடங்கிய ராமகிருஷ்ண விலோம காவ்யம் என்று ஒரு காவியத்தை இயற்றியுள்ளார். இதில் ஸ்லோகத்தை முதலிலிருந்து படித்துக் கொண்டு போனால் ராமாயணக் கதையைக் காணலாம். ஸ்லோகத்தின் பின்னாலிலிருந்து திருப்பிப் படித்துக் கொண்டு போனால் வருவது இன்னொரு ஸ்லோகம். அதில் மஹாபாரதக் கதையைக் காணலாம். விகடகவி, தேருவருதே போன்ற சொற்களில் வரும் எழுத்துக்களைத் தலைகீழாகத் திருப்பிப் போட்டாலும் அதே சொற்கள் வருவது ஒரு சொல் அலங்காரம். இதை ஆங்கிலத்தில் Palindrome என்கிறோம்.

ஒரு ஸ்லோகம் அல்ல, பல ஸ்லோகங்கள் அடங்கிய ஒரு காவியமே இப்படி அமைக்கப்பட்டுள்ளது என்றால்..! வியக்க வைக்கும் இந்தக் காவியத்திலிருந்து உதாரணத்திற்கு இரு பாடல்களை இங்கு காணலாம்.

கௌசிகே த்ரிதபஸி ஷ்ரவ்ரதி யோத்ததாத் த்விதநயஸ்வமாதுரம் I
ரந்துமாஸ்வயன தத்தித்தாதயோ தீவ்ர ரக்ஷஸி பதத்ரிகேஷிகௌ II -ஆறாவது ஸ்லோகம்

இதன் பொருள் : எல்லா உயிரினங்களின் ஆசைகளை நிறைவேற்ற உறுதி பூண்ட தசரத மன்னர், (மனோ வாக்கு காயம் ஆகிய )மூன்று விதத்திலும் தவம் செய்த ரிஷி விஸ்வாமித்திரருக்குத் தன் செல்வங்களான ராமர், லக்ஷ்மணரைத் தந்தார்.

இதே ஸ்லோகத்தை திருப்பிப் போட்டுப் படித்தால் பொருள் மாறி விடும் இப்படி:- புண்ணியச் செயல்களைச் செய்த ஓ, பரீட்சித்து மன்னனே, ராக்ஷஸ குணத்தில் வேறு யாரையும் ஒப்பிடமுடியாத பூதனையையும் பறவையின் உருவில் இருந்த பகனையும் குதிரையின் உருவில் இருந்த கேசினையும் விளையாட்டு லீலையாக எல்லையற்ற ஞானம் உடைய ஸ்ரீ கிருஷ்ணர் அவர்கள் உடலிலிருந்து (உயிரை நீக்கி) முக்தி அளித்தார்.

ராம மாநா ஸதா கேத பாவே தயா வான்
அதாபி இந தேஜா ரிபவ் அநதே
காதி மோதா சஹாதா ஸ்வ பாஸா
ரஸாமே ஸூக ரேணுகா த்ரஜே பூருமே –7-

இடர் உற்றவருக்கு அருளும் காருண்ய சீலன்
கரு ஞாயிறு போன்றவன் இந்தேஜோ -ஸூர்யன் போல் பிரகாசிக்ப்பவன்
ஆனாலும் அருகில் செல்ல ஸுலப்யன் உடையவன்
அப்படிப்பட்ட ராமன் பூமி முழுவதும் சுற்றி அதைச் செல்வமாக யுடைய
ரேணுகையான புதல்வனான பரசுராமன் விரோதத்துடன் தோன்றி
பின் அவனைப் பணிந்ததும் ஸ்ரீ ராமசந்திரன் கருணையுடன் திகழ்ந்தான்

கதம் மிகுந்து இரைத்துப் பொங்கும் கனை கடல் உலகம் எல்லாம்
புதைவு செய் இருளின் பொங்கும் அரக்கர் தம் புரமும் பொற்பும்
சிதைவு செய் குறியைக் காட்டி வட திசைச் சிகரக் குன்றின்
உதயம் அது ஒழித்துத் தோன்றும் ஒரு கரு ஞாயிறு ஓத்தான் -கம்பர் –

கட்டார் சிலைக் கரு ஞாயிறு புரைவான்
கண் தாமரை போல் கரு ஞாயிறு என
செந் தண் கமலக்கண் சிவந்த வாய் ஒரு கரு ஞாயிறு
அந்த மில்லாக் கதிர் பரப்பி வளர்ந்தது ஒக்கும் அம்மானே -திருவாய் -8-5-7-

‘பூதலத்து அரசை எல்லாம் பொன்றுவித்தனை; என்றாலும்,
வேத வித்து ஆய மேலோன் மைந்தன் நீ, விரதம் பூண்டாய்,
ஆதலின் கொல்லல் ஆகாது; அம்பு இது பிழைப்பது அன்றால்;
யாது இதற்கு இலக்கம் ஆவது? இயம்புதி விரைவின்!’ என்றான்.–பரசுராம படலம் 36-

‘எண்ணிய பொருள் எலாம் இனிது முற்றுக!
மண்ணிய மணி நிற வண்ண! வண் துழாய்க்
கண்ணிய! யாவர்க்கும் களைகண் ஆகிய
புண்ணிய! விடை’ எனத் தொழுது போயினான். 40-

மேரு பூ ஜேத் ரகா காணுரே கோ ஸூமே ஸா அரஸா
பாஸ்வதா ஹா ஸதா மோதிகா
தேந வா பாரிஜாதே ந பீதா நவா யாதவே அபாத் அகேதோ
ஸமாநாமரா —ஸ்லோகம் 7 -ப்ரதிலோமம்

எப்படி ரைவதக பர்வதமானது கிருஷ்ணனின் இருப்பாள் மேருவை விஞ்சியதோ
அதே போல் பாரிஜாத மலரை அடைந்த உடன் ருக்மிணி பிராட்டி சிறிதே மணம் நிறைந்த பூ லோகத்து மலர்களை எல்லாம் அறவே விட்டாள்
அத்தைச் சூடிய பின் அவள் அம் மலரைப் போலவே வெண்மை நிறம் வீசக்கூடிய திவ்ய மேனி பெற்று
தேவ லோக மங்கையரைப் போல் கவலை அற்று மகிழ்ச்சியுடன் விளங்கினாள்
ரைவதக பர்வம் த்வாராகை ஒட்டி இருக்கும் மலை-கிர் நார் இப்பொழுது உள்ள பெயர் -ஹரி வம்சம்

————-

ஸாரஸ அஸம தாத அஷி பூம்நா தாம அசவ் ஸீதயா
ஸாது அசவ் இஹ ரேம ஷேமே அரம் ஆஸூர ஸாரஹா –ஸ்லோகம் -8-

இவையா பில வாய் திறந்து எரி கான்ற
இவையா எரி வட்டக் கண்கள் -இவையா
எரி பொங்கிக் காட்டும் இமையோர் பெருமான்
அரி பொங்கிக் காட்டும் அழகு -திருமழிசைப் பிரான் பாசுரம் போலவே இங்கு கவி வேங்கடாத்ரி அருளிச் செய்கிறார்

ஹார ஸார ஸூமா ரம்யா ஷேமேர இஹ விஸாத் வஸா
யா அதஸீ ஸூ மதாம் நா பூஷிதா தாம ஸ ஸார ஸா –ஸ்லோகம் -8-ப்ரதி லோமம் 

அழகிய முத்தினாலான மாலையைப் போல் ஒளிர்ந்ததும்
செல்வத்துக்கு எல்லாம் அணி கலனாய் திகழ்ந்ததுமான
அந்த பாரிஜாத மலரைச் சூடின ருக்மிணி பிராட்டி அதஸி புஷ்ப மாலையை சூடின கண்ணனுடன்
மற்ற மனைவியரைக் கண்டு பயம் அற்றவளாய் அவன் திரு மாளிகைக்கு சென்றாள்

————-

ஸாகஸா பர தாய இபமா பாதா மந்யு மத்தயா
ஸா அத்ர மத்யமா தாபே போதாய அதி கதா ரஸா –ஸ்லோகம் -9- அநு லோபம்

ராஜ்ய லஷ்மியின் வைபவத்தால் பிரகாசிக்கும் அயோத்தியை நகரை கைகேயி யானவள்
ராமனுக்கு முடி சூட்டும் வைபவம் பற்றிக் கேள்விப்பட்ட வுடன் கோபத்தாலும் வருத்தத்தாலும்
உன்மத்த நிலையை அடைந்தவளாய் பரதனுக்காக நிலை நிறுத்தினாள் –

தாவில் மாமணிக்கலம் மற்றும் தனித்தனிச் சிதறி,
நாவி ஓதியை நானிலம் தைவரப் பரப்பிக்
காவி உண்டகண் அஞ்சனம் கன்றிடக் கலுழாப்
பூ உதிர்ந்தது ஓர் கொம்பு எனப் புவி மிசைப் புரண்டாள். –கைகேயி சூழ்ச்சிப் படலம் –3-

ஸாரதா கதியா தபோ பேதா யா மத்யம த்ரஸா
யாத்த மந்யு மதா பாமா பயேதா ரபஸா ஆகஸா –ஸ்லோகம் -9-ப்ரதி லோமம்

தன் சீலத்தால் பெரும் புகழை யுடைய யோசித்த இடை யுடையளான -மத்ய மா -ஸத்ய பாமை
கண்ணன் பாரிஜாத மலரை ருக்மிணியிடம் அளித்த செய்தி அறிந்து கோபமும்
கண்ணனின் அன்பு தன்னிடத்தில் குறைந்ததோ என்ற பயமும் அடைந்தாள்

மேல் உள்ள இரண்டு ஸ்லோகங்களும் இரு மனைவியரின் துக்கத்தையும் கோபத்தையும் காட்டுகிறது
கைகேயி -கௌசல்யை
ஸத்ய பாமை -ருக்மிணி பிராட்டி
முன்னுரிமை பறிக்கப் பட்டு தங்களை மத்யமா -secondary -என்று கணவர் எண்ணுகிறார்கள் என்ற நினைவு

————–

தாநவாத் அபகா உமாபா ராமே கானனத ஆஸ ஸா
யா லதா அவ்ருத்த ஸேவாகா கைகேயீ மஹத அஹஹ –ஸ்லோகம் -10- அநு லோமம்

ராமனுக்கு முடி சூட்டப் போகும் விஷயம் அறிந்த கைகேயி துயரத்தால் நலிவுற்று வெளுத்தவளாய்
அறுந்த கொடி போல் தரையிலே விழுந்து தயரதனுக்கு செய்யும் அனைத்து பணிவிடைகளையும் மறந்தவளாய்
முடி சூட்டுதலை எதிர்த்து ரானைக் காட்டுக்கு அனுப்பினாள்

கூன் உருவில் கொடும் தொழுத்தை தன் சொற் கேட்ட கொடியவள் தன் சொற் கொண்டு இன்று
கானகமே மிக விரும்பி நீ துறந்த வள நகர் –பெருமாள் திரு மொழி

‘ஏய வரங்கள் இரண்டின், ஒன்றினால், என்
சேய் அரசு ஆள்வது; சீதை கேள்வன் ஒன்றால்
போய் வனம் ஆள்வது’ எனப் புகன்று, நின்றாள் –
தீயவை யாவையினும் சிறந்த தீயாள்.–கைகேயி சூழ்ச்சிப் படலம்– 14-

நாகம் எனும்கொடியாள், தன் நாவின் வந்த
சோக விடம் தொடர, துணுக்கம் எய்தா,
ஆகம் அடங்கலும், வெந்து அழிந்து, அராவின்
வேகம் அடங்கிய வேழம் என்ன வீழ்ந்தான். 15-

ஹஹ தாஹ மயீ கோகைகா வாஸோத் தா வ்ருதாலயா
ஸா ஸத் ஆந நகா அமேரா பாமா கோபத வா நதா –ஸ்லோகம் -10- ப்ரதி லோமம்

அழகிய முகம் கொண்டவளான பாமா இப்பொழுது கொழுந்து விட்டு எரியும் காட்டுத்தீ போன்ற கோபத்தால்
முகம் எல்லாம் ஜ்வலிக்க கலக்கமுற்ற மனத்தளாகி அழகிய மயில்கள் நடமாடும் தனது வீட்டினுள்
பணிப்பெண்கள் நுழையா வண்ணம் தாள் இட்டாள்

அநு வ்ரதா காம கலா ஸ்வ தீதி நீ விசித்ர சஸ்த்ராஸ்த்ர விஹார வேதி நீ
பஹு ப்ரிய ஸ்யாபி ஹரேர் அதீவ ஸா பபூவ தேவீ பஹு மாந கோசர –யாதவாப்யுதம் -14-72-ஸத்ய பாமா வர்ணனம்

பர்த்தாவின் திரு உள்ளபடி நடப்பவள்=காம சாஸ்திரம் கற்றவள்
அம்பு அஸ்த்ரங்களின் பிரயோகம் அறிந்தவள்
ஆகையால் பல மனைவியர்களிலும் இவளே கண்ணனின் அன்புக்கு பூர்ண பாத்ரமானவள்

கைகேயி யாருடன் பேசாமல் தன்னையே வருத்திக் கொள்ள
ஸத்ய பாமையோ கோபத்தால் பணிப் பெண்களை தவிர்த்தாள்

————————-

இதே காவியத்திலிருந்து இன்னொரு பாடலைப் பார்ப்போம்.
க்ஷதாய மா யத்ர ரகோரிதாயுர் அங்கானுகானன்யதயோயனானி I
நிநாய யோ வன்யனகானுகாரம் யுதாரிகோரத்ரயமாயதாக்ஷ: II– 34வது ஸ்லோகம்

இதன் பொருள் : சுக்ரீவனும் இதர குரங்குகளும் யுத்தகளத்தில் நுழைந்தவுடன் அழியப் போகும் வாழ்வை உடையவனான ராவணனால் ராமருக்கு எந்தக் காயத்தையும் விளைவிக்க முடியவில்லை.
இதையே பின்னாலிலிருந்து படித்தால் வரும் பொருள் இது: நீண்ட கண்களையுடைய ஸ்ரீ கிருஷ்ணர் மலை போன்ற உருவத்தை ஒத்த (அகாசுரன், கேசின், பூதனா ஆகிய) மூன்று பயங்கரமான அசுரர்களை வதம் செய்தான்.

இது போன்ற விலோம காவியத்தின் ஆதிகர்த்தா சூர்யகவியே என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அவர் பார்த்தபுரத்தில் (அஹ்மத் நகர்) 1580ஆம் ஆண்டு வாக்கில் வாழ்ந்த அற்புதமான கவிஞர். இதற்கு அவரே ஒரு உரையையும் எழுதி இருக்கிறார். அதில் இப்படிப்பட்ட ஒரு காவியம் செய்வது எவ்வளவு கஷ்டமானது என்பதையும் விளக்கியுள்ளார்.

—————-

சிதம்பர கவியின் அற்புத காவியங்கள்
அடுத்து 1600ஆம் ஆண்டில் தஞ்சாவூரில் வாழ்ந்த சிதம்பர கவி என்பவர் சப்தார்த்த சிந்தாமணி என்ற நூலை இயற்றியுள்ளார். இதிலும் முதலிலிருந்து படித்தால் ராமாயணமும் பின்னாலிலிருந்து படித்தால் மஹாபாரதக் கதையும் மிளிரும். தஞ்சை சரஸ்வதி மஹாலில் சுவடி வடிவில் உள்ள இந்த அற்புத நூல் இன்னும் அச்சிடப்படவில்லை எனத் தெரிகிறது. ஆனால் இதன் பெருமை உலகெங்கும் பரவி விட்டிருக்கிறது.இவர் இன்னும் ஒரு படி மேலே போய் கதா த்ரயம் என்ற காவியத்தையும் இயற்றி இருக்கிறார். இதில் ஸ்லோகத்தைப் பிரித்துப் படித்துப் பார்த்தால் ராமாயணம், மஹாபாரதம் ஆகியவற்றோடு பாகவதக் கதையையும் படிக்கலாம், ஒரே பாடலில் மூன்று பிரம்மாண்டமான நூல்கள்! அதிசயம், ஆனால் உண்மை! உலகில் இது போல எந்த ஒரு மொழியிலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத சாதனையாக இது கருதப்படுகிறது!

கவிஞர் வேங்கடாத்வரி
சிதம்பர கவியை அடுத்து அதிசயமான மூன்றாவது கவிஞராகத் திகழ்பவர் வேங்கடாத்வரி என்பவர். 1650ஆம் ஆண்டு வாக்கில் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த மாபெரும் கவிஞர் இவர். இவரது ராகவ யாதவீயம் என்பது 30 ஸ்லோகங்களைக் கொண்ட ஒரு அரிய நூல். ஸ்லோகத்தை நேரடியாகப் படித்தால் ராமாயணக் கதையையும் தலைகீழாகப் படித்தால் மஹாபாரத கதையையும் இதில் படிக்க முடிகிறது.இதில் இரு ஸ்லோகங்களைப் பார்க்கலாம்.

ராமநாமா சதா கேதபாவே தயாவான் அதாபீனதேஜா: ரிபௌ ஆனதே I
காதிமோதாஸஹாதா ஸ்வபாஸா ரஸாமே சுக: ரேணுகாகாத்ரஜே பூருமே II -ஸ்லோகம் 7
அனுலோமமாக அதாவது முதலிலிருந்து கடைசி வரை வரிசைக்கிரம்மாகப் பார்த்தால் இதன் பொருள் : துயரப்படுவோரிடம் எப்போதும் சதா கருணையுடன் திகழும் ராமபிரான், சூரியனைப் போலப் பிரகாசிப்பவரும் சுலபமாக அணுகக்கூடியவரும் முனிவர்களைத் துன்புறுத்திய ராக்ஷஸர்களை அழித்தவருமான அவர் ரேணுகாவின் புத்திரரும் பூமி அனைத்தையும் தனது செல்வமாகக் கொண்டு சுற்றித் திரிந்தவருமான பரசுராமரைப் பார்த்த போது குளிர்ந்த ஒளியுடன் அடக்கமுடன் திகழ்ந்தார்.
இதையே திருப்பிப் போட்டால் வரும் ஸ்லோகம்:

மேருபூஜேத்ரகா காணுரே கோஸுமே சா அரஸா பாஸ்வதா ஹா சதா மோதிகா I
தேன வா பாரிஜாதேன பீதா நவா யாதவே அபாத் அஸ்வேதா சமானாமரா II

பிரதிலோமமாக அதாவது கடைசியிலிருந்து முதல் வரை (மேலே உள்ள ஸ்லோகப்படி பார்த்தால்) இதன் பொருள் : மேருவையும் வெல்லும் ரைவர்த்தக மலையில் இருந்தபோது பாரிஜாத மலரை அடைந்த ருக்மிணி பூமியில் உள்ள குறைந்த வாசனையே உள்ள எந்த புஷ்பங்களின் மீதும் ஆசையின்றிப் போனதோடு ஒரு புதிய மேனியை அடைந்தவள் போலத் திகழ்ந்தாள்.
ஆக அனுலோமமாகவும் பிரதிலோமமாகவும் உள்ள இந்த விலோம காவியத்தின் அனைத்துப் பாடல்களையும் வார்த்தை வார்த்தையாக எடுத்து அர்த்தத்தைக் கூறப் போனால் கவிதையின் அழகும் ஆழமும் நன்கு புரிவதோடு பிரமிப்பும் வியப்பும் வரும்.

இன்னும் ஒரு பாடல்:
தாம் ஸ: கோரமதோஷ்ரீத: விக்ராம் அஸதர: அதத I
வைரம் ஆஸ பலாஹாரா வினாஸா ரவிவம்சகே II – ஸ்லோகம்18

அனுலோமமாக இதன் பொருள்: ராமனின் வலதுகரமாகத் திகழ்ந்த பயமே அறியாத லக்ஷ்மணனால் மூக்கு அறுபட்டவுடன் சூர்ப்பணகை ராமன் மேல் பழி வாங்கத் துடித்தாள்.
இந்த ஸ்லோகத்தை பிரதிலோமமாக கடைசியிலிருந்து தலைகீழாக எழுதிப் பார்த்தால் வருவது இந்த ஸ்லோகம்:-

கேசவம் விரஸானாவி: ஆஹ ஆலாபஸமாரவை: I
ததரோதஸம் அக்ராவித: அஷ்ரித: அமரக: அஸதாம் II

இதன் பொருள்:-மலைகளின் கொட்டமழிப்பவனும், தேவர்களின் தலைவனும், அசுரர்களை அழிப்பவனுமான இந்திரன் தனது சந்தோஷம், பலம், ஒளி ஆகியவற்றை இழந்தான். வானையும் பூமியையும் படைத்த கிருஷ்ணனிடம் சமாதானப்படுத்தும் சொற்களைப் பேசினான்.
காவியம் படிப்போம்; பரப்புவோம்!

(சம்ஸ்கிருத) இலக்கணத்திற்குட்பட்டு பொருள் பொதிந்த சொற்களை இப்படி அமைப்பதென்பது இறை அருளினால் மட்டுமே வரும் என சூரிய கவியே மனம் நெகிழ்ந்து சொல்லியுள்ளார்.
இப்படிப்பட்ட தெய்வீகக் கவிஞர்கள் இந்த நாட்டில் தோன்றி இதிஹாஸ மேன்மையையும் சம்ஸ்கிருத அருமையையும் நிலை நாட்டி இருப்பது சனாதன தர்மத்தின் ஏராளமான அதிசயங்களுள் இன்னும் ஒரு அதிசயமே!

ராமகிருஷ்ண விலோம காவ்யத்தை சம்ஸ்கிருதத்தில் படிக்க விரும்புபவர்கள் கீழ்க்கண்ட இணையதளத்தில் http://sanskritdocuments.org/all_pdf/raamakrshhna.pdf என்ற தொடுப்பிலிருந்து இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

ராகவ யாதவீயம் காவியத்திற்கு ஆங்கிலத்தில் விரிவான அழகான உரை ஒன்றை எழுதி இருப்பவர் டாக்டர் சரோஜா ராமானுஜம்.இந்த சம்ஸ்கிருத ஸ்லோகத்திற்கான ஆங்கில விரிவுரை நூலையும் இணையதளத்தில் காணலாம்.

அருமையான காவியங்களை உலகிற்குத் தரும் இணைய தளங்களுக்கும் உரை எழுதிய சம்ஸ்கிருத விற்பன்னர்களுக்கும் நமது நன்றிகளை உரித்தாக்கி இக் காவியங்களின் பெருமையை உலகில் பரப்புவோம்!.ராம கிருஷ்ணரின் அருளுக்குப் பாத்திரராவோம்!!
******************

உலகில் ராமாயணம் போல தொடர்ந்து எழுதப்பட்ட இதிஹாசம் வேறு எதுவும் கிடையாது. சுமார் 3000 ராமாயணங்கள் இருப்பதால் எண்ணிக்கை விஷயத்திலும் இதற்கே முதலிடம்.

சுமார் 2200 ஆண்டுகளுக்கு முன் வால்மீகி ராமாயணம் எழுதப்பட்டதாக வெளிநாட்டு ஆராய்ச்சியளர் செப்புவர். ஆனால் இதுதான் ஆதி காவியம், “சோகத்திலிருந்து பிறந்ததே ஸ்லோகம்” என்று இந்துக்கள் பகர்வர். காதல் புரியும் பறவைகளில் ஒன்றை, ஒரு வேடன் அடித்து வீழ்த்த, அதைப் பார்த்த வால்மீகியின் உணர்ச்சி கொந்தளிக்க, அந்த சோகத்தில் உருவானது ஸ்லோகம் (செய்யுள்).

ராஜதரங்கிணி என்ற வரலாற்று நூலில் கல்ஹணர் என்ற புலவர் ஒரு சுவையான விஷயத்தைச் சொல்கிறார். அசோகனுக்குப் பின்னர் காஷ்மீரை ஆண்ட இரண்டாவது தாமோதரன், திவச தினத்தன்று குளிக்கப் போனபோது பசியுடன் இருந்த சில பிராமணர்கள் உணவு படைத்துவிட்டுச் செல்லும்படி கோரினராம். விடஸ்தா நதியில் குளித்த பின்னரே அவ்வாறு செய்வேன் என்று அரசன் சொல்லவும், பிராமணர்கள், விதஸ்தா நதியை அவனுக்கு முன்னால் கொண்டு வந்தனராம். அதனை அவன் மாயத் தோற்றம், உண்மயல்ல என்று சொல்லி நிராகரிக்கவே, பிரமணர்கள் அவனைப் பாம்பாகப் போகும் படி சபித்தனர். அவன் வருந்தவே, ஒரே நாளில் ராமாயணம் முழுவதையும் கேட்டால் இந்த சாபத்திலிருந்து விமோசனம் பெறலாம் என்று அவர்கள் சாப விமோசனம் கொடுத்தனர். இந்த தாமோதரன் ஹுஸ்கர், ஜுஸ்கர், கனிஷ்கர் முதலிய மன்னர்களுக்கு முன் — 2200 ஆண்டுகளுக்கு முன் —வாழ்ந்தவன்..

2500 ஆண்டுகளுக்கு முன்னரே ராமாயணம் தென் குமரி வரை பரவிவிட்டது. புத்தமத்த ஜாதகக் கதைகளில் தசரத ஜாதகம் முதலியன    இருப்பதும் , சங்கத் தமிழ் நூலான புறநானூற்றில் வால்மீகி சொல்லாத 2 கதைகள் இருப்பதும்,  காதா சபத சதியில் கோதவரி நதிக்கரையில் ஒரு வீட்டில் ராமாயண  ஓவியம் இருப்பதாகப் பாடி இருப்பதும் இதன் பழமைக்கு சான்று பகரும். ஆழ்வார் பாடல்களில் பல புதிய விஷயங்கள் உள்ளன. வால்மீகி என்ற பெயரில் புறநானூற்றுக் கவிஞர், 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்துள்ளார்!

ராமாயணம் பற்றிய மற்றொரு அதிசயம் சமண ராமாயணம், பௌத்த ராமாயணமென்று எல்லோரும் ராமன் கதை பாடி மகிழ்ந்தனர்.

ராமாயணம் பற்றிய மற்றொரு அதிசயம், நிறைய மொழிகளில் இதை இயற்றி இருப்பதாகும்.தென்கிழக்கு ஆசிய மொழிகளிலும் கூட ராமன் கதை உண்டு.

பல ராமாயணங்கள் நமக்குக் கிடைக்கவில்லை. ஆயினும் அது பற்றிய குறிப்புகள் உள. மஹா ராமாயணம் மூன்றரை லட்சம் ஸ்லோகங்கள் உடையது. இப்போதுள்ள இதிஹாசங்களில், நூல்களில் உலகில் மிகப் பெரியது மஹாபாரதம்- அதில்கூட ஒரு லட்சம் ஸ்லோகம்தான்!

நாரதர் எழுதிய சம்வ்ரத ராமாயணம் 24,000, லோமசர் எழுதிய லோமச ராமாயணம் 32,000 ஸ்லோகங்களைக் கொண்டவை. 60, 000 ஸ்லோகங்களுக்கு மேலக உடைய இரண்டு ராமாயணங்கள் இருந்தனவாம்..

சமண ராமாயணம் பிராக்ருத மொழியிலும், பௌத்த ராமாயணங்கள் பாலி மொழியிலும், இந்து ராமாயணங்கள் சம்ஸ்கிருத, தமிழ் மொழிகளிலும் இருந்தன.

ப உ ம சரிய (பதும சரிதம்) என்ற சமண ராமாயண த்தை விமல சூரி என்பவர் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதியதாக ச் சொல்லுவர்– அதில் 118 பருவங்கள் உள்ளன. ராவணனின் 10 தலை, கும்பகர்ணனின் ஆறுமாத தூக்கம் முதலியன பொய் என்று இதன் ஆசிரியர் அப்போதே எழுதியுள்ளார்

பௌத்தர்களின் ஜாதக் கதையான தசரத ஜாதகத்திலும், வால்மீகி ராமாயணத்திலும் ஒரே மாதிரியான பல ஸ்லோகங்கள் இருக்கின்றன. அக்காலத்திலேயே ராமன் கதை பற்றிப் பல பொதுவான விஷயங்கள் உலவி வந்தது இதனால் தெரிகிறது

பழமைக்கு உவமைச்  சான்று

சம்ஸ்கிருதத்தில் உவமைகள் இல்லாத காவியங்கள் குறைவு. வால்மீகி  ராமாயணத்தில் 3462 உவமைகள் இருப்பதாக அந்த உவமைகளைத் தொகுத்தளித்த ஆராய்ச்சியாளர் எம்.எம்.பாடக் கூறுகிறார்.

சீதையை விஷப் பாம்புக்கு ஒப்பிடுவது, இந்திர த்வஜம் போல அவன் வீழ்ந்தான் என்று உவமிப்பது முதலியன வால்மீகியின் பழமையை காட்டுகிறது ஏனெனில் பிற்காலத்தில் பாம்பை தீய விஷயங்களுக்கு மட்டுமே உவமை கூறினர்; இந்திர விழாவில் இந்திர த்வஜ கம்பத்தை அடித்துச் சாய்க்கும் உவமை எல்லாம் பிற்காலத்தில் பயன்படுத்தப்படவில்லை.

சுந்தர காண்டத்தில் 19 ஆவது அத்தியாயத்தில் தொடர்ந்து 30 உவமைகள் வருகின்றன. இது ஒரு புதுமை.

உவமைகள் பற்றி ஆராய்ந்த அறிஞர் இதில் குறைந்தது 13 வகை உவமைகள் இருப்பதாகப் பட்டியல் தருகிறார்.

3462 உவமைகளில்

2240 பூர்ண வாக்யா ச்ரௌதி

548 தர்மலுப்தா சமாசக

257 சமாசக பூர்ண ஆர்த்தி

174 தர்ம வசக லுப்தா பூர்ணா உவமை வகைகள் என்பார்.

வால்மீகி குறைந்தது 200 வகை தாவரங்களையும், 135 வகை ஆயுதங்களையும் குறிப்பிடுகிறார்.

ராமாயணத்தைப் போற்றும் பல பாடல்கள் உண்டு. அதில் ஒரு பாடல், இந்தப் பூமியில் சூரிய சந்திரர்கள் பிரகாசிக்கும் வரை ராமாயணத்துக்கு – ராம கதைக்கு –அழிவே  கிடையாது  என்று கூறும்

காரணம் என்ன?

காம, க்ரோத, லோபம் என்ற மூன்று தீய குணங்கள் உடைய எவரும் எப்படி முடிவெடுப்பரோ அதற்கு நேர் மாறாக முடிவு எடுக்கின்றனர் ராமாயண கதாபாத்திரங்கள். இதைவிட ஒரு நல்ல குடும்பம் இருக்கவே முடியாது என்னும் அளவுக்குச் செயல்படும்  பல கட்டங்களைக் காண்கிறோம்.

இந்தப்  பூவுலகில் எல்லா நல்ல குணங்களும் நிரம்பிய நல்ல மனிதர்  எவரேனும் உண்டா?  என்று நாரதரிடம் வால்மீகி முனிவர் கேட்டபோது, நாரதர் ராமரின் குணாதிசயங்களை விவரித்து நீண்ட பதில் தருகிறார். பலரும் கேட்ட விஷயங்களே அவைகள் . பின்னர் நாரதர் விடைபெற்றுச் செல்கிறார். வால்மீகி முனிவர் தமஸா நதிக்கரையை நோக்கிச் செல்கிறார். அங்கு தினசரி நடை பெறும்  காட்சிதான் நடக்கிறது அதாவது ஒரு வேடன் பறவைகளை நோக்கி அம்பு எய்கிறான். அவை செத்து விழுகின்றன. அதைப்  பார்த்த வால்மீகிக்கு சோகம் மிக்க  உணர்ச்சிக் கொந்தளிப்பு ஏற்படுகிறது. அதன் வாயிலாக நமக்கு ராமாயணம் கிடைக்கிறது. ஆனால் அதற்கு முன்னர் ஒரு அற்புதமான வருணனை வருகிறது.

இதோ சில அரிய எடுத்துக் காட்டுகள்:-

வால்மீகி முனிவர் தமஸா நதியைச் சுற்றுமுற்றும்  பார்க்கிறார் . அற்புதமான, அமைதியான அழகுமிக்க பரத்வாஜ  ஆஸ்ரமம் தெரிகிறது .அதைச்சொற்களில் வடிக்கும் போது நாம் சித்திரத்தில் கண்ட காட்சி போல அமைகிறது  அந்தச் சொற்சித்திரம் :-

(1)

அகர்தமமிதம் தீர்த்தம் பரத்வாஜ நிசாமய

ரமணீயம் ப்ரசன்னாம்பு ஸன்மனுஷ்ய மனோ ததா

பொருள்

பரத்வாஜரே  இந்த தண்ணீரைப் பாருங்கள் ! ஸ்படிகம் போல தெள்ளத் தெளிவாக இருக்கிறது; பார்க்கவே மனதிற்கு இன்பம் தருகிறது; நேர்மையான மனிதனின் மனதுபோல களங்கமற்று இருக்கிறது.

நேர்மையான மனிதனின் மனதுபோல தெளிந்த நீரோட்டம் உடையது அந்த ஆறு. நல்ல உவமை. ரமணீயம் ப்ரசன்ன , சன் மனுஷ்ய மனஹ  (நல்ல மனிதனின் மனது) என்ற சொற்கள் கவனிக்க வேண்டிய சொற்கள்.

இப்படிப்பட்ட நல்ல மனிதர்களின் மனதுதான் அற்புதங்களைச்  செய்யும். முத்து சுவாமி தீக்ஷிதர்  அமிர்த வர்ஷனி ராகம் பாடினால் மழை  பெய்யும் ; ஆதிசங்கரர் கனக தாரா தோத்திரம் பாடினால் தங்க நெல்லிக்காய் மழை  பெய்யும். ஞான சம்பந்தர் தேவாரம் பாடினால் அஸ்திச்  சாம்பலிலிருந்து  பூம்பாவை உயிர்பெற்று எழுவாள்; கூன் பாண்டியன் நின்ற சீர் நெடுமாறனாகக்  காட்சி தருவார். இதெல்லாம் தெளிந்த நீரோடை போன்ற மனது உடையோர் சாதிக்கக் கூடிய காரியம். நமக்கும் அப்படி இருக்குமானால் அற்புதங்களை சாதிக்கலாம்.

(2)

சீதா தேவி ஓராண்டுக் காலத்துக்கு ராவணனால் சிறைவைக்கப்பட்டு அசோக வனத்தில் வாடுகிறாள். உயிர்விட எண்ணிய தருணத்தில் ராமனின் கணையாழியுடன் வந்து காட்சி தருகிறான் அனுமன். இருண்ட  வானத்தில் ஒரு ஒளிக்கீற்று தோன்றுகிறது.  ராம- ராவண யுத்தம் முடிந்த பின்னர் மீண்டும் வெற்றிச் செய்தியுடன் சீதையை சந்திக்க அனுமன் வருகிறான்.

“தாயே உங்களுக்குத் தீங்கு விளைவித்த அசோக வன ராட்சச , ராட்சசிக்களை ஒழித்துக்கட்டவா?” என்று கேட்கிறான் . பகைவனுக்கும் அருள்வாய் நன்நெஞ்சே என்ற பாரதியின் வாக்கிற்கு இணங்க கருணையே வடிவான  ஸீதை சொல்கிறாள் :-

பாபானாம் வா சுபானாம் வா வதார்ஹானாம் ப்லவங்கம

கார்யம் கருணமார்யேண ந கஸ்சின்னா பராத்யதி

சீதை சொல்கிறாள் –

“இது போன்ற சிறியோர் மீது நாம் பழிவாங்குதல் அழகல்ல. அவர்களுடைய அரசர் சொன்னதையே அவர்கள் செய்தார்கள். உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தும் குணம் கருணையே ; அவர்கள் நல்லவர்களா கெட்டவர்களோ,  தீய குணங்களை உடையோரை தண்டித்தல் சரியாக இருக்கலாம்; ஆயினும் எப்படி ஒரு மனிதன், மற்றொரு மனிதனை எடைபோட முடியும் முடியும்?”

(3)

வால்மீகி , மனிதர்களை வருணிப்பதோடு இயற்கையையும் அற்புதமாக வருணிக்கிறார். காட்டில் இரவு நேரம் எப்படி இருக்கும்?

“மரங்கள் எல்லாம் அசைவற்று நிற்கின்றன. பிராணிகளும் பறவைகளும் அங்கே மறைந்து நிற்கின்றன. மெதுவாக மாலை நேரம் விடை பெற்றுப்  புறப்படுகிறது . வானத்தில் கண்கள்  (நட்சத்திரங்கள்)  முளைக்கின்றன. எங்கு நோக்கினும் நட்சத்திரங்களும் ராசி மண்டங்களும் பிரகாசிக்கின்றன அப்போது குளிர்ந்த கிரணங்களை வீசும் சந்திரன் உதயமாகி இருளை விரட்டுகிறான். பூமியில் வாழும் உயிரிங்களின் உள்ளங்களில் மகிழ்ச்சி பொங்குகிறது. இரவுநேரத்தில் வலம் வரும் ஜந்துக்கள் நகரத் துவங்குகின்றன. பிற பிராணிகள் கொன்ற எச்ச  சொச்சங்களைத் தின்னும் நரிகளும் யக்ஷ ராக்ஷசர்களும் நடைபோடுகின்றன”.

இது பாலகாண்டத்தில் வரும் வர்ணனை ; ராமனுக்குச் சொல்லப்படும் விஷயம். ஒரு சிறுவனுக்கு எவ்வளவு திகிலும், பின்னர் அச்சம் நீங்கிய உணர்வும் ஏற்பட்ட வேண்டுமோ அப்படி வால்மீகி அமைத்துள்ள சொற்றொடர்கள் இங்கே உள்ளன

இப்படி நிறைய செய்திகளை நாம் பல்வேறு கோணங்களில் காணலாம் . அப்போதுதான் வால்மீகியின் பெருமையை நாம் உணரமுடியும். இவைதான் எத்தனை முறை படித்தாலும் எத்தனை முறை கேட்டாலும் ராமாயணத்தை அலுக்காமல் கேட்க வைக்கிறது.

நாகப்பட்டினம் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள திருத்தலம் தில்லை விளாகம். இங்கு பஞ்சலோகத்திலான ஸ்ரீகோதண்ட ராமர், சீதாபிராட்டியார்,
இலக்குவன், அனுமன் ஆகியோருடன் நின்ற கோலத்தில் அற்புதமாக காட்சி தருகிறார். இந்த விக்கிரகங்களின் கையிலும், காலிலும் உள்ள பச்சை நிற நரம்புகள்,
விரலில் உள்ள ரேகைகள், கை, கால்களில் உள்ள நகங்கள் மற்றும் அனுமனின் திருமேனியில் மண்டிக் கிடக்கும் உரோமங்கள், தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளன.
மேலும் ஸ்ரீராமர் கானகம் செல்லும் போது அவருடைய அன்னை கௌசலை இடது மணிக்கட்டில் கட்டிய ரட்சா பந்தன், இடது முட்டியின் கீழே கட்டப்பட்டுள்ள
ரட்சை, எழுத்துக்களுடன் கூடிய தனுசு போன்றவையும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

ராமரின் முன்னோர்கள்–

1. பிரம்மாவின் மகன் -மரீசீ
2. மரீசீயின் மகன்- கஷ்யபர்
3. கஷ்யபரின் மகன் -விவஸ்வான்
4. விவஸ்வானின் மகன்- மனு
5. மனுவின் மகன் -இஷ்வாகு

6. இஷ்வாகுவின் மகன் -விகுக்ஷி
7. விகுக்ஷியின் மகன்- புரண்ஜயா
8. புரண்ஜயாவின் மகன் -அணரன்யா
9. அணரன்யாவின் மகன் -ப்ருது
10. ப்ருதுவின் மகன்- விஷ்வாகஷா

11. விஷ்வாகஷாவின் மகன் -ஆர்தரா
12. ஆர்தராவின் மகன் யுவான்ஷ்வா-1
13. யுவான்ஷ்வாவின் மகன் ஷ்ரவஷ்ட்
14. ஷ்ரவஷ்டின் மகன் -வ்ரதஷ்வா
15. வ்ரதஷ்வாவின் மகன் -குவலஷ்வா

16. குவலஷ்வாவின் மகன் – த்ருதஷ்வா
17. த்ருதஷ்வாவின் மகன் -ப்ரோமத்
18. ப்ரோமத்தின் மகன்- ஹர்யஷ்வா
19. ஹர்யஷ்வாவின் மகன் -நிகும்ப்
20. நிகும்பின் மகன் -சன்டஷ்வா

21. சன்டஷ்வாவின் மகன் க்ருஷஸ்வா
22. க்ருஷஸ்வாவின் மகன் ப்ரஸன்ஜீத்
23. ப்ரஸன்ஜீத்தின் மகன் யுவான்ஷ்வா-2
24. யுவான்ஷ்வாவின் மகன் மன்தாத்தா
25. மன்தாத்தாவின் மகன் அம்பரீஷா

26. அம்பரீஷாவின் மகன் ஹரிதா
27. ஹரிதாவின் மகன் த்ரதஸ்யு
28. த்ரதஸ்யுவின் மகன் -ஷம்பூத்
29. ஷம்பூத்தின் மகன்- அனரண்யா-2
30. அனரண்யாவின் மகன் – த்ரஷஸ்தஸ்வா

31. த்ரஷஸ்தஸ்வாவின் மகன் ஹர்யஷ்வா 2
32. ஹர்யஷ்வாவின் மகன் -வஸுமான்
33. வஸுமாவின் மகன்- த்ரிதன்வா
34. த்ரிதன்வாவின் மகன் த்ரிஅருணா
35. த்ரிஅருணாவின் மகன் -திரிசங்கு

36. திரிசங்கு வின் மகன் ஹரிசந்திரன்
37. ஹரிசந்திரநநின் மகன் ரோஹிதாஷ்வா
38. ரோஹிதாஷ்வாவின் மகன் ஹரித்
39. ஹரித்தின் மகன் -சன்சு
40. சன்சுவின் மகன் -விஜய்

41. விஜயின் மகன் -ருருக்
42. ருருக்கின் மகன் -வ்ருகா
43. வ்ருகாவின் மகன் -பாஹு
44. பாஹுவின் மகன்- சாஹாரா
45. சாஹாராவின் மகன் -அசமஞ்சன்

46. அசமஞ்சனின் மகன் -அன்ஷுமன்
47. அன்ஷுமனின் மகன் -திலீபன்
48. திலீபனின் மகன்- பகீரதன்
49. பகீரதனின் மகன் -ஷ்ருத்
50. ஷ்ருத்தின் மகன் -நபக்

51. நபக்கின் மகன்- அம்பரீஷ்
52. அம்பரீஷனின் மகன் -சிந்து த்வீப்
53. சிந்து த்வீப்பின் மகன்- ப்ரதயு
54. ப்ரதயுவின் மகன் -ஸ்ருது பர்ணா
55. ஸ்ருது பர்ணாவின் மகன் சர்வகாமா

56. சர்வகாமாவின் மகன்- ஸுதஸ்
57. ஸூதஸின் மகன் -மித்ரஷா
58. மித்ராஷாவின் மகன்- சர்வகாமா 2
59. சர்வகாமாவின் மகன் அனன்ரண்யா3
60. அனன்ரண்யாவின் மகன் -நிக்னா

61. நிக்னாவின் மகன்- ரகு
62. ரகுவின் மகன் -துலிது
63. துலிதுவின் மகன் – கட்வாங் திலீபன்
64. கட்வாங் திலீபனின் மகன் – ரகு2
65. ரகுவின் மகன் – அஜன்

66. அஜனின் மகன் – தசரதன்
67. தசரதனின் மகன்
68. ஸ்ரீ ராமன் அவர் பரம்பரையில் 68வது அரசன்.

இஷுவாகு தொடங்கி ராமர் வரை நான்கு சதுர்யுகம் காலம்

———————–

ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
சிவதனுசாக் ருஹீத சீதாஹஸ்தகரம்
அங்குல்யாபரண சோபிதம்
சூடாமணி தர்ஸன கரம்
ஆஞ்சநேய மாஸ்ரயம்
வைதேகி மனோகரம்
வானர தைன்ய சேவிதம்
சர்வ மங்கள கார்யானுகூலம்
சத்தம் ஸ்ரீராம சந்த்ர பாலய மாம்.

ஏக ஸ்லோக ராமாயணம்

 ஆதௌ ராம தபோவனாதி கமனம், ஹத்வா ம்ருகம் காஞ்சனம்,

வைதேஹி ஹரணம், ஜடாயு மரணம், சுக்ரீவ சம்பாஷணம்,

வாலி நிக்ரஹணம், சமுத்ர தரணம், லங்காபுரீ தாஹனம்,

பஸ்சாத் ராவண கும்பகர்ண ஹனனம், சைதத்தி ராமாயணம்

ஆதியில் ராமன் காடு செல்லல்

பொன் மானைக் கொல்லல்

சீதா தேவி கடத்தல்

ஜடாயு இறத்தல்

சுக்ரீவன் சந்திப்பு/உரையாடல்

வாலீ அழிவு,

கடல் தாண்டல்

இலங்கை எரிப்பு

பின்னர் ராவணன், கும்பகர்ணன் மரணம்

இதுவே ராமாயணம்

ஸ்ரீ ஸுந்தர காண்ட மஹிமை ஸ்லோகம் –

ஸுந்தரே ஸுந்தரோ ராம:
ஸுந்தரே ஸுந்தரி கதா
ஸுந்தரே ஸுந்தரி ஸீதா
ஸுந்தரே ஸுந்தரம் வநம்
ஸுந்தரே ஸுந்தரம் காவ்யம்
ஸுந்தரே ஸுந்தரோ கபி:
ஸுந்தரே ஸுந்தரம் மந்த்ரம்
ஸுந்தரே கிம் ந ஸுந்தரம்

—————-

ஏக ஸ்லோக பாகவதம்

 ஆதௌ தேவகி தேவ கர்ப்ப ஜனனம், கோபி க்ருஹே வர்த்தனம்,

மாயா பூதன ஜீவிதாபஹரணம், கோவர்தன உத்தாரணம்,

 கம்சச் சேதன கௌரவாதி ஹரணம், குந்தீ சுதா பாலனம்

சைதத் பாகவதம்  புராண கதிதம் ஸ்ரீ க்ருஷ்ண லீலாம்ருதம்

ஆதியில் தேவகியின் கர்ப்பத்தில் இறைவன் பிறப்பு

கோபியர் வீட்டில் வளர்ப்பு

மாயா உருவ பூதனையின் அழிவு

கோவர்த்தன மலையின் உயர்வு

கம்ச, கௌரவர்கள் அழிவு

குந்தீ மகன் காப்பு

இதுவே பாகவத புராணக் கதை; ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் அற்புத லீலைகள்

ஏக ஸ்லோக மஹாபாரதம்

ஆதௌ பாண்டவ தார்தராஷ்ட்ர ஜனனம், லாக்ஷா க்ருஹம் தாஹனம்

த்யூதே ஸ்ரீஹரணம், வனே விசரணம், மாத்சாலயே வர்த்தனம்,

லீலாகோஹ்ரஹணம், ரணே விஹரணம், சந்திக்ரியா ஜ்ரும்பணம்,

பஸ்சாத் பீஷ்மசுயோதனாதி நிதனம்,   ஹ்யேதன் மஹா பாரதம்

 ஆதியில் பாண்டவர், திருதராஷ்ட்ரர் பிறப்பு

அரக்கு மாளிகை எரிப்பு

சூதாட்டத்தில் நாடு இழப்பு

காட்டில் சுற்றல்

மத்ஸ்ய நாட்டில் (விராடன்) வசிப்பு

ஆநிரை கவர்தல்

போரில் அழிவு

சமாதான உடன்படிக்கை மீறல்

பின்னர் பீஷ்மர், துர்யோதண வகையறா மரணம்

இதுவே மஹா பாரதம்

ஸ்ரீ ப்ரஹ்லாத க்ருதம் ஸ்ரீ ஹரி அஷ்டகம்–ஶ்ரீ வேங்கடேஶ அஷ்டகம்–ஶ்ரீ ஶ்ரீனிவாஸ க³த்³யம் –ஸ்ரீ ஹநுமத் அஷ்டகம்–ஸ்ரீ ஹநுமத் அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரம்–

February 23, 2023

ஹரிர் ஹரதி பாபாநி துஷ்ட சித்தைர் அபி ஸ்ம்ருத
அநிச்சயா அபி ஸம் ஸ்ப்ருஷ்டோ தஹத்யேவ ஹி பாவக || 1 ||

ஹரி திருநாம உச்சாரணம் -தானே பாப மலையை பற்றி தூள் தூளாக்குமே
நாம் மன ஸஹாயம் இல்லாமலே -இச்சையும் இல்லாமலே-துஷ்டமான சிந்தனை இருந்து கொண்டே சொன்னாலும் பலன் கிட்டும் என்றால்
ஆசையுடன் ஆனந்தமாக சொல்லுவாருக்கு பலன் நிச்சயம் கைமுதிக நியாயம் அன்றோ

அழுக்கு உடன் கங்கையில் நீராடினாலும் பாபங்களை போக்கும் அன்றோ
விரும்பாமல் நெருப்பைத் தொட்டாலும் சுடுமே

பஸ்யதே ஹரத்வம் -ஆத்ம ஸ்வரூபம் திருடப்படுகிறது
இவனோ நமது பாபங்களை அபஹரிக்கிறான் –
இது ஒன்றே நாம் சேமித்து வைத்தது
தூங்கும் பொழுதும் ஸ்வப்னம் மூலம் பாபங்களை போக்கி அருளுகிறானே

———

ஸ கங்கா ஸ கயா சேது ஸ காசி ஸ ச புஷ்கரம்
ஜிஹ்வாக்ரே வர்த்ததே யஸ்ய ஹரிர் இத் யஷர த்வயம் || 2 ||

ஹரி த்வய அக்ஷரம் ஸக்ருத் உச்சாரணம்
கங்கையில் நீராடிய புண்யமும்-சேது நீராடிய புண்யமும்
கயாவில் செய்யும் ஸ்ரார்த்த புண்யமும்
காசி புஷ்காரம் போன்ற தீர்த்த யாத்திரைகள் புண்யமும்–கிட்டும்

கங்கா கயா சேது காசி -இவையும் த்வய அக்ஷரங்கள்-பாவானத்வம்

———-

வாரண ஸ்யாம் குரு க்ஷேத்ரே நைமி சாரண்ய ஏவ ச
யத் க்ருதம் தேந யத் ப்ரோக்தம் ஹரிர் இத் யஷர த்வயம் || 3 ||

ஸ்ரீ வாரணாசி ஸ்ரீ குறு க்ஷேத்ரம் ஸ்ரீ நைமிசாரண்யம்
இவற்றில் செய்யும் புண்ய காரியங்களின் பலன்கள் எல்லாமே
ஹரி நாம சங்கீர்த்தனம் நித்தியமாக செய்வதாலேயே கிட்டுமே
ஹரி நாம சங்கீர்த்தனம் தானே அனைத்து புண்ய ஸ்தலங்களில் செய்யும் புண்ய பலன்கள் அனைத்தையுமே அளித்து அருளுமே

————–

ப்ருதிவ்யாம் யாநி தீர்தாநி புண்யான் யாயதனாநி ச
தாநி ஸர்வாண்ய சேஷாணி ஹரிர் இத் யஷர த்வயம் || 4 ||

உலகில் உள்ள அனைத்து திவ்ய தேச தீர்த்தயாத்ரைகளால் பெறும் பலன்களையும்
ஹரி நாம சங்கீர்த்தனம் கொடுத்து அருளும் அன்றோ

————–

கவாம் கோடி ஸஹஸ்ராணி ஹேம கன்யா ஸஹஸ்ரகம்
தத்தம் ஸ்யாத்தேந யேந யுக்தம் ஹரிர் இத் யஷர த்வயம்|| 5 ||

ஆயிரம் ஆயிரம் கோ தான பலன்களும்
ஆயிரம் ஆயிரமான கன்யா தானம் செய்யும் பலன்களும்
ஹரி நாம சங்கீர்த்தனம் கொடுத்து அருளும் அன்றோ

————

ருக் வேதோ அத யஜுர் வேத ஸாம வேதோ யப் யதர்வண
அதீதஸ் தேந யேந யுக்தம் ஹரிர் இத் யஷர த்வயம் || 6 ||

ரிக் வேத யஜுர் வேத சாம வேத அதர்வண வேத
அனைத்து வேத பாராயண பலன்களும்
ஹரி நாம சங்கீர்த்தனம் கொடுத்து அருளும் அன்றோ

———–

அஸ்வ மேதைர் மஹா யஜ்ஜைர் னரமேதைஸ் தவைவ ச
இஷ்டம் ஸ்யாத்தேந யேந யுக்தம் ஹரிர் இத் யஷர த்வயம் || 7 ||

அஸ்வமேத யாகங்கள்
மற்றும் அனைத்து யாகங்கள் செய்தால் கிடைக்கும் பலன்கள் அனைத்தும்
ஹரி நாம சங்கீர்த்தனம் கொடுத்து அருளும் அன்றோ

———–

ப்ராண ப்ரயாண பாதேயம் ஸம்ஸார வ்யாதி நாஸனம்
துக்காத் யந்த பரித்ராணம் ஹரிர் இத் யஷர த்வயம் || 8 ||

ஸ்ரீ ஹரி நாம ஸங்கீர்த்தனமே
அர்ச்சிராதி கதிக்கும் பாதேயம் புண்டரீகாக்ஷ திருமணம் அன்றோ
இதுவே ஸம்ஸார மாயக்கூட்டை அறுத்து முடித்து
பேற்றையும் பெற்றுக் கொடுத்து
நித்ய பரம புருஷார்த்தமான ப்ரீதி காரித கைங்கர்யங்களையும் அளிக்குமே

————

பக்த பரிகரஸ் தேந மோஷாய கமனம் ப்ரதி
ஸக்ருத் உச்சாரிதம் யேந ஹரிர் இத் யஷர த்வயம் || 9 ||

ஸ்ரீ ஹரி நாம ஸக்ருத் ஸங்கீர்த்தனம் ஒன்றே
ஸம்ஸார தளைகளை போக்கி அளிக்கும்
இத்தைத் தவிர வேறே ஒன்றுமே வேண்டாமே

————–

ஹர் அஷ்டகம் இதம் புண்யம் ப்ராத ருத்தாய ய படேத்
ஆயுஷ்யம் பலம் ஆரோக்யம் யஸோ வ்ருத்திஸ் ஸ்ரயா வஹம் || 10 ||

இந்த ஸ்ரீ ஹரி அஷ்டக ஸ்தோத்ரம் நித்தியமாக அநுஸந்திக்க
ஆயுஸ்ஸு ஐஸ்வர்யம் ஆரோக்யம் செல்வம் கீர்த்தி
அனைத்தையும் பெற்று
பூ ஸூரர்களாக இருக்கப் பெறுவர் -என்று பலன் அருளிச் செய்கிறார் –

———————

ப்ரஹ்லாதேந க்ருதம் ஸ்தோத்ரம் துக்க சாகர சோஷணம்
ய படேத்ஸ நரோ யாதி தத் விஷ்ணோ பரமம் பதம் || 11 ||

அனந்த கிலேச பாஜனமான கொடிய வெந்நரகமான ஸம்ஸாரத்திலேயே
அனைத்தும் பெற்று நிலத்தேவர்களாக இருந்து
அந்தமில் பேர் இன்பம் பெற ஸ்ரீ வைகுண்டம் சென்று
நித்ய ஸூ ரிகள் உடன் ஒரே கோர்வையாக இருக்கப் பெறுவர்
என்று பலன் சொல்லித் தலைக் கட்டி அருளுகிறார் –

——–

இதி ப்ரஹ்லாத க்ருதம் ஸ்ரீ ஹரி அஷ்டகம் ஸம் பூர்ணம்

————————————————————————–

ஸ்ரீ வேங்கடேஶ அஷ்டகம் 

வேங்கடேஶோ வாஸுதே³வ꞉ ப்ரத்³யும்நோ(அ)மிதவிக்ரம꞉ ।
ஸங்கர்ஷணோ(அ)நிருத்³த⁴ஶ்ச ஶேஷாத்³ரிபதிரேவ ச ॥ 1 ॥

ஜநார்த³ந꞉ பத்³மநாபோ⁴ வேங்கடாசல வாஸிந꞉ ।
ஸ்ருஷ்டி கர்தா ஜக³ந்நாதோ² மாத⁴வோ ப⁴க்த வத்ஸல꞉ ॥ 2 ॥

கோ³விந்தோ³ கோ³பதி꞉ க்ருஷ்ண꞉ கேஶவோ க³ருட³த்⁴வஜ꞉ ।
வராஹோ வாமநஶ்சைவ நாராயண அதோ⁴க்ஷஜ꞉ ॥ 3 ॥

ஶ்ரீத⁴ர꞉ புண்ட³ரீகாக்ஷ꞉ ஸர்வதே³வஸ்துதோ ஹரி꞉ ।
ஶ்ரீந்ருஸிம்ஹோ மஹா ஸிம்ஹ꞉ ஸூத்ராகார꞉ புராதந꞉ ॥ 4 ॥

ரமா நாதோ² மஹீ ப⁴ர்தா பூ⁴த⁴ர꞉ புருஷோத்தம꞉ ।
சோல புத்ர ப்ரிய꞉ ஶாந்தோ ப்³ரஹ்மாதீ³நாம் வரப்ரத³꞉ ॥ 5 ॥

ஶ்ரீநிதி⁴꞉ ஸர்வ பூ⁴தாநாம் ப⁴ய க்ருத்³ப⁴ய நாஶந꞉ ।
ஶ்ரீராமோ ராமப⁴த்³ரஶ்ச ப⁴வப³ந்தை⁴கமோசக꞉ ॥ 6 ॥

பூ⁴தா வாஸோ கி³ரி வாஸ꞉ ஶ்ரீநிவாஸ꞉ ஶ்ரிய꞉ பதி꞉ ।
அச்யுதாநந்த கோ³விந்தோ³ விஷ்ணுர் வேங்கட நாயக꞉ ॥ 7 ॥

ஸர்வ தே³வைகஶரணம் ஸர்வ தே³வைக தை³வதம் ।
ஸமஸ்ததே³வகவசம் ஸர்வ தே³வஶிகா²மணி꞉ ॥ 8 ॥

இதீத³ம் கீர்திதம் யஸ்ய விஷ்ணோரமிததேஜஸ꞉ ।
த்ரிகாலே ய꞉ படே²ந்நித்யம் பாபம் தஸ்ய ந வித்³யதே ॥ 9 ॥

ராஜத்³வாரே படே²த்³கோ⁴ரே ஸங்க்³ராமே ரிபுஸங்கடே ।
பூ⁴தஸர்பபிஶாசாதி³ப⁴யம் நாஸ்தி கதா³சந ॥ 10 ॥

அபுத்ரோ லப⁴தே புத்ராந் நிர்த⁴நோ த⁴நவாந் ப⁴வேத் ।
ரோகா³ர்தோ முச்யதே ரோகா³த்³ப³த்³தோ⁴ முச்யேத ப³ந்த⁴நாத் ॥ 11 ॥

யத்³யதி³ஷ்டதமம் லோகே தத்தத் ப்ராப்நோத்யஸம்ஶய꞉ ।
ஐஶ்வர்யம் ராஜ ஸம்மாநம் பு⁴க்தி முக்தி ப²ல ப்ரத³ம் ॥ 12 ॥

விஷ்ணோர் லோகைகஸோபாநம் ஸர்வ து³꞉கை²கநாஶநம் ।
ஸர்வைஶ்வர்ய ப்ரத³ம் ந்ரூணாம் ஸர்வ மங்க³ளகாரகம் ॥ 13 ॥

மாயாவீ பரமாநந்த³ம் த்யக்த்வா வைகுண்ட²முத்தமம் ।
ஸ்வாமி புஷ்கரிணீ தீரே ரமயா ஸஹ மோத³தே ॥ 14 ॥

கல்யாணாத்³பு⁴தகா³த்ராய காமிதார்த²ப்ரதா³யிநே ।
ஶ்ரீமத்³வேங்கடநாதா²ய ஶ்ரீநிவாஸாய தே நம꞉ ॥ 15 ॥

இதி ஶ்ரீ ப்³ரஹ்மாண்ட³புராணே ப்³ரஹ்மநாரத³ஸம்வாதே³ வேங்கடகி³ரிமாஹாத்ம்யே ஶ்ரீ வேங்கடேஶ அஷ்டகம் ।

——————–

ஶ்ரீ ஶ்ரீனிவாஸ க³த்³யம் 

ஶ்ரீமத³கி²லமஹீமண்ட³லமண்ட³னத⁴ரணீத⁴ர மண்ட³லாக²ண்ட³லஸ்ய,
நிகி²லஸுராஸுரவன்தி³த வராஹக்ஷேத்ர விபூ⁴ஷணஸ்ய,
ஶேஷாசல க³ருடா³சல ஸிம்ஹாசல வ்ருஷபா⁴சல நாராயணாசலாஞ்ஜனாசலாதி³ ஶிக²ரிமாலாகுலஸ்ய,
நாத²முக² போ³த⁴னிதி⁴வீதி²கு³ணஸாப⁴ரண ஸத்த்வனிதி⁴ தத்த்வனிதி⁴ ப⁴க்திகு³ணபூர்ண ஶ்ரீஶைலபூர்ண
கு³ணவஶம்வத³ பரமபுருஷக்ருபாபூர விப்⁴ரமத³துங்க³ஶ்ருங்க³
க³லத்³க³க³னக³ங்கா³ஸமாலிங்கி³தஸ்ய, ஸீமாதிக³ கு³ண ராமானுஜமுனி நாமாங்கித ப³ஹு பூ⁴மாஶ்ரய
ஸுரதா⁴மாலய வனராமாயத வனஸீமாபரிவ்ருத விஶங்கடதட நிரன்தர விஜ்ரும்பி⁴த ப⁴க்திரஸ
நிர்க⁴ரானந்தார்யாஹார்ய ப்ரஸ்ரவணதா⁴ராபூர விப்⁴ரமத³ ஸலிலப⁴ரப⁴ரித மஹாதடாக மண்டி³தஸ்ய, கலிகர்த³ம
மலமர்த³ன கலிதோத்³யம விலஸத்³யம நியமாதி³ம முனிக³ணனிஷேவ்யமாண ப்ரத்யக்ஷீப⁴வன்னிஜஸலில
ஸமஜ்ஜன நமஜ்ஜன நிகி²லபாபனாஶனா பாபனாஶன தீர்தா²த்⁴யாஸிதஸ்ய, முராரிஸேவக ஜராதி³பீடி³த
நிரார்திஜீவன நிராஶ பூ⁴ஸுர வராதிஸுன்த³ர ஸுராங்க³னாரதி கராங்க³ஸௌஷ்ட²வ குமாரதாக்ருதி
குமாரதாரக ஸமாபனோத³ய த³னூனபாதக மஹாபதா³மய விஹாபனோதி³த ஸகலபு⁴வன விதி³த
குமாரதா⁴ராபி⁴தா⁴ன தீர்தா²தி⁴ஷ்டி²தஸ்ய, த⁴ரணிதல க³தஸகல ஹதகலில ஶுப⁴ஸலில க³தப³ஹுல்த³
விவித⁴மல ஹதிசதுர ருசிரதர விலோகனமாத்ர வித³ல்தி³த விவித⁴ மஹாபாதக ஸ்வாமிபுஷ்கரிணீ ஸமேதஸ்ய,
ப³ஹுஸங்கட நரகாவட பதது³த்கட கலிகங்கட கலுஷோத்³ப⁴ட ஜனபாதக வினிபாதக ருசினாடக
கரஹாடக கலஶாஹ்ருத கமலாரத ஶுப⁴மஞ்ஜன ஜலஸஜ்ஜன ப⁴ரப⁴ரித நிஜது³ரித ஹதினிரத ஜனஸதத
நிரஸ்தனிரர்க³ல்த³ பேபீயமான ஸலில ஸம்ப்⁴ருத விஶங்கட கடாஹதீர்த² விபூ⁴ஷிதஸ்ய, ஏவமாதி³ம
பூ⁴ரிமஞ்ஜிம ஸர்வபாதக க³ர்வஹாபக ஸின்து⁴ட³ம்ப³ர ஹாரிஶம்ப³ர விவித⁴விபுல புண்யதீர்த²னிவஹ
நிவாஸஸ்ய, ஶ்ரீமதோ வேங்கடாசலஸ்ய ஶிக²ரஶேக²ரமஹாகல்பஶாகீ², க²ர்வீப⁴வத³தி க³ர்வீக்ருத
கு³ருமேர்வீஶகி³ரி முகோ²ர்வீத⁴ர குலத³ர்வீகர த³யிதோர்வீத⁴ர ஶிக²ரோர்வீ ஸதத ஸதூ³ர்வீக்ருதி
சரணக⁴ன க³ர்வசர்வணனிபுண தனுகிரணமஸ்ருணித கி³ரிஶிக²ர ஶேக²ரதருனிகர திமிர:, வாணீபதிஶர்வாணீ
த³யிதேன்த்³ராணிஶ்வர முக² நாணீயோரஸவேணீ நிப⁴ஶுப⁴வாணீ நுதமஹிமாணீ ய ஸ்தன கோணீ
ப⁴வத³கி²ல பு⁴வனப⁴வனோத³ர:, வைமானிககு³ரு பூ⁴மாதி⁴க கு³ண ராமானுஜ க்ருததா⁴மாகர கரதா⁴மாரி
த³ரலலாமாச்ச²கனக தா³மாயித நிஜராமாலய நவகிஸலயமய தோரணமாலாயித வனமாலாத⁴ர:,
காலாம்பு³த³ மாலானிப⁴ நீலாலக ஜாலாவ்ருத பா³லாப்³ஜ ஸலீலாமல பா²லாங்கஸமூலாம்ருத தா⁴ராத்³வயாவதீ⁴ரண
தீ⁴ரலலிததர விஶத³தர க⁴ன க⁴னஸார மயோர்த்⁴வபுண்ட்³ர ரேகா²த்³வயருசிர:, ஸுவிகஸ்வர த³ல்த³பா⁴ஸ்வர
கமலோத³ர க³தமேது³ர நவகேஸர ததிபா⁴ஸுர பரிபிஞ்ஜர கனகாம்ப³ர கலிதாத³ர லலிதோத³ர ததா³லம்ப³ ஜம்ப⁴ரிபு
மணிஸ்தம்ப⁴ க³ம்பீ⁴ரிமத³ம்ப⁴ஸ்தம்ப⁴ ஸமுஜ்ஜ்ரும்ப⁴மாண பீவரோருயுக³ல்த³ ததா³லம்ப³
ப்ருது²ல கத³லீ முகுல மத³ஹரணஜங்கா⁴ல ஜங்கா⁴யுக³ல்த:³, நவ்யத³ல ப⁴வ்யமல பீதமல
ஶோணிமலஸன்ம்ருது³ல ஸத்கிஸலயாஶ்ருஜலகாரி ப³ல ஶோணதல பத³கமல நிஜாஶ்ரய ப³லப³ன்தீ³க்ருத
ஶரதி³ன்து³மண்ட³லீ விப்⁴ரமதா³த³ப்⁴ர ஶுப்⁴ர புனர்ப⁴வாதி⁴ஷ்டி²தாங்கு³ல்தீ³கா³ட⁴ நிபீடி³த பத்³மாவன:,
ஜானுதலாவதி⁴ லம்ப³ விட³ம்பி³த வாரண ஶுண்டா³த³ண்ட³ விஜ்ரும்பி⁴த நீலமணிமய கல்பகஶாகா² விப்⁴ரமதா³யி ம்ருணால்த³லதாயித ஸமுஜ்ஜ்வலதர
கனகவலய வேல்லிதைகதர பா³ஹுத³ண்ட³யுக³ல்த:³, யுக³பது³தி³த கோடி க²ரகர ஹிமகர மண்ட³ல
ஜாஜ்வல்யமான ஸுத³ர்ஶன பாஞ்சஜன்ய ஸமுத்துங்கி³த ஶ்ருங்கா³பர பா³ஹுயுக³ல்த:³, அபி⁴னவஶாண
ஸமுத்தேஜித மஹாமஹா நீலக²ண்ட³ மத³க²ண்ட³ன நிபுண நவீன பரிதப்த கார்தஸ்வர கவசித மஹனீய
ப்ருது²ல ஸாலக்³ராம பரம்பரா கு³ம்பி⁴த நாபி⁴மண்ட³ல பர்யன்த லம்ப³மான ப்ராலம்ப³தீ³ப்தி ஸமாலம்பி³த விஶால
வக்ஷ:ஸ்த²ல:, க³ங்கா³ஜ²ர துங்கா³க்ருதி ப⁴ங்கா³வல்தி³ ப⁴ங்கா³வஹ ஸௌதா⁴வல்தி³ பா³தா⁴வஹ தா⁴ரானிப⁴
ஹாராவல்தி³ தூ³ராஹத கே³ஹான்தர மோஹாவஹ மஹிம மஸ்ருணித மஹாதிமிர:, பிங்கா³க்ருதி ப்⁴ருங்கா³ர
நிபா⁴ங்கா³ர த³ல்தா³ங்கா³மல நிஷ்காஸித து³ஷ்கார்யக⁴ நிஷ்காவல்தி³ தீ³பப்ரப⁴ நீபச்ச²வி தாபப்ரத³ கனகமாலிகா
பிஶங்கி³த ஸர்வாங்க:³, நவத³ல்தி³த த³ல்த³வலித ம்ருது³லலித கமலததி மத³விஹதி சதுரதர ப்ருது²லதர
ஸரஸதர கனகஸரமய ருசிரகண்டி²கா கமனீயகண்ட:², வாதாஶனாதி⁴பதி ஶயன கமன பரிசரண ரதிஸமேதாகி²ல
ப²ணத⁴ரததி மதிகரவர கனகமய நாகா³ப⁴ரண பரிவீதாகி²லாங்கா³ வக³மித ஶயன பூ⁴தாஹிராஜ
ஜாதாதிஶய:, ரவிகோடீ பரிபாடீ த⁴ரகோடீ ரவராடீ கிதவீடீ ரஸதா⁴டீ த⁴ரமணிக³ணகிரண விஸரண ஸததவிது⁴த
திமிரமோஹ கா³ர்ப⁴கே³ஹ:, அபரிமித விவித⁴பு⁴வன ப⁴ரிதாக²ண்ட³ ப்³ரஹ்மாண்ட³மண்ட³ல பிசண்டி³ல:,
ஆர்யது⁴ர்யானந்தார்ய பவித்ர க²னித்ரபாத பாத்ரீக்ருத நிஜசுபு³க க³தவ்ரணகிண விபூ⁴ஷண வஹனஸூசித
ஶ்ரிதஜன வத்ஸலதாதிஶய:, மட்³டு³டி³ண்டி³ம ட⁴மரு ஜர்க⁴ர காஹல்தீ³ படஹாவல்தீ³ ம்ருது³மத்³த³லாதி³ ம்ருத³ங்க³
து³ன்து³பி⁴ ட⁴க்கிகாமுக² ஹ்ருத்³ய வாத்³யக மது⁴ரமங்க³ல்த³ நாத³மேது³ர நாடாரபி⁴ பூ⁴பால்த³ பி³லஹரி மாயாமால்த³வ கௌ³ல்த³ அஸாவேரீ ஸாவேரீ
ஶுத்³த⁴ஸாவேரீ தே³வகா³ன்தா⁴ரீ த⁴ன்யாஸீ பே³க³ட³ ஹின்து³ஸ்தானீ காபீ தோடி³ நாடகுருஞ்ஜீ ஶ்ரீராக³ ஸஹன
அடா²ண ஸாரங்கீ³ த³ர்பா³ரு பன்துவரால்தீ³ வரால்தீ³ கல்த்³யாணீ பூ⁴ரிகல்த்³யாணீ யமுனாகல்த்³யாணீ
ஹுஶேனீ ஜஞ்ஜோ²டீ² கௌமாரீ கன்னட³ க²ரஹரப்ரியா கலஹம்ஸ நாத³னாமக்ரியா முகா²ரீ தோடீ³
புன்னாக³வரால்தீ³ காம்போ⁴ஜீ பை⁴ரவீ யது³குலகாம்போ⁴ஜீ ஆனந்த³பை⁴ரவீ ஶங்கராப⁴ரண
மோஹன ரேகு³ப்தீ ஸௌராஷ்ட்ரீ நீலாம்ப³ரீ கு³ணக்ரியா மேக⁴க³ர்ஜனீ ஹம்ஸத்⁴வனி ஶோகவரால்தீ³ மத்⁴யமாவதீ
ஜேஞ்ஜுருடீ ஸுரடீ த்³விஜாவன்தீ மலயாம்ப³ரீ காபீபரஶு த⁴னாஸிரீ தே³ஶிகதோடீ³ ஆஹிரீ வஸன்தகௌ³ல்தீ³
ஸன்து கேதா³ரகௌ³ல்த³ கனகாங்கீ³ ரத்னாங்கீ³ கா³னமூர்தீ வனஸ்பதீ வாசஸ்பதீ தா³னவதீ மானரூபீ
ஸேனாபதீ ஹனுமத்தோடீ³ தே⁴னுகா நாடகப்ரியா கோகிலப்ரியா ரூபவதீ கா³யகப்ரியா வகுல்தா³ப⁴ரண
சக்ரவாக ஸூர்யகான்த ஹாடகாம்ப³ரீ ஜ²ங்காரத்⁴வனீ நடபை⁴ரவீ கீரவாணீ ஹரிகாம்போ⁴தீ³ தீ⁴ரஶங்கராப⁴ரண
நாகா³னந்தி³னீ யாக³ப்ரியாதி³ விஸ்ருமர ஸரஸ கா³னருசிர ஸன்தத ஸன்தன்யமான நித்யோத்ஸவ
பக்ஷோத்ஸவ மாஸோத்ஸவ ஸம்வத்ஸரோத்ஸவாதி³ விவிதோ⁴த்ஸவ க்ருதானந்த:³ ஶ்ரீமதா³னந்த³னிலய
விமானவாஸ:, ஸதத பத்³மாலயா பத³பத்³மரேணு ஸஞ்சிதவக்ஷஸ்தல படவாஸ:, ஶ்ரீஶ்ரீனிவாஸ:
ஸுப்ரஸன்னோ விஜயதாம். ஶ்ரீ​அலர்மேல்மங்கா³ நாயிகாஸமேத: ஶ்ரீஶ்ரீனிவாஸ ஸ்வாமீ ஸுப்ரீத:
ஸுப்ரஸன்னோ வரதோ³ பூ⁴த்வா, பவன பாடலீ பாலாஶ பி³ல்வ புன்னாக³ சூத கத³ல்தீ³ சன்த³ன சம்பக மஞ்ஜுல்த³
மன்தா³ர ஹிஞ்ஜுலாதி³ திலக மாதுலுங்க³ நாரிகேல்த³ க்ரௌஞ்சாஶோக மாதூ⁴காமலக ஹின்து³க நாக³கேதக
பூர்ணகுன்த³ பூர்ணக³ன்த⁴ ரஸ கன்த³ வன வஞ்ஜுல்த³ க²ர்ஜூர ஸால கோவிதா³ர ஹின்தால பனஸ விகட
வைகஸவருண தருக⁴மரண விசுல்த³ங்காஶ்வத்த² யக்ஷ வஸுத⁴ வர்மாத⁴ மன்த்ரிணீ தின்த்ரிணீ போ³த⁴
ந்யக்³ரோத⁴ க⁴டவடல ஜம்பூ³மதல்லீ வீரதசுல்லீ வஸதி வாஸதீ ஜீவனீ போஷணீ ப்ரமுக² நிகி²ல ஸன்தோ³ஹ
தமால மாலா மஹித விராஜமான சஷக மயூர ஹம்ஸ பா⁴ரத்³வாஜ கோகில சக்ரவாக கபோத க³ருட³ நாராயண
நானாவித⁴ பக்ஷிஜாதி ஸமூஹ ப்³ரஹ்ம க்ஷத்ரிய வைஶ்ய ஶூத்³ர நானாஜாத்யுத்³ப⁴வ தே³வதா நிர்மாண மாணிக்ய
வஜ்ர வைடூ⁴ர்ய கோ³மேதி⁴க புஷ்யராக³ பத்³மராகே³ன்த்³ர நீல ப்ரவால்த³மௌக்திக ஸ்ப²டிக ஹேம ரத்னக²சித
த⁴க³த்³த⁴கா³யமான ரத² கஜ³ துரக³ பதா³தி ஸேனா ஸமூஹ பே⁴ரீ மத்³த³ல்த³ முரவக ஜ²ல்லரீ ஶங்க³ காஹல்த³
ந்ருத்யகீ³த தால்த³வாத்³ய கும்ப⁴வாத்³ய பஞ்சமுக²வாத்³ய அஹமீமார்க³ன்னடீவாத்³ய கிடிகுன்தலவாத்³ய
ஸுரடீசௌண்டோ³வாத்³ய திமிலகவிதால்த³வாத்³ய தக்கராக்³ரவாத்³ய க⁴ண்டாதாட³ன ப்³ரஹ்மதால்த³
ஸமதால்த³ கொட்டரீதால்த³ ட⁴க்கரீதால்த³ எக்கால்த³ தா⁴ராவாத்³ய படஹகாம்ஸ்யவாத்³ய ப⁴ரதனாட்யாலங்கார
கின்னெர கிம்புருஷ ருத்³ரவீணா முக²வீணா வாயுவீணா தும்பு³ருவீணா கா³ன்த⁴ர்வவீணா நாரத³வீணா ஸ்வரமண்ட³ல
ராவணஹஸ்தவீணாஸ்தக்ரியாலங்க்ரியாலங்க்ருதானேகவித⁴வாத்³ய வாபீகூபதடாகாதி³ க³ங்கா³யமுனா
ரேவாவருணா ஶோணனதீ³ஶோப⁴னதீ³ ஸுவர்ணமுகீ² வேக³வதீ வேத்ரவதீ க்ஷீரனதீ³ பா³ஹுனதீ³ க³ருட³னதீ³
காவேரீ தாம்ரபர்ணீ ப்ரமுகா²: மஹாபுண்யனத்³ய: ஸஜலதீர்தை²: ஸஹோப⁴யகூலங்க³த ஸதா³ப்ரவாஹ
ருக்³யஜுஸ்ஸாமாத²ர்வண வேத³ஶாஸ்த்ரேதிஹாஸ புராண ஸகலவித்³யாகோ⁴ஷ பா⁴னுகோடிப்ரகாஶ
சன்த்³ரகோடி ஸமான நித்யகல்த்³யாண பரம்பரோத்தரோத்தராபி⁴வ்ருத்³தி⁴ர்பூ⁴யாதி³தி ப⁴வன்தோ
மஹான்தோzனுக்³ருஹ்ணன்து, ப்³ரஹ்மண்யோ ராஜா தா⁴ர்மிகோzஸ்து, தே³ஶோயம் நிருபத்³ரவோzஸ்து, ஸர்வே
ஸாது⁴ஜனாஸ்ஸுகி²னோ விலஸன்து, ஸமஸ்தஸன்மங்க³ல்தா³னி ஸன்து,
உத்தரோத்தராபி⁴வ்ருத்³தி⁴ரஸ்து, ஸகலகல்த்³யாண ஸம்ருத்³தி⁴ரஸ்து ॥

 

ஸ்ரீ ஹரி: ஓம் ॥

————————————–

ஸ்ரீ ஹநுமத் அஷ்டகம்

வைகாஸ மாஸ க்ருஷ்ணாயாம் தஸமி மந்த மாஸேரே
பூர்வ பத்ராஸு ஜாதாய மங்களம் ஸ்ரீ ஹநுமதே

குரு கௌரவ பூர்ணாய பலாபூப ப்ரியாய
நாநா மாணிக்ய ஹஸ்தாய மங்களம் ஸ்ரீ ஹநுமதே

ஸுவர்சலா களத்ராய சதுர்புஜ தராய ச
உஷ்ட் ராருடாய வீராய மங்களம் ஸ்ரீ ஹநுமதே

திவ்ய மங்கள தேஹாய பீதாம்பர தராய
தப்த காஞ்சன வர்ணாய மங்களம் ஸ்ரீ ஹநுமதே

பக்த ரக்ஷண சீலாய ஜாநகீ சோகஹாரணே
ஜகத் பாவக நேத்ராய மங்களம் ஸ்ரீ ஹ்நுமதே

பம்பாதீர விஹாராய சௌமித்ரி ப்ராண தாயிணே
ஸ்ருஷ்டி காரண பூதாய மங்களம் ஸ்ரீ ஹநுமதே

ரம்பாவ.ந விஹாராய ஸுஹத்மாதட வாஸிநே
ஸர்வ லோகைக கண்ட்டாய மங்களம் ஸ்ரீ ஹநுமதே

பஞ்சாநநாய பீமாய கால/நேமி ஹராய ச
கௌண்டிந்ய கோத்ராய ஜாதாய மங்களம் ஸ்ரீ ஹநுமதே

———–

ஸ்ரீ ஹநுமத் அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரம்

1. ஆஞ்ஜநேயோ மஹாவீரோ ஹநூமாந் மாருதா மஜ:
தத்வ ஜ்ஞாத ப்ரத: ஸீதா தேவீ முத்ரா ப்ரதாயக:

2. அஸோக வநிகாச் சேத்தா ஸர்வ மாயா விபஞ்ஜந:
ஸர்வ பந்த விமோக்தாச ர÷க்ஷõ வித்வம்ஸ காரக:

3. பரவித்யா பரீஹார: பரஸெளர்ய விநாஸந:
பரமந்த்ர நிராகர்த்தா பரயந்த்ர ப்ரபேதந:

4. ஸர்வக்ரஹ விநாசீச பீமஸேந ஸஹாயக்ருத்:
ஸர்வது:க ஹர:ஸர்வ லோகசாரீ மநோஜவ:

5. பாரிஜாத த்ருமூலஸ்த: ஸர்வமந்த்ர ஸ்வரூபவாந்
ஸர்வதந்த்ர ஸ்வரூபிச ஸர்வ மந்த்ராத்மகஸ் ததா

6. கபீச்வரோ மஹாகாய: ஸர்வரோக ஸர:ப்ரபு
பலஸீத்தி கர: ஸர்வ வித்யா ஸம்பத் ப்ரதாயக:

7. கபிஸேநா நாயகச்ச பவிஷ்யச் சதுராநந
குமார ப்ரஹ்மசாரீச ரத் நகுண்டல தீபதிமாந்:

8. ஸஞ்சலத் வால ஸந்நத்த லம்பமாநஸிகோஜ் ஜ்வல:
கந்தர்வ வித்யா தத்வஜ்ஞோ மஹாபல பராக்ரம:

9. காராக்ருஹ விமோக்தாச ச்ருங்கலா யந்தமோசக:
ஸாகரோத்தாரக: ப்ராஜ்ஞோ ராமதூத: ப்ரதாபவாந்:

10. வாநர: கேஸரி ஸுத: ஸீதாஸோகா நிவாரண:
அஞ்ஜநாகர் பஸம்பூதோ பாலார்க்க ஸத்ருசாநந:

11. விபீஷண ப்ரிய கரோ தசக்ரீவ குலாந்தக:
லக்ஷ்மண ப்ராண தாதாச வஜ்ரகாயோ மஹாத்யுதி:

12. சிரஞ்சீவி ராம பக்தோ தைத்ய கார்ய விகாதக:
அக் ஷஹந்தா காஞ்சநாப: பஞ்ச வக்ரோ மஹாதபா:

13. லஞ்கிணீ பஞ்ஜந: ஸ்ரீமாந் ஸிமஹிகா ப்ராண பஞ்ஜந:
கந்தமாதந சைலஸதோ லங்காபுர விதாஹக:

14. ஸுக்ரீவ ஸசிவோ பீம: ஸுரோதைத்ய குலாந்தக:
ஸுரார்ச்சதோ மஹாதேஜா ராமசூடாமணி ப்ரத:

15. காமரூபி பிங்களா÷க்ஷõ வார்த்தி மைநாகபூஜீத:
கபலீக்ருத மார்த்தாண்ட மண்டலோவிஜிதேந்த்ரிய:

16. ராமஸுக்ரீவ ஸந்தாதா மஹாராவண மந்தந:
ஸ்படி காபோ வாகதீசோ நவவ்யாருதி பண்டித:

17. சதுர்பாஹுர் தீநபந்துர் மஹாத்மா பக்தவக்ஸல
ஸஞ்ஜீவந நகாஹர்தா ஸசீர் வாக்மீ த்ருடவ்ரத:

18. காலநேமி ப்ரமதநோ ஹரிமர்கட மர்கட:
தாந்த: சாந்த: ப்ரஸந்நாத்மா தஸகண்ட மதாபஹ்ருத்

19. யோகீராமகதாலோல: ஸீதாத்வேஷண பண்டித
வஜ்ரதஷ்ட்ரோ வஜ்ரநகோ ருத்ரவீர்ய ஸமுத்பவ:

20. இந்த்ரஜித் ப்ரஹிதாமோக ப்ரஹ்மாஸ்த்ர விநிவாரக:
பார்த்த த்வஜாக்ரே ஸம்வாஸீ ச்ரஞ்ஜர பேதக:

21. தசபாஹுர் லோகபூஜ்யோ ஜாம்பவத் ப்ரீதிவர்த்தந:
ஸீதாஸமேத ஸ்ரீராம பாதஸேவா துரந்தர:

22. இச்யேவம் ஸ்ரீஹநுமதோ நாம்நா மஷ்டோத்தரம் சதம்
ய: படேச் ச்ருண்யாநநித்யம் ஸர்வாந் காமா நவாப்நுயாத்

இதி காளிகாரஹஸ்யே ஹநுமதஷ்டோத்தர ஸதநாம ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்

————-

ஸ்ரீ ஆஞ்ஜநேய த்யான ஸ்லோகங்கள்

புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்ப்பயத்வம் ஆரோகதா |
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத் ||

ஸர்வ கல்யாண தாதாரம் ஸர்வாபத் கன மாருதம் |
அபார கருணாமூர்த்திம் ஆஞ்ஜநேயம் நமாம்யஹம் ||

அஞ்ஜநா நந்தனம் வீரம் ஜானகீ சோ’கநாசனம் |
கபீச’மக்ஷ ஹந்தாரம் வந்தே லங்கா பயங்கரம் ||

ஆஞ்சநேயமதி பாடலாநநம் காஞ்சநாத்ரி கமநீய விக்ரஹம் |
பாரிஜாத தருமூலவாஸிநம் பாவயாமி பவமான நந்தனம் ||

யத்ர யத்ர ரகு நாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருதமஸ்தகாஞ்ஜலிம் |
பாஷ்பவாரி பரிபூர்ணலோசனம் மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம் ||

மனோஜவம் மாருத துல்ய வேகம் ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம் |
வாதாத்மஜம் வானரயூத முக்யம் ஸ்ரீ ராமதூதம் சி’ரஸா நமாமி ||

அஸாத்ய ஸாதக ஸ்வாமின் அஸாத்யம் தவ கிம்வத |
ராம தூத க்ருபாஸிந்தோ மத் கார்யம் ஸாதயப்ரபோ ||

உத்ய தாதித்ய ஸங்காஸம் உதார புஜ விக்ரமம் |
கந்தர்ப்ப கோடிலாவண்யம் ஸர்வவித்யா விஸாரதம் ||

ஸ்ரீராம ஹ்ருதயா நந்தம் பக்தகல்ப மஹீருஹம் |
அபயம் வரதம் தோர்ப்யாம் கலயே மாருதாத்மஜம் ||

ராமதூத மஹாதீர ருத்ரவீர்ய ஸமுத்பவ |
அஞ்ஜநா கர்ப்ப ஸம்பூத வாயுபுத்ர நமோஸ்து தே ||

நாமாம் யஹம் மாருதஸுநு மாநிலம் ஸ்ரீஜானகி ஜீவத ஜீவத ப்ரியம் |
ஸௌமித்ரி மித்ரம் கபிராஜ வல்லபம் ஸ்ரீராமதூதம் ஸிரஸா நமாமி ||

———————-

அஞ்சிலே ஒன்று பெற்றான்,
அஞ்சிலே ஒன்றை தாவி,
அஞ்சிலே ஒன்றராகி , ஆர்யார்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்
அவன் நன்மை அளித்து காப்பான்!!!

——————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-