ஸ்ரீ நிதி ஸ்வாமிகள் கார்த்திகையில் கார்த்திகையில் திருவவதரித்து அருளிச் செய்த
ஸ்ரீ நாச்சியார் கோயில் ஸ்ரீ கல் கருடன் மேல் 102 ஸ்லோகங்கள் கொண்ட பிரபந்தம் இது
விஹாரம் என்ற பகுதிகளாகப் பிரித்து அருளிச் செய்துள்ளார்-விஹாரம் ஸஞ்சாரம் என்றவாறு –
கவிதா ஜித கல்லோலி கன்யகா காந்த வக்ஷஸே
கருணாதி குணடாட்யாய கமலா நிதயே நம-
பாற் கடல் கொதிக்கின்றது என்று அத்தை விட்டு திருமார்பில் அமர்ந்து
அகலகில்லேன் இறையும் என்று நித்ய வாஸம் செய்பவள்
தம்முடைய கவிதையினால் அலை மகளை மார்பில் கொண்டுள்ள எம்பெருமானை வென்றவர் என்றபடி
அவனைத் தனது கவிதைகளால் வசப்படுத்தியவர்
கருணாதி குண் டாட் யாய –கருணை முதலிய குணங்கள் நிறைந்தவர்
கமலா நிதயே நம-இவர் திரு நாமம் ஸ்ரீ நிதி -அவருக்கு பிரணாமங்கள் என்றவாறு
வைராக்ய -விஜித -ஸ்வாந்தை ப்ரபத்தி விஜி தேஸ்வரை
அநு க்ரோஸ ஏக விஜிதை இத் உபாதேஸி தேசிகை –வைராக்யம் மூலம் மனதை வெற்றி கொண்ட ஆச்சார்யர்கள்
ஆனு மானித அதிகரணத்தில் யமன் நசிகேதஸத்துக்கும் உபதேசம்
தஸ்ய ச வசீகரணம் தச் ஸரணாகதி ரேவ -சரணாகதி மூலம் அவனையும் நம் வசப்படுத்தலாம் என்கிறார்
ப்ரபத்தி விஜி தேஸ்வரை-இப்படி பிரபத்தி செய்து வெற்றி கொண்டவர்கள் நம் ஆச்சார்யர்கள்
அநு க்ரோஸ ஏக விஜிதை-
புகழ் புண்ணியம் பொருளுக்கும் வசப்படாத ஆச்சார்யர்கள் இரக்கத்தின் வசப்பட்டு உபதேசிக்கிறார்கள்
——-
ஸூபர்ணன்
தார்ஷ்யன்
வைநதேயன்
வாயு வாஹனன்
நாகாந்தகன்
ஸூதா ஹரன் –
ஸூதா கரன்
ககேஸ்வரன்
ககநேஸ்வரன்
பக்ஷி ராஜன்
ஷேம காரீ -போன்ற திரு நாமங்கள் பெரிய திருவடிக்கு உண்டே
———–
முதல் விஹாரம் -மஹா ப்ராஸ விஹாரம் –12 ஸ்லோகங்கள்
ஒவ்வொரு அடியிலும் முகப்பில் உள்ள தொடர்கள் ஒரே மாதிரியாக இருக்கும்
ஸ்ரீ லஷ்மீ ஸதநே ஸ்திதம் கலயதே ஸ்ரீ பக்ஷி ராஷாய தே
ஸ்ரீ லஷ்மீ பகவத் விவாஹ விதயே ஹேதுத்வ மாதஸ் துஷே
ஸ்ரீ லஷ்மீ பகவத் ஸூவாஹ மணயே வேதவ்க பூர்ணாத்மநே
ஸ்ரீ லஷ்மீ ஸதநாதி வாஞ்சித வராந் ஸத்யஸ் ப்ரதாத்ரே நம -1-
ஸ்ரீ நாச்சியார் கோயிலில் எழுந்து அருளி இருப்பவரும்
ஸ்ரீ நாச்சியாருக்கு ஸ்ரீ நம்பிக்கும் திருக் கல்யாணம் நடக்கக் காரணமானவரும்
இருவருக்கும் வாஹனமாக விளங்குபவசரும்
வேதமே வடிவு எடுத்தவரும்
செல்வம் வேத ஞானம் இல்லம் போன்ற அனைத்து அபீஷ்டங்களையும் அருளும் ஸ்ரீ கருட பகவானுக்கு வணக்கம் –
———-
இரண்டாம் விஹாரம் —ப்ராஸ விஹாரம்
இதில் 15 ஸ்லோகங்கள் உள்ளன
ஒவ்வொரு ஸ்லோகத்திலும் எதுகை அணி அமைந்துள்ளது
இதில் முதல் ஸ்லோகம்
ரஷஸஸ் தநு பவேந பாதிதம் ரக்ஷதஸ்தவ ததா ரகூத் வஹம்
பக்ஷ பாத விபவோ அஸ்து தாதருசஸ் ஸ ஷணாய பதகேந்த்ர மே ஸதா –இரண்டாம் எழுத்து ஷ
கருட பகவானே ராக்ஷசனான ராவணன் மகனால் வீழ்த்தப்பட்ட ராமனைக் காத்த இறக்கைகள்
உடைய கருட பகவானே அந்த வீச்சு எனக்கு எப்பொழுதும் விழாக் காலமாகவே இருக்கும்படி அருள்வதாகுக
——-
மூன்றாம் விஹாரம் –அநு ப்ராஸ விஹாரம்
இதில் 26 ஸ்லோகங்கள் -மோனை நயம் -ஒவ்வொரு அடியிலும் முதல் எழுத்து ஒன்றாகவே இருக்கும்
இதில் முதல் ஸ்லோகம்
பரஸ்ய பும்ஸ ப்ரணய ஏக பாத்ரம் பயோதிஜா பத்தன க்லுப்த வாஸ
பதோ தர ப்ராண கணாப ஹாரீ பதங்க ராஜ பரிதஸ் ஸ பாது
பரமபுருஷனின் அன்புக்குப் பாத்ரமானவரும்
திருமகளின் திரு நகரான நாச்சியார் கோயிலிலே வஸிப்பவரும்
வயிற்றையே காலாக யுடைய பாம்புகளின் உயிரை அபஹரிப்பவருமான
பக்ஷி ராஜன் அடியோங்களை எல்லாப் புறங்களிலும் இருந்து கொண்டு ரக்ஷித்து அருள வேண்டும் –
————-
நான்காம் விஹாரம் –சமத்கார விஹாரம்
இதில் 34 ஸ்லோகங்கள் -பலவிதப் பொருள் அணிகள் கொண்டது –
இதில் முதல் ஸ்லோகம்
சஷுஸ் ஸ்ருதிநாம் சரமாம் தஸாம் யந் நாஸா நிஜாக்ரேண ஸ்ருஜத்ய ஜஸ்ரம்
ஸ வைநதேயஸ் ஸ்ருதி ப்ருந்த ரூப ஸ்ருதீ ருதைஸ் ஸ்வை பரித புனாது
கருட பகவான் கண்ணையே காதாக யுடைய பாம்புகளுக்கு தனது மூக்கினாலேயே இறுதி நிலையைத் தருகிறார்
அவர் வேதமே வடிவெடுத்தவர்
நமது காதுகளை அவர் தனது ஒலிகளால் புனிதமாக்க வேண்டும்
இந்த ஸ்லோகத்தில் கண் காது மூக்கு பற்றிய குறிப்புக்கள் உள்ளன
————-
இதில் 27 ஸ்லோகம் உரையாடல் வடிவில் அமைந்துள்ளது -எல்லே இளங்கிளி போல்
ஸ்வாமின் வஞ்சுள வல்லி -கேந பவதா நாவிஷ் க்ருதா பாஹவ
ஸத் வாரோ அத்ர புஜ த்வயம் புனரிதம் சங்காய சக்ராய ச
காந்தே பக்த தமோ மம ப்ரிய ஸூஹ்ருத் மத் வாஹநேந்த்ரோ வரோ
பாஹு த்வந்த்வ யுதோ மமாபி ததலம் –ஸ்வாமின் நமஸ்தே நம
வஞ்சுள வல்லி -பகவானே
ஸ்ரீ நிவாஸன் -வஞ்சுள வல்லி
வஞ்சுள வல்லி –நான்கு கரங்களையும் காட்டாமல் சங்கு சக்கரங்களோடு இரண்டு திருக்கைகளுடன் மட்டும் நீர் எழுந்து அருளி இருப்பது எதனால்
ஸ்ரீ நிவாஸன் -எனது சிறந்து பக்தனும் நண்பனுமான கருடன் இரண்டு திருக்கைகளோடே தானே இருக்கிறான்
எனவே நானும் அவனைப் போலவே இரண்டு கைகளோடு இருக்கிறேன்
வஞ்சுள வல்லி –எம்பெருமானே அடியார்களுக்கு ஏற்றபடி தன்னை அமைத்துக் கொள்ளும் தன்மை யுடைய உனக்கு நமஸ்காரங்கள்
நிறம் வெளிது செய்து பசிது கரிது-யுகம் தோறும் அவரவர் விரும்பியபடியே தன்னை அமைத்துக் கொள்ளுமவன்
—————
ஐந்தாம் விஹாரம் – பிரார்த்தனா விஹாரம்
இதில் 15 ஸ்லோகங்கள் -இதில் 11 வது ஸ்லோகம்
ஸ்வாமின் பஷீஸ் வராஸ்மின் குருமயி கருணா மீஷேதே தன்ம மாலம்
யேந ஸ்யுஸ்தே புஜங்க ப்ரமுக விஷ தரா கோசார நாஷி மார்கே
ஷேமோ பூய குடும்பே ஸ்வய மதி மஹிதோ வர்தமானோ மம ஸ்யாத்
ஸ்ரீ மன் நாராயணோ அபி ஸ்வய மதி குதுகீ ஸ்வைர் மமாத்கே ஸதா ஸ்யாத்
ஸ்வாமியே -பறவைகளின் தலைவனே -பாம்புகள் போன்ற விஷ ஜந்துக்களும் தீயவர்களும் அடியேனுடைய பார்வையில் படாமலும்
அடியேனுடைய குடும்பத்தில் நன்மையும் செல்வமும் சிறப்பும் செழிப்பும் ஏற்பட்டு
ஸ்ரீ மன் நாராயணன் அவனுடைய ஸமஸ்த பரிவாரங்களோடு வந்து எப்போதும்
அடியோங்களுக்குத் துணையாகும்படி நீ கருணை கூர்ந்து அநுக்ரஹிக்க வேண்டும் இதுவே போதும்
இதில் 15 வது ஸ்லோகத்தில் கருடனிடம் சரணாகதி செய்கிறார்
ஸரோஜ வாஸா ஸதநே வஸந்தம்
ஸரோஷா மாச்சின்ன ஸரீ ஸ்ரு பவ்கம்
ஸரோக மேதம் ஸூகி நம் விதாதும்
ஸரோ மஹர்ஷ சரணம் ப்ரபத்யே
நாச்சியார் கோயிலில் வசிப்பவரும்-சினத்துடன் பாம்புகளை துவம்சம் செய்பவருமான கருடன்
வியாதியுடன் கூடிய அடியோங்கள் நலம் பெறும்படி அருள் புரிய வேண்டும்
என்று பிரார்த்தித்து மயிர்க்கூச்சு எரிய அவரிடம் சரணாகதி செய்கிறேன்
ஸ்வாமி சரணாகதி செய்தவுடன் ஆம் என்று கருடன் கூறி அருளியதால் விளைவாக மயிர்க்கூச்சு எரிகிறார்
இதன் பல ஸ்ருதி ஸ்லோகம்
ஸ்ரீ நிவாஸ கவி தல்ல ஜக் லுப்தம்
ஸ்ரீ நிவாஸ வஸதே பதகேந்தோ
ஸ்ரீ நிவாஸ சதகம் படிதம் சேத்
ஸ்ரீ நிவாஸ சதகம் ப்ரததாதி
ஸ்ரீ நிதி கவி எழுதிய நாச்சியார் கோயில் கல் கருடன் பற்றிய இந்தச் செல்வம் நிறைந்த ஸ்துதியைப் படிப்பவர்கள்
செல்வம் நிறைந்த நூற்றுக் கணக்கான வீடு செல்வம் எல்லாம் பெற்று இன்புற்று வாழ்வார்கள்
———–
முதல் விஹாரம் -மஹாப்ராஸ விஹாரம் –12 ஸ்லோகங்கள்
ஒவ்வொரு அடியிலும் முகப்பில் உள்ள தொடர்கள் ஒரே மாதிரியாக இருக்கும்
ஸ்ரீ லஷ்மீ ஸதநே ஸ்திதம் கலயதே ஸ்ரீ பக்ஷி ராஷாய தே
ஸ்ரீ லஷ்மீ பகவத் விவாஹ விதயே ஹேதுத்வ மாதஸ் துஷே
ஸ்ரீ லஷ்மீ பகவத் ஸூவாஹ மணயே வேதவ்க பூர்ணாத்மநே
ஸ்ரீ லஷ்மீ ஸதநாதி வாஞ்சித வராந் ஸத்யஸ் ப்ரதாத்ரே நம -1-
மேதாவி மஹரிஷியின் மகளாக அவதரித்த ஸ்ரீ நாச்சியார் கோயிலில் எழுந்து அருளி இருப்பவரும்
ஸ்ரீ நாச்சியாருக்கு ஸ்ரீ நம்பிக்கும் திருக் கல்யாணம் நடக்கக் காரணமானவரும்
இருவருக்கும் வாஹனமாக விளங்குபவரும்
வேதமே வடிவு எடுத்தவரும்
செல்வம் வேத ஞானம் இல்லம் போன்ற அனைத்து அபீஷ்டங்களையும் –ஸத்யஸ்-விரைந்து அருளும் ஸ்ரீ கருட பகவானுக்கு வணக்கம் –
நேத்ரம் காயத்ரமூசி த்ரிவ்ருத் இதி ச சிரோ நாமதேயம் யஜும்ஷி
சந்தாம் சி அங்கானி திஷ் நியதாம் அபி அஜனி சபை விக்ரஹோ வாம தேவ்யம்
யஸ்ய ஸ்தோமாத்மந அசவ் ப்ருஹத் இதர கருத் தாத்ர்சாம்நாத புச்ச
ஸ்வா சந்த்யம் ந ப்ரஸூதாம் ஸ்ருதி சத சிகர அபிஷ்டுதாத்மா கருத்மான் —கருட பஞ்சாசஸ் -3-
சாமவேத சோமனே கருத்மான் -காயத்ரி மந்திரமே–காயந்தம் த்ராயதி இதி-அவன் திருக் கண்கள் -த்ரி விருத் மந்திரமே அவன் திரு முடி –
யஜுர் வேதமே அவன் திரு நாமம் – வேத சந்தஸ் ஸூக்களே அவன் அங்கங்கள்
“ஸ்தோமம்” என்னும் ஸாம வேத பாகமே அவரது ஆத்ம ஸ்வரூபம்.
“காயத்ரம்” என்கிற ஸாமம் அவருக்கு கண்கள்.
“த்ரிவ்ருத்” என்ற ஸாமம் அவருக்கு சிரசு.
யஜுர் வேதங்கள் அவருடைய திருநாமங்கள்.
சந்தஸ்ஸுக்கள் அவரது திருக் கரங்கள்.
“திஷ்ண்யம்” எனப்படும் வேள்வி மேடைகள் அவரது திருப்பாதங்கள்.
“வாமதேவ்யம்” என்கிற ஸாமம் அவரது திருமேனி,
“ப்ருஹத்” , “ரதந்தரம்” என்னும் ஸாமங்கள் அவருடைய இரு சிறகுகள்.
“யஜ்ஞாயஜ்ஞியம்” என்கிற ஸாமம் அவருக்கு வால்.
இவ்வாறு வேத பாகங்களெல்லாம் கருடனுடைய திருமேனிகளாய் விளங்குவதால்
கருடனை “வேத ஸ்வரூபன்” என்கிறார்கள் பெரியோர்.
——-
அம்ருத கலச சிந்தோர் அந்தரங்கே சயாநம்
அம்ருத கலச ஸிந்தோ கன்யகா முத் வஹந்தம்
அம்ருத கலச ஸிந்தும் கஞ்சித் அம்ஸே வஹந்தம்
அம்ருத கலச ஹஸ்தம் பாவயே பக்ஷி ராஜம் –2-
அம்ருத கலச சிந்தோர் அந்தரங்கே சயாநம்
அம்ருத மயமான பாற் கடலில் பள்ளி கொண்டு இருப்பவனும்
வ்யூஹ மூர்த்திகள் போலவே நறையூரிலும்
வாஸூ தேவன்
ப்ரத்யும்னன்
அநிருத்தன்
புருஷோத்தமன்
ஸங்கர்ஷணன் -என்ற ஐவராக சேவை சாதித்து அருளுவதால் இந்த பதங்கள் பிரயோகம்
அம்ருத கலச ஸிந்தோ கன்யகா முத் வஹந்தம்
வக்ஷஸ்தலத்திலும் வஞ்சுள வல்லி நித்ய வாஸம் இங்கும் உண்டே-உத் வஹந்தம்-மணந்து கொண்டவர்
சனிக் கிழமை இங்கு சேவித்தால் 16 முறை திருமலை அப்பனை சேவித்த பலம் உண்டு என்பார்கள்
அம்ருத கலச ஸிந்தும் கஞ்சித் அம்ஸே வஹந்தம்
அம்ருதம் அமரர்கட்க்கு ஈந்த மிளிர் சுடர் ஆழி நெடுமால்
அமுதினும் ஆற்ற இனியான் நிமிர் திரை நீள் கடலானே என்று நம்மாழ்வார் அருளிச் செய்தபடியே
ஆராவமுதமான எம்பேருமானைத் திருத் தோள்களில்-அம்ஸே- வஹிப்பவனும்
அம்ருத கலச ஹஸ்தம் பாவயே பக்ஷி ராஜம்
அம்ருத கலச பிரசாதம் வியாழக்கிழமை தோறும் இங்கு உண்டே
———-
இந்த ஸ்லோகத்தைக் கேட்டவுடனே -அமுதம் போல் உள்ளதே -என்று சொல்லி ரசித்தான் புள்ளரையன்
இதே போல் அமுத மயமான ஸ்லோகங்களை மேலும் இயற்ற அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்
பாக ஸாஸன சிலா மய ஆக்ருத
பாக ஸாஸன ஸஹோதர ப்ரிய
பாக ஸாஸன திசேஹ பக்ஷிணாம்
பாக மஸ்ய கவிதாஸூ கஞ்சன –3-
பாக ஸாஸன சிலா மய ஆக்ருதே
இந்த்ர நீலக் கல் போன்ற கல்லான வடிவத்தை யுடையவனே
பாக ஸாஸன ஸஹோதர ப்ரிய
இந்திரனின் ஸஹோதரனான உபேந்த்ரனான எம்பெருமானின் நண்பனே
தாஸஸ் ஸகா வாஹநம் ஆஸநம் த்வஜோ
யஸ்தே விதாநம் வ்யஜநம் த்ரயீமய: |
உபஸ்திதம் தேந புரோ கருத்மதா
த்வதங்க்ரி ஸம்மர்த்த கிணாங்கஶோபிநா ||–ஸ்தோத்ர ரத்ன ஶ்லோகம் 41 –
வேதங்களையே அங்கங்களாக உடைய அந்த கருடாழ்வார், உனக்கு அடியவனாகவும், நண்பனாகவும், வாஹனமாகவும்,
ஆஸனமாகவும், கொடியாகவும், விதானமாகவும், சாமரமாகவும் இருக்கிறார்;
மேலும் உன்னுடைய திருவடிகள் அவருடைய தோள்களில் அழுத்தியதால் ஏற்பட்ட தழும்புகளாலே ஒளிவிடுகிறார்;
உன்னுடைய ஸன்னிதியில் இப்படிப்பட்ட கருடாழ்வாரால் நீ வணங்கப்படுகிறாய் —
பாக ஸாஸன திசேஹ பக்ஷிணாம்
பறவைகளின் இந்திரனே -அரையனே –
இன்றும் நாச்சியார் கோயில் வெளிப்பிரகாரத்தில் மாலை வேளையில் அமர்ந்தால் பறவைகள் கூட்டமாக
ஒலி எழுப்பிக் கொண்டு அவ்வழியாகச் செல்வதைக் காணலாம்
அவைகள் ஸ்தோத்ரம் செய்யும் ஒலியே இது –
பாக மஸ்ய கவிதாஸூ கஞ்சன
அடியேனுடைய கவி அனைவரும் மகிழும்படியான பாகத்தில் -நடையில் -இருக்கும்படி நீ அருள வேண்டும் –
———-
கருடன் நாகங்களை அடக்கி தனது மேனி முழுவதும் ஆபரணமாக அணிந்துள்ளான்.
பூணூல் : வாசுகி
வலது கை கங்கணம்: குளிகன்
இடது கை கங்கணம் : ஆதி சேஷன்
அரையில் அணி: தட்சகன்
மாலை: கார்கோடகன்.
வலது காது குண்டலம்: பத்மன்
இடது காது குண்டலம் : மஹா பத்மன்
திருமுடியில் : சங்க பாலன்—சங்க ஸூடன் என்றும் சொல்வர்
விடமுடைய பாம்பின் உடம்பையும் உயிரையும் உண்ணும் பறவை கருடன்.
அக்கருடனுடைய அரைக்கசையாக, கைகளில் தோள் வளைகளாக, முடி மேல், காது குண்டலங்களாக விளங்கும்
ஆபரணங்கள் எல்லாம் பாம்பு, குடையும் பாம்பு என்று பரிபாடல் கூறுகின்றது.
விடமுடை அரவின் உடலுயிர் உருங்கு உவணம் அவன்
மடிமேல் வலந்தது பாம்பு பாம்பு தொடி பாம்பு தலைமேலது பாம்பு
இறை தலையன பாம்பு படிமதம் சாய்த்தோய் பசும் பூனலை
கொடிமேலிருந்தவன் தாக்கு இரையது பாம்பு – பரிபாடல்
எல்லா கருடனிலும் அஷ்ட நாகங்கள் ஆபரணமாக விளங்கும்
ஆனால் இந்த கல் கருடனில் ஒன்பது நாகங்கள் ஆபரணமாக உள்ளன,
ஒன்பதாவது நாகம் கருடனின் வாளை அலங்கரிக்கின்றது.
பரிஷ்கார வர்ணக–
வாமே வைகுண்ட சய்யா பணிபதி கடகோ வாஸூகி ப்ரஹ்ம ஸூத்ர
ரஷேந் நஸ்தஷ கேண க்ரதித கடி தடஸ் சாரு கார்க்கோட ஹார
பத்மம் கர்ணேஸ் ப அசேவ்யே ப்ரதிமவதி மஹா பத்ம மந்யத்ர பிப்ரத்
சூடாயாம் சங்க பாலம் குளிகமபி புஜே தஷிணே பக்ஷிமல்ல -ஸ்ரீ கருட பஞ்சாசத் —36-
ஆதி சேஷனே கையில் கங்கணம் -வாஸூகி பூணூல் -தக்ஷகன் கழுத்துக்கு ஆபரணம்
கார்க்கோடன் -ஹாரம் -பத்ம மஹா பத்ம காதுகளுக்கு ஆபரணங்கள்
சங்க பாலன் திரு முடியில் -குளிகன் தோல் வளை
இப்படி முக்கிய அஷ்ட சர்ப்பங்கள் சேவை உண்டே –
நாக பாசத்தால் இந்திரஜித் இளையபெருமாளை கட்ட, அவர் மயங்கி விழுந்த போது
அந்த கட்டிலிருந்து விடுவித்தவன் கருடன். அதற்காக இராம பிரானின் தழுவுதல பெற்றவன் கருடன். ”
ககநகர கனககிரி கரிமதர நிகம்மய நிஜ கருட கருதநில லவகளித விஷவதநக்ர கதந” என்று
ஸ்வாமி தேசிகன் இவ் வைபவத்தை பாடுகின்றார்.
————
கலச ஜலதி கந்யா கேஹ கேஹ லஸந்தம்
கலச ஜலதி கந்யா காந்த காந்தம்
கலச மம்ருத பூர்ணம் ஹஸ்த பத்மே ததாநம்
கலச ஜலதி கந்யா வீக்ஷிதம் ஸந் நமாமி –4-
கலச ஜலதி கந்யா கேஹ கேஹ லஸந்தம்
ஆவிர்பாவ கலச ஜலதவ் -என்று ஸ்வாமி தேசிகன் சாதித்தபடி
பாற் கடலில் தோன்றிய மஹா லஷ்மியின் திருக் கோயிலான நாச்சியார் கோயிலில்
தனிக்கோயில் ஸந்நிதியில் எழுந்து அருளி இருப்பவரை-லஸந்தம்-ஒளி வீசுகிறவரே
கலச ஜலதி கந்யா காந்த காந்தம்
அந்தப்பிராட்டியாரின் அழகான கணவனான எம்பெருமானைத் தாங்குபவரை
க்ரீடேயம் கலு நான்ய தாஸ்ய ரஸதா ஸ்யாத் ஐகரஸ்யாத்தயா -ஆழ்வான் ஸ்ரீ ஸூக்தியின் படி
அந்யோன்ய திவ்ய தம்பதி
கொடியைத் தாங்கும் கொம்பு -அழகிய கேள்வன்
வைகுண்ட பீடி க்ருத்ஸகந்தம் –கருட தண்டகத்தில் ஸ்வாமி தேசிகன் –
கலச மம்ருத பூர்ணம் ஹஸ்த பத்மே ததாநம்
அம்ருதம் நிறைந்த கலசத்தைத் தனது கரங்களிலே ஏந்தியவர்
தோள்களிலோ ஆராவமுதம்
கரங்களிலோ தேவாம்ருதமான உப்புச் சாறு
கலச ஜலதி கந்யா வீக்ஷிதம் ஸந் நமாமி
பிராட்டியின் கடாக்ஷத்துக்கு இலக்கானவரை வணங்குகிறேன்
ஸஹ ஸ்திர பரித்ரஸ வ்ரஜ விரிஞ்சந அகிஞ்சனை:
அநோகஹ ப்ருஹஸ்பதி ப்ரபல விக்லப ப்ரக்ரியம்
இதம் ஸதஸதாத்மநா நிகிலம் ஏவ நிம்நோந்நதம்
கடாக்ஷ தத் உபேக்ஷயோ: தவ ஹி லக்ஷ்மி தத் தாண்டவம்–ஸ்ரீ குணரத்ன கோஸம்–18-
மஹா லக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! இந்த உலகில் – அசையாமல் ஒரே இடத்தில் உள்ள தாவரங்கள், அசையும் பொருள்கள்,
மிக உயர்ந்த ப்ரம்மன் – எதுவும் இல்லாத பிச்சைக்காரன், மரம் போன்றவன், ஞானம் மிகுந்த ப்ரஹஸ்பதி போன்றவன்,
பலம் மிகுந்தவன், பலம் இல்லாதவன் என்று இப்படியாக மேடும் பள்ளமும் உள்ளன. இப்படி இருக்கக் காரணம் என்ன?
இது இவ்வாறு இருப்பது – உனது கடாக்ஷம் கிடைப்பதாலும், கிடைக்காமல் இருப்பதாலும் அன்றோ?
இவை உனது ஒரு விளையாட்டாக அல்லவா உள்ளது?
இங்கு இவை அனைத்தும் இவளுக்கு நாட்டியம் ஆடுவது போன்று பொழுது போக்கு அம்சமாக அல்லவா உள்ளது?
பங்குனி உத்திர மண்டபத்தில் நம்பெருமாள் ஸ்ரீரங்கநாச்சியாருகாகக் காத்து நிற்கும் காட்சி.
இந்த உலகில் உள்ள உயிர்கள் மட்டும் இவளால் ஏற்றம் பெறுவதில்லை. நம்பெருமாளும் அப்படியேதான்.
இவள் வந்தால் அல்லவோ இந்த மண்டபத்திற்கும், இந்த உற்சவத்திற்கும் பொருளுண்டு??
நம்பெருமாள் மட்டும் இங்கு நின்றால் என்ன பெருமை உள்ளது?
இவள் இங்கு வந்து கடாக்ஷித்ததால் அன்றோ எம்பெருமானார் வாயிலாக கத்ய த்ரயம் வெளிப்பட்டது?
—————-
பத்மாலயே அதி மதுரே க்ருத நித்ய வாஸ
பத்மா பிராம மதுநாசந க்லுப்த சித்த
பத்மா பிஜாத சுப வாஹன ஹம்ஸ ஸேவ்ய
பத்ம அஸி தேஷண நிப பரிபாது பத்ரீ –5-
பத்மாலயே அதி மதுரே க்ருத நித்ய வாஸ
இங்கு நித்ய வாஸம் செய்து அருள்பவர்
சிற்பி ஒரே கல்லில் வடிக்க -தத்ரூபமாக இருந்த அது பறக்கத் தொடங்க
உளியால் சிற்பி கருடனை அடிக்க மூக்கில் அடிபட்டு விழ
மறையாரும் பெரு வேள்விக் கொழும் புகை போய் வளர்ந்து எங்கும்
நிறை யார வான் மூடும் நீள் செல்வத் திரு நறையூரில் எழிலைக் கண்டதும்
வேத ஸ்வரூபி அங்கேயே நித்ய வாஸம் செய்து அருளுகிறார் என்பர்
பத்மா பிராம மதுநாசந க்லுப்த சித்த
பிராட்டிக்கு ஆனந்தம் தந்து அருளுபவரும்
மதுவை நிரஸித்து அருளிய எம்பெருமா-ஹயகிரிவர் – இடத்திலேயே சித்தம் வைத்து விருப்பவர்
விஷ்ணு சித்தரும் பெரிய திருவடியின் அம்சமே அன்றோ
ஹயக்ரீவருக்கு பெரிய திருவடிக்கு வியாழக்கிழமை குருவாரம் மிகவும் உகந்தது
கருட மந்த்ரம் ஜபித்து யாரும் தவம் செய்த ஸ்வாமி தேசிகனுக்கு ப்ரத்யக்ஷமாக வந்து
ஹயக்ரீவ விக்ரஹத்தையும் வழிபட அருளி
ஹயக்ரீவ மந்திரத்தையும் உபதேசித்து அருளினார் அன்றோ
பத்மா பிஜாத சுப வாஹன ஹம்ஸ ஸேவ்ய
தாமரையில் தோன்றிய நான்முகனின் வாகனமான அன்னப் பறவையால் வணங்கப்படும் புள்ளரையன்
அன்னப் பறவை மற்ற எல்லாப் பறவைகளுக்கும் உப லக்ஷணம்
பத்ம அஸி தேஷண நிப பரிபாது பத்ரீ
மைத்தடம் கண்ணி என்றும் மைய கண்ணாள் என்றும் கொண்டாடப்படும் பிராட்டியுடைய திருக் கண்களைப் போல் திரு மேனி கொண்டவர்
கருடன் பொன் வண்ணத்தவரானாலும் இங்கு கல் கருடனாக ஸேவை சாதித்து அருளுவதால் இவ்வாறே கொள்ள வேண்டும்
பிராட்டி எம்பெருமானை ஸதா பஸ்யந்தி பண்ணுவதால் பெற்ற மை வண்ணம் போல்
இவரது திருமேனியும் ஸதா பஸ்யந்தி யாலேயே வந்த வர்ணம்
இப்படிப்பட்ட பெரிய திருவடி நம்மை ரக்ஷிக்கட்டும்
————
ஜகன் மாதுர் கேஹே நகர வ்ருஷபே பூர்ண விபவே
ஜகன் மாதுர் கேஹேம் பஜ யுகள மத்யம் நிஜமயம்
ஜகன் மாதா கிருஷ்ணாஜிந பிஹி தமாஹோ ச கலயன்
ஜகன் மாநம் த்ருஷ்ட்வா பதக பதிமாநந்த மயதே –6-
ஜகன் மாதுர் கேஹே நகர வ்ருஷபே பூர்ண விபவே
வைபவ வளங்கள் நிறைந்த திவ்ய தேசம்-
ஒரே ஆழ்வார் 110 பாசுரங்கள் -பெற்ற திவ்ய தேசம் -வேறே எந்த திவ்ய தேசத்துக்கும் இந்தப்பெருமை இல்லையே
பொன் முத்தும் அரி யுகிரும் புழைக் கைம்மா கரிக்கோடும்
மின்னத்தன் திரை யுந்தும் வியன் பொன்னித் திரு நறையூர்
மின்னொத்த நுண் மருங்குல் மெல்லியளைத் திரு மார்பில்
மன்னித்தான் வைத்துகந்தான் மலரடியே அடை நெஞ்சே
ஜகன் மாதுர் கேஹேம் பஜ யுகள மத்யம்
திருமார்பில் பிராட்டியைக் கொண்டவன்
ஜகன் மாதா கிருஷ்ணாஜிந பிஹி தமாஹோ ச கலயன்
மான் தோலால் மறைத்துக் கொண்டு வாமனனாய் யாசகம் கேட்டுச் சென்றான்
மான் கொண்ட தோல் மார்வின் மாணியாய் மாவலி மண்
தான் கொண்டு தாளால் அளந்த பெருமானைத்
தேன் கொண்ட சாரல் திரு வேங்கடத்தானை
நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே
ஜகன் மாநம் த்ருஷ்ட்வா பதக பதிமாநந்த மயதே
ஓங்கி உலகளந்த பெரிய தோற்றத்தோடு பெரிய திருவடி ஸேவை
நான்கு எட்டு பேர் என்று கூட்டிக் கூட்டி 128 பேர் எழுந்து அருளச் செய்ய வேண்டும் படியான விஸ்வ ரூபம் அன்றோ
இந்தப் பெருமையை கண்டு மிதுன தம்பதிகள் மகிழ்வார்கள் அன்றோ-
————-
ஆஸ்லேஷா தார தேவான் ஹ்ருதி பய பரிதான் ஸந்ததம் குர்வதஸ்தான்
ஆஸ்லேஷா தாத்ம தார த்வயகர கலி தாத் ஆதி மூலஸ்ய பும்ஸஸ்
ஆஸ்லேஷா தூரு ஜாதத் அதிகத மஹித அநந்த யோகஸ்ய வீந்தோ
ஆஸ்லேஷம் புத்திர் ஏஷா மம சமதிகதா மோஹ மம்ஹோ ப்ரயாதி –7–
ஆஸ்லேஷா தார தேவான்–ஆயில்யம் என்ற நக்ஷத்திரத்துக்கு தேவர்களானவர்களை-நாகங்கள் நக்ஷத்ரம் -லஷ்மணன் -ஆயில்யம்
ஹ்ருதி பய பரிதான் ஸந்ததம் குர்வதஸ்தான்–மனதில் பயத்துடன் நிரம்பினவர்களாக எப்போதும் செய்பவரும்
ஆஸ்லேஷா தாத்ம தார த்வய கர — தமது இரு மனையாளான தேவிமார் களின் இருவரின் கைகளால்
கலி தாத் –தழுவுதலாலும்
ஆதி மூலஸ்ய பும்ஸஸ் ஆஸ்லேஷாத் ஊரு ஜாதத் அதிகத மஹித -உலகிற்கு எல்லாம் ஆதி காரணமான பரம புருஷனான புருஷோத்தமனின் தொடையில் இருந்து தோன்றிய ஐந்தவான ஊர்வசியின் அணைப்பை விட பெரிய இன்பம் அடையும்
அநந்த யோகஸ்ய வீந்தோ –அடையப்பட்ட பெருமை பொருந்திய சேர்க்கையை யுடைய பஷிகளின் தலைவனான கருடனின்-வீ -பறவை
ஆஸ்லேஷம் புத்திர் –தழுவுதலே அடைந்த அடியேனது புத்தியானது
ஏஷா மம சமதிகதா மோஹம் அம்ஹோ ப்ரயாதி –மோஹத்தை அடைகிறது -இது என்ன பெரிய வியப்பு
ஊரு ஜாதர் -ஒவ்ரவர் என்னும் மகரிஷி -ஸ்ரீ வத்ஸ கோத்ரத்து ப்ரபவர் பற்றி அருளிச் செய்ததாகவுமாம்
———
கமலஸ்தித தேவதா க்ருஹே
கமல ஸ்ரீ ஹரி நேத்ர வாஹனம்
கமலம் கலயந்தம் ஆஸ்ரயே
கமல ஸ்ரீ கர ஸூத சோதரம் –8-
கமலஸ்தித தேவதா க்ருஹே-நாச்சியார் கோயிலிலே
கமல ஸ்ரீ ஹரி-தாமரைக்கண்ணன்
மிதுன திவ்ய தம்பதியை எழுந்து அருளப் பண்ணும் திருத்தேர் போன்ற வாஹனமானவர்
அனைவருக்கும் கமலாந்தமான ஐஸ்வர்யத்தை அருள்பவர்-கம் அலம் போதுமான மகிழ்ச்சி
தாமரையை மலரச் செய்யும் ஸூர்யனின் தேரோட்டியான அருணனுக்கு ஸஹோதரர்
இவரை அடியேன் ஆஸ்ரயிக்கிறேன்
————-
பத்மம் கர்ணே வஹதி ச பவான் பத்ம நாபம் ததாம்ஸே
பத்மம் கர்ணே பதக நிரூபதே தம் மஹாந்தம் பரஸ்மின்
பத்மகார ஸ்த்வமிதி யததஸ் ஸ்வ அநுரூபே பவித்ரே
பத்மா காரே நனு புரவரே ஸாதரோ வர்த்தஸே அஸ்மின் –9-
பத்மம் கர்ணே வஹதி ச பவான் -நீங்கள் பத்மம் பாம்பு அணிகலன்
பத்ம நாபம் ததாம்ஸே–தோளில் பத்ம நாபன்
பத்மம் கர்ணே பதக நிரூபதே தம் மஹாந்தம் பரஸ்மின்-இடது காதில் மஹா பத்மம் பாம்பு அணிகலன்
பத்மகார ஸ்த்வமிதி -பத்மத்துக்கு இருப்பிடமாகவே உள்ளீர்
யததஸ் -அதனாலேயே
ஸ்வ அநுரூபே பவித்ரே பத்மா காரே நனு புரவரே -இந்த ஷேத்ரத்தில்
ஸாதரோ வர்த்தஸே அஸ்மின்-உகந்து அருளி உள்ளீர்
பாம்புகளுக்கும் கருடனுக்கும் பகை மூண்டு –பாம்புகளை பூண்டோடு அழிக்க கருடன் முற்பட்டார்
இதைக் கண்ட சர்ப்ப ராஜன் கருடனிடம் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு
தினம் ஒரு பாம்பை ஆஹாரமாக அனுப்பி வைக்கிறேன் -வம்சம் முழுவதையும் அழிக்காதீர் என்று சொல்ல
கருடனும் அதுக்கு ஸம்மதித்தாராம்
தோளில் பத்ம நாபனைத் தங்கி இருக்கிறார் -அதற்குத் தக்கபடி பரிசுத்தமான திவ்ய தேச வாஸம்
கருடன் நாகங்களை அடக்கி தனது மேனி முழுவதும் ஆபரணமாக அணிந்துள்ளான்.
பூணூல் : வாசுகி
வலது கை கங்கணம்: குளிகன்
இடது கை கங்கணம் : ஆதி சேஷன்
அரையில் அணி: தட்சகன்
மாலை: கார்கோடகன்.
வலது காது குண்டலம்: பத்மன்
இடது காது குண்டலம் : மஹா பத்மன்
திருமுடியில் : சங்க பாலன்—சங்க ஸூடன் என்றும் சொல்வர்
எல்லா கருடனிலும் அஷ்ட நாகங்கள் ஆபரணமாக விளங்கும்
ஆனால் இந்த கல் கருடனில் ஒன்பது நாகங்கள் ஆபரணமாக உள்ளன,
ஒன்பதாவது நாகம் கருடனின் வாளை அலங்கரிக்கின்றது.
———–
கமடம் கரடிம் ச பஷயன்
கமலம் ஹந்த ஸதாம் விவர்த்தயன்
கமலாலய பூஷணம் ஸ மே
கமலா காந்தா தர கரோது ஸம் —
கமடம் கரடிம் ச பஷயன் -கருடன் யானையையும் ஆமையையும் உண்ட சரித்ரம்
சாந்த்ரா க்ரோத அனுபந்தாத் ஸரஸி நகமுகே பாதபே கண்ட சைலே
துண்டாக்ரே கண்ட ரந்த்ரே ததனு ச ஜடரே நிர்விசேஷம் யுயுத்ஸூ
அவ்யாதஸ்மாந் அப்வ்யாத விதித நகர ஸ்ரேணி தம்ஷ்ட்ரா பிகாதவ்
ஜீவக்ராஹம் க்ருஹீத்வா கமட கரடிநவ் பக்ஷயன் பஷிமல்ல –ஸ்ரீ கருட பஞ்சாசத்-18-
விபாவசு சுப்ரதீகா -இருவரும் சகோதரர்கள் -சொத்துக்காக சண்டை போட்டு ஒருவர் ஒருவர் மேல் சாபம் –
யானை-கமட — ஆமை-கரடிநவ்–யாக பிறக்க -கோபம் தொடர -சாந்த்ரா க்ரோத அனுபந்தாத் –
இந்த பிறவியிலும் சண்டை போட ஸரஸி -சரஸுக்கு கொண்டு செல்ல அங்கும் சண்டை போட
நகமுகே பாதபே கண்டசைலே -நகத்தால் மரத்துக்கு மேலே கொண்டு செல்ல அங்கும் சண்டை போட
வாயால் கவ்வி -வயற்றில் விழுங்க அங்கும் சண்டை போட்டார்கள்
பஷிமல்ல-புள்ளரையன் -நம்மை ரக்ஷிக்கட்டும்-
கமலம் ஹந்த ஸதாம் விவர்த்தயன்
கம் -அலம் -போதுமான அளவு ஆனந்தம்
ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் என்று அறிந்து
அசன்னேவ ச பவதி அஸத் ப்ரஹ்மேதி வேத சேத்
அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத சந்தமேனம் ததோ விதுரதி
சத்துக்களுக்குப் போதுமான ஆனந்தத்தைப் பக்ஷிராஜன் வளர்த்துக் கொடுக்கிறான் –
கமலாலய பூஷணம்
நாச்சியார் கோயிலுக்கே ஆபரணம் அன்றோ பெரிய திருவடி
ஸ மே கமலா காந்தா தர கரோது ஸம்
எம்பெருமானுக்கு வாஹனமாக விளங்கும் கருடாழ்வார் அடியேனுக்கு –கரோது ஸம்-மங்களத்தை உண்டாக்கட்டும் –
————
ஸூர ஸம் ஸரஸிஜால யவத்யா
ஸூர ஸம் ச தத ஏவ ஜகத்யாம்
ஸூர ஸந் நயநம் அத்ர வஹந்தம்
ஸூர ஸாரதி ஸஹோதரம் பஜே –11-
ஸூரஸம் ஸரஸிஜால யவத்யா
தாமாரையாளான வஞ்சுள வல்லித் தாயாரை ஏந்தி இருக்கும் திரு மார்பு
திகழ்கின்ற திரு மார்பில் திரு மங்கை தன்னோடும் திகழ்கின்ற திருமால்
கழற்ற ஒண்ணாத திரு ஆபரணம் அன்றோ இவள்
ஸூரஸம் ச தத ஏவ ஜகத்யாம்
ஸூரஸம்–ஸூ உ ரஸம் -நல்ல ரஸத்தோடு கூடியவள்
உகாரம் பிராட்டிக்கு வாசகம்
அக்ரதவ் ப்ரயயவ் ராம ஸீதா மத்யே ஸூ மத்யமா
ப்ருஷ்ட தஸ்து தனுஷ் பாணி லஷ்மணோ ஆஜுஹாவ ஹ -ப்ரணவமே நடந்து சென்ற காட்சியின் விவரணம்
சுவையன் திருவின் மணாளன் -இவளுடன் சேர்ந்து இருப்பதாலேயே நல்ல ரஸத்தை யுடையவனாக எம்பெருமான் விளங்குகிறான்
ஸூர ஸந் நயநம் அத்ர வஹந்தம்
திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல்
ஸூர -ஸூர்யன் –
ஸத் -நக்ஷத்ரங்களின் தலைவனான சந்திரன்
தனது கண்களாக யுடைய எம்பெருமானுக்கு வாஹனம்
அநாதி மத்ய அந்தம் அநந்த வீர்யம் அநந்த பாஹும் சசி ஸூர்ய நேத்ரம்
பஸ்யாமி த்வாம் தீப்த ஹுதாச வக்த்ரம் ஸூவ தேஜஸா விஸ்வ மிதம் தபந்தம் ––
இந்த கீதா ஸ்லோக பாஷ்யத்தில் –சசி ஸூர்ய நேத்ரம் -என்பதற்கு
சசிவத் ஸூர்யவத் ச ப்ரஸாத ப்ரதாப யுக்த ஸர்வ நேத்ரம்
தேவாதீந் அநு கூலான் நமஸ்காராதி குர்வான் ப்ரதி ப்ரஸாதவ்
தத் விபரீதான் அஸூர ராக்ஷஸாதீன் ப்ரதி ப்ரதாபவ்
அனுக்ரஹத்தையும் நிக்ரஹத்தையும் கருடாரூடனாய் இருந்தே செய்து அருள்கிறான் என்கிறார்
ஸூர ஸாரதி ஸஹோதரம் பஜே —
ஸூர்யனின் சாரதியான அருணனின் ஸஹோதரன்
இவரைப் போற்றுகிறேன் -வணங்குகிறேன் –
———–
பஷீந்த்ர ரஷேதி வதந்தி லோகா
பஷீந்த்ர பஸ்யேதி வதந்தி கேசித்
பஷீந்த்ர லஷீ க்ருத பக்தி பாவ
பஷீ க்ருதோ ரக்ஷஸி பவ்ய ஸப்த –12-
பஷீந்த்ர ரஷேதி வதந்தி லோகா
உலகில் பல பக்தர்கள் ரக்ஷணத்துக்கு உம்மைப் பிரார்த்திக்கிறார்கள்
பஷீந்த்ர பஸ்யேதி வதந்தி கேசித்
வேறே சிலர் உமது கடாக்ஷத்தைப் பிரார்த்திக்கிறார்கள்
பஷீந்த்ர லஷீ க்ருத பக்தி பாவ
அப்படிப்பட்ட பக்தர்களுக்கு இலக்காக விளங்கும் புள்ளரையன்
பஷீ க்ருதோ ரக்ஷஸி பவ்ய ஸப்த —
தன்னுடைய மங்களமான ஒலிகளாலே அனைத்து மங்களங்களும் அருள்கிறாய்
பக்தரின் பிரார்த்தனையில் உமது திரு நாம சங்கீர்தன குரலால் மங்களங்கள் உண்டாகின்றன என்றுமாம் –
மதுரா தரணி கிரஸ்தே மது ஜிதபி ஸ்ரோதும் உத்ஸூகோ நிரதாம்
ஸ்ரவணே ஜநிமத ஸூர பத நகரீ நாதத்வ மப்யாய –வஸூ மதி ஸதக ஸ்லோகம்
பூமா தேவியின் பேச்சு தேனைப் போல் மதுரமாக உள்ளது
அது மதுவை வென்ற எம்பெருமானையே ஈர்த்து விட்டது
அந்த மதுரமான பேச்சை ஸ்ரவணம் செய்யவே ஸ்ரவண நக்ஷத்திரத்தில் திருவவதரித்தான்
ஆகாசம் ஒலிகளை நன்றாக ஊடுறவச் செய்வதால் ஆகாச நகரான திரு விண்ணகரிலே வந்து அவதரித்தான்
அதே போலவே வேத யோ விஹ்ருதம் ததங்க மதவா தத்தே ஸ தே ப்ரீதயே -என்றபடியே
வேத ஸ்வரூபியான கருடனின் மங்கள ஒலிகளைக் கேட்பதற்காகவே நம்பி இங்கு வந்து நித்ய வாஸம் செய்து அருள்கிறான்
தனது மங்கள ஒலிகளாலே உலகுக்கு மங்களங்களை அருளுகிறார் –
——————-
இரண்டாம் விஹாரம் —ப்ராஸ விஹாரம்
இதில் 15 ஸ்லோகங்கள் உள்ளன
ஒவ்வொரு ஸ்லோகத்திலும் எதுகை அணி அமைந்துள்ளது
இதில் முதல் ஸ்லோகம்
ரஷஸஸ் தநு பவேந பாதிதம்
ரக்ஷதஸ்தவ ததா ரகூத் வஹம்
பக்ஷ பாத விபவோ அஸ்து தாதருசஸ்
ஸஷணாய பதகேந்த்ர மே ஸதா -13–இரண்டாம் எழுத்து ஷ
கருட பகவானே ராக்ஷசனான ராவணன் மகனால் வீழ்த்தப்பட்ட ராமனைக் காத்த இறக்கைகள்
உடைய கருட பகவானே அந்த வீச்சு எனக்கு எப்பொழுதும் விழாக் காலமாகவே இருக்கும்படி அருள்வதாகுக
பதகேந்த்ர–ஓ கருட பகவானே
ரஷஸஸ் தநு பவேந–ராக்ஷசனான ராவணனின் மைந்தனான இந்த்ரஜித்தினால்
பாதிதம்–விழும்படி செய்த நாக அஸ்திரத்தினால் கட்டுண்ட இளைய பெருமாள் படுத்த நிலையில் இருந்தார்
ரகூத் வஹம்–ரகு குலத்தில் பிறந்த லஷ்மணரை
ததா –அப்பொழுது
ரக்ஷதஸ் தவ-ரஷிப்பதற்கு உன்னுடைய
பக்ஷ பாத விபவோ –இறக்கைகளின் வீசல் ஆகிய லீலை ஏற்படுகிறது
தாதருசஸ்–அது போன்ற லீலை
அஸ்து ஸ ஷணாய மே ஸதா–என்னுடைய பிரதிபந்தங்கள் கழிந்து நிரதிசய ஆனந்தம் பெற இருக்கட்டும் –
இராமாயண ஸ்லோகத்தில் உள்ள அதே பத பிரயோகம் இங்கும்
கம்பர் மாண்ட தீஷித புத்ரனை எழுப்பிய வ்ருத்தாந்தம்
என்று இன்ன பன்னி அழிவான் எறிந்த எரி சோதி கீற இருள் போய்
பொன் துன்னி அன்ன வெயில் வீசுகின்ற பொருள் கண்டு நின்ற புகழோன்
நின்று உன்னி உன்னி இவன் யாவன் என்று நினைகின்ற எல்லை நிமிரச்
சென்று உன்னும் முன்னர் உடன் ஆயினன் இவ் வுலகு ஏழும் மூடு சிறையான்
வாசம் கலந்த மரை நாள நூலின் வகை என்பது என்னை -மழை என்று
ஆ சங்கை கொண்ட கொடை மீளி அண்ணல் சர ராமன் வெண்ணெய் அணுகும்
நேசம் கலந்த மறை வாணர் செஞ்சொல் அறிவாளர் என்று இம் முதலோர்
பாசம் கலந்த பசி போல் அகன்ற பதகன் துரந்த உரகம்
இந்த ஸ்லோகத்தில் கருடனின் இறக்கை வீச்சுப் போலவே –மந்த்ர அக்ஷரங்கள் அமைந்து உள்ளன
இந்திரஜித் புத்தி
லஷ்மணன் ஜீவாத்மா
வேத கோஷம் கேட்டு அறிந்து புத்தியை அவன் இடம் செலுத்தி உஜ்ஜீவிப்போம்
———-
சிலா மயீ தே தனு ரத்ர பக்ஷின்
கலாபி காந்தா கவ சோஜ் ஜ்வலேயம்
மலானி மன் நேத்ர கதானி நித்யம்
விலாஸ லேசேந வினா கரோது–14-
ஓ பக்ஷி ராஜனே உம்முடைய இத் திருமேனி இவ் விடத்திலே மயில் போல் காந்தி உடையதாகவும்
கருங்கல் மயமாகவும் பிரகாசமான கவசத்தைத் தரித்துக் கொண்டும் விளங்குகிறது
என்னுடைய கண்ணில் உண்டாகிற அழுக்கை -விஷயாந்தர ப்ராவண்யத்தை –
உமது இறக்கைகளின் விலாஸத்தின் துளியால் இல்லாமல் செய்து அருள்வாய்
————-
அம்ஸா ஸ்ரயம் கஞ்சன காள மேகம்
கம்ஸாந்தகம் ரஞ்ஜயதோ நிநாதை
ஸம்ஸாஸ் பதம் விக்ரம வைகரீஸா
த்வம்ஸாய பூயாத் அக சந்த தேர்ந –15-
கருட பகவான் தனது முதுகை இருப்பிடமாகக் கொண்ட ஒரு காள மேகம் போல் விளங்குகிற
எப்பொழுதும் ப்ரசம்ஸை செய்து கொண்டு வரும் கம்சனை அழித்த பகவான் கண்ணனை
தனது சப்தங்களால் ஆனந்தப் படுத்திக் கொண்டு இருக்கிறார்
அந்தப் பராக்ரம வீர தீரச் செயல் எங்களுடைய பாப கூட்டங்களை ஒழிக்க விளங்கட்டும் –
———–
பணிதிபிர் அமலாப் ருத்தி தாங்க
மணி ரபி பாதுஸ பக்ஷிணா மயம் ந
குணி வர புருஷோத்தமஸ்ய வாஹ
பணி ரமணீ ரமணீ யதா நிராஸ–16–
அர்த்த சம விருத்தம் புஷ்பி தாக்ரா விருத்தம் – -12-13-12-13-கண்ணி நுண் சிறுத்தாம்பு -அவிதித –தனியன் போல் இதுவும்
வேதங்களால் எழுந்த வடிவம் பெற்றவனும்
பறவைகளும் சிறந்தவனும்
நற் பண்புகள் நிறைந்த புருஷோத்தமனுக்கு வாஹனம் ஆனவனும்
பாம்புகளின் மனைவிகளின் ஸுபாக்யத்தை -அந்தப் பாம்புகளைக் கொல்வதன் மூலம் நீக்குபவனுமான
இந்த கருடன் அடியோங்களை ரக்ஷித்து அருளட்டும் –
பணிதிபி ரமலா–அமல பணிதிகளால் -தூய வாக்கான வேதம் –விசுத்தானாம் வாசாம் -தேசிகன் தயா சதகத்தில்
வேதங்களால் எழுந்த வடிவம் பெற்றவன்
ஸூபர்ணோஸி கருத்மான் த்ரி வ்ருத்தே சிரஸ் காயத்ரம் சஷுஸ் ஸ்தோம ஆத்மா ஸாம தே தனூ
வாமதேவ்யம் ப்ருஹத் ரதந்த்ரே பஷவ் யஜ்ஞாயஜ் நியம் புச்சம் சந்தாம்ஸி அங்காநி திஷ்ணியா ஸபா யஜும்ஷி நாம
காயத்ரி சந்தஸ்ஸு வேத அங்கங்களால் ஆனது என்றும்
கருடன் வேத அங்கங்களால் ஆனவன் என்றும் கொள்ளலாம் –
யஸ்ய ஸ்தோமாத்மந அசவ் ப்ருஹத் இதர கருத் தாத்ர்சாம்நாத புச்ச
ஸ்வா சந்த்யம் ந ப்ரஸூதாம் ஸ்ருதி சத சிகர அபிஷ்டுதாத்மா கருத்மான் —கருட பஞ்சாசஸ் -3-
சாமவேத சோமனே கருத்மான் -காயத்ரி மந்திரமே–காயந்தம் த்ராயதி இதி-அவன் திருக் கண்கள் -த்ரி விருத் மந்திரமே அவன் திரு முடி –
யஜுர் வேதமே அவன் திரு நாமம் – வேத சந்தஸ் ஸூக்களே அவன் அங்கங்கள்
“ஸ்தோமம்” என்னும் ஸாம வேத பாகமே அவரது ஆத்ம ஸ்வரூபம்.
“காயத்ரம்” என்கிற ஸாமம் அவருக்கு கண்கள்.
“த்ரிவ்ருத்” என்ற ஸாமம் அவருக்கு சிரசு.
யஜுர் வேதங்கள் அவருடைய திருநாமங்கள்.
சந்தஸ்ஸுக்கள் அவரது திருக் கரங்கள்.
“திஷ்ண்யம்” எனப்படும் வேள்வி மேடைகள் அவரது திருப்பாதங்கள்.
“வாமதேவ்யம்” என்கிற ஸாமம் அவரது திருமேனி,
“ப்ருஹத்” , “ரதந்தரம்” என்னும் ஸாமங்கள் அவருடைய இரு சிறகுகள்.
“யஜ்ஞாயஜ்ஞியம்” என்கிற ஸாமம் அவருக்கு வால்.
இவ்வாறு வேத பாகங்களெல்லாம் கருடனுடைய திருமேனிகளாய் விளங்குவதால்-கருடனை “வேத ஸ்வரூபன்” என்கிறார்கள் பெரியோர்.
குணி வர புருஷோத்தமஸ்ய வாஹ
கருடன் அம்ருத கலசம் கொண்டு வந்ததை பாராட்டி வேண்டிய வரம் கேட்க்கச் சொன்ன விஷ்ணு
வாஹனம் த்வஜமாக ஆக்கி அருளிய
வரம் அருளிய குணம்
தனது தாயான விநதைக்கு கொடுமை செய்த கத்ருவின் சந்ததியான பாம்புகளைக் கோரைப்பதால் கிழித்து
சித்தரவதை பண்ணி இரையாக்கிக் கொண்டதையே –
பக்ஷி தோரக என்ற பதத்தால் அடுத்த ஸ்லோகத்திலும்
இதில் –பணி ரமணீ என்று தொடங்கும் வரியாலும் குறிப்பிடுகிறார்
வக்ர யுக்தி-
பாம்புகளைக் கொல்லுபவன் என்று சொல்லாமல்—பாம்புகளின் மனைவிகளின் ஸுபாக்யத்தை – நீக்குபவன்-என்று அருளிச் செய்தது –
——–
பக்ஷி ராஜ பவமே அஷி கோசர
பக்ஷி தோரக சுப ஷிதாவிஹ
ரஷித அனக முனீஸ்வர ப்ரபோ
சிஷி தாமித தனூதி தோத்தம –17-ரதோத்ததா விருத்தம் -12-எழுத்துக்கள் அடி தோறும்
பறவைகளின் அரசனே
பாம்புகளைச் சாப்பிடுபவனே
குற்றமற்ற முனி ஸ்ரேஷ்டர்களை ரக்ஷிப்பவனே
பிரபுவே
நிறைய அஸுரர்களைத் தண்டித்தவனே
உத்தமனே
இந்த மங்களமான பூமியில் என் கண்ணுக்குப் புலப்படு
தேசிகருக்கு ப்ரத்யக்ஷமாகி ஹயக்ரீவ மந்த்ர உபதேஸம் அருளியது போலவே
தனக்கும் ப்ரத்யக்ஷமாக வேண்டுகிறார் –பக்ஷி ராஜ பவமே அஷி கோசர–என்ற வரியால்
கருடன் பாரசாலி -பார வாஹி –
இரையாக யானையையும் ஆமையையும் தூக்கிக் கொண்டு நைமிசாரண்யத்தில் மரக்கிளை மேல் அமர
அது முறிய ஆரம்பிக்க -அதன் கீழே வைகாசனர்கள் -வாலகில்யர்கள் -என்னும் முனிவர்கள் யாகம் செய்ய அந்த மரக்கிளையில் தலை கீழாகத் தொங்கிக் கொண்டு இருக்க
தனது அலகால் மரக்கிளையை எடுத்துக் கொண்டு யானையையும் ஆமையையும் கால் இடுக்கிலே பிடித்துக் கொண்டு வெகு தூரம் பறந்து வேறு ஓர் இடத்தில் போட்டு முனிவர்களை காத்த வ்ருத்தாந்தம்
இத்தையே ரஷிதாநக முனீஸ்வர -பதம் காட்டும்
வலகில்ய முனிவர்களின் குட்டை உருவத்தை ஏளனம் செய்ததால் அவர்களின் கோபத்துக்கு ஆளானான் தேவேந்திரன்
இன்னோர் இந்திரனை ஸ்ருஷ்ட்டி செய்ய யாகம் செய்தார்கள்
இந்திரன் காஸ்யப முனிவரின் உதவியை நாடினான் –
யாகத்தின் பலனை காஸ்யபருக்கு வழங்க அவரது மனைவி விநதைக்கு பிறந்த கருடனை பக்ஷிகளுக்கு இந்த்ரனாக்க பயன் படுத்திக் கொண்டதால் பஷீந்திரன் ஆனான்
இதையே பக்ஷி ராஜா -பஷீணாம் மணி என்று குறிப்பிடுகிறார் –
ப்ரஹ்லாதனின் குமாரன் விரோசனன் பாற் கடலில் பையத் துயின்ற பரமனின் கிரீடத்தைத் திருடி பாதாளத்துக்கு கொண்டு போக
முனிவர்களின் ஆணைப்படி கருடன் அங்கு சென்று அவனுடன் யுத்தம் செய்து கிரீடத்தை மீட்டு கண்ணன் இடம் சமர்ப்பித்த
விருத்தாந்தம் –சிஷி தாமித தனூதி தோத்தம-என்கிற வரியால் குறிப்பிடப் படுகிறது
இங்கு தானவோத்தமன் -விரோசனன் என்று கொள்ள இடம் உண்டு –
ரஷி தானக முனீஸ்வர ப்ரபோ –நாக பாசம் விடுவித்த விருத்தாந்தம் –அநகர்-சக்ரவர்த்தி திருமகனுக்கு ஸஹஸ்ர நாமங்களில் ஓன்று
அநகர்-முனிவர்களை ரக்ஷித்ததாகவுமாம்
சுப ஷிதவ் -ஒரே பதமாகக் கொண்டால் -மங்கள பூமியிலே -திரு நறையூரிலே -என்றவாறு
இரண்டு பதங்களாகக் கொண்டால் கருடன் மங்களமானவன் –
கருடனைப் பார்த்தாலும் கருட த்வனியைக் கேட்டாலும் மங்கள கரம் அன்றோ
இதே போல் தனூதி தோத்தம -ஒரே பதமானால் அசுர உத்தமனான விரோசனன்
இரண்டு பதங்களாகக் கொண்டால் -தானவர்களைத் தண்டித்தவனே உத்தமனே என்றவாறு
சிஷி தாமித தனூதி தோத்தம–சிஷித அமித தனூதித உ த்தம-மால்யவான் – மாலி -போன்ற தானவ நிரஸனம்
தானவர்கள் ராக்ஷஸர்களுக்கும் உப லக்ஷணம்
———
வருணாலய ஜா க்ருஹே ஸ்திதம்
தருணா ஸ்வர்க்க ஸதாம் ஸமக்ரமம்
அருணா வ்ரஜம் தமாஸ்ரயே
கருணா பூரித ஸுத்த மானஸம் –-18-அர்த்த சம விருத்தம் -ஸூந்தரீ என்ற பெயர் -10-11-10-11
நாச்சியார் கோயிலிலே இருப்பவனும்
வானவரின் மரத்தோடு -கற்பக மரத்தோடு -ஸமமான முறை கொண்டவனும்
அருணனுக்குத் தம்பியும்
கருணை நிரம்பிய தூய மனஸ்ஸூ உள்ளவனுமான கருடனை ஆஸ்ரயிக்கிறேன்
வருணாலய ஜா க்ருஹே ஸ்திதம் தருணா ஸ்வர்க்க ஸதாம் ஸமக்ரமம் –வரியால் -கற்பக மரம் விரும்பியதை அளித்து வியத்தற்கு உரியது ஆனால் போல்
கல் கருடனும் தனது பாரத்தால் அதிகரித்தும் குறைத்தும் வியப்பூட்டி அருளுகிறார் என்றும்
அபீஷ்ட பல அளிப்பதாலும் சமம் என்றவாறு
வக்ர யுக்தி
நாச்சியார் கோயிலில் என்று சொல்லாமல்-வருணாலய ஜா க்ருஹே ஸ்திதம் வருணனின் ஆலயமான சமுத்திரத்தில் உண்டான லஷ்மியின் க்ருஹம்-என்று அருளிச் செய்தது
———–
மருணா பவ நாம தாரிணா
குருணா தப்தம் அமும் ஜனம் ப்ருசம்
வருணாலய ஜா க்ருஹே அர்ச்சித
கருணா நிர்வ்ருதம் ஆதநோது மாம்--19-
ஸம்ஸாரமாகிய -பவம் என்னும் பெயரை ஏந்திய பாலைவனத்தில் வெகுவாகக்
கொளுத்தப்பட்டு இருக்கும் அடியேனை
கடலின் புதல்வியான திருவின் இல்லத்தில் -நாச்சியார் கோயிலில் வழி படப்படும்
புள் இறையான கருடன் தனது தகவால் வாட்டம் நீங்கி மகிழ்ச்சி பெறுவேனாகச் செய்து அருள வேண்டும் –
இந்த நெருப்புப் போன்ற பவத்தை அணைக்க கடலே தேவைப்படும் என்று குறிப்பால் உணர்த்தவே வருணாலயம் பத பிரயோகம்
கரை புரண்ட கருணைக் கடலான எம்பெருமானாலே இது சாத்தியம் என்று காட்டப்படுகிறது
———-
பயோதி கன்யா பவனே வஸந்தம்
வயோ அதிகம் கஞ்சன பாவயாமி
ரயோத்தரம் வேத மயம் யமா ஹு
ஜயோதயம் யேந ஜனா லபந்தே –20-
வேதத்தில் நிகர் இல்லாதவனாகவும் -மறைகளின் உருவகமாகவும் கூறப்படும் எவன் இடம் இருந்து
மக்கள் வெற்றியையும் எழுச்சியையும் பெறுகிறார்களோ
அப்படிப்பட்ட பாற் கடலின் மைந்தளான திருவின் இல்லத்தில் நாச்சியார் கோயிலில் வஸிக்கும்
ஓர் உயர்ந்த மிக மூத்த பறவை இறையைத் தொழுகிறேன் –
வயோதிகன்
பஞ்சவடியில் பெரிய உடையார் சீதாபிராட்டியை ரக்ஷிக்க முயன்றது போல்
இங்கும் பெரிய திருவடி மிதுன ரக்ஷணத்துக்காக -அடியார் ரக்ஷணமே மிதுனத்துக்கு உகப்பு
வயஸ் -ஆயுளையும் பறவையையும் குறிக்கும் -பறவைகளுக்கு இறைவன் என்றுமாம்
வேதமயம் தொன்மையானது முதியது
வயோ அதிகம் -வாயு போல் விரைவில் மோக்ஷம் அளிப்பவன் என்பதால் இந்தப் பத பிரயோகம்
ஜயோதயம்-ஜனங்கள் -த்ரை வர்ணிகர் என்ற நிர்பந்தம் இல்லையே -ஜெனித்தவர் அனைவருக்கும் அருள்பவர்
————
நாராயணம் யோ வஹதே ஸ ராகம்
ஸாராதிகம் யம் ஸூதியோ வதந்தி
ஆராதி தோய ஸத நேர மாயா
பாராயணம் தஸ்ய கரோமி நாம்நாம் –21-
எம்பெருமானான நாராயணனை உகப்புடன் யார் சுமக்கிறானோ
கற்றவர்கள் யாரை மிக வலிமை யுடையவனாகக் கூறுகின்றனரோ
மறைப்பொருளான யார் நாச்சியார் பி கோயிலிலே வழி படப்படுகிறானோ
அந்தக் கல் கருடனின் திரு நாமங்களை பாராயணம் செய்கிறேன் -எப்பொழுதும் படிக்கிறேன்
ஸாரம் -வலிமை -கருத்து பொருள்களில் வந்தது
மறையோனும் –மறைப்பொருளும் -மறை யுருவனும் இந்த ஸ்லோகங்களைக் கேட்டு உகந்து அருள்வார்கள் அன்றோ –
——–
பயோதி கன்யா ஸதனே விபாந்தம்
வயோ அதிகம் கஞ்சன பாவயாமி
அயோதிகோ யேந பவேத் பவே அஸ்மின்
பயோதய கோ அபி கதா அபி நஸ்யாத் –22-
பயோதி கன்யா ஸதனே விபாந்தம்
பாற் கடலில் தோன்றியவளான நாச்சியாரின் இருப்பிடமாகிய நாச்சியார் கோயிலில் பொலிவுடன் திகழும் கல் கருடன்
மலங்கும் வராலும் வாளையும் பாய் வயல் சூழ் தரு
நலம் கொள் வாய்மை அந்தணர் வாழும் நறையூரே
திர்யக்குகளும் மனிதர்களும் செழிப்புடன் விளங்கும் நாச்சியார் கோயிலிலே
நாச்சியாருடைய பூர்ண கடாக்ஷத்துக்கு இலக்காக வைநதேயர் விளங்குகிறார்
வயோ அதிகம் கஞ்சன பாவயாமி
வய -பறவைகளைக் குறிக்குந் சொல் –
அனைத்துப் பறவைகளைக் காட்டிலும் மேம்பட்டவர் -புள்ளரையன் –
அந்தக் கருடனைத் த்யானித்துப் போற்றுவோம்
அயோதிகோ யேந பவேத் பவே அஸ்மின்
யாருடைய அருளால் நமக்கு உயர்ந்த அனைத்து மங்களங்களும் உண்டாகின்றனவோ
பயோதய கோ அபி கதா அபி நஸ்யாத்
வருடைய அருளால் நமக்கு ஏந்திய பயமும் ஏற்படுவது இல்லையோ
சைகாம் பஞ்சா சதம் யா மதநுத விநதா நந்தனம் நந்தியிஷ்யன்
க்ருத்வா மவ்சவ் ததாஜ்ஞாம் கவி கதக கடா கேஸரீ வேங்கடேச
தாமே தாம் சீல யந்த சமித விஷதர வியாதி தைவாதி பீடா
காங்ஷா பவ்ரஸ்த்ய லாபா க்ருத மிதர பலைஸ் தார்ஷ்ய கல்பா ப வந்தி -கருட பஞ்சாசத் –52–பல ஸ்ருதி
பெரிய திருவடி அருள் பெற்ற ஸ்வாமி -ஹயக்ரீவர் பிரசாதம் -அருளிய இந்த பிரபந்தம்
நமக்கு பரம புருஷார்த்தம் பெறுவிக்கும்
——–
வாதஸ்ய ஜேதுர் விஹகேஸ்வரஸ்ய
தாதஸ்ய வாசா கரி கூர்ம போக்து
யாதஸ்ய நாகம் த்வம்ருதா பஹர்து
மா தஸ்ய கோ அப் யஸ்தி ஸமோ ஜகத்யாம் –23-
வாதஸ்ய ஜேதுர் –
தம்முடைய வேகத்தில் காற்றைப் போன்றவர்
சை லீம் நஸ் ஸப்த ஸைலீ லகிமத ரபஸஸ் சவ்து ஸாத்வீம் ஸூ பர்ண -கருட பஞ்சாசத்
கருடன் பறந்து செல்லும் வேகத்தில் மலைகளின் எடைகளே குறைந்து விடுகின்றனவாம்
அசையாத மலைகள் கூட நரையும் படியான வேகம்
காற்று வீச மரங்கள் மட்டுமே நகரும்
ஆகவே வேகத்தில் காற்றை வென்றவர்
விஹகேஸ்வரஸ்ய-பறவைகளின் அரசனான புள்ளரையனான கருடன்
தாதஸ்ய வாசா கரி கூர்ம போக்து
தனது தந்தையின் கூற்றை ஏற்று யானையையும் ஆண்மையையும் உண்டவர்
அமுதம் அபகரிக்கச் சென்ற போது வேடர் கூட்டத்தையே உண்டாபின்பும் பசி ஆறாது இருக்க
கஸ்யபர் ஆலோசனைப்படி யானையையும் ஆண்மையையும் உண்டு பசி ஆற்றினார்
ஜீவ க்ராஹம் க்ருஹீத்வா கமடம் கரடிம் ச பக்ஷயன் பக்ஷி மல்ல -கருட பஞ்சாசத்
யாதஸ்ய நாகம் த்வம்ருதா பஹர்து
தாயான விநதையை மீட்க்கும் பொருட்டு அம்ருதத்தை அபகரித்து வந்தவர்
ஹரித்வார் பிரயாகை நாசிக் உஜ்ஜயினி நான்கு இடங்களிலும் சிந்த கும்பமேளா நடப்பது ப்ரஸித்தம்
மா தஸ்ய கோ அப் யஸ்தி ஸமோ ஜகத்யாம்
ஒப்பார் மிக்கார் இலையாய -ந கச்சித் ஸமஸ்தே -கருட பஞ்சாசத் என்றபடி நிகரானவர் யாரும் இல்லையே
———
காரா க்ருஹாந்த கலிதாவ தாரம்
வாரா ணஸீ தாஹக சக்ர பாணிம்
தாரா தரம் கஞ்சன ஸம் வஹந்தம்
ஸாரா திகம் பக்ஷி பதிம் ப்ரபத்யே –24-
காரா க்ருஹாந்த கலிதாவ தாரம்
சிறைச்சாலையில் திரு அவதாரம் செய்த கண்ணபிரான்
நமது சம்சாரக் கட்டுக்களை உடைக்கவே உரலில் கட்டுண்டான்
வாரா ணஸீ தாஹக சக்ர பாணிம்
தன்னுடைய சக்ராயுதத்தால் காஸ்ட்டி நகரை எரித்தவன்
ஜய! பஞ்சாயுதீமுக்ய! நிர்தக்த காசீபுர! – ஹேதி புங்கவ ஸ்தவம் -2–நடாதூர் அம்மாள்
திருமாலின் ஐந்து ஆயுதங்களுள் முதன்மையானவனே! காசீ நகரத்தை எரித்தவனே! –
ஸ்யந்தநத் விரத வாஜி பதாதி ப்ராஜ்ய ஸுத பரி பாடி ஸம்ருத்தயா
சக்ர வஹ்னி விபேவேன ததா பூத் சந்த்ர சேகர விலேபந பூமா –யாதவாப்யுதம்
சாம்பலுக்கு பஞ்சம் ஏற்படாதபடி காசியை எரித்த வ்ருத்தாந்தம்
தாரா தரம் கஞ்சன ஸம் வஹந்தம்
கார் மேகங்களைப் போல் கரிய நிறத்தை யுடைய எம்பெருமானை வாஹனமாக இருந்து தாங்குபவர்
ஸாரா திகம் பக்ஷி பதிம் ப்ரபத்யே
பலம் நிறைந்தவராக பக்ஷி ராஜரை சரண் அடைகிறேன்
யஸ்மின் த்யவ் ப்ருத்வீ ச அந்தரிக்ஷம் ஓதம் மனஸ் ஸஹ பிராணைஸ் ச சர்வை –முண்டகம்
அவனையே தங்கி கைங்கர்யம் செய்பவர்
——–
காரா க்ருஹான் தர்ஜனி மாப்த வந்தம்
தாரா தரம் ஸ்வாம் ஸகதம் விதன்வன்
காரா க்ருஹான் மாம் பவ நாம தேயாத்
வீ ராஜ ராட் விஷ்ணு பதே விதத்தாம் –25-
காரா க்ருஹத்தினுள் பிறப்பை அடைந்த மேகத்தை ஒத்த ஸ்ரீ கிருஷ்ணனை முதுகில் சுமந்து செல்லும்
பக்ஷிகளின் ராஜாவாக விளங்கும் கல் கருடன்
அடியேனை சம்சாரம் என்னும் காரா க்ருஹத்தில் இருந்து எடுத்துச் சென்று ஸ்ரீ வைகுண்டத்தில் வைக்கட்டும்
காரா தாரா காரா வீரா -ப்ராஸம் ரமணீயம்
———-
வஸ்யோ விஷ்ணுர் யஸ்ய குணவ்கை
நஸ்யத் யம்ஹோ யஸ்ய த்ருஸா ந
பிரஸ்யன் த்யஸவோ யேனா ஹீனாம்
பஸ்யத் வஸ்மான் ஏஷஸ் கடாஷை –26-
எவருடைய குண கூட்டங்களால் ஸ்ரீ விஷ்ணுவானவர் வசியப்பட்டு உள்ளாரோ
எவருடைய கடாஷப் பார்வையினால் நமது பாபக் கூட்டங்கள் நசிக்கின்றனவோ
மேலும் பாம்புகளின் உயிர்கள் எவரால் பிரிந்து செல்கின்றனவோ
அப்படிப்பட்ட கருடாழ்வார் நம்மை குளிரக் கடாக்ஷித்து அருளட்டும்
இதிலும் வஸ்யோ -நஸ்யத் -பிரஸ்யன் -பஸ்யத் -ப்ராஸம் ராமணீயம்
பாபம் பாம்பின் விஷம் போல் சித்தரிக்கப்பட்டதும் மிக அழகு
——-
வஞ்சுள வல்லீ நாயக வாஹம்
அஞ்சன ஸம்மித விக்ரஹ வர்ணம்
மஞ்ஜூல ராஜத கவசம் வந்தே
ரஞ்ஜித சேவக மானஸ நேத்ரம் –27-
வஞ்சுலம் என்ற கொடியின் நடுவில் ஆவிர்பவித்ததால் வஞ்சுள வல்லி திரு நாமம்
வஞ்சுள வல்லி நாயகரான எம்பெருமானுக்கு வாஹனமானவரும்
எம்பெருமான் வர்ணமான கறுப்புக் கல்லான விக்ரஹமாதலால் கவசத்தால் அலங்கரிக்கப் பட்டவரும்
சேவார்த்திகளின் மனத்தையும் கண்ணையும் மகிழ்விப்பவரான கருடாழ்வாரை வணங்குகிறேன்
இங்கும் வஞ்சுள -அஞ்சன ம்-மஞ்ஜூல-ரஞ்ஜித–ப்ராஸம் -மிக ரஞ்சகம்
——————-
மூன்றாம் விஹாரம் -அநு ப்ராஸ விஹாரம்
பரஸ்ய பும்ஸஸ் ப்ரணய ஏக பாத்ரம்
பயோதி ஜாபத்தந க்லுப்த வாஸஸ்
பதோ தர ப்ராண கண அபஹாரீ
பதங்க ராஜ பரிதஸ் ஸ பாது –28-
பரஸ்ய பும்ஸஸ் ப்ரணய ஏக பாத்ரம்
பரம புருஷனான நறையூர் நம்பியின் அன்புக்குப் பாத்திரமானவர்
அவனது அன்பையும் அருளையும் பெற்று ஸம் ப்ரஸாதனாக விளங்கும் கருடன்
ஸர்வ காலத்திலும் ஸர்வ அவஸ்தைகளிலும் கைங்கர்யம் செய்யும் பேறு பெற்றுத் திகழ்கிறார்
தாஸஸ் ஸகா வாஹநம் ஆஸநம் த்வஜோ
யஸ்தே விதாநம் வ்யஜநம் த்ரயீமய: |
உபஸ்திதம் தேந புரோ கருத்மதா
த்வதங்க்ரி ஸம்மர்த்த கிணாங்கஶோபிநா ||-ஸ்தோத்ர ரத்னம் -41-
வேதங்களையே அங்கங்களாக உடைய அந்த கருடாழ்வார், உனக்கு அடியவனாகவும், நண்பனாகவும், வாஹனமாகவும்,
ஆஸனமாகவும், கொடியாகவும், விதானமாகவும், சாமரமாகவும் இருக்கிறார்;
மேலும் உன்னுடைய திருவடிகள் அவருடைய தோள்களில் அழுத்தியதால் ஏற்பட்ட தழும்புகளாலே ஒளிவிடுகிறார்;
உன்னுடைய ஸன்னிதியில் இப்படிப்பட்ட கருடாழ்வாரால் நீ வணங்கப்படுகிறாய் —
வேகோத்தாநாம் விதாநம் வ்யஜனமநு குணம் வைஜயந்தீ ஜயந்தீ
மித்ரம் நித்யாப்ய மித்ரம் யுதி விஜயரதோ யுக்ய யோகா நபேஷ
தாஸோ நிஷ் பர்யு தாஸோ தநு தநய பிதோ நி ஸஹாய ஸஹாய
தோ தூயே தஸ் மதீயம் துரிதம தரிதா ராதி பஷை ஸ்வ பாஷை -கருட பஞ்சாசத் -46-
வேகோத்தாநாம் விதாநம் -விதானமாகவும் கைங்கர்யம் –
வ்யஜனமநு குணம் -விசிறியாகவும் கைங்கர்யம்
வைஜயந்தீ ஜயந்தீ -வெற்றிக்கு கொடி யாகவும்
மித்ரம் நித்யாப்ய மித்ரம் -நண்பன் -விரோதி நிரசனத்துக்கு உதவி
யுதி விஜயரதோ யுக்ய யோக அநபேஷ-குதிரை வேண்டாத ரதமாகவும் கைங்கர்யம் –
தாஸோ நிஷ் பர்யு தாஸோ -விட்டு விட மாட்டாத சேஷ பூதர்
தநு தநய பிதோ நிஸஹாய ஸஹாய -வேறே சகாயம் வேண்டாத சகாவாகவும்
தோ தூயே தஸ் மதீயம் துரிதம தரிதா ராதி பஷை ஸ்வ பாஷை -பக்ஷங்களை கொண்டு விரோதி நிரசனம்
பண்ணுவது போலே நம் பிரதிபந்தகங்களை போக்கி அருளுபவர்
இதில் -வைஜயந்தி ஜெயந்தி –நிஸ் ஸஹாய ஸஹாய –பர்யு தாச தாச – சப்த பிரயோகங்கள் அனுபவிக்கத்தக்கன
பயோதி ஜாபத்தந க்லுப்த வாஸஸ்
பாற் கடலில் தோன்றிய பெரிய பிராட்டியாரின் தேசமான நாச்சியார் கோயிலிலே நித்ய வாஸம் செய்து அருளி
மிதுனத்தின் அருளை வெகு விரைவில் நமக்குத் பெற்றுத்தர வல்ல கருடன்
பதோ தர ப்ராண கண அபஹாரீ
வயிற்றையே காலாக யுடைய பாம்புகளின் உயிரை அபஹரிப்பவர்
பதங்க ராஜ பரிதஸ் ஸ பாது —
புள்ளரையன் நம்மை எல்லாப் புறங்களிலும் இருந்து கொண்டு ரக்ஷிக்க வேண்டும்
அடியார்களை நாற் புறங்களிலும் இருந்து ரக்ஷிப்பதற்காகவே
வாஸூ தேவன் -ப்ரத்யும்னன் -அநிருத்தன் -சம்கர்ஷணன் -புருஷோத்தமன் -ஐந்து உருவங்களுடன் இங்கு ஸேவை சாதித்து அருளுவது போல்
பெரிய திருவடியும் -ஸத்யன் ஸூ பர்ணன் -கருடன் -தாஷ்யன் -விஹ கேஸ்வரன் -என்று ஆகமம் சொல்லுவது போல்
ஐந்து வடிவங்களுடன் இருந்து நம்மை ரக்ஷித்து அருளுகிறார்-
————-
பதே பயோதே ப்ரிய கன்யா காயா
பதாப்ஜ ஸஞ்சார பவித்ரிதே அஸ்மின்
பதோ தரா மோத விஹார ஹாரி
பதே பதே ஸம் பதமாத நோது –29-
பதே பயோதே ப்ரிய கன்யா காயா
பாற் கடலின் அன்பு மகளான மஹா லஷ்மியின் தேசமான நாச்சியார் கோயிலிலே
பிராட்டி பாற் கடலில் நின்றும் அவதரிக்கையில்
ரதிர் மதி சரஸ்வதீ த்ருதி ஸம்ருத்தி ஸித்தி ஸ்ரீய
ஸூதா ஸகி யதோ முகம் சிசலிஷேத் தவ ப்ரூலதா —ஸ்ரீ குணரத்ன கோசம் -17–என்னும்படி
அவள் கடாக்ஷம் தேவர்களுக்கு மட்டுமே கிட்டியது
இங்கு வந்து நித்யவாஸம் செய்து நம் போல்வாருக்கும் கிட்டியதால் பாற் கடலை விட இது அதி விலக்ஷணம்
பதாப்ஜ ஸஞ்சார பவித்ரிதே அஸ்மின்
பிராட்டி திருவடி ஸ்பர்சத்தால் மேன்மை பெற்ற திவ்ய தேசம்
ஸுரபித நிகமாந்தம் வந்திஷீய இந்திராயா:
தவ கமல பலாச ப்ரக்ரியம் பாத யுக்மம்
வஹதி யதுபமர்தை: வைஜயந்தீ ஹிமாம்ப:
ப்லுதிபிரிவ நவத்வம் காந்த பாஹாந்தராளே–39-
ஸ்ரீரங்கநாயகி! நீ உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் திருமார்பில் எப்போதும் அமர்ந்துள்ளாய்.
உனது திருவடிகள் படுவதால், அவன் அணிந்துள்ள வைஜயந்தி என்ற மாலை வாடாமல் உள்ளது;
அதன் மீது குளிர்ந்த நீர் தெளித்தது போன்று எப்போதும் புதிதாகவே உள்ளது.
இப்படிப்பட்ட உனது திருவடிகளைப் போற்றும் வேதாந்தங்கள், மேலும் சிறப்படைந்து மிகுந்த மணம் வீசுகின்றன.
தாமரை மலர் போன்றுள்ள உனது இத்தகைய திருவடிகளை நான் சரணம் என்று வணங்குகின்றேன். (என்னை நழுவவிடாதே).
ஸ்ரீரங்கநாச்சியார் எப்போதும் தனது திருவடிகளை அவனது மாலைகளின் மீது படும்படி வைப்பதாலேயே
அவனது மாலைகள் வாடாமல் உள்ளன என்று கருத்து.
பதோ தரா மோத விஹார ஹாரி
வயிற்றையே காலாக யுடைய பாம்புகளின் உத்ஸாஹ விளையாட்டுக்களை அபஹரித்துக் கொண்டு எழுந்து அருளி இருக்கும் கருடன்
பதே பதே ஸம் பதமாத நோது —
நம் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் வளங்களை அருளட்டும்-
————
பத்ம நிவாஸ ஸதந பரமஸ்ய வாஹ
பஷா நில ஷபித பன்னக ராஜ ராஜி
பா காரி ஸைன்ய பரி பாவுக வீர்ய லேச
பத்யானி மே திசது பத்ர ரதாவ தம்ச -30-
பத்ம நிவாஸ ஸதந
நாச்சியார் கோயிலிலே நித்யவாஸம் செய்து அருளும் கருடன்
பிராட்டி ஸ்தானம் -சாடு -இவரும் புருஷகார பூதர்
கருட மந்த்ரம் ஜெபித்து அவர் புருஷகாரத்தால் ஹயக்ரீவருடைய லாலாம்ருதம் பெற்றார் அன்றோ நம் தேசிகர் ஸ்வாமி –
பரமஸ்ய வாஹ
பரம புருஷனான நம்பிக்கு வாஹனம்
பஷா நில ஷபித பன்னக ராஜ ராஜி
தனது இறக்கை களின் காற்று அசைவாலேயே பாம்புகளின் கூட்டங்களை எல்லாம் வென்றார் –
பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி -என்று ஈடுபட்டு அருளிச் செய்கிறார்
சிறகு ஒலியே ஸாம கானம்
பா காரி ஸைன்ய பரி பாவுக வீர்ய லேச
இந்திரனுடைய ஸேனையை தனது வீரத்தின் லவ லேசத்தாலேயே வென்றவர்
ஸ்தம்பிதே ஜம்ப ஸத்ராவ் –ஸ்வாமி தேசிகன்
பத்யானி மே திசது பத்ர ரதாவ தம்ச –
அந்த புள்ளரையன் அடியோங்களுக்கு நன்மைகளை செய்து அருளட்டும்
—————–
பாதாளாந்த ப்ரவிஷ்ட பயபரமதிகம் வர்தயன் பன்ன கானாம்
பத்மா காந்தம் வஹந்தம் பதி சதி மருதாம் பஸ்யதாம் அஷி ஜாதே
பாதோ மோதாபி ஜாதம் கிமபி விகலிதம் ஷாலி தாகம் விதன்வந்
பத்மா சத்மா பிராம பதிக பரிப்ருடஸ் பாது பாஷாணா வர்ஷ்மா –31-பகாரத்தில் ஆரம்பிக்கும் பதங்கள் நிறைந்த ப்ராஸம்
பத்மா சத்மா பிராம -நாச்சியார் கோயில் திவ்ய தேசத்தில் தனது வாசத்தால் இனியதாக ஆக்கியவரும்-மிதுன ஸம்பந்தத்தால் அழகு அடைந்தவர் -என்றுமாம் –காலசோபி கௌஸ்துபம் -ஸ்ரீ மத் பாகவதம் -கழுத்தில் பிரகாசிக்கும் கௌஸ்துபம் என்றும் கொழுத்தால் பிரகாசிக்கும் கௌஸ்துபம் என்றும் கொள்ளுமா போல்
பதிக பரிப்ருடஸ்-பக்ஷிகளுக்குத் தலைவரும்
பாது பாஷாணா வர்ஷ்மா-கல்லாலான -கல்லைப் போன்ற திருமேனியை யுடையவரும்-கல்லைப் போன்று நிச்சலமான பக்தி கொண்டவர் –
பாதாளாந்த –பாதாளத்தின் முடிவில்- எல்லையில்
ப்ரவிஷ்ட –ப்ரவேசித்து
பன்ன கானாம்–பாம்புகளின்
பயபரமதிகம் வர்தயன் –பயத்தின் பாரத்தை அதிகமாக வளர்ப்பவரும்
தம் –அந்த அத்தகைய பெருமை பெற்ற
பத்மா காந்தம் -ஸ்ரீ லஷ்மீ காந்தனான எம்பெருமானை
பதி -வழியில்
வஹந்தம் –தாங்கிக் கொண்டு செல்பவரும்
சதி -நல்ல
பஸ்யதாம்–அதனைப் பார்க்கும்
மருதாம் –தேவர்களுடைய
அஷி ஜாதே சதி –கண்களின் கூட்டத்தில்
மோதாபி ஜாதம் –சந்தோஷத்தால் ஏற்பட்டதும்
கிமபி –ஒப்பற்றதும்
ஷாலி தாகம்–பாபத்தை நீக்கிய
பாத -ஆனந்தக் கண்ணீரை
விகலிதம் -விழுந்த
விதன்வந்-செய்பவருமான பெரிய திருவடி
பாது–காக்கட்டும்
பத்மா காந்தம் வஹந்தம் பதி சதி மருதாம் பஸ்யதாம் அஷி ஜாதே-என்று சேர்த்துப் பார்த்தால்
அம்ருதம் பானம் செய்தும் நாம் இவ்வாறு கைங்கர்யம் செய்யப்பெற வில்லையே
த்யாகேன ஏக ந அம்ருதத்வ மானஷு –தியாகத்தாலேயே எம்பெருமானை அடைய முடியும் என்று உணர்ந்து
பெரிய திருவடியைக் கொண்டாடி ஆனந்தக் கண்ணீர் பெருகினர் தேவர்கள் –
வஜ்ராதபி கடோராணி ம்ருதூநி குஸூமாதபி –உடல் கல்லானாலும் உள்ளம் கருணை மிக்கு
வரப்பிரஸாதி யாக திகழும் பெரிய திருவடி அடியோங்களை ரக்ஷிக்க வேண்டும்
————
பாரம்யஸ் யைக பாத்ரம் பசகதி ஜூஷாம் பன்னக ப்ராண ஹாரீ
பாரா பேதாக மாத்மா ப்ரணத ஜன மனச் சிந்திதார்த்த ப்ரதாதா
பாதோஜா க்ஷஸ்ய வாஹஸ் பதக பரிப்ரூட பாதுமாம் பாப ப்ருந்தாத்
பாரா வராத்மஜாதா சதந புர வரஸ்ரீ க்ருஹே ராஜ மாந–32-
பசகதி ஜூஷாம்-மிகவும் வேகம் யுடையவர்களுக்குள்
பாரம்யஸ் யைக பாத்ரம் –முதல் ஸ்தானம் வஹிப்பவரும்
பன்னக ப்ராண ஹாரீ–பாம்புகளின் பிராணனை அபஹரிப்பவரும்
பாரா பேதாக மாத்மா –கரையில்லா முடிவில்லா -அநந்தமான வேத வடிவானவரும்
ஸந்தோ மயேந கருடேந -ஸ்ரீ மத்பாகவதம்
ஸ்ருதி சத சிகர அபிஷ்டு தாத்ம கருத்மான் என்றும்
ஸ்ருதி ஸிந்து ஸூதோத்பாத மந்தராய -என்றும் தேசிகரும்
யஸ்ய நிஸ் ஸ்ர வஸிதம் வேதா -எம்பெருமானின் மூச்சுக்காற்றே கருடாழ்வார்
ப்ரணத ஜன மனச் சிந்திதார்த்த ப்ரதாதா–தன்னை வணங்கும் ஜனங்களின் மனத்தால் நினைக்கப் பெற்ற ஐஸ்வர்யம் அனைத்தையும் அளிப்பவரும்
பாதோஜா க்ஷஸ்ய வாஹஸ் –தாமரைக் கண்ணனின் வாஹனமானவரும்
பதக பரிப்ரூட –பக்ஷிகளின் தலைவரும்
பாரா வராத்மஜாதா சதந புர வரஸ்ரீ க்ருஹே –ஸமுத்ர கன்னிகையாய் ஆவிர்பவித்த பெரிய பிராட்டியார் யுடைய திவ்ய க்ஷேத்ரமான நாச்சியார் கோயிலிலே
ராஜ மாந–பிரகாசிப்பவரான பெரிய திருவடி
பாது மாம் பாப ப்ருந்தாத்-அடியேனை பாபக் கூட்டங்களில் இருந்து ரக்ஷிக்கட்டும்
—————–
ஜாதோ வாதோ அநு கந்தம் யமிஹ கதி பதே நோ மனாகப் யலம் ஸ
ஜாயே ருத்ரா ஸூ கீர்த்தீ கடித விகடிதே ஹ்ருஷ்யதோ யேன சீக்ரம்
ஜாலம் பாபஸ்ய மே அஃலம் ஹரது ஸ பகவானண்ட ஜானாம் ப்ரதான
ஜாநக்யா நந்தத ஸ்ரீ ரகு குலஜ மணே ஜீவிதஸ்ய ப்ரதாதா –33-
அநு கந்தம் யம் –எவரைப் பின் தொடர்ந்து
ஜாதோ வாதோ இஹ –தோன்றிய காற்றும் கூட இங்கு
கதி பதே நோ மனாகபி யலம் ஸ–வேக விஷயத்தில் லவ லேசமும் கூட ஈடு கொடுக்க முடியவில்லையோ
யேன கடித விகடிதே-எவரால் பிரிந்து சேர்ந்தால்
ஜாயே ருத்ரா ஸூ கீர்த்தீ ஹ்ருஷ்யதோ சீக்ரம்–ருத்ரா ஸூ கீர்த்தீ என்னும் அவருடைய இரண்டு பத்னிகளும் சீக்கிரமாக ஸந்தோஷப்படுகிறார்களோ
ஜாநக்யா நந்தத ஸ்ரீ ரகு குலஜ மணே ஜீவிதஸ்ய ப்ரதாதா–சீதாப்பிராட்டிக்கு ஆனந்தம் கொடுத்த சக்ரவர்த்தி திருமகனுக்கு உயிரைக் கொடுத்தவரும்
அண்ட ஜானாம் ப்ரதான ஸ பகவான–பக்ஷிகளில் முக்யமானவருமான அந்தப்பெரிய திருவடி
ஜாலம் பாபஸ்ய மே அஃலம் ஹரது –என்னுடைய பாபத்தின்–என்னைத் தாக்குவதற்குத் தேவையான கூட்டமான வலையை அபஹரிக்கட்டும்
யதா தாதம் தசரதம் யதாஜம் ச பிதா மஹம்
ததா பவந்த மாஸாத் ஹ்ருதயம் மே ப்ரஸித்தி -யுத்த -50-43-பெருமாளுக்கும் திருவடியின் தரிசனத்தால் மிக ஆனந்தம்
ந ஹி தம் பரி பஸ்யாமி யஸ் தரேத மஹோததிம்
அந்யத்ர கருடாத் வாயோர் அந்யத்ர ச ஹனுமத -யுத்த -1-3- பெருமாள் கூற்றில் கருடனே முதலில்
த்ராயண மேவ பூதா நாம் சங்ரஸ் யாஸ்ய லங்கேந
ஸக்திஸ் ஸ்யாத் வைநதேயஸ்ய தவ வா மாருதஸ்ய வா -ஸூந்தர –68-9- பிராட்டி கூற்றிலும் கருடனுக்கே முதல் ஸ்தானம்
ஹரது -பத பிரயோகம் அம்ருதம் அநாயாசேன அபஹரித்தது போல் நமது பாபங்களையும் அபஹரிக்க வல்லவர்
யதா ராஜா ததா ப்ரஜா -நியாயப்படியும் ஹரியின் செயல் போல் பெரிய திருவடியின் செயல்களும்
——————-
வஸூமதி சதகத்தில் –ம -எழுத்து 18 தடவை வரும்படி
மாந்யே மாநிதி மாரகேலிதயிதே மாராரி மாந ப்ரதே
மாயா வாரிணீ மதுரி போஸ் ஸம் மோஹிநீ ஸ்வாமிநீ
மாலா லாலித மூர்த ஜாத மஹிதே மந்தார வாஸைர்நதே
மாதர் மாதவி மஞ்ஜூளா தர தலே மந்தம் தயேதா மயி–இதே போல் வார்த்தை விளையாட்டு இதிலும் உண்டே
உபலவ புஷமீடே நாயகம் பஷ பாஜாம்
உபல முபல மஸ்மின் இந்திரா மந்திரே ந
உப லலித நிதாநம் ஸ்ரீ பவர்காத்ரு தாக்யம்
கமபி பஹு விசித்ரம் ஸ்வா பவர்க ப்ரதம் தம் –34-
உபலவ புஷமீடே நாயகம் பஷ பாஜாம்
அழகிய கல்லாலான திருமேனியோடு விளங்கும் பறவைகளின் அரசனான
கல் கருடனை வணங்குகிறேன்
உபல முபல மஸ்மின் இந்திரா மந்திரே ந
நாச்சியார் கோயிலிலே எழுந்து அருளி இருந்து நமக்கு நற் பயன்களை உறுதியாக அளிப்பவரும்
உ என்பது ஏவ பொருளில் வந்துள்ளது
உபாசகர்களுக்கு இவர் பலம் அளிப்பது உறுதி என்பதால் இவரை உபலர் என்கிறார்
உ -நாச்சியார் -இவரைப் பலமாகக் கொண்டவரும் -அவரே யாருக்குப் பலமோ அவரே உபலர் என்றபடி
உப லலித நிதாநம்
உ -சந்திரனையும் குறிக்கும்
ஷோடச கலாத்கமக –சந்த்ர மண்டல ரூபேண உகாரஸ்ய த்யேயத்வ உக்த்யா அபேதா உபசாராத் ஷோடச கலாத்மகே சந்த்ரே –வாசஸ்பதியை கலைக்களஞ்சியப்படி
உகாரம் பூர்ண சந்த்ரனைக் குறிக்கும் –
பா என்னும் சொல் ஒளியைக் குறிக்கும்
சந்திரனுக்கு யாரால் ஒளியோ அவர் உபர் ஆகிறார்
சந்த்ர மண்டலத்தில் கோயில் கொண்டு ஒளிரச் செய்யும் ஸ்ரீ லஷ்மீ ஹயக்ரீவனே உபர்
அவருடைய லலிதம் லீலை -அதற்க்கு காரணமானவர் உப லலித நிதானம் –
ஸ்வாமி தேசிகனுக்கு ஹயக்ரீவ மந்த்ர உபதேசம் செய்து அருளி அவர் மூலம் ஸ்ரீ லஷ்மீ ஹயக்ரீவர் உடைய லீலையாக
பல பிரபந்தங்கள் வரக்காரணமாக இருந்தவர் ஆதலால் கருடன் உப லலித நிதானம் –என்றபடி –
அன்றிக்கே
உப -இரண்டு விபூதிகளிலும் எம்பெருமான் லீலைகள் செய்து அருள வாஹனமாக -துணையாக இருப்பதால்
இவரை உப லலித நிதானம் என்கிறார்
உப என்னும் சொல் ஸமாஸங்களில் உபய என்கிற வடிவத்தில்
வ்ருத்தி மாத்ரே நித்யம் வ்யவச் -இலக்கண நெறியின் படியே உப வேதாந்தம் உப விபூதி என்னாமல்
உபய வேதாந்தம் என்றும் உபய விபூதி என்றும் கூறும் மரபு உண்டே
ஸ்ரீ பவர்காத்ரு தாக்யம்
இப்படி உபல -ப வர்க்கத்தை ப வரிசையில் உள்ள நான்கு எழுத்துக்களுடைய சொற்களால் போற்றப்படுபவர்
கமபி பஹு விசித்ரம் ஸ்வா பவர்க ப்ரதம் தம் —
பவர்க்கத்தால் போற்றப்படுபவராய் இருந்தாலும் அபவர்க்கம் என்னும் மோக்ஷத்தையும் அளிக்க வல்லவர்
அப்படி புகழ் பெற்ற ஒப்பற்ற ஆச்சார்யமான ஒருவரை
ஈடே –வணங்குகின்றேன்
————
விநதாத்மபவோ விநதா தரவாந்
விஹ்ருதம் தத்தே ததிதம் யுக்தம்
ஸூரஸஸ் ஸூதராம் ஸூர ஸாத்ம பவான்
ஹரதீத் யேதத் பாதி விசித்ரம் –35-
விநதாத்மபவோ விநதா தரவாந் விஹ்ருதம் தத்தே ததிதம் யுக்தம்
விநதை –விநயத்துடன் வணங்கியவள்
அவள் மகனான கருடன் வணக்கத்துடன் வந்து அவன் அடி பணியும் வினதர்கள் இடம் ஆதாரம் காட்டிப் பல லீலைகளை புரிவது சரியானதே
ஸூரஸஸ் ஸூதராம் ஸூர ஸாத்ம பவான் ஹரதீத் யேதத் பாதி விசித்ரம் –
ஆனால் பல ரசங்களை மிகுதியாக உடையவனாக –ஸூ ரசனாக -சுவையன் திருவின் மணாளன் -திருமாலுக்கு
அந்தரங்கனாக இருப்பதால் ஸூ ரசனாக இருந்த போதும்
நாக மாதாவாகிய ஸூரஸா வினுடைய பிள்ளைகளான பாம்புகளை வதைக்கிறாரே
இது மிகவும் விசித்திரமாக அன்றோ உள்ளது –
இதே போன்ற சமத்காரத்தை கஜேந்திர மோக்ஷம் விஷயமாக அருளிச் செய்த
குஞ்சரா ரத்னத்தின் பல ஸ்லோகங்களில் ஸ்வாமி அருளிச் செய்துள்ளார்-மாதிரிக்கு ஓன்று
விபதா ஸ்வ பத அவலம்பயா
விநதந் நார்த்தமநாஸ் ஸரோகத
விபதம் புநரா ஜூஹாவ ஹா
விரஜாதீர புவோ கஜாதிப
விபத்து ஏற்பட்ட உடன் விபத்தாகிய எம்பெருமானை -வி கருடன் -திருவடியாகக் கொண்டு விளங்குவதால் இவனே விபத்து –
குண்டு நீருரை கோளரீ மதயானை கோள் விடுத்தாய் –யானையைக் காத்த சிங்கமே –
பொதுவாக யானையைப் பகையாகக் கருதும் ஸிம்ஹமே அதனை ரக்ஷித்து அருளிற்றே
இதே போல் ஸூ ரசனாக விளங்கும் கருடனே
ஸூ ரசனாவின் பிள்ளைகளைக் கொல்கிறானே என்று
கவி நயத்துடன் முரண்பட்டு காட்டி அருள்கிறார்
————
பதங்க ராஜ பலதோ நதாநாம்
பலிஷ்ட துர்யோ பகவான் மஹாத்மா
பவர்க ஹ்ருத்யோபி விபாப வர்க
விபாப வர்கோ அப்ய வரக தாயீ--36-
பதங்க ராஜ பலதோ நதாநாம்
வரப்ரசாதியாக அடியார்களுக்கு அபீஷ்டங்களை தந்து அருளுபவர்
ஏழு வியாழக்கிழமைகள் தொடர்ந்து அர்ச்சனை செய்வோர் பெறும் பலன்கள் இன்றும் கண் கூடாகக் காண்கிறோம்
பலிஷ்ட துர்யோ பகவான் மஹாத்மா
பலசாலிகளில் சிறந்தவர் -ஷாட் குண்ய ஸ்மேர -அவனைப் போலவே பகவானாகவும் மஹாத்மாவாகவும் விளங்குபவர்
பவர்க ஹ்ருத்யோபி விபாப வர்க
ப வர்க்கத்தில் வரும் அணைத்தாலும் போற்றப்பட்டவராய் இருந்தும்
பாப வர்க்கங்கள் தீண்டப்படாமல் தூய்மையாக அபஹத பாப்மாவாக விளங்குபவர்
விபாப வர்கோ அப்ய வரக தாயீ
பாப வர்க்கங்களால் தான் தீண்டப்படாமல் இருப்பதற்கும் மேலே அபவர்க்கமான மோக்ஷத்தை அளிக்க வல்லவர்
————-
விநாத நந்தன விநாத நந்தன
ஸூரஸா பூ ஹர ஸூரஸா பூ ஸூக
கமலா வேஸ்மணி கமலா வேஸ்மச
வசதா வஹதா பவதா அஸ்மி ஸூகி –37-
விநதையின் மைந்தனே
வணங்குபவர்க்கு மகிழ்ச்சியை அளிப்பவனே
நாகங்களை அழிப்பவனே
சிறந்த ஆனந்தத்தை அளிக்கும் பூமிப்பிராட்டியாருக்கும் ஆனந்தம் அளிப்பவனே-பூமியில் உள்ள மக்களுக்கும் ஆனந்தம் அளிப்பவரும்
நாச்சியார் கோயிலில் வசிப்பவனும்
பெரிய பிராட்டியாரின் இருப்பிடமான எம்பெருமானை தாங்குபவனுமான
உன்னால் அடியேன் ஆனந்தமுடையவனாக இருக்கிறேன் –
———-
சம்பா ரமா யஸ்ய ஸ கால மேக
ஸம் ஸத்ய ஜஸ்ரம் யமிமம் வஹந்தம்
சங்காகுலம் ஸர்ப குலம் ஸ தன்வன்
ஸத் நச்சு குந்த பரமஸ் தநோது–38-
எவனுக்குப் பெரிய பிராட்டியார் மின்னல் போன்றவளோ
நீருண்ட மேகம் போன்றவனான அந்தப் பகவான்
தன்னை எழுந்து அருளப் பண்ணும்
எந்த இப்பஷி ராஜனைப் பெருமையாகக் கூறுகிறானோ
அந்தப் பக்ஷி ராஜன் பாம்புகளின் ஸமூஹத்தை ஸம்சயத்தினால் கலங்கியதாகச் செய்து கொண்டு
நமக்கு மங்களத்தைப் பரவச செய்ய வேண்டும்
———–
சகுந்தலா யத் குல லாலிதா ஸா
ச ஸாங்க தர்பம் முகதோ ஹரந்தீ
சசாங்க வம்சஸ்ய ததவ் ப்ரகாஸம்
சகுந்த ராஜஸ் ஸ தநோது சம்ந–39-
சந்திரனின் கொழுப்பினை முகத்தின் வாயிலாக போக்குபவளான
எந்த சகுந்தலை சந்த்ர வம்சத்தின் ஒளியை கொடுத்தாளோ அவள்
எந்த பக்ஷிராஜனின் குலத்தால் பேணப்பட்டாளோ
அந்தப் பக்ஷி ராஜன் நமக்கு மங்களங்களைக் கொடுக்க வேண்டும் –
————-
ஸ்ருதி ஸ்வரூபே த்வயி சந்நிவிஷ்ட
ஸ்ருதீ நிநாதை ஸூ கய த்யுதாரை
ஸ்ருத்யேக கம்யான் கலயன் அராதீந்
ஸ்ருத்யேக கம்யஸ் ஸ்வ சமான் விதத்தே–40-
தாராளமான ஒலிகளால் கேட்ப்போரின் இரு காதுகளையும் –காதுகளிலும் -இன்பம் பெருக்குபவரான
ஸ்ருதி ஸ்வரூபே -வேதாத்மா விஹகேஸ்வர -வேதத்தை சரீரமாகக் கொண்ட வேதாத்மாவான உம்மிடத்தில் உம்மை –
சந்நிவிஷ்டர் -நன்கு உறைந்தவன் -த்ருட பிராமண ஸித்தி உள்ளவன் -வேதத்தின் சுவைப் பயன் -எழுந்து அருளி இருப்பவராக -ஏறி அலங்கரிப்பவராக வேதத்தால் மட்டுமே அறியப்படுபவரான-க்ருத்ய ஏக கம்யரான -எம்பெருமான்
விரோதிகளையும் தனக்கு ஸமமாக ஸ்ருதி ஏக கம்யர்களாக
காதால் மட்டுமே கேட்கப்படும் முடிவு எய்தியவர்களாக
வேத ஸப்தங்கள் ஆஸ்திகர் செவிகளுக்கு இனிமையாய் இருக்கும் –
வேத வடிவமான கருத்மானின் த்வனியும் பக்தர்கள் செவிகளுக்கு இனிமையாகவும்
எம்பெருமான் விஸ்லேஷத்தால் வாடும் பக்தர்களுக்கு அவனது
வரவைப் பறை சாற்றும் உயிர்க்காப்பாகவும் இருக்குமே-
கண்களால் காண வரும் கொல் என்ற ஆசையால்
மண் கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்து செல்
பண் கொண்ட புள்ளின் சிறகொலி பாவித்துத்
திண் கொள் ஒர்க்கும் கிடந்து என் செவிகளே-
ஸ்ருதி என்ற சொல் -மறை என்னும் பொருளில் முதல் கடைசி வரிகளிலும்
காது என்னும் பொருளில் இரண்டாம் அடியிலும்
கேட்டல் என்னும் பொருளில் மூன்றாம் அடியிலும் பிரயோகிக்கப் பட்டுள்ளது
———-
அம்ஸே ஸ்திதஸ்ய புருஷஸ்ய பரஸ்ய காந்த்யா
அம்போத வத் கிமிஹ பாஸி சிலா கருத்மான்
அஸ்ய அங்க்ரிஜா சரிதுபா வ்ருதவத் கிமேவம்
அத்ராசி தத் ரஜத கஞ்சுக ஸம் வ்ருதாங்க –41-
ஓ கல் கருட ஸ்வாமியே -இந்த திரு நறையூர் தேஸத்தில் தோளில் இருக்கிற புருஷோத்தமனான
விஷ்ணுவுடைய திருமேனியின் கறுத்த ஒளியாலே கார் மேகம் போல் கறுத்தவனாக ஒளிர்கிறீரோ
எம்பெருமானுடைய திருவடியில் தோன்றிய கங்கையினால் சுற்றப்பட்ட -மறைக்கப்பட்டவர் போல்
இவ்வாறு அப்படிப்பட்ட வெள்ளிக் கவசத்தினால்
சாற்றப்பட்ட திருமேனி யுடையவராக வெண்மையாக இங்கே இருக்கிறீரோ
கங்கா நதியே கவசமாக ஆனாளோ
ஸாரூப்யம் அருளியது தோன்றுமே
தேவதைகளும் எம்பெருமான் அடியார்களுக்கு ஸேவை புரிவார்கள் அன்றோ –
—————
வாராசி கன்யா சதனே அதி மான்யம்
வாஸம் பஜந்தம் விஹகாதி நாதம்
வாஸாம் பரை தேஹி நமாமி ஹீனை
வாஹம் ஹரே ரத்ன ரஹம் வஹாமி –42-
அடியேன் கொண்டாடத்தக்க நாச்சியார் கோயிலிலே நித்ய வாஸம் செய்பவரும்
பக்ஷிகளுக்குத் தலைவரும்
வாஹனமாகவும் உள்ள கருடாழ்வாரை
ப்ரயோஜனாந்தரர் போல் இன்றிக்கே அநந்ய ப்ரயோஜனராய்
சொற்களின் சுமைகளால் -ஸ்துதிகளால் மனதுக்குள்ளே த்யானிக்கிறேன்
எனது உள்ளத்துக்குள்ளே பறக்கும் அவனும் நிலையாக வீற்று இருக்க
அவனுடன் மிதுன தம்பதிகளும் நித்ய வாஸம் செய்து அருளப் பெற்றேனே
கருட வாஹனனாகிய எம்பெருமான் திரு உள்ள உகப்புக்காகவே கருட தண்டகம் அருளிச் செய்ததாக
ஸ்வாமி தேசிகன் அருளிச் செய்கிறார்
ஹரியின் வாகனத்தையும் நான் வஹிக்கிறேன் என்கிறார் இவர் இங்கு
————-
சசாங்க ஸஹஜா க்ருஹே சமித ஸர்ப லீலா ரஸ
சடாரி முக ஸூக்திபிர் சதச ஆதராத் கீர்த்தித
சத க்ரது ஸரேஷ் வஹோ சலபதாம் திசன் தேஜஸா
சமத்ர மயி சன்னதே சரணமாகதே புஷ்யது –43-அனைத்துப் பாதங்களிலும் சகாரம் முதல் எழுத்து
ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஸந்நிதியில் எழுந்து அருளி இருக்கும் ஸ்ரீ கருடாழ்வார்
நாகங்களின் சேஷ்டிதங்களை அடக்கியவர்
ப்ரபந்ந ஜன கூடஸ்தரான நம்மாழ்வாரால் கொண்டாடப்பட்டவர்
தேவேந்த்ரனுடைய ஆயுதங்களை வீட்டில் பூச்சி ஆக்கியவர்
அவரை நமஸ்கரித்து சரணாகதி அடைந்து அவர் அநுக்ரஹம் பெற்றதை அருளிச் செய்கிறார்
சந்திரன் பிறப்பிடமும் பெரிய பிராட்டியார் பிறப்பிடமும் சீதளமான சமுத்ரமே
ஆஹ்லாத கரமான குணம் -அநுக்ரஹ மயீம் நித்யம் அஞ்ஞாத நிக்ரஹாம் –
அவள் அடியவரான கருடாழ்வார் குணமும் அப்படியே
கர்மங்களுக்கு அடிமைப்பட்டு இருப்பதை -பாம்புகளை நிரஸித்து அருளியது போல் -போக்கி அருள்பவர்
ஆம்நாயாநாம் ப்ரக்ருதிம பராம் ஸம்ஹிதாம் த்ருஷ்ட வந்தம் -என்று பாதுகா ஸஹஸ்ரத்தில்
திருவாய் மொழி கண்டு அருளிய ரிஷியான நம்மாழ்வார்
ப்ரதம சதகே வீஷ்ய வரதம்
அருளாழி புள் கடவீர் அவர் வீதி ஒரு நாள் என்றும்-ஓடும் புள் ஏறி சூடும் தண் துழாய் நீடு நின்றவை ஆடும் அம்மானே என்றும்
கருடாரூடனாக வரதன் தனக்கு அருள் செய்வதை அருளிச் செய்கிறார்
————-
சசி பகிநீ சரணாகதம் சரணமமும் தமஹ மகாம்
சமித மஹா பணி லலிதம் சத முக பூ சுப விஜயம்--44-அனைத்துப் பாதங்களிலும் சகாரம் முதல் எழுத்து
சந்திரனுடைய ஸஹோதரி பெரிய பிராட்டியார்
அவர் சரணம் -இருப்பிடம் -நாச்சியார் கோயிலில் வீற்று இருப்பவர் கருடாழ்வார்
பெரிய சர்ப்பங்கள் கொட்டங்களை எல்லாம் அடக்கியவர்
தேவ லோகத்தை வென்றவர்
அப்படிப்பட்ட பராக்ரமத்துடனும் ஆஸ்ரிதர் மேல் கருணையுடனும் இருக்கும்
கருடாழ்வாரை சரண் அடைகிறேன்
———–
ஸர்வ மௌலி தடிநீ தட ந்ருத்யத் சர்வரீ ச பகினீ சரணஸ்தம்
ஸர்வ வாஞ்சித கரம் விஹகேந்த்ரம் ஸர்வ லோகபதி வாஹம் ஆஸ்ரயே–45-
சிவனின் முடியில் கங்கை வீற்று இருந்து நடனம் ஆடுவதை போலவே இருக்கிறாள் கங்கை
பிறை சூடி -அவள் பக்கத்திலே சந்திரனும் உள்ளான்
அவன் இரவின் தலைவன் ஆவான்
அவனுடன் பிறந்தவள் பிராட்டி
அவளுடைய கோயிலிலே இருப்பவர் ஸ்ரீ கருடாழ்வார்
பாதோதகேந வித்ருதேந சிவா பவந்தி -ருத்ரன் எம்பெருமான் திருவடி தீர்த்த ஸ்பரிசத்தால் சிவன் ஆனான்
அதே போல் சந்திரனும் அதன் அருகில் இருப்பதால் மங்களம் அடைந்தான்
மங்களம் மங்களானாம் -என்ற திருமாலுக்கும் மங்களமான பிராட்டியாருக்கு சகோதரன் ஆனதால் சந்திரன் மேலும் சிறப்பை அடைகிறான்
மிதுன தம்பதிகளுக்கு வாஹனமாய் இருக்கும் பெரிய திருவடியை ஆஸ்ரயிக்கிறார்
—————-
ஸூ பர்ணம் ஸூ சாகம் ஸூ ரௌகாபி நந்த்யம்
ஸூ பஷம் ஸூ ப்ருஷ்டம் ஸூ மேரோஸ் ஸ பக்ஷம்
ஸூ தாயாஸ் ஸூ தாப்தே ஸூ கேஹே வஸந்தம்
ஸூ கம் ப்ராப்து மாப்தாஸ் ஸூதம் கஸ்ய பஸ்ய--46-
சிறந்த இறகுகளை உடையவனும் –
அவனைக் கூட்டி வரும் போது அஞ்சிறைப்புள் –
விலக்கி அழைத்துச் செல்லும் பொழுது வெஞ்சிறைப் புள்
சிறந்த கை கால்கள் யுடையவனும்
பொரு சிறைப்புள் உவந்து ஏறும் -இருவருக்கும் உகப்பு
தன்னை வணங்க வைத்த கரணம் இவை
தங்கள் கார்யங்களை நடத்துகிறபடியால் ஸூரர்கள் எனப்படும் தேவர் கூட்டங்களால் பாராட்டத் படுபவன்
கொற்றப்புள் ஓன்று ஏறி மன்னூடே வருகின்றான்
சிறந்த பின்புறத்தை யுடையவனும்
தாஸஸ் ஸஹா ஆஸனம் வாஹனம் -என்பதற்கு ஏற்ற திருமேனி அமைப்பை யுடையவன் –
மேரு மலையின் தோழனும்
மேரு மலை போன்ற திருமேனி அளவும் அழகும் பொன்னிறமும்
பொன் மலையின் மீமிசைக் கார் முகில் போல்
பாற் கடலின் புத்ரியான பிராட்டியாருடைய நாச்சியார் கோயிலிலே நித்ய வாசம் செய்து அருள்பவனும்
கஸ்யப மஹரிஷியின் மைந்தனான அணுக்கத் தொண்டன்
இப்படிப்பட்ட பெருமைகளை யுடைய கருடாழ்வாரை சரணம் அடைகிறோம்
————
ஸரஸ்வதீ பிர் ஸததம் ஸ்திதாபி
ஸம் பூர்ண ஸர்வா வயவம் ஸூ பர்ணம்
ஸரோஜ வாஸா சதனே வஸந்தம்
ஸமாஸ்ரயே ஸாராஸ நேத்ர வாஹம்–47-
வேதத்தின் உரு -கண்ணாடி போல் தன்னையே காணும் படி எதிரில் எழுந்து அருளி இருக்கிறார்
ஸூ பர்ணோஸி கருத்மான் -சிறந்த இறக்கைகள்
வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகு என்னும் மேலாப்பின் கீழ் வருவான்
குளத்தில் தோன்றிய தாமரையை இருப்பிடமாகக் கொண்ட பிராட்டியுடைய இல்லத்தில் வசித்து
மிதுனமே சேஷி என்று உணர்ந்து
பிராட்டி நிழலில் ஒதுங்கி கைங்கர்யங்களை உகப்புடன் செய்து அருள்கிறார்
ஸாரஸம் -தாமரை ஒத்த திருக்கண்கள் கொண்ட திருமால்
தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே புள்ளைக் காடாகின்ற வாற்றைக் காணீர்-ஆழ்வார் திரு உள்ளத்தில் ஏசல் கண்டு அருள்கிறான்
இப்படிப்பட்ட கருடாழ்வாரைப் புகலாகப் பற்றுகிறேன்
———
ஸூர பதி ப்ருதநா தூனன படுனா
ஸூத நோர் விநதா ஸம்ஞாவத்யா
ஸூத இதி ஜகதி ப்ரதி தேனா அஹம்
ஸூக மிஹ நிகிலம் ப்ராப்தஸ் ஸத்யம்--48-
இந்திரனுடைய படைகளை ஆட்டி வைக்க வல்லவனும்
கொடியா வடு புள்ளுயர்த்தான்
கருடப்புட் புட் குடி சக்கரப்படை வான நாட
பகைவர்களை எதிர்த்த போதும் -அடியார்களே அஹங்காரத்தால் எதிர்த்த போதும்
அவர்களுக்குத் தக்கபடி வ்யாபாரித்துத் திருத்துபவரும்
விநதா மைந்தனும் -யன் மங்களம் ஸூ பர்ணஸ்ய விநதா கல்பயத் புரா -என்று
கௌசல்யா தேவி பெருமாளுக்கு மங்களா சாசனம் செய்ததும் த்ருஷ்டாந்தம்
இப்பெருமைகளை யுடைய கருடாழ்வாரது அனுக்ரஹத்தாலேயே
வைகுந்தமாகும் தம்மூர் எல்லாம் என்னும்படி
அங்குபோய் செய்யும் நித்ய கைங்கர்யங்களை இங்கேயே செய்யப் பெறுகிறோமே
———
ஸூரா ஸூரா நந்தித விக்ர மௌனம்
ஸூ கீர்தி லீலா ரஸ நிர் வ்ருதாங்கம்
ஸூதாப்தி கன்யா சதநாங் கணஸ்தம்
ஸூதம் ப்ரபத்யே விநதாங் கனாய--49-
தேவர்களும் அசுரர்களும் வணங்கும் பராக்கிரமத்தை உடையவர்
த்ரிதாம் நஸ் த்ரி தச ரிபு சமூ மோஹநோ வாஹ நேந்த்ர கருட பஞ்சாசத் -51–அசுரர்கள் அழித்து -இதனால் இவர்களுக்கு –
மூன்று அவஸ்தை -த்ரி தச-இளைமை -பால்யம் -யவ்வனம் -மட்டுமே –
த்ரை கால்யோபஸ்திதாத்-முக்கால பிரதிபந்தகங்களையும் போக்கி அருளுவார்
ஸூ கீர்த்தியுடன் ஸம்ஸ்லேஷ லீலா ரசத்தினால் மகிழ்பவர்
நாச்சியார் கோயிலிலே நித்யவாஸம் செய்து அருளும் விநதையின் குமாரரான சேஷியை வணங்குகிறேன் –
————
ஸூதாம்புதி ஸூத க்ருஹே ஸூர பதச்சேமூ த்ராச
ஸூதா கலச ஹாரக ஸூம சரஸ்ய வாஹ பிது
ஸூதீ மணிபி ரர்சித ஸூபக நீலமேக ப்ரபு
ஸூ பர்ண இஹ மானஸே ஸூகத ஏது வாஸம் ஸதா –50-
திருமக்களுடைய நாச்சியார் கோயிலிலே வசிப்பவரும்
இந்திரனுடைய சேனையை வென்றவரும்
அம்ருதகலசத்தை பலாத்காரமாக எடுத்து வந்தவரும்
மன்மதனுடைய தந்தைக்கு வாஹனமாயும்
சான்றோர்களால் போற்றப்படுபவரும்
மிக்க தேஜஸ்ஸை யுடையவருமான
கருடாழ்வார் எனது மனதில் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் வஸிக்க வேண்டும்
இதே கருத்துக்களை கருட பஞ்சாசத் -24-25 ஸ்லோகங்களில் உண்டே
யா ஸ்வாங்கே சங்கர அந்தர்க்கருதநில லவ ஸ்தம்பிதே ஜம்ப சத்ரவ்
குண்டாஸ்த்ரே சன்ன கண்டம் ப்ரணயதி பவயே பஷ லேசம் திதேச
சோஸ்மாகம் சம்விதத்தாம் ஸூரபதி ப்ருதாநா த்வந்த்வ யுத்தைக மல்ல
மாங்கள்யம் வால கில்ய த்விஜ வர தபஸாம் கோ அபி மூர்த்தோ விவர்த்த-24-
யா ஸ்வாங்கே சங்கர அந்தர்க்கருதநில லவ ஸ்தம்பிதே
ஜம்ப சத் ர்ரவ்-இந்திரன் ஜம்பாசுரனை வென்றதால் ஜம்பை சத்ரு என்று இந்திரனைச் சொல்லி
-வஜ்ராயுதம் இவன் சிறகு அசைவிலே சக்தி அற்று இருக்க
குண்டாஸ்த்ரே சன்ன கண்டம் ப்ரணயதி-இந்திரன் பிரார்த்தித்தவாறே சிறகின் ஒரு லேசம் அருளி
பவயே பஷ லேசம் திதேச–தேவ வஜ்ராயுத பலம் பெற்று இழந்த மதிப்பை மீண்டும் பெற அருளினான்
சோஸ்மாகம் சம்விதத்தாம்
ஸூரபதி ப்ருதாநா த்வந்த்வ யுத்தைக மல்ல–இந்திரனுடைய தேவ கணங்களுடன் யுத்தத்தில்
மாங்கள்யம் வால கில்ய த்விஜ வர தபஸாம் கோ அபி மூர்த்தோ விவர்த்த-வால கில்யாஸ் காஸ்யபருடைய
யாகத்துக்கு உதவி கைங்கர்யம் செய்ய
இந்திரன் அவர்கள் சிறு உருவை ஏளனம் பண்ண -அவர்கள் சபிக்க –
அவர்களில் வெறுப்பற்ற மிக பெரிய உருவத்துடன் -விவர்த்த மூர்த்த -வந்து இந்திரனுடைய கர்வத்தை அழித்தார்
ருத்ரான் வித்ராவ்ய சேந்த்ரான் ஹுதவஹ ஸஹிதம் கந்தவாஹம் க்ருஹீத்வா
காலம் நிஷ்கால்ய தூத்வா நிர்ருதி தநபதீ பாஸிநம் க்லேசயித்வா
ஸர்ப்பாணாம் சாத்மிகாநாம் அம்ருத மய பண ப்ராபண ப்ராப்த தர்ப்ப
நிர்ப்பாதம் க்வாபி சர்ப்பன் அபஹரது ஹரே ரௌப வாஹ்யோ மதம்ஹ–25-
ருத்ரான் வித்ராவ்ய சேந்த்ரான் -இந்திரன் ருத்ரன் போன்றோர் ஓட
ஹுதவஹ ஸஹிதம் கந்தவாஹம் க்ரு ஹீத்வா காலம் நிஷ்கால்ய தூத்வா நிர்ருதி தநபதீ பாஸிநம் க்லேசயித்வா–
ஹுதவஹ என்று அக்னி -கந்த வாஹ என்று வாயு -யமன்-
பவ்சிக என்று வருணன்- வருண பாசக்கயிற்றை ஆயுதமாக கொண்டதால் – குபேரன் -போன்றோரை வென்று
ஸர்ப்பாணாம் சாத்மிகாநாம் அம்ருத மய பண ப்ராபண ப்ராப்த தர்ப்ப–சர்ப்பங்கள் வினைதை தாயை
அடிமையை இருந்து விடுவிக்க அமிர்தம் எடுத்து வந்து
நிர்ப்பாதம் க்வாபி சர்ப்பன் அபஹரது ஹரே ரௌப வாஹ்யோ மதம்ஹ-அதுக்கும் மேலே வாஹனமாகவும் ஆகி
————
ரமா ரமண வாஹனம் ரண ஜய ஸ்ரியா ஸேவிதம்
ரவே ரதக ஸோதரம் ரகு பதே ரணே ரக்ஷகம்
ரமா சதன வாஸினம் ரயஜித அஞ்ஜனார் அஞ்ஜனம்
ரவணே க்ருத மங்கலம் ரதமனா அஹம் பாவயே –51-
ரமா தேவியான திருமகளின் பிரிய நாயகனுடைய வாஹனமாயும் –குதிரை பூட்ட வெண்டாதே திருத்தேர் அன்றோ இவன்
வேகோத்தாநாம் விதாநம் வ்யஜனமநு குணம் வைஜயந்தீ ஜயந்தீ
மித்ரம் நித்யாப்ய மித்ரம் யுதி விஜயரதோ யுக்ய யோகா நபேஷ
தாஸோ நிஷ் பர்யு தாஸோ தநு தநய பிதோ நி ஸஹாய ஸஹாய
தோ தூயே தஸ் மதீயம் துரிதம தரிதா ராதி பஷை ஸ்வ பாஷை -46-
வேகோத்தாநாம் விதாநம் -விதானமாகவும் கைங்கர்யம் –
வ்யஜனமநு குணம் -விசிறியாகவும் கைங்கர்யம்
வைஜயந்தீ ஜயந்தீ -வெற்றிக்கு கொடி யாகவும்
மித்ரம் நித்யாப்ய மித்ரம் -நண்பன் -விரோதி நிரசனத்துக்கு உதவி
யுதி விஜயரதோ யுக்ய யோக அநபேஷ-குதிரை வேண்டாத ரதமாகவும் கைங்கர்யம் –
தாஸோ நிஷ் பர்யு தாஸோ -விட்டு விட மாட்டாத சேஷ பூதர்
தநு தநய பிதோ நிஸஹாய ஸஹாய -வேறே சகாயம் வேண்டாத சகாவாகவும்
தோ தூயே தஸ் மதீயம் துரிதம தரிதா ராதி பஷை ஸ்வ பாஷை -பக்ஷங்களை கொண்டு விரோதி நிரசனம்
பண்ணுவது போலே நம் பிரதிபந்தகங்களை போக்கி அருளுபவர்
இதில் -வைஜயந்தி ஜெயந்தி / நிஸ் ஸஹாய ஸஹாய / பர்யு தாச தாச –
சப்த பிரயோகங்கள் அனுபவிக்கத்தக்கன
வெற்றித்திருமகளால் பூர்ணமாக அருளப்பெற்றவர்
ஸூர்யனுடைய தேர் போட்டியான அருணனுக்கு சகோதரர்
பெருமாளுக்கு நாகபாசம் விடுவித்து கைங்கர்யம் செய்தவர்
வாயு புத்ரனுடைய வேகத்துக்கு காரணமானவர்
பஷிகளால் மங்களா சாசனம் செய்யப்படும் புள்ளரையனை மகிழ்ச்சியுடன் எனது மனத்தால் வணங்குகிறேன்
வெஞ்சிறைப்புள்ளாய் அநிஷ்ட நிவ்ருத்தியும்
அம் சிறைப்புள்ளாய் இஷ்ட பிராப்தியும் அளிப்பவர் அன்றோ
————-
சத தல சரணாயா சத்ம ஸம் பூஷ யந்தம்
சத தல கு ஸூ மாஷம் சார்ங்க பாணிம் வஹன் ந
சத மக மணி நீல ஸார்வ பவ்ம க கானாம்
சத மக ஸஹ ஜாத ஸ்ரீ ஸூஹ்ருத் பாது பாபாத்–52-
சத தல சரணாயா சத்ம ஸம் பூஷ யந்தம்–நாச்சியார் கோயிலுக்கு பூஷணமாக இருப்பவர்
சத தல கு ஸூ மாஷம் சார்ங்க பாணிம் வஹன் ந-தாமரைக்கண்ணன சக்ரபாணிக்கு வாஹனமாயும் இருப்பவர்
த்வத் ஸ்வீகார கலா அவலேப கலுஷா: ராஜ்ஞாம் த்ருச: துர்வசா:
நித்யம் த்வத் மது பாந மத்த மதுப ச்ரீ நிர்பராப்யாம் பதிம்
த்ருக்ப்யாம் ஏவஹி புண்டரீக நயநம் வேத: விதாமாஸ தே
ஸாக்ஷாத் லக்ஷ்மி தவ அலோக விபவ: காக்வா கயா வர்ணயதே?–40-
ஸ்ரீரங்கநாயகியே! மஹாலக்ஷ்மீ! உனது கருணை மிகுந்த கடாக்ஷம் காரணமாக
இந்த உலகில் உள்ள அரசர்கள் மிகுந்த செல்வம் பெற்று, கர்வம் கொண்டுள்ளனர்.
அவர்களது கண்களில் பார்வையைக் காணவே இயலவில்லை (அத்தனை கர்வம் உள்ளது).
உனது கணவனான ஸ்ரீரங்கநாதனின் கண்கள், கருவண்டுகள் போன்று உன்னைத் தேனாக நினைத்து
எப்போதும் உன்னையே மொய்த்தபடி உள்ளன. இதனால் அவனது கண்கள் சிவந்து விட்டன.
இதன் மூலமாக மட்டுமே வேதங்கள் அவனை செந்தாமரைக் கண்ணன் (புண்டரீகாக்ஷன்) எனப் புகழ்ந்தன போலும்.
இப்படியாக பல பெருமைகள் கொண்ட உனது திருக்கண்களை நான் எவ்வாறு வர்ணிக்க இயலும்?
சத மக மணி நீல ஸார்வ பவ்ம க கானாம்
மணி வண்ணன-மன்னு மரகதக்குன்றான நம்பியை நித்தியமாக அனுசந்தித்து சா ரூப்யம் பெற்று
நீல நாயக கல் நிறத்தை எய்தினாரே
சத மக ஸஹ ஜாத ஸ்ரீ ஸூஹ்ருத் பாது பாபாத்
வாமனனுக்கு சஹா-மிக்க சீலத்துடன் -இரந்தும் நம்மை உஜ்ஜீவித்து அருள்பவர் –
இதனாலேயே வாமனனுக்கு பிரியமானவர்
—————
கல்லோலினீ காமுக கன்யகாயா
காந்தே நிசாந்தே கலயன் நிவாஸம்
காகோதர த்ராஸத கூஜிதோ ந
கரோது கம் கஸ்யப புத்ர ரத்னம் –53-
கல்லோலினீ காமுக கன்யகாயா
அமுதினில் வந்த பெண்ணமுதமான -சீதக்கடலுள் அழுத்தமான –
பாற் கடல் புத்ரியான வஞ்சுள வல்லித்தாயாருடைய
காந்தே நிசாந்தே கலயன் நிவாஸம்
அந்தப்புரமாக விளங்கும் நாச்சியார் கோயிலிலே நித்ய வாசம் செய்பவரும்
ஸ்ரீ தேவி இங்கும் -பூமா தேவி விண்ணகரிலும் -ஆண்டாள் நாச்சியார் ஸ்ரீ வில்லுபுத்தூரிலும் ஒரே ஸந்நிதி -அந்தப்புரம் போல் உண்டே
காகோதர த்ராஸத கூஜிதோ ந
தன்னுடைய திருமேனி தேஜஸ்ஸாலே பாம்புகளுக்கு அச்சம் உண்டாக்குபவர்
நாக பாசத்தால் கட்டுண்ட போது
ததோ முஹுர்த்தாத் கருடம் வைநதேயம் மஹா பலம்
வானரா தத்ருசு ஸர்வே ஜ்வலந்தம் இவ பாவகம்
தமா கதமபி ப்ரேஷ்ய நாகாஸ்தே விப்ரது த்ருவு –தேஜஸ்ஸைக் கண்டதும் நாகங்கள் அஞ்சி ஓடுனவே
கரோது கம் கஸ்யப புத்ர ரத்னம்
கஸ்யபர் பெற்று எடுத்த ரத்னம் அடியேனுக்கு கம் -ஆனந்தம் அளித்து அருளட்டும்
கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம –சாந்தோக்யம் -ஸுகம் ஆகாசம் -ஸ்ரீ வைகுண்டம்
———-
அத சதுர்த்த சமத்கார விஹார
விஹாரம் ஸஞ்சாரம் என்றவாறு -லீலை வேடிக்கை என்றுமாம்
ப்ராஸம்
அநு ப்ராஸம்
மஹா ப்ராஸம் –காவ்யா நடை அழகுடன் முதல் மூன்று விகாரங்கள்
ஸமத்காரம் -பொருள் சுவை பதிந்த விஹாரம்
பிரார்த்தனை -பக்தி பாவம் ததும்பும் விஹாரம்
சஷுஸ் ஸ்ருதீநாம் ஸரமாம் தஸாம் யத்
நாஸா நிஜாக்ரேண ஸ்ரு ஜத்ய ஜஸ்ரம்
ஸ வைந தேய ஸ்ருதி ப்ருந்த ரூப
ஸ்ருதீ ருதைஸ் ஸ்வை பரித புநாது –54-
சஷுஸ் ஸ்ருதீநாம் ஸரமாம் தஸாம் யத் நாஸா நிஜாக்ரேண ஸ்ரு ஜத்ய ஜஸ்ரம்
யாருடைய மூக்கு நுனியானது பாம்புகளுக்கு எல்லாம் முடிவு ஏற்படுத்துகிறதோ
பாம்புகளை வெல்லும் திறமையால்
தத்வீ கராரி
நாக ஹந்தா
ஆஸீ விஷாரி
ஸர்ப சந்தான ஹந்தா
காத்ரவே யாந்தகன்
புஜக குல ரிபு
வ்யாலா ஹாரன்
என்ற திரு நாமங்களால் ஸ்வாமி தேசிகன் கருட பஞ்சாசத்தில் அருளிச் செய்கிறார்
ஸ வைந தேய ஸ்ருதி ப்ருந்த ரூப
வேத ஸ்வரூபி
ஸ்ருதீ ருதைஸ் ஸ்வை பரித புநாது
தன்னுடைய ஒலிகளால் எனது காதுகளைப் புனிதம் ஆக்கட்டும்
முடியானே போல் ஸ்வாமியுடைய கரணங்களும் அபிநிவேசம் மிக்கு உள்ளன –
————
வட தரு மஹா ஸாகா லக்னான் முனீன ப்ரஷிதம்
கருட பவதா ஷுத் ஷுண்ணேனா அப்யஹோ யதனுஷ்டிதம்
ததிஹ பகவத் பக்த ப்ராந்தே மாமோதித மாகசாம்
நிசய மகிலம் தூரீ கர்தும் சரித்ர மலம் ப்ருசம்–55-
கருடனே பசியால் பீடிக்கப்பட்ட நிலையிலும் உம்மால் ஆலமரத்தின் பெரும் கிளையில் தொங்கிய
மஹா முனிவர்களை ரக்ஷிக்க எது செய்யப்பட்டதோ அந்த ஆச்சார்யமான சரிதமே
அடியேனுடைய பாகவத அபசாராதிகளாகிய
பெரிய பாபக் கூட்டங்களைப் போக்கி அருளப் போதுமானது
அல்லது
பாகவத கோஷ்ட்டியில் புகழப்படும் இந்த சரித்திரமே எனது பாபக் கூட்டத்தைப் போக்கப் போதுமானது என்றுமாம்
ஸ்ரீ மத் பாகவதத்தில் இறுதியில் -படதே வா த்விஜ கண முக்ய ஸம்ஸதி -இங்கு கருத்மான் ஸந்நிதியில் என்றவாறு
————-
உபரோ பகவானிஹ பாதி ஹரி
கமலா சதேந ச பவான்ஹி தத்
உபலா க்ருதிதாம் அதி கத்ய பராம்
உபகார ரதிம் குருதே நிதராம்–56-
நம்பியும் நீரும் உபரர்கள்-உ பெரிய பிராட்டியாரை தனக்கும் மேல் பெருமை உடையவராக ஆக்கிக் கொண்டு உள்ளீர்கள்
ஆகவே உபலமாக -கல்லாக ஆனீர் -உபரன் உபலன் -ரகாரமும் லகாரமும் -மாறலாம்
உ ப உபகாரம் செய்து அருளுகிறீர்கள் இருவரும் என்றுமாம்
கமலா குசஸூ –ஸ்லோகம் போல் இதுவும் இனிமையான ஸ்லோகம்
——–
சவ்ஷ்ம்யாத் பஸ்யதி ஸர்வமத்ர பரிதஸ் ஸ்ரீ மான் முனிஸ் கஸ்யப
தஸ்யாயம் தநயோ அநகோ விநதயா ஸத்யா ஸ்வ குஷவ் த்ருத
தஸ்மாத் ஸுஷ்ம்ய விலோகனே அதி நிபுண ஸ்ரீ வாஹகோ அயம் ஹரே
ஸுஷ்ம்யம் ஸுது மனஸ்ய முஷ்ய ஸததம் தர்மஸ்ய பஷீஸ்வர –57-
விநதையின் திரு வயிறு வாய்த்த இந்த வைநதேயன் -காஸ்யபரின் புதல்வர்
கஸ்யபர் சுற்றிலும் பார்க்க வல்லவர் -ஸூஷ்மமாகப் பார்க்க வல்லவர்
ஹரியின் வாஹனமாக ஆகும் பக்ஷி ராஜர் அடியேன் மனத்தில் தர்மங்கள் ஸூஷ்மங்களை அருளிச் செய்ய வேண்டும்
கழுகுப் பார்வை விசேஷணம் அன்றோ -கழுகை விட உயரமாக பறந்து ஸூஷ்மமாகப் பார்க்க வல்லவர்
வைநதேய கதி பரா -ஸம்பாதி கூற்று
காஸ்யப பஸ்யகோ–ஸ்ருதி
பஸ்யகர் மருவி கஸ்யபர் ஆனது –ஹிம்ஸம் என்றது ஸிம்ஹம் ஆனது போல் –
த்ருஸ்யதே த்வ க்ரியா புத்த்யா ஸூஷ்மயா ஸூஷ்ம தர்சிபி -என்னும்படி
ஸூஷ்ம ஸித்த அர்த்தமான பகவானைக் காணும் ஸூஷ்ம ஞானம் அருள வேண்டும் என்று பிரார்த்திக்கிறார் –
கஸ்யபர் போலவே விநதையும் ஸூ பர்ணீ என்ற பெயரில் வேதப் புகழ் பெற்றவள்
——–
ஆகாஸே கிரணைர் நவை ஸமுதிதை ஸூர்யஸ்ய ஹேமாயிதே
வ்ருஷாக்ரைர் ம்ருதுனா அநிலேந சலிதை ஸம்வீ ஜிதே சாமரே
மேகானாம் சகலை கதாகதி யுதை ஸம் பூஷிதே ராஜதை
அம் சாக்ரே கலையன் கனம் கமபி தம் பஷீஸ் வராக்ரே பவ –58-
இதில் தன் முன் ஆவிர்பவித்து ஸேவை சாதித்து அருளப் பிரார்த்திக்கிறார்
ஸூர்ய உதய காலத்தில் கருடனையும் கருடாரூடனான எம்பெருமானையும் தியானிக்க வேண்டும்
ஸ்வர்ண மயமான கிரணங்கள் மரங்களின் நுனியில் விழ மரங்கள் தங்கமயமாக விளங்க
காற்றும் மெதுவாக வீச -இயற்கையே -தங்க சாமரம் வீசுவது போல் இருக்குமே கருடாழ்வாருக்கு
மேகங்களும் வெண்மையாக -கருடாழ்வாருடைய திருத் தோள்களுக்கு வெள்ளித்துண்டுகள் அலங்கரிப்பது போல் இருக்குமே
இப்படிப்பட்ட கருடாழ்வார் ஸேவை சாதிக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறார் –
——–
யத் பாதால கதாஹி ஸஞ்சய பணாஸம் பேதிநாஸாக்ரத
நிர் தூதாநத பாபராசி நிகம ஸ்தோ மஸ்ய திவ்யாக்ருதி
ஸந்தோ தாம ஸூ தாம சாரதி மணே யத் ப்ராத்ருதா மாஸ்திதம்
தல் லஷ்மீ சதனே சமர்ச்சித பதம் தேஜோ மமாஸ்து ஸ்ரீ யை-59-
தேஜோ ராஸியாக அனுபவிக்கிறார்
ஜ்யோதிஷம் ஜ்யோதிஸ்ஸு
கருத்மானும் வ்யூஹ சம் கர்ஷணனே -ஆவணி ஸ்வாதி திரு நக்ஷத்திரத்தில் திருவவதாரம்
——–
ஸூகந்த கிரி மஸ்தகே மதுர வஞ்ஜூலா ஸம் யுதம்
விலோசன விநோததம் விநம திஷ்ட ஸந்தா யினம்
ஸதா மனஸி சாதரம் நயன யோச்ச குர்வன் ஸ்ருதவ்
ஸஹஸ்ர நயனோ பலாக்ருதி ரயம் ஜயத் யண்டஜ –60-
ஸூ கந்த கிரி கருடாழ்வாருக்கு மங்களா ஸாஸனம் பண்ணுகிறார்
———
அம்ஸே கம்ஸ ரிபும் வஹந்தம் அம்ருதம் ஹஸ்தே ப்ரசஸ்த அம்ருதம்
நாஸ அக்ரேண ஸதா வி பின்ன புஜகம் ஸ்ரீ கேஹ கேஹஸ்திதம்
இஷ்டா நாநதா சஞ்சயேஷு தததம் தம் பஷீணாம் ஈஸ்வரம்
ஸ்வாந்தே சந்தத மாதரேண கலயே வேதவ்க ஸத் விக்ரஹம் –61-
அம்ஸே கம்ஸ ரிபும் வஹந்தம் அம்ருதம்
ஆராவமுதனை திருத்தோள்களில் ஏந்தியவர்
அமரர் தம் அமுதே அசுரர்கள் நஞ்சே
கம்ஸ -கொள்கலனையும் குறிக்கும் -ஆராவமுதனை ஒரு கொள்கலத்துக்குள் அடக்க முடியாதே
கம்ஸ -வெண்கலத்தையும் குறிக்கும்
கம்ஸ ரிபு இங்கு இருந்தாலும் வெண்கலப் பாத்திரங்களுக்கு பிரசித்தம் இந்த திவ்ய தேசம்
நறையூரில் செண்பகப் பூக்களின் வாசனையைக் கண்டு வண்டுகள் புகுவதாக கலியனின் அனுபவம்
ஹஸ்தே ப்ரசஸ்த அம்ருதம்
ஆராவமுத்துக்கு நிகராகாத உப்புச்சசாற்றை கையில் ஏந்தி உள்ளவன்
துவாதச அக்ஷர மண்டபத்தில் ஆராவமுதனைக் கண்களால் பருகிக் கொண்டே உள்ளான் -என்பதை அம்ருத சார்தூல ஸ்லோகத்தில்
ஸ்வர்க்கே பாத்யம்ருதம் யதர்த்தம் யதபவம் யோத்தும் ச யத் நான்வித
திங்மாம் யத் ரஸநா கதம் விதநுதே கிஞ்சித் ருசிம் ஸாரூஜ
நிர் யுத்தம் ச நியத் நம் அத்ர நகரே பீதம் மயா ஸர்வதம்
தத்பாதீதி க்ருதாஞ்ஜலிர் யதம்ருதம் பஷீஸ்வரஸ் சேவதே-
நாஸ அக்ரேண ஸதா வி பின்ன புஜகம்
தனது அலகின் நுனியால் பாம்புகளைத் துண்டாக்குபவரை
ஸ்ரீ கேஹ கேஹஸ்திதம்
நாச்சியார் கோயிலிலே கோயில் கொண்டுள்ளவரை
இஷ்டா நாநதா சஞ்சயேஷு தததம் தம் பஷீணாம் ஈஸ்வரம்
தனது அடியார்களின் அபீஷ்டங்களை வழங்கும் கருடாழ்வாரை
ஸ்வாந்தே சந்தத மாதரேண கலயே வேதவ்க ஸத் விக்ரஹம் —
வேத ஸ்வரூபியாய் விளங்கும் கருடாழ்வாரை எப்போதும் உள்ளத்தில் வைத்துப் போற்றுகிறேன்
———–
ஆகாஸ ஆஸ்தே ஸ யதம்ஸ தேஸே
சாகாஸ் சமா யஸ்ய வஹந்தி தேஹே
பஷீஸ் வரோயம் பரமாத்புதாத்மா
கரோது கல்யாண பரம்பராம் ந –62-
ஆகாஸ ஆஸ்தே ஸ யதம்ஸ தேஸே
ஆகாசம் –அகில உலகுக்கும் ஆதாரமான பரமாத்மாவையே குறிக்கும் –
அஸ்ய லோகாஸ்ய கா கதிரித் யாகாச -சாந்தோக்யம்
ஆகாஸஸ் தல் லிங்காத் -ப்ரஹ்ம ஸூத்ரம்
சாகாஸ் சமா யஸ்ய வஹந்தி தேஹே
யாருடைய திருமேனியில் வேதத்தின் அனைத்து சாகைகளும் வசிக்கின்றனவோ
பஷீஸ் வரோயம் பரமாத்புதாத்மா
அத்தகைய அத்புதமான திருமேனியை யுடைய பக்ஷி ராஜர்
கரோது கல்யாண பரம்பராம் ந —
அடியேனுக்கு அனைத்து மங்கள வரிசைகளும் அளிக்கட்டும்
இதில் உள்ள சமத்காரம் பறவை வாலில் இருக்கும் -ஆகாசத்தில் இருக்கும் –
இங்கு ஆகாசம் பறவை வாலில் உள்ளது -பறவை சாகையில் இருக்கும் -இங்கு சாகைகள் பறவையின் உடலில் உள்ளன
———
கமலா பவேந கமநீ யதமே
மணி முக்தாபித தடிநீ தடகே
மணி ராஜ நிபம் மஹ நீய தமம்
பதக ப்ரவரம் வரதம் வரயே-63-
கமலா பவேந கமநீ யதமே
அழகான திவ்யதேசமான நாச்சியார் கோயிலிலே
மணி முக்தாபித தடிநீ தடகே
மணி முக்தா நதிக்கரையில்
விரோசனனை வீழ்த்தி வைரமுடியைக் கொண்டு வரும் பொழுது அந்தக்கரீடத்தில் இருந்து
செவ்வக வடிவில் ரத்னாக்கள் விழுந்ததால் இந்த திருநாமம்
வாவித் தடம் சூழ் மணி முத்தாற்று நறையூர் நெடுமாலை -கலியன் புஷ் காரணிக்கு மங்களா ஸாஸனம்
மணி ராஜ நிபம் மஹ நீய தமம்
மணிகளில் ஸ்ரேஷ்டமான இந்திரா நீலக்கல் போன்ற திருமேனி
பதக ப்ரவரம் வரதம் வரயே
வரப்ரஸாதியாய் திகழும் பக்ஷி ராஜரை வணங்குகிறேன்
————
துரகான் ஸ விதுர் நயதஸ் ஸஹஜம்
உதரா துதிதம் விநதா ஸூதநோ
உரகா நுதரே கலயந்த மஹம்
பதகாதிபதிம் சதயம் கலயே–64-
துரகான் ஸ விதுர் நயதஸ் ஸஹஜம்
ஸூர்யனின் குதிரைகளை எளிதாக ஒட்டிச் செல்லும் அருணனின் உடன் பிறப்பே
ராகு விழுங்கும் போது தன்னை யாரும் ரக்ஷிக்க வில்லை என்று கோபம் கொண்ட ஸூர்யன் உலகை தவிக்கச் செய்ய அருணன் கவசமாக இருந்து காத்தார்
அதே போல் ஸம்ஸார தாபத்தில் இருந்து கருடாழ்வார் நம்மைக் காத்து அருளுகிறார்
உதரா துதிதம் விநதா ஸூதநோ
அழகிய விநதையின் திரு வயிற்றில் உதித்தவனே
தாயாரை அடிமைச் சிறையில் இருந்து மீட்டது போல் நம்மையும் சம்சாரச் சிறையில் இருந்து மீட்டு அருளுகிறார்
உரகா நுதரே கலயந்த மஹம்
சர்ப்பங்களை விழுங்கி வயிற்றில் வைத்து இருப்பவனே
அதே போல் நமது பாபங்களையும் பயத்தையும் வேதனைகளையும் விழுங்க வல்லவராகத் திகழ்கிறார்
பதகாதிபதிம் சதயம் கலயே
இத்தகைய பெருமை பெற்ற பக்ஷிகளின் அதிபதியே உன்னை எப்போதும் நினைக்கிறேன்
———–
பஷீ கோபி வராத ஏஷ வதது ஸ்வைரம் ருதைஸ் ஸோபநம்
யத்வா ஸோபந மத்ர காநு கணநா சிந்தாதவா காமம
லஷ்மீ மந்த்ர மந்திரேதி மஹிதே ஸம் பூஜிதே ஸந்ததம்
பஷீந்த்ரே த்வயி மங்கள ஏக நிலயே மன்மா நஸே ஜாக்ரதே–65-
மிகவும் பூஜிக்கத்தக்க பிராட்டியின் கமலாலயத்தில் இருப்பவனும்
எப்பொழுதும் மங்களங்களுக்கு உறைவிடமாகப் போற்றப்படும் நீர்
எனது மனக்கடலில் உறைவதால் பறவைகளின் குரல் மங்கலமோ அமங்களமோ என்ற சிந்தனை சிறிதும் இல்லையே
சில பக்ஷிகளின் குரல் அப சகுனம் என்றும் நல்ல சகுனம் ஸாஸ்த்ர வல்லுநர் சொல்வார்கள்
——–
ரஷாம் பக்ஷிபதே கஜஸ்ய கலயன் அம்சே த்வதீயே ஸ்தித
தேநே கர்ஷண மத்ர தத்ர பவத கோதாய கிம் நா பவத்
மோதா யைவ யதார் தர க்ஷண க்ருதே வேகோஸ்ய மான்யோ குண
தேநை வாஸ்ய பதாம் புஜேஸ்மி நிதராம் தாஸ்யம் கதோ நிவ்ருத–66-
பக்ஷிகளின் தலைவனே -கஜேந்திராழ்வானை ரக்ஷிக்க உனது தோளில் அமர்ந்து விரைந்ததனால்
சற்றும் ஆயாஸம் தோன்றவில்லையா என்ற கேள்விக்கு
அடியார் ரக்ஷணத்துக்காக விரைந்த வேகம் போற்றத்தக்கதே-கரி ப்ரவர ப்ரும்ஹிதே பகவதஸ் த்வராய நம –பட்டர் –
விரைந்து வந்து ரஷித்த எம்பெருமான் திருவடிகளை பற்றி மனத்துயர் நீங்கியவனாக உள்ளேன்
உஷா தஷாந்த கஸ்ய ஸ்கலதி வலஜித குஞ்ஜர கஞ்ஜரீதி
க்லாந்தோ தாது சகுந்தோஸ்நுக இதி தயயா சாமி ருத்தஸ்ய தோ அபி
க்ராஹ் ரஸ்த த்வி பேந்த்ர ஷதி பய சகிதா குண்ட வைகுண்ட சிந்தா
நாஸீ ரோதாரா மூர்த்திர் நரக விஹதயே ஸ்தாத் வி ஹங்கேஸ்வரோ ந –-கருட பஞ்சாசத் -47-
க்ராஹ் ரஸ்த த்வி பேந்த்ர -முதலையால் பீடிக்கப்பட்ட ஸ்ரீ கஜேந்திராழ்வான்
உஷா தஷாந்த கஸ்ய ஸ்கலதி -பெரிய திருவடி வேகம் ருத்ரன் வாகனமான ரிஷபம் வேகம் ஒன்றுமே இல்லையாம் படி –
வலஜித குஞ்ஜர கஞ்ஜரீதி -இந்திரா வாஹனம் ஐராவதம் -நொண்டி போலே என்று என்னும் படி –
க்லாந்தோ தாது சகுந்தோஸ்நுக இதி -ப்ரஹ்மனின் வாஹனம் அன்னம் தளர்ந்து நடப்பது போலே –
தயயா சாமி ருத்தஸ்ய தோ அபி ஷதி பய சகிதா குண்ட வைகுண்ட சிந்தா -அவன் சங்கல்பத்துக்கு தக்க வேகம் -தடை இல்லாமல் –
நாஸீ ரோதாரா மூர்த்திர் நரக விஹதயே ஸ்தாத் வி ஹங்கேஸ்வரோ ந -கருட வாகன எம்பெருமான் நம்மை உஜ்ஜீவிக்கட்டும்
———-
ப்ராலேயா ஹார்யா கன்யா பரி ப்ருட தனுஷி ஜ்யா விமுக்தே ருஜுத்வம்
ப்ராப்தே பாணே த்வயாதோ பத்தி பகவத பாத மூலே முராரே
பக்தே ஸக்தே ம்ருதங்கே நத சிரஸி ததோ ஹந்த கங்காதர அஸ்மின்
அஸ்மத் ஸ்வாமின் கருத்மன் த்வமஸி யதுபதே ஸஸ்மித ப்ரேம பாத்ரம் –67-
பாணாசூர யுத்தத்தில் சிவ வில்லில் நாணாகிய வாஸூகி தங்களைக் கண்டவுடன் அஞ்சி ஓடி விட்டது
நாண் அற்ற வில் நேராக வளைவு அற்றதாக விளங்கி விட்டது
ஆகவே சிவன் தொடுத்த பாணம் தங்கள் திருவடிகளில் சரணம் அடைந்தது போல் விழுந்து விட்டது
பாணனும் சரண் அடைந்தவன் போல் திருவடிகளில் விழுந்தான்
பாணன்-அம்பு என்றும் பாணாசூரன் என்றும் பொருளில் வந்துள்ளது –
பாணன் தலை குனிந்து நிற்பது கண்டு சிவனும் தலை குணியுந்து நின்றான்
அந்நிலையில் யதுபதியான கண்ணனின் அன்புக்கு இலக்காக நீர் அல்லவோ திகழ்ந்தீர்
———–
ஸ்ரீ மான் வஞ்சுள வல்லிகா பரி ப்ருட ஸுகந்தி காத்ரே பதி
திஷ்டன் ஸ்ரீ மணி மௌத்திகா பரி சரே ரம்யே விசித்ரே அத்ர வை
பஸ்யன் ஸ்த்வாம் சதுரா னனேன சதுரோ வேதான் முதா அதீ தினா
தாதும் கிம் யுவயோ உதீத ஹ்ருதய பாஹு த்வயம் தத் ததவ்–68-
கருட பகவானே இந்த நாச்சியார் கோயிலிலே ஸுகந்திகா என்னும் ஸூ கந்த மலையில்
மணி முத்தா நதி என்னும் புஷ் கரணியின் கரையில் வஞ்சுள வல்லி மணாளன் ஸேவை சாதித்து அருள்கிறான்
மூலவர் இரண்டு திருக்கரங்களுடன் மட்டுமே ஸேவை சாதிக்கிறான்
இரண்டு கரங்களுடன் திகழும் உங்களுக்கும் தாயாருக்கும் வேதம் கற்றுக் கொடுத்து
தன் அருள் பெற்று அதன் மூலம் படைக்கும் ஆற்றல் பெரும் பிரமனாகிய கருவியின் மூலம் தந்து அருள எண்ணியே
இரண்டு திருக்கரங்களுடன் திகழ்கிறான்
கைகளில் சங்கு சக்கரங்கள் வைத்துக் கொண்டு அருள்கிறான் –
———-
ஆனீதே பவதா விரோசன கராத் வாஜ்ரே கிரீடே ததா
முக்திம் மௌத்திக மேக மக்ர ஸரிதி ஸ்ரீ பாஸூரம் மார்கிதம்
ஹஸ்தவ் த்வவ் ப்ர ஸ்ருதவ் விதாய சபலவ் ஸம் சாதிதும் தன் மணிம்
ஹஸ்தா வேவ ந ஹீதி கிம்நு கதயன் ஸ்வாமீ த்வி ஹஸ்தோ அபவத்–69-
இங்கு மணி முக்தா ஸரஸ்ஸில் விழுந்த மணியைத் தேடவோ
அல்லது கிடைத்த மணியை கைகளால் மறைத்துக் கொள்பவன் போல் ஸேவை சாதிக்கிறான்
தன்னிடம் கைகள் இரண்டு மட்டுமே உள்ளது
அவற்றிலும் சங்கு சக்கரங்கள் வைத்துள்ளேன்
மணி எங்கே இருக்க முடியும் என்னிடம் இல்லையே என்று காட்டுபவன் போல் உள்ளான்
———
உபலா க்ருதம் உத் பலேந துல்யம்
ரஜதாச் சத பூஷி தாங்க ஜாதம்
நபஸா ஸித மேக ஜால பாஜா
சமதா மேயுஷம் ஆஸ்ரயே அண்ட ஜாதம்–70-ஸூந்தரீ வ்ருத்த ஸ்லோகம்
உபலா க்ருதம் –கல்லிலான சரீரத்தை யுடையவரை
உத் பலேந துல்யம்-அதனாலேயே கரு நெய்தல் பூவினை ஒத்தவரை
ரஜதாச் சத பூஷி தாங்க ஜாதம்–வெள்ளியிலான கவசத்தால் அலங்கரிக்கப்பட்ட அவயவங்களை யுடையவரை
ஸித மேக ஜால பாஜா-அதனாலேயே வெளுத்த மேகங்களோடு கூடிய
நபஸா-ஆகாயத்தினோடு
சமதா மேயுஷம் -ஒப்புமையை அடைந்தவரை
அண்ட ஜாதம்-பறவையான -முட்டையில் இருந்து பிறந்தவரான கருடனை
ஆஸ்ரயே–சரணம் அடைகிறேன்
ஆகாசம் பூமியில் இல்லை அண்டத்தில் உள்ளது -அதே போல் கருடனும் அண்டத்தில் முட்டையில் தோன்றியவர்
——-
த்ரயீ மூர்தி ஸ்த்வம் மமச ஸ பகவ னம்பர மணி
த்ரி தாம்னோ தாம த்வம் மமச ஸ ரதீ நாம ஸதனம்
ததாபி த்வத் ப்ராப்தவ் சகித சகித துர்ய குண தீ
இதி ப்ராத்ரா மந்தஸ்மித மதிகத பாது ககராட்–71-சிகிரிணீ வ்ருத்த ஸ்லோகம்
தவம் -நீ
த்ரயீ மூர்தி -வேத உருவானவன்
மம அபி ச -எனக்கும்
ஸ-அந்த வேத உருவான
அம்பர மணி-ஸூர்யனும்
பகவான் -ஸ்வாமி -எஜமானன் ஆனவன் –
த்வம் –நீ
த்ரி தாம்னோ –பரமபதம் ஸூர்ய மண்டலம் திருப்பாற் கடல் -என்ற மூன்று இடங்களை சிறப்பாகக் கொண்ட விஷ்ணுவுக்கு
மூன்று உலகங்களையும் இருப்பிடமாகக் கொண்ட விஷ்ணுவுக்கு
தாம -இருப்பிடமானவன் –வாஹனமானவன்
மமச-என்னுடையவரான
ஸ –அந்த ஸூர்யனும்
ரதீ–தேருக்கு உரிமையாளரான
நாம ஸதனம்–விஷ்ணுவுக்கு இருப்பிடம் ஆனவரே
ததாபி –ஆயினும்
துர்ய குண தீ–தேர்க் குதிரைகளின் கடிவாளத்தில் புத்தியை உடையவராக அவர்
சகித சகித –நீ என்னைப் பார்க்க வரும் போது எல்லாம் மிகவும் பயந்தவராக இருக்கிறார்
இதி -இவ்வாறு
ப்ராத்ரா -சகோதரரான அருணானாலே
மந்தஸ்மிதம் -புன் சிரிப்போடு
அதிகத–நெருங்கப்பட்ட
பாது ககராட்-பறவைகளின் தலைவனான கருத்மான் நம்மைக் காப்பாற்றட்டும் –
உனக்கும் ஸூரியனுக்கும் பல ஒற்றுமைகள் இருந்தாலும் நீ எண்ணெய் பார்க்க வரும் பொழுது எல்லாம் ஸூர்யன்
நடுங்கி விடுகிறான் –
பாம்புகள் தானே அவனது தேரின் கடிவாளங்கள் -அதனால் தான் என்று அருணன் சொல்கிறான்
இதே காட்சி முதல் பாதத்தில் ஸ்வாமி தேசிகன்-
அர்யம்ணா துர்ய யோக்த்ர க்ரசந பய ப்ருதா சாந்த்விதோ அனுருபந்தாத்
கோதண்ட ஜ் யாம் ஜிக்ருஷேதி தி ஸஹித தியா சங்கீத சங்கரேணா
தல்பே கல்பேதே மா தே மதிரிதி ஹரீனா அப் யாதரேணானுநீத
பஷீந்த்ரஸ் த்ராயதாம் ந பணதரே மஹிஷீ பத்ர பங்கா பஹாரீ -27-
அர்யம்ணா-ஸூர்ய பகவான்
துர்ய யோக்த்ர–வில்லின் நாண் கயிறு
கோதண்ட ஜ்யாம்-கோதண்ட த்வனி
பத்ர பங்கா–திருமாங்கல்யம் –
———
சாகா பங்காத் வட பரி ஹ்ருதிம் க்லுப்தவான் கிம் த்வமேவத்
ஜ்ஞாத்வா ருத்ரோ வட தரு தலே நர்தனம் ஸம் விதத் தே
யத்ர பூவன் உரக நிவஹா நிர்பயா அங்க லக்னா
ந்ருத்தா நூத்யன் மணி யுத பணா லோக தூதாந்த காரா –72-மந்தாக்ராந்தா வ்ருத்த ஸ்லோகம்
சாகா பங்காத் –கிளையின் முறிவாலே
வட பரி ஹ்ருதிம் –ஆலமரத்தின் விடுகையை
த்வம் -நீ
க்லுப்தவான் -செய்தனை
ஏதத்-இதை
ஜ்ஞாத்வா கிம் -அறிந்தபடியால் தானோ
ருத்ரோ வட தரு தலே நர்தனம் ஸம் விதத் தே
-ஆலமரத்தின் அடியிலே பரமசிவன் நாட்டியத்தை செய்கிறான்
யத்ர ந்ருத்தா நூத்யன் -எங்கு நாட்டியத்தை அனுவதித்திக் கொண்டு
மணி யுத பணா லோக தூதாந்த காரா-மணியுடன் சேர்ந்த படங்களுடைய பிரகாசத்தாலே இருட்டைப் போக்கடிக்கும்
அங்க லக்னா–ருத்ரனுடைய சரீரத்தோடு சேர்ந்து இருக்கும்
உரக நிவஹா–பாம்புகளின் கூட்டங்கள்
அபூவன் நிர்பயா -பயம் அற்றவையாய் ஆயின
உத்ப்ரேஷ அலங்காரம் –
————
லஷ்மீ ஸத்ம பவான் வஹன் விஹரத ஸ்ரீ மான் பதங்க ப்ரபோ
லஷ்மீ சத்ம ச ஸதத்வம் வஹதி யத் த்வாம் தேன வித்யோ ததே
யஸ் ஸ்வம் நாம வஹத் யஹோ புவி ஜன தம் சா வஹன் யோஜன
லஷ்மீ ஸத் மச ஏவ ஸர்வ புவன ஸ்லாக்யோ பவேன் மானவ –73-
லஷ்மீ ஸத்ம பவான் வஹன் விஹரத ஸ்ரீ மான் பதங்க ப்ரபோ
அகலகில்லேன் இறையும் -என்பதையே இங்கு லஷ்மீ சத்மன்
கருடா வா குரலைக்கேட்டு உகந்து வரும் கருடாழ்வார்
இப்படிப்பட்ட சேஷ பூதன் கிட்டினானே என்று சேஷியும் மகிழ்ந்து ஏறுவான்
பொரு சிறைப் புள் உவந்து ஏறும் பூ மகளார் தனிக்கேள்வன் –
லஷ்மீ சத்ம ச ஸதத்வம் வஹதி யத் த்வாம் தேன வித்யோ ததே
இங்கு நாச்சியார் கோயிலை லஷ்மீ சத்மம் என்கிறார்
ஸத்வ குணத்தை வளர்க்கும் திவ்ய தேசம் என்றவாறு
வேத ஸ்வரூபி இங்கேயே நித்யவாஸம் செய்வதால்
வேள்வும் விழவும் வீதியில் என்றும் அறாத ஊர் நாளும் நறையூர்
யஸ் ஸ்வம் நாம வஹத் யஹோ புவி ஜன தம் சா வஹன் யோஜன லஷ்மீ ஸத் மச ஏவ ஸர்வ புவன ஸ்லாக்யோ பவேன் மானவ –
லஷ்மீ சத்மனைத் தாங்கும் உம்மை லஷ்மீ சத்மம் தூங்குவதில் இருந்தே
தம்மைத் தாங்குபவரைப் பிரதியாகத் தாமும் தாங்குபவர்கள் லஷ்மீ சதமர்களாக விளங்குவார்
அதாவது அவர்கள் இடம் மஹா லஷ்மீ எப்போதும் நித்ய வாஸம் செய்து அருள் புரிவாள்
நம்மாழ்வார் —புவியும் இரு விசும்பும் நின்னகத்த நீ என்
செவியின் வழி உள் புகுந்து என்னுள்ளாய் -அவிவின்றி
யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார்
ஊன் பருகு நேமியாய் உள்ளு
———-
புராண பும்ஸோ வஹனம் விதன்வந்
வயோதிகஸ் ஸன் விந தாத்ம ஜாத
த்ருஷன் மயோ தண்ட தரோ ஸ்த்ய ஹீனாம்
ஸ்திதிம் கதஸ் ஷீரதி பூக்ர ஹான்த–74-
புராண பும்ஸோ வஹனம் விதன்வந்
தங்களுடைய முன்னோர்களை யார் தாங்குகிறார்களோ
வயோதிகஸ் ஸன் விந தாத்ம ஜாத
அவர்களுடைய வயதான காலத்திலும் கூட அவர்களுடைய பிள்ளைகள் அவர்களிடம்
பணிவுடன் இருந்து பணி விடை செய்வார்கள்
த்ருஷன் மயோ
அவர்கள் கல் போல் இருக்கலாம்
அதாவது ஓடி ஆடி வேலைகள் செய்யாமல் நிம்மதியாக ஒய்வு எடுக்கலாம்
தண்ட தரோ ஸ்த்ய ஹீனாம்
அவர்கள் கையில் தண்டம் ஏந்தி இருப்பார்கள்
தண்டத்தைப் போல அவர்களுடைய வாரிசுகள் அவர்களை
உடன் இருந்து தாங்குவார்கள்
ஸ்திதிம் கதஸ் ஷீரதி பூக்ர ஹான்த
அவர்கள் கடல் போன்ற வீட்டில் பால் பொங்கப் பொங்க வாழ்வார்கள் –
ஸ்லேஷ அலங்காரம்
கருடனுக்கும் பொருந்தும் படி அமைந்த ஸ்லோகம்
புராண பும்ஸோ வஹனம் விதன்வந்
புராண புருஷன் ஊழி முதல்வனைத் தாங்கும் கருடன்
வயோதிகஸ் ஸன் விந தாத்ம ஜாத
சிரஞ்சீவியாக நீண்ட ஆயுள் கொண்டுள்ளார்
வயம் என்னும் பறவைகளின் தலைவர்
விநதையின் மகன் –விந தாத்ம ஜாதன்
த்ருஷன் மயோ
கல்லாலான திருமேனி கொண்டவர்
தண்ட தரோ ஸ்த்ய ஹீனாம்
பாம்புகளைத் தண்டிக்கும் தண்டத்தைத் திருக்கையில் எனது உள்ளார்
ஸ்திதிம் கதஸ் ஷீரதி பூக்ர ஹான்த
பாற் கடலின் மகளான பிராட்டியின் தேசமான நாச்சியார் கோயிலிலே
சீரோடும் சிறப்போடும் எழுந்து அருளி உள்ளார்
——–
ஸஹோ தராய சதனே ஸூதாம்ஸோ
ஸூர்யஸ்ய ஸூ தஸ்ய ஸஹோ தரோ அயம்
சர்பேந்த்ர ஸந்தான ஸமாப்தி ஸாச
ஸ மே சமாம் ஸம்பத மாதநோது –75-
ஸஹோ தராய சதனே ஸூதாம்ஸோ
அமுதைப் பொழியும் சந்திரனின் சகோதரியான மஹா லஷ்மியின் இருப்பிடமான நாச்சியார் கோயிலில்
முழு நிலவைக் கண்டு கடல் பொங்குவது போல்
பிராட்டியைப் பார்த்ததும் எம்பெருமானான கருணைக்கடல் பொங்கும்
ஸ்மேரேண வர்த்தித ரஸஸ்ய முகேந்து நா தே நிஸ் பந்த தாம் விஜஹதோ நிஜயா ப்ரக்ருதியா -பூ ஸ்துதி ஸ்லோகம்
ஸூர்யஸ்ய ஸூ தஸ்ய ஸஹோ தரோ அயம்
அருணனின் ஸஹோதரன்
துர்யயோக்தா என்றபாம்பு ஸூர்யனுடைய தேருக்கு கடிவாளம் -சேணம்
கருடனால் பயந்த ஸூர்யன் அருணன் ஸஹோதரன் என்று பயம் தெளிந்தான்
இத்தையே –அர்யம்ணா துர்ய யோக்த்ர க்ரசந பய ப்ருதா சாந்த்விதோ அனுருபந்தாத்
கோதண்ட ஜ் யாம் ஜிக்ருஷேதி தி ஸஹித தியா சங்கீத சங்கரேணா
தல்பே கல்பேதே மா தே மதிரிதி ஹரீனா அப் யாதரேணானுநீத
பஷீந்த்ரஸ் த்ராயதாம் ந பணதரே மஹிஷீ பத்ர பங்கா பஹாரீ -27-
அர்யம்ணா-ஸூர்ய பகவான்
துர்ய யோக்த்ர–வில்லின் நாண் கயிறு
கோதண்ட ஜ்யாம்-கோதண்ட த்வனி
பத்ர பங்கா–திருமாங்கல்யம் –
சர்பேந்த்ர ஸந்தான ஸமாப்தி ஸாச
பாம்புகளின் தலைவனான வாஸூகி உடைய சந்ததியை முடிப்பதில் ஆசை கொண்ட கருடாழ்வார்
அஹீ நாந்தகன் -கருடனுடைய திரு நாமங்களில் ஓன்று
ஸ மே சமாம் ஸம்பத மாதநோ
அவர் அடியேனுக்கு அனைத்து சம்பத்துக்களையும் அருளட்டும்
———
ருத்ரேண ஸத்யம் பகிநீ ஹி தத்தா
நிஜங்கா பூஷா கண ரக்ஷணார்த்தம்
ருத்ரா ஹி சேயம் தவ நாயிகா யத்
விஹங்கரா ஜேதி விதர்க யாமி –76-
கருத்மானுக்கு ருத்ரா ஸூ கீர்த்தி இரண்டு தேவிமார்கள்
ருத்ரனின் இளைய சகோதரி ருத்ரா
உத்ப்ரேஷ அலங்காரத்தில்
ருத்ரன் தனது சரீரத்தில் அலங்காரமாகக் கொண்ட சர்ப்பங்களை ரக்ஷிப்பதன் பொருட்டு
தனது உடன் பிறந்தவளே உமக்கு திருமணம் செய்வித்தானோ என்கிறார்
பாற்கடலில் உண்டான விஷத்தை உண்டதும் தான் பட்ட வேதனையைத் தீர்க்க தனது உடலில்
உள்ள சர்ப்பங்களை தன்னைக் கடிக்கச் சொன்னார் -முள்ளை முள்ளால் எடுப்பது போல்
வீர்யம் அதிகமாக ஆராவமுதனைப் பருகவே கும்பேஸ்வரராக பருகி வேதனையைத் தீர்த்துக் கொண்டார்
இத்தை அம்ருத சார்தூலத்தில்
பித்வா ஹந்த விஷம் பயோதி குஹராத் ஜாயம் புராரி புரா
நாகைர் ஆபரணைச் ச ஸம் வ்ருதஸ் தநுஸ் தப்தோ நிதாந்தம் தத
பர்யாப்த்யா விதுரம் பிபன் நிஹ த்ருஸா கும்பஸ்ய கோணே ம்ருதம்
கும்பம் ஸ்வயமிதீவ ஸம் பிரகதயந் கும்பேஸ்வரோ வர்த்ததே –
ஸ்வாமி தேசிகன் கருட பஞ்சாசத்தில்
கருடன் ருத்ராவை ஆலிங்கனம் செய்த போது அவர் விடும் மூச்சுக்கு காற்றால் அவர் திருமேனியில் உள்ள பாம்புகள் எல்லாம் இறுகுவதாக
ருத்ரா காடோப கூடோச் ச்வஸநதி பிடத ஸ்தநா யோகாத் இவ -என்று அருளிச் செய்துள்ளார்
———
புஞ்ஐன் புஜங்க அநுபவீதா பூதம்
புக்தவ் து தேஷாம் அபவீத பூதம்
தம் ப்ரஹ்ம ஸூத்ரம் து ஸமீஷ்ய சர்பம்
மந்தா நசைல ஸ்மரணம் விதத்ஸே –77-
கருடனுக்கு வாஸூகி ப்ரஹ்ம ஸூத்ரமாக உள்ளது
அது வயிற்றைச் சுற்றி உள்ள நிலையைப் பார்த்தால் திருப்பாற் கடலைக் கடையும் சமயத்தில் மத்தாக இருந்த
மந்த்ரமலையின் நினைவு கருடனுக்கு ஏற்படுகிறது
திண்ணியதாக இருப்பதை சமத்காரமாக வெளியிடுகிறார் –
இந்திரஜித்தின் நாகபாசத்தால் வானர முதலிகள் மயங்கிக்கிடந்த நிலையில்
நன்பால் விளங்கு மணி கோடியோடு நளிர் போது செம் பொன் முதலாத்
தன் பால் இயைந்த நிழல் கொண்டு அமைந்த தழுவாது வந்து தழுவ
மின் பால் இயன்ற தொரு குன்றம் வானின் மிளிர்கின்றது என்ன வெயிலோன்
தென் பால் எழுந்து வடபால் நிமிர்ந்து வருகின்ற செய்கை தெரிய -என்று
மின்னலான ஒரு பெரிய மலை ஆபரணங்களும் மாலைகளும் அணிந்து கொண்டு வானில் வருவது போல்
வந்ததாக கம்பர் கூறுகிறார் –
வை கஷ்ய ஸ்ரக்வீ சேஷச் சுரண பரிணமச் சஸ்த்ர பந்தா நு பந்த
வஷஸ் பீடா திரூடோ புஜகத மயிதுர் ப்ரஹ்ம ஸூத்ராயமாண
அஸ்ராந்த ஸ்வைர நித்ரா விரசித விவிதோச்ஸ்வாச நிஸ்வாச வேக
ஷாமோச் ஸூநாக்ருதிர்ந ஷபயது துரிதம் கோ அபி கத்ரூ குமார —கருட பஞ்சாசத் -42-
புஜகத மயிதுர் ப்ரஹ்ம ஸூத்ராயமாண-வாஸூகி -பூணூல் –
புஜகத மயிதுர்-என்று பெரிய திருவடி -சர்ப்பங்களை அடக்கியவர் என்றபடி
வை கஷ்ய ஸ்ரக்வீ சேஷச் சுரண -இடது தோளில் இருந்து மாலை போலே
பரிணமச் சஸ்த்ர பந்தா நு பந்த -சஸ்திரம் பந்தம் தானே –
வஷஸ் பீடா திரூடோ அஸ்ராந்த ஸ்வைர நித்ரா -நன்றாக நிர்ப்பயமாக நிர்ப்பரமாக தூங்கும்
விரசித விவிதோச்ஸ்வாச நிஸ்வாச வேக ஷாமோச் ஸூநாக்ருதிர்ந ஷபயது துரிதம் கோ அபி கத்ரூ குமார –உஸ்வாஸ
நிஸ்வாசங்களால் -திருமேனி விரிந்தும் சுருங்கியும்
கத்ரூ குமார-வாஸூகி –
அந்த வாஸூகி கருடன் சர்ப்பங்களை உண்ணத் தொடங்கும் நிலையில் உபவீதமாகவும்
புசித்து முடித்து வயிறு பெருத்த நிலையில் அரை நாண் போல் அபவீதமாகி விடுகிறது
ஸ்வாமி தேசிகரும்
நம பன்னக நத்தாய வைகுண்ட வச வர்த்தினே ஸ்ருதி ஸிந்து ஸூ தோத் பாத மந்தராய கருத்மதே
பாற் கடல் பிராட்டி அவதரித்த இடம் -திரு நறையூர் அவள் ஆட்சி செய்யும் இடம்
நீள் நாகம் சுற்றி நெடுவரை நட்டு ஆழ் கடலைப் பேணான் கடந்து அமுதம் கொண்ட உகந்த எம்பெருமான்
இங்கே வயிறாற உண்ட கருடன் என்னும் மலையைச் சுற்றி வா ஸூ கையை வைத்து
மணி முஃதா தீர்த்தத்தைக் கடைந்து வஞ்சுள வல்லி என்னும் பெண்ணமுதத்தைப் பெற்றான்
——–
கார் கோட ஹார கபலீ க்ருதா நாம்
குஷி ஸ்திதா நாம் புஜ கோத்த மாநாம்
ஆஸ்வாஸ நார்த்தம் தவ நாபி ரந்த்ரம்
விசந் நிவா பாதி ததந்தி காஸ்ய–78-
கார்கோடன் கருடனுக்கு ஹாரமாக இருப்பதால் அதன் தலை கருடனின் நாபி தேசத்தில் வரும்
கருத்மான் விழுங்கிய சர்ப்பங்கள் வயிற்றில் உள்ளன
அவைகளுக்கு ஆஸ்வாஸம் கூறுவதன் பொருட்டு கருடனின் தொப்புள் வழியாக உள்ளே புகுவது போல்
நாபியின் சமீபத்தில் தலை உள்ளது என்கிறார்
உலகம் உண்ட பெரு வாயன் அயனைப் படைத்ததோர் எழில் உந்தியில் இருந்து உதிக்கும் தாமரையின் வாயிலாகப் படைப்பது போல்
உங்களை உண்டு தொப்புள் வழியாக வெளிக் கொண்டு வருவான் என்று ஆஸ் வாஸம் பண்ணுகிறானாம்
——–
சரதி ககநே த்வய் யம் ஸஸ்தம் விதாய ரமாதவம்
தபதி தபநே தச் சத்ரத்வம் கதஸ் தவ பாணித
தவ கடகதாம் யாதச் சேஷ பணாகணா விஸ்துத-(விஸ்த்ருத )
தவ ச ஹ்ருதயம் நஸ் ஸர்வேஷாம் திநோதி பணீஸ்வர–79-
சரதி ககநே த்வய் யம் ஸஸ்தம் விதாய ரமாதவம்
திருவின் மணாளனான எம்பெருமானைத் தோள்களில் சுமந்தபடி
வானில் நீ ஸஞ்சரிக்கிறாய்
தபதி தபநே தச் சத்ரத்வம் கதஸ் தவ பாணித -தவ கடகதாம் யாதச் சேஷ பணாகணா விஸ்த்ருத
அந்த சமயத்தில் ஸூர்யனின் வெப்பம் படாதபடி சென்றால் குடையாம் இத்யாதிப்படியே ஆதி சேஷன் குடை பிடிக்கிறான்
தவ ச ஹ்ருதயம் நஸ் ஸர்வேஷாம் திநோதி பணீஸ்வர
இத்தால் அஞ்சும் குடியான உன்னுடைய உள்ளத்துக்கும்
அடியோங்களுடைய உள்ளத்துக்கும் ஆனந்தம் தருகிறார்
ஸூர்யனுக்கு ஒளி தரும் உனக்கு வெப்பம் தாங்காது என்று பொங்கும் பரிவால் அஸ்தானே பய சங்கை பண்ணும் குடி –
——
ஸ்வாமின் வஞ்சுள வல்லி கேந பவதா நாவிஷ் க்ருதா பாஹவா
ஸத்வா ரோத்ர புஜ த்வயம் புநரிதம் சக்ராய சங்காய ச
காந்தே பக்த தமோ மம ப்ரிய ஸூஹ்ருத் மத்வாஹ நேந்த்ரோ வர
பஹு த்வந்த்வயுதோ மமாபி ததலம் ஸ்வாமின் நமஸ்தே நம–80-
இது பிராட்டிக்கு நம்பிக்கும் உரையாடல்
ஸ்வாமின் -பிராட்டி உடைய விளிச்சொல்
வஞ்சுள வல்லி -சொல்லு என்று நம்பி கூற்று
கேந பவதா நாவிஷ் க்ருதா பாஹவா ஸத்வா ரோத்ர புஜ த்வயம் புநரிதம் சக்ராய சங்காய ச
நான்கு திருக்கரங்களுடன் இல்லாமல் இரண்டு மட்டுமே எதற்க்காக
காந்தே பக்த தமோ மம ப்ரிய ஸூஹ்ருத் மத்வாஹ நேந்த்ரோ வர பஹு த்வந்த்வயுதோ மமாபி ததலம்
எனது பக்தன் கருடனுக்கு இரண்டு இருப்பதால்
ஸ்வாமின் நமஸ்தே நம
தமர் உகந்த படி அமைத்துக் கொள்ளும் உமக்கு நமஸ்காரங்கள் –
———
புஜகா பரணே ந தூர் ஐடி
கமலா வாஸ கதோ ந விஸ்வ த்ருக்
நவமேக நிபோ ந மாதவ
க இதிஹாஸ்மி ந வக்தும் ஈஸ்வர–81-
புஜகா பரணே ந தூர் ஐடி
கருடன் பரமசிவனைப் போலவே பாம்புகளை ஆபரணமாகக் கொண்டுள்ளார்
ஆனால் ஜடாமுடி கொண்டு தவம் சாதனை பண்ண வேண்டாதபடி கிங்கரனாக அவனே கொண்டானே
கமலா வாஸ கதோ ந விஸ்வ த்ருக்
கமலா ஆலயம் -நாச்சியார் கோயில் -நான்முகனும் நாபி கமலாலயத்தில் இருந்தாலும்
இவர் படைப்புத் தொழில் செய்ய வேண்டாமே
ப்ரஹ்ம ஏக நிஷ்டை இவருக்கு -உபய நிஷ்டை அவனுக்கு
நவமேக நிபோ ந மாதவ
நீல மேக ஸ்யாமளானைப் போல் திருமேனி
ஆனால் இவர் மிதுன சேஷி கொண்டவர்
க இதிஹாஸ்மி ந வக்தும் ஈஸ்வர
இப்படி மும்மூர்த்திகளை போல் இல்லாதவராக மேம்பட்டு உள்ள உம்மை எவ்வாறு ஸ்துதிப்பேன்
மூவரும் இணைந்தாலும் இவருக்கு நிகராகாதே
———–
கமலாலய மாதந நோத்யத்
வஹதே தம் கமலாலயம் நத
புஜகாபரண ப்ரமோ தேத
புஜகாந் ஹந்தி ச கோன் வயம் புமான்-82-
பிராட்டியின் நித்ய வாசஸ்தானமான ஸ்ரீ நிவாசனையே அத ஆநோதி -கீழ் ஆக்குகிறான்
த்வஜமாகவும் மேல்கட்டு விதானமாகவும் இவர் தானே மேல் உள்ளார்
வினதை சிறுவன் என்னும் மேலாப்பின் கீழ் என்னும்படி உள்ளான்
அதே சமயம் அலர் மேல் மங்கை உறை மார்பனை விநயத்தோடு வணங்கி எழுந்து அருளப் பண்ணுகிறான்
நாகங்களையே ஆபரணமாகக் கொண்டு ஆனந்தம் அடையும் கருடன்
பாம்புகளையும் கொல்கிறானே
புஜம் கச்ச தீதி புஜக –விஷ்ணு கருடன் திருத்தோளில் ஆரோஹணித்தவர் -தோள்களில் உள்ள ஆபரணத்தைக் காட்டுவது போல் மிதுனத்தையும் தாங்கிக் காட்டி அருள்கிறான்
யோ யம் தத்தே ஸ்வ நிஷ்டம் வாஹநம் அபி வர ஸ்பார்சிதோ யேன யஸ்மை
யஸ்மாத் யஸ்மை ஆஹவஸ்ரீ விததாதி பஜனம் யத்ர யத்ரேதி சந்த
பிராயோ தேவ ச இத்தம் ஹரி கருட பிதா கல்பித ஆரோஹ வாஹ
ஸ்வாபாவ்ய ஸ்வ ஆத்ம பவ்ய ப்ரதிசாது சகுனிர் ப்ரஹ்ம ச ப்ரஹ்மதாம் ந —கருடபஞ்சாசத் 4–அவன் பிரசாதத்தாலே த்வஜமாகவும் வாகனமாக
கருடம் ச ததர்ஸோ ச் சை ரந்தர்தாநகதம் த்விஜ
க்ருதச்சாயம் ஹரேர் மூர்திநி பஷாப்யாம் பஷி புங்கவம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-12-4-
பெருமாள் திருப்பாதங்கள் கருடனுக்கு கண்ட ஆபரணமாக விளங்கும்
சிலேடை நயம் -ஆலயம் -ஆசனம் -தாம் வஹதே -புஜக ஆபரணம் புஜகஸ்ய ஆபரணம்
விலக்ஷணமான கருடாழ்வாரைக் கொண்டாடுகிறார் –
————-
புஜகாபரண கமலாலயக
நவ மேக நிபோ யதயம் நதயம்
த்ரி பிரிபி தேவை ஸ்வய முதிதோ பூத்
த்ரி பிரிபி தேவை கோபி புமாந்த–83-கீழ் போல் திரிமூர்த்தி ஸாம்ய சிலேடை இதிலும்
பாம்புகளை ஆபரணமாக அணிந்தவன்
கமலாலயமான நாச்சியார் கோயில் தாமரையை அடைந்தவன்
நீருண்ட மேகம் போன்ற காந்தி உடையவன்
யதயம் ததயம் –அவன் இவ்விதம் உள்ளானோ அக்காரணங்களிலாயே
மூன்று வேதங்களாலும் எங்களுடைய ஒப்பற்ற புருஷோத்தமன் தானே போற்றுதலுக்கு உரித்தாகிறான் –
தனித்தனியே மும்மூர்திகளுடைய குணங்கள் இவனிடம் காணலாய் இருப்பதால்
அவர்களும் இவனைப் போற்றுகின்றனர்
தேவ வேத சமத்கார பிரயோகமும் ஸ்வாரஸ்யம்
———
கேது வாஹன தயைவ மித்ர தா
ஸா அவ யோத திஹ சாஸ்ய ஹீநமா
தேந சேஷ பணிராஜ மித்ரதா
வைநதேய தவ பாது ஸந்ததம்–84-
நீ எனக்கு கேது த்வஜமாகவும் -மேலானவனாகவும்-வாஹனம் -கீழானவனாகவும்
விஷ்ணுவான எனக்கும் வாகனமான உனக்கும் உள்ள இத்தகைய நட்பு மிகவும் மேலானது
இத்தகைய சங்கீதத்தின் நட்ப்பின் காரணமாகவே பணி ராஜனான -ஆதிசேஷனிடம் உனது ஸ்நேஹம்
ஸந்ததம் பாத்து -எப்போதும் விளங்கட்டும் –
அரவும் கருடனும் அன்புடன் ஏந்தும் அடி இரண்டும் -அம்ருதாஸ்வாதினீ –32-
ஸ்லிஷ்யத் போகீந்தர போக -என்று கருட பஞ்சாசத் ஸ்லோகத்திலும் இவ்விருவருடைய சேர்க்கையை அருளிச் செய்கிறார்
அஹீன மித்ரா -அஹீநதா -அஹீ நம் என்ற புண்ய யாகம் போன்றது நமது ஸ்நேஹம்
அவநம் ஸ்ரயநாம் அஹீந மாகம்–பரமார்த்த ஸ்துதி
———-
இத்ய வேத்ய பகவன் மதம் ஸ்திதம்
சேஷ தாம் வஹதி சேஷ வத் பவான்
சேஷ ஏஷ தவ ஸோ அஹமித்யதஸ்
மாம சேஷ பத கேஸ்வரோ அவதாத்–85-
இவ்வாறு பகவானுடைய அபிப்ராயம் இருக்கையில் -கருடனிடம் நட்பு உடன்படிக்கை காரணமாக –
சேஷத்வ அனுரூப கைங்கர்யத்தை நடத்தி வரும் பொழுது
சேஷ பூதர்களான அசேஷ அடியோங்களை
புள்ளரைரே நீரே ரஷித்து அருள வேண்டும்
உம்மிடம் சேஷத்வமும் அசேஷத்வமும் பொருந்தி இருக்கின்றனவே
————
புஜாந்தர விபூஷணம் பகவதீ பயோ தேஸ் ஸூதா
பவனாபி ச வாஹனம் பகவதோ அஸ்ய விஷ்ணோரிதி
வதன் கில பதே பதே வகுல பூஷண ஸ்ஸாதரம்
பஜத்யமித பக்திதை நிஜ வசஸ் ஸூதா ராஸிபி--86-
பகவானான மஹா விஷ்ணுவின் திரு மார்பிலே திரு ஆபரணமாக பாற்கடலின் திரு மகளையும்
வாஹனமாக உம்மையும் சேர்த்து அடிக்கடி நம்மாழ்வார் அன்புடன் பல பாசுரங்களால் மங்களா சாசனம் செய்து அருளி உள்ளார்
இவற்றை அனுசந்திக்கவே நமக்கு பகவத் பக்தி உண்டாகும் அன்றோ –
திகழ்கின்ற திரு மார்பில் திரு மங்கை தன்னோடும்
திகழ்கின்ற திருமாலார் சேர்விடம் தண் வாட்டாறு
புகழ்கின்ற புள்ளூர்ந்து பேர் அரக்கர் குலம் கெடுத்தான்
இகழ்வின்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே
———
விஷ்ணும் வஹன் விஷ்ணு பதைக லோல
ருத்ரா னுகூல கமலாலயே அபி
பக்த்யா மஹத்யா ஸததம் நிவிஷ்ட
த்ரி மூர்த்தி ஹ்ருதய ஸ்ருதி மூர்த்தி ரிந்தே–87-
வேதாத்மாவான கருட பகவான் ஸ்ரீ மஹா விஷ்ணுவை வைத்துக் கொண்டு விஷ்ணு பதத்தை ஆசையுடன் அனுபவிக்கிறார் –
விஷ்ணு பதம் என்பதை பரமாகாசம் என்றும் திருவடிகள் என்றும் கொள்ளலாம்
பகவானின் பாதத்தை அனுபவித்துக் கொண்டு எப்பொழுதும் இருப்பதால் ஸாயுஜ்யம் அடைந்து விஷ்ணுவைப் போலவே ஆனார்
அடியார் விரோதிகளை நிரஸித்து அருளும் பொழுது அனுகூலராக விளங்குகிறார்
பகவத் பக்தியுடன் திகழும் ருத்ரனுக்கும் அனுகூலர் என்றுமாம்
பிராட்டிக்கு வாசஸ்தானமான எம்பெருமானுக்கு வாஹனமாயும்
கமலாலயம் என்று திரு நாபி கமலத்தை வாசஸ்தானமாகக் கொண்ட நான்முகனையும் கொள்ளலாம்
இப்படிப்பத பிரயோக சாதுர்யத்தால் மும்மூர்த்திகளுக்கும் சமத்காரமாக இவரது ஒப்பீடு சொல்லப்படுகிறது
—————
அத பஞ்சம ப்ரார்த்தனா விஹார
பக்ஷி ராஜ விநாதாத் மஜ ஸேவா
விஷி பத்யக ததிம் விந தானாம்
ஸூஷிதி ஸ்ஸூஹ்ருத பூரி பாலனாம்
அஷி மத் ஸூத மணே ஸூகி குர்யாத்–88-
பறவை அரசனானவனும் -வினதாவின் மகனுமான -கருடனின் பணி புரிதலானது
ஸேவிப்பவர்களின் பாபக் கூட்டங்களை ஒழித்து விடும்
நிறையும் புண்ணிய பலன்களின் ஸ்ரேஷ்ட இருப்பிடமான அவர் எனது திருக்குமாரர்
கண்ணைக் குணப்படுத்தி அருள வேண்டும்
இரு சக்கர வண்டியில் விபத்தில் கண் பார்வை இழந்த கருணாகர ஸ்வாமிக்காக இது முதல் மூன்று ஸ்லோகங்களில் பிரார்த்தனை
அத்தை நிறைவேற்றி அருளினார் கருத்மானும்
————
பக்ஷி ராஜ புஜ கேஸ்வராலயே
பக்ஷி தாமித புஜங்க சந்ததே
ரஷி தாநக வடஸ்த சன்முநே
ஸ்வ ஷிமத் வரமமும் ஸூதம் குரு–89-
பறவை அரசனே
பாம்பின் லோகமான பாதாளத்தில் அளவற்ற பாம்புக்கு கூட்டங்களை உண்டவரே
வட வ்ருஷத்தில் அமர்ந்து இருக்கும் குற்றமற்ற வாலகில்ய முனிவர்களை ரக்ஷித்து அருளியவரே
இந்த எனது பிள்ளையை நல்ல கண் பார்வை உடையவனாக ஆக்கி அருள வேண்டும்
—————
நேத்ரம் ஹி காயத்ர முஸந்தி யஸ்ய
நேத்ரம் ககானாம் பரமம் யமா ஹு
காத்ரம் யதீயம் கனகாப த்ருஸ்யம்
நேத்ரம் ஸ புத்ரஸ்ய ஸூகீ கரோது–90-
எவருடைய கண்ணை காயதரம் என்னும் ஸாமம் என்று கூறுகிறார்களாய்
எவரை புள்ளரையன் என்று போற்றுகிறார்களோ
எவரின் திருமேனி தங்கம் போல் திகழ்கிறதோ
அவர் எனது பிள்ளையின் கண் பார்வையை முழுமையாக அருள வேண்டும்
———–
அஷவ்ஹிணீ யேன ஹதா ஸூராணாம்
குஷவ் க்ருதே பேஸ்வர கச்ச பேன
ஸ ஷவ்ம ஸம்வீத தனுர் கருத்மான்
அஷவ்க மஸ்மாகம் அகாத் புநாது–91-
அம்ருதம் கொண்டு வர தேவ லோகத்துக்கு எழுந்து அருளும் பொழுது பசியைப் போக்கிக் கொள்ள
இடையில் பரஸ்பர சாபத்தால் யானையும் குதிரையுமாகிய விபாவஸூ ஸூ ப்ரிதீர் என்கிறவர்களை அமுது செய்து அருளினார்
தம்மை எதிர்த்து வந்த தேவப்படைகளை நிரஸித்து அருளினார்
திருப்பீதாம்பரத்தால் அலங்க்ருதமான திருமேனியை யுடைய அவர் நமது இந்திரிய வசியதையைப் போக்கி அருள வேண்டும்
இதில் -அஷவ்ஹிணீ -குஷவ் க்ருதே -ஸ ஷவ்ம -அஷவ்க –ப்ராஸம் நோக்கத் தக்கது
———-
பஷீந்த்ர லஷ்மீ சதனோ பலாட்ய
பக்ஷேண நிர் தூத விபக்ஷ ஜாத
பக்ஷம் மதீயம் விஜயேன யுக்தம்
அஷீண தர்மம் தயயா விதேயா–92-
வாரீர் பெரிய திருவடி நாயனாரே -மிகுந்த பலம் பொருந்தியவரே –
நாச்சியார் திருக்கோயிலில் எழுந்து அருளி இருக்கும் தேவரீர் தயையுடன் அடியேனுடைய பக்ஷத்தை வெற்றியுடன் கூடியதாகவும்
குறைவற்ற தர்மம் உடையதாகவும் ஆக்கி அருள வேண்டும்
இதில் நான்கு பாதங்களிலும் ககார ஷகாரங்கள் ப்ராஸமாக வந்துள்ளமை காணலாம் –
————–
அதி குடிலகதிஸ் ஸன் ஆத்மனச் சாதனார்த்தம்
விசதி கிமபி ரந்த்ரம் ஹந்த வக்த்ரேண கோரம்
வமதி விஷமபி ஸ்வம் ஸர்வதா கூட வ்ருத்தி
விமத இஹ மமாயம் சிஷயே மம் ககேந்த்ர--93-
இதில் தமது எதிரிகளை சிஷித்து அருள வேண்டுகிறார்
இவருக்கு எதிரி வேத பாஹ்ய குத்ருஷ்டிகளே
வைதிக போர்வை கொண்டு வேதத்தில் ஆபாத தத -தனக்குச் சாதகமாகத் தோன்றும் சில வாக்யங்களாகிற
ரந்தரத்துக்குள் -பொந்துகளுக்குள் -நுழைந்து
எம்பெருமானுக்கு குணம் இல்லை விபூதிகள் இல்லை
போன்ற கொடிய விஷம் போன்ற வாக்கியங்களை சொல்லிக் கொண்டு திரிகிறார்கள்
வெளிப்படையாகச் சொன்னால் வைதிகர்கள் தங்களை நிரசிப்பார்கள் என்று மறைந்தே
கார்யங்களை செய்கிறார்கள் என்று முதல் மூன்று பாதங்களால் அருளிச் செய்கிறார்
குடிலமான போக்கு
தன்னை மறைத்துக் கொள்வதற்காக பொந்துக்குள் நுழைத்தாள்
வாயினால் கொடிய விஷத்தைக் கக்குதல்
எப்பொழுதும் மறைத்தே உறைதல்
போன்றவை பாம்புகளுக்கும் உண்டாகையாலே
தமது எதிரிகளான குத்ருஷ்டிகளை பாம்புகள் என்கிறார்
பாம்புகளை சிஷிக்க வல்ல பெரிய திருவடி நாயனாரை இவர்களை வெல்லுவதற்கு
வேண்டிய சக்தியை அருளிச் செய்யும் படி பிரார்திக்கிறார்
—————
பத்மா நிதிம் வஹஸி பத்ம பலாச நேத்ரம்
பத்மா நிதவ் விஹரஸே நகரே அப்யமுஷ்மின்
பத்மா நிதவ் மயி விதாய ததா ப்ரஸாதம்
பத்மாப்த ஸூத ஸஹஜா வஹ சாதரஸ் த்வம்--94-
தாமரையை வளர்த்தும் ஸூர்யனுக்கு சாரதியான அருணனுடன் பிறந்தவரே
தாமரை இதழ் போன்ற திருக்கண்களுடைய எம்பெருமானுக்கு வாஹனமாய் உள்ளீர்
நாச்சியார் கோயில் திவ்ய தேசத்தில் மகிழ்ந்து விளையாடவும் செய்கிறீர்
ஸ்ரீ நீதியான அடியேன் இடம் அப்படியே அருள் புரிந்து ஆதாரத்துடன் இருந்து அருள வேண்டும் –
அந்த பத்மா நிதியைத் தாங்குவது போல்
இந்த பத்மா நிதியையும் அருளி கைக்கொள்ள வேண்டும்
வேதாத்மா விஹாகேஸ்வரரானபடியாலே
வேதம் நான்கு ஐந்து வேள்வி அங்கம் ஆறு இசை ஏழு நடையால் வல்ல அந்தணர் வாழும் நறையூரிலே (பெரிய திருமொழி -6-10-7)உகந்து
அருளி நித்ய வாஸம் செய்வதில் வியப்பில்லையே
அருணன் தேரை ஒட்டி வந்து தாமரையை மலர்த்துவது போல்
நீரும் எம்பெருமானுடைய தாமரைக் கண்களை மலர்த்தி அவனுடைய பூர்ண கடாக்ஷங்களை
அடியோங்கள் பெற்று உஜ்ஜீவிக்கும் படி அருள வேண்டும்
இதில் பத்மம் -பதம் ஐந்து முறை வந்த அழகு நோக்கத்தக்கது –
——
பத்மாலயே புரவரே பதகேந்த்ர திஷ்டன்
பத்மாலயம் ஸ்ருதி யுகம் ஸ்ருதி ரூப தன்வன்
பத்மாலயம் வஹஸி பத்ம பலாச நேத்ரம்
பத்மாலயே மயிஸ மந்த மத்வ ப்ரஸீத--95-
வாரீர் பெரிய திருவடி நாயனாரே
நாச்சியார் திருமாளிகையில் நித்ய வாஸம் செய்து அருளி வேதாத்மாவான தேவரீர்
எல்லாருடைய காதுகளையும் மங்களத்துக்கு இருப்பிடமாகச் செய்யும் படி
மங்களகரமான வேத ஒலிகளை உடையவராய் இருந்து கொண்டு தாமரைக்கண்ணனா ஸ்ரீ யபதியைத் தாங்கி அருள்கிறீர்
இப்படிப்பட்ட தேவரீர் மந்தமாதியாய் இருக்கும் அடியோங்களை ரக்ஷித்து அருள வேண்டும்
பெரிய திருமடலில் இங்குள்ள தாயாரின் திவ்ய மங்கள விக்ரஹ வர்ணனை உண்டு
விஷ்வக் சேனர் இங்கு மட்டுமே இரண்டு திருக்கரங்களுடன் ஸேவை ஸாதிக்கிறார்
செண்பகப்பூவின் வாசனையை வெறுக்கும் வண்டுகளும் கூட இங்கு
வம்பவிழும் செண்பகத்தின் வாசமுண்டு மணி வண்டு வகுலத்தின் மலர் மேல் வைகு -6-6-1-
கந்தத்வாரம் என்று போற்றப்படும் பிராட்டியுடைய பரிமளம் இந்த க்ஷேத்ரம் முழுவதும்
பரவி இருப்பதால் நறையூர் -ஸூகந்த வனம் என்ற திரு நாமம் பெற்ற க்ஷேத்ரம்
இதில் பகாரம் பத்து முறையும்
பத்மம் பதம் ஐந்து முறையும் வரும் அழகு அனுபவிக்கத் தக்கது
———
பத ந்யாஸ க்ராந்த த்ரி புவன மிமம் வேங்கட பதிம்
பத ந்யாஸம் குர்யா மமகர யுகே சேஷகிரி ராட்
பதான் யேயம் மந்த்ரே பரி விரஸயன் பத்ர ரத ராட்
பதம் சேஷாத் ரேர் மே வ்ரண விர ஹிதம் தத் ஸூக யது–96-
தன் திருவடி வைப்புகளாலே மூவுலகையும் கடந்த திருவேங்கடத்து எம்பெருமானைக் குறித்து
ஸ்ரீ திருமலைக்கு அரசே
எனது இரு கரங்களிலே திருவடிகளை வைத்து அருள வேண்டும் என்று பிரார்த்தித்து அந்தப்பேற்றைப் பெற்ற பக்ஷி ராஜரே
என்னுடைய புதல்வனான சேஷாத்ரியின் காலில் உள்ள புண்ணை அற்றதாக்கி அத்தை ஸ்வஸ்தம் ஆக்கி அருள வேண்டும்
மான் கொண்ட தோல் மார்வின் மாணியாய் மாவலி மண்
தான் கொண்டு தாளால் அளந்த பெருமானைத்
தேன் கொண்ட சாரல் திரு வேங்கடத்தானை
நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே –நம்பியே -உலகு அளந்த திருவேங்கடமுடையான்
தூவாய புள்ளூர்ந்து வந்து துறை வேழம்
மூவாமை நல்கி முதலைத் துணித்தானைத்
தேவாதி தேவனைச் செங்கமலக் கண்ணானை
நாவாயுள்ளானை நறையூரில் கண்டேனே –கஜேந்த்ரனுடைய காலில் ரணம் போக்கி அருளியது போல் தமது குமாரனுடைய ரணம் ஆற்ற பிரார்த்தனை
———
ஸ்ரீ மன் பன்னக ஸார்வ பவ்ம நகரே ஸ்ரீ தேவ நாதாந்திகே
நாஸா க்ரேண நதீம் ஹிதாத்ருஸ ரஸாம் யத்வத் பவான் நிர்மமே
தத்வத் மத் ஸூ ஹ்ருதோ ஹ்ருதோ ஹித ரஸாம் வாஸம் கரோ தூன்ன தாம்
யேனோ பைதி முதம் மதீய க்ருஹிணீ தத் தாத பாதா அபி--97-
ஸ்ரீ மானான கருடனே
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் ஸ்ரீ மான் -22-180-222- மூன்று தடவைகள் வரும்
22-திரு நாமத்துக்கு –விருத்தா காரத்வ அபி ஸ்ரீ மான் ஸர்வ மநோ ஹர -ஸ்ரீ பட்டர் வியாக்யானம்
வ்ருத்த ஆகாரமுடைய ஸ்ரீ நரஸிம்ஹ பாரமான திரு நாமம்
அவ்வாறே நம் கல்கருடனும் அழகிய தோற்றத்தோடு ஸ்ரீ மானாக திகழ்கிறார்
180 திரு நாமத்துக்கு திவ்ய பூஷண ஸம்பத் பிர் யுக்த –பாம்புகளை ஆபரணமாக அணிந்து திகழ்கிறார்
222 திரு நாமத்துக்கு மத்ஸ்ய ரூப அவதாரேபி -ஸ்ரீ மான் கமல நேத்ர –
இவரும் நேத்ரம் காயத்ரமூஸே -காயத்ரி மந்திரமே கண்களாகக் கொண்டவர்
பன்னக ஸார்வ பவ்ம நகரே –
ஆதி சேஷன் நகரம் –திரு அஹீந்த்ர புரம் -அவ் வூரிலே
ஸ்ரீ தேவ நாதாந்திகே
தேவ நாதன் -அடியார்க்கு மெய்யன் -அவனுக்கு அருகில்
நாஸா க்ரேண நதீம் ஹிதாத்ருஸ ரஸாம் யத்வத் பவான் நிர்மமே
உன்னுடைய அலகால் நதியை உருவாக்கினாய்
கருட நதி தீர்த்தம் சமர்ப்பித்து எம்பெருமானுடைய தாக்கத்தை தீர்த்து அருளினார் புள்ளரசன்
தத்வத்
அந்தக்கல்லில் இருந்து தண்ணீரைப் பெருகி வரச் செய்தது போல்
மத் ஸூ ஹ்ருதோ ஹ்ருதோ ஹித ரஸாம் வாஸம் கரோ தூன்ன தாம்
கல் நெஞ்சம் கொண்ட என் நண்பனின் வாயில் இருந்து நல்ல உன்னதமான வார்த்தைகளாகிய நதியைப் பெருகி வரச் செய்தாயாகில்
யேனோ பைதி முதம் மதீய க்ருஹிணீ தத் தாத பாதா அபி
அதனால் என்னுடைய மனைவியும் அவளுடைய தந்தையும் ஆனந்தப்படுவார்கள்
———–
ஸ்வாமின் பஷீஸ் வராஸ்மின் குரு மயி கருணா மீஷதே தன் மமாலம்
யேன ஸ்யுஸ்தே புஜங்க ப்ரமுக விஷதரா கோஸரா நாஷி மார்கே
ஷேமோ பூயஸ் குடும்பே ஸ்வய மதி மஹிதோ வர்தமானோ மமஸ்யாத்
ஸ்ரீ மான் நாராயணோ அபி ஸ்வயமதி குதுகீ ஸ்வைர்ம மாத்கே ஸதா ஸ்யாத்–98-
ஸ்வாமின்
தான் ஸ்வம் சொத்து சேஷபூதன் என்று உணர்ந்து ஸ்வாமின் என்று விளிக்கிறார்
மேல் 101 ஸ்லோகத்தில் ஸரணாகதி செய்கிறார்
பஷீஸ் வர
நீர் பக்ஷிகளுக்கு மட்டும் ஈஸ்வரர் அல்லர் –
அடியோங்களுக்கும் தேவரீரே ஈஸ்வரர்
அஸ்மின் குரு மயி கருணா மீஷத்
தம்மை ஸமர்ப்பித்து கருணை கூர்ந்து அருள் புரிய வேண்டும் என்கிறார்
ஏதன் மமாலம் யேன ஸ்யுஸ்தே புஜங்க ப்ரமுக விஷதரா கோஸரா நாஷி மார்கே
பாம்புகள் போன்ற விஷ ஜந்துக்களும் தீயவர்களும் அடியேனுடைய பார்வையில் படாமல்
எப்போதும் எம்பெருமானுடைய அடியவர்களுடன் கூடியே இருக்க அருள் செய்ய வேண்டும்
தீதில் நன்னெறி நிற்க அல்லாது செய் நீதியாரோடும் கூடுவது இல்லை யான் –
ஷேமோ பூயஸ் குடும்பே ஸ்வய மதி மஹிதோ வர்தமானோ மமஸ்யாத்
அடியேனுடைய குடும்பத்தில் நன்மையையும் ஏற்றமும் செழிப்பும் உண்டாகும்படியும்
ஸ்ரீ மான் நாராயணோ அபி ஸ்வயமதி குதுகீ ஸ்வைர்ம மாத்கே ஸதா ஸ்யாத்
அவனுடைய ஸமஸ்த பரிவாரங்களோடு
அரவத்து அமளியினோடும் அழகிய பாற் கடலோடும் அரவிந்தப்பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து -என்றபடி
வந்து அடியேனுக்குத் துணையாகும்படி அனுக்ரஹம் பண்ணி அருள வேண்டும் –
கல் கருடன் -கற்ற கருடன் என்றும் – கற்கின்ற கருடன் என்றும் –கற்கப் போகும் கருடன் என்றும் முக்காலத்திலும் கற்று
நமக்கும் கல்வி வரத்தை அருள்பவராக விளங்குகிறார்
——–
புஜங்கா பாஸம் கில மோசயித்வா
புஜா யுகீ பஞ்ஜ ரக கராரே
புஜா ஸ்வ துண்டேன புஜங்க மானாம்
புஜாதிகம் ரக்ஷது மாமகீனம்–99-
புஜங்கா பாஸம் கில மோசயித்வா
நாக பாசத்தால் கட்டுண்ட பெருமாள் இளைய பெருமாள் வானர முதலிகள் -அனைவரையும் விடுவித்து அருளியவர்
புஜா யுகீ பஞ்ஜ ரக கராரே
கரரின் விரோதியான பெருமாளின் இரு தோள்களையும் ஆராத் தழுவிக் கொண்டார்
புஜா ஸ்வ துண்டேன புஜங்க மானாம்
தன்னுடைய அலகால் பாம்புகளை உண்ணும் கருடன்
திரிபுர சம்ஹாரத்தின் போது செவ்வனே தேரோட்டி க என்னும் பிரமனின் புதல்வர் கஸ்யபர்
அவர் புதல்வர் கருடாழ்வார்-ஆகவே இவர் -க என்ற தேரோட்டியின் மகனின் மகன்
புஜாதிகம் ரக்ஷது மாமகீனம்
இப்படிப் புகழ் பெற்ற தேரோட்டிகளின் சம்பந்தம் பெற்ற தானே பகவானின் தேராகவும் தேரோட்டியாகவும் திகழ்ந்து
நம் மனதில் எழும் சிந்தனைகளையும் ஆசைகளையும் செவ்வனே நடத்திச் சென்று
நல்ல ஆசைகளையும் நிறைவேற்றும்படி பிரார்த்திக்கிறார்
நாச்சியார் கோயிலில் நித்ய வாசம் செய்து அருளும்
கோபத்துடன் பாம்புகளை கிள்ளி எறியும் கருடாழ்வாரை
பிணியுடன் இருக்கும் நான் ஸுகம் பெற மயிர்ச்சுழிப்புடன் சரணம் அடைகிறேன்
புஜாதிகம் ரக்ஷது மாமகீனம்
அடியேனுடைய கைகள் உள்ளிட்ட அனைத்து அவயவங்களை ரக்ஷித்து அருள்வாய்
இதில் புஜ -பத பிரயோகம் ஐந்து தடவைகள்
———-
ஸூ தஸ்ய வாஹஸ் ஸூர நாத ஸூநோ
ஸூ தஸ்ய ஸூ ரஸ்ய ஸஹோதரோய
ஸூ தஸ்ய கஸ்யா அபி ஸூ தஸ்ய ஸூநு
ஸூ தஸ்ய மே பாது மனோ தரஸ்ய–100-இந்த்ர வஜ்ரா விருத்தம் -ஸூத பதம் பாதங்கள் தோறும் அமைந்த ப்ராஸ அலங்காரம் இதில்
எவன்
தேவாந்தனுடைய மகனான அர்ஜுனனுக்குத் தேரோட்டியின் வாஹனமோ
ஸூர்யனுடைய தேரோட்டியாக அருணனுக்கு ஸஹோதரனோ
க என்ற பெயருடைய தேரோட்டியாக பிரமனுக்கு மகனான காஸ்யபருக்கு மகனோ
அவன்
என்னுடைய மனதில் தோன்றும் எண்ணத்தின் -ஆசைகளின் -தேரோட்டியாக விளங்கி நல் வழியில் செலுத்தி அருளட்டும்
———
சரோஜ வாஸா சதனே வஸந்தம்
ஸரோஷ மாச்சின்ன ஸரீ ஸ்ரு பவ்கம்
ஸரோக மேதம் ஸூ கினம் விதாதும்
ஸரோ மஹர்ஷ சரணம் ப்ரபத்யே--101-
நாச்சியார் கோயிலில் நித்ய வாஸம் செய்யும் கருடாழ்வார்
சினத்துடன் பாம்புகளைக் கிள்ளி எறியும் அவர்
பிணியுடன் இருக்கும் என்னை சுகம் பெறச் செய்யுமாறு
மயிர்க்கூச்சத்துடன் சரண் அடைகிறேன்
———-
ஸ்ரீ நிவாஸ கவி தல்லஜ க்லுப்தம் ஸ்ரீ நிவாஸ வசதே பத கேந்தோ
ஸ்ரீ நிவாஸ சதகம் படிதம் சேத் ஸ்ரீ நிவாஸ சதகம் பிரததாதி--102-
ஸ்ரீ நிவாஸன் என்ற பெயருடைய கவியால்
ஸ்வாமியின் முழுப்பெயர் ஸ்ரீ நிவாஸ ராகவன்
நாச்சியார் கோயிலில் வசிக்கும் பறவை அரசரைப் பற்றிய
திருவுடைய -மங்களங்கள் உடைய நூறு ஸ்லோகங்களைப்
படிப்பவர்கள்
நூற்றுக்கணக்கான செல்வங்களுடைய ஐஸ்வர்யம் பெற்று இனிது வாழ்ந்து மோக்ஷ சாம்ராஜ்யமும் பெறுவார்கள்
—————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நிதி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரும் தேவி தாயார் சமேத ஸ்ரீ தேவாதி ராஜ பர ப்ரஹ்மம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply