ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் வைபவம்
ஸூந்தர ஜாமாத்ரு முநே ப்ரபத்யே சரணாம் புஜம்
ஸம்ஸார ஆர்ணவ ஸம் மக்ந ஐந்து சந்தார போதகம்
ஸம்ஸாரக் கடலில் அழுந்தி உள்ள ஜந்துக்களைத் தாண்டுவிக்கும் ஓடம் போன்றதான
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயரின் திருவடித் தாமரைகளை சரண் அடைகிறேன் –
————-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளைக்கும் அவர் திருக்குமாரர் ஸ்ரீ நாயனார் ஆச்சான் பிள்ளைக்கும் சிஷ்யரான இவர்
தென் தேசத்தில் ப்ரஹ்ம தேசம் மன்னார் கோயிலில் -ஆனிமாதம் ஸ்வாதி நக்ஷத்திரத்தில் திரு அவதரித்தவர்
திருவாய் மொழிக்கு பன்னீராயிரப்படி அருளிச் செய்தவர்
அன்போடு அழகிய மணவாளச் சீயர்
பின்போரும் கற்று அறிந்து பேசுகைக்கா தம் பெரிய
போதமுடன் மாறன் மறையின் பொருள் உரைத்தது
ஏதமில் பன்னீராயிரம் –உபதேச ரத்னமாலை –45-
இவரைப் பெரியவாச்சான் பிள்ளை திருத்திப் பணி கொண்டு அருளிய விவரம் இவர் வைபவத்தில் காட்டப்பட்டுள்ளது
மன்னு மணவாள முனி செய்யுமவை தாமும் சில –(உபதேச 47)என்று மா முனிகள் அருளியபடி
திரு விருத்தம் ஸ்வாபதேச உரை முதலான மூவாயிரத்தில் சில பிரபந்தங்களுக்கு உரை
த்ராவிட உபநிஷத் சங்கதி -ஸம்ஸ்க்ருத பத்ய கிரந்தம்
தத்வ தீபம் -ஸம்ஸ்க்ருத கத்ய கிரந்தம்
அதுக்கு இவரே -தீப பிரகாசம் -மணிப்பிரவாள வியாக்யானம்
தீப ஸங்க்ரஹம்
தத்வ நிரூபணம்
ரஹஸ்யத்ரய காரிகா வளி
ஸ்ரீ பகவத் கீதை வெண்பா இவை போல்வன நமக்கு கிடைத்துள்ளன –
இவர் அருளிச் செய்துள்ள கீதைக்கு மணிப்பிரவாள வியாக்யானம் போல்வன இப்பொழுது லுப்தம்
திருமாலை ஆண்டான் திரு வம்சத்தவரான யாமுனாச்சார்யர் இவரது சிஷ்யர்
ப்ரமேய ரத்னம் போன்ற கிரந்தங்கள் சாதித்தவர்
பூர்வாஸ்ரமத்தில் -வரதராஜர் என்னும் திருநாமம் –
உத்தம ஆஸ்ரமத்தில் ஸூந்தர ஜாமாத்ரு முனி -அழகிய மணவாள ஜீயர் என்று திருநாமம் பெற்றார்
வாதிகளை ஜெயிக்கையால் வாதி கேஸரீ என்ற பட்டப்பெயர் பெற்றார் –
————————–
பிரவேசம்
ஸ்ரீ யபதியாய்
ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷண ஸ்வரூப ரூப குண விபூதியை யுடைய ஸர்வேஸ்வரன்
பதிம் விஸ்வஸ்ய-என்று விஸ்வத்துக்கும் பதி யாகையாலே
தன்னுடைய நாராயணத்வ ப்ரயுக்தமான
வியாப்ய வியாபக பாவம்
சரீர ஆத்ம பாவம்
சேஷ சேஷி பாவம்
நியாந்த்ரு நியாம்ய பாவம்
ஆதார ஆதேய பாவம்
முதலான அவிநா பூத சம்பந்தம் ஸகல ஆத்மாக்களோடும் ஒத்து இருக்க
(அப்ருதக் ஸித்த விசேஷணம் – பிரிவில்லாமல் –
அசேஷ சித் அசித் வஸ்து சேஷிந சேஷ ஸாயினே –
யஸ்ய சேதனஸ்ய யத் த்ரவ்யம் சர்வாத்மனா ஸ்வார்த்தே தாரயிதும் நியந்துஸ் ச ஸக்யஞ்ச தத் தஸ்ய சரீரம்
அவனாலே தாங்கப்பட்டு அவனுக்காகவே இருப்பதே சரீரம்
பரகத அதிசய ஆதேயன உபாயத்வமே -சேஷ சேஷி பாவம் -அவனுக்கே
பஸ்யமே லோக ஐஸ்வர்யம் -அனைத்தையும் நானே தாங்குகிறேன் -கீதை )
ஒரு விபூதியில் உள்ளார்
நிரந்தர அனுபவ ஜெனித நிரதிசய ஆனந்த திருப்தராயப் போருகிற படியையும்
ஒரு விபூதியில் உள்ளார் –
அநீசயா சோசதி முஹ்யமாந -ஸ்வேதாஸ்வரம் -4-7-என்று
அநாதி அஞ்ஞான அந்தகாரத்தாலே அபி பூதராய் –
அநாத்மந் யாத்ம புத்தியும் -(அஹங்காரம் -யானே -ஸ்வரூபம் மாறி )
அஸ்வே ஸ்வ புத்தியுமாகிற -(மமகாராம்–என் தனதே -என்னுடையது அல்லாதவற்றை என்னுடையது ஸ்வ பாவம் மாறி )
அந்யதா ஞான
விபரீத ஞானங்களாலே
ஆத்ம அநநு ரூபமான அர்வாசீந புருஷார்த்தங்களிலே அதி ப்ரவணராய்
(தாழ்ந்த விஷயாந்தரங்களில் ஐஸ்வர்யார்த்திகளாய் )
ஆத்ம அநு ரூபமான அதிசயித புருஷார்த்தத்தில் அத்யந்த விமுகராய்
கர்ப்ப நரகாதி ஸகல கிலேசங்களாலும் வ்யாகுலராய்ப் போருகிற படியையும் கண்டு
இவர்களுக்கு அவகாசம் பிறக்கைக்கு அடியான ஸ்வ அபிமுக்யத்தைப் பண்ணுவிக்கைக்கு உப கரணமான
கரண களேபரங்களையும் கொடுத்து
மாநம் ப்ரதீபம் இவ காருணிகோ ததாதி -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -உத்தர சதகம் –1-என்கிறபடியே
(ஹர்த்தும் தமஸ் சத் அஸதீ விவேக்தும் ஈச மாநம் ப்ரதீபம் இவ காருணிகா ததாதி
தேந அவ லோக்ய க்ருதிநஸ் பரி புஞ்ஜதே தம் தத்ர ஏவ கேபி சபலா ஸலபீ பவந்தி–ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -உத்தர சதகம் –1-1-
காருணிகா-தயாளுவான
ஈச மாநம்-சர்வ ஸ்வாமியான ஸ்ரீ பெரிய பெருமாள்
ஹர்த்தும் தமஸ்-அஞ்ஞான அந்தகாரத்தை போக்குவதற்கும்
சத் அஸதீ விவேக்தும்-நல்லதும் தீயதும் அறிகைக்கும்
ப்ரதீபம் இவ ததாதி-பெரு விளக்குப் போலே இருக்கிற பிரமாணத்தை பிரகாசிக்கிறார் –
தேந அவ லோக்ய க்ருதிநஸ் பரி புஞ்ஜதே–பாக்யாதிகர் அந்த ஈசனை அந்த பிரமாணத்தாலே நன்றாக அறிந்து
ததீய பர்யந்தமாக அனுபவிக்கின்றார்கள்
தம் தத்ர ஏவ கேபி சபலா ஸலபீ பவந்தி-சஞ்சல ஹ்ருதயராவார் அந்த பிராமண விஷயத்தில்
வீட்டில் பூச்சிகள் போலே விழுந்து நசிக்கிறார்கள் –)
(காருணிகனான சர்வேஸ்வரன் –
அறிவிலா மனிசர் உணர்வு என்னும் சுடர் விளக்கு ஏற்றி-
பிறங்கு இருள் நீங்கி
மேல் இருந்த நந்தா வேத விளக்கை கண்டு
நல்லதும் தீயதும்-விவேகிக்கைக்கு
மறையாய் விரிந்த துளக்கமில் விளக்கில் கொளுத்தின ப்ரதீபமான-கலைகளை
நீர்மையினால் அருள் செய்தான்––ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம்-சூர்ணிகை 1-)
அந்தகாரத்திலே திரிவாருக்கு அர்த்த பிரகாசம் பிறக்கைக்குக் கை விளக்கு கொடுத்தால் போலே
நிர்த் தோஷமான பிராமண ப்ரகாஸத்தையும் பண்ணுவிக்க
திமிர உபஹத த்ருஷ்டியானவனுக்கு தீபமும் ப்ரகாஸமும் அல்லாதாவோ பாதி
பகவத் பக்தியாகிற ஸித்தாஞ்சனத்தாலே ஆந்த்ர சஷுஸ்ஸான நெஞ்சின் குருடு தீராமையாலே
அதுவும் அகிஞ்சித் கரமாக
இதிஹாஸ புராணாப்யாம் வேதம் சமுப ப்ரும்ஹயேத்–(பார்ஹஸ் பத்ய ஸ்ம்ருதி ) என்று
வேத உப ப்ரும்ஹணமான ஸ்ம்ருதி இதிஹாஸ புராண ரூபங்களாய்
ஸ்வ யோக மஹிம சாஷாத் க்ருத பராவர தத்வ விபாகரான பரம ரிஷிகளாலே
ப்ரணீதங்களான பிரபந்தங்களை பிரவர்த்திப்பித்தும்
அதுவும் கார்ய கரம் அல்லாமையாலே
ஓலைப் புறத்துச் செல்லாத ராஜ்யத்தை எடுத்து விட்டுக் கொள்ளும் ராஜாக்களைப் போலே
தான் ராம கிருஷ்ண ரூபத்தாலே திரு அவதரித்தும்
ரூப ஓவ்தார்ய குணை பும்ஸாம் த்ருஷ்டி ஸித்த அபஹாரிணம் (அயோத்யா -3-26 ) என்று
ஸுந்தர்யாதி குண ஆவிஷ்காரேண
அக்ரூர மாலாகாராதிகான் பரம பாகவதான் க்ருத்வா -(கீதா பாஷ்யம் -அவதாரிகை )என்று சொல்லுகிறபடியே
ஸாஸ்த்ர சஸ்த்ரம் முனை மடிந்தால் எடுக்கும் -ப்ரஹ்மாஸ்திரமாகிற வடிவு அழகைப் பிரகாசிப்பித்தும்
உபதேஸ அநுஷ்டானாதி முகத்தால் தர்ம ஸம்ஸ்தாபநத்தைப் பண்ணியும்
வசீகரிக்கப் பார்த்த இடத்திலும்
அநாதி பாப வாஸநா தோஷ தூஷிதா சேஷ சேமுஷீகர் ஆகையாலே
பாஹ்ய குத்ருஷ்டி மத அவகாஹநம் பண்ணி
(புத்தோடு சமணம் எல்லாம் கலை அறக் கற்ற மாந்தர் காண்பாரோ கேட்பரோ )
வைதிக மார்க்க பராங் முகராகக் கண்டபடியாலே
இவர்களை வசீகரிக்கைக்கு உபாயம் ஏதோ என்று பார்த்து
(எம்பெருமானாராய் இருந்தால் அப்போதே ஒரு சிந்தை செய்து நாரணர்க்கு ஆளாக்கி அருளுவார் )
தீபகம் காட்டி மிருகம் பிடிப்பாரைப் போலே ஸஜாதீய புத்தி பண்ணலாம் படியான
ஆழ்வார்களைப் ப்ரவர்த்திப்பித்தான் –
இவர்கள் ஆகிறார் –
ரிஷிகளைப் போலே கர்மாதி ஸாத்ய ஞானர் அன்றியே –
பகவத் ப்ரஸாதத்தாலே
அயத்ன லப்த ஞான வைராக்ய பக்தி கராய்
வேத இதிஹாஸ புராணாதிகளைப் போலே அதி க்ருதாதிகாரம் இன்றியே
ஸர்வ அதிகாரமாய்
திராவிட ரூபமான பிரபந்த விசேஷங்களாலே
ஸகல வேத வேதாந்த ரஹஸ்ய அர்த்தத்தைப் பிரகாசிப்பிக்கையாலே
அத்யந்த விலக்ஷணராய் இருப்பார்கள் –
இவர்களிலும் வைத்துக் கொண்டு
நம்மாழ்வார் -அல்லாத ஆழ்வார்களைப் போலே லௌகிக ஞானம் நடையாடா நிற்க
பகவத் பிரஸாதத்தாலே -ஒரு கால விசேஷத்திலே தத்வ ஞானாதிகள் பிறந்து அனுபவிக்கை அன்றிக்கே
திருத்துழாய் பரிமளத்தோடே அங்குரிக்குமா போலே
ஸஹஜ ஞான பக்தியை உடையவராகையாலும்
மாதா பிதா –ஆத்யஸ்ந குல பதே –ஸ்தோத்ர ரத்னம் –5- என்று
இது தத்வ ஞான ப்ரவர்த்த நத்திலே பிரதம ஆச்சார்யராக விலக்ஷண பரிக்ருஹீதர் ஆகையால்
ஈஸ்வரன் தானே லோகத்தைத் திருத்துகைக்கு இவர் ஆவர் என்று அங்கீ கரித்து
என்னாலும் தன்னைச் சொல்லிய சூழல் திருமாலவன் கவி யாது கற்றேன் -திரு விருத்தம் -48- என்னும்படி
இவர் திரு உள்ளத்திலும் நாக்கிலும் நின்று இவர் தம்மைக் கொண்டு தாமே ப்ரவர்த்திப்பிக்கையாலும்
அத்யந்த வ்யாவ்ருத்தராய் இருப்பார் ஒருவர் –
(மெல்லியல் ஆக்கைக் கிரிமி குருவில் மிளிர் தந்தாங்கே
செல்லியசெல் கைத்துலகை என் காணும் என்னாலும் தன்னைச்
சொல்லிய சூழல் திருமாலவன் கவியாது கற்றேன்
பல்லியின் சொல்லும் சொல்லாக் கொள்வதோ வுண்டு பண்டு பண்டே-48 –என்றைக்கும் என்னை -7-9-)
ஏவம் வித வை லக்ஷண்யத்தை யுடைய இவருக்கு உத்தம வர்ணாதிகளிலே அன்றியே
துரீய வர்ணத்திலே அவதாரமான இது
பத்ப்யாம் சூத்ரோ அஜாயதே –புருஷ ஸூக்தம் –என்கிற மரியாதையாலே
(முகத்தில் இருந்து பிராமணன் -சதுர்த்த வர்ணன் திருவடியில் இருந்து )
வர்ண உத்கர்ஷம் அன்றியே சேஷத்வமே உத்தார ஹேது என்னும்
அர்த்த விசேஷத்தை ஸூசிப்பிக்கைக்காக –
ஹரி கீர்த்திம் விநைவாந்யத் -(மாத்ஸ்ய புராணம் யம வசனம் )-என்கிற நியாயத்தாலே
பகவத் விஷயமான பாஷைக்கு அபகர்ஷம் உண்டாகில் இறே
ந சூத்ரா பகவத் பக்தா -என்கிற நியாயத்தாலே
சேஷத்வ ஞான ஆஸ்ரயமான இவ்வர்ணத்துக்கு அப கர்ஷம் உள்ளது –
இப்படி வை லக்ஷண்யத்தை யுடையவரான இவ்வாழ்வார் பக்கலிலே
பிரபந்தங்கள் அவதீர்ணங்கள் ஆகிற இடத்து
ஈஸ்வரன் ஸ்வ ஸங்கல்பத்தாலே வாஸூ தேவாதி சதுர் வ்யூஹத்தைப் பண்ணினால் போலேயும்
வேதங்கள் ருகாதி பேதத்தாலே சதுர்த்தாக வ்யக்தமானால் போலேயும்
இவையும் திரு விருத்தம் திரு வாசிரியம் பெரிய திருவந்தாதி திருவாய் மொழி
என்று நாலு வகையாகப் பிரதிபாதிக்கப் பட்டன –
அவற்றில் பிரதம பாவியான இப்பிரபந்தத்திலே
அஞ்ஞான கர்ம தேஹாதி ரூபமான (பொய் நின்ற ஞானம் -பொல்லா ஒழுக்கு -அழுக்கு உடம்பு )
ஸம்ஸார ஸம்பந்த நிவ்ருத்தியை அபேக்ஷித்திக் கொண்டு
அனுபவ உபகரணமான ப்ராவண்ய அதிசயத்தாலே அனுபவ அபி நிவேசம் நடந்த படியையும்
அனுபவ அலாபத்தில் ஆர்த்தி அதிசயித்த பிரகாரத்தையும்
ஸ்மாரக பதார்த்தங்கள் ஆர்த்திக்கு அதிசய ஜனகங்களான பிரகாரத்தையும்
இவருடைய ப்ராவண்யாதி வை லக்ஷண்யத்தைக் கண்ட
ஸூஹ்ருத்துக்களும் -பரிவருமாய் உள்ளார்
தாங்கள் ஈடுபட்டும்
இவரை ஆஸ்வசிப்பித்தும்
போந்த பிரகாரத்தையும் –
ஆர்த்தி அதிசயம் கால விளம்பம் பொறுக்க மாட்டாத ஸைதில்யத்தை ஜநிப்பித்த பிரகாரத்தையும்
மறந்து பிழைக்க ஒண்ணாத படி ஞானம் சங்குசிதமாகாத பிரகாரத்தையும்
ப்ராப்ய ப்ராபகங்கள் –பகவத் சீல ஸுலப்யங்களே
(ஆஸ்ரய ஸுகர்ய குணமே ஸுசீல்யம் -இதுவே ப்ராப்யம்
அனுபவத்துக்கு ஸுகர்ய குணம் -ஸுலப்யம்-இதுவே ப்ராபகம்
அங்கும் சோஸ்னுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மண
பாலேய் போல் சீர் குணங்களில் அனுபவம்
ஆகவே இவையே ஆறும் பேறும் என்றபடி -)
என்று அறுதியிட்டு பிரகாரத்தையும் வெளியிடுகையாலே
ஈஸ்வரன் திரு உள்ளத்திலே படும்படி இவர் தம்முடைய வ்ருத்த கதனம் பண்ணினார் ஆயிற்று –
ஆகையால் இறே இப்பிரபந்தத்துக்கு திரு விருத்தம் என்று பேர் ஆயிற்று
அல்லது
தாழிசை-
துறை –
விருத்தம் என்று இனத்தின் வகையான
கலித் துறையை விருத்தம் என்னக் கூடாது –
(வெண்பா -கலிப்பா -ஆசிரியப்பா வஞ்சிப்பா -என்று இருக்க வேண்டுமே
வெண்பா தாழிசை -கலி தாழிசை -போல் இருக்க வேண்டும்
கலி விருத்தம் என்று சொல்லக் கூடாதே
நான்கு சீர் அடி நான்கு -எதுகை ஒத்து இருக்க வேண்டுமே )
இப் பிரபந்தத்திலே அத்யாத்ம ரூபமான இவ்வர்த்தங்களைப் பிரகாசிக்கிற இவர்
நாயக நாயிகா சங்கம ரூபமான காம ராக பிரகாரமாய் இருக்கிற
கிளவித் துறையைப் பேசுவான் என் என்னில்
காமமாவது –
இதர விஷயத்திலான போது அநர்த்தா வஹமாய் த்யாஜமாகக் கடவது
காமத் கோப்ய-(ஸ்ரீ மத் பாகவதம் -7-1-33)என்கிற கணக்கிலே
கண்ணனுக்கே காமமான போது புருஷார்த்த அந்வயியாய்க் கடவது –
(சேம நல் வீடும் பொருளும் தருமமும் சீரிய நற்
காமமும் என்றிவை நான்கென்பர் நான்கினும் கண்ணனுக்கே
யாமது காமம் அறம் பொருள் வீடி தற்கென்று உரைத்தான்
வாமனன் சீலன் இராமானுசன் இந்த மண் மிசையே -இராமானுஜ நூற்றந்தாதி-40 – )
ஆகையால் இந்த வகை தமிழ் மர்யாதையான ஸ்ருங்கார ப்ரகாசகமான பாசுரங்களாலே
இவ்வத்யாத்மத்தை அருளிச் செய்தது –
கட்டி பூசிக் கடு தீற்றுவாரைப் போலே விஷயசக்தரான ஸம்ஸாரிகள் நெஞ்சிலே படுகைக்காக –
(இந்திரியங்கள் எந்த மார்க்கங்களில் போகுமோ
அவற்றையே கண்ணன் இடம் வைக்க -அவற்றை மாற்றலாமே )
ஆனால் ஈஸ்வரனே தலைமகனாகப் பாடப் ப்ராப்தமாய் இருக்க -அவனைப் பாட்டுடைத் தலைவனாக்கி
ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கிளவித் தலைமகனாக வைத்துப் பாடின இடத்துக்குத் தாத்பர்யம் என் என்னில்
ஈஸ்வரன் போக்ய பூதனாமோ பாதி
அடியார் குழாங்களை –உடன் கூடுவது என்று கொலோ (2-3-10 )-என்றும்
பரி ஜனைஸ் தவ சங்க ஸீய -ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -77- என்றும்
தத் சம்பந்த முகத்தாலே ததீயாருக்கும் போக்யதை உண்டாகையாலே
அவர்கள் பக்கல் ப்ராவண்யத்தைப் பிரகாசிப்பிக்கிறது –
(கைங்கர்ய நித்ய நிரதைர் பவத் ஏக போகை
நித்யைர் அநு க்ஷண நவீந ரஸ ஆர்த்ர பாவை
நித்ய அபி வாஞ்சித பரஸ்பர நீச பாவைர்
மத்தை வதை பரி ஜனைஸ் தவ சங்க ஸீய–77-
கைங்கர்ய நித்ய நிரதைர்–ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி ஆட் செய்பவர்களாயும் –
பவத் ஏக போகை-அநந்ய போக்யத்வ ஸ்வரூபத்தில் தலை நின்றவர்களாயும்
நித்யைர்-நித்ய ஸித்தர்களாயும்
அநு க்ஷண நவீந ரஸ ஆர்த்ர பாவை-க்ஷணம் தோறும் புதிது புதிதாக விளைகின்ற
பகவத் அனுபவ ருசியினால் உருகின நெஞ்சை உடையராயும்
பரஸ்பர நீச பாவைர் -பாகவதர்களுக்குள் பரஸ்பரம் சேஷத்வத்தையே சதா விரும்புவர்களாயும் –
மத்தை வதை பரி ஜனைஸ் தவ சங்க ஸீய-அடியேனுக்குத் தெய்வமாகக் கொண்டாடாத தக்கவர்களாயும்
இருக்கிற தேவரீருடைய அடியார்களுடன் உடனே கூடி வாழக் கடவேன்)
இந்த நாயக நாயகிகளுடைய இயற்கைப் புணர்ச்சி முதலான சம்பந்தமானது ஸாஸ்த்ரீயமோ என்னில்
ஸாஸ்த்ரத்திலே
1-ப்ராஹ்மோ
2-தைவ
3-ப்ரஜாபத்ய
4-ஆர்ஷ
5-ஆஸூரோ
6-காந்தர்வோ
7-ராக்ஷஸ
8-பைஸாசா
இதி -என்று விவாஹம் எட்டு வைகையாக இருக்கும் என்றது
இது தான்
அறநிலை ஒப்பே பொருள் கோள் தெய்வம் யாழோர் கூட்டம்
அரும் பொருள் வினையே இராக்கதம் பேய் நிலை என்று கூறிய
மறையோர் மன்றல் எட்டிவை அவற்றுள் துறையமை நல் யாழ்ப்
புலமையோர் புணர்ப்பு பொருண்மை என்மனார் புலமையோரே -என்று அகத் தமிழிலும் சொல்லப்பட்டது –
1-அற நிலை
3-ஒப்பே
4-பொருள் கோள்
2-தெய்வம்
6-யாழோர் கூட்டம்
5-அரும் பொருள் வினையே
7-இராக்கதம்
8-பேய் நிலை
அதில்
ப்ராஹ்மம் ஆவது
அபி ரூபனாய் வ்ருத்த ஸம்பன்னனாய் இருக்கிறவனை அழைத்து ஸத் கரித்து
அலங்க்ருதையான கன்னிகையைக் கொடுத்தல்
இதுக்கு அற நிலை என்று பெயர் –
தைவமாவது
தேவ யஜன ரூபமான யாகத்திலே ஆர்த்விஜ்யம் பண்ணினவனை அழைத்துக் கன்னிகையைக் கொடுத்தல்
இதுக்கு தெய்வம் என்று பெயர்
ப்ரஜாபத்யமாவது
ஓக்க இவர்கள் இருவரும் ப்ரஜா உத்பாதநாதி ரூபமான தர்மங்களை அனுஷ்டிக்கக் கடவர்கள் என்று
வாக்காலே அறுதியிட்டுச் சொல்லி
அக்னி காரியத்தையும் தானே அனுஷ்ட்டித்துக் கன்னியை அலங்கரித்துக் கொடுத்தல்
இதுக்கு ஒப்பு என்று பெயர் –
ஆர்ஷமாவது
ஒன்றாதல் இரண்டாதல் கோ மிதுனத்தோடு கன்யகையை அலங்கரித்துக் கொடுத்தல்
இதுக்குப் பொருள் கோள் என்று பெயர் –
ஆஸூரமாவது
வரன் தானே கன்யகைக்கு ஆபரணம் பூட்டி சக்திக்கு ஈடாக பந்துக்களுக்கு
(தனம் )தானம் கொடுத்துக் கைப்பிடித்தல்
இதற்கு அரும் பொருள் வினை என்று பெயர் –
காந்தர்வமாவது
தனியிடத்து இருவருடையவும் காம மோஹத்தாலே கூடுகை
இதுக்கு யாழோர் கூட்டம் என்று பெயர்
ராக்ஷஸமாவது
பந்துக்களை அடர்த்துப் பெண்ணைக் கைப்பிடிக்கை
இதுக்கு இராக்கதம் என்று பெயர்
பைசாசமாவது
ஸூப்தை யாதல் – ப்ரமத்தை யாதல் -கன்யகையை ரஹஸ்யத்திலே கூடுகை
இதுக்கு பேய் நிலை என்று பெயர் –
இவை எட்டிலும் –
ப்ராஹ்மம் தைவம் ப்ரஜாபத்யம் ஆர்ஷம் என்கிற இவை நாலும்
அக்னி பூர்வகமாக ப்ராஹ்மணனுக்குக் கர்த்தவ்யம் ஆகையாலே ப்ரஸஸ்தங்கள்
அல்லாத நாலும்
ஐகன்யங்கள் (தாழ்ந்தவை)
இதில்
ப்ராஹ்ம விவாஹத்தில் பிறந்தவன் –
தச பூர்வான் தசா பரான் ஆத்மாநம் ச (போதாயன தர்மம் ) என்று
தன் வம்சத்தை இருபத்தொரு படி கால் சுத்தனாக்கும்
தைவ விவாஹத்தில் பிறந்தவன்
முன் ஏழும் பின் ஏழும் சுத்தனாக்கும்
ப்ரஜாபத்ய விவாஹத்தில் பிறந்தவன்
முன் ஆறும் பின் ஆறும் சுத்தனாக்கும்
ஆர்ஷ விவாஹத்தில் பிறந்தவன்
முன் மூன்றும் பின் மூன்றும் சுத்தனாக்கும்
ஆஸூராதிகளான நாலுக்கும் இவ்விசேஷம் இல்லையே யாகிலும்
விலக்ஷண புருஷ அனுஷ்டிதமாகில்
அதிசயித புருஷ உத்பாதகங்கள் என்று ஸாஸ்த்ரங்களிலே கண்டு கொள்ளப் படும்
இவ்
வெட்டிலும் வைத்துக் கொண்டு
காந்தர்வமானது ஸ்ருங்கார ரஸமுமாய் ஸ்திரீயினுடைய அநந்யார்ஹதா ரூபமான கற்புக்கும் முதலாகையாலே
அகத்தமிழ் மர்யாதைக்குப் பிரதானமாய்ப் போரும்
அன்பின் ஐந்திணைக் களவு எனப்படுவது அந்தணர் அரு மறை மன்ற வெட்டினுள்
கந்தருவ வழக்கம் என்மனார் புலவர் என்று அகத்தமிழிலும் -இறைவனார் அகப் பொருளில் சொல்லப்பட்டது –
இப்படி ஸாஸ்த்ரீயமாய்க் கற்புக்கும் உறுப்பான சம்பந்தமாகையாலே இந்தக் கிளவித்துறை
மர்யாதையாலே தம்முடைய அநந்யார்ஹதையைப் பிரகாசிப்பிக்கக் குறையில்லை
ஆத்ம ஸ்வரூபத்துக்கு ஸ்த்ரீத்வாதி பேதம் இன்றிக்கே இருக்க
நாயிகா ரூபத்தாலே ஸ்த்ரீத்வம் சொல்லுகைக்கு அடி என் என்னில்
ஸ்வரூபம் ஸர்வதா பரதந்த்ரமாகையாலும்
அநந்யார்ஹம் ஆகையாலும்
அநந்ய ரக்ஷகமாகையாலும்
அநந்ய போக்யமாகையாலும்
ஸ்த்ரீத்வ சாதரம்யம் உண்டாகையாலே சொல்லக் குறையில்லை
ச ஏவ வாஸூ தேவோ சவ் ஸாஷாத் புருஷ உச்யதே –
ஸ்த்ரீ ப்ராயம் இதரத் ஸர்வம் ஜகத் ப்ரஹ்ம புரஸ் ஸரம் (ஸ்ரீ விஷ்ணு தர்மம் ) என்று சொல்லக் கடவது இறே
ஸ்வாமித் வாத் மத்வ சேஷித்வ பும்ஸ்த்வாத்யாஸ் ஸ்வாமிநோ குணா
ஸ்வேப்யோ தாஸத்வ தேஹத்வ சேஷத்வ ஸ்த்ரீத்வ தாயிந –என்று
ஸ்வாமி குண அனுசந்தானத்தில் ஸ்வத்துக்குத் தத் ப்ரதி சம்பந்திக ஸ்வ பாவங்கள் தோற்றுகையாலே
ஈஸ்வரனுடைய புருஷோத்தமத்வ அனுசந்தானத்தில்
ஸ்வ ஸ்வரூபத்துக்கு ஸ்த்ரீத்வ அனுசந்தானம் அவர்ஜனீயம் என்றதாயிற்று –
இப்படி நாயக நாயிகா ஸம்பந்தம் ஸித்தமாய் இருந்துள்ள இடத்தில்
தாய் வார்த்தையான இடம் -ஞான தசையாதல் -பரிவர் வார்த்தை யாகக் கடவது
தலைமகள் -என்பது ப்ரேம தசையை
தோழி என்பது ஸூஹ்ருத்துக்களை
கிளவித் தலைமகன் என்பது அபிமத பாகவத விஷயத்தை
தூது என்பது -கடகமான ஆச்சார்ய விஷயத்தை
கண் அழகு என்பது ஞான வை லக்ஷண்யத்தை
முலை அழகு என்பது -பாரதந்தர்ய லக்ஷணமாய் போக உபகாரணமான பக்தி வை லக்ஷண்யத்தை
இடை அழகு என்பது -ஒன்றும் பொறாத வைராக்கியத்தை
நடை அழகு என்பது -அனுஷ்டானத்தை
வளை -என்பது அநந்யார்ஹதா சிஹ்னத்தை
இருள் என்பது அஞ்ஞானத்தை
வாடை அன்றில் தென்றல் முதலான பாதகங்கள் என்பது ஸ்மாரகத்வேந அஸஹ்யங்களான லௌகிக பதார்த்தங்களை
இரவு நெடுமை என்பது -விளம்ப அஷமத்வத்தை
பொழுதோடு புலம்பல் -மாலைக்கு ஆற்றாமை என்பது -போக யோக்ய கால ஸந்நிதியை
சந்த்ர உதயம் என்பது -அலாப தசையில் விவேகமும் பாதகமான படியை
இன்னமும் இப் பிரகாரங்களிலே வ்யங்யங்களும் (ஆழ் பொருள்களையும் உள்ளுறை பொருள்களையும் )
கண்டு கொள்ளப்படும் –
————-
இப் பாட்டு ப்ரபந்த தாத்பர்யத்தை ஸங்க்ரஹிக்கிறது
அதாவது
அவித்யா கர்ம தோஷாதிகள் விரோதி என்னும் இடமும்
(ஆதி வாசனா ருசி ஜென்மம் -ஸ்வரூப உபாய மோக்ஷ புருஷார்த்த விரோதிகள் )
இவை ஸ்வரூப ஞானம் பிறந்தவனுக்கு நிவர்த்த நீயம் என்னும் இடமும்
நிவர்த்தகனானவன் –
ஸர்வ ரக்ஷகனாய் –
அவதார ப்ரயுக்த ஸுலப்ய விசிஷ்டனான ஸர்வேஸ்வரன் என்னும் இடமும்
(சர்வேஸ்வரன் பரத்வம் -நாம் கிட்ட ஸுலப்யம் உயிர் அளிப்பான் என்நின்ற யோனியுமாய் பிறந்த விபவம் )
நிவ்ருத்த விரோதிகனுக்கு ப்ராப்யனானவன்
நித்ய ஸூரி ஸேவ்யனான சர்வாதிகன் என்னும் இடமும் அறுதியிட்டு –
இவ்வர்த்தத்தை புத்தி சாஷாத்கார ஸந்நிஹிதனான ஈஸ்வரனைப் பார்த்து
(புத்தி சாஷாத்கார–மானஸ ப்ரத்யக்ஷ சமானாதிகாரம்
உயிர் அளிப்பான் எந்நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா)
ஸங்க்ரஹேண விண்ணப்பம் செய்கிறார் –
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
எந்நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
மெய்ந்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே –1–
பாசுரம் -1-பொய் நின்ற ஞானமும் -தாமான நிலையில் அருளியது -ஒழிவில் காலம் -3-3-
பதவுரை
உயிர் அளிப்பவன்–எல்லாப் பிராணிகளையும் ரக்ஷித்தருள்வதற்காக
நின்ற யோனியும் ஆய்–பலவகைப்பட்ட பிறப்புகளையுடையனால்
பிறந்தாய்–திருவவதரித்தவனே!
இமையோர் தலைவா–தேவர்களுக்குத் தலைவனே!
பொய் நின்ற ஞானமும்–பொய்ம்மை நிலைபெற்ற அறிவும்
பொல்லா ஒழுக்கமும்–தீய நடத்தையும்
அழுக்கு உடம்பும்–அசுத்தங்களோடு கூடின சரீரமும்
(ஆகிய இவற்றோடு கூடி)
இ நின்ற நீர்மை–இவ்வண்ணமான இயல்வை (பிறப்புத் துன்பத்தை)
இனி யாம் உறாமை இனிமேல் நாங்கள் அடையாதபடி
அடியேன் செய்யும் மெய் விண்ணப்பம்–(உனது) அடியனாகிய யான் சொல்லும் உண்மையான விஜ்ஞாபகத்தை
நின்று கேட்டருளாய்–நின்று நீ கேட்டருள வேணும்.-கேட்பதே அருள்
உரை
பொய் நின்ற ஞானமும்
உத்பத்தி விநாசாதி யோகத்தாலே அஸத்ய ஸப்த வாஸ்யமான
அசேதன விஷயத்தில் ஆத்ம ஞானமும்
பொல்லா ஒழுக்கும்
அந்த தேஹாத்ம அபிமானம் அடியான ஸாம்ஸாரிக துஷ்கர்ம ப்ரவ்ருத்தியும்
அழுக்கு உடம்பும்
இக் கர்மம் அடியாக வரக் கடவதான மாம்ஸா ஸ்ருகாதி மல ரூபமான தேஹ சம்பந்தமும்
(பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய்
கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர்
சிரங்களால் வணங்கும் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
வரங் கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே.–6-3-7-
நல்ல வலத்தால் நம்மைச் சேர்த்தோன் முன் நண்ணாரை
வெல்லும் விருத்த விபூதியன் என்று -எல்லை யறத்
தான் இருந்து வாழ்த்தும் தமிழ் மாறன் சொல் வல்லார்
வானவர்க்கு வாய்த்த குரவர் —ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–53-)
இந் நின்ற நீர்மை
இவற்றிலே நிலை நின்று போந்த வாஸனா ருசிகள் ஆகிற ஸ்வ பாவ விசேஷத்தை
(நின்ற நீர்மை விட்டுப் பிரியாத ஸ்வ பாவங்கள் )
இனி யாம் உறாமை
நிர்ஹேதுக கடாக்ஷ மூலமான ஞான லாபத்தை உடையரான பின்பு
முன் அங்கீ கார பலத்தை உடையரான நாங்கள் அணுகாத படி
உயிர் அளிப்பான் எந் நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய்
பிராணி பதார்த்தங்களினுடைய
அநிஷ்ட நிவ்ருத்தியையும் –
இஷ்ட ப்ராப்தியையும் -பண்ணிக் கொடுக்கைக்காக
ரூப ப்ரகார வ்யவஸ்திதங்களான ஸகல ஜாதிகளிலும்
அவதீர்ணன் ஆனவனே –
இமையோர் தலைவா
ஏவம் வித ஸுலப்ய விசிஷ்டனான உன்னை ஆஸ்ரயித்தாரை அனுபவிப்பிக்கைக்காக
ஸதா தர்சன பரரான அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவனே –
(தாங்களும் அனுபவித்தும் நாம் அங்கு போனாலும் வந்து எதிர் கொண்டு நம்மை அனுபவிப்பித்தும் )
அடியேன் செய்யும் மெய் விண்ணப்பம் நின்று கேட்டருளாய்–
உன் திருவடிகளிலே நிருபாதிக சேஷத்வத்தையே ஸ்வரூபமாக யுடைய நான் செய்கிற
மெய்யான விண்ணப்பத்தை
ஜகத் வியாபாரத்தில் பரபரப்பு அற்று நின்று கேட்டு அருள வேணும்
மெய்ந் நின்று கேட்டருளாய்–
அபேக்ஷிக்கும் படி நின்று கேட்டருளாய் என்றுமாம்
(சரீரத்தில் நின்று என்றுமாம் )
கேட்டு அருளாய்
என்று கேட்கை தானே அருள் என்று கருத்து –
(கேட்டு அருளி வேறே ஒன்றும் செய்ய வேண்டாம்
எழுந்து அருள வேண்டும் -என்று வந்ததே அருள் போல் –
கார்ப்பங்காடு ஸ்வாமிகள் –62- திரு நக்ஷத்ரம் -எழுந்து அருளி கடாக்ஷத்தாலே போதும்
உபன்யாசம் செய்ய வேண்டாம் என்பார்களாம் )
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை அடியேன் செய்யும் மெய் விண்ணப்பம் என்று அந்வயம் —
யாம் உறாமை
என்று பன்மையாய் இருக்க
அடியேன்
என்று ஒருமையாலே
ஈஸ்வரனுக்கு விஞ்ஞாபிப்பார் தாம் ஒருவருமாய்
பல லாபம் சம்பந்தி சம்பந்தி பரம்பரைக்கும் ஒக்கும் என்று கருத்து –
(விண்ணப்பம் உடையவர் ஒருவரே -பலம் நமக்கு எல்லாருக்கும் உண்டே
இந்த வரங்கத்து இனிது இரு நீ என்ற அரங்கர்
எந்தை எதிராசர்க்கு ஈந்த வரம் -சிந்தை செய்யில்
நம்மதன்றோ நெஞ்சமே நற்றாதை சொம் புதல்வர்
தம்மதன்றோ தாய முறை தான் —ஸ்ரீ ஆர்த்தி பிரபந்தம்–60-)
இனி பிரபந்த சேஷமும்
இதில் சொன்ன அர்த்தங்களை விஸ்தரேண ப்ரதிபாதிக்கிறது –
செய்யும் விண்ணப்பம் -1- என்று தொடங்கி
விண்ணப்பம் செய்த –100-என்று தலைக் கட்டுகையாலே
ஸ்ருணு விஞ்ஞாபனம் -ஸ்தோத்ர ரத்னம் –50- என்று தொடங்கி
மது மதந விஞ்ஞாபனம் —57- என்ற கணக்கிலே
இப் பிரபந்தமாக இப் பாட்டில் சொன்ன அர்த்தமே ஒரு வார்த்தையாய் இருக்கிறது –
(ந ம்ருஷா பரமார்த்தமேவ மே
ஶ்ருணு விஜ்ஞாபநம் ஏகமக்ரத: |
யதி மே ந தயிஷ்யஸே ததோ
தயநீயஸ் தவ நாத துர்லப: ||ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் —50
ஸ்வாமி! முதலில் என்னுடைய ப்ரார்த்தனையைக் கேள்; இது பொய்யல்ல; இது உண்மையே;
உன்னுடைய கருணையை எனக்கு அளிக்காமல் என்னை இழந்து விட்டாய் என்றால்,
உன்னுடைய கருணையைப் பெற என்னைவிடத் தகுந்த எவரையும் நீ பெறமாட்டாய்.
ந தேஹம் ந ப்ராணாந்ந ச ஸுகம் அஶேஷாபிலஷிதம்
ந சாத்மாநம் நாந்யத் கிமபி தவ ஶேஷத்வ விபவாத் |
பஹிர்பூதம் நாத! க்ஷணமபி ஸஹே யாது ஶததா
விநாஶம் தத்ஸத்யம் மதுமதந! விஜ்ஞாபனம் இதம் ||ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் —57
ஸ்வாமியே! உன் விஷயமான கைங்கர்யச் செல்வத்துக்கு வெளிப்பட்டிருக்கும் என்னுடைய
தேஹம், ப்ராணன், எல்லோராலும் விரும்பப்படும் சுகங்கள், என்னுடைய ஆத்மா ஆகிய எதுவாக இருந்தாலும்
அவற்றை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது; இவை எல்லாம் ஒழியட்டும்.
மது என்னும் அரக்கனைக் கொன்ற என் ஸ்வாமியே! இது உண்மை; இதுவே என் ப்ரார்த்தனை.)
இப் பாட்டில்
விரோதி நிவ்ருத்தியையும்
அவதார ஸுலப்யத்தாலே -உபாய பாவத்தையும்
நித்ய ஸூரி ஸேவ்யமான -ப்ராப்யத்தையும்
அடியேன் -என்று ஸ்வரூபத்தையும்
மெய்ந்நின்று கேட்டு அருளாய் -என்று பல அபேக்ஷையும் பண்ணுகையாலே
அர்த்த பஞ்சகம் ஸூசிதமாயிற்று –
——————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply