Archive for the ‘Namm Aazlvaar’ Category

ஸ்ரீ திரு விருத்தம் – -பாசுரங்கள் -51-60–ஸ்ரீ நம்பிள்ளை ஈடு –ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் -வியாக்யானம் –

April 12, 2022

அவதாரிகை

தூரஸ்தரான அன்பரும் த்வரித்து வந்து ஆஸ்வஸிப்பிக்கும் படி ஆர்த்தரான இவர்
அதுக்கு மேலே
ஸம்ஸார கோலஹலத்தைக் கண்டு சிதிலரான பிரகாரத்தை
கடலோசைக்கு ஆற்றாத தலைவி வார்த்தையாலே
அருளிச் செய்கிறார் –

மலை கொண்டு மத்தா வரவாற் சுழற்றிய மாயப் பிரான்
அலை கண்டு கொண்ட வமுதம் கொள்ளாது கடல் பரதர்
விலை கொண்டு தந்த சங்கமிவை வேரித் துழாய் துணையாத்
துலை கொண்டு தாயம் கிளர்ந்து கொள்வான் ஒத்து அழைக்கின்றதே -51 –

பாசுரம் -51-மலை கொண்டு மத்தா அரவால் சுழற்றிய –
கடலோசைக்கு ஆற்றாத தலைவி இரங்கல் –
நண்ணாதார் முறுவலிப்ப -4-9-

பதவுரை

கடல்–கடலானது
மலை–மந்தர பர்வதத்தை
மத்து ஆ கொண்டு-மத்தாகக்கொண்டு
அரவால்–வாஸுகிநாகமாகிய கடை கயிற்றால்
சுழற்றிய–(தன்னைக் கடைவதற்குச் சுழலச் செய்த
மாயம்–அற்புத சக்தி வாய்ந்த
பிரான்–எம்பெருமான்
அலை கண்டு–(தன்னை) அலைத்து
கொண்ட–(தன்னிடத்தினின்று) எடுத்துக் கொண்ட
அமுதம்–அமிர்தத்தை
கொள்ளாது–(மீண்டும்) வாங்கிக்கொள்ள மாட்டாமல்,
வேரி துழாய் துணை ஆ–பரிமளத்தையுடைய (எம்பெருமானது) திருத்துழாயைத் தனக்குத் துணையாகக் கொண்டு
துலை கொண்டு–ஒத்து எதிர்வந்து
தாயம் கிளர்ந்து–பங்காளி யுரிமை கொண்டாடுதல் போலே மேலெழுந்து
பரதர் விலை கொண்டு தந்த சங்கம் இவை கொள்வான் ஒத்து–நெய்தல் நிலமக்களான வலையம் (என்னிடத்தினின்று)
விலை வாங்கிக் கொண்டு எனக்குக் கொடுத்த இச்சங்கு வளைகளை மீட்டும் வாங்கிக் கொள்வது போன்றது.
அழைக்கின்றது,–(சண்டைக்குக்) கூப்பிடுகின்றது.

வியாக்யானம்

மலை கொண்டு மத்தா வரவாற் சுழற்றிய மாயப் பிரான்
மந்த்ர பர்வதத்தை மத்தாகக் கொண்டு
வாஸூகி யாகிற பாம்பாலே கடைந்த ஆச்சர்யத்தை யுடைய ஸர்வேஸ்வரன்

அலை கண்டு கொண்ட வமுதம் கொள்ளாது கடல்
தன்னை அலையும் படி தன் பக்கலில் நின்றும் வாங்கிக் கொண்ட அம்ருதத்தை
மீட்டுக் கொள்ள மாட்டாது கடலானது

பரதர் விலை கொண்டு தந்த சங்கமிவை
இச்சங்கங்கள் விலை வாங்கிக் கொண்டு பரதர் தந்தவை

பரதர் என்று
நுளை யருக்குப் பேர்

வேரித் துழாய் துணையா
மதுவை யுடைத்தான திருத்துழாயைத் தனக்குத் துணையாகக் கொண்டு
அதாவது
திருத்துழாயில் ஆசையால் யுண்டான தளர்த்தி இவளை
நலிகைக்கு உறுப்பாகை

துலை கொண்டு
ஒத்து எதிர் ஏறி
துலைத்தல் -முடித்தலாய்
இவளை முடிக்க வேணும் என்று உட்கொண்டு என்றுமாம் –

தாயம் கிளர்ந்து
ஞாதேயம் கொண்டாடுவாரைப் போலே
மேல் எழுந்து

கொள்வான் ஒத்து
வளையை மீட்டு வாங்கிக் கொள்வாரைப் போலே

அழைக்கின்றதே
அவஷ்டம்ப (பற்றுக்கொம்பு )பலமுடையார் வியவஹாரத்துக்குத் தொடர்ந்து
அழைக்கும் கணக்கிலே
அதி கோஷம் பண்ணா நின்றது என்று
தன் ஆற்றாமை கூறினாள் ஆயிற்று –

இத்தால்

மலை கொண்டு என்று தொடங்கி -அமுதம் கொள்ளாது கடல் -என்கையாலே
ஸம்ஸார சாகர மத்யத்திலே
நிச் சலமான வியவசாய மந்த்ரத்தை நாட்டி
ப்ராப்ய ருசி யாகிற பாசத்தாலே
நித்ய மதனம் பண்ணின ஸர்வேஸ்வரன் தானே
தமருற்றார் தலைத்தலைப் பெய்து -திருவாய் -4-9-2-
நூற்றும்படி யாக்கி
அம்ருத அக்ஷர -ஸ்வேதாஸ்வர
ஸப்த வாஸ்யனான இவ்வாத்மாவை உத்தரித்துக் கொண்டு போய் புஜிப்பிக்கிற இத்தை
ஸம்ஸார சாகரம் மீட்டுக் கொள்ள மாட்டாது என்று தோற்றுகிறது –

பரதர் இத்யாதியாலே
எங்கள் கையில் யுண்டான இந்த ஸூத்த பாவமானது
தேசிகரானார் எங்களுடைய சமர்ப்பணாத் அநு விருத்தியாலே தந்தது என்று காட்டுகிறது

வேரித் துழாய் இத்யாதியாலே
பகவத் போக்யதையில் யுண்டான அபி நிவேசமானது
ஸாம்ஸாரிக கோலா ஹலத்தையும் ஸஹியாதபடி பண்ணுகையாலே
ஆற்றேன் உலகு இயற்கை -திருவாய் -4-9-3-என்கிறபடியே
இவருக்கு ஆர்த்தியை ஜெநிப்பித்தமை தோற்றுவித்தாயிற்று –

———

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

அவன் வந்து கிட்டுவதற்கு முன்னே கடலோசை வந்து செவிப்பட்டு அது பாதகமாகிற படியைச் சொல்லுகிறது –
பதினாலு ஆண்டு கூடப்போன வழியை ஒரு பகலிலே வாரா நிற்கச் செய்தே
க்ரம பிராப்தி பற்றாமை நடுவே திருவடியை வரக்காட்டினார் இறே
அப்படியே இங்கு ஓர் ஆள் வரவிட்டால் கண்டது எல்லாம் பாதகமாம் இறே
சங்கத்யா பரத ஸ்ரீ மான் ராஜ்யே -நார்த்தீ ஸ்வயம் பவேத் -யுத்த -128-17-
அய்யர் நியமிக்க நடுவில் ஆய்ச்சி யுடைய வர வ்யாஜத்தாலே நாம் நம்மைப் பின் தொடர்ந்து வர
அவனுக்கு நாம் சொன்ன நாள் எல்லை கழிந்தால் பின்னை ஒரு க்ஷணம் தாழ்க்கில்
தன்னைக் கிடையாது என்னும்படி நம் நெஞ்சிலே படுத்திப் போனான்
இன்று சென்று நாம் கிட்டினால் பதினாலாண்டும் பிரிந்து கண்ட ஹர்ஷத்தாலே
நீ முடி சூடு என்றால் அத்தை அல்லேன் என்னாதே இசையப் பெறுவது காண்
அய்யர் நம்மை முடி சூடிக் காணப் பெறாதே போன இழவு தீர நாம்
பிள்ளையை முடி சூடக் கண்டு வாழப் பெறுவது காண்

சநைர் ஜகாம ஸா பேஷ -அயோத்யா -19-31-
இத்தை ஸா வேஷ -என்று திருத்தி
கீழ் விழியாலே பார்த்துப் போனார் என்று பொருள் சொன்னபடியாலே
அத்தை பட்டர் கேட்டு அருளி

அது வேண்டா காண் -கீழ் நடந்த பாடம் தனக்குப் பொருள் சொல்லலாம் காண் -என்று
இவ்வுபரணங்களைக் கொண்டு பிள்ளையை முடி சூட்டிக் காணப் பெற்றிலோம் என்னும்
அபேஷையோடே போனார் – என்று அருளிச் செய்தார்

அத்தலை மகன் வந்து கிட்டுவதற்கு முன்பே கடலோசை வந்து பாதகமாகிற படியைச் சொல்லுகிறது

வியாக்யானம் –

மலை கொண்டு மத்தா
ஒரு தாழிக்கு உட்பட்ட தயிரை ஒரு மத்தை இட்டுத் திரிக்குமா போலே
மலையை மத்தாகக் கொண்டு அசலத்தை சலிப்பிக்கும் படி பண்ணி

அரவால்
ஸர்ப்ப ஜாதிக்கு மார்த்தவம் ஸ்வ பாவம் இறே
அத்தை வலிக்கைக்கு ஈடான திண்மையை உடைய கயிறாகக் கொண்டு
பதார்த்தங்களுக்கு நியதமாய் இருபத்தொரு ஸ்வ பாவம் இல்லை
அவன் புத்தி அதீனமாய் இருக்கும் அத்தனை காண்

சுழற்றிய
அஜ்ஜலத்தை பிரமிப்பித்தான்

மாயப்பிரான்
அதுக்கு ஈடாக ஆச்சர்ய சக்தியை யுடையவன்
அன்றிக்கே
தோளும் தோள் மாலையுமாய் நின்று கடைந்த வாற்றைச் சொல்லவுமாம்

அலை கண்டு கொண்ட
அப்ரமேயோ மஹோ ததி-யுத்த -19-31-என்கிறபடியே
ஒருவரால்

———–

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி

அவதாரிகை

இவர் வந்து கிட்டுவதற்கு முன்னே கடலோசை வந்து செவிப்பட்டு
அத்தால் பாதைப்படும் நாயகியாய் அருளிச் செய்கிறார்

வியாக்யானம்

மலை கொண்டு மத்தா வரவாற் சுழற்றிய மாயப் பிரான்
மஹா அசலத்தை மத்தாகக் கொண்டு
அதி மிருதுவான வாஸூகி யாகிற கயிற்றால் கடலைக் கடைந்த ஆச்சர்யத்தைக் காட்டி
எனக்கு உபகரித்தவன் –

அலை கண்டு கொண்ட வமுதம் கொள்ளாது கடல்
தன்னை மிகவும் அலையும்படி மதித்தது கண்டு
தன்னால் வாங்கிக் கொண்ட அம்ருதத்தைத் தான் அபஹரித்துக் கொள்ள மாட்டாது
இக்கடலானது
அவனில் அத்யந்தம் அசமர்த்தனான தான்

பரதர் விலை கொண்டு தந்த சங்கமிவை
வளைகாரரால் விலை கொடுத்துப் பெற்ற வளைகள் அன்றோ இவை

வேரித் துழாய் துணையாத்
இவைகளைத் தானே அபஹரிக்க மாட்டாமல்
ஸ்வ அபஹாரத்துக்கு வேரித் துழாயையும் துணையாக்கிக் கொண்டது என்கிறாள்

வேரித் துழாய் துணையா-என்று
அவ்வளவு அன்றிக்கே
ஓர் துர் வ்யவஹாரத்தையும் அவலம்பித்ததாய் என்னை அழையா நின்றது என்கிறாள்

துலை கொண்டு தாயம் கிளர்ந்து கொள்வான் ஒத்து அழைக்கின்றதே-என்று
அந்யாயப் படுகிறாள்

சங்கு எல்லாம் தன்னதேயாய்
பரதர் தன் தம்பிமார்களாய்
இந்த வளையிலும் தன்னினுள்ள சங்கு ஸாம்யத்தைக் கொண்டு
தன தம்பிமார்கள் அல்ப விலைக்கு இட்டார்கள் என்கிற தாயத்தைக் கொண்டு
வ்யவஹார ஸப்த உத் கோஷத்தால் விஜ் ரும்பித்ததாய் காட்டில் வழி பறிப்பார்
தன் கிட்ட வா என்று அழைப்பாரைப் போலே என்னை அழையா நின்றது
இதுக்கு நான் என் செய்கேன் -என்கிறாள் –

——————-

அவதாரிகை

இப்படி இவருடைய ஆர்த்தியைக் கண்ட ஸூஹ்ருத் பூதர்
அனுபவ யோக்ய தசையிலே அனுபவிக்கப் பெற்றிலோம்
ஆசந்ந ரானார் நித்ய அனுபவம் பண்ணப் பெறா நின்றார்கள்
நமக்கு அவனோடு உண்டான அசாதாரண சம்பந்தமும் அகிஞ்சித் கரமாயிற்றே -என்று
இவர் ஈடுபடுகிறாராக நினைத்து
நிதர்சன முகத்தாலே ஈஸ்வரனுடைய ஸ்வா தந்தர்யத்தை ஸூசிப்பித்து ஆற்றின பிரகாரத்தை
காலம் கண்டு கலங்கின தலை மகள் ஆற்றாமையை
தோழி காலம் மறைத்து உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்-

அழைக்கும் கரும் கடல் வெண் திரைக்கே கொண்டு போய் அலர்வாய்
மழைக் கண் மடந்தை யரவணை ஏற மண் மாதர் விண் வாய்
அழைத்து புலம்பி முலை மலை மேல் நின்றும் ஆறுகளாய்
மழைக் கண்ண நீர் திருமால் கொடியான் என்று வார்கின்றதே – 52-

பாசுரம் -52–அழைக்கும் கரும் கடல் வெண் திரைக்கே –
கால மயக்கு –
அந்தாமத் தன்பு -2-5-

பதவுரை

அழைக்கும்–(அன்போடு) அழைக்கிற
கரும் கடல்–(தன்னிடத்திற் பள்ளிகொண்டிருக்கிற எம்பெருமானது திருமேனியின் நிழலீட்டாலே) கறுத்துள்ள திருப்பாற்கடலானது.
வெண் திரை கை–(தன்னுடைய) வெளுத்த அலைகளாகிய கைகளாலே
கொண்டு போய்–எடுத்துக் கொண்டு போக,
விண்வாய்–ஆகாயத்திலே
புலம்பி அழைத்து–(மேக கர்ஜனை முகமாக அழுது கூப்பிட்டு
முலை மலை மேல் நின்றும்–(தனது) ஸ்தனங்களாகிய மலைகளின் மேல் நின்றும்.
அலர் வாய் மழை கண் மடந்தை–தாமரை மலரில் வாழ்பவளும் மழை போலக் குளிர்ந்த கண்களை யுடையவளுமான திருமகள்
அரவு அணை ஏற00(அப்பாற் கடலினிடையிற் பள்ளி கொண்டுள்ள எம் பெருமானது) ஆதிசேஷனாகிய சயனத்தின் மீது ஏற,
(அது கண்டு)
மண் மாதர்–பூமிப்பிராட்டி
ஆறுகள் ஆய்–ஆறுகளாக பெருக விட்ட
மழை கண்ண நீர்–மழையாகிய கண்ணீரானது
திருமால் கொடியான் என்று–திருமால் கொடியவனென்று வெளியிட்டு
வார்கின்றது–பெருகுகிறது.

வியாக்யானம்

அழைக்கும் கரும் கடல் வெண் திரைக்கே கொண்டு போய் அலர்வாய்-மழைக் கண் மடந்தை யரவணை ஏற
பிறந்த அகவாசி தோன்ற ஆதரித்து அழைப்பாரைப் போலே அழைப்பதாய்
தன்னுள் அகவாயில் கண் வளருகிற ஸர்வேஸ்வரன் திருமேனியின் நிழலீட்டாலே
ஸ்யாமளமான கடலானது
தன்னுடைய வெளுத்த திரக் கைகளாலே எடுத்துக் கொண்டு போகப் போய்
தாமரைப்பூ இடத்திலே இருக்கிற
மழை போலே அத்யுதாரமான கண்ணை யுடையளாய்
மடப்பம் முதலான ஸ்த்ரீத்வ குணத்தாலே பூர்ணையாய் இருக்கிற பெரிய பிராட்டியார்
திருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே ஏற

குளிர்ந்த கண் -என்றுமாம்

மண் மாதர்
பூமியாகிய பிராட்டி யானவள்

விண் வாய் அழைத்து புலம்பி
தானும் கிட்டு அனுபவிக்கப் பெறாத இழவாலே
ஆகாசத்திலே மேக த்வனி முகத்தால் புலம்பி அழைத்து

முலை மலை மேல் நின்றும் ஆறுகளாய்
பூமிக்கு முலையாய் இருக்கிற மலை மேல் நின்றும்
ஆறுகளாகிற பிரவாகத்தை யுடைத்ததாய்க் கொண்டு

மழைக் கண்ண நீர்
வர்ஷமான கண்ண நீரானது

திருமால் கொடியேன் என்று வார்கின்றதே
பெரிய பிராட்டியாருக்குப் பிச்சானாவான் கொடியனாய் இருந்தான் என்று
வடியா நின்றது என்று
உத் ப்ரேக்ஷையாலே காலத்தை மயக்கி உரைத்தாளாயிற்று –

இத்தால்

இவருடைய ஆர்த்தியைக் கண்ட ஸூஹ்ருதுக்கள்
நித்ய அநபாயினி யான பிராட்டியாரோடு ஒத்த போகத்தை யுடைய
ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு
க்ஷண விஸ்லேஷத்தில் அதிசய ஆர்த்தி பிறக்கும்படி அன்றோ
(இது நாலாவது நிர்வாகம் –
கீழ் பெரியவாச்சான் பிள்ளை நிர்வாகத்தில் மூன்று பார்த்தோமே )
அத் தலையில்
வை லக்ஷண்யமும்
ஸ்வா தந்தர்யமும் இருக்கும்படி
நீர் அவன் செய்தது கண்டு ஆறி இருக்கை காணும் பிராப்தம் என்று
இவரை ஆஸ்வஸிப்பித்ததாயிற்று

பூமி பக்கல் யுண்டான இந்த உத் ப்ரேக்ஷை
ஈஸ்வரனுடைய ஸ்வா தந்தர்யத்துக்கு ஸூசகம் –

———

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

கலந்து பிரிந்த தலைமகன்
கார் காலத்திலே வருகிறோம் என்று போனானாய்
காலமும் வந்து
வர்ஷிப்பதும் செய்யா நின்றது என்று தலைமகள் தளர
தோழியானவள்
அக்காலம் அன்று காண் இது –
பெரிய பிராட்டியார் ஸர்வேஸ்வரனையும் கொண்டு திருவனந்த ஆழ்வான் மேலே
ஸம்ஸ்லேஷ அர்த்தமாக ப்ரவேசிக்க
அத்தைக்கண்ட ஸ்ரீ பூமிப் பிராட்டியானவள்
இப்பரிமாற்றத்துக்கு நான் கூட்டு அன்றிக்கே ஒழிவதே -என்று அழுகிற கண்ணநீர் காண் இது
நீ நினைக்கிற வர்ஷம் அல்ல காண் இது -என்று
இங்கனே காலத்தை மயக்கி தரிப்பிக்கிறாளாய் இருக்கிறது

வியாக்யானம்

அழைக்கும்
போகத்துக்கு ஏகாந்தமான ஸ்தலம் இங்கே யுண்டாய் இருக்க
போக்தாக்களாய் இருக்கிற நீங்கள் வாரிகளோ என்று
அழைக்கிறாப் போலே யாயிற்று
கடல் கோஷிக்கிற படி

கருங்கடல் வெண் திரைக்கே
நீர்ச்சேர்த்தியாலே கறுத்து இருக்கும் இறே
கீழ் கறுத்து அவகாசம் யுண்டாய் மேல் திரைந்து காட்டின பொது வெளுத்து இருக்கும் இறே
அபாமபி சுக்லம் -என்று ஜலத்துக்கு ஸ்வ பாவம் வெளுப்பே யாகிலும்
அந்நீர்ச் சேர்த்தியாலே கறுத்து இருக்கும் இறே
கீழே கறுத்து மேலே

——-

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி

மண் மாதர் விண் வாய் அழைத்து புலம்பி முலை மலை மேல் நின்றும் ஆறுகளாய்
மழைக் கண்ண நீர் திருமால் கொடியேன் என்று வார்கின்றதே –
வாய் -இடம்
ஸ்வாவதாரத்தில் அவன் பிரிவைப் பொறாத மண் மகளுக்காக
இவ்வாகாசத்தை தனக்கு இடமாகக் கொண்ட மேகங்கள்
வேங்கடவனைத் தன் முழக்கத்தால் அழைத்ததாயிற்று
அதுக்கு அவன் வாராமையாலே
அவனுக்கு இருப்பிடமாகிற முலையில் நின்றும் அவன் கேட்கத் தன் சீர் முழக்கத்தால்
தான் அவன் கொடுமைகளைப் புலம்பிக் கொண்டு மழையாகிற தன் கண்ணீர்கள்
ஆறுகளாய்ப் பெருக அழா நின்றதே
மழை -மேகம்
வார்கின்றதே -பெருகா நின்றதே –

—————–

அவதாரிகை

இப்படி பார்ஸ்வஸ்த்தரும் ஆஸ்வஸிப்பிக்க வேண்டும்படியான இவருடைய
ஆர்த்தியைக் கண்ட பரிவரானவர்கள்
இதுக்குப் பரிஹாரம் ஏதோ என்று கலங்கின அளவிலே
நிதானஜ்ஞரான நிரூபகர் பகவத் விஷய மூலமான ஆர்த்திக்கு (இதுவே நோய் )
தத் சம்பந்தியான பரிஹாரம் செய்ய பிராப்தம்
என்று சொன்ன பாசுரத்தை
தலைவி ஆற்றாமையால் வந்த நோவுக்குப் பரிஹாரம் ஏதோ என்று வினவின
செவிலி முதலானார்க்கு
கட்டுவிச்சி நோய் நாடி
பரிஹாரம் சொன்ன பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்

வாராயின முலையாள் இவள் வானோர் தலைமகனாம்
சீராயின தெய்வ நல் நல் நோயிது தெய்வத் தண் அம் துழாய்
தாராயினும் தழை யாயினும் தண் கொம்பதாயினும் கீழ்
வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே -53 –

பாசுரம் 53-வார் ஆயின முலையாள் இவள் –
கட்டுவிச்சி கூறுதல்-
வைகுந்தா மணி வண்ணனே -2-6-

பதவுரை

வாரா ஆயின முலையான–கச்சுப் பொருந்திய தனத்தை யுடையவளான
இவள்–இப்பராங்குச நாயகியினுடைய
இது–இந்த நோயானது
வானோர் தலைமகன் ஆம் சீர் ஆயின தெய்வம் நல்நோய்–தேவாதி தேவனான திருமாலினது தகுதியான
திருக்கல்யாண குணவிஷயமாக வுண்டான சிறந்த நல்ல நோய்;
(இதற்குப் பரிஹாரமுறை யாதெனில்;)
தெய்வம்–திய்வமான
தண்–குளிர்ந்த
அம்–அழகிய
துழாய் தார் ஆயினும்–(அப்பெருமானது) திருத்துழாய் மாலையையாயினும்
தழை ஆயினும்–(அத்திருத்துழாயின்) ஓரிலையையாயினும்
தண் கொம்பு அது ஆயினும்–குளிச்சியான (அதன்) கிளையை யாயினும்
கீழ்வேர் ஆயினும்–கீழிலுள்ள (அதன்) வேரையாயினும்
நின்ற மண் ஆயினும்–(அதற்கு இருப்பிடமாய்) நின்ற மண்ணையாயினும்
கொண்டு வீசுமின் (நீங்கள்) கைக்கொண்டு (அதன் காற்று இவள் மேற்படும்படி) வீசுங்கள்

வியாக்யானம்

வாராயின முலையாள் இவள்
இவள் கச்சை யுடைத்தான முலையை யுடையவள் என்று
பருவத்தைச் சொல்லுகையாலே
இவள் நோய் வேறு ஒரு முகம் அல்ல என்றபடி

ஆனால் யாராலே வந்த நோய் என்னில்

வானோர் தலைமகனாம் சீராயின தெய்வ நல் நல் நோயிது
அயர்வறும் அமரர்கள் அதிபதியான ஸர்வேஸ்வரனுடைய குணங்கள் அடியாக யுண்டாய்
நாட்டார் கொள்ளுவது அன்றியே
திவ்யமாய்
கிலேச பலம் இன்றியே
போக பலமான நோயாய் இருக்கும்

இத்தால்
நோய் முதலும்
நோயும்
நாடினாள் ஆயிற்று
மேல் துணிவுக்கு உபாயம் நாடிச் சொல்லுகிறாள்

தெய்வத் தண் அம் துழாய் தாராயினும்
நோய் திவ்யமானவோ பாதி
பரிஹாரமும் திவ்யமாக வேணும் என்கிறாள்

அவனோட்டை ஸ்பர்சத்தாலே
அப்ராக்ருதமாய்
செவ்வியாலும் குளிர்த்தியாலும் ஆர்த்தி சாந்த கரமாய்
நிரதிசய போக்யமான திருத்துழாயினுடைய விகஸிதமான
பூ வாகிலுமாம்

தழை யாயினும்
அதனுடைய விகாஸத்தை யுடைத்தான
இலைத் தழை யாகிலுமாம்

தண் கொம்பதாயினும்
அந்தத் தழையாலே குளிர்த்தியை யுடைத்தான
அதின் கிளை யாகிலுமாம்

கீழ் வேராயினும்
இவை எல்லாவற்றையும் தன் மேலே யாம்படி பரிணமிப்பதான
மூலம் ஆகிலுமாம்

நின்ற மண்ணாயினும்
அந்தத் திருத்துழாய்க்கு வாசஸ்தானமான பூமியின் பரப்பு ஆகிலுமாம்

கொண்டு வீசுமினே
நீங்கள் ஸ்வீ கரித்து
அதின் காற்று இவள் மேல் படும்படி வீச அமையும் என்று
ப்ரயோக பிரகாரமும் சொன்னாள் ஆயிற்று –

இத்தால்

வாராயின முலையாள் இவள் -என்கையாலே
இவளுக்கு பகவத் விஷயத்தில் பரிணதையான பக்தியானது
சங்க பாச அநு பந்தை யானமை தோற்றுகிறது
(ஸத்ஸங்க சேர்க்கை -பகவத் சங்க பாசம் )

வானோர் தலைமகனாம் சீராயின -என்கையாலே
ஸூரி போக்யனான ஸர்வேஸ்வரனுடைய குண கணங்கள்
பக்தி அபி விருத்தி ஹேது என்னும் இடம் தோற்றுகிறது

ஸ்வகல்யாண குணாநந்த்ய க்ருத்ஸ்நஸ்வாதீநதாமதி:
பக்த்யுத்பத்தி விவ்ருத்த்யர்த்தா விஸ்தீர்ணா தஶமோதிதா-ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம்-14-10 – விபூதி யோகம்:

பக்த்யுத்பத்தி விவ்ருத்த்யர்த்தா – ஸாதநபக்தி உண்டாகி வளர்வதன் பொருட்டு,
ஸ்வ கல்யாணகுண அநந்த்ய க்ருத்ஸ்ந ஸ்வாதீநதா மதி: – தனது கல்யாணகுணங்களின் அளவின்மை பற்றியும்,
அனைத்தும் தனக்கு அதீனமாயிருப்பது பற்றியும் உள்ள அறிவு,
விஸ்தீர்ணா – விரிவாக,
தஶமோதிதா – பத்தாமத்தியாயத்தில் சொல்லப்பட்டது.

தெய்வ நல் நோயிது-என்கையாலே
இந்த பக்தி உத் க்ருஷ்டையாய் இருந்ததே யாகிலும்
போக அலாப தசையில் ஆர்த்தியை விளைக்கும் என்னும் இடம் தோற்றுகிறது

தெய்வத் தண் அம் துழாய்-இத்யாதியாலே
இவ்வார்த்தி சாந்தி பகவத் சம்பந்தி பரம்பரா சம்பந்தத்தாலே
என்னும் இடம் தோற்று கிறது

அதாவது
தெய்வத் தண் அம் துழாய்-என்று
ஈஸ்வரனுக்கு அத்யந்த அபிமதமானவர் ஆதரணீயர் என்றபடி

தாராயினும் -என்று
ஸுவ் மனஸ் யோத்தரான சிரோ பூதரைக் காட்டுகிறது
(பூம் கொத்து -தலையால் தாங்க
நம்மாழ்வாருக்கு மேலிட்ட முதல் ஆழ்வார் போல்வார் )

தழை யாயினும் -என்று
அந்த ஸுவ் மனஸ் யத்தாலே கந்தளிதரான பரிசர வர்த்திகளைக் காட்டுகிறது –
(மதுரகவி ஆழ்வார் போல்வார் )

தண் கொம்பதாயினும் -என்று
அந்தத் தழைப்பாலே குளிர்த்தி பெற்ற கிளைஞ்சரைக் காட்டுகிறது
( கிளைஞ்சர்-உறவினர்)

கீழ் வேராயினும் -என்று
இந்த சாகோச்ச் ராயத்துக்கு அடையக் கீழாம் படியான
தாழ்ச்சியை யுடையார்
தாழ நிற்கிற சேஷத்வ ஸ்வ பாவத்தாலே
இப் பரம்பரையை வர்த்திப்பிக்கிற மூல பூதர் என்னும்படியானவரைக் காட்டுகிறது
(நைச்ய அனுசந்தானம் பண்ணும் பூர்வர் )

நின்ற மண்ணாயினும் -என்று
ஏவம் பூதர் வர்த்திக்கிற தேச ஸம்பந்தம் அமையும் என்று காட்டுகிறது

கொண்டு வீசுமினே-என்று
ஏவம் வித பரிஹார ஹேதுவைக் கொண்டு ப்ரவர்த்திக்குமதே
உங்களுக்கு க்ருத்யம் என்றதாயிற்று

யே து பாகவதாஸ் சங்கை ஸப்ருசந்த் யுபவிசந்தி ச பஸ்யந்த்யபி ச ஸ்ருண்வந்தி
தாஸஸ் தேஷாம் அஹம் முனே-என்று
பகவத் சம்பந்தி பரம்பரா ஸம்பந்தம் உத்தேச்யமாகச் சொல்லக் கடவது இறே

(கங்கை கங்கை என்னும் வாசகத்தாலே கடுவினை களையலாமே
பாகவதர்கள் ஸ்பர்ச வேதிகள் என்றவாறு )

——-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

இவள் இருந்து பகட்டக் கேளாது இறே அது
காலமும் அதுவேயாய் நிலை நின்று அவளும் மோஹித்தாள்
இம்மோஹத்துக்கு நிதானம் அறியாதே ஷூத்ர தேவதா ஆவேசத்தாலே வந்ததாகக் கருதி
பந்துக்கள் கலங்கி வழி அல்லா வழியே பரிஹரிக்க இழிய
இவள் பிரகிருதி அறிந்து இருப்பாள் ஒரு மூதறிவாட்டி
நீங்கள் செய்கிற இது கார்யம் அன்று
இவள் பிழைக்க வேணுமாகில் நான் சொல்லுகிறபடியே இங்கனே பரிஹரிக்கப் பாருங்கோள்
என்கிறாள் –

வியாக்யானம்

வாராயின முலையாள் இவள்
நீங்கள் செய்கிற இவ்வெறியாட்டம் கொண்டு பரிஹரிக்கும் பருவம் அல்ல
கால ஷேபம் பண்ணாதே கடுக சிகித்ஸித்துக் கொடு நிற்க வேண்டும்படி யன்றோ
இவள் பருவம் இருக்கிற படி

வாராயின முலையாள் இவள்
வாராலே யான முலை
வாராலே தாங்கப்பட்ட முலையை

—————-

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி

அவதாரிகை

இப்படி அருளிச் செய்து அத்யார்த்தியாய்
மோஹங்காத நாயகி பாவத்தைப் பெற்றார்
இந்த மோஹத்தை மற்ற நோய்களில் ஒன்றாக்கி
இந்நோய் முதலையும்
இந்நோய் ஸ்வரூபத்தையும்
இத்துக்கு இதுதான் தணிவு என்னுமத்தையும்
அறியாதாள் ஒருத்தி எத்தையோ இதுக்குப் பரிஹாரமாகச் செய்ய நினைக்க
அது எல்லாம் அறிந்த இவள் உயிர்த் தோழியானவள்
அவளை நிராகரித்து
இது செய்யுங்கோள் என்று ஸ்வ பஹு மான்யைகளைக் குறித்து விதிக்கிறாள்

வியாக்யானம் –

வாராயின முலையாள் இவள்
இம்முலைகள் அதி மாத்ரமாய் வளரப் புக
அத்தைத் தடுக்கும் வாரால் அதில் பஹு மதி செய்தவளாய்
அத்தால் அவைகளை ஒப்பிக்கும் அவள் ஆயிற்று இவள்
இதுக்குப் பலம் பர த்ருஷ்டி பிரசரண நிவாரணம்
கொடிப்பந்தலுக்கு அணுக்கம் தீர்ப்பது போன்றதாயிற்று இவ்வார் இவளுக்கு
இவளும் பொற்கொடி இறே
உபாஸகனுக்கு ஸ்மர்த்வ்யாதபி ஸ்ம்ருதி அத்யர்த்த பிரியமானால் போலே
தத் பக்தியேயான இம்முலைகளிலே இப்படி பக்தி செய்யும் இவளுக்கு
மற்ற நோய் அப்ரஸக்தம் என்றதாயிற்று
முலைக் கச்சு உள்ளவளான இவள் என்றபடி

இந்நோய்க்கு நிதானத்தையும் சொல்லுகிறாள்
வானோர் தலைமகனாம் சீராயின தெய்வ நல் நல் நோயிது
என்னை ஈர்க்கின்ற குணங்களை யுள்ளவன் இறே -நித்ய ஸூரி நிர்வாஹகன்
அந்த குணங்களின் ஈடுபட்டால் வந்த நல்ல திவ்யமான நோய் காண் இது
சீராயின நோய் பரிஹரிப்பது அன்றாகில் இனி கண் விழித்து
வார்த்தை சொல்லுமதுக்கு உபாயம் ஏது என்ன

தெய்வத் தண் அம் துழாய்
தாராயினும் தழை யாயினும் தண் கொம்பதாயினும் கீழ்
வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே
என்கிறாள்
தேச கால பேதேந ஸம்பவா ஸம்பவா பிப்ராயம் இவ்விகல்பம்

துளஸீ காந்தம் யத்ர –தத்ர சந்நிஹிதோ ஹரி -என்ற
தேவ தேவ சாந்நித்யத்தாலே
பரிமளத்தாலும்
கோமளதையாலும்
அழகியதும் குளிர்ந்ததுமான
பூத்தாருள்ள துழாயை நீங்கள் சிரஸா தரித்துக் கொண்டு வீசிப் பரிஹரிக்கவே
கண் விழிப்பள் என்றபடி

————-

அவதாரிகை

இப்படி ஆர்த்தரான இவர் ஆர்த்தியை சமிப்பிக்கும் இடத்தில்
ஸாரஞ்ஞரான கடகராலே சமிப்பிக்க வேணும் என்று நினைத்து
அவர்களை அபேக்ஷித்த பிரகாரத்தை
வண்டுகளைத் தூதாக நாயகனான ஈஸ்வரன் விஷயத்திலே போக விடுகிற
நாயகி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

வீசும் சிறகால் பறத்தீர் விண்ணாடு நுங்கட்கு எளிது
பேசும்படி யன்ன பேசியும் போவது நெய் தொடு வுண்
டேசும்படி யன்ன செய்யும் எம்மீசர் விண்ணோர் பிரானார்
மாசின் மலரடிக் கீழ் -எம்மை சேர்விக்கும் வண்டுகளே -54 –

பாசுரம்-54-வீசும் சிறகால் பறத்தீர் –
வண்டு விடு தூது –
கேசவன் தமர் -2-7-

பதவுரை

நெய்–(திருவாய்ப்பாடியிலே) நெய்யை
தொடு உண்டு–கைதொட்டுக் கவர்ந்து அமுது செய்து
ஏசும்படி–(பலரும்) பரிஹஸிக்கும்படி
அன்ன செய்யும்–(மற்றும் பல) அப்படிப்பட்ட காரியங்களைச் செய்தருளிய
எம் ஈசர்–எமது தலைவரும்
விண்ணோர் பிரானார்–(மேலுலகிலுள்ளார்க்கு) தலைவருமாகிய எம்பெருமானுடைய
மாசு இல் மலர் அடி கீழ்–குற்றமில்லாத செந்தாமரை மலர்போன்ற திருவடிகளின் கீழ்
எம்மை சேர்விக்கும்–எம்மை அடைவிக்கவல்ல
வண்டுகளே–ஓ வண்டுகளே! (நீங்கள்)
வீசும் சிறகால் பறத்தீர்–வேகமாக வீசுகிற சிறகுகளாலே பறந்து செல்ல வல்வீர்;
விண் நாடும் துங்கட்டு எளிது–(அவர் வீற்றிருக்கு மிடமான பரம பதமும் உங்களுக்குச் செல்ல) எளிது;
(எனக்காக நீங்கள் அவர் பக்கல் தூது செல்லுதற்குப் புறப்படும் பொழுது)
பேசும்படி அன்ன பேசியும் போவது (நீங்கள் எனக்காக அவரிடம் சொல்லும்
படியான வார்த்தைகளை (எனக்கு) சொல்லியும் போக வேணும்.

வீசும் சிறகால் பறத்தீர்
அவன் தன்னைப் போலே கால் கொண்டு நடக்க வேண்டாதே
எழ வீசுகிற சிறகாலே ஆகாசத்திலே போவுதீர்

விண்ணாடு நுங்கட்கு எளிது
உபாப்யாமேவ பஷாப்யாம் ஆகாஸே பஷிணாம் கதி -ஸ்ரீ நரஸிம்ஹ புராணம் -என்கிறபடியே
பக்ஷ பலமுடைய உங்களுக்கு பரம வ்யோம ஸப்த வாஸ்யனான திருநாடு
செல்லுகிறது எளிதாய் இருக்கும்
ஆகையால் போகைக்கு உறுப்பாகச் செய்ய வேண்டுவது இல்லை

பேசும்படி யன்ன பேசியும் போவது
அங்குச் சொல்லும்படியான அந்த வார்த்தைகளை நான் கேட்டு ஆஸ்வஸித்து
இருக்கும் படி எனக்குச் சொல்லியும் போக வேணும் –

நெய் தொடு வுண்டேசும்படி யன்ன செய்யும் எம்மீசர்
நெய்யைக் களவிலே அமுது செய்தயாராக ஏசும்படியான அந்தச் செயலை அனுஷ்ட்டித்து
அத்தாலே எத்திறம் -1-3-1- என்று
நான் ஈடுபடும்படி எனக்கு ஸ்வாமி யானவர் –

விண்ணோர் பிரானார்-
நித்ய ஸூரிகளுக்கு நிரந்தர போகத்தை உபகரிக்கிறவருடைய

மாசின் மலரடிக் கீழ் –
ஹேய ப்ரதிபடமாய்
நிரதிசய போக்யமான
திருவடிகளின் கீழே

எம்மை சேர்விக்கும் வண்டுகளே
என்னைச் சேர விடுவதாக உத் யுக்தங்களான வண்டுகளே
பேசும்படி அன்ன பேசியும் போவது -என்று அந்வயம்

இத்தால்
வீசும் சிறகால் பறத்தீர் விண்ணாடு நுங்கட்கு எளிது-என்கையாலே
ஸாரஞ்ஞரான கடகருடைய ஞான அனுஷ்டான ரூபமான பக்ஷ த்யவத்தாலே
நிரந்தர பகவத் அனுபவத்தில் யுண்டான உச்ச்ரித கதியாய் இருப்பார்க்கு
முக்திஸ் தஸ்ய கரே ஸ்திதா என்னும் கணக்கிலே
போக பூமி எளிது என்னும் படி தோற்றுகிறது

பேசும்படி யன்ன பேசியும் போவது -என்கையாலே
அப்படிப்பட்ட கடகருடைய கடிப்பிக்கைக்கு ஈடான வார்த்தை
இவ்வதிகாரிக்கு ஆஸ்வாஸ கரம் என்றபடி

நெய் தொடு வுண் டேசும்படி யன்ன செய்யும் எம்மீசர் விண்ணோர் பிரானார்-என்கையாலே
ஈஸ்வரனுடைய
நீர்மையும்
மேன்மையும்
இச்சேதனனுக்கு நிரந்தர உஜ்ஜீவன ஹேது என்றபடி –

மாசின் மலரடி-என்கையாலே
ஆஸ்ரித விஷயத்திலே தாரதம்யம் ஆகிற மாசு இல்லாமையும்
ஆஸ்ரித லாபத்திலே விகாஸத்தையும் சொன்னபடி

அடிக் கீழ் -எம்மை -என்கையாலே
இரண்டு தலைக்கும் சம்பந்தம் ஸ்வ ஸ்வாமி பாவம் என்றபடி

சேர்விக்கும் வண்டுகளே-என்கையாலே
தன் வாங் மாதுர்யத்தாலே சேர விடுகை ஆச்சார்ய க்ருத்யம் என்றதாயிற்று

—————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே -என்றாளே
வீச வேண்டுவது இல்லை
இவளுடைய யுக்தி மாத்திரத்திலே உணர்ந்தாள்
உறங்கின போது பசி பொறுக்கலாம்
உணர்ந்தால் புஜித்து அல்லது தரிக்க ஒண்ணாது இறே
மோஹம் தானே நன்றாய் விழுந்தது
அங்கு நின்றும் ஓர் ஆள் வந்து தரித்தல்
இங்கு நின்றும் ஓர் ஆள் விட்டு வரவு பார்த்து தரித்தல் செய்ய வேண்டும்படி யாயிற்று
அங்கு நின்றும் ஒருவரை வரக்கண்டது இல்லை
தன் பரிகரத்தில் கால் நடை தந்து போக வல்லார் இல்லை யாயிற்று –
இனித் தன பரிசரத்திலே வர்த்திக்கிற வண்டுகளைத் தூது விடுமத்தனை
என்று தூது விடுகிறாள்

————

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி

அவதாரிகை

அப்படி சிலர் சிரஸா தரித்து வந்து உடம்பைத் தடவவே கண் விழித்தாளாய்
ஸ்வ ஆச்சார்யர்களைக் கண்டு
ஞான கர்மங்கள் ஆகிற சிறகால் எம்மை வீசும் வண்டுகளே
அச்சிறகால் எம்மை விண்ணாடு சேர்விக்கும் வண்டுகளே
பரத்தில் சேர்விக்கும் வண்டுகளே
விண்ணாடு உங்களுக்கு எளிது -நீங்கள் பரத்திலே தூது போங்கோள்
போவதும் அங்கே நீங்கள் பேசும்படி என்ன
அத்தை ஏன் முன்னே பேசியும் போக வேணும் -என்று அவர்களைத் தூது விடுகிறாள் –

வியாக்யானம்

வீசும் சிறகால் பறத்தீர் விண்ணாடு நுங்கட்கு எளிது
பேசும்படி யன்ன பேசியும் போவது
இதுக்கு அர்த்தமும்
அந்வயமும்
சொன்னதாயிற்று

நெய் தொடு வுண் டேசும்படி யன்ன செய்யும் எம்மீசர் விண்ணோர் பிரானார் மாசின் மலரடிக் கீழ் –
சிசுபாலாதிகள் ஏசும்படி களவால் நெய் அமுது செய்ய
அத்தால்
பிரகடித ஸுசீல்ய வாத்சல்யாதிகளால் என்னைத் தாம் அடிமை கொண்டு
எண்ணில் ப்ரீத்தியையும் விளைத்து
எம் ஈஸரானவர் விண்ணோர் பிரானாரே
இத்தாலும்

மாசின் மலரடிக் கீழ்
ஸுர்யாதி தோஷ ராஹித்யத்தால் ஜகத் ஆதரணீயரானவருடைய திருவடி மலர்களுக்கு
என் தலை கீழ் பீடமாம்படி என்னைச் சேர்த்து விடும் வண்டுகள் நீங்கள் அன்றோ
இப்போதே நமக்காகத் தூது போங்கோள் -என்கிறாள்
எம்மை சேர்விக்கும் வண்டுகளே

———————————

அவதாரிகை

இப்படி நிரவதிகமாக இவருக்குப் பகவத் விஷயத்தில் பிறந்த பக்தி வைலக்ஷண்யத்தைக் கண்ட
அன்புடையார் ஸ்லாகித்து யுரைத்த பாசுரத்தை
தலைவியை நலம் பாராட்டின (கிளவித் )தலைமகன் வார்த்தையாலே
அருளிச் செய்கிறார் –

வண்டுகளோ வம்மின் நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ
உண்டு களித் துழல் வீர்க்கு ஓன்று உரைக்கியம் ஏனம் ஒன்றாய்
மண்டுகளாடி வைகுந்த மன்னாள் குழல்வாய் விரை போல்
விண்டுகள் வாரும் மலருளவோ நும்வியலிடத்தே–55-

பாசுரம் -55-வண்டுகளோ வம்மின் நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ –
நலம் பாராட்டுதல்-
சார்வே தவ நெறி -10-4-

பதவுரை

வண்டுகளோ–வண்டுகளே!
வம்மின்–வாருங்கள்;
நீர் பூ–நீரிலுண்டாகிற பூவும்
நிலம் பூ–நிலத்திலுண்டாகிற பூவும்
மரத்தின் ஒண்பூ–மரத்திலுண்டாகிற சிறந்த பூவும் என்கிற இவை யெல்லாவற்றிலும்
உண்டு–(தேனைக்) குடித்து
களித்து–களிப்படைந்து
உழல்வீர்க்கு–(எங்கும்) திரிகிற உங்களுக்கு
ஒன்று உரைக்கியம்–(யாம் இப்பொழுது) ஒரு புதுமையைச் சொல்லுவோம்.
ஏனம் ஒன்று ஆய்–ஒப்பற்ற வொரு வராஹ மூர்த்தியாய்
நண் துகள் ஆடி–பூமியின் தூளியை அளைந்து எம்பெருமானுடைய
வைகுந்தம்–பரமபதத்தை
அன்னாள்–ஒத்திருக்கின்ற இப்பராங்குச நாயகியினுடைய
குழல்வாய்–கூந்தலிலே இயற்கையாய் அமைந்துள்ள
விரைபோல்–பரிமளம்போல
விண்டு–மலர்ந்து மணம் வீசி
கள் வாரும்–தேன் பெருகப்பெற்ற
மலர்–பூக்கள்
தும் வியல் இடத்து–உங்களாட்சிக்கு உட்பட்ட (நீங்கள் தடையின்றி ஸஞ்சரிக்கிற) விசாலமான இடத்திலே
உளவோ–இருக்கின்றனவோ?

வியாக்யானம்

வண்டுகளோ வம்மின்
பூவின் வாசியும்
மணத்தின் வாசியும்
தேனின் வாசியும்
அறியும் நீங்கள் -புறம்பு யுண்டான உங்களுடைய ரஸத்தில் பராக்கை விட்டு
நான் சொல்லுகிற வார்த்தை கேட்க்கும்படி வாருங்கோள்

நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ உண்டு களித் துழல் வீரக்கு
எளிதாக ஒருவருக்கும் கிட்ட ஒண்ணாத நீர்ப் பூக்களிலும்
எல்லார்க்கும் கிட்டலாம்படியான நிலத்தில் பூக்களிலும்
உயர்ந்த சாகைகள் நிற்கிற மரத்தில் பூக்களிலும்
உண்டான வாசியை அறிந்து புஜித்துக் களித்து
அத்தாலே
நிரதிசய ஆநந்திகளாய் எங்கும் ஓக்க ஸஞ்சரிக்கிற உங்களுக்கு

ஓன்று உரைக்கியம்
நீங்கள் கண்ட வாசி போல் அன்றியே
அத்யந்த வ்யாவ்ருத்தமாய் இருபத்தொரு வை லக்ஷண்யம் சொல்லுகிறோம்

ஏனம் ஒன்றாய்
அத்விதீயமாய் இருபத்தொரு வராஹமாய்
அன்றியே
வராஹ ஜாதியோடே வேறுபாடு இல்லாதபடியான ஜாதி ஐக்யத்தை யுடையனாய்
(மானமிலா பன்றியாய் -அபிமானம் இல்லாத உப மானம் இல்லாத -இப்படி இரண்டு போல் இங்கும் )

மண்டுகளாடி
மண்ணினுடைய துகளை ஆசினவனுடைய
அதாவது
துகள் என்று
ஏக தேசமாய்
மஹா வராஹத்தினுடைய திரு வயிற்றுக்கு பிரளய ஆர்ணவ கதையான பூமி
ஒரு கஸ்தூரி பிந்துவாலே அலங்காரம் இட்டால் போலே இருக்கை
(திரு எயிற்றுக்கு -கோரைப்பல்லுக்கு என்றுமாம் )

வைகுந்த மன்னாள்
இப்படி ஆபத்து வந்து உதவ வேண்டாத படி அவனுடைய அழியாத தேசம்
போலே இருக்கிறவளுடைய

குழல்வாய் விரை போல்
புஷ்பாதியாலே வந்தேறியான பரிமளம் அன்றியே
ஸ்பா விகமான குழலின் பரிமளம் போலே
(கந்தம் கமழும் குழலீ அன்றோ இவள் )

விண்டு
எங்கும் ஒக்கப் பரம்பி

கள் வாரும்
மதுஸ் யந்தியாய்க் கொண்டு ஆனந்திப்பியா நிற்கும்

மலருளவோ நும் வியலிடத்தே
நீங்கள் ஸஞ்சரிக்கிற பரந்த தேசத்திலே இப்படிக்கொத்த பூவும் உளதோ

இத்தால்
வண்டுகளோ வம்மின்
இவ்வாழ்வாருடைய வை லக்ஷண்யத்தை அன்பரானவர்கள்
பகவத் அனுபவ தத் பரராய்த் திரிகிற ஸாரஞ்ஞரைப் பார்த்து

(பகவத் ப்ராவண்யம் – மொட்டு-பல்லவம் -பிரமம்
பாகவத சமாஹம் -மலர்ந்து -மத்யமம்
ஆச்சார்யர் அபிமானம் – பழுத்தால் போல்
சரமபர்வ நிலை அன்றோ
ஸ்ரீ ரெங்கம் கரிசைலம் திரிந்து -மாறன் அடி பணிந்து உய்ந்தவர் ஆனால் போல் )

நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ
உண்டு களித் துழல் வீரக்கு ஓன்று உரைக்கியம்
ஷீராப்தி சாயியான வ்யூஹ ஸ்தலத்தின் விகாஸத்தையும்
பூதல வர்த்தியான அவதாராதி வை லக்ஷண்யத்தையும்
நாநா சாகைகளின் முடியிலே காணும் படியாய் நித்ய போக்யமான
பர தசையில் (வேதாந்த விழுப்பொருள் தானே பர வாஸூதேவன் )வை லக்ஷண்யத்தையும்
நிரந்தர அனுபவம் பண்ணி ஆநந்திகளாய்
ஸர்வ லோகங்களிலும் காம சாரிகளாய்த் திரிகிற உங்களுக்கு ஓன்று சொல்லுகிறோம்

ஏனம் ஒன்றாய் மண்டுகளாடி வைகுந்த மன்னாள் குழல்வாய் விரை போல் விண்டுகள் வாரும் மலருளவோ நும்வியலிடத்தே
ஆபத் சகனான ஸர்வேஸ்வரனுடைய அழிவற்ற தேசம் போலே
ஆஹ்லாத கரரான இவருடைய
தூராத் கந்தோ வாதி -தைத்ரியம் -2 ப்ரச்னம் -என்கிற கணக்கிலே
இவ் விகாஸமும்
யசஸ் ஸுரப்யமும்
(எண் திசையும் அறிய இயம்பிய கீர்த்தி அன்றோ ஆழ்வாரது )
நீங்கள் அனுபவித்த பகவத் சம்பந்திகளில் யுண்டோ என்று
ஸ்லா கித்து உரைத்தார் ஆயிற்று –

————–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

தூதுக்கு வந்து –
பிரிய நினைத்து –
பிரிந்தால் வரும் தனையும் இவள் ஆறி ஜீவித்து இருக்கைக்காக
இப்படி இருக்கிறவன் அகலான் -என்று அவள் நெஞ்சிலே படுகைக்காக
நலம் பாராட்டு என்று ஒரு கிளவியாய்
அவளைக் கொண்டாடுகிறான்

குலே மஹதி ஸம்பூதே -அயோத்யா -26-21-என்று
பெருமாளும் கொண்டாடினார் இறே

வியாக்யானம்

வண்டுகளோ வம்மின்
வண்டுகாள் வாருங்கோள்

நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ
மூன்று வகையாதல்
நாலுவகை யாதல் சொல்லக் கடவது இறே
நிலப்பூவும் கொடிப்பூவும் என்று நிலத்திலே இரண்டாக்கி
மற்றை இரண்டையும் கூட்டி
நாலாகச் சொல்லுவாரும் உண்டு
நல்ல மலர்ப் பொழில் நாலும் நுழையீர்காள் -என்னக் கடவது இறே
பூ யுள்ள இடம் எங்கும் புக்கு
மதுபானம் பண்ணிக் கழித்து
அதுவே யாத்ரையாகத் திரிகிற உங்களுக்கு நல்லதொரு வார்த்தை சொல்லுகிறேன் வாருங்கோள்

ஏனம் ஒன்றாய்
அத்விதீயமான மஹா வராஹமாய் பூமியைத் தன்

—————————————-

அவதாரிகை

இப்படி அன்பர் ஸ்லாகிக்கும் படி பகவத் விஷயத்தில் இவருக்குப் பிறந்த
ப்ராவண்ய அதிசயத்தாலே இவருடைய அனுபவ அலாபத்தாலே
வந்த கிலேசம் தீரும்படி
ஸர்வேஸ்வரன் ஒரு முகத்தாலே ஸம்ஸ்லேஷத்தை ப்ரகாசிப்பித்து ஆஸ்வஸிப்பிக்க
பார்ஸ்வஸ்த்தரனானவர் தம்முடைய முன்புத்தை ஆர்த்தி கண்டு கலங்கின
ஸூஹ்ருத்துக்களை ஆஸ்வஸிப்பித்த பாசுரத்தை
தன் ஆற்றாமைக்குக் கலங்கி இருந்த தோழியைக் குறித்துத்
தலைவி இரவிடத்துத் தலைமகன் கலந்தமையைத்
தென்றல் மேல் வைத்து உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

வியலிடம் உண்ட பிரானார் விடுத்த திரு அருளால்
உயலிடம் பெற்று உய்ந்தும் அஞ்சலம் தோழி ஓர் தண் தென்றல் வந்து
அயலிடை யாரும் அறிந்திலர் அம் பூம் துழாயின் இன் தேன்
புயலுடை நீர்மையினால் தடவிற்று என் புலன் கலனே -56 –

பாசுரம் -56-வியலிடம் உண்ட பிரானார் விடுத்த –
தலைவன் இரவில் கலந்ததைத் தோழியிடம் தலைவி கூறுதல் –
கண்கள் சிவந்து -8-8-

பதவுரை

வியல்–விசாலமான
இடம்–உலகங்களை
உண்ட–திருவயிற்றில் கொண்டருளிய
பிரானார்–பிரபுவாகிய எம்பெருமான்
விடுத்த–(எம்மிடத்துச்) செலுத்திய
திரு அருளால்–சிறந்த கருணையினால்
உயல் இடம்பெற்று–உஜ்ஜீவிப்பதற்கு இடம் பெற்று
உய்ந்தும்–வாழ்ந்திட்டோம்,
அஞ்சலம்–(இனி வாடை முதலியவற்றுக்கு) அஞ்சுவோமல்லோம்
தோழி–வாராய்தோழி!
ஓர் தண் தென்றல் வந்து–ஒரு குளிர்ந்த தென்றற் காற்று வந்து
அயிலிடை யாரும் அறிந்திலர்–அருகில் எவரும் அறியாதபடி
அம் பூ துழாயின் இன் தேன்–அழகிய பூக்களையுடைய திருக்துழாயின் இனிய தேன் துளிகளை
புயலுடை நீர்மையினால்–மழை துளித்தல் போலத் துளிக்குந் தன்மை யுடையதாய்
என்–என்னுடைய
புலன்–அவயவங்களிலும்
கலன்–ஆபரணங்களிலும்
தடவிற்று–ஸ்பர்சித்தது

வியாக்யானம்

வியலிடம் உண்ட பிரானார்
விஸ்த்ருதமான தேசத்துக்கு பிரளய ஆபத்து வர
வயிற்றிலே வைத்து நோக்கின மஹா உபகாரகர் ஆனவர்

விடுத்த திரு அருளால்
அவர் நம்மளவில் வர விட்ட சம்பத்தான அருளாலே

உயலிடம் பெற்று உய்ந்தும்
உய்கைக்கு அவகாசம் பெற்று உஜ்ஜீவித்தோம்

அஞ்சலம்
இனி வாடை தொடக்கமான வற்றுக்கு அஞ்ச வேண்டுவது இல்லை

தோழி
இன்னாமைக்குத் தளர்ந்த வுனக்கும் ஒக்கும் இறே பேறு

ஓர் தண் தென்றல் வந்து
நாட்டில் தென்றலோடு கூட்டலாவது ஓன்று இன்றியே
அத்விதீயமாய்
நம்முடைய ஆர்த்தி எல்லாம் தீர்க்கும்படி அதி சீத ஸ்பர்சமாய்
நம் பக்கல் ப்ரேமத்தாலே தாக்ஷிண்யத்தை
யுடைத்தான தென்றலானது
தன் வரத்துத் தானே ஆஸ்வாஸ கரமாம் படி வந்து

அயலிடை யாரும் அறிந்திலர்
தென்றலுக்கு இடையுமவள் தென்றல் வரவுக்கு உகந்து உரைத்தமையாலே
நாயகன் வரவு சொன்னாள் என்று அறிந்து

(நேராக நாயகன் கலந்தமை சொல்ல வில்லை
ஓர் தண் தென்றல் வந்து என்று உகந்து உரைத்ததே நாயகனுடைய வரவைச் ஸூசிப்பிக்கிறாள் )

தோழி அசல் அறியில் செய்வது என் -என்று
துணுக்கு என்ன

அயல் இடத்து ஒருவரும் அறிந்தார் இல்லை
என்கிறார்

மேல் செய்வது என் என்று கேட்க
அம் பூம் துழாயின் இன் தேன் புயலுடை நீர்மையினால் தடவிற்று என் புலன் கலனே
அழகிய பூந்தாரை யுடைய திருத்துழாயின் இனிய தேன் துளிகளை வர்ஷிக்கிற
ஸ்வ பாவத்தை யுடைத்தாய்க் கொண்டு
என்னுடைய இந்திரியங்களை ஸ்பர்சித்து ஆஸ்வஸிப்பித்தது

அன்றியே
பொலன் கலன் என்ற
பாடமான போது
பொன்னாலே சமைத்த கலன் என்று சொல்லுவர்

இத்தால்

ஆபத் சகனான ஸர்வேஸ்வரனுடைய நிரவதிக கிருபையாலே
நமக்கு உஜ்ஜீவிக்கக் குறையில்லை

பிராணஸ்ய பிராண -என்கிறபடியே
நமக்கு ஆஸ் வாஸ கரனானவன் –
லௌகிகரான ஒருவர் அறிவுக்கும் விஷயம் ஆகாத படி
தன்னுடைய நிரதிசய போக்யதையையும் பிரகாசிப்பித்து
தம்முடைய ஆர்த்தி எல்லாம் தீர்க்கும்படி
தம்முடைய கரணங்களையும்
ஞானாதி குண அலங்காரங்களையும்
தான் விரும்பினான்

(புலன் கலனே -இந்திரியங்கள் -ஆபரணங்கள் -என்று கொண்டு
பிரித்து அருளிச் செய்கிறார் )

நமக்கு இனி அஞ்ச வேண்டுவது இல்லை என்று
ஸூஹ்ருத் பூதரை ஆஸ்வஸி ப்பித்து அருளிச் செய்தார் ஆயிற்று –

—————-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

கலந்து பிரிந்த தலைமகன் வரவு தாழ்க்க
பிரிவாற்றாத் தலை மகளைக் கண்ட தோழி
இவளுடைய ஆற்றாமை இருந்த படி இதுவாய் இருந்தது
நாயகனையோ வரக் காண்கிறிலோம்
இனி இவள் ஜீவிக்கை என்ற ஒரு பொருள் இல்லை -இவளை இழந்தோம் ஆகாதே என்று நோவு பட
இத்தைக் கண்ட தலைமகள்
ஸந்நிதியில் யாத்ருச்சிகமாக ஒரு ஸம்ஸ்லேஷம் விருத்தமாயிற்று காண்
நீ அஞ்ச வேண்டா காண் -என்று
தலைமகள் தான் தோழிக்கு விருத்தமான ஸம்ஸ்லேஷத்தைச் சொல்லுகிறாள்

வியாக்யானம்

இது யுண்டாம் போது நம் பக்கலிலே ஒரு கைம்முதல் வேணும்
அதுவும் இன்னது என்று அறிகிறிலோமே என்ன

வியலிடம் யுண்ட பிரானார்
பிரளயத்தில் பூமிக்குள்ள கைம்முதலே இறே நமக்கு யுள்ளது என்கிறாள்
ஆபத்தே காண் வேண்டுவது அவன் அருளுக்கு –
பிரளய ஆபத்தில் அவன் வயிற்றிலே வைத்து நோக்குகிற போது
பூமிக்காக ஏதேனும் கைம்முதல் யுண்டோ
அப்போது பூமிக்கு யுண்டான ஆற்றாமை இவள் ஒருத்திக்கு யுண்டு போலே காணும்

பிரானார்
உபகாரமே காண் அவர் பக்கல் உள்ளது
அவர் பண்ணும் கிருபைக்குப் பாத்ரபூதராம் இத்தனையே காணும் இத்தலைக்கு வேண்டுவது
அவர் பண்ணும் இது ஒரு ஸஹ காரியை அபேக்ஷியாது இறே

எம்பெருமானார் எழுந்து அருளி இருக்கச் செய்தே
ஸ்ரீ பாதத்தில் சேவித்து இருக்கிற வர்கள்
தமக்குத் தஞ்சமாக நினைத்து இருப்பது என் என்று கேட்க
வங்கி புரத்து நம்பி இருந்தவர்
மூடோ யமல்ப மதி -ஸ்ரீ விஷ்ணு தர்மம் –98-93-என்கிற
க்ஷத்ர பந்துவின் வாக்கியம் அன்றோ என்ன
அது ஒண்ணாது காண்
ப்ரணதே-ஸ்ரீ விஷ்ணு தர்மம் -98-93-என்று ஓன்று யுண்டு
அதிலே ஸர்வஞ்ஞன் அறிய நிர்மமனாய் விழ வேணும் இறே
நம் தலையிலே ஏதேனும் ஒரு அம்சம் ஒதுங்கில் செய்து தலைக் கட்டுகையில் யுள்ள அருமையாலே
அது இழவோடே தலைக்கட்டும்படியாய் இருக்கும் காண்
இத்தலையிலே ஒரு அம்சம் ஒதுங்கில் அது அப்ரதி ஷேதத்தில் ஒதுங்கும் அத்தனை அல்லது
உபாயத்துக்கு ஸஹ காரியாகாது
நீ உபாயமாக வேணும் என்கிற ஸ்வீ காரம் அவஸ்ய அபேக்ஷிதமாய் இருக்கச் செய்தே
அத்தலையிலே உபாய பாவமாம்படி இறே இருப்பது
இவன் பக்கலிலே பரமபக்தி பர்யந்தமாக விளைந்தால்
அது ஸ்வரூப ப்ரயுக்தமான வகையில் அந்வயிக்கும் அத்தனை அல்லது
ஸ்வ தந்திரமாய் நின்று பல பிரதமாக மாட்டாதாய் இறே இருப்பது

ஆனால் பின்னை நினைத்து இருக்க வேண்டுவது என் என்ன
காளியனுடைய வார்த்தையை நினைத்து இருக்கும் அத்தனை -என்று அருளிச் செய்தார்

ஸோ அஹம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-7-7-
திருமேனியில் என்னுடைய உடலை இட்டுச் சுற்றி பிராதி கூல்யத்தில் நின்றும் நிவ்ருத்தனாகாத நான்

தேவ தேவ ச
பிராதி கூல்ய நிவ்ருத்தியே

———-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி

வியலிடம் உண்ட பிரானார் விடுத்த திரு அருளால்
உயலிடம் பெற்று உய்ந்தும்
விசேஷ பலத்தைப் பெற்று உஜ்ஜீவித்தோம்
தன் உஜ்ஜீவனமே தன் தோழிமார்க்கு எல்லாம் ஆகையாலே இந்த பஹு வசனம்

அஞ்சலம் தோழி
நீ இவ்வாடை கூடகமானவற்றுக்கு அஞ்ச வேண்டுவது இல்லையடி

ஓர் தண் தென்றல் வந்து அயலிடை யாரும் அறிந்திலர்
அயல் இடத்தாரும் அறியாத படி தன் வரவே எனக்கு ஆஸ் வாஸ கரமாம்படி
குளிர்ந்த தென்றல் வந்தபடி

வந்தது என் செய்தது என்ன

அம் பூம் துழாயின் இன் தேன் புயலுடை நீர்மையினால் தடவிற்று என் புலன் கலனே
என்கிறாள்
அழகிய பூந்தராய் யுடைய திருத்துழாயின் இனிய தேன் துளிகளை வர்ஷிக்கிற
ஸ்வ பாவத்தை உடையதாய்க் கொண்டு தடவிற்று
என் கண் முதலான இந்த்ரியங்களையும் அணி கலன்களையும்
அது செய்து போந்துள்ள ஸூகத்தை
நான் ஏது என்று சொல்லுவேனடி

—————————————

அவதாரிகை

இப்படி இவர்க்கு பகவத் ஸம்ஸ்லேஷத்தால் பிறந்த ஞான வைலக்ஷண்யத்தை அனுபவித்து
ஈடுபட்ட அன்பரானவர்கள் தங்கள் ஈடுபாட்டைக் கண்டு
ப்ராவண்யத்தை மட்டம் செய்விக்க வேணும் என்று நியமித்த
பந்துக்களைக் குறித்துச் சொன்ன பாசுரத்தை
தலைவி கண் அழகிலே ஈடுபட்ட தலைமகனைக் குறித்துக் கழறின
பாங்கனுக்குத் தலைமகன்
கழற்று எதிர்மறையான பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

புலக் குண்டலப் புண்டரீகத்த போர்க் கெண்டை வல்லி யொன்றால்
விலக்குண்டுலாகின்று வேல் விழிக்கின்றன கண்ணன் கையால்
மலக்குண்டமுதம் சுரந்த மறி கடல் போன்றவற்றால்
கலக்குண்ட நான்று கண்டார் எம்மை யாரும் கழறலரே – -57-

பாசுரம் -57-புலக் குண்டலப் புண்டரீகத்த போர்க் கெண்டை –
தலைவன் தோழனிடம் எதிர்வார்த்தை பேசுதல் –
முடியானே மூவுலகும் -3-8-

பதவுரை

புலம் குண்டலம்–அழகிய குண்டலங்களையுடைய
புண்டரீகத்த–தாமரைமலர் போன்றதான தலைவியின் முகத்திலுள்ள
போர்கெண்டை–(தம்மில் ஒன்றோடொன்று எதிர்த்துப்) போர் செய்கிற இரண்டு கெண்டை மீன்கள் போன்ற கண்கள்
வல்லி ஒன்றால் விலக்குண்டு–(மூக்காகிய) ஒரு கொடியால் (குறிக்கிட்டு இடையில்) விலக்கப்பட்டு
உலாகின்று–(தனித்தனி சீற்றத்தோடு) உலாவிக் கொண்டு
வேல் வழிக்கின்றன–வேலாயுத்த்தைக் கொண்ட குத்தினாற்போல வருத்துவனவாய் நோக்குகின்றன.
கண்ணன்–எம்பெருமானுடைய
கையால்–திருக் கைகளால்
மலக்குண்டு–கடைந்து கலக்கப்பட்டு
அமுதம் சுரந்த–(தன்னிடத்திலுள்ள) அமிர்தத்தை வெளிப்படுத்தின
மறி கடல் போன்று–அலை கிளரப் பெற்ற கடல்போல
அவற்றால் கலக்குண்ட நான்று–அக்கண்களால் (யாம்), கலக்கப்பட்ட பொழுது
கண்டார்–(அக்கண்களின் நிலைமையை ப்ரத்யக்ஷமாகப்) பார்த்தவர்கள்
யாரும்–எவரும்
எம்மை–எம்மை
கழறலர்–(ஒருத்தியின் கண் பார்வையில் அகப்பட்டு இப்படி கலங்கினானென்று) குற்றஞ் சொல்லமாட்டார்கள்.

வியாக்யானம்

புலக் குண்டலப்
புலப்படும்படி அழகிதான் குண்டலத்தை யுடைய
புலப்படுத்தல் -காணப்படுதல்

பொலக் குண்டலம் என்று பாடமாய்
பொற் குண்டலம் என்றுமாம்

புண்டரீகத்த
குண்டலத்தை யுடைய
புண்டரீகம் என்கையாலே
செவ்வியும்
அழகும்
மணமும் யுடைமையால்
புண்டரீகம் ஒப்பான முகத்தைச் சொல்லுகிறது

போர்க் கெண்டை
அப்புண்டரீகத்திலே தன் நீல முகம் ஒன்றிப் போருவது (பொருவது)
இரண்டு கெண்டையானது என்கையாலே
கண்ணைக் காட்டுகிறது

வல்லி யொன்றால் விலக்குண்டு
வல்லி ஒன்றாலே விலக்கப் பட்டு
அதாவது
மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ -திருவாய் -7-7-2- என்று
கற்பகக் கோடியை மூக்குக்கு உவமையாகச் சொல்லுகையாலே
பொருகிற கெண்டை போன்ற கண்கள் மூக்காகிற கற்பகக் கொடியால்
விலக்கப் பட்டால் போன்றன என்கை

உலாகின்று
உலவா நின்று கொண்டு
விலக்கின அளவிலும் ஸ்ப்ரத்தை யாற்றாமையாலே
உலவா நின்றன என்னலாய் இருக்கை

வேல் விழிக்கின்றன
வேல் போலே கூரிய பார்வையை யுடையன -என்கையாலே
க்ரூர்யம் மாறாதன என்கை

கண்ணன் கையால் மலக்குண்டமுதம் சுரந்த மறி கடல் போன்றவற்றால்
ஆஸ்ரித ஸூலபனான கிருஷ்ணன் கைகளாலே மலங்கும்படி கடையப்பட்டு
அகவாயில் கிடந்த அம்ருதத்தைச் சுரந்த அலை எறிகிற கடல் போலே
அபரிச் சின்னையான போக்யதையை யுடைய அவற்றாலே
வெறும் கொடுமையே யன்றியே ஆஹ்லாத கரமானவை என்றபடி

கலக்குண்ட நான்று கண்டார்
அக்கடல் அவன் கையிலே பட்டது அத்தனையும் இக்கண்
என்னைப் படுத்தின நாள் கண்டவர்கள்
அதாவது
அவன் கடலைக் கலக்கி ஸாரமான அம்ருதத்தை க்ரஹித்தால் போலே
இக் கண் அகாதமான நெஞ்சைக் கலக்கி ஸாரமான அறிவை அபஹரித்தது என்கை

நான்று கண்டார் -என்கையாலே
அனுபவித்தார்க்கு அல்லது அறிய முடியாது என்கை

எம்மை யாரும் கழறலரே
இப்படி அகப்பட்டுக் கலங்கின எங்களைப் பரிவாலே நியமிக்கிற நீயே யன்றியே
விஷய விரக்தராய் அதிசயித ஞானரான சனகாதி முனிகளும்
வாசி அறிவாராகில்
(ஆழ்வார் வை லக்ஷண்யம் -உண்ணும் சோறு எல்லாம் கண்ணன் என்று இருப்பார் என்று அறிந்து )
நியமிக்க மாட்டார்கள் என்றதாயிற்று –

இத்தால்

இவருடைய ஞானமானது
1-ஸ்ரவண
2-மனன
3-சாஷாத்கார ரூபமாய்ப்
பரிணமித்த பிரகாரத்தை ஸூசிப்பிக்கிறது
எங்கனே என்னில்

புலக் குண்டலம் என்று
கர்ண ஆபரணத்தைச் சொல்லுகையாலே
1-பிரதம பாவியான ஸ்ரவணமான அலங்காரத்தைக் காட்டுகிறது
(ஸ்ரோதவ்யா
ஸ்ரவணம் -பக்தி நவ லக்ஷணம் -அங்கும் முதல் )

குண்டலப் புண்டரீகம் -என்கையாலே
2-அந்த ஸ்ரவண முதித ஹ்ருதய புண்டரீகத்தைக் காட்டுகிறது –
(வட்ட வடிவு தாமரை-கவிழ்த்தால் போல் -ஆனந்தப்பட்டு உள்ளம் )

போர்க் கெண்டை -என்கையாலே
3-அந்த ஸ்ரவண ஞானத்தை மனனம் பண்ணும் இடத்தில்
பூர்வ பக்ஷ ஸித்தாந்த யுக்தியாலே விரோதத்தை உப பாதித்துப் பண்ணும்
ஆராய்ச்சியைக் காட்டுகிறது

வல்லி யொன்றால் விலக்குண்டுலாகின்று -என்கையாலே
4-மத்யஸ்த்தை யான ஸித்தாந்த யுக்தியாலே விரோதம் சமித்து
ஸ்வ காரியத்தில் வ்யாபாரித்தமையைக் காட்டுகிறது

வேல் விழிக்கின்றன -என்கையாலே
5-இப்படி யுக்தித ப்ரதிஷ்ட அபிதமான ஞானமானது
பாவநா ஸித்தமான கூர்மையாலும்
நெடுமையாலும்
சாஷாத்கார ரூபமான ஆபரோஷ்யத்தைப் பண்ணினமையைக் காட்டிற்று
(கண் முன்னே தோற்றும்படி கூர்மையான தெளிந்த ஞானம் )

கண்ணன் கையால் மலக்குண்டு -என்கையாலே
6-இப்படி அபரோக்ஷ ரூபமான ஞானத்துக்கு த்யேய விஷய வை லக்ஷண்யத்தாலே
பிறந்த பாரவஸ்யத்தையைக் காட்டிற்று
(பக்தி ரூபா பன்ன ஞானம் -க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் -அவன் வசம் பட்டாரே )

அமுதம் சுரந்து -என்கையாலே
7-இந்த பாரவஸ்யம் அடியாக இந்த ஞானத்துக்கு அத்யந்த ப்ரீதி ரூபையான
பக்தி ரூபாபத்தியைக் காட்டிற்று
(மதி நலம் -பிரேம ரூபமான பக்தி )

மறி கடல் போன்று -என்கையாலே
8-காதல் கடல் புரைய-5-3-4-என்றும்
கடலின் மிகப் பெரிதால் -7-3-4-என்றும்
கழியப் பெரிதால் -7-3-6- என்றும்
சொல்லுகிற விகாஸ அதிசயத்தைக் காட்டிற்று –

அவற்றால் கலக்குண்ட -என்கையாலே
9-இந்த ஞானம் அனுபவ உபகாரணமாம் அளவன்றியே
பிறரையும் தன் வசமாக்கிக் கொள்ளும் படியைக் காட்டிற்று –

(கடல் போன்ற ஞானம் -பக்தி ரூபா பன்ன ஞானம் ஆழ்வாருக்கு ஆனபின்பு
நம்மளவும் -இது அடுத்த நிலை நம் உள்ளமும் கலங்கிற்றே
ஆழ்வார் ஞானம் பக்தி நினைத்து நினைத்து -அம்ருதம் போன்ற பக்தி
நாமும் உருகுகிறோமே
காண்பதற்கு உதவும் -கண்டவர்களைக் கலக்குவத்துக்கும் இதே தானே )

நான்று கண்டார் எம்மை யாரும் கழறலரே – என்கையாலே
10-புறம்புள்ளாரும் புகுந்தால் தாங்களும் ஈடுபடும்து ஒழிய
பிறரை நியமிக்கைக்கு சக்தர் அல்லர் என்னும் இடம் சொல்லிற்று ஆயிற்று

———

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

என்று இருப்பார்கள் போலே காணும்
பவத பரமோ மத -ஸ்ரீ சஹஸ்ர நாம
அவர் உகந்தது என்று இறே பின்னை பகவத் விஷயத்தை விரும்புவது

——–

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

அவதாரிகை

நீ இங்கனே அவனில் தானே ஆழங்கால் பட்டு ஈடுபடா நின்றாய்
அவனில் அத்தனை பிரவணை யாவது உனக்கு உசிதமோ என்றால் போலே
உயிர்த் தோழி சில சொன்னாள்
அதுக்கு அவன் தான் நாயகன் கண் அழகுப் பார்வைகளில் தான் ஈடுபட்ட
நாயகியாய் அருளிச் செய்கிறார்

வியாக்யானம்

புலக் குண்டலப் புண்டரீகத்த போர்க் கெண்டை வல்லி யொன்றால் விலக்குண்டுலாகின்று வேல் விழிக்கின்றன
ஒரு புண்டரீகத்துக்கு இரு புறமும்
சுடர் இலகு விலகு மகர குண்டலங்கள் -8-8-1-
தானே தானாய்ப் புறப்படும் படியான குண்டலங்களால் அலங்க்ருதமான புண்டரீகத்திலே
பரஸ்பர ஸ்பர்தையால் பொருகிற கெண்டை மீன்களானவை
வல்லி ஒன்றால் தடுக்கப் பட்டு ஸ்பர்தை தீராமையாலே உலவா நின்று கொண்டு
வேல் போலே ஒன்றுக்கு ஓன்று கூரிய பார்வையை உடையனவாயிற்று

அவைகள் எது போன்றன வென்று கேட்டாள் தோழி
அதுக்கு

கண்ணன் கையால் மலக்குண்டமுதம் சுரந்த மறி கடல் போன்று -என்கிறாள்
கிருஷ்ணன் கைகளால் கலங்கும்படி கடையப்பட்டதாய் அகவாயில் அம்ருதத்தைச் சுரந்த மறுக்கத்தால்
அலை எறிகிற கடலைப் போன்றன காண் அவை என்றான்

அவற்றால் உனக்கு என் என்றான்
அதுக்கு

அ வற்றால் கலக்குண்ட நான்று கண்டார் எம்மை யாரும் கழறலரே -என்கிறாள்
என் அகாதமான நெஞ்சாகிற கடலானது அவைகளால் கலங்கினதாயிற்று என்றாள்

கலங்கிற்றோ என்ன

அந்நாள் அவைகளை நீ கண்டாயாகில் நீயும் என்னைப் போல்வாய் காண் –
அவ்வழகையும் ஆகர்ஷணத்தையும் கண்டவர்கள் என்னை யாராகிலும் கழறலாய் இருக்குமோ
இராது கிடாய்
நீ அத்தைக்கு காணாதவளாகையாலே இங்கனே சில என்னில் சொன்னாயாளாய் என்று
இங்கனே சொன்ன தோழியை ஒக்கும் எண்பித்தாள் ஆயிற்று

இவ்வளவும் அருளிச் செய்ய மாட்டாத பட்டர்
விதோ பத்தஸ் பர்த்த ஸ்புரித சபரத் வந்த் வவளிதே-ஸ்ரீ ரெங்கராஜா ஸ்தவம் -1-99-
த்ருஸவ் தே -ஸ்ரீ குணரத்ன -9-என்று அருளிச் செய்தார் –

—————

அவதாரிகை

இப்படி விலக்ஷணமான ஞான பாகத்தை யுடைய இவர்
ஈஸ்வரன் தம்மைத் தனக்கே யாம்படி பண்ணிக் கொள்ளுகைக்கு
விளம்பம் என் என்று தளும்ப

அவனுடைய ஸர்வ சக்தி யோகத்தை பிரகாசிப்பித்து
ஸூஹ்ருத்துக்கள் ஆற்றின பாசுரத்தை

தன்னை வரைந்து கொள்ளாமையாலே தளர்ந்த தலைவியைக் குறித்து
உன்னுடைய நாயகனான ஈஸ்வரனுக்குச் செய்யப்படாதது யுண்டோ என்று தோழி
தலைவன் தலைமையை யுரைத்த பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

கழல் தலம் ஒன்றே நில முழு தாயிற்று ஒரு கழல் போய்
நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது நீண்ட வண்டத்து
உழறலர் ஞான சுடர் விளக்காய் உயர்ந்தோரே இல்லா
அழறலர் தாமரைக் கண்ணன் என்னோ விங்களக்கின்றதே – 58-

பாசுரம் -58-கழல் தலம் ஒன்றே நிலம் முழுது ஆயிற்று –
தோழி தலைவன் பெருமையை கூறி தலைவியை ஆற்றுதல் –
திண்ணன் வீடு -2-2-

பதவுரை

ஒன்றே–ஒரு திருவடியிடமே
ஆயிற்று–பூமி முழுவதும் தானாய்ப் பரந்தது;
மற்றொரு திருவடி
முழுதாயிற்று–(பூமியிலே இடமில்லாமையாலே மேலே) போய்
உழறு அலர்–உலகுங்செல்ல வல்ல பரந்த
ஞானத்து சுடர் ஆய் விளக்காய்–ஞானமாகிய ஒளிக்கு இடமான விளக்குப் போன்றவனாய்
உயர்ந்தோரே இல்லா–(தன்னிலும்) மேற்பட்டவரை யுடையவனல்லாதவனும்
நிழல் தர–நிழலைச் செய்யும்படி
எல்லா விசும்பும்–ஆகாசாவகாம் முழுவதிலும்
நிறைந்தது–வியாபித்தது
நீண்ட அண்டத்து–அளிவிட வொண்ணாத பரமபதத்தில் எழுந்தருளியிருப்பனும்
அழறு அவர் தாமரைக் கண்ணன்–சேற்றில் மலர்ந்த செவ்வி மாறாத செந்தாமரை மலர் போன்ற
திருக்கண்களை யுடையவனுமான திருமால்.
இங்கு அளக்கின்றது என்னோ–இந்த லீலாவிபூதியில் அளக்க வேண்டுவதுண்டோ?

வியாக்யானம்

கழல் தலம் ஒன்றே நில முழு தாயிற்று
ஒரு அடித்தலமே பூமி அடையாத தானாயிற்று

ஒரு கழல் போய்
ஒரு திருவடி பூமியில் இடம் இல்லாமையாலே போய்

நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது
சேஷத்வமாகிற நிழலைக் கொடுக்கைக்காக
ஊர்த்வ லோகம் எல்லாவற்றிலும் நிறைந்தது

ஈஸ்வரரான ப்ரஹ்ம ருத்ரர்களும் –
ஒருவன் திருவடியை விளக்க –
ஒருவன் தீர்த்தத்தைச் சுமக்கும் படியான நிழலை இறே
அவர்களுக்குள் கொடுத்தது

நீண்ட வண்டத்து
அபரிச்சின்னமாய்
பரம ஆகாஸ ஸப்த வாஸ்யமான
பரமபதத்திலே

உழறலர் ஞான சுடர் விளக்காய்
உழன்று சஞ்சரிப்பதால்
அலர்ந்து
விகஸிதமான
ஞானமாகிய சுடருக்கு ஆஸ்ரயமான விளக்காய்

இத்தாலே
ஈஸ்வரனுடைய ஞானமும்
அஃதே கொண்டு எல்லாக் கருமங்களை செய் -திருவாய் -4-1-8-என்கிற
கணக்கிலே ஸகல வியாபார மூலமாய்
ஸர்வத்ர விகஸிதமாய் இருக்கும் என்றும்
ஆஸ்ரயமான ஸ்வரூபமும் ஸ்வயம் ப்ரகாசமாய் இருக்கும்
என்றும் சொல்லிற்று ஆயிற்று

உயர்ந்தோரே இல்லா
தன்னில் உயர்ந்தவர்களை உடையவன் அல்லாதவன்

இத்தாலே
உயர்வற உயர்நலம் யுடையவன் -1-1-1- என்னும்படி
ஆனந்த வல்லி ப்ரக்ரியையாலே சத குண உத்தரிதமாய் வளர்ந்து வளர்ந்து
யதோ வாசோ நிவர்த்தந்தே -தைத்ரியம் என்கிறபடியே
வாக்குக்கும் மனஸ்ஸுக்கும் நிலம் அல்லாத ஆனந்தத்தை யுடையவன் என்றபடி

அழறலர் தாமரைக் கண்ணன்
இந்த ஆனந்தத்துக்குப் ப்ரகாசகமான கண்ணழகை யுடையவன்
அழறு என்று அளறு
நீரிலும் சேற்றிலும் நின்று வளர்ந்து
செவ்வி மாறாத தாமரை போன்ற கண்ணை யுடையவன் என்றபடி

என்னோ விங்களக்கின்றதே
இப்படி நித்ய விபூதி லோகத்தையும்
நிரதிசய ஞான ஆனந்த யோகத்தையும்
விலக்ஷண விக்ரஹ யோகத்தையும் யுடையவன்
ஒரு திருவடியாலே பூமியை அநந்யார்ஹமாக்கி
ஒரு திருவடியாலே ஊர்த்வ லோகத்தைக் கீழ்ப்படுத்திக் கொண்டவனுக்கு
இவ்விபூதியில் அளக்க வேண்டுவது உண்டோ

அளப்பது நின்ற இடம் ஒழிய மாறி இட வேண்டும் இடம் யுண்டாகில் இறே
நிலமும் விசும்பும் இரண்டு திருவடிகளுக்கு இடமாயின இத்தனையே இறே -என்று
அவன் பெருமை உரைத்தாள் ஆயிற்று –

இத்தால்
விலக்ஷணமான ஸ்வரூப ரூப குண விபூதியை யுடைய ஸர்வேஸ்வரன்
த்ரைவிக்ரம அபதானத்தாலே ஸமஸ்த விபூதிகளையும் தனக்கே யாக்கினால் போலே
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே -திருவாய் -2-9-4- என்று
உம்முடைய அபேக்ஷைக்கு ஈடாகக் கொண்டு அருளக் குறையில்லை என்று
அவனுடைய ஸம்பந்தத்தையும்
ஸக்தியையும்
பிரகாசிப்பித்து
ஆஸ்வஸிப்பித்தாராயிற்று –

———-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

விபூதி த்வய வ்யாப்த ஞான ப்ரபர் அநேகர் உளர்

இப்படிக் கொத்தவன்
அழறலர் தாமரைக் கண்ணன்
அதிகர்தம ஸூத்த ஜவாப்த் யுத்பூத ரவி கர விகஸித தாமரை போன்ற
கண்ணுள்ள கண்ணன்
அழறு -சேறு

என்னோ விங்களக்கின்றதே –
எந்தப்பிரகாரமாக இங்கு அளந்தானோ
அளப்பது நின்ற இடம் ஒழியவாம்
நிலமும் விசும்பும் இரண்டும் திருவடிகளுக்கு இடமான வித்தனை
ஸ்ருதியும் த்ரிணீ பாத்தா வி சக்ரமே -ஸ்ரீ விஷ்ணு ஸூக்தம் என்றது
இவன் எங்கனே மூட்டியோ தாள் அளந்தான்
சொல்லாய் நீ தான் தோழி –

—————-

அவதாரிகை

இப்படி சக்தனான ஸர்வேஸ்வரன் விளம்பிக்கையாலே
இவருக்குப் பிறந்த ஆர்த்தியைக் கண்ட
ஸூஹ்ருத்துக்கள்
நொந்து யுரைத்த பாசுரத்தை
இரவு நீடுதலுக்கு ஆற்றாளாய்த் தலை மகள் ஈடுபாடு கண்டு
பாங்கி இரங்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

அளப்பரும் தன்மைய ஊழி யங்கங்குல் அந் தண் அம் துழாய்க்கு
உளப் பெரும் காதலின் நீளிய வாயுள ஓங்கு முந்நீர்
வளப் பெரு நாடன் மது சூதன் என்னும் வல்வினையேன்
தளப் பெரு நீள் முறுவல் செய்ய வாய தட முலையே -59 –

பாசுரம் -59-அளப்பரும் தன்மை அவ் ஊழி அம் கங்குல் –
இரவு நீடுதற்கு ஆற்றாத தலைவியைப் பற்றிச் செவிலி இரங்குதல் –
முந்நீர் ஞாலம் -3-2-

பதவுரை

வல்வினையேன்–கொடிய தீவினையையுடைய எனது
தள பெரு நீள் முறுவல் செய்யவாய தடமுலை–முல்லை யரும்பினளவான பெருமையும் நீட்சியுமுள்ள பல் வரிசையை யுடைய
சிவந்த வாயுடையளாயிப் பெரிய தனங்களை யுடையவளாகிய இப்பெண்பிள்ளை
(என்ன சொல்லுகிறாளென்றால்)
அளப்பு அரு தன்மைய–“அளவிடுதற்கு அரியதான தன்மையையுடைய
ஊழி–கற்பங்களினும்
அம்–அழகிய (நீண்ட)
கங்குல்–இராப்பொழுதுகள்
அம் தண்ணம் துழாய்க்கு உளம் பெரு காதலின் நீளிய ஆய் உன்–அழகிய குளிர்ந்த திருத்துழாய் விஷயமாக
(என்) உள்ளத்திலே வளர்கிற மிக்க வேட்கைபேலால் நீண்டனவாயுள்ளன.
ஓங்கு முந்நீர் வளம் பெரு நாடன்–உயர்ந்த கடல் சூழ்ந்த வளப்பமுள்ள பெரிய நாட்டையாளுபவன்
மதுசூதனன்-மதுவென்னும் அசுரனையழித்தவன்
என்னும்–என்று வாய்விட்டுச் சொல்லி யலற்றுகிறாள்.

வியாக்யானம்

அளப்பரும் தன்மைய ஊழி யங்கங்குல்
அளவிட வரிதாம் படியான ஸ்வ பாவத்தை யுடைத்தான கல்பங்களில் காட்டில்
அழகிய கங்குலானவை

கங்குலுக்கு அழகாவது
கல்பத்திலும் நெடிதாய் இருக்கை

அந் தண் அம் துழாய்க்கு உளப் பெரும் காதலின் நீளிய வாயுள
அழகிய குளிர்ந்த திருத்துழாய்க்கு என்னுள்ளத்திலே வளருகிற காதல் போலே
நீளிய வாயுள்ளன

காதலுக்கு முடிவு காணாதவோ பாதி
கங்குலுக்கும் முடிவு காண ஒண்ணாது என்கை
(கங்குலும் காதலும் முடிவு காண ஓண்ணாமை -)

ஓங்கு முந்நீர் வளப் பெரு நாடன்
உயர்ந்த முந்நீரை யுடைத்தாய் வளப்பத்தையும் யுடைத்தான
பெரிய நாட்டை யுடையவன் என்கையாலே
லோகம் கடல் விழுங்காமல் நோக்குமவன் என்றபடி

மது சூதன்
அந்த லோகத்துக்கு ஆஸூர ப்ரக்ருதிகளால் வந்த
நலிவு தீர்த்துக் கொடுக்குமவன்

என்னும்
1-இப்படிக் கங்குலின் நெடுமையையும்
2-ரக்ஷகத்வத்தையும்
3-விரோதி நிவர்த்தகத்வத்தையும்
வாய் விட்டுச் சொல்லா நிற்கும்

வல் வினையேன்
கங்குலைக் குறுக்குதல்
அவனைக் காட்டுதல் செய்ய மாட்டாத
மஹா பாபத்தை யுடையேனான என்னுடைய

தளப் பெரு நீள் முறுவல் செய்ய வாய தட முலையே
அவன் தன்னை ஓர் ஒன்றிலே எழுதிக் கொள்ள வல்லவான
அவயவ வை லக்ஷண்யத்தை யுடையவள்

தளம் என்று முல்லை
முல்லை யரும்பின அளவான பெருமையையும்
நீட்சியையும் யுடைத்தான முறுவலையும்
(போக்யதையில் நீட்சி )

இங்கு முறுவல் என்பது
தந்த பங்க்தியை

செய்ய வாய்
முறுவலுக்குப் பரபாகமாய் சிவந்த வாய் அழகையும்

தடமுலை
பெரிய முலைகளையும் யுடையவள்
என்னும் -என்று கீழோடே அந்வயம்

இத்தால்
ஸர்வ ரக்ஷகனான ஸர்வேஸ்வரன்
விரோதியைப் போக்கி அனுபவிப்பிக்க சக்தனாய் இருக்க
விளம்பிக்கையாலே இவ்வாழ்வாருக்கு
இருள் தரும் மா ஞாலத்தில் இருப்பு நெடுகித் தோற்றுகையாலே
ஆர்த்தி பிறந்தமை சொல்லிற்று ஆயிற்று

தளப் பெரும் இத்யாதியாலே
1-பரிஸூத்தமான இவருடைய அந்தர் விகாஸத்தையும் (வெளுப்பு)
(அதரத்துக்கு அந்தர் தந்தபந்தி-செங்கல் பொடிக்கூறை வெண் பல் தவத்தவர்போல் )
2-ராகோத்தரமான வாக் விகாஸத்தையும் (சிகப்பு-பக்தியின் நிறம் )
3-நிரதிசயையான பக்தி அபி விருத்தியையும் காட்டுகிறது
(முலை வளர்ந்து கொண்டே இருக்குமே -அவா -காதல் நீண்டு கொண்டே போகுமே )

—————-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

எட்டா நிலத்திலே ஸ்ரீ வைகுண்டத்திலே ஓலக்கம் கொடுத்து இருக்கை அன்றிக்கே
அவதரித்து ஸூலபனானான் -என்றவாறே நாம் பெற்றால் போலே இருக்க ஹ்ருஷ்டரானார்
அங்கே இருந்து இழக்கை யன்றிக்கே
இங்கே வந்து கிட்டச் செய்தே பெறா விட்டவாறே அவசன்னரானார்
அவ்வவஸாதம் ஒரு பிராட்டி தசையை விளைவித்தது
கலந்து பிரிந்து பிரிவாற்றாத தலைமகள் ஸம்பந்தம் யுண்டாய் இருக்க
போக யோக்யமான இருளிலே வந்து உதவக் காணாமையாலே
இருள் பாதகமாக நின்றது என்று சொல்லா நின்றாள் என்று
அவள் பாசுரத்தைத் திருத்தாயார் சொல்லுகிறாளாய் இருக்கிறது –

வியாக்யானம்

அளப்பரும் தன்மைய ஊழி யங்கங்குல்
ஊழியான ராத்ரி யானவை
அளக்க அரியத்தை அளந்து கொண்டவன் திருவடிகளாலும் அளக்கப் போகிறது இல்லை
அளக்கலாமாகில் வந்து தோற்றானோ
அளக்க வரிதாகையை ஸ்வ பாவமாக யுடையதான

ஊழி யங்கங்குல்
ஊழி யாகிற ஆகாரமே காணும் நிரூபகமாய் இருக்கிறது
ஆனால் பரிச்சேதிக்க ஒண்ணாத வற்றையும் ஒரு பாசுரம் இட்டுச் சொல்ல ஒண்ணாதோ என்ன

அந் தண் அம் துழாய்க்குஉளப் பெரும் காதலின் நீளிய வாயுள
அதனில் பெரிய என் அவா -10-10-10-
பெரியத்தில் பெரியது என்னும் அத்தனை
பகவத் தத்துவத்தையும் விளாக்குலை கொண்டது இறே இவ்வவா
பகவத் ஆனந்தத்தைப் பரிச்சேதிக்கப் பார்த்து அவை பட்டது படும் அத்தனை யாயிற்று
இவற்றைப் பரிச்சேதிக்கப் புக்காலும்
நேதி நேதி -ப்ரஹதாரண்யம் என்கிறபடியே
இது அன்று இது அன்று என்னும் அத்தனை போக்கி இப்படி என்று
பாசுரம் இட்டுச் சொல்ல ஒண்ணாது

அம் தண் துழாய் யுண்டு -அவன் தோளில் இட்ட மாலை
அதுக்கு என்னுள்ளத்தில் யுண்டான சர்வாதிகத்வத்தையும்
விளாக்குலை கொள்ள வற்றாது காதலிலும் பெருத்து இருப்பனவாயுள்ளன

ஓங்கு முந்நீர் வளப் பெரு நாடன் மது சூதன் என்னும்
அவன் எல்லைக்குப் புறம்பே இருந்து நோவு படுகிறேனோ
கடல் சூழ்ந்து இருப்பதாய் வளப்பத்தை யுடைத்தாய் இருந்துள்ள பெரு நாட்டை யுடையவன்
ரஷ்ய வர்க்கத்துக்குக் களையான மதுவை நிரசித்தவன்
சம்பந்தம் இல்லாமையே
விரோதி நிரசன சீலன் அல்லாமையோ நான் இங்கனே படுகிறது

வல்வினையேன்
இவன் வடிவு அழகைப் பார்த்தால் இப்படி கிலேசப்படுகைக்கு ஓரடி இல்லை
அத்தலை இத்தலையாய் அவன் படக்கடவதை இவள் படா நின்றாள்
இதுக்கடி இவள் வடிவு அழகில் ஏதேனும் குறை யுண்டோ
மத பாபம் ஏவ -என்கிறாள்
இவள் படுகிற

————

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

போக்கினவள் -என்றும் இங்கனே வாய் விட்டுக் கூப்பிடுமதே கார்யமாய் இரா நின்றாள்

வல்வினையேன்
வலியதான வெவ்வினையால் இறே
நான் இவள் அவஸாதத்தைக் காணவும் கேட்கவுமாயிற்று
தன் அழகில் ஈடுபடுத்தி அவனை இங்கனே கூப்பிடப் பண்ண வல்லவள் தான்
இப்படிக் கூப்பிடா நின்றாள் என்கிறாள்

தளப் பெரு நீள் முறுவல் செய்ய வாய தட முலையே
தளவு என்று முல்லை
அதில் பெருத்த அரும்பு போன்ற தந்த பங்க்தியாய் உத் பவித்த
நீண்ட வெண் மின்னல் போன்ற புன்சிரிப்புள்ளவள்
சிவந்த திருவதரத்தை யுடையவன்
அவனுடைய ஸந்தாபத்தைத் தீர்க்கவும் ஆசா பூர்த்தியைச் செய்யவும் வல்ல
முலைகளை யுள்ளவள் என்னும் என்றத்தோடே
இதுக்கு அந்வயம் –

—————

அவதாரிகை

இப்படி பார்ஸ்வஸ்தரும் ஈடுபடும்படியான இவருடைய ஆர்த்தியைக் கண்ட
பரிவரானவர்கள்
ஈஸ்வரனுடைய அநந்ய ஸாத்யத்வத்தை அறியாதே
அவனை லபிக்கைக்கு உபாயமான பக்த்யாதிகள் பூர்ணம் அன்றியே இருக்க
நடக்கிற த்வரையானது என்னாய் இருக்கிறது என்று சொல்லுகிற பாசுரத்தை

(ஈஸ்வரனுடைய அநந்ய சாத்யத்வம் இரக்கமே உபாயம்
இவளுக்கு சாதனம் இல்லையே-முலை இத்யாதி -பக்த்யாதிகள் என்று பார்ஸ்த்வத்தார்
அவன் ஸ்ரீ வைகுண்டம் விரக்தி யடைந்து திருவேங்கடம் வந்தது
மயர்வற மதிநலம் அருளினதை அறியாமல் பேசுகிறார்கள் என்றபடி )

தலைவி ஈடுபாடு கண்ட தோழி
அறத்தோடு நின்று யுறைக்கக் கேட்ட செவிலி
பேதைப் பருவத்தாளான இவளுக்குத் தலைவன் இடம் வினாவும்படியான புணர்ச்சி யறிவு
வந்தவாறு என்னாய் இருந்தது என்று சொன்ன
பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்

முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூம் குழல் குறிய
கலையோ அரையில்லை நாவோ குழறும் கடல் மண்ணெல்லாம்
விலையோ வென மிளிரும் கண் இவள் பரமே பெருமான்
மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே – 60-

பாசுரம் -60-முலையோ முழு முற்றும் போந்தில –
தலைவியின் இளமைக்குச் செவிலி இரங்குதல் –
அறுக்கும் வினையாயின -9-8-

பதவுரை

முலையோ–ஸதனங்களோ வென்னில்
முழு முற்றும் போந்தில–மிக முழுவதும் தோன்றினவில்லை;
மொய் பூ குழல்–அடர்ந்த மென்மையான தலை மயிர்கள்
குறிய–(முடிகூடாமல்) குட்டையாய் யுள்ளன;
கலையோ–ஆடையோ வென்னில்
அரை இல்லை–இடையிற் பொருந்த உடுக்கப்படுவதில்லை;
நாவோ–நாக்கோவென்னில்
குழறும்–(திருத்தமாக வார்த்தை சொல்ல மாட்டாமல்) குதலைச்சொல் பேசுகின்றது.
கண்–கண்களோ வென்னில்
கடல் மண் எல்லாம் விலையோ என–கடல் சூழ்ந்த உலகமுழுவதும் (இவற்றுக்கு) விலைப் பொருளோ வென்று சொல்லும்படி
மிளிரும்–(ஒரு நிலையில் நில்லாமல்) பிறழ்ந்து நோக்குகின்றன;
பெருமான் மலையோ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகம்.–‘திருவேங்கடமலை எனது தலைவனது இருப்பிடமோ?
என்று பலகாலுஞ் சொல்லிப் பயில்கிற வார்த்தை
இவள் பரமே–(இப்படி இளமைப் பருவமுடைய) இவளிடம் உண்டாகக் கடவதோ?.

வியாக்யானம்

முலையோ முழு முற்றும் போந்தில
யவ்வன ஸூ சகமான முலைகளானாவை மிகவும் முழுக்கத் தோற்றிற்றன இல்லை
முழு முற்றும் என்று மீமிசையாய் மிகுதியைக் காட்டுகிறது

மொய் பூம் குழல் குறிய
செறிந்த பூவை யுடைத்தான குழல்
பூக்களைச் செறியச் சொருகும் அளவு ஒழிய
முடி கூடின வில்லை

கலையோ அரையில்லை
பரிவட்டமானது அறையில் பொருந்த வுடுக்கும் அளவன்று

நாவோ குழறும்
நாவானது வார்த்தையைத் திருந்தச் சொல்லாது

கடல் மண்ணெல்லாம் விலையோ வென மிளிரும் கண்
கடல் சூழ்ந்த பூமியும்
மற்றும் யுள்ள லோகங்களும் இவற்றுக்குத் தகுதியோ
என்னும் படி கண்கள் மிளிரா நிற்கும்

இவள் பரமே
இப்படிப் பேதைப் பருவத்தை யுடையளான இவளுக்குத்
தலைவருமதே (கை வருமோ என்றபடி –

நாயகனை வசீகரித்து
முலை அழகாலே யாதல்
மயிர் முடி அழகாலே யாதல்
உடை அழகாலே யாதல்
உக்தி சாதுர்யத்தால் யாதல்
ஸா பிப்ராயமாக கடைக் கணிக்கும் பார்வையின் வைஷம்யத்தாலே யாதலாய் இருக்க

(இந்த நான்கும் நாயகனை வசீகரிக்காது போல்
கண் பார்வையாலும் அவனை வசீகரிக்காதே
இவர் பார்வையில் சமத்துவம் தான் தெரியும்
வை ஷம்யம் இல்லையே )

முலையும் அரும்பாதே
குழலும் முடி கூடாதே
பரிவட்டமும் செவ்வனே உடுக்க அறியாதே
சொல்லும் மழலையாய்
கண்ணும் ஒதுக்கிப் பாராமல் செவ்வே நோக்கும்படியான இந்தப் பேதைக்கு
இப்படித் தலைவன் இடம் வினாவுதல் யுண்டானவாறு என் கொல்
என்று அதிசயப்பட்டாள் ஆயிற்று

பெருமான் மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே
ஸ்வாமியானவனுடைய மலையோ திருவேங்கடம் என்று சந்தை சொல்வாரைப் போலே
பலகாலும் அப்யஸிக்கிற பாசுரம் இவள் தலையிலே கிடப்பது ஒன்றே என்றாள் ஆயிற்று

இத்தால்

பரிவரானவர்கள் –
பகவத் பிராப்தி சாதனங்களான பக்த்யாதிகள் இன்றியே இருக்க
இவ்வாழ்வார் அவனுடைய தேசத்தைப் பிராபிக்கத் த்வரிக்கிறது என்னோ என்று
பரிவாலே கலங்கி உரைத்தார்களாய் இருக்கிறது

முலையானது
போக உபகரணமான பக்திக்கு ஸூசகமாகையாலே –
அந்த பக்தியானது
பிராப்தி சாதனமான பரமபக்தியாம்படி பரிணமித்தது இல்லை என்றபடி

குழல் குறிய -என்று
முடி அழகில்லை என்றபடியாலே
நமஸ் யந்தஸ் ச -கீதை -9-14-என்கிறபடியே
தலையாலே வசீகரிக்கிற பிராணாமம் இல்லை என்றபடி

உடை அழகில்லை என்கையாலே
பந்த பரிகரஸ் தஸ்ய -ஹர்யஷ்டகம் -என்னுமா போலே
யதந்தச்ச த்ருட வ்ரதா -கீதை -9-14-என்று சொல்லுகிற நிரந்தர கீர்த்தமாம் இல்லை என்றபடி

(ஸததம் கீர்தயந்தோ மாம் யதந்தஸ்ச த்ருடவ்ரதா:
நமஸ்யந்தஸ்ச மாம் பக்த்யா நித்யயுக்தா உபாஸதே-கீதை-9-14-

த்ருடவ்ரதா:-திடவிரதத்துடன்,
ஸததம் கீர்தயந்த: ச-இடைவிடாது நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டும்,
யதந்த: ச-முயற்சி புரிவோராகவும்,
நமஸ்யந்த: ச-என்னைப் பக்தியால் வணங்குவோராய்,
நித்யயுக்தா: பக்த்யா உபாஸதே-நித்திய யோகிகள் உபாசிக்கிறார்கள்.

திடவிரதத்துடன் முயற்சி புரிவோராய், எப்போதும் என்னைப் புகழ்வோராய், என்னைப் பக்தியால்
வணங்குவோராய் நித்திய யோகிகள் உபாசிக்கிறார்கள்.

மனது எதைப் புகழ்கிறதோ அதன் மயமாகிறது; எத்துறையில் முயல்கிறதோ அத்துறையில் மேன்மையடைகிறது;
எதை விரும்பி வணங்குகிறதோ அதன் இயல்பை அடைகிறது. இத்தனை விதங்களில் பக்தர் தமது மனதை
பகவானிடம் செலுத்துகிறபடியால் அவர்கள் நித்தியயோகிகள் ஆகிறார்கள். பகவானுக்கு அருகில் வீற்றிருப்பவரும் ஆகின்றார்கள் )

மிளிரும் கண் -என்கையாலே
ஸ்வரூபாதி ஸமஸ்த அர்த்த அவகாஹியான ஸ்வாபாவிக ஞானம் ஒழிய
ஒதுக்கிப் பார்க்கும் த்யான ரூப ஞானம் இல்லை என்றபடி

இவள் பரமே -என்கையாலே
கேவலமான ஸ்வரூப பாரதந்தர்யம் யுடையாருக்கு
சாதனம் இல்லாமல்
த்வரையைத் தலையிலே ஏறிட்டுக் கொள்ளுமோ என்று
வ்யதிரேகம் சொன்னபடி

பெருமான் மலை -இத்யாதியாலே
அடிமை செய்ய வேண்டும் நாம் -திருவாய் -3-3-1-என்கிறபடியே
அவன் எழுந்து அருளி நிற்கிற (இருக்கிற) திருமலையே போகஸ்த்தானம் என்றதாயிற்று
(கைங்கர்ய ஸ்தானம் என்றவாறு )

—–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

தளப் பெரு நீண் முறுவல் செய்ய வாய தடமுலை வளப்பெரு நாடன் மது ஸூதனன் என்றாளே
ப்ராப்த யவ்வனையாய் -பருவம் நிரம்பின பின்பு இது சொல்லக் கேட்க வேணுமோ
அடியே பிடித்தும் இவளுக்கு இதுவே யன்றோ யாத்திரை என்கிறாள்

வியாக்யானம்

வியாக்யானம்

முலையோ முழு முற்றும் போந்தில
இவை எல்லாம் பருவம் நிரம்பினவாறே பிராப்தம்
முலைகள் சமைய வளர்ந்தவில்லை என்னும் அளவல்ல
முலை எழும் எல்லை இன்னவிடம் என்று கொண்டைக்கோல் நாட்டிற்றும் இல்லை

மொய் பூம் குழல் குறிய
செறிந்து அழகியதாய் இருந்துள்ள குழல்களை அவன் பேணி சூழி யஞ்சுற்றினால்
இவள் வினை கேட்டாலே குலைத்தால் அவன் அதுக்குக் காலைப் பிடிக்கும் அளவல்ல

கலையோ அரையில்லை
தாய்மார் உடுத்தினால் அது அப்படியே இருக்குமதுக்கு அவ்வருகு தான்
திரஸ்கரிக்கும் இது இன்னவிடம் என்று அறியும் விவேகம் தான் நெஞ்சில் நடையாடிற்று இல்லை

நாவோ குழறும்
சொல் தெளிவு யுண்டாய்ப் பொருள் யுடைத்தான சப்தங்களைச் சொல்லி
அவ்யக்தமானவற்றை அவள் பக்கலிலே கேட்டு ஐயர் ஆய்ச்சி என்று சிலவற்றைக் கற்ப்பிப்பார்கள் இறே
அவர்கள் தெளிந்த சொல் தான் குற்றமாம் படி இவளுடைய கலங்கின சொல்லே நன்றாய் இருக்கும் இறே

கடல் மண்ணெல்லாம் விலையோ வென மிளிரும் கண்
இத்தை பட்டர் அருளிச் செய்யா நிற்க
எல்லா அவயவங்களுடைய நிரம்பாமையைச் சொல்லி
இவற்றினுடைய பெருமையைச் சொன்னால் விரூபமாய் இராதோ என்று

இவள் பரமே பெருமான்
மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே –

————–

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்

வியாக்யானம் –

முலையோ முழு முற்றும் போந்தில
முழு முற்றும் –
எவ்வளவும் முலையைச் சொல்லுவேனோ எவ்வளவும் உத் பவித்தது இல்லை

மொய் பூம் குழல் குறிய
செறிந்த குழலுக்கு வாரிப்பூ முடிக்க உரியள்ன் அல்லள்

கலையோ அரையில்லை
கலை -பரிவட்டம்
அரையில் பரிவட்டம் நிற்கும்படி உடுக்க அறியாள்

நாவோ குழறும்
நாக்கால் குழறு மதான மழலைச் சொல்லே

கடல் மண்ணெல்லாம் விலையோ வென மிளிரும் கண்
இவள் முழித்தலுக்குக் கடல்கள் எல்லாம் சூழ்ந்த மண் விலையாமோ
என்னும்படியான கண் பார்வையள்-

இவள் பரமே பெருமான்மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே –
என்னை யாளும் யவன் மலையோ திருவேங்கடமே என்பதாய்
அப்போது சொல்லும் வாக்யமாவிது

இவள் பரமே
இவளுக்குத் தக்கதோ

இத்தால்
அவளுக்கு அவனில் அதி ப்ரணதையும்
பிரிவில் அத்யாவசன்னதையும்
ஒவ்த் பத்திகம் என்றதாயிற்று
இதுக்கு வல் வினையேன் என்று
நொந்து கொள்வான் என் என்று இவள் தாயைத் தேற்றுகிறாள் –

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திரு விருத்தம் – -பாசுரங்கள் -41-50–ஸ்ரீ நம்பிள்ளை ஈடு –ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் -வியாக்யானம் –

April 2, 2022

அவதாரிகை

இப்படி ப்ராப்ய த்வரை நடவா நிற்கச் செய்தே
அவிளம்பேந பிராப்தி ஸித்தியாமையாலே
பதார்த்தாந்தர ஸந்நிதியும்( வாடைக்காற்றும் )பாதகமாய்
நலிகிற பிரகாரத்தை
வாடைக்கு வருந்தின தலைமகள் வார்த்தையால் அருளிச் செய்கிறார்

என்றும் புன் வாடை இது கண்டு அறிதும் இவ்வாறு வெம்மை
ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம் ஓங்கு அசுரர்
பொன்றும் வகை புள்ளை ஊர்வான் அருள் அருளாத இந் நாள்
மன்றில் நிறை பழி தூற்றி நின்று எம்மை வன் காற்று அடுமே–41-

பாசுரம் -41-என்றும் புன் வாடை இது கண்டு அறிதும் –
வாடைக்கு வருந்திய தலைவி வார்த்தை –
நீராய் நிலனாய் -6-9-

பதவுரை

என்றும்–எப்பொழுதும்
புன்–கொடுமை செய்கிற
வாடை இது–இந்த வாடையை
கண்டு அறிதும்–கண்டறிவோம்!
இவ்வாறு வெம்மை உருவம்–இப்படிப்பட்ட (வாடையினுடைய) வெப்பத்தின் தன்மையையும்
சுவடும்–குறிப்பையும்-பிரகாரத்தையும்
ஒன்றும்–ஒருவிதத்தாலும்
தெரியிலம்–அறிகின்றிலோம்;
ஓங்கு அசுரர்–வலிமையாற் கிளர்கின்ற அசுரர்கள்
பொன்றும் வகை–அழியும்படி
புள்ளை–கருடப் பறவையை
ஊர்வான்–ஏறி நடத்துகிற எம்பெருமான்
அருள் அருளாத–தனது கருணையால் என்னை வந்து காத்தருளாத
இந் நாள்–இக் காலத்திலே
வன் காற்று–வலிய வாடையானது
என்னை–என்னை
மன்றில் நிறை பழி–வெளியிலே பரவி நிறைகிற பழிப்பை
தூற்றி–அயலாரை விட்டுத் தூற்றுவித்து
நின்று அடும்–அப்பாற் போகாமல் நிலை நின்று அழிக்கினறது

வியாக்யானம்

என்றும் புன் வாடை இது கண்டு அறிதும்
எல்லாக் காலத்திலும் புல்லிமை செய்து நலிந்து போருகிற இந்த வாடை கண்டு அறியோம்

இவ்வாறு வெம்மை
இப்படிப்பட்ட வாடையினுடைய வெம்மையானது

ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம்
ஒரு பிரகாரத்தாலும் வெம்மையினுடைய ஸ்வரூபம்
அறிதி யிடவாய் இருக்கிறது இல்லை
அதுக்கடியான ஸூ சகமும் அறிகிறிலோம்

ஓங்கு அசுரர் பொன்றும் வகை புள்ளை ஊர்வான்
உத்துங்கரான ஆஸூர ப்ரக்ருதிகள் மங்கும்படி
பெரிய திருவடியை நடத்துகிறவன்

அருள் அருளாத இந் நாள்
தன் கிருபையை உபகரியாத இக்காலத்திலே

மன்றில் நிறை பழி தூற்றி
மன்றிலே நிறைந்த பழியை
அயலாரை இட்டுத் தூற்றுவித்து

நின்று
போகாமல் நின்று

எம்மை
பிரதி கிரியை பண்ண மாட்டாத என்னை

வன் காற்று அடுமே–
பலவானான வாடைக் காற்றானது
அடியா நின்றது என்கிறாள்

இத்தால்
பூர்வ அநு பூத துக்க பரம்பரைகள்
தண்ணீர்ப் பந்தல் என்னும்படி
பகவத் அலாப ஜனிதமாய்க் கொண்டு
லோகோபக்ரோசகரமான -லோக உப கோசாரமாக
தாதாத்விக துக்கத்தினுடைய அதிசயத்தை ஸூசிப்பித்ததாயிற்று –

————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
கலந்து பிரிந்த தலைமகள்
நெடுநாள் வாடை வந்து போகா நிற்கச் செய்தே
இப்போது இதன் கீழ் ஜீவிக்க அரிதாய் இரா நின்றது என்று
இங்கனே தன் ஆற்றாமையைச் சொல்லுகிறாள்
எம்மை நோக்குவது என்று கொலோ -என்று
நமக்கு ரக்ஷகர் ஆவார் ஆரோ என்று இருந்த இவளுக்கு
ஒரு காற்று வந்து ரக்ஷிக்கிற படி
சத்தா தாரகமானது தானே பாதகமாம் படி

வியாக்யானம்

என்றும் புன் வாடை இது கண்டு அறிதும் இவ்வாறு வெம்மை
இதுக்கு முன்பு கலவி ஒரு நாளும் இல்லை போலே
என்றும் விஸ்லேஷத்தோடே போந்தது அத்தனை
இவ்வாடை பாதகமாம் போது கலவி உண்டாக வேணும் இறே என்று
இது கண்டதுண்டு என்று அறியும் அத்தனை

புன்வாடை
மந்தமாருதம்

இது கண்டறிதும்
இத்தோடு ஸஜாதீயமானவை எல்லாம்
அனுபவித்தோம் இறே

இவ்வாறு வெம்மை ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம்
இப்படி வெம்மை உருவும் சுவடும் ஒன்றும் தெரியிலம்
பிரிந்தாருக்குச் சுடுவது அக்னியாதிகள் அல்ல
வாடை
லௌகிக வியுத் பத்தியாலே சொல்லுகிறாள் –

ஓங்கு அசுரர் பொன்றும் வகை புள்ளை ஊர்வான் அருள் அருளாத இந் நாள்

ஸர்வேஸ்வரன் என்கிற அறிவு இவர்களுக்கு இல்லாமையாலே
வளர்ந்து இருந்துள்ள அஸூர வர்க்கமானது முடியும்படிக்கு ஈடாகப்
பெரிய திருவடியை நடத்தா நின்று உள்ளவனுடைய ஸ்வரூப ப்ரயுக்தமான
அருளும் மறுத்த படி

வாதார்ஹம் அபி –ஸூந்தர -38-35-
அல்லாதாராபாதி –
பெருமாள் –

மன்றில் நிறை பழி தூற்றி நின்று எம்மை வன் காற்று அடுமே

————————–

அவதாரிகை
இப்படி ஆர்த்தரான அளவிலே
ஈஸ்வரன்
தன்னுடைய ஸீலாதிசயத்தை இவருக்குப் பிரகாசிப்பித்துப்
பரிபூர்ண கடாக்ஷம் பண்ணின பிரகாரத்தை
பாவனையாலே (மாநஸமாக)அனுபவித்து
அருளுகிறார் –

வன் காற்றறைய வொருங்கே மறிந்து கிடந்தலர்ந்த
மென் கால் கமலத் தடம் போல் பொலிந்தன மண்ணும் விண்ணும்
என் கால்க்கு அளவின்மை காண்மின் என்பான் ஒத்து வான் நிமிர்ந்த
தன் பால் பணிந்த என் பால் எம்பிரான் தடக் கண்களே -42-

பாசுரம் -42-வன் காற்று அறைய ஒருங்கே மறிந்து –
தலைவி தலைவன் கண் அழகில் ஈடுபட்டு உரைத்தல் –
பொரு மா நீள் படை -1-10-

பதவுரை

எம் பிரான்–எம்பெருமானுடைய
கட கண்கன்–பெரிய திருக்கண்களானவை (எங்ஙனம் விளங்குகின்றனவென்றால்.)
மண்ணும் விண்ணும்–மண்ணுலகமும் விண்ணுலகமுமாகிய விசாலமான இடமிரண்டும்
என் காற்கு–எனது இரண்டு பாதங்களின் அளவுக்கு
அளவு இன்னும் காண்மின்–இடம் போதாத அற்புதத்தை பாருங்கள்
என்பான் ஒத்து–என்று (அந்தந்த உலகங்களிலுள்ளார்க்குக் கூறி) ஒரு வித்தை காட்டுபவன் போன்று
வான் நிமிர்ந்த–மேலுலகை நோக்கி வளர்ந்த
தன்–தன்னுடைய
கால்–திருவடிகளை
பணிந்த–வணங்கின
என்பால்–என்னிடத்து.
வன் காற்று அறைய–பெருங்காற்று வீசுதலால்
ஒருங்கே மறிந்து கிடந்து அலர்ந்த–ஒரு பக்கமாகச் சாய்ந்து கிடந்து மலர்ந்த
மென்கால்–மெல்லிய நாளத்தை யுடைய
கமலம் தடம்போல்–தாமரைத் தடாகம் போல
பொலிந்தன–அழகு மிக்கு விளங்கின-

வியாக்யானம்

வன் காற்றறைய
வலிய காற்றானது
சலியாமல் நிற்க ஒட்டாமல் அடிக்க

வொருங்கே மறிந்து
ஓர் இடத்திலே சேரப் புரிந்து

கிடந்தலர்ந்த
கிடைப்பாட்டிலே விகஸிதமான

மென் கால்
ஒரு முகத்திலே சாய்கைக்கு அடியான தண்டில்
மார்த்தவத்தை யுடைய

கமலத் தடம் போல்
தாமரைத் தடாகம் போலே

பொலிந்தன
அழகினுடைய அபி விருத்தியை யுடையவாயின –

இவ் விடத்தில் கண்களுக்குக் காற்றாவது
அப்ரதிஹத கதியான கிருபா ப்ரேரிதமாகை –
(தடங்கல் இல்லாத
சீதளமான திருக்கண்கள் திருக்கச்சி நம்பி )

ஒருங்கே மறிகை யாவது
ஆழ்வார் பக்கலிலே ஒருபடிப்பட்ட ஆபி முக்யத்தை உடைத்தாகை

கிடந்து அலரு கையாவது
இவைரை விஷயீ கரிக்கையாலே கண்ணுக்கு விகாஸம் உண்டாகை

மென் காலாவது
இக் கடாக்ஷத்துக்கு மூலமாய்
கிருபா கார்யமான சித்த மார்த்தவம் (ஸுஹார்த்தம்)

கமலத் தடம் என்று
நிறத்தாலும்
குளிர்த்தியாலும்
பரப்பாலும்
போக்யமாய் இருக்கை

பொலிவாவது
காலம் மாறி மலரும் தடம் -போது செய்யாத்- திருக்கண் அழகுக்குப்
போலி அல்லாத மிகுதியைச் சொல்லுகிறது –
(இதுவோ குவியாமால் எப்போதும் மலர்ந்தே -மாறாமல் -போது செய்யாமல் இருக்குமே )

மண்ணும் விண்ணும் என் கால்க்கு அளவின்மை காண்மின் என்பான் ஒத்து வான் நிமிர்ந்த
பூமியும் -ஊர்த்தவ லோகங்களும்
என் காலுக்கு அளவு போராது
நீங்கள் காணுங்கோள் என்று
தத் தத் தேச வாசிகளுக்கு உபதேசிப்பாரைப் போலே
ஒண் மிதியில் புனலுருவி -திருநெடும் தாண்டகம்
என்கிற பாட்டின் படியே ஊர்த்வ லோகங்கள் அடைய வியாபாரித்து

விண்ணும் மண்ணும் -என்றும்
பாட பேதம் சொல்லுவார்

தன் பால் பணிந்த என் பால்
தன் திருவடிகளில் வணங்கின என்னிடத்து

தன்பால் என்ற
பாடமான போது
தன்னிடத்து என்றும் சொல்லுவர்

எம்பிரான் தடக் கண்களே
த்ரை விக்ரம அபதானத்தாலே
அசாதாரணமான ஸம்பந்தத்தை அறிவித்த ஸ்வாமியினுடைய
பெரிய திருக்கண்கள்

இப்பாட்டு
நாயகனான ஈஸ்வரனுடைய நோக்கிலே துவக்குண்ட
நாயகி வியந்து உரைத்தலுமாகவுமாம் –

—-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
வாடையின் கீழே ஜீவிக்க அரிது என்று
இனி முடியும் அத்தனை என்று வார்த்தை சொன்னவாறே
குளிர நோக்கினான் –

வியாக்யானம்

வன் காற்றறைய வொருங்கே மறிந்து கிடந்தலர்ந்த
மென் கால் கமலத் தடம் போல் பொலிந்தன
மென் கால் கமலமாவது
மிருதுவான காற்றும் கூடப் பொறாத படியான
மெல்லிய தாளை யுடைத்தான கமலமானது

இதிலே வன் காற்றாவது
அது தான்
தன்னைப் பாராதே
அறைவது

ஒருங்கே
ஏகதோமுகமாக

மறிந்து கிடந்தது அலர்ந்த
மற்றை அருகே புரியில்
தரமிலோபம்

மண்ணும் விண்ணும்
என் கால்க்கு அளவின்மை காண்மின் என்பான் ஒத்து வான் நிமிர்ந்த
தன் பால் பணிந்த என் பால் எம்பிரான் தடக் கண்களே

—————————-

அவதாரிகை
இப்படிக் கண் அழகை அனுசந்தித்தவர்
அவ் வழியாலே
அவயாந்தர சோபையையும்
வடிவழகையும்
அனுசந்தித்து
இவ்வாழ்வாருக்கும்
அதிசயித ஸ்வ பாவரானவர்க்கும்
பரிச்சேதித்து நினைக்க அரிது என்று அருளிச் செய்கிறார்

இது
நாயகன் உரு எழில் உரைத்த தலைவி வார்த்தையால்
சொல்லப் பட்டதாகவுமாம் –

கண்ணும் செம் தாமரை கையும் அவை அடியோ அவையே
வண்ணம் கரியதோர் மால் வரை போன்று மதி விகற்பால்
விண்ணும் கடந்து உம்பர் அப்பால் மிக்கு மற்று எப்பால் யவர்க்கும்
எண்ணும் இடத்ததுவோ எம்பிரானது எழில் நிறமே -43-

பாசுரம் -43-கண்ணும் செந்தாமரை கையும் அவை அடியோ அவையே –
தலைவனின் வடிவ அழகு பற்றித் தலைவி கூறல் –
உயர்வற உயர் நலம் -1-1-

பதவுரை

கண்ணும்–திருக்கண்களும்
செந்தாமரை–செந்தாமரைப் பூவையொப்ப
கையும்–திருக்கைகளும்
அவை–அத்தாமரைப் பூவை யொப்ப
அடியோ–திருவடிகளும்
மதி விகற்பால்–ஞானத்தின் மிகுதியால்
விண்ணும் கடந்து–ஸ்வர்க்க லோகத்தாரை மேலிட்டு
உம்பர் அப்பால் மிக்கு–அதன் மேலிடத்துள்ள ஸத்ய லோகத்தார்க்கும் அப்பாற்சென்று.
அவையே–அத்தாமரைப் பூக்களையே யொப்ப.
எம்பிரானது–எம்பெருமானுடைய
எழில் நிறம்–அழகிய திருமேனி விளக்கம்
வண்ணம் கரியது ஓர் மால் வரைபோன்று–நிறத்தில் கறுத்ததான வொரு பெரிய மலையையொத்து
மற்ற எப்பால் யவர்க்கும்–அதன்மேல் பரமபதத்தில் எவ்விடத்துமுள்ள நித்ய ஸூரிகளுக்கெல்லோர்க்கும்
எண்ணும் இடத்துவோ–(இப்படிப்பட்டதென்று) அளவிடும்படியான தன்மையுடையதோ? (அன்று)

கண்ணும் செம் தாமரை
நிரங்குச ஐஸ்வர்யத்துக்கும்
வாத்சல்யத்துக்கும்
ஸூ சகமான திருக் கண்களும் தாமரை

கையும் அவை அடியோ அவையே
திருக்கைகளுக்கும்
திருவடிகளுக்கும்
அவை (தாமரை) ஒழிய ஒப்பில்லை

ஓ -என்ற அசை
தாமரை முற்று உவமை அல்லாமையைக் காட்டுகிறது –
(தாவி வையம் கொண்ட தடம் தாமரை -முற்று உவமை அங்கு )

வண்ணம் கரியதோர் மால் வரை போன்று
திருமேனி நிறம்
நீலமான அத்விதீயமான பெரிய வரை போலே இரா நின்றது
அவயவங்கள் சிகப்புக்குத் திரு மேனி பரபாக சோபையைக் கொடுத்த படி

மதி விகற்பால்
மதியினுடைய வேறுபாட்டால் -மிகுதியால்

விண்ணும் கடந்தும்
மனுஷ்யாதிகளில் காட்டில் ஞானாதிகரான தேவர்கள்
வர்த்திக்கிற ஸ்வர்க்கத்தையும் கடந்து

உம்பர் அப்பால் மிக்கு
மேலுண்டான ஸநகாதிகள்
ப்ரஹ்மாதிகளுக்கும் அவ்வருகே போய்

மற்று எப்பால் யவர்க்கும்
இவர்களில் வியாவ்ருத்தராய்
எங்கும் ஓக்க வியாப்தமான ஞானாதி குணங்களை யுடைய ஸூரிகளுக்கும்

எண்ணும் இடத்ததுவோ
தங்கள் (மதி )வைஷம்யங்களாலே
பரிச்சேதிக்கலாம் படியான நிலத்திலே நிற்கிறதோ

எம்பிரானது எழில் நிறமே –
இவ்வழகை முற்றும் எனக்கு உபகரித்தவனுடைய
ஸுந்தர்ய சோபை யானது

ஆக
உபய விபூதியிலும்
இவ்வழகு பரிச்சேதிக்க அரிது என்றதாயிற்று –

—————-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை

நோக்கின அக்கண் வழியே
திருமேனியில் அழகை அடைய அனுபவித்து
இவ் விஷயத்தைக் கிட்டின இத்தால்
ஒரு பலம் இல்லையாய் இரா நின்றதீ -என்கிறாள்

வியாக்யானம்

கண்ணும் செந்தாமரை
நோக்குக்கு இலக்கான நிலைமை மாற்றி
அவயவாந்தரத்தோடே சேர்த்து அனுபவித்த பின்பாயிற்றுப் பேசலாயிற்று

முதல் உறவு பண்ணின கண்களும் செந்தாமரை போலே இருந்தன

கையும் அவையே
நோக்கின அநந்தரம்
ஸ்பர்சத்திலே அபேக்ஷை பிறக்கும் இறே
அணைத்த கைகளும் தாமரை

அடியோ அவையே
ஸ்பர்சத்தாலே துவக்குண்டு விழும்
துறையான திருவடிகளும் அவையே

வண்ணம் கரியதோர் மால் வரை போன்று

—————-

அவதாரிகை

இப்படி அபரிச்சேத்யம் என்று சொல்லப் போமோ
ஈஸ்வரனுடைய ரூப வேஷ நாம விக்ரஹங்களை நிஷ்கர்ஷித்து
அவ்வவ ஸாஸ்த்ர சமயங்களிலே நிற்கிறவர்கள்
சொல்லுகிறார்கள் அன்றோ என்னில்
அவர்களும் அவன் பெருமையை முடியக் காணப் பெற்றார் இல்லை என்கிறார்

இதுவும்
தலைவி தலைமகன் பெருமையை யுரைத்தல் யாகிற கிளவியாம்

நிறமுயர் கோலமும் பேருமுருவமும் இவை இவை என்று
அறமுயல் ஞானச் சமயிகள் பேசிலும் அங்கு அங்கு எல்லாம்
உறவுயர் ஞானச் சுடர் விளக்காய் நின்றதன்றி யொன்றும்
பெற முயன்றார் இல்லையால் எம்பிரான் பெருமையே -44-

நிறம் உயர் கோலம் -ஒப்பனையும் இவனைப் பற்றியே நிறம் பெரும் –
ஆபரணங்களுக்கு அழகு கொடுக்கும் பெருமாள் அன்றோ

பாசுரம் -44-நிறம் உயர் கோலமும் பெரும் உருவும்-
துறையடைவு -தலைவி தலைவன் பெருமை கூறுதல் –
பத்துடை அடியவர் -1-3-

பதவுரை

நிறம்–திருமேனி நிறமும்
உயர் கோலமும்–சிறந்த அலங்காரமும்
பேரும்–திருநாமமும்
உருவும்–வடிவமும்
இவை இவை என்று இனனின்னவையென்று
அங்கு அங்கு எல்லாம்–கீழ்ச்சொன்ன நிறம் அலங்காரம் திருநாமம் வடிவம் இவையெல்லாவற்றிலும்
உற உயர் ஞானம் சுடர் விளக்கு ஆய் நின்றது அன்றி–மிகவுயர்ந்த (தமது) ஞானமாகிற தீபத்தால்
சிறிது விளக்கத்தைப் பெற்று நின்ற தொழிய
அறம் முயல் ஞானம் சமயிகள் பேசிலும்–தரும மார்க்கத்தால் முயன்று பெற்ற ஞானத்தையுடைய
வைதிக ஸம்ப்ரதாயஸ்தர்கள் (ஒருவாறு பிறர்க்குச்) சொன்னாலும். (அவர்கள்)
எம்பிரான் பெருமையை–எம்பெருமானுடைய (ஒப்புயர்வற்ற) மஹிமையை
ஒன்றும் பெற முயன்றார் இல்லை–ஒரு வகை யாலும் முற்றும் அளவிட்டுக் கூறப்பெறும்படி முயற்சி செய்தார்களில்லை.

வியாக்யானம்

நிறமுயர் கோலமும்
திருமேனி நிறம் தான் மிகைத்துத் தோற்றும்படியான ஒப்பனையும்

அன்றியே
நிறத்தோடு சேருகையாலே உயர்த்தி பெற்ற
ஒப்பனையும் என்றுமாம்

பேருமுருவமும்
இவ்வழகிலே அகப் பட்டார் பாசுரமிட்டு ஸ்துதிக்கைக்கு ஈடான திரு நாமங்களும்
இவ்வழகுக்கு ஆஸ்ரயமான விக்ரஹங்களும்

இவை இவை என்று
கால பேதத்தாலும்
குண பேதத்தாலும் உண்டான
அதிகாரி பேதத்தாலே
தத் தத் நியதமாக அநு சந்தேயமான ரூபாதி பேதங்களை நிஷ்கர்ஷித்து

அற முயல் ஞானச் சமயிகள் பேசிலும்
தர்ம மார்க்கத்தாலே முயன்று பெற்ற ஞானத்தை யுடையரான
வைதிக ஸாஸ்த்ர ஸமய நிஷ்டரானவர்கள் ஸ்ரோத்தாக்களுக்குப் பாசுரம் இட்டுப் பேசிலும்

அற முயல்
மிகவும் முயல் என்றுமாம்

அங்கு அங்கு எல்லாம்
அந்த அந்த
ரூப
வேஷ
நாம
விக்ரஹங்கள் எல்லாவற்றிலும்

உறவுயர் ஞானச் சுடர் விளக்காய் நின்றதன்றி
அவற்றிலே சிறக்க உயர்ந்து வருகின்ற ஞானமாகிற
தீபத்தாலே விளக்கத்தைப் பெற்று நின்றது ஒழிய

யொன்றும் பெற முயன்றார் இல்லையால்
ஒரு பிரகாரத்தையும் பரிச்சேதிக்கப் பெறும் படி
யத்னம் பண்ணினார் இல்லை

எம்பிரான் பெருமையே
இவை எல்லாவற்றையும் எனக்கு ப்ரகாசிப்பித்த மஹா உபகாரகனுடைய
நிரதிசய மஹாத்ம்யத்தை -என்று
தமக்கு அவன் அருளாலே
இவ் வபரிச்சித்த மஹாத்ம்யம் பிரகாசித்த படியை
அருளிச் செய்தார் யாயிற்று –

——–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
இவ்வாசிகளும் யுண்டாய்ச்
சிலர் அறிந்தார் களுமாய்
அவர்களுக்கு அறியாதாரில் காட்டில் ஓர் ஏற்றம் யுண்டாய்ப் போரா நிற்க
எப்பால் எவர்க்கும் எண்ணும் இடத்து -என்றத்துக்குக்
கருத்து என் என்னில்
அவர்கள் அறிந்தாரான நிலை இது அன்றோ என்று
அதுக்கு உத்தரம் சொல்லுகிறது –

—————–

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி
அவதாரிகை

இதம் இத்தம் என்று
தத் தத் ஸமய நிஷ்டர்களால் அறியலாகாதோ என்ன
வாசா சொன்ன மாத்ரமே
அங்கனே அறியப் போகாது என்று அருளிச் செய்கிறார்

வியாக்யானம்

நிறமுயர் கோலமும்
திருமேனி நிறத்துக்கு மேல் தோன்றும்
ஓர் ஓர் அழகும்

பேரும்
திருநாமங்களும்

உருவமும்
திவ்ய மங்கள விக்ரஹங்களும்

இவை இவை என்று
பேர்கள் இவை
உருவங்கள் இவை
என்று தனித் தனியே நிஷ்கர்ஷித்து

அறமுயல் ஞானச் சமயிகள் பேசிலும்
தர்ம த்வய லீதரிநாப நிவிஷ்டராய்
த்வே வித்யே வேதீ தவ்ய-முண்டக -1-1-4-
என்னப்பட்ட
பரோக்ஷ அபரோக்ஷ ஞானாவாந்தர பெத்த நிஷ்கர்ஷண ப்ரவ்ருத்தர்கள்
சிஷ்யர்களுக்கு ஸப்தத்தால் நிரூபித்துச் சொல்லிலும்

அங்கு அங்கு எல்லாம்
அங்கு அங்காகப் பேசும் இடங்கள் எல்லாம்

உறவுயர் ஞானச் சுடர் விளக்காய் நின்றதன்றி
விசாரிக்க விசாரிக்க அஞ்ஞாத அம்சமே மேல் மேல் விஞ்சி
விபூதி த்வய நித்ய வ்யாப்த ஞான ப்ரப ஆஸ்ரய ஞான ஸ்வரூபமாய்
பர ப்ரகாசமுமாய்
ப்ரகாசாந்தர நிரபேஷ ப்ரகாசமாய் நிலைக்கு நின்றது அன்றி

யொன்றும் பெற முயன்றார் இல்லையால்
இதம் இத்தம் என்று பரிச்சேதிக்க யத்னப்படுவார்
என்றும்
எங்கும்
இல்லையே

சரி -எத்தை -என்ன
எம்பிரான் பெருமையே
இத்தை எல்லாம் எனக்கு அறிவித்து
என்னை அடிமை கொண்டு உபகரித்தவனுடைய
ஸர்வ உத்க்ருஷ்ட ஸ்வரூபாதிகளை ஒன்றும் பெற முயல்வார் இல்லை
என்று அந்வயம்

—————————-

அவதாரிகை

இப்படித் தமக்கு ஈஸ்வரன் தன் மஹாத்ம்யத்தைப் பிரகாசிப்பித்த படியை அனுசந்தித்து
ஸந்துஷ்டாரான அளவிலே –

இவர் திரு உள்ளமானது
ஸம்ஸார ஆர்ணவ மத்யஸ்தரான நமக்கு
பாரித்தால் போலே அவன் உபகரித்தான் என்று
ஹ்ருஷ்டராகா நின்றீர்
சம்சாரத்தில் நின்றும் உத்தீர்ணரானவர்கள் பெறக் கடவ பேறானது
நமக்கு நிலை நிற்கக் கூடுமோ என்று
திரு உள்ளத்துக்கு கருத்தாக

அவன் பூர்ண கடாக்ஷம் பெற்ற நமக்கு குறையில்லை காண்
என்று அருளிச் செய்கிறார் –

பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர் புண்டரீகம் நம் மேல்
ஒருங்கே பிறழவைத்தார் இவ்வகாலம் ஒருவர் நம் போல்
வரும் கேழ்பவருளரே தொல்லை யாழி யஞ்சூழ் பிறப்பும்
மறுங்கே வரப் பெறுமே சொல்லு வாழி மட நெஞ்சமே -45-

பாசுரம் -45-பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர்ப்-
தலைவி தலைவன் நீரில் உதவியதை நினைந்து உரைத்தல் –
ஊனில் வாழ் உயிரே -2-3-

பதவுரை

மட நெஞ்சமே–பேதை நெஞ்சமே!
பெரும் கேழலார்–(பிரளய வெள்ளத்திலழுந்தின பூமியை யெடுப்பதற்கு) மஹா வராஹ ரூபியானவனர்
இ அகாலம்–(ரக்ஷிப்பதற்கு) எளியதல்லாத இக்காலத்தில்
தம்–தம்முடைய
பெரு கண் மலர் புண்டரீகம்–பெரிய செந்தாமரைப்பூப் போன்ற திருக்கண்களை
நம்மேல்–நம் பக்கலில்
ஒருங்கே பிறழ வைத்தார்–ஒரு படிப்பட மிளிரும்படி வைத்தார். (கடாக்ஷித்துக் காத்தருளினார்.
நம் போல் வரும் கேழ்பவர்–(அவரோடு) நம்மைப்போல் பொருந்திய ஸம்பந்தம் பெற்றவர்.
ஒருவர் உளரே–வேறொருத்தர் உண்டோ? (இல்லை)
தொல்லை வாழியம்–(அவரோடு பழமையான வாழ்க்கையும் யாமுடையோம்;
(அப்படிப்பட்ட நமக்கு)
சூழ் பிறப்பு–விடாது சூழ்கிற பிறப்புத் துன்பங்கள்
மருங்கே வர பெறுமே–அருகிலும் வரக்கூடுமோ?
சொல்லு–சொல்லாய்;
வாழி–(கலக்கந் தெளிந்து) வாழ்வாயாக.

வியாக்யானம்

பெரும் கேழலார்
பிரளய ஆர்ணவத்திலே புக்கு அழுந்தின பூமியை எடுக்கைக்கு
அந்த பிரளய ஜலம் கீழ் வலிற்றன வாம் படி
மஹா வராஹமானவர்
ஜலார்த்த ருஷேர் மஹா வராஹஸ்ய –
(தண்ணீரால் நனைந்த அடிவயிறு கொண்டவர் )–ஸ்ரீ விஷ்ணு புராணம் –1-4-24- என்னக் கடவது இறே

தம் பெரும் கண் மலர் புண்டரீகம்
மஹா வராஹ ஸ்புட பத்ம லோசன -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-4-20- என்கிறபடியே
பிரளயத்திலே மூழ்கி
ஸ்ரீ பூமிப்பிராட்டியைக் கண்ட ப்ரீதியாலே
விகஸிதமான கண் அழகு இருந்தபடி

நம் மேல் ஒருங்கே பிறழவைத்தார்
அவளை அன்று பிரளயத்தில் நின்றும் எடுக்கைக்குப் பாரித்தால் போலே
நம்மையும் இஸ் ஸம்ஸார ஆர்ணவத்தில் நின்றும் எடுப்பதாக நம் பக்கலிலே
ஒருபடிப்பட மிளிரும்படி வைத்தார்

இவ்வகாலம்
இக்காலத்தில்

ஒருவர் நம் போல் வரும் கேழ்பவருளரே
இக்கடாக்ஷ விஷய பூதரான நம்மைப் போலே
அவனோடே கேழ் முதலைப் பெற்று இருப்பார் ஒருவர் உளரோ

பிரளய ஆர்ணவமும்
ஸம்ஸார ஆர்ணவமுமான
ஆபத்தின் வாசி போரும் இறே
ஸ்ரீ பூமிப்பிராட்டி பக்கலிலும்
நம் பக்கலிலும் யுண்டான உறவின் வாசி

தொல்லை யாழியம்
(தொல்லை வாழியம் )
இக் கேழ் முதல் யுண்டான உறவு அளவே அன்றியே
பழையதாய்
ஸ்வரூப ப்ரயுக்தமான
வாழ்வு யுடையோம் ஆவோம்

வாழ்வு என்று
அனுபவத்தை நினைக்கிறது
(மிக்க இறை நிலையும் வாழ் வினையும் -ப்ராப்யம் )

சூழ் பிறப்பும் மறுங்கே வரப் பெறுமே
நம்மைச் சூழ்ந்த பிறப்பும்
நம் பரிசரங்களிலே வரவற்றோ

சொல்லு
பகவத் கடாக்ஷம் யுண்டால்
அனுபவம் பெற்றாருக்கு
ஜென்ம சம்பந்தம் யுண்டு என்று கேட்டு அறிவது யுண்டா
சொல்லிக் காண் –

வாழி
உன் கலக்கம் அற்றுத் தெளிந்து வாழ்வாயாக

(ஜாயமான புருஷ -மது ஸூதன கடாக்ஷம்
கண்ணாவான் -அமலங்களாக விழிக்கும்
கருவிலே திருவுடையார் அன்றோ )

மட நெஞ்சமே
ஒடுக்கமுடைய நெஞ்சமே
உன் அறிவில் சங்கோசம் இறே நீ இப்படி சங்கித்தந்து என்று
திரு உள்ளத்தைத் தெளிவித்தார் ஆயிற்று

இப்பாட்டு
கிளவியாம் இடத்து
நாயகனான ஈஸ்வரனுடைய நீருடை (நீரிடை )யுதவியை நினைத்து
உரைத்தது ஆகவுமாம்
அவ்விடத்து
சூழ் பிறப்பும் மருங்கே வரப் பெறுமே -என்ற இடம்
பிரிந்தார் படும் துயர் நமக்கு யுண்டாகாது என்று கருத்து –

——–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

இப்படி ஸ்வ யத்ன சாத்யமல்லாத வஸ்துவை
ஒரு ஹேது இன்றிக்கே இருக்கப்
பெற்றுக் கொடு நின்றேன்
இப்படி இருக்கிற எனக்கு ஒப்பாவார் புறம்பு யுண்டோ
ஸம்ஸார துரிதம் தான் என்னைப் பின்னாட்ட வற்றோ -என்கிறார் –

வியாக்யானம்

பெரும் கேழலார் 
ரஷ்யத்தினுடைய ரக்ஷணத்துக்குத் தன்னை அழிய மாறுமவர்
மஹா வராஹா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-4-26-
ரஷ்யமான பூமியின் அளவல்ல வாயிற்று ரக்ஷகனான தன்னைப் பாரித்த படி

தம் பெரும் கண் மலர் புண்டரீகம்
ஸ்புட பத்ம லோசன

நம் மேல்
குளப்படியிலே கடலைத் தேக்குமா போலே
நம் சிறுமை பாராதே
ஸ்ரீ பூமிப்பிராட்டி பரிகரம் என்ற இது ஒன்றையுமே பார்த்த இத்தனை –

ஒருங்கே
நம் மேல் வைத்த கடாக்ஷத்தை மாற்றிப் பிராட்டி தன் பக்கலிலே வைக்க வென்றால்
அதுவும் அரிதாம் படியாயிற்று
த்வயி கிஞ்சித் ஸமா பந்நே கிம் கார்யம் சீதயா மம -யுத்த -41-4-
இங்குக் கிஞ்சித் ஸமா பத்தியும் பொறுக்கப் போகாது
அங்கே தர்மியை விட்டுப் பிடிக்கிலுமாம்
நீர் மஹா ராஜரான தரம் குலைய உம்மை ஒரு வார்த்தையைப் பையல் சொன்னான் ஆகில்
நீர் தேடிப்போகிற சரக்கு நமக்கு என் செய்ய

பிறழ
மிகுதியைச் சொல்லவுமாம்
கடாக்ஷம் நம்முடம்பிலே மிளிரும்படியாக என்னவுமாம்

வைத்தார்
இதுக்கு நம் பக்கல் ஓர் அடி இல்லை
அவன் இப்படிக்கு கடாக்ஷிக்கக் கண்டது அத்தனை
ஆகிலும் ஒரு

இவ்வகாலம் ஒருவர் நம் போல்
வரும் கேழ்பவருளரே தொல்லை யாழி யஞ்சூழ் பிறப்பும்
மறுங்கே வரப் பெறுமே சொல்லு வாழி மட நெஞ்சமே

————-

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி

அவதாரிகை

வியாக்யானம்

பெற்றதாயிற்று
அப்போது மஹா கிருபா பரித கடாக்ஷ பிரசுரமான அந்தத் திருக்கண்களை

நம் மேல் ஒருங்கே பிறழவைத்தார் இவ்வகாலம்
இக்காலத்தில்
நமக்கு உபாயம் நிறைவேறின காலத்திலேயே தானே என்றபடி
யா –ஸ்மர்த்தா –தம் -அஹம் -ஸ்மராமி–நயாமி பரமாம் கதிம் –என்றுள்ள திருவருளாலே
நம்மில் உள்ள புண்ய பாபங்கள் எல்லாம் ஒருமிக்க அங்க அங்காகாச் சாயாவும் –
அவைகளுக்கு நம்மில் ஒட்டு அறவும்
ஸ்வத் யாகும் பபரீத கடாக்ஷங்களை ஒருமிக்க பிரசரிப்பித்து
அதுகளே நம்மைக் கழலப் பிறழும்படி அக்கண்களால் கடாஷித்தவர்வ்

ஒருவர் நம் போல் வரும் கேழ்பவருளரே
யாரேனும் ஒருவர் நம்மைப் போலே உபாயம் பெற்று இருப்பாரும்
வரும் நன்மை யுடையாரும் யுண்டோ

தொல்லை யாழி யஞ்சூழ் பிறப்பும் மறுங்கே வரப் பெறுமே
அநாதியாய் வருந்தனை வாழ்ச்சியும்
யோனிகள் தோறும் பிறப்பும்
நம்மைப் பற்றி இருப்பார்க்கு வருமோ

சொல்லு வாழி மட நெஞ்சமே
உன் அதிசங்கை நீங்கி
அவனோடே வாழக் கடவாய்
எனக்குப் பவ்யமான நெஞ்சமே –

—————————————————

அவதாரிகை

இப்படி இவர் வார்த்தை கேட்டுத் திருந்தின நெஞ்சு
பகவத் விஷயத்திலே அவஹாகிக்க
இம்மாநஸ அனுபவத்துக்கு அநு ரூபமான பாஹ்ய அனுபவத்தில்
அபி நிவேசம் பிறந்து
அது கிடையாமையாலே யுண்டான தளர்த்தியாலே சொன்ன பாசுரத்தை
நாயகனான ஈஸ்வரனுடைய விஷயத்திலே நெஞ்சைத் தூதுவிட்ட
நாயகி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

மட நெஞ்சம் என்றும் தமது என்றும் ஓர் கருமம் கருதி
விட நெஞ்சை உற்றார் விடவோ அமையும் அப் பொன் பெயரோன்
தட நெஞ்சம் கீண்ட பிரானார் தமது அடிக் கீழ் விடப் போய்
திட நெஞ்சமாய் எம்மை நீத்து இன்று தாறும் தாறும் திரிகின்றதே -46-

பாசுரம் -46-மட நெஞ்சம் என்றும் தமது என்றும் –
நெஞ்சைத் தூது விட்ட தலைவி இரங்குதல் –
அருள் பெறுவார் அடியார் -10-6-

பதவுரை

மடம் நெஞ்சம் என்றும்–பேதைமையை யுடைய மனமென்று எண்ணியும்
தமது என்றும்–நமக்கு அந்தரங்கமானதென்று எண்ணியும்
ஓர் கருமம் கருதி–ஒரு காரியத்தை யுத்தேசித்து
நெஞ்சைவிட உற்றார்–மனத்தைத் தூதுபோக விடத் துணிந்தவர்
விடவோ அமையும்–அத்துணிவை விட்டொழிதல் தகுதி;
(ஏனெனில்)
அ பொன் பெயரோன்–அந்த (கொடிய) இரணியனுடைய
தட நெஞ்சம்–பெரிய மார்பை
கீண்ட–எளிதிற் பிளந்தருளி
பிரானார் தமது–பராக்ரமசாலியான எமபெருமானுடைய
அடிக்கீழ்–திருவடிகளிலே
விட–(யாம் எமது நெஞ்சைத்) தூதுவிட (அது)
போய்–விரைவாகச் சென்று
திடம் நெஞ்சம் ஆய்–உறுதியான கருத்துள்ளதாய்
எம்மை நீத்து–(தூதுவிட்டவரும் தனக்கு உடையவருமான) எம்மை நினையாமற் கைவிட்டு
இன்று தாறும்–இன்று வரையில்
திரிகின்றது–(அப்பெருமானையே தொடர்ந்து உல்லாஸமாகத்) திரிந்து கொண்டிருக்கின்றது.

வியாக்யானம்

மட நெஞ்சம் என்றும்
மடப்பத்தால் தமக்கு விதேயமாகப் போந்த நெஞ்சு என்றும்

தமது என்றும்
விதேயத்வ மாத்ரம் அன்றிக்கே
கரணத்வ ப்ரயுக்தமான சேஷத்வ ஸம்பந்தம் யுண்டு என்றும்

ஓர் கருமம் கருதி
இது புறம்புள்ளாரைக் கொண்டு கொள்ளும் கார்யம் இன்றியே
அந்தரங்க பூதரைக் கொண்டு கொள்ளுவதொரு கார்யம் என்று நினைத்து

விட நெஞ்சை உற்றார்
நெஞ்சைப் போக விடுவதாக அறுதி இட்டவர்கள்

விடவோ அமையும்
அந்த அறுதிப்பாட்டைத் தவிர அமையும்

ஓ -என்று
இழவைக் காட்டுகிறது

நெஞ்சிலும் அண்ணியாரும் யுண்டோ
(அருகிலே உள்ளார் உண்டோ )
தவிருகிறது என் என்னில்

அப் பொன் பெயரோன் தட நெஞ்சம் கீண்ட பிரானார் தமது அடிக் கீழ் விடப்
துர்மானத்தாலும்
பகவத் பாகவத ப்ரத்வேஷத்தாலும் ப்ரஸித்தனாய்
பொன்னுக்குப் பர்யாயமான ஹிரண்யன் என்னும் பேரை யுடையவனுடைய
அஹங்காரம் குடி கொண்ட இடமுடைய ஹிருதயத்தை
அநாயாஸேந பிளந்த மஹா உபாகாரகனான
ஸர்வேஸ்வரனுடைய திருவடிகளிலே போகவிட

இத்தால்
ஆஸ்ரயித்தவர்களுக்கு பிரபல விரோதிகள் யுண்டாகிலும்
அநாயாஸேந கழித்துக் கொடுக்குமவன் ஆகையாலே
நெஞ்சைப் போக விடுகைக்கு பற்றாசாகாச் சொன்ன படி

போய்த் திட நெஞ்சமாய்
விட்டதே பற்றாசாக
விஷய வை லக்ஷண்யத்தாலே சடக்கெனப் போய்
த்ருட அத்யவசாய யுக்தமாய்

இவ்விடத்தில்
நெஞ்சு என்றது
வியவசாயத்தை

எம்மை நீத்து
கார்யம் கொள்ளப் போக விட்ட
எங்களை நினையாமல் விட்டு

இன்று தாறும் திரிகின்றதே –
இன்று அளவும் முக்தரைப் போலே
அனுபவமே யாத்ரையாய்
அநு ஸஞ்சரணம் பண்ணித் திரியா நின்றது –

இத்தால்
தம்முடைய திரு உள்ளம் மீட்க அரிதாம் படி
பகவத் விஷயத்திலே அவஹாகித்தமையை
அருளிச் செய்தார் ஆயிற்று

———

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

கீழ் –
ஸர்வேஸ்வரன் மேல் விழுவதற்கும்
அல்லேன் என்னாதே ஆபி முக்யத்தைப் பண்ணித் தமக்கு உடன்பட்டது
என்று நெஞ்சைக் கொண்டாடினார்
இப்போது
நெஞ்சை இன்னாதாகிறார்
அது என் என்னில்

ஆசை கரை புரளும்படு அதுக்குத் தான் கிருஷி பண்ணி
அவ்வாசைக்கு இரை இட்டு
இனி பிராப்தியால் அல்லது நடவாத ஸமயத்தில் அதுக்கு ஸஹ கரியாதே
தன்னைக் கொண்டு அகல நின்றது என்று
இன்னாதாகிறார் –

இது ஸஹ கரிக்கையாவது என் என்னில்
பந்த ஹேதுவானவோ பாதி மோக்ஷ ஹேதுவாவும் இறே
ர ரஷே தர்மேண பாவேந சைவ -கிஷ்கிந்த-1-128-என்கிறபடியே
பிராப்தி அளவும் செல்ல முகம் காட்டி ஓக்க நின்று
நீ பட்டது எல்லாம் நான் பாட்டன் -என்ன வேணும் இறே

அவனை உபாயம் என்கிறது
ப்ராப்த அப்ராப்த விவேகம் பண்ணி
நிஷ்கர்ஷித்துச் சொல்லும் வார்த்தை இறே

அவனே உபாயமாக நிற்கச் செய்தே இத்தலையில் வருவதும் யுண்டு இறே
அவை தான் தனித்து நின்று பேற்றுக்கு உடலாக மாட்டாமையாலே
ஒன்றாகச் சொல்ல மாட்டாது ஒழிகிறது அத்தனை

இத்தலையால் வருமவை தான் எவை என் என்னில்
பேற்றுக்குச் சேதனன் தான் உளனாக வேணுமே
தான் உளன் என்னா உபாயத்தில் அந்வயியான் இறே
புருஷார்த்தத்தை அறிந்து ஸ்வீ கரிக்கைக்கு நெஞ்சு வேணும் இறே

ஈத்ருசங்கள் சில யுண்டு இறே -இத்தலையிலே வருவன
இவை தான் உண்டாகா நிற்கச் செய்தேயும்
தான் உபாய சரீரத்திலே நிவேசியாதே ஸந்நிதி மாத்ரத்தாலே உபகாரகங்களாய் நிற்க்க கடவது

அவன் உபாயமாய்
ஸித்த ஸ்வரூபனுமாய் இருக்கச் செய்தே
இவனுக்கு சம்சாரம் அநு வர்த்திக்கிறதுக்கு ஹேது ஈத்ருசங்கள் இல்லாமை இறே
இப்படி பிராப்தி அளவும் நின்று முகம் காட்டித் தரிப்பிக்க வேண்டி இருக்க
அது செய்யாமையாலே நெஞ்சை இன்னாதாகிறார் –

இன்று தாறும் தாறும் திரிகின்றதே

வியாக்யானம்
மட நெஞ்சம் என்றும் தமது என்றும்
நாட்டிலே இங்கனேயும் பிரமம் யுண்டு-தம் தாம் நெஞ்சு தம் தனக்கு பவ்யம் என்று
சேதனன் தான் புருஷார்த்தத்தை சாதித்துக் கொள்ளுகைக்கு உறுப்பாக ஸர்வேஸ்வரன்
இவற்றை இவனோடு கையடைப்பாக்கி வைக்கையாலே இவற்றைத் தம் தாம் என்று இருப்பார்கள் இறே
இச்சரீரத்தைக் கொடுத்தவோ பாதி
சரீர ஏக தேசமான னென்கையும் புருஷார்த்தை யறிந்து ருசி பண்ணுகைக்காகக் கொடுத்தான்

அங்கே புக்கவாறே அவன் ஸ்வ பாவத்தைப் பஜித்தது
பிராட்டியுடைய இரண்டாம் பிரிவு போலே
அவன் தான் போகிற போது இவன் தாழ்க்க மாட்டான் என்று இறே போயிற்று

அவன் ஸ்வ பாவத்தைப் பஜித்தது என்று கொடுமை சொல்லுகிற இதுக்கு
கீழ் உபகாரம் சொன்னதோடு சேர்த்தி என் என்னில்
அங்கு உபகாரத்தைப் பற்றிச் சொல்லிற்று
இங்கு இவ்வாற்றாமையாலே முகம் காட்டாமையான அத்தைப் பற்றிச் சொல்லிற்று

எம்மை நீத்து
என்னை ஸந்யசித்தது

இன்று தாறும் தாறும் திரிகின்றதே
நம்மை யல்லது தஞ்சம் இல்லாதாரைப் பொகட்டுப் போந்தோம் என்னும் அனுதாபத்தோடே
ஓர் இடத்தே இழந்து கிடந்தது என்று கேட்கப் பெற்றதாகிலுமாம் இறே
தான் நினைத்த படி இன்று அளவும் ஸஞ்சரியா நின்றது –

————-

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி

அவதாரிகை

இந்நெஞ்சையே அவர் வரவுக்கு தூது திடீர் என்றவர்களுக்கு
இதில் ஸ்வ பாவத்தை அருளிச் செய்கிறார்

வியாக்யானம்

மட நெஞ்சம் என்றும் தமது என்றும் ஓர் கருமம்  கருதி விட நெஞ்சை உற்றார் விடவோ அமையும்
தங்கள் நெஞ்சு தங்களுக்கு விதேயம் என்றும்
நெஞ்சு தான் தங்களது என்றும்
அத்யவசித்து
இதுவும் மிகவும் அந்தரங்கர் செய்யுமது என்று எண்ணி நெஞ்சை அதுக்காக விட நினைத்தார்
அந்த நினைவை விடத்தக்கதே

அப் பொன் பெயரோன் தட நெஞ்சம் கீண்ட பிரானார் தமது அடிக் கீழ் விடப்
நான் அந்தப் பொன் பெயர் உள்ளவனுடைய பகவத் பாகவத த்வித அத்வேஷங்களால்
அகன்ற மார்வை விதாரணம் செய்த
மஹா உபகாரகருடைய திருவடிகளில் என் நெஞ்சைப் போக விட

போய்திட நெஞ்சமாய்
சடக்கெனப் போய்
என்னை விடுமத்திலும்
அவரையே தொடர்வதிலும்
அத்யவசாய தார்ட்யம் யுடையதாய்

எம்மை நீத்து
என்னை நிராகரித்து

இன்று தாறும் தாறும் திரிகின்றதே
தோளில் இட்ட திருத்துழாய் தாரும்
தானுமாய்
அவரோடே இன்றும் அநு சஞ்சரண ஸீலமாய் இரா நின்றதே

ஆகையால் ஆர்க்கும் தன் நரேஞ்சு என்று தூது விடலாகாது என்று –

————–

அவதாரிகை

இப்படி மானஸ அனுபவம் நடக்க
பாஹ்ய அனுபவம் ஸித்தியாமையாலே வந்த தளர்த்தியாலே
லௌகிக பதார்த்த தர்சனம் ஸ்மாரகமாய்க் கொண்டு
இவரை ஈடுபடுத்தின படியைக் கண்டு
ஸூஹ்ருத்துக்கள் நொந்து உரைத்த பாசுரத்தை
வாடைக்கும் மதிக்கும் ஆற்றாது
வளை இழந்த தலை மகளைக் கண்டு
பாங்கி இரங்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

திரிகின்றது வடமாருதம் திங்கள் வெந்தீ முகத்து
சொரிகின்றது அதுவுமது ,கண்ணன் விண்ணூர் தொழவே
சரிகின்றது சங்கம் தண்ணம் துழாய்க்கு வண்ணம் பயலை
விரிகின்றது முழு மெய்யும் என்னாம் கொல் என் மெல்லியற்கே –47–

பாசுரம் -47-திரிகின்றது வட மாருதம் திங்கள் வெம் தீ –
பிரிவாற்றாது வருந்தும் தலைவி நிலை கண்டு செவிலி இரங்குதல் –
நாங்கள் வரி வளை -8-2-

பதவுரை

வட மாருதம்–வாடைக் காற்று
திரிகின்றது–உலாவுகிறது;
திங்கள்–(குளிர்ந்த இயல்பையுடைய) சந்திர மண்டலம்
வெம் தீ–கொடிய நெருப்பை
முகந்து சொரிகின்றது–வாரி யிறைக்கின்றது:
அதுவும் அது–முற்சொன்ன வாடைக் காற்றும் அப்படியே நெருப்பை வீசுகின்றது;
கண்ணன்–கண்ண பிரானுடைய
விண் ஊர்–பரமபதமாகிய வாஸஸ்தாநத்தை
தொழவே–இடைவிடாது தொழுது அநுபவிக்க வேணுமென்று ஆசைப்பட்டு அது கிடையாமையால் வந்த மெலிவாலே
சங்கம்–(கையிலணிந்துள்ள) சங்கு வளை.
சரிகின்றது–கழன்று விழுகின்றது;
தண் அம் துழாய்க்கு–(அவனது) குளிர்ந்த அழகிய திருத்துழாயினிடத்தில் வைத்த ஆசையினால்
(ஆசைப்பட்டு அது கிடையாமையினாலே)
முழு மெய்யும்–உடம்பு முழுவதிலும்
வண்ணம் பயலை விரிகின்றது?–(இயற்கையான மாமை நிறம் நீங்கிப்) பசுப்பு நிறம் பரப்புகின்றது (இனி)
என் மெல்லியற்கு–மென்மையான தன்மையை யுடைய என் மகளுக்கு
என் ஆம் கொல்–யாதாய் முடியுமோ.

வியாக்யானம்
திரிகின்றது வடமாருதம்
வாடைக்காற்று உலவா நின்றது –
கொல்லும் யானை திரிகின்றது -என்னுமா போலே

திங்கள் வெந்தீ முகத்து சொரிகின்றது
பூர்ண சந்த்ரனானது
லௌகிக அக்னி தண்ணீர் என்னும்படியான கொடிய நெருப்பைக் குடத்தை இட்டு
முகந்து சொரிவாரைப் போலே சொரியா நின்றது

அதுவுமது ,
முன்பு திரிகிற வடமாருதமும் அப்படியே

கண்ணன் விண்ணூர் தொழவே சரிகின்றது சங்கம்
கிருஷ்ணனுடைய பரம வ்யோம ஸப்த வாஸ்யமான பரமபதத்தை
நித்ய அஞ்சலி பந்தம் -மோக்ஷ தர்மம் -1-64-
பண்ணி அனுபவிக்க வேணும் என்கிற மெலிவாலே வளை சரியா நின்றது

சரிகின்றன -என்றும்
சொல்லுவர்

தண்ணம் துழாய்க்கு வண்ணம் பயலை விரிகின்றது முழு மெய்யும்
முழு மதியாலும்
வாடையாலும்
யுண்டான வெம்மை தணிக்கைக்குக் குளிர்ந்த திருத்துழாயில்
அபி நிவேசத்தாலே ஸ்வா பாவிகமான நிறத்தை அமுக்கி
பயலை நிறமானது உடம்பு எங்கும் பரவா நின்றது –

என்னாம் கொல் என் மெல்லியற்கே
ஆற்ற மாட்டாத ம்ருது ஸ்வ பாவையாய்
எனக்குத் துணையான இவளுக்கு என்னாய் முடியுமோ
என்று வெறுத்தாள் ஆயிற்று –

இத்தால்
வாடையும் திங்களும் வெந்தீயும் சொரியும் என்கையாலே
ஆஸ்வாஸ கரருமாய்
ப்ரகாஸ கரருமாய்க் கொண்டு
லோக உபகாரகரான சீதள ஸ்வ பாவரும்
பகவத் விஸ்லேஷ தசையில் தாப ஹேதுவாவர் என்ற படி

கண்ணன் -இத்யாதியாலே
ப்ராப்ய தேசத்தில் அபி நிவேசம் பிறந்தால் தன் கையில் யுண்டான
மினுக்கமும் குலைந்து
(கை வளையும் மேகலையும் காணேன் )
அத்தலையில் போக்யதையில் யுண்டான ப்ராவண்யத்தாலே
அசாதாரண ஆகாரமும் அந்யதா பாவிக்கும் படியான
ஆர்த்தி அதிசயத்தைச் சொல்லுகிறது

என்னாம் கொல் -இத்யாதியாலே
தங்களுக்கு உஜ்ஜீவன ஹேதுவானவருக்குப் பிறந்த ஆர்த்தி என்னாய் முடிகிறதோ என்று
ஸூஹ்ருத பூதர் வெறுத்து யுரைத்தார் ஆயிற்று

————-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

கலந்து பிரிந்து பிரிவாற்றாமை நோவு படுகிற தலை மகளைக் கண்ட திருத்தாயார்
பாதகங்களின் பெருமையையும்
இவள் மார்த்வத்தையும் அநு சந்தித்து
என்னாய் விளையக் கடவதோ -என்கிறாள்

வியாக்யானம்

திரிகின்றது வட மாருதம்
மத்த கஜமானது ஆளைக் கணிசித்து உலாவுமாப் போலே உலவா நின்றது –
நாயகனுடைய தண்ணளி அற்ற ஸமயம் பார்த்து நலிவதாகத் திரியா நின்றது –

அன்றிக்கே
வாடையானது குளிரக் கடவது இறே
அந்த சைத்யம் மாறாடிச் சுடா நின்றது –

திங்கள் இத்யாதி
இதில் ஸ்வ பாவம் அனுபவித்த வாறே நாம் தான் பேசாது இருக்கிறது என் என்று
சந்திரனும் நெருப்பை முகந்து சொரியத் தொடங்கினான்

வெம் தீ
நெருப்புச் சுடுமாப் போல் அன்று இறே நீர் கொதித்தால் சுடுவது

முகந்து சொரிகின்றது
அங்குக் குறைவற்றுக் கிடந்த படி

அதுவுமது
வாடையோ பாதியும்
சந்திரனோ பாதியும்
பாதகமாவன சில யுண்டு இறே
ஒரு கடலோசை
அன்றில் -என்றால் போலே

———–

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமிகள்

குளிர்ந்து அழகிய திருத்துழாயைப் பெற அபி நிவேசத்தாலே
விண்ணில் யுள்ள அவனால் பெற்ற வர்ணத்தை அமுக்கிப்
பசுமை நிறமானது உடம்பு எங்கும் பரவா நின்றது

என்னாம் கொல் என் மெல்லியற்க்கே
ம்ருது ஸ்வ பாவையான என் மகளுக்கு என்னாய் முடியுமோ –

———————————–

அவதாரிகை

இப்படி ஸூஹ்ருத பூதரும் வெறுக்கும் படி ஆர்த்தி விஞ்சின படியைக் கண்ட
பார்ஸ்வஸ்தரானவர்கள்
பரமபத அனுபவத்தில் த்வரிக்கக் கடவீரோ
உம்மைக் கொண்டு லோகத்தைத் திருத்துகைக்காகக் கவி பாடுவித்துக் கொள்ளுகைக்கு
ஒரு முகத்தாலே ஈஸ்வரன் வைத்தான் இத்தனை காணும் -என்று
இவரை ஆஸ்வஸிப்பிக்க
அவர்களைக் குறித்து ஸ்வ நிகர்ஷாதிகளை அருளிச் செய்கிறார் –

மெல்லியல் ஆக்கைக் கிரிமி குருவில் மிளிர் தந்தாங்கே
செல்லிய செல்கைத் துலகை என் காணும் என்னாலும் தன்னைச்
சொல்லிய சூழல் திருமாலவன் கவி யாது கற்றேன்
பல்லியின் சொல்லும் சொல்லாக் கொள்வதோ வுண்டு பண்டு பண்டே-48 –

பாசுரம் -48-மெல்லியல் ஆக்கிக் கிருமி -நன்னிமித்தம் கண்டு -பல்லிக்குரல் கேட்டதை –
தான் ஆறி இருத்தலை தலைவி தோழிக்கு கூறுதல் –
என்றைக்கும் என்னை -7-9–

பதவுரை

மெல் இயல்–மென்மையான தன்மையையுடைய
ஆக்கை–உடம்பை யுடைத்தான
கிருமி–புழுவானது
குருவில்–புண்ணிலே
மிளிர் தந்து–வெளிப்பட்டு
அதுவே–அவ்விடத்திலேயே
செல்லிய–நடமாடும்படியான
செல்கைத்து–ஸ்வபாவத்தையுடையது; (அது)
உலகை என காணும்–உலக நடத்தையை எங்ஙனம் அறியும்?
(அறியமாட்டாது; அதுபோல)
என்னாலும்–என்னைக் கொண்டும்.
தன்னைச் சொல்லிய–தன்னைப் பாடுவித்த
சூழல்–சூழ்ச்சியை யுடைய
திருமாலவன்–ச்ரிய பதியான அப்பெருமானுடைய
கவி–புகழுரையை
யாது கற்றேன்–(யான்) யாதென்று அறிவேன்?
பல்லியன் சொல்லும்–பல்லியின் வார்த்தையையும்
சொல் ஆ கொள்வதோ–(பின் நிகழ்ச்சியை முன்குறிக்குஞ்) சொல்லாகக் கொள்ளுதலோ
பண்டு பண்டே உண்டு–மிக வெகு காலமாகவுள்ளது

வியாக்யானம்

மெல்லியல் ஆக்கைக் கிரிமி குருவில் மிளிர் தந்தாங்கே செல்லியசெல் கைத்துலகை என் காணும்
ம்ருது ஸ்வ பாவமான சரீரத்தை யுடைத்தான கிரிமியானது
புண்னிலே கிளர்ந்து
அவ்விடத்திலே நடத்தக் கடவதான ஸமஸ்த வியாபாரத்தையும் யுடைத்தானது
லோக வியாபாரத்தை எங்கனே அறியும் படி

இத்தால்
அல்ப ஞான சக்திகனான நான்
லோகத்தைத் திருத்துகையாவது என் -என்கிறார் ஆயிற்று

ஆனாலும் உம்மைக் கொண்டு கவி பாடுவித்துக் கொள்ளா நின்றானே என்ன
என்னாலும்
இப்படி அத்யந்த அபக்ருஷ்டமான
ஜன்ம
வித்யா
விருத்தங்களை யுடைய என்னாலும்

தன்னைச்
அத்யந்த விலக்ஷணமாய்
அபரிச்சின்னமான ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்களை உடையவனை

சொல்லிய சூழல்
சொல்லிக் கொண்ட சூழ்கையை (சாமர்த்தியத்தை) யுடைய
அதாவது
தத்வமான தான் சொல்லுமதிலும்
தத்வ தர்சிகள் சொன்னால் பரிக்ரஹம் யுண்டாம் என்கிற விரகு யுடையவன் -என்கை

(வேதம் பெருகின சம்த்ராம்பு போல் இவர் வாயாதனவாறே
லஷ்மீ நாதாயோ சிந்து ஸ்வாதந்ரியம் போக்கி -நாதமுனிகள் மலை –
காட்டாறு -ராமானுஜர் காட்டும் ஏரி -சிம்ஹாசனபதிகள் மூலம் நம்மிடம் –
மண் குடம் போல் அல்லவே பொன் குடம்
ஐஞ்சாம் ஒத்தும் அறு மூன்றும் கழி யுண்ணுமே )

திருமால்
அர்த்தோ விஷ்ணுரியம் வாணீ -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-3-18-என்கிறபடியே
ஸப்த அர்த்தங்கள் இரண்டும் அவளும் தானுமான ஸ்ரீ லஷ்மீ பதியானவன் –

அவன் கவி
அவனுடைய கவி
ஸப்த அர்த்தங்கள் தான் ஆனவோ பாதி
கவி பாட்டுண்டானும் தானேயாய் இருக்கை

யாது கற்றேன்
அது நான் கற்றேன் அத்தனை
என் முன் சொல்லும் -திருவாய் -7-9-2- என்கிறபடியே
அவன் முன்னுருச் சொல்ல
பின்னுருச் சொன்னேன் அத்தனை –

ஆனால் என்
நீர் பாடின கவி என்று ஈஸ்வர ஹ்ருதயத்திலும் யுண்டாய்
லோக பரிக்ரஹமும் பிறந்து நடவா நின்றதே என்ன

பல்லியின் சொல்லும் சொல்லாக் கொள்வதோ வுண்டு
ஷூத்ர ஜந்துவினுடையதாய் இருபத்தொரு ஸ்வைர ஸப்தத்தையும்
தம் தம்முடைய பெரிய நன்மைக்கு ஸூசகமாக லோகத்திலே கொண்டு போகிற இது யுண்டே

பண்டு பண்டே-
இது அநாதியாய்ப் போருகிற மரியாதை இறே என்று
தம்முடைய நிகர்ஷத்தைப் பாராதே
தம்மை ஈஸ்வரன் அங்கீ கரித்து
பாரதந்த்ர்யமே பற்றாசாக வாசிக கைங்கர்யத்தைக் கொண்டபடி
அருளிச் செய்தார் ஆயிற்று –

———

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

இஸ் ஸம்ஸாரத்திலே வைத்தச இதுக்கு ஹேது என் என்று இறே
கீழ் நொந்தது
இவருக்கு இவ்விடம் நிலம் கொதிப்பது -ஸ்வார்த்தமாக இருக்கிறோம் என்று இருக்கில் இறே
அங்கன் இன்றிக்கே
நமக்காக இருக்கிறோம் -என்னும் இடத்தை அறிவிக்கவே இவரைத் தரிப்பிக்கலாம்
மேல் இவர் போய்ப் பெற இருக்கிற ஸ்வரூபமும் அதுவே இறே என்று பார்த்தாராய்

ஆழ்வீர் நீர் வாரீர்
உமக்கு இங்கே ஒரு ஸம்பந்தம் யுண்டாய் இருக்கிறீர் அல்லீர்
நமக்காகவே இருக்கிறீர் அத்தனை
நாமும் ரசித்து
நம்முடையாரும் ரசிக்கும்படியாக உம்மைக் கொண்டு சில பிரபந்தம் தலைக் கட்டுவதாகப் பார்த்தோம் –
அதுக்காக வைத்தோம் அத்தனை காணும் -என்று அறிவிக்க

ஆனால் தட்டு என்
நம் ஸ்வரூபத்தோடு சேர்ந்ததுமாய் -நாமும் பெற இருக்கிறதுவுமாகில் அதில் குறை என்
ஆனாலும் நம்மைக் கொண்டு இத்தைத் தலைக் கட்ட நினைப்பதே
இதுக்கு ஈடான ஞானமாதல் -மற்றும் வேண்டும் உபகரணங்களாதல் ஒன்றும் இன்றிக்கே இருக்க
நம்மைக் கொண்டு இத்தைத் தலைக் கட்ட நினைப்பதே
இது ஒரு நீர்மையே என்று ஸர்வேஸ்வரன் தம்மை
விஷயீ கரித்த படியைக் கண்டு விஸ்மிதராய் விஷயீ காரத்தைப் பேசுகிறார் –

வியாக்யானம்

மெல்லியல் ஆக்கை
இவனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளில் என்னுடைய ஞானத்துக்கு விஷயமாவது
ஏக தேசம் கிடீர் நான் அறிவது ஒன்றும் இல்லை –
இப்படி இருக்கிற என்னைக் கொண்டு கிடீர் இத்தைத் தலைக்கட்டிற்று என்கிறார் –

மெல்லியல் ஆக்கைக் கிருமி
ம்ருது ஸ்வ பாவமான சரீரத்தை யுடைய கிருமியானது
இமையோடு இமை பொருந்தும் போதைக் காற்றுப்படப் பொறாதே
முடியும்படி மிருதுவான சரீரத்தை யுடைய ஒன்றாக எண்ணப் படாதே ஷூத்ர ஜந்துவானது

குருவில் மிளிர்ந்தது
அந்த க்ரந்தியிலே மிளிர்ந்து
உத்பத்தியும் விநாசமுமேயாய்
நடுவு பட்டதொரு காலம் இன்றிக்கே தோற்றி மாயும்படியாலே மிளிர்ந்து என்கிறது –
பஞ்சாக்னி வித்யையிலே சொல்லுகிறபடியே
புருஷார்த்த உபயோகியாய் இருபத்தொரு சரீரம் பரிக்ரஹிக்கில் இறே பிறந்தது என்னாலாவது

ஆங்கே
அந்தக் கிரந்தியிலே

செல்லிய செல் கைத்து
செல்லுகிற செல்கையை யுடைத்து
நடக்கிற யாத்திரையை யுடைத்து
உத்பத்தியும் ஜீவனமும் நடுவுபட்ட நாளில் பரிபவமும் விநாசமும்
இது அடைய அங்கேயாய் இருக்கும் இறே
அங்கே இறே அழகு செண்டேறுவது
அந்தக்கிரந்தியிலே தன் வியாபாரம் எல்லாம் ராஜ மார்க்கத்தில் போலே நிராபாதமாய் நடப்பது என்றபடி

செண்டேறுகை யாவது
ராஜ மார்க்கத்தில் ஸஞ்சரிக்கை
நெல் காய்க்கும் மரம் ஏது -என்று இருக்குமா போலே -அந்தக் கிரந்திக்கு அவ்வருகு அறியாத இது –

உலகை என் காணும்
லோக விருத்தாந்தத்தை ஒன்றை அறியவற்றோ
இது கிடீர் நான் தன்னளவில் நின்ற நிலை

ஏது உண்டு
அத்தை அவனே எனக்குச் சொல்ல
அத்தைச் சொல்லப் பெற்றேன் காண்

இப்படி நீர் சொன்னத்தை பிராமண தர்மமாக நாங்கள் கொள்ளா நின்றோமே என்ன

பல்லியின் சொல்லும் சொல்லாக் கொள்வதோ யுண்டு பண்டு பண்டே
பல்லி சொன்னாலும் முன் முற்காலத்திலும்
அபிஞ்ஞர் ஸ்வ ஸ்வ உத்தேஸ்ய ஸித்தியிலே அத்தை பிராமணத்வேந கைக் கொள்ளுவது யுண்டே –
இது இன்று முதலோ –

———–

அவதாரிகை

இப்படி பூர்வ உபகாரத்தைப் பேசினவர்
தமக்கு முன்பு அநு விருத்தமான அனுபவ அலாப கிலேசத்தாலே
தமக்குப் பிறந்த மோஹ அந்தகாரத்தின் மிகுதியை
ஸூஹ்ருத பூதருக்கு அருளிச் செய்த பாசுரத்தை
இருளுக்கு ஆற்றாத் தலைமகள் பாங்கிக்கு யுரைத்த பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

பண்டும் பல பல வீங்கிருள் காண்டும் இப்பாயிருள் போல்
கண்டும் அறிவதும் கேட்பதும் யாமிலம் காள வண்ண
வண்டுந்துழாய் பெருமான் மதுசூதனன் தாமோதரன்
உண்டும் உமிழ்ந்தும் கடாய -மண்ணேர் அன்ன ஒண்ணுதலே -49 –

பாசுரம் -49-பண்டும் பல பல வீங்கு இருள் காண்டும் –
தலைவி இருளுக்கு ஆற்றாது தோழியிடம் பேசல் –
ஊரெல்லாம் துஞ்சி -5-4-

பதவுரை

காள வண்ணம்–கறுத்த திருநிறத்தையும்
வண்டு உண் துழாய்–வண்டுகள் தேனுண்ணப்பெற்ற திருத்துழாய் மாலையைமுடைய
பெருமான்–ஸர்வேச்வரனும்
மதுசூதனன் தாமோதரன்–மதுஸூதநனென்றும் தாமோதரனென்றும் திருநாமங்களை யுடையவனுமான திருமால்
உண்டும்–(பிரளயகாலத்திலே) வயிற்றினுட்கொண்டும்
உமிழ்ந்தும்–(பிரளயம் நீங்கின வளவிலே) வெளிப்படுத்தியும்
கடாய–பாதுகாக்கப் பெற்ற
மண்–பூமியினுடைய
ஏர்–அழகை
அன்ன–ஒத்த
ஒள் நுதலே–ஒளிபொருந்திய நெற்றியை யுடையவளே!
பண்டும்–முன்பும்
பலபல–மிகப்பலவான
வீங்கு இருள்–பெரிய இருட்பொழுதுகளை
காண்டும்–பார்த்திருக்கிறோம்;
இ பாய் இருள்போல்–இந்தப் பரந்த இருட்பொழுது போல
கண்டும் அறிவதும் கேட்பதும்யாம் இலம்–யாம் (வேறொரு பொருளைக்) கண்டறியவதும் கேட்டறிவதும் இல்லோம்.

வியாக்யானம்

பண்டும் பல பல வீங்கிருள் காண்டும்
முற்காலத்திலும் பஹு விதமான பெரிய இருள் கண்டு அறிவுதோம்

இப்பாயிருள் போல் கண்டும் அறிவதும் கேட்பதும் யாமிலம்
இந்தப் பரந்த இருள் போலே நாங்கள்
கண்டதுவும் இல்லை
அறிவதும் இல்லை
கேட்பதுவும் இல்லை

காள வண்ண வண்டுந்துழாய் பெருமான்
கறுத்த வண்ணத்தை யுடையவனாய்
வண்டு மது பானம் பண்ணுகிற திருத்துழாயை யுடையவன் ஆகையால்
ஸர்வ சேஷியானவன்
(திருத் துளஸீ மாலாதாரான் தானே ஸர்வ சேஷீ )

காள வண்ண வண்டு -என்று
வண்டின் நிறம் ஆகவுமாம்

மதுசூதனன்
மதுவை நிரசிகையாலே ஆஸ்ரித விரோதிகளை போக்குமவன்

தாமோதரன்
ஆஸ்ரித பவ்யனானவன்

உண்டும் உமிழ்ந்தும் கடாய -மண்ணேர் அன்ன ஒண்ணுதலே
பிரளய ஆபத்தில் திரு வயிற்றிலே வைத்தும்
அநந்தரத்திலே உமிழ்ந்தும்
ரக்ஷிக்கப் பட்டுப் போந்த பூமியினுடைய அழகுக்கு
ஸத்ருசமான ஒள்ளிய நுதலை யுடையவளே

(மண்ணேர் அன்ன
நேர் அழகு
அன்ன -நிகரான )

கடாய -என்று
நடத்துதலாய் நிர்வஹிக்கை
அதாவது ரஷிக்கை

அன்றியே
கடாய் என்று
கடத்தலாய்
அளக்கையைச் சொல்லுகிறது ஆகவுமாம் –

இத்தால்
முன்பு யுண்டான விஸ்லேஷ ஜெனிதமான மோஹ பரம்பரைகள் அளவன்றியிலே
இப்போது அதிசயிதமான மோஹ அந்தகாரம் போலே
ஸ்ரவணத்துக்கும்
மனனத்துக்கும்
அபரோஷிக்கைக்கும்
விஷயமாய் இருப்பது ஓன்று முன்பு கண்டு அறிவது இல்லை என்று
வெறுத்து யுரைத்தார் ஆயிற்று –

காள -என்று தொடங்கி
மண்ணேர் அன்ன ஒண் நுதலே -என்கையாலே
விலக்ஷண விக்ரஹத்தையும் -(காள வண்ண )
போக்யத்தையும் -(வண்டுந்துழாய் )
சேஷித்வத்தையும் -(பெருமான் )
விரோதி நிவர்த்தகத்வத்தையும் -(மது ஸூதனன் )
சீல அதிசயத்தையும்-(தாமோதரன் )
யுடைய ஸர்வேஸ்வரன்
ஸர்வ பிரகார ரக்ஷணம் பண்ணின விபூதியும் போலி என்னும் படியான
அதிசயித வை லக்ஷண்யத்தை ஸூசிப்பிக்கிற படி

ஒள்ளிய நுதலுக்கு
மண்ணேர் ஒத்தது என்கையாலே
ஊர்த்வ புண்ட்ர ரூபமான திலக ஸுந்தர்யம்
நெற்றிக்குத் தகுதியாய் இருந்தது என்றுமாம் –

———

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

ஸர்வேஸ்வரன் நம்மை விசேஷ கடாக்ஷம் பண்ணிற்றிலனோ -என்று இருந்தார்
பண்ணினான் என்று நிர்ப்பரராய் இருந்தார்
முன் அவன் விசேஷ கடாக்ஷம் பண்ணினான் என்று தோற்றின பின்பு
இது காதாசித்கமுமாய்
அனுபவ விச்சேத்யத்தையும் பண்ணுவதான
ஸம்ஸாரத்திலே நம்மை வைப்பதே -என்னும் ஆற்றாமை ஒரு பிராட்டி தசையை விளைத்தது –
கலந்து பிரிந்து பிரிவாற்றாத தலைமகள் ராத்ரி வியசனத்தாலே
தான் நோவுபடுகிற படியைத் தானே சொல்லுகிறாள் ஆதல்
தோழி வார்த்தை யாதல் –

வியாக்யானம்

பண்டும் பல பல வீங்கிருள் காண்டும்
இதுக்கு முன்பு எல்லாம் ராத்திரி வியசனத்தாலே அலைந்து போந்தாள் ஒருத்தி காணும் இவள் தான்
மார்க்கண்டேய பகவான் அநேகம் ப்ரளயங்கள் நீஞ்சிக் கரை கண்டால் போலே
இதுக்கு முன்பும் அநேக ராத்திரி வியஸனங்களும் அனுபவித்து அவற்றுக்கு ஒரு அவசானமும் கண்டு போந்தோம் இறே

வீங்கிருள் காண்டும்
முன்பு அநேகம் வளர்ந்த இருள் கண்டோம்

இப்பாயிருள் போல் கண்டும் அறிவதும் கேட்பதும் யாமிலம்
இப்படிப் பரந்த இருள் போலே இருப்பது ஓன்று கண்டு அறியோம்
இவ் விருளைத் தப்பி ஒதுங்க நிழல் இல்லாதபடி பிரளயம் பரந்தால் போலே கண்டவிடம் எங்கும் தானே பரந்தது –
இதைப் போலே இருப்பது ஒன்றும் கண்டறியோம்
நம்மோடு சகோதரிகளாய் ராத்திரி வியாசனத்துக்கு ஆடல் கொடுத்துப் போந்த –
ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள் போல்வார் தானும்
இப்படி இருப்பது ஒன்றை அனுபவித்துப் போந்தார்களாகக் கேட்டு அறிவதும் இல்லை –
முன்பு சம்சாரியாய் நின்ற நிலையிலே அனுபவித்தனவும் அநேகம் ராத்ரிகள்
ஞானம் பிறந்த பின்பும் அநேகம் ராத்திரிகள் அலைத்துப் போந்தன
இவ்விசேஷ கடாக்ஷம் பண்ணின பின்புற்றை பாதகத்வம் முன்பு இல்லை இறே

ராமம் இத்யாதி -அயோத்யா -42-34
ஓர் ஆண் -சக்ரவர்த்தி -முன்னடி தோற்றாதே பட்ட விஷயத்துக்குப் பெண்ணான இவள் படச் சொல்ல வேண்டா விறே
நல்லதின் பின் போனதைத் தண்ணியதையைக் காட்டி மீட்க்குமதன்றே
மே த்ருஷ்டி
பும்ஸாம் த்ருஷ்டி சித்த அபஹாரிணாம் -ஆரண்ய -3-29-
நாட்டாரோபாதி அல்ல கிடீர் என்பாடு

மே ராமம்
இவனுக்கு கிரய விக்ரய அர்ஹமான படி
ததவ் குசிக புத்ராய -பாலா -22-13-என்று

அத்யாபி ந நிவர்த்ததே
கடல் கொண்டத்தைக் குளப்படியைக் காட்டி மீட்க ஒண்ணாதே
ந த்வா பஸ்யாமி
பெருமாளைக் காணப் பெறா விட்டால்
அவரைப் பெற்ற ஸுபாக்யமுடைய உன்னைக் காணப் பெறுகிறிலேன்
கைகேயி கொட்டில் நின்றும் என்னை எடுத்துக் கொண்டு போங்கோள்-என்றான் இறே

நத்வா பஸ்யாமி -என்கையாலே

போக்குமவன்
தன்னில் வ்யாமுக்தரால் கட்டுப்படுமவன்
அவனால் இஷ்ட ஸர்வ சேஷ்டா விஷயமாகி
கடாய
கொள்ளப்பட்ட மண் மகள் போலே ஒள்ளிய முதலை யுடையவளே
கேட்டதும் யாமிலம் -என்றத்தோடு இதுக்கு அந்வயம்
காள வண்ண
வண்டுந்துழாய் பெருமான் மதுசூதனன் தாமோதரன்
உண்டும் உமிழ்ந்தும் கடாய -மண்ணேர் அன்ன ஒண்ணுதலே

———————

அவதாரிகை

இப்படி பகவத் அலாப ஜெனிதமான இவருடைய ஆர்த்தியைக் கேட்டு
தேசாந்தரஸ்தரான அன்புடைய பாகவதர்
ஸத்வரராய்க் கொண்டு இவரைக் காண வேண்டும் என்று வந்த பிரகாரத்தை

பொருள் வயிற் பிரிந்து
வினை முற்றி
மீண்ட தலைமகன்
தலை மகள் ஆற்றாமை நினைத்து
பாகனைத் தேரை விரைந்து நடத்தச் சொன்ன
பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

(யத்ர ராம ச லஷ்மண -பெருமாள் இருந்த இடத்துக்கு விபீஷணன் வந்தான் போல்
அவன் இருக்கும் இடமே திவ்ய தேசமே உத்தேச்யம் )

ஒண்ணுதல் மாமை ஒளி பயவாமை விரைந்து நன் தேர்
நண்ணுதல் வேண்டும் வலவ கடா கின்று தேன் நவின்ற
விண் முதல் நாயகன் நீண் முடி வெண் முத்த வாசிகைத்தாய்
மண் முதல் சேர்வுற்று அருவி செய்யா நிற்கும் மா மலைக்கே – 50-

பாசுரம் -50-ஒள் நுதல் மாமை ஒளி பயவாமை –
தலைவன் மீண்டு வருகையைத் தேர் பாகனிடம் கூறல் –
கிளரொளி இளைமை -2-10-

பதவுரை

வலவ–பாகனே!
ஒண் நுதல்–அழகிய நெற்றியையுடையவளான நாயகியின்
மாமை ஒளி–மேனி நல் நிறத்தின் விளக்கம்
பயவாமை–பசப்பு அடையாதபடி (அதற்கு முன்னமே!)
நம் தேர்–நமது தேர்
விரைந்து நண்ணுதல் வேண்டும்–துரிதமாகச் சென்று சேர வேண்டும்;
(எவ்வித்திற்கு? என்றால்)
தேன் நவின்ற–வண்டுகள் பாடப் பெற்ற
விண் முதல் நாயகன் நீள் முடி–பரமபதநாதனான பெருமானது நீண்ட திருமடியில் தரித்த
வெள் முத்தம் வாசிகைத்து ஆய்–வெண்ணிறமான முத்துமாலையின் தன்மையதாய்
மண் முதல் சேர்வுற்ற–(முடிதொடங்கி) அடிவாரத்து நிலத்திலே சேரும்படியான
அருவி–நீர்ப்பெருக்கை
செய்யா நிற்கும்–செய்து நிற்கிற
மா மலைக்கு–பெரிய திருமலைக்கு
இன்று கடாக–இப்பொழுது (தேரை)நடத்துவாயாக

ஒண்ணுதல் மாமை ஒளி பயவாமை
அழகிய நுதலை யுடையவளுடைய நல்ல நிறத்தின் ஒளி
பயப்பு எய்தாமல்

விரைந்து நன் தேர் நண்ணுதல் வேண்டும்
நம்முடைய தேரானது
சடக்கெனக் கிட்ட வேண்டும்

வலவ கடா கின்று
தேர் நடத்த வல்லவனே -தேரைக் கடாவுவாயாக

கடாவுக்கா இன்று என்று
இன்று நடந்துக்க என்றுமாம்

தேன் நவின்ற விண் முதல் நாயகன் நீண் முடி வெண் முத்த வாசிகைத்தாய்
விண்ணுக்கு முதல் நாயகனானவனுடைய
தேன் நவிலும்படியான நீண் முடியிலே வண்டு படும்படியான பெரிய திருமுடியில்
வெளுத்த முத்து வாசிகை போலே

மண் முதல் சேர்வுற்று அருவி செய்யா நிற்கும் மா மலைக்கே
பூமி ப்ரதேசமான மலையடியிலே சேரும்படியான
அருவியைப் பண்ணா நிற்கிற பெரிய திருமலையிலே
நண்ணுதல் வேண்டும்
என்று அந்வயம்

இத்தால்
ஆழ்வாருடைய ஊர்த்வ புண்ட்ர உஜ்வலமான திரு நெற்றியை நினைத்து
இவருக்குப் பகவத் பாகவத விஸ்லேஷ ஜனிதமான வியசனத்தைப் பற்றி ஆஸ்வசிப்பிப்பார்
தம் மநோரத ஆரூடரான அன்பர் மநோ ரத நிர்வஹணத்தில் சமர்த்தமான நெஞ்சை
த்வரிப்பித்த பிரகாரமாய் இருக்கிறது –

இவ்விடத்தில்
மா மலைக்கே -என்கிற இடம்
ஆழ்வாருக்கு ஆஸன்னமான தெற்குத் திருமலை ஆகவுமாம் –
(கிளர் ஒளி இளமை க்கு பொருந்தி இருக்குமே )

———

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை

இதுக்கு முன்பு இங்கனே இருபத்தொரு ராத்திரி வியசனம் அனுபவித்து அறியோம்
என்னும்படி அவசாதம் பிறந்தவாறே
போதயந்த பரஸ்பரம் -ஸ்ரீ கீதை -10-9- பண்ணி
இவளை ஆஸ்வஸிப்பிக்கைக்காகத் தலைமகன் வருகிறான்
வினை முற்றி மீண்ட தலைமகன்
பதினாலு ஆண்டும் கூடப்போன

நம் அவ்வுத்ஸவத்துக்குக் கோலம் கொண்டு
நம் அவ்வுத்ஸவத்துக்கு எதிர்பார்த்து நிற்குமதாயிற்று
அப்பெருமலை எல்லாம்
அம்மலைக்கு -வலவ விரைந்து தேர் காடாகின்று
என்று அந்வயம் –

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திரு விருத்தம் – -பாசுரங்கள் -31-40–ஸ்ரீ நம்பிள்ளை ஈடு –ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் -வியாக்யானம் –

March 25, 2022

அவதாரிகை
பகவத் விஷயத்தில் அவகாஹித்த இவருடைய நெஞ்சை அகல்விக்கும் இடத்தில்
ஸர்வ ஸக்தியான அவன் தனக்கும் ஸக்யம் இன்றிக்கே இருக்க
நம்மாலே செய்யலாமோ என்று
அவர்கள் விஹஸ்தரான (கை ஓய்ந்து ) படியை அறிந்து

திருமலையை நோக்கி உத்யுக்தராய்ப் போருகிறார்
சில உதார ஸ்வ பாவரைக் கண்டு
இவர்கள் நமக்கு கடகராகக் கூடுமே என்கிற அபி சந்தியை
மேகங்களைத் தூதாக விடத் தேடுகிற
நாயகி வார்த்தையால் அருளிச் செய்கிறார் –

இசைமின்கள் தூது தென்று இசைத்தால் இசையிலம் என் தலை மேல்
அசைமின்கள் என்றால் அசையும் கொலாம் அம் பொன் மா மணிகள்
திசைமின் மிளிரும் திரு வேம்கடத்து வன் தாட்சி மயம்
மிசைமின் மிளிரிய போவான் வழிக் கொண்ட மேகங்களே – –31-

பாசுரம் -31-இசைமின்கள் தூது என்று இசைத்தால் இசையிலம் –
தூது செல்லாத மேகங்களைக் குறித்துத் தலைவி இரங்குதல் –
எம் கானல் அகம் கழிவாய் -9-7-

பதவுரை

அம்பொன்–அழகிய பொன்னும்
மா மணிகள்–சிறந்த ரத்னங்களும்
திசை–திக்குகள் தோறும்
மின் மிளிரும்–மின்னல்போல ஒளி வீசப்பெற்று
திருவேங்கடத்து–திருவேங்கட மலையினது
மேகங்கள்–மேகங்களானவை
தூது இசைமின்கள் என்று இசைத்தால்–(நீங்கள் எமக்காகத்) தூதுக்கு இசைந்து சென்று சொல்லுங்கள்’ என்று சொல்லி வேண்டினால்
இசையிலம்–(அதற்கு உடனே) உடன் பட்டுச் செல்லக் காண்கிறோமில்லை;
வல்தாள் சிமயம் மிசை–வலிய அடிவாரத்தையுடைய சிகரத்தின் மேலே (சிகரத்தை நோக்கி).
மின் மிளிரிய போவான்–மின்னல்கள் விளங்கச் செல்லும் பொருட்டு
வழிகொண்ட–பிரயாணப்பட்ட
என் தலைமேல் அசைமின்கள் என்றால்-நீங்கள் என் தலையின்மேல் பொருந்துங்கள் என்று வேண்டினால்
அசையும் கொல் ஆம்–(அவை அங்குச்) செல்லக் கூடுமோ?

இசைமின்கள் தூது தென்று இசைத்தால் இசையிலம்
தூத வார்த்தை சொல்லுங்கோள் என்று சொன்னால்
அனுமதி பண்ணக் காணகிறிலோம்

என் தலை மேல் அசைமின்கள் என்றால் அசையும் கொலாம்
நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே -திருவாய் -9-7-1-என்கிறபடியே
தலை மேல் சஞ்சரியுங்கோள் -என்று அபேக்ஷித்தால்
அது தான் செய்யக்கூடுமோ

அம் பொன் மா மணிகள் திசைமின் மிளிரும் திரு வேம்கடத்து
ஸ்லாக்யமான பொன்னும்
மஹார்க்கமான ரத்னங்களும்
திக்குகள் தோறும் ஒளியை மிளிரா நிற்கிற திருமலையில்

வன் தாட்சி மயம் மிசை
வலிதான் அடி யுரத்தை யுடைத்தான சிகரத்தை நோக்கி

மின் மிளிரிய
மின்னைப் ப்ரகாசிப்பவனாய்
போவான் வழிக் கொண்ட
போகைக்கு வழிப்பட்ட

மேகங்களே
உபகார ஸ்வ பாவமான மேகங்களானவை

போவான் வழிக் கொண்ட மிளிரிய மேகங்கள்-என்று
அன்வயம்

இத்தால்
இசைமின்கள் தூது தென்று இசைத்தால் இசையிலம்
கடகத்வத்தை நீங்கள் இசையை வேணும் என்றால்
இசையைக் கண்டிலோம்

என் தலை மேல் அசைமின்கள் என்றால் அசையும் கொலாம்
நம்முடைய அபேக்ஷை தோன்ற
சிரஸா வஹித்து அனுவர்த்தித்தால்
அனுமதி பண்ணக் கூடுமோ

அம் பொன் மா மணிகள் திசைமின் மிளிரும் திரு வேம்கடத்து
ஸ்லாக்யமான ஸ்வரூபமும்
மஹார்க்கமான குண ரத்னங்களும்
ஸர்வோதிக்தமாகப் பிரகாசிக்கிற திருமலையில்

வன் தாட்சி மயம் மிசைமின் மிளிரிய போவான் வழிக் கொண்ட மேகங்களே
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் -திருவாய் -6-10-11- என்கிறபடியே
ஆஸ்ரயணீயமான திண் கழலை யுடைய
வண் புகழ் நாரணனாகிற -திருவாய் -1-2-10-
அஞ்சன சிகரத்தை நோக்கி உத்யுக்தராய்
உஜ்வலமான தீப்தியை யுடையரான
(போகும் பாகவதர்கள் ஞான ஒளி -மின்னல் )
உதார ஸ்வா பாவமானவர்கள்
(எங்கும் தீர்த்தகரராய் திரிந்து அருளுபவர் )
என்று அனுசந்தித்து அருளினார் ஆயிற்று –

———

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
இசையிலம் -என்ற ஒரு பாடம்
இசைவலம் -என்ற ஒரு பாடம்

இசைவலம் -என்ற ஒரு பாடமான போது
திரு வேம்கடத்து போவான் வழிக் கொண்ட மேகங்களே
இசைமின்கள் தூது தென்று இசைத்தால் இசையிலம்
என் தலை மேல் அசைமின்கள் என்றால் அசையும் கொலாம்
இப்படி நான் சொன்னால் இசையுமோ என்று அவற்றுக்குச் சொல்லும்படியை
ஸ்வ கதமாகச் சொல்லுகிறாள்

அங்கன் அன்றிக்கே
இசையிலம் -என்ற ஒரு பாடமான போது
திரு வேம்கடத்து போவான் வழிக் கொண்ட மேகங்கள் -என்று தேற்றமாக்கி
இசைமின்கள் தூது தென்று இசைத்தால் இசையிலம்
இசைகிறவன வில்லை
என் தலை மேல் அசைமின்கள் என்றால் அசையும் கொலாம்
அது தவிர்த்தால் இத்தைச் செய்ய வற்றே

வியாக்யானம்
இசைமின்கள் தூது தென்று இசைத்தால் இசையிலம்
திருமலையைக் குறித்துப் போகையிலே ஓருப்பட்டுள்ள மேகங்களானவை
என்னுடைய தூத வாக்கியத்தை நீங்கள் போய்ச சொல்ல வேணும் என்று
நான் கால் கட்டினால்
அத்தைச் செய்கிறவன வில்லை

என் தலை மேல் அசைமின்கள் என்றால் அசையும் கொலாம்
அது தவிர்ந்தால்
திருமலையைக் குறித்துப் போகையில் ஓருப்பட்ட நீங்கள்
அப்படி என் தலையிலே உங்கள் காலை
நீங்கள் வையுங்கோள் என்று நான் சொன்னால் அப்படிச் செய்யலாம்
ஸ்வ கார்யம் செய்யாதாருக்கும்
பர ஹிதம் செய்ய வேண்டி இருக்கும் இறே
என் ஆர்த்தையைச் சென்று அறிவித்து
அவனையும் என்னையும் சேர்க்கை இறே கார்யம்
அங்கன்

———–

அவதாரிகை
இப்படி கடக அபேக்ஷை பிறக்கும்படி
நெஞ்சு பகவத் விஷயத்திலே மண்டி
வைகுந்தவனோடே என் நெஞ்சினாரைக் கண்டால் -என்று
பரமபத நிலையன் அளவும் சென்றபடியால்
ஸத் வரராய் (துடிப்புடன்)
பரம ஸாம்யா பன்னரானாரை
பாவனையால் அபரோக்ஷித்துச் சொன்ன பாசுரத்தைப்
(முக்தர்களை )போலி கண்டு யுரைத்த
(ஆழ்வார் நெஞ்சு அங்கேயே முன்னமே சென்றதே )
தலைவி பாசுரத்தால் அருளிச் செய்கிறார்

மேகங்களோ உரையீர் திருமால் திருமேனி யொக்கும்
யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர் உயிர் அளிப்பான்
மாகங்கள் எல்லாம் திரிந்து நன்னீர்கள் சுமந்து நுந்தம்
ஆகங்கள் நோவ வருத்தும் தவமா மருள் பெற்றதே –32-

பாசுரம் -32-மேகங்களோ உரையீர் திருமால் திருமேனி –
துறையடைவு-தலைவி போலி கண்டு பேசுதல் –
வைகல் பூம் கழிவாய் -6-1-

பதவுரை

மேகங்களே–ஓ மேகங்களே!,
திருமால் திருமேனி ஒக்கும் யோகங்கள்–எம்பெருமானது திருமேனியை யொத்திருக்கும்படியான உபாயங்களை
உங்களுக்கு எவ் ஆறு பெற்றீர்–உங்களுக்கு (ஸித்திக்கும்படி) எவ்விதமாய் அடைந்தீர்கள்?
உரையீர்–சொல்லுங்கள்;
உயிர்–உயிர்களை
அளிப்பான்–பாதுகாக்கும் பொருட்டு
நல் நீர்கள் சுமந்து–நல்ல ஜலத்தைத் தரித்து
மா கங்கள் எல்லாம் திரிந்து–பெரிய வானங்களிலெல்லாம் ஸஞ்சரித்து
நும் தம்–உங்களுடைய
ஆகங்கள் நோவ–உடம்புகள் நோகும்படி
வருந்தும்–(அவ்வுடம்புகளை) வருந்திச் செய்த
தவ ஆம்–தபஸ்ஸோ
அருள் பெற்றது–(அவ் வெம்பெருமான) அருளை நீங்கள் பெற்ற காரணம்?.

வியாக்யானம்

மேகங்களோ
கரும் பெரும் மேகங்கள் காணில் கண்ணன் என்று ஏறப் பறக்கும் -திருவாய் -4-4-9- என்கிறபடியே
பிரிவு போலி கண்டு பதறப் பண்ணும் இறே
ஆகையால் மேகங்களை ஸம்போதிக்கிறாள்

உரையீர்
நான் கேட்கிற வார்த்தைக்கு மறு மாற்றம் சொல்லு கிறி லீர்

வார்த்தை கேட்பதற்கு முன்னே மறு மாற்றம் சொல்லும் வகை என் என்னில்
திருமால் திருமேனி யொக்கும் யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர்
ஸ்ரீ ராமனோடு திருமேனியோடு ஸாரூப்யம் பெறும்படியான
உபாயங்கள் காற்று வளத்திலே திரிகிற உங்களுக்கு
எப்பிராகாரத்தாலே லபிக்கப் பட்டது
உரையீர் என்று அந்வயம்
உரையுங்கோள் என்றுமாம்

உயிர் அளிப்பான் மாகங்கள் எல்லாம் திரிந்து
பிராணிகளை ரஷிக்கைக்காகப்
பெரிய ஆகாசம் எல்லாம் ஸஞ்சரித்து

நன்னீர்கள் சுமந்து
ஸர்வ உப ஜீவ்யமாம் படி சரஸமான
ஜல ஸம்ருத்தியைத் தரித்து

நுந்தம் ஆகங்கள் நோவ வருந்துத் தவ மா மருள் பெற்றதே –
பர உபகார யுக்தமான உங்களுடைய காய கிலேசத்தையும் பாராதே
ஆயாஸிப்பித்த தபஸ்ஸாம் இத்தனை இறே
ஸாம்ய ஆகார பிரதமனானவனுடைய அருளைப் பெற்றது –

இத்தால்
ஸாம்யா பன்னரைக் குறித்து
உபாய ப்ரஸ்னம் பண்ணின விடத்து
மறு மாற்றம் பெறாமையாலே

பகவத் விபூதி பூதரான ஆத்மாக்களை உஜ்ஜீவிப்பிக்கைக்காக
தீதில் நன்னெறி காட்டி எங்கும் திரிந்து -பெருமாள் திருமொழி -2-6-என்கிறபடியே
(ஸ்வா தந்தர்ய லேசமும் இல்லாத
நெறி
நன்னெறி
தீதில் நன்னெறி )

ஸர்வ ப்ரதேசத்திலும் ஸஞ்சரித்து
சீலாதி குண ரஸ பூரத்தைத் தரித்து
ஸ்வ சரீர கிலேசம் பாராதே பரார்த்தமாக ஆயாஸித்த
பரம தபஸ்ஸூ இறே
பல ப்ரதமான அருளைப் பெறுவித்தது என்று
பாவநை யாலே பல சாதன பாவத்தைக் கல்பித்து அருளிச் செய்தார் ஆயிற்று

இத்தால்
வ்யாபார சீலருக்கு ஒழிய ஒரு பலம் கிடையாது
நிர் வ்யாபாரராய் இருப்பவருக்கு ஸித்தியாதோ என்று
விஷண்ணரானமை தோற்றுகிறது –

(மேம்பொருள் போக விட்டு –வாழும் சாம்பாரை அகத்தி போலும் என்பது பொய்யாயிற்றோ
தாபம் செய்தால் தான் ஸாரூப்யம் ஸித்திக்குமோ
உபாயம் என்றால் உழைப்பு இல்லை
கைங்கர்யம் என்றால் ஒய்வு இல்லை
இதுவே என் பணி என்னாது அதுவே ஆட்ச் செய்யும் ஈடே – )

ஆதி அந்தம் அநந்தம் அற்புதம் ஆன வானவர் தம்பிரான்
பாத மா மலர் சூடும் பத்தி இலாத பாவிகள் உய்ந்திட
தீதில் நல் நெறி காட்டி எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே
காதல் செய் தொண்டர்க்கு எப் பிறப்பிலும் காதல் செய்யும் என் நெஞ்சமே –2-6-

————

அவதாரிகை
இப்படி இவருடைய விபாகத்தைக் கண்ட
ஸூஹ்ருத்துக்கள்
விஷாத ஹேதுவான ஈஸ்வரனைக் குறித்து விண்ணப்பம் செய்த பாசுரத்தை
நாயகி ஆற்றாமைக்கு உதவாத நாயகனான ஈஸ்வரனை நோக்கி
பாங்கி உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும்
இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர் ஈங்கு ஓர் பெண் பால்
பொருளோ எனும் இகழ்வோ? இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ
தெருளோம் அரவணையீர் ! இவள் மாமை சிதைக்கின்றதே –33

பாசுரம் -33-அருள ஆர் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் –
தலைவி ஆற்றாமை கண்ட தோழி தலைவனை வெறுத்தல்-
ஏறாளும் இறையோனும் -4-8-

பதவுரை

அரவு அணையீர்–ஆதிசேஷசயனத்தை யுடையவரே!
அருள் ஆர் திரு சக்கரத்தால்–கருணை நிறைந்த திருவாழியைக் கொண்டு
அகல் விசும்பும்–பரந்த விண்ணுலகத்திலும்
நிலனும்–மண்ணுலகத்திலும்
இருள் ஆர்வினை கெட–இருளையொத்த கொடிய தொழில்கள் நிகழாதபடி
(துஷ்ட நிக்ரஹஞ் செய்து)
செங்கோல் கடாவுதீர்–உமது கட்டளையைத் தடையன்றிச் செலுத்துகிறீர்.
(அப்படி லோகங்களை ரக்ஷிக்கிற நீர்)
இவள்–இப்பராங்குச நாயகியினுடைய
மாமை–மேனி நிறத்தை
சிதைக்கின்றது–அழிப்பதானது
ஈங்கு–‘இவ்வுலகத்தில்
ஓர் பெண்பால்–ஒரு பெண்ணைக் காப்பது
பொருளோ எனும்–புருஷோத்தமோ’ என்கிற
இகழ்வோ–அவதாரமோ?
(அல்லது)
இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ–(உம்மால் ரக்ஷிக்கப்படுகின்ற) விண் மண்ணுலகங்களுக்கு
உள்ளாகாமல் வெளியாயிருப்பவளொருத்தியிவள்’ என்ற எண்ணமோ?
தெருளோம்–அறிகின்றிலோம்

வியாக்யானம்

அருளார் திருச் சக்கரத்தால்
ஆஸ்ரித ரக்ஷணார்த்தமான கிருபையாலே
பரிபூர்ணனான திருவாழி ஆழ்வானாலே

அகல் விசும்பும் நிலனும்
பரந்த விசும்பும் நிலனும்

இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர்
மோஹ அந்தகார ஸஹ சரிதமான விபரீத விருத்தங்கள் போம்படி
ஸங்கல்ப ரூபமான ஆஜ்ஜையை நடத்தா நிற் புதீர்

ஈங்கு ஓர் பெண் பால் பொருளோ எனும் இகழ்வோ?
ஒரு அபலையை ரஷிக்கை புருஷார்த்தமோ என்கிற அநாதரமோ

இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ
ரக்ஷணீய விபூதிக்குப் புறம்பாய் இருப்பாள் ஒருத்தி என்கிற நினைவோ

தெருளோம்
அறிகிறிலோம்

அரவணையீர் !
படுக்கை வாய்ப்பு அறிந்து கிடக்கிற நீர்

இவள் மாமை சிதைக்கின்றதே –
இவளுக்கு இடம் கொடாமல்
இவள் நிறத்தை அழிக்கின்றது என்று வெறுக்கிறாள் –

இத்தால்
அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும் இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர்
ஸங்கல்ப மயமான திருவாழியாலே
விபூதி த்வயத்தையும் இருள் அகல நிர்வஹிக்கும் என்கையாலே
நித்ய விபூதியில்
அனுபவ விச்சேத ரூபமான இருள் நடையாடாதபடி பண்ணுகையும்
லீலா விபூதியில்
செய்யேல் தீ வினை என்று அருள் செய்யும் என் கையார் சக்கரக் கண்ணபிரான் -திருவாய் -2-9- 3- என்கிறபடியே
அவித்யா காரிதமான விபரீத விருத்தம் நடையாடாமல் நோக்குகையும் தோற்றுகிறது

(பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் என்றதையே
இருளார் வினை )

ஈங்கு ஓர் பெண் பால் பொருளோ எனும் இகழ்வோ?
ஒரு விபூதி ஏக தேசத்தில் ஸ்வ காரியத்தில் அசக்தராய் பரதந்த்ரராய் இருப்பார்
ஒருவரை ரஷிக்கையில் சரக்கு அறுதியோ

இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ
இந்த விபூதியிலும்
அந்த விபூதியிலும்
அந்தர்பவியாமல் இருக்கையாலே புறம்பு என்று நினைத்ததோ
(இங்குற்றேன் அல்லேன் அங்குற்றேன் அல்லேன் )

இது நிஷ்கரிஷிக்கலாய் இருக்கிறது இல்லை
அசக்தியும் பாரதந்தர்யமும் அநாதரத்துக்கு உறுப்பு அல்லாமையாலும்
விபூதி த்வய வ்யாவ்ருத்தி வை லக்ஷண்யத்துக்கு உறுப்பாகையாலும்
அங்கீ கார ஹேது யுண்டு என்றபடி

அரவணையீர் -என்கையாலே
அந்த விபூதியில் உள்ளவரோடு
நித்ய ஸம்ஸ்லேஷம் நடக்கிறபடி சொல்லுகிறது

இவள் மாமை சிதைக்கின்றதே -என்கையாலே
அவிளம்பேந ஆதரியாமையாலே
அசாதாரண ஆகாரமும் குலையும் படியாகா நின்றது

இதுக்கு ஹேது அறிகிலோம் என்று
ஸூஹ்ருத்துக்கள் வெறுத்து உரைத்த பாசுரத்தை அருளிச் செய்தார் ஆயிற்று

———

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
போலி கண்டு தரிக்க ஒண்ணாத படி மேகங்களும் மறைந்தன
ஜீவனத்துக்கு எத்தனை யேலும் அவசாதம் வந்தாலும்
அவனுக்கு அறியாமைக்கு மேல் இல்லையே

ஆண்டாள் ஒரு நாள் ஆழ்வானுக்கு, ‘பிள்ளைகள் விவாகம் செய்வதற்குத் தக்க பருவத்தை அடைந்தார்கள்:
இவ் விடையாட்டம் ஒன்றும் ஆராயா திருக்கிறது என்?’ என்ன,
பகவத் குடும்பத்துக்கு என்னை இன்று இருந்து கரையச் சொல்லுகிறாயோ?
நாளை நான் வாசித்துச் சமையக் கொள்ள, அங்கே வரக் காட்டு, என்ன,
பட்டரையும் சீராமப் பிள்ளையையும் கொடுத்துப் போக விட, வாசித்துச் சமைந்து பெருமாள் திருவடிகளிலே நிற்க,
ஒன்று சொல்லுவாய் போலே இருந்தாயே’ என்று திரு வுள்ளமாக,
இவர்கள் விவாகம் செய்வதற்குத் தக்க பருவத்தை அடைந்தார்கள் என்னா நின்றார்கள் என்று விண்ணப்பம் செய்ய
எல்லாம், செய்கிறோம்’ என்று திருவுள்ளமானார்;
பிற்றை நாளே மன்னியைக் கொண்டு வந்து நீர் வார்த்துக் கொடுத்தார்கள்.

காதுகன் செய்தவற்றை செய்தாய் 0மேக சஞ்சாரத்தையும் மாற்றி மோகம் பண்ணினாய்
திருத்தாயார் கங்குலும் பகலும் திருவாய் மொழி போல் –
இவள் திறத்து என் நினைந்து இருந்தாய் என்கிறாள்

அருளார் திருச்சக்கரத்து
உபய விபூதியில் -உமக்கும் செல்லாதோர் மூலை உண்டாய் இவளுக்கு ரக்ஷணம்
நீர் செய்ய முடியாமல் இருந்ததோ
வேறே ஒருவர் ரஷணம் ஆவார் என்று ஆறி இருக்கவோ
உபய விபூதியிலும் உமது ஆஜ்ஜை அன்றோ நடக்கிறது
இவள் ஸ்த்ரீ மாத்ரம்-என்று இவளை ரக்ஷிப்பது நமக்கு பிரயோஜனம் அன்று என்று இருந்தாயோ
நமது எல்லைக்கு புறம்பு இவள் என்று இருந்தாயோ

ரக்ஷணத்துக்கு உமக்கு பரிகரம் இல்லாமல் போனதே என்று தான் ஆறி இருக்கவோ
அநாஸ்ரிதர் விஷயத்தில் திருவாழி ஆழ்வானுக்கு த்வேஷம் உறைத்து இருக்கும்
சமோஹம் சர்வ பூதேஷூ என்று அன்றோ அவன் இருப்பது
ஹிரண்யன் நெஞ்ஜையும் துழாவிப் பார்ப்பான் அவன் -அனுகூல்ய லேசம் உள்ளதோ என்று
அதே போல் ஆஸ்ரித விஷயத்தில் இவன் கை விட்டாலும் ஆழ்வான் கை விட்டு விட மாட்டான்
ஆச்ரித விஷயத்தில் அனுக்ரஹமும் அதிகம்

பிராட்டியை விடவும் இவனுக்கு ஊற்றம் அதிகம் உண்டே
அவளுக்கு ஒரு நிர்பந்தம் உண்டே
அவரது திரு உள்ளம் படியே நடக்க வேண்டுமே – -ஸஹ தர்ம சாரிணி அன்றோ
ராமஸ்ய விவசாயம் சங்கல்பம் -அறிபவள் அன்றோ
லஷ்மணஸ்ய தீ மான் அதுவும் இவள் அறிபவள்

இவர் பண்ணி இருபத்தொரு விவசாயம் -ரஷித்தே தீருவேன்
உன்னை விட்டாலும்
லஷ்மணனை விட்டாலும்
உயிரை விட்டாலும்
ப்ராஹ்மணர் ரக்ஷணம் விட மாட்டேன்
எவர்களை –
ப்ரஹ்மணேப்யோ –விசேஷித்த இவர்களுக்கு
அளவன்றிக்கே
ரஷக அபேக்ஷை உடையவர் பக்கலில் பற்று வைத்து இருப்பார்

உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன் வளை வாய் நேமிப் படையாய்
கர்ப்ப பூதாஸ் தபோ -உன்னுடைய கர்ப்பத்துக்குள் உள்ளோம்
தபஸ் -சக்தி இருந்தாலும் -பிராப்தி இல்லையே
ஸ்வ ரக்ஷண சக்தரானாலும்
கர்ப்ப பூதர் -என்று இவனையே எதிர்பார்த்து இருக்கும் தண்டகாரண்ய ரிஷிகள் போல்வாரை
ரஷித்தே தீருவேன் என்ற விவசாயம் கொண்டவர் அன்றோ பெருமாள் –

விசுவாமித்திரர் சக்ரவர்த்தி இடம் -வார்த்தை சொல்லும் இடத்தில்
சாபம்-அம்பு பூண்ட பெருமாள் வேண்டும் -என்னால் சாபம் கொடுத்து அழிக்க முடியும்
யஜ்ஜம் செய்வதால் சாபம் கொடுக்கும் சக்தியைப் பயன் படுத்த மாட்டேன்
அதே அர்த்தம் இங்கும்
மாரீசன் ஸூபாஹூ வந்தாலும் நான் சாபம் பிரயோகிக்க மாட்டேன்
பிராண ஹானியாக இருந்தாலும் அனுஷ்டானம் மாறாதே
ரக்ஷணத்துக்கு சக்தி இருந்தாலும் -ரக்ஷகன் கையையே பார்த்து இருப்பேன்
ஜனனி தான் கைப்போடு புளிப்பு தவிருவாள்

இந்த ராமர் விரதம் அறிவாள்
அபயம் சர்வ பூதானாம் ஏதத் விரதம்
சர்வ பூதேப்யோ -என்று ராவணன் இடத்தில் மட்டும் ரக்ஷணம் அல்ல
யாரேனும் யாகிலும் ரஷிப்பேன்
இத்தனை வருஷம் அநாதி காலம் இருந்து கற்றவள் -நித்யைவேஷா -அந பாயிநி அன்றோ

லஷ்மணன் -விவசாயமும் அறிந்தவள் அன்றோ
பெருமாள் குழைச் சரக்கு -பிராட்டிக்காக எத்தையும் செய்பவராய் -அந்நிய பரராய் இருப்பார்
சீதாபிராட்டி அபிமதம் செய்ய மாரீச மாயமான் பின்னே போவார்
ராக்ஷஸ மாயை என்று அறிந்து அப்போதும் யுணர்ந்து நோக்குவார் இளைய பெருமாள் ஒருவரே அன்றோ
ராமனே விட்டாலும் -அப்போதும் ஆஸ்ரித ரக்ஷணம் ஒரு தலை லஷ்மணம் புண்ய லக்ஷணம் -வடிவிலே தெரியும்

ஆற்றாமைக்கு அனுரூபமாக பிராட்டி தளர்ந்து போக மாட்டாள்
பெருமாளை விட்டுப் பிரிந்தாலும் -முடியாமலும் -கலங்காமலும் -விவசாயம் அறிந்தவள்
தானே தெளிவாக இருப்பவள் மாயா சிரஸ்ஸால் கலங்க மாட்டாள்

இப்படி இளைய பெருமாளை நினைத்து இருப்பது போல்
அருளார் திருச் சக்கரம் நம்மை விட்டுக் கொடுக்காது என்று இருக்கும் பராங்குச நாயகி
ஆசிலே வைத்த கையும் சக்கரமும் கொண்டே ரஷிப்பான்
சங்கல்பத்தாலே ரஷிக்கும் சக்தி யுண்டாய் இருக்கச் செய் தேயும்
திருச்சக்கரத்தான்
ஈஸ்வர பிடாரி அஹங்காரம் ஒன்றே போதும்
அநாயாசேந ரஷிக்கும் சக்தன்
இருந்தாலும் கையார் சக்கரம் கை கழலா நேமியான்
தொட்ட படை எட்டும் தோலாத வீரன் அன்றோ –

உபய விபூதியையும் திருச்சக்கரமும் கையுமாய் இருந்தே நோக்கி அருளுபவன்
அசேதன கிரியா கலாபங்களால் -உபாயாந்தர பரர் இருக்க
சர்வ சக்தியின் -ரக்ஷண தீஷித உறைப்பைக் கொண்டு பிரபன்ன நிஷ்டர்கள்

அகல் விசும்பும்
திரிபாத் விபூதி அன்றோ –
நிலனும்
லீலா விபூதியும்
அந்நிய பரரோடு அநந்ய பரரோடு வாசி இல்லையே ரஷிக்கும் இடத்தில்
உபய விபூதியிலும் அஞ்ஞானம் போக்கி அருளும் திருச்சக்கரம்
தமஸ் அங்கு உண்டோ -என்னில்
அங்கு அதிசங்கை உண்டே
நித்ய கைங்கர்யத்துக்கு க்ஷணம் விச்சேதம் வந்து விடுமோ கலங்குவார்
பிராக பாவத்தால் அங்கு
இங்கு ப்ரத்வம்ச பாவம்
அழகைக் காட்டி அங்கு
‘இங்கு பிரதிகூத்தில நிரசனம் செய்து ரஷிப்பார்

அப்படி இருக்க அன்றோ இவள் விஷயத்தில் இங்கே ஸ்த்ரீ வதம் பிராப்தம் ஆயிற்றே
இவள் மாமை சிதைக்கின்றது
யாது ஓன்று உபேக்ஷிக்காமல் இருக்க ஹேதுவோ அதுவே சிஷிக்கக் காரணம் ஆகுமோ
அநந்ய கதியாயும் அபலை யாயும் இருந்தும் ரக்ஷிக்காமல் கை விட்டீரே
பெண்ணை ரஷித்து என்ன பிரயோஜனம் என்றோ
புறம்பாய் உள்ளாள் இவள் – அங்குள்ளார் நோக்கட்டும் என்று உள்ளீரோ
அகிலாண்ட கோடி ப்ரஹ்மாண்ட நாயகன் என்று அன்றோ விருதூதித் திரிகிறீர்
இவளுடைய ஸ்வரூபம் பார்த்தாலும் கைவிடக்கூடாதே
உம்முடைய ஸ்வரூபம் பார்த்தாலும் கைவிடக்கூடாதே

ஸ்ரீ கீதை -10-39- ஸ்லோகத்தில் லோக்கத்துக்கு பீஜம் நான்
என்னைத் தவிர்த்து யாரும் எங்கும் இல்லையே –

உன்னாலாயே அனைத்தும் ரஷிக்கபட இருக்க
உன்னால் ரக்ஷிக்கப் படா விட்டால் அது சூன்யம் ஆகுமே -வஸ்துவாகவே மாட்டாதே
இருக்கு என்றாலே உம்முடைய ரக்ஷணத்துக்கு ஆளாய் இருக்க வேண்டுமே

உம்முடைய சத்தையும் ஸ்வரூபமும் சர்வ ரக்ஷணம் அன்றோ
நெருப்பினால் நனைக்க முடியுமோ

திருக்குடந்தை ஊரா உனக்கு ஆட்பட்டும் இன்னம் உழல்வேனோ

இனி திரௌபதி பரிபவம்
இங்கு உள்ளார் யாரும் சரக்கு அல்ல
சா அஹம்
கேச க்ரஹம் ப்ராப்தனானேன் -பரிபவம் ப்ராப்தனானேன்
நீ இல்லை போலும் -கண்ணன் நீ இந்த விபூதியிலேயே இருக்க அன்றோ இவ்வாறு பட்டேன்
இதுக்கு என்ன சேர்த்தி உண்டு என்கிறாள்

என்னைப் போலே கையும் வளையலுமாயோ நீ உள்ளாய்
புருஷோத்தமன் அன்றோ ‘
உன்னுடைய புருஷோத்தமத்வம் சரணாகத ரக்ஷணத்துக்காக அன்றோ
சரணாகதை நான்
நீயோ சங்கு சக்ர கதா பாணி -என்கிறாள் திரௌபதி
அருளார் திருச்சக்கரத்தால் இங்கு

சங்க சக்ர -எப்பொழுதும் கை கழலா நேமியான் -ஆபரண மாத்திரமோ -ஆயுதம் அன்றோ

துவாரகா நிலையா –
பரமபதத்தில் உள்ளேன் என்று சொல்லிட்டு தப்ப முடியாதே
அவதரித்து சமீபத்தில் சன்னிஹிதனாய் இருக்க அந்நியனாய் மீளவும் போனாயோ

அச்யுத –
சன்னஹித்தனாய் இருந்து ஆஸ்ரிதரை எங்கு நழுவ விட்டாய்

கோவிந்தா
பசுக்களை ரஷிக்க மாட்டேன் -வசிஷ்டாதிகளை மட்டுமே ரஷிப்பேன் என்று இருந்தாயோ
குறைய நின்றார் ரக்ஷணத்துக்கு கோவிந்த பட்டாபிஷேகம் செய்து கொண்டாயே

புண்டரீகாஷ
விடாயாருக்கு நோக்காமல் நித்ய ஸூரிகளுக்கு –
விண்ணோர் பரவும் தாமரைக் கண்ணனாய் மட்டுமே இருந்தாயோ
ஏலம் இட்ட தண்ணீரை தாகம் உள்ளாருக்கு அருளால்
கடாக்ஷம் கொண்டு நித்ய ஸூரிகளை மட்டுமே காப்பாயோ

மாம் ரக்ஷணம்
என்னுடைய ரக்ஷணத்துக்கு நீ என்று நான் அறிவித்த பின்பும் –
மாம் வ்ரஜ -என்னைப் பற்று என்றாயே
என்னைக் காப்பாத்து இவள் வார்த்தை

தீஷித்து உள்ள எனது பார்த்தாக்களும் உன்னால் ரக்ஷிக்கப் படுபவர்கள் அன்றோ
கிருஷ்ண ஆஸ்ரய கிருஷ்ண பலாயா கிருஷ்ண நாதாய என்று அன்றோ இருக்கிறோம்
இவர்களைக் கூப்பிடவில்லையே

ஆனாலும் கண்ணன் வாளா இருக்க
சரணாகதம் என்று சொல்லி
அவன் உருகின துயிலை நீயும் ஒரு கையால் பிடித்தாய் அன்றோ என்று அவன் நினைவாக
இரு கையும் விட்டேனா திரௌபதியைப் போலே

தன்னை வியாவர்த்திக்கிறது
நானும் ரக்ஷகன் அகில

தனித்தனியே நூற்றுவரும் சுழற்ற வல்ல பார்த்தா இருக்க
இங்கு இவனைக் கூப்பிட்டது என் என்று வினவ ஆளவந்தார்
பண்டே உபதேசம் பெற்றாளே
ஸ்மர்தவ்ய பகவான் ஹரி -பெரும் ஆபத்து வரும் பொழுது நினை என்று -வசிஷ்டர் சொல்லி வைத்து உள்ளார்
குறை ஒன்றுமே இல்லாத அக்காலத்திலும் குறை வந்தால் ஹரியை நினை என்று சொல்லி வைத்த மஹாநுபாவர்
மஹத் ஆபத்து வந்தால் தன்னோட்டை உள்ளார் போல்
ஞானாதி பூர்ணனான அவனை நினைக்க அடுக்கும் ஸ்ம்ருதி மட்டுமே கார்யகரம் ஆகும் என்றாரே
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் -ஆழ்வார்

பிரார்த்தனா மதி சரணாகதி
உம்முடைய ஸ்வரூபம் -ஹேது கண்டிலோம்
இவள் ஆற்றாமை சொல்ல வந்த இடத்தில் உபய விபூதி நாதத்வம் சொல்வான் என் என்னில்

உலாகின்ற கெண்டை யொளியம்பு எம்மாவியை யூடுருவக்
குலாகின்ற வெஞ்சிலைவாள் முகத்தீர் குனிசங்கிடறிப்
புலாகின்ற வேலைப் புணரி யம்பள்ளி யம்மான் அடியார்
நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலை இடமே – திரு விருத்தம் 75-

நித்ய சித்தர் -முமுஷு போல் தவிக்கிறார்

அரவணையீர்
இவளை ரஷிக்காமல் உமக்கு படுக்கை பொருந்துவதே
உம்முடைய ஜீவனத்தை அன்றோ நீர் இழக்க உள்ளீர்
எங்கும் பக்க நோக்கு அறியாமல் இவளை பூர்ண கடாக்ஷம் பண்ணி அருளி
உண்டியிட்டாய் இனி உண்டு ஒழியாய்
இவளை மீளவும் உண்டாக்கலாம் என்று உள்ளீரோ
யதா பூர்வம் கல்பயத் -போல் இவளை போல் உருவாக்க முடியாதே
சங்கல்பத்தால் உண்டாக்க வல்லவள் அன்றே

இவளை சிதைக்கின்றது
இவளை நோவுபட வைத்து
பகுதியாக தான் காண முடியும்
ரஷ்யம் நோவு படுவது உமக்கு அவத்யமாம் என்று
பார்ஸ்வத்தர் பாசுரத்தால் அவனுக்கு அறிவிக்கிறான்

——————-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி
வியாக்யானம்
அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும்
ஆஸ்ரிதரில் பூர்ண கிருபை யுள்ள
திருவாழியாலே
அவ்விபூதியையும் நிர்வஹிக்கும் படி

இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர்
மோஹ அந்தகார மயமான இங்குள்ள பாப பரங்கள் போம்படி
திவ்ய ஆஜ்ஞா ப்ரவர்த்தகரான நீர்

ஈங்கு ஓர் பெண் பால் பொருளோ எனும் இகழ்வோ?
இவ்விடத்தில் உள்ள ஓர் அபலையை ரக்ஷிப்பது
நமக்கு ஒரு புருஷார்த்தமோ
என்று அநாதரித்த படியோ

இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ
ரஷ்ய வஸ்து பஹிர் பூதை
இவள் என்று நினைத்தீரோ

தெருளோம்
அறிகிறிலோம்

அரவணையீர் !
இப்போதும் வாய்த்த படுக்கையிலே
கண் வளரா நின்றீர்

இவள் மாமை சிதைக்கின்றதே
இவள் அவசாதம் -இவள் நிறத்தை அழித்து விடா நின்றதே
நான் இத்தைப் பார்ப்பது எங்கனே என்று கூப்பிடுகிறாள் –

————-

அவதாரிகை
இப்படி அவசன்னரான இவர்
பகவத் ஸம்ஸ்லேஷம் உண்டாகைக்கு இத்தலையாலே கூடுவதொரு
ஹேது யுண்டோ என்று பார்த்து
அது கூடாமையாலே
பின்னும் ஸம்ஸ்லேஷ த்வரையாலே கிலேசிக்கிற பிரகாரத்தைக் கண்டு
ஸூஹ்ருத்துக்கள் கலங்கி யுரைத்த பாசுரத்தை
நாயகனான ஈஸ்வரனைக் கூடுகைக்கு
கூடல் இழைத்து அது கலங்குகையாலே ஈடுபடுகிற
நாயகியைக் கண்டு
தோழி கலங்கி உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

சிதைக்கின்ற தாழி என்று ஆழியை சீறி தன் சீர் அடியால்
உதைக்கின்ற நாயகம் தன்னொடு மாலே உனது தண்டார்
ததைக்கின்ற தண் அம் துழாய் அணிவான் அதுவே மனமாய்
பதைக்கின்ற மாதின் திறத்து அறியேன் செயற் பால் அதுவே -34-

பாசுரம் 34-சிதைக்கின்றது ஆழி என்று ஆழியைச் சீறி –
கூடல் இழைத்து வருந்தும் தலைவி நிலையை தோழி தலைவனுக்கு உரைத்தல் –
மின்னிடை மடவார்கள் -6-2-

பதவுரை

மாலே–எம்பெருமானே
ஆழி–கூடல் வட்டமானது-கடலை என்று நம்பிள்ளை நிர்வாகம்
சிதைக்கின்றது–காரியத்தைக் கெடுக்கின்றது
என்று–என்ற காரணத்தினால்
ஆழியை–அக்கூடல் வட்டத்தை
சீறி–கோபித்து
தன் சிறுஅடியால்–தனது சிறிய கால்களால்
உதைக்கின்ற–உதைக்கும் படியான மேம்பாடுடனே
உனது–உன்னுடையதான
தண் தார் ததைக்கின்ற–வாடாத மலர்கள் நிறைந்த
தண் அம் துழாய்–குளிர்ந்த அழகிய திருத்துழாயை
அணிவான் அதுவே மனம் ஆய் பதைக்கின்ற–சூடும் பொருட்டு அதிலேயே கருத்தாய் வருந்துகிற
மாதின் திறத்து–இம்மங்கை விஷயத்தில்
செயல் பாலது–செய்யத்தக்கவை
அறியேன்–யான் அறிகின்றிலேன்.

வியாக்யானம்
சிதைக்கின்ற தாழி என்று ஆழியை சீறி
ஆழி என்று கூடல் வட்டம்
கூடல் வட்டமானது கார்யத்தைச் சிதையா நின்றது என்று
அந்த ஆழியை வெறுத்து

தன் சீர் அடியால் உதைக்கின்ற நாயகம் தன்னொடும்
தன்னுடைய சீரிய அடியாலே அழிக்கிற
மேனாணிப்போடும்

சீரடி என்று
சிவந்த அடி -என்றுமாம்
சீறடி -என்றும் சொல்வர்

மாலே
பெரியவனே
இவள் ஆவி அழித்த பெருமை
பெரிய நீ காணத் தகும் என்று கருத்து

அன்றியே
மாலே உனது தண்டார்-தண் தார் -என்று
மேலோடே கூட்டி
நீ தன் பக்கல் பண்ணின வ்யாமோஹம் அறிந்தவள் ஆகையாலே
உன் மாலையிலே நசை பண்ணினாள் என்றுமாம் –

உனது தண் தார் ததைக்கின்ற தண் அம் துழாய் அணிவான் அதுவே மனமாய்
உன்னுடைய செவ்வி மாறாத பூ தழைக்கிற
குளிர்ந்த
தர்ச நீயமான திருத்துழாயைச் சூடுகைக்கு
அதிலே நிரந்தர சித்தையாய்க் கொண்டு

தார் என்று
மாலை ஆகவுமாம்

பதைக்கின்ற
கிடந்த இடத்தில் கிடக்க மாட்டாமல்
கிலேசிக்கிற

கூடலைக் காலிட்டு அழிக்க வல்லவளாய் இருக்க
மாட்டு கிறிலள்

மாதின் திறத்து
கிலேச சஹமல்லாத மார்த்வத்தை யுடைய இவள் பக்கல்

அறியேன் செயற் பால் அதுவே
செய்யத் தக்கது அறிகிறிலேன்

இவளைப் பதைப்பிக்கிற நீயே
பரிஹாரம் அறியுமத்தனை என்று கருத்து –

இத்தால்
சிதைக்கின்ற தாழி என்று
தன் கையில் வியாபாரம்
ப்ராப்ய லாப ஹேதுவாகை அரிது என்றபடி

ஆழியை சீறி -என்று
ஸாத்ய உபாயத்தில் அனுபாதேயத்வ புத்தி பிறந்தபடி

தன் சீர் அடியால் உதைக்கின்ற நாயகம் தன்னொடு -என்று
அனுபாதேயத்வ புத்தி பிறந்தால்
அவ் வுபாயங்களைக் காற்கடைக் கொண்டு பரித்யஜிக்கும் இடத்தில்
இவ்வதிகாரியினுடைய ஸாமர்த்யம் சொல்லுகிறது

அதாவது
ஸ வாஸன தியாக ஸாமர்த்யம்

மாலே -என்று
விட்டுப் பற்றும் விஷயத்தினுடைய
வாத்சல்யாதியாயும்
ஞான சக்தியாதியாயும் யுள்ள
குணங்களின் பெருமை சொல்லுகிறது –

(மாமின் அர்த்தமும் -ஆஸ்ரித சவுகர்ய ஆபாத குணங்கள்
அஹமின் அர்த்தமும் -ஆச்ரித கார்ய ஆபாத குணங்கள் )

உனது தண்டார் ததைக்கின்ற தண் அம் துழாய் அணிவான் -என்று
இப்படி அவிளம்ப உபாய பரிக்ரஹத்துக்கு அடியான த்வரையை ஜநிப்பிக்கும்
விஷய போக்யதா அதிசயம் சொல்லுகிறது –

அதுவே மனமாய் பதைக்கின்ற -என்று
போக்ய விஷயத்தில் ப்ராவண்யம் விளம்பத்தைப் பாராமல்
ஆர்த்தியை ஜெநிப்பிக்கும் என்கிறது

மாதின் திறத்து -என்று
ஆர்த்தி விஞ்சினாலும்
ஸ்வரூபம் ப்ரவ்ருத்தி யோக்யம் அன்று என்றபடி

அறியேன் செயற் பால் அதுவே -என்று
ஏவம் விதமான அதிகாரம் யுடையாருக்கு
ஸாத்ய உபாயத்தில் ஞானமே பிடித்தில்லை என்றதாயிற்று –

——–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
கீழில் திருத்தாயார் வார்த்தையாகச் சொன்னதுவும்
ஆழ்வார் தமக்குப் பிறந்ததோர் விசேஷம் இறே
அவன் ரக்ஷகன் என்னும் இடம் தோற்றச் சொன்ன வார்த்தை இறே
இது தான்
அவனுடைய ரக்ஷகத்வத்தில் கண்ணழிவு அற்று இருக்க
அப்போதே வந்து உதவாமையாலே
இவருக்குப் பிறந்த பதற்றத்தைச் சொல்லுகிறது

கலந்து பிரிந்த தலைமகள்
நாயகன் வரவு தாழ்த்து
ஆற்றாமை மீதூர்ந்து
பிரிந்தார் ஒதுங்குவது நெய்தல் நிலத்திலே யாகையாலே
கடற்கரையிலே இருந்து கூடல் இழைக்க பலகால் இழையா நின்றால்
ஒரு கால் அல்லா ஒரு கால் சிதறும் இறே

ததா கதாம் தாம் வ்யதிதா மனிந்தி தாம் வ்யபேத ஹர்ஷாம் பரிதீன மானஸாம்
ஸூபாம் நிமித்தானி ஸூபானி பேஜிரே நரம் ஸ்ரியா ஜூச்ட மிவோ பஜீவின–ஸ்ரீ ஸூந்தர -29-1-
தன் தபஸ்ஸால் வந்த வெளிச்சிறப்பை யுடையனாய்
ப்ரஹ்மாவின் பக்கலிலே லப்த ஞானானுமாய்
அர்த்த தத்வம் இருந்தபடி பேசுவதாகப் புகுந்தவனுக்கும்
இன்னபடி என்று பாசுரம் இட்டுச் சொல்ல ஒண்ணாது
அவற்றால் ஐயத்தை இல்லாததும் ஐயத்தை சொல்லப் போகாது இறே
ஓடுகிற ஆற்றாமைக்கு எல்லாம் ஆஸ்ரயம் இல்லை
கருமுகை மாலையை வெய்யிலில் இட்டால் போலே இவளுக்கு இவ்வாற்றாமை

வ்யதிதாம் -ஆரண்ய -29-1-
இப்படிச் சொல்லிச் சொல்லும் அத்தனை

அநிந்திதாம்
அத்தலையால் வரில் வரும் அத்தனை
அவனை அறிந்தால் இருக்கக் கடவ படியிலே இருந்தாள்

வ்யபேத ஹர்ஷாம்
சிறைக்கூடத்திலே பிறந்து வளர்ந்தால் போலே
இதுக்கு முன்பு ஹர்ஷம் புகுந்து போனமையும் இல்லையோ –

——–

அவதாரிகை
இப்படி அனுபவ த்வரையாலே ஆர்த்தரான இவருக்கு
அனுபவ யோக்ய காலம் ஆர்த்தி அதிசய ஜனகமாய்க் கொண்டு
ஸந்நிஹிதமான அளவிலே
ஸ்மாரகமான லௌகிக பதார்த்தம் பாதகத்வேந ஸஞ்சரிக்கிற படியைக் கண்டு ஈடுபட்டு
அனுசந்தித்த பிரகாரத்தை
மாலைக்கு ஆற்றாமையின் மேலே
வாடைக்கு இரங்கின தலைமகள் பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார்

பால் வாய் பிறைப் பிள்ளை ஒக்கலை கொண்டு பகல் இழந்த
மேல் பால் திசை பெண் புலம்புறு மாலை உலகு அளந்த
மால் பால் துழாய்க்கு மனம் உடையார்க்கு நல்கிற்றை எல்லாம்
சோல்வான் புகுந்து இது வோர் பனி வாடை துழா கின்றதே –35-

பாசுரம் -35-பால் வாய் பிறைப் பிள்ளை –
மாலைக்கு ஆற்றாமையின் மேல் தலைவி வாடைக்கு இரங்குதல் –
வாயும் திரையுகளும் -2-1-

பதவுரை

பால் வாய் பிறை பிள்ளை–அமிருத கிரணத்தை வெளியுமிழகிற தன்மையையுடைய இளம்
பிறைச் சந்திரனாகிய பால் மாறத வாயையுடைய (தனது) இளங் குழந் தையை
ஒக்கலைகொண்டு-தனது இடைப்புறத்திலே (ஒரு பக்கத்திலே) வைத்துக்கொண்டு
பகல் இழந்த மேல் பால் திசை பெண்–ஸூர்யனாகிய கணவனை யிழந்த மேற்கு பக்கத்துக் திக்காகிய பெண்
புலம்பு உறும்–வருந்தி அழப் பெற்ற மாலைப் பொழுதானது
உலகு அளந்த மால் பால்–உலகங்களை அளவிட்ட திருமாலினிடத்து உள்ள
துழாய்க்கு–திருத்துழாய்க்கு
மனம் உடையார்க்கு–ஆசைப்பட்ட நெஞ்சையுடையவர்களுக்கு
நல்கிற்றை எல்லாம்–அருள் செய்த உதவியை முழுவதும்
சோல்வான்–கவர்ந்து கொள்ளும் பொருட்டு
புகுந்து–வந்து
இது ஓர் பனி வாடை–இந்தக் குளிர்ந்ததொரு காற்று.
துழாகின்றது–(என்மேல்) தடவுகின்றது; அந்தோ!

வியாக்யானம்
பால் வாய் பிறைப் பிள்ளை ஒக்கலை கொண்டு பகல் இழந்த மேல் பால் திசை பெண் புலம்புறு மாலை
பிறையாகிய பால்வாய்ப் பிள்ளையைப் பக்கத்திலே கொண்டு
பகலாகிற நிர்வாஹகனை இழந்த மேலை இடத்து யுண்டான திக்காகிற பெண்
தாத் காலிக பக்ஷி கோஷ முகத்தாலே புலம்புதலை உற்றது
என்னலாம் படியான மாலைக் காலமானது

பால்வாய்ப் பிறைப்பிள்ளை என்று
தன்னிடத்து வாய்ந்த பிறைப்பிள்ளை என்றுமாம்

பிள்ளை ஓக்கலைக் கொண்டு என்று
பிள்ளையாகிய சுற்றத்தைக் கொண்டு என்றும் சொல்வர்

ஓக்கலாவது –
சுற்றம்

பகல் என்று
ஆதித்யனைச் சொல்லிற்றாகவுமாம்

இத்தால்
மாலைக் காலமானது நாயகனைப் பிரிந்த பெண் பிறந்தாரை வருத்தும் என்று
தோற்றுவித்ததாயிற்று

உலகு அளந்த மால் பால் துழாய்க்கு மனம் உடையார்க்கு நல்கிற்றை எல்லாம்
தன்னதான லோகத்தை பராபிமான கிலேசம் புகுராமல்
எல்லை நடந்து
தன் கால் கீழே இட்டுக் காய்ந்த பெரியவனிடத்து
சேஷித்வ ஸூசகமான திருத் துழாய்க்கு ஆசைப்பட்ட நெஞ்சை யுடையவருக்கு
மாலை யுபகரித்த சத்தா மாத்ரத்தை ஒன்றும் சோராத படி

சோல்வான் புகுந்து
கொள்ளுவதாகப் புகுந்து

இது வோர் பனி வாடை
முன்பு வந்த வாடைகள் போல் அன்றியே
பெண் பிறந்தாரை நடுங்குவிக்கைக்கு அத்விதீயமாய் இருபத்தொரு வாடை –

துழா கின்றதே
துழாகின்றது

சத்தை கிடந்த இடம் தேடித் தடவா நின்றது என்று இரங்கி உரைத்தாள் யாயிற்று –

இத்தால்
பால்வாய் -என்று தொடங்கி
மாலை -என்று காலத்தைச் சொல்லுகையாலே
அனுபவ யோக்ய காலம் ஸந்நிஹிதமானால்
தன் பக்கல் தோற்றின ஞான ஏக தேசமே அவசேஷிக்கும் படி
மஹா ப்ரகாசகமான விவேகமும் குலைந்து மேலான திக்காய் இருக்கிற
பாரதந்தர்யம் யுடையாருக்கும் ஆர்த்தி அதிசயிக்கும் என்னும் இடம் தோற்றுகிறது

(பிள்ளை கையில் -கொஞ்சம் ஞானம் இவளுக்கு மிச்சம்
மேலைத்திக்கு -பாரதந்தர்யம் அறிந்த
விவேக ஞானம் குலைந்து புலம்புகிறாள் )

உலகளந்த என்று மேலுக்கு
அசாதாரண சர்வ சேஷியானவனுடைய போக்யதையிலே ஈடுபட்டார்க்கு
போக யோக்ய கால ஸந்நிதியால் வந்த ஆர்த்திக்கு மேலே
ஸ்மா ரகமான பாதக ஸந்நிதி சத்தையையும்
குலைக்கப் ப்ரவர்த்தியா நிற்கும் என்றதாயிற்று –

———–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
நல்கிற்றை எல்லாம் சோல்வான்
இங்கே சேஷித்துக் கிடந்ததாகத் தான் இது இப்படிப் படுகிறது
தவிர்ப்பதற்காக வந்து புகுந்தது

இதுவோர் பனிவாடை
இதுவோர் சந்த்ர உதயமும் ஒரு ஸந்த்யையும் ஒரு சமுத்திர கோஷமும் இத்தனை சமுதாயம் வேணுமோ
இது அடையச் செய்தது என் என்று வந்து புகுந்தது

துழா கின்றதே
இங்கு ஏதேனும் தொங்கிற்று யுண்டோ என்று
துழாவிக் கொண்டு வாரா நின்றது

ஸ்வா பதேசம்
இத்தால்
சந்த்ர உதயம்
அத்தால் வந்த பரிச்சேதம்
இவற்றை யுடைத்தான இந்நிலத்திலே பொருந்தாதே
இது இல்லாத அகால கால்யமான தேசத்தில் அல்லது பொருந்தாத படியைச் சொல்லுகிறது –

—————–

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி
அவதாரிகை
மாலையும் வந்தது மாயன் வாரான் -திருவாய் -9-9-9-என்று
மாலைக்கு ஆற்றாமைப்படும் மகளைப் பரிதபிக்கிற வாடையால்
நலிவு படுகிற இவளைக் கண்ட
திருத்தாயார் பயப்படுகிறான்

வியாக்யானம்
பால் வாய் பிறைப் பிள்ளை ஒக்கலை கொண்டு பகல் இழந்த மேல் பால் திசை பெண் புலம்புறு மாலை
பிறையாகிற பிள்ளை பால்வாய்ப் பிள்ளை யாயிற்று
மேற்புறமான திக்கானது
பகலாகிற பர்த்தாவை இழந்த ஸ்திரீயானாள்
இவள் தனது முலைப்பால் உண்கிற பிறப்பிள்ளையைத் தன் ஒக்கலிலே வைத்துக் கொண்டவளாய்
தாத் காலிக பக்ஷி ஸமுத்ர கோஷத்தாலே புலம்பா நின்றாள்
என்னாலான மாலை -ஸந்த்யா காலம் நல்கிற்றை எல்லாம் என்று அந்வயம்

ஆர்க்கு என்ன
உலகு அளந்த மால் பால் துழாய்க்கு மனம் உடையார்க்கு
என்று அந்வயம்
உலகு எல்லாம் எனக்கே சேஷம் என்கிற வ்யாமோஹத்தாலே
அத்தைத் தன் கால் கீழே இட்டுக் கொண்டவன்
இடத்தில் யுள்ள துழாய் வேணும் என்கிற மனஸ்ஸூ யுள்ளாருக்கு என்றபடி

இவர்கட்க்கு
நல்கிற்றை எல்லாம் சோல்வான்
உபகரித்தது களை எல்லாம் அபஹரிக்குமதாய்

மாலை வந்த போதே மாயனும் வருவான் என்று பிராணங்களை தரிக்கவும்
கண் விழிக்கவும் பெற்றாள்
இத்தை அபஹரிக்குமதாய்

புகுந்து இது வோர் பனி வாடை துழா கின்றதே
முன்பு வந்த வாடை போல் அன்றிக்கே
பனி யாகிற நஞ்சோடே கலந்த வாடை
இவள் பிராணங்களை அபஹரிக்க வேணும் என்றே அதுகளுக்கு
இருப்பிடத்தை எல்லாம் தேடித்தடவா நின்றது என்று
அத்தைத் தான் பொறாமல் பயப்படுகிறாள் –

———–

அவதாரிகை
இப்படி கால சந்நிதியிலும்
போக ஸந்நிதி இல்லாமையாலே
மோஹ ஜனகமான விளம்ப அஷமத்வத்தால் உண்டான இவருடைய
ஆர்த்தி அதிசயத்தைக் கண்ட ஸூஹ்ருத்துக்கள்
ஈஸ்வரனுடைய நைர் க்ருண்ய சங்கையைப் பண்ணி வெறுத்த பிரகாரத்தை
இருளுக்கு ஈடுபட்ட தலைமகள் ஆற்றாமை கண்ட தோழி
தலைமகனான ஈஸ்வரனுடைய கொடுமை கூறின பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

துழா நெடும் சூழ் இருள் என்று தம் தண் தராது பெயரா
எழா நெடு வூழி எழுந்த விக்காலத்தும் ஈங்கு இவளோ
வழா நெடும் துன்பத்தள் என்று இரங்கார் அம்மனோ இலங்கைக்
குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே –36–

பாசுரம் -36-துழா நெடும் சூழ் இருள் என்று தம் தண் தார் –
துறையடைவு-தோழி தலைவனின் கொடுமையைக் கூறல் –
ஆடி ஆடி அகம் கரைந்து -2-4-

பதவுரை

துழா நெடு சூழ் இருள் என்று–(கண்ணுக்குப் பொருள்கள் புலப்படாமையால் கைகளால்) தடவித் தேட
வேண்டும்படியான முடிவில்லாத நிறைந்த இருட் பொழுதென்று (ஒரு பேரிட்டுக் கொண்டு)
எழா நெடு ஊழி எழுந்த–(முன்பு ஒருகாலும்) தோன்றியறியாத நீண்ட கல்பம் தோன்றின.
இக்காலத்தும்–இச்சமயத்திலும்
ஈங்கு இவளோ–இவ்விடத்துத் தனிமை பொறுக்க மாட்டாதிருக்கிற இவளோ
தம் தண் தார் அது பெயர் ஆ–நமது குளிர்ந்த திருத்துழாய் மாலை விஷயமாக
(துழாய் மாலை யென்னும் பெயரையே உருவிட்டுச் சொல்லிக் கொண்டு)
வழா நெடு துன்பந் தன்–தவறுதலில்லாத மிக்க (முடிவில்லாத) துன்பமுடையவன்
என்று–என்று இவள் நிலைமையைத் திருவுள்ளத்திற்கொண்டு
இரங்கார்–(தலைவர்) இரக்கங் கொண்டு வந்து அருளுகிறாரில்லை;
அம்மனோ–அந்தோ!
இலங்கை–இலங்காபுரியிலுள்ள
குழாம்–கூட்டமான
நெடுமாடம்–பெரிய மாளிகைகளை
இடித்த–(தம் சேனையைக் கொண்டு இடித்துத் தள்ளின
பிரனார்–தலைவருடைய
கொடுமைகளே–கொடுந்தன்மைகள் இருந்தபடி என்னே!.

வியாக்யானம்
துழா நெடும் சூழ் இருள் என்று
துழாவும்படி கண்ணிட்டுப் பதார்த்தம் காண ஒண்ணாத படியான
முடிவின்றியே சூழ்ந்த இருள் என்று சொல்லப்படுவதாய்

தம் தண் தராது பெயரா
தன்னுடைய குளிர்ந்த மாலையைப் பேரிட்டுக் கொண்டு வியாஜமாக்கி

எழா நெடு வூழி எழுந்த விக்காலத்தும்
இதுக்கு முன்பு தோற்றி அறியாத கல்பம் தோற்றின
இவ்வளவிலும்

ஈங்கு இவள்
இவ்விடத்துத் தனிமை பொறுக்க மாட்டாத இவள்


ஐயோ

வழா நெடும் துன்பத்தள் என்று
வழுவாத பெரிய துன்பத்தை உடையவள் என்று

இரங்கார்
பர துக்கம் பொறுக்க மாட்டாத இரக்கத்தைப் பண்ணுகிறிலர்

அம்மனோ
என்று கொடுமைக்கு அஞ்சி உரைத்தல்

இலங்கைக் குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே
அரணை யுடைத்தான லங்கையில் திரண்ட நெடிய மாடங்களை இடித்தலாலே
பெண் பிறந்த ஜாதிக்காக உபகாரகராய் இருக்க
இவை சில கொடுமைகள் இருந்தபடி என் என்கிறது

நெடிய இருள் இறே என்றும்
இருள் பொறுக்க மாட்டாள் என்றும்
துக்கம் கனவிது என்றும்
இரங்குகைக்கு ஹேது பஹுளமாய் இருக்க
இவை கண்டு இரங்காமை தனித்தனியே கொடுமை என்றபடி –

இத்தால்
ப்ராப்ய விஷயத்தில் போக்யதையை வ்யாஜமாகக் கொண்டு
மோஹ அந்தகாரமாய் முழுக்க நடக்கும்படியான விளம்ப அஷமத் வத்தால் வந்த
கால தைர்க்யம் விஞ்சின அளவிலும்
இப்படி இருள் தரும் மா ஞாலத்திலே ஸ்வ துக்க நிவர்த்தனத்தில் அஸக்தரான இவர்
அலாப நிபந்தனை துக்கத்தாலே ஈடுபடுவர் என்று கிருபை பண்ணு கிறிலர்

தேவ்யா காருண்ய ரூபயா லஷ்ம்யா சஹா -ஸ்ரீ லஷ்மி தந்திரம் –28-14-என்று
கிருபை தனக்கு வருகிற துக்கமும் போக்கக் கடவ அவர்
இரங்காக் கொடுமைகள் இருந்தபடி என்
என்று வெறுத்து உரைத்தார் ஆயிற்று –

(கிருபை என்னும் பெயர் கொண்ட சீதாப் பிராட்டிக்கு –
காருண்யமே ரூபமாக வந்த பிராட்டி –
அவன் கிருபையையையே தூண்டுமவள் அன்றோ )

————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
கீழ்
ஸந்த்யா காலமும் வாடையும் நெளிந்தபடி சொல்லிற்று
அதுக்கும் மேலே
இருளும் வந்து தோற்றிற்று

வியாக்யானம்
துழா
இதுக்குத் தேடிப்பிடித்து நலிகைக்கு ஒரு ஸம்பந்தம் இல்லையீ
ப்ராணன்களோடே ஒரு ஸம்பந்தம் உண்டு இறே வாடைக்கு

நெடும் சூழ் இருள் என்று
எல்லை காண ஒண்ணாத படி இருப்பதாய்ப் பரந்து வருகிற இருள் என்று
ஒரு பேரையிட்டு
தார்மிக வேஷத்தைக் கொண்டு நலிவாரைப் போலே

ராத்ரியினுடைய வேஷம் தார்மிக வேஷமோ என்னில்
அதுக்கானால் ஒரு அவதி உண்டு இறே

வேறு ஒன்றினுடைய வடிவைக் கொண்டு நம்மை நலிகைக்கு நாம் செய்வது என் என்னில்
தன் தண் தராது பெயரா
வழி போவாரை யடைய
நீ காண் குதிரை கொண்டு போந்தாய் -என்று
சகர புத்திரர்கள் நலியத் தொடங்கினால் போலே

ஸ்வபாவமான படி என் -என்கிறாள்
இலங்கைக் குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே –
அபிமத விஷயத்துக்காக அவ்வரணை அழித்து உள்ளே புக்கு உபகரித்தவர் இப்போது
பிறர் நோவு தமக்குப் போது போக்காகப் புத்தி பண்ணி இருந்தாராகாதே -என்று
ஸ்ரீ எம்பார் அருளிச் செய்யும் படி

அங்கன் அன்றிக்கே
வர பலத்தாலே ஒருவரால் அழிக்க ஒண்ணாத அரணை யுடைத்தான
லங்கையை அழித்தது ஒருத்திக்காக என்று இருந்தோம்
அது அங்கன் அன்றிக்கே
இங்கனே கட்டளைப்பட்டு தர்ச நீயமாய் இருக்கிறது என் என்னும் பொறாமையாலே
அழித்தார் இத்தனை
அப்படி நம்முடைய ஸ்த்ரீத்வத்தால் வந்த அரணை அழிக்கைக்காக வல்லது
நம்மோடே ஸ்நேஹம் யுண்டாய் அல்ல -என்று
ஸ்ரீ திருமலை நம்பி வார்த்தை

ஸ்வாபதேசம்
இத்தால்
போக்ய யோக்கியமான காலமும் ஸம்ஸ்லேஷ சமயத்தில் அனுகூலமாமவை
அப்போது அனுகூல ஆகாரத்தாலே இப்போது பிரதிகூலமாய் நலிய நலிவு பட்டு
ஏதேனும் திசையிலும் குலையாத பகவத் பக்தியில் யுண்டான ரக்ஷகத்வ விஸ்ரம்பமும் குலைந்து
ஆற்றாமை கரை புரண்ட படியைச் சொல்லுகிறது –

——-

ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமி
அவதாரிகை
இப்படியுள்ள இவளுடைய ஆர்த்தி அதிசயத்துக்கு மேல்
இருளும் ராத்திரியும் இவளை
நலியுமது கண்டும் இவர் இரங்கிற்றிலர்
இவர் கொடுமைகளுக்கு நான் எத்தைச் செய்வேன் என்று
திருத்தாயார் வெறுப்பால் இன்னாதாகிறாள்

வியாக்யானம்
துழா நெடும் சூழ் இருள் என்று
துழாவிப் கொண்டும்
முடிவும் இல்லாததாய்ச் சூழ்த்துக் கொண்டு வந்த இருள் என்று சொல்லப்படுமதாய்

தம் தண் தராது பெயரா
தன் தோளில் இட்ட திருத்துழாய் மாலையை ஆசைப்பட்டதே வ்யாஜமாக்கி

எழா நெடு வூழி எழுந்த விக்காலத்தும்
என்றும் இங்கனே எழுச்சியும் வளர்ச்சியும் இல்லாமலும்
இன்று உள்ளதான கல்பமாய் இக்காலம் தோற்றின வளவிலும்

ஈங்கு இவள்
இங்கனே தனிமை பொறாமல்
அத்யா பன்னை யானவள்


ஐயோ

வழா நெடும் துன்பத்தள் என்று
வலுவாத பெரிய துக்கத்தை யுடையவன் என்று

இரங்கார்
இரக்கத்தைப் பானு கிறிலர்

அம்மனோ
புலியைக் கண்டு அஞ்சினால் போல் இது
இந்தக்கொடுமை யுண்டோ இன்று என்கிறாள்

இலங்கைக் குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே
லங்கையில் திரண்ட நெடிய மாடங்களை இடித்து உபகரித்தாருடைய
கொடுமைகள் இருந்தபடி என்

ஏக தாரா வ்ரதர் படி இங்கனே யாகாதே என்பதான வெறுப்பு இதில் –

———

அவதாரிகை
இப்படி ஆப்தரான இவ்வாழ்வார்
பகவத் விஷயத்தில் தமக்குப் பிறந்த அபி நவையான பக்தி தசையைத்
தம்முடைய ஞான தசையாலே அநு சந்தித்து
துர்க்கதமான ஸம்ஸார மார்க்கத்தில் இந்த ப்ரேம தசையானது நடந்ததாகை
அரிது என்று நொந்த பிரகாரத்தை
புணர்ந்ததுடன் போன தலைமகளுடைய கரத்தருமை நினைந்து
நற்றாய் இரங்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

கொடும் காற் சிலையர் நிரை கோள் உழவர் கொலையில் வெய்ய
கடுங்கா விளைஞர் துடி படுங்கவ் வைத்து அருவினையேன்
நெடும்காலமும் கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்ற
தொடுங்கால் ஓசியும் இடை இள மான் சென்ற சூழ் கடமே –37-

பாசுரம் -37-கொடும் கால் சிலையார் நிறை கோள் உழவர் –
நற்றாய் தன் மகள் சென்ற பாலை நிலக் கொடுமையை கூறி இரங்கல் –
மண்ணை யிருந்து துழாவி -4-4-

பதவுரை

அரு வினையேன்–அநுபவிக்க முடியாத தீவினைப் பயனையுடைய யான்
நெடு காலமும்–வெகு காலம்
கண்ணன்–கண்ணபிரானுடைய
நீள் மலர் பாதம்–நீண்ட தாமரை மலற்போன்ற திருவடிகளை
பரவி–வழிபட்டு
பெற்ற–அந்த ஆராதனையின் பயனாக ஈன்ற
தொடுங்கால் ஒசியும் இடை இனமான்–தொட்டால் ஒடியும்படியான (மிக மெல்லிய) இடையை யுடையவளும்
இளமை தங்கிய மான் போன்ற பார்வை யுள்ளவளுமான மகள்
சென்ற–நடந்துபோன
சூழ்கடம்–பரந்த பாலை நிலம். (எப்படிப்பட்டதென்னில்)
கொடு கால் சிலையர்–வளைந்த விற்கழுந்தை யுடையவர்களும்
நிரை கோள் உழவர்–பசுக்கூட்டங்களைக் கவர்ந்து கொள்வதையே தொழிலாக வுடையவர்களும்
கொலையில் வெய்ய–கொலைத் தொழிலில் கொடியவர்களும்
சுடு கால்–நடை விரைந்த கால்களை யுடையவர்களுமாகிய
இளைஞர்–இளைய வீரர்களது
துடி–பறைகள்
படும்–ஒலித்தலாகிற
கவ்வைத்து–ஆரவாரமுடையது.

வியாக்யானம்

கொடும் காற் சிலையர்
கொடிதான கோலை யுடைத்தான சிலையை யுடையவர்கள்
கோடுதல்-வளைதல்
கால் என்று சிலைக்கோடி
கோடிய காற் சிலையர் -என்றுமாம்

நிரை கோள் உழவர்
நிரை கொள்ளுகையை உழவாக யுடையவர்கள்
நிரை என்று -காலித்திரள்
உழவானது -இதுவே க்ருஷியாய் இருக்கை

கொலையில் வெய்ய கடுங்கால்
மாற்றார் எதிர்ப்பட்ட விடத்து கொலைத் தொழிலில் வெவ்வியரான கடிய காலை யுடையவர்கள்
அதாவது
சீக்ர காமிகளாய் எதிரிகளை அழியச் செய்கை

விளைஞர்
இந்த ஸுர்யாதிகளுக்கு ஈடான
பருவத்தின் இளமையை யுடையவர்கள்

துடி படுங்கவ் வைத்து
இவர்கள் பறை அறைவால் யுண்டான ஆரவாரத்தை யுடைத்து

அருவினையேன் நெடும்காலமும் கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்ற
ஆஸ்ரித ஸூலபனான கிருஷ்ணனுடைய ஸர்வ சமாஸ்ரயணீயமாய்
நிரதிசய போக்யமான திருவடிகளைக் கீர்த்த நாதி முகத்தாலே
ஆஸ்ரயித்துப் பெறப்பட்ட

தொடுங்கால் ஓசியும் இடை
தொடும் அளவில் முறியும் என்னும்படி
மெல்லிதான இடையை யுடைய

இள மான்
பருவத்தாலும்
தனிமையால் யுண்டான நோக்காலும்
முக்தமான மான் போலே இருக்கிறவள்

சென்ற சூழ் கடமே
இவள் நடக்கிற சூழ்ச்சியை யுடைய வழியானது

சூழ்ச்சியாவது
வெம்மையால் துயரை விளைத்தல் –

இத்தால்
இளமான் -என்று
பருவத்தையும்
ஸ்த்ரீத்வத்தையும் சொல்லுகையாலே
அபி நவையாய்
தாஸ்ய ப்ரீதி ரூபையான பக்தியை ஸூசிப்பித்த படி

தொடுங்கால் ஓசியும் இடை -என்கையாலே
பக்தி கார்யமான வைராக்யத்தின் முதிர்ச்சியைத் தோற்றுவிக்கிறது
அன்றியே
அந்நிய ஸ்பர்சம் யுண்டாகில்
மத்யே அவிச்சின்னமாம் படி யான
பக்தியின் மேன்மை சொல்லிற்றாகவுமாம்

நெடும்காலமும் கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்ற-என்கையாலே
ஜன்மாந்தர ஸஹஸ்ரேஷு தபோ ஞான ஸமாதிபிர் நராணாம் ஷீண பாபாநாம்
கிருஷ்ணே பக்தி ப்ரஜாயதே -என்கிறபடியே
பக்தி பிறக்கைக்கு உடலான அருமை தோற்றுகிறது

சென்ற சூழ் கடமே –என்று
இந்த பக்தி வர்த்திக்கிறது
ஸம்ஸார காந்தார மார்க்கத்திலே என்றபடி

கொடும் காற் சிலையர் நிரை கோள் உழவர் கொலையில் வெய்ய-என்று
இம் மார்க்கத்தினுடைய விரோதி பூயஸ்தையைச் சொல்லுகிறது –
இவ் விடத்து பக்திக்கு விரோதிகளாவன விஷய அர்த்திகளான இந்திரியங்கள்

கொடுங்கால் சிலையார் என்கையாலே
பாதக ஸாதனத்தினுடைய ஸாமர்த்யத்தைச் சொன்னபடி

இதில்
கால் கொடுத்தலாவது
அபிராப்த விஷய அவகாஹநம் ஆகிற வக்ர கதி

கொடுமையான போது
இந்த்ரியங்களினுடைய அநர்த்தா வஹத்வம்

நிரை கோள் உழவர் -என்று
இந்த்ரியங்களுக்குப் பிரதி நியதமாய்க் கொண்டு நிரை நிரையான
ஸப்தாதி விஷயங்களை
கிரஹிக்கையே வ்ருத்தியாய் இருக்கை

கொலையில் வெய்ய-என்கையாலே
இச் சேதனனை பகவத் விஷயத்தை விஸ்லேஷிப்பித்து நலியும் இடத்தில்
க்ரூரங்களாய் இருக்கை

கடுங்கால் என்று
சீக்ர காரிகளாய் இருக்கை

இளைஞர்-என்று
நலியும் இடத்தில் சக்தி குன்றாது இருக்கை

துடி படுங் கவ்வைத்து-என்கையாலே
பலவா திந்த்ரியக்ராவோ வித்வாம் ஸமபி கர்ஷதி -என்று
பறை அறைவாரைப் போலே உண்டான பிராமண ப்ரஸித்தியைச் சொல்லுகிறது

ஆக
இந்திரிய பலாக்ராந்தமான ஸம்ஸார மார்க்கத்திலே
பகவத் பக்தி தசையானது நடக்க அரிது என்னும் இடத்துக்கு
நொந்து அருளிச் செய்தார் ஆயிற்று –

————-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
கலந்து பிரிந்த தலைமகள்
நாயகன் வரும் அளவும் தரித்து இருக்க மாட்டாதே
ஆற்றாமை மிகுகையாலே தனி வழியே புறப்பட்டு குரூரமான காட்டிலே
துஷ்ட ஸத்வங்களும் –
துர்த்வனிகளும்
துர்க்கதியுமான
தேசத்திலே போனாளாய்
அவளைத் திருத்தாயார் படுக்கையிலே காணாமையாலே
எல்லாப் படியாலும் பொல்லாதாய் இருக்கிற தேசத்திலே போன இவள் என் செய்கிறாளோ என்று
இவள் போன வழியைப் பார்த்து சோகிக்கிறாள்
திருக்கோளூரிலே புக்க பெண் பிள்ளையுடைய திருத்தாயாரைப் போலே
ஓர் இடத்தை நிச்சயிக்க ஒண்ணாமையாலே அவளிலும் இவளுக்கு சோகம் அதிசயித்து இருக்கும் –
அன்றிக்கே
புணர்ந்ததுடன் போக்கிலே இவளுக்கு இரங்குகிறாள் ஆகவுமாம்
இவளுடைய ஸுகுமார்யத்தையும்
இவள் தான் ஸ்லாக்யையாய் இருக்கிற பொடியையும்
வழியில் அருமையையும்
அது தனக்கு ஓர் எல்லை இன்றிக்கே இருக்கிற பொடியையும் சொல்லிக் கூப்பிடுகிறாள்

வியாக்யானம்
கொடும் காற் சிலையர்
அவ்வழி தான் இருக்கிற படியைச் சொல்லுகிறது

கொடும் காற் சிலையர்
கொடிதான காலை யுடைத்தான சிலையை யுடையராய் இருப்பர்கள்
எப்போதும் ஓக்கக் கால் வளைந்த படியே இருந்துள்ள வில்லை யுடையராய் இருப்பர்கள்
பர ஹிம்ஸா த்வரையாலே போஜன சமயத்தோடு நித்ரா சமயத்தோடு வாசியற
எப்போதும் ஓக்க நாண் ஏறிட்ட படியேயாய் இருக்குமாயிற்று வில்லு

இப்படி ஏறிட்ட நாணி இழிய விடாதே இருந்துள்ள வில்லைக் கொண்டு இவர்கள்
கொள்ளும் பிரயோஜனம் என் என்னில்
நிரை கோள் உழவர்
நிரை கோள் உண்டு -கோ க்ரஹணம்
அதுவே யாத்ரையாய் இருப்பர்கள்
ரக்ஷகனாய் இருக்குமவன் கோ ப்ராஹ்மண -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-19-25-
ஹிதனாய் இருக்குமா போலே
இவர்கள் இவற்றின் ஹிம்சையே தங்களுக்கு வெள்ளாண்மை யாய் இருப்பர்கள்

கொடுங்கால்
நான் ஏறிடுகையாலே வளைந்து இருக்கை

சிலையர்
அது நிரூபகமாய் இறுக்கியபடி
அவன் கையும் திருவாழியுமாய் இருக்கிறாப் போலே இறே
எப்போதும் கை கழலா நேமியானாய் இருக்கும் இறே -பெரிய திரு -87-
அவன் பர ரக்ஷகனாய் இறே இருப்பது
நா ஹாரயதி ஸந்த்ராஸம் பாஹு ராமஸ்ய ஸம்ஸ்ரிதா -அயோத்யா -60-20-என்னுமா போலே
பயம் கெட்டு இருக்கிறது அன்று இறே இங்கு

என்னும்படி நாயகனும் தொடக் கூசும்படியான இடையாள்
மிகவும் இளமை யுள்ளவள்
இளமான் போல் காதராஷி யானவள்

சென்ற சூழ் கடமே
இவள் நடந்து போன பெரும் காடு இவ்வகையாக ஆயிற்று
அதிலே இப்படி போனாள் என்று சோகிக்கிறாள் –

——–

அவதாரிகை
இப்படி ஸம்ஸாரத்தின் துர்கதியை அனுசந்தித்து அருளினவர்
ஆஸ்ரித விஷயத்தில் ஸாம்யாபத்தி ப்ரதனாய்
ஸர்வ ஸமாஸ்ரயணீயனான ஸர்வேஸ்வரனுடைய நீர்மையை அனுசந்தித்து
நாம் அவனை ஆஸ்ரயித்து இருக்கையாலே
நாம் அவனோடு பரம ஸாம்யா பன்னராகைக்குக் குறையில்லை என்று நினைத்த பிரகாரத்தை
தலைமகனான ஸர்வேஸ்வரனுடைய திரு நிறத்தில் போலி கண்ட -நெய்தலைக் கண்ட –
தலைமகள் பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
(போலி கண்டு அழிதல் என்றும் மகிழ்தல் என்றும் கொள்ளலாம் )

கடமாயினகள் கழித்து தன் கால் வன்மையால் பல நாள்
தடமாயின புக்கு நீர் நிலை நின்ற தவமிது கொல்
குடமாடி யிம் மண்ணும் விண்ணும் குலுங்க வுலகளந்த
நடமாடிய பெருமான் உரு ஒத்தன நீலங்களே -38-

பாசுரம் -38-கடம் ஆயினகள் கழித்து தன கால் வன்மையால் –
தலைவனைப் பிரிந்த தலைவி போலி
கண்டு மகிழ்தல் -சொன்னால் விரோதம் இது -3-9-

பதவுரை

கடன் ஆயினகள் கழித்து–காடுகளாகவுள்ள வற்றைக் கடந்து ஒழித்து
கடம் ஆயின புக்கு–தடாகங்களாக வுள்ளவற்றில் பிரவேசித்து (அங்கு)
தம் கால் வன்மையால்–தமது கால்களின் வலிமையால்
பல நாள்–அனேக காலம்
நீர் நிலை நின்ற–நீரிலே நீங்காது நின்று செய்த
தவம் இது கொல்–இத் தவத்தினாலேயோ
நீலங்கள்–நீலோற்பல மலர்கள்–கரு நெய்தல்கள்
குடம் ஆடி–(கிருஷ்ணாவதாரத்தில்) குடக் கூத்தாடினவனும்
(த்ரிவிக்ரமாவதாரத்தில்)
இ மண்ணும்–இந்த மண்ணுவகமும்
விண்ணும்–விண்ணுலகமும்
குலுங்க–நெகிழும்படி
உலகு–உலகங்களை
அளந்து–அளவிட்டு
நடம் ஆடிய–(இங்ஙனம்) திருவிளையாடல் செய்தருளினவனுமான
பெருமான்–எம்பெருமானுடைய
உரு ஒத்தன–திருமேனி நிறம்போன்ற நிறம் பெற்றன.
இம் மண்ணும் விண்ணும் குலுங்க–இந்த பூ லோகமும் ஊர்த்வ லோகமும் ஆச்சர்யப்பட்டு அசையும்படியாக
குடமாடி -ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தில் குடக் கூத்தாடியும்
வுலகளந்த-லோகங்களை த்ரிவிக்ரம அவதாரத்தில் ஆக்ரமித்தும்
நடமாடிய பிரான் உரு ஒத்தன -சஞ்சரித்த சர்வேஸ்வரனுடைய திரு மேனியோடே சாம்யம் உடைத்தாய் இருக்கின்றன
இது -இதற்குக் காரணம்
கடமாயினகள் கழித்து -தேவ பித்ரு ருஷி ருணங்கள் நிறைவேற்றி
தன் கால் வன்மையால் -தனது காலின் உரத்தினால்
பல நாள் தடமாயின -அநேக காலம் தடாகம் என்ற பேர் பெற்றவைகளில்
புக்கு நீர் நிலை நின்ற தவம் கொல்-பிரவேசித்து ஜலத்தில் சிரகாலம் வாஸம் பண்ணின தபஸ்ஸாய் இருக்கலாம்

வியாக்யானம்

கடமாயினகள் கழித்து
தனக்கு அனுபவித்து அற வேண்டும்படியான பாபங்களைக் கழித்து

தன் கால் வன்மையால்
தான் நின்ற அடி யுரத்தாலே

பல நாள்
அநந்த காலம்
பலம் பெறும் அளவும் என்றபடி

தடமாயின புக்கு
அகாதமான தடாகங்களிலே அவகாஹித்து

நீர் நிலை நின்ற
நீரிலே நித்ய வாஸம் பண்ணின

தவமிது கொல்
இது தபஸ்ஸாகக் கூடும் இறே

குடமாடி
பஞ்ச லக்ஷம் குடியில் பிறந்த கோப கோபீ ஜனங்கள் எல்லாம்
காணும்படி குடக் கூத்தாடி

யிம் மண்ணும் விண்ணும் குலுங்க
இந்த பூமியோடு
தேவ லோகத்தோடு
வாசி யற
தன் செயலிலே வ்யாகுலமாம் படியாக

இது கீழோடே சேரவுமாம்

வுலகளந்த நடமாடிய
அளக்கிற இடத்திலே
அநாயாசத்தாலே வல்லார் ஆடினால் போலே இருக்கை

பெருமான்
அந்நிய சேஷத்வத்தையும்
ஸ்வ ஸ்வா தந்தர்யத்தையும்
கழித்துக் கொடுக்கையாலே ஸர்வாதிக சேஷி யானவனுடைய

பெருமான் உரு
ரூபமேவாஸ்யை தந் மஹி மாநம் வ்யாஸஷ்டே -யஜுர் -5-1-4-என்கிறபடியே
பெருமை சொல்லுவதாக நிறம்

ஒத்தன நீலங்களே
நீலங்களானவை அவன் திரு நிறத்தோடு ஒத்தன

ஆக
இந் நிலத்துக்கு ஸாம்யம் உண்டாயிற்று
தன்னுடைய உத்பத்தி ஸ்தானமான தேசத்திலே
நித்ய வாஸம் தானே தபஸ்ஸூ ஆகையால் என்றதாயிற்று

(திருஅயோத்யையில் இருந்ததே ஹேதுவாக அன்று
சராசரங்களை வைகுந்தம் ஏற்றி அருளினாரே பெருமாள்
தவம் க்ஷேத்ர வாசமே )

இதுக்கு கடங்கள் கழிக்கை யாவது –
தபஸ்ஸூ பாபத்தைப் போக்கும் என்கிற ஸாம் யத்தாலே

இத்தால்
யாவத்த்ரியதே ஸா தீஷா -தைத்ரியம் -என்கிறபடியே
அநந்ய ஸாதனனாகிற அதிகாரிக்கு சரீர ஸ்திதி தானே
சாதன அனுஷ்டானம் என்னலாம் படி இருக்கை

அதில் கடமாயின கழித்து -என்கையாலே
கடம் என்று ருணமாய்
நாயம் ருணீ -பாகவதம் -என்கிறபடியே
இவ் வதிகாரியினுடைய ருண த்ரய அபகரணம் சொல்லுகிறது

தன் கால் வன்மையால் -என்கையாலே
வ்யவசாய சக்தியை ஸூசிப்பித்த படி

பல நாள் தடமாயின புக்கு -என்கையாலே
சீதமிவஹ்ரதம் -மோக்ஷ -4-50- என்கிறபடியே
வாசத் தடமான பகவத் விக்ரஹங்களிலே அவகாஹித்து என்றபடி
(நீராடப் போதுவீர் -)

நீர் நிலை நின்ற -என்கையாலே
ஸ்வ பாவமான நீர்மையிலே நிலை நிற்கை

தவமிது கொல் -என்கையாலே
அநு பாவ்யம் தானே பல ஸாதனம் என்னும்படி
அவிசேஷிதமாய் இருக்கை

குடமாடி இத்யாதியாலே
கிருஷ்ணனுக்கும்
த்ரிவிக்ரமனுக்கும் யுண்டான ஸர்வ ஸமாஸ்ரயணீயதையாலே
வந்த நீர்மையின் ஐக்யம் தோற்றுகிறது

உரு வொத்தன நீலங்கள் -என்கையாலே
ஸாம்யா பன்னரானவர்கள்
புஷ்பவத் ஸ்லாக்ய ஸ்வ ரூபர் என்கை யாயிற்று –

———

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
நெடுநாள் ஸம்ஸாரத்திலே இருக்கச் செய்தேயும்
பகவத் விஷயத்திலேயே அவகாஹித்த படி இறே
கீழ்ச் சொல்லிற்று

இப்பாட்டில்
பகவத் விஷயத்தில் அவகாஹித்த நெஞ்சு மீண்டு தரிக்கைக்காக லோக யாத்திரையை அனுசந்திக்கப் புக்கார்
அதுவும் பகவத் விஷயத்துக்கே உடலாய் இருக்கும் இறே
ஸம்ஸாரிகளானவர்கள் இங்குத்தை வாஸனையாலே அத்தை இங்குத்தைக்கு உடலாக்கிக் கொள்வர்கள்
இவர்கள் பகவத் விஷய வாஸனையாலே இத்தையும் அங்குத்தைக்கு உடலாக்கிக் கொள்வர்கள்

நோ பஜனம் ஸ்மரந் -சாந்தோக்யம் -8-1-2- என்கிற
முக்தனில் காட்டில் முமுஷுவுக்கு வாசி இது விறே –

ஸம்ஸார ஸ்ம்ருதியும் அனுவர்த்தியா நிற்கச் செய்தே அதுவும் பகவத் அனுபவத்துக்கு உடலாய் இருக்கும்
முதலிலே இது தன்னில் ஸ்ம்ருதி தானும் பிள்ளையாய் இருக்கும் முக்தனுக்கு

குருகைக் காவல் அப்பனை
ஜகத் ஈஸ்வரர்களுக்கு ஸம்பந்தம் இருக்கும் படி என் என்று கேட்க
எஜ்ஜகத்துக்கும் எவ்வீஸ்வரனுக்கும் நீ கேட்க்கிறது -என்றான்
சரீரம் யாதவாப்நோதி யச்சாப் யுத்த க்ராம தீஸ்வர -ஸ்ரீ கீதை -15-8-என்று
இந்திரியாதிகளோடே கூடி உபசயாத்மகமாய் இருந்துள்ள இச்சரீரம் ஆகிற இஜ்ஜகத்துக்கு
ஜீவாத்மாவை ஈஸ்வரனாகச் சொல்லா நின்றது இறே
இச்சரீரத்துக்கும் ஈஸ்வரனான ஆத்மாவுக்கும் யுண்டான ஸம்பந்தம் யாதொன்று அப்படி
இச் சரீர சரீரீ பாவம் ஜகத் ஈஸ்வரர்களுடைய சம்பந்தம் என்று உத்தரம் சொன்னான்

அவன் தானே -எனக்கு எம்பெருமானை ஸ்மரிக்கைக்கு விரகு சொல்ல வேணும் என்ன
நான் உனக்கு அது சொல்லுகிறேன்
நீ எனக்கு மறக்க விரகு சொல் என்றான்

ஆவது என் என்னில்
ஒரு பதார்த்தத்தைக் கண்டால் அதனுடைய வஸ்துத்வ நாம பாக்த்வங்கள் அவன்
அந்தராத்மதயா நிற்கில் அல்லது அவற்றுக்கு இல்லை இறே
விசேஷண அம்சம் தோற்றா நிற்க நினைக்க விரகு கேட்க வேண்டுவதே என்றபடி

இப்படி பகவத் விஷயத்திலே அவகாஹித்து இருக்கிற இவர் லோக யாத்திரையில் கண் வைத்தார்
சில நீரிலே நிற்கிற நீலங்கள் வந்து கண்ணுக்கு இலக்காயிற்று
இவை அவனோடு ரூப ஸாம்யத்தை யுடையனவாய் இரா நின்றன
இவை நெடுநாள் நீரிலே நின்று பண்ணின தபஸ்ஸூ யுடைய பலமாகாதே -என்கிறார் –

குடக்கூத்தாடி ஸஹர்ஷ சீர கம்பம் பண்ணும்படியாக சர்வ லோக க்ரஹணத்தைப் பண்ணி
நடந்து அருளின பெருமை யுள்ளவருடைய திருமேனி போன்றி கோள் நிறத்தால்

நீலங்களே
கரு நெய்தல் பூக்கள்

——–

அவதாரிகை
இப்படி அதிகார சம்பத்தியான பல ஸித்தியை அனுசந்தித்தவர்
இதுக்கு அடியான
பகவத் கடாக்ஷத்தையும் அனுசந்தித்து
அவ்வனுசந்தானத்தின் முதிர்த்தியாலே ஸர்வேஸ்வரனுடைய
திருக்கண் அழகானது
ஏழையர் ஆவி -யில் போலே
உரு வெளிப்பாடாம் படி பிரகாசித்த பிரகாரத்தை அருளிச் செய்கிறார் –

நீல தட வரை மேல் புண்டரீக நெடும் தடங்கள்
போல பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும் பொங்கு முந்நீர்
ஞாலப் பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான்
கோலம் கரிய பிரான் எம்பிரான் கண்ணின் கோலங்களே -39-

நீலத் தட வரை மேல் புண்டரீக நெடும் –
தலைவனின் உருவம் பற்றித் தலைவி கூறுதல் –
ஏழை யாராவி -7-7-

பதவுரை

நீலம்–நீலமணி மயமான
தடவரை மேல்–பெரியதொரு மலையின் மேலுள்ள
புண்டரீகம் நெடு: தடங்கல் போல பொலிந்து–பெரிய செந்தாமரைப்பூப் பொய்கைகள் போல விளங்குகின்றவைகளும்
எமக்கு எல்லாத இடத்தவும்–எமக்குக் காணுமிடந்தோறும் தோன்றுகின்றவை யுமாயுள்ளவை
(எவையென்னில்)
பொங்கு முந்நீர்–கிளர்கிற கடல்சூழ்ந்த மண்ணுலகத்துக்குத் தலைவனும்
விசும்புக்கும் பிரான்–விண்ணுலகத்துக்குத் தலைவனும்
மற்றும் நல்லோர்பிரான்–மற்றுமுள்ளவர் யாவர்க்கும் தலைவனும்
கோலம் கரிய பிரான்–திருமேனி நிறம் கறுத்திருக்கப் பெற்ற பிரபுவுமான
எம்பிரான்–எம்பெருமானுடைய
கண்ணின்–திருக்கண்களினுடைய
கோலங்களே–அழகுகளேயாம்.

வியாக்யானம்
நீல தட வரை மேல் புண்டரீக நெடும் தடங்கள் போல
நீல ரத்ன மயமான பெரிய மலையின் மேலே
தாமரையை யுடைத்தான நெடிய தடாகங்கள் போலே

பொலிந்து
தாமரைத் தடாகம் போலி சொல்லும் படி
அழகு விஞ்சி

எமக்கு எல்லா இடத்தவும்
சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றும் கண்டீர் -திருவாய் -7-7-1-என்கிறபடியே
ஸர்வ பிரதேசத்திலும் பிரகாசியா நின்றன

பொங்கு முந்நீர் ஞாலப் பிரான்
கிளம்பின முன்னீரை யுடைய லோகத்துக்கு ஸ்வாமி யானவன்

இத்தால்
ஆற்று நீர் ஊற்று நீர் வர்ஷ ஜலத்தாலே கடல்
முந்நீர் ஆனால் போலே
அர்த்த காம அபிமான நீர்மையாலே (ஸ்வ பாவத்தால் ) விஞ்சின ஜகத்தை
ஜிதந்தே புண்டரீகாக்ஷ -ஜிதந்தா ஸ்தோத்ரம் -1-என்னும்படி
போக ப்ரதனாயக் கொண்டு
தன் கண் அழகாலே தோற்பித்த ஸ்வாமியானவன் என்றபடி

விசும்புக்கும் பிரான்
வெளி நாடான நித்ய விபூதிக்கும்
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை -திருவாய் -2-6-3-என்கிறபடியே
தன் கண் அழகாலே போக பிரதனாய்க் கொண்டு நிர்வாஹகனானவன் என்கிறது

மற்றும் நல்லோர் பிரான்
முன் சொன்ன லீலா விபூதியிலும் அந்தர் பவியாதே
நித்ய விபூதியிலும் புகப் பெறாதே
தன் குணங்களில் ப்ரவணரான முமுஷுக்களுக்கு
பாஹிமாம் புண்டரீகாக்ஷ -ஜிதந்தே -8- என்கிறபடியே
தனது கடாக்ஷ விசேஷத்தாலே உபாய பூதனாய் ரக்ஷிக்குமவன்

கோலம் கரிய பிரான்
இக் கண் அழகுக்குப் பரபாக ரஸத்தை யுண்டாக்கக் கடவதான
திரு மேனியில் கருமையாலே உபகாரகனானவன்

எம்பிரான்
இக் கண் அழகையும்
வடிவு அழகையும்
காட்டி என்னை அடிமை கொண்டவனுடைய

கண்ணின் கோலங்களே –
கண்களின் அழகுகள் ஆனவை
அதாவது
1-பரபாக சோபையும்
2-மிளிர்த்தியும்
3-பெருமையும்
4-சிவப்பும்
5-குளிர்த்தியும்
தொடக்கமானவை

கோலம் கரிய பிரான் எம்பிரான் கண்ணின் கோலங்கள்
நீலத் தடவரை மேல் நெடும் தடங்கள் போலப் பொலிந்து
எமக்கு எல்லா விடத்தவும்
என்று அந்வயம்

இப்பாட்டு
கிளவி மர்யாதையில் நாயகனான ஈஸ்வரனுடைய உரு வெளிப்பாட்டைத்
தோழிமார் தொடக்கமானார்க்கு நாயகி உரைத்ததாகையாலே
இவ்வாழ்வாருடைய ஸ்வ அனுசந்தானம் இன்றியே
ஸூஹ்ருத்துக்களை நோக்கிச் சொன்னதாகவுமாம் –

————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
சில நீலங்களைக் கண்டு
இவை பண்ணின தபஸ்ஸுக்குப் பலம் பெற்றன போலே இரா நின்றன
நம்முடைய விரஹ தாபத்துக்கே யாகாதே பலம் இன்றிக்கே ஒழிகிறது
என்று அவ்வழியாலே அவற்றோடு போலியான வடிவை நினைத்து
அவ்வழியாலே திரு முகத்திலே அழகை அனுசந்தித்து
அது தான் போய்
ப்ரத்யக்ஷ சாமானாகரமாய்
அத்தாலே அணைக்கக் கணிசித்துக்
கைக்கு எட்டாமையாலே நோவு பாடவும்
அவ்வழகு ஸ்ம்ருதி விஷயமாய் உரு வெளிப்பாடாய்
நோவு பட்டுக் கிடக்கிற படியைச் சொல்லுகிறது

வியாக்யானம்

நீல இத்யாதி
ஒரு நீல கிரி போலே யாயிற்று திருமேனி இருப்பது
ராம கமல பத்ராஷ -ஸூந்தர -35-8-
பெரு வெள்ளத்தில் சில சுழிகள் போலே யாயிற்று திருக்கண்கள்
ஸர்வாங்க ஸூந்தரராய் இறே இருப்பது
அதன் மேலே இறே கண் அழகு
விகாசம் செவ்வி குளிர்த்தி தண்ணளி இவற்றாலே தாமரை போலே யாயிற்று இருப்பது
கண் அழகுக்கு எல்லை எவ்வளவு என்னில்
ஸர்வ ஸத்வ மநோ ஹர -ஸூந்தர -35-8-
இடக்கை வலக்கை அறியாத திர்யக் ஜாதியிலே பிறந்த நாங்களும் அகப்படும் படியாயிற்று இதில் அழகு

எல்லா உலகும் தொழும் ஆதி மூர்த்தி -திருவாய் -3-3-5- என்றார் இறே
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என் கண் பாசம் வைத்த -திருவாய் -3-3-4- என்னக் கடவது இறே
என்னில் குறைந்தார் இல்லை
நான் அகப்படத் தொழுதேன் என்று இருக்கிறேன்
நான் அகப்பட்ட பின்பு இனி யார் தான் என்று இருக்கிறார்
ரூப தாக்ஷிண்ய சம்பன்ன -ஸூந்தர -35-8-
அதுக்கு அவ்வருகு சில சுழிகளாய் ஆயிற்று இவை
வடிவு அழகும்
ஆனு கூல்யமும்
போக்தாக்கள் இல்லாமையாலே குமர் இருந்து போம் இத்தனை
ஸர்வ ஸத்வ மநோ ஹரத்வம் கண் அழகோடே அற்றது இறே

ஸம்பன்ன
இவை கூடு பூரித்துக் கிடக்கும் அத்தனை

ஸம்பன்ன ப்ரஸூத
இவை தான் ஒவ் பத்திகமாய் இருக்கை

பெருமாள் வடிவு அழகைக் கழியப் பேசினாய்
இன்னம் இப்படி இருபத்தொரு ஆஸ்ரயம் யுண்டோ இல்லையோ என்ன
ஓன்று உண்டு
ஜனகாத்மஜே
உனக்கு ஏற்கும் கோல மலர்ப்பாவை -திருவாய் -10-10-6-என்கிறபடியே
தேவரீரும் உண்டு

எமக்கு எல்லா விடத்தவும்
இக்கண் அழகின் கீழே நாடு ஜீவித்துக் கிடவா நின்றது இறே
நமக்கே இறே பாதகம் ஆகிறது
கண்டு அனுபவிக்க இழிந்தால்
ப்ரத்யக்ஷ சாமானா காரமாய் அவ்வருகே சில பரிமாற்றத்தைக் கணிசித்துக் கை நீட்டுவது

முதலானவைகளில் பரபாக ஸ்ரீ யை உண்டாக்கி அவைகளை அனுபவிப்பிக்கும் உபகாரகன் –

எம் பிரான்
இவ்வெல்லா வகையிலும் என்னை அனுபவிப்பித்து என்னை அடிமை கொண்ட உபகாரகன்

ஏவம் பூதகனுடைய கண்ணின் கோலங்களே எமக்கு எல்லா விடத்த்வும் என்று
அந்வயம்
திருக்கண்களினுடைய அலகுகள் இப்போது எங்கும் அனுபாவ்யமாகா நின்றது –

———-

அவதாரிகை
இப்படி உரு வெளிப்பாட்டாலே வடிவு அழகை அனுபவித்தவர்
நேரே அனுபவிக்கப் பெறாமையாலே
தம்முடைய ப்ரகாஸம் அடையக் குலைந்து மோஹ அந்தகாரம் மேலிடும் அளவான படியாலே
இவ்வவஸ்தையில் ஆஸன்னரானார் தம்மை அத்தலைக்கு ப்ரஸாத பாத்ரமாக்கி
ஸமர்ப்பியாதே விளம்பிப்பதே என்று
ஸூஹ்ருத பூதரைக் குறித்து அருளிச் செய்த பாத்திரத்தை
பகல் பொழுது கழிந்து இருள் கண்டு இரங்கின தலைமகள்
உற்றார் விரைந்து கொடுப்பது என்றோ என்று
பாங்கிமாருக்கு உரைத்த பாசுரத்தாலே
அருளிச் செய்கிறார் –

கோல பகல் களிறு ஓன்று கற்புய்ய குழாம் விரிந்த
நீல கங்குல் களிறு எல்லாம் நிறைந்தன நேரிழையீர்
ஞால பொன் மாதின் மணாளன் துழாய் நாங்கள் குழல் சூழற்க்கே
ஏலப் புனைந்து என்னைமார் எம்மை நோக்குவது என்று கொலோ -40-

பாசுரம் -40-கோலப் பகல் களிறு ஓன்று கல் புய்ய குழாம் –
இருள் கண்ட தலைவி தோழியிடம் திருமண விருப்பம் கூறுதல் –
மானேய் நோக்கு -5-9-

பதவுரை

கோலம்–அலங்காரத்தை யுடைய
பகல்–ஸூர்யனாகிய
களிறு ஒன்று–ஒப்பில்லாததொரு யானை
கல் புய்ய–அஸ்தமன பர்வதத்தில் மறைய,
குழாம் விரிந்த–திரளாகப் பரந்த
நீலம்–நீலநிறத்தையுடை
கங்குல்–இரவாகிய
களிறு எல்லாம்–யானைகளெல்லாம்
நிறைந்தன–அடைவே எதிரில் வந்து சேர்ந்தன.
நேர் இழையீர்–தகுதியான ஆபரணங்களை யுடையவர்களே!
ஞாலம்–பூ தேவிக்கும்
பொன் மாதின்–ஸ்ரீ தேவிக்கும்
மணாளன்–நாயகனான எம்பெருமான்
துழாய்–(தனது) திருத்துழாய் மாலையை
நங்கள் சூழ் சூழற்கே–எமது அடர்ந்த தலை மயிரிலே
ஏல புனைந்து–தகுதியாகச் சூட்ட
என்னைமார்–எமது தாய்மார்
எம்மை நோக்குவது–என்னைப் பார்ப்பது
என்று கொலோ–என்றைக்கோ?

வியாக்யானம்
கோல பகல் களிறு ஓன்று கற்புய்ய
துவர் அணித்தால் போலே செக்கர் கோலத்தை யுடைத்தான ஆதித்யனாகிற களிறானது
அஸ்தமய பர்வதமாகிற கல்லிலே வாங்க

புய்த்தால்-வாங்குதல்
போக என்றபடி

இவ்விடத்து ஆதித்யனைக் களிறு என்றது
மேனாணிப்பாலும்
புகர் யுடைமையாலும்

குழாம் விரிந்த நீல கங்குல் களிறு எல்லாம் நிறைந்தன
திரளாகப் பரந்த
நீல நிறத்தை யுடைத்தான
ராத்திரிகள் ஆகிற
ஆனை கள் எல்லாம் எதிர்பட்டன

கங்குழைக் களிறு என்றது
இருட்சியாலும்
திரட்சியாலும்

நேரிழையீர்
தகுதியான ஆபரணத்தை உடைத்தானவர்களே
மெல்லிய ஆபரணம் என்றுமாம்

ஞால பொன் மாதின் மணாளன்
ஞால மாதினுக்கும்
பொன் மாதினுக்கும்
மணாளன்

துழாய் நாங்கள் குழல் சூழற்க்கே ஏலப் புனைந்து
திருத் துழாய் மாலையை நம்முடைய செறிந்த குழலிலே முற்படவே சூட்டி
தகுதியாகச் சூட்டி என்றுமாம்

என்னைமார்
என்னைமார் என்று மூத்தவர்களை சொன்னபடி

எம்மை நோக்குவது என்று கொலோ
எம்மை ரக்ஷிப்பது என்றாய் இருக்கிறது என்று
வரவை விரைவித்தல் வேண்டி உரைத்தாள் யாயிற்று –

இத்தால்
கோல பகல் களிறு ஓன்று கற்புய்ய -என்கையாலே
ராகோத்தரமான விவேக ப்ரகாஸம் மறையும்படியாக என்றபடி
(பக்தி பாரவஸ்யத்தாலே வந்த அஞ்ஞானம் -பேற்றுக்குத் த்வரிக்கப் பண்ணுமே )

குழாம் விரிந்த நீல கங்குல் களிறு எல்லாம் நிறைந்தன நேரிழையீர்-என்கையாலே
மோஹ அந்தகாரம் மேலிட்டமை தோற்றுகிறது

ஞால பொன் மாதின் மணாளன் -என்கையாலே
நாய்ச்சிமாரோபாதி
ஸம்பந்தம் அசாதாரணம் என்கிறது

துழாய் நாங்கள் குழல் சூழற்க்கே ஏலப் புனைந்து -என்கையாலே
அத் தலையில் பிரசாத்துக்கு யோக்யமாய் இருக்கும் ஸ்வரூபம் என்கிறது

என்னைமார் எமமை நோக்குவது -என்கையாலே
பிரதமஜரான கௌரவ்யரே கடிப்பிப்பர் என்கிறது

என்று கொலோ -என்கையாலே
தத் விஷயமான அபேக்ஷையே இவ் வதிகாரிக்குக் கர்த்தவ்யம் என்றதாயிற்று

(விருப்பமே நாம் செய்ய வேண்டியது
அடைவிப்பவன் அவனே
பிராப்தாவும் பிராபகமும் பிராப்திக்கு உகப்பானும் அவனே )

இவ்விடத்தில்
நேரிழையீர் என்று
ஸூஹ்ருத் பூதருடைய ஆத்ம குண யோகத்தை ஸூசிப்பிக்கிறது –

——–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
உரு வெளிப்பாடாய் நோவு படா நிற்கச் செய்தே
பகலும் கழிந்து ராத்திரியுமாய்
அது தான் அநேகம் வடிவுகளைக் கொண்டு நலிய நலிவுண்டு
நம்முடைய தசையைக் கண்ட பந்து வர்க்கத்தில் உள்ளார் நம்மை நோக்குவது என்றோ என்கிறாள்

இது பாங்கியரோடே கூடின தலைமகள் வார்த்தை யாதல்
அன்றிக்கே
தோழி வார்த்தை யாதல்
இவளுடைய தயநீய தசை இருந்தபடி ஒரு பகலை இரந்து கவிபாடும்படி யாயிற்று –

வியாக்யானம்
கோல பகல் களிறு ஓன்று கற்புய்ய
தர்ச நீயமான ஆதித்யனாகிற களிறு கல்லிலே போய்ப் புக
அஸ்தா சலத்திலே போய்ப்புக
வீர பத்நீ இறே
அவன் இருப்பில் புக்கிருந்து
த்வம் நீச -ஸூந்தர -21-16-என்னுமவள்
ராத்திரியிலே வந்தால் ஸர்வ இந்த்ரியங்களுக்கும் பிரிந்த விஷயம் ஒன்றுமே இலக்காகையாலே
வியசனம் அதிசயித்து ஆற்ற அரிதாய் இருக்கும்
பகலில் வந்தால் இந்திரியங்கள் பாளி பாய்கையாலே ஆற்றாமை ஆற்ற எளிதாய் இருக்கும் இறே

குழாம் விரிந்த நீல கங்குல் களிறு எல்லாம்
பகல் அனுகூலமாகையாலே ஒன்றாகச் சொல்லிற்று
ராத்திரி பாதகாதவத்தாலே அநேகமாகத் தோற்றா நின்றது இறே
ராக்ஷஸருக்கு ராம ஸஹஸ்ரமாய்த் தோற்றுமா போலே
குழாம் குழாமாகத் திரண்டு நீலமான நிறத்தை யுடைத்தான
கங்குல் யாகிற களிறு எல்லாம் எங்கும் பரம்பிற்றன
தான் என்னை யானை போலே விரும்பி வந்து இத்தனை யானைக்கு
இரையாக்கி இட்டு வைத்துப் போவதே –

நிறைந்தன நேரிழையீர்
இந்த ராத்திரி வியஸனத்துக்குத் தப்பி ஒப்பனை அழியாமை இருக்க
நினைத்து இருக்கிறார் நாலு மூன்று அபலைகள் ஆயிற்று
அதாவது என் எண்ணில்
மேலே எம்மை நோக்குவது என்று கொலோ -என்னா நின்றது இறே

இழை -என்று
ஆபரணமாய்
விலக்ஷணமான ஆபரணத்தை யுடையீர்

ஞால பொன் மாதின் மணாளன்
குற்றம் பொறுப்பிப்பார் இன்றிக்கே குற்றம் அறியாதார் வேணும் ஆயிற்று
இவளுக்கு இப்போது ஸா பராதராய் வர நின்றாரை ரக்ஷிக்கும் ஈஸ்வரன்
ஒரு ரக்ஷகனும் வேணும் இறே
ஒன்றும் கைம்முதல் இல்லாதாராயும் ரக்ஷிக்கும் பிராட்டி
குற்றம் கண்டு பொறுப்பிக்கும்
அதுவும் இல்லையாயிற்று இவளுக்கு
ஞாலம் ஆகிற ஸ்லாக்யமான நிருபாதிக ஸ்த்ரீத்வம்

மணாளன்
இக்குணங்களை யுடைய ஸ்ரீ பூமிப்பிராட்டிக்கு வல்லபனானவன் –
ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு ஓலக்கம் கொடுக்கும் போது தான்

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திரு விருத்தம் – -பாசுரங்கள் -21-30–ஸ்ரீ நம்பிள்ளை ஈடு –ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் -வியாக்யானம் –

March 17, 2022

அவதாரிகை

இப்படி அவசன்னரான இவரை ஆஸ்வசிப்பிக்கைக்காக
(வேலன் வந்ததால் சிதிலம் ஆன ஆழ்வாரை )
ஒரு விபூதியாக நம்மை ஆதரியா நிற்கச் செய்தே
(நீதி வானவர் அன்றோ-இங்கு அநீதி மன்னவர் )
நீர் இருந்த தேசத்திலே வந்து -(லீலா விபூதியில் )
நீர் அபிமானித்த வஸ்துக்களை ஆதரித்து விரும்புகைக்காகவும்-
ஸர்வஞ்ஞன்-ஆழ்வாருக்குப் பிடித்த ஈட்டிய வெண்ணெய் உண்ண
உம்முடைய பிரதிபந்தகங்களைப் போக்கி உம்மை அனுபவிப்பைக்காகவும் அன்றோ இங்கு வந்தது

(ஏழு ரிஷபங்கள் அடக்கி
நப்பின்னையைச் சொன்னது ஆழ்வாரையும் நம்மையும் சொன்னதற்காகவே
பரித்ராணாய ஸாதூ நாம் -ஆழ்வாரை அணைத்தல்
துஷ்க்ருதாம் வி நாஸநம் -ஏழு ரிஷபங்கள் அடக்கி
தர்ம சமஸ்தானம் -வெண்ணெய் உண்டது -அஹம் ஹி போக்தா -யஜ்ஜமாகவும் -பிரபு எவச –
செய்கின்ற கிதிஎல்லாம் யானே என்னும்
செய்வான்நின் றனகளும் யானே என்னும்
செய்துமுன் இறந்தவும் யானே என்னும்
செய்கைப்பயன் உண்பேனும் யானே என்னும்
செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்
செய்ய கமலக்கண்ணன் ஏறக் கொலோ?
செய்ய உலகத்தீர்க் கிவைஎன் சொல்லுகேன்?
செய்ய கனிவாய் இளமான் திறத்தே.–5-6-கர்த்தாவாகவும் போக்தாவாகவும் )

என்ற சர்வேஸ்வரன் திரு உள்ளத்தைக் கருத்தை ஆவிஷ்கரிக்க
ஒக்கும் இறே என்று ஸந்துஷ்டாராய்
ஆசன்னரான கிருஷ்ண -(பாவியேன் பல்லில் பட்டுத் தெறிப்பதே )
மானஸ அனுபவ ஸந்நிஹிதனான -(முன்னால் நிற்கும் கிருஷ்ணனை -ஆடினை கூத்து முன்னிலை பிரயோகம் )
(ஆழ்வார் காலத்தில் இல்லையே யாயினும் அக்காலத்தில் நடந்தவற்றை அப்படியே காட்டி அருளினான் அன்றோ )
அவன் இடம் விண்ணப்பம் செய்கிறார் –

சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி வானோர்கள் நன்னீர்
ஆட்டி அம் தூபம் தரா நிற்கவே அங்கு ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்தி மிலேற்றுவன் கூன்
கூட்டிடை ஆடின கூத்து அடல் ஆயர் தம் கொம்பினுக்கே –21-

பாசுரம் -21-சூட்டு நல் மாலைகள் தூயன ஏந்தி -எருதுகளை அடக்கித் திருமணம் செய்யக் கூறுதல் –
வீற்று இருந்து ஏழு உலகம் -4-5-
முதல் பாசுரம் இதுவும் இறுதி பாசுரமும் தாமான தன்மை —
அகத்துறை சொல்ல வேண்டாம் என்றும் சொல்வர் சிலர் –

பதவுரை

அங்கு–பரமபதமாகிற அவ்விபூதியில்,
விண்ணோர்கள்–நித்ய ஸூரிகள்
நல் நீர் ஆட்டி–நன்றாகத் திருமஞ்சனம் ஸமர்ப்பித்து
அம் தூபம் தரா நிற்க–அழகிய தூபத்தை ஸமர்ப்பித்துக் கொண்டு நிற்க,
(அந்தத் தூபத்தினால் திருமுக மண்டலம் மறைந்திருக்கும் க்ஷணத்திலே)
ஓர் மாயையினால்–(உனது) ஒப்பற்ற மாயவகையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்து–(இங்குத் திருவாய்ப் பாடியிலுள்ளார் நாள் தோறும் கடைந்து)
சேர்ந்த வெண்ணெயை எடுத்து அமுது செய்ய விரும்பி வந்து
தூயன சூட்டு நல் மாலைகள் ஏந்தி–பரிசுத்தாமனவையாய் (உனக்குச்) சூட்டத்தக்க அழகிய மாலைகளைக் கைகளில் ஏந்திக் கொண்டு நின்று
அடல் ஆயர்தம் கொம்பினுக்கு–வலிமையை யுடைய இடையரது குலத்திற் பிறந்த பூங்கொம்பு போன்ற மகளான
நப்பின்னையை மணஞ்செய்து கொள்வதற்காக
இமில்-முசுப்பையுடைய
ஏறு–(ஏழு) எருதுகளினுடைய
வல் கூன் கோட்டிடை–வலிய வளைந்த கொம்புகளின் நடுவிலே
கூத்து ஆடினை–கூத்தாடி யருளினாய்.

சூட்டு நன் மாலைகள்
சூடுவதற்குத் தகுதியான நல்ல மாலைகள்
(தலையில் சூடி -தோளில் மாலை )
(நல் -இரண்டுக்கும் -ஹார மத்ய மணி நியாயம் தேஹளீ தீப நியாயம் -நாயக ஸ்ரீ போல் )

மாலைக்கு நன்மை யாவது
அப்ராக்ருதம் -ஆகவே நல்ல மாலை
அனுரூபமாய்
புனுகினில் தோய்த்தால் போல்
அநுராக ரஞ்சிதம் -(பக்தியில் தோய்க்கப் பெற்ற )

சூட்டு -திருமுடி சாத்தாய்
மாலை -தோளுக்கு விடுவதாகவும்
(மூன்று முடிக்கு உரிய அரசு
பார் அளந்த பேர் அரசே விசும்பு அரசே என்னை வஞ்சித்த ஓர் அரசே
வைர முடி ராஜ முடி கிருஷ்ண ராஜ முனி -மூன்று முடிக்கு உள்ள அரசே -நாயனார் )
கிரீட மகுட சூடாவதாம்சம்
அப்போது நன்மை மத்யம விளக்கு போல் இரண்டுக்கும் அந்வயமாம்

தூயன
புஷ்பத்துக்குத் தூய்மையாவது
த்ரிவித தியாகம் -கர்த்ருத்வ மமதா பல தியாகங்கள் மூன்றும்
கர்த்ருத்வமும் மமதையும் ப்ரயோஜனாந்தரமும் ஆகிய மூன்றும் இல்லாமல்
(புழு மயிறு ஸ்ராய் இல்லாமல் (

ஏந்தி
பாரதந்தர்யத்தால்
யாவத் அங்கீ காரம் ஏந்திக் கொண்டு நின்று இருப்பதே தூய்மை
(கொண்டு வைத்தேன் -நீ நீராட வேண்டும் பிரார்த்தனை தான் செய்யலாம் )

விண்ணோர்கள்
பரம வ்யோம வாசிகளான அப்ராக்ருத புருஷர்கள்

நன்னீர் ஆட்டி
அன்பினானால் ஞான நீர் கொண்டு
அன்பும் ஞானமும் கலந்து -பரிசுத்த பக்தி ரூபா பன்ன ஞானதாலே திருமஞ்சனம் ஆட்டி
(திருக்குறும் தாண்டகம் -இதுவும் ஸ்நாநாசனம் போது அனுசந்திக்கிறோமே )

அம் தூபம் தரா நிற்கவே
அலங்கார அந்தர பாவியாய்
சர்வ கந்த வஸ்துவுக்கும் அதி வாசனை கரமாகையாலே ஊட்ட-அழகிய தூபம் தாரா நிற்கவே
(வகையால் மனம் ஒன்றி மாதவனை -நாளும் புகையால் விளக்கால் நீரால்
சுமந்து மா மலர் –நீர் சுடர் தூபம் கொண்டு -இத்யாதி
ஸ்ரீ வைகுண்ட விரக்த்தாயா -வேங்கடத்து வந்தாலும் அவர்களும் வந்து ஆராதிப்பார்களே )

அங்கு
அந்த நித்ய விபூதியில்

விண்ணோர்கள் -நன்னீராட்டி – சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி -நிற்கவே -என்று அன்வயம்
ஸ்நாநாசனமும் அலங்காரசனமும் ஆன பின்பு
அங்கே சென்ற பின்பு
போஜ்யாசனத்துக்குப் போந்த படி
(காலத்துக்கு வேலை இல்லை அங்கு என்றாலும் அடுத்து அடுத்து இவை உண்டே )

ஓர் மாயையினால்
அப் புகை நிழலிலே ஒளித்துப் போருவாரைப் போலே
அத்விதீயமான
தனது அபிநிவேச சங்கல்பத்தினாலே
மாயா வாயுனம் ஞானம்

ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ணப் போந்து
திருவாய்ப்பாடியில் நாள் தோறும் கடைந்து ஈட்டிய வெண்ணெயை அபஹரித்து

இமிலேற்று வன் கூன் கூட்டிடை ஆடின கூத்து
ககுத்துக்களை யுடைய எருதுகளின்
வலித்தாய்
வளைந்த கொம்புகளின் நடுவே
வல்லார் ஆடினால் போலே வியாபாரித்தாய்

அடல் ஆயர் தம் கொம்பினுக்கே –
பிரபலரான கோப குலத்தில் பிறந்த
நப்பின்னை பிராட்டிக்கு நாம் போக்தா ஆக வேணும் என்று
ஸய்யாசனம் இது

ஆகையால்
அந்த விபூதியில் ஆராதனம் செய்து கொண்டே இருக்கும் போது
(சம்சாரி -முமுஷு முக்தன் -தசை மாறி வர வேண்டுமே
தயிர் பால் சம்சாரி
வெண்ணெய் முமுஷு
நெய் முக்தன் )
இந்த விபூதியில் சம்பந்த ஞானம் உடையார் -மதி மந்தானம் -புத்தியான மத்து
முமுஷுக்கள் உடன் கலந்து பரிமாறி
ஸம்ஸாரம் பிடிக்காமல் உபேக்ஷித்து –
ருசி விளைத்து மேலே மேலே கூட்டிப் போக

உபநிஷத் கடலைக் கடைந்து -மஹாபாரதம் சந்திரன் –
அதே போல் பக்தாம்ருதம் திருவாய் மொழி
நாள் தோறும் இடது வலது -மனன மதனம் பண்ணி ஈட்டுகை
பால் மாறி -நெய் வராமல்-அந்தரேவ- நடுவே நிற்கும் வெண்ணெய் போல்

சம்சாரம் கழித்து –
உண்டியே உடையே உகந்து திரியாமல்
அவஸ்தையைக் கழித்து
ஆகதோ பரமபதம் புகப் பெறாமல்
ஆந்தராளிகர் இடைப்பட்ட முமுஷுக்களை அனுபவிக்க
இவர்கள் எதிர்பாராமல் -ஈட்டிய வெண்ணெய் –
எப்போது திருவடி சேர்ப்பார் எதிர்பார்த்தே இருக்க வேண்டுமே

அபிநிவேசத்தால் -பேராசை கொண்டு போந்து
கோட்டிடை இத்யாதி-
ரஜோ தமோ குண பிரதிபந்தங்களைப் போக்கி
செருக்கை யுடைய சரீரம்
அவஸ்தா சப்தகம் போக்கி
கர்ப்ப ஜென்ம பால்ய யவ்வனம் விருத்தம் -மரணம் -ஏழு தசைகளிலும் இரண்டு கொம்புகள்
பிரபலமாய் -கர்மங்கள் -குத்திப் போக்கும்

அநாயாசன போக்கி ஆட்டம் பார்த்தாலே தெரியுமே
நானும் வேண்டா நீயும் வேண்டா தன்னடையே போகும்

பாரதந்தர்ய ஏவ ஸ்வரூபம் நிரூபணம்
ஸ்வ ரக்ஷணம் ஸ்வ அந்வயம் இல்லாத நப்பின்னை -அடலாயர் கொம்பு
அநந்ய ரஷ்யம் – அநந்ய போக்யம் -கொம்புக்கு இரண்டும் உண்டே
இதே தான் முமுஷுக்குவுக்கும் இருக்க வேண்டும்
என் நான் செய்கேன் -யாரே களை கண் -இத்யாதி
இப்படிப்பட்ட ஆத்ம வஸ்துவை நீ புஜிக்க குறை யுண்டோ என்று விண்ணப்பம் செய்தார் ஆயிற்று

————–

அவதாரிகை

இப்படி ஈஸ்வரனுக்கு அபிமத விஷயராய் இருக்கிற இவர் பக்கலிலே
நம்முடைய ஸ்திதியை உசாவுவோம் என்று வந்த வித்வத் அபிமானி ஜனங்களைக் குறித்து
உங்கள் படிகள் பரஸ்பர அசங்கதங்களாய் இருந்தன வென்று
பார்ஸ்வத்த ஸூஹ் ருத்துக்கள் சொன்ன பாசுரத்தை
மதி யுடன்படுவதற்குக் களிறு வினவி வந்து
குறையுற்ற தலைமகனை
தோழி நகைத்து உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

கொம்பார் தழை கை சிறு நாண் எறிவிலம் வேட்டை கொண்டாடு
அம்பார் களிறு வினவுவது ஐயர் ,புள் ளூரும் கள்வர்
தம் பார் அகத்து என்றும் ஆடாதன தம்மிற் கூடாதன
வம்பார் வினாச் சொல்லவோ எம்மை வைத்தது இவ் வான் புனத்தே –22-

பாசுரம் -22-கொம்பு ஆர் தழை கை ,சிறு நாண் எறிவிலம் -தோழி தலைவனைக் கேலி செய்தல் –
நல்குரவும் செல்வமும் -6-3-

பதவுரை

ஐயர்–இப்பெயரிவருடைய
கை–கையிலுள்ளது
கொம்பு ஆர் தழை–மரக்கிளையிற் பொருந்திய தழையாகும்;
சிறு நாண் எறிவு இலம்–(இவர் கையில் வில் இல்லாமையால்) சிறிய நாணியை (கைவிரலில்)
தெறித்து ஒலி செய்தலைக் கேட்டிலோம்;
கொண்டாடு–(இவர் தமக்கு) ப்ரியமாக வெளிக்காட்டுவது
வேட்டை–வேட்டையாம்;
வினவுவது–(இவர் நம்மை நோக்கிக்) கேட்பது
அம்பு ஆர் களிறு–(எய்யப்பட்ட) அம்போடு பொருந்திய யானையாம்;
(இவரது செயல்களும் சொற்களும்)
புன் ஊரும் கள்வர் தம் பார் அகத்து என்றும் ஆடாதன–கருடப் பறவையை ஏறி நடத்துகிற மாயவரான திருமாலினது
உரிய பொருளாகிய இவ்வுலகத்தில் எக்காலத்திலும் நடவாதனவும்
தம்மில் கூடாதென–தமக்குள் ஒன்றொடொன்று பொருத்த மில்லாதனவுமாகவுள்ளன:
வம்பு ஆர் வினா சொல்லவோ–புதுமை மிக்க கேள்விகளுக்கு விடை கூறும் பொருட்டோ
எம்மை–நம்மை
இவ் வான்புனத்தே வைத்தது–இந்தப் பெரிய கொல்லையிலே (நமது முதுகுவரல் காவல்) வைத்தது?

கொம்பார் தழை கை
கொம்பிலே செறித்த தழை
கைக்குப் பரிகரம் ஆயிற்று

சிறு நாண் எறிவிலம்
வில் இல்லாமையாலே
சிறிய நாண் ஒலியும் கேட்டிலோம்

வேட்டை கொண்டாட்டு
வேட்டை கொண்டாடுகை
நாட்டுக்கு வார்த்தை

அம்பார் களிறு வினவுவது
அம்போடே யானை போந்ததோ
என்று வினவா நிற்பது

ஐயர் ,
ஐயர் -இது உம்முடைய பெருமைக்கு ஈடாய் இராய் நின்றது

புள் ளூரும் கள்வர் தம் பார் அகத்து என்றும் ஆடாதன
பெரிய திருவடியை மேற்கொண்டு
எதிரி அறியாமல் ஜகத்தை ரஷித்துக் கொண்டு திரிகிற
ஈஸ்வரனுடைய விபூதியிலே
எக் காலத்திலும் நடை யாடாததான

தம்மிற் கூடாதன
தன்னில் தான் சேர்த்தி அற்றன

வம்பார் வினாச் சொல்லவோ
நிஷ் ப்ரயோஜனமாகக் கேட்ட வார்த்தைகளுக்கு மறு மாற்றம் சொல்லவோ

வம்பார் வினா -என்று
புதுமையால் மிக்க வினா என்னலுமாம்

எம்மை வைத்தது இவ் வான் புனத்தே –
எங்களைப் பெரிய புனத்திலே உடையவர்கள் வைத்தது –

(இந்திரியங்கள் -தந்தியான யானை
ஞானம் என்ற அம்பு கொண்டு அடக்கப் பார்த்தோம் –
கையிலே இருக்கும் தழையை வில்லாகக் கொண்டு அடக்கவோ )

இத்தால்
கொம்பார் தழை கை -என்கையாலே
விஷய ப்ரவாஹங்கள்
கை விட்டதில்லை -என்றபடி

சிறு நாண் எறிவிலம் -என்கையாலே
ப்ரணவ தநுர் விஷ்பாரித ஸ்வர
மாத்ரமும் இல்லை என்றபடி –

(பிரணவம் தனுஷ் -ப்ரஹ்மம் லஷ்யம் -ஞானம் கொண்டு விட வேண்டுமே
ஆத்மா அம்பு -மூன்று மாத்திரை உள் அட வாங்கி விட வேண்டுமே
மூன்றரை மாத்திரை ஸ்வரமும் இல்லையே
ஸ்வரூப ஞானத்துக்கு பிரணவ தனுஸ் வேணுமே )

வேட்டை கொண்டாடு-என்கையாலே
ஸம்ஸார அந்தகாரத்திலே -பாலைவனத்தில் –
துஷ்ட ஸத்வமான
ராக த்வேஷ
லோப மோஹாதிகளுடைய
நிரஸனத்திலே ஒருப்பட்டோம் நாங்கள் என்கிற கொண்டாட்டமே உள்ளது என்றபடி

அம்பார் களிறு வினவுவது -என்கையாலே
ஞான சர வித்தமாய் இருக்கச் செய்தே
இந்த்ரிய தந்தியானது விஷய அடாவீ வித்ருதமாயிற்று
என்று தத் அநுயானம் பண்ணிற்று என்கிறது

(தத் அநுயானம் பண்ணிற்று -இந்திரியங்கள் போன வழியிலே போகிறோமே
சதுர் தந்து -நான்கு கொம்பு உள்ள மிருகங்கள் -ராமாயணம் சொல்லுமே
சம்சாரம் மரம் தலை கீழ் -படைக்கும் பிரம்மா மேல் இருப்பதால்
இத்தை வெட்டிச் சாய்க்க
அஸங்கம்-பற்றின்மை வைத்தே வெட்ட வேண்டும் -திடமான வைராக்யம் வேணும் )

ஐயர் ,-என்று
ஞாத்ருத்வ உத்கர்ஷத்தாலே வந்த கௌரவ்யதை இருந்தபடி என்கிறது

புள் ளூரும் கள்வர் –
வேத மயமான பெரிய திருவடியை நடத்துகையாலே
ப்ராமண கதி ப்ரவர்த்தகனாய்
(வேதம் நான்காய் -வேதம் தந்தவனும்
வேதத்தால் சொல்லப்படுபவனும் அவனே )
யமாத்மா ந வேத -ப்ருஹதாரண்யம் -5-7-22-என்கிறபடியே
கள்வர்-
முகம் தோற்றாமல் நின்று ரக்ஷிக்கிற ஸர்வேஸ்வரனுடைய

தம் பார் அகத்து என்றும் ஆடாதன தம்மிற் கூடாதன –
ஸ்வாதந்த்ர கடினையான பூமியிலே ஒரு காலத்திலும் நடையாடாதே
பரஸ்பர சங்கதி அற்று ப்ரயோஜன பர்யவசாயி அன்றியிலே

வம்பார் வினாச் சொல்லவோ எம்மை வைத்தது இவ் வான் புனத்தே –
அபி நவமான ப்ரஸ்னத்துக்கு பிரதி வசனம் பண்ணுகைக்காகவோ
ஈஸ்வரன் தனக்கு போக சக்திக்கு உறுப்பாகத் திருத்தி நோக்குகின்ற
இத் தேசத்திலே
(புனம் காத்து -நம்மைத் திருத்தி – இசைவித்து நின் கண் வேட்க்கை எழுவிக்க )
தனக்கு நிர்தேச காரிகளாய் இருக்கிற எங்களை நியமித்து வைத்தது என்று
ஞாத்ருத்வ ஆபாஸத்தாலே துர் அபிமானிகளான புருஷர்களைத் திருத்துக்கைக்காக
பார்ஸ்வத்தரான ஸூஹ்ருத்துக்கள் சொன்ன ஹித வசனத்தை அருளிச் செய்தார் ஆயிற்று –

————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு –
அவதாரிகை
ஆழ்வார் ஸ்ரீ கிருஷ்ண விஷயத்திலே ஈடு பட்டு இருக்கிற படியைக் கண்ட பாகவதர்கள்
தடுமாறுகிற படியைச் சொல்லுகிறது
கலந்து பிரிந்த தலைமகள் தோழிமாருடனே புனம் நோக்கி இருந்த இடத்தே
கையிலே தழையைக் கொண்டு சென்று
தன் ஆற்றாமையை ஆவிஷ்கரிக்க அவனை நிஷேதிப்பாரைப் போலே
இடம் கொடுத்து வார்த்தை சொல்லுகிறாள் –

வியாக்யானம்
அபிமத விஷயம் இருந்த இடத்தே சென்று தண்ணீர் சுண்ணாம்பு என்பாரைப் போலே
தழையை முறித்துப் பிடித்துக் கொண்டு இவர்கள் இருந்த புனத்தே சென்று
இங்கனே ஓர் ஆனை அம்போடே போந்ததோ என்று கேட்டான்
கொம்பார் தழை கை
கையிலே தழையைக் கொண்டு சென்றான் தன் ஆற்றாமையை அறிவிக்கைக்காக –
நீர் ஒன்றை நினைத்து இருந்தீர்
அது விபரீத பலத்தைப் பலியா நின்றது
ஆஸ்ரயத்தை இழந்த தளிர் போலே உங்களைப் பிரிந்து நான் உறாவினேன் -என்கைக்காகக் கொடு நின்றான் இவன் –
அது உன் கையிலே ஸ்பர்சத்தாலே தளிரும் முறியுமாய் சத சாகமாகா நின்றது
பாவியேன் உம்முடைய ஆற்றாமை காட்டுகைக்காகக் கொடு வந்தீராகில் கொம்பிலே காட்ட மாட்டு கிறீலிரே –
பிறர் இடத்தே இருப்பார்க்கு அன்றோ வாட்டம் உள்ளது
உம்முடைய கைப்பட்டாருக்கு வாட்டம் யுண்டோ
கொம்பாய் உம்முடைய கையிலே இருந்தோம் அல்லோம்
கொடியாய் உம்முடைய தோளில் அணைந்தோம் அல்லோம்
நாங்கள் என்ன இருப்பு இருக்கிறோம் தான் –

வேட்டை கொண்டாடு
வேட்டைக்குப் போந்தானாக வாயிற்றுச் சொல்லுகிறது
வில்லோ என்றவாறே தழையைக் காட்டா நின்றான்
கையைப் பார்த்தவாறே நாண் தோய்ந்த தழும்பும் கூட இன்றியே இரா நின்றது

சிறு நாண் எறிவிலம்
இப்போது கையிலே வில் இல்லாமையே அன்றிக்கே முன்பு விற் பிடித்த தழும்பு கூடக் கண்டிலோமீ
இவர்கள் தான் வீர பத்னிகள் யாகையாலே கையைக் கண்டபோதே அறிவார்கள் ஆயிற்று
அன்றியே
சிறு நாண் எய்யப்படுவதான வில்லை யுடையீர் அல்லீர் என்று

ஒரு கதிர் போகில் ஜகத் உப ஸம்ஹாரமாம் படி யன்றோ எங்கள் நிலை

இவ்வான் புனம்
அவனுடைய உபய விபூதியோ பாதியும் பரப்புப் போராதோ எங்கள் புனம்
எங்களுக்குக் கிட்டாருக்குத் தான் உத்தரம் சொல்லுகைக்கு அவசரம் யுண்டோ
எங்கள் கார்யமே போரும் காணும் என்கிறார்கள்

இத்தால்
ஸம்ஸார ஜன்மத்துக்கு பிரயோஜனம் ஆகிறது
பகவத் பிரவணர் படியைக் காண்கையே இறே –

———–

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி
அவதாரிகை
இப்படி கண்ணனுக்கு அபிமத விஷயமாய் இருக்கிற இவரில்
நம்முடைய ஸ்திதியை உசாவுவோம் என்று வந்த ஆபாஸ வித்வஜ் ஜனங்களைக் குறித்து
உங்கள் படி பரஸ்பர அசங்க தங்களாய் இருந்தன என்று ஸூஹ் ருத்துக்கள் சொன்ன பாசுரத்தை
உடன் படுத்தக்
களிறு வினவ வந்து குறையுற்ற தலைவனைத் தோழி நகைத்து உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்

வியாக்யானம்
ஒரு வியாஜத்தால் அபிமத விஷயத்தைக் கிட்டுவாரைப் போலே தளிருள்ள தழையை முறித்துப் பிடித்து
இங்கு ஓர் ஆனை போந்ததோ என்று வினவிக் கொண்டு நின்றான்
அவனைப் பரிஹஸித்துக் கொண்டு சொல்லுகிறாள் –

கொம்பார் தழை கை
கொம்பிலே செறித்த தழை கைக்குப் பரிகரமாயிற்று

சிறு நாண் எறிவிலம்
வில் இல்லாமையாலே சிறு நாண் ஒலியும் கேட்டிலோம்

வேட்டை கொண்டாட்டு
வேட்டை கொண்டாடுகை

அம்பார் களிறு வினவுவது
அம்போடே ஓர் யானை வந்ததோ
என்று வினவப் பாரித்தது

ஐயர்
இது உம்முடைய பெருமைக்கு ஈடாய் இரா நின்றது

புள்ளூரும் கள்வர் தம் பாரகத்து என்றும் ஆடாதனர்
புள்ளூர்ந்து வஞ்சித்துத் திரிகிற ஈசுவரனுடைய விபூதியில் நடையாடுமது அல்ல

தம்மில் கூடாதன
தம்மில் தான் சேர்ந்தன அல்ல

வம்பார் வினாச் சொல்லவோ
ஆரோ கேட்ட உடனே நிஷ் பிரயோஜனமாக மறு மாற்றம் சொல்லவோ

எம்மை வைத்தது இவ் வான் புனத்தே –
எங்களை இந்தப் பெரிய புனத்திலே வைத்தது
நமக்குள்ள சேஷிகள் –

————-

அவதாரிகை
இப்படி ஹித வசனம் கேட்டுத் திருந்தின ஞாதாக்கள்
ஆழ்வார் பக்கலிலே நெஞ்சம் துவக்குண்டு சொல்லுகிற பாசுரத்தை
புனம் காத்து இருந்த தலைவியையும் தோழியையும் கண்டு
தலைமகன் குறைவற உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்

புனமோ புனத் தயலே வழி போகும் அரு வினையேன்
மனமோ மகளிர் நும் காவல் சொல்லீர் புண்டரீகத்து அம் கேழ்
வனமோர் அனைய கண்ணான் கண்ணன் வானாடு அமரும் தெய்வத்
தினம் ஓர் அனையீர் களாய், இவையோ நும் இயல்வுகளே –23-

பாசுரம் -23-புனமோ புனத்து அயலே -தலைவன் குறை யுற உரைத்தல் –
கடல் ஞாலம் செய்தேனும் -5-6-

பதவுரை

மகளிர்–பெண்களே!
நும் காவல்–உங்கள் காவலுக்கு உரிய பொருள்
புனமோ–இந்தத் தினைப்புனமோ? (அல்லது)
புனத்து அயலே வழி போகும் அருவினையேன் மனமோ–இப் புனத்தினருகிலே வழிச்
செல்லுகிற பாவியேனான என்னுடைய நெஞ்சமோ?
சொல்லீர்–சொல்லுங்கள்;
புண்டரீகத்து அம்கேழ் வனம் ஓர் அனைய கண்ணான்–செந்தாமரை மலரின் அழகிய ஒளியை யுடைய காட்டை
ஒரு புடை யொத்திருக்கின்ற திருக் கண்களை யுடையவனாகிய
கண்ணன்–கண்ணபிரானது
வான் காடு–பரமபதத்திலே
அமரும்–வாஸம் பண்ணுகிற
தெய்வத்து இனம்–நித்யஸூரி வர்க்கத்தினர்
ஓர் அனையீர்கள் ஆய்–ஒருபுடை ஒத்தவர்களாய்
நும் இயல்புகள்–நீங்கள் கொண்டிருக்கின்ற தன்மைகள்
இவையோ–அயலார் மனத்தைக் கொள்ளை கொள்ளுதல் முதலிய இச்செய்கைகளாகத் தகுமோ?

புனமோ
உங்கள் வேலிக்குள்ளே அகப்பட்டுத் திருத்துண்டு
விளைந்து கிடக்கிற புனமோ

புனத் தயலே வழி போகும்
அப்புனத்துக்கு அருகே வழி போகிற

அரு வினையேன் மனமோ
அகப்பட்டால் தப்ப மாட்டாத பாபத்தைப் பண்ணின என்னுடைய நெஞ்சமோ

மகளிர் நும் காவல் சொல்லீர்
பெண்மைக்கு எல்லை நீளமான பிறவி அழகை யுடைய
உங்கள் காவலுக்கு விஷயம் சொல்ல வேணும்
புனம் விட்டு அகலாதவோ பாதி
என் நெஞ்சம் விட்டு அகலுகிறிலீர் என்று கருத்து

புண்டரீகத்து அம் கேழ் வனமோர் அனைய கண்ணான்
புண்டரீகத்துடைய அழகிய செறிவை யுடைத்தான காட்டுடனே போலிமை
சொல்லும்படி வி லக்ஷணமான கண்களை யுடைய –

(கரை பொருது ஒழுகும் காவிரி ஆறே -ஆற்றிடைக் கிடப்பது ஓர் ஐந்தலை அரவே-
அரவம் சுமப்பது ஓர் அஞ்சன மலையே -அம்மலை பூத்தது ஓர் அரவிந்த வனமே-
அரவிந்த மலர் தொறும் அதிசயம் உளவே –
கடல் விளிம்பு உடுத்த கண் அகல் ஞாலம் உடன் முழுது அளந்தது ஒரு தாமரையே –
வகிர் இளம் பிறையான் வார் சடை தேங்கப் பகிரதி கான்றது ஓர் பங்கே ருகமே
யாவையும் யாரையும் படைக்க நான் முகக் கோவை ஈன்றது ஓர் கோகனகமே
திரு மகட்கு இனிய திருமனை ஆகி பரு மணி இமைப்பது ஓர் பதும மலரே
சடைத்தலை தாழ்த்துச் சங்கரன் இரப்ப முடித்தலை தவிர்த்தது ஓர் முளரி மா மலரே
ஆங்கு மண்டோதரி அணிந்த மங்கல நாண் வாங்க வில் வாங்கிய வனசம் ஒன்றே
விரிந்த புகழ் இலங்கை வேந்தற்கு தென் திசை புரிந்து அருள் மலர்ந்தது ஓர் புண்டரீகமே
மண் தினிஞாலமும் வானமும் உட்பட அண்டம் உண்டு உமிழ்ந்தது ஓர் அம்போ ருகமே
கடை சிவந்து அகன்று கரு மணி விளங்கி இடை சில அரி பரந்து இனி ஆய நெடிய ஆய
இன்பம் தழீ இய இரு பெரும் கமலம் துன்பம் தழீ இய தொண்டனேனையும்
உவப்புடன் ஒரு கால் நோக்கி பவக் கடல் கடக்கும் பரிசு பண்ணினவே –
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் அருளிய திருவரங்கக் கலம்பகம் –73-)

கண்ணன் வானாட மெரும்
கிருஷ்ணனுக்கு போக விபூதியான நாட்டிலே நித்ய வாஸம் பண்ணுகிற

தெய்வத் தினம் ஓர் அனையீர் களாய்,
திவ்ய சங்கத்தோடே ஒரு பிரகாரத்தாலே
ஒப்புடையீராய் இருக்கை

இவையோ நும் இயல்வுகளே
பர சித்த அபஹாரியான பிரதிகூலா சரணம் உங்களுக்கு ஸ்வ பாவ மாகவாயோ என்று
தன் குறையற யுரைத்தானாயிற்று

இத்தால்
புனமோ என்று
உம்முடைய அநந்ய சாதனத்வாதி மர்யாதைக்கு உட்பட்டு போக
உன்முகமாம் படி திருத்துண்ட இவ்விபூதி ப்ரதேசமோ என்றபடி

புனத்தயலே என்று தொடங்கி
இதனுடைய பரிசர வர்த்தியான சாதன சரணியாலே நடக்கும்
எங்கள் நெஞ்சோ என்றபடி –

(மனசால் தியானித்து -உபாயாந்தரங்கள் ஆகிய வழியிலே
புனம் -சிந்தை அற்று -நெஞ்சு -சிந்தனை அன்றோ
அஜடமாய் இருந்தால் தானே கார்யகரம் ஆகும் )

இவ்விடத்தில் அருவினை -என்றது
விடமாட்டாத பாவ பந்தத்தை

மகளிர் என்று தொடங்கி
பாரதந்த்ர ஏக நிரூ பணீயமான ஸ்வரூப வை லக்ஷண்யத்தை யுடைய
உங்களுக்கு நியாம்யம் ஏது என்று அருளிச் செய்ய வேணும் என்றபடி

புண்டரீகம் இத்யாதி
ஸ்வாமித்வ
வாத்ஸல்ய
ஸூ சகமான கண் அழகை யுடையவனாய்
(செவ்வரியோடும் அந்த நீண்ட பெரியவாய கண்கள் இவற்றைக்காட்டுமே )
உத்துங்க லளிதனான கிருஷ்ணனுடைய அப்ராக்ருத பரம வ்யோம வாசிகளான
ஸாத்ய தேவர்களுடைய சங்கத்தோடே சாத்ருஸ்யம் சொல்லலாம்படி
விண்ணுளாரிலும் சீரியராய் வைத்து
மார்க்க அந்தர காமிகளையும் வர வலித்துக் கொள்ளும்படியான
வியாபார வை லக்ஷண்யம் இருந்தபடி என் என்று
திருந்தின விலக்ஷணர் பண்ணின நிந்தா ஸ்துதியை அருளிச் செய்தாராயிற்று –

(நிந்தா ஸ்துதி -நேராக ஸ்தோத்ரம் பண்ணவில்லையே –
கிளைவித் தலைமகன் ஆழ்வாரைப் புகழ்ந்த படி )

—————-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
இவனை நோக்கி இவர்கள் சில வக்ர யுக்திகளைச் சொல்ல
இவன் தானும் இவர்களைச் சில வக்ர உக்திகளைச் சொன்னான்
வம்பார் வினாச் சொல்லவோ எம்மை வைத்தது இவ்வான் புனத்தே -என்றார்கள்
அழகிது -இது சொல்ல ஒண்ணாதாகில் நீங்கள் பூனம் நோக்கி இருக்கிறி கோளோ
வழி போவார் மனம் நோக்கி இருக்கிறி கோளோ -என்கிறான் –

வியாக்யானம்
விண்ணுளாரிலும் சீரியரே -திரு விருத்தம் -79-என்னக் கடவது இறே இவர்களை

இவையோ நும் இயல்வுகளே
நான் உங்களை இங்கன் அன்று நினைத்து இருந்த படி
நாநா பவநம் பெற்று அநேக சரீர பரிக்ரஹத்தைப் பண்ணி அனுபவிக்கக் கோலி வர
உள்ள நெஞ்சையும் கூடக் கைக்கொண்டு வாய் திறவாதே இருப்பதே
அழகிதாக போதயந்த பரஸ்பரம் -கீதை -10-9- பண்ண வந்தேன்

இதுக்கு ஸ்வாபதேசம்
ஆழ்வார் பகவத் அலாபத்தாலே வந்த ஆற்றாமையுடனே
நல்லார் நவில் குருகூர் நகரான் –திரு விருத்தம் -100- என்கிற படியே
ஸத்வ நிஷ்டர்கள் அடங்கலும் திரண்டு படுகாடு கிடைக்கும் படி இருக்கிற இருப்பைக் கண்ட
அவர்களுடைய சர்வ இந்திரியங்களும் அபஹ்ருதமாகிற படியைச் சொல்கிறது –

தென் ஆனாய்
நாலு பக்கமும் யானையைத் தேடிப் போவார் தப்பலாம்
பாகவதர்கள் இடம் சேர்ந்து விலகாமல் -ஆழ்வார் திருவடிகளில் ஈடுபட்டு மீள முடியாமல் சிக்குண்டதுக்கு ஐதிக்யம்
சீரார் வேங்கடமே –ஆராமம் சூழ்ந்த அரங்கம் -மண்டின இடங்களில் புகுந்தவர்
வேலிக்கு வெளியில் திருக்குருகூரில் அகப்பட்டதுக்கு –
பிள்ளை உறங்கா வல்லி தாசர் உடையவர் பாதமே என்று இருந்ததுக்கு

நம்பிள்ளை ஈட்டில்
ஆப்பான் திருவழுந்தூர் அரையர்
மச்சிலே
பிள்ளை திரு நறையூர் அரையர் இப்பாட்டை அநுஸந்தியா நிற்க
ஸீ ல குணம் காட்டும் எம்பெருமான் எங்கும் உண்டாகா நிற்க
திருப்புளிக் கீழ் -அடைந்தேன் -சிக்கினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
சீலாதி குணம் அளவு இல்லையே
குண வித்தர் படி

——————

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி
அவதாரிகை
இப்டியுள்ள ஹித வசனத்தைக் கேட்டுத் திருத்தப்பட்ட பரம ஏகாந்தி பண்ணும் நிந்தா ஸ்துதியைப்
புனம் காத்து இருந்த தலைவியையும் தோழியையும் கண்டு
தலைவன் குறை யுரைத்த பாசுரத்தாலே
காட்டுகிறார் இதில்

வியாக்யானம்
புனமோ
இது உங்கள் வேலிக்குள் அகப்பட்ட புனமோ என்பது ஹர்ஷ யுக்தி இங்கு

புனத் தயலே வழி போகும்
உங்கள் புனத்திலே புகுந்தோம் அல்லோமே
புணத்துக்கு அருகே அல்லது வழி இல்லை இறே நமக்கு
புணத்துக்கு அருகே வழி போகிற

அரு வினையேன் மனமோ
ஈஷத் அநு ரக்தரிலும் அநு ரக்திக்க்கும் படியான பாபத்தைப் பண்ணின என் மனம் தான்

மகளிர் நும் காவல் சொல்லீர்
பெண்மைக்கு எல்லை நிலமான பிறவியையுடைய
உங்கள் காவலுக்கு உட்பட்ட புனம் தானோ சொல்லுங்கோள்

புண்டரீகத்து அம் கேழ் வனமோர் அனைய கண்ணான்
புண்டரீகத்தினுடைய அழகிய ஸ்ரீ யை யுடைத்தான வனத்தோடே ஒரு போலியே சொல்லும்படியான
கண்களை யுடைய

கண்ணன் வானாட மெரும்
கிருஷ்ணனுக்கு போக பூமியான நாட்டிலே
நித்ய வாஸம் பண்ணுகிற

தெய்வத்தினம் ஓர் அனையீர் களாய்,
நித்ய ஸூரி சங்கத்தோடே ஒரு பிரகாரத்தாலே
ஒப்புடையீர் களாய் இருக்கிறீகோளே

இவையோ நும் இயல்வுகளே
ஒருபடி நம் மநோ வ்ருத்தி அறியாதவர்களாய்
ஒருபடி நம்மிடம் ப்ரீதி யுடையவர்களாய் இருக்கிறி கோளே
உங்களுடைய ஸ்வ பாவங்கள் இங்கே புனம் காக்கும் தோழி தலைவி இவர்களோடு ஒத்த
ஸ்வ பாவத்தால் திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்கள்

புனம் -இவர்கள் இருக்கும் தேசம்
யுக்தமான ஸூரி சாத்ருஸ் யமும் இவ்விருவருக்கும் ஒக்கும் என்றதாயிற்று –

———-

அவதாரிகை
இப்படி பாகவதர் ஈடுபடும்படியான இவருடைய வை லக்ஷண்யம்
பகவத் ப்ராவண்ய அதிசயம் ஆகையால்
அந்த ப்ராவண்ய அனுரூபமாக பிராப்தி சித்தி யாகையாலே
தமக்குப் பிறந்த ஸைதில்யத்தைக் கண்டு ஸூஹ்ருத்துக்கள் உரைத்த பாசுரத்தைத்
தலைமகன் பிரிவு ஆற்றாளாய் தலைவி ஈடுபாடு கண்ட தோழி இரங்கின
பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

(நாட்டைத் திருத்தவும்
நச்சுப் பொய்கை யாகாமைக்கும்
ஆர்த்தி அதிகார பூர்த்திக்காகவே ஆழ்வாரை இங்கே வைத்து இருந்தார் )

இயல்வாயின வஞ்சநோய் கொண்டுலாவும் ஒரோ குடங்கைக்
கயல்பாய்வன பெருநீர் கண்கள் தம்மொடும் ,குன்றம் ஒன்றால்
புயல்வாயின நிரை காத்த புள்ளூர்தி கள்ளூரும் துழாய்
கொயல்வார் மலர் மேல் மனத்தொடு என் னான்கொல் எம் கோல வளைக்கே –24–

பாசுரம் -24-இயல்வாயின வஞ்ச நோய் கொண்டு -உலாவும் -பிரிவாற்றாத தலைவிக்காகச் செவிலித் தாய் இரங்குதல் –
கரு மாணிக்க மலை -8-9-

பதவுரை

இயல்பு ஆயின–இயற்கையானதும்
வஞ்சம்–பிறரறியாதபடியுள்ளதுமான
நோய்–காதல் நோயை
கொண்டு–உடையவையாய்
உலாவும்-(ஆற்றாமை மிகுதியால் எங்கும்) பரந்து பார்க்கிற
ஒரே குடங்கை கயல் பாய்வன பெருநீர் கண்கள் தம்மோடும்–ஒவ்வொரு ஒவ்வொரு அகங்கை யளவாக வுள்ளவையும்
கயல்மீன் போலப் பிறழ்வனவுமாகிய மிக்க நீர்ப் பெருக்கை யுடைய கண்களுடனும்
புயல் வாய்–(முன்பு) பெருமழை பெய்த காலத்து
குன்றம் ஒன்றால்–கோவர்ததன மலையினால்
இனம் நிரைகாத்த–பசுக்கூட்டங்களைப் பாதுகாத்தருளினவனும்
புள் ஊர்தி–கருட வாகஹனனுமான கண்ணபிரானது
கள் ஊரும் துழாய்–தேன் பெருகும் திருத்துழாயினுடைய
கொயல் வாய் மலர்மேல்–பறிக்கப் படுதல் பொருந்தின பூவின் மேல் (ஆசைப்பட்டுச் சென்ற)
மனத்தொடு–மனத்தோடும்
எம் கோல் வளைக்கு–அழகிய வளையல்களையுடைய எமது மகளுக்கு
என் ஆம் கொல் = (இன்னும்) என்ன நிலைமை நேருமோ?

இயல்வாயின வஞ்சநோய் கொண்டுலாவும்
ஸ்வா பாவிகமாய் பிறர் அறியாத படியான காதல் நோயைக் கொண்டு
ஆர்த்தி அதிசயத்தாலே யாதாயாதம் பண்ணா நிற்பனவாய்
(யாதாயாதம் பண்ணா நிற்பனவாய் -உலாவி-கண்கள் உலவுவதாக இங்கு –
ஆழ்வார் உலவுவதாக மேலே சொல்வார் )

ஒரோ குடங்கைக் கயல்பாய்வன பெருநீர் கண்கள் தம்மொடும் ,
ஒரோ சிறாங்கை போலே பெருத்து நீண்ட கயலானது நிரம்பின கயத்திலே பாயுமா போலே
கண்ணீர் வெள்ளத்திலே அலமருகிற கண்களோடும்

கண்கள் தன்னோடும் என்றும் சொல்வர்

குன்றம் ஒன்றால் புயல்வாயின நிரை காத்த புள்ளூர்தி
கண்டதொரு மலையாலே
பெரு மழையில் ஈடுபடாமல்
கோகுலங்களைக் காப்பானுமாய்
ஆர்த்த ரக்ஷணத்துக்கு உதவும்படி பெரிய திருவடியை நடத்தும் ஸ்வ பாவனான கிருஷ்ணனுடைய

கள் ளூரும் துழாய் கொயல்வார் மலர் மேல் மனத்தொடு
மதுஸ்யந்தியான திருத் துழாயினுடைய கொயல் வாய்ந்த மலரிலே அபி நிவிஷ்டமான நெஞ்சோடும் கூட –

என் னான்கொல் எம் கோல வளைக்கே
கையும் வளையுமான என் தலைவிக்கு ஏதாய் முடியுமோ

கோல் வளை -என்று
மழுக்கான வளை என்றபடி
(அழகிய வளை என்றும் வளைந்த வளை என்றும் )

என்னாம் கொல் என்று
கண் கலக்கமும்
நெஞ்சு அழிவுமான
அளவன்றியிலே இனி ஏதாய் முடியுமோ என்று
வளைக்கும் அஞ்சி உரைத்தாள் யாயிற்று

இயல்வாயின வஞ்ச நோய் கொண்டு உலாவும் எம் கோல் வளை -என்று
அந்வயமாகவுமாம்
(உலாவும் இங்கு ஆழ்வாருக்கு )

இத்தால்
ஸ்வாபாவிக ஆகாரமாய் –
ஸ்வ ஸம் வேத்யமான பக்தி யோகத்தை யுடைத்தாய்க் கொண்டு –
ஒரு நிலை நில்லாமல் வியாபரிப்பதாய்-
சிறாங்கித்து அனுபவிக்கலாம் படி தர்சநீய ஸம் ஸ்தானத்தை உடைத்தாய்
ஆர்த்தி ஜெனிதமான அஸ்ரு வெள்ளத்திலே அலமருகிற பாஹ்ய கரணத்தோடும்

ஆர்த்த விஷயத்தில் யரும் தொழில் செய்து நோக்க வல்லனாய்
த்வராயை நம -ஸ்ரீ ரெங்க ஸ்தவம் -2-57-என்னும்படி
அதி த்வரித காமியானவனுடைய
அதிசயித போக்யமான மாலை அழகை அனுபவிக்கையிலே
அபி நிவிஷ்டமான அந்தக் கரணத்தோடும்

ஈடுபடுகிற இவர் கையிலே
நமக்குத் தஞ்சமான
(ஆழ்வார் இடம் உள்ள பாரதந்தர்யமே நமக்குத் தஞ்சம் )
பாரதந்தர்ய லக்ஷணம் பிரியப்படுகிறதோ என்று நொந்த
ஸூஹ்ருத்துக்கள் பாசுரத்தை அருளிச் செய்தார் யாயிற்று

(சீதாபிராட்டி இளைய பெருமாள் இடம் -என்னை நான் அழித்துக் கொள்ள முடியாது
என்று பாரதந்தர்யம் காட்டி அருளினாள் அன்றோ )

இங்கும் வஞ்ச நோய் கொண்டு உலாவும் என்று ஆழ்வாருக்கு விசேஷணம் ஆகவுமாம் –

————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
வியாக்யானம்
புயல்வாயின நிரை காத்த புள்ளூர்திகள் ளூரும் துழாய் கொயல்வார் மலர் மேல் மனத்தொடு

கண்டதோர் மாலையாலே மஹா மேக வர்ஷத்திலே அகப்படுவனவான கோ ஸமூஹங்களைக் காத்தவனுமாய்
ஆர்த்த ரக்ஷணத்துக்கு உதவும்படி பெரிய திருவடியை நடத்தும் ஸ்வ பாவனுமானவனுடைய
மது ஸ்யந்தியான திருத்துழாயின் கொய்தல் வாய்ந்த மலர் மேல் அபி நிவிஷ்டமான மனத்தோடும்
நோய் கொண்டு உலாவும் என்று அந்வயம்

என் னான்கொல் எம் கோல வளைக்கே –
அழகிய கையும் வளையுமான
என் மக்களுக்கு ஏதாய் முடியுமோ –

—————–

இப்படி ஸூஹ்ருத்துக்களும் ஈடுபடும்படி ஈஸ்வரனுடைய போக்யதையிலே ஈடுபட்டவர்
அந்த போக்யதையினுடைய அதி ப்ரவ்ருத்தியை
அவன் உகந்த திருத்துழாயிலே ஈடுபட்ட தலைமகள் பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

எம்கோல் வளை முதலா கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும்
செம்கோல் வளைவு விளைவிக்குமால் திறல் சேர் அமரர்
தம் கோன் உடைய தம் கோன் உம்பர் எல்லா யவர்க்கும் தம் கோன்
நம் கோன் உகக்கும் துழாய் என் செய்யாது இனி நால் நிலத்தே –25-

பாசுரம் -25-எம் கோல் வளை முதலா -தலைவன் மாலைக்குத் தலைவி ஆசைப்படுதல் –
மாயக் கூத்தா வாமனா -8-5-

பதவுரை

திறல் சேர்–வலிமை பொருந்திய
அமரர் தம்–தேவர்களெல்லார்க்கும்
கோனுடைய–தலைவனான பிரம தேவனுக்கும்
தம்கோள்–தலைவனா யிருப்பவனும்
உம்பர் எல்லா யவர்க்கும் தம்கோன்–பரமபதத்திலுள்ள நித்யஸூரிகளெல்லோர்க்கும் தலைவனாயிருப்பவனும்
நம் கோள்–(இவ்வுலகத்திலுள்ள) நமக்கும் தலைவனுமாகிய நம் பெருமான்
உகக்கும்–விரும்பித் தரித்துள்ள
துழாய்–திருத்தழாயானது
எம் கோல்வளை முதல் ஆ–எமது (கையிலுள்ள) அழகியவளை நிமித்தமாக
கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும் செங்கோல் வளைவு விளைவிக்கும்–அப்பெருமானது உபய விபூதியையும்
பாதுகாக்கிற தட்டில்லாத கட்டளையின் நேர்மைக்கும் ஒருகோடுதலை உண்டாக்கா நின்றது;
இனி–இங்ஙனமான பின்பு,
நானிலத்து–இவ்வுலகத்தில்
என் செய்யாது–(அந்தத் திருத்துழாய்) வேறு எத் தீங்கைத் தான் செய்ய மாட்டாது.

வியாக்யானம்
எம்கோல் வளை முதலா
எங்கள் கையிலே
கோல் வளை படியாக

கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும் செம்கோல் வளைவு விளைவிக்குமால்
ஸர்வ ஸூலபமான கிருஷ்ணன்
லீலா விபூதியையும் நித்ய விபூதியையும் நிர்வஹிக்கிற
அபங்குரையான ஆஜ்ஜைக்கு வளைவை யுண்டாக்கா நின்றது

திறல் சேர் அமரர் தம் கோன் உடைய தம் கோன்
பிரபலரான லோக பாலாதி தேவர்களுக்கும் நிர்வாஹகனான ப்ரஹ்மாவுக்கும்
அசாதாரண ஸ்வாமி யானவன்

உம்பர் எல்லா யவர்க்கும் தம் கோன்
மேலான நித்ய ஸூரிகளுடைய ஸகல ஸமூஹங்களுக்கும்
நிருபாதிக சேஷியானவன்

நம் கோன்
இந்த மேன்மையாலே நம்மை அடிமை கொண்ட ஸர்வேஸ்வரன்

உகக்கும் துழாய்
தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் -திருவாய் -1-9-7- என்கிறபடியே
விரும்பும்படியான ராஜ குலத்தை யுடைத்தான திருத்துழாயானது

என் செய்யாது இனி நால் நிலத்தே –
குறிஞ்சி முல்லை நெய்தல் மருதம் என்று நாலு வகைப்பட்ட பூமியிலே
இனி எது செய்யாது என்றதாயிற்று
(பாலை -ஐந்தாவது -மக்கள் வாழ மாட்டார்கள் அன்றோ )

எம் கோல் வளை -என்று
தலைமகளைச் சொல்லிற்று ஆயிற்று

தலைமகள் ஈடுபாட்டுக்கு
தோழி ஆற்றாது உரைத்தலாகவுமாம்

இத்தால்
எம் கோல் வளை இத்யாதி
நம் கையிலே மினுங்கித் தோற்றுகிற பாரதந்தர்ய லக்ஷணம் அடியாக
உபய விபூதியையும் நிர்வஹிக்கிற
பகவத் சங்கல்பத்தை அநு விதானம் பண்ணி
ஆறி இருக்க ஒட்டாதபடி த்வரையை விளைக்கையாலே
பகவத் ஆஜ்ஜா பங்கத்தைப் பண்ணுவதாய் இரா நின்றது

நிர்வாஹ்யமான விபூதி த்வயத்துக்கும் நிருபாதிக சேஷி யாகையாலே
அகில ஜகத் ஸ்வாமியாய்
அஸ்மத் ஸ்வாமி யானவனுக்கும் அபிமதம் ஆகையிலே
அதிசயித வை லக்ஷண்யத்தை யுடைத்தான போக்யதையினுடைய
அதி பிரவிருத்தி யானது
இரண்டு விபூதியையும் விளாக்குலை கொள்ளுகையாலே
பிரதான புருஷ வியக்த கால ரூபமான சாதுர்வித்யத்தை யுடைத்தான ஜகத்தில்
இனி ஏது செய்யாது என்று தம்முடைய ஸைதில்யத்தை அருளிச் செய்தாராயிற்று

(பிரதான புருஷ வியக்த கால ரூபமான சாதுர்வித்யத்தை யுடைத்தான-
ஸூஷ்ம ரூப ப்ரக்ருதி -புருஷ -ஸ்தூல ரூப -காலம் -இப்படி நான்கும் –
அந்திம ஷட்கம் ஸங்க்ரஹ ஸ்லோகம்-இப்பத பிரயோகங்கள் உண்டே
ப்ரதாந புருஷவ்யக்த ஸர்வேஶ்வர விவேசநம்
கர்ம தீர் பக்திரித்யாதி: பூர்வஶேஷோந்திமோதித:
ப்ரதாந புருஷவ்யக்த ஸர்வேஶ்வர விவேசநம் – ஸுக்ஷ்மமான மூலப்ரக்ருதி, ஜீவன், ஸ்தூலமான அசேதனம்,
ஸர்வேஶ்வரன் ஆகியவற்றைப் பற்றிய விளக்கமும்,
கர்ம: – கர்மயோகமும்,
தீ: – ஜ்ஞாநயோகமும்,
பக்தி: – பக்தியோகமும்,
இத்யாதி: – இவற்றை அநுஷ்டிக்கும் முறை முதலானவையும், (ஆகிய இவற்றில்)
பூர்வஶேஷ: – முன் அத்தியாயங்களில் சொல்லாமல் விடப்பட்டவை,
அந்திமோதித: – கடைசி ஆறு அத்தியாயங்களிலும் சொல்லப்பட்டன.)

அன்றியே
எம் கோல் வளை -என்று
பாரதந்தர்ய ஏக நிரூபணீயமான ஆழ்வாருடைய ஸ்வரூபத்தை உத்தேசித்து பார்ஸ்வத்சரான
ஸூஹ்ருத்துக்கள் சொன்ன வார்த்தை யாகவுமாம்

————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
ஸர்வேஸ்வரன் அபலையானவள் நிமித்தமாகத் தன்னுடைய ஆஜ்ஜையை நெகிழப் பண்ணா நின்றான்
அவன் நினைவு அறிந்து கார்யம் செய்யும் திருத்துழாய் எத்தைச் செய்யாது என்னுதல்
அன்றிக்கே
உபக்ரமத்தில் அவனுடைய ஆஜ்ஜையையும் கூட அழிக்கிற இது
இனி எல்லாம் செய்தது அன்றோ என்று
இத் திரு துழாய் தன்னையே சொல்லிற்றாதால்
திருத் தாயார் வார்த்தை யாகவுமாம்

வியாக்யானம்
எங்கோல் வளை முதலா
எனக்கு எல்லா வழியாலும் உஜ்ஜீவன ஹேதுவான இவள் நிமித்தமாக
பகவத் ஸ்பர்சம்
க்லேசமாகப் புக்கது
இவளைத் தொடங்கிக் கிடீர்

ஆரேதுயர் உழந்தார் துன்புற்றார் ஆண்டையார்
காரே மலிந்த கருங்கடலை – நேரே
கடைந்தானைக் காரணனை நீரணை மேல் பள்ளி
அடைந்தானை நாளும் அடைந்து —-27-மூன்றாம் திரு அந்தாதி -27-என்னக் கடவது இறே

அவஸ்யம் அநு போக்த்வயம் -என்கிறபடியே
அனுபவ விநாஸ்யமான பாபத்தைப் பண்ணின
பகவத் ப்ரத்யாஸன்னரில் அப் பாப பலம் அனுபவித்தார் யார்

அவன் தானும்
ந மே பக்த ப்ரணஸ்யதி-ஸ்ரீ கீதை -9-31-என்றான் இறே

க்ஷிப்ரம் பவதி தர்மாத்மா ஸஸ்வச் சாந்திம் நிகச்சதி.–
கௌந்தேய ப்ரதிஜாநீஹி ந மே பக்த ப்ரணஸ்யதி—৷৷9.31৷৷

க்ஷிப்ரம் = வெகு விரைவில்
ப⁴வதி = அடைகிறார்கள்
த⁴ர்மாத்மா = தர்மத்தின் வழியில்
ஸ²ஸ்²வச்சா²ந்திம் = நிரந்தர அமைதி
நிக³ச்ச²தி = அடைகிறார்கள்
கௌந்தேய = குந்தி புத்திரனே
ப்ரதி ஜாநீஹி = நான் உறுதி அளிக்கிறேன்
ந = இல்லை
மே = என்னை
ப⁴க்த: = பக்தன்
ப்ரணஸ்²யதி = அழிவது

என் விஷயமான ஸ்வயம் பிரயோஜன பக்தியைச் செய்பவன் துராசாரம் உள்ளவனாயினும் விரைவிலேயே
தடை நீங்கப் பெற்ற பக்தி யோகத்திலேயே ஈடுபட்ட நெஞ்சை உடையவன் ஆகிறான் –
நிலையான துராசார நிவ்ருத்தியை நன்கு அடைகிறான் –
குந்தீ புத்திரனே -என்னுடைய பக்தன் அழிய மாட்டான் என்னும் இந்த அர்த்தத்தை நீயே ப்ரதிஜ்ஜை செய்வாய் –
இப்படிப் பட்ட அநந்ய பக்தனுக்கு ரஜஸ் தமஸூக்கள் வாசனை ருசி உடன் கழன்று போகும் –
என்னையே நினைந்து பிரதி பந்தகங்கள் போக்கப் பெற்று என்னை அடைகிறான் –
ரஜஸ் தமஸ் ஒழித்து துராசாரம் போகும் -என்னை பற்றி நினைத்தவனுக்கு -கிரமத்தால் பக்தன் ஆவான்
இதை நீயே ப்ரதிஞ்ஜை பண்ணப் போகிறாய் –
நான் ஏலா பொய்கள் உரைப்பான் என்பர் -நீ சொன்னால் நம்புவார்கள் -ஷத்ரியன் ராஜா அன்றோ –
அஷ்ட வித பக்தி -எனக்கு சமமாக நினைக்கத் தக்கவன் –
மிலேச்சனாக இருந்தாலும் -கருட புராணம்- நின்னொடு ஓக்க -திருமாலை
மத் பக்த ஜன வாத்சல்யம் -பூஜா ஆமோதித்து ஆனந்தம் ஸ்வயம் பூஜா பண்ணி
மத் கதா ஸ்ரவணா ப்ரீதி -கொள்மின் கொடுமின் ஞானம் கொடுத்து பெறலாம் –

ந வாஸூ தேவ பக்தா நாம சுபம் வித்யதே க்வசித் -ஸ்ரீ ஸஹஸ்ரநாம அத்யாயம்
ஸர்வேஸ்வரன் பக்கலிலே ப்ரேமத்தைப் பண்ணி இருக்கையும்
பொல்லாங்குகள் உண்டாகுகையும்
அக்னி நாஸிஞ்சேத் -போலே கூடாதது ஓன்று இறே

இவன்
தான் போக்கிக் கொள்ளப் பார்த்தல்
அவனுக்கு அசத்தி உண்டாதல் செய்யில் இறே
இது உண்டாவது

ந வாஸூ தேவம் ப்ரணிபத்ய ஸீததி –என்றும்
நிர்தோஷம் வித்தி தம் ஜந்தும் ப்ரபாவாத் பரமாத்மந-என்றும் -ஸாத்வதம் ஸம்ஹிதை-16-24-இத்யாதியாலே கண்டோம்

சர்வ பிரகாரங்களாலும் தோஷமே யாகிலும் ஞானத்துக்கு மேல் அவ்வருக்கு நன்மை இல்லையாகிலும்
பக்தி நெருப்பு இவன் இடம் இல்லை யாகிலும்
இனி இவனை நிர்தோஷனாக பிரதிபத்தி பண்ண வேண்டுகிறது என்ன ஹேது கொண்டு என் என்னில்
ப்ரபாவாத் பரமாத்மந -ஸாத்வதம் ஸம்ஹிதை-16-24-
இத் தோஷங்களோடே பகவத் விஷயத்திலேயும் கை வைக்கும்
பின்னை இத்தையே-தோஷத்தையே- பார்த்து இருக்கும் அத்தனை போக்கி இவனைக் குறைய நினைத்ததாகில்
பகவத் ப்ரபாவத்தைக் குறைய நினைத்தானாம் இத்தனை –
எலி எலும்பனான இவனைப் பார்த்து குறைய நினைக்கிறது
பகவத் ப்ரபாவத்தைப் பார்த்து இவனை நிர்தோஷனாகப் பிரதிபத்தி பண்ணுகிறது –
புரா -பகவத் விஷயத்தில் கை வைப்பதற்கு முன்பு இறே தோஷம் இருப்பது

பின்பு அவன் பக்கலில் நெஞ்சு வைக்கவும் பொல்லாங்கு உண்டாகையும் கூடாது
அவன் தானும் ஷிப்ரம் பவதி என்றான் இறே
பண்டு உய்யக் கொண்டார் பக்கலிலே -இவர் நாதமுனி சிஷ்யர் அல்லர்
சாதனாந்தர நிஷ்டர் வேறே உய்யக் கொண்டார் ராமானுஜர் காலம் அவரும் இல்லை
நான்காம் வர்ணம் பாகவத பிரபாவம் அறிந்தவர்
இவர் இடம் உசாவி -அருளாளப்பெருமாள் எம்பெருமானார் தாசர் இருவரும் சங்கை
அவரைக் கண்டு தான் இருந்த இடத்தை அவருக்கு கொடுத்து கடக்க நிற்க

தாசரும் தனது தன்மை அறிந்தவர்
எல்லாரும் தாசர் என்று அறிந்து இருப்பார்க்களே என்ன

என்னால் உம்மை அறியப்போமோ
பகவான் நிர்ஹேதுகமாக கிருபையால் படைத்து -ஜகத்காரணம் இவனே என்று அறிந்தவன்
தேவர்கள் கூட அந்த பாகவதர் பெருமையை அறியவே மாட்டார்கள் பாரதம்
பிரானே உம்முடைய பெருமை தெரியாது என்று சொல்ல தேவர்கள் வேணும் -நான் யார் சொல்ல

என் கோல் வளை
எனது ஜீவனம் அழித்தோ தனது ஸ்வாதந்த்ரம் நடத்தப் பார்ப்பது
இளைத்து கை வளை இழந்த ஆழ்வார் அழகு -மிக்கு இருக்குமே
ஆகிலும் இக் குறையும் வராதே இவர் இருக்க வேண்டும்
அம்ருத சாகரத்தில் ஆழ்ந்து அங்கு -சம்சாரம் அப்படி இல்லையே

உண்ணும் சோறு –கண்கள் நீர் மல்கி இருப்பவரையே நமக்குப் பிடிக்கும் -இப்படி இருந்தாலும்
அவனை அன்றி வேறே ஒன்றை நினையாத -ஏங்குதலே அழகு
கண் எச்சில் படாமைக்கு இவை வேண்டாம் -த்ருஷ்ட்டி தோஷம் வரக் கூடாது
தாயார் ஆகையால் இப்படித்தானே நினைப்பாள்
ஆஹ்லாத ஸீத நேத்ராம்பு பார்ப்பது அழகு தான் இருந்தாலும்

தன்னை அழிய மாறி ஆஸ்ரித வத்ஸலனான கண்ணன் கூட இப்படி பண்ணுவானோ
தனது ஆணையை அழித்து
அகர்மவஸ்யனாய்
தேவகி வயிற்றில் பிறந்து வந்து சொல்கிறான்
ஜாதோசி தேவ தேவ
ஜாதோஹம் -அவன் சொன்னதைத் திரும்பி ரிஷிகள்

கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும்
ஈரக்கையால் தடவி ரக்ஷிக்கும் செங்கோல்
அங்கு ஏதும் சோராமே ஆள்கின்ற திருவரங்கச் செல்வனார்
ஆணை -அதுக்கு வளைவு -உண்டாக்கலாமோ
திருத் துழாய் ஆணையை வளைத்து விடடாதே
ரஷ்ய வர்க்கத்தில் ஒருத்தி விட்டாலும் ஸர்வ ரக்ஷகத்வம் கொத்தை ஆகுமே –
அதுதானே ராம ராஜ்ஜியம்

இத்தால் சொல்லிற்று ஆயிற்று
இவரை இழந்தால் -இனிக் கிடையாது என்னில்
உபய விபூதியும் இழந்தது ஆகுமே அவனுக்கு

பக்தி பிரியர் என்பார் ஒருவர்
இவர் விரகம் அனுசந்தித்து
ஆழ்வீர் என் பட்டீர் என்று திரிவாராம்
வியாசர் -சம்சார வாசனை கனத்து புத்ர வியோகத்தில் மலையில் இருந்து விழுந்து சாயா சுகரை வைத்து தரித்தார்
பகவத் விஷயத்தில் இழிவாருக்கு-இவர் திருவாய் மொழி கொண்டே
கதிர் பொருக்கி தர்ம வீர்ய ஞானம் பெற்றவர்கள் போல் இல்லாமல்
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்
அத்தால் கூட தானே செங்கோல் -கூட வளைவிப்பானோ

திறல் சேர் அமரர்
சம்சாரிகள் ஸூத்ர விஷயங்களையும் உண்டு அறுக்க மாட்டார்கள்
நித்ய ஸூரிகள் அவனை அனுபவித்து -மேலும் அனுபவிக்க நிரந்தரமாக திறமை கொண்டவர்கள்
சாத்மிக்க சாத்மிக்க அனுபவிக்க போக்த்ருத்வ சக்தி உடையவர்கள்
விஷ்வக்சேனருக்கும் கோன்
தேவர்கள் கோன் ப்ரஹ்மாதிகளுக்கும் கோன்
உகக்கும் துழாய்
ராஜ குலா மஹாத்ம்யம்

இவன் தான் செங்கோல் வளைத்தாவது ஆழ்வாரை துன்பம் கொடுக்க சங்கல்பிக்க
திருத்துழாயும் சஹகரித்து
ஒரு பிரபு ஆயிரம் காசு கொண்டு வரச் சொல்ல இவன் மூன்று மடங்கு பண்ணி அவன் ப்ரீதிக்கு விஷயம் ஆக்குமே
அழியாத விபூதியையும் அளிக்கப் பார்க்கும் இது லீலா விபூதியை அளிக்க சொல்ல வேணுமோ

சீதா பிராட்டி துக்கம் கண்டு-தெப்பம் முழுகினால் போல் துன்பம்
புருஷகாரம் செய்து நம்மை சேர்ப்பிக்க இவளும் துக்கம் பட்டால்
காலத்தின் கொடுமை என்ன சொல்வது திருவடி வார்த்தை சுந்தர காண்டம்
காலம் என்பது -கால சக்கரத்தாய் -அழிக்கிற வஸ்துவில் நான் காலம் என்றானே கீதாச்சார்யன்
அகால தேசத்திலும் துன்பம் கொடுக்கும் காலம் அவன் தானே
நீர்மைக்கு அவ்வருக்காய் இருப்பார் இப்பாட்டு படா நின்றால் என் செய்யாது

இவளோ முடியா நின்றாள்
இனி யாரை அழிக்க என்று வத்யம் தேடித் திரியும்
திருத்துழாய் போக்யத்தை குமர் இருந்து போம் அத்தனை
காய்ந்து சருகாய் போக வேண்டுமே
ஹேய மான தேசத்தில் என்ன செய்யாது

இத்தால் சொல்லிற்று
நான்கு நிலமும் -வாசி இல்லாமல் ஏக ரூபமாய் துன்பம்
நெடியானே என்று கிடைக்கும் நெஞ்சமே
காணக் கருதும் கண்ணும்
பாஹ்ய அந்தக்கரணம் அனைத்தும் ஈடுபட்டதுக்கு பிரமாணம்

ஆற்றாமை கைவிஞ்சி இருப்பு கண்ட பாகவதர்கள்
இவர் ஸம்ஸாரிகளுடைய அன்ன பானாதிகளால் தரிக்குமவர் அல்லராய் இரா நின்றார்
தம்முடைய உத்தேச்யம் கைப் புக்கு இருக்கிறது இல்லை
இனி இவ் விருப்பு அவருக்கு எவ்வளவாகக் கடவதோ
இவர் ஜீவிப்பாரோ ஜீவியாரோ என்று சம்ஸயம் பண்ண வேண்டும்படியான தசை
விளைந்த படியைச் சொல்லிற்று கீழ்

இதில் இவர் ஜீவிக்க மாட்டார் -சம்ஸயம் இல்லை
ஈஸ்வரன் இவரைக் கொண்டு சில பிரபந்தங்கள் தலைக்கட்டுவதாகக் கோரி இருந்தான்
இனி அவன் சங்கல்பமும் அழிந்ததாகாதே என்று நிர்ணயிக்க வேண்டும்படியான
தசை பிறந்த படியைச் சொல்கிறது –

————-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி
அவதாரிகை
இப்படி எனக்கு அதி போக்யமும்
எங்கோன் உகக்குமதுமான இத்திருத்துழாய்
ஸர்வ ரக்ஷகனும் ஸர்வாதிகாரி நிர்வாஹகனுமானவனதான
பெண்ணீர்மை ஈடழிக்க வல்ல திவ்ய ஆஜ்ஜையினுடைய ஸர்வ தேசா க்ரமணத்தை விஜ் ரும்பியா நின்றதே
இனி இந்நான்னிலத்து இது எத்தைச் செய்யாதது என்று
அதின் கொடுமைகளிலும்
போக்யதையிலும் தலைமகள் ஈடுபடுகிறாள்

வியாக்யானம்
எம்கோல் வளை முதலா
என்னுடைய கையில் வளை முதல் கொண்டு

கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும் செம்கோல் வளைவு விளைவிக்குமால்
ஸர்வ ஸூலபனான கிருஷ்ணனுடைய லீலா விபூதியையும் நித்ய விபூதியையும் நிர்வஹிக்கிற
ஆஜ்ஜையினுடைய தேச சதுஷ்டய வ்யாபனத்தை சத சாகமாக விளைவியா நின்றதே

திறல் சேர் அமரர் தம் கோன் உடைய தம் கோன்
சமர்த்தகளான லோக பாலாதி தேவர்களுக்கு நிர்வாஹகானான ப்ரஹ்மாவுக்கும் அசாதாரண ஸ்வாமி யான

உம்பர் எல்லா யவர்க்கும் தம் கோன்
மேலான நித்ய ஸூ ரிகளுடைய ஸகல ஸமூஹங்களுக்கும் நிருபாதிக சேஷியானவன்

நம் கோன்
இம்மாலை போலே எங்களை அடிமை கொண்டவன்

உகக்கும் துழாய்
தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் -திருவாய் -1-9-7-என்னும்படி
விரும்பும்படியான ராஜ குலத்தை யுடைய திருத்துழாயானது

என் செய்யாது இனி
என்னை எந்தப்பாடு படுத்தாது –
உபய விபூதியும் படாத படிகளை எல்லாம் படுத்தாதோ

நால் நிலத்தே –
பாலை மருதம் நெய்தல் குறிஞ்சி என்றுள்ள நாலு வகையான நிலத்திலுள்ள
தன்னை ஆசைப்பட்டாரையும் கழல் வளை ஆக்காமல் விடுமோ –
அவளவள் தோழிமார்களையும் தாய்மார்களையும் அங்கனே புலம்பப் பண்ணாமல் விடுமோ
என்று தலைமகள் அவசன்னை யாகிறாள் –

————–

அவதாரிகை
இப்படி ஈடுபட்ட இவரைக் கண்ட அபிமதரான பாகவதர்
இவர் ஸம்ஸார மார்க்கத்தைக் கழித்த பிரகாரத்தையும்
அர்ச்சாவதாரத்தின் அதிசயித போக்யதையையும் இவருக்குப் பிரகாசிப்பித்து
ஆஸ்வசிப்பித்த பிரகாரத்தை உணர்ந்து
உடன் போன தலைமகன்
நடந்து இளைத்த தலைவியைக் குறித்து
இடம் தலைப்பெய்தமை சொன்ன
பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

(கோயில் திருமலை பெருமாள் கோயில் மூன்றுமே திருவிருத்தத்தில் உள்ள திவ்ய தேசங்கள்
திரு வெக்கா -பெருமாள் கோயில் )

நானிலம் வாய் கொண்டு நன்னீர் அற மென்று கோது கொண்ட
வேனிலம் செல்வன் சுவைத் துமிழ் பாலை கடந்த பொன்னே
கானிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெக்காவுதம்
பூம்தேன் அலம் சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே —-26-

பாசுரம் -26-நானிலம் வாய்க் கொண்டு நல் நீர் -நகர் காட்டல் –
மாலை நண்ணி -9-10-

பதவுரை

நால்நிலம்–(முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்னும்) நால்வகை நிலங்களையும்
வாய்கொண்டு–(தன் கிரண முகத்தாலே) வாயிற் பெய்து கொண்டு
நன்னீர் அறமென்று–ஸாரமான நீர்ப்பசை அறும்படிமென்று
கோது கொண்ட–அஸாரமான பாகம் இது வென்று அறிந்த
வேனில் அம் செல்வன்–வெப்பத்தைத் தனக்குச் செல்வமாகவுடைய ஸூர்யன்
சுவைத்து உமிழ்–உருகி பார்த்து வெறுத்துக் கழித்த
பாலை–பாலை நிலத்தை
கடந்த-தாண்டி வந்த
பொன்னே–பொன் போன்றவளே!.
விண்ணோர்–மேலுலகத்தோர் யாவரும்
கால்நிலம் தோய்ந்து தொழும்–(நிலந்தோய்தவில்லாத தமது) கால்கள் நிலத்தில் படியும்படி
இங்கு வந்து நிலைத்து நின்று வணங்கும்படியான
கண்ணன் வெஃகா–கண்ணபிரானது திவ்யதேசமான திருவெஃகாவானது
உது–அடுத்துள்ளது.
அம் பூ தேன்–அழகிய பூவையும் தேனையுமுடைய
இள–இளமை மாறாத
சோலை–சோலையானது
அப்பாலது–அவ்விடத்துள்ளது.;
எப்பாலைக்கும் சேமத்தது–(எது நமது) எல்லாத் துன்பங்களுக்கும் (மாறாய்) துன்பந்தருவதோரிடமாம்.

வியாக்யானம்
நானிலம் வாய் கொண்டு நன்னீர் அறம் என்று கோது கொண்ட
முல்லை முதலான நாலு நிலத்தையும் தன் கிரண முகத்தாலே க்ரஸித்து
சார அம்சமான நீர்ப்பசை அற ஆராய்ந்து புஜித்துக் கோதான அம்சம் இது என்று அறிந்து

வேனிலம் செல்வன்
கோடைக்காலத்தில் ப்ரபவ ஐஸ்வர்யத்தை யுடைய ஆதித்யன்

சுவைத் துமிழ் பாலை
பசை யறுதி கண்ட வழற்றியாலே உமிழ்ந்த பாலை நிலத்தை

கடந்த பொன்னே
நெருப்பிலே நடப்பாரைப் போலே
இந்நிலத்திலே நடக்கச் செய்தே ஓட வைத்த பொன்னே போலே
ஒளி விடுகிறவனே

கானிலம் தோய்ந்து விண்ணோர் தொழும்
இப்படிக் கால் பொருந்தாது இருக்கை அன்றிக்கே
பரம வ்யோம வாசிகளும் இங்கே வந்து
கால் பொருந்தி அனுபவிக்கும் படியான

கண்ணன் வெக்காவுதம்
ஆஸ்ரித ஸுலப்யத்தாலே
சொன்ன வண்ணம் செய்வார் -என்ற திருநாமமான
கிருஷ்ணனுடைய திரு வெக்காவானது
அடுத்து அணித்தாயிற்று

பூம்தேன் அலம் சோலை அப்பாலது
அழகிய பூவையும் தேனையும் யுடைத்தாய் நித்ய வஸந்தமாய் இளகித் தோற்றுகிற
சோலை அவ்விடத்தது –

எப் பாலைக்கும் சேமத்ததே —
இது நமக்கு எல்லா அவஸ்தை களுக்கும் ஷேம கரமாய் இருப்பதோர் இடம்

இத்தால்
நானிலம் என்று தொடங்கி
சேதனருடைய ஸ்வரூப ரூப குண விபவங்கள் ஆகிற நாலு வகைப்பட்ட போக ஸ்தலத்தையும்
தன் ஸங்கல்ப முகத்தாலே அந்தர் பவிப்பித்து சார அம்சத்தை மிகவும் புஜித்து
நிஸ் சாரமான அம்சம் இது என்று திரு உள்ளம் பற்றி

கர்ம தாரதம்ய அனுரூப பல பிரதானத்தால் உண்டான ஸ்வா தந்தர்யத்தாலே
பிரதாபோஷ் மளனான ஸ்ரீ யபதியானவன்

(செல்வன் ஸூர்ய மண்டல மத்ய வர்த்தி செல்வ நாரணன்
கிரணம் -சங்கல்பம்
ஆத்மாவின் ஸ்வரூபம் சேஷத்வம்
ரூபம் வணக்கம்
குணம் -அடியேன்
வைபவம் -கைங்கர்யம்
சார அம்சம் புஜித்து )

பகவத் ஞானப் ப்ரஸங்கம் இல்லாப் பசை அறுதி கண்டு
அஹங்காராதி ரூபமான அழல் விஞ்சி இருக்கையாலே
ஷிபாமி -ஸ்ரீ கீதை -16-19- என்று கை விட்ட
ஸம்ஸார ஸ்தலத்தைக் கடந்து

அத்யுஜ்வலமான ஸ்வரூப வைலக்ஷண்யத்தை யுடையரான உமக்கு
நித்ய ஸூரிகள் பொருந்தி வர்த்திக்கும் படி
நிரதிசய ஸுலப்ய விஸிஷ்டனான
ஸர்வேஸ்வரனுடைய அர்ச்சாவதார ஸ்தலம்
அதூர வர்த்தியாய்
அதிசயித போக்ய போக உபகரணாதி ஸம்ருத்தமாய் இரா நின்றது

இது வன்றோ நமக்கு உபாய தசையோடு உபேய தசையோடு வாசியற
ஷேம கரமான புகலிடம் என்கிற
அபிமத பாகவத வசனத்தை வெளியிட்டு அருளினார் யாயிற்று –

————-

அவதாரிகை
இப்படி தமக்குப் பிறந்த ஆஸ்வாசத்தாலே முன்பு பாதகமான லௌகிக பதார்த்தங்களும்
அனுகூலித்த படியை
நாயகனான ஈஸ்வரனுடைய திருத்துழாய் மாலையைத் தரிக்கையாலே
முன்பு நலிந்து போந்த வாடை தணிந்த படியை நாயகி உட் கொண்டு
உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

சேமம் செம்கோன் அருளே செருவாரும் நட்பாகுவர் என்று
ஏமம்பெற வையம் சொல்லும் ,மெய்யே பண்டு எல்லாம் மறை கூய்
யாமங்களோடு எரி வீசும் நம் கண்ணன் அம் தண் அம் துழாய்
தாமம் புனைய ,அவ் வாடை ஈதோ வந்து தண் என்றதே –27-

பாசுரம் -27-சேமம் செங்கோன் அருளே –
தலைவி மாலை பெற்று மகிழ்தல் –
எல்லியும் காலையும்–8-6-

பதவுரை

செம் கோன் அருளே–(எல்லாப் பொருள்களுக்கும்) நேரில் தலைவனான எம்பெருமானது திருவருளே
சேமம்–நம்மைப் பாதுகாப்பது (என்று கொள்ள)
பண்டு எல்லாம் அறை கூய் யாமங்கள் தோறு எரி வீசும்–முன்பெல்லாம் (பிரிந்திருந்த காலத்துப்) பகைத்து எதிர்
வந்து சண்டைக்கு அழைத்து இரவுகள் தோறும் அந்நி ஜ்வாலையை (எம்மேல்) வீசுந்தன்மையுள்ள
செறுவாரும் நட்பு ஆகுவர் என்று–பிரதிகூலரும் அநுகூலராவர் என்று
ஏமம் பெற–உறுதி பொருந்த
வையம் சொல்லும்–உலகத்தோர் கூறுகிற
மெய்யே–உண்மை மொழியின் படியே,
அ வாடை–அந்தக்காற்றானது
நம் கண்ணன் அம்தண்ணம் துழாய் தாமம் புனைய–நமது தலைவனான எம்பெருமானது அழகிய
குளிர்ந்த திருத்துழாய் மாலையை (யாம்பெற்று)த் தரித்ததனால்
ஈதோ வந்து தண்ணென்றது–இதோ வந்து (இப்பொழுது) குளிர்ச்சியாயிருக்கின்றது.

வியாக்யானம்

சேமம் செம்கோன் அருளே
நிருபாதிக ஸ்வாமியுடைய அருளே ரக்ஷகமானது

செருவாரும் நட்பாகுவர் என்று
அப்போது பாதகராவாரும் அனுகூல பந்துக்கள் ஆவார் என்று

ஏமம் பெற
தஞ்சமாக விஸ்வசிக்கலாம் படி

வையம் சொல்லும் ,மெய்யே
நாடு மெய்யாகச் சொல்லா நிற்கும்

எங்கனே என்னில்
பண்டு எல்லாம் மறை கூய்
முன்பு எல்லாம் எதிரேறி விரோதித்து

யாமங்களோடு எரி வீசும்
ஜாமங்கள் தோறும் நெருப்பைச் சொரியா நிற்கும்

நம் கண்ணன் அம் தண் அம் துழாய் தாமம் புனைய ,
நமக்கு ஸூ லபனாய்ப் புகுந்து கலந்த கிருஷ்ணனுடைய
அழகிய குளிர்ந்த திருத்துழாய் மாலையைச் சூட

அவ் வாடை ஈதோ வந்து தண் என்றதே –
அவ்வாடை நாம் அறியும்படி வந்து இப்பொழுது சீதளமாய் இரா நின்றது என்று
தலைவி ஆற்றாமை தீரத் தலை மகன்
இரவிடத்துக் கலந்தமை தோற்றுவித்ததாயிற்று –

இத்தால்
சேமம் என்று தொடங்கி
நிருபாதிக சேஷியான ஈசுவரனுடைய கிருபையே ரக்ஷகமானால்
தத் விபூதி பூதரும் அனுகூலிப்பார்கள் என்று ஷேம உத்தரமாம் படி லோகம் ஸத்யம் சொல்லா நிற்கும்
எங்கே கண்டோம் என்னில்

முன்பு ஸ்மா ரகமாய்க் கொண்டு காலம் தோறும் தாப ஹேது வானது
ஸர்வ ஸூலபனான சர்வேஸ்வரனுடைய விஷயீ காரம் யுண்டான அளவிலே
அந்தப் பதார்த்தம் தானே அனுகூலித்து ஆஸ்வாஸகரமாயிற்று என்று
அபரோஷித்து அனுசந்தித்து அருளினார் ஆயிற்று –

————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
பகவத் அலாபத்தாலும் சம்சாரத்தில் யுண்டான தாபத் த்ரயத்திலுமாக இவர் நொந்து இருக்கச் செய்தே
நெடுநாள் பாதகமாய்ப் போந்த வாடையானது இப்போது ஒரு ஸம்ஸ்லேஷ விசேஷத்தாலே
வந்து அனுகூலமான படியைச் சொல்லுகிறது

வியாக்யானம்

ஸ்ரீ கீதை -8-12- உண்டானவாறே பூர்வ அனுபவ ஸ்ம்ருதி இன்றிக்கே ஒழிவது –
அங்கன் அன்றிக்கே
ஸம்ஸாரத்திலே இருந்து ஞான லாபம் பிறந்தது இரண்டு ஆகாரமும் தோற்றும் இறே
இது போக்யமாய்த்தோ இல்லையாகில் ஆகையாலே ஞானம் பிறந்தது இல்லையாம்
இது பிரதிகூலமாய்த் தோற்றிற்று இல்லையே யாகில் அப்ராப்தியே யாம் –
இரண்டுக்கும் நடுவில் அவஸ்தை இறே இது –

————

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி
அவதாரிகை
அபிமத அன்வயத்தால் ஆஸ்வஸ்தையான தலைவி முன் பிரதிகூலித்தது எல்லாம்
இப்போது அனுகூலமாயிற்று என்று தலைவனோடு சொல்லுமதாய் அருளிச் செய்கிறார்
முக்தனுக்கு இந்தப் ப்ரக்ருதியும் அனுகூலமேயாம் என்பதை ஸூசபிக்கைக்காக –

சேமம் செம்கோன் அருளே
நிருபாதிக ஸ்வாமியுடைய அருளே ஸூக கரமானது –

செருவாரும் நட்பாகுவர் என்று
முன்பு பாதிப்பாரும் அனுகூல பந்துக்கள் ஆவார் என்று

ஏமம்பெற
பழகினும்

வையம் சொல்லும் ,மெய்யே
லௌகிகமான பழம் சொல்லும் மெய்யே
எங்கனே என்னில்

பண்டு எல்லாம் மறை கூய்
முற் காலம் எல்லாம் எதிரேறி விரோதித்து

யாமங்களோடு எரி வீசும்
யாமங்கள் தோறும் நெருப்பைச் சொரியா நிற்கும்

நம் கண்ணன் அம் தண் அம் துழாய் தாமம் புனைய ,
நமக்கு ஸூ லபனாய்ப் புகுந்து கலந்த கிருஷ்ணனுடைய
அழகிய குளிர்ந்த திருத்துழாய் மாலையைச் சூட

அவ் வாடை ஈதோ வந்து
அவ்வாடையே இப்போதாக வந்ததாய்

தண் என்றதே
ஸூக ஸீதமாய் இரா நின்றதே –

—————-

அவதாரிகை
இப்படி பாவநா ஸித்தமான
பகவத் அங்கீ காரமும்
பதார்த்தாந்தர அநு கூல்யமும்
அநந்தரத்திலே ஆர்த்திக்கு உறுப்பாகையாலே

பாதக ஸந்நிதியில் ஈடுபட்டு
ரக்ஷக அபேக்ஷை பிறந்து ப்ரலாப வசனத்தை
வாடையாலே நோவு பட்டு நாயகனான எம்பெருமானை நோக்கி
நாயகி தன்னில் இரங்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

தண் அம் துழாய் வளை கொள்வது நாம் இழப்போம் நடுவே
வண்ணம் துழாவி ஓர் வாடை உலாவும் வள்வாய் அலகால்
புள் நந்து உழாமே பொரு நீர் திரு அரங்கா அருளாய்
எண்ணம் துழாவும் இடத்து உளவோ பண்டும் இன்னன்னவே –28-

பாசுரம் -28-தண் அம் துழாய் வளை கொள்வது –
தலைவனைப் பிரிந்த தலைவி வாடைக்கு வருந்துதல் –
கங்குலும் பகலும் -7-2-

பதவுரை

வள்வாய் அலகால்–கூர்மையான வாயின் நுனியினால்
புள்–பறவைகள்
நந்து உழாமே– (தன்னிடத்துள்ள) சங்கைக் கோர்த்தாதபடி-ஹிம்ஸியாதபடி
பொரு–அலை மோதுகிற
வளை கொள்வது–(எமது) கை வளைகளைக் கொள்ளை கொள்ளா நின்றது
யாம்–(உன் பக்கல் ஈடுபட்ட) நாம்
இழப்போம்–வளையை இழக்கிறோம்; (இப்படி யிருக்க)
ஓர் வாடை–(எமக்கும் தனக்கும் யாதொரு ஸம்பந்தமு மில்லாத காற்றானது.
நடுவே–இடையே பிரவேசித்து
நீர்–காவிரி நீர் சூழ்ந்த
திரு அரங்கா–ஸ்ரீரங்கமென்னுந் திருப்பதியை யுடையவனே!
தண் அம் துழாய்–குளிர்ந்த அழகிய (உனது திருத்துழாயானது
வண்ணம் துழாவி உலாவும்–(எமது) மாமை நிறத்தைக் கவர்ந்த பொருட்டுத் தடவித் தேடிக் கொண்டு ஸஞ்சரிக்கத் தொடங்குகின்றது.
அருளாய்–(அதற்கு யாம் மாமை யிழக்காதபடி) வந்து சேர்ந்தருள வேணும்.
எண்ணம் துழாவும் இடத்து (மனம் தடுமாறு மளவிலும்)
பண்டும் இன்னன்ன உளவோ-முன்பும் இப்படிப்பட்ட (எம் நிலைமைகள் போன்ற) நிலைமைகள் (வேறு எங்கேனும்) உள்ளனவோ?

வியாக்யானம்

தண் அம் துழாய் வளை கொள்வது
அத்தலையில் ஆஸக்தியால் உண்டான ராஜ குலத்தாலே
குளிர்த்தியும்
அழகும் யுடைத்தான
திருத் துழாய் வளைவைக் கொள்ளப் பிராப்தம் –

நாம் இழப்போம்
உம்மை ஒழியச் செல்லாத நாங்கள் இழக்கவும் பிராப்தம்

நடுவே வண்ணம் துழாவி ஓர் வாடை உலாவும் –
இதில் ஒரு துவக்கற்று
பீஷாஸ் மாத் வாத பவதே -தைத்ரியம்
உமக்கு அஞ்சி நாட்டிலே திரிகிற ஒரு வாடையானது
நிறத்தைத் தடவி எடுப்பதாக உலாவா நின்றது

வள்வாய் அலகால் புள் நந்து உழாமே பொரு நீர் திரு அரங்கா
வளைந்த வாய் அலகாலே வந்தேறியான புள்ளானது தன்னுள்ளே வர்த்திக்கிற
சங்கைத் தகராத படி பொருகிற நீரை யுடைத்தான
கோயிலுக்கு நிர்வாஹகன் ஆனவனே

அருளாய்
நீ அருளக் காண்கிறிலேன்

எண்ணம் துழாவும் இடத்து
நஞ்சம் தடுமாறுகிற அளவிலும்

உளவோ பண்டும் இன்னன்னவே –
இப்படிக்கு ஒத்தன பண்டும் செய்தன யுளவோ என்று
இரங்கி உரைத்தார் யாயிற்று

இத்தால்
தண் அம் துழாய் வளை கொள்வது நாம் இழப்போம் நடுவே வண்ணம் துழாவி ஓர் வாடை உலாவும் –
சீதள ஸ்வ பாவராய்
தர்ச நீயரான
பகவத் ப்ரத்யா ஸன்னர் எங்கள் கையில் மினுக்கும் கொள்ளவுமாம்
தங்கள் இழக்கவுமாம்
ஆசன்னன் அன்றியே ஆஜ்ஜா அநு வர்த்தகம் பண்ணித் திரிகிற
லௌகிக பதார்த்தம் ரூப விபர்யாஸ கரமாகா நிற்கும்

வள் வாய் அலகால் புள் நந்து உழாமே பொரு நீர் திரு அரங்கா
கர்ம முகத்தாலே வஞ்சகையான ப்ரக்ருதியானது
ஸூப்ர ஸ்வ பாவனான ஆத்மாவை நோவுபடுத்தாமல்
(உன்) உள் -நீர்மையாலே நோக்குமவனே
என்கையை ஸூ சிப்பிக்கிறது

அருளாய்-என்று
ஏவம் வித ஸ்வ பாவமான தேசத்திலே வர்த்திக்கிற
நீ இரங்கக் காண்கிறிலோம் –

எண்ணம் துழாவும் இடத்து உளவோ பண்டும் இன்னன்னவே –
ஆர்த்தியாலே நெஞ்சு தடுமாறுகிற அவஸ்தையிலும்
இரங்காது இருந்த விஷயங்கள்
முற் காலத்திலும் யுளவோ
இல்லை என்றபடி

ஸ்ரீ ஜனகராஜன் திருமகள்
திரௌபதி
ஸ்ரீ கஜேந்திரன்
தொடக்கமானர் அளவிலே கண்டிலோமே
இது எனக்கே கூறு பட்டது அத்தனை இறே என்று வெறுக்கிறார்

———-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
மானஸ அனுபவ மாத்ரத்திலே வந்த களிப்பு இறே கீழ் –
அந்வயத்தில் போன்றது இறே வ்யதிரேகத்தில் இழவாவது
தண்ணம் துழாய்த் தாமம் புனைய -என்று அந்வயத்திலே போக்யமானது
இப்போது வியதிரேகத்திலே பாதகம் ஆக்கிரப்படியைச் சொல்கிறது –
லாபத்தில் தன்னுடைய ப்ராப்யதை எவ்வளவு யுண்டு அவ்வளவு பாதகத்வம் யுண்டு இறே
அலாபத்தில் ஸம்ஸாரிகளுக்கு பாஹ்ய விஷயத்தில் பேறு இழவுகள் இரண்டும் ஒத்து இருக்கையாலே
அவை பெறவும் இழக்கவுமாய் இருக்கும்
அவ்வளவு அல்ல இறே இது
ஸ்வா பாவிகமான ஸ்வ பாவமும் சங்குசிதமாய்
ஆத்ம ஸ்வரூபமும் திரோஹிதமாய் இருக்கிற இருப்பு இவருக்கு இழவாகச் சொல்லுகிறது
ஸம்ஸார தசையிலும் அநு வார்த்தைக்கும் இறே அயோக்யதை
ஆக
ஞான லாபத்தைப் பேறு என்கிறது
ப்ராப்தியை இழவு என்கிறது –

வியாக்யானம்
தண்அம் துழாய் வளை கொள்வது நாம் இழப்போம்
இதுக்கும் இவருக்கு இங்கனே இருபத்தொரு சம்பந்தம் உண்டு
ஸம்ஸாரிகளுக்குப் பேறு இழவு புறம்பாய்

இதுவான பின்பு
பரம சேதனனுமாய்
ரக்ஷகனுமாய்
அண்ணியனுமாய்
இருக்கிற உனக்கு என் செய்ய வேணும்
ஏதத் விரதம் மம -யுத்த -18-33-என்று
இருக்குமது இல்லை இறே நீருக்கு

திரு அரங்கா அருளாய் எண்ணம் துழாவும் இடத்து உளவோ பண்டும் இன்னன்னவே –
முதன்மைக்கு ஓலக்கம் கொடுத்து இருக்கும் இடமோ
இவ்விடம் இவ்வருகு வர நின்ற அம்சத்துக்கு பிரயோஜனம் அருளுகை அன்றோ
எங்களுக்கு எங்கள் அநு பாவ்யங்கள் அனுபவிக்க வேணுமாகில் நீ உன் அருளுக்கு விஷயம் தேடி எங்கு ஏறப் போவாய்
மயர்வற மதிநலம் அருளின பின்பு
தொழுது எழு -திருவாய் -1-1-1-என்னும்படி
த்வரை விளைவதுக்கும் ஒரு கால் அருள வேண்டிற்று இறே
அப்படியேயோ
அருளாலே இறே இவ்வாடை தான் பிரதிகூலமாயிற்று —

———-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமிகள்
அவதாரிகை
இப்படி பாவநா ஸித்த பகவல் லாபமும்
பதார்த்தாந்தர அநு கூல்யமும்
அநந்தரத்திலே
ஆர்த்திக்கு உறுப்பாய்
அரங்கா அருளாய் -முன்போல் இன்னம் பாதிப்பது உண்டோ -என்று கூப்பிடுகிறார் –
இப்பாசுரத்தில்

வியாக்யானம்
தண் அம் துழாய் வளை கொள்வது
அத் தலையில் நலிகையாலே உன் அழகிய குளிர்ந்த திருத்துழாய் தாரானது
என் வளையைக் கொள்வது பிராப்தம்
நாம் இழப்போம்
உம்மை ஒழியச் செல்லாத நாங்கள் இழக்கவும் பிராப்தம்

நடுவே வண்ணம் துழாவி ஓர் வாடை உலாவும் –
உன் பீத்யா ஸஞ்சரிக்கும் காற்றானது நிறத்தைத் தடாவிடக் கொண்டு
எடுப்பதாகா உலவா நின்றது –

வாள்வாய அலகால் புள் நந்து உழாமே பொரு நீர் திரு அரங்கா
வளைந்த சஞ்சூ புடத்தை யுள்ள வந்தேறியான புள்ளானது தன்னுள்ளே வர்த்திக்கிற
சங்கைக் குத்தாத படி திரையால் பொருகிற நீரை யுடைத்தான
ஸ்தலத்துக்கு நிர்வாஹகனானவனே

அருளாய்
அருளக் காண்கிறிலேன்

எண்ணம் துழாவும் இடத்து
நெஞ்சு தடுமாறுகிற அளவிலும்

உளவோ பண்டும் இன்னன்னவே –
இப்படிக்கு ஒத்தன பண்டு செய்தன இன்னம் உளவே –

————

அவதாரிகை
இப்படி ஆர்த்தரான இவர் தன்னுடைய ஆர்த்தியை கடக முகத்தாலே அறிவிக்க என்று நினைத்து
தான் அபேக்ஷித்த (உபேக்ஷித்த) இடத்திலும் கடகராய் இருப்பார் ஒருவரைப் பெறாமையாலே
ஸ்வ கார்ய பரராய் ப்ரவர்த்திக்கச் செய்தேயும்
நம் கார்யம் செய்யலாகாது இருக்கிற படியோ என்று சங்கித்து
வெறுக்கிற பிரகாரத்தை
நாயகனான ஈஸ்வரன் விஷயத்திலே தூதாக அபேக்ஷிக்கச் செய்தேயும்
அது செய்யாதன சில அன்னங்களைக் குறித்து வெறுத்துச் சொல்லுகிற
நாயகி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

இன்னன்ன தூதெம்மை ஆள் அற்ற பட்டு இரந்தாள் இவள் என்று
அன்னன்ன சொல்லாப் பெடையொடும் போய் வரும் நீலம் உண்ட
மின்னன்ன மேனி பெருமான் உலகில் பெண் தூது செல்லா
அன்னன்ன நீர்மை கொலோ? குடிச் சீர்மையில் அன்னங்களே –29-

பாசுரம் -29-இன்னன்ன தூது எம்மை ஆள் அற்றப்பட்டு –
தலைமகள் அன்னப் பறைவையை வெறுத்து உரைத்தல் –
பொன்னுலகு ஆளீரோ -6-8-

பதவுரை

குடிசீர்மை இல்–உயர் குடிப் பிறப்பால் வரும் சிறப்பு இல்லாத
அன்னங்கள்–இவ்வன்னப் பறவைகள்
(எனன் செய்கின்றனவென்றால்)
இவள்–‘இப்பராங்குச நாயகியானவள்
ஆள் அற்றம் பட்டு–(வேறு தனக்கு) ஆளில்லாமையால்
இன்னன்ன தூது–இப்படிப்பட்ட தூதராக
எம்மை–நம்மை
இரந்தாள் என்று–குறைகூறி வணக்கத்தோடு வேண்டிக் கொண்டாள்’ என்றெண்ணி
அன்னன்ன சொல்லா–அப்படிப்பட்ட தூதுமொழிகளை (த் தலைவனிடஞ் சென்று) சொல்லாமல்
பேடையொடும் போய் வரும்–(தமக்கு இனிய) பெண் பறவைகளுடனே (மந்த கதியாக மகிழ்ச்சியோடு) உலாவித் திரிகின்றன;
(இதற்குக் காரணம்)
நீலம் உண்ட–நீலநிறத்தையுட்கொண்ட
மின் அன்ன–மின்னல்போன்ற
மேனி–திருமேனியை யுடைய
பெருமான்–எம்பெருமானுடையதான
உலகில்–உலகத்தில்
பெண் தூது செல்லா–பெண்களுக்காகத் தூது செல்வதில்லாத
அன்னன்ன நீர்மை கொலோ–அப்படிப்பட்ட தன்மையையுடைமையோ?

வியாக்யானம்
இன்னன்ன தூது
இப்படிப்பட்ட தூது
நம்மைப் போக விடுகிறது ஸர்வ உத்க்ருஷ்டமான
பகவத் விஷயத்துக்குத் தூதாக வன்றோ

எம்மை
கார்ய உபயுக்தமான கரண பாடவத்தை யுடைய
நம்மை அன்றோ
(வீசும் சிறகால் பரப்பீர் )

ஆள் அற்ற பட்டு
வேறு தனக்கு ஆள் இல்லாமை யன்றோ
அபேக்ஷிக்கிறது

இரந்தாள்
அமோகமான அப்யர்த்தனத்தை அன்றோ பண்ணிற்று

இவள்
தன் வை லஷண்யம் எல்லாம் கிடக்க அன்றோ
அபேக்ஷித்தது

என்று
1-விஷயம் உத்க்ருஷ்டம் ஆகையாலும்
2-நமக்கு யோக்யதை யுண்டாகையாலும்
3-தன் ஆள் அறுதியாலும்
4-தன் பெண்மை பாராதே
நம்மை இரந்தாள் என்று நினைத்து

அன்னன்ன சொல்லாப்
அப்படிப்பட்ட கார்யத்தைப் பற்ற ஒரு வார்த்தை சொல்லாது

பெடையொடும் போய் வரும்
ஸ்வ அபிமத விஷயத்தோடே கூட கத்யாகதி பண்ணித் திரியா நின்ற

நீலம் உண்ட மின்னன்ன மேனி பெருமான் உலகில்
நீல தோயதத்தை விழுங்கின வித்யுத்லேகை போலே
ஸ்யா மளத்வ
ஹிரண்மயத்வங்கள்
கலசின வடிவை யுடைய ஸர்வேஸ்வரனுடைய லோகத்தில்

பெண் தூது செல்லா அன்னன்ன நீர்மை கொலோ?
பெண் பிறந்தாருக்குத் தூது செல்லக் கடவோம் அல்லோம் என்கிற
ஸ்வ பாவத்தை யுடையனவாய் இருக்கின்றனவோ
முன்பு பெண் தூது போனார் இல்லை இறே என்று
ராகவ பாண்டவ தூத வ்ருத்தாந்தத்தைத் தனக்கு ஸ்வ பாவமாக நினைத்து இருக்கின்றனவோ

குடிச் சீர்மையில் அன்னங்களே –
குடிப் பிறப்பால் வந்த சீர்மை

அன்னங்களானவை பெண் பிறந்தாருக்கு ஒப்புச் சொல்லலாம் படி
குடியில் சீர்மை கண்டிலோம் என்றபடி

இத்தால்
இன்னன்ன தூது -என்று தொடங்கி
1-ப்ராப்ய விஷயம் நிரதிசய உத்க்ருஷ்டமாகையாலும்
2-தனக்கு ஞான பிரேமாதிகள் ஆகிற கடகத்வ உத்பத்தி உண்டு என்று இருக்கையாலும்
3-தன்னுடைய அநந்ய கதித்வத்தாலும் இறே
4-தத் ஏக ரஷ்யத்வ பாரதந்தர்யத்தையும் பாராதே
நம் பக்கலிலேயும் பிரார்த்தனா ரூபமான ப்ரவ்ருத்தியைப் பண்ணிற்று என்று
தங்கள் அபிசந்தி தோன்ற ஒரு வார்த்தை சொல்லாதே

ஸ்வ அநு வர்த்திகளான அபிமத விஷயத்தோடே அனுபவ பரராய்க் கொண்டு
யாதாயாதம் பண்ணா நின்றார்கள்

உபாஸ்யத்வ
போக்யத்வ
ப்ரகாஸகத்வமாம் படி
வேதாந்த வேத்யமான பர விக்ரஹத்தை யுடைய ஸர்வேஸ்வர விபூதியில்
பரதந்த்ரராய் இருப்பாரைச் சேர விடலாகாது என்கிற இது ஸ்வ பாவமாய் இருக்கிறதோ –
இவர்கள் ஆபி ஜாத் யத்தால் வந்த சீர்மையும் கண்டிலோம்

(நீலம் உண்ட மின்னன்ன மேனி
உபாஸ்யத்வம்
போக்யத்வம்
ப்ரகாஸகத்வம்
மூன்றுமே உண்டே )

ஸ்வ பாவ ஸுத்தியும்
ஸ்ரைஷ்ட்யமும்
அகிஞ்சித் கரமாய் இருந்ததீ என்று சடக்கென பிரவர்த்தியாமையாலே
அதி சங்கை பண்ணி வெறுத்து அருளினார் ஆயிற்று –

———–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
அருளாய் என்ற அநந்தரம்
அருளக் கண்டது இல்லை
அருளாய் என்று வடிம்பு இட வேண்டாத படி எல்லாருக்கும் ஓக்க
ஓலக்கம் கொடுத்து இருக்கிற இடத்திலே

(நம்பிள்ளை ஈட்டில்
அசோகா மரம் -உனது பேரைப் போல் என்ன ஆக்கு
ஒரு மரத்துடன் சாம்யா பத்தி அபேக்ஷிக்கிறார் பெருமாள்
சோக உபஹத சேத்னன் நான்
நீயோ சோகம் இல்லா மரம் )

வியாக்யானம்
பெறாமையாலே பரவஸையாய் இருந்த அளவானாள் என்று

அன்னன்ன சொல்லாப்
அந்த அன்னமானது சொல்லுமது அல்ல

பெடையொடும் போய் வரும்
தங்கள் பிரிவால் வரும் வியஸனம் இல்லாமையாலும்
போய்வருமது யுண்டாயும்
என் தசையை இவை சொல்லா
என்று அந்வயம்

சொல்லாது என்பதில் ஹேதுவை உத் ப்ரேஷிக்கிறாள்
நீலம் –இத்யாதியாலே

நீலம் உண்ட மின்னன்ன மேனி பெருமான்
நீல மேகம் உள் கொண்ட மின்னல் போன்றவளாய்
குளிர்ந்த திரு மேனி யுள்ள பெருமை யுடையவரில்

உலகில் பெண் தூது செல்லா
பெண் பிரிவால் வியஸனம் உள்ளவரில் பெண் தூது
அது இல்லாதவரில் லோகத்தில் பெண் தூது கார்யகரம் அல்ல

அன்னன்ன நீர்மை கொலோ?
என்பதான பரமம் உள்ளவையே ஸ்வ பாவத்தால் இவை

குடிச் சீர்மையில் அன்னங்களே –
குடிச் சீர்மையாவது
அப்போதைக்கு அப்போது விஸ்லேஷ வியஸனம் வர அது அறிகை
அது இல்லாத இவ்வன்னங்கள் என் தசையை அறிந்து சொல்லுமோ
அப்படி பிரம ஸ்வ பாவம் யுள்ளது சொல்லுமே என்பது அவ்வன்னத்தில் இன்னாப்பு
என்னோடு கலந்தவனே பிரிவால் வியஸனப்படாமலே
என் தூதரைக் கண்டும் இருக்கிறான் என்பதான இன்னாப்பு அவனில் –

————–

அவதாரிகை
இப்படி கடக அபேக்ஷை பண்ணினவர்களுடைய கார்ய அபி முக்யத்தைத் கண்டு
சொல்லி விடுகிற வார்த்தையை -அன்னம் தொடக்கமான வற்றை
நாயகன் பின் சென்று தன்னை அகன்ற நெஞ்சை நோக்கித் தூது விடுகிற நாயகி
வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –

அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் தொழுது இரந்தேன்
முன்னம் செல்வீர்கள் மறவேல்மினோ,கண்ணன் வைகுந்தனோடு
என் நெஞ்சினாரைக் கண்டால் என்னை சொல்லி அவர் இடை நீர்
இன்னும் செல்லீரோ இதுவோ தகவு என்று இசைமின்களே –30-

பாசுரம் -30-அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் –
பிரிந்த தலைவி அன்னங்களையும் குருகுகளையும் தூது விடுதல் –
அஞ்சிறைய மட நாராய் -1-4-

பதவுரை

அன்னம் செல்வீரும்–(வானத்திற் பறந்து) செல்லுகிற அன்னப் பறவைகளாகிய உங்களையும்
வண்டானம் செல்வீரும்–(அப்படியே) செல்பவர்களாகிற வண்டானக் குருகுகளாகிய உங்களையும்
தொழுது இரந்தேன்–யான் வணங்கிப் பிரார்த்திக்கின்றேன்
(என்னவென்று எனில்;)
முன்னம் செல்வீர்கள் மறவேன்மினோ–உங்களுள் முன்னே செல்பவர்கள் (என் வேண்டுகோளை) மறவா தொழிவீராக
கண்ணன் வைகுந்தனோடு–கிருஷ்ணவதாரஞ் செய்தருளினவனும் பரமபதத்துக்குத் தலைவனுமாகிய பெருமானுடைய
என் நெஞ்சினாரை கண்டால்–(முன்பு போயிருக்கிற) எனது மனத்தை (அங்கு நீங்கள்) பார்த்தால்
என்னைச் சொல்லி–(அதற்கு நீங்கள்) என்னைக் குறிப்பிட்டுச் சொல்லி
அவரிடை நீர் இன்னம் சொல்லீரோ–அவரிடத்து நீர் இன்னமும் போய்ச்சேராதிருக்கிறீரோ?
இது தகவோ–இது தகுதியோ?
என்று இசைமின்கள்–என்று சொல்லுங்கள்-

வியாக்யானம் –

அன்னம் செல்வீரும்
பிரதானமாய்ப் போகிற அன்னங்களும்

வண்டானம் செல்வீரும்
அவை போன வழியிலே கூடப் போகிற வண்டான குருகுகளும்

அன்னம்
வண்டானம்
என்கிற ஒருமை
சொல்லீர் என்கிற பன்மையாலே
ஜாதி பரம் –

தொழுது இரந்தேன்
பத்தாஞ்சலி புடம் -யுத்த -18-27-என்கிறபடி
ஷிப்ர ப்ரஸாதமான அஞ்சலி பந்தத்தையும் பண்ண
யாசந்தம் -யுத்த -18-27- என்கிறபடியே
வாசகமான பிரார்த்தனையும் பண்ணினேன்

யத்தி மனஸா த்யாய -என்கிற நியாயத்தாலே
வாசிக காயிகங்களுக்கு மானஸம் அர்த்தாத் ஸித்தமாய்க் கொண்டு
பூர்வ பாவியாம் இறே

ஆக
கரண த்ரய யுக்தமான பூர்ண பிரபதனத்தைப் பண்ணினேன் என்றபடி

முன்னம் செல்வீர்கள் மறவேல்மினோ,
உங்களில் குண பிரதான பாவம் இல்லை
முற்பட்டாரில் கார்யம் மறவாது ஒழிவதே வேண்டுவது

ஏது என்ன
கண்ணன் வைகுந்தனோடு என் நெஞ்சினாரை கண்டால்
தன் நீர்மையைக் காட்டி என் நெஞ்சை அபஹரித்த
சேணுயர் வானத்து இருக்கிற -திருவாய் -5-3-9-
ஸ்ரீ வைகுண்ட நாதனோடே எனக்குக் கரணமாகையாலே பரதந்த்ரமாய்ப் போன நெஞ்சைக் கண்டால்

நெஞ்சினாரை
அத் தலையில் ஆஸக்தியால் யுண்டான ராஜ குலத்தாலே உபசரித்துச் சொல்கிறாள்

ஸதா தர்சன விஷயமானவரைக் காணலாம்
ஆஸ்ரித பலத்தால் யுண்டான செருக்காலே அந்தரங்க பரிகாரமாக நெஞ்சைக் காண்கையும்
அரிது என்றபடி

என்னைச் சொல்லி
என்னோடு யுண்டான
சம்பந்தத்தையும்
பூர்த்தியையும்
தனிமையும் தோன்றச் சொல்லி

அவர் இடை நீர் இன்னும் செல்லீரோ
நீர் போருகிற போதை யாபத்திலே விஞ்சி இருக்கிறவர் பக்கலிலே
அவருக்குக் கரண பூதரான எங்களையும் அகப்பட வரவிடும்படி
இன்னமும் போகாது ஒழிவதே

அவர் என்று
உத்க்ருஷ்ட நாயக சம்பந்தம் அடியாக கடகர் தங்கள் சொல்லும் பாசுரத்தாலே சொல்லுகிறாள்
தன்னோபாதி நெஞ்சை உபசரிக்கும்படி சொல்லுகிறாள்

இதுவோ தகவு
ஸ்வ ஸ்வாமி சம்பந்த ஸ்வ பாவம்
இருக்கும்படி இதுவோ

என்று இசைமின்களே –
இப்படிப் பலருமாகச் சொல்லுங்கோள்
சிஷ்டர் பலரும் கர்ஹித்துச் சொல்லுகை மீளுகைக்கு உறுப்பாம் இறே –

இத்தால்
அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும்
கடகத்வத்தில் உன்முகராய்த் தோன்றினவர்களைக் குறித்து
நடையாலும்
பேச்சாலும்
புத்தி யோகத்தால்
ஸ்ரேஷ்டராய்க் கொண்டு ப்ராப்ய தேச அபி முகரான நீரும்
பிரதான
புருஷ
அநு ஸாதகராய் தத் ஸமான தேச உன்முகரானவருமான
உங்களைக் குறித்து என்றபடி –

தொழுது இரந்தேன்-என்கையாலே
த்வர அதிசயத்தாலே கடக விஷயத்தில் அநு விருத்தியும்
ஓர் அளவில் நில்லாது என்றபடி

முன்னம் செல்வீர்கள் மறவேல்மினோ,–என்று
ஆர்த்தியினுடைய அதிசயத்தாலே
முற்பட அறிவிக்கையை வேண்டுவது
பிரதான நியமமும் இல்லை -என்றபடி

கண்ணன் வைகுந்தனோடு என் நெஞ்சினாரை கண்டால் என்னை சொல்லி அவர் இடை நீர் இன்னும் செல்லீரோ
சீலத்தாலே அபஹ்ருதமாய்
திவ்ய போகத்திலே மூண்ட நெஞ்சைக் கண்டால்
என் அவஸ்தையை அறிவித்து

இதுவோ தகவு என்று இசைமின்களே –
இப்படி அசஹாயாரானவர் பக்கல் இன்னம் போகாது ஒழிவதே
இதுவோ ஸ்வாமி கார்யம் செய்து தலைக் கட்டின படி என்று சொல்லுங்கோள் என்கையாலே
நெஞ்சை மீட்டு வரக் காட்ட வேணும் என்கையில் தாத்பர்யம்

அதாவது
அநு ஸ்மரணம் நடக்கச் செய்தே
அனுபவம் பெறாமையால் யுண்டான ஆர்த்தியைக் காட்டில்
விஸ்மரணமே அமையும் என்கிற வெறுப்பு இருந்தபடி

கடகரானவர்கள் நெஞ்சை மீட்க்குமோ பாதி
மீண்டும் வரக் காட்டவும் வல்லவர்கள் என்று இருக்கிறார் –

(சாம்சாரிக விஷயத்தில் இருந்து மீளச் செல்ல வல்ல ஆச்சார்யர்களால்
ஏது செய்ய முடியாது என்றவாறு )

———

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
சிலரைப் போக விட்டோமாகில் அவர்கள் க்ரமத்தாலே கார்யம் தலைக் கட்டிக் கொண்டு
வருகிறார்கள் என்று க்ரம பிராப்தி பார்த்து
அவ்வளவும் சூது சதுரங்களாலே போது போக்கி ஆறி இருக்கலாம் விஷயம் அன்று ஆகையாலே
யாம் கபீ நாம் ஸஹஸ்ராணி ஸூப ஹுந்ய யுதாநி ச
திஷு ஸர்வாஸூ மார்க்கந்தே –

—————-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி
அவதாரிகை
ஷணமும் அவன் பிரிவைப் பொறாதவள் ஆகையாலே கண்ணால் கண்டாரை எல்லாம்
தூது விடவும்
இரக்கவும் செய்து
தம் தூதாக முன்பு போன நெஞ்சுக்கு என் தசையை ஸ்மரிப்பித்து
இவனோடு அவன் ஸ்தானத்தில் நின்ற உமக்கு இன்னம் அத்ருப்தியோ என்று
அப்பெருமையுள்ள என் நெஞ்சுக்கு அவர் முன்னே சொல்லி
உம்முடைய அருளும் இத்தோடு ரமிப்பதாயிற்றோ என்று அவர் இசையும் படி
விண்ணப்பம் செய்யுங்கோள் என்கிறாள் –

வியாக்யானம்
அன்னம் செல்வீரும்
அன்னமாய்ப் போமவர்களும்

வண்டானம் செல்வீரும்
குருகாய் போமவர்களும்

தொழுது இரந்தேன்
கேளுங்கோள் என் யாசனத்தை
காணுங்கோள் நான் உங்களைத் தொழுது இரந்தத்தை என்று

முன்னம் செல்வீர்கள் மறவேல்மினோ,
முன்னாகச் சென்றவர்கள் என்னை மறவாதே கொள்ளுங்கோள்
முன்னாகத் தூது விட்ட என் நெஞ்சு என்னை மறந்ததே
நீங்களும் அப்படி செய்யாதே கொள்ளுங்கோள்

கண்ணன் வைகுந்தனோடு என் நெஞ்சினாரை கண்டால்
தன் ஸுலப்யத்தால் என் நெஞ்சை அபஹரித்து
சேணுயர் வானத்து இருந்த ஸ்ரீ வைகுண்ட நாதனோடு
ரமண சீலமானவராய்
எனக்கும் காரண பூதரானவராய்
அவருக்குப் பூசும் சாந்தானவரைக் கண்டால்

அவரை நீங்கள் வேறுபாட்டுக் காண்பதே துர்லபம்
காணப்பெற்றால்

என்னை சொல்லி
எனது இவ்வாற்றாமையை
அவருக்கு அறிவித்து

அவர் இடை
என்னோடு கலந்து என்னைப் பிரிந்த
என் நாதரான என் நெஞ்சினாரோடே ரமிக்கும்
புருஷ ரிஷபரிடை

நீர் இன்னும் செல்லீரோ
இன்னம் அவகாஹியா நின்றீரோ

இதுவோ தகவு என்று
அவனுடைய அருளும் இவ்வளவேயோ
என் நெஞ்சினாருக்கு உள்ள தாகவும் இவ்வளவேயோ
என்னா நின்றாள்

என்று இசைமின்களே –
என்றுமாகச் சொல்லி
என் நெஞ்சுக்கும்
அவருக்கும்
நாம் அயுக்தம் செய்தோம் என்று இசையப் பண்ணுங்கோள் –

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திரு விருத்தம் – -பாசுரங்கள் -11-20–ஸ்ரீ நம்பிள்ளை ஈடு –ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் -வியாக்யானம் –

March 3, 2022

அவதாரிகை
இப்படி இவருடைய வை லக்ஷண்யத்திலே ஈடுபட்டு
பகவத் அனுபவ அர்த்தமாகவும்

(இசைவித்து உனது தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே
நின் கண் வேட்க்கை ஏழுவிப்பேன்
அனுபவத்துக்கும் -உம்மை ப்ரீதி காரித கைங்கர்யத்துக்கும்
இவற்றை ருசி காற்றிய ஆழ்வார் அருளிச் செயல்கள் உண்டே )

தேசாந்தரத்திலே பாகவத விஸ்லேஷம் பொறாத படியான
இவருடைய ஞான வை லக்ஷண்யம் கண்ட அன்புடையார் சொன்ன பாசுரத்தை
பொருள் வயிற் பிரியலுற்ற
தலைமகன் பிரிவாற்றாத தலைமகள் வேறுபாடு கண்டு உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்

(விலக்ஷண ஞானம் பாகவத ஸம்ஸ்லேஷ அஸஹிஷ்ணுத்வம்
கண்ணபுரம் ஓன்று உடையோருக்கு வேறு ஒருவருக்கு உரியேனோ ஞானம்
உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -விலக்ஷண ஞானம்
கேட்டு அல்லிக் கமலக் கண்ணன் ஆவான் அன்றோ )

அரியன யாமின்று காண்கின்றன கண்ணன் விண்ணனையாய்
பெரியன காதம் பொருட்கோ பிரிவென ஞாலம் எய்தற்
குரியன வொண் முத்தும் பைம் பொன்னுமேந்தி ஒரோ குடங்கைப்
பெரியன கெண்டைக் குலம் இவையோ வந்து பேர்கின்றவே —11-

பாசுரம் -11-அறியான யாம் இன்று காண்கின்றன -பிரிவாற்றாத தலைவியின் வேறுபாடு கண்டு
தலைவன் உரைத்தல் –மாலுக்கு வையம் -6-6-

பதவுரை

யாம் இன்று காண்கின்றன–நாம் இப்பொழுது பார்க்கின்றவை
அரியன–(உலகத்தில் வேறு எங்கும் பார்ப்பதற்கு) அருமையானவை;
கண்ணன் விண் அணையாய்–எம்பெருமானுடைய பரமபதம்போல அளவற்ற இன்பம் தருபவளே!
பெரியன காதம் பிரிவு–அதிக தூரங்களான பலகாங்களில் (அவரவர்கள்) பிரிந்து போவதானது
பொருட்கோ–பொருள் சம்பாதிப்பதற்காகவோ?’
என–என்று யான் (பொதுப்படையாக உலக நிகழ்ச்சியைப் பற்றிக் கேட்க
(அவ்வளவிலே)
ஞாலம் எய்தற்கு உரியன–எல்லாவுலகங்களையும் தம் வசப்படுத்திக் கொள்ளக்கூடியவையாயும்
ஒரோ குடங்கைப் பெரியன–தனித்தனி ஒரு அகங்களையவ்வளவு பெரியவையாயுமுள்ள
கெண்டை குலம் இவை–கெண்டை மீன்களின் இனமான இக்கண்கள்
ஒள் முத்தும் பை பொன்னும் ஏந்தி–(பிரிவாற்றாமையால் வந்த கண்ணீர்த் துளிகளாகிய அழகிய முத்துக்களையும்
(பசலை நிறமாகிய) பசும் பொன்னையுங் கொண்டு
வந்து பேர்கின்ற–(என் முன்னே) வந்து உலாவுகின்றன;
ஓ–இது என்ன வியப்பு!.

உரை
அரியன யாமின்று காண்கின்றன
நாட்டில் அரிதாய் இரா நின்றதீ
நாங்கள் இன்று காண்கின்றன

கண்ணன் விண்ணனையாய்
கிருஷ்ணனுடைய பரமபதம் போலே
நிரதிசய போக்ய பூதை யானவளே
(கண்ணனுக்கு அடங்கிய சரக்கு அனைத்தும் தானே )

பெரியன காதம் பொருட்கோ பிரிவென
அதி தூரங்களான காதங்களில் பொருளுக்காகவோ நினைத்தது

ஞாலம் எய்தற்குரியன
ஸர்வ லோகத்தையும் தன் வசம் ஆக்கத் தக்கவையாய்

வொண் முத்தும் பைம் பொன்னுமேந்தி
ஆற்றாமையால் வந்த அஸ்ரு பிந்துக்களாகிய முத்துக்களையும்
பயப்பாகிற அழகிய பொன்னையும் ஏந்தி

ஒரோ குடங்கைப் பெரியன
தனித் தனியே ஒரு சிறாங்கை போலே பெருத்து இருப்பன

கெண்டைக் குலம்
1-குளிர்த்தியாலும்
2-மிளிர்தலாலும்
3-ஓடுதலாளாலும்
கெண்டையோடே சமமான குலம் என்னும்படி

இவை
இக் கண்களானவையோ

வந்து பேர்கின்றவே
என் முன்னே வந்து உலவா நோன்றன


இது என்ன ஆச்சர்யமோ
அரியன யாம் இன்று காண்கின்றன என்று அந்வயம்

இத்தால்
அரியன யாம் இன்று காண்கின்றன -என்று
இவருடைய ஞான வை லக்ஷண்யம் ஓரு இடத்திலும் காண அரிது என்றபடி

(மாதா பிதா -ஆளவந்தார்
ஏக விஞ்ஞானம் ஸர்வ விஞ்ஞானம்
ஜகத் காரணம் ஒன்றை அறிந்தால் எல்லாம் அறிந்ததாகுமே
வாஸா -விவகாரத்துக்கு பரிணாமம் ரூபம் நாமம்
ஸர்வம் ப்ரஹ்மம்
நிர்ஹேதுக கிருபா விசேஷத்தாலே மதிநலம் அருளப்பெற்றவர் அன்றோ

உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செம் தமிழ் ஆரணமே என்று இந் நீள் நிலத்தோர்
அறிதர நின்ற இராமானுசன் எனக்கு ஆரமுதே – – 19-)

கண்ணன் விண் -என்கையாலே
பரமபதமும் ஓர் மாயையினால் போந்த கிருஷ்ணனது என்றபடி

விண் அனையாய்
பரம வ்யோமம் போலே
1-அபரிச்சின்ன மஹாத்ம்யத்தையும்
2-அப்ராக்ருதத்வத்தையும்
3-ஆனந்தாவஹத்வத்தையும் -உடையவர் என்றபடி –
(எங்கனே சொல்லிலும் இன்பம் பயக்கும் பக்த அம்ருதம் தொண்டர்க்கு அமுதம் அன்றோ )

பெரியன காதம் பொருட்கோ பிரிவென -என்று
புருஷார்த்த ஸித்த்யர்த்தமாக தேசாந்தர கமனம் பண்ண வேணுமோ என்றபடி

ஞாலம் எய்தற் குரியன -என்கையாலே
ஸமஸ்த விபூதியையும் விளாக்குலை கொள்ளும்படியாய் இருக்கை
(சூழ்ந்து அதனில் பெரிய அவா அன்றோ இவரது )

வொண் முத்தும் பைம் பொன்னுமேந்தி -என்கையாலே
விலக்ஷணமான நித்ய முக்த்தாகாரத்தையும்
ஹிரண்மயமான ஈஸ்வர விக்ரஹத்தையும்
தன்னுள்ளே பிரகாஸிப்பிக்கை

(சர்வஞ்ஞத்வமும் இவருக்கு உண்டு என்றபடி
கண்ணுள்ளானே இவனும்
அனைவரும் பிரதிபலிப்பார்களே )

ஒரோ குடங்கைப் பெரியன -என்கையாலே
ஏவம்விதமான மஹாத்ம்யத்தை யுடைத்ததே யாகிலும்
அன்பர்களுக்கு சிறாங்கித்து அனுபவிக்கலாம் படி இருக்கை

கெண்டைக் குலம் -என்கையாலே
ஸ்ரீ நாயனாபமாய்
பிரளய ஆபத் சஹமான பிரதம அவதாரத்திலே
அவஹாகித்தமை தோற்றி இருக்கை

இவை-என்கையாலே
ஞானத்தை அபரோஷித்து அனுபவிக்கலாம் படி இருக்கை

வந்து -என்று
ஆசையுடையோர் சென்று அனுபவிக்கை அன்றிக்கே
தானே வந்து
ஆசையையும் அவர்களுக்கு உண்டாக்கும் என்கை

பேர்கின்றவே-என்று
அதற்கு அடியான பரம்புதலை ஸ்வ பாவமாக யுடைத்தாய் இருக்கும் என்றபடி

இவ் விடத்து
இவையோ பேர்கின்றவே என்று
பன்மை
ஞானத்தின் வ்ருத்தி பேதத்தை நினைக்கிறது

இப்படி அன்புடையவரான பாகவதருடைய
ஸ்லாகா வசனத்தை வெளியிட்டு அருளினார் ஆயிற்று –

———

தாத்பர்யம்
இப்பாசுரத்தில் பாகவத விஸ்லேஷம் ஒரு ஷணமும் பிரியாமையை ஸஹியாத ஆழ்வாரைக்
கண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள்
தனம் அர்த்தமாக பிரிந்த நாயகனைக் கண்ட
நாயகியின் அவஸ்தையைக் கண்டு உரைத்த நாயகன் பாசுரமாய் இருக்கிறது

அத்யந்த போக்யமாய் உள்ள ஓ நாயகியே
நான் இன்றைக்கு ஒருநாளும் காணாத அத்புதம் கண்டேன்
சிலர் என்னிடத்தில் பொருளின் பொருட்டு பிரிவதைச் சொல்ல
நான் அவர்களை நிஷேதியாமல் இருக்க
நானும் பிரிந்தேன் என்று எண்ணி அவ்வளவிலேயே
நெடுதூரம் பிரிந்த நாயகி போல் படுகிறாய்
நான் உன்னை விட்டுப் பிரிய வல்லேன் அல்லேன்
உபய விபூதியும் கண்டு ஆசைப்படும்படி-அனுபவத்து விஸ்வமயமாகும் படி
கண்ணீர் உகுத்து திரு மேனியும் வை வர்ணம் அடைந்து
ஒவ்வொரு சிறங்கை அளவு உள்ள உன்னுடைய கண்கள் பெரிய இரண்டு மத்ஸ்யங்கள் துள்ளுவது போல்
நின்ற நிலையில் நில்லாமல் சலிக்கிறதே
இது என்ன ஆச்சர்யம்

——————————

நம்பிள்ளை ஈடு அவதாரிகை

தலைமகளோடே கலந்து பரிமாறா நிற்கச் செய்தே
நடுவே போது போக்காக
நாட்டிலிலே சிலரைச் சிலர் பொருளுக்காகப் பிரிவர் காண் -என்று ப்ரசங்கித்தார்கள்
அத்தை இவன் கேட்டு
நாம் பிரிந்தோம் அல்லாமாகில்
நமக்கு இது குற்றமாகப் புகா நின்றதோ என்று
இத்தை நிஷேதியாதே அனுமதி பண்ணினான்
இத்தை இவன் அனுமதி பண்ணின போதே பிரிய நினைத்து அன்றோ செய்தது என்று விக்ருதையாக
அத்தைக் கண்ட தலைமகன் வார்த்தையாய் இருக்கிறது –

வியாக்யானம்
அரியன
இவை சால அரியவாய் இருந்தன
ஸம்போக மத்யே பிரிவை நினைக்கை சால அரியது ஓன்று இறே
இப்பெரிய திருநாளிலே இது ஒரு திரு ஏகாதசி எங்கே தேடி எடுத்தி கோள் -என்று பட்டர் அருளிச் செய்தார்
நீ நினைத்த ஸாஹஸத்தை நாம் போய் அனுஷ்ட்டித்தாலும் கிடையாதது ஒன்றாய் இருந்ததே
இது சாலப் பெறுவதற்கு அரிதாய் இருந்ததீ

யாம்
உன்னாலே உன்மஸ்தக போகங்களையும் புக்கு அனுபவிக்கிற நான்

இன்று காண்கின்றன
நீ அதிசங்கை பண்ணுகிற இப்பிரிவுக்கு முன்பேயும் சில பிரிவுகள் உண்டு இறே
அவற்றிலும் கண்டிலோமீ இவை
இத்தை ஐந்தாம் பிரிவு என்னக் கடவது இறே
அநந்தரம் வார்த்தை இறே

கண்ணன் விண்ணனையாய்
ஒரு தேச விசேஷங்களிலே
ஸமஸ்த போகங்களையும் பெற்று புஜிக்கிறான் ஒருவன் ஒன்றேயாய்
அது தான் அகஞ்சுரிப்பட்டு மற்றவை இன்றிக்கே இருக்குமத்தை நினைக்கும் அன்று அன்றோ
உன்னோடே கூடினவன்று ஓர் இடத்தை நினைப்பது
தேவ தாவத் ஸர்வார்த்த ஸித்திஸ் ஸ்யாத் -என்கிறபடியே ஸ்வத யுண்டாயிற்று அது
ஒரு நாளும் அழியக் கடவது அன்றிக்கே இருந்துள்ள அபஹத பாப்மத்வாதிகளை உடையவோடு ஓக்கத் தானும்
அபஹத பாப்மத்வாதிகளைப் பெற்று அனுபவிக்கிறவன்
இவற்றுக்குத் திரோதானம் பண்ணக் கடவதான ஸம்ஸாரத்தை ஸ்மரிக்குமோ

பெரியன காதம்
அஸங்கயேயமான காதமாகப் புக்கதாயிற்று
பிரிவைப் பிரசங்கித்தவாறே காதல் நெடிதாகப் புக்கது

பொருட்கோ பிரிவென
ஷூத்ர ப்ரயோஜனங்களுக்காகச் சிலரைச் சிலர் பிரிவார் காண் என்று இங்கனே சிலர் பிரசங்கித்தார்கள் போலே
இவனும் அத்தைக் கேட்டான் போலே
பொருள் அதிகாரத்தைக் கிழித்துப் பொகடப் போகாதே இவனால்
போய்ப் படைக்கும் பெரும் பொருளை த்யாஜ்யம் என்று இருந்தானாகில்

———————————

இப்படி பாகவதர்
ஸ்லாகிக்கைக்கு அடியான பகவத் ப்ராவண்யத்தாலே
தத் விஷயத்திலே அபி நிவிஷ்டமாய்
தன் திரு உள்ளம் கைகழிந்த படியாலே பிறந்த ஸைதில்யத்தை
தலைவி தன் ஆற்றாமை கூறிய பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

பேர்கின்றது மணியாமை பிறங்கி யள்ளல் பயலை
ஊர்கின்றது கங்குலூழிகளே இதெல்லா மினவே
ஈர்க்கின்ற சக்கரத் தெம்பெருமான் கண்ணன் தண்ணம் துழாய்
சார்கின்ற நன்னெஞ்சினார் தந்து போன தனி வளமே—12-

பாசுரம் -12-பேர்கின்றது மணி மாமை -தலைவன் பிரியப் பெற்ற தலைவி
தன் ஆற்றாமை கூறி நெஞ்சொடு கலாய்த்தல் –மாசறு சோதி -5-3–

பதவுரை

மணி மாமை–(எனது) அழகிய நிறமானது
பேர்கின்றது–விகாரப் படா நின்றது;
பிறங்கி அள்ளல் பயலை–விளங்கி அடர்தலை யுடைய பயலை நிறமானது
ஊர்கின்றது–மேன் மேல் பரவா நின்றது;
கங்குல்–இராப் போது
ஊழிகளே–அனேக கற்பங்களாக நின்றது;
இது எல்லாம் இனவே–இத் தன்மையுள்ள இவை யெல்லாம்
ஈர்க்கின்ற சக்கரத்து–(கொடியோரை) அறத்திடுகிற திருவாழியை யுடைய
எம்பெருமான் கண்ணன்–எனது தலைவனான கண்ணபிரானது
தண் அம் துழாய்–குளிர்ந்த அழகிய திருத்துழாயிலே
சார்கின்ற–ஆசைப்பட்டுச் செல்கின்ற
நல் நெஞ்சினார்–(எனது) நல்ல மனம்
தந்து போன–(தான் செல்கிற போது எனக்குக்) கொடுத்து விட்டுச் சென்ற
தனி வளமே–ஒப்பற்ற செல்வங்களாம்.

பேர்கின்றது மணியாமை
நன்றான மாமை நிறமானது வேறுபடா நின்றது

மாமை -என்று
ஸ்த்ரீகளுடைய நல் தோலின் நிறம்

பிறங்கி யள்ளல் பயலை ஊர்கின்றது
மேன்மேலும் கிளர்ந்து செறிந்த வை வரண்யமானது பரவா நின்றது

கங்குலூழிகளே
ஒரு இராத்ரி அநேக கல்பங்களாகப் பரிணயியா நின்றது

இதெல்லா மினவே
இவை எல்லாம் இப்படியே யானது

ஈர்க்கின்ற சக்கரத் தெம்பெருமான் கண்ணன்
ஆஸ்ரித விரோதிகளை அழியச் செய்யும்படியான திருவாழியைக் காட்டி
என்னை எழுதிக் கொண்டு
எனக்கு பவ்யனான கிருஷ்ணனுடைய

தண்ணம் துழாய்
ஸ்ரம ஹரமாய்
தர்ச நீயமான
திருத் துழாயிலே

சார்கின்ற நன்னெஞ்சினார்
அபி நிவேசித்துப் போருகிற ஸ்நேஹோத்தரமான நெஞ்சினார்
அத் தலையில் ஆஸக்தி யடியான ராஜ குலத்தாலே உபசரித்துச் சொல்லுகிறாள்

தந்து போன தனி வளமே—
போகிற தசையில் நமக்குத் தந்து போன நிரதிசய ஐஸ்வர்யம்
என்று பாங்கியைக் குறித்துத் தன் ஆற்றாமை சொன்னாள் ஆகவுமாம் –

இத்தால்
பகவத் விஷயத்தில் இவர் நெஞ்சு
அபி நிவிஷ்டமாய்ச் சென்றதடியாக

பேர்கின்றது மணியாமை -என்று
ஸ்வா பாவிகமான ஸ்வரூப ஆகாரமும் குலையும்படியாய்

பிறங்கி யள்ளல் பயலை ஊர்கின்றது -என்று
அபி நிவேச விகாரங்கள் அபி விருத்தமாய்
ப்ரசரிக்கும் படியாய்

கங்குலூழிகளே -என்று
மோஹ அந்தகாரம் நடக்கும் காலமானது
விளம்ப அஷமத்வத்தாலே கல்ப கோடியாய்
ப்ரதிபாதியா நின்றது

(பக்தி பாரவஸ்யத்தாலே இவருக்கு
நமக்கு அஞ்ஞானத்தாலே
காலைப் பூசலும் மாலைப் பூசலும் உண்டே
இரவாக ஆளவந்தார் நிர்வாகம்
முற்கூற்றில் இருந்து பிற்கூற்றாக வந்தமை எம்பெருமானார் )

இதெல்லா மினவே-
இது எல்லாம் இப்படி யானது

ஈர்க்கின்ற சக்கரத் தெம்பெருமான் -என்று
விரோதி ஸமர்த்தமான திருவாழியையும்

தெம்பெருமான்
ஒழிக்க ஒழியாத ஸம்பந்தத்தையும்

கண்ணன்
ஆஸ்ரித பவ்யத்தையும் யுடையனான
கிருஷ்ணனுடைய

தண்ணம் துழாய்
நிரதிசய போக்யதா ஸூசகமான மாலை அழகிலே

சார்கின்ற நன்னெஞ்சினார்
அநு ரக்தமான நெஞ்சானது

தந்து போன தனி வளமே
தந்து போன அத்விதீயமான ஸம்பத்து இறே என்று
அனுசந்தித்தார் ஆயிற்று

ஸூஹ்ருத் பூதரை நோக்கி அருளிச் செய்தார் ஆகவுமாம் –

————-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு

அவதாரிகை
பகவத் ஸம்ஸ்லேஷம் பாகவத ஸம்ஸ்லேஷ பர்யந்தமாக இருக்குமோ பாதி
பகவத் விஸ்லேஷமும் பாகவத விஸ்லேஷ பர்யந்தமாகவே இருக்கும் இறே
ஆகையாலே
தடாவிய அம்பிலே -பாசுரம் -6-
இவருக்குக் கீழ்ப் பிறந்த பகவத் விஸ்லேஷமானது
இப்பாட்டு அளவும் வர
பாகவத விஸ்லேஷமும்
காதாசித்கமாக ஸம்ஸ்லேஷம் உண்டாயிற்றாகில்

அவர்களோடே கூட அவனை அனுபவிக்கப் பெறாமையாலே
2-3-1-முதல் பாட்டில் அனுபவமும் போனதே
ஆர்த்தி உடன் தலைக்கட்டிற்றே

(அவர்கள் விஸ்லேஷிக்கில் செய்வது என் எனது அதிசங்கையாய்ச் சென்றது
அது தானும் போய்
11- அரியன யாம் பாசுரத்தில்
பாகவத விஸ்லேஷம் பற்றி அதி சங்கை சொல்லி
இதில் பகவத் விஸ்லேஷ ஆற்றாமை வந்ததால்
கீழே பாகவதர்கள் பிரிந்து போக மாட்டோம் என்று சொல்லி

வரிகளுக்கு நடுவில் உள்ள அர்த்தம்
முதல் பாட்டில் பிறந்த பகவத் ஸம்ஸ்லேஷம் அபி நிவேசம் மீண்டும் தலை எடுக்கிறது இதில்
இங்கனம் அல்லை யாகில் இரண்டும் புருஷார்த்தம் ஆகாவே
பூஜ்யம் ஓன்று இரண்டையும் கொண்டே binary கணிதம்
அது போல் அல்லவே இங்கு

பகவத் சேஷத்வமும் பாகவத சேஷத்வமும் ஒன்றை ஓன்று பிரியாமல் விடாமல் இருக்கும்
பகவத் சம்ச்லேஷம் ஏற்பட்டு பாகவத சம்ச்லேஷம் விரும்பலாம்
அடியாருக்கு ஆட்படுத்தி அருள் என்று பிரார்த்திக்கலாம்
என் அப்பனில் -என்று சொல்லி மேல்
முடிவில் உண்டான பாகவத ஸம்ஸ்லேஷம் இல்லாத அன்று
கீழ் உண்டான பகவத் ஸம்ஸ்லேஷமும் போவதற்கு ஹேது
இந்த பகவத் ஸம்ஸ்லேஷம் தான் -பாகவதர்கள் உடன் கூடின அன்று தான்-அல்லது ஒன்றாய்த் தலைக் கட்டாதே
அது போன அன்றே இதுவும் போகுமே
main switch போட்டு தான் ஒன்றை உபயோகிக்கலாம் -சார்ந்தே இருக்கும்
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ என்று இவர்கள் உடன் கூடி
அவனை அனுபவிக்கப் பெறாமையாலே பிறந்த பகவத் சம்ஸ்லேஷமும் குலைந்து போனதே )

(நம்பிள்ளை ஈட்டில் -ஊனில் வாழ் உயிரிலே -2-3- 1/10/11 பாசுரங்களையும் சேர்த்து –
களிப்பும் கவரவும் அற்று விளக்கி உள்ளார்)

(ஊனில் வாழ் உயிரே! நல்லை, போ! உன்னைப் பெற்று
வானுளார் பெருமான் மதுசூதன் என் அம்மான்
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்தொழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே–2-3-1–

கன்னலே!அமுதே!கார்முகிலே!என் கண்ணா!
நின்னலால் இலேன் காண்;என்னை நீ குறிக் கொள்ளே–2-3-7-

அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே–2-3-9-

களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளி கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ
துளிக்கின்ற வான் இந் நிலம் சுடர் ஆழி சங்கு ஏந்தி
அளிக்கின்ற மாயப் பிரான் அடியார்கள் குழாங்களையே–2-3-10-

குழாங்கொள் பேர் அரக்கன் குலம் வீய முனிந்தவனைக்
குழாங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்து உரைத்த
குழாங்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் உடன் பாடிக்
குழாங்களாய் அடியீர்! உடன் கூடி நின்று ஆடுமினே–2-3-11-

(பகவத் ஸம்ஸ்லேஷம் பெற்று ஏக ரஸமாகக் கலந்து –
குலைந்து
ஆற்றாமை யுடன் தலைக்கட்டிற்றே ‘களித்தேனே’ என்றவர்,

மீண்டும், ‘இவ் வுலக மக்களோடு பொருந்தி யிருத்தல் நீங்கி,
இவ் வனுபவத்திற்குத் தேசிகரான நித்திய ஸூரிகள் திரளில் போய்ப் புகுவது எப்போதோ?’ என்கிறார்
‘கலியர் கல அரிசிச் சோறு உண்ண வேண்டும்’ என்று நினைக்குமாறு போன்று,
இவரும் ‘அத்திரளில் போய்ப் புகப் பெறுவது என்றோ!’ என்கிறார்.
ஆற்றாமையின் மிகுதி இங்ஙனம் கூறச் செய்கின்றது.
மாயப்பிரான் தானே–மாயப்பிரான் அடியார்கள் – பாகவத ஸம்ஸ்லேஷம் அளிக்க வேண்டும்

குழாங்களாய் அடியீர்! உடன் கூடி நின்று ஆடுமினே–என்று பலன் சொல்லித் தலைக்காட்டுகிறார்

குழாங்களாய் –
என்னைப் போன்று பருகிக் களித்தேனே’ என்று கூறி,
குழாம் தேட இராதே,
முற்படவே திரளாக இழியப் பாருங்கள்.

அடியீர் உடன் கூடி நின்று ஆடுமின் –
அவன் பக்கலிலே நிக்ஷிப்த பரராய் இருக்கிற நீங்கள் நால்வர் இருவர் இங்கிருக்கும்
நான்கு நாளும் தள்ளத் தக்க அர்த்த காமங்களைப் பற்றிச் ‘சீறு, பாறு’ என்னாதே,
நம் பெரிய குழாத்திலே போய்ப் புகுமளவும் ஒரு மிடறாய் அனுபவிக்கப் பாருங்கள்.

(ஆடுகை -அவகாஹியாய் -அனுபவிக்கப் பாருங்கோள் -என்றபடி )

அவனைப் பிரிந்த பிரிவு தோற்றாத படி
ஸ்மரிப்பித்து
ஆஸ்வசிப்பித்தி
போந்த இவர்கள் போய் நின்ற வாறே -இவர்கள் விலகினால் -பழைய பகவத் விஸ்லேஷமும் கிட்டும்
பத்து மாதம் பிரிந்த சீதை
திருவடி கண்டு மகிழ்ந்து
திரு கணையாழி கண்டு அவனையே கண்டது போல் மகிழ்ந்து
போன பின்பு பிறந்த ஆற்றாமை போல் இங்கும் இருந்தது
கணையாழி கையிலே இருந்தாலும் நோவு பட்டாள்
அன்றோ அங்கு

வியாக்யானம்

அனுகூல பதார்த்தங்களும் இப்பொழுது அவனை நினைவூட்ட -அவை நலிய
உன்னாலே தானே வந்தது என்று தோழியைக் கோபித்து
பின்னும்
இவளை வெறுப்பது என்
அவள் சொல்ல மெய் என்று கைக் கொண்ட நெஞ்சு அன்றோ என்று அத்தோடு கிலாய்க்கிறாள்
அவள் குண கீர்த்தனம் பண்ண அத்தை மெய் என்று நினைத்தது நெஞ்சின் குற்றமே என்று கிலாய்க்கிறாள்

கிட்டின போது நிறமானது மேலே மேலே ஒளி வீச
ஸ்ரீ ஸஹஸ்ர நாமத்துக்கு யோக்கியமான இவள் நிறம்
அவன் போன போது அத்தைக் கொண்டு ஜீவித்தோம்
அதுவும் மாறிற்றே
இளைய பெருமாள் சுக்ரீவனுக்கு பெருமாள் பிராட்டியைப் பிரிந்த ஆற்றாமையை சொன்னது
சுந்தர காண்ட ஸ்லோகம் –
வார்த்தை செவியில் பட பிரபை குறையத் தொடங்கிற்று
பெருமாள் அளவு அல்ல சுக்ரீவனுக்கு
செய்தியைக் கேட்டவுடன் இவனுக்கு அத்யர்த்தம் ஆனதே
பிராட்டி உடன் கூடியவாறே பெருமாளுக்குப் போகும்
இவனுக்கு கூடவும் வேணும்
பெருமாளுக்கு வர்ணமும் வர வேண்டும்
தான் ராஜ்ஜியம் மனைவி இழந்த போதும் பெற்ற இழவை பெருமாள் திரு உள்ளத்தில் போட்ட
பின்பு முகம் வெளுத்து இருந்ததே
பின்பு இளைய பெருமாள் பிராட்டி பிரிவால் பெருமாள் பட்ட பாட்டை சொல்லக் கேட்டு
கிரகத்தால் பீடிக்கப்பட்ட அம்சுமான் -சந்திரன் போலே ஆனதாம்
காண்கிற போதே ஹர்ஷம் மேலே மேலே யாமா போல் இங்கு நிறம் போகிற படி
இவை போனதும் இருள் சூழ்ந்து கொண்டதே
விஷம் போலே ஒரே யாத்ரி அநேக கல்பங்களாக உருக்கொண்டதே
இவை எல்லாம் –
சந்திரன் அன்றில் தென்றல் போல் அனைத்தும்
என் நெஞ்சினார் கொடுத்துப்போன இவை
கலந்து பிரிந்தவர் தந்தது அல்ல
அவரோடே கூட போன நெஞ்சினார் கொடுத்த
சந்தான சாபம் போல் வைத்துப் போனதே
யுகாவாதாரை ஆண்மையால் அழிக்கும்
உகந்தாரையும் அழகாலே அழிக்கும்
கையும் திருவாழி யுமான அழகைக் காட்டி என்னை எழுதிக் கொண்டான்

சக்கரம் பிடித்த கண்ணன்
மறைத்துப் போக சொன்ன தேவகி -இங்கு கம்சன் போல்வார் இல்லையே
காணில் முடிப்பான் அவன்
காணாத போது முடிவார் இவர் போல்வார்
தோளில் சாத்தின துழாயில் ஈடுபட்ட நல் நெஞ்சு அங்கெ சார்ந்தது
நாம் கண்டது அடங்கலும் பகையாக்கிக் கொண்டு இங்கே இருந்தோம்
என்னைப் போல் இல்லாமல் நெஞ்சு துணிந்தார்
துணிந்தாருக்கு அல்லது பேறு இல்லையே –
ஸ்ரீ சுக ப்ரஹ்ம ருஷி வேத வியாசர் பக்கலில் சென்று
ப்ரஹ்ம பிராப்தி உபாயம் பிரார்த்தித்த அளவிலே
எனக்கு ஞானம் மட்டுமே உண்டு
எனது சிஷ்யர் ஜனகனுக்கு சால அத்யவசாயம் உண்டு என்று சொல்ல
அவன் இடம் கேட்ட இடத்து
விவசாயம் -திட அத்யாவஸ்யம் தவிர வேறே ஒன்றும் இல்லை -மோக்ஷ தர்மம் ஸ்லோகம்
துணிவைத் தவிர வேறே உபாயம் இல்லையே
நாம் பழிக்கு பயந்து இருந்தோம்
அது மேல் விழுந்து வாழ்ந்து போனார்

நல் நெஞ்சினார்
பாரதம் சாந்தி பர்வ–334-47-என்று
துணிவே ஒழிய வஸ்துவை லபிக்கைக்கு ஒரு விரகு இல்லை காண் என்றான் இறே
நாம் பழிக்கு இறாய்த்து நின்று கிலேசப்படா நின்றோம்
அவர் மேல் விழுந்து வாழ்ந்து போனார்
தம் தாம் வயிற்றிலே பிறந்தார்களே யாகிலும் பகவத் ப்ரத்யா ஸந்தரை கௌரவிக்க வேணும் இறே

தந்து போன
சிலர் ஜீவிக்கப் புக்கால்
பித்ராதிகளை அழைத்து வாழ்விக்க கடவர்கள் இறே

தனி வளம்
அவர் நமக்கு வைத்துப் போன ஒப்பில்லாத ஸம்பத்து
அதாகிறது
அவர் தாம் வந்தாலும் இது போக்க ஒண்ணாதே –

————–

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி
அவதாரிகை
கண்ணன் கலந்த போது உள்ளம் பத்து ஆர்க்கும் இல்லையே
இப்போது உனக்கு என்ன குறையாய் இப்படிப் படா நின்றாய்
எதைத் தந்து போயிற்று உன்னெஞ்சில் அவனில் என்று ஊரார் கேட்கச் சொல்கிறாள்
பேர்கின்றத்திலே –

வியாக்யானம்
மணியாமை
மணி மாமையாவது
ஸ்த்ரீக்கு யவ்வன ப்ராதுர் பாவத்தில் உள்ள ஒளி பெற்ற நிறம்
அது போயிற்று

பேர்கின்றது
அது வேறுபடா நின்றது
அந்நிறம் போன இடம் பாழ் கிடவாமே

பிறங்கி யள்ளல் பயலை
மேல் மேல் வளர்ந்து வருகிற வை வர்ணமானது

ஊர்கின்றது
பரவா நின்றது

கங்குலூழிகளே
ஒரு ராத்ரி அநேக கல்பங்களாக பரிணமியா நின்றது

இதெல்லா மினவே
இத்தோடு என்னில் உள்ளது எல்லாம் இப்படியே யாயிற்று

ஈர்க்கின்ற சக்கரத் தெம்பெருமான்
அன்று கையும் திருவாழியுமான சேர்த்தி அழகைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவன்

கண்ணன்
எனக்கு அதி பவ்யமானவன்
இப்போது தன் பிரிவால் என்னை ஈர்கின்றான் -வதியா நின்றான்
அப்போது அத்யந்த அனுகூலமான தானும்
தன் பரிகரமும்
தன் சம்பந்தமும்
இப்போது அதி ப்ரதிகூலமாய் என்னைக் கொல்ல வேணுமோ
அவனுடைய

தண்ணம் துழாய் ஈர்கின்ற
அவன் பிரதிகூலித்த இப்போது
அவன் சாத்திக் கொண்டு இருக்கும் குளிர்ந்த திருத்துழாயைப் பெற ஆசைப்படா நின்றார் பாருங்கோள்

சார்கின்ற நன்னெஞ்சினார்
இந்நெஞ்சு இப்படி ஸ்வ தந்திரமான பின்பு என்னால் தான்
என் நெஞ்சினார் என்ன வேண்டிற்று

தந்து போன தனி வளமே
என் நெஞ்சு தான் என்னை விட்டுப் போம் போது எனக்குத் தந்த
அத்விதீய ஸம்பத்தானது இது என்கிறார் –
தந்து போன தனி வளமே என்று –

—-

தாத்பர்யம்
தம்முடைய திரு உள்ளம்
பகவத் ப்ராவண்யம் அடைந்து அத்தாலே
பாஹ்ய ஸம்ஸ்லேஷம் கிட்டாத-அஸஹ்யமாய் -பிறந்த ஸைதில்யம்
நாயகன் விரஹம் -நாயகி -சேர்ந்த நாயகன் இங்கு
கையும் திருவாழியுமாக சேவை சாதிக்க
அவன் சாத்தி அருளிய திருத்துழாயை ஆசைப்பட்டு அவன் பின்னே நெஞ்சு போக
தேக சவுந்தர்யாதிகள் அழிந்து
அது போனதால் இது வந்ததால் கொடுத்துப் போனதாக சொல்கிறார்
சூர்யன் இருளை பரிசாகக் கொடுத்து போனது போல்
சரீரம் வெளுத்து வைவர்ணயம் அடைந்தது
மற்றும் உண்டான தென்றல் முதலியவையும் பாதிக்க
இப் பாதகங்கள் எல்லாம்
ஒரு இரவு பல கல்பங்களாக பெருகத் தொடங்கிற்றே
நெஞ்சுடன் ஸஹவாசத்துக்கு நான் பெற்ற பலனே இது

———————

அவதாரிகை

இப்படி பகவத் லாபம் அடியான ஆர்த்தி அதிசயத்தாலே
தம்முடைய விவேகமும் குலைந்து (பகல் மறைந்து )
மோஹ அந்தகாரமும் விஞ்சி
ஸ்வ பாக ஸைதில்யமும் பிறந்து
விளம்ப அஷமதை அடியாக ரக்ஷக அபேக்ஷை பிறந்த ஆகாரத்தை
பிரிவாற்றாத் தலைமகள்
இருளாலும் வாடையாலும் ஈடுபட்ட உரைத்த பாசுரத்தாலே
அனுசந்தித்து அருளுகிறார்
தனி வளர் செங்கோல் நடாவு தழல் வாயரசவிய-இத்யாதியாலே –

தனி வளர் செங்கோல் நடாவு தழல் வாயரசவிய
பனிவளர் செங்கோல் இருள் வீற்று இருந்தது பார் முழுதும்
துனி வளர் காதல் துழாயைத் துழாவு தண் வாடை தடிந்து
இனி வளை காப்பவர் ஆர் எனை வூழிகள் ஈர்வனனே-13-

பதவுரை

தனி வளர்–ஒப்பில்லாமல் வளருந்தன்மையுள்ள
செங்கோல்–(தனது ஒளியாகிய) அரசாட்சியை
நடாவு–(எங்கும் தடையின்றிச்) செலுத்துகிற
தழாய்வாய் அரசு–உஷ்ணத்துக்கு வாய் ஸ்தானமான வெப்பம் வாய்ந்த ஸுர்யனாகிய அரசன்
அவிய–ஒழிய
பனி வளர் செங்கோல் இருள்–(ஜனங்களுக்கு) நடுக்கத்தைச் செய்கின்ற ஆட்சியையுடைய இருளாகிய சிற்றரசு
பார் முழுவதும்–பூமி முழுவதும்
வீற்றிந்தது–அரசு வீற்றிருந்தது;
இனி–இனி மேல்,
நுனி வளர் காதல்–துன்பத்தை அதிகப்படுத்துகிற என் ஆசைக்கு இலக்கான
துழாயை–(தலைவனது) திருத்துழாய் மாலையை
துழாவு–அளைந்து வருகிற
தண் வாடை–குளிர்ந்த காற்றை
தடிந்து–தண்டித்து (அழித்து)
வளை–(பிரிவாற்றாமையால் மெலிந்த எனது கைகளினின்று கழன்று விழத்தொடங்கின) வளைகளை
காப்பவர்–கழலவொட்டாது தடுத்துப் பாதுகாப்பவர்.
ஆர்–யாருளர்?
(எவருமில்லை.)
ஊழிகள்–(கற்பக வடிவங்கொண்ட இராத்திரிகள்
எனை–என்னை
ஈர்வன–பிளக்குந்தன்மையுடையன.

உரை

தனி வளர் செங்கோல் நடாவு தழல் வாயரசவிய
தன்னுடைய தேஜஸ்ஸிலே அல்லாத தேஜஸ் பதார்த்தங்கள் அடைய மறையும்படி
அத்விதீயமாய்க் கொண்டு வளருவதான
தன்னுடைய பிரகாசத்தை எங்கும் ஓக்க நடத்துவானாய்
உஷ்ண கிரணன் ஆகையாலே ப்ரதாப உத்தரரான ஆதித்யன் அஸ்தமிக்க

பனிவளர் செங்கோல் இருள் வீற்று இருந்தது பார் முழுதும்
விரஹி ஜனங்களுக்கு நடுக்கத்தை வளர்கிற நிலையை யுடைத்தான
அந்தகாரமானது
லோகம் அடையத் தன்னுள்ளே யாக்கிக் கொண்டு
தன் பெருமை தோற்றும் படி இருந்தது

பனித்தல்
துளிர்த்தலும்
குளிர்த்தியுமாய்

துனி வளர் காதல் துழாயைத் துழாவு தண் வாடை தடிந்து
துக்கத்தை வளர்ப்பதான காதலுக்கு விஷயமான திருத்துழாயை
அளைந்து வருகிற குளிர்ந்த வாடையைத் துணித்து

இனி வளை காப்பவர் ஆர்
ரக்ஷக ஸந்நிதி இன்றியே
பாதக ஸந்நிதி யுண்டான பின்பு
கை கழலத் தேடுகிற வளையைக் காப்பவர் யார்

எனை வூழிகள் ஈர்வனனே
கல்ப ஆகரைகளான ராத்ரிகள் என்னை ஈரா நின்றன
ஆகையாலே என்னைக் காக்க ஒண்ணாது என்று கருத்து

1-அஸ்தமித்த ஆதித்யன் காக்கவோ
2-அறிவு அழிக்கிற அந்தகாரம் காக்கவோ
3-வறுத்துகிற வாடை காக்கவோ
4-வருந்துகின்ற நான் காக்கவோ -என்றதாயிற்று –

(ஈஸ்வரனை ஒழிந்தவர் ரக்ஷகர் அல்லர் என்பதை பிரபன்ன பரித்ராணத்திலே சொன்னோம் )

இத்தால்
தனி வளர் செங்கோல் நடாவு தழல் வாயரசவிய
இவருடைய அனுபவ அலாப கிலேசத்தால் ஆதித்ய பிரகாசம் போலே
அத்விதீயமாய் அபி வ்ருத்தமாம் படி ஈஸ்வர ஆஜ்ஜை நடத்துவதால்
பாஹ்ய குத்ருஷ்ட்டி நிரசனத்தாலே பிரதாப உத்தரமான விவேகத்தை யுடைய
ஸ்வரூபமும் (அனுபவ அலாப கிலேசத்தாலே ) அஸத் ஸமமாம் படி

(யத்கோஸஹரஸ்ரமபஹந்தி தமாம்ஸி பும்ஸாம்
நாராயணோ வஸதி யத்ர ஸசங்க சக்ர: |
யந்மண்டலம் ஸ்ருதிகதம் ப்ரணமந்தி விப்ரா:
தஸ்மை நமோ வகுளபூஷண பாஸ்கராய ||–ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 4)

(சூர்யனுடைய ஆயிரம் கிரணங்கள் வெளி இருளைப் போக்குவது போலே யாவர் ஒரு ஸ்ரீ ஆழ்வார் உடைய
ஆயிரம் பாசுரங்கள் சகல சேதனர்களுடையவும் அகவிருளைத் தொலைக்கின்றனவோ,
சூர்யன் இடத்தில் ஸ்ரீ நாராயணன் சங்கு சக்கரங்களோடு கூடி விளங்குவது போல்
அப்பெருமான் யாவர் ஒரு ஸ்ரீ ஆழ்வார் இடத்தில் அவ்விதமாகவே உறைகின்றானோ,
வேத ப்ரதிபாத்யமான ஸூர்ய மண்டலத்தை அந்தணர்கள் வணங்குவது போலே யாவரொரு
ஸ்ரீ ஆழ்வார் யுடைய திவ்ய ஸ்தலம் செவிப்பட்ட யுடனே பரம பாகவதர்கள் கை கூப்பி வணங்குவார்களோ –
அப்படிப்பட்ட ஸ்ரீ நம்மாழ்வார் ஆகிற ஸூர்யனை வணங்குவோமாக!)

(ஆதித்ய ராம திவாகர அச்யுத பானுக்களுக்கு போகாத உள்ளிருள் நீங்கி
சோஷியாத பிறவிக் கடல் வற்றி விகஸியாத போதில் கமலம் மலர்ந்தது
வகுள பூஷண பாஸ்கர உதயத்தாலே–ஆச்சார்ய ஹிருதயம்–சூரணை -83-)

பனிவளர் செங்கோல் இருள் வீற்று இருந்தது பார் முழுதும்
அபிமத அலாபம் அடியான ஆந்த்யத்தை (அறியாமையை ) வர்த்திப்பிக்கிற
பெருமையை யுடைத்தான
மோஹ அந்தகாரமானது
ஈசேஸீ தவ்ய விபாகமறத் திரோதானம் பண்ணுகையாலே தானேயாய் விட்டது

துனி வளர் காதல் துளாயை துழாவு தண் வாடை தடிந்து
துக்க அபி வர்த்தகமான அபி நிவேசத்துக்கு விஷயமான பகவத் போக்யதைக்கு
ஸ்மாரகமாய்க் கொண்டு ஸஞ்சரிக்கிற
சீதாதி துக்க ஜனகமான பாதக பதார்த்தத்தை விலக்கி

இனி வளை காப்பவர் ஆர்
பர சம்பந்த ஸூசகமான என் கையில் ஆகாரத்தை
இனிக் கழலாமல் நோக்குபவர் யார்

(கையில் ஆகாரம் -அஞ்சலி -வளையல்கள் -சேஷத்வ பாரதந்த்ர ஸ்வரூபம் )

எனை வூழிகள் ஈர்வனனே
விளம்ப அஸஹத் வடிவமான கால தைர்க்யமானது ஸ்வரூப சத்தையையும்
அழிக்கத் தேடா நின்றது
என்று அனுசந்தித்து அருளினார் ஆயிற்று –

——-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
ராத்திரியும் மற்றும் ஸ்மாரக பதார்த்தங்கள் எல்லாம் பாதகமாம் படியைச் சொல்லிற்று இறே கீழ்
இதில் அந்த ராத்ரி தானே அற இருண்டு
பாதக பதார்த்தங்களும் தனித்தனியே வந்து நலிய
அவற்றின் கையிலே நோவுபட்டு
இவற்றின் படி இதுவான பின்பு இனி நான் சத்தை கொண்டு ஜீவிக்கை என்று
ஓன்று உண்டோ என்று நோவு படுகிறாள்

வியாக்யானம்
வீற்று இருந்தது பார் முழுதும்
பனியை விஜ்ரும்பிக்க வற்றான சக்தி யுள்ள தமஸ்ஸானது லோகம் எங்கும்
தானே தானாய் ஸ்திரப்ரதிஷ்டித்தமாயிற்று

இதுக்கு மேலே
துனி வளர் காதல் துளாயை துழாவு தண் வாடை தடிந்து
துக்கத்தை வளர்ப்பதாக காதலுக்கு விஷயமான திருத்துழாயை அளைந்து வருகிற
குளிர்ந்த வாடையால் ஸோஷிதையாய் க்ருசையானேன்

இனி வளை காப்பவர் ஆர் எனை வூழிகள் ஈர்வனனே
இப்படியான பின்பு கை கழலத் தேடுகிற வளை கழலாத படி பண்ணுவார் யார்
இக் கங்குலும் எத்தனை கல்பமாய் என்னைப் பாதியா நின்றதே என்கிறாள் தலைமகள்
இவளை என்கிறாள் தோழி
இப்படி இருவகையால்
ஞான சூன்யரோடும் அஞ்ஞரோடும் இருப்பு அஸஹ்யமாய்
அவனைப் பிரிகையாலே அனுகூலரும் பாதகராவாரும் விடுவாருமாய் நோவு படுகிறாள் –

———

தாத்பர்யம்
ஆழ்வார் தமக்கு சம்சாரம் அஸஹ்யமான படியை –
காலம் குறித்துப் போன சமயத்தில் வருவதாகச் சொன்ன நாயகன் வாராமையைக் கண்டு
வருந்திய நாயகியின் பாசுரத்தால் பேசுகிறார்

பகல் காலத்தில் சூர்யன் நக்ஷத்ரங்களும் சந்திரனும் மறையும்படி
தனது கிரணங்களை வியாபிக்கச் செய்து சர்வ பதார்த்தங்களையும் பிரகாசிப்பிக்க
அவற்றைப் பார்த்துக் கொண்டு காலம் போக்கினோம்

இரவில் ஸூர்யனும் அஸ்தமித்து இருள் மண்டிற்று
குளிர் நடுங்க தொடங்கிற்று
இருள் பதார்த்தங்களை எல்லாம் மறைத்ததே
இதுக்கு மேல்
நான் ஆசைப்பட்ட திருத்துழாய் வாசனையை அளாவி வந்து வாடைக்காற்று என்னை நலிந்தது
இதனால் என் சரீரம் இளைத்து வளையல்கள் கழன்று போகவே
கழல் வளை கழலும் வளையானவே
நாயகனோ வரவில்லை
எனக்கு பாதகங்களான இவைகளைப் போக்கி நாயகன் வந்து ரக்ஷித்து அருளுவது எப்போதோ என்கிறாள்

————-

அவதாரிகை
இப்படி பகவத் அலாபத்தாலே ஈடுபட்டவருடைய ஞான வை லக்ஷண்யத்தைக் கண்டு
கொண்டாடுகிறவர் பாசுரத்தை
தலைவி கண் அழகு கண்டு வியந்த தலைவன் பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஈர்வன வேலும் அஞ்சேலும் உயிர் மேல் மிளிர்ந்து இவையோ
பேர்வனவோ அல்ல தைவ நல்ல வேள் கணை பேரொளியே
சோர்வன நீல சுடர் விடு மேனி அம்மான் விசும்பூர்
தேர்வன தைவம் அந் நீர கண்ணோ இச் செழும் கயலே -14-

பதவுரை

ஈர்வனவேலும்–(பகையைப்) பிளப்பனவான, வேல்கள் போலவும்
அம் சேலும்–அழகிய சேல்மீன்கள் போலவும் உள்ளனவான
இவை-இவை
உயிர்மேல் மிளிர்ந்து–(எனது) உயிரை வசப்படுத்தும் பொருட்டு அதன் மேற்பாய்ந்து
பேர்வனவோ அல்ல–(அதைவிட்டு) நீங்குவன அல்ல;
தெய்வம்–தெய்வத் தன்மையை யுடைய
நல்–அழகிய
வேள்–மன்மதனுடைய
கணை–அம்புகளினுடைய
பேர் ஒளிய–சிறந்த ஒளியையே
சோர்வன–தாம் வெளியிடுவன
நீலம்–நீலமணியினுடைய
சுடர்–ஒளியை
விடு–வீசுகின்ற
மேனி–திருமேனியை யுடையனான
அம்மான்–எம்பெருமானது
ஊர் விசும்பு–திருநாடாகிய பரமபத்தை
தேர்வன–(தனக்கு, ஒப்பாகத்) தேடுந் தன்மையுடையன;
இ செழு கயல்–கொழுதத் கயல் மீன்களென்று சொல்லத்தக்க இவை
தெய்வம் அன்னீர கண்ணோ–(மோஹினியென்னும்) பெண் தெய்வத்தையொத்த உமது
கண்ணோ–கண்களோ?

வியாக்யானம்

ஈர்வன வேலும் அஞ்சேலும்
கூரிய பார்வையாலே எதிரியை அழிக்கையாலே வேல்களாயும்
நீர்மையின் மிகுதியாலே செல்லாமை தோற்றுகையாலே சேல்களாயும் இருக்கிற இவை

வேல் என்கையாலே
நாயக அநுராக ஜனகமாய்க் கொண்டு ஈடுபடுத்தும் என்றபடி

சேல் என்கையாலே
பிரிவில் தரியாமை தோற்றுகிறது

ஆக உபய அநுராகமும் பிரகாசித்ததாயிற்று

ஈர்வன வேலும் அஞ்சேலும் -என்று
பாதகத்வ
போக்யத்வங்கள் இரண்டும் உண்டான படி

உயிர் மேல் மிளிர்ந்து
பிராணனை வசீகரிப்பதாக ப்ரவர்த்தியா நின்று கொண்டு

இவை
கீழ்ச் சொன்ன ஆகாரங்கள்
அபரோஷிக்கும்படியான இவை


இவற்றினுடைய வைச்சித்ர் யத்துக்கு ஆச்சர்யப்பட்ட படி

பேர்வனவோ அல்ல
உயிர் மேல் மிளிர்தல் தவிருமோ என்னில் தவிரா

அதுக்கும் மேலே
தைவ நல்ல வேள் கணை பேரொளியே சோர்வன
திவ்யமான ஸூக ஜனகத்வத்தால் வந்த நன்மையை யுடைய சரங்கள் ஆகிற
தாமரை நீலம் தொடக்கமான வற்றின் யுடைய மகத்தான பிரபையை
அனுபவியா நின்று கொண்டு காமுகதையை ஜநிபிப்பபவனாய் யுள்ளன

பேர் ஒளியே சோர்வன -என்று
ஒளியை பிரஸரிப்பன என்றுமாம்

நீல சுடர் விடு மேனி அம்மான் விசும்பூர் தேர்வன
நீல ரத்ன ப்ரபா விசாரியான திருமேனியுடைய ஸர்வேஸ்வரனதாய்
பரம வ்யோம ஸப்த வாஸ்யமான ஸ்ரீ வைகுண்டத்தையும்
தான் இட்ட வழக்காகக் கணிசியா நின்றன

இச் செழும் கயலே
தர்ச நீயமான ஸம்ஸ்தானத்திலே கயல்கள் என்று சொல்லலாம் படி இருக்கிற இவை

தைவம் அந் நீர கண்ணோ
தேவ மாயேவ நிர்மிதா -பால-1-27-என்கிறபடியே
திவ்ய ஆகாரைகளான உங்களுடைய கண்ணாய் இருக்கின்றனவோ என்று
வியந்து உரைத்தலாய் இருக்கிறது

இது பாங்கியுடன் தன்னைப் புனத்திடைக் கண்டு மதி யுடன்படுத்த தலைவன்
குறை நயந்து உரைத்தல் ஆகவுமாம் –

இத்தால்
இவருடைய ஞான வை லக்ஷண்யம்
ஈர்வன வேலும் அஞ்சேலும்
வேல் என்றும்
சேல் என்றும் சொல்லுகையாலே
கூர்மையும்
நீர்மையும் தோற்றிற்று

ஈர்தலும் அழகும் சொல்லுகையாலே
எதிரிகளை வித்தராக்கி உகப்பிக்கும் என்றதாயிற்று

உயிர் மேல் மிளிர்ந்து -என்கையாலே
சேதனர் பக்கல் பூர்ண விஷயீ காரம் தோற்றிற்று

இவையோ பேர்வனவோ அல்ல -என்கையாலே
இந்த விஷயீ காரத்துக்கு குலைத்தல் இல்லாமை தோற்றிற்று

(ததீய சேஷத்வத்தைக் குலைக்க முடியாதே
மதுரகவி ஆழ்வார் பெற்று மகிழ்ந்தமை கண்டோமே )

தைவ நல்ல வேள் கணை பேரொளியே சோர்வன -என்கையாலே
போக்ய விஷயத்தில் பக்தி காமரான திவ்ய புருஷர்களுடைய
ஸதா பஸ்யந்தி என்று இலக்குத் தப்பாத கிரணங்களுடைய பெரிய ப்ரகாஸத்தையும்
தன்னதாக்கிக் கொண்டமை தோற்றிற்று

நீல சுடர் விடு மேனி அம்மான் விசும்பூர் தேர்வன -என்கையாலே
நித்ய விபூதியையும் ஸ்வா தீனமாகக் கணிசிக்கும் என்றதாயிற்று

(பொன்னுலகு ஆளீரோ புவனி எல்லாம் ஆளீரோ என்றாரே )

இச் செழும் கயலே-என்று
லீலா விபூதியில் அவதார அனுபவத்திலும் அவகாடம் என்றதாயிற்று

தைவம் அந் நீர கண்ணோ -என்று
நித்ய ஸூரி ஸமானரான வோபாதி ஞானமும்
லோக விஸஜாதீயமாய் இரா நின்றது என்று விஸ்மிதரான
அந்யர் பாசுரத்தை வெளியிட்டார் ஆயிற்று –

———-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
நாயகனானவன் தலைமகளோடே கலந்து பிரிகிற சமயத்திலே
தன் ஈடுபாட்டாலும்
தனக்குத் தாரண அர்த்தமாகவும்
மேல் பிரிந்தால் இவன் தம்மை ஒழியவும் ஜீவிக்க வல்லன் என்று
அவள் நெஞ்சில் படாமைக்காகவும் அவள் அழகைக் கொண்டாடுகிறான் –

வியாக்யானம்
ஈர்வன வேலும்
ஈர்வனவான வேல் போலவும்
அஞ்சேலும்
அழகிய சேல் போலவும் இருக்கிற
இவை கண்ணோ
ஸ்வ கார்யம் செய்து தலைக்கட்ட வற்றாய் இருக்கையும்
தர்ச நீயமாய் இருக்கையும்
பற்ற வேலைச் சொல்லுகிறது
இரண்டாலும் செய்கிறது பின் அழியாமே நின்று கார்யம் செய்ய வற்றாய் இருக்கை –

உயிர் மேல்
அவ்வேல் போலே தோல் புரையே போமவை யல்ல
அசேத்யமாயும்
அதாஹ்யமாயும்
இருக்குமதிலே யாயிற்று வியாபரிப்பது

உயிர் மேல் மிளிர்ந்து
குத்தின வேலைப் புரித்து யுடைத்தால் போலே

இவையோ பேர்வனவோ அல்ல
பறித்துக் குத்த ஒண்ணாதே
அவ்விடம் தன்னிலே இடம் காணும் அத்தனை –

தைவ நல்ல வேள் கணை பேரொளியே சோர்வன
ஈர்வன வேலும் சேலும் என்று விசேஷித்தால் போலே
நாட்டில் காமன் தான் ஒப்பாகப் போராமை அவனையும் விசேஷிக்கிறதாயிற்று
அப்ராக்ருத ஸ்வ பாவனுமாய்
விலக்ஷணமாய் இருப்பான் ஒரு

—————

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி
அவதாரிகை
இப்படி பகவத அலாபத்தாலே நோவு படுகிற இவள் கண் அழகு கண்டு
விஸ்மயப் படும் நாயகனாய் ஈடுபடும்
தோழியினுடைய பாசுரத்தாலே
ஸ்வ ஞானத்தின் அழகில் நம்மை ஈடுபடுத்துகிறார்

வியாக்யானம்
ஈர்வன வேலும் அஞ்சேலும் உயிர் மேல் மிளிர்ந்து இவையோ பேர்வனவோ அல்ல
தன் கண்களுக்கு லஷ்யனான என்னை
வேதிப்பது கொண்டு வேலுமாய்
என்னைத் தன்னில் அநு ரக்தனாக்கி ஆகர்ஷிக்க வல்ல அழகிய மத்ஸ்யங்களுமாய்
என் ப்ராணன்கள் மேல் விழுந்து கார்ய க்ரூரத்தால் தன்னால் இவையே என்னவான
இவை நின்று வசீகரியாமல் தவிர்வன வல்ல


இது என்ன இதன் வசீகரண சக்தி என்று ஆச்சர்யப்படுகிற படி –

இவ்வளவோ இதன் கார்யம்
தைவ நல்ல வேள் கணை பேரொளியே சோர்வன
திவ்ய ஸூக ஜனகத்வத்தால் வந்த நன்மையுள்ள காமனதான சரங்களினுடைய
மஹத்தான பிரபையைத் தன் ஒளியாலே அபஹரியா நின்றன

இவ்வளவில் தான் நிற்பதோ இவற்றின் சக்தி
நீல சுடர் விடு மேனி அம்மான் விசும்பூர் தேர்வன
நீல ரத்ன ப்ரபா விசாரியான திருமேனியை யுடையவளாய்
நம்மில் விளையாடும் ஸ்வாமியுடைய விண்ணில் வியாபித்ததாய்
அதில் தன் போன்ற கண்களைத் தேடா நின்றன

இச் செழும் கயலே
தர்ச நீய ஸம்ஸ்தானத்தால் கயல்களே என்று சொல்லலான இவை

தைவம் அந் நீர கண்ணோ
தேவ மாயையே என்னலானதாய்
என்னை அந்ய பரன் ஆகாமல் பலாத்கரிப்பதான கண் தானோ
இவள் கண் தான் இவள் தோழிக்கும் இப்படி ஆகர்ஷகமாய் இருக்கிற படி –

————

தாத்பர்யம்

ஆழ்வாருடைய ஞான வைலஷண்யத்தைக்கண்டு புகழும் கிளைவித் தலைவன் அருளிச் செய்யும் பாசுரத்தை –
நாயகனானவன் நாயகியின் கண் அழகில் ஈடுபட்டு பேசும் பாசுரமாக அருளிச் செய்கிறார்
அழகிய இரண்டு மத்ஸ்யம் போலே யும்
மன்மதனின் பூக்கணைகள் போலேயும் அதி ஸூந்தரமாய் என் கண் முன்னே காண்கின்ற இவை
எனது உயிரை சின்னா பின்னமாக ஆக்கிய பின்பு
இன்னமும் பாதிக்க திரும்புகிறது
இவற்றின் வைலக்ஷண்யத்தைக் கண்டு
நித்ய ஸூரிகளும் ஸ்யாம ஸூந்தர எம்பெருமான் அனுபவம் விட்டு
இவற்றை அனுபவிக்கைக்கா இங்கே தேடிக்கொண்டு வந்தார்கள்
அழகியதாயுள்ள இவை உன்னுடைய கண்ணாய் இருக்குமோ என்று கேட்க்கிறான்

—————

அவதாரிகை –

இப்படி ஆழ்வாருடைய ஞான வை லக்ஷண்யத்திலே வித்தரானவர்கள்
இவர் ஞானத்தை ஸ்லாகிக்கச் செய்தே
அந்ய பரதை தோன்ற வர்த்திப்பார் சிலரைக் குறித்து
அவர்கள் ஹ்ருதய சோதன அர்த்தமாக
பார்ஸ்வஸ்த ஸூஹ் ருத்துக்கள் சொன்ன பாசுரத்தை

புனத்திடைக் களிறு வினவ வந்த கண் அழகைக் கொண்டாடின தலைவனைக் குறித்து
தோழி (பேச வந்த தலைமகன் )கருத்து அறிந்து உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
(ஆக இவர் இது தோழி பாசுரம் என்றே திரு உள்ளம் கொள்கிறார் )

(கயிறு வினவ வந்த கோஷ்ட்டி வேறே
ஆழ்வார் ஞானம் பேசும் கோஷ்ட்டி வேறே
உபாயாந்தர கோஷ்ட்டி அயலோர்
ஆழ்வார் இடம் அவர்களை இழுத்து பிரபன்னர் கூட்டத்தில் சேர்க்க எண்ணி
பார்ஸ்த்வத்த ஸூஹ் ருத்துகள் பாசுரத்தை என்றபடி )

கயலோ நும் கண்கள் என்று களிறு வினவி நிற்றீர்
அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை கடல் கவர்ந்த
புயலோடு உலாம் கொண்டல் வண்ணன் புன வேங்கடத்து எம்மொடும்
பயலோ இலீர் கொல்லை காக்கின்ற நாளும் பல பலவே–15-

பதவுரை

களிறு வினவி–யானை (இங்குவரக கண்டதுண்டோ? என்று) கேட்கத் தொடங்கி
கயலோ நும கண்கள் என்று நிற்றீர்;–‘உங்கள் கண்கள் கயல்மீன்கள் தாமோ?’ என்று (எங்கள் கண்களைக் கொண்டாடிக்) கால் பேராமல் நின்றீர்;
அயலோர் அறியிலும்–அயலார் அறிந்தாலும்
ஈது என்ன வார்த்தை–இது என்ன பொருந்தாத வார்த்தை;
கடல் கவர்ந்த–கடல்நீரை முழுதும் கொள்ளை கொண்டதும்
புயலோடு உலாம்–மழையோடு மந்தமாகச் சஞ்சரிப்பதுமான
கொண்டல்–காளமேகம் போன்ற
வண்ணன்–(குளிர்ந்த) திருநிறத்தை யுடையனனான எம்பெருமானது
புனம் வேங்கடத்து–(பல) கொல்லைகளையுடைய திருவேங்கட மலையிலே
கொல்லை காக்கின்ற நாளும் பல பல–(நாங்கள்) கொல்லை காத்து வருகிற மிகப்பல நாள்களிலொன்றிலும்
எம்மோடும் பயலோ இலீர்–எங்களோடு (நீர்) பாகமுடையீரல்லீர்.

வியாக்யானம்

கயலோ நும் கண்கள் என்று களிறு வினவி நிற்றீர்
உங்கள் கண்கள் கயல் போலே இரா நின்றன என்று கொண்டாடி
கயிற்றை எங்கே என்று தேடி நில்லா நின்றீர்கள்
களிறு வினவினார் காணா விட்டால் போக அன்றோ அடுப்பது –
கண்ணைக் கொண்டாடுகைக்கும்
போகாமே நிற்கைக்கும்
என்ன சேர்த்தி யுண்டு
களிறு வினவி கயலோ நும் கண்கள் என்றார் என்று அந்வயம்

அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை
புறம்புள்ளார் அறிவிலும் இது என்ன சேரா வார்த்தை
களிறு வினவி வந்தவருக்குக் கண் கொண்டு கார்யம் என் என்று
அயலோர் நினைப்பர் என்று கருத்து

கடல் கவர்ந்த புயலோடு உலாம் கொண்டல் வண்ணன்
பெரும் கடலை மண்டி யுண்டு கண்டவிடம் எங்கும் தூறலோடும் துளியோடும் திரிகிற
காள மேகம் போலே குளிர்ந்த திரு நிறத்தை யுடைய

புன வேங்கடத்து
புனல் சூழ்ந்த திருமலையிலே

கொல்லை காக்கின்ற நாளும் பல பலவே–
நியமனத்தின் படியிலே கொல்லைக்கு அழிவு வாராமல் நோக்கிக் கொண்டு
போருகிற நாள்களும் பல பல யுண்டு
ஆண்டு தோறும் பல பல நாள்களும் காக்கின்றோம்

எம்மொடும் பயலோ இலீர்
எங்களுடன் பயிர்க்கூட்டு இல்லை
பயல் என்று
பாகமாய்
கூட்டுப் பயிர் இல்லை என்றபடி
ஆதலால் நிற்கிற இதுவும் மிகை என்றதாயிற்று –

இத்தால்
கயலோ நும கண்கள் என்று
எங்கள் தர்சனத்தையும் கொண்டாட நின்றீர்

(பிரபத்தி நிஷ்டை தானே எம்பெருமானார் தர்சனம் -நாகணை மிசை நம்பிரான் சரணே சரண்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
த்வமேவ உபாய பூதோ மே பவ
அத்யவசாயம் கொண்டாடுவது )

களிறு வினவி -என்கையாலே
ப்ரகீர்ணே விஷயாரண்யே ப்ரதா வந்தம் ப்ரமாதினம்
ஞான அங்குசேந க்ருஹ்ணீயாத் வஸ்ய இந்திரிய தந்தினம் -சுக்ர நீதி -1-98-என்று
காடு பாய்ந்து திரிகிற கடக் களிற்றைத் தேரோட்டி விட்டுப் பிடிக்க நினைப்பாரைப் போலே
இந்த்ரிய அநுதா வனத்திலே தேட்டமாய் இரா நின்றது –

(உபாயாந்தர நிஷ்டர்
இந்திரியங்கள் திரிய ஞானம் என்றும் அங்குசன் கொண்டு நாம் கட்டுப்படுத்த வேண்டும் இவர்களுக்கு
ஆழ்வார் ஹ்ருஷீகேசன் இடம் விட்டார் அன்றோ
கீதாச்சார்யன் அருள் கொண்டு அருளியவற்றையே அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினார் )

நிற்றீர் -என்கையாலே
இங்கு உண்டானது புறம்பு போக மாட்டு கிறிலீர் -என்றபடி

அயலோர் -என்று
இம் மர்யாதைக்குப் புறம்பானவர்கள் என்றபடி –
அதாவது
ஆழ்வார் ஞான வை லக்ஷண்யத்துக்குப் புறம்பாய்
ஸ்வ ஞானத்தாலே இந்த்ரிய வஸீ கரணம் பண்ணத் தேடும் உபாஸகரை நினைத்த படி

அறியிலும் -என்கையாலே
தேவாநாம் குஹ்யமான இந்த ஞான அநு ப்ரவேஸம்
உபாயாந்தர நிஷ்டர் அறியாமல் மறைக்கப்படும் ரஹஸ்யம் என்றதாயிற்று –

ஈது என்ன வார்த்தை -என்கையாலே
இந்த்ரிய வஸீ காரத்துக்குத் தான் யத்னம் பண்ணுகையும்
அநந்ய ஸாதனருடைய ஞானத்தை ஸ்லாகிக்கைக்கும்
ஏக அதிகாரிக்குச் சேராது என்றபடி

(ஞானத்தால் தானே இருவருக்கும் இந்திரிய வஸ்யத்தை செய்ய வேண்டும்
தர்ம வீர்ய ஞானத்தால் ரிஷிகள்
அருளின பக்தி ஆழ்வாருக்கு -அவனது ஞானத்தால் அவனே செய்து அருளுவான் அன்றோ )

கடல் கவர்ந்த புயலோடு உலாம் கொண்டல் வண்ணன் -என்கையாலே
இந்த ஞான நிஷ்டருக்கு
1-உபாய பூதனானவனுடைய உள் நீர்மையால் உண்டான பூர்த்தியையும்
2-ஜல ஸ்தல விபாகம் இல்லாத உபகாரகத்வத்தையும்
3-ஸர்வ ஸந்நிதியையும்
4-தர்ச நீயமான விக்ரஹ யோகத்தையும் சொல்லிற்று

வேங்கடத்து என்று
உபாய பூதனானவன் உத்துங்கன் அன்றியே
ஸர்வ ஸூ லபனான அர்ச்சாவதார யுக்தன் -என்றதாயிற்று

புன வேங்கடத்து -என்கையாலே
அர்ச்சாவதார ஸ்தலமே போக ஸ்தானம் என்றபடி

எம்மொடும் பயலோ இலீர் -என்று
ஏவம் வித போக பாக்த்வம் உபாயாந்தர நிஷ்டருக்கு இல்லை என்றபடி

கொல்லை காக்கின்ற -என்று
இந்த போக ஸ்தானத்துக்கு ரக்ஷை இந்த அநந்ய ஸாதனருடைய நித்ய ஸந்நிதி என்றபடி

நாளும் பல பலவே–என்று
இவ்வதிகாரிகளுக்குப் போக அந்வயம் தத் தத் கால உசிதமாய்க் கொண்டு
அவிச்சின்னமாய் நடக்கும் என்றதாயிற்று –

கொல்லை என்று
வரம்பு அறுதியைக் காட்டுகையாலே அர்வாசீன போகம் போலே பரிச்சின்னம் அன்றியிலே
இருக்கும் என்றதாயிற்று (கொல்லை எல்லை என்றபடி )

ஆக
இப்படி ஆழ்வாருடைய ஞான வைலக்ஷண்யத்திலே அவகாடரானவர்கள்
உபாயாந்தர ஆகாங்ஷை யுடையாரையும் திருத்தி
உள்ளே புகுர விடும் பிரகாரம் சொல்லிற்று ஆயிற்று –

————

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
கலந்து பிரிந்த தலைவனானவன்
பிற்றை நாள் தலை மகளும் தோழி மாரும் கூடப் புனம் நோக்கி இருந்த இடத்தே சென்று
தன் ஆயாஸத்தை ஆவிஷ்கரித்து
ஆற்றாமையைச் சொல்ல அத்தைக் கேட்ட தோழிமார் வார்த்தையாகச் செல்லுகிறது

வியாக்யானம்
கயலோ
இங்கனே ஓர் ஆனை போந்ததோ என்று சொல்லுவதாக மநோ ரதித்துக் கொடு போன அவன்
அவர்களோடே கிட்டிக் கண்ணுக்கு இலக்கனவாறே
சொல்லுவதும் அறியாதபடி கலங்கி கண்ணை ப்ரஸ்னம் பண்ணத் தொடங்கினான்

கண்கள் கயலோ என்றான்
இது ஒரு வ்யாஹத பாஷணம் இருந்தபடி என் என்ன

இங்கு ஒரு வ்யாஹதீ இல்லையீ -இதுக்கு சம்பாவனையும் இல்லையீ என்கைக்காக
கயலோ நும் கண்கள் என்கிறான்

இத்தைக் கேட்டு மந்தஸ்மிதம் பண்ணி வ்ரீளை யாலே கவிழ்ந்து இருந்தார்கள்
அநந்தரம் தப்பினோம் ஆகாதே என்று வாஸனை கை கொடுத்து களிறு வினவத் தொடங்கினான்

திரியட்டும் இவன் இந்த அசங்கத பாஷணம் பண்ணத் தொடங்கினான் என்று அறிந்து
கேளாமைக்காக முகத்தை மாற வைத்தார்கள்

பின்னை அதுவும் கூடச் சொல்ல மாட்டாதே
ஸ்தப்தனாய் நின்றான்

தன் ஆற்றாமையை ஆவிஷ்கரித்து தரிக்க வந்தவனை முடிய நிஷேத வசனத்தைப் பண்ணினால்
பின்னை அவனுடைய ஸ்வரூப ஸ்திதி இல்லையே
என்றதுக்காக நேரே முகத்தைப் பார்த்து
பாவீ நீ இது என் சொன்னாய் -என்கிறார்கள்
இவன் தன்னை உளனாக்கிக் கொண்டு நின்று வார்த்தை சொல்ல வேணும் என்று

அயலோர் அறியிலும்
நாங்கள் அறிந்தோம் என்கை
நீர் தான் இதுக்கு முன் கண்டு அறியாதார் ஒருவராய் இரா நின்றீர்
நாங்கள் தனியே இருந்த இடத்தே இது என் சொன்னீர் என்கிறார்கள்
நாங்கள் இருக்கிற இடத்திலே வந்து அசங்கத பாஷணங்களைப் பண்ணா நின்றாள்
இவ்வார்த்தையில் உள்மானம் புற மானம் அறியாதார் என் நினைத்து இருப்பார்கள்

அறியிலும்
உள்ளுள்ளார் குமிழி நீர் உண்ணா நிற்க
புறம்பு உள்ளாருக்கு அறிய ஒண்ணாது இறே
ஆனாலும் பாஷிக தோஷமாய் வருமாதுவும் பரிஹரிக்க வேணும் இறே

ஈது என்ன வார்த்தை
அனந்விதமுமாய்
அபார்த்தமுமாய்
இரா நின்றதீ
முன்னிலை வார்த்தைக்கும் பின்னில் வார்த்தைக்கும் ஒரு சேர்த்தி இல்லாமையாலே
அசங்கத பாஷணமாய் இரா நின்றதே
முன்பே அற்ற எங்களை
இப்போது அறுகைக்குச் சொல்லுகிறது ஆகையாலே ப்ரயோஜன சூன்யமாய் இரா நின்றதே

அன்றிக்கே
அடிக்கழஞ்சு பெறும் சீரிய வார்த்தையாய் இருந்ததீ

இத்தால்
தங்களுடைய ஈடுபாடும்
நிஷேதமும்
இரண்டும் தோற்றச் சொல்லுகிறார்கள்

ஈது என்ன வார்த்தை
என்று வார்த்தையைக் கொண்டாடுகிறார்கள்

அயலோர் அறியிலும் என்று
உள்ளீட்டைக் கொண்டாடுகிறார்கள்

கடல் கவர்ந்த
உம்மை முன்பு கண்டு அறியோம்
எல்லா

———-

பேராமலே நின்றான்
இவள் அவன் பாவஜ்ஜையாய்
அதுக்குத் தானும் உள்பட்டாளாய்
இது என்ன வார்த்தை என்று இவள் சொல்லி
என்தான் முன் உன்னோடு நமக்கு அந்வயம் இல்லையோ -என்னும்படியான அவன் பாவத்தை
நாங்கள் புனத்தில் பண்ணும் பயிரில் உமக்கு அந்வயம் இல்லையே என்று அந்யதா கரித்துச் சொல்ல
ஆகில் நீங்கள் இங்கே நிற்பான் என் என்று அவனும் கேட்க
இக்கொல்லை காக்க நாள் தோறும் வந்து நிற்பன் நான்
உமக்கு என்னில் இப்படிகள் தகுமோ -என்கிறான்
கயலோ நும கண்கள் -என்கிற இதில்

வியாக்யானம் –
கயலோ நும் கண்கள் என்று
களிறு வேட்டைக்கு வந்தவரைப் போலே உன் கண்கள் கயல் போல் இரா நின்றது என்று கொண்டு

களிறு வினவி நிற்றீர்
களிறு எங்கே என்று தேடி நில்லா நின்றீர்
உறவு என்ன உமக்கு என்னோடு என்று இவளுக்கு ஸ்வ கதம்
இப்படி இவள் சொல்ல என் தான் என்னும்படி அவன் சில சொன்னான்

அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை
என்கிறாள்
அயலார் அறியும்படி வரிலும் வரும்
இது என்ன அசங்கத பாஷிதத்தைச் சொல்லா நின்றீர் என்று அபிப்ராயம்
நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பன் -4-5-8- என்பதான
சுத்தாந்த சித்தாந்திகள் அன்றே அயலார்
மாதவர் இவரே
ஏவம் பூதன் என் கணவன் என்னுமத்தை ஸூ சிப்பிக்கிறாள்
நீர் யாரோ என்பதானதாய்

கடல் கவர்ந்த புயலோடு உலாம் கொண்டல் வண்ணன் புன வேங்கடதெம்மாடும் பயலோ இலீர்
பெரும் கடல் மண்டி யுண்டு எங்கும் வர்ஷிக்கலான சஞ்சாரம் உள்ள காள மேகம் போலே
குளிர்ந்த நிறத்தை யுடையவனுடைய வேங்கடத்தில் உள்ள புனத்தில் என்னோடு உமக்கு
கூட்டுப் பயிரும் இல்லையே
உமக்கு என்னோடு என்ன சம்பந்தம் என்றபடி

இங்கே வந்து நிற்பது நீ நம்மை ஆசைப்பட்டு அன்றோ என்னப் புக
கொல்லை காக்கின்ற
என்கிறாள்
நாங்கள் இங்கே வந்து நிற்பது கொல்லை காக்கைக்காவே காண்
என் உன் ரஷ்ய ரஷாக பாவத்துக்கு நான் இல்லை என்று தான் நீ இல்லை என்று தான்
குறை சொல்ல வல்லையே
நாளும் பல பலவே–

———–

அவதாரிகை
இப்படி ஆழ்வாருடைய வை லக்ஷண்யம் கண்டு ஸம்ஸ்லிஷ்டரான பாகவதருடைய
ஸம்ஸ்லேஷ தசையிலும் விஸ்லேஷ தசையிலும்
காலத்தினுடைய அத்யல்பத்வாதி மஹத்வங்கள் அடியாகத் தம்முடைய ஸைதில்யத்தைத்
தம்முடைய ஸூஹ் ருத்துக்களுக்கு அருளிச் செய்த பாசுரத்தை
தலைவி தன் பாங்கியருடன் வியந்து உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார்

பல பல ஊழி கள் ஆயிடும் அன்றியோர் நாழிகையை
பல பல கூறு இட்ட கூறாயிடும் கண்ணன் விண் அனையாய்
பல பல நாள் அன்பர் கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும்
பல பல சூழல் உடைத்து அம்ம வாழி இப்பாய் இருளே–16-

பதவுரை

கண்ணன் விண் அனையாய்–எம்பெருமானுடைய பரமபதம் போல மிகப் பிரியமானவளே!
பல பல வழிகள் ஆயிரம்–(நாயகரைப் பிரிந்த நிலையில் இருட்பொழுது) மிகப்பல கற்பகங்களாக நிற்கும்;
அன்றி–அதுவல்லாமல்
(நாயகரோடு கூடியிருக்கும் நிலையில் இந்தப் பொழுதுதானே)
ஒரு நாழிகையை பலபல கூறு இட்ட கூறு ஆயிடும்-ஒரு நாழிகையைப் பலபல பகுப்புகளாக்கிய கூறுகளில் ஒரு கூறாக ஆகா நிற்கும்;
அன்பர்-நாயகர்
பல பல நாள் கூடினாலும்-பல பல நாள் கூடிநின்றாலும்
(காலம் மிகச் சுருங்குதலால்)
யாம் மெலிதும்-யாம் வருந்துகிறோம்; (ஆதலால்)
(அன்பர் பல பல நாள்) நீங்கினாலும்–(நாயகர் பலபல நாள்) நீங்க நின்றாலும்
(காலம் மிக வளர்தலால்)–
யாம் மெலிதும்–யாம் மிக வருந்துகிறோம்;
(ஆதலால்)
இ பாய் இருள்–இந்தப் பரந்த இருட்பொழுது
பல பல சூழல் உடைத்து–சிறுமைக்கும் பல உபாயமுடையதாய்ப் பெருமைக்கும் பல உபாயமுடையதாயிரா நின்றது.
பல பல சூழல் உடைத்து–அம்ம வாழி- எந்த நிலையிலும் வருத்துகின்ற இவ்விருட்பொழுது)
அந்தோ! வாழ்க.

பல பல ஊழி கள் ஆயிடும்
பல அவாந்தர கல்பத்தை யுடைத்தான பல மஹா கல்பமாகா நிற்கும்

அன்றியோர் நாழிகையை பல பல கூறு இட்ட கூறாயிடும்
அந்தக் கல்பம் தான் தன் அவயவ ஏக தேசமான ஒரு நாழிகையைப் பல பலவாக
கலா ரூபத்தாலும்ம காஷ்டா ரூபத்தாலுமாகக் கூறிட்ட கூற்றிலே ஏக தேசமாகா நிற்கும்

கண்ணன் விண் அனையாய்
கலா முஹுர்த்தாதி மயச்ச காலோ ந யத் விபூதே பரிணாம ஹேது என்னும்படி
அகால கால்யமான கிருஷ்ணனுடைய பரமபதம் போலே நித்ய அபிமதை யானவளே

பல பல நாள் அன்பர் கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும்
பல பல நாள் அன்பர் கூடிலும் காலம் அத்யல்பமாகையாலே யாம் மெலியா நின்றோம்
பல பல நாள் அன்பர் நீங்கிலும் நாடோறும் காலம் அதி மஹத்தாகையாலே யாம் மெலியா நின்றோம்

ஆகையால்
இப்பாய் இருளே பல பல சூழல் உடைத்து
இந்தப் பாய்ந்த இருள் சிறுமைக்கும் பெருமைக்கும் பல விரல் யுடைத்தாய் இரா நின்றது

அம்ம வாழி
அம்ம -இது ஒரு வாழ்வு இருந்தபடியே என்று ஆச்சர்யப்படுகிறாள்

இத்தால்
இப்பாய் இருள் என்று
மோஹ அந்தகார ஜனகமான இக்காலமானது என்றபடி

பல பல இத்யாதி
இங்கும் ஸம்ஸ்லேஷ விஸ்லேஷ தசைகளில் கால அத்யல்ப அதி மஹத்வங்களைச் சொல்லுகிறது

விண் அனையாய் -என்று
க்ஷண அணுவத் ஷிப்த பராதி காலயா -ஸ்தோத்ர ரத்னம் —
அனுபவ தசையில் காலம் அத்யல்ப மாம்படியை ஸூ சிப்பிக்கிறது

அபூர்வ நாநா ரஸ பாவ நிர்பர
ப்ரபுத்தயா முக்த விதக்த லீலயா |
க்ஷணாணுவத் க்ஷிப்தபராதி காலயா
ப்ரஹர்ஷயந்தம் மஹிஷீம் மஹாபுஜம் ||-44-

தன்னுடைய அழகான மற்றும் சிறந்ததான லீலைகளால் பிராட்டிக்கு ஆனந்தத்தைக் கொடுப்பவன் எம்பெருமான்;
இப்படிப்பட்ட லீலைகளால் பிராட்டிக்கு ப்ரஹ்மாவின் ஆயுட்காலமும் ஒரு நொடிப்பொழுதில் செல்லும்படி
ஒவ்வொரு க்ஷணமும் புதியதாக ரசிக்கும்படியாக இருக்கும்;
பிராட்டியைத் தழுவுதற்கு ஏற்ற பெரிய திருக்கைகளை உடையவன்.

கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும்-என்கையாலே
இக்காலத்தினுடைய உபய வித பரிணாமம் ஸைதில்யாவஹம் என்றபடி

அம்ம வாழி -என்று
தான் நினைத்த வடிவைக் கொள்ளவற்றே என்று ஆச்சரியப்பட்டார் ஆயிற்று –

தாத்பர்யம்

இப்பாசுரத்தில் ஆழ்வார்
பாகவத விஸ்லேஷத்தில் தமக்கு பிறந்த வேறுபாட்டை
நெடும்காலம் பிரிந்த தலைவன் ஒரு இரவில் வந்து கலந்து அதே இரவில் –
தோழியுடன் கூடி பிரிந்த நாயகியின் வார்த்தையாக அருளிச் செய்கிறார்
ஓ தோழி இக்காலத்தின் கொடுமையைப் பார்
பிரிந்த காலத்தில் ஒரு துளி யாயே இருந்தாலும் அநேக கல்பமாய் நெருக்கி என்னைப் பாதியா நின்றது
தெய்வ சங்கல்பத்தால் வந்து கூடினால் இப்போதாகிலும் எனது மநோ ரதப்படி
சந்தோஷமாக இருக்க முடியாத படியே உள்ளதே
இப்படி இரவி குறுகியும் நெடுகியும் காலம் கோலோச்சும் சம்சாரம் படுத்தும் பாடு பொறுக்க அரிதாய் உள்ளதே
நான் இப்படி சர்வகாலத்திலும் பாதிக்கப்பட்டே இருந்தேன்
அந்த இரவே வாழட்டும்

——————————————-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
கலந்து பிரிந்த தலைமகன் வரவு தாழ்க்க
பிரிவாற்றாத தலை மகள்
அவனை ஒழியத் தனக்கு காலம் சென்றிட அரிதாகிற படியைத் தோழியைப் பார்த்து சொல்லுகிறாள் ஆதல்

அன்றிக்கே
ஸம்ஸ்லேஷ அநந்தரத்திலே பாங்கிமாரும் தானுமாய் இருக்கிற இருப்பு உண்டு இறே
அதிலே இராத்ரியிலே போகம் விருத்தமான படி என் என்று கேட்க
வ்ருத்தமான படியைச் சொல்லுகைக்கு போகத்துக்குக் காலம் உண்டாயிற்றோ
பிரிவில் காலம் நெடுகுமா போலே இறே கூடினால் காலம் குறுகும் படி -என்கிறாள் ஆகவுமாம்

இதிலே இவை இரண்டுமே உண்டு
ஒன்றைப் பிரதானமாக்கி ஒன்றை ஆனு ஷங்கிகமாகக் கொள்ளும் அத்தனை இறே

புணர்ந்து நீங்கின தலைமகனைச் சிறைப்புறத்திலே கண்டு தோழி என்றோரு பேரையிட்டு
அவனை ஒழிய தனக்கு உண்டான செல்லாமையை அவன் நெஞ்சிலே படுத்துகிறாளாய் இருக்கிறது

இத்தால்
ஒரு நாளும் பிரிவின்றிக்கே நித்ய ஸம்ஸ்லேஷம் பண்ணுகையில் தனக்கு கருத்து என்னும்
இடம் தோற்றச் சொல்லுகிறாள் –

(தேஷாம் சதத யுக்தாநாம் –ததாமி புத்தி யோகம் —
எப்போதும் கூடி இருக்க வேணும் என்று விரும்புவனுக்கு என்று கொள்கிறோம் )

இப் பாசுரம் தோழி வார்த்தை யாகவுமாம்
இவளைக் காட்டில் இவள் தோழியானவள் அவன் படி அறிந்து இருக்கும் இறே –

அயோத்யா மக்களைக் கூட்டி வந்த பரதாழ்வானுக்கு குகப்பெருமாள் இளைய பெருமாள் சரித்ரத்தைக் கூறினான்
யாரைப்பற்றி யார் இடம் பேசுவது –
ஆச சஷே-கூறினான்
குகோ ககன கோசர-காட்டு வாழ் சாதி
மனசுக்கும் கூட அகோசரமான விஷயத்தை வாயாலே பேசினான்
அத -இதுக்கு முன்னால்
முன்பு இவன் கைகேயி
பெருமாளுக்கு நல்லான் என்று அறிந்த பின்பு சின்னான்
ஸத் பாவம்
லஷ்மனோ லஷ்மி வர்த்தந
பெருமாள் திருவடிகளில் அதிப்ராவண்யமே இவனுக்கு ஸத் பாவம்
லஷ்மணஸ்ய
கடலைக் கையாலே இறைக்கக் கோலுவாரைப் போல் தலைக்கட்டு
பரதாய குக
யாருக்கு யார் சொல்ல வேண்டும் என்று விவஸ்தையே இல்லையே
ஸ்ரீ பரதாழ்வான் ஸ்ரோதா
ஸ்ரீ குகப்பெருமாள் வக்தா
அப்ரமேயா பரதா
இளைய பெருமாளை பிரகாரம் அறிந்தேன் என்று பேசத்தொடங்கினான்
இவனது பிரபாவம் புத்திக்கு எட்டாதே
காட்டிலே சுத்தி திரிந்த குகன்
பிரிந்தால் தானே சுகம் என்று சொல்லி பிரிந்த பெருமாள் –
பின்பு குகன் மரத்தில் அடியில் தலையை மடுத்து இருந்தவன் பெருமாளுக்கு நல்லான் என்றவனைக் கண்டவன் எழுந்து பேசுகிறான்
நம்பியும் நாயகனை ஒக்கின்றான்
தவம் வேடம் தலைக் கொண்டான் -பேச முடியாதே
காட்டில் உள்ளவற்றை தனித்தனியே பதார்த்தங்களை அறிநதால் போல் இளைய பெருமாள் குணம், முழுவதும் அறிந்து பேசுகிறான்
அன்றிக்கே
எங்கே பிறந்து வளர்ந்தவன் ஆறு வார்த்தை சொல்கிறான் என்று ரிஷி கொண்டாடுகிறான்
காட்டிலே பிறந்து மரங்களை அறிந்தவன்
இவனோடு ஓக்க பிறந்தவனைப் பற்றி சொல்கிறான்
இன்னார் சொல்ல இன்னார் கேட்க என்னும் நியதி இல்லையே
தேசிகர் சொல்லும் அத்தனை
கணபுரம் கைதொழும் பிள்ளையை பிள்ளை என்று எண்ணப் பெறுவரோ
மடக்கிளியைக் கைகூப்பி வணங்கினாளே அன்றோ

பல பல ஊழி கள் ஆயிடும் —
எண்ணிறந்த அநேக காலம் கலந்து -அல்ப காலம் பிரிந்தால் -அல்ப காலமும் அநேக காலம் ஆகிற படி –

அன்றி –இத்தை ஒழிய –
யோர் நாழிகையை-பல பல கூறு இட்ட கூறாயிடும் –
இதனுடைய பரப்புக்கு எல்லை இல்லாதவோ பாதி
ஒரு நாழிகையை அநேக கூறு ஆக்கினால் அதில்
ஒரு சிறு கூறாக நின்றது கலந்த காலம் கலக்கைக்கு இடம் இன்றியே
உபோத் காதத்துக்கு போந்து இருந்த படி–
போகத்துக்கு இன்றி இலே நோவு படுக்கைக்கு வேண்டும் கலவியாய் இருந்த படி

கண்ணன் விண் அனையாய்-
தலை மகள் வார்த்தை ஆன போது
அகால காலத்தில் உள்ளார் பரம பதத்தில் இருப்பார்க்கு சம்சார வெக்காயம் தட்டாதால் போல
இவ் அவசசாதத்தோடே கூடி இருக்க செய்தேயும் சத்தை கிடக்கிறது உன் சந்நிதி ஆகை அன்றோ ..

தோழி வார்த்தை ஆன போது
பரம பதத்தில் உள்ளார்க்கு புனர் ஆவர்த்தி இல்லாதா போல ,
உன்னோடு கலந்தார்க்கு உன்னை பிரிகை உண்டோ ?..
பிரியில் தாங்கள் உளார் ஆகை என்று ஓன்று உண்டோ ?-
நீ நித்ய விபூதி போல் அன்றோ அழிய விடமாட்டான்
முக்தருக்கு லீலா விபூதி ததீயதத் ஆகாரத்தால் த்யாஜ்யமாக இருக்காது
கர்ம நிபந்தமான ஸ்ம்ருதி இல்லாமல் ததீயத்வ ஆகாரம்
தாதார்த்தம் -அவன் பிரயோஜனத்துக்காகவே அறிந்து சேஷத்வத்திலேயே அந்வயித்ததே

சம ஸுகம் துக்கம் உண்டே தோழிக்கும்
சுக்ரீவர் மஹாராஜர் பெருமாள் இடம் கண்டோமே

பல பல நாள் அன்பர் கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும்-
கால தத்வம் உள்ளத்து அத்தனையும் கலக்கிலும் ,அல்ப காலம் பிரியிலும் ,
நாம் ஒரு படி இட்டு இருக்க மாட்டோம் —

தன் வார்த்தை –
கலக்கிற போது வாய் புகு நீரும் அரு நிலையாய் (கால் பாவாது அகாத ஸ்தலம் )
ஆறி இருக்க மாட்டாது மெலிகையும் ,
பிரிந்தால் பிரிந்து ஆற்றாமையால்-மெலிகையும்

கூடின எல்லா நாளுக்கும் ஒக்கும்

தோழி வார்த்தை- ,
நாயகிக்கு நாயகன் உடைய சம்ஸ்லேஷ அந்தத்திலே ,விஸ்லேஷம் ஆய் இருக்கும்
அத்தாலே சம்ஸ்லேஷத்தொடு விஸ்லேஷமும் வாசி அற மெலிகிற படி –
குழி அறியாது இருக்கைக்கு தம்மை போலே அல்லாமே யாம் –

சம்போகத்துக்குக் காலமே இல்லையே
நீங்கிலும்
நீங்க மாட்டான்
அப்படியே நீக்கினாலும் ஸம்ஸ்லேஷ வர்த்தகத்துக்காக பிரிந்தான் அன்றோ

இரண்டு திறத்தாரும் அங்கனே படுக்கைக்கு அடி-
அன்பர் பிரிகையாலே –

பல பல சூழல் உடைத்து-
விசித்திர சக்தன் அவன் என்று இருந்தோம்
காலத்துக்கு இப்படியா
நந்த கோபாலன் கடை தலைக்கே நள் இருள் கண் –நாச்சியார் திருமொழி 12-3-என்னுமா போலே,
கலவிக்கு முன்னிலையாய் ,
விஸ்லேஷத்தில் வந்தால் –
சுருங்கா இருளின் கரும் திணும்பை–திரு விருத்தம்-72-என்று
அஞ்ச வேண்டும் படி பாதகமாய் இருக்கும்

அம்ம .
அம்மே என்ற படி-

ஒரு சொல்லாக்கிச் சொல்லலாம்
அன்றிக்கே
அம்ம
ஹிம்சிக்க பதார்த்தம் போல் வெறுத்து பேசுகிறாள்

வாழி-
தன் வார்த்தை யான போதைக்கு —
வழி பறிப்பாரை-உடன் பிறந்தீர் ! நூறு பிராயம் புகுவீர் ! என்னுமா போலே —

தோழி வார்த்தை யான போது —
இவ் அவசாதம் நீங்கிடுக-
நீயும் வாழ்ந்து இவளையும் வாழ வைக்க மாட்டாயோ
ஆயுஷ்மன் -ஜடாயு என்றால் போல் இந்த இருளும் அனுகூலமாக இருக்க வேண்டும் என்றவாறு

இப்பாய் இருளே –
பரந்த இருளே முன்னிலை யாக –
கடல் கண்ணால்பார்த்தாலும் பரிச்சேதிக்க ஒண்ணாதது போல் இந்த இருளும்

இத்தால்
ஆழ்வாருக்கு சம்சாரத்தில் இருப்பு பொருந்தாது இருக்கிற படி-
காலக்ருத பரிணாமாதிகள்
வியதிரிக்தருக்கு அர்த்த காமங்களுக்கு உறுப்பாகும்
ஆழ்வாருக்கு எப்போதுமே பகவத் தசையில் ஆழ்வதற்கே உறுப்பாகும்
பக்தியின் சிறப்பு

தோழி வார்த்தையான போது
ஈஸ்வரன் பாகவத உத்தமர்களை விட்டுப்பிரிய மாட்டாரே எதனால் தவிக்கிறாய் என்றபடி

ஆசையாக சுமந்திரன் நின்றானே
இரண்டு நாள் நின்றாலும்
பலப்பல நாள் அங்கேயே இருந்தான் என்று ஸ்லோகம்
ஐயருக்கு போர பழைய நாள் போந்தீர்
ஆய்ச்சிமாரையும் அயோத்யா மக்களையும் ரக்ஷித்து போம் என்று விடை கொடுக்க நின்றான்
திவசம் பஹுன் -காலம் நெடுங்கிய படி
அதே போல் இங்கும்
குகப்பெருமாள் உடன் தானே நிற்கிறான் -ஆனால் காலம் நெடுக வேண்டுவான் என்
பகவத் ஸம்ஸ்லேஷம் இல்லாத பாகவத ஸம்ஸ்லேஷம் மட்டுமே போதாதே

நினைவு படுத்த கூட இவர் இருக்க ஆற்றாமை தானே விஞ்சும்
பிரிவாற்றாமையால் தானே அவனும் -ஸ்ம்ருதிக்கு உத்போதகர் அவன் தானே

ஸ்ரீ குஹப்பெருமாளோடே நின்றானாகில் இவனுக்கு காலம் நெடுகுவான் என் என்று பிள்ளை கேட்டருள
ஸம்ருத்திக்கு உத்போதகர் உண்டானால் காலம் நெடுகும் அத்தனை இறே என்று ஜீயர் அருளிச் செய்தார்

ஆசயா யதி மாம் ராம புந சப்தா பயேதிதி -அயோத்யா -59-3-
ஸூமந்த்ரா நீ போ என்றாகிலும் ஒரு வார்த்தை சொல்லுவாரோ என்றாகிலும் நின்றான் அன்றோ –

————

ஸ்ரீ பெரிய பரகாலன் ஸ்வாமி வியாக்யானம்

கீழ்ப்பட்ட காலம் எல்லாம் உன்னைப் பிரியாது இருந்தவன் இப்போது அத்யல்ப காலம் உன்னைப் பிரியவே
உன் முன்னே வந்து நிற்கப் பெற்றவனை இங்கனே சொல்லி விடவோ என்று சொன்ன உயிர்த் தோழியை
கண்ணனுக்கு விண் போலே அதி ப்ரியை யானவளே என்று ஸம்போதித்து
கேளடீ பல பல நாள் அன்பர் கூடிலும்
ஒரு நாழிகையை ஆயிரமாக விபஜித்தால் அதில் ஒரு பாகமாய்ப் போமடீ

அங்கன் அன்றியே
நீங்கிலும்
பிரியிலும் பிரிந்த ஒரு க்ஷணமும் பல பல கல்பமாய் விடும் காண்
இது அன்புடையார் ஸ்வ பாவம் இருக்கும் படி

பா ஸ்வ பாவமிடீ
நாங்கள் பிரிந்த காலம் அதி மஹத்தாகையாலே மெலியா நின்றோம்
இப்படிப் பிறந்த இருள் என்னைச் சூழ்கைக்கு பல விரகு யுடைத்தாய் இருந்தது

அம்ம
சிறு பெண்ணே
என்னோடே நீயும் அவசன்னை யாகா நின்றாய்

உன் அவஸாதம்
வாழி
நீங்கி நன்றாய் இருக்க வேணும் என்கிறாள்

அவன் கீழ் களிறு வினவி நின்றதுவும் என்னைப் பிரிந்து இருக்க மாட்டாமையால் இறே
அத்தால் அவனைத் தன் போல்வனாக்கிக் கூட்டிக் கொண்டு
யாம் -என்கிறது –

———————————

அவதாரிகை
இப்படி அபிமதரான பாகவதருடைய விஸ்லேஷ தசையில் அவர்கள் பக்கல் தமக்கு ஆஸ்வாஸ ஜனகமான
மநோ ரத ஸரணியைக் குலையாது ஒழிய வேணும் என்று
ஸம்ஸார ஆர்ணவத்தை அபரோக்ஷித்து உரைத்த பாசுரத்தைத்
தலைவன் பிரிந்து போன நேர் வழி தூரல் என்று
கடலை நோக்கி இரந்த தலைமகள் பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

இருள் விரிந்தால் அன்ன மா நீர் திரை கொண்டு வாழியரோ
இருள் பிரிந்தார் அன்பர் தேர் வழி தூறல் ,அரவணை மேல்
இருள் விரி நீல கரு நாயிறு சுடர் கால்வது போல்
இருள் விரி சோதி பெருமாள் உறையும் எறி கடலே–17-

பதவுரை

இருள விரி–இருளை வெளியுமிழ்கிற
நீலம்–நீலரத்தினம் போன்ற
கரு–கருமை நிறமுடைய
ஞாயிறு–ஸூர்யமண்டலமென்று
சுடர் கால்வது போல்–ஒளி வீசுவது போல,
இருள் விரி சோதி பொருள்–கருமை நிறம்
அரவணைமேல்–சேஷ சயனத்தின்மேல்
உறையும்–நித்யவாஸம் செய்யப்பெற்ற
எறி கடலே–அலை வீசுகிற கடலே!
வாழி–வாழ்வாயாக:
இருள் விரிந்தால் அன்ன–இருள் பரப்பினாற்போன்ற
மா நீர் திரை கொண்டு–கருத்த நீரையுடைய அலைகளால்
இருள் பிரிந்தார் அன்பர் தேர் வழி தூரல்–இருளிலே என்னை விட்டுப் பிரிந்து சென்ற
நாயகருடைய தேர் போன வழியை அழியா தொழிவையாக-

உரை

இருள் விரிந்தால் அன்ன மா நீர் திரை கொண்டு
இருள் பரம்பினால் போலே இருக்கிற கறுத்த நீர்த் திரையைக் கொண்டு

மா நீர் -என்று
பெரிய நீர் என்றுமாம்

வாழியரோ

இருள் பிரிந்தார்
என் பக்கல் அன்புடையவர் யாகையாலே
அயல் அறிய ஒண்ணாது என்று இருளிலே பிரிந்து போனவருடைய

தேர் வழி தூறல் ,
எனக்குக் கண்டு தரிக்கைக்கு உடலான நேர் வழியைத் தூராது ஒழிய வேணும்

அரவணை மேல் இருள் விரி நீல கரு நாயிறு சுடர் கால்வது போல்
திருவனந்த ஆழ்வான் ஆகிற அணையின் மேலே இருளை விரியா நிற்கிற நீல ரத்னத்தைக்
கருவாகச் சமைத்த ஆதித்யன் ப்ரபையை உமிழுமாப் போலே

இருள் விரி சோதி பெருமாள் உறையும்
இருண்டு விரிகிற ஜ்யோதிஸ்ஸை யுடையனான ஸர்வேஸ்வரன்
நித்ய வாஸம் பண்ணுகிற

எறி கடலே–
எறிதல் -கொந்தளித்தல்

எறிகிற கடலே -வாழியரோ
வாழியரோ என்று தேர் வழி தூராமைக்கு வாழ்த்துகிறாள் –

இத்தால்
எறி கடலே என்று
பாத்ய பாதக பாவத்தாலே கொந்தளிக்கிற ஸம்ஸார ஆர்ணவத்தைக் காட்டுகிறது

அரவணை மேல் என்று தொடங்கி
பகவத் சம்பந்தத்தைச் சொல்லுகையாலே
தமக்கு விருத்தாசரணம் பண்ணாமைக்கு உறவு சொல்கிறாள்

இருள் பிரிந்தார் அன்பர் என்று
இருள் தரும் மா ஞாலமான -திருவாய் -10-6-1-ஜகத்திலே
ஸ்நிக்த பந்துக்களான
பாகவதர் விஸ்லேஷித்தார் என்றபடி –

மச் சித்தா மத்கத ப்ராணா –ஸ்ரீ கீதை -10-9- இத்யாதியாலே
துணைத் தேட்டமாய் இருப்பது இத் தேசத்திலே இறே

தேர் வழி தூரல் -என்கையாலே
ஸாம் சாரிக கோலா ஹலம் மேலிட்டால் தத் விஷய மநோ ரத ஸரணியும் குலையும்
என்று நினைத்துக் குலையாமையை அபேக்ஷித்த படி

இருள் விரிந்தால் அன்ன -இத்யாதி
மோஹ அந்தகார பிரசரத்தைப் பண்ணும் வாஸநா கல்லோலம் சைத்தில்ய ஹேது என்றபடி

வாழியரோ என்று
தம் ஆற்றாமையாலே இம் மநோ ரத ஸரணியைக் குலையாமைக்காக பாதகரை வாழ்த்துமா போலே
மங்களா ஸாஸனம் பண்ணுகிறார் –

தாத்பர்யம்
சிறிது காலம் சம்ஸ்லேஷம் உண்டாகி பிரிந்த ஆற்றாமையை
தேர் வழி பார்த்தாகிலும் தரித்து இருப்போம் என்று
சமுத்திரத்தைப் பிரார்த்திக்கும் நாயகி பாசுரத்தால் அருளிச் செய்கிறார்
ஓ சமுத்ரமே
நீலக்கரு ஞாயிறு போல்
விஸ்லேஷ துக்கம் அறியாய்
இன்று கூடி இருந்து இரவிலே போனான்
தேர் வழியைப் பார்த்தாகிலும் ஜீவிக்கலாம் என்று இருந்தோம்
அத்தை அழியாதே கொள்
எனக்கு இந்த உபகாரம் செய்தால் நெடும்காலம் சுகிக்கக் கடவாய் -மங்களா சாசனம் பண்ணுகிறாள்

————-

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
தலைமகன் கலந்து பிரிந்து போனானாய்
இவளும் தேர்க்கால் சுவட்டைத் தனக்குத் தாரகமாகப் பார்த்துக் கொண்டு இருந்தாளாய்
இனித்தான் பிரிந்தார் இரங்கும் நிலம் நெய்தல் நிலமாகையாலே கடற்கரை யாய் இருக்கும் இறே
அத்தேர் சுவட்டை அலை வந்து அழிக்கப் புக
அத்தை அழியாதே கொள் -என்று அதின் காலிலே விழுந்து கூப்பிடுகிறாள்

வியாக்யானம்
இருள் பரம்பினால் போலே இருக்கிற பெரிய நீர்த் திரைகள் ஆகிற கையைக் கொண்டு
அபாம் அபி -சுக்லம் என்று கொண்டு காலத்துக்கு குணம் வெளுப்பாகச் சொல்லா நிற்கச் செய்தே
மா நீர் -என்றதைக் கொண்டாயிற்று இருட்சியைச் சொல்லிற்று
பரப்பாலும் நீர்ச் செறிவாலும் கறுத்துத் தோற்றும் இறே
இருள் விரிந்தால் அன்ன மா நீர் திரை கொண்டு தேர் வழி தூரல் -என்னவாயிற்று உபக்ரமித்தது
கடல் மலை போலே நடுவே வந்து அத்தை அழிக்கில் செய்வது என் என்று
வாழியரோ என்று
அதின் காலிலே விழுந்து சரணம் புக்கு அத்தை நியமிக்கிறாள்
தன்னைப் புரிந்தவன் செய்ததைத் தானும் செய்கிறாள்
அஞ்சலிம் பிராங்முக க்ருத்வா -யுத்த -21-1-

விஸ்லேஷத்தில் அவர்களோடு சம்பந்தம் உள்ளது ஓன்று கொண்டாகிலும் தரிக்க வேண்டும்படியாக
இவருக்குப் பிறந்த தஸா விசேஷத்தைச் சொல்லுகிறது
ஸோபி ரேணுர் ந லஷ்யதே -ஸ்ரீ விஷ்ணு புராணம் –5-8-31-

———-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி
அவதாரிகை
இப்பாட்டின் வகுப்பு இப்படி –
கண்ணன் விண்ணனையாய் -பல பல நாள் அன்பர் கூடிலும் ஒரு நாழிகையை பல பல கூறு இட்ட கூறாயிடும்
அன்றி
நீங்கிலும் யாம் மெலிதும் பல பல ஊழிகள் ஆயிடும்
அன்பர் யாம் மெலிதும் பல பல சூழல் உடைத்து அம்ம வாழி இப்பாய் இருளே–16-
என்று
தன்னோடு ஸம்ஸ்லிஷ்டனான தன் தலைமகன் அவ்விருளிலே தானே ஒரு கார்யத்துக்காகப் பிரிந்தவனாய்
கடற்கரையிலே தேர் ஏறிப்போக அதின் மார்கம் அழியும் படி தரங்க விஜ்ரும்பணமுள்ள கடலைத்
தன் தலைவன் வர்ணத்தாலும் ஸம்பந்தத்தாலும் உள்ள ஸ்நே ஹத்தைப் புரஸ்கரித்து
அதின் மார்க்கத்தை அழியாமைக்காகப் பிரார்த்திக்கிறாள்
பிரிவில் கடலும் தத் வியாபாரமும் துஸ் ஸஹமாய்
இருள் விரிந்தால் -என்று இதில் –

வியாக்யானம்
இருள் விரிந்தால் அன்ன மா நீர் திரை கொண்டு –
இருள் பரம்பினால் போலே இருக்கிற உன்னுடைய மஹா ஜலமயமனான அலைகளைக் கொண்டு

இருள் பிரிந்தார் அன்பர் தேர் வழி
அன்பானவன் இந்த அந்தகாரத்தில் பிரிந்தவனாய்த் தேர் ஏறிப் போம் வழியை

தூரல் ,
அழியாதே கொள்ளாய்

எத்தால் நம்மை நீ இப்படிப் பிரார்த்திப்பது என்ன
அரவணை மேல் இருள் விரி நீல கரு நாயிறு சுடர் கால்வது போல் இருள் விரி சோதி பெருமாள் உறையும் எறி கடலே–
என்கிறாள்
திருவனந்த ஆழ்வான் ஆகிற அணையின் மேலே இருளை விரியா நிற்கிற நீல ரத்னத்தைக் கருவாக உண்டாக்கின
அதி நீல ஆதித்யனுடைய ப்ரபையை உமிழுமா போலே
இருள் போலே விரிகிற ஜ்யோதிஸ்ஸை யுடையனான ஸர்வேஸ்வரன் நித்ய வாஸம்
பண்ணுகிறானே உன்னில் என் கணவனவன் அவநதான தேர் மார்க்கத்தை
தூரல்
அலைகளை வீசி எறியும் கடலே
வாழியரோ -என்று
தேர் வழி தூராமைக்குச் சொல்லுகிறாள் ஆயிற்று –

——————

அவதாரிகை
இப்படி விஸ்லேஷ அஸஹரான இவருக்கு அனுபவ யோக்ய காலத்தில்
ப்ராப்ய அலாப்ய நிபந்தனமான ஆர்த்தியைக் கண்டு பொறுக்க மாட்டாமல்
ஸூஹ்ருத்துக்களான பாகவதர் சொன்ன பாசுரத்தை
கார் காலம் கண்டு அழிந்த தலைவி ஆற்றாமை கண்டா பாங்கி இரங்கின
பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

கடல் கொண்டு எழுந்தது வானம் அவ் வானத்தை அன்றி சென்று
கடல் கொண்டு ஒழிந்த அதனால் இது கண்ணன் மண்ணும் விண்ணும்
கடல் கொண்டு எழுத்த அக் காலம் கொலோ புயல் காலம் கொலோ
கடல் கொண்ட கண்ணீர் அருவி செய்யா நிற்கும் காரிகையே –18-

பதவுரை

கடல்கொண்ட–கடலளவினதான
கண்நீர் அருவி–கண்ணீர் வெள்ளத்தை
செய்யா நிற்கும்–செரிந்து நிற்கிற
காரிகையே–அழகிய நங்காய்!
வானம்–ஆகாயமானது
கடல் கொண்டு எழுந்தது–கடலைக் கவர்ந்து கொண்டு கிளம்பியது;
கடல்–அக் கடல்தான்
அன்றி–(அங்ஙனம் தன்னைக் கொள்ளைகொண்ட ஆகாசத்தின் மீது கோபித்து
அ வானத்தை சென்று கொண்டு ஒழிந்த அதனால்–ஆகாயத்தைப் போய்க் கவர்ந்து கொண்டு விட்டதனால்
இது–இந்த நிலை, உண்டாயிற்று;
கண்ணன் மண்ணும் விண்ணும்–எம்பெருமானுடைய உடைமையான மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும்
கடல்கொண்டு எழுந்த அகாலம் சொல் ஓ–பிரளய சமுத்திரம் தன்னுள் ஆக்கிக்கொண்டு மேற்கிளர்ந்த அந்தக் கறபாந்த காலந்தானோ? (அன்றி)
புயல் காலம் கொல் ஓ–மழைக்காலந்தானோ? (அறியேன்.)

உரை

கடல் கொண்டு எழுந்தது வானம்
ஆகாசமானது கடலைக் கிரஹித்துக் கொண்டு கிளம்பிற்று என்னலாய்

அன்றி-அவ் வானத்தை
அன்றி அபரிச்சின்னமான ஆகாசத்தைக் கோபித்து

கடல் -சென்று – கொண்டு ஒழிந்த அதனால்
கடல் தான் சென்று கொண்டு விட்டது என்னலாய் இருக்கையாலே

இது
இந்த அவஸ்தை

கண்ணன் மண்ணும் விண்ணும் கடல் கொண்டு எழுத்த அக் காலம் கொலோ புயல் காலம் கொலோ
கிருஷ்ணனுடைய த்யாவா பிருத்விகளை பிரளய ஆர்ணவம் கொண்டு கிளர்ந்த காலமோ

புயல் காலம் கொலோ
கார் காலமோ

காரிகை கடல் கொண்ட கண்ணீர் அருவி செய்யா நிற்கும்
அழகு வடிவு கொண்டால் போலே இருக்கிற இவள்
திரை கொள்ளும் படியான கண்களிலே
நீராலே அருவியைப் பண்ணா நின்றாள் என்று
காலம் தெளிந்த பாங்கி இரங்கி உரைத்தாள் யாயிற்று

காரிகைக்கு -என்ற
பாடமான போது
இவர் கண்ண நீர் அருவி செய்யா நின்றது என்றபடி

மண்ணும் விண்ணும் கடல் கொண்டு எழுத்த அக் காலம் கொலோ புயல் காலம் கொலோ-என்று
எல்லாவற்றுக்கும் முடியும் காலமோ
நமக்கு என்று வந்த கார் காலமோ என்கையாலே
ஆற்றுதலுக்கு உறுப்பான கால மயக்கம் அன்று –

இத்தால்
கடல் கொண்டு எழுந்தது வானம் -என்று
பரம வ்யோமமானது ஸம்ஸார ஸாகரத்தைக் கபளீ கரித்தது -என்னலாய்
அவ்வானத்தை என்று
(அசித் சித் வாசி இல்லாமல் ப்ரஹ்மத்துடன் ஒட்டிக் கொண்டு இருக்குமே )

அன்றியே
இஸ் ஸம்ஸார சாஹரம் தான் பரம வ்யாமத்தோடே ஏகீ பவித்தது என்னலாம் படி இருக்கையாலே

(சூழ் விசும்பு அணி முகில் இப்பாட்டுக்கு விரிவு
சம்சாரம் முக்தனுக்குத் தானே தொலையும் )

கிருஷ்ண ஏவ ஹி லோகா நாம் உத்பத்திரபி சாப்யய-என்று
அவன் தான் விபூதி த்வயத்தையும் உப ஸம்ஹரிப்பதாக
(மண்ணும் விண்ணும் -பரமபதத்தைச் சொல்ல வில்லை )
கால அகால யதாம் அஹம் -ஸ்ரீ கீதை -10-30- என்கிறவன் தானாம்படியாக ஒரு காலம் வந்ததோ
இவருடைய ஸைதில்யம் இருந்தபடியோ
இரண்டு விபூதியும் அழியுமா போலே இருந்தது என்று சங்கா வஹமாய் இருக்கை

புயல் காலம் கொலோ -என்று
இவருடைய ப்ராப்ய த்வரையை அறிக்கைக்காக (அறிவிக்கைக்காக ) வந்து
ஆர்த்தியை ஜனிப்பிக்கிற தொரு கால விசேஷமோ

கடல் கொண்ட கண்ணீர் அருவி செய்யா நிற்கும் காரிகையே –
பாரதந்தர்யத்தை அனுசந்தித்து இருக்கப் ப்ராப்தமாய் இருக்க
அபரிச்சின்னமான ஞானத்துக்குக் காலுஷ்யம் பிறந்து நடவா இருந்தது என்று
சிதிலராய்ச் சொன்ன பாசுரமாய் இருந்தது –

—–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
இது போய் பகவத் விஷயத்திலே மூட்டும் இறே
இதுவும் ஒரு கால மயக்கமாய் இருக்கிறது
இவர் தமக்குப் பல இடங்களிலும் வருமாயிற்று கால மயக்கு
அவற்றுக்கு எல்லாம் மூல ஹேதுக்கள் -இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -1-என்ற
அநந்தரமே தொடங்கி பகவல் லாபத்தோடே செல்ல வேண்டி இருக்க
அது கிடையாமல் பிறந்த ஆற்றாமையைப் பார்ஸ்வஸ்த்தருக்கு ஆஸ்வசிப்பித்தும்
ஜீவிப்பிக்கிறது பரமாய் இருக்கும் இறே
ஆகையால் சொல்லுகிறது

கலந்து பிரிந்த தலைமகன் கார்காலத்தைக் குறித்துப் போனானாய்
அக்காலமும் வந்து அவன் வாராமையால் பிறந்த ஆற்றாமை

கண்ணன் இத்யாதி
சர்வேஸ்வரனுடைய
பூமி அந்தரிக்ஷம் ஸ்வர்க்காதிகள் அடைய -பிரளயம காலமோ
வர்ஷா காலமோ
இரண்டாலும் உனக்கு இழவு இல்லை
அஸத் ஸமமாய்க் கிடக்கும்
உண்டது உருக்காட்டாமல் அவன் இருப்பானே
தான் உளனாக உண்டாக்குமவன் -உன்னையும் உண்டாக்கி விடுவானே

————

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி
அவதாரிகை
இப்படி விஸ்லேஷ அஸஹ மானை யான தலை மகளுடைய போக யோக்கியமான காலத்தில்
அவன் வாராமையாலே
வந்த ஆர்த்தி அதிசயத்தாலே புறப்படும் கண்ணீர் வெள்ளத்தைக் கண்ட இவள் தாயார்
அத்தைச் சொல்லிக் கொண்டு இக்காலம் பிரளய காலமேயோ வர்ஷா காலம் தானோ என்று
தானும் ஏங்கி அவசன்னை யாகிறாள்
இப்பாசுரத்தில் –

வியாக்யானம்
கடல் கொண்டு எழுந்தது வானம்
மேகமானது கடலை அடி மண்டியோடே பருகினதாய் எழும்பிற்று

அவ் வானத்தை அன்றி சென்று
அன்றி -அவ்வானத்தைத் தான் கபளீ கரித்து அன்று விடாததாய்ச் சென்று
ஸ்வயம் விஜ்ரும்பித்து எழும்பினதாய்

கடல் கொண்டு ஒழிந்த
கடலானது அவ்வானத்தைக் கபளீ கரித்துக் கொண்டு
ஸ்வயம் அதி மஹத்தாய் எழுந்தது ஆயிற்று

அதனால் இது
அந்தக்காரணத்தாலே இக்காலம்

கண்ணன் மண்ணும் விண்ணும் கடல் கொண்டு எழுத்த அக் காலம் கொலோ
கிருஷ்ணம் பூமி ஆகாச சமுத்ரங்களை வயிற்றிலே வைத்துக் கொண்டு விஜ்ரும்பித்த மஹா ப்ரளயமோ

புயல் காலம் கொலோ
மேகங்களே விஜ்ரும்பித்து எழும்பி வர்ஷிக்கும் காலம் தானோ


இது என்ன காலமாயிற்று

கடல் கொண்ட கண்ணீர் அருவி செய்யா நிற்கும் காரிகையே
காரிகை -இவ்வவஸ்தை பொறுக்க மாட்டாத அபலையான சீர்மை யுள்ளவள் –

கடல் கொண்ட கண்
கடலைத் தோற்பித்த கண்
அது யுடையவள்
அக்கண்ணீர் அருவிகளையே சொரியா நின்றாள் என்று அவசன்னை யாகிறாள்
இது கால மயக்குத்துறை –

——————-

அவதாரிகை
இப்படி அனுபவ யோக்ய கால தர்சனத்தாலே ஈடுபட்ட இவருக்கு ஈஸ்வரன் சடக்கென
அனுக்ரஹம் பண்ணாதே
விளம்பிக்கிறபடியைக் கண்டு ஸூஹ்ருத்துகள் ஈடுபட்டு உரைத்த பாசுரத்தை
கார் காலத்தில் ஈடுபட்ட தலைவிக்குத் தலைவன் அருளாமையாலே
பாங்கி பழிக்கு இரங்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

காரிகையார் நிறை காப்பவர் யார் என்று கார் கொண்டு இன்னே
மாரிகை ஏறி அறை இடும் காலத்தும் வாழியரோ
சாரிகை புள் ஆர்ந்து அம் தண் துழாய் இறை கூய் அருளார்
சேரிகை ஏறும் பழியாய் விளைந்தது என் சின் மொழிக்கே –19-

பதவுரை

காரிகையார் நிறைகாப்பவர் யார் என்று–‘ஸ்திரீகளுள் (எம்முன், அடக்கத்தை அழியாமற்
பாதுகாத்துக்கொள்ள வல்லவர் யாவருள்ளார்?” என்று கருதிச்செருக்கி
மாரி–மேகங்கள்
கார் கொண்டு–கருமை நிறங்கொண்டு-கோபத்துக்கு வர்ணம்
இன்னே–இவ்வாறு
கை ஏறி–ஒழுங்காக (வானத்தின் மீது) ஏறி நின்று
அறையிடும் காலத்தும்–அறைகூவுகிற காலத்திலும்
சாரிகை புள்ளர்–விரைந்த நடையையுடைய கருடப் பறவையை வாஹநமாக வுடையரான இத்தலைவர்
அம் தண்ணம் துழாய்–அழகிய குளிர்ந்த (தமது) திருத்துழாயை
கூய் இறை அருளார்–(இவளை) அழைத்து (இவளக்கு)ச் சிறிதும் கொடுத்தருளுகிறாரில்லை;
(ஆகவே)
என் சில் மொழிக்கு–சில பேச்சுக்களையுடை என் மகளான இவளுக்கு
சேரி கை ஏறும்பழி ஆய் விளைந்தது–(அவர் பக்கல்கொண்ட காதல்தான்) இவ்வூர் முழுவதும் பரவும் பழியாய்ப் பலித்தது.
அதிமாத்ர ப்ராவண்யத்தைப் பழி என்கிறார்கள்
வாழியரோ–இவள் இத் துன்பம் நீங்கி வாழ்ந்திடுக.

உரை

காரிகையார் நிறை காப்பவர் யார் என்று
தங்கள் அழகு பார்த்து இருக்கும் பெண் பிறந்தாரில் தங்கள் பூர்த்தியை யாராலே காக்கலாம் என்று

இன்னே
இப்படியே

கார் கொண்டு மாரிகை ஏறி
மேகங்களானவை வர்ஷித்துக் கொண்டு அணிந்து ஏறி

அறை இடும் காலத்தும்
யுத்த உன்முகரைப் போலே தன் முழக்கத்தாலே அறை கூவுகிற காலத்திலும்

வாழியரோ சாரிகை புள்ளர்
இவ்வளவிலும் தம்முடைய வைபவத்துக்கு மங்களா ஸாஸனம் பண்ண இருக்கிற இவர்

சாரிகை புள்ளார்
ஆ பன்னர் இருந்த இடத்தில் சடக்கென வருகைக்கு ஈடான பரிகரத்தை யுடையவர்

சாரிகை என்று
மண்டல ஆகார கதியைச் சொல்லுகிறது
தர்ச நீய கதியான புள் என்றபடி
(சிறப்பான நடத்தை ஆச்சாரம் அனுஷ்டானம் வேதம் தானே சொல்லும் )

ஆர்ந்து அம் தண் துழாய்
அழகிய குளிர்ந்த திருத்துழாயை

இறை கூய் அருளார்
ஏக தேசமும் அழைத்துக் கொடுத்து அருளுகிறிலீர்
கொடுக்கும் போதை ஸாந்த்வ வாதமும் தேட்டமாய் இருக்கிற படி

(இறை ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை
இங்கு ஏகதேசம் )

சேரி கை ஏறும் பழியாய் விளைந்தது என் சின் மொழிக்கே –
என்னுடைய மித பாஷிணி யானவளுக்கு
ஊரார் கை வகுத்து உறும்படியான பழியாய்ப் ;பலித்தது

கை ஏறும் பழி என்று
கை எடுத்து உரைக்கவுமாம் –

இத்தால்
காரிகையார் -என்று
ஸ்த்ரீத்வத்தைச் சொல்லுகையாலே பாரதந்தர்யத்தை அனுசந்தித்து
தத் தஸ்ய ஸத்ருசம் பவேத்-ஸூந்தர –37-62- என்று இருக்கும் ஸ்வரூபத்தைச் சொன்னபடி

நிறை காப்பவர் யார் -என்று
இந்த ஸ்வரூப பூர்த்தியை யாராலே நோக்கலாம் என்று அபிப்ராயம்

கார் கொண்டு என்று தொடங்கி
ஸ்மாரக முகத்தாலே ஆகர்ஷகமான விக்ரஹத்தையும்
அனுபாவ்யமான குண அபி வர்ஷத்தையும் ஆவிஷ் கரித்து

இப்படி அனுபவ யோக்ய அவஸ்தையானது அபி முகமாய் த்வரிப்பிக்கச் செய்தேயும்
மங்களா ஸாஸனம் பண்ணும்படி
தர்ச நீயமான வாஹன வை லக்ஷண்யத்தை யுடையவர்
போக்யமாய் ஸ்ரம ஹரமான தம்முடைய ப்ரஸாதத்தை ஸ்நிக்த கம்பீரமான திரு மிடற்று ஓசையாலே
அழைத்து ஏக தேசமும் கொடுத்து அருளுகிறீலீர்

என் சின் மொழிக்கு
என்று இதனுடைய அபேக்ஷையில் புனர் வசனம் மிகையாம் படி ஸக்ருத் யுக்த அதிகாரிகளால்
எங்களுக்கு உஜ்ஜீவன ஹேதுவான அவருக்கு என்றபடி
(ஸக்ருத் ஏவ யுக்தி த்வயம் பிரபத்தி ப்ரபந்ந ஜன கூடஸ்தர் அன்றோ இவர்
மாறன் சொல் வேராக வீடு )

சேரி இத்யாதி
இந்த ஸ்ரேணி யிலுள்ள சாத்விக ஜனம் கை எடுத்துக் கூப்பிடும்படி பழியாய்
பரிணமித்தது என்றார் ஆயிற்று –

—————–

ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
அவதாரிகை
தோழியானவள் காலத்தை மயக்கி இவளை ஆஸ்வசிப்பித்து வார்த்தை சொல்லா நிற்க
அவ்வளவில் பிரிந்து தனி இருப்பாரைக் காலத்தை மயக்கி தரிப்பிப்பார் யுண்டாகில் தரிப்பிப்புயுங்கோள் என்று
வாய் பற்றிக் கொண்டு வந்து தோற்றின சில மேகங்கள்
அவற்றின் உத்யோகத்தைக் கண்ட திருத்தாயார் வார்த்தையாகாச் செல்லுகிறது

வியாக்யானம்
காரிகையார் உண்டு -அபலைகள்
அவர்களுடைய நிறையுண்டு -அடக்கம்
அத்தை ஆர் தான் அறியாதபடி நோக்குகிறார்கள்
நோக்குவார் யுண்டாகில் நோக்குங்கோள் என்று

கார் கொண்டு
புறம்பு கறுப்பு
அகவாயில் கறுப்பு புறம்பு பொசித்துத் தோற்றிற்று என்னலாய் இருக்கை
இன்னே
இதனுடைய ஒருப்பாடு இருந்தபடி கண்டோ உமக்கு இப்படி -என்னும் அத்தனை போக்கிப்
பாசுரம் இட்டுச் சொல்லலாவது இல்லையே

மாரிகை ஏறி
ரண உத்யதா நாம் கிஷ்கிந்தா -28-21-என்னும்படி
கையும் அணியும் வகுத்துக் கொண்டு

அறை இடும் காலத்தும்
நோக்குவார் யுண்டாகில் நோக்குங்கோள் -என்று அறையோ அறை -என்னா நின்றதாயிற்று
தேந நாதேந மஹதா நிர்ஜகாம ஹரீஸ்வர -பால -1-68-

அவன் ரக்ஷகன் நாம் ரஷ்யம் என்று ஆச்சார்ய உபதேச மாத்திரம் அறிந்து ஆறி இருக்கலாய் –
க்ரமத்தாலே பெறுவோம் என்று இருக்கலாம்
இவருக்கு அனுபவ பூர்வகமாக அறிந்து -கிருபா குண ஞானம் பிறந்து
இரக்கமே உபாயம் -அதுக்கு நான் ஆள் என்று உணர்ந்த பின்பு க்ரம பிராப்தி என்று ஆறி இருக்காமல் -துடிப்பாரே
பேற்றுக்குத் த்வரிக்க வேணுமே
வழி அல்லா வழி மேல் விழுந்து அடைய த்வரிப்பது குற்றம் அன்றே
ஸாஸ்த்ரங்கள் விதித்தாலும் செஞ்சே தீர கங்கணம் கொண்டு – வாஸனை பலத்தாலும் கவனக்குறைவால் -பிராமாதிகமாகவும்
அபிராப்த விஷயங்களில் புத்தி பூர்வகமாக குற்றம் நாம் செய்வது போல் பகவத் விஷயத்தில்
ஞானாதிக்யத்தால் வருமவை எல்லாம் அடிக்கழஞ்சு பெறலாம்
பத்தி மேலீட்டால் தெரிந்தே செய்தாலும் குறை இல்லையே
குணாதி விஷயத்தில் விஷய வை லக்ஷண்யம் பண்ண வைக்கும்
ஷூத்ர விஷயம் அல்பம் அஸ்திரம் அப்ராப்யம் -இதிலே மேல் விழுந்து
இது அநந்தமாயும் ஸ்திரமாயும் ப்ராப்த விஷயமுமாய் அதுக்கும் மேலே குணாதி விஷயமுமாய் –
ஆக நான்காலும் இருக்க கைமுதிக நியாயத்தால் செய்வதிலே குறை இல்லையே

இத்தால் சொல்லிற்றாயிற்று என் என்னில்
ஷூத்ர விஷய ப்ராவண்யத்தோ பாதி பகவத் விஷயத்துக்கு குற்றம் உண்டாகிலும்
விட மாட்டாத படியான இவருடைய ப்ராவண்ய அதிசயம் சொல்லுகிறது –

பகவத் விஷயத்தில் குற்றமே சொன்னாலும் விட மாட்டார்
கடியன் கொடியின் நெடிய மால் –ஆகிலும் கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் என்பர் அன்றோ

———————-

ஸ்ரீ பெரிய பரகால ஸ்வாமி
அவதாரிகை
இப்படி வர்ஷா காலத்திலேயே அத்யாவசன்னையாகும் தலைவிக்குத் தலைவன் அருளாமையாலே
இவள் தாயார் ஊரார் சொல்லும் பழிக்கு இரங்கி அவசன்னை யாகிறாள் இப்பாட்டில் –

காரிகையார் நிறை காப்பவர் யார் என்று
தங்கள் அழகைக் கண்டு உகக்கும் பெண்களுடைய பூர்த்தியை யாராலே காக்கலாம் என்று

கார் கொண்டு இன்னே மாரிகை ஏறி
இன்னே –
இப்படியே
கார் கொண்டு மாரிகை ஏறி
மேகங்களானவை மேல் மேல் வர்ஷித்திக் கொண்டு
அணி அணியாக ஏறி

அறை இடும் காலத்தும்
யுத்த உன்முகரைப் போலே தன் முழக்கத்தாலே அறை கூவுகிற காலத்திலும்

வாழியரோ
என்று சிலராலே தமக்கு மங்களத்தை ஆஸாஸிப்பித்திக் கொண்டு

சாரிகை புள்ளார்
மண்டல ஆகார கதியால் ஸாரி விடும் புள்ளுடையவருடைய

அம் தண் துழாய்
அழகிய குளிர்ந்த திருத்துழாயை

இறை கூய் அருளார்
ஈஷத்தாகிலும் மனமுற்று அழைத்துக் கொடுத்து அருளுகிறிலீர்

என் சின் மொழிக்கே –
என் மகளாய்
மித பாஷிணியான இவளுக்கு

சேரி –
ஊரார்

கை ஏறும் பழியாய் விளைந்தது
கை வகுத்து ஏறும்படியான பழியாய்ப் பலித்தது

அவனில் பிரவணை யானாய் உனக்கு இத்தனையும் வேணும் காணும் -என்னும்படி
ஓர் அவதி அற்றுத் தூற்றுவார்களே என்று அவசன்னை யாகிறாள்
இது இவள் பசி வளர்க்கப் பட்டினி இடா நின்றவன் என்று அறிந்தும்
சிலருக்கு அவனில் ப்ராவண்யத்தைத் தவிர்க்கவாய்
சேரியர்க்கே பழியாய்த் தன் குலத்துக்குப் பழியாய் விளைந்தது என்னா நின்றாள் –

————

அவதாரிகை
இப்படி நோவு படுகிற இவருடைய ஆர்த்தியை சலிப்பிக்கைக்காக
ஈஸ்வரன் அநந்ய ஸாத்யன் -என்று அறியாதே இவர் பக்கல் பரிவாலே உண்டான கலக்கத்தாலே
ஸர்வான் தேவான் நமஸ்யந்தி -அயோத்யா காண்டம் -2-52-என்னுமா போலேயும்
நாய்ச்சியார் காமன் காலிலே விழுந்தால் போலேயும்
பகவத் விபூதி பூதரான தேவதாந்தர அனுவர்த்தனத்தாலே யாகிலும் இவருடைய ஆர்த்தியை சலிப்பிக்கலாமோ
என்று ப்ரவர்த்தித்த பரிவரைக் குறித்து
இவருடைய ப்ரக்ருதி அறிந்து இருக்கும் ஸ ப்ரஹ்மசாரியான ஸூஹ்ருத்துக்கள் விலக்கின பாசுரத்தை
தலை மகள் ஈடுபாட்டுக்கு நிதானம் அறியாதே வெறி யாடலுற்ற தாயாரைக் குறித்து
இவள் பிரகிருதி அறிந்த தோழி வெறி விலக்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

சின்மொழி நோயோ கழி பெருந்தெய்வம் இன்ன-இந்நோய் இது என்று
இன்மொழி கேட்கும் இளந்தெய்வம் அன்று இது வேல! நில் நீ
என் மொழி கேண்மின் என்னம்மனை மீர் ! உலகு ஏழும் உண்டான்
சொல் மொழி மாலை யம் தண் யம் துழாய் கொண்டு சூட்டுமினே –20–

பதவுரை

சில் மொழி நோயோ–சில பேச்சுக்களே பேசவல்ல இவளுடைய நோயோவென்றால்
இ நோய் இனது என்று இல்மொழி கேட்கும் இன தெய்வம் அன்று இது–இந்த நோய் இப்படிப்பட்ட தென்று வரையறுத்து
இல்லாத மொழிகளைப் படைத்துச்சொல்லக் கேட்கத்தக்க க்ஷுத்ரதெய்வத்தின் விஷயமாக வந்ததன்று இது;
வேல–வெறியாட்டாளனே!
நீ நில்–நீ விலகி நிற்பாயாக;
எம் அம்மனைமீர் எனது தாய்மார்களே–
என் மொழி கேண்மின்–(இவள் தன்மையை உண்மையாக அறிந்த) எனது வார்த்தையைக் கேளுங்கள்;
கழிபெருந் தெய்வம்– மிகப் பெரிய தெய்வமான எம்பெருமான் விஷயமாக உண்டானது.
ஏழு உலகும்–எல்லாவுலகங்களையும்
உண்டான்–(பிரளயங் கொள்ளாதபடி) திருவயிற்றிற்கொண்டு காத்தருளிய பெருமானது.
சொல் மொழிகொண்டு–திருநாமத்தைச் சொல்லுதலைச் செய்து கொண்டு
மாலை அம் தண்ணம் துழாய்–(அவனது) மாலையாகவுள்ள அழகிய குளிர்ந்த திருத்துழாயை
சூட்டுமின்–(இவளுக்குச்) சூட்டுங்கள்-

வியாக்யானம்

சின்மொழி நோயோ
வாய் விட்டு வார்த்தை சொல்லவும் மாட்டாத இவளுடைய நோய்


நோயின் முதிர்த்திக்கு ஈடுபட்ட படி

கழி பெருந்தெய்வம்
மிகவும் பெரிய ஈஸ்வரன் அடியாக வந்தது

இன்ன-இந்நோய் இது என்று
இந்த நோய் இப்படிப்பட்டது என்று
ஸ்வரூப பிரகாரங்களைப் பரிச்சேதித்து

இன்மொழி கேட்கும்
இல்லாத மொழியைக் கேட்கப்படுவதான

இளந்தெய்வம் அன்று இது
இது அர்வாஸீன (தாழ்ந்த )தேவதை அன்று

வேல! நில் நீ
முருகனே -நீ வெறி யாடுகிற வேலனே -கடக்க நில்லு

என் மொழி கேண்மின்
இவள் பிரகிருதி அறிந்த என்னுடைய வார்த்தையை கேளுங்கோள்
ப்ரக்ருதி அறியாதே அசம்பாவிதத்தைச் சொல்லுகிற
கட்டு விச்சி
வேலன்
தொடக்கமானவர் வார்த்தையைக் கேளாதே என்று கருத்து –

என்னம்மனை மீர் !
மெய் சொல்லுகைக்கு அடியான பந்தமும்
ப்ரக்ருதி அனுகுணமாகப் பிரவர்த்திப்பிக்கும் வாத்சல்யத்தையும் யுடைய நீங்கள்

உலகு ஏழும் உண்டான் சொல் மொழி
ஸப்த லோகத்தையும் தனது வயிற்றிலே வைத்து நோக்கினவன் திரு நாமத்தைச் சொல்லுகை

மாலை யம் தண் யம் துழாய்
மாலா ரூபமாய்
தர்ச நீயமுமாய்க் குளிர்ந்த திருத்துழாய்

கொண்டு சூட்டுமினே –
சொன்மொழியைக் கொண்டு
திருத்துழாயைச் சூட்டுமின் என்று நேர் நிரல் நிறை
இந்நோய்க்கு பகவன் நாமமாகிற மந்த்ரத்தை உச்சரித்து
ப்ரஸாதமாகிற பசு மருந்தை சிரஸா வஹியுங்கோள்
என்றதாயிற்று –

இத்தால்
சின்மொழி நோய் -என்று
ஸ்வ காரியத்தில் ஸக்ருத் வசனமும் ஒழிய அறியாதவள் என்றபடி –

நோயாவது
அனுபவ அபி நிவேச ரூபமான பக்தி யோகம்

கழி பெருந்தெய்வம் -என்று
ஸமாப்யதிக ரஹித ஸர்வேஸ்வரன் என்றபடி
(ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் அன்றோ )

இந்நோய் இது என்று-இத்யாதியாலே
இந்த ஆர்த்தி ஏவம் விதம் என்று பர்ச்சேதிக்கலாம் படி
அஸத்ய ப்ரலாப ஸ்ரவண விஷயமான அர்வாஸீன தேவதைகளுக்கு ஸாத்யம் அன்று
ஆகையாலே
வேல நில் நீ -என்று
தேவதாந்த்ர அந்வயம் நிற்கப்படுவதாக என்றபடி

பிரதமத்திலே பகவத் சம்பந்தம் உடையோருக்கு அவதானித்துக் கழிக்க வேண்டுவது
தேவதாந்த்ர சம்பந்தம் ஓன்று இறே
பின்பு இறே
ஆர்த்தி பரிஹாரமும்
போக ஸித்தியும்

(பகவத் சேஷத்வத்திலும் அந்நிய சேஷத்வம் ஒழிகையே பிரதானம் )

என் மொழி கேண்மின் -என்று
ஆர்த்தி பரிஹாரம் -ஆப்த உபதேச மூலம் என்றபடி

என்னம்மனை மீர் ! -என்று
பிதா புத்ர ஸம்வாதம் போலே மூப்பு இளமையால் வரும் தாரதம்யம் இன்றியே
அறிவுடையார் உபதேஷ்டாக்கள் என்றபடி

உலகு ஏழும் உண்டான் சொல் மொழி -என்று
நாம உச்சாரண பேஷ ஜாத் நஸ்யந்தி சகலா ரோகா -என்கிறபடியே
ரக்ஷகனுடைய நாம உச்சாரணமே ஆர்த்தி சாந்தி கரம் என்றபடி

மாலை யம் தண் யம் துழாய் -என்று
போக்ய வஸ்து ஸம்ஸ்லேஷமும் ஆஹ்லாத ஜனன முகத்தாலே ஆர்த்தியை
சமிப்பிக்கும் என்றதாயிற்று

கொண்டு சூட்டுமினே –என்கையாலே
போக்ய விஷயத்திலே தலை வைக்கப் பண்ணி
அத்தாலே
நோ பஜநம் ஸ்மரன் -சாந்தோக்யம் -8-12- என்கிறபடியே
ஆர்த்தியை நினைக்கைக்கும் வழி இல்லை இறே

ஆகையால்
உபதேச மூலமான ஸப்த உச்சாரணமும்
போக்ய அந்வயமும்
விஸ்லேஷ ஆர்த்தி நிவர்த்தகம் என்றதாயிற்று –

———-

ஸ்ரீ நம்பிள்ளை -ஈடு
அவதாரிகை
காலமும் போய் மர முதிர்ந்து மேகங்களுமாகக் கை வளர்ந்து
நாயகனும் வாராமையாலே இவள் மோஹங்கதையாக
இத்தைக்கண்ட தாயார் தொடக்கமான பந்து வர்க்கமும் போய் அறிவு இழந்து
இவளுக்கு இது ஷூத்ர தேவதா ஆவேசத்தாலே வந்ததாக நினைத்து
பாஹ்ய ஆகமங்களைத் த்ருஷ்டியாகக் கொண்டு தேவதாந்தர ஸ்பர்சமுடையாரை
சிகித் சகரராய்க் கொண்டு சிகிச் ஸஹையிலே இழிய
இவள் பிரக்ருதியை அறிந்த தோழி யானவள்
இவர்கள் இவளை இழக்கும்படி வ்யாபரியா நின்றார்கள்
அவன் வந்திலனேயாகிலும் நாம் இவள் சத்தியை நோக்கி இட்டு வைப்போம் என்று பார்த்து
வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து -திருவாய் -4-6-8-என்கிறபடியே
வேதத்தைத் த்ருஷ்டியாகக் கொண்டு வேத தனரைத் தேசிகராய்க் கொண்டு
வேதாந்த வேத்யமான பரதத்வம் அடியாக வந்தது என்று புத்தி பண்ணி
இக்குடிக்கு அனுரூபமாகப் பரிஹரிக்கப் பாருங்கோள் என்று
பரிஹாரத்தைச் சொல்லி இவள் வெறி யாட்டத்தை விலக்குகிறாள்

வியாக்யானம்
சின் மொழி
கீழ்ச் சொன்ன தசா விசேஷம் தன்னையே சொல்லிற்றாகவுமாம்
அன்றிக்கே
சில கற்ப்பித்தவை சொல்லுமது ஒழியத் தானாக ஒன்றும் சொல்ல மாட்டாத படியன்றோ இவள் பருவம்
இப்பாவைக்கு வந்தது அவனடியாக வேண்டாவோ

சின்மொழி நோயோ
இவள் கொண்ட நோய் அறிந்து ஸர்வேஸ்வரன் அடியாக வந்தது என்னுதல்

அன்றிக்கே
சின் மொழி நோய் கழி பெரும் தெய்வம் ஓ
என்னவுமாம்
இவள் இந்நோய் கொள்ள பாக்யம் பண்ணுவதே
இது என்ன ஆச்சார்யமோ
நாம் இந்நோயைக் கொள்ளாதே
இதுக்குப் பரிஹாரம் பண்ணுவதாகப் புகுந்து அவிக்ருதிகளாய் இருப்பதே என்று
ஓ என்னவுமாம்

கழி பெரும் தெய்வம்
இவளுடைய இந்நோய் கழியப் பெரிதான பரதேவதை அடியாக வந்தது
இந்த்ராதிகளில் காட்டில் ப்ரஹ்மாதிகள் யுடைய ஐஸ்வர்யத்துக்கு ஏற்றம் உண்டே யாகிலும்
இருவருக்கும் ஷேத்ரஞ்ஞத்வம் அவிசிஷ்டம் இறே
சேஷித்வ ப்ரயுக்தமான இதர விஸஜாதியை யுள்ளது அவன் ஒருவனுக்கும்
ஸ்ருஜ்யத்வ கர்ம வச்யத்வ ஷேத்ரஞ்ஞத்வங்கள் இங்கு உள்ளார் எல்லாருக்கும் ஒக்கும் இறே

கழி பெரும் தெய்வம்
அவ்வருகு இல்லாத தத்வம்
பதிம் விஸ்வஸ்ய -தைத்ரியம்
பதிம் பதீ நாம் -ஸ்வேதாஸ்
தமீஸ் வரணாம் பரமம் மஹேஸ்வரம் -ஸ்வேதாஸ்
யதோ வாஸோ நிவர்த்தந்தே -தைத்ரியம்

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருவாய்மொழி வாசகமாலை — ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை–இரண்டாம் பத்து விவரணம்-

February 3, 2022

சந்தியும் சந்திப்பதமும் அவை தம்மிலே தழைக்கும்
பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலு கிற்பீர்
வந்தியும் வந்திப்பவரை வணங்கும் வகை அறிவீர்
சிந்தியும் தென் குருகூர் தொழுது ஆட் செய்யும் தேவரையே

நாத முனிக்கு அன்று நாலாயிரமும் உணர்த்தி
போதம் அருள் குருகூர் வித்தகனார் -கோதில்
திருவாய் மொழி வாசக மாலைத் தேனைத்
தரவே எனக்கு அருள் செய்தார் –

———-

வாயும் திரையுகளும் கானல் மடநாராய்
ஆயும் அமருலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
நோயும் பயலைமையும் மீதூர எம்மே போல்
நீயும் திருமாலால் நெஞ்சம் கோட்பட்டாயே –2-1-1-

வாயும் திரையுகளில் –
விலக்ஷணம் ஆகையாலே கலங்கி ஒரு பிராட்டி தசையைப் ப்ராப்தராய் –
கண்ணால் கண்ட பதார்த்தங்கள் எல்லாம் பகவத் அலாபத்தாலே நோவு படுகின்றனவாகக் கொண்டு
அவற்றுக்குமாக நோவு படுகிற பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

கீழில் திருவாய் மொழியிலே
மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர் அணியை -என்று
ஸுலப்யமும் -மேன்மையும்-வடிவு அழகும் -ஆகிற ஆகார த்ரயமும்
மேல் விழுகைக்கு உடலாகயாலே இவ்விஷயத்தை இப்போதே அனுபவிக்க வேணும் என்று
பாஹ்ய ஸம்ஸ்லேஷ அபேக்ஷை பண்ண —

அனுபவம் பெறாமையாலே பிறந்த அவஸா அதிசயத்தாலே ஒரு பிராட்டி தசையைப் ப்ராப்தராய் –
ஆற்றாமை கை கொடுக்கத் தன் லீல உத்யானத்திலே சென்று இருந்து
அங்கே வர்த்திக்கிற பதார்த்தங்களைக் கண்டு
அவை எல்லாம் தன்னைப் போலவே நோவு படுகின்றனவாகக் கொண்டு
தான் அவற்றுக்குமாக நோவு பட

அப்போது ஸர்வ ஸக்தனானவன்
இவர் அவஸாதம் எல்லாம் தீர வந்து ஸம்ஸ்லேஷித்த எம்பெருமானைக் குறித்து
இனி ஒரு நாளும் என்னைக் கை விடாது ஒழிய வேணும் என்கிறார் –

———-

வேவாரா வேட்கை நோய் மெல்லாவி யுள்ளுலர்த்த
ஓவாது இராப்பகல் உன் பாலே வீழ்த்து ஒழிந்தாய்
மாவாய் பிளந்த மருதிடை போய் மண் அளந்த
மூவா முதல்வா இனி எம்மைச் சோரேலே –2-1-10-

உயர்வற -என்கிற பாட்டை -வேவாரா வேட்கை நோய்-என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்

உயர்வற -வேவாரா -மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி -ப்ரஹ்மானந்தது அளவும் -லீலா விபூதியாய் -அதில் வர்த்திக்கிற பத்தரைச் சொல்கிறது –
அவர்கள் அர்த்த காமங்களிலே ஈடுபடா நிற்கையாலே ஸம்ஸார மக்நர் ஆனார்கள்

உயர் நலம் என்று
நித்ய விபூதியையாய் -அதில் வர்த்திக்கிற நித்யரைச் சொல்கிறது –
அவர்கள் ஸம்ஸ்லேஷ ஏக போகராகையாலே நித்ய ஆனந்த மக்நர் ஆனார்கள் –

இவர்
அங்கன் அன்றிக்கே –
வேவாரா வேட்கை நோய் மெல்லாவி யுள்ளுலர்த்த-
தாம் இரண்டு கோடியிலும் கூட்டு அற்று
பகவத் காமமானது அதாஹ்யமான ஆத்மாவைக் குருத்து வற்றாம்படி வேவா நின்றது –
லௌகிக அக்னிக்கு தஹிக்கக் கூடாத ஆத்மாவை ப்ரேமம் ஆகிற அக்னி தஹிப்பது ஆவியை இறே

இது எங்கனே அறிந்தீர் என்ன
மயர்வற மதி நலம் அருளுகையாலே அறிந்தேன் என்ன

அறிந்த படி என் என்ன –

மயர்வற மதி நலம் அருளின யுன்னிடத்தில் பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே

முன்பு சொன்ன ஸம்ஸாரிகள் உண்டு உடுத்து திவா ராத்ர விபாகம் பாராமல் திரிய
நித்யரும் முக்தரும் பகவத் அனுபவமே யாத்ரியாய் இருக்க
உபய விபூதியில் உள்ளார் படி அன்றிக்கே
வேவாரா வேட்க்கை நோயாலே
ஓவாது இராப்பகல் உன் பாலே வீழ்த்து ஒழிந்தேன்

மெல்லாவியை –அல்பப்ப்ராணனை –வேவாரா வேட்கை நோய் மெல்லாவி யுள்ளுலர்த்த
கூடோக்நிர் இவ பாதபம் -உள்ளேயே குமுறுகிற நெருப்பு மரத்தை எரிக்குமா போலே
உள்ளே பிடித்துப் புறம்பே வேவா நின்றது –

ஓவாது இராப்பகல் உன் பாலே வீழ்த்து ஒழிந்தாய்
அகப்பட்டாருக்கு மீள ஒண்ணாத உன் பக்கலிலே விழ விட்டுக் கொண்டாய் –
இப்படி யாக்கின நீ ஒருவரும் இல்லாதான் ஒருவனோ –

உயர் நலம் உடையவனாய் அயர்வறும் அமரர்கள் அதிபதியானவன்
மாவாய் பிளந்த மருதிடை போய் மண் அளந்த மூவா முதல்வா
சற்றும் அயர்வில்லாமல் ஆனந்த அம்ருத பானம் பண்ணும் நித்ய முக்தர் அனுபாவ்யமான நீ
கிருஷ்ணனாய் வந்து அவதரித்து கேசியை ஸம்ஹரித்து
யாமளார்ஜுனங்கள் நடுவே தவழ்ந்து போய்
மகா பலி அபஹரித்துக் கொண்ட பூமியை எல்லை நடந்து மீட்டுக் கொண்டு –

இப்படி உபகாரங்களைப் பண்ணினவான உன்னுடைய
துயர் அறு சுடர் அடி தொழுது எழப் பண்ணின
மூவா முதல்வா இனி எம்மைச் சோரேலே
இத்தனைக்கும் காரணனான நீ
சுடர் அடி தொழுது எழப் பண்ணின நீ
சோர விடாதே கொள்

கீழ் ஒன்பது பாட்டிலும்
நீயும் திருமாலால் நெஞ்சம் கோள் பட்டாயே என்று சம துக்கிகளைக் கட்டிக் கொண்டு அழக் கண்ட திருமால்
சகிக்க மாட்டாமல் வந்து அரதி யாற்றி சாந்தவதானம் பண்ணி

மூவா முதல்வா இனி எம்மைச் சோரேலே
சோம்பாது இப்பல்லுருவை எல்லாம் படர்வித்த எந்தாய்
புத்வா காலமதீதஞ்ச முமோஹ பரமா துர -பகவானைக் கண்டு அவனுக்கு அடிமை செய்யாமையாலே
ஏராளமான காலம் கடந்து விட்டது -அது தெரிந்தவாறே வருத்தம் தாங்காமல் மூர்ச்சை அடைந்தார் -என்க –
சீதா பிராட்டி பிரிவால் பெருமாள் மோஹித்தத்தை சொல்லும் ஸ்லோகம்
இதே போல் முன்புள்ள காலம் இழந்தாலும் மேல் உள்ள காலம் கை விடாதே கொள்
சுடர் அடி தொழுது எழு என் மனனே -நீயும் மூவா முதல்வனைச் சோரேல் -கிடாய் என்கிறார் –

——–

திண்ணன் வீடு முதல் முழுதுமாய்
எண்ணின் மீதியன் எம்பெருமான்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம்
கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே –2-2-1-

திண்ணன் வீட்டில்
பிரிந்தாரைக் கண்ணாஞ்சுழலை இடப்பண்ணுமோ பாதி
கூடினாலும் மறக்கும் படி பண்ணும் என்கிறார்

உயர்வற உயர்நலம் என்கிற பாட்டைத் திண்ணன் வீடு விவரிக்கிறது
எங்கனே என்னில்

உயர்வற -கீழில் திருவாய் மொழியிலே இவருக்குப் பிறந்த ஆற்றாமை பேச்சுக்கு நிலம் அன்று இறே

கடல் வெதும்பினால் விளாவ நீர் இல்லை -என்னுமா போலே ஆற்றாமையோடே முடியப் புக்கவாறே
அநந்தரம்
அவன் வந்து முகம் காட்டினவாறே ஆற்றாமை புக்க இடம் கண்டிலர் –

இதுக்கு அடி என் என்று ஆராயப் பார்த்தவாறே
இதர விஷயங்களினுடைய லாப அலாபத்து அளவல்லாத விஷய வை லக்ஷண்யமாய் இருந்தது –

இதுக்கு அடி என் என்று பார்த்தார்
ஸமஸ்த கல்யாண குணாத் மகனாகையாய் இருந்தது –

இது தனக்கு அடி என் என்று பார்த்தவாறே -ஸர்வேஸ்வரன் ஆகையாலே இருந்தது –

உயர்வற உயர் நலம் உடையவன் என்றால் அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இறே தோன்றுவது
இப்படி அறியும்படி மயர்வற மதி நலம் அருளினன் என்றது –

ஆக இங்கனே ப்ராசங்கிகமாக ப்ரஸ்துதமான ஸர்வேஸ்வரத்வத்தை அனுசந்தித்து அத்தை அருளிச் செய்கிறார் –

கீழே மூவா முதல்வா -என்று
காரணத்வம் ப்ரஸ்துதமானவாறே
அந்தக் காரணத்தை உபபாதிக்கிறார் என்று பிள்ளான் பணிப்பர் –

உயர்வற உயர் நலம் யுடையவன் யவன் அவன் என்று சொல்லிற்று இல்லையோ
ஸர்வேஸ்வரத்வம் என்னில் ஒரு கால் சொன்னோம் என்று கை வாங்கி இருக்க வல்லவர் அல்லர் இறே

ஒரு கால் சொல்லிற்று என்று கை வாங்கலாம் விஷயம் அன்று இது
இனித்தான் பகவத் விஷயத்தில் புனருக்தி தோஷாயவாகாது
ஒரு குணத்தையே எல்லாக் காலத்திலும் அனுபவிக்க வல்லார் இவர்

மயர்வற மதிநலம் அருளுகையாலே ஒரு குணம் தன்னையே இதுக்கு முன் அனுபவித்தது என்று தோற்றாத படி
க்ஷணம் தோறும் புதுமை பிறப்பித்து அபர்யாப்த்த அம்ருதம் -ஆராவமுதம் -ஆனவன் -இவனே இறே
பயிலா நிற்கச் செய்தே இறே -பண்டு இவரைக் கண்டு அறிவது எவ்வூரில் என்பது –

ஆகையாலே -உயர் நலம் உடையவனே காரணம் என்று -ஸ்ருதிப் பிரசித்தன் –
ப்ரமாதிகளைக் காரணம் என்கிறவர்களைக் குறித்து வெந்நரகில் விழாதே கிடி கோள்
பெற்ற தாய் இருக்க மணை வெந்நீராடாதே கிடி கோள்

உயர் நலம் யுடையவன் எவன் அவன் -திண்ணன் வீடு முதல் முழுதுமாய்
ஆனந்தாதி கல்யாண குணங்களிலே வைத்துக் கொண்டு ஒவ் தார்ய குணம் சொல்கிறார்

திண்ணன் வீடு
திருத்தமான வீடு -என்று ஆவிர்ப்பவாதிகளான கர்ம நிபந்தனமாக வரும் அழிவு இல்லை என்கை
இத்தால்
திண்ணம் என்று நித்ய விபூதி தொடக்கமான எல்லா விபூதியையும் யுடையவன் அவன் யவன் அவன்
மோக்ஷப் ப்ரப்ருத்-அசேஷ -புருஷார்த்த பிரதனனாவான் ஆகையாலே மயர்வற மதிநலம் அருளினன்

பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே அறியலாம் என்று பார்த்தாலும்
எண்ணின் மீதியன் எம்பெருமான்
அப்ராப்ய மனஸா ஸஹ -என்று
எண்ணுக்கும் எல்லை கடந்து இருக்கும் என்கை

ஓரோர் குணங்கள் வகையற எண்ணிறந்து இருக்கும் –
ஆக
அஸங்கயேயமான கல்யாண குணங்களை யுடைய எம்பெருமான் தன் குண விபூதிகளைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவன்
யாவன் ஒருவன் அவன் அமரர்கள் அதிபதி

மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம் கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே
அயர்வறும் அமரர்கள் -சற்றும் அயர்வு அல்லாமல் கைங்கர்யமே தாரகமான நித்ய முகத்திற்கு
அனுபாவ்யமானவன் யாவன் ஒருவன் அவன்
மண்ணும்
லீலா விபூதியில் பூமி அந்தரிக்ஷ முதலான லோகங்கள் எல்லாம் ஒருக்காலே அமுது செய்த
என் கிருஷ்ணனை அல்லது இல்லை –

எல்லா வகைகளாலும் நிர்வாஹகன் அவன் ஒழிய வேறு நிர்வாஹகர் யாரும் இல்லாத தான் யாவன் ஒருவன்
அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே -என்று தன் திரு உள்ளத்தைக் குறித்தும்
தம் நெஞ்சு போல்வாருக்கும் –
நம் கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே -ஆகையால்
ஹேய ப்ரத்ய நீகமான -வீடு முதலான ஸகல பல தோஹி விஷ்ணு -என்று
ஸர்வ பல ப்ரதமான தேஜஸ்ஸை யுடைய திருவடிகளைத் தொழுது
தாப த்ரயங்களும் மாறும் படி
பத்தாஞ்சலி புடா ஹ்ருஷ்டா என்கிறபடியே
தொழுது வர்த்தியுங்கோள் என்று
உபதேஸ கர்ப்ப அனுபவம் பண்ணுகிறார் –

———

ஊனில் வாழ் உயிரே! நல்லை, போ! உன்னைப் பெற்று
வானுளார் பெருமான் மதுசூதன் என் அம்மான்
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்தொழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே–2-3-1–

ஊனில் வாழ் உயிரிலே
ஆர்த்தி தீர வந்து ஸம்ஸ்லேஷித்த ஸம்ஸ்லேஷம் உள்ளளவு பட்டிராமையாலே
இப்பேற்றுக்கு உஸாத் துணை யாவார் யார் என்று பார்த்த இடத்தில்
ஸம்ஸாரிகளில் இல்லாமையாலே
அவன் தன்னோடே ஓக்க ப்ராப்யமருமாய்
அவனை நித்ய அனுபவம் பண்ணா நிற்பாருமாய்
பகவத் அனுபவத்துக்குத் தேசிகருமாய் இருக்கிற
நித்ய ஸூரிகள் திரளிலே போய்ப்புக்கு
போதயந்த பரஸ்பரம் பண்ணி அனுபவிக்கப் பெறுவது எப்போதோ என்று
அநா வாப்தியோடே தலைக்கட்டினார்

வாயும் திரை யுகளில் -ஸம்ஸ்லேஷித்த ஸம்ஸ்லேஷத்தைச் சொல்லுகிற இத்திருவாய் மொழி
நடுவு ப்ராசங்கிகமாக பரஸ்துததாம் அத்தனை

ஆற்றாமைக்கு அறிவு நடையாடாத திர்யக்குகளானவற்றை
நீயும் நான் பட்டது பட்டாயோ என்று அவற்றைக் கட்டிக் கொண்டு அழுதார் அங்கு

இங்கு பகவத் ஸம்ஸ்லேஷத்தால் வந்த ப்ரீதிக்கு அறிவு நை சர்க்கிகமான-இயற்கையாகவே உள்ள –
நித்ய ஸூரிகளை உஸாத் துணையாகத் தேடுகிறார்

———-

இனியார் ஞானங்களால் எடுக்கல் எழாத எந்தாய்!
கனிவார் வீட்டின்பமே! என் கடற்படா அமுதே!
தனியேன் வாழ் முதலே!! பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய்
நுனியார் கோட்டில் வைத்தாய்! நுன பாதம் சேர்ந்தேனே–2-3-5-

உயர்வற பாட்டை -இனியார் ஞானங்களால்-பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
உயர்வற -இனியார் ஞானங்களால்-
ப்ரஹ்மானந்தம் தொடங்கி மனுஷ்யானந்தம் அளவும்
யார் ஞானங்களால் எடுக்கல் எழாத எந்தாய்!
எத்தனையேனும் அதிசயித ஞானர் ஆனவர்களுடைய-ஞான விசேஷங்களாலும்
ஸ்வ யத்னத்தால் எடுப்பாருக்கும் அன்று
பேர்க்கப் போகாதே இருக்கிற என்னாயன் எவன் ஒருவன் அவன் மதி நலம் அருளினன்

கனிவார் வீட்டின்பம்
அஞ்ஞான கந்த ரஹிதமான பக்தி ரூபா பன்ன ஞானருடைய ஹ்ருதயங்களிலே வஸியா நிற்கிற

கடற்படா அமுதே!
அபர்யாப்த்த அம்ருதம் ஆனவனே
அன்றியே
அவர்கள் இருப்பிடங்களில் வந்து அவர்களுக்குப் போக்யமானவனே

இப்படி போக்யமானவன் யாவன் ஒருவன் அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன் அவன்
தனியேன் வாழ் முதலே
அசர்வு இல்லாத நித்யருக்கு போக்யனானவன்
அமரர்க்கு இன்பத்தை விளைக்குமவன்
அல்லாதாருக்கு அறிய ஒண்ணாதவன்
இவ்விரண்டு கோடியிலும் எண்ண ஒண்ணாது இருக்கிற எனக்கு அயத்ன ஸித்தமான போக்யனானவனே

தனியேன் வாழ் முதலே!
அயர்வறும் அமரர்கள் அதிபதியான நீ -தனியேன் வாழ் முதலாய் -மயர்வை அறுத்து –
மதி நலத்தை அருளின பின்பு
உபய விபூதியிலும் கூட்டு அற்றுத் தனியேனாய் நான் இருக்கக் கைமுதல் ஆனவனே

எனக்குப் பிரதான ஸூஹ்ருதம் ஆனவனே
ஏகாஷி ஏக கர்ணிகள் நடுவே இருப்பதற்கு அஸஹ்யமான படி இருக்கிற
எனக்கு வாழ் முதலானவனே

இப்படி ச நாதன தர்ம – அயர்வரும் அமரர்கள் அதிபதி
உபாய உபேயமும் தானே யாய் –
பகவத் அனந்தைக பரருக்கும் நித்ய முக்தருக்கும் போக்யனான

பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய் நுனியார் கோட்டில் வைத்தாய்
நீ தான் தனிமையில் வந்து உதவிற்று இல்லையோ
வராஹ ரூபியாய் பிரளயங்கதமான புவனங்கள் ஏழையும் எடுத்து –

நுனியார் கோட்டில் வைத்தாய்
கூர்மை மிக்க கோட்டு இடையிலே வைத்து ரக்ஷித்தாய்
இத்தால் ரஷ்ய வர்க்கத்தின் அளவு அல்லாத ரக்ஷகனுடைய பாரிப்பு சொல்லுகிறது –

இப்படி தனிமையிலே உதவி ரக்ஷிக்குமவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு
ஹேய பிரதிபடமாய் தேஜோ ரூபமான திருவடிகளான யுன் பாதம் சேர்ந்தேனே -என் மனனே

இமையோர் தலைவா இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்னும்படி
நீ அறிவு தந்த போதே உன் திருப்பாதம் சேர்ந்தேனே யன்றோ
அடியார்கள் குழாங்களுடன் இனி சுடர் அடி தொழுது உஜ்ஜீவிக்கும்
அத்தனை அன்றோ என்று உகக்கிறார்

———–

ஆடியாடி யகம் கரைந்து இசை
பாடிப்பாடி கண்ணீர் மல்கி எங்கும்
நாடி நாடி நரசிங்கா வென்று
வாடிவாடும் இவ்வாணுதலே –2-4-1-

ஆடியாடியில் ததீய ஸம்ஸ்லேஷத்தை ஆசைப்பட்டுப் பெறாமையாலே வந்த இழவாலே
பெற்ற ஸம்ஸ்லேஷமும் இழந்து அடியே பிடித்துக் கூப்பிட்டார்

கீழில் திருவாய் மொழியிலே
பருகிக் களித்தேனே என்று ஹ்ருஷ்டராய் -அது தன்னை
பாகவதர்களோடே உசாவித் தரிக்க வேணும் என்று பார்த்து
அதற்கு இவ்விபூதியில் ஆள் இல்லாமையாலே நித்ய ஸூரிகள் திரளிலே போய்ப் புக்கு
போதயந்த பரஸ்பரம் பண்ணி -அனுபவிக்கக் கோலி நினைத்த போதே அத்திரளிலே புகப் பெறாமையாலே
மிகவும் அவசன்னராய் தம்முடைய தசையை ஸ்வ கீயரான ஸ்ரீ வைஷ்ணவர்கள்
எம்பெருமானுக்கு அறிவிக்கிற படியை அந்யாபதேசத்தாலே பேசுகிறார் –

வாட்டமில் புகழ் வாமனனை இசை
கூட்டி வண் சடகோபன் சொல் அமை
பாட்டோராயிரத்து இப்பத்தால் அடி
சூட்டலாகுமே அந்தாமமே –2-4-11-

உயர்வற என்கிற பாட்டை -வாட்டமில் புகழ் -என்கிற பாட்டு விவரிக்கிறது -எங்கனே என்னில் –
உயர்வற -வாட்டமில் -மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்மானந்தம் அளவாக
ஸ்வ ஸ்வாமி சம்பந்தத்து அளவாக வருகிற உயர்த்தி அற்ற வாட்டமில் புகழ் வாமனன் –

உயர்நலம் உடையவனுக்கு வாட்டமாவது
இந்த விபூதி அந்நிய சேஷத்வ -ஸ்வ ஸ்வா தந்தர்யங்களாலே விஞ்சி
ஈஸ்வரோஹம் என்று இருக்கையாலே ஈஸ்வரத்தினுடைய வாட்டமாம்

சேஷித்வமும் ஸ்வா தந்தர்யமும் வாட்டம் உண்டாய் வருகையாலே -அது வாராமைக்காக
தன்னுடைமை பெறுகைக்கு தான் இரப்பாளானாய் மகா பலி பக்கலிலே மண்ணை இரந்தவாறே
அது பெற்ற பின்பு வாட்டமில் புகழ் வாமனன் என்கிறது அல்ல

என் ஆர்த்தியில் ஓதுத்திலன் ஆகில் அவன் புகழுக்கு வாட்டம் வரும் என்று
இவ்வளவிலே வந்து முகம் காட்டுகையாலே வாட்டமில் புகழ் வாமனன் என்கிறார்

ஒன்றிலே ஓன்று கண் நழுவாமல் வந்து இரந்து அளந்து கொண்டவன் என்கிறார் –
நீர் இது அறிந்தபடி என் என்ன
அவன் மதிநலம் அருளப் பெற்றவத்தால் வந்த பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே அறிந்தேன்

இசை கூட்டி வண் சடகோபன் சொல்
இசை கூட்டி –
ஸாம ரஸ உத் கானமானது -சடகோப வாங் மயம் என்று -ஸஹஸ்ர ஸாக உபநிஷத் -ஸமா கமமான
ஈர் ஐந்தினுடைய
இசை கூட்டி வண் சடகோபன் சொல் -என்று
லோகங்கள் எல்லாம் பிரசித்தமாம் படி மதி நலம் அருளினவன் யாவன் ஒருவன்
அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி
அஞ்ஞான அந்தகார ரஹிதரான நித்யரானவர்கள்
ஏதத் ஸாம காயானாஸ்தே -என்று சாமத்தின் இசை கூட்டி ஸஹஸ்ர சாகையை
அமை பாட்டோராயிரத்து இப்பத்து –
அமைந்த படி

மானஸ அனுபவ மாத்திரம் அன்றிக்கே
வாசகமாகி
நாட்டை வாழ்வித்த ஒவ்தார்யம் இது

அமை பாட்டோராயிரத்து இப்பத்தும்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் அடி சூட்ட ஸாம கணத்தில் இசை சற்று நாவறுதல் அற
ரஸ அனுபவத்தில் வந்த நித்ய முக்தருக்கு உத் கீதார்த்த ரச ஞானம் உடையவனான அவன்
துயர் அறு சுடர் அடி தொழுது

அமை பாட்டோராயிரத்து இப்பத்தால் அடி
சூட்டலாகுமே அந்தாமமே
ஹேய ப்ரத்ய நீகமாய் -ஸர்வ ஸமாஸ்ரயணீயமுமான திருவடிகளிலே
சாமசாகர்த்த மான ரசங்களாலே அமையப்பட்ட ஆயிரம் பாட்டுக்களிலும் வைத்துக் கொண்டு
இப்பத்துப் பாட்டையும் அதிகரிக்க வல்லார்க்கு
இச்செவ்வி மாலையைக் கொண்டு அவன் திருவடிகளிலே நித்ய கைங்கர்யம்
பண்ணப் பெறுவர் -என் மனனே

அடி சூட்டலாகுமே அந்தாமமே
வாசக மாலையை அடி சூட்டலாகுமே அந்தாமமே
பித்ரு தனம் புத்திரனுக்கு அனுபாவ்யமாம் போலே அனுபாவ்யமாம்
ஆழ்வார் கிலேசம் வேண்டா -அவர் பேறே இறே கற்றாருக்கும் பேறு
அடியார்கள் குழாங்களை உடன் கூடி அங்கு
அடியவரோடு இருந்து அனுபவிக்கப் பெறுவர் என்கிறார் –

———–

அந்தாமத் தன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு
அந்தாம வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரமுள
செந்தாமரைத் தடங்கண் செங்கனி வாய் செங்கமலம்
செந்தாமரை யடிக்கள் செம் பொன் திருவுடம்பே –2-5-1-

ஆடியாடியிலே ததீய ஸம்ஸ்லேஷத்தை ஆசைப்பட்டுப் பெறாமையாலே வந்த இழவாலே
பெற்ற ஸம்ஸ்லேஷமும் இழந்து அடியே பிடித்துக் கூப்பிடுகிறார் –

கீழ் ஆடியாடியிலே ஆழ்வாருக்குப் பிறந்த வியசனம் எல்லாம் மாறும் படியாக
அதந்த்ரித சமூபதி ப்ரஹித ஹஸ்தம் —
ஆர்த்த ரக்ஷணத்துக்காக பகவான் த்வரை யுடன் எழுந்து அருளும் பொழுது சேனை முதலியார்
தாங்கும் நிமித்தமாக காண்பிக்கப்பட்ட கையைக் கவனிக்காமல் -பெரிய த்வரையுடன் –
ஆயுத ஆபரணங்களை அக்ரமமாக -அரை குலைய தலை குலையத் தரித்துக் கொண்டு வந்து
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு வந்து உதவினால் போலே

இவரும் வலம் கொள் புள்ளுயர்த்தாய் -என்று கூப்பிடட ஆர்த்த நாதம் செவிப்பட்டு
அழகியதாக ஜகன் நிர்வஹிணம் பண்ணினோம் என்று பிற்பாட்டுக்கு லஜ்ஜித்து
தன்னுடைய ஸ்வரூப ரூப குண சேஷ்டிதங்களுக்கு ஒப்பவைகளான ஆயுத ஆபரணங்கள் சேர்ந்த சேர்த்தியோடே
வந்து ஸம்ஸ்லேஷிக்கக் கண்டு ஹ்ருஷ்டராய் பெற்ற பேற்றை உகந்து அனுபவிக்கிறார் –

சொல்லீர் என் அம்மானை என்னாவி யாவி தனை
எல்லையில் சீர் என் கருமாணிக்கச் சுடரை
நல்ல வமுதம் பெறர்க்கு அரிய வீடுமாய்
அல்லி மலர் விரையொத்தான் ஆண் அல்லன் பெண் அல்லன் –-2-5-9-

உயர்வற என்கிற பாட்டை -சொல்லீர் என் அம்மானை-என்கிற இப்பாட்டு விவரிக்கிறது –
எங்கனே என்னில்

மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்மானந்தம் அளவும் அவரவர்கள் பிரயாசத்தாலே ஆர்ஜிக்கிற
போக்யதா அனுபவங்களை எல்லாம் அல்பமாய் அஸ்திரமாய் அற்றது
ஆகையால் உயர்வற என்கிறது

இத்தை நீங்கள் அறிந்து கொண்டு
உயர் நலம் யுடையவன் என்னோடே வந்து -அந்தாமத்து அன்பு செய்து –
தனக்கு போக்ய போக உபகரண போக ஸ்தானங்கள் எல்லாம் என் அவயவங்களிலே யாம்படி கொண்டு அருளி
உயர்வற உயர் நலம் உடையவனாய் விளங்குகிற படியை

சொல்லீர் என் அம்மானை-
ஷூத்ர விஷயங்களை அனுபவித்து -அதுக்குப் பாசுரம் இட்டுக் கவி சொல்லி
இருக்கிற நீங்கள் சொல்ல வல்லீர்களோ

எல்லையில் சீர் என் கருமாணிக்கச் சுடரை–என் அம்மானை–
தன் குண சேஷ்டிதங்களாலே எனக்கு மயர்வற மதி நலம் அருளி
அந்த பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே என்னை சேஷத்வ முறையிலே நிறுத்தினவன் –

மயர்வற
அஞ்ஞான கந்த ரஹிதமான ஞான பக்திகளாலே ஆத்ம பரமாத்ம விவேக ஞானத்தை யுண்டாக்குகையாலே
என்னாவி யாவி தனை
என் ஆத்மாவுக்கு அந்தராத்மா வானவனை –

மதி நலம் அருளினன் என்று
கிருபா குண விசிஷ்டமான குணங்கள் கல்யாண குணைக தானமாகையாலேயும்
சவுந்தர்யாதி குண விசிஷ்டமான திவ்ய மங்கள விக்ரஹமும் புதுக்கணித்து தேஜோ மயமாயிற்று

யவன் அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி
அயர்வில்லாத நித்ய முக்தருக்குப் போக்ய பூதனானவன் யாவன் ஒருவன்
எல்லையில் சீர் என் கருமாணிக்கச் சுடரை
என்னோடே கலந்த பின் புகர் பெற்றானாய் இருக்கிற படி

நல்ல வமுதம்
அப்ராக்ருத போக்யங்களில் தலையான அம்ருதம் -அபர்யாப்த அம்ருதம் -ஆரா வமுதம்

பெறர்க்கு அரிய வீடுமாய்
ஒருவராலும் ஸ்வ யத்னத்தாலே பிராபிக்க ஒண்ணாத மோக்ஷ புருஷார்த்தமும் ஆனவன் யாவன் ஒருவன்
அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
இதர விஷயங்களில் போக ருசி அற்று –

நிரவதிக தேஜோ ரூபமான
அல்லிமலர் விரையொத்த
திருவடிகளை யுடையவன்

ஆண் அல்லன்
இதர புருஷ ஸஜாதீயன் அல்லன்

பெண் அல்லனே
அதுவும் அப்படியே யாகையாலே
உபய விஷய ஸஜாதீயன் அல்லன் என்றபடி

அவன் திருவடிகளைத் தொழுது உஜ்ஜீவி என்று திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –

———-

வைகுந்தா மணி வண்ணனே என் பொல்லாத் திருக் குறளா என்னுள் மன்னி
வைகல் வைகல் தோறும் அமுதாய வானேறே
செய்குந்தா வரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள்
செய்குந்தா உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கனவே –2-6-1-

அந்தாமத்து அன்பில் –
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொல் என்ற இவர் ஆசைப்பட்ட படியே வந்து கலந்தான் என்கிறார்
ஆடியாடியில்
ஆர்த்தி தீர வந்து ஸம்ஸ்லேஷித்த படி சொல்லித்து அந்தாமத்து அன்பு
அந்த ஸம்ஸ்லேஷத்தால் பிறந்த ப்ரீதி அவனது என்னும் இடம் சொல்லுகிறது
வைகுந்தா மணி வண்ணனில் –

சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள்
ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற் பின்
மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்காய் துளக்கற்ற அமுதமாய் எங்கும்
பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே –2-6-2-

உயர்வற -என்கிற பாட்டைச் -சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படா-என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
உயர்வற
மனுஷ்யானந்தம் தொடங்கி ப்ரஹ்மானந்தத்து அளவும் அல்பமான
காம்ய ரசங்களைப் புசித்து உயர்வு ஏற்றார்கள்

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
ஸர்வ ரஸ -என்கிறவன்
ஸர்வ ரசிகத்வமும் ஆழ்வாரோடே அனுபவிக்கைக்கு -இவ்விடத்தில் ஸர்வ ரக்ஷகத்வமும் செய்து இருந்தால்
இவரோடு ஐக ரஸ்யம் ஸித்தியாதே என்று அவற்றை எல்லாம் ஸ்வ ரஷிதமாக வைத்து
பின்னை அனுபவிப்போம் என்று பார்த்து
சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள் ஒக்கவே விழுங்கி
ஆழ்வார் திரு உள்ளத்திலே
சிக்கெனைப் புகுந்தான் –

ஜகத் ரக்ஷணத்துக்கு வேண்டுமாவை எல்லாம் தன்னுள்ளே யாக்கி அநந்ய பரனாய் அனுபவித்துப் போக மாட்டாதே இருந்தான்

இவர் திரு உள்ளத்திலே இருந்து செய்தது என் என்னில்
இப்படிவரும் ஜகத்துக்கு ஸர்வ ரக்ஷகத்வங்களும் இவர் இடத்திலே யாக வேணும் என்று
இவருக்கு மயர்வற மதி நலம் அருளினன்

பின் மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்காய்
மயர்வற இவருக்கு அந்யதா ஞான விபரீத ஞானங்கள் ஆகிற இருளைப் போக்குகைக்கு பக்தி ரூபா பன்ன மாகிற
மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்கை
நந்தா விளக்காகப் பிரகாசிப்பித்து -அத்தாலே தானும் விகஸித ஸகஜ ஸர்வஞ்ஞனாய்
விஜ்வரனுமாயிற்று
விக்ரஹமும் புகர் பெற்றது இப்போது ஆயிற்று –

ஆழ்வாரை அனுபவித்து -இப்படி விளங்கினவன் -யாவன் ஒருவன் -அவன் -அயர்வறும் அமரர்கள் அதிபதி –
அஞ்ஞானம் அசக்திகள் இல்லாத அமரர்கள் -அநந்த வைனதே யாதி ப்ரப்ருதிகள் –
த்ரிபாத் விபூதியும் அடங்காதவர்கள் பரிசர்யை பண்ண இருக்கும் ஸ்வாமி யானவன் –

துளக்கற்ற அமுதமாய்
அபர்யாய அம்ருதமாய்
ஆடியாடியில் பட்ட கிலேசம் தீர்ந்தான் தானாய் இரா நின்றான் –

இனி இவர் வள வேழுலகு தலையெடுத்து இவர் நம்மை விடில் செய்வது என்
என்று உள் நடுக்கம் தீர்ந்தது இப்போது ஆயிற்று –

துளக்கற்ற அமுதமாய்
அவன் இவரை அபர்யாப்த அம்ருதமாய் -பிரமுமோதஹ -என்கிறபடியே
அவன் தம்மை விரும்பி போக்யமாக நினைத்து இருக்கிற இருப்பு தமக்கு போக்யமாய் இருக்கிற படி –

இப்படி போக்ய பூதனானவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
துயர் -துளக்கம்
அற -அற்ற
அமுதமான சுடர் அடிகளைத் தொழுது உத்ஸாஹி –

அவன் நம்மைப் பார்த்தவருக்கு
எங்கும் பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே
எங்கும் பக்க நோக்கு அறியான்
அயர்வறும் அமரர்கள் -அநிமிஷராய் அபர்யாப்த அம்ருதம் அல்லது அனுபவியாதர்களையும் நோக்கு அறியான் –

ஆழ்வார் பக்கல் ப்ராவண்யத்தைத் தவிர்க்கலாமோ பார்ப்போம் என்று
நாச்சிமார் திரு முலைத் தடத்தாலே நெருக்கி அணைத்தாலும்
அவர்கள் பக்கல் கண் வைக்க மாட்டிற்று இலன்

என் பைந்தாமரைக் கண்ணன்
என் பக்கல் ப்ரீதியாலே விகசிதமான திருக்கண்களை யுடையவன்
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே என்கிறார் –

———-

அவதாரிகை

வைகுந்தா மணி வண்ணனில்
தன்னை இவர் பிரியில் செய்வது என் என்று அதி சங்கை பண்ண
பிடித்தேன் கொள் சிக்கெனவே -என்றும்
மாஸூச -என்றும்
சங்கையைத் தீர்த்து அவனை உளன் ஆக்கினார்

இவர் ஆடியாடியில் பட்ட கிலேசம் தீர
கேசவன் தமரில் –
இவ்வாழ்வார் உடன் கலைக்கையால் வந்த ப்ரீதி தான் இவர் ஒருவர் அளவிலும் இன்றிக்கே
இவரோடு ஸம்பந்த சம்பந்திகள் அளவும் வெள்ளம் இட்டுப் பெருகிறபடியை அருளிச் செய்கிறார் –

வந்து கலந்தபடி சொல்லி
அந்தாமத்து அன்பிலே
அக்கலவியால் பிறந்த ப்ரீதி அவனது என்னும் இடம் சொல்லுகிறது -வைகுந்தா மணி வண்ணனிலே
அந்தப் ப்ரீதி தான் இவர் ஒருவர் அளவிலும் அன்றிக்கே இவர் ஸம்பந்த சம்பந்திகள் அளவிலும்
வெள்ளம் இட்டுப் பெருகுகிற படி சொல்லுகிறது -கேசவன் தமரிலே -என்று கண்டு கொள்வது –

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்
மாசரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா
ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே–2-7-1-

உயர்வற என்கிற பாட்டைக் -கேசவன் தமர் -என்கிற பாட்டு -விவரிக்கிறது –
எங்கனே என்னில்
உயர்வற
மனுஷ்யானந்தம் தொடங்கி ப்ரஹ்மானந்தத்து அளவும் ஆழ்வார் உபதேசத்தால்
அந்நிய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்தர்யத்தாலே வந்த உயர்த்தி அற்று
சம்பந்த ஞானம் பிறந்து
கேசவன் தமர் ஆனார்கள் –

ஈஸ்வரனும் உயர்வற உயர் நலம் உடையவன் ஆனான்
தத கேசவ நாமா வான் என்கிறபடியே ஸர்வ நிர்வாஹகனான நிலையிலே தோற்று இருக்குமவர்கள் -என்னுதல்

ஸர்வேஸ்வரன் உடையார் என்றாயிற்று ஆழ்வார் இவர்களை விரும்புவது

எமர் என்று -ஆழ்வார் சம்பந்தம் கொண்டாயிற்று அவன் இவர்களை விரும்புவது

இத்தாலே ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் அபிமானமே வேண்டுவது அவன் விஷயீ கரிக்கைக்கு என்றபடி –

கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும் -கேசவன் தமர் -ஆனார்கள்
இப்படி அவர் திருத்துகைக்கு அடி என் என்னில்
கேசவ கிலேச நாசநன் -என்கிறவன் யாவன் ஒருவன் -அவன் மயர்வற மதி நலம் அருளுகையாலே
முன்னை வினை
பின்னை வினை
ப்ராரப்தங்கள்
தாப த்ரயங்களும் எல்லாம் நசித்தது
பக்தி ரூபா பன்ன ஞானம் பிறந்து பர உபதேசம் பண்ணித் நிறுத்தின படி

குலம் தாரயதே தாத ஸப்த ஸப்த ச ஸப்த ச -என்கிறபடியே
இப்படிச் சொன்னவன் யாவன் ஒருவன் அவன் பிரஸாதத்தாலே லோகமானது திருந்தப் பெற்றது

மா சதிர்
பகவத் கிருபை -மகத்தான சதிர்
கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்
மாசரிது பெற்றுக் கேசவன் தமர் ஆனார்கள் –

மா சதிர்
இந்த சதிர் தம்மளவு அன்றிக்கே
தம்மோடு ஸம்பந்த சம்பந்திகள் அளவும் வெள்ளம் இட்டுப் பெருகிற படி
மயர்வற மதி நலம் அருளுகையாலே -மா சதிர் இது பெற்று

தன் தலையாலே வந்ததாகில் இறே -ஸா வதி யாவது

இது பெற்று -ஞான பக்திகளைப் பெற்று

எவன் அவன் மேல் மேல் என இவர்களை சிரஸா வஹிக்கிற படி
நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா
ஸ்ரீ வைஷ்ணவ சம்பத்து வாய்க்கிற படி

எழு படி கால் என்ற அளவில்லை
தொட்டாரைத் தொட்டு இருபத்தொரு படி கால்
இன்னும் நம் அளவும் வருகிற படி

இப்படி உம் மக்களுக்கு அருளினவன் ஆர் என்ன
அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி
ததீய சேஷத்வத்தில் அளவில்லாத வைகுந்தத்து அமரரும் முனிவரும்
மங்களா ஸாஸனம் பண்ண இருக்குமவன்

ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன்
இப்படி விஷயீ கரித்ததற்கு ஹேது
ஸ்வாமி யாகையாலே -வடிவு அழகாலும் கண் அழகாலும் – என்னை அநந்யார்ஹன் ஆக்கினவன் –

அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன்
விண்ணோர் நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே
மா சதிர் பெற்றுத்
துயர் அடி தொழுது எழு என் மனனே

நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா
நித்ய ஸூரி ஸேவ்யனானவன் -நமக்கு ஸ்வாமியான உபகாரகன் ஆனவன் –
ஸர்வ சமாஸ்ரயணீயன் ஆனவன் திருவடிகளைத் தொழுது
நித்ய அஞ்சலி புடா ஹ்ருஷ்டா -என்கிறபடியே
கேசவன் தமரோடே வர்த்தி என்கிறார் –

———-

அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம்
புணர்வது இருவரவர் முதலும் தானே
இணைவனாம் எப்பொருட்கும் வீடு முதலாம்
புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே –2-8-1-

அணைவது அரவணையில்
அவனுடைய முக்த மோக்ஷ ப்ரதத்வத்தை அருளிச் செய்கிறார்

அணைவது அரவணையில்
நம்மோடே ஸம்பந்தமே ஹேதுவாக அவன் விஷயீ கரிப்பதான பின்பு
சம்சாரிகளுக்கு நம்மோடே ஒரு சம்பந்தம் உண்டாக்கி
அவன் கிருபைக்கு விஷயம் ஆக்குவோம் என்று பார்த்து
அவர்களுக்கு மோக்ஷ பிரதத்வத்தை அருளிச் செய்கிறார் –

உயர்வற என்கிற பாட்டை
அணைவது அரவணை-விவரிக்கிறது -அது எங்கனே என்னில் –
உயர்வற
மனஷ்யாநந்தம் தொடங்கி ப்ரஹ்மானந்தம் அளவாக
ஐஹிக ஆமுஷ்மிக போகமே உத்தேச்யம் என்று புஜிக்கிறவர்கள் ஆகையாலே உயர்வு அற்றார்கள்

உயர் நலம் என்று பர ப்ரஹ்மானந்தம் உடையவன் எவன் அவன் மோக்ஷ பிரதன் ஆனவன்

அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம் புணர்வது
முக்த ப்ராப்ய போகம் தான் இருக்கிற படி
பர்யங்க வித்யையில் சொல்லுகிறபடியே ஸர்வேஸ்வரனும் பிராட்டிமாரும் கூடி இருந்து
திருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே எழுந்து அருளி இருக்க இச் சேதனன் முக்தனாய்ச் சென்று கிட்டினால்
ஈஸ்வரன் கோசி என்றால்
அஹம் ப்ரஹ்மாஸ்மி– நான் ராஜ புத்ரன் -ப்ரஹ்ம பிரகார பூதன் -என்னக் கடவன்

ஆகில் இங்கனே போராய் என்று அவன் அங்கீ காரம் பெற்று
மாதா பிதாக்கள் இருந்த படுக்கையிலே பிரஜை சென்று ஏறுமா போலே
பாதே நான்ய ஆரோஹதி -என்று ஏறக் கடவன் என்கிறது –

அணைவது
தாபத்ரயங்கள் எல்லாம் ஆறும்படி அணைவது
புணர்வது-என்கிறது மூவருக்கும் ஒக்கும் படி பரிமாறினது

ஆக
சர்வேஸ்வரனும் பிராட்டியுமாக திருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே ஏறி இருக்க
இவனும் அனுமதியால் ஏற
அணைத்து மடியில் வைத்து உகந்து
கிரியதாம் இதி மாம் வத -என்று ஏவிக்கொள்ள அடிமை செய்கை முக்த ப்ராப்ய போகம் ஆகிறது

இவருக்கு இப் ப்ராப்யத்துக்கு சாதகம் ஏது என்ன
மயர்வற மதி நலம் அருளினன்
இவருடைய துர்க்கதி கண்டு -தன் நிர்ஹேதுக கிருபையாலே
பக்தி ரூபா பன்ன ஞானத்தைக் கொடுத்தது இதற்கு ஹேது

இப்படிப்பட்டவன் எவன் அவன்
இருவரவர் முதலும் தானே
ப்ரமாதிகளுக்கு காரணமாய் இருக்க
ஸ ப்ரம்மா ஸ சிவஸ் ஸேந்த்ர -என்கிற பிரஸித்தியாலே சொல்லுகிறார்
இவ்விபூதி கார்ய காரண ரூபத்தாலே சம்பந்தம் சொல்லிற்று
அவ்விபூதி போக பூமியாய் நித்தியமாய் இருக்கும் என்று சொல்லிற்று
இப்படி உபய விபூதிக்கும் நாயகனானவன் யாவன் ஒருவன் அவன் அமரர்கள் அதிபதி

ப்ரம்ம ருத்ராதிகளைப் போலே ஸம்ஸார பந்தகம் அல்லாமையாலே
அம்ருத ஸப்த வாசிகளாய் -அம்ருதம் திவி -வாசிகளாய் -அபர்யாப்த அம்ருத போகிகளாய்
இருக்கிற நித்ய ஸூ ரிகளாலே ஸேவ்யமானவன் மோக்ஷ பிரதன்

ப்ரம்ம ருத்ராதிகளுக்குக் காரணபூதனாய் நிர்வஹிக்கிறான் யாவன் ஒருவன் அவன்
எப்பொருட்கும்-இணைவனாம்
தேவாதி பதார்த்தங்கள் தோறும் ஸஜாதீயனாய் வந்து அவதரிக்கும்
எந்நின்ற யோனியுமாய் பிறக்கும்

இப்படி
ப்ரம்ம ருத்ராதிகள் நடுவே விஷ்ணு நாமாவாயும் உபேந்த்ரனாயும்
சக்கரவர்த்தி திருமகனாயும் வஸூ தேவ புத்ரனாயும்
மஹா வராஹமாயும் குப்ஜா மரமாயும்
தாம் பிறக்கிறது எதுக்காக என்னில்
உயிர் அளிப்பான்
வீடு முதலாம்
மோக்ஷ பிரதனாகைக்காகவே அன்றோ

பஷி பிசாசம் முதலானோருக்கும் மோக்ஷம் கொடுத்து ரஷிக்கைக்காக -என்ன
ஆனால் எல்லாரும் முக்தராக வேண்டாவோ பின்னை என்ன –

துயர் அறு சுடர் அடி தொழுது
பிறவிக்கடல் நீந்துவார்க்குப் புணைவன்
தேவதாந்த்ர பஜனாதிகளான துயர் அற்று மோக்ஷ ப்ரதனான ஸர்வ ஸ்மாத் பரனானவன் திருவடிகளை
என் மனனே
உனக்கு மயர்வற மதி நலம் அருளி மோக்ஷத்தையும் தன் நிர்ஹேதுக கிருபையால் தந்த உபகாரகனைத் தொழுது
ஸம்ஸாரம் ஆகிற பெரும் கடலை -அது யாராலும் கடக்கப் போகாதே –
பிரபலமான நீயே கடத்தித் தர வேணும் என்று பர ந்யாஸம் பண்ணி இருப்பார்க்கு
ப்ரதிபூவாய் நின்று கடத்திக் கொடுக்கும்

புணைவன்
புணையாம் அவன்
ஸர்வ பர நிர்வாஹகன் -ஆனவன்
என் மனனே தொழு

ஸம்ஸார சாகரம் கோரம் அநந்த கிலேச பாஜநம்
த்வாம் ஏவ சரணம் ப்ராப்ய நிஸ் தரந்தி மநீஷண
விஷ்ணு போதாஸ்ர யந்மே மன –என்னக் கடவது இறே
அக்கரையும் இக்கரையும் ஒன்றாய் நின்று கடத்தும் ஓடம் இறே –

———

எம்மா வீட்டுத் திறமும் செப்பம் நின்
செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லைக்
கைம்மா துன்பம் கடிந்த பிரானே
அம்மா வடியேன் வேண்டுவது ஈதே –2-9-1-

எம்மா வீட்டில்
ஸர்வேஸ்வரன் இவனுக்கு மோக்ஷம் கொடுப்பானாகப் பாரிக்கிற படியைக் கண்டு
அங்கே போகவுமாம் -இங்கே இருக்கவுமாம்
ஏதேனுமாக எனக்காக இருக்கும் இருப்புத் தவிர்த்து உனக்கே உறுப்பாம் படி
அதுவே எனக்கு வடிவாம்படி தந்து அருள வேணும் என்று ஸ்வ ப்ராப்யத்தை நிஷ் கர்ஷித்தார்

கீழே அணைவது அரவணையிலே
வீடு முதலாம் என்று தானும் அனுசந்தித்து
நலம் அந்தமில்லதோர் நாடு புகுவீர் -என்று பிறருக்கும் உபதேசிக்கக் கண்டு
ஸர்வேஸ்வரனும் இவருக்கும் இவர் பரிகரங்களுக்கும் மோக்ஷம் கொடுப்பதாகப் பாரிப்பதைக் கண்டு
தேவரீர் எனக்கு மோக்ஷம் தரப் பார்த்ததாகில் இங்கனே தரப் பார்ப்பது –

அதாகிறது
உனக்கு மோக்ஷம் கொள் என்று எனக்காகத் தருகை அன்றிக்கே
நமக்காகக் கொள் என்று -தேவரீர்க்கே ஆம்படி
ஸ்ரக் சந்த நாதிகளாக தேவர் கொள்ளும்படியாகத் தர வேணும் என்று
தான் நினைத்து இருந்தபடியைப் பிரார்திக்கிறார் –

உயர்வற என்கிற பாட்டை -எம்மா வீடு விவரிக்கிறது -எங்கனே என்னில்

உயர்வற உயர் நலம் எம்மா வீடு
ஐஹிக ஆமுஷ்மிகாதிகள் அன்று
உயர் நலமான வீடு கொள்ளும் என்றான் ஈஸ்வரன்
வேண்டா என்றார்
மா வீடு -வி லக்ஷணமான மோக்ஷம் கிடீர் -என்றான்
அதுவும் வேண்டா -என்கிறார்
எம்மா வீடு கிடீர் -ஐஸ்வர்ய கைவல்யாதிகள் -என்று இருக்க வேண்டா –
பரம புருஷார்த்த லக்ஷண மோக்ஷம் என்றான் –
அதுவும் வேண்டா என்றார்
இவைகள் எல்லாம் எம்மா வீட்டுத் திறங்கள்

செப்பம் -செப்போம்
எவ் வகையாலும் உயர்நலம் உண்டே யாகிலும் எனக்கு வேண்டா

செப்போம் -செல்லோம் —
நீயும் ப்ரசங்கிக்க வேண்டாம்
நானும் நிஷேதிக்க வேண்டா

எம்மா வீட்டுத் திறமாவது
ஸா லோக்ய ஸா ரூப்ய ஸா மீப்ய ஸா யுஜ்யம் என்ற இவைகள்

உமக்கு இப்படி அறியும்படி உபதேசித்தார் யார் என்ன
உயர் நலம் உடையவன் எவன் அவன் -எனக்கு மதிநலம் அருளினன் –
எனக்கு -என்கிற
மயர்வு அறுத்து
அத்யந்தம் பரதந்த்ரனாம் படி அருளினன்

ஆகில் உமக்கு வேண்டுவது என் என்ன
நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து
அகவாய் சிவந்து புறவாய் கறுத்து
மஹத்தாய்
மணத்து மலர்ந்த திருவடித் தாமரைகளை அடியேன் தலையிலே வைக்க வேணும் –
நீ நிர்ஹேதுகமாக அருளின பக்தியைப் பெறுகையாலே இதுவே அமையும் –

எவன் அவன் -அயர்வறும் அமரர்கள் அதிபதி –
நிமிஷமும் விஸ்லேஷிக்கப் பொறாத நித்யருக்கு நிர்வாஹகனானவன்
துயர் அறு சுடர் அடியான பாத பற்பை
ஆகிஞ்சன்யமும் அநந்ய கதித்வமும் உள்ளவனான என் சிரஸ்ஸையே அலங்கரிக்கையை

ஒல்லை
இந்த அர்த்தித்தவம் இப்போதே செய்து அருள வேணும் –

நாம் இப்படி சீக்கிரமாக யாருக்குச் செய்தோம் என்ன
கைம்மா துன்பம் கடிந்த பிரானே
அயர்வறும் அமரர்கள் அதிபதியான நீ
அதந்த்ரித சமூபதி ப்ரஹித ஹஸ்தம் -என்று
பதறிக் கொண்டு வந்து தோன்றி யானையின் துயரம் தீர்த்தவன்
செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லை யிலே அருள வேணும்

கொக்குவாயும் பிடி கண்ணியும் இட்டால் போலே
கழற்றாமல் ஆதரிக்க வேணும் –

அம்மா வடியேன் வேண்டுவது ஈதே
ஸ்வாமியான உன் துயர் அறு சுடர் அடி
துக்க அந்தகாரமான காள ராத்ரிக்கு அவிவேக கந அந்த திங் முகத்திலே
பிரளய காலத்திலே ஸூர்யனைப் போலே என் ஹ்ருதயத்திலே உதித்தும்
போக்கும் திருவடிகளைத் தொழுது எழு என்று
அனுபவ கர்ப்ப உபதேசம் பண்ணுகிறார் –

——–

கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்
வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்
வளர் இளம் பொழில் சூழ் மாலிரும் சோலை
தளர்விலராகில் சார்வது சதிரே –-2-10-1-

கிளர் ஒளி இளமையில்
எம்மா வீட்டில் நிஷ் கர்ஷித்த ப்ராப்யம் பெறுகைக்குத் திருமலையை ஆஸ்ரயித்தார்

—–

சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது
அதிர்குரல் சங்கத்து அழகர் தம் கோயில்
மதி தவழ் குடுமி மாலிரும் சோலை
பதியது வேத்தி எழுவது பயனே –-2-10-2-

உயர்வற என்கிற பாட்டைச் -சதிரிள மடவார்-என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
உயர்வற -சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது-
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் சதிராவது –
ப்ரம்ம பாவன நிஷ்டரையும் தங்கள் வசம் ஆக்குகை

பருவத்தால் வந்த இளைமையாலும் மோஹிப்பிக்கை –
பவ்யர்களாய் இருந்து வஸீ கரிக்கிற சதிராகையாலே உயர்வற என்கிறது –

மடவார்கள் தாழ்ச்சியை மதியாதே
அவர்கள் தங்கள் ஆகிஞ்சன்யம் தோன்ற வணங்கி ஒடுங்கி யாயிற்று வஸீ கரிப்பது
அவர்கள் பக்கல் மனஸ்ஸை வைக்காதே –
இது நெடு நாளவற்று உயர்த்தி கொளே இனி யமையும்

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
சவுந்தர்ய சீலாதி குணங்களை யுடையவனானவன் பக்கலிலே மனஸ்ஸை
வைமின் என்ன

அவன் உங்களுக்கும் மயர்வற மதிநலம் அருளுகைக்காகாவே திருமலையிலே
வந்து நிற்கிறவன் –

அதிர்குரல் சங்கத்து அழகர்
மயர்வு பிறப்பிக்கும்
மடவார் தாழ்ச்சியை மதியாதே என்றும்
மதியிலே நலமான ஞான பக்தி வைராக்யம் பிறக்கும் படி
அதிர்குரல் சங்கத்து அழகர்
ஊதுகிற குழல் போலே சங்கம் முழங்குகிற படி –

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
அயர்வரும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
அதிர்குரல் சங்கத்து அழகர்

சவுந்தர்யாதிகளிலே கண் வைக்காதே -அடிமை செய்து இருக்கும் படிக்கு –
நித்யர்
முக்தர்
முமுஷுக்கள்
பத்தர்
கர்ம பாவநா நிஷ்டர்
ப்ரஹ்ம பாவநா நிஷ்டர்
ஐஸ்வர்யார்த்திகள்
கைவல்யார்த்திகள்
எல்லாரும் அவரவர் பேறு பெறுகைக்காக –

மதி தவழ் குடுமி மாலிரும் சோலை பதியது வேத்தி எழுவது பயனே
துயர் அறு சுடர் அடி தொழுது எழுவது பயனே
சந்திரன் தவழும்படி ஓங்கின கொடி முடியை யுடைய
மாலிருஞ்சோலை மலையை
பருத்து உயர்ந்த சோலையை யுடைய மலையையே

பதியதி ஏத்தி
அழகர் நித்ய வாஸம் செய்கிற பதியான கோயிலிலே
நலம் திகழ் நாரணன் துயர் அறு சுடர் அடி
ஸர்வ ஸமாஸ்ரயணீயமான திருவடிகளைத் தொழுது

என் மனனே
எழுவது பயனே -என்று
தம் நெஞ்சுக்கும் நெஞ்சு போல்வாருக்கும் உபதேசித்து
உபதேச கர்ப்ப அனுபவம் பண்ணுகிறார் –

———–

இரண்டாம் பத்து விவரணம் முற்றிற்று

———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய்மொழி வாசகமாலை — ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை–முதல் பத்து விவரணம்–

February 1, 2022

ஸ்ரீ திருவாய்மொழி வாசகமாலை நூலை இயற்றியவர் ஒரு வைணவப் பெண்மணி.
இவரது பெயர் ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை. காலம் 13 ஆம் நூற்றாண்டு.
ஸ்ரீ திருவாய்மொழிப் பாடல்கள் சிலவற்றிற்கு எழுதப்பட்டுள்ள விவரண சதகம்.

பொதுவாகச் சைவ, வைணவ மரபுகளில் சமய ஆசாரியருடைய நூல்களே செல்வாக்குப் பெறுவது வழக்கம்.
அல்லாதார் நூல்கள் மக்களிடம் அவ்வளவாகப் பரவுவது இல்லை. அவ்வாறு பரவாமல் போன நூல்களில் இதுவும் ஒன்று.

நம்மாழ்வார் திருவாய்மொழி 1102 பாடல்களைக் கொண்டது. அதில் 164 பாடல்கள் தெரிந்தெடுக்கப்பட்டு
அவற்றிற்கான விரிவுரை கூறுவது இந்த நூல்.
திருவாய்மொழியில் 10 அல்லது 11 பாடல்களைக் கொண்ட பகுதி ஒரு பதிகம். 10 பதிகங்களைக் கொண்டது ஒரு பத்து.
இவ்வாறு 10 பத்துக்கள் சேர்ந்ததே திருவாய்மொழி.
இவ்வாறு அமைந்துள்ள திருவாய்மொழி நூலிலிருந்து ஒவ்வொரு பதிகத்திலிருந்தும் முதல்-பாடல் அல்லது முதல்-இரண்டு-பாடல்
விரிவுரைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு எடுத்துக்கொள்ளப்பட்ட பாடல்களே 146.
இந்தப் பாடல்களுக்கு விவரண சதகம் பாடும்போது அந்தந்த பதிகத்தில் அடங்கியுள்ள பாடல்கள்
அனைத்துக்குமான தொகுப்புப் பொருளையும் இந்த நூல் குறிப்பிட்டு மணிப்பிரவாள நடையில் கூறுகிறது.

———-

பூழியர் கோன் தென்னாடு முத்துடைத்து -பாண்டிய நாட்டின் ஒரு பகுதி -வழுதி நாடு -தலைநகர் -திருக்குருகூர்
கோவிந்தன் தனக்கே குடி அடியாரான வேளாள குல மன்னர் -திருவழுதி வள நாடர்
இவர் திருக்குமாரர் -அறம் தாங்கியார் -செந்நெறிச் செல்வர்
இவர் திருக்குமாரர் சக்ரபாணியார்
இவர் திருக்குமாரர் -அச்சுதர்
இவருக்கு செந்தாமரைக் கண்ணர் என்றும் பொற் காரியர்
இருவரும் திருக்குமாரர்கள்
பொற் காரியாரது திருக்குமாரர் காரியார்
இவரே நம்மாழ்வாரைத் தோற்றுவித்து உலகை உய்வித்த புண்ணிய புருஷர் –

திரு வண் பரிசாரம் திருப்பதியில் -திருவாழ் மார்பணிந் செல்வப்புதல்வியார் -உடைய நங்கையார் -ஆழ்வாரது திருத்தாயார்

திருக்குறுங்குடி நம்பி நாமே உங்களுக்கு புதல்வராவோம் என்று அருளிச் செய்து ஆழ்வார் திரு அவதாரம்

ஆதி சேஷன் முன்னமே திருப்புளிய மரமாக திரு அவதரித்தார்
கலியுகம் –43 நாள் -வைகாசி -விசாகம் -இவர் திரு அவதாரம் -சேனை முதலியார் அம்சம் –
உலகு இயல்புக்கு மாறாக இருக்க மாறன் என்று திரு நாமம் சாத்தினார்கள்

மதுரகவி ஆழ்வார் -செத்தத்தின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடைக்கும் -கேள்வி
அத்தைத் தின்று அங்கே கிடைக்கும் -பதில்

அசேதனத்தில் ஆத்மா புகுந்து மாறி மாறி பிறவி சூழலில் உழன்று இருக்கும் என்றும்
அஞ்ஞானத்தில் உழன்று தேகம் போன்ற ஆத்மாவுக்கு கொஞ்சம் ஞானம் ஆச்சார்யர் மூலம் பெற
இதுக்கும் -அத்தைத் தின்று அங்கேயே கிடக்கும்

திவ்ய தேச எம்பெருமான்கள் தங்கள் பரிவாரங்களுடன் திருப்புளிய மரத்தில் காட்சி கொடுத்து பாடல்கள் பெற்று மகிழ்ந்தனர் –

———

அர்த்தபஞ்சகம் -ஒவ்வொன்றுக்கும் இரண்டு பதிகங்கள் திருவாய் மொழி என்றும் உண்டே

ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் -முதல் இரண்டு பத்துக்கள்
உணர் முழு நலம் -முழு உணர் முழு நலம் -ஞான ஆனந்த ஸ்வரூபம்
ப்ராப்துஸ் ச ப்ரத்யகாத்மந -அடுத்த இரண்டு பத்தும் –
ப்ராப்த் யுபாயம் -அடுத்த இரண்டு பத்தும்
பிராப்தி விரோதி அடுத்த இரண்டு பத்தும்
பலம் ப்ராப்தோ -கடைசி இரண்டு பத்தும் –

த்வயார்த்தமே திருவாய் மொழி -தீர்க்க சரணாகதி -சார ஸங்க்ரஹம்

தோன்றா உபநிஷத் பொருள் தோன்றலுற்றார் தமக்கும் சான்றாம் இவை –

ஆயிர மா மறைக்கும் அலங்காரம் யாரும் தமிழுக்குப்
பாயிரம் நாற் கவிக்குப் படிச் சந்தம் பனுவற்க்கு எல்லாம்
தாய் இரு நால் திசைக்கும் தனித்தீபம் தண்ணம் குருகூர்ச்
சேய் இரு மா மரபும் செவ்வியான் செய்த செய்யுட்களே

ஆரா வமுதம் கவி யாயிரம்
என்று எல்லாம் கம்ப நாட்டாழ்வார் சடகோபர் அந்தாதி

—————

தேசிகரும் –
தமிழ் வாதம் அறிந்த பகவர்களே
செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித் தெளியாத மறை நிலங்கள் தெளிக்கின்றோமே
சந்தமிகு தமிழ் மறையோன் தூப்புல் தோன்றும் வேதாந்த குரு
ஸூர்யனால் மலரப் பெற்ற தாமரைக்காடுகள் -அவன் திருக்கண்கள் -ரகுவீர கத்யத்தில் -ஆழ்வார் பாசுரங்கள் கொண்டே –
புண்டரீகத்து அங்கேழ் வனமோர் அனைய கண்ணான் -23–திரு விருத்தப் பாசுரம்

முதல் -23-பாசுரங்கள் கொண்டே ஸ்ரீ பாஷ்யார்த்தம் –

——-

வேதம் தமிழ் செய்த மாறன் –

ஸ்வரூப பரமான அருளிச் செயல்கள்

உயர்வற உயர் நலம் உடையவன் -1-1-1–ஸ ஏகோ ப்ரஹ்மண ஆனந்த ஆனந்தோ ப்ரஹ்ம -தைத்ரியம்
இனன் உணர் முழு நலம் -1-1-2-விஞ்ஞானம் ஆனந்தம் ப்ரஹ்ம -ப்ருஹதாரண்யம்
மிகுநர் இலனே -1-1-2- ந தத் ஸமஸ் ச அப்யதிகஸ் ச த்ருஸ்யதே -ஸ்வேதா
பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை -3-7-1-நாராயண பரஞ்சோதி -தைத்ரியம்
பரஞ்சோதீ –3-1-2-பரம் ஜோதி ரூப ஸம்பத்ய –சாந்தோக்யம்

பங்கயக்கண்ணனை -3-7-1-யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ -சாந்தோக்யம்
செம் பொன் திரு உடம்பே -2-5-1-ஆ ப்ராணதாத் ஸர்வ ஏவ ஸூ வர்ண -சாந்தோக்யம்
எண்ணின் மீதியன் எம்பெருமான் –2-2-1-அப்ராப்ய மனஸா ஸஹ -தைத்ரியம்
சொல் அளவன்று -8-2-6- யதோ வாஸோ நிவர்த்தந்தே
இமையோர் தமக்கும் எல்லையிலாதன கூழ்ப்புச் செய்யும் -8-2-6-யஸ்யா மதம் தஸ்ய மதம் மதம் யஸ்ய ந வேத
ஸ அவிஞ்ஞாதம் விஜா நதாம் விஞ்ஞாதம் அவிஜா நதாம் -கேனோ
என் வல் வினை மாய்ந்தறச் செய்குந்தன் –7-9-7-ஸர்வே பாப்மாந பர தூயந்தே -சாந்தோக்யம்
கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ -7-5-1- யத்ர நாந்யத் பஸ்யதி நாந்யத் ஸ்ருணோதி நாந்யத் விஜாநாதி ச பூமா -சாந்தோக்யம்

காரண பரமான அருளிச் செயல்கள்

முதல் தனி வித்தேயோ -10-10-8–ஏகோ ஹவை நாராயண ஆஸீத் -மஹா உபநிஷத்
தானோர் உருவே தனி வித்தாய் –1-5-4-ப்ரஹ்ம வா இதம் ஏக மேவ அக்ர ஆஸீத் -ப்ருஹதாரண்யம்
மூவாத் தனி முதலாய் –2-8-5—ஆத்மா வா இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ -ப்ருஹதாரண்யம்
நினைத்த எல்லாப் பொருள்களுக்கும் வித்தாய் –1-5-2–ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ -சாந்தோக்யம் –

ஸ்ருஷ்டி வாக்யங்கள்

பாமரு மூ வுலகும் படைத்த –7-6-1- தத் ஈஷத லோகாந்நு ஸ்ருஜா இதி –சாந்தோக்யம்
தானே உலகு எல்லாம் தானே படைத்து –10-5-3-இதம் ஸர்வம் ஸ்ருஜத -தைத்ரியம்
எல்லா உலகும் உயிரும் தானேயாய் –10-7-2-ஸத் ச த்யச்சா பவத் -தைத்ரியம்
யாவையும் எவையும் தானாய் –3-4-10-ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம -சாந்தோக்யம் –

காரண கார்ய நிபந்தன சாமாநாதி கரண்யம்

பெரிய அப்பனைப் பிரமன் அப்பனை உருத்திரன் அப்பனை –8-1-11-நாராயணாத் பிரம்மா ஜாயதே நாராயணாத் ருத்ரோ ஜாயதே

ஆத்ம சரீரபாவ நிபந்த சாமா நாதி கரண்யம்

ஓர் உயிரேயோ உலகங்கட்க்கு எல்லாம் –8-1-5—அந்தர்யாமி ப்ராஹ்மணம் ப்ருஹதாரண்யம்
கரந்த சில் இடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும் கரந்து எங்கும் பரந்துளன் —1-1-10-யச்ச கிஞ்சித் ஜகத் யஸ்மிந்
த்ருஸ்யதே ஸ்ரூயதே பிவா அந்தர் பஹிஸ் ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித –தைத்ரியம் –
தானேயாகி நிறைந்து –10-7-2–தேநேதம் பூர்ணம் புருஷேண ஸர்வம் -தைத்ரியம்
முதலில் சிதையாமே –1-5-2-பூர்ணம் ஏவா வஸிஷ்யதே –ஸ்வேதாஸ்வரம்
பெரிய நீர் படைத்து அங்கு உறைந்து –8-1-5–ஆபோ வா இதம் அக்ரே சலிலம் ஆஸீத் தஸ்மிந் ப்ரஜாபதிர் வாயுர் பூத்வா சரத் –தைத்ரியம்

ஏனமாய் நிலம் கீண்ட –5-7-6-தாம் வராஹோ பூத்வா ஹரத்
வன் மா வையம் அளந்த எம் வாமனா –3-3-2-விசக்ரமே ப்ருதிவீ மேஷ ஏதாம் -புருஷ ஸூக்தம்
எல்லையில் சீர் -2-5-9-விபூதீ நாம் நாஸ்த்யந்தோ விஸ்தரஸ் யமே -கீதை
தானே யாள்வானே –10-5-3-அந்த ப்ரவிஷ்டா ஸாஸ்தா ஜநா நாம் ஸர்வாத்ம -தைத்ரியம்
அயனாம் சிவநாம திருமாலால் -8-8-11
அரியை அயனை அரனை அலற்றி -10-10-11-

அவனே அவனும் அவனும் அவனும் -9-3-2—ச ப்ரம்மா ச சிவ சேந்த்ர -தைத்ரியம்
கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் –5-6-1—தத் ஹைதத் பஸ்யன் ருஷி வாமதேவ பிரதிபேதே அஹம் மனுரபவம் ஸூர்யச்ச
தன்மை பெறுத்தி -3-7-7–ஸ்வேந ரூபேணே அபி நிஷ்பத்யதே -சாந்தோக்யம் –
நல்ல வமுதம் –2-5-9-இதம் அம்ருதம் -ப்ருஹதாரண்யம்
இல்லத்தாரும் புறத்தாரும் மொய்த்து –8-8-8—ஞாதய பர்யுபாஸதே ஜாநா ஸிமாம் ஜாநாஸி மாமிதி –சாந்தோக்யம்

இனிப்பிறவி யான் வேண்டேன் –10-6-1—லிந்து மாபிகாம் –சாந்தோக்யம்
மாக வைகுந்தத்து மகிழ்வு எய்துவர் வைகலுமே –5-10-11- தத் விஷ்ணோ பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய-தைத்ரியம் –
மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவாவோ –8-1-5–தமீஸ்வரணாம் பரமம் மஹேஸ்வரம்
ஆர் உயிரேயோ –8-1-5–பிராணஸ்ய ப்ராணா –கேந உபநிஷத்
கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும் –9-1-1–ததேதத் ப்ரேயஸ் புத்ராத் பிரேயோ மித்ராத் ப்ரேயோ வித்தாத் –ப்ருஹதாரண்யம்
நல்ல பதத்தால் மனை வாழ்வார் கொண்ட பெண்டிர் மக்களே –8-10-11-நாஸ்யா ப்ரஹ்ம வித் குலே பவதி -முண்டகம் –

சந்தங்கள் ஆயிரத்து –10-9-11-தத் சந்தஸாம் சந்தஸ்த்வம் ப்ரஹ்மவை சந்தாம்ஸி -தைத்ரியம்
பொறி யுணர்வு அவை இலன் –1-1-2-யத் தத் அத்ரேச்யம் அக்ராஹ்யம் –முண்டகம்
யாவையும் யவரும் தானாய் அவரவர் சமயம் தோறும் தோய்விலன் –3-4-10-ஏகஸ் ததா ஸர்வ பூத அந்தராத்மா ந லிப்யதே லோக துக்கேந பாஹ்ய -கட
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர் –4-1-1–ஸ்வோபாவா மர்த்யஸ்ய யதந்த கைதத் –கட
தோற்றங்கள் ஆயிரத்துள் –6-8-11–வாசா விரூப நித்யயா -தைத்ரியம்

நாரணற்கு ஆள் அன்றி ஆவரோ –7-5-2-ப்ரஹ்ம தம் பராதாத் –ப்ருஹதாரண்யம்
இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி –10-7-5–ஏதஸ் யை வைதாநி ஸர்வாணி நிச்வஸிதாநி –ப்ருஹதாரண்யம் –
பல பிறப்பாய் –1-3-2—பஹுதா விஜாயதே -புருஷ ஸூக்தம்
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் -6-7-1–வாஸூ தேவம் ஸர்வம் இதி –கீதை –

————–

உயர்வற உயர் நலம் யுடையவன் எவன் அவன் –

நிர்ஹேதுகமாக ஸ்வரூப ரூப குணங்களையும் நித்ய ஸூரிகள் அதிபதியாயும்-நிர்வாஹகானாயும் –
இருக்கும் இருப்பையும் காட்டிக் கொடுக்க –
ப்ரத்யக்ஷமாக அனுபவித்த ஆழ்வார் -அனுபவ ஜெனித ப்ரீதி உந்த -இன்ப வெள்ளத்தை
வாயினால் பாடி அல்லது தரிக்க மாட்டாமல் பேசுகிறார் –

உயர்வு அற -வருத்தம் இல்லாமல்
மற்றவர்கள் உயர்வு அறும் படி -இல்லாமல் போகும்படி –
ஸூர்யன் ப்ரகாஸத்தால் நக்ஷத்திரங்கள் இருந்தும் இல்லாதவை போல் இருக்குமா போல் –

உயர் –
அளவிடமுடியாத -எல்லை காண முடியாமல் உயர்ந்து கொண்டே இருக்குமே
தொல்லை யஞ்சோதி நினைக்குங்கால் என் சொல் அளவு அன்று -இமையோர் தமக்கும் எல்லையிலாதன கூழ்ப்புச் செய்யும் –
நலம் -ஆனந்த குணம் -எண்ணற்ற கல்யாண குணங்கள் –
ஸமஸ்த சேதன அசேதன விஸிஷ்ட விபூதிகள் -மூன்று அர்த்தங்களும் உண்டு –

யவன் -அவன் என்பதால்
இந்த கல்யாண குணங்கள் அவனை அடைந்து நிறம் பெறுகின்றன

ச ஏகோ ப்ரஹ்மண ஆனந்தோ -(தைத்ரியம் )
ந தத் சமஸ் சாப்யதிகஸ் ச த்ருஸ்யதே -(ஸ்வேதாஸ்வரம் )
நிரஸ்த அதிசய ஆஹ்லாத ஸூக பாவ ஏக லக்ஷணா (ஸ்ரீ விஷ்ணு புராணம் )

கோந் வஸ்மின் ஸாம் பிரதம் லோகே குணவான் (ஸ்ரீ மத் ராமாயணம் )
குணவான் என்றதே இங்கு நலமுடையவன்

த மேவம் குண ஸம் பன்ன மகா மயதமேதி நீ
பஹவோ ந்ருப கல்யாண குணா புத்ரஸ்ய சந்திதே
அஹம் அஸ்ய அவரோ ப்ராதா குணைர் தாஸ்யம் உபாகத (ஸ்ரீ மத் ராமாயணம் )

கேவல அனுபவ ஆனந்த ஸ்வரூப பரம ஸ்வராட் (ஸ்ரீ மத் பாகவதம் )

ப்ரூதே காதா ஸஹஸ்ரம் முர மதந குணஸ் தோம கர்ப்பம் முனீந்திர -தேசிகன்

மனுஷ்ய- -கந்தர்வ -சிரலோக பித்ருக்கள் -ஆஜானஜ தேவர் -கர்மதேவர் -தேவர் –
இந்திரன் -ப்ருஹஸ்பதி -பிரஜாபதி -ப்ரஹ்மானந்தம் -சொல்லி
மீண்டும் கீழே வந்து -இப்படி பல மடங்குகள்

உபர் யுபர் யப்ஜபுவோபி பூரு ஷாந் பிரகல்ப்ய தேயே சதம் இத் யனு க்ரமாத் க்ரஸ்த்வ
தேகைக குணாவ தீப்ஸயா ஸதாஸ்திதா நோத்யமதோதி சேரதே

யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ

சுடரடி -திவ்ய மங்கள விக்ரஹம் உப லக்ஷணம்
சுடர் ஒளி மூர்த்தியை
மாசூணாச் சுடர் உடம்பாய்

அர்த்த பஞ்சகமும் இதில் உண்டே
உயர்வற உயர் நலம் உடையவன் -அயர்வறும் அமரர்கள் அதிபதி -பர ஸ்வரூபம்
என் மனனே -அதிகாரி ஸ்வரூபம்
மயர்வு -விரோதி ஸ்வரூபம்
அருளினன் -உபாய ஸ்வரூபம்
தொழுது எழு -ப்ராப்ய ஸ்வரூபம்
உபதேச கர்ப்ப அனுபவம் -அனுபவ கர்ப்ப உபதேசம் –

——–

எம்பெருமானார் -அடுத்தபடி
சந்திரிகிரி ஐயன்
ஸ்ரீ மன் நாராயண ஐயர்
திருக்கோஷ்டியூர் ஜீயர்
என்று மூவரையும் குறிப்பிட்டு பின்பு
வடக்குத் திருவீதிப்பிள்ளை பற்றியும் – குறிப்பிடுகிறார்

எனவே
இப்பிரபந்த கர்த்தா -பெண்பிள்ளை -ஸ்ரீ வடக்குத் திரு வீதிப்பிள்ளை ஸ்வாமிகளுடைய சிஷ்யை-
ஸர்வஜித் வருஷம் இவர் திரு அவதாரம்
அதுக்கு அடுத்த ஆங்கீ ரஸ வருஷம் இவரது
கலி யுகாதி -சக வருஷங்கள் எண் குறிப்பிட வில்லை
ஆங்கீர வருஷம் -மார்கழி -26-தேதி இப்பிரபந்தம் வெளியிட்டதாகக் குறிப்பிடுகிறார் –

நிர்ப்பரோ நிர்பயோஸ்மி -ந்யாஸ விம்சதி கடைசி ஸ்லோகத்தை இவர் காட்டி உள்ளதால்
தேசிகருக்குப் பிற்பாடாராக இருக்க வேண்டும் –
ஸ்ரீ மா முனிகள் திரு நாமம் இந்த நூலில் இல்லை
ஆகவே அவருக்கு முன் திரு அவதரித்தவராக இருக்க வேண்டும்
ஆகவே 1270-1370-காலத்துக்குள் இவர் அவதாரம்

ஈட்டில் உள்ள ஸ்ரீ ஸூக்திகளையே கொண்டு வந்துள்ளது இப்பிரபந்தம் –
இவ் வுரை நூறு பாட்டுக்களுக்கே உள்ளது
தஞ்சை ஸரஸ்வதி மஹாலில் உள்ள ஒரே சுவடு -ஆசிரியர் தமது கையாலேயே எழுதப்பட்டது –

ஸரஸ்வதி மஹால் ஓலைச்சுவடிகள் 700 வருஷங்கள் பழைமை என்பதால்
இது இவரே எழுதின ஓலைச் சுவடியாக இருக்க முடியாது –

இணைவனாம் எப்பொருட்க்கும் -என்கிறபடி -முதல் பாசுரம் மற்ற எல்லா பாசுரங்களுடன் இணைக்கப் பட்டு
அவற்றுடன் பொருள் ஒன்றி இருப்பதை நன்கு விளக்குகிறது இந்நூல்
வருந்தி நான் வாசகமாலை கொண்டு -என்ற ஆழ்வார் அருளிச் செயலுக்கு ஏற்ப
திருவாய் மொழிச் செய்யுள்களையே வசன நடையில் தொகுத்தால் போலே அமைந்துள்ள இந்நூலுக்கு
திருவாய் மொழி வாசக மாலை என்று பெயர் இடப்பட்டுள்ளது –

உயர்வற உயர் நலம் உடையவன் கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் -என்று சேர்த்து
உயர்வற -உயர்த்தி அற்ற லீலா விபூதியை -ஈர் ஏழு லோகங்களை –
உயர் நலம் உடையவன் -அவ்வெம்பெருமான் இருப்பிடமாகிய நித்ய விபூதியைச் சொல்லும்
கங்குல் -இரவு -பகல் -இருள் தரும் மா ஞாலம் -நித்ய விபூதி -பகல் -இவற்றை உடையவன் உயர் நலம் உடையவன் –
தத் விஷ்ணோ பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய
இப்படி ஸ்வா பதேச அர்த்தங்களையே இவ்வாறு இணைத்து அருளிச் செய்கிறார் –

இதே போல் ஆழி எழ பாதிக்கத்துக்கு உயர்வற உயர் நலம் உடையவனே வாமனன் என்று
கொண்டு பொருத்திப் பொருள் விளக்குகிறார் –

சந்தியும் சந்திப்பதமும் அவை தம்மிலே தழைக்கும்
பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலு கிற்பீர்
வந்தியும் வந்திப்பவரை வணங்கும் வகை அறிவீர்
சிந்தியும் தென் குருகூர் தொழுது ஆட் செய்யும் தேவரையே

நாத முனிக்கு அன்று நாலாயிரமும் உணர்த்தி
போதம் அருள் குருகூர் வித்தகனார் -கோதில்
திருவாய் மொழி வாசக மாலைத் தேனைத்
தரவே எனக்கு அருள் செய்தார் –

———

இந்த ஏட்டில் மூன்று சித்ரங்கள் வரையப்பட்டுள்ளன
தமிழ் மறை தந்து அருளிய -ஆராவமுதாழ்வார் -பாம்பணையில் பள்ளி கொண்டு அருள
நடுவில் பராங்குச நாயகி -ஞான முத்ரையுடனும்
வலப்புறம் கண்ணன் யசோதா பிராட்டியால் உரலினோடு இணைத்துக் கட்டப்பட்டு -இரண்டு மருத மரங்களும்
இவ்வாறு ஒலை யிலே சித்திரம் வரைவதும் சகஜம் போல் அன்று இருந்தது போலும்

——–

அவதாரிகை
ஸ்ரீயப்பதியான ஸர்வேஸ்வரன்
இவ்விருள் தரும் மா ஞாலத்திலே ஓடி ஓடிப் பல பிறவிகளிலும் தோன்றித் தோன்றி
எல்லையற்ற துன்பங்களை அனுபவித்துத் தன் உண்மையான ஸ்வரூபத்தை மறந்து தவிக்கும்
எண்ணற்ற ஜீவாத்மாக்களை உய்வித்து நற்கதியை அடைவிப்பதற்காகத் தோற்றுவித்த
தத்துவ உபதேச திவ்ய பிரந்தங்களுக்குள்
திருவாய் மொழி எனப்படும் செஞ்சொல் கவிகள் ஆயிரமும் ஒன்றாகும் –

இது மதிநலம் அருளப்பெற்ற -உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம் பெருமான்
என்று இருந்த நம்மாழ்வாரால் அருளிச் செய்யப்பட அந்தாதித் தொடையில் அமைந்த சரம பிரபந்தம்

ஆழ்வார் அவனுடைய ஸ்வரூப ரூப குண சேஷ்டித விபூதியை யாதாத்ம்யமாக காட்டப்பட்டு அறிந்து
அருளிச் செய்த -பொய்யில் பாடல்கள் -தேனினும் இனிய தமிழ் பாசுரங்கள்
ஆழ்வாரை வியாஜமாக எம்பெருமானே -தானே தன்னைப் பாடிய வாய் முதல் அப்பன் –

இவற்றில் நூறு பாடல்களுக்கே இந்த உரை -விவரண சதகம் என்று தாமே திருநாமம் சூட்டி அருளுகிறார்
இதில் முதல் 13 ஏடுகளும் -15-16- ஏடுகளும் லுப்தம்
இப்பொழுது கிடைத்த ஏடுகளில் 1-6 -தொடங்கி உள்ளது –

————-

பரிவதில் யீசனைப் பாடி விரிவதில் மேவலுறுவீர்
பிரிவகை யின்றி நன்னீர் தூய்ப் புரிவதுவும் புகைப் பூவே –1-6-1-

தத் ஆஸ்ரயணீயன் யார் என்ன -மயர்வற மதிநலம் அருளினன்
அத்தாலே
தேவதாந்தர பஜனம் அற்று
அருளின பக்தியால்
ஸூகரமாக
பகவத் சமாஸ்ரயணம் பண்ணப் பெற்றேன்

நீங்களும்
விரிவது மேவலுறுவீர்
அயர்வரும் அமரர்கள் அதிபதியானவனை ஆஸ்ரயித்து
விஸ்த்ருதராக-விரிந்த -மழுங்காத ஞானம் உடையராய் – வேண்டி இருப்பீர்

பிரிவகை யின்றி நன்னீர் தூவி
சற்றும் அசராமல் ஆஸ்ரயிக்கிற
நித்யருக்கு அதிபதியாய்
நியாந்தா வானவனைத் துயர் அறு சுடர் அடி தொழுது

பிரிவகை யின்றி -அயோக்யன் என்று அகலாதே
நன்னீர் தூய்ப் -ஏலாதி ஸம்ஸ்காரங்கள் வேண்டா
துயர் அறு சுடர் அடிகள் ஆகையாலே
புரிவதுவும் புகைப் பூவே -ஏதேனும் புகையும் பூவும் அமையும்
கள்ளார் துழாயும் -இத்யாதி

சுடர் அடி தொழுது எழு என் மனனே
இப்படி
ஸூலபமுமாய் –
ஸூ கரமான திருவடிகளைத் தொழுது வர்த்தி -என்கிறார் –

———–

பிறவித் துயர் அற ஞானத்துள் நின்ற -துறவிச் சுடர் விளக்கம் தலைப் பெய்வார்
அறவனை ஆழிப் படை அந்தணனை மறவியை இன்றி மனத்து வைப்பாரே –1-7-1-

பிறவித் துயரில்
கீழ்ச் சொன்ன ஆஸ்ரயணீயம் தான் போக ரூபமாய் இருக்கும் என்கிறார் –
இப்படி போக்யனானவனை விட்டுப் ப்ரயோஜனாந்தரத்தைக் கொண்டு அகலுவதே -என்று
கேவலரை நிந்திக்கிறார்

உயர்வற என்கிற பாட்டைப் பிறவித் துயர் என்கிற பாட்டு விவரிக்கிறது –
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும்
காம்ய பலன்களையும்
அதுக்கும் அவ்வருகான கைவல்யத்தையும் பெறுவதே என்று கேவலரை நிந்திக்கிறார் –

உயர்வு அற
பிறவித துயர் அற
ஸ்வர்க்காதிகளில் கைவல்யத்தில் உயர்த்தி யுண்டோ என்ன
அவற்றுக்கு ஒரு வகையாலும் உயர்வு இல்லை என்கிறது -பரமானந்தத்தைப் பற்றச் சொல்கிறது –

அற ஞானத்துள் நின்ற
உயர் நலம் உடையவன் எவன் அவன்
ஞான ஆனந்தாதி ஸ்வரூபம் ஆனவன்
மயர்வற மதிநலம் அருளினன்
பரமானந்த ஸ்வரூபத்தைப் பற்றி
ஜரா மரண மோஷாயா -என்றதை அறிந்து
ஆத்ம அனுபவ ஞானத்தில் ஞானம் முற்றி இருக்கை –
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனை நோக்குகிற மதி நலம் அருள பெற்று அவனாலே

துறவிச் சுடர் விளக்கம் தலைப் பெய்வார்
பிரகிருதி விநிர் முக்தமான ஆத்ம ஸ்வரூபத்தைப் பிராபிக்க வேண்டி இருப்பார்

அறவனை
அயர்வறும் அமரர்கள் அதிபதி யாவன் ஒருவன்
அவன் ஆழிப்படை அந்தணனை
அசர்வற்று
அபர்யாப்த்த அம்ருத ஆனந்த மக்நரான நித்ய ஸூரி சேவ்யனை அகன்று
ஆத்ம அனுபவத்திலே மூளத் தேடுவதே
ஏதேனும் ஒன்றைத் தேடிப் பெறும் போது அவனை ஆஸ்ரயித்துப் பெற வேண்டும்படி இருக்கிற
இது -என்ன தார்மிகனோ -என்கிறார் –

ஆழிப் படை அந்தணனை
துயர் அறு சுடர் அடி தொழுது எழு
ஆத்ம அனுபவ விரோதியைப் போக்கிக் கொள்வதே -சுத்தி குண விசிஷ்டன் என்றதாயிற்று
அவர்கள் பற்றுற்றும் என் மனனே
சுடர் அடி தொழுது எழப் பெற்றோமே

ஆழிப் படை அந்தணனை மறவியை இன்றி மனத்து வைப்பாரே –
அந்திம ஸ்ம்ருதி இல்லையாகில் பழைய ஸம்ஸாரமே ஸித்திக்கும் என்கிறார் –

———–

இவையும் அவையும் உவவையும் இவரும் அவரும் உவரும்
எவையும் எவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என்னமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே –1-9-1-

அருகலிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன்
கருகிய நீல நன்மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன்
பொருசிறைப் புள்ளுவந்தேறும் பூ மகளார் தனிக் கேள்வன்
ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே –1-9-3-

அருகலிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன்
பூர்ணனுமாய் இருக்கிறவன் -யாவன் ஒருவன் –அயர்வறும் அமரர்கள் அதிபதி –
அமரர்கள் ஆதி முதல்வனானவன் –
அக்குணங்களை நித்ய ஸூரிகள் அனுபவிப்பிக்க –அவர்கள் தம் அதீனமாம் படி இருக்கிறவன் –

மயர்வற மதிநலம் அருளினன்
அஞ்ஞான கந்த ரஹிதமான -பக்தி ரூபா பன்ன ஞானத்தை
தன் நிர்ஹேதுக கடாக்ஷத்தினாலேயே பூரித்தவன் யாவன் ஒருவன்
தன்னோடு ஏக ரஸம் அனுபவிக்கும் படி பக்தி ரூபா பன்ன ஞானத்தை அருளினவன் –

கருகிய நீல நன்மேனி வண்ணன்
தம்மோடு உண்டான அவயவ அனுபவம் பண்ணினவற்றால் வந்த திருமேனியில் புகர்
கருத்து நெய்த்துப் பேசுகைக்க விஷயமாம் படி யாயிற்று –

செந்தாமரைக் கண்ணன்
அகவாயில் குணங்களுக்குப் பிரகாசகமான திருக்கண்களை யுடையவன்
எனக்கு மயர்வான அவித்யாதிகளைப் போக்கி
ஞான பக்தியாதிகளாலே தன்னோடு ஐக ரஸ்யம் பிறந்து அனுபவிக்கும் படி
பண்ணினவற்றால் வந்த என்னவா
தன்னதாம் படி
திருமேனியும் திருக்கண்களும் செவ்வி பெற்று விகஸிதமாய் யுகக்கிறவன்
யாவன் ஒருவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி
சற்றும் அசராதே ஏக ரஸ அனுபவ மக்நரானவர்களும் ரசிக்கிற ஸ்வாமி யானவன் –

பொருசிறைப் புள்ளுவந்தேறும் பூ மகளார் தனிக் கேள்வன்
ஸர்வேஸ்வரன் பெரிய திருவடியை மேற் கொள்ளுவதாகக் கடாக்ஷித்தால்
அவனுடைய அங்கீ காரம் பெற்றால்
அந்த ஹர்ஷத்தால் பெருக்காறு சுழித்தால் போல்
தன்னில் தான் பொரா நின்றுள்ள சிறகை யுடையவனாய்க் கொண்டு யாயிற்று த் தோற்றுவது –

இன்னம் -அவனை மேற்கொள்ளப் பெற்றோம் இறே -என்று திரு உள்ளத்திலே ப்ரீதியோடே யாயிற்று மேற் கொள்ளுவது –

பூ மகளார் தனிக்கேள்வன்
புஷ்பத்தில் பரிமளம் வடிவு கொண்டால் போலே இருப்பவளாய்
போக்யதை ஏக வேஷையான பெரிய பிராட்டியாருக்கு வல்லபன் என்றால்
இரண்டாம் விரலுக்கு ஆள் இல்லாதவனாய் யாவன் ஒருவன் இருக்கிறான்
அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே

அவன் பண்ணின மஹா உபகாரம் மட்டில்லை என்ன
அது ஏது என்ன
ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன்
திருவனந்த ஆழ்வானுக்குப் படுக்கையால் வந்த முறை
திருவடிக்கு வாகனமான முறை
பிராட்டிமாருக்கு மஹிஷியான முறை
ஸ்ரீ சேனாதிபதி ஆழ்வானுக்கு செங்கோல் செலுத்தின முறை
இப்படித் தனித்தனியே முக்தர் நித்யருக்கு முறை முறையால் வரும் கைங்கர்யங்கள் எல்லாம்
அவர் அவர்களோடே பரிமாறும் பரிமாற்றம் எல்லாம் இவருக்கு ஒரு வழியால் வந்தது அன்றிக்கே
சர்வ வித ரஸத்தையும் தந்து விடுகிறிலன்
என் அளவில் நித்ய முக்தர்கள் எல்லார் அளவிலும் பண்ணும் ஆதரத்தை
என் பக்கலிலே பண்ணா நின்றான் –

ஒழிவிலன் என்னோடு உடனே
இவன் ஒரு விபூதிமான் -அந்ய பரன் என்று தோற்ற இருக்கிறான் –
நித்ய விபூதியில் கேள்வியும் இங்கேயே இருந்து கேட்க்கும் அத்தனை

தண் தாமம் செய்தது என்று நித்ய விபூதியில் பண்ணும் ஆதரத்தைப் பண்ணினார் என்றார்
கீழில் திருவாய் மொழியில்
இதில் அவ்விபூதியில் உள்ளார் உடன் பரிமாறும் படியை என் ஒருவன் இடம் பரிமாறா நின்றான் என்கிறார் –

பூசும் சாந்திலே -இவர் அவயவங்களை சந்தன புஷ்ப்பமாகக் கொண்டான்
இதில் போக வஸ்துக்களாயும் போக ஸ்தானங்களாயும் கொண்டான்

ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே
நீயும் ஓர் அனுபவம் குறையாமல் துயர் அறு சுடர் அடி தொழுது அனுபவித்து எழு
என் மனனே -என்கிறார் உபகார ஸ்ம்ருதியாலே –

—————

பொருமா நீள் படை ஆழி சங்கத்தொடு
திருமா நீள் கழல் ஏழ் உலகும் தொழ
ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக்
கரு மாணிக்கம் என் கண் உளதாகுமே –1-10-1-

பொருமா நீள் படையில்
இப்படிப்பட்ட பேற்றுக்கு இத்தலையில் ஒன்றும் செய்ய வேண்டாத படி
ப்ராதிகூல்ய நிவ்ருத்தி தொடக்கமாக -பரமபக்தி பர்யந்தமாகத் தானே பிறப்பித்து
நித்ய ஸூரிகள் பேற்றையும் தந்தான் என்கிறார் –

கீழில் திருமொழியில் பிறந்த ஸர்வாங்க ஸம்ஸ்லேஷத்தை அநுஸந்தித்து உச்சி யுள்ளே நிற்கும் என்று இறே கீழ் நின்றது
பேற்றில் இனி இதுக்கு அவ்வருகே ஏற்றமாகச் செய்து கொடுக்களாவது இல்லை என்று நிர் வ்ருத்தராகிறார் என்று முன்புள்ள முதலிகள் நிர்வஹிக்கும் படி –
நிர் வ்ருத்தி என்று ஸூ கமாக ஸூ கிக்கிறார் என்றபடி

கீழே பிறந்த ஸர்வாங்க ஸம்ஸ்லேஷத்தை அனுசந்தித்துச் சொல்லுவது ஓர் ஏற்றம் உண்டு
உச்சியுள்ளே நிற்கும் என்று இறே -கீழ் இதுக்கும் மேல் ஏற்றமாக –பண்ணிக் கொடுக்கிறான் என்று பட்டர் அருளிச் செய்தார்

நீர் தாம் இங்கனே கிடந்தது படுகிறது என்
மறந்து பிழைக்கலாகாதோ என்ன
எத்தைச் சொல்லி மறப்பேன் என்கிறார் –

———–

நம்பியைத் தென் குறுங்குடி நின்ற அச்
செம்பொனே திகழும் திரு மூர்த்தியை
உம்பர் வானவர் ஆதி யஞ்சோதியை
எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ –1-10-9–

உயர்வற -என்கிற பாட்டை இப்பாட்டு விவரிக்கிறது எங்கனே என்னில்
உயர்வற என்று
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்மானந்தம் அளவாக லீலா விபூதி யோகம் சொல்லுகிறது
உயர் நலம் உடையவன் என்று
நித்ய விபூதி யோகம் சொல்லுகிறது
யவன் அவன் என்று –
உபய விபூதியிலும் அதிசயிதமான த்ருதீய விபூதிக்கும் நிர்வாஹகனான நம்பியை
பூர்ணமானவனை
நம்பியைத் தென் குறுங்குடி நின்ற அச் செம்பொனே திகழும் திரு மூர்த்தி-என்கிறது –

இப்படிப் பரிபூர்ணமானவன் எனக்கு மயர்வற மதி நலம் அருளித் தன் ஸ்லாக்யமான
பரத்வாதிகளில் காட்டில்
அர்ச்சக பராதீனமான திவ்ய மங்கள விக்ரஹத்தைக் காட்டிப் பரத்வாதிகளிலே
மனஸூ போகிற மயக்கத்தை அறுத்து

அர்ச்சாவதாரத்திலும் திருக்குறுங்குடி நம்பியை ஒழியப் போகாமல்
மனன் அக மலம் அறும் படி பண்ணி
இப்படி மயர்வற மதிநலம் அருளினவன் யாவன் ஒருவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் -என்றும்

உம்பர் வானவர் ஆதி யஞ்சோதியை
இப்படி நித்ய ஸூரி ஸேவ்யனாய்
ஆதி காரணமான பரஞ்சோதியை மறப்பது என்
அஞ்ஞான கந்த ரஹிதரான மேலாத் தேவர்களுக்கும் நிலத் தேவர்களுக்கும்
காரணமானவனை மறக்க விரகு உண்டோ –
இப்படி உபகாரகனானவனை மறக்க விரகு உண்டோ –

துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
மறக்க ஒட்டாத் திருவடிகள்
உன் மறப்பாகிற துயர் அறுக்கும்
அஞ்ஞான அந்தகாரம் நீக்கி -ஞானப் ப்ரகாஸம் ஆகிற பரஞ்ஜோதிஸ்ஸூ
உனக்கு விளக்காகக் காட்டும் திருவடிகளைத் தொழுது எழப் பண்ணின
எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ

அபூர்ணன் என்று மறக்கவோ
அஸந்நிஹிதன் என்று மறக்கவோ
வடிவு அழகு இல்லை என்று மறக்கவோ
மேன்மை இல்லை என்று மறக்கவோ
எனக்கு உபகாரன் அல்லன் என்று மறக்கவோ
எத்தைச் சொல்லி மறப்பேன் -என்கிறார் –

முதல் பத்து விவரணம் முற்றிற்று –

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திரு விருத்தம் – -பாசுரங்கள் -2-10–ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் -வியாக்யானம் –

January 30, 2022

அவதாரிகை –

விலக்ஷண விக்ரஹ யுக்தனாய் –
ஸூலபனாய் –
ஸூரி போக்யனான ஈஸ்வரன் –
திருவடிகளில் இவருக்குப் பிறந்த
ப்ராவண்ய அதிசயத்தாலே வந்த கண் கலகத்தைக் கண்டு
விஸ்மிதரான ஸூஹ்ருத்துக்கள் பாசுரத்தை

ஈஸ்வரனான நாயகனைப் பிரிந்து ஆற்றாளான தலைவியினுடைய
வேறுபாட்டைக் கண்டு
வியந்த தோழி வார்த்தைகளால் அருளிச் செய்கிறார்

இப் பாட்டு கீழ் பாட்டில்
பிறந்தாய் என்றும்
இமையோர் தலைவா என்றும்
சொன்ன பதங்களின் அர்த்தங்களை பிரகாசிக்கிறது –

செழு நீர்த் தடத்துக் கயல் மிளிர்ந்தால் ஒப்ப சேயரிக் கண்
அழுநீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ
முழுநீர் முகில் வண்ணன் கண்ணன் விண்ணாட்டவர் மூதுவராம்
தொழுநீர் இணையடிக்கே அன்பு சூட்டிய சூழ் குழற்கே —-2-

பாசுரம் -2- செழு நீர்த் தடத்துக் கயல் -தலைவியின் வேறுபாடு கண்ட தோழி வியந்து உரைத்தல் -கோவை வாயாள் -4-3-

பதவுரை

முழு நீர் முகில் வண்ணன் கண்ணன்–நிறைந்த நீரை யுடைய காளமேகம் போன்ற நிறத்தை யுடைவனான எம்பெருமானுடைய
மூதுவர் ஆம் விண்நாட்டவர் தொழுநீர் இணை அடிக்கே–யாவர்க்கும் முற்பட்டவரான பரமபதத்து
நித்யஸூரிகள் வணங்குந் தன்மையையுடைய திருவடியிணைகளில்
அன்பு சூட்டிய–தனது அன்பைச் செலுத்தின
சூழ் குழற்கு–அடர்ந்த கூந்தலையுடைய பெண்மகளுக்கு.
செழுநீர் தடத்து–மிக்க நீரையுடைய ஒரு தடாகத்தில்
கயல்–கயல் மீன்
மிளிர்ந்தால் ஒப்ப–பிறழ்ந்தாற் போல
சே அரி கண்–சிவந்த ரேகைளையுடைய கண்கள்
அழுநீர் துளும்ப–(நாயகனுடைய பிரிவை ஆற்றாமையால்) புலம்பின நீர் ததும்ப
அலமருகின்றன–தடுமாறுகின்றன;
வாழி–இந்த அன்பு நிலை என்றைக்கும் நிலைத்து நிற்கவேறும், (அரோ அசை.)

முழுநீர் முகில் வண்ணன்
கடலைக் கழுத்து அளவாகப் பருகின காளமேகம் போன்ற நிறத்தை யுடையவன்

கண்ணன்
அம் முகில் போலே ஆகாச வர்த்தியாய்
எட்டாதே இருக்கை இன்றிக்கே
பூமியிலே கால் தாழ்ந்து ஸூலபனானவனுடைய

மூதுவராம் விண்ணாட்டவர் தொழுநீர் இணையடிக்கே
பூர்வே என்றும்
ப்ரதம ஜா என்றும்
சொல்லுகிறபடி முற்பாடராய்
பரமபதத்துக்கு நிலத்து ஆளிகளான அநந்த கருட விஷ்வக் ஸேனாதிகளான நித்ய ஸூரிகள்
நித்ய அஞ்சலி புடா ஹ்ருஷ்டா நம இத்யேவ வாதிந -என்கிறபடியே
நிரந்தர கைங்கர்யம் பண்ணும் படியான ஸ்வ பாவத்தை யுடைய
பரஸ்பர ஸத்ருசமான திருவடிகளிலே –

அன்பு சூட்டிய சூழ் குழற்கே —
தன்னுடைய ப்ராவண்யத்தை சூட்டின செறிந்த குழலை உடையவளுக்கு

செழு நீர்த் தடத்துக் கயல் மிளிர்ந்தால் ஒப்ப
அழகிய நீரை யுடைத்தான தடாகத்தில் கயலானது இடம் வலம் கொண்டால் போல

சேயரிக் கண் அழுநீர் துளும்ப அலமருகின்றன
சிவந்த அரியை யுடைத்தான கண்கள் ப்ரேமத்தால் அழுத நீர் துளும்ப
ஆற்றாமையால் நின்ற இடத்திலே நில்லாமல் அலமருகின்றன

வாழியரோ
இது தான் தனக்கு தர்ச நீயமாகையாலே
நாயகனும் கண்டு வாழ வேணும் என்று
தோழி மங்களா ஸாஸனம் பண்ணுகிறாள்
அன்றியே
இந்தப் ப்ரேமம் உள்ளதனையும் நடக்க வேணும் என்று அநுசாஸித்தாள் ஆகவுமாம் –

இத்தால்
தடத்து மிளிர்ந்த கயலை நீர் துளும்பின கண்ணுக்கு ஒப்புமை சொல்லுகையாலே
அந் நீரோடு கண்ணுக்கு உண்டான சேர்த்தி தோற்றுதலால் ஞானத்தினுடைய ஊற்றுமை சொல்லிற்று

(மீன் வாசஸ்தானம் செழும் நீர் தடாகம் ஆதாரம்
இவர் ஞானத்துக்கு அடி மயர்வற மதிநலம் அருளின-அவனே ஹேது ஆதாரம் )

சேயரிக் கண் என்று ராகோத்தரமாகச் சொல்லுகையாலே
அந்த ஞானம் பக்தி ரூபா பன்ன ஞானமே தோற்றுகிறது

அழு நீர் துளும்ப அமலருகின்றன -என்கையாலே
அபிநிவேசம் மிகுந்தமை தோற்றுகிறது
(அன்பு ஆர்வம் அபிநிவேசம் -அன்பே தகளி -ஆர்வமே நெய் )

முழு நீர் முகில் வண்ணன் என்று
ப்ரேம விஷயம் பூர்ணமாய் –
தர்ச நீயமாய்
உத்துங்கமாய் இருக்கும் என்றதாயிற்று

கண்ணன் என்று
இவ் விஷயம் இவருக்குக் கை புகுந்தமை தோற்றுகிறது

விண்ணாட்டவர் தொழு நீர் இணை அடிக்கே -என்கையாலே
விலக்ஷண போக்யம் என்னும் இடம் தோற்றிற்று

இணை அடிக்கே அன்பு சூட்டிய -என்கையாலே
அந்த மேகம் இவர் பக்கலிலே கால் விழுந்தமை சொல்லிற்று

அன்பு சூட்டிய என்கையாலே
இத் தலையிலே அன்பு அவன் திருவடிகளுக்கு அலங்காரம் என்று தோற்றிற்று

இணை அடிக்கே அன்பு சூட்டிய சூழ் குழற்கு -என்கையாலே
கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன கழலே (திருவாய் -4-3-6 )என்கிறபடியே
அவன் திருவடிகள் இவர் திருமுடிக்கு அலங்காரம் என்னும் இடம் தோற்றுகிறது

வாழியரோ -என்கையாலே
இப்பிரேமம் ஈஸ்வரனுக்கும் ஆசாஸ்யமாய் இருக்கும் என்னும் இடம் தோற்றிற்று –
(அவாப்த ஸமஸ்த காமன் ஆசைப்படுவதும் நமது பக்தி ஒன்றையே தானே )

இது தோழி வார்த்தை யாகையாலே
இயற்கையிலே புணர்ந்த தலைமகன் பிரிவிலாதல்
அன்றியே தோழியில் கூட்டத்துப் புணர்ந்த தலைமகன் பிரிவிலாதல்
பிரிவாற்றாத தலைவி வேறுபாடு கண்ட தோழி உட் கொண்டு (அனுமானித்து )வியந்து உரைத்தது –

——-

தாத்பர்யம்

சர்வேஸ்வரனுடைய நித்ய விபூதி ஐஸ்வர்யத்தை அனுபவித்து
ஆழ்வார்
அப்போதே அங்கு அடைந்து அனுபவிக்க
கிட்டாமையாலே
அத்யந்தம் ஆர்த்தராய்

தனது ஸ்வ பாவம் மறந்து
தன்னைப் பிராட்டியாகப் பாவித்துக் கொண்டு இருக்க
அங்குள்ள பாகவதர்கள் -இவரை சில பாசுரங்களாலே ஆஸ்வசிப்பிக்க
அப்படி வந்தவர்களே தோழிகள்
அவர்கள் சொல்லும் பாசுரம் -நாயகன் உடன் ஸம்ஸ்லேஷித்து பிரிந்து விரஹ வேதனையில் இருக்கும் தம்மை ஆஸ்வசிப்பிக்க
ஆர்த்தி உடன் தவிக்க -ஆச்சார்யர் நம்மை -சேர்ப்பிப்பார்களே
சீதாப் பிராட்டி திருவடி ஸ்ரீ ராமாயணம் சொல்ல சுற்றி சுற்றிப் பார்த்தால் போல் இவள் கண்கள்

நீர் கொண்ட மேகம் போல் அதி ஸூந்தரமான சர்வேஸ்வரனுடைய வடிவு அழகை ஸ்ரீ வைகுண்டத்தில் நித்ய ஸூரிகள்
எல்லாரும் ஆஸ்ரயித்து அனுபவிக்கிறாப் போலே
இவள் தானும் அனுபவிக்க ஆசைப்பட்டு அது கிடைக்கப் பெறாமல் வியசனமுற்று
தன்னுடைய மத்ஸ்யம் போன்ற கண்களில் நின்றும்
கண்ணீரை தாரை தாரையாகப் பெருகிக் கொண்டு
தன்னுடைய நாயகன் எந்தத் திக்கில் நின்றும் வருவானோ என்று நாலு பக்கங்களிலும் கண்களைச் சுழற்றி
விழித்துப் பார்த்துக் கொண்டு இருக்க
பூர்ண தடாகத்தில் துள்ளுகிற இரண்டு மத்ஸ்யம் போன்ற இவளது கண்கள் அழகை அனுபவிக்க இப்பொழுது
இவளது கணவனுக்கு பிராப்தி இல்லையே
இனி சீக்கிரத்தில் இவள் நாயகனுடன் சேர்ந்து இவ் வவஸ்த்தையைத் தவிர்ந்து ஸூகிக்கக் கடவள்

——–————

அவதாரிகை –

இப்படி பார்ஸ் வஸ்த்ரான ஸூஹ்ருத்துக்களும் கண்டு விஸ்மிதாராம் படி ப்ரேம பரவசரானவர்
இந்தப் பாரவஸ்யத்துக்கு மூலமான பகவத் விஷயத்திலே ப்ராமண புரஸ்சரமாக
(பிரமாணம் வேதம் -பிரமேயம் காட்டும் புள் -வேத மயன் )
நெஞ்சு சென்ற பிரகாரத்தை
பிரிந்து போன தலைமகன் பின் சென்ற நெஞ்சை நோக்கித்
தலைவி உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

குழற் கோவலர் மடப்பாவையும் மண் மகளும் திருவும்
நிழற் போல்வனர் கண்டு நிற்கும் கொல் மீளும் கொல் தண்ணம் துழாய்
அழற்போல் அடும் சக்கரத் தண்ணல் விண்ணோர் தொழக் கடவும்
தழற் போல் சினத்த அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே—3-

பாசுரம் -3-குழல் கோவலர் மடப்பாவையும் -பிரிவாற்றாத தலைவி நெஞ்சு அழிந்து உரைத்தல் -வெள்ளைச் சுரி சங்கு -7-3-

பதவுரை

தண் அம் துழாய்–குளிர்ந்த அழகிய திருத் துழாயை யுடையவனும்
அழல் போல் அடும் சக்ரத்து–(அஸுர ராக்ஷஸர்களை) நெருப்புப் போல் அழிக்கின்ற திருவாழியை யுடையனுமான
அண்ணல்–எம்பெருமான்
விண்ணோர் தொழ கடவும்–மேலுலகத்தவர் வணங்கும்படி ஏறி நடத்துகிற
தழல் போல் சினத்த–பி ள்ளின் பின் போன
(பகைவர் நிறத்தில்) நெருப்புப் போன்ற கடுங்கோபத்தையுடைய அக்கருடாழ்வானது பின்னே சென்ன
தனி நெஞ்சம்–(எனது) தனிப்பட்ட மனமானது
குழல்கோவலர்–புல்லாங்குழலை யுடையரான இடையரது
மடம் பாவையும்–குணவதியான மகளாகிய நப்பின்னைப் பிராட்டியும்
மண் மகளும்–பூமிப்பிராட்டியும்
திருவும்–பெரிய பிராட்டியும்
நிழல் போல்வனர்–(எம்பெருமானுக்கு) நிழல் போலேயிருக்க அவர்களை
கண்டு நிற்கொல்-பார்த்துக் கொண்டு (அவ்விடத்தை விடாதே) நிற்குமோ?
மீளும் கொல்–திரும்பி வருமோ?

குழற் கோவலர் மடப்பாவையும் மண் மகளும் திருவும் நிழற் போல்வனர் கண்டு
குழலை நிரூபகமாக உடையவராகையாலே
அக் குழல் ஓசையாலே அறிவில்லாத பசுக்களையும் வசீகரிக்க வல்லவரான
கோப குலத்திலே பிறக்கையாலே
தன் மொழி அழகாலே வசீகரிக்க வல்லவளுமாய்
மடப்பம் முதலான நாரீ குணங்களை உடையவளுமான நப்பின்னைப் பிராட்டியும்

கந்தவதியான பிருத்விக்கு அபிமாநிநி யாகையாலே
மணத்தை வடிவாக யுடையளான ஸ்ரீ பூமிப் பிராட்டியும்

தவ ஸ்ரியா –ஸ்தோத்ர ரத்னம் –38–என்று
ஸர்வ ப்ரகார ஸம்பத் ரூபையாய் இருக்கிற பெரிய பிராட்டியாரும்

சாயை போலே அனுவர்த்திக்கிற படியைக் கண்டு

நிற்கும் கொல் மீளும் கொல்
இவர்கள் அப்ருதக் ஸ்திதைகள் ஆனால் போலே
நமக்கு அபிமானியான நாயகிக்கும் செறியக் குறை இல்லையே -என்று நிற்குமோ
இவர்களும் அனுவர்த்திக்கும்படியான அவனைக் கிட்டல் அரிது என்று மீளுமோ

தண்ணம் துழாய் அழற்போல் அடும் சக்கரத் தண்ணல்
குளிர்ந்து அழகியதான திருத் துழாயையும்
ஆஸ்ரித விரோதிகளை அக்னி போலே பஸ்ம ஸாத்தாக்கும் திருவாழியையும் யுடையவனாகையாலே
ஸ்வாமி யானவன்

விண்ணோர் தொழக் கடவும் தழற் போல் சினத்த அப்புள்ளின் பின் போன
ப்ரஹ்ம ருத்ராதிகள் சேஷத்வ ப்ரகாசிகையான வ்ருத்தியைப் பண்ண
ஆஸ்ரித ஸம் ரக்ஷணார்த்தமாக
அதி த்வரையுடன் நடத்தப்படுவானாய்

பரிகர பூதனான ஆழ்வானிலும்
பரிகரவானான ஈஸ்வரனிலும்
விரோதி விஷயத்தில் சீற்றம் கால அக்நி போலே இருக்கும் படியான
மஹா ப்ரபாவனாய் இருந்துள்ள
பெரிய திருவடியின் பின்னே எனக்கு முந்துற்றுப் போன

தனி நெஞ்சமே
பின்னையும் விட்டு
அங்கும் முகம் பெறாமல் தனிப்பட்ட நெஞ்சம்
ஸ்வ தந்திரமான நெஞ்சம் என்றுமாம்

முகம் பெறும் அளவும் நிற்குமோ
மீண்டு போருமோ என்றுமாம்

குழல் என்று
இவள் தன் மயிர் முடி ஆகவுமாம் –

இத்தால்
இவ்வாழ்வார் தம் திரு உள்ளம்
வேத மயனான புள்ளின் பின் போனமை சொல்லுகையாலே
பிராமண அநு சாரித்த்வம் சொல்லிற்று

அப்புள் -என்கையாலே
ப்ரமாணத்தினுடைய உத்கர்ஷம் சொல்லிற்று

தழல் போல் சினத்த அப்புள் -என்று விரோதி நிரஸனம் சொல்லுகையாலே
ப்ரமாணத்தினுடைய பாஹ்ய குத்ருஷ்டி நிரசன ஸாமர்த்யம் சொல்லிற்று

கடவும் என்கையாலே
காருணிகோ உததாதி (ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -2-1 )என்கிறபடி
பிராமண ப்ரவ்ருத்தி ஈஸ்வர அதீனம் என்னும் இடம் சொல்லிற்று

விண்ணோர் தொழ -என்கையாலே
விஷ்ணு பக்தி பரரான தேவர்களை ஸர்வேஸ்வர ப்ரவர்த்தித ப்ரமாணமானது
ஸ்வரூபத்தில் நிறுத்தும் என்னும் இடம் சொல்லிற்று

தண்ணம் துழாய் அழற் போல் அடும் சக்கரத் தண்ணல் –என்கையாலே
1-போக்யத்வமும்
2-அநிஷ்ட நிவர்த்தகத்வமும்
3-ஸ்வாமித்வமும்
ஆகிற ஸ்வ பாவ த்ரயமும்
பிராமண சார ப்ரதிபாத்யம் என்று தோற்றிற்று

நிழற் போல்வனர்-என்கையாலே
ஸ்ரீ பூமி நீளை கள் மூவருக்கும் தத் சேஷத்வம் ஸ்வ பாவிகம் என்னும் இடம் சொல்லிற்று

நப்பின்னைப் பிராட்டி முதலாகச் சொல்லுகையாலே
1-நீர்மை முன்னாக
2-அழகாலே ஈடுபட்டு
3-மேன்மை ஈறாக
நெஞ்சு அவகாஹித்த படி சொல்லிற்று

கண்டு நிற்கும் கொல் மீளும் கொல்-என்கையாலே
இப்படி மஹிஷீ
பூஷண
பரிஜ நாதி விசிஷ்டமான விஷயத்தை அவகாஹித்த நெஞ்சு
வ்யவஸ்திதமாய் நிரந்தர அனுபவம் பண்ணுமோ-
விஸ்லேஷிக்குமோ -என்று சொல்லிற்று ஆயிற்று –

இப் பாட்டு
தலைவன் பிரிவாற்றாத தலைவி நெஞ்சு அழித்து உரைத்தது

தழற் போல் சினத்த அப்புள்-என்று
தன்னுடன் கூடி இருக்கிற நாயகனை
போகாசக்தனான ராஜ புத்ரனை வ்ருத்த மந்திரி நியமித்து எடுத்துக் கொண்டு போமா போலே
தன்னைச் சிவந்து பார்த்துக் கொண்டு போனமை தோற்றுகிறது –

அப் புள்ளின் பின் போன-என்று
நெஞ்சு பின் தொடரச் செய்தேயும் அவன் சினம் பொறுக்க மாட்டாமல்
முகம் திரிந்து சொல்லுகிறாள் –

———

தாத்பர்யம்

இப் பாசுரத்தில் சர்வேஸ்வரனை முன்பு ஆழ்வார் மாநசமாக அனுபவித்ததால்
திரு உள்ளம் ஸர்வேஸ்வரன் இடம் ப்ராவண்யம் ஆனதை தானே சொல்கிறாள் தோழியிடம்
ஓ தோழி நாயகனைப் பிரிந்த இந்த தசையில் அவன் சாத்திக் களைந்த குளிர்ந்த அழகிய திருத்துழாயும்
அவன் திருக்கையிலே ஆபரணமாக ஸ்ரீ ஸுதர்சன ஆழ்வாரும் -அனுகூலருக்கு ஆயுதம் இல்லை
என் மேல் தீ வீசி -என்னை மிகவும் உபத்திரியா நின்றன
இவ் வஸ்தையிலும் கூட சர்வேஸ்வரன் திருத்துழாய் அணிந்து -திருக்கையும் திருவாழியுமான
சேர்த்தி உடன் சேவை சாதிக்காமல்
நித்ய ஸூரிகள் தன்னை ஆஸ்ரயிப்பித்துக் கொண்டு -விண்ணோர் தொழக் கடவ -(இது தான் அவனுக்கு வேறே முக்கிய வேலை போல் )
தன்னிடத்தில் பரிவால் இலை அசைந்தாலும் விரோதிகளோ என்று -அஸ்தானே பயசங்கை -பண்ணி –
பயந்து சீறி அருளும் திருவடியை வாஹனமாகக் கொண்டு
நடத்தி அருளும் போது என் நெஞ்சு என்னையும் விட்டு விட்டு அந்த திருவடி பின்னே தனியாக போனதே —
(கருடவாஹனான அவன் பின்னே போனது என்னாமல் அப்புள்ளின் பின் போனதே என்பதால்
ததீய சேஷத்வம் அறிந்து சென்றமை தோற்றுமே )
அங்கு போன பின்பு நிறைந்த மயிர் முடி யுடைய நப்பின்னைப் பிராட்டியும் -ஸ்ரீ பூமிப் பிராட்டியும் பெரிய பிராட்டியாரும்
இவர்கள் ஸர்வேஸ்வரனை அனுவர்த்தித்து ஆஸ்ரிதர் குற்றங்களை பொறுப்பிக்க-
தலையெடுக்கும் ஸுலப்யம் கண்டு அங்கே நிற்குமா –
அல்லது ஸ்ரீ பூமி நீலா தேவிமார் ஸேவ்யனான அவன் மேன்மையைக் கண்டு அங்கு தரித்து நிற்க மாட்டாமல்
திரும்ப வருமோ சொல் -தோழி என்று கீழே விளித்து இங்கு சொல் என்று நிகமிக்கிறாள் –

———

ப்ராப்ய விஷயத்திலே பிராமண அதீனமாக நெஞ்சு பற்றி
அத்தால்
ப்ராப்தி த்வரா அதிசயத்தாலே
ப்ராப்ய லாபத்து அளவும் பதார்த்தாந்தர ஸந்நிதியும்
அஸஹ்யம் என்னும் இடத்தை
வாடைக்கு ஆற்றாளாய்த்
தலைமகள் வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –

தனி நெஞ்சம் முன்னவர் புள்ளே கவர்ந்தது தண்ணம் துழாய்க்கு
இனி நெஞ்சம் இங்குக் கவர்வது யாமிலம் நீ நடுவே
முனி வஞ்சப் பேய்ச்சி முலை சுவைத்தான் முடி சூடு துழாய்ப்
பனி நஞ்ச மாருதமே எம்மதாவி பனிப்பியல்வே —-4-

பாசுரம் -4-தனி நெஞ்சம் முன் அவர் -தலைவனைப் பிரிந்த தலைவி வாடைக்கு ஆற்றாது வருந்தி கூறல் –ஓடும் புள்ளேறி -1-8-

பதவுரை

தனி நெஞ்சம்–(என்னோடு) உறவற்று நீங்கிய (என்) மனம் முழுவதையும்
முன்–முன்னமே
அவர் புள்ளே–அப்பெருமானுடைய கருடப் பறவையே
கவர்ந்தது–(பிறர்க்கு மிச்சமில்லாதபடி) கவர்ந்து கொண்டு போயிற்று.
(ஆதலால்,)
தண் அம் துழாய்க்கு–(அப்பெருமானுடைய) குளிர்ந்த அழகிய திருக் குழாய்க்கு
கவர்வது–கவர்ந்து கொண்டு போவதற்கு உரியதான
நெஞ்சம்–வேறொரு நெஞ்சை
இனி இங்கு யாம் இலம்–இனி இவ்விடத்தில் யாம் உடையோ மல்லோர்,
(அப்படியிருக்க.)
முனி–கோவிக்குத் தன்மையுள்ள
வஞ்சம் பேய்ச்சி–வஞ்சனையையுடைய பேய் மகளான பூதனையினுடைய
முலை–(விஷந்தடவின) முலையை
சுவைத்தான்–(பசையற) உருசி பார்த்து உண்ட கண்ணபிரானுடைய
முடிசூடும் துழாய்–திருமுடியில் சூடப்பட்ட திருத்துழாயினது
பனி நஞ்சம் மருதமே–குளிச்சியை யுடைய விஷம் போன்ற காற்றே!
நீ நடுவே–நீ இடையிலே (புகுந்து)
எம்மது ஆவி பனிப்பு–(ஏற்கனவே நோவு பட்டிருக்கிற) எம்முடைய உயிரை மேலும் நடுங்கச் செய்வது
இயல்பே–(உனக்குத் தக்க) இயற்கையோ? (தகாது.)

தனி நெஞ்சம்
என்னோடு உறவற்று நீங்கிய நெஞ்சத்தை

முன்னவர் புள்ளே கவர்ந்தது
முன்பு அவரோட்டை சம்பந்தத்தால் உண்டான
ராஜ குலத்தாலே
பெரிய திருவடியே அபஹரித்தான்

நெஞ்சம் புள்ளே கவர்ந்தது
பருந்து இறாஞ்சிக் கொண்டது

தண்ணம் துழாய்க்கு இனி நெஞ்சம் இங்குக் கவர்வது யாமிலம்
குளிர்ந்து அழகிய திருத் துழாய்க்கு இனி இங்குக் கவருகைக்கு நாம் நெஞ்சுடையோம் அல்லோம்

நெஞ்சு இரண்டு உடையார்க்கு இறே இழக்க வேண்டுவது
பிரிந்தாரை ஈடுபடுத்துகைக்கு அவனோடு சம்பந்தமுடையாரில்
திர்யக் ஸ்தாவர விபாகம் இல்லையாய் இருந்தது இறே –

நீ நடுவே
(அலைந்து வீசுவதே ஸ்வ பாவமான காற்றே )
அத் தலையில் சம்பந்தம் அடியாக எனக்கும் அவற்றுக்கும் பாத்ய பாதக பாவம் நடக்க ப்ராப்தம்
நீ ஏதுறவாக நலிகிறாய் என்று கருத்து
(பிடித்தாரைப் பிடித்தார் அன்றோ நான் என்னுமாம் காற்று )

முனி வஞ்சப் பேய்ச்சி முலை சுவைத்தான் முடி சூடு துழாய்ப் பனி நஞ்ச மாருதமே
முனிந்து வஞ்சகத்தை உடையளான பேய் மகளுடைய முலையைப் பசையறச் சுவைத்த
(விஷம் கலந்து ரஸ்யம் சுவை -பராசரர் விஷ்ணு புராணத்தில் )
கிருஷ்ணனுடைய திரு அபிஷேகத்திலே சாத்தின திருத்துழாயின் குளிர்ந்த
மது பலத்தாலே நஞ்சூட்டியது போல் இருக்கிற காற்றே
அத்தலையிலே சம்பந்தம் தோற்றத் திருத்துழாயின் குளிர்த்தியையும்
கூட்டிக் கொண்டு வந்தாயோ

முனி வஞ்சப் பேய் முலை சுவைத்தான்
வெறுத்து வஞ்சித்தாரை நலிகை அன்றிக்கே
உகந்து செவ்வை யுடையாரையும் நலிவான் ஒருவன் இறே
(ஆழ்வார் -உகந்து -செவ்வாய் நேர்மை அன்றோ )

பேயினார் ஆர் உயிர் உண்டிடும் பிள்ளை நம் பெண் உயிர்க்கு இரங்குமோ (பெரிய திருமொழி -8-5-3 ) என்று
பேய் என்று பாராதே பெண்ணாக அமையும் இறே பிணம் ஆக்குகைக்கு

அவள் பாடு முலை நலம் கொண்டு காணும் முடியச் செய்தது

முனி நஞ்சப் பேய்ச்சி -என்றும் பாட பேதம்

பனி நஞ்ச மாருதமே
திருத் துழாயிலே பனி நீரிலே தோய்ந்து நைந்த காற்றே என்றுமாம்

எம்ம தாவி பனிப்பியல்வே
தருகைக்கு நெஞ்சு இல்லாத எங்களுடைய பிராணனை நடுங்கப் பண்ணுகை ப்ராப்தமோ
அவர் பாடும் போகை அஞ்சுமவை இறே –
(இயல்பு அல்ல ஈற்று ஏகாரம் )

இத்தால்
இவர் திரு உள்ளத்துக்குத் தனிமை யாவது
மதாந்தரங்களை அவலம்பியாமல் ஸ்வரூபேண அவஸ்திதமாகை
(சாக்கியம் கற்றோம் சமணம் கற்றோம் போல்வர் அல்லரே இவர் )

முன் என்றது
பிரதமத்திலே சித்தாந்த அவகாஹி யாகை

அவர் புள்ளே என்றது
வேதைஸ் ச சர்வைர் அஹமேவ வேத்ய –15-15-என்று
ப்ரமேயத்தோடு ப்ரமாணத்துக்கு உண்டான அவிநா பாவம்
(பிரியாமை -அப்ருதக் ஸித்தம் -அவரே வேதம் -அவர் வேதமே )

புள் -என்றது
ப்ருஹத் ரதந்தரே பஷவ் -யஜுர் -4-1-42-என்று முதலாக
ஸூ பர்ணோஸி கருத்மான் -யஜுர் 4-1-42- என்று
(இரண்டு சாமம் இரண்டு இறகுகள் )
வேதத்தினுடைய கருடாத்மகதை-
புள்ளே என்று உபபத்தி வேண்டாத நைர பேஷ்யம்

(உப மானம் உபமேயம் இரண்டும் சொல்ல வேண்டாமே
தாவி தடம் கொண்ட தாமரையே -முற்று உவமை போல்
வேதமே பெரிய திருவடி வடிவம் )

கவர்ந்தது என்று
வலிய மீட்க ஒண்ணாத படி நெஞ்சு வசீக்ருதமாகை

தண்ணம் துழாய்க்கு இனி நெஞ்சம் இங்குக் கவர்வது யாமிலம் -என்று
இப்படி ஸ்ருதி பிராமண வஸீக்ருதமான நெஞ்சில்
அர்த்த ஸாமர்த்ய ரூபமான போக்யாதிகளாலே
கர்த்தவ்ய அம்சம் இல்லை என்று கருத்து

(அங்கியே கைப்பட்டதால் அங்கங்கள் வேண்டாமே
மேலே அறிந்து கொள்ள வேண்டிய அம்சம் இல்லையே தவிர
ராமாயனாதிகள் த்வரையை மூட்டி வளர்க்க வேண்டுமே )

இனி கவர்வது யாமிலம் -என்று
ப்ரதமத்திலே சரம ஞானம் பிறந்தவர்களுக்குப் பின்பு
ஞாதவ்ய அம்சம் இல்லை என்று கருத்து

நீ நடுவே என்று
ஞாதவ்ய அம்சம் இல்லையே யாகிலும் ஸ்மாரகம் த்வரா ஜனகம் என்றதாயிற்று –

முனி வஞ்சகம் என்று தொடங்கி விரோதி நிரசன சீலனானவனுடைய
சேஷித்வ போக்யத்வ ஸூசகமான திருத்துழாயின் சைத்யத்தோடே
ஸம் ஸர்க்கத்தை யுடைத்தான மாருதம் என்கையாலே
ரக்ஷகத்வ
சேஷித்வ
போக்யத்வங்கள் இவர்க்குக் காற்று வளத்தில் தோற்றின படி

(பிறக்கும் போதே சட கோபித்து முனிந்து –
காற்றிலே அனைத்தையும் அறிந்தவர் அன்றோ
முடி -சேஷித்வம்
முலை சுவைத்தான் முடி -ரக்ஷகத்வம்
திருத்துழாய் போக்யத்வம் )

முனிந்து வஞ்சனை யுடையளான பேய்ச்சி முலையைச் சுவைத்தான் -என்கையாலே
அநர்த்த காரிணியாய் இருக்கச் செய்தே
ஸ்வ போக்ய புத்தி ஜனனியான ப்ரக்ருதியைப்
பசை அறுக்கும் என்னும் இடம் தோற்றிற்று

முடி சூடு துழாய் என்கையாலே
சேஷித்வமானது போக்யத்வ விசிஷ்டம் என்னும் இடம் தோற்றிற்று

பனி நஞ்சம் என்று திருத்துழாயின் குளிர்த்தியிலே நைந்தது என்ற பொருளாய்
தத் ஸம் சர்க்கம் ஆரேனையுமாகிலும் நைவிக்கும் என்றதாகவுமாம் –

மாருதமே எம்மதாவி பனிப்பியல்வே-என்கையாலே
ஸ்மாரகமாய் த்வரையை ஜெனிப்பித்தாலும்
ப்ராப்தி தத் அதீனம் ஆகையாலே
அத்தலையில் த்வரையே வேண்டும் என்று கருத்து –

(பேற்றுக்கு உபாயம் அவன் நினைவே -உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -)

———

தாத்பர்யம்

இப்பாசுரத்தில் சர்வேஸ்வரனை ஆழ்வார் முன்பு மாநசமாக அனுபவித்ததால்
அவனோடே சம்பந்தித்த பதார்த்தங்கள் இப்போது ஆழ்வாருக்கு ஸ்ம்ருதி விஷயமாக
அலாபத்தால் பாதகமான படியை
நாயகனைப் பிரிந்த நாயகியை வாடைக் காற்றுக்கு ஆற்றாதவளாய் சொல்லும் பாசுரத்தால்
அருளிச் செய்கிறார்

விஷத்தை கொண்டு வீசுவது போல் எனக்கு அத்யந்த பாதகமாய் குளிர்ந்து வீசுகிற ஓ மாருதமே
சர்வேஸ்வரன் பெரிய திருவடியை நடத்திக்கொண்டு வர சேவித்து
எனக்கு இருந்த ஒரு மனஸும் முன்பே போனது
இனி மேல் பட கொண்டு அவன் சாத்திக் களைந்த திருத்துழாய்க்கு கொண்டு போகைக்கு வேறே
என்னிடம் வேறே மனஸ் ஸூ இல்லை
இப்படி மனசைப் பறி கொடுத்து அவஸ்தை படும் சமயத்தில் நீயும் வந்து
தன்னை முடிக்க நினைத்து சீறிக்கொண்டு கபடத்தால் -தாய் வேஷம் கொண்டு வந்த பூதனையை-
நமக்கு உபகரிக்கைக்காக முடித்த சர்வேஸ்வரன் திருமுடியில் சாத்தின பரிமளம் கொண்டு
நலிய வந்த உனக்கு இது தர்மம் அன்று காண்
தத்துவம் அன்று தகவும் அன்று
ஆகையால் நீ என்னை பாதியாது ஒழிய வேணும் -என்கிறாள் –

————-

அவதாரிகை
இப்படி ப்ராப்ய த்வரையை யுடைய இவருக்கு
ஸ்மாரகமான லௌகிக பதார்த்த ஸந்நிதியும்
சைத்தில்ய ஜனகமானபடி
பார்ஸ்வஸ்தரான ஸூஹ்ருத்துகளுக்கு ப்ரஸித்தமான பிரகாரத்தை
வாடைக்கு ஈடுபட்டு மாமை இழந்த தலை மகளைக் கண்டு
தோழி இரங்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

பனிப்பியல்வாக உடைய தண் வாடை இக்காலம் இவ் ஊர்ப்
பனிப்பியல்வெல்லாம் தவிர்ந்து எரி வீசும் அம்தண் அம் துழாய்
பனிப்புயல் சோரும் தடங்கண்ணி மாமைத் திறத்துக் கொலாம்
பனிப்புயல் வண்ணன் செங்கோல் ஒருநான்று தடாவியதே —-5-

பாசுரம் -5-பனிப்பு இயல்வாக உடைய -வாடைக்கு வருந்தி மாமை இழந்த தலை மகளைக் கண்டு தோழி இரங்குதல் –மாயா வாமனனே -7-8-

பதவுரை

பனிப்பு இயல்பு ஆக உடைய–குளிரச் செய்வதையே இயற்கை தொழிலாக வுடைய
தண் வாடை–குளிர்ந்த காற்றானது
இக்காலம்–இப்போது மாத்திரம்
இவ் ஊர்–இவ்விடத்தில் மாத்திரம்
பனிப்பு இயல்பு எல்லாம் தவிர்த்து–குளிரச் செய்வதாகிய (தன்னுடைய) இயற்கையை முழுதும் விட்டு
அம் தண்ணம் துழாய்–அழகிய குளிர்ந்த (அவனது, திருத்துழாயின் விஷயமாக
(ஆசைப்பட்டு)
பனி புயல் சோரும்–மழை துளித்தலை யுடைய மேகம் போல நீர் சொரிகிற
எரி வீசும்–வெப்பத்தை வீசுகின்றது;
(இவ்விதமாக)
பனி புயல் வண்ணன்–குளிர்ந்த காளமேகம் போன்ற தன்மையையுடைய எம்பெருமானது
செங்கோல்–(என்றும் மாறாத) கட்டளை
ஒரு நான்று தடாவியது–இவ்வொரு காலத்தில் கோணலாய்ப் போனது,
தட கண்ணி–பெரிய கண்களையுடைய இவளது
மாமை திறத்து கொல்லும்–மேனி நிறத்தை யழிப்பதற்கோ போலும்

பனிப்பியல்வாக உடைய தண் வாடை
குளிரப் பண்ணுகையே நடப்பாக உடைத்தாகையாலே
குளிர்த்தியே குணமாக யுடைய வாடை

இக் காலம் இவ் ஊர்
இக் காலத்திலும் இவ் வூரிலும்
காலாந்தரத்திலும் இல்லை
தேசாந்தரத்திலும் இல்லை
முற் காலம் தானும் காணாமையாலே இக்காலம் என்கிறாள்

இவளுக்கு என்னாதே
இவ்வூருக்கு என்றது
இவள் ஆற்றாமையைக் கண்ட ஊரார் தங்களுக்கும் வாடை தபிக்கையாலே

பனிப்பியல்வெல்லாம் தவிர்ந்து
பனிப்பிக்கிற இயல்பை ஏக தேசமும் சேஷியாத படி விட்டு

எரி வீசும்
வாயோர் அக்னி (தைத்ரியம் -1-2-5 ) என்று
தன் கார்யமான அக்னியின் குணத்தைப் பஜியா நின்றது

வீசும்
ஒளிக்க வேண்டாத படி போன இடம் எல்லாம் தூவா நின்றது

அம் தண் அம் துழாய்
அழகிய குளிர்ந்த திருத்துழாய் இடத்து (அதன் பொருட்டு )
இந்த நெருப்பை ஆற்றலாவது
அவன் வளையத்து வைத்த குளிர்ந்த திருத்துழாயின் நிழலில் என்கை –
(இந்த இடம் ஒன்றே வாடைக் காட்டால் தபிக்க ஒண்ணாத ஸ்தலம் ஆயிற்று )

பனிப் புயல் சோரும் தடங்கண்ணி
துளிக்கிற புயல் போலே நீர் சொரிகிற பெரிய கண்ணை உடையவள்
ஒதுங்க நிழல் இல்லாமையாலே
உருகி விழும்படியான கண் கலக்கத்தை உடையவள்
(ஸ்வரூப ஞானத்தை விரக அக்னி உருக்கிற்றே )

மாமைத் திறத்துக் கொலாம்
இவள் நிறம் இடையாட்டத்துக்கு ஆக வேணும் இறே
நெஞ்சு பெரிய திருவடி கொண்டு போனானாகில்
நிறத்தைத் தான் அழிப்பதாக
வாடையை வேறுபடுத்தி வரக் காட்டினான் ஆகக் கூடும்

பனிப் புயல் வண்ணன்
குளிர்ந்த வர்ஷுக வலாஹகம் போலே இருக்கிற வடிவை யுடையவன்
ஸ்ரமஹரமுமாய் உபகாரகமுமான மேக ஸ்வபாவன் என்னவுமாம்

செங்கோல்
வடிவு போலே ஸ்வபாவ பேதம் பிறவாத ஆஜ்ஜை

ஒரு நான்று தடாவியதே
ஒரு கால விசேஷத்திலே செவ்வை குலைந்து வளைந்தது

பூதம் பூதாந்தர குணத்தை பஜிக்கை யாகிற இது
ஈஸ்வர ஆஜ்ஜைக்கு செவ்வைக் கேடு என்று நினைக்கிறாள்
செவ்வையே ஸ்வ பாவமான இது
இவள் நிறத்துக்காக ஒரு கால விசேஷத்திலே குலைந்தது என்கை –

இத்தால்
பனிப்பியல்வாக உடைய தண் வாடை -என்கையாலே
தன் ஸ்வரூபத்துக்கு ஈடாக லோகத்துக்கு கார்யகரமாயிற்று என்றதாயிற்று

இக் காலம் இவ் ஊர்ப் பனிப்பியல்வெல்லாம் தவிர்ந்து எரி வீசும் -என்கையாலே
பிராப்தி த்வரை பிறந்த இன்று ஸ்மாரகமாய்க் கொண்டு
அலாப நிபந்தன பரிதாபத்தை
இவரோடு
இவரைப் பற்றினாரோடு வாசி அற விளைக்கையாலே
ஸ்வ பாவ பேதம் பிறந்ததாக நினைக்கை

எரி வீசும் -என்கையாலே
லௌகிக பதார்த்த ஸந்நிதி ஹுதவஹ ஜ்வாலா பஞ்ஜராந்த்ர வ்யவஸ்தித்தி போலே இருக்கை
(நெருப்புக் கூண்டு தேவலை போல் இருக்குமே
பகவத் சிந்தை இல்லாதவர் கூட்டம் மிகவும் த்யாஜ்யம் )

அம் தண் அம் துழாய் பனிப்புயல் சோரும் தடங்கண்ணி -என்கையாலே
போக்ய விஷய வை லக்ஷண்யம் சைத்தில்ய ஜனகமாம் படி சொல்லிற்று

பனிப் புயல் சோரும் தடங்கண்ணி -என்கையாலே
மதி எல்லாம் உள் கலங்கி (திருவாய் 1-4-3 )-என்கிறபடி
நேர் அறிவு கலங்கின படி

மாமைத் திறத்துக் கொலாம்-என்கையாலே
ஸ்வ அசாதாரண ஆகாரத்தையும் சிதிலமாக்கக் கூடுமாய் இருந்ததே இறே என்றபடி

பனிப்புயல் வண்ணன் செங்கோல் ஒருநான்று தடாவியதே-என்கையாலே
ஆர்த்தி அதிசயத்தாலே அப்ரகம்ப்யாமான சங்கல்பத்துக்கும்
ஆர்ஜவ சைத்தில்யத்தைப் சங்கிப்பிக்கும் என்கை –

பதார்த்தா ந்தரத்துக்கு ஸ்வபாவ பேத சங்கையைப் பிறப்பித்தவோ பாதி
அசாதாரண ரூபத்துக்கு சைத்தில்ய சங்கையைப் பிறப்பிக்கும் இறே
ஆர்த்தியினுடைய அதிசயம் –

தாத்பர்யம்
இப் பாசுரத்தில் ஆழ்வார்
இவ் விபூதியில் உள்ள மாருதம் முதலான பதார்த்தங்கள் –
சர்வேஸ்வரனால் ஸ்ருஷ்டிக்கப்பட்டவையே இவை என்றும் –
அவனுக்கே சேஷ பூதம் என்றும் அனுசந்தித்து அவ்வழியாக-ததீயத்வ ஆகாரம் என்று அறிந்து –
சர்வேஸ்வரன் ஸ்ம்ருதி விஷயமாக
பிராப்தி த்வரையால் அலாபத்தால் விஷண்ணராய் இருக்க

அப்பொழுது பக்கத்தில் உள்ள பாகவதர்கள் சொல்லும் பாசுரத்தை
ஒரு விரஹிணி மந்த மாருதத்தால் பாதிக்கப் பட்டுக் கிடக்க அவள் நிலையை
தோழி உரைக்கும் பாசுரத்தால் அருளிச் செய்கிறார்

அருகே உள்ளார் இப் பெண் நாயகனான சர்வேஸ்வரன் சூடிய திருத் துழாயில் ஆசைப்பட்டு –
பெற வேண்டும் -என்று எண்ணி -கிடைக்காமையால் பெரு மழை போல்
தன்னுடைய விசாலமான நேத்ரங்களிலே தாரை தாரையாக கண்ணீர் பெருக்க
ரக்ஷகனான சர்வேஸ்வரன்
தனது ஸ்வரூபம் மாறாடிக் கொண்டு -கருணை ரக்ஷகத்வம் இல்லாமல் ஆகவே
தொண்டனான வாயுவும் இவளது சவுந்தர்யம் அழிக்கக் கோலி –
தனது குளிர்ந்த -சீத ஸ்வபாவம் மாறாடிக் கொண்டு உஷ்ண ஸ்வபாவம் அடைந்து -நெருப்பாய்
இப்பொழுது இவ்வூரில் இவள் மேல் அழல் வீசத் தொடங்கிற்று
வாயுவுக்கு வெப்பமும் குளிரும் இருக்கக் கூடாது என்ற சர்வேஸ்வரன் ஆஜ்ஜை கூட
இப்போது இவருக்காக பங்கமாயிற்றே -என்று இன்னாப்பு –

———————–

அவதாரிகை
இப்படி இவருக்கு ப்ரஸித்தமாம் படி முன்பு பிறந்த பகவத் ப்ராவண்யத்தைக் கண்ட
அன்புடையரான பாகவதர் உகந்து சொன்ன பாசுரத்தை
தலைமகள் எழில் கொண்டு வியந்த தலைமகன் பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

தடாவிய வம்பும் முரிந்த சிலைகளும் போக விட்டு
கடாயின கொண்டொல்கும் வல்லி ஈதேனும் அசுரர் மங்கக்
கடாவிய வேகப் பறவையின் பாகன் மதன செங்கோல்
நடாவிய கூற்றம் கண்டீர் உயிர் காமின்கள் ஞாலத்துள்ளே–6-

பாசுரம் -6-தடாவிய அம்பும் முறிந்த சிலைகளும் -தலைவியின் அழகை
தலைவன் வியந்து பேசுதல் –உண்ணும் சோறு -6-7-

பதவுரை

இது–இவ்வடிவானது
தடாவிய–வளைந்த
அம்பும்–பாணங்களையும்
முரிந்த–ஒடிந்த
சிலைகளும்–விற்களையும்
போக விட்டு–கொள்ளாமல் ஒழித்து
கடாயின கொண்டு–உபயோகிக்கத் தக்க அம்புகளையும் விற்களையும் ஏந்தி துவண்டு நடக்கிற
வல்லி எனும்–ஒரு பூங்கொடி போன்ற பெண் வடிவமாயிருந்தாயினும்
அசுரர் மங்க–அஸுரர்கள் அழியும்படி
கடாவிய–ஏறி நடத்தப்படுகின்ற
வேகம்–விரைவையுடைய
பறவை–பக்ஷிராஜனாகிய வாஹனத்துக்கு
இன் பாகன்–இனிய பாகனாகிய எம்பெருமானது (ஸம்பந்தம் பெற்ற)
மதனன்–மன்மதனுடைய
செங்கோல்–ஆளுகையை
நடாவிய–நடத்துகிற
கூற்றம்–யமனாயிருக்கும்;
ஞாலத் துள்ளே–இந்நில வுலகத்திலே
கண்டீர்–(இவ்வழகிய வடிவத்தைப்) பார்த்தவர்களே!
உயிர் காமின்கள்–(உங்களது) உயிரைக் காத்துக் கொள்ளுங்கள்

தடாவிய வம்பும் முரிந்த சிலைகளும் போக விட்டு
வளைந்த அம்பையும்
முரி போன சிலைகளையும் தவிர்ந்து

கடாயின கொண்டொல்கும்
தக்க அம்பும் சிலைகளும் கொண்டு ஸஞ்சரிக்கும்

வல்லி ஈதேனும்
இது ஒரு கொடி என்று சொல்லும்படி
ஸ்த்ரீ ரூபமாக இருந்ததே யாகிலும்
காமன் அம்பும் சிலையும் வளைந்து முரிந்து இருக்கும் என்று நினைத்து
அத்தைக் கழித்துத்
தன் கண்ணும் புருவமுமே தகுதியான அம்பும் சிலையுமாகக் கொண்டு உலாவும் என்று கருத்து –

அம்பும் -என்றது
ஜாதி ஏக வசனம்

சிலைகள் என்று
முரிய முரிய பொகட்டு எடுத்தாலும் பசையில்லை என்றபடி

இவ்வாறு தக்கன கொண்டு உலாவுதலால்
அசுரர் மங்கக் கடாவிய வேகப் பறவையின் பாகன்
அசுரர் மங்கும்படி நடத்தப்பட்ட வேகத்தை யுடைய பெரிய திருவடிக்கு இனிய பாகனானவனுடைய
பறைவையினுடைய பாகன் என்னவுமாம்

பொரு சிறைப்புள் உகந்து ஏறி –சேஷிக்கும் சேஷபூதனுக்கும் -இருவருக்கும் இனிமை உண்டே

மதன செங்கோல் நடாவிய கூற்றம்
மதனன் ஆஜ்ஜையை நடத்துவதால் எதிர்ப்பட்டாரை அழியச் செய்வதொரு மிருத்யுவாய் இருக்கும்

கண்டீர் உயிர் காமின்கள்
கண்டவர்கள் ப்ராணனைத் தன் வசம் ஆக்குகையாலே
உங்கள் உயிரைக் காத்துக் கொள்ளுங்கோள்

ஞாலத்துள்ளே–
இந்த லோகத்திலே அந்த மிருத்யுவைத் தப்பினாலும் இந்த மிருத்யுவைத் தப்ப ஒண்ணாது –

இத்தால்
ஆழ்வாருடைய ஞானாதி வை லக்ஷண்யம் கண்ட அன்புடைய பாகவதர்
வல்லி யீதேனும்-என்று
உபக்ந அபேஷமான கொடி போல் பாரதந்தர்யம் பிரகாசித்து இருக்கிலும்

தடாவிய வம்பும் முரிந்த சிலைகளும் போக விட்டு
அம்பு என்று
லஷ்ய பேதி யாகையாலே
விஷய க்ராஹி ஞானத்தைக் காட்டுகிறது

சிலை என்று
ப்ரேரகமாகையாலே
க்ரஹண ஸாதனங்களைக் காட்டுகிறது –

இந்த ஞானத்துக்குத் தடாவுதலாவது
அஞ்ஞானம் மத் அந்யத் யுக்தம் -(ஸ்ரீ விஷ்ணு புராணம்-6-5-87 )என்கிறபடியே
அப்ராப்த விஷய அவகாஹநம்

சிலைக்கு முரிவாவது
தத் தத் ஞான ஸாதனங்கள் ப்ரபல ப்ரமாணங்களாலே பக்நமாகை

(ப்ரத்யக்ஷம் அனுமானம் இவற்றால் பக்நமாகாமல்
ஸாஸ்த்ர ஞானம் கொண்டே -ஸாஸ்த்ர ஜன்ய ஞானம் உடையவர்
மதி நலம் அருளப்பெற்றவர் )

ஏவம் பூத ஞான தத் ஸாதனங்களை விட்டு
கடாயின -கொண்டொல்கும்
அநுரூப ஞான தத் ஸாதனங்களைக் கொண்டு வர்த்திக்கும்

அதாவது
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு (முதல் -67 )என்றும்
உளன் சுடர் மிகு ஸ்ருதியுள் (திருவாய் -1-1-7 )என்றும் இருக்கை –

இப்படி விலக்ஷண ஞானத்தை யுடைய வ்யக்தி யாதலால்
அசுரர் மங்கக் கடாவிய வேகப் பறவையின் பாகன்
ஆஸூர ப்ரக்ருதிகளான பாஹ்ய குத்ருஷ்டிகள் மங்கும் படி ப்ரவர்த்திக்கப் பட்ட
நித்யத்வ
அபவ்ருஷேயத்வ
ரூபமான பக்ஷ த்வய அவலம்பனத்தாலே
அப்ரதிஹத ப்ராமாண்ய கதியான
ஸ்ருதி மயமான பெரிய திருவடிக்கு
ஸ்வ ரஸ நாயகனான ஸர்வேஸ்வரன் விஷயத்திலே
மதன செங்கோல் நடாவிய
நிரந்தர காமுகதையை நிர்வஹிப்பதான

கூற்றம்
பூர்வ அவஸ்தையை அழித்து விடுகையாலே
ஸம்ஸாரம் மிருத்யுவாய் இருக்கும்

கண்டீர் உயிர் காமின்கள்
கண்டவர்களுக்குத் தம்முயிர் தமக்கு உரித்தாகாமையாலே காத்துக் கொள்ளுங்கோள்

இவ்விடத்தில் உயிர் காத்தலாவது
தமக்கு உரித்தாக்குகை யாதலால் கண்டவர்களில் ஸ்வ தந்த்ரர் ஆவார் இல்லை என்று கருத்து
ஸ்வா தந்தர்யம் இறே ஸம்ஸார மூலம்

ஞாலத்துள்ளே–
ஞாலத்துள்ளே ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே (திருவாய் -6-7-2 )
ஆக்கும் விஷயம் ஆகையாலே தப்ப அரிது என்றதாயிற்று

பறவையின் பாகன் ஞாலத்துள்ளே மதன செங்கோல் நடாவிய கூற்றம் –
என்று அந்வயிக்கவுமாம் –

———

தாத்பர்யம்

இப் பாசுரத்தில் ஆழ்வார்
பகவத் ப்ராவண்யத்தால் -யோக நிலையில் -நேத்ரங்களை மூடிக்கொண்டு -தத் ஏக த்யான பரராய் இருக்க
அப்போது தம்மைக் கண்ட பாகவதர்கள் சொன்ன பாசுரத்தை
நாயகியின் கடாக்ஷத்தில் ஆழ்ந்த மூழ்கிய நாயகன் பாசுரத்தால் அருளிச் செய்கிறார்
இந்த நாயகி எப்போதும் வளைந்து இருக்கும் தனுஸூ போல் தன்னுடைய வட்டமான புருவங்களை நெரித்து
மேல் விழுந்து பாணம் போலே அதி சூஷ்மமான விசாலமான கண்களைத் திறந்து
பார்க்கத் தகுந்த விஷயம் ஒருவரும் இல்லை
அவனுக்கு ஆழ்வார் ஒருவர் கிடைத்தார் -எங்கும் பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணன் –
இவருக்கு 16 வருஷங்கள் கழித்து தானே மதுரகவி ஆழ்வார் கிட்டினார்
பார்வையை வெளியிடாமல் தன்னிடம் அடக்கிக் கொண்டு
கொடி போல் அதி துர்பலையாய் இருந்தாலும்
உபாயமாக அனுஷ்ட்டிக்க பலம் இல்லையே இவளுக்கு
ஆனால் கூற்றம் -தீமைகளைப் போக்க வல்லவள்
சத்ருக்களை மாளும் படி அதி வேகம் உடைய பெரிய திருவடியை வாஹனமாக யுடைய சர்வேஸ்வரனுக்கு
புத்திரனான மன்மதனுடைய ஆஜ்ஜையை
அப்ரதிஹதமாய் நடத்தக்கடவ மிருத்யுவாக எண்ணுங்கோள்
பூ லோகத்தில் நீங்கள் சில காலம் பிழைத்து
உங்கள் பிராணனை இவள் கையில் அகப்படாத படி காத்துக் கொள்ளுங்கோள்

——

அவதாரிகை

ஏவம் வித ப்ராவண்ய அநு ரூபமான போக ஸித்திக்கு ப்ராப்த காலமாய் இருக்க
(கீழ் ஆறாம் பாட்டில் விளக்கிய அவள் ப்ராவண்யம்
அதுக்கு ஏற்ற காலமும் வர )
விளம்பிக்கையாலே கண் கலங்கின ஆழ்வாரை
ஆற்றி உரைக்கிற ஸூஹ்ருத்துக்கள் பாசுரத்தை
கார் காலத்துத் தலைவன் வரவு காணாது கண் கலங்கின தலைவியைக்
கால மயக்காலே ஆற்றின தோழி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஞாலம் பனிப்பச் செறித்து நன்னீரிட்டுக் கால் சிதைந்து
நீல வல்லேறு பொரா நின்ற வானமிது திருமால்
கோலம் சுமந்து பிரிந்தார் கொடுமை குழறு தண் பூம்
காலம் கொலோ வறியேன் வினையாட்டியேன் காண்கின்றவே –7-

பாசுரம் -7-ஞாலம் பனிப்பச் செறித்து -கால மயக்கு –இன்னுயிர்ச் சேவல் -9-5–

பதவுரை

ஞாலம் பனிப்ப–உலகம் நடுங்கும்படி
செறித்து-தம்மில் தாம் நெருங்கி
நல் நீர் இட்டு–(தம் உடம்பின்) நீரை நன்றாக வெளிச் சிந்தி
கால் சிதைந்து–கால்களால் தரையைக் கீறிக் கொண்டு
நீலம் வல் ஏறு–கரிய வலிய எருதுகள்
பொரா நின்ற–போர் செய்யப் பெற்ற
வானம் இது–ஆகாசமாகும் இது;
திருமால்–எம்பெருமானுடைய
கோலம் சுமந்து–வடிவத்தை யுடையதாய்
பிரிந்தார் கொடுமை குழறு–பிரிந்து போன நாயகனது கொடுந்தன்மையைக் கூறுகிற
தண் பூ காலம் கொல் ஓ–குளிர்ந்த அழகிய கார் காலத்தானோ?
வினையாட்டியேன்–தீவினையுடைய நான்
காண்கின்ற–காண்கின்றவற்றை
அறியேன்–இன்னதென்று அறிகிற வில்லை.

ஞாலம் பனிப்பச் செறித்து
லோகம் எல்லாம் நடுங்கும்படி தன்னில் தான் நெருங்கி

நன்னீரிட்டு
ஸ்வ கதமான ஜலத்தை இட்டு

பனிப்ப நன்னீர் இட்டு -என்று
நனையும்படி நன்றாக நீர் இட்டு என்றுமாம் –

கால் சிதைந்து-
மேகத்துக்கு வர்ஷ தாரை முரிந்து விழுகை
ஏற்றுக்குச் சினத்தாலே காலைச் சிதைக்கை –

நீல வல்லேறு
நீல நிறத்தை யுடைய ஏறு என்று
மேகத்தை மயக்கி உரைக்கிறாள் –

பொரா நின்ற வானமிது
இந்த ஆகாசத்திலே பொருகிறன அத்தனை

கால் சிதைந்து பொரா நின்ற -என்று
மேகமானது காற்றின் சிதைவாலே மேகம் எதிர் எதிரே பொருகிறது என்றுமாம்

அன்றியே
திருமால் கோலம் சுமந்து
விளங்கின மின்னாலும்
ஸ்யாமளமான நிறத்தாலும்
ஸ்ரீ மானுடைய கோலத்தைத் தரித்து

பிரிந்தார் கொடுமை குழறு
இக்காலத்தில் பிரிந்து போய் வராத தலைவருடைய கொடுமையைத்
தன் அநஷரமான முழக்கத்தாலே சொல்லுவதான

தண் பூம் காலம் கொலோ
குளிர்ந்து
அழகிய
கார் காலம் தானோ

வறியேன் வினையாட்டியேன் காண்கின்றவே-
உன்னை இப்படிக் காண வைத்த பாபத்தை யுடைய நான்
காணா நின்றன ஏது என்று அறிகின்றிலேன்
தெரிந்து அறிய மாட்டு கிறிலேன் –

இத்தால்
இவ்வாழ்வாருடைய அனுபவ யோக்ய காலத்தில்
விளம்ப அஷமத்வத்தாலே
அவி விவேக கன அநந்த திங் முகமாய்
பஹுதா சந்தத துக்க வர்ஷியான பவ துர் தினத்திலே (ஸ்தோத்ர ரத்னம் -49 )
அகப்பட்டோம் என்று ஸாம்ஸாரிக கோலா ஹலத்தாலே
இவருக்குப் பிறந்த கண் கலக்கத்தைக் கண்ட
ஸூஹ்ருத்துகள் (நல்லார் நாவில் குருகூர் ஸாத்விகர் )

ஞாலம் பனிப்பச் செறித்து
லோகம் நடுங்கும்படி பரஸ்பர ஸ்பர்தாளுக்களாய் நெருங்கி

நன்னீரிட்டுக் கால் சிதைந்து
நல்ல நீர்மையை இட்டு வைத்து
நிலை குலைந்து
(நீர்மை ஸுலப்ய குணம் விட்டு )

நீல வல்லேறு
நைல்யத்தாலே தமஸ் பிராஸுர்யத்தையும்
ஏறு என்று
செறுக்கு சொல்லுகையாலே
ரஜஸ் பிராஸுர்யத்தையும்
உடைய வலியரான துர்மான ப்ரசுர புருஷரானவர்கள்

பொரா நின்ற
ஒருவருக்கு ஒருவர் மேலிட்டு நடத்துகிற

வானமிது -என்கையாலே
இத் தோஷம் ப்ரஹ்ம பவனம் அறுதியாக நடக்கும் என்றபடி –

இத்தால்
ஸம்ஸாரிகள் கோலாஹலத்துக்குக் கண் கலங்க வேணுமோ
பாடாந்தரம் -நீர் கலங்க வேணுமோ என்று கருத்து –

அன்றியே
அனுபவ அலாப தசையிலே
திருமால் கோலம் சுமந்து பிரிந்தார் கொடுமை குழறு தண் பூம் காலம் கொலோ வறியேன் வினையாட்டியேன் காண்கின்றவே
ரஜஸ் தமஸ் ப்ரஸுரரான புருஷர்கள்
ஸ்ரீ யபதியைப் பாவித்துத்
தங்கள் ஸாந்நித்யத்தாலே
பிரிந்தாருடைய கொடுமையை ஸூசிப்பிக்கிற ஆகாரத்தாலே
இவ்வவஸ்தை அஸஹ்யமாகவும் கூடும் இறே என்று
கோடி த்வய தர்சனத்தாலே ஸம்ஸயித்து ஆற்றாமையை மட்டம் செய்வித்தார் ஆயிற்று

(ரஜஸ் தமஸ் ப்ரக்ருதிகள் தங்களுக்குள்ளே பொருது என்றும்
உம்மிடம் கலந்து என்றும்
கோடி த்வயம் )

இங்கு வினையாட்டியேன் என்றது
பாரதந்தர்யத்தாலே
ஸ்மாரகமான லௌகிக கோலாஹலத்தைத் தவிர்த்தல்
அவிளம்பேந போக ஸித்தியைப் பிறப்பித்தல்
செய்ய மாட்டாத பாபத்தை யுடையேன் என்றபடி –

—–

தாத் பர்யம்
இப்பாசுரத்தில் ஆழ்வார் தமக்குப் பகவத் ப்ராவண்யம் மிக்கு பகவத் அனுபவம் பிராப்தி உண்டாக –
அது பெறாமல் கலங்கி இருக்க அவரை
ஆஸ்வாசப்படுத்த பாகவதர்கள் பாசுரத்தை
தோழியின் பாசுரத்தால் –
குறித்த காலத்தில் நாயகன் வாராமல் தளர்ந்த நாயகியை ஆஸ்வாசிப்படுத்திய பாசுரத்தால் அருளிச் செய்கிறார்

ஓ தோழி வர்ஷா காலத்தால் வருவதாகச் சொல்லிப் போந்தான்
மேகங்கள் சுற்றிச் சூழ்ந்து நெருங்கி குளிர வர்ஷிக்கத் தொடங்கிற்று
ஆறுகளும் குளங்களும் பெருகத் தொடங்கிற்று –
ஏக்க தசை -பர பக்தி தசை மாறி ஆர்த்தி அதிகார பூர்த்தி அடைந்த பின்பு -நாயகி சொல்ல –
தனது தசையைச் சொல்ல
இப்போதும் வரவில்லை
தோழி மாற்றக் கருதி
இது வர்ஷா காலம் அன்று
மேகமே இல்லை
‘இரண்டு எருதுகள் பூமியில் இடம் இல்லாமல் ஆகாசத்தில்
அந்யதா கரிக்கிறாள்
நம்மிடம் விஸ்வசிக்க மாட்டாள் என்று
ஸ்ரீ யபதியினுடைய வேஷம் கொண்ட மேகம் ஆகவுமாகலாம் என்கிறாள்
இது கர்ஜிப்பதை பார்த்தால்
நான் வந்த காலத்திலும் உன்னை விட்டுப்பிரிந்து நாயகன் வரவில்லை என்று
துக்கம் விசாரிக்க வந்தது போல் புலம்பு கிறது
உன்னுடைய அவஸ்தையைக் காண நேர்ந்தது நான் பண்ணிய பாபமே என்கிறாள்

————-

அவதாரிகை

இப்படி பகவத் அலாப தசையிலே ஆஸ்வாஸ கரரான அன்புடைய பாகவதர்
பகவத் பரராய்க் கொண்டு
திருமலை தொடக்கமான உகந்து அருளின தேசங்களிலே போகைக்கு ஒருபடிப்பட்டமை
அறிந்து அருளின இவர் –
அவர்கள் பிரிவாற்றாமையாலே அவர்களை நோக்கி அருளிச் செய்த பாசுரத்தைத்
தலைமகன் பொருள் வயிற் பிரிவு அறிந்து உரைத்த
தலைமகள் வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –

இது தலைமகன் பொருள் வயிற் பிரிவு அறிந்த தோழி
தலைவன் தன்னை நோக்கி உரைத்ததாகவுமாம்

பிரியலுற்ற அன்பரை நோக்கி
இவ்வாழ்வார் பிரகிருதி அறிந்த ஸூஹ்ருத்துகள் வார்த்தை யாகவுமாம் –

காண்கின்றனகளும் கேட்கின்றகளும் காணில் இந்நாள்
பாண் குன்ற நாடர் பயில்கின்றன இதெல்லாம் அறிந்தோம்
மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேங்கடத்தும்பர் நம்பும்
சேண் குன்றம் சென்று பொருள் படைப்பான் கற்ற திண்ணனவே —8–

பாசுரம் -8-காண்கின்றனகளும் கேட்கின்றனகளும் -தலைவன் பொருள் வயிற் பிரிதல் குறிப்பால்
அறிந்த தலைவி தோழிக்கு கூறல் –கையார் சக்கரம் -5-1-

பதவுரை

குன்றம் நாடர்–மலைகளை யுடைத்தான நாட்டுக்குத் தலைவரான நாயகர்
இ நாள்–இன்றை தினத்தில்
பயில்கின்றன–பலவாறாக நடத்துகின்றவையான
காண்கின்றனகளும்–காணப்படுகிற செய்கைகளும்
கேட்கின்றனகளும்–கேட்கப்படுகின்ற சொற்களும்
காணில்–ஆராய்ந்து பார்க்குமிடத்து
பாண்–வெளியுபசார மாத்திரமாம்;
இது எல்லாம்–இந்த மிக்க உபசாரமெல்லாம்
மாண் குன்றம் ஏந்தி–மாட்சிமை தங்கிய கோவர்த்ததன கிரியை நினைப்பின்றி யெடுத்த கண்ணபிரானது
தண் மாமலை வேங்கடத்து–குளிர்ந்த சிறந்த திருவேங்கடமலையின்
உம்பர் நம்பும்–மேலுலகத்தாரால் விரும்பப்படுகிற உயர்ந்த சிகரத்தை
சென்று–போய் அடைந்து
பொருள் படைப்பான்–(அங்கும்) பொருளீட்டும் பொருட்டு
கற்ற–(புதிதாக) அப்யஸித்த
திண்ணளவு–வலிமையின் செயல் (என்று)
அறிந்தோம்–தெரிந்து கொண்டோம்.

காண்கின்றனகளும் கேட்கின்றகளும் காணில் இந்நாள்
பொருட்க்குப் பிரிவானாக ஒருப்பட்ட தலைமகன்
தலைவி தரிக்கைக்காக சில தாழ்வுகள் செய்யவும்
சில தாழ்வுகள் சொல்லவும் கண்டு
இதுக்கு முன்பு கண்டும் கேட்டும் அறியாதே
இப்போது காண்கின்றவையும் கேட்க்கின்றவையும் ஆராய்ந்து பார்க்கில்

பாண்
பாண்மையாய் இரா நின்றது

குன்ற நாடர்
மலையோடு கூடின நாட்டை யுடையாராகையாலே வன்னெஞ்சர் என்று கருத்து

பயில்கின்றன
பல படியும்
செய்வது
சொல்வது ஆகிறன

இதெல்லாம்
இந்த அதிசயித உபசாரங்கள் எல்லாம்

அறிந்தோம்
ஸா பிப்ராயம் என்று அறிந்தோம்

மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேங்கடத்து
கோ ரக்ஷணத்துக்கு உறுப்பாகையாலே மாட்சிமை யுடைத்தான கோ வர்த்தனமாகிற மலையை
அநாயாசேன ஏந்திய கிருஷ்ணனுடையதாய்
குளிர்த்தியை யுடைத்தாய்
பெரிய திருமலை என்று சொல்லப்படுவதான திரு வேங்கடத்திலே

மாட்சிமை -நன்மை

மாண் குன்றம் ஏந்தி -என்று
மாணுமாய்
குன்றம் ஏந்தியுமானவன் என்று
வாமன கிருஷ்ண அவதாரங்களைச் சொல்லிற்று ஆகவுமாம்

உம்பர் நம்பும் சேண் குன்றம் சென்று
மேலாத் தேவர் (திருவாய் -5-1-2 ) விரும்பும் உயர்ந்த சிகரத்தை சென்று கிட்டி

பொருள் படைப்பான் கற்ற திண்ணனவே
அழியாப் பொருள் படைக்கைக்கு அறுதியிட்ட சிக்கனவு -என்று அறிந்தோம் -என்று அந்வயம் –

இத்தால்
பகவத் அனுபவ பரராய்க் கொண்டு
ஆழ்வாரைப் பிரிந்து போகலுற்ற அன்பர்
இவர் அநுமதியோடே விடை கொள்ள வேணும் என்று நினைத்து இவர் அளவிலே
பஹு முகமாக அனுவ்ருத்தியைப் பண்ணி தாழ்ச்சி தோன்ற சில விண்ணப்பம் செய்ய
இவர்கள் பிரிவுக்கு அடியான இது பொறுத்து அருளாமையாலே
பாடுவார் கொண்டாட்டம் போலே பல படியும் தாழ்வு செய்வது சொல்லுவதாகிற இதுக்கு அபிப்ராயம் அறிந்தோம்

(அரையர் திருவேங்கடம் செல்ல ஆசை கொள்ள மந்தி பாய் வேங்கடம் பாசுரம் –
நின்றான் கிடந்தான் -அறிந்தேன் யாத்திரை போகவில்லை என்று சொல்ல வைத்தாரே நம்பெருமாள் )

குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவன் –அன்று ஞாலம் அளந்த பிரான் -சென்று சேர் திருவேங்கட மா மலையிலே (திருவாய் -3-3-8 )என்றும்
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் (திருவாய் -6-10-10-) என்றும்
உயர்ந்த சிகரத்தை சென்று கிட்டி
ஸ்ரீ நிதியாகிற மஹா நிதியைப் பெறுகைக்கு அறுதியிட்ட சிக்கனவே இறே என்று அருளிச் செய்தமை தோற்றிற்று –

இவ்விடத்தே
குன்ற நாடர் என்றது
வேங்கடத்தைப் பதியாக (நாச்சியார்-8-9 ) வாழ நினைத்தவர்கள் என்றபடி

(கிளைவித் தலைமகன் பாட்டுடைத் தலைமகனை நோக்கிச் செல்வதாக தலைவி சொன்னவாறு )

தாத்பர்யம்

இப்பாசுரத்தில் இந்நாள் வரை ஸஹவஸித்த பாகவதர்கள்
திருவேங்கடமலை யாத்திரை உத்தேச்யமாக
அத்தை ஆழ்வார் இடம் விண்ணப்பம் செய்ய
அவர்களது அபூர்வமான நைச்ய யுக்திகளையும் சாத்ருச சேஷ்ஷ்டிதங்களையும் கண்டு
இவர்கள் பிரிய நினைக்கிறார்கள் என்று அறிந்து அருளிச் செய்யும் பாசுரத்தை

நாயகன் பிரிய நினைக்கும் பொழுது செய்யும் செயல்களையும் சொற்களையும் நாயகயின் பாசுரத்தால் அருளிச் செய்கிறார்
உம்மிடத்தில் இப்பொழுது இவை போன்ற
உம்முடைய செயல்கள் சொற்களும் நிரூபிக்கில்
பிரிய நினைப்பது போல் அன்றோ இருந்தது
நித்ய ஸூரிகளும் விரும்பத்தக்க்க
ஸ்ரமஹரமாய் மநோ ஹரமாய்
முன்பு கோவர்த்தன ஏந்தி ரஷித்தவன்
இப்பொழுது சர்வ சுலபனாய்
அது ஊருக்காக இங்கு உலகுக்காக
அப்போது 125 வருஷங்கள்
இப்பொழுது நித்தியமாக
அங்கு சேவிக்கப் போக நினைத்தீர்கள்
அந்யாபதேசத்தில் -பேசும் பொழுது -அம் மலையைக் கிட்டித் தனம் ஆர்ஜனம் பண்ணிப்போக நினைத்தீர்கள்
உம்முடைய மநோ ரதம் நாம் ஸூ வியக்தமாக அறிந்தோம்
இவ்வாறு என்னை விட்டுப் பிரிந்து செல்வது உங்களுக்குத் தகாது காணும் என்று ஆழ்வார் அருளிச் செய்கிறார்

—————————–

அவதாரிகை

அன்புடையாரை அகல மாட்டாத இவருடைய ஸ்வரூப வை லக்ஷண்யத்தாலும்
ஞான வை லக்ஷண்யத்தாலும்
பிரிய மாட்டாமையால் அன்பர் சொன்ன பாசுரத்தை
பிரிவு அறிந்த தலைவி எழிலும் வேறுபாடும் கண்டு
பிரிய மாட்டாத தலைவனுடைய கோளான வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –

திண் பூஞ்சுடர் நுதி நேமி யஞ்செல்வர் விண்ணாடனைய
வண் பூ மணி வல்லி யாரே பிரிபவர் தாம் இவையோ
கண் பூங்கமலம் கருஞ்சுடராடி வெண் முத்தரும்பி
வண் பூங்குவளை மடமான் விழிக்கின்ற மாயிதழே–9-

பாசுரம் -9-திண் பூஞ் சுடர் நுதி நேமி -தலைவன் தலைவியின் நீங்கல் அருமை கூறுதல் -பொலிக பொலிக –5-2-

பதவுரை

திண்–வலிய
பூ–அழகிய
சுடர்–ஒளியுள்ள
நுதி–கூர்மையை யுடைத்தான
நேமி–திருவாழியை யுடைய
அம் செல்வர்–அழகிய எல்லா ஐசுவரியங்களையுமுடைய எம்பெருமானது
விண் நாடு அனைய–பரமபதத்தை யொத்த
வண் மணி பூ–அழகிய சிறந்த பூங்கொடி போன்றவளை
யாரே பிரிபவர் தாம் எவர்தாம் பிரிய வல்லவர்? (எவரும் பிரிய வல்லரல்லர்;)
(ஏனெனில்;)
இவையோ கண்–இவளது கண்கள் கண்களாக மாத்திரமிருக்கின்றனவோ?
பூ கமலம்–தாமரை மலர்களாய்
வண் பூ குவளை–அழகிய செங்கழு நீர் மலர்களுமாய்
மா இதழ்–பெரிய இதழ்களை யுடையவையாய்
கரு சுடர் ஆடி–கரிய (அஞ்சனத்தின்) ஒளியை அணிந்து
வெண் முத்து அரும்பி–(நம்மைப் பிரிதலாற்றுமையாலுண்டான கண்ணீராகிற) வெளுத்த முத்துக்கள் தோன்றப் பெற்று
மடமான் விழிக்கின்ற–மடத்தை யுடைய மான் போல நோக்குகின்றன.

திண் பூஞ்சுடர் நுதி நேமி யஞ்செல்வர்
திண்மையையும்
புகர் யுடைமையையும்
ஒளியையும்
‘கூர்மையையும்
உடைய திருவாழியோடே உண்டான சேர்த்தி அழகையும் உடையராய்
ஸ்ரியா ஸார்த்தம் -என்கிறபடியே
வைகுண்ட பர லோக -லிங்க புராண ஸ்லோகம்
பெரிய பிராட்டியாரோடே கூட எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ மானுடைய
(அந்தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் -அம்மானுக்கு–ஆழி இத்யாதி
அங்கும் உண்டே -தாமம் ஸ்ரீ வைகுண்டம் )

விண்ணாடனைய
பரமபதம் போலே
நிரதிசய ஆனந்தா வஹையான

வண் பூ மணி வல்லி
தர்ச நீயமான புஷ்போத் கமத்தை உடைத்தாய்
ஸ்லாக்யமான கொடி போன்றவளை
(பூ மலர்ந்த கொடி )

யாரே பிரிபவர் தாம்
தம்மைத் தாம் அறிவாரில் பிரிவார் உண்டோ

அது நிற்க
இவையோ கண்
கண்ணாய் இருக்கிறானோ

பூங்கமலம்
அழகிய கமலமானது

கருஞ்சுடராடி
அஞ்ஐனத்தின் ஒளியை அணிந்து

வெண் முத்தரும்பி
ஆற்றாமையால் உண்டான அஸ்ரு பிந்துக்கள் ஆகிற
வெளுத்த முத்தை அரும்பி

வண் பூங்குவளை
உதாரமாய்
அழகிதான
செங்கழு நீரினுடைய

மடமான் விழிக்கின்ற
மடப்பத்தை யுடைய
மானின் நோக்கை யுடைத்தாகா நின்ற

மாயிதழே–
பெரிய இதழை யுடைத்து என்னலான
இவை கண்ணாய் இருக்கின்றனவோ

இக் கொடிக்கு வண்ணம் சிறப்புடைய பூ என்னும் அத்தனை
ஆதலால் ஆரே பிரிபவர் என்று கருத்து
இது நீங்கல் அருமை கூறல்

கமலம் என்கையாலே அரி சிதறுதலும் (மெதுவாக மலரும் )
கருஞ்சுடர் என்கையாலே அஞ்சனம் அணிவும்
வெண் முத்து அரும்பி -என்கையாலே ஆற்றாமையும்
குவளையின் பெரிய இதழ் -என்கையாலே கடைச் சிவப்பும்
மான் விழிக்கின்ற -என்கையாலே செல்லாமை நோக்குதலும் தோற்றிற்று
குவளை -நெய்தல் என்னவுமாம்

இத்தால்
இவ்வாழ்வாரைப் பிரிய நினைத்த அன்பரான பாகவதர்
பரத்வ ப்ரகாசகமான திருவாழியோடு உண்டான சேர்த்தியாலே
தர்ச நீயனான ஸ்ரீ மானுடைய பரமபதம் போலே
ஆனந்தாவஹமாய்

உதாரமாய் –
போக்யமாய் –
அத் யுஜ்ஜ்வலமாய் –
உபக்ந அபேக்ஷமான கொடி போலே –
பாரதந்தர்ய ஏக நிரூபணீயமான ஸ்வரூபத்தை யுடைய இவரை
ஸ்வரூப ஞானம் பிறந்தாரில் விடுவார் யுண்டோ –

(வண் பூ மணி வல்லிப் பேச்சு வந்தேறி அல்ல -நாயனார்
வல்லி கொடி -தேக ஆத்ம குணங்கள் )

அது நிற்க
இவையே கண் என்கையாலே
நாட்டு ஒப்பான ஞானம் அன்று என்றபடி

பூங்கமலம் கருஞ்சுடராடி -என்கையாலே
ஞானத்துக்கு ஆகாரம் விஷயாதீனம் என்றிட்டு
பத்ம வர்ணனையும் அஞ்சநாபனையும் விஷயீ கரித்தமை தோற்றிற்று

(கண்ணுக்கு கூர்மை சேர்ப்பது மை -அஞ்சனம்
இவரது ஞானத்துக்கு விஷயம் மெய் நின்ற பகவத் ஞானம் -அந்த வடிவம்
ஸம்ஸார ஞானம் பொய் நின்ற ஞானம்
திருவையும் மாலையையும் க்ரஹித்தவள் -மெய்யான ஞானம்
பூம் கமலம் -அவள்
கரும் குவளை -அவன் )

வெண் முத்தரும்பி -என்கையாலே
சுத்த ஸ்வ பாவமான முக்தா ஹாரத்தை ஆவிஷ் கரித்தமை சொல்லிற்று

குவளை மாயிதழ் என்கையாலே
அநுராதகதை (சிகப்பு) தோற்றிற்று

(இவரது வெறும் வாக்ய ஜன்ய ஞானம் இல்லையே
பக்தி ரூபா பன்ன ஞானம் தானே
ராகம் கலந்த ஞானம் )

மான் விழிக்கின்ற என்கையாலே
விஸ்லேஷ அசஹதை தோற்றிற்று

ஏவம் விதமான ஞான வை லக்ஷண்யத்தாலும் இவரைப் பிரியப் போமோ
என்கிற பாசுரத்தை அருளிச் செய்தார் ஆயிற்று –

——-

தாத்பர்யம்

முன் பாசுரத்தில் ஆழ்வார் ஸூஹ்ருதரான பாகவதர்கள்
தம்மை விட்டுப் பிரிவதாக விசன்னராக இருக்க
அவர்களும் உம்முடைய வை லக்ஷண்யத்தைக் கண்டா நாங்கள் பிரிய மாட்டோம் என்று அருளிச் செய்த பாசுரத்தை
நாயகி யுடைய சவுந்தர்யத்தால் மக்னனான நாயகன் உரைத்த பாசுரமாக அருளிச் செய்கிறார்

சவுந்தர்யம்
லாவண்யம்
மார்த்தவம் –
சந்நிவேசம் -முதலான
இவற்றை நிரூபகமாக உள்ள அவயவங்கள் உடைய நாயகியை
ஸ்ரீ மானான திருமால் உள்ள ஸ்ரீ வைகுண்டம் சேர்ந்தவர்கள் அங்குள்ள தேஜோ மயமான
வலிய திருவாழி தொடக்கமான -ஆயுதம் ஆபரணம் இரண்டு ஆகாரமும் உண்டே –
போக்யத்தில் ஈடுபட்டு அத்தை விட்டுத் திரும்ப மாட்டாதாப் போலே

உன்னுடைய மாந்தளிர் போன்ற அதரத்தையும்
கமலம் போல் அதி ஸூந்தரமாய் கரு நெய்தலின் முத்துக்கள் சிதரிக்க கிடந்தால் போல் -சோக அஸ்ரு சொரிந்து
மான் போல் விழிக்கும் குவளை போன்ற கண்களை யுடைய
உன்னைக் கண்டார் பிரிவாரோ
ஆகையால் நான் உன்னை விட்டுப் பிரிய மாட்டோம்
பாகவத சம்ஸ்லேஷம் கிட்டிய பின்பு பகவத் ஸம்ச்லேஷம் தேடிப்போவாரோ என்றவாறு

—————

அவதாரிகை

இப்படிப் பிரிய மாட்டாத அன்பரான பாகவதர்
இவ்வாழ்வாருடைய அவயவ சோபையிலும்
அருளிச் செய்த வசன வ்யக்திகளிலும்
ஈடுபட்டுச் சொல்லுகிற வார்த்தையை
தோழியும் தலைமகளும் இருந்த கானல் புனத்து எதிர்ப்பட்ட தலைவன்
மதியுடன் படுத்தலுற்றுக்
குறை யற யுரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

மாயோன் வட திருவேங்கட நாட வல்லிக் கொடிகாள்
நோயோ யுரைக்கிலும் கேட்கின்றிலீர் உரையீர் நுமது
வாயோ அதுவன்றி வல்வினையேனும் கிளியும் எள்கும்
ஆயோ அடும் தொண்டையோ அறையோ விதறிவரிதே—10-

பாசுரம் -10-மாயோன் வட திருவேம்கட நாட -தலைவன் தோழியிடம் குறை கூறல் –
மதி உடன்படுதல் –நெடுமாற்கு அடிமை -8-10-–

பதவுரை

மாயோன்–ஆச்சரியமான குணசேஷ்டிதங்களை யுடையனான எம்பெருமானது
வடதிருவேங்கடம் நாட–வடதிருவேங்கட மலையை இடமாகவுடைய
வல்லி கொடிகாள்–பூங்கொடி போன்ற இளம் பெண்களே!
அது அன்றி–அதுவல்லாமல்
வல்லினையேனும் கிளியும் எள்கும்–கொடிய தீவினையையுடைய நானும் கிளியும் தளரும்படியான
ஆயோ–(உங்களது) ‘ஆயோ’ என்கிற சொல்லோ?
தொண்டையோ–கோவைக் கனி போற் சிவந்த உங்களது அதரமோ?
நோய் ஓ உரைக்கிலும் கேட்கின்றிலீர்–(என்னுடைய) காதல் நோயையோ (நீங்கள் தாமாக அறியா விட்டாலும்)
நான் சொன்னாலும் கேட்கிறீரில்லை;
உங்களுடைய வாயின் அழகோ?
அடும்–(என்னை) உயிர்க் கொலை செய்யா நிற்கும்;
இது அறிவு அரிது–இவற்றில் இன்னது என்னை வருத்து மென்பது அறிய அரிதா யிருக்கின்றது;
உரையீர்–நீங்கள் சொல்லுங்கள்;
(அறையோ–இது முறையிட்டுக் கூறும் வார்த்தை.)

மாயோன்
ஆச்சர்யமான குண சேஷ்டிதங்களை யுடைய
ஸர்வேஸ்வரனதான

வட திருவேங்கட நாட வல்லிக் கொடிகாள்
வட எல்லையான திருமலையை நாடாக யுடைய
வல்லி போன்று இருந்த பெண்காள்

இங்குக் கொடி என்று
கொடிச்சியாய்
குற மகள் ஆகவுமாம்

நோயோ யுரைக்கிலும் கேட்கின்றிலீர் உரையீர்
உங்கள் முன்னே நின்று ஈடுபட்ட என்னுடைய நோய் காணாத அளவன்றியே
சொல்லவும் கேட்க்கிறீலீர்
ஸ்வர அவஸாதமும் செவிப்படுகிறது இல்லை

ஓ என்று
ஈடு பாடு தோற்றுவித்த அசைச் சொல்
உங்கள் ஸந்நிதி எனக்கு ஈடுபாட்டை விளைத்த படி

நுமது வாயோ
உங்கள் விகசிதமான வாய் அழகோ

அதுவன்றி
அவ்வளவு இன்றியே

வல்வினையேனும் கிளியும் எள்கும் ஆயோ
கால் தாழ்ந்து நோவு படுகைக்கு ஈடான வலிய பாபத்தை யுடையேனான நானும்
உங்கள் புனத்திலே போகம் படிந்து உண்ணும் கிளியும்
சிதிலராம்படி
ஆய விடுகிற மிடற்று ஓசையோ

தொண்டையோ
அக்காலத்தில் தொண்டைப்பழம் போலே சிவந்த
அதர சோபையோ

அடும்
என்னை உயிர்க் கொலை செய்யா நிற்கும்

இது அறிவது அரிதே
இவற்றில் ஏதோ நலிகின்றது என்று அறிய அரிதாய் இரா நின்றது

உரையீர் அறை
நீங்கள் சொல்ல வல்லீராகில் சொல்லுங்கோள்
இவர்கள் வார்த்தை கேட்க்கையில் விருப்பத்தாலே கருத்து அறிவித்த
தலைமகன் மேலிட்டு உரைத்த பாசுரம்
குறை நயந்த தலைவன் கருத்து அறிவித்தல்

மாயோன் வட திருவேங்கட நாட
இத்தால்
பிரிய மாட்டாத அன்பர்கள்
மாயோன் இத்யாதியாலே
அபரிச்சின்ன போக்யதையாலே ஆச்சார்யாவஹனுடைய ஸர்வ உத்தரமான
திருமலையிலே நாட்டத்தை யுடைய -என்றபடி

வல்லிக் கொடிகாள்-என்று
பகவத் அனுபவ ரஸ அபேக்ஷமான பாரதந்தர்யத்தைச் சொல்லுகிறது
பன்மை -கௌரவத்தைக் காட்டுகிறது

ஆக
போக்ய பூதன் வர்த்திக்கிற போக ஸ்தானமான திருமலையிலே
மானஸ அனுபவம் நடந்து
அத்தாலே பாரவஸ்யம் பிறந்து இருக்கிற நீர் என்றதாயிற்று

நோயோ யுரைக்கிலும் கேட்கின்றிலீர் -என்று
உம்முடைய பக்கல் ப்ராவண்யத்தாலே எங்களுக்கு உண்டான ஈடுபாடு விண்ணப்பம் செய்தாலும்
அனுபவ பாரவஸ்யத்தாலே திரு உள்ளம் போற்றுகிறது இல்லை –

உரையீர்
இது அருளிச் செய்ய வேணும்

நுமது வாயோ
அனுபவ பரிவாஹ ரூபமான பிரபந்த நிர்மாண தசையில் முக விகாஸமோ

அதுவன்றி
அவ்வளவு அன்றியே

வல்வினையேனும்
உம்மைப் பிரிந்து போகாதபடி துவக்குவதான வலிய வினையை யுடைய நானும்

இவ்விடத்தில் வினை என்பது
பாவ பந்தத்தை

கிளியும் -என்று
பசுஞ்சாம நிறத்தாலும்
அவ்வதரத்தில் பழுப்பாலும்
வசன மாதுர்யத்தாலும்
போக்ய பூதனான ஈஸ்வரனை ஸூசிப்பிக்கிறது

எள்கும்-என்று
ஈசேஸிதவ்ய விபாகம் அற
இவர் பாசுரத்தில் ஈடுபட்டமை தோற்றிற்று

(தொண்டர்க்கு அமுது உண்ண அன்றோ சொன்னார்
அவனும் தென்னா தென்னா என்று ஈடுபடும் படி அன்றோ இவர் திவ்ய பிரபந்தங்கள் )

ஆயோ -என்று
வ்யவஹார ரூபமான ஸப்த வ்ருத்தியோ -என்றபடி

தொண்டையோ -என்று
தாத் காலிகமான அதர ஸ்புரணமோ -என்றபடி

அடும்-என்கையாலே
இவை தனித்தனியே சைதில்ய ஜனகம் என்றபடி

அறையோ விதறிவரிதே—என்கையாலே
வேறே ஆராலே இத்தை விவேகித்து அறியலாம் என்றபடி

உரையீர் -என்று
நீர் தாமே இத்தை நிஷ்கர்ஷித்து அருளிச் செய்ய வேண்டும் என்று அந்வயம் –

தாத்பர்யம்

இப் பாசுரத்தில் ஆழ்வாருடைய சவுந்தர்ய ஸுசீல் யாதி குணங்களில் ஈடுபட்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள் பாசுரத்தை
(நேராக -இல்லை மதுர கவி ஆழ்வார் போன்ற )தோழிகளுக்கு விண்ணப்பம் செய்வது
நாயகியின் பக்கல் வ்யாமுக்தனான நாயகன் வார்த்தை யாலே அருளிச் செய்கிறார்
ஓ ஸ்த்ரீ ரத்னமே
நான் இப்படி வேதனை படும் சமயத்தில் நீயே வந்து விசாரித்து ஆஸ்வாசப்படுத்தாமல்
அது தவிர்ந்ததுவும் அன்றி
நான் உன்னைக் கிட்டி அறிவித்த அளவும் காது கொடுத்துக் கேட்க்காமலும் உள்ளாயே
என்னுடைய பாதிப்பு எனக்கு அஸஹ்யமாய் இருக்கிறது
இதற்க்கு ஹேது ஆராய்ந்த அளவில்
உன்னுடைய அவயவ சவுந்தர்யமோ
கிளியும் தோற்று இரை எடுக்கவும் தவிர்க்கும் படி
குருவி ஓட்டும் ஆயோ என்னும் சொல்லோ
உனது அதரத்தின் தொண்டைப் பழம் போன்ற அழகோ
என்று அறிய வில்லையே
ஆகவே அறியாமை வெற்றி கொள்ளட்டும் என்கிறான்

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திரு விருத்தம் -தனியன்/பிரவேசம் -முதல் பாசுரம் –ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் -வியாக்யானம் –

January 28, 2022

ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் வைபவம்

ஸூந்தர ஜாமாத்ரு முநே ப்ரபத்யே சரணாம் புஜம்
ஸம்ஸார ஆர்ணவ ஸம் மக்ந ஐந்து சந்தார போதகம்

ஸம்ஸாரக் கடலில் அழுந்தி உள்ள ஜந்துக்களைத் தாண்டுவிக்கும் ஓடம் போன்றதான
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயரின் திருவடித் தாமரைகளை சரண் அடைகிறேன் –

————-

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளைக்கும் அவர் திருக்குமாரர் ஸ்ரீ நாயனார் ஆச்சான் பிள்ளைக்கும் சிஷ்யரான இவர்
தென் தேசத்தில் ப்ரஹ்ம தேசம் மன்னார் கோயிலில் -ஆனிமாதம் ஸ்வாதி நக்ஷத்திரத்தில் திரு அவதரித்தவர்
திருவாய் மொழிக்கு பன்னீராயிரப்படி அருளிச் செய்தவர்

அன்போடு அழகிய மணவாளச் சீயர்
பின்போரும் கற்று அறிந்து பேசுகைக்கா தம் பெரிய
போதமுடன் மாறன் மறையின் பொருள் உரைத்தது
ஏதமில் பன்னீராயிரம் –உபதேச ரத்னமாலை –45-

இவரைப் பெரியவாச்சான் பிள்ளை திருத்திப் பணி கொண்டு அருளிய விவரம் இவர் வைபவத்தில் காட்டப்பட்டுள்ளது

மன்னு மணவாள முனி செய்யுமவை தாமும் சில –(உபதேச 47)என்று மா முனிகள் அருளியபடி
திரு விருத்தம் ஸ்வாபதேச உரை முதலான மூவாயிரத்தில் சில பிரபந்தங்களுக்கு உரை
த்ராவிட உபநிஷத் சங்கதி -ஸம்ஸ்க்ருத பத்ய கிரந்தம்
தத்வ தீபம் -ஸம்ஸ்க்ருத கத்ய கிரந்தம்
அதுக்கு இவரே -தீப பிரகாசம் -மணிப்பிரவாள வியாக்யானம்
தீப ஸங்க்ரஹம்
தத்வ நிரூபணம்
ரஹஸ்யத்ரய காரிகா வளி
ஸ்ரீ பகவத் கீதை வெண்பா இவை போல்வன நமக்கு கிடைத்துள்ளன –
இவர் அருளிச் செய்துள்ள கீதைக்கு மணிப்பிரவாள வியாக்யானம் போல்வன இப்பொழுது லுப்தம்

திருமாலை ஆண்டான் திரு வம்சத்தவரான யாமுனாச்சார்யர் இவரது சிஷ்யர்
ப்ரமேய ரத்னம் போன்ற கிரந்தங்கள் சாதித்தவர்

பூர்வாஸ்ரமத்தில் -வரதராஜர் என்னும் திருநாமம் –
உத்தம ஆஸ்ரமத்தில் ஸூந்தர ஜாமாத்ரு முனி -அழகிய மணவாள ஜீயர் என்று திருநாமம் பெற்றார்
வாதிகளை ஜெயிக்கையால் வாதி கேஸரீ என்ற பட்டப்பெயர் பெற்றார் –

————————–

பிரவேசம்
ஸ்ரீ யபதியாய்
ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷண ஸ்வரூப ரூப குண விபூதியை யுடைய ஸர்வேஸ்வரன்
பதிம் விஸ்வஸ்ய-என்று விஸ்வத்துக்கும் பதி யாகையாலே
தன்னுடைய நாராயணத்வ ப்ரயுக்தமான
வியாப்ய வியாபக பாவம்
சரீர ஆத்ம பாவம்
சேஷ சேஷி பாவம்
நியாந்த்ரு நியாம்ய பாவம்
ஆதார ஆதேய பாவம்
முதலான அவிநா பூத சம்பந்தம் ஸகல ஆத்மாக்களோடும் ஒத்து இருக்க

(அப்ருதக் ஸித்த விசேஷணம் – பிரிவில்லாமல் –
அசேஷ சித் அசித் வஸ்து சேஷிந சேஷ ஸாயினே –
யஸ்ய சேதனஸ்ய யத் த்ரவ்யம் சர்வாத்மனா ஸ்வார்த்தே தாரயிதும் நியந்துஸ் ச ஸக்யஞ்ச தத் தஸ்ய சரீரம்
அவனாலே தாங்கப்பட்டு அவனுக்காகவே இருப்பதே சரீரம்
பரகத அதிசய ஆதேயன உபாயத்வமே -சேஷ சேஷி பாவம் -அவனுக்கே
பஸ்யமே லோக ஐஸ்வர்யம் -அனைத்தையும் நானே தாங்குகிறேன் -கீதை )

ஒரு விபூதியில் உள்ளார்
நிரந்தர அனுபவ ஜெனித நிரதிசய ஆனந்த திருப்தராயப் போருகிற படியையும்
ஒரு விபூதியில் உள்ளார் –
அநீசயா சோசதி முஹ்யமாந -ஸ்வேதாஸ்வரம் -4-7-என்று
அநாதி அஞ்ஞான அந்தகாரத்தாலே அபி பூதராய் –
அநாத்மந் யாத்ம புத்தியும் -(அஹங்காரம் -யானே -ஸ்வரூபம் மாறி )
அஸ்வே ஸ்வ புத்தியுமாகிற -(மமகாராம்–என் தனதே -என்னுடையது அல்லாதவற்றை என்னுடையது ஸ்வ பாவம் மாறி )
அந்யதா ஞான
விபரீத ஞானங்களாலே
ஆத்ம அநநு ரூபமான அர்வாசீந புருஷார்த்தங்களிலே அதி ப்ரவணராய்
(தாழ்ந்த விஷயாந்தரங்களில் ஐஸ்வர்யார்த்திகளாய் )
ஆத்ம அநு ரூபமான அதிசயித புருஷார்த்தத்தில் அத்யந்த விமுகராய்
கர்ப்ப நரகாதி ஸகல கிலேசங்களாலும் வ்யாகுலராய்ப் போருகிற படியையும் கண்டு

இவர்களுக்கு அவகாசம் பிறக்கைக்கு அடியான ஸ்வ அபிமுக்யத்தைப் பண்ணுவிக்கைக்கு உப கரணமான
கரண களேபரங்களையும் கொடுத்து
மாநம் ப்ரதீபம் இவ காருணிகோ ததாதி -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -உத்தர சதகம் –1-என்கிறபடியே

(ஹர்த்தும் தமஸ் சத் அஸதீ விவேக்தும் ஈச மாநம் ப்ரதீபம் இவ காருணிகா ததாதி
தேந அவ லோக்ய க்ருதிநஸ் பரி புஞ்ஜதே தம் தத்ர ஏவ கேபி சபலா ஸலபீ பவந்தி–ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -உத்தர சதகம் –1-1-

காருணிகா-தயாளுவான
ஈச மாநம்-சர்வ ஸ்வாமியான ஸ்ரீ பெரிய பெருமாள்
ஹர்த்தும் தமஸ்-அஞ்ஞான அந்தகாரத்தை போக்குவதற்கும்
சத் அஸதீ விவேக்தும்-நல்லதும் தீயதும் அறிகைக்கும்
ப்ரதீபம் இவ ததாதி-பெரு விளக்குப் போலே இருக்கிற பிரமாணத்தை பிரகாசிக்கிறார் –
தேந அவ லோக்ய க்ருதிநஸ் பரி புஞ்ஜதே–பாக்யாதிகர் அந்த ஈசனை அந்த பிரமாணத்தாலே நன்றாக அறிந்து
ததீய பர்யந்தமாக அனுபவிக்கின்றார்கள்
தம் தத்ர ஏவ கேபி சபலா ஸலபீ பவந்தி-சஞ்சல ஹ்ருதயராவார் அந்த பிராமண விஷயத்தில்
வீட்டில் பூச்சிகள் போலே விழுந்து நசிக்கிறார்கள் –)

(காருணிகனான சர்வேஸ்வரன் –
அறிவிலா மனிசர் உணர்வு என்னும் சுடர் விளக்கு ஏற்றி-
பிறங்கு இருள் நீங்கி
மேல் இருந்த நந்தா வேத விளக்கை கண்டு
நல்லதும் தீயதும்-விவேகிக்கைக்கு
மறையாய் விரிந்த துளக்கமில் விளக்கில் கொளுத்தின ப்ரதீபமான-கலைகளை
நீர்மையினால் அருள் செய்தான்––ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம்-சூர்ணிகை 1-)

அந்தகாரத்திலே திரிவாருக்கு அர்த்த பிரகாசம் பிறக்கைக்குக் கை விளக்கு கொடுத்தால் போலே
நிர்த் தோஷமான பிராமண ப்ரகாஸத்தையும் பண்ணுவிக்க

திமிர உபஹத த்ருஷ்டியானவனுக்கு தீபமும் ப்ரகாஸமும் அல்லாதாவோ பாதி
பகவத் பக்தியாகிற ஸித்தாஞ்சனத்தாலே ஆந்த்ர சஷுஸ்ஸான நெஞ்சின் குருடு தீராமையாலே
அதுவும் அகிஞ்சித் கரமாக

இதிஹாஸ புராணாப்யாம் வேதம் சமுப ப்ரும்ஹயேத்–(பார்ஹஸ் பத்ய ஸ்ம்ருதி ) என்று
வேத உப ப்ரும்ஹணமான ஸ்ம்ருதி இதிஹாஸ புராண ரூபங்களாய்
ஸ்வ யோக மஹிம சாஷாத் க்ருத பராவர தத்வ விபாகரான பரம ரிஷிகளாலே
ப்ரணீதங்களான பிரபந்தங்களை பிரவர்த்திப்பித்தும்
அதுவும் கார்ய கரம் அல்லாமையாலே

ஓலைப் புறத்துச் செல்லாத ராஜ்யத்தை எடுத்து விட்டுக் கொள்ளும் ராஜாக்களைப் போலே
தான் ராம கிருஷ்ண ரூபத்தாலே திரு அவதரித்தும்

ரூப ஓவ்தார்ய குணை பும்ஸாம் த்ருஷ்டி ஸித்த அபஹாரிணம் (அயோத்யா -3-26 ) என்று
ஸுந்தர்யாதி குண ஆவிஷ்காரேண
அக்ரூர மாலாகாராதிகான் பரம பாகவதான் க்ருத்வா -(கீதா பாஷ்யம் -அவதாரிகை )என்று சொல்லுகிறபடியே
ஸாஸ்த்ர சஸ்த்ரம் முனை மடிந்தால் எடுக்கும் -ப்ரஹ்மாஸ்திரமாகிற வடிவு அழகைப் பிரகாசிப்பித்தும்

உபதேஸ அநுஷ்டானாதி முகத்தால் தர்ம ஸம்ஸ்தாபநத்தைப் பண்ணியும்
வசீகரிக்கப் பார்த்த இடத்திலும்

அநாதி பாப வாஸநா தோஷ தூஷிதா சேஷ சேமுஷீகர் ஆகையாலே
பாஹ்ய குத்ருஷ்டி மத அவகாஹநம் பண்ணி
(புத்தோடு சமணம் எல்லாம் கலை அறக் கற்ற மாந்தர் காண்பாரோ கேட்பரோ )
வைதிக மார்க்க பராங் முகராகக் கண்டபடியாலே

இவர்களை வசீகரிக்கைக்கு உபாயம் ஏதோ என்று பார்த்து
(எம்பெருமானாராய் இருந்தால் அப்போதே ஒரு சிந்தை செய்து நாரணர்க்கு ஆளாக்கி அருளுவார் )
தீபகம் காட்டி மிருகம் பிடிப்பாரைப் போலே ஸஜாதீய புத்தி பண்ணலாம் படியான
ஆழ்வார்களைப் ப்ரவர்த்திப்பித்தான் –

இவர்கள் ஆகிறார் –
ரிஷிகளைப் போலே கர்மாதி ஸாத்ய ஞானர் அன்றியே –
பகவத் ப்ரஸாதத்தாலே
அயத்ன லப்த ஞான வைராக்ய பக்தி கராய்
வேத இதிஹாஸ புராணாதிகளைப் போலே அதி க்ருதாதிகாரம் இன்றியே
ஸர்வ அதிகாரமாய்
திராவிட ரூபமான பிரபந்த விசேஷங்களாலே
ஸகல வேத வேதாந்த ரஹஸ்ய அர்த்தத்தைப் பிரகாசிப்பிக்கையாலே
அத்யந்த விலக்ஷணராய் இருப்பார்கள் –

இவர்களிலும் வைத்துக் கொண்டு
நம்மாழ்வார் -அல்லாத ஆழ்வார்களைப் போலே லௌகிக ஞானம் நடையாடா நிற்க
பகவத் பிரஸாதத்தாலே -ஒரு கால விசேஷத்திலே தத்வ ஞானாதிகள் பிறந்து அனுபவிக்கை அன்றிக்கே
திருத்துழாய் பரிமளத்தோடே அங்குரிக்குமா போலே
ஸஹஜ ஞான பக்தியை உடையவராகையாலும்

மாதா பிதா –ஆத்யஸ்ந குல பதே –ஸ்தோத்ர ரத்னம் –5- என்று
இது தத்வ ஞான ப்ரவர்த்த நத்திலே பிரதம ஆச்சார்யராக விலக்ஷண பரிக்ருஹீதர் ஆகையால்
ஈஸ்வரன் தானே லோகத்தைத் திருத்துகைக்கு இவர் ஆவர் என்று அங்கீ கரித்து

என்னாலும் தன்னைச் சொல்லிய சூழல் திருமாலவன் கவி யாது கற்றேன் -திரு விருத்தம் -48- என்னும்படி
இவர் திரு உள்ளத்திலும் நாக்கிலும் நின்று இவர் தம்மைக் கொண்டு தாமே ப்ரவர்த்திப்பிக்கையாலும்
அத்யந்த வ்யாவ்ருத்தராய் இருப்பார் ஒருவர் –

(மெல்லியல் ஆக்கைக் கிரிமி குருவில் மிளிர் தந்தாங்கே
செல்லியசெல் கைத்துலகை என் காணும் என்னாலும் தன்னைச்
சொல்லிய சூழல் திருமாலவன் கவியாது கற்றேன்
பல்லியின் சொல்லும் சொல்லாக் கொள்வதோ வுண்டு பண்டு பண்டே-48 –என்றைக்கும் என்னை -7-9-)

ஏவம் வித வை லக்ஷண்யத்தை யுடைய இவருக்கு உத்தம வர்ணாதிகளிலே அன்றியே
துரீய வர்ணத்திலே அவதாரமான இது
பத்ப்யாம் சூத்ரோ அஜாயதே –புருஷ ஸூக்தம் –என்கிற மரியாதையாலே
(முகத்தில் இருந்து பிராமணன் -சதுர்த்த வர்ணன் திருவடியில் இருந்து )
வர்ண உத்கர்ஷம் அன்றியே சேஷத்வமே உத்தார ஹேது என்னும்
அர்த்த விசேஷத்தை ஸூசிப்பிக்கைக்காக –

ஹரி கீர்த்திம் விநைவாந்யத் -(மாத்ஸ்ய புராணம் யம வசனம் )-என்கிற நியாயத்தாலே
பகவத் விஷயமான பாஷைக்கு அபகர்ஷம் உண்டாகில் இறே
ந சூத்ரா பகவத் பக்தா -என்கிற நியாயத்தாலே
சேஷத்வ ஞான ஆஸ்ரயமான இவ்வர்ணத்துக்கு அப கர்ஷம் உள்ளது –

இப்படி வை லக்ஷண்யத்தை யுடையவரான இவ்வாழ்வார் பக்கலிலே
பிரபந்தங்கள் அவதீர்ணங்கள் ஆகிற இடத்து
ஈஸ்வரன் ஸ்வ ஸங்கல்பத்தாலே வாஸூ தேவாதி சதுர் வ்யூஹத்தைப் பண்ணினால் போலேயும்
வேதங்கள் ருகாதி பேதத்தாலே சதுர்த்தாக வ்யக்தமானால் போலேயும்
இவையும் திரு விருத்தம் திரு வாசிரியம் பெரிய திருவந்தாதி திருவாய் மொழி
என்று நாலு வகையாகப் பிரதிபாதிக்கப் பட்டன –

அவற்றில் பிரதம பாவியான இப்பிரபந்தத்திலே
அஞ்ஞான கர்ம தேஹாதி ரூபமான (பொய் நின்ற ஞானம் -பொல்லா ஒழுக்கு -அழுக்கு உடம்பு )
ஸம்ஸார ஸம்பந்த நிவ்ருத்தியை அபேக்ஷித்திக் கொண்டு
அனுபவ உபகரணமான ப்ராவண்ய அதிசயத்தாலே அனுபவ அபி நிவேசம் நடந்த படியையும்
அனுபவ அலாபத்தில் ஆர்த்தி அதிசயித்த பிரகாரத்தையும்
ஸ்மாரக பதார்த்தங்கள் ஆர்த்திக்கு அதிசய ஜனகங்களான பிரகாரத்தையும்

இவருடைய ப்ராவண்யாதி வை லக்ஷண்யத்தைக் கண்ட
ஸூஹ்ருத்துக்களும் -பரிவருமாய் உள்ளார்
தாங்கள் ஈடுபட்டும்
இவரை ஆஸ்வசிப்பித்தும்
போந்த பிரகாரத்தையும் –
ஆர்த்தி அதிசயம் கால விளம்பம் பொறுக்க மாட்டாத ஸைதில்யத்தை ஜநிப்பித்த பிரகாரத்தையும்
மறந்து பிழைக்க ஒண்ணாத படி ஞானம் சங்குசிதமாகாத பிரகாரத்தையும்
ப்ராப்ய ப்ராபகங்கள் –பகவத் சீல ஸுலப்யங்களே

(ஆஸ்ரய ஸுகர்ய குணமே ஸுசீல்யம் -இதுவே ப்ராப்யம்
அனுபவத்துக்கு ஸுகர்ய குணம் -ஸுலப்யம்-இதுவே ப்ராபகம்
அங்கும் சோஸ்னுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மண
பாலேய் போல் சீர் குணங்களில் அனுபவம்
ஆகவே இவையே ஆறும் பேறும் என்றபடி -)

என்று அறுதியிட்டு பிரகாரத்தையும் வெளியிடுகையாலே
ஈஸ்வரன் திரு உள்ளத்திலே படும்படி இவர் தம்முடைய வ்ருத்த கதனம் பண்ணினார் ஆயிற்று –
ஆகையால் இறே இப்பிரபந்தத்துக்கு திரு விருத்தம் என்று பேர் ஆயிற்று

அல்லது
தாழிசை-
துறை –
விருத்தம் என்று இனத்தின் வகையான
கலித் துறையை விருத்தம் என்னக் கூடாது –

(வெண்பா -கலிப்பா -ஆசிரியப்பா வஞ்சிப்பா -என்று இருக்க வேண்டுமே
வெண்பா தாழிசை -கலி தாழிசை -போல் இருக்க வேண்டும்
கலி விருத்தம் என்று சொல்லக் கூடாதே
நான்கு சீர் அடி நான்கு -எதுகை ஒத்து இருக்க வேண்டுமே )

இப் பிரபந்தத்திலே அத்யாத்ம ரூபமான இவ்வர்த்தங்களைப் பிரகாசிக்கிற இவர்
நாயக நாயிகா சங்கம ரூபமான காம ராக பிரகாரமாய் இருக்கிற
கிளவித் துறையைப் பேசுவான் என் என்னில்

காமமாவது –
இதர விஷயத்திலான போது அநர்த்தா வஹமாய் த்யாஜமாகக் கடவது
காமத் கோப்ய-(ஸ்ரீ மத் பாகவதம் -7-1-33)என்கிற கணக்கிலே
கண்ணனுக்கே காமமான போது புருஷார்த்த அந்வயியாய்க் கடவது –

(சேம நல் வீடும் பொருளும் தருமமும் சீரிய நற்
காமமும் என்றிவை நான்கென்பர் நான்கினும் கண்ணனுக்கே
யாமது காமம் அறம் பொருள் வீடி தற்கென்று உரைத்தான்
வாமனன் சீலன் இராமானுசன் இந்த மண் மிசையே -இராமானுஜ நூற்றந்தாதி-40 – )

ஆகையால் இந்த வகை தமிழ் மர்யாதையான ஸ்ருங்கார ப்ரகாசகமான பாசுரங்களாலே
இவ்வத்யாத்மத்தை அருளிச் செய்தது –
கட்டி பூசிக் கடு தீற்றுவாரைப் போலே விஷயசக்தரான ஸம்ஸாரிகள் நெஞ்சிலே படுகைக்காக –
(இந்திரியங்கள் எந்த மார்க்கங்களில் போகுமோ
அவற்றையே கண்ணன் இடம் வைக்க -அவற்றை மாற்றலாமே )

ஆனால் ஈஸ்வரனே தலைமகனாகப் பாடப் ப்ராப்தமாய் இருக்க -அவனைப் பாட்டுடைத் தலைவனாக்கி
ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கிளவித் தலைமகனாக வைத்துப் பாடின இடத்துக்குத் தாத்பர்யம் என் என்னில்
ஈஸ்வரன் போக்ய பூதனாமோ பாதி
அடியார் குழாங்களை –உடன் கூடுவது என்று கொலோ (2-3-10 )-என்றும்
பரி ஜனைஸ் தவ சங்க ஸீய -ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -77- என்றும்
தத் சம்பந்த முகத்தாலே ததீயாருக்கும் போக்யதை உண்டாகையாலே
அவர்கள் பக்கல் ப்ராவண்யத்தைப் பிரகாசிப்பிக்கிறது –

(கைங்கர்ய நித்ய நிரதைர் பவத் ஏக போகை
நித்யைர் அநு க்ஷண நவீந ரஸ ஆர்த்ர பாவை
நித்ய அபி வாஞ்சித பரஸ்பர நீச பாவைர்
மத்தை வதை பரி ஜனைஸ் தவ சங்க ஸீய–77-

கைங்கர்ய நித்ய நிரதைர்–ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி ஆட் செய்பவர்களாயும் –
பவத் ஏக போகை-அநந்ய போக்யத்வ ஸ்வரூபத்தில் தலை நின்றவர்களாயும்
நித்யைர்-நித்ய ஸித்தர்களாயும்
அநு க்ஷண நவீந ரஸ ஆர்த்ர பாவை-க்ஷணம் தோறும் புதிது புதிதாக விளைகின்ற
பகவத் அனுபவ ருசியினால் உருகின நெஞ்சை உடையராயும்
பரஸ்பர நீச பாவைர் -பாகவதர்களுக்குள் பரஸ்பரம் சேஷத்வத்தையே சதா விரும்புவர்களாயும் –
மத்தை வதை பரி ஜனைஸ் தவ சங்க ஸீய-அடியேனுக்குத் தெய்வமாகக் கொண்டாடாத தக்கவர்களாயும்
இருக்கிற தேவரீருடைய அடியார்களுடன் உடனே கூடி வாழக் கடவேன்)

இந்த நாயக நாயகிகளுடைய இயற்கைப் புணர்ச்சி முதலான சம்பந்தமானது ஸாஸ்த்ரீயமோ என்னில்
ஸாஸ்த்ரத்திலே
1-ப்ராஹ்மோ
2-தைவ
3-ப்ரஜாபத்ய
4-ஆர்ஷ
5-ஆஸூரோ
6-காந்தர்வோ
7-ராக்ஷஸ
8-பைஸாசா
இதி -என்று விவாஹம் எட்டு வைகையாக இருக்கும் என்றது

இது தான்
அறநிலை ஒப்பே பொருள் கோள் தெய்வம் யாழோர் கூட்டம்
அரும் பொருள் வினையே இராக்கதம் பேய் நிலை என்று கூறிய
மறையோர் மன்றல் எட்டிவை அவற்றுள் துறையமை நல் யாழ்ப்
புலமையோர் புணர்ப்பு பொருண்மை என்மனார் புலமையோரே -என்று அகத் தமிழிலும் சொல்லப்பட்டது –

1-அற நிலை
3-ஒப்பே
4-பொருள் கோள்
2-தெய்வம்
6-யாழோர் கூட்டம்
5-அரும் பொருள் வினையே
7-இராக்கதம்
8-பேய் நிலை

அதில்
ப்ராஹ்மம் ஆவது
அபி ரூபனாய் வ்ருத்த ஸம்பன்னனாய் இருக்கிறவனை அழைத்து ஸத் கரித்து
அலங்க்ருதையான கன்னிகையைக் கொடுத்தல்
இதுக்கு அற நிலை என்று பெயர் –

தைவமாவது
தேவ யஜன ரூபமான யாகத்திலே ஆர்த்விஜ்யம் பண்ணினவனை அழைத்துக் கன்னிகையைக் கொடுத்தல்
இதுக்கு தெய்வம் என்று பெயர்

ப்ரஜாபத்யமாவது
ஓக்க இவர்கள் இருவரும் ப்ரஜா உத்பாதநாதி ரூபமான தர்மங்களை அனுஷ்டிக்கக் கடவர்கள் என்று
வாக்காலே அறுதியிட்டுச் சொல்லி
அக்னி காரியத்தையும் தானே அனுஷ்ட்டித்துக் கன்னியை அலங்கரித்துக் கொடுத்தல்
இதுக்கு ஒப்பு என்று பெயர் –

ஆர்ஷமாவது
ஒன்றாதல் இரண்டாதல் கோ மிதுனத்தோடு கன்யகையை அலங்கரித்துக் கொடுத்தல்
இதுக்குப் பொருள் கோள் என்று பெயர் –

ஆஸூரமாவது
வரன் தானே கன்யகைக்கு ஆபரணம் பூட்டி சக்திக்கு ஈடாக பந்துக்களுக்கு
(தனம் )தானம் கொடுத்துக் கைப்பிடித்தல்
இதற்கு அரும் பொருள் வினை என்று பெயர் –

காந்தர்வமாவது
தனியிடத்து இருவருடையவும் காம மோஹத்தாலே கூடுகை
இதுக்கு யாழோர் கூட்டம் என்று பெயர்

ராக்ஷஸமாவது
பந்துக்களை அடர்த்துப் பெண்ணைக் கைப்பிடிக்கை
இதுக்கு இராக்கதம் என்று பெயர்

பைசாசமாவது
ஸூப்தை யாதல் – ப்ரமத்தை யாதல் -கன்யகையை ரஹஸ்யத்திலே கூடுகை
இதுக்கு பேய் நிலை என்று பெயர் –

இவை எட்டிலும் –
ப்ராஹ்மம் தைவம் ப்ரஜாபத்யம் ஆர்ஷம் என்கிற இவை நாலும்
அக்னி பூர்வகமாக ப்ராஹ்மணனுக்குக் கர்த்தவ்யம் ஆகையாலே ப்ரஸஸ்தங்கள்

அல்லாத நாலும்
ஐகன்யங்கள் (தாழ்ந்தவை)

இதில்
ப்ராஹ்ம விவாஹத்தில் பிறந்தவன் –
தச பூர்வான் தசா பரான் ஆத்மாநம் ச (போதாயன தர்மம் ) என்று
தன் வம்சத்தை இருபத்தொரு படி கால் சுத்தனாக்கும்

தைவ விவாஹத்தில் பிறந்தவன்
முன் ஏழும் பின் ஏழும் சுத்தனாக்கும்

ப்ரஜாபத்ய விவாஹத்தில் பிறந்தவன்
முன் ஆறும் பின் ஆறும் சுத்தனாக்கும்

ஆர்ஷ விவாஹத்தில் பிறந்தவன்
முன் மூன்றும் பின் மூன்றும் சுத்தனாக்கும்

ஆஸூராதிகளான நாலுக்கும் இவ்விசேஷம் இல்லையே யாகிலும்
விலக்ஷண புருஷ அனுஷ்டிதமாகில்
அதிசயித புருஷ உத்பாதகங்கள் என்று ஸாஸ்த்ரங்களிலே கண்டு கொள்ளப் படும்

இவ்
வெட்டிலும் வைத்துக் கொண்டு
காந்தர்வமானது ஸ்ருங்கார ரஸமுமாய் ஸ்திரீயினுடைய அநந்யார்ஹதா ரூபமான கற்புக்கும் முதலாகையாலே
அகத்தமிழ் மர்யாதைக்குப் பிரதானமாய்ப் போரும்

அன்பின் ஐந்திணைக் களவு எனப்படுவது அந்தணர் அரு மறை மன்ற வெட்டினுள்
கந்தருவ வழக்கம் என்மனார் புலவர் என்று அகத்தமிழிலும் -இறைவனார் அகப் பொருளில் சொல்லப்பட்டது –

இப்படி ஸாஸ்த்ரீயமாய்க் கற்புக்கும் உறுப்பான சம்பந்தமாகையாலே இந்தக் கிளவித்துறை
மர்யாதையாலே தம்முடைய அநந்யார்ஹதையைப் பிரகாசிப்பிக்கக் குறையில்லை

ஆத்ம ஸ்வரூபத்துக்கு ஸ்த்ரீத்வாதி பேதம் இன்றிக்கே இருக்க
நாயிகா ரூபத்தாலே ஸ்த்ரீத்வம் சொல்லுகைக்கு அடி என் என்னில்

ஸ்வரூபம் ஸர்வதா பரதந்த்ரமாகையாலும்
அநந்யார்ஹம் ஆகையாலும்
அநந்ய ரக்ஷகமாகையாலும்
அநந்ய போக்யமாகையாலும்
ஸ்த்ரீத்வ சாதரம்யம் உண்டாகையாலே சொல்லக் குறையில்லை

ச ஏவ வாஸூ தேவோ சவ் ஸாஷாத் புருஷ உச்யதே –
ஸ்த்ரீ ப்ராயம் இதரத் ஸர்வம் ஜகத் ப்ரஹ்ம புரஸ் ஸரம் (ஸ்ரீ விஷ்ணு தர்மம் ) என்று சொல்லக் கடவது இறே

ஸ்வாமித் வாத் மத்வ சேஷித்வ பும்ஸ்த்வாத்யாஸ் ஸ்வாமிநோ குணா
ஸ்வேப்யோ தாஸத்வ தேஹத்வ சேஷத்வ ஸ்த்ரீத்வ தாயிந –என்று
ஸ்வாமி குண அனுசந்தானத்தில் ஸ்வத்துக்குத் தத் ப்ரதி சம்பந்திக ஸ்வ பாவங்கள் தோற்றுகையாலே
ஈஸ்வரனுடைய புருஷோத்தமத்வ அனுசந்தானத்தில்
ஸ்வ ஸ்வரூபத்துக்கு ஸ்த்ரீத்வ அனுசந்தானம் அவர்ஜனீயம் என்றதாயிற்று –

இப்படி நாயக நாயிகா ஸம்பந்தம் ஸித்தமாய் இருந்துள்ள இடத்தில்
தாய் வார்த்தையான இடம் -ஞான தசையாதல் -பரிவர் வார்த்தை யாகக் கடவது
தலைமகள் -என்பது ப்ரேம தசையை
தோழி என்பது ஸூஹ்ருத்துக்களை
கிளவித் தலைமகன் என்பது அபிமத பாகவத விஷயத்தை
தூது என்பது -கடகமான ஆச்சார்ய விஷயத்தை
கண் அழகு என்பது ஞான வை லக்ஷண்யத்தை
முலை அழகு என்பது -பாரதந்தர்ய லக்ஷணமாய் போக உபகாரணமான பக்தி வை லக்ஷண்யத்தை
இடை அழகு என்பது -ஒன்றும் பொறாத வைராக்கியத்தை
நடை அழகு என்பது -அனுஷ்டானத்தை
வளை -என்பது அநந்யார்ஹதா சிஹ்னத்தை
இருள் என்பது அஞ்ஞானத்தை
வாடை அன்றில் தென்றல் முதலான பாதகங்கள் என்பது ஸ்மாரகத்வேந அஸஹ்யங்களான லௌகிக பதார்த்தங்களை
இரவு நெடுமை என்பது -விளம்ப அஷமத்வத்தை
பொழுதோடு புலம்பல் -மாலைக்கு ஆற்றாமை என்பது -போக யோக்ய கால ஸந்நிதியை
சந்த்ர உதயம் என்பது -அலாப தசையில் விவேகமும் பாதகமான படியை
இன்னமும் இப் பிரகாரங்களிலே வ்யங்யங்களும் (ஆழ் பொருள்களையும் உள்ளுறை பொருள்களையும் )
கண்டு கொள்ளப்படும் –

————-

இப் பாட்டு ப்ரபந்த தாத்பர்யத்தை ஸங்க்ரஹிக்கிறது
அதாவது
அவித்யா கர்ம தோஷாதிகள் விரோதி என்னும் இடமும்
(ஆதி வாசனா ருசி ஜென்மம் -ஸ்வரூப உபாய மோக்ஷ புருஷார்த்த விரோதிகள் )

இவை ஸ்வரூப ஞானம் பிறந்தவனுக்கு நிவர்த்த நீயம் என்னும் இடமும்

நிவர்த்தகனானவன் –
ஸர்வ ரக்ஷகனாய் –
அவதார ப்ரயுக்த ஸுலப்ய விசிஷ்டனான ஸர்வேஸ்வரன் என்னும் இடமும்
(சர்வேஸ்வரன் பரத்வம் -நாம் கிட்ட ஸுலப்யம் உயிர் அளிப்பான் என்நின்ற யோனியுமாய் பிறந்த விபவம் )

நிவ்ருத்த விரோதிகனுக்கு ப்ராப்யனானவன்
நித்ய ஸூரி ஸேவ்யனான சர்வாதிகன் என்னும் இடமும் அறுதியிட்டு –

இவ்வர்த்தத்தை புத்தி சாஷாத்கார ஸந்நிஹிதனான ஈஸ்வரனைப் பார்த்து
(புத்தி சாஷாத்கார–மானஸ ப்ரத்யக்ஷ சமானாதிகாரம்
உயிர் அளிப்பான் எந்நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா)
ஸங்க்ரஹேண விண்ணப்பம் செய்கிறார் –

பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
எந்நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
மெய்ந்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே –1–

பாசுரம் -1-பொய் நின்ற ஞானமும் -தாமான நிலையில் அருளியது -ஒழிவில் காலம் -3-3-

பதவுரை
உயிர் அளிப்பவன்–எல்லாப் பிராணிகளையும் ரக்ஷித்தருள்வதற்காக
நின்ற யோனியும் ஆய்–பலவகைப்பட்ட பிறப்புகளையுடையனால்
பிறந்தாய்–திருவவதரித்தவனே!
இமையோர் தலைவா–தேவர்களுக்குத் தலைவனே!
பொய் நின்ற ஞானமும்–பொய்ம்மை நிலைபெற்ற அறிவும்
பொல்லா ஒழுக்கமும்–தீய நடத்தையும்
அழுக்கு உடம்பும்–அசுத்தங்களோடு கூடின சரீரமும்
(ஆகிய இவற்றோடு கூடி)
இ நின்ற நீர்மை–இவ்வண்ணமான இயல்வை (பிறப்புத் துன்பத்தை)
இனி யாம் உறாமை இனிமேல் நாங்கள் அடையாதபடி
அடியேன் செய்யும் மெய் விண்ணப்பம்–(உனது) அடியனாகிய யான் சொல்லும் உண்மையான விஜ்ஞாபகத்தை
நின்று கேட்டருளாய்–நின்று நீ கேட்டருள வேணும்.-கேட்பதே அருள்

உரை

பொய் நின்ற ஞானமும்
உத்பத்தி விநாசாதி யோகத்தாலே அஸத்ய ஸப்த வாஸ்யமான
அசேதன விஷயத்தில் ஆத்ம ஞானமும்

பொல்லா ஒழுக்கும்
அந்த தேஹாத்ம அபிமானம் அடியான ஸாம்ஸாரிக துஷ்கர்ம ப்ரவ்ருத்தியும்

அழுக்கு உடம்பும்
இக் கர்மம் அடியாக வரக் கடவதான மாம்ஸா ஸ்ருகாதி மல ரூபமான தேஹ சம்பந்தமும்

(பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய்
கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர்
சிரங்களால் வணங்கும் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
வரங் கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே.–6-3-7-

நல்ல வலத்தால் நம்மைச் சேர்த்தோன் முன் நண்ணாரை
வெல்லும் விருத்த விபூதியன் என்று -எல்லை யறத்
தான் இருந்து வாழ்த்தும் தமிழ் மாறன் சொல் வல்லார்
வானவர்க்கு வாய்த்த குரவர் —ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–53-)

இந் நின்ற நீர்மை
இவற்றிலே நிலை நின்று போந்த வாஸனா ருசிகள் ஆகிற ஸ்வ பாவ விசேஷத்தை
(நின்ற நீர்மை விட்டுப் பிரியாத ஸ்வ பாவங்கள் )

இனி யாம் உறாமை
நிர்ஹேதுக கடாக்ஷ மூலமான ஞான லாபத்தை உடையரான பின்பு
முன் அங்கீ கார பலத்தை உடையரான நாங்கள் அணுகாத படி

உயிர் அளிப்பான் எந் நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய்
பிராணி பதார்த்தங்களினுடைய
அநிஷ்ட நிவ்ருத்தியையும் –
இஷ்ட ப்ராப்தியையும் -பண்ணிக் கொடுக்கைக்காக
ரூப ப்ரகார வ்யவஸ்திதங்களான ஸகல ஜாதிகளிலும்
அவதீர்ணன் ஆனவனே –

இமையோர் தலைவா
ஏவம் வித ஸுலப்ய விசிஷ்டனான உன்னை ஆஸ்ரயித்தாரை அனுபவிப்பிக்கைக்காக
ஸதா தர்சன பரரான அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவனே –
(தாங்களும் அனுபவித்தும் நாம் அங்கு போனாலும் வந்து எதிர் கொண்டு நம்மை அனுபவிப்பித்தும் )

அடியேன் செய்யும் மெய் விண்ணப்பம் நின்று கேட்டருளாய்–
உன் திருவடிகளிலே நிருபாதிக சேஷத்வத்தையே ஸ்வரூபமாக யுடைய நான் செய்கிற
மெய்யான விண்ணப்பத்தை
ஜகத் வியாபாரத்தில் பரபரப்பு அற்று நின்று கேட்டு அருள வேணும்

மெய்ந் நின்று கேட்டருளாய்–
அபேக்ஷிக்கும் படி நின்று கேட்டருளாய் என்றுமாம்
(சரீரத்தில் நின்று என்றுமாம் )

கேட்டு அருளாய்
என்று கேட்கை தானே அருள் என்று கருத்து –

(கேட்டு அருளி வேறே ஒன்றும் செய்ய வேண்டாம்
எழுந்து அருள வேண்டும் -என்று வந்ததே அருள் போல் –
கார்ப்பங்காடு ஸ்வாமிகள் –62- திரு நக்ஷத்ரம் -எழுந்து அருளி கடாக்ஷத்தாலே போதும்
உபன்யாசம் செய்ய வேண்டாம் என்பார்களாம் )

இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை அடியேன் செய்யும் மெய் விண்ணப்பம் என்று அந்வயம் —

யாம் உறாமை
என்று பன்மையாய் இருக்க

அடியேன்
என்று ஒருமையாலே
ஈஸ்வரனுக்கு விஞ்ஞாபிப்பார் தாம் ஒருவருமாய்
பல லாபம் சம்பந்தி சம்பந்தி பரம்பரைக்கும் ஒக்கும் என்று கருத்து –

(விண்ணப்பம் உடையவர் ஒருவரே -பலம் நமக்கு எல்லாருக்கும் உண்டே
இந்த வரங்கத்து இனிது இரு நீ என்ற அரங்கர்
எந்தை எதிராசர்க்கு ஈந்த வரம் -சிந்தை செய்யில்
நம்மதன்றோ நெஞ்சமே நற்றாதை சொம் புதல்வர்
தம்மதன்றோ தாய முறை தான் —ஸ்ரீ ஆர்த்தி பிரபந்தம்–60-)

இனி பிரபந்த சேஷமும்
இதில் சொன்ன அர்த்தங்களை விஸ்தரேண ப்ரதிபாதிக்கிறது –

செய்யும் விண்ணப்பம் -1- என்று தொடங்கி
விண்ணப்பம் செய்த –100-என்று தலைக் கட்டுகையாலே
ஸ்ருணு விஞ்ஞாபனம் -ஸ்தோத்ர ரத்னம் –50- என்று தொடங்கி
மது மதந விஞ்ஞாபனம் —57- என்ற கணக்கிலே
இப் பிரபந்தமாக இப் பாட்டில் சொன்ன அர்த்தமே ஒரு வார்த்தையாய் இருக்கிறது –

(ந ம்ருஷா பரமார்த்தமேவ மே
ஶ்ருணு விஜ்ஞாபநம் ஏகமக்ரத: |
யதி மே ந தயிஷ்யஸே ததோ
தயநீயஸ் தவ நாத துர்லப: ||ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் —50

ஸ்வாமி! முதலில் என்னுடைய ப்ரார்த்தனையைக் கேள்; இது பொய்யல்ல; இது உண்மையே;
உன்னுடைய கருணையை எனக்கு அளிக்காமல் என்னை இழந்து விட்டாய் என்றால்,
உன்னுடைய கருணையைப் பெற என்னைவிடத் தகுந்த எவரையும் நீ பெறமாட்டாய்.

ந தேஹம் ந ப்ராணாந்ந ச ஸுகம் அஶேஷாபிலஷிதம்
ந சாத்மாநம் நாந்யத் கிமபி தவ ஶேஷத்வ விபவாத் |
பஹிர்பூதம் நாத! க்ஷணமபி ஸஹே யாது ஶததா
விநாஶம் தத்ஸத்யம் மதுமதந! விஜ்ஞாபனம் இதம் ||ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் —57

ஸ்வாமியே! உன் விஷயமான கைங்கர்யச் செல்வத்துக்கு வெளிப்பட்டிருக்கும் என்னுடைய
தேஹம், ப்ராணன், எல்லோராலும் விரும்பப்படும் சுகங்கள், என்னுடைய ஆத்மா ஆகிய எதுவாக இருந்தாலும்
அவற்றை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது; இவை எல்லாம் ஒழியட்டும்.
மது என்னும் அரக்கனைக் கொன்ற என் ஸ்வாமியே! இது உண்மை; இதுவே என் ப்ரார்த்தனை.)

இப் பாட்டில்
விரோதி நிவ்ருத்தியையும்
அவதார ஸுலப்யத்தாலே -உபாய பாவத்தையும்
நித்ய ஸூரி ஸேவ்யமான -ப்ராப்யத்தையும்
அடியேன் -என்று ஸ்வரூபத்தையும்
மெய்ந்நின்று கேட்டு அருளாய் -என்று பல அபேக்ஷையும் பண்ணுகையாலே
அர்த்த பஞ்சகம் ஸூசிதமாயிற்று –

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருவிருத்தம் — ஸ்ரீ ஸுதர்சன ராமானுஜ தாஸன்

January 15, 2022

ஸ்ரீப்பதியான ஸர்வேஶ்வரனாலே மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்கள் ஆழ்வார்கள்.
இவர்கள் அருளிச்செய்தவைகளே திவ்யப் ப்ரபந்தங்கள்.
* பிறந்திறந்து பேரிடர்ச் சுழி * என்று சொல்லப்படுவது ஸம்ஸார ஸாகரமாகும்.
* ஸம்ஸார ஸாகரம் கோரம் அநந்தக்லேஶ பாஜனம் * என்று சொல்லப்படுவது இந்த * இருள் தருமாஞாலம் * ஆகும்.
தாண்ட முடியாததாய், மிகுந்த துன்பங்களுக்குப் பிறப்பிடமாய் இருப்பது இந்தப் ப்ரக்ருதி ஸம்பந்தமாகும்.
அப்படிப்பட்ட ஸம்ஸார ஸாகரத்தினைக் கடப்பதற்குரிய அருமருந்தன்ன ஸ்ரீஸூக்திகளை அருளிச் செய்தவர்கள் ஆழ்வார்கள்.

ஸ்ரீ பெரிய பிராட்டியார் கேள்வனான ஸ்ரீமந் நாராயணன் அருளிய ஜ்ஞானத்தாலே இவர்கள்
* தொண்டர்க்கமுதுண்ணச் சொல்மாலைகள் * அருளியவர்கள்.
இது தன்னை * தத்வம் திவ்ய ப்ரபந்தானாம் ஸாரம் ஸம்ஸாரவைரிணாம் * (பூர்வ தினசர்யா – 27)
என்றருளினார் ஸ்வாமி ஸ்ரீ எறும்பியப்பா.
திவ்யப்ரபந்தங்கள் சரீர ஸம்பந்த ரூபமான ஸம்ஸாரத்தைப் போக்கடிப்பன என்கின்றது

* மாறன் விண்ணப்பம் செய்த சொல்லார் தொடையல் இந்நூறும் வல்லார் அழுந்தார்
பிறப்பாம் பொல்லாவருவினை மாய வன்சேற்றள்ளல் பொய்ந்நிலத்தே * (திருவிருத்தம்-100),

* செயிரில் சொல்லிசைமாலை ஆயிரத்துளிப்பத்தால் வயிரம் சேர் பிறப்பறுத்து வைகுந்தம் நண்ணுவரே * (திருவாய் 4-8-11)

* நோய்கள் அறுக்கும் மருந்தே *

* அணைவிக்கும் முடித்தே * முதலிய பாசுரங்களினால் விளங்கும்.

இப்படிப்பட்ட மிக்க க்ருபாளுக்களான ஆழ்வார்களில் தலைவர் நம்மாழ்வார்.
ஏனைய ஆழ்வார்கள் இவ்வாழ்வாரின் அவயவங்களாகவே போற்றப்படுகின்றனர்.
ஸம்ப்ரதாயத்தில் * ஆழ்வார் * என்றாலே நம்மாழ்வாரைத் தான் குறிக்கும்.
இவ்வாழ்வார் தாமும் நான்கு வேத ஸார ரூபமாக நான்கு திவ்யப்ரபந்தங்கள் அருளிச் செய்துள்ளார்.
இவற்றுள் ப்ரதம (முதல்) திவ்யப்ரபந்தம் திருவிருத்தமாகும்.
இது ருக்வேதஸாரமாய், 100 பாசுரங்கள் கொண்டதாய் இருக்கிறது.
இதில் ஸ்வாபதேச அர்த்தங்களும், அகப்பொருள்களும் நிறைந்து உள்ளன.

——

திருவிருத்ததிற்கு ஏற்பட்ட வ்யாக்யானங்கள்
நம்பிள்ளை அருளிய ஈடு வ்யாக்யானம்
பரம காருணிகரான பெரியவாச்சான் பிள்ளை அருளிய வ்யாக்யானம்
அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமி அருளிய ஸ்வாபதேச வ்யாக்யானம்
பெரிய பரகால ஜீயர் ஸ்வாமி அருளிய வ்யாக்யானம்
அப்பிள்ளை ஸ்வாமி ஸ்வாமி அருளிய அரும்பதம்

———–

இந்த திவ்யப்ரபந்தம் ஆழ்வார் பராங்குச நாயகியின் நிலையினை அடைந்து,
ஸர்வேஶ்வரனை நாயகனாகக் கொண்டு அருளப்பெற்றதாகும்.
ஜீவாத்மாக்களுடைய இயல்பான நிலைமை பெண்ணிலைமையே ஆகும்.
* கந்தல் கிழிந்தால் ஸர்வர்க்கும் நாரீணாமுத்தமையினுடைய அவஸ்தை வரக்கடவதாயிருக்கும் * என்கிறது
ஸ்ரீவசன பூஷண திவ்ய ஸ்ரீஸூக்தி.

இதில் நடந்த கதைகளைச் சொல்லுகிறபடியால் திருவிருத்தம் (ஆழ்வாருடைய விருத்தம்) என்று திருநாமம் ஆயிற்று.
ஆழ்வார் தமக்குத் தாமே * மணிவல்லி * என்று இந்த திவ்யப்ரபந்தத்தில் திருநாமம் சாற்றியுள்ளார்.
எனவே இத்திருநாமத்தை நமது ஆசார்யர்கள் மிகவும் ஆதரித்து வந்துள்ளனர்!
* அடியேன் செய்யும் விண்ணப்பம் * என்று தொடங்கி
* மாறன் விண்ணப்பம் செய்த * என்று முடிக்கையாலே,
திருவிருத்தம் முழுமையும் ஆழ்வாருடைய வ்ருத்தத்தினைத் தெரிவிப்பதாக அமைந்தது என்றபடி.

———

ஸ்வாபதேஶார்த்தங்கள்-

இத் திவ்ய ப்ரபந்தத்தில் ஸ்வாபதேஶார்த்தங்கள் நிறைந்துள்ளன.
எம்பெருமானே ரக்ஷிப்பன் என்கின்ற அத்யவஸாய ஜ்ஞாநத்தைத் தாய் என்றும்,
பாகவதர்களை ஸகிகளென்றும்,
கடகனான ஆசார்யனை (சேர்த்து வைப்பவரான ஆசார்யனை) தூதென்றும்,
ஜ்ஞாந வைலக்ஷண்யத்தைக் கண்ணழகென்றும்,
அஜ்ஞாநத்தை இருளென்றும்,
பாதக பதார்த்தங்களை வாடை, தென்றல், அன்றில் என்றும் ஸ்வாபதேஶார்த்தங்கள் அருளப்பட்டுள்ளன.

* மயில் பிறை வில் அம்பு முத்துப் பவளம் செப்பு மின் தேர் அன்னம் தெய்வ உரு விகாஸ சுத்தி தாந்தி
ஞான ஆனந்த அனுராக பக்த்ய அணுத்வ போக்யதா கதிகளை உடைய அக மேனியின் வகுப்பு * என்கிற
ஆசார்ய ஹ்ருதய சூர்ணிகையில் (137)
ஆழ்வார் ஸ்த்ரீ நிலைமை யெய்தி
ஸ்த்ரீகளின் அவயவங்களாகச் அருளுகின்றவைகளின் ஸ்வாபதேஶார்த்தம் அருளப்பட்டுள்ளது.

———

திருவிருத்தமும் – அகத் துறையும்

திருவிருத்தத்தின் முதல் பாசுரம் எம்பெருமானை நோக்கி விண்ணப்பம் செய்வதாகவும்,
இறுதிப் பாசுரம் பல ச்ருதியாகவும் அமைந்துள்ளது.
மற்றைய 98 பாசுரங்களும் அகப்பொருள் துறையில் அந்தாதித் தொடையில் அமைந்தவை.

“காமப் பகுதி கடவுளும் வரையார் ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர்” (தொல் -பொருள்-நூ.83)
நூற்பாவில் காமக் குறிப்பை வைத்து இலக்கியம் பாடுகின்ற பொழுது தேவரிடத்தும் மக்களிடத்தும் வரையார் என்று
உரையாசிரியர் விளக்கம் தருகின்றனர்.
எனவே கடவுளைத் தலைவனாகக் கொண்டு அகத்துறையில் பாசுரங்கள் பாடுவது தமிழர் மரபு என்பது தேறும்.
உதாரணமாக சில பாசுரங்களைப் பார்க்கலாம்.

ஏழாம் பாசுரம் காலமயக்கு துறையில் அமைந்ததாகும்.
மழைக்காலம் வந்தவுடன் தான் திரும்பிவிடுவதாக வாக்களித்த தலைவன், மழைக்காலம் வந்தும் திரும்பி வராததால்
கவலையுற்ற தலைவியைக் குறித்துத் தோழியானவள் அவளைத் தேற்றும் விதமாக
இது மழைக்காலமா – அல்லது இரண்டு நீல எருதுகள் வானில் சண்டையிடுகின்றன.
அவற்றின் திமிலிலிருந்து மதநீர் பெருகுகின்றனவா என்று தெரியவில்லை என்று கூறுவதாக அமைந்துள்ளது இப்பாசுரம்.

ஞாலம் பனிப்பச் செறுத்து நன்னீரிட்டுக்கால்சிதைந்து
நீலவல்லேறுபொராநின்றவானமிது, திருமால்
கோலஞ்சுமந்து பிரிந்தார்கொடுமை குழறுதண்பூங்
காலங்கொலோவறியேன், வினையாட்டியேன்காண்கின்றவே. (7)

கால மயக்குத் துறையிலே அமைந்த இன்னுமொரு பாசுரம் பதினெட்டாம் பாசுரமாகும்.

கடல்கொண்டெழுந்ததுவானம், அவ்வானத்தை யன்றிச்சென்று
கடல்கொண்டொழிந்தவதனாலிது, கண்ணன்மண்ணும்விண்ணுங்
கடல்கொண்டெழுந்தவக் காலங்கொலோ புயற்காலங்கொலோ
கடல்கொண்டகண்ணீர், அருவிசெய்யாநிற்குங்காரிகையே (18)

ஸமுத்ரத்தைத் தோற்பித்த கண்களில் இருந்து ஜலத்தைப் பெருக்கிக் கொண்டு நிற்கும் பெண்ணே!
ஆகாசமானது ஸமுத்ரத்தை விழுங்கி மேலே கிளம்பிற்று; ஸமுத்ரமானது அந்த ஆகாசத்தை கோபித்துக் கொண்டு,
பின் தொடர்ந்து சென்று, ஆகாசம் கொண்டுபோன ஜலத்தை வாங்கிக் கொண்டு –
அப்போது அதில் தங்கிப்போன ஜலத்தினால் இந்த மழைத்துளி விழுகிறது.
ஸ்ரீக்ருஷ்ணனுடைய பூலோகத்தையும் விண்ணுலகத்தையும் ஸமுத்ரம் கபளீகரித்து
வ்ருத்தியடைந்த ப்ரளயகாலந்தானோ?
மழைக்காலந்தானோ? நிச்சயிக்க மாட்டுகிறிலேன் – என்று
கால மயக்குத் துறையில் அமைந்துள்ளது இப்பாசுரம்.

இங்கு ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளை வ்யாக்யான ஸ்ரீஸூக்திகள் –
” திருமங்கையாழ்வார்க்குச் சரணம் புக வேண்டுமா போலே இவர்க்கும் பலகாலும் கால மயக்கு வேண்டியிருக்கிறபடி ”
(எப்படித் திருமங்கை ஆழ்வார் அடிக்கடி சரணாகதி செய்வாரோ
அது போல நம்மாழ்வார் அடிக்கடி காலமயக்கு அனுபவத்தில் ஈடுபடுவார்)

அகத்துறையில் வெறிவிலக்கு என்றால் தலைவிக்குக் காமத்தாலுண்டான நோயை
வேறு காரணத்தாலுண்டானதாகக் கொண்டு அந்நோயைத் தணிக்கவேண்டிச் செய்யும்
வெறியாட்டைத் தடுத்து நிற்றலைக் கூறுதல்.
இத்துறையில் அமைந்துள்ள பாசுரம் இருபதாம் பாசுரமாகும்

சின்மொழிநோயோ கழிபெருந்தெய்வம், இந்நோயினதென்
றின்மொழிகேட்கு மிளந்தெய்வமன்றிது, வேலநில்நீ
என்மொழிகேண்மி னென்னம்மனைமீருலகேழுமுண்டான்
சொன்மொழி, மாலையந்தண்ணத்துழாய்கொண்டுசூட்டுமினே (20)

தலைவியானவள் சோகித்துக் கிடக்கும் தசையினைக் கண்ட திருத்தாயார் முன்னே தேவதாந்த்ர ஸ்பர்சமுடையார்
புகுந்து நிற்க/சிலவற்றைச் செய்யத் தொடங்க;
தோழி தலைமகளது ப்ரபாவத்தினைத் தெரிந்தவளாகையாலே திருத்தாயாரை நோக்கி
இவளுக்கு நோய் தீர்க்கிறோம் என்று விநாசத்தை விளைக்க வேண்டா என்று
கூறுவதாக அமைந்துள்ளது இப்பாசுரமாகும்.

நலம் பாராட்டல் துறையில் அமைந்தது 55வது பாசுரம்.
தலைவன் தலைவியின் அழகைப் பாராட்டுவது அகப் பொருளில் நலம் பாராட்டல் என்பர்.
கொளு இதனை,அழிபடர் எவ்வம் கூர ஆயிழை
பழிதீர் நன்னலம் பாராட் டின்று என்று விளக்குகிறது.

இங்கு,
திருமாலை நாயகனாகப் பாவித்த ஆழ்வார்
நாயகியாகத் தம்மைப் பாவித்து நலம் பாராட்டுகிறார்.

வண்டுகளோ! வம்மின்! நீர்ப்பூ நிலப்பூ மரத்தில் ஒண்பூ
உண்டு களித்து உழல்வீர்க்கு ஒன்று உரைக்கியம்ஏனம் ஒன்றாய்
மண்துக ளாடிவை குந்தமன் னாள்குழல் வாய்விரைபோல்
விண்டு கள்வாரும் மலர் உளவோ நும்வியல் இடத்தே? (55)

——–

திருவிருத்தத்தில் ஆழ்வாரின் ப்ரபாவங்கள்

ஆழ்வாருடைய ப்ரபாவங்களைச் சொல்வதாக இத் திரு விருத்தத்தில் சில பாசுரங்கள் அமைந்துள்ளன.
எப்படித் திருவாய்மொழியில் * துவளில் மாமணிமாடமோங்கு * பதிகமோ அதே போன்றதாகும்.
சில பாசுரங்களைக் காணலாம்

ஈர்வனவேலுமஞ்சேலுமுயிர்மேன்மிளிர்ந்து, இவையோ
பேர்வனவோவல்லதெய்வநல்வேள்கணைப் பேரொளியே
சோர்வனநீலச்சுடர்விடுமேனியம்மான் விசும்பூர்
தேர்வன, தெய்வமந்நீரகண்ணோவிச்செழுங்கயலே (14)

இப்பாசுரத்தில் நாயகியின் (பராங்குச நாயகியின்) கண்ணழகில் ஈடுபட்ட நாயகன்,
அவற்றின் அழகைச் சொல்லிப் புகழ்வதாக அமைந்தது இப்பாசுரம்.
கண்ணழகு ஞானமாகச் சொல்லப்பட்டது காண்க.
ஆழ்வாருடைய ஜ்ஞாநத்தின் ஏற்றத்தைக் கண்டுரைத்த பாகவதர்கள் பாசுரத்தைச் சொல்லுவதாக அமைந்துள்ளது இப்பாசுரம்.
இந்த ஜ்ஞாநத்தின் தன்னேற்றம் எப்படிப்பட்டது எனில் நித்யஸூரிகளும் பரமபதநாதனின் அநுபவத்தினையும்
விட்டுவிட்டு ஆழ்வாரைத் தேடிக் கொண்டு வருவதாக அமைந்துள்ளது.

கயலோநுமகண்களென்றுகளிறுவினவிநிற்றீர்,
அயலோரறியிலுமீதென்னவார்த்தை, கடல்கவர்ந்த
புயலோடுலாங்கொண்டல்வண்ணன் புனவேங்கடத்தெம்மோடும்
பயலோவிலீர், கொல்லைகாக்கின்றநாளும் பலபலவே (15)

யானை (இங்குவரக் கண்டதுண்டோ? என்று) கேட்கத் தொடங்கி,
“உங்கள் கண்கள் கயல்மீன்களோ?”என்று (எங்கள் கண்களைக் கொண்டாடி) நின்றீர்;
அயலார் அறிந்தாலும் இது என்ன பொருந்தாத வார்த்தை;
கடல்நீரை முழுதும் கொள்ளை கொண்டதும் மழையோடு மந்தமாகச் சஞ்சரிப்பதுமான காளமேகம் போன்ற
திருநிறத்தையுடையனனான எம்பெருமானது (பல) கொல்லைகளையுடைய திருவேங்கட மலையிலே (நாங்கள்)
கொல்லை காத்து வருகிற மிகப்பல நாள்களிலொன்றிலும் எங்களோடு (நீர்) பாகமுடையீரல்லீர் – என்பது இப்பாசுரத்தின் அர்த்தம்.

இப்பாசுரத்திலும் ஆழ்வாருடைய பகவத் விஷயாவகாஹநத்தில் உண்டான வைலக்ஷண்யத்தினைக் கண்ட
பாகவதர்கள் இவருடைய ஜ்ஞாநாதி குணங்களிலீடுபட்டு இருப்பதாக இருப்பது இப்பாசுரமாகும்.

கொடுங்கால்சிலையர்நிரைகோளுழவர்கொலையில்வெய்ய
கடுங்காலிளைஞர்துடிபடுங்கவ்வைத்து அருவினையேன்
நெடுங்காலமும் கண்ணன் நீண்மலர்ப்பாதம்பரவிப்பெற்ற
தொடுங்காலொசியுமிடை இளமான்சென்றசூழ்கடமே (37)

இப்பாசுரத்தில், ஆழ்வார்க்குப் பிறந்த ஜ்ஞாந பக்தி வைராக்யங்களைக் கண்டு, இவர்க்கு
இந்த ஸம்ஸாரத்தில் இருப்பு மிகவும் கொடிதாயிருக்குமென திருத்தாயார் கருதுவதாக அமைந்தது இப்பாசுரம்.

உலாகின்ற கெண்டை ஒளியம்பு, எம்ஆவியை ஊடுருவக்
குலாகின்ற வெஞ்சிலை வாண்முகத்தீர் – குனிசங்கிடறிப்
புலாகின்ற வேலைப் புணரியம் பள்ளியம் மானடியார்
நிலாகின்ற வைகுந்தமோ, வையமோ? நும்நிலையிடமே. (75)

ஆழ்வாரினுடைய திருக்கண்களின் அழகைப் பேசுவதாக அமைந்தது இப்பாசுரம்.
* வெஞ்சிலை வாண் முகத்தீர்* – ஆழ்வாரது ஸ்வரூபத்தைக் கண்டு ஈடுபட்ட பாகவதர்கள் அவரை நோக்கி
‘நுமது இடம் அந்த நித்யவிபூதியோ? என்று வியந்துரைத்தலாம்.
பரந்த குளிர்ந்த நுண்ணிய விளக்கமுடைய உமது ஞானத்தை எமது நெஞ்சிலே பதியும்படி செலுத்தும்
முகமலர்ச்சியுடையவரே! என அழைத்தபடி.
எம்பெருமானுடைய நித்யமுக்தர் வஸிக்கும் நித்ய விபூதியோ இந்த லீலாவிபூதியோ உமது இருப்பிடம்?
ஆழ்வார், ஞானம் முதலியவற்றின் மஹிமையால் முக்தரென்று சொல்லும்படியும்,
அங்கு நின்று இங்கு வந்தவர் ஒருவர் என்று சொல்லும்படியும் உள்ள தன்மை இப்படி வினவுதற்குக் காரணம்.

———–

மேலும் இத்திவ்யப்ரபந்தத்தில் தத்வார்த்தங்கள் பொதிந்துள்ளன.
ஆழ்வார் தாமும் தொடங்கியருளும் பொழுதே
* பொய்நின்ற ஞானமும் பொல்லாவொழுக்கும் * என்று தான் தொடங்கியருளுகிறார்.
ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளை மிகவும் வியந்து கொண்டாடி இங்கு வ்யாக்யானமிட்டருளுகிறார்!
மஹாபாரதம் தொடங்கி க்ரந்தங்கள் விரிவாக இருந்தும் தெளிவாகச் சொல்ல இயலாத ஜீவாத்மாக்களின் நிலையை
ஆழ்வார் ஒரே சந்தையில் அருளிச்செய்கிறார் என்று.
* மஹாபாரதமெல்லாம், கூளமும் பலாப்பிசினும் போலே ப்ரக்ருதி புருஷ விவேகம் பண்ணமாட்டிற்றில்லை;
இவர் மயர்வறமதிநலம் அருளப் பெற்றவராகையாலே, மூன்று பதத்தாலே ப்ரக்ருதி புருஷ விவேகம் பண்ணியருளினார் *.

இன்னமும் முதல் பாசுரத்திலுள்ள அர்த்தங்களைச் சுருக்கி ஸ்வாமி அழகியமணவாளப்பெருமாள் நாயனார் தாமும்
* இமையோரதிபதி அடியேன்மனனே பொய்மயர்வு பிறந்தருளினன் விண்ணப்பம் தொழுதெழென்ற பஞ்சகத்தோடே,
அவித்யாதிஸ்வரூப ஸ்வாபாவ, ஆத்மேச்வரபந்த, ரக்ஷணக்ரம, குண, விக்ரஹ, விபூதியோக, ததீயாபிமாந,
உபதேசவிஷய, அந்யாபதேச ஹேத்வாதிகளும் ஸங்க்ருஹீதம் * (212) என்கிற சூர்ணிகையிலே ஆசார்ய ஹ்ருதயத்தில்
சுருக்கியருளினார்.

அதாவது (1) * இமையோர் தலைவா * என்று பரஸ்வரூபத்தினையும்,
(2) * அடியேன் செய்யும் * என்று ஸ்வஸ்வரூபத்தையும்,
(3) *பொய்ந்நின்ற ஜ்ஞாநமும் பொல்லாவொழுக்கும் அழுக்குடம்பும் * என்று விரோதி ஸ்வரூபத்தையும்,
(4) *என் நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் * என்று உபாய ஸ்வரூபத்தையும்
(5) * செய்யும் விண்ணப்பம் * என்கையாலே புருஷார்த்த ஸ்வரூபத்தையும்
ஆகிற அர்த்த பஞ்சகத்தையும் முதல் பாசுரத்திலேயே காட்டியருளியுள்ளார்.

(குறிப்பு – திருவிருத்த விஷயமான கட்டுரையாகையாலே திருவாய்மொழி எடுக்கப்படவில்லை.
மாமுனிகள் வ்யாக்யானத்திலே கண்டு கொள்வது)

திருவிருத்தமே, திருவாய்மொழியாக விரிந்துள்ளது என்பதினை ஸ்வாமி அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்
தம்முடைய ஆசார்ய ஹ்ருதயத்தில்
* ருக்கு ஸாமத்தாலே ஸரஸமாய் ஸ்தோபத்தாலே பரம்புமாபோலே
சொல்லார் தொடையல் இசை கூட்ட அமர்சுவை ஆயிரமாயிற்று * என்று காட்டியருளினார்.

கருவிருத்தக்குழி நீத்தபின் காமக்கடுங்குழிவீழ்ந்து,
ஒருவிருத்தம்புக்குழலுறுவீர், உயிரின்பொருட்கட்கு
ஒருவிருத்தம்புகுதாமல்குருகையர்கோனுரைத்த
திருவிருத்தத்து ஓரடிகற்றிரீர் திருநாட்டகத்தே

கர்ப்ப, ஜன்ம, பால்ய, யௌவன, ஜரா, மரண நரகங்களாகிற அவஸ்த்தைகளிலே சிக்கி ஸம்ஸாரத்திலே
உழல்கின்ற ஜீவர்களைப் பார்த்து, ஆழ்வார் அருளிச்செய்த திருவிருத்தத்தின் ஓரடி கற்கையே உங்களை
இந்த ஸம்ஸாரச் சுழலில் நின்றும் விடுபட ஹேதுவாக இருக்கும் – என்று
திருவிருதத்தின் பெருமையைப் பகர்வதாக அமைந்துள்ளது இத் தனியன்.

முடிவுரை

இவ்வாறு திருவிருத்தத்தின் உரைகளில் காட்டப்பட்ட சில பல விசேஷமான அர்த்தங்களை இங்கே அனுபவித்தோம்.

அடியேன் ஸ்ரீ ஸுதர்சன ராமானுஜ தாஸன்

————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஸுதர்சன ராமானுஜ தாஸன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.