ஸ்ரீ திருவடி மாலை–ஸ்ரீ ரா. இராகவையங்கார்‌ ஸ்வாமிகள்–

ஸ்ரீ திருவடி மாலை அண்ணாமலைப்‌ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்‌ சேது சமத்தான மகாவித்துவான்‌ பாஷா கவிசேகரர்‌ ஸ்ரீ  ரா. இராகவையங்கார்‌

மகாவித்துவான்‌ ரா. இராகவையங்கார்‌ மாலையின்‌ தொடக்கத்தில்‌ உள்ள வாழ்த்தில்‌,
‘திருவினிய பொய்கை’ . என்று பொய்கையாழ்வார்‌
முதலாக குருகைமகிழ்‌ மாறன்‌ பெரிய சடகோபன்‌” ஆகிய குரவர் தாள்‌ சேர்குவர்‌ அடிமையானே’ என்று
குறித்தல்‌ அவர்‌ தம்‌ அடியார்க்கு அடியனாகும்‌ பத்தி நிலையைக்‌ காட்டும்‌.

திருவடிமாலையில்‌ சிலபாடல்கள்‌ திருமால்‌ திருவடி களைப்‌ போற்றுகின்றன. ௪ட கோபரைச்‌ சில பாடல்கள்‌ து.திக்கின்‌றன. பலபா டல்கள்‌ கிருஷ்ணாவதாரம்‌, இராமாவதாரம்‌, நரசிங்காவ வதாரம்‌ முதலிய அவதாரங்கள்‌ பற்றியவையே= திருவேங்கடம்‌, திருவரங்கம்‌, திருமாவிருஞ
சோலை, – திருப்புல்லாணி: முதலிய திருப்பதிகளில்‌ எழுந்தருளிருள்ள எம்‌ பெருமான்‌ களைப்‌ பற்றியவை பல.
திருமால்‌ அருள்‌ வேண்டும்‌ பாடல்கள்‌, மாயோனிடம்‌ முறையிடும்‌ பாடல்கள்‌ சிற்சில, இவ்வாறு திருவடி மாலை பத்தி ரசம்‌ கனிய அமைந்த இன்னிசைப்‌ பாடல்களாகும்‌.

திருவடிமாலையின்‌ இறுதியில்‌ இராமநாம மகமை உரைக்கும்‌ *சீராமநாமப்‌ பாட்டு என்னும்‌ பகுதி உள்ளது.
கல்லாரும்‌ கற்றாரும்‌ கற்கும்‌ நாமம்‌ கங்‌.கை முதல்‌ தீர்த்த பயன்‌ காட்டு நாமம்‌ வில்லாரும்‌ வீரர்‌ செயம்‌ வேண்டும்‌ நாமம்‌ மெய்ம்மைக்கே பரியாயம்‌ வேண்டும் நாமம்‌ என்று இவ்வாறு இராம நாம மகிமை பேசுதலை இப் பகுதியில்‌ காணலாகும்‌.
இந்தப்‌ பக்திப்‌ பனுவல்‌ மகாவித்துவான்‌ வாழ்  நாளி லேயே 1983ஆம்‌ ஆண்டு முதன்‌ முறையாக வெளிடப்‌ பெற்றது. 66 ஆண்டுகளுக்குப்‌ பின்‌ வெளியாகும்‌ இப்‌ பதிப்பினைத்‌ தமிழார்வலர்கள்‌ பெற்றுப்‌ பயன் பெறுவாார்களாக.

————–

வாழ்த்து
‘திருவினிய பொய்கை கருவினொளிர்‌ பூதன்‌
செகமுழுவ தும்பே யெனவகலு நன் பேய்‌
மருவினிய பாணன்‌ வளர்மழிசை பூரன்‌
மசிழ்புதுவை நாதன்‌ மதுரகவி கோதை
அரசினுயர்‌ கொங்கர்‌ மகிபகுல துங்கள்‌
அடியர் பத தூளி யணி குறைய லாளி
குருகைமகழ்‌ மாறன்‌ பெரியசட கோபன்‌.
குரவரிவர்‌ தாள்சேர்‌ குவரடிமை யானே,

விதியோர்தர வியலாத மு குந்தன் மிசை யன்பின்‌
விதுரற்கொரு சபரிக்கெழு பதினாயிர மதிகன்‌
மதியோர் புகழ்‌ குருகூர் மகிழ்‌ மாறன் சட கோபன்‌
மதுரத் தமி ழமிழ்தைப் பொரு மறையைப் பொழி முகிறாள்‌
துதியோர் குரு வழிபாடு செய்‌ கோளூர் மறை வாணன்‌
றுகடீர் மது ரகவீச னிணைச் செம்பத பதுமங்‌
கதியோர் தரு பூதூரெதி ராசன் பத கஞ்சங்‌
கலை தேர் வர வர யோகிகள்‌ கழலே தொழுவோமே.

நூல்

பொருள் கொடுத்து வசை கேட்கும்‌ புல்லர்க்‌ கேயும்‌
பொறுக்கரிதாய்ச்‌ செலிசுடும்வெம்‌ புன்சொல்‌ பெய்தாற்‌
கருள்கொடுத்து மீளாவீ டாங்கே நல்கு
மம்மானின்‌ திருவுளத்துக்‌ காகு மென்றே
தெருள்கொடுத்த பெரியவர்க்குந்‌ தெளிய லாகாத்‌
தெய்வங்கள்‌ தெய்வதமாஞ்‌ செம்மா லுன்னை
யிருள்கொடுத்த நெஞ்சினொடு மேத்து வேன்போ
லிழித்துரையிற்‌ பழித்துரைப்பா னெண்ணினேனே..–1–

மறை யெடுத்துன்‌ குணத்தொன்று வழுத்தப்‌ புக்கு
மனம் வாக்குக்‌ கெட்டாத மகிமைத்‌ தென்றே
யிறையெடுத்துச்‌ சொல மாட்டா தீண்டு மீண்ட
வேற்றமுள போற்றுமுளச்‌ சோதீ யுன்னைத்‌
துறையெடுத்த நெறி தோன்றா நாயேனெய்தச்‌
சொல்லாலே கூவுகின்ற தெல்லாம்‌ பாலர்‌
பிறையெடுத்து விளையாட வாவா வென்று
பிதற்றுகின்‌ற தன்மையினும்‌ புன்மைத்‌ தம்மா.–2-

ஏரி தான்‌ மாரியினுக்‌ கேது வாயி
னிருவிழிநோக்‌ கிரவிவரற்‌ கேது வாயிற்‌
சீரிதா நின்னருட்கு நாயேன்‌ செப்புஞ்‌
சிறுசொல்லு மேதுவெனச்‌ சிறக்கு மம்மா
பாரினீ யருள் செய்வாய்‌ செய்யா யானோ
பயன்கருதேன்‌ பருகுபவன்‌ பருகா துய்யா
னோரில்யா னவனாக வுன்னை யேத்தா
துய்யாமை யேத்தினே னுடைய கோவே.–3-

சொல்லாலே மேலாப்புச்‌ செய்து வானிற்‌
.றிகழ்சோலை மலை மேய தேவ தேவே
சொல்லாலே யுனை வழுத்தத்‌ துணிவ தெல்லாந்‌
துகிலாலே யெரிய விக்கத்‌ துணிவ தாகும்‌
வில்லாலே யாகாய மெய்வ தாகும்‌
விரலாலே வளி யளக்க. மேவ லாகுங்‌
கல்லாலே பெருங்கடனீர்‌ கடத்த லாகுங்‌
காலாலே வானேறக்‌ கற்ப தாமே.–4-

5. அவியாத்‌ தருப்பைவெஞ்‌ சாயக
மாஞ்சிலை யாரணங்காந்‌
தவியாக்‌ கரியர சாகுந்‌
தயிர்க்குடத்‌ தங்குமுத்தி செவியாற்‌ கனவினுந்‌ தெய்வக்‌
கவிகை தெரிந்திலெனைக்‌
கவியாக்கி யாண்ட முழுமுதற்‌று ஓன்மைக்‌ கடவுளுக்கே.

6. ஏழு லோகமும்‌ வாழ வென்று ஓரு
சோழ  மண்டல மீதுதன்‌
னிணையில் காவிரி நடுவி லேயர
வணையிலே வளர்‌ தெய்வதம்‌
மாழை மாதகலாது மின்னென
மார்பிலே யொளி ரருண் முகில்‌
வள மிகுந்தமிழ்‌ மறை மொழிந்துயர்‌
பதின்ம ராடு குணக் கடல்‌
வேழ மென்பதன் வாயினால் வெளி
யாகி வந்த விழுப்பரம்‌
வேத முள்ளன யாவையும் முத
லீறு மோதும்‌ வியன் சுடர்‌
ஊழி யின்னுயிர்‌ முழுதை யுந்தன துதரம்‌ வைத்த தனிப் பொருள்‌
உம்ப ரிம்பரெ லாமு நாபியி
தய மாமுழு முதலரோ.

7. கடன்மிசைக்‌ கிடந்த கருணை வா ரிதியைக்‌
கன் மழை தடுத்த கார்‌ முகிலை
யடன் மிசைத்‌ தேவர்க்‌ கமுது பெய்‌ யாரா
வமுதினை யலர் மகட்‌ கணியை
மடன் மிசைத்‌ தேன் பாய்‌ மாலிருஞ்‌ சோலை
மலை மிசை மரகத மலையை
யுடன் மிசைச்‌ சுழலும்‌ புன் பிறப்‌ பொழிவா
னுள்ளினே னெள்ளினே னுலகே.

8. பல்லா யிரம் பழி சூழ்கின்ற யானுன்‌ பதுமபத
மல்லாற்‌ றொழுது துதித்தறி யேனகி லாண்டமுத
லெல்லாம்‌ வயிற்றி னடக்கி யளிக்கின்ற வின்னருட்கு
நல்லார்‌ பொல்லாரென்‌ றிருகூறு செய்யு நவையுமுண்டே..

9. பிள்ளைப்‌ பருவத்‌ ‘தொரு குழவி
பெரியோர்‌ கையாற்‌ றொழது தொழுது பேணி யவர் தாமுரைத்த மொழி
பிதற்றி யிருக்கும்‌ பெற்றியைப்போ
லுள்ளத்‌ துருகு மன்பர் தொழி
லுதனை நடிக்க“வுவந்துன சீர்‌
உள்ள படி யொன்‌ றுணரும்வலி
யொழிந்த விழிந்த நாயடியேன்‌
எள்ளத்‌ தனையு மிளகாத
விருப்பு மனத்தாற்‌ பொய்ந் நாவா
லீயா திவறுங்‌ கொடுங்கையா
லெண்ணி யியம்பித்‌ தொழலெல்லாங்‌
கொள்ளத்‌ தினையுந்‌ திருவுளத்துக்‌ குறித்த லுளதோ கோகனகக்‌
கோயில்‌ வளர்ந்த கொடி படர்ந்த
கொடைக் கற்‌ பகமே குணக் கடலே.

10. வெருவித்‌ துயர் படு கடலைப்‌ பொரு பிற
வியினிற்‌ சுழல் வரும்‌ வினை தீர
மருவித்‌ தொழு மன மதனைத்‌ தருவதுன்‌
மகிமைத்‌ திருவரு ணெறியாமே
குருவிற்‌ பொலி குல முழுதுக்‌ கொருபதி
குருகைப்‌ பதி வளர்‌ தமிழ் மாறர்‌
பெருவிற்‌ பன மறை யமிழ்தைப்‌ பருகிய
பெருமைப்‌ புயலெனு நெடுமாலே.

17. கத்து கடல் சூழ்‌ புலி
கண்டா கருணன்‌ முனமெதிர்ந்து
செத்த வுடலை நிவேதனஞ்செய்‌
திறத்துக்‌ குகந்தே யவற்குமவன்‌
சித்த முவத்தல்‌ காரணமாத்‌
தீய தம்பி தனக்குமுயர்‌
முத்தி கொடுத்த திருவருளே
மூட னேனை யாண்டதுவே.

12. பத்தி செய்து பகைத்த கண்‌டா கர்‌ணன்‌
பாழி வெள்ளிப்‌ பருப்பத வாணனை
முத்தி யெய்த விழைந்து வணங்கவு
முகுந்த னன்றி யுகந்தது வல்லமோ
புத்தி செய்தரி பொங்கரு டங்குமா
புரிக வென்ற புராரி யிடத்துநீ
நத்தி யெய்தி மகப் பெறு மாயமென்‌
நான்முகப் பிர மற்கொரு தந்தையே.

13-. கூவத்தே வீழ்ந்த சிறு குழவியை நம்‌.
றாயெடுக்கக்‌ குதித்தாற்‌ போலப்‌
பாவத்தே மனக் கலம்போய்ப்‌ பவக் கடல் வாய்ப்‌
பட்டாரைப்‌ பரமன்‌ றானே
யாவத்தே யில்லாத பெருவீட்‌.டை.
யடைவிப்பா னருளா லிச்சை
மேவத்தே கம்படைத்துத்‌ தோன்‌ றுவனிம்‌
மெய்யுணர்ந்தோர்‌ வினைதீர்ந்‌ தோரே.

14, காயா மலருங்‌ கருவிளையுங்‌
காருங்‌ கடலுங்‌ கமழுமெழின்‌
மாயா மதுசூ தன முகுந்த
வர மாதவ வாமன வெனவா
யோயா தலற்றி யகங்கரைய
யுள்ளே ததும்பி யின்பவெள்ளம்‌
பாயா வழிந்து வினைக் கோடை.
பாற்று நாளு முளதேயோ.

15. மனைவிட்டிலன்‌ மகவிட்டிலன்‌
வலிவிட்டிலன்‌ மாலே
‘தனைவிட்டில னிலம்விட்டிலன்‌
றனம்விட்டில னாசை
‘தினைவிட்டிலன்‌ வினைவிட்டிலன்‌
திருவற்றவ னேனும்‌
உனைவிட்டில னெனின்‌ மற்றவ
னொளி பெற்றவ னாமே.

16. நின்ன தாகுமால்‌ விண்ணு மண்ணொடும்‌
நிலைய தாகிய வீடு மேயெனின்‌
என்ன தாக யாதுள்ளதோ தெரி
கிற்கிலே னுடற்‌ செனன மோடுயிர்‌
உன்ன தாகலானிற்கு நல்குதற்‌
கொன்று மில்லையா னேழை யேனுமென்‌
தன்ன தாக வென்‌ கையி லுள்ளதஞ்‌
சலி நினாதுகை தனிலி லாததே.

17. நெய்யிற்‌ றனியே யெரியாத
நெருப்புத்‌ திரியின்‌ மிசை யதையே
பெய்யிற்‌ சுடர் விட்‌ டொளி கிளரும்‌
பெற்றி யேய்ப்ப மலவுயிரை
மெய்யிற்‌ புகுவித்‌ திரண்டனையு.
மேவிப்‌ பொலியும்‌ விழுச்சுடர்‌ நீ
கையிற்‌ கனி போற்‌ காட்டினல்லாற்‌
காணா தெவர்க்கு மகக் கண்ணே.

18. காமாந்த காரமடுக்‌ காரிகையார்‌ வேட்கைக்‌
கராவாயிற்‌ கண்ணிழந்து கன்‌மனவெங்‌
றேமாந்து வீழ்ந்துகரை யேறவலி யில்லா களிறு ஓன்‌
தெந்தையுனை யுன்னாது நொந்தழிவ தருள்வாய்‌
பூமாந்து வண்டுலவு பொய்கையிடைப்‌ புக்குப்‌
போற்று கரி காத்ததினு மேற்றமிதற்‌ குண்டால்‌
தீமாந்து மெழுகு பொரத்‌ தினமுருகு மன் பர்‌
சிந்தை குடி கொண்டிருலகு முந்தை முழு முதலே.

19. பாபத்தாற்‌ காழ்த்தறிவு
பாழ்த்ததனான்‌ வெளிறியடுங்‌
கோபத்ததாற்‌ சிவப்புற்றுக்‌
கொடுஞ்செருக்கா னனியிருண்டே
யாபத்தா னிளைப் பெய்தி
யழுக்காற்றாற்‌ றடிக்கு மனம்‌
சாபத்தேற்‌ குயிர்ப் பிணியாய்த்‌
தழைப்பது காண்‌ டனி முதலே.

20. பழுவிருக்கத்‌ தோல் வேய்ந்த பாவை நெஞ்சப்‌
பாம்பிருக்கும்‌ பாழ்ங்குடங்கர்‌ பற்பல்‌ கோடிப்‌
புழுவிருக்கப்‌ போர்த்தமலப்‌ பொதியே யைந்து
புலப் பேய்கள்‌ குடியிருக்கும்‌ புக்கில்‌ புண்ணாய்‌
குழுவிருக்கத் தொக்கமுடை யிரைமெய்‌ யென்று
குறித்திருக்கப்‌ பெற்றபெருங்‌ குணத்தோர்க்‌ கல்லா
லெழுவிருக்க மொருகணையா ஸனெய்து பத்த
ரெழுபிறப்பு மறுப்பவனை யேத்த லாமே.

21. பணவாசைப்‌ பேய் கண்‌ டுயில விடா
தெனைப்‌ பாவையராம்‌
பிணவாசைப்‌ பூதங்‌ கனவும்‌
புகுந்து பிடித்துடற்று
முணவாசைக்‌ கூளி யெஞ்‌ ஞான்றுந்‌
தெறுமிவைக்‌ கோய்வுமுண்‌டோ
குணவாசைப்‌ பாநுவைப்‌ போன்றுள
னோங்மென்‌ குலதெய்வமே.

22. பொன்னினைக்கும்‌ புகழ் நினைக்கும்‌
பூமியெலா நினைக்கும்‌
பூணினைக்கு மூணினைச்கும்‌
பூவை மொழி யாரை
மன்னினைக்குந்‌ தன்னினைக்கும்‌ மற்றையர்க்குத்‌ தீது
வர நினைக்கும்‌ பழி மறைக்கும்‌
வழி நினைக்குந்‌ தன்ன
தின்னினைக்கு நென்னினைக்கு
மிருள் புகுத்த வல்ல தெது நினைக்க வென்றாலு
மதுநினைக்கு நெஞ்ச
நின்னினைக்க லாகாது
நீநினைத்தல்‌ வேண்டு
நீடொளிய சேடகிரி
நின்ற பெருமாளே.

23-மாட்டாலும்‌ மயக்காலும்‌ மகிழாலும்‌
புகழாலும்‌ வாட் கண்‌ மாதர்‌
கூட்டாலு முணைவாலுங்‌ குடியாக் கொண்
மடியாலுங்‌ கோபத்‌ தாலும்‌
பீட்டாலு மழுக்காற்றுப்‌ பேயாலு
நாயேன் செய்‌ பிழைக ளெல்லாம்‌
பாட்டாலு நிரம்பாது கேட்டாலும்‌
பாவபெனப்‌ பகர்வ ரெந்தாய்‌.

24-ஏழாலே அளந்திட்ட புன் பிறப்பின் எத் துணைக்கோ வினைவேன் எந்தாய் ே
ஊழாலே ஒரு கோடி உடலாலே யுரையாலே யுடறுங்‌ காமப்‌
பாழாலே கூழாலே பகையாலே பசியாலே பயத்தாற்‌ பாவச்‌
சாழாலே திணிந்த மனக்‌ கல்லாலே படுவல் எலாங்‌ கணிக்கலாமே.

25. சற்றேனு மிரங்கீரோ வெனப் பசித்தார்‌
தழங்குரைமுன்‌ றலைக் கேட்‌ டோர்கைத்‌
துற்றேனு மீவறியாச்‌ சுமடனேன்‌
சுடும்வறுமை தொலையத்‌ தம்மை
விற்றேனு முதவுகொடை வீரர்முன
மென்னாவேன்‌ வியாள மேய
புற்றேனு மொவ்வாவென்‌ புல்லுடலே
புவியினெடும்‌ பொறையா மெத்தாய்‌.

26. அருகிருக்கும்‌ புல்லாணி யமர்ந்திருக்கும்‌
வில்லாளிக்‌ கன்பு பூண்டு
பெருகிருக்கு முறையானே பேசறியே
னந்தணரிற்‌ பிறந்தேன்‌ வாளா
முருகிருக்குங்‌ குழலார்க்கு முனைந்திருக்குங்‌ காமத்தீ மூள நாளும்‌
வெருகிருக்கு மாறிருளை விழைந்திருக்கும்‌
வெய்யனருண்‌ மேவ லுண்டே.

27. அனைபடைத்த வுயிர்க்கெல்லா மயன் படைத்த
‘தில்லை யுட லடியார்க்‌ காக்க
முனை படைத்த வறவாழி முதல்வனடி.
முளரியினை முன்னு மெண்ணந் தினை படைக்க மாட்டாது தீ நரகு
படைப்பார்தாஞ்‌ செய்த முன்னை
வினை படைத்த தல்லாது வேறுண்டோ
மெய்யுணர்ந்து விள்ளுங்‌ காலே.

28-குழலோம்பு மினியவிசைக்‌ குயிலோம்பு
குரன் மடவார்‌ கொடிய காமத்‌
தழலோம்பி யேயபணி தலையோம்பிப்‌
பெற்றவற்ப சார மென்னும்‌
விழலோம்பி யதனானோய்‌ மிக வோம்பி
மெலிவெல்லாம்‌ வீடாண்‌ மாயன்‌
கழலோம்பு மாறறியாக்‌ கசடோம்பி
நின்ற வெய்ய காட்சி யாமே.

29-பாடு பட்டுத்‌ தேறி நிதிப்‌ பரப்பு நாளும்‌
பகை விளைக்கு நிலனும் பெண்‌ பாலார்‌ கொங்கைக்‌
கோடு பட்டுச்‌ சிதைந்த புல வுடம்பும்‌ வாழ் நாள்‌
குறை பட்டுப்‌ போம் வழிக்குத்‌ துணையோ சொல்லாய்‌
காடு பட்டுப்‌ போகாமே காக்குங்‌ கார் போற்‌
கருணை மழை பொழிகின்ற கமலக்‌ கண்ணந்‌
கீடுபட்டு வீடுபெற்று வாழ வெண்ணா
திரும்பிறவிக்‌ கடற்பட்ட வேமை நெஞ்சே.

30-எல்லணைத்த பிறைபோலு மெழிலணைத்த
இரு நுதலா ரிரண்டு கொங்கைக்‌
கல்லணைத்துக்‌ கண்ட சுகங்‌ கனவலைத்த
கனி சுவைத்த காட்சித்‌ தென்று
வில்லணைத்து நீல முகின்‌ மிளிர் பச்சைப்‌
பாயன் மிசை மேயினாற் போற்‌
புல்லணைக்கட்‌ சாய்ந்தவன் பேர்‌ புகன்‌ மிருப்பார்‌
பேர் புகன்று புகுவர்‌ வீடே

31-மலைபோ னிதியு மணுவா மதித்து வறுமை கொளுங்‌
கலையோ துளியுங்‌ கடலா நினைத்துக்‌ கருவமுறு
நிலையோ பெறாது நரகு படைக்கின்‌ற நெஞ்சிற்கியான்‌
விலையோ வருளு மிலையோ வடமலை மேலவனே.

32-குடி பிடிக்கு மானப் பேய்‌ குலம் பிடிக்கு
மகங்காரக்‌ கூளி யோடு
செடி.பிடி.க்கும்‌ பேராசைச்‌ செந்நாயு
மனக் குரங்குத்‌ தினமு மென்னை
மடிபிடிக்கும்‌ விடியலும்‌ வழி மறிக்கு
நரக நெறி வகுக்கு மூன்னை
யடி பிடிக்க வொட்டா விவ்‌ வல்லலெலாம்‌
வெல்ல வரு ளரங்கத்‌ தெந்தாய்‌.

33-பாட்டா னளி கண்‌ முரலுமெழிற்‌
பங்கே ருகத்தின்‌ மிசை யமர்ந்து
சூட்டா ரேகினம்‌ பெடைதிளைக்குந்‌
துறை சேர் மல்லி வளதாடி
தாட்டா மரைப்  போதுளப்போதிற்‌
றணவார்‌ பிறவச்‌ சலதி பட
மாட்டார்‌ முடிப்போ தவாவுமுதல்‌
வன்றாட்‌ பிணைந்‌ தெடுத்தலினே.

34-குலை யெடுத்த மரக் கொம்பிற்‌ குதித்துத்‌ தாவும்‌
குரங்கனைத்து நீ முன்னர்க்‌ குறித்த வாறே
மலை யெடுத்து மலை கடந்தும்‌ வாழ்ந்த வென்றன்‌
மனக்குரங்கு மட்டுமுனை வணங்க லில்லாத்
தலையெடுத்து நிமிர்‌ ந்திருளின்‌ வீழ்த லெல்லாத்‌
தயா வுளத்திழற் குறியாத தன்மை யென்னோ
சி லை யெடுத்த நீல முகில்‌ போற் புல்‌லாணித்‌
திருப்பதியின்‌ மேவி வளர்‌ தேவ தேவே,

35. செகத்துக்க ணவதரிக்குத்‌ தெய்வதச் சீர்‌
கேட்டுரையாச்‌ செவிட்டு மூங்கை
முகத்துக்கண்‌ விழித்திருக்க வகத்துக் கண்‌
குருடுபட்ட மூட னல்லா
லிகத்துக் கண்‌ வாழ் வனைத்து மிருங்கான
னீரனைத்தென்‌ றெண்ணா தேபெண்‌
அகத்துக் கண்‌ வந்துழல வாழ் நரக
மமிழப்போ மாதன்‌ யானே.

36. மருவேட்ட குழலார்க்கு மனம் வேட்ட
மயலானே வையத்‌ தென்றுங்‌
கருவேட்ட விடர்க்கடலிற்‌ சரைவே.ட்ட
வுடை கலம்போற்‌ கவிழ்கின்‌ றேற்குச்‌
செரு வேட்ட. தென்னிலங்கை தீ வேட்டஞ்‌
செயம் பொருத செல்வன்‌ கஞ்சத்‌
திருவேட்ட முழு முதல்வன்‌ சீர் வேட்ட
சேவடியே சேம மாமே.

37-ஆற்றைக் கடவா திருஞ்சழிவா
வாழ்த்த விரைவு மடு மரம் போன்
வாற்றைக் கடவா தீ குண முகில்
மாட்‌ட . விரையு மா மிவிடநீ .
றூற்றைக்‌ களைந்து வேர றுக்குத்‌
துகடீ ரருள்வா டருவை கொலோ
சேற்றைக்‌ கழுவ முடையளறு
திளைப்பேற்‌ கொருநாட்‌ டிருமாலே.

38. தெருளாசைப்‌ பட்டறிந்து செங்கண்மால்‌
சேவடிக்கே சேர்ந்த நெஞ்சா
லருளாசைப்‌ பட்டிருக்கு மடியார்முன்‌
செடிநாயேனவனிமீது பொருளாசைப்‌ பட்டிவறிப்‌ புன்பழியே
நனி யிட்டிப்‌ பொரு கண்‌ மானார்‌ மருளாசைப்‌ பட்டதனா னிருளாசைப்‌
பட்டெய்த வதிகின்‌ றேனே.

39-கறையடிக்குள்‌ வெதுப்பொழியக்‌ கலுழன்‌ மிசைக்‌
கார் மழைபோற் கடிது போந்த
விறை யடிக்குத்‌ தினை யுருகா விரும்புமன
மெமனெனும்பேர்‌ யார் சொற்‌ றாலும்‌
மறை படிக்கும்‌ பதைபததைக்கும்‌ பல்கோடி
நினை நினைந்து பரிவு கூரு
மறையடிக்கு முடிக்குமிக வழுத்து மரி
யெழுத்துமெண்ண மாட்டா தந்தோ.

40-தேக நிலை யாத நிலை செத்தபிண மோதுஞ்‌
செல்வ நிலை யாதபடி சொல்வரிர வாளர்‌
போக நிலை யாமை வலி போமுதுமை கூறும்‌
புத்திநிலை யாதமுறை பித்தர்மொழி வாரான்‌
மோக நிலை யாமைசொல மூடமன முண்டு
முற்று நிலை யாமை மறை கற்றவர்கள்‌ சொல்வார்‌
சோக நிலை யாத நிலை சொல்லி யருள்‌ வாரார்‌
சோலை மலை மேவி வளர்‌ நீல நெடு மாலே.

41-முடியிருக்கு நெடுமாலுக்‌ கடிமைசெய
முயலாத மூடமூர்க்கச்‌
செடியிருக்கு மனக்குரங்கு குடி.யிருக்கு முடையாக்கை சிதையா தேயிப்‌
படியிருக்கு மெனநினைக்கும்‌ பாமரர்க்குச்‌
செத்த பிணம்‌ பறை யாற்‌ சாற்றி
நொடியிருக்கு மெனக் கருதீர்‌ நுமக்குமிது
வழியென்று நுவலு மாலோ.

42. ‘குகை கண்டு தனி யிருந்து குல தெய்வம்‌
வரானாக்காக்‌ குருட்டு நெஞ்சாற்‌
பகைசண்டு சினந்துமுறு பணங்கண்டு
விழைந்தும் விழிப்‌ பான லார்புன்‌
னகை கண்டு மருண்டுமவர்‌ நடங்கண்டு
வியந்‌து மொழி நாள்க ளெல்லாந்‌
தொகை கண்டு துறவார்க்குச்‌ சுடுகாட்டிற்‌
புகை கண்டு சொல்லு மெய்யே.

43. மறி கேட்டு வாங்கியதை மலைக் கடவுட்‌ கென்று
வதைத்திட்டுக்‌ கொலை படை.த்து வருள் படைத்த வேலன்‌
குறி கேட்டுக்‌ களியாட்டுக்‌ குணக் கூத்து மாடிக்‌
கும்பிட்டுப்‌ பெற்ற பயன்‌ றுன்பத்தின்‌ வேறோ
செறி கேட்டுப்‌ பவக் கடலிற்‌ றிரையிடர்க்கு நொந்து
தீ வினைக்‌ கரா வாயிற்‌ சிக்குவது தீர்ந்து
நெறி கேட்டுப்‌ பெரு வீட்டி னிலைத்தினிது வாழ
நீர் நினைதி ராயினரி பேர் நினைதிர்‌ மாதோ.

44. தீவினைப்‌ பெருக்காற்‌ பொருடனைப்‌ பெருக்கிச்‌
சிறு புகழ்க்‌ கொரு சில விடுவீர்‌
கோவினைத்‌ தொலைத்துச்‌ செருப்பினைக்‌ கொடுக்குங்‌
கொள்கைநுங்‌ கொள்கையே யம்மா
காவினைச்‌ சயித்த கொடையினா லடியர்‌
கருதிய தன்னையு மளிக்குத்‌
தேவினைப்‌ பழிச்சி யாவையுங்‌ கழித்துச்‌
சிறப்பினை யுறப் பெறா தீரே.

45. மா கனக மேருவென நிதியி ௫ந்தென்
மகிழ் பெண்டிர்‌ மக்களொடு வாழ்விருந்தென்‌
றேக நக மெனவிருந்தென்‌ றெளித்த தாலென்‌
செக முழுது மடிமை புகுஞ்‌ செயத்தி னாலென்‌
போக நகராதிபதி யாயி னாலென்‌
பொல்லாத விரணியரா வணர் போன்‌ மாள்வர்‌
கோகனக மலர்ந்தருணீர்‌ கோத்த கொண்டல்‌
கோதண்ட கோளரியைக்‌ கூறா தோரே.

46-திரவியமொன்‌ றுறுமாயிற்‌ றிரைமேற்‌ செல்வர்‌
தீ மலையின்‌ மிசைச் சேர்வர்‌ சீயத்‌ துஞ்சா
‘திரவியல்வெங்‌ கான்சுரம்போ யிளைப்பர்‌ வையத்‌
தினைப்பிளந்து பாதாளத்‌ திடையும்‌ பார்ப்பர்‌
உரவிய கார்‌ வானத்தும்‌ பறப்பர்‌ பூத
மொன்றுக்கு மஞ்சார்த முயிரு மாய்ப்பர்‌
விரவிய விவ்‌ வினையினொரு தினையும்‌ தெய்வ
விழுப் பொருளைப்‌ பெறப்புரிய விழைவோர்‌ யாரே.

47-அன்புருக்கொ ளசோதைத்தாய்க்‌ கெளிய னாகி
யழனுருக்கொள் வஞ்சத்தாய்க்‌ கெமனே யாகித்‌
துன்புருக்கொள் பொரு களிற்றை மாய்த்துத்‌ தாய
தொழு களிற்றைத்‌ துயர்‌.தீர்த்துத்‌ துகடீ ருள்ளத்‌
தின்புருக்கொள்‌ சேடன் மிசை யினிது சாய்தந்தன்‌
றிடருருக்கொள்‌ காளியனை யடர்த்த லானே
வன் புருக்கொள்‌ கொடியார்க்கு மடியா ருக்கு
மன்னிறைவ னருண் முறைமை மதிக்க லாமே.

48-கங்கைக்‌ கரைக்குக்‌ குகப் பெருமான்‌
கருதும்‌ பம்பைக்‌ கரைக்கநுமான்‌
சங்கம்‌ கடலின்‌ பெருங்கரைக்குச்‌
சார்ந்த வொருவீ டணனிவரைப்‌
பங்கத்‌ துறையும்‌ பள்ள நிலம்‌
பாயும்‌ புனல் போற்‌ கலந்த விறை
துங்கத்‌ தினிய திருவருளே
தொலையாப்‌ புணையாந்‌ துயர்க் கடற்கே.

49-ஓலை கட்டித்‌ தூதேகிப்‌ பாண்டவர்க்கா
வூரிரந்தா னுவந்து சாத்த மாலை கட்டிக்‌ கருள் புரிந்‌தான்‌ மண்ணினுற்றார்‌
புண்ணியத்தின்‌ வாழச்‌ சேது
வேலைகட்டி வைத்த பிரான்‌ யருள் கடலிற்‌
குளித்தற்கு விரகி லாமே
சேலை கட்டி விழி வலைக்கொள்்‌ தெரிவையர்கா
தலின்மூழ்குஞ்‌ சிதடன்‌ யானே.

50-பிரமனை முன்‌ படைத்தவற்குப்‌ பெரு மறையைப்‌
பிறக்குவித்த பிரம மென்றே
பரமனை முன்‌ றுதிக்கறியாப்‌ பாழ்ம் பிறப்பு
மானிடமாய்ப்‌ பார்க்கப்‌ பட்ட
கரமனைத்துக்‌ கழுகனைத்துக்‌ கழுதனைத்துக்‌
கல்லனைத்துக்‌ கனியு நஞ்சா
மரமனைத்தென்‌ றெண்ணி விடா மதியுடையேற்‌
குவமையிந்த வையத்‌ துண்டே.

51-தனக்கு மே லொருவருள ரென வெறுக்குஞ்‌ _
சழக்குயிரின்‌ மமதையினைச்‌ சாற்றி னுற்றா
ருனக்குமேற்‌ கடவளுள னென்ற போதும்‌
உருத்தவரைக்‌ கொலை சூழு முதற்குச்‌ சான்று
சினக்குமே லுலகமெலா நடுங்கா நிற்குந்‌
,தீயவிர ணியனென்று தெளிவா ரன்னா
னெனக்குமே லில்லை யென வகங்கரிப்பி
னெல்லையினின்‌ றேற்கிறைவ வென்செய்‌ வாயே.

52-முற்றத்‌ துறந்த முனிவரரு முதல்வா நின்பான்‌ முறையிட்டுச்‌
செற்றக்‌ காம மயக்கமெலாந்‌
தீரு மாறு வரங்கிடப்பக்‌ குற்றக்‌ கலமா யுளவடியேன்‌
குறைவேண்‌ டுவது முறையோதான்‌
தெற்றத்‌ தெளிந்த சடகோபர்‌
தெவிட்டா தருந்துந்‌ தெள்ளமுதே.

53-அரனைப்‌ படைக்குந்‌ திசைமுகனை
யலரிற்‌ படைக்குந்‌ திரு நாபி
வரனைப்‌ படைக்கு மனப் பெரியார்‌
மலர்ந்த செழுந் தாமரைப் பதத்துச்‌
சிரனைப்‌ படைக்க மாட்டாத
தேகம்‌ படைக்குந்‌ தீய வினை
மரனைப்‌ படைத்து வளர்க்கின்‌ ற
மதியைப்‌ படை.த்தேற்‌ கருளுளதோ.

54-காலமெலாங்‌ கணிகையரிற்‌ கழித்து மூத்த
காரிகையாள்‌ காந்தனைப்பின காண லுற்றுச்
சீலமெலாஞ்‌ திறந்த குணத்‌ தெரிவை யொப்பச்‌
செய்த பிழை பொறுக்குவென்று செப்பல்‌ போல
வாலமெலாந்‌ திரண்டனையே னந்தோ வாசைக்‌
காளாகி நாடொலைத்தே னன்ப ரேய்ப்ப
வோலமெலா மிடுகின்றே னிதற்கு நீயு
முற்றருள்வையோ வறியேன்‌ பெற்ற தேவே.

55-கிளை யெலா நச்சுக்‌ கனி பழுத்‌ திருக்குங்‌
கெட்ட தீ மரத்தையும்‌ வித்து
முளையெலாங்‌ கெடுத்துப்‌ புனலெலாம்‌ வீணாய்‌
முடித்து நல்‌ லெருவெலாந்‌ தீத்துக்‌
களையெலாம்‌ விளைக்‌ குங்‌ களரையு மனையேன்‌
காண்பனோ நின்னையு மாயர்‌
அளையெலா மடிய ரன்புபோ லருந்து
மய்யனே தெய்வ நா யகனே.

56.மறப்பினுக்கோ ரறையா குமை யிருட்டுச்‌
சிறையாகு மயற்கூ டாகும்‌
இறப்பினுக்கும்‌ பிறப்பினுக்கும்‌ படியாகும்‌
நரகினுக்கோ ரேணி யாகுந்‌
துறப்பினுக்குப்‌ பகையாகுந்‌ துர்க் குணத்துக்‌
குறவாகுந்‌ துகடீ ரெந்தாய்‌ சிறப்பினுக்குச்‌ செல்லாது செய் சுவராந்‌
தீமனமென்‌ செயத்தத்‌ தாயே.

57-ஓழுக்கினா னீத்த வுயர் முனி வரரு
முள்ளமுக்‌ கறவுனை யுள்வா
ரிமுக்கினா னளறே யெனுங்குடும்‌ பத்தோ
டிரண்டறப்‌ பொருந்தழுக கிருநீர்‌ முழுக்கினாற்‌ போமோ வுன்‌ றிரு வருளின்‌
மூழ்கினா னல்லது வினையைப்‌
புழுக்கினான்‌ முளைக்கா வித்தெனப்‌ புரிந்து
போற்றினார்க்‌ காற்றுமா தவனே.

58-உடலிந்தே யிடரினுக்கொன்‌ றுன்ன லெல்லா
முரலிருந்தே யுலக்கையினுக்‌ கஞ்சல்‌ போலாங்‌
குடலிருந்த தொடக்கறுத்துக்‌ கோத்த சுற்றக்‌
கொடும்பாசப்‌ பிணிப்பவிழ்த்துக்‌ கொண்ட பெண்ட
மடலிருந்த பெரும்பேயி னாசை யோட்டி
யகப்பற்றும்‌ புறப்பற்று மனைத்தும்‌ வீட்டி
மடலிருந்த துளவலங்கன்‌ மாயன்‌ நூய
மலரடிக்கீ ழ்ப்‌ புக்கொடுங்கா மடமை நெஞ்சே.

59-சரிந்த குழ றாங்கிய கண்‌ கரமும்‌ பற்றத்‌
தளர்ந்த வுடை பிடித்த மலர்க்‌ கரமும்‌ விட்டுத்‌
தெரிந்த வுளத்‌ தொளிர்கின்ற தேவே யுன்னைத்‌
தேர்ந்தொருகாற்‌ கூப்புதலைச்‌ செய்யும்‌ போழ்‌தே விரிந்த குணப்‌ பாண்டவர்தம்‌ வென்றி போல
விளங்குதவக்‌ கொடிமான மெய்யே காத்துப்‌
புரித்தபெரும்‌ பாரதமும்‌ போதா தென்று
புலம்பியதுன்‌ றிருவருளின்‌ பொலிவே யம்மா.

60-துட்டவிரா வணனாவாற்‌ சுடுகென்‌ றோதத்‌
துனைந்தெழுந்து புகுந்தன்பாற்‌ றொழுது தீயர்‌ கிட்டவிரா முழு முதலே சரண மென்று
கிளத்திரங்கும்‌ வீடணனைத்‌ கய னென்னப்‌
பட்டவிராக்‌ கதன்றம்பி நம்பாற்‌ கொள்ளப்‌
படாதென்ற கவி வேந்தை மறுத்து நல்கி
யுட்டவிரா வன்பின்வரி விராவ ணற்கு
முற்ற பய மளிப்பலென்ற வுரையே தஞ்சம்‌.

61-பிரமாண்ட கோடியெலாம்‌ பெற்றுக்‌ காக்கும்‌ பிரமநீ யவரித்த பெற்றி தேறா
துரமாண்ட கவியளனத்து முவரிக்‌ கூலத்‌
துறுகணுனக்‌ கெய்தாமை யளிக்க வோர்ந்து
கரமாண்ட வால்பிணைத்துக்‌ கவிந்து கொண்டு
கடி மதில்போ னின்றிளைப்பாற்‌ கண்க டுஞ்சச்‌
சரமாண்ட வில்லினொடுத்‌ தம்பி யோடுத்‌
தாண்டியவை காத்தவரு டமியேன்‌ றஞ்சம்‌.

62-திசைக்கும்‌ வெப்ப வினைத் துயரைத்தெறு இடத்த வச்ச வரிப் பெ ணருத்திய
திருக்க னிக்கு மணித் துணை கட்டிய
செவிக்க சட்ட னளித்த மூடைச்சவக்‌
தசைக்கு மற்பி னுருக் கொளுத்தருள்‌
தழைத்த பத்த ருடற் புள கத்தொடு
தழற்கணுற்ற வரக்கை நிகர்த்துளன்‌
தனித்து ருக்க முறத்தமி மிற்பொழி
றிசைக்கும்‌ வெற்றி யுருக்கு மிணிக்குயி லெழிற் கை பற்றி யதற்கு வெறுத்தர வெனக் கொ தித்த செருக்க னிடைக் குலத்‌
‘திலச்சை யற்ற சழக்க னெனச்சொலும்‌
வசைக்கு முத்தி கொடுத்து மறைச்சிரம்‌
வழுத்த நிற்கு மடிப்பது மத்தலான்‌ மனத்தை வைக்க நினைப்ப கொல்‌ கற்றவர்‌
மயக்க மிக்க பவக்கடல்‌ வற்றவே.

63. விது வைத்த தலைச் சிவ னுக்குமலர்‌
மிசைவைத்த மறைந்பிர மற்குமிறை
புதுவைத்தல முற்ற முதுக் குறைவி புனை புத்தமிழ்‌ தத்தமி மிற்குமுடி மது வைத்த விதழ்த் தொடை யற்கு மகிழ்‌
மனம் வைத்து மணத்தைய ஸித்தபுயல்‌
பொது வைத்த நிதிக்கு நிகர்த்தவருள்‌
டொழியத்‌ தழைகிற்பது முற்றுமரோ.

64. சேப்படைத்த சவனயனே யெனலான
தெய்வதங்கள்‌ திகழ் மந்‌ தாரக்‌
காப்படைத்த விந்தரனே தலையாய
தேவர்நரர்‌ கனக மேரு
தேப்படைத்த பலகாடி யண்டமுதற்‌
பூதமெலாந்‌ திருமால்‌ நாபிப்‌
பூப்படைத்த தென்‌ றவன்பேர்‌ நாப்படைத்த
பயன்கொள்ளப்‌ புகல்வர்‌ மேலோர்‌ .

65. பரகாலனை முதலாகிய பழையோ ரருளானே
கரவாதுள மறவாதுன கழலே தொழு வேனே
நரநாரண வரிவாமன நளினாசனி நாதா
வரகாரண சகன்மோகன மதுசூதன மாலே.

66-துருவனுக்குயர்‌ நிலைகொடுத்தன
துருபதைக் கவிழ்‌ துகில் வளர்த்தன
சுமுக னுக்குள பயமொ ழித்தன வுலகாளும்‌
ஒருவ னுக்கெழில்‌ வளை தரித்தன
வுரைக ரிக்குயர்‌ கதி படைத்தன
வுலம ழைக்கொரும லையெ டுத்தன வுமை கேளவன்‌
சருவனுக்கிர வொழிய விட்டன
தசமுகற்கடு கணை தொ டுத்தன
சகல ருக்குநல்‌ வரம்விளைப்பன வடி நீழன்‌
மருவெனக்கிக பரம ளிப்பன
வடம லைக்குறு கடவு ணற்பொல
வரை யெனத் தரு தரு வெனப்படு புயமாதோ.

67-முறை க டந்து பிறர் ம டந்தை
முலை புணர்ந்த பழுதெலாந்‌
தறை கி டந்து புனல் படிந்து
தழலி னின்று மொழியுமோ
சிறை கி டந்த செனனம்‌ விஞ்சி
நரகு ழந்து தவிருமோ
மறை க டந்த வரமு குந்த மனமி ரங்கி யருள்வையே.

68-தானே வழங்க வறியாத
சலவா ரியையுன்‌ றயையினுக்கு
நானே யுவமை நவில்வதையு
நயந்துந்‌ தன்னை நல்கலிலா
வானே வளருங்‌ கற்பக மா
மரத்தை நினக்கொப்‌ புரைப்பதையுங்‌
கோனே நிளையுந்‌ தொறுமெனது
கொடிய மனமுங்‌ குலைவுறுமே.

69.மாறு பட்டுரிய கொழுந னுக்கியைய
வாழ்த லற்று மயல்‌ மனைகளில்‌
வயிறு பட்ட பசி தணிய லுற்றுவினை
வழியி யற்றிவரு கூலி கொண்‌
டூறு பட்டசிறு நிலையி னிற்குமவ
ளொருவ னுக்கென முன்‌ னாளினி
லுடைமை பட்டு மண முடிய லுற்றதனை
யுணர்வின்‌ வைத்து நிறை தன் மனம்‌
வேறு ட்டிலளு பட்‌ மாகி மற்ழெதையும்‌
விழைத லற்ற வளு மாயினால்‌
மெலியு மத் தெரிவை குணனை மெச்சிவரன்‌
மேவு காலமுள தாகுமால்‌
தூறு பட்டவினை யேனு னக்கடிமை
தொடர் விலிட்டுமுனை யல்லது
தொழ நி னைத்தவனு மிலையெ னத்தெரிவை
துளவு தொட்ட .முடி மாயனே.

70-தாயிருந்தும்‌ முலையினிற்பால்‌ தழைத்திருந்துந்‌ தரைக் கிடக்குந்‌ தருணந்‌ தானே
வாயருந்த மாட்டாத மகவினுக்கு
வாயின் முலை மடுக்குந்‌ தாய் போல்‌
நீயிருந்து நின் கணருள்‌ நிறைந்திருந்தும்‌
யானருந்தா நிலை கண்‌ டென்கண்‌.
மேயிருந்து நீயூட்டா வெளின்‌ மெலிவேன்‌
வசையுநினை மேவு மெந்தாய்‌.

71-அனும னுக்கு நளிர்க வென ச்சொலி
யழலின்‌ வெப்ப மகற்றி யளித்தவள்‌
அடல ரக்கர்‌ சிறையை யறுப்பதற்‌
கணுமு யற்சியு முற்றில எற்றென முனும யற்கு முதுமறை சொற்றவன்‌ முழுது யிர்க்கு முலகு படைத்தவன்‌
முதிரி ருட்கொர்‌ பரிதி யளித்தவன்‌
முகிலி டர்க்கு மலைமயை யெடுத்தவன்‌
தனுவெ வைக்கும்‌ நிறுவி வளர்ப்பவன்‌
தனய ருக்குண்‌ முலையை யமைப்பவன்‌
தழை. பயிர்க்கு மழையை விடுப்பவன்‌
தரணி துக்க மொழிய வுதிப்பவன்‌
இனும னுக்கு கொடிய பவக் கடல்‌
இழிய வைப்ப னெடுப்ப னெனக்கவன்‌
எழின்மி குத்த வருளின்‌ முறைப்படி .
இனிதி ருப்பதை யல்லது மொல்லுமே.

72. பொற்றை யுடலைப்‌ புறங்கழுவிப்‌
பொழுதே புசித்துப்‌ புனையர வப்‌
புற்றை விழைந்து புணர்ந்துறங்கும்‌ புன்மை யலது புவியினிடை
மற்றை யெதுவு மின்பமென
மதியேன்‌ பரமா வுனைத் துதியேன்‌
இற்றை நாளுன்‌ னடி யெண்ணி
யிருப்பேற்‌ கென்னீ யெண்ணுவதே.

73. கரியுந்‌ திருவீ டணனுமடத்‌
காகா சுரனுந்‌ துருபதையும்‌
பரியு மிடரா னு ளதநடுங்கிப்‌
பகவ னுனையே பற்றியபோ
துரிய தூய்மை முறை புரிய
வுணர்ந்து .மிலரா லன்னவர்க்கு
விரியு மரிய பெருங்கருணை
வினையேன்‌ தனக்கு முளதாமே.

74. பாந்தண்‌ மணிவாய்‌ விடமருத்திப்‌
படரு மழலி னிடைவீழ்த்திப்‌
படையி னறுத்து மலையுருட்டிப்‌
பதைக்க வதைக்கும்‌ படி.புரிந்துந்‌
தேந் தண்‌ டுளவத்‌ தொடைகமழுஞ்‌
செழுந்தாண்‌ மலரி னழுந்துமனந்‌
திறம்பாச்‌ சிறுவன்‌ மொழி காக்கத்‌
திருத் தூ ணுதித்துத்‌ தனைக்குவிக்குங்‌ காந்தண்‌ மெலியும்‌ விரற்கரத்தான்‌
கருத்தோன்‌ றிடங்காண்‌ டலைவேட்டுக்‌
கனக னுரங்கீண்‌ டுடற்றொடக்காற்‌
கரிய குடரு மெடுத்தணிந்து பூந்தண்‌ மாரி சுரருவந்து பொழிய வெல்லா வுயிர்க்குமளி
பொங்கி வழியுஞ்‌ சிங்கப்பிரான்‌
புகழே நினைவேற்‌ கிகழ்வுளதோ

75. எல்லா வுயிரு மெம்பெருமாற்‌
கினிய வுடலா யிருக்குமுடல்‌
பொல்லா தொருநோ யுறினதனைப்‌
போக்க முயற லுயிர்க்கன்‌ றித்‌
கல்லா வுடற்கு முளதாமோ
கடவுள்‌ கழற்கே யறத் தீர்ந்த
நல்லார்‌ தமக்குத்‌ தாமுயலார்‌
நங்கோ னருளி னடப்பாரே.

76. நம்பிரான்‌ காளிங்க நடன மாடி
நயந்ததனை யநுகரிக்க நயந்தார்‌ தம்மு
ளெம்பிரான்‌ றிருவேட மியைந்தா டன்னி
னிருங்காளி யன்வடிவ மெய்தி னாளே
அம்பிரா னடிக்கமலஞ்‌ சிரமேற்‌ றாங்கு
மருமையினாற்‌ பெருமை மிகப்‌ படைத்தாளன்னாள்‌
வெம்பிரா மனம் பழுத்த விழுத்த பத்தி வினையேற்குத்‌ இனையேனு மேவு மேயோ.

77–வாள் பிடித்த கண்ணியர் தம்‌ மயற்பேயின்‌
பேழ்வாயின்‌ மயங்கி வீழ்ந்து
தேள்பிடித்த கரப்பினுருச்‌ சிதைவேற்குச்‌
சேண்முழுதுஞ்‌ சென்று தாஅய
தாள்பிடித்து வழுத்தவிடாக்‌ கோள்பிடித்‌
சழக்குவிதி தணப்ப தெந்த நாள்பிடித்து நண்ணுறுமோ நண்ணாது
நரகிலெனை நாட்டு மேயோ.

78-ஆசையெலாம்‌ புகவல்ல மனமீ காம
னல்வழியிற்‌ செலவுய்க்கு மாக்கை நாவாய்‌
மாசையெலாம்‌ பண்டமெனச்‌ சுமந்தவாவாம்‌
வன்காற்றான்‌ மறுகுபவ வாரி யோடத்‌
தேசையெலா மிழந்ததன்கண்‌ வினையை யீட்டச்‌
சிறுநாய்க னெனநாயேன்‌ செறிந்தேன்‌ கண்டா
ரோசையெலா மிடவெமனாம்‌.பாறை தாக்கி
யுடையும்போ தென்னாவே னுடைய தேவே.

79-தாழியினுக்குமூயர்‌ வீடு கொ டுத்த முதல்‌ தாமரை யுற்ற திரு மா மகளுக் கழகன்‌
வேழ ம ழைக்குமுன மேவிய ளித்தவரன்‌
வேதமு தற்கலைகள்‌ யாவுமு யிர்த்தபரன்‌
ஏழும ரத்தினையு மூடுரு வச்சிலையின்‌
ஏவை விடுத்தபுய லீரடி யைப்பிடியார்‌
ஆழும்‌ வினைப்பிறவி யாகு மிடர்க்கடலில்‌
ஆவி திகைக்கவுழல்‌ வாரிது சத்தியமே,

80-ஒருகூற னுமை கேள்வ னொளிர்நாபி
யுறையாதி மறை வாண னொடு மாதவர்‌
புருகூதன்‌ முதலாய சுரர்யாரு
மறியாத பொருளாய தனிமாமுதல்‌
குருகூரர்‌ பரகாலர்‌ குளிர்கோதை
யதிராசர்‌ வரயோகி குருதாள்களின்‌
முருகூரு நறைவீசு தமிழோத ,
வெனையாள முனமே செய்‌ தவமேதரோ.

81-எய்தாலும்‌ வால்குழைக்கு மிருஞ்சுணங்கன்‌
பெருங்குணனு மில்லே னின்றேன்‌
பெய்தாலுங்‌ கைப்பறாப்‌ பேய்ச்சுரைக்காய்‌
போல்கின்றேன்‌ பெரு நூறம்மேற்‌
செய்தாலு மீவறியாச்‌ செல்வர்கடைக்‌
குழன்றிடர்கொ டீய னேற்கு
வைதாலும்‌ வீடளிக்கு மால் பதத்தை
முடிசூடி வழுத்த லாமே.

82-தூய நீயுயிர்‌, யாவும்‌ வீடு
துலங்கு மாறருள்‌. செய்யினுஞ்‌
சுத்த சத்துவ ருக்க.லாதொரு
துட்ட னேற்கது கிட்டுமோ
தீய ராவண னேனு நம்மொடு
சேர்க வென்ற தினத்திலே
சீல வீடண னன்றி மற்றெவர்‌
தேவ நின்னடி. சூடினார்‌
பாய மாமுகி லேழும்‌ வாழிய
பாரி லேமழை பெய்யினும்‌
பைந்த ருக்குல மல்ல தங்குள
பட்ட தாருத ழைக்குமே
ஆய யாவ முண்ண நல்குறு
மன்ன சாலையு ளாயினும்‌
அறப்ப சித்தவ ரன்றியேவ
ரருந்தி யின்புறு வாரரோ..

83–நீழலொன்று மிலாத பாலை
நெஞ்சு ரத்தி னிருந்ததோர்‌ நிறை குழைத்தரு வடிய டுத்தவர்‌ நெடு வெ யிற்றுயர்‌ தீர்பபோற்‌:
கேழ லென்றொரு ஞான மேனி
கிளர்ந்து கொண்டுல கங்களைக்‌
கீறு வெண்பிறை மாற மைந்தொளிர்‌
கேடில்‌ கொம்பிடை யேந்தினார்‌
வீழ லென்றும்‌ விழாமை யென்றுமிம்‌
மேதி னிக்கண்‌ மிடைந்த
தீ வினை ந ருங்கெடு குணமெ னுங்கறை
விரவு றாம லிருப்பரால்‌ –
தாழ லொன்றுமி லாது போயவர்‌
தாள்‌ டைந்தவர்‌ யாவருஞ்‌
சார்கொ டும்பவ நோயொ. ழித்துயர்‌
தணவி லின்படை வாரரோ.

84-‘திலத்தளவும்‌ பிறர்க்குதவாத்‌ தீயமன னாலே
சிதலைதின்‌ ற மதலையெனத்‌ இனமெலிந்து சாய்வேன்‌
சலத்தையடை தொறும்வேதத்‌ தனிக்கடவுள் யுன்னைத்‌
தயாவிலியென்‌ பேனென்றன்‌ சழக்குவினை யென்னேன்‌
நலத்த நெறி நடக்கறியா தடி யிழுக்கி வீழ்ந்து நனி துயரான்‌ முனி வெய்தி நடுங்குகர மோச்‌சத்‌
தலத்தை யறை குற்ற தளர்‌ நடைப் பருவக்‌ குழவி
தன்மதியென்‌ றுன்மதியிற்‌ சாலவழ கிற்றே.

85-தேனும்‌ பாலுங்‌ கன்னலும்போற்‌
றெவிட்டாச்‌ சுவைய தீந்தமிழின்‌
யானும்‌ பாட வல்லனென
ஞாலம்‌ புகழ்த னனிவிருப்போ
வானும்‌ பாரு மளந்தசெந்தா
மரைத்தாள்‌ விருப்போ நீயறிவை
மீனும்‌ பாழி யாமையுமாம்‌
விமலா நின்சீர்‌ விளம்புதற்கே.

86. தழலை நிகர்த்த துயர்ப் பிறவி
தழைக்கு நிலனா யயன்‌ றிருத்து
மழலை மொழிப்பெண்‌ மயிலனையார்‌
மயற்பேய்‌ பிடித்த மனக்குரங்குன்‌
கழலை வழுத்தி யமுது சுவை
காணா தினிய கரும்பிருக்க
விழலை வளர்க்கு மாத ரைப் போன்‌
மெலிதல்‌ விதியோ விழுப் பொருளே.

87. விள்ளற்‌ கரிய தொரு வீடும்‌
வேண்டா விறலின்‌ விழுப் பெரியார்‌
கொள்ளக்‌ குறையாப்‌ பெருங்கருணைக்‌
குவாலை முகந்து கொளவளிக்கும்‌
வள்ளல் கடவுள் திருவடிப்பூ மணக்காப் பனுவல் மாலை எலாம்
தள்ளப்‌ படுமா லீமம்சைத்‌
தயங்கு மாலை தனை நிகர்த்த

88-பவத்தைப்‌ புகுவேன்‌ பர மாயான்‌
பாவிற்‌ குழல் போ லுழல்‌வேனோ
தவத்தைப்‌ புகுவார்க்‌ குளதாமுன்‌
றயைதான்‌ றமியேற்‌ கிலதாமே.

89. நீயிருக்குங்‌ கோயிலென.நினையாம
லுடம்பிதனை நெடிய காலம்‌
பேயிருக்கும்‌ பாழ் மனையிற்‌ பெருங்கேடு
பெறவிகழ்ந்து பிறருக்‌ கச்ச
மாயிருக்குந்‌ இீயவினைத்‌ தூறுமண்டி
யழியவிட்டே னந்தோ சேய்க்குத்‌
தாயிருக்கு மாறிருக்குந்‌ தடங்கருணைப்‌
பெருங்கடலே தம்பி ரானே.

90. முத்த மிரங்கு முறுவனல்லார்‌
முலைக்கண்‌ மோத முரணழிந்து
நித்த மிரங்கும்‌ வகையுடைந்த
நெஞ்சப்‌ புணையே துணையாய்ப் போய்‌
நத்த மிரங்கும்‌ பவக்கடலி. னனிமூழம்‌ குவதொன்‌ றல்லாதுன்‌
சித்த மிரங்கும்‌ படிவேறென்‌
செயவ லேன் யான்‌.தெய்வதமே.

91. தேறா வொருவன்‌ றெங்கிளநீர்‌
செவ்வே நிறைந்த தீங்காயைச்‌
செங்கை வருந்த வசைத்த சைத்துச்‌
சிறிதுந்‌ தளும்பா வகையோர்ந்து
மாறா மிதுநீ ரிலதென்று
மருண்டு மாந்த முயலாது வறிதே யிகழ்ந்து விட்டாங்கு
வைய முழுது நிறைந்தெவர்க்கும்‌
பேறா யருளுக்‌ குருவான
பெருந்தே வூனப்‌ பேய்விழிக்குப்‌
பிறங்கா வியல்பா னிலையென்‌ று
பேணா திகழ்ந்து பெரும்பிறிதாய்‌
நீறாய்‌ நிலத்து விளிவேனை
நெடுமாற்‌ கேநீ யடிமையென
நினைவித்‌ தெடுத்தாண்‌ டதுஞான
நிதி போன்‌ மாற னெறித்தமிழே.

92. நெஞ்ச மென்ற கருங்கல்‌ கொண்டிடர்‌
நீர வெம்பவ வாரியி
னீடு செல்ல நினைந்து மூழ்குறு
நீச னேனகி லேசனே
தஞ்ச மென்றன னஞ்ச லென்‌ றரு
டந்தி டாயெனி னின்னையே
தந்தை தாய்கதி யென்று வேதம்‌
விதந்த துந்தவ றாகுமே கஞ்ச நாண்மல ரந்த ணன்றரு
கங்கை மோலிய ஸிந்திரர்‌
காசி லாதப ராச ராதியர்‌
காண வாசைகொள்‌ சேவடி
வஞ்ச னேனும வாவி னாலது
மாறெ னாநினை வாயெனின்‌
மாசு ளேற்கென வேறு பாதம்‌
வகுத்தி லாதென்‌ மாயனே.

93. முழுதுந்‌ தெளிந்து சலனங்கொ ளாது
முதுகுன்‌ றிருந்த சுனையிற்‌ பழுதின்‌ றிருந்த புனலின் கண்‌ வந்து படர்திங்க ணீழல்‌ படல்போற்‌று
ஓழுதொன்று தூய ருளமீது வந்து
சுடர்கின்ற சோதி யெனையே
கழுதென்று நின்ற கடையே னெனாது
கழறந்து வீடு தருமே.

94. வெருடருங்‌ கூற்ற மேற்றவெத்‌ நரகின்‌
விமுமமே கெழுமியும்‌ பல்கா
லுருட.ரும்‌ பிறவி யெனைப்பல கோடி
யுறுவதே பெறுவதாய்ப்‌ பொல்லா
இருடரு ஞாலத்‌ திடராலா முழந்து மிம்மியுங்‌ கழிந்திலா தந்தோ.
தெருடருந்‌ தேவுன்‌ னருளையு மறிக்குந்‌
திறத்‌த்‌ தென்‌ தீவினைத்‌ திரளே.

95. வான் மறந்த காலத்தும்‌ வழங்கு புனற்‌
பேராறு மான நின்னின்‌
றூன்மறந்த யோகியர் தமுளமறந்து
பருகவரு ளொழுகஈ நிற்ப: ,
தான்மறந்து நாவற்று நலிவெல்லா
முணர்ந்திலையே நற்றாய்‌ பி
‘தான்மறந்துந்‌ தான் மறவாள் எனல் பொய்யோ
தரைகடந்த சரணத்‌ தாயே.

96. உனக்குரிய வருட்கடலிற்‌ றிளைக்கும்‌ போதா
வொருதுளியிற்‌ றுளியெடுத்திங்‌ குரைக்கப்‌ புக்க
தெனக்கினிப்ப தென்னுமந்த வேது வன்றி
யாதுமோர்‌ பயன்கருஇ யில்லை கண்டாய்‌
‘தனக்கினிக்கு மெனத்தாய்ப்பா லுண்ப தல்லாற்‌
றன்னுடலம்‌ வளர்ப்பதெனச்‌ சற்றுப்‌ பிள்ளை ‘
மனக்கணினைப்‌ பில்லாத வாறு போல்வேன்‌
வரத்தவத்த ரமுதமென மடுக்குந்‌ தேவே.

97. மத்தேறு முதலாகப்‌ படாதனபட்‌
டுயிர்க்கருள வருமாத்‌ தெய்வம்‌
பித்தேறு மகவுக்கும்‌ பெரிதிடருற்‌
றுணவருத்தும்‌ பெற்றாண்‌ மான
தத்தேறு திருக்கரத்தான்‌ ஞாலமெலா நனியூட்டு நன்றி தேறார்‌ செத்தேறு பாடைமரஞ்‌ செய்பாவ
மென்னென்று செப்பு மாறே.

98-நலத்து மருந்தீங்கே நயக்கும் வெந்தீயேனாக
நாட்டமுதமே பெய்த கலத்துளும் கயப்பே சுவைக்குறும் இயல்பேன்
கண்ணநின்‌ கோயிலைச்‌ சூழும்‌
வலத்துளு நின்னை மதித்திடா துலக
வாழ்க்கையே மனக்கொள்வேன்‌ வைகு
நிலத்துளு மினிப்போ நீணர குளும்யா
னெடும்பொறை யாகுவே னம்மா.

99. மையோ மணியோ வெனுமேனி
மாயோனடித் தா மரை வாழ்த்தி
மெய்யோ புளக மரும்பவுளம்‌
வெந்தீ மெழுகின்‌ விரைந்துருகக்‌
கையோ தலைமேற்‌ குவித்தொருகாற்‌
கண்ணீர்‌ கலுழக்‌ கண்டறியேன்‌
ஐயோ வவன்ற னருட்பேரா
ற்ருந்த விழைந்தே னழகிதன்றே.

100. எள்ளற்‌ குரிய மனப்பேயார்க்‌
கேவற்‌ றொழில் செய்‌ திளைப்பேனைக்‌
கொள்ளக்‌ கருதிற்‌ -கொடும்பாவக்‌
கோட்டை யகத்தேன்‌ குணமிலென் று
தள்ளக்‌ கருதி னவன்றாளே
சரணம்‌ புகுந்தே னிவையிரண்டால்‌
விள்ளற்‌ கரிய விழுக்கடவுட்‌
கடியே னிடரே விளைத்தேனே.

101. தாய்வ யிற்றிடை வைத்த தார்கரு
தான ருத்தி வளர்த்ததார்‌ தலையி னிற்பொறி யிட்ட தார்நல
தரையி னிற்பெற விட்டதார்‌
பாய்வ யிற்றுயர்‌ போது தாய்முலை
பால்பி லிற்ற விழைத்ததார்‌
பளக றப்பயி றற்கெ னப்பல
பாடை மைப்புவி நட்டதார்‌
நோய்வ யிற்புக லுற்ற காலையி
னொய்தெ டுத்து நிறுத்ததார்‌  நுவலுக்கடை யுதரம்‌ வைத்துயிர்‌
நுதலி யற்பொ டணைத்ததார்‌
நாய்வ யிற்றிகழ்‌ குணமி லேனையும்‌
நன்னெறிச் செல  வுய்த்ததார்‌
நான்மு. கத்தொரு சேய்படைத்தொளிர்‌
நாபி மெய்ப்பொரு ளன்‌ றியே.

102. விழிவழியே தெரிகின்ற பேய்த்தேரை
நீரென்று விழைவுற்‌ நாரும்‌ குழிவழியாய்‌. வழிகுழியாங்‌ குருட்ருநல்‌ லொளியரெனக்‌ குறித்துக்‌ கூறப்‌
பழிவழியே யொழுகியிருட்‌ பாழ்ங்குழியில்‌
வீழ்கிற்பேன்‌ பரமா நிற்கே
வழிவழியா யுளவடியார்‌ மாந்துதிரு
வருட்காசை வைக்க லாமே.

103. பத்திச்‌ சுவையே பழுத்தமனப்‌
பகவ ரமுதப்‌ பழம்பாடல்‌
நத்திச்‌ சுவைதேர்‌. திருச்செவிக்கு
‘நவில்வார்‌ நாவுங்‌ கயக்கும்வெஞ்சொல்‌
வித்திச்‌ சுவையே நவையாக
விளைத்த வருத்த மித்தனைக்கு
முத்துச்‌ சுவைநல்‌ கருட்கடவுண்‌
முனியா யிதுவ முன்னருளே.

104. பீட்டைப்‌ புரிந்த பெருந்தமிழிற்‌
பிறவா நெறியே நனிகாட்டி
நாட்டைப்‌ புரிந்த தெருட்பெரியார்‌
நயந்த கடவுட்‌ பத்திமைதான்‌
கேட்டைப்‌ புரிந்தேற்‌ கணுவேனுங்
இடையா திவைகொண்‌் டுளதெனின்யான்‌
பாட்டைப்‌ புரிந்து படி.றியற்றிப்‌
பாரை மயக்கும்‌ பாதகனே.

105.– செகத்தைப்‌ புரக்கக்‌ கவித்த முடி
இருந்த வெழுதித்‌ தேசெழுதேன்‌
செந்தா மரைக்க ணெழுதியருட்‌
டேனார்‌ வெள்ளந்‌ தெரித்தெழுதேன்‌
முகத்தைப்‌ புதுக்கி யெழுதிமணி
மூறுவ னிலவை முகிழ்த்தெழுதேன்‌
மொய்யா ரகல மெழுதிமலர்‌
முதல்வி கோயின்‌ முடித்தெழுதேன்‌.

106. அகட்டைப்‌ புனைய வெழுதியூல
கனைத்து மடங்கு மாறெழுதேன்‌
அணியார்‌ நாபி யெழுதிமறை
வவனார்‌ வரவை யமைத்தெழுதேன்‌
இகத்தைப்‌ பரத்தை யளிககுமடி வயெழுதி யெமைக்காப்‌ பதையெழுதேன்‌
எழுதா மறைக்கு மரியவனை
யெழுதி யேமாந்‌ திருந்தேனே

707. தன்னையே தந்தையெனச்‌ சார்ந்தார்க்கோர்‌ தந்‌ தையையும்‌
பின்னையே நல்காப்‌ பெருங்கடவுள்‌–முன்னையே
தன்னையே தந்தையெனச்‌ சாரார்க்‌ கநந்தபிதா
என்னையோ நல்கு மியல்பு.

108, கொலைக்களிற்றிற்‌ கொண்ட குளிர்முத்தை யுப்பு
விலைக்குக்‌ கொடுத்த. விதமே–நிலைத்ததமிழ்ப்‌
பாவைப்‌ பிறர்க்குப்‌ பகர்ந்த பிழை, தீர
நாவைக்‌ கழுவினே னான்‌.

109. கற்ற நயித்துருவ காகுபனி. ராகவன்யான்‌.
சொற்ற தமிழ்க்குச்‌ *சுவைதேறார்‌–உற்ற
ஒருங்குலக மெல்லா மொருவாயி னுண்ட
பெருங்கடவுள் அல்லாற்‌*பிற்‌:

*கேள்வியாற்‌. செவிகண்முற்றுந்‌’ தோட்டவருணர்‌
வினுண்ணு மமுதத்தின்‌… சுவையாய்‌ நின்றான்‌” என்பது
கம்பநாடர்‌. . திருவாக்கு… (இராமாவதாரம்‌. ஆரணிய.சவரி பிறப்‌. 7)

——————-

ஸ்ரீ ராமப்பாட்டு

மதியிருக்குஞ்‌ சடைச்சிவனார்‌ மனைவியினுக்‌
குபதேசம்‌ வகுத்துக்‌ கங்கை
நதியிருக்குந்‌ தண்காசி நகர்மரிக்கு
மூயிர்க்கெல்லா நல்கக்‌ கஞ்சப்‌
பொதியிருக்கு மறைமுதல்வன்‌ பொறியழித்து
வீடளிக்கும்‌ பொற்பிற்‌ றென்று
விதியிருக்கு முடிவழுத்து மெய்ந்நாமம்‌
ராமவென விளம்பு வாயே.

2-தாதையார்‌ நாரதற்குத்‌ தந்த நாமம்‌
தவமுனிவன்‌ வான்மீகி சாற்று நாமம்‌
மேதையார்‌ ஞானியார் தாம்‌ விள்ளு நாமம்‌
விபீடணற்குப்‌ பேறருள மிக்க நாமம்‌
தீதையா ருற்றாலுந்‌ தீர்க்கு நாமம்‌
தேவரெலாஞ்‌ செபிக்கின்ற தெய்வ நாமம்‌
சதையா ருயிர் தளிர்க்கச்‌ செய்க நாமம்‌
சீராம நாமமெனச்‌ செப்பு வாயே.

3. குரு வடிவ வசிட்டன் மகிழ்‌ கூர்ந்த நாமம்‌
கோசிகனார்‌ வழிபட்டுக்‌ கொண்ட நாமம்‌
கருவடியிற்‌ புகாநெறியே காட்டு நாமம்‌
கவந்தனொடு விராதனுயிர்‌ களிக்கு நாமம்‌
மருவடிய ரெல்லாரும்‌ வாழ்த்து நாமம்‌
மந்திரங்கட்‌ கரசெனவே வகுத்த நாமம்‌
திருவடிக்கின்‌ னமுதாத்தித்‌ திக்கு நாமம்‌
சீராம நாமமெனச்‌.செப்பு வாயே.

4. இகத்துக்கும்‌ பரத்துக்கு மேற்ற நாமம்‌
* இருக்கனைத்து நாந்தியினி னியம்பு நாமம்‌
மகத்துக்குப்‌ புகல்கின்‌ற மகிமை நாமம்‌
மாதவயோ கியருளத்தே வரைந்த நாமம்‌
முகத்துக்கின்‌ சுவைத்தாக முளைத்த நாமம்‌
மூன்னொரு புள்‌ சிறை முளைக்க மொழிந்த நாமம்‌
செகத்துக்குந்‌ திவியினுக்குஞ்‌ சிறந்த நாமம்‌
சீராம நாமமெனச்‌ செப்பு வாயே.

* – ராமபத்ரன்‌ விஷயமான “பத்ரங்கர்ணேபி’ என்னுஞ்‌
சுருதியே நாந்தியாதலால்‌ இங்ஙனங்‌ கூறியது.

5. உலகினிலெட்‌. டைந்தினுக்கு ளூயிரா நாமம்‌
உறங்காத வில்வியுளத்‌ துறைந்த நாமம்‌
பலகலைதேர்‌. சரபங்கர்‌ பன்னு நாமம்‌ பாய புகழ்க்‌ கவியரசர்‌ பாடு நாமம்‌
இலகலைவாமழ்‌ வருணன்மகிழ்ந்‌ தேத்து நாமம்‌
இத்திரசித்‌ தனை வதைக்க வெண்ணு நாமம்‌
சிலவிலங்குஞ்‌ செப்பவருள்‌ செய்த நாமம்‌
சீராம நாமமெனச்‌ செப்பு வாயே.–எட்டு -திருமந்திரம்-அஷ்டாக்ஷரம் ஐந்து சிவ பஞ்சாக்ஷரம்

6. கல்லாருங்‌ கற்றாருங்‌ கற்கு நாமம்‌
* கங்கை முதற்‌ நீர்த்தபலன்‌ காட்டு நாம
வில்லாரும்‌ வீரர் செயம்‌ வேண்டு நாமம்‌
மெய்ம்மைக்கே பரியாய மேய நாமம்‌
சொல்லாருஞ்‌ சொலவேட்குந்‌ தூய நாமம்‌
தோமரக்க ரளத்தச்சந்‌ தோற்று நாமம்‌
செல்லாரு மழையினருள்‌ சிறக்கு நாமம்‌
சீராம நாமமெனச்‌ செப்பு வாயே.—*-தீர்த்த ஸ்நாநம் அநந்த கோடி பலதம் ஸ்ரீ ராம நாம அம்ருதம்

7-அரிய குகப்‌ பெருமாளா தரித்த நாமம்‌
ஆயிர நா மப்பயனு மளிக்கு நாமம்‌
பெரியதிரு வடி.பரவும்‌ பெரிய நாமம்‌
பெரும் புண்ணி யப் பயனாப்‌ பிறங்கு நாமம்‌
உரியதந்தை யங்கதனுக்‌ கோது நாமம்‌
ஓன்னாரும்‌ வழுத்துபுக முற்ற நாமம்‌
தெரியவழற்‌ தடவுள் முனந்‌ தெளித்த நாமம்‌
சீராம நாமமெனச்‌ செப்பு வாயே.

* “நிற்கின்ற செல்வம்‌ வேண்டி நெறி நின்ற வுயிர்க ளெல்லாங்‌ கற்கின்ற திவன்ற னாமங்‌ கருதுவ திவனைக்‌
சுண்டாய்‌’” என்று அங்கதனுக்‌ குரைப்பது காண்க.

8.–இசையியற்கண்‌ வாயார-வேத்து நாமம்‌
இம்மையே நன்மை தரு மினிய நாமம்‌
தசையறச் சு தீக்கணற்கு நயக்கு நாமம்‌
நமபட.ரு மிறைஞ்சி யகல்‌ நல்ல நாமம்‌
பசையறுத்த பரதனுளம்‌ பதித்த நாமம்‌
பனிமொழியா ளகலிகைநற்‌ பயன்கொ ணாமம்‌
திசையனைத்துந்‌ தொழவுரைத்துத்‌ திருந்து நாமம்‌
ராம நாமமெனச்‌ செப்பு வாயே.–இசைக்கண்ணும்‌ இயற்கண்ணும்‌ என்க.

9. மலய முனி யுலகறிய வழுத்து நாமம்‌
மலரயனே முதற்றேவர்‌ வாழ்த்து நாமம்‌
அலையுமுயிர்க்‌ கெலாமபய மளிக்கு, நாமம்‌
அத்திரி மா முனியறித்த வமுத நாமம்‌
நிலையில் பிறுப்‌ யற வெருவை நினைந்த நாமம்‌
நீண் நகரம் புகுவார் தாம் நினையா நாமம்
சிலைவலவன்‌ சத்துகுக்கன்‌ தேறு தாமம்‌
சீராம நாமமெனச்‌ செப்பு வாயே.

10. எத்திக்கு மெழுமுனிவ ரேத்து நாமம்‌
எவ்வுயிர்க்குஞ்‌ சீவனமா வெண்ணு நாமம்‌
பத்திக்கு மூலமெனப்‌ பன்னு நாமம்‌
பரமசிவ னுமையவட்குப்‌ பகர்ந்த நாமம்‌ முத்திக்கு வித்தாக முன்னு நாமம்‌
முதியவரு மிளையவரு மொழியு நாமம்‌
சித்திக்கு மந்திரமாத்‌ தேர்ந்த நாமம்‌
சீராம நாமமெனச்‌ செப்பு வாயே.

17, * தாரணியிற்‌ கலிதெறுவே தாந்த நாமம்‌
சபரிநெடுங்‌ காலமுளஞ்‌ சமைத்த நாமம்‌
பேரணியி னவர்க்குநலம்‌ பேணு நாமம்‌
பிரிய வந சூயை புகழ்‌ பேசு நாமம்‌
ஏரணியுந்‌ திரிசடைக்கு மினிய நாமம்‌
யான்சொலவு மெளிவந்த வின்ப நாமம்‌
சீரணியு முமையவள்முன்‌ றெளிந்த நாமம்‌
சீராம நாமமென்று சேர்க வீடே.

காராரு மேனிக்‌ கருணாகர மூர்த்திசக்
காரா தனையிதுவா வாதரித்து–நாரானே
சீராம நாமத்‌ திருப்பாட்‌ டிவணுரைத்தான்‌-மாரா கவன் கவிஞர் மன்

வரி சிலை நெடியேபன் பேர் படைத்தவர்க்கு
அடியவர்க்கு அடியரும் பெறுவார்
வேர் படைத்த எம் பிறவி யாற்றுவக் குணா வீடு -கம்பர்

————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ரா. இராகவையங்கார்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading