அவதாரிகை – விநா வேங்கடேசம் ந நதோ நநாத: ஸதா வேங்கடேசம் ஸ்மராமி ஸ்மராமி ஹரே வேங்கடேச ப்ரஸீத ப்ரஸீத ப்ரியம் வேங்கடேச ப்ரயச்ச ப்ரயச்ச . எம்பெருமானை பற்றி சொல்ல வந்த வேதங்கள் ஆழ்வார்களின் ஸ்ரீஸூக்திகள் அனைத்தும் எம்பெருமானின் அனுக்ரஹத்தால் நடைபெறுகின்றன. நம் தோஷத்தை நினைக்க நினைக்க பயம். எம்பெருமான் வைபவத்தை கேட்க கேட்க பயம் விலகும். பயக்ருத் பயநாசன: ஆழ்வார் தன் பாசுரங்கள் வாயிலாக வெற்றி அடைய வழிகளை வகுத்து இருக்கிறார். ஸ்ரீனிவாச பெருமாள் அலமேலுமங்கா தாயார் ஆழ்வார் திருவடிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு பாடி தொடர்வோம். சின்னப் பிள்ளைகளுக்கு பரீக்ஷையில் தேர்வு அடைந்தால் வெற்றி ஒரு சம்சாரிக்கு நல்ல வேலை கிட்டி நன்கு சம்பாதித்து வீடு கட்டி உறவினர்களிடம் நல்ல பெயரை எடுத்தால் வெற்றி ஆக வெற்றி என்பது அவரவர் வயதிற்கேற்ப அவரவர் தகுதிக்கேற்ப வெற்றி அடைவோம். ஒருவருக்கே காலத்திற்கேற்ப அவன் இலக்கு மாறிக் கொண்டே இருக்கும். வெற்றிக் கொள்ளும் போது அதை அடையும் வழி உபாயமும் மாறும். ஆத்மாவின் முயற்சி பரமாத்மாவின் அருள் இரண்டும் இருந்தால் தான் ஒரு காரியம் வெற்றிகரமாக முடியும். கடவுளிடம் செய்நன்றி மறக்காமல் இருக்க வேண்டும். இந்திரியங்களை அடக்க யோகம் வேண்டும். மனசு அடக்க த்யான பயிற்சி அவசியம். புலன்கள் அடக்க அனுஷ்டானம் முக்கியம். ப்ராணனை அடக்க ப்ராணாயாமம் செய்யனும். நரம்புகளை வசப்படுத்த பத்மாசனத்தில் அமர பழகிக் கொள்ளனும். நம் இஷ்டப்படி வாழ்வது வாழ்க்கையல்ல. சாந்தி சம-வெளி இந்திரியங்களான கண்காது மூக்கு நாக்கு . போன்றவையும் தமம் – உள் இந்திரியமான மனதை அடக்குவது இரண்டும் சரிவர இருக்கனும். ஆழ்வார் தன் பாசுரத்தில் கிளரொளியிளமை கெடுவதன் முன்னம் வளரொளி மாயோன் மருவிய கோவில் வளரிளம் பொழில் சூழ் மாலிருஞ் சோலை தளிர்விலராதில் சார்வது சதிரே. என இளமை இருக்கும் போதே திருமாலிருஞ்சோலை அழகரை ஆஸ்ரயிங்கள் என்கிறார். இளம் வயதில் உடம்பு ஒன்றை செய்ய ஒத்து வரும். ஆனால் மனசு ஒத்து வராது. வயதானபின் மனம் ஒத்து வரும். ஆனால் உடம்பு ஒத்துழைக்காது. நம்மாழ்வார் நமக்காக கருணையுடன் 7ம்பத்து 4ம் திருமொழி ஆழி எழ சங்கும் வில்லும் எழ எனத் துவங்கும்10 பா சுரங்கள் எம்பெருமானின் அவதாரங்களில் அவர் வெற்றி விஜயம் கண்டதையும் பின் 11வது பாசுரம் பலஸ்ருதியாய் இந்த 10 பாசுரங்கள் பக்தியுடன் கூறினால் வெற்றி நிச்சயம் என தெரிவித்ததையும் மேற்கோளிட்டார்.
பெருமான் கோவர்த்தன மலையை தூக்க ஒரு சக்தி வேண்டும். பூமா தேவியை வராஹராக இடர்ந்தெடுக்க வேறுவிதமான சத்தி வேண்டும். வில்லை முறித்து ராமன் ராவணனை கொல்ல அபாரசக்தி இருந்தது. திரௌபதி கூக்குரலுக்கு புடவையை மட்டும் கண்ணன் சுரந்தது வேற சக்தி எந்தெந்த நேரத்தில் எந்தந்த விதமான ஆற்றலை பயன்படுத்த வேண்டுமோ அதை பயன்படுத்த வேண்டும். உலகம் முழுக்க தாவி திரிவிக்ரம அவதாரம் எடுப்பதற்கு வேற சக்தி, எல்லாவிதமான ஆற்றலும் துளி துளியாவது நமக்கு வேண்டும். பெருமாளின் அவதார பெருமைகளை படிக்கவோ கேட்கவோ செய்யச் செய்ய நமக்கும் நம்மை அறியாமல் பலம் வந்து விடும். எப்போதும் என்னுடையது என்று ஒரு காரியம் செய்யும் போது பதட்டம் வருவது சகஜம். அகங்காரம் மமகாரம் விட்டு நாம் அதை செய்தால் அந்தக் காரியத்தில் வென்று விடுவோம். பகவானின் லீலைகள் மனதில் நிற்க நிற்க தானே அந்த செய்யும் திறனை அவரே நமக்கு கொடுப்பார். சாது பரித்ராணம் துஷ்ட நிரசனம் தர்ம சம்ஸ்தாபனம் தான் சனாதன தர்மத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. இந்திரியங்கள் மனசு ப்ராண வாயு எல்லாம் அடக்கி சம்சாரத்தை ஜெயித்து திரும்பி வராத மோக்ஷத்தை அடைவதே ஒவ்வொரு ஜீவாத்மாவின் இலக்கு ஆத்ம பரமாத்மா விஷயத்தில் மோக்ஷ இஷ்யாமி என்பதே பிரார்த்தனை . இதன் அடியாய் ஆழ்வார் 7ம்பத்து 4 ம்திருமொழியில் 10 பாசுரார்த்தங்களை சாதிக்கத் துவங்கினார். முதல் பாசுரமான ஆழி எழ சங்கும் வில்லும் எழ…. க்ருதயுகத்தில் நடந்த த்ரிவிக்ரம அவதாரத்தை பற்றியது. உலகத்தையே அளந்து தன் சொத்தாக (பூ, புவக, ஸூவக மூன்று லோகத்தையும் இந்திரனிடத்தில் பெருமான் கொடுத்து வைத்திருந்தார். அதை மஹாபலி பறித்து போக பெருமாள் ப்ரஹ்லாதனுக்கு அவன் வம்சத்தில் இனி யாரையும் கொல்வதில்லை என்ற வரத்தை கொடுத்ததால் வாமனனாய் 3 அடியில் போய் மஹா பலியிடம் யாசகம் கேட்டு பெற்ற பின் வானம் முட்டுமளவிற்கு வளர்ந்து ஒரு அடியால் கீழ் உலகத்தையும் மற்றொரு அடியால் மேல் உலகத்தையும் அளந்து 3வது அடியை எங்கு வைப்பது என்ற காலை தூக்கிய திரிவிக்ரம அவதாரத்தை திருக்கோவிலூரில் காணலாம் என்றார். ஜெய விஜயீ பவ என்றனர் தேவர்கள். சங்கு சக்ரம் பெருமானுக்கு முன்னால் மேலே போய் ஜெய விஜயீ பவ என்று மங்களாசாசனம் செய்தது. இங்கனம் மஹாபலியிடம் தன் சொத்தை சாமர்த்தியமாய் திரும்ப வாங்கி இந்திரனிடத்தில் ஒப்படைத்தார். இதன் அடியாய் ஹனுமன் சூடாமணியை சீதையிடம் கொடுத்து பின் ராவணனின் சேனைப்படை ஆயுதப்படை போன்ற அனைத்தையும் சேர்த்து பார்த்துக் கொண்டு வந்தார். ஒரு காரியம் செய்ய சாம- சமமாய் பேசி முடிப்பது அரக்கர்களிடம் இயலாத காரியம் என கைவிட்டார். தான- தானம் கொடுக்க அந்த நேரத்தில் ஹனுமனுக்கு சக்தியில்லை. பேதம் – அரக்கர்களிடம் பேதம் செய்ய முடியாது. ஆதலால் தண்டம் – அங்குள்ள கதையை எடுத்து அக்ஷய குமாரன் இந்திரஜித் போன்றோரை முடித்தார். ஆக எந்த வழியை கையாளனும் என்பது முக்கியம் என்பதை விளக்கினார். திரிவிக்ரம அவதாரத்தை விளக்கும் விதத்தில் திருமங்கை ஆழ்வாரின் திருநெடுந் தாண்டகத்தில் ஒண் மிதியிற் புனலுருவி ஒரு கால் நிற்ப ஒரு காலும் காமருசீர வுணனுள்ளத்து * என மதியும் கடந்து அண்ட மீது போகி இருவிசும்னூடு போயெழுந்து * மேலைத் தண்மதியும் கதிரவனும் தவிரவோடித் தாரகையின் புரம் தடவி அப்பால் மிக்கு* மண் முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை மலர் புரையும் திருவடியே வணங்கினேனே. கின்னர்கள் தேவர்கள் பெருமாள் ஜெயித்தார் என கூக்குரலிட்டனர். அடுத்த பாசுரத்தில் அமிர்த மதனம் செய்த சரித்ரம். தேவர்கள் அசுரர்கள் விருப்பப்படி கடைவதற்கு வந்தவர்கள். அவர்களால் முடியவில்லை ஆயிரம் ஆயிரம் தோள்கள் ஆயிரம் ஆயிரம் தாள்கள் கொண்டு ஆரா அமுதம் கடைந்து பெரிய மந்திர மலையை மத்தாக நாட்டி கடைந்தார். அப்போது அஸ்வம் – குதிரை உச்சஸ்வரஸ் அப்சரஸ்கள், ஆலகால விஷம் வந்தது. அமிர்தத்தை எதிர் நோக்கி இருந்தனர். ஆரா அமுதனாய் பெருமான் கடைந்து கொண்டு இருக்கிறார்
பேரெயில் சூழ் கடல் தென்னிலங்கை செற்ற பிரான் -என்றும் –கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன் -என்று-தம்முடைய தோல்வி பிரஸ்துதம் ஆகையால் எதிர்தலையில் வெற்றியை அனுசந்தித்து-அத்தோடு சேர்ந்த இல்லாத விஜயங்களை பேசி அனுபவிக்கிறார்-தன்னுடைய விஜய பரம்பரைகளைப் பத்தும் பத்தாகக் காட்டிக் கொடுக்கக் கண்டு அனுபவித்து உவகை அடைகிறார்.
குன்றம் எடுத்த பிரான் அடியாரொடும்
ஒன்றி நின்ற சட கோபன் உரை செயல்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே–7-4-11-இத் திருவாய்மொழியைக் கற்றவர்கட்கு இது தானே வெற்றியைத் தரும்,-ஆசையோடு கற்பார் யாவர் சிலர், அவர்களுக்கு வெற்றியைப் பண்ணிக் கொடுக்கும்.-இன்ன வெற்றி விசேஷித்து இல்லாமையால் ஸமஸ்த வெற்றி– செல்வத்தை விரும்புகிறவனுக்குச் செல்வத்திற்குத் தடையாக வுள்ளனவற்றை-கவனக்குறைவு அசுத்தி பேராசை போன்ற -வென்று கொடுக்கும்;-கேவலனுக்கு -வேறே ப்ரயோஜனமாகிய -விரோதியைப் போக்கிக் கொடுக்கும்;-பகவானைச் சரணம் அடைந்தவர்களில் உபாசகனுக்கு ஐம்புலன்களையும் வெல்லுதல் முதலியவற்றைச் செய்து கொடுக்கும்;-பிரபந்நனுக்குக் கைங்கரிய விரோதிகளை வென்று கொடுக்கும்.
இது தான் ‘குலந்தரும்’ என்கிறபடியே எல்லா அபேக்ஷிதங்களையும் கொடுக்கும்’;
‘ஐஸ்வர்ய கைவல்ய பகவல் லாபங்களை ஆசைப் பட்டவர்களுக்கு அவற்றைக் கொடுக்கும்’;
‘கர்ம ஞான பத்திகளிலே இழிந்தவர்களுக்கு விரோதியைப் போக்கி அவற்றைத் தலைக் கட்டிக் கொடுக்கும்’;
‘பிரபத்தியிலே இழிந்தவர்களுக்கு ஸ்வரூப ஞானத்தைப் பிறப்பித்துக் கால க்ஷேபத்துக்கும் போகத்துக்கும்
ஹேதுவாயிருக்கும்’ என்ற வாக்கியங்கள் இங்கு அநுசந்தேயங்கள்.(முமுக்ஷூப்படி. திருமந்திரம். சூ. 18-21.)
உலக இன்பங்கள் காம்யார்த்தமாய் கிட்ட இந்திரன் சந்திரன் குபேரன் போன்ற தேவதாந்திரங்களை நியமித்து அவர்களை பிரார்த்தித் தால் நமக்கு வேண்டியது கிட்டும் என எம்பெருமான் வைத்திருக்கார். ஆனால் மோக்ஷத்திற்கு எம்பெருமானைத்தான் பிரார்த்திக்கனும். இன்னென்ன பாசுரங்கள் கூறினால் இன்னென்ன பலன்கள் கிடைக்கும் என பலத்தை எதிர்பார்த்து தான் லௌகீக வாழ்க்கையில் இருக்கோம். ஒரு காரியத்தை செய்ய நமக்கு சக்தியும் வேண்டும். ப்ராப்தியும் வேண்டும்
திருக்குடந்தையில் கிடந்த கோலத்தில் ஆரா அமுதமாய் இருப்பது போல ஆரா அமுதம் கரையில் கடைய. ஆறுமலைக்கு எதிர்ந்தோடும் ஒலிகோமதி துவாரகாவில் கோமதி நதியில் காலையில் உப்பு இருக்காது. கடல் நீர் மட்டம் உயர்ந்து கோமதி நதிக்குள் புகுந்தால் நதி தீர்த்தம் சிறிது உப்பாகி விடும். அது போல் ஆறு மலைக்கு எதிர்ந்து ஓடுகிறது . அர ஊறுசுலாய் மலை தேய்க்கும் ஒலி – அரவு என்றால் பாம்பு. இது நன்றாக சொறிந்து விடுகிறது. கடல் மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி. அப்பன் ஊன்றி இடத்து எயிற்றில் கொண்ட நாளே. ப்ரயோஜனாந்தரம் என்றால் பெருமானை தவிர்த்து வேறு ப்ரயோஜனத்தை எதிர்பார்ப்பது. இந்த தேவர்களுக்கு தற்போது அமுதம் வேண்டும் என்பதற்காக ஆரா அமுதன் கடைந்தார். அநன்ய ப்ரஜோனம் என்றால் பெருமாளே எல்லாம் என்று இருக்கை. ஆக தேவர்களுக்காக அமுதம் கடைந்து கொடுத்தார். இங்கனம் தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு உதவி செய்து இருக்கார் பெருமாள். இந்திரன் தன்னிடத்தில் விருந்து வைக்க அங்கு கண்ணன் சத்யபாமாவை அழைக்க சத்யபாமா இந்திரன் தோட்டத்தில் இருக்கும் பாரிஜாத பூவின் செடியை தன்னிடத்தில் வைக்க விரும்பி கேட்க அதை உபகாரம் செய்த பெருமானுக்கே அவன் கொடுக்க மறுக்க பின் ஒரு கிளையை கருடன் மூலம் பூமிக்கு எடுத்துக் கொண்டு வந்தார். பெரிய மலை போன்று தோற்றமளிக்கும் வராஹரின் மேல் ஒட்டியிருக்கும் இரண்டு கோரப் பற்கள் தான் சந்திரன் போல் இருந்ததாம். பூமா தேவியை தன் மடியில் அமர்த்தி உபதேசம் செய்தார். ஸ்ரீ வராஹ சரமஸ்லோகமாய் ” ஸ்திதே மநஸீ ஸீஸ்வஸ்தே சரீரே ஸ்தியோதர: தாது ஸாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விச்வரூபஞ்ச மாம ஜம! ததஸ்து ப்ரியமாணத்து காஷ்ட பாஷான ஸன்னிபம். அஹம் ஸ்மராமி மத்பக்தம் நமாமி பரமாங்கதும்.!! நம் அனைவரையும் உலகத்தோடு தூக்கி தாங்குகிறார். நான்றிலே ஏழுமண்ணும் தானத்தவே. பூமியில் ஒரு சின்னதூசி கூட அசையாமல் பூமாதேவியின் திருமேனி அலுங்காமல் தூக்கி நிறுத்தினார். நான்றிலேலே ஏழ் மலைதானத்தவே பின்னும் நான்றிலே ஏழ் கடல் தானத்தவே . கடலில் இருக்கும் நீர்த் திவலைகள் கூட சிதறாமல் தூக்கி எயிற்றில் கொண்டார். ஈனச் சொல்லாயினுமாக எறிதிரை வையம் முற்றும் ஏனத்துருவாய் இடந்த பிரான் * இரு கற்பகம் சேர் வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்றெல்லா வர்க்கும ஞானப்பிரானை யயல்லா வில்லை* நான் கண்ட நல்லதுவே* என திருவிருத்தம் பாசுரம். நாம் சிறு வயதில் இந்த வராஹ பெருமாளை சரணாகதி பண்ணி அதை மறந்தாலும் நம் ப்ராண ப்ராயணத்தின் போது நாம் மறந்தாலும் நினைவு தப்பினாலும் பெருமான் ஞாபகம் வைத்துக் கொண்டு அழைத்து போகிறேன் என்கிறார். முக்தியை கொடுப்பார். அடுத்து ப்ரளய காலத்தில் ஆபத்து வர தன் வயிற்றில் வைத்து உபகரித்து சின்ன ஆலிலையில் சயனித்து உலகத்தையே விழுங்கி அங்கனம் விழுங்கும் போது ஆலிலை மட்டும் வைத்தாரா எனில் அதுவே அவரின் அகடிதகடனா சாமர்த்தியம். அதாவது சேராததை சேர்த்து வைக்கும் சாமர்த்தியம். மார்க்கேண்டேய ரிஷி தன் தவத்தின் பலனால் இந்த கோலத்தை காண பின் மார்க்கண்டேயனும் கண்ணன் மூச்சு உள்ளே இழுக்கும் போது போக கண்ணன் வயிற்றில் இருந்து கொண்டு வெளியே இருக்கும் தன் ஆசிரமத்தை பார்க்க கண்ணன் மூச்சை வெளியே விடும்போது திரும்ப தன் ஆசிரமத்திற்கே வந்தடைந்தார் என்பது சரித்ரம். அந்த ஆலிலையில் பரம சுந்தரராய் சயளித்த ப்ரபாவம் அளப்பறியது. அந்த கண்ணன் திருவடிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு. நாளுமெழ நில நீருமெழ* விண்ணும் கோளுமெழ எரிகாலுமெழ * மலை தாருமெழச் சுடர்தானுமெழ* விண்ணும் கோளும் எழ சுடர் தானும் சூரியன் சந்திரன் எல்லாம் மறைந்தார். முடிந்தார். ஜலம் ” என்று சப்தமிட ப்ரளய காலத்தில் ஒட்டுமொத்த உலகமும் கண்ணன் வாய்க்குள் போயிற்று .
ஆழி எழச் சங்கும் வில்லும் எழத் திசை
வாழி எழத் தண்டும் வாளும் எழ அண்டம்
மோழை எழ முடி பாதம் எழ அப்பன்
ஊழி எழ உலகங் கொண்ட வாறே.–7-4-1-
ஆழி எழச் -மஹா பலி பக்கல் அர்த்தியாய்ச் சென்று அபேக்ஷித்து கையிலே நீர் விழுந்த அநந்தரம் வளர்ந்து அருளின போது -அவ்விடத்தில் என்ன தீங்கு வருகிறதோ -என்று ஓக்க கிளர்ந்த படி -ஆயிரக் காதம் பறப்பதன் குட்டி ஐஞ் நூற்று காதம் சிறகடிக் கொள்ளும்-என்று பிள்ளை அருளிச் செய்வர்
சங்கும் வில்லும் எழத்-தூசியிலே திரு வாழி யாழ்வான் ஏறின வாறே -அநந்தரம் திவ்யாயுதங்கள் ஓக்க எழ -த்ரி விக்ரம க்ரமாக்ரந்தத்ர லோக்யஸ் ஸ்ப்புரதாயுத
திசை-வாழி எழத் -திவ்யாயுதங்கள் அவனுக்கு பரிந்து எழ -அவனுக்கும் இவற்றுக்கும் பரிந்து சர்வதோதிக்கமாக அனுகூலருடைய மங்களாசாச த்வனி எழ –சங்கைஸ் ஸூ ராணாம் திவி பூதலஸ் த்தைஸ் ததா மனுஷ்யைர்க்கக நேச கேஸரை ஸ் துத-க்ரமான்ய ப்ரசஸார ஸர்வதா மமாஸ்து மாங்கல்ய விவ்ருத்தயே ஹரி –ஏத்த ஏழ் உலகும் கொண்ட -இடக்கை வலம்புரி நின்று ஆர்ப்ப -என்கிறபடியே வலம் புரி முழங்க -திரு வாழி அழல் உமிழ
தண்டும் வாளும் எழ -புறப்பட்டோம் என்று மற்றும் இல்ல திவ்யாயுதங்களும் கிளர
அண்டம்-மோழை எழ -தரணி தல முழுதும் தாரகையின் இன்னுலகும் தடவிய தன் புறமும் விம்ம வளர்ந்தவன் -என்று தன்னுடைய வளர்த்திக்கு அண்டாந்தரம் இடம் போராமையாலே -அண்ட புத்தி பிளந்து -ஆவரண ஜலம் உள்ளே வந்து புகுர- மோழை-குமிழி
முடி பாதம் எழ -முடியும் பாதமும் ஓக்க எழ
அப்பன்-என் நாயகன் பண்ணின உபகாரமே-என்கிறார் –
ஊழி எழ -மஹா பலியால் உபத்திரவம் பட்ட காலம் போய் நல்ல காலம் வந்து தோற்றும் படியாகவும்
உலகங் கொண்ட வாறே.–உலகை அளந்து கொண்ட பிரகாரம் -தேவாஸ் ஸ்வ ஸ்த்தா நமா யாந்தி தைத்யாஸ் சர்வே ஹதா கதா நபயம் வித்யதே கிஞ்சித் ஜிதம் பகவதா ஜகத்
ஆறு மலைக்கு எதிர்ந்து ஒடும் ஒலி அர
வூறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி கடல்
மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி அப்பன்
சாறு பட அமுதம் கொண்ட நான்றே.–7-4-2-
ஆறு மலைக்கு எதிர்ந்து ஒடும் ஒலி அர-வூறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி கடல்-மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி –
கடலை தாழியாகக் கொண்டு -மலையை மத்தாகக் கொண்டு -வா ஸூ கியைக் கயிறாகக் கொண்டு -ஆயிரம் தோளால்-என்கிறபடியே தோளும் தோள் மாலையுமாய் -ஒரு மஹா பாஹு கடை கிற போது -கடல் கொந்தளித்து ஸஹ்யங்களை நோக்கி ஆறு எதிரே ஓடு கிற ஓசையும் -வா ஸூ கியினுடைய உடம்பைச் சுற்றி மலையைத் தேய்கிற த்வனியும் -அரவு -வாஸூகி / ஊறு -உடம்பு / சுலாய் -சுற்றி / வாஸூகியினுடைய உடைலைச் சுற்றி கடைந்த போதை சர சர என்கிற த்வனியும் –
கடல்-மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி –மந்த்ரத்தை கொடு புக்கு நட்டுத் திரித்த போது -கீழ் கடல் மேல் கடலாய் கிடாய்ப்பாய்ச்சல் போலே திரையோடு திரை தாக்கி கிளறுகிற ஒலியும்
அப்பன்-உபகாரகன்
சாறு பட -கடலில் நீர் கோதாம் படி பிரயோஜனமாக அம்ருதம் உண்டாக –சாறு என்று உத்சவமாய் -தேவ ஜாதிக்கு உத்சவம் உண்டாம்படியாக என்னுதல் —சாறு பட -விழவு பட -என்றபடி -நீரிலே ரசமான பசை பட என்னுதல் -உத்சவமாம் படி என்னுதல்
அமுதம் கொண்ட நான்றே.–அம்ருத மதனம் பண்ணின காலத்தில் இவை எல்லாம் உண்டாயிற்று –
நான்றில ஏழ் மண்ணுந் தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் மலை தானத்தவே பின்னும்
நான்றில ஏழ்கடல் தானத்தவே அப்பன்
ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே.–7-4-3-ஹா வராஹ வ்ருத்தாந்தத்தை அனுசந்திக்கிறார் –
நான்றில ஏழ் மண்ணுந் தானத்தவே பின்னும்
பூமி பிரளயம் கொள்ள மஹா வராஹமாய் பூமி உத்தரணம் பண்ணின போது –நான்றில-சலித்தது அல்லை / ஏழ் மண்ணும் -சப்த த்வீபமும் /தானத்தவே -ஸ்வ ஸ்தானஸ்த்தானங்கள் ஆயிற்றன -ஒரு வியாபாரத்தால் செய்ததாய் இருக்கை அன்றிக்கே ஸ்வ சங்கல்பத்தாலே செய்தால் போலே இருக்கை -/ பின்னும்-அதுக்கும் மேலே –
நான்றில ஏழ் மலை தானத்தவே பின்னும்-
பூமிக்கு ஆதாரமான குல பர்வதங்களும் சலியாதே ஸ்தானஸ்த்தமாயிற்றன-இவை திண்ணியதாகையாலே இப்படி செய்யலாம்
நான்றில ஏழ்கடல் தானத்தவே -த்ரவத்ரயமான சமுத்திரமும் சலியாதே ஸ்தானஸ்த்தானமாயிற்றன
அப்பன்-நஷ்ட உத்தாரணம் பண்ணின உபகாரகன்
ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே.–மாறுபாடு உருவக்குத்தி இடந்து எறட்டு-பந்தை எறட்டு செண்டிலே ஏற்றால் போலே இருந்தது திரு எயிற்றிலே ஏற்ற போது –
நாளும் எழநிலம் நீரும் எழ விண்ணும்
கோளும் எழ எரி காலும் எழ மலை
தாளும் எழச் சுடர் தானும் எழ அப்பன்
ஊளி எழ உலகம் உண்ட ஊணே.–7-4-4-பிரளய காலத்தில் பூத பவ்திகங்களோடு கூடின ஜகத்தை திரு வயிற்றிலே வைத்து ரஷித்த படியை சொல்லுகிறார் –
நாளும் எழ-கால வ்யவஸ்தை பேர -வியவச் சேதகரான ஆதித்யாதிகள் போனவாறே காலா காஷ்டாதி ரூபமான வியவச் சேதமும் போயிற்றது என்கை
நிலம் நீரும் எழ -காரணமான பூமியும் ஜலமும் போக
விண்ணும்-கோளும் எழ –ஆகாசமும் க்ரஹங்களும் போக
எரி காலும் எழ -அக்னியும் வாயுவும் போக
மலை-தாளும் எழச் -பூமிக்கு ஆதாரமான மலைகள் வேரோடு பறித்து விழ
சுடர் தானும் எழ -அனுக்தமான நக்ஷத்ராதி தேஜோ பதார்த்தங்கள் போக
அப்பன்-பிரளய ஆபத்சகன்
ஊளி எழ உலகம் உண்ட ஊணே.–திரு வயிற்றிலே புகுரும் நெருக்கத்தால் வந்த ஆரவாரம் உண்டாம் படி
ஊளி -சப்தம் -உறிஞ்சின ஓசை என்னவுமாம் –எழ -என்றது தோற்ற என்றபடி -லோகத்தை உண்ட படி –
ஸ்ரீகிருஷ்ண அவதாரம். கிருஷ்ணன் மகன் ப்ரத்யும்னன். அவன் மகன் அநிருத்தன் . பாணாசுரன் பெண் உஷை தன் கனவில் அநிருத்தனை காண அவனையே திருமணம் புரிய விருப்பப்பட்டாள். உஷையின் தோழி சித்ரா தேவி கனவில் யார் எதை பார்த்தாலும் வரையும் கலை கொண்டவள். அவள் முதலில் கண்ணனின் படம் வரைய, பின் ப்ரத்யும்னன் படம் வரைய கிட்டத்தட்ட இப்படித்தான் இருப்பான் ஆனால் இவன் இல்லை என்று கூற கடைசியில் அநிருத்தன் படம் வரைய இவனே என்று நிச்சயித்தாள் உஷை. கண்ணனுக்கும் பாணாசுரனுக்கும் சண்டை நிகழ கண்ணன் பாணாசுரனின் 1௦௦௦ தோள்களில் 998 தோள்கள் வெட்ட 2 மட்டுமே அவன் பெண் கல்யாணத்திற்கு அவனும் இருக்கனும் என்று விட்டு வைத்தார். இந்த சண்டையில் நேர் சரிந்தான் …(8ம் பாசுரம்) கொடி கோழி கொண்டான் (சுப்ரமணியன்) நேர் சரிந்தான் எரியும் அனலோன் அக்கினியும் பறந்தது. அப்பன் நேர் சரிந்தான் முக்கண் மூர்த்தி – திரிநேத்ர சிவனார் சரிந்து விழ நேர் சரிந்தான் திண் தோள் பாணாசுரனின் 2 தோள்களை விட்டுவிட்டு பாக்கி தோள்களை கண்ணன் வெட்டினார். அன்று மண் நீரெரி கால் விண்மலை முதல் * அன்று சுடர் இரண்டு பிறவும் பின்னும் அன்று மழை உயிர்தேவும் மற்றும் * அப்பன் அன்று முதல் உலகம் செய்ததுமே . ப்ரளய காலம் முடிந்து வ்யஷ்தி சிருஷ்டி வரை பர ப்ரஹ்மம் படைத்து பின் நான்முக ப்ரஹ்மாவை படைத்து இதர சிருஷ்டி தொழிலை செய்யக் கூறுகிறார். தேவான் பாவயதி தேன அப்பன் அன்று முதல் உலகம் செய்தார். நாராயண பரோ ஜ்யோதி ஆத்ம நார யண பர: வருணன் இந்திராதிகளை படைத்து வருணன் பூஜையை கூறினார். பூவில் நான் முகனை படைத்த ப்ரஹ்மம் மூல ப்ரக்ருதி வரை தான் படைத்து பின்வரும் படைப்பு தொழிலை அவரவர் கர்மத்தின் அடிப்படையில் படைக்க கோர அதன்படி நான் முகனும் செய்தார் என்பது சரித்ரம். இன ஆ நிரை பாடி அங்கே ஒடுங்க அப்பன் தீ மழைகாத்து குன்றமெடுத்தானே. கோவர்த்தன உத்தாரணம் சரித்ரம்.
நேர் சரிந்தான் கொடிக் கோழி கொண்டான் பின்னும்
நேர் சரிந்தான் எரியும் அனலோன் பின்னும்
நேர் சரிந்தான் முக்கண் மூர்த்தி கண்டீர் அப்பன்
நேர் சரி வாணன் திண் தோள் கொண்ட அன்றே–7-4-8-பாண விஜயத்தை அனுசந்திக்கிறார் –
நேர் சரிந்தான்-தோற்றத்தில் கெட்டுப் போனான் என்னுதல் -முதுகிட்டுப் பிழைத்து போனான் என்னுதல் –
கொடிக் கோழி கொண்டான் -மயிலை த்வஜமாக யுடையவன் -இளமறியான தேவ சேனாபதி யாகையாலே ஸூ ப்ரஹ்மண்யன் தூசியிலே கெட்டுப் போனான் என்கை
பின்னும்-நேர் சரிந்தான் எரியும் அனலோன்-அவன் கெட்டுப் போன பின்பு ஜ்வலியா நின்றுள்ள அக்னி வந்து தோற்றி கேட்டு ஓடினான் –
பின்னும்-நேர் சரிந்தான் முக்கண் மூர்த்தி கண்டீர் -நாற்பத்து ஒன்பது அக்னியும் கேட்டு ஓடின பின்பு த்ரி நேத்ரனான ருத்ரன் முதுகிட்டான்-மகன் கொடியால் அகப்பட்டான் என்று கொடியை மறைத்த இடத்திலும் கண்ணை மறைக்க ஒண்ணாமையாலே அகப்பட்டு கெட்டு ஓடிப் போனான் -கண்ணை மறைக்க ஒண்ணாமை யாலே அகப்பட்டு கெட்டு ஓடிப் போனான் –தேவதாந்தரங்களை ரக்ஷகமாக பற்றினாரை-அவர்கள் எதிரி கையிலே காட்டிக் கொடுத்து தம் தாமைக் கொண்டு தப்பிப் போவார்கள் -என்கை
அப்பன்-நிருபாதிக ரக்ஷகன்
நேர் சரி வாணன் திண் தோள் -ரக்ஷகரானார் அளவு இது வானால் ரஷ்ய பூதன் ஆனவனுக்கு முதுகு காட்டிப் பிழைத்து போம் அது ஒழிய வேறு போக்கடி இல்லை இ றே -திண் தோள் -ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபி பேதி என்று இருக்குமா போலே -தேவதாந்தரங்களைப் பற்றி தோள் வலி கொண்டாடி இருந்த படி –ருத்ரன் வர பலத்தால் திண்ணிதான தோள்
திண் தோள் கொண்ட அன்றே–உஷை பித்ரு ஹீனை யாகாமைக்காக தலை அறாதே தோளைத் துணித்து விட்டான்
கீழ் அசுரர்களை மார்விலே அம்பேற்று ஜெயித்த படி சொல்லிற்று -அவர்களுக்கு ஆபாஸ்ரயமாக வந்த தேவ ஜாதியையும் ஜெயித்த படி சொல்லிற்று இப்பாட்டில் –
ஊனுடை மல்லர் உதைந்த வொலி* மன்னர் ஆணுடைச் சேனை நடுங்கு மொலி * விண்ணுள் ஏணுடைத் தேவர் வெளிப்பட்ட ஒலி * அபபன் கானுடைப் பாரதம் கையறை போழ்தே பெருமானே கடல். நம்மை ஆட்டி வைப்பார் சிறிய வயதில் மாடுகளை மேய்த்தார். பெரியவரானதற்கு குதிரைகளை மேய்த்தார். இது தான் வித்யாசம். குதிரையை போன்று நம் இந்திரியங்கள் தறிகெட்டு ஓடும். மனம் தான் கடிவாளம். புத்திதான் சாரதி . கையில் சின்ன கடிவாளம் வைத்துக் கொண்டு அர்ஜுனனுக்கு உப தேசம் . செய்தார். ஆயுதம் எடுக்காமலே தேரை முன்னும் பின்னும் நகர்த்தி சாரத்யம் பண்ணியே அசுரர்கள் போன்ற திமிங்கலம் போன்று கெளரவர்களை போரில் ஜெயித்தார். தீர்ப்பாரையாம் இனி எங்கனம் நாடுதும் ? அன்னை மீர்* ஓர்ப்பால் இவ் வொண்ணுதல் உற்ற நல் நோயிலு தேறினோம் போர்ப்பாகு தான் செய்து அன்றைவரை வெல்வித்த *மாயப் போர்த் தேர்ப் பாகனார்க்கு இவள் சிந்தை துழாய் திசைக்கின்றதே என்பது பாசுரம். சரியான பாகு பதத்தில் நாம் இனிப்பு பண்டம் செய்வது போல போர்ப் பாகு . தேர்பாகு நன்றாக இருக்க பாகிலே பிடிபட்ட மா வாய் நம்மாழ்வார் போர்ப்பாடு செய்த மாயப் போர் கண்ணன் சாரத்யம் செய்தே எல்லோரையும் முடித்து பூ பாரத்தை ரக்ஷிப்பதற்கு அவதாரம் செய்தார். அசுரத்தன்மை உடைய துரியோதனாதிகள். ஆக போரை தொடுக்காமல் தன் சங்கல்பத்தாலே பாரதப் போரை முடித்து விட்டார். அடுத்து 6ம்பாசுரம். போழ்து மெலிந்த புன்செக்கரில் வான் திசை சூழுமெழுந்து உதிரப் புனலா* மலை கீழ்து பிளந்த சிங்க மொத்ததால் * அப்பன் ஆழ்துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே. நரசிம்ம அவதாரத்தின் பாசுரம். தேவர்கள் கொடுத்த வரத்தை மதித்து பெருமான் சிங்க முகத்துடன் மனித உடலுடன் நரஹரியாய் ப்ரஹ்லாதன் என்ற பக்தனுக்காக அவன் காட்டின தூணிலே உதித்து தன் . நகத்தையே சுதர்சனமாய் கொண்டு ப்ரஹ்லாதன் தந்தை ஹிரண்ய கசிபுவை 2 ஆக பிளந்தார். அப்போது பூமியே தடம்புரண்டு சொர்க்கம் கீழேயும் பூமி மேலேயும் போய் திசைகளே தெரியாமல் விழித்தனர். பக்தனிடத்தில் ஒரு பாகவதனிடத்தில் அபச்சாரம் செய்தது கண்டு பொறுக்காமல் எடுத்த அவதாரம்
ஊணுடை மல்லர் ததர்ந்த ஒலி மன்னர்
ஆணுடைச் சேனை நடுங்கும் ஒலி விண்ணள்
ஏணுடைத் தேவர் வெளிப்பட்ட ஒலி அப்பன்
காணுடைப் பாரதம் கையறை போழ்தே.–7-4-5-பாரத சமர வ்ருத்தாந்தத்தை அனுபவிக்கிறார்-
ஊணுடை மல்லர் தகர்த்த ஒலி -பலகரமான த்ரவ்யங்களை மிகவும் புஜித்து மிடுக்கரான மல்லர் நெரித்து விழுகிற ஒலி
மன்னர்-ஆணுடைச் சேனை நடுங்கும் ஒலி -ராஜாக்களுடைய ஆண் பிள்ளைத் தனத்தை உடைத்தான சேனை -என்னுதல் -பீஷ்மாதிகளை ரக்ஷகமாக உடைத்தான சேனை என்னுதல் –கிருஷ்ணன் பிரதிபக்ஷத்தில் ஆனான் என்று நடுங்கி அலமாக்கிற த்வனி
விண்ணள்-ஏணுடைத் தேவர் வெளிப்பட்ட ஒலி -சுவர்க்கத்தில் மதிப்பராக எண்ணப் பட்ட தேவர்கள் -தெரிவரிய சிவன் பிரமன் அமரர் கோன் என்கிறபடியே ப்ரோக்ஷபூதர் ஆனவர்கள் -கண்ணுக்கு விஷயமாய் ஸ்துதிக்கிற த்வனி -ஸ்ரீ வேத வியாச பகவான் த்ருதராஷ்ட்ரனை யுத்தம் கண்டு இருப்பாயா உனக்கு கண் தர என்ன -நான் பொறுக்க மாட்டேன் என்ன சஞ்சயனுக்கு கண் கொடுத்து கண்டு சொல் என்றான் –
அப்பன்-பூ பார நிரஹரணம் பண்ணின உபகாரகன் –
காணுடைப் பாரதம் கையறை போழ்தே.–தர்ச நீயமான பாரதம் -அதாவது முட் கோலும் சிறு வாய்க் கயிறும் சேனா தூளியுமாய் சாரத்த்ய வேஷத்தோடே நின்ற நிலை –கையறை போழ்தே–கையும் அணியும் வகுத்து திரிகிற சமயம் தொடங்கின போது என்றுமாம் –
போழ்து மெலிந்த புன் செக்கரில் வான் திசை
சூழும் எழுந்து உதிரப் புனலா மலை
கீழ்து பிளந்த சிங்கம் ஓத்ததால் அப்பன்
ஆழ் துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே.–7-4-6-ஆஸ்ரிதர்க்கு உஜ்ஜீவன ஹேது வான ஹிரண்ய வத வ்ருத்தாந்தத்தை அனுபவித்து அருளிச் செய்கிறார் –
போழ்து மெலிந்த புன் செக்கரில்-ஸந்த்யா வேளையிலே நாள் முற்று சந்தையாய்ச் செவ்வானம் மறைவதற்கு முன்பே -அவன் கொண்ட வரத்தில் புகாத காலத்திலே –
வான் திசை-சூழும் எழுந்து உதிரப் புனலா-ஆகாசமும் திக்குகள் எங்கும் ரக்த ஜலமாக -ஸந்த்யா ராகத்தில் காட்டில் ரக்தமானது எல்லாவிடத்தையும் சிவப்பிக்க என்றுமாம்
மலை-கீழ்து பிளந்த சிங்கம் ஓத்ததால் -மலையை கீழே இட்டு மேலே இருந்து அத்தை பிளக்கிற ஸிம்ஹம் போலே இருந்தது என்னுதல் -மலையை இரண்டு கூறாக கிழித்துப் பிளந்த ஸிம்ஹம் போலே என்னுதல் –கீழ்ந்து பிளந்த ஸிம்ஹம் –
அப்பன்-பிதா எதிராக வந்து உதவின உபகாரகன் –கீழில் பாட்டில் பந்துக்கள் பகையாக வந்து உதவின படி சொல்லிற்று -இதில் ரக்ஷகனான பிதா பகையாக வந்து உதவின்படி சொல்லுகிறது -பந்துக்கள் பகையாக வந்து உதவினவன் -ஜனகன் பகையாக வந்து உதவினவன் -ஆத்மை வரி புராத்மநா -என்று தனக்குத் தானே பாதகனான அவ்வளவிலும் வந்து உதவுமவன் -ஆனபின்பு சர்வரையும் விட்டு அவனையே யன்றோ பற்ற அடுத்து
ஆழ் துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே-தன் சீற்றத்தைக் காட்டி மிகவும் துக்கத்தை விளைத்து அசூரனைக் கொன்ற படி -நரசிம்ஹத்தின் தோற்றத்தில் சவகல்பனானான் -பின்னை உடலைக் கிழித்து பொகட்டான் -அவன் வீயத் தோன்றிய –சிங்கப் பிரான் -என்ன கடவது இறே-
நரசிம்ம அவதாரத்தில் ப்ரஹ்லாத வரதனாய் லக்ஷ்மி நரசிம்மனாய் பெருமான் எழுந்தருளியிருக்கார் . அங்கண் ஞாலம் அஞ்ச அங்கு ஓராளரியாய் * அவுணன் பொங்க ஆகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதனிடம் * பைங்காணை கொம்பு கொண்டு பத்தி மையால் அடிக்கீழ் செங்கணாளி இட்டிறைஞ்சும் சிங்கவேள் குன்றமே. சிங்கவேள் குன்றம் என திருமங்கை ஆழ்வார் இட்ட பெயர். காட்டிற்கு மட்டுமல்ல எல்லாவற்றிற்கும் ராஜாதி ராஜனாய் பெருமான் விளங்குகிறார். 7வது பாசுரம் – மாறுநிரைத்து இரைக்கும் சரங்கள் இன நூறு பிணம் மலைபோல் புரள கடல் ஆறு மடுத்து உதிரப்புனலா* அப்பன் நீறுபட இலங்கை சென்றநேரே மஹாபாரதப் போர் பகலில் மட்டும் தான் நடந்தது. ஆனால் ராம ராவண யுத்தம் இரவு பகல் பாராது விடியவிடிய சண்டை நடந்தது. ஏனெனில் இரவு பொழுது அசுரர்கள் பலம் பெறுவார்கள். சூரிய அஸ்தமனத்தில் தூங்கும் போது செரிமானம் நடக்கும். எந்தெந்த நேரத்தில் எந்தெந்த திசையில் சூரியன் உதிக்குமோ அதன்படி தான் செரிமானமும் இருக்கும். மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள். இலங்கை சென்ற நேரே நேர்மையின் வடிவமாய் ராமன் சண்டையிட்டார். எங்கிருந்து அம்பு வருகிறது என்று தெரியாமல் தப்பு தப்பாய் ராவணன் அம்பு விட்ட போதும் தான் நேர்மை தவறாமல் சண்டையிட்டார். ஒருவில் ஒரு சொல் ஒரு இல் என்ற கொள்கையை கடைபிடிக்கும் ராமன். மாறு ஒன்றுக் கொன்று சண்டையிட்டு அலை அலையாய் இரைச்சலுடன் சடலங்கள் வந்து விழ அதாவது ராமன் பாணத்திலிருந்து அம்பு போக போக சடலம் சரமாரியாய் வந்து விழுந்தது. இதன் அடியாய் அழகான சரித்ரம். இந்திராதி தேவர்கள் ராமன் வெற்றி பெற்றதற்கு ராமனை வேண்டுகிறார்கள். ராமன் இந்திரனிடம் கை கூப்பி எனக்கு ப்ரதி உபகாரமாய் ஏதாவது கொடுக்க நினைத்தால் அதை போரில் மடிந்த குரங்குகளை உயிர் பிச்சை கொடு என்று சொல்ல இந்திரனும் உயிர்பிச்சை கொடுத்தான், ராமன் வீபீஷணன் பக்கம் திரும்பி உங்கள் பக்கம் யாரையாவது பிழைக்க வைக்கனுமா என்று கேட்க விபீஷணன் இறந்த சடலங்களை ராவணன் சண்டை போட்டுக் கொண்டு இருக்கும் அசுரர்களுக்கு மலைப்பாய் இருக்கும் என கடலில் வீசி எறிந்து விட்டான் என்றான். சுற்றி இரத்த ஆறு ஓடிற்று. நீலக் கடல் இரத்தக் கடலாய் மாறியது. மொத்த பூமியும் கரை கண்டு ஆடும் அளவிற்கு இலங்கையை முடித்தார் ராமன். இந்திரியங்களை ராவணனின் 10 தலைக்கு உவமையாகக் கொண்டு இந்திரியம் சொல்வதை மனசு கேட்கும். விவேகம் என்ற உண்மையான பகுத்தறிவு ஆத்மா வேறு தேஹம் வேற என்ற அறிவு புரிதல் வேண்டும்
மாறு நிரைத்திரைக் குஞ்ச ரங்களின்
நூறு பிணம் மலை போற் புரளக் கடல்
ஆறு மடுத்து உதிரப் புனலா அப்பன்
நீறு பட இலங்கை செற்ற நேரே.–7-4-7-ராவண வத வ்ருத்தாந்தத்தை அனுபவிக்கிறார் –
மாறு நிரைத்திரைக் குஞ்ச ரங்களின்-சாரிகை வருகிற கடுப்பாலே எதிராக நிரைத்து இரையா நிற்கிற சர ஸமூஹத்தாலே -ஓர் அம்பை விட்டால் அதற்கு எதிராக மற்றை யம்பை விடுகையாலே திருச் சரங்கள் தன்னிலே முட்டி த்வநிக்கிற படி
நூறு பிணம் மலை போற் புரளக் -இனமான நூறு நூறாக பிணங்கள் மலை போலே புரண்டு கிடக்க -அநேக பிணங்கள் என்றுமாம்
கடல்-ஆறு மடுத்து உதிரப் புனலா -அப்பன்-நீறு பட இலங்கை செற்ற நேரே-அபூர்ய மாணமசல ப்ரதிஷ்ட்டம்-என்கிறபடியே அவிக்ருதமான கடல் ரத்தத்தால் நிரம்பி ஆறுகளில் எதிரே மடுத்து ரக்த ஜலமாக -ரக்ஷகனானவன் லங்கை பஸ்மாமாம் படி அழித்த நேர்பாடு என்னுதல் -நேரே என்று ஐஸ்வர்யமான ப்ரபாவத்தாலே அன்றிக்கே செவ்வையான ஆண் பிள்ளைத் தனத்தால் என்னுதல் -க்ருதரிம யோதிகளான ராக்ஷஸரைத் போல் அன்றிக்கே நேர் போராக என்னுதல்-
அன்று மண் நீர் எரி கால் விண் மலை முதல்
அன்று சுடர் இரண்டும் பிறவும் பின்னும்
அன்று மழை உயிர் தேவும் மற்றும் அப்பன்
அன்று முதல் உலகம் செய்ததுமே.–7-4-9-பாணனை தமித்த -ஜெயித்த -அன்று தொடங்கி ஜகத் உண்டாயிற்று என்கிறார் -ஆதி ஸ்ருஷ்ட்டி ஆகவுமாம் –
அன்று மண் நீர் எரி கால் விண் மலை முதல்-பூத பஞ்சகங்கள் என்ன -பூமிக்கு ஆதாரமான மலை என்ன -இவை தொடக்கமாக –
அன்று சுடர் இரண்டும்-சந்த்ர ஸூ ரியர்களும் உண்டாயிற்று
பிறவும்-மற்றும் உண்டான நக்ஷத்ர க்ரஹாதி தேஜோ பதார்த்தங்களும்
பின்னும்-அன்று மழை உயிர் தேவும் மற்றும் -மேகத்தையும் -வர்ஷ ஜலத்தால் ஜீவிக்க கடவ பிராணிகளையும் -வருஷத்துக்கு உத்பாதகரான தேவர்களையும் -மற்றும் அனுக்தமான பதார்த்தங்களையும் அன்று உண்டாக்கினான் –
அப்பன்-சர்வ உத்பாதகன் ஆனவன் –
அன்று முதல் உலகம் செய்ததுமே.–அன்று முதல் ஜகத்தை உண்டாக்கிற்று -வாணனை தோற்பித்த அன்று முதல் என்னுதல் -ரூப நாமங்களை இழந்து சதேவ -என்கிற தசையில் பஹுஸ்யாம் -என்று சங்கல்பித்த அன்று முதல் என்றுமாம் –
ப்ரதி வருஷம் இந்திரனுக்கு படைத்த ஆயர்பாடி மக்கள் அடுத்த வருஷம் வரும் போது அதே மாதிரி இந்திரனுக்கு படைக்க வரும் போது கண்ணன் தடுத்து கோவர்த்தன மலைக்கு படைக்கும் படி கூறினார். கோவர்த்தன மலையால் தான் செடி கொடிகள் போன்ற உயிரினங்கள் வாழ்கிறது. பருவமழை பொழிகிறது. அதற்கே படைக்க கோர ஆயர்பாடிகுழந்தைகளும் செய்வதறியாது ஒத்துக் கொள்ள , வைத்த விதவிதமான அனைத்து தின் பண்டங்களையும் மலைக்கு திரையிட முடியாது நீங்கள் எல்லோரும கண்களை மூடிக்கொள்ளுங்கள் என்று கூற அவர்களும் மூடிக்கொள்ள கண்ணன் துளி மிச்சம் வைக்காமல் அத்தனையும் உண்டான் என்பது சரித்ரம். மேலும் இந்திரன் படைப்பதை பார்ப்பானே தவிர அதை தொடக்கூட மாட்டான் அலட்சியமாய் இவர்கள் படைத்தது தானே என்று இருந்து விடுவான். ஆனால் தனக்கு படைக்காத கோபத்தில் வருணனை மழை பெய்ய கூறினான் இந்திரன். மழை விடாமல் பெய்ய கண்ணன் அந்த கோவர்த்தன மலையையே குடையாக பிடித்து ஆயர்பாடி மக்களையும் ஆநிரைகளையும் காக்க இந்திரன் மனம் திருந்தி கண்ணன் காலில் விழுந்து க்ஷமா கேட்டதாய் சரித்ரம், இந்த .பாசுரங்களின் பல ஸ்ருதியாய் இந்த 10 பாசுரங்களை அப்யஸிப்பவருக்கு அவர்கள் பிரார்த்தனை படி வெற்றி நிச்சயம் கிட்டும் என்று முடித்தார். ,
குன்றம் எடுத்த பிரான் அடியாரொடும்
ஒன்றி நின்ற சட கோபன் உரை செயல்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே–7-4-11- .நிகமத்தில் எம்பெருமானுடைய விஜயங்களைத் தொடுத்த இத்திருவாய் மொழியை சஹ்ருதயமாக கற்பார்க்கு இது தானே விஜயங்களைக் கொடுக்கும் என்கிறார் –
குன்றம் எடுத்த பிரான் அடியாரொடும்-ஒன்றி நின்ற சட கோபன் உரை செயல்
கோவர்த்தன உத்தாரணம் பண்ணின உபகாரகனான கிருஷ்ணன் திருவடிகளையே தஞ்சமாக நினைத்து இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களிலே தம்மையும் அந்நிய தமராக நினைத்து இருந்த ஆழ்வார் அருளிச் செய்த இது -மலையை எடுத்த அன்று மலைக்கு கீழே ஒதுங்கினவர்களை போலே சம்சாரத்துக்கு அஞ்சி கிருஷ்ணன் திருவடிகளிலே ஒதுங்குமவர்கள் ஸ்ரீ வைஷ்ணவர்கள் -அச் செயலுக்கு தோற்று அடிமை புக்கவர் ஆயிற்று இவர்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை-வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே-
சர்வேஸ்வரன் விஜயங்களை சேராத தொடுத்த இவை பத்தும் -ஆதரித்து கற்பார்க்கு இதில் சொல்லுகிற விஜயத்தை கொடுக்கும் -இச் சேதனனுக்கு விஜயமாவது -சர்வேஸ்வர விஜயம் இ றே -அதுவே இ றே இவருக்கு புருஷார்த்தமும் -சம்சார விஜயத்தை கொடுக்கும் என்றுமாம் –
நன்றி புனைந்த– சர்வேஸ்வர விஜய ரூபமாய் ஆத்மாவுக்குப் புருஷார்த்தமுமாய் இருந்த இத்தை தொடுத்த என்றபடி-
அந்தரங்கத்தை விடவேண்டும் சரணாகதி !!! அந்த ரங்கத்தை தொடவேண்டும் சரணாகதி !!! முயலும் ஆமையும் பண்ணலாம் சரணாகதி !!! முயலாமையை உணர்ந்து பண்ணனும் சரணாகதி !!! குமரிகாண்டத்திலும் பண்ணலாம் சரணாகதி !!! அமெரிக்கா கண்டத்திலும் பண்ணலாம் சரணாகதி !!! மதி நிறைந்த நன்னாளிலும் பண்ணலாம் சரணாகதி !!! நிதி தொலைத்த எந்நாளிலும் பண்ணலாம் சரணாகதி !!! பெண்ணும் பேதையும் பண்ணலாம் சரணாகதி !!! கண்ணனும் கோதையும் பண்ணலாம் சரணாகதி !!! மீமாம்சை கற்றவனும் பண்ணலாம் சரணாகதி !!! மீன் மாம்சம் விற்பவனும் பண்ணலாம் சரணாகதி !!! பக்தியை கேட்டுப் பெறலாம் சரணாகதி !!! முக்தியை கேட்டும் பெறலாம் சரணாகதி !!! காமன் சோமனிடம் கூடாத சரணாகதி !!! ராமன் மனம் கூடும் சரணாகதி !!!
——————————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply