Archive for the ‘Ashtaadasa Rahayangal’ Category

ஸ்ரீமத் வரவர முநீந்த்ர க்ரந்த உதாஹ்ருத ப்ரமாண அநுக்ரமணிகா

February 1, 2026

1-அ இதி பசுவதோ நாராயணஸ்ய ப்ரதமாபிதா நம்பி தா கிம் நாம மங்கலம்
ந க்ருதம்? (வையாகரணர் )

2-அகாரஞ்சாப்யுகாரஞ்ச மகாரஞ்ச ப்ரஜாபதி:, வேதத்ரயாந்நிரப் ஹத் பூர்
புவஸ்ஸ்வரிதீதி ச. மநுஸ்மருதி 2-76)

3-அகார : சித்ஸ்வரூபஸ்ய விஷ்ணோர் வாசக இஷ்யதே. உகாரச்சித்ஸ்வரூபாயா
ரியோ வாசீ தா விது:. மகாரஸ்து தயோர் தாஸ இதி ப்ரணவலக்ஷணம். (பகவச்சாஸ்த்ரம்)

4-அகாரேணோச்யதே விஷ்ணு: ஸர்வலோகேச்வரோ ஹரி:. உத்த்ருகா விஷ்ணுநா லக்ஷ்மீ. உகாரேணோயதே ஸதா . மகாரஸ்து தயோர் விப்ர ஸ்ரீநாராயணயோஸ் ஸதா ; ஆதிமந: சேஷபூதஸ்ய வாசக : ச்ருதி சோகித (பாஞ்சராத்ரம்)

5-அகாரோ வை ஸர்வா வாக் (தைத்திரீயோபநிஷத்.நாராயணாநுவாகம் 12-3)

6-அகார்யசிந்தா ஸமகாலமேவ ப்ராதுர்ப்பவந் சாபதர: புரஸ்த்தாத், அந்த:
சரீரேஷ்வபி ய: ரஜா நாம் ப்ரத்யாதிதேசாவிநயம் விநேதா . (ரகுவம்சம் 6-40)

7-அகாலபலிநோ வ்ருக்ஷாஸ் ஸர்வே சாபி மதுஸ்ரவா:, பவந்து மார்கே பகவந்
அயோத்யாம் ப்ரதி கச்சத . (ராமா.யு. 127, 19)

8-அகிஞ்ச நோகதி:- அஹமஸ்ம்யபராதா நாம் ஆலயோகிஞ்சநோகதி, த்வமே
வோபாயபூதோ மே பவேதி பரார்த்தநா மதி . சரணாகதிரித்யுக்தா ஸா
தேவேஸ்மிந் ப்ரயு யதாம். (அஹிர்புத் ய ஸம்ஹிதா 37-30,31)

9-அகிஞ்சநோநந்யகதி: ந தர்மநிஷ்ட்டோஸ்மி ந சாத்மவேதீ ந பக்திமாந்
த்வச்சரணாரவிந்தே, அகிஞ்சந: அநந்யகதி: சரண்ய த்வத்பாதமூலம் சரணம்
ப்ரபத்யே. (ஸ்தோத்ரரத்னம்-22)
பக்த்யேகலப்ய: புருஷோத்தமோஸௌ ஜகத் ப்ரஸூதிஸ்த்திதிநாசஹேது:
அகிஞ்சநோ நந்யகதி: சரண்ய க்ருஹாண மாம் க்லேசிநம் அம்புஜாக்ஷ!
(ஜிதந்தா 2-15)

10-அகிஞ்சித்கரஸ்ய சேஷத்வா நுபபத்தி: (ஸ்ரீபாஷ்யகாரரின் முக்தகவாக்யம்

11-அக்ருத்ரிம த்வச் சரணாரவிந்த ப்ரேமப்ரகர்ஷாவதி மாத்மவந்தம், பிதாமஹம்
நாதமுநிம் விலோக்ய ப்ரஸ்த மத்வருத்தம் அசிந்தயித்வா. (ஸ்தோத்ர ரத்னம் ச்லோ.65)

12-அகில ஜகந்மாதரம்- பகவந்நாராயணாபிமதா நுரூப ஸ்வரூபரூப குண விப
வைச்வர்ய சீலாத்ய நவதிகாதிசயாஸங்க்யேய கல்யாண குணகணாம் பத்ம
வநாலயாம் பகவதீம் சரியம் தேவீம் நித்யா நபாயிநீம் நிரவத்யாம் தேவதேவ
திவ்ய மஹிஷீம் அகில ஜகந்மாதரம் அஸ்மந்மாதரம் அசரண்ய சரண்யாம்
அநந்யசரண : சரணமஹம் ப்ரபத்யே. (சரணாகதி கத்யம்)

13-அகில புவந ஐந்மஸ்த்தேம பங்காதிலீலே விந்த விவித பூத ராத ரக்ஷைக
தீஷே, ச்ருதிசிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீநிவாஸே பவது மம பரஸ்மிந்
சேமுஷீ பக்திரூபா (ஸ்ரீபாஷ்யமங்களச்லோகம்)

14-அகிலஹேய ப்ரத்யநீக கல்யாணைகதாந ஸ்வேதர ஸமஸ்தவஸ்து விலணா
நந்த ஜ்ஞாநா நந்தைக ஸ்வரூப! (சரணாகதி கத்யம் )

15-அக்நிப்ரவேசம் யச்சாபி குருதே மத்கதாத்மநா, ஸ யாத்யக்நிப்ரகாசேந
விமாநேந மமாலயம். ப்ராணாந் த்யஜதி யோ மர்த்யோ மாம் ரபந்
நோப்யநாசகம், பாலஸூர்யப்ரகாசேந வரஜேத்யாநேந மத்க்ருஹம்.
( ஆச்வமேதிக பர்வம் [வைஷ்ணவ தர்ம சாஸ்த்ரம் ] ஐந்தாமத்யாயம்)

16-அக்நிர் வாக்பூத்வா முகம் ப்ரா சத், ஆதித்ய: சக்ஷர் பூக்வா அக்ஷிa
ப்ராவிசத், வாயுர்க்கராணோபூத்வா நாஸிகே ப்ராவிசத், திச: ச்ரோத்ரம்
பூத்வா கர்ணௌ ப்ராவிசந், ஓஷதிவநஸ்பதயோ லோமாநி பூத்வா த்வசம்
ப்ராவிசந் சந்த்ரமா மநோ பூத்வா ஹ்ருதயம் ப்ராவிசத், மருத்யுரபாநோ
பூத்வாநாபிம் ப்ராவிசத், ஆபோ ரேதோ பூத்வா சிச்நம் ப்ராவிசந்
(ஐதரேயோபநிஷத் 1.2-4)

17-்நிம் வாவாதித்யஸ் ஸாயம் ப்ரவிசதி, தஸ்மாத் அக்நி: தூராந்நக்கும்
தத்ருசே, உபே ஹி தேஜஸீ ஸம்பத்யேதே (தைத்திரீய யஜுர்ப்ராஹ்மணம் 2)

18-அக்நீஷோமீயம் பசுமாலபேத. (ய – அஷ்டகம்3; பரத்நம் 5)

19-அக்நேரௌஷ்ண்யம் ப்ரகாசத்வம் ரூபேந்த்ரிய மமர்ஷணம், ஸந்தாப செளர்ய
தை ண்யாதிவர்ணம் பசநசக்திதாம். ஆதத்தே ஸஹஸா தேஹ: ஸாஹ
ஸஞ்ச த்வி ர்ஷப.

20-அக்நே: சிவஸ்ய மாஹாத்யம் தாமஸே ப்ரகீர்த்திதம், ராஜஸேஷு ச
மாஹாத்ம்யம் அதிகம் ப்ரஹ்மணோ விது:, ஸாத்விகேஷ அத கல்பேஷ்மாஹாத்ம்யம் அதிகம் ஹரே:, தேஷ்வேவ யோக ஸம்ஸித்தா கமிஷ்யந்தி
பராம் கதிம். ஸங்கீர்ணேஷு ஸரஸ்வத்யா : பித்ரூணாஞ்ச நிகத்யதே.
(மத்ஸ்யபுராணம் – 53-68)

21-அக்ர தஸ் தே கமிஷ்யாமி-யதி த்வம் ப்ரஸ்த்திதோ துர்க்கம் வந மத்யைவ
ராகவ, அக்ரதஸ் தே கமிஷ்யாமி ம்ருத்நந்தீ குசகண்டகாந். (ராமா. அயோ.27-6)

22-அக்ரத: ப்ரயயெள ராம: ஸீதா மத்யே ஸு மத்யமா, ப்ருஷ்ட்டதஸ் து தநுஷ்
பாணி: லக்ஷ்மணோநுஜகாம ஹ (ராமா. ஆரண்ய 11-1)

23-அங்கே பரதமாரோப்ய-தம் ஸமுத்தாப்ய காகுத் த்த: சிரஸ்யாக்ஷிபதம்
கதம், அங்கே பரதமாரோப்ய முதித: பரிஷஸ்வஜே (ஸ்ரீர மா யுத்த 130-38)

24-அங்க நாமங்க நாமந்தரே மாதவோ மாதவம் மாதவஞ்சாந்தரேணாங்க நா,
இத்தமாகல்பிதே மண்டலே மத்யக: ஸஞ்ஜகெள வேணு நா தேவகீநந்தந:,
(கர்ணாம்ருதம்)

25-அங்காநி வேதா : சத்வார: மீமாம்ஸா ந்யாயவிஸ்தர:, புராணம் தர்ம சாஸ்த்ரஞ்ச வித்யா ஹ்யேதா: சதுர்தச (ஸ்ரீ விஷ்ணுபுராணம் 3-6-28)

26-அங்கா யநயா தேவதா:-ஸ ஆத்மா; அங்காந்யந்யா தேவதா:
(தைத் திரீய உபநிஷத்,சீக்ஷாவல்லீ)

27-அங்குஷ்ட்டமாத்ர: புருஷோ மத்ய ஆத்மநி திஷ்ட்தி.ஈசாநோ பூதபவ்
யஸ்ய ந ததோ விஜுகுப்ஸதே, அங்குஷ்ட்டமாத்ர: புருஷோ ஜ்யோதிரிவா
தூமக :. ஈசாநோ பூத பவ்யஸ்ய ஸஏவாத்யஸ உ ச்வ: (கடோ 2-4-12,13)

28-அதவிசேஷிதாந்பரலயஸ்மநி ஸம்ஸரத: கரண களேபரைர் கடயிதும்
தயமாந மநா வரத! நிஜேச்சயைவ பரவாநகரோ: ப்ரக்ருதிம் மஹதபிமாத
பூத கரணவலிகோரகிணீம். (ஸ்ரீரங்கராஜஸ்தவம் உத்தரசதகம் 41)

29-அசிந்த்யாத்புதாக்லிஷ்ட-நமோசிந்த்யாத்புதாக்லிஷ்ட ஜ்ஞாந வைராக்ய ராசயே, நாதாய முநயேகாத பகவத் பக்தி ஸிந்தவே. (ஸ்தோத்ரரத்னம் 1)

30-அசேதநா பரார்த்தாச நித்யா ஸததவிக்ரியா, த் குணா கர்மிணாம் ேத்
ரம் ப்ரக்ருதே ரூப முச்யதே. வ்யாப்திரு பேண ஸம்பந்தஸ் தஸ்யாச்ச புரு ஷஸ்ய ச, ஸ ஹ்யநாதி ரநந்தச் ச பரமார்த்தேந நிச்சி : (பரமஸம்ஹிதை 2)

31-அச்சேத்யோயம் அதாஹ்யோயம் அக்லேத்ய: அபிசாஷ்ய ஏவ ச, நித்ய: ஸர்வகதஸ் ஸ்த்தாணு: அசலோயம் ஸநாத (பகவத் கீதை 2-24)

32-அச்யூத பக்திதத்வ பூயோ நமோபரிமிதாச்யுத பக்திதத்வ ஜ்ஞாநாம் ருதாப்தி பரிவாஹ சுபைர் வசோபி:, லோகேவதிர்ணபரமார்த்த ஸமக்ர பக்தி
யோகாய நாதமுநயே யமிநாம் வராய. (ஸ்தோத்ரரத்னம் 3)

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ சார ஸங்க்ரஹம்-வார்த்தை -456-

December 17, 2025

வார்த்தை -456-

(ஸ்ரீ சார ஸங்க்ரஹம் பிரபந்தம் இந்த வார்த்தை அடியாகவே அருளிச் செய்யப்பட்டு உள்ளது
அஷ்ட ஸ்லோஹியும் இவற்றை விவரிக்கும் )

அகில ஜகத்திதாநு சாசனமான வேதத்திலும் –
வேத உப ப்ரும்ஹணங்களாக பிரவ்ருத்தங்களான ஸ்ம்ருதி இதிஹாச புராணங்களிலும்
அவிகீதமாக பிரசித்தமாய் –
சர்வேஸ்வரனுடைய ஸ்வம்மாய் –
சர்வ ஆத்மாக்களுக்கும் ஆபத் தனமாய் இருந்துள்ள த்வயம் -என்னும் திரு நாமத்தை உடைத்தாய் இருந்துள்ள வாக்ய த்வயம்
பத்து அர்த்தத்தை பிரதிபாதிக்கிறது –

1-ஸ்ரீய பதித்வமும்
2-ஸ்ரீ நாராயணத்வமும்
3-ஸ்ரீ நாராயணன் உடைய சர்வ லோக சரண்யமான சரணார விந்த யுகளமும்
4-அதினுடைய ப்ராபகத்வமும்
5-தத் கோசரமாய் சேதன கதமாய் இருந்துள்ள பிரார்த்தனா கர்ப்ப விஸ்ரம்பமும்
6-ஸ்ரீ லஷ்மீ தத் வல்லபர்களுடைய நிகில ஆத்ம நித்ய கைங்கர்ய ப்ரதான அர்த்தமான நித்ய சம்பந்தமும்
7-கைங்கர்ய ப்ரதி சம்பந்தியான ஈஸ்வரனுடைய நிரதிசய போக்யதையும்-8-சர்வ ஸ்வாமித்வமும்(இவை இரண்டுமே நாராயணார்த்தம்)
9-நித்ய கைங்கர்யமும் –
10-கைங்கர்ய பிரதிபந்தக நிச்சேஷ நிபர்ஹணமுமாகிற அர்த்த விசேஷங்கள்

ஈத்ரு சார்த்த விசேஷ ப்ரகாசகமான மந்திர விசேஷணத்தின் உடைய விவரண ரூபமாய்
அபௌருஷேயமாய் -இருந்துள்ள திருவாய்மொழியில் பத்துப் பத்தாலும்
இப் பத்து அர்த்தத்தையும் பூர்வாச்சார்யர்கள் அடைவே சேர்த்து அனுசந்தித்து கொண்டு போருவார்கள்

(த்வயார்தம் தீர்க்க சரணாகதி என்றது சார சங்கரஹத்திலே–சூரணை -210—திருவாய்மொழி பத்து பத்தாலும் ஸ்ரீயபதித்வம் முதலாக — கைங்கர்ய விரோதி நிவ்ருத்தி பர்யந்தமாக த்வயத்தில் பிரதிபாதிதமான பத்து அர்த்தத்தையும் பிரதிபாதிக்கையாலே , த்வய அர்த்தமாய்க் கொண்டு தீர்க்க சரணாகதியாய் இருக்கும் என்று சொல்லப் பட்டது –
பிள்ளை அருளி செய்த சார சங்கரகமாகிற பிரபந்தத்தில்-அந்த பிரபந்தம் ஆவது தான் என் என்னில்- அகில ஜதத்தி தானுசாசன பரமான வேதத்திலும் –வேத உப ப்ரும்ஹமான அர்த்தமாக –பிரவ்ருத்தங்களான-ஸ்ம்ருதி இதிகாச புராணாதி சமஸ்த சாஸ்திரங்களிலும் பிரசித்தமாய் –சர்வேஸ்வர- சர்வ ஸ்வமாய் –நம் ஆச்சர்யர்களுக்கு ஆபத் தனமாய் -இருந்துள்ள அர்த்த த்வ்யத்தை – பிரதி பாதிக்கையாலே -த்வயம் -என்று திரு நாமத்தை உடைத்தாய் உள்ள வாக்ய த்வயம் – பத்து அர்த்தத்தை பிரதி பாதிக்கிறது -இப்படி திருவாய்மொழியின் த்வய அர்த்த பிரதிபாதாக த்வத்தை விசதமாக ஆச்சார்யர்கள் அருளிச் செய்து வைக்கையாலே – ஸ்வ பிரபந்தத்தில் வக்தவ்ய அம்சத்தை தத் பிர பந்தத்தில் தர்சிப்பித்தார் ஆய்த்து .. )

இதில் முதல் பத்தால் –
மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள் -1-3-1-என்றும் –
மலராள் மைந்தன் -1-5-9-என்றும் –
திருமகளார் தனிக் கேள்வன் -1-6-9-என்றும் –
திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே -1-9-1-என்றும் –
பூ மகளார் தனிக் கேள்வன் -1-9-3-என்றும் –
மைந்தனை மலராள் மணவாளனை -1-10-4-என்றும் –
ஸ்ரீ ய பதித்வம் ப்ரதிபாதிதம் ஆய்த்து

பத்துடை யடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே –1-3-1-தாமரைப் பூவை பிறப்பிடமாக யுடைய ஸ்ரீ மஹா லஷ்மியானவள் விரும்பும்படியான பெறுவதற்கு அறிய நம் ஸ்வாமியானவன்-ஈஸ்வரீம் சர்வ பூதானாம் -என்கிற மேன்மையை யுடையளாய்-பரிமளம் ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கிற போக்யதையை யுடையளான பிராட்டி  அகலகில்லேன் இறையும் என்று விரும்பும் தத்துவம் பெறற்கு அரிய ஸ்வாமிகள்
ஸ்ரீ யபதி என்கை இறே சர்வாதிகத்வத்துக்கு லஷணம்-நம் -என்று இந்த மேன்மையும் நீர்மையும் தமக்கு பிரகாசித்து இருக்கிற படி –

மாயோம் தீய வலவலைப் பெருமா வஞ்சப் பேய் வீய
தூய குழவியாய் விடப்பால் வமுதா வமுது செய்திட்ட
மாயன் வானோர் தனித்தலைவன் மலராள் மைந்தன் எவ்வுயிர்க்கும்
தாயோன் தம்மான் என்னம்மான் அம்மா மூர்த்தியைச் சார்ந்தே –1-5-9-நித்ய ஸூரிகள் ஜீவனம் இருக்கிற படி–‘தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்று அமரர் ஆட் செய்வார்,’ என்கிறபடியே, அவர்கள் விரும்பித் தொண்டுகளைச் செய்யப் பெரிய பிராட்டியாரும் தானுமாக இருக்குமவன்.-மைந்தன் -நித்ய யௌவன ஸ்வ பாவன்-அவளுக்கு மிடுக்கானவன்.-இனி, இதற்கு, ‘அவளுடைய சேர்த்தியினாலே நித்தியமான புதிய யௌவனத்தை யுடையவன்’ என்று பொருள் கூறலுமாம்.-

தரும வரும பயனாய –திருமகளார் தனிக் கேள்வன்
பெருமையுடை பிரானார் -இருமை வினை கடிவாரே–1-6-9-உபநிஷத்துக்களிலே பரம பிரயோஜனமாக பிரசித்தமானவற்றை தரும் திருமகளார் –தர்மத்தினுடைய பரம பிரயோஜனமான திருமகளார்-தருமத்தினுடைய-பரம – மேலான பிரயோஜனந்தான் ஒரு வடிவு கொண்டாற் போன்று இருக்கின்ற ஸ்ரீ பெரிய பிராட்டியார்  -அத்விதீயனான வல்லபன்-ஸ்ரீ யபதித்வ நிபந்தனமான பெருமையை யுடையவர்-இரண்டாம் விரலுக்கு ஆள் இல்லாதபடி -நாயகனாய் இருக்கிறவன். அப்ரமேயம் ஹி தத் தேஜ -ஜனக குலத்தில் அவதரித்த பிராட்டியானவள் எவனுக்கு மனைவியாக இருக்கின்றாள்?-அவனுடைய திறல் வலி முதலாயின அளவிட முடியாதனவாக இருக்கின்றன,’ என்கிறபடியே.
ஸ்ரீயப்பதி- திருமகள் கேள்வன் ஆகையாலே வரும் ஏற்றம் உள்ளது இவன் ஒருவனுக்குமே ஆதலின், ‘தனிக் கேள்வன்

இவையும் அவையும் உவவையும் இவரும் அவரும் உவரும்
எவையும் எவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என்னமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே –1-9-1-என்னமுதம் –
தேவர்கள் அதிகாரிகளான அம்ருதத்தில் காட்டில் வியாவ்ருத்தி-சுவையன் –-ரசிகன் -அவ்வமுதத்தில் காட்டில் வியாவ்ருத்தி -அதுக்கு போக்த்ருத்வம் இல்லையே-திருவின் மணாளன் –இவருடைய அமிர்தம் ஒரு மிதுனம் ஆயிற்று

அருகலிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன்
கருகிய நீல நன்மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன்
பொருசிறைப் புள்ளுவந்தேறும் பூ மகளார் தனிக் கேள்வன்
ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே –1-9-3-பரிமளம் ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கும் படியான பாக்யத்தை யுடையவள்-அத்விதீய நாயகன் -என்னும் வை லக்ஷண்யத்தை யுடையவன்-புஷ்பத்தில் பரிமளம் வடிவு கொண்டால் போலே இருப்பவளாய் -போக்யத ஏக வேஷையான ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபன் என்றால் -இப்படிப்பட்ட ஐஸ்வர்யத்துக்கு இரண்டாம் விரலுக்கு ஆள் இல்லாதபடி இருக்கிறவன்

நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால்
என் செய்யோம் இனி என்ன குறைவினம்
மைந்தனை மலராள் மணவாளனைத்
துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய் –1-10-4-நித்ய யவ் வன ஸ்வ பாவனை—மைந்து -மிடுக்கு இனிமை அழகு கெடுவாய், இவ் விஷயத்தைச் சிலரால் விடப் போமோ?–நிரதிசய போக்யையாய் இருக்கிற பிராட்டி செவ்வி கொள்ள இட்டுப் பிறந்தவனை-ஸ்ரீ பெரிய பிராட்டியார் ‘அகலகில்லேன் இறையும்’ என்னும் விஷயத்தை யன்றோ நான் உன்னை ‘விடாதே கொள்’ என்கிறேன்?

—————

இரண்டாம் பத்தால் –
எம்பெருமான் நாரணற்கு -2-1-7-என்றும் –
எம்பிரான் எம்மான் நாரயணனாலே -2-7-1-என்றும்
நாராணன் முழு ஏழு உலகுக்கும் நாதன் -2-7-2-என்றும் நாரயணத்வம் பிரதிபாதிதம் ஆய்த்து

தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு எம்
ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே
வேற்றோர் வகையில் கொடியதாய் எனையூழி
மாற்றாண்மை நிற்றியே வாழி கனையிருளே –2-1-7-அப்ராப்த விஷயத்துக்கு தோற்றோமோ -அல்லோம் என்றாரையும் விட மாட்டாத வத்சலனுக்கு –ஸூலபனுக்கு என்னவுமாம்-ப்ராப்த விஷயத்தில் வாத்சல்யாதிகளால் இழந்தோம் என்கை –

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்
மாசரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா
ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே–2-7-1-நித்ய ஸூரிகளை அனுபவிக்குமா போலே என்னை அனுபவிப்பித்தவன்-அவர்களை போலே என்னை அநந்யார்ஹன் ஆக்கியவன் –தன் மேன்மை பாராதே -சர்வ அந்தர்யாமியாய்க் கொண்டு இவற்றின் சத்தையை நோக்கி நிற்கும் வத்சலன் ஆனவனாலே –எமர் கீழ் மேல் ஏழு பிறப்பும்-கேசவன் தமர் ஆனார்கள் -மாசரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வாநாராயணனாலே என்கிற இடம் மா சதிரினுடைய உபபாதனம்

நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன் வேதமயன்
காரணம் கிரிசை கருமமிவை முதல்வன் எந்தை
சீரணங்கு அமரர் பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று
வாரணத்தை மருப்பொசித்த பிரான் என் மாதவனே –2-7-2-அர்த்தத்தை சொல்லுகைக்காக சப் தத்தை உபாதானம் பண்ணுகிறார் -அர்த்தம் சொல்லி –ஸூ விஷய பக்ஷபாதத்தை  அருளிச் செய்கிறார் –நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன்–நாரணன் -திரு நாமம் சொல்லி –எண் பெருக்கு அந்நலத்து ஒண் புகழ் ஈறிலா -வண் புகழ் நாரணன் -திண் கழல் சேரே -கீழே-வேத மயன்-அந்த நாரணன் சப்தத்தையே வேதங்கள் பிரதானமாக பிரதிபாதிக்கப்படும் —ப்ரஹ்மம் ஆத்மா சத் பொதுவான சொற்கள் நாராயணனையே குறிக்கும் –

—————-

மூன்றாம் பத்தால் –
நாண் மலராம் அடித் தாமரை -3-3-9-(ப்ராப்யம் சொல்ல வந்த பதிகம் -ஒழிவில் காலம் -இருந்தாலும் பூர்வ வாக்ய ப்ரமாணமாகக் இங்கு எடுத்து ஆள்கிறார்)என்றும் –
அங்கதிர் அடியன் -3-4-3-என்றும் –
அவன் பாத பங்கயம் -3-6-4-என்றும் –
அன்று தேர் கடவிய பெருமான் கனை கழல் -3-6-10-என்றும் –
மூ உலகும் தொழுது ஏத்தும் சீரடியான் -3-8-1-என்றும்
நாராயணன் உடைய சர்வ லோக சரண்யமான சரணார விந்த யுகளம் பிரதிபாதிதம் ஆய்த்து

ஓயும் மூப்புப் பிறப்பு இறப்புப் பிணி
வீயுமாறு செய்வான் திரு வேங்கடத்து
ஆயன் நாள்மலராம் அடித் தாமரை
வாயுளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே.–3-3-9-நிரதிசய போக்யமான திருவடிகளை—செவ்விப்பூவைத் தலையிலே வைத்தலைப் போன்றிருப்பது ஒன்றாதலின், ‘நாண்மலராம் அடித்தாமரை’ என்கிறார்.மநோ வாக் காயங்களால் அனுபவிக்கப் பார்ப்பார்க்கு-இது இறே துக்க நிவ்ருத்திக்கு குடிக்கிற வேப்பங்குடி நீர்-அவன் கால் காண, ‘மூப்புப் பிறப்பு இறப்பு’ என்கிற இவையெல்லாம் அழியும்’ என்றபடி.-திருமேனியில் கால் பகுதியைக் காண -நாலு பகுதியும் போகும் -மூப்பு -இறப்பு -பிறப்பு -பிணி இவை எல்லாம் போகுமே-நான்கு வர்ணர் நான்கு பகுதிகளில் இருந்து பிறந்தார்கள் என்பதால் திருவடியை கால் பகுதி என்கிறார்-இவை இரண்டும் உடலுக்கும் உபலக்ஷணமாய், ‘திருவடிகளை மனம் வாக்குக் காயங்களாலே அநுசந்திப்பார்கட்கு’ என்றபடி.-வாயுள் வைக்கையாவது, ‘ஓவாது உரைக்கு முரை’-முதல் திருவந்தாதி -95- என்கிறபடியே உரைத்தல்.-மனத்துள் வைக்கையாவது, மறவாதிருத்தல். இப்படி -கரணங்களுக்கு-உறுப்புகட்கு –அடைத்த காரியங்களைக் கொள்ளவே,-சொரூபத்திற்கு விரோதியாய் வந்தேறியானவை தாமாகவே போம்.

பங்கயக் கண்ணன் என்கோ! பவளச் செவ் வாயன் என்கோ!
அங் கதிர் அடியன் என்கோ! அஞ்சன வண்ணன் என்கோ!
செங் கதிர் முடியன் என்கோ! திரு மறு மார்பன் என்கோ!
சங்கு சக்கரத்தின் என்கோ சாதி மாணிக்கத்தையே!–3-4-3-நோக்குக்கும் முறுவலுக்கும் தோற்றார் விழும் திருவடிகள் –நிலத்தைச் சொல்லுகிறது.-

வைம்மின் நும் மனத்து என்று யான் உரைக்கின்ற மாயவன் சீர்மையை
எம்மனோர்கள் உரைப்பது என்? அது நிற்க; நாடொறும் வானவர்
தம்மை ஆளுமவனும் நான்முகனும் சடைமுடி அண்ணலும்
செம்மையால் அவன் பாத பங்கயம் சிந்தித்து ஏத்தித் திரிவரே.–3-6-4-அநந்ய பிரயோஜநரோபாதி தடை இன்றிக்கே புக்கு நிரதிசய போக்யமான திருவடிகளை நினைத்தும் அது உள்ளடங்காமே புகழ்ந்தும் அது தானே யாத்ரையாய் சஞ்சரிப்பர்கள்-நாடொறும் செம்மையால் என்னவுமாம் –வேறு பலன்களைக் கருதும் தன்மையும் நெஞ்சிலே கிடக்கச்செய்தே வேறு பலனைக் கருதாதவர்களைப் போல வந்து பற்றாநிற்பர்கள் ஆதலின், ‘செம்மையால் திரிவர்’ என்கிறது; ‘வேறொரு பயனை விரும்புகிற விருப்பமும் உள்ளே கிடக்கச்செய்தே அது இன்றித் தன்னையே பற்றினாரைப் போலே இருக்க, புகுவது புறப்படுவதாய்த் திரியும்படி அன்றோ அவன்படி இருக்கிறது?’ என்றபடி.-செம்மை – செவ்வை; அதாவது, வேறொரு பயனையும் கருதாமை.
தூயோமாய் வந்தோம் –என்று இல்லாமல் -இவர்கள் மித்ர பாவேன -பாவ தோஷமும் கிடக்கச் செய்தே -அநந்ய பிரயோஜனர் போலே புகுந்து புறப்பட்டு –

கடல் வண்ணன் கண்ணன் விண்ணவர் கருமாணிக்கம் எனது ஆர்உயிர்
பட அரவின் அணைக் கிடந்தபரஞ்சுடர் பண்டு நூற்றுவர்
அடவரும் படை மங்க ஐவர்கட்கு ஆகி வெஞ்சமத்து அன்று தேர்
கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் கண்களே?–3-6-10-
யுத்தத்திலே அன்று தேரிலே ரதியாய் அன்றிக்கே கையாளாய் சாரத்யம் பண்ணினவனுடைய நிரதிசய போக்யமான திருவடிகளை-காண்பது எஞ்ஞான்று கொலோ என்கிறபடியே பட்டினியாய்க் கிடக்கிற கண்கள் காண்பது-சேனா தூளியும் உழவு கோலும் சிறு வாய்க் கயிறுமான வடிவைக் காண்பது என்றோ –கனைக்கை-த்வநிக்கை-என்னுதல் – செறிகை-என்னுதல் –சேநா தூளியும் உழவுகோலும் சிறுவாய்க் கயிறும் தேருக்குக் கீழே நாற்றின திருவடிகளும் அத்திருவடிகளிலே சார்த்தின சிறுச் சதங்கையுமாய்ச் சாரதி வேஷத்தோடே நின்ற போதைத் திருவடிகளில் ஆபரணத்தின் ஒலி செவிப்படவும் அவ்வடிவைக் காணவும் காணும் ஆசை.-இக்கண்கள் அடிப்படுவது –திருவடிப் படுவது -எப்போதோ? இவை முடியப் பட்டினி விட்டே போந்தவை இப்பட்டினி விடக்கடவது என்றோ?‘அவ்வடிவைக் காண வேண்டும்,’ என்று விடாய்த்த கண்கள் ‘காணப் பெறுவது என்றோ?’ என்றபடி. இவர் மனஸ் சஹகாரியம் இல்லாமலே கண்கள் காண ஆசைப் படுகின்றனவே

முடியானேஎ! மூவுலகும் தொழுது ஏத்தும்சீர் அடியானேஎ! ஆழ்கடலைக் கடைந்தாய்! புள்ளூர்
கொடியானேஎ! கொண்டல்வண்ணா! அண்டத்து உம்பரில் நெடியானேஎ! என்று கிடக்கும்என் நெஞ்சமே.–3-8-1-அவனுடைய சேஷித்வத்தை அனுசந்தித்தால் தம்முடைய அனுரூபமாக திருவடிகளில் இறே விழுவது-திருமுடியின் அழகை நினைந்து தோற்றுத் திருவடிகளிலே விழுகிறார். ஒருகாலும் அடி விடாரே.-மேல் திருவாய்மொழியில் ‘தன் தாள் இணைக்கீழ்க் கொள்ளும் அப்பனை’ என்றது, வடிம்பு இடுகிறபடி.-‘எல்லார்க்கும் பொதுவான திருவடிகளை என் தலையிலே வையாய்,’ என்பது கருத்து.-குணாகுண நிரூபணம் அசேஷ லோக சரண்யமான திருவடிகளை உடையவனே-மதீய மூர்த்தானாம் அலங்கரிஷ்யதி -என்று வகுத்த திருவடிகளை என் தலையிலே வைக்கப் பெறுவது எப்போது காண் என்று கருத்து

———————

நாலாம் பத்தால் –
இலங்கை நகர் அம்பெரி உய்த்த உய்த்தவர் -4-2-8-என்றும் –
வல் வினை தீர்க்கும் கண்ணனை -4-4-11-என்றும் –
தொல் வினை தீர -4-4-11-என்றும் –
வெய்ய நோய்கள் முழுவதும் வியன் ஞாலத்து வீய -4-5-2-என்றும் –
மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் -4-5-4-என்றும் –
பிறந்தும் செத்தும் நின்று இடரும் பேதைமை தீர்ந்து ஒழிந்தேன் -4-9-7-என்றும் –
நோயே மூப்பு பிறப்பு இறப்பு பிணியே என்று இவை ஒழிய -4-9-9-என்றும் –
வேட்கை எல்லாம் விடுத்து –கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை -4-9-9-என்றும் –
அக்தே உய்யப் புகுமாறு -4-1-11-என்றும் –
உய்வுபாயம் மற்று இன்மை தேறி -4-3-11-என்றும் –
அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட ப்ராப்திக்கும் ஹேதுவான ப்ராபகத்வம் பிரதிபாதிதம் ஆய்த்து

கொம்பு போல் சீதை பொருட்டு, இலங்கை நகர்
அம்பு எரி உய்த்தவர்
தாள் இணை மேல் அணி
வம்பு அவிழ் தண் அம் துழாய் மலர்க்கே இவள்
நம்புமால்; நான் இதற்கு என்செய்கேன் நங்கைமீர்?–4-2-8-சந்த்ர ஆதித்யர்களும் புகப் பயப்படுமூர்-சர அக்னியை புக பிறப்பித்தவர் -கேவல அக்னி சோற்றை வேவிக்குமது ஒழிய பிரவேசிக்க கூசுமூர்-கையாலே சர அக்னியை பிரவேசிப்பித்தான்–அம்பாகிய நெருப்பைப் புகச் செய்தவர்.-சக்கரவர்த்தி திருமகன் இதனைக் கை தொட்டு சிக்ஷித்துக் குணவான் ஆக்கிப் பின்பே அன்றோ போகவிட்டது?-பலவான் ஆக்கி என்றபடி -நாணுக்கும் குணவான் -நாணை ஏற்றி அனுப்பினார் என்றபடி –ஆகையாலே, கேவலாக்நி புகுதற்குக் கூசும் ஊரிலே தன் வாய் வலியாலே புக்கதாயிற்று.-சரத்தின் பலம் -வாய் வலி –யதா ராகவா நிர்முக்த சர -என்று திருவடி புகிலும் சரஸ்த நீயானாக இறே புகுந்தது-இப்படி, தான், முதுகிட்டாரையுங்கூட, குணவான்கள் ஆக்கும்படி ஏக்கற்றவருடைய திருவடிகளில் சார்த்தப்பட்ட.-ஏ- வரும் வெஞ்சிலை -ஏ – க்கற்றவர் -சக்தி கொடுத்து போக்க வைத்தவர்
ஏ -அம்பு -கை தொடுகை -பிடிக்கையும் அடிக்கையும்-சிஷை -அர்ஜவம் நியமிக்கி -நாணில் ஏத்தி-முதுகிடவை முதுகிலே அம்புறா தூணி வைப்பதும் -சொன்ன வார்த்தை கேட்கால் முது காட்டி ஓடினார் –

வல்வினை தீர்க்கும் கண்ணனை வண் குருகூர்ச் சடகோபன்
சொல் வினையாற் சொன்ன பாடல் ஆயிரத்துள் இவை பத்தும்
நல்வினை என்று கற்பார்கள் நலனிடை வைகுந்தம் நண்ணித்
தொல் வினை தீர எல்லாரும் தொழுது எழ வீற்றிருப்பாரே.–4-4-11–அடியார்களுடைய பிரிவிற்குக் காரணமான மஹா பாவத்தைப் போக்கும் தன்மையனான கிருஷ்ணனை. பெற்றவர்கள் கை விட்டால் கைப்பிடித்தார் விடாரே–என் செய்கேன் என்று கை விட்டதும் -இவன் கைக் கொண்டான் -கை பிடித்தவர் -இதம் சீதா -பிரியம் உடன் -பிடித்தவர்-ஆஸ்ரிதர் உடைய விஸ்லேஷ ஹேதுவான மஹா பாபத்தை போக்கும் ஸ்வ பாவனான கிருஷ்ணனை—தொல் வினை தீர -அநாதி யான அவித்யாதிகள் நீங்கி-இவர் பாடின திருவாய்மொழியைக் கற்றவர்களைத் தொழுது நித்திய ஸூரிகள் உய்வு பெறும்படி.-வீற்றிருப்பாரே –-அவன் இறைவனாம் தன்மைக்கு முடி சூடி இருக்கப் பெறுவர்கள்.-‘அந்த முத்தன் சுதந்தரன் ஆகிறான்,’ என்னக் கடவதன்றோ? என்றது,-‘கர்மம் அற்றவன் ஆகின்றான்’ என்றபடி. வீற்று -வேறுபாடு. ஸ்வராட் பவதி -ஸ்ருதி-சாம்யாபத்தி அடைந்து -கைங்கர்ய சாம்ராஜ்யத்துக்கு முடி சூடி என்றபடி –

மைய கண்ணாள் மலர்மேல் உறை வாள் உறை மார்பினன்
செய்ய கோலத்தடங் கண்ணன் விண்ணோர் பெருமான் தனை
மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேன்
வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே.–4-5-2-குரூரமான சாம்சாரிக சகல துக்கங்களும் பூமியிலே இருக்கப் போம் படி ‘ வியன் ஞாலத்திலே இருக்கையால் உண்டான வெய்ய நோய்கள் என்னுதல்-லோகத்தில் துரிதங்கள் எல்லாம் நசிக்கும் படி என்னுதல்
பாவனா பிரகர்ஷத்தாலே-தாம் பரம பதத்தில் இருக்கிறாராய் பூமியில் உள்ள துக்கங்கள் எல்லாம் போம்படி என்னுதல்-க்கஸ்தா பஸ்யந்தி பூகதான்-என்று சீயர் அருளிச் செய்தார் –‘அவசியம் அனுபவித்தே தீரவேண்டும்’ என்கிறபடியே, அனுபவித்தால் அல்லது நசிக்கக் கடவன அல்லாத கர்மங்கள் முழுதும் நசிக்க. இவ்வுலகத்திலே இருக்கச் செய்தே, இவை முழுதும் அழிந்தன என்று சொல்லலாம்படி யாயிற்று, பகவானுடைய அனுபவத்தாலே பிறந்த தெளிவு; ஆதலால், ‘வியன் ஞாலத்து வீய’ என்கிறது.-‘பனை நிழல் போலே தம்மை ஒருவரையும் நோக்கிக் கொள்ளுகை யன்றிக்கே, ஊரும் நாடும் உலகமும்
தம்மைப் போலே யாம்படி தாம் இருந்த உலகத்தில் உண்டான கர்மங்களும் முழுதும் அழிந்தன,’ என்னுதல்.
அங்ஙனம் அன்றிக்கே,‘வியன் ஞாலம்’ என்று வேறு ஒரு தேசம் போலே இருக்கச் சொல்லுகையாலே,தாம் ‘வீற்றிருந்து ஏழுலகு’ என்னும் இத் திருவாய்மொழியை அருளிச் செய்கிறது-பரமபதத்திலே இருந்து போலே காணும்,’ என்று அருளிச் செய்வர்.
பாவனையின் மிகுதியாலே திருவுள்ளம் பரமபதத்திலேயாய் அங்குற்றாராய்த் தோன்றுகிறபடி.-வியன் ஞாலம் – ‘ஆச்சரியப்படத் தக்க உலகம்’ என்னுதல்; ‘பரப்பையுடைத்தான உலகம்’ என்னுதல்.

மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான்
தூவி அம் புள்ளுடையான் அடல் ஆழி அம்மான் தன்னை
நாவியலால் இசை மாலைகள் ஏத்தி நண்ணப் பெற்றேன்;
ஆவி என் ஆவியை யான் அறியேன் செய்த ஆற்றையே.–4-5-4-அகல நின்று ப்ரயோஜனங்களைக் கொண்டு போகாதே அநந்ய பிரயோஜனராய் ஆஸ்ரயித்து இருப்பார் -கிட்டக்கொண்டு –தேஹி மே ததாமி தே -‘நான் உனக்குத் தருகிறேன்; நீ எனக்கு ஒன்று கொடு,’ என்று வேறு பிரயோஜனங்களுக்கு மடியேற்றுக்கொண்டு போகை அன்றிக்கே
,எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயானை வழுவா வகைநினைந்து வைகல் தொழுவார்’-முதல் திருவந்-26-என்கிறபடியே,-அவன் றன்னையே பிரயோஜனமாகக் கொண்டு தொழுமவர்கள். என்றது,-இன்று வந்தித்தனையும் அமுது செய்திடப்பெறில் நான் ஒன்று நூறாயிரமாக் கொடுத்துப் பின்னும் ஆளும் செய்வன்’- நாய்ச்சியார் திருமொழி, 9 : 7.என்கிறபடியே தொழுமவர்கள் என்றபடி.-கொடுத்துக் கொள்கை அன்றிக்கே கொண்டதுக்குக் கைக் கூலி கொடுக்க வேண்டும் –-பகவத் அலாபம் ஆகிற துக்கம் போம்படி-அநந்ய பிரயோஜனரை குறித்து அநந்ய பிரயோஜனனாயக் கலக்கும் உபகாரகன் -அவர்களுக்குப் பின்னை வினை உண்டோ?’ என்னில், வேறு பிரயோஜனங்களிலே
நெஞ்சு செல்லுகைக்கு அடியான பாவங்கள் போகும்படியாக.
‘ஆஸ்ரயண விரோதி கழிந்ததேயாகிலும், பாப ஹேதுவான சரீரம் இருக்கையாலே வேறு பிரயோஜனங்களிலே மனம் செல்லுகைக்கு அடியான பாபம் உண்டாகைக்குக் காரணம் உண்டே யன்றோ? அத்தகைய பாபங்கள் போம்படி’ என்பது கருத்து.

ஆயே இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும்
நீயே மற்று ஒருபொருளும் இன்றிநீ நின்றமையால்
நோயே மூப்பு இறப்பிறப்புப் பிணியே என்றிவை ஒழியக்
கூயே கொள் அடியேனைக் கொடு உலகம் காட்டேலே.–4-9-7-இறப்பு பிறப்பு பிணி வியாதி இவற்றாலேநோவுபடுகிற சம்சாரிகள் நடுவில் நின்றும்–சரீரத்துக்கு வந்தவற்றுக்குச் சரீரியான ஆத்துமா இன்புறுதல் துன்புறுதல் செய்யுமதனைப் போன்று, எனக்கு வந்தவற்றுக்கு இன்புறல் துன்புறல் செய்வாய் நீ ஆம் படி சம்பந்தம் உண்டாய் இருந்த பின்பு, பிறவி காரணமாக வருகின்ற இந்தத் துன்பங்களைக் கழித்து-அழைத்துக் கொள் -ஆதி -மநோ வியாதி என்றவாறு -வியாதி தேக வியாதி–கொடிதான லோகம் -சப் தாதி விஷய ப்ரவணமாய் த்வத் விமுகமான லோகம் -த்ருஷ்ட்டி விஷம் போலே காணவே முடிவன் என்கிறார்-இவன் தானே வருகிறான்,’ என்று இராமல், நீயே அழைத்துக் கொண்டருள வேண்டும்.

கூட்டுதி நின் குரை கழல்கள்; இமையோரும் தொழா வகைசெய்து,
ஆட்டுதி நீ; அரவணையாய்! அடியேனும் அஃது அறிவன்;
வேட்கை எலாம் விடுத்து எனை உன் திருவடியே சுமந்து உழலக்
கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே.–4-9-9-
உன்னை ஒழிந்த சகல பதார்த்தங்களிலும் உண்டான சங்கத்தை விடுவித்து -நான் எனக்கு என்று இராத படி பண்ணி—எனக்கு உன்னை ஒழிந்தவை ஆமத்தனை அன்றோ ஆசைப் படுகைக்கு?
உன் உலகத்தில் நான் ‘எனக்கு, எனக்கு’ என்னாதது உண்டோ?-யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்திலையோ?ருசியுடைய என்னை உன் திருவடிகளிலே கைங்கர்யம் பண்ணி வர்த்திக்கும் படி –புறம்பான விஷயங்களிலே உண்டான ஆசை எல்லாம் உன் பக்கலிலே யாய், உன் திருவடி களையே நான் ஆதரித்து, அதுவே வாழ்க்கையாய்ச் செல்லும்படிக்காக.-அந்நிய சாத்தியமான திருவடிகளிலே கூட்டினாய் —யாவர் சிலர்க்கும் தந்தாமால் சேர்த்துக் கொள்ள அரிய திருவடிகளை நான் சேரும்படி என்னைச் சேர்த்துக் கொண்டாய்.கேட்டார் வாய் கேட்க்கை யன்றிக்கே நான் அனுபவிக்கப் பெற்றேன் ஆகையால் அறிந்தேன்-

அஃதே உய்யப் புகும் ஆறு என்று கண்ணன் கழல்கள் மேல்
கொய் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்
செய்கோலத்து ஆயிரம் சீர்த்தொடைப் பாடல் இவை பத்தும்
அஃகாமல் கற்பவர் ஆழ் துயர் போய் உய்யற் பாலரே.–4-1-11-நான் சொன்னதுவே ஆத்மாவுக்கு உஜ்ஜீவன உபாயம் என்று—திருநாரணன்தாள்’ என்று நான் சொன்ன அதுவே உய்வதற்கு உரிய வழியும் பலமும் என்று. உபாயாந்தரம் வேறே இல்லை -பிரயோஜ நாந்தரம் இல்லை –அதுவே உய்வு -அதுவே ஆறு -அதுவே உய்யப் புகும் ஆறு –-அது ஏது என்னில்-ஸூ லபனான கிருஷ்ணனை யாயிற்று கவி பாடிற்று –கண்ணனைத் தாள் பற்றி’ என்று தாமும் சொல்லி, கண்ணன் கழல்கள் நினைமினோ’ என்று பிறர்க்கும் உபதேசித்து நின்றாரே?-அது தன்னையே அருளிச்செய்கிறார். ‘இப்படி அடியுடையார் புறம்பு இல்லை’ என்றே அன்றோ இவ்வடிகளைத் தாம் பற்றியது?-‘துயர் அறு சுடர்அடி தொழுது எழு’ என்று தம் திருவுள்ளத்திற்கு அருளிச்செய்தார்;‘வண் புகழ் நாரணன் திண்கழல் சேரே’ என்று பரோபதேசம் செய்தார் அங்கு.-இங்கு, ‘கண்ணனைத் தாள் பற்றி யான் என்றும் கேடு இலனே,’ என்றார்;‘கண்ணன் கழல்கள் நினைமினோ,’ என்று பரோபதேசம் செய்தார்.
இது என்ன அடிப்பாடுதான்! ‘கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண்,’ என்றே அன்றோ பரோபதேசம் முடிக்கிறதும்?-திருவடியில் என்ன ப்ராவண்யம் –-

உய்வு பாயம் மற்றின்மை தேறிக் கண்ணன் ஒண்கழல்கள் மேல்
செய்ய தாம ரைப்பழனத் தென்னன் குருகூர்ச் சடகோபன்,
பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்,
வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே.-–4-3-11-அவன் பிரணயித்வ குணத்தை பேசா விடில் உஜ்ஜீவன உபாயம் இல்லை என்று தெளிந்து ––இவர் சர்வேசுவரனுடைய காதல் குணத்தைப் பேசத் தொடங்கியது, பேசித் தலைக்கட்ட வல்லவராய் அன்று; இஃது ஒழியத் தரிக்கைக்கு உபாயம் இல்லை என்று தெளிந்து.-தான் பரம காதலன் என்பதனை அவதரித்துப் பிரகாசிப்பித்த கண்ணபிரானுடைய திருவடிகளிலே.-அவதரித்து தன் பிரணயித்வ குணத்தை ஆவிஷ் கரித்த கிருஷ்ணன் திருவடிகளில்-

—————–

ஐஞ்சாம் பத்தால் –
தமியேனுக்கு அருளாய் -5-7-2-என்றும்
ஆறு எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய் -5-7-10-என்றும் –
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் –5-8-3-என்றும் –
அவளை உயிர் உண்டான் கழல்கள் அவையே சரணாக கொண்ட 5-8-11–என்றும் –
நாமங்கள் ஆயிரம் உடைய நம்பெருமான் அடி மேல் சேமம் கொள் தென் குருகூர் சடகோபன் –5-9-11-என்றும் –
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு -5-10-11-என்றும் –
நாள் தோரும் ஏக சிந்தையனாய் -5-10-11-என்றும் –
பிரார்த்தனா கர்ப்ப விஸ்ரம்பம் பிரதிபாதிதம் ஆய்த்து(பிரார்த்தனையை உள்ளடிக்கிய மஹா விஸ்வாஸம்ப்ரபத்யே கத்யர்த்தம் புத்த்யர்த்தம்)

அங்குற்றேனலேன் இங்குற்றேனலேன் உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து நான்
எங்குற்றேனுமலேன் இலங்கை செற்ற அம்மானே!
திங்கள் சேர் மணி மாட நீடு சிரீவர மங்கல நகருறை
சங்கு சக்கரத்தாய்! தமியேனுக்கு அருளாயே.–5-7-2-என் பக்கல் ஸத்தாத்திரேகி இருப்பது ஒன்றும் இல்லை-ஆற்றாமையோடே ஒரு துணை இன்றிக்கே இருக்கிற எனக்கு—தமியேனுக்கு –1- இத்தலையும் குறைவற்றது என்கிறார். ருசி உள்ளதே –அங்கே பிரியாதிருக்கிறார் படி அல்லேன், -அங்கே சதா பஸ்யந்தி அன்றோ-இங்கே பிரியாதிருக்கிறார் படி அல்லேன். -இங்குள்ளார்க்கு இவ்விஷயத்தை அறியாமையாலே பிரிவு இல்லையே.-தமியேனுக்கு–2-உன்னை ஒழியத் துணை இல்லாத எனக்கு. ஸ்வரூபத்தைச்‘சாதனம்’ என்று செலவு எழுதிக் கழிக்கில் கழிக்குமித்தனை. -சாதநாந்தர ஸூன்யன்-அவாவில் வீழ்ந்து -பக்தி -சிநேக பூர்வம் உபாயம் ஆகாதோ -என்னில் இது ஸ்வரூபம் தானே –சாதனம் என்று இத்தை எழுத ஒண்ணாதே-நீ உபாயம் ஆனாலும் உபாயத்தைப் பிரதிபத்தி பண்ணுவார் வேண்டாவோ.–பிரபன்ன ஜன கூடஸ்தர் என்னை அன்றோ சொல்கிறார்கள் –தமியேன்-3-பிராட்டியில் வேறுபாடு அங்காகில் ஒரு திரிசடையாகிலும் உண்டே அன்றோ,-இங்கு “ஆவார் ஆர் துணை” என்னும்படி அன்றோ தனிமை செய்ய வேண்டுவது என் என்ன-ருசிக்குப் பண்ணின க்ருஷியை விரோதி நிவ்ருத்திக்கும் ப்ராப்திக்கும் பண்ணும் இத்தனை என்கிறார் –என் வெறுமையும் உன் நிறைவும் அறிகைக்கு, நீ அடியில் தந்த அருள் இன்று குடி போயிற்றோ, அன்று நான் விரும்பாதிருக்க அருளின நீ, விரும்புவதற்குத் தகுதியைப் பிறப்பித்துப் பொகடவோ.
ருசியை உண்டாக்குவார் ஒருவரும், உபாயத்தை அநுஷ்டிக்கிறவர் ஒருவருமாயோ இருப்பது.-நின்னருளே புரிந்திருக்கிற எனக்கு அருளாயாகில் பின்னை யார்க்கு வேறு அருள இருக்கிறாய்.

ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக் கோர் கைம்
மாறு நான் ஒன்றிலேன் என தாவியும் உனதே
சேறு கொள் கரும்பும் பெருஞ் செந்நெலும் மலி தண் சிரீவர மங்கை
நாறு பூந்தண் துழாய் முடியாய்! தெய்வ நாயகனே!–5-7-10-ஆறு -என்று உபாயம் -சரண் என்று உபேயம் -உபாய உபேயங்கள் இரண்டும் உன் திருவடிகளேயாம் படி பண்ணினாய் என்று பிள்ளான் நிர்வஹிக்கும்–இவை இரண்டிலும் உபாயத்தையே சொல்லுகிறது என்று பட்டர் நிர்வஹிப்பர்-எனக்கு உபாயம் உன் திருவடிகளேயாம்படி பண்ணித் தந்தாய் –ஆறு -உபாயம் -உபாக்யார்த்தைக வாசக -என்கையாலே சரண் என்று உபாயம் -எனக்கு என்று -உபாயாந்தர நிஷ்டரைக் காட்டிலும் தமக்கு உள்ள வேறுபாடு சொல்லுகிறார் –நோற்ற நோன்பிலேன் என்று தொடங்கி-உபாயாந்தர ஸூன்யத்தையை முன்னிட்டு உபாய நிஷ்கர்ஷம் பண்ணுகிற திரு வாய் மொழி யாகையாலே அத்தையே நிகமிக்கிறது -அவதாரணத்தாலே ஏக பதத்தை நினைக்கிறது -ஈஸ்வரனை பற்றின ஊற்றத்தாலே உபாயாந்தரங்களை நெகிழ்கை ஒழிய -நாஸ்திக்யத்தாலே விடுமன்று அது விஷயாந்தர ப்ராவண்ய ஹேதுவாம் -ஒளஷத சேவை பண்ணினான் ஒருவன் சர்ப்பத்தின் வாயிலே கை கொடுத்தால் நிர்ப்பாதம் -ஒளஷத ஸ்பர்சம் இல்லாதவன் அத்தைச் செய்தால் மரண ஹேதுவாம் –

என்னான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அருவாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3-நானும் எனக்கு கடவனாய் -பிறரும் சக்தர் ஆனவன்றும் -உன்னால் வரும் நீ ஒழிய -என்னால் வரும் நீயும் வேண்டா -பிறரால் வரும் நீயும் வேண்டா என்கை –த்வம் ஏவ உபாயம் போதோ மே பாவ –“மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு மாமேவ ஏஷ்யஸி யுக்த்வா ஏவம் ஆத்மாநம் மத்பராயண:”– ஸ்ரீகீதை. 9. 34.“என்னை நமஸ்காரம் செய்வாய், என்னை அடைவாய்” என்றால் எனக்குச் சோகம் போகாது கண்டாய்.-ஓதி நாம் குளித்து -நமக்கே நலம் ஆதலால் -திருப் புல்லாணி-நமக்கு நலம் தேடும் –-உபாயாந்தரம் வேண்டாம் -என் நலம் நீ தேடுவதே உக்தம் –உபாயம் தன்னைப் பொறுக்கும் -உபாயாந்தரம் இரண்டையும் பொறுக்கும் -பிரபத்தி எதையும் பொறாதே –யாவையாலும்’ என்னாமல், ‘யாவராலும்’ என்கிறது உபாய பாவம் ஒரு சேதனனாலே என்றிருக்கையாலே.-அன்றிக்கே, பெறுவது உன்னையே யாகிலும் உன்னாலே பெறுமன்று வேண்டுவன்,-என்னாலும் பிறராலும் பெறும் உன்னையும் வேண்டேன்.-மற்றையவற்றிற்கும் அபிமத சித்தி உண்டேயாகிலும் காலன் கொண்டு மோதிரம் இடுமாறு போலே ஸ்வரூப விரோதியானது எனக்கு வேண்டாம்.
கடல் கடத்தப் பெற இருத்தல், சபித்துப் பெற இருத்தல் செய்யாத பிராட்டியைப் போலே. என்றது, இரண்டு தலைகளையும் அழிக்கையே அன்றோ. ஒருவராலும் ஒருகுறை நிரம்புவதாக வேண்டி இரேன்.-அன்றிக்கே, ‘உன்னால் அல்லால்’ என்கிற இதனை, உபேய விஷயமாக்கி, ‘உன்னை ஒழியமற்றென்றால் எனக்கு ஒருகுறை இல்லை’ என்று சொல்லுவாருமுளர்.-இப்பொருள் அத்துணைச் சிறப்புடைத்தன்று என்பது போதரும்.

உழலை என்பில் பேய்ச்சி முலை யூடு அவளை உயிர் உண்டான்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்

குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே.–5-8-11-ஊழலை கோத்தால் போலே இருக்கிற எலும்புகளையுடைய பேய்ச்சி முலையிலே உகப்பாலே அவளை ப்ராணாபஹாரம் பண்ணின விரோதி நிரசன ஸ்வ பாவனான ஸ்ரீ கிருஷ்ணனுடையவையாய்-தமக்கு உபாயமாக முன்பு பிரகாசிப்பித்த திருவடிகளையே-அபிமத சித்திக்கு உபாயமாக புத்தி பண்ணிக் கொண்ட திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வாரானவர்-விருப்பமில்லாதவைகள் நீங்குவதற்கும் விருப்பமுள்ளவைகளை அடைவதற்கும் உபாயம் என்று அறுதியிட்ட ஆழ்வார்.-விரோதிகளைப் போக்குவதும் அவனைத் தருவதும் திருவடிகளேயாம் என்பார் ‘அவையே’ என ஏகாரம் கொடுத்து ஓதுகிறார் பலியாவிட்டாலும் தம்மடி விடாதவரே அன்றோ இவர்; ஆதலின், ‘கொண்ட’ என்கிறார்

நாமங் களாயிர முடைய நம் பெருமானடி மேல்
சேமங் கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த

நாமங்களாயிரத்துள் இவை பத்தும் திருவல்லவாழ்
சேமங்கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே.–5-9-11—ஸ்வயம் பிரகாசகனான சர்வேச்வரன் ஆயிரம் திருப் பெயர்களை யுடையவனாயிருக்கிறான்” என்கிறபடியே, குணங்களுக்கும் செயல்களுக்கும் வாசகமான திருப் பெயர்களை யுடையவனாகையாலே சர்வேச்வரனாகப் பிரசித்தனானவன்.தேவோ நாம சஹஸ்ரவான் ஸஹஸ்ர பாஹு: ஸர்வஜ்ஞோ தேவோ நாம ஸஹஸ்ரவாந்”-பாரதம். என்கிறபடியே குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான திரு நாமங்களை யுடையவன் ஆகையாலே சர்வேஸ்வரனாக பிரசித்தனானவன்—-‘நம்’ என்பது, பிரசித்தியைக் காட்டும். பெருமான்-சர்வேஸ்வரன்.-அவனைப் பெறாதே நோவு பட நோவு பட–புறம்புள்ள காற் கட்டுக்களை விட்டு, அவன் திருவடிகளே ரக்ஷகமாகப் பற்றும் ஆழ்வார் பிராட்டி ஆற்றாமை மிக்க இடத்திலும் ராவணனை சபிய்யாதே பெருமாள் வரவை பார்த்து இருந்தால் போலே அவனுக்கு திரு நாமங்கள் போலே குண சேஷ்டிதங்களுக்கு ப்ரதிபாதகமான ஆயிரத்திலும்-ஆராய்ந்து உரைத்த இப்பத்தையும்

நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும்
ஏக சிந்தையனாய்
க் குருகூர்ச் சடகோபன் மாறன்
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையுமொர் பத்தும் வல்லார்
மாக வைகுந்தத்து மகிழ் வெய்துவர் வைகலுமே.–5-10-11-அனந்த சாயித்தவம் சர்வாதிக வஸ்துவுக்கு லக்ஷணம் ஆகையாலே -சர்வாதிகனே சரண்யன் என்கிறது -திரு வனந்த ஆழ்வானுடைய புருஷகார பாவம் சொல்லுகிறது என்றுமாம் –படுக்கையைச் சொல்ல படுக்கை யுடையாரைச் சொல்லிற்றாம் இறே-ஆஸ்ரித விஷயத்தில் உபகார சீலனானவன் –நமக்கு திருவடிகளே உபாயம் என்று –அவதாரணத்தாலே உபாய நைரபேஷ்யம் சொல்லுகிறது -சம்சாரிக ஸ்வ பாவங்கள் மேலிட்டு விபரீதமே பலியா நின்றாலும் இது தவிர வேறு ஒன்றில் கால் தாழாது ஒழி கை -மஹா விச்வாஸம் ஆகிறது –நாள் தோறும் இதுவே மநோ ரதமான ஆழ்வார் -பகவத் குண பிரேரிதராய் தாம் உள்ராகைக்காக-ஈஸ்வர நைரபேஷ்யம் -பல பிரபத்தி என்றும் சொல்வார்கள் –-உபாய எதிர்பார்க்க மாட்டார் -அதிகாரி ஸ்வரூபம் வேண்டுமே – ஆகிஞ்சன்யம் அனந்யகதி மகா விஸ்வாசாதிகள் எல்லாம் இதுவே –சம்சார சம்பந்தப்பட்ட ஸ்வபாவங்கள் மேலிட்டு விபரீதமே பலியா நின்றாலும்
அப்படி அடிக்கழிவு செய்வார் ஒருவரல்லரே இவர். மஹா விஸ்வாசமாகிறது, இஃது ஒழிய வேறொன்றில் கால் தாழாதொழிகை ஆம்.-புறம்பு உண்டான சிந்தனை போய், இவ் விஷயத்திலே ஒரே தன்மையான எண்ணத்தை யுடையராய், பொருள் ஈட்டுதற்குச் செல்வார் ஒருவர் ஒரு சிராயை -மரக்கலம் -நம்பி நாலாண்டு பதிற்றாண்டு இழியா நின்றார்களன்றோ,
பேற்றின் சீர்மையைப் பார்த்தால் அவ்வளவாகிலும் வேண்டாவோ இவ் விஷயத்தில்.
சம்சாரத்தின் இயல்பால் வியசனங்கள் தொடர்ந்து வந்தாலும் உறுதி குலையாமே போருமதன்றோ ஸ்வரூபமாவது.-மித்ர பாவேனே –ஸூசகம் –தொழுது எழு மிகை என்பான் என் என்னில் -மகா விஸ்வாசம் இதில் வைப்பது சுலபம் தானே –

————–

ஆறாம் பத்தால் –
திரு மா மகள் இருந்தாம் மலிந்து இருந்து -6-5-8-என்றும் –
அடிமை செய்தார் திருமாலுக்கே -6-5-11-என்றும் –
ஒசிந்த ஒண் மலராள் கொழுநன் -6-7-8-என்றும்
என் திரு மார்வற்கு (மூவரையும் சொன்னபடி)-6-8-10-என்றும் –
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே(உயிர்கள் காப்பார் கைங்கர்யம் இல்லாமல் ஆத்மநாசமாகுமே -ஆகவே ரக்ஷணத்தைச் சொன்னபடி) -6-9-3-என்றும்
கைங்கர்ய பிரார்த்தனா கர்ப்பமான நித்ய சம்பந்தம் பிரதிபாதிதம் ஆய்த்து –

(கீழ் பூர்வ வாக்யத்திலும் நித்ய யோகம் -எப்பொழுதும் புருஷகாரமாவதற்காக -இங்கு ஒன்றைப் பத்தாக்கி கைங்கர்ய வர்த்தகையாய் இருப்பதற்கு -கைங்கர்ய பிரதிசம்பந்தி சேஷி மிதுனத்துக்கே தான்)

திருந்து வேதமும் வேள்வியும் திரு மா மகளிரும் தாம்மலிந்து
இருந்து வாழ்பொருநல் வடகரை வண்தொலை வில்லி மங்கலம்
கருந்தடங் கண்ணி கைதொழுத அந்நாள் தொடங்கி இந்நாள்தொறும்
இருந்திருந்து அரவிந்தலோசந! என்றென்றே நைந்திரங்குமே.–6-5-8-ஆராத்யரான பெரிய பிராட்டியாரும் தானும் சம்ருத்தமாய் இருந்து வாழுகிற வூர் -வேதமும் வைதிக சமாராதானமும் அதன் பலமான சம்பத்துமானவை மிக்கு இருந்து வர்த்திக்கிற வூர் -என்றுமாம் –தாம் என்றது கீழ் சொன்னவை தாம் என்கை -ஆராதிக்கின்றவர்களுடைய நிறைவு இருக்கிறபடி.-திருமாமகள் – செல்வம்.

சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே
தந்தை தாய் என்றடைந்த வண்குரு கூரவர் சடகோபன்
முந்தை ஆயிரத்துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச்சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமாலுக்கே.–6-5-11-இப்பத்தை அப்யஸிக்க வல்லார் ஸ்ரீ யபதிக்கு அடிமை செய்வார்-பெருமாளும் பிராட்டியும் சேர இருக்க இளைய பெருமாள் அடிமை செய்தாற்போலே, சேர்த்தியிலே அடிமை செய்யப் பெறுவர்

ஒசிந்த நுண்ணிடைமேல் கையை வைத்து நொந்துநொந்து
கசிந்த நெஞ்சினளாய்க் கண்ணநீர் துளும்பச் செல்லுங்கொல்?
ஒசிந்த ஒண் மலராள் கொழுநன் திருக்கோளூர்க்கே
கசிந்த நெஞ்சினளாய் எம்மை நீத்தஎம் காரிகையே.–6-7-8–வண்டாலே ஆத்தசாரமான புஷபம் போலே நித்ய சம்ச்லேஷத்தாலே துவண்டு இருக்கிற பிராட்டிக்கு நாயகன் -இவருடைய சேர்த்தி யாயிற்று இவளைக் கொண்டு போயிற்று -அவனுடைய பிரணயித்தவம் இறே இவளை இருக்க ஒட்டாது ஒழிந்தது-ஒசிந்த நுண்ணிடை-இவள் நடவாதே இருந்தாலும், நினைத்தால் வயிறு எரிய வேண்டும்படி காண் இடை இருப்பது!-நடு ஒன்று இல்லை என்று அறிகின்றிலள். தன் கையை வைக்கவும் பொறாதே அன்றோ தன் இடை தான்;“மின்னையும் வஞ்சியையும் வென்று இலங்கும் இடையாள்” – பெரிய திருமொழி, 3. 7 : 7.-என்று,அவன் கூடப் போகச் செய்தேயும் அஞ்ச வேண்டும் படியான இடை அன்றோ.-ஒசிதல் – துவளுதல். நுண்ணியதாய் தேரிதான இடை.-பல சொல்லி என்? இடை ஒன்று இல்லை என்கை. அதாவது, இற்றது முறிந்தது இப்போது, பின்னை’ என்று பயப்பட வேண்டும்படியாய் இருக்கை.-அவனுடைய காதல் குணத்திலே அகப்பட்டவள் இனி மீளப் புகுகிறாளோ? என்னுதல்.-ஒண் மலராள் கொழுநன் என்று அவனுக்கு ஏற்றம் இருக்கிறபடி என்னுதல்.-திருமகளார் தனிக் கேள்வன்-திருவாய். 1. 6 : 9.- என்னும் பெருமை யுடைய பிரானாரே அன்றோ.

வந்திருந்து உம்முடைய மணிச்சேவலும் நீருமெல்லாம்
அந்தரம் ஒன்றுமின்றி அலர்மேல் அசையும் அன்னங்காள்!
என்திரு மார்வற்கு என்னை இன்னவாறிவள் காண்மின்என்று
மந்திரத் தொன்றுணர்த்தி உரையீர்மறு மாற்றங்களே.–6-8-10-என் ஸ்வாமிநி யான பெரிய பிராட்டியாரை திரு மார்விலே உடையவர்க்கு-எனக்கு அங்கு ஓர் அடி இல்லாமை மிறுக்குப் படுகிறேனோ?“பிராட்டி சந்நிதியில் ஸ்ரீராமபிரானைப் பார்த்து இந்த வார்த்தையைச் சொன்னார்”“ஸீதா ஸமக்ஷம் காகுத்ஸ்தம் இதம் வசனம் அப்ரவீத்”என்பது, ஸ்ரீராமா. ஆரண். 15 : 6.-என்கிறபடியே, சொன்ன வார்த்தை விலை போமவள் முன்னால் சொல்லுங்கோள்;
நான் பற்றின அடைவே பற்றுங்கோள் என்கிறாள்.

ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்
சாலப் பலநாள் உகந்தோறு உயிர்கள் காப்பானே!
கோலத் திருமா மகளோடு உன்னைக் கூடாதே
சாலப் பலநாள் அடியேன் இன்னும் தளர்வேனோ?–6-9-3-பிராட்டியோடே கூட இருக்கிற யுன்னைக் கிட்டி அடிமை செய்யப் பெறாதே -மாதா பிதாக்களை சேர க் காணுமா போலே ஒரு மிதுனம் இ றே ப்ராப்யம் -மாதா பிதாக்களை அகன்று ஸ்தநனயப் பிரஜை ஜீவிக்க வற்றோ -தாயும் தமப்பனும் கூட இருக்கக் கிட்டப் பெறாதே, பால் குடிக்கும் குழந்தை நாக்கு ஒட்டிக் கிடந்து துடிக்குமாறு போலே இருக்கிறது காணும்.“வேறாகாதவள்” என்கிறபடியே, அவனும் அவளுமான சேர்த்தி யன்றோ இவர்க்குப் பேறு.-இருவரும் சேர்ந்த சேர்த்தி பேற்றுக்கு உறுப்பாய் அன்றோ இருப்பது –ஸஹ தர்ம ஸரீதவ -என்ன கடவது இறே

————————–

ஏழாம் பத்தால் -(இனிமைக்கு ஏழாம் பத்து ஸ்வாமித்வத்துக்கு எட்டாம் பத்து -இரண்டுமே உத்தரவாக்கிய நாராயண பதார்த்தம்-பூர்வ வாக்கியத்தில் ஆஸ்ரய ஸுகர்ய கல்யாண குண விஸிஷ்ட நாராயணன் -இங்கு ஆஸ்ரிய கார்ய ஆபாதக கல்யாண குண விஸிஷ்ட நாராயணன்)
கன்னலே அமுதே -7-1-2-என்றும் –
திருமாலின் சீர் இறப்பு எதிர்காலம் பருகிலும் ஆர்வனோ -7-9-9-என்றும்
ஏழுலகை இன்பம் பயக்க -7-10-1- என்றும்
கைங்கர்ய பிரதி சம்பந்தியான ஈஸ்வரனுடைய நிரதிசய போக்யதை பிரதிபாதிதம் ஆய்த்து

என்னை ஆளும் வன்கோ ஓரைந்திவை பெய்து இராப்பகல் மோது வித்திட்
டுன்னை நான் அணு காவகை செய்து போதி கண்டாய்
கன்னலே! அமுதே! கார்முகில் வண்ணனே!கடல்ஞாலம் காக்கின்ற
மின்னு நேமியினாய்!வினையேனுடை வேதியனே!–7-1-2-அகலப் போனால் ஆற்ற ஒண்ணாத படி போக்யத்தை இருக்கிற படி –ஒரு வகையால் வந்த இனிமையாகில் நான் ஆறி இரேனோ? ‘ர்வ கந்த: ஸர்வ ரச’ என்கிறபடியே, எல்லா விதமான இனிய பொருள்களுமாய், அளவு இறந்து, கொள்ள மாளா இன்ப வெள்ளமாய் இராநின்றதே.
‘அமுது’ என்பது, இனிய பொருளுமாய், சாவாமல் காக்குமதுவுமாய் இருப்பது.

திறத்துக்கே துப்பரவாம் திரு மாலின் சீர்
இறப்பெதிர் காலம் பருகிலும் ஆர்வனோ?

மறப்பிலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னை
உறப்பல இன்கவி சொன்ன உதவிக்கே?–7-9-9-ஏதேனும் ஒன்றிலே புக்கால் அத்தை தலைக் கட்ட வல்ல சாமர்த்தியத்தை யுடையவன் -த்ருணத்தைக் கொண்டு ஒரு கார்யம் கொள்ளப் புக்கால் -அத்தைக் கொண்டே நினைத்த கார்யம் கொள்ளும் சாமர்த்தியத்தை யுடையவன் –திறம் -கூறுபாடு –துப்புரவு -சாமர்த்தியம்-திரு மாலின் சீர்-இந்த சாமர்த்யரத்துக்கு அடியாய் இருக்கிறது ஸ்ரீ யபதித்தவம் ஆயிற்று -ஸ்ரீ யபதியினுடைய கல்யாண குணங்களை –‘அவன் குப்பைக்காலன் காண், ஸ்ரீமான் செய்தன எல்லாம் நன்றாய் வருங்காண்’ என்னக்கடவது அன்றோ?(குப்பைக்காலன்-நல்லவன் விபரீத லக்ஷணை)இறப்பெதிர் காலம் பருகிலும் ஆர்வனோ?-போன காலமும் வரும் காலமும் நான் அனுபவித்தால் தான் ஆர்வேனோ -போன காலம் அனுபவிப்பாராய்ச் சொல்லுகிறார் அல்லர் -எல்லா காலமும் அனுபவித்தாலும் ஆரார் என்கை -கீழ்ச சொன்ன ஸமஸ்த சேதனருடைய போக்த்ருத்வ சக்தியையும் கூட்டிக் கொண்டு அனுபவித்தாலும் ஆராது-எந்நாள் சிந்தித்து ஆர்வேனோ என்கிறதில் காட்டிலும் ஏற்றம் இல்லையாம் இறே சேதனரைக் கூட்டிக் கொள்ளாத போது -நான் உடையேனாய் அனுபவிக்கப் புக்காலும் உயிர் வாழ்வதற்கு அடியான ஆயுள் அற்பமாகையாலே உபகாரத்தை நினைப்பதற்குக் காலம் போருகிறது இல்லை.

இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும் இவ் வேழுலகை
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்

அன்புற் றமர்ந் துறைகின்ற அணி பொழில் சூழ் திரு வாறன்விளை
அன்புற் றமர்ந்து வலஞ்செய்து கைதொழும் நாள்களு மாகுங் கொலோ?–7-10-1-நிரதிசய ஆனந்தம் பிறக்கும் படியாக-நித்ய துக்கியான சம்சாரியானவன் -ஆனந்த மயனான தன்னோட்டை சேர்த்தியாலே ஆனந்திக்குமா போலே யாயிற்று -பிராட்டியோட்டை சேர்த்தியாலே தான் ஆனந்திக்கிற படி –அல்லி மலர் மக்கள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் -என்ன கடவது இறே –ராமஸ்து ஸீதயாசார்த்தம்ராகவோ அர்ஹதி வைதேஹீம் -என்று இறே இவளுக்கு ஏற்றம் –யஸ்ய ஜனகாத்மஜா -என்று இறே தனக்கு ஏற்றம் -எழிலை யுடைய பெரிய பிராட்டியார் –இருவரும் கூடின சேர்த்தியாலே சகல லோகங்களும் ஆனந்தம் உண்டாம் படி -இருவருக்கும் அந்யோன்யம் பிறந்த ஆனந்தம் இறே லோகத்தில் ஆனந்தத்துக்கு அடி –ராம்ஸ ஸீதாம் அநு ப்ராப்ய ராஜ்யம் புனர வாப்தவான் ப்ரஹ்ருஷ்டம் உதிதோ லோக -என்கிற படியே -மாதா பிதாக்கள் சேர இருந்தால் பிரஜைகளுக்கு மிகவும் ஏற்றம் உண்டாம் இறே –இந்த லோகங்களுக்கு ஸூகம் பிறக்கையாலே தனக்கு இனிமை பிறக்கும் படியாகவும் -இவற்றை ஆளுகைக்கு வந்து இருக்கிறார்கள் இருவரும் கூட என்று வேறுபாடு தோற்ற இருந்து இவற்றை ரஷியா நிற்கிற-எங்கள் பிரான்-என்னை இட்டு திருவாய்மொழி பாடுவித்துக் கொண்ட மஹா உபகாரகன் –கேசவன் தமருக்கு பின்பு இவர் தனி அல்லர் இறே

——————

எட்டாம் பத்தால் –
அடியனேன் பெரிய வம்மான் (நந்தகோபருக்கு சொத்து யசோதைக்கு அன்பு அடியேனுக்கு அம்மான்)-8-1-3-என்றும் –
விண்ணோர் கோன்  நங்கள் கோனை (ஸ்வாமித்வம்)-8-2-2-என்றும் –
அமர்ந்த நாதனை (ஸ்வாமித்வம் இவனிடம் அமர்ந்து இருக்கும் மற்றவர்கள் இடத்தில் இல்லை)-8-4-10-என்றும் –
மூவுலகாளி (க்ருதக -அக்ருதக -க்ருதாக்ருதக -ஸமஸ்த லோகங்களும் ஸ்வாமி)-8-9-5-என்றும் –
நேர்பட்ட நிறை மூவுலகுக்கும் நாயகன் -8-9-11-என்றும் –
சர்வ ஸ்வாமித்வம் பிரதிபாதிதம் ஆய்த்து

எடுத்த பேராளன் நந்தகோபன் தன் இன்னுயிர்ச் சிறுவனே ! அசோதைக்கு
அடுத்த பேரின்பக் குல விளங்களிறே ! அடியனேன் பெரிய வம்மானே !
கடுத்த போர் அவுணன் உடல் இரு பிளவாக் கை யுகிராண்ட எம் கடலே !
அடுத்த தோர் உருவாய் இன்று நீ வாராய் எங்கனம் தேறுவரும் உமரே ?–8-1-3-விபரீத ஞானம் உடையார்க்கோ வந்து கிட்டலாவது-ஸ்வரூப ஞானம் உடையோருக்கு வந்து கிட்டலாகாதோ -அடியேன் என்று இருப்பார்க்கோ உன் பெருமை எல்லாம் காட்டுவது –உன்னை மகன் என்று இருப்பார்கோ உதவல் ஆவது –முறை உணர்ந்து இருப்பார்க்கு உதவல் ஆகாதோ –தேவ தேவோ ஹரி பிதா -பிதாச் ச ரக்ஷக சேஷி -நவ வித சம்பந்தம் –நான் முறையில் நின்றவாறே நீயும் முறையிலே நில்லா நின்றாய் -என்றது-அடியேன் என்று நான் சொல்ல நீ ஈஸ்வரனாய் இரா நின்றாய் என்றபடி-

வேண்டிச் சென்று ஓன்று பெறுகிற்பாரில் என்னுடைத் தோழியர் நுங்கட்கேலும்
ஈண்டு இது உரைக்கும்படியை அந்தோ காண்கின்றிலேன் இடராட்டியேன் நான்
காண் தகு தாமரைக் கண்ணன் கள்வன் விண்ணவர் கோன் நங்கள் கோனைக் கண்டால்
ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான் எத்தனை காலம் இளைக்கின்றேனே ?–8-2-2-நித்ய ஸூரிகளைப் போலே என்னை அநன்யார்ஹை யாக்கினவன் -ஒரு விபூதியாகப் படுத்தின பாட்டை கிடீர் என்னை ஒருத்தியையும் படுத்திற்று –

அமர்ந்த நாதனை யவரவராகி அவரவர்கருளும் அம்மானை
அமர்ந்த தண் பழனத் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றறாங்கரையானை
அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள் தம்பதி அவனிதேவர் வாழ்வு
அமர்ந்த மாயோனை முக்கண் அம்மானை நான்முகனை யமர்ந்தேனே–8-4-10-ஆனைப் பிணங்களை குதிரை சுமக்க வற்றோ -என்னாத படி -உபய விபூதிக்கும் நாதன் என்றால் தாக்கு இருக்குமவனை –த்ரை லோக்யம் அபி நாதேந யேன ஸ்யன்னாதவத்தரம்-என்று ரஷ்யத்தில் காட்டில் ரக்ஷகத்வம் விஞ்சி இருக்கை –உபய விபூதிகட்கும் காரணம் பற்றாத சேஷி என்றால் போரும்படி இருக்கிறவனை-எந்த நாதனால் மூன்று உலகங்கட்கும் நல்ல நாதனை உடையன ஆகுமோ -என்ற பிரமாணம் படி-மூன்று உலகங்களையும் பெருமாளுக்கு கை யடைப்பு ஆக்கினாலும்-பின்னையும் காக்கப் படும் பொருள்கள் சுருங்கி காப்பாற்றுகின்ற துடிப்பே விஞ்சி இருக்கும் –

புனையிழைகள் அணிவும் ஆடையுடையும் புது கணிப்பும்
நினையும் நீர்மையதன்று இவட்கிது நின்று நினைக்கப் புக்கால்
சுனையினுள் தடந்தாமரை மலரும் தண் திருப் புலியூர்
முனைவன் மூவுலகாளி அப்பன் திருவருள் மூழ்கினளே–8-9-5-ஸமஸ்த லோகங்களுக்கும் நிர்வாஹகன்-அப்பன் -ஐஸ்வர்யத்தாலும் குறைவறப் பெற்றேன் -என் தன் ப்ரீதியால் சொல்லுகிறாள் -அவனுடைய-திருவருள் மூழ்கினளே––கடல் கொண்ட வஸ்துவை யன்றோ நீங்கள் மீட்கப் பார்க்கிறது

நேர்பட்ட நிறை மூவுலகுக்கும் நாயகன் தன்னடிமை
நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்
நேர்பட்ட தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பத்தும்
நேர்பட்டார் அவர் நேர்பட்டார் நெடுமாற்கு அடிமை செய்யவே–8-9-11-சர்வேஸ்வரனுக்கு அடிமை செய்ய நேர் பட்டார் -இவர் பாசுரத்தை சொன்னவர்கள் -இவருடைய வ்ருத்தியிலே அந்வயிக்கப் பெறுவார்கள் -என்கை -சர்வேஸ்வர ஸ்வரூபத்தையும் –ஸ்வ ஸ்வரூபத்தையும் -ப்ரதிபாதகமான பிரபந்த வை லக்ஷண்யத்தையும் -இத்தை அப்யசித்தாருடைய ப்ராப்ய வை லக்ஷண்யத்தையும் சொல்லிற்று ஆயிற்று –இவர் பாசுரத்தை சொன்னவர்-இவர் செய்ய விரும்பிய கைங்கர்யத்திலே சேரப் பெறுவர் –-நேர் படுகை -சொல்லப் படுகை -சொல்லப் பட்டார் -என்றபடி –-ஆக-இப் பாட்டால் சர்வேஸ்வரனுடைய ஸ்வரூபத்தையும்-
ஆத்ம ஸ்வரூபத்தையும்- இவற்றைச் சொல்லுகிற பிரபந்தத்தின் சிறப்பினையும்-
இதனைக் கற்றவர்கள் பெரும் பேற்றின் சிறப்பினையும்- சொல்லிற்று ஆயிற்று —

——————–

ஒன்பதாம் பத்தால் -(ஆய பதார்த்தம்)
பண்டை நாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு உன் கோயில் சீய்த்து -9-2-1-என்றும் –
நின் தீர்த்த அடிமைக் குற்றேவல் -9-2-2-என்றும் –
தொடர்ந்து குற்றேவல் செய்து -9-2-3-என்றும் –
கொடுவினையேனும் பிடிக்க (முன்னில் மூன்றிலும் ப்ரகடம்)-9-2-10-என்றும் –
உறுவது இது என்று உனக்கு ஆட்பட்டு -9-4-4-என்றும் –
ஆட் கொள்வான் ஒத்து -9-6-7-என்றும் –
நானும் மீளா அடிமைப் பணி செய்யப் புகுந்தேன் -9-8-4–என்றும் –
நித்ய கைங்கர்யம் பிரதிபாதித்யம் ஆய்த்து

பண்டை நாளாலே நின் திரு வருளும் பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்துப்
பல்படிகால் குடி குடி வழி வந்து ஆள் செய்யும்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-1-நெடுநாள் கூடவே பண்ணிப் போந்த கடாக்ஷத்தையும் –எதிர் சூழல் புக்கு நெடுநாள் பட்ட கிலேசத்தின் பலம் அன்றோ இது -நெடு நாள் கிருஷி பண்ணி பல வேளையில் கை விடவோ –அதுக்கு அடியாக பெரிய பிராட்டியார் கடாக்ஷத்தையும் கொண்டு –அவனுடைய அருளின் ஸ்வாதந்தர்யத்தை கெடுக்கும் அவள் அருள் -பிரணயித்தவத்தால் வந்த பாரதந்தர்யம் இறே -என்னடியார் யது செய்யார் –என்னும் உன் கடாக்ஷமும் –நகச்சின் நபராத்யதி –என்னும் அவள் கடாக்ஷத்தையும் பெற்று –க்ருபயா பர்யபாலயத் -என்று கிருபா பரதந்த்ரமான உன் கடாக்ஷமும் -அந்த பாரதந்தர்யத்துக்கு அடியான அவள் கடாக்ஷமும் -என்றுமாம் –உகந்து அருளின நிலங்களிலே அசாதாரண பரிசர்யை பண்ணி -தேஹாத்ம அபிமானிகள் தம் தாமுடைய க்ருஹங்களைப் பேணுமவர்கள் –பிராட்டி யடியாக பகவத் பிரசாதம் பெற்றவர்கள் உகந்து அருளின தேசங்களை பேணுவர்கள் –இன்று புதிதாய் வந்ததோ -நீ விசேஷ கடாக்ஷம் பண்ண தொடங்கின அன்றே தொடங்கி வந்தது அன்றோ –

குடிக் கிடந்து ஆக்கம் செய்து நின் தீர்த்த வடிமைக்குக் குற்றேவல் செய்து உன் பொன்
அடிக் கடவாதே வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி நீ யொருநாள்
படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கணியாய்
கொடிக்கொள் பொன் மதில் சூழ் குளிர் வயல் சோலைத் திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-2-தன்னுடைய ரஸ்யத்தை யாலே இதர புருஷார்த்தங்களிலே நசை அறுக்க வல்ல அடிமைகளில் அந்தரங்கமான அடிமைகளை செய்து-உன் பொன்-அடிக் கடவாதே-உன்னுடைய ஸ்ப்ருஹணீயமான திருவடிகளை அல்லது அறியாதே -என்னுதல் – உன் திருவடிகளை தப்பாதே என்னுதல் -அல்லது அறியாமை யாவது -அநந்ய பிரயோஜனகை -தப்பாது ஒழிகை யாவது -ஆஞ்ஞஜையை அதி லங்கியாது ஒழிகை –ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய -என்று இருக்கையும் -பெருமாளை மீடகைக்கு சென்று திருவடிகளிலே விழ -பித்ரு வசனத்தை அனுஷ்டித்தோமானா நிறம் நமக்கு யுண்டாவது நீ ராஜ்யத்திலே இருக்கிறது காண் -என்ன ஆரூரோஹ ரதம் ஹ்ருஷ்ட -என்று மீளுகையும்

கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம் கிடத்தி உன் திரு வுடம்பு அசைய
தொடர்ந்து குற்றேவல் செய்து தொல்லடிமை வழி வரும் தொண்டரோர்க்கு அருளி
தடம் கொள் தாமரைக் கண் விழித்து நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்
இடம் கொள் மூ வுலகும் தொழ விருந்து அருளாய் திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-3-இத்தசையில் செய்யப்படுவது இது -என்று உணர்த்தி அந்தரங்க வ்ருத்தியைப் பண்ணி -பெருமாள் தமக்கு அபிமதங்களில் அவஹிதர் அன்றிக்கே இருந்த போதும்-இவ் வடிமையைக் கொண்டு அருள வேணும் -என்று வடிம்பிட்டு இளைய பெருமாள் அடிமை செய்தால் போலே –தொல்லடிமை-ஆத்மாவுக்கு ஸ்வாபாவிகமான வடிமை -மம சஹஜ கைங்கர்ய விதய -என்கிறபடியே–அகாரார்த்தா யைவ ஸ்வம் அஹம் அத மஹ்யம் ந நிவஹா நராணாம் நித்யாநாம் அயநம் இதி நாராயண பதம் யம் ஆஹ அஸ்மி காலம் சகலம் அபி சர்வத்ர சகலாஸூ அவஸ்தாஸூ ஆவிஸ்யு மம சஹஜ கைங்கர்ய விதய -அஷ்ட ஸ்லோகி –எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லா நிலைகளுளும்-
தானாகவே உண்டாகும் கைங்கர்யங்கள் வெளிப்பட வேண்டும் -என்னக் கடவது அன்றோ –வழி வரும் தொண்டரோர்க்கு அருளி-நெறி தப்பாதே வருகிற அடியோங்களுக்கு கிருபை பண்ணி –அடிமை முறை தப்பாமே போருகிற-வேறு கதி இல்லாத-எங்களுக்கு-திருவருள் செய்து –இம் மூன்று பாசுரங்களிலும் தம்முடைய வம்ச பரம்பரையின் பெருமையை சொன்னால் போலே அன்றோ இருக்கிறது –அது அன்று இங்குச் சொல்லுகிறது-
ஒருவருக்கேயாய் இருப்பாரை முகம் பார்ப்பார் வேறு ஒருவர் இலர் -என்று-தம்முடைய அநந்ய கதித்வத்தைச் சொல்லுகிறார் –கைங்கர்ய கிரியைச் சொல்லி -யோக்யதை இருப்பதாகச் சொல்லிக் கொள்ள வில்லை -உனக்கே அற்றுத் தீர்ந்தோம் -நீ கை விட்டால்
வேறு யாரும் கொள்ள மாட்டார்கள் –மறந்தும் தொழா மாந்தர் -அன்றோ -அநந்ய கதித்வம் அன்றோ வெளியிட்டுக் கொள்கிறார் –-

கொடு வினைப் படைகள் வல்லையாய் அமரர்க்கிடர் கெட வசுரர்கட்கிடர் செய்
கடு வினை நஞ்சே என்னுடை யமுதே கலி வயல் திருப் புளிங்குடியாய்
வடி விணை யில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
கொடு வினையேனும் பிடிக்க நீ யொருநாள் கூவுதல் வருதல் செய்யாயே–9-2-10-
இவ்வடிவில் வந்தால் ஒப்பு இல்லை -பகவத் தத்துவமும் ஒப்பன்று —துல்ய சீல வயோ வ்ருத்தாம் துல்யாபி ஜன லஷணாம்-ராகவ அர்ஹதி வைதேஹீம் தம் ச இயம் அஸி தேஷணா-சுந்தர -16-5-பெருமாளுக்கு கருத்த கண்களை உடைய வளான இந்தப் பிராட்டியும் தகுந்தவள்-என்கிறபடியே-எற்றமாயே நின்றது அன்றோ –-அப்படிப்பட்ட நில மகள் -ஏவம் பூதை -என்னும் அத்தனை-அவர்கள் கூசித் தொட வேண்டும் படி ஸூ குமாரமான திருவடிகளை-அவர்கள் சந்நிதியும் யுண்டாய் இருக்க நான் இழப்பதே -என்னும் இன்னாப்பாலே சொல்லுகிறார் -கண்கள் சிவந்த -திருவாய் மொழிக்கு பின் நிகர்ஷ அனுசந்தானம் இல்லை இறே-நிரதிசய போக்யனாய் ஸந்நிஹிதனான நீ சத்தையை நோக்குகைக்காக ஒரு நாள் அங்கே அழைத்தல் -இங்கே வருதல் செய்து அருள வேணும் -வருதல் என்கிற இத்தை முந்துற சொல்லாது ஒழிந்தது அந்த சமுதாயத்தை காண வேணும் என்னும் நசையாலே –எல்லை இல்லாத இனியனாய்-அண்மையில் இருப்பவனான நீ-ஸ்வரூபத்தை நோக்குகைக்கு-ஒரு நாள் அங்கே அழைத்தல் -இங்கே வருதல்-செய்து அருள வேண்டும்-முற்பட வருதல் என்று இலர் ஆயிற்று-அச் சேர்க்கையை குலைக்க ஒண்ணாது என்னுமதனாலே-விருப்பம் உடையார் பக்கல் அவனைத் தனியே விட்டு இரார்கள் அன்றோ –அதனால் கூடக் கொடு வருவார்கள் என்னும் அதனை பற்றச் சொல்லுகிறார்-

உறுவது இது என்று உனக்கு ஆட்பட்டு நின் கண்
பெறுவது எது கொல் என்று பேதையேன் நெஞ்சம்
மறுகல் செய்யும் வானவர் தானவர்க்கு என்றும்
அறிவது அரிய அரியாய அம்மானே–9-4-4-சீரியது அடிமை செய்யுமது என்று–உனக்கு அடிமை புகுந்து -ஸ்வரூபம் பகவத் பரதந்த்ரம் என்று உணர்ந்தால் சீரிய பிரயோஜனம் கைங்கர்யம் இறே-உன் பக்கல் பெறுவது ஏதோ என்று -ஸ்வரூபத்தையும் உணர்ந்து -கைங்கர்யமே சீரியது -என்று அறிந்து -ஈஸ்வரன் அநந்ய பிரயோஜனர்க்கு வேறு ஒன்றைக் கொடுத்து விடுவான் அல்லன் -என்று அறியும் இவர் -உன் பக்கல் பெறுவது ஏதோ என்கைக்கு ஹேது என் என்னில் -க்ரமத்திலே வந்து முகம் காட்டுகிறோம் -என்று சம்சாரத்தில் இருப்பே சேஷித்து விடப் புகுகிறதோ -என் த்வரை அறிந்து முகம் காட்டுகிறாயோ-என்கைக்காக சொல்லுகிறார் என்பது –ஆர்த்த பிரபன்னர் அன்றோ ஆழ்வார் –கஜேந்திரன் அநாதி காலம் இழந்து காணப் பெற்றான் -பரதன் கண்டு இழந்து 14 சம்வத்சரம் பொறுத்து பெறப் பெற்றான் -எனக்கு என்ன ஆகுமோ-

காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும்
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்
ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்
கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே–9-6-7-அடிமை கொள்வாரைப் போலே புகுந்து –என்னை வெறும் தரை யாக்கின ஆச்சர்ய பூதனாலே –கீழே திருவருள் என்று மறைத்துச் சொன்ன வார்த்தையை வெளியிடுகிறார் –கிட்டின போது தாழ நின்று மின்மினி பரக்க பரிமாறும் ஆச்சர்யம்-

நாளேல் அறியேன் எனக்கு உள்ளன நானும்
மீளா அடிமைப் பணி செய்யப் புகுந்தேன்

நீளார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
வாளேய் தடம் கண் மடப்பின்னை மணாளா –9-8-4-நித்ய ஸூரிகள் பண்ணும் ஆத்மாந்த தாஸ்யத்தில் அன்றோ நானும் அதிகரித்தது -ஒரு பிரயோஜனத்தை கொள்ளக் கிட்டினவனாய் ஆறி இருக்கிறேனோ -தாஸ்ய பரிமளத்தில் சுவடு அறியாதவனாய் ஆறி இருக்கிறேனோ

————-

பத்தாம் பத்தால் -(நமஸ் பதார்த்தம் ப்ராப்யத்தில் களை இருக்கிறது -மற்றை நம் காமங்கள் மாற்று)
துயர் கெடும் கடிது -10-1-7-என்றும் –
கெடும் இடர் ஆய வெல்லாம் -10-2-1-என்றும் –
எழுமையும் ஏதம் சாரா -10-2-2-என்றும் –
இப் பிறப்பு அறுக்கும் -10-2-5-என்றும் –
உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள் வியக்க  இன்புறுதும் எம் பெண்மை யாற்றோம் -10-3-9-என்றும்
பிணி ஒன்றும் சாரா -10-4-7-என்றும்
பிறவித் துயர் கடிந்தோம் -10-4-3-என்றும் –
விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம் -10-5-9-என்றும் –
அமரா வினைகளே -10-5-9–என்றும் –
கடு நரகம் புகழ் ஒழித்த -10-6-11-என்றும் –
தடுமாற்ற வினைகள் தீர்த்தான் -10-8-5-என்றும் –
பிறவி கெடுத்தேன் (அவனே செய்தாலும் இப்படி சொல்லும்படி வைத்து உகக்கிறான்)-10-8-3-என்றும் –
அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன் -10-8-7-என்றும் –
அவா வற்று வீடு பெற்ற (ஞாதும் த்ரஷ்டும் ப்ராப்தி-பரபக்தி கீழ் எல்லாம் -பரஞானம் சூழ் விசும்பு -பரமபக்தி முனியே நான்முகன்)-10-10-11-என்றும் –
கைங்கர்ய பிரதிபந்தக நிஸ் சேஷ நிபர்ஹணம் பிரதிபாதிதம் ஆய்த்து –

மற்று இலம் அரண் வான் பெரும் பாழ் தனி முதலா
சுற்றும் நீர் படைத்து அதன் வழித் தொல் முனி முதலா
முற்றும் தேவரோடு உலகு செய்வான் திரு மோகூர்
சுற்றி நாம் வலம் செய்ய நம் துயர் கெடும் கடிதே
-10-1-7-எல்லா தேவ ஜாதியோடும் கூட எல்லா லோகங்களையும் உண்டாக்குமவன் வர்த்திக்கிற திரு மோகூர்-நாம் சென்று -விடாதே ப்ரதக்ஷிணாதிகளைப் பண்ண-வழித் துணை இல்லை -என்று நாம் படும் துக்கங்கள் சடக்கென போகும் -அதஸோ அபயங்கதோ பவதி -என்னக் கடவது இறே -ஆனபின்பு மற்றிலம் அரண் –

கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும்
கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்
விடமுடை யரவில் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் அனந்த புரநகர் புகுதும் இன்றே-10-2-1-இடர் என்று பேர் பெற்றவை அடங்க போம் –பாபே குருணி குருணி –என்று பாப அனுரூபமாக பிராய்ச சித்தம் பேதித்து இருக்கும் -திரு நாமத்துக்கு அங்கனம் ஒரு நியதி இல்லை –மேரு மந்த்ர மாத்ரோ அபி –நஸ்யதி –என்றபடி சகல பாபங்களும் போம் -திரு நாமங்கள் தான் பலவும் வேணுமோ என்னில் –ஒரு விரோதியைப் போக்கின படியைச் சொல்ல விரோதி வர்க்கமாக போம் என்னுதல் –ப்ரசஸ்த கேசன் என்றால் –கேசவ கிலேச நாசன – என்கிறபடியே சாம்சாரிக சகல துரிதங்களும் போம் என்னுதல் –பாபேந்தனாக்னி சசதைவ நிர்மல மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி –விஷ்ணு தர்மம் –பாவங்கள் ஆகிற விறகுக்கு நெருப்பு போன்றவர் -என்கிறபடியே
எல்லா துன்பங்களும் ஒரு முறையிலேயே அழியும் – –என்னக் கடவது இறே-நரகே பஸ்யமா நஸ்து யமேன பரி பாஷித-கிம் த்வயா நார்ச்சிதோ தேவ கேசவ கிலேச நாசன -பாரதம் -என்கிறபடியே -நீண்ட மயிர் முடியை உடையவனாய் இருக்கும் இருப்பைச் சொல்ல-பிறவியாலாய துன்பங்கள் அனைத்தும் போம் -என்றும்-க இதி ப்ரஹ்மனொ நாம ஈசோஹம்சர்வ தேஹிநாம்-ஆவாம் தவ அங்கே சம்பூதௌ தாஸ்மான் கேசவ நாமவான் -என்கிறபடியே-பிரமனுக்கும் சிவனுக்கும் தலைவனே என்ன-பிறவியாலாய துன்பங்கள் அனைத்தும் போம் –போய பிழையும் புகுதருவான் நின்றனவும் -என்கிறபடியே-அனுபவிக்க கடவனவும்-முன்பே தொடங்கி அனுபவிக்கிறவையும்-எல்லாம் நசிக்கும் ஆதலால் -எல்லாம் -என்கிறார் –என்ன -அர்த்த அனுசந்தானம் வேண்டா -யுக்தி மாத்திரமே அமையும் பாப விமோசனத்துக்கு என்கிறது –

இன்று போய்ப் புகுதிராகில் எழுமையும் ஏதம் சாரா
குன்று நேர் மாட மாடே குருந்து சேர் செருந்தி புன்னை
மன்றலர் பொழில் அனந்த புர நகர் மாயன் நாமம்
ஒன்றும் ஓர் ஆயிரமாம் உள்ளுவார்க்கும் உம்பரூரே–10-2-2-போவோம் என்று இச்சை பிறந்த இன்றே போய்த் திருவனந்த புரத்தே சென்று புகுவீராகில் -இதர விஷய விரக்தி வேண்டாவோ -இச்சா மாத்திரமே அமையுமோ என்னில் –யதஹரேவ விரஜேத் ததஹரேவ பிரவ்ரஜேத்-ஜாபாலி ஸ்ம்ருதி –எவன் வைராக்யம் உள்ளவன் ஆகிறானோ அன்றே துறவறத்தை மேற்கொள்ள வேண்டும் -என்கிறபடியே- -அதிக்ருதாதிகாரமானவற்றுக்கு–சர்வாதிகாரமுமாய் பிராப்தமுமாய் முன்பே இவனை இச்சித்து இவன் இச்சை பார்த்து இருக்கும் விஷயத்துக்கு -இச்சா மாத்திரமே வேண்டுவது –அப்ராப்த விஷயத்துக்கு இறே அதிகாரி சம்பத்து வேண்டுவது –கால தத்வம் உள்ளதனையும் ஒரு வ்யஸனம் வாராது -சாரா -அவன் திரு முகம் கொண்டு தவிர்க்க வேண்டா -இவ்வ்வாஸ்ரயம் நமக்கு இருப்பு அன்று என்று சர்வ துக்கமும் கழலும்–சும்மெனாதே கை விட்டு ஓடி தூறுகள் பாய்ந்தனவே -பெரியாழ்வார் திருமொழி -5-4-3-என்கிறபடியே-நாம் இவ்விடத்தில் இருப்பதற்கு உரியோம் அல்லோம் -என்று தன்னடையே வந்து கிட்டாது –இராஜ குல சம்பந்தத்தாலே விட்டு ஓடிப் போம் –
வானோ மறிகடலோ மாருதமோ தீயகமோ
கானோ ஒருங்கிற்றும் கண்டிலமால் -ஆன் ஈன்ற
கன்று உயரத் தாம் எறிந்து காய் உதிர்த்தார் தாள் பணிந்தோம்
வான் துயரை ஆ ஆ மருங்கி –
பெரிய திருவந்தாதி -54-–

புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி
எண்ணுமின் எந்தை நாமம் இப்பிறப்பு அறுக்கும் அப்பால்
திண்ணம் நாம் அறியச் சொன்னோம் செறி பொழில் அனந்த புரத்து
அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரர் ஆவார்–10-2-5-என் ஸ்வாமி யுடைய திரு நாமத்தை அநுஸந்தியுங்கோள்–இடறினவன் அம்மே என்னுமா போலே-வகுத்தவனுடைய திரு நாமத்தை அநுஸந்தியுங்கோள் –சததம் கீர்த்தயந்தோ மாம் யதன் தச்த த்ருடவ்ரத-நமச்யந்தச்ய மாம் பக்த்யா நித்ய யுக்தஉபாசதே -ஸ்ரீ கீதை -9-14-எப்பொழுதும் என்னை கீர்த்தனம் செய்கின்ற வர்களாயும் -என்னா நின்றதே அன்றோ –அதனைச் சொல்லுகிறது –நஞ்சீயர் பட்டரை-திரு நாமம் சொல்லும் பொழுது பக்தி உடையனாய் சொல்ல வேண்டுமோ -என்று கேட்க-கங்கையில் முழுகப் போமவனுக்கு-வேறு உவர்க் குழியிலே முழுகி போக வேண்டுமோ-மேல் உண்டான நன்மையைத் தருகிற இது-அதிகாரி சம்பத் ஆகிய -தகுதியையும் தர மாட்டாதோ -என்று அருளிச் செய்தாரம் –-திரு நாமம் சொல்லுகைக்கு ருசியே ஆயிற்று வேண்டுவது-அவர்களே அதிகாரிகள் ––பிறவியினுடைய தோஷ பிராஸுர்யம் ப்ரத்யக்ஷ சித்தம் இறே–இ -சுட்டு எழுத்து-கண்டதே அன்றோ இதனுடைய இழையீடு -நூலாலே தைத்தல்-இழை இட்டால் போலே இருக்கிற அவயவங்களுடைய சேர்த்தி-கவிழ்ந்து பார்க்கவே அமையுமே இதனுடைய அகவாயை-தன்னைடையே வைராக்கியம் பிறக்குமே –-இப்படி கண் கூடாக கண்டு இருக்கச் செய்தேயும் வைராக்கியம் பிறவாது இருக்கிறதே அன்றோ வாசனையின் கனம் –-ஒரு செட்டியை -இவன் தமிழில் சிறந்த புலமை படைத்தவன் -என்று பட்டருக்கு காட்டினார்களாக-பட்டர் அவனைப் பார்த்து -உனக்கு யாதேனும் கேட்க விருப்பம் இருப்பின் கேட்கலாகாதோ -என்ன-சிலர் -காண்கிற இத் தேகத்துக்கு அவ்வருகு ஆத்மாவும் இல்லை –புண்ணிய பாபங்களும் இல்லை-ஈஸ்வரனும் இல்லை -என்று இரா நின்றார்கள்–சிலர் -இச் சரீரம் தான் நிலை அற்றது -என்று இதனுடைய தாழ்வினைக் கண்டு-அவ்வருகே நிலைத்து இருக்குமது ஒன்றனை பற்ற வேண்டும் -என்று இரா நின்றார்கள்-விஷயம் ஒன்றாக இருக்க வேறுபட்ட இவ்விரண்டு கொள்கைகளும் நடக்கிற படி எங்கனே -என்ன--தைவீ ஹி ஏஷ குணமயீ மம மாயா துரத்தயா-மாமேவ யே ப்ரபத்யந்தே மாயம் ஏதாம் தரந்தி தே -ஸ்ரீ கீதை -7-14-
என்கிறபடியே-நல்லவர்கள் இதனுடைய தாழ்வினைக் கண்டு இதனைக் கழித்து கோடற்க்கும்-மற்றையோர்கள் இதிலே இனிமை உண்டு என்று நினைத்து கேடு உறுகைக்கும்- உடலாம்படி கர்மங்களுக்கு தகுதியாக இதனை எடை எடுத்து காணும் -நிறுத்து -அறுதி இட்டு -காணும் –ஈஸ்வரன் பண்ணிற்று என்று அருளிச் செய்தார்-
இது கண்டாய் நன்னெஞ்சே இப்பிறவி யாவது
இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது -இது கண்டாய்
நாரணன் பேரோதி நரகத்தரு கணையா
காரணமும் வல்லையேல் காண்
–இரண்டாம் திரு -66-என்னும்படியாய் இருக்கும் அன்றோ-
நாம் நன்றாக நினைத்து இருக்குமது அன்று இதன் தன்மை –அல்பம் அஸ்திரம் -ஆகாரம் பிரத்யஷிக்கலாமே –-ஈஸ்வரன் வெளிச் சிறப்பினை பிறப்பிக்க-இது சிறிது -நிலை அற்றது -என்று அறிந்த இதுவே காண்–இதுக்கு நிலை நின்ற தன்மை –இப் பிறப்பு அறுக்கும் –
இப்படி தாழ்வு உள்ளதாக அறியப் படுகின்ற இச் சரீர சம்பந்தத்தை அறுக்கும் –செறிந்த பொழிலை யுடைய திருவனந்த  புரத்திலே கண் வளர்ந்து அருளுகிற சர்வேஸ்வரனுடைய நிரதிசய போக்யமான திருவடிகளை ஆஸ்ரயிக்குமவர்கள் -இப் பிறப்பு அறுக்க வேணும் -என்ன வேண்டாத நித்ய ஸூரிகளானவர்கள் –இத்தால் விரோதியை போக்கும் அளவன்றியே-உத்தேச்யத்தை பெறுகைக்கும் திருவனந்த புரமே ஆஸ்ரயணீய ஸ்தலம் என்கிறது –வியக்தமாக -மதிநலம் அருளப் பெற்ற நாம் -தேஹாத்ம அபிமானிகளான -நீங்கள் அறியும் படி உங்கள் அநர்த்தத்தைப் பார்த்துச் சொன்னோம் –

உகக்கும் நல்லவரோடும் உழி தந்து உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள்
வியக்க இன்புறுதும் எம் பெண்மை ஆற்றோம்
எம்பெருமான் பசு மேய்க்கப் போகேல்
மிகப் பல அசுரர்கள் வேண்டு உருவம் கொண்டு நின்று உழி தருவர் கஞ்சன் ஏவ
அகப்படில் அவரோடும் நின்னொடு ஆங்கே அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ–10-3-9-எங்களை போல் அன்றிக்கே -நீ உகக்கும்படியான விலக்ஷணைகளோடு சஞ்சரித்து -அவர்களோடே பரிமாறப் பெற்றிலோம் என்று திரு உள்ளத்தில் யுண்டான விடாயால் வந்த துக்கம் கெடும் தோறும் –புறம்புள்ளாரைப் போல் அன்றியே -உன் உகப்பே பிரயோஜனமாக நாங்கள் -மிகவும் உகப்புதோம்-மிகுதி எதில் காட்டில் என்னில்-எங்களோடு கலக்குமதில் காட்டில் -என்னுதல்–உன்னில் காட்டில் நீ உகந்தவர்களை உகப்புதோம் -என்னுதல் –உன் உகப்புக்கு புறம்பாய் வரும் ஸ்த்ரீத்வம் எங்களுக்கு அஸஹ்யம் -அது வேண்டா –-நீ உகந்தாரை ஒழிய உன்னை உகக்குமவர்கள் அல்லோம் காண் நாங்கள் -உன்னைத் தனித்து உகப்பாள் மூக்கறைச்சி அன்றோ -சூர்பணகை அன்றோ –
ததீயர் சேஷத்வம் ஞானம் உடையவர்கள் அன்றோ -அவனும் ததீயாரும் சேர்ந்ததே புருஷார்த்தம் –

பணி நெஞ்சே நாளும் பரம பரம்பரனை
பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும்
மணி நின்ற சோதி மது சூதன் என் அம்மான்
அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே–10-4-7-சகல துக்கங்களும் நம்மை ஸ்பர்ஸியா -அந்த துக்கங்களுக்கு அடியான ஜன்மத்தைப் போக்கி அடிமை கொள்ளும்

ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறை உடையம்
மீள்கின்றதில்லை பிறவித் துயர் கடிந்தோம்
வாள் கெண்டை ஒண் கண் மடப்பின்னை தன் கேள்வன்
தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே10-4-3-துக்க ஹேதுவான ப்ரக்ருதி சம்சர்க்கத்தையும் ஒட்டினோம் -பரம பதத்தில் புகச் செய்தேயும் ருசி முன்னாக போகாத வைதிக புத்ரர்களுக்கு மீள வேண்டிற்று இறே –மயர்வற மதி நலம் அருளினன் -என்று ருசி ஜனகனும் அவனேயாய் -பேறும் அவனாலேயாய் இருக்கிற எனக்கு புநாவ்ருத்தி பிரசங்கம் இல்லை-

கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே
விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக
பண்டே பரமன் பணித்த பணி வகையே–10-4-9–கண்ட போதே வினை என்று பேர் பெற்றவை எல்லாம் விட்டுப் போய்த்து -சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்னுமவன் அடியாக வந்ததாகையாலே தட்டில்லை இறே-இவர் கேவலர் அல்லர் –அடி வுடையராய் இருந்தார் -என்று விட்டுப் போயிற்றின –சாடு- மூலம் உண்டு -திருவடி கண்டார்-
த்ருஷ்டே பராவரே-கண்டால் போகும் -ஸ்ருதி -ஆழ்வார் சங்கை இல்லாமல் கண்டேன் –
பரன் அவரன்-மேன்மைக்கும் எளிமைக்கும் எல்லை இவனே –பரர்கள் என்று லோகத்தில் உள்ளார் அவரர்கள் போல் –உயர்வற உயர் நலம் -உயர்வு அறும் படி அன்றோ இவனது உயர்வு –

அமரர்க்கு அரியானை தமர்கட்கு எளியானை
அமரத் தொழுவார்கட்கு அமரா வினைகளே–10-5-9-அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு ஆஸ்ரயிக்க இழியவே பிரயோஜனாந்தர ப்ராவண்யத்துக்கு அடியானை கர்மங்களானவை தானே போம் —

காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த
வாட்டாற்று எம் பெருமானை வளம் குருகூர்ச் சடகோபன்
பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே–10-6-11-தன் கனை கழல்கள்-காட்டி -கடு நரகம் புகல் ஒழித்த–ஸ்வரூப குணங்களை பிரகாசிப்பிக்கிற வடிவைக் காட்டி சம்சார சம்பந்தத்தைத் தவிர்த்த -என்னுதல் -தன்னைக் காணப் பெறாத துக்கத்தைப் போக்கினவன் என்னுதல் -கழல் -திரு மேனிக்கு உப லஷணம்-இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை –என்று விரும்பியவாறே-செய்தான் ஆயிற்று–அறிவுடையாருக்கு பொறுக்க முடியாத நரகம்-இவ் உலக வாழ்க்கை அன்றோ 

வானே தருவான் எனக்காய் என்னோடே ஒட்டி
ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்
தேனே ஏய் பொழில் தென் திருப் பேர் நகரானே–10-8-5-புகுந்த பின்பு தான் அனுகூலித்தேனோ-தன்னைப் பிரிந்து தடுமாறுகைக்கு அடியான புண்ய பாப ரூபமான கர்மங்களை தானே தவிர்த்தான் –கர்மங்களுக்கு கட்டுப் படாதவனான தானே –இவர் பல காலம் தேகத்தினை விரும்பி விட மாட்டாதே போந்தார்-இப்போது இவருக்கு தன் பக்கலில் ருசி பிறந்தவாறே–இதனோடு தொற்று அல்லாத தானே-இதிலே வந்து புகுரா நின்றான் –
அவனைப் போலே முன்னடி தோற்றாது ஒழியில் அன்றோ இவர்-இச் சரீரத்தின் தண்மையைக் காணாது ஒழிவது-இதன் தண்மையை நினைந்து -இதனுள் -என்கிறார் –காதல் கண்ணை மறைத்தது அவனுக்கு- இவர் மயர்வற மதி நலம் அருள பெற்றவர் அன்றோ-தானே--புகுகிற போது தானே யாய்-பின்னர் நானும் அவன் செய்யும் கார்யத்துக்கு அனுகூலமாக இருந்தேனோ –தடுமாற்ற வினைகள் தவிர்த்தான் – தன் பக்கல் நின்றும் என்னை பிரித்து தடுமாறும்படி-செய்ய வல்ல பாபங்களைப் போக்கினான் –அவை யாவன-பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்-இங்கு இவ் உயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்கள் –

பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன்
மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப் பேரான்
அடிச் சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே–10-8-3—தலை மேலே தாள் இணைகள் -10-6-6-என்று-அவன் திருவடிகளை தலை மேல் கொண்டு வந்து வைக்கையாலே அவற்றை உரக்கப் பிடித்துக் -கெட்டியாக பிடித்துக்-கொண்டேன் –தலை மேலே தாள் இணைகள் -என்கிறபடியே -அவன் திருவடிகளைக் கொண்டு வந்து என் தலையிலே வைக்க -அத்தை ஒரு நாளும் பிரியாத படி பற்றினேன் -ஜன்மத்தைப் போக்கினேன் –ஜென்ம சம்பந்தத்தால் வந்த துக்கங்களை அடியேன் -சம்சாரத்திலே நிற்கைக்கு அடியான மூல பிரக்ருதியை நிவர்த்திப்பித்தேன்-பிறவியை மறுவல் இடாதபடி போக்கினேன் –ஸ்தூல சரீர விமோசனம்-
கானோ ஒருங்கிற்றும் கண்டிலோம் -பெரிய திருவந்தாதி -54-என்கிறபடியே-எங்கே போயிற்று -கண்டிலேன் –அவன் தம்மோடு-நிர்ஹேதுகமாக வந்து கலந்த படியை நினைந்து இவன் திருவடிகள் எனக்கு இங்கனே எளிது ஆவதே –என்கிறார்-

உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத்
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான்
கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே-10-8-7-மேலான தாஸ்ய ரசம் அதிசயித்து -யேந யேந தாதா கச்சதி -என்கிற ரசத்தை அனுபவித்து -சேவாச்ச்வ வ்ருத்தி -என்கிற இது இறே கீழான தாஸ்யம் –முடிவிலே -தொழும் சொல்லுப் பெற்றேன் -அனுபவ ப்ரீதி தலை மண்டையிட்டால் -அதன் மேலே நம என்று புத்தி பூர்வகமாக சொல்லும் சொல்லைப் பெற்றேன் –நம இத்யேவ வாதின -இறே -அதாவது ப்ரீதி வழிந்த சொல்லாலே திருவாய் மொழி பாடி அடிமை செய்யப் பெறுகை –அந்தி தொழும் -என்கையாலே பலம் சொல்லிற்று
கைங்கர்ய ஏக ரச இன்பம் மிகுந்தால் -அதனுடைய முடிவிலே நம -என்று சொல்லுகின்றவர்கள் -என்று மனம் அறியச் சொல்லுவது ஓன்று உண்டு-அப் பாசுரத்தைச் சொல்லப் பெற்றேன் –முக்தாநாம் லஷணம் ஹி ஏதத் ஸ்வேத த்வீப வாஸிநாம்-பத்தாஞ்சலி புட ஹ்ருஷ்டா நம இதி ஏவ வாதின –பாரதம் மோஷம் -என்கிறபடியே –-அந்தி தொழும் -சரம நிலை -நம -பிராப்ய-விரோதி -ஸூ போக்துத்வ புத்தி -தவிர -கைங்கர்யம் செய்யும் பொழுது
எப்போதாவது வரலாம் என்பதால் எப்பொழுதும் ஸ்வேத தீப வாசிகள் சொல்லிக் கொண்டே இருப்பார்-யவாதாத்மபாபி -மற்றை நம் காமங்கள் மாற்று சொல்லிக் கொண்டே இருக்க வேண்டுமே மேலைத் தொண்டு –-அதாவது-ப்ரீதி வழிந்த சொல்லாலே திருவாய்மொழி பாடி-அடிமை செய்யப் பெறுகையைத் தெரிவித்த படி –

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11- அவனைப் பெற்று நிரஸ்தித ஸமஸ்த பிரதிபன்னராகையாலே நிர் துக்கரான ஆழ்வார் அருளிச் செய்த –

———————–

இப்படி ஸ்ரீயபதித்ய பிரமுகங்களாய் (தொடங்கி)
கைங்கர்ய பிரதிபந்தக நிஸ் சேஷ நிபர்ஹண பர்யந்தங்களாய் இருந்துள்ள
உபாதேய அர்த்தங்களை பிரதிபாதிக்கக் கடவதாய் இருந்துள்ள
வாக்யத் த்வயமும்  -திருவாய்மொழியும் –
பகவத் சரணார்த்திகளாய் -பிரபத்தி உபாய பரராய் இருக்கும் அதிகாரிகளுக்கு
கால ஷேப ஹேதுவாகவும்
ஈஸ்வர ப்ரீணந அர்த்தமாகவும்
யாவச் சரீர பாதம் அனுசந்தேயம் -(த்வய அர்த்த அனுசந்தாநேந ஸஹ உடன் யாவத் சரீர பாதம் -அரங்கன் எம்பெருமானுக்கு இட்ட கட்டளை -த்வய அர்த்தமே திருவாய்மொழி)

———

நேத்ருத்வம் நித்யயோகம் ஸமுசித குண ஜாதம் தநுக்யாபநம் ச உபாயம்
கர்த்தவ்ய பாகம் து அத மிதுநபரம் ப்ராப்யமேவம் ப்ரஸித்தம் |
ஸ்வாமித்வம் ப்ரார்த்தநாஞ்ச ப்ரபலதர விரோதிப்ரஹாணம்
தசைதான் மந்தாரம் த்ராயதே சேத்யதிகத நிகம: ஷட்பதோயம் த்விகண்ட: ||
-5-

இந்த ஸ்லோகம் மந்த்ர ரத்னமான த்வயத்தை விவரிக்கிறது. த்வயம் என்பது இரு கண்டங்களும் ஆறு பதங்களும் கொண்டு அமைந்தது. பத்துப் பொருளை உட்கொண்டிருக்கிறது: (1) சேதனனைத் தன் வயமாக நடத்தும் திறமை (2) பிராட்டியோடு பிரிக்க முடியாத நிலை (3) ஈச்வரத் தன்மைக்கேற்ற இனிய குண ஸமூஹம் (4) அழகிய திருமேனி (5) உபாயம் (6) சேதனன் செய்ய வேண்டிய கடமை (7) இருவருமான சேர்த்தியில் கைங்கர்யம் என்னும் பலன் (8) உரிமை என்னும் ஸம்பந்தம் (9) கைங்கர்ய ப்ரார்த்தனை (10) கைங்கர்யத்துக்கு இடையூறாக உள்ளவைகளிலிருந்து விடுதலை – ஆகிய இந்தப் பத்துப் பொருள்களையும் இடைவிடாது நினைப்பவனை ரக்ஷிக்கிறது என்னும் இதை வேதத்தை அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

—————————————————-———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ரஹஸ்ய நிஷ்கர்ஷம் -ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள்-

October 23, 2025

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

1-ஸம்ஸாரத்தை அடியறுக்கும் மந்த்ரங்கள் இரண்டு -குரு தரமான பக்தி யோகமும் -லகுதரமான ந்யாஸ யோகமும்

தோஷ சப்தகங்கள் –துக்க மூலம் -துக்க மிஸ்ரம் -துக்க உதர்க்கம் -அல்பம் -அஸ்திரம் -விபரீத அபிமான மூலத்வம் -ஸ்வாபாவிக ஆனந்த வ்ருத்தம் -அதாவது
துன்பத்திலிருந்து பிறப்பது – துன்பத்துடன் கலந்திருப்பது -துன்பத்தை உண்டாக்குவது-அளவில் மிகக் குறைவானது -நிலையற்றது -தகாத ஆசைக்கு கருவியாய் இருப்பது -எம்பெருமானை அனுபவிப்பது என்னும் இட்டுப் பிறந்து வைத்தால் இயற்க்கைக்கு மாறாக இருப்பது-ஆகிய ஏழுவித குறைகள் இல்லாத நிலையில்லா –பரிபூர்ண ப்ரஹ்ம அனுபவம் -இதற்குத்தடையாய் பிறப்பு இறப்பில் சுழன்று நிற்கும் கூடிய நரகமே இந்த ஸம்ஸாரம்-இதன் நின்றும் மீள பக்தியோகமும் பிரபத்தியும் இரண்டு மார்க்கங்கள்

2-இவற்றில் பக்தி யோகம் -யாதொருவனை இவன் வரிக்கிறானோ என்னும் ஸ்ருதி வாக்யத்தாலும் -பக்த்யா லப்ய து அநந்யயா -ஸ்ரீ கீதா வாக்யத்தாலும் -இத்யாதிகளாலும் ப்ரதிபாதிக்கப்படுகிறது

நாயமாத்ம ப்ரவசனேன லப்4யோ ந மேத4யா ந ப3ஹுனா ஶ்ரதேன |
யமேவைஷ வ்ருணுதே தேன லப்4யஸ்தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தனூம்ஸ்வாம் ||
-கட ஸ்ருதி-23-ஈஸ்வரன் எதன் அடிப்படையில் மனிதனை ஆத்ம ஞானம் அடைவதற்கு தேர்ந்தெடுப்பார் என்றால் எவனொருவன் மோட்சத்தை அடைவதில் தீவிர வைராக்யத்துடன் இருக்கின்றானோ அவனைத் தான் தேர்ந்தெடுக்கின்றார்.   அவர்களுக்குத்தான் ஆத்ம ஞானத்தை அடைவதற்கு அனுக்கிரகம் செய்கின்றார்.

 பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி
ததஹம் பக்த்யுபஹ்ருதமஸ்நாமி ப்ரயதாத்மந
:-9-26-நல்ல மனமுடையாரது பக்திவலையொன்றில் மட்டும் அவன் படுகிறான்

சர்வாதிகாரமாய் -சர்வ அநிஷ்ட நிவர்த்தந ஷமமாய்-சர்வ இஷ்ட சாதனமாக வற்றாய்-
ஸூ கரமாய் -சக்ருத் கர்தவ்யமாய் -ஆசுகாரியாய் -ப்ரதிபன்னா நர்ஹமாய்
ப்ரஹ்மாஸ்த்ர பந்தம் போலே ஸ்வ பலத்திலே உபயாந்தர பிரயோக அசஹமாய் இருந்துள்ள ப்ரபத்தி

3-இத்தாலே -ஸ்வ கத ஸ்வீ கார அநுபாயத்வமும் -பரகத ஸ்வீ கார உபாயத்வமும் -சொல்லப்படுகின்றன என்று சிலர் சொன்னார்கள்கீழ் சொன்ன ஸ்ருதி வாக்யத்தை பக்தி பரமாக யோஜிக்கிற ஸ்ரீ பாஷ்ய ஸூக்திக்கும் விரோதிக்கும்

பலம் அத உபபத்தே —3-2-37--இவன் இடம் இருந்தே கர்ம பலன் பெறுகிறார்கள்
கர்மம் க்ஷணிகம்-ஸர்வஞ்ஞன்-ஸர்வசக்தன் -காருணிகன் -உதார குணம் -ஆதியும் அந்தமும் இல்லாதவன்-ஆகவே கர்மத்தால் ப்ரீதனாகி இவனே பலன் அருளுகிறார் -நாம் உபாஸனம் செய்யத் தேவையில்லை என்பது பொருந்தாது-

4-பக்தியால் அஹங்கார வாதம் -நான் செய்கிறேன் என்னும் வாதம் -விலக்கத்தக்கது -ஸ்வ ஆத்ம சரீரகதயா பரமாத்ம உபாஸந விதாயக -தன்னை சரீரமாக யுடையவனாக பகவானை உபாஸிக்கும் படி யாணையிடும் -ஸ்ருதி ஸூத்ர பாஷ்யாதி பரிசய வைதேசிகருக்கும் -தேர்ச்சி இல்லாதவருக்கும் கூட அருசிக்கும் -சுவைக்காது

அஹம் என்ற மாத்ரத்தாலே -என்பதாலே மட்டுமே -அஹங்காரம் வரில் -வரும் என்றால் -பகவத் கைங்கர்யாதிகளிலும் இது துஷ் பரிஹரமாம் -தவிர்க்க முடியாத ஓன்று அன்றோ -கைங்கர்யத்தையும் விட்டு விடலாமோ -கூடாதது அல்லவா-வ்யாஸாதிகளுடைய தன்னிஷ்டையும் -அதன் நிலைப்பும் -விரோதிக்கும் -வ்யாஸாதிகளுக்கும் பகவத் பாரதந்தர்ய ஞானத்தில் -தத் உபதேஸம் கடியாது –

கர்ம யோகங்கள் தேவதா அந்தர்யாமி -பரமாத்ம பரங்கள் -எம்பெருமானார் சரீரங்களாகக் கொள்பவை -ஆகையால் தத் அங்கத்வத்தால் -கர்ம யோகங்கள் அங்கமாக இருப்பதால் -வரும் அவத்யம் கேடு இல்லை -அவ்வாறு உண்டாகில் நைமித்திகங்களும் த்யாஜ்யமாம் -விட வேண்டியவையே –

இஷ்டாபத்தியில் -பிடித்த கர்மாக்களைச் செய்வதில் -மநீஷீ வைதிக ஆசாரம் மநஸாபி ந லங்கயேத் -லஷ்மீ தந்த்ரம் -17-94-அறிவுள்ளவன் வேதத்தில் விதித்த நடைமுறைகளை மனதாலும் மீறக்கூடாது -இத்யாதி பிரமாணங்களும் தந் நிஷ்டாசாரமும் -அதில் நிலைத்தவர்களின் செயலுக்கும் விரோதிக்கும்-

மஹா பாரதத்தில் -சாந்தி பர்வாவில் -யஞ்ஞ அக்ரஹர அத்தியாயத்தில் -தேவர்களைக்குறித்து செய்யும் யாகத்தின் ஹவிஸ்ஸை ஏற்றுக் கொண்டு அவர்களின் அந்தர்யாமியான எம்பெருமான் மகிழ்ந்து பாலன்ஸ் அளிக்கிறான் -அக்னி -அக்ரம் நயதி -முன் நின்றும் ஜீவர்களை நடத்திச் செல்பவன் என்றும் எம்பெருமானையே குறிக்கும் -இதே போலவே இந்திரன் சிவன் சப்தங்களும் அவனையே குறிக்கும் –
ஸாஷாத் அபி அவிரோதம் ஜைமினி -1-2-29–அனைத்துப் பெயர் சொற்களும் நேராகவே கூட எம்பெருமானையே குறிக்கும் எனக்கொள்வதில் முரண்பட்டு இல்லை என்கிறார் ஜைமினி
ஸ்ரீ ஹஸ்திகிரி மஹாத்ம்யத்திலும் ப்ரம்மா வேள்வியைச் செய்ய பரஞ்சுடர் உகந்து பேர் அருளாளன் ஆவிர்பவித்து அருளினார் அன்றோ –

பக்தி த்யாகத்தில் ஹேது -தத் அசக்தியும் விளம்ப அஷமதையும் அபிராப்தமாயுமாகையும் -ஆழ்வார்களில் விளம்ப அஷமதையும்-அபிராப்தமாயுமாகையும் -நம்மிடம் அசக்தியும் காணலாம்பாலாழி நீ கிடைக்கும் பண்பை யாம கேட்டேயும்
காலாழும் நெஞ்சு அழியும் கண் சுழலும்
நீலாழிச் சோதியாய் ஆதியாய் தொல்வினை என்பால் கடியும்
நீதியாய் நிற் சார்ந்து நின்று
ஆழ்வார்களும் பக்தி அனுஷ்டான அசக்தியும் சொல்லலாம்

அவபோதிதவாநிமாம் யதா
மயி நித்யாம் பவதீயதாம் ஸ்வயம் |
க்ருபயைததநந்ய போக்யதாம்
பகவந்! பக்திம் அபி ப்ரயச்ச மே ||
-ஶ்லோகம் 54 –

என் ஸ்வாமியே! எப்படி உன்னுடைய நிர்ஹேதுக க்ருபையால் என்னுடைய சேஷத்வத்தை எனக்கு அறிவுறுத்தினாயோ, அதேபோல வேறு எங்கும் கிடைக்காத, உன்னிடத்தில் பக்தி செய்யும் அந்த இனிய அனுபவத்தையும், நீயே அளிக்க வேண்டும்.

நநு ப்ரபந்நஸ் ஸக்ருதேவ நாத!
தவாஹம் அஸ்மீதி ச யாசமாந: |
தவாநுகம்ப்ய: ஸ்மரத: ப்ரதிஜ்ஞாம்
மதேகவர்ஜம் கிமிதம் வ்ரதம் தே ||
-ஶ்லோகம் 64 –

ஸ்வாமி! “நான் உன்னிடத்தில் ஒருமுறை சரணடைந்துள்ளேன்” என்றும்
“உனக்கே நான் தொண்டு செய்ய வேண்டும்” என்றும் சொல்லி,
நீ கடற்கரையில் விபீஷணன் சரணடைய வந்த ஸமயத்தில் செய்த சபதத்தை நினைக்கும் நான்,உன்னுடைய கருணையைப் பெறத் தகுந்தவன்; தேவரீருடைய சபதம் என் ஒருவனைத் தவிர்த்தோ?-ப்ரபன்னர் பக்தி பிரார்த்தனையும் ஸ்வயம் ப்ரயோஜநமாகவும்ரஸ்யதா அதிசயத்தாலே ஒழிய சாதந புத்தியால் அன்றுபஜந ஸூகம் ஏகஸ்ய விபுலம் -பல ரூபமான பக்தி மூலம் பெரும் பகவத் அனுபவம் அபரிச்சேதம்

யா ப்ரீதி அவிவேகாநாம் விஷயேஷு அநபாயிநீ த்வாம் அநு ஸ்மரத ஸா மே ஹ்ருதயாத் மாபஸர்ப்பது – ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-20-19-(விவேகம் அற்றவர்களுக்கு சிற்றின்பத்தில் மிக்க ஈடுபடக் உள்ளது போல் உன்னையே அனைவரதும் நினைத்துக்கொண்டு இருக்கும் அடியேனுக்கு உம்மிடம் ஈடுபடக் விலகாமல் இருக்காய் அருளிச் செய்யவேணும் -ப்ரஹ்லாதாழ்வான் பிரார்த்தனை –இத்யாதிகள் படியே) ரஜஸ் தமோ குண உன்மேஷம் இல்லாத -ஸத்வஸ்தருக்கு -சத்வ குணம் மிக்கிருப்பாருக்கே பக்தியானது ரஸ்ய தமமாய் இருக்கும் –
மின் கொள் சேர் புரி நூல் குறளாய் அகல் ஞாலம் கொண்ட
வன் கள்வ னடி மேல் குருகூர்ச் சடகோபன் சொன்ன
பண் கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திரு வண் வண்டூர்க்கு
இன் கொள் பாடல் வல்லார் மதனர்; மின்னிடை யவர்க்கே.
–6-1-11-காமினிகளுக்குக் காமுகர் எவ்வளவு, ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அவ்வளவு ஆவர் இதனைக் கற்க வல்லவர்கள்.

பூர்வோக்த பக்தி பரித்யாக ஹேது -உடையவனுக்கு ப்ரபத்தியில் அதிகாரம்-பக்தியில் அசக்தியே ப்ரபத்திக்கு அதிகாரம் –
நயநே வ்ருஷாசல இந்தோ தாரா மைத்ரீம் ததா நயா கருணே
த்ருஷ்டஸ் த்வயா ஏவ ஜனிமான் அபவர்க்கம் அக்ருஷ்ட பச்ச்சயம் அநு பவதி —தயாசாதகம் -20-
தயா தேவியே! திருமலையில் உதித்த குளிர்ந்த சந்திரன் போன்ற ஸ்ரீநிவாஸனின் திருக்கண்களின் விழியினுடைய நட்பை நீ கொண்டுள்ளாய் . உன்னால் பார்க்கப் பட்ட மனிதன் ஒருவன், உழவு போன்ற சிரமம் இன்றி கிட்டும் பலன் போன்று, எந்த விதமான முயற்சியும் இன்றி மோக்ஷம் அடைகிறான்.

இப் பிரபத்தி தான்-அந்தணர் அந்தியர் எல்லையில் நின்ற அனைத்துலகுக்கும் – ஸர்வாதிகாரமாய் -ஸர்வ பல ப்ரதமாய் -சதுர்வித பலத்துக்கும் ஸாதனமாய் -ஆநு கூல்ய சங்கல்பம் -பிரதிகூல வர்ஜனம் -மஹா விஸ்வாஸம்-கார்ப்பண்யம் -கோப்த்ருத்வ வரணம் என்னும் அங்க பஞ்சக உபேதமாய் -இச்சா அநு குணமாக பிராரப்த கர்மங்களையும் போக்குவதாய் இருக்கும் –
தாவதார்த்தி ததாவாஞ்சா தாவந் மோஹா ததா அ ஸூகம் -யாவந் ந யாதி சரணம் த்வாம் அசேஷ அக நாஸகம்
-விஷ்ணு -1-9-73-சரணாகதி செய்யாத வரையில் தானே ஜீவர்களுக்கு இழந்த செல்வத்தைப் பெறவும் புதிதாக செல்வத்தைப் பெறவும் ஆத்ம அனுபவத்தை பெறவும் ஆசையும் அனுபவிக்கப் பெறாத நிலையும் கவலையும் இருக்கும்
மோக்ஷத்தையே மட்டுமே குறித்துச் செய்யும் பிரபத்திக்கு பல -சங்க -கர்த்ருத்வ த்ரிவித -தியாகமும் வேண்டும் –

ப்ராரப்தே தர பூர்வ பாபமகிலம் ப்ராமதிகம் சோத்தரம்
ந்யாசேன ஷபயன் நநப்யுபகத பிராரப்த கண்டம் ச ந
தீ பூர்வோத்தர பாப்மா நாமஜந நாஜ் ஜாதே அபி தன்நிஷ்க்ருதே
கௌடில்யே சந்திம் சிஷயா அப்ய நதயநம் க்ரோடீகரோதிம் ப்ரபு
–அபராத பரிஹார அதிகாரம்-18-

இவ்வர்த்தத்தில் ஸ்ரீ பாஞ்சராத்ரம் அத்யந்த ஜாகரூபமாய் இருக்கும் -இதனுடைய மஹாத்ம்யம் பாஞ்சராத்ரஸ்ய க்ருத்ஸ்நஸ்ய வக்தா நாராயண ஸ்வயம் -சாந்தி பர்வம் -359-58-இத்யாதிகளிலே கண்டுகொள்வது
-ஆநு கூலஸ்ய ஸங்கல்ப பிராதி கூலஸ்ய வர்ஜனம் ரஷிஷ்ய தீதி விஸ்வாஸ கோப்த்ருத்வ வரணம் ததா ஆத்மநிஷேப்ய கார்ப்பண்யே ஷட் விதா ஸரணாகதி அஹிர்புத்ந்யா ஸம்ஹிதை -37-28-29-
ஸத் கர்ம நிரதா ஸூத்தோ சாங்க்ய யோக விதஸ் ததா -நார்ஹந்தி சரணஸ் தஸ்ய கலாம் கோடி தமீமபி -லஷ்மீ தந்த்ர -16-62-
நிஷே பாபர பர்யாய ந்யாஸ பஞ்சாங்க ஸம்யுத ஸந் ந்யாஸ ஸத்யாக இத் யுக்த ஸரணாகதி ரித்யபி -லஷ்மீ தந்த்ர-17- 74-இத்யாதிகளைக் கொண்டு அறியலாம் –

தயிரில் வெண்ணெய் -உயிர் இனத்தில் அந்தணன் -வேதங்களில் ஆரண்யகம் -ஒவ்ஷதங்களில் அம்ருதம் – இதே போல் பாஞ்சராத்ரம் நான்கு வேதங்களுக்கும் சமம் -ஸாரம் –ஸ்வயமாக தானே அருளிச் செய்த ஏற்றமும் உண்டு -முனி ஸ்ரேஷ்டர்களால் ப்ரமாணமாகக் கொள்ளப்பட்டது -தர்க்கபாதம் –

ஸூத்ரம் –211-விஞ்ஞானாதி பாவே வா தத் அப்ரதிஷேத –2-2-41-வேதாந்தத்தில் கூறப்பட்ட பரம புருஷனின் உபாசனத்தையும் அவனை அர்ச்சிப்பதையும் பாஞ்ச ராத்ரம் விளக்குவதால் அது முழுவதுமே பிரமாணம் என்பது சித்தம் –ஸூத்ரம் –212–விப்ரதிஷேதாச் ச -2-2–42--இந்த பாஞ்சராத்ரத்திலும் ஜீவனின் உத்பத்தியை விசேஷமாக நிஷேதித்து இருப்பதால் இது வேதத்துக்கு முரண் அற்றது-அசேதநா பரார்த்த ச நித்யா சதத விக்ரியா த்ரி குணா கர்மிணாம் க்ஷேத்ரம் ப்ரக்ருதே ரூப முச்யதே வ்யாப்தி ரூபேண ஸம்பந்த தஸ் யாச்ச புருஷஸ் யச ஸஹ்ய நாதி ரநத் தச்ச பரமார்த்தே நிச்சித -என்று பாஞ்ச ராத்ரத்திலே ஜீவனுக்கு உத்பத்தி நிஷேதிக்கப்பட்டது ஆகையால் ஸ்ருதியுடன் சிறிதும் முரண்பாடு இல்லை-பாஞ்சராத்ரத்தின் அப்ரமாண்யம் பரபக்ஷமாகையாலே தந் நிராகரணமும் இப்பாத சங்கதமாகக் குறையில்லையே -இதை உத்சர்க்க அபவாத முறை –

பாஞ்ச ராத்ரே ச பவ்த்தே ச ஸ்காந்த புராணம் இத்யாதிகள் தாமஸகங்கள் ஆகையால் ஸாத்விக ப்ரதிபன்னமான ஏதத் ப்ராமண்யத்திற்கு பாதகங்களாக மாட்டா-

சிலர் ஸ்வார்த்த ப்ரபந்நன் -என்ற ஒரு அதிகாரி உண்டு என்றார்கள் -பூனைக்குட்டியைத் தாய்ப்பூனை காப்பது போல் அவனே நன்மை காத்தருள இருக்க-மோக்ஷ பலனுக்காகவும் நாமே செய்யும் ப்ரபத்தியும் கூடாதே –ஸ்வாதீந கர்த்ருத்வ போக்த்ருத்வ -ஸ்வார்த்த கர்த்ருத்வ போக்த்ருத்வ ப்ரம ரூபங்களான அஹங்கார மமகாரங்கள் அடி அறுத்தவர்களே -அஹங்கார ரஹிதர்களுக்கே முமுஷுத்வம் ஸாஸ்த்ர ஸித்தமாகையாலே மோஷார்த்த ப்ரபத்தியில் ஸ்வார்த்ததா ப்ரபத்திக்கு அவகாசமில்லை -ஆகையால் இது அத்யந்த ஹாஸ்யம்-என்பர்-ஆநு கூல்ய ஸங்கல்ப-ப்ராதி கூல்ய வர்ஜனங்கள் ஸம்பாவித ஸ்வபாவங்களாம் இத்தனை ஒழிய அங்கங்கள் அன்று என்று சிலர் சொன்னது -தத் அங்கத்வ போதக வசன ஸத பாதிதமாகையாலே அநுப பந்நம் -பிரபத்தி காலத்தில் இவை தேவைதான் -அதற்குப்பிறகு தொடர்பு நாட்களில் ஒருகால் இவை இல்லாது போனாலும் தகுந்த ப்ராயச்சித்தம் செய்து கொண்டால் செய்த பிரபத்திக்கு பலன் குறைவற்று இருக்கும் என்பதே தாத்பர்யம் –ஸாத்ய உபாய சோதன அதிகாரத்தில் தேசிகர் ஸாதித்து அருளுகிறார்-பராபேஷா ந வித்யதே -அங்கங்களை எதிர்பார்ப்பதில்லை -ஸநத்குமார ஸம்ஹிதை -என்றது பிரபத்தியைப் பற்றியது அல்ல -மற்ற உபாயங்களைப் பொறுத்தே விதிக்கப்பட்டவை -ஸாமான்ய நிஷேதத்துக்கு விஹித வ்யதிரிக்த விசேஷம் விஷயத்வம் -பொதுவானவற்றை விலக்குவதற்கு குறிப்பிட்டுச் சொல்லும் வசனம் -வேண்டுமிறே -இல்லையாகில் நிர்விசேஷ வாதம் பிரசங்கிக்கும்
பராபேஷா ந வித்யதே –இதற்கு முன்பு பிரபத்தே க்வசித்தபி ஏவம் என்றும் கீழ் பக்தியோகத்தின் அங்கங்களை விளக்கி மற்றொரு நிவ்ருத்தி தர்மமான ப்ரபத்திக்கும் அவ்விதம் இருக்கும்போதே என்கிற சங்கைக்கு பதிலாக அங்கங்களை எதிர்பார்க்காது என்றுள்ளது

விஸ்வாஸம் அங்கம் -மற்றவை அங்கங்கள் அன்று என்பதாலேயே – விஸ்வாஸ பூர்வகம் (பாஷ்யகாரரின் முக்தக வாக்யம் என்று நிஷேப ரக்ஷையில் பூர்வபக்ஷ ப்ரகரணத்தில் ) என்று அருளிச் செய்ததும் தத் ப்ரதான்ய அபிப்ராயத்தாலே தான் -இல்லையாகில் துல்ய நியாயதையாலே இதற்கும் அங்கத்வம் இல்லையாம் -ஸாஸ்த்ர பிரதிபன்னங்களில் -ஒன்றைச் சொன்னது ஹானோ பாதாந ந்யாயத்தாலே மற்றவைகளுக்கும் உப லக்ஷணம் -மந்திரத்தில் இவ் வுருப்புக்கள் இருக்கும்படியை ரஹஸ்ய த்ரய சாராதிகளிலே அருளிச் செய்கிறார் -த்வயத்தில் இவ்வைந்து அங்கங்களும் குறிப்பிட்டு இருக்கும்படியை ரஹஸ்ய த்ரய ஸாரம் -நிஷேப ரக்ஷை -சில்லறை ரஹஸ்யங்களிலும் அருளிச் செய்கிறார் –இதில் பர ந்யாஸம் ப்ரபத்தியின் அங்கிது சாங்க அனுஷ்டானத்துக்கு நடாதூரம்மாள்(இவர் ஸ்ரீ வாத்ஸ்ய வரதகுரு. தேசிகனின் ஆசார்யரான அப்புள்ளாரின் ஆசார்யர் ) அருளிச் செய்யும் சுருக்கு –அநாதி காலம் தேவரீருக்கு அநிஷ்டாசரணம் பண்ணுகையாலே சம்சரித்துப் போந்தேன்-இன்று முதல் அனுகூலனாய் வர்த்திக்கக் கடவேன் –பிரதிகூலாசரணம் பண்ணக் கடவேன் அல்லேன் –தேவரீரைப் பெறுகைக்கு என் கையில் ஒரு கைம் முதல் இல்லை –தேவரீரையே உபாயமாக அறுதி இட்டேன் –தேவரீரே உபாயமாக வேணும் –அநிஷ்ட நிவ்ருத்தி இலாதல் இஷ்ட ப்ராப்தி இலாதல் எனக்கு இனி பரமுண்டோ

க்வசித் ததஸ்கத்வ (அதுவே என ) வாதம் -உபாய கோப்த்ரு பத ஏகார்த்த அபிப்ராயம் தத் பேத வ்யபதேசம் (அவற்றுள் வேறுபாடு என்ற குறிப்பு ) உபாயே க்ருஹ ரஷித்ரோ இத்யாதி பிரமாண ஸித்தம் -அங்காதிகளுக்கு பிரமாண ஸம்ப்ரதாய அனுகுணமாக ஈஷத் பேதம் (சிறிது வேறுபாடு கண்டு கொள்வது ) -உபாயத்வ யாஸ்ந அங்கத்வம் சொல்லுகிற இடத்திலும் உபாய ஸப்தம் கோப்த்ருத்வ பரம் -கோப்த்ருத்வ வரண அங்கித்வம் சொல்லுகிற வசனங்களில் கோப்த்ருத்வ பரம் உபாயத்வ பரம்-பிரபத்யங்க பக்தி பலத்தை பிரபத்தி மாத்ரத்தாலே தருகையாலே ப்ரபன்னனுக்கு ஈஸ்வரன் விசேஷத-குறிப்பாக -உபாயம் -என்றது

பிரபத்தி மோக்ஷ உபாயம் அன்றாகில் பஹு பிரமாண ஸம்ப்ரதாய விரோதங்கள் ப்ரசங்கிக்கும் -ந்யாஸம் ஏஷாம் தபஸாம் அதிரிக்தம் ஆஹு -ஓமிதி ஆத்மாநம் யுஞ்ஜீத -பக்த்யா பரமயா வாபி ப்ரபத்யா வா மஹாமதே ப்ராப்யோஹம் -பல பிரமாணங்கள் உண்டு -அகலகில்லேன் இத்யாதியாலே ஆழ்வார் பிரபத்தி பண்ணுகிறார் -இதிலே த்வயத்தில் போலே பர ந்யாஸ ப்ரதிசம்பந்தி -சேஷி விசேஷண தயா பெரிய பிராட்டியாரைச் சொல்லுகையாலே அவனுக்கும் உபாயத்வம் தோற்றுகிறது

1-லஷ்ம்யா ஸஹ ஹ்ருஷீகேஸ தேவ்யா காருண்ய ரூபயா-ரஷக ஸர்வ சித்தாந்தே வேதாந்தேஷு ச கீயதே -லஷ்மீ தந்த்ரம் -ஆணையிடுபவன் எம்பெருமான் -கருணையே வடிவெடுத்தவளும் இந்த விபூதியில் விளையாட்டு நிலமாக்கி லீலா ரஸத்தை அனுபவிப்பவளுமான பெரிய பிராட்டியாருடன் கூடி நின்றே அனைத்தையுமே காப்பவனாகிறான் என்று எல்லா ஸித்தாந்தங்களாலும் உபநிஷத்துக்களாலும் புகழப்படுகிறான் –

2-ஆத்ம வித்யா தேவி த்வம் விமுக்தி பலதாயிநீ -விஷ்ணு புராணம் -ஹே தேவி மோக்ஷம் அடைவிக்கும் வித்யைக்கு அதிபதியானவளும் ஸம்ஸார பந்தத்தில் இருந்து விடுவிப்பவளும் நீயே

3-ஸர்வ ஐஸ்வர்ய குணோபேதா நித்யம் தத் தர்ம தர்மிணீ -லலிதா ஸஹஸ்ரநாமம்-அனைத்தையும் நியமிக்கும் குணமுடையவளும் -எல்லா நன்மைகளையும் பெற்றவளும் எப்போதும் எம்பெருமான் செயல்களையே ஒட்டியே நடப்பவளும் நீயே-4-ஸர்வேச்சா பரிபூரிகா -லலிதா ஸஹஸ்ரநாமம் -அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றும் திறன் உடையவளும் நீயே-5-தர்ம காமார்த்த மோக்ஷதா -லலிதா ஸஹஸ்ரநாமம் -அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய அனைத்து பலன்களை அளிப்பவள் நீயே -6-பர நிர்வாண தாயிநீ -லலிதா ஸஹஸ்ரநாமம் –உயர்ந்த பலமான மோக்ஷத்தையும் அளிப்பவளும் நீயே –

7-வாச பரம் ப்ரார்த்தயிதா பிரபத்யேத் நியத ஸ்ரியம் -சவ்ந ஸம்ஹிதை -வேதத்தில் சொன்ன உயர்ந்த புருஷார்த்தத்தைத் பெற விரும்புபவர்கள் தவறாமல் பெரிய பிராட்டியாரை சரணம் அடைய வேண்டும் –
8-ஸர்வ காம ப்ரதாம் ரம்யாம் ஸம்ஸார ஆர்ணவ தாரிணீம் -ஸ்வயாம்புவம் -அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றுபவளும் நம் ஹிதத்தை விரும்புபவளும் ஸம்ஸாரமாகிற கடலைக் கடத்து விப்பவளும் நீயே –
இத்யாதி பிரமாணங்களையும் இங்கே பராமர்சிப்பது -விசிஷ்டேண மோக்ஷ உபாயம் என்பதை நிரூபிக்க எட்டு பிரமாணங்களை நிரூபிக்கிறார் –

அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநத விவித பூத விராத ரக்ஷைக தீக்க்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||ஸ்ரீ பாஷ்யம்-மங்கள ஸ்லோஹம்-

இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.

1- ஸ்ரீ நிவாஸனுக்கு லோகங்களைப் படைத்தல் காத்தல் அழித்தல் விளையாட்டு போல் எளிதானவை
2-சிந்தனை எப்போதும் அடியார்களை ஸம் ரக்ஷணம் செய்வது மட்டுமே
3- வேதாந்தங்களில் இரத்தினம் போல் ஒளிவிடும் ப்ரஹ்மம் அவனே
4- மென்மையான அவனிடம் எனக்கு பக்தி ரூபாபன்ன ஞானம் உண்டாக அவன் அருளட்டும்

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரங்களில் எங்குமே ப்ரஹ்ம லக்ஷ்மீ சம்பந்தம் குறிப்பிடப்படக் காணோம்.
ஆகிலும் ஸ்ரீ எம்பெருமானார் நூல் சுருக்கமே போலத் தோற்றும் முதல் ச்லோகத்திலேயே ஸ்ரீ எம்பெருமானை ஸ்ரீ நிவாசன் என்றார்.
இது ஸ்ரீ ஆழ்வார்கள் எல்லார்க்கும் மிக்கோனான எம்பெருமானை ஸ்ரீரிய:பதி என்றே கண்டதாலும்,
திரு இல்லாத் தேவரைத் தேரேன்மின் தேவு என்றதாலுமே ஆகும்.

பிரஹ்மணி! ஸ்ரீநிவாஸே – அவனே ஸ்ரீநிவாஸ பர பிரஹ்மம் என்று
1. ஸ்ரீயப் பதித்தவம்;
2. ஸ்ருஷ்டி ஸ்திதி லயகாரகத்வம் ;
3. ஸர்வாத்ம ஸம்ரக்ஷகத்வம் ;
4. பிரஹ்மணத்வம்
இத்யாதி விசேஷண விசிஷ்ட பிரஹ்மம் ஸ்ரீநிவாஸன் என்பதாக தொடக்கத்தேலேயே
குணாஸ்ரய உபய லிங்க விசேஷ விசிஷ்ய பிரஹ்ம தத்வத்தை பிரதி பாதித்து
அத்வைதிகளின் மிடற்றைப் பிடிக்கிறார் ஸ்வாமி.
-ஐஸ்வர்யம் -உபய விபூதி நாதன் –

ஈஷத் த்வத் கருணா நிரீக்ஷண ஸுதா ஸந்துக்ஷணாத் ரக்ஷ்யதே
நஷ்டம் ப்ராக் ததலாபதஸ் த்ரிபுவனம் ஸம்ப்ரத்யனந்தோதயம்
ச்ரேயோ ந ஹ்யரவிந்த லோசனமன: காந்தா ப்ரஸாதாத்ருதே
ஸம்ஸ்ருத்யக்ஷர வைஷ்ணவாத் வஸுந்ருணாம் ஸம்பாவ்யதே கர்ஹிசித்“-ஸ்ரீ சதுஸ் ஸ்லோகீ – 3வது ஸ்லோகம்
“இந்த மூவுலகும் கொஞ்சம் கருணையுடன் கூடிய உன் பார்வை என்னும் அம்ருதத்தினுடைய நனைப்பதால் இரட்சிக்கப் படுகிறது.-அது கிடைக்காததால் முன்பு அழிந்தது. இப்போது பல வகையாகத் தோற்றமளிக்கிறது.-ஐஹிகம், கைவல்யம், பரமபதம், என்கிற மூவகையான சுகங்களும் மனிதர்களுக்குத் தாமரைக் கண்ணனுடைய திருவுள்ளத்துக்கு இனியவளான உன் திருவருளல்லது மேன்மை ஒரு போதும் எதிர் பார்க்கப் படுவதில்லை யன்றோ”

ஐச்வர்யம் அக்ஷர கதிம் பரமம் பதம் வா
கஸ்மைசித் அஞ்ஜலி பரம் வஹதே விதீர்ய
அஸ்மை ந கிஞ்சித் உசிதம் க்ருதம் இதி அத அம்ப
த்வம் லஜ்ஜஸே கதய க: அயம் உதாரபாவ:–58-

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உனக்கு முன்னால் நின்று கொண்டு ஒருவன் தனது இரு கரங்களையும் தலைக்கு மேல் தூக்கி வணங்கினால் நீ துடித்துப் போகிறாய்! என்ன காரணம்? அவனது கைகள் நோகுமே என்றும், அந்தப் பாரத்தை அவன் தாங்குவானா என்றும் என்ணுகிறாய். இதனால் அவனுக்கு மிகுந்த செல்வமும், உனக்குக் கைங்கர்யம் செய்யும் வாய்ப்பையும், உயர்ந்த மோக்ஷத்தையும் அளிக்கிறாய்.
இத்தனை செய்த பின்னரும் உனது நிலை எப்படி உள்ளது? “ஐயோ! எதனை நினைத்து இந்தக் குழந்தை நம்மிடம் வந்தானோ? நாம் அளித்தது போதுமானதாக இருந்ததா? இதன் மூலம் இவனது வேண்டுதல் பலித்ததா? தெரியவில்லையே!
நாம் குறைவாகக் கொடுத்து விட்டோமோ?”, என்று பலவாறு எண்ணியபடி,
நீ வெட்கப்பட்டுத் தலையைச் சற்றே தாழ்த்தி அமர்ந்திருக்கிறாய்.
இத்தகைய உனது கொடைத்திறன் எத்தன்மை உடையது என்பதை நீயே கூறுவாயாக.

வாழ்த்தி யவனடியைப் பூ புனைந்து நின் தலையைத்
தாழ்த்தி இரு கை கூப்பு என்றால் கூப்பாத -பாழ்த்த விதி
எங்குற்றான் என்றவனை ஏத்தாத என்னெஞ்சமே
தங்க தான் ஆம் ஏலும் தங்கு
–84-

பகவத் விஷயத்திலே ஒன்றும் செய்யாத நெஞ்சே அவனை வாழ்த்தி அவன் திருவடிகளிலே பூக்களைப் புனைந்து உன் தலையை அவன் திருவடிகளில் தாழ்ந்து இரண்டு திருக்கையையும் கூப்பு என்றால் கூப்பாதே (தமது கைகளை திருக்கைகள் என்று வெறுப்பால் அருளிச் செய்கிறார் )பாழ்த்த விதி என்று தம்முடைய அகலுகையைச் சொல்லி வெறுக்கவுமாம் பிராப்தி பிரதிபந்தகமான கர்ம வைகல்யத்தைச் சொல்லவுமாம்

மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை
வாரி மாறாத பைம்பூம் பொழில் சூழ் குருகூர் நகர்க்
காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இப்பத்தால்
வேரி மாறாத பூமேல் இருப்பாள் வினை தீர்க்குமே
–4-5-11-இத்திருவாய்மொழி கற்றார்க்குப் பலம் கொடுப்பாள் பெரிய பிராட்டி,’ என்கிறது

இவளை -ஸ்ரியம் தேவீம் தேவஜூஷ்டாம் உதாராம் -ஸ்ருதி பறை சாற்றும் -அப்படி இருக்க- மாம் ஏகம் சரணம் வ்ரஜ அஹம் த்வாம் ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸூச -இத்யாதிகள் சேரும்படி எங்கனே என்னில் –விஸிஷ்ட தாத்பர்யத்தாலே கூடும் -இல்லையாகில் நிர்விசேஷ சரண்யதை பிரசங்கிக்குமே –விஸிஷ்ட அத்வைத ஸித்தாந்தம் அன்றோ வேதாந்த-நம் ஸித்தாந்தம்-ஆகையாலே ஸ்ரீ விஸிஷ்டனே மோக்ஷ உபாயம் எனத் தட்டில்லை -விஸிஷ்ட பரத்வமிறே பதங்களுக்கு ஸ்வபாவ ஸித்தம்ஸ்வரூபத்தைச் சொல்லும் போது அவ்வோ தர்மங்களைக் இட்டல்லது சொல்ல ஒண்ணாது -அவற்றைக் கழித்துப் பார்க்கில் ஸஸ விஷாண துல்யமாம் –தத்வத்ரய சிந்தன அதிகாரம்

ஸ்ருதி ஸ்ம்ருதி பாஞ்சராத்ர ஸம்ப்ரதாய விருத்தங்களாக -கேவல தர்க்கங்களாலே ஓர் அர்த்தம் ஸித்தியாது -ஸித்திக்குமாகில் ஸ்வ அபிமத புருஷகாரத்வாதிகளும் நிர்விசேஷங்களாக ப்ரசங்கிக்கும்
ஸ்ருதேஸ் து ஸப்த மூலத்வாத் –2-1-27-என்றார் இறே ஸூத்ரகாரர் -ப்ரஹ்மத்தை அவயவம் கிடையாதா போது பஹுஸ்யாம் -ப்ரஹ்மமே பலவாகக் ஆயிற்று என்பதை எவ்வாறு பொருந்தும் எனில் விலக்ஷணமான தர்மம் -பிராட்டிக்கு எப்போதும் சேர்ந்தே இருப்பது -என்று வேதம் சொல்வதைக் ஒத்துக் கொள்ளத் தானே வேண்டும் என்கிறது இதில்-

து சப்தம் பக்ஷத்தை விலக்குவது
ஸ்ருதேஸ்–ப்ரஹ்மத்தின் இருப்புக்கு ஸ்ருதியே பிரமாணம் ஆகையாலே -இப்படி நேராது
சப்த மூலத்வாத்-ஸ்ருதி என்னும் சப்தத்தையே ஆதாரமாக -நம்பிக்கை காரணமாக -ஏற்று இருப்பதால்-பிரமாணாந்தரங்களுக்கு விஷயமாகாத ப்ரஹ்மத்திற்கு ஸ்ருதி கூறியபடி
நிர் அவயவத்வம் -காரணத்வம் -சர்வ சக்தத்வம் -முதலிய தர்மங்களை ஏற்றுக் கொள்வதால் எல்லாம் பொருந்தும்-இதனால் விரோதம் இல்லை-ஆகையால் ஸ்ருதி ஸ்ம்ருதி பாஞ்சராத்ர ஸத் ஸம் ப்ரதாயாதி ஸித்தமான இவ்வர்த்தம் -ஸ்ரீ விஸிஷ்டமான எம்பெருமானே மோக்ஷ காரணம் -என்னும் இவ்வர்த்தம் -ஒருவராலும் ஒரு ஹேதுவாலும் சலிப்பிக்க ஒண்ணாது –
பரதேவதா பாரமார்த்யாதிகார ஆரம்ப ஸ்லோகத்தில்-

ஆத்மைக்யம் தேவதைக்யம் த்ரிகசமதிகதா துல்ய தைக்யம் த்ரயாணாம்
அந்யத்ர ஐஸ்வர்யம் இத்யாதி அநிபுணா பணிதீ ஆத்ரியந்தே ந சந்த
த்ரயந்தை ஏக கண்டை தத் அனுகுண மனு வியாச முக்ய உக்திபி ச
ஸ்ரீ மான் நாராயணோ ந பதி அகிலதநு முக்தித முக்த போக்ய
—சாஸ்த்ர அறிவு முற்றும் அற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் எனில் ,-ஆத்மாக்கள் எல்லாம் ஒன்றே ; தேவதைகள் யாவரும் ஒன்றே ; த்ரிமூர்த்திகளின் தன்மையும் ஒன்றே;-இவர்களின் ஆத்மஸ்வரூபமும் ஒன்றே; இந்த மூவரையும்விட மேலாக இருப்பவன் ஒருவனே ஈச்வரன். ஆனால், இது ஸாரமுள்ளது , இது ஸாரமில்லாதது என்று பிரித்து அறியும் வல்லமையுடையவர்கள், இவைகளை ஏற்பதில்லை-ஒரே கருத்தைச் சொல்லும் உபநிஷத்துக்களினாலும் ,அவைகளோடு ஒத்திருக்கிற , மநு , வ்யாஸர் முதலியவர்களின் ஸூக்திகளாலும் ,எல்லாவற்றையும் சரீரமாக உடையவனும் ,மோக்ஷத்தை அளிப்பவனும், முக்தர்களால் அநுபவிக்கப்படுபவனுமான பிராட்டியுடன் எப்போதும் பிரியாமல் இருக்கிற நாராயணனே , நமக்கும் அனைவருக்கும் எஜமானன் –சேஷீ என்பதாகும் 

அர்த்த ஸ்வபாவ அனுஷ்டாந லோக த்ருஷ்ட்டி குரூக்திபி -ஸ்ருதி ஸ்ம்ருப்தியாம் ஸம் ஸித்தம் கடகத்வம் ஸ்ரியோ விது –லஷ்மீ புருஷகாரத்வே நிர்திஷ்டா பரமர்ஷிபி -பிராட்டியுடைய புருஷகாரத்வத்தை நிரூபிக்கும் பிரமாணம் -ஆறு ஹேதுக்கள் –1-அர்த்த ஸ்வ பாவம் -பெயரின் பொருளால் கிடைப்பது –2-அனுஷ்டானம் -முன்னோர்கள் செய்து காட்டியது -3-லோக த்ருஷ்ட்டி -உலகு நடப்புப்படி நடப்பது –4-குரூக்தி -ஆழ்வார் முதலானோர்களின் அருளிச் செயல்கள் –5-ஸ்ருதிகள் சொல்லுவது –6-ஸ்ம்ருதிகள் சொல்லுவது-

ஸ்ரீயதே -ஸ்ரயதே -ஸீதா சமஷம் காகுத்ஸ்தம் இதம் வசனம் அப்ரவீத் –ரா -3-15-6-
நித்யம் அஞ்ஞான நிக்ரஹாம்-கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம் கிடத்தி உன் திரு வுடம்பு அசைய தொடர்ந்து குற்றேவல் செய்து தொல்லடிமை வழி வரும் தொண்டரோர்க்கு அருளி தடம் கொள் தாமரைக் கண் விழித்து நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்
இடம் கொள் மூ வுலகும் தொழ விருந்து அருளாய்
திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-3-தேவஜூஷ்டாம் -ஸ்ருதி
வாசஸ் பரம் பிரார்த்தயிதா பிரபத்யேத் நியத ஸ்ரியம் -ஸ்ம்ருதி
அர்த்த ஸ்வ பாவ அனுஷ்டான லோக திருஷ்ட்டி குரூக்திபிர் -ஸ்ருத்யா ஸ்ம்ருத்யா ச ஸம் ஸித்தம் கடகார்த்த அவலம்பநம் -நிஷேப ரக்ஷை வசனம் –

ஸ்ரியம் கடக பாவேந ப்ரபத்ய ப்ரதமம் தத-
ஸ்ரீ மந் நாராயணஸ் யாங்க்ரி பஜேதா பீஷ்ட காங்ஷாய
-இத்யாதி பிரமாணங்களை இங்கே அனுசந்திப்பது –

இவ்விடத்தில் சிலர் காருண்ய ரூபையான இவள் விபரீதர் அளவாகவும் க்ருபார்த்த ஹ்ருதயை யாகையாலே இவளிடத்தில் சரண வரணம் பண்ண வேண்டுவதில்லை -என்றார்கள் —மாதர் மைதிலி ராக்ஷஸீஸ் த்வயி ததைவ ஆர்த்த அபராதஸ் த்வயா ரஷந்த்யா பவனாத்மஜாத் –லகுதரா ராமஸ்ய கோஷ்டீ க்ருதா –குணரத்னகோசம் -50-
இது அதிவாதம் ரஸோக்தி -அவளை சரணம் புகுந்த பின்பே அவனை சரணம் அடைய வேண்டும் -கத்யத்ரயத்திலும் பார்க்கிறோம் -அது-இவளிடத்தில் சரண வரணம் பண்ண வேண்டுவதில்லை என்பது – மந்த்ர ரத்ன பிரதம பத வ்யுத்பத்தி –ஸ்ரீ யதே இதி ஸ்ரீ -நம்மால் அடையப்படுபவள் -அதைச் சார்ந்த பிரமாண நிர்த்தேச வையர்த்த்ய ப்ரசங்கங்களாலே ஸூதராம் அப ஹாஸ்யம்
ஸ்ரீ நரஸிம்ஹ அவதார வ்ருத்தாந்தத்தில் கொண்ட சீற்றம் தணிக்க பிராட்டியாரை முன்னிட்டு வேண்டி நின்றதை நினைத்துப் பார்க்க வேண்டும் –
இவ்விடத்தில் இவளுக்கு ஈஸ்வரேண ஸ்வரூபத அபி நித்ய ஸம்ஸ்லேஷம் விவஷிதம் என்றும் ஸத்துக்கள்-அல்வழக்கில் நம்மைப் படிய ஒட்டாதவர்கள் – அருளிச் செய்வர்கள்

சாந்தானந்த மஹாவிபூதி பரமம் யத்ப்ரஹ்ம ரூபம் ஹரே:

மூர்த்தம் ப்ரஹ்ம ததோபி தத்ப்ரியதரம் ரூபம் யதத்யத்புதம்

யாந்யந்யானி யதாஸுகம் விஹரதோ ரூபாணி ஸர்வாணி தாநி

ஆஹுஸ்வைரநுரூபரூபவிபவைர் காடோப கூடாநி தேசது:ஶ்லோகீ – ஸ்லோகம் 4

“பகவானுடைய எல்லா வகையான உருவங்களிலும் உன் சம்பந்தம் உண்டென்பது இதில் பேசப்படுகிறது. அமைதியோடு முடிவில்லாத மகாவிபூதி என்னும் பரமபதத்தில் ஸ்ரீ மஹாவிஷ்ணுவுக்குத் திருமேனியாக உள்ள எந்த உருவமோ அதைவிட மிகவும் பிரியமான உருவம் எதுவோ, எது ஆச்சர்யமானதோ சுகத்துக்கேற்றவாறு அவ்வப்போது எடுக்கப்பட்ட லீலையாக எடுக்கின்ற வேறு பல உருவங்களோ அந்த எல்லா உருவங்களும் தனது தகுந்த உருவங்களுடன் பெருமையுடனும் அழுந்தி ஆலிங்கனம் செய்யப்பட்டவையே. இதனால் பகவானுடைய எல்லா நிலைகளிலும் பிராட்டியின் சேர்த்தி சொல்லப்பட்டது.”ப்ரபந்ந பாரிஜாதத்தில் வரத குரூபாத்தா -நடாதூர் அம்மாள் மேற்கோள் காட்டி அருளிய ஸ்ரீ விஷ்வக்ஸேன ஸம்ஹித ஸ்ரீ ஸூக்தியை இங்கே அனுசந்திப்பது

மயா யதா ₂ ஜக₃த்₃வ்யாப்தம் ஸ்வரூபேண ஸ்வபா₄வத ꞉ ।
தயா வ்யாப்த மித₃ம் ஸர்வம் நியந்த்ரீ ச ததே₂ஶ்வரீ ॥॥

மேற் சொல்லிய படி ஸ்வரூபத்தினாலும் குணத்தினாலும் என்னால் இவ்வுலகம் எவ்வாறு வியாபிக்கப்பட்டு இருக்கின்றதோ அவ்வாறே இம்மஹா லஷ்மியினாலும் வியாபிக்கப்பட்டு இருக்கின்றது -என்னைப் போலவே இவளும் இவ்வுலகத்துக்கு நியாமிகையாகவும் ஈஸ்வரியாகவும் இருக்கின்றாள் –

ஸ ஏகோ விபூ –எம்பெருமான் ஒருவனே வியாபித்து இருப்பவன் -என்னில் விபு -நியந்த்ரு பரம் -ஆளும் தன்மையைக் குறிக்கும் என்பதால் ப்ரக்ருத பாதமில்லை –இல்லையாகில் ஞான விபுத்வங்களும் ஸித்தியாது –எங்கும் பரந்து நிற்கும் பொருள்களிலும் ஞானத்தையும் சொல்கிறோமே -அதே கணக்கில் இவளுக்கு சொல்லலாம் அன்றோ –

அணுத்வே சதி சேதனத்வம் –மிதுன சேஷமே சேதன லக்ஷணமாகக் கடவது யதா ஸர்வகதோ விஷ்ணு : ததைவ இயம் த்விஜோத்தம”- என்பது, ஸ்ரீ விஷ்ணுபுராணம், 1. 8 : 17 -இத்யாதிகளை இங்கே அனுசந்திப்பது -ஈஸ்வரனைப் போலவே இவளையும் ஸூஷ்மை என்றால் -அவ்யாஹத ஸர்வாந்த ப்ரவேஸ சமர்த்தை -என்றதாம் -அளவில் சிறியவள் என்னும் பொருளில் இல்லை –எல்லா வஸ்துக்களிலும் உள்ளே புகுந்து நியமிக்கும் திறன் உள்ளவள் என்பதையே சொல்லிற்றாம் –

விப்வீ ச -எங்கும் பரந்தவள் என்றும் அபியுக்தர் சொன்னார்கள் –
வந்தே ஸர்வ கதாம் விஷ்ணு வல்லபாம் விஸ்வ ரூபிணீம் -எங்கும் நிறைந்த யாவுமாய் இருந்து எம்பெருமானுக்கு இனியவனாய் இருப்பவள் -என்று நஞ்சீயர் அருளிச் செய்தார் –
ஸ்ரீ ரிதி விஸ்வ வ்யாபிநீ லஷ்மீ அபி தீயதே -ததா விஷ்வக்ஸேன ஸம்ஹிதாதிஷு அபி தீயதே -உலகெங்கும் பரந்த பிராட்டிமார் ஸ்ரீ என அறியப்படுகிறாள் -இவ்விதமே விஷ்வக்ஸேன ஸம்ஹிதை முதலியவற்றால் அறியப்படுகிறாள் -என்று இவளுடைய விபுத்வத்தை அருளாளப்பெருமாள் எம்பெருமானாரும் த்வய விவரணத்திலே ஸமர்த்தித்தார் –

முகுந்தப்பெருமாளும் தத்வ நிரூபணத்தில் -ஸ்ரீரபி நாராயணவத ஏவ ஸ்வரூபேண குண தஸ்ச விப்வீ -யதா ஆஹ பராசர யதா ஸர்வ கதோ விஷ்ணு ததைவேயம் இதி -எம்பெருமானைப் போலவே இவளும் ஸ்வரூபத்தாலும் குணத்தாலும் எங்கும் பரந்தவள் -பராசரரும் விஷ்ணு புராணத்தில் இவ்வாறு அருளிச் செய்கிறார் -என்று ஸ்பஷ்டமாக இவளுடைய விபுத்வத்தை உபபாதித்தார் -கடாம்புப் பெருமாளும் -தஸ்மாத் ஸ்வரூபதஸ் ஸ்வபாவதஸ் ச ஸ்ரியா வ்யாப்த பரமபுருஷ இதி ஸித்தம் என்று மிதுன நிர்ணயத்தில் விஸ்தரமாக ப்ரதிபாதித்தார்-

சோமாசி யாண்டானும் தத்வ ஸங்க்ரஹத்தில் -ஸேயம் ஸ்ரீ பகவான் இவ முமுஷு உபாஸ்யா ஸர்வ வ்யாபிநீ ச இதி அவ கம்யதே -மோக்ஷ உபாய ஞான விஷயீ பூதஸ்ய பகவத ஸ்ரீ நிவாஸத்வே விசேஷணாத் -ஸ்ரீ யதே இதி ஸர்வ ஸமாஸ்ரயணீய தாயா ஸ்ரீ ஸப்தத ஏவ ப்ரதிபாதநாத் -என்று அந்த உபாசனத்துக்கு விஷயமான ஸ்ரீ நிவாஸனுடன் எப்போதும் கூடியிருப்பவள் என்பதால் மோக்ஷம் விரும்புபவர்களால் எம்பெருமானைப் போலே இந்தப் பிராட்டி மோக்ஷத்துக்கான அறிவுக்கு விஷயமான எம்பெருமான் ஸ்ரீ நிவாஸனின் விசேஷணமாக உபாசிக்கத் தகுந்தவள் -எங்கும் பரந்தவள் என எண்ணப்படுகிறவள் -ஸ்ரீ யதே இதி ஸ்ரீ -அடையப்படுபவள் -என்பதை பெயரே காட்டும் –

வேதார்த்த ஸங்க்ரஹே -பகவத் பாஷ்யகாரர் -பகவத் ஸ்வரூப அனுரூபத் வஸ்ய லஷ்ம்யா ப்ரதிபாதநாத்
ஐஸ்வர்யமபி கைவல்யம் பகவத ப்ராப்தி மேவ ச
ததாதி பஜதாம் ஏஷா தயிதா பரமாத்மந
தயா பரேண பும்ஸேவ வ்யாப்தம் ஏதத் சராசரம்
தயா தேநாபி ரஹிதம் வித்யதே நது கிஞ்சன
ப்ரீதா ஸா சரணாகத்யா ஸஹைவ பரமாத்மநா
போகான் அபவர்க்கம் ச விதரதி அனுகம்பயா
ஞானதஸ் ச ஸ்வரூபேண விஸ்வம் வியாப்ய வ்யவஸ்திதாம் ஞானதஸ் ச ஸ்வரூபேண வியாப்ய தேவ ஸ்திதோ ஹரி
வ்யாப்த ப்ரியாபி அந்யாபி ஞானத பரமேஸ்வர
ந ஸ்வரூபத இத்யேஷ விஸேஷோ ஹி ஸ்ரியோ அநயோ
ஸ்ரிய புருஷகாரத்வ ஸ்த்ரீத்வாத்யா பேதகா ஹரே
பத்யு தண்ட தரத்வாத்யா வதான்யத்வாதய ஸமா -இத்யாதி லஷ்மீ தந்த்ர பரிஸிஷ்ட பாரத்வாஜ ஸம்ஹிதா பரிஸிஷ்ட வசநை
யுக்தார்த்த த்வயஸ்யாபி ப்ரதிபாதநாத்
-என்று ஸ ப்ரமாணமாக லஷ்மீ ஸ்வரூபத்தை நிரூபித்தார்

ஸ்ருதியும் ஹ்ரீஸ் ச தே லஷ்மீஸ் ச பத்ந்யவ் –அஸ்ய ஈசானா ஜகத விஷ்ணு பத்நீ –-இவையும் பிரமாணங்கள்-லஷ்மீ தந்திரத்தில் அடங்கிய பாரத்வாஜ ஸம்ஹிதையிலும் -எம்பெருமானின் பிரிய மனைவியான பிராட்டிமார் தன்னை வணங்குபவருக்கு -செல்வம் கைவல்யம் மோக்ஷம் -ஆகிய அனைத்தையுமே வழங்குபவள் -எம்பெருமானைப் போலவே உலகனைத்தும் இவளால் சூழப்பட்டவை –அவர்கள் இருவராலும் சூழப்படாத வஸ்து ஒன்றுமில்லை -சரணாகதியால் எம்பெருமானிடம் சேர்ந்து அவளும் மகிழ்பவளாய் கருணையினால் இவ்வுலக மற்றும் மேல் வுலக இன்பங்களையும் அளித்து அருளுகிறவள் -தனது ஸ்வரூபத்தாலும் ஞானத்தாலும் உலகை சூழ்ந்து நடத்துகிறாள் -ஹரியும் இப்படியே தான் ஸ்வரூபத்தாலும் ஞானத்தாலும் உலகைச் சூழ்ந்து இருக்கிறான் -பிராட்டியினுடையவும் மற்றவர்களுடையவும் ஞானத்தால் எம்பெருமான் சூழப்பட்டு இருக்கிறானோ -ஞானத்திற்கு விஷயமாகிறான் – மற்றவர்கள் ஞானத்தால் மட்டுமே சூழ்கிறார்கள் -பிராட்டியைப் போல் ஸ்வரூபத்தால் அல்ல
ஹரியைக் காட்டிலும் இவள் வேறுபட்டு இருப்பது -பெண்களுக்கே உரிய தன்மையாலும் -பரிந்து பேசும் புருஷகாரத்வத்தாலும் -இவளைக் காட்டிலும் அவனுக்கு தண்டகரத்வம் உண்டு -இருவருக்குமே காருண்யம் பிரியவசனம் போன்றவை பொதுவானவை –
இவற்றால் பிராட்டியினுடைய ஸ்வரூபம் இன்னது என்றும் நிரூபிக்கப்பட்டது –

கூரத்தாழ்வானும் மந்த்ர விவரணத்திலே –அத்ர அயம் அகார அவ ரக்ஷணே இதி தாதோ நிஷ்பன்ன பரம புருஷம் அபிததாதி-அத்ர ஸ்ரீ மத்வம் விவஷிதம் ஸ்ரீ மத ஏவ ரக்ஷகத்வாத் -என்று திருமந்திர பிரகரணத்தில் அருளிச்செய்து –
த்வய பிரகரணத்திலும் –மந்த்ர அபிப்ரேதம் பகவதோ ரக்ஷகத்வ உபயுக்தம் விசேஷம் அத்ர கண்டத உபாதத்தே ஸ்ரீ மத் பதேந ப்ராப்யத்வம் இவ ப்ராபகத்வம் அபி ஹி ஸ்ரீ மதே ஏவம் -ஸ்ரீமாந் ஏவ ஹி ரக்ஷகோ பவதி -என்று அருளிச் செய்தார்-தேவத்வமும் ரக்ஷகத்வமும் -திருவுடன் சேர்ந்தவனுக்கே –ஸ்ரத்தயா தேவ தேவத்வம் அஸ்னுதே -திருவில்லாத்தாத் தேவரை தேறேன்மின் தேவு –
த்வயத்தில் ஸ்ரீ மத் பதம் -மந்திரத்தில் சொல்லப்பட்ட நாராயணனுக்கு ரக்ஷகத்வத்துக்குப் பொருத்தமான விசேஷணம் -அதாவது அடையப்படுபவனாகவும் அடைவிப்பவனாகவும் உள்ள தன்மை பிராட்டியுடன் சேர்ந்தவனுக்கே —பிராட்டியை யுடையவனே ரக்ஷகனாவான்

அவர் தாமே -சாரீரிக சாரத்தில் –ஆனந்தா தய ப்ரதாநஸ்ய -என்ற ஸூத்ரத்தில் -ஆதி சப்தேந -அத்ர ஸ்வரூப நிரூபகம் ஸ்ரீயபதித்தவம் ச பராம்ருஸ்யதே -அத ஸ்வரூப நிரூபகத்வாத் யத்ர யத்ர பகவான் அபிதீயதே தத்ர தத்ர ஸ்ரீரபி –ததா ச சகல பல ப்ரதோ ஹி விஷ்ணு (விஷ்ணு தர்மம் ) பலம் அத இத்யாதி ஷு அபி ஸா தத் விசேஷணம் பவதீதி -ததேவம் பகவத இவ அஸ்யா அபி சகல பல சாதனத்வம் அபி -என்று மோக்ஷ உபாயத்வத்தை அருளிச் செய்தார் –

ஆனந்தாதய ப்ரதா நஸய —3-3-11-ஞான ஆனந்த அமல அந்நதத்வ ரூபங்களான ஸ்வரூப நிரூபக தர்மங்கள் ஸர்வ பர வித்யைகளிலும் உப ஸம்ஹரிக்கத் தக்கவையா இல்லையா என்று சம்சயம்-ஒரு பிரகரணத்தில் உள்ள குணங்களை வேறு பிரகரணத்தில் உப ஸம்ஹரிக்கையில் பிரமாணம் இல்லாமையால் உப ஸம்ஹார்யங்கள் அன்று என்று பூர்வ பக்ஷம்

அதை நிரசிக்கிறார்-ஸர்வ அபேதாத் -என்ற ஸூத்ரத்தில் இருந்து -அபேதாத் -என்பது இங்கு அனுவர்த்திக்கிறது
ஆனந்தாதய ப்ரதா நஸய-ஆனந்தாதி குணங்கள் எல்லா வித்யைகளிலும் உப ஸம்ஹரிக்கத் தக்கவையே-ப்ரஹ்மத்துக்கு சர்வ வித்யைகளிலும் அபேதத்தாலே -ப்ரஹ்ம ஸ்வரூபத்துக்கு இன்றியமையாத ஆனந்தாதி குணங்கள் அனுசந்திக்கக் கூடியவையே
இதனால் ப்ரஹ்ம குணங்கள் அநந்தமாய் இருந்தாலும் உப ஸம்ஹரிக்கக் கூடியவையே என்று கருத்து –-ப்ரஹ்மத்தின் ஆனந்தம் போன்ற தன்மைகள் அனைத்து இடங்களிலும் பொருந்தும் –ஒரு சில குணங்களே சில வித்யைகளுக்கு கூறப்பட்டாலும் –அனைத்து குணங்களுன் கூடிய ப்ரஹ்மம் அனைத்து உபாசனைகளிலும் ஒன்றாகவே இருப்பதால்

எம்பெருமான் ஸ்வரூபத்தை நிரூபிக்கும் தன்மையாக பிராட்டி இருப்பதால் எங்கெல்லாம் அவன் சொல்லப்படுகிறானோ அங்கெல்லாம் இவளும் சொல்லப்பட்டவளாகிறாள் -ஆகையால் அனைத்து பலன்களை அளிப்பவன் விஷ்ணுவே -மாங்கல்ய ஸ்தவம் -49-
பலம் அத உபபத்தே —3-2-37–யாகாதிகளில் கர்மமே அபூர்வத்தின் மூலமாக பலன் தரும் என்று பூர்வ பக்ஷம்

பரம் பொருளின் இடம் இருந்தே பலம் கிட்டுகின்றன -இதுவே பொருந்தும் –
எங்கும் உள்ளவன் -அனைத்தும் அறிந்தவன் -சர்வ சக்தம் -உதாரன் –
யஜ்ஞம் தானம் ஹோமம் உபாசனம் இவற்றால் மகிழ்ந்து அளிக்கின்றான்
ஷணம் நேரம் அழியக் கூடிய கர்மங்கள் பலன்களை தர வல்லமை அற்றனவே என்றவாறு-

நிகரில் புகழாய் –என்று வாத்சல்யம் சொல்லப்படுகிறது -தோஷ போக்யத்வம் வாத்சல்யம் என்று சிலர் மிகையாகச் சொல்லில் -தோஷங்கள் உபாதேயங்களாகும் –தோஷ அதர்சித்வம் -என்றால் ஸார்வஞ்ஞ ப்ரதிபாதிக ஸ்ருதி -ஸ்ம்ருதிகள் விரோதிக்கும்-பக்த தோஷேஷு அதர்ஸனம்--பாவிதம் -நடிப்பு – -தயா சதகம் -அடியார்களின் குற்றங்களை பொருள் படுத்தாது இருக்கச் செய்யும் அன்பு-அவனது சரீரமாகிய நம் மேல் அவன் ஆசை கொள்ளாமல் இருப்பானோ -சாரீரிக மீமாம்ஸைக்கு இதுவே தாத்பர்ய விசேஷமாக இருக்கும் -முமுஷுக்களுக்கு நித்ய அனுபாவ்யமாய் இருக்கும் –

உலகம் மூன்றுடையாய் -என்று ஸ்வாமித்வம் சொல்கிறது –ஸ்வ ரக்ஷண ப்ரவ்ருத்தி அர்ஹன் -உடையவன் உடைமையை ரக்ஷிக்குமதே பிராப்தம் -பிரதான பிரதிதந்தர அதிகாரம் –

என்னை ஆள்வானே -ஸுசீல்யம் ப்ரதிபாதிக்கப்படுகிறது –மஹதோ மந்தை ஸஹ நீரந்த்ர ஸம்ஸ்லேஷ ஸ்வ பாவம் இறே -இது ஸர்வாதிகாரமான ந்யாஸத்தை -ஸரணாகதியை -உள் கொண்டு இருக்கிறபடியை வித்யாபேத அதிகரணத்திலும் -விகல்ப அதிகரணத்திலும் ப்ரஹ்ம ஸூத்ரத்தில் ஸ்பஷ்டமாகக் காணலாம் -பலவான ப்ரஹ்ம வித்யைகள் இருக்க ஏதேனும் ஒன்றைச்செய்ய வேணும் -ந்யாஸ விதியையும் இவற்றுள் ஓன்று –இவற்றுக்கு எல்லாமே ஸுசீல்ய குணம் உறுப்பாய் இருக்கும்

திருவேங்கடத்தானே-அர்ச்சாவதார ப்ரதிபாதகம் -ஸுலப்யம் —ஸ்ருதி ஸ்ம்ருதி பாகத்திலும் -விவஷித குண உப பத்தேஸ் ச இத்யாதி -1-2-2-ஸூத்ரம் தன்னிலும் ப்ரஸித்தம் -ஸூத்ரம் -34–விவஷித குணோபபத்தே —1-2-2-குணங்கள் பொருந்த வேண்டும் என்றால் பரம் பொருளைக் குறித்தே ஆக வேண்டும்-

புகுந்தேன் என்று பர ஸமர்ப்பணம் வ்யஞ்சிதம் ஆயிற்று -தத் அங்கமான விஸ்வாஸமும் இவ்விடத்தில் கண்டோக்தம்

அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே பிராதிகூல்ய வர்ஜனமும் ஆனுகூல்ய சங்கல்பம் திருவடியை நினைத்தாலே தோன்றும்படி -அபயமளிப்பதும் -அணுக எளியதாயும் -போக்யமாயும் -பாவனமாயும் -இருக்கும் திருவடிகளே–அவனும் அவளும் கைவிட்டாலும் விடாத திண் கழலாய் இருக்கும் அன்றோ-

புகல் ஒன்றில்லா -என்று கார்ப்பண்யமும் யுக்தமாயிற்று –புகுந்தேன் என்று அங்கி தோன்றுகிற விடத்தில் கோப்த்ருத்வம் வரணம் தோன்றும்-

இவையெல்லாம் யாமுநாதி சரணாதிகளிலும் உண்டு என்றும் ஸ்தோத்ர பாஷ்ய -ரஹஸ்யத்ரய சாரா -அபய பிரதான சாராதிகளிலே பிரபஞ்சித்தோம்

நிகமன காரிகை ஸ்லோகங்கள்
1-பக்த்யா வ்யாஸாதய ஸக்தா அஸக்தாஸ் ச ப்ரபத்தித
ப்ராப்நுவந்தி பரம் பூர்வே விலம்ப்ய ஸஹஸா அபரே

ஸக்தா-திறனுள்ளவர்களான
வ்யாஸாதய-வ்யாஸர் முதலானோர்
பக்த்யா-பக்தி யோகத்தாலும்
அஸக்தாஸ்-திறன் அற்றவர்கள்
ச ப்ரபத்தித-ப்ரபத்தியாலும்
ப்ராப்நுவந்தி பரம்-பரம புருஷனாலே எம்பெருமானை அடைகிறார்கள்
அதில்
பூர்வே -முதலில் சொன்ன பக்தி யோகிகள்
விலம்ப்ய -தாமதமாகவும்-இனிமையாக இருந்தாலும் -ப்ராரப்தம் அனுபவித்து கழித்த பின்பே-பல பிறவிகளில் பின்பே பலம்
அபரே -மற்றவரான ப்ரபன்னர்கள்
ஸஹஸா -தாமதம் இல்லாமலும் அடைகிறார்கள்
வேண்டிய பொழுதிலேயே பலனைத் தரும் இன்றே இசையின் இணையடி சேர்ப்பர் -இனிப் பிறவோம்

2- கேநாபி ஸூக்ருதேந ஆர்த்தி கேஷாஞ்சித் இஹ ஜாயதே
கேஷாஞ்சித் ததபாவேந ஸஹஸா ஸா ந ஜாயதே

இஹ-இவ்வுலகில்
கேநாபி ஸூக்ருதேந -ஏதோ ஒரு நல்வினையால்
ஆர்த்தி -இந்த ஷணத்திலேயே மோக்ஷம் வேணும் என்னும் துடிப்பு
கேஷாஞ்சித் ஜாயதே -எவருக்காவது பிறக்கும்
கேஷாஞ்சித் -மற்றவருக்கு
ததபாவேந -இவ்வித நல்வினை இல்லாமையால்
ஸா-இத்துடிப்பு
ஸஹஸா ஸா ந ஜாயதே -உடனே பிறப்பதில்லை

3-அத அதிகாரி பேதேந சாதன த்வய ஸம்பவ
பலே து நாநயோ பேத விகல்ப கில ஸூத்ரித

அத -ஆதலால்
அதிகாரி பேதேந-செய்யத் தகுதி உள்ளவர்களுக்குள் உள்ள வித்யாஸத்தைப் பொறுத்து
சாதன த்வய ஸம்பவ -இவ்விரு உபாயங்களும் நேரும்
விகல்ப கில ஸூத்ரித-ஸூத்ரத்தில் இதுவோ அதுவோ என்று சொல்லி யிருக்கிறது அல்லவோ -இது நியத விகல்பம்
பலே து ந அநயோ பேத -ஆனாலும் இருவருக்குள் பலனைப் பொருத்த வரையிலும் வித்யாஸமில்லை

4-கஸ்ஸித் க்ருதீ ஸ்வ யத்நேந நிஹத்ய ரிபு மண்டலம்
புங்க்தே போகான் மஹாராஜ தமேவ ஆஸ்ரித்ய கஸ்ஸன

கஸ்ஸித் க்ருதீ -ஒரு செயலைச் செய்யும்
மஹாராஜ-அரசன்
ஸ்வ யத்நேந-தன் முயற்சியினால்
நிஹத்ய ரிபு மண்டலம் -பகைவரின் கூட்டத்தை அழித்து
புங்க்தே போகான் -அதன் போகத்தை அனுபவிக்கிறான் –
அதே நேரத்திலே ஒரு உயர்ச்சியும் செய்யாமலே
தமேவ ஆஸ்ரித்ய கஸ்ஸன -அவனை அண்டியதாலேயே அப்பலனை அனுபவிக்கிறார்கள் அன்றோ

5-தஸ்மிந் ந்யஸ்த பர தேந துல்ய போகோ மஹீ பதே
தத்வத் பக்தே பிரபத்தேஸ் ச யுஜ்யதே துல்ய போகதா

தஸ்மிந் மஹீ பதே -அந்த எம்பெருமானிடத்தில்
ந்யஸ்த பர-பக்தி யோகம் செய்ய வேண்டிய பளுவை வைத்தானாகில்
தத்வத் தேந துல்ய போக யுஜ்யதே-உண்மையில் எம்பெருமானுக்கு நிகரான இன்பத்தை அடைகிறான் –
பக்தே பிரபத்தேஸ் ச -பக்தியோகம் செய்பவனுக்கும் பிரபத்தி செய்பவனுக்கும்
துல்ய போகதா -அனுபவம் ஒன்றே தான்

6-உபாஸித குணாதே யா ப்ராப்தாவபி அபஹிஷ்க்ரியா
ஸா தத் க்ரது நய க்ராஹ்யா நாகாராந்தர வர்ஜனம்

உபாஸித குணாதே -உபாஸிக்கப்பட்ட குணம் முதலியவைகள்
ப்ராப்தாவபி-பகவானை அனுபவிக்கும் போதும்
யா அபஹிஷ்க்ரியா -எப்படி தள்ளப்பட வில்லையோ
ஸா தத் க்ரது நய க்ராஹ்யா -அவை தத் க்ரது நியாயப்படி அறியத்தக்கது -அதாவது
நாகாராந்தர வர்ஜனம் -உபாஸிக்கப்படாத ஆகாரங்கள் இல்லை என்பது இல்லை –
இருதி நேரத்தில் உபாஸிக்கும் போது தியானித்த குணங்களையே அங்கும் அனுபவிக்கிறான் என்பதால் மற்ற குணங்கள் இல்லை என்பதை இல்லையே

7-க்ருதே த்யாயந் யஜந் யஜ்ஜை த்ரேதாயாம் த்வாபரே அர்ச்சயந்
யதாப்நோதி ததாப்நோதி கலவ் சங்கீர்த்ய கேஸவம்

க்ருதே த்யாயந் -க்ருத யுகத்தில் த்யானத்தாலும்
யஜந் யஜ்ஜை த்ரேதாயாம் -த்ரேதா யுகத்தில் யாகங்கள் செய்தும்
த்வாபரே அர்ச்சயந் –த்வாபர யுகத்தில் பூஜிப்பதாலும்
யதாப்நோதி -எவரை அடைவார்களோ
தத் கேஸவம்-அந்த கேஸவனை
தத் ஆப்நோதி கலவ் சங்கீர்த்ய -கலியுகத்தில் ஸ்தோத்ரம் செய்வதாலேயே ஒருவன் அடைகிறான் –
இவ்வாறு ஸ்தோத்ரம் செய்து பின்பு பக்தி யோகத்திலோ பிரபத்தியிலோ மூட்டி பலனை அளிக்கும் -ஆக பரம்பரை யாகக் காரணம் கொள்ள வேண்டும் –

8-நஹி ஸாஸ்த்ர விரோதேந கஸ்ஸின் ந்யாய ப்ரவர்த்ததே
தஸ்மான் ந முக்தி பேதோஸ்தி இத்யாஹு ஆகம வேதிந

ஸாஸ்த்ர விரோதேந-ஸாஸ்த்ரங்களுக்கு விரோதமாக
கஸ்ஸின் ந்யாய-நியாயங்கள் ஏதும்
நஹி ப்ரவர்த்ததே -சொல்ல இயலாது
தஸ்மான் –ஆகவே
முக்தி பேத-மோக்ஷத்தில் வித்யாஸம் ஏதும்
ந அஸ்தி இதி -இல்லை என்பதாக
யாஹு ஆகம வேதிந–ஆகமங்களை நன்கு அறிந்தவர்கள் கூறுகிறார்கள்
பரம்பரையாகக் காரணங்கள் சொல்வதே பொருத்தம் என்றவாறு –

—————————-

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நயினாராச்சார்யர் சுவாமி திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கம்பராமாயணத்தில் திருமந்த்ரார்த்தம்-ஸ்ரீ சேஷையங்கார்‌ ஸ்வாமிகள்-

September 22, 2025

எம்பெருமான்‌ சர்வ சக்தன்‌ என்பதைப்‌ பால காண்டத்திலும்‌, பக்த ரக்ஷண தீக்ஷிதன்‌ என்பதை அயோத்யா காண்டத்திலும் –பாகவத பரதந்த்ரன் என்பதை ஆரண்ய காண்டத்‌திலும்‌ சரணாகதி தர்‌மம்‌ அபயப் பிரதான வைபவ மிவற்றை யுத்த காண்‌டத்திலும்‌, ஏனைய தர்மங்களை மற்ற இடங்களிலும்‌ கம்பர்‌ வெளி யிட்டிருப்பதைப்‌ பரக்கப் பார்க்கலாம்‌,

கிஷ்கிந்தா காண்டத்தில்‌ ௮னுமப் படலத்தில் ,-மாற்றமஃது உரைத்தலோடும்‌’இல்லாத வுலகத்‌தெங்கும்‌”, என்னும்‌ செய்யுள்களாலும்‌ ** அஞ்சனைக்கொரு சிறுவன்‌” என்று தொடங்கி , துன்‌பினைத் துடைத்‌து மாயத் தொல்வினை”’ என்னுமளவான செய்யுள்களாலும்‌ சொல்லப்பட்ட ஆசார்ய லஷணமான சாஸ்திரார்த்த தத்வ ஞானமும்‌, சதாசார சீலமும்‌ பரத்வ நிச்சயமு முடையனாய்‌, இயல்பாகவே பராநுகூல பரனும்‌ ஸ்வ ப்ரயோஜனத்தில்‌ விருப்ப மில்லாதவனுமா யிருப்பானொருவன்‌,-மஞ்செனத் திரண்ட கோல மேனிய’”என எம்பெருமானை ஸாக்ஷாத் கரித்தவாறே அவனனுக்ரஹத்தால்‌ லோகத்தாரை உஜ்ஜீவிக்கச் செய்யம்‌ சதாசாரிய னாவனென்பது :’மாணியாம் படிவமன்று ” என்‌னுஞ் செய்யுளால் குறிக்கப் பட்டிருக்‌றது –

இப்படியான சதாசார்யனைச்‌ சிஷ்ய யாத்திரையில் பிரவிர்த்திப்பித்து, சம்சார துக்கத்தில் அகப்‌பட்டுழலும் அவரை உடைமை யென்னும்‌ மமகார நிவர்த்தி கண்டு உஜ்ஜீவிக்கும்படி எம்பெருமான்‌ திருவுள்ளம் பற்றுவன்‌ என்பதை, ““அணிகலக் குறியினாலே , வென்றி யானடியன் தன்னை வேறு கொண்டிருந்து கூறித்‌, தென்றிசைச் சேறி யென்றான வனருள் சிதைவதாமோ என்னும்‌ சுந்தர காண்டச்‌ செய்யு ளாலும்‌ தெளியலாம்‌,

இராமாவதார ரஹஸ்யத்தை ஹனுமான்‌ வாக்கால்‌, இராவணனுக்கு அறிவுறுத்தி யிருப்பதையும்‌,-அன்னவர்க் கடிமை செய்வேன் நாமமுமனுமனென்பேன்‌”?
என்ன ஹனுமான வாக்கால் காட்டும்‌ ஆண்டானடிமைத் திறனையும்‌ கருதுமிடத்‌து ஹனுமானை ஈசனருள் பெற்று உலகத்தார்க்கு உறுதி பயக்கும்‌ உண்‌மைப் பொருளை உபதேசிக்கும்‌ நல்லாசிரியனாகவும்‌, பரமபதியின் பிரிவாற்றாமல்‌ துன்புறும்‌ சீதைப் பிராட்டியாருக்கு பதியின்‌ அருள் சின்னத்தைக் காட்டி துயரை நீக்கி பதியை யடைய ஹேது வாயிருந்த திருவாழியை சேதனர்கள்‌ சம்சாரத் துக்கத்தினின்று கரையேறி
எம்பெருமானை யடையும் ஹேதுவான திருமந்த்ரமாகவும் உய்த்து உணரவைத்துக்
கம்பர் சுந்தர காண்டத்தில் ஆசார்ய தர்மத்தையும்‌ திருமந்திர மேம்‌பாட்டையும்‌ வெளியிட்டிருப்பது
நன்கு தெளியத் தக்கது-சுந்தர காண்டத்தில் இந்
துண்ணிய கருத்துக்களடங்கிய உருக்காட்டு படலத்‌தில்‌ 10 செய்யுள்கள் காணத்தக்கது –௮றுபத்‌து மூன்றாவது மீட்டுமுரை”யென்ற செய்யுள் முதல்‌ எழுபத்து இரண்டாவது
-பாழிய பணைத் தோள்‌”
என்‌ற செய்யுளீறாகப்‌ பத்துப் பாசுரங்களிலும்‌ உள்ளுறைப் பொருள் உணர வேண்டும்-இக் காண்டத்தில்‌ ஜீவாத்மாவினுடைய ஸ்வரூபத்தையும்‌, ஆசாரிய கிருத்தியத்தையும்‌ மிகக்‌ தெளிவாயும்‌ அழகாயும்‌சித்தாந்தம் செய்திருப்பதால்‌, சுந்தர காண்டமெனப்‌ பெயர் கிடைத்தது என்பதேயாம்‌.

ததோ ராவணநீதாயாஃ ஸீதாயாஃ ஷத்ருகர்ஷநஃ. இயேஷ பதமந்வேஷ்டுஂ சாரணாசரிதே பதி৷৷5.1.1৷৷-முதல் ஸ்லோகார்த்தம் -மேலே கிஷ்கிந்தா காண்டத்‌திற் கண்டபடி நிகழ்ந்த பிறகு சத்‌துருவை நாசம் பண்ணத் தகுந்த ஹநுமான்‌ இராவணனாற்‌ பெயர்த்துக் கொண்டு போகப்பட்ட சீதாப் பிராட்டியினுடைய இருப்பிடத்தைக்‌ தேடுவதற்காக ஆகாய மார்க்கத்திற்‌ பிரவேசிக்க எண்ணங் கொண்டார்‌?!-சேதனர்களை உய்யக்‌ கொள்வதற்காகவே ஏற்படுத்திய முத்‌ரையையும்‌ ஆஜ்ஜையையும்‌ பெற்ற பிற்பாடு அஜ்ஞானமான பகைவனை வேரோடு வெல்லத் தக்க ஆசாரியன்‌, (ஹூுமான்‌) பூர்வாசாரியர்களால் அநுஷ்டிக்கப்பட்ட
ஸத் ஸம்பிரதாய மார்க்கத்தில்‌ நிலைத்தவராய்‌, அவிவேகத்தால்‌ தனக்கு ஸ்வாதினம் பண்ணப்பட்ட சேதனனுடைய ஸம்ஸார மண்டலத்தையும்‌,பகவத்‌ ப்ராப்‌தியிலுண்டான எண்ணத்தையும்‌, ஸாத்விக ஸம்பாஷண முதலான அடையாளத்தையும் தேட நினைத்தார்-

கழுந்தரா யுன கழல் பணியாதவர் கதிர் மணி முடிமீதே
அழுந்த வாளிகள் தொடு சிலை ராகவ வபி நவகவிநாதன்‌
விழுந்த நாயிற தெழுவதன் முன் மறை வேதியருடன் ஆராய்ந்து
எழுந்த நாயிறு விழுவதன் முன்கவி பாடின தெழ நூறே.–
தனியன்

“தேவபாடை யினிக் கதை செய்தவர்‌
மூவரானவர் தம்முள் முந்திய
நாவினா ருரையின்படி நான்‌ றமிழ்ப்‌
பாவினா லிதுணர்த்திய பண்பரோ?
, —வால்மீகி வசிஷ்டர் போதாயனர் -மூவர்
தமிழிலே தாலை நாட்டி—பார் மேல்‌, நம்பு பா மாலையாலே நரருக்கின்‌ றமுதமீந்தான்‌

மீட்டிமுரை வேண்டுவன வில்லையென மெய்ப் பேர்‌
தீட்டியது தீட்டரிய செய்கையது செவ்வே
நீட்டி தென நேர்ந்தனனெனா நெடிய கையாற்‌
காட்டினனொராழியது வாணுதலி கண்டாள்‌
–சுந்தர காண்டம்‌ உருக் காட்டு படலம்‌. பாட்டு-63,

மீட்டுமுரை – முன்னமே-பகவானுடைய சொருபத்தையும்‌, செளலப்யத்தையும்‌ காருண்யத்தையும்‌, சேதனனுக்கும்‌ பகவானுக்குமுள்ள சம்பந்தத்தையும்‌, சேதனனுடைய பூர்வ வாசனையையும்‌, ஆசாரியன்‌ (ஹநுமான்‌) எடுத்துச்‌ சொன்ன பின்‌ மற்றும் சொல்ல வேண்டிய விஷயம்‌
வேண்டுவனவில்லை–இனி மேல்‌, சேதனனால் கேட்‌கப் பெறுவதும்‌, ஆத்மா உஜ்ஜீவிக்கும் பொருட்‌டுள்ள அவசியமானதுமான உபாயம்‌ வேறு யாதொன்றுமில்லை்‌
என– என்று, (இவ் விதமாகச்‌ சொல்லி,)
மெய்ப்பேர் தீட்டியது –நாராயண என்‌னும்‌ பெயரும்‌ உயிருமான திரு நாமத்துடன்‌ ஓம்‌ நமோ என்னும் உடலாகிய (மெய்யாகிய) எழுத்துக்‌களைச் சேர்த்துச் செய்த திவ்ய மங்கள கரமான அஷ்டாஷரம்‌ என்ற திரு மந்தரமொன்றுண்டு,
தீட்டரியசெய்கையது–அந்தத் திருமந்திரமானது எழுதவரிது, எழுதற்பாலதன்று, எழுதாக்கிளவி, (வேத வாக்கியம்‌) அதை எழுத முடியாது, எழுதுதற்‌கடங்காது, எழுதிக் கற்‌றுக் கொள்வதிற் பயனில்லை,௮து உபதேச மந்திரம்‌, உபதேசக் க்ரமத்தா லடையத் தக்கது யொழிய வேறல்ல. (ஆகையால்‌)செவ்‌வே–நேராக (முறைப்படி) ௮தாவது குரு பரம்‌பரா பூர்வமாக, அல்லது உபதேச விதிப்படி
நீட்டிதென–நீ சேதனனுககு இந்த அஷ்டாக்ஷர மந்த்ரத்தை உபதேசம் பண்ணு என்று சொல்லி,
நேர்ந்தனன் -எனக்குப்‌ பகவான் கொடுக்தார்‌, ௮தாவது ஆஞ்ஞாபித்தார்‌, என–என்று உபதேசம்‌ பண்ணக் கருதி, நெடிய கையால்‌– விசேஷ அர்த்த புஷ்டி யுள்ளதும்‌, ஞான வித்தகந் தரித்த செங்கை ‘என்பதற்கிணங்க ஞானக் குறியுமாகிய சின் முத்ரையினால்‌ காட்டினனொராழி – தனது இருக்கையை வட்ட வடிவாய்ச்‌ சின் முத்ரா ரூபமாக வைத்துக் கொண்டு, பகவத் ஆஜ்ஞா ரூபமான வேத வாக்கியமாயும்‌, மிகவும்‌ ஆழ்ந்த பொருள்களை யுடையதாயு மிருப்பதால்‌ ஆழியென்று சொல்லத் தக்கதாயுள்ள திருவஷ்டாக்ஷர மந்த்ரத்தை ஹனுமானாகிய வாசாரியன்‌ சீதை யாகிய சேசனனுக்கு உபதேசித்தார்‌.
அது வாணுதலி கண்டாள்‌–சேதனனும்‌ உபதேதசம்‌ பெற்ற பின்‌ அந்தத் திருமந்திரத்தின்‌ பெருமையை ௮றிந்தான்‌- அதனால் அகம் மகிழ்ந்தான்-௮கத்தினழகு முகத்தில் தெரியுமாதலால்‌ ஆத்மா வடைந்த ஆனந்தத்தை வெளிப் படுத்திக் காட்டிய முக மலர்ச்‌சி கொண்டு, வாணுதலி கண்டாள் எனக் கூறப்பட்‌டன. இன்னும்‌, திருமந்திர உபதேசத்துக்குரி வைஷ்ணவ சின்னமான ஊர்த்துவ புண்டர மணிந்த நெற்றியும்‌ பகவத் பார தந்திரியமுமுடைய சேதனனென்பது தோன்ற வாணுதலி யென்றாரென்பதும்‌ பொருந்தும்‌-எனவே ௮னுமான்‌ சீதைக்கு ஸ்ரீராமனது கணையாழியைக் கொடுத்தார்‌ என்பது இச் செய்யுளுக்குச்‌ சாமானியக் கருத்தாயிருப்பினும்‌, விசேஷார்த்தமாக, அனுமானாகிய ஆசாரியன்‌ ராஷஸ மண்டலமாக சம்சார பந்தத்தால்‌ நலிவடையா நின்ற சீதையாகிய சேதனனுக்குத்‌ திரு வாழியாகிய திருவஷ்டாஷாரத்தை வேத விதிப்படி. பிரஸாதித்தார்‌ என்பதையும்‌ இச் செய்யுள்‌ ௮டக்கிக்‌ கொண்டி ருக்கிறது.

அது வாணுதலி கண்டாள்‌” என்று சொன்ன பின்‌ அந்தச் சேதனலுக்குண்டான பரவசச்தை வெளிப்படுத்த விரும்பிப்‌ பின்‌ வரும்‌ இரண்டு செய்யுள்களின் முலம்‌ பலவித திருஷ்டாந்தங்களுடன்‌ உபபாதிக்கிறார்‌,

இறந்தனர் பிறந்த பயனெய்தினர் கொலென்கோ
மறந்தனரறிந் துணர்வு வந்தனர் கொலென்கோ
துறந்த வுயிர் வந்திடை சொடர்ந்தது கொலென்கோ
திறந்தெரிவ தென்னை கொலி நன்னுதலி செய்கை
–64-

(இதுவும்‌ உபதேச அநந்தரம்‌)
இந் நன்லுதலி செய்கை-இத் திவ்விய முக மலர்ச்சியை யடைய சேதனனுக்கு ஜாயமான கடாஷத்தாலுண்டான ஆனந்த அனுபவத்தை (எவ் வனுபவத்துக்கு ஈடாகச்‌
சொல்லுதல்‌ கூடுமென்று ஆராய்ந்தால்‌) இறந்தனர்‌ – ஜீவாத்மா சம்சார பந்தத்திலகப்பட்டு இந்திரியங்களாற் கட்டுண்டு பூர்வ ஞானமே மேலிடாது அஞ்ஞானமான அந்தகாரத்தி லகப்‌பட்டுழன்று ஜென்ம மெடுத்தும்‌ ஜென்ம சாபல்யமான கிருத்தியங்கள்‌ யாதொன்னுஞ் செய்யாமல்‌, திருவடிகளை அடைய வேண்டிய கருமங்களிருந்தும்‌ விலகி ஜீவப் பிரேதம் போலிருக்கும்‌ பயனற்ற ஆத்ம கோடிகள்‌ ; பிறக்க பயனெய்தினா்‌ கொலென்கோ – திடீரென்று பகவத் ஜாயமான கடாஷ விசேஷத்தாலே உலகில் பிறந்து ௮டைய வேண்டிய புருஷார்த்தங்களை அடைந்தால்‌ அந்த ஜீவர்களுக்கு எவ் வளவு ஆனந்த முண்டாகுமோ ௮வ்வளவு சந்தோஷம்‌ உண்டாயிற்றென்று சொல்‌லலாமோ ; (அல்லது) அறிந்து – சத் சம்பிரதாய மார்க்கக்தை யனுஷ்டித்து வந்து, பகவத் சரணாரவிந்தங்களில் ஈடுபட்டிருந்து வந்து; (இப்பால்‌)மறந்தனர்‌ – ஜென்மாந்தர வாசனையையும்‌, பகவானுடைய சராணாரவிந்தங்களின்‌ வைபவத்தையும்‌ ஒரு கால விசேஷத்தில்‌ மாயையினால்‌ அடியோடு மறந்திருக்க ஒரு ஜீவன்‌ உணர்வு வந்தனர் கொலென்கோ- மறுபடியும் குருமுகமாகப்‌ பூர்‌வ அனுஷ்டானத்தையும்‌ தன் நிலைமையையும்‌ திடீரென்று அறிந்து உஜ்ஜீவுக்கும் படியான ஒரு ஹேது நேர்ந்தால்‌ ௮ப்போது என்ன குதூகலமுண்டாகுமா அதற்குச் சமமாகச் சொல்லலாமோ ;(அல்லது) துறந்த உயிர்‌-போன பிராணன்‌; வந்து இடை தொடர்ந்தது கொலென்கோ – மறுபடியும்‌ உடலுட்புகுந்து உடலும்‌ உயிரும்‌ கூடிற்று என்றால் எவ்வளவு ஆனந்தமுண்டூ அவ்வளவு ஆனந்தத்‌தை இந்தச் சேதனன்‌ அடைந்தானென்று தான் சொல்லலாமோ, (செய்கை) திறந் தெரிவது என்னை கொல்‌ -௮ந்த ஆனந்தத்தின்‌ அளவையும்‌ பெருமையையும்‌ வன்மையையும்‌ என்ன வென்றெடுத்துரைப்பது,

இழந்த மணி புற்றர வெதிர்ந்‌த தெனலானாள்‌
பழந்தன மிழந்தன படைத்தவரை யொத்தாள்‌
குழந்தையை யுயிர்த்த மலடிக்குவமை கொண்டாள்‌
உழந்து விழி பெற்றதொருயிர்ப்‌ பொறையு மொத்தாள்‌–65-

(தவிரவும்‌,) புற்றரவு – இந்த சம்சார மண்‌டலத்தில்‌ ஜீவாத்மா;
இழந்த மணி – (தான்‌ அயர்‌வுற்றிருந்த போது, ௮தாவது தான்‌ மாயையினால்‌
மயக்குற்று மெய்ம்மறந்து புத்தி ஸ்‌திரமில்லாமற்‌ சஞ்சல மடைந்திருந்த காலத்தில்‌) தன்னை விட்டகன்ற உயர்ந்த ரத்ன சமானமான அழுக்கற்ற
நல்லறிவை;
எதிர்ந்ததெனலானாள்‌ – மறுபடியும்‌
அடைந்தால்‌, அச்சேதனனுக்கு ௮ப்போதுண்‌டாகும்‌ களிப்பை ஓக்கும்‌;(அல்லது) இழந்தன தானே தன்னுடைய கர்மானுஷ்டானங்களினாலும்‌, ௮விவேகத்தினாலும்‌, சுயேச்சையினாலான
கிருத்தியங்களினாலும்‌ இழந்த மோக்ஷத்தை;
பழந்தனம்‌ – மிகப் பழமையாயும்‌ அநாதி பூர்வகமாயும்‌
௮நாதி காலங்களாககத் தன்னைக் காப்பாற்றுவதற்கு
ஹேதுவாயுமுள்ள ஒரு சாரமான மூல மந்திரமானதும்‌, பூமியிலுள்ள மநோ ரதங்களையும்‌ சுவர்க்க
போகங்களையம்‌ முக்தியையும் சாதித்துக் கொள்வதற்கு ஆதாரமானதுமான ஒப்பற்ற பொருளை;
படைத்தவரை யொத்தாள்‌ – மீண்டும்‌ புதையல்‌ கண்டெடுத்தாற்‌ போல்‌ ௮திக வியப்புடன்‌ புதிதாக
கிட்டினது போலடைந்தால்‌ அப்போது சேதனனுக்குண்டாரும்‌ ஆநன்தத்திற்கு ஒப்பாகுமென்று சொல்லற் பாலதாம்‌; (அல்லது) குழந்தையை – தென் புலத்தாரைத் தான்‌ பருவ காலங்களிற் கொடுக்கும் நன்னீர் முதலாயுள்ள கருமங்கள்‌ யாவும்‌ வேத விதிப்படி செய்வதால் கரை யேற்றும்
தன்மை யுடைய ஆண் குழந்தையை;
(இனி உள்‌ளுரை )
ஜீவாத்மா எத்தனையோ கோடி ஜென்மமெ
டுத்துழலும் போது *பூதமைந்தும்‌, விலங்கிய விகாரப் பாட்டின் வேறுபாடுற்‌ற வீக்கம்‌, கலங்குவது”? என்பதற்கிணங்க அந்த வீக்கமாகிய பிறப்‌பின்‌ மிகுதியற்று மறுபிறப்பில்லாமல்‌ உய்யும்படிக்கான ஓர்‌ உபாயத்தை; (திவ்விய ௮ஷ்டாஷர
மந்த்ர அனுக்கிரஹத்தை)
உயிர்த்த – நூதனமாக எதிர்பாராது அடைந்த;
மலடிக்குவமைகொண்டாள்‌ – நெடு நாளாகக் காத்திருந்தும்‌ பிரயத்தனப்‌
பட்டும்‌ கிட்டாமல்‌ இனிக் கிடைப்பதரிதென்று
மனங்கலங்கச்‌ சோர்வும்‌ ஏக்கமுமுற்றிருக்கும்‌ ஒரு
ஜீவாத்மாவுக்கு ௮ப்போதுண்டாகும்‌ பர வசத்தை நிகரக்குமென்‌று சொல்லலாம்‌; (அல்லது) உழந்து -அஞ்ஞான மிகுதியால்‌ தன்னுடைய ஞானக்கண்‌ ணடைக்கப்பட்டு ௮தனால்‌,தெளிவான நடையற்று
நன்னெறி விட்டு விலகி உழல்கின்ற போது
விழி பெற்றது -சன்மார்க்கமும்‌ மோஷ ஹேதுவுமான
நன்னெறியை ஊட்டும்‌ படிக்குள்ள ஓர்‌ உபாயத்தை யடைந்த;
ஓர்‌ உயிர்ப்பொறையும்‌ ஒத்தாள்‌-ஒரு ஜீவாத்மா அல்லது ஒரு சேதனனுக்குள்ளது
போல்‌ ஆயிற்று.

ஆகவே, இந்த இரண்டு செய்யுள்களாலும்‌ அனுமான்‌ சீதா பிராட்டிக்குக்‌ கணையாழியைக்‌ காட்டினவுடன்‌ ௮வள்‌ மிகக் களிப்புற்றாளென்பது சாமான்யக் கருத்தாயினும்‌ . விசேஷார்த்தமாகத்‌ திருவஷ்டாக்ஷர வுபதேச பூர்வமாகச்‌ சேதனனுக்குண்டாகும்‌ ஆத்மானந்த வைபவத்தைப்‌ பூர்வாசாரியர்களாற்‌ பலவித திருஷ்டார்தங்களுடன்‌
விரித்தெழுதப் பெற்றதற்கிணங்க இவ் விடத்திலும்‌
கூறப் பட்டது.

———–

இனிப்‌ பின்வரும்‌ இரண்டு செய்யுள்களால் திரு மூல மந்திரத்தை உபதேசம் பெற்ற பின்‌ அந்தச் சேதனன்‌ ௮தைக் கொண்டாடி யனுபவித்த விதத்தை விரித்துக் காட்டுகிறார்‌

வாங்கி நண் முலைக் குவையில் வைத்தனள் சிரத்தால்‌
தாங்கி நண் மலர்க்கண் மிசை யொத்தின டடந்தோள்‌
வீங்கி நண் மெலிந்தனள் குளிர்ந்தனள் வெதுப்போ
டேங்கினள் உயிர்த்தனல் இதின்னது எனலாமே,
–66-

வாங்கினள் –சேதனன்‌ ௮ஷ்டாஷ மந்திரத்தை வானமீகி பகவான்‌ பிரயோகித்ததற்கு இணங்க மனசில் வாங்கினன்‌ என்றார்‌ ; மனசில்‌ நிலை பெறச் செய்தான்‌ என்றபடி-
முலைக் குவையில் வைத்தனள்‌ – பகவத் அனுபவ முச்கிய சாதனமான சேஷத்வ பாரதந்தர்ய ஸ்வரூப ஞானத்தைப் பிறப்பிக்கும்‌ த்வயம்‌ என்‌னும்‌ மந்த்ரத்துடன் சேர்த்து அந்த மந்திரத்தை அனுசந்தித்தான்‌-
சிரத்தால் தாங்கினள்‌ – அந்த த்‌வயார்த்தத்துக்குள்‌ உத்தர வாக்கியார்த்தத்தில் ஊன்றினான்‌; ௮தாவது சர்வ ஸ்லாக்கியமானதும்‌ சாரமானதுமான மந்திரத்தை ௮தனுடைய கெளரவமும்‌, தன்னுடைய பாரதந்தர்யமும்‌ தோற்ற அதை ப்ரதானமாகவும்‌ மூலாதாரமாகவும்‌ கொண்டாடினான்‌ என்றபடி-
மலர்க்கண்‌ மிசை யொத்தினள்‌ -தன்னுடைய ஞானக் கண்‌களால்‌ ௮ம் மந்திரத்தின்‌ பெரும் பயனை ௮னுபவித்தான்‌-
தடந் தோள் வீங்கினள்‌ – பெரிய தோள்‌களாகிய பகவத் பாகவத கைங்கரிய சாதனங்களைப்‌ பெருக்கினான்‌- மெலிந்தனள்‌ – பகவத் கைங்கரியத்‌தில்‌ த்வரை யுடையனாய்‌ ௮து எப்பொழுது கிட்‌டுமோ வென்னும்‌ ஏக்கத்தாற்‌ சோர்வுற்றான்‌.
குளிர்ந்தனள்‌ – இந்த மந்திராநுசந்தானமே சகல வித கைங்கரியமுமாகி ௮வன்‌ திருவடி சேவை கிடைப்பிக்கச் செய்வதென்ற நிச்சயத்தால்‌ ஸந்தோஷத்தை யடைந்தான்‌- வெதுப்‌போடு ஏங்கினாள்

“ஒரு கணத் திரண்டு கண்டேனொளி மணி யாழி யான்ற
திரு முலைத் தடத்து வைத்தாள் வைத்தலுஞ் செல்வ நின்பால்
விரக மென்பதின் வந்த வெங் கொழுந் தீயினால் வெந்‌
துருகிய துடனே யாறி வலித்தது குளிர்ப் புள்ளூற–

என்பதற்கிணங்க, ஈசனுக்‌கு உகப்பாகச்‌ செய்யும்‌ சத் கர்மங்களில்‌ ஏதேனும்‌ குறைவு பட்டு விடுமோ வென்று மனக் கலக்கங்கொண்டு பரி தபித்தான்‌ உயிர்த்தனள்‌ – இன்னதென்று தோன்‌றாது பெருமூச்செறிந்தான்‌-இது இன்னதெனலாமே – இப்படியாகச்‌ சேதனனால் செய்யப்பட்ட பல செய்கையை இன்னின்ன எண்ணங் கொண்டு இன்ன காரணத்தோடு இன்னின்ன செய்கைகள்‌ செய்து கொண்டாடினான்‌ என்று சொல்வது எளிதாமோ என்பதாம்‌.

மோக்கு முலை வைத்துற முயங்கு மொளிர் நன்னீர்‌
நீக்கி நிறை கண்ணிணை ததும்ப நெடு நீள
நோக்கு நுவலக் கருதுமொன்‌று நுவல்கில்லாள்‌
மேக்கு நிமிர் விம்மலள் விழுங்கலுறுகின்றாள்‌-
-67-

மோக்கும்‌–சேதனன்‌ திருமந்திரத்தை
௮நு சந்தானம் செய்துகொண்டே அதன் அர்த்தத்தை யனுபவிப்பான்‌-
முலை வைத்துற முயங்கும்‌ – அதை த்வயதத்தோடு நன்றாகப்‌ பொருந்தும்படி. சேர்ப்பான்‌- அதாவது அத்‌வைத பாவமின்றி விசிஷ்டாத்வைத சித்தாந்த பரமாக அர்த்தத்தை நயிப்பிப்ப னென்றபடி-
கண்‌ணிணை ததும்‌ப வொளிர் நிறை நன்னீர் நீக்கி -உயர் மழைக் கண்ணீரா லாயிரங் கலசமாட்டி யேங்கனெ ளிருந்த தல்லா லியம்பலள்‌? என்றபடி
தனக்குண்டான ஆஹ்லாதத்தால்‌ அஜ்ஞானம் மேலிட்டுத்‌ தன்னாற்‌ சரியான கைங்கரியம் செய்து ஆதரிக்க முடியுமோ வென்று ஏக்கங்கொண்ட மனோ சாஞ்சல்யத்தை நீக்கி;
நெடு நீள நோக்கும்‌ – திரு ௮ஷ்டாக்ஷரத்தின்‌ ஆழ்ந்து கிடக்கும்‌ அர்த்த விசேஷங்களை யெல்லாம்‌ நெடுந்தூரம்‌ ஆராய்‌வன்‌,
நுவலக் கருதும்‌ – அதன் பெருமையைக்‌ கண்டு பூரித்துப்‌ பலமாக ஸ்தோத்திரம் செய்ய ஆசையை உடைவனாவான்‌. ஒன்னும்‌ நூவல்‌ இல்லாள்‌ – அடங்காத ஆனந்தத்தைப்‌ பெற்ற படியால்‌ யாதொன்றும்‌ வாய் திறந்து சொல்ல மடியாது திகைத்து நிற்பான்‌.
மேக்கு நிமிர்‌ விம்மலள்‌ -ஞான ஆனந்தத்தாலுண்டான ஆத்ம புஷ்டி யுடையனாய்‌.
விழுங்க லுறுகின்றாள்‌ – அக்காரக் கனியான எம்பெருமானை விழுங்குவது போல அவகாஹித்துத் தொடங்கினான்‌ என்பதாம்‌–

மேலே கண்டவிதமாகத்‌ திருமந்திரத்தை அனுபவித்ததன்‌ மேல்‌, பின் வரும்‌ இரண்டு செய்‌யுள்களால் இந்தச் சேதனனுக்குண்டான தேஜஸ்ஸையும்‌ ௮வன்‌ பெற்ற பேருதவியையும்‌ உணர்த்துகிறார் –

நீண்ட விழி நேரிழை தன்‌ மின்னினிற மெல்லாம்‌
பூண்ட தொளிர் பொன்னனைய பொம் மனிற மெய்யே
ஆண்ட கை தன் மோதிர மடுத்த பொருளெல்லாம்‌
தீண்டள வில் வேதிகை செய் செய்வ மணி கொல்லோ.
–68-

நீண்ட விழி நேரிழை தன்‌ –திருமந்த்ரார்த்த ஞான தைர்க்யத்தை அடைந்த சேதனனுக்கு
மின்னினிற மெல்லாம்‌-அப்பியாச தசையில் மின் போல் தோன்றி மறைந்து வந்த ஸ்வரூப ஞானம் எல்லாம்
மெய்யே -பாவந ப்ரகர்ஷத்தாலே ப்ரத்யக்ஷ ஸமான ஆகாரமாய்
ஓளிர் பொன்னனைய பொம் மனிறம் பூண்டது –தப்த காஞ்சனம் போல்‌ இடை வீடின்றி -அதாவது- சேதனனுடைய மன நிலை நிஷ்களங்க மாயிற்று ; (ஏனெனில்‌) ஆண்ட கை தன் மோதிரம் –திரு ௮ஷ்டாஷர மந்தர மானது
அடுத்தபொருளெல்லாம்‌ – உபதேசம்‌ பெற்ற எந்த ஜீவனையும்‌,
தீண்டள வில் வேதிகை செய் —ஸ்ரவண மாத்திரத்தாலே ஸ்வரூப பிரகாசத்தை உண்டாக்குவதால்
செய்வ மணி கொல்லோ-ஸ்பர்சன வேதி
யென்னும் தெய்வத் தன்மை பொருந்திய மணி விசேஷமோ – அல்லது ஞான ஆனந்த ஸ்வரூபம் தானோ -மூலத்தில்‌ ஐக்கியம் தானோ என்று வியக்கத் தக்கதாயுள்ளதோ என்பதாம்

இருந்து பசியாலிட ருழந்தவர்கள் யெய்‌தும்
அருந்துமமுதாகிய தறத்தவரை யண்மும்‌
விருந்து மெனலாகியது வீயுமுயிர் மீளும்‌
மருந்‌து மெனலாகியது வாழி மணியாழி
-69-

வாழி – பெருமை பொருக்திய நித்‌தியமான வாழ்வை அளிக்கத் தகுந்த;
மணியாழி -திரு மூல மந்திரமானது ; பசியால்‌ – இந்திரியங்களின்‌ ஈடுபாட்டால்‌; இருந்‌திட ருழந்தவர்கள்‌ மெய்ச் நெறி செல்லாதுய் நெறி யறிவின்றி- துக்கத்திலாழ்ந்து கஷ்டப்படுற ஒரு ஆத்மாவுக்கு;
எய்தும்‌ ௮ருந்துமமுதாகியது – கால விசேஷத்தில்‌ இந்திரிய அனுபோகங்களினின்‌றும் விலகி உய்யுமநெறி யடைவதற் கேற்பட்ட தொரு ஒப்‌பற்ற உபாயம்‌ கிடைத்தாற் போலாயிற்று;
அறத்‌தவரையண்மும்‌-சன்மார்க்கம் அமைந்தவர்களைத் தேடிச் சேரும்‌.
விருந்துமென லாகியது -விருந்து போலவே சந்தோஷ ஹேதுவுமாயிற்று ;
வீயுமுயிர்‌ மீளும் மருந்துமெனலாகியது – இறுதி யினுயிர் தந்தீயு மருந்தொத்‌த தனைய தெக்தாய்‌”எம்பிரானாமஞ் சொல்லி,௨ருக்கின னுணர்வைத் தந்தானுயிர் -என்பதற்கு இணங்க யாதொரு பயனுமற்றுத்‌ திருவடிகளைச் சேராது வியர்தமாகப் போகும் நிலையில்‌ நின்ற ஒரு ஆத்மா உஜ்ஜீவிப்பதற்கு ஹேதுவான ஒரு ௮மிர்‌த சஞ்சீவி போலும்‌ ஆயிற்று என்பதாம்‌-

இவவிரு செய்யுள்களாலும்‌ திருமந்திரத்தின்‌ ஸ்வபாவத்தையும்‌, அதன் பெருமையையும்‌, ௮தனால்‌, சேதனனுக் குண்டான மேன்மையையும்‌ சொல்லி, இனி அடுத்‌து வரும்செய்யுளால்‌ அந்தச்‌ சேதனன்‌ கிருதக்ஞதையுடன்‌ ஆசாரியனை ஸ்தோத்திரம் செய்ய ஆரம்பித்ததைச்‌ சொல்லுகிறார் –

இத்‌தகையளாகி யுயிரேமுற விளங்கும்‌
முத்த நகையாள் விழியினாலி முலை முன்‌ றில்‌
தத்தி யுகமென்குதலை தள்ள வுயிர் தந்தாய்‌
உத்தம வெனா வினைய வாசக முரைத்தாள்‌.
-70-

இத்தகையளாகி – மேற் சொன்ன
படிக்குள்ள வைபவங்களைப் பெற்று; உயிரேமுறவிளங்கும்‌ முத்த நகையாள்‌ – அத்தியானந்தத்தை யடைந்த சேதனன்‌; விழியினாலி – திருமந்திரத்தின்‌ அர்த்த ஜ்ஞான சாரம்‌;
முலை முன்றில்‌ தத்தி யுக – த்வயார்த்தத்தில்‌ ததும்பி வழிய அனுசந்தித்து;
மென்குதலைதள்ள – மிருது பாஷியாய்‌
ஸ்தோத்திர பூர்வகமாக ஆசாரியனைப் பார்த்து-
உயிர்‌ தந்தாய்‌ – உஜ்ஜீவிக்கும் பொருட்டு உபதேசம் செய்து ௮னுக்கிரகித்க எம்பெருமானே!
உத்‌தம-பரமபுருஷனே!
என-என்றழைத்து ஸ்தோத்‌தரத்துக்கு ஆரம்பித்து;
இனையவாசகமுரைக்‌
தாள்‌ – பின் வருமாறு சேதனன் சொல்லலுற்றான்‌ என்பதாம்‌,
இச் செய்யுளுக்குப்‌ பிராட்டி கணை யாழியைக் கண்டு மகிழ்ந்து ஆனந்த பாஷ்பத்துடன்‌ தன்னை உயிர் வைத்துக் கொள்ளும்படிக்கான ஹேதுவைச் செய்து மணியாழியைக் கொடுத்து
உதவின ௮னுமனைப் பார்த்துத்‌ தன்னுடைய நன்‌றி யறிதலை வெளிப்படுத்தினாளென்பது சாமானனியக் கருத்தாயினும்‌, வேதார்த பரமாகத் திரு மூல மந்திர உபதேச அநந்தரம் ஞநான பிரகாசமுள்ள சேதனன்‌, ஆத்மானந்தப் பெருக்குடன்‌ திரு மந்திர சாரத்தை த்வயஅர்த்தத்திலூன்‌றி அனுசந்தித்து உபதேசத்தால்‌ தன்னை உஜ்ஜீவிக்கச்‌ செய்த பரமாசாரியனுக்குத்‌ தன்‌ கிருதஜ்க்ஷதையை வெளிப்படுத்‌துகிறான்‌ என்னும் கருத்துத்‌ தோன்றுமாறு காண்க,
இனி வரும்‌ இரண்டு செய்யுள்களால்‌ உத்தமமான தத்து வத்தையும்‌, வேதாந்தக் குறிப்பையும்‌ மங்களாசாசன மகிமையையும்‌ விசேஷமாக எடுத்‌துச் சொல்‌லுகிறார் –

மும்மையா முலகம் தந்த முதல்வன் தூதாய்ச்
செம்மையால் உயிர்‌ தந்தாய்க்கு செயலென்னா வெளியதுண்‌டே
அம்மையாய் யத்தனாய் யப்பனே யருளின் வாழ்வே
இம்மையே மறுமை தானு நல்கினை யிசையொடென்றாள்‌
–71-

மும்மையாமுலகக்தந்த – பதினான்குலகத்‌ தையும்‌, க்ருதகம்‌, அக்ருதகம்‌, கருதாகிருதகம்‌
என்று மூன்று வகையாகப் பிரித்தபடி எல்லா உலகர்களையும்‌ சிருஷ்டித்த முதல்வற்கு– சிருஷ்டியால்‌ முதல்வனாகிய பிரமனுக்கு
முதல்வன்‌-*முதலாவார் மூவரே யம் மூவருள்ளும்‌, முதலாவான் மூரிநீர் வண்ணன்‌” என்னும்‌ பூதனான சாக்ஷாத் பரமாத்ம
தூதாய்‌–அஜ்ஞாநமடைந்த சேதநனுக்கு
அறிவிக்கச் செய்ய வேண்டியதற்காக ஞானம் அனுஷ்டானம் நிறைந்த ஆச்சார்யனுடைய கிருபையால்‌–
செம்மையால் நேரான வழியான சரணாகதி முறைப்‌ படி ;
உயிர் தந்தாய்‌-ஈடேற்றி உய்யச் செய்த பரம
கிருபாளுவுமாகிய வுனக்கு;
செயல்‌ என்னா வெளிய துண்டே – நீ செய்த பேருதவிக்கு நான் செய்யக்‌
கடவ கைம்மாறு யாதொன்றுமில்லையே ௮தாவது ஞான உதயமானபின்பு ‘நான்‌’ எனது என்‌பது இல்லை யாதலின்‌ தன்னுடைய பாரதந்திரியம்
துலங்க இவ்வாறு சேதனன் சொல்லலுற்றான்‌ என்பதாம்‌ –
அம்மையாய் –பிரிய பரையாகிய
மாதாவைப் போலும்‌ ;
௮த்தனாய் –ஹித பரனாய
பிதாவைப் போலும்‌ அனுக்கிரகஞ் செய்த; அப்பனே–பகவத் ஸ்வரூபனான ஆசார்ய மூர்த்‌தியே,
அருளின் வாழ்வே -கிருபைக்கு இருப்பிடமாயுள்ளவனே !
இம்மையே மறுமை தானும்‌ இசையொடு
நல்கை- த்வயானுபவத்தைக் கொடுத்‌ தருளினய்‌, அதன் மூலம்‌ புகழையும்‌ புண்ணியத்தையும்‌ கட்டிக் கொண்டாய்‌ என்றாள் –என்று சேதனன்‌
ஸ்தோத்திரம்‌ செய்தான்‌. (தவிரவும்‌)

பாழிய பணைத் தோள் வீர துணையிலேன் பரிவு தீர்த்த
வாழியர் வள்ளலே யான் மறுவிலா மனத்தேனென்னின்‌
ஊழியோர் பகலா யோதும் யாண்டெலா முலகமேழும்
ஏழும் வீவுற்ற ஞான்‌று மின்றென விருத்தி யென்றாள்‌–72

பாழிய பணைத் தோள் வீர-“மாணியாம் வேடம் தாங்கி மலர் அயற்கு அறிவு மாண்டோர்‌, ஆணியா யலகுக்‌கெல்லாம் அறம் பொருணிரப்பு மண்ணல்‌”‘ என்றபடி.
பகவத பாகவத கைங்கர்ய சாதனமான பாஹு பல
முடையவனே
துணையிலேன் பரிவு தீர்‌த்த-யாதொரு ஆதாரமும் இன்றிக்‌ கடைத்தேறும் வழி யற்‌றுக்‌ கலங்‌கக் கிடந்த அடியேனுடைய துக்கத்தையும்‌ அஜ்ஞானத்தையும்‌ நிவிர்த்தித்த
வாழியர் வள்ளலே – நித்திய மங்களமான வாழ்வை அன்‌புடனும் ஆதரத்துடனும் ௮ளித்த உதார குணமுடை.யவனே!
யான் மறுவிலா மனத்தேனென்னின்‌—-
அஜ்ஞாந அந்தகாரத்துள் மூழ்கி ஆத்ம நாசமடையா நின்ற நான் உன்னுடைய ஸந்தர்சனத்தாலே ஸ்வரூப யதாத்ம்ய ஞானத்தை யடைந்து உஜ்ஜீவித்தேனாகையால்‌.
ஊழியோர் பகலா யோதும் யாண்டெலா முலகமேழும் ஏழும் வீவுற்ற ஞான்‌று மின்றென விருத்தி யென்றாள்‌–நீ பல்லாண்டு பல்லாண்டாய்‌ நெடும்காலம் நிலை பெற்று என் போன்ற இன்னும்‌
௮நேக சேதனர்களையும்‌ உயிர்ப்பிக்கக் கடவை என்று சொல்லிச் சேதனன்‌ ௮திக வினயத்துடன்‌ மங்களாசாசனம் செய்தான்‌ என்றபடி –

————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸ்ரீ சேஷையங்கார்‌ ஸ்வாமிகள்- திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ரஹஸ்ய விவேகம்-ஸ்ரீ வரவரகுருவரர்‌ ஸ்வாமிகள்-

September 14, 2025

இந்த ரஹஸ்ய விவேகம்‌ அருளிச்செய்தவர்‌ – ஸ்ரீமணவாள மாமுனிகள்‌ நியமித்தருளின அஷ்டதிக்‌ கஜங்களி லொருவராய்‌, ”தேவராஜகுரு”‘ என்னும்‌ திருநாமத்தை யுடை.யரான எறும்பி அப்பாவின்‌ திருப் பேரனாகிற தேவராஜகுரு, வரருடைய திருக் குமாரராகிய வரவரகுருவரர்‌. இவர்க்கு *’ஆசார்ய ரத்நம்‌”” என்னும்‌ மற்றொரு திருநாமமுண்டென்று பூர்வர்கள்‌ பணிக்கும்படி. இந்தத்‌ திருநாமம்‌ இவர்க்கு ‘வழங்கி வருவதற்குக்‌ காரணம்‌ – இவர்‌ ஆசார்ய ரத்நம்‌: என்னுமொரு க்‌ரந்தம்‌ அருளிச் செய்தமையே. இவருடைய வம்ஸ பரம்பரையினடைவு இருக்கும்படி என்னென்னில்‌ எறுப்பி அப்பாவின்‌ திருக் குமார்‌ யஜ்ஞ நாராயண குரு அவர்‌ தனியன்‌
தேவராஜார்ய தநயம்‌ தயா வாத்ஸல்ய ஸாகரம்‌।
ப்ரஜ்ஞா நிதி,ம்‌ ப்ரபத்‌,யேஹம்‌ யஜ்ஞ நாராயணம்‌ குரும்‌!!

இவருடைய குமாரர்‌ தேவராஜகுரு. அவர்‌ தனியன்‌- தே,வராஜகுரோ! பெளத்ரம்‌ திவ்ய போதம்‌ தயாநிதிம்‌। வாத்ஸல்ய வாரிதி,ம்‌ வாத்ஸ்யம்‌ வந்தே தேவேஸ தேஸிகம் -இவர்‌ குமாரர்‌ வரவரகுருவரர்‌. அவர்‌ தனியன்
வாத்ஸ்ய ஸ்ரீ தேவ ராஜார்ய தநயம் விநய உஜ்ஜ்வலம்
வாத்ஸல்யாதி குணாவாஸம்‌ வந்தே வரவரம்‌ குரும்‌ ‘

இவர்‌ அருளிச் செய்த கிரந்தங்கள்‌ –அஷ்டஸ்லோகீ ஸம்ஸ்க்ருத வ்யாக்யா, பகவத் கீதா வ்யாக்யா, ரஹஸ்ய விவேகம் ஆச்சார்ய ரத்னம்

அஷ்டாதஸ பேத விசாரா பர நாமதேய: ரஹஸ்ய விவேக:உபோத்காதம்
ஜயதி ஸகல வித்‌யாரங்க பூமிர் குருர்மே குண கண மணி ஸிந்து,: வத்ஸ வம்ஸாம்புதீந்து,!!
ஸுரபதி குருஸூநு: ஸ்ரீநிவாஸார்ய பாத, ப்ரவண விமல சித்தோ ரம்ய ஜாமாத்ரு நாமா

தர்கேஷ்வேகே விதக்‌தா ; பணிபதி பணிதெள ப்ரெளடதா நாஸ்தி தேஷாம்‌, ஸப்‌த ஞாநம்‌ ந தர்க்கே ந தது பய விதோ பாதி மீமாம்ஸி தாதீ,!।
மீமாம்ஸா பார த்‌ருஸ்வா ஸடரிபுவசஸாம்‌. ஸ்யாத்‌ ஸ்வரூபாநபி ஜ்ஜோ
யஸ்மிந் நாஸ்தே ஸமஸ்தம்‌ ஸதி ஸது குஸலம்‌ ரம்ய ஜாமாத்ரு ஸுூரி

அமோகாம்‌ ஸம்ஸ்ரிதாஸ் ஸந்த: ஸாத்விகா மோக்ஷ ஸித்‌தயே|
உபாத்‌வம்‌ ஸெளம்ய ஜாமாத்ரு தேஸிகாஷ்டாக்ஷரீம்‌ ஸக்ருத்‌ ||.

ரஹஸ்ய த்ரய வாக்யார்த்த,மணீநாம்‌ மலஸோத,நம்‌ |
ப்ராசா மாசார்ய வர்யாணாம்‌ க்ரியதே ஸூக்தி கங்குயா ||

உபாய ஸ்ரீ விப்‌வீ ஸரண வசஸ ஸாதநமிதி
ந கைவல்யம்‌ முக்தி: புநரபி பர ப்ராப்தி கதநம்‌ |
ததாண்டாந்தர்பாவ ப்ரமிதி வசநம்‌ கேவலகதே
பரபத்தேர் தெவ்ர்பல்யம்‌ த்விதி கதிசந த்‌ராக கதயந்

ஸக்தாநாம்‌ பக்தி யோக ப்ரபதந விஷய: ஸக்தி ஹீநாதிகார:
ப்ரத்யே கோபாயதா ந ப்ரதி நியமவதாம்‌. கர்ம யோகாதி காநாம்‌ |
ஸாத்‌யோபாயேந ஸித்‌தம்‌ பவதி விஸத்‌ருஸம்‌ ப்ராப்யமந்யேந சாந்யத்‌
த்யாகஸ் ஸித்‌தாநுவாத,? ப்ரணவ விரஹதோ அஷ்டாக்ஷரத்வம்‌ மநோர்ஹி !

ஸ்ருஷ்ட்யாதெள நைவ ஸக்தி ஸ்புடமபி மஹதாம்‌ நித்ய முக்தாதி காநாம்‌.
தோஷா த்‌ருஷ்டிஸ்து வாத்ஸல்யமபி து பர துக்கோத் த்‌ருதீச்சா தயேதி

நோபாய ஸ்ரீந விப்‌வீ ந ஸரணவசஸ ஸாதநத்வே ப்ரமாணம்‌
கைவல்யம்‌ முக்திரஸ்மாந் ந பரம புருஷ ப்ராப்தி ரூர்த்‌வம்‌ ப்ரக்ருத்யா?. |
ப்ராபல்யம்‌ ஹி ப்ரபத்தே: பஜந விதிரசவ் புத்‌தி தெளார்பல்ய மூலோ
ந்யாஸ: ஸர்வாதிகார: ததிதர ஸரணாநி அஸ்வ தந்த்ராணி நைவ ||

அகாரத்திலே ஆர்த்தமான ஸ்ரீ ஸம்பந்தம்‌ லஷ்ம்யா. ஸஹ-இத்யாதி, வசநாநுரோதேந உபாயத்வே நைவ ஆக வேண்‌டுகையாலும்‌, த்‌வயத்தில்‌ ஸ்ரீமானுக்குச்‌ சொல்லுகிற உபாயத்வம்‌ விஸேஷண பூதையான பிராட்டிக்கும்‌ துல்யமாகையாலும்‌- ஸ்ரீக்கு உபாயத்வமே என்னில்‌ ,லக்ஷ்ம்யாஸஹ* இத்யாதி, வசநத்தில்‌ விஸேஷணத்வா ப்ரதாந ரக்ஷகத்வ வாசியான திருதீயையாலே. கடகத்வேதைவ அந்வயமென்னுமிடம்‌ ஸித்‌தமாகையாலும்‌ , வசநாந்தரத்திலும்‌ , நாந்யதா லக்ஷணம்‌ பவேத்‌ என்று இங்கே ஸங்கிதமான உபாயத்வம்‌ நிஷித்‌தமாகையாலும்‌ , த்‌வயத்தில்‌ விஸேஷணத்வ ப்ரயுக்தமான உபாயத்வம்‌ சொல்லில்‌ , நார பத,வாச்‌யங்களாய்‌ , கார்யோபயோகிகளாய்‌ , ஆஸ்ரயண ஸெளகர்யாபாதகங்களான வாத்ஸல்யாதி குணங்களுக்கும்‌ விஸேஷணத்வ ப்ரயுக்தமான உபாயத்வம்‌ ப்ரஸங்கிக்கையாலே அது கூடாமையாலும்‌ ஸ்ரீக்குப் புருஷகாரத்வமே அஸாதாரணம் என்றதாயிற்று –

பத்னிக்கு பதி ஸ்வரூப அநு ரூப்ய அவஸ்யம் பாவத்தாலும் –யதோ ஸர்வ கதோ விஷ்ணு: இத்யாதி வசநத்தாலும்‌ ஸ்ரீக்கு விபுத்வம்‌ கொள்ள வேணுமென்னில்‌ ஸேஷத்வ யவஸ்யம் பாவத்தாலே விஸ்வபதித்வாதிகள்‌ வாராதாப் போலே மகார வாஸ்யையான. இவளுக்கு விபுத்வம்‌ வாராமையாலும்‌, *யதா ஸர்வ கதோ விஷ்ணு: இத்யாத்‌,யுக்த ஸர்வகதத்வம்‌ , *விஷ்ணோர் தேஹாநுரூபாம்‌* இத்யாதியாலே தேஹ ப்ரயுக்தமாகச் சொல்லுகையாலும்‌. விபுத்வம்‌ கூடாது –

நமஸ்ஸிலே ஸாத்‌யோபாயங்களான பக்தி ப்ரபத்திகளுக்கு. ஸாத்யங்களுமாய் விஸத்ருஸங்களுமாய் அந்யங்களுமான பக்தி ப்ரபத்தியாதிகளுடைய பரித்யாக அங்கமாக ஸித்தமுமாய் ஸாஸ்த்ர அஸத்‌ருஸமுமாய்‌ , அநந்யமுமான தன்னையே உபாயமாக ஸ்லீகரி என்று விதிக்கையாலும்‌, இவற்றுக்கு ப்ரஸதநோபாயத்வம்‌. நமஸ்ஸிலே நிஷித்தம்

ஸர்வ கர்ம விநிர்மோக்ஷத்தில்‌ முக்தி பேதம்‌ கூடாமையாலே கைவல்யம்‌ மோஷமன்று . ஆகையாலே , பரம பத ப்ராப்‌தியும்‌, பின்பு மகார வாஸ்யனான பரக்ருதி வியுக்தாத்மாவினுடைய அநுபவமான கைவல்யமும்‌ அண்டத்துக்குள்ளே யென்னில்‌, இவ்‌ விடத்தில்‌ ஸர்வ கர்‌ம விநிர்மோஷமாவது நித்யமான ஆத்மாநுபவத்துக்கு ப்ரதி பந்தகமான அசித் ப்ராப்தி ஹேது பூத ஸர்வ கர்மங்‌களினுடையவும்‌ விநிர்மோக்ஷமே அவனுக்கு அபேஷிதமாகையாலே கைவல்யம்‌ மோஷமாய்‌ ஸ்வோத்‌தேஸ்ய பல ஸாதந பூத கர்ம ஷயம்‌ அவனுக்கு விவஷிதமல்லாமையாலே அது நஸியாமையாலே மோக்ஷ பேதமும்‌ ப்ராமாணிகமாய்க் கூடுகையாலும்‌ , நித்யமாகையாலே புந;பர ப்ராப்தி கூடாமையாலும்‌ அவனுக்கு ஸ்வ வ்யதிரிக்த தத்வ ப்ராப்த்யபாவத்தாலே,,விரஜா பரம வ்யோம்‌ நோ: இத்யாத்‌,யுக்த ஸ்தாநமே ஸ்தாநமாகவும்‌ ப்ரக்ருதி வியுக்‌தாத்ம வாசியான மகாரத்திலே ஸித்‌தமாகையால்‌ அவை மூன்றும்‌ கூடாது.

ப்ரபத்தி தெளர்பல்யமும்‌ அதின்‌ ஸக்திரஹிதாதி காரத்வமும்‌, பக்திக்கு ஸக்தாதிகாரத்வமும்‌ ஸர்வ தர்ம பரித்யாக அங்ககதத்‌ விதாநத்தாலே கூடாது-

ஸாத்ய உபாயேந ஸித்தம் பவதீ த்யாதி த்ரயமும் ஸாஸ்த்ர ஸித்‌தமென்னில்‌ , ஸாத்‌யமுமாய்‌ விஸத்‌ருஸமுமாய்‌, அந்யமுமான ஸர்வ தர்ம பரித்யாக பூர்வகமாக ஸித்தமாய்‌, ஸத்‌ருஸமுமாய்‌ , அநந்யமுமான தன்னை உபாயமாக ஸ்லீகரி என்று விதிக்கையாலே கூடாது –

த்யாஜ்யமாகில்‌ , ஸாத்‌யோபாய விதி, வ்யர்த்தமாகையாலே “த்யாக, ஸித்‌த அநுவாத,”‘ என்கையும்‌ தத்‌,விதி, அந்யார்த்தமாகையாலே ல்யப்பாலே அபாஸ்தம்

ப்ரணவ மந்தரா அஷ்டாக்ஷரத்வமும்‌ ஓமித்யேகாக்ஷரம்‌ இத்யாதி,ஸ்ருதி ஸித்‌தையான அஷ்டாஷர ஸங்க்‌யையை யுடைத்தான திருமந்த்ரத்தாலே நிரஸ்தம்

ஐகத் வ்யாபார வர்ஜம்‌ என்கையாலும்‌ , ஸர்வ ஸராரத்வம்‌. கூடாமையாலும்‌, முக்தருக்கு ஸ்ருஷ்ட்யாதியில்‌ ஸக்தியில்‌லை என்றும்‌, ஐகத்‌ வ்யாபார வர்ஜம்‌ என்றது ஈஸ்வர நியோகமில்லா தவர்களுக்கே யாகையாலே, அதுண்டானவர்களுக்கு ஸர்வ ஸரீரத்வ மொழியவே ஸ்ரஷ்ட்ருத்வம்‌ காண்கையாலும்‌ ஸர்வ வித கைங்கர்ய வாசியான சதுர்த்தியாலே தள்ளுண்டது –

பக்தாநாமாகஸ் ஸ்வ விஜ்ஞாதா என்கையாலே தோஷ தர்ஸித்வமே வாத்ஸல்யம்‌ என்னுமதுவும்‌ ஸமந்வயாதிகரணத்தில்‌, ஸ்ருத ப்ரகாஸிகையிலே “வாத்ஸல்யம்‌ நாம தோஷேஷ்வபி குணத்வ புத்‌தி- என்றும்‌, ஸ்தலாந்தரத்திலும்‌: தோஷ போக்‌யத்வமேயாகச் சொல்லுகையாலும்‌ தத்‌ வாசியான நார ஸப்‌தத்தாலே நிரஸ்தம்-

பாதுகோத்தருதீச்சா”‘ “பர துக்க நிராசிகீர்ஷா-தயை”‘ என்றதும்‌, “தயா நாம – ஸ்வார்த்த நிரபேஷா பர துக்க, அஸஹிஷ்ணுதா” என்று ஸ்ருத ப்ரகாஸிகையிலே பர துக்க அஸஹத்வமாகச் சொன்ன தயையே நார ஸப்‌த வாச்யமாகையாலே அத்தாலே தள்ளுண்டது

கர்ம யோகாதிகளுக்கு ப்ரத்யேகோபாயத்வமும் கூடப்‌ பதினெட்டும்‌ அடைவே விவரிக்கப்படுகிறது

————-

ரஹஸ்ய த்ரய ஸாரத்திலே த்ரயோவிம்ஸாதிகாரத்திலே “லஷ்ம்யா ஸஹ ஹ்ருஷீகேஸ தேவ்யா காருண்ய ரூபயா। ரக்ஷ௧ ஸர்வ ஸித்‌தாந்தே வேதாந்தேஷு ச கீயதே என்கிறபடியே ஸ பத்நீகனாய்க் கொண்டு ஸர்வ ரக்ஷண யஜ்ஞ தீஷிதனான ஸர்வேஸ்வரனுக்கு ஸ்ரீமச் சப்‌,த,த்திலே சொல்லுகிற பத்நீ ஸம்பந்தத்தில்‌ வரும்‌ கலக்கங்களுக்கு, திங் மாத்ரத்தாலே பரிஹாரம்‌ காட்டுகிறோம்‌. சிலர்‌ த்வயத்தில்‌. பூர்வ கண்டத்தில்‌ ஸ்ரீமச் சப்‌தம்‌ உப லஷண பரமென்றும்‌, உத்தர கண்டடத்தில்‌ ஸ்ரீமச் சப்‌தம்‌ விஷேஷண பரமென்றும்‌ பிரியச் சொன்னார்கள் –இவ்விடத்தில் ஸப்தம் ஏக ரூபமாய் இருக்க ஸ்வாரஸ்யத்துக்கு பாதகமன்றிக்கே யிருக்க, “ஸ்வரூபம்‌: ஸ்வாதந்த்ர்யம்‌ இத்யாதிகளில்‌ ப்ரஸித்‌தமான கூடஸ்த ஸம்ப்ரதாய விருத்‌தமாகப் பண்ணுகிற இவ் விபாகம்‌ அநுப பந்நம் -அநந்ய உபாயத்வ விருத்தமான உபாயத்‌,வித்வ ப்ரஸங்கம் இவ்விடத்தில் பாதகமானாலோ என்னில் அநந்ய ப்ரயோஜனத்வ விருத்தமான ப்ராப்யத் வித்வ ப்ரஸங்கத்தாலே உத்தர கண்டத்திலும்‌ விஸேஷணத்வம்‌ தவிர ப்ரஸங்கிக்கும்‌. ஆனால்‌ இரண்டிடத்திலும்‌ உப லக்ஷண மானாலோ வென்னில்‌- குண விக்‌ரஹ வ்யாபார விஸேஷணங்களும்‌ இரண்டிடத்திலும்‌ உப லக்ஷணமாக ப்ரஸங்‌கிக்கும்‌. உப யுக்தங்களாகையாலே அவை விஸேஷணங்கள்‌ என்னில்‌, இதுவும்‌ பூர்வோத்தர கண்டங்களில்‌ பத்நீ ஸம்பந்தத்திலும்‌ துல்யம்‌. உபயோக விஸேஷங்கள்‌ தத் தத்‌ வஸ்துக்களுக்கு அநுரூபமான படியிலே ப்ரமாண ஸம்ப்ரதாயங்களாலே கண்டு கொள்வது. வஸ்த்வநு ரூபமாயிறே. விநியோக மிருப்பது. உபாயோபேய பரமான வாக்யத்‌வயத்திலும்‌ ஸ்ருதமான இவ் விஸேஷணத்தினுடைய உபயோக ப்ரகாரத்தை வேரி மாறாத பூமேலிருப்பான்‌. வினை தீர்க்குமே என்றும்‌, *நின் திருவருளும்‌ பங்கயத்தாள் திருவருளும்‌ கொண்டு நின் கோயிஸ்‌ சீய்த்து” என்றும்‌ நம்மாழ்வார்‌ அருளிச் செய்தார்‌.

அலமேஷா பரித்ராதும்‌. ராக்ஷஸ்வோ மஹதோ பயாத் -என்றும் “அலமேஷா பரித்ராதும்‌ ராகவாத்‌ ராக்ஷஸீகணம்‌ -என்றும் ஸ்ரீ வால்மீகி பகவான் ஆதிகாவ்யத்திலே நிபந்தித்தான்
ஸம்ஸாரார்ணவதாரிணீம்‌” என்று ஹிரண்ய கர்ப்ப காஸ்யபாதிகளும் சொன்னார்கள் -வாஸ பரம் ப்ரார்த்தயிதா ப்ரபத்‌யேந் நியத ஸ்ரியம்‌* சவ்நக பகவான்‌ விதித்தான்-“ஆத்ம வித்யா ச தேவி த்வம் விமுக்தி பலதாயிநீ –என்று புலஸ்த்ய வஸிஷ்ட வர ப்ரஸாத லப்த பரதேவதா பாரமார்த்ய ஞானமுடைய ஸ்ரீ பராசர ப்ரஹ்ம ருஷி அருளிச் செய்தான் –விமுக்தி பலதாயிநீ –என்கிற இது ஆத்ம வித்யா விசேஷணமாகிலும் தத் ஸாமாநாதி கரண்யத்தாலே அது இவளுடைய விபூதியாயிற்று -ஸ்ரீ யபதிதானும்-யாமாவம்ப்‌ய ஸுகே நேமம்‌ துஸ்தரம்‌ தரிகுணோததி,ம்‌। நிஸ்தரந்தய சிரேணைவ வ்யக்த த்யாந பராயணா; என்று ஸ்ரீஸாத்வதத்திலே ஸ்ரீயபதி ரூப த்‌யாநத்திலே அருளிச் செய்தான் – தத்பரங்களான ஸாஸ்த்ரங்கள்‌ நிற்க இம் மத்‌ய ஸாஸ்த்ரங்கள்‌ அதிப்ரபலங்கள்-ஆளவந்தாரும்‌.*ஜகதஸமஸ்தம்‌ யத பாங்க ஸம்ஸிரயம்‌? என்றும்‌, *ஸ்ரேயோ ந ஹ்யரவிந்த லோசந மநஃகாந்தா-. ப்ரஸாதாத்‌ருதே ஸம்ஸ்ருத் யஷர வைஷ்ணவாத்‌ வஸூ ந்ருணாம்‌ ஸம்பாவ்யதே கர்ஹிசித்‌* என்றும்‌ அருளிச்செய்தார்‌-ஸ்ரீ பராஷ்யகாரரும்‌ – ஸ்ரீவைகுண்ட கத்யத்திலே, ஸேஷஸேஷாநாதி, ஸர்வம்‌ பரிஜநம்‌ பகவதஸ் தத்ததவஸ்தோசித பரிசர்யா யாமாஜ்ஞாபயந்தயா என்று பகவத்‌ கைங்கர்ய ரூப பரம புருஷார்த்த,ம்‌ இவள்‌ நியோகத்தின் படியே நடத்த வேணுமென்று அருளிச்செய்தார்-கூரத்தாழ்வானும் –ஸ்வஸ்தி ஸ்ரீரதிஸதாத சேஷ ஜகதாம் -ஸர்க்கோப ஸர்க்க ஸ்திதீ: ஸ்வர்க்கம்‌ துர்க்கதிமாபவர்க்கிக பதம்‌ ஸர்வம்‌ ச குர்வந்‌ ஹரி ய்ஸ்யா வீக்ஷ்ய முகம்‌: ததிங்கித பராதீநோ விதத்தே அகிலம்‌ க்ரீடேயம்‌ கலு நாந்ய தாஸ்ய ரஸதா ஸ்யாதை கரஸ் யாத்தயா” என்று ஸங்க்‌ரஹித்த அர்த்தத்தை *தேவி த்வந் மஹிமாவதிர்‌ ந ஹரிணா நாபி த்வயா ஜ்ஞாயதே” என்று தொடங்கி விஸ்தரித்தார்

பட்டரும்‌, “ஐ்ஸ்வரய மக்ஷர கதிம்‌ பரமம்‌ பதம்‌ வா கஸ்மைசிதஞ்ஜலிபரம்‌ வஹதே விதீர்ய -அஸ்மை ந கிஞ்சிதுசிதம்‌ க்ருதமித்ய தாம்பத்வம்‌ லஜ்‌ஜஸே கதய கோய முதாரபவ.* என்று ஸ்ருதியில்‌ உதார ஸப்‌தத்துக்கு வ்யாக்‌யாநம்‌ பண்ணினார்‌ இத்யாதியாலும்‌-இப்படி மத்‌யஸ்த த்ருஷ்டியாலே ப்ராமாணிகார்த்தங்கள்‌ தோற்றச் செய்தே பற்றினது விடாதொழியில்‌, த்ருட பூர்வ ஸ்ருதோ மூர்க்கோ தர்மாணா மவிஸாரத,। வ்ருத்‌தாந ப்ருச்சந்‌ ஸந்தேஹாந்‌ அந்த ஸ்வ ப்‌ரமிவர்ச்சதி – அந்யதா மந்த புத்‌தீநாம்‌. ப்ரதிபாதி துராத்மநாம்‌. | குதர்க்க(வ்யால தஷ்டாநாம்‌), ஜ்ஞாநதுஷ்டாநாம்‌ விப்‌ராந் தேந்த்‌ரிய வா(ஜி)திநாம்‌ என்கிற தஸையாம்‌- ஆகையால்‌ ஸித்‌தோபாய ஸப்‌த வாஸ்ய விமர்ஸத்தில்‌ நாநயோர் வித்‌யதே பரம்‌ இத்யாதியாலும்‌, ஸப்த விம்ஸாதிகாரத்திலே, வக்ஷ்ம்யா ஸஹ … கீயதே ‘இத்யாதிகளிற்படியே ஸபத்நீக ஸித்‌தனாயிருக்கையாலே இங்கே ப்ரமாண ஸித்‌தோபயோக விஸேஷமான பத்நீ ஸம்பந்தம்‌ ஆர்த்தம்‌. இப்படி ஸந்நியோக சிஷ்ட ந்யாயத்‌தாலே எம்பெருமானைச்‌ சொன்ன விடமெங்கும்‌ பிராட்டியையும்‌ சொல்லிற்றாம்‌’ என்றும்‌, அஷ்டாவிம்ஸாதிகாரத்திலே, “நாராயணன்‌ ஸரண்யனாம் போது லக்ஷ்மீ விஸிஷ்டனா யிருக்குமென்கைக்காக பூர்வகண்டத்தில்‌ ஸ்ரீமச் சப்‌தம்‌‘ என்றும்‌, ‘சரணா விதி நிர்தேஸ பத்நீ வைஸிஷ்ட்ய பாதக -இதி மந்தைரிதும்‌ ப்ரோக்தம்‌ ஸ்ரீமச் சப்த நிரோததா! ஸப்‌த ஸ்வ ரஸத ப்ராப்தம்‌ வைஸிஷ்ட்யம்‌ பரமம்‌ ஸ்ருதம்‌ | விஸேஷ்ய சரண த்வித்வம்‌ ந ஹி பதிது மர்ஹதி !! சரணாநிதி வக்தவ்யமிதி யச்ச ப்ரஸஞ்ஜிதம்‌ | க்‌ரந்தஜ்ஞைர பஹாஸ்யம்‌ தத்‌ பதி ப்ராதாந்யதோ அந்வயாத்‌ – ந ஸம்ராஜி ஸ பத்நீ கே. ஸத்‌,விதீயோக்தி ஸாஹஸம்‌ | ததாத்ரேத்ய பராம்ருஸ்ய தர்ஸிதம்‌ குரு ஸாஹஸம்‌’ இத்யாதியாலும்‌ இப்படியே உபாய ஸ்ரீ , என்று ஸாதிக்கப்பட்டது –

இதி பூர்வ பக்ஷக்‌ரந்த.

அத, ஸித்தாந்த–நோபாய-ஸ்ரீ;
ஸ்ரீவசந பூஷண வ்யாக்‌யாநத்திலே – “புருஷகாரமென்றும்‌, உபாயமெண்றும்‌ இவற்றை நிரூபகமாக அருளிச் செய்தது. – பிராட்டிக்கு புருஷகாரத்வமும்‌, ஈஸ்வரனுக்கு உபாயத்வமும்‌ அஸாதரணம் என்று தோற்றுகைக்காக-இது தன்னை –மத் ப்ராப்திம்‌ ப்ரதி ஐந்தூநாம்‌ ஸம்ஸாரே பததாமத। லக்ஷ்மி புருஷகாரத்வே நிர்திஷ்டா பரமர்ஷிபி,। மமாபி ச மதம்‌ ஹ்யேதத்‌ நாநயதா லக்ஷணம்‌ பவேத்‌ன்றும்‌, “அதம்‌ மத் ப்ராப்தயுபாயோ வை ஸாக்ஷாத்‌ வக்ஷ்மீ பதி: ஸ்வயம்‌ | வக்ஷ்மீ, புருஷகாரேண வல்லப. ப்ராப்தி யோகிநீ | ஏதஸ்யாஸ் ச விஸேஷோயம்‌ நிகமாந்தேஷு ஸப்த்‌யதே? என்றும்‌. “ஆகிஞ்சந்யைகரணா கேசித்‌ பாக்‌யாதிகா; புந மத் பதாம்போருஹ த்‌வந்வம்‌ ப்ரபத்ய ப்ரீதா மாநஸா வக்ஷ்மீம்‌ புருஷகாரேண வ்ருத வந்தோ வராநந। மத் க்ஷமாம்‌ ப்ராப்ய ஸேநேஸ ப்ராப்யம்‌ ப்ராபகமேவ மாம்‌! வப்த்வா க்ருதார்த்தா ப்ராப்ஸ்யந்தி மாமேவ அநந்ய மாநஸா:*. எண்றும்‌ பகவஸ் ஸாஸ்த்ரத்திலே. தானே அருளிச் செய்தானிறே” என்றும்‌, “உபாயத்வமும்‌, *கருஷ்ணம்‌ தர்மம்‌ ஸநாதநம்‌‘ என்று ஸநாதந தர்மமாகச்‌ சொல்லப்படுகிற அவனுக்கே ஸ்வதஸ் ஸித்‌தமாய்‌, ததீஃயருக்கும்‌ ததா ஸத்தியடியாக வருகிறதிறே யுள்ளது. ஆகையாலே பிராட்டிக்கு, புருஷகாரத்வமும்‌ ஈஸ்வரனுக்கு, உபாயத்வமும்‌ நிரூபகமாகத்‌ தட்டில்லை – இவ்வர்த்தத்தை. வெளியிடுகைக்காக வாயிற்று இவரிப்படி அருளிச்‌ செய்தது” என்றும்‌. “இப்படி புருஷகார ஸாபேஷமென்னில்‌ உபாயத்தினுடைய நைரபேஷ்ப ஹாநி வாராதோ என்கிற ஸங்கையிலே அருளிச் செய்கிறார்மேல்‌ உபாயமென்று. தொடங்கி–அதாவது – ஸஹாயாந்தர ஸம்ஸர்க்க அஸஹமான ஸித்‌தோபாயம்‌ ஸரண வரண ஸ்வரூப ஸ்வீகாரத்திஸ்‌ ஸ்வீகர்த்தாவான புருஷனையும்‌ ஸ்வீகரிப்பிக்கும்‌ புருஷகாரத்‌தையும்‌ அபேஷித்திருக்கும்‌- ஸ்வீக்ருதனான தான்‌ இவனுக்கு அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக இஷ்ட ப்ராப்தி பண்ணுகையாகிற கார்ய காலத்தில்‌ புருஷனும்‌ புருஷகாரமுமாகிற உபயத்தையும்‌ அபேஷியாதே தானே செய்து தலைக்கட்டும் என்கை –

கார்ய காலத்தில்‌ ஸஹகாரி ஸாபேஷத்வமுண்டாகிலிறே உபாயத்தினுடைய நைரபேக்ஷ்யத்துக்கு. ஹாநி வருவதென்று கருத்து” என்றும்‌, ரஹஸ்ய த்ரய வ்யாக்‌யாநத்தில் அகாரார்த்த விவரணத்தில்‌, “வக்ஷ்ம்யா. ஸஹ… கீயதே என்கிறபடியே ரக்ஷகனான ஈஸ்வரன்‌. சேதநரை ரக்ஷிக்கும்‌ தஸையில் இவர்களுடைய அபராதங்களைக்‌ கண்டாதல்‌, தன் ஸ்வாதந்த்ர் யத்தாலே யாதல்‌ உபேஷியாமற் செய்கைக்குறுப்பான க்ருபையை ஜநிப்பிக்கும்‌. புருஷகார பூதையான பிராட்டி ஸந்திதி அவஸ்யாபேக்ஷித-மாகையாலே, ரக்ஷகனானவனைச்‌ சொல்லுகிற இவ் வகாரத்‌திலே லக்ஷ்மீ ஸம்பந்தம்‌ அநு ஸந்தேயமென்கை’ என்றும்‌ த்வயத்தில்‌ பூர்வகண்டத்தில்‌ ஸ்ரீமத் பதார்த்த விவரணத்தில்‌, ‘இப்போதிவளேச்‌ சொல்லுகிறது புருஷகாரமாக” என்கையாவே உபாய வஸ்து விஸேஷணமா யிருக்கிற ஆகாரத்தை யிட்டு இவளுக்கு உபாயத்வத்தில்‌, அந்வயம்‌ சொல்லும்‌ பக்ஷம்‌ நிரஸ்தம்‌’ என்றும்‌ சரணாவிதி பதார்த்த விவரணத்தில்‌ த்வி வசநம்‌ இரண்டுக்கு மேல்‌ மற்றொன்று புகுர ஸஹியாமையாவே ஸஹாயாந்தர நிரபேக்ஷமான உபாய பூர்த்தியையும்‌ சொல்லுகிறது என்கை’ என்றும்‌, “அவனுபாயமாமிடத்தில்‌ ஸஹாயாந்தரங்களை ஸஹியாமையாலே தான்‌ உபாய பாவத்தில்‌ அந்வயமின்றிக்கே புருஷகாரமாயிருக்கும்‌ என்றும்‌. ‘பெரிய ஜீயர் அருளிச் செய்தார் –

பரந்த ரஹஸ்யத்தில்‌ (த்‌வய ப்ரகரணே மதுபர்த்த விசாரே), ஸ்ரீமந் நாராயண சரணெள என்று உபாய தயா வக்ஷ்யமாணனான நாராயணனுக்கு விஷேஷணமாக ஸ்ரீமத்தையைச்‌ சொல்வா தின்றால் நாராயண ஸப்‌தத்திற் சொல்லப்‌ புகுகிற குண விஸேஷங்கள்‌ விஸேஷணத்வேந உபாய ஸரீரத்திலே அந்விதமாகிறவோபாதி இவளும்‌ உபாய அவயவமாக ப்ராப்தையுமாய்‌ மாதா பிதாக்களிருவரும்‌ சேர விருந்து ப்ரஜா ஸம் ரஷணம்‌ பண்ணுகை ப்ராப்தமுமாய்‌ அதுக்கு மேலே *வேரி மாறாத பூமேலிருப்பாள்‌ வினை தீர்க்குமே என்று உபாய க்ருத்யமான விரோதி நிவர்த்தகத்வம்‌ இவ் வர்த்தத்திலே நிஷ்டரான நம்மாழ்வார்‌ திருவுள்ளத்தாலுமுண்டாய்‌ ப்ரதேஸாந்தரங்களில்‌, இவளை புருஷகாரமாக நினைத்துச் சொல்லுகிறார்களென்கிறவையும்‌ உபாய பாவத்திலே அந்வயிப்பிக்க யோக்‌யமுமாய்‌ அதுக்கு மேலே, *அரி ப்ராணாந்‌ பரித்யஜ்ய ரஷிதவ்ய* என்று மேலே அநுஷ்டிடக்கப் புகுகிற ப்ரபத்தி தானே புருஷகார க்ருத்யத்தைச்‌ செய்ய வற்றாகையாலும்‌, மாட்டாதாகில்‌ இவள்‌ ஸ்வாதந்த்ர்யத்தை யாற்றிச் சேரவிட உபாயபூதனானவிவன்‌ ரஷிக்க வமைந்திருக்க உபாயாந்விதமான இவனுடைய ப்ரபத்த்யநுஷ்டாநம்‌ நிஷ்பலமாம் படியுமாயிருக்க இவளுக்கு உபாய ஸரீரத்தில்‌ அந்வயமில்லை – புருஷகார பாவத்திலே என்று ஒதுக்கித்‌ தருவாரார்‌ என்னில்‌ விஸேஷணத்வ முண்டே யாகிலும்‌ விஸேஷணகதமான குணங்களோபாதி உபாயோபயோகித்வம்‌. இவளுக்கு இல்லாமையாலும்‌ ஸமாஸ்ரயணைகாந்தமான ஸெளஸீல்யாதி குணோதய விரோதியான ஸ்வாதந்த்ரயத்தை புருஷகார பூதையான இவளாற்றினாலும்‌ அவன் கார்யம்‌. செய்யும் போதைக்கு “ரக்ஷ்யாபேஷாம்‌ ப்ரதீக்ஷ்தே* என்கிறபடியே உபாய ப்ரார்த்தநா ரூபமான ப்ரபத்தி வேண்டுகையாலும்‌, *வினை தீர்க்கும்‌” என்கிறவிடம்‌ *களைவாய்‌ துன்பம்‌ களையாதொழிவாய்‌ களை கண்‌ மற்றிலேன் * என்கிறவருடைய உக்தி யாகையாலே இத் திருவாய்மொழி அநுஸந்தித்தவர் பக்கல்‌ இவளுக்குண்டான ஆதராதிஸய ப்ரகாஸகமாகையாலும்‌ இவளுக்கு புருஷகார பாவத்திலே நோக்காகக் கடவது-

இவளுக்கு உபாய பாவத்தில் அந்வயமுண்டாகில் சாதன பூதமான கர்மஜ்ஞாநாதிகளுக்கு “பலமத;* “ஸப்ரிதோ அலம்‌ பலாய* என்று ஆராதந ப்ரீதனான ஈஸ்வரன் முகத்தாலே இஷ்ட அநிஷ்ட ப்ராப்தி பரிஹார ரூபமான பல ஸித்‌தி இவனாலேயாதல்‌, அங்ஙனன்றியிலே பல ப்ரதிபாதந ஹேதுவான ஜ்ஞாந ஸக்த்யாதிகளுக்கு உத்பாதிகையாதாலாக வேண்டும் -தான் பல ப்ரஸாதிகையாகில் –யஸ் ஸர்வஜ்ஞஸ் : ஸர்வவித்‌*, *பராஸ்ய ஸக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வாபாவிகீ ஜ்ஞாந பல க்ரியா ச *, *தேஜோ பலைஸ்வர்ய மஹாவபோத, ஸூ வீர்ய ஸக்த்யாதி குணைகராஸி , என்று ஸ்ருதி ஸ்ம்ருதிகளில்‌ ஈஸ்வரனுக்குச் சொல்லுகிற ஜ்ஞாந ஸக்த்யாதி குண விஸேஷங்களின்றியிலே யொழிய வேணும்‌-உண்டாகிலிவனளை யொழியவே ஈஸ்வரன் தானே கார்ய கரண க்ஷமனே. அக் குணங்களை உத்பாதிக்கிறாளாகில்‌ குணங்களுக்கு ஸ்வாபாவிகத்வ மின்றியிலே யொழியும்‌. ஸெளஸீல்யாதிகளோபாதி திரோஹித மானவற்றை ப்ரகாஸிப்பிக்கிறாளென்னில்‌, ஐகத் ஸ்ருஷ்டி ஸம்ஹாராதிகளிலே இடைவிடாமல்‌ விநியோகம்‌ கொண்டு போருகிற ஜ்ஞாந ஸக்தயாதிகளுக்கு ஸெளஸீல்யாதி திரோதாயகமான ஸ்வாதந்தர்யத்தோபாதி ஒரு திரோதாநமில்லையே- உண்டாகில்‌ ஸ்ருஷ்ட்யாதிகள்‌ நடவா தொழிய வேணும்‌- ஸர்வதா அந்விதையாகில்‌ ஸ்வ விரோதி நிவ்ருத்தியில்‌, தத் தஸ்ய ஸத்ருஸம்‌ பவேத்‌ என்று இருக்கக் கூடாதே.. குண விஸேஷங்களே அமைகை யன்றோ-“ஆஸம்ஸேயம்‌ ஹரி ஸ்ரேஷ்ட, க்ஷிப்ரம்‌ மாம்‌ ப்ராப்ஸ்யதே பதி! அந்தராத்மா ச மே ஸூத்த தஸ்மிம்ஸ் ச பஹவோ குணா என்று தன் பக்கல் அநந்வோபாயத்வமும்‌ அவன் பக்கல் குண” விஸேஷங்களுமே பல ஸித்‌திக்கு மபேஷிதமாகத்தான் அறுதியிட்டு வைத்தது-நாம்‌ உபாயமாக யாதொரு வஸ்துவை ஸ்வீகரிக்கிறோம்‌, அவ் வஸ்துவுக்கு இவள்‌ ஸ்வரூப நிரூபிகை யாகையாவே ப்ரணவத்தில்‌ ப்ரதம பதத்திற் போலே *யத்‌யபி ஸச் சித்த. “என்கிற குண ஸித்‌தி ந்யாயத்தாலே அவர்ஜநீயமாய்‌ அந்வயியாதோ வென்னில்‌, ஸ்வரூப நிரூபகத்வேந அவர்ஜநீய ஸம்பந்தம்‌ உண்டே யாகிலும்‌ உபாய தஸையைக்‌ கொண்டு கொள்வதொரு ப்ரயோஜந மில்லாமையாலே ஸ்வரூப நிரூபகங்களான ஜ்ஞாநாநந்தகங்களோபாதியும்‌. குமரிருந்து போமித்தனை-இவற்றுக்கு ப்ரயோஜந மின்றிக்கே யொழிகைக்கு ஹேது அவனுடைய நைரபேஷ்யமாகில்‌, சில குண விஸேஷங்கள்‌ உபாயதயா அந்வயிக்கிறபடி என் என்னில்‌, இவை கார்யோபயோகி யாகையாலும்‌, குணத்வேந அப்ருதக் புத்‌தி ப்ரவ்ருத்திக மாகையாலும்‌ குணி குண த்‌வாரா கார்யம்‌ செய்கை நைரபேக்ஷயத்துக்குக்‌ கொத்தை யல்லாமையாலும்‌ அவற்றுக்குத்‌ தட்டில்லை

இவள்‌ கார்யாநுபயுக்தை யாகையாலும்‌ த்ரவ்யத்வேந ப்ருதக்‌ புத்‌தி ப்ரவ்ருத்தி யோக்‌யதை யுண்டாகையாலும்‌ அத்தாலே உபாய நைரபேக்ஷ்யத்துக்குக் கொத்தையா யறுகையாலும்‌ உபாய பாவத்தில்‌ அந்வயமில்லை-ஆகையால்‌. ஸேக்ஷித்வ தஸையிலும்‌ ப்ராப்யத்வ தஸையிலும்‌ ஒரு மிதுநமே ஆக வேண்டினவோபாதி உபாய தஸையிலே ஸ்வேதர ஸகலாஸஹாயாஸஹ மாயிருக்கையாலே இவளுக்கு உபாய பாவத்தில்‌ அந்வயமின்றியிலே புருஷகார பாவத்திலே யாகக்கடவது– என்றும்‌, கதய த்ரய வ்யாக்‌யாநத்திலே ‘ஸ்ரீவல்லப, – இவ் வாலப்‌யம்‌ புருஷகார பாவத்துக்கும்‌ ப்ராப்யதைக்கும்‌ உறுப்பாயிறே யிருப்பது‘ என்றும்‌.” ஸ்ரீமந்‌- இப்படி யிருக்கிற உன்னையுங் கூட அசிர்த்து, புருஷகார பூதையான பிராட்டியைப்‌ பார்த்து ரஷிக்க வேணும்‌” என்றும்‌, ‘ஸ்ரீமதே* என்கிற விடத்தில்‌ ஸ்வரூபாநு பந்தியான லக்ஷ்மீ ஸம்பந்த மநுஸந்தேயம்‌-இத்தால்‌ புருஷகாரபாவம்‌ சொல்லிற்று என்றும்‌, ஸ்ரீமந்‌– பூர்வ வ்ருத்தம்‌. பாராதே விஷயீகரிக்கும்படி அருகே யிருந்து சேர்ப்பாருமுண்டு” என்றும்‌ ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தார் –

சரம ரஹஸ்ய த்ரயத்தில் –இப்பதத்தில் த்வி வசனம் ஸ த்விதீயம் இவ் வுபாயம்‌’ என்கிற ஸாஹஸ வசநத்தைத் தள்ளுகிறது.. அவனுமவளும் கூட உபாயமென்னில்‌, சரணங்கள்‌ இரண்டு என்ன வொண்ணாது, நாலென்ன வேணும்‌. இவ்விருவரும்‌. ஸமப்ரதாநரென்னில்‌, அவளும்‌ தனியே உபாயமாய்‌ அவனும்‌ தனியே உபாயமாய்‌ விஸிஷ்டம்‌ உபாயமென்னும்‌ வார்த்தையோடு விரோதிக்குமாகையாலே, அவளுக்கு, புருஷகார பாவமும்‌ அவனுக்கு உபாய பாவமும்‌ வ்யவஸ்த்திமாயே யிருக்கும்‌‘ என்று நயினாராச்சான் பிள்ளை அருளிச்‌ செய்தார்‌. ரஹஸ்யாம்ருதத்திலே “இவளுடைய உபாய பாவத்தை ஸகல ப்ரமாணங்களும்‌ சொல்லிற்றே யாகிலும் வக்ஷ்மீ விஸிஷ்டம்‌ உபாயம் என்னுமனவில்‌ விஸேஷ்யமான ஈஸ்வராம்ஸத்திலே ப்ராதாந்யமும்‌ விஸேஷணமான இவள்‌ பக்கலிலே அப்ராதாந்யமுமாகக் கடவது-அதாவது புருஷோத்தமத்வத்தாலே வந்த ஸ்வாதந்த்ரியத்தாலே அநிஷ்ட நிவ்ருத்தியும்‌ இஷ்ட ப்ராப்தியும்‌ பண்ணிக் கொடுப்பான் – ஈஸ்வரனேயாய்‌, இது கண்டு தானுகந்து அவனைப் பின் செல்லுகை – தனக்கு ஸ்வரூபமா யிருக்கை-ஆன பின்பு தனித்து இருவரும்‌ உபாயமாகச்‌ சொல்லுகிற விடங்கள்‌ பகவானுக்கு அபிமதையாய்‌ அநுரூபை யாயிருக்கிற ப்ராதாந்யத்தாலே இவள்‌ சொல்விற்றை அவன்‌ செய்யுமென்கிற நி்ஸ்சய நிபந்தநமாகக்‌ கடவது-ஆகையால்‌. உபாய விஸேஷணமான விக்‌ரஹாதிகளில்‌ ஸூபாஸ்ரயத்வத்திலே விக்‌ரஹத்துக்கு அந்வயமாகிறாப் போலேயும்‌ அக் குணங்களில்‌ வாத்ஸல்யாதிகளுக்கு. ஆஸ்ரயணீயத்வத்திலும்‌, ஜ்ஞாந சக்த்யாதிகளுக்கு கார்ய கரத்வத்திலும்‌ அந்வயமாகிறாப் போலவும்‌ குணங்களுக்குத்‌ தனித் தனியே கார்ய பேதமுண்டானாப் போலவும்‌ லக்ஷ்மிக்கு புருஷகார பாவத்திலே அந்வயமென்று நிஷ்கர்க்ஷிக்கப் பட்டதாயிற்று” என்று வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர்‌ அருளிச் செய்தார்‌

தத்வ பூஷணத்திலே ‘காரண வஸ்துவே உபாஸ்யமுமாய்‌ ஸரண்யமுமாகையாலே இவளுக்கு உபாய பாவத்தில் அந்வயமில்லை. இவளுக்கு உபாய பாவமுண்டாக ப்ரமாணங்களுண்டே என்னில்‌ – அது ஸரண்யனுடைய இச்சாநுவிதாயித்வமாகக் கடவது’ என்றும்‌. “மேலே ப்ரதம பதாந்தமான த்வி வசநத்தாலே நிர்விக்ரஹவாதிகளை நிரஸிக்கிறது-அநந்தர பதத்தாலே உபாயத்‌வித்வாதிகளை நிரஸிக்கிறது. என்று நடுவில் திருவீதிப் பிள்ளை நிர்வஹிப்பர்‌” என்றும்‌, ரஹஸ்ய த்ரய ஸாரத்திலே ‘சரணெள’ என்று த்‌வி வசந ப்ரயோகம்‌ பண்ணுவான் என் என்னில்‌ ஏக வசந ப்ரயோகம் பண்ணினால்‌ ஜாத்யேக வசநமாகக்‌ கொண்டு லக்ஷ்மீ விஸிஷ்டோபாயத்தைக்‌ காட்டுகையாலேஅதை வ்யாவர்த்திக்கைக்காக த்வி வசந ப்ரயோகம்‌” என்றும்‌- ‘வக்ஷ்மீ குண விக்‌ரஹங்கள்‌ விஸேஷணமாய்‌- அவன் விஸேஷ்யமாகையாலே விஸேஷ்யாம்ஸ பூதனானவனுக்கே ப்ராதாந்யேந கார்ய கரத்வம்‌-விஸேஷணாம்‌ஸமான இவற்றுக்கு ததநுவிதாயித்வ மாத்ரமே யாயிருக்கு மாகையால்‌-விக்‌ரஹத்துக்கு ஸுபாஸ்ரவத்வம்‌ வாத்ஸல்யாதி களுக்கு ஆஸ்ரயண சவ்கர்யாபாதகத்வம்‌-ஜ்ஞாந ஸக்த்யாதிகளுக்கு ஆஸ்ரித கார்‌யாபாதகத்வம்‌ இந்த குணங்களுக்குத்‌ தனித்தனியே கார்ய பேதம் எப்படி அப்படியே வக்ஷ்மீ புருஷகாரத்வம்‌ நியதமாகவே யிருக்கும்‌ என்றும்‌, ஸ்ரீ மாலாதி பவம்ஸ மவ்க்திகமணி கண்டீரவோ வாதிநாம்‌ நாம்நா யாமுந தேஸிக கவிவர பாதஞ்ஜலே பண்டித. என்று சொல்லப்பட்டவராய்‌, அழுகருக்கு புரோஹிதராய்‌ வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர்‌ பாதத்திவலவரான யாமுநாசார்யர்‌ அருளிச் செய்தார்‌- இத்தால்‌ ப்ரமாண ஸித்‌தமு மின்றியிலே பகவதபிமதமுமின்றியிலே ஸம்ப்ரதாய ஸித்‌தமுமின்றியிலே ஆசார்ய ருசி பரித்யக்தமான இந்த உபாயத்வம்‌ பரித்யாஜ்யம்‌ ப்ரமாண ஸித்‌தமுமாய்‌ பகவதபிமதமுமாய்‌, ஸம்ப்ரதாய ஸித்‌தமுமாய்‌ ஆசார்ய ருசி பரிக்‌ருஹீதமு மாயிருக்கிற புருஷகாரத்வமே ப்ராமாணிகருக்கு பரிக்‌ராஹ்ய மென்றதாயிற்று-

இதி ரஹஸ்ய விவேகே ப்ரதம விவேக ஸமாப்தம்

————

அத, பூர்வபக்ஷி- ஸ்ரீர் விப்வீ

சதுஸ் ஸ்லோக் யதிகாரே –ஏவம் கில தே வதந்தி யதா விபு ஸ்வபாவஸ்ய ஈஸ்வரஸ்ய அகடிதகடநா ஸாமர்த்‌யாத்‌ அணுத்வம்‌-ததா அணு ஸ்வபாவாயா ஏவ தஸ்யா விபுத்வமிதி தத்ர த்ருஷ்டாந்தஸ் தாவத யுக்த உபாத்‌யவச்சேத மாத்ரேண ஹி அணுத்வம்‌ ஈஸ்வரே அங்கீ க்ரியதே ந து ஸ்வரூபத யதிசாகடிதகடநா ஸக்தயா அத்ர விருத்‌த த்வய ஸம்பவ ததா ஸர்வாத்‌வைத பேதாபேத பஷாப்யாம் கிமபராத்தம்‌-என்றும்‌-ந ச ஸர்வகதாதி ஸப்‌தாநாம்‌. ஸார்வத்ரிகாவதார ஸர்‌வ ஸேஷித்வாதி ப்‌ரதிபாதகத்வம்‌ கல்ப்யம்‌- யதா ஸ்ருத ஸ்வீகாரே விரோதாபாவாத்‌ நாபி! முக்தவத்‌ தர்ம பூத ஜ்ஞாந த்‌வாரா வயாப்தி கல்பநம்‌ யுக்தம்‌ தத்‌வத்‌ பாதக ஸ்ருத்யாத்‌ய பாவாத-விபுத்வயாஸம்பவே இஹ பாதக இதி சேந் ந – கால தத்வே நித்ய முக்தேஸ்வராணாம்‌-தர்ம பூத ஜ்ஞாநே ச விபுத்வ ஸ்வீகாராத்‌ என்றும்‌. அதோ ஜீவத்வேப்யஸ்யா ஸ்வரூப விபுத்வேந பதி ஸ்வரூபாநுரூப்யமிதி” என்றும்‌, ஸப்த விம்ஸாதிகாரத்திலே “வ்யாப்தனுக்கு ப்ரதி வஸ்து பூரணத்வமாவது ஓரொரு உபாத்‌ய வச்சிந்ந ப்ரதேஸமே ஸர்வத்தையும்‌ நிர்வஹிக்க வல்ல ஸக்தியை யுடைத்தா யிருக்கை யல்லது வஸ்து தோறும்‌. ஸ்வரூப ஸமாப்தி யன்று. இது கொள்ளில்‌ பஹிர்‌ வ்யாப்திக்கு விருத்‌தமாம்‌. இத்தை அகடிதகடநா ஸக்தியால்‌ நிர்வஹிக்கில்‌ விருத்‌த ஸமுச்சயம்‌ கொள்ளும்‌ பர மதங்களிற் படியாம்‌‘ என்றும்‌ ஸ்ரீக்கு விபுத்வம்‌ ஸாதிதமாயிற்று-

இதி பூர்வ பக்ஷ க்ரந்த

அத ஸித்தாந்த -ஸ்ரீர் ந விப்‌வீ

ஸ்ரீக்கு விபுத்வம்‌ கிடையாது– எங்ஙனே யென்னில்‌ ஈஸ்வரன்‌ அணுக்கள்‌ தோறும்‌. பரி ஸமாப்ய வர்த்திக்‌மென்னுமிடம்‌ கூடாதாகில்‌ பரி ஸமாப்ய வ்ருத்தியைச்‌ சொல்லுகிற அந்தர்யாமி ப்‌ராஹ்மண ஸுபாலோபநிஷத்‌ ப்ரப்‌ருதி ஸகல ப்ரமாண விரோதம்‌ ஸம்பவிக்கும்‌- திருவாய்மொழி முதல்‌ திருவாய்மொழி எழாம்‌ பாட்டின்‌ ஈட்டிலே. ‘”அவை யவை தொறும்‌” – அவ்வோ பதார்த்‌தங்கள்‌ தோறும்‌ அவற்றிலே வ்யாபிக்கு மிடத்திலே பல தூணுக்காக ஒருத்திரம்‌ கிடந்தாப் போலே யன்றிக்கே ஜாதி வ்யக்தி தோறும்‌ பரிஸமாப்ய வர்த்திக்குமாப் போலே எல்லாவற்றிலும்‌ தனித் தனியே குறைவற வ்யாபித்து-நிற்கும்‌ என்றும்‌, “(எங்கும்‌ பரந்து) அந்தர்‌ பஹிஸ்ச வ்யாபித்து- இதில்‌ ப்ரமாணமென்னென்னில்‌. (உளன் சுடர் மிகு சுருதியுள்‌) அபெளருஷேயமாய்‌ நித்ய நிர்தோஷமா யிருக்கிற வேதத்தாலே ப்ரதிபாதிக்கப் பட்டிருக்கும்‌” என்றும்‌, பத்தாம்‌ பாட்டில்‌ “இப்படி வ்யாபித்து, நின்றால்‌ அசித் ஸம் ஸர்க்கத்தாலே சேதநனுக்கொரு ஸங்கோசம்‌ பிறவா நின்றதிறே. அப்படியே இவனுக்கு மிவற்றோட்டை ஸம் ஸர்க்கத்தாலே ஸங்கோசம்‌ பிறக்குமோ வென்னில்‌- அது செய்யாது, அஸங்குசிதமாக வ்யாபித்து நிற்குமென்று வ்யாப்தி ஸெவ்கர்யத்தை யருளிச் செய்கிறார்‌ (பரந்த தண்‌ பரவை) இத்யாதி–பரந்து குளிர்ந்திருந்துள்ள. கடலில்‌-ஜல பரமாணுக்கள் தோறும்‌ வ்யாபித்திருக்கும்‌ நீர்ச் செறிவாலே திரண்டு தோற்றுகிற வித்தனை யிறே; பரமாணு ஸங்காதமிறே- “ஜ்யாயா நந்தரிக்ஷாத்‌* என்கிற வஸ்து, ஜல பரமாணுக்களிலே வ்யாபியா நின்றால்‌ அல்பாவகாஸமாய்‌ நெருக்குப் பட்டிருக்குமோ வென்னில்‌ பரந்த அண்டம்‌-இது எனவாயிற்று வ்யாபித்திருப்பது-ஓரண்டத்தைச்‌ சமைத்து அதிலே ஓர்‌ ஏகாகியை ஸவத்தாப் போலே இருக்கும்‌- இப்படி ஜல பரமாணுக்களிலே வ்யாபித்து, விடுமத்தனையோ என்னில்‌ எண்றும்‌ * (இடந் திகழ்‌ பொருடொறும்‌) – அவ்வ ஸரீரங்களிலே ஜ்ஞாநாநந்த லக்ஷணமாய்க் கொண்டு மிளிருகிற ஆத்மாக்கள் தோறும்‌, (எங்கும்‌ பரந்துளன் ) சேதநன்‌ ஸரீரத்திலே வ்யாபிக்கும்‌ போது அதில்‌ ஏக தேஸத்திலே நின்று ஜ்ஞாநத்தாலே எங்கும்‌ வ்யாபிக்கக் கடவனாயிருக்கும்‌. இவன் அங்கனன்றிக்கே ஸ்வரூபத்தாலே எங்கும்‌ வ்யாபித்திருக்கும்‌-விபுத்வத்தை அவனுக்குச் சொல்லி அணுத்வத்தை. இவனுக்குச் சொல்லி இதுக்குள்ளே அவன் குறைவற வ்யாபித்திருக்கும் என்றால்‌, அது கூடுமோ வென்னில்‌, (இவை யுண்ட கரனே) சிறுவடிவைக் கொண்டு பெரிய வற்றை யெல்லாம்‌ தன் வயிற்றிலே வைத்தால்‌ தயிருண்ட பொன் வயிறிவ்வேழுலகு முண்டு மிடமுடைத்தால்‌ என்கிறபடியே – பின்னேயும்‌ அவ் வயிறே இடமுடைத்தாம்படி இருக்க வல்ல ஸர்வ ஸக்தி – சிறிய வற்றிலே குறைவற இருக்க மாட்டானோ என்கிறார்‌. இப்படி ஸூ த்‌ருட ப்ரமாண ஸித்‌தனென்று மயர்வற மதிநலமருளப் பெற்று, ஸகல ப்ரமாண ப்ரமேயங்களை ஸாக்ஷாத்கரித்த ஆழ்வார்‌ (பரந்த வண்டமிதென – இடந் திகழ்‌ பொருடொறும்‌ எங்கும்‌ கரந்து பரந்துளன் ) என்று ஸாப்‌தமாக அருளிச் செய்ததை நம்பிள்ளை முதலானோர்‌ விவரிக்கையாலே ஆழ்வார்கள்‌ திவ்ய ஸுக்திகளோடும்‌, ஆசார்ய திவ்ய ஸூக்திகளோடும்‌ விரோதமாம்‌

அணோரணியாந்‌ மஹதோ மஹியாந்‌ என்று அணியஸ்த்வ-. மஹீயஸ்த்வங்களைச்‌ சொல்வி அந்தர்பஹிஸ் ச தத் ஸர்வம்‌. வ்யாப்ய… என்று அணுவுக்குள்ளிலும்‌ விபுவுக்குப்‌ புறம்பும்‌ வ்யாபிக்குமென்று சொல்லி, இப்படிக் கூடுமோவென்று ஸ்ருதி தானே ஸங்கித்து பராஸ்ய ஸக்திரவிவிதைவ ஸ்ரூயதே என்று அகடிகடநா ஸாமர்த்‌யத்தைச்‌ சொல்லி பரிஹரித்ததிறே. ஆகையாலே பரம மஹானாயிருக்கிறவனுக்கும்‌ அணுவுக்குள்ளே அந்தர் வ்யாப்தி கொள்ள வேணும்‌. திருவாய்மொழி ஈட்டில்‌ முடியானேயில்‌ “கொள்வன்‌: நான் : மாவலி” என்கிற பாட்டிவே, *எஞ்ஞான்று பொருந்துவன் -என்கிற அடியிலே. “ஸரவாத்மாக்களுக்கும்‌ ஸேஷத்வம்‌. அவிஸிஷ்டமாய்‌ இருக்கச் செய்தே பத்‌தரும்‌ முக்தரும்‌. நித்யரும்‌ என்கிற பிரிவோபாதி மஹிஷிகளும்‌; “அநந்யா”. என்கிற பிராட்டியின்‌ வார்த்தை எல்லார்க்கும்‌ சொல்லவாம்படியிறே ஸ்வரூபத்தை உணர்ந்தாரிருப்பது. ஈஸ்வரனுக்கும்‌ பிராட்டிமார்க்கும்‌ பேதம்‌ சொல்லுகிற. ப்ரமாணங்களெல்லம் அல்லாதாரோபாதி பிரிவுண்டென்னுமிடம்‌ சொல்லுகிறன. ஜக்யம்‌ சொல்லுகிற விடமெல்லாம்‌ பாரதந்தர்ய காஷ்டையைப் பற்றச்‌ சொல்லுகிறனவென்று. ப்ராஸங்கி,கமாக ஒருருவிவே அருளிச் செய்தார்‌! என்று. வடக்குத்‌ திருவீதிப் பிள்ளை அருளிச் செய்தார்-

தத்வங்கள்‌ மூன்றே யாகையாலும்‌. ஈஸ்வர கோடியிலே கூடினால்‌ ஈஸ்வர த்‌வித்வம்‌ வருகையாலும்‌ சேதநகோட்யந்‌தர் பூதையாகையாலே. அணு ஸ்வரூபையா யிருக்கு மிப்‌பிராட்டி ஸ்வரூப நிரூபக தர்மமாய்க் கொண்டு ஈஸ்வரன் இருந்தவிடமெங்கும்‌. *ஈஸ்வரீம்‌? என்று ஸ்ருதையாந அகடிதகடநா ஸக்தியாலே வ்யாபிக்கத்‌ தட்டில்லை. “பர்த்தாவினுடைய படுக்கையையும்‌ ப்ரஜையினுடைய தொட்டிலையும்‌ விடாதே யிருக்கும்‌ மாதாவைப் போலே ப்ரதம சரம பதங்களை விடாதே யிருக்குமிருப்பு‘ என்றும்‌, ‘நாரங்களாவன ” என்று தொடங்கி, ‘பெரிய பிராட்டியார்‌ தொடக்கமான” என்றும்‌ பிள்ளை வோகாசார்யர்‌ அருளிச் செய்தார்‌. இதன்‌ வயாக்‌யாநத்திலே ‘ஈஸ்வர சேதந வாசகங்களான அகார மகாரங்களிரண்டிலும்‌ இவளுக்குண்டான அநவரதாந்‌வயத்தை ஸத்‌ருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார்‌’ என்றும் “பெரிய பிராட்டியார்‌ தொடக்கமான நாய்ச்சிமாராவார்‌. *ஏவம் பூத பூமி நீளா நாயக!*,”தேவி!! த்வாமநுநீளயா ஸஹ மஹீதேவ்யஸ் ஸஹஸ்ரம்‌ ததா என்கிறபடியே ப்ரதாந மஹிஷியான பெரிய பிராட்டியார் முதல்‌ தத் ஸமானைகளாண பூமி நீளைகளும்‌ மற்றும்‌ அநேகராகச்‌ சொல்லப் படுகிற நாய்ச்சிமாரும்‌ என்றும்‌, “ ‘ஸஷ்மீ ப்ரப்‌ருதி மஹிஷீ வர்க்கங்களும்‌’ என்றிறே ஆச்சான் பிள்ளை அருளிச்‌ செய்தது” என்றும்‌ பெரிய ஜீயர்‌ அருளிச் செய்தார்‌-

பரந்த ரஹஸ்யத்திலே ஸ்ரீயபதி. என்கிறபடியே பிராட்டி பகவத் ஸ்வரூப நிரூபிகை யாகையாலே, “யத்‌யபி ஸச்சித்தோ ந நிரபுக்ண தைவதம்‌ குண கணம்‌ மநஸா அநுதாவேத்‌ ததாப் யந்தர் குண கணாமேவ தேவதாம்‌ பஜதே தத்ராபி! ஸகுணைவ தேவதா ப்ராப்யதே’ என்கிற குண ஸித்‌தி நியாயத்தாலே ஸக்ஷ்மீ ஸம்பந்தமும்‌ ஆர்த்தமாக இவ் விடத்திலே சொல்லிற்றாயிற்று –அணுரப்யாத்மா” என்று ஆத்ம ஸாமாந்ய ப்ரயுக்தமாம்‌ இவளுக்கு வரும்‌ அணுத்வமும்‌, யதா ஸர்வகதோ விஷ்ணு ததைவேயம்‌ த்விஜோத்தம” இதயாதிகளிலே சொல்லுகிறபடியே ஈஸ்வரனோபாதி இவளுக்குண்டான ஸர்‌வ வ்யாபகத்வமும்‌ தன்னில்‌ விருத்‌தமாய்‌ ஏகாஸ்ரயஸ்தமாகக்‌ கூடாமையாலே இரண்டும்‌ கூடுகைக்காக “அநுபபத்‌யமாநார்த்த தர்ஸநாதுபபாத கார்த்தாந்தர கல்பநம்‌ அர்த்தாபத்தி–என்கிற அர்த்தாபத்தியின் படியே அபரிச்சேத்‌யமான ஸ்வரூப வைபவத்தை யுடையனான ஸர்வேஸ்‌வரன் அத்யந்த ஸுஷ்மங்களான பதார்த்தங்களிலே பண்ணும்‌ அவ்வவ வ்யாப்திக்கு ஒரு ஸக்தி விஸேஷேத்தைக் கொள்ளுமோபாதி. இவளும்‌ ஒரு ஸக்தி விஸேஷத்தாலே வ்யக்த்யாஸ்ரயமான ஜாதி போலே ஈஸ்வரன்‌ வ்யாபித்த விடமெல்லாம்‌ ல்யாபிக்கக்‌ கடவளாகையாலே ஈல்வர ஸ்வரூப நிரூபிகை என்னுமிடம்‌ ஸம் ப்ரதிபந்தம்‌-வ்யக்திக்கும்‌ ஜாதிக்கும்‌ உண்டான ஸம்பந்தம்‌ போலே ஈல்வரனுக்கும்‌ பிராட்டிக்குமுண்டாண ஸம்பந்தமும்‌-அதில்‌ ஜாதியாகிறது – வ்யக்தி ஸ்வரூபத்தைப் பற்றிக்‌ கடக்க நிற்க வற்றாய்‌ அதில்வாதவன்று தானில்லை யென்னலாம்‌ படியுமாய்‌ வ்யக்தியுள்ள விடமெங்கும்‌ வ்யாபிக்கவும்‌ கடவதாய்‌, ஸ்வாஸ்ரயத்துக்கு இதர வ்யவச்சேதகமு மாயிருக்கும்‌. வ்யக்தி யாகிறது – ஜாதிக்கு ஆஸ்ரயமாய்‌ ஜாதியோடே வ்யாப்தமுமாய்‌ ஜாதி வ்யவச்சேத்‌யமுமாய்‌ ஜாதிக்கு விஸேஷ்யமுமாயிருக்கும்‌. அதில்‌ ஜாதி போலே பிராட்டியும்‌, *அநந்யா ராகவேணாஹம்‌ பாஸ்கரேண ப்ரபா யதா *, *அநந்யா ஹி மயா ஸீதா பாஸ்கரேண ப்ரபா யதா – என்றும்‌. *நித்யைவைஷா ஐகந் மாதா விஷ்ணோ ஸ்ரீர் அநபாயிநீ* என்றும்‌ சொல்லுகிறபடியே ஆதித்யனுடைய ப்ரபை போலே பிரியில்‌ ஸ்திதை யாகாதபடி ஈஸ்வரனை ஆல்ரயமாகா வுடையளாய்‌, யதா ஸர்வகதோ விஷ்ணு ததை வேயம்‌ த்விஜோத்தம த்வயா ச விஷ்ணுநா சாம்ப, ஜகத் வ்யாப்தம்‌ சராசரம்‌ என்கிறபடியே ஈஸ்வரனுள்ள விடமெல்லாம்‌ வ்யாப்தையுமாய்‌, *ஸ்ரீ யபதி; – நித்ய ஸ்ரீ ” என்கிறபடியே பகவத் ஸ்வரூபத்தினுடைய இதர வ்யவச்சிந்ந புத்தி ஹேது பூதையாய்‌ *விஷ்ணு பத்நீ” என்கிறபடியே பகவச் சேஷ பூதையுமாயிருக்கும்‌-அவனும்‌ வ்யக்தி போலே இவளுக்கு ஆஸ்ரயமாய்‌, இவளோடே வ்யாப்தனுமாய்‌, இவளைக் கொண்டு அறிய வேண்டுமவனுமாய்‌, இவளுக்கு ஸேஷியுமாயிருக்கும்

இனி ஜாதி நிரூப்யமான கட வ்யக்தியைச் சொன்ன போதே நிரூபகமான ஜாதியும்‌ தன்னடையே அந்விதமாமாப் போலே இப்பதமும்‌ நிரூப்யனான ஈஸ்வரனைச்‌ சொன்ன போதே நிரூபக பூதையான பிராட்டியையும்‌. சொல்விற்றாய் விடும்‌- என்றும்‌-கத்ய வ்யாக்‌யாநத்திலே. (வி-ப -வ) *அர்த்தோர் விஷ்ணுரியம்‌ வாணீ-என்று அர்த்தாம்ஸம்‌ அவனதாய் லஸப்தாம்சம் இவளதாயிருக்கை –பும்நாமா பகவாந்‌ ஹரி ஸ்த்ரீநாம்‌ நீ லக்ஷ்மீ:. என்கிறபடியே புல்விங்க பதார்த்தம்‌ அவனதாய்‌ ஸ்த்ரீ லிங்க பதார்த்தம்‌ இவளதாயிருக்கை என்றும்‌, சென்னியோங்கு வ்யாக்யாநத்திலே – (சதிரா) தன்னடியார்‌ – ஒரு மிதுநம்‌ ஸேஷியாணால்‌ தம்மடியாரென்ன வேண்டாவோ வென்னிவ்‌, அடியாரென்கிறதுக்குள்ளே அடிமையில்‌, அந்தர்‌ பாவம்‌ தனக்குண்டாகையாலே யென்னுதல்‌, இத்தால்‌- நார கோடி கடிதை என்கை’ என்றும்‌, பரந்த ரஹஸ்யத்திலே ‘நார ஸப்‌தார்த்த விவரணத்திலே லக்ஷ்மீ ப்ரப்‌ருதி மஹிஷீ வர்க்கங்களும்‌ என்று பிராட்டி நார கோடி கடிதையாகையாவே இப் பதத்தில்‌ லக்ஷ்மீ ஸம்பந்த மநு-ஸந்தேயம்‌” என்றும்‌ ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தார் –

தத்வ ஸங்கரஹத்திலே ‘ஏவமாதமநாமணுத்வே கத,மயம்‌. வ்யவஹார; யதா ஸர்வ கதோ விஷ்ணுஸ் ததைவேயம்‌ த்விஜோத்தம இதி ஸரிய। அத்ராஹு. – நேயமாத்மாந்தர் பூதேதி கதமித மநந்தர் பாவ வசநம்‌ போக்யாந்தர்‌ பாவாத் ஈஸ்வராந்தர் பாவாத்‌ கோடி த்ரயாதி ரேகாத்‌வா? நாத்ய- ஜ்ஞாத்ருத்வ விரோதாத்‌ (ஜ்ஞாத்வாஜ்ஞாத்வ விரோதாத்‌ இதி தால கோஸஸ்த பாட). ந த்விதீய, ஈஸ்வரத்வஸ்ய த்வி நிஷ்டத்வா ஸம்பவாத்‌ தயோ, ஸ்வாஜ்ஞா வ்யாகாதத்வேநா நீஸ்வரத்வா பத்தே। அத எவ ஸ்ரூயதே – “ஈஸதே தேவ ஏக .” இதி । நேயமேவ ஸ தத் பத்நீத்வேந நிர்தேஸாத்‌। ந ச இயமேகைவ த்விதா அவஸ்திதேதி யுக்தம்‌ வக்தும்‌ ஏகத்வே ப்ரமாணா பாவேந தத் கல்பநாநுபபத்தே! ந ச *அர்த்தோ வா ஏஷ ஆத்மநோ யத் பத்நீ இதி ஸாதாரண வசநாத்‌ அத்ராப்யேகத்வ ஸித்‌தி-
ஸூக துக்காதி வ்யவஸ்தா லஷணாத்‌ ஆத்ம பேத ஹேதோ ஸ்ருதே: ஸ்துதித்வா வஸாயாத்‌ | யத்‌ யஸ்தி ஏக தயா நிர்தேஸ க்வசித்‌ ஸோபி அவிநாபாவ நிபந்தந தயா அவகந்தவ்ய “ஏகைவ வர்த்ததே பிந்நா ஜ்யோத்ஸ்நேவ ஹிமதீதிதே- இதி ப்‌ராஹ்ம புராணே தர்ஸநாத்‌– யதா ஜ்யோத்ஸ்நா,. ஜ்யோத்ஸ்நாவதோ பிந்நாபி அவிநாபூதா வர்த்ததே இத்யர்த்த,.। அநேந காரணாந்தர் பாவோப்ய பாஸ்த,. ஈஸ்வரத் வவத்‌ தஸ்யாபி த்வி நிஷ்டத்வா ஸம்பவாத்‌. | ஐகஜ் ஜந்மாதி காரணத்வம்‌ ஆஸ்யாந்தரேபி பவேத்‌ | ப்ரஹ்ம. வக்ஷண தயா ந நிர்தேஸ்யத்வம்‌ ஸ்யாத்‌ [நிரதேஷ்டவ்யம்‌ ஸ்யாத்‌ இதி தாள கோஸஸ்த பாட.)லக்ஷணஸ்ய அஸாதாரண தர்மத்வாத்‌ | நிர்த்திஸ்யதே ச “ஜந்மாத்‌யஸ்ய யத்‌ இதி | கிஞ்ச குத்ரேயம்‌ அநு விஸதி? ந தாவது பாதாநே, தஸ்ய *ஸதேவ ஏகமேவ” இத்யேகத்வா வதாரணாத்‌। க்வசித்‌ அநு ப்ரவேஸோபி ஏகத்வா விரோதீதி சேத்‌ – ந தயோரநு ப்ரவேஸா பாவே ஜகதுபாதாநத்வம்‌ ந நிர்வஹதி ப்ரஹ்மண அபரிணாமித்வாத்‌ பரிஸூத்‌தத்வாச்ச
நசைவமத்ர தர்மி க்‌ராஹகத்வாத்‌ அந்வய வ்யதிரேகாப்‌யாம்‌ அநுபபத்தே: வசந பாவாத்‌ வா கஸ்யசித்‌ காரணத்வம்‌ அப்‌யுப கந்தவ்யம்‌ | ந சதுஷ்டய மப்யத்ரேதி கதமியம்‌ காரண தயா ஸ்வீக்ரியதே! ஸ்வரூபாந்தர் பாவாத்‌ அவர்‌ஜநீய: தத் ஸந்நிதி ரிதிசேத்‌ – ஸத்யம்‌, அவர்‌ஜநீய தயைவ ஸந்திதி ரஸ்யா ந து காரணதயா, ததாத்வே ப்ரமாணா பாவாத்‌ । நாபி நிமித்தே அந்தர்பவதி அத்‌விதீய பத ப்ரகோபாத்‌ ஸத்ய ஸங்கஸ்பஸ்ய தஸ்ய ஈஸ்வரஸ்ய ஸஹாயாந பேக்ஷத்வாச்ச। அநேந உபாயாந்‌தர் பாவோப்யு பருத்‌த,!। தஸ்ய மாமேகம்‌ இத்யே கத்வ நிரதேஸாத்‌ அமோக ஸங்கல்பதயா ஸஹாயாந பேஷத்வாச்ச। ந நு – ஸ்ரீமத ஏவ தஸ்ய உபாயத்வம்‌ உபதிஸ் யத இதி சேத்‌ ந – தத்ர சரண யோரேவ ஸரணதயா அவஸீய மாநத்வாத்‌ ததாபி தயோரேவ **சரணஸ்ய (சரணாநாம்‌.- இத பாடாந்தரம்‌.] ததாவஸாய இதி சேத்‌ ந- சரணாவிதி த்வித்வ விரோதத்‌! அதோ விஸேஷண தயா நிர்திஷ்டாயா விநியோகாந்தர மந்வேஷ்டவ்யமிதி। ந த்ருதீய ப்ரமாணா பாவாத்‌ | ந நு கோடி த்ரயாநத்தர் பாவ ஹேதுவத்‌ ஆத்ம ஜாத்ய நந்தர் பாவாஹேது வ்யாபகத்வேஸ்வரத்வயோ ; பகவதீவ அஸ்யா அபி விதயமாநத்வாத் நாத்ம ஜாத்யந்தர்பூதா தாப்‌யாமேவ ஹி. புருஷாந்யத்வம்‌ உத்தம புருஷஸ் யோபதிஷ்டம்‌ | “உத்தம; புருஷஸ்த்வந்ய பரமாத்மேத் யுதஹ்ருத। யோ லோக த்ரய. மாவிஸ்ய பிபர்த்யவ்யய ஈஸ்வர: | இயமபி ததா வ்யபதிஸ்யதே, யதா ஸர்வகதோ விஷ்ணு ததைவேயம்‌ த்விஜோத்தம “ஈஸ்வரீம்‌ ஸர்வ பூதாதாம்‌” இத்யாதி-ஷ் விதி சேத்‌ ந-ப்ரதமஸ்து ஸ்வரூபாஸித்‌தோ ஹேது: தைஸ் தைஸ் சரீர விஸேஷை, ஸர்வத்ர ஸந்நிதேரேவ ஸர்வ கதார்த்த த்வேந விவக்ஷி தத்வாத் | ததாத்வம்‌ ச ப்ரஸ்ந ப்ரதி வசநோ பபாதந ப்ரகாரை ரேவா வதார்யதே | ததாஹி பூர்வத்ர -: *தே வெளவ் தாத்ரு விதா தாரெள ப்‌ருகோக் யாதிரஸூயத। ஸ்ரியம்‌ ச தேவதேவஸ்ய பத்நீம்‌ நாராயணஸ்ய ச இதி! ஸ்ரிய க்யாத்யாம்‌-ப்‌ருகு பத்ந்யாம்‌ பராஸரோக்த்யா உத்பத்திம்‌ உபஸ்ருதய மைத்ரேய ப்ருச்சதி – ஷீரோதாத்‌ ஸ்ரீ. ஸமுத் பந்நா ஸ்ரூதே அம்ருத மந்தநே | ப்‌ருகோ க்யாத்யாம்‌ ஸமுத்பந்நேத்யே ததாஹ கதம்‌ பவாந் இதி। ந ச ஏகஸ்யா அநேகத்ர உத்பத்தி விரோததியா அயம் ப்ரஸ்ந தஸ்ய காலாதி பேதேந ஸம்பவாத்‌ மஹதாம்‌ யுகபத் ஸம்பவச்ச, *தத் தத் கல்பாந்த வ்ருத்தாந்த மதி க்ருத்ய மஹர்ஷிபி,.। தாநி தாநி ப்ரணீதாநி வித்‌வாநத்ர ந முஹ்யதி இத்யத்ர பரிஹ்ருதத்வாச்ச। அதோயமேவ ப்ரஸ்நார்த்த நித்யதயா நிகில ஜகஜ்‌ ஜநநீத்வேந பகவதா நிரபாயதயா ச ப்ரதி, தாயா கத மயமுபதேஸ ததாத்வே நித்யத்வாத்‌ யநுபபத்தேரிதி | அயமேவ யுக்த உத்தராநுகுண்யாத்‌ | தஸ்யோத்தரம்‌ – “நித்யைவைஷா ஐகந் மாதா விஷ்ணோ: ஸ்ரீர் அநபாயிநீ । யத ஸர்வ கதோ விஷ்ணு: ததைவேயம்‌ த்விஜோத்தம இதி ! தஸ்யாயமர்த்த ந நிதயத்வாதேர்‌ ஜந்மநோ விரோத உபயோர் விஷ்ணெள ஸஹ ஸந்தர்ஸநாத்‌ யதா விஷ்ணு நித்யத்வாதி குணகஸ்ஸந் ஸர்வ ஜகத் த்ராணாய ஸர்வேஷு தேஸ காலாதி விஸேஷேஷு கத தைஸ்தை ஸரீரை ஸந்நிஹித ஏவம்‌ இயம்பி நிதயா நிகில ஜகஜ் ஜநநீ – நிரபாயா ஸதீ தைஸ்தை: ததநுரூபைஸ் ஸரீரை: ஸர்வத்ர ஸந்நிஹிதேதி நாநுபபத்திரிதி அஸ்யாய மேவார்த்தோ யுக்த-அர்த்தோ விஷ்ணுர் இயம்‌ வாணீ* இத் யுபக்ரம்ய அத்‌யாய ஸேஷேண “பகவத்‌, விக்‌ரஹ விஸேஷைஸ் ததநுகுணை ஏததீயை விக்ரஹைஸ் ச ஐகத் வ்யாப்தி ப்ரகாரோப பாதநாத்‌। அந்யதா ஸர்‌வ கதத்வ நிர்‌தேஸ்ய ஸ்வரூப வ்யாப்தி பரத்வே உபயோ ஸர்வத்ர வ்யாப்த் யுபபாதநாத்‌ புல்லிங்ககா பதரர்த்தா பகவத் ரூபம்‌ ஸ்த்ரீ லிங்ககா பதார்த்த லக்ஷ்மி” ஸ்வரூபமிதி விபாகோ நோபபத்‌யதே

ஏவ முத்தரத்ராப் யுபபாதிதம்‌அம்ஸைர் யதா ஐகத் ஸ்வாமீ தேவதேவோ ஜநார்தந।। அவதாராந்‌ கரோத்யேஷா ததா ஸ்ரீஸ்தத் ஸஹாயிீ நீ | புநஸ் ச பத்‌மா ஸம்பூதா ஆதி த்யோபூத் யத்ர ஹரி யதா து பர்கவோ ராம; ததா பூத்‌ தரணி த்வியம்‌ ராகவத்வே அபவத் ஸீதா ருக்மிணீ க்ருஷ்ண ஐந்மநி | அந்யேஷு ச அவதாரேஷு விஷ்ணோரேஷா அநபாயிநீ ॥ தேவத்வே தேவதேஹேயம்‌ மநுஷ்யத்வே ச மாநுஷீ। விஷ்ணோர் தேஹாநு ரூபாம்‌ வை கரோத்யேஷா ஆத்மநஸ்‌ தநும்‌ ॥ அநயைவ திஸா “த்வயா ச விஷ்ணுநா சாம்ப ஜகத்‌ வ்யாப்தம்‌ சராசரம்‌” இத்யாதி கமபி நேயம்‌. “ஸெம்யாஸெளாம்யைர்‌ ஐகத்‌ ரூபை த்வயை தத்தேவி பூரிதம்‌* இதி. தத்ரைவ விவ்ருதத்வாத்‌ ஏவமுப பாதநாத்‌ உபயோஸ் ஸரீர விஸேக்ஷைர் வ்யாப்தி ரித் யவதீர்யதே! தேஷு ஸர்வேஷு ஸரீரேஷு ஸெபரி ப்ரமுகவத்‌ குண த்‌வாரா வ்யாப்திரித்‌ யுபபத்தே ந கட குட ப்ரபாதாநுகார। ஸூத்ரிதம்‌ சைதத்‌- “குணாத்‌வா அவலோகவத்‌ இதி | யஸ் ச த்‌விதீயோ ஹேது ஸோப்ய ப்ரஸித்‌த ஸ்வேதர ஸகல பதார்த்தே ஸ்வரத்வஸ்யைவ புருஷாந்யத்வ ஸாதகத்வாத்‌ அந்யதா கதிபயேஸ்வரத்வ மாத்ரேண புருஷாந் யத்வே ஸர்வேஷாம்‌ பும்ஸாம்‌ ஈஸ்வரத்வாபத்தே। ந ஹி ஸ்வ ஸரீர மாத்ரஸ்யாப்ய நீஸ்வர; கஸ்சித்‌ அஸ்தி’ இத்யாதி யும்‌, “ஸாந்தா நந்தேத்யாதி ஸ்லோகோக்தம்‌ ச என்றும்‌, ஏதத்‌ வ்யாக்யாநத்திலே “திவ்யாத்ம ஸ்வரூபத்திலுங் காட்டில்‌ ப்ரிய தரமாயிருக்கக் கடவதாய்‌ மூர்த்தம்‌ ப்‌ரஹ்ம என்னும்‌ பெயரை யுடைத்தான

திவ்ய மங்கள விக்‌ரஹம்‌ தொடக்கமான அவனுடைய நாநா விக்‌ரஹங்களடைய அவனுக்கு அநுரூபமான அவ்வவ விக்‌ரஹங்களாலே ஸர்வ காலமும்‌ ஆலிங்கநம்‌ பண்ணி நிற்குமென்றும்‌ சொல்லப்பட்டது” என்றும்‌, “அர்த்தோ விஷ்ணுரியம்‌ வாணீ” என்று தொடங்கி. அத்‌யாய ஸேஷத்தாலே இவருடைய விக்‌ரஹ விஸேஷத்‌தாலும்‌ ஐகத் வ்யாப்தி ப்ரகாரத்தைச் சொல்லி உபபாதிக்கையாலும்‌- ஸர்வ ஸப்‌தத்துக்கு விக்‌ரஹ வ்யாப்தியே அர்த்தம் என்னக் குறையில்லை- அங்ஙன் அன்றிக்கே, ஸ்வரூப வ்யாப்தியைச்‌ சொல்லுகிறதாகில்‌ –தேவ திர்யங் மநுஷ்யேஷு புந் நாமா பகவாந்‌ ஹரி! ஸ்த்ரீ நாம்நீ லக்ஷ்மீர் மைத்ரேய நாந யோர்‌ விதயதே பரம்‌” புல்லிங்க ஸப்‌த வாஸ்யமானவை பகவத் ரூபம்‌, ஸ்த்ரீ லிங்க ஸப்‌தமானவை ஸக்ஷ்மீ ஸ்வரூபமென்று பிரித்துச் சொல்வக் கூடாது என்றும்‌ – ‘இவ்வோ அர்த்தங்களை, ப்ரமாண ஸித்‌தமுமன்றியிலே ஸம்ப்ரதாய ஸித்‌தமுமன்றியிலே, ஸத்தாவத்துமன்றியிலே யிருக்க யாவர்‌ சிலர்‌ ரஹஸ்ய ரூபேண உபதேஸித்து ஜகத்தை மோஹிப்பிக்‌கிறார்கள்‌ அவர்கள்‌ ஸகல சிதசித்‌ வஸ்து விலக்ஷணைமாய்‌, நிகில ஜகதேக காரணமாய்‌ நிரஸ்த ஸமஸ்த ஸமாப்‌யதிக வஸ்து ஜாதமாய்‌, நாராயண ஸப்த வாஸ்யமான பர ப்ரஹ்மமே. ஸகல வேதாந்த வேத்‌யமென்று ப்‌ரஹ்ம மீமாம்ஸா ஸுூத்ர ந்யாயத்தாலே அறுதி யிடுமவர்களாய்‌, வேதவிதக்‌ரேஸரருடைய நினைவைப்‌ பின் சென்றிருக்கக் கடவ நம்மாசாரயர்களாலே அங்கீகரிக்கப் படார்கள் என்றிட்டு நம்மாலேயும் ஆதரிக்கப்படார் என்றும்‌ நயினாராச்சான்‌ பிள்ளை அருளிச் செய்தார்‌-ரஹஸ்யாம்ருதத்திலே “வக்ஷ்மீ விஸிஷ்டமாய்க்‌ கொண்டு ல்யாபிக்குமென்கிற பக்ஷம்‌ ஸ்ரீ விஷ்ணு புராணத்திற்‌ சொல்லுகிற ஸ்வ விபூதி பேதத்தாலே யாதல்‌, ஸ்லரூப நிரூபகத்வ நிபந்தநமான அப்ருதக்‌ பாவத்தாலே யாமித்தனை யல்லது ஈஸ்வரன்‌ ஸ்வரூபத்தோபாதி ஸ்வரூபத்தினுடைய பரம மஹத்வத்தாலாக மாட்டாது-அப்படியாமாகில் ஈஸ்வர. த்வித்வாதிகளாகிற தோஷங்களுண்டாம்‌. இவளுடைய பத்நீத்வ ஸ்ருதியோடும்‌ ஈஸ்வரனுடைய ஏகத்வ ஸ்ருதியோடும்‌ விரோதிக்குமாகையாலே ஸ்ரிய:பதித்வ நிரூமான ஸ்வரூபமே வ்யாபகமென்றதாயிற்று! என்று வாதி, கேஸரி அழகிய மணவாள ஜீயர்‌ அருளிச் செய்தார்‌. ரஹஸ்ய த்ரய ஸாரத்திலே – ‘அதிஸயகரியான லக்ஷ்மிக்கும்‌ வஸ்து ஸம்ஸ்தந ரூப ஜாத்யாதி போலே நிரூபகத்வ நிபந்தநமான ஸ்வரூபாந்தர் பாவமுண்டாகையாலே’ என்று வாதி. கண்டீரவரான யாமுநாசார்யர்‌ அருளிச் செய்தார்‌-அத்‌வைத பேதாபேத பக்ஷங்களில்‌ விருத்‌த ஸமுச்சய நிபந்தநமான ஈஸ்வரனுடைய அகடிதகடநா ஸக்தியைக்‌ கொள்ளாமையாலே அது அஸத் ப்ரதிபந்தி- ‘அதோ ஜீவத்வேப்‌யஸ்யா ஸ்வரூப விபுத்வேந பதி ஸ்வரூபாநுரூப்யமிதி”-என்றதும் வாலாக்ர ஸத பாகஸ்ய ஸததா கல்பிதஸ்ய பாகோ ஜீவ–‘த்ரஸரேணு ப்ரமாணாஸ்தே” இத்யாதி ஸ்ருதி விருத்‌தம்‌. ஜீவத்வ ப்ரயுக்தமாண அணுத்வம்‌ அவர்ஜநீயமாகையாலும்‌, இவளுடைய விபுத்வ ப்ரமாணங்கள்‌ அந்யதா ஸித்‌தங்களாகையாலும்‌, ‘வ்யாப்தனுக்கு ப்ரதி வஸ்து பூர்ணத்வமாவது- ஓரொரு உபாத்‌யவச்சிந்ந ப்ரதேஸமே ஸர்வத்தையும்‌ நிர்வஹிக்க வல்ல ஸக்தியை யுடைத்தாயிருக்கை என்று கல்பிக்கைக்கும்‌ கல்பகமிவ்லை., ஜாதி வ்யக்தி தோறும்‌ பூரணமாக வ்யாபிக்கக காணாமையாலே இவளுக்கிது கொள்ளில்‌ பஹிர் வ்யாப்திக்கு விரோத பரஸங்கமில்லை. இதை அகடிதகடநா ஸக்தியால்‌ நிர்வஹிக்கில்‌ விருத்‌த ஸமுச்சயம்‌ கொள்ளும்‌ பர பக்ஷத்தின் படியாகாதாப் போவவும்‌ வேதம்‌ ப்ரமாணம் என்கிற விடத்தில்‌ ஈஸ்வர ப்‌ரணீதமின்றியிலே அபெளருஷேயத்வாதி பேதமுண்டாகையாலும்‌, தேஹாதிரிக்தன்‌ ஆத்மா என்கிற விடத்தில்‌ பகவச் சேஷத்வாதி பேதமுண்டாகையாலும்‌., பர பக்ஷத்தின் படியாகா என்னில்‌ ஈஸ்வரனுடைய அந்தர்‌” வ்யாப்தி பஹிர் வயாப்திகளில்‌ அகடிதகடநா ஸக்தியாலே பர பக்ஷத்தின்‌படி ஆகாதென்று கைக் கொள்ளுவது ..

இதி ரஹஸ்ய விவேகே ஸ்ரீவிபுத்வ கண்டநம்‌ நாம-த்வதீயோ விவேக ஸமாப்தம்

—————

அத, பூர்வபக்ஷி ஸரண வசஸ. ஸாதநமிதி.

ரஹஸ்ய த்ரய ஸாரத்திலே இருபத்து மூன்றாமதி,காரத்திவே -: ஸித்‌த உபாயத்தைப் பற்றி வரும்‌ கலக்கங்களும்‌, அவற்றின்‌ பரிஹாரங்களும்‌ சொல்லுகிறோம்‌ :அநாதி,காலம்‌ அநாதரித்த. ஈல்வரன்‌ இன்று ஒருத்தனை ஆதரிக்கிறது தன்‌ ஸ்வாதந்தர்ய-. மாத்ரத்தாவே யன்றோ? இங்ஙன் அன்றாகில்‌, “இன்றென்னைப்‌ பொருளாக்கித்‌ தன்னை என்னுள்‌ வைத்தான்‌ அன்று என்னைப்‌ புறம்‌ போகப் புணர்த்தது என் செய்வான்‌” என்று ஆழ்வார்‌ விண்ணப்பம்‌ செய்ய ஸர்வேஸ்வரன்‌ “சூழ் விசம்பணி முகில்‌ தூரியம்‌ முழக்கின* இதொழிய வேறொரு உத்தரம்‌. அருளிச் செய்தானா ? ஆகையால்‌ நாமொரு உபாயாநுஷ்டாநம்‌ பண்ணுகை என்னென்பது, “நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை * என்கிறபடியே “அருள்‌ புரிந்த சிந்தை யடியார் மேல்‌ வைத்தவன்‌ தானே ரஷித்த போது, காணுமத்தனை யன்றோ’ என்று சிலர்‌ கலங்குவர்கள்‌, இவர்களைத்‌ தெளிவிக்கும்படி, – ஈஸ்வரன்‌ ஸவதத்த்ரனே யாகிலும்‌, வைஷம்ய நைர்க்‌ருண்யமாகிற தோஷங்கள்‌ தனக்குத் தட்டாமைக்காக இவன் பக்கலிலே ஒரு வ்யாஜத்தை யுண்டாக்கி அத்தை அவலம்பித்துத் தான்‌ ரக்ஷிக்கும்‌- இவ் வர்த்த,த்தை, “திருமா லிருஞ்சோலை மலை யென்றேன் என்ன திருமால் வந்து என்‌ நெஞ்சு நிறையப் புகுந்தான்‌* என்று ஆழ்வார்‌ அருளிச் செய்தார்‌… இப்படியானால்‌, “இன்றைன்னைப்‌ பொருளாக்கி” என்கிற பாட்டுக்கும்‌ இதுக்கும்‌ மூலமான வசநங்களுக்கும்‌ நிர்‌வாஹமேதென்னில்‌ – அது சொல்லுகிறோம்‌. – ஈஸ்வரனுக்கு ஸஹஜங்களான ஸ்வாதந்த்ரய காருணயங்களினுடைய ப்ராதாந்யத்தாலே இவற்றுக்கு வ்யாஜ பூதங்களான விஸேஷ காரணங்களை அநாதரித்துப் பண்டென்னைப்‌ பராங்முகளாக்குகைக்கும்‌, இவற்றுக்கு வயாஜ பூதங்களான விஸேஷ காரணங்‌களை ஆதரித்து இன்றென்னை அபிமுகனாக்குகைக்கும்‌ உன்‌ ஸ்வாதத்த்ர்யமும்‌ கிருபையுமொழிய வேறொரு ப்ரதாந காரணம்‌ கண்டிலேன்

எனக்குக்‌ காட்டாதே ஸ்வதஸ் ஸர்வஜ்ஞனான நீ கண்டதுண்டாகில்‌ அருளிச் செய்ய வேணுமென்ன, ஈஸ்வரன்‌ நிருத்தரனா யிருக்கிற விருப்பாலே ஸ்வாதந்தர்ய க்ருபைகளினுடைய ப்ராதாந்யத்தை நாட்டுக்கு வெளியிடுகிறார்‌. இத்தால்‌. இச் சேதநனை லிவோபகரண மாக்குகைக்கு ப்ரதாந காரணம்‌ ஈஸ்வர ஸ்வாதந்த்ரயம்‌- இதுக்கு ஸஹகாரி காரணம்‌ ப்ரவாஹாநாதியான ஸ்வாஜ்ஞாதிவங்கநம்‌. இவனை போக உபகரணமாக்குகைக்கு ப்ரதாந காரணம்‌ ஈஸ்வரனுடைய ஸ்வாபாவிக் காருண்யம்‌. இதுக்கு ப்ரதிபந்தகமான ஈஸ்வர நிக்‌ரஹத்தை ஸமிப்பித்துக் கொண்டு ஸஹகாரி காரணமென்று பேர்‌ பெற்றது – இவனுடைய ஸாுக்ருத விஸேஷ த்வாரா க்ருபை யடியாக வந்த வஸீ கரண விஷேஷங்கள் என்று ஈஸ்வரனுடைய ஸ்வபாவத்தையும்‌, வைஷம்ய நைர்‌ க்ருண்யங்க ளில்லாமையையும்‌, பந்த மோக்ஷாதி வ்யவஸ்தையையும்‌ ப்ரமாண ப்ரதி நியதமானபடியே அனுஸந்தித்து. ஸ்வதந்த்ரனுடைய க்ருபையிலே யூன்றிப்‌ போர வடுக்கும்‌. என்று கருத்து’ என்றும்‌, நாவாமதிகாரத்திலே –முக்தராவார்‌. – ஸாஸ்த்ர சோதிதங்களான உபாய விஸேஷங்களால் வுண்டான பகவத் ப்ரஸாதத்தாலே அத்யந்த நிவ்ருத்த ஸம்ஸாரராய்‌‘ என்றும்‌, ‘ப்ரதாந விரோதிக்குச்‌ செய்யும்‌ பரிஹாரத்தை, தஸ்ய ச வஸீ கரணம்‌ தச் சரணாகதி ரேவ என்று கட வவ்லியில்‌ வஸீ கார்ய பரம்பரையை வகுத்த விடத்தில்‌ பாஷ்யகாரர்‌ அருளிச் செய்தார்‌” என்றும்‌, இருபத்து மூன்றாம்‌ அதிகாரத்திலே “க்ருபா விஸிஷ்டனாண ஈஸ்வரன் *கருஷ்ணம்‌ தர்மம்‌ ஸநாதநம்‌-என்கிறபடியே ஸித்‌த உபாயம்‌-இவனுக்கு ப்ரஸாதநங்களான பக்தி ப்ரபத்திகள்‌ ஸாத்‌யோபாயங்கள்‌-ஓரதிகாரி விஸேஷத்துக்கு கர்த்தவ்யமாக *மாமேகம்‌ மரம்‌ வ்ரஜ*என்று விதிக்கப்படுகிற ப்ரபத்தியை அதிகாரி விஸேஷணம் என்று சிலர்‌ சொன்ன விடம்‌ அதிகாரி விஸேஷணத்துக்‌குச் சொல்லும்‌ லக்ஷணத்தோடு சேராமையாலே அதிவாதம்‌-இங்ஙனல்வாத போது, ஈஸ்வரன்‌ உபாயமாய்‌ நிற்க உபாஸநாதி ஸாஸ்த்ரார்த்தங்களும்‌ அதிகாரி விஸேஷணங்களாம்‌. ஆகையாலே ப்ரபத்தியுங்கூட உபாயமன்று என்று சிலர்‌ அதிவாதம்‌ பண்ணுகிறதும்‌ ஸித்‌த உபாயத்தினுடைய ப்ராதாந்யமடியாக வித்தனை-அது ப்ரதாநமான படி ப்ரஸாதநங்களாலே ப்ரதிபந்தகமான நிக்‌ரஹம்‌ ஸமித்தால்‌ ஸ்வாபாவிகாநு பவத்துக்கு ப்ரயோஜக மாகையாலே’ என்றும்‌, ‘ஸித்‌தோபாயம்‌ ப்ரதாநமே யாகிலும்‌ தத்‌ வஸீகரணார்த்தமான ஸாத்‌வோபாயாநுஷ்டாநத்துக்கு *இன்றென்னை” இத்யாதி பூர்வாசார்ய வாக்ய விரோதம்‌ இல்லை என்றும்‌, “இப்படி ஈஸ்வர ஸ்வாதந்த்ர்‌ய ஸஹஜ காருண்யங்களடியாக வரும்‌ கலக்கங்களுக்குப்‌ பரிஹாரம்‌. சொன்னோம்‌. ஸம்பந்த விஸேஷமடியாக வரும்‌ கவக்கத்துக்கு பரிஹாரம்‌ சொல்லுகிறோம்‌” என்றும்‌ “இவை யெல்லாம்‌ ஸ்வரூபத்துக்குப் பொருந்துமோ என்று சிலர்‌ ஸித்‌தோபாய முகத்தாலே ஸாத்‌யோபாய ஸரீரத்தை அழிக்கப் பார்ப்பர்‌கள்‌, அவர்களை விலக்கும்படி பரமர்ஷிகளும்‌ ஸ்ரீ பாஷ்யகாராதிகளும்‌, விஸ்வாஸ பூர்‌வக ப்ரார்த்தநாத்மநிஷே பாதிகளைத் தாங்களும்‌ அநுஷ்டித்து இதுக்கு ஸாஸ்த்ரங்களை மூதலிப்பித்துக் கொண்டு உபதேஸ பரம்பரையும்‌ நடத்திப்‌ போருகையாலே ஸேஷித்வாதி ஸம்பந்த,ம்‌. நித்யமே யாகிலும்‌ கர்மவான்‌௧ளான ஜீவர்கள் விஷயத்தில்‌ ஈஸ்வரன் ஒரு ஸாத்‌யோபாய விஸேஷத்தை முன்னிட்டல்வது ரஷியான்‌ என்று ஸாஸ்த்ரம்‌ சொல்லுகையாலே ஸாஸ்த்ர நிஷ்டருக்கு பரிக்‌ரஹிக்க வேணும்‌’ என்றும்‌, ‘தன்னை ஈஸ்வரன் ரஷிக்கும் போது ஸம்பந்தத்தோடு கூட விலக்காமையே வேண்டுவதென்னில்‌, அதுவும்‌ அநுபபந்நம்‌’ என்றும்‌-இருபத்தேழாமதிகாரத்தில்‌ ஸாத்‌யோபாய விஸேஷத்தாலே வஸீகார்யமுமாய்‌ ப்ராப்யமுமா யிருக்கிற ஸித்‌தோபாயம்‌” என்றும்‌-புருஷார்த்தத்துக்கு ஸாதநமாக ஸாஸ்த்ர விஹிதமான ஸாத்‌யோபாயமும்‌ பர ந்யாஸ பர்யந்தமாக அகிஞ்சநனுக்கு அநிஷ்ட நிவ்ருத்தியைச் சொல்லுகிற நமஸ்ஸிலே ஆர்த்தமாக அனுஸந்தேயம்‌” என்றும்‌, ‘உபாய ப்ரகாரம்‌ வஸீ கரண விஸேஷம்‌’ என்றும்‌, “அகிஞ்சநனான அதிகாரிக்கு யதாவிதி ரக்ஷாபேஷாபூர்வக பரந்யாஸத்தை யொழிய வேறொன்றால் அபேஷை யில்லாத ஸித்‌தோபாயத்தை –மாமேகம்‌ என்று காட்டி அதினாலே வஸீகரணார்த்தமான ஸாத்‌யோபாயத்தை ஸரணம்‌ வ்ரஜ- என்று விதியாலே காட்டுகிறது. இப்படி விதிக்கிற ப்ரபத்தி ரூப வித்யைக்கு ஸரண்ய ப்ரஸாதநமாசோதி தத்வத்தாலே வருகிற உபாயத்வமும்‌ பக்தியோடு துல்யம்‌’ என்றும்‌, இருபத்தொன்பதாமதிகாரத்திலே என்னுணர்வினுள்ளே யிருத்தினோண்‌. அதுவுமவனதின்னருளே என்றும்‌, “இசைவித்தென்னை உன்‌ தாளிணைக் கீழிருத்துமம்மானே * என்றும்‌ சொல்லுகிறபடியே உபாய பூதனான அவன் இசைவிக்கச் செய்கிற வ்யாஜ மாத்ரத்தை அவனோடொக்க உபாயமாக எண்ணுகை உசிதமன்றென்று ஏக ஸப்‌த தாத்பர்யம்‌- இப்படி ஸித்‌தோபாயத்தைப் பற்ற ஸாத்‌யோபாயம்‌ வ்யாஜ மாத்ரமாய்‌ ப்ரதாநமின்றிக்கே நிற்கிற நிலையைப் பற்ற ஸம்பந்த ஜஞாந மாத்ரம்‌, ஸித்‌தோபாய ப்ரதிபத்தி மாத்ரம்‌, அநிவாரண மாத்ரம்‌, அநுமதி மாத்ரம்‌, அசித் வ்யாவ்ருத்தி மாத்ரம்‌, சைதந்ய க்ருத்யம்‌, சித்த ஸமாதாநம்‌, அதிகாரி விஸேஷணம்‌’ என்று இப் புடைகளிலே அதிவாதம்‌ பண்ணினார்கள்‌. இவ்வந்ய பரோக்தியைக்‌ கொண்டு இவை தானே அர்த்தம் என்றும் அறுதியிட ஒண்ணாது –இவை எல்லாம் சரணம் வ்ரஜ -என்கிற விதிக்கு விருத்தங்களாம்-அதி ப்ரஸங்காதி தோஷங்களுமுண்டு-அதெங்கனே என்னில்‌, ஸம்பந்த ஜஞாந மாத்ர மென்றாலும்‌, ஸித்‌தோபாய ப்ரதிபத்தி மாத்ரமென்றாலும்‌, அது வாக்ய மாத்ர ஜந்யமாகில்‌ விதி விஷயமாக மாட்டாது. அவிதேய ஜ்ஞாநத்தாலே மோக்ஷமென்பாருக்கு உபாஸநாதி விதி விரோதம்‌ பாஷ்‌யாதி ஸித்‌தம்‌-தத்வஜ்ஞாந முடையவருக்குப்‌ பின்பு கர்த்தவ்யமாண ஜஞாநாந்தரமாகில்‌ ப்ரபத்தியினுடைய விதி லக்ஷண அநுஷ்டந வாக்யங்கள்‌ சொல்லுகிறபடியே இதன் ஸ்வரூப மங்கீ கரிக்க வேணும்‌. ஸித்‌தோபாய ஸ்வீகாரமென்ற பாசுரத்துக்கும்‌ – ஸித்‌தோபாயத்தை யறிந்து அது தனக்கு. கார்ய கரமாம்படி பண்ணுகிற விதி ப்ராப்த ப்ராரத்தநா பூர்வக பர ந்யாஸ ரூபாதிகாரி க்ருத்யத்திலேயிறே தாத்பர்யம்‌. அநிவாரண மாத்ரமென்றது விலக்காத மாத்ரமானால்‌ ரக்ஷகனான ஈஸ்வரனை இவன் முன்பு ப்ரபலனாய்‌ விலக்கினானாகில்‌ ஈஸ்வரனுடைய ஈஸ்வரத்வம்‌ ஸங்குசிதமாம்‌.

அபராதத்தாலே நிக்ரஹத்தை உண்டாக்கி விலக்கினானாகில்‌ இவன்‌ பண்ணுகிற ப்ரபத்தி ப்ரஸாதநமே யாக வேணும்‌. ஸ்வ ரக்ஷணார்த்த வ்யாபாரத்தாலே விலக்கினானென்னில் நிர் வ்யாபாரமான ஸுஷுப்தி ப்ரளயாத்‌ யவஸ்தைகளிலும்‌, வ்யாபரிக்க. யோக்‌யனா யிருக்கிற ஜாக்‌ரத்‌ தஸையிலும்‌ விலக்காதே யிருக்கும் போதும்‌ ஈஸ்வரன் மோக்ஷப்ரதாநம்‌. பண்ண ப்ரஸங்கிக்கும்‌. அநுமதி மாத்ரமென்றால் அது உபாஸகனுக்கும்‌ துல்யம்‌- அசித்‌,வ்யாவ்ருத்தி மாத்ரம்‌ ப்ரதிகூல தஸையிலு முண்டாகையாலே இவ்வளவே ரக்ஷணீ யதைக்கு உறுப்பாகாது-சைதந்ய க்ருத்யமென்னால் உபாஸநாதிகளும்‌ மற்றுமுள்ள சேதந வ்ருத்திகளும் எல்லாம்‌ சைதந்ய க்ருத்யமாகையாலே இதுக்கொரு வாசி சொல்விற்றாகாது. சேதநனுக்குத் தானே வருமதென்று விவக்ஷிக்கில்‌ உபதேஸாதிகள் வேண்டாதொழியும்‌. பலாநுப வுக்தா சித்த ஸமாதாந மாத்ரமே யென்னில்‌, தந்தாம்‌ ருஸ்யநு ரூபமாக ப்ரதி புருஷம்‌ வேறுபடும்‌. “வ்ரஜ? என்று விதேயமாய்‌ பல தத் காமநாதிகளன்றிக்கே யிருக்கிற வித்தை அதிகாரி வி்ஸேஷணமென்ன வொண்ணாது. கர்த்தவ்யமாக விதிக்கிற ப்ரபத்தி தனக்கே. இப்படி ஏதேனுமொரு கண்ணழிவு பண்ணில்‌, உபாஸநாதிகளையும்‌. இப்படிக் கண்ணழிக்கலாம்‌. அப்போதும்‌ இம்‌ முகங்களாலே உபாஸநாதிகளிற் காட்டில்‌ ப்ரபத்திக்கு வ்யாவ்ருத்தி சொல்ல நினைத்தது தலைக் கட்டாது. ஸ்வ விஷய ஸ்வீகார விஸிஷ்டமாய்க் கொண்டு பல ப்ரதமாகா நிற்கச் செய்தே இஸ் ஸித்தோபாயம்‌ ஸ்வீகாரத்தாலும்‌ நிரபேஷமென்று புத்தி பண்ண வேணுமென்னில்‌ இது த்ருஷ்டி விதி போலே ஆரோபிதமாதல்‌ ஸ்வ வசந விருத்‌தமாதலாம்‌. ஆகையால்‌ ஈஸ்வரன்‌ ப்ரஸாத நீயனாய்‌ ப்ரதாநமான ஸித்‌தோபாயம்‌ பக்தி ப்ரபத்திகளிரண்டும்‌ ப்ரஸாதநங்களாய்க் கொண்டு ப்ரதாந மல்லாத ஸாத்‌யோபாயங்கள்‌ “இவை யிரண்டத்தொன்றிலே யதாதிகாரம்‌ நிலையாகக்‌ கடவது‘ என்றும்‌, “இப்படி பக்தயாதிகள் போலே ஸரணாகதி தர்மமும்‌ கர்த்தவ்யமாக விதிக்கப்படுகையாலே. “தன்னால் வரூம்‌ நன்மை விலைப் பால் போலே, ஈஸ்வரனால் வரும்‌ நன்மை முலைப் பால் போலே என்கிற பிள்ளான் வார்த்தைக்கு பக்தி ப்ரபத்த்யாதிகளெல்லாம்‌ அவனால் வருகிறதென்று நினைக்க வேணுமென்று தன்னுடைய பராதீந கர்த்ருத்வத்திலே தாத்பர்யம் –

அந்ய விஸ்வாஸ ஸித்‌த்‌யர்த்தவம்‌ பக்த் யுபாய விதிம்‌ வதந்। ஸர்வ ஸாஸ்த்ரேஷ்வ விஸ்வாஸம்‌ ஆதத்தே முக பேதத:!! மத்‌யோபஹத பாத்ரஸ்த, தீர்த்த, த்ருஷ்டாந்த வர்ணநம்‌ | அஹங்காராந்வயே து ஸ்யாத்‌ ப்ரபத்தாவபி பக்திவத்‌ ஆகையால்‌ “ப்ரஸீத மத்‌ வ்ருத்த மசிந்தயித்வா- இத்யாதிகள்‌ முன்பு தான்‌ பண்ணின ப்ரபத்திக்கு ஷமை கொள்ளுகிற படி யென்று சிலர்‌ சொல்லுமதுவும்‌ அஹங்கார ஸ்பர்ஸாதி ஸங்கையைப் பற்றவா மத்தனை யல்லது யதா ஸாஸ்த்ர மநுஷ்‌டித்த ப்ரபத்தி அபராதமாய்‌ அதுக்கு க்ஷமை கொள்ளுகிற படியன்று -அப்படியாகில்‌ பிதாமஹம்‌ நாதமுநிம்‌ விலோக்ய ப்ரஸீத- என்கிற பூர்வாசார்ய புரஸ்காராதிகளும்‌ தான்‌ செய்கிறதாகையாவே அதுக்கு க்ஷமை கொள்ள வேண்டி அநவஸ்தையாம்‌-இது ஸ்வ பர நிர்வாஹமாகில்‌ அது போலவே முன்பு பண்ணின ப்ரபதநமும்‌ ஸ்வ பர நிர்வாஹமென்னலாம்‌. இங்குச் சொல்லும்‌ குதர்க்கங்களாலே பூர்வர்கள்‌ பண்ணின ப்ரபத்தியும்‌ அபராதமா யறுகையாலே பூர்வர்களை முன்னிடவு மொண்ணா தொழியும்‌’ என்றும்‌, “புத ப்ரபதநம்‌ வேண்டாவென்கையும்‌ பர பக்ஷமாம்‌ இவ்‌ விடத்திலே சிலர்‌ – வ்ரஜ இத்யாதி விதிகளை அந்ய பரங்களாக்கி யோந்யதா ஸந்த மாத் மாநம்‌ அநுயதா ப்ரதி பத்‌யதே! கிம்தேந ந க்ருதம்‌ பாபம்‌ சோரேண ஆத்ம அபஹாரிணா –யமோ வைவஸ்வதோ ராஜா யஸ்தவைஷ ஹ்ருதி ஸ்தித தேந சேத விவாதஸ்தே மா கங்காம்‌ மாகுரூந்‌ கம “ஆத்ம தாஸ்யம்‌ ஹரே ஸ்வாம்யம்‌ ஸ்வபாவம்‌ ச ஸதா ஸ்மர* இத்யாதிகளில்‌ தாத்பர்ய கதிகளையும்‌ பராமர்ஸியாதே. இவற்றைக் கொண்டு ஸாஸ்த்ர ஜந்ய ஸம்பந்த ஞாநமொழிய வேறு முமுஷுவுக்கு அநுஷ்டேயமாய்‌ இருப்பதொரு உபாயமில்லை என்பார்கள்‌. இது பக்தி ப்ரபத்த் யாதி விதி ஸ்வாரஸ்ய விருத்தம்‌” என்றும்‌, “இங்கனல்லாத போது. புந ப்ரபத்தி விதாயக ஸாஸ்த்ரமும்‌ அப்படிகளுக்கு ஸிஷ்டாநுஷ்டாநமும்‌ பூர்வ ஸம்ப்ரதாயமும்‌ விரோதிக்கும்‌” என்றும்‌, இருபத்து நாலாமதிகாரத்திலே “உபாஸநாதிகள்‌. ஸ்வரூப விருத்‌தங்களென்று சிலர்‌ சொல்லுவர்கள்‌. இதுவும்‌ ப்ரபத்தியை ஸ்துதிக்கைக்காக அதிவாதம் பண்ணினார்களா மித்தனை -எங்கனே யென்ணில்‌ நித்யமான ஆத்ம ஸ்வரூபத்துக்கு இவை நாஸகங்களாய்க் கொண்டு. ஸ்வரூப விருத்‌தங்களென்ன வொண்ணாது’ என்றும்‌, “மோக்ஷ ப்ரதிகூவங்களான ராகாத்‌ யுபாதிகளாலே வந்த காம்ய நிஷித்‌தங்கள் போலே பந்தகங்களல்லாமையாலும்‌ மோக்ஷார்த்தி தனக்கே விதிக்கையாலும்‌ உபாஸநாதிகளுக்கு ஸாஸ்த்ர முகத்தாலே அநர்த்தா வஹத்வ ரூபமான ஸ்வரூப விரோதம்‌ சொல்ல வொண்ணாது- ஆகையால்‌ ஆத்ம ஸ்வரூபத்தைப் பற்ற உபாஸநாதிகளுக்கு நாஸகத்வ அஸம்பாவிதத்வா நர்த்தா வஹத்வங்களில்லாமையாலே ஒரு, படியாலும்‌ ஸ்வரூப விரோத ப்ரஸங்கமில்லை! என்றும்‌, “உபாஸநாதிகள்‌ அஹங்காராதி கர்ப்பங்கள் என்னுமிடம்‌ ஸாஸ்த்ரமிசையா திருக்கச்‌ செய்தே ஆரோபித்தார்களத்தனை” என்றும்‌, ‘அபிசாராதிகளை விதித்த கட்டளையிலே ஸாஸ்த்ர ப்ரரோசநாதிகளில்‌ அபி ஸந்தியாலே அதிகார விஸேஷத்திலே உபாஸநாதிகளை விதித்ததத்தனை யன்றோ! முமுஷு வுக்கு ப்ராப்ய ப்ராபகங்கள்‌ ஏகமாகையாலே ப்ராப்யாநுரூபமான உபாயம்‌ ஸர்வேஸ்வரன் ஓருவனுமே யாகையாலன்றோ-அத பாதக பீதஸ்த்வம்‌ ஸர்வ பாவேந பாரத । விமுக்தாந்ய ஸமாரம்போ நாராயண பரோ பவ” என்று தர்ம தேவதை தன்‌ புத்ரனுக்கு உபாஸநாதிகளை ப்ராப்ய விரோதிகளென்று நினைத்து நிந்தித்ததென்னில்‌ அதுவும்‌ அத்யந்தாநுபபந்தம்‌-என்றும்‌, “அத பாதக பீதஸ்த்வம்‌ என்கிற விடத்திலும்‌ ‘பாதக ஸப்‌தத்தாலே உபாஸநாதிகளை நிந்திக்கிற (நினைக்கிற )தென்கைக்கும்‌ ப்ரமாணமில்லை- ஆகையால் முமுஷுவுக்கு விஹிதங்களாகையாலே பக்தி ப்ரபத்திகஎிரண்டும்‌ யதாதிகாரம்‌ பரிக்‌,ராஹ்யங்கள்‌- என்றும்‌, “இவை “அகிஞ்சநோ அநந்யகதி-என்றிருக்குமதிகாரிக்கு ஸ்வாதிகார விருத்‌தங்களென்ன ப்ராப்தம்‌- இவ்வதிகார விரோத மறியாதே உபாஸநாதி களிலே ப்ரவர்த்திக்குமவனைப் பற்ற -நரஸ்ய புத்தி தெவ்ர்பல்யாத்‌ உபாயாந்தர மிஷ்யதே* என்றதும்‌’ என்றும்‌, “இப்படி இவ் வுபாயத்தின் அதிகாரத்திலும்‌ ஸ்வரூபத்திலும்‌ வரும்‌ கலக்கங்கள்‌ ஸமிப்பித்தோம்‌. இனி மேல்‌ பரிகரங்களில்‌ வரும்‌ வ்யாமோஹம் சமிப்பிக்கிறோம் -இவ்வுபாயத்துக்கு ஆனுகூல்ய சங்கல்பாதிகள் வேணுமோ?’ ‘ஆர்த்தோ வா யதி வா த்ருப்த- என்றும்‌, மித்ர பாவேந ஸம்ப்ராப்தம்‌ ந த்யஜேயம்‌ கதஞ்சந | தோஷோ யத்‌யபி தஸ்ய ஸ்யாத்‌ என்றும்‌,. யதி, வா ராவணஸ் ஸ்வயம்‌ என்றும்‌ சொல்லுகிற ரிபூணா மபி வத்ஸலனான ஸரண்யண்‌ ஸரணாகதனுடைய தோஷங்களைப் பார்க்குமோ? “அநாலோசித விஸேஷ அசேஷ லோக ஸரண்ய என்றன்றோ பூர்வர்கள்‌ பாசுரம்‌, ஆகையாலிவை ஸம்பாவித ஸ்வபாவங்களாமித்தனை யன்று அன்றோ வென்று சிவர்‌ சொல்லுவர்கள்‌. இதுக்கு ப்ரபத்த யுத்தர காலத்தில்‌ ஆநுகூல்யாதிகள்‌ அநுவர்த்தியாதொழியிலும்‌, ப்ரதி ஸமாதநம்‌ பிறந்து ப்ரபத்தி பலமும்‌ குறைவற்றிருக்கு மென்கையிலே தாத்பர்யம்‌ கொள்ளலாம்‌. இங்ஙனல்லாத போது ஷட்‌ விதா ஸரணாகதி என்றும்‌, ந்யாஸ பஞ்சாங்க ஸம்யுத என்றும் “ஸ்வாங்கை,, பஞ்சபி,ராவ்ருதாம்‌ என்றும்‌, அங்காங்கிகளை விபஸித்‌துச்‌ சொல்லுகிற பல ப்ரமாணங்களுக்கும்‌ விருத்தம்‌ என்றும்‌, இருபத்தெட்டாமதிகாரத்திலே -ஸ்ரீமானான நாராயணன்‌ திருவடிகளிலே அங்க,பஞ்சக ஸம்பந்நமான ஆத்ம ரஷா பர ஸமர்ப்பணம்‌ பண்ணுகிறேனென்று த்‌வயத்தின்‌ திரண்ட பொருள்‌-இங்கன் அல்லாத போது பக்தி ரூப மோக்ஷோபாயங்களை விதிக்கிற ஸாஸ்த்ரங்கள் எல்லாம்‌ அத்யந்த வ்யாகுலங்களாம்‌’ என்றும்‌ சொல்லப் பட்டது.

இதி பூர்வ பக்ஷ

அத, ஸித்தாந்த.-ந ஸரண வசஸ ஸாதநத்வே ப்ரமாணம்‌.

ப்ரபத்திக்கு உபாயத்வத்தில்‌ ப்ரமாணமில்லை (உபாயமென்கை ப்ரமாண விருத்‌தமாம்‌.) எங்ஙனே யென்னில்‌-இன்றென்னைப்‌ பொருளாக்கி” என்கிற பாட்டுக்கு – அநாதி காலம்‌ ஈஸ்வரன்‌ சேதநனை க்ருபை பண்ணாமைக்கு ப்ரதாந ஹேது ஈஸ்வர ஸ்வாதந்தர்ய மென்றும்‌, அப்ரதாந ஹேது ஆஜ்ஞாதிலங்கநமென்றும்‌ இவன்‌ கருபை பண்ணுகைக்கு அப்ரதாந ஹேது ப்ரபத்தி என்றும்‌ தாத்பர்யம்‌ கல்பிக்கைக்கு ப்ரமாணாமில்லை – ப்ரத்யுத – நிர் ஹேதுகத்வமே இதுக்கு தாத்பரிய மென்கைக்கு ப்ரமாணங்களுமுண்டு-ஸ்வ கர்மபி ஸம்ஸ்ருதி சக்ரஸ்தே ப்‌ராம்யமாணே” என்கையாலும்‌“முன் செய்த முழு வினையால்‌, யானே யென்னை யறிய கிலாதே என்று ஆழ்வார்‌ தாமே அருளிச் செய்கையாலும்‌ அநாதி காலமிழவுக்கடி கர்மம்‌-ஜீவே துக்காகுலே விஷ்ணோ க்ருபா காப் யுப ஜாயதே, *விதி வாய்க்கின்று காப்பாரார்‌? *நாஸெள புருஷகாரேண* புருஷகாரமும்‌ மிகையாம்படி யிறே யவன் படி. *செய்தாரேல்‌ நன்று செய்தாரென்னு மவனிறே.
(ந சாப்யந்யேந ஹேதுதா)
உபாயாந்தரத்தாலன்று (கேவலம்‌ ஸ்வேச்சயா) அப்ரதாந ஹேதுவுமில்லை- (ஏவ) இப்படியே- இதில்‌ ஸம்ஸய லேசமுமில்லை (அஹம்‌ ப்ரேஷே ), *அஸங்கல்பித மப்யஸ்ய ப்ரேரணம்‌. யத் க்ருதம்‌ மயா! விஷ்ண்வாய தநதீ பஸ்ய தஸ்யை தத்‌ புஜ்யதே பலம்‌”, மாதவனென்றதே கொண்டு”, “என்னுள்‌ புகுந்திருந்து, *திருமாலிருஞ்சோலை மலை யென்றேனென்ன திருமால்‌. வந்தென்னெஞ்சு நிறையப் புகுந்தான்‌” இத்யாதிப்படியே வைஷம்ய நைர்க்‌ருண்ய பரி ஹாரார்த்தமாக யாத்ருச்சிக ப்ராஸங்கிக ஸுக்ருத விஸேஷங்களை கல்பித்து கடாக்ஷிப்பன் (கஞ்சித்‌) அதிகாரி நியமமில்லை (கதாசந) கால நியமமில்லை- என்றித்யாதிப்படியே ப்ரமாணங்க ளுண்டாகையாலே – இன்று பேற்றுக்கடி க்ருபையே யாகையால்‌ இதுக்கு வஸீகர உபாயம்‌ ஸாதகமன்று’ என்றித்யாதியும்‌, ஸைவ தஸ்யாப வஸீகரணம்‌ பவதி” என்று சரணாகதியை தச்சேஷதா ப்ரதிபத்தி யென்று அதிகாரி விஸேஷணமாக ஸ்ருத ப்ரகாஸிகையிலே பட்டர்‌ விவரித்தருளினார் –

பாஷ்யகாரரும்‌ பாஷ்யத்திலே பக்தியை, “ஸ்வாஜ்ஞாதி வ்ருத்தி வ்யவஸாய நிவ்ருத்தி மாதரேண * இதயாதியாலே அதிகாரி விஸேஷணமாக அருளிச் செய்தார்‌-ஆகையால்‌ ஆழ்வார்‌ திவ்ய ஸூக்தி விரோதமும்‌ பாஷ்யகாரர்‌ திவ்ய ஸூக்தி விரோதமும்‌ ஸ்ருத ப்ரகாஸிகா பட்டர் திவ்ய ஸூக்தி விரோதமும்‌ வஸீகரணோபாயம்‌ ஆர்த்தமாகக்‌ கல்பிக்கிற விடமெங்கும்‌ துர்வாரம்‌. ஸமந்வயாதிகரணத்திலே ஸ்ருத ப்ரகாஸிகையிவே பட்டர்‌ ஸேக்ஷஸேஷி பாவ ஸ்வரூபோபாஸநாத்மக ஜ்ஞாநத்தாலே சேதநேஸ்வரர்கள்‌ ஸங்கதராகிறதற்கு த்ருஷ்டாந்தமாக நாவுபெ,ள ஸங்கச்சேதே என்று பூர்வம்‌ அவிஜ்ஞாத ஸம்பந்தராயிருக்கிற ராஜ புத்ரர்கள்‌ ஸம்பந்த ஞாநாநந்தரம்‌ ஸங்கதராவர்கள் என்று அருளிச் செய்கையாலே ஸம்பந்த ஜ்ஞாநமே போருமென்‌கிறத்தை ப்ரகாஸிப்பித்தருளினார்‌- ரிஷிகளுடைய தாத்பர்யஜ்ஞரான பாஷ்யகாரர்‌ கத்யத்திலே ப்ரபத்தி பண்ணினதுக்கு. க்ஷாமணம்‌ பண்ணி யருளினார்‌ என்றும்‌. பிள்ளை முதலானார்‌ வ்யாக்‌யாநம்‌ பண்ணி யருளினார்கள்‌.
(ஸ்வ ரக்ஷணே ஸ்வாந்வய நிவ்ருத்தியைச்‌ சொல்லுகிற நமஸ்ஸிவே ஸ்வ ரக்ஷணார்த்தமான ஸாத்‌யோயாயத்தை ஆர்த்தமாகச் சொல்லுகை அஸங்கதம்‌. அகிஞ்சநனான அதிகாரிக்கு பர ந்யாஸத்தை யொழிய வேறு ஓன்று அபேஷை யில்லாத ஸித்‌தோபாயத்தை மாமேகம்‌ எண்று காட்டி. அவனுடைய வஸிகரணார்த்தமான ஸாத்‌யோபாயத்தை. ஸரணம்‌ வ்ரஜ என்று விதிக்கையாலே காட்டுகிறதென்கையும்‌, ‘ஏக ஸப்‌த ஸ்வாரஸ்ய விருத்‌தம்‌-பாஷ்யகாரரும்‌. பதினெட்டு பர்யாயம்‌ திருக்கோட்டியூர்‌ நும்பி பக்கலிலே எழுந்தருளி மாஸோபவாஸம்‌ பண்ணி சூழரவு கொண்டு பெற்ற அர்த்தத்துக்கு விருத்‌த மாகையாலே ஸம்ப்ரதாய விருத்தம்‌.

ஸரணம்‌ வ்ரஜ என்று சோதிதத்வத்தால்‌ வருகிற அதினுடைய உபாயத்வம்‌*ஏக -ஸப்‌தத்தாலே அபோதிதம்‌. “என் உணர்வினுள்ளே யிருத்தினேன் அதுவும் அவனது இன்னருளே -என்கிறவிடத்தில்‌ – இருத்துகையும்‌, “இசைவித்தென்னை . என்கிற விசைவுமே அவனுடைய அருளின்‌ கார்யமாகையாலே அவ்வருளூக்கு அப்ரதாநமாகவும்‌ காரணமன்றிறே. பாஷ்யகாரர்‌ திருவாய் மொழியைக் கொண்டு ஸூத்ர வாக்யங்கள்‌ ஒருங்க விடுவரே- அப்படிப்பட்டவர்‌ “ஆறெனக்கு நின் பாதமே”, *கழல்களவையே சரணாக”, “நாகணை மிசை நம்பிரான் சரணே சரண்‌”, அடிக் கீழமர்ந்து புகுந்தேனே என்கிற வித்யாதி ஆழ்வார் பாசுரத்துக்கு விருத்‌தமாக ப்ரபத்தியை அப்ரதாந வஸீகரணோபாயமாகவும்‌ திருவுள்ளம்‌ பற்றாரிறே-அப்படிப் பட்டவர்‌ வஸீகரணேபாயமென்றால்‌ அதுக்குக்‌ கருத்து குத்‌ருஷ்டிகளுக்கு ரஹஸ்யோபாயத்தை வெளியிட வொண்ணாமையிறே. உபாஸநாத்மக ஜ்ஞாநத்தை பாஷ்யத்‌திலே அருளிச் செய்ததுக்குக் கருத்து அதுவே- கத்ய வ்யாக்யாநத்திலே ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தார்‌. பாஷ்யகாரர்‌ தாம்‌ ஸ்வீகாரத்தில்‌ அநுபாயத்வமாகிற ஏக சப்த தாத்பர்யத்தை அருமைப்பட்டிறே பெற்றது.ஆகையால்‌ அதுவே யிறே இவருக்குத்‌ திருவுள்ளம்‌. அப்படிப்பட்ட எம்பெருமானார்‌ திருவுள்ளத்துக்கு விருத்‌தமாக ஏகஸப்த தாத்பர்ய கல்பநம்‌ அத்யந்த ஸாஹஸ கார்‌யமாமத்தனை – ஸித்‌தோபாய ப்ரதிபத்தி மாத்ரம்‌, அநுமதிமாத்ரம்‌, அசித்‌ வ்யாவ்ருத்தி மாத்ரம்‌, சைதந்ய கார்யம்‌, சித்த ஸமாதாநார்த்தம்‌, அதிகாரி விஸேக்ஷணம்‌’ என்கை அதிவாதமாகிறதும்‌, (இல்விடம்‌ தாள கோஸத்தில்‌ சிதிலமையிருப்பதால்‌. ஸூத்த பங்க்தி காண வில்லை ) ஏஷ து. வா அதிவததி யஸ்ஸத்யேந அதிவததி என்றாலும்‌ விஹிதமான அதிவாதமிறே. ஆகையால்‌ இவை தானே அர்த்தமென்று அறுதியிடவேணும்‌- இவை யெல்லாம்‌ “மாமேகம்‌ சரணம்‌ வ்ரஜ என்கிற விதிக்கு அத்யந்தம்‌ அநுகூலங்களிறே. ப்ரமாண விருத்‌தங்களான அர்த்தங்களுக்கே யிறே அதி ப்ரஸங்காதி தோஷங்கள்‌ உள்ளது. ஸம்பந்த ஜ்ஞாநமும்‌, ஸித்‌தோபாய ப்ரதிபத்தியும்‌ ஆசார்யோபதிஷ்டமான திருமந்த்ர ரூப வாக்ய ஜந்ய ஜ்ஞாந மாத்ரமுமாகலாம்‌-தத்வஜ்ஞானமுடையவ னுக்குப்‌ பின்பு “ப்ரபத்‌யே* என்கிற வர்த்தமாந நிர்தேசத்‌தாலே ஸதாநுஸந்தேயமான ஜ்ஞாநமுமாகலாம்‌ “இது உபாயமன்று, ஈஸ்வரனே உபாயம்‌’ என்பாருக்கு உபாஸநாதி வித்யாநுகூல்யமும்‌, அதினுடைய அதிகாரி விஸேஷணத்வ ப்ரதிபாதநமும்‌ பாஷ்யாதியில்‌ ஸித்‌தம்‌. ப்ரபத்தியினுடைய – மாமேகம்‌ ஸரணம்‌ வ்ரஜ, “ப்ரார்த்தநா மதி ஸரணாகதி.*, *ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ப்ரபத்தி. , சரணெள ஸரணம்‌ ப்ரபத்‌யே என்கிற விதி லக்ஷண அனுஷ்டான வாக்யங்கள்‌ சொல்லுகிறபடியே அதிகாரி விஸேஷணமாக அங்கீகரிக்க வேணும்‌.ஸித்தோபாய ஸ்வீகாரமென்ற பாசுரத்துக்கும்‌ அதிகாரி க்ருத்யத்திலே தாத்பர்யமென்ற அம்ஸம் ப்ராமாணிகம்‌- அதிரிக்தம்‌ அப்ராமாணிகம்‌-விலக்காத மாத்ரமானாலும்‌ அநாதி காலம்‌ ஆஜ்ஞாதி வ்ருத்தி வ்யவஸாயத்தாலே விலக்கென்று பண்ணுகிற தந் நிவ்ருத்தி ரூப ப்ரபத்தி அதிகாரி ஸம்பத்தியைக் காட்டுகிற வழியாலே ப்ரஸாதநமாகலாம்‌-அநாதி காலம்‌ ஸ்வ ரக்ஷணார்‌த்த வ்யாபாரத்தாவே விலக்கினானே யாகிலும்‌ இப்போது ‘பகவத்‌ ப்ரவ்ருத்தி விரோதி ஸ்வ ப்ரவ்ருத்தி’ என்று அறிந்து தந் நிவ்ருத்தியாலே உண்டாகிற விவக்காமை ஸூ ஷுப்த்‌யாத்‌ யவஸ்த்தைகளில்‌ இல்லையிறே-ஆகையால்‌ அவவவஸ்த்தையில்‌ மோக்ஷம்‌ வர வேணுமென்கை அஸங்கதம்‌-அநுமதி மாத்ரமென்றாலும்‌ அது உபாஸநத்துக்குத்‌ துல்யமென்கை இஷ்டம்‌. புத்‌தி தெவ்ர்பல்ய நிபந்தநமான சோதிதத்வத்தால்‌ வருகிற உபாயத்வம்‌ கழியுமே“அஸ்தி ப்‌ரஹ்மேதி சேத்‌ வேத ஸந்தமேநம்‌* என்கிற அசித்‌ வ்யாவ்ருத்தி யில்வையே ப்ராதிகூல்யதஸையில்‌. ஆகையால்‌ அசித்‌ வயாவ்ருத்தியே ரக்ஷணியதைக்குப் போரும்‌. சைதந்ய க்ருத்யமென்னாலும்‌. இவ் விடத்தில்‌ சைதந்யம்‌ ஸ்வரூப யாதாத்ம்ய விஷயமாகையாலே “அஜ்ஞாநமதோந்ய துக்தம்‌” என்கிற படியே ஸ்வரூப விஷயமாண உபாஸநாதிகளும்‌ புத்தி தெவ்ர்பல்ய நிபந்தநமாகையாலே இதுக்கு நெடுவாசி சொல்லிற்றாம்‌. ஸாமாந்யேந சேதநனுக்குத்‌ தானே வருமென்று அநுக்தோபாலம்பம்‌. சித்த ஸமாதாநம்‌ என்றது தந்தாம்‌ ரூச்யநுரூபமாக பலம்‌ பேதிக்கிலும்‌ அவ்வோ

பலாநுகுண ரஷணம்‌ இனிப் பண்ணுமென்றும்‌ சித்த ஸமாதாநம்‌ ப்ராபத்தாக்களில்‌ வேறுபடாது. ப்ரபத்தி ப்ரார்த்தநா ரூபமாய்‌, காமணையிலே அந்தர்பவிக்கையாலே அதிகாரி விஸேஷணமென்னத் தட்டில்லை. இவ்வதிகாரிக்கு அத்‌வேஷம்‌ தொடங்கி கைங்கர்ய பர்யந்தம்‌ பல பரம்பரை யாகையாலும்‌ அநந்யார்ஹ ஸேக்ஷத்வ ஜ்ஞாநமும்‌ பலமாகையாலும்‌ பகவத்‌ காமநா கார்யமாகையாலும்‌ அதிகாரி விசேஷணம் என்னலாம்‌- பகவத ப்ரவ்ருத்தி விரோதி ஸ்வ ப்ரவருத்தி ரூபமான உபாஸநத்துக்கு தந் நிவ்ருத்தி ரூபத்வம்‌ துரவசம்‌ -ஆகையால்‌ நெடு வாசி சொல்லிற்றாம்‌-ஸித்‌தோபாயம்‌ இவன்‌ ஸ்விகரிக்கும்‌ தஸையில்‌ இவனுக் கதிகாரார்த்தமாக தத் ஸாபேஷமொழிய கார்ய காலத்தில்‌ தந் நிரபேஷமாகையாலே ஸ்வீகார நிரபேஷமென்னும்‌ நினைவு ஆரோபமன்று-ஸ்வ வசந விருத்‌தமுமன்று- அப்ரதாந ஹேது வல்லாமையாலே அவையிரண்டத் தொன்றிலாக வுமொண்ணாது -எம்‌பெருமானார்க்கு அபிமத விஷயமாய்‌ அவர்‌ பக்கவிலே. பழுக்கக் கேட்டு தந் நிஷ்டரான திருக் குருகைப் பிரான் பிள்ளான்‌ திவ்ய ஸூக்திக்கு முக்ய பாதை இல்லாதிருக்க அமுக்ய தாத்பர்‌ய கல்பநமந்யாய்யமென்று – பக்தி அநுபாயமென்றால்‌ பக்தி ஸாஸ்த்ரத்தில்‌ அவிஸ்வாஸம்‌ வருமென்று தத் பரிஹாரார்த்தமாக “நராணாம்‌ புத்தி தெர்‌பல்யாதுபாயாந்தர மிஷ்யதே- என்கிறபடியே ஸ்வரூப விஸ்வாஸத்துக்கே ஸாஸ்த்ர விஸ்வாஸம்‌ கார்ய மாகையாலே ஒரு ஸாஸ்த்ரத்திலும்‌ அவிஸ்வாஸம்‌ வாராது-மத்‌யோபஹதபாத்ரஸ்த தீர்த்த த்‌ருஷ்டாந்த வர்ணநம்‌ ப்ரபத்தியிலும்‌ வருமென்றதுவும்‌ வஸீகரண உபாயம்‌ என்ற பக்ஷத்தில்‌ வருமென்கையாலே இஷ்டம்‌. “மத்‌ வ்ருத்தமசிந்தயித்வா” என்று ஸ்வ பூர்வ வ்ருத்தத்தை நினைத்து இப்படியிறே ப்ரபத்தி பண்ணுகிறான் என்று ஸ்வாமி திரு வுள்ளத்திலே கலக்கத்தை எண்ணி அதுக்கு க்ஷமை. கொள்ளுகிறதென்று தோற்றா நிற்க-அல்லாத அஹங்காார ஸங்கையைக் கல்பித்து தந் நிபந்தநம் என்கை பரமாசார்யர்‌ திருவுள்ளக் கலக்கத்துக்கு ஹேதுவாம்‌-ஆசார்ய புரஸ்காரத்தாலே ப்ரபதந கர்த்தா தாமன்றிக்கே -ஆசார்யனாகையாலே அவ்விடத்தில்‌ அநவஸ்தையில்லை பாங்கலராகிலும்‌ செயல்‌ நன்றாகத் திருத்திப் பணி கொள்‌ ளுமாசார்யன்‌ திருவுள்ளம்‌ பூர்வ வ்ருத்தததை யெண்ணிக்‌ கலங்காமையாலே அவ் விடத்திலும்‌ அநவஸ்தையில்‌லை அதுவுமவனதின்னருளே* என்கிறபடி யன்‌றிக்கே ஆசார்யனாகையாலே- அவன் ப்ரஸாத கார்யமாந ப்ரபத்தியை அவனுக்கு ப்ரஸாதநம் என்னுமிடத்திலே ஆத்மாஸ்ரயமும்‌, அந்யோந்யாஸ்ரயமும்‌, அநவஸ்தையும்‌ வரும்‌. எங்கனே என்னில்‌ ஸாத்‌யோபாயம்‌ தன்னை யுண்டாக்குகிற ஸித்‌தோபாயத்தை வஸீகரிக்கும் போது தானுண்டாகையாலே ஆத்மாஸ்ரயம்‌. ஸாத்‌யோபாயம்‌ வஸீகரணத்தை அபேஷிக்கையாலும்‌ வஸீகரணம்‌ ஸாத்‌யோபாயத்தை அபேஷிக்கையாலும்‌ அந்யோந்யாஸ்ரயம்‌ ஸாத்‌யோபாயமுண்டாயே யிதுக்கு வஸீமகரணத்வம் உண்டாக வேணும்‌- ஸாத்‌யோபாய ஜநகத்வம்‌ ஸித்‌தோபாயத்துக்கு உணடாயே ஸாத்‌யோபாயம்‌ ஸித்‌திக்க வேணுமென்று ஸங்க்ரஹம் – இப்போது ஸாத்‌யோபாயமுண்டாகை அவனருளாலே. அந்த வருள்‌ அதுக்கு முந்தின அருளாலே என்று அநவஸ்தையாம்‌. பிஜாங்குர நியாயத்தாலே அநவஸ்தை தோஷாய அன்றென்னில்‌ மேல்‌ வஸீகரண பரம்பரைக்கு ஸாத்‌யோபாய ப்‌ரதாந பரம்‌பரையே பலமாய்‌ அநிர்மோக்ஷம்‌ ப்ரஸங்கிக்கும்‌.

ப்ரதம ப்ரபத்திக்கு ஷாமணம்‌ பண்ணுகிறவர்களுக்கு புந ப்ரபதநம்‌ வேண்டா வென்றது ஸ்வ பஷமோழிய பரபஷமானபடி எங்ஙனே? தான்‌ ஸ்வதந்த்ரனாய்‌ ஈஸ்வரனை வஸீகரித்தால்‌ ஸ்வாதந்த்ர்‌யமாக ஆத்மாபஹாரம்‌ வருமென்று அது வாராமைக்காக அவனோட்டை அவிவாதமே போரும்‌- உனக்குமவனுக்குமுண்டாண ஸ்வாபாவிக ஸம்பந்தத்தை எப்போதும்‌ நினை யென்று சொல்லுகிற. “யோந்யதா ஸந்தம்‌”, யமோ வைவஸ்வதோ ராஜா- “ஆத்ம தாஸ்யம்‌ ஹரே ஸ்வாம்யம்‌* இத்யாதி ப்ரமாணங்களுக்கு விருத்தமான தாதபர்யகதி கல்பநம்‌ ஆசார்யாநுஷ்‌டாந ஸம் ப்ரதாயங்களுக்கு விருத்‌தமாம்‌- “ஸக்ருதேவ ப்ரபந்நாய”, “ஸக்ருதேவ ஹி ஸாஸ்த்ரார்த்த,, “ஸக்ருத்‌ க்ருதோஞ்ஜலி.” இத்யாதி ப்ரமாணாநுகுணமாக ப்ராயஸ்சித்திரியம்‌ ஸாத்ர யத்புந ஸரணம்‌ வ்ரஜேத்‌” ன்கிற விதுக்கு தாத்பர்யம்‌ கொள்ளாதே புந ப்ரபதநமாமென்கையும்‌ ஸிஷ்டாநுஷ்டாந ஸம்ப்‌ரதாய விருத்‌தம்‌- ஆநுகூல்ய ஸங்கல்பாதிகளையும்‌. அங்கம் என்கையும்‌ ஸம்பாவித ஸ்வபாவங்கள் என்கிறத்தை ப்ரபத்த் யுத்தர காலம்‌ அநுவர்த்தியாது ஓழியிலும்‌ பலம்‌ குறைவற்றிருக்கும் என்கையும்‌ அங்க பஞ்சக ஸம்பந்நமான ஆத்ம ஸமர்ப்பணம்‌ பண்ணுகிற தென்று த்வயத்தில்‌ திரண்ட பொருள்‌ என்கையும்‌, ‘இங்ஙன் அல்லாத போது பக்தி ப்ரபத்தி ரூபோபாயங்களை விதிக்கிற ஸாஸ்த்ரங்களொல்லாம்‌ அத்யந்த வ்யாகுலங்களாம்‌ என்கையும்‌- “அஹமஸம்யபராதநாமாலயோகிஞ்சநோதித்வமேவோபாய பூதோ மே பவேதி ப்ரார்த்தநாமதி। ஸரணாகதி ரித்யுக்தா ஸா தேவேஸ்மித்‌ ப்ரயுஜ்யதாம்‌ என்கிற லக்ஷண வாக்ய விருத்‌தம்‌- அவதாரணத்தாலே அவனை யொழிந்த தொன்றுக்கும்‌ உபாயத்வமில்‌லே யென்று கழிக்கையாலே அங்கத்வம்‌ சொல்லுகிற வசநங்களுக்கும்‌ ஸம்பாவித ஸ்வபாவ(த்வ)த்திலே தாத்பர்யமாககக் கடவது-ஸகலாத்மாக்களுக்கும்‌ அநந்ய ஸரணத்வ ப்ரதிபாதகமான நமஸ்ஸுதானே ‘உபாஸநாதிகள்‌ அநந்ய ஸரணத்வத்துக்கு விருத்தங்கள் என்கைக்கும்‌ ப்ரமாண மாயிருக்க, ப்ரமாணமில்லை யென்றும்‌ அத்தை ஸ்துதி யென்றும்‌ அதிவாத மென்றும்‌, அவற்றுக்கு ஸ்வரூப விரோதம்‌ சொல்ல வொண்ணாது என்றும்‌ “த்‌வ்யக்ஷரஸ்து பவேத்‌ மருத்யு; தீர்யக்ஷரம்‌ ப்ரஹ்மணா பதம்‌ | மமேதி த்வ்யக்ஷரோ ம்ருத்யு ந மமேதி ச ஸாஸ்வதம்‌ என்கிறபடியே அநந்யார்ஹ ஸேஷத்வ அநந்ய ஸரணத்வ அநந்ய போக்‌யத்வ ஸ்வரூப நாஸகத்வமுண்‌டாயிருக்க அவற்றுக்கு ஸ்வரூப விரோத ப்ரஸங்கமில்லை யென்றும்‌ ஏகாந்தீ து விநிஸ் சித்ய தேவதா விஷயாந்தரை பக்த்யுபாயம்‌ ஸமம்‌ க்ருஷ்ண ப்ராப்தவ் க்ருஷ்ணைக ஸாதந- என்றும்‌ தேவதாந்தர ஸப்‌தாதி பக்தி க்ருஷ்ணாக்‌ய ஹேதுஷு | ஸாம்ய க்ருத்‌ பரமைகாந்தீ ஹரெவ் ஸ்வாமீதி புத்திமாந் என்றும்‌ வஸீகரண உபாயமென்று பக்திகளை தேவதாந்தர விஷயங்களோடு ஓக்க ஸ்வரூப நாஸகங்களாக ஸாஸ்த்ரம்‌ சொல்லா நிற்க ஒரு படியாலும் ஸ்வரூப விரோதி பிரசங்கமில்லை என்றும் –

அஹங்கார கர்ப்பம் என்று ஆரோபித்தார்கள் என்றும் “அத, பாதக பீதஸ்த்வம்‌” என்கிற இடத்தில்‌ பாதக ஸப்‌தத்தாலே உபாஸநாதிகளை நினைக்கிறதென்கைக்கும்‌ தர்ம புத்ரனுக்கும்‌ தர்மாநுஷ்டாநம்‌ ஒழிய வேறு பாதகமில்லாமையே உபபந்ந மாயிருக்க, அநுபபந்நமென்றும்‌ “ஸர்வே பாப்மாநோதோ நிவர்த்தந்தே”, “ஸர்வே பாப்மாநா ப்ரதூயந்தே, “ஸர்வ பாபேப்‌யோ மோக்ஷயிஷ்யாமி என்று ஸ்ருதி ஸ்ம்ருதிகள்‌ புண்யத்தையும்‌ ‘பாப’ஸப்‌தத்‌தாலே சொல்லா நிற்க, அப்படிச் சொல்லவுமில்லை யென்றும்‌- இவற்றுக்கு அநந்ய ஸரணத்வ ஸ்வரூப விரோதித்வம்‌ ஸர்வாத்ம ஸாதரணமாயிருக்க அத்தைச் சிலரிடத்திவே யொதுக்கி, அவர்களதிகாரத்துக்கு விருத்‌தமென்றும்‌ ப்ரமாண விருத்‌தர்த்‌தங்களைச்‌ சொல்லுகை அதி ஸாஹஸம்‌. வலிதா சரிதே-அஸங்கல்பிதமப்யஸ்ய ப்ரேரணம்‌ யத் க்ருதம்‌ மயா | விஷ்ண்வாய தநதீ பஸ்ய தஸ்யைதத்‌ புஜ்யதே பலம்‌. ॥ ததோ ஜாதி ஸ்ம்ருதி ஜந்ம மாநுஷ்யம்‌ ஸோபநம்‌ வபு ॥ வஸ்ய பதிர்மே ஸர்வாஸாம்‌ கிம்புந ; தீபதாயிநாம்‌ – இத்யாதி…
ஸூவ்ரதோ பாக்‌யாநே – *ஸ்ருணு தஸ்ய மஹா ப்ராஜ்ஜே !: நிமித்தம் கத தோ மம । யேந த்வம்‌ ப்‌ராஹ்மணஸ் யாஸ்ய குலே ஜாதா மஹாத்மந.” என்று தொடங்கி இஜ் ஜந்ம ஹேது புறத் திண்ணையிலே வைஷ்ணவன்‌ வந்து இருந்தானென்று, சொல்லிற்று. காருடே ஸ்ரீரங்க, மாஹாத்ம்யே – *பத்ரே த்வயா ஸுஷ்டு க்ருதம்‌ ந கிஞ்சிதிஹ வித்‌யதே । இதோ: த்வாதஸ ,ஜந்மாந்தே த்வாம்‌ கஸ்சித் ஸித்‌த ஆவிஸத்‌ விஷ்ணு பக்தோ நிவாஸார்த்தம்‌ ராத்ர்யாம்‌ து தவ வேஸ்மநி | தத் ஸந்நிதாந ப்ரபவ தவ ஸாது ஸமாகம ஸா ஹி வை ப்‌ரஹ்மவிதுஷீ ஸ்ரீமத்‌ ரங்கமுபாஸ்ரிதா॥ தத்ர தீர்த்தோதகம்‌ ஸ்ரீமத ஸ்வத்தம்‌ நாம ஸம்ஸ்ரிதா | தர்ம ஜ்ஞாதர்ம பரமா யஸ்யாஸ்தே ஸங்கமோபவத்‌–இத்யாதி “நிர்ஹேதுக கடாக்ஷேணே மதீயேந மஹாமதே | ஆசார்ய விஷயீ காராத்‌ ப்ராப்நுவந்தி பராம்‌ கதிம்‌ ம சித பரம சில்லாபே ப்ரபத்திரபி நோபதி | விபர்யயே து நைவாஸ்ய ப்ரதிஷேதாய பாதகம்‌”, *நமனும்‌ முற்கலனும்‌ பேச நரகில்‌ நின்றார்கள் கேட்க நரகமே சுவர்க்கமாகும்‌ நாமங்களுடைய நம்பி-அவனதூர் அரங்கம் என்னாது அயர்த்து வீழ்ந்தனிய மாந்தர் கவலயுட்படுகின்‌றார் என்று அதனுக்கே கவல்கின்றேனே”(அருளினன்‌).! 1.1) நிர்ஹேதுகமாக அருளிக்‌கொண்டு நிற்கக் கண்ட வித்தணை- எனக்கு அருளினன்‌ என்னாதொழிந்தது – பகவத்‌ விஷயீகாரத்துக்கு முன்பு தம்மை அசத் கல்பராக நினைத்திருக்கையாலே -அருளினன் -இத்தலை அர்த்திக்க அன்றிக்கே முலைக் கடுப்பாலே தரையிலே பீச்சுவாரைப் போலே அருளிக் கொண்டு நிற்கக் கண்ட வித்தனை என்றும் -“தாது. ப்ரஸாதாத்‌ மஹிமாருமீலம்‌” எண்கிற. படியே நிரஹேதுகமாக அருளிக்கொண்டு நிற்கக்கண்ட வித்தனை என்றும்‌, (உடையானிடை]) (1-2-1) அவனுடையவனாய்‌ உங்கள்‌ ஸத்தையை நோக்கிக் கொண்டு போரா நிற்க,, நீங்களும்‌, ‘நான்‌, என்னது! என்று அகலப் பாராதே உங்களை அவன்‌ பக்கலிலே ஸமர்ப்‌பிக்கப் பாருங்கோள்‌-அவன் உடையவனான பின்பு அவனோடு அவிவாதமே உங்களூக்கு ‘வேண்டுவது’ என்றும்‌, “தேந சேத விவாதஸ்தே – உடையவனா யிருக்கிறவனோடே உனக்கு அவிவாதம்‌ உண்டாகில்‌ இத்தால்‌ பேறு என்‌ என்பாயோ? “மா கங்காம்‌ மா குரூந்‌ கம. – ஒரு தீர்த்தம்‌ தேடிப் போதல்‌ புண்ய ஷேத்ரம்‌ தேடிப்‌ போதல்‌ செய்ய வேண்டா- அஹங்கார மமகாரங்கள்‌ கிடக்க ப்ராயஸ்சித்தம்‌ பண்ணுகை யாவது -நிஷித்‌த த்ரவ்யத்தை உள்ளே வைத்து மெழுகூட்டினவோபாதியிறே உடையவனுக்கும்‌ உடைமைக்கும்‌. தக்கபடியிறே ப்ராயஸ்சித்தமும்‌- உடையவன்‌ ஸர்வேஸ்வரன்‌., த்‌ரவ்யங்களில்‌ ப்ரதாந த்‌ரவ்யமான ஆத்ம த்‌ரவ்யத்தையிறே அபஹரித்தது. அபஹரித்த த்ரவ்யத்தைப்‌ பொகட்டு ப்ராயஸ்சித்தம்‌ பண்ண வேணுமே. பொகடுகிற த்‌ரவ்யம்‌ தானாகையாலே ப்ராயஸ்சித்தம்‌ பண்ணுகைக்கு வேறு அதிகாரமுமில்லையே- ஆகையால்‌ நீங்களும்‌ உடையவன் பக்கலிலே விடு செய்மினே-வீடு – ஸமர்ப்பிக்கை– அதாகிறது – இசைகை’ என்றும்‌ ‘(வெறிதே அருள்‌ செய்வர்‌) நிர்ஹேதுகமாக கிருபை பண்ணுவர்‌-ஆருக்கென்னில்

(செய்வார்கட்கு) “யமேவைஷ வ்ருணுதே” என்று தாம்‌ விஷயீகரிக்க நினைத்தார்க்கு-தாந்தாம்‌ ஒன்று செய்வார்க்‌கென்னில, ‘வெறிதே’ என்னக் கூடாதிறே- ஆனாலுமொரு ஹேது வேண்டாவோ அருளுக்கென்னில்‌- உகப்பாயிற்று ஹேது- *ப்ரியதம ஏவ ஹி வரணீயோ பவதி” என்னக் கடவதிறே- ருசி யுண்டானாலும்‌ இவன் சேதநனான வாசிக்கு சைதந்ய ப்ரயுக்தமான ஸ்வபா வமாகக்‌ கொள்ளுமித்தனே யல்லது பேற்றுக்கு ஸாதநமாகச்‌ சொல்ல ஓண்ணாதிறே என்றும்‌, ‘ ‘மதி-அநுமதி! என்றாக்கி அநுமதி மாத்ரத்தாலே’ என்பர்‌ பட்டர்‌. அதாவது ‘அவன் புகுகிற விடத்தில் விலக்கிற்றிலன்‌ என்கை’ என்றும்‌, (வைத்தேன்‌. மதியாலே எனதுள்ளத்தகத்தே) – அநுமதியாலே என் நெஞ்சினுள்ளே வைத்தேன்‌-ஓர்‌ அநுமதி மாத்ரத்துக்கு இத்தனை பலமுண்டாவதே- (எய்த்தே ஒழிவேனல்லேன் ) – இனிப்‌ பிறந்து கலேஸிக்கக் கடவேனல்லேன்‌” என்றும்‌, முதற்பாட்டிஸ்‌, யாத்‌ருச்சிகமாகக்‌ திருமலையைச்‌ சொல்லுங் காட்டில் நிரபேஷனான தான் பிராட்டியோடே கூட வந்து என்னுள்ளே புகுந்தருளின னென்கிறார்‌(திருமாவிருஞ்சோலைமலை இத்யாதி) முன்பு அநாதி காலம்‌ ஈஸ்வரனுக்குத்தம்‌ பக்கல்‌ பேரிட்டுக்‌ கொள்ளலாவ தின்றிக்கே யிருக்க இப்போது அவனுக்குப்‌ பேரிட்டுக் கொள்ளுகைக் கடியானது இன்னதென்கிறார்‌. ஓரோ தேசங்களில்‌ மலைகளைச் சொல்லா நின்றால்‌ ஓரோ விஸேஷங்களை யிட்டுச்‌ சொல்லக்‌ கடவதாயிருக்குமிறே- அப்படியே திருமாலிருஞ்சோலைமலை என்றேன்‌. (என்ன) மநஸ் ஸஹகாரமுமில்‌லை கிடீர்‌ – உக்தி மாத்ரமே என்‌ பக்கலுள்ளது- இவன்‌ ஸேஷ பூதனாயிருந்‌தானாகில்‌, உபாய பாவம்‌ நம் பக்கலிலே யாயிருந்ததாகில்‌ இவனுடைய பேறு நம்‌ பேறாயிருந்ததாகில்‌, சேதந வாசிக்கு உக்தி மாத்ர முண்டாய்த்தாகில்‌, இதுக்கவ்வருகு, கொண்டு கார்யமென்‌?’ என்றிருக்குமவனிறே-இது தான்‌. ஒரு மலையிறே -அவனுக்கு உக்தியை இல்லை என்ன வொண்ணாதே. இதுக்கடி ஆராயுமவனல்லனே- ராவணன்‌ தம்பிக்கு. மித்ர பாவமே யமையும்‌ என்னுமவன் இதுக்கு, அவ்வருகொன்று வேணுமென்றிரானிறே-மலைகளினுடைய சாமான்யம் கிடக்க இவ்விசேஷத்தைச் சொல்லிற்று இதிலுண்டான ஆதராதிஸமன்றோ என்‌றிரா நின்றானாய்த்து அவன் – ஆக. இவர்க்கொன்றில்லை என்னவுமாய்‌, அவனுக்கு இது ஒன்றுண்டு என்னவுமாம்படி யிருக்கறதிறே இது தானே(திருமால்‌) அஹ்ருதயமாகச்‌ சொன்னது தன்னை ஸஹ்ருதயமாக்கிக் கொடுப்பாருமருகே யுண்டு என்கிறார்‌. (வந்து) ‘அவன்‌ வருவதே என்றிவர்‌ விஸ்மயப்படா நிற்க, ‘பிபாஸை வர்த்தித்தவன்‌ தண்ணீரிருந்த விடத்தே வருமத்தனே யன்றோ’ என்றாயத்து அவன் வார்த்தை-க்ருபணராயிருப்பார்‌ ஸ்லாக்யரிருந்த விடத்தே வருமித்தனை யன்றோ என்றிரா நின்றான்‌-எல்லார்க்கு அதிகம்யனானவனுக்கு நான்‌ அபிகம்யனானேன் *ஸோப்‌ய கச்சத்‌ ஸபரீம்‌* என்னுமா போலே (என் நெஞ்சம்‌) அந்த உக்தி ஸஹ்ருதமான என் நெஞ்சிலே (நிறையப்‌ புகுந்தான்‌) விஷயாந்தரங்களுக்கு அவகாஸ மில்லாதபடி புகுந்தான்‌- அத்ரிபகவானாஸ்ரமத்திலே ‘நான்‌ ராமன் , இவள்‌ மைதிலி, இவன்‌ லக்ஷ்மணன்‌” என்று நமஸ்கரித்து நின்றாப் போலே, அக் காட்டில்‌ பாழடையத் தீரும்படி புக்காப் போலே என் நெஞ்சில்‌ பாழ்‌ தீரப் புகுந்தான்‌” என்றும்‌ (இன்றென்னைப்‌. பொருளாக்கி) அஸத் கல்பனான என்னை இன்று ஒரு வஸ்துவாம்படி பண்ணி ‘பொருளல்லாத வென்னை’ என்றாரிறே. (தன்னை) ஸத்துக்களுக்கு(ம்‌) அஸத்துக்களுக்கும்‌ – என்று விகித புஸ்தக பாடம்‌) ஸப்ருஹணீயனான தன்னை. (என்னுள்‌ வைத்தான்‌) தன்னைப் பிறர்க்கு அவகாஸ மில்லாதபடி முற்றூட்டாக என்னுள்ளே கொடு வந்து வைத்தான் – (அன்று) அவன்‌ விஸேஷ கடாக்ஷம்‌ பெறுவதற்கு முன்புள்ள நாளை வெல்லாவற்றையும்‌ சொல்லுகிறார்‌. இன்றென்கிறது மயர்வற மதி நலம்‌ அருளப் பெற்றவதுக்குப்‌ பின்புண்டான காலத்தை (என்னைப் புறம்‌ போகப் புணர்த்ததென்‌ செய்வான்‌?) பரதந்த்ரனான என்னைப்‌ புறம்பு போகப்‌ பண்ணிற்று என் செய்கைக்காக? பாஹ்யனாகப் பண்ணுகை யாகிறது- உபேஷிக்கை… இழந்த நாளிழந்தது மவனாலே பெற்ற வின்று பெற்றதுமவனாலே ‘ என்றிருக்கிறார்‌. பரதந்த்ர வஸ்து செல்ல நிற்க வற்றோ, வர நிற்க வற்றோ. (குன்றித்யாதி.,) இப்படி-மதிப்பனானவன் மலைகளைச்‌ சேர வைத்தாப் போலே விளங்கா நின்றுளள மாடங்கள்‌ சூழ்ந்த திருப்பேரான்‌., (ஒன்று எனக்கு அருள் செய்ய) முன்பு கை விட்டதுக்கு ஹேது சொல்வவுமாம்‌, இன்று என்னை விஷயீகரித்ததுக்கு ஹேது சொல்லவுமாம்‌. (உணரத்தலுற்றேனே) இதுக்கு ஒரு மறு மாற்றம்‌ அருளிச் செய்ய வேணு மென்று திரு வுள்ளத்திலே படும்படி விண்ணப்பம்‌ செய்ய வேண்டி யிரா நின்றேன்‌. ‘இது நாம்‌ சொல்ல வேணுமோ? நீரே அறியிரோ’ என்றான் ‘அடியேன் அறியேன்‌, ஸர்வஜ்ஞரான தேவர்‌ அருளிச்‌ செய்யவேணும்‌’ என்றார்‌. ‘ஆனால்‌ நாம்‌ உம்முடைய நெஞ்சிலே புக்கிருககிற இடத்தில்‌ ஸம்வதித்திருந்தீர் அத்தாலே காணும்‌’ என்றான் – ‘ஓம்‌, அது தானுண்டோ யான் ஓட்டி என்னுள் இருத்துவம்‌ ‘ என்றார்‌. ‘அதில்லே யாகிலும்‌ புகுந்த பின்பு, நம்மை ஆதரித்தீரே’ என்றான்‌. ‘மருவித் தொழும்‌ மனமே தந்தாய்‌ என்று அதுவும்‌ தேவர்‌ செய்த வித்தனை’ என்ரார்‌. ‘ஓங் காணும்‌, அதில்லை யாகிலும்‌ நம்மோடு ஓக்க விஷயாந்தரங்களையும்‌ விரும்பாதே யிருந்தீரே என்றான் – “என்னைத்‌ தீமனங்கெடுத்தாய்‌* என்று அதுவும்‌ தேவரே யன்றோ ‘ என்றார்‌. ‘இவை யொன்றுமில்லை யாகிலும்‌ நாம்‌ தந்த மதிநலத்தை வளர்த்துக் கொண்டு போந்தீரே’ என்றான்‌. “காதல் கடல்‌ புரைய விளைவித்த காரமர்‌ மேனி என்று அதுவும்‌ தேவரீரே யன்றோ’ என்றான் – இப்படியிவர்‌ முடியத்‌ துடர்ந்தவாறே பெருங்கடல்‌ மண்டினாரைப் போலே. போக்கற்றான் – ‘இதுக்கு ஈஸ்வரன்‌ சொன்ந உத்தரமென் என்று ஜீயர்‌ பட்டரைக் கேட்க “இவர்‌ தலையிலே ஒரு பழியை யேறிட்டு நெடுநாள் இழந்த நாம்‌ சொல்வதன்‌” என்று லஜ்ஜாவிஷ்டனாய்க் காலாலே தரையைக் கீறி நிற்கும் அத்தனை போக்கி வேறு உத்தரம் உண்டோ -என்று அருளிச் செய்தார் -அதாவது- ‘முன்பு ருசி யில்லாமையாலே’ என்ன மாட்டான் – “இப்போது ஸாதநாநுஷ்டாநம்‌ பண்ணுகையாலே’ என்ன மாட்டான் – ஆனால்‌ பின்னை ஈஸ்வரனுக்கு வைஷம்ய நைர்‌க்ருண்யாதிகள் வருதல்‌, ஸர்வ முக்தி ப்‌ரஸங்கம்‌ வருதல் செய்யாதோ வென்னில்‌ அது செய்யாது- அடியிலே அத்‌வேஷமும் இச்சையும்‌ பிறக்கைக்குத்‌ தான்‌ கிருஷி பண்ணி -அது-பக்வமாமளவும்‌ பார்த்திருக்கையாலே அவன் கேட்டதுக்கு ஒரு மறு மாற்றம்‌ சொல்லக் காணாமையாலே ‘அறிந்தோம்‌. இதுக்கு ஹேது – இ௩்ஙனே யாக வேணும்‌’ எண்று பார்த்தார்‌. ‘தன்னுடைய ஸ்பர்ஸம்‌ ப்ரதி கூலமாகை தவிர்ந்து விலக்காத ஸமயம்‌ பார்த்திருந்தானாதல்‌ தன்னை யொழிந்த வற்றில்‌ ஸாதந புத்‌தி தவிருமளவும்‌ பார்த்திருந்தானாதவாக வடுக்குமென்று பார்த்தார்‌-ஆனாலிது தன்னை அவன் உத்தரமாக அருளிச் செய்யா தொழிவான் என்னென்னில்‌, ‘சைதந்ய ப்ரயுக்தமாய்‌ வருகிற அத்‌வேஷத்தை ஸாதநமென்ன மாட்டானே-உபாய பாவம்‌ தன் தலையிலே யாய்த்தே, நெடு நாள்‌ இவர் தலையிலே பழி யிட்டிழந்திருந்த நாம்‌ எத்தைச்‌ சொல்லுவது! என்று பேசாதே இருந்தான் – ‘*ஹ்ரீரேஷாஹி மமாதுலா * என்று பிற்பாட்டுக்கு வஜ்ஜித்து நிற்குமவனிறே .-இவர்தாமெடுத்து வைத்து வார்த்தை சொல்லும்‌படியாய்த்து அவன் நிலை சைதந்ய ப்ரயுக்தமாண ருசி தான் ஸ்வரூபாதிரேகியன்றிறே’ என்றும்‌, சார்வே தவ நெறிக்கு – ஒன்பதாம்‌. பாட்டிலே. “ஜந்மாந்தர ஸஹஸ்ரேஷு” என்கிறபடியே அநேக கால ஸாத்‌யமான பக்தியாலே லபிக்கப்படுமவனை கேவலம்‌ அவன் ப்ரஸாதத்தாலே காணப் பெற்றேன் – என்கிறார்‌. “கண்டேன்‌ கமல மலர்ப்பாதம்‌ காண்டலுமே விண்டே வொழிந்த” என்றும்‌, “(அவன தருளால்‌) அவனுடைய ப்ரஸாதத்தாலே-ப்ராப்யமவனே என்கிற நிபந்தநத்தோபாதி ப்ராபகமுமவன் ப்ரஸாதமேயா யிருக்கிறபடி.(உறல்‌ பொருட்டு) ப்ராபிக்கையின்‌ பொருட்டு, ப்ராப்ய ப்ராபகுமவனே யாகில் நீர் இதில் அந்வயித்த அம்சம் ஏதென்ன -என் உணர்வினுள்ளே இருத்தினேன் -அவனை என்னுடைய ஞானத்துக்கு விஷயமாக்கினேன் -“வைத்தேன்‌. மதியால்‌” என்றது தானிறே. இச்சித்தேனென்கை – இச்சை தான்‌ ஸ்வாதீநுமோ வென்னில்‌, (அதுவும்‌ அவனதின்னருளே) அந்த இச்சை தான் பிறந்தது அவன் ப்ரஸாதத்தாலே ‘ என்றும்‌ ஈட்டில் -பிள்ளை யருளிச் செய்தருளினார்‌.ஆறு எனக்கு நின்‌ பாதமே சரணாகத்‌ தந்தொழிந்தாய்‌* என்றும்‌, “களைவாய்‌ துன்பம்‌ களையாதொழிவாய்‌ களை கண்‌ மற்றிலேன் ” என்றும்‌., நாகணை மிசை நம்பிரான்‌ சரணே சரண் நமக்கென்று நாடொறுமேக சிந்தையனாய்‌ என்றும்‌, அடிக்கீழமர்‌ந்து புகுந்தேனே என்றும்‌, கழல் களவையே சரணாகக்‌ கொண்ட குருகூர்ச்‌ சடகோபன் அருளிச் செய்தார்

தஸ்ய ச வஸீகரணாம்‌ தச்சரணாகதிரேவ* என்று ஸ்ரீ பாஷ்யகாரர்‌ அருளிச் செய்தது-அவ்விடத்தில்‌ ஸ்ருத ப்‌ரகாசிகையில்
“கதம்‌ ஸர்வ ஸ்மாத் பரஸ்ய அநீஸ்வரேண ஸம்ஸாரிணா । வஸீ கர்த்தும்‌ ஸக்யத்வம்‌ ஸக்யஸ்சே(ஞ்சே)த்‌ தத் ப்ரகாரோஃபி க்வசித்‌ ஸ்ரூயேத | ந ச ஸ்ரூயதே। *யச்சேத்‌ வாங்மநஸீ ப்ராஜ்ஞ இத்யாதவ் தஸ்ய வஸீகார்யத்வ ஸ்ரவணம்‌ தர்ஸ யிஷ்யதே | இத்யுக்த வஸீ கரண ப்ரகார ப்ரதிபாதக“தத்‌,யச்‌சேத்‌ ஸாந்த ஆத்மநி ” இதி ஸ்ருதி வ்யாக்யாநே *தத்‌,யச்சேத்‌ ஸாந்த ஆத்மநீதி ஸாந்தே ஸ்வத ஊர்மி ஷட்க ப்ரதிபடே மஹத ஆத்மநோ ஜீவஸ்ய நியமம்‌ நாம தத் சேஷதா ப்ரதிபத்தி। ஸைவ தஸ்யாபி வஸீகரணம்‌ பவதி’ என்று பட்டராலே அதிகாரி விஸேஷணமாண ஸேஷத்வஜ்ஞாந கார்யமாக வ்யாக்‌யாதமாயத்திறே. “ரசநாநுபபத்தே: இத்யாத்‌,யதிகரணத்திலே வ்யதிரேகோ அநவஸ்திதே. என்கிற ஸூத்ர பாஷ்யத்திலே ‘ஸ்வ ஸாஸநாதி வ்ருத்‌தி வ்யவஸாய நிவ்ருத்தி மாத்ரேணே அநாத்‌ யநந்த கல்போபசித துர்விஷஹா ரந்தாபராதா நங்கீகாரேண நிரதிஸய ஸுக- ஸம்வ்ருத்‌தயே ஸ்வயமேவ ப்ரயததே | யதோக்தம்‌-தேஷாம்‌ ஸதத யுக்தாநாம்‌ பஜதாம்‌ ப்ரீதி பூர்வகம்‌ | ததாமி புத்‌தி யோகம்‌ தம்‌ யேந மாம்‌ உபயாந்தி தே, “தேஷாமேவாநு கம்பார்த்தம்‌ அஹமஜ்ஞாநஜம்‌ தம। நாஸயாம் யாத்மபபாவ ஸ்த ஜ்ஞாநதீ பேந பாஸ்வதா * இதி’ என்று பகவதஜ்ஞாதிலங்கந புத்தி நிவ்ருத்தி ஸ்தாநத்திவே ப்ரீதி பூர்வக பஜநத்‌தையும்‌ பாஷ்யகாரர்‌ அருளிச் செய்தார்‌. ‘வாக்யாந்வயாத்‌’ இத்யத்ர ச ‘அதோத்ர பரமாத்மைவ அம்ருதத் வோபாயதயா ‘த்ரஷ்டவய.’ இத்யாதி நா உச்யதே’ என்று பகவானே உபாயமென்று பாஷ்யகாரர் முக்தகண்டமாக அருளிச்‌ செய்தார்‌. பர மதஸ் ஸேதூந்மாந இத்யாத்‌ யதிகரணத்தில்‌உபபத்தஸ் சன்கிற ஸூத்ர பாஷ்யத்திலே-‘ப்ராப்யஸ்ய ‘பரம புருஷஸ்ய ஸ்வ ப்ராப்தவ் ஸ்வஸ்யைவ உபாயத்வோப பத்தே

*நாயமாத்மா ப்ரவசநேந லப்‌ய: ந மேதயா ந பஹுநா ஸ்ருதேந யமேவைஷ வ்ருணுதே தேந லப்‌ய தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம்‌ ஸ்வாம்‌” இத்யநந்யோபாயத்வ ஸ்ரவணாத்‌’ என்றும்‌, ஸ்ருத ப்ரகாஸிகையிலே ‘அநந்யோபாயத்வ ஸ்ரவணாத்‌ – ப்ராப்யஸ்யைவ உபாயத்வ ஸ்ரவணாதி த்யர்த்த,. *விவ்ருணுதே தநூம்‌ ஸ்வாம்‌* இதி அநேந ப்ராபகத்வம்‌ ப்ராப்யத்வம்‌ ச கம்யதே’ என்றும்‌, “பவமத உபபத்தே,* என்கிற விடத்தில்‌ “உபாஸீநாநாம்‌ பரஸ்மா தேவாஸ்மாத்‌ புருஷாத் தத் ப்ராப்தி ரூபம்‌ அபவர்க்காக்யம்‌ பலமிதி ஸம்ப்ரதி ப்‌ரூதே’ என்றும்‌, ‘உபபத்தே ஸ்வ ஹி ஸர்வஜ்ஞ ஸர்வஸக்தி மஹோதார யாக தாந ஹோமாதிபிர் உபாஸநேந ச ஆராதித ஐஹிகாமுஷ்மிக போக ஜாதம்‌ ஸ்வ ஸ்வரூ பாவாப்தி ரூபமபவர்க்கம்‌ ச தாதுமீஷ்டே நஹ்ய சேதநம்‌ கர்ம க்ஷணத்‌வம்ஸி காலாந்தர பாவி பல ஸாதநம்‌ பவிதுமர்ஹதி’ என்றும்‌-ஸ்ருதத்வாச்ச* என்கிற ஸூத்ர பாஷ்யத்திலே ‘*ஸ. வா ஏஷ மஹாநஜ ஆத்மா அந்நாதோ வஸுதாந, ஷி ஹ்யேவ ஆநந்தயாதி * இதி பேகோபவர்க்க ரூபம்‌ பலம்‌ அயமேவ ததாதீதி ஹி ஸ்ரூயதே‘ என்றும்‌, ‘ஸித்‌த தர்மமே மோக்ஷ ஸாதநம்‌ ஸாத்‌ய தர்மம்‌ தத் ஸமாராதநம்‌’ என்றும்‌ ப்ரகாஸிப்பிக்கப் பட்டது. அருளாளப் பெருமாளெம்பெருமானார்‌ – ப்ரமேய ஸாரத்திலே – கருமத்தால்‌ ஞாநத்தால் காணும்‌ வகை யுண்டே* என்று தொடங்கி நாலு பாட்டாலே நமஸ் ஸப்‌தார்த்தமான அநந்ய ஸரணத்வத்தை அருளிச் செய்கிறார்‌. (நமஸ் ஸுப்த்தார்த்தம்‌ – அநந்ய ஸரணத்வமிறே). “நாலாம் பாட்டு – ஸேஷி யானவன் திருவடிகளை – அத் திருவடிகள் தானே தருகை யொழிய உபாயாந்தரங்களால் காண விரகுண்டோ? என்கிறார்‌’ என்றும்‌, “அஞ்சாம்‌ பாட்டு ஸித்‌தோபாயத்தின்‌ படியைக் கண்டாவ்‌ உபாயாந்தரங்களை ஸவாஸநமாக விட்டு அது தன்னிலும் தன்னுடைய ஸ்வீகாரத்தில்‌ உபாய புத்‌தி யற்‌றுத் தன்‌ வெறுமையை அநுஸந்தித்திருக்குமது – ஸர்வேஸ்வரனுடைய க்ருபாபலமென்கிறார்‌-என்றும்‌.’ஏழாம்‌ பாட்டு- “குறையேதுமில்லா தார்கு என்றுமிறை யேதுமில்வாத யாம்‌’ என்று அருளிச் செய்த ப்ரஸங்கத்திவே- இப்படி யிரண்டு தலைக்கும்‌ உள்ள இல்லாமையை அநுஸந்தித்து ஸேஷியான வனை ஐயித்திருப்‌பாரில்லை. அதொருவருக்கு ஸித்‌திக்குமதோ ? என்கிறார்‌” என்றும்‌ தத்‌ வ்யாக்‌யாநத்திலே ஜீயர்‌ அருளிச் செய்தருளினார் –

தன்னால் வரும்‌ நன்மை விலைப்பால்‌ போலே அவனால்‌ வரும்‌ நன்மை முலைப்பால் போலே- என்று ஸ்வகத ஸ்வீகாரத்தினுடைய ஹேயதையையும்‌, பரகத ஸ்வீகாரத்தினுடைய ஸ்லாக்யதையையும்‌ பரம ரஹஸ்யத்திலே. ராத்ரி பர்த்தாவோடு ஸம்ஸ்லேஷித்து விடிந்தவாறே கூலிதர வேணுமென்னுமா போலே பக்தியை உபாயமாக்கிக் கொள்‌ளுகை-உபேய விஷயத்தில்‌ எம்பெருமானாலேயே எம்பெருமானைப்‌. பெறுமித்தனை போக்கி தந்தம்‌ நன்மை கொண்டு பெற நினையார்‌ ஸ்வரூப ஜ்ஞநாமுடையார்‌’ என்றும்‌ திருக் குருகைப்‌ பிரான் பிள்ளான்‌ அருளிச் செய்தார்‌- பட்டர்‌ – ரஹஸ்ய த்ரய விவரணமான அஷ்டஸ்லோகியில்‌ கர்த்தும்‌ த்யக்துமபி ப்ரபத்துமநலம்‌* என்று ப்ரபத்தி பண்‌ணுகைக்கும்‌ யோக்யதை யில்லாமையை அருளிச்‌ செய்தார்‌ (எம்‌பெருமான் படியை அனுசந்தித்து ) கத்ய வியாக்யானத்திலே -அநந்தரம் கீழ் சரணம் புக்க அதுக்கு ஷாமணம்‌ பண்ணுகிறார்‌-ஷாமணம்‌ பண்ணுகிறது ஆருடைய ஹ்ருதயத்தாலே யென்னில்‌- ஸ்வ ஹ்ருதயத்‌தாலே-அதென்னென்னில்‌, அநாதி காலம்‌ அபராதத்தைப்‌ பண்ணிக் கூடு பூரித்தவன்‌ இன்றாக. ஆபி முக்யம்‌ பண்ணினானே யாகிலும்‌, *ரிபூணமபி வத்ஸல :, “யதி வா ராவண ஸ்வயம்‌” என்றிருக்குமீஸ்வரனுடைய படியைப்‌: பார்த்தால்‌ கைக் கொள்ளுகைக்கு ஒரு குறையுமில்லை-பதி வ்ரதையானவள் நெடுநாள்‌ வ்யபிசரித்து பின்பு பர்த்தா. வானவன் பழியா(ள )னென்கிற விதுவே ஆலம்பநமாக வந்தென்ணை ரக்ஷிக்க வேணுமென்று முன்னே நின்றால்‌ வருகை தானே அபராதம்‌- அதுக்கு மேலே என்னை ரக்ஷிக்க வேணுமென்கை யாவது அபராதத்துக்கு மேல் எல்லையாய் ஸ்த்ரீத்வ ஹாதியுமாயிருக்குமிறே-அப்படியே இவனும்‌ அநந்யார்ஹ ஸேஷ பூதனுமாயிருந்து வைத்து கனக்க அபராதத்தைப் பண்ணிப் போந்து இன்று வந்து ஸரணம்‌ புகுருகையாவது அபராததுக்கு மேல் எல்லையாய் சேஷத்வ ஹாநியுமா யிருக்கக் கடவதிறே- ஆனால்‌ ஸரணம் புகுருகை அபராதமானால்‌ அது பண்ணுவான்‌ என் என்னில்‌,, *த்வமேவ ஸரணம்‌ கத:” என்று புறம்பு புகலில்லாமையாலே- ஸரணம் புகவும்‌ வேணும்‌- பூர்வ வ்ருத்தத்தைப் பாரா பண்ணின இதுவும்‌ அபராதமென்று பய ஹேதுவாகையாலே க்ஷாமணம்‌ பண்ணவும்‌ வேணும்‌ என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தார்‌. “உபாயத்தில்‌ அஹங்காரமாவது, – ஸ்வகத ஸ்வீகாரத்தில்‌ உபாய புத்தியை த்யஜித்து பரகத ஸ்வீகாரத்துக்கு விஷய பூதனாகை என்று இவர் தாமே (வார்த்தா மாலையில்‌) அருளிச் செய்தார்‌.
“ஸ்வாநுவ்ருத்தி ப்ரஸந்தாசார்யனாலே மோக்ஷமோ? கிருபா மாத்ர ப்ரஸந்நாசார்யனாலே மோக்ஷமோ?’ என்றிங்ஙனே ப்ரஸங்கமாக, முதலியாண்டான்‌ – ‘ஸ்வாநுவ்ருத்தி ப்ரஸந்நாசாரயனாலே ‘ என்ன ஆழ்வான்‌ ‘க்ருபா மாத்ர ப்ரஸந்நாசார்யனாலே ‘ என்ன, ஆண்டான்‌. – “குற்றமின்‌றிக் குணம்‌ பெருக்கிக்‌ குருக்களுக்கு அநுகூவராய்‌ என்று பெரியாழ்வார்‌ அருளிச் செய்கையாலே ஸ்வாநுவ்ருத்தி ப்ரஸந்நாசார்யனாலே யாக வேணும்‌-என்ன அவ்வளவிலே ஆழ்வான்‌ ‘அங்கனன்று, “பயனன்றாகிலும்‌ பாங்கல்ல ராகிலும்‌ செயல்‌ நன்றாகத்‌ திருத்திப் பணி கொள்வான்‌-குயில் நின்றார்‌ பொழில் சூழ்‌ குருகூர்‌ நம்பி? என்று ஸ்ரீமதுரகவி யாழ்வார்‌ அருளிச் செய்கையாலே அவருடைய அடிப் பாட்டிலே யிருக்கிற நமக்கெல்லாருக்கும்‌ ஸ்வாநுவ்ருத்தி கூடாமையாலே கிருபா மாத்ரத்திலே மோக்ஷம்‌ என்று அருளிச் செய்தார்‌- அன்று ஆண்டானும்‌. ‘அப்படியாக வேணும்‌’ என்று போர ப்ரீதராய்‌ அருளினார்‌ என்று வார்த்தா மாலாதிகளிலே. ப்ரஸித்‌தமிறே-

இயமிஹ மதிரஸ் மதுஜ் ஜீவிநீ வரத தவ கலு ப்ரஸாதா த்ருதே ஸரணமிதி வசோபி மே நோதியாத்‌ என்றும்‌, “ஏவம்‌ ஸதா ஸகல ஜந்மஸு ஸாபராதம்‌ ஷாம் யஸ்யஹோ ததபி ஸந்தி விராம மாத்ராத்‌” என்றும்‌ ஆழ்வான்‌ அருளிச்‌ செய்தாரிறே-சரம ஸ்லோக வ்யாக்‌யாந ப்ரவேஸத்திலே “இதில் வர்த்தம்‌ கேட்கைக்காக விறே எம்பெருமானார்‌ பதினெட்டு பர்யாயம்‌ திருக்கோட்டியூர் நம்பி பக்கலில்‌ எழுந்தருளிற்று-நம்பி தாமும்‌ இதிலர்த்தத்தினுடைய கெளரவத்தையும்‌ இதுக்கு அதிகாரிகளில்லாமையையும்‌ பார்த்திறே இவருடைய ஆஸ்திக்யாதர பரீக்ஷார்த்தமாகவும்‌ பலகால் நடந்து துவளப் பண்ணி சூளரவு கொண்டு மாஸோபவாஸம்‌ கொண்டு அருமைப் படுத்தி யருளிச் செய்தருளிற்று-நிஷ்க்ருஷ்ட தத்வ நிஷ்டனாய்‌ பரமாத்மநி ரக்தனாய்‌ அபரமாத்மதி வைராக்‌யமுடையவனாய்‌, ப்ரமாண பரதந்த்ரனாய்‌ பகவத்‌ வைபவம்‌ ஸ்ருதமானால்‌.அது. உபபத்ந மென்னும் படியான விஸ்ரம்ப பாஹுள்யமுடையனாய்‌ ஆஸ்திகாக்ரேஸரனா யிருப்பானொருவ னுண்டாகில்‌, அவன் இந்த ஸ்லோகார்த்த ஸ்ரவணாநுஷ்டாநத்துக்கு அதிகாரி யாகையாலே அதிகாரி துர்லபத்வத்தாலும்‌, அர்த்த கெளரவத்தாலு மித்தை வெளியிடாதே மறைத்துக் கொண்டு. போந்தார்கள்‌ எம்பெருமானார்க்கு முன்புள்ளார்‌. ஸம்ஸாரிகள்‌ துர்கதி கண்டு பொறுக்க மாட்டாதபடி க்ருபை புரண்டிருக்கையாலே அர்த்தத்தின்‌ சீர்மை யாராதே அநர்த்தத்தையே பார்த்து வெளியிட்டருளினார்‌ எம்பெருமானார்‌-என்று பெரிய ஜீயர்‌ அருளிச் செய்தார்‌.

திருவிருத்தத்திலே – ஈனச்சொல்‌ என்கிற பாட்டிண்‌ வ்யாக்‌யாநத்திலே “(ஞானப்பிரானை யல்லாலில்லை) அவனை யொழிந்த தானும்‌ பரிக்ரஹிக்கிற உபாயங்களும்‌. அடையக் கழுத்துக் கட்டி யென்கை. ஒருவிசை திருக்கோட்டியூர்‌ நம்பி திருநாளுக்கெழுந்தருளின ஸமயத்திலே இவ்வர்த்தத்தை அருளிச் செய்வதாக ஒரு ஏகாந்த ஸ்தலத்திலே எழுந்தருளி எம்பெருமானாரையும் கூடக்‌ கொண்டு புக்காராய்‌, திருப்பணி செய்வானொருவன் உறங்கிக்‌ குறட்டை விடா நிற்க, அவனைக் கண்டு ‘அநர்த்தப் பட்டோம்‌” எண்று அவ்விசை தவிர்ந்து மற்ற விசை அருளிச் செய்யக் கேட்டருளி எம்பெருமானார்‌ ஆழ்வான் அகத்திலே அமுது செய்து இருக்கிற வளவிலே உச்சி வெய்யிவிலே தண்டையும்‌ கொண்டு வந்து புகுந்து நம்பி. – ‘இவ்வரத்தத்தை ஒருவர்க்கும்‌ சொல்லாதே கொள்‌’ என்று, அருளிச் செய்தார்‌. உணக்குச் சொல்வாதிருக்க மாட்டுகிறிலேன் இறே என்று ஸஹகாரி நைரபேஷ்யத்தை அருளிச்‌ செய்தாரிறே- இனி பல போக்தாவான தன்‌ ஸ்வரூபமும்‌ தான்‌ பரிக்‌ரஹித்த உபாயமுமே யிறே ஸஹகாரி யாயுள்ளது. அத்தைத் தவிர்க்கிறது-( நான் கண்ட) கைப்பறியாகப்‌ பறித்த புண்ய பாபங்கள்‌ கலந்திருக்கையாலே புண்யம்‌. தலை யெடுத்த போதாக வெளிச் செறித்து அல்லாத போது கலங்கிக்‌ கிடக்கிற ஜ்ஞாநத்தைக் கொண்டு பிறரை ப்‌ரமிப்‌பக்கைக்காகச்‌ சொல்லுகிற விப்ரலம்பக வாக்யமன்றியே பகவத் ப்ரஸாத லப்‌தமான ஞாநத்தை யுடையேனாய்‌, அவ்வெளிச்செறிப்புக்கே சொன்ன அர்த்தம்‌ இது தான்‌ பிறர்க்குச் சொல்ல வேணுமென்று சொல்லிற்றுமல்ல- ஹர்ஷத்துக்குப் போக்கு விட்டுச் சொன்ன வார்த்தை என்கிறார்‌” என்று நம்பிள்ளை அருளிச் செய்தார்‌.
முமுஷுப்படியில்‌ த்‌வய ப்ரகரணத்திலே, “உபாயமவனாகையாலும்‌ இவை நேரே உபாயமல்லாமையாலும்‌’என்கிற ஸுூத்ர வ்யாக்‌யாநத்திலே, “அதாவது – பல ஸித்‌தி்க்கு உபாயம்‌ பற்றப்படுகிற ஈஸ்வரனாகையாலும்‌ கரண த்ரயத்தாலுமுண்டான பற்று தல்களாண இவை ஆபாத ப்ரதீதியில்‌ உபாயம் போல் தோற்றிக் கழியுண்டு போமதொழிய ஸாக்ஷாதுபாயம்‌ அல்லாமையாலும்‌’ என்றும்‌ சரம ஸ்லோக வ்யாக்‌யாநத்திலே – வரணத்திலே ஸாதநதா ராஹித்யத்தையும்‌, மூலத்திலே – (ஏகம்‌) இந்த ‘ஏக ஸப்‌தம்‌ ஸ்தாந ப்ரமாணத்தாலே அவதாரணார்த்தத்தைக்‌ காட்டுகிறது’ என்று தொடங்கி – “உபாய பாவத்தில்‌ அந்தர்பவியாது’ என்னுமளவும்‌ மற்றும்‌ இதின் வ்யாக்யாநத்திலே “உய்யக் கொண்டார்‌ என்று தொடங்கி மேலெல்லாம்‌, மூல வ்யாக்‌யாநங்களிரண்டிலும்‌ ஸ்ரீவசந பூஷண தத்‌ வ்யாக்‌யாநங்களிலே, “இது தன்னைப்‌ பார்த்தால்‌! என்று தொடங்கி, – “ப்ராப்தாவும்‌ ப்ராபகனும்‌ ப்ராப்திக்கு. உகப்பானுமவனே” என்னுமளவாக – உபாயாந்தர ஸ்வீகாரங்களினுடைய ஸ்வரூப விரோதித்வ அநு பாயத்வாதிகளையும்‌ “ப்ரதி கூலராகிறார்‌’ என்று தொடங்கி “இங்கு ஸ்வ ப்ரயோஜமென்கிறது ஆஸ்ரயண தோஷ ஜந்யமானத்தை என்னுமளவாக உபாயாந்தர நிஷ்டரும்‌ வரண ரூப ப்ரபத்தியை உபாயம் என்றால் வரும்‌ அவத்‌யத்தையும்‌ அதின்‌ அங்க நைரபேக்ஷயத்தையும்‌ ஆநு கூல்ய ஸங்கல்பாதி களினுடைய ஸம்பாவித ஸ்வபாவத்வத்தையும்‌, ஸஹ வாஸ நிவ்ருத்திக்கு அவிஷயமாகச்‌ சொன்ன ப்ரதிகூல அந்தர் கதமென்னுமிடத்தையும்‌, “இழவுக்கடி கர்மம்‌, பேற்றுக்கடி க்ருபை” என்றும்‌. ‘த்ரிபாத்‌வியூதியிலே ‘ என்று தொடங்கி, ‘நிவர்த்ய ஜ்ஞாநம்‌ பய ஹேது- நிவர்த்தக ஜஞாநம்‌ அபயஹேது’ என்னுமளவாக, மூல வ்யாக்‌யாநங்களிரண்டிலும்‌. நிர்ஹேதுக விஷயீ காரத்தையும்‌ தனி சரமத்திலே ‘(ஏகம்‌) நஞ்சீயர் இதுக்கு அவதாரணத்தைச்‌ சொல்லுகிறதென்று அருளிச் செய்வர்‌-எங்ஙனே யென்னில்‌ த்வமேவோபாய பூதோ மே பவ என்றும்‌, “தமேவ ஸரணம்‌ கச்ச,” என்றும்‌, *மாமேவ யே ப்ரபத்‌யந்தே” என்றும்‌, *தமேவ சாத்‌யம்‌ புருஷம்‌ ப்ரபத்‌யே * என்றும்‌- ஸ்தாந ப்ரமாண ஸித்‌தமாகையாலே– ஆனால்‌ இவ்வவதாரணத்துக்கு வ்யாவர்த்யமாவது ஏதென்றால்‌ கீழே உபாயாந்தரங்களை த்யாஜ்யங்களாகச்‌ சொல்லுகையாலே அவற்றை வ்யாவர்த்திக்கிற தென்ன வொண்ணாது- “மாம்‌” என்று அஸாதாரணாகாரத்தைக்‌ கீழே சொல்லுகையாலே தேவதாந்தரம்‌ வ்யாவர்த்ய மென்ன வொண்ணாது-பின்னையேதாவதென்றால்‌- இனி இங்குள்ளது ஸ்வீகார்யமும்‌, ஸ்வீகாரமும்‌, ஸ்வீகர்த்தாவுமாக வேணுமிறே. அதில்‌ ஸ்வீகார்யன் உப௱யமாய்‌ நின்றால்‌, இனி யுள்ளது ஸ்வீகாரமும்‌ ஸ்வீகர்த்தாவுமிறே. அந்த ஸ்விகர்த்தாவோபாதி ஸ்வீகாரமும்‌ உபாயத்தில் புகாதென்கிறது. ஆவதென் *உபாயோபேயத்வே ததி ஹி தவ தத்வம்‌ நது குணெள” என்கிறபடியே, உபாயத்வம்‌. நித்யமே யாகிலும்‌ இவனுடைய ஸ்விகாராநந்தரமாக வன்றோ உபாயமாகிறது. *யதநந்தரம்‌ யத்‌ பவதி, தத்தஸ்ய காரணம்‌” என்கிறபடியே இந்த ஸ்வீகாராநந்தரமாக வல்வது. ஈஸ்வரனுடைய உபாய பாவம்‌ ஸித்‌தியாமையாலே இது உபாயமாதல்‌ ஸஹகாரி(யா)யாதவாக வேண்டாவோவென்னில்‌, “மாமேகம்‌ ஸரணம்‌ வ்ரஜ* என்று, உபாய ஸ்வீகாரமாகச்‌ சொல்லுகையாலே ஸாஷாதுபாயத்வமில்லை -இனி ஸஹகரிக்கையாவது – உத் பத்தியிலே ஸஹகரித்தல்‌ பல ப்ரதாநத்திலே ஸஹகரித்தலாய்த்து-பக்த்யுபாயம்‌ கர்ம ஜ்ஞாந ஸாத்‌யமாகையாலே உத்பத்தியிலே சேதந ஸாபேக்ஷம்‌, அசேதந மாகையாலே பல ப்ரதாநத்தில் ஈஸ்வர ஸாபேக்ஷம்‌ இவ்வுபாயம்‌ ஸித்‌த வஸ்துவுமாய்‌, ந்ருபாதிக ஸர்‌வ ஸுஹ்ருத்துமா யிருக்கையாலே உத்பத்தி நிரபேக்ஷம்‌- ஸர்வ ஸக்த்வாதி குண விஸிஷ்டமாகையாலே பல ப்ரதாநத்தில்‌ நிரபேஷம்‌-ஆனால்‌ ‘ய(த்ய)த்ஸாங்கம்‌ த(த்த)த் ஸாதநம்‌’ என்கிறபடியே உபாயம்‌ ஸங்கமாயன்றோ இருக்க வேணும்‌. இவ்வுபாயம்‌ ஸித்‌தமா யிருக்கிறபடி யென்‌ என்னில்‌ உபாயமாகிவ்‌ ஸாங்கமாயிருக்கு வேணுமென்கிற நிர்பந்தமில்லை. அவை ஸாத்‌யமுமாய்‌ அத்ய ஸாபேஷமுமா யிருக்கையாலே ஸாங்கமாக வேண்டிற்றித்தனை-இவ் வுபாயம்‌ ஸித்‌தமுமாய்‌ அந்ய நிரபேக்ஷமுமா யிருக்கையாலே நிரங்கமுமாயிருக்கும்‌-ஆனால்‌ உபாயாந்தரங்களுக்கும்‌ உபாயத்வ வ்யபதேஸமும்‌ பண்ணுகிறது – பல ப்ரதங்களான தேவதைகளுக்கு ப்ரஸாதகங்களான முகத்தாலே யன்றோ? அவ்வோபாதி இவ் வுபாயமும்‌ ஈஸ்வர ப்ரஸாதகமானாலோ வென்னில்‌ தேவதைகளில்‌ சேதநருக்கு பூர்வமே பலத்தைக் கொடுப்பதாக நினைவின்றிக்கே யிருக்கச்‌ செய்தே இச் சேதநருடைய க்ரியை யாய்த்து அவர்கள்‌ ப்ரஸாதத்தை ஜநிப்பிக்கிறது- ஈஸ்வர விஷயத்தில்‌ வந்தால் , ஸர்வாத்மாக்களுக்கும்‌ ஸ்வரூபாவிர்பாவத்தை யுண்டாக்குவதாக. பூர்வமேவ சிந்தித்து அவஸர ப்ரதீக்ஷனாய்ப்‌ போருகையாலே அவனுக்கு ப்ரஸாத ஐநகமாகச்‌ செய்ய வேண்டுவதொன்றில்லை- உண்டென்றிருக்கையாகிறது தன்‌ ஸ்வரூப பாரதந்தரயத்தையுமழித்து அவனுடைய ரக்ஷகத்வத்தையும்‌ ஸோபாதிகமாக்குகிறான் இத்தனை ” என்று பிள்ளை லோகாசார்யர்‌ அருளிச்‌ செய்தருளினார்‌.

இதி ஸித்தாந்த.

பூர்வபக்ஷாந்தரம்‌.

ரஹஸ்ய த்ரய ஸாரத்திலே இருபத்தைந்தாமதிகாரத்தில்‌. “இப்படி த்‌வயத்தில்‌ த்‌விதீயாந்த பதங்களாலே ப்ரகாஸிதமான ஸித்‌தோபாய விஷயமாகவும்‌, ஆக்யாத பதத்தாலே சொல்லப் பட்ட ஸாத்‌யோபாய விஷயமாகவும்‌ பிறக்கும்‌ வ்யாகுலங்களை ஸமிப்பி(க்க வேணும்‌)க்கிறோம்‌’ என்றும்‌ “ந சூத்‌ரா பகவத்‌ ப,க்தாஃ விப்ரா பாகவதா; ஸ்ம்ருதாப ஸர்வ வர்ணேஷு தே ஸூத்‌ரா: யேஹ்ய பக்தா ஜநார்தநே என்று பகவத்‌ பக்தியாகிற குண விஸேஷ ஸத ஸத்‌ பாவங்களாலே அபக்ருஷ்ட ஜாதீயரை உத்க்ருஷ்ட ஜாதி வாசக ஸப்‌தத்தாலே சொல்லியுமிருந்தது. இதடியாக பகவத பக்தரெல்லாரும்‌ ஏக ஜாதீயர் அன்றோ வென்று சில ம்ருது ப்ரஜ்ஞர்‌ நினைப்பார்கள்‌-‘இங்ஙனே யாகில்‌ பாகவத ப்‌ராஹ்மணன்‌ இன்ன படியே வர்த்திப்பான் பாகவத ஸூத்ரன்‌ இன்னபடியே வர்த்திப்பான் என்று ஆசார நியமங்கள்‌ சொல்லும்‌ ஸர்வ ஸாஸ்த்ரங்களும்‌ விரோதிக்கும்‌. கேவல ப்‌ராஹ்மணனுக்கும்‌ கேவல ஸூத்‌ரனுக்குமுள்ள எல்லை பாகவத ப்‌ராஹ்மணனுக்கும்‌ பாகவத ஸூத்‌ரனுக்கும்‌ கொள்ள வேணுமென்றும்‌, இவரை ஸமர் என்கிற ஸாஸ்த்ரங்களும்‌ பரம புருஷார்த்த ஸாம்யாதிகளாலே. என்றும்‌ கிடாம்பி அப்புள்ளார்‌ அருளிச் செய்தார்‌ என்றும்‌, “ஜாதி பேதியாது. திருஸுரபியானாலும்‌ கோத்வம்‌ கழியாதிறே’ என்றும்‌, ‘ஸ்ரீ விதுரரும்‌ ஸ்வ ஜாத்யநுரூபமாக விவாஹாதிகளைப்‌ பண்ணினார்‌-“புக்த வத்ஸு த்‌விஜாக்ர்‌யேஷு நிஷண்ண பரமாஸநே | விதுராந்நாநி புபுஜே ஸூசீநி குணவந்தி ச ‘ என்றித்தைக் கேட்டு துர்யோதநன் “பீஷ்மாத்‌ரோணா வதி க்ரம்ய மாம் சைவ மதுஸூதந கிமர்த்தம்‌ புண்டரீகாக்ஷ புக்தம்‌ வ்ருஷவ போஜநம்‌” என்று கேட்க, “த்‌விஷதந்நம்‌ நைவ போஜூயேத் பாண்டவான் த்விஷஸே ராஜந் மம ப்ராணா ஹி பண்டவா – என்று, உத்தரமருளிச் செய்கையாலே ஸ்ரீ விதுரருக்கு துர்யோதனன் சொன்ன ஜாதி விஸேஷத்தை பகவான்‌ இசைந்தானாயிறறு- ஆனால் ப்‌ராஹ்மணர்க்கும்‌ க்ஷத்திரியர்க்கும்‌ ஸூத்‌ரனுடைய பக்வாந்நத்தை புஜிக்கை நிஷித்‌தமன்றோ வென்னில்‌, “ஆர்யாதிஷ்டிதா வா ஸூத்‌ரா. (அந்ந ) ஸம்ஸ்கர்த்தார ஸ்யுட்-என்று ஆபஸ்தம்பாதிகள் சொவ்லுகிறபடியே யுகாந்தரங்களிவ்‌ ஆர்‌ய பரதந்தரரான குணவச்‌-ஸூத்‌ரர்கள்‌ ஆர்யர்க்கு அந்ந ஸம்ஸ்காரம்‌ பண்ண அநு ஜ்ஞாதராகையாலே அவ்விடத்தில்‌ நிஷேதமில்வை. இது ஸூசிஸ்து ப்ரயதோ பூத்வா விதுரோந்நமுபாஹரத்‌-என்று ஸ்ரீ விதுரருடைய குண விஸேஷங்கள்‌ சொல்லுகையாலே ஸூசிதம்‌. *ப்ரஹ்ம வித்தான இவர்‌ யோக ப்ரபாவத்தாலே தேஹ ந்யாஸம்‌ பண்ணின பின்பு ப்ராப்தனான தர்ம புத்ரன்‌ செய்த ஸம்ஸ்கார விஸேஷம்‌ தூஷ்ணீம்‌ அனுஷ்டிதமாதல்‌ வ்யக்தி விஸேஷ நியதமாதலாமித்தன- அது கொண்டு வ்யக்தயந்தரங்களில்‌ ந்யாய ஸஞ்சாரம் பண்ண வொண்ணாது என்றும்‌, “மோஹந ஸாஸ்த்ரங்களிற் சொன்ன ஜாத் யுத்‌தாராதிகளை ப்ராமாணிகர்‌ நினைக்கலாகாது-சருவ்யத்யாஸாதிகளான சில விஸேஷ நிதானங்களாவே வருகிற விஸ்வாமித்ராதிகளுடைய நிலை வேறு சிலர்க்குக் கூடுமென்கை வசந விருத்‌தம்‌- விதுராதிகளிலும்‌ உத்கருஷ்ட ப்ரபாவரான ஆழ்வார்களுடைய வ்ருத்தாந்த விஸேஷங்களை நம்மனுஷ்டாநத்துக்குத் த்ருஷ்டாந்தமாக்கலாகாது- அவர்கள்‌ வ்ருத்தாந்தங்களையும்‌ ஆராய்ந்தால்‌, ஸ்வ ஜாதி நியமத்தைக்‌ கடந்தமை யில்லை- என்றும்‌, “இப்படி யானாலும் வித்‌யா மந்தராதி களுடைய க்ரஹணம்‌ ப்‌ராஹ்மணாதி விஷயத்திலேயாக வேணுமென்னுமிடம்‌ “ஸூத்‌ர யோநாவஹம்‌ ஜாதோ நாதோந்யத்‌ வக்து முத்ஸஹே! என்ற ஸ்ரீ விதுர வாக்யத்தாலே ஸித்‌தம்‌-துவாதார தர்ம வ்யாதாதிகளும்‌ ஸந்தேஹம்‌ கேட்கவந்த ப்‌ராஹ்மணரைத்‌ தாங்கள்‌ ஸம்பாவித்து தீர்த்த யாத்ரையிலே வழி திகைத்தாரை வழியிலே சேர்த்த மாத்ரம்‌ அவர்களைத்‌ தெளிவித்து விட்டார்களா மத்தனை யல்லது – முக்யமான ஆசார்ய கர்மம் பண்ணினார்களன்று- இப் ப்ரகாரங்கள்‌ அவ்வோ இதிஹாஸங்களிலே கண்டு கொள்வது. *பக்திரஷ்டவிதா ஹ்யேஷா யஸ்மிந் ம்லேச்சேபி வர்த்ததே | தஸ்மை தேயம்‌ ததோ க்ராஹ்யம்‌ ஸ ச பூஜ்யோ யதாஹ்யஹம்‌* என்றதுவும்‌, கந்யா ப்ரதாந பரமன்று, ஜ்ஞாந ப்ரதாந பரமென்று வ்யாக்யாநம்‌ பண்ணினார்கள்‌. “பூஜ்ய என்கிற ஸப்‌தமும்‌ ஸாதாரணமாகையாலே பாகவதத்வம்‌ உண்டானால்‌ ஸர்வரும்‌ ஸாஸ்த்ரம்‌ சொன்ன மட்டுக்களிலே ஆதரணீயர்‌” என்றும்‌. “அதோ ஜாதேர் நிக்ருஷ்டாயா ஸர்வஸ்யா வா விநா ஸத | ஸாஜாத்யம்‌ விஷ்ணு பக்தாநாமிதி மந்தமிதம்‌: வச என்றும்‌, ‘ஸாரீர குண விஸேஷமடியாக வ்யவஸ்திதங்களான ஸரீர ஜாதி விஸேஷங்கள்‌ உத்பத்தி ஸித்‌தங்களாய்‌ மரணாந்தமாக ஸ்திரங்களாயிருக்கும்‌’ என்றும்‌ போனகம்‌. செய்த சேடம்‌ தருவரேல்‌ புனிதமன்றே” என்றதுவும் குரு விஷயமாம் அத்தனை – என்றும் -இதில் சேஷ ஸப்தம் அன்ன சேஷ கிம் க்ரியதாம் இஷ்டைஸ் ஸஹ புஜ்யதாம் இத்யாதிகளில்‌ ந்யாயத்தாலே பாண்டஸ்த விஷயமானால் விரோதமில்லை -என்றும்‌, இருபத்தொன்பதாமதிகாரத்திலே “மாத்ருபி பித்ருபி ஸ்சைவ பதிபிர் தேவரைஸ்ததா | பூஜ்யா பூஷயித வ்யாஸ்ச பஹு கல்யாண மீப்ஸுபி ப ஜாமயோ (ஜ்ஞாநி நாம்‌) யாநி கேஹாநி ஸபந்த்ய ப்ரதி பூஜிதா! தாநி கருத்யா ஹதாநீவ விநஸ்யந்தி ஸமந்தத; !! ஏவமாதிஷு பூஜோக்தி! யதவ் சித்யாத்‌ நியம்யதே | பக்த ம்லேச்‌சாதி பூஜோக்தி ஏவமேவ நியம்யதாம்‌’ என்றும்‌ சொல்லப்பட்டது-

இத்ய வாந்தர பூர்வ பக்ஷ க்‌ரந்த,

அத ஸித்தாந்த-

ஜாதி போகாதென்கிறது ஸாஸ்தர விருத்தமாகையாலே அயுக்‌தம்‌. எங்ஙனே யென்னில்‌, அபக்ருஷ்ட ஜாதீயரை பாகவத்‌ ஸத்‌ரரென்றும்‌ ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய ஜந்ம நிரூபணம்‌ பண்ணுகையும்‌ பகவத்‌ பக்தரெல்லாரும்‌ ஏக ஜாதீயரன்றோ வென்று நினைக்கிறவர்களை ம்ருது ப்ரஞ்ஞர் என்கையும்அவர்களுக்கும் கலக்கங்கள் உண்டு என்று சொல்லுகையும் அநகத்வ விநிக்‌ரஹமுமாய்‌ அவர்கள்‌ பரமாசார்யர்களாகையாலே ஆசார்யாபசாரமுமாம்‌-ஏக ஜாதீயரானாலும்‌ ஆசார நியமங்களைச் சொல்லும்‌ ஸாஸ்த்ர விரோத ப்ரஸங்கமுமில்லை- வர்ணாஸ்ரமாதிகளிலே அவதரித்த பாகவதரெல்‌லார்க்கும்‌ பண்டைக் குலத்தைத்‌ தவிர்ந்து தொண்டக் குலமொன்றே யாயிருந்தாலும்‌- *நீசனேன் நிறைவொன்றுமிலேன் என்கிறபடியே, ‘அடியேன்‌ பாணண்‌ அடியேண்‌ பாணன்‌’ என்று ஸ்ரீலோக ஸாரங்க, மஹா முநிகளுக்குத்‌ திருப்பாணாழ்வார்‌ விலங்கி யோடுகையாலும்‌ திருமழிசை யாழ்வார்‌ ‘க்ருஷ்ணாநாம்‌ வ்ரீஹீணாம்‌ நகநிர்பிந்நம்‌” என்கிற ஸ்ருதியை உச்சரியாமையாலும்‌, பண்டைக் குலம்‌ தவிரந்து தொண்டக் குலமானது ஸாஸ்த்ர த்‌ருஷ்டிகளூக்‌கொழிய மாம்ஸ சஷுஸ்ஸுக்களுக்குத் தோற்றாமையாலும்‌ “லோக ஸங்க்‌ரஹமேவாபி ஸம்பஸ்யந் கர்த்து மர்ஹஸி’ என்று தர்ம ஸம்ஸ்தாபநம்‌ பண்ணப் பிறந்தவன்‌ தான் லோக ஸங்க்ரஹார்த்தமாக விதிக்கையாலும்‌ “அவிப்வவாய தர்மாணாம்‌ பாவநாய குலஸ்ய ச இத்யாதி-அநபேஷா5பி தாம்‌ ப்ரதி । உபாயத்வ க்‌ரஹம்‌ தத்ர வர்ஜயேந்மநஸா ஸாதீ ப்ரியாய மம விஷ்ணோஸ் ச தேவதேவஸ்ய ஸார்ங்கிண | மநீஷீ வைதி காசாரம்‌ மநஸாபி ந லங்கயேத்‌! ஏவம்‌ விலங்கயந்‌ மர்த்யோ மர்யாதாம்‌ வேத நிர்மிதாம்‌ ப்ரியோபி ந ப்ரியோ மே அசவ் மதாஜ்ஞாவ் யதிவர்த்தநாத்‌- என்றும்‌ பிராட்டி விதித்தருளுகையாலும்‌- ஸ்ரீவசந பூஷண வ்யாக்யாநத்திலே – ‘வர்ணாஸ்ரமாசாரத்தை அநிஷ்ட கோடியாகச்‌ சொல்லப் பார்க்கில் ஸர்வேஸ்வரனும்‌ பிராட்டியும்‌ அருளிச் செய்த வசநங்களோடும்‌ பூர்வாசார்ய வசநாநுஷ்டாநங்களோடும்‌ விரோதிக்குமிறே. என்று பெரிய ஜீயர்‌ அருளிச் செய்கையாலும்‌, ஜாதி போமென்கிறத்‌தில் ஸாஸ்த்ர விரோத ப்ரஸங்கமில்லை யிறே- பண்டைக் குலத்தைத்‌ தவிர்ந்து தொண்டக் குலமாவது – ஆழ்வார்களும்‌ ஆசார்யர்‌களும்‌ அருளிச் செய்தார்கள்‌-கேவல ப்‌ராஹ்மணனுக்கும்‌- கேவல ஸூத்‌ரனுக்கும்‌ உள்ள எல்லை அவர்கள்‌ ஸ்ரீ வைஷ்ணவர்களான பின்பு கொள்ள வேணுமென்கை -காய அன்ன ஸ்தல ஸூத்தி பண்ணின வ்ருத்த ஆசார விருத்தம் -(இதன் அர்த்தம் ஸித்தாந்தத்தின் முடிவிலே ஸ்பஷ்டமாகும்‌] *மாத்ரு யோநி பரீக்ஷயாஸ் துல்யமாஹார் மநீஷிண | அரச்சாவதாரோபாதாநம்‌ வைஷ்ணவோத்பத்தி சிந்தநம்‌” ஜாதி போகாது என்கிற விடம்‌ விஸ்வா மித்ர வீத ஹவ்யாதி களிடத்திவே பாதிதம்‌ “பகுவத்‌ பக்தா ந ஸூத்‌ரா- என்னுமா போலே- ‘தேவஸுரபி நகவ் என்று ப்ரமாண மில்லாமையாலே அது, த்ருஷ்டாந்தமன்று-‘கிமர்த்த)ம்‌ புண்டரிகாக்ஷ। மாம்‌ சைவாதி க்ரம்ய வ்ருஷவ போஜநம்‌ புக்தம்‌’ என்று கேட்க- த்விஷதந்நம்‌ ந போக்தவ்யம்‌’ என்று உத்தரம்‌ அருளிச்‌ செய்கையாலே நீ என்‌ உயிர் நிலையிலே த்வேஷிக்கையாலே- யோ விஷ்ணும்‌ ஸததம்‌ த்வேஷ்டிதம்‌ வித்‌யா தந்த்ய ரேதஸம்‌” என்கிறபடியே”நீ அந்தயரேதஸ்ஸாகையாலே உன்னை பரித்யஜித்தோம்‌’ என்றும்‌ “பாகவதா விப்ரா: என்கிறபடியே ஸ்ரீவிதுரர்‌ விப்ரர்‌ ஆகையாலே அவருடைய அந்நத்தை புஜித்தோமென்றும்‌ தாத்பர்யம்‌ ஸுசிதம்‌- ஆகையால்‌ துரியோதநன்‌ சொன்ன ஜாதி விஸேஷத்தை “பகவத் பக்தா ந ஸூத்ர- என்று நிராகரித்தானாய்த்து
தர்ம புத்ரர்‌ விதுரர்க்குப்‌ பண்ணின ப்‌ரஹ்ம மேதத்தை தூஷ்ணிம் அனுஷ்டிதம் என்கை -லோக வைலக்ஷணோ நாம பவிஷ்யத்யஸ்‌ய பார்த்திவ யதி, தர்ம மவாப்தோ அஸெள’ என்கிற வசந விருத்தம்‌- வ்யக்தி விஸேஷ நியதமென்று கல்பிக்கைக்கு கல்பகமில்லை. மோஹந ஸாஸ்த்ராதிகளில்‌ சொன்னதன்றே. “ந ஸத்ரா பகவத்‌ பக்தா- இத்யாத்‌ யுக்த ஜாத் யுத்‌தாராதிகளில்‌ விஸ்வாமித்ரனுடைய விப்ரத்வம்‌ சருவ்யத்யாஸாதி நிதாநமாகில்‌ அந்த விப்ரத்வம்‌ தபஸ்‌ஸூக்கு பூர்வமே வர வேணும்‌-தபஸ்ஸாலே வந்தாலும்‌ ப்‌ராஹ்மணாநுக்‌ரஹ மூலகமிறே- வீதஹவ்‌ யாதிகளூக்கும்‌ பரத்‌வாஜாத்‌,யநுக்ரஹாதிகளாலே வந்ததென்று அநுஸாஸநாதி களிலே சொல்லா நின்றதிறே “யத்‌ய தாசரதி ஸ்ரேஷ்ட தத்ததே வேதரே ஐநா- என்கிறபடியே ஆழ்வார்களுடைய அநுஷ்டாநத்தை நம்‌ அநுஷ்டாநத்துக்கு தருஷ்டாந்தமாக்கலாம்‌-அவர்கள் அநுஷ்டாநத்தை ஆராய்ந்தால்‌ பண்டைக் குலத்தைத் தவிர்ந்தாலும் லோக
த்‌ருஷ்ட் யநு குணமாக அநுஷ்டாநம்‌ நைச்ய நியந்தநமாக உண்டாயிருக்கும்‌- அது கொண்டு அவர்களுக்கும்‌ பண்டைக் குலம்‌ தவிர வில்லை- என்று நினைக்கை மஹா பாகவதாபசாரம்‌- வித்‌யாமந்த்ராதி க்ரஹணமும்‌ ப்‌ராஹ்மணாதி நியம விஷயமென்கையும்‌ “ததோ க்ராஹ்யம்‌”, “ததுக்தி மாத்ரம்‌ மந்த்ராக்ரயம்‌”, கொடுமின்‌ கொள்மின்‌” இத்யாதிகளோடு விரோதிக்கும்‌… ஸூத்‌ரயோநவ் – இத்யாதி நைச்யாநுஸந்தாநமென்று கொள்ள வேணும்‌- ஆசார்யத்வமும்‌ தர்ம ஸந்தேஹமும்‌ ஸமிப்பிக்கை தானேயிறே- ஆகையால்‌ விஷ்ணு பக்தர்க்கெல்லாம்‌ பண்டைக் குலம்‌ போய்த் தொண்டக்‌ குலமென்று பெரியாழ்வார்‌ அருளாளப் பெருமாளெம்‌பெருமானார்‌ முதலானோர்‌ அருளிச் செய்தார்கள்‌. ‘அதுவும்‌ மந்த வசநமிறே என்கை அவர்கள்‌ பக்கல்‌ அபசாரமாம்‌-ஸரீர ஜாதி விஸேஷங்கள்‌ உத்பத்தி ஸித்‌தங்களாய்‌ மரணாந்தமாக ஸதிரமா யிருக்க வேணும்‌’ என்றதும்‌ ஆழ்வாராசார்‌களின்‌ திவ்ய ஸுக்திகளோடும்‌ ஸ்ருதி ஸ்ம்ருத்யாகளோடும்‌ விரோதிக்கும்‌-போனகம் செய்த சேடம் தருவரேல்‌ புனிதம்‌* என்றது குரு விஷயம் என்றாலும் நாராயண ஏக நிஷ்டர் எல்லாரும் குறு துல்யராகையாலே -ததுச்சிஷ்டம்‌ ஸூ பாவநம்‌- என்கிறபடியே பரகத ஸ்வீ கார நிஷ்டரெல்லாரும்‌ விஷயமென்றபடி -பாண்டஸ்த விஷயமானால்‌ விரோதமில்‌ல’ என்கிறது- ‘கலத்ததுண்டு” என்கிறத்தோடு விரோதிக்கும்‌- ‘பக்த ம்லேச்சாதி பூஜோக்தி ரேவமேவ நியம்யதே’ என்று சாத்தாத ஸ்ரீ வைஷ்ணவர்‌களை ஸ ச பூஜ்யத என்கிறதும்‌- மணவாட்டிப் பெண்களை “பூஜ்யா என்ற மாத்ரம்‌’ என்கையும்‌ *யதாஹ்யஹம்‌” என்கிறத்தோடு விரோதிக்கும்‌-
திருப் பல்லாண்டு வ்யாக்‌யாநத்திலே ‘(பண்டைக் குலத்தைத்‌, தவிர்ந்து) ப்ரயோஜநாந்தர பரர்‌ அநந்ய ப்ரயோஜநரான பின்பு முன்புத்தை நிலை பண்டைக் குலமாய்த் தோன்றின படி. லங்கையில் நின்று கால் வாங்கின போதே ராவணனை: “நிஸாசரன்‌’ என்றானே ஸ்ரீ விபீஷண ஆழ்வான்‌-‘ராக்ஷஸாநாம்‌. பலா பலம்‌‘ என்றாரிறே பெருமாள் தாமும்‌- க்ஷத்ரியனாயிருக்கச் செய்தே தபோ பலத்தால் ப்ராஹ்மண உத்தமனாய் அத்யயனம் பண்ணுவிக்கவும் யஜிப்பிக்குவும்‌ கடவனானானிறே. விஸ்வாமித்ரன்‌” என்று நம்பிள்ளை அருளிச்‌ செய்தார் –

ஸ்ருத ப்ரகாஸிகையிலே, தேவதாதிகரணத்திலே. “பஸ்சாத்‌. விஸ்வாமித்ர ப்ரப்‌ருதீநாம்‌ ச ப்‌ராஹ்மண்யாத்‌ய பாவா ப்ரஸங்காத் என்று விஸ்வாமித்ராதிகளுடைய ப்‌ராஹ்மண்யாதிகளை ஐந்ம ப்ரப்‌ருதி யன்றியே பின்பு வந்ததாக, அருளிச்‌ செய்தார்‌- ‘ஏதேந ஸர்வே வ்யாக்யாதா இத்யத்ர ‘தபோ வி்ஸேஷாத்‌ வரண விபோகோஸ்தி’ என்று அருளிச் செய்தார்‌-
ஜ்ஞாந ஸார வ்யாக்‌யாநத்திலே. “குடியும்‌. குலமுமெல்லாம்‌ கோகநகை கேளவனடியார்க்கு” (குடி) – க்ராமம்‌(குலம்‌) கோத்ரம்‌ (எல்லாம்‌) என்றது மற்றும்‌ நிரூபகமாய்ப் போருமவை பல வுண்டாகையாலே- அவை யாவன சரண: ஸூத்ராதிகள் (கோகநகை கேளவனடியார்க்கு அவனடியே யாகும்‌) அதாவது – முன்பு ஓளபாதிகமாக நிரூபகமாய்ப்‌ போந்த குடியும்‌ குலமுமெல்லாம்‌ போய்‌ ஸேஷியானவன் திருவடிகளில்‌ ஸம்பந்தமே நிரூபகமாய்‌ அத்தை விட்டு வ்யபதேஸிக்கும் படியாய் விடுமென்கை-இதுக்கு த்‌ருஷ்‌டாந்த மருளிச் செய்கிறார் மேல்‌ – (படியின் மேல் ) என்று தொடங்கி – பூமியின்‌ மேலுண்டான ஐல ஸம்ருத்‌தியடைய நதிகளின்‌ நாமமும்‌ வர்ணமுமெல்லாம்‌ ஸமுத்‌ரத்தை. ப்ரவேஸிக்கவே பின்பு காண வொண்ணாதபடி போமா போலே என்கை- “ஏகாந்தீ வ்யபதேஷ்டவ்யோ நைவ க்ராம குலாதிபி- நத்‌யாஸ்‌ தஸ்யைவ நாமாதி ப்ரவிஷ்டாயா யதார்ணவம்‌ | ஸர்வாத்மநா ப்ரபந்நஸ்ய விஷ்ணு மேகாந்திநஸ் ததா என்னக் கடவதிறே-
ஸ்ரீவசந பூஷணத்திலே – ‘க்ஷத்ரியனான விஸ்வாமித்ரன் ப்‌ரஹ்மர்ஷியானான் ” என்கிற ஸூத்ர வ்யாக்‌யாநத்திலே-“இப்படி இதிஹாஸாதிகளாலே பாகவத வைபவம்‌ சொல்லப்‌ பட்டதே யாகிலும்‌.*ந ஸூத்‌ரா பகவத்‌ பக்தா விப்ரா பாகவதா ஸ்ம்ருதா -ஸ விப்ரேந்த்ரோ முநி ஸ்ரீமான் ஸயதிஸ் ஸ ச பண்டித- என்று சொன்ன விப்ரத்வாதிகள்‌ அர்த்தவாதமாமித்தனை யல்லது அபக்ருஷ்ட ஜந்மாவானவன்‌ அந்த ஸரீரந் தன்னிலே உத்க்ருஷ்டனாகக் கூடுமோ வென்ன-கூடுமென்னுமிடத்துக்கு உதரஹரண தயா அருளிச் செய்கிறார்‌ – க்ஷ்த்ரியனான என்று தொடங்கி- அதாவது – க்ஷத்ரிய குலோத்‌பவனான விஸ்வாமித்ரன் – அஜ் ஜந்மத்திலே தான் பண்ணின தபோ விஸேஷமடியாக வஸிஷ்ட வாக்யத்தாலே க்ஷத்ரியத்வம்‌ பின்னாட்டதபடி ப்‌ரஹ்ம ருஷியாய் விட்டானிறே-ஆகையாலே அத்யந்தாபக்ருஷ்ட குலோத்‌பவரானாலும்‌ அந்த ஸரீரந்தன்னோடே அநவதிக ஸக்திக பகவத் ஸம்பந்த ரூப ஸம்ஸ்கார விஸேஷத்தாலே அத்யந்தோத்க்ருஷ்ட குல ஜாநுவர்த்தநீயராம்படி உத்க்ருஷ்‌ட தமராகக்‌ குறையில்லை என்கை- அல்ப ஸக்‌திக வஸிஷ்‌ட வாக்யம்‌ செய்த படி கண்டால் ஸர்வ முக்திக ஸம்பந்த விஸேஷம்‌ என் செய்யமாட்டாது’ என்றும்‌, ஆசார்ய ஹ்ருதய வ்யாக்‌யாநத்திலே – பாகவத வைபவத்தைப் பல உதாஹரணங்களாலும்‌ ப்ரகாசிப்பியா நின்று கொண்டு, ‘இவ்வாகாரங்கள றிந்தாருக்கிறே ஐந்மத்தில்‌ உத்கர்ஷாபகர்ஷம்‌ தெரிவது என்கிறார்‌ மேலொரு சூர்ணையாலே

85–ம்லேச்சனும்‌ பக்தனானால்‌ சதுர்வேதிகள்‌ அநுவர்த்திக்க அறிவு கொடுத்து, குல தைவத்தோ டொக்கப்‌ பூஜை கொண்டு பாவந தீர்த்த, ப்ரஸாதனாம்‌ என்கிற திருமுகப் படியும்‌, விஸ்வாமித்ர -விஷ்ணுசித்த -துளஸீ ப்‌ருத்யரோடே உள் கலந்து தொழு குலமானவன்‌ நிலையார்‌ பாடலாலே ப்‌ராஹ்மண வேள்விக் குறை முடித்தமையும்‌, கீழ் மகன்‌ தலை மகனுக்கு ஸம ஸஹாவாய்த்‌ தம்பிக்கு முன் பிறந்து வேலும்‌ வில்லுங் கொண்டு பின் பிறந்தாரைச் சோதித்துத்‌ தமையனுக்கு இளையோன்‌ ஸத்‌ பாவம்‌ சொல்லும்படி ஏக குலமானமையும்‌, தூது மொழிந்து நடந்து வந்தவர்களுடைய ஸம்யக் -ஸகுண-ஸஹ போஜநமும்‌, ஒரு பிறவியிலே இரு பிறவியானா ரிருவர்க்கு தர்ம ஸூநு ஸ்வாமிகள்‌ அக்‌ர பூஜை கொடுத்தமையும்‌, ஐவரில்‌ நால்வரில்‌ மூவரில்‌ முற்பட்டவர்கள்‌ ஸந்தேஹியாமல்‌ ஸஹஜரோடே புரோடாஸமமாகச்‌ செய்த புத்ர க்ருத்யமும்‌, புஷ்ப த்யாக போக மண்டபங்‌களில்‌ பணிப் பூவும்‌ ஆல வட்டமும்‌ வீணையுங் கையுமான அந்தரங்கரை முடி மன்னவனும்‌ வைதிகோத்தமரும்‌ மஹா முனியும்‌ அநுவர்த்தித்த க்ரமமும்‌, யாக,அநுயாக உத்தர விதிகளில்‌ காய அந்ந ஸ்தல ஸூத்‌தி பண்ணின வ்ருத்‌தாசாரமும்‌ அறிவார்க்கிறே ஜந்ம உத்கர்ஷ அபகர்‌ஷங்கள்‌ தெரிவது.

சதுர் வேதிகள் அனுவர்திக்க அறிவு கொடுத்து –
அதாவது –
ச விப்ரேந்தரோ முனி ஸ்ரீமான் ச யதிஸ் ச பண்டித தஸ்மை தேயம் ததோ க்ராஹ்யம் -என்றும் –
பழுது இலா ஒழுகலாற்று பல சதுப் பேதிமார்கள் இழி குலத்தவர்கள் ஏலும் எம் அடியார்கள் ஆகில்
தொழுமினீர் – கொடுமின் கொள்மின் -திருமாலை -42-என்றும் சொல்லுகிற படியே –
சர்வோத்க்ருஷ்டனாய் -உத்க்ருஷ்ட வர்ணரான சதுர்வேதிகள்
அபிஜன அத்யபிமான தூஷிதமான ஸ்வ ஸ்வரூப சுத்யர்தமாக -அனுவர்த்திக்கைக்கு விஷயமாய் –
அவர்களுக்கு ஞான அபேஷை உண்டாகில் ஞான பிரதானம் பண்ணி-

குல தெய்வத்தோடு ஒக்க பூஜை கொண்டு –
அதாவது –
ச ச பூஜ்யோ யதாஹ்யஹம் -என்றும்
நின்னோடு ஒக்க வழி பட அருளினாய் -போல் மதிள் திருவரங்கத்தானே -திருமாலை -42-என்கிற படியே-
மம நாதம் -மம குலதைவதம்–கத்யத்ரயம் –என்று குல தெய்வமாக சொல்லப் படுகிற சர்வேஸ்வரனோடு ஒக்க –
( யாவர்க்கும் தொழு குலமாம் இராமன் -கம்பர் – குகப்படலம் -68-)
கடல் மல்லைத் தல சயனம் ஆர் என்னும் நெஞ்சுடையார் -அவர்கள் எங்கள் குல தெய்வமே –பெரிய திருமொழி -2-6-4-என்கிற படியே
குல தெய்வமாய் அவர்களை பூஜை கொண்டு-

பாவன தீர்த்த பிரசாதனாம் என்கிற திரு முகப் படியும் –
அதாவது –
தத் பாதாம்பு அதுலம் தீர்த்தம் தத் உச்சிஷ்டம் ஸு பாவனம் -என்று
அவன் திருவடிகளை விளக்கின ஜலம் அனுபமமான தீர்த்தம் –
அவன் அமுது செய்த சேஷம் பரம பாவனம் என்கையாலே –
அஹங்கார மதிரா பாந மத்தரான அசுத்தரும் இந்த தீர்த்த பிரசாத அன்வயத்தாலே – சுத்த ஸ்வரூபராம் படி
பாவன தீர்த்த பிரசதனனாம் என்று அருளிச் செய்த பகவத் உக்தியான திரு முகமும் –
அதன் படி எடுப்பான ஆழ்வார் பாசுரமும் ..
(வானுளார் அறியலாகா வானவா என்பராகில் -தேனுலாம் துளப மாலைச் சென்னியாய் என்பராகில்
ஊனமாயினகள் செய்யும் ஊன காரகர்களேலும் போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதமன்றே –)

விஸ்வாமித்ர விஷ்ணுசித்த துளஸீ ப்ருத்யரோடே உள் கலந்து தொழு குலமானவன்
அதாவது –
அபர ராத்ரியிலே சென்று பாடி -நம்பியை திரு பள்ளி உணர்த்துகையாலே –
கௌசல்யா ஸுப்ரஜா ராமா பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நரசார் தூலே கர்த்தவ்யம் தைவமாஹ்நிவம் –பால -23-2—என்றும் ,
அரவணையாய் ஆயர் ஏறே அம்மம் உண்ணத் துயில் எழாயே –பெரியாழ்வார் -2-2-1 -என்றும் ,
அரங்கத்தம்மா பள்ளி எழுந்து அருளாயே -திருப்பள்ளி எழுச்சி -என்று திரு பள்ளி உணர்த்தின
விஸ்வாமித்திரன் ,பெரியாழ்வார் ,துளபத் தொண்டாய தொண்டர் அடி பொடி ஆழ்வார்
ஆகிற இவர்களோடு ச கோத்ரியாய்–
வலம் தாங்கு சக்கரத்து அண்ணல் மணி வண்ணற்கு ஆள் என்று உள் கலந்தார் -என்கிற படியே –
பகவத் சேஷத்வ ஞான பூர்வகமாக -அநந்ய பிரயோஜன வ்ருத்தியிலே -அன்விதனாய் உள் கலந்து –
(நம்பியைத் திருப்பள்ளி உணர்த்துகையாலே மூவருடன் ஒரு சேர எண்ணப்பட்டு )
வலம் தங்கு சக்கரத்து அண்ணல் மணி வண்ணற்கு ஆள் என்று உள் கலந்தார் –திருவாய் -3-7-9–என்கிறபடியே
ஒப்பும்மைப் பெற்று எம் தொழு குலம் -திருவாய் -3-7-8-என்று விசேஜ்ஞர் ஆதரிக்கும் ஏற்றத்தை அடைந்த
ஜன்ம சித்த நைச்யனான பாகவதன் –(நம்பாடுவான் )

நிலையார் பாடலாலே ப்ராஹ்மண வேள்வி குறை முடித்தமையும் –
அதாவது –
சரக குலோத்பவனான சோம சர்மா வாகிற பிராமணன் உபக்ரமித்த யாகத்யை யதாக்ரமம் அனுஷ்டியாமையாலும் –
அது சமாமிப்பதுக்கு முன்னே மரிக்கையாலும் -பிரம ரஷசாய் பிறந்து திரியா நிற்க செய்தே –
த்வம் வை கீதப் ப்ரவானே நிஸ்தார யிதுமர்ஹசி
ஏவ முக்த்வாத ,சண்டாளம் ராஷசஸ் சரணம் கத -என்கிற படியே
நீ உன்னுடைய கீத பிரபாவத்தாலே என்னை இவ் ஆபத்தில் நின்றும் கரை ஏற்ற வேணும் என்று சரணம் புக –
யன் மயா பஸ்சிமம் கீதம் ஸ்வரம் கைசிக முத்தமம் –
பலேன தஸ்ய பத்ரம் தே மோஷ இஷ்யதி கில்பிஷாத் –கௌசிக மஹாத்ம்யம்
(உயர்ந்த ஸ்வரம் கௌசிகம் பலத்தால் உன்னை இந்தப் பாபத்தில் இருந்து விடுக்கிறேன் )என்று
நம்பி சந்நிதியில் பின்பு பாடின – நிலையார் பாடலான கைசிக பண்ணாலே –
ஏவம் தத்ர வரம் க்ருஹ்ய ராஷசோ ப்ரஹ்ம சம்ஜ்ஞத
யக்ஜா சாபாத் விநிர் முக்த சோமசர்மா மகாயச -கௌசிக மஹாத்ம்யம் –என்னும் படியாக
வைகல்ய தோஷத்தால் வந்த ராஷசத் வத்தைப் போக்கி உஜ்ஜீவிப்பிக்கையாலே –
அந்த ப்ராஹ்மணன் உடைய யாகத்தில் குறையை தலைக் கட்டின படியும்

கீழ் மகன் தலை மகனுக்கு சக சகாவாய் –
அதாவது –
நிஷாத வம்ச ஜராகையாலே-(வேடர் குலத்தில் பிறந்தவர் ஆகையால்) –
ஏழை ஏதலன் கீழ் மகன் –பெரிய திருமொழி -5-8-1–என்னும் படி ,
ஜன்ம வ்ருத்த ஞானங்களால் தண்ணியரான ஸ்ரீ குஹப் பெருமாள்-
(தலை மகனுக்கு )அயோத்தியர் கோமான் ஆகையாலே அவை-ஜன்ம வ்ருத்த ஞானங்களால் எல்லாத்தாலும்
உத்க்ருஷ்டனாய் இருக்கும் அளவு அன்றிக்கே –
தர்ம ஐக்யத்தாலே -( ஆதி யம் சோதி யுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்தவன் ஆகையால் )
வானோர் தலை மகனாய் -7-2-10–இருக்கிற சக்கரவர்த்தி திரு மகனுக்கு
உகந்து தோழன் நீ –பெரிய திருமொழி -5-8-1-என்கையாலே சமனான சஹாவாய்-
(ஆழ நீர்க் கங்கை அம்பி கடாவிய ஏழை வேடனுக்கு எம்பி நின் தம்பி நீ தோழன் மங்கை கொழுந்தி
எனச் சொன்ன வாழி நண்பினை உன்னி மயங்குவான் –கம்ப நாட்டாழ்வார் )-

தம்பிக்கு முன் பிறந்து –
அதாவது –
மாழை மான் மட நோக்கி உன் தோழி உம்பி எம்பி என்று ஒழிந்திலை –பெரிய திருமொழி -5-8-1-
என்கையாலே -இவர் தம்பியான இளைய பெருமாளுக்கு முன் பிறந்தவராய்-

வேலும் வில்லும் கொண்டு பின் பிறந்தாரை சோதித்து –
அதாவது –
இப்படி தம்மை அங்கீகரித்த அன்று இராத்திரி பெருமாள் பள்ளி கொண்டு அருளா நிற்க –
அவருடைய சௌகுமார்ய அனுசந்தாநத்தால் உண்டான பரிவாலே கண் உறக்கம் அற்று ,
கையும் வில்லுமாய் காத்துக் கொண்டு நிற்கிற இளைய பெருமாளை அதி சங்கை பண்ணி –
கூர் அணிந்த வேல் வலவன்–பெரியாழ்வார் -3-10-4- -என்றும்
ததஸ்த் வஹஞ்ச உத்தம பாண சாப த்ருத் ஸ்திதோபவம்
தத்ர ச யஸ்ய லஷ்மண –அயோத்யா –87-23-–
( இளைய பெருமாள் ஸ்ரீ குகப்பெருமாளை அதி சங்கை பண்ண
இருவரையும் அதி சங்கை பண்ணி ஸ்ரீ குகப் பெருமாள் பரிக்ரகம் பெருமாளை நோக்கிற்று இறே-
ஒரு நாள் முகத்தில் விழித்தவர்களை வடிவழக்கு படுத்தும் பாடாயிற்று இது –ஸ்ரீ வசன பூஷணம் )
(மாலைவாய் நியமம் செய்து மரபுளி இயற்றி வைகல் வேலை வாயமிர் தன்னாளும் வீரனும் விரித்த நாணல்
மாலை வாய்ப் பாரின் பாயல் வைகினன் – வரி வில் ஏந்திக் காலை வாய் அளவும் தம்பி இமைப்பிலன் காத்து நின்றான்
தும்பியின் குழாத்தின் சுற்றம் சுற்றத்தன் தொடுத்த வில்லன் வெம்பி வெந்து அழியா நின்ற நெஞ்சினன் விழித்த கண்ணன்
தம்பி நின்றானை நோக்கித் தலைமகன் தனிமை நோக்கி அம்பியின் தலைவன் கண்ணீர்
அருவி சோர் குன்றின் நின்றான் -கம்ப நாட்டாழ்வார் ) என்றும் சொல்லுகிற படியே சாயுதராய் கொண்டு
இவர் மேல் கண்ணாய் நின்று அவர் நினைவு சோதித்து-

தமையனுக்கு இளையோன் சத்பாவம் சொல்லும் படி ஏக குலம் ஆனமையும் –
அதாவது-
ஆச சஷேத சத்பாவம் லஷ்மணஸ்ய மகாத்மான
பரதாயா அப்ரேமயாயா குஹோ கஹன கோசர -அயோத்யா -86-1–என்கிற படியே
ஸ்ரீ ராம விரக கிலிஷ்டனாய் – சித்ர கூடத்து ஏறப் போவதாக வந்த தமையனான
ஸ்ரீ பரதாழ்வானுக்கு தம்பியான ஸ்ரீ இளைய பெருமாள் உடைய –
பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ் நிக்த – பால -18-27–என்றும் –
பரவாநஸ்மி காகுத்ஸ்த த்வயி வர்ஷ சதம் ஸ்திதே –ஆரண்ய -15-7–என்றும் -சொல்லுகிற படியே
ஸ்ரீ பெருமாள் பக்கல் பிரேம பாரதந்த்ர்யங்களே நிரூபகமாம் படி இருக்கையாகிற சத்தையோடே ,
( ஸத்பாவம் -பிரேம பாரதந்தர்யங்களே சத்தையாம்படி ) வ்யாப்தமான ஸ்வாபத்தை சொல்லும் படி இஷ்வாகு வம்சயரோடு
ஏக குலம் ஆனபடியும் –

தூது மொழிந்து நடந்து வந்தவர்களுடைய
சம்யக் சகுன சஹ போஜனமும்
அதாவது –
முன்னோர் தூது வானரத்தின் வாய் மொழிந்து -பெரிய திருமொழி -2-2-3-என்று ஸ்ரீ பிராட்டிக்கு தூது வாக்யத்தை
ஸ்ரீ திருவடி வாயிலே சொல்லி விட்ட ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன்
சபர்யா பூஜி தஸ் சம்யக் ராமோ தசரதாத்மஜா–பால-1-57- -என்கிற படி
ஸ்ரீ சபரி கையால் பண்ணின சம்யக் போஜனமும் ,
(ஆண்டவள் அன்பின் ஏத்தி யழுதிழி அருவிக் கண்ணன் மாண்டது என் மாயப்பாசம் வந்தது வரம்பில் காலம்
பூண்ட மாதவத்தின் செல்வம் போயது பிறவி என்பாள் வேண்டிய கொணர்ந்து நல்க விருந்து செய்திருந்த வேலை –கம்ப நாட்டாழ்வார் )

குடை மன்னரிடை நடந்த தூதா-பெரிய திருமொழி -6-2-9- -என்னும் படி -ஸ்ரீ பாண்டவர்களுக்கு தூது போன
ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்ரீ பீஷ்ம ஸ்ரீ துரோணாதி க்ருஹங்களை விட்டு –ஆதியால் துரியோதனன் க்ருஹம்
விதுரான்னானி புபுஜே சுசீனி குணவந்தி ச பாரதம் -உத்யோக பர்வம் – என்கிறபடியே-ச காரம் பாவனத்வமும் போக்யத்வமும்
பாவனத்வ போக்யத்வங்கள் கண்டு உகந்து ஸ்ரீ விதுரர் திரு மாளிகையிலே
பண்ணின சகுண போஜனமும் ,

தூது வந்த குரங்கு -பெரிய திருமொழி -10-2-6–என்கிற ஸ்ரீ திருவடி -த்ருஷ்டா சீதா -பால-1-78- என்ற ப்ரீதியாலே
( கண்டனன் கற்பினுக்கு அணியைக் கண்களால் )
உபகாராய சுக்ரீவோ ராஜ்ய காங்ஷி விபீஷண-நிஷ்காரணாய ஹனுமான் தத் துல்யம் சஹ போஜனம் –பாத்மோத்தர புராணம் –
என்று திரு உள்ளம் பற்றி -கோதில் வாய்மையினானோடு உடனே உண்பன் நான் –பெரிய திருமொழி -5-8-2-
என்று ஸ்ரீ பெருமாளோடு பண்ணின சஹ போஜனமும் .

ஒரு பிறவியிலே -இத்யாதி -அதாவது –
யது குலத்திலே பிறந்து -கோப குலத்தில் சஜாதீயத்வேன வளருகையாலே
ஒரு பிறவியிலே இரு பிறவியான ஸ்ரீ கிருஷ்ணனுக்கு ஸ்ரீ தர்ம புத்ரர் தம்முடைய
யாகத்திலே அகர பூஜை கொடுத்தமையும் –

ருஷி புத்ரராய் பிறந்து -போய் மற்றோர் இடத்திலே -தஜ் ஜாதீயராய் வளருகையாலே
ஒரு பிறவியில் இரு பிறவியான திரு மழிசைப் பிரானுக்கு ஸ்ரீ பெரும் புலியூர் அடிகள்
தம்முடைய யாகத்தில் அக்ர பூஜை கொடுத்தமையும்-

ஐவரில் இத்யாதி -அதாவது –
பாண்டவர்கள் ஐவரில் பிரதானரான ஸ்ரீ தர்ம புத்ரர் ஸ்ரீ விதுரருக்கு
ஞானாதிக்யத்தையும் -அசரீரீ வாக்யத்தையும் கொண்டு சந்தேகியாமல் செய்த புத்ர க்ருத்யமும் –

ஸ்ரீ தசரதாத்மஜர் நால்வரில் பிரதானரான ஸ்ரீ பெருமாள்-
சௌமித்ரே ஹரே காஷ்டானி நிர்மதிஷ்யாமி பாவகம்
க்ருத்ரராஜம் திதஷாமி மத்க்ருதே நிதனம் கதம் –ஆரண்ய -68-27- என்று
சகஜரான ஸ்ரீ இளைய பெருமாளும் கூட நிற்க செய்தே அவர் கையிலும் காட்டாமல் –
ஏவமுக்த்வா சிதாம் தீப்தாமாரோப்ய பதகேச்வரம் –
ததாஹா ராமோ தர்மாத்மா ஸ்வ பந்துமிவ துக்கித –ஆரண்ய -68-31-என்கிற படியே
ஸ்ரீ பெரிய உடையாருக்கு செய்த புத்ர க்ருத்யமும் –

(இந்தநம் எனைய என்னக் காரகில் ஈட்டத்தோடும் சந்தனம் குவித்து வேண்டும் தருப்பையும் திருத்திப் பூவும்
சிந்தினன் மணலின் வேதி தீர் தர இயற்றித் தெண்ணீர் தந்தனன் தாதை தன்னைத் தடக்கையால் எடுத்துச் சார்வான்
ஏந்தினன் இருகை தன்னால் ஏற்றினன் ஈமம் தன் மேல் சாந்தொடு மலரும் நீரும் சொரிந்தனன் தலையின் சாரல்
காந்தெரி கஜலமூட்டிக் கடன்முறை கடவா வண்ணம் நேர்ந்தனன் நிரம்பு நன்னூல் மந்த்ர நெறியின் வல்லான் –கம்ப நாட்டாழ்வார் )

ஸ்ரீ பெரிய நம்பி ,ஸ்ரீ திரு கோட்டியூர் நம்பி ,ஸ்ரீ பெரிய திரு மலை நம்பி -என்று சக ப்ரஹ்மச்சாரிகளாய்க் கொண்டு
ஸ்ரீ ஆளவந்தார் திரு அடியிலே சேவிக்கையாலும் -ஸ்ரீ உடையவருக்கு ஆச்சார்யர்கள் ஆகையாலும் –
பிரசித்தரான ஸ்ரீ நம்பிகள் மூவரிலும் -பிரதானரான ஸ்ரீ பெரிய நம்பி ஸ்ரீ மாறனேர் நம்பிக்கு –
புரோடாசத்தை நாய்க்கு இடாதே கொள்ளும் -என்று அவர் அருளிச் செய்து போந்த படி
புரோடாசமாக நினைத்து செய்த புத்ர க்ருத்யமும்-

புஷ்ப த்யாக இத்யாதி -அதாவது
சிந்து பூ மகிழும் திருவேம்கடம்-திருவாய் -3-3-2-என்கிறபடியே புஷ்ப மண்டபமான ஸ்ரீ திரு மலையிலே
பணிப்பூவும் கையுமாய் திரு உள்ளம் அறிந்து பரிமாறுகையாலே ஸ்ரீ திரு வேங்கடம் உடையானுக்கு
அந்தரங்கரான ஸ்ரீ குரும்பறுத்த நம்பியை-
துளங்கு நீண் முடி அரசர் தம் குரிசில் தொண்டை மன்னவன் –பெரிய திருமொழி -5-8-9–என்கிற
அபிஷிக்த ஷத்ரியாக்யரான ஸ்ரீ தொண்டை மான் சக்கரவர்த்தி அனுவர்தித்த க்ரமும் –

வேகவத் உத்தரே தீரே புண்ய கோட்யாம் ஹரிஸ் ஸ்வயம்
வரதஸ் சர்வ பூதானாம் அத்யாபி பரித்ருச்யதே –ஸ்ரீ காஞ்சீ மஹாத்ம்யம் -என்கிற படியே
த்யாக மண்டபமான ஸ்ரீ பெருமாள் கோவிலிலே திரு ஆல வட்டமும் கையுமாய்
பெருமாளுக்கு அந்தரங்கராய் நின்ற ஸ்ரீ திரு கச்சி நம்பியை
வைதிகோதமரான உடையவர் அனுவர்தித்த க்ரமமும்-

தெண்ணீர் பொன்னி திரைக் கையால் அடி வருட பள்ளி கொள்ளும்–பெருமாள்–1-1–என்கிற படியே
போக மண்டபமான ஸ்ரீ கோவிலில் வீணையும் கையுமாய் பெருமாளுக்கு அந்தரங்கராய்
வர்த்தித்த ஸ்ரீ திரு பாண் ஆழ்வாரை ஸ்ரீ லோக சாரங்க முனிவர் அனுவர்தித்த க்ரமும் –

யாக அனுயாக உத்தர வீதிகளில் காய அன்ன ஸ்தல சுத்தி பண்ணின வ்ருத்தாசாரமும்-
அதாவது –
யஜ தேவ பூஜாயாம் -என்கையாலே யாக சப்த வாச்யமான திரு ஆராதனத்திலே
ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் ஸ்பர்சத்தாலே காய சுத்தி பண்ணிய ஸ்ரீ உடையவரும்

பகவத் ஆராதன அநந்தரம் தத் சமாப்தி ரூபேண பண்ணப் படும் அது ஆகையாலே –
அனுயாக சப்த வாச்யமான பிரசாத ஸ்வீகாரத்தில் -ஸ்ரீ பிள்ளை ஏறு திரு உடையார் தாசர்
கர ஸ்பர்சத்தாலே -அன்ன சுத்தி பண்ணின ஸ்ரீ நம் பிள்ளையும் –

உத்தர வீதி குடி புகுகிற போது ஸ்ரீ பிள்ளை வானமாமலை தாசர் சஞ்சரணத்தாலே ஸ்தல சுத்தி
பண்ணின ஸ்ரீ நடுவில் திரு வீதிப் பிள்ளை பட்டரும்

ஆகிய ஞான வ்ருத்தர்களுடைய ஆசாரமும் -அறிவார்க்கு இறே ஜன்ம உத்கர்ஷ அபகர்ஷங்கள் தெரிவது –
அதாவது –
இப்படி கீழ் சொன்ன இவை எல்லாம் அறிவார்க்கு இறே
இன்ன ஜன்மம் உத்க்ருஷ்டம் -இன்ன ஜன்மம் அபக்ருஷ்டம் -என்று
ஜென்மத்தினுடைய உத்கர்ஷமும்
அபகர்ஷமும் தோன்றுவது என்ற படி ..

இத்தால் ஜென்மாத் யபக்ருஷ்டர் பகவத் பக்தர்கள் ஆனார்கள் ஆகில் –
உத்க்ருஷ்ட வர்ணரால் அனுவர்த நீயராய் –
அவர்களுக்கு ஞான பிரதராய் –
ஸ்ரீ ஈஸ்வரனோபாதி அவர்களுக்கு பூஜ்யராய் –
ஸ்வ தீர்த்த பிரசாதங்களாலே சர்வரையும் சுத்தர் ஆக்குமவர்களாம் படியும்
பாப மக்னரான உத்க்ருஷ்ட வர்ணருக்கும் ஸ்வ சம்பந்தத்தாலே உத்தராகராம் படியையும் ,
அவர்கள் அளவில் ஸ்ரீ பகவத் ததீயர்கள் உடைய ஆதார அனுவர்த்த பிரகாரங்களையும் –
அவர்களுடைய ஸ்பர்சமே பரம பாவனத்வம் என்னும் அத்தையும் –

பிரமேய பூதனான ஸ்ரீ ஈஸ்வரனுடையவும்
பிரமாத்ரு பூதரான ஸ்ரீ ததீயர் உடையவும்
வசன அனுஷ்டானங்களாலே -மந்த மதிகளும் அறியும் படி பிரகாசிப்பித்தார் ஆய்த்து ..என்றும்‌ பெரிய ஜீயர்‌ அருளிச் செய்தருளினர்‌.

(ஸ்ரீ வசன பூஷணத்தில் -226-தொடங்கி-239-வரை உள்ள சூத்திரங்களையும் அவற்றின் வியாக்யானத்தையும் போலே இங்கும் )

அஜ்ஞர்‌ ப்‌ரமிக்கிற வர்ணாஸ்ரம வித்யா வ்ருத்தங்களை, கர்த்தப ஐந்மம்‌ ஸ்வபசாதமம்‌, ஸில்பநைபுணம்‌, பஸ்மாஹுதி, ஸவ விதவாலங்காரமென்று கழிப்பர்கள்‌’ என்றும்‌, “ஒரு ராஜா தன்னை மறை முனிவன் ஆக்கினவன் நீசனாக்குவித்த ராஜாவை வாரே உறுப்பாக யஜிப்பித்து ஸ்வர்க்க மேற்றின போதே தெரியும்‌: என்றும்‌, “ஸர்‌வ வர்ண ஸூத்‌ரத்வம்‌ காடுவாழ்‌ சாதியில்‌ கடல் வண்ணண் வேடம்‌ தென்‌னுரையில்‌ ஹரி கீர்த்தி ஸ்வ பசரில்‌ பத்திபாசநமுமறிவார்‌ ஆராரமரரென்ன வேற அறியாதார்‌ சாதி யந்தணர்களேலும்‌ தகர விழுவர்‌’ என்றும்‌ பிள்ளை லோகாசார்யர்‌ திருத் தம்பியாரான அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்‌ அருளிச்‌ செய்தார்‌-தத் தத் ஸூத்ர வயாக்யாநங்களிலே பெரிய ஜீயரும்‌ விஸகரித்தருளினார்‌-விஷ்ணு சித்தனுக்குப்‌ போலே பண்டைக்‌ குலத்தைத் தவிர்ந்து தொண்டக் குலமான படியும்‌, ஆசாரய விஷ்ணுவத் பூஜ்யத்வ பாவநத்வாதி க்யாதிகளும்‌ விஸ்வாமித்ர விப்ரத்வ தபோ மூலத்வமும்‌ ப்ராமாணிகமென்று நம்மாசார்யர்கள்‌ ஏக கண்டமாக ஸ்தாபித்தருளினார்கள்‌-“விஸ்வம்‌ க்ராந்தம்‌ வாஸுதேவம்‌ விஜாநந்‌ விப்ரோ விப்ரத்வம்‌ கச்சதே தத்வ தர்ஸீ* இத்யாதி ஸ்ருதிகளுமுண்டு.

இதி ஸித்தாந்தம்

——————-

அத பூர்வ பக்ஷ -ந கைவல்யம் முக்தி

ரஹஸ்ய த்ரய ஸாரத்திலே சரம ஸ்லோக அதிகாரத்திலே -ஸர்வ பாப நிவ்ருத்தி கைவல்யத்துக்கும் பகவத் பிராப்திக்கும் பொதுவன்றோ என்கை மந்த சோத்யம் -எங்ஙனே யென்னில்‌, ஸர்வ பாபம்‌ கழிந்ததாகில்‌ ஸ்வத ப்ராப்தமான பகவதநுபவத்தை யிழந்து கிடக்கைக்குக்‌ காரணம்‌ இல்லை – அப்போது பகவதநுபவ ரஹிதமான ஆத்மாநுபவ மாத்ரம்‌ கடியாது. ஆகையால்‌ அவ் வவஸ்தையில் ஐஸ்வர்யமும்‌ ஜரா மரணாதி துக்கங்களும்‌ வருகைக் கீடான கர்மங்கள்‌ கழிந்து பரிபூரண பகவதநுபவத்துக்கு ப்ரதிபந்தகமான கர்மம்‌ கழியாதே கிடக்கிற வளவிலே, *யம்‌ லப்‌த்வா சா பரம்‌ லாபம்‌ மந்யதே நாதி கம்‌ தத– என்னும்‌ படி இருப்பதொரு ஸ்வாத்மாநுப வாநந்த விஸேஷம்‌ —ஆத்மார்த்தீ சேத்‌ த்ரயோப்யேதே தத் கைவல்யஸ்ய. ஸாதகா- என்று சொல்லுகிறபடியே தனக்கு ஸக்யமாயிருப்பதொரு உபாய விஸேஷத்தாலே ஸித்‌தித்தால் இவ்வநுபவத்தை அசிதநுபவத்தோடும்‌ பகவதநுபவத்தோடும்‌ துவக்கு இல்லாதபடியாலே கைவல்யமென்று. ப்ராப்தியில்‌ கைவல்ய ஸப்‌தம்‌ ஸர்வோபாதி நிவ்ருத்தியை நினைக்கிறது. ஆத்ம மாத்ராநுபவ விஷயமாக, ‘ஸ்வாத்மாநு பூதிரிதி யாகில முக்திருக்தா’. இத்யாதி களில்‌ பரயுக்தமான ‘முக்தி’ஸப்‌தமும்‌ *விகதேச்சாப யக்ரோதோ யஸ் ஸதா முக்த ஏவ ஸ- இத்யாதிகளிற் போலே நிர்வாஹ்யம்‌. ‘ஜரா மரண மோக்ஷாய’ என்றதுவும்‌ தேவர்களுடைய அமரத்வ வ்யபதேஸம்‌ போலே ஆபேஷிகம்‌. க்ரமேண முக்தி பர்யந்தமாம்‌ விஷயத்தைப்‌ பற்றச்‌ சொல்லுகிற தாகவுமாம்‌-இப்படி விபவ வ்யூஹ ஸாலோக்யாதி மாத்ரத்தில்‌ ‘முக்தி’ஸப்‌தபமும்‌ நிர்வாஹ்யம்‌-வோகேஷு விஷ்ணோர்‌ நிவஸந்தி கேசித்‌ ஸமீபம் ருச்சந்தி ச கேசி தந்யே | அந்யே து ரூபம்‌ ஸத்‌ருஸம்‌ பஜந்தே ஸாயுஜ்ய மந்யே ஸ து மோக்ஷ உக்த. என்று நியமிக்கப்‌ பட்டதிறே. இதில்‌ சொன்ண ஸாயுஜ்யம்‌ பரமபதத்திலே. சென்றவனுடைய போக ஸாம்யம்‌. கேவலாத்மாநுபவம்‌ நித்யமன்று என்னுமிடமும்‌, ஸாக்ஷாத் மோக்ஷமன்று என்னுமிடமும்‌ “சதுர்விதா மம ஜநா; பக்தா. ஏவ ஹி தே ஸ்ரூதா! தேஷாமேகாந்தி நம ஸ்ரேஷ்டா தே சைவா நந்யதேவதா:। அஹமேவ கதிஸ் தேஷாம்‌ நிராஸீ கர்ம காரிணாம்‌ । யே து ஸிஷ்டாஸ் த்ரயோ பக்தா பல காமா ஹி தே மதா ஸர்வே ஸ்யவந தர்மாண ப்ரதி புத்தஸ்து மோக்ஷபாக்‌” என்கிற வசநத்தாவே ஸித்‌தம் -முச்யேதா அர்த்தஸ் ததா ரோகாத்‌. ஸ்ருத்வே மாமாதித கதாம்‌. ॥ ஜிஜ்ஞாஸுர் லபதே பக்திம்‌ பக்தோ பக்த கதிம்‌ லபேத் என்கையாலே ஸ்ரீகீதையில்‌ “ஜிஜ்ஞாஸு* என்கிற ஆத்மா நிஷ்டனும்‌ க்ரமேண ஜ்ஞாநியாமென்று உக்தமாயிற்று- மன்னுறில்‌” என்று பகவதநுபவத்தை நித்யம் என்கையாலும்‌ இதுக்கு வ்யவச்சேத்‌யமாகச்‌ சொல்லும்‌ ஆத்ம மாத்ராநுபவம்‌ நித்யமன்று என்னுமிடம்‌ வ்யஞ்‌ஜிதம்‌-இதுக்கு “இறுதிகூடா* இத்யாதிகளில்‌ நாஸமில்லை என்கிற பாசுரமும்‌ சாதுர் மாஸ்யாதி கர்ம பல விஸேஷங்களில்‌ அக்ஷய்யத்வோக்தி போலே -எனை வூழி” என்கிற அதி சிரகால ஸ்தாயித்வாபிப்ராயம்‌ என்னும்‌- கீதா தாத்பர்ய சந்த்‌ரிகையிலே, எழாமத்‌யாயத்திலே, ‘(கேவலாத்ம ந்யபர்யவஸ் யந்நிதி) நகரம்‌ ப்ரவி விஷோரத்‌ வகஸ்ய சாயா தருமூல ஸ்வாபவத்‌ ஆத்மாநுபவ விலம்ப இதி பாவ- அத்ர ஜிஜ்ஞாஸோர் வக்தவ்யம்‌ ஸர்வம்‌ அஷ்டமே பிரபஞ்ச யிஷ்யாம-என்றும்‌, அஷ்டமத்திலும்‌ – நித்ய ஸ இத்யநேந, ஆத்மாநுபவாதி பலாந்தர வ்யவதாந நைரபேக்ஷ்யம்‌ விவக்ஷிதமித்யாஹ’ என்றும்‌,-அக்ஷர யதாத்ம்ய நிஷ்டா நாம் து ஸ்வ ஸ்வரூப மேவ பூர்வம் போக்யம் வஸ்வாதி பத ப்ராப்தி பூர்வக ப்‌ரஹ்ம ப்ராப்தி ஸாதந மது வித்‌யாதி ந்யாயாத்‌ அந்ததோ ப்‌ரஹ்ம ப்ராப்தி ஈத்‌ருஸ பர்வ க்ரம ப்ரதி நியமல்ஸ ப்ராசீநா பேக்ஷயா ருசி பேதாத்‌ ஸ ச ப்ராசீந கர்ம விஸேஷாத்‌ “சதுர்விதா பஜந்தே மாம்‌- இதி ப்ராகேவ தர்ஸித என்றும்‌ ‘ஆத்ம மாத்ராநுப வஸுகஸ்ய அஸ்தி ரத்வாதேவ ச்யவநதர்‌ மத்வமுச்யதே’ என்றும்‌, “அவ்யவஹித மோக்ஷ பாக்த்வம்‌ ப்ரதி புத்‌த ஸ்யோச்யதே”என்றும்‌, “ப்‌ரஹ்ம காயநிஷேவண ஸங்காத்‌ முக்தஸ்ய தேவ யாநேந மார்க்கேண பரமாகாஸக மநமுச்யதே தத்‌வதிஹாபி-ஸ்வாத்மாநுபவ ஸ்தாநாத்‌ ப்ரச்யுதஸ்ய பரம வ்யோமாதி ரோஹஸ்யாத்‌ । அர்ச்சிராதி கதிஸ்சாஸ்ய அவாந்தர பாவாநுபவாத்‌ பஸ்சாத்‌ வா கதிமத்‌யே வா தக்ஷிணாயந ம்ருதஸ்ய சந்த்‌ர மஸ ஸாயுஜ்யவத் விஸ்ரம
மாத்ரரூபோயம்‌ அவாந்தர பலாநுபவ இத்யுப யதாபி ந விரோத,” என்றும்‌, ‘ஸ்மரந்திச ஸ்வாத்மாநுப வஸ்தாநம்‌. முக்தி ஸ்தாநாதர்வாசீநம்‌. ‘யோகிநாமம்ருதம்‌ ஸ்தாநம்‌ ஸ்வாத்ம ஸந்தோஷ காரிணாம்‌’ இதி” என்றும்‌, “ஸர்வ தர்மாம்ம்ச ஸந்தயஜ்ய ஸர்வ காமாம்ஸ்ச ஸாக்ஷராந்‌. | லோக விக்ராந்த சரணென சரணம்‌ தேவ்ரஜம்‌ விபோ ॥. (இதி). *கைவல்யம்‌ பகவந்தம்‌ச மந்த்ரோயம்‌ ஸாத யிஷ்யதி இத்யாதி -ஷ்வபி கைவல்ய சப்தேன ஆத்ம மாத்ர அனுபவ ஸூகம் ததபேஷிபி ப்ராப்யமுச்யதே | ஏதச்ச அந்தராய கோடி நிவிஷ்டத்வாத்‌ ஆதித ஸாவதாநா ஜ்ஞாநிந: பரிஹரந்தி । கேசித்து – ப்‌ரஹ்மாநுபவ வைமுக்‌யேந நித்யம்‌ ஆத்மாநுப ஸூகமிச்சந்தி ந தத்ர பாஷ்யகாராதி ஸம்ப்ரதாயம்‌ ப்ரமாணம்‌ யுக்திம்‌ வா பஸ்யாம நிஸ்ஸேஷா கர்மக்ஷயே ஸ்வாபாவிக ரூபாவிர்பாவேந ப்‌ரஹ்மாநுபூவாவஸ்யம்பவாத்‌, கர்ம ஸேஷயோகே து ஸம்ஸார ப்ரஸங்காச்ச ஜரா மரணாதி ஹேது பூத ஸர்வ கர்ம விநாஸாத்‌ அஸம்ஸார: | தாவந் மாத்ரேண ச முக்தத் வவ்யபதேஸ | ப்‌ரஹ்மாநுபவ ப்ரதிபந்தக கர்‌மணஸ்து அவிநாஸாத்‌ ததநுபவாபாவ இதி சேத்‌ – அஸத்வேவமேதத்‌ கர்ம: பரஸ்தாதபி ந நங்க்ஷய தீத்யத்ர ந நியாமகமஸ் தீத்யேஷா திக் ” என்றும்‌ சொல்லப் பட்டது.

இதி பூர்வபக்ஷ க்ரந்த

அத, ஸித்‌தாந்த- கைவல்யம்‌ முக்தி!

‘ஸர்வ பாப நிவ்ருத்தி கைவல்யத்துக்கும்‌ பகவத் ப்ராப்திக்‌கும்‌ பொதுவன்றோ வென்கை -மந்தசோத்பயம்‌’ என்கையே மந்த சோத்‌யமாமத்தனை- எங்ஙனே என்னில் பாபமாவது அநிஷ்டாவஹமிறே. கேவலனுக்கு அநிஷ்டாவஹம்‌ ஈஸ்வராத்‌ யநுபவ ஹேதுக்கள்‌. அதடையக் கழிந்தால் பகவதநுபவத்துக்கு ஹேது வில்லை. பகவதநுபவம்‌ ஸ்வத ப்ராப்தமானாலும்‌ ப்ரதிபந்தக நிவ்ருத்தி ஹேது ஜன்யமிறே
பரத்யுத விரோதியான பரமாத்ம ஸரீராத்மாநுபவ ஹேதுவும்‌ கிடக்கையாலே அந்த ஆத்ம மாத்ராநுபவ மொழிய பகவதநுபவ ப்ரஸங்கமும்‌ கடியாது. அந்த ஆத்ம மாத்ராநுபவ ஹேதுவும்‌- “பராபி த்யாநாத்‌” இத்யாதி ஸூத்ரோக்தமான உபாஸநாநுகுண பல ஸாதக பகவத் ஸங்கல்பம்‌- அது பின்னை ‘தேஹ யோகாத்‌ வா ஸோபி’ என்கிறபடியே- தேஹாதி மூலமாகில்‌ மோக்ஷமின்றியிலே யொழியுமென்னில்‌ ஆத்மாநுபவ விரோதி ஸகல கர்‌மங்களும்‌ அதடியான ப்ரக்ருதி ஸம்பந்தமும்‌ கழிகையாலே இத்தை மோக்ஷமென்னத் தட்டில்லை – இது பக்தி ப்ரபத்தி ரூப புண்ய ப்ரபந்ந பகவதநுபவ ஸ்வார்த்த தத் கைங்கர்‌யங்களுக்கும்‌ ஒக்கும்‌-அவற்றுக்கு ஸ்வ ஸ்வரூப ஸாதநமொழிந்த ஸ்வ ஸ்வ விரோதி ஸகல கர்‌ம க்ஷயமுண்டே யென்னில்‌ அது ஆத்மாநுபவத்துக்கும்‌ ஒக்கும்‌-ஆத்மாநுபவம்‌ ஸ்வத ப்ராப்தமன்றே யென்னில்‌ பகவதநுபவ ஸ்வார்த்த தத்‌ கைங்கர்யங்களும்‌ அஹங்கார கர்ப்ப மமகாரமாகையாலே கிங்கரனுக்கு ஸ்வத ப்ராப்தமன்று-தெளிவிசும்பாகையாலே அவையும்‌ கழியுமென்னில்‌ அதுவும்‌ ஆத்மாநுபவத்துக்குமொக்கும்‌. ஆத்மாநுபவம்‌ கழிக்கிறது – அங்குத்தை பகவதநுபு பூஷயா உபாஸநத்தாலே என்னில்‌ பகவதநுபவ கைங்கர்யங்களில்‌ ஸ்வார்த்தத்வத்தைக்‌ கழிக்கிறபடி என்ன வேணும்‌. அங்கவற்றில்‌ ஸ்வார்‌த்தத்வத்தைக்‌ கழிக்கிறது ப்ராயஸ்சித்த புருஷகார ஜந்ய பகவத்‌ கிருபையாலே என்னில்‌ ஆத்மாநுப,வைஸ்வர்‌ய காமனைகளுமத்தாலே கழிய வேணும்‌. “ஸ சாநந்த்யாய கல்பதே ஸர்வம்‌ ஹ பஸ்ய பஸ்யதி சாயா வா ஸத்வ மநுகச்சேத்‌ கிங்கரா மம தே நித்யம்‌” இத்யாத்‌ யுக்தமான ஆவிர்பாவ ஸமத்‌ருஷ்டித்வ பாரதந்த்ர்‌ய கைங்கர்யங்களும்‌ பகவத்‌ க்ருபையாலே ஐஸ்வர்ய கைவல்யார்த்திகளுக்கும்‌ வர வேணும்‌. தத் க்ரது ந்யாயத்தாலே அவை அவர்களுக்கு வாராதே என்னில்‌ அது உபாயாந்தர நிஷ்ட ஸ்வ ப்ரயோஜந பரர்க்குமொக்கும்‌. ஆனால்‌ பகவதநுபவ ஸ்வார்த்த கைங்கர்யங்கள்‌ மோக்ஷமென்னில்‌, ஆத்மாநுபவமும்‌, “ஆத்மாநுபூதிரிதி யாகில முக்திருக்தா, ஐரா மரண மோக்ஷாய” என்கிற வசநங்களை அந்யதாகரிக்கக் கூடாது

ஸா லோக்யாதிகளில் முக்தி ஸப்தமும் ஆசார்ய ஹ்ருதய வ்யாக்யானங்களில் “சதுர்விதமான மோக்ஷம்‌’ என்றும்‌,’ஸாலோக்ய ஸாமீப்ய ஸாரூப்ய ஸாயுஜ்யங்களொன்கிற நாலு வகைப்பட்ட மோக்ஷம்‌’ என்றும்‌, எம்மா விட்டினீட்டிலே “[இத்தோடு (எம்மா வீட்டுத் திறமும்‌ செப்பம்‌) ஒரு தமிழன்‌ எம்மா வீட்டு விகல்பம்‌ செவ்வியவாம்‌- என்றான்‌- அந்த பஷத்திலே என்கிற சுட்டு முன் பங்க்தியையும்‌ கூட்டிக் கொள்ளக் கடவது;] வீட்டு விகல்பமாவது – ஸாலோக்ய ஸாரூப்ய ஸாமீப்ய ஸாயுஜ்யமென்‌கிறவை- செவ்வியவாகை யாவது – ஸாலோக்யாதிகளெல்லாம்‌ இம்‌ மோக்ஷத்திலே யுண்டாகை! என்றும்‌, பரமபதத்திலே நாலு உண்டாக. நிர்வஹிக்கையாலே அதுவே முக்‌யமென்று நிர்வாஹ்யம்‌. யே து ஸிஷ்டாஸ் த்ரயோ பக்தா பவகாமா ஹி தே மதா. | ஸர்வே சயவந தர்மாண ப்ரதிபுத்‌தஸ்து, மோக்ஷ பாக்‌ என்கிற விடத்திலே சயவநத்துக்கு பல காமனையை ஹேதுவாகச்‌ சொல்லுகையாவே “பலார்த்தீ,. ந மே பக்த ஸ வை வணிக” என்கிறபடியே அநந்ய போக்‌யத்வ ஸ்வரூப ஹாநியே ‘சயவந ஸப்‌தார்த்தம்‌. இங்கனறிக்கே தாங்கள்‌ அநுபவிக்கிற பல ப்ரச்யுதி யாகில்‌, ஸவகீய பல காமனையாலே வந்த பகவதநுபவ ஸ்வார்த்த கைங்கர்யங்களும்‌ அநித்யமாக வேணும்‌. பகவான்‌ நித்யனாகையாலே அவை நித்யம்‌. ஆத்மாவும்‌ நித்யனாகையாவே ததநுபவும்‌ நித்யமாம்‌. ஆகையால்‌ ஸ்வ பல காமனையால்‌ வந்த ஸ்வார்த்த பகவத் கைங்கர்ய காமர்க்கும் –ஆத்மாநுபவ காமர்க்கும் ஐஸ்வர்ய காமர்க்கும் ஏக ரூபமாக ஸ்வரூப பிரஸ்யுதியே ஸ்யவன சப்தார்த்தமாகக் கடவது -இதில் நித்ய பாலார்த்திகளுக்கு ஸ்வரூப ஹானி நித்யம் அநித்ய பாலார்த்திகளுக்கு அநித்யம் என்றதாயிற்று -நித்ய பலங்களை நித்ய ஸம்ஸாரமாக நினைத்திறே ஸா யுஜ்யத்துக்கு அது இல்லாமையைப்பற்ற ஸ து மோக்ஷ உக்த என்றதும்‌பிரதி புத்தஸ்து மோக்ஷ பாக் என்றதும் ‘ஜ்ஞாநியே அத்தைப்‌ பெறுவான்‌” என்றதும்‌– ஆகையாவே ஜரா மரண மோக்ஷமுண்டாகையைப்‌ பற்ற கைவல்யத்தை மோக்ஷ மென்னத் தட்டில்லையே

“முச்யேதார்த்த: ததாரோகாத்‌* இத்யாதி ஸ்லோகத்தில்‌, ‘ஆர்த்த ஸப்‌தம்‌. நஷ்டைஸ்வர்ய காமனைச் சொல்லாதே, “ஆரோக்யம்‌ பாஸ்கரோதிச்சேத்‌* என்கிற ஆரோக்‌ய காமானைச்‌ சொன்னாப் போலே அந்த ஸ்லோகத்தில்‌ ஜிஜ்ஞாஸுவைச்‌ சொல்லுகையாலே ஸ்ரீகீதையில்‌ ‘ஜிஜ்ஞாஸு என்கிற ஆத்மநிஷ்டன்‌ க்ரமேண ஜ்ஞாநியாம் என்னவில்லை. மன்னுறில்‌, “இறுதி கூடா* என்கிற விடங்களில்‌ பண்ணுகிற விஸ்வாமித்ர ஸ்ருஷ்டியும்‌ அவ் விடங்களில்‌ பூர்வர்கள்‌ பண்ணி யருளின வ்யாகயாநங்களுக்கு விருத்‌தமாம்‌. நகரத்துக்குப் போம்‌ வழிப் போக்கர்‌ மரத்தடியிலே உறங்கினாப் போலே ஆதமாநுபவ விளம்பமென்று கல்பிக்கைக்குக்‌ கல்பகமில்லை. மது வித்‌யா ந்யாயம்‌ அந்யாயயம்‌- எங்ஙனே என்னில்‌- மது வித்‌யையில்‌ கார்ய காரணேபயாவஸ்த ப்‌ரஹ்மோபாஸந மாகையாலே கல்பாந்தரத்திலே அநித்யமான தேசத்திலே அநித்யமான வஸ்வாதி ப்ராப்தியாய்‌, அநித்யமான கார்யாவஸ்த ப்‌ரஹ்மத்தை அநுபவிக்கலாம்‌. நித்யமான பரமபதத்தில்‌ அநுபவிக்கக் கூடாது. ததநந்தரத்திலே காரணாவஸ்தமாய்‌ விஸேஷ்யமான பரப்‌ரஹ்மத்தை நித்யமான பரம பதத்திலே நித்யனான தாணன் அநுபவிக்கிலுமாம்‌. விஸேஷணமான ஆதித்யன்‌ அநித்யனாகையாலே ததநுபவம்‌ பரமபதத்தில்‌ கூடாது. ஆகையால்‌, அங்கு. அப்படியாகலாம்‌-

பஞ்சாக்‌நி வித்‌யையில்‌, ப்ரக்ருதி வியுக்த ப்‌ரஹ்மாத்மக ஸ்வாத்மோபாஸந மாகையாலே, நித்யாத்மாநுபவம்‌ அநித்ய தேச காலங்களில்‌ கூடாது, ப்ரக்ருதி வியுக்தாத்மாநுபவம்‌ ப்ரக்ருதி மண்டலத்தில்‌ கூடாது. ஆகையால்‌ மது. வித்யா ந்யாயம்‌ அந்யாயமென்னக் குறையில்லை – ஈத்‌ரூஸ கிரமேண இச்சையும்‌ பூர்வமில்லை – ‘ஜிஜ்ஞாஸு, – ப்ரக்ருதி வியுக்தாத்ம ஸ்வரூபாவாப்தீச்சு,.” என்றிறே பாஷ்யம்‌. ப்ரக்ருதி வியுக்தாத்ம ஸ்வரூபாவாப்தி – மண்டலத்தில்‌ கூடாதிறே (இவ்விடத்தில்‌ சில ப்ரதிகளில்‌ பங்க்தி. ஸ்கலிதமாயும்‌ முன்னும்‌ பின்னுமாயும்‌ காண்கிறது,-கோஸாந்தர ஸஹாயத்தினால்‌ ஸோதித்துக் கொள்க] ஸூஹ்ருதமும் மூலமாயிறே சொல்லப்பட்டது -ஆகையால் பர்வ க்ரம நியம கல்பநம் மூல கிரந்த பாதிதம்‌. அர்ச்சிராதிகதியில்‌ விளம்ப கல்பநமும்‌, ப்ரக்ருதி மண்டலத்தில்‌ ஸ்தாந கல்பநமும்‌ “விரஜா பரமவ்யோம்நோரந்தரா கேவலம்‌ ஸ்ம்ருதம்‌* இத்யாதி ப்ரமாண விருத்‌தம்‌- த்ருஷ்டாந்த கல்பநங்களும்‌ வ்யர்த்தம்‌. “ஸர்வ காமாம் ஸ் ச ஸாக்ஷராந் | கைவல்யம்‌ பகவந்தம்‌ ச * இத்யாதிகளில்‌. அக்ஷர கைவல்ய ஸப்‌தங்களும்‌ ஜிஜ்ஞாஸு விஷயம்‌ [இவ் விடத்தில்‌ தாளபத்ரகோளம்‌ ஸிதில மாயிருப்பதால்‌ ஸூத்‌த பங்க்தி கோஸலாந்தரங்களில்‌ காண்க ) அவ்யக்தோக்ஷர இத்யுக்த யேத்வாக்ஷரம நிர்தேஸ்யம்‌’, ‘கேவலாத்மந்ய பர்‌யவஸ்யந்‌, அத, கைவல்யார்த்தி,நாம்‌‘ இத்யாதி ப்ரயோகாத்‌ ப்‌ரஹ்மாநுப,ப்ரதிபந்தக கர்மண ஸத்வாத்‌, ஆத்மாநுபவம்‌ நஸியாதென்‌கிறதற்கு நியாமகம்‌, யத் ப்ராப்ய ந நிவர்தந்தே தத்‌ தாம பரமம்‌ மம, தச்சாபுநரா வ்ருத்தி லஷணம்‌” இத்யாதி- கைவல்யம்‌ முக்தி யென்றும்‌ நித்யமென்றும்‌ ஆழ்வார்கள்‌ முதலான ஆசார்யர்களும்‌ அருளிச் செய்தார்கள்‌. எங்ஙனே என்னில்‌, “(உற்றது வீடுயிர்‌) ஆத்மா மோக்ஷத்தை ப்ராபித்தது-அது நித்யமாய்‌ ஜ்ஞாநா நந்த லக்ஷணமா யிருக்கையாலே’ என்றும்‌, இறுகலிறப்பு* என்றும்‌, *ஞாநிக்கும்‌ – ஸங்கோசத்தை மோக்ஷமென்று சொல்லுகிற ஆத்மஞ்ஞருக்கும் என்றும் (6-9-10)குறுகா நீளா -ஸ்வத குறுகையும் நீளுகையும் இன்றிக்கே இருக்கை -(எனையூழி இத்யாதி )காலோபாதியால்‌ வரும்‌ ஸங்கோச விகாஸங்கள் இன்றிக்கே யிருக்கை (அளவிவினபம்‌ சேர்ந்தாலும்‌) இங்ஙனே யிருக்கையாலே முடிவின்‌றிக்கே யிருக்கிற ஆத்மாநுபவ ஸுகத்தை பிராபித்தாலும் (பெரும் துன்பம் வேரற நீக்கி!) ஜந்மம்‌ போனால்‌ அநந்தரம்‌ வரக்கடவதான ‘கைவல்யமாகிற மஹா துக்கத்தை ஸவாஸநமாகப்‌ போக்கிக்‌ கீழ் நின்ற நிலை தான்‌ நன்று என்னும்படியிறே இதன்‌ தண்மை- அதுக்குப்‌ பின்பொரு ஸரீர பரிக்‌ரஹம்‌ பண்ணி யாகிலும்‌ பகவத் ஸமாஸ்ரயணம்‌ பண்ண யோக்‌யதை உண்டிறே…

இது நித்யமாயிருப்பதொன்றன்றோ என்று ஆத்ம லாபத்துக்காக வந்து உபாஸிக்கிற கேவவர்‌ வந்து தோற்ற அவர்களை ஷேபிக்கிறார்‌ – (சரணமாகிய வித்யாதி..)” என்றும்‌, “(திருத்தாள் வணங்கி) பாவியேனுக்கு பகவத்‌ விஷய மில்லாமையாலே ஆத்ம ப்ராப்தி அபுருஷார்த்தம்‌, ஜஸ்வர்யம் போலே அஸ்திரமல்லாமையாலே நிலை நின்ற அபுருஷார்த்தமென்கை’ என்றும்‌, ‘(யாதுமில்லை இத்‌யாதி) ‘இவ்வாத்மாநுபவ ஸூகத்துக்கு மேற்பட்டிருப்ப தொன்றில்லை என்று அவ் வருகே பகவதநுபவ ஸூகமுண்டே யாகிலும்‌. அத்தையே புத்தி பண்ணிக்‌ காது பெருக்கப் புக்கவன் அத்தைப்‌ பல காலும்‌ அறுத்து வைத்து முன்புத்தை யோக்யத்‌தையும்‌. கூடக் கெடுக்குமா போலே-பகவத் ஸமாஸ்ரணத்துக்கு யோக்‌யமான ஸம்ஸாரத்திலே ஸப்‌தாதி விஷயங்களை அநுபவித்திருக்கு மத்தையும்‌ இழக்கும்‌” என்றும்‌, (திருவாய்மொழி -8-8-6-) (அதுவே வீடு) “அற்றது பற்றெனில்‌ உற்றது வீடுயிர்‌’ என்று ப்ராக்ருதங்களில்‌ தொற்றற்றவாறே ஆத்ம ப்‌ராப்தி லஷண மோக்ஷமா யிருக்கும்‌- அதுக்கென்னச்‌ செய்ய வேண்டுவதில்லை (வீடாமே) அவனுக்கு ப்ரகாரமாக ஆத்ம வஸ்துவை. அநுஸந்தித்து அவ் வழியாலே இது தன்னை ப்ராப்யமாக விறே இவர் தாம்‌ நினைத்திருப்பது. அவ்வளவு போக மாட்டாதே இதின்‌ நன்மையைக் கண்டு இவ்வளவிலே கால் தாழ்வார்க்கும்‌. போந்திருந்ததீ என்கிறார்‌ என்றும்‌, (8-8-7) “(அதுவே வீடு) கீழ்ச் சொன்னவதுவே ஆத்ம ப்ராப்தி லக்ஷண மோக்ஷமாகிறது- (வீடு பேற்றின்பந்தானுமது) அம் மோக்ஷத்தை ப்ராபித்தால்‌ வரும்‌ ஸூகமும் அதுவே (அதுவே வீடு) கீழ்ச்‌ சொன்ன ஆத்ம ப்ராப்தியே மோக்ஷம்‌(வீடு பேற்றின்பந்‌தானுமது) மோக்ஷ ஸித்‌தியில்‌ வரும்‌ ஸுகமும்‌ அந்த ஆத்மாநுபவம்‌’ என்றும்‌ திருப் பல்லாண்டு வயாக்‌யானத்தில் – “கைவல்யார்த்திகளை அழைக்கிறார்‌. அவர்கள்‌. உபாஸித்துத் தலைக் கட்டப் புகுகிற மோக்ஷம் தான் அநர்த்தம் என்று தோற்றி யிருந்ததிவர்க்கு. அம் மோக்ஷம்‌ ப்ரத்யா ஸந்நமா யிருக்கையாலே அத்தைத் தவிர்த்து இங்கே வாருங்கோள்‌ என்கிறார்‌. அநந்தரம்‌ ஸ்வ ஸ்வரூபாவாப்தி மோக்ஷமாகையாலே அவ் வருகு போக்கில்லை – இவ்வருகு வரவில்லை வறுத்த பயறு முளைக்கிற யோக்‌யதையையும்‌ கூடக் கெடுக்கிறதிறே.-ஜரா மரண மோஷாயா -என்று பிரக்ருதி வியுக்தாத்ம அனுபவத்தை புருஷார்த்தமாக அனுபவித்து மோக்ஷமாக. நினைத்திருப்பது’ என்றும்‌, “ஆத்ம ப்ராப்தி உத்க்ருஷ்டமென்னும்‌ நினைவாலே அழைக்கிறார்‌ அல்லர்‌- அந்த மோக்ஷத்தை இவர்‌ அநர்த்தமென்று இருக்கையாலே அந்த மோக்ஷத்தை ப்ராபித்தால்‌ மீள வொண்ணாமையாலும்‌ ஐஸ்வர்ய காமனுக்குக்‌ காலாந்தரத்திலே யாகிலும்‌ பகவத் ஸம்பந்தம்‌ பண்ண யோக்‌யதை உண்டாகையாலும்‌ இவனுக்கு அந்த யோக்‌யதையும்‌ அழிகையாலே துர்க்கதியைக் கண்டு முற்பட அழைக்கிறார்‌” என்றும்‌, பெரிய திருமொழி (8-2-8) “தொண்டெல்லாம்‌* என்கிற பாட்டின்‌ வயாக்யாநத்திலே (நின்னடியே தொழுது!) என்று உன்னை யன்றே யிவன்‌ தொழுதது – திருக்கண்ணபுரத்தை யிறே. யதோ உபாஸநமன்றோ பலம்‌- ஜஸ்வர்யார்த்‌திகள் ஐஸ்வர்ய விஸிஷ்டனை இறே பற்றுவது -ஆத்ம ப்ராப்தி காமன் ஸூத்‌தி விஸிஷ்டனையிறே பற்றுவது-இவளும்‌. இவ்வூரை ஆசைப் பட்டவளாகையாலே. ஊரைத் தொழுகிறாள்‌- யத்‌ விஸிஷ்ட வஸ்துவைப் பற்றினால்‌ தத்‌ விஸிஷ்ட வ-ஸ்துவே யிறே ப்ராப்யம்‌’ என்றும்‌, நாச்சியார்‌ திருமொழி! வ்யாக்யாநத்தில்‌, (5-11) – ‘(நமோ நாராயணைய என்பாரே) ‘நமோ நாராயணய வென்று பல்லாண்டும்‌ பரமாத்மாவைச் சூழ்ந்திருந்தேத்துவர்‌ பல்லாண்டு’ என்றிறே தமப்பனார் வார்த்தை– இக் குடிக்காக வுள்ளதோர்‌ ஆசையிறேயிது-அதுவே பலமாகப் பெறுவரென்று நல்லாண்டென்று நவின்று, பல்லாண்டென்றுரைப்பார்‌- நமோ நாராயணாய வென்று பல்லாண்டு மேத்துவரிறே. தத்‌ க்ரது ந்யாயத்தாலே பேறாகையாலே காதாசித்கமாகை தவிருகையே உள்ளது -ப்ராப்ய பூமியிலே புக்கிருந்து இப் பாசுரம்‌ சொல்லி அநுபவிக்கப் பெறுவர்‌” என்றும்‌, மற்றும்‌. பல விடங்களிலும்‌ பெரியவாச்சான் பிள்ளை அருளிச்‌ செய்தார்‌.

கீழ்‌ “சமயங்கள்‌ கண்டானவை காப்பான்‌* என்கிற விடத்தில்‌, கர்ப்பிதமான ஸம்ஸாராபத்‌,ரக்ஷகத்வத்தை விவரிக்கிறார்‌ – (4-திருவந்தாதி-88) (உயிர் கொண்டு உடலொழிய வித்யாதி) ஆத்மா ஸரீரத்தைப் பொகட்டு ப்ராணனைக் கொண்டு யம படராலே ப்ரேரிதனாய்ப் போம்‌ போது ஆஸ்ரிதரானவர்களை ஆளிட்டந்தி தொழாதே தானே விரைந்து சென்று அவர்கள்‌ தர்ஸநத்தால் வந்த அறிவு கேடு முதவான ‘துரிதமென்று பேர் பெற்றவை யெல்லா வற்றையும்‌ போக்கும்‌ ஸ்வபாவனா னவனுடைய குண சேஷ்டிதாதிகளுக்கு வாசகமான திரு நாமங்களை ப்ரீதி பரவஸராய்க்‌ கொண்டு சொல்லி இவர் ஸ்வ ரக்ஷணத்துக் குடலாகச் செய்யக்‌ கடவதொரு ப்ரவருத்தி யில்லாதபடி ஸ்வருப பாரதந்த்ரயத்தை அநுஸந்தித்து எம்பருமானே நிர்வாஹகனென்று அவன் தலையிலே ஸர்வ பரத்தையும்‌ பொகட்டு தத் குண அநுபவம்‌ பண்ணி வாழுமவர்களே பழுதற வாழுமவர்கள்‌-அந்ய ஸா பேஷமாகையாலே அதி ஷூத்‌ரமாய்‌ ப்ரதி புருஷம்‌ தத் தத் ருசி அனுகுணமாக வியவஸ்திதமாய் துக்க ஹேதுவான அஹங்கார மமகார கர்ப்பமாகையாலே பந்தகமுமாய் இருக்கிற கர்மாத்‌,யுபாய விஸேஷங்களைப் பற்றி நிற்கிறவர்களுடைய வாழ்வாமாகில்‌ நிஷ் ப்ரயோஜநமாயிருக்கும்‌- அந்வய வ்யதிரேகங்களாலே இவற்றுக்கு உபாயத்வம்‌ முதவிலே யில்லை யென்று உள்ள படி உணர்ந்திருக்கும்‌. ஜ்ஞாநிநாமக்‌ரேஸரராகையாலே (பந்தனையார்‌ வாழ்வேல் பழுது) என்று அவற்றிலொரு சரக்கற அருளிச் செய்கிறார்‌’ என்று பெரிய ஜீயர் ஸ்ரீ பாதத்தில்‌ பிள்ளை அருளிச் செய்தார்‌. அர்த்தபஞ்சகத்தில்‌, ‘கேவவனாவான்‌. – தனி யிடத்திலே’ என்று தொடங்கி, ஆத்மாநுபவ மாத்ரத்தையே புருஷார்த்‌தமாக அநுபவித்து பின்பு ஸம்ஸார ஸம்பந்தமும்‌ பகவத் ப்ராப்தியுமற்று யாவதாத்மபாவி அஸரீரியாய்க் கொண்டு திரிவான் ஓருவன்‌‘ என்று பிள்ளை லோகாசார்யர்‌ அருளிச்‌ செய்தார் –

இதி ஸித்‌தாந்தம்

அத, பூர்வபக்ஷ-: புநரபி பர ப்ராப்தி கதநம்‌.

ரஹஸ்ய த்ரய ஸாரத்திலே, இருபத்தொன்பதாமதிகாரத்திலே. -பஞ்சாக்‌நி வித்யாதிகளில் சொன்ன ப்‌ரஹ்மாத்மக ஸ்வாத்மாநுபவம்‌ பண்ணுவார்க்கு பாஷ்யாதிகளிலே அர்ச்சிராதிகதியும்‌ ப்‌ரஹ்ம ப்ராப்தியும்‌ சொல்லப் பட்டது- ஆகையால்‌ இப் பஞ்சாக்‌நி வித்யா நிஷ்டர்க்கு ஆத்ம மாத்ராநுபவ ரூபமான அவாந்தர பலம்‌ வந்தாலும் மது வித்‌யா ந்யாயத்தாலே ப்‌ரஹ்ம ப்ராப்தி பர்யந்தமாய்‌ விடும்‌ என்றும்‌. –ஜிஜ்ஞாஸுர் லபதே பக்திம்‌- என்கையாலே ஸ்ரீ கீதையில் ‘ஜிஜ்ஞாஸு: என்கிற ஆத்ம நிஷ்டனும்‌ கிரமேண ஜ்ஞாநியாமென்று உக்தமாயிற்று’ என்றும்‌ கீதா தாத்பர்ய சந்த்‌ரிகையில்‌, ‘ஆத்ம யாதாம்ய நிஷ்டாநாம்‌’ என்று தொடங்கி, ‘அந்ததோ ப்‌ரஹ்ம ப்ராப்த- ஈத்‌ருஸ பர்வ க்ரம ப்ரதி நியமம்ச ப்ராசீநாபேஷயா ருசி பேதாத்‌‘ என்றும்‌. “ஸ்வாத்மாநுபவ-. ஸ்தாநாத்‌ ப்ரச்யுதஸ்ய பரம வ்யோமாதி ரோஹஸ்யாத்‌। அர்ச்சிராதிகதிஸ் ச அவாந்தர பலாநுபவாத் பஸ்சாத்‌, வா. கதி மத்‌யே வா அவாந்தர பலாநுபவ.” என்றும்‌. சொல்லப் பட்டது.

இதி பூர்வ பக்ஷ க்ரந்த.

அத, ஸித்‌தாந்த. அஸ்மாந் ந பரம புருஷ ப்ராப்தி:

பஞ்சாக்னி வித்யா நிஷ்டனுக்கு பாஷ்யாதி களிலே அர்ச்சிராதிகதியும்‌, ப்‌ரகக்ருதி வியுக்த ப்‌ரஹ்மாத்மக ஸ்வாத்ம ப்ராப்தியும்‌ பாஷ்யகாரர்‌ அருளிச் செய்கையாலே அர்ச்சிராதி கதிக்கு பூர்வமும்‌ கதிமத்‌யத்திலும்‌ ப்ரக்ருதி வியுக்த ப்ரஹ்மாத்மக ஸ்வாத்ம ப்ராப்தி யில்லை யாகையாலே ஆத்மாநுபவ அந்தத்தில்‌. ப்‌ரஹ்ம ப்ராப்தி என்கை கூடாது. ‘கைவல்யம்‌ முக்தி! என்கிற விடத்தில்‌, மது வித்‌யையில் நித்யா நித்யோபாஸந மாகையாலும்‌ பர்வ க்ரம நியமம்‌ கூடும்‌, இங்கு நித்யோபாஸநமாகையாலே பர்வ க்ரம நியமாபேஷை அவனுக்கு இல்லாமையை, ‘ஜிஜ்ஞாஸு- ப்ரக்ருதி வியுக்தாத்‌ம ஸ்வரூபாவாப்தீச்சு,.’ என்று பாஷ்யகாரர்‌ அருளிச் செய்கையாலும்‌ அது கூடாதென்று சொல்லப்பட்டது. “ஜிஜ்ஞாஸாுர் லபதே பக்திம்‌* என்கிற ஜிஜ்ஞாஸுவும்‌, ‘முச்யேதார்த்த ததராரோகாத்‌‘ என்று சொல்லப்பட்ட (ஆர்த்தன் ) ப்‌ரஷ்டைஸ்வர்ய காமனன்றிக்கே, “ஆரோக்யம்‌ பாஸ்கராதிச்‌சேத் என்று சொல்லப்பட்ட ரோகார்த்தன் ஆகிறாப் போலே. கைவல்யார்த்தி யன்றிக்கே, ஈஸ்வராத்‌ ஜஞாநமந் விச்சேத் ! என்கிற விடத்திற் சொன்ன ஜ்ஞாநாந் வேஷியே. ‘பக்தி்ஸ் ச ஞாந விஸேஷ என்கிறபடியே பக்தியும்‌ ஜ்ஞாந விஸேஷமிறே. ஆகையாலே, ஆர்த்தோ ஜிஜ்ஞாஸு என்று சொல்வப்பட்ட ஜிஜ்ஞாஸு க்ரமேண ஜ்ஞாநி யாவான் என்றும்‌ சொன்னோம்‌- யாவதாத்ம பாவி ஸ்வாத்மாநு பவமே பண்ணுமிடத்துக்கு ஆழ்வார்கள்‌ முதலான ஆசார்யர்கள்‌ திவ்ய ஸுக்திகளும்‌ காட்டினோம்‌.

இதி ஸித்தாந்தம்

———————–

அத, பூர்வபக்ஷம் -தத் அண்டாந்தர் பாவ ப்ரமிதி வசநம்‌ கேவல கதே.

ரஹஸ்ய த்ரய ஸாரத்திவே இருபத்தொன் பதாமதிகாரத்திலே, “யோகிநாமம்ருதம்‌ ஸ்தாநம்‌ என்று இவ் வாத்மாநுபவ ஸ்தாந விஸேஷமும்‌ சொல்லப் பட்டது. இஸ்தாந விஸேஷம்‌ பரமபதமன்று என்னுமிடம்‌ இப்ரகரணந் தன்னிலே, “ஏகாந்தி-நஸ் ஸதா ப்‌ரஹ்ம த்‌யாயிநோ யோகிநோ ஹி யே தேஷாம்‌ தத் பரமம்‌ ஸ்தாநம்‌ யத்‌வை பஸ்யந்தி ஸூரயட்-என்று பகவத் ப்ராப்தி காமனான பரமைகாந்திக்கு ஸூரி த்‌ருஸ்யமாண ஸ்தாநாந்தரம்‌ சொல்லுகையாலே ஸித்‌தம்‌’ என்றும்‌ தாத்பர்ய சந்த்‌ரிகையிலே,’ஸமரந்தி ச ஸ்வாத்மாநுப ஸ்தாநம்‌ முக்தஸ்தாநா தர்வாசீநம்‌”யோகி நாமம்ருதம்‌ ஸ்தாநம்‌ ஸ்வாத்ம ஸந்தோஷ காரிணாம்‌ இதி என்றும்‌ சொல்லப்பட்டது
இதி பூரவபக்ஷ க்ரந்த,.

அத, ஸித்தாந்த–ஊர்த்வம்‌ ப்ரக்ருத்யா

ஆத்மானுபவ காமஸ்து பகவதோ போக்யத்வம் பரித்யஜ்ய ஸ்வாத்மாநுப ப்ரதிபந்தக ப்ரக்ருதி வித்‌வம்ஸநோபயோகி தயா பாவநத்வ மாத்ரம்‌ அநுஸந்தாய தேநைவ நிரஸ்த ஸமஸ்த ப்‌ரதிபந்தக பரமபத ப்ரவேஸ பூர்வகம்‌ ஆத்மகதா திஸயிதாநுகூல்ய விஸேஷம்‌ உபாஸநாநுகுணம்‌ அநுபவந்‌ அநாக்ராத பகவத்‌ போக்‌யதாநுப வர்த்ததே! அத கைவவ்யார்த்தி ந ப்ரக்ருதி வியுக்தாத்ம ஸ்வரூபாநுபவ ப்ரக்ருதி மண்டலாதிக்ர மண மந்தரேண ந கடதே இதி தஸ்யாநுபவ ஸ்தாநம்‌ பரமபதமிதி கம்யதே | தேஸ விஸேஷ ப்ரவேஸே ஸத்யபி ஆவிர்பூதாஸங்குசித ஞ்ஞாந தயா பகவத் ஸ்வரூப ஸாக்ஷாத்காரே ஸத்யபி உபாஸநாநுகுணம்‌ ஸர்வேஸ்வர ஸ்வ போக்யத்வ விஷயம்‌ ஜ்ஞாநம்‌ ஸங்கோசயதி | உபாஸநாநுரூப பல ப்ரஸாதக பகவத்‌ ஸங்கல்ப ஏவாத்ர ஸங்கோசக! யதப்யுக்கம்‌ ‘அநந்ய ப்ரயோஜநைக லப்‌யதே ஸ விஸேஷ ப்ரவேஸ ப்ரயோஜநாந்தர நிஷ்டஸ்வ கதமுபபத்‌யதே இதி – ததப்ய வ்ருத்‌தம்‌ | விரஜோத்தரணாநந்தரம்‌ பரமாகாஸ ஸப்‌த வாஸ்யே திவ்ய ஜநபத திவ்ய நகர வ்யதிரிக்த ப்ரதேஸே கேவலாநாம்‌ அவ. ஸ்தாநம்‌ ந து திவ்ய ஜந பத திவ்ய நகர ப்ரவேஸ இத்யப்‌யுபகமாத்‌ | ப்ரக்ருதி மண்டலா தூரீத்‌வம்‌ ஸ்ரீ வைகுண்ட தர்வாக்‌ பரமாகாஸ ஸப்‌த வாச்யே தேஸ விஸேஷே கேவலாநாம்‌ அநுபவ ஸ்தாநமிதி ப்ரதிபாதிதம்‌ பவதி | பாத்‌மே புராணேப்யேதத்‌ ஸ்பஷ்டமுக்தம் பவதி | *விரஜா பரமவ்யோம்நோ ரந்தரா கேவவம்‌ ஸ்ம்ருதம்‌ | தத்ஸ்தாந முப போக்தவ்யா மவ்யக்தம்‌ ப்‌ரஹ்ம ஸேவிபி,.” இதி | *முக்தாநாம்‌ பரமா கதி.” இத்யேதத்‌ வ்யாக்‌யாநாவஸரே ஸ்ரீ பராஸர பட்டர் மிஸ்ரைரபி ஏவமுக்தம்‌ – ‘பரமேதி விஸேஷணேந -முக்தாநா மேவ கேஷாஞ்சித் அர்வாசீநா கதிர் கம்யதே க்ருஹ்யதே ச நிர்முக்த ஜரா மரணாத்‌மக கைவல்ய லஷணா “ஜரா மரண மோக்ஷாய மாமாஸ்ரித்ய யதந்தி யே* இதி. ஸம்ஸார பரமபதயோர் மத்‌யே தேஷாம்‌ ஸ்தாநம்‌ ச யோகிநாம்‌ அம்ருதம்‌ ஸ்தாநம்‌ ஸ்வாத்ம ஸந்தோஷ காரிணாம்‌* இதி’ இதி அர்ச்சிராதி,மார்க்க கமந மப்யஸ்ய கேவலஸ் யாஸ்தி, | ஸ்ரீ பகவத்‌ கீதா பாஷ்யே பகவாந் பாஷ்யகாரோபி ஏவமாஹ ‘அத, ஆத்ம யாதாத்ம்ய வித பரம புருஷ நிஷ்டஸ்ய ஸாதாரணீம்‌ அர்ச்சிராதி காம்‌ கதிமாஹ – தவயோரப் யர்‌ச்‌சிராதி கதி ‘ஸரூயதே’ இத்யாதி,நா (‘ஸ்ருதெவ் ஸ்ருத்யா இத்யாதி நா’ என்று ஒரு ஸ்ரீ கோஸத்தில்‌ காண்கிறது ]. “தத்ய இத்தம் விதுயே சேமேரண்யே ஸ்ரத்‌தா தப இத்யுபாஸதே தேர்ச்சிஷமபி ஸம்ப வந்தி” இதி ஹி ஸ்ருதி *ப்ராஜா பத்யம்‌ க்ருஹஸ்தாநாம்‌ ப்‌ராஹ்மம்‌ ஸந்யாஸிநாம்‌ ஸ்ம்ருதம்‌. [ந்யாஸிநாம்‌ ப்‌ரஹ்ம ஸம்ஜ்ஜிதம்‌ – பார – இதி கேவலாஸ்ரம தர்மாநுவர்த்திநாம்‌ ஜஸ்வர்யார்த்திநாம்‌ ப்ரப்ய தயா ப்‌ரஹ்ம லோக பர்யந்தாநபிதாய, “யோகி நாமம்ருதம்‌ ஸ்தாநம்‌ ஸ்வாத்ம ஸந்தோஷ காரிணாம்‌” இத்யாதி சதுர்முககாதி ஸ்தாந வ்யாவ்ருத்தம்‌ ஸுஸ்திரம்‌ ஸ்தாநம்‌ கைவல்யார்த்திநாம்‌ ப்ராப்ய தயா ப்ரதிபாத்‌ய அநந்தரம்‌, ஏகாந்திந ஸதா ப்‌ரஹ்ம த்‌யாயிநோ யோகிநோ ஹி யே தேஷாம்‌ தத்‌ பரமம்‌ ஸ்தாநம்‌ யத்‌ வை பஸ்யந்தி ஸூரய-இதி பகவச் சரணார்த்திநாம்‌ நித்ய ஸூரி நிஷேவணீயம்‌ ஸ்ரீ வைகுண்டாதி ஸப்‌த வாச்யம்‌ பரமம்‌ ஸ்தாநம்‌ ப்ராப்ய தயா பகவதா பராஸரேண ஹி உக்தம்‌- என்று கைவல்ய தத் ஸ்தாநாதிகளை ப்ரமாண உபபத்திகளாலே நம்முடைய நயினார்‌ நிரணயித்தருளினார்‌-

இதி ஸித்‌தாந்த:

———-

அத, பூர்வ பக்ஷ- ப்ரபத்தேர் தெவ்ர் பல்யம்‌.

(இந்த உக்தி – ஸாப்‌தமாதல்‌ ஆர்த்த மாதாவாகக் கடவது-ஸாப்‌தமான போது வல்லவர்கள்‌ இருக்கற விடம்‌ பார்த்துக்‌ கண்ட விடங்களிலே ஸங்க்ரஹித்துக் கொள்வது.)
“இதி பூர்வபக்ஷ க்ரந்த-

அத- ஸித்‌தாந்த ப்ராபல்யம்‌ ஹி ப்ரபத்தே

இப்போது பிரதிபத்திக்கு தவ்ர்பல்யம் துஸ் ஸகத்வ ஸ்வரூப விரோதித்வ. விலம்ப்‌ய பல ப்ரதத்வ அதி க்ருதாதிகாரத்வாதி தோஷங்களில்லாமையாலே அவற்றால் தவர்பல்யம் சொல்ல வொண்ணாது- ப்ரகாராந்தரேண தெளர்‌பல்யம்‌ சொல்லுமதுவும்‌- “தஸ்மாத்‌ ந்யாஸ மேஷாம் தபஸாம் அதிரிக்தமாஹு -என்கிற ஸ்ருதி வ்ருத்தம் -ஸக்தாநாம் பக்தியோக ப்ரபதந விஷய ஸக்தி ஹீந அதிகாரி -என்கையாலே ஆர்த்தமாக ப்ரபத்திக்கு தவ்ர்பல்ய முக்தமென்ற பக்ஷத்திலும் பக்தி ப்ரபத்திகளுடைய சக்தாஸக்தாதிகாரத்வ நிராகரணத்தாலே அதுவும் நிராக்ருதம் -ஆகையால் பிரபத்திக்கு தவ்ர் பல்யம் ஒருபடியாலும் சொல்ல ஒண்ணாது ஸரணாகதி கத்ய வ்யாக்‌யாநாவதாரிகையில்‌- “ஆனால்‌ இவ் வுபாயம்‌ வேதாந்த ஸித்‌தமன்றோ வென்னில்‌, யாஜ்ஜிகீயமான உபநிஷத்திலே “ஸத்யம்‌ தபோ தம ஸம தாநம்‌ தர்ம ப்ரஜநநம்‌ அக்நய அக்நி ஹோத்ரம்‌ யஜ்ஜோ மாநஸம்‌* என்று ஒன்றுக்கொன்று உத்க்ருஷ்டமாகச்‌ சொல்லிப்‌ போந்து எல்லாவற்றுக்கும்‌ மேலாக “தஸ்மாத்‌ ந்யாஸமேஷாம்‌ தபஸாம்‌ அதிரிக்தமாஹு- என்று ‘தபஸ்‌ஸுகளில்‌ வைத்துக் கொண்டு அதிரிக்தமாண தபஸ்ஸூ ப்ரபத்தி என்று இதினுடைய உத்கர்ஷம்‌ சொல்லிற்று- அதுக்கு மேலே “தர்மஜ்ஞ ஸமய; ப்ரமாணம்‌ வேதாஸ் ச” என்று ப்ரபல ப்ரமாணமான ஆசார்ய ருசி பரி க்ரூஹீதத்வாமாகிற ஏற்றமும்‌ இதுக்கு உண்டு. ‘வேதாஸ் ச ‘ என்று வேதமும்‌ அப்ரதாந ப்ரமாணமாம்படி யிறே வைதிக பரிக்‌ரஹத்தின்‌ ப்ராமாண்யாதி ஸயமிருப்பது. அளவுடையராயிருப்பாரக்கு இதுவே போருமாயிற்று ப்ராமாணயத்துக்கு-

இது தான் அளவில்லாதார்க்கு வேதாந்த ஸித்தமுமாய் யிருக்கும்‌. ஆக இப்படி வேதாந்த ஸித்‌தமுமாய்‌- ஸ்வரூப ப்ராப்தமுமாய் ஆச்சார்ய ருசி பரிக்ரூஹிதமுமாய்‌, சரண்ய ஹ்ருதய அநு சாரியுமாய் இருக்கையாலே அதிலும் இதுவே அநுஷ்டேயம் என்னுமிடத்தைத் தம்மை விஸ்வஸித்திருக்‌கும்‌ ஸாத்விகர்‌ இழக்க வொண்ணாதென்று பார்த்துத் தாமும்‌ பெரிய பெருமாளும்‌ அறிந்ததாக அநுஸந்தித்தவிடம்‌ அமைந்திருக்க, தம்முடைய பரம க்ருபையாலே கத்ய ரூபேண வெளியிடுகிறார்‌ என்றும்‌. ‘வேதாந்தங்களிலே மஹா பதமாகச்‌ சொல்லுகிற பக்தியைக்‌ காட்டிஸ்‌ இப்ரபத்திக்கு ஏற்றமென்னென்னில்‌, அது அதி க்ருதாதிகாரமுமாய்‌, விளம்ப்‌ய பல ப்ரதமுமாய்‌, ப்ரமாத ஸம்பாவனை யுள்ளதுமாய்‌, ஸாத்‌யமுமாய்‌, ஸவரூப அநநுரூபமுமாய்‌ ப்ராப்யத்‌துக்கு விஸத்‌ருஸ முமாயிருக்கும்‌. இதுவோ வென்றால்‌ இதுக்கு எதிர்த்தட்டாம்படி ஸர்வாதிகாரமுமாய்‌, ஸூகரமுமாய்‌, அவிளம்ப்‌ய பல ப்ரதமுமாய்‌, ப்ரமாத ஸம்பாவனையுமின்‌றிக்கே ஸித்‌தமுமாய்‌, ப்ராப்யத்துக்கு ஸத்‌ருஸ முமாயிருக்‌கும்‌ என்றும்‌ பெரியவாச்சான்‌ பிள்ளை அருளிச்‌ செய்தார்‌-

இதி ஸித்தாந்த –

அத, பூர்வபக்ஷ –ஸக்தாநாம்‌ பக்தி யோக ப்ரபதந விஷய। ஸக்தி ஹிநாதி,கார:

ரஹஸ்ய த்ரய ஸாரத்திலே இருபத்தொன்பதாமதிகாரத்திலே-வ்யாஸாதிகள்‌ அதிகாரி புருஷர்களாகையாலே விளம்ப. க்ஷமருமாய்‌, உபாயாந்தர ஸக்தருமா யிருப்பார்களாகையால்‌ உபாஸநத்தில்‌ இழிந்தார்களல்லது ஜ்ஞாந மாந்த்‌யமாதல் ,
விஸ்வாஸ மாந்த்யமாதல் உண்டாய் யிழிந்தார்களன்று-
என்றும்‌- இருபத்து நாலாமதிகாரத்திலே- ஆதுராதிகளுக்கு அவகாஹநாதிகள் போலே ஆகிஞ்சன்ய அநந்யகதி என்றிருக்கும்‌ அதிகாரிக்கு ஸ்வாதிகார விருத்‌தங்களென்ன ப்ராப்தம்‌. இவ்வதிகார விரோதமறியாதே, உபாஸநாதிகளில்‌ பரவர்த்திக்குமவனைப் பற்ற,”நரஸ்ய புத்தி தவ்ர்பால்யாத் உபாயாந்தர மிஷ்யதே –என்றது ஆகையால்‌ இவ் வுபாஸநாதிகளும்‌ அதிகாரயந்தரத்துக்கு யதாதிகாரம்‌ அநு குணங்கள்‌ அபிசாராதிகளை விதித்த கட்டளை யிலே ஸாஸ்த்ர ப்ரரோசநாதிகளில்‌ அபிஸந்தியாலே அதிகாரி விஸேஷேத்திலே உபாஸதநாதிகளை விதித்ததத்தனை யன்றோ’ என்றும்‌, ‘ ‘நரஸ்ய புத்‌தி தெவ்ர்பல்யா துபாயாந்தர மிஷ்யதே’ என்றுமிப்படி அதிகாரத்தில்‌ வரும்‌. கலக்கங்களை ஸமிப்பித்தோம்‌-என்றும்‌, (29-அ) “உபாயாந்தரத்தில்‌ ஸக்தி யில்லாத போது அகிஞ்சனனாய் ப்ரபத்திக்கு அதிகாரியாய்‌” என்றும்‌-அல்லாத போது உபாய விதாயக ஸாஸ்த்ரங்கள்‌ நிரர்த்தகங்களாம்‌-‘உபாயாந்தரத்தில்‌ அநுஷ்டாந ஸக்தி யில்வாதார்க்கும்‌” என்றும்‌, ‘உபாயாந்தரங்களிலஸ்‌. ஐ்ஞாநாபாவத்தாலே யாதல்‌- ஜஞாந முண்டாயிருக்க ஸக்த்யபாவத்தாலே யாதல்‌- ஸோகித்த அதிகாரியைப் பற்ற அவ் வுபாயங்களொன்றிலும்‌ நீ அலைய வேண்டா, அவை ‘தனித்தனியே தரும்‌ பலங்கள்‌ உனக்கெல்லாம்‌ ப்ரபத்தி வஸீக்ருதனான நான் ஓருவனுமே அமையுமென்று சொல்விற்‌றாயிற்று’ என்றும்‌, (24ம்‌ அதிகாரத்தில்‌) “அவற்றுக்கு. ஸாமர்த்‌ய மில்லாமை யாலாதல்‌ விளம்ப க்ஷமனல்லாமை யாலாதல்‌ இப் ரபத்தியை ஸ்வதந்த்ரோபாயமாகப் பற்றினவனை *செய்த வேள்வியன்‌” என்றும்‌, *க்ருதக்ருத்யன் ” என்றும்‌, உபாஸநாதிகளில்‌ ஸமர்த்தனல்வாதவனுக்கு ப்ரபத்தியை விதித்தாலும்‌ இப் ப்ரபத்தி தானே அவை கொடுக்கும்‌ பலத்தையும்‌ அவை தன்னையும்‌ கொடுக்க வற்றாம்‌ அகிஞ்சநனுக்கு உத்தாரகமாய்‌ அவனபேஷித்த காவத்திலே பலாவிநபாவத்தையும்‌ உடைத்தா யிருக்கையாலே அதிக-ப்ரபாவமா யிருக்கும்‌’ என்றும்‌ சொல்லப்பட்டது-

இதி பூர்வ பக்ஷ க்ரந்த-

அத, ஸித்‌தாந்த –பஜந விதி,ரஸெவ் புத்தி தவ்ர்பல்ய மூல; ந்யாஸ ஸர்வாதிகார:

வ்யாஸாதிகள்‌ உபாஸநத்திவிழிந்தது புத்தி தவ்ர்‌ பல்யத்தாலே என்னுமிடமும் பிராமாணிகம் -ஸகல ஆத்மாக்களுக்கும்‌ ஸேஷத்வ பாரதந்த்ர்ய ரூப ஸ்வாதிகார விருத்‌தமாகையாலே (அகிஞ்சநோநந்யகதி.) என்றிருக்குமதிகாரிக்கே அவிருத்‌தம் என்கை யுக்தம்‌- ஸகலாத்மாக்களுக்கும் வேஷத்வ பாரதந்தர்ய ரூப ஸ்வரூப விருத்‌தமென்றும்‌ அறிந்திறே நராணாம்‌” என்று சேதந ஸாமாந்ய வாசி ஸப்‌தத்தாலே உத்‌தேஸித்து “புத்‌தி தெவ்ர்பல்யா துபாயாந்தர மிஷ்யதே” என்று உபாஸகனுக்கு புத்தி தெளர்‌பல்யத்தை ஹேதுவாக விதித்தது. ஆகையால்‌ அகிஞ்சந வ்யதிரிக்தாதிகாரிக்கு அநு குணம் என்ன வொண்ணாது-‘கலக்கங்கள் ஸமிப்பித்தோம்‌’ என்கிறதும்‌ ஸ்வ வசந வ்யாஹதம்‌- வ்யாஸாதிகள் உபாயாந்தர நிஷ்டரானது ஜ்ஞாந மாந்த்‌யாதி மூலம் என்னுமிடத்தை ஆழ்வார்‌களும்‌. ஆசார்யர்களும்‌ அருளிச் செய்தார்கள்‌. “ஓராயிரம்‌ என்கிற திருவாய்மொழியில்‌ மூன்றாம்‌ பாட்டிலே – (அறிந்தனரெல்லாம்‌) மற்றுடம் அறிந்தாராயிருக்கிற பராசர வ்யாஸ வால்மீகி ப்ரப்‌ருதி ருஷிகளும்‌- (அரியை வணங்கி) ஸர்வ துக்க நிவர்த்தகரை வணங்கி – ஆஸ்ரயித்து, (அறிந்தனர்‌ நோய்களறுக்கும்‌ மருந்தே) ஸம்ஸார துரித பேஷஜம் என்னும் இவ்வளவே வறிந்தார்கள் – “ஸம்ஸார ஸர்ப்ப ஸந்தஷ்ட நஷ்டா. சேஷ்டைக பேஷஜம்‌”அவனுடைய போக்யதையில் இழிந்திலர்கள்‌- அவனுடைய நிரபேக்ஷேபாய பாவத்தில்‌ இழிந்திலர்கள்‌” என்றும்‌. கண்ணி நுண் சிறுத் தாம்பு வ்யாக்‌யாந ப்ரவேஸத்திலே த்ரை குண்ய விஷயா வேத்‌ என்கிற வேத மர்யாதையிலே நின்றார்கள்‌ ருஷிகள்‌ என்று தொடங்கி இத்தை உபபாதித்துக் கொண்டு போய்‌, “இந்த ருஷிகளிற் காட்டில்‌ ஆழ்வார்களுக்கு நெடு வாசி யுண்டு’ என்றும்‌,
ஆசார்ய ஹ்ருதய வ்யாக்யாநத்திலே(முனிவரை இத்யாதி.) (முனிவரை இடுக்கியும்‌ முந் நீர் வண்ணனாயும்‌ வெளியிட்ட ஸாஸ்த்ர தாத்பர்யங்களுக்கு விஸிஷ்ட நிஷ்க்ருஷ்ட வேஷங்கள் விஷயம் -1-17- அதாவது – *இருள்கள் கடியும்‌ முனிவர்‌” என்கிற. ஸ்மர்த்தாக்களான வ்யாஸாதி ருஷிகளை..யிட்டு வெளியிட்ட சாஸ்தரத்துக்கு சேதனருடைய தேக விசிஷ்ட வேஷம் விஷயம்-ஸ்ரீ பதரி ஹாஸ்ரமத்திலே ஸ்வேன ரூபேண நின்று வெளி இட்ட சாஸ்திர தாத் பர்யமான திரு மந்த்ரத்துக்கு சேதனருடைய நிஷ்க்ருஷ்ட வேஷம் விஷயம் என்கை என்றும்
சாஸ்திரிகள் தெப்பக் கரையரை போலே இரண்டையும் இடுக்கி பிறவிக் கடலை நீந்த சாரஜ்ஞர் விட்டத்தில் இருப்பாரைப் போலே இரு கையும் விட்டு கரை குறுகும் காலம் எண்ணுவார்கள்-சூரணை1–19-ஆறு நீஞ்சுவார் தெப்பத்தை ஒரு கையிலே இடுக்கி தாங்களும் ஒரு கை துழாவுமா போலே-ஸ்வ யத்னமும் தத் சாத்திய பகவத் கிருபையும் ஆகிய உபயத்தையும் அவலம்பித்து கொண்டு -பிறவி கடல் நீந்துவார்க்கே -திருவாய் -2-8-1–என்கிற படியே சம்சார சாகரத்தை கடக்க தேட-ஸ்வ யத்ன நிஷேத பூர்வகமாக ஆத்மாவின் பகவத் ஏக உபாயத்தை பிரதி பாதிக்கிற சாஸ்திர சாரமான திரு மந்த்ரஜ்ஞர் ஆனவர்கள் ஓடம் ஏறினவர்கள் தீரகமனார்தமான ஸ்வ யத்னத்தையும் தெப்பத்தையும் கை விட்டு -கரை குறுவது எப்போது -என்று பார்த்து கொண்டு அதன் விட்டத்திலே இருக்குமா போலே-சம்சார ஆர்ணவ மக்நாநாம் விஷயாக்ராந்த சேதஸாம் விஷ்ணு போதம் விநாநாந்யத் கிஞ்சித் அஸ்தி பாராயணம் –ஸ்ரீ விஷ்ணு தர்மம்-என்கிற படியே-அக்கரையும் இக்கரையும் ஊடுருவ நின்று சம்சார சமுத்ரத்தை கடத்தும்-வைகுந்தன் என்பதோர் தோணியை-நாச்சியார் -5–4– சம்சார நிஸ்தாரமாகப் பற்றி-தத் ஞான சக்தியாதி அனுசந்தானத்தாலும் ஸ்வ பாரதந்த்ர்யாதி அனுசந்தானத்தாலும் நிர் பரர் ஆகையாலே இரண்டு கையும் விடுமா போலே-ஸ்வ யத்ன ரூப உபாசனாதியையும்-தத் சாத்திய பகவத் கிருபையையும்-அவலம்பிக்கையை விட்டு கேவல பகவத் கிருபையே உத்தாரகம் என்று அத்யவசித்து-கூவிக் கொள்ளும் காலம் இன்னும் குறுகாதோ -திருவாய் -6–9–9 -என்றும்-ஆக்கை விடும் பொழுது எண்ணே–திருவாய் -1–2–9-என்று சொல்லுகிற படியே பகவத் பிராப்தி ஆகிய கரையை குறுகைக்கு ஈடான கால சிந்தனை பண்ணா நிற்பார்கள் என்கை-என்றும்
இவை-ஸ்வரூபத்தை உணர்ந்து உணர்ந்து உணரவும் உணர்வைப் பெற ஊர மிக உணரவும் உண்டாம்-சூரணை-1-20-இத்தால் இவர்கள் உடைய ஸ்வரூப ஜ்ஞான ஆகார தார தம்யமே-கீழ் சொன்ன ஆகாரங்கள் இவர்களுக்கு உண்டாகுகைக்கு ஹேது என்றது ஆயிற்று-என்றும்

முளைத்து எழுந்த ஸூர்ய துல்ய யாதாத்ம்ய சரமம் விதியில் காணும் பிரதம மத்யம தசைகளை பகல் விளக்கும் மின்மினியும் ஆக்கும்-சூரணை -23 –ஆழ்வார்கள் பகவத் ப்ரஸாதத்தாலே பெற்ற பாரதந்தர்ய போக்யதைகள்‌ ஸூர்ய துல்ய யாதாத்ம்ய சரமமாகிறன -ருஷிகள் ஸாஸ்த்ரத்தாலே பெற்ற ஸேக்ஷத்வ போக்த்ருத்வங்கள்‌ (விதியிற் காணும்‌) ப்ரதம மத்‌யம தஸைகள் ஆகிறன-மண்டினாரும் மற்றையாரும் ஆஸ்ரயம்- சூரணை -28 –அதாவது-கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று மண்டினார்-திருக் குறும் தாண்டகம் -19–என்று உகந்து அருளின நிலங்களிலே அத்ய அபிநிவிஷ்டராய் இருக்கிற பிர பின்னர் கைங்கர்யத்துக்கு ஆஸ்ரயம்-விளக்கினை விதியின் காண்பார் மெய்மையைக் காண்கிற்பாரே -திருக் குறும் தாண்டகம்-18–என்று கீழில் பாட்டில் சொன்ன மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யலாமே -திருக் குறும் தாண்டகம் -19—மற்றையரான–உபாசகர் கர்மத்துக்கு ஆஸ்ரயம் என்கை-என்றும் -மேலே பல ஸூத்ர வ்யாக்‌யாநங்களிலும்‌ பரக்க அருளிச் செய்தார்‌. திருநெடுந்தாண்டகத்திலே, *கல் எடுத்து” என்கிற பாட்டின் வ்யாக்யாநத்திலே ‘அஸக்தாதிகாரமிது, ஸக்தாதிகாரம்‌. ஸாதநாந்தரங்கள்‌ என்கிற வார்த்தை நம்‌ ஆசார்யர்கள்‌ கோஷ்டியிலே புகுரக் கடவதன்‌றியே யிறே யிருப்பது’ என்று பெரியவாச்சான் பிள்ளை நிஷ்கர்ஷித்தருளினார்‌.
பிள்ளை லோகாசார்யரும்‌ முழுக்ஷுப்படியிலே “கொண்டிப்‌ பசுவுக்குத்‌ தடி கட்டி விடுவாரைப் போலே அஹங்கார மமகாரங்களால்‌ வந்த களிப்பற்று ஸ்வரூப ஜ்ஞாநம்‌ பிறக்கைக்காக‘. என்று அருளிச் செய்தார்‌- பெரிய ஜீயர்‌ இதின் வ்யாக்யாநத்திலே ஆப்தனான வேத புருஷன் உபாயாந்தரங்களை விதித்தது பட்டி தின்று திரிகிற பசுவுக்கு வசப்படுகைக்கு என்றித்யாதி அருளிச் செய்தருளினர்‌-ஸ்ரீ வசந பூஷணத்திலே “வேதாந்தங்கள்‌ உபாயமாக, விதிக்கிறபடியென்‌? என்னில்‌- ஓளஷத ஸேவை பண்ணாதவர்களுக்கு அபிமத வஸ்துக்களிலே அத்தைக் கலசி இடுவாரைப் போலே ஈஸ்வரனைக் கலந்து விதிக்கிறதித்தனை – இத்தை ப்ரவரத்திப்பித்தது பர ஹிம்ஸையை, நிவர்த்திப்‌பிக்கைக்காக- இது தான் பூர்வ விஹித ஹிம்ஸை போலே விதி நிஷேதங்களிரண்டுக்கும்‌ குறை யில்லை. அத்தை ஸாஸ்த்ர விஸ்வாஸத்துக்காக விதித்தது. இத்தை ஸ்வரூப விஸ்வாஸத்துக்காக விதித்தது. அது தோல் புரையே போம்‌. இது, மர்ம ஸ்பர்ஸி ” என்று அருளிச் செய்தார்‌. ஆகையால்‌ ‘பக்தி ஸக்தாதிகாரம்‌, ப்ரபத்தி ஸக்தி ஹீநாதிகாரம்‌’ என்ன வொண்ணாது எண்றதாயிற்று-

இதி ஸத்தாந்தம்

———–

அத, பூர்வ பக்ஷ-ப்ரத்யேகோபாயதா ந ப்ரதி நியமவதாம்‌ கர்ம யோகாதிகாநாம்‌.

ரஹஸ்ய த்ரய ஸாரத்திலே – இருபத்தொன்பதாமதிகாரத்‌திலே “ஸர்வ தர்மாந்‌ பஹுவசநத்தாலே – ஸ பரிகரங்களாய்‌ நாநா ப்ரகாரங்களான உபாஸநங்களை யெல்லாம்‌ சொல்லுகையிலே தாத்பர்யம்‌.-புருஷோத்தமத்வ ஜ்ஞாநம்‌ ஸர்வ வித்‌யைகளுக்கும்‌ உபகாரகமான தத்த்வ ஜ்ஞாந மாத்ரமாகவும்‌, அவதார ரஹஸ்ய சிந்தநம்‌ அநுஷ்டிக்‌கிற உபாஸநாதிகளுடைய ஸீக்ர நிஷ்பத்தி ஹேதுவாகவும்‌ தேஸ வாஸாதிகள் உபாய விரோதி பாப க்ஷய ஹேதுக்களாய்க்‌ கொண்டு உபாய நிஷ்பாதகங்களாகவும்‌ ஸ்ரீகீதா பாஷ்யாதிகளிலே ஸமர்த்திககையாலே, இவற்றை ஸாக்ஷாந்‌ மோஷோபாயங்களாக்கி அங்கி பஹுத்வ விஷயமாந பஹு வசநத்தாலே விவக்ஷிக்கிறதென்கை யுசிதமன்று. நாநா ஸப்‌தாதி பேதாத்‌ என்கிறபடியே இவை யொழியவும்‌ ஸத்‌ வித்‌யா தஹர வித்‌யாதி பேதத்தாலே அங்கி பஹுத்வம்‌ கிடக்கையால்‌ இப்பஹு வசநம்‌ ஸார்த்தம்‌’ என்று சொல்லப் பட்டது.

இதி பூர்வபக்ஷி க்ரந்த-

அத, ஸித்‌தாந்த ததிதர ஸரணாந் யஸ்வ தந்த்ராணி நைவ

ஞான பக்த் யந்விதம்‌ கர்ம ஜநகாதிஷு த்ருஸ்யதே -கர்ம பக்த் யந்விதம்‌ ஜஞாநம்‌ ப்ராயேண பரதாதி ஷு கர்ம ஜ்ஞாநாந்விதா பக்தி ப்ரஹ்லாத ப்ரமுகாஸ்ரயா* என்று கர்மாதிகள்‌ ஸ்வதந்த்ரங்களாக ஸாஸ்த்ரோக்தங்களாகையாலும்‌, புருஷோத்தமத்வ ஜ்ஞாநாதிகள் ஸர்வ வித்‌யாஸாதாரணங்களானாலும்‌ ப்ரபத்தி போலே ஸ்வதந்த்ரமாகக்‌ குறையில்லாமையாலும்‌ இவற்றை ப்ரதாந மோக்ஷ ஸாதநமாக்கி பஹு வசநார்த்தமாகச்‌ சொல்லுகை உசித க்ரமம்‌. ஆகையிறே- ஸரணாகதி கத்‌ய வ்யாக்‌யாநத்திலே ‘(ஸர்வ தர்மாம்ஸ் ச ) ‘தர்மி ஸப்‌தத்தாலே உபாய ரூபமான கர்ம யோகாதிகளைச்‌ சொல்லுகிறது” என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தார்‌. ரஹஸ்யாம்ருதத்திலே ‘தர்மாந்‌ என்கிற பஹு வசநம்‌ கர்‌ம ஜ்ஞாந பக்தி ரூபத்தாலே- அவைதான்‌ மூன்று வகையாய்ப்‌ பவவாயிருக்குமென்கிறது. இவை மூன்றும்‌ தன்னில்‌ தான் ஸஹகாரிகளாய்க் கொண்டு தனித்தனியே புருஷார்த்தத்‌துக்கு ஸாதநமாயிருக்கும்‌. எங்ஙனே கண்டதென்னில்‌, ஜ்ஞாந பக்திகளோடே கூடின கர்மம்‌ ஐநகாதிகள்‌ பக்சகலிலும்‌, கர்ம பக்திகளோடே கூடின ஜ்ஞாநம்‌ ஆதி பரதாதிகள் பக்கலிலும்‌ கர்ம ஜ்ஞாநங்களோடே கூடின பக்தி ப்ரஹ்லாதாதிகள் பக்கலிலும்‌ காணப்பட்டது. அவ்வோ க்ரியைகளை ப்ரதாநமாக அநுஷ்டிக்கிற கர்த்தாக்களுடைய பேதத்தாலே மூன்றாகச் சொல்லப்பட்டது. ஆகையாலே யிறே பகவச் ஸாஸ்த்ரத்தில்‌ கர்மாத் யுபாயங்கள்‌ மூன்று, என்றும்‌; ப்ரபத்தி சதுர்த்தோபாயமென்றும்‌ சொல்லப்‌ படுகிறது.” என்று வாதி கேஸரி அழகிய மணவாளச் சீயர்‌ அருளிச் செய்தார்‌.
முழுஷுப்படி சரம ல்லோக ப்ரகரண வ்யாகயாநத்திலே, இனி மேல்‌ பஹுவசநார்த்தத்தை அருளிச் செய்கிறார்‌” என்று தொடங்கிப் பெரிய ஜீயர் அருளிச் செய்தவற்றையும்‌ கண்டு கொள்வது-

——————

இதி ஸித்தாந்த-

அத, பூர்வபக்ஷ-: ஸாத்‌யோபாயேந ஸித்தம் பவதி –

ரஹஸ்ய த்ரய ஸாரத்திவே-இருபத்து மூன்றாமதிகாரத்திலே”க்ருபா விஸிஷ்டனான ஈஸ்வரன் – க்ருஷ்ணம்‌ தர்மம்‌ ஸநாதநம்‌ என்கிறபடியே சித்தோபாயம் – இவனுக்கு ப்ரஸாதகங்களான பக்தி ப்ரபத்திகள்‌ ஸாத்‌யோபாயங்கள்‌” என்றும்‌, ரஹுஸ்ய ரத்நாவளீ ஹ்ருதயத்திலே ‘மோக்ஷோ-: பாயமான ஸாத்‌யோபாயம்‌ பக்தி யென்றும்‌ ப்ரபத்தி என்றும்‌ இரண்டுபடியாயிருக்கும்‌’ என்றும்‌ சொல்லப்‌ பட்டது. ஜ்ஞாந த்‌ரவ்யமும்‌ இதினுடைய ஸர்வ விஷய விகாஸத்துக்கு ஸ்வரூப யோக்‌யதா ரூபையான ஸக்தியும்‌. நித்யங்களாகையாவே அவற்றில்‌ ஆவிர்பாவ ஸப்‌தம்‌ முக்யமென்கிற உக்தியாலே மோக்ஷமும்‌ என்றதாய்த்து.. [இந்த பங்கதிக்கு ஆகரம்‌ காண வில்வலை )

இதி பூர்வபக்ஷ க்‌ரந்த:

அத, ஸித்‌தாந்த: ஸாத்‌,யோபாயேந ஸித்‌தம்‌ ந பவதி

ஆசார்ய ஹ்ருதயத்திலே “மற்றொன்று கண்ணணல்லாஸ்‌. என்கிற வைகல்‌ வாழ்தலான ஸித்‌தோபாயம்‌’ என்று, அழகிய மணவாளப் பெருமாள்‌ நாயனார்‌ அருளிச் செய்தார்‌. தத்‌ வ்யாக்யாநத்திலே – ‘*குற்றமில்‌ சீர்‌ கற்று வைகல்‌வாழ்தல் என்கிற யாவதாத்ம பாவியான குண அனுபவத்துக்கு உடவான ஸித்‌தோபாயத்தை’ என்றும்‌, **யாதுமில்லை மிக்கதனில் ” என்று தொடங்கி இவனை ஓழிய வேறு ஓன்றை ‘ரக்ஷகம்‌’ என்று பற்றினவர்கள்‌ பண்டு நின்ற நிலையும்‌ கெட்டு அநரத்தப் பட்டுப் போவர்கள்‌’ என்றும்‌ அருளிச்செய்தார்‌ பெரிய ஜீயர்‌-
நான்‌முகன் திருவந்தாதியிலே. திருமழிசைப் பிரான் “செயல்‌ தீரச்‌ சிந்தித்து வாழ்வாரே வாழ்வார்‌ சிறு சமயம் பந்தனையார்‌ வாழ்வேஸல் பழுது” என்று ஸ்வ ரக்ஷணத்துக்கு உடலாகச்‌ ‘செய்யக் கடவதொரு ப்ரவ்ருத்தி யில்லாதபடி ஸ்வரூப பாரதந்த்ர்யத்தை அநு ஸந்தித்து எம்பெருமானே நிரவாஹகன் என்று அவன் தலையிலே ஸர்வ பரத்தையும்‌ பொகட்டு தத் குணநுபவம்‌ பண்ணி வாழுமவர்களே பழுதற வாழுமவர்கள் அந்ய ஸாபேஷமாகையாலே. அதி ஷூத்‌ரமாய்‌ ப்ரதி புருஷம்‌ தத்தத்‌ ருச்யநு குணமாக வ்யவஸ்திதமாய்‌ துக்க ஹேதுவான அஹங்கார மமகார கர்ப்பமாகையாலே பந்தகமாயிருக்கிற கர்மாத்‌ யுபாய விஸேஷங்களைப் பற்றி நிறகிறவர்களுடைய வாழ்வாமாகில்‌ நிஷ் ப்ரயோஜநமாயிருக்கும்‌ என்று அருளிச் செய்கையாலே ஸாத்‌யோ பாயத்தாலே ஸித்‌த ப்ராப்தியிவ்லை என்றதாய்த்து

இதி ஸித்‌தாந்த:

———-

அத, பூர்வபஷ-

விஸத்‌ருஸம்‌ ப்ராய்யமென்கிறதுவும்‌. பூர்வபக்ஷ் க்‌ரந்தத்‌திலே ஸாப்‌தமாக வுண்டானால்‌ அவ்விடங்களிலே கண்டு. கொள்வது. “ஸாத்‌யோபாயேந ஸித்‌தம்‌ பவதி‘ என்கிறத்‌தாவே அது ஆர்த்தமாகில்‌, தந் நிராகரணத்தாவே இதுவும்‌ நிராக்ருதமென்று கொள்வது.

இதி பூர்வ பக்ஷ க்ரந்த,.

அத, ஸித்‌தாந்த: ஸத்‌ருஸம் ப்ராப்யம்‌.

ஸ்ரீ வசந பூஷணத்திலே ரத்நத்துக்குப்‌ பலகறை போலேயும்‌ ராஜ்யத்துக்கு எலுமிச்சம்பழம்‌ போவேயும்‌ பலத்துக்கு, ஸத்‌ருஸம் அன்று‘ என்று பிள்லை லோகாசார்யர் அருளிச்‌ செய்தார்‌. பெரிய ஜீயரும்‌ அதின்‌ வ்யாக் யாநத்திலே “பரமோதாரனான ஈஸ்வரன் இவன் பக்கல்‌ பக்தி மாத்ரமே பற்றாசாக பரம புருஷார்த்த லக்ஷண மோக்ஷத்தைக் கொடுத்‌தாலம்‌ பலத்துக்கு இது ஸத்‌ருஸ ஸாதநமன்று என்கை என்று அருளிச் செய்தார்‌. கத்ய வ்யாக்‌யாநத்திலே ‘பக்தி ப்ராப்யத்துக்கு விஸத்‌ருஸமாயிருக்கும்‌. இது அதுக்கு எதிர்த்தட்டாம்படி ப்ராப்யத்துக்கு ஸத்‌ருஸமமாயிருக்கும்‌’ என்று ஆச்சான் பிளளை அருளிச்‌ செய்தார்‌-

இதி ஸித்தாந்த.

———-

அத, பூர்வபஷ- அந்யேந சாந்யத்‌.

இதுவும் பூர்வ பக்ஷ க்ரந்தங்களிலே ஸாப்தமாய் உண்டான விடங்களிவே கண்டு கொள்வது. “ஸாத்‌யோபாயேந ஸித்‌தம்‌ பவதி’ என்கிறத்தாலே ஆர்த்தமாகில்‌, தந் நிராகரணத்‌தாலே ஏதந் நிராகரணமும்‌ ஸித்‌தம்‌-

இதி பூர்வபக்ஷ க்ரந்த.

அத, ஸித்‌தாந்த- அந்யேந நாந்யத்‌

அவன் திருவடிகளுக்கு அவன்‌ திருவடிகளே உபாயமென்று நம்மாழ்வார்‌ அருளிச் செய்தார்‌. “அஃதே உய்யப் புகுமாறு” என்றும்‌, “திருநாரணன் தாள் காலம்‌ பெறச் சிந்தித்து உய்ம்மினோ” என்றும்‌ அருளிச் செய்தாரிறே. “நான் சொன்னதுவே உஜ்ஜீவிக்கைக்கு உபாயமும்‌ உபேயமும்‌ என்று தத்‌ வ்யாக்‌யாதாக்களும்‌ அருளிச் செய்தார்கள்‌-
முழுஷுப்படியில்‌ த்வய ப்ரகரணத்திலே “சரணவ் ஸரணம்‌” என்கையாலே ப்ராப்யம் தானே ப்ராபகம்‌ என்கிறது‘ என்று பிள்ளை லோகாசார்யர்‌ அருளிச் செய்தார்‌. இந்த பக்ஷத்துக்கு பூர்வாசார்யர்களுடைய ஸ்ரீஸூக்திகள்‌ அபரிமிதங்களென்று விவேகிகள்‌ கண்டு கொள்வது
இதி ஸித்தாந்த-

———

அத பூர்வபக்ஷ தியாக, ஸித்‌த அநுவாத

ரஹஸ்ய த்ரய ஸாரத்திலே சரம ஸ்லோகாதிகாரத்திலே- “இவ்வநுவாதத்துக்கு அதிகாரி விஸேஷத்தைக் காட்டுகையே ப்ரயோஜநம்‌- அதில்‌, ‘பரி’ என்கிற உபஸர்க்கம்‌ அதிகார பவ்ஷ்கல்யத்தை விவக்ஷிக்கிறது.” *அநிதயம ஸூகம்‌ லோகமிமம்‌ ப்ராப்ய பஜஸ்வ. மாம்‌-என்கிற விடத்தில்‌ ‘ப்ராப்ய’ என்கிறது விதி யன்றிக்கே. ‘ப்ராப்ய வர்த்தமாநஸ் த்வம்‌’ என்று வ்யாகயாதமானாப் போலே இங்கு ‘பரித்யஜ்ய ஸ்திதஸ்த்வம்‌’ என்று விவக்ஷிதமாகக்‌ கடவது- இப்படி அர்த்தாந்தரங்களிலும்‌ ப்ரயோகம்‌ உண்டாகையாலே –த்வா-ஸ்ருதி மாத்ரத்தைக் கொண்டு த்யாகம்‌ அங்கமென்ன வொண்ணாது- என்றும்‌ “இங்கனன்றிக்கே கர்ம யோகம்‌ ஜ்ஞாந யோகம்‌, பக்தி யோகம்‌- என்கிற தர்மங்களினுடைய ஸ்வரூப த்யாகம்‌ ப்ரபத்திக்கு அங்கமென்னும்‌ பக்ஷத்தில்‌, ப்ரபத்தி ஸர்வாதிகாரமன்றிக்கே ஒழியும்‌- தர்மாநுஷ்டாந ஸக்தனுக்கு இறே அவற்றினுடைய தியாகத்தை விதிக்க வேண்டுவது- இது பஹு ப்ரமாண ஸித்‌தமான கார்ப்பண்யமாகிற அங்கத்‌துக்கும்‌ *புகலொன்‌றில்லா வடியேன் *, *குலங்களாய, குளித்து மூன்று” “ந தர்ம நிஷ்டோஸ்மி இத்யாதிகளிலே ப்ரஸித்‌தமான அகிஞ்சன அதிகாரம் என்கிற ஸம்ப்ரதாயத்துக்கும்‌ விருத்‌தமாம்‌- ஈஸ்வரனைப் பற்ற அத்யந்த பரதந்த்ரதையாவே உபாயாந்தரங்களுக்கு க்ஷேத்ரஜ்ஞன் நித்ய அஸக்தன் என்று காட்டி இவனுக்கு அவற்றினுடைய த்யாகத்தை விதிக்கிறதென்னுமது ஸர்வ ஸாஸ்த்ர ஸ்வ வசந ஸ்வ ப்‌ரக்ருத்யாதி விரோதத்தாலே அத்யந்த பரிஹாஸ்யம்‌-அப்போது துல்ய ந்யாயதையாலே “வ்ரஜ* என்கை தானும்‌ கடியாது- உபாயாந்தரங்களுக்கு ஜீவாத்மா நித்ய அஸக்தன் என்கை தங்களுக்கு அநிஷ்டமான அநுவாத பக்ஷத்துக்கு ஸ்திரீகரணம்‌ பண்ணினபடியாமத்தனை – என்றும்‌ சொல்லப்பட்டது –

இதி பூர்வபக்ஷ க்ரந்த-

அத, ஸித்‌தாந்த: தியாகஸ் சாங்கம்‌’ ப்ரபத்தே-

முமுஷுப்படியிலே,( பரித் யஜ்ய) த்யாகமாவது-உக்தோபாயங்களை அநுஸந்தித்து ஸூக்திகையிவே ரஜக புத்தி பண்ணுவாரைப்‌ போலேயும்‌ விபரீத திஸாகமநம்‌ பண்ணுவாரைப் போலேயும்‌ அநுபாயங்களிலே உபாய புத்தி பண்ணினோம்‌ என்கிற புத்தி விஸேஷத்தோடே த்யஜிக்கை- பரி என்கிற உப ஸர்க்கத்தாலே பாதகாதிகளை விடுமா போலே ருசி வாஸனைகளோடும் கூட மறுவவிடாதபடி விட வேணுமென்கிறது. ‘ல்யப்‌’பாலே ஸ்நாத்வா புஜ்ஜீத என்னுமா போலே உபாயாந்தரங்களை விட்டே பற்ற வேணும்‌ என்கிறது என்றும்‌- தனி சரமத்திலே த்யஜ்ய என்கிற ‘லயப்‌பாலே *ஸ்நாத்வா புஞ்ஜீத” என்கிறபடியே உபாய ஸ்வீகாரத்துக்கு உபாயாந்தர த்யாகத்தினுடைய அங்கத்வம்‌ சொல்லுகிறது. யாகத்திலே இழியுமவனுக்கு தத்‌ வ்யதிரிக்த ஸர்வ தர்ம த்யாகம்‌ அங்கமாகிறாப் போலே இதுவும்‌ ஆத்ம த்யாகமாகையாலே தத் வ்யதிரிக்த ஸர்வ தர்ம த்யாகம்‌ அங்கமாகக்‌ கடவதென்றும்‌ முன்பே சொல்லிற்று-இத்தால்‌ ஸாஸ்த்ர வையர்த்‌யமும்‌ பரிஹரிக்கப்பட்டது- விட்டே பற்ற வேணுமாகில்‌ ஸர்வாதிகாரத்வ பங்கம்‌ வாராதோ வென்னில் அஸக்தனுமாய்‌ அயோக்யனுமானவன்‌ ஸ்வரூப ஞான வைஸத்யத்தாலே விட்டுப் பற்றக் கடவன் அல்லாதவர்களும்‌: உக்த லக்ஷணத்தாலே அஸக்தராயிருக்குமத்தன போக்கி ஸர்வத்திலும்‌ அஸக்தரா யிருப்பா ரொருத்தருமில்லையே அவர்களும்‌ விக்‌ந விளம்பாதி பயமுடையராகில்‌ யதா யோக்யம்‌ விட்டுப் பற்றக் கடவர்கள்‌-ஆகையாலே ஸர்வாதிகாரத்வ பங்கம்‌ வாராது- இப்படிக் கொள்ளாதே ஸர்வோபாய ஸூந்யனுக்கு இது உபாயமென்னும்‌ பக்ஷத்‌தில்‌ ஸர்வோபாய ஸூந்யராயிருப்பார் ஓருத்தரும்‌ இல்லை யாகையாலே அந்த பக்ஷத்துக்கும்‌ இந்த தூஷணம்‌ வருமாகையாலே த்யாகம்‌ அங்கமென்கிறவிது உபபந்தம்‌ என்றும்‌ பிள்ளை வோகாசார்யர்‌ அருளிச் செய்தார்‌

ரஹஸ்ய த்ரயத்திலே இவ் விடத்திற் பரிஹாரம்‌ சொல்ல ப்படுகிறது. விளம்பா க்ஷமனான புருஷனுக்கு சிர கால ஸாத்‌யமான உபாயங்களில்‌ துஷ்கரத்வாதி யடியான ஸ்வத பரி த்யாகமும்‌ உபாய ஸூந்யத்வமடியான ஸோகோதயமும்‌ கூடும்‌. அதின்‌ விரோதியைப் பார்த்தாலும்‌ அநாகதமான அநந்த காலத்திலும்‌ ஸந்தாரோபாயம்‌ காணவரிதென்று உபாயாந்தர துஷ்கரத்வத்தை நச்சி கத்‌யத்திலே பாஷ்யகாரர்‌ அருளிச் செய்தார்‌-இப்படி ஸ்வதஸ் ஸித்‌த த்யாகம்‌ ஸம்பவிக்கிலும்‌ இங்கு சொல்லுகிறபடி த்யாகம்‌ அதுவன்று- அதாவது இவ் விஷயத்தில்‌ விதிக்கப்படுகிற ப்ரபதநத்தினுடைய ஸ்வரூபம்‌ உபாயாந்தர ஸம்ஸர்க்கத்தை ஸஹியாது என்னுமிடம்‌ வசந பலத்தாலே கொள்ள வேணும்‌- அந்த உபாயாந்தர ஸம்ஸர்க்க அஸஹத்வமாகிற உபாய ஸ்வரூபம்‌ இவ் விடத்தில்‌ வேறொரு ப்ரமாணத்தாலே காண வொண்ணாமையாலே ஸாஸ்த்ர விதியை அபேஷித்திருக்கும்‌- இத்தாலேயிறே ‘ஸர்வ’ஸப்‌தத்துக்கு அர்த்தபூர்த்தி அல்லாத போது நிரவஸேஷ த்யாகம்‌ ஸித்‌தியாதே- தானே உபாயங்களை துஷ்கரமென்று விட்டவணுக்கு ஸக்யாம்ஸம்‌ அநுவர்த்தித்‌தால்‌ விரோதமில்லை –
ரஹஸ்யாம்ருதத்திலே, “இன்னமும்‌ அநுவாத பக்ஷத்திலே த்யாகம்‌ துஷ்கரத்வமடியாகவாகை ராஜஸமாய்க் கொண்டு ஜ்ஞாந கார்யமல்லாமையால்‌ நிஷ் ப்ரயோஜநமாம்‌- அதாவது காய க்லேஸ பயத்தாலே கர்மத்தை துக்க கரமென்று, ஸ்வரூபேண விட்டவன் ராஜஸ த்யாகம்‌ பண்ணினாகையாலே த்யாக பலமான கஷாய பாக மநோநைர்‌மல்ய ஐ்ஞாநோத்பத்த் யபிவ்ருத்‌திகளைப் பெறான் என்று தியாகத்தை வித்‌யோபதேஸத்திலே ஸரண்யண் தானே அருளிச் செய்தான் -அந்த ந்யாயத்தாலே இந்த அதிகாரிகளுக்கும்‌ துஷ்கரம்‌ என்று விடுமளவில்‌ நிரவஸேஷ த்யாகம்‌ கூடாமையாலே- தியாக பலமான ஆகிஞ்சன்யம் ஸித்தியாது-விதேய பக்ஷத்தில்‌ த்யாகம்‌ ஸாஸ்த்ரமாகையாலும்‌ ஸாத்விகமாகையாலும்‌, ஜ்ஞாந கார்யமே யாயிருக்கும்‌’ என்றும்‌- ஆகையால்‌ ஸர்வோபாய ஸம்ஸர்க்க அஸஹமாந ப்ரபதந ஸ்வரூபம்‌ விதேயமாகையாலே இவ் விடத்தில்‌ ஸர்வ தர்ம த்யாகத்‌தினுடைய விதேயத்வம்‌ மிகவும்‌ உபபந்நம்‌’ என்று வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர்‌ அருளிச் செய்தார்‌. “சிலர் , ‘இங்கு த்யாகத்தை விதிக்கிறதன்று அநுவதிக்கிறது’ என்பர்கள்‌. அதுக்கு ஸப்‌த ஸ்வாரஸ்ய மில்லாமையாலே தர்ம த்யாக விஸிஷ்டமான ஸரணாகதியை விதிக்கிறதென்று ஆழ்வான்‌ பணிக்கும்‌- எண்று சரம ரஹஸ்யத்திலே நயினாராச்சான் பிள்ளை அருளிச் செய்தார்‌.

இதி ஸித்‌தாந்த

———-

அத பூர்வ பக்ஷ ப்ரணவ விரஹத: அஷ்டாக்ஷரத்வம்‌ மநோஸ் ச

ரஹஸ்ய த்ரய ஸாரத்திலே மூல மந்த்ராதிகாரத்திலே ந ஸ்வர ப்ரணவோங்காநி நாப்யந்யவித யஸ்ததா ஸ்த்ரீணாம்ஸ் ச ஸூத்ர ஜாதீநாம்‌ மந்த்ர மாத்ரோக்திரிஷ்யதே- என்கிறபடியே ப்ரணவ மொழிந்த போது, “தத்ரோத்தராயணஸ்யாதி பிந்துமாந்‌ விஷ்ணு ரந்தத. | பீஜ மஷ்டாக்ஷரஸ்ய ஸ்யாத்தேநாஷ்டாக்ஷரதா பவேத்‌” என்கிற ப்ரக்ரியையாலே எட்டெழுத்தும்‌ அநுஸந்தேயமாக விதிக்கப்பட்டது’ என்று, சொல்லப் பட்டது-

இதி பூர்வபக்ஷ க்ரந்த

அத ஸித்தாந்தம் -பிரணவ விரஹத அஷ்டாக்ஷரத்வம் மநோஸ் ச

இதினுடைய அஷ்டாக்ஷரத்வம்‌ சொல்லுகிற விடத்தில்‌, ஓமித்வேகாக்ஷரம்‌ என்று ப்ரணவத்தை ஓரக்ஷரமாகவும்‌, “நம இதி த்‌வே அக்ஷரே” என்று நமஸ்ஸூ இரண்டு அக்ஷரமாகவும்‌, “நாராயணாயேதி பஞ்சாக்ஷராணி* என்று. நாராயண பத,த்தை அஞ்சக்ஷரமாகவும்‌ ஸ்ருதி சொஸ்லுகையாலே ஸமஸ்தமான நாராயண பதத்தில்‌ நார பதத்‌தைப் பிரித்து ஷடஷரமாக்க ப்ரணவத்தை யொழிய அஷடாக்ஷரத்வம்‌ சொல்லுமவர்களுடைய பக்ஷம்‌ அவைதிகமாகையாலே அநாதரணியமாகக் கடவது’ என்று முழமுஷுப்‌படி வ்யாக் யாநத்திலே பெரிய ஜீயர்‌ அருளிச் செய்தார்‌.
*நஸ்வர ப்ரணவோங்காநி * இத்யாதிகள்‌-நாரதீ யாஷ்‌டாக்ஷர ப்‌ரஹ்ம வித்‌யையிலே ஜப ப்ரஸ்தாவபடித மாகையாலே ஸ்த்ரீ ஸூத்‌ராதிகளுக்கு ப்ரணவாதிகார நிஷேதம்‌- ஜப விஷயமாமத்தனை யென்று தத்வஜ்ஞர்‌ தெளிந்து கொள்வர்கள்‌. ஆகையால்‌ ‘விரோதாதிகரண ந்யாயத்தாலே ஸ்ருதி விருத்‌த ஸ்ம்ருதி அப்ரமாணமாகையாலே அநாதாரணீயம்‌’ என்று நிர்வஹித்து “ந ஸ்வர.” இத்யாதி வசநத்‌துக்கு கதி கல்பிப்பதும்‌ அவிவக்ஷிதமென்று கொள்வது -[ரஹஸ்ய த்ரய ஜீவாது முதலிய ரஹஸ்ய க்ரந்தங்களில்‌ இப்படி கதி கல்பிக்கப்பட்டது காண்க)
இதி ஸித்தாந்த,

அத, பூர்வ பக்ஷ. ஸருஷ்ட்யாதவ நைவ ஸக்தி ஸ்புட மதி மஹதாம்‌ நித்ய முக்தாதி காநாம்

ஸ்தோத்ர பாஷ்யத்திலே [ஸ்தோந்ர ரத்நே த்வத் ஆஸ்ரிதாதாம்‌ ஐகதுத்ப ஸ்திதி . இத்யாதி–விம்ஸ ஸ்லோக பாஷ்யே – ஏவம்‌. முக்தாநாம்‌-ஜகத் வ்யாபாரே ஸக்திரஸ்தி, தத் ப்ராப்திர்‌ நாஸ்தீதி பக்ஷோபி ந விசாரார்ஹ ந ஹி முக்தாநாம்‌
ஸர்வ ஸரீரத்வம்‌ அஸ்ருதத்வாத்‌, அநுபபத்தேஸ் ச। தத பாவே கதம்‌, பஹுஸ்யாம்‌
” இதி ஸங்கல்ப ஸக்தி, ததாவித ஸக்தி ஸாலிந தத,ப்ராப்திஸ் சாத்ர துர்வசா ததைவ நித்யாநாமபி | உக்தம்‌ ஹி பாஷ்யே அநந்த பத வ்யாக்யாநே ‘ஸாதிஸய ஸ்வரூப ஸ்வகுணா ; நித்யா வ்யாவ்ருத்தா:’ இதி அத யதோக்த ஏவார்த்த ‘ஜகத் ஸ்ருஷ்ட்யாதி பார அஸ்மிந்‌ ஸமர்ப்பித இதி கேஷாஞ்சித்‌ வயாக்‌யாநம்‌ து. பகவததீந தத் ப்ரபாவாதிஸய ப்ரஸம் ஸார்த்தம்‌ | ஏகஸ்‌யைவ ஹி ஸர்வ ஸரீரிண “பஹுஸ்யாம்‌ இதி ஸங்கல்ப க்ஷமத்வமிதி ப்ராகேவ ஸ்தாபிதம்‌। அத எவ ஹி “ஸ்ரீமதி விஷ்வக்ஸேநே ந்யஸ்த ஸமஸ்தாத்மைஸ்வர்யம்‌* இதி ஸ்ரீவைகுண்ட கத்‌யோக்திரபி , பக்தாநாம்‌ ஸ்வாமிநோ வா விக்ந ப்ரஸமநே பரிஜன நியோகாதவ் ச யோஜநீயா! விஷ்வக்ஸேந மந்த்ரே து *விஸ்வம்‌ ஸ்ருஜ இதி பதம்‌ முக்தவத் ப்ரபூத ஸ்ருஷ்டி மாத்ர விஷய பரம் விசேஷ்ய பூத பரமாத்ம பரம்‌ வா நேதவ்யம்‌‘ என்று சொல்லப் பட்டது.

இதி பூர்வபக்ஷ் க்ரந்த,.

அத, ஸித்‌தாந்த ஸ்ருஷ்ட்யாதெவ் சாஸ்தி ஸக்தி) ப்ரபு நியமநதோ நித்ய முக்தாதிகாநாம்‌.

விஷ்வக்ஸேந மந்த்ரத்திலே ,*விஸ்வம்‌ ஸ்ருஜே * என்று இவருக்கு ஸ்ரஷ்ட்ருத்வம் கண்டோக்தம் –ஸங்கல்ப மாத்ரா வக்லுப்த ஜகஜ் ஜென்ம ஸ்திதி த்வம்ஸாதிகே ஸ்ரீமதி விஷ்வக்‌ஸேந ந்யஸ்த ஸமஸ்தாத்மைஸ்வர்யம்‌” என்று ஸ்ரீ வைகுண்ட கத்யத்திலே பாஷ்யகாரர்‌ அருளிச் செய்தார்‌- ஆகையாலே ‘நித்ய முக்தாதிகளுக்கு ஸ்ருஷ்ட்யாதியில்‌ ஸக்தி யில்லை என்கை- எம்பெருமானார்‌ திவ்ய ஸூக்திக்கு அத்யந்த விருத்‌தமாகையாலே எம்பெருமானார்‌ தர்ஸநஸ்தராலே அத்யந்த பரிஹாஸ்ய மாயிருக்கும்‌- “தம்முடைய ஸங்கல்பத்‌தாலே ஐகத் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களைப் பண்ணக்‌ கடவ ஸேனை முதலியார்‌ தொடக்கமான திவ்ய புருஷர்களும் வரிசையிலே ஸேவித்திருக்க’ என்கிறபடியே ஸ்ரீய பதியான ஸர்வேஸ்வரன் தானே தன்னுடைய உபய விபூதியையும்‌ அன்ன புகழ்‌ முடும்பை யண்ணலுகாசிரியருக்கு ஸாக்ஷாத் கரிப்பிக்க அப்படியே விஸத விஸததர விஸத தமமாக உபய விபூதியையும்‌ யதாவஸ்தித ஸ்வரூப ஸ்வபாவமாக ஸாக்ஷாத் கரித்த ப்ரகாரத்துக்குப்‌ பாசுரமிட்டருளின அர்ச்சிராதியிலும்‌ “இதில்‌ நித்யராவார்‌ ஒரு நாளும்‌ ஸம்ஸார ஸம்பந்தமாகிற அவத்‌யமின்றிக்கே. நிரவத்‌யராய்‌ -வானிளவரசு வைகுந்தக்‌. குட்டன்‌ வாசுதேவன்‌- என்கிற வைகுண்ட நாதனுக்கு விண்ணாட்டவர்‌ மூதுவர்‌: என்கிறபடியே பட்டம்‌ கட்டுகைக்கு உரியராம்படி மூப்பரான மந்த்ரிகளாய்‌ ஈஸ்வர நியோகாத்‌ ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களைப்‌ பண்ணவும்‌ ஸக்தராய்‌’ என்றும்‌, ஸ்தோத்ர ரத்நத்தில்‌,”த்வத் ஆஸ்ரிதாநாம்‌“என்கிற ஸ்லோக வ்யாக்‌யாநத்‌தில்‌ தேவரை தூர நின்று ஆஸ்ரயிக்கிற ப்‌ரஹ்மாதிகள்‌ ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார கர்மங்களை உபதேஸ க்ரமத்தாலே பெற்று ஸம்ஸார விமோசநத்தைப் பண்ண ஸக்தராண பின்பு, அநந்யப்ரயோஜநராய் ஆஸ்ரயிக்குமவர்கள்‌ அவற்றைச்‌. செய்யப்‌ பார்த்தால்‌ லீலையாகா நின்றது- முக்தர்‌ தேவரோடே லீலா ரஸம்‌ அநுபவிக்கும்போது ஸங்கல்பத்தாலே ஜாத்யாதிகளை ஸ்ருஷ்டித்திறே அநுபவிப்பது. “ஸங்கல்பாதேவ தச்ச்‌ருதே.* *ஸங்கல்பாதேவாஸ்ய பிதரஸ் முக்த்திஷ்‌டந்தே” ஜகத் ஸ்ருஷ்ட்யாதி ப்ராப்தி யில்லாமைபோக்கி ஸக்தி யில்லாமையாலே தவறுகிறாரல்வர்‌’ என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தருளினார்‌-
ப்‌ரஹ்மாதிகளுடைய ஏக தேஸ ஸ்ரஷ்ட்ருத்வாதி ஸக்தி ஈஸ்வராதீனை யாகிறாப் போவே நித்ய முக்தருடைய ஸகல ஐகத் ஸ்ருஷ்ட்யாதி ஸக்தியும்‌ ஈஸ்வராதீனை யிறே- ஆகையால்‌. நித்யமுக்தர்களுக்கு ஸ்ருஷ்ட்யாதியில்‌ ஸக்தி உண்டென்‌னுமிடம்‌ உபபந்நம்‌-

இதி ஸித்தாந்தம்

அத பூர்வ பக்ஷ -தோஷா த்‌ருஷ்டிஸ்து வாத்ஸல்யம்‌-

ரஹஸ்ய த்ரய ஸாரத்திலே த்வயாதிகாரத்திலே, “இவற்றில்‌ வாத்ஸல்யமாவது. – தோஷே யத்‌யபி தஸ்ய ஸ்யாத்‌” என்கிறபடியே ஆஸ்ரிதருடைய தோஷம்‌ பாராதே அங்கீகரிகைக்கீடான இரக்கம்‌” என்றும்‌, ரஹஸ்ய ரஷையில்‌, ப்ருது கத்‌யாதிகாரத்திலே, “வாத்ஸல்யம்‌ – ஸரணகத வத்ஸல ‘ இத்யாத்‌யபிப்ரேதா ஸ்வ ரக்ஷணீ யதயாபி மதேஷு தோஷதிரஸ்காரிணீ ப்ரீதி தோஷாணமபி குணத்வேந தர்ஸநம்‌’ இதி து அதிவாத,! என்றும்‌ சொல்லப்பட்டது.

இதி பூரவ பஷ க்ரந்த,.

அத, ஸித்‌தாந்த-தோஷேஷு இச்சைவ வாத்ஸல்யம்‌.

“வாத்ஸல்யம்‌ நாம தோஷேஷ்வபி குணத்வ புத்‌தி யதா மாதுர்வத்ஸே’ என்று ஸமந்வயாதிகரண பாஷ்ய ஸ்ருத ப்ரகாஸிகையிலும்‌, ‘வாத்ஸல்யம்‌ நாம தோஷேபி குணத்வ புத்தி யதா ஸத்‌ய ப்ரஸூதாயா தேநோர் வத்ஸே ‘ என்று ஸரணாகதி கத்‌ய ஸ்ருத ப்ரகாஸிகையிலும்‌ வேத வ்யாஸ பட்டர்‌ அருளிச் செய்தார்‌-
ஞான ஸாரத்திலே, “அற்றமுரைக்கில் வடைந்தவர் பாலம்புயை கோன் குற்றமுணர்ந்திகமும்‌ கொள்கையனோ- எற்றே தன் கன்றினுடம்பின்‌ வழுவன்றோ காதலிப்பது அன்றதனை ஈன்றுகந்த வா’ (25-பா) என்று அருளாளப்‌ பெருமாளெம்‌பெருமானார்‌ அருளிச் செய்தார்‌-(இது ப்ரஷிப்தம் ] (அதற்கு. “ப்ரபந்நாந் மாதவஸ் ஸர்வாந்‌ தோஷேண பரிக்ருஹயதே | அத்யஜாதம்‌ யதா வத்ஸம்‌. தோஷேண ஸஹ வத்ஸலா(பரிக்ருஹ்யதே -பரிக்ருஹ்ணா நீத்யர்த்த ஆர்ஷத்வான் ந தோஷ என்று பவ் ராணிக ப்ரமாணம் சேர்த்தருளினார் பெரிய ஜீயர் )-குன்றனைய குற்றம்‌ செயினும்‌ குணம்‌ கொள்ளும்‌” *செய்தாரேல் நன்று செய்தார் *செய்த குற்றம்‌ நற்றமாகவே கொள் ஞால நாதனே – என்றித்யாதி ஆழ்வார்களும்‌ அருளிச் செய்தார்கள் – தோஷம்‌ போக்யமாகில் (தோஷம்‌)புத்‌தி பூர்வகமாகச் செய்ய வேண்டி வாராதோ வென்னில்‌ வாராது – *உண்ணிலாவிய வைவரால்‌ குமை தீற்றி , *பல நீ காட்டிப் படுப்பாயோ”, *ஐவரறுத்துத்‌ தின்றிட வஞ்சி நின்னடைந்தேன்‌” இத்யாதிகளிலே ஜ்ஞாநி களுக்கு தோஷம்‌ பயாவஹமாகச்‌ சொல்லுகையாலே புத்‌தி பூர்வகமாகச் செய்யானென்னுமிடம்‌ (‘செய்ய வேண்டா என்னுமிடம்‌! – (க) பாடம்‌] ஸித்தம்‌-தனி சரமத்திலே “வாத்ஸல்யமாவது – ஸத்‌யோஜாதமான வத்ஸத்தின் பக்கல்‌ தேநுவுக்கு உண்டாண காமம்‌, அதாவது – சுவடு பட்ட தரையிலே புல் தின்னாத பசு அன்றீன்ற கன்றின்‌ தோஷத்தை தோஷமெண்று கருதாதே தனக்கு போக்யமாகக்‌ கொன்ளுமா போலே, ஆஸ்ரிதருடைய தோஷத்தைத்‌ தன் பேறாகப்‌ போக்கித்‌ தன் கல்யாண குணங்களாலே தரிப்பிக்கை! என்று பிள்ளை லோகாசார்யர்‌ அருளிச் செய்தருளினார்‌-

இதி ஸித்‌தாந்த-

———–

அத பூர்வபக்ஷ- பர துக்கத்‌ த்‌ருதீச்சா தயா.

ரஹஸ்ய த்ரய ஸாரத்திலே த்வயாதிகாரத்திலே, ‘பரம காருணிகத்வமாவது – ஸவார்த்த, நிரபேக்ஷையான பர துக்க நிராகரணேச்சை.! என்றும்‌, ரஹஸ்ய ரஷையில் – ப்ருது கத்யாதிகாரத்திலே.’காருணிகத்வம்‌ – அநுத்திஷ்ட ஸ்வ ப்ரயோஜநாந்தர பர துக்க நிராகரணேச்சா | பர துக்க துக்கித்வாதிகம்‌ து ந லக்ஷணம்‌ அவ்யாப்தே அதி வ்யாப்தேஸ் ச । ஸர்வ ப்ரஸாஸிது, ஸாபராத நிக்‌ரஹஸ்யாபி ஸாஸ்த்ர ஸித்‌ததவாத் ததநுரோதேந காருண்யம்‌ நியந்தவ்யம்‌” என்றும்‌ சொல்லப் பட்டது.

இதி பூர்வபக்ஷ க்ரந்த-

அத, ஸித்‌தாந்த-பர துக்க அஸஹத்வம்‌ -தயா

ஸ்ரீ பாஷ்யத்திலே பல விடங்களிலும்‌ தயா ஹி நாம ஸ்வார்த்த நிரபேஷா பர துக்க அஸஹிஷ்ணுதா’ என்று பாஷ்யகாரர்‌ அருளிச் செய்தார்‌- திருவாய்மொழி உயர்வற உயர்நலத்தின்‌ ஈட்டிலே துயரறு சுடரடி என்று எம்பெருமானார்‌ அருளிச் செய்யும்படி வ்யஸநேஷு மநுஷ்யாணாம்‌. ப்‌ருஸம்‌ பவதி துக்கித- என்றால்‌ துக்க நிவ்ருத்தியும்‌ அவனதாயிருக்குமிறே- இவர்‌ துயரற தான்‌ துயர்‌ தீர்ந்தானாயிருக்கை- இத்தால்‌ இவர்‌ மயர்வற அவன் துயரற்றபடி” என்றும்‌, ‘(அவன் மேவி யுறை கோயில்‌) அவன் பரம பதத்தில்‌ உள் வெதுப்போடே போலே காணுமிருப்பது- ஸம்‌ஸாரிகள்‌ படுகிற கிலேசத்தை அநுஸந்தித்து இவை என்படுகிறனவோ’ என்கிற திருவுள்ளத்தில்‌ வெதுப்‌போடே யாயிற்று அங்கிருப்பது. “நோபஜநம்‌ ஸ்மரந்‌ என்று கொண்டு இங்குத்தை துக்கத்தை நினையாது ஓழிய வேண்டுவது பண்டு துக்கியாயிருந்து ஸம்ஸாரத்தில் நின்றும்‌ போனவனுக்கிறே. இங்குத்தை துக்கத்தை நினைக்குமாகில்‌, அநுபவிக்கிற ஸுகத்துக்குக் கண்ணழிவாகாதோ என்னும்‌ கண்ணழிவில்லை யிறே அவனுக்கு- ‘பரமபதத்திலும்‌ ஸம்ஸாரிகள்‌ படுகிற கிலேஸத்தை அநுஸந்தித்துத்‌ திருவுள்ளத்தில்‌ வெ(து)றுப்போடே யாயிற்று எழுந்தருளி யிருப்பது’ என்று பட்டர்‌ அருளிச்‌ செய்ய ஆச்சானும்‌ பிள்ளை யாழ்வானும்‌ இத்தைக் கேட்டு-‘பரம பதத்திலே ஆநந்த நிர்ப்பரனா யிருக்கிற விருப்பிலே திரு உள்ளத்திலே ஒரு வியசனத்தோடே இருந்தான் என்கை
உசிதமோ? என்றார்கள்‌ என்று பண்டிதர்‌ என்கிறவர்‌ வந்து விண்ணப்பம்‌ செய்ய “வ்யஸநேஷு மநுஷ்யாணாம்‌ ப்‌ரூஸம்‌. பவதி துக்கித.” என்றது குண ப்ரகரணத்திலேயோ, துக்க ப்ரகரணத்திலேயோ’ [ தோஷ ப்ரகரணத்திலேயோ’ என்றபடி) என்று கேட்க மாட்டிற்றிலீரோ? இது குணமாகில்‌ குணம்‌ என்று பேர் பெற்றவற்றில்‌ அங்கில்லாததொன்றுண்டோ” என்று அருளிச் செய்தார்‌ *ஸமஸ்த கல்யாண குணாத்மகோ அஸவ் * என்னக் கடவதிறே. தன்னிச்சை யொழிய கர்ம நிபந்தநமாக வருமவை யில்லை. என்னுமத்தனை போக்கி அநுக்‌ரஹ கார்‌யமாய்‌ வருமவை யில்‌லை என்னில்‌-முதலிலே ‘சேதநனன்றிக்கே ஒழியுமிறே ‘ஸ ஏகாகீ ந ரமேத என்றது – நித்ய விபூதியும்‌ குணங்களும்‌ உண்டா யிருக்கச்‌ செய்தே யிறே” என்றும்‌ நம்பிள்ளை அருளிச் செய்தருளினார்‌-
ஸ்ரீ ஸஹஸ்ரநாமத்திலே -விகர்த்ரு- நாம பாஷ்யம்‌ அருளிச் செய்யா நின்ற பட்டர்‌ ஸ்வார்த்த ஹர்ஷ ஸோக அந்ய பாவேபி பரார்த்த தத்‌ ப்ரஸக்திரதோஷ | அந்யதா பரதுக்க துக்கித்வாதயோ குணா கதம் அஸ்ப ஸ்புட- என்று வ்யக்தமாக அருளிர் செய்து போந்தாரிற ஸ்ரீ வேத வ்யாஸ பட்டரும்‌- தயா ஹி ஸ்வார்த்த நிரபேஷா பர துக்க அஹிஷ்ணுதா என்று ஜிஜ்ஞாஸ அதிகர ஸ்ருத ப்ரகாஸிகையிலும்‌ காருண்யம்‌. – ஸ்வார்த்தா ந பேஷயா பர துக்க அஸஹிஷ்ணுதா” என்று சரணாகத ஸ்ருத ப்ரகாஸிகையிலும்‌ அருளிச் செய்தார் – *ஆவாவென்றருள்‌ செய்தான்‌” என்றும்‌, ”அடியோர்க்காவாவென்னாய் என்றும்‌, “ஆவா வடிபணிவனென்‌று அருளாய் ? என்றும்‌. *அடியேர்க்‌காவாவென்றிரங்கி* என்றும்‌, “ஆவாலென்நடியேத்கிறை இரங்காப்‌* ன்றும்‌. அப்போ வப்போ வென்று க்ருபை பண்ணி யென்றும்‌- க்ருபை யாகிறது- பர துக்க அஸஹிஷ்ணுத்வமென்றும்‌ , “மயர்வற மதி நலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள்‌ ஸ்பஷ்டமாக அருளிச் செய்தார்கள்‌-தத்வ த்ரயத்திலே – ஈஸ்வர ப்ரகரணத்திலே, “க்ருபை துக்கிகளுக்கு ‘ என்கிற விடத்தில்‌ வ்யாக்‌நதத்தில் -கிருபையாவது -பர துக்க அஸஹிஷ்ணுத்வமாகையாலே -ஆவாரார் துணை என்று அவ நீர் கடலுள் அழுந்தும்‌ நாவாய் போல்‌ பிறவிக்கடலுள் நின்று துளங்குகை முதலான துக்க முடையவர்களுக்கு உறுப்பாமிருக்குமென்கை என்று பெரிய ஜீயர்‌ அருளிச் செய்தார்‌.
ஆகையால்‌ நம்மாழ்வார்‌ முதலான ஆழ்வார்‌களும்‌, எம்பெருமானார்‌ முதலான ஆசார்யர்களும்‌ ஒரு மிடறாக அருளிச் செய்தருளின ஸுக்திகளுக்கு விருத்‌தமாக அர்த்த கல்பநம்‌ அத்யந்தாநுப பந்நம்‌-
இப்படிப் பிள்ளை லோகாசார்யர்‌ பெரிய ஜீயர்‌ முதலான நம்‌ ஆசார்யர்கள்‌ அருளிச் செய்த அர்த்த விஸேஷங்களுக்கே ப்ரமாணோபபத்தியில்‌ ஸம்ப்ரதாயமுண்டாகையாலே இதுவே ப்ராமாணிகருக்கு உபாதேய மென்றதாயிற்று-

அழகிய மணவாள நயினார்‌ அருளிச் செய்த ரஹஸ்ய விவேகம்‌ முற்றிற்று.

அவன் பக்கலிலே நிஷிபத பரராயிருககின்ற நீங்கள் நாலவரிருவர் இங்கிருககிற நாலு நாளும்‌ த்யாஜ்யமான அர்த்த காமங்களைப் பறறி “சீறு பாறு? என்னாதே நம்‌ பெரிய குழாத்திலே போயப் புகுமளவும ஒரு மிடறாய் அநுபவிக்கப் பாருங்கோள் –பூர்வர் ஸ்ரீ ஸூக்தி ரத்னம்
எம்பெருமானார் திருவடி சம்பந்தம் பெற்ற பாக்யவான்கள் வம்சத்தில் பிறந்து வைத்து-ஞான அனுஷ்டானங்களை ஒழிந்தாலும் அவர்கள் ஸம்பந்தமே பேற்றுக்கு உபாயமாகிறாப் போலே அவை யுண்டானாலும் இழவுக்கு ௮வர்கள் பககல் அபசாரமே போதும” ஸ்ரீவசந பூஷண ஸ்ரீ ஸூக்தி –
எம்பெருமானாருடைய திருவடி ஸம்பத்திகளிலே, கூரத்தாழவான் எம்பார் பட்டர் நஞ்சீயர் நம்பிள்ளை வடக்குத் திருவீதிப் பிள்ளை பிள்ளை லோகாசாரியர் திருவாய் மொழிப் பிள்ளை மணவாள மா முனிகள் என்கிற ஒரு ஆசார்ய பரம்பரையும் –
திருக் குருகைப் பிரான் பிள்ளான் , கிடாம்பியாச்சான் , எங்களாழவான் , நடாதூரம்மாள் , கிடாம்பியப்புள்ளார் , வேதாந்த தேசிகன் என்கிற ஒரு ஆசார்ய பரம் பரையும் ஏற்பட்டு இரணடு வகுப்பிலுமுள்ள ஆசாயர்களும் உபய வேதாந்த ப்ரவர்த்தங்களாய அற்புதமான ஸ்ரீ ஸூக்தி ரத்னங்களாலே இவ் விபூதியை இருள் தருமா ஞாலமென்று பேச வொண்ணாத படி ஆக்கி யருளினவர்கள்-பிராசீனமாயும் அதே சமயம் குண புஷ்கலமாயும் இருக்கும் நம் ராமானுஜ தரிசனத்துக்கு எதுவுமே நிகரில்லையே

யதி ஷமாப்ருத் த்ருஷ்டம் மதம் இஹ நவீ நம் ததபி கிம் –
தத் பராக் ஏவ அந்யத் வத ததபி கிம் வர்ண நிகேஷ
நிசாம் யந்தாம் யத்வா நிஜமத திரஸ்கார விகமாத்
நிரா தங்கா டங்க த்ரமிட குஹதேவ பரப்ருதய –57

ஓ, ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம் சமீபத்தியது என்பதில் நீங்கள் திருப்தி அடைகிறீர்கள்.
எல்லாம் சரி. எந்த பிரச்சினையும் இல்லை. அப்படியே இருக்கட்டும். என்றால் என்ன?
அப்படியானால், அதற்கு முன்னரே ஏதோ ஒரு மதம் இருந்திருக்க வேண்டும் என்று
நீங்கள் சுட்டிக் காட்டலாம். இது எதை நிறுவுகிறது-பூர்வர்கள் ஸித்தாந்தம் என்னும் ஸ்வா ரஸ்யம் ராமானுஜ தர்சன ஸித்தாந்தத்தை உரைத்துப் பார்த்தால் அகப்படும் -அநாதி மதமே யன்றி நவீநமதமன்று என்பது தெற்றென விளங்கும்-என்றவாறு-ஒழிக்க ஒழியாத ஸம்பந்த ஞான மாத்ரமே மமககு மேலான நன்மைகளுக்கு எல்லை அஃது உணடானால் நாம் எம் பெருமானோடு விவாதப் பட மாடடோம் – எவ்விதப் பணி விடைகளும் நாம் செய்தோமாவோம்

யமோ வைவஸவதோ ராஜா யஸ தவைஷ ஹருதி ஸதித; தேந சேத விவாதஸ தே மா கககாம மா குரூ ந கம ‘ மநு -8-92-ஸர்வ நியாமகன் -தண்டதரன் -ஸூர்ய வம்சத்தன் -ஆதித்ய மண்டல மத்யவர்த்தி-ஸமஸ்தருக்கும் இனியவன் -உள்ளத்திலே உறைபவன் -இதை உணர்வது சேஷத்வ கைங்கர்யம் செய்தால் கங்கை நீராட்டமோ தீர்த்த யாத்திரையும் வேண்டாமே-அடங்கு எழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன் அடங்கு எழில் அஃது என்று அடங்குக உள்ளே –1-2-7-இந்த ஐஸ்வரியம் எல்லாம் நமக்கு வகுத்த சேஷியானவனுடைய ஐஸ்வரியம் என்று அனுசந்திக்கவே – நினைத்தால் தானும் அதுவாக அந்வயிக்கலாம் இறே -சேரலாமே!-ஆன பின்னர், சம்பந்த ஞானமே வேண்டுவது என்கிறார்.

ஒரு வணிகன் தன் மனைவி கருவுற்று இருக்குங்காலத்தில்-அர்த்த ஆர்ஜனம் – பொருள் தேடும் விருப்பினால் வெளி நாடு சென்றான்; அவளும் கரு உயிர்த்தாள்; மகனும் தக்க வயது அடைந்து தனக்கும் தகப்பனாருடைய வாணிகமே தொழிலாக மகனும் பொருள் தேடப் போனான். இருவரும் தத்தமக்கு வேண்டிய சரக்குப் பிடித்துக்கொண்டு வந்து ஒரு பந்தலில் தங்கினார்கள்; அஃது, அவ்விருவருக்கும் இடம் போதாமையால் அம்பு அறுத்து எய்ய வேண்டும்படி விவாதம் உண்டான சமயத்தில், இருவரையும், அறிவான் ஒருவன் வந்து,‘இவன் உன் தமப்பன்; நீ இவன் மகன்,’ என்று அறிவித்ததால்,கீழ் இழந்த நாள்களுக்குச் சோகித்து, இருவர் சரக்கும் ஒன்றாய்,அவன் -ரக்ஷகனாய் -காப்பாற்றுகின்றவனாய் இவன் -ரஷ்யமாய் -காப்பாற்றப்படும் பொருளாய் அந்வயிக்கலாம் அன்றோ-கலந்துவிடுவார்கள் அன்றோ? அது போன்று,

உன்னுமின் -ஸ்மரணம் -சேர்மினே -ஸங்கமம் -புல்கு -பஜநம் -பற்று -கைப்பிடிக்க அத்யாவசாயம் -அடங்கு -சேஷ வ்ருத்திகள் செய்து -ஒடுங்கு -ஸாயுஜ்யம் –இவையே பரபக்தி பரஞான பரமபக்தி -காதல் அன்பு வேட்க்கை அவா -சங்க காம அநுராக ஸ்நேஹ உதயவஸாதி தசைகள்-பகவத் தாஸ்யமே ஆத்மாவுக்கு நிரூபகம்‌ என்று உணர்ந்த பெரியோர்‌ வர்ணாஸ்ரம வித்யா விருத்தங்களை கர்தபஜந்மம்‌, ஸ்வவவாதமம்‌, சில்பநைணம்‌, பஸ்மாஹுதி, ஸவவிதவாலங்கார மென்று கழிப்பர்கள்‌. ஆத்ம ஸ்வரூபத்தை அறியாதவர்‌ ப்ராம் மண்யா ஷிப்ரயுக்தம்‌ குலம்‌ உச்ராயம்‌ என்றுப்ரமிப்பர்கள்‌, தோல் புரையே போமதுவான இதன்‌ உண்மையை அஜ்ஞர்கள்‌ எங்ஙனம்‌ அறிவர்‌?-நன்பொருள்‌ என்கிறது ஆத்மாவை-தாஸ்ய வைலக்ஷண்யத்தை யுடையனாகையாலே- பகவச் சேஷத்வமாவது பகவத்தளவில்‌ நில்லாகே சேஷத்வ காஷ்டையில்‌ நிற்கக் கடவ ஆத்ம வஸ்‌துவைக் கிடீர்‌ நானபஹரித்தது- என்று நம்பினேன் பிறர் நன்பொருள் -ஆக நன்மக்கள்‌ என்கிறது ஆத்ம கத சேஷத்வ அனுரூபமான ப்ரபதனத்‌தில் இழிந்தவர் என்கிறது

குழந்தைகள் போல்‌ தனக்கென்றொரு பிரவிருத்தி யின்‌றிக்கே மாசில்லாதாரா யிருக்குமவர்கள்‌ ப்ரபந்கர்‌ என்றதாயிற்று, இது கொண்டே ப்ரபந்ர்குலத்தை-மாசில்குடி என்று ஆழ்வாரும்‌ அருளிச்செய்தார்‌. மாசாவன அகங்கார மமகாரங்கள்‌ ,
கஹந்தே நாஹந்தே விஹரண பதம்‌‘ என்று அகங்காரத்தை ப்ரபந்நர்கள்‌ “வானோ மறி கடலோ மாருதமே” என்கிற கணக்‌கிலே விரட்டி யடி.ப்பவர்கள்‌- ஆகையாலிறே மாசில்‌ குடியாயிற்று ப்ரபந்ந குலம்‌-ப்ரபந்நன்‌ தலைக்கு மேலேயும்‌ தளிர் புரையும்‌ தண்மை திருவடிகளுக்கு இயற்கையாம்‌, லாலித புத்ரர்களுக்கு அபராத பயம்‌ இல்லை யென்பது வெள்ளிடை மலை

———————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வரவரகுருவரர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ அருளிச் செயல்களும்-நவவித சம்பந்தமும்

August 28, 2025

மாறன் பராங்கதி தந்தடியேனை மருட்பிறவி
மாறன் பரான குழத்துள் வைப்பான் தொல்லை வல் வினைக்கோர்
மாறன் பராமுகம் செய்யாமல் என் கண் மலர்க்கண் வைத்த
மாறன் பராங்குசன் வாழ்க என் நெஞ்சினும் வாக்கினுமே-
–திருவரங்கத்தந்தாதி காப்பு (நம்மாழ்வார்- துதி) பிள்ளைப் பெருமாள் அய்யங்கார்-

நான் உன்னை அன்றி இலேன் கண்டாய்; நாரணனே? நீ என்னை அன்றி இலை — நான்முகன் திருவந்தாதி

அகாரந்தான் எழுத்துமுதல் ஆதல் போல
அச்சுதனே அனைத்துயிர்க்கும் அப்பன் ‘ ஆவான் ;
அகாரந்தான் எழுத்தொலிக்க உதவல் போல
அவன்தானே உயிர் வாழக் ‘காப்போன் ‘ ஆவான் ;
அகாரந்தான் இறுதியிலே மறைந்த நான்கன்
உருபால் கைங் கரியம் அறி வித்தலாலே
அகாரந்தான் பெயரானோன் உயிர்கட் கெல்லாம்
ஆண்டை எனும் ‘சேஷி.என அறிகின்றோமே.

ஓங்காரத்து இடையில் எழுத்து உகாரம் ஆகும் ;
ஒருவாத அநந்யம் எனும் தேற்றேகாரம்
பாங்கான உயிர் அனைத்தும் மகளிர் ஆவார் :
பகவன் அவன் பிரிக்க வொண்ணாக் ‘கணவன்’ என்னும்;
நீங்காத உயிர்ப் பெயராம் மகாரந்தானே
‘நினைந்தறியத் தகும் பிரமம் ‘ அவனே என்னும் ;
ஆங்காரம் அழிக்கின்ற நமஸ்ஸினாலே
அவன்’ உடையான் ‘: நாம் ‘ உடைமை’ என்று தேர்வோம்.

நாராய ணாய எனில் சொற்கள் மூன்றாம்;
நாரந்தான் அசித்துச் சித்துஅனைத்தி னுக்கும்
பேராகும் ; அவற்றினையே உடலாய்க் கொண்டு
பிரியாமல் இயக்குதலால் அவன் சரீரி ‘;
வேராகும் அயனம் எனல் இருக்கும் தானம் ;
விருப்பிடமாம் இருப்பிடத்துக்கு அவள்’ஆதாரம்
ஆராயின் எட்டெழுத்தே அதில் அடங்கும்;
ஆழ்பொருளோ அளவிலவாம் வியப்பு ஈதன்றோ?

ஆய எனல் நான்கள் உரு பாகும் ; இங்கே
அவ்வுருபை ‘ பொருட்டு ‘ என்றும் சொல்லு வார்கள்;
தூயன் அவன் அநுபவிக்கும் பொருட்டே, சித்து
தோன்றியுளது எனப் பொருளை விரித்து நோக்கின்
மாயவனே அனுபவிக்க உரியன் ; அந்த
மாண் உரிமை வாய்த்தவன் பேர் போக்தா ‘ ஆகும்;
நேயமொடு ஒன்பது வகையில் உயிர்கட் கெல்லாம்
நீங்காத உறவாகி நின்றான் ஈசன்.

இவ்வுறவை அவன் அறுக்க முனைந்திட் டாலும்
இயலாது ; நாம் அறுக்க இயல்வ துண்டோ?
எவ்வுறவும் அவன் ஆன தாலே அன்றோ
எம்முடனே ஒருவனாய்த் தோன்று கின்றான்?
தவ்வுறவே சேய்குழியில் வீழ்ந்த தென்றால்.
தாய் உடனே அக்குழியில் தாவி மீட்பாள் :
ஒவ்வுறவே பரன் அந்த வண்ணம் நம்முன்
உறவு நினைந்து அர்ச்சை வடி வாயினானே !

ஐந்நிலைகள் தனக்குரிமை யாகக்கொண்ட
அமலனுக்குப் பணிபுரியக் கடன்பட் டுள்ளோம் ;
மெய்நிலைய மாம்அவன் அக் கடனைக்கொள்ள
விழி எதிரே நிற்கின்றான்; நாம் ஒப்போமேல்
நம்நிலையத்தூடுஅவனே அமர்ந்து கேட்பான் ;
நாம் அதற்கும் இசையோமேல் நமை விடாமல்
பைந்நிலையைப் பாயலிலே படுத்துக் கொண்டு
பார் என்பான் என் கடனைத் தீர் என் பானே!

வணிகள் கடல் கடந்துபொருளைத் தேடி)
ஓர் இருப தாண்டின் பின் திரும்பி வந்தான்;
பொருள்களைத் தன் இடத்தினிலே இறக்க லுற்றான்;
போந்தொருவன் இடை மறித்து என்இடம் இது’ என்றான்;
இருவருமே பூசலிட்டார் ; ஆங்கோர் ஆன்றோர்.
“ஏன் பூசல் ‘? ‘ நீர் தந்தை – மகனே ‘ என்றார்
பொருது பெரும் பூசலிட்ட கை தளர்ந்து
பூசல் மறந்து உடல் நழுவிப் புளகுற்றாரே

இப்படித் தான் பவக் கடலில் மூழ்கி மாழ்கி
இறை உறவை மறந்துகயிங் கரியம் விட்டுத்
தப்படி நாம் இருக்கின்றோம் ; ஒரு நல் லாசான்
தனி யுறவு நுமக்குண்டு என்று உபதே சிக்க
மைப்படியும் மேனியன் நம் தலைவன் என்று
வாஞ்சையினால் அறிந்து கொண்டு சரண் அ டைந்தே.
“எப்படியும் பயன்படுத்து கென்போம்” ஆயின்
இப்படியில் பவக்கடல் தான் வற்றிடாதோ?

நவவித சம்பந்தத்தை நாம் அறிந்தால்
ஞாலத்தார் சகோதரத்வம் சமத்வம், கொண்டே
அவ்விதம் ஒன் றில்லாமல் ஒருமைப் பாட்டை
அடைந்திடுவோம் : உயிர்த் தொண்டே அரி தொண்டாகும்
பவவிதனம் பறந்துவிடும் ; வீடு பேறு இப்
பாரினிலே இக் கணமே பலிக்க லாகும் ;
தவஇதம் மிக்கெளிதாகும் ; சமயம் சாதி
சச்சரவாம் நச்சரவம் சாம்பிச் சாகும்.

ஆழ்வார்கள் தாம் அருளிச் செயல் என் கின்ற
அமுதொழுக விட்டனர், நாம் அமரர் ஆக ;
ஏற்பாரும் புகழ் தரும் நம் பிள்ளை ஆதி
எண்ணிலர் நல் உரைஎழுதி உபக ரித்தார்
தாழ்வாதும் இலாத மணிப் பவளமாய்,அத்
தனை உரையும் இருப்பதனால், அதனைத் தேர்ந்தே
வாழ்வார விரும்புவர் பல கால் கற்றும்
மலைமுட்டும் குருவி என மருண்டார் அம்மா!

ஆசார்ய இருதயமாம் மாறன் நெஞ்சை
அருளானராம் இளவல் அருளிச் செய்யத்
தேசார் ஸ்ரீ வசன பூ டணத்தி னோடு
தெய்விக்கல் இரகசியம் ஈரொன் பானும்
நேசானு கூடிமுடன் உலகா சார்யர்
நிலத்து மர்க்குக் கொடையாக நேர்ந்து தந்தார்
வாசம கோசரமாய் அதனுள் நுட்பம்
மன்னுலகில் முடவனுக்குக் கொம்புத்தேனே!

தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்தமாயன்” (திருவாய். 7.9:2) என்னுள்ளே நின்று இந்நூலை எழுத வழி காட்டினான். என்னுள்ளே நிரந்தரமாக எழுந்தருளி விருந்து கொண்டு எனக்கு எல்லா நலங்களையும் ஈந்துவரும் வேங்கடம் மேவிய விளக்கு’ இந்நூல் வெளிவரவும் ஓரளவு துணை செய்தான். அப்பெருமான் திருவடிகளைப் போற்றிச்
சரண் அடைகின்றேன்.

பிதா ச ரஷக சே பர்த்தா ஜ்ஞேயோ ரமா பதி :
ஸ்வாயாதாரோ மமா மாச போக்தா ச ஆத்யமநூதிநே
:” ஆத்ய மநுவாவது மூலமந்திரம். அதில் ப்ரதிபாதிக்கப்பட்ட ரமாபதி :-ஸ்ரீய : பதியானவன் பிதாவாயும் ரக்ஷகனாயும் சேஷியாயும் பர்த்தாவாயும் ஜ்ஞேயனாயும் ஸ்வாமியாயும் ஆதாரனாயும் ஆத்மாவாயும் போக்தாவாயுமுள்ளான்- அவன் பிதாவானால் நாம் புத்திரனாகிறோம். அவன் இரக்ஷகளானால் நாம் இரக்ஷயனாகிறோம். அவன் போக்தாவானால் நாம் போக்யனாகிறோம். ஆக, இவை ஒன்பது வகையான உறவுகள்

உன் றன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்’ ‘உன்றன்னோடுறவேல் நமக்கிங்கொழிக்க ஒழியாதுபாரார்த்தயம் ஸ்வம் ஸ்ருதி சத ஸிரஸ் ஸித்தம் அத்யாபயந்தீ’

அகாரத்தில்–அகாரோவை ஸர்வா வாக்’” என்றும் “அகரமுதலவெழுத்தெல்லாம்” என்றும் -ஜன்ய-ஜன்க பாவம் அல்லது பிதா – புத்ரபாவம் என்பது பிதா -புத்ர பாவமும்–அவ ரக்ஷணே” என்கிற தாதுவிலிருந்து தேறினதாகையாலே ரக்ஷ்ய -ரக்ஷக பாவமும்,லுப்த சதுர்த்தியாலே அவனுக்கே –தாதர்த்தே சதுர்த்தியாலே சேஷ-சேஷி பாவம் என மூன்று உறவுகளும் தோன்றும்.உகாரமானது அவதாரணப் பொருளதாய் எம்பெருமானுக்கே சேஷப் பட்டது என்று காட்டுதலால் ‘ கொண்டானை யல்லா லறியாக் குலமகள் போல் ” என்கிறபடியே பதி-பத்னீ பாவமாகிய உறவு தேறுகின்றது.மகாரமானது ” மரு ஜ்ஞானே” என்கிற
தாதுவிலிருந்து தேறினதாகையாலே ஜ்ஞாதாவான ஆத்மாவைச் சொல்லுதலால் ஞாத்ரு-ஜ்ஜேய பாவம் என்கிற உறவு தேறிற்று. எம்பெருமான் அறியப்படுபவன்; ஆத்மா
அறிகிறவன் என்றவாறு ” ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்குணர்வு ” என்கிற பொய்கை யாழ்வார் பாசுரம் இங்கு காணத் தக்கது.மகாரத்திற்குப் பிறகு உள்ள நம : பதத்தினால் தன்னை இரக்ஷித்துக் கொள்வதில் தனக்கு எவ்விதமான உரிமையுமில்லை என்று காட்டுவதால் ஆன்மாக்களெல்லாம் எம்பெருமானுடைய ஸொத்து என்று ஏற்படுகிறது. இதனால் ஸ்வ ஸ்வாமி பாவம் என்கிற உறவு தேறுகிறது.எம்பெருமான் ஸ்வாமி; நாம் அவன் சொத்து .நாராணாம் அயனம் என்கிற தத் புருஷ ஸமாஸத்தால் ஆதாராதேய பாவம் என்கிற உறவு தேறுகின்றது-நாராயண சப்தத்தில் நாரங்கள் பகவானிடத்திலே இருக்கின்றன என்பது தத் புருஷனால் ஸித்திக்கிறது. நாரங்களிலே பகவான் உளன் என்பது பஹிர் வ்ரீஹியால் ஏற்படுகிறது. அவற்றிலே இவன் இருப்பதாவது அவற்றை உடலாகக் கொண்டு தான் அவற்றுக்கு உயிராக இருப்பதே யாதலால் சரீர-ஆத்ம பாவம் ஸித்திக்கிறது. ஸகல சேதந அசேதங்களும் சரீரம்; அவன் சரீரி-ஒன்பதாவது உறவு போக்த்ரு – போக்ய பாவம் . இது நாராயண பதத்திலுள்ள நான்காவது வேற்றுமையால் ஏற்படுகிறது. நாராயணனுக்குச் செய்யப்படுகின்ற கைங்கர்யத்தின் போகமும் அவனுக்கே யன்றி இந்த ஜீவனுக்கில்லை. என்று காட்டுதலால் போக்த்ரு – போக்ய பாவம் என்கிற உறவைத் தெரிவிக்கின்றது . எம்பெருமான் போக்தா; ஜீவாத்மா போக்யன். ஜீவாத்மாவை போக்தாவாகவும் எம்பெருமானை போக்யனாகவும் கொள்வதும் ஒருபுடை உண்டெனினும் திருமந்திரத்தில் வடிகட்டின பொருள் முந்துறக் கூறினதேயாரும் என்பர்.
ஆக, திரு மந்திரத்தினால் நவவித (ஒன்பது விதமான) ஸம்பந்தங்கள் தெரிய வந்தன.

வெற்பென்று வேங்கடம் பாடினேன்; வீடு ஆக்கி
நிற்கின்றேன்; நின்றுநினைக் கின்றேன்; கற்கின்ற
நூல்வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்
கால்வலையில் பட்டிருந்தேன் காண்!

நின்ற தெந்தை ஊர கத்து இருந்த தெந்தை பாட கத்து
அன்று வெஃக ணைக்கி டந்த து என்னி லாத முன்னெ லாம்
அன்று நான் பிறந்தி லேன் பிறந்த பின் மறந்தி லேன்
நின்ற தும்இ ருந்த தும் கிடந்த தும் என் நெஞ்சுளே

எம்பெருமான் சம்சாரியான எனக்கு ருசி பிறவாதகாலமெல்லாம் ருசி பிறப்பிப்பதற்காக நின்றான், இருந்தான், கிடந்தான். என்னிடம் ருசி உண்டாக்குகை
அவனுக்குச் சாத்தியம் (பலன்) ; அதற்குச் சாதனம் (வழி முறைகள்) நிற்றல், இருத்தல், கிடத்தல் என்பவை. பலன் கைபுகுந்த மாத்திரத்தில் — என்னிடம் ருசி பிறந்ததும் –
அவன் திவ்விய தேசங்களில் நிற்றல்,இருத்தல், கிடத்தல் களைத் தவிர்த்து,-அரவத்து அமளியி னோடும் அழகிய பாற்கட லோடும் அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து-அந்த விருப்புகளையெல்லாம் என் நெஞ்சிலே செய்தருளினான் ” என்கின்
றார்

அடங்கெழில் சம்பத்து அடங்கக்கண்டு ஈசன்-அடங்கெழில் அஃதென்று அடங்குக உள்ளே.-இறைவனுக்கும் நமக்கும் உள்ள சம்பந்தம், எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம்; உனக்கே நாம் ஆட்செய்வோம்-ஆசாரிய ஹிருதயத்தின்,
ஒன்று கூடின தாய்ப் பற்று அறுக்க மீண்டு ஒழிகையாலே பழவடியேன் என்னுமது ஒன்றுமே
ஒழிக்க ஒழியாது ‘
(12)

இந்த உடல் சம்பந்தம் இடையில் வந்தேறியாய் நல்வினை தீவினை காரணமாக வருவது; இது யாதானும் ஒருகாலத்தில் அழியக் கூடியதாக இருக்கும். நாராயண சம்பந்தம் அநாதியாய் ஒருவித காரணமும் இல்லாமல் வந்ததாகையால், என்றும் உளதாயிருக்கும். இடையில் வந்த சரீர சம்பந்தத்தை அநாதி’ என்று சொல்லுவது பொருந்துமோ? என்ற வினா
எழுகின்றது. அதற்கு மணவாள மாமுனிகள் வந்தேறியான காலத்திற்கு அடி தெரியாமையாலும் அநாதி என்று பிரமாணங்சுகள் சொல்லுவதாலும் இவரும் (அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்) அநாதி’ என்றார். “ஒரு காலவரையில் அஃது இறைவனுடைய திருவருளால் அது மறையக் காண்கையாலே வந்தேறி என்பது
ஒருதலை” என்று கூறுவர்.

நாராயண சப்தார்த்தை அனுசந்திக்கிற திருமங்கை ஆழ்வார் –
எம்பிரான் எந்தை என்னுடை சுற்றம் எனக்கு அரசு என்னுடை வாணாள் -பெரிய திருமொழி -1-1-6–என்கையாலேஈஸ்வரனே இவ் ஆத்மாக்களுக்கு சர்வ வித பந்துவும் என்று இப் பதத்திலே சொல்லும்(முமுஷுப்படி-சூரணை -102)(பிரான் – உபகாரகன்; சுற்றம் – சகலவித பந்துவும்;அரசு – ஆண்டவன்; வாழ்நாள் – பிரான பூதன்]என்ற பாசுரத்தில் நான்கு விதமான சம்பந்தத்தைக் கூறி திருமந்திரத்தின் பொருளை விளக்கி மகிழ்கின்றார்.

குலசேகரப் பெருமாள் வித்துவக் கோட்டம்மான் திருப் பதிகத்தில் (5-ஆம் திருமொழி) இந்த நவவித சம்பந்தமும் அடங்கிக் கிடப்பதாக நம் முன்னோர் குறித்துப் போயுள்ளனர்.

தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை
விரை குழுவும் மலர் பொழில் சூழ் வித்துவக் கோட்டு அம்மானே
அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள் தன்
அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே
-5-1-பிரஜை உறங்குகிற தொட்டில் கீழே கிடக்கும் தாயைப் போலே இங்கே வந்து கிட்டினவனே-தம்முடைய பாரதந்த்ர்யத்தாலே தம்முடைய ரஷணத்துக்கு தமக்கு ஆனவையும் சொன்னார் –
சேஷியாகையாலே தம்முடைய ரஷணத்துக்கு ப்ராப்தன் -அவன் என்கிறார் -இப்போது –
ஒருவன் பேற்றுக்கு ஒருவன் சாதனமாம் போது இத்தனை பிராப்தி உண்டானால் அல்லது ஆகாது இறே-பிரஜை உடைய நோய்க்கு தாய் இறே குடி நீர் குடிப்பாள்-மேல் தாயை நிதர்சனமாகச் சொல்லப் புகுகிறவர் ஆகையால் இப்போது அம்மான் என்று பிராப்தி தோன்றச் சொல்லுகிறார் –வளர்த்த தாய் -என்னாதே-ஈன்ற தாய் -என்றத்தாலே பிராப்தம் சொல்லிற்று-

கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும்
கொண்டானை அல்லால் அறியா குலமகள் போல
விண் தோய் மதிள் புடை சூழ் வித்துவக் கோட்டம்மா! நீ
கொண்டு ஆளாய் ஆகிலும் உன் குரை கழலே கூறுவனே
— 5-2-கொண்டானை யல்லால் யறியா -என்கையாலே –பாதி வ்ரத்யம் சொல்லிற்று-குலமகள் -என்கையாலே ஆபி ஜாத்யம் சொல்லிற்று-

மீன் நோக்கும் நீள் வயல் சூழ் வித்துவக் கோட்டு அம்மா ! என்
பால் நோக்காய் ஆகிலும் உன் பற்று அல்லால் பற்றி இலேன்
தான் நோக்காது எத் துயரம் செய்திடினும் தார் வேந்தன்
கோல் நோக்கி வாழும் குடி போன்று இருந்தேனே—
5-3-என் ரஷணத்தில் எனக்கு அந்வயம் அல்லாதாப் போலே சம்பந்தம் உடைய நீயே ரஷிக்கும் அத்தனை – நான் செய்யலாவதும் இல்லை -நீ மாட்டாததும் இல்லை –

வாளால் அறுத்து சுடினும் மருத்துவன் பல்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளா துயர் தரினும் வித்துவக் கோட்டு அம்மா ! நீ
ஆளா வுனதருளே பார்ப்பன் அடியேனே
— 5-4-பெற்ற தாய் பிரஜைக்கு அஹிதம் செய்யில் இறே நீ செய்வது -அப்படி இருக்கிற நீ செய்யிலும் –ஸ்வரூப அனுரூபமான வர்த்தியைப் பெறுகைக்காக-இப்போது தோற்றுகிற வ்யசனங்களை புத்தி பண்ணாதே உன் க்ருபையையே புத்தி பண்ணி இருப்பன் –

வெம் கண் திண் களிறு அடர்த்தாய் ! வித்துவக் கோட்டு அம்மானே !
எங்கு போய் வுய்கேன் ? உன் இணை அடியே அடையல் அல்லால்
எங்கும் போய் கரை காணாது எறி கடல் வாய் மீண்டேயும்
வங்கத்தின் கூம்பேறும் மா பறவை போன்றேனே
— 5-5–சம்சார சாகரத்தைக் கடக்கும் போது உகந்து அருளின தேசமான திரு வித்துவக் கோட்டை பற்றி அல்லது கடக்கலாம் அத்தனை அல்லது வேறு உபாயம் இல்லை இறே கடக்கைக்கு உகந்து அருளின தேசத்தை ஒழிந்தது எல்லாம் அக் கடல் போலே இறே-

செந் தழலே வந்து அழலை செய்திடினும் செங்கமலம்
அந்தரம் சேர் வெங்கதிரோர்க்கு அல்லால் அலராவால்
வெந்துயர் வீட்டா விடினும் வித்துக் கோட்டு அம்மா ! உன்
அந்தமில் சீர்க்கு அல்லால் அகம் குழைய மாட்டேனே
—5-6-கல்யாண உக்தமான உன் குணங்களுக்கு அல்லது என் நெஞ்சு நெகிழாது –

எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைம் கூழ்கள்
மைத்து எழுந்த மா முகிலே பார்த்து இருக்கும் மற்றவை போல்
மெய் துயர் வீட்டா விடினும் வித்துவக் கோட்டு அம்மா! என்
சித்தம் மிக வுன் பாலே வைப்பன் அடியேனே
—5-7-அவஸ்யம் அநு போக்தவ்யம் -என்கிற பாபத்தைப் போக்கி சம்சார சம்பந்தம் அறுத்துக் கொடுக்க வந்து இருக்கிற நீ அது செய்திலை யாகிலும் என் ரஷணத்திலே நெகிழ்ந்தாய் என்று தோற்ற ஒருகாலுக்கு ஒருக்கால் உன் பக்கலிலே நெஞ்சு பிரவணமாகா நின்றது –

தொக்கி இலங்கி ஆறெல்லாம் பரந்தோடி தொடு கடலே
புக்கு அன்றி புறம் நிற்க மாட்டாத மற்றவை போல்
மிக்கு இலங்கு முகில் நிறத்தாய் ! வித்துவக் கோட்டு அம்மா ! உன்
புக்கு இலங்கு சீர் அல்லால் புக்கிலன் காண் புண்ணியனே !
—5-8-புண்ணியனே -பிரதம ஸூஹ்ருதம் நீ யாகையாலே –

நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான்
தன்னையே தான்  வேண்டும் செல்வம் போல் மாயத்தால்
மின்னையே சேர் திகிரி வித்துவக் கோட்டு அம்மா !
நின்னையே தான் வேண்டி நிற்பன் அடியேனே
–5-9-எப்போதும் கை கழலா நேமியனாய் ஆசிலே வைத்த கையும் நீயுமாய் என்னுடைய ரஷணத்துக்காக இங்கே வந்திருந்து வைத்து
காற்கடைக் கொண்டாயே யாகிலும் தன்னைக் காற்கடைக் கொண்டவனை ஐஸ்வர்யம் விடாதே போலே நீ என்னை உபேஷிக்க உபேஷிக்க-உன்னையே பற்றி நின்றேன் –

வித்துவக் கோட்டு அம்மா ! நீ வேண்டாயேயா யிடினும்
மற்றாரும் பற்றிலேன் என்று அவனை தாள் நயந்த
கொற்ற வேல்  தானை குலசேகரன் சொன்ன
நல் தமிழ் பத்தும் வல்லார் நண்ணார் நரகமே
– 5-10-இதுக்கு என்று வந்திருக்கிற நீ என்னை உபேஷித்தாயே யாகிலும்-வேறு ஒரு புகலில்லை-நான் அநந்ய கதி என்று -அவன் திருவடிகளை ஆசைப்பட்டு-பிரதிபஷத்தை பக்க வேரோடு வாங்க வற்றான வென்றியை உடைய வேலையையும் சேனையையும் உடைய ஸ்ரீ பெருமாள் சொன்னவை –
பிரதிபஷத்தை வெல்லுகைக்கு ஈடான பரிகரம் உடையரானார் போலே யாய்த்து –
ஸ்ரீ பகவத் ப்ராப்திக்கு பரிகரமாக-இவருடைய அநந்ய கதித்வத்வமும்-கடல் பேர் ஆழமாய் இருக்கச் செய்தே -உள்ளுள்ள பதார்த்தங்கள் தோற்றும்படியாய் இருக்குமா போலே
அர்த்தம் மிக்கு இருக்குமாய்த்து இத் திருமொழி –சம்சார சம்பந்தத்துக்கு அடியான பாபத்தை பண்ணினார்களே யாகிலும் இஸ் சம்சாரத்திலே வந்து பிரவேசியார்கள் –

ஆழ்வார்பெருமக்கள் எம்பெருமானைத் தந்தை நிலையில் வைத்தெண்ணக்கூடிய இடங்கள் எண்ணற்றவை.-திருவேங்கடத்து என் ஆனை என் அப்பன் (3.9:1)
என்றும், திருக்குறுங்குடி எம்பெருமானை,… குறுங்குடி மெய்யம்மையே உளனாய எந்தையை (3.9:2)-எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும் தம்பிரானை தண் தாமரைக் கண்ணனை கொம்ப ராவு நுண் ணேரிடை மார்புனை (1.10:3)-எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும் எம்பிரானை”என்று அழகாய்ப் பேச, அதன் இன்பத்தில் திளைத்த எம்பெருமான் ‘இப்படி ஏத்துகின்றவன் ஆர் ?” என்று குளிரக் கடாட்சிக்கின்றான். அக்கடாட்சத்தால் மகிழ்ந்த ஆழ்வார் தண்டாமரைக் கண்ணனை ” என்று மேலும் சிறப்பிக்கின்றார், குற்றமே வடிவான தம்மீது எம்பெருமான் இவ்வளவு சிறப்பாகக் கருணை காட்டக் காரணமில்லையே! என்ன காரணமோ? என்று ஆராய்ந்து பார்த்த ஆழ்வார். கடாட்சிக்கச் செய்யவல்ல பெரிய பிராட்டியார் அருகில் இருப்பதை உணர்ந்து, ‘ கொம்பு அராவு நுண் நேரிடை மார்பனை என்று மேலும் சிறப்பிக்கின்றார். இந்த ஆழ்வாரே திருவிண்ணகர் சேர்ந்த பிரானை – என் சரண் என் கண்ணன் என்னை ஆளுடை என்அப்பனே (6. 3.8)என் அப்பன் எனக்காய் இகுளாய என்னைப் பெற்றவளாய்,பொன் அப்பன் மணி அப்பன்; முத்தப்பன் என்னப்ப னுமாய் தன் ஒப்பார் இல் அப்பன் (6.3:9)(இருளாய்-செவிலியாய் என்று கூறுவதைக் காணலாம்-இந்த ஆழ்வாரே,பொழில்ஏழும் உண்ட எந்தாய் : (2,3:4)எள்கல் தந்த எந்தாய் ! (2.5:4)-எந்தாய் ! தண்திரு வேங்கடத்துள்
நின்றாய்
(2:6:9)எக்காலத்தும் எந்தையாய்ப் என்னுள் மன்னில் மற்று எக்கா லத்திலும் யாதொன்றும் வேண்டேன் (2.9:8) எழில்கொள சோதி எந்தை தந்தை தந்தைக்கே ! எந்தை தந்தைதந்தை (3.3:1) தந்தை தந்தைக்கும் முந்தை (3.3:2) ஆதுமில் காலத் தெந்தை அச்சுதன் (3.4:4)வார்ப்புனல் அந்தண் அருவி வடதிரு வேங்கடத் தெந்தை (3.5:8) தாவி ைையம் கொண்ட எந்தாய்! (4.7:3) ஆணி செம்பொன் மேனி எந்தாய் ! (4.7:4) ஏன மாய்நிலம் கீண்டஎன் அப்பனே ! (5.7:6) அகல்கொள் வையம் அளந்த மாயன்என் அப்பன் (6.4:6) புனத்து மாய்முடி மாலை மார்பன்என் அப்பன் (6.4:6) மாணி யாய்நிலம் கொண்ட மாயன்என் அப்பன் (6.4:6)
தூமுதல் பத்தர்க்குத் தான்தன்னைச் சொன்னஎன் | வாய்முதல் அப்பனை (7.9:3)
என்னால்தன்னை பதவிய இன்கவி பாடிய அப்பனுக்கு (7.9.10)பதவிய – மதுரமான]
திருக்குறன் அப்பன் (7.10:2)-பாம்பணை அப்பன் (7.10:5)தாயாய் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் நீயாய்நீ நின்ற வாறு இவைஎன்ன நியாயங்களே (7.8:1) பெரிய அப்பனை, பிரமன் அப்பனை;உருத்திரன் அப்பனை, முனிவர்க்குரிய அப்பனை, அமரர் அப்பனை,உலகுக்கோர் தனியப்பன் தன்னை (8,1:11)என்று எம்பெருமானை அப்பனாகப்-தந்தையாகப்-பாவித்துப் பாசுரங்கள் அருளியுள்ளதைக் காணலாம்.

மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய் விளக்கொளியாய் முளைத்தெழுந்த
திங்கள் தானாய்
பின்னுருவாய், முன்னுருவில் பிணிமூப் பில்லாப் பிறப்பிலியாய், இறப்பதற்கே
எண்ணாது என்றும்
பொன்னுருவாய், மணியுருவில் பூதம் ஐந்தாய்ப் புனலுருவாய், அனலுருவில்
திகழும் சோதி
தன்னுருவாய், என்னுருவில் நின்ற எந்தை

ஒண்மிதியில் புனலுருவி ஒருகால் நிற்ப ஒரு காலும் காமருசீர் அவுணன் உள்ளத்து
எண்மதியும் கடந்தண்ட மீது போகி இருவிசும்பி லூடுபோய் எழுந்து மேலைத்
தண்மதியும் கதிரவனும் தவிர ஓடித் தாரகையின் புறந்தடவி, அப்பால் மிக்கு
மண்முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை

திருமங்கையாழ்வாரின் திருநாங்கூர்த்திருமணிக் கூடம் திருமொழி ஒன்றின் (4.5) ஒவ்வொரு பாசுரத்திலும் இந்தத் தந்தை- தனயன் உறவு முறை அமைந்திருப்பதைக்
கண்டு அநுபவித்து மகிழலாம்.
காம்புடைக் குன்ற மேந்திக் கடுமழை காத்த எந்தை (1)
வவ்விய இடும்பை கூரக் கடுங்கணை துகந்த எந்தை (2)
வன்தாள் சேத்தொழில் சிதைத்துப் பின்னை செவ்வித்தோள் புணர்ந்த எந்தை (3)
பூங்குருக் கொசித்துப் புள்வாய் பிளந்தெரு து) அடர்ந்த எந்தை (4)
வருமவள் செவியும் மூக்கும் வானினால் தடிந்த எந்தை (5)
அண்டமும் சுடரும் அல்லா ஆற்றலும் ஆய எந்தை (6)
நின்றவெஞ் சுடரும் அல்லா நிலைகளும் ஆய எக்தை (7)
பொங்கிய முகிலும் அல்லாப் பொருள்களும் ஆய எந்தை (8)
கோவமும் அருளும் அல்லாக் குணங்களும் ஆய எந்தை (9)
என்ற பாசுரப் பகுதிகளைக் காண்க.

நல் வீடு செய்யும் மாதாவினைப் பிதுவை திருமாலை வணங்குவனே (திருவிருத் – 95)
மேலாத் தாய்தந்தையும் அவரே இனி ஆவாரே (திருவாய்.5.1:8)தெளிவிலாக் கலங்கல் நீர்சூழ் திருவரங்கத்துள் ஓங்கும் ஒளியுணர் தாமே யன்றே தந்தையும் தாயும் ஆவா
[ஓங்கும்-விஞ்சியிருக்கும் ஒளிதேசு ] – திருமாலை – 37-அத்தனாகி அன்னையாகி ஆளும் எம்பிரானுமாய்‘ (திருச்சந்.115)தாயும் தந்தையும் ஆய்இவ் வுலகினில் வாயும் ஈசன் மணிவண்ணன், எந்தையே (1-10:6)வாயும் அவதரித்தவன்?எந்தை யே!என்றும், எம்பெரு மான்! என்றும் சிந்தையுள் வைப்பன்; சொல்லுவன் (1-10:7)” என்னைப்பெற்ற
அத்தாயாய்த் தந்தையாய் அறியாதன அறிவித்த அத்தா
(2.3 2)தஞ்ச மாகிய தந்தை தாயொடு தானுமாய் (3.6:9)

தாய் நினைந்து கன்றே ஒக்க என்னையும் தன்னையே நினைக்கச் செய்து தான் எனக்கு
ஆய்நினைந்து அருள் செய்யும் அப்பனை
(பெரி. திரு.7.3:2)உயிர்க் கெல்லாம்
தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணா
!- பெரி . திரு. 7:19-பெற்ற தாய் நீயே, பிறப்பித்த தந்தை நீ; மற்றையார் ஆவாரும்நீ; (பெரி .திருவந்- )

———–

இரட்சக – இரட்சய சம்பந்தம்

பெற்றார் பெற்றொழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு
உற்றானாய் வளர்ந்து என் உயிராகி நின்றானை
முற்றா மாமதிகோள் விடுத்தானை எம்மானை
எத்தால் யான் மறக்கேன் இதுசொல், என் ஏழை நெஞ்சே
! (6)

திரு மந்திரத்தில் தேறுகின்ற ஒன்பது வகையான உறவுகளையும் உடையவன் எம்பெருமான் என்பது ”உற்றானாய் நின்று வளர்த்து என் உயிராகி நின்றானை” என்ற அடியால் பெறப்படுகின்றது.

உலகைப் பிரளயத்திலிருந்து எம்பெருமான் உய்வித் தமையைக் கூறும், பெரிய திருமொழியிலுள்ள ‘மை நின்ற (11.6) என்ற பதிகத்தில் திருமங்கையாழ்வாரின் திருவாக்கு
கள் (ஒன்பது பாசுரங்கள்) இரட்சக-இரட்சய உறவினை மிகத் தெளிவாக விளக்குகின்றன. மைந்நின்ற கருங்கடல் வாய் யுலகின்றி வானவரும் யாமும் எல்லாம்
மெய்ந்நின்ற சக்கரத்தன் திரு வயிற்றில் நெடுங்காலம்
-11-6-1-

வெம்பெருமான் உண்டு உமிழ்ந்த வெச்சில் தேவர்
அல்லாதார் தாம் உளரே யவன் அருளே யுலகாவது அறியீர் களே
–11-6-2-

நெற்றி மேல்  கண்ணானும் நிறை மொழி வாய் நான்முகனும் நீண்ட நால்வாய்
ஒற்றைக் கை வெண் பகட்டில் ஒருவனையும் உள்ளிட்ட அமரரோடும்
வெற்றிப் போர் கடல் அரையன் விழுங்காமல் தான் விழுங்கி உய்யக் கொண்ட
கொற்றப் போராழியான் குணம் பரவாச் சிறு தொண்டர் கொடியவாறே
–11-6-3-

பனிப் பரவித் திரை ததும்பப் பார் எல்லாம் நெடும் கடலே  யானகாலம்
இனிக் களை கண் இவர்க்கு இல்லை என்று உலகம் ஏழினையும் ஊழில் வாங்கி
முனித்தலைவன் முழங்கொளி  சேர்  திரு வயிற்றில் வைத்து உம்மை யுய்யக் கொண்ட
கனிக்கவளத் திருவுருவத் தொருவனையே கழல் தொழுமா கல்லீர்களே –
11-6-4-

பாராரும் காணாமே பரவை மா நெடும் கடலே யான காலம்
ஆரானும் அவனுடைய திரு வயிற்றில் நெடும் காலம் கிடந்தது உள்ளத்து
ஓராத உனர்விலீர் உணருதிரேல் உலகளந்த உம்பர் கோமான்
பேராளான் பேரான பேர்கள் ஆயிரங்களுமே பேசீர்களே
 -11-6-5-

பேயிருக்கு நெடு வெள்ளம் பெரு விசும்பின் மீதோடிப் பெருகு காலம்
தாயிருக்கும் வண்ணமே யும்மைத் தன் வயிற்றிருத்தி  உய்யக் கொண்டான்
போயிருக்க மற்று இங்கோர் புதுத் தெய்வம் கொண்டாடும் தொண்டீர் பெற்ற
தாயிருக்க மணை வெந்நீர் ஆட்டுதிரோ மாட்டாத தகவற்றீரே
—11-6-6-

மண்ணாடும் விண்ணாடும் வானவரும் தானவரும் மற்றும் எல்லாம்
உண்ணாத பெரு வெள்ளம் உண்ணாமல் தான் விழுங்கி யுய்யக் கொண்ட
கண்ணாளன் கண்ணமங்கை நகராளன் கழல் சூடியவனை உள்ளத்து
எண்ணாத மானிடத்தை எண்ணாத  போதெல்லாம் இனியவாறே
–11-6-7-

மறம் கிளர்ந்து கரும் கடல் நீர்  உரந்துரந்து பரந்தேறி யண்டத்தப்பால்
புறம் கிளர்ந்த காலத்துப் பொன்னுலகம் ஏழினையும் ஊழில் வாங்கி
அறம் கிளர்ந்த திரு வயிற்றின் அகம்படியில் வைத்து உம்மை உய்யக் கொண்ட
நிறம் கிளர்ந்த கருஞ்சோதி நெடும் தகையை நினையாதார் நீசர் தாமே
–11-6-8-

அண்டத்தின் முகடு அழுந்த அலை முந்நீர்த் திரை ததும்ப ஆவா வென்று
தொண்டர்க்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் தான் அருளி உலகம் ஏழும்
உண்டு ஒத்த திரு வயிற்றின் அகம்படியில் வைத்து உம்மை யுய்யக் கொண்ட
கொண்டற் கைம் மணி வண்ணன் தண் குடந்தை நகர் பாடி யாடீர்களே
–11-6-9-

மூவுலகு உண்டு உமிழ்ந்த முதல்வன் (திருமாலை-1)
‘பாரினை உண்டு, பாரினை உமிழ்ந்து’ (பெரி . திரு. 4.10:5)
‘உண்டாய் உலகு ஏழ் முன்னமே உமிழ்ந்து மாயையால் புக்கு(திருவாய்- 1.5:8)

ஓவாத் துயர்ப் பிறவு உட்படமற் றெவ்வவையும்
மூவாத்தனிமுதலாப் மூவுலகும் காவலோன்
மாவாகி ஆமையாய்மீனாகி மானிடமாம்
தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே
(2-8-5)

சோம்பாது இப்பல்லுருவையெல்லாம் படர்வித்த வித்தா! ‘ (பெரிய திருவந்.18,

களைவாய் துன்பம்; களையா (து) ஒழிவாய்; களைகண் பற்றிலேன்;
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்த மாமாயா!
தளரா உடலம் என்ன (து) ஆவி சரிந்து போம்போது
இளையா(து) உன்தாள் ஒருங்கப் பிடித்துப் போதஇசை நீயே
-5-8-8-

நலந்தான் ஒன்றுமிலேன் நல்ல தோரறஞ் செய்துமிலேன் -பெரி . திரு .1.9:4-ஆகிஞ்சன்னியம்”, அநக்யகதித்துவம்

தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதிபுகத் தனியொரு தேர்கடவித் தாயொரு கூட்டிய என்
அப்ப
!(பெரியாழ். திரு.1.6:7)பிறப்பகத்தேமாண்டொழிந்த பிள்ளைகளை நால்வரையும்
இறைப் பொழுநில் கொணர்ந்து கொடுத்து ஒருப்பகுத்து உறைப்பன்
(பெரியாழ். திரு.4.8:2) வேத வாய்மொழி அந்தணன் ஒருவன் எந்தை! நின்சரண் என்னுடை மனைவி
காதல் மக்களைப் பயத்தலும் காணாள் கடியது ஓர் தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப ஏதலார் முன்னே இன்னருன் அவற்குச் செய்து உன்மக்க மற்றுஇவர் என்று
கொடுத்தாய்
(பெரி.திரு. 5.8 8)படர் புகழ் பார்த்தனும் வைதிக னும்உடன் ஏறத்திண் தேர்கடவி சுடரொளி யாய்நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை
உடலொடுங் கொண்டு கொடுத்தவன்
(திருவாய்.3.10:5)மாதவத்தோன் புத்திரன்போய்
மறிகடல்வாய் மாண்டானை ஓதுவித்த தக்கணையா உருவுருவே கொடுத்தான்
.-பெரியாழ். திரு .4.8:1-ஓது வாய்மையும் உவனியப் பிறப்பும் உனக்கு முன் தந்த| அந்தணன் ஒருவன்
‘ காதல் என் மகன் புகலிடங் காணேன் ; கண்டு நீ தரு வாயெனக்கு என்று கோதில் வாய்மையினான் உனை வேண்டிய குறைமு டித்தவன் சிறுவனைக் கொடுத்தாய்
-பெரி. திரு. 5.8-7

அல்லற் படாவண்ணம் காக்க வேண்டும் (4-10-3) அற்றைக்கு நீ என்னைக் காக்க வேண்டும் (4-10-4)ஐய! இனிஎன்னைக் காக்க வேண்டும் (5) அண்ணலே! நீ என்னைக் காக்க வேண்டும் (6) அஞ்சலை என்றுஎன்னைக் காக்க வேண்டும் (7)ஆனாய்! நீஎன்னைக் காக்க வேண்டும் (8)

————

4-சேஷீ -சேஷ உறவு-சீவான்மாவுக்கு அவனுடைய கை, கால்கள் முதலான உறுப்புகள் கூடிய உடல் சேஷமாவது போன்று, பரமான் மாவுக்குச் சரீரமாக நிற்கும் இந்தச் சீவான்மா சேஷபூதன் (அடிமை) ஆகின்றான். சர்வேசுவரன் தன்னுடைய திருவுள்ளத்தின் சங்கல்பா குணமாய்த் தனக்கே உரிய விருப்புப் பொருளாய் உரிமையாக்கிக் கொள்ளுகின்றான்.
அதனால் பரமான்மா (ஆண்டான்) ஆகின்றான்.

சென்றால் குடையாம்; இருந்தால்சிங் காசனமாம்
நின்றால் மரவடியாம் ; நீள்கடலுள் என்றும்
புணையாம் ; அணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்,
அணையாம் திருமாற்கு அரவு

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று

திருவேம்கடவா நாயேன் வந்தடைந்தேன் நல்கி யாள் என்னைக் கொண்டருளே—1-9-1-திருவேம்கட மா மலை என் ஆனாய்  வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—1-9-2-குளிர் மா மலை வேங்கடவா அன்றே வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—1-9-நெறியார் திருவேங்கடவா அலந்தேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—-1-திருவேங்கட மா மலை என் அப்பா வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—-1-9-5- விரையார் திருவேங்கடவா அண்ணா வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே-1-9-கன மா மலை வேங்கடவா அரியே வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே–1-9-7-சோலை சூழ் வேங்கடவா ஆற்றேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—1-9-8-மாயனே எங்கள் மாதவனே கல் தேன் பாய்ந்து ஒழுகும்கமலச் சுனை வேங்கடவா அற்றேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே–1-9-9-பிராட்டி சம்பந்தம் கூறப் பெற்றிருப்பதனால் ‘புருஷகாரம்‘ தெளிவாகின்றது.

விண்ணோர் தொழும் வேங்கடமாமலை மேய அண்ணா வடியேன்இடரைக் களையாயே1 10-விலங்கல் குடுமித் திருவேங்கடம் மேய அலங்கல் துளப முடியாய் அருளாயே–1-10-2-சீரார் திருவேங்கட மா மலை மேய ஆராவமுதே அடியேற்கு அருளாயே–1-10-3-நில மீரடியாலே
விண டோய் சிகரத் திருவேங்கடம் மேய அண்டா வடியேனுக்கு அருள் புரியாயே-1-10-4-சேணார் திருவேங்கட மா மலை மேய கோணா கணை யாய் குறிக்கொள் எனை நீயே-1-10-5-மின்னார் முகில்சேர் திருவேங்கடம் மேய என்னானை என்னப்பன் என் நெஞ்சில் உளானே6-தேனே திருவேங்கட மா மலை மேய கோனே என் மனம் குடி கொண்டு இருந்தாயே–1-10-7-வேய் விண்டுதிர் வேங்கட மா மலை மேய ஆயன் அடி அல்லது மற்று அறியேனே–1-10-8-சிந்தா மணியே திருவேங்கடம் மேய எந்தாய் இனி யான் உன்னை என்றும் விடேனே–1-10-9-

காவளம் பாடி மேய கண்ணனே களை கண் நீயே –4-6-1-நாங்கை மேய
கண்ணனே காவளந்தண் பாடியாய் களை கண் நீயே -4-6-2-நாங்கைக்
கருத்தனே காவளந்தண் பாடியாய் களை கண் நீயே-4-6-3-நாங்கைக்
கனை கழல் காவளந்தண் பாடியாய் களை கண் நீயே –4-6-4-நாங்கை மேய
கடவுளே காவளந்தண்  பாடியாய் களை கண் நீயே -4-6-5-நாங்கை மேய
கல்லரண் காவளந்தண் பாடியே களை கண் நீயே -4-6-6-நாங்கைக்
காத்தேன் காவளந்தண் பாடியாய் களை கண்நீயே –4-6-7-நாங்கைக்
காவளம் பாடி மேய கண்ணனே களை கண் நீயே -4-6-8-மட மயிலாலு நாங்கைக்
கந்தமார் காவளந்தண் பாடியாய் களை கண் நீயே -4-6-9-

முட்டில்பல் போகத் தொரு தனி நாயகன் மூவுல குக்குரிய
கட்டியைத் தேனை அமுதை நன் பாலைக் கனியைக் கரும்புதன்னை
மட்டவிழ் தண்ணக் துழாமுடி யானை வணங்கி அவன் திறத்துப்
பட்டபின் னைஇறை யாகிலும் யான்என் மனத்துப் பரிவலனே
(3-10-3)-தனி நாயகன்- ஒப்பற்ற தலைவன்;பட்டபின்னை–ஆட்பட்ட பிறகு

உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத் தொடு வீற்றிருந்தும் மணங்கூடியும்
கண்ட வாற்றால் தனதே உலகென் நின்றான்தன்னை
வண்டமிழ் நூற்க நோற்றேன் அடியார்க் கின்பமாரியே
(4-5-10)-தனதே உலகென நின்றான் தன்னை ‘ என்பதால் சேஷித்துவமும் ‘ வண்டமிழ் நூற்க நோற்றேன்’ என்பதால் சேஷத்துவமும் தெளிவாகின்றன.

வாரா வருவாய் வரும்என் மாயா ! மாயா மூர்த்தியாய்!
ஆரா அமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய் ! திருக்குடந்தை
ஊரா ! உனக்காட் பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ?
(5-8-10)’ஆண்டாய் ‘ என்பதால்
சேஷித்துவமும், உனக்காட்பட்டும்? என்பதால் சேஷத்துவமும் தெளிவாகின்றன

தெரிதல் நினைதல் எண்ணல் ஆகாத் திருமாலுக்கு உரிய தொண்டர் தொண்டர் தொண்டர் சடகோபன் (6-9-11)-திருமாலுக்கு’ என்பதால் சேஷித்துவமும்,–தொண்டர் தொண்டள்’ என்பதால் சேஷத்துவமும் தெளிவாகின்றன.

புண்ட ரீகக்கொப் பூழ்புனற் பள்ளி அப்பனுக்கே தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் (7-1-11)’புனல் பள்ளி அப்பன் ‘ என்பதால் சேஷித்துவமும் .தொண்டர் தொண்டன்’ என்பதால் சேஷத்துவமும் புலனாகின்றன.

என்அமர் பெருமான் இமையவர் பெருமான் இருநிலம் இடந்தாம் பெருமான்
முன்னைவல் வினைகள் முழுதுடன் மாள என்னை ஆள் கின்ற எம்பெருமான்
(8-4-3)’ என் அமர் பெருமான்… இருநிலம் இடந்த எம்பெருமான் ‘ என்பதால் சேஷித்துவமும், என்னை ஆள்கின்ற ‘ என்பதால் சேஷத்துவமும் அறியப்பெறுகின்றன.

செந்தழலே வந்து அழலைச் செய்திடினும் செங்கமலம்
அந்தரம்சேர் வெங்கதிரோற் கல்லால் அலராவால்
வெந்துயர்வீட் டாவிடினும் விற்றுவக் கோட்டம்மா !உன்
அந்தமில் சீர்க்கல்லால் அகம்குழைய மாட்டேனே
(5-6)ூரியன் நிலையில் எம்பெருமா
னையும் (சேஷி) தாமரையின் நிலையில் தம்மையும் (சேஷன்) வைத்துக் கூறியதனால் ஆண்டான்- அடிமை உறவு காணப்படும். ஆனால் பிரதிவாதி பயங்கரம் அண்ணசாமி, நாயக. நாயகிபாவனை தொனிக்கும் என்று அருளிச் செய்வர். ஒரு வகையில் நோக்கினால் இதுவும் பண்டைய நிலைப்படி ஆண்டான்-அடிமை உறவு தானே!

5-நாயக-நாயகி சம்பந்தம்
ஞானத்தில் தம் பேச்சு பிரேமத்தில் பெண் பேச்சு-சம்பந்த உபாய பலங்களில் உணர்த்தி துணிவு பதற்றம் ஆகிய பிரஜ்ஞாவஸ்தைகளுக்குத் தோழி, தாயார்.
மகள் என்று பேர்
“ஞானாவஸ்தைகள்’ என்னாமல் பிரஜ்ஞாவஸ்தைகள்’-என்றது –அவஸ்தா திரய விருத்தி’-மூன்று விதமான நிலைகளும் அவர்கட்கு எல்லாக் காலங்களிலும் உண்டு என்னுமிடம் தோற்றுகைக்காக.

தீர்ப்பாரை யாமினி -4-5-அநந்யார் சேஷத்துவத்தைத் தோழி வெளிப்படுத்துவது-
சின்மொழி நோயோ கழிபெருந்தெய்வம், இந்நோய் இனது என்று
இன்மொழி கேட்கும் இளந்தெய்வம் அன்று இது வேல! நில்நீ
என்மொழி கேண்மின் என் அம்மனைமீர்! உலகேழும் உண்டான்| சொன்மொழி மாலை அம் தண்ணந் துழாய்கொண்டு சூட்டுமினே (20)
‘துவளில் மணிமாடத்து'(6.5)-தலைவியின் அநந்யார்ஹத்துவம் தோழிக்கு தெரிவித்தவாறு.
‘கருமாணிக்க மலைபோல்’ (8.9)-‘இவளது உடம்பில் அழகிய குளிர்ந்த திருத்துழாயின் மணம் வீசுவதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? என் உடம்பிலாவது உங்கள் உடம்பிலாவது திருத்துழாய் மணம் வீசுகின்றதோ? எம்பெருமான் திருமேனியில் அணைந்தாலல்லது இம் மணம் வீசுவதற்குக் காரணம் உண்டோ?” என்கின்றாள் . “இராஜ புத்திரரை அணையாதாற்குக் கோயில் சாந்து நாறுவதற்கு விரகு உண்டோ?” என்பது ஈடு. இதனால் திருப்புலியூரில் நின்ற மாயப் பிரானுடையதிருவருளுக்கே இவள் இலக்காயினாள் என்று கூறும் தோழியின் கருத்தில் தலைவியின் அநந்யார்ஹ சேஷத்துவம்’ பளிச்சிடுகின்றதன்றோ?

மண்ணையிருந்து துழாவி (4.4) என்ற திருப்பதிகத்தில்,-தாய்ப்பாசுரம்–தலைவியின் பாரதந்திரியம் வெளி யாகின்றது.
‘உண்ணும் சோறு’ (6.7) என்றபதிகம் தாய்ப் பாசுரம் -எல்லாம் கண்ணன் ‘ என்ற தாய்ப் பாசுரத் தொடர் தலைவியின் பாரதந்திரியத்தையும். உபாயத்தையும் காட்டுகின்றது.
கங்குலும் பகலும்’ (7.2)-பெரிய பெருமாளைத் தாய் வினவுவதில் ஆழ்வாரின் ஈஸ்வர பாரதந்திரியமும் உபாயத்தில் துணிவும் பளிச்சிடுவதைக் காண்லாம்
உடனே பெற வேண்டும் என்ற பதற்றத்தை யுடையவள் மகள்.-
திருக்குறுங்குடி பற்றிய ‘எங்ஙனேயோ’ (5.3)திருவாய்மொழியில்,-தலைவியின்
வாக்கு அவளது பதற்ற நிலையைப் பாங்குடன் தெரிவிக்கின்றது.
‘வெள்ளைச் சுரி சங்கொடு(7 3) என்று தொடங்கும் திருவாய்மொழியிலும் இன்னுயிர்ச் சேவலிலும் (9.5)அவனுடைய திருக் குணங்களை ஒருவாறு நினைத்துத் தரித்தும் நடைபெறுகின்றது -இப் பாசுரங்கள் ஆழ்ந்து ஓதி அனுபவிக்கும் போது தலைவியின் துடிப்பைப்- பதற்றத்தைத்- தெளிவாக உணர முடிகின்றது.

திருமங்கையாழ்வாரின் ‘தவள இளம்பிழை (9.5)என்று தொடங்கும் திருக்குறுங்குடி பற்றிய திருமொழியிலும் என்னுடைய ஆவி இனி தரிக்க விரகில்லை; நான் வேண்டும் என நீங்கள் நினைத்தால்,திருக்குறுங்குடியில் என்னைக் கொண்டு போய்ச் சேர்த்து விடுங்கள் ; அங்கே எழுந்தருளி யிருக்கின்ற கொண்டல் மணி வண்ணரைக் கண்டவுடன் என் வாட்டமெல்லாம் தீரும்;மேகத்தையும் மணியையும் கண்ட பின்னரும் வாட்டம் நிற்குமோ ? ஆகவே, பாதகப் பொருள்களின் வசத்திலே அகப்பட்டு நான் நலிவு படாமல் இவை யெல்லாம் அநுகூலங்களாகப் பெறும் தேசத்தில் என்னைக் கொண்டு போய் விட்டிடுங்கள்” என்கின்றாள்.
நாச்சியார் திருமொழி(12) –
மதுரைப் புறத்து என்னை உய்த்திடுமின் (1)
ஆய்ப்பாடிக்கே என்னை உய்த்திடுமின் (2)
நந்தகோ பாலன் கடைத்தலைக்கே என்னை உய்த்திடுமின் (3)
யமுனைக் கரைக்கு என்னை உய்த்திடுமின் (4)
பொய்கைக் கரைக்கு என்னை உய்த்திடுமின் (5)
பத்தவிலோசனத்து (என்னை) உய்த்திடுமின் (6)
பாண்டி வனத்து என்னை உய்த்திடுமின் (7)
கோவர்த் தனத்து என்னை உய்த்திடுமின் (8)
துவராபதிக்கு என்னை உய்த்திடுமின் (9)-இவற்றிலெல்லாம் “எம்பெருமானைக் கிட்டியல்லது தரியேன்” என்ற பதற்றம் தொனிப்பதைக் காணலாம். ‘சித்தோபாயம்’ நிழலிடுவதைக் கண்டு மகிழலாம்.

6-ஞாதா-ஞேயன் உறவு-அறிவன்- அறியப்படும் பொருள் உறவு-
மகாரம் இருபந்தைந்தாம் அட்சரமாய் ஞானவாசியுமா யிருக்கையாலே, ஆத்மாவைச் சொல்லுகிறது.(முமுட்சுப்படி.-66) -ஆன்மாவிற்கு சேஷத்துவம், ஞானத்துவம், ஞாத்ருத்வம் (அறிவுடையவனாய் இருக்கை) ஆகிய மூன்று தன்மைகள் உண்டு-
பெயரும் கருங்கடலே நோக்கும் ஆறு;ஒண்பூ
உயரும் கதிரவனே நோக்கும் -உயிரும்
தருமனையே நோக்கும்;-ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு-பொய்கை யாழ்வாரின் திரு வாக்கு- 67)–இப் பாசுரத்தில் உணர்வு என்பது ஞான மயனான ஆன்மா திருமாலுக்கு அநந்யார்ஹ சேஷ பூதன் என்பதை உணர்த்தும் –
சிந்தை மற்றொன்றின் திறத்தல்லாத் தன்மை தேவ பிரான் அறியும்
சிந்தையினால் செய்வ தானறியாதன மாயங்கள் ஒன்றுமில்லை
சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத் தேவர் குழு வணங்கும்
சிந்தை மகிழ் திரு வாறன்விளையுறை தீர்த்தனுக் கற்ற பின்னே (7-10-10)–எம்பெருமானுக்கு அடிமை என்று அறுதியிட்ட பின்பு என் மனம் வேறு ஒன்றினை உத்தேஸ்யமாக நினைத்திராத தன்மையை எம்பெருமான் அறிவான்; சிந்தையினால் நினைக்கப்படு வனவான வஞ்சனைகள் (மாயங்கள்) அவன் அறியாதன ஒன்றும் இல்லை -“ஆழ்வீர்! இப்போது நீர் திருவாறன்விளையிலே பிராவண்யம் (ஊற்று) முற்றி யிருந்தீராகிலும், பல காலும் பரம பதம், பரம பதம்’ என்று வாய் வெருவிக் கிடந்தீராதலால்,எம்பெருமான் . இதையே கொள்ளும்’ என்று நிர்பந்தித்துக் கொடுத்தானாகில் என் செய்வீர்?” என்று சிலர் உசாவியதாகக் கொண்டு அதற்கு விடை தருகின்றார் இப் பாசுரத்தில்,”அதனை,என் நினைவிற்கு மூலமாக இருக்கின்ற சர்வேஸ்வரனைக் கேட்டுக் கொள்வது” என்று அருளிச் செய்வர் நஞ்சீயர். ”திருவாறன் விளையே பிராப்பியம் என்று இருக்கின்றீர்; ஈஸ்வரன் ஸ்வதந்திரன் அல்லனோ? அவன் பரம பதத்தைத் தரின் என் செய்வீர்!” என்ன, ” அவன் முற்றறிவினன் அல்லனோ? அவன் அறியானோ. என்கின்றார்’என்று பிள்ளான் பணிப்பர். “அவன் புருஷார்த்தப் பிரதன் என்று பிரசித்தி பெற்றவன் அல்லனோ? புருஷன் விரும்பியதை யன்றோ அவன் கொடுத்தருளுவன்! எனது சிந்தை திருவாறன் விளை தவிர மற்றொன்றையும் கணிசியாதிருக்கும் படியை அறிய ஆற்றலற்றவன் அல்லனே; அப்படி அறிந்து கொண்டும் எங்ஙனே மற்றொன்றினைக் கொடுப்பான்?” என்கின்றார். “மற்றொன்று என்கிறது பரம பதத்தின் பெயர் சொல்லுகையும் கூட அஸஹ்யமானபடி” என்பது ஈடு, இதனாலும் ‘ஞாதா -ஞேயன்” உறவு உறுதியாகின்றது.

7-(ஸ்வ-ஸ்வாமி)சொத்து – சொத்துக் குரியவன்
யானே என்னை அறிய கிலாதே
யானே என் தனதே என்று இருந்தேன்
யானே நீ ; என் உடைமையும் நீயே;
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே!(2-9-9)-இதனால் சொத்து-சொத்துக்குரியவன் ‘ என்ற சம்பந்தம் தெளிவாகின்றது.

ஆனந்தமாய் அரங்கற்கே உயிர்கள் |அடிமை என்னும்
ஞானந்தனால் ஐம் பொறி வாசல்! சாத்தி நற்றாளைப் பற்றி
ஈனந் தரும் பற்றும் மற்றென்றும் யான் எனது என்னும் அபி
மானம் தவிர்ந்திருப்பார்க்கு இது | போல் இல்லை மாதவமே.–திருவரங்கக்கலம்பகம்

மாத வங்கள் என்(று) ஓத வங்களின் மருவு சீவன் என்று ஒருவ! நீபெரும்
பூதம் அல்லை; இந் திரியம் அல்லை;ஜம்புலனும் அல்லை;நற் புந்தி அல்லை காண்;
சீத ரன்பரம் தாமன் வாமனன்|திருவ ரங்கனுக் கு) அடிமை; நீயுனக்கு
ஏதும் இல்லை என்றறி; அறிந்தபின் ஈதின் மாதவம் இல்லை எங்குமே-திருவரங்கக் கலம்பகம்

8-சரீர- சரீரி பாவனை-அதாவது சித்தும் அசித்தும் எம்பெருமானுக்கு உடலாக
இருக்கும்-இங்ஙனமாக உடலைப் பற்றி நிற்கும் உயிர் அவ்வுடலுக் கேற்ப இன்ப துன்ப உணர்ச்சிகளும் அறிவின் சுருக்கமும் பெருக்கமும் அடைதல் தெளிவாகும். ஆனால், உடல் உயிர் இரண்டினுள்ளும் கலந்து நிற்கும் இறைவனை இவ்வேறுபாடுகள் சிறிதும் அடைவதில்லை -இதற்குக்காரணம் ‘பிரவேச ஹேது விசேடம்”
திடவிசும்பு எரிவளி நீர்நிலம் இவைமிசைப்
படர் பொருள் முழுவதும் ஆய்அவை அவை தொறும்
உடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்.
நீர்ஆய் நிலன்ஆய் தீ ஆய் காலாய் நெடுவானாய்
சீரார் சுடர்கள் இரண்டு ஆய் சிவனாய் அயன் ஆனாய்
அடியேன் உள்ளான் உடல் உள்ளான்–அஹம் ‘ அர்த்தத்துக்கு ஞாநாநந்தங்கள் தடஸ்தம் என்னும்படி தாஸ்யமிறே அந்தரங்க நிரூபசும் என்ற ஸ்ரீவசனபூஷன ஸூத்திரத்திற்கு ‘அடியேன் உள்ளான் என்றாறிறே ஆழ்வார் ! திருக்கோட்டியூர் நம்பி ஸ்ரீபாதத்திலே ஆழ்வான் ஆறு மாதம் சேவித்து நின்று மகா நிதியாகப் பெற்ற அர்த்தமிறே இது” என்று மணவாள மாமுனிகள் அருளிச் செய்துள்ளார்
திடவிசும்பு எரிநீர் திங்களும் சுடரும்
செழு நிலத்து உயிர்களும் மற்றும்
படர் பொருள்களுமாய் நின்றவன்-திருமங்கையாழ்வர்
யாவையும் எவரும் தானாய் அவரவர் சமயம் தோறும்
தோய்வு இலன்; புலன் ஐந்துக்கும் சொலப்படான்; உணர்வின் மூர்த்தி;
ஆவி சேர் உயிரின் உள்ளால் ஆதுமோர் பற்றுஇலாத
பாவனை அதனைக் கூடில் அவனையும் கூடலாமே

9-ஆதார-ஆதேய சம்பந்தம்–ஆதாரம்- தாங்குவது-ஆதேயம்- தாங்கப் பெறுவது
நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே
மனஞ்செய் ஞானத்து உன்பெருமை மாசுணாதோ? மாயோனே. (1-5-2)
தனிமாப் புகழே எஞ்ஞான்றும் நிற்கும் படியாத தான்தோன்றி
முனிமாப் பிரம முதல்வித்தாய், உலகம் மூன்றும் முளைப்பித்த
தனிமாத் தெய்வம் (8-10-7)–‘தோன்ற’ என்பதனால் சமஷ்டி சிருஷ்டியும், இரண்டாவது அடியிலுள்ள முளைப்பித்த என்பதால் வியஷ்டி சிருஷ்டியும் தெரிவிக்கப் பெறுகின்றன.
எங்குவந்துறுகோ, என்னை யாள் வானே ?ஏழுலகங்களும் நீயே;
அங்கவர்க்கமைத்த தெய்வமும் நீயே ;அவற்றவை கருமமும் நீயே ;
பொங்கிய புறம்பால் பொருளுள வேலும் அவையுமோநீ; இன்னே யானால்,
மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே; வான் புலன் இறந்ததும் நீயே (8-1-6)-மங்கிய
அருவாம்நேர்ப்பம்’ என்பதற்குப் பத்த ஆன்மாக்களின் தொகுதி என்றும், ‘வான் புலன் இறந்தது ‘ என்பதற்கு முக்தாத்மாக்களைச் சொல்லுகிறது என்றும் பிள்ளான் பணிப்பர். அப்போது இல்லாததற்குச் சமமாய் ஸூஷ்மமான ஆன்மாக்களின் தொகுதி என்றும், பரம பதத்தில் கண்களுக்குப் புலப்படாத முக்தாத்ம ஸ்வரூபம் என்றும் பொருள் படும்-இந்தப் பாசுரத்தால் ஆதாரம் எம்பெருமான் என்றும்,ஆதேயம் ஆன்மாக்கள் என்றும் தெளிவாகின்றது.
இறந்ததும் நீயே; எதிர்ந்ததும் கீயே; நிகழ்வதோ நீ இன்னே ஆனால்,
சிறந்ததன் தன்மை அதுஇதுஉது என்று அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன் (7)-பாவியாகிய அடியேன் அந்தச் சம்பந்த ஞானம் ஒன்றிலும் ஐயம் கொள்ளா நின்றேன்?” இதிலும் ஆதார- ஆதேய உறவு தெளிவாகின்றது –
நான்உன்னை யன்றி யிலேன் கண்டாய் நாரணனே! நீஎன்னை அன்றி இலை. (7)-நீ எனக்கு ஆதாரம்; நான் உனக்கு ஆதேயம் ‘–இது தானே உண்மை? ” என்கின்றார் ஆழ்வார்.

போக்தா-போக்கிய சம்பந்தம்
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே;
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே (2-9-4)-அத்தியந்த பாரதந்திரியத்தைப் பயனாக அறுதி யிடுகின்றார் ஆழ்வார்.
நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை
ஈர்மை செய்(து) என்னுயிராய் என் உயிர் உண்டான்
திருவருள் செய்பவன் போல என் உள் புகுந்து
உருவமும் ஆருயிரும் உடனே உண்டான்–அவன் அங்கீகாரத்திற்கு முன்பு இவர்
சரீரத்தையே விரும்பிப் போந்தார். அவன் இவரை அங்கீகரித்த பின்பு இவர் தம் சரீரத்தை வெறுக்க அவன் இவருடைய சரீரத்தை விரும்பிப் புக்கான்.இவருக்கு
அவனுடைய சேர்க்கை ஸ்வரூப ஞானத்திற்கு உடல் ஆயிற்று; அவனுக்கு இவருடைய சேர்க்கை உடலை உயிராக விரும்புவதற்கு உடல் ஆயிற்று’–அணுப் பரிமாணமான இவ் வஸ்துவை விபுவான தான் விளாக்குலை கொண்டு அநுபவித்தா னென்கின்ற இது தனக்கு ஏற்றமாம்படி கௌரவியா நின்றான்”

    ————————————————————————————————

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

    ஸ்ரீ இராமாயண ஸாரம் -ஸ்ரீ கார்ப்பங்காடு ஸ்வாமிகள்

    July 23, 2025

    ஸ்ரீராமாயண உபன்யாஸத் தொடரை பார்த்தஸாரதி பக்த ஸபை சார்பில்
    திருவல்லிக்கேணி வானமாமலை மடத்தில் நிகழ்த்திய போது வெளியிடப் பெறற
    விழா மலரில் இந்நூல் இடம் பெற்றது.
    ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அவசியம் ” அறிய வேண்டிய அர்த்தங்கள் ” என்று
    கூறப்பெறும் அர்த்த பஞ்சகத்தை உள்ளத்தில் கொண்டு ஸ்ரீராமாயணத்தை ஆராயும்
    ஓர் ஆய்வு நூலாக மீமாம்ஸா நியாயங்களின் உதவி கொண்டு இந்நூலை ஸ்வாமி
    இயற்றியுள்ளார்.
    மிக்க இறைநிலை மெய்யாம் உயிர்நிலை தக்கநெறி தடையாகி தொக்கியிலும்
    ஊழ்வினை வாழ்வு, ஆகிய ஐந்து செம்பொருட்களும்
    தூய தமிழ் நடையில் எழுதப்
    பெற்றுள்ளது. தற்காலப் போக்கைக் கருத்தில் கொண்டு ஸ்வாமி கால்நூற்றாண்டிற்கு
    முன்னமேயே ஸம்ப்ரதாய மணிப்பிரவாள நடையை விட்டு தமிழ் மரபு நடையை
    மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாம்.

    திருமகள் கொழுநனான பரமபுருஷன், நம்முடைய நன்மையைத் திருவுள்ளம்
    பற்றி, திரு அயோத்தியில் திருவவதரித்து, பதினோராயிரம் ஸம்வத்ஸரம் இவ்வுலகில்
    எழுந்தருளியிருந்த சரிதம் நாம் நன்கு அறிந்ததேயாகும். அப்பரமபுருஷன் அங்ஙனம்
    இராமபிரானாகத் திருவவதாரம் செய்தருளினபோது, அவனை அறிவிக்கும் வேதமானது,
    வால்மீகி முனிவனிடமிருந்து இராமாயணமாய்த் திருவவதாரம் செய்ததாம். இக்
    கருத்தைக் கொண்டுள்ள,” வேத வேத்யே பரேபும்ஸி ஜாதே தசரதாத்மஜே
    வேத : ப்ராசேதஸாதா த் ஸாக்ஷாத் ராமாயணாத்மநா| “
    -என்னும் முதுமொழியை ஊன்றிக் காணுங்கால், ‘இராமபிரானைப் போன்று, அவ் இராமபிரான் திவ்யசரிதமான இராமாயணமும் நமக்கு அன்புடன் ஆதரிக்கத் தக்க திவ்ய சாஸ்திரம்’ என்பது நன்கு புலனாகும். “விசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்தை இவ்வுலகில் நன்கு பாவச் செய்தவரும், பூர்வாசாரியருள் நடுநாயக மணிபோன்று விளங்குபவருமான எம்பெருமானார், திருமலையில் ஒரு ஸம்வத்ஸரம் எழுந்தருளி யிருந்து, திருமலைநம்பிகள் ஸந்நிதியில் இராமாயண விசேஷார்த்தங்களை (இராமா யணத்தில் கூறப் பெற்றுள்ள சிறந்த பொருள்களைக்) கேட்டருளினார்” என்பதே இவ் இராமாயணத்திற்குள்ள தனிச்சிறப்பை நன்கு தெரிவிக்கின்றதன்றோ?-“இவ்வாறு மிக்க சிறப்புள்ள இராமாயணத்தின் ஸாரப் பொருள், பரமாத்மா, ஜீவாத்மா, உபேயம், விரோதி, உபாயம் என ஐந்தாம்” என்பதை இந்த ‘இராமாயணஸாரம்’ என்னும் நூல், மிக விரிவும், மிகச் சுருக்கமும் இன்றி விளக்கிக் காட்டி யிருக்கிறது.

    திருமாலான பரம புருஷன், தனக்கே உரித்தான திருநாட்டில் திருமகள் மண்மகள்
    முதலிய தேவிமாரோடு வீற்றிருந்து, நித்யராலும் முக்தராலும் தொண்டு பூண்டொழுகப்
    பெற்றிருப்பவனாம். இங்ஙனம் இருப்பினும்,அப்பரம புருஷன் அத்திருநாட்டிலுள்ளாரைப்
    போன்று, இவ்வுலகிலுள்ளாரும் தன்னை அனுபவித்துப் பேரின்பக் கடலில் மூழ்கிப் பெருங்
    களிப்புற வேண்டியிருக்க. அங்ஙனமின்றி,மாயா சப்தப் பொருளான மூலப்ரைக்குதியில்
    அழுந்திக் கிடந்து, அறிவுற்றவராகயிருப்பினும், அறிவற்ற அசேதனப் பொருளோடு
    வாசியற இருத்தலைக் கண்டு இரக்கமுற்றனன்.

    இவ்வாறு இரக்கமுற்ற எம்பெருமான், இவ்வுலகத்தாரைக் கரையேற்றத் திருவுள்ளம்
    பற்றி,

    இங்ஙனம் அருளப் பெற்றிருப்பினும், இச் சேதனர் அக்கலைகள் காட்டிய வழியைப் பின்
    பற்றாது அவ்வுறுப்புக்களையும் அவ்வுடல்களையும் கொண்டு, ஆற்றைக்கடக்கக் கொடுத்த
    புணையைக் கொண்டு அவ்வாற்றைக் கடவாது கடலிடைப் புகுவாரைப் போல், சுவை,ஒளி,
    ஊறு, ஓசை, நாற்றம் என்னும் விஷயங்களில்உழல்வராயினர்.
    இதைக் கண்ட எம்பெருமான், தன் கட்டளை செல்லாத நாட்டில் தானே சென்று,
    தன் வழி வருமாறு செய்யும் அரசன் போன்று, இவ்வுலகினில் எண்ணிறந்த அவதாரங்களைச் செய்தருளினான்.
    இவ் வவதாரங்களுள்,இராமாவதாரம் மிகமிகச் சிறந்ததாம்.இவ்விராமபிரான், தன் உபதேச மொழிகளாலும், ஒழுக்கங்களாலும் இவ்வுலகத்தவர்க்கு உணர்த்தின நீதிகள் பல. அந்நீதிகளை, பின்னானார்க்கும் உதவ வேண்டும் என்னும் எண்ணத்தினால் நான்முகனார், நூறுகோடி அளவினதான இராமாவதார சரிதத்தைச் செய்து, நாரதர் முதலான தேவஷிரிகளுக்கு உபதேசம் செய்தருளினார்; அந்த நாரதரையே இராமநாமத்தையே ஜபித்துப் போது போக்குபவனாகிய வால்மீகி முனிவனிடம் அனுப்பி, அவ்விராமபிரானுடைய சரிதத்தை அம்முனிவனுக்கு உபதேசம் செய்வித்து, தாமும் காட்சி அளித்து, இராம சரி
    தத்தை இயற்றுமாறு கட்டளையிட்டார்.

    இங்ஙனம் அருள் பெற்ற அம்முனிவனும் ஸ்ரீராமாயணத்தைச் செய்தனன்.

    ஸ்ரீராமாயணச் சிறப்பு

    பிள்ளைலோகாசார்யார், ஸ்ரீராமாயணத்தை-இதிஹாஸ ச்ரேஷ்டம்’ எனக்கொண்டாடி
    அருளிச்செய்திருக்கிறார். ஆனால், நாராயணனாகவே போற்றப்பெற்றவர் வ்யாஸர்; இராம
    பிரானிடம் சிறந்த பக்தி பெற்றிருப்பவர் வால்மீகி ; அவரிடம் பிறந்தது பாரதம்;-இவரிடம் பிறந்தது இராமசரிதம்;
    பாரதம் என்னும் இதிஹாஸத்தை அங்ஙனம் போற்றி அருளிச் செய்யாது, இராம சரிதத்தை ‘ இதிஹாஸ ச்ரேஷ்டம்’ எனப்போற்றி அருளிச்செய்ததற்குக் காரணம் யாதோ? எனின்,- (நாராயண:கதா மிமாம்) என்று தொடங்கி,வ்யாஸர், நாராயணனின் பரிபூர்ணாவதாரமாய்க், கொண்டாடப்பெறும் கண்ணபிரானுடைய சரிதத்தை, பாரதத்தில் ஒருவாறு வெளியிட்டிருப்பது உண்மையேயாம். ஆயினும்,
    (யதா தர்மாதயச் சார்த்தா: முனிவர் யானுகீர்த்திதா !ந ததா வாஸுதேவஸ்ய மஹிமாஹ்
    யனுவர்ணித:
    )என்று நாரதர் (பாரதத்தைச் செய்து மன மகிழ்ச்சி சிறிதும் இன்றி இருக்கும்) வ்யாஸரை நோக்கிக் கூறுகின்றவாறு, அப்பாரதத்தில், அறம் பொருள் இன்பங்களும், அவற்றின் ஸாதனங்களும் கூறப் பெற்றிருக்கின்றன போன்று, கண்ணபிரானுடைய பெருமை கூறப்பட்டிலது.மேலும், பூசல் பட்டோலை‘ என்று ப்ரஸித்தி ஏற்படுமாறு, யுத்த சரிதத்தையே பெரும்பாலும் வெளியிட நேர்ந்திருக்கிறது; நான்முகனார் புத்திரரான நாரதர், கண்ணபிரானுடைய சரிதத்தைஉபதேசம் செய்ய, பின்பு வ்யாஸர், ஸ்ரீபாகவதத்தைச் செய்ததாக அங்கு சரித்தரம், பாரதத்தைச் செய்திருந்தும், அகக் களிப்பற்றிருந்த வ்யாஸர்,தம் துன்பம் தீருமாறு ஸ்ரீபாகவதத்தைச் செய்தார் என்பதற்கு அவர் திருவாக்கையே சான்றாகக் காண்க :–அஸ்த் கீர்த்தன காந்தார பரிவர்த்தன பாம்ஸுலாம் !வாசம் சௌரி தாலாப கங்கயைவ புனீமஹே||”நாரதருக்குத் தந்தையாரான நான்முகனார் பூஜிக்கப்பெறும் பெருமை வால்மீகி முனிவனுக்கு உண்டு, நான்முகனார்,வால் மீகி முனிவனுடைய ஆசிரமத்திற்கு வந்தார்;அம்முனிவனுடைய இராமபக்தியைக் கண்டு மனமகிழ்ச்சியுற்றார்; அம்முனிவனால், இவ்வுலகம் உய்வு பெற விரும்பினார்; அம்முனிவனைப் பூஜிக்க விரும்பி, தம் முன்னே உள்ளதோர்ஆஸனத்தைக் காட்டி, அதில் அமரச் சொன்னார். வால்மீகியும் அவ்வாறே அதில் அமர்ந்தார்” என்னும் வால்மீகி முனிவன் பெருமையைக் கூறும் சரிதம் இங்கே காணத்தக்கது.-வால்மீகயே மஹர்ஷயே ஸந்திதேசாஸனம் தத: ப்ரஹ்மணா ஸமநுஜ்ஞாத : ஸோப்யுபாவிச தாஸனே !-என்னும் வால்மீகியின் திருவாக்கும் இங்கே அனுபவிக்கத்தக்கது.-மேற்கூறிய சரித்ரங்களை உற்று நோக்குங்கால் அங்கு, பாரதத்தைச் செய்த வ்யாஸருக்கே மனமகிழ்ச்சி ஏற்படவில்லை என்பதும்,’இங்கு, இராம சரிதத்தைச் செய்த வால்மீகி முனிவனுக்கு அங்ஙனம் குறை கூறுவதற்கு இல்லை’ என்பதும் தெளிவாம்.-மேலும், வேதத்தினால் அறியப்படும் பரம புருஷன், சக்ரவர்த்தித் திருமகனாய் அவதரித்த வாறே, அவ்வேதம், அப்பரமன் கல்யாண
    குணங்களையும், ஆச்சரியச் செயல்களையும் கூற வால்மீகி முனிவனிடம்  ராமாயணமாக (இராம சரிதமாக) அவதரித்தது’ என்னும் கருத்தைக் கொண்டுள்ள,-வேத வேத்யேபரே பும்ஸி ஜாதே தசரதாத் மஜே வேத: ப்ராசேதஸாதாஸீத் ஸாக்ஷாத் ராமா யணாத்மநா ||| என்னும் ஸ்காந்த வசனத்தை அனுபவிக்குங்கால், இவ்விராம சரிதத்தின் வேதத் தன்மையும் நன்கு புலனாம்.
    அன்றியும், ஆழ்வான் திருக்குமாரரான பட்டர், ஸஹஸ்ரநாம் பாஷ்யத்தில்-
    ஸ்ரீ மத் ராமாயணவன் மஹாபாரதம் சரணம் ) என்று அருளிச் செய்திருக்கிறார். இவ் வாக்கியத்தில், பாரதப் பெருமையைக் கூறும்போது இராமாயணத்தை எடுத்துக் காட்டாகக் காட்டியிருப்பது காணத் தக்கதாம்.

    இவ்வாறு சிறப்புற்றிருக்கும் இராமாயணத்தில் தேறிய ஸாரப்பொருள் பல உண்டு. எம்
    பெருமானார், திருமலையில் எழுந்தருளியிருந்து திருமலை நம்பியிடம் ஸ்ரீராமாயணம் கேட்டருளினார் என்பதே இதற்குத் தக்க சான்றாம்.
    (அடைய வேண்டிய பரமாத்மா, (அடைகிறவனாகிய) ஜீவாத்மா, (பரமனை அடைவதன்)
    பலம், (அவனை) அடையவொட்டாது தடைசெய்யும்) விரோதி, (அவனை அடைவதற்கான)
    உபாயம், என ஸாரப்பொருள் ஐந்து
    “ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோரூபம் ப்ராப்துச்ச ப்ரத்யகாத்மந ப்ராப்த்யுபாயம்பலம் ப்ராப்தே: ததா ப்ராப்தி விரோதிச வதந்தி ஸகலா வேதா : ஸேதிஹாஸ புராணகா: II என்னும் வசனம் இங்குக் காணத் தக்கது இவ்வசனத்தின் கருத்து – ” இதிஹாஸம்,
    புராணம் ஆகிய இவற்றோடு கூடிய வேதங்கள் மேற்கூறிய ஐந்து பொருளையும் கூறுகின்றன என்பதாம்.
    மேற்கூறிய ஐம்பொருளையும் வேறு வழியாக நாம் அறியலாகாதோ? இதிஹாஸத்தின் உதவியைக் கொண்டுதான் அறிதல் வேண்டுமோ? அவசியமானால், அவ்விதிஹாஸம் தான் எவ்வாறு இயம்புகின்றதோ ?எனின், விரித்துக் கூறுவோம் :
    கண்முதலிய வெளி இந்திரியங்களையும் மனமாகிய உள்ளிந்திரியத்தையும் ப்ரத்யக்ஷம்
    என்பர். இதனால், பரமாத்மா முதலிய பொருளை அறிய இயலாது. இந்திரியத்தினால்
    அறியப்பெறும் இரண்டு பொருள்களுள், ஒன்றைவிட்டு ஒன்று பிரியாமல் இருக்கும் நிலைமையைக் கொண்டு, ஒன்றைக் காணாத இடத்தும் கண்ட ஒன்றினால் காணாத மற்றொன்றை அறிகைக்கு உறுப்பான யுக்தியை அனுமானம் என்று கூறுவர். புகையைக்கண்டு அப்புகையினால் காணாத நெருப்பை ஊஹித்து அறிகிறோம் அல்லவா? இவ்வனுமானமும், மேற் கூறிய ஐம்பொருளையும் அறிதற்குப் பயன்படாது. ஒருவகைக் குற்றமும் இன்றி இருப்பதும், என்றும் உள்ளதுமான வேதத்தினால் தான் அறியலாம். அவ்வேதமும்,தெளிவாக எடுத்து. உரைக்கும் வண்ணத்தில் அமைந் திலது, ஆதலின், இதிஹாஸத்தின் உதவி அவசியமாம். இவ்வுதவி அவசியம் என்னும் இவ் விஷயத்தை வால்மீகி முனிவன் பின் குறிக்கப்பெறும் சலோகத்தினால் வெளியிட்டு இருக்கின் றனன்.
    ஸது மேதாவிநெள திருஷ்டவா வேதேஷ பரிநிஷ்டிதெள: 1-வேதோபப்ரும்கணார்த்தாய தாவக்ராஹயத ون-இதின் கருத்தைச் சிறிது விரித்துக் கூறுவோம் :” வால்மீகி முனிவன் நான்முகனார் கட்டளையைப் பின்சென்று, இராமாயணத்தைச் செய்தபின், “இவ்விராம சரிதத்தைப் பாட வல்லவன் எவனோ? யான் அறியேன்; எம்பெருமான்! நீயே அவனை எனக்கு அருள வேண்டும். என்று அப்பரமனைச் சிந்தித்துக் கொண்டிருந்தனன். அக்காலத்தில் ‘முனி வேஷம் பூண்ட குசலவர் அம்முனிவன்- திருவடிகளைப் பணிந்து நின்றனர். அம்முனிவனோ, மிகச் சிறந்த புத்தி பெற்றிருப்பவரும், ருக் வேதம் முதலிய நான்கு வேதங்களையும், மற்ற நூல்களையும் நன்கு ஓதி உணர்ந்தவருமான
    அக்குசலவர்களைக் கண்டு களித்து, வேதோபப்ரும்ஹணமாகிய இராம சரிதத்தை அவர்
    களுக்கு உபதேசம் செய்தனன்”-வேதோப ப்ரும் ஹணம்’ என்பதற்குக் கருத்து யாதோ? எனின், கூறுவோம்: எங்ஙனம் இருபத்து நாலாயிரம் ச்லோகங்கள் கொண்டுள்ள இராமாயணத்தில் சில பகுதிகளை மட்டும் கற்றுணர்ந்தோர்க்கு அந்த இராமாய
    ணத்தின் கருத்து அறுதியிட இயலாதோ,அங்ஙனமே, பல கிளைகள் கொண்டுள்ள வேதத்திலும் சில கிளைகளை மட்டும் ஓதி உணர்ந்தோர்க்கு அந்த வேதத்தின் கருத்து அறுதியிட இயலாது. அறிவிலிகளான நாம் வேதம்முழுவதும் ஓதி உணர இயலாது. ஆதலின், மிக நெடுகின காலத்தில் பரமபுருஷனை வணங்கி வழிபட்டு உள்ளத் தூய்மை பெற்றிருக்கும் மஹான்களுக்கே அந்த வேதமும், அதின் உண்மைக் கருத்தும் நன்கு புலனாகும்.-அன்னாரே,அந்த உண்மைக் கருத்தை உள்ளபடி அறுதியிட்டு, அக்கருத்தைத் தெளிவாகத் தெரிவிக்கும் நூலை இயற்றஇயலும். “அன்னாம்ருள் வால்மீகி முனிவனும் ஒருவன்’: ”அங்ஙனம் வேதக் கருத்தைத் தெளிவாகத் தெரிவிக்கும் நூல்களுள், இராமாயணமும் ஒன்று”என்னில், இவை புகழுரையாமோ? ஆகாதன்றோ? இவற்றால், “வேதக் கருத்தைத்தெளிவாகத் தெரிவிக்கும் நூல் உபப்ரும்ஹணம்’‘ என்பது நன்கு விளங்குகின்றதன்றோ?–இங்கு”வேதோபப்ரும் ஹணார்த்தாய- வேதோபப்ருமணரூப ஸ்வக்ரந்த படனாயேத்யர்த்த: உபப்ருஹம்ணம் நாம நாநாசாகானுஸாரண நிர்ணீத வேதார்த்த ரதிபதகோ சுரந்த: என்னும் கோவிந்த ராஜீய வ்யாக்யான வாக்யங்களும்
     (உபப்ரும்ஹணம் ச ச்ருதி பிரதிபந் நார்த்த விசதீகரணம் ) என்னும் எம்பெருமானாருடைய திருவாக்கும் அனுபவிக்கத்தக்கவை.
    [பதப் பொருளைச் சொல்வது எதுவோ, அது உபப்ரும்ஹணம் என்று சிலர் கூறுவர்.இங்ஙனம் கூறுவதற்கு ஆதாரத்தைக் காணப் பெற்றிலோம். மேற் கூறிய ஆதாரங்களுள் அமைந்துள்ள “நிர்ணீதார்த்த பிரதிப்பாத கோக்ரந்த:” ச்ருதி ப்ரதிபந்நார்த்த விசதீகரணம்”-என்னும் வாக்கியங்களைக் காண்க-இனி, வேதத்தில் கூறப்பட்டுள்ள பரமாத்மா முதலிய ஐம்பொருளையும் இராமாயணத் தில் காண்போம்.

    வேதாந்தமும் பரமாத்மாவும்

    வேதம்,பரமாத்மாவை எங்ஙனம் கூறுகின் றது? என்னில், சிறிது விவரித்துச் செப்புவோம்:
    வ்யாஸர், உபநிஷத்துக்களில் அமைந்துள்ள காரண வாக்கியங்களினால் பரமபுருஷனை
    நன்கு உணரலாம் என்கிறார்.-கண் முதலிய வெளியிந்திரியங்களால் காணப்பெறும் இப்பிரபஞ்சத்திற்கு எது காரணமோ, அப்பொருளே ‘பரமாத்மா
    “(யதோவா இமானி பூதானி ஜாயந் தே தத்ப்ரஹ்ம) என்னும் வாக்கியத்தைக் காண்க.
    சங்கை : ஆனால், உபநிஷத்துக்களில் காரண வாக்கியங்கள் பல உண்டு. அவற்றுள்
    ஒரு வாக்கியம் போன்று,மற்றொரு வாக்கியம் காரணப் பொருளைக் குறிக்காமல் முரண்பாடு தோன்றக் கூறியிருத்தலை நாம் காணலாம்.
    (ஹிரண்ய கர்ப்பஸ் ஸமவர்த்ததாக்ரே -)(ஏகோ ஹவை நாராயண ஆஸீத்) என்னும்
    வாக்கியங்களை எடுத்து நோக்கினால், ஒரு பொருள் காரணப் பொருளாகக்கூறப் பெற்
    றிராமல் அந்த அந்த வாக்கியத்தில் வெவ்வேறு பொருள் (பிரமனும், சிவனும் நாரா
    யணனும்) காரணப் பொருளாக முரண்பாடு தோன்றுமாறு குறிக்கப் பெற்றிருப்பது புலப்படுகின்றதன்றோ! இங்ஙனம் இருக்க,ஒன்றே காரணப் பொருள்; அப்பொருள் நாராயணனே என்பதை நாம் அறுதியிடுவது யாங்ஙனம்? என்னும் ஐயம் இங்கு உண்டாகலாம்.

    வேத வாக்கியங்களைக் கொண்டு பரமனை அறியுங்கால், இவ்வாறான க்லேசம் உண்டாவது உண்மையே. இங்ஙனம் க்லேசம் பெற்றிருப்போர்க்கு மனத்தெளிவுக்கு இடம்
    இல்லை. “வேதம் தெளிவாக எடுத்து உரைக்கும் வண்ணத்தில் அமைந்திலது’ என்று நாம்
    முன்னமே கூறியிருந்தோமே அஃது.இப்போது எண்ணத் தகுந்தது. இக்லேசம் தீருவதற்கு
    வ்யாஸர் செய்த மீமாம்ஸா சாஸ்திரம் ஒரு வழியினால் உதவி புரிகின்றது. வால்மீகி முனி
    வன் இயற்றிய இராமாயணமோ, வேறொருவழியினால் உதவி செய்கின்றது. இவற்றுள்
    மீமாம்ஸா சாஸ்திரம் செய்யும் உதவியை முதலில் சுருக்கமாகக்காண்போம் :
    மீமாம்ஸா சாஸ்திரமாவது – வேத ஆராய்ச்சி செய்யும் நூலாகும். இவ்வாராய்ச்சி முறையை, மேற்கூறிய உபநிஷத்வாக்கியங்களில் பின்வருமாறு நாம் அறியலாம் :
    “ஹிரண்ய கர்ப்ப : என்னும் முதல்வாக்கியம், ‘எல்லாம் அழிந்த காலத்து,பிரமன்
    இருந்தான்’ என்னும் கருத்தையும், “நஸத்நசாஸத். என்னும் இரண்டாம் வாக்கியம்,
    ஸத்தும் அஸத்தும் அக்காலத்தில் இல்லை; சிவன் இருந்தான்” என்னும் கருத்தையும்
    “ஏகோ ஹவை நாராயண என்னும் மூன்றாம் வாக்கியம், ‘அச்சமயத்தில் நாராயணன்
    இருந்தான்’ என்னும் கருத்தையும் கொண்டுள்ளன. ஆனால்,முதல் இரண்டு வாக்கியங்
    களில் பிரமன் இருந்தான்; சிவன் இருந்தான் என்று தெளிவாகத் தெரிகிறது போல், ‘நாரா
    யணன் இல்லை’ என்பது தெரிகிறதா? இங்கு இது முக்கியமாய் நோக்கத்தக்கது.
    (ஏகோஹவை நாராயண ஆஹீத் ந ப்ரஹ்மா நேசான 🙂 என்னும் மூன்றாம் வாக்கியத்தில் “நாராயணன் அக்காலத்தில் இருந்தான்” என்பது எங்ஙனம் தெளிவாகத் தெரிகின்றதோ, அங்ஙனமே “அக்காலத்தில் பிரமனும் இல்லை; சிவனும் இல்லை என்பதும் தெளிவாகத் தெரிகிறல்லவா?-இதனால் என்ன தேறிற்று என்னில், கூறுவோம்; மேற்கூறிய மூன்று வாக்கியங்களுக்கும் முரண்பாடு சிறிதும் இன்றி, கருத்தைக் கொள்வது சிறந்த முறையாகும். முதல் இரண்டு வாக்கியங்களுக்கும் ‘எல்லாம் அழிந்தகாலத்து, பிரமன் மாததிரம் இருந்தான்; அல்லது சிவன் மாத்திரம் இருந்தான்; வேறு ஒரு பொருளும் இல்லை’ என்னும் கருத்தைக் கொண்டால், ஏகோ ஹவை நாராயண ஆஸீத். என்னும் வாக்கியம் சேருமோ? சேராதன்றோ? ‘ஏகோ ஹவை’ என்னும் வாக் கியம் தெளிவாகக் கூறுகின்றவாறு, “எல்லாம் அழிந்த காலத்தில் நாராயணன் மாத்திரம் இருந்தான் மற்றொன்றும் இல்லை” என்னும் கருத்தைக் கொண்டாலோ,முதல் இரண்டு வாக்கியங்களும் பொருந்தும் என்று கூறவும் வேண்டுமோ? வேண்டாமன்றோ ? ‘ஏனைய பொருள் அழிந்த காலத்து, பிரமனோ சிவனே இருந்ததாகவும், அப்பிரமனும் சிவனும் அழிந்த காலத்தும் அழிவில்லாத நாராயணனே இருந்ததாகவும், முதல் இரண்டு வாக்கியங்களும், மூன்றாம் வாக்கியமும் முறையே அறிவிக்கின்றன என்று கூறும்போது, முரண்பாடு சிறிதும் இல்லையன்றோ? இவ்வாறு ஆராய்ந்து வேதக் கருத்தை அறுதியிடும் நூலே வ்யாஸர் செய்த மீமாம்ஸா சாஸ்திரமாம். இந்த சாஸ்திர உதவியைக கொண்டு வேதக் கருத்தை நாம் நன்கு காணலாம்.-ஆயினும், மேதாவிகளுக்கே இது கூடும்.-இராமாயணம் செய்யும் உதவியை இனிக் காண்போம் :

    இராமாயணமும் பரமாத்மாவும்
    ”சக்ரவர்த்தித் திருமகன் ஸீதாபிராட்டி யைத் திருமணம் புரிந்துகொண்டு அப்பிராட்டியுடனும், சுற்றத்தாருடனும், பரிவாரங்களுடனும் திரு அயோத்திக்கு எழுந்தருளும்போது, வழியில், பரசுராமன் வந்து-குறுக்கிட்டு, தன் வில்லை வாங்கி நாணேற்றுமாறு அச்சக்ரவர்த்தித் திருமகனை வேண்டிக்கொண்டனன்” என்பது வரலாறு. பரசுராமன் கையில் இருந்த அவ்வில்லின் பெருமை பின்வருமாறு:

    [ததிதம் வைஷ்ணவம் ராம தனு: பரமபாஸ்வரம்!ஸமானஸாரம் காகுத்ஸ்தரௌத்ரேணதனு ஷாத்விதம்
    ததாது தேவதாஸ்ஸர்வா : – ருச்சந்தி ஸ்மபிதாமஹம் சிதிகண்டஸ்ய விஷ்ணோச்சபலாபலநிரீக்ஷயா
    அபிப்ராயந்து விஞாய தேவதாநாம் பிதாமஹ விரோதம் னயாமாஸ தயோ: ஸத்யவ
    தாம்வர:
    விரோதே து மஹத்யுத்தம் அபவத்ரோமஹர் சித்திகண்டஸ்ய விஷ்ணோச்ச பரஸ்பரஜி
    கீஷிணோ: !|
    ததா து ரும்பிதம் சைவம் தனுர்பீம பராக்ரமம் ஹுங்காரேண மஹாதேவ: ஸ்தம்பிதோதத்ரி லோசன:
    தேவை ஸ்ததா ஸமாகம்ய ஸர்ஷிஸங்கை: ஸசாரணை: யாசிதெள ரசமம் தத்ர ஜக்மது :தெள ஸுரோத் தமெள 
    ஜ்ரும்பிதம் தத் தனுர் த்ருஷ்டவா சைவம் விஷ்ணு பராக்ரமை அதிகம் மேனிரேவிஷ்ணும் தேவா : ஸர்கணாஸ் ததா]
    இவற்றின் கருத்து – இந்த வில் விஷ்ணுவினுடையது. முன், எம்பெருமானுடைய வராஹாவதாரச் செயலை பிரமனிடம் கேட்டு,அவ்வெம்பெருமானுடைய மேன்மையை
    உணர்ந்திருந்த எல்லாத் தேவர்களும், சிவன் த்ரிபுர ஸம்ஹாரம் செய்தபின் சிவனுடையவும் விஷ்ணுவினுடையவும் பலாபலத்தைக் காணக் கருதி, யாருடைய வலிமை மிகச் சிறந்தது’ என்று நான்முகனைக் கேட்க அந் நான்முகன், சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் விரோதத்தை விளைவிக்க, அவ்விருவரும் கோரமான யுத்தம் செய்ய, அப்போது விஷ்ணுவினுடைய ஹும் என்னும் ஓசையினால் சிவனுடைய வில்லும், சிவனும் பங்கம் அடைய, ‘இனிப் போர் நிகழ வேண்டாம்’ எனத் தேவர்கள் வேண்டிக் கொளள, அவ்விருவரும் சமனம் அடைய. விஷ்ணுவின் விக்கிரமத்தினால், சிவனும் சிவனது வில்லும் பங்கம் பெற்றதைக் கண்கூடாகக் கண்ட முனிவர்களும தேவர்களும் விஷ்ணுவைச் சிறந்த தெய்வமாக அறுதியிட்டனர்” என்பது

    மேலும், திருவடி இராவணன் முன்னிலையில் இராம பிரானுடைய மேன்மையைக் கூறுமிடத்துத் தென்படும் வார்த்தை-(ப்ரஹ்மாஸ்வயம்பூ: சதுரானனோவா ருத்ரஸ்
    த்ரிநேத்ர: த்ரிபுராந்தகோவா 1 இந்த்ரோ மஹேந் ர : ஸு ரநாயகோவா த்ராதும் நசக்தாயுதி ராமவத்யம் ! ] இதின் கருத்து- “சிறந்த செல்வம் பெற்றிருப்பவனும், வ்ருத்ரன் என்னும் அஸுரனைக் கொன்றொழித்தவனும், முப்பத்து முக்கோடி தேவதைகளைத் துணையாய்க் கொண்டிருப்ப வனுமான இந்திரனும், இந்த இந்திரனுக்கும் மேலானவனும் ப்ரளய காலத்தில் ப்ரஜைகளை அழச் செய்பவனும் காமனை நெற்றிக்கண்ணால் எரித்தவனும் த்ரிபுராந்தகனுமான சிவனும், இச்சிவனுக்கும் தந்தையானவனும் ஏனையோரைப் போல் பிறவாதவனும் நான்கு முகங்களை உடையவனுமான பிரமனும், தனித்தனியாகவோ, ஒன்று சேர்ந்தோ இராமபிரானுடைய சீற்றத்துக்கு இலக்காய் வதம் செய்யத்தகுந்தவனைக் காக்க சக்தியற்ற வராம்” என்பது.
    மேற்கூறியவாறு, தேவதைகளை (இரக்ஷகராக விளங்குகின்றவரைக் கழித்துப் பேசும்
    வார்த்தையில், “நாராயணனும் சக்தியற்றவன் என்று குறிக்கப் பெற்றிலது –இதனால்,
    ” இராமபிரான் நாராயணனே” என்னும் உண்மை யார்க்கும் கூறாமலேயே நன்கு
    விளங்குகின்ற தன்றோ?-அன்றியும், இராமபிரானால் கொலையுண்டு கிடக்கும் இராவணனைக்கண்டு, நெஞ்சழிந்து, புலம்பிப் பேசும் மண்டோதரி, ஒருவாறு
    தெளிந்து, அந்த இராமபிரானுடைய மேன் மையைப் பின்வருமாறு பேசியிருக்கிறாள்:
    இராமபிரானே! “இனியறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம், இனியறிந்தேன் எம் பெருமானுன்னை” என்று பெரியோர் அருளிச் செய்தது போன்று, இத்தனை போதும் உன்னை அறிந்திலேன்; இப்போது அறிந்தேன் என்றாள் மண்டோதரி.
    இதைத் திருச்செவியேற்ற இராமபிரான்,-“நீ என்னை அறிந்தவாறு எங்ஙனே?” என்ன,
    திருநாட்டில் திருவாழி, திருச்சங்கு, திருத்தண்டு இவற்றைத் திருக்கைகளில் ஏந்தியும்,
    திருமறுவைத் திருமார்பில் சின்னமாகப் பெற் றும், திருமகளோடு என்றும் வாழ்பவனாகிய
    திருமால் நீ என்றாள்.
    ”திருமாலாகிய நாம் திருநாட்டை விட்டிட்டு இவ்வுலகில் வரக்காரணம் யாதோ?”
    என்று சக்ரவர்த்தித் திருமகன் திரும்பவும் வினவினான்.எல்லா உலகங்களிலும் உள்ள
    எல்லாஉயிர்களுக்கும் நன்மையைச் செய்யத் திருவுள்ளம் கொண்டு,மானிட வடிவத்துடன்
    திருவவதாரம் செய்து, உலகத்திற்கே கண்டகனாகிய இராவணனைக் கொல்ல வந்தாய்;
    கொன்றாய் என்றாள் மண்டோதரி. இக்கருத்துக்களை, பின் குறிக்கப்பெறும் மண்டோதரி
    வார்த்தையில் காண்க:
    (தமஸ : பரமோதாதா சங்கசக்கர கதாதர-ச்ரீவத்ஸவக்ஷாநித்ய அஜய்யச்சா வ
    தோத்ருவ:-மானுஷம் வபுராஸ்தாய விஷ்ணுஸ்ஸத்ய பராக்ரம் 1)
    இன்னமும், ‘ தேவரீருடைய திரு நாபிக் கமலத்தில் பிரமனாகிய என்னை உண்டாக்கி,
    என்னிடம் படைப்புத்தொழிலும் தேவரீரால் வைக்கப் பெற்றுள்ளது’ என்னும் கருத்தைக்
    கொண்டுள்ள,-பத்மே திவ்யேஅர்க்க ஸங்காசே நா யாமுத் பாத்ய மாமபி! ப்ராஜாபத்யம் த்வயா கர்ம மயி ஸவம் நிவேசிதம் ||-என்னும் வார்த்தையைக் காணுங்கால்,
    நாராயணன் மேன்மையை நாம் நன்கு அறியலாம் அன்றோ? (இராமபிரான் தன்னுடைச்
    சோதிக்கு எழுந்தருளும் போது, பிரமன் வார்த்தையாகக் கால் புருஷனால் கூறப்பெற்
    றுள்ளது, இது.)முன்னம், . ஹிரண்யகர்ப்பஸ் ஸமவர்த்த தாக்ரே” “நஸத் நசாஸத் சிவ ஏவ கேவல:”ஏகோஹவை நாராயண ஆஸீத்ந ப்ரஹ்மா)நேசான :” என்னும் வாக்கியங்கள், கருத்
    தைத் தெளிவாகத் தெரிவிக்கும் வண்ணத்தில் அமைந்தில; மீமாம்ஸா சாஸ்திர முறையைப் பின்பற்றி ஆய்ந்து காணும் மேதாவிகளுக்கே கலக்கம் சிறிதும் இன்றி, ஏனைய பொருள்கள் இன்றி இருச்கும்போது, சிவனோ,பிரமனோ இருந்ததாகவும் எல்லாம் அழிந்த காலத்து, நாராயணனே இருந்ததாகவும் அவ்வாக்கியங்களின் தெளிந்த பொருளைக் காணக்கூடும் என்று கூறியிருந்தோமல்லவா?
    இப்போது, இராமாயணம்,(மீமாம்ஸா சாஸ்திரம் செய்யும் உதவியைப் போலன்றி)
    யார்க்கும் எளிதில் நன்கு விளங்குமாறு,
    (I) விஷ்ணு.சிவன் இவ்விருவருக்கும் போர் நடக்கும்போது, விஷ்ணுவினுடைய மேன்மையை முனிவரும் தேவரும் கண் கூடாகக் கண்டனர்; (2) இந்திரனோ, சிவனோ, பிரமனோ ஒன்று சேர்ந்த இம்மூவரோ, இராமபிரானுடைய சீற்றத்துக்கு இலக்கானாரை இரக்ஷிக்கஇயலாதவர் ; (3) இவ்வுலகத்திற்கு நன்மையையும், இராவணனுக்கு அழிவையும் செய்ய வந்த இர க தெய்வமான நாராயணனேஇராமபிரான்; (4) படைப்பவனாகிய பிரமன்
    படைப்புத் தொழிலைப் பரம புருஷனாகிய இராமபிரானுடைய அருளாலேயே பெற்றிருப்பவன் ; என்னும் உண்மைக் கருத்துக்களை முறையே, பரசுராமன்,திருவடி மண்டோதரி (பிரமன்) காலபுருஷன் ஆகிய இவர்கள் வாக்கியங்களினால் நன்கு இயம்புகின்றதைக் கண்டோமல்லவா?
    மேற்கூறிய உண்மைக் கருத்துக்களை நாம் மனத்தில் கொண்டு “ஹிரண்யகர்ப்பு: “
    “நஸத் நசாஸத்” “ஏகோ வை நாராயாண ஆஸீத் நப்ரஹ்மா நேசான: ‘ என்னும் வாக்
    கியங்களைக் கண்டால், மந்த மதிகளுக்கும் கலக்கம் சிறிதும் உண்டாகாதன்றோ?
    இவ்வாறு நாராயணன் மேன்மையையும், ஏனையோருடைய தாழ்ச்சியையும், ஆங்கு
    ஆங்கு பல வாக்கியங்களினால் மிக மிகத்தெளி வாகத் தெரிவித்திருத்தலை ஒருவாறு சுருக்கமாகக் கண்டோ மல்லவா? இனி ஜீவாத்மாவின் உண்மையை உணருவோம்.

    வேதாந்தமும் ஜீவனும்

    (பதிம் விச்வஸ்ய) என்பது ஒரு வேதாந்த வாக்கியமாம். இவ்வாக்கியம், ‘இவ்வுலகை உடையவன் எம்பெருமான்’ என்னும் கருத்தைக் கொண்டுள்ளது. இதனால், (எங்ஙனம், சக்ரவர்த்தித் திருமகன் இராமன்’ என்றால், இராமனுக்குத் தந்தை சக்ரவர்த்தி’ என்பது தேறுகின்றதோ, அங் ஙனமே) இவ்வுலகு எம்பெருமானுக்கு உடைமைப் பொருள்’ என்பது தேறுகின்றதல்லவா?
    இவ்வாறு உடைமைப் பொருளாயிருக்கும் தன்மையை சேஷத்வம்’ என்று கூறுவர் ஆன்றோர்.-உடைமைப் பொருளாயிருக்கும் தன்மை’ என்பதைச் சிறிது விவரித்துக் கூறுவாம்: கட்டிப் பொன் ஒருவனுக்கு உடைமைப் பொருளாய் இருத்தலைக்காண்கிறோம். அப் பொன், அவன் சிறப்புப் பெறுதற்கு ஏதுவாயும், அவன் விரும்புகின்றவாறு, தான் அனு பவித்தல், பிறர்க்கு உபகரித்தல் ஆகியவற்றிற்கு ஏற்றதாயும் இருக்கின்றது.இது போன்று,ஜீவனும் எம்பெருமானுக்கு உடைமைப் பொருளாய் இருத்தலை ” பதிம் விச்வஸ்ய” என்னும் வாக்கியத்தில் காண்கிறோம். அந்த ஜீவன், எம்பெருமான் சிறப்புப் பெறுதற்கு ஏதுவாயும்,அவ்வெம்பெருமான் விரும்புகின் றவாறு தான் அனுபவித்தல், பிறர்க்கு உபகரித்தல் ஆகியவற்றிற்கு ஏற்றவனாயும் இருக்கின்றான். இங்கு, “கட்டிப் பொன்
    போலே சேஷத்வம்” என்னும் வாக்கியம் காணத் தக்கது.
    அன்போடு கூடிய இந்தச் சேஷத்வ நிலையை தாஸ்யம்‘ என்பர். இந்தத் தாஸ்யம் ஜீவ
    னுக்கே உரியதொரு சிறப்பாகும்.

    (யஸ்யாஸ்மி நதமந்தரேமி) என்னும் மற்றொரு வேத வாக் கியத்தைக் காண்போம். இவ்வாக்கியத்தின் கருத்து- ‘எவனுக்கு நான் தாஸனாக (அடிமையாக) இருக்கின்றேனோ, அவனை விட்டு வேறொருவனிடம் செல்லமாட்டேன்’ என்ப தாம் இவ்வாக்கியத்தில் அமைந்துள்ள யஸ்யாஸ்மி‘என்னும் பகுதி, ‘பதிம் விச்வஸ்ய என்னும் வாக்கியத்தின் தேறிய பொருளையே குறிக்கின்றது.
    ‘நதமந்தரேமி’ என்னும் பகுதியின் கருத்தைச் சிறிது விரித்துக் கூறுவாம். ஒருபொருள் ஒரு க்ஷணம் இருந்தால், அவ்வாறுஓரு க்ஷணம் இருத்தலை ‘ஸத்தை’ என்பர்-இரண்டு க்ஷணம் முதல் அந்த அந்தக்காலத்தில் இருத்தலை ‘ஸ்திதி’ என்று கூறுவர். முயறசியை ”ப்ரவ்ருத்தி’ என்று பகருவர். முயற்சியின்மையை ‘நிவ்ருத்தி, என்று சொல்லுவர்.
    இம்முறையில், ஒவ்வொரு ஜீவனுடைய ஸத்தை, ஸ்த்திதி, பரவ்ருத்தி, நிவ்ருத்தி ஆகிய
    இவை பரமபுருஷனுக்கு வயப்பட்டனவாகவே காணப்படுகின்றமையின், ஜீவன் எம்பெரு
    மானுக்குப் பரதந்திரன் எனப்படுகிறான்.-எங்ஙனம்,தட்டான் கைப்பட்டுப் பணி செய்யப்படுகின்ற பொன்னானது, அவன் அதனை உருக்கவும், தட்டவும், நீட்டவும்,
    ஆக்கவும், அழிக்கவும் முயலுமளவில், அது நெகிழ்வதும் வளைவதும், நீள்வதும், ஆவதும்
    அழிவதுமாகி, தன் ஸத்தை முதலியவற்றில் தனக்கு வசமாயிருக்கையின்றி, அவன் வசப்
    பட்டிருக்கின்றதோ, அங்ஙனமே, ஜீவனும், தன் ஸத்தை முதலியவற்றில் தனக்கு வச
    மின்றி, எம்பெருமான் விரும்புகின்றவாறு, ஆக்கவும், அழிக்கவும் வசப்பட்டிருக்கின்றான்’
    என்பதை நாம் அறிதல் வேண்டும் இங்கு,” பணிப்பொன் போலே பாரதந்திரியம்’
    என்னும் வாக்கியம் நோக்கத்தக்கது.
    இப்பாரதந்திரிய சப்தக் கருத்தை ஊன்றி நோக்கின்.எம்பெருமான் ஸ்வதநதிரன்’
    என்பதும் இங்கு நன்கு விளங்குமன்றோ?
    பரமபுருஷனைப் பற்றி உள்ள சேஷத்வ பாரதந்திரியங்களிரண்டும் சேர்ந்தே யிருக்கு
    மாதலின், அவற்றைத் தனித்தனியே பிரித்து அறிந்து கொள்ளுமாறு, கட்டிப் பொன்,
    பணிப்பொன் என்னும் இவ்வுதாரணங்கள் காட்டப் பட்டன.
    இவற்றால்,எம்பெருமானுக்குச் சிறப்பை விளைக்கைக்கு உறுப்பாய், அவன் விருப்புக்கு ஏற்ப உபயோகம் கொள்ளுதற்குத் தகுதி யுடையதாயிருக்கை, ‘சேஷத்வம்’ என்றும்,
    அங்ஙனம் உபயோகப்படுவதாயிருக்கை, ‘பாரதந்திரியம்’ என்றும் இவற்றிற்கு உள்ள
    வேற்றுமையை நாம் நன்கு அறியலாம்.
    இதுகாறும் கூறியவாற்றால், ”பதிம் விச் வஸ்ய., ‘யஸ்யாஸ்மி நதமந்தரேமி “ என்னும் வாக்கியங்களில் எம்பெருமான் ஸ்வாமி(உடையவன்) ‘ஸ்வதந்திரன்’(தனக்கு வசமான தன் ஸத்தை முதலியவற்றைப் பெற்றிருப்பவன்)’ என்னும் கருத்தும்,ஜீவன்,அவ் எம்பெருமானுக்குச் சேஷமாயும் பரதந்திரமாயும் இருப்பவன்’ என்னும் கருத்தும், அவ
    னுக்கும் (பரமனுக்கும்) இவனுக்கும் ( சேதனனுக்கும்) வேற்றுமை உண்டு’ என்னும் கருத்தும் நன்கு விளங்குகின்றன அல்லவா?
    இனி,  (தத் த்வம் அஸி) என்னும் வேறொரு வேதாந்த வாக்கியத்தைக் காண்போம். இவ்வாக்கியம், ஆத்மா ஒரு பொருள்தான் உண்டு; ஜீவனுக்கும் பரமனுக்கும் வேற்றுமை யில்லை என்னும் கருத்தைக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
    இக்கருத்தையும். “ பதிம் விச்வஸ்ய” “யஸ்யாஸ்மி ந தமந்தரேமி” என்னும் வாக்கியங்களின்,மேற்கூறிய கருத்தையும் சேர்த்து நோக்குங்கால், ‘ஜீவனும் பரமனும் ஒரு பொருளா ? அல்லது வேறு வேறு பொருள்களா? ஒன்று எனின். ‘பதிம் விச்வஸ்ய’ என்னும் சுருதி சேராது. வேறு எனின், “தத் த்வம் அஸி’ என்னும் சுருதி சேராது’ என்னும் இக்கலக்கம்)
    உண்டாவது இயல்பன்றோ?
    இக்கலக்கத்திற்குப் பரிஹாரம் மீமாம்ஸா சாஸ்திர முறையைப் பின் பறறிக் காணுங்கால், பின்வருமாறு அறியத்தக்கது : தத்த்வம் அஸி” என்னும் சுருதியிலுள்ள-தத்’ என்னும் பதம், அறிவு, ஆற்றல் முதலிய திருக்குணங்களோடு கூடிய காரணப்பொருளான பரமனைக் குறிப்பதாகும். ‘த்வம்’ என்னும் பதம் ‘ஸ்வேதகேது ‘ என்னும் ஜீவனைச் சரீரமாய்க் கொண்டுள்ள பரமனைக் குறிக்கும்.-இவ்விருவரும் ஒருவர்’ என்பது இவ்வாக்கியத்
    தின் கருத்து.

    தத் என்னும் இப்பதம் பரமனைக் குறிக்கும் என்பது உண்மையே. ஆனாலும், இந்த த்வம்
    என்னும் பதம், முன்னிலைப் பொருளான ஜீவனை (ச்வேதகேதுவை)க் குறிக்குமேயன்றி,
    பரமன் வரையில் செல்லுமோ? செல்லாதன்றோ ? அங்ஙனமாயின்,இஃது அவனை
    (ச்வேதகேதுவை)ச் சரீரமாய்க்கொண்டுள்ள  பரமனைக் கூறும் என்று நீங்கள் கூறுவது
    எவ்வாறு?’ என்னும் கேள்வி உண்டாகலாம்.
    இக் கேள்வியின் பரிஹாரம் – ஜாதியை உணர்த்தும் சொல், ஜாதியை உணர்த்தும் அளவில் நில்லாமல்,எங்ஙனம் அந்த ஜாதிக்கு இருப்பிடமான வடிவத்தையும் உணர்த்துகின்றதோ, (எங்ஙனம். ‘குடம்’ என்னும் சொல்,குடத்தன்மையை உணர்த்தி அவ்வளவில் நில்லாமல், அக்குடத்தன்மைக்கு இருப்பிடமான குடத்தையும் உணர்த்துகின்றதோ-அங்ஙனமே, சரீரத்தை உணர்த்தும் சொல்லும், சரீரத்தை உணர்த்தும் அளவில் நில்லாமல், அச்சரீரத்தைத் தாங்கும் ஆத்மா வரையில் செல்லும்’ என்பது ஒரு முறையாம். இம்முறையை-அபர்யவஸான வருத்தி’ என்று கூறுவர். ஜீவன் எம்பெருமானுக்குச் சரீரம்
     (என்பது யஸ்யாத்மாசரீரம் ) என்னும் சுருதியினால் அறியத்தக்கது.-ஜீவன். கை, கால் முதலிய உறுப்புக்களோடு கூடிய பிண்டத்தை ஏவி, தாங்கி,அப்பிண்டம் செய்யும் பணியை ஏற்று உகந்து போருகின்றமையின், அவனை ஆத்மா என்றும், அப்பிண்டத்தைசரீரம் என்றும் அறிகின்றோம்.
    இது போன்றே, பரமாத்மாவும், அறிவுற்ற சித்தும் அறிவற்ற அசித்துமாகிய இப்பிரபஞ்
    சத்தைத் தூண்டி, தாங்கி, இப்பிரபஞ்சம் செய்யும் பணியை ஏற்று உகக்கிறானாதலின்,
    அப்பரமன் ஆத்மா; இப்பிரபஞ்சம் சரீரம் என்னத் தட்டில்லையன்றோ?(தாத்ம்யமிதம் ஸர்வம் தத் ஸத்யம் ஸ ஆத்மா) என்னும் வாக்கியம், “தத் த்வம் அஸி என்னும் வாக்கியத்தோடு சேர்ந்த வாக்கியமாம். இவ்வாக்கியம், ‘இப்பிரபஞ்சம் பரமனை ஆத்மாவாக உடையது ; அது உண்மை;-பரமன் ஆத்மா’ என்னும் கருத்தைக் கொண் டுள்ளது .-இவ்வாறு, முதலில், இப்பிரபஞ்சத்திற்கும் பரமனுக்கும் உள்ள சரீரத் தன்மை,ஆத்மா வின் தன்மை இவற்றைக் கூறி, பின்பு, ‘ஸ்வேதகேது’ என்னும் ஜீவனையும், பரமனையும் முறையே த்வம், ‘தத் ‘ என்னும் பதங்களினால் குறித்து, இவ்விருவருக்கும் உள்ள (சரீரத்தன்மை ஆத்மாவின் தன்மை ஆகிய) தொடர்பினால் உண்டான ஒற்றுமையை அந்த ”தத்த்வம் அளி” என்னும் சுருதி அறிவிக்கின்றதாக நாம்கொள்ளுதல் நன்றாம். இப்போது, “தத் த்வம் அளி ” என்னும்
    இந்தச்சுருதியிலும், ”பதிம் விச்வஸ் ” “யஸ் யாஸ்மி ந தமந்தரேமி’ என்னும் சுருதிகளில்
    போன்று, ஜீவனைப் பரமனுக்குச் சேஷப் பொருளாயும், பரதந்திரப் பொருளாயும்
    கண்டோமல்லவா? கண்டவாறு யாதோ?எனின், ‘ஜீவன் எம்பெருமானுக்குச் சரீரம்
    என்ற போதே,அந்த ஜீவன், எம்பெருமானுக்கு சேஷப் பொருளும், பரதந்திரப்
    பொருளுமாம்’ என்பது தெள்ளிதன் விளங்குகின்றதன்றோ?
    இம்முறையில், மீமாம்ஸா சாஸ்திரம், முன்னம் கூறிய கலக்கத்திற்குப் பரிஹாரத்தைத்
    தெரிவிக்கின்றது. இது போலன்றி, இராமாயணம் எளிதில் உணருமாறு ஜீவனுடைய
    உண்மை நிலையை உணர்த்துகின்றது. இவ்வாறு எளிதில் உணர்த்தும் உண்மை நிலையைக் காண்போம்.

    இராமாயணமும் ஜீவாத்மாவும்-
    ‘சக்ரவர்த்தித் திருமகன், ஸீதாபிராட்டி யுடனும், இலக்குமணனுடனும் வனத்திற்கு எழுந்தருளி, சக்ரவர்த்தியும் துஞ்சி, இராச்சியம் அராஜகமாய்க் கிடந்த காலத்து, பரதனை
    முடி சூடிக்கொள்ளவேணும் என்று வஸிஷ்டர்) வேண்டிக்கொள்ள, அப்பரதன் அதற்கு இசையாது இருந்தனன்’ என்பது சரித்திர உணமை அங்ஙனம் இசையாது இருக்கும்போது, பரதன் வளிஷ்டரை நோக்கிக் கூறினவார்த்தை பின் வருமாறு :-
    (கதம் தசரதா ஜாதோபவேத் ராஜ்யா பஹாரக: ராஜ்யம் சாணம் ச ராமஸ்ய தர்மம் வக்து மிஹார்ஹ )-இதின் கருத்தைச் சிறிது விரித்துக் கூறுவோம் :-
    இராமபிரான் வனத்திற்கு எழுந்தருளிய பின், அப்பரமபுருஷன் பிரிவு பொறாது, என் தந்தையாரான சக்ரவர்த்தி துஞ்சினார். அச் சக்ரவர்த்தி வயிற்றில் பிறந்த நான், அவ்வி ராமபிரான் துறந்த இராச்சியத்தை எங்ஙனம் ஏற்றுக்கொள்வேன். அங்ஙனம் ஏற்றுக் கொண்டால், சக்ரவர்த்தி வயிற்றில் பிறந்த பிள்ளை என்று என்னை உலகம் கூறுமோ? கூறாதன்றோ ?
    மேலும், என் உண்மை நிலையை உணருங்காலும் இவ்விராச்சியத்தை யான் ஏற்றுக் கொள்வதற்கு இல்லை. ஏனெனில், நான் என்னும் இவ்வாத்மாவும், இந்த இராச்சியமும் அப்பிரானுக்கே உரிய பொருள்களாம்.-அப்பிரானுக்கே உரிய இரண்டு உடைமைப் பொருள்களுள், ஒன்று மற்றொன்றை ஆண்டு பரிபாலனம் செய்வது முறையாமோ? ஆகா தன்றோ?
    இவ்வுலகில் தன்னைப் பெற்று வளர்த்த தன் தந்தையாரையும்சிறையிலிட்டு வைத்து, தான்
    இராச்சியத்தை முறை தவறிப்பெற்று, பரிபாலனம் செய்வது என்பதொன்று உண்டு. இம்முறையைப் பின்பற்றி, என் பாக்கல் இராச்சி யத்தை வைப்பது தகுமோ ? தகாதன்றோ ?
    என் இயல்பை உணர்ந்து, காக்கும் தன்மையைக் கூறுவீர்.இராமபிரானுக்கே உரிய இப்பொருள்களுள், ஒன்று மற்றொன்றைஆண்டு பரிபாலனம் செய்யலாம் என்னில்,
    என்னைத்தான் இராச்சியம் இரட்சிக்கட்டுமே?-என, ஒருவனுக்கே உரிய பெட்டி, இரத்தினம் ஆகிய இரு பொருள்களுள், ஒன்று காப்பதாயும், மற்றொன்று காக்கப்படுவதாயும் காணப் பெறுகின்றன அல்லவா? இதுபோன்று பரதனாகிய நீ, காப்பவனாகியும் இராச்சியம் காக்கப் படுவதாயும் ஆனாலோ? என்னில்,-மேற்கூறிய இரு பொருள்களுள், ஒன்றான இரத்தினம், உடையோனாகிய அப்புருஷனால் என்றும் தரிக்கத்தக்கதாம். அவ்வாறான அந்த இரத்தினத்தை,அவன் ஒருகால்பெட்டியில் வைத்து, அப்பெட்டியைக் காப்பதாய்க் கரு துங்கால், அது அங்ஙனம் காணப் பெறுகின்றது. அல்லாத போது, அப்பெட்டி அங்ஙனம்
    காணப் பெறுகின்றதோ? இல்லையன்றோ? இராமபிரானுக்கே உரிய (இரத்தினமாகிய இராச்சியம் அப்பிரானாலேயே என்றும் தரிக்கத் தக்கதல்லவா? அந்த இராச்சியமாகிய
    இரத்தினத்தைத் தரித்துக் காக்கத் தகுதி எனக்கு உண்டோ? இல்லையன்றோ? நான் அப் பெட்டியாய் இருக்கத் தகுமோ? தகாதன்றோ?-என,
    இராச்சியத்திற்கு அறிவும் ஆற்றலும் இல்லை. அதனால், அதற்கு உன்னைக் காக்க இடமில்லை. அறிவும் ஆற்றலும் உள்ள உனக்கோ, அந்தஇராச்சியத்தைக் காக்கத் தகுதி உண்டு என்னில், என்அறிவும் ஆற்றலும் எம் பெருமானுக்குப் பணி செய்யப் பாங்காயுள்
    ளன வன்றி, அந்த எம்பெருமான் உடைமையை அவனுக்கு இல்லை செய்யத் தகுதியுடையனவோ? அங்ஙனமோ தேவரீர் எண்ணியிருக் கிறது?” என்பது இதின் கருத்து-இதனால், ‘பரதன் உண்மைநிலையே ஜீவனுக்குரிய ஓர் உண்மை உயரிய நிலை என்பது தெள்ளிதின் விளங்குகின்றதல்லவா?

    இனி, ஸீதா பிராட்டியார் சரிதத்தில் பார தந்தரிய நிலையைக் காண்போம் : ஸீதா பிராட்டியாருக்கு மூன்று பிரிவுகள் உண்டு. தேவமாதர்களின் சிறையை விடுவிக்கைக்காக அசோகவனத்தில் தாம் சிறை இருந்தது. முதல் பிரிவு. இரண்டாம் பிரிவாவது – உலக அபவாதத்தைப் போக்கிக் கொள்வதற்காகச் சக்ரவர்த்தித் திருமகன் அப்பிராட்டியாரை காட்டிலே போகவிடப் பிரிந்தது . மறுபடியும் அப்பிராட்டியார் இராமபிரான் முன்னிலையில் வந்திருக்கும் போது, பிரிந்து, பிறநதகத்தில் (பூமியில்) புகுந்து விட்டது மூன்றாம் பிரிவாம். இப்பிரிவுகளுள், இரண்டாம் பிரிவில் பாரதந்தரிய நிலை நன்கு விளங்குகின்றது. இதைச் சிறிது விவரித்துக் கூறுவாம் :
    சக்ரவர்த்தித் திருமகனும் ஸீதாபிராட்டியாரும் திரு அயோத்தியில் எழுந்தருளியிருக்கும் காலம். திருவயிறு வாய்த்திருத்தலை (கர்ப்பிணியாயிருக்கையை ) சக்ரவர்த்தித் திருமகன் கண்டனன். அவன் அப்பிராட்டியாரை நோக்கி, அறுபதினாயிரம் ஆண்டு மலடு கிடந்த என் தந்தையாரான சக்ரவர்த்தியைப் போன்று வருந்திப் பெறாது, எளிதாகவே எனக்குப் புத்திரப் பேறு கிட்டிற்றே! அவசியம் அனுபவித்தல்லது நிற்க வொண்ணாத ஆசையோடு கூடி இருக்கும் நீ எத்தை விரும்பு கிறாய்? எல்லாவற்றையும் சொல்லாய், உள்ளோடுகிறவை நிழலெழுகிற முகவொளி உடையவளே!-(அபத்யலாபோ வைதேஹி மமாயம் ஸமு பஸ்தித: I கிமிச்சஸி ஸகாமா த்வம்ப்ரூஹி ஸர்வம் வரானனே) என்று அருளிச் செய் தனன்.
    இதைச் செவியேற்ற பிராட்டி இராம பிரானை நோக்கி, அருளிச் செய்த வார்த்தை யாவது -(தபோவனானி புண்யானி த்ரஷ்டும் இச்சாமி ராகவ கங்காதீர நிவிஷ்டானி ருஷீணாம்
    புண்ய கர்மணாம் பல மூலாசி நாம் வீர பாத மூலேஷு வர்த்திதும் / ஏஷமே பரம: காம :)-என்பதாம்.
    இதின் பொருள் ‘இராகவனே ! கிழங்கு, காய்,கனி இவற்றைப் புஜிப்பவரும், ஸத்துவ குணம்பெற்றிருப்பவருமான மஹான்களுடைய திருவடி நிழலில் ஒரு நாளாகிலும் தங்கி, கங்கைக் கரையில் உள்ள தபோவனங்களைக் காண விரும்புகிறேன். இதுவே. எனக் குள்ள மேலான விருப்பம்’ என்பதாம்.
    இவ்வார்த்தையைத் திருச்செவி சாற்றியருளின இராமபிரானும், உலக அபவாதத்தைப்
    போக்கிக் கொள்ள வேணும் என்னும் திருவுள்ளம் பெற்றிருப்பவனாகையால், அப்பிராட்டி யாரின் விருப்பத்தை நிறைவேற்றுபவன்போல், அவ்வாறே அனுப்பினன். இதுவே இரணடாம் பிரிவாகும்.
    இப்பிரிவுக்குப் பயன்- இராமபிரடான், கட்டிலே வைத்த போதோடு காட்டிலே
    விட்ட போதோடு வாசியற அப்பிரானுடைய திருவுள்ளக் கருத்தையே பின் சென்று நடக்க வேண்டும்படியான தன் பாரதந்தரிய நிலையைப் பிரகாசப்படுத்துதலேயாம்.
    கட்டிலே வைத்தபோதோடு காட்டிலே விட்ட போதோடு வாசியற, அப்பிரானுடைய திருவுள்ளக் கருத்தையே பின்சென்றுநடக்க வேண்டும்படியான நிலை’ என்பதைச் சிறிது விளக்குவோம்.
    ஸீதாபிராட்டி அசோக வனத்தில் சிறை இருக்குங்கால், இராவணனாலும், அரக்கியராலும் பட்ட துன்பம் எல்லையற்றதாம். அப் பிராட்டி முன்னிலையில், இராவணன் முறை தவறிக் கூறிய வார்த்தைகள் பல உண்டு. அவற்றுள் ஒன்று பின்வருமாறு-‘கிளி போன்றவளே! நான் உன்னைக் கொணர்வதற்கு முன்னமே உன் கணவனாகிய இராமன் மாண்டு போனான்; அவன் இறக்குங்கால்,ஹா ஸீதா ! ஹா லக்ஷ்மணா ! என்று கூறியதை நீ காதாரக் கேட்டிருக்கின்றாய் ; அங்ஙனம் இருக்க, இராமனைக் கூடவேணும் என்று நீ கருதுகின்றனையே!  ஈது என்ன பேதமை? நல்விதி என்னை உன் பக்கல் கூட்டி
    யிருக்க, அதை அவமதித்து என்னை வெறுப்பது தகுதியோ ‘ இங்கு,
    “வீட்டும் காலத்து அலறிய மெய்க்குரல்
    கேட்டும் காண்டாற்குஇருத்தி கொல் கிள்ளை நீ !
    நாட்டும் கால்நெடு நல் அறத் தின்பயன்
    ஊட்டும்காலத்து இகழ்வது உறும்கொலோ–என்னும் கம்பர் வாக்கைக் காண்க.
    மக்களுள் ஒருவனாகிய இராவணன் தாயான பிராட்டி முன்னிலையில், கூறும் வார்த்தை
    யாமோ? இது. இங்ஙனமே. அரக்கியரும். தத்தமக்குத் தோன்றியவாறு கடிந்து கூறிய
    சரிதம் உலகமறிந்ததேயாம். வில்லம்புக்குத் தப்பலாம்; சொல்லம்புக்குத் தப்ப இயலுமோ? இயலா தன்றோ?
    “தீயினாற்சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
    நாவினால் சுட்ட வடு-என்னும் ஆன்றோர் வாக்கு இங்குக் காணத் தக்கது.
    இங்ஙனம் இருப்பினும்,முடிந்து பிழையாது, பிராட்டி அசோக வனத்தில் உயிர் தரித்து
    இருந்தமைக்குக் காரணம் யாதோ? எனின்,-காரணம் ஒன்று கூறுவாம்.
    நம் தலைமகனான இராமன் நம்மிடம் அளவற்ற அன்பு உள்ளவன்;ஜகதேக வீரன்;
    விரோதியான இராவணனைக் கொல்வது திண்ணம். கொன்று, நம்மைத் தேடுங்கால்,
    ஸீதை முடிந்து பல மாதங்களாயிற்றே? என்றால், தண்ணீர்ப் பந்தலில் வந்து, உருண்டு
    உடைந்து கிடக்கும் தண்ணீர்ச்சாலைக் கண்டு தபிக்கும் விடாயனைப் போன்று, அப்
    பரமன் கதி என்னாகும்! அப்பரமனுக்காகவே நாம் உயிர் தரித்திருப்பது நம் நிலைமைக்குப்
    பொருந்திய கார்யம் அன்றோ?” என்று இருந்ததே அக்காரணமாம்.இங்கு, இராமபிரான் திருவுள்ளக் கருத்தைப் பின்சென்று இருக்கும் பாரதந்தரியநிலையை நாம் நன்கு உணரலாம் அல்லவா?-இக்கருத்தை நாம் மனத்திருத்தி, இரண்டாம் பிரிவையும், அப்பிரிவில் நடந்தசெயலையும் காணுங்கால்,ஓர் ஐயம் எழக்கூடும் அந்த ஐயம் பின்வருமாறு காணத்தக்கது.-இரண்டாம் பிரிவாவது – உலக அபவாதத்தைப் போக்கிக் கொள்வதற்காக இராமபிரான் பிராட்டியைக் காட்டிலே போகவிடப்பிரிந்தது’ என்று முன்னமேயே கூறியிருந்தோம். இதைக் காணுங்கால், பிராட்டியிடம் இராமபிரானுக்கு அன்பு எள்ளளவும் இல்லை என்று தெரிகிறதன்றோ? அப்பிராட்டியார், தம் உயிரை விரும்பி இருப்பது இராமபிரானுக்காகவே என்ற கருத்து,-(நஹி மே ஜீவிதேநார்த்த :) என்ற அவர் கூற்றால் நன்கு விளங்குகிறதன்றோ ? அசோகவனத்தில் எழுந்தருளியிருக்குங்கால், இரா
    வணனாலும் அரக்கியராலும் சொல்லொணாத்துன்பம் பெற்றிருந்தும் இராமபிரானுக்காக
    வேயன்றோ உயிர் தரித்திருந்தது? அவன் அவ்வாறு இருக்க, பிராட்டியார் உயிர் துறக்காது
    இருந்ததற்குக் காரணம்யாதோ ?-இவ் ஐயத்திற்குப் பரிகாரமாவது– மிகவும்
    துயருற்றிருந்த இலக்குமணன், கங்கைக் கரையேறினதும், பிராட்டி ஸன்னிதியில், இராமன்,
    காட்டிலே விட்டதிற்குப் பயனாகத் திருவுள்ளம் பற்றின உலக அபவாத பரிஹாரத்தை விண்ணப்பம் செய்தனன். அதைச் செவிமடுத்த அப்பிராட்டி, மிகவும் துன்புற்றுப் புலம்பிப் பேசும்போது, அருளிச்செய்த வார்த்தைகளுள் ஒன்று.
    (நகல்வத்யைவ ஸௌமித்ரே ஜீவிதம்ஜாஹ்வீ ஜலே
    த்யஜேயம் ராகவம் வம்சேப துர்மாபரிஹாஸ்யதி ||–இதன் கருத்து – இலக்கு மணனே! ‘இராம
    பிரானைச் சுட்டியிருக்கும் ரகுஸந்தானமானது, அவ் இராமபிரானுடைய திருவம்சத்தில்
    இல்லாமல் அழிய வொண்ணாது’ என்று கங்கா ஜலத்தில் இப்போதே உயிரை விடுகைக்குத்
    தகுதியுடையவளாக ஆகிறிலேன்’ என்பதாம்.
    இக்கருத்தைக் காணுங்கால், இராமபிரானைப்பற்றி உயிர் தரித்திருக்க வேண்டுவதில்லை. அப்பிரான் விரும்பிய ஸந்ததியைப்பற்றி அப்பிராட்டியார் அப்பிரிவில் உயிர் தரித்திருந்ததாய்த் தெரிகிறதன்றோ? இதைக்காண்போருக்கு மேற்கூறிய ஐயத்தின் பரி
    ஹாரம் நன்கு புலனாம்.-இங்கு, ”ஆற்றாமையின் கனத்தாலே முடிந்து பிழைக்கை தேட்டமாகா நிற்கச் செய்தேயும், அது செய்யமாட்டாதே பெருமாள் நினைவைப்
    பின் சென்று, தன் ப்ராணனை நோக்கிக் கொண்டிருக்க வேண்டும் படியான பாரதந்
    திரியத்தையிறே ப்ரகாசிப்பித்தது” என்னும் மணவாளமா முனிகள் திருவாக்கு அனுபவிக்
    கத்தக்கது.
    இத் திருவாக்கில் அமைந்துள்ள “பெருமாள் நினைவைப் பின்சென்று” என்பதற்கு, ‘குசல
    வர்களுடைய திருவவதாரத்தில் இராமபிரான் விருப்புற்றிருப்பவனாம்.ஆதலின,இப்போது
    நாம் உயிர் தரித்திருப்பது அப்பிரானுக்கு இஷ்டமாம்’ என்னும் எண்ணத்தை, (அபத்
    யலாபோவைதேஹி. என்னும் அப்பிரான் திருவாக்கையும், அதின் மூலமான அவன் திரு
    வுள்ளக் கருத்தையும் பின்பற்றி)ப் பெற்றிருந்து’ என்பது கருத்தாம்.
    இனி, இங்கு அப்பிராட்டியார் குசலவர்கள் திருவவதாரம் செய்த பின், உயிரோடு இருந்ததிற்குக் காரணம் யாதோ?என்னும் வினா சிலருக்கு உண்டாகலாம். இராமபிரானுக்காகவோ, அப்பிரானுடைய ஸந்ததிக்காகவோ, பிராட்டியார் உயிர் தரித்திருக்க வேண்டுவதில்லையன்றோ?இவ்வினாவிற்கு விடை பின்வருமாரு – தலைவன், தலைவிக்கு அடையப்பெறும் நன்மையாயும், அந்நன்மையைப் பெறுதற்கு ஏதுவாயும்,-அத்தலைவியினால் உபசரிக்கத் தக்கவனாயும், போற்றத் தகுந்தவனாயும் இருப்பவனாம்.
    அதனால், உயிரையோ, அவ்வுயிரிலும் மேற்பட்டது ஒன்றையோ, விட்டாகிலும் தலைவன்
    விருப்பத்தைச் செய்ய வேண்டியவளாம் தலைவி
    (பதிர்ஹி தைவம் நாரயா : பதிர்பந்து : பதிர் கதி: 1 ப்ராணை ரபி ப்ரயம் தஸ்மாத் பர்த்து: கார்யம் விசேஷத: I”பாலயந்தீ ஹரேர் பாவம் பத்னீ பகவ தோஹ்யஹம் ) என்று பிராட்டியாராலேயே அருளிச் செய்யப் பெற்றுளளது
    இங்கு, ‘பிறருக்காக உயிர் தரித்திருக்கவேண்டும்; பரதந்திரருக்கு முடிகை தேட்டமானாலும் முடியப்போகாது’ என்னும் உண்மையை உணருதல் வேண்டும் இவ்வுண்மைக் கருத்தைச் சிறிது விரித்துக் கூறுவோம்: பெருவ்யாதியினால் பீடிக்கப்பட்ட ஒருவன், அப் பீடை தாங்க மாட்டால், தானே உயிரைத் துறந்து விடுகிறான். அவன் அங்ஙனம் முடிகையே அவனுக்குச் சேர, பிழைக்கை எனப் பெறுகின்றது. இவ்வாறு முடிகையே பிழைக்கையானால் பிழைக்கையும் முடிகையாகலா மன்றோ?
    ஸீதாப்பிராட்டியார், குசலவர்கள் திருவ வதாரம்செய்த பிறகு, இராமபிரானுடைய
    ஸந்ததுக்காக உயிர் தரித்திருக்கவேண்டுவதில்லை என்பதும். அக்காலத்தில் அவருக்கு
    முடிகை தேட்டமாயிருந்தது என்பதும் ஒருவாறு உன்மையேயாம். ஆயினும், அப்பிராட்டியார் தம் இயல்புக்கு ஏற்ப, மேற்கூறிய வாறு பிழைக்கை என்னும் முடிகையைப் பெற்றிருந்தவர் என்றே நாம் அறிதல் வேண்டும். இவ்வாறு இருத்தற்கும் காரணம் இராமபிரான் திருவுள்ளக் கருத்தேயாம்.
    இங்கு, திருவுள்ளக் கருத்து என்பது யாதோ? எனின், கூறுவோம்: “ஸீதா பிராட்டியார் கற்
    புடையவர்” என்பது மாத்திரமன்றி, கற்பினுக்கு அணியாகவே விளங்குபவராம். கண்
    டனன் கற்பினுக்கு அணியை’ என்னும் திருவடி திருவாக்கையும் இங்கு நாம் காணுதல்
    வேண்டும். அப்பிராட்டியாரை, இக் கொடுவுலகம் தன் இயல்புக்கேற்ப, குற்றம் கூறிற்று.
    ஆயினும், நாள் செல்ல, நாள் செல்ல இக் கொடுவுலகத்திற்கே, அப்பிராட்டியாரின்,
    குற்றம் சிறிதும் இன்றியிருக்கும் சிறப்பு நன்கு விளங்கக் கூடும். அக்காலத்கில் குழந்தைகளுடன் பிராட்டியாரை அழைத்துக் கொள்வதே தமக்கு நன்றாம். ஆதலின், இப்
    பொழுது பிராட்டியார் உயிர் துறத்தல் கூடாது. என்பதே அக்கருத்தாம்.
    இதற்குத்தக்க பிரமாணம் யாதோ? எனின்,
    மூன்றாம் பிரிவைப் பற்றிக் கூறுமிடத்து, வால்மீகி முனிவன். இராமபிரானுடைய ஸன்
    னிதியில் வந்து ஒடுங்கி நிற்கும் ஸீதாப்பிரட்டியாரைக் குறித்து,’இவர் குற்றம் சிறிதும்
    இன்றி நல்லொழுக்கம் பெற்றிருப்பவர்;-பாவம் சிறிதும் இல்லாதவர் ; இராமபிரானை
    யல்லாமல் மற்றொருவரையும் நெஞ்சாலும் நினைத்திலாது, அப்பிரானையே தெய்வமாகப்
    பற்றி இருப்பவர்-‘இயம்சுத்தஸமாசாரா அபாபா பதிதே வதா’ என்று கூறியிருத்தலையும்,
    இராமபிரானும், “நானும், குற்றம் சிறிதும் இன்றி இருப்பவர் பிராட்டியார் என்பதை அறிவன் (“அபாபேத் யபி ஜானதா ) முனிவனாகிய நீர் சொன்னதுவே போதும்-ஏ தேவம் மஹாபாக யதா வசஸ் தர்மவித்)ஆனாலும், இந்தத் திரளிலே உலகம் நம்புமாறு, தன் சுத்தியை வெளியிட்டுக்கொள்ள வேண்டும்’ என்று அருளிச் செய்திருத்தலையும் காணுங்கால், மேற்கூறிய கருத்து,தெள்ளிதின் விளங்குகின்றதன்றோ?
    இங்கு, (பிறருக்காக உயிர் தரித்து இருக்க வேண்டும் பரதந்திர ஜன்மத்தில் பிறந்தோருக்கு நினைத்தபோது முடியப்போமோ ?-அங்ஙனம் நினைத்தபோது முடிந்து விட்டால்,
    பாரதந்திரியமாகிற செல்வம் நிலை பெற்றிக் குமோ ?) என்னும் கருத்தைக் கொண்டுள்ள
    மாயும் வகையறியேன் வல்வினையேன் பெண் பிறந்ததே என்னும் ஆழ்வார் திருவாக்கையும் காண்க.
    இதுகாறும் கூறிய பரதன், ஸீதா பிராட்டியார் இவ்விருவருடைய சரிதங்களை நாம்
    மனத்திருத்தி நோக்குங்கால், இராமபிரானுக்கு இராச்சியமும், பரதனும், ஸீதாப்
    பிராட்டியும் போன்று, ‘இந்த ஜீவனும், இவனுடைமையாக எண்ணப் பெற்றிக்குமவையும் அப்பிரானுக்கே (நாராயணனுக்கே) உரிய உண்மை உடைமைப் பொருளும் பரதந் திரப்பொருளுமாம்’ என்பது நன்கு விளங்கு கின்றதல்லவா ? இவ்வாறு ஜீவனுடைய
    உண்மை நிலையை இராமாயணத்தில் கண்டோ மல்லவா? இனி, உபேயம் எனப்படும் பயனைப் பற்றி ஆராய்வோம்.

    —————-

    வேதாந்தமும் உபேயமும்

    இவ்வுலகிற்கு மீண்டுவருதல் இன்றி, மோக்ஷ உலகத்தைத் தருவதான வழியில் சென்று,  திருநாட்டிலே எம்பெருமானைச் சேர்ந்து, அவனையும், அவன் திருக்குணங்களையும், திருமேனியையும் அன்புடன் அனுபவித்து, அவ்வனுபவத்தினால் உண்டான. ஆனந்தம்தூண்ட அவன் திருவுள்ளம் உகக்குமாறு அடிமை செய்து வாழுதலே, இந்த ஜீவனுக்குச் சிறந்த நன்மையாம். இவ்வாறான வாழ்வையே உபேயம்’ என்றும், வீடுபேறு‘ என்றும் கூறுவர், ஆன்றோர். இங்கு, ‘பரமனைப் பஜனம் பண்ணுவோர்,
    (மோஷ உலகத்திற்குச் செல்லுவோரை முதலிற்கண்டு. உபசரித்து, வழி நடத்தும்
    தெய்வமான) அர்ச்சிஸ்ஸை அடைகின்றனர்’ என்னும் கருத்தைக் கொண்டுள்ள
    (தே ர்ச்சி ஷமபி ஸம்பவந்தி)என்னும் வேதாந்த வாக்கியமும்,-பரமனைப் பஜனம் பண்ணுவோன் அப்பரமனையே அடைகின்றான்’ என்னும் பொருள் பெற்றுள்ள
     (ப்ரஹ்மம் விதாப்நோதி பரம்) என்னும் வேதாந்த வாக்கியமும்,
    ‘மிகவும் இனிய பொருளான பரம புருஷனை அடைந்து, அனுபவித்து இன்பம் துய்க்கின்றான்’ ‘திருநாட்டில் முக்தன் எம்பெருமா னுடன் அவன் திருக்கலியாண குணங்களை அனுபவிக்கின்றான்’ என்றும் அப்பரமபுருஷனுடைய திருமேனியைக் கண்கூடாகக் காண்கின்றனர் நித்யர்’ என்னும் கருத்துக்களை முறையே காட்டும்
     ” (ரஸம் ஹ்யேவாயம் லப்த்வாS நந்தீ பவதி) ” (பரமே வ்யோமன் ஸோ ச்னுதே ஸர்வான் காமான் ஸஹப்ரஹ்மணா விபச்சிதா(ஸதா பச்யந்தி ஸூரய :) என்னும் வேதாந்த வாக்கியங்களும் காணத் தக்கன.
    ஆனால், ‘பரமபுருஷன் திருவுள்ளம் உகக்குமாறு அடிமை செய்து வாழுதல் இந்த ஜீவனுக்குச் சிறந்த நன்மை’ என்பதற்குத் தக்க பிரமாணம் யதோ? என்னும் கேள்வி இங்கு உண்டாவது இயல்பேயாம்.
    இக்கேள்விக்கு விடை பின்வருமாறு : ஜீவன் கை, கால் முதலிய உறுப்புக்களோடு
    கூடிய பிண்டத்தை ஏவி, தாங்கி, அப்பிண்டம் செய்யும் பணியை ஏற்று உகக்கின்றமையின், அந்த ஜீவன் ஆத்மா ; அப்பிண்டம்சரீரம்’ என்பது எங்ஙனமோ, அங்ஙனமே-பரமன் ஜீவனை ஏவி,தாங்கி, அந்த ஜீவன் செய்யும் பணியை ஏற்று உகக்கின்றமையின்,
    அப்பரமனும் ஆத்மா; அந்த ஜீவனும் சரீரம், என்பதைபும் நாம் உணரலாமல்வலா?
    இங்கு, (யஸ்யாத்மா சரிரம்= எவனுக்கு ஜீவன் சரீரமோ) என்னும் வேதாந்த வாக்கியம் பிரமாணமாய்க் காணத்தக்கது இதனால், தேறிய ஸாரப் பொருள் என்? என்னில், இந்தச் சுருதி. ஜீவன் பரமனுக்குச் சரீரமாம்’ என்று கூறிய போதே. இந்த ஜீவனுக்குச் சிறந்த நன்மை பரமனுக்குத் தொண்டு செய்கையேயாம். என்பதையும் கூறிற்றன்றோ?

    ஆனால், ‘இவ்வடிமைத் தொழில் உலகப்போக்கில் துன்பம் தருவதாய் இருத்தலினாலும் ‘ஓருவருக்குத் தொண்டு பூண்டொழுகுவது துன்ப மயமானது’ எனச் சாஸ்த்திரங்களில் சொல்லப்படுவதாலும், மனுமுதலியபெரியோர் தொழில்களில் அடிமைத்தொழில், கடைப்பட்டது; துன்பமயமானது’என இயம்பி இருத்தலாலும், அடிமைத்தொழில் துன்பம் தருவதொன்றாம்’ என்பதுதெள்ளிதின் விளங்குகின்றதன்றோ?
    உண்மை இவ்வாறு இருக்க, ‘துன்பம் கலவாத பேரின்பத்தையே அனுபவித்துக்
    கொண்டிருக்கும் மோக்ஷ தசையிலும்,ஜீவனுக்கு இவ்வடிமைத் தொழில் உண்டு எனச்
    சொல்லப் பெறுகின்றதே, இது பொருந்துமாறு யங்ஙனம்? என்னும் இவ்வினா இங்கு
    எழுகின்றது.-இவ்வினாவிற்குவிடை பின்வருமாறு :-
    எங்கும் அடிமைத் தொழில் துன்பம் தருவ தாகவே இருக்கும்’ என்பது இல்லை. ‘காளி
    தாஸன், தான் உகந்த விலைமகளுக்குத் தண்ணீர் கொண்டு வ து தருதல் முதலிய தொண்டைமிக்க மகிழ்வுடனும், இன்பத்துடனும் செய்து வந்தான்’ என்பது சரித்திர உண்மை. அதைப்போன்றே, பரமனுக்குச் செய்யும்தொண்டும் இன்பமாகவே இருக்கும்.
    காளிதாஸன், தான் உகந்த விலை மகளின் அழகு முதலிய குணங்களில் ஈடுபட்டு, அவ் வுவப்பினால், அங்குத் தொண்டு புரிந்ததால், அத்தொண்டு இன்பமாக இருந்தது என்ன லாம்.
    இங்கு, எம்பெருமானுக்கு அழகு முதலியகுணங்கள் உண்டோ? ‘அவன் நிர்குணன் (குணங்களற்றவன்) என வேதாந்தங்களில் கூறப்பெறுகின்றனனே, அங்ஙனம் குணமற்ற அப்பெருமானிடத்தில் இந்த ஜீவனுடைய நெஞ்சம் ஈடுபடுமோ? ஈடு படாதன்றோ? மனக்
    கவர்ச்சி உண்டாகாத இடத்தில் உவப்புக்கொள்ளாத இடத்தில் அடிமைத் தொழில் இன்பமாய்த் தோன்றுவதுதான் எவ்வாறு? எனச் சிலர் கருதக்கூடும்.
    எம்பெருமான் நிர்குணன்’ என்னும் வேதாந்த வாக்கியத்திற்கு, குணம் ஒன்றுமே இல்லாதவன்’ என்பது கருத்தன்று; பின்னை-கருத்து யாதோ? எனின், ‘தீயகுணம் சிறிதும்
    இல்லாதவன்’ என்பதே கருத்தாம்.
    திருக்கலியாண குணங்களும் இல்லாதவன்’என்று பொருள் கொள்ளில், பேரறிவு,
    பேராற்றல் முதலிய எண்ணிறந்த திருக்கலியாண குணங்களைப் பெற்றிருப்பவனாம் எம்
    பெருமான் ‘ என்னும் கருத்தைக்கொண்டுள்ள (பராஸ்ய சக்தி:) என்பனபோன்ற பல வேதாந்த வாக்கியங்களோடு முரண்பாடுஉண்டாமன்றோ ?
    இங்ஙனம், எம்பெருமான் திருக்கலியாண குணம் நிரம்பியிருக்கப் பெற்றவன்’ என
    வேதாந்த வாக்கியம் இயம்புகின்றமையினாலும், இந்த ஜீவனும்,எம்பெருமான் திருக்
    குணங்களில் ஈடுபட்டு, உவந்து, அடிமைத்தொழில் புரிகின்றமையினாலும், இங்கும்
    அடிமைத் தொழில் இன்பமாகவே இருக்கும்என்பதில்,தட்டு ஒன்றுமில்லை.
    இதுகாறும் கூறியவற்றால், வேதாந்த வாக்கியங்களைக்கொண்டே, ‘பரமபுருஷன் திருவுள்ளம் உகக்குமாறு அடிமை செய்வதே வீடுபேறு’ என்பதை உணர்ந்தோமல்லவா ?
    (ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி) என்னும் வேறொரு வேதாந்த வாக்கியத்தையும், அவ்வாக்கியத்தில் மேலெழத்தோன்றும் கருத்தையும் காண்போம்.
    “ஒருவன் குற்றத்தினால், முத்துச்சிப்பியில்அதன் தன்மையை அறியாது, வெள்ளியின்
    தன்மையை அறிகின்றான்; அவ்வறிவு பிரமம் எனப்படும். அந்தப் பிரமம் இருக்கும்போது,
    வெள்ளி உண்மைப் பொருளாய்த் தெரிகின்றது. அதனால் அவன் அதை எடுக்கச்
    செல்கின்றான். அங்ஙனம் சென்று, எடுத்து,நோக்குங்கால், ‘ இது வெள்ளியன்று, முத்துச்
    சிப்பி’என்று சிப்பியின் தன்மை புலனாகின்றது. அப்போது, அம்முத்துச் சிப்பியைத் தவிர,
    வெள்ளியோ, அதன் தோற்றமோ இல்லை; சிப்பி மட்டும் தென்படுகின்றது” இது போன்று, ப்ரஹ்மமானது குற்றத்தினால் பிரபஞ்சமாகத் தோன்றுகின்றது. “தத் த்வம் அஸி-என்னும் வாக்கியத்தினால், ஆத்மா ஒன்று தான் உண்டு’ என்னும் உண்மையை உணரும்போது, இப்பிரபஞ்சமோ இதன்தோற்றமோ ஒன்றுமே இராது. அந்த ப்ரஹ்மம் மட்டும் இருக்கும். அங்ஙனம் அந்த ப்ராஹ்மம் மட்டும் இருக்கையே வீடு பேறாம். இதுவே மேற் கூறிய வாக்கியத்தின் மேலெழத்தோன்றும் கருத்தாம்.
    இக்கருத்தையும், முன்னம் கூறிய அடிமைத்தொழிலே வீடு பேறாம்’ என்னும் கருத்தை
    யும் ஒன்று சேர்த்துக் காண்போருக்குக் கலக்கம் உண்டாவது இயல்பேயாம்.-இக்கலக்கத்தை மீமாம்ஸா சாஸ்திர முறையைக் கைக்கொண்டு போக்கிக்கொள்ளுங்கால்,
    ” ப்ரஹ்மவேத ப்ரஹ்மைவ பவதி” என்னும் வாக்கியம், ‘ஆத்மாவினுடைய உண்மையை
    உள்ளபடி உணர்பவன் ப்ரஹ்மமாகவே ஆகிறான்’ என்னும் கருத்தைக் காட்டுவதன்று; பிறகு எக்கருத்தைக் காட்டுகின்றதோ என்னில், ‘மேற்கூறியவாறு உண்மையை உணருவோன், மோஷ தசையில் பரமனோடு மிகவும் ஒற்றுமை பெற்றிருப்பவனாம்’ என்னும் கருத்தையே காட்டுவதாம் ; என்பதுநன்கு புலனாம்.
    இவ்வாக்கியத்தில் அமைந்துள்ள “ப்ரஹ்மைவ பவதி” என்னும் பகுதியில் “ப்ரஹ்ம
    மாக ஆகிறான்” என்னும் கருத்து காணப் பெறுகின்றது என்பது ஒருவாறு உண்மையே.
    இக்கருத்தையே கொள்ளில் ஜீவனுக்கும் பரமனுக்கும் உள்ள வேற்றுமையைப் பலவாறாகக்
    கூறும் பல வேதாந்த வாக்கியங்களோடுமுரண்பாடு உண்டாமன்றோ?
    முன்னம் சேதனன் அர்ச்சிராதி வழியில் செல்லுதல், திருநாட்டிலே பரமபுருஷனைச்
    சேர்தல்,அவனையும், அவன் திருக்குணங்களையும், திருமேனியையும் அனுபவித்தல், ஆனந்தம் பெறுதல்,அடிமை செய்தல், அப்பரமனை உவப்பித்தல் என்னும் பல நன்மைகளை அறிவிக்கும் பல வாக்கியங்களைக் கண்டோமல்லவோ?-மிகவும் ஒற்றுமையுள்ள இருபொருள்களைஅவ்வொற்றுமை தோன்ற ஒன்றாகவே கூறுதலும் செய்யுள் வழக்கில் உள்ளதொன்றேயாம். தாமரை மலர் போன்றுள்ள கண்ணை அம்மலராகவே கூறுகின்றாரல்லவா? ‘தாவிவையங் கொண்ட தடந்தாமரை என்று.இம்முறையைப் பின்பற்றி, ‘‘ப்ரஹ்மைவபவதி” என்னும் சுருதியில் மேற்கூறியவாறு பொருத்தமான பொருளைக் காண்பதே நன்றாம்.
    ஆனால், தலைவன், தொண்டன் இவ்விருவருள் தலைவனுக்குச் சிறப்பும், தொண்டனுக்குத் தாழ்ச்சியும் தென்படுகின்றன. இது போன்று,உண்மையில் தலைவனான எம்பெருமானுக்குச் சிறப்பும் தொண்டனான ஜீவ னுக்குத் தாழ்ச்சியும் உண்டு என்றே கொள்ளுதல் வேண்டும். அங்ஙனமே பிரமாணங்களும் கூறுகின்றன.-உண்மை இவ்வாறு இருக்க, பரமனுக்கும் ஜீவனுக்கும் மிகவும் ஒற்றுமை உண்டு என்று கூறுவது யாங்ஙனம்? எனச் சிலர் கருதக்கூடும்.
    ஓர் அரசனுக்கு அவன் புத்திரனைத் தொண்டன் என்றும், அந்த அரசனோடு மிகவும்
    ஒற்றுமை பெற்றிருப்பவன் அவன் புத்திரன் என்றும் காண்கின்றோம். அது போன்றே
    இங்கும் ப்ரஹ்மத்திற்கு ஜீவன்தொண்டன் என்றும், அந்த ப்ரஹ்மத்தோடு மிகவும்
    ஒற்றுமை பெற்றிருப்பவன் என்றும் கொள்ளக் குறையில்லை நான் இராஜ குமாரன்’ என்
    னும் கருத்தைப் பெற்றுள்ள ‘(அஹம் ப்ரஹ்மாஸ்மி) என்னும் வாக்கியத்தை இங்குக் காண்க. அரசனுடைய புதல்வன் அரசனன்றோ?
    இவ்வாறு உபேயத்தைக் குறிக்கும் வேதாந்த வாக்கியங்களின் கருத்தை மிமாம்ஸா சாஸ்திர முறையைப் பின்பற்றி,கலக்கம் சிறிது மறக் கண்டோம். இனி, இராமாயணத்தில் இவ் உபேயத்தைக் காண்போம் :

    இராமாயணமும் உபேயமும்

    முதலில். எம்பெருமானுடைய அருளுக்கு இலக்கானவனை எம்பெருமானாகவே சுருதி இயம்புகின்றதே, இதை இராமாயணம் எவ்வாறு தெரிவிக்கின்றதோ, அதை அவ்வாறே அனுபவிப்போம்
    திருவடி அசோக வனத்தில் ஸீதாபிராட்டி யாரைத் திருவடிதொழுது நிற்கும் போது, அப்பிராட்டியார் தாம், அத்திருவடியை நோக்கி, இவன் இராமதூதனோ? அல்லனோ?
    என ஐயமுற்று, உண்மையை உணரவிரும்பி, இஷ்வாகு குலத்திலே திருவவதாரம் செய்தருளின புருஷோத்தமர்களான இராம இலக்ஷ்மணர்களுக்கும். வானரரான ஸுக்ரீவன் முதலானார்க்கும் தோழமை ஏற்பட்டதற்குக் காரணம் யாதோ? ஏற்பட்டது எவ் வாறோ? என்று வினவியிருப்பது நாம் அறிந்த தேயாம்.

    அவ்வினாவிற்குத் திருவடி விடை விடுக்குங்கால், கூறிய வார்த்தை,  “(ராம ஸூக்ரீவயோரைக்யம் தேவ் யேவம் ஸமஜாயத) என்பதாம்.-இவ்வார்த்தையின் கருத்து, பின்வருமாறு:- ‘புருஷோத்தமனாகிய இராமபிரானோ. மிக மிகப் பெரியோனும், ஒப்பற்ற மேன்மை பெற் றிருப்போனுமாம். குரங்காகிய ஸுக்ரீவனோ மிக மிகச் சிறியோனும், ஒப்பற்ற தாழ்ச்சி பெற்றிருப்போனுமாம். அப்பெருமான் இக் குரங்கைத் தோழமை கொள்வதற்குத் தக்க காரணம் இவன்பால் ஒன்றும் அறிகின்றி லேன், அம்மா!ஆயினும், இராமபிரான் ஸுக்ரீவன் ஆகிய இவ்விருவரும் ஒருவர் என்னலாம் படி, அவ்விருவருக்கும் உள்ள தோழமையைத் தான் அறிகின்றேன்.’-இன்னமும் கேட்டருளாய்: இராமபிரானுடைய தர்ம பத்தினியாகிய தேவரீருக்கு இலக்குமணன் தூது வருதல் முறையாகும்.-அல்லது, உயிர்த்தோழனாகிய ஸுக்ரீவன் அங்ஙனம் தூது வருதல் முறை என்னலாம்.
    நானோ, ஸுக்ரீவன் தொண்டர்களுள் மிகவும் கடைப்பட்டவன். இவ்வாறு கடைப்பட்டவனாகிய இத்தொண்டன், தூது வருமாறு அவ்விருவருக்கும் தோழமை ஏற்பட்டுள்ளது என்றால், அத்தோழமை எவ்வாறு உள்ளது என்பதற்கு யான் விடை விடுக்கவும் வேண்டுமோ? வேண்டாமன்றோ?இங்கு, “ராம ஸுக்ரீவ யோரைக்யம்”’
    என்றிருந்தாலும், அவ்விருவரும் ஒருவரே’ என இயம்புவாரும் உண்டோ? இல்லையன்றோ?
    அவ்வாறு இயம்பினால், அதை உலகம் ஏற்குமோ?=சுருங்கச் சொல்லின், இராமபிரானும்
    ஸுக்ரீவனும் உண்மையில் வேறு வேறு பொருளாகவே இருப்பவராம். ஆயினும், இன்ப
    துன்பங்களை ஸமமாகப் பெற்றிருப்பவராம். அஃதாவது- இராமபிரானுடைய இன்ப துன்பங்களை ஸுக்ரீவனும், ஸுக்ரீவனுடைய இன்ப துன்பங்களை இராமபிரானும் பெற்றிருத்தலாம். இவ்வாறு இவ்விருவருக்கும் மிகவும் ஒற்றுமை இருப்பது பற்றி
    இருவரும் ஒருவராகவே போற்றப் பெறுகின்றனர். இது போன்று, வீடுபேற்றைப் பெற்
    றிருக்குங்கால், பரமனுக்கும் ஜீவனுக்கும் உண்மையில் வேற்றுமை உண்டு, ஆயினும்,
    மிகவும் ஒற்றுமையைப் பற்றி, ஜீவன் ப்ரஹ்ம மாக ஆகிறான், எனப்போற்றப் பெறுகிறான்
    என்பது, இங்குத் தெளிவு அன்றே?
    இராமாயணம் இவ்வாறு ‘ப்ரஹ்மைவ பவதி‘ என்னும் சுருதியின் கருத்தை, கலக்கம் சிறிது
    மின்றி, யாருக்கும் எளிதில் விளங்குமாறு இயம்பியிருத்தலைக் கண்டோமல்லவா?
    இனி, இலக்குமணனுடைய சரிதத்தில், ‘எம்பெருமானுக்கு அடிமை செய்து உவப்பிப்பதே
    இந்த ஜீவனுக்கு சிறந்த நன்மையாம்’ என்பதைக் காண்போம்:
    இராமாயணம் இயம்புகின்றவாறு, இலக்குமணனுக்கே உரிய சீரிய சிறப்புக்களை,-”பசியராயிருப்பார் அட்டசோறும் உண்ணவேணும், அடுகிறசோறும் உண்ணவேணும்
    என்னுமாபோலே, காட்டுக்குப் போகிறபோது இளைய பெருமாள் பிரியில் தரியாமையை முன்னிட்டு அடிமை செய்யவேணும், எல்லா அடிமையும் செய்யவேணும், ஏவிக் கொள்ளவும் வேணும் என்றார்; படை வீட்டில் புகுந்த பின்பு, காட்டில் தனியிடத்தில் ஸ்வயம்பாகத்திலே வயிற்றைப் பெருக்கினபடியாலே, ஒப்பூணுண்ண மாட்டாதே ஒரு திருக்கையாலே திருவெண்கொற்றக் குடையையும், ஒரு திருக்கையாலே திருவெண் சாமரத்தை
    யும். தரித்தடிமை செய்தார்” என்னும் ஸூத்திரத்தில், பிள்ளை லோகாசார்யர் வெகு அழகாக அருளிச் செய்திருக்கிறார். இந்தஸூத்திரத்தின் கருத்து :-
    மிக்க பசியுடையோர் தம் பசியின் மிகுதியினால், ஆக்கின சோறும் ஆக்குகின்ற சோறும்
    எல்லாம் தாமே உண்ணவேணும் என்றுஎண்ணுவர் . இவர் போன்று, இலக்குமணனும் இராமபிரானுக்கு எல்லா அடிமைகளும் தானே செய்யவேணும் என்று எண்ணுகின்றானாம். இந்த இலக்குமணன், முளைக்கும் போதே மணத்தோடு முளைக்கும் திருத்துழாய் போன்று, திருவவதாரம் செய்யும்போதே இராமபக்தியோடு அவதரித்தவனாம். ஆதலின், இராமபிரான் வனத்திற்கு எழுந்தருளும் போது, அவனுடன் செல்வதாக முயன்றனன்.
    அம்முயற்சியைக் கண்ட இராமபிரான், ‘இலக்குமணா! நீ இத்திரு அயோத்தியிலேயே இருப்பாய்’ என்றனன். அப்போது, இலக்குமணன்,(நீரைப் பிரியில் உயிர் தரியாத மீன்நிலை
    போன்றுள்ள) அந்த இராமபிரானைப் பிரியில் உயிர் தரியாத தன் நிலையை முன்னிட்டு,
    “நாணோடு சேர்ந்த வில்லைத் தாங்கியும். உனக்கு முன்னே சென்றும், ஆங்கு ஆங்கு வழி
    காட்டியும், காய், கனி முதலியவற்றைத் தேடிக் கொணர்ந்து உதவியும் இவ்வாறான அடிமையை இராமா ! நான் உனக்குச் செய் வேன் ; என்னை அழைத்துச் செல்வாய்’ என
    வேண்டிக் கொண்டனனாம்.-அன்றியும், அப்பெருமானை அந்த இலக்குமணனே, தேவரீருக்குத் தொண்டு செய்யப் பெறாதபோது, நான் உயிர் தரியேன். தேவரீரோ எனில், நிறைவாளராகையாலே தொண்டைக் கொள்ளாவிடினும், உயிர்தாங்கத் தக்கவர். ஆயினும், என்னிடம் அடிமைகொண்டால தேவரீருக்கும் பெருமை உண்டு.-ஸீதாப்பிராட்டியார் தேவரீர் ஆகிய இருவரும் மலைச்சாரலில் விளையாடும் போதும்,-திருக்கண்வளருங் காலத்தும், அங்ஙனம் கண் வளருதலின்றி விழித்திருக்குங்காலும் எல்லா அடிமைகளும் செய்யவேணும். என் விருப்பத்துக்காக இன்றி,தம் விருப்பத்துக்கேற்ப ஏவி, என்னிடம் பணியை திருவுள்ளம் பற்ற வேணும்’ என்றும் விரும்பிப் பெற்றனனாம்.
    இன்னமும், தானே சமையல் செய்து தானே உண்ணும் ஒருவன், நாளடைவில் தன்
    வயிற்றைப் பெருக்கிக் கொள்வான்; மற்றவனோடு உண்ண இசையான். இவன் போன்று,
    இலக்குமணனும். தானே வனத்தில் இராம பிரானும் ஸீதாபிராட்டியுமாகிற சேர்த்தியில், எல்லா அடிமைகளையும் செய்து, அடிமைக் கண் அன்பை பெருக்கிக் கொண்டவன் மற்றும் பரதன் முதலானாரோடு தானும் ஓர் அடிமை செய்ய இசைந்திலன். இவ்விசையாமையே எங்கே கண்டோம்? என்னில்,
    இராமபிரான் வனவாஸத்தைச் செய்து, மீண்டு திரு அயோத்திக்கு எழுந்தருளி, முடி
    சூடியிருக்கும் போது, ஒரு கையால் திருவெண் கொற்றக்குடையை எடுத்துப்பிடித்தும், மற்றொரு கையால் திருவெண்சாமரத்தைப் பணிமாறியும் இவ்வாறு இரண்டு அடிமையை ஒரு காலத்தில் செய்தனனாம்.
    (நச ஸீதா த்வயா ஹீநா நசாஹமபி ராகவ ஜலான் மத்ஸ்யாவிவோத்ருதெள தனுராதாய ஸகுணம்.அகரதஸ் தே கமிஷ்யாமி பந்தானமனுதர்சயன், ஆஹரிஷ்யாமி தே-நித்யம் மூலாநி ச பலானி ச | பவாம் ஸ்துஸ்ஹ வைதேஹ்யா கிரிஸானுஷ ரம்ஸ்யதே, அஹம் ஸர்வம் கரிஷ்யாமிஜாக்ரத ஸ்வபதச்ச தே 1 கரியதாமிதி மாம் வத ச த்ரம்ச சாமரம் திவ்யம் திருதவான் லக்ஷ்மணஸ் ததா ) என்னும் இவை காணத்தக்கன
    இனி, இங்கு மற்றொரு முக்கியப் பொருளையும் நாம் ஆராய்ந்து அறிதல் இன்றியமை
    யாததாம். முன்னம் கூறிய பகுதிகளில்,)’ இராமபிரான், ப்ரஹ்ம சப்தப் பொருளான
    நாராயணனே’ என்பது நமக்கு விளங்குகின்றது.ஆயினும், ‘அப்பரமன் திருக்கலியாண
    குணமும் இல்லாதவனா? அல்லது தீய குணம் சிறிதும் இன்றி, திருக்கலியாண குணம் நிரம்பி இருக்கப் பெற்றவனா? இராமாயணம் இப் பரமனை இயம்புகின்றது எவ்வாறோ? என்னும் இக்கேள்வி இங்கு ஏற்படுவது இயல்பேயாம்.-இதற்கு விடை பின்வருமாறு-
    ஒரு நூலின் உண்மைக் கருத்தைஉணரும் போது,அங்ஙனம் உணர்வதற்கு ஏதுவாயுள்ள
    வழி சில உண்டு. அவ்வழியைப் பின்பற்றிக் காணுங்கால், உண்மை நன்கு புலனாகும். இம்
    முறையில் ஒரு வழியை இங்குக் காண்போம்.
    இராமாயணம், முதலிலும், இடையிலும், இறுதியிலும் எப்பொருளை எவ்வாறு இயம்பு
    கின்றதோ, அதை அவ்வாறே அறுதியிடுதல் மேற்கூறிய வழியாகும்.
    இராமாயணம் முதன் முதலில் இராமபிரானைக் கூறுகின்றது எவ்வாறோ ? எனின்,
    திருக்கலியாண குணமும் இல்லா தவன் என்று கூறவில்லை; ‘தீயகுணம் சிறிதும் இன்றி,
    திருக்கலியாண குணமே நிரம்பியிருக்கப் பெற்றவன்’ என்றேகூறுகின்றது.
    நாரதமுனிவனை நோக்கி, வால்மீகி முனிவன் மிக வணக்கத்துடன், இக்காலத்தில் இவ்வுலகில் சீலம் முதலிய எல்லா நற்குணங்களும் பொருந்தியிருப்பவன் யாவன்? என வினாவ,-யாவும் அறிந்த அந்நாரத முனிவன், இஷ்வாகு குலத்தில் திருவவதாரம் செய்தருளின இராமபிரான், எல்லாத் திருக்கலியாண குணகணங்களும் பொருந்தி யிருக்கப் பெற்றவனாம்;-எங்ஙனம் கடல் தன்னிடத்துள்ள சிறந்த-இரத்தினம் முதலிய பொருளைப் பிறர் அறியாதவாறு மறைத்து வைத்திருக்கின்றதோ,-அங்ஙனமே இராமபிரான் (உலக நன்மையை உண்டுபண்ணுவதான) தன்னிடத்திலுள்ள
    சிறந்த திருவுள்ளக் கருத்துக்களைப் பிறர் அறியாதவாறு மறைத்து வைத்திருப்பவனாம்;
    வீரத்தன்மையில் விஷ்ணு போன்றவன்; பதினாறு கலைகளோடு கூடிய பூரண சந்திரன்
    போன்று காண இனியன் ; காலாக்னி போல்சீற்றமுடையவன்; பொறுமையில் பூமியோடு
    ஒத்தவன் ; ஸத்தியத்தில் தரும தேவதையே வடிவெடுத்தது போன்றவன் என்று விடை
    கூறினன்.
    (கோன்வஸ்மின்ஸாம் ரதம்லோகே குணவான் கச்ச வீர்யவான்) என்னும்வால்மீகி முனிவன் வார்த்தையும்-(வம்சா ப்ரபவ: ராமோ நாம ஜனை: ச்ருத: 1 ஸமுத்ர இவ காம்பீர்யே விஷ்ணுநா ஸத்ரு சோ வீர்யே ஸோமவத் ப்ரியதர்சன: காலாக்னிஸத்ருச: க்ரோதே க்ஷமயா ருதிவீ ஸம: 1 ஸத்யே தர்ம இவாபர:) என்னும் நாரத முனிவன் வார்த்தைகளும் காணத்தக்கன.
    இவ்வாறு, வேதாந்தக் கருத்தைத் தெளிவாகத் தெரிவிக்க வந்த (உபப்ரும்ஹண
    மாகிய) இராமாயணம் முதன் முதலிலேயே இராமபிரானுடைய திருக்கலியாண குணங்
    களை, ஆசார்யன் சீடனுக்குக் கூறும் முறையில் மிகமிகத் தெளிவாக இயம்பியிருத்தலைக் கண்டோம். இனி, இடையிலும் காண்போம்
    அயோத்தியா காண்டம் முதலில் கூறப்பெற்றுள்ள வரலாறு பின்வருமாறு – சக்ரவர்த்தி, ஸபையில் வீற்றிருக்கும் அரசர் முதலானாரை நோக்கி, இது மிகப் பெரிதான இராச்சியம். இதை என் முன்னோரான மன்னர் மிகுந்த மனவூக்கத்துடன் பாதுகாத்து வந்தனர். அவரது வம்சத்தில் பிறந்த நானும், மனுநெறியைப் பின்பற்றி எனது அறிவு ஆற்றல்களுக்கு ஏற்றவாறு இது வரையில் பாதுகாத்து வந்தேன். எனது சரீரம் மிகவும் மூப்படைந்து விட்டது. ஆதலின், இந்த அரசுரிமையை இராமபிரானிடம் வைத்து, வருத்தந் தீர்ந்து, இனிது வாழ
    விரும்புகின்றேன். இது பொருத்தமான செயல் என்று நீவீர் எண்ணியிருப்பின், நுங்கருத்தைத் தெரிவிக்க வேண்டுகின்றேன் என்று கூறினன்.
    இதைச் செவிமடுத்த அவையிலுள்ள அரசர் முதலானோரனைவரும் அளவற்ற ஆனந்தம்
    அடைந்தனர்; மிகமிகப் பெரிய கோஷத்தைச் செய்தனர்; அப்பெரிய கோஷத்தினால் எதிரொலியைக் கிளப்பி அங்குள்ள விமானத்தை அசையச்செய்தனர். இவ்வாறு தம் ஆனந்தத்தை அறிவித்து, இப்போதே இராமபிரான் இராச்சியத்தை ஏற்று, முடிசூடி, பட்டத்து
    யானையின் மீது திருவெண்கொற்றக்குடை நிழலில் எழுந்தருளும் சிறப்பைக் கண்டு
    களிக்கவேணும் என்றனர்.
    இவ்வாறான களிப்பைக் கண்ட தசரத மன்னவன், திரும்பவும் அவ்வரசர் முதலானோரைக் குறித்து, ‘நீவீர் பேரிரைச்சல் செய்து கூறுவதை நோக்குங்கால், இது வரையில் கொடுங்கோல் மன்னனான தசரதன் பாதுகாத்து வந்தான் ; இவன் விலகுவது நலம்;
    இனி, செங்கோல் மன்னனான இராமபிரான் இராச்சியத்தை ஏற்று பாதுகாக்கப் போகிறான்; நமக்குஇனி நற்காலம்! என்னும் நுங்கருத்து வெளிப்படுகின் றதே ! இவ்வாறு என்னை வெறுத்துக் கூறுதற்குக் காரணம் யாதோ? எனக்குக் குற்றம் ஏதேனும் உண்டோ?’ என்றனன்.
    சக்ரவர்த்தியின் இவ்வார்த்தையைக் கேட்ட அரசர் முதலானோர். ஒரு கருத்துடன், மன்னர்பிரானே! தேவரீருக்குக் குற்றம் உண்டு என்று கூறினர். அக்குற்றம் யாதோ ? என்று
    அம்மன்னர்பிரான் கேட்க, (பஹவோ ந்ருப கல்யாணகுணா: புத்ரஸ்ய ஸந்தி தே)-எண்ணிறந்த திருக்கலியாண குணக் கூட்டங்களுக்குக் கடலான இராமபிரானைப்
    புத்திரனாகப் பெற்றிருப்பதே தேவரீருக்கு உள்ள குற்றம். அதனாலேயே தேவரீரை
    வெறுக்கின்றோம் என்றனர்.-இவ்வாறு, இராமாயணத்தின் இடையில் இராமபிரான் திருக்குணங்களைச் சுருக்கமாய்க் கண்டோம். இனி, இறுதியில் காண்போம்.
    ‘இராமபிரான் பதினான்கு வருடம் வனத்தில் வளித்து, அதினின்றும், மீண்டு திரு
    அயோத்திக்கு எழுந்தருளி,முடிசூடி,பதினோராயிரம் ஆண்டு இராச்சியத்தைப் பாதுகாத்து வந்தான்’ என்பது சரித்திர உண்மை.-அவன் மன்னர்பிரானாயிருந்து அரசு புரியுங்
    கால், மக்களின் மனோநிலைமையைக் கண்கூடாகக் கண்ட வால்மீகி முனிவன், (” ஸர்வம் முதிதமேவாஸீத் ஸர்வோ தர்ம பரோபவத்)மக்களனைவரும் மனமகிழ்ச்சியுடனும், அவரவருக்குரிய தருமங்களில் ஊற்றம் பெற்றிருப்பவருமானார் என்று கூறியிருக்கிறான். இங்ஙனம் அனைவரும் இருப்பதற்கு காரணம் யாதோ? எனின், இந்த இராமபிரானுடைய
    திருக்கலியாண குணமேயாம். (ராமோ ராஜ்யமுபாஸித்வ) என்னும் வசனம் இங்குக் காணத் தக்கது.-இராமன் தன் தேஜஸ்ஸினால் மக்களைஅடக்கி ஒடுக்கி ஆண்டவனல்லன், தன் திருக் கலியாண குணத்திற்கு ஏற்ப, இனிய நல் வார்த்தைகளைக் கூறி, பின் சென்று,வயப்
    படுத்தி, ஆண்டவன் என்கிறான்.
    இவ்வாறு இராமாயணத்தில், ‘இராம பிரான் திருக்கலியாண குணம் நிரம்பியிருக்
    கப்பெற்றவன்’ என்பதைக் கண்டோம்.-இலக்குமணன் இராமபிரானுடைய அத்திருக்
    குணங்களில் மிகவும் ஈடுபட்டு உவப்புடன் எல்லா அடிமைகளும் செய்தவன்’ என்பதையும், (குணைர்தாஸ்யமுபாகத 🙂 என்னும் அந்த இலக்குமணன் வாக்கி யத்திலேயே நாம் நன்கு காணலாம்.
    இங்ஙனம் இராமாயணத்தில் உபேயத்தைக் கண்டோம். இனி ஐம்பொருள்களுள் ஒன்றாகிய விரோதியைக் காண்போம்.

    ————–

    வேதாந்தமும் விரோதியும்

    எம்பெருமானை ஜீ வன்அடையாதவாறு எது தடையாய் நிற்கின்றதோ, அது, விரோதி’ எனப்படும். வேதாந்தம் அஜ்ஞானம், கருமம், ப்ரக்ருதி ஸம்பந்தம் முதலியவற்றை விரோதியாய் இயம்புகின்றது.-இதைச் சிறிது விவரித்துக் கூறுவோம்:
    அஜ்ஞானம், ‘கை, கால் முதலிய உறுப்புக்களோடு கூடிய பிண்டமே ஆத்மா’ என
    எண்ணும் எண்ணமும், ‘தான் எம்பெருமானுக்கு உரியவனல்லன்; தனக்காகவே இருப்பவன்’ என எண்ணும் எண்ணமுமாகும். இவ் விரு எண்ணங்களுள், முன்னது, தேஹாத்மாபிமானம்’ என்றும் பின்னது, ‘ஸ்வாதந்திரியாபிமானம்’ என்றும் கூறப் பெறும்.

    தேஹாத்மாபிமானத்தைச் சிறிது விளக்கிச்சான்றுடன் கூறுவோம்: ‘இரும்புத் துண்டு, நெருப்பு இவ்விரண்டும் வேறு வேறு பொருள் களாயிருப்பினும், நெருப்பிலிட்டுப் பழுக்கக்
    காய்ச்சிய அந்த இரும்புத்துண்டு, நெருப்புத்தொடர்பின் மிகுதியினால் நெருப்பாகவே
    எங்ஙனம் தோன்றுகின்றதோ, அங்ஙனமே,-ஆத்மா, சரீரம் இவ்விரண்டும் வேறு வேறு பொருள்களாயிருப்பினும், அந்த ஆத்மாவும், சரீரத்தொடர்பின் மிகுதியினால் சரீரமாகவே தோன்றுகின்றான்’ என்பதை நாம் அறிதல் வேண்டும்.
    இவ்வாறு, ‘சரீரமே ஆத்மா’ என எண்ணுங்கால், உண்மை உணர்வு சிறிதும் இல்லை. ஆத லின், (உணர்விண்மையே உறக்கமாதலின்-ஜீவனை உறங்குகின்றவனாகவே (அனாதி மாயயா ஸு ப்த:) என்னும் சுருதி இயம்புகின்றது. ( இந்தச் சுருதியில் மாயா சப்தம் ஸத்வம், ரஜஸ், தமஸ் என்னும் முக்குணங்களோடு கூடிய பிரக்ருதி )என்னும் அசித்தைக் கூறும் வழியால் சரீரம் என்னும் பொருளைக் குறிக்கின்றது.)உண்டி உடைகளை உவந்து அவற்றைப் பெற ஓடித்திரியுங்காலத்தும், ஜீவனுக்கு இவ்வுறக்கம் உண்டு. அதனால் நன்மை சிறிதும் இல்லை. எப்போது, உறக்கம் போய் உண்மையை உணருகின்றனனோ, அப்போது தான் நன்மை உண்டு’ என்னும் கருத்தைக் கொண்டுள்ளதும், அனாதி மாயயா ஸுப்த: என்னும் வாக்கியத்தோடு தொடர்புற்றதுமான  ” (யதா ஜீவ: ப்ரபுத்யதே) என்னும் சுருதியைக் காணுமவர்க்கு தேஹாத்மாபிமானம்’ தடை என்பது நன்கு புலனாகும்.
    இங்ஙனம் தேஹாத்மாபிமானத்தைச் சுருக்கமாய்க்கண்டோம். ஸ்வாதந்திரியாபிமானத்
    தையும் இனிக்காண்போம் :
    ‘ஆத்மா, அறிவுடையவன்’ என்ற போதே,’ஸ்வதந்திரன்’ என்று கூறியதாகக் தேறும்.
    எங்ஙனம் என்னில்,-இந்த ஜீவன், முதலில் ஒரு பொருளை உள்ளபடி அறிகிறான்; பின்பு, அப்பொருளின் சீர்மையைப்பற்றி அதை விரும்புகிறான் ; அதன் பிறகு அதை அடைய முயல்கிறான் ;-அதற்கேற்பஏதுவைத் தேடுகிறான்; முடிவில் அதை அடைந்து, இன்பம் பெறுகிறான்
    இவற்றை, வடமொழியாளர்,(ஜாநாதி இச்சதி, யததே, கரோதி,அனுபவதி) என்பர்
    இவற்றை நோக்குங்கால்,அறிவுடை யனான ஜீவன்,தனக்காக ஒன்றை விரும்பி, முயன்று,
    செய்து, இன்பம் துய்ப்பவன்’ என்பது தெள்ளிதின் விளங்குகின்றதன்றோ? இங்ஙனம் இருக்கின்றமையின், ‘இவன் ஸ்வதந்திரன்’ எனப்படுகிறான்.
    அஷ்டாக்ஷரத்தில் முதல் பதம் பிரணவம்.-அப்பிரணவம் அ, உ, ம் என்னும் மூன்று எழுத்துடையது. அம்மூன்றுனுள், ‘ம்’ என்னும் எழுத்து அறிவுடையனான ஜீவனைக் குறிக்கின்றது.-இவ்வாறு, அறிவுடையவன்’ என்பதை அறிவிக்கும் ‘ம்’ என்னும் அக்ஷரத்தாலும்,-நான் இதை அறிகிறேன்’ என்னும் அனுபத்தாலும், ‘ஜீவன் ஸ்வதந்திரன்’ என்பதை நாம் அறியலாகும். இங்ஙனம் தன்னை ஸ்வதந்திரனாக (தன் விருப்பத்திற்கு ஏற்ப ஒன்றில் முயன்று, செய்து, பெற்றுப் புஜிப்பவனாக) அறியுங்காலத்து, உண்மை உணர்வும் பெற்றிறான் ; தன் நிலைக்கேற்ற பயனையும் பெறான்.-இதனால்தான், அஷ்டாஷரத்தில், நடுவில் அமைந்துள்ள’நம:’ என்னும் பதமானது, ம்’ என்னும் அக்ஷரத்தினால் தேறிய ஜீவனுடைய ஸ்வாதந்திரிய நிலையை இல்லை செய்து, பாரதந்திரிய நிலையையே இவனுக்குரிய சீரிய தன்மையாக அறிவிக்கின்றது ‘நம:’ என்பதில், “ம: ந என்று எழுத்துக்களைப் பிரித்துக் கூட்டி, ‘எனக்கு நான் இல்லை; எம்பெருமானுக்கே உரியவன்’ என்னும் பொருள் கொள்ளப் பெற்றுள்ளது. அஃது இங்குக் காணத்தக்கது.
    ”தனக்குப் பாரதந்திரிய நிலையை உண்மையாக உணருங்கால், நன்மை உண்டு; அப்பாரதந்திரிய நிலைக்கு எதிரான ஸ்வாதந்திரிய நிலையை உணருங்கால், நன்மை இல்லை” என்பது அஷ்டாஷர மஹா மந்திரத்தில் தேறிய ஸாரம் பொருளாதலின், ஸ்வாதந்திரியாபிமானம்’ தடை என்பது தெளிவு.
    இனி, கருமம் தடை என்பதைக் காண்போம்: புண்ணியமும் பாவமும் கருமம் எனப்படும். இக்கருமம் எம்பெருமானை அடைய வொட்டாது தடுக்கின்றது. ஆதலின்,
    விரோதி’ எனப்படுசின்றது.-ஆனால், பொய் கூறுதல் முதலிய பாவம் தடை என்னில், அதை நம் மனம் ஏற்கின்றது போன்று, புண்ணியமும் தடை என்னில், அதை நம் மனம் ஏற்குமோ? ஏற்காதன்றே?-உண்மை இங்ஙனம் இருக்க,புண்ணியத்தைத் தடையாக கூறுவது யாங்ஙனம்? எனச் சிலருக்கு இங்கு ஐயம் எழக்கூடும்.-இதற்குப் பரிஹாரம் பின் வருமாறு
    ‘புபுஷு, முமுஷு என மானிடரை இருவகையில் வகுத்துக்காணுதல் வேண்டும். இம்மை
    மறுமைகளில் இன்பத்தை விரும்புகின்றவன் புபுஷு என்றும், பரம புருஷனை அடைய
    விரும்புகின்றவன் முமுஷு என்றும் கூறப்படு கின்றனர். புபுஷு நிலைமைக்கேற்ப இம்மை
    மறுமைகளில் ஓரொரு நன்மைக்கு எதுவாய் உள்ளது புண்ணியம் எனப்படும்.உதாரணமாக இவ்வுலகில் பசு, பூமி, புத்திரன், முதலிய நன்மைக்கு ஏதுவாயுள்ள புண்ணியங்களையும்,
    மறுமையில் ஸு வர்க்கம் முதலிய நன்மைக்கு எதுவாயுள்ள புண்ணியங்களையும் நாம் காணலாம். இப்புண்ணயங்கள், பரமபுருஷனை விரும்புபவனுக்கு (முமுக்ஷவிற்கு) இம்மை
    மறுமைப் பயன்களைக் கொடுத்துத் தடையாயிருக்கின்றமையின்,பாவங்களேயாம்?.
    (அஸ்வ இவ ரோமாணி விதூய பாபம்) என்னும் சுருதி வாக்கியமானது, குதிரை தன் ரோமங்களை விடுவது போன்று, புண்ணிய பாவங்களாகிற கருமத்தை விட்டு, பரமனுடைய
    உலகத்தை இந்த ஜீவன் அடைவதாகக் கூறுகின்றமையின், கருமம் தடை எனத் தெரிகிற தன்றோ?(புண்ய பாபே விதூய நிரஞ்ஜன: பரமம் ஸாம்ய முபைதி) என்னும் வாக்கியமும் இங்குக் காணத்தக்கது.-இக்கருத்தாலே பொய்யில் புலவரும் *இருள் சேரிரு வினையுஞ் சேரா’ என்று கூறிச் சென்றனர்.-இதுகாறும், கூறியவாற்றால் கருமம் தடை என்பதைக் கண்டோம். இனி, ப்ரக்ருதி ஸம் பந்தம் விரோதி என்பதைக்காண்போம்
    ப்ரக்ருதி ஸம்பந்தம்‘ என்னுமிடத்திலுள்ள”ப்ரக்ருதி’ என்னும் சொல், தேவ சரீரம், மானிட சரீரம், விலங்கு சரீரம், தாவர சரீரம் என்னும் நான்கு வகையிலுள்ள அசித்தைக் குறிக்கும்; ஸம்பந்தம் என்னும் சொல்,அந்த அந்தச் சரீரத்திற்கும் ஆத்மாவுக்கும் உள்ள-தொடர்பைக் குறிக்கும். இத்தொடர்பு, எம்பெருமானைப் பெற்று, பூர்ணமாக அனுபவித்து, அடிமை செய்து, அவனை உவப்பிப்பதற்குத் தடையாயிருக்கின்றது.-இப்பொருள்  (தஸ்ய தாவதேவ சிரம் யாவந்ந விமோ யே அத ஸம்பத்ஸ்யே) என்னும் சுருதியினால் நன்கு விளங்கும். இந்தச்
    சுருதியின் கருத்து: “ஸத் என்னும் பரமனைப் பஜனம் செய்பவனுக்குச் சரீரத் தொடர்பு
    உள்ளவரையில் விளம்பம் உண்டு; சரீரத் தொடர்பு மறுவலிடாதபடி விட்டதும் பரமனை அடைகின்றான்” என்பதாம்.இதனால்,’சரீரம் தடை’ என்பது வெள்ளிடைமலை.
    இவ்வாறு, ப்ரக்ருதி ஸம்பந்தம் தடை என்பதைக் கண்டோம்.
    மேற்கூறிய அஜ்ஞானம் முதலியவை போன்று,அஜ்ஞான வாஸனை, கரும வாஸனை,
    ருசி ஆகிய இவையும் பரமபுருஷனை அடைய வொட்டாது தடையாயுள்ளனவாம்.
    பாம்பு முதலியவற்றைக் காணும் போது, உண்டாகும் அச்சம் முதலியவற்றுக்கு காரணமாயுள்ளது ‘அஜ்ஞான வாஸனை’ என்றும்,-துரும்பு முதலியவற்றைக் கிள்ளுதற்குக் காரணமாயுள்ளது ‘கரும வாஸனை’ என்றும், பாவச் செயல்களையோ, புண்ணியச் செயல்
    களையோ அறிந்தே செய்தற்குக் காரணமாயுள்ள சுவை ‘ருசி’ என்றும் நாம் அறிதல் வேண்டும்.-இங்ஙனம், அஜ்ஞானம், கருமம்,ப்ரக்ருதி ஸம்பந்தம், அஜ்ஞான வாஸனை,கரும வாஸனை,ருசி இவை பரமனை அடைவதற்குத் தடையாய்க் கண்டோம்.

    இனி, சிலருடைய கருத்துக்கிணங்க வேறொருவாறு தடையைக் கூறுவதாகக்  தோன்றும் வேறொரு வேதாந்த வாக்கியத்தையும் காண்போம்(தத் யதா ஹிரண்யநிதிம் நிஹிதம் அக்ஷேத்ர ஜ்ஞா: உபர்யுபரி ஸஞ்சரந்த: ந விந்தேயு: எவ மேவ இமா: ஸர்வா: ப்ரஜா:
    அஹரஹர் கச்சந்த்ய: ஏதம் ப்ரஹ்ம லோகம் ந விந்தந்தி அந்ருதேன ஹி ப்ரத்யூடா🙂 என்பதே அவ்வேதாந்த வாக்கியமாம்.-இவ்வாக்கியத்தின் கருத்து : ‘ பூமியின் கீழே உள்ள புதைபொருளை அப்பூமியின் இயல்பை உணராதார், தினந்தோறும் அப்பூமியின்
    மேலே செல்பவராயிருந்தும், எங்ஙனம் பெறு கிறாரில்லையோ, அங்ஙனமே, மிகமிகச் சிறந்த பயனும், ஆத்மாவுமான பரமனை உணராதார். எல்லாக்காலத்தும் அவனோடு ஒருவாறு தொடர்புற்றிருந்தும், பெறுகிறாரில்லை. இவர் பொய்யான அஜ்ஞானத்தினால் ஆத்மாவினிடத்தில் நின்றும் இழுக்கப் பெற்றும், மறைக்கப் பெற்றும் இருப்பவரன்றோ?’ என்பதாம்.
    இங்கே, பின்குறிக்கப்பெறும் பொருள்முக்கியமாய் அறியத்தக்கதாம் -” முத்துச்சிப்பி
    வெள்ளியாய்த்தோன்றுதற்குக் காரணம் குற்றம் என்பது உலகானுபவத்தினால் எங்ஙனம் புலனாகின்றதோ, அங்ஙனமே, ப்ரஹ்மம் பிரபஞ்சமாய்த் தோன்றுதற்குக் காரணம்
    குற்றம் ‘ என்பதும் பிரமாணத்தினால்(வேதாந்த வாக்கியத்தினால்) புலனாகின்றது.
    அக்குற்றம் அவித்யை. அஜ்ஞானம் என்பனபோன்றுள்ள சப்தங்களினால் குறிக்கப் பெறுகின்றதாம். அந்த அஜ்ஞானமும், அதனால் உண்டாம் பிரபஞ்சத்தோற்றமும், பிரபஞ்சமும் பொய்ப்பொருளாம்.
    “தத்த்வம் அளி’ என்னும் வாக்கியத்தினால், ஆத்மா ஒருவனே உண்மைப் பொருள்
    என்னும் உண்மை உணர்வு உண்டாகும் போது, மேற்கூறிய அஜ்ஞானமும்,அதன்
    காரியங்களும், அழிந்து விடுகின்றமையின், அந்த அஜ்ஞானமும் அதன் காரியங்களும்
    பொய்ப் பொருள்’ என்பது தெளிவாக விளங்குகின்றது? “இதைத்தான் மேற்
    கூறிய வேதாந்த வாக்கியத்திலுள்ள அந்ருதசப்தம் இயம்புகின்றது” என்பதே அறியத்
    தக்க அம்முக்கியப் பொருளாம்.
    ‘அஜ்ஞானமும், அதன் காரியமும் உண்மைஉணர்வினால் போக்கத் தக்கவையாயிருத்
    தலின், பொய்ப் பொருள்களாம்’ என்பதும்,-‘அந்த அஜ்ஞானமே, ப்ரஹ்மமாக மாத்திரம்
    இருக்கும் இருப்புக்குத் தடை’ என்பதும் இங்குத் தேறிய ஸாரப் பொருள்களாம்.
    இக்கருத்தையும், மேற்கூறிய (அஜ்ஞானம், கருமம், ப்ரக்ருதி ஸம்பந்தம் முதலியவை
    தடை என்னும்) கருத்தையும் வேத வாக்கியங்களிலே காணுமவர்க்குக் கலக்கம் ஏற்படுவது இயல்பேயாம். இக்கலக்கத்திற்கு, மீமாம்ஸா சாஸ்திர முறையைப் பின்பற்றிக்காணுங்கால் உண்டாம் பரிஹாரம் பின்வருமாறு-
    ”நோய்வாய்ப்பட்டிருக்கும் ஒருவன் மருத்துவனைக் கிட்டி, தன் நோய் தீருமாறு
    மருந்தைப் பெற விரும்புகின்றான். அம்மருத்துவனும், அவன் நோயை உள்ளபடி
    உணர்ந்து, அந்நோய்க்குத் தக்க மருந்தைக்கண்டு, உதவுகின்றான். அங்ஙனம் உதவப்
    பெற்ற அந்நோயாளியும், அம்மருந்தை உட் கொள்ள,அவன் நோய் தீருகின்றது. இதை
    இங்கு எடுத்து நாம் நோக்குதல் வேண்டும்.-நோக்கின் நோயின் உண்மையை உணர்ந்து,
    தக்க மருந்தை உதவுகின்றதும், நோயின் பொய்மையை உணர்ந்து அங்ஙனம் மருந்தை
    உதவா தொழிகின்றதும் யார்க்கும் நன்கு விளங்குகின்றன அல்லவா? நோயின் பொய்
    மையை உணர்ந்தும், மருந்தை உதவுவார் உண்டோ? இல்லையன்றோ? இதுபோன்று, ப்ரஹ்மம் பிரபஞ்சமாய்த் தோன்றுதற்குக் காரணமாயுள்ள குற்றம்\(அஜ்ஞானம்) உண்மையாயிருப்பின், அது தீருவதற்கு, ‘தத் த்வம் அளி” என்னும் சாஸ்திரம், ஆத்மா ஒருவனே உண்டு’ என்னும் உண்மையை உணர்த்தி, உதவி செய்ய இடம் உண்டாம். ‘அஜ்ஞானம் உண்மை இல்லை’ என்னில், ‘சாஸ்திரம் உதவி செய்ய இடம் இல்லை’ என்பதைக் கூறுதலும் வேண்டுமோ? வேண்டாமன்றோ ?’அஜ்ஞானமும் உண்மைதான்’ என்று கொள்ளில், ‘ஆத்மா ஒன்று தான் உண்மைப் பொருள்; மற்றொன்றும் உண்மையில் இல்லை என்னும் கொள்கைக்கு இடமுண்டோ? இல்லை யன்றோ? (‘அஜ்ஞானமும் உண்மை’ என்று கொள்ளுங்கால், அஜ்ஞானமும் ஆத்மாவும் உண்மைப் பொருள்களாய்த் தேறுகின்றன அல்லவா? ‘ஆத்மாவைத் தவிர ஒன்றும் உண்மையில் இன்று’ என்பது பொருந்துவது எவ்வாறு?)
    இதனால் என்ன தேறிற்று? என்னில் ‘ப்ரஹ்மம் பிரபஞ்சமாய்த் தோன்றுதற்கு ஏதுவான
    அஜ்ஞானத்தை உண்மையாகவோ, பொய் மையாகவோ ஒத்துக் கொள்வதற்கு இல்லை”
    என்னும் கலக்கமே தேறிற்று.-இவற்றை நெஞ்சில் கொண்டு நோக்கு
    வார்க்கு, ”தத் யதா …..அந்ருதேந ஹி ப்ரத்யூடா:” என்னும் சுருதிக்கு மேற்கூறியவாறு கருத்துரைத்தல் பொருத்தமுடைத்தன்று என்றால், வேறு கருத்து யாதோ? எனின், கூறுவோம்.
    ஒருவன் செய்யும் கருமம், பயனில் சிறிதும் விருப்பம் இன்றி,எம்பெருமான் முகமலர்த்திக்
    குறுப்பாகவே, செய்யப் பெறுமாயின், அக் கருமம் ருதம்‘ என்றும், இவ்வாறின்றி
    இம்மை மறுமைகளில் ஓரொரு பயனை விரும்பிச் செய்யப்படுமாயின், அக்கருமமே
    ‘அந்ருதம்’ என்றும் கூறப்படும். இம்முறையில், மேற்கூறிய சுருதியில் உள்ள அந்ருத
    சப்தம், ஓரொரு பயனை விரும்பிச் செய்யும் கருமத்தையே கூறுகின்றமையினாலும், அக்
    கருமம், பரமனை அடைவதற்குத் தடையாயிருத்தலாலும், மேற்கூறியவாறு இங்குக்
    கலங்க இடம் இல்லை.
    “அச்வ இவ ரோமாணி விதூய பாபம்” என்னும் சுருதி, பாவங்களை விட்டுப் பர
    மனைப் பெறுகின்றான்” என்னும் கருத்தையும்,
    “ஏதம் ப்ரஹ்ம லோகம் நவிந்தந்தி அந்ருதேந ஹி ப்ரத்யூடா:” என்னும் சுருதி,பாவமுடை
    யார் பரமனைப் பெறுகின்றாரில்லை’ என்னும் கருத்தையும் கொண்டுள்ளனவாதலின், இங்கு முரண்பாட்டிற்குச் சிறிதும் இடமில்லை?-இல்லையன்றோ? இதனால்,’அந்ருத சப்தம்
    பொய்ப் பொருளைக் குறிக்கும்’ என்று கூறும் போது ஏற்படும் இடர்களுக்கும் இங்கு இட
    மின்று என்பது யாவருக்கும் புலனாகும்.
    இவ்வாறு மீமாம்ஸா சாஸ்திர முறையைப் பின்பற்றிப் பொருள்கொள்வார்க்குக் கலங்க
    இடமில்லை என்பதைக் கண்டோம். இனி, இராமாயணத்தில் விரோதியைக் காண்போம்:

    இராமாயணமும் விரோதியும்

    ‘இராமாயணம் விரோதியை, ஒருவாறு மெய்ப்பொருளாகவே உணர்த்துகின்றது
    என்பதையும் உபபாதித்துக் காட்டுவோம் :-இது மெய்’ ‘இது பொய்’ என்பதை நாம்
    அறுதியிடுவது எவ்வாறோ? எனின், யாரும் எளிதில் உணருமாறு ஓர் அனுபவத்தை
    முதலில் எடுத்துக் காட்டுவோம்.-ஒருவன், முதலில் முத்துச் சிப்பியை வெள்ளி என அறிந்து, அதை எடுக்கச் சென்று,பின்பு, இது சிப்பி; வெள்ளியன்று’ என்னும் உண்மையை உணர்ந்து, அதை எடுக்காது விட்டிடுகிறான். அங்கு, ‘வெள்ளி பொய்ப்பொருள்’ என்பது தெளிவு.
    வேறொருவன், வெள்ளியையே வெள்ளி என உண்மையை உணர்ந்து, அதை எடுக்கச் சென்று, எடுத்து, அதனாலாம் பயனைப் பெறுகிறான். இங்கு, ‘வெள்ளி மெய்ப் பொருள்
    எனபதும் யார்க்கும் நன்கு புலனாம்.
    இம்முறையைக் கைக்கொண்டு.இராமாயணம் மெய் பொய்களை அறுதியிடுகின்றது’
    என்பதை நாம் அறியலாம்; எங்கே? என்னில், திருவடி, இராமபிரானுடைய திருக்குணம்
    சிறிதும் நடையாடாத அசோகவனத்தில் போய்ப்புக்கு, தென்றலும், சிறுதுளியும்
    போன்றுள்ள இராம நாமத்தைக் கூறுங்கால், அதைத் திருச்செவி ஏற்ற ஸீதாபிராட்டியார்-முதலில் இந்நிலத்தில் இது பரிமாறுவது ஒன்றல்ல; இது சித்தமோஹத்தால் வந்ததோ? வாதகதியோ? உன் மாதஜவிகாரமோ?ம்ருக திருஷ்ணிகையோ?” என்று ஐயமுறுகிறார். பின்பு ‘இவன் (ஹனுமான்) முன்னே நின்று வார்த்தை சொல்லா நின்றான்; இது
    கேட்டு, நாம் வேற்றுமை பெற்றிருக்கிறோம்;-ஆனபின்பு, இது மெய்யாம்’ என்று திருவுள்ளம் தெளிந்து இன்புறுகிறார் என்பது வரலாறு.-இவ்வரலாற்றைத் தெரிவிக்கும் வார்த்தை:-(கிம்நு ஸ்யாத் சித்தமோஹோயம் பவேத் வாதகதிஸ்த்வியம் | உன்மாதஜோ விகா
    ரோவா ஸ்யாத் இயம் மருக ருஷ்ணிகா | அதவா நாய முன்மாத : மோஹோ யுன்
    மாத லக்ஷண: ஸம்புத்யே சாஹமாத்மான மிமம்சாபிவனெளகஸம்) என்பதாம்.
    (தலைமகனைப் பிரிந்த தலைமகளுக்கு. தன் தலைமகன் நன்மையைக் கேட்பதில் விருப்பம்
    உண்டாவது இயல்பேயாம்; அவ்விருப்பினால் அவனைப் பற்றிய எண்ணமும் இடையீடின்றி
    ஏற்படும். அவ்வெண்ணத்தின் ஒருநிலையை சித்தமோஹம் என்பர். ஊணும் உறக்கமும்
    இன்றி இருக்கும்போது, வாத பித்த சிலேஷ்மங்களாகிய தாதுக்களுக்குக் கலக்கம் உண்
    டாகும்.அக்கலக்கத்தினால் உண்டாகும் காற்றின் ஒரு நிலைக்கு வாதகதி’ என்று பெயர்.
    அந்நிலையிலுள்ள பிரமத்தை இங்கு வாதகதி என்று கூறுவர். தலைமகனைப் பிரிந்த தலை மகளுக்கு உள்ள ஒருநிலையை உன்மாதம் என்றுபகருவர். அந்த உன்மாதத்தினால் உண்டாகும் பிரமத்தை உன்மாதஜ விகாரம் என்று செப்புவர். மருகதருஷ்ணிகையாவது ஒன்றை மற்றொன்றாக அறிதலாம். கானலைத் தண்ணீராகக் கருதலாம் ]

    இங்கு ஸீதாப்பிராட்டியார், முதலில் திருவடி வார்த்தையைப் பொய்யாக பிரமித்து,
    தக்க சான்றுகளினால், ‘இது பொய் அன்று ;மெய்தான்’ என்று அறுதியிட்டிருப்பதை உலகம் நன்கு காணக் கூடுமன்றோ? இது போன்று,(பிரஹ்மம் பிரபஞ்சமாகத் தோன்றுதற்கு காரணமாகிய) ‘அஜ்ஞானமும், பிரபஞ்சத் தோற்றமும், பிரபஞ்சமும் ஆகிய இவை
    பொய்ப் பொருள்கள் தாம்’ என்று அறிதியிடு தற்குத் தக்க சான்றுகள் உளவாகில், நாம்
    இசையத் தட்டு ஒன்றுமிராது. அங்ஙனம் உலகத்திலும் சாஸ்திரத்திலும் சான்றுகள்
    காணக் கிடைக்காதவையே யாம்’ என்பது இங்கு முக்கியமாய் அறியத்தக்கதாம்.
    இனி, தேஹாத்மாபிமானமும், ஸ்வாதந்தரியாபிமானமுமாகிய இவை, பரமனைப்
    பெற்று அனுபவித்ததற்கு உண்மையான இடையூறாம்’ என்பதை இராமாயணத்தில்
    காண்போம். இங்கு முதலில், பின்வருவது கவனிக்கத் தக்கதாம்:
    ஒருவன் பரமனைப் பற்றிய அறிவு பெற்றிருப்பானாயின், அவன் ஸத்து’ என்றும், அவ்
    வறிவு பெறாது இருப்பானாயின், அவன் அஸத்து’ என்றும் வேதாந்தம் அறிவிக்கின்றது
    (ஸந்தமேனம்; அஸன்னேவஸபவதி) ஒருவன் பரமனைப் பற்றிய அறிவு பெற்றிருந்தும், அவ்வறிவுக்கு ஏற்ப அன்பையும் ஆதாரத்தையும் பரமன்பால் செய்யாது இருப்பின், அவனை
    ஸத்து என்றோ, அஸத்து என்றோ, மேற்கூறிய சுருதி அறிவித்திலது. ஆயினும், அவனும்
    அஸத்தே’ என்றுதான் கூறுதல் வேண்டும்.-அவன் அறிந்தும் அன்பைச் செய்யாது இருக்
    கின்றமையின் அவனுக்குக் குற்றம் அதிகமாம்-இதுபோன்று, “ஒருவன் ஜீவனாகிய தன்னை
    தேஹமாகவோ, ஸ்வதந்திரனாகவோ உணரவில்லை; தன் உண்மை நிலையை ஒருவாறு
    உணர்ந்தவனேயாம். ஆனாலும், அவன் தேஹாத்மாபிமானமும், ஸ்வாதந்திரியாபிமான முமாகிய குற்றம் பெற்றிருப்பவன் எவ்வாறு சரிதம் பெற்றிருப்பனோ, அங்ஙனம்
    சரிதம் பெற்றிருப்பானாயின், பரமனை அனுபவித்து வாழப்பெறாது இழந்து விடுகிறான்”
    என்பது ஓர் உயரிய உண்மைப் பொருளாம்.
    இவ்வுண்மைப் பொருளை இராமாயணம், சக்ரவர்த்தியின் வரலாற்றில் தெளிவாகத்
    தெரிவிக்கின்றது.எங்கே?எங்ஙனம்? என்னில்,
    அவ்வரலாற்றை முதலில் கூறுவாம்: “சக்ரவர்த்தி, வஸிஷ்டரைக் குல குருவாகக் பெற்
    றிருந்தவர் ; அச்வமேதம், புத்திர காமேஷ்டி முதலியவற்றைச் செய்தவர். ஆதலின், ஆத்மாவின் உண்மை நிலையை உணராதவரல்லர். இங்ஙனம் இருப்பினும், இராமபிரானுக்கு முடி சூடுவதாய் நிச்சயித்து, தன் ப்ரிய மஹிஷியான கைகேயியிடம் சென்று தெரிவிக்க. அப்போது, ‘பரதனுக்கு முடி சூடவே ணும்; இராமன் பதினான்கு வருஷம் வனம் செல்லவேணும்’ என அக்கைகேயி வேண்டிக் கொள்ள சக்ரவர்த்தியும் அவ்வேண்டுதலுக்கு இசைய, இராமபிரான் இலக்குமணனோடும், ஸீதாபிராட்டியோடும் காடு சென்றனன்” என்பது வரலாறாகும்.
    இவ்வரலாற்றைக் கூறுமிடத்து, இராமாயணம் சக்ரவர்த்தியைப் பல இடங்களில்
    கைகேயியிடம் காமம் பெற்றிருப்பவன்’ என்றே நிந்தித்துக் கூறியிருக்கின்றது. ‘
    காமீ கமல பத்ராஷீ முவாச வனிதாமிதம்) என்பதையும், இது போன்றுள்ள வசனங்களையும்
    இங்குக்காண்க. ஒருவனுக்கு, ஆதமாவினுடைய உண்மை உணர்வு உள்ளபடி இருக்குமேயானால், பெண்ணாசை சிறிதும் இராது.’காமீ. என்று கூறும் போது, பெண்ணாசை உண்டு என்பது நன்கு விளங்குகின்றதன்றோ?
    தேஹாத்மாபிமானமும் ஸ்வாதந்திரியா பிமானமும் பெற்றிருப்பான் போன்றவன் சரிதமே
    யன்றோ? அக்காலத்திலேயே பரம புருஷனான இராமபிரானை அனுபவித்து வாழப்பெறாது
    முடிய நேரிட்டதன்றோ? ஆனால், ச க்ரவர்த்தி இராமபிரானைப் பிரிந்து முடிய நேரிட்டதற்கு வேறு ஒரு காரணமும் உண்டு; கைகேயிக்கு முன்னமேயே சக்ரவர்த்தி இரண்டு வரங்கள் தருவதாய் வாக்களித்திருந்தத்தினாலும், அதைப் பின் சென்று ஸத்தியத்திற்குக் கட்டுப்பட்டு,இராம பிரானாகிய தருமத்தைத் துறந்து விட்ட தனாலும் அப்பரமனை இழக்க நேரிட்டது. ஸத்திபம்’ என்பது தருமமேயானாலும், இராமபிரா னாகிய மிகமிகச் சிறந்த தருமத்தைக் காணுங்கால், அந்த ஸத்தியம் என்னும் தருமத்தை ஒரு பொருளாய்க் கருதாமல் காற்கடை கொள்ள வேண்டியவன் சக்ரவர்த்தி.அங்ஙனம் அந்த ஸத்தியத்தைக் காற்கடை கொள்ளாது பற்றி, துறக்கத் தகாத அப்பரமனைத் துறந்ததே, இராமனை அனுபவிக்கப் பெறாது இழந்ததற்கு காரணம். [ இராமபிரான் மிக மிகச் சிறந்த தருமம் என்பதை வரும் உபாயத்தைப் பற்றிக் கூறும் பகுதியில் நாம் காணலாம்.] இதை, பிள்ளை லோகாசார்யர் “சக்ரவர்த்தியைப் போலே இழக்கைக்கு உறுப்பு” என்று அருளிச் செய்திருக்கிறார்.-உண்மை இவ்வாறு இருப்பினும், கைகேயி பால் உள்ள ஆசையும் இராமபிரானை இழந்த தற்கு காரணம் என்னில், குற்றம் ஒன்றும் வாராது, ‘மற்றதில் பற்றுள்ளவனுக்குப் பரமன் கிடைக்க மாட்டான்; பற்றற்றவனுக்கே பரமனைப் பெறலாம்’ என்பதும் சாஸ்திரத்தில் கூறப்பெற்றுள்ள ஓர் உயர்ந்த உண்மை . இவ்வாறு தேஹாத்மாபிமானம், ஸ்வாதந்திரியாபிமானன் இவற்றின் தடைத் தன்மையைக் கண்டோம
    இனி, இராமாயணத்தில் கருமம் பரமனை இழக்கச் செய்கிறது’ என்பதையும் காண்போம். இராமபிரான் எம்பெருமான்; ஸீதாபிராட்டி எம்பெருமாட்டி” என்பது உண்மை.-இராமபிரானுக்குப் புண்ணியமும் பாவமும் உண்மையில் இல்லை. இதுபோன்று, ஸீதா பிராட்டியாருக்கும் புண்ணியமும் பாவமும் இல்லை’ என்பதும் உண்மையேயாம். ஆனாலும், ஸீதாபிராட்டியார் ., ஜீவன், இங்ஙனம் இருப்பின் பரமனைப் பிரிய நேரிடும்’ என்பதைத் தம் சரிதத்தில் வெளியிட்டிருக்கிறார்.-இதை முதலில் நாம் இங்கு அறிதல் அவசியமாம்.
    “‘இராமபிரான் காட்டிற்கு எழுந்தருளும் போது, ஸீதாபிராட்டியாரின் மென்மையை
    யும், காட்டின் வன்மையையும் திருவுள்ளம் பற்றி, அயோத்தியிலேயே தாம் வனவாஸம்
    செய்து திரும்பிவரும் வரையில் அப்பிராட்டியாரை இருக்க வேண்டிக் கொள்கிறான். அப் பிராட்டியாரும் அப்பெருமான் பிரிவு பொறாது, தம்மை உடன் அழைத்துச் செல்ல வேணும் என விரும்புகிறார். பலகால் விரும்பியும், இசையாது இருந்த இராமபிரானைக் குறித்து, “என் தந்தையார் என்னை ஆண்மை உடையானொருவனுக்குக் கொடாது, பெண்
    ணுக்கே கொடுத்து விட்டார்; ஆனால், “நான் பெண்ணோ? ‘ என்று தேவரீர் எண்ணலாம்.
    அகவாயில் பெண்மையும், புறவாயில் ஆண்மையும் பெற்றிருப்பவரன்றோ ? நீவீர். அகவாயிலும் உண்மையில் ஆண்மை பெற்றிருப்பீராயின், இங்ஙனம் என்னை விட்டுச் செல்வதாகக் கூறுவீரோ ? கூற மாட்டீரன்றோ?-(ஸ்த்ரியம் புருஷ விக்ரஹம்) என்றனள்” என்பது சரித்திர உண்மை.-தம் சரிதத்தினால் உலகுக்கு நன்மை புரிய வந்த பிராட்டியார், புருஷோத்தமனான இராமபிரானைக் குறித்து, இவ்வாறு என் தந்தையார் பெண்ணுக்கே பெண்ணைக் கொடுத்தார் என்று இயம்புவது முறையாமோ? ஆகாதன்றோ? இவ்வாறு கூறியது பகவதபசாரமன்றோ? இது முதலில் இங்குக்குறிக்கொள்ளத் தக்கது.
    மேலும், இராமாயணத்திலேயே வேறொரு வரலாறும் இங்குக் காணத்தக்கதாம்:
    இராமபிரான் ஸீதா பிராட்டியார்பால் உள்ள அன்பின் மிகுதியினாலே, மாரீசன் என்னும் மாயா மிருகத்தின் பின்னே வெகுதூரம் சென்று, அம்மிருகத்தை அம்பினால் அடித்துக்
    கொன்றனன். அந்த சமயம் மாரீசன் மிருகரூபத்தைவிட்டு, தன் சரீரத்தை எடுத்து
    உயிர் துறந்தனன் ; அங்ஙனம் உயிர் துறக்குங்கால், இராமபிரானுடைய குரல் போன்றுள்ள
    தன் குரலாலே ஹா ஸீதே ! ஹா லக்ஷ்மணா என்று கூறினன். அக் கூற்று பிராட்டியார் திருச்செவியில் பட, அப்போதுஇலக்குமணனை, இப்போதே நீ சென்று இராமபிரானை இரட்சித்தல் வேண்டும்’ என்று அவள் வேண்டிக் கொள்ள, (இராமபிரா னுடைய சிறப்பைஉள்ளபடி உணர்ந்த ) இலக்குமணன், மாரீசன் மாயையைக் கூறி, அவ்வாறு செல்ல இசையாது இருந்தனன். அங்ஙனம் இலக்குமணன் இசையாது இருக்க, பிராட்டியார் அவனை நோக்கி, கடுஞ்சொற்களைக்-(“”அநார்ய, அகருணாரம்ப, நருசம்ஸ, குலபாம்.ஸந.)கூறினார் என்பதே அவ்வரலாறாம்.-இலக்குமணன் இயற்கையிலேயே இராம
    பிரானிடம் அளவற்ற அன்பு பெற்றிருப்பவனாம். அவ்வாறு பரமபக்தி பெற்றிருக்கும்
    அந்த இலக்குமணனை நோக்கி, கூறத் தகாத(லக்ஷ்மணா ! நீ நிச்சயமாய் என்னை உனதாககிக் கொள்ளக் கருதி,இம் மாதிரி கபட வேஷத்துடன் கானகம் வந்திருக்கின்றாய்
    என்று கூறி) மேற்கூறிய கடுஞ் சொற்களைக் கூறியது அப்பிராட்டியாருக்குத் தகுமோ?
    தகாதன்றோ ? இவ்வாறு கூறியது பாகவதாபசாரமன்றோ?இதுவும் இரண்டாவதாக இங்கு
    காணத்தக்கது.
    ‘இம்மாதிரி பரமனிடமும்,பாகவதோத்தமனான இலக்குமணனிடமும் பிராட்டியார்
    நடந்து கொண்டமையின், இவை காரணமாகப் பரமனைப்பிரிந்து, அசோக வனத்தில்
    அரக்கிமார் நடுவில் இருந்து துன்புற வேண்டிற்று’ என்பதை இங்கு நாம் அறிதல்
    வேண்டும்-இதை ஸீதாபிராட்டியார் அருளிச் செய்த”(மமைவ துஷ்க்ருதம் கிஞ்சித் மஹதஸ்தி நஸம்சய:) என்னும் வார்த்தையில் நன்கு காணலாம். இவ்வார்த்தையில், இராமபிரான் திறத்தில் செய்த அபராதத்தை’கிஞ்சித்’என்னும் சப்தமும், இலக்குமணன் திறத்தில் செய்த அபராதத்தை மஹத்’ என்னும் சப்தமும் கூறுகின்றன என்று நாம் நன்கு அறியலாம். இவ்வாறு, கருமம் பரமனை இழக்கச் செய்கிறது’ என்பதை பிராட்டியார் சரிதத்தில் ஒருவாறு கண்டோம்.
    இனி, ப்ரக்ருதி ஸம்பந்தம் தடை என்பதை இராமாயணத்தில் சில இடங்களில் காட்டுவோம்.
    (1) இராமபிரான், ஸீதையுடனும் இலக்குமணனுடனும் சரபங்கருடைய ஆசிரமத்திற்கு எழுந்தருளும் தருணம். அத்தருணம் இந்திரன் சரபங்கரிடம் வந்து அளவளாவிக்
    கொண்டிருந்தான். அந்த இந்திரன், இராம பிரானை அப்போது கண்டு, இந்த இராமன்,
    வேறொருவராலும் சிறிதும் செய்ய இயலாத மிகப் பெரியதொருகாரியத்தை (இராவண
    வதத்தைச் செய்யத் திருவுள்ளம் கொண்டு,அவதரித்தவன். அதை அவன் நிறைவேற்றிய பிறகு என்னைப் பார்ப்பது நலம் என்று கூறி, சரபங்கரிடம் விடை பெற்று, இரதம் ஏறி, தன் உலகம் சென்றான். இந்திரன் சென்றதும், இராமபிரான் சரபங்கரிடம் சென்று அவர் திருவடிகளை வணங்கினன் ; பின்பு இந்திரன் வந்து போனதைப் பற்றி வினவினான்.
    அவ்வினாவுக்கு விடையாக சரபங்கர் கூறிய வார்த்தையை பின்வருமாறு காணலாம்:

    (மாமேஷவரதோ ராம ப்ரஹம லோகம் நி ஷதி 1 ஜிதமுக்ரேண தபஸா து ப்ராபம் அக்ரு
    தாத்மபி: அஹம் ஞாத்வா நரவ்யாக்ர வர்தமானம் அதூரத |
    ப்ரஹ்மலோகம் நகச்சாமி த்வாம் அத்ருஷ வா ப்ரியாதிதிம் த்வயாஹம் புருஷவ்யாக்ர தார்மிகேண மஹாத்மநா! ஸமாகம்ய கமிஷ்யாமி த்ரிதிவம் தேவ ஸேவிதம் )
    இதின் கருத்து : ”இராமா ! எல்லோருககும் நன்மையை அளிப்பவனாகிய இந்த இந்திரன்,பிரமனுடைய ஆணையினால் அப்பிரமனது உலகத்திற்கு என்னை அழைத்துக்
    கொண்டு போக விரும்புகின்றனன். நான் ஸமீபத்தில் எழுந்தருளியிருக்கும் உன்னை
    ஞானக் கண்ணால் கண்டவனாதலின், மிகவும் இனியனாகிய உன்னை வெளிக்கண்களாலும் கண்டு, களிப்புற எண்ணி, (திரும்பி வருதல், அழிதல் முதலிய குற்றங்களோடு கூடிய) பிரமனது உலகத்திற்குச் செல்ல விருப்பம் இன்றி இருக்கின்றேன். மிகமிகச் சிறந்த தர்மம் எனப் போற்றப் பெறும் பரமனாகிய உன் குளிர்ந்த நோக்குக்கு இப்போது இலக்காகிப் பின்பு அநந்தன், கருடன் முதலிய நித்யர் சூழ்ந்திருக்கப் பெற்றுள்ள பரமபதத்தில் உன்னை அடைய விரும்புகின்றேன்” என்பதாம்.
    சரபங்கள் இவ்வாறு கூறி, இராமபிரானை நோக்கி, ” இராமா ! நீ சிறிது நேரம் என்னை
    நோக்கிக் கொண்டிரு” என விரும்பி, அவ் வெம்பெருமானுடைய முன்னிலையிலேயே
    எரிந்து கொண்டிருக்கும் ஹோமாக்னியில் ப்ரஹ்மமேத மந்திரங்களை ஜபித்துக் கொண்டு
    பாம்பு தோலை உரிப்பது போன்று மானிட சரீரத்தை விட்டு, அர்ச்சிராதி வழியினால்
    சென்று, பரம பத்தில் பரமனைப் பெற்று வாழ்வுற்றார்’ என்பது, சரபங்கருடைய சரித்திர உண்மை.
    (2) இராமபிரானுடைய, ஸீதாபிராட்டி என்னும் உயரிய உடைமைப் பொருளை முறைதவறி விரும்பி, தனக்கு ஆக்கிக் கொள்ள இராவணன் எடுத்துச் செல்லும் ஸமயம் அதனை அறிந்த ஐடாயு தமக்கு இயன்ற அளவும் இராவணனோடு போர் புரிந்தார். இறுதி|யில் அப்பாபியினால் பிராட்டியைப் பற்றியே உயிர் துறக்க நேர்ந்தது. பரமபுருஷன் தேடிக் கொண்டு வரும்போது, ‘ஆயுஷ்மன்’ என்று அப்பரமனுக்கு மங்களம் பாடினார் ; “இராவ
    ணன் உன் உயிரையும் (பிராட்டியையும் ), என் உயிரையும் கொண்டுபோய் விட்டான்” என்
    னும் உண்மையையும் உணர்த்தினார். அவருக்குப் பரமன் ப்ரஹ்மமேத ஸம்ஸ்காரத்தைச்
    செய்து,  (கச்ச லோகாநநுத்தமான்) என்கிறபடி விஷ்ணுலோகத்தையும் தந்திருளினான் என்பது ஜடாயுவின் சரித்திர ஸாரம்.
    (3) “சபரி என்னும் வேட்டுவச்சி, தன் ஆசிரமத்திற்கு எழுந்தருளின இராமபிரானுக்கும் இலக்குமணனுக்கும் அதிகமான அன்புடன் பூஜை செய்தாள்; அப்பெருமானுடைய குளிர்ந்த நோக்குக்கு இலக்கானாள்; அவளும், தன் உடம்பை விட்டு உத்தம கதியைப் பெற்றாள் என்பது சபரியின் வரலாறு.-இங்கு (சஷுஷா தவ ஸும்யேனே பூதாஸ்மிரகுநந்தன பாதமூலம் கமிஷ்யாமி ) என்னும் வார்த்தை நோக்கத்தக்கது.-மேற்கூறிய மூவிடங்களிலும், சரபங்கரும், ஐடாயுவும், சபரியும் ஆகிய இம்மூவரும் இராமபிரானுடைய குளிர்ந்த நோக்குக்கு இலக்காகி, உடம்பை விட்டு அப்பரமன் திருவடிகளைச் சார்ந்ததாகவே தெரிகின்றமையின்,பிறப்பறுக்கலுற்றாற்கு உடம்பும் தடை’ என்பது நன்கு புலனாம். தேஹாத்மா பிமானம் முதலியன பொய்ப்பொருளாகவே இருப்பின், அவற்றின் காரியம் நிகழ்வதற்கு இடமில்லை யன்றோ? இவ்வாறு இராமாயணத்தில் விரோதியின் உண்மையைக் கண்டோம். இனி உபாயத்தைப் பற்றி ஆராய்வோம்.

    ———————————

    வேதாந்தமும் உபாயமும்

    வேதாந்தம் ஜீவன் பரமனைப் பெறுதற்கு எதை ஸாதனமாக அறிவிக்கின்றதோ, அது
    உபாயம் எனப்படும். அவ்வேதாந்தம் கூறிய உபாயத்தைச் சிறிது விரித்துக் கூறுவோம் :
    இப்பிரபஞ்சத்தை அந்த அந்தக் காலத்தில் ஆக்கி, அளித்து, அழிக்கின்றவன் எவனோ,
    அவனே பரமாத்மா எனப்படுகின்றான். அப் பரமனையும், அவன் திருக்குணங்களையும், திருமேனியையும், உள்ளத்துக் கொண்டு அன்புடன் சிந்திக்கும் சிந்தனை ‘பக்தி’ எனப்படும்.
    இப்பக்தி, இச்சேதனன் எம்பெருமானைப் பெற்று வாழ்வதற்குச் சிறந்த ஸாதனமாம்,
    இங்கு (காரணந்து த்யேய: ) என்னும் சுருதி வாக்கியம் சான்றாய்க்காணத்தக்கது.
    இந்தப் பக்தியை ஒருவன் சாஸ்திரம் கூறியவாறு செய்து தலைக்கட்டுதற்குச் சிறந்த அறி
    வும், ஆற்றலும் இன்றியமையாதனவாம்.இச்சிறந்த அறிவும், ஆற்றலும் எவனுக்கு இல்லையோ, அவன், எம்பெருமானை இழக்க வேண்டுவதில்லை; எம்பெருமான் திருவடிகளில் சரணாகதியைச் செய்து, அவனைப் பெற்று வாழலாம்
    சிலர், மேற்கூறிய பக்தியைச் செய்து தலைக் கட்டுதற்குத் தக்க அறிவு ஆற்றல்களைப் பெற்
    றிருந்தும், பக்தியை ஸாதனம’ என்று எண்ணிச் செய்யாது, தன் நிலைக்கு ஏற்ப பக்தி
    யைப் பயனாகவே எண்ணிச் செய்து,கொண்டானையல்லாலறியாக் குலமகள் போன்று,எம்பெருமான் திருவடிகளையே தஞ்சமாகப் பற்றி, இன்புறுகின்றனர். இவரே மிகச்
    சீர்மையுற்றவராவர்.
    சரணாகதியாவது: ‘எனக்குச் சிறிதும் நன்மையில்லை; குற்றங்களெல்லாம் உண்டு.
    வேறு இரஷகரும் எனக்கு இல்லை’ என்று தன் நிலைகளைக் கூசாது கூறி, பெரிய பிராட்டியார் முன்னாக எம்பெருமான் திருவடிகளையே ஸாதனமாகப் பற்றுதலாம். இச்சரணாகதிக்கு, (சரணமஹம் ப்ரபத்யே) என்னும் சுருதி வாக்கியம் தக்க பிரமாணமாகும்.
    இவ்வாறு, பக்தியையும் சரணாகதியையும் ஜீவன் எம்பெருமானைப் பெறுதற்கு ஸாதனமாக அறிவிக்கும் வாக்கியங்களைக் கண்டோம்
    சிலர் ‘ப்ரஹ்மமாக மாத்திரம் இருத்தல் மோஷம்‘ என்றும், அதைப் பெறுதற்கு ஆத்மா ஒன்று தான் உண்மைப் பொருள் என்னும் (சுருதி வாக்கியத்தினால் ஏற்படும்) ஞானம் ஸாதனம்” என்றும் எண்ணுகின்ற (ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி) என்னும் வாக்கியத்தையும் ஆதாரமாய்க் காட்டுகின்றனர்.-இதைக் கேட்பவர்க்கு மனம் கலங்கும் என்பது உண்மையே. இக்கலக்கத்திற்கு மீமாம்ஸா சாஸ்திர முறையைப் பின்பற்றி ஒரு பரிஹாரத்தைச் சுருக்கமாய்க் கூறுவோம் :

    ஒருவனுடைய முயற்சி சக்தியினால் (ஆற்றலினால்) எது உண்டாகிறதோ, அதைப் ‘புருஷதந்திரம்‘ என்றும், ஒருவன் முயற்சி சிறிதும்இன்றி இருந்தும், எது பிரமாணத்திலேயே
    ஏற்படுகின்றதோ, அதைப் ‘பிரமாண தந்திரம்’ என்றும் சாஸ்திரம் கூறுகின்றது.
    மேற்கூறிய பரமனைச் சிந்திக்கும் சிந்தனையும், பரமன் திருவடிகளை உபாயமாய்ப் பற்றும் பற்றுதலும், ஒருவன் முயற்சி சக்தியைக் கொண்டு செய்யும் போது உண்டாகின்றமையின், புருஷ தந்திரமாம். சிலர் கூறுகின்ற வாறு தத்த்வம் அஸி‘ என்னும் சுருதியினால்,’ஆத்மா ஒன்று தான் உண்மைப் பொருள்’ என்னும் ஞானம் உண்டாகும் போது,முயற்சி சக்தி ( பக்தி ப்ரபத்திகளுக்குப் போன்று வேண்டப்படாமையின் அந்த ஞானம் பிரமாண தந்திரமாம். இவற்றை நாம் மனத்திற் கொண்டு, பின்வருமாறு இங்கு ஆராய்தல் அவசியமாகும்:
    சுருதி வாக்கியத்தினால் உண்டாகும், ‘ஆத்மா ஒன்றுதான் உண்மைப்பொருள் என்னும் ஞானம் மட்டும் மோஷஸாதனமா யிருப்பின், புருஷ தந்திரமான பக்தியையோ,
    சரணாகதியையோ, அந்தச் சுருதி வாக்கியம் சேதனனைக் குறித்துக் கட்டளையிட இடம்
    பெறுமோ? பெறாதன்றோ?
    மேலும், ப்ரஹ்மவேத ப்ரஹ்மைவ பவதி என்னும் சுருதியில் அமைந்துள்ள “ப்ரஹ்மைவ பவதி” என்னும் பகுதியின் உண்மைக் கருத்தையும், “தத் த்வம் அஸி ‘ என்னும் சுருதியின் உண்மைக் கருத்தையும், முறையே-“வேதாந்தமும் உபேயமும்” “வேதாந்தமும் ஜீவனும்” 
    என்னும் பகுதிகளில் கூறியுள்ளோம்; கண்டு கொள்வது.
    ஆனால், “ப்ரஹ்ம வேத ” என்பதின் கருத்து யாதோ? எனச் சிலர் வினாவக் கூடும். இவ் வினாவிற்கு, ” பரமனைப் பற்றிய சிந்தனையும்-ப்ரஹ்ம ஞானமாதலின், அந்தச் சிந்தனை
    என்னும் ஞானம் பெற்றிருப்பானையே ‘ப்ரஹ்ம வேத’ என்னும் சுருதி குறிக்கின்றது’ என்பது விடையாய்க் காணத்தக்கது.-இவ்வாறு மிகச் சுருக்கமாய் மீமாம்ஸா சாஸ்திர முறையைப் பின்பற்றிய பரிஹாரத்தைக் கண்டோம். இனி, வேதாந்தத்தின்முடிந்த பொருளைக் காட்டுவோம்:
    இங்கு பின்வருமாறு வேதாந்தத்தின் அம்முடிந்தபொருள் காணத் தக்கது : பரமனைப்
    பற்றிச் சிந்திக்கும் சிந்தனை பரமனைப் பெறுதற்குக் காரணம் என்பது ஒருவாறு உண்மையேயாம். ஆனாலும், ‘அப்பரமன் திருவடித் தாமரைகளையே சரணமாகக் கொண்டு,
    அவற்றைப் பெறுகின்றது என்பது மிக மிகச் சிறந்த முறையாகும்”; இதற்குப் பல சான்று
    கள் உண்டு.
    (I) அறிவாளிகளுள் மிகச் சிறந்தவர் ஸ்ரீ பீஷ்மர். அவர் சரதல்பத்தில் கிடந்து தருமபுத்திரருக்குப் பல தருமங்களை உபதேசம் செய்தனர். அங்ஙனம் உபதேசம் பெற்ற
    தருமபுத்திரர், அந்த அந்த தருமத்தை உபதேசம் செய்யும் போது, அது அது சிறந்த
    தருமமாகத் தெரிகின்றமையின், மிக மிகச் சிறந்த தருமத்தை அறிய வேணும் என்று
    கருதி, தம் சாதுரியத்துக்கு ஏற்ப அப்பீஷ் மரை நோக்கி, ‘தேவரீர் மிகவும் விரும்பும்
    தருமம் எது?’ என்று வினவினார். அங்ஙனம் வினவப்பெற்ற ஸ்ரீபீஷ்மரும், ‘நாராயணனு
    டைய திருநாமங்களைச் சொல்லுதலே மிக மிகச் சிறந்த தருமம்’ என விடை கூறியிருக்
    கிறார். (இது விஷ்ணு ஸஹஸ்ர நாமாத்தியா யத்தில் காணக்கிடக்கின்றது.)
    இதைநாம் மனத்திருத்தி, (மிகமிகச்சிறந்த பிரமாணம் எனப் போற்றப்பெறும்) வேதத்
    தில் கூறப்பெற்றுள்ள தருமங்களுள், அவ் வேதம் மிகவும் விரும்பும் தருமம் எது? என்
    பதையே ஆராய்ந்து அறிதல் இங்கு இன்றியமையாததாகும்.அங்ஙனம் ஆழ்ந்து ஆய்ந்து
    காணுங்கால், ‘சரணாகதி’ என்னும் தருமத்தையே வேதம் மிக விரும்புகின்றது என்பது விளங்கும்.ஆனால், “ஸ்ரீ பீஷ்மர்தாம் விரும்பும் தருமத்தைத் தெரிவிக்கும்போது, (ஏஷமே ஸர்வ தர்மாணாம் தர்மோதி கத மோமத:) என்று எவ்வாறு தெளிவாகத் தெரிவித்திருக்கிறாரோ, அவ்வாறு வேதமும் சரணாகதியை, தான் விரும்பும் தருமமாய்த்தெரிவித்திருக்கிறதோ?” எனச் சிலர் ஐயமுறக்கூடும். இவ் ஐயத்திற்கு இடம் சிறிதும் இல்லை. எவ்வாறு எனின், கூறுவோம்: ஸ்ரீ பீஷ்மர் விரும்பிய தருமம் திருநாம ஸங்கீர்த்தனம் என்பதற்கு, அவருக்கு “ஏஷமே” என்னும் சொல்லை ஆதாரமாய்க் கண்டோம் அங்கு.-இங்கு, வேதபுருஷனுடைய ஆசாரத்தையே ஆதாரமாய்ப் பின்வருமாறுகாணலாம் :
    இப்பிரபஞ்சத்திற்குக் காரணனான எம்பெருமான் அன்புடன் சிந்திக்கத் தக்கவன்’
    என்று பக்தியைச் சுருதி சொல்லிற்று. அக்காரணனான எம்பெருமானை மோக்ஷத்தில்
    விருப்பமுடைய நான் சரணம் பற்றுகிறேன்’ என்று சரணாகதியைத் தன் ஆசாரத்தில்
    உள்ளதாய் அறிவிக்கின்றது. இங்கு மேற் கூறிய “காரணந்து த்யேய:” “முமுக்ஷர்வை
    சரணமஹம் ப்ரபத்யே” என்னும் சுருதி வாக்கியங்கள் நோக்கத் தக்கன. ஸ்ரீபீஷ்மருடைய
    சொல்லிலும், வேத புருஷனுடைய ஆசாரம் பிரபலமன்றோ? இவ்வாறு வேதத்தில் சான்றைக் கண்டோம்; இனி, பரம புருஷனுடைய திருவாக் கிலும் தக்க சான்றைக் காண்போம்
    (2) பரம புருஷன் அர்ஜூனனைக் குறித்து அருளிச் செய்த திவ்விய சாஸ்திரம்
    பகவத்கீதை ‘ என்பது உலகு உணர்ந்ததேயாம். அக்கீதையில் உள்ள பதினெட்டு அத்தி
    யாயங்களிலும், கருமயோகம், ஞானயோகம்,பக்தியோகம் என்னும் தருமங்களைப் பரக்க
    அப்பரமன் உபதேசம் செய்திருப்பது அதை அனுபவிப்போர் அறிந்ததேயாகும். (நான்
    செய்பவன்’ இக்கருமம் என்னுடையதுஎனக்கு இப்பயன் வேண்டும்’ என்னும் எண்
    ணங்களை அறவே ஒழித்து பரமன் திருவுள்ளம் உகக்குமாறு தன் வருணத்திற்கும், ஆசிரமத்திற்கும் ஏற்ற தருமங்களைச் செய்தலே கருமயோகமாம். இவ்வாறு நெடுகின காலத்தில் கரும யோகத்தைச் செய்து, அதனால் சித்த சுத்தி பெற்று, அச் சித்தத்தைக் கொண்டு,ஜீவ னாகிய தன்னைச் சிந்திக்கும் சிந்தனையே ஞானயோகமாம்.)
    உண்மை இவ்வாறு இருப்பினும்,அப்பரமபுருஷன், அந்தக் கீதையின் முடிவில் அருளிச
    (ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ ) என்னும் வார்த்தையைக் காணுங்கால்
    சரணாகதியே அவன் உகந்த தருமம் எனத் தெரிகின்றது. இதைச் சிறிது விரித்துரைப்
    போம்.
    பிள்ளைலோகாசார்யர், “தர்ம ஸம்ஸ்தாபனம் பண்ணப் பிறந்தவன்தானே, ஸர்வ
    தர்மங்களையும் விட்டு என்னைப் பற்று’ என்கையாலே, ஸாக்ஷாத் தர்மம் தானே என்
    கிறது’ என்று அருளிச் செய்திருக்கிறார்.-இதின் கருத்து : தருமத்தை நிலை நாட்டுதற்கெனவே திருவவதாரம் செய்தருளின கண்ணபிரான், .தன்னால் உபதேசம்
    செய்யப் பெற்றவையும்’ ‘ஒருவாறு வீடு பேற் றைத் தருகின்றவையுமான கரும ஞான
    பக்திகள் எல்லாவற்றையும் விட்டு, என் ஒரு வனையே பற்று’ என்கையாலே,அவனே,
    நேரே பயனைக் கொடுக்கக் கூடிய தருமம்’ என்பதும், ‘மேற்கூறிய கரும ஞான பக்தி
    களாகிய யாவும் அங்ஙனம் நேரே பயனைக் கொடுக்கும் தருமங்கள் அல்ல’ என்பதும்
    நன்கு விளங்குகின் றனவல்லவா ? என்பதாம்.
    அன்றியும், ‘ பக்தி சபலன்’ (ஜீவன் செய்யும் பக்தியில் மிகவும் விருப்புற்றிருப்பவன்)
    என்று புகழப்பெறும் பரமபுருஷன் அப்பக்தியைப் பல இடங்களில் பலவாறாகப் பரக்கப்
    பேசி, இறுதியில், ‘அதையும் விட்டு,என்னைப் பற்று’ என்று அருளிச் செய்திருக்கின்றமையின். அப்பக்தியிலும் தானாகிய தருமமேதான் உவந்ததாம் என்பதும் இங்கு தெளிவு.-இவ்வாறு, ‘எம்பெருமான் உகந்த தருமம் சரணாகதி” என்பதைக் கண்டோம். இனி, வைதிகரும் மிகவும் ஆதரித்து, ஆசரித்த தருமம் சரணாகதி’ என்பதைக் காட்டுவோம்.
    (3) வேதத்தைச் சிறந்த பிரமாணமாகக் கொண்டு, அவ்வேதக் கருத்தையும் உள்ளபடி
    உணர்ந்து, அவ்வுணர்வைப் பின் சென்று நடப்போர் யாவரோ,அவரே வைதிகர் எனப்
    போற்றப் பெறுகின்றனர். அவ்வைதிகருள்,-மயர்வற மதி நலமருளப்பெற்ற நம்மாழ்வாரே சீர்மை யுற்றவராவர். ‘அவர் மிகமிகச் சிறந்த பக்திபெற்றிருந்தும், தமக்குப் பரமன்
    பால்உள்ள அப்பக்தியை அவனைப் பெறுதற்குக்காரணமாய்க் கருதாது,அவன் திரு
    வடித்தாமரைகளையே காரணமாய்ப் பற்றியிருந்தவர்’ என்பதும் மிகவும் பிரஸித்தமானது. இவர் போன்று, இவர் திருவடித் தாமரைகளைப் பணிந்துய்ந்தவரான நம்
    ஆசார்யர்களும் சரணாகதி தர்மத்தையே விரும்பி யிருந்தனர் என்பதும் தெளிவு.
    இவ்வாறு, வேதம், வேத்யன், (வேதத் தின் முக்கியப் பொருளான பரமபுருஷன்)
    வைதிகர் ஆகிற இம்மூவரும் மிகவும் விரும்பும் தருமம் சரணாகதி என்பதைக் கண்டோம்.
    இச்சரணாகதியையே இராமாயணம் விரித்துரைக்கின்றது’ என்பதை இனிக் காண்போம்.

    இராமாயணம்-சரணாகதி-சாஸ்திரம்

    பரமாத்மா.ஜீவாத்மா, உபேயம், விரோதி, என்னும் (ஐம் பொருளில் சார்ந்த, நான்கு பொருள்களையும் இராமாயணம் தெளிவாகத் தெரிவிக்கின்றவாறு இக்கட்டுரையி
    லேயே ஒருவாறு கண்டிருக்கிறோம். ஆயினும், சரணாகதி தருமத்தைவெளியிடுவதில் இராமயணம் நோக்குடைத்தாதலானும், ‘இராமாயணம் சரணாகதி சாஸ்திரம்’ எனப் பிரஸித்தி பெற்றிருப்பதால்,சரணாகதி தருமத்தையே இராமாயணம் விரித்துரைக்கின்றது’
    என்று கூறு வதிலும் தட்டொன்றும்இல்லை. இப்பகுதியில், சரணாகதி தருமத்தின் உண்மைகளை நாம் அறியலாம்.
    எம்பெருமான் முன்னிலையில் தன் நிலைகளைக் கூசாது கூறி, பெரிய பிராட்டியார்.
    முன்னாக எம்பெருமானை ஸாதானமாய்ப் பற்றுதல் சரணாகதி’ என முன்பு கூறியிருந்
    தோம். இங்கு சேதனன்பால் உள்ள பற்றுதல், பேற்றுக்கு ஸாதனமா? அல்லது, இச்
    சேதனனால் பற்றப் பெறும் எம்பெருமானே ஸாதனமா? என்னும் ஐயம் ஏற்படுவது
    இயல்பேயாம்.

    பிள்ளைலோகாசார்யர் ‘பற்றப் பெறும் எம்பெருமானே பேற்றுக்கு ஸாதனம்; பற்றுதல் ஸாதனமன்று’ என்று அருளிச் செய்திருக்கிறார் ; சேதனன் பாலுள்ள பற்றுதலை
    அதிகாரி விசேஷணமாகத் திருவுள்ளம் பற்றியிருக்கிறார்.
    இங்கு, முதலில், இவ்விரு ஆசார்யர்களுடைய கருத்துக்களையும் தக்க சான்றுகளுடன்
    முறையே விரித்துக்கூறி, கருத்து வேற்றுமை யின்மையையும் காட்டி, பின்பு, இராமாயணத்தில் சரணாகதி பேசப் பெற்றிருக்கும் விதம் இன்னது என்பதையும் தெரிவிப்போம்.
    தேசிகன், சேதனன் பாலுள்ள பற்றுதல் பக்தி ஸ்தானத்தில் எமபெருமானை ஸாதித்துத்
    தருவதென்றும்,அத்தானத்திலுள்ள எம்பெருமானே பேற்றுக்கு ஸாதனமென்றும் திருவுள்ளம் பற்றியிருக்கிறார்.
    பிள்ளைலோ காசார்யர் திருவுள்ளம் பின்வருமாறு காணத் தக்கது:
    “தருமம்” என்னும் சொல்,எது விரும்பும்பயனுக்கு முக்கிய காரணமோ, அதைக்
    குறிக்குமாம். பரமபுருஷன் அவர் அவர் விரும்பும் பயனுக்கு முக்கிய காரணனாயிருத்
    தலின்,சாஸ்திரம் தர்மம்’ என்னும் சொல்லையிட்டு, அவனைக் குறிக்கின்றது.
     (ராமோ விக்ரஹவாந்தர்ம 🙂 ‘ (க்ருஷ்ணம் தர்மம் ஸநாதநம் ) என்னும் வாக்கியங்களை
    நாம் இங்குக் காணுதல் நன்றாம். மேலும் இந்த எம்பெருமான் எனப் பெரும் தருமம்
    மிகச் சீர்மை யுற்றதாம். எவ்வாறு? என்னில் கூறுவோம்:
    ஏனைய தருமங்களுக்கும்,எம்பெருமான் எனப்படும் தருமத்திற்கும் மிகவும் வேற்றுமை
    உண்டு. எவ்வாறு? என்னில், ஏனைய தருமம் எதுவாயிருப்பினும், அது வேறொன்றின் உத
    வியை விரும்பியன்றி இராது. எம்பெரு மானோ,அவ்வாறு வேறொன்றின் உதவியை
    விரும்பான்’ என்பது மாத்திரமன்று; அவ்வாறு உதவியைப் பொறுப்பானும் அல்லன்.-இங்கு எடுத்துக்காட்டாகப் பின் குறிக்கப்பெறுவது நோக்கத்தக்கது. பரமனைச் சிந்திக்கும் சிந்தனை பக்தி’ என்பது நாம் அறிந்ததேயாம். இப்பக்தி, தான் உண்டாம்போது
    சேதனனுடைய முயற்சியை விரும்புகின்றது;-இச்சேதனன், சாஸ்திரம் கூறுகின்றவாறு
    முதலில் இன்னது பக்தி’ என்பதை உணர்ந்து-அங்ஙனம் உணர்ந்தவாறு முயன்று, செய்யும்
    போதுதானே உண்டாகின்றது ; முயன்று-செய்யாதபோது உண்டாவதில்லையன்றோ ?
    மேலும் இப்பக்தி, பயனைக் கொடுக்கும் போது, அங்ஙனம் கொடுக்கத்தக்க அறிவு
    ஆற்றல்களைப் பெற்றிராமையின், பேரறிவு பேராற்றல்களைப் பெற்றிருக்கும் எம்பெரு
    மானை உதவியாய் விரும்புகின்றது. இதனால், பக்தி, தான் உண்டாம்போது, சேதனனு
    டைய முயற்சியை உதவியாய் விரும்புகின்றது என்பதும், பயனைக் கொடுக்குங்கால், எம்பெரு மானை விரும்புகின்றது’ என்பதும் நன்கு புல னாகும்.
    அன்றியும், சித்தம் சுத்தமாய் இராத போது, அச்சித்தம் பரமனைச் சிந்திக்கப்பாங் காயிராது.ஆதலின்,எதைச் செய்தால் சித்தம் சுத்தி பெறுமோ, அதைச் செய்தல்
    இன்றியமையாததாகும். இச்சித்த சுத்தியை கரும யோகத்தைச் செய்து பெறலாகும்.
    இதைக் காணுங்கால்,பக்தியைச் செய்தற்குச் சித்த சுத்தி இன்றியமையாததாம். சித்த
    சுத்தி பெறுதற்கு கரும யோகத்தைச் செய்தல் இன்றியமையாததாம். ஆதலின், ‘பக்தி,
    சித்தசுத்தி வழியாகக் கருமயோகத்தை உதவியாய் விரும்புகின்றதாம்’ என்பது நன்கு
    விளங்குகின்றது? (சித்த சுத்தியாவது – உள்ளத் தூய்மையாம்)-இன்னமும், இவ்வாறு, பக்திக்கு உதவியாயுள்ள பலவற்றைச் சாஸ்திரங்களில் காணலாம் .
    உதவி வேண்டா உபாயம்
    எம்பெருமான் என்னும் தருமத்திற்கோ,ஓர் உதவியும் கூறுதற்கு இன்று. நித்தியரனாய் (என்றும் உள்ளவனாய்) இருத்தலின், ‘உண்டாதல். என்பதே இல்லை; பேரறிவும்,
    பேராற்றலும் பெற்றிருத்தலின், பயனைக் கொடுக்கும்போது, பிறருதவி வேண்டுவதில்லை; இயற்கையிலேயே மிகவும் தூய்மை பெற்றிருத்தலின், அத்தூய்மை பெற ஒன்றைவேண்டிச் செய்தலுக்கும் இடம் இன்று. இயற்கையில் தூய்மை பெற்றிருப்பவன் என்பது மாத்திரமன்று; தன் தொடர்பினால் பிறருக்கும் தூய்மையை உண்டு பண்ணுவானன்றோ?
    எம்பெருமான்.-மேலும், வேறொன்றின் உதவியையும் எம்பெருமான் பொறான்’ என்பதற்குப் பின் வரும் சரிதம் எடுத்துக்காட்டாகக் கூறப்பெற்றுள்ளது: இந்திரஜித்தினுடைய பிரமாஸ்தி
    ரத்தினால் கட்டுண்ட திருவடியை இராக்கதர்மேலும், சணல் கயிறுகளால் கட்டியபோது,
    அப்பிரமாஸ்திரம் நழுவியதாயும், அங்ஙனம் நழுவியிருந்தும், இராவணனுடைய உண்மைகளை உணர விரும்பி, கட்டுண்டவன் போன்று, அத்திருவடி இருக்க, அவனை அவ் இராக்கதர் இராவணன்பால் இழுத்துச்சென்றனராம்”. என்பதே அச் சரிதமாம். இச் சரிதத்தில், ‘வேறொன்றின் (சணல் கயிறின்) தொடர்பைப் பிரமாஸ்திரம் பொறுத்திலது’ என்பது தெளிவு. இதுபோன்று, எப்பெருமானும் மற்றொன்றின் உதவித் தொடர்பைப்
    பொறான்’ என்னும் உண்மை இங்கு உணரத் தக்கதாம். இவ்வாறு, எம்பெருமானுக்கும்
    ஏனைய தருமங்களுக்கும் உள்ள வேற்றுமையையும், எம்பெருமானுக்குள்ள சீர்மையையும்
    கண்டோம். மேற் கூறியவாறு, ‘எம்பெருமான் வேறு ஒன்றின் உதவியைச் சிறிதும் பொறான்’ என்பதற்குத் தக்க சான்று யாதோ? எனின், கூறுவோம்: சரணாகதியைக் கூறும் சான்றுகள் பலஉண்டு. அவையாவன ; (மாமே வயே ப்ரபத்யேத்) (தமேவ சாத்யம் புருஷம் ப்ரபத்யேத்)
    (த்வமேவ உபாய பூதோ மே பவ)) ” ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்” என்பனவாம்.-இச் சான்றுகளுக்கு முறையே, “யாவர் சிலர் என்னையே பற்றுகிறார்களோ, ‘அந்த ஆதி புருஷனையே பற்றக் கடவன்’ நீயே எனக்கு உபாயமாக வேண்டும்’ ‘எனக்கு
    உபாயம் தருமிடத்தில் உன் திருவடிகளையே உபாயமாக அளித்தாய்’ என்னும் கருத்துக்கள்
    காணத்தக்கன.-மேற்கூறிய சான்றுகளில்,உபாயப் பொரு ளைக் குறிக்கும் சொல்லைச் சேர்ந்தே ‘ஏவ-என்னும் சொற்களைக் காண்கின்றோமல்லவா?
    இச்சொற்கள் இங்கு, பிரிநிலைப் பொருள் பெற்றுள்ளனவாம்,அஃதாவது: எம்பெருமான், அவனைப் பெறுதற்கு முக்கிய காரணனாம்; வேறொன்றும் முக்கிய காரணமாகவோ,
    துணைக் காரணமாகவோ இல்லை’ என்பதாம்.
    இக் கருத்தைக் காணுங்கால், சேதனன் பாலுள்ள பற்றுதல் காரணமன்று : பற்றப்
    பெறும் எம்பெருமானே காரணன் என்பது தெளிவாக விளங்குகின்ற தன்றோ?

    அதுவும் அவனது அருளே

    இன்னமும், “இச்சேதனன் எம்பெருமானைப் பற்றுதலாகிய செயல் பேற்றுக்குக் கார
    ணமன்று”, என்பதை  (தம் ஹ தேவம் ஆத்ம புத்தி பிரகாசம்) என்னும் சுருதியினாலும் நாம் நன்கு காணலாம். இந்தச்சுருதியின் கருத்து : ‘எம்பெருமான் உபாயம்’ என்னும் அறிவு அவ் எம்பெருமானுடைய அருளாலேயே பெறுவதொன்றாம் என்பது.-இந்தச் சுருதி, முன்னம் கூறிய “முமுஷுர்வை சரணமஹம் ப்ரபத்யே” என்னும் வாக்கியத்தோடு சேர்ந்திருக்கின்றமையின்,-‘எம்பெருமான் உபாயம் என்னும் அறிவை எந்த எம்பெருமான் தன் இன்னருளால் மலரச் செய்கின்றானோ, அவ்எம்பெருமானையே, வீடு பேற்றில் விருப்பமுடைய நான் (வேதபுருஷன்) உபாயமாகப் பற்றுகிறேன்’ என்னும் கருத்து இங்குக் காணத்தக்கதாம்.-இக்கருத்தை ஆழ்ந்து ஆராய்ந்து காணுங்கால், முதலில்,எம்பெருமான் இன்னருளுக்கு இலக்காகிய பின்பு, அவ் இன்னருளினால் ‘எம் பெருமான் உபாயம்’ என்னும் அறிவு பெற்று, அதன் பிறகு, அவ்எம்பெருமானைப் பற்ற விரும்பி, பிறகு, எம்பெருமானை உபாயமாகப் பற்றுகிறான்’ என்னும் அடைவு நன்கு புலப்படுகின்றதன்றோ?
    எம்பெருமானை உபாயமாகப் பற்றுதற்கு அங்ஙனம் உபாயமாகப் பற்றுதல் வேண்டும்
    என்னும் விருப்பம் காரணமாம். அவ்விருப்பம் உண்டாதற்கு, எம்பெருமான் உபாயம்
    என்னும் அறிவு ஏதுவாம். அவ்வறிவு பெறு வதற்கு அவ் எம்பெருமான் இன்னருள் இன்றி
    யமையாததாம் என்று வேறொரு வழியில் அமைந்துள்ள அடைவும் இங்கு அறியத் தக்கதாகும்.-இக் கருத்தையே நம்மாழ்வாரும், “என்னுணர்வினுள்ளே இருத்தினேன். அதுவும் அவனது இன்னருளே” என்ற தமது திருவாக்கினால் வெளியிட்டிருக்கிறார்.
    இது காறும் கூறியவாற்றால். ”இந்தச் சேதனன் எம்பெருமானைப் பற்றிய பின்பு.
    இவன் துன்பம் நீங்கி இன்பம் பெறுதல் எவ்வாறு ஏற்படுகின்றதோ, அவ்வாறே, இவை
    இரண்டிற்கும் முன்பு இச்சேதனன் பாலுள்ள பற்றுதலும். அவ்வெம்பெருமானாலேயே உண்டாகின்றது” என்னும் முடிந்த உண்மைப் பொருளும் இங்கு நன்கு விளங்குகின்றது.
    இங்கு, பின் குறிக்கப் பெறும் எடுத்துக் காட்டும் காணத்தக்கது: தந்தையான ஒரு
    வன், தன் புத்திரனுக்கு ‘காயத்ரீ’ என்னும் மந்திரத்தைசாஸ்திர முறைப்படி உதவுகிறான்.
    அங்ஙனம் உதவப் பெற்ற அப்புத்திரனும், தன் தந்தையார் தன் கையில் கொடுத்த
    தனத்தை, அத் தந்தையாருக்கே தன் நன்றி அறிதலுக்கு ஏற்பத் திரும்பவும் கொடுக் கின்றான்.-இதுபோன்று, எம்பெருமான் கொடுக்க அறிவு, விருப்பம் இவற்றைப் பெற்ற இச்சேதனன், அவ்வெம்பெருமான் கொடுத்த ஆற்றலைக் கொண்டே அவனை உபாயமாகப் பற்றுகின்றான். ஆதலின், அப்பற்று தலுக்கு உபாயத் தன்மை கொள்ளுதற்கு இல்லை யன்றோ ?

    அதிகாரி விசேஷணம்
    இதுவரையில் கூறியவற்றால், ‘எம்பெருமானைப் பற்றும் பற்றுதல் ஸாதனமன்று;எம்
    பெருமானே முக்கிய தருமமாம்’ என்பதை உணர்ந்தோம். ஆனால், இப்பற்றுதல் இச்
    சேதனனுக்குப் பேற்றைப் பெறும்போது,உதவுகின்றது எவ்வாறு? எனின், அதிகாரி
    விசேஷணமாய் உதவி புரிகின்றது. இதனைச் சிறிது விரித்துக் கூறுவோம்.
    சாஸ்திரங்களில், உபாயம், அங்கம், பலம் என்று கூறப் பெற்றிருத்தலை நாம் காணலாம்.
    எம்பெருமானைப் பெற்று அவனையும், திருக்குணங்களையும், திருமேனியையும் அன்புடன்
    அனுபவித்து, அவ்வனுபவத்தாலாகிய ஆனந்தம் உள்ளடங்காது தூண்ட, அதனால் செய்யும்
    அடிமைத் தொழிலே மிகமிகச் சிறந்த பயனாம். இப்பயனைப் பெறுதற்கு எம்பெருமானே உபாயமாம். இவ்வுபாயத்தை (எம்பெருமானை)ஒருவன் பற்றும்போது, ஏனைய தருமங்கள்
    எல்லாவற்றையும் விட்டே பற்றுதல் இன்றியமையாததாகும். இ தற்கு “(ஸர்வ தர்மான் பரித்யஜ்ய ) என்னும் கண்ணபிரானுடைய திருவாக்கே தக்க சான்றாம்.
    “உண்பானொருவன், முதலில் நீராடியே பின்பு உண்ணுதல் வேண்டும் ” ‘ (ஸ்நாத்வா புஞ்ஜீத) என்று எவ்வாறு சாஸ்திரம் கூறுகின்றதோ, அவ்வாறே, கண்ணபிரானும், ‘பரம புருஷனாகிய என்னைப் பற்றுங்கால், ஏனைய தருமங்கள் எல்லாவற்றையும்அறவே விட்டு, என்னைப் பற்று’ என்று அருளிச்செய்திருக்கின்றான். இவ்வாறு ஏனைய தருமங்களை விடுதல் என்பது அங்கமாம்(உதவியாம்).-இச்சேதனன் பாலுள்ள பற்றுதலோ, உபாயமும் அன்று ; அங்கமும் அன்று. ஆனாலும், இச்சேதனன் பற்றினால், மேற்கூறிய பயனைப் பெறலாம். பற்றாவிடில் பயனைப் பெற இயலாது.- இவ்வாறு, இச்சேதனன் பாலுள்ள பற்றுதல், உபயம், அங்கம் இவற்றில் வேறுபட்டதாயும், பயன் உண்டாம்போது வேண்டப் பெறுவதாயும் இருக்கின்றமையின்,இஃது அதிகாரி விசேஷணமாம்.
    இங்கு, கண்ணன் அருளிச் செய்த(ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ-அஹம் த்வா ஸர்வ பாபேப்ய ; மோக்ஷயிஷ்யாமி மாசுச :)என்னும் வார்த்தை காணத் தக்கது.
    இவ் வார்த்தையில்,”ஸர்வ தர்மான்பரித்யஜ்ய” என்னுமிடத்து, முற்கூறியவாறு ஏனைய தருமங்களை அறவே விடுதல்’ என்னும் அங்கத்தையும்; ‘மாம்” என்னுமிடத்து, எம்பெருமானாகிற உபாயத்தையும்; ‘ஏகம்’ என்னுமிடத்துஇவன் பாலுள்ள பற்றுதல் உபாய
    மன்று; ‘எம்பெருமான் வேறொன்றின் உதவியைப் பொறான்’ என்பதையும், ” வ்ரஜ என் னுமிடத்து, இவன் பற்றும் பற்றுதலையும்,”த்வா” என்னுமிடத்து, பற்றுதலைச் செய்த
    சேதனாகிற அதிகாரியைக் கூறும் முகத்தாலே ‘பற்றுதலாகிய அதிகாரி விசேஷணத்தையும்,,ஸர்வபாபேப்யோ மோ யிஷ்யாமி’ என்னுமிடத்து, பரமனை அடைய
    ஒட்டாது தடையாயிருக்கும் பாவத்தைப் போக்கி அளித்தலையும் கண்ணன் வெளியிட்டிருப்பது தெளிவு.-மேலும்,
    தனக்கடிமைபட்டது தானறியானேலும் மனத்தடைய வைப்ப தாம் மாலை- வனத்திடரை ஏரி யாம் வண்ணமியற்று மிது வல்லால் மாரி யார் பெய்கிற்பார் மற்று” என்னும் பூதத்தார் பாட்டும் இங்கு அனுபவிக்கத் தக்கதாம். இப்பாட்டில் முன் அடிகள் தெரிவிக்கும் கருத்து : ”இச்சேதனன்,எம்பெருமான் உடையவன்;தான் உடைமைப் பொருள்’ என்னும் உண்மை
    உணர்வு பெறாதிருந்தும், பெரியோர் செய்யும் முறையைக் கண்டாகிலும், எம்பெருமானைத்
    தன் மனத்திலே கொண்டு விரும்பக் கடவன்”என்பதாம்.-இனிப் பின்னடிகளின் பொருளைக் காண்போம். (இச்சேதனனுக்கு முன்னடிகளில் கூறியவாறு) விருப்பம் மாத்திரம் உண்டானாலும், எம்பெருமான் இவன் விரோதியைப் போக்கி, இவனுக்குத் தன்னைத்தானே தந்தருளுவன். எவ்வாறு? என்னில்,-காடெழுந்து மேடாயிருக்கும் நிலத்தை ஏரியாக வெட்டுகின்றோம். இச்செயல் மழை பெய்தற்குக் காரணமன்று.நாம் ஏரி வெட்டு
    கின்றோம் என்பது பற்றியே மழை பெய்யுமா?-அல்ல. இதனால், ‘ஏரி வெட்டுதல் மழை
    பெய்தற்குக் காரணமன்று’ என்பது உலகறிந்ததேயாம். ஆனால் ஏரி வெட்டுதல் மழை
    பெய்தற்குக் காரணமன்றாகில் அங்ஙனம் வெட்டுதல் பயனற்றதுதானே ! என்று எண்ணலாகாது. பரமனுடைய நினைவினால் மழை பெய்யும்போது,அம்மழை நீரை அவ் வனத்திடர் தாங்கிக்’ கொள்ளுமோ? கொள்ளாதன்றோ ? அத்துடரைத் திருத்தி, ஏரியாக
    அமைத்து வைப்போமாயின். மழை பெய்யும் போது,அம்மழை நீரை அந்த ஏரி தாங்கித்
    தன்பால் வைத்துக் கொள்ளும் என்பதே பின்னடிகளின் பொருளாம்.-இதனால் ‘ஏரி வெட்டுதல், மழை நீர் பழுதுபடாமைக்காகவே யன்றி, மழையைப் பெய்வித்தற்காக வன்று’ என்பது நன்கு தெரிகிறது.-இங்கு, எம்பெருமானை உபாயமாகப் பற்றாதாரை வனத்திடராகவும்,எம்பெருமானை உபாயமாக பற்றும் பற்றுதலை, ஏரியாம் வண்ணம் இயற்றுதலாகவும், சேதனன் பால்உள்ள எம்பெருமான் இயற்கை இன்ன ருளை,ஏரியில் தங்கின மழை நீராகவும் கொள்ளுதல் பொருத்தமாகும்.
    இங்குத்தேறிய முடிந்த பொருள் என்ன?எனில், ” சேதனராகிற நாம் செய்யும் நற் செயல்களெல்லாம், எம்பெருமானுடைய இயற்கை இன்னருளைத் தாங்கிக் கொள்வதற்கு ஒருவாறு உறுப்பாம் என்பதொழிய, அப்பரமன் அருளை உண்டாக்குதற்கு உடலாகாது”-என்பதே அம்முடிந்த பொருளாம்.
    இதனால், “ஏரி வெட்டுதல் போன்று, சேத னன் எம்பெருமானைப் பற்றுதலாகிய செயல்
    உபாயமன்று ; ஏரி வெட்டுதல் எவ்வாறு இன்றியமையாததோ, அவ்வாறே எம்பெருமானை உபாயமாகப் பற்றுதலும் இன்றியமையாததாம். என்பதை இங்கு ஸாரப் பொருளாய்க் காணலாம். இக்கருத்தைத் திருவுள்ளத்தில் கொண்டு, பிள்ளைலோகாசார்யார்.
    ப்ரபத்தியை அதிகாரி விசேஷணம் என்று திருவுள்ளம் பற்றியிருக்கிறார்.-இதுகாறும், பிள்ளைலோகாச்சார்யருடைய திருவுள்ளத்தைச் சுருக்கமாய்க் கண்டோம்.

    இனி, தேசிகன் திருவுள்ளத்தைக் காண்போம்.
    ‘எம்பெருமானைச் சிந்திக்கும் சிந்தனை பக்தி’ என்று முன்னமே கூறியிருந்தோம்.
    இப்பக்தியைச் செய்யத் தகுந்த அறிவும் ஆற்றலும் உள்ளவன், இதையே மோக்ஷ ஸாதனமாகச் செய்யக்கடவன். அறிவும் ஆற்றலும் இன்றி இருப்பவனோ, பக்தியைச் செய்யமாட்டாது இருப்பினும், வீடுபேற்றை இழக்கவேண்டியதில்லை; எம்பெருமானை உபாயமாகப் பற்றினால், அந்த எம்பெருமான் பக்தி ஸ்தானத்தில் வந்து சேருவன். அங்ஙனம் வந்து சேர்ந்த எம்பெருமான், (பக்தி ஸ்தலத்தில் பக்தி எங்ஙனம் வீடுபேற்றிற்கு ஸாதனமோ, அங்ஙனமோ மோக்ஷத்திற்கு உபாயம் ஆவான்.-இங்ஙனம், ப்ரபத்தி, எம்பெருமான் வேறொரு உபாயமாகிய பக்தி ஸ்தானத்தில் வந்து சேருதற்குக் காரணமேயன்றி, நேராக வீடு பேற்றைப் பெறுதற்கு காரணமன்று; எம்பெருமான தான் அப்பேற்றுக்கு காரணம்.-இவ்வாறு தேசிகன் திருவுள்ளத்தைச் சுருக்கமாய் காணலாம்.
    மேற்கூறிய இரு பக்ஷங்களிலும், ப்ரபத்தியை, அதிகாரி விசேஷணமாக ஒருவரும்,
    எம்பெருமான் பக்தி ஸ்தானத்தில் வந்து சேருதற்குக் காரணமாக மற்றொருவரும் திரு வுள்ளம் பற்றியிருத்தலைக் காண்கின்றோம்-இதை நோக்குங்கால், இவ்விரு ஆசாரியர்களுக்கும் திருவுள்ளத்தில் வேற்றுமை உண்டு’ என்பது தெரிகிறது.-ஆனாலும்.எம்பெருமான் நேரே வீடு பேற்றிற்கு உபாயம் என்பதை  இவ்விரு ஆசார்யர்களும்,  திருவுள்ளக் கருத்து வேற்றுமையின்றி, ஆதரித்திருக்கிறார்கள் என்பது நன்கு இங்கு விளங்குகின்றது.   இந்தத் திருவுள்ளக் கருத்தொற்றுமையே இங்கு முக்கியமாய் அனுபவிக்கத்தக்கது.
    இனி, இராமாயணம் சரணாகதி தருமத்தை இயம்புகின்றவாறு சிறிது விரித்துக்
     கூறுவோம்.

    இராமாயணமும் சரணாகதியும்

    தசரத சக்ரவர்த்தி புத்திரப்பேற்றை விரும்பி, வேள்வி செய்யும் தருணம். அத்தருணத்தில், நான்முகனாரும், ஏனைய தேவதைகளும், மற்றும் மஹரிஷிகளும் அவ்வேள்வியில்,
    தம்தம் அவியை (ஹவிஸ்ஸை)ப்பெற விரும்பி, ஒன்று சேர்ந்து வந்திருந்தனர். அங்ஙனம்
    வந்திருந்த தேவதைகள் முதலானார் யாவரும், நான்முகனாரை நோக்கி, ஓ பகவானே !
    உமது அருள்பெற்று, மிக்க பராக்கிரமம் கொண்ட இராவணன், எங்களனைவரையும்
    துன்புறுத்திக் கொண்டிருக்கின்றனன். நாங்கள் அவனை அடக்கத் தக்க வன்மையற்றிருக்கின்றோம். ஆதலின் அவனைக் கொல்லுதற்கு ஏற்ற உபாயத்தை நீவிர் ஆராய்ந்து அருள் புரியவேண்டும்’ என்று வேண்டிக் கொண்டனர்.
    இவ்வாறு வேண்டுங்காலத்து, சக்ரவர்த்தி வேள்வி நிகழும் நிலத்தின் கண், பேரொளி
    பெற்றிருப்பவனும், சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையனும், திரு அரையில் கட்டிய கசசை
    யுடையனும், என்றும் எல்லாப் பொருளிலும் உள்ளும் புறமும் பரந்திருப்பவனும், இப்பிர
    பஞ்சத்திற்கு ஸ்வாமியுமான நாராயணன் வைகுந்தத்தினின்றும் எழுந்தருளினன்.
    இங்ஙனம் பரமபுருஷன் எழுந்தருளின வரலாற்றைக் கூறும் வார்த்தை,

    (ஏதஸ்மிந் அந்தரே விஷ்ணு: உபயாதோ மஹாத்யுதி : சங்க சக்ர கதாபாணி : பீதவாஸா ஜகத்பதி 🙂 என்பதாம்.-இவ்வார்த்தையில், சரணாகதி தருமத்தின் உண்மை பலவற்றை நாம் உணரலாகும்.(1 ) தருமம், என்னும் சொல்,எது பயனுக்கு ஸாதனமோ, அதைக் குறிக்கும். எம்பெருமான் அந்தஅந்த நன்மைக்குக் காரணனாயிருக்கின் றமையின், தரும சப்தத்தால் குறிக்கப்பெறுகின்றான். அவன் நித்தியமாயிருப்பவன். ஆதலின், ஏனைய தருமங்களில் ஏதேனும் ஒன்று எங்ஙனம் முயற்சி சக்தியினாலேயே ஏற்படுகின்றதோ, அங்ஙனம் எம்பெருமான் உண்டு பண்ணப்படுமவனல்லன் என்று முன்னமே கூறியிருந்தோம்.
    எம்பெருமான் எதிர்நோக்குவது
    இதைச் சிலர் காணுங்கால், ‘அவர் அவர்விரும்பிய பயன் அந்த அந்தக் காலத்து, யாதொரு இடையூறுமின்றி, எம்பெருமானாகிய தருமத்தினால் ஏற்படத் தட்டென்? ‘ என்றுகருதக்கூடும். ஆனாலும், இங்ஙனம் கருதஇடம் இல்லை. ஏனெனில்,’எம்பெருமானாகிய தருமம் எல்லாருக்கும் என்றும் உள்ளது’ என்பது ஒருவாறு உண்மையே. ஆனாலும், அந்த எம்பெருமானாகிய தருமம் துன்பம் துடைத்து, இன்பம் அளித்து, இவனை நோக்குங்கால், இவனுடைய வேண்டு தலையும் வேண்டுகின்றது.
    (ரக்ஷயா பேக்ஷாம் ப்ரதீக்ஷதே) என்னும் பிரமாண வசனம் இங்குக் காணத் தக்கது.
    இதனால் “‘இரட்சித்தல் என்னும் தொழிலை இயற்கையாகப் பெற்றிருக்கும் எம்பெருமான், (காக்கப்பெறும்) இச்சேதனனுடைய வேண்டுதலை விரும்பியே இவனை இரட்சிக்கின்றான்” ! என்னும் சரணாகதியைப் பற்றிய ஓர் உண்மையை நாம் உணரலாகும்.
    இவ்வுண்மை, மேற்கூறிய “ஏதஸ்மிந் அந்தரே” என்னும்வார்த்தையில் நன்கு புலனாகின்றது . எவ்வாறு என்னில் ?”எம்பெருமான், ஏனைய தேவதைகளைப் போன்று, தன் அவியைப் பெற்றுப் புசிக்க, வேள்வி நிகழும் நிலத்து எழுந்தருளினான்” என்பது இங்கு உண்மையன்று. அங்ஙனம், அவியைப் பெற்றுப் புசிக்கத் திருவிள்ளமிருப் பின். அவர்களைப் போன்று, அந்நிலத்தில் முன்னமேயே எழுந்தருளியிரானோ? சங்கம், சக்கரம், தண்டு இவற்றைத் திருக்கைகளில் ஏந்தியும், திருவரையில் கச்சை கட்டியும் போர் புரிபவன் போன்று எழுந்தருளுதலும் ஏற்படுமோ? பிறகு உண்மை என்ன? எனின், ‘; ஏதஸ் மிந்அந்தரே” என்பதை இங்கு உற்றுநோக்குதல் இன்றியமையாததாகும். இச்சொல்லில் நான்முகனாரை நோக்கி, ‘துன்பம் தீர்ந்து இன்பம் யாம் பெருமாறு நீவிர் ஆராய்ந்து அருள் புரியவேண்டும்’ என்று தேவதைகள் வேண்டுங்காலத்து, எம்பெருமான் எழுந்தருளினான் என்பது கூறப்பெற்றிருத்தலால், ‘எம்பெருமான் இச்சேதனருடைய வேண்டுதலை விரும்பி இரட்சிக்கின்றான்’ என்பது வெளிப் படை.
    ”பிரமாஸ்திரம் எங்ஙனம் சணல் கயிற் றின் தொடர்பைப் பொறுக்கின்றதில்லையோ ; அங்ஙனமே, எம்பெருமானும் வேறொன்றின் தொடர்பைப் பொறான்’ என்று முன்னம் கூறியிருந்தீர்கள். இப்போது, ‘இச்சேதனன் வேண்டுதலை எம்பெருமான் எதிர்பார்த்தே இவன் காரியம் செய்கின்றான்’ என்று கூறுகிறீர்கள்.இக்கருத்துக்கள் இரண்டும் பொருந்துமாறு யாங்ஙனம்?” எனச் சிலர் இங்கு வினவக்கூடும்.
    ஒருவன், வேறொருவரின் உதவி சிறிதும் இன்றி, சமையலைச் செய்ய வல்லவன்,அவனை
    வேறொருவன் தன் வீட்டுச் சடங்கு நிமித்தமாய்ச் சமையல் தொழில் புரியுமாறு வேண்டிக் கொள்கின்றான். அங்ஙனம் வேண்டிக் கொள்ளப்பெற்ற அவனும் அவ்வேண்டுகோளுக்கு இணங்கி, சமையல் செய்கின்றான்.-இவ்விடத்து, “வேறொருவரின் உதவி சிறி
    தும் வேண்டாதவன் இவன் என்று கூறினீர்களே? இவன் சமையல் நிமித்தமாய் வேறொருவன் வேண்டுதலை விரும்பித்தானே,வந்து சமையல் செய்தனன்” என்று முரண்பாடு தோன்ற வினவுவாரும் உண்டோ? இல்லை யன்றோ? இங்குக் கருத்து யாதோ? எனின், சமையல் செய்பவன் சமையலைச்செய்யுங்கால், வேறொருவரின் உதவியைச் சிறிதும் விரும்பி யிருப்பின், அஃது அவன் சிறப்பிற்கு (வேறொருவரின் உதவி சிறிதும்இன்றி சமையலைச் செய்ய வல்லவனாயிருக்கைக்கு ) அழிவை விளைக்கும்.
    அஃது இல்லையன்றோ?-இது போன்று,எம்பெருமானாகிய தருமம் இச்சேதனன் காரியம் செய்யும்போது, வேறொன்றின்தொடர்பை வேண்டினால், அத் தருமத்தின் சிறப்பிற்கு அவ்வேண்டுதல் அழிவை விளைக்கத்தான் செய்யும். அங்ஙனம் வேண்டாமையின், முன்னம் கூறிய அச்சிறப் பிற்கு (வேறொன்றின் உதவித்தொடர்பை வேண்டாதவனாயிருக்கைக்கு) யாதொரு குறை கூறுதற்கும் இடம் இல்லையன்றோ
    இவ்வாறு, இச்சேதனன் வேண்டுதலை விரும்பி எம்பெருமான் இவன் காரியம் செய்பவன்’ என்னும் உண்மையை உணர்ந்தோம்.-இனி, இவ்வார்த்தையில்,சரணாகதியைப் பற்றிய வேறொரு உண்மையையும் நாம் காணலாகும். அவ்வேறொரு உண்மை யாதோ ?எனின், கூறுதும்.

    வேண்டுவது விலக்காமையே

    (2) எம்பெருமான் உடையவன்; சித்தும் அசித்தும் உடைமைப் பொருள் என்று முன்னமேயே கூறியிருந்தோம். உடைமைப்பொருள்’ ‘உடையவன்’ என்னும் உண்மைப்பொருள்-இரண்டனுள், உடைமையை நோக்கிக்காக்கும் பொறுப்பு உடையவனுக்கு என்றும் உண்டு. அவ்வுடைமைப் பொருள் அறி வுற்றிருக்கும் ஜீவனாயிருந்தால், அந்த ஜீவனுடைய விலக்காமையைக்கண்டு, உடனே வந்து இரட்சிப்பவன் எம்பெருமான். இவ்வுண்மை
    “ஜகத்பதி ” என்னும் சொல்லைஉற்று உணர்ந் தால் நன்கு உணரலாகும். இச்சொல் ‘இப்
    பிரபஞ்சத்திற்கு ஸ்வாமி’ என்னும் பொருளைக் காட்டி நிற்கின்றமையின். இப்பிரபஞ்சம்
    உடைமைப் பொருள்’ எம்பெருமான் உடையவன்’ என்பது இங்குத் தெளிவன்றோ? இராவணனால் துன்புற்றிருக்கும் தேவதைகள் முதலானாருக்கு உள்ள விலக்காமையைக் கண்டு,உடனே எம்பெருமான் எழுந்தருளினன்’ என்னும் உண்மையை இங்குக்காணலாமல்லவா? மேற்கூறிய உண்மைகளை உணருங்கால், இச்சேதனன், எம்பெருமானாகிய தருமத்தினால் தன் நிலைக்கேற்ற நன்மையை அடையும் போது, ‘சேதனனாகிய இப்பொருள் எம்பெருமான் ஒருவனுக்கே இரட்சிக்கத் தக்கதாம்?-எம்பெருமான் கிட்டிக்காக்கும்போது, அவன் செய்யும் இரட்சணத்தை விலக்காது இருத்தலும் இவனுக்கு இன்றியமையாததாம். என்பன தேறிய பொருள்களாக நன்கு விளங்குகின்றனவல்லவா?

    பிராட்டியை முன்னிடுதல்

    இனி, இந்த இராமாயணத்திலேயே, ‘இச்சேதனன் எம்பெருமானைச் சரணம் பற்றுங்கால், பெரிய பிராட்டியாரை முன்னிடுதலும் இன்றியமையாததாகும்’ என்னும் ஸாரப்பொருளையும் நாம் காண்போம். இப்பொருளை இராமாயணம் பலவாறாக விரித்துக் கூறியிருக்கின்றது. இதைச் சிறிது விவரிப்போம்.-எம்பெருமானும் பெரிய பிராட்டியாரும்
    இச்சேதனனை இரட்சிப்பவராம். எம்பெருமான், இச்சேதனன் துன்பம் தீர்ந்து, இன்பம் பெற்று வாழ்தற்கு முக்கிய காரணனாம். பெரிய பிராட்டியாரோ, இச்சேதனன் எம் பெருமானைச் சரணம் பற்றுங்கால், புருஷகாரமாயிருந்து உதவியைச் செய்பவராம்.
    புருஷகாரமாயிருந்து உதவியைச் செய்கையாவது : இச்சேதனன் எமபெருமானைச் சரணம் பற்றுங்கால், இவன் நெடுகின காலத்தில் அறிந்தும் அறியாமலும் எண்ணிறந்த பாவங்களைச் செய்திருக்கின்றமையினாலும், இவன்,தன் முன்னிலையில் வந்து நிற்குங்கால், பேரறிவாளனாகிய தனக்கு இவனது பாவம் முற்றும் நினைவுக்கு வருவதாலும்,அந்த அந்தப் பாவத்திற்கு ஏற்ப, பயனை அளித்து நல்வழியில் நடத்திப் போருமவனாய்த் தான் இருப்பதாலும்,எம்பெருமான் சீறிச் சிவந்து இச்சேதனனைக் கண்கொண்டு பாரான். அஙஙனம் இருக் குங்கால், இப்பரமனுக்கு, அவனுக்கும் (பரம
    னுக்கும் ) இவனுக்கும் (சேதனனுக்கும்) உள்ள தொடர்பை உணர்த்தி, இவன் நிலையை அறி
    வித்து,இரக்கத்தையும் இவன் பிழையைப் பொறுக்கும் தன்மையையும் கிளப்பி, இவனைக்
    கண்கொண்டு பார்க்கச் செய்து, அப்பரமன் இவனைத் திருவுள்ளமுவந்து அங்கீகரிக்குமாறு
    பெரிய பிராட்டியார் உதவி புரிகிறார். இங்ஙனம் உதவிபுரிகையே புருஷகாரமாயிருந்து
    உதவி செய்கையாம்.
    சரணாகதி தருமத்தைப் பற்றிய இந்த உண்மையை, இராமாயணத்தின் முடிந்த
    பொருளாய்ப் பின்வருமாறு பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்திருக்கிறார்:-
    அவள் புருஷகரமாக அவனைப்பற்றுவதே பலவ்யாப்தமாவது. இது தான் காக விபீஷணாதிகள் பக்கலிலே காணலாம். அவளை அநாதரித்து இவனைப் பற்றின சூர்ப்பண்கை அநர்த்தப் பட்டாளிறே. பெருமாளை யொழியப் பிராட்டியைப் பற்றின இராவணனும் அநர்த்தப்பட்டான். இருவரையும் பற்றினாலிறே ஸ்ரீவிபீஷணாழ்வானைப் போலே வாழ லாவது”
    இதின் கருத்தைச் சிறிது விரித்துக் கூறுவோம்:- முதலில்,காகத்தின் வரலாற்றைக் காண்போம். “திருச்சித்திரக் கூடத்தில்,இராமபிரான் ஸீதா பிராட்டியார் மடியில்
    திருக்கண் வளருங் காலம். அக்காலத்தில்,இந்திரனுடைய புத்திரனும், கெட்ட எண்ணத்தினால் காகத் தன்மையைப் பெற்றிருப்பவனுமாகிய காகாஸுரன் ஸீதாபிராட்டியாரைக் கிட்டி,- திருமேனியில் புண்ணை உண்டாக்கினான் . அப்பிராட்டியார் துன்பம் பொறாமல், தன் மடியில் கண்வளரும் எம்பெருமானை எழுப்பினார். உணர்ந்தெழுந்து அப்பெருமானும், காகத்தின் பாவச் செயலைக் கண்கூடாகக் கண்டு, பிரமாஸ்திரத்தை அக்காகத்தின் மீது விட்டருளினான். அதுவும், அந்த அஸ்திரத்தினால் துரத்தப்பட்டு. ஓரிடத்தில் ஒன்பது தடவை சென்று இரட்சணத்தை இரந்தும், ஒருவரும் இரங்கவில்லை. அப்போது புகலற்று அப்பெருமான் எழுந்தருளி இருக்கும் இடம்
    வந்து விழுந்துகிடந்தது. தரையிலே தலையும் பெருமான மடியிலே கால்களுமாய்க் கிடந்தது. அக்காகத்தின் நிலையைக் கண்ட ஸீதா பிராட்டியார் அக்காகத்தை இரட்சிக்குமாறு அப்பரமனை வேண்டிக் கொண்டனர் . அப் பரமனும் அஸ்திரம் பயனற்றதாய் ஆகாமையின், அதனால் அக்காகத்தின் கண்ணை அழித்து, அதற்கு உயிர்ப் பிச்சைக் கொடுத்து, அதனை இரட்சித்தனன்” என்பதே காகத்தின் வரலாறாம்.

    (ஸபித்ராச பரித்யக்த: ஸரைச்ச ஸமஹர்ஷிபி த்ரீந்லோகாந்ஸம்பரிக்ரம்ய தமேவ சரணம்கத : 1) என்னும் (இராமாயணம்ஸுந்தரகாண்டத்தில் உள்ள) வார்த்தை யிலும்,
    சித்திர கூடத்திருப்பச் சிறு காக்கை முலைதீண்ட
    அத்திரமே கொண்டெறிய அனைத்துலககும் திரிந்தோடி
    வித்தகனே ! இராமாவோ ! நின் அபயம்என்று அழைப்ப
    அத்திரமே அதன் கண்னை அறுத்ததும் ஓரடையாளம்”-என்னும் பெரியாழ்வார் திருவாக்கிலும் காணலாம். இவ்வரலாற்றில் அமைந்துள்ள ஸாரப் பொருளைப் பின் வருமாறு காணலாம் :

    ஸீதா பிராட்டியார் திறத்தில் இராவணனும், காகா ஸுரனும் பொறுக்கொணாத்
    துன்பத்தை விளைவித்தவர்களாம். ஆனாலும்இராவணனைக்காட்டிலும் காகா ஸுரனுக்குப்
    பாவம் அதிகமாம். எங்ஙனம் ? என்னில், இராவணன் அப்பிராட்டியாரை எடுத்துச் சென்று, அசோகவனத்தில் சிறையில் வைத்து, தானும்,ஏகாக்ஷிமுதலான அரக்கிமாரும் பல தடவை சொல்லொணாச் சொற்களைச் சொல்லித் துன்புறுத்தியது ஒருவாறு உண்மையே.
    ஆயினும் காகா ஸூரனைப் போன்று,அப்பிரட் டியார் திருமேனியில் புண்னை உண்டாக்க
    வில்லை யன்றோ? ஆதலின், காகாஸுரன் பாவம் அதிகமன்றோ?-இக்காகாஸுரன், பிரமாஸ்திரத்தினால் துரத்தப் பெற்று எங்கும் புகலற்று, செய லற்றுப் பரமன் முன்னிலையில் விழுந்து கிடந்தது போன்று, இராவணனும், இராமபிரானுடன் முதலில்போர் புரிந்த போது,அவ் எம்பிரான் பாணங்களால் அடிப்பட்டு, கையில் உள்ள வில்லை விழ விட்டு, இரதத்தில் தனக்குரிய இடத்தையும் விட்டுச் செயலற்றுக் கிடந்ததாய்’ வால்மீகி முனிவன்
    வரலாற்றைக் கூறியிருக்கிறான்.-இங்ஙனம் செயலற்றுக் கிடத்தல்’ என்பது,
    காகம் இராவணன் இவ்விருவருக்கும் ஒத்தி ருந்தும், இராவணனிலும் காகம் மிக்க பாவம்
    பெற்றிருந்தும், இராவணன் இலங்கையுடன் அழிவு பெற்றதற்கும் காகம் (கண்ணழிவு
    மாத்திரம் பெற்று) உயிரழிவு பெறாததற்கும் காரணம் யாதோ? எனின் காகத்திற்கு ஸீதா
    பிராட்டியார் முன்னிலையும், அதனால், அப் பிராட்டியார் இயற்கை இன்னருளுக்கு இலக்கானதும் உண்டு. ஆதலின், வாழ்வு பெற்றான். இராவணனுக்கோ, அப் பிராட்டியார் முன்னிலையும், அதனாலாம் இயற்கை இன்னருளுக்கு இலக்கா தலும் இல்லை. ஆதலின்
    முடிந்தான். இவ்வுண்மை, இராவணன் வரலாற்றோடு காகத்தின் வரலாற்றையும் சேர்த்து உணருங்கால், நன்கு விளங்குகின்றதன்றோ ?-இங்கு,” இவள் ஸந்நிதியாலே காகம்
    தலை பெற்றது; அதில்லாமையே இராவணன் முடிந்தான்” என்னும் பிள்ளைலோகாசார்யர்
    திருவாக்கும்,இவள் ஸந்நிதியாலே அபரா தத்தைத் தீரக் கழியச் செய்து ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கு இலக்காய் தலையறுப்புண்ணத்தேடின காகம்… தலை பெற்றுப் போய்த்து;-அப்படியிருக்கிற இவள் ஸந்நிதி இல்லாமயையாலே போக்கற்றுச் செயல் மாண்டு நின்ற நிலை யொத்திருக்கச் செய்தேயும், காகத்தோபாதி அபராதமுமின்றிக்கே யிருக்க, ராம சரத்துக்கிலக்காய் இராவணன் முடிந்து போனான் என்கை என்னும் மணவாளமாமுனிகள் திரு வாக்கும் அனுபவிக்கத் தக்கவை.
    இதுகாறும் கூறிய காகாஸுரன் வரலாற்றினால், “மிக்க பாவம் பெற்றிருப்பவனும்,
    பிராட்டியாரை முன்னிடும் போது, எம்பெருமா இன்னருளுக்கு இலக்காகி,
    நன்மை பெற்று, வாழ்வு பெறலாம்” என்னும் உண்மைக் கருத்து தெள்ளிதின் விளங்கு
    கின்றதன்றோ? மேலும், இராவணனும், சூர்ப்பணகையும், விபீஷணனும் ஒரு குடியிலே பிறந்தவர்கள். இராவணன் எம்பெருமானை அறிவிலக்கி, பிராட்டியாரை மாத்திரம் முறைதவறி விரும்பினான். சூர்ப்பணகை பிராட்டியாரைவிட்டு, எம்பெருமானை மட்டும் முறை தவறி விரும்பினாள். பிராட்டியாரை விட்டு என்பது மட்டும் இல்லை; ஏன் பிராட்டியாரை இடையூறாகக் கருதி, விழுங்கவும் முயன்றாள்.-இவ்விருவரும் நன்மையைச் சிறிதும் பெற்றரில்லை. விபீஷணனோ, இராவணன், சூர்ப்பணகை இவ்விருவருடன் பிறந்திருந்தும் இவ் விருவரைப் போன்று, முறை தவறி ஒருவரை விட்டு ஒருவரை மாத்திரம் விரும்பாமல், பிராட்டியார் எம்பெருமான் இருவரையும் முறையுடன் பற்றி, இருவர் சேர்த்திக்கும் முயற்சி மேற் கொண்டதால் இன்றும் வாழ்ந்து போருகின்றானன்றோ? திருவரங்கத்தில் எம்பெருமான் இன்றும் விபீஷணனை நோக்கிக் கிடக்கின்றானன்றோ? இவ்விடத்திலே, தென்திசை இலங்கை நோக்கி” என் னும் தொண்டரடிப்பொடியார் திருவாக்கும், இத் திருவாக்கிற்குப் பொருள் கூறுமிடத்துள்ள ‘‘தென் திசை இலங்கை நோக்கி (முன்புத்தை திக்குகளைக் கடாக்ஷித்தது அவ்வோ தேசங்களின் வெறுமை தீருகைக்காக) இது தம் குறை தீருகைக்காக ; மாதா ப்ரஜைகளுக்கு முலை கொடுத்து அவற்றின் முகமலர்த்தி காண்கைக்குப் பாங்காகச் சாயுமாபோலே’ என்னும் பெரியவாச்சான் பிள்ளை திருவாக்கும் அனுபவிக்கத் தக்கவை.
    மேற்கூறிய இரு திருவாக்குகளிலும், விபீஷணன், இன்றும் எம்பெருமானுடைய இன்னருளுக்கு இலக்காயிருந்து வாழ்ந்து போருகிறான்’ என்பது நன்கு விளங்குகின்றதன்றோ?
    இது காறும் கூறியவாற்றால், ‘இச்சேதனன் எம்பெருமானைப் பற்றுங்கால், பெரிய
    பிராட்டியாரை முன்னிடுதல் இன்றியமையாததாம்’ என்பதை ஒருவாறு கண்டோம்.

    இறைவன் திருவுள்ளத்தை பின் சென்று பற்றுதல்

    இனி இச்சேதனன் எம்பெருமானை உபாயமாய்ப் பற்றும்போது, இவன் பற்றும்
    அப்பற்றுதல் அவ எம்பெருமான் திருவுள்ளத்தைப் பின் சென்றிருக்கவேண்டும்” என்பதும்
    சரணாகதியைப் பற்றிய ஓர் உண்மையாகும்.-இவ்வுண்மையைப் பரதன் வரலாற்றில் நாம்.
    அறியலாகும்.
    “கூனியின் கூற்றினால் கலங்கிய கைகேயி,பரதன் முடியையும், இராமபிரான் வன
    வாஸத்தையும் சக்ரவர்த்தியிடம் வேண்ட,அச்சக்ரவர்த்தியும் ஸத்தியத்திற்குக் கட்டுப்
    பட்டு அளிக்க, இராமபிரானும் வனம் செல்ல,அதனால் சக்ரவர்த்தியும் துஞ்ச, கேகய தேசத்
    தினின்றும் அயோத்தி வந்த பரதன் இவ்வரலாறுகளை அறிந்து, சக்ரவர்த்திக்குச் செய்ய
    வேண்டிய சடங்குகளைச் செய்து முடித்து.சித்திரகூடம் சென்று, இராமபிரான் திருவடித்
    தாமரைகளை உபாயமாகப்பற்றி,இப்போதே திருவயோத்திக்கு எழுந்தருளி முடிசூடிக்
    கொள்ளுதல் வேண்டும்’ என்று அவ் இராமனை ஆர்த்தியுடன் வேண்டின் இடத்தும், அப்
    பிரான் அதற்கு இசையாது இருக்க, அத்தரு ணம் அவன் திருவடி நிலைகளை அருள, அவற்றைப் பெறாப்பேறாகப் பெற்று, திரும்பி நந்திக்ராமம் வந்து, அத்திருவடி நிலைகளுக்கு அபிஷேகம் செய்து, அவற்றுக்குப் பரதந்திரனாய் பதினான்கு ஆண்டு பரமபுருஷன் வரவை எதிர்பார்த்துக் காலம் கழித்துக் கொண்டிருந்தனன் பரதன்” என்பதே அப்பரதன் வரலாறாம்.
    இவ்வரலாற்றைக் காணுங்கால், “இராமபிரான் திருஅயோத்திக்கு எழுந்தருளி முடி
    சூடிக்கொள்ளுதல்” பயன் என்பதும், ” அப்பயனுக்கு அவன் திருவடிகளே உபாயம்”
    என்பதும் பரதன் எண்ணத்தில் நன்கு விளங்குகின்றன அல்லவா ?
    இங்கு வால்மீகி முனிவன்,  (அபிஷஞ்சஸ்வ சாத்) என்றும், (ஏவமுக்த்வா மஹா பாஹு : ஸபாஷ்ப: கைகயீஸுத : Iராமஸ்ய சிரஸா பாதெள ஜக்ராஹ விதிவத் புந : II) என்று கூறியிருப்பது காணத்தக்கது.-மேற்கூறிய வார்த்தைகளுள், “அத்யைவ அபிஷஞ்சஸ்வ” என்னும் பகுதியில், “பரதன் விரும்பும் காலத்திலேயே முடி சூடிக்கொள்ளுதல் அப்பரதன் விரும்பிய பயன் ‘ என்பதும்,”ஸபாஷ்ப:” என்பதில், “‘பரதன் ஆர்த்தியுடையவன்’ என்பதும், “ராமஸ்யபாதெள சிரஸா ஜக்ரா ” என்னும் பகுதியில்,”பரதன் இராமபிரானுடைய திருவடிகளை உபாயமாய்ப் பற்றியவன்” என்பதும், “விதிவத் ‘; என்பதில் “அப்பரதன் அங்ஙனம் பற்றும்போது, முறையுடன் பற்றியவன்” என்பதும் நன்கு விளங்குகின்றனவல்லவா ?
    இக்கருத்துக்களை மனத் திருத்திக் காணுமவர்க்கு, “பரதன் ஆர்த்தியுடன் முறைப்படிசரணம் பற்றியவன்” என்பது தெளிவு.-(ஆர்த்தியுடன் சரணம் பற்றியவனுக்கு, அப்போதே பயனுண்டாம்’ எனச் சாஸ்திரம் கூறுகின்றது. அவ்வாறு அப்பரதன் பயன் பெற்றனனா? என்னில், பெறவில்லை என்றே வால்மீகி முனிவன் கூறியிருக்கின்றான்.
    “(ஸகாமம் அநவாப்யைவ ராம பாதாவுபஸ்ப்ருசன் நந்திக்ராமே அகரோத் ராஜ்யம் ராமாகம
    நகாங்யா) என்னும் வால்மீகி முனிவனின் வார்த்தை இங்குக்காணத்தக்கது.
    இவ்வார்த்தையில் அமைந்துள்ள “ஸகாமம் அநவாப்யை ” என்னும் பகுதியில், பரதன் இராமபிரானிடம் தான் விரும்பிய பேற்றைப் பெறவில்லை என்பது தெளிவு.
    இங்கு, பரதன் முறைப்படி பற்றியிருந்தும், பயனைப் பெறாதற்குக் காரணம் யாதோ? எனின், இதற்கு பரிஹாரமாய் முதலில் சிலர் கூறும் கருத்துக்களை கூறுவோம் :
    (1) சக்ரவர்த்தி வேள்வி நிகழும் நிலத்தின் கண் எம்பெருமான் எழுந்தருளிய போது,
    தேவதைகள் முதலானார், அப்பரம புருஷன் மானிட வடிவத்துடன் திருவவதாரம் செய்து
    இராவணனை அழிக்க வேண்டும் என விரும்பி,அவனைச் சரணம் பற்றியிருப்பது சரித்திர
    உண்மை. அந்தச் சரணாகதி முதலில் தேவதைகளினால் செய்யப்பெற்றுள்ளது. அத்
    தேவதைகள் கோரின பயனை அளிக்கத் திருவுள்ளங்கொண்டு, வனவாஸம் என்னும் வியாஜத்தினால் எழுந்தருளியிருக்கும் தருணத்தில், பரதன் ஆர்த்தியுடன் சரணம் பற்றியிருக்கும் வரலாறும் நாம் அறிந்ததேயாம். இதனால்,’இப்பரதன் செய்தசரணாகதி பின்பு செய்யப் பெற்றுள்ளது’ என்பது தெளிவு. முன்பு செய்த தேவதைகளின் சரணாகதிக்கு முதலில் பயனை அருள் செய்து, பின்பு செய்த பரத சரணாகதிக்குப் பின்பு பயனை அருள புரிதல் முறை எனத் திருவுள்ளம் கொண்டு, பரதன் விருப்பத்திற்கு ஏற்ப, அப்போதே இராமபிரான் திரு அயோத்திக்கு எழுந்தருளி முடி சூடிக்கொள்ளவில்லை. இது முதல் பரிஹாரம்.
    (2) இராமபிரான் திருவுள்ளம் புண்படுமாறு பரதனுக்குச் சில பாவங்கள் இருக்கக்
    கூடும் பயனின்மையைக் கண்கூடாகக் காண்கின்றமையின், அங்ஙனம் சிலபாவங்கள்
    இருக்கக்கூடும் என்று ஊஹிக்கலாமல்லவா ? இவ்வாறு கூறுவது இரண்டாம் பரிஹாரம்.
    (3) இச்சரணாகதிக்குச் சில அங்கங்கள்(அங்கங்கள் = உதவி செய்யுமவை) உண்டு.பெரியோரை முன்னிடுதல், பெரியபிராட்டியாரை முன்னிடுதல் போல்வன அவ்வங்கங்களாகும். பரதன் பயன் பெறத்தற்குக்காரணம், அவ்வங்கங்களுள், ஏதோ ஓன்றிரண்டு குறைந்திருக்கலாம். இது மூன்றாம் பரிஹாரம்.
    ( ) இராமபிரான், தந்தை, தாய் இவரைப் பூசித்தல் இன்றியமை யாததாம்’ என்னும் முறையைத் தன் செயலில் நடத்திக்காட்டி நிலைநிறுத்த வந்தவன். ‘தன்தாய்’ என்றும், ‘ வேற்றுத் தாய் ‘ என்றும் வேற்றுமை சிறிது மில்லாதவன். கைகேயி வேற்றுத் தாயாயிருப்பினும், அத்தாய் சொல்லைப்பின்சென்று முடியையும் துறந்த பரமபுருஷனன்றோ? அவன். அப்பெருமான் அவ்வாறு பூசித்தகைகேயியைப் பரதன் பலவகையால் வெறுத்துப்பேசியது அவன் திருவுள்ளத்தை மிகவும் புண்படுத்தியது. ஆதலின், அவன் பரதன் விருப்பத்துக்கேற்ப இரங்கினான் இல்லை
    (மாதரம் ரக்ஷ கைகேயீம்) என்னும் இராமபிரான் வார்த்தையும் (பூஜிதா மாமி கா மாதா) என்னும் பரதன் வார்த்தையும் இங்குக் காணத்தக்கன. சித்திர கூடத்தில் திருவடி நிலைகளைக் கொடுத்து அருளுங்கால், இராமபிரான் அருளிச் செய்தது, முதல்
    வார்த்துை.பதினான்கு ஆண்டு வனவாஸம் செய்து மீண்டு நந்தி ராமத்தில் எழுந்தருளியிருக்கும் இராமபிரான் முன்னிலையில் பரதன்சொன்ன வார்த்தை( பூஜிதா மாமி காமாதா” என்பது .) இது நான்காம் பரிஹாரம்.
    இவ்வாறு சிலர் கருத்துக்கிணங்க நான்கு பரிஹாரங்களைக் கண்டோம். இப்பரிஹாரங்கள் பொருத்தமுடையன அல்ல என்பதை முறையே காட்டுவோம், இனி
    (1) தேவதைகள் சரணாகதியைத் தெரிவிக்கும் இடத்தில் “இராவணன் அழிவை விரும்பிச் சரணம் பற்றியிருக்கிறதாகக் கூறப் பெற்றிருக்கிறதன்றி, காலம் குறிக்கப் பெற்றிலது என்பதை நாம் அறிதல் அவசியமாகும்.-அவ்விடத்துள்ள தேவதைகள் வார்த்தை
     (விஷ்ணோ ஸரமே ஜஹி ராவணம்) என்பதாம். பரதன் சரணம் பற்றுங்கால், “அத்யைவ ” (இப்போதே) என்று காலம் குறிக்கப் பெற்றிருக்கின்றது வெளிப்படை. இதனால், என்ன தேறிற்று என்னில் கூறுவோம்.
    தேவர்களும், பரதனும் தம் தமக்கு உரிய இராவணன் அழிவு. ‘திரு அயோத்திக்கு எழுந்தருளி முடிசூடிக் கொள்ளுதல்’ என்னும் பயன்களை ஒரே காலத்தில் பெற விரும்பியிருப்பின்
    பயனைப் பற்றிய முரண்பாடு ஏற்படுகின்றமையின்,அம் முரண்பாடு தீருமாறு பரம புருஷனும், முந்திச் செய்த தேவதைகளின் சரணாகதிக்கு முந்தியும், பிந்திச் செய்த பரத சரணாகதிக்குப் பிந்தியும் பயனை அளித்தல் நன்றாம்’ என்று திருவுள்ளங்கொண்டு, பரதனுக்கு அக்காலத்திலேயே உதவ இசையவில்லை என்னலாம். தேவர்களும் பரதனும் தம் தமக்குஉரிய பயனை ஒரேகாலத்தில் பெற விரும்பி, பரமனை வேண்டிக் கொண்டதாகக் கூறப்பெற்றிலது.-பரதனாவது, காலத்தைக் குறிக்காது தனக்குரிய பயனைச் சரணம் பற்றி வேண்டிக் கொண்டிருந்தானென்றிருப்பின், பரமன் பரதனுக்கு அக்காலத்திலே அருளாவிடினும், இந்த ஆராய்ச்சிக்கே இடம் ஏற்பட்டிராது.-அப்பரத னே, ‘இப்போதே முடிசூட்டிக் கொள்ள வேண்டும்’ என்று காலத்தைக் குறித்தே சரணம் பற்றியிருக்கிறான் அன்றோ? இதனால் பரதன் விருப்பத்திற்கு ஏற்ப அப்போதே, முந்தி முடி சூடி, அப்பரதன்
    தாபத்தைந்போக்கி, பிந்தித் தேவதைகள் விரும்பியவாறு, இராவணனை அழிக்க, ஏதோ
    ஒன்றை வியாஜமாய்க் கொண்டு, இராம பிரான் வனததிற்கு எழுந்தருளலாமன்றோ ?
    ஆதலின், முதல் பரிஹாரம் ஏற்கத் தகுந்த தன்று.(வியாஜம் = போலிக் காரணம்.)
    (2) பரதன் திருவவதாரன் உண்மையை உணரின், இராமபிரான் எங் னம் பாவமின்றி
    இருப்பவனோ, அங்ஙனமே அப்பரதனும், பாவமின்றி இருத்தலின், அப்பரதனுக்கு இராம
    பிரான் திருவுள்ளம் புண்படுமாறு சில பாவங்கள் உண்டு’ கூறுதற்கும் இடம் இன்று.
    இதனால், இரண்டாம் பரிஹாரமும் பொருத்தமுடைத்தன்று என்பது தெளிவு.
    (3) “ராமஸ்ய சிரஸா பாதெள ஜக்ராஹ விதி வத்பு :” என்பதில் உள்ள “விதி வத்”
    என்னும் சொல்லை நோககின், “எம்பெருமானை உபாயமாய்ப் பற்றுங்கால்,முறை வழுவாது
    பற்றியவன் பரதன்” என்பது தெள்ளிதின் விளங்குகின்றதன்றோ? ஆதலின், மூன்றாம்
    பரிஹாரத்திற்கும் இடம் இன்று.
    (4) நான்காம் பரிஹாரம் இராமாயணத்தில் ஒருவாறு கூறபபெற்றுள்ளது என்பது உண்மையே. ஆயினும் அதைப் பரிஹாரமாய் எடுத்துக் கொள்வதற்கு இல்லை. இதைச்
    சிறிது விரித்துக் கூறுவோம்.-‘இராமபிரான் பரமாத்மா, பரதன் ஜீவன்’ என்னும கொளகையை உள்ளத்தில் கொண்டு, பின்வரும உணமை உணரத்தககது.
    எம்பெருமான எலலாச்சேதனருக்கும எனறும் தஞ்சமாகிய தந்தையும் தாயுமானவன். இங்ஙனம் தந்தையாயும தாயாயும அவன் இருப்பது கருமத்தினாலன்று. பரமனுக்கும் சேதனனுககும் உளள ஒன்பது வித்த தொடர்பும்என்றும உள்ள தனறோ? இவவாறான
    தொடர்பு இலக்குமணனுக்கும் இராமபிரானுக்கும் எஙஙனம் என்றும் உள்ளதோ, அங்ஙனமே பரதனுக்கும் இராமபிரானுக்கும் என்றும் உள்ளதாம். இவவாறான தொடர்பு பரதனுக்கும் கைகேயிக்கும உண்டோ ? இல்லையன்றோ?
    இலக்கு மணன், (முடி சூடவைத்த முஹுர்த்தத்திலே, ஜடைசூடி இராமபிரா னைக கானகம்புகச்செயத கைகேயி போன்று, விபரீதச் செயல் உண்மையில் இன்றியிருநதும் )
    தசரதனையும ஸுமித்ரா தேவியையும் தஞ்சமாகி தந்தையாயும் தாயாயும் கருதாது,
    இராமபிரானையே அங்ஙனம் தந்தையாயும், தாயாயும், மற்றும் எல்லா உறவினராயும் கருதி, அவ் இராமபிரான் பின்னே, அவன் மனம் மகிழுமாறு அடிமை செய்யக் சென்றனனன்றோ? இல்வாறு இலக்குமணன் சென்றதற்குக் காரணம் அவ் இலக்குமணனுக்குள்ள இராம பக்தியன்றோ?-அவ் இலக்குமணன்போன்று, பரதனும்
    மிக்க இராமபக்தி பெற்றிருப்பவனன்றோ ? மேற்கூறியவாறு விபரீதச்செயல் உள்ள
    கைகேயியினிடம் அப்பரதனுக்கு மனம்பொருந்துமோ ? அவன் தன் தாயை வெறுத்தது சாஸ்திர முறையைக் காணுங்கால்,குற்றமாமோ ?-பரமனிடம் வெறுப்புற்ற தாயை அறவே விட்டிடுவது, சாஸ்திரத்தின் உண்மைக்கருத்து அன்றோ?-இவ்வுண்மைக் கருத்தைக் காணுங்கால்,’நான்காம பரிஹாரமும் பரிஹாரமாகாது’ என்பது தெளிவாம்.
    ஆனால், இராமபிரான் “மாதரம் ரக்ஷகைகேயீம் மா ரோஷம் குரு தாம ப்ரதி’
    என்று கூறியிருக்கின்றனனே; பரதனும், பதினான்கு ஆண்டு வனவாஸம் செய்து, திரும்பி
    நநதிகராமததில் எழு தருளியிருக்கும் இராம பிரானைக குறிதது, பூஜிதா மாமிகாமாதா “
    என்று பகவதபிபராயத்தைப் பின்பற்றி நடந்த தன செயலைக் கூறியிருக்கின்றனனே
    என்று சிலர்மறுபடியும மறுததுக கூறலாம்-இப்பரிஹாரத்தை முக்கியமாய் நம்
    ஆசார்யர்கள் திருவுளளம் பற்றவில்லை சேதனனுடைய உண்மை நிலையை உணருஙகால்,
    கைகேயியை பரதன் வெறுத்தது மேற்கூறியவாறு குற்றமாமோ?
    மேலும், இராமாயணத்தில் இப்பகுதியி லேயே இரண்டொரு உண்மைகளையும், கிஷ்கிந்தா காண்டத்தில் ஓர் உண்மையையும் இங்கு எடுத்துக்காட்டுவோம்.
    (1) தந்தை ஆசாரியன் இவ்விருவருள், தந்தை சரீரத்தை உண்டுபண்ணி அச்சரீரததை வளர்ப்பவனாம். ஆசாரியனோ,ஞானத்தை உண்டுபண்ணி ஆத்மாவை வளர்ப்பவனாம். இருவரும் உதவியைச் செய்பவரேயாயினும், ஞானத்தை உதவும் ஆசாரியனே மிக்க சிறப்புப் பெற்றவனாம். ” (ஸஹி வித்யாத : தம் ஐநயதி தத் ச்ரேஷ்டம் ஜன்ம கரியாந் ப்ரஹ்மத பிதா ) என்னும் வசனம் காணத்தக்கது,-இங்கு. ஆதலின், ஆசாரியன் ஆணையைப் பின் சென்று நடத்தல் மிகவும் முக்கியமாகும். இவ்வுண்மையை உணர்த்தி, வஸிஷ்டர்,
    ‘இராமா! உனக்கும் உன் தந்தையாருக்கும் நான் ஆசாரியன் ; ஆதலின், என் சொற்படி
    நீ வனவாஸத்தை விட்டிட்டு, இராச்சியத்தை ஏற்று முடி சூடுதல் நன்றாம்” என்று கூறியிருக்கிறார், இராமபிரானை நோக்கி .-மேலும், ஸ்வதந்திரனான பரமனுக்கு
    ஆசரித பாதந்திரியமும் உண்டு. அஃது அவனுக்குச்சிறந்த செல்வமாம். ஆச்ரித பாரதந்
    திரியமாவது – பரமனாகிய தான், தன்னை அன்புடன் ஆதரித்தோருக்கு, அவர் ஏவிற்றுச்
    செய்யும் கையாளாயிருத்தலாம். கண்ணபிரான் பஞ்ச பாண்டவர்க்குத் தூதனாயும்
    தேரோட்டியாயும் இருந்து இழிதொழில் செய்தனனன்றே ?
    வஸிஷ்டர் மேற்கூறிய உண்மையையும்உணர்த்தி, இராமா ! நீ பரமனன்றோ? பரதன்
    பக்தி பெற்றிருப்பாரில் சீரியனன்றோ? ஆதலின், அப்பரதன் திறத்தில் பரதந்திரனாய்,
    அவன் ஏவிற்றுச் செய்தல் உனககுச் சிறந்தசெல்வமன்றோ? இப்போது, பரதன் வேண்டு
    கின்றவாறு, நீ முடியை ஏற்றுக்கொள்ளாதிருப்பின், உனக்குரிய சீரிய செல்வத்தை இழந்தே விடுவாய்’ என்றும் கூறியிருககிறார்.-இவ்வாறு வஸிஷ்டர் இராமபிரானை நோக்கிக் கூறிய உண்மைக் கருத்துக்களைப் பின்வரும் அவ்வஸிஷ்டர் வார்த்தைகளில் நாம்  காணலாம் 🙁ப்ரஞாம் ததாது சாசார்ய: தஸ்மாத் ஸகுரு ருச்யதே II ஸோ S ஹம் தே பிதுராசார்ய: தவ சைவ பரம்தப மம த்வம் வசனம் குர்வந்நாதிவர்த்தேஸ் ஸதாம்கதிம்||
    பரதஸ்ய வச : பர்வந்யாசமாநஸ்ய ராகவ ஆத்மாநம் நாதிவர்த்தேஸ் த்வம் ஸத்ய தர்ம
    பராக்ரம |1)-இவ்வாறு கூறிய வஸிஷ்டரை நோக்கிஇராமபிரான் அருளிச் செய்த விடையாதோ?எனின், கூறுவோம்.
    உலகத்தில், சுவரை வைத்துச் சித்திரம் எழுதுதல்” என்று ஒரு முறை உண்டு. இம்
    முறையைத் திருவுள்ளத்தில் கொண்டு, இராமபிரான் பின் வருமாறு விடையை அருளிச்
    செய்திருக்கிறான் :-சரீரம் அற்றிருப்பானுக்கு ஞானம் உணடாதற்கும், ஆசாரியன் ஞானத்தை உதவிபுரிதற்கும் இடம் இன்று. சரீரம், பெற்றிருப்பானுக்கே ஞானம் உண்டாதற்கும், ஆசாரியன் ஞானத்தை உதவி புரிதற்கும் இடம் உண்டு. இதனால், சரீரம், சித்திரம் எழுதுதற்குச் சுவர் போன்று,ஞானம் உண்டாதற்கு மிகவும் முக்கியம் எனத்தெரிகின்றதன்றோ?-இவ்வாறு மிகவும் முக்கியமாயுள்ள சரீரத்தை உண்டாக்கி, வளர்ப்பதற்கு, தந்தையாரும், தாயாரும் நோன்புநோற்று,பத்து மாஸம் சுமந்து, பெற்று,பெற்றபினபும், இவனறியாது இருக்கும் சைசவ நிலையில் இவன்
    பொருட்டு,படாதனபட்டு இவ்வாறு உதவி புரிகின்றவராதலின், ஆசாரியனிலும் மிக
    மேம்பட்டவராவர். ஆசாரியனிலும், தந்தைக்கு ஏற்றமுண்டு; அவ்வாசிரியன் வசனத்திலும், தந்தையார் வசனத்திற்கும் ஏற்றமுண்டு. உண்மை இவ்வாறு இருத்தலின்,
    தந்தையார் வசனமே ஆதரிக்கத்தக்கதாம்.-இதுவே, இராமபிரான் விடையாகும்.’ (ஸ ஹிராஜா ஜநயிதா பிதா தசரதோ மம ! ஆஜ்ஞாதம் யந்மயா தஸ்ய ந தந்மித்யா பவிஷ்யதி) என்னும் இராமபிரான்வார்த்தை அனுஸந்திக்கத் தக்கது.
    இதைச் சிறிது ஆராய்வோம் : ‘ராமா! ஆச்ரித பாரதந்திரியமாகிய உன் சீரிய செல்வத்தை நீ இழந்துவிடாது பரதன் விருப்பத்தை நிறைவேற்றுவாய் ” என்று வஸிஷ்டர் கூறியதற்கு இராமபிரான் ஒன்றும் விடையறுத்ததாய் இங்குத் தெரியவில்லை.
    இராமபிரான் இயம்பியவாறு தாய்தந்தைகளுக்குச் சிறப்பு உண்டு” என்பது ஒருவாறு உண்மையேயாகும். ஆனாலும், “ஆசாரியனிலும் தாய் தந்தைகளுக்கு ஏற்றம்
    உண்டு” என்று கொள்ளில், அவர்களிலும் ஆசாரியனுக்குச் சிறப்புக்கூறும் பல சாஸ்திரங்
    களோடு முரண்பாடுஉண்டாமன்றே?-மேலும், தாயையும் தந்தையையும் விடச்
    சொன்ன சாஸ்திரம் போன்று, ஆசாரியனையும் விடச் சொன்ன சாஸ்திரமும் உண்டோ?)
    இல்லையன்றோ? எழுத்தறிவித்தவன் போன்றாரைச் சாஸ்திரம் விடச் சொன்னது உண்மை.
    திரு அஷ்டாக்ஷரத்தை உபதேசம்செய்தவன் எம்பெருமானிலும் மி க மேம்பட்டவன்”
    என்பது சாஸ்திர உண்மைக் கருத்தனறோ?-வஸிஷ்டர், எம்பெருமான் இராமனுக்குத் திரு
    அஷ்டாக்ஷரத்தை உபதேசம் செய்த ஆசாரியரன்றோ? இவ்வுலகத்தில், தன் உபதேச மொழிகளினாலும், செயல்களினாலும் அந்த அந்த முறையை நிலைநிறுத்தத் திருவவதாரம் செய்தருளினவனும்,அங்ஙனமே நிலை நிறுத்தினவனுமான இராமபிரானும், “ஆசாரியன் வசனம் ஆதரிக்கத் தக்கதன்று” ”தந்தையாரின் வசனமே ஆதரிக்கத் தக்கது ‘ என்று அருளிச் செய்வானாயின்,அவ் எம்பெருமானை யார் மறுத்துக்கூற முடியும். ஸ்வதந்திரனை மறுத்துக்கூற இயலுமோ? அவன் திருவுள்ளம் அப்போதே திரு அயோத்திக்கு எழுந்தருளி முடி சூடுதற்கு இடம் தரவில்லை என்பதைத் தவிர, வேறு நோக்கு அவன் வார்த்தைக்கு உண்டோ? இல்லையன்றோ?
    இக்கருத்து, இப்பகுதியிலேயே உள்ள பரதனின் வேறொரு வரலாற்றைக் காணுங்கால், உறுதிப்படுகின் றமையின், அவ்வரலாற்றையும் எடுத்துரைப்போம் இங்கு :பரதன் தன் வேண்டுகோளுக்கு இராமபிரான் சிறிதும் இரங்கக் காணாமையின்,
    “அந்த இராமபிரான் ஆசிரமத்தின் வாசலில், (அவன் திரு அயோத்திக்கு முடிசூட எழுந்தரு
    ளும் வரையில்) ஊணின்றி, தர்ப்பங்களைப் பரப்பி அவற்றின்மேல் கிடப்போம்” என்று
    எண்ணி, ஸுமந்திரனைத் ‘தர்ப்பங்களைக் கொண்டு வா” என்று ஏவினன். இதைக்
    கேட்ட ஸுமநதிரன்,பரதன் கூற்று இராமபிரான் திருவுள்ளத்திற்குப் பாங்காயிராததை
    ஒருவாறு உணர்ந்து, அப்பரதன் ஏவினவாறு செய்யாது இருநதனன். அத்தருணம், பர
    தனே, தான் எண்ணியவாறு தர்ப்பங்களைப் பரப்பி, அவற்றின்மேல் கிடக்க முயன்றனன்.
    இதைக் கண்கூடாகக் கண்ட இராம பிரான், பரதனை நோக்கி அருளிச் செய்த வார்த்தை பின் வருமாறு காணத்தக்கது :
    ”அப்பா! நான் உடையவன் ; நீ என்உடைமைப் பொருள். இங்ஙனம் உடைமை யாயிருக்கின்ற உன்னை, உடையோனாகிய யான், என் விருப்பத்திற்கு ஏற்ப உபயோகம் கொள்ள எண்ணினேன். இவ்வாறு விரும்பி உபயோகம் கொள்ளுதல், எனக்குச் செய்யத் தகாத செயலாய் உன் மனத்தில்தோன்றியது போலும் . அங்ஙனம்தோன்றியது மாத்திரம் இன்றி, உடைமைப் பொருளாய் உள்ள நீ, உன் நிலைக்கு உரியதும், உடையோனான என்னைஅடக்கி நல் வழியில் நடக்கச் செய்வதுமாக நீ கருதிய இச்செயலை (இந்த ஆசிரமத் தின் வாசலில் தர்ப்பங்களைப் பரப்பிச் கிடத்தல் என்னும் செயலை ச் செய்து,இதனால், என்பால் உள்ளதும், என் நிலைக்கு ஏலாததாய் நீ எண்ணியிருப்பதுமான செய்யத் தகாத
    செயலை (உன்னைஎன் விருப்பத்திற்கு ஏற்ப உபயோகம் கொள்ளுதல் என்னும் செயலைத் தவிர்க்கப் பார்க்கிறாய் போலும். என்செயல் எனக்கு ஏற்றது’ என்பதை யான் இயம்புதலும் வேண்டுமோ? உன் செயல்உனக்கு ஏற்றதாமோ? “ஏற்றதன்று” என்பதையும் கூறுவேன்.
    ப்ராஹ்மணன் ஒருவன் தன் பொருளை”இன்ன தருணம் தரவேண்டும்” என்று தருணத்தைக் குறித்து, கடனாக ஒருவனுக்குக்கொடுக்கின்றான். அங்ஙனம் கடன் வாங்கியவன், கடன்காரனான ப்ராஹ்மணனுக்குக் கொடுக்கவேண்டிய பொருளைக் குறிப்பிட்ட
    காலத்துக் கொடுக்காது தவறி இருப்பின், அக்கடன் காரன் வாங்கியவன் வீட்டுவாசலில்,
    நீ இப்போது செய்ய விரும்பியது போன்று, தர்ப்பங்களைப் பரப்பிக் கிடத்தல் நன்றாம்.
    இது ப்ராஹ்மண தருமம். த்திரியனான உனக்குரியதன்று. நீ வேறொரு வருணத்தின்
    முறையைப் பின்பற்றியவனாதலின், உனக்குப் பாவம் உண்டாம். அப்பாவம் போமாறு,
    “இனி, இவ்வாறான பாவச் செயலை நான் செய்வதில்லை” என்று சபதம் பண்ணி, தண்ணீரைத்தொட்டு, நீ என்னைத்தொடு.ஈதேஅப்பாவச் செயலுக்கு ஏற்ற பரிஹாரச் செயலாம்.(இக்கருத்துக்களைப் பின் குறிக்கப்பெறும் வார்த்தைகளில் காண்க 🙂
    (சேஷ்யேபுரஸ்தாத் சாலாயா யாவந்ந ப்ரதியாஸ்யதி) என்பது பரதன் வார்த்தையாம்.
    (கிம் மாம் பரத குர்வாணம் தாத ரத்யுப வே யஸ் | ப்ராஹ்மணோஹ்யேக பார்ச்வேந் நராந் ரோத்தும் இஹார் தி 1நதுமூர்த்தாபிஷிக்தா நாம் விதி: ப்ரத்யுப வேச நே I உத்திஷ்ட த்வம் மஹாபாஹோ ! மாம்சஸ்ப்ருச ததோதகம்)(இவ்வாறே பரதனும் பரிஹாரச் செயலைச்
    செய்ததாய்ச் சரித்திரம்]-இங்கு உண்மை பின்வருமாறு உணரத் தக்கதாம். இராமபிரான் சக்ரவர்த்தித் திருமகனாக இருக்கின்றமையின், க்ஷத்தி ரியனே ஆவான்.
    மேலும், இப்பரம புருஷனுடைய திருவடிநிலைகள் திரு அபிஷேகம் செய்யப் பெற்றிருக்
    கின்றமையின், ” இப்பரம புருஷன் மூர்த்தாபிஷிக்த சத்திரியன் ” என்று கூறுதற்குக் தடை
    ஒன்றும் இராது அன்றோ?அன்றியும், இந்த இராமபிரான், வானர வெள்ளங்களுடன் கடற்கரை சேர்ந்து, கொந் தளிக்கும் அக்கடலைக் கண்டிருக்கும் காலம். அக்காலத்து, அவ்வாறான கடலைக் கடந்து செல்லத் தக்க உபாயம் யாதோ? என ஆராய்ந்து காணுங்கால், அப்பரம புருஷன்”இக்கடலைக் கடந்து அக்கரை செல்லுதற்கு, கடலரசனை நோக்கி அவன் அருள் புரியுமாறு இக்கடற்கரையிலே தர்ப்பங்களைப் பரப்பி அவற்றின் மேலே கிடத்தல்,’ அணைகட்டுதல், இக்கடலைத் தண்ணீர் சிறிதும் இன்றி வற்றச் செய்தல், எனப் பல உபாயங்கள் உண்டு. அவற்றுள், கடற்கரையிலே தர்ப்பங்களைப் பரப்பிக் கிடத்தலே சிறந்த உபாயமாம்” என்று அருளிச் செய்திருக்கின் றனன்.
    (தபஸா ஸேதுபந்தேந ஸாகரோச் சோஷணேந வா ஸர்வதா ஸுஸமர்த்தோஸ்மி ஸாகரஸ்
    யாஸ்ய லங்கநே) என்னும் அவ் இராமபிரான் வார்த்தை இங்குக்காணத் தக்கது.
    இவ்விடத்து, ‘தபஸா’ என்னும் சொல் நோக்கத் தக்கது. இன்னமும் தர்மாத்மா’ என்று கொண்டாடப் பெறும் விபீஷணனும்,-” இராமபிரான் இவ்வாறு கடலரசனை நோக் கிக்கிடத்தலே நன்றாம்” என்று கூறியிருக்கின்றனன்.-இராமபிரானும், கடலரசனைக் குறித்து, தர்ப்பசயனத்திலே கிடந்தனன் என்பது சரித்திர உண்மை. அபிஷேகமில்லாத பரதனை நோக்கி, ” இது ப்ராஹ்மண தருமம் ; அபிஷே கம் செய்யப்பட்டுள்ள க்ஷத்திரியன் இவ்வாறு செய்தல் தீதாம்” என்று அருளிச் செய்த எம்பெருமான்,மேற்கூறியவாறு அபிஷேகம் செய்து கொண்டக்ஷத்திரியனாகிய தான் இவ் வாறு செய்திருத்தல் முறையாமோ? இன்னமும், பரதன், இவ்விராமபிரானுக்குப் பின் பிறந்த தம்பியாதலின், அபிஷேகத்திற்குத் தகுதியற்றவனாம். கேகயதேசத்தினின்றும் திரு அயோத்திக்கு வந்து,
    தன் தாயின் வீட்டிலேதன் தந்தையார் சக்ரவர்த்தி உயிர் துறந்ததைக் கேட்டு, பூமியில்
    விழுந்து புரண்டு அழும் போது, தன் தாய் கைகேயி ‘ராஐந்” என்று அழைக்க,அவ்வாறு அழைத்ததையே மிகவும் பொறாது இருந்தவனன்றோ?
    மேலும், குலகுருவும், தன் குருவான இராம பிரானுக்கும் குருவுமான வஸிஷ்டர் “இவ்
    விராச்சியத்தை ஏற்று முடி சூடிக்கொள்’ என்று கூறுங்கால், அவரையும் மிகவும் பூசிக் கத் தக்கவர் என்று பாராது பலவாறாக வெறுத்துப் பேசி, யானும் இராச்சியமும்
    இராமபிரானுடைய உடைமைப் பொருளாய் உண்மையில் இருக்க, யான் இவ் இராய்ச்சி
    யத்தை ஏற்றுக் கொள்வது எவ்வாறு? என்று பேரோலக்கத்தில் கதறிக் கூறிய மஹான்
    அன்றோ?-இன்னும், மேற்கூறியவாறு கூறியது மாத்திரமேயன்றி, ஆர்த்தியே வடிவெடுத்து வந்தது போன்றுள்ள அப்பரதன், தாய்மார், மந்திரிமார், வ ஷ்டர், ஜாபாலி முதலிய பெரியோர், யானைகள், குதிரைகள், ஏன் அயோத்தியிலுள்ளார் அனைவரையும் ஒன்று
    சேர்த்து, அழைத்துக் கொண்டும், மத்தகத்திடைக் கைகளைக் கூப்பி திசை நோக்கித் தொழுது கொண்டும், சித்திரகூடம் சென்றுசேர்ந்து,இராமன் திருவடித் தாமரைகளிலே
    வேரற்ற மரம் போன்று விழுந்து கிடந்து,தன் தலையாலே இரந்து, வேண்டிக் கொண்ட
    வனன்றோ?-இப்பரதன் உண்மை நிலை இதுவாயிருக்க. இவனுக்குப் பாவந்தான் உண்டோ? இவன் க்ஷத்திரியனானாலும்,மூர்த்தாபிஷிக் க்ஷத்திரியன் என்று கூறுதற்கு இடம் தான் உண்டோ? பாவத்திற்கே இடமில்லாத போது, பரம புருஷன் பரிஹாரத்தைச் செய்யக் கட்டளை யிட்டதுதான் பொருந்துமோ?-ஆனால், பரதன் இராமபிரான் கட்டளையிட்டவாறு பரிஹாரத்தைச் செய்திருக்கின்றனனே? என்று சிலர் வினாவக் கூடும். இராமபிரான் வனம் எழுந்தருளியதற்குத் தன் பாவமே காரணம்” என்று கூறினவனும், உண்மை யில் பாவம் சிறிதுமின்றி இருக்குமவனான பரதன், தன் நிலைக்கு ஏற்ப பரிஹாரத்தைச் செய்தனனேயன்றி, பாவம் இருந்து பரிஹாரம் செய்தான் என்பது உண்மையாமோ
    இதுவே மேற்கூறிய வினாவிற்கு விடையாம்.-தன் நிலைமைக்கு ஏற்ப நடந்து கொள்ளும்
    பரதன் ஸ்வாமியான இராமபிரான் முன், அவ்விராமன் திருவுள்ளத்திற்குப் பாங்காயிராத,”தர்ப்பங்களைப் பரப்பிக் கிடத்தல்” என்னும் செயலைச் செய்ய முயன்றது தான் முறையாமோ? என்று சிலர்க்கு இங்கு ஐயம் எழக்கூடும். இவ் ஐயத்திற்குப் பரிஹாரத்
    தைக் கூறுவோம் :-அப்பரதன், எம்பெருமான் திருவுள்ளத்தைப் பின் சென்று நடக்கும் தன் நிலைக்குச் சேராத செயலை ( தர்ப்பங்களைப் பரப்பி அவற்றில் கிடத்தலைச் செய்ய முயன்றதும் இராமன்பாலுள்ள பக்திப் பெருமையினா லல்லது, வேறு காரணத்தினால் ஏற்பட்ட தாமோ? ஆகாதன்றோ?-நம்மாழ்வார், திருமங்கை மன்னன் போல்வார், எம்பெருமானை அடையப்பெறாத போது, தரித்திருக்க மாட்டாமையின்,
    ‘அப்பரம புருஷனை முறை தவறியாவது பெறவேணும்’ என்று எண்ணி, மடலெடுத்தல்,தூது விடுதல் முதலிய செயல்களைத் தம் நிலைக்குச் சேராதிருந்தும், செய்யக் கருதிச்
    செய்திருக்கிறார்கள். ”இவ்வாறு இவர்கள் கருதிச் செய்தது எங்ஙனம் பக்திப் பெருமை
    யினாலேயோ, அங்ஙனமே பரதன் செயலும் பக்திப் பெருமையினாலேயே” என்பதைநாம்
    அறியலாகும்.-இதுகாறும் கூறியவாற்றால்,முடிந்த
    பொருள் யாதோ? எனின், இராமபிரான் திருவுள்ளத்திற்குப் பரதன் செயல் பாங்கா
    யில்லை” என்பதே தேறிய முடிந்தபொருளாம்.-ஆனால், மறுபடியும் சிலர், “மாதரம்ரக்ஷ
    கைகேயீம்” ”ஆ ஞாதம் யந்மயாதஸ்ய”உத்திஷ்டத்வம்” என்னும் முன்னம் கூறிய
    வாக்கியங்களில், இராமபிரான், ‘பரதா!கைகேயியை வெறுப்பது கூடாது’ என்றும்,
    ‘ஆசாரியனிலும் தந்தையாருக்கு ஏற்றம் உண்டு: ஆதலின் அவர் வசனமே தனக்கு ஆதரிக்கத் தக்கது’ என்றும், ‘பரதா ! நீ பாவம் செய்தவன் ஆதலின், பரிஹாரத்தைச் செய்’
    என்றும் வெளிப்படையாக அருளிச் செய்திருக் கின்றமையின்,அங்ஙனம் வெளிப்படையாகக் கூறியவற்றைக் காரணமாய்க் கொள்ளாது, அவற்றைக் கழித்துப் பேசி, இராமபிரான் திருவுள்ளத்திற்குப் பாங்காயிராமையையே பரதன் பயன் பெறாததற்குக் காரணமாய்க் கூறுதல் ஏற்கத் தக்கதாமோ? என்று கருதக் கூடும்.
    “வெளிப்படைப் பொருளை விட்டிட்டு, உட்கருத்தையே எடுத்துக்கொள்ளுதல் சிறந்த
    முறையாம்” என்பதை ஓர் எடுத்துக் காட்டினால் விளக்கிக் காட்டுவோம் :
    ‘இராமபிரான், ஸுக்ரீவனுடன் தோழமைகொண்டவன்; ஸுக்ரீவன் விருமபியவாறு வாலியைக் கொன்று, கிஷ்கிந்தா ராச்சியத்தையும், ருமை என்னும் ஸுக்ரீவன்
    மனைவியையும் அந்த ஸுக்ரீவன் பெற்று, முன்புபோல் வாழும்படி உதவி புரிந்தவன்;
    அங்ஙனம் உதவி புரியும் போது, ஸுக்ரீவன் நம்புமாறு மழுவேந்திக் கொடுத்துக் காரியம்
    செய்தவன்” என்று நம் ஆசாரியர்கள் பரம புருஷனுடைய திருக்குணங்களைப் புகழ்ந்து அருளிச் செய்வதுண்டு” அங்ஙனம் வாலியை வதம் செய்யும் போது, அவ்வாலிக்கும் ஸு க்ரீ
    வனுக்கும் நடந்த போர் இரண்டு. முதலில் நடந்த போரில், இராமபிரான் வாலியை
    அடித்துக் கொல்லாது விட்டிருக்கிறான். அப் போரில், ஸுக்ரீவன் தன்னாலாந்தனையும்
    போர் புரிந்தும், இராமபிரான் கூறியபடி அம்பை எய்து வாலியைக் கொல்லாது இருந்தமையின், அடி தாங்கமுடியாமல் முதுகு காட்டி ஓடிவிட்டான் என்பது வரலாறு – (ஈது
    இங்கு முதலில் அறியத்தக்கது-இவ்வாறுஓடிவந்த ஸுக்ரீவன், இராமா! நீ ஏன்? கூறியவாறு வாலியை அடிக்கவில்லை என்று வினவினான். இவ்வினாவிற்கு இராமபிரான் விடை யளிக்கும் போது கூறிய வார்த்தை-(ஸுக்ரீவ ச்ரூபதாம் தாத க்ரோதச்ச வ்யபநீயதாம்
    காரணம் யேந பாணோயம் நமயா ஸ விஸர்ஜ்ஜித:-அலங்காரேண வேஷேண ப்ரமாணேம்
    கதே நச த்வம் ச ஸுக்ரீவ வாலீச ஸத்ருசெள ஸ்த: பரஸ்பரம்||| ஸ்வரேண வர்சஸாசைவ ப்ரேக்ஷித ந விக்ரமேண ச வாக்யைச்ச யக்திம் ச வாநர வாம் நோபலக்ஷயே ததோரஹம் ரூப ஸாத்ருச்யாத் மோஹிதோ வாநரோத்தம நோத்ஸ்ருஜாமி மஹா வேகம் சரம்-என்பதாம்

    இவற்றின் வெளிப்படையான பொருள்:
    ஸுக்ரீவா ! ஒப்பனையிலும், வடிவ அமைப்பிலும். உயரத்திலும், நடையிலும்,குரலிலும், தேஜஸ்ஸிலும், பார்வையிலும், பராக்ரமத்தி லும்,வாக்கியங்களிலும் நீயும் வாலியும் ஒருவரை ஒருவர் ஒத்திருக்கிறீர்களாகையினால், உங்கள் இருவருள், ‘இன்னவன் வாலி ; இன்னவன் ஸுக்ரீவன்’ என்பதை என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை. இந்த ஸந்தேஹத்தில் நான் பாணத்தை விட்டால், அது ஒருகால் உன்மேல் பட்டு, ஆபத்து நேருமோ என்று அஞ்சி, நான் வாளா இருந்து விட்டேன்” என்பதாம்.
    இவ்வெளிப்படைப் பொருளை இங்குக் கொள்ளுதற்குப் பொருத்தம் உண்டா? என்பதுதான் நாம் ஆழ்ந்து கவனிக்கத்தக்க தாம். பேரறிவாளனான இராமபிரான் ஸு க்ரீ வனுக்கும் வாலிக்கும் உள்ள வேற்றுமையை உண்மையில் உணர இயலாதோ? உணர வில்லையோ? அல்பம் அறிவுள்ளவன் கூட ‘அடி படுபவன் ஸுக்ரீவன்; அடிப்பவன் வாலி’ என்பதை எளிதில் அறியக்கூடியதை, என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை’ என்று இராம பிரான் இயம்புகின்றனனே,இது பொருந் துமோ? இதில், நம் ஆசாரியர்களின் திருவுள்ளக் கருத்தைக் கூறுவோம். இங்கு, முதலில், பின் கூறப்பெறும் உண்மைஉணரத்தக்கதாம்.
    பரமபுருஷன், சேதனனை நோக்கி, நீ,என்னி டத்தில் உனக்குள்ள அன்பை என் அன்பர்
    பால் என்றும் வைத்திரு; அங்ஙனம் என் அன்பர் பால் அன்பைச் செய்யாது இருப்பின்,
    அவர் திறத்தில் அபராதத்தைச் செய்தவனா வாய்; அதனால், உனக்கு மாத்திரம் அழிவு உண்டாம் என்று எண்ணாதே,உன்னோடு தொடர்புற்ற இப்பிரபஞ்சமும் அழிந்துவிடும்’ என்று அருளிச் செய்திருக்கின்றான்- -(யா ப்ரீதி: மயி ஸம்வருத்தா மத்பக்தேஷு ஸதாஸ்துதே 1 அவமானகரியா தேஷாம் ஸம்ஹரத் யகிலம் ஜகத் !! )என்னும் பரமபுருஷன் திருவாக்கு அனுபவிக்கத் தக்கது. இங்கு
    இதனால், நாம் ஓர் உண்மையை உணர லாம்: ஒரு சேதனன் எம்பெருமானை முறை வழுவாது பற்றியிருப்பினும், தான் கோரின் பயனைப் பெறும்போது, அவன் அடியார் திறத்து அபராதம் சிறிதும் இல்லாது இருத்தல் இன்றியமையாததாகும்.இவ்வாறு அப ராதம் பெற்றிருப்பின், பயனைப் பெற இயலாது. சரணாகதி தருமத்தை நாம் உணரும் போது, ”பரமனடியார் திறத்து அபராதம் சிறிதும் இன்றியிருத்தல், ஒரு முறை என்ப தையும் உணரல் வேண்டும்.-இவ்வுண்மைக் கருத்தை மனத்தில் கொண்டு,ஸு க்ரீவன் வரலாற்றை ஆராய்தல் வேண்டும்! ஸுக்ரீவன் இராமபிரானி டத்து மிக்க அன்புள்ளவன் என்பது மெய்யே. ஆயினும், இலக்குமணனிடம் எங்ஙனம் அன்பு காட்டுதல் வேண்டுமோ, அங்ஙனம் காட்டினா னில்லை : இராமபிரானும் ஸுக்ரீவனும் அக்னி ஸாக்ஷியாய்த் தோழமை கொள்ளுகிறார்கள். அவ்வாறு தோழமை கொண்டபின், ஸுக்ரி வன். இலையும் பூவும் நிரம்பியிருக்கும் ஒரு மரத்தின் கிளையை ஒடித்து, பூமியின் மேலே போட்டு, அதின் மேலே இராமபிரானுடன் உட்கார்ந்து கொண்டு,அப்பெருமானிடம் தன் குறை ைப் போக்குமாறு வேண்டிக் கொள்கிறான். இவ்வாறு, ஸுக்ரீவனும் இராம பிரானும் இலையும் பூவும் நிரம்பியிருக்கும் கிளையில் பல ஸமயங்களில் உட்கார்ந்து ஒருவ ருடன் ஒருவர் பேசிக் கொண்டிருந்ததாய்ச் சரிதம் கூறப் பெற்றிருக்கிறது. ஆனால், ஒரு ஸ்மயமாவது, இலக்குமணனை ஸுக்ரீவன் இவ்வாறு ஆஸனம் கொடுத்து உபசரித்ததாய் இராமாயணத்தில் கூறப் பெற்றிலது.-(தத : ஸ ப ணப ளாம் சித்வா சாகாம்
    ஸுபுஷ்பிதாம் ஸாலஸ்யாஸ்தீர்ய ஸுக்ரீவ: நிஷஸாத ஸராகவ: II லக்ஷ்மணாயாத ஸம்ஹ்ருஷ்ட:ஹநுமான் பலவகாஷப: சாகாம் சந்தனவர்க்ஷஸ்ய ததெள பரம்
    புஷ்பிதாம் II)-என்பனகாணத் தக்கன ) ஸுக்ரீவனுடைய இச்செயலைக் காணுங்கால், இலக்குமணனிடம் அன்பில்லை; அபராதம் உண்டு’ என்பது நன்கு விளங்குகின்ற தன்றோ? இச்செயலை இராமபிரான் கண்கூடாகக் கண்டவனாதலின், முதலில் ஸுக்ரீவனும் வாலியும் போர் புரியுங்கால், வாலியை அடிக்க அவன் திருவுள்ளம் இசையாது இருந்தது-பின்பும், ஸுக்ரீவன் தன் செயலை உணர்ந்து, இலக்குமணனிடம் எங்ஙனம் அன்புகாட்டுதல் வேண்டுமோ, அங்ஙனம் காட்டின தாய்க்ாணப் பெற்றிலது . ஆனாலும், தன்னைப் பற்றினாரை அடியாருடைய அபிமானத்திற்குப் பாத்திரமாக்கிக் காரியம் செய்வது என்பது பரமபுருஷனுடைய ஓர் உயரிய முறையாம். இம்முறையைத் திருவுள்ளம் பற்றி, ஸுக்ரீவனுடைய கழுத்தில் இலக்குமணன் திருக்கைகளால் அடையாளமாய்
    க புஷ்பி மாலையைப் போடச் செய்யும் முகத்தால், அந்தப் பாகவதோத்தமனுடைய அன்
    புக்கு இலக்காக்கி, வாலியை இரண்டாம் போரில் கொன்று, ஸுக்ரீவனுக்கு, அவன்
    கோரின பயனை அளித்திருக்கின்றான், இராமபிரான்.-கருதாபி ஞா நசிஹ்நஸ் த்வம் அநயா கஜஸாஹவயா லஷ்மணே ந ஸமுத்பாட்ய யைஷா கண்டே க்ருதா தவ Il
    என்னும் வார்த்தை அனுபவிக்கத் தக்கது.

    இதுகாறும் கூறிய ஸுக்ரீவன் வரலாற்றில், ஆழ்ந்து, ஆராய்ந்து காணும் போது,
    “வெளிப்படையான பொருளில் உண்மை நோக்கு இன்று; உள்ளுரை பொருளிலேயே
    உத்தமனுடைய உக்திக்கு நோக்கு உண்டு என்று எங்ஙனம் அறிகின்றோமோ, அங்ஙன மே, பரத சரணாகதிப் பகுதியில் அமைந்துள்ள புருஷோத்தமனுடைய,“மாதரம் ர கை
    கேயீம்” ஆஞாதம் யந்மயா தஸ்ய” ” உத் திஷ்ட த்வம்” என்னும் உக்திகளுக்கும்,
    ”வெளிப்படையான பொருளில் நோக்கு இன்று; உள்ளுறை பொருளிலேயே நோக்கு “
    என்பதை நாம் அறிதல் அவசியமாகும்.
    ஆகவே, பரதன் இராமபிரானை முறை யுடன் பற்றியிருந்தும் அப்பற்றுதல், அந்த
    இராமபிரான் திருவுள்ளத்திற்குப் பாங்காயிராமையின், பயனற்றதாம் என்பதைக்
    கண்டோம். இப்பொருளை தேசிகன் திருவாக் கிலும் அனுபவிப்போம்.-(ராமே ராஜ்யம் பிதுரபிமதம் ஸம்மதம்ச ப்ரஜாநாம் மாதா வவ்ரே ததிஹ பரதே ஸத்யவாதி ததௌச 1 சிந்தாதீத: ஸம நி ததா பாதுகாகர்யாபிஷேக : துர்விஜ் ஞா நஸ் வஹ்ருதய மஹோ தைவமத்ர ரமாணம்)-என்பதே அத்திருவாக்காம்.
    இத்திருவாக்கின் கருத்து : “தசரத சக்ரவர்த்தி, இராமபிரானுக்கு முடி சூட்டி,
    இராச்சிய பாரத்தை அப்பரமபுருஷனிடத்தில் வைக்க விரும்பினான். அச்சகரவர்த்தி
    கொள்கையை மக்கள் அனைவரும் ஒரு முகமாக விரும்பினார்கள். அச்சக்ரவர்த்தி மஹிஷியான கைகேயி, பரதனுக்கு முடி சூட்டி இராச்சிய பாரத்தை அவனிடம் வைக்க வரம்
    கேட்டாள். ஸத்திய வாதியான சக்கரவர்த்தி யும் அங்ஙனம் அளித்தான். ஆனால், சக்ர
    வர்த்தி கோரியவாறு இராமபிரானுக்கும்,கைகேயி கோரியவாறு பரதனுக்கும் திரு அபி
    ஷேகம் நடைபெறாது . ஒருவரும் ஒரு காலும் எண்ணாதிருக்க, திருவடி நிலைகளுக்குத் திருவபிஷேகம் நன்கு நடந்தது. இதற்குக் காரணம் எம்பெருமானுடைய ஸங்கல்பமேயாம்” என்பதாம்.
    இத்திருவாக்கில், இராமபிரான் திரு அயோத்திக்கு எழுந்தருளி முடி சூட வேண்டும்’ என்னும் பரதன் விருப்பம் சப்தத்தில் தெளிவாய்க்கூறப்பெறாதது ஒருவாறு உண்மையேயானாலும், கூறப் பெற்றிருக்கிறதாகவே கொள்ளுதல் பொருத்தமுடைத்தானதாம். சக்ரவர்த்திக்கும் மக்களுக்கும்) இராமபிரானுடைய திருவபிஷேகம் எங்ஙனம் இஷ்டமோ ; அங்ஙனமே அதுதானே பரதனுக்கும் இஷ்டம் அது தைவமாகிய இராமபிரானுக்குத் திருவுள்ளமில்லாமையால் உண்டாகவில்லை.
    இத்திருவாக்கையும், இதின் கருத்தையும்அனுபவிப்போர்க்கு, இராமபிரான் திரு
    வுள்ளமில்லை. அதனால், பரதன் கோரியதுநிறைவேறவில்லை’ என்பது நனகு விளங்கு
    மன்றோ?
    இதுவரையில், கூறிய வற்றால் “எம்பெருமான் சிறந்த தருமம்” என்பதும், “அவ்வெம்
    பெருமான் சேதனனுடைய வேண்டுதலையும். இச்சேதனன் தன்னைப் பற்றும்போது.பெரிய
    பிராட்டியாரை முன்னிடு தலையும் வேண்டு கின்றனன்” என்பதும், இச்சேதனன் அவ்
    எம்பெருமானைப் பற்றும்போது,அப்பற்றுதல் அப்பெருமான் திருவுள்ளத்திற்குப் பாங்கா
    யிருக்க வேண்டும்” என்பதும் இராமாயணத்திலேயே ஒருவாறு அறியப் பெற்றுள்ளன
    அல்லவா? இனி, இவ்வாறான தருமம் இராமாயணத்தில் நிலை நிறுத்தப் பெற்றிருக்கும் இடத்தைக் காண்போம் :
    ஆனால் “தருமம் இருவகைப்படும். இச் சேதனன் முயன்று செய்யும் போது, உண்டா
    வது ஒன்று. எப்போதும் உள்ளது மற்றொன்று.எம்பெருமான் என்றும் உள்ளதொரு மிகச்
    சிறந்த தருமம்” என்று முன்னமேயே கூறி யிருந்தோம்.

    இக்கருத்தை மனத்தில் கொண்டு நோக்குவார்க்கு, “சேதனன் முயன்று செய்யும்
    போது, உண்டாகும் தருமம், நாள் செல்லசெல்ல சிறிது அழிவு பெறலாமாதலின்,
    அத்தருமத்தை நிலை நிறுத்துதல் என்பதற்குப்பொருள்உண்டு; என்றும் எங்கும் உள்ள எம்
    பெருமானாகிய தருமத்தை எம்பெருமான் திருவவதாரம் செய்து, நிலை நிறுத்துவதாவது
    என்?” என்னும் ஐயம் எழக்கூடும். இவ் ஐயத்திற்கு ஸமாதானத்தை இராமாயணத்தில்
    விபீஷண சரணாகதிப் பகுதியில் நன்கு காணலாம். ஆதலின், விபீஷண சரணாகதிப் பகுதி
    யில் அமைந்துள்ள வரலாற்றையும், ஸாரப் பொருள்களையும் மிக விரிவின்றி, அனுபவிப்
    போம்.
    இராமபிரான், கடற்கரையில் வானரவெள்ளங்களுடனும், ஸுக்ரீவன் இலக்கு
    மணன் இவர்களுடனும் எழுந்தருளியிருக்கும் தருணம். அத்தருணம், இலங்கையில், இரா
    வணன், தனக்கு நன்மையைக் கூறின விபீஷணனைப் பலவாறாக நிந்திக்க, அந்நிந்தனையைப்  பொறாது, அவ்விபீஷணன், கதையைக் கையில் உடையவனாய் நான்கு இராக்கதருடன் ஆகாசத்திலே கிளம்பி, வடகரையை அடைந்து, ஆகாசத்திலேயே தஙகியிருக்க, அதைக் கண்ட எல்லா வானரர்களும், இராவணன் தம்பியாயிருத்தலாலும், இலங்கையின் நின்றும் வந்திருத்தலாலும், இவ்விராக்கதரால், எம்பெருமானுக்கு என்ன தீங்குநேரிடுமோ?’ என்று தம் அன்பு நிலைக்கு ஏற்பஅஞ்சி,அவ்விராக்கதரை அழிக்கக் கருதி, தம் கைகளில் மரங்களையும் மலைச்சிகரங்களையும் வைத்துத் தயாராயிருக்க, அவ்வானரர்களின் அந்நிலையைக் கண்கூடாகக் கண்டிருந்தும், அவர்களின் இராமபக்தியைப் புகழ்ந்து, அவ் வானரர்கள் முன்னாக இராமபிரானைப் பற்றுகையே முறையாம்’ என அறுதியிட்டு, அங்ஙனம் அறுதியிட்டவாறே, அவ்வானரர்களை வெகு மதிப்புடன் முன்னிட்டு முறை வழுவாது இராமபிரானைப் பற்றியிருக்கின்றான், விபீஷணன்” என்னும் வரலாறு முதலில் இங்கு அறியத்தக்கதாம்.-இவ்வாறு இராமபிரானை விபீஷணன் பற்றுங்கால், அவ்விபீஷணன் கூறிய வார்த்தைகளாவன :

    1. ராவணோ நாம் துர்வ்ருத்த : ராக்ஷ ோராக்ஷஸேச்வர : 1 தஸ்யாஹம் அநுஜோ ப்ராதா விபீஷணஇதி சருத : 11
    2. தேந ஸீதா ஜனஸ்தாநாத் ஹ்ருதா ஹத்வா ஜடாயுஷம் ருத்தா ச விவசா தீநா ராக்ஷ பிஸ்
    ஸூரக்ஷிதா!
    3. தமஹம் ஹேதுபி: வாக்யை: விவிதைச்ச ந்யதர்சயம் ஸாது நிர்யாத்யதாம் ஸீதா ராமாயேதி.
    4. ஸச ந ப்ரதிஜக்ராஹ உசயமாநம் ஹிதம் ராவண : கால சோதித : 1
    வாக்யம் விபரீத இவெளஷதம்பு
    5. ஸோஹம் பரு தஸ் தேந தாஸவச் சாவமாநித : த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச ராகவம்
    சரணம் கத: 11
    6. ஸர்வாபாலோக சரண்யாய ராகவாய மஹாத்மநநிவேதயத மாம் ப்ரம் விபீஷணம் உபஸ்திதம் 1 )

    இவற்றின் கருத்து : (I) (”எம்பெருமானைப் பற்றுவோன், தன் குற்றங்களைக் கூசாது கூறிப்பற்றக் கடவன்’ என்னும் முறையைக் கைக்கொண்ட) விபீஷணன், “இராமபிரானுக்கே உரியவனாய் இருத்தல் இன்றி, எல்லா உலகங்களையும் கதறிக் கூப்பிடுமாறு செய்பவனும், இங்ஙனம் கொடியோன்’ என ப்ரஸித்தி பெற்றிருப்பவனும் கெட்ட நடத்தை உடையவனும்
    இராக்கதனும், இராக்கதர் அனைவர்க்கும் ஈச்வரனுமான இராவணனுக்கே உரியவனாயிருந்து, இதுவரையில் தொண்டு செய்து போந்தவன்; அவன் எக் குடலில் பத்து மாஸம் இருந்து பிறந்தனனோ, அக்குடலில் பத்து மாஸம் இருந்து பிறந்தவன்; எல்லோரையும் நடுங்கச் செய்பவனாயிருத்தலின் ‘விபீஷணன்’ என்று எங்கும் ப்ரஸித்தி பெற்றிருப்பவன்,-நான்” (சுருங்கச் சொல்லின், இராவணனுக்கு அவனுக்குரிய குற்றங்கள் மாத்திரம் உண்டு; எனக்கு எனக்குரிய குற்றங்களும், அவன் தொடர்பினாலாகிய குற்றங்களும் உண்டு ஆதலின்,என் குற்றம் அதிகம்) என்கிறான்.

    (2) மேலும் அவ்விபீஷணன் கூறியதாவது: ”அவ் இராவணன், (திரு அயோத்தியில் இருப்பு சிறை என்னலாம் படி, அனுபவத்திற்கு மிகவும் பாங்கான) ஜனஸ்தானத்தினின்றும், உயிரையும் உடலையும் பிரிப்பது போன்று, ஸீதா பிராட்டியாரையும் இராமபிரானையும் பிரித்து, அவ்இராமபிரானுக்கு உயிரான ஜடாயுவையும் கொன்று, தன் அசோகவனிகையில், அந்த ஸீதா பிராட்டியாரைக் கொணர்ந்து வைத்து, எங்கும் போகவொட்டாது,-அரக்கிமாரைக் காவலாய் வைத்தவன் அங்ஙனம் ஸ்தா பிராட்டியார் திறத்திலும் ஜடாயு பக்கலிலும், அளவிறந்து அபராதத்தைச் செய்தவனாகிய இராவணன் பின் பிறந்தவன், நான்” என்பதாம்.
    (3) அன்றியும், அவ்விபீஷணன் செப்பியதாவது : “இர வணா! நீ. இராமபிரானுக்கே உரியவராகிய அந்த ஸ்தா பிராட்டியாரை, அவ் எம்பெருமானிடம் திரும்பவும் கொணர்ந்து போய்ச் சேர்த்துவிடு’ என்றும், ”நான் கூறியவாறு செய்யாவிடின், நீ அழிந்து விடுவாய்” என்றும்,அவனுக்கு அடிக்கடி அறிவித்தேன்'” என்பதாம்.-

    (4) இன்னமும் “நோய்வாய்ப் பட்டு, சாகக் கிடக்கிறான் ஒருவன், மருந்தை எங்ஙனம் எடுத்துக் கொள்ள மாட்டானோ,அங்னமே, யமனால் தூண்டப்பட்ட அவ் இராவணன், நான்கூறிய ஹித வசனத்தைச் செவிதாழ்த்தும் கேட்கவில்லை’ என்றும் கூறினான்,-விபீஷணன்.
    (5) இன்னும்,விபீஷணன் பகர்ந்ததாவது : “என் ஹித வசனத்தைச் செவி தாழ்த்துக் கேட்கவில்லை ” என்பது மாத்திரமே அன்று. ஹித வசனத்தைக் கூறியதே காரணமாக அவனும். அவனைச் சேர்ந்தாரும் என்னை அவமதித்தனர். ஆதலின், என் மனைவிமாரையும், புத்திரர்களையும், விட்டிட்டுஇராமபிரானைத் தஞ்சமாகப் பற்றினேன், நான்” என்பதாம்.
    (6) இவ்வாறு கூறி, பின்னும் அவ்விபீஷணன் வேண்டிக்கொண்டதாவது :
    ‘வானரர்களே !எம்பெருமான் எந்தச் சேதனனைக் காக்கத் திருவுள்ளம் பற்றுகின்றனனோ அந்தச் சேதனனே புண்ணியனாவான்.அவ் எம்பெருமானாகிய இராமபிரான், இவ்விபீஷணனைக் காக்கத் திருவுள்ளம் பற்றுவானாயின், இவனுக்கு நன்மை உண்டாம். அந்நன்மைநான் பெற்றேனாக வேண்டும்.-அங்ஙனம் நன்மை பெற்றேனாதற்குச்
    செய்ய வேண்டுவது யாதோ? எனின், மிக்க ஆர்த்தியுடன் இலங்கையினின்றும் இங்கு வந்
    திருக்கும் இவ்விபீஷணனை இராமபிரானுக்கு அறிவித்தல் வேண்டும். நீங்கள் என் வரவை அறிவிக்குங்கால் ” இராமபிரானுக்கு இவ்விபீஷணன் தொண்டுடனாதல் நன்றாம்” என்னும் எனக்குள்ள இந்த ருசி மாறுவதற்கு முன் வெகு சீக்கிரமாக அறி வித்தல் பயனுற்றதாகும். என்னை அவ்இராமபிரான், திருவுள்ளம் உவந்து ஏற்றுப் பணி கொள்ளுமாறு செய்தல் உங்களுக்குப் பணியாம். அப்பிரான் ஏற்றுப்பணி கொண்டு உவத்தல், அவன் தனக்கு உற்ற தாகும். நீங்கள் இச்சேதனனைப் பரமன் உவந்து ஏற்குமாறு செய்யுமவர்களா யிருக்கின்றமை யின்,அங்ஙனம் செய்யாதபோது, உங்கள் நிலை உங்களைவிட்டு அகன்றொழிந்து விடுமன்றோ? ஆத ன், உங்களுக்கு அழிவுஉண்டாம்.
    அப்பெருமான், நீங்கள் என் வரவை அறிவித்த பின்பும், அவன் கூவுதல் வருதல் செய்யாதும், என்னைத்திருவுள்ளம் உவந்து ஏற்று, அடிமை கொள்ளாதும் இருப்பின்,அப்பரமன்
    தன் நிலையினின்றும் தவறியவனாவானன்றோ ?
    எம்பெருமானிடம் பேரன்பு பெற்றிருக்கும் உங்களையும், அவ் எம்பெருமானையும் உவப்பித்தல், தொண்டனான என் நிலைக்கு ஏற்றதும், இன்றியமையாததுமாம். அங்ஙனம்
    உவப்பியாது யான் இருப்பின், அஃது என்நிலைக்கு அழிவை விளைக்குமன்றோ ? உவப்பியாது இருத்தலே அழிவை விளைக்கும் என்னும் போது, உங்களையும், அவ் எம்பெருமானையும் உங்களுக்கும் அவனுக்கும் உரிய அந்த அந்த நிலையில் நின்றும் நழுவச் செய்யும் முகத்தால் அழிப்பேனாயின், என் கதிதான் என்னாகும் ?
    ஆதலின், நீங்கள் என் வரவை சீக்கிரம் அறிவிக்கும்போது, உங்களுக்கு நன்மையுண்டு.
    அப்பரமன் என்னை ஏற்று அடிமை கொள்ளும் போது, அவனுக்கு நன்மை உண்டு; நான்
    உங்கள் ஓலக்கத்தில் ஒருவனாகக் கலந்திருந்து உங்களைப்போல் அடிமை செய்யும்போது.
    எனக்கும் நன்மை உண்டு. இவ்வாறு எல்லாரும் நன்மை பெற்றுவாழுமாறு நீங்கள் என்
    வரவை அறிவித்தல் நன்றாம் எல்லா உலகங்களையும் காக்கும் பரமனன்றோ? அவ்வெல்ல உலகங்களிலும் யானும் ஒருத்தனன்றோ ? அவ்எம்பெருமான் நீர்மைக்கு ஆகாதாரும் உண்டோ ? இராவணன் தம்பியும் சத்துருவுமான உன்னைஎம்பெருமானிடம் அறிவிக்கையாவது என் ? என்னாதீர்கள். [இவ்வுலகத்திலுள்ளாரனைவரும்.ஒன்றுசேர்ந்து எதிர்த்தாலும் அறப் பெரியோ னாகிய அப்பரமனுக்கு, பொல்லாங்கு சிறிதும் உண்டாதற்கு இடமுண்டோ? சரணம் பற்றினாரைக் காக்கும் குடியில் திருவவதாரம் செய்த மஹாத்மாவன்றோ? அப்பரமன்.அவன் பொருட்டு எல்லோருக்கும் நன்மை உண்டாமாறு அறியுவிங்கோள்” என்பதாம்.-அங்ஙனம் விபீஷணன் அறிவிக்குங்கால் இராமபிரான் பக்கலில் பொங்கும் பரிவு பெற்றிருப்பவனான ஸுக்ரீவன், மேற்கூறிய விபீஷணன் வார்த்தையைக் கேட்டு, மிக்க பரபரப்புடன், அப்பெருமானைக்கிட்டி, ஒரு வார்த்தை
    விண்ணப்பம் செய்து கொண்டனன்.
    ”திரு அயோத்தியை விட்டுப் போந்து அநேக நாளாயிற்றே? ராஜ நீதியை மறந்ததோ? இவ்விடம் இலங்கைக்கு மிகவும் அண்ணியதன்றோ ? இராவணன் அநீதிகள் அறியவில்லையோ? ஒருவன் ‘சரணம்’ என்னும் சொல்லைச் சொல்லும்போது, இவற்றை
    மறந்து விடலாமோ?-வத்யதாம் ஏஷ தீவ்ரேணே தண்டேநஸசி வைஸ்ஸஹ | ராவணஸ்ய ருசம்ஸஸ்ய ப்ராதாஹ் யேஷ விபீஷண 1-இவனை கட்டியிட்டு வைத்தல்; மாரீசனைப்
    போன்று,வரும் காலத்தில் துன்பம் விளைக்கும்படி தொடுத்த அம்போடே விடுதல் செய்யக்
    கடவோமல்லோம். கொன்றே விடுவோம். அங்ஙனம் கொல்லும் போது, முதலிலே தேவரீரை நலிகைக்குக் கூட்டுப்படையாய் வந்த இந் நால்வரையும் தலையறுத்து, இவன்கையிலே கொடுத்துப் பின்பு இவனைக் கொல்லக் கடவோம். இவன் இராவணன் உடன்பிறந்தவனன்றோ ? அவ் இராவணன்,பெற்றதாயையும் தமப்பனையும் சேர இருக்கப்
    பொறாதவனன்றோ ? உடலையும் உயிரையும் பிரித்தது போன்று, என்றும் விட்டகலாத
    ஸீதாபிராட்டியரையும் எம்பெருமானாகிய தேவரீரையும் கடல் ஒரு புறமும் மலை ஒரு
    புறமுமாக்கின பையலுக்கு, இவன் ஓர் அவயவம் என்று சொல்லலாம் படி அண்ணியனன்றோ?” என்பதே அந்த ஸுக்ரீவன் கூறியஅவ்வார்த்தையாம்.

    இவ்வார்த்தையைத் திருச் செவியேற்ற இராமபிரான், வானரர்களை நோக்கி, கூறிய
    தாவது :வானரர்களே! இவ்விபீஷணன், இராவணன் தம்பியாதலின், இவன் நம்முடன் சேரத்
    தகுதியற்றவன்; அங்ஙனம் சேரத் தகுதியற்றமைக்குத் தகுந்ததும், யுக்தியோடு சேர்ந்ததும், எல்லோரும் விரும்பத் தக்கதும் இனியதுமான ஸுக்ரீவன் வார்த்தையை நீங்கள் கேட்டீர்களன்றோ? இவ்விபீஷணனை நாம் ஏற்றுக் கொள்ளுமிடத்து, உங்கள் கருத்து யாதோ? கூறுமின்’ என்பதாம்.-இராமபிரானுடையமேற்கூறிய வார்த்தையைக் கேட்ட வானரர்கள் அனைவரும், விபீஷணனை ஏற்றுக் கொள்ளுதல் முறை என்னில், ஸுக்ரீவ மஹாராஜருக்கும் கலக்கம் உண்டாம்; ‘அங்ஙனம் ஏற்றுக் கொள்ளுதல் முறையன்று’ என்னில், இராமபிரானுக்குத்திருவுள்ளம் கலங்கும்; இவ்விருவருக்கும் பரதந்திரமான நாம் ஒன்றும் கூறுதற்கு இல்லை என்று மெளனமாயிருந்தனர்.-அங்ஙனம் மெளனமாயிருக்கும் வானரர்களை நோக்கி, இராமபிரான் அருளிச் செய்த-வார்த்தையாவது 🙁 ஹ்ருதாஹ்யர்த்த க்ருச்ச்ரேஷ யுக்தம் புத்திமதா ஸதா ! ஸமர்த்தேநாபி ஸந்தேஷ்டும் சாச்வதீம் பூதிமிச்சதா ||
    என்பதாம்.-இவ்வார்த்தையின் கருத்துப் பின்வருமாறு :
    வானரர்களே! நம்மைச் சரணம் பற்றியிருக்கும் விபீஷணன், தன்னை நாம் ஏற்றுக் கொள்ளாது ஒழியில் பிழையாதாயினாயிருந்தான்; இவ்விபீஷணனை நாம் ஏற்றுக் கொள்ளில், உங்கள் மஹாராஜர் பிழையாதாராயிருந்தார். சரணம் பற்றி யவனை ஏற்றுக்கொள்ளுதலும், நம்மிடம் பொங்கும் பரிவுபெற்றிருக்கும் மஹாராஜர் கூறியதைக்
    கேட்டு நடத்தலும் நமக்குச் சிறந்த நன்மைகளாகும். சரணம் பற்றி யவனை விட்டிட்டால், இரகு குலத்திலே பிறந்த இராமன் சரணம் பற்றியவனைக் கைவிட்டு விட்டான்’என்பர். மஹாராஜர் கூறியதைச் செய்யாவிடின், ‘தன்னைப் பற்றினாரிடம் பரதந்திரனாயிருக்கும் இராமன் க்ரீவ மஹாராஜர் கூற்றுச் செய்தான் இல்லை’ என்பர்.-இவ்வாறு இரண்டையும் செய்தேயாக வேண்டியிருந்தும், ஒன்றுக் கொன்று முரண்பட்டவைகளாயிருத்தலின், செய்வதா ? அல்லது செய்யமாட்டாது விட்டிடுகின்றதா?என்று தபிக்கும் நிலையில் இருக்கும் எனக்கு,’இது செய்யத்தக்கது; இது செய்யத் தகாதது’ என்னும் பகுத்தறிவு பெற்றிருப்பாரும்,
    நினைத்ததை நடத்தவல்ல ஆற்றல் பெற்றிருப்பாரும், அழியும் பொருளில் கண்வையாது. அழிவற்ற செல்வத்தைவிரும்புவாரும், நொந்தாரைக் கண்டால் பொறுக்கமாட்டாது, ஐயோ !என்றிருப்பாரும் உத்தமஸ்நேஹிதரும் ஆன நீங்கள், என் தாபம் நீங்குமாறு,ஆராய்ந்து சொல்லுதல் பொருத்தமன்றோ? கூறுமின்.”
    மேற்கூறிய வார்த்தையில் அமைந்துள்ள‘சாச்வதீம் பூதிம் இச்சதா” என்னும் பகுதி)
    இங்கு ஆழ்ந்து நோக்கத்தக்கதாம். இப்பகுதியில் விளங்கும் இராமபிரானுடைய திருவுள்ளக் கருத்து வெகு அழகானதாம். அக்கருத்தாவது : ”உங்கள் மஹாராஜர், நம் சரீரத்திற்கு இராவணன் தம்பியான இவ்விபீஷணனால் என்ன தீங்கு நேரிடுமோ? என அஞ்சுகிறார். இச்சரீரம் என்றும் அழியாது இருக்கும் செல்வம் அன்று .சரணம் பற்றியவன்,யவரேனும் ஆகிலுமாம்; அவரை விட்டிடாதுகாக்கும் போது, உண்டாம் புகழுடம்பு ஒருநாளும் அழியமாட்டாதன்றோ? நீங்கள் கூறும் கூற்று, நமக்கு நிலைநின்ற புகழுடம்பு உண்டாமாறு இருத்தல் வேண்டும்” என்பதாம். மேற்கூறிய கருத்துக்களைக் காணுங்கால், ‘என்றும் உள்ள எம்பெருமானாகிய தருமத் திற்கும் ஒருவாறு சலனம் ஏற்படும் இடம்-உண்டு” என்பது நன்கு விளங்குகின்ற தன்றோ?
    இராமபிரான் விபீஷணனை விட்டிடாது காப்பானாயின், அப்பிரானை விட்டு, தருமத்தின்
    தன்மை(பற்றினாருக்கு நன்மையை அளிப்பவனாயிருக்கை) அகன்றொழியாது. ஸுக்ரீவன்
    பொங்கும் பரிவினால் மிகக் கலங்கி, “விபீஷணனைக் காக்கல் ஆகாது ; கொன்றே தீரவேண்டும்’ என்று கூறும் கூற்று, தருமமாகிய இராமபிரானையே ஒருவாறு அழிக்கத் தேடு கிறதன்றோ?-இங்கு இராமபிரான், தானாகிய தருமத்தை அழிவுக்கு இடம்கொடாது, நிலைநிறுத்தும் பரிசு யாதோ? எனின், தன்னைப் பற்றி னார்,ஒருகாலும் தன் எண்ணத்தைப் பின்செல்லாது இரார் ; அங்ஙனம் பின் செல்லாது ஒரு ஆச்ரிதன் இருப்பின், அவ்வாச்ரிதனுடைய (தன்னைப் பற்றினவனுடைய) மனக்கலக்கத்தை ஏனைய ஆச்ரிதரால் மாற்றி, அவனைத் தன் வயப்படுத்தி, தன்னைத் தன்னிலையின் நின்றும் நழுவவிடாது, தன்னை நோக்கி அருளுவதே, அவன் தன்னை நிலைநிறுத்தும் பரிசாம். இதுவே, இராமபிரான் திருவவ தாரம் செய்து செய்யும் முக்கியமான தருமஸ்தாபனமாம்.(தருமத்தை நிலை நிறுத்தலாம்.)-இந்த ” ஸுஹ்ருதா ” என்னும்வார்த்தை கூறுகிறவாறு இராமபிரான் வானரர்களை நயமாகக் கேட்க, அவ்வானரர்கள் அனைவரும்தம் கொள்கையை அறிவித்துக் கொள்ளுதல் இயலாதாதலின்,அங்கதன், சரபன்,ஜாம்பவான், மைந்தன் ஹநுமான் இவ் ஐவரும் ஒன்று சேர்ந்து, ஒரு குழாமாயிருந்து, அவ் இராமபிரானுடைய ஸன்னிதியில், அவன் நன்மையையே நினைந்து, வேறிடத்தில் எண்ணத்தை விட்டிட்டு, தன் தனக்குரிய கொள்கையைத் தனித் தனியே விண்ணப்பம் செய்து கொண்டதாய் இங்கு வரலாறு அறியத் தக்கது.-அங்கதன் கூறிய வார்த்தையும்,அதின் கருத்தும் வருமாறு 🙁அர்த்தாநர்த்தெள விந்ச்சித்ய வயவ ஸாயம் பஜேத ஹ குணத : ஸங்க்ரஹம் குர்யாத்
    தோஷ தஸ்து விஸர்ஜ்ஜயேத் என்பது அவ்-வார்த்தையாம்.
    “இராமபிரான் தன்னைத் தஞ்சமாய்ப் பற்றியிருப்பவனை விட்டிடாதவன். ஸுக்ரீவன் விபீஷணனைக் கொல்ல வேனும் என்று இருப்பவன். இவ்விருவருடைய இவ்விரு
    கொள்கைகளுள் ஒன்றை விட்டு ஒன்றைக்கொள்ளும்போது,வீபீஷணனுடைய நிலைமைகளை நன்கு ஆராய்ந்து காணுதல் அவசியமாகும். அங்ஙனம் ஆராய்ந்து காணும் போது, குற்றமிருப்பின், விபீஷணன் விடத்தக்கவனாம்.-மிக்க குணம் பெற்றவனாயிருப்பின்,விபீஷணன் கொள்ளத்தக்கவனாம்.ஆதலின், விபீஷணனைப் பற்றி ஆராய்தல் மிக முக்கியமானதாம்” என்பதே அவ்வார்த்தையின் கருத்தாகும்.
    இவ்வாறு அங்கதன் கூறிய பின்பு,சரபன் தன் கொள்கையை, “புருஷர்களுள் மிகச்
    சிறந்தவ னே ! இவ்விபீஷணனனுடைய, நடத்தை நன்கு நமக்குத் தெரியாதாகை
    யால், அதை அறிகைக்கு, முந்துறத்தூதுவிடவேணும்.-க்ஷிப்ரம் அஸ்மிந் நரவ்யாக்ரசார: ப்ரதிவிதீய தாம் ) என்று கூறியிருக்கிறான்.-இங்ஙனம் சரபன் செப்பிய பிறகு,ஜாம்பவான் கூறியதாவது :
    ” இவ்விபீஷணன் இராவணனிடத்தினின்றும் வந்தவன் என்பது மாத்திரமின்றி வருகைக்குத் தகுதியற்ற இடத்திலும், காலத்திலும் வந்தவன். ஆதலின் யோசிக்கத் தக்கவன்(அதேசகாலே ஸம்ப்ராப்த: ஸர்வதா சங்க்ய தாம் அயம்) என்பதாம்.

    இப்படி ஜாம்பவான் தன் கொள்கையைக்  கூறிய பிறகு, மைந்தன், ” இவ்விபீஷணனை : 
    நம்மோடு சேர்த்துக்கொண்டு, இவன் நன்மை தீமைகளை நன்கறிந்து, அதற்கு ஏற்ப நடந்து
    கொள்ளுவது நன்றாம். “(பாவமஸ்யது விஜ்ஞாயதத்வதஸ் த்வம் கரிஷ்யஸி)” என்று கூறினன்.
    இந்நால்வரும் இவ்வாறு இயம்பிய பிறகு, திருவடி இந் நால்வருடைய கொள்கைகளையும்
    கண்டித்து, தன் கொள்கையை இராமபிரான் ஸன்னிதியில் விண்ணப்பம் செய்து கொண்டி
    ருக்கின்றனன். இங்கு இத்திருவடி வார்த்தையும், அவ்வார்த்தையின் கருத்தும் பின் வருமாறு : ஸுக்ரீவனைக் குறித்து, “தலைவ ஒருவரை வெல்லவேண்டும் என்றாவது, ஒருவ
    ரிடத்தில் அஸுயையினாாவது, நான் பெரி யன்’ என்னும் எண்ணத்தினாலாவது, ஒரு
    பயனை விரும்பி, பக்ஷபாதத்தினாலாவது கூறப் போகிறேனில்லை. இராமபிரானுடைய திருக் குணங்களைக்கண்டு, உண்மையைக் கூறுவேன்” என்றனன், திருவடி.
    இவ்வாறு கூறி, அத்திருவடி அங்கதன் கொள்கைக்குக் கூறியிருக்கும் குற்றமாவது:
    ” இவ்விபீஷணனிடத்தில், குணங்கண்டு ஏற்றுக் கொள்ளுதல்; குற்றங்கண்டு விட்டிடு
    தல்’ என்னும் கொள்கை சிறந்ததன்று.ஏனெனில், இவனை நம் காரியத்தில் ஏவினாலல்லது, இவன் நன்மை அறிய இயலாது ; நன்மையை அறியாமல் ஏவ இயலாது. ஆதலின்,
    இவனை ஆராய்தல் இயலாததாம்.-(ருதே நியோகாத் ஸாமர்த்யம் அவ போத்தும் ந சக்யதே
    ஸஹஸா விநியோகோ ஹி தோஷவாந் ப்ரதிபாதி மா ) என்பதாம்.
    பின்பு, சரபன் கொள்கைக்குச் செப்பியிருக்கும் குறையாவது : “இவ்விபீஷணன் எதிரே நிற்கையால், “தூதனை விட்டு, இவன் நன்மை தீமைகளை அறிந்து, அவ்வறிவுக்கு
    ஏற்ப நடந்து கொள்ளலாம் ” என்னும் கொள்கையும் சீரியதன்றாம்.-(சாரப்ரணிஹிதம் யுக்தம் யதுக்தம் ஸசிவைஸ்தவ அர்த்தஸ்யா ஸம்பவாத் தத்ர காரணம் நோபபத்யதே )என்பதாம்.
    பிறகு, ஜாம்பவான் கொள்கைக்குப் பகர்ந்திருக்கும் புன்மையாவது :
    “இவ்விபீஷணன், இராமபிரானிடம் வருகைக்குத் தகுதியற்ற இடத்திலும்,காலத்திலும் வந்தவன் ” என்னும் மதமும் பொருத்தமுடைத்தன்று. ஏனெனில், இராவணன் மிக்க தமோகுணம் பெற்றிருப்பவனாம், பிறரைத் துன்புறுத்துகின்றவனாம். ஆதவின், விடத் தக்கவனாம். விபீஷணன் அவனை விடாது இருப்பின், அவன்பாவச்செயலினால்,அவனைப் போன்று, அவனுக்கு உடன்பட்டிருக்கும் இவனும் அழிய நேரிடும்.-இராமபிரானோ, ரஜஸ்ஸும், தமஸ்ஸும் சிறுதுமின்றி, சுத்த ஸத்துவ குணமுடையவனாம். துன்பம் துடைத்து இன்பம் தந்து பிறரை வாழ்விப்பவனாம். ஆதலின், பற்றத்தக்கவனாவன். இவ் இராமபிரானைப் பற்றி இவனருளால், இப்பரமன் திருவடித் தாமரைகளைக் கிட்டி, தொண்டு செய்துவாழ்வுபெறலாம்.
    இவ்வாறு இராவணனுக்கும் இராமபிரானுக்கும் உள்ள தீமை நன்மைகளைக் கண்டவனாம் இவ்விபீஷணன். மேலும், இராவணன் கீழ்மையும் இராமபிரான் ஆண்மையும் நன்கு உணர்ந்தவனாம், இவன். ஆகவே உள்ளத் தூய்மையுடன் பரமபுருஷனையே தஞ்சமாய்ப் பற்ற வந்தவன் வரவுக்கு இவ்விடமும் இக் காலமும் தகுந்த இடமும் காலமும் ஆகத் தட்டொன்று மில்லை யன்றோ?-(ஸ ஏஷதேச: காலச்சபவதீ யதா ததா புருஷாத் புருஷம் ப்ராப்ய ததா தோஷகுணாவபி !தெளராத்ம்யம் ராவணே திருஷ்ட்வா விக்ரமம் ச ததா த்வயி
    யுக்தம் ஆகமநம் தஸ்ய ஸத்ருசம் தஸ்ய புத்தித)-என்பதாம்.
    [ஒருவன் கருமயோகத்தைச் செய்கின்றான். அக்கரும யோகமாகிய தருமம், பரிசுத்மான இடத்திலும், காலத்திலும் செய்யப்பெறுமாயின், அதற்கு நன்மையுண்டாம் ;
    அதனாலாகிய பயனும் உண்டாகும்.அங்ஙனம் செய்யப் பெறாவிடின், அத்தருமத்திற்கு நன்மையும் பயனும் உண்டாகா.இத்தருமம்போன்று. இடம் காலம் இவற்றினால், எம்பெருமானாகிய தருமத்திற்கு ஏற்படும் நன்மையும் பயனும் கூறுதற்கு சாஸ்திரம் இடம் தரவில்லையன்றோ? இராமபிரானாகிய தருமத்தைத் த ஞ்சமாய்ப் பற்றும் விபீஷணனுக்கு, அங்ஙனம் பற்றுங்கால், ஏதேனும் ஓர் இடமும் ஒரு காலமும் அமையுமாதலின், இன்ன இடம்
    இன்ன காலம் என்பது இல்லையன்றோ? இந்த உண்மையைத் திருவடி வாயிலாக வெளியிடுகின்றான், வால்மீகி முனிவன். கருமயோகமாவது – எம்பெருமான் திருவுள்ளம் உகக்குமாறு, தனக்குரிய தருமங்களைச் சாஸ்திரமுறையைப் பின் சென்று செய்கையாம்.)
    இவ்வாறு ஜாம்பவான் கொள்கைக்குக் குறை கூறி, மைந்தன் கொள்கைக்கு இழிவைக்
    கூறியிருக்கிறான் திருவடி. அவ்விழிவாவது :-”இவ் விபீஷணனை ஒரு காரியத்தில்
    தூண்டி, அக்காரியத்தைச் செய்வித்து, அதனால், இவன் கருத்தைத் தெளியலாம்” என்னும் கொள்கையும் சீர்மை உடைத்தன்று.-ஏனெனில், எதிரி தன் காரியத்தில் வல்லவனாயின், தன் எண்ணத்தை வெளியிடாதவாறு, நடந்துகொள்வன் ; ஆதலின், சீக்கிரத்தில் அவன் நினைவு அறிய இயலாது அன்றோ ?-(அசக்யஸ் ஸஹஸா ராஜந்பாவோ வேத்தும் பரஸ்யவை)-என்பதாம்.

    இங்ஙனம்,அங்கதன் முதலானார் கொள்கைகளுக்குக் குறைகூறிய தி ருவடி, தன்
    கொள்கையையும் நன்கு கூறியிருக்கின்றனன் :
    ”இந்த விபீஷணன் கூறும்போது, இவன் பால்குற்றங்களைக் குறிக்கும் செயல் ஒன்றும்
    காணப் பெற்றிலது : வழியடியுண்டவன்தாய் முகத்திலே விழித்தாற் போன்று, இவன்
    முகம் குளிர்ந்தன்றோ? தெரிகிறது; இவன் தீம்பனாகில், இவனுக்கு விரோதத்தைச் செய்ய
    முயன்ற இவ்வானர வெள்ளத்தில், அன்பனாய் இவ்வாறு வார்த்தை கூறு தற்கு இடம்
    உண்டோ? கூறியிருப்பனோ ? பயம் சிறிதும் இன்றியும் இருப்பனோ ? இவன் குரல் தழு
    தழுத்துத் தெரிகின்றதோ? இல்லையன்றோ?-ஒருவனுக்குக் கெட்ட எண்ணம் உண்மையில்
    இருப்பின்,அவ்வெண்ணத்தை அவன் மறைக்க முயன்றாலும், அதை, அவன் முகம்
    வெளிப்படுத்திவிடுமன்றோ? ஆதலின், இவன் தூய்மை பெற்றிருப்பவனேயாம்.
    பிறருக்குச் செய்ய அரிதான இராமபிரானுடைய முயற்சியையும், இராவணனுடைய
    கெட்ட சரிதத்தையும் நன்கு கண்டு, தீம்பனான வாலியைக் கொன்று, கிஷ்கிந்தா இராச்
    சியத்தை ஸுக்ரீவனுக்கு வயமாக்கிக் கொடுத்ததையும் கேட்டு, அவ்வாறே, இராவணனைக்
    கொன்று, இலங்கா இராச்சியத்தைத் தனக்கு வயமாக்கிக் கொடுப்பன் என்று திடமாய்
    எண்ணி, இவ்விபீஷணன் இங்கு வந்தனன்-என்பது என் எண்ணம். இவன் நிலையை
    இவ்வாறுஉண்மையாக உணர்ந்தால் இவன் ஏற்றுக் கொள்ளத்தக்கவனாம் . இதுவே, திருவடி கூறிய கூற்றாம்.-இங்கு, திருவடியின் வார்த்தை பின் வருமாறு 🙁உத்யோகம் தவ ஸம்ப்ரேக்ஷ்ய மித்யா வ்ருத்தம்ச ராவணம் | வாலி நம் ச ஹதம் சருத்வா ஸுக்ரீவம்ச
    அபிஷேசிதம் || ராஜ்யம் ரார்த்தயமானஸ்து புத்தி பூர்வமிஹாகத : ஏதாவத்து புரஸ்க்ருத்யவித்யதேத் வஸ்ய ஸங்க்ரஹ : ) இங்ஙனம் திருவடி கூறிய வார்த்தையைத்
    திருச்செவி சாற்றி, (ஸக்ரீவன் முதலானார்,’சரணம் பற்றிய விபீஷணனை ஏற்றுக் கொள்
    ளுதல் கூடாது’ எனக் கூறும்போது ஒருவாறு அழிந்திருந்த ) இராமபிரான் உளனானான் ;
    மனக்களிப்பும் பெற்றான் ; தன் கொள்கையையும் வெகு அழகாகக் கூறியிருக்கின்றான்.
    (அத ராம ப்ரஸந்நாத்மா) என்னும் வால்மீகி முனிவன் வாக்கியமும், ” அத ராம்: = அநந்தரம் பெருமாள் உளரானார்; திருவடி வார்த்தையாலே உளரானார். ப்ரஸந்நாத்மா=தர்மியுண்டான
    வாறே தர்மம் உண்டாயிற்று’‘ என்னும் பெரியவாச்சான்பிள்ளை திருவாக்கும் அனுப விக்கத் தக்கவை.

    இனி, இராமபிரான் கொள்கையைக்காண்போம்.-இராமபிரான், அங்கதன் முதலானாரை நோக்கி, தன் கொள்கையைக் கூறுதற்கு முன், தன் உத்தமத் தன்மைக்கு ஏற்ப, ‘உங்கள் வார்த்தையை நான் கேட்ட வோபாதி, இவ்விபீஷணனைப்பற்றி,யான் கூறும் வார்த்தையையும் நீங்கள், செவி தாழ்த்துக் கேட்க வேண்டும். என்று இரந்து கொண்டிருக்
    கின்றான்.-இவ்வாறு இரந்து, இராமபிரான் கூறிய வார்த்தையாவது (மித்ராபாவேந ஸம்ப்ராப்தம் நத்யஜேயம் கதம்சந தோஷோ யத்யபி தஸ்யஸ்யாத் ஸதாம்ஏதத் அகர்ஹிதம் )என்பதாம்
    இராமபிரான். கடற்கரையில் வானரர்கள் திரளிலே அருளிச் செய்த ‘மித்ரபாவேந’
    என்னும் இவ்வார்த்தை,கண்ணன் பகவத் கீதையின் இறுதியில் அருளிச் செய்த “ஸர்வ
    தர்மாந் “ என்னும் வார்த்தைபோன்று உள்ளதாம்.
    கண்ணபிரான், அக்கீதையில், கருமயோகம்,(எம்பெருமான் முக மலர்த்திக்குஉறுப்பாகச் செய்யும் ஜீவனாகிய தனக்குரியதருமம்) ஜ்ஞான யோகம், (உள்ளத் தூய்மை பெற்றிருப்பவன் சிந்திக்கும் ஜீவாத்மாவைப்பற்றிய சிந்தனம்) பக்தி யோகம் (பரமனைப்
    பற்றிச்சிந்திக்கும் சிந்தனம்) ஆகிய இவ்வுபாயங்களைப் பரக்கக்கூறி, இறுதியில் இவற்றை
    விட்டிட்டு, பரமனாகிய தன்னையே பற்றுமாறு கட்டளையிட்டிருக்கிறான்.
    இராமபிரானும், இங்கு அங்கதன், சரபன் முதலானோர் கூறிய கொள்கைகளைக் கழித்து,
    இறுதியில் தனக்கே உரிய சீரிய கொள்கையை முடிந்த பொருளாக அருளிச் செய்திருக்கிறான்.
    கண்ணன் செல்வம் இழந்திருக்கும் அர்ஜ்னனைச் செல்வ வானாக்க இறுதியில் ஸர்வ தர்மாந்” என்னும் வார்த்தையை அருளிச் செய்தது போன்று, இராமபிரானும், இலங்
    கையை இழந்த விபீஷணனை இலங்கையை உடையவனாக ஆக்க இறுதியில் ‘மித்ரபாவேந என்று அருளிச் செய்திருக்கிறான்.
    அங்கு, கண்ணன் ஸேனையின் ந டுவில் அர்ஜ்ஜுனன் சோகம் தீர்வதற்கு அவ்வார்த்
    தையை அருளிச் செய்திருக்கிறது போன்று, இங்கும், இராமபிரான் ஸேனையின் நடுவில்
    விபீஷணன் சோகம் தீர்வதற்கு இவ்வார்த் தையை அருளிச் செய்திருக்கிறான்.
    நம்ஆசாரியர்கள் ‘திருத்தேர்த் தட்டில்வார்த்தை’ ‘கடற்கரை வார்த்தை’ என்னும்,
    (கண்ணபிரான் இராமபிரான் இவ்விரு எம்பெருமான்களுடைய) இவ்விரு வார்த்தைகளையும், எல்லாச் சேதனருடைய சேமத்தைவிளைவிக்கும் சீர்மையுடையன வாயிருத்தலினாலும், மேற்கூறியவாறு ஒற்றுமை பெற்றிருக்கின்றமையினாலும், அன்புடன் தாங்களும் ஆதரித்தும், தங்கள் திருவடிகளில் ஸம்பந்தம்
    பெற்றிருப்பார்க்கு உபதேசம் செய்தும்போருகிறார்கள்’‘ என்பதையும், “எந்தச் சேதன
    னுக்கு ‘இவ்விரு வார்த்தைகளில் நன்கு தொடர்பு ஏற்படுகின்றதோ,அந்தச் சேதனனே. ஸ்ரீ வைஷ்ணவன்’ எனப் புகழப்பெறுகின்றான்” என்பதையும் நாம் இங்கு அறிதல் அவசியமாகும்.
    உண்மை இங்ஙனம் ஆனாலும், பெரியவாச்சான்பிள்ளை இராமபிரான் வார்த்தைக்கு
    மிக்க ஏற்றத்தைத் திருவுள்ளம் பற்றி அருளிச் செய்திருக்கிறார் :
    அங்கு.சரணாகதாத்வஸாயம்’ சொல்லிற்று; இங்கு . ‘சரண்யாத்வாஸாயம்’ சொல்
    லுகிறது .அங்கு, ‘சரணாகதனைப் பாபங்களில் நின்றும் விடுவிப்பேன்’ என்கிறது; இங்கு
    ‘நான் விடேன்’ என்கிறது” என்னும் பெரியவாச்சான் பிள்ளை திருவாக்கு அவசியம் அனு
    பவிக்கத் தக்கதாம்.
    இத்திருவாக்கின் கருத்தைச் சிறிது விவரித்துக் கூறுவோம் : எம்பெருமானை எவன்
    அவனைப் பெறுதற்குக் காரணமாய்ப் பற்றுகின்றனனோ, அவனைச் சரணாகதன் என்பர்
    அச்சரணாக தனுக்கு உரிய திடமானஎண்ணத்தை (“எம்பெருமான் இப்பொருளை
    ஒருகாலும் விட்டிடான்; காத்தே தீருவன் ‘என்னும் எண்ணத்தை) ‘அத்யவஸாயம்
    என்று கூறுவர்.

    இந்த எண்ணம், எம்பெருமான் திருவடிகளை உபாயமாய்ப்பற்றி, பேற்றைப்பெறுபவ
    னுக்கு இன்றியமையாததாம். இவ்வின்றியமையாமையைப் பின்வருமாறு நாம் அறியலாம்:
    ஒருவன், கப்பலை ஏறி, கடலைக் கடந்துதான் விரும்பிய இடத்துக்குச் செல்கிறான்.
    அங்ஙனம் கடந்து செல்பவனுக்கு உள்ள(இக்கப்பல் மிக உறுதியானது : இது நம்மை,
    கோரின் இடத்திற்குக் கொண்டு போய்ச்சேர்த்துவிடும் என்னும் ) எண்ணத்தைக் காண்
    கின்றோமல்லவா?-இது போன்று, இந்த ஜீவனும் எம்பெருமானாகிய கப்பலை ஏறி ஸம்ஸாரமாகியபெருங்கடலைக் கடந்து, தான் விரும்பிய பரமபதமாகிய இடத்துக்குச் செல்ல வேண்டியவனாயிருக்கின்றமையின், .எம்பெருமானாகியகப்பல் மிகமிக உறுதியானது; இக் கப்பல்நம்மைப் பரமபதத்தில் கொண்டு போய்ச்சேர்த்துவிடும்” என்னும் திடமான எண்ணம்பெற்றிருக்கவேண்டியவனன்றோ?
    இங்கு, ”ஒரு சிறாயை விச்வஸித்து,ஆறு மாஸத்துக்கு வேண்டும் சோறும் தண்ணீரும்
    ஏற்றிக்கொண்டு, கடலிலே இழியாநின்றான். அவ் வோபாதியாகிலும் வேண்டாவோ பக
    வத்விஷயத்தைப் பற்றுவார்களுக்கு‘ என்னும் நம்பிள்ளை திருவாக்கு அனுபவிக்கத்
    தக்கது.
    இத்திருவாக்கை அனுபவிக்குங்கால்
    “எம்பெருமானாகிய கப்பலை ஏறிச் செல்பவ னுக்கு மிகவும் திடமான எண்ணம் வேண்டும்.
    அவ் எண்ணம் இந்த ஜீவன் நிலையைக் காணுங்கால், உண்டாவது அரிதாம். ஆனாலும், கருங்கடலைக் கடப்பவன், அங்ஙனம் கடக்கக் கருவியாய் எண்ணியிருக்கும் கப்பலில் வைத்திருக்கும் நம்பிக்கை போன்றுள்ள நம்பிக்கையாவது இந்த ஜீவனுக்கு வேண்டுவது அவசியமன்றோ?”‘என்னும் உண்மை நன்கு விளங்குகின்ற தன்றோ?
    ‘இந்தத் திடமான எண்ணம் பரம புருஷனாகிய என்னைச் சரணம் பற்றியிருப்போனுக்கு
    இன்றியமையாததாம்” என்பதை இயம்பியிருக்கிறான்,”ஸர்வ தர்மான்” என்னும்
    வார்த்தை வாயிலாகக் கண்ணன்.மேலும், அக்கண்ணபிரான், மேற்கூறிய வார்த்தையிலேயே, இவ்வாறு திடமானஎண்ணம் பெற்றிருக்கும் சேதனனை, என்னை
    அடையவொட்டாது தடைசெய்யும் பாவங் களினின்றும் விடுவிப்பேன்’ என்றும் அருளிச்
    செய்திருக்கிறான்.
    இதுவரையில், சரணாகதாத்யவஸாயம் சொல்லிற்று; சரணாகதனைப் பாவங்களில்
    நின்றும் விடுவிப்பேன்‘ என்னும் பகுதியின் கருத்தைக் கண்டோம். இனி, சரண்யாத்ய
    வஸாயம்’ என்பதின் கருத்தைக் காண்போம்.
    ‘சரண்யன்‘ என்பதற்கு, ‘துன்பம் துடைத்து இன்பம் தரும் எம்பெருமான் என்று பொருள். அவ் எம்பெருமானுடைய திடமான எண்ணத்தை (“இந்த ஜீவனை ஒருக்காலும் விட்டிடேன்; காத்தே தீருவேன்” என்னும் எம்பெருமான் எண்ணத்தை) சரண்யாதியவஸாயம்’ என்று கூறுவர்.
    இவ் அத்யவஸாயத்தையும் ‘இந்த ஜீவனை எம்பெருமானாகிய நான் விடேன்’ என்று கூறி
    யிருத்தலையும், இங்கு இராமபிரான் வார்த்தையில்நாம் நன்கு அறியலாகும்.
    ஜீவனுடைய திடமான எண்ணம், எம் பெருமானுடைய திடமான எண்ணம் இவை
    இரண்டும், இந்த ஜீவன் பேறு பெறும்போது அவசியமானவை என்றாலும், இவன் எண்ணத்
    திலும்,அவன் எண்ணம் மிகமிக முக்கியமானதல்லவா ?
    இந்த ஜீ வன், “எம்பெருமான் இப்பொருளை இரட்சியாது விட்டிடான் : இரட்சித்தே தீருவன்” என்னும் திடமான எண்ணம்பெற்றிலனேயானாலும், எம்பெரு மான்,
    இந்த ஜீவனை நாம் விட்டிடாது, இரட்சித்தே தீருதல் வேண்டும” என்னும் திடமான எண்ணம் பெற்றிருப்பின், எம்பெருமானுடையஅவ் எண்ணத்தினாலேயே, இவனுக்கு நன்மை
    உண்டாவது திண்ணமன்றோ ?

    ‘இந்த ஜீவன், எம்பெருமான் இப்பொருளை இரட்சித்தே தீருவன்’ என்று திடமாக
    எண்ணியிருந்தாலும், எம்பெருமான், ‘இந்தஜீவனை இரட்சித்தே தீரவேண்டும் என்று எண்ணாது இருப்பின், இவன் நன்மை பெற இயலுமோ? இயலாதன்றே? இதுபோன்று
    பாவத்தினின்று விடுவிப்பதிலும், எம்பெருமான் இவனை விடாது இருத்தல் மிகவும் முக்கி
    யமானதன்றோ ?
    இங்கு,”உன் மனத்தால் என் நினைந்திருந்தாய் இடவெந்தை எந்தைபிரானே” என்னும்
    திருமங்கை மன்னன் திருவாக்கும் அனுபவிக்கத்தக்கதாம் .-உண்மை இவ்வாறு இருத்தலின், கண்ணன் வார்த்தையிலும், இராமபிரான் வார்த்தைக்கு ஏற்றம் உண்டு என்பது தெளிவாம்.
    இதுவரையில், “மித்ரபாவேந்” என்னும் இவ்வார்த்தையின் சீர்மையைச் சிறிது கண்டோம். இனி,இவ்வார்த்தையின் கருத்தைச் சுருக்கமாய்க் காண்போம் :
    நம்பத் தக்கவன் செயலாலே நம்மை நெருங்கி வந்த இவ்விபீஷணனை ஒரு படியாலும் விடஊஹை கூடச் சிறிதும் நமக்கு இல்லை; இவ்விபீஷணனுக்குக் குற்றம் இருந்தாலும்,இவன் நினைத்த காரியம் பெற்றானா கிறான். இவனை ஏற்றுக் கொள்ளுதல்,பெரியோர்களுக்கு நிந்திக்கத் தக்கதாகாதாம்” என்பது, மேற்கூறிய வார்த்தையின் கருத்தாம்.
    இவ்வாறு இராமபிரான் தன் இயல்பை இயம்பியிருந்தும், பொங்கும் பரிவு பெற்றிருந்
    துள்ள ஸுக்ரீவன், தெளிவு சிறிதும் இன்றி,-அவ் இராமபிரான் முன்னிலையில் “விபீஷணன் ஏற்றுக்கொள்ளத் தக்கவன் அல்லன்” என்பதைச் சில முறைகளைப் பின் பற்றிக் கூறி
    யிருக்கிறான். அக்கூற்றிற்கு இராமபிரான் விடை அளிக்குங்கால். அப்பிரான் திருவாக்கி
    லிருந்து அவதரித்ததும், “மித்ரபாவேந என்னும் வார்த்தை போன்று மிகச் சீர்மையுற்றதும், எல்லாச் சேதனருக்கும் நன்மையை உண்டு பண்ணுவதுமான வார்த்தை வருமாறு

    (ஸக்ருதேவ ரபந்நாய தவாஸ்மீதிசயாசதே |அபயம் ஸர்வபூதேப்ய: ததாமி ஏதத் வரதம் மம1
    என்பதே அவ்வார்த்தையாம்.-(இவ்வார்த்தையின் கருத்துக் காணும் போது. ஸக்ரீவன் கேள்விகளுக்கு இராமபிரான்விடையளித்திருக்கிறதாய் நாம் காணுதல் நன்றாம்.
    ஸுக்ரீவன், இராமபிரானை நே க்கி இராம! நீ புருஷோத்தமன்; உன்னை முறையுடன் உபாயமாய்ப் பற்றியிருப்போனை விட்டிடாது காத்தல் உனக்குரிய தருமமேயாம். சாஸ்திரம், ‘சரணாகதியை ஒருகால் செய்தல் நன்று; பலகால் செய்யலாகாது’ என்று இயம்பியிருக்கின்றது. இவ்விபீஷணனோ, சாஸ்திரம் கூறும் முறையைப் பின்
    சரணம் கா: / பவந்தம் சரணம்கத: / பாதயோச்சரணாவேஷநிபபாத ) என்று முக்
    கால் சரணம் பற்றியவனன்றோ? ஆதலின், இவன் ஏற்கத் தக்கவனல்லன் எனறு கூறினன்.
    இதற்கு, இராமபிரான் அருளிச் செய்தவார்த்தை :
    “(ஸக்ருதேவ) இவ்விபீஷணன் முறை வழுவாது ஒருகால் நம்மைப் புற்றியவனே
    ஆவான்; எங்ஙனம்? என்னில், இராவணனால் மிகவும் அவமதிக்கப்பட்ட விபீஷணன் நம்மை
    நோக்கி, நான்கு இராக்கதருடன்,ஆகாசத் தில் கிளம்பிய போதே, நீங்கள் அவனைச் சத்துருவாய் எண்ணிக் கலங்க, உங்களுக்கு அக்கலக்கம் போக வேண்டும் என்று அவன் எண்ணி,’என்னைச் சத்துருவாய் எண்ணலாகாது நான் இராமனைச் சரணம் பற்ற வந்தனன்”’
    என்னும் உண்மையை உங்களுக்கு உணர்த்திய வார்த்தை, “ராகவம் சரணம் கத” என்பது.
    உங்கள் வார்த்தையினால், நாமும் கலங்கினோமோ? என்று ஐயம் கொண்டு,நம்மைத்
    தெளியப்பண்ணச் சொன்ன வார்த்தை,
    பவந்தம் சரணம் கத:” என்பது. உண்மையில் முறை வழுவாது நம்மைச் சரணம் பற்றும் போது உள்ள வார்த்தை“பாதயோச் சரணான்வேஷ நிபபாத ” என்பது. ஆதலின், இவன் ஏற்றுக்கொள்ளத்தக்கவனேயாம். . இதைச்செவி மடுத்த ஸு க்ரீவன், மேலும் வினவியதாவது:-இவ்விபீஷணன் தேவரீரைச் சரணம் பற்றியிருப்பவனல்லன்; ஏன்? எனில் “வதம் செய்யவேண்டும்” என்று எங்கள் கூற்றைக்கேட்டு வெருவி, போகநிற்கிறவனன்றோ?
    இவன். ஆதலின்,இவன் ஏற்கத் தக்கவனல்லன்”
    இதற்கு இராமபிரான் விடையாவது:‘(ப்ரபந்நாயைவ) நாம் இவ்வாறு இவனை
    ஏற்றுக் கொள்ளுதல் முறையோ, முறையன்றோ? எனத் தடுமாறுதல் போன்று இராது.
    உறுதியுடன் நம்மைப் பற்றியே இருப்பவன் காண், இவன்”.-இதைச் செவியேற்ற ஸுக்ரீவன், இவ்விபீஷணன்,தேவரீரையே மிகச் சிறந்த நன்மையாய்க் கருதாது, இலங்கையைப் பெற
    விரும்பி வந்தவனன்றோ? –த வரீருக்கு த்தொண்டனான திருவடியுமன்றோ? “ராஜ்யம்
    ப்ரார்த்தயமாநச்ச” என்று இவ்விபீஷணனுக்குள்ள நிலைமையை (இலங்கையில் விருப்
    புற்றிருக்கும் இயல்பை)த் தெளிவாய்க்கூறி,தன் கொள்கையை முன்னம் வெளியிட்டிருக்
    கின்றனன். ஆதலின், இவன் ஏற்கத் தகுந்தவனல்லன்’ என்றனன்.
    இதற்கு, இராமபிரான் அருளிச் செய்தவார்த்தை : “( தவாஸ்மீதி ச யாசதே.)திருவடி இராவணன் முன்னிலையில், நம் சிறப்புக்களை கூறுங்கால், அவ் இராவணன்
    அவற்றைப் பொறாது, அத்திருவடியைக்கொல்ல, தன் தொண்டர்களுக்குக் கட்டளை
    இட்டனன். அந்த ஸமயம் அங்கிருந்த வி ஷணன். தூதனைப் கொல்லலாகாது” என்றுதடுத்தனன். அவ்வாறு தடுத்து, தனக்குச் செய்திருக்கும் நன்மையை உணர்ந்த திருவடி இலங்கையின் அரசுரிமையை விபீஷணனுக்கு அளிக்கவேணுமென்று தான் கருதி “ராஜ்யம் ப்ரார்த்தய மானச்ச “ என்று கூறினனேயன்றி விபீஷணன் அரசுரிகைமயை வேண்டினனோ? இல்லையன்றோ?
    மேலும் நம் தம்பியான இலக்குமணன், நம்மைஎங்ஙனம் விரும்பி, நம்மைப் பிரியாது
    நம்முடன் நின்று, நமக்கு மனமகிழ்ச்சிஉண்டாகுமாறு நம்மையே மிகச்சிறந்த பயனாகப் பற்றியிருக்கின்றனனோ,அங்ஙனமே இவ்விபீஷணனும், நம்மையே மிகச்சிறந்த பயனாக விரும்பி நமக்கே ஆட்செய்ய வந்தவன் காண். (தவ,ச, அஸ்மி இதி யாசதே என்று பதங்களைக் கூட்டி, ‘ச’ என்னும் சொல்லை,ஏகாரப்பொருளில் கொண்டு நோக்கின், ” இராமபிரானாகிய உனக்கே அடிமையாக இருக்கிறேன் என்று விரும்புகின்றவன் பொருட்டு” என்னும்பொருள் இங்குக் கிடைக்கிறதன்றே?)
    இதைக் கேட்ட ஸுக்ரீவரின் மேலும்இராமபிரானை நோக்கி, இராமா! விபீஷண னுடைய சரணாகதி. முறை வழுவியது’ என்னும் என் கூற்றுக்கு நீ விடை கூறினாய் நீ அவனுக்கு அளிக்கும் பயன் தான் யாதோ?என்றனன்.
    இதைத் திருச்செவியேற்ற இராமபிரானும், “தேவர் மனிதர். முதலிய எல்லா ஐந்துக்
    களினின்றும், பயத்தைப் போக்கி, நன்மையைச் செய்வேன் எனக்கூறி, ! இவ் வுலகிலுள்ளார் அனைவருக்கும்துன்பம் துடைத்து இன்பம் தருதல்,நமக்கே உள்ளதொரு தருமமன்றோ! ஸுக்ரீவ ! இதை நீதலைக்கட்டித் தருதல் நன்றாம்” என்றும் கூறி
    யிருக்கின்றனன். (அபயம் ஸர்வ பூதேப்ய; ததாமி ஏகத்வரதம் மம).இவ்வாறு, தன் திடமான ஸங்கல்பத்தை இராமபிரான் வெளிப்படுத்திய இடத்தும் ஸுக்ரீவனுக்குக் கலக்கம் தீர்ந்திலது.அத்தருணம் தன் மிடுக்கையும் அவன் நெஞ்சில் படுமாறு. கலக்கம் தீர்வதற்குக் கூறியிருக்கிறான் 🙁பிசாசாந்தாநவாந்யஷாந் ருதிவ் யாம்சைவ ராக்ஷஸாந் |
    அங்குள்யக்ரேணதாந் ஹந்யாம் இச்சன் ஹரிகணேச்வர| ) என்பது, அம்மிடுக்கைக் கூறிய வார்த்தையாம்.
    இதின், கருத்து : ‘ ஸுக்ரீவ!பிசாசங்களையும். அஸுரர்களையும் இயக்கர்களையும்,
    இப்பூமியிலுள்ள அரக்கர்களையும் இவர்களனைவரையும் அழியச் செய்யுமிடத்து, தம் பலம்
    எல்லாம் வேண்டா ; ஆயுதமும் வேண்டா; நம் கைவிரலும வேண்டா; விரல் நுனியே
    போரும் . ஆனால். நம் விரோதிகளுடையதிரள் குறி அழியாது இருப்பானேன்? என்னலாம். அருமையாலனறு, செய்யநாம் நினையாமல் இருத்தலே, அங்ஙனம் அத்திரள அழியாது இருததலுக்குக் காரணமாம். உயிர்நிலையிலே நலிந்த இராவணனை நலிய நினைவில்லாமல் இதுகாறும் இருத்தலுக்குக் காரணம்யாதோ? என்று வினவலாம்.இவவிபீஷணனைப் போனறு உயிரோடு தலைவணங்கினால் அவனும் அவனைச் சேர்ந்தோறும் வாழ்நது போகலாமன்றோ? இதுதான அங்ஙனம் இருத்தலுக்குக்காரணம். வாலியை நாம் அடித்துக் கொன்றபோதுதானே கிஷ்கிந்தையின் அரசுரி மையை நீ பெற்றுவானர வெள்ளங்களுக்குஅரசனானது” என்பதாம்.
    இங்கு, பின்வருமாறு உண்மை உணரத் தக்கது: எவன் தன் இச்சையினால் இப் பிர
    பஞ்சத்தைஆக்கி, அளிதது அழிக்கின்றனனோ,அவனே மிகமிக மேலான தெய்வம்” என்பது
    வேதாந்தங்களின் உண்மைக் கருத்தாகும்.-அங்ஙனம் மிகமிக உயர்ந்த தெய்வம் இராம
    பிரான என்பதை இவ்வுலகம் உணர்ந்ததேயாம். அந்த இராமபிரானுக்கு, ” இவ் இரா
    வணனையும் இலங்கையையும் அழித்தல்” என்பது உண்மையில் ஒரு பொருளோ?
    தேவதைகளுடைய வேண்டுகோளுக்குஇணங்கி தன் மேன்மையை, மற்றவர் அறி
    யாது இருக்குமாறு, மானிட சரீரம் போன்றுள்ள தன் சரீரத்தினால் மறைத்துக் கொண்டிருக்குமவனும், இராவண வதமான பிறகும்,-பிரமன், சிவன் முதலானோர். இராமா! நீ நாராயணன்’ என்று உண்மையை உணர்ந்து கூறுங்கால், தன்னை மானிடனாகவே கூறிக்
    கொண்டவனும், பரதேவதையும் பரமபுருஷ னுமான இராமபிரான், தானாகிய தருமத்தை
    நிலைநிறுத்தும் இவ்விடத்து, மித்ர பாவேந் என்னும் வார்த்தை வாயிலாகத் தன் இயல்
    பையும், “ஸர்வ தர்மான் ‘ என்னும் வார்த்தை வாயிலாகத் தன் திடமான எண்ணத்தையும் கூறிய அந்த அந்த அளவில் நில்லாது, தன் இச்சையினாலேயே இப் பிரபஞ்சத்தை ஆக்கி, அளித்து, அழிக்க வல்லவனுக்குஇலங்கையையும் இவ் இராவணனையும் அழித்தல் அருமையாமோ? என்று தனக்கே உரிய தெய்வத் தன்மையையும் வெளிப்படுத்திக்
    கூறி, இம் முகத்தால். ‘ஸகரீவனாகிய ஆசரிதனுக்குத் தான் வயப்பட்டிருத்தல்’ என்னும்
    தனக்கே உரிய சீர்மையையும் அழியவொட்டாது காத்து தனககுரிய தருமத் தன்மையை
    யும் நிலைநிறுத்தி, விபீஷணனையும் வாழ்வித்தஇச்சரிதம் வெகு ஆச்சர்யமானதல்லவா?
    இராமபிரான் இவ்வாறு அருளிச் செய்து மேலும் கூறிய வார்த்தை:(ஆநயை நம் ஹரிச்ரேஷ்டதத்தம் அஸ்யா பயம் மயா விபீஷணோவா ஸுக்ரீவ யதிவா ராவணஸ் ஸ்வயம் )என்பதாம்.
    இவ்வார்த்தையின் கருத்தையும் முடிந்தபொருளையும் முறையே இங்குக் காண்போம்:
    “ஸுக்ரீவனே! தன் வரவை இராகவனாகிய நம்மிடம் தெரிவிக்குமாறு இவ்விபீஷணன், வேண்டிக் கொண்டவனன்றோ? இவன் நெஞ்சாறல் தீர்ந்து நம்மிடம் சேர்ந்தானாவ
    தும்.நாம் ஏற்றுக் கொண்டோமாவதும் நீ சென்று அவனை அழைத்து வந்தாலன்றோ?
    ஆதலின், அவனை அழைத்து வருதல் வேண்டும். விட வேண்டிய எல்லாவற்றையும் விட்டிட்டு, நம்மைச் சரணம் புகுந்த இவனுக்குநம்மால் பயமின்மையானது அருளப் பெற்றுள்ளது. (இவ்வாறு கூறியதும் விபீஷணனை அழைக்கச் சென்ற ஸுக்ரீவனைக் குறித்து, திரும்பவும் இராமபிரான் கூறியதாவது) விபீஷணனைத் தானே அழைத்து வரும்படி கூறப் பட்டது என்று மீளாதே, இராவணன் தானே யாகிலும் அழைத்துக் கொண்டு வரவேணும், விபீஷணனைக் கைக் கொண்டோமாகில், தன்பக்கல் புண்ணியம் உடையோனை ஏற்றுக்கொண்டோமாவோம்; இவ் விபீஷணனுடன் வந்த இந்நான்கு இராக்கதரும் பிழைத்துப் போருவர் ; வந்தவன் உண்மையில் இராவண னாயிருந்து, அவ் இராவணனை ஏற்றுக் கொண் டாலோ,அப்போதுதான், இராமபிரானாகிய நமக்கு நிறமுண்டாம்; இலங்கையிலுள்ள இராக்கதர் அனைவரும் வாழ்ந்து போருமாறு நோக்கினோமாவோம். நமக்கு வரும் ஏற்றம்முழுவதும் உயிர்த்தோழனான உன்ன தன்றோ?
    என்னும், இதுவே மேற்கூறிய வார்த்தையின்உண்மைக் கருத்தாகும்.
    இங்கு, ஸுக்ரீவன் இசைந்ததும், இராமபிரான் தானே நேரே விபீஷணனை அழைத்து
    ஏற்றுக்கொள்ளாது, ஸுக்ரீவனையிட்டேஅழைத்து வருமாறு ஏவியிருப்பதற்குக் கருதது
    யாதோ? எனின், கூறுவோம் :
    இராமபிரானுக்கு ‘ஆச்ரிதபாரதந்திரியம்’ என்னும் செல்வம் உண்டு; அதாவது,
    தன்னைப் பற்றியவனுக்கு வயப்பட்டிருத்தலாம்” என்று இக்கட்டுரையில் அடிக்கடி கூறி
    வருகிறோம் அல்லவா ? தானே விபீஷணனைஅழைத்து ஏற்றுக்கொள்ளும்போது, அச்செல்
    வம் இவன் பால் நிலைபெற்றிருக்குமோ ? அழிந்து விடாதோ? ஆதலின், ஸுக்ரீவனை இட்டே அழைத்து ஏற்றுக் கொண்டனன்.-இது நம் ஆசாரியர்களாலே இங்கு ஸமாதானமாய்க்கூறப் பெற்றுள்ளதொரு உண்மைக் கருத்தாம்.
    மேலும், விபீஷணன் இராமபிரானிடம் அளவற்ற அன்பு உடையவன். அவ்விபீஷண
    னைக் கொல்லவேண்டும்” என்று ஸுக்ரீவன் கூறியது, அவ்வாறு கூறிய ஸுக்ரீவனுக்குப்
    பெரிய பாவமன்றோ ? ” தன்னை விட்டிட்டு, தன் அடியார் திறத்தில் அன்பைச் செய்தல்நன்றாம் என்பதும், “அங்ஙனம் அன்புசெய்யாது இருத்தல், பெரிய பாவம்” என்பதும்,
    ” அப்பாவம் உள்ளவன் மாத்திரமேயன்றி, அவனோடு தொடர்பு பெற்றிருக்கும் இப்பிர பஞ்சமும் அழிந்துவிடும்” என்பதும் பரமபுரு ஷனாலேயே கூறப்பெற்றுள்ள உயரிய உண்
    மைக் கருத்துக்கள் அல்லவா?உண்மை இங்ஙனம் இருக்க, ஸுக்ரீவன்,
    விபீஷணனைக் கொல்ல வேண்டும்’ என்று கூறியிருப்பது மிகமிகப் பெரிய பாவமன்றோ?
    இராமபிரான, ஆச்ரிதரிடம் மிக்க அன்பு பெற் றிருப்பவனாதலினாலும், ஸு க்ரீவன் அவ் ஆச்ரிதருள் ஒருவனாதலினாலும், அந்த ஸுக்ரீவன்பாவம் தீர்ந்து நன்மை பெறுமாறு திருவுள்ளம்பற்றி, அந்த ஸுக்ரீவனையே அழைததுவர நியமித்தருளினான்’ என்பதும் இங்கு ஓாஉண்மைக் கருத்தாகும்.
    இன்னமும், இங்கு அறியவேண்டுவதோர்உண்மை உண்டு: எம்பெருமானை ஜீவன பற்றும் பற்றுதல், “ஸ்வகத ஸ்வீகாரம்” எனப்படும் எம்பெருமான் ஒரு சேதனனைத்
    தனக்குக் காக்கத தககவனாய்க கருதி, அவனே இவனை மேல் விழுந்து ஏற்றுக்கொளளுதல் என்பதை ‘பரகத ஸவீகாரம்” என்று பகருவர். இங்கு,முன்னது 
    ” (முமுக்ஷர்வை சரணமஹம் ப்ரபத்யே)என்னும் வாக்கியமும்,பின்னதுக்கு,
    தேநலப்ய = எந்தச் சேதனனை எம்பெருமான்மேல் விழுந்து விருமபுகின்றனனோ, அவனால்
    அப்பெருமான் அடையத் தக்கவனாம்) என்னும் வாக்கியமும் தக்க சான்றுகளாம்.
    “ஜீவன் எமபெருமானைப் பற்றுமபோது எங்ஙனம் பிராட்டியாரை முன்னிட்டுப் பற்று
    கின்றனனோ,அங்ஙனமே, எம்பெருமானும் ஒரு சேதனனை மேல் விழுந்து ஏற்றுக்கொள்
    ளும போதும், பிராட்டியாரையோ, அல்லது, பிராட்டியார்ஸதாநத்தில் உள்ள ஒரு பாகவ
    தோததமனையோ, முன்னிட்டே ஏற்றுக் கொள்கின்றான் என்பதும் ஒர் உயரிய
    உணமையாகும்இம்முறையை, இந்த இராமயணத்தில் பலஇடங்களில் நாம் காணலாகும். எங்கே?என்னில், கூறுதும்.
    ஸீதாபிராட்டியாரை முன்னிட்டு, ச்ருங்கி பேர புரத்தில் குகனை ஏற்றுக்கொண்
    டிருத்தலை, நாம் காணலாம் 🙁குஹேந ஸஹிதோராம 🙂 என்னும் வாக்கியம் இங்குக் காணத்
    தக்கது. இல்வாக்கியத்தில், “குஹன் இராமபிரானோடு சேர்ந்தனன்” என்று கூறப் பெற்றிலது; ‘இராமபிரான் குஹன் இருக்குமிடம்எழுந்தருளி அக்குஹனோடு சேர்ந்தனன்”
    என்றே கூறப் பெற்றுள்து. இதனால், எம்பெருமான், சேதனனை அவனிருக்குமிடம்
    எழுந்தருளி மேல் விழுந்து ஏற்றுக் கொள்கி றான்‘ என்பது தெளிவு.
    இங்ஙனம் ஏற்றுக் கொள்ளும் போது,
    ஸீதாபிராட்டியாரை முன்னிட்டே ஏற்றுக்கொண்டனன், இராமபிரான்‘ என்பதை
    திருமங்கை மன்னன், “மாழை மான் மடநோக்கி” என்னும் வாக்கியத்தினால் அருளிச்
    செய்திருக்கிறார்; காணலாம்.
    இந்தக் குஹன் சரிதம் போன்றே, இவ்விபீஷணன் சரிதமும் உள்ளது. (விபீஷணே நாசு ஜகாம ஸங்கமம்) என்பது இங்கே வாக்கியம், இவ்வாக்கியத்திலும் இராமபிரான் விபீஷணனோடு சேர்ந்ததாகவே கூறப் பெற்றுள்ளது.
    இங்கு ஸீதாபிராட்டியார் ஸ்தாநத்திலுள்ள ஸுக்ரீவனை முன்னிட்டு விபீஷணனை இராம
    பிரான் ஏற்றுக் கொண்ட இவ்வுண்மை,
    “ஆநயைனம் ஹரிச்ரேஷ்ட” என்னும் வார்த் தையில் தெளிவு.
    ஆனால் “ஜீவாத்மா எம்பெருமானைப் பற்றும்போது, தான்,குற்றக்கடலாயிருக் கின்றமையின், பிராட்டியாரை முன்னிடுகிறது, அக்குற்றங்களைப் பொறுத்தற்கு என்னலாம்.எம்பெருமான் சேதனனைத் தனக்குத் காக்கத் தக்கவனாகக் கருதி, மேல் விழுந்துஏற்றுக்கொள்ளும் போது பிராட்டியாரையோ, அல்லது அந்த ஸ்தாநத்தில்
    உள்ளஒரு பாகவதோத்தமனையோ,முன்னிடுதல், எப்பயனைக் கருதியோ ? இவ் எம்பெரு
    மானுக்குக் குற்றம் சிறிதும் இல்லையன்றே?”எனச்சிலர் இங்கு ஐயமுறக்கூடும்.
    இதின் பரிஹாரம் :
    எம்பெருமானுக்கும் குற்றம் உண்டு; அக்குற்றம் யாதோ? எனில், எம்பெருமானுக்கும்
    சேதனனுக்கும் உள்ள தொடர்பு என்றும் உள்ளது ; ஒழிக்க ஒழியாதது. இவ்வாறான
    தொடர்பையும், தன்னுடைய நீர்மைக்குணங்களையும் இது வரையில் பாராது, இச்
    சேதனன் செய்த குற்றங்களையே கண்டு,இவனை விலக்கி ஸம்ஸாரத்தில் வைத்திருந்
    தானாதலின், இப்போது மேல் விழுந்து ஏற்றுக்கொள்பவ னாயிருந்தும், இவ் எம்பெருமானை இச்சேதனன் வெறுத்து விலகக்கூடுமன்றோ ? இவ்வாறு விலகாது இச்சேதனன் தன் வயத்திலே வரவேண்டி எம்பெருமானுக்கும் பிராட்டியாரையோ அவர் ஸ்தாநத்தில் உள்ள வரையோ முன்னிடுதல் இன்றியமையாததாம்.
    இங்கு ”இவன் முன்னிடுமவர்களை அவன் முன்னிடும் என்னுமிடம் அபயப்ர தானத் திலும் காணலாம். இருவர் முன்னிடுகிறதும் தந்தாம் குற்றங்களைச் சமிப்பிக் கைக்காக.
    என்னும் பிள்ளைலோகாசார்யர் திருவாக்கு-அனுபவிக்கத் தக்கது.
    இவ்வாறு இராமபிரான் விபிஷணனை நேரே ஏற்றுக் கொள்ளாது, ‘ஸு க்ரீவனை அழைத்து வா’ என்று அருளிச் செய்திருப்ப தற்கு, பல உண்மைகளைக் கண்டோம்.
    இவ்விடத்து, ஸுக்ரீவன் இராமபிரான்நியமனப்படி அழைத்து வர விபீஷணனும்
    வந்து, அவ் இராமனைக்கிட்டி, வணங்கிவாழ்ந்துபோனான் என்பது சரித்திர உண்மை.
    இங்கு, எம்பெருமானாகிய தருமம் நிலை நிறுத்தப் பட்டிருத்தலையும் கண்டோமல்லவா?
    ஆக, ” திருமகள் கொழுநனான எம்பெருமான், இவ்வுலகில் செய்தருளின திருஅவதாரங்களுள் இராமாவதாரம் மிகச் சிறந்தது”‘என்பதும், அங்ஙனம் அவ் எம்பெருமான்திருவவதாரம் செய்தபோது, அவனைக் கூறும் வேதமும், வால்மீகி முனிவனிடமிருந்து இராமாயணமாகத் திரு அவதாரம் செய்திருக் கிறது’ என்பதும், ” அந்த இராமாயணம் மிக்க சிறப்பு பெற்றுள்ளது ” என்பதும், ”வீடு பேற்றை விரும்புகின்றவன் அவசியம் அறிய வேண்டும் பொருள் ஐந்து; அவை பரமாத்மா, ஜீவாத்மா, உபேயம், விரோ தி, உபாயம் என்பன” என்பதும், “ நாராயணன் பரமாத்மா, ” அப்பரமாத்மாவிற்குச் சேஷமாயும் பரதந்திரமாயும் இருப்பவன் ஜீவன்’ அப்பரமன் திருவுள்ளம் உ க்குமாறு
    அடிமை செய்தலே வீடுபேறு என்னும் உபேயம் அப்பேற்றைஇதுவரையில் இந்த ஜீவன்
    அடையப் பெறாது தடை செய்யும் அஜ்ஞானம் முதலியன விரோதி’ ” இவ்விரோ தி
    போவதற்குத் தக்க ஸாதனம் பக்திப்ரபத்திகள்’ என்று வேதாந்தம் கூறுகின்றது ” என்பதும், “வேதத்தின் திரு அவதாரமான இராமாயணமும், வேதாந்தம் கூறுகின் றவாறு ஐம்
    பொருளையும் நன்கு விளக்கிக் கூறுகின்றது’என்பதும், “ வேதாந்தம் மாத்திரம், தான்மிகச்சிறந்த பிரமாணமாயிருந்தும். இவ்ஐம் பொருளையும் கலக்கம் சிறிதும் இன்றி அறிவிக்க மாட்டாதாதலின், அவ்வேதாந்தம் மீமாம்ஸா சாஸ்திரம், இதிஹாஸமான இரா
    மாயணம் இவற்றின் உதவியை விரும்புகின்றது என்பதும் “மீமாம்ஸா சாஸ்திரம்
    செய்யும் உதவி சிறந்ததாயிருந்தும், மேதாவி களுக்கே அது பயன்படும்” என்பதும், ” இரா
    மாயணம், பெண்ணுக்கும் பேதைக்கும் விளங்குமாறு, நன்கு உதவி புரிகின்றது” என்பதும், இவ் இராமாயணம் மேற்கூறிய ஐம்பொருளையும் நன்கு விளக்கிக் கூறுகின்ற
    தாயிருப்பினும், சரணாகதி என்னும் உபா யத்தையே விளக்கிக் கூறுவதில் அது மிக்க
    நோக்குடையது என்பதும், “இதனாலேயே சரணாகதி சாஸ்திரம் ‘ என இராமாயணம்
    பெயர் பெற்றிருக்கிறது’ என்பதும், ” சரணாகதி தருமத்தைப் பற்றிய பல உண்மைகளை
    இராமாயணம் அந்த அந்த இடத்தில் விரிவா கவும்,தெளிவாகவும், அழகாகவும் கூறுகிறது
    என்பதும், இக்கட்டுரையின் பலபகுதிகளிலும் அறியக்கிடக்கின்ற ஸாரப் பொருள்கள் என
    விளங்குகின்றன அல்லவா? 

    ———————————————————————–

    ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ கார்ப்பங்காடு ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

    ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிச் செய்த -ஸ்ரீ ரகஸ்ய த்ரய சுகளம் -ஸ்ரீ சார சங்க்ஷேபம் –

    June 20, 2025

    ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
    வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

    திருமந்தராதிகாரம்‌ -முன்னுரை 
    ஆசார்ய லக்ஷணங்கள்‌ நிறைந்த சிறந்த ஆசார்யனை அடைந்து அவன்‌ கடாக்ஷத்தால்‌ ஞானம்‌ பெற்று ப்ர பத்தியைச்‌ செய்தவனுக்கு அந்த ப்ரயத்திக்குப்‌ பின்‌ திருமந்த்ரம்‌ - த்வயம்‌ - சரம சுலோகம்‌ ஆகிய மூன்று ரஹஸ்யங்களை அதுஸந்தித்துக்‌ கொண்டும்‌ அவற்றின்‌ அர்த்தங்களை சிந்தித்துக்‌ கொண்டும்‌ இருப்பது எப்பொழுதும்‌ இன்பத்தைத்‌ தரும்‌.

    திருமந்த்ரம்‌' சேதநன்‌ முக்கியமாய்‌ அறியவேண்டிய 'எல்லா விஷயங்களையும்‌
    சருக்கமாய்த தெரிவிக்கும்‌. இது எட்டு அக்ஷரங்கள்‌ கொண்டது. இதில்‌ மூன்று பதங்கள்‌ உண்டு. முழுதும்‌ ஒரே வாக்யமாயிருக்கும்‌-இதில்‌ முதற்பதம்‌ ப்ரணவம்‌. இந்த ப்ரணவம்‌ எல்லா வேதங்களுக்கும்‌ மூலமானது. இதைச்‌ சொல்லிவிட்டுத்‌ தான்‌
    வேதத்தைத்‌ தொடங்க வேண்டும்‌. இது ஒரே எழுத்தாக உள்ளது. வேதமும்‌ ஸ்ம்ருதிகளும்‌ இந்த ஒரெழுத்தான ப்ரணவத்தை மூன்று எழுத்துக்‌ கொண்டதாகக்‌ கூறி அந்த மூன்று அக்ஷரங்களையும்‌ மூன்று பதமாகப்‌ பிரித்து ஒரு வாக்யமாக வைத்துப்‌ பொருள்‌ கூறியுள்ளன.

    இந்த ப்ரணவத்தில்‌ அ-உ-ம்‌ என்ற மூண்று எழுத்துக்கள்‌ உள்ளன. இதில்‌ முதல்‌ எழுத்தான ?௮ என்பது பிராட்டியைப்‌ பிரியாத எம்பெருமானைச்‌ சொல்லுகிறது. எத்தகைய எம்பெருமானை? எல்லாவற்றுக்கும்‌ காரணமாய்‌ எல்லோரையும்‌ காப்பவனாம்‌ எல்லோருக்கும்‌ சேஷியான எம்பெருமானைக்‌ காட்டும்‌. இந்த மூன்று அம்சங்களையும்‌ அகாரம்‌ எவ்வாறு காட்‌டுகின்றது என்பதை ஆராய்வோம்‌ - உலகில்‌ சொற்களும்‌ அச்சொற்களால்‌ கூறப்படும்‌ பொருள்களும்‌ உண்டல்லவா? சொற்களுக்கெல்லாம்‌ மூலமான எழுத்து அ என்பது. எழுத்துக்கள்‌ ௮” வில்‌ தானே தொடங்குகின்றன! இவ்வாறே சொற்கள்‌ கூறும்‌ பொருள்களுக்கெல்லாம்‌ மூல காரணமாயுள்ளவன்‌ எம்பெருமானே-இப்படி சொற்களுக்கு மூலமான அகாரம்‌ சொற்‌ பொருள்களுக்கு மூல காரணமான எம்பெருமானைக்‌ கூறுவது பொருத்தம்‌ தானே! இவ்வம்சத்தை வாமன புராணமும்‌ காட்டுகின்றது. ஆகவே ௮ என்பதால்‌ அனைத்துக்கும்‌ எம்பெருமான்‌ காரணம்‌ என்ற பொருள்‌ தேறியது. மேலும்‌ ?௮? என்னும்‌ எழுத்து "அவ்‌? என்ற தாதுவிலிருந்து தேறுகின்றது. ?அவ்‌? என்ற வினைப்பகுதி (தாது) காத்தல்‌ என்ற பொருளைக்‌ காட்டும்‌. இவ்வழியால்‌ எல்லோரையும்‌ காப்பவன்‌ என்ற பொருள்‌ தேறும்‌. மேலும்‌ இந்த ௮? என்னும்‌ எழுத்தின்‌ மேல்‌ ஆய: என்னும்‌ நான்காம்‌ வேற்றுமையுருபு ஏறிப்‌ பின்‌ மறைந்திருக்கின்றது. இந்த வேற்றுமை யுருபுக்கு அடிமைத்‌ தன்மை பொருளாகும்‌. இங்கு எம்பெருமானால்‌ காக்கப்படும்‌ ஜீவன்‌ அவனுக்கு அடியன்‌ என்று பொருள்‌ கிடைக்கின்றது. இப்படி ஜீவன்‌ அவனுக்குச்‌ சேஷன்‌ என்று ஏற்பட்டால்‌ எம்பெருமான்‌ ஜீவனுக்குச்‌ சேஷியாகின்றான்‌. ஆகவே எல்லாவற்றுக்கும்‌ காரணமாய்‌ எல்லோரையும்‌ காப்பவனாகத்‌ திகழும்‌ எம்பெருமான்‌ எல்லோர்க்கும்‌ சேஷியாகவும்‌ உள்ளானென்று அகாரத்தால்‌ தேறியது.-இப்படி ஜீவன்‌ அடியனாம்‌ எம்பெருமான்‌ தலைவனாய்‌
    நிற்றலாகிய சேஷ சேஷிபாவமென்னும்‌ ஸம்பந்தம்‌ ஒருநாளும்‌ யாராலும்‌ நீக்க முடியாதாதலின்‌ இதனால்‌ ஜீவன்‌ சரீரமாயும்‌ எம்பெருமான்‌ ஆத்மாவாயும்‌ நிற்பதென்ற சரீர சரீரிபாவ ஸம்பந்தமும்‌ கூறப்பட்டதாகின்றது. சரீரத்தின்‌ இலக்கணத்தில்‌ சேஷதவம்‌ ஒரு பகுதியன்றோ!

    வயத்தில்‌ பிராட்டியின்‌ சேர்க்கை வெளிப்படையாகவே கூறப்பட்டுள்ளது. இங்குக்‌
    கருத்தாகக்‌ கொள்ள வேண்டியுள்ளது.ப்ரணவத்தில்‌ உ” என்பது நடுவெழுத்து. இதற்கு அவதாரணம்‌ பொருள்‌ என்பர்‌ வடநூலார்‌. அவதாரணத்தைத்‌ தமிழர்‌ தேற்றேகாரம்‌ என்பர்‌. இரண்டும்‌ பரியாயச்‌ சொற்கள்‌. அவதாரணமேென் பதற்கு அவனுக்கு மட்டும்‌” *இவனுக்கே என்ற முறையில்‌ வரையறுத்தலே பொருளாகும்‌. அ?” என்பதுடன்‌ ௨”
    என்ற எழுத்துச்‌ சேரும்போது அகாரத்தால்‌ கூறப்படும்‌ எம்பெருமானுக்கே அடியன்‌ ஜீவன்‌ என்று வரையறுத்த பொருள்‌ தேறும்‌. இதனால்‌ எம்பெருமானையன்றி மற்றுள்ளாரோடு ஜீவனுக்கு இயற்கையான ஸம்பந்தம்‌ ஏதுமில்லையென்று தேறியது.
    இதனால்‌ எம்பெருமானையன்றி மற்ற தேவதைகளை விலக்க வேண்டிய அவசியம்‌ ஏற்படுவதுடன்‌ மற்ற தெய்வங்களை நாடுமவர்களையும்‌ அணுகாது விலக்க வேண்டுமென்பதும்‌ தேறியது.

    ம்‌” என்ற எழுத்து ஜீவனைக்‌ கூறும்‌ பொருளில்‌ உருவாவதற்கு இரண்டு வழிகள்‌ உள்ளன. (1) வடமொழியில்‌ மந்‌” என்ற ஒரு தாது (வினைப்பகுதி) உள்ளது. இந்தப்‌ பகுதிக்கு அறிவு என்பது பொருள்‌. இந்த வினைப்பகுதியினின்று வியாகரண முறைப்படி ம்‌ என்று தேறிவிடுகின்றது. அப்பொழுது ஞான வடிவான ஆத்மா
    என்று பொருளாகும்‌. (2) மற்றொரு வழி - வடமொழியில்‌ அஸ்மத்‌ என்ற ஒரு சொல்‌ உண்டு. இது தன்மைப்‌ பொருளில்‌ வருவது. வேதத்திற்கு இலக்கணம்‌ தனி. அந்த இலக்கணத்தின்‌ படி *அஸ்‌.மத? என்ற சொல்லில்‌ முன்னே உள்ள அஸ்‌” என்பதுவும்‌ பின்னே உள்ள அத? என்பதுவும்‌ அழிகின்றன. எஞ்சியுள்ள பகுதி ?ம்‌* என்பதுவே. இப்படி அஸ்மத்‌? என்ற முழுப்பகுதியே *ம்‌* என்று அகியிருப்பதால்‌ அந்தப்‌ பொருளே இதற்கும்‌ உண்டு.

    ம்‌” என்னும்‌ மகாரம்‌ ஜீவனைக்‌ கூறுவதாய்த தேறியது. மந்‌” என்றவினைப்பகுதியினின்று ஞான வடிவன்‌ ஜீவாத்மா என்று தேறியது போல்‌ அநந்த வடிவமாயுள்ளவன்‌ என்றும்‌ தேறும்‌. எவ்வாறெனில்‌ நான்‌ என்று ஒவ்வொருவனும்‌ உணரும்போது அந்த ஜீவன்‌ அநுகூலனாகவே தோன்றுகின்றான்‌. நூன்‌” என்று உணரும்‌ எவனுக்காவது தன்‌ ஆத்மா ப்ரதிகூலனாய்த தோன்றுவதுண்டா? ஆகவே இன்பவடிவமாகவே தோன்று கின்றான்‌ ஜீவன்‌. ஆதலின்‌ அநந்த வடிவமாயுமுள்ளவனென்றும்‌ தேறுகின்றது. இவ்வாற்றால்‌ ஞானவடிவனாய்‌ ஆநந்தவடிவனாய்‌ முன்கூறிய அடிமைத்‌ தன்மையுடையவனாயுள்ளவன்‌ ஜீவாத்மா என்று பொருள்‌ தீர்ந்தது. ப்ரணவத்தின்‌ முழுப்பொருள்‌ ப்ரணவத்தில்‌ இந்த மூன்று அக்ஷ்ரங்களின்‌ அர்த்தத்தையும்‌ சேர்த்து ஒரு பொருளாகப்‌ பார்க்கும்போது ஜீவனைப்‌ பற்றிய பின்வருமாறு உள்ள அநுஸதந்தாநம்‌ பலிக்கும்‌. அதாவது - "ஜீவாத்மா தன்னை அறிய வேறொரு ஞானம்‌ வேண்டாதபடி தானே நான்‌? என்று ப்ரகாசிப்பவன்‌; எப்பொழுதும்‌ அநுகூலனாகவே தோற்று. மவன்‌: தன்‌ ஞானத்தாலே வஸ்துக்களை அறிபவன்‌; தான்‌ ப்ரகாசிப்பதால்‌ வரும்‌ பயனைத்‌ தானே பெறுமவன்‌; (ப்ரக்ருதி - மஹாந்‌ - அஹங்காரம்‌ - ஜஞாநேந்தரியம்‌ ஐந்து - கர்மேந்த்ரியம்‌ ஐந்து - மனம்‌ - தந்மாத்ரங்கள்‌ ஐந்து - பூதங்கள்‌ ஐந்து ஆகிய) இருபத்துநான்கு அசேதந தத்துவங்களைக்‌ காட்டிலும்‌ வேறுபட்டவன்‌. இத்தகைய ஜீவாத்மா, எல்லாவற்றுக்கும்‌ காரணமாய்‌” எல்லோரையும்‌ காப்பவனாய்‌ எல்லோருக்கும்‌ தலைவனான சரிய: பதிக்கே இயற்கையில்‌ அடியனாயிருப்பவன்‌; வேறு எவனுக்கும்‌ அடியனாகத தகுதியூடையனல்லன்‌”. என்பதுவே. 'ப்ரணவத்தால்‌ இந்த அர்த்தத்தை அறிந்து சேதநன்‌ அநுஸந்திப்பான்‌. இப்படி ஜீவாத்மாவாகிய தான்‌ எம்பெருமானுக்குச்‌ சேஷமென்று தீர்ந்ததால்‌ தனக்கு உடைமையாயுள்ள ஸகல வஸ்துக்களும்‌ எம்பெருமானுக்கே சேஷமாயுள்ளனவென்றும்‌ தேறுகின்றது. உகாரத்திற்கே பொருள்‌ பிராட்டியென்று சுருதி முதலியன கூறுகின்றன. ஆகவே பரணவத்தில்‌ கடை எழுத்தான மகாரத்தால்‌ கூற.ப்படும்‌ ஜீவன்‌ முதலெழுத்தான அகாரத்தால்‌ கூறப்படும்‌
    எம்பெருமானுக்கும்‌ நடு எழுத்தான உகாரத்தால்‌ கூறப்படும்‌ பிராட்‌ டிக்கும்‌ தாஸனாய்‌ நிற்பவன்‌ என்று பொருள்‌ தேறுகின்றது.ப்ரணவத்துக்கும்‌ நம: என்பதற்கும்‌ சேர்த்துப்‌ பொருளை ஆராய்ந்தால்‌ 'ஜீவ்னாஇய நானும்‌ என்னுடையனவாகக்‌ கூறப்படும்‌ பொருள்களும்‌ உண்மையில்‌ என்னுடையனவாகமாட்டா. பிறருக்கும்‌ இவற்றில்‌
    சிறிதும்‌ - உரிமையில்லை. இவை அனைத்தும்‌ மற்றவருக்கு உரிமையில்லாதவாறு எம்பெருமானுக்கே சேஷமாயுள்ளன? என்று அநுஸந்திக்க வேண்டியதாய்‌ முடிந்தது.

    திருமந்திரத்தின்‌ பதங்களை வாக்கியமாகச்‌ சேர்த்துப்‌ பொருள்‌ பூ கண்ட பெரியோர்கள்‌ பத்துவகை அர்த்தங்களை அநுஸந்திப்பர்‌. -அந்தப்‌ பத்துவகைப்‌ பொருள்களும்‌ ஸ்ரீமத்‌ ரஹஸ்யத்ரய ஸாரத்தில்‌ விளக்கமாய்க்‌ கூறப்பட்டுள்ளன-
    முன்னோர்களான பெரியோர்கள்‌ 'திருமந்த்ரத்திலே பிறந்து த்வயத்திலே வளர்ந்து த்வயைக நிஷ்ட்‌ டரா£வீர்‌' என்று சிஷ்யர்களுக்கு உப்தேசித்தார்கள்‌.

    —————————————-

    கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
    ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

    ———————————————————

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ நயினாராச்சார்யர் சுவாமி திருவடிகளே சரணம்-
    ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

    ஸ்ரீ வேதாந்த தேசிகர் அருளிச் செய்த -ஸ்ரீ தத்வ த்ரய சுகளம்-

    June 20, 2025

    ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
    வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

    சுளகம்‌ என்ற சொல்லுக்கு உள்ளங்கை என்று அர்த்தமாகும்‌.. -அசேதநம்‌ - சேதநன்‌ - ஈச்வரன்‌ என்னும்‌ தத்துவங்களைப்‌ பற்றிய  விஷயங்களை உள்ளங்கையில்‌ வைத்தாற்‌ போல்‌ எளிதில்‌  காட்டுவதால்‌ இந்த ரஹஸ்யத்திற்கு இப்பெயர்‌ வந்தது -
    ஸ்ரீ மந்‌ நாராயணன்‌ திருவடிகளே சேதநர்க்கு உபாயமாகனும்‌ -அதனால்‌ வரும்‌ பலனாகவும்‌ ஆகும்‌. இவ்வெண்ணத்துடன்‌ அவன்‌ திருவடிகளைப்‌ பற்ற வேண்டுமானால்‌ முதலில்‌ மூன்று தத்துவங்களைப்‌ பற்றிய உண்மைகளை விரிவாய்‌ அறிய வேண்டும்‌. இவற்றை அறிந்தால்‌ மட்டுமே சில விபரீத ஜ்ஞாநங்கள்‌ ஒழியும்‌. அவையாவன - (1) சரீரத்திலும்‌ ஆத்மா வேறு பட்டிருக்கும்‌ உண்மையை அறியாமல்‌ சரீரத்தையே ஆத்மாவராகக்‌ கருதுதல்‌. (2) எம்பெருமானுக்கு அடிமையாக இருக்கும்‌ ஆத்மாவை ஸ்வதந்த்ரனாக நினைத்தல்‌. மூன்று தத்துவங்களையும்‌ நன்கு அறிந்தால் தான்‌ இந்த விபரீத எண்ணங்களெல்லாம்‌ ஒழியும்‌.

    அசேதந வஸ்து மூவகைப்படும்‌. (1) த்ரிகுணம்‌ (2 காலம்‌ -(3) சுத்த ஸத்துவம்‌. இந்த மூன்றுக்கும்‌ அறிவு கிடையாது. ஆதலால்‌ அசேதநமாகும்‌.
    தர்மபூதஜ்ஞாநத்தின்‌ நிலை -இங்கு ஒரு கேள்வி - ஜீவனிடம்‌ உள்ள அறிவைத்‌ தர்ம
    பூதஜஞாநம்‌ என்று கூறுகின்றோமே! அதற்கும்‌ அறிவு இல்லையே! அறிவுக்கு ஒர்‌ அறிவு ஏது? ஆதலின்‌ அதுவும்‌ ஒர்‌ அசேதந வஸ்துவாய்‌ உள்ளதே! இந்த மூன்றைப்‌ போல்‌ அதையும்‌ அசேதந வஸ்துவில்‌ சேர்த்து நான்காகக்‌ கூற வேண்டாமா? என்று

    அசேதநங்களை விளக்குவதன்‌ பயன

    இந்த மூன்றை மட்டும்‌ பிரித்து விளக்குவதன்‌ காரணத்தை ஆராய்வோம்‌. திரிகுணம்‌ என்னும்‌ ப்ரக்ருதியைப்‌ பற்றி விளக்கினால்‌ இருபத்தைந்தாவது தத்துவமாகிய ஜீவனைப்‌ பற்றி விளக்கமாய்‌ அறியமுடியும்‌. அந்த ப்ரக்ருகியின்‌ மாறுபாடாகிய
    சரீரத்தினும்‌ ஜீவனுக்கு வேறுபாடு தெரியவேண்டுமன்றோ!
    இவ்வாறே காலத்தைப்‌ பற்றிய விளக்கம்‌ தெரிந்தால்தான்‌ இம்மைச்‌ செல்வம்‌ நெடுங்காலம்‌ நிலைக்கக்கூடியதன்று என்ற விவேகம்‌ ஏற்படும்‌. மேலும்‌ இந்தக்‌ காலத்திற்குக்‌ கட்டுப்படாத பரமபதத்தில்‌ ஆசை உண்டாகும்‌. மேலும்‌ அந்த அந்தக்‌ காலத்தில்‌ செய்ய வேண்டிய காரியங்களை உரிய காலத்தில்‌ செம்வதற்கு எண்ணம்‌
    கொள்ளவும்‌ காலத்தைப்‌ பற்றிய விளக்க அறிவு பயன்படும்‌. இங்ஙனமே சுத்த ஸததுவததைப்‌ பற்றிய விரிவான அறிவு உபாயமும்‌ பலனுமாய்‌ நிற்கும்‌ எம்பெருமானுடைய திருமேனி முதலியன சுத்த ஸத்துவ மயமாயிருப்பதை நன்கு அறியப்‌ பயன்படும்‌. இந்த மூன்று அசேதநங்களின்‌ விளக்க அறிவு பயன்படுமளவுக்குத்‌ தர்மயூதஜ்ஞாநத்தின்‌ விளக்கம்‌ பயன்படாதாகையாலும்‌ அதை இந்த மூன்று அசேதநங்களுடன்‌ சேர்க்கவில்லை.
    ஸத்துவம்‌ - ரஜஸ்‌ - தமஸ்‌! என்னும்‌ மூன்று  குணங்களுக்கும்‌ இருப்பிடமான ப்ரக்ருதி, தரிகுணம்‌ என வழங்கும்‌.  இந்த ப்ரக்ருதி சேதநர்களுக்குப்‌ பகவானுடைய ஸ்வரூபத்தைக்‌ காட்டாமல்‌ மறைக்கின்றது. இன்னும்‌ பல தீங்குகளையும்‌ விளைவிக்கின்றது. -ஸத்துவம்‌ - இது உயர்ந்த குணம்‌. இது சேதநருக்கு 
    வஸ்துக்களின்‌ உண்மையான நிலையைக்‌ காட்டும்‌. மனிதன்‌ ஸுகம்‌ பெறுதற்கும்‌ காரணமாகும்‌. இந்தக்‌ குணம்‌ சிலருக்கு . மிகவும்‌ அதிகமாகி விட்டால்‌ மோக்ஷத்துக்குச்‌ சாதனமான” செயலைச்‌ செய்யத்‌ தூண்டி உதவி புரியும்‌-ரஜஸ்‌ என்பது நடுத்தரமான ஒரு குணம்‌. இது சேதநருக்கு ஆசை - துன்பம்‌ - விபரீத ஜ்ஞாநம்‌ முதலியவற்றை உண்டாக்கும்‌. தமஸ்‌ என்பது இழிவான குணம்‌.
    இது மனிதருக்குக்‌ கவனமில்லாமை - சோம்பல்‌ - உறக்கம்‌ - அஞ்ஞாநம்‌ முதலியவற்றைத்‌ தரும்‌.இந்த மூன்று குணங்களும்‌ ப்ரக்ருதியில்‌ ஏற்றக்‌ குறைவின்றி
    ஸமமான அளவுக்கு இருக்கும்‌ ஸமயமே மஹாப்ரளயமாகும்‌. ஸ்வதந்தரனான எம்பெருமான்‌ ஸங்கல்‌.்பித்தால்தான்‌ இம்மூன்று குணங்களும்‌ ஸமமான அளவுக்குச்‌ சேரும்‌. எப்பொழுது அவன்‌ ஸங்கல்பிப்பான்‌ என்பதைச்‌ சாஸ்தரம்‌ கூறியுள்ளது. அந்த
    ஸங்கலபத்துக்கு அவனே காலத்தைக்‌ குறிப்பிட்டுக்‌ கொள்வான்‌.இவ்வாறே இந்த மூன்று குணங்களும்‌ ப்ரக்ருதியில்‌ சில ஸமயத்தில்‌ ஒன்றுக்கொன்று ஏற்றக்‌ குறைவாய்‌ இருக்கும்‌. இந்த ப்ரக்ருதி அப்பொழுதுதான்‌ மஹாந்‌ அஹங்காரம்‌ முதலிய
    மாறுபாடுகளை அடைகின்றது. அப்பொழுது தான்‌ உலகில்‌ ஸ்ருஷ்டி (படைப்பு) ஏற்படுகின்றது. நம்‌ சரீரத்தில்‌ வாதம்‌ - பித்தம்‌ - கபம்‌ என்ற தாதுக்களில்‌ ஒன்று குறைவதும்‌ மற்றொன்று கூடுவதுமாய்‌ இருக்கவில்லையா? அவ்வாறே ப்ரக்ருதியில்‌ இம்மூன்று குணங்களுள்‌ ஒன்று ஏறுவதும்‌ மற்றொன்று இறங்குவதுமாய்‌ இருப்பதுண்டு. அப்பொழுதுதான்‌ ப்ரக்ருதி பல வஸ்துக்களாய்‌ மாறுபாட்டை யடைகின்றது. இவ்வாறு குணங்களில்‌ ஏற்படும்‌ ஏற்றச்‌ சுருக்கங்களுக்கு அளவேயில்லை.

    முற்கூறிய மூன்று குணங்களும்‌ ஸமமான நிலையில்‌ இருக்கப்‌ யெற்ற வஸ்துவே மூல ப்ரக்ருதி என வழங்குகின்றது. இந்த மூலபரக்ருதிக்கு அறிவு கிடையாது; அழிவு கிடையாது; பிறர்‌ பயனுக்காகவே ஏற்பட்டது. எப்பொழுதும்‌ மாறுபாடு அடைந்து
    கொண்டேயிருப்பது. ஸ்ரீவைகுண்டம்‌ தவிர மற்ற இடங்களில்‌ இது இல்லாத இடம்‌ இல்லையென்னலாம்படி எங்கும்‌ பரவியுள்ளது. இந்த ப்ரக்ருதி மிவும்‌ ஸூக்ஷமமான சில மாறுபாட்டை அடையும்போது அதற்குத தமஸ்‌ முதலிய சில பெயர்ப்‌
    பிரிவுகளைச்‌ சுருதி சொல்லுகின்றது.

    இந்த ப்ரக்ருதி பல்வேறு வஸ்துக்களாய்‌ மாறு படும்போது வயக்தமெனப்‌ பெயர்‌ பெறும்‌. ஒரே வகையான மாறுபாட்டை அடையும்போது அவயக்தமெனப்‌ பெயர்‌ பெறும்‌. இந்த ப்ரக்ருதி மாறுபடும்‌ நிலையில்‌ வயக்தமெனப்‌ பெயர்‌ கொண்டு மஹாந்‌ முதல்‌ ப்ருதிவீ வரை உள்ள இருபத்துமூன்று தத்துவமாக மாறும்‌.
    பரக்குதியின்‌ முழுப்‌ பகுதியும்‌ இப்படி இருபத்து மூன்று தத்துவங்களாக மாறுவதில்லை. அதில்‌ ஒரு பகுதியே இப்படி மாறுகின்றது. மற்ற பகுதி மாறாமல்‌ அப்படியே இருந்து கொண்டிருக்கும்‌. ப்ரக்ருதியில்‌ மற்ற வஸ்துக்களாக மாறுபடும்‌ பகுதி கடலில்‌ அலைகளையுடைய பகுதி போன்றதாகும்‌. மாறுபடாமல்‌
    அப்படியே நிற்கும்‌ பகுதி கடலில்‌ அலையேயில்லாத இடம்‌ போன்றதாகும்‌. இப்படி மஹாத்‌ முதலிய மாறுபாட்டை அடையாமல்‌ அப்படியே நிற்கும்‌ ப்ரக்ருதியின்‌ பகுதியிலும்‌ கூட ப்ரளய நிலையில்யோல்‌ மிகவும்‌ ஸு்க்ஷூமமாய்‌ நமக்குப்‌
    புலப்படாதனவாய்‌ ஒரே வகையான மாறுபாடுகள்‌ இருந்து கொண்டேயிருக்கும்‌.

    இப்படி பரக்குதியில்‌ ஸத்துவம்‌ - ரஜஸ்‌ - தமஸ்‌ என்னும்‌ மூன்று குணங்களின்‌ ஏற்றச்‌ சுருக்கங்களால்‌ ஏற்படும்‌ மாறு பாடுகளில்‌ முதல்‌ மாறுபாடு மஹாந்‌ என்பது. ஜீவனுக்கு நிச்சயவடிவமான ஞானத்தை மநஸ்ஸுதான்‌ உண்டாக்குகின்றது.
    அப்பொழுது இந்த மஹாந்‌ மனத்துக்குத்‌ துணையாயிருக்கும்‌. ஆதலால்‌ இநத மஹாந்‌ புத்தி என்று வழங்கப்பெறும்‌. இந்த மஹானும்‌ தன்னிடம்‌ உள்ள குணத்தைக்‌ கொண்டு மூன்று வகைப்படும்‌. மஹானில்‌ ஸத்துவகுணம்‌ அதிகமாயிருந்தால்‌
    ஸாத்துவிக மஹாந்‌ என்றும்‌, ரஜோ குணம்‌ மிகுந்திருந்தால்‌ ராஜஸ மஹாந்‌ என்றும்‌, தமோ குணம்‌ அதிகமாயின்‌ தாமஸ மஹாந்‌ என்றும்‌ அழைக்கப்படும்‌.
    இந்த மஹானிலிருந்து பிறக்கும்‌ தத்துவம்‌ அஹங்காரம்‌ என்பது. இதன்‌ செயல்‌ வருமாறு - ஜீவனிலும்‌ வேறுபட்ட சரீரத்தையே ஆத்மாவாக நினைத்து அதில்‌ நான்‌ என்ற எண்ணத்தை மனம்‌ உண்டாக்குகின்றது. அப்பொழுது மனத்துக்கு இந்த அஹங்காரம்‌ துணை புரிகின்றது. அதனாலேயே இதற்கு அஹங்காரம்‌ என்ற பெயர்‌ வந்தது. இந்த அஹங்காரமும்‌ தனக்குக்‌ காரணமான மஹான்‌ போலேஸாத்துவிகம்‌ - ராஜஸம்‌ - தாமஸம்‌ என்று குணங்களின்‌ மிகுதி குறைவுகளைக்‌ கொண்டு
    மூவகைப்படும்‌. இவற்றுள்‌ ஸாத்தவிக அஹங்காரத்தினின்று இந்திரியங்கள்‌ பிறக்கின்றன. தாமஸ அஹங்காரத்தினின்று பின்‌ தரும்‌ விளக்கத்தின்படி பூதங்கள்‌ பிறக்கின்றன. இந்த இரண்டு அஹங்காரங்களும்‌ தத்தம்‌ காரியங்களைப்‌ பிறப்பிக்கும்போது ராஜஸ அஹங்காரம்‌ இவ்விரண்டுக்கும்‌ தூண்டித்‌ துணை புரியும்‌

    ஸாத்துவிக அஹங்காரத்தினின்று பதினொன்று. இந்திரியங்களும்‌ பிறக்கின்றன. இந்த்ரியங்கள்‌ உள்‌  இந்திரியங்களென்றும்‌ புற இந்திரியங்களென்றும்‌ இருவகைப்படும்‌. -உள்‌ இந்திரியமென்பது மனம்தான்‌. இந்த மனம்‌ 
    ஸம்ஸாரலோகத்தில்‌ உள்ள சேதநர்கள்‌ ஒன்றைச்‌ செய்ய ஸங்கல்பிப்பதற்கும்‌ ஒன்றை நினைத்தற்கும்‌ மற்றும்‌ சில எண்ணங்கள்‌ உண்டாவதற்கும்‌ காரணமாயிருக்கும்‌. வெளி இந்திரியங்கள்‌ தத்தம்‌ செயலைச்‌ செய்ய இந்த மனம்‌ துணையாய்‌ நிற்கும்‌. உலகில்‌ மனிதனுக்கு நிச்சயமான எண்ணம்‌ உண்டாகின்றதன்றோ! அந்த எண்ணத்துக்கு மனம்தான்‌ காரணமாகின்றது. அப்பொழுது மனம்‌ புத்தி என்று பெயரால்‌ வழங்கும்‌. மனிதன்‌ ஒன்றை வேறொன்றாகத்‌ தவறிக்‌ கருதுகின்றான்‌. அதற்கும்‌ மனம்‌ தானே காரணம்‌! அந்த நிலையில்‌ மனம்‌ அஹங்காரம்‌ என்ற பெயர்‌ பெறுகின்றது. மனிதன்‌ ஒரு விஷயத்தைப்‌ பற்றி ஆலோசிக்னெறான்‌. இந்த ஆலோசனைக்கும்‌ மனமே காரணம்‌. இந்த நிலையில்‌ மனம்‌ சிததம்‌ என்று
    அழைக்கப்பெறும்‌.


    ஜஞாநேந்திரியங்கள்‌ ஐந்தும்‌ தத்தும்‌ செயலைப்‌ புரியும்‌ போது அவற்றின்‌ சக்தியை ஐந்து பூதங்களும்‌ வளர்த்துப்‌ போஷிக்கின்றன. காதுக்கு ஆகாய மம்‌. ஸ்பரிசேந்திரியத்துக்கு வாயுவும்‌, கண்ணுக்குத்‌ தேஜஸ்ஸும்‌. நாவுக்கு ஜலமும்‌, மூக்குக்குப்‌ பூமியும்‌ துணைநின்று அவ்விந்திரியங்களின்‌ சக்தியை வளர்க்கின்றன. இவ்வாறே உள்ளிந்திரியமாகிய மனத்துக்குப்‌ பூமி என்னும்‌ பூதம்‌ போஷகமாயுள்ளது. ப்ராண வாயுவை ஜலம்‌ போஷிக்கிறது. வாக்குக்குத்‌ தேஜஸ்‌ போஷகமாகும்‌.

    மஹாந்‌ என்ற தத்துவம்‌ தொடங்கி ப்ருதிவி வரையில்‌ உள்ள எம்பெருமானது படைப்பு ஸமஷ்டி ஸ்ருஷ்டியெனப்படும்‌. இந்த மஹான்‌ முதலிய தததுவங்களின்‌ பகுதிகளைக்‌ கொண்டு செய்யப்படும்‌ படைப்பு வ்யஷ்டி ஸ்ருஷ்டி எனப்படும்‌.

    சுத்த ஸத்துவத்தின்‌ உருவத்தைப்‌ பற்றிச்‌ சில கருத்துவேற்றுமைகள்‌ உண்டு.
    அவையாவன - சிலர்‌ இந்தச்‌ சுத்த ஸத்துவத்தை ப்ரக்ருதியையும்‌ காலத்தையும்‌ போல ஜடம்‌ என்கின்றனர்‌. அதாவது - தானே பரகாசிக்காமல்‌ வேறொன்றால்‌ புலப்படுத்த வேண்டியதாயுள்ள தென்கின்றனர்‌. சிலர்‌ சுத்த ஸத்துவத்தை ஸ்வயம்‌
    ப்ரகாசமென்கின்றனர்‌. அதாவது - இதைக்‌ காண்பதற்குச்‌ சாதனமாய்‌ வேறொன்றும்‌ வேண்டியதில்லையென்றும்‌ தானே ப்ரகாசிததுக்‌ கொண்டிருக்குமென்றும்‌ கூறுகின்றனர்‌. தர்மபூதஜ்ஞாநம்‌, ஜீவாத்மா, அவனுடைய தர்மபூதஜ்ஞானம்‌, சுத்த ஸத்த்வம்‌ ஆகிய இவையெல்லாம்‌ ஸ்வயம்ப்ரகாசம்‌ என்று தேறுகின்றது. ஆத்மா *நான்” என்று எப்பொழுதும்‌ தோன்றிக்‌ கொண்டேயிருப்பதால்‌ இதை அறிய வேறு ஞானம்‌ வேண்டியதில்லை. ஆதலால்‌ _ஆதிமா ஸ்வயம்ப்ரகாசம்‌. ஆத்மாவிடம்‌ உள்ள ஞானம்‌ தர்மபூதஜ்ஞாநமெனப்படும்‌. இந்த ஞானம்‌ தன்னை அறிய வேறொரு ஞானம்‌
    வேண்டாதபடி தானே ப்ரகாசிப்பதால்‌ இதுவும்‌ ஸ்வயம்ப்ர காசம்‌ என்னப்படுகின்றது. இவ்வாறே சுத்த ஸத்துவமும்‌ தன்னை அறிய வேறொரு ஞானம்‌ வேண்டாதபடி தானே ப்ரகாசிக்னெறது. ஆதலின்‌ இதுவும்‌ ஸ்வயம்‌ ப்ரகாசம்‌. ஆக ஆத்மாக்களும்‌ தர்மபூத ஜ்ஞாநமும்‌ சுத்த ஸத்த்வமும்‌ ஸ்வயம்‌ ப்ரகாசம்‌ என்ற முறையில்‌ ஒற்றுமையுடையன.

    ஆயினும்‌ ஆத்மாவையும்‌ தர்மபூதஜ்ஞாநத்தையும்‌ காட்டிலும்‌ சுத்த ஸத்துவத்துக்குச்‌ சல வேற்றுமைகளும்‌ உண்டு. இந்த வேறுபாடுகள்‌ சாஸ்த்ரங்களால்‌ நிச்சயிக்கப்‌ பட்டனவாகும்‌. உதரஹரணமாம்‌ - ஆத்மாவுக்கு மாறுபாடு கிடையாது. சுத்த : ஸத்துவம்‌ வேறொரு வஸ்துவாய்‌ மாறுபாட்டை அடைவது. தர்ம பூதஜ்ஞாதம்‌ மற்றொரு
    வஸ்துவைக்‌ காட்ட வல்லது. சுத்த ஸத்துவம்‌ தன்னை மட்டும்‌ காட்‌ டுமேயன்றி மற்றொரு வஸ்துவைக்‌ காட்ட வல்லதன்று. இப்படி சிற்சில வேற்றுமைகளையும்‌ சாஸ்தரமே வரையறுத்துள்ளது -ஆத்மா, தான் புலப்படுமேயன்றி மற்ற வஸ்துவைக்‌ காட்டாது. தர்‌மபூதஜ்ஞாநமோ தானே புலப்படுவதுடன்‌ மற்ற வஸ்துவையும்‌ காட்ட வல்லது.
    ஆத்மா தான்‌ புலப்படுவதால்‌ வரும்‌ பயனைத்‌ -தானே பெறும்‌. தர்மபூத ஜ்ஞாநம்‌ தான்‌ புலப்படுவதால்‌ வரும்‌ பலனைத்‌ தான்‌ அடைய முடியாது. அசேதநம்தானே! ஆத்மாவுக்குச்‌ சுருக்கமோ மலர்ச்சியோ கிடையாது. தர்மபூதஜ்ஞாநம்‌ சுருங்குவதும்‌ மலருவதும்‌ உண்டு. இந்த வேற்றுமைகளையும்‌ சாஸ்தரம்‌ , வலியுறுத்திக்‌ கூறுவதால்‌ ஏற்றுக்‌ கொண்டேயாக வேண்டியிருக்கன்றதன்றோ! இவ்வாறே இந்த இரண்டிலும்‌ காட்டிலும்‌ இந்தச்‌ சுத்த ஸத்துவத்திற்குக்‌ ழ்க்‌ கூறியவாறு லை வேற்றுமைகளையும்‌ முன் கூறிய ப்ரமாணங்களை ஒத்த ப்ரமாணங்கள்‌ வலியுறுத்திக்‌ கூறுவதால்‌ இசைந்தேயாக வேண்டும்‌. -
    சுத்த -ஸத்துவத்தின்‌ தன்மைகள்‌ நமக்கு மிகவும்‌ அநுகூலமாயிருப்பதால்‌ “சுத்த ஸத்துவத்தை ஆநந்தமயம்‌' என்றும்‌ கூறுவர்‌. இது எம்பெருமானுடைய ஞானம்‌ - சக்தி - பலம்‌: ஐச்வர்யம்‌. --வீர்யம்‌ - தேஜஸ்‌ ஆகிய ஆறு குணங்களும்‌! நமக்குப்‌ புலப்படும்படி செய்வதால்‌ ஷாட்குணயமயம்‌ என்றும்‌ அழைக்கப்படும்‌.

    வாத்மாவைப்‌ பற்றிய விளக்கத்தை ஸ்ரீ ஆளவந்தார்‌ தாம்‌ அருளிச்‌ செய்த ஸித்தித்ரயத்தில்‌ ஆத்மஸித்து என்ற பகுதியில்‌ "தேஹேந்தரிம: என்று தொடங்கும்‌ சுலோகத்தில்‌ அருளிச்‌ செய்தார்‌ -தேறஹேந்த்ரிய மந: ப்ராணூ.ப்யோ 2ந்யோ 2நந்யாஸாததந: நித்யோ வ்யாபீ ப்ரதிக்ஷேத்ரமாத்மா பிந்ந: ஸ்வதஸ்ஸு-இதற்குச்‌ சுருக்கமான பொருள்‌ வருமாறு - ஜீவாத்மா, சரீரம்‌ - இந்தரியம்‌ - மநஸ்‌ - ப்ராண வாயு - தர்மபூதஜ்ஞாநம்‌ இவற்றிற காட்டிலும்‌ வேறுபட்டவன்‌. தானே ப்ரகாரிப்பவன்‌. அழிவற்றவன; எந்த அசேதநத்திலும்‌ உள்ளே புகவல்லவன்‌. சரீரம்தோறும்‌
    வேறுபட்டவன்‌. இயற்கையில்‌ ஸுகஸ்வரூபனும்‌ ஸாகத்தைப்‌ பெறத்‌ தகுதி யுடையவனுமா யிருப்பவன்‌.

    எம்பெருமானுக்கு இரண்டு வகைப்பட்ட தன்மைகள்‌ உண்டு. (1) ஸ்வரூப நிரூபக தர்மங்கள்‌ (2) நிரூபித ஸ்வரூப விசேஷணங்கள்‌.-ஸ்வரூப நிரூபகங்களாவன - ஒரு வஸ்துவின்‌ ஸ்வரூபத்தை எந்தத்‌ தன்மைகளையுடையதாகக்‌ கூறியே விளக்கினாலன்றி அந்த வஸ்துவை அறிய முடியாதோ அந்தத்‌ தன்மைகள்‌ எம்பெருமானுக்கு (1) ஸத்யத்வம்‌ (2) ஜ்ஞாநத்வம்‌ (3) அநந்தத்தவம்‌ (4) ஆநந்தத்வம்‌ (5) அமலத்வம்‌ என்னும்‌ ஐந்து தன்மைகளும்‌ ஸ்வரூப நிரூபக விசேஷணங்கள்‌. எம்பெருமானைப்‌ பற்றி அறிய முற்படும் யோது இந்தத்‌ தன்மைகளை அறிந்தே இவற்றுடன்‌ கூடியவனாக அவனை உணர வேண்டும்‌. இந்த ஐந்தையும்‌ சேர்க்காமல்‌ அவன்‌ ஸ்வரூபத்தை மட்டும்‌ அறியமுடியாது.
    (1) ஸத்யத்வம்‌ - எப்பொழுதும்‌ மாறுபடாது ஒரே நிலையில்‌ நிற்றல்‌.
    (2) ஜ்ஞாநதவம்‌ - எப்பொழுதும்‌ குறைவுபடாத ஞான வடிவனாயிருக்கும்‌ தன்மை.
    (3) அநந்தத்வம்‌ - *இங்கு தான்‌ இருக்கின்றான்‌? என்று தேசததாலும்‌, இப்பொழுது தான்‌ இருக்கின்றான்‌? என்று காலத்தாலும்‌ இந்த வஸ்துவின்‌ அந்தர்யாமியாகத் தான்‌ இருக்கின்றான்‌, என்று வஸ்துவினாலும்‌ அளவிட முடியாதபடி எவ்விடத்திலும்‌ எக்காலத்திலும்‌ எந்த வஸ்துவையும்‌ சரீரமாகக்‌ கொண்டு நிற்கும்‌ தன்மை.
    4) ஆநந்ததவம்‌ - ஆநந்த ஸ்வரூபனாய்‌ நிற்றல்‌-(5) அமலத்வம்‌ - தோஷங்களில்லாத தன்மை

    நிரூபிதஸ்வரூபவிசேஷணம்‌ - ஒரு வஸ்துவின்‌ ஸ்வரூபத்தை விளக்கிய பின்‌ அதன்‌ பெருமை புலப்.படுவதற்குப்‌ புகழ்ந்து பேசும்‌ குணங்கள்‌. முற்கூறிய ஐந்து குணங்களு டனேயே எம்பெருமானை விளக்கிய பின்‌ அவன்‌ பெருமையை அதிவதற்காக அவனிடம்‌ உள்ள ஜ்ஞாநம்‌ - சக்தி முதலிய குணங்களும்‌ இவற்றின்‌ உட்பிரிவுகளான ஸெளசீல்யம்‌ (மிக மேம்பட்டவன்‌ தாழ்ந்தவர்களோடு இடையீடின்றிக்‌ கலந்து பழகும்‌ தன்மை) முதலிய தன்மைகளும்‌ கூறப்‌ படுகின்றன. இவையெல்லாம்‌ நிரூபித ஸ்வரூப விசேஷணங்களாகும்‌. இக்குணங்களின்‌ இலக்கணங்களையும்‌ இவை பயன்படும்‌ முறை முதலியவற்றையும்‌ விரிவாக அறிய வேண்டுமானால்‌ சாஸ்த்ரங்களின்‌ உதவியை நாடிக்‌ கொள்க.
    ஸ்ரீபாஞ்சராத்ர ஸம்ஹிதையில்‌ முப்பத்தொன்ப; விபவரூபங்களுக்கும்‌ பெயர்கள்‌ கொடுக்கப் பட்டுள்ளன அவையாவன - (1) பத்மநாபன்‌ (2) ஸநத்குமாரன்‌ (8) தருவ 
    (௧) அநந்தன்‌ (5) சக்த்யாத்மா (6) மதுஸூதநன்‌ (7) கபில (8) விச்வரூபன்‌ (9) விஹங்கமன்‌ (10) க்ரோடாதம (12) படபாவக்த்ரன்‌ (12) தர்மன்‌ (74) ஹயக்ரீவன்‌ (14) ஹம்ஸ (15) மத்ஸ்யம்‌ (16) கூர்மம்‌ (17) அம்ருநாூாஹரணன்‌ (18) வராஹ
    (19) ந்ருஸிம்ஹன்‌ (20) ராஹுஜித (21) காலநேமிக்நன்‌ (22) பா ஜாதஹரன்‌ (23) தத்தாத்ரேயன்‌ (24) வடபத்ரசாயி (25) வாமன (26) த்ரிவிக்ரமன்‌ (27) நரநாராயணர்‌ (28) ஹரி (29) நாரத (30) ப்ருது (31) வ்ருஷபன்‌ (22) தந்வந்தரி (83) வ்யாஸ
    (34) பாதாளசயநன்‌ (35) பரசுராமன்‌ (36) ராமன்‌ (67) பலராம (38) க்ருஷ்ணன்‌ (39) கல்கி என்பன.

    எம்பெருமானுடைய அவதாரங்களைப்பற்றிய ஆறு ரஹஸ்யங்கள்‌ உண்டு. அவையாவன (3) எம்பெருமானுடைய அவதாரம்‌ ஒவ்வொன்றும்‌ இந்த்ரஜாலம்‌ போலன்றி உண்மையாயிருத்தல்‌ (2) அவதாரதசையிலும்‌ எம்பெருமானுக்கு
    இயற்கையாயுள்ள தன்மைகளை விடாதிருக்கப்‌ பெறுதல்‌ (3) அவ தாரத்திலும்‌ உள்ள அவன்‌ திருமேனி! ரஜஸ்‌ - தமஸ்ஸுக்களின்‌ ஸ்ம்பந்தமேயில்லாது சுத்தஸத்துவமயமாகவேயிருத்தல்‌ (4) அவன்‌ இக்கர்மபூமியில்‌ அவதரிப்பதற்குக்‌ கர்மம்‌ முதலியவனவன்றின்‌ தன்‌ ஸங்கல்பமே காரணமாயிருத்தல்‌ (5) பூமியில்‌ தர்மம்‌ குறைந்து அதர்மம்‌ தலையெடுக்கும்யபேோது அவதரிக்கும்‌ தன்மை (6) ஸாதுக்களை ரக்ஷிப்பதே அவதாரத்திற்குப்‌ பலனாயிருத்தல்‌ என்பன.

    எம்பெருமானுடைய எட்டு நிலைகள்‌ -(1) கர்த்தா (2) ப்ரேரகன்‌ (3) அநுமந்தா (4) ஸஹகாரி (5) ஸாக்ஷி! (6) பலப்ரதன்‌ (7) பலி (8) உதாஸீநன்‌ என்று அந்த அந்த நிலைகளில்‌ பெயர்‌ யெறுகின்றான்‌.-கர்த்தா - வஸ்துவினுள்‌ புகுந்து படைப்பு
    முதலியவற்றைச்‌ செய்பவன்‌. -ப்ரேரகன்‌ - ஜீவனுக்கு அறிவைக்‌ கொடுத்து ஒரு
    செயலைச்‌ செய்யுமாறு ஏவுபவன்‌.-அநுமந்தா - சேதநன்‌ செயலைச்‌ செய்யும்போது
    அதைச்‌ செய்விப்பவன்‌.-ஸஹகாரி - சேதநன்‌ செய்யும்‌ செயலில்‌ தான்‌
    யெரும்பகுதியை ஏற்றுத்‌ துணை செய்பவன்‌. -ஸாக்ஷி-சேதனன்‌ செய்யும்‌ செயலை நேரில்‌ பார்த்துக்‌ கொண்டிருப்பவன்‌.- பலப்ரதன்‌ - சேதநன்‌ செயல்களுக்குப்‌ பலனை
    அளிப்பவன்‌.-பலி - அச்செயலின்‌ பலனை முக்கியமாய்ப்‌ யெறுமவன்‌-உதாஸீநன்‌ - சேதநன்‌ செய்யும்‌ செயலில்‌ தான்‌ விசேஷமான தொடர்பற்று ப்‌ பொதுக்‌ காரணமாக இருப்‌பவன்‌.

    —————————————-

    கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
    ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

    ———————————————————

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ நயினாராச்சார்யர் சுவாமி திருவடிகளே சரணம்-
    ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

     

    ஸ்ரீ சில்லரை ரகஸ்யங்கள்- ஸ்ரீ ரகஸ்ய ரத்னாவளி /ஸ்ரீ ரஹஸ்ய ரத்னாவளி ஹ்ருதயம்–

    June 20, 2025

    ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
    வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

    ஸ்ரீ ரகஸ்ய ரத்னாவளி

    ஒன்றே புகல் என்று உணர்ந்தவர் காட்டத் திருவருளால்
    அன்றே அடைக்கலம் கொண்ட நம் அத்திகிரித் திருமால்
    இன்றே இசையில் இணை அடி சேர்ப்பர் இனிப் பிறவோம்
    நன்றே வருவது எல்லாம் நமக்கு பரம் ஓன்று இலதே

    1—ஒரு ஜீவனுக்கு ஒரு ஜீவன் தஞ்சம் அல்லன்
    2—ஸ்ரீ மானான நாராயணன் ஒருவனே சர்வ ஜீவர்களுக்கும் தஞ்சம்
    3—இஜ் ஜீவன் அநாதி காலம் அனுபவிக்கப் பெறாதே ஸ்ரீ யபதியைப் பெறுகைக்கு ஹேதுவான உபாயத்தை
    ரகஸ்ய த்ரய முகத்தாலே உபதேசித்து அவ்வழியாலே ஆசார்யன் இவனுக்கு தஞ்சமாகிறான்
    4— சர்வ ஸ்வாமிநி யாய் -சர்வேஸ்வரனுக்கு சேஷ பூதையாய் ஸஹ தர்ம சாரிணியான பெரிய பிராட்டியார் இத்தலையிலே
    வாத்சல்ய அதிசயத்தாலும் அத்தலையில் வால்லப்ய அதிசயத்தாலும் புருஷாகாரமாய்க் கொண்டு இஜ்ஜீவர்களுக்கு தஞ்சமாகிறாள்
    5—இவளைப் புருஷாகாரமாக்க வேண்டுவது ஈஸ்வரன் தண்ட தரனாகையாலே
    6—இத் தண்ட கரண்யம் அநாதியான அஞ்ஞான அதிலங்கனம்
    7–இப்படி அபராத அநு ரூபமாக தண்ட தரனாய்ப் போருகிற சரண்யனுடைய வசீகரணங்களில் பிரதானம்
    சர்வ அகிஞ்சன அதிகாரமான ஆத்ம ரக்ஷ பர சமர்ப்பணம்
    8—இது ச பரிகரமாக ஸக்ருத் கர்தவ்யம்
    9–இச் சமர்ப்பணத்தை தான் அனுஷ்ட்டிக்கவுமாம் -தனக்காக ஆச்சார்யாதிகள் அனுஷ்ட்டிக்கவுமாம்
    10—இதற்குக் கோரின பலத்தைப் பற்றப் புந பிரபத்தி முதலான கர்தவ்ய சேஷம் இல்லை
    11—இப்படி க்ருதக்ருத்யனான ப்ரபன்னனுக்கு வர்ண ஆஸ்ரமாதி தர்மங்கள் ஸ்வ தந்த்ர அஞ்ஞான சித்தங்களான கைங்கர்ய விசேஷங்கள்
    12—இவனுக்கு ஆஞ்ஞா அனுஞ்ஞா சித்தங்களான கைங்கர்யங்கள் எல்லாம் ஸ்வயம் பிரயோஜனங்கள்
    13—கரண அகரண ரூபங்களான அபசாரங்கள் புகுந்தாலும் பிரபன்னனுக்கு நரகாதிகள் இல்லை –
    14—ராஜ குமாரனுக்கும் அவதானம் பண்ணி நடக்க வேண்டுமா போலே லகு ப்ரத்யவாயமும் வாராமைக்காக அபசாரங்கள் துரபரி ஹரணீ யங்கள்
    15—பிரபத்திக்கு கோரின பலத்துக்கு ஒன்றாலும் பிரதிபந்தம் இல்லை
    16—புத்தி பூர்வக அபசாரங்கள் புகுந்தாலும் பிராயச்சித்த விசேஷம் அதிகாரி விசேஷம் நியதம்
    17—இப்படி பிராயச்சித்தத்திலே மூட்டுகிறதும் கடின ப்ரக்ருதிகளுக்கு காசை காட்டுவாரைப் போலே
    அவன் பண்ணுகிற சிஷைகளும் எல்லாம் சரண்ய பிரசாத பலம்
    18—இங்கு இருந்த காலம் தர்ம அனுபந்தியான போகத்திலும் போக புத்தியால் ப்ராவண்யம் பிறந்ததாகில் இது தான்
    அதிகார அனுரூபமான கைங்கர்ய அம்ருத ரசத்துக்கு தண்ணீர்த் துரும்பு
    19—இப்படி நிஷித்த போக பிராவண்யம் கைங்கர்ய அம்ருத ரஸ விருத்தம் ஆகையால் விஷம் போலே திரை பரி ஹரணீயம்
    20—கைங்கர்யமாவது -ஸ்வாமி உகந்த ஏவல் தொழில் செய்கையாலே இது எதா சாஸ்திரம் பண்ணினாள் உகப்பாம்
    21—பகவத் கைங்கர்யமும் பாகவத கைங்கர்யமும் சேர அனுஷ்ட்டிக்க அரிதான போது
    பரம புருஷார்த்த காஷ்டையான பாகவத கைங்கர்யமே உபாதேயமாம்
    22–இவை இரண்டிலும் பிரதானம் ஆச்சார்ய கைங்கர்யம்
    23–இக் கைங்கர்ய பரனுக்கு பரமை காந்திகள் உகந்த இடமே உசித ஸ்தானம்
    24—இப்படி துல்ய சீலரைக் கிடையாத போது விபரீத சம்சர்க்கம் ஏகாந்த வாச பரிஹார்யம்
    25—இவனுக்கு அர்ச்சிராதி கதி சிந்தனைகள் சித்த சந்தோஷ ஹேது வான காலேயாபனம்-கால ஷேப கார்யம்
    26—சாதக வ்ருத்தியான இவனுக்கு அந்திம ப்ரத்யயம் ஸ்வதந்த்ர சாத்தியம் அன்று
    27—இப்படி க்ஷண க்ருத்யமான ஆத்ம சமர்ப்பன யாகத்துக்கு பகவத் சங்கல்ப சாத்தியமான தேக அவசானம் அவப்ரதம்
    28—சதாசார்ய பரிக்ராகத்திற்கு முன்புள்ள அநாதி காலம் எல்லாம் ஒரு காள ராத்திரி
    29—பின்பு தேச அவசனத்து அளவும் நல் விடிவு
    30—மேல் முழுக்க ஸ்வ ச்சந்த கைங்கர்ய மஹோத்சவ திவசம்

    இது சாத்விக ஹ்ருதயங்கையமான ரஹஸ்ய ரத்நா வளி

    சிறு பயனில் படியாத தாக்கவோர் எம்மைச் சேர்க்க அடைக்கலம் கொண்ட திருமால் தானே
    மறு பிறவி அறுத்து அழியா வானில் வைக்கும் மனமே நீ மகிழாத இருப்பது என் கொல்
    உறுவது உனக்கு உரைக்கேன் இங்கு இருக்கும் காலம் ஒரு பிழையும் புகுதாத யுணர்த்தி வேண்டிப்
    பெறுவது எல்லாம் இங்கே நாம் பெற்று வாழப் பேர் அடிமையாலே இது என்று இகழேல் நீயே

    ரஷந்த்வ அநந்யார்ஹ ஷேயம் லகீயா சீமபி காரீயசீ சாந்த
    லஷ்மீ ஸஹாய ஹ்ருதயம் ரஹஸ்ய ரத்ன வளீம் ரமேயம் –

    ——————————————

    ஸ்ரீ ரஹஸ்ய ரத்னாவளி ஹ்ருதயம்-

    இது அம்ருத ரஞ்ஜனீ ரஹஸ்யங்களில் பதினான்காவது.-காஞ்சீபுரத்தில் அருளிச்செய்யப்பட்டது

    தத்த்வோபாயா புமர்த்தேஷ
    அத்யாத்மவிதாம் விபாவநீயேஷ
    ஸ்வயமேவ ஸூசயாமோ
    ரஹஸ்யரத்நாவளீஹ்ருதயம் |

    ஸ்தாசார்யோபதே பூர்வகமாக ஸர்வேஸ்வரன் திருவடிகளிலே ஸமர்ப்பித பரனான முமுக்ஷவினுடைய நிர்ப்பரத்வ அத்யவஸாயத்தைச் சொல்லுகிறது முதல் கவி

    அத்யாத்மவிதாம் – வேதாந்த சாஸ்த்ரத்தைஅறிந்தவர்களுக்கு, விபாவநீயேஷ -அனுஸந்திக்கத் தக்கவைகளான, தத்வோபாயபுமர்த் தேஷ–தத்வம் ஹிதம் புருஷார்த்தம் இவைகளில், ரஹஸ்யரத்நாவளி ஹ்ருதயம் -ரஹஸ்ய ரத்நாவளி என்னும் க்ரந்தத்தின் தாத்பர்யத்தை –ஸ்வயமேவ – நாமே, சயாம: – ஸூசிப்பிக்கிறோம்.

    இதில் ‘ ஒன்றே புகல்’ என்றது

    ஒன்றே புகல் என்று உணர்ந்தவர் காட்டத் திருவருளால்
    அன்றே அடைக்கலம் கொண்ட நம் அத்திகிரித் திருமால்
    இன்றே இசையில் இணை அடி சேர்ப்பர் இனிப் பிறவோம்
    நன்றே வருவது எல்லாம் நமக்கு பரம் ஓன்று இலதே

    (நாரஸ்த்விதி ஸர்வ பும்ஸாம் ஸமூஹ: பரிகீர்த்தித: |
    கதிராலம்பநம் தஸ்ய தேந நாராயண: ஸ்ம்ருத:
    II)பாத்மோத்தரம்

    ஸர்வபும்ஸாம் – எல்லா ஜீவாத்மாக்களுடைய, ஸ மூஹ: – கும்பல், நார: து இதி – நாரம் என்று, ப்ரகீர்த்தித: – சொலப்பட்டது, தஸ்ப – அந்தக் கும்பலுக்கு,கதி:-அடையவேண்டிய ப்ரயோஜனம், ஆலம்பனம் – ஆஸ்ரயிககவேண்டிய வஸ்து, தேந – ஆகையினால, நாராயண:இதி – நாராயணன் எனறு, ஸ்ம்ருத: – சொல்லப்பட்டான்.

    (நாரோ நராணாம் ஸங்காத : தஸ்யாஹமயநம் கதி: )

    நராணாம் – ஜீவாத்மாக்களுடைய, ஸ ங்க: – கும்பல், நார: – நார: (என்று சொல்லப்படுகிறது), தஸ்ய – அந்தக்கும்பலுக்கு, அஹம் – நான், அயநம கதி: – அடையவேண்டிய ப்ரயோஜனம்.(தேக – அத்தால், நாராயண இதி – நாராயணன் என்று,முநிபி-ரிஷிகளினால். ஈரித: – சொல்லப்பட்டவனாக,அஸ்மி – ஆகிறேன்,)

    (ததேதததி துக்காநாம் ஆஸ்பதே து பவார்ணவே1 1
    பத்தாம் கத்யதே ஸத்யம் விஷ்ணுரேக: பராயணம் ||

    அதிதுக்காநாம் – அதிகமான துக்கங்களுக்கு, ஆஸ்பதே– இடமான, பவார்ணவே -ஸம்ஸாரமாகிற ஸமுத்ரத்தில், பததாம் – விழுகிறவர்களுக்கு,ஏக: விஷ்ணு: – விஷ்ணுஒருவனே, பராயணம் – முக்யமாக அடையவேண்டிய ப்ரயோஜனம, ததேதத் – அப்படிப்பட்ட இது, ஸத்யம் – உண்மையாக, கத்யதே – சொல்லப்படுகிறது.

    (கர்மணாம் பரிபாகத்வாத் ஆவிரிஞ்சாதமங்களம்
    இதி மத்வா விரக்தஸ்ய வாஸுதேவ: பரா கதி: ||- பாகவதம் – 11-19-18 )

    கர்மணாம் – கர்மங்களுடைய, பரிபாகத்வாத் – பரிணாமமாக இருக்கிறபடியினால், ஆவிரிஞ்சாத் – ப்ரஹ்ம வரையிலும், அமங்களம் – பாபங்களைப் போக்கடிக்கக்கூடிய தன்மை
    யாகிற சுபத்வம் இல்லாதவர்கள், இதி மத்வா – என்றுஎண்ணி, விரக் தஸ்ய -அவர்களிடத்தில் ஆசை இல்லாதவனுக்கு, வாஸு தேவ -பகவானே,பராகதி: – அடையவேண்டிய ப்ரயோஜனம்.

    (யே ச வேதவிதோ விப்ரா: யே சாத்யாத்மவிதோ ஐநா: 1
    தே வதந்தி மஹாத்மாநம் க்ருஷ்ணம் தர்மம் ஸநாதநம் |1)

    யே ச – எந்த, விப்ரா: – ப்ராஹ்மணர்கள், வேதவித: – வேதத்தை அறிந்தவர்களோ,யேச-எவர்கள், அத்யாத்மவிதோஜநா:-வேதாந்த சாஸ்த்ரத்தை அறிந்தவர்களோ,தே – அவர்கள், மஹாத்மாநம் – மஹாத்மாவாகிய, க்ருஷ்ணம்-க்ருஷ்ணனை, ஸநாதநம் – நித்யமான,தர்மம் – தர்மமென்று, வதந்தி – சொல்லுகிறார்கள்.

    (அம்ருதம் ஸாதநம் ஸாத்யம் தம் பஸ்யந்தி மநீஷிண:யஜ்ஞாக்யம் பரமாத்மாநம் விஷ்ணும் த்யாயந் ந ஸ்ததி )-விஷ்ணுதர்மம் – 72 – 4

    தம் – அந்தப் பகவானை,மநீஷிண:பெரியோர்கள், அம்ருதம் – அழிவில்லாத, ஸாதனம் – உபாயமாகவும், ஸாத்யம் – பலனாகவும், பச்யந்தி – பார்க்கிறார்கள், யஜ்ஞாக்யம் – யஜ் ஞம் என்று சொல்லப்படுகிற, பரமாத்மாநம் – பரமாத்மாவாகிய, விஷ் ணும் – விஷ்ணுவை, த்யாயந் – த்யானித்து, ந ஸ்ததி – துக்கப்படுவ தில்லை.

    நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு -திருவாய்-5-10-11- இத்யா திகளில் ஓர் அதிகாரி விசேஷத்திற்குப் பரம ப்ராப்யனான பரிய:பதி ஒருவனுமே வ்யாஜ விசேஷ வஸீகரணீயமான ஸித்தோபாயம் என்றபடி. உணர்ந்தவர்’ என்று ப்ரதிபுத்த அதிகாரி விசேஷத்தைச் சொல்லுகிறது.

    (ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோரூபம் ப்ராப்துச ப்ரத்யகாத்மம்:ப்ராப்த்யுபாயம் பலம் சைவ ததா ப்ராப்தி விரோதி ச !வதந்தி ஸகலா வேதா: ஸேதிஹாஸ புராணகா: )–ஹாரீத ஸம்ஹிதை.

    ப்ராப்யஸ்ய – அடையவேண்டிய ப்ரயோ ஜனமாகிய, ப்ரஹ்மண: – ப்ரஹ்மத்தினுடைய, ரூபம்-ஸ்வரூபத்தையும், (ஸ்வபாவாதிகளையும்),ப்ராப்து: ச – அடைகிறவனாகிய – ப்ரத்யகாத்மந:- ஜீவாத்மாவினுடைய, (ஸ்வரூபாதிகளையும்). ப்ராப்த்யுபாயம் –அடைவதற்கு உபாயத்தையும், பலம் – பலத்தையும், ததா – அப்படியே, ப்ராப்தி விரோதிச – அடைவதற்குத் தடையாக நிற்கிற விரோதியையும், ஸேதிஹாஸ புராணகா: இதிஹாஸ புராணாதிகளோடு கூடிய, ஸகலா: – எல்லா, வேதா:- வேதங்களும், வதந்தி – சொல்லுகின்றன.

    இத்யாதிகளிற் சொன்ன அர்த்த பஞ்சகத்தையும், சகார ஸமுச்சிதமான ஸம்பந்த விசேஷத்தையும், ஸத்த்வ நிஷ்ட்டருக்கு ஸ்ரோதவ்யபேஷமற உரைக்கலாம்படி திருந்தக் கண்டவர்களை ‘ப்ரதிபுத்தர் ‘ என்கிறது.

    ப்ராப்யமான ப்ரஹ்மமாவது-(விஷ்ணோஸ் ஸகாஸாத் உத்பூதம் ஜகத் தத்ரைவ ச ஸ்திதம் |
    ஸ்திதி ஸம்யம கர்த்தாஸௌ ஜகதோஸ்ய ஜகச்ச ஸ : I!
    -விஷ்ணுபுராணம்- 1 – 8 – 17

    விஷ்ணோ: ஸகாசாத் – விஷ்ணு விடத்திலிருந்து, உத்பூதம் – உண்டானது, தத்ரைவ -அவ்விடத்திலே ஸ்திதம்-நிலைபெற்றிருக்கிறது,அஸௌ-இவன்,ஸ்திதிஸம்யமகர்த்தா ஸ்திதி நியமநம் இவற்றைச் செய்பவன், ஸ :- அவன்,ஜகச்ச -அந்த லோகமாகவும் (இருக்கிறான்)

    (க்ருஷ்ண ஏவ ஹி லோகாநாம் உத்பத்திரபி சாப்யய :-பார ஸபா – 38 – 26

    க்ருஷ்ண ஏவ ஹி – க்ருஷ்ணன் ஒருவனே, லோகாநாம் – லோகங்களுக்கு, உத்பத்தி: -உண்டாகும் இடம், அபி சஅப்யய: -லயிக்கும் இடமும்.

    (க்ருஷ்ணஸ்ய ஹி கருதே பூதமிதம் விஸ்வம் சராசரம்)பார – ஸபா – 41 – 23

    இதம்– இந்த, பூதம் – ப்ராணியும், சரா சரம்-ஸ்த்தாவரஜங்கமரூபமான விச்வம் எல்லா லோகமும் க்ருஷ்ணஸ்ய ஏவஹி-க்ருஷ்ணனுக்காகவே, க்ருதம் – ஏற்பட்டதன்றோ.

    இத்யாதிகளிற்படியே ஸர்வகார்யை காரணமாய், ஸத்யத்வ ஜ்ஞாநத்வாதி ஸ்வரூப நிரூபக தர்மங்களை யுடையனுமாய், ஜ்ஞாந சக்த்யாதி கல்யாண குண கண மஹோததியாய், ஸூத்தாஸூத்த விபூதி த்வயத்திற்கும் ஏக சேஷியாய்,

    ஓருயிரேயோ உலகங்கட்கெல்லாம் ‘-திருவாய் – 8-1-5-என்னும்படி ஸர்வாந்தராத்மாவாய், பர வ்யூஹாதி பஞ்ச ப்ரகார திவ்ய மங்கள விக்ரஹ யுக்தனாய், ஸர்வாவஸ்த்தையிலும் ஸலக்ஷ்மீகனாய், ஸர்வலோக ஸரண்யனாய், ஸரணாகத வத்ஸலனாய், ஸர்வ
    ப்ரகார நிரதிஸய போக்யனான நாராயணன்.

    ப்ராப்தாவான ப்ரத்யகாத்மாவாவது-
    (புமாந் ந தேவோ ந நரோ ந பஸூ : ந ச பாதப : ஸரீராக்ருதி பேதாஸ்து பூபைதே கர்மயோநய: (நாயம் தேவோ ந மர்த்யோவா ந திர்யக் ஸ்த்தாவரோபி வா
    ஜ்ஞாநாநந்தமயஸ்த்வாத்மா ஸேஷோ ஹி பரமாத்மந
    : II-விஷ்ணு புராணம் – 2 13-98

    புமாந் – ஜீவாத்மா, ந தேவ -தேவனுமல்லன், ந நர: – மனிதனுமல்லன், ந பசு : – பசுவுமல்லன், ந சபாதப: – மரமுமல்லன், பூப – ஒ ! அரசனே, ஏதே – இவைகள், கர்ம யோநய :- கர்மங்களைக் காரணமாக வுடைய, சரீராக்ருதிபேதா சரீரத்தின் ஆகாரபேதத்தால் உண்டானவை.-அயம் – இந்த ஜீவாத்மா, தேவ -தேவனுமல்லன், ந மர்த்யோவா – மனுஷ்யனுமல்லன், ந திர்யக் – திர்
    யக்குமல்லன், ந ஸ்த்தாவரோபிவா – ஸ்த்தாவரமுமல்லன், ஆத்மா -ஆத்மாவானவன், ஜ்ஞாநாநந்தமய: – ஜ்ஞாநத்தையும், ஆநந்தத்தையும் ஸ்வரூபமாக வுடையவன், பரமாத்மந: – பரமாத்மாவிற்கு,சேஷ :- சேஷபூதனாயிருப்பவன்.

    இத்யாதிகளிற்படியே தேஹேந்த்ரியாதி விலக்ஷணனாய், ஜ்ஞாநாநந்த ஸ்வரூபனாய், ஸ்வயம் ப்ரகாசனாய், ஸ்வஸ்மை பாஸமானாய், அணுவாய்,ஜ்ஞாநா நந்த குண கன,பரசேஷதைக ரஸனாய், பராதீந ஸ்வரூப ஸ்த்திதி பிர வ்ருத்திகனாய், பரிபூர்ண பகவத
    நுபவ யோக்யனாய, ஸ்வரூபாநுகுண ஸ்வச் சந்த கைங்கர்யார்த்தியான ஜீவன்.

    ப்ராப்த்பாயமாவது-இஜ்ஜீவன் ஸம்ஸார ஸாகரத்தைக் கடந்து அக்கரைப்படுகைக்கு உபாயமாய், ஸாதநமாக ஸ்வ புத்தியாலே கோரும் (கோலும்)படி ஸாஸ்த்ர யுக்தமான அர்த்தம். இது ஸித்தம் என்றும் ஸாத்யம் என்றும் இரண்டு படியாயிருக்கும். ஸித்தோபாயமாவது-நித்ய ஸித்தங்களான ஸ்வரூப குணங்களை யுடையனாய், ஸர்வஜ்ஞனாகையாலே பரஹித வேதியாய், ஸர்வ சக்தி யாகையாலே ஸர்வாநிஷ்ட நிவாரண ஷமனாய், ஸர்வ பூத நிஸர்க்க ஸுஹ்ருத்தாகையாலே பராநிஷ்ட நிவாரணாதிகளில் ஸர்வதாபிமுகனாய்,( ஸர்வஜ்ஞோபி ஹி விஸ்வேஸ : ஸதா காருணிகோபி ஸந் |ஸம்ஸார தந்த்ர வாஹித்வாத் ரக்ஷ பேஷாம் ப்ரதீஷதே !-லஷ்மீதந்த்ரம் – 17 – விச்வேச – பகவான், ஸர்வஜ்ஞ :அபி – எல்லாம் அறிந்தவனாயிருந்த போதிலும், ஸதா – எப்பொழுதும்,காருணிகோபி ஸந் – கருணையுடன் கூடியவனாய் இருந்த போதிலும்,ஸம்ஸாரதந்த்ர வாஹித்வாத் – ஸம்ஸாரத்தை நடத்துகிறவனாகையினாலே. ரக்ஷாபேக்ஷாம் – ரக்ஷிக்க வேண்டும் என்கிற அபேக்ஷையை,ப்ரதீஷதே – எதிர் பார்க்கிறான்.)இத்யாதிகளிற் படியே அவஸர ப்ரதீக்ஷனாய், வ்யாஜ விசேஷ வஸீகரணீயனாய், ஸங்கல்பித விசேஷத்தில் ஸஹகாரி நிரபேக்ஷனாய், ஸ்வார்த்த ப்ரவருத்தனாய்,மோக்ஷ ப்ரதாநத்திற்கு அவ்யவஹித ஸங்கல்பாஸ்ரயனான ஸ்ரிய:பதி. ஸாத்யோபாயமாவது-புருஷனுக்குக் கர்த்தவ்யமாகச் சோதிதமான புருஷார்த்த ஸாதநம். மோக்ஷார்த்தமான ஸாத்யோபாயம் பக்தி என்றும் ப்ரபத்தி என்றும் இரண்டு படியாய் இருக்கும். பக்தி ரூபமான ஸாத்யோபாயம் கர்ம யோக ஜ்ஞாந யோக ஸம்ஸ்க்ருதாந்த:கரண ஸாத்யமாய், அஷ்டாங்க யோக ஸம்ஜ்தமாய்,வர்ணாதி நியதாதிகாரமாய், வர்ணாஸ்ரம தர்ம இதிகர்த்தவ்யதாகமாய்,க்ருச்ச்ர சாத்யமாய்,தைல தாராவத் அவிச்சிந்ந ஸ்ம்ருதி ஸந்ததி ரூபமாய், அஹரஹரப்யாஸாதேயாதிஸயமாய், ஆப்ரயாணம் அநுவர்த்தநீயமாய், ப்ராரப்தேதர புண்ய பாப நிவர்த்தகமாய், ஸ்வ யத்ந ஸாத்ய அந்திம ப்ரத்யய விசேஷமாயிருக்கும்.-ப்ரபத்தி ரூபமான ஸாத்யோபாயம் மஹா விஸ்வாஸாதி |
    ஸம்ஸ்க்ருதாந்த:கரண ஸாத்யமாய், ஷடங்க யோக ஸம்ஜ்ஜிதமாய், அநந்யோபாய ஸர்வாதிகாரமாய், ஆனுகூல்ய ஸங்கல்பாதி மாத்ர பரிகரமாய், ஸுகரமாய், ப்ரார்த்தநாந்வித ஸக்ருத் பர ந்யாஸ ரூபமாய், அநாதேயாதிஸயமாய், ஆதேஹபாதம்
    ஸ்வரூப ஆவருத்த்யாதி கர்த்தவ்ய சேஷ ரஹிதமாய், ப்ராரப்த கர்ம நிவர்த்தந க்ஷமமாய், ஸ்வ ப்ரயத்ந ஸாபேக்ஷ அந்திம ப்ரத்யய அநபேக்ஷமாயிருக்கும். ஸாத்யோபாயத்தில் அனுபாயத்வாதி வ்யபதேசம் பர ஸங்கல்ப ஸா பேக்ஷத்வாதி நிபந்தநம்.

    இங்கு பலமாவது :
    ஸ்வாதிகாராநுகுண வஸீகரண விஸேஷத்தாலே உத்தர பூர்வாக அஸ்லேஷ விநாஸங்கள் பிறந்து, ஸ்தூல சரீர நிவ்ருத்தி யுண்டாய் ஊர்த்வ கதி விஸேஷத்தாலே உத்க்ராந்தனாய்,
    அர்ச்சிராதி மார்க்கத்தாலே ஆதி வாஹிகராலே அதிலங்கித த்ரிகுண மண்டலனாய், அவதூத ஸூஷ்ம சரீரனாய், அப்ராக்ருத தேஸ விஸேஷ ப்ரவிஷ்டனாய், ஆவிர்ப்பூத ஸ்வரூபனாய், அபஹத பாப்மத்வாதி குணாஷ்டக விஸிஷ்டனானவனுடைய

    ப்ராப்தி விரோதியாவது–பீஜாங்குர ந்யாயத்தாலே அநாதியாக ப்ரவ்ருத்தமான அக்ருத்ய கரண கருத்யாகரண பிரவாஹத்தாலே உத்பந்நமாய், ப்ராயசித்தம் பண்ணாதார்க்கு அநதிலங்கரீய பலமாய், ஆகமைக ஸமதிகம்யமாய், அநுத் பரேக்ஷணீய விபாக ஸமயமாய், ஆ ப்ரஹ்ம ஸ்தம்ப பர்யந்தம் அபி வ்யாப்தமாய், அத்யந்த விஷம பிரவாஹமாய், அதி கோர நரகாதி அநர்த்த பரம்பரா ஹேதுவாய், சக்ரவத் பரிவர்த்தமாநமாய், ஆமோ ஷம அநுவிருத்தமான பகவந் நிக்ரஹ ஸந்தாநமும், அதின் கார்ய காரண வர்ககமும்.

    இங்கு ஸம்பந்தமாவது- ப்ராப்தாவான ஜீவாத்மாவிற்கு ப்ராப்யனான பரமாத்மாவோடு உண்டான துவக்கு. இது ஆதேயத்வம் விதேயத்வம், அப்ருதக் ஸித்தத்வம், ஸேஷத்வம், சரீரத்வம், வயாப்யத்வம், ரஷ்யத்வம், கிங்கரத்வம், போக்யத்வம்,போக்த்ருத்வம் என்றிப்படி ஸாமாந்ய விசேஷாதி ரூபமாய்க் கொண்டு ப்ரமாணங்களாலே விவிதமாக விபக்தமாயிருக்கும்.

    இப்படி மோக்ஷ ஸாஸ்த்ர ஸித்தமான ப்ராப்யத்தையும், ப்ராப்தாவையும், ப்ராப்த் யுபாயத்தையும் ப்ராப்தியையும்,ப்ராப்தி ப்ரதிபந்தகத்தையும், ஸம்பந்தத்தையும் ஸாஸ்த்ர த்ருஷ்டியாலே ஸம்யக்காக கண்டவர்களே ‘உணர்ந்தவர்’ என்கிறது.
    உணர்ந்தவர் ஒன்றே புகல் என்று காட்ட’ என்று அந்வயம்

    (தத்வித்தி ப்ரணிபாதேந பரி ப்ரஸ்நேந ஸேவயா
    உபதேஷ் யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிந: தத்த்வ தர்ஸிந:-கீதை – 4 – 34

    தத் – அந்த ஜீவாத்ம தத்த்வத்தை, ப்ரணிபாதேந- நன்றாக ஸேவிப்பதினாலும், பரி ப்ரச்நேந-செவ்வையாகக் கேட்பதினாலும், ஸேவயா – ஸிஸ்ரூஷை செய்வதினாலும், வித்தி – அறிந்து கொள், தத்த்வதர்சி : -உண்மையை அறிந்த, ஞாநிந; – ஜ்ஞாநிகள் , தே – உனக்கு, ஜ்ஞாநம் – ஆத்மாவைப் பற்றிய ஜ்ஞாநத்தை, உப தேஷ் யந்தி – உபதேசிக்கப் போகிறார்கள்.

    யே ஸந்துஷ்டா: ருதோபேதா: ஸத்யார்ஜவ தயாபரா: 1 ஜிதேந்த்ரியா ஜிதக்ரோதா : தா நுபாஸ்வச ப்ருச்சச11
    யே – எவர்கள், ஸந்துஷ்டா: -(கிடைத்ததைக் கொண்டு) ஸந்தோஷத்தை யுடையவர்களாயும, ச்ருதோபேதா ( சாஸ்த்ரார்த்தங்களை முறைப்படி பெரியோர்களிடம் இருந்து) கேட்டுத் தெரிந்து கொண்டவர்களாயும், ஸத்ய ஆர்ஜவ தயா பரா:- ஸத்யம், கபடமில்லாமை, தயை இவைகளை யுடையவாகளாயும், ஜிதேநத்ரியா: – இந்த்ரியங்களை ஜயித்தவர்களாயும், ஜிதக்ரோதா – கோபத்தை ஐயித்தவர்களாயும் (இருக்கிறார்களோ , தாந்-அவர்களை,உபாஸ்வ – முறைப்படி ஆச்ரயி,ப்ருச்ச – (கேட்க வேண்டிய அர்த்தங்களைக்) கேட்டுக்கொள்-

    (ஸர்வயோக்யமநாயாஸம் அப்ரமாதமநூபமம் |
    ப்ரபந் நார்த்தி ஹரம் விஷ்ணும் ஸரணம் கந்துமர்ஹஸி |

    ஸர்வயோக்யம் – எல்லோராலும் ஆச்ரயிக்கத் தக்கவனாயும், அநாயாஸம் – ஆச்ரயிப்பதில் ச்ரமம் ஒன்றும் இல்லாதவனாயும், அப்ரமாதம் – அஜாக்கிரதை முதலிய தோஷங்கள் இல்லாதவனாயும், அநூபமம் – தனக்கு ஸத்ருசனானவன் ஒருவனும் இல் லாதவனாயும், ரபந்நார்த்திஹரம் – ஆச்ரிதர்களுடைய துக்கத்தைப் போக்கடிக்கக்கூடியவனாயும்இருக்கிற, விஷ்ணும் விஷ்ணுவை, சரணம்- சரணமாக, கந்தும் – அடைவதற்கு, அர்ஹஸி – யோக்கியனாகிறாய்,-இத்யாதிகளிற்படியே நிரபாய ஸாத்யோபாய விசேஷத்தாலே
    வஸீகரணீயமான ஸித்தோபாயத்தை வெளியிட என்றபடி.-இத்தாலே நானும் என்னை ரக்ஷித்துக் கொள்ள மாட்டேன், வேறு எனக்கு ரக்ஷகரில்லை, மேலே என்னுடைய வ்யாபார விசேஷத்தாலே அபேக்ஷை யற தேவரீரே என்னை ரக்ஷித்தருள வேணும் என்கிற பரந்யாஸ ரூப வஸீ கரண விசேஷா நுஷ்ட்டாநமும் பலிதம்

    அங்ஙனன்றிக்கே ‘ஒன்றே புகல் என்று உணர்ந்தவர் ‘ என்று ஆசார்யர்களை விசேஷிக்கிறதாகவுமாம். அப்போது ‘காட்ட ‘என்றது-(தவ பரோஹ மகார்ஷி ஹி தார்மிகை-ஸ்ரீரங்கராஜஸ்தவம் – 2 – 102 அஹம் -நான், தவ – உமக்கு,-பர: – ரக்ஷிக்க வேண்டிய பரமாக, தார்மிகை: – தர்மிஷ்டர்களினால் (ஆசார்யர்களினால் ), அகார்ஷி-செய்யப்பட்டேன். )-இத்யாதிகளிற் படியே ஸர்வ ஸேஷி திருவடிகளிலே- ஆத்மாத்மீயம் ச யத்கிஞ்சித் துர்ப்பரம் துஸ்த்யஜம் மம 1 தத் ஸர்வம் தவ விந்யஸ்தம் பயோ: பாதபத்மயோ: II)-ஆத்மா- நானும், ஆத்மீயம் -என்னுடையதன் யிருக்கிற, யத்கிஞ்சித் -எது, மம – எனக்கு, துர்ப்பரம் – ரக்ஷிக்க முடியாததும், துஸ்த்யஜம் – விடமுடியாததாயும் இருக்கிறதோ, தத் ஸர்வம் அவை எல்லாமும், தவ – உம்முடைய, சுபயோ :-மங்கள கரங்களான, பாத பத்மயோ:- திருவடித் தாமரைகளில், விந்யஸ்தம், ஸமர்ப்பிக்கப்பட்டது.என்று ஆத்மீயரான நம்மை அநந்ய ரக்ஷ்யத்வே ஸமர்ப்பிக்க என்றபடி.

    திருவருளால் எனறது-(ஸ தம் நிபதிதம் பூமௌ ஸரண்ய; ஸரணாகதம்-வதார்ஹமபி காகுத்ஸ்த்த: க்ருபயா பர்யபாலயத-)-ஸுந்தர – 38-34. சரண்ய: – சரண்யராகிய,ஸ:-அந்த, காகுத்ஸ்த்த: -ககுத்ஸ்த வம்சத்தில் அவதரித்த ராமன்,பூமௌ – பூமியில் நிபதிதம் – விழுந்தவனாயும், சரணாகதம் – சரணம் அடைந்தவனாயும் இருக்கிற, தம்-அந்தக் காகத்தை, வதார்ஹமபி – கொல்லத் தகுந்தவனாய் இருந்த போதிலும் க்ருபயா – க்ருபையினால், பர்யபாலயத் -நன்றாக ரக்ஷித்தார்.)-(க்ருபயா கேவலமாத்மஸாத்குரு-ஸ்தோ-48.க்ருபபா கேவலம் – (உம்முடைய) க்ருபை யினாலேயே, ஆத்மஸாத்குரு -உமக்கு அதீனமாகச் செய்துகொள்ளும்-(யாமாலம்ப்ய ஸுகேநேமம் துஸ்தரம் ஹி குணோததிம் 1 நிஸ்தரந்த்யசிரேணைவ வ்யக்த த்யாந பராயணா:-ஸ்ரீ ஸாத்வதம் – 12 – 34. வ்யக்த த்யாந பராயணம் – வ்யக்தம் என்று சொல்லப்படுகிற திவ்ய மங்கள விக்ரஹத்தை த்யானம் செய்து கொண்டிருக்குமவர்கள், யாம் – எந்த லக்ஷ்மியை, ஆலம்ப்ய – ஆச்ரயித்து, துஸ்தரம் – மற்ற ஒருவரால் தாண்ட முடியாத, இமம் – இந்த, குணோததிம்-குணங்களாகிற ஸமுத்திரத்தை, அதாவது குணங் களுக்கு ஆதாரமான ப்ரக்ருதியாகிற ஸமுத்திரத்தை, கேந – ஸுகமாக. நிஸ்தரந்தி – தாண்டுகிறார்களோ.)என்கிற ந்யாயத்தாலே அவிளம்பித அநாயாஸமாய் பலஸித்தி யுண்டாம்படி ஆஸ்ரித ரக்ஷணத்திலே ஆத்மவல்லபனை அபி முகனாக்குகிற அகில ஜகந்மாதாவினுடைய அநபாய க்ருபையாலே என்னவுமாம்.

    அன்றே அடைக்கலம் கொண்ட‘ என்றது-அநேநைவ து மந்த்ரேண ஸ்வாத்மாநம் மயி நிக்ஷிபேத் -மயி நிக்ஷிப்த கர்த்தவ்ய க்ருதகருத்யோ பவிஷ்யதி !-“ஸாத்யகி தந்த்ரம் அநேநஏவதுமந்த்ரேண – இந்த மந்திரத்தினாலேயே, ஸ்வாத்மாநம் – தன்னுடைய ஆத்மாவை.மயி – என்னிடத்தில், நிக்ஷிபேத் – ஸமர்ப்பிக்கவேண்டும், மயி – என்னிடத்தில், நிதிப்த கர்த்தவ்ய: – ஸமர்ப்பிக்கப்பட்ட பரத்தையுடையவனானவன், க்ருதக்ருத்ய: – இனிச் செய்யவேண்டியகார்யத்தைச் செய்தவனாக, பலிஷ்யதி – ஆகப்போகிறான்.)என்றும்,-துராசாரோபி ஸர்வா கருத நோ நாஸ்திக புரா ஸமாரயேத் ஆதி தேவம் ப ரத்தயா ஸரணம் யதி !!நிர்த்தோஷம் வித்தி தம் ஐந்தும் ப்ரபாவாத் பரமாத்மந : -ஸாத்வதம் 16-23. புரா -(பகவானை ஆச்ரயிப்பதற்கு) முன்னால், துராசாரோபி – கெட்ட அநுஷ்டானத்தை யுடையவனாயும்,ஸர்வாசீ – (சாப்பிடத் தகாத ) எல்லாம் சாப்பிடுகிறவனாயும்,
    க்ருதக்க:- பண்ணின உபகாரத்தை மறந்தவனாயும், நாஸ்திக: -தெய்வம் ஒன்று இல்லை என்று சொல்லுகிறவனாயும் இருந்தபோதிலும்,-ஆதிதேவம் – தேவதைகளுக்கு எல்லாம் முதல் தேவதையாகிய பகவானை,சரத்தயா – மஹா விச்வாஸத்துடன், ஸமாச்ரயேத்யதி – ஆச்ரயிப்பானேயாகில்,தம் – அந்த, ஜந்தும் – ப்ராணியை,’. பரமாத்மந: – பரமாத்மாவினுடைய,ப்ரபாவாத் – மஹிமையினால், நிர்த்தோஷம் ஒரு தோஷமும் இல்லாதவனாக, வித்தி – அறி.)என்றும்-த்யக்த்வா புத்ராம் ச தாராம்.ச ராகவம் மரணம் கத:-ராமா யுத்த 17-16. புத்ராந் ச – பிள்ளைகளையும், தாராந்ச – பத்தினிகளையும், த்யக்த்வா – விட்டுவிட்டு, ராகவம் – ஸ்ரீ ராமனை, சரணம்- சரணமாக, கத – அடைந்தேன்.)-என்றும்,ஆநயைநம் ஹரிஸ்ரேஷ்ட தத்தமஸ்யாபயம் மயா-ராமா – யுத்த – 18–34. ஹரிச்ரேஷ்ட -வானரச்ரேஷ்டனான ஒ ! ஸு க்ரீவனே. அஸ்ய – இவனுக்கு, மயா – என்னால், அபயம் – அபயமானது, தத்தம் – கொடுக்கப்பட்டது. ஏநம் – இவனை,ஆநய – அழைத்துக் கொண்டுவா.)-என்றும் சொல்லுகிறபடியே பர ஸமர்ப்பண ஸமநந்தரம் நமக்கு ஸ்வ ரக்ஷணார்த்த கர்த்தவய பேரஷம் இல்லாதபடி பர ஸ்வீகாரம் பண்ணினவர் என்றபடி.)

    நம் அத்திகிரித் திருமால் ‘ என்றது-(வேகவத்யுத்தரே தீரே புண்யகோட்யாம் ஹரிஸ்ஸ்வயம் 1
    வரதஸ் ஸர்வபூதாநாம் அத்யாபி பரித்ருயதே
    IIஹஸ்திகிரீமாஹாத்ம்
    யம் 15-16 வேகவத்யுத்தரே தீரே -வேகவதிஎன்னும் நதியின்வடகரையில், புண்ய கோட்யாம் – புண்யகோடி விமானத்தில், ஹரி: – பகவான், ஸ்வயம் – தானே, ஸர்வ பூதாநாம் – எல்லா ப்ராணிகளுக்கும்,வர த:- வரத்தைக் கொடுக்கிறவராக, அத்யாபி – இப்பொழுதும், பரித்ருச்யதே – எல்லோராலும் காணப்படுகிறார்.)என்றும்–நிகரில் புகழாய்! உலகம் மூன்றுடையாய்! என்னை யாள்வானே ! ‘-திருவாய்- 6–10–10)இத்யாதிகளிற் படியே ஆஸ்ரித ஸம்ரக்ஷணோபயுக்த ஸௌஸீல்ய வாத்ஸல்ய ஸ்வாமித்வ விஸிஷ்டனாய் நண்ணினவர்களுக்கு விண்ணுலகம் தர விரைந்து ரக்ஷாபேக்ஷா ப்ரதீக்ஷனாய் மண்ணுலகில் வந்து பலப்ரதாநோமுகனாய் நிற்கிற பெருமாள் என்றபடி.

    இன்றே இசையில் இணையடி சேர்ப்பர் ‘ என்றது-க்வாஹம்அத்யந்த து புத்தி : க்கசாத்ம ஹித வீக்ஷணம்| யத் ஹிதம் மம தேவேச ததாஜ்ஞ பய மாதவ !
    த்வாம் ப்ரபந்நோஸ்மி தாஸஸ் தே நாந்யா க்வாபி கதிர் மம | அத்யைவ கிங்கரீ க்ருத்ய நிதேஹி த்வத் பதாம்புஜே II-ஜிதந்தா ஸ்தோத்திரம் 1 – 18-
    (அத்யந்த துர்புத்தி: –
    மிகவும் கெட்ட புத்தியையுடைய, அஹம் – நான், க்வ-எங்கே, ஆத்மஹித வீசணம் – என்னுடைய ஹிதத்தை நானே யோசித்துக் கொள்வது என்பது, க்வ – எங்கே, அதாவது எனக்கும் அதற்கும் வெகு தூரம் என்றபடி, தேவேச – தேவதைகளுக் கெல்லாம் ஈசுவர
    னாகிய, மாதவ – சரிய:பதியகிய பகவானே : மம – எனக்கு, யத் – எது,ஹிதம் – நன்மைபைக் கொடுக்கக் கூடியதோ, தத் – அதை, ஆஜ்ஞாபய – உத்தரவு செய்யும், த்வாம் – உ பை, ரபந்ந:- ஆச்ரயித்தவனாயும், தே – உமக்கு, தாஸ: – தாஸனாகவும், அஸ்மி – ஆகிறேன், மம – எனக்கு க்வாபி – ஓர் இடத்திலும், அந்யா – வேறு,கதி:- கதி, ந – இல்லை, அத்யைவ – இப்பொழுதே, கிங்கரீ க்ருத்ய -கிங்கரனாகச் செய்து, த்வத் பதா புரே – உம்முடைய திருவடித் தாமரையில், நிதேஹி – வைத்துக்கொள்ளும்.)இத்யாதிகளிற்படியே பரம புருஷார்த்தைகமஸ்கராமளவில் அப்போதே கொடு உலகு காட்டாதே கொழுஞ்சோதி உயரத்துக்கூட்டரிய திருவடி கூட்டி அருள்வர் என்றபடி.

    இனிப் பிறவோம் ‘ என்றது-கண்டு கேட்டு -திருவாய்-4-9-10-இத்யாதிகளிற்படியே பராவர புருஷார்த்த விவேகத்தாலே ஐஸ்வர்ய கைவல்யங்களை ஒழித்த நாம் ஏதேனுமொரு பகவத் க்ஷேத்ர வாஸ கைங்கர்யாதி ஸங்கத்தாலே-இங்கேதிரிந்தேற்கு இழுக்குற்று என் ‘--திருவாய்- – 8- 10 -4-என்று த்வரையற்று இருக்குமளவிலும் சரணமாகும் தனதாள் அடைந்தார்க்கெல்லாம் மரண மானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்த்யக்த்வா தேஹம் புநர்ஜந்ம நைதி மாமேதி ஸோர்ஜூந-கீதை – 4 -9 அர்ஜூன, ஸ: – அவன், தேஹம்- இந்தத் தேஹத்தை, த்யக்த்வா- விட்டுவிட்டு, புந: – மறுபடியும், ஐந்ம-பிறப்பை, நைதி – அடைவதில்லை, மாம் – என்னை, ஏதி – அடை கிறான்.)-‘கொள்ளக் குறைவிலன் வேண்டிற்றெல்லாம் தரும்-திருவாய் 3-9-5-இத்யாதிகளிற்படியே இனி எனக்கு ஒரு ஸரீர பரிக்ரஹம் உண்டாகாதபடி ப்ராரப்த கர்ம விசேஷத்தையும் ஒரு விரகாலே கழித்து ரக்ஷித்தருளுவர் என்றபடி.

    நன்றே வருவதெல்லாம் ‘ என்றது இத்தேஹம் விடுமளவும்-(போகை: புண்யக்ஷயம் ததா -போகை: – ஸூகத்தின் அனுபவங்களினால் புண்யக்ஷயம் – புண்யகர்மத்தின் நாசத்தையும்.)என்கிறபடியே அநுகூலங்கள் வருமவை ப்ராரப்த புண்யரூப
    நிகள நிவ்ருத்தியாகையாலும், ப்ரதிகூலங்கள் வருமவை-(ஹரிர்துக்காநி பக்தேப்யோ ஹிதபுத்யா கரோதிஹி ஸஸ்த்ரக்ஷாராக் கர்மாணி ஸ்வபுத்ராய யதா பிதா !-ஹரி: – பகவான், பக்தேய :- பக்தர் களுக்கு, துக்காநி – துக்கங்களை, பிதா – தகப்பனார், ஸ்வபுத்ராய –
    தன்னுடைய பிள்ளைக்கு, சஸ்த்ர க்ஷாராக் கர்மாணி யதா -ஆயுதம் க்ஷாரம்,அக்னி, முதலியவைகளினால் செயயும் கார்யங்களைப் போல,ஹித புத்த்யா – நல்லது என்கிற எண்ணத்தினால், கரோதி – செய்கிறான்)(யஸ்யா நுக்ரஹம் இச்சாமி தஸ்ய வித்தம் ஹராம்யஹம்-பாகவதம். யஸ்ய – எவனுக்கு, அநுக்ரஹம் – அநுக்ரஹத்தை
    இச்சாமி – வி ரும்புகிறேனோ, தஸ்ய – அவனுடைய, வித்தம் பணத்தை.அஹம் – நான், ஹராமி – அபஹரிக்கிறேன்.)-இத்யாதிகளிற்படியே ப்ராரப்த துஷ்க்ருதத்தில் சிகை
    தீ(ர்த்த)ருகிற படியாலும்-(ரத்நபர்வதமாருஹ்ய யதா ரத்நம் நரோ முநே
    ஸத்த்வா நுரூபமாதத்தே ததா க்ருஷ்ணாத் மநோரதாங்!)
    (ஸங்கல்பாதேவ பகவாந் தத்த்வதோ பாவிதாத்மநாம்| வருதாந்தமகிலம் காலம் ஸேசயத்யம்ருதேந து II)இத்யா திகளிற்படியேகைங்கர்ய மநோரதத்துக்குப் பங்கம்
    வாராமையாலும் யாவச்சரீரபாதம் நமக்கு வருமவை எல்லாம் ப்ரிய ஹித விநன்றே வருவதெல்லாம் ‘ என்றது இத்தேஹம் விடுமளவும்-(போகை: புண்யக்ஷயம் ததா -போகை: – ஸூகத்தின் அனுபவங்களினால் புண்யக்ஷயம் – புண்யகர்மத்தின் நாசத்தையும்.)என்கிறபடியே அநுகூலங்கள் வருமவை ப்ராரப்த புண்யரூப
    நிகள நிவ்ருத்தியாகையாலும், ப்ரதிகூலங்கள் வருமவை-(ஹரிர்துக்காநி பக்தேப்யோ ஹிதபுத்யா கரோதிஹி ஸஸ்த்ரக்ஷாராக் கர்மாணி ஸ்வபுத்ராய யதா பிதா !-ஹரி: – பகவான், பக்தேய :- பக்தர் களுக்கு, துக்காநி – துக்கங்களை, பிதா – தகப்பனார், ஸ்வபுத்ராய –
    தன்னுடைய பிள்ளைக்கு, சஸ்த்ர க்ஷாராக் கர்மாணி யதா -ஆயுதம் க்ஷாரம்,அக்னி, முதலியவைகளினால் செயயும் கார்யங்களைப் போல,ஹித புத்த்யா – நல்லது என்கிற எண்ணத்தினால், கரோதி – செய்கிறான்)(யஸ்யா நுக்ரஹம் இச்சாமி தஸ்ய வித்தம் ஹராம்யஹம்-பாகவதம். யஸ்ய – எவனுக்கு, அநுக்ரஹம் – அநுக்ரஹத்தை
    இச்சாமி – விரும்புகிறேனோ, தஸ்ய – அவனுடைய, வித்தம் பணத்தை.அஹம் – நான், ஹராமி – அபஹரிக்கிறேன்.)-இத்யாதிகளிற்படியே ப்ராரப்த துஷ்க்ருதத்தில் சிகை
    தீ(ர்த்த)ருகிற படியாலும்-(ரத்ந பர்வதமாருஹ்ய யதா ரத்நம் நரோ முநே
    ஸத்த்வா நுரூபமாதத்தே ததா க்ருஷ்ணாத் மநோரதாங்!-
    முநே – ஓ ! ரிஷியே ! நர :- மனிதன், யதா – எப்படி, ரத்ன பர்வதம் – ரத்னமயமான மலையை, ஆருஹ்ய- ஏறி, ரத்னம் – ரத் னத்தை, ஸத்த்வாநு ரூபம் – தன்னுடய சக்திக்குத் தகுந்தபடி, ஆதத்தே எடுத்துக் கொள்ளுகிறானோ,ததா – அபபடியே, கருஷ்ணாத் – க்ருஷ்ணனிடத்தில் இருந்து, மனோரதாந்- இஷ்டங்கள, ஆதததே -பெற்றுக் கொள்ளுகிறான்.)

    (ஸங்கல்பாதேவ பகவாந் தத்த்வதோ பாவிதாத்மநாம்| வருதாந்தமகிலம் காலம் ஸேசயத்யம்ருதேந து -ஸ்ரீஸாத்வத ஸம்ஹிதை-பகவாந்- பகவானானவர், தத்த்வத: – உள்ள படியே, பாவிதாத் மநாம் -த னை தயானம் செய்பவாகளுக்கு, ஸங்கல் பாதேவ தன்னுடைய ஸங்கல்பத்தினாலேயே, வருதாந்தம் – இவனால் ராரததிக்கப்பட்டிருக்கும் வரையிலான, அகிலம – எல்லா, காலம்- காலததையும், அமருதே – அமருதத்துனால், ஸே சயது – நனைக்கிறார்.)இத்யா திகளிற்படியே கைங்கர்ய மநோரதத்துக்குப் பங்கம்
    வாராமையாலும் யாவச் சரீரபாதம் நமக்கு வருமவை எல்லாம் ப்ரிய ஹித விஷங்கள் என்று ப்ரீதராகிறபடி.(ப்ரியமித்தரததாபி வா யத் யதா விதரஸி வரத ப்ரபோ த்வம ஹிமே-ததநுபவநமேவ யகதம் ஹி மே த்வயி நிஹிதபரோத்யஸோஹம் யத: -(வரதர. ஸதவம் – விபோ – ப்ரபுவாகிய, வரத – வரதனே த்வம்- நீர், மே எனக்கு, பரியம் – இஷ்டத்தையாவது, இதரத்- மற்றொன் ருகிய துக்கத்தையாவது, யத்- எதை,யதா -எப்படி, விதரஸி- கொடுக்கிறாயோ, மே – எனக்கு, ததறுபவமேவ – அதை அனுபவிப்பதே யுக்தம் ஹி – உசிதமன்றே, யத. – எந்தக்காரணத்தி ல், ஸோஹம் -அப்படிப்பட்ட நான், த்வயி-உம்மிடத்தில், நிஹிதபர: – வைக்கப்பட்டதான பரத்தை யுடையவனாக, அஸமி – ஆகிறேன.)என்றார்களிறே.

    நமக்குப் பரம் ஒன்றிலதே’ என்றது ஸர்வஜ்ஞனுமாய் ஸர்வஸக்தனுமாய் பரம காருணிகனுமாய் பரம சேஷியுமான பெருமாள் பரஸ்வீகாரம் பண்ணி தேஹயாத்ரையை நம்முடைய கர்மா நுகுணமாக நடத்துகையாலும், ஆத்ம யாத்ரையைத் தம்முடைய ப்ரதாநரூப க்ருபா நுகுணமாக நிர்வஹிக்கையாலும்-(ஜநார்த்தநம் ப்ரணிபதிதோ ந ஸீததி-ஜநார்த்தநம் – பகவானை, ப்ரணிபதித: – ஆச்ரயித்தவன், ந ஸ்ததி – துக்கப்படுவதில்லை. )
    (நவாஸுதேவபக்தாநாம் அபம் வித்யதே க்வசித்-நக்ரோதோ ந ச மாத்ஸர்யம் ந லோபோ நா பாமதி; பவந்தி க்ருதபுண்யாநாம் பக்தாநாம் புருஷோத்தமே )-ஆநுசா-254 – 133,135 வாஸுதேவபக்தாநாம் – பகவானி டத்தில் பக்து செய்பவர்களுக்கு, க்வசித் – ஓர் இடத்திலும், அசுபம் -அமங்களம், நவித்யதே – க ணப்படுவதல்ய க்ருத பு யானாம்-புண்யம் செய்தவர்களாயும், புருஷோத்தமே – பகவானிடத்தில், பக்தாநாம்-பக்தர்களாயும் இருப்பவர்களுக்கு,க்ரோத – கோபமானது, ந- இல்லை, மாத்ஸர்யம் – த்வேஷமானது, ந, லோப . – லோபமானது, ந – இல்லை)இத்யாதிகளிற் படியே புத்தி பூர்வமாக அபாயங்களில் இழிய ஓட்டாமையாலும், ப்ரவருத்தங்களாகில் ஏதேனும் ஒரு கண்ணழிவு செய்து விடுகையாலும, பராவர தத்த்வ விவேகத்தாலே பர தந்தர கர்திருத்வ பரதிபத்தியை யுடையவருமாய ஸகிஞ்சந அகிஞ்சந அதிகாரி விவேகத்தாலே ந்யஸ்த பரருமான நமக்கு ஆத்ம ரக்ஷார்த்தமாக இனி ஒரு கர்த்தவய லேஷம் இல்லை என்றபடி.

    இனிப் பிறவோம் ‘ என்றும், ‘ நமக்கு ‘என்றும் பஹு -வசந ப்ரயோகத்தாலே -(பஸூர் மநுஷ்ய: பஷீ வா யே ச வைஷ்ணவ ஸம்ஸ்ரயா-தேநைவதே ப்ரயாஸ்யந்தி தத் விஷ்ணோ: பரமம்பதம் | )-சாண்டில்யஸ்ம்ருதி -1-15. பசு -பசுவானாலும், மனுஷ்ய.மனிதனானாலும், பஷீ வா-பக்ஷியானாலும், யே – எவைகள், வைஷ்ணவ ஸம்ச்ரயா: -வைஷ்ணவர்களை ஆச்ரயித்தவைகளோ, தே – அவைகள் தேநைவ – அந்த வைஷ்ணவர்களை ஆச்ரயித்ததினாலேயே, விஷ்ணோ பசுவானுடைய, தத் – அந்த, பரமம் பதம் – பரமபத்தை, ப்ரயாஸ் யந்தி – அடைகின்றன.இத்யாதிகளிற்படியே அநுபந்தி ரக்ஷணம் இங்கே ஸூசிதமாகிறது.

    ——————-

    1-ஒரு ஜீவனுக்கு ஒரு ஜீவன் தஞ்சமல்லன் ‘ என்றது-ஸ்வயம் மருத்பிண்டபூதஸ்ய பரதந்த்ரஸ்யதேஹி :-ஸ்வரக்ஷணேப்ய க்தஸ்ய கோ ஹேது: பரரக்ஷணே|-இதிஹாஸ ஸ மு — 17 – 63 ஸ்வயம் – தான், மருத்பிண்ட பூதஸ்ய – மண்ணுருண்டைபோல் இருப்பவனாயும், பரதந்த்ரஸ்ய – பராதீனனாயும், ஸ்வரக்ஷணேபி – தன்னைக் காப்பாற்றிக் கொள்ளுவதிலும்,
    அசக்தஸ்ய – சக்தி இல்லாதவனாயும் இருக்கிற, தேஹி : ஜீவாத்மா விற்கு, பரரக்ஷணே -அயலானைக் காப்பாற்றுவதில்,ஹேது :- காரணம்,க:- எது? இல்லை என்றபடி )ப்ரஹ்மாணம் மிதிகண்டம் ச யாசாந்யா தேவதா:ஸ்ம்ருதா -ப்ரதிபுத்தா நஸேவந்தே யஸ்மாத் பரிமிதம் பலம் -பார -சாந்தி – 350- 36 ப்ரஹ்மாணம்- ப்ரஹ்மாவையும், சிதி கண்டம் ச -ருத்திரனையும், யா: – எவர்கள், அந்யா: – இதரர்களான தேவதைகள், ஸ்ருதா: – சொல்லப்பட்டவர்களோ ( அவர்களையும்).ப்ரதி புத்தா: – நல்ல ஜ்ஞானமுடையவர்கள், நஸேவந்தே – ஸேவிப்பதில்லை, யஸ்மாத் எந்தக் காரணத்தினால்,(அவர்களால் கொடுக்கப் படுகிற) பலம் – ப்ரயோஜனம், பரிமிதம் – அல்பமாயிருக்கிறதோ.–(அநந்ய ஐஞாநவிரஹாத் அத்தா தேவதாகதா: -ப்ரஹ்மோநாதய : ஸர்வேஸ்வஸ்வாதந்த்ர்யேன கர்ஹிதா.-(தேவதாகதா:- தேவதைகளாய் இருக்கையை அடைந் திருக்கிற, ப்ரஹ்மேசாநாதய : – ப்ரஹ்மா, ருத்திரன்முதலிய, ஸர்வே- எல்லோரும், அநந்யஜ்ஞாந விரஹாத்- பகவானைத் தவிர வேறு ஒரு அடைய வேண்டிய ப்ரயோஜனம் இல்லை என்கிற ஜ்ஞாநம் இல்லாமையினால், அசுத்தா:- அபரிசுத்தர்கள், ஸ்வ ஸ்வாதந்த்ர்யேண-தாங்கள் ஸ்வதந்த்ரர்கள் என்று எண்ணி இருப்பதினால், கர்ஹிதா:- நிந்திக்கப் பட்டவர்கள், புருஷவ்யாக்ர – புருஷச்ரேஷ்டனே, அந்யே-மற்றவர்களான, யே- எவர்கள், சேதஸ : – மனத்திற்கு, வ்யபாச்ரயா: – த்யானத்திற்கு விஷயமாக இருக்கிறார்களோ, தே – அந்த, கர்ம யோநய : – கர்மத்தைக் காரணமாகவுடைய, தேவாத்யா :-தே தை முதலிய ஸமஸ்தா – எல்லோரும், அசுத்தா- அபரிசுத்தர்களாக,ஸ்பு:- ஆவார்கள்)(ஆப்ரஹ்மஸ்தம்பபர்யந்தா ஜகதந்தர்யவஸ்த்திதா:1 ப்ராணிந: கர்ம நித ஸம்ஸாரவ வர்த்தி :||-(யதஸ்த்தோ ந தேத்யாநே த்யாநிநாமுபகாரகா: 1 அவித்யாந்தர்கதா ஸர்வே தே ஹி ஸம்ஸார கோசரா :-(பஸ்ாதுத்பூதபோதாதுச த்யாநே நைவோபகாரக: 1
    நைஸர்கிகோ ந வை போதஸ்தேஷாமப்யந்யதோ யத-விஷ்ணுதர்மம்-104 -33-
    யத:- எந்தக்காரணத்தினால், ஆப்ரஹ்ம- ப்ரஹ் மாமுதல், ஸ்தம்ப பர்யந்தா – புழுவரையிலான, ஜகதந்தர் வீயவஸ்திதா:- லோசுங்களுக்கு உள்ளடங்கிய ப்ராணிகள், கர்மஜநித – கர்மத்தினால்-உண்டாக்கப்பட்ட, ஸம்ஸாரவசவர்த்தி : – ஸம்ஸாரத்திற்கு வசப்பட்டவர்களோ, தத: – ஆகையினால்,தே – அவர்கள்,த்யாநிநாம் – த்யானம் செய்பவர் களுக்கு, த்யாநே – த்யானத்தில், நஉபகாரகா: – உபகாரம் செய்கிறவர்களல்லர், அவித்யாந்தர்கதா- அவித்யைக்கு உட்பட்ட வர்களான,ஸம்ஸார கோசரா: ஸம்ஸாரத்திலுழலும், தே ஸர்வே-அவர்கள் எல்லோரும்,பச்சாத் – பிற்பாடு, உத்பூதபோதா: ச – ப்ரகாசத்தை அடைந்திருக்கிற ஜ்ஞாநத்தை யுடையவாகள்,த்யா-ேத்யாநத்தில், நைவோபகாரகா :உபகாரம் செய்கிறவர்களல்லர்,தேஷாமபி – அவர்களுக்கும் போத :- ஜ்ஞாநமானது, ந நைஸர்க்கிகஸ்பாவத்தில் ஏற்பட்டதன்று,யத: – எந்தக் காரணத்தினால், அந்யத:- வேறு ஒருவனால் உண்டாக்கப்பட்டதோ)(பஸவ: பாரிதா: பூர்வம் பரமேண ஸ்வ லீலயா
    தேநைவ மோச யாஸ்தேநாந்யை மோசயிதும்க்ஷமா :
    ||-பசவ :- ஜீவாத்மாக்கள, பூர்வம் – முன்
    னால், பரமேண – பரமாத்மாவினால், ஸ்வ லீலயா – தன்னுடைய விளையாட்டினாலே. பாசிதா: கட்டப்பட்ட வைகள், தே நைவ – அந்தப் பரமாத்மாவினாலேயே, தே – அவைகள், மோசநீயா: – விடுவிக்கத்தக்கவைகள், அந்யை: – மற்றவர்களினால், மோசயிதும் – விடுவிப்பதற்கு நக்ஷமா : – யோக்யர்களல்ல. ) இத்யாதிகளிற்படியே பரதந்தர சேதநர்களில் ஆரேனும் ஒருவன் தனக்கும் பிறர்க்கும் நிரபேக்ஷ ரக்ஷகனாக மாட்டான் என்றபடி. –

    —————–

    2-ஸ்ரீமானான நாராயணன் ஒருவனுமே ஸர்வஜீவர்களுக்கும் தஞ்சம் ‘ என்றது-(ஸ்ரீமந்நாராயண ஸ்வாமிந் அநந்ய ஸரணஸ் தவ –சரணௌ ரணம் யாத தவைவாஸ் யஹம் அச்யுத-த்வய மந்த்ராந்தரம் ஸ்ரீமந் – லக்ஷ்மியுடன் கூடியவனாயும். ஸ்வாமிங் – ஸ்வாமியாயும் இருக்கிற, நாராயண – நாராயணனே, அநந்ய சரண:- வேறு ஒரு ரக்ஷகனும் இல்லாதவனாகிய நான், தவ – உம்முடைய, சரணெள -திருவடிகளை, சரணம் – உபாயமாக, யாத : – அடைந்தேன், அச் யுத – ஆச்ரிதர்களை நழுவ விடாதவனாகிய பகவானே, அஹம் – நான், தவைவ – உமக்கே சேஷ பூதனாக, அஸ்மி – ஆகிறேன்.)(மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே-கீதை – 7 -14.யே – எவர்கள், மாமேவ – என்னை யே, ப்ரபத்யந்தே – ஆச்ரயிக்கிறார்களோ, தே – அவர்கள், ஏதாம் – இந்த மாயாம் – ப்ரக்ருதியை, தரந்தி – தரண்டுகிறார்கள்.)(தமேவ சாத்யம் புருஷம் ப்ரபத்யேத் யத ப்ரவ்ருத்தி: ப்ரஸ்ருதா புராணீ-கீதை – 15 – 4 யத: – எவனிடத்தில் இருந்து, புராணி- அநாதி யான, ப்ரவருத்தி: – லோகத்தினுடைய ப்ரவ்ருத்தி,ப்ர ஸ்ருதா – உண் டாயிற்றோ, தம் – அப்படிப்பட்ட, ஆத்யம் – முதலாவதாகிய, புருஷ மேவ – புருஷனையே, ப்ரபத்யேத் – ப்ரபத்தி செய்யக்கடவன்.)(தமேவ பரணம் கச்ச ஸர்வபாவேந பரர த ||தத்ப்ரஸாதாத் பராம்லாந்திம் ஸ்த்தாநம் ப்ராப்ஸ்யஸிஸாவதம்-கீதை 18-62 பாரத – அர்ஜுந, ஸர்வபாவேந – எல்லா அபிப்ராயத்தினாலும், தமேவ – அந்தப் பகவானையே, சரணம் – உபாய மாக, கச்ச – அடை, தத் ப்ரஸாதாத் – அவனுடைய அனுக்ரஹத் தினால், பராம் – உயர்ந்ததான, சாந்திம்-சாந்தியையும், சாச்வதம் -அழிவில்லாத, ஸ்தாநம் – இடத்தையும், ப்ராப்ஸ்யஸி – அடையப் போகிறாய்.)ஸம்ஸாரார்ணவமக்நாநாம் விஷயாக்ராந்தசேதஸாம்| விஷ்ணுபோதம் விநா நாந்யத் கிஞ்சிதஸ்தி பராயணம்!!-விஷ்ணு தர்மம் – 1 – 5 – 9 ஸ ம்ஸாரார்ணவ மக்காநாம் ஸம்ஸாரமாகிற ஸமுத்திரத்தில் முழுகினவர்களாயும், விஷயாக்ராந்த சேதஸரம் – சப்தம் முதலிய விஷயங்களினால் பீடிக்கப்பட்ட மனத்தை யுடையவர்களாயும் இருப்பவர்களுக்கு, விஷ்ணுபோதம் விநா- விஷ்ணுவாகிற தெப்பத்தைத் தவிர, அந்யத் – வேறு, கிஞ்சித் – ஒரு பராயணம் – அடையக் கூடிய ப்ரயோஜனம், நாஸ்தி-இல்லை.)(ஸம்ஸாரஸாகரம் கோரம் அநந்தக்லே பா ஜநம் |த்வாமேவ ரரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷிண: 1-அநந்தக்லேசபாஜனம் -அளவில்லாத துக்கத்திற்கு இடமாயும், கோரம் – பயங்கரமா யுமிருக்கிற, ஸம்ஸார ஸாகரம் ஸம்ஸாரமாகிற ஸமுத்திரத்தை மநீ ண : – புத்திமான்கள், த்வாமேவ – உம்மையே, சரணம் – உபாயமாக ப்ராப்ய – அடைந்து, நிஸ்தரந்தி – தாண்டுகிறார்கள்.)ஸர்வலோக ரண்யாய ராகவாய மஹாத்மநே| நிவேதயத மாம் க்ஷிப்ரம்)-ராமா – யுத்த – 17-15 ஸர்வலோக சரண்யாய – எல்லோராலும் சரணமாக அடையத் தக்கவராயும், மஹாத்மநே – மஹாத்மாவாயும் இருக்கிற, ராகவாய – ஸ்ரீராமன் ; பொருட்டு, மாம் – என்னை,க்ஷிப்ரம் – சீக்கிரமாக, நிவேதயத – ஸமர்ப்பியுங்கள்.)-இத்யாதிகளின்படியே பத்நீஸம்பந்த குணவிபேஷ வி ஷ்டனான நாராயணன் ஒருவனுமே அகிஞ்சநராயும் ஸகிஞ்சநராயும் உள்ள ஸர்வ ஜீவர்களுக்கும் ஸ்வபுத்ய தீ ந ஸஹகார்யதிரிக் அபேக்ஷா ரஹிதமாக அநிஷ்ட நிவ்ருத்தியையும் -இஷ்டப்ராப்தியையும் பண்ணுவன் என்றபடி.

    இவனைப் பற்றினவர்களை ஒருவரும் பாதிக்கமாட்டாதபடியையும், ஸ்வபாவதஸ் ஸர்வ ஸமனாய்-(ந மே த்வேஷ்யோஸ்தி-கீதை- 9 – 29 மே – எனக்கு, த்வேஷ்ய:- த்வேஷிக்கத்
    தகுந்தவன், நாஸ்தி – இல்லை) என்கிற இவனுக்கு த்வேஷ்யராம்படி ஸாபராதரானாரை ஒருவரும் ரக்ஷிக்கமாட்டாத படியையும்-(கஜம் வா வீக்ஷ்ய ஸிம்ஹம் வா-அயோ 60 20. கஜம் வா – யானையையாவது, ஸிம்ஹம் வா -சிங்கத்தையாவது, வீய – பார்த்து, (ஸீதை பயப்படவில்லை.)(ப்ரஹ்மா ஸ்வயம்பூ:-ந்தர- 51- 45 ஸ்வயம்பூ: – தானே உண்டானவரான,ப்ர
    ஹ்மா – ப்ரஹ்மாவும், (மற்ற ருத்திரனும் இந்திரனும் ராமனால் கொல்லத் தகுந்தவனாக ஏற்படுத்தப்பட்டவனை ரக்ஷிக்க சக்தி யுடையவாகளல்லா என்றுமேல்)என்கிற ஸ்லோகங்களில் தாத்பர்யத்திலும், ப்ரஹ்லாத ஸு முககாக ராவணாதி வருத்தாந்தங்களிலும் கண்டு கொள்வது.

    ———-

    3-இஜ்ஜீவன் அநாதிகாலம் அநுபவிக்கப் பெறாத ஸ்ரீரிய,பதியைப் பெறுகைக்கு ஹேதுவான உபாயத்தை ரஹஸ்ய த்ரயமுகத்தாலே உபதேசித்து அவ்வழியாலே ஆசார்யன் இவனுக்குத் தஞ்சமாகிறான்” என்றது.தாஸபூதா: ஸ்வதஸ்ஸர்வே ஹ்யாத்மாந: பரமாத்ம :-மந்திர ராஜபதஸ்தோத்திரம் – ஸர்வே -ஆத்மா : – எல்ல ஆத்மாக்களும், ஸ்வத: -ஸ்வபாவத்தினாலேயே, பரமாத்மந:- பரமாத்மாவிற்கு, தாஸபூதா : – தாஸர்கள்.)
    இத்யாதிகளில்படியே ஸுரிகளோடொக்க ஸ்வரூப யோக்யதை உண்டாயிருகக, ஸ்வாபராதத்தாலே ஸ்வத: ப்ராப்தமான பகவதநுபவத்தை இழந்த ஸம்ஸாரி சேதநன் இப்பேறு பெறுகைக்கு அவிநாபாவத்தாலே விஸ்வஸநீயமான உபாய விசேஷத்தை அத்யாத்ம பலாஸ்த்ர ஸாரமான மூலமந்த்ராதிகளாலே உபதேஸித்து,-(ஆசார்ய : ப்லாவிதா தஸ்ய ஜ்ஞாநம் ப்லவ இஹ உச்யதே-தஸ்ய – அப்படிப்பட்ட ஜீவாத்மாவிற்கு, இஹ – இந்த, ஸம்ஸார தசையில், ஆசார்ய: – ஆசார்யன், ப்லாவிதா – தெப்பக்காரன், ஜ்ஞாநம் ப்லவ: – ஜ்ஞாநமாவது தெப்பம், (என்று) உச்யதே- சொல்லப்பபடுகிறது.)-(ஸாக்ஷாந் நாராயணோ தேவ :க்ருத்வா மர்த்யமயீம் தநும்-மக்நாநுத்தரதே லோகாந் காருண்யாத் யாஸ்த்ரபாணிநா-ஜயா க்ய ஸம்ஹிதை – தேவ – தேவனாகிய.நாராயண:- நாரா யணன், ஸாக்ஷாத் – நேராகவே, மர்த்யமயீம் – மநுஷ்ய ரூபமான-தநும் சரீரத்தை,கருத்வா-செய்து கொண்டு, காருண்யாத்-க்ருபையினால், சாஸ்த்ர பாணிநா – சாஸ்த்ரமாகிறகையினால், மக்னாக் முழுகி இருக்கிற, லோகாந்- ஜனங்களை, உத்தரதே – உயரத் தூக்கிவிடுகிறார்.)இத்யாதிகளில்படியே ஆசார்யன் இவனுக்குப் பரம்பரயா மோக்ஷ ஸாதநமாகிறான் என்றபடி.-(பாபிஷ்ட்ட: க்ஷத்ரபந்துச புண்டரீகஸ்ச புண்யகருத் ஆசார்யவத்தயா முகதெள தஸ்மாதாசார்யவார் பவேத் -பாபிஷ்ட்ட :- மிகவும் பாபியான. த்ரபந்து: ச – க்ஷத்திர பந்துவும் புண்ய க்ருத் – புண்யம்செய்தவனாகிய புண்டரீக: ச – புண்டரீகனும், ஆசாயவத்தயா – ஆசார்யனை அடைந்திருக்கையாலே, முக்தெள -மோக்ஷத்தை அடைந்தார்கள்,தஸ்மாத்- அ கையினால், ஆசார்யவாந்பவேத் – ஆசராயனை அடைந்தவனாக ஆகவேண்டும்.)என்றதற்கும்இதுவே தாத்பர்யம்.

    ————–

    4— சர்வ ஸ்வாமிநி யாய் -சர்வேஸ்வரனுக்கு சேஷ பூதையாய் ஸஹ தர்ம சாரிணியான பெரிய பிராட்டியார் இத்தலையிலே வாத்சல்ய அதிசயத்தாலும் அத்தலையில் வால்லப்ய அதிசயத்தாலும் புருஷாகாரமாய்க் கொண்டு இஜ்ஜீவர்களுக்கு தஞ்சமாகிறாள்–என்றது(ஸர்வேஷாமேவ லோகாநாம் ஈஸ்வரி மம வல்லபா-ஸர்வேஷாமேவ – எல்லா, லோகாநாம் – லோகங்களுக்கும்,மம – என்னுடைய, வல்லபா- பத்தினியாகிய லக்ஷமீ-ஈச்வரீ – யஜமானி.)(அஸ்யா மம ச லேஷம் ஹி விபூதிருபயாத்மிகா-.விஷ்வக்ஸேந ஸம்ஹிதை. உபயாத்மிகா – இரு வகைப்பட்ட, விபூதி: – விபூதியும், அஸ்யா – இந்த லக்ஷ்மிக்கும், மம ச – எனக்கும் சேஷம்ஹி- சேஷமல்லவா.)தேவதிர்யங் மநுஷயேஷு பு நாமா பகவாந்ஹரி:
    (ஸ்த்ரீ நாம்நீ லக்ஷ்மீர் மைத்ரேய நாநயோர் வித்யதே பரம்|!-விஷ்ணு புராணம் 1 – 8 35
    . தேவதிர்யங் மநுஷ்யேஷ தேவதைகள், மருகங்கள், மனுஷ்யர்கள், இவர்களுக்குள், பு நாமா –
    புருஷன் என்று பெயர் உடையதெல்லாம், பகவாங் – பகவானாகிய ஹரி: – விஷ்ணு (வின்விபூதி), ஸ்த்ரீ நாம் – ஸ்த்ரீ என்று பெயருடைய தெல்லாம்,ல மீ:- லக்ஷ்மிக்கு, (சேஷபூதம்), மைத்ரேய – ஒ ! மைத்ரேயனே ! அநயோ : – இவ்விருவர்களைத் தவிர,பரம் – மேலான வஸ்து, நவித்யதே – இல்லை.)நித்யை வைஷா ஜகந்மதா விஷ்ணோ: ஸ்ரீரநபாயி-விஷ்ணு புராணம் – 1 – 8 – 17 ஜகந்மாதர – லோகங்களுக்கு எல்லாம் தாயாகிய, ஏஷா – இந்த லக்ஷமீ, விஷ்ணோ:- விஷ்ணுவிற்குநித்யைவ – எப்பொழுதும் இருப்பவள், அந பா யிங் – விட்டுப்பிரியாத வள்.)(யஜ்ஞவித்யா மஹாவித்யா குஹ்யவித்யா ச பேலாபநே|
    ஆத்மவித்யா ச தேவி! த்வம் விமுக்தி பலதாயி || -விஷ்ணு புராணம் 1 – 9-120.சோபமே – மங்களகரமான லக்ஷ்மியே! த்வம் – நீ, யஜ்ஞவித்யா – யஜ்ஞவித்யை, மஹாவித்யா ச்ரேஷ்டமான வித்யை, குஹ்ய வித்யா – ரஹஸ்யமான வித்யை விமுக்தி பலதாயிநீ – மோக்ஷமாகிற பலத்தைக் கொடுக்கிற, ஆத்மவித்யாச – ஆத்ம வித்யையும், தேவி – ஒ தேவியே, த்வம் – நீயே, (ஆதம வித்டையும நீயே, மோக்ஷம்,கற பலத்தைக் கொடுப்பவளும்
    நீயே என்றும் பொருள் டடும்.)(இயம் ஸ்தா மம ஸுதா ஸஹதர்மசரீ தவ-பால -87-32 இயம் ஸ்தா – இந்தஸ்தை, மம என்னுடைய, ஸுதா – பெண், தவ – உமக்கு, ஸஹதர்ம சரீ – சேர்ந் திருந்து தர்மா நுஷ்டாநம் செய்யக் கூடியவள்.)(ஸர்வைச்வர்ய குணோபேதா நித்ய தத்தர்ம தர்மி-ஸர்வைச்வர்ய குணோபேதா – எல்லா வற்றிற்கும் ஈச்வரியாய் இருக்கை யாகிற, குணத்தை யுடையவள், நித்யம் – எப்பொழுதும், தத் தர்ம தர்மிணி – பகவானுடைய ஸ்வபாவம் போன்ற ஸ்வபாவத்தை யுடையவள்)(கருணாஸ்ரா நதமுகீ கமலா ஸ்ப்ரபா|<கல்யாணவாஹிநீ கல்யா கலிகல்மஷநாலி|ஸர்வார்த்திநா நீ ஹ்ருஷ்டா ஸமுத்ரபரியோஷி |ஸர்வேச்சா பரிபூரிகா |ஆர்யா யபோதா | வஸுதா தர்மகாமார்த்த மோக்ஷதா||அப்ரமேயா க்ரியா ஸூஷ்மா பரநிர்வாணதாயிநீ -லக்ஷ்மீ ஸஹஸ்ரநாமம். கருணாஸ்ரா நதமுகீ – தயையினால் உண்டாகிய கண்ணீரை யுடையவளாயும், வணங்கின முகத்தை யுடையவளாயும் இருப்பவள்,கமலா – தாமரைப் புஷ்பம் போன்ற கண்களையுடையவள், சசி ப்ரபா – சந்த்ரன் போன்ற காந்தியுடையவள், கல்யாணவாஹி – மங்களங்களை உண்டாக்குகிறவள்,கல்யா-அப்படிச்செய்ய சக்தியுடையவள், கலிகல்மஷ நாசிநீ – கலியினாலுண்டான பாபத்தைப் போக்கடிப்பவள், ஸர்வார்த்தி நாசிநீ – எல்லோருடைய துக்கங்களையும் போக்கடிப்பவள், ஹ்ருஷ்டா – ஸந்தோஷத் தையுடையவள், ஸமுத்ரபரிசோஷிணீ – ஸமுத்ரத்தை வற்றும்படிசெய் யக்கூடியவள், ஸர்வேச்சா பரிபூரிகா – எல்லோருடைய ஆசையையும் பூர்த்திசெய்பவள், ஆர்யா – பூஜிக்கத்தகுந்தவள்,ய சோதா – யசஸ் ஸைக்கொடுக்கக்கூடியவள், வஸுதா – பணத்தைக் கொடுப்பவள, தர்மகாமார்த்த மோக்ஷதா – தர்மம், காமம், அர்த்தம், மோக்ஷம்ஆகிய நான்கு புருஷார்த்தங்களையும் கொடுப்பவள், அப்ரமேயா – அளவிட்டு அறியமுடியாதவள், அக்ரியா – (அவாப்த ஸமஸ்தகாமதையாலே) ஒரு வித கார்யமும் செய்யாதவள், அன்றிக்கே ‘க்ரியா’ என்று பகவானுடைய ஸர்வவ்யாபாரங்களுக்கும் நிர்வாஹகையானபடியினாலே க்ரியா ரூபி என்றபடியாகவுமாம், ஸூக்ஷ்மா ஸூக்ஷ்மமான ஸ்வரூபத்தை யுடையவள், பரநிர்வாணதா உயர்ந்ததான மோக்ஷத்தை கொடுப்பவள்)(வாச: பரம் பரார்த்தயிதா ப்ரபத்யேத் நியத ரியம் -செளநக ஸம்ஹிதை. வாச: பரம் – வாக்குக்கு எட்டா த தான,பலம் – பலத்தை, ப்ரார்த்தயிதா – வேண்டுகிறவன் அபேக்ஷிப்பவன்), நியத:- ஸாவதானனாய்க்கொண்டு, சரியம் – லக்ஷ்மியை, ப்ரபத்யேத் – சரணம் அடையவேண்டும்.)ப்ராய சித்த பரணங்கே து ஸர்வபாபஸமுத்பவே மாமேகாம் தேவதேவஸ்ய மஹிஷீம் ரணம் வரஜேத் I-லகுதந்த்ரம்-17 10 ஸர்வ பாப ஸ முத்பவே – எல்லாப்பாபங்கள் உண்டான போதிலும், ப்ராயச்சித்த ப்ரஸங்கே து – ப்ராயச்சித்தம்செய்து கொள்ள நேர்ந்தபோது, தேவதேவஸ்ய.- பகவானுடைய,மஹிஷீம் – பத்னியாகிய, மாமேகாம் – என்னை ஒருவளையுமே, சரணம் வ்ரஜேத் – சரணமாக அடைய வேணடும்.)(ஸர்வகாமப்ரதாம் ரம்யாம் ஸம்ஸாரார்ணவதாரிணீர்-க்ஷிப்ரப்ரஸாதிநீம் ல மீம் ரண்யாம சிநதயேத் -ஸ்வாயம்பு வசனம். ஸர்வகாமப்ரதாம் – எல்லா இஷ்டங்களை
    யும் கொடுக்கக்கூடியவளாயும், ரம்யாம் – அழகானவளாயும், ஸம்ஸாரார்ணவ தாரி ம் – ஸம்ஸாரமாகிற ஸழுத்திரத்தைத் தாண்டிவைப்பவளாயும், க்ஷிப்ர ப்ரஸாதி நீம் – சீக்ரத்தில் அனுக்ரஹம் செய்பவளாயும் இருக்கிற, லக்ஷ்மீ – லக்ஷ்மியை, சரண்யாம் – சரணம் அடையத்தகுந்தவளாக, அநுசிந்தயேத் – நினைக்கவேண்டும்.)(ப்ரணிபாத ப்ரஸ நாஹி மைதில் ஜகாத்மஜா-ஸந்தர – 27-44 ஜநகாத்மஜா – ஜநகராஜன் பெண் ணாகிய, மைதில் – ஸ்தையானவள், ப்ரணிபாத ப்ரஸந்நாஹி – சரணாம் சுதிசெய்வதினால் அனுக்ரஹத்தைச் செய்யக்கூடியவளன்றோ)(அலமேஷா பரித்ராதும் ராக்ஷஸ்யோ மஹதோ பயாத்- ஸந்தர – 27-44 ஏஷா – இந்த ஸ்தை,ராக்ஷஸ்ய: –ஓ! ராக்ஷஸிகளே, மஹத : பயாத்-பெரிய பயத்திலிருந்து, பரித்ராதும் ரக்ஷிப்பதற்கு, அலம் – சக்தியுடையவள்.)(அலமேஷா பரித்ராதும் ராகவாத்ராக்ஷ கணம்-ராக்ஷ கணம்-ராக்ஷஸிகளையெல்லாம்,-ராகவாத் – ராமனிடமிருந்து, பரித்ராதும் -காப்பாற்றுவதற்கு, ஏஷா இவள் அலம் – சக்தியுடையவள்.)இத்யாதிகளிற் சொன்ன ஸர்வயேஷி வ்யதிரிக்த ஸர்வ பேஷித்வம் நிக்ரஹாஸமாநாதிகரண ஸர்வா நுக்ரஹவத்த்வம் இத்யாதிஸ்வபாவ விலேஷங்களையுடையளான பிராட்டி ஸாபராதரான
    வர்கள் எல்லோருக்கும் பாஸிதாவான ஸர்வேஸ்வரன் அபிமுகம் கொள்ளமாட்டாதே தயங்காதபடி அவனுடைய பித்ருத்வப்ர யுத்தமான ஊஷமளீ பாவத்தை–உசிதை: உபாயை. விஸ்மார்ய-்குணரத்கோசம் – 52 உசிதை: – அததற்குத் தகுந்தவைகளான, உபயை – உபாயங்களினால், விஸ்மார்ய – மறக்கும்படிசெய்து,என்னும்படியாக்கி, இவர்களை அவன் திருவடிகளிலே சேர்த்து- தன் அடியார் திறத்தகததுத் தாமரையாளாகிலும்
    சிதகுரைக்குமேல் என்அடியார் அது செய்யார்-பெரியாழ்வார் – 49 – 2-என்னும்படி பண்ணிக் கொண்டு-பவேயம் சரணம் ஹி வ: – சுந்தர – 58 90 வ: – உங்களுக்கு, சரணம் -உபாயமாக.
    பவேயம் – ஆகக் கடவேன்.–என்றருளிச் செய்தபடியே இவர்களுக்கு ரக்ஷாஹேது ஆகிறாள்
    என்றபடி.-

    ———–

    5—இவளைப் புருஷாகாரமாக்க வேண்டுவது ஈஸ்வரன் தண்ட தரனாகையாலே-என்றது-அப்ரமேயோநியோஜ்யச யத்ர காமகமோ வசீ – பார் – ஸபா – 40 – 78 யத்ர காம கம: – தனக்கு இஷ்டமான இடத்தில் போகக் கூடியவன், வசீ – எல்லாவற்றையும் தனக்கு வசமாக உடையவன். அப்ரமேய: – அளவிட முடியாதவன், அநியோஜ்யருவராலும் நியமிக்கப்படக் கூடியவனல்லன்)ஸ்வாதந்த்ர்யாமைஸ்வரம் அபர்யநுயோஜ்யமாஹு:- வைகுண்ட ஸ்தவம் – 55 ஐச்வரம் – ஈச்வரனுடையதாகிய, ஸ் வாதந்த்ர்யம் – ஸ்வதந்த்ரனாயிருக்கும் தன்மையை அபர்ய யோஜ்யம்- வேறு ஒருவராலும் கேட்கமுடியாததாக, ஆஹு :-சொல்லுகிறார்கள்.)இத்யாதிகளில்படியே நிரங்குச ஸ்வதந்த்ரனான ஸர்வேஸ்வரன்-தஸ்மாத் Uாஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்யா கார்ய வ்யவஸ்திதௌ-கீதை- 16 – 24 தஸ்மாத் ஆகையினால், தே – உனக்கு,கார் யாகார்ய வ்யவஸ்திதௌ – இது செய்யத்தகுந்தது, இது செய்யத்தகாதது என்கிற ஏற்பாட்டில், சாஸ்த்ரம் – சாஸ்த்ரமானது, ப்ரமாணம்.-என்று க்ஷேத்ரஜ்ஞருக்கு கருத்யாகருத்ய வ்யவஸ்த்தாபகமான பலாஸ்த்ரத்தை அநாதியாக ப்ரவர்த்திப்பிக்க, ப்ரவாஹ அநாதி கர்ம ஸம்யுகதராய் ஆஜ்ஞாதிலங்கநம் பண்ணின
    வர்களை இவன்- க்ஷிபாமி அஜஸ்ரம் அஸுபாந்-கீதை – 16 – 19 அஜஸ்ரம் – எப்பொழுதும், அசுபாந்- பாபம் செய்த அவர்களை, க்ஷிபாமி – (அஸுர ஸ்வபாவமுள்ள சரீரங்களில்) தள் ளுகிறேன்.–என்கிறபடியே நிக்ரஹித்துப் போருமவனாக ப்ரமாண ஸித்தமாகையாலே, ஸ்வாபராத பூயஸ்தையாலே பீதரானவர்களுக்கு அர்த்த ஸ்வபாவாதிகளாலே அநதிலங்கநீய வாக்யையான விஷ்ணு பத்நியைப் புருஷகாரமாக்க வேண்டுகிறது என்றபடி. 

    ————-

    6—இத் தண்ட கரண்யம் அநாதியான அஞ்ஞான அதிலங்கனம்-என்றது-(ஸமோஹம் ஸர்வ பூதேஷ -கீதை 9 – 29 அஹம் – நான், ஸர்வபூதே – எல்லா ப்ராணி களிடங்களிலும், ஸம: – ஒரே விதமான மனதையுடையவன்-என்று ஸர்வ ஸமனான ஸர்வேஸ்வரன் தனக்கு வைஷம்ய நைர்க்ருண்யாதிகள் வாராதபடி வ்யவஸ்தித நிக்ரஹம் பண்ணு கைக்கு விலேஷ காரணம்

    நிமித்தமாத்ரமேவாஸௌ ஸ்ருஜ்யாநாம் ஸர்க்க கர்மணி
    ப்ரதாநகாரணீபூதா யதோ வை ஸ்ருஜ்யக்தய: !!(நிமித்தமாதரம் முகத்வைநம் நாந்யத் கிஞ்சிதபேக்ஷதே நீயதே தபதாம் ஸ்ரேஷ்ட ஸ்வக்த்யாவஸ்து வஸ்துதாம்-விஷ்ணு புராணம் – 1 – 4-51, 52
    அஸெள – இந்தப் பகவான், ஸ்ருஜ்யா நாம் – ஸ்ருஷ்டிக்கப்படுகிற வஸ்துக்களினுடைய, ஸர்க்க கர் மணி – ஸ்ருஷ்டிப்பதாகிய கார்யத்தில், நிமித்தமாத்ரமேவ – பொதுவா கிய காரணம் மாத்திரம் தான், யத: – எந்தக்காரணத்தினால். ஸ்ருஜ்ய சக்தய:- ஸ்ருஷ்டிக்கப்படுகிற வஸ்துக்களின் சக்திகள், ( அதாவது முன் ஜன்மங்களில் செய்யப்பட்ட கர்மங்கள்), ப்ர தாந கார பூதா: – முக்யமான காரணங்களாக இருக்கின்றனவோ, இதம் – இந்த வஸ்து, நிமித்தமாத்ரம் முக்த்வா – பொதுவான காரணத்தைத் தவிர, அந்யத் கிஞ்சித் – வேறு ஒன்றையும், நாபேக்ஷதே – எதிர்பார்க்கிறதில்லை. வஸ்து – ஒரு வஸ்துவானது, தபதாம்ச்ரேஷ்ட – தபஸ் பண்ணுகிறவர் களுக்குள் ச்ரேஷ்டனே ! ஸ்வசக்த்யா-தன்னுடைய சக்தியினாலேயே (கர்மங்களினாலேயே), வஸ்துதாம்- அந்த வ ஸ்துவாய் இருக் கையை, நீயதே – அடைவிக்கப்படுகிறது)-கர்மபி: பாவிதா: பூர்வை: கு லாகு ஸலைஸ்து தா : -விஷ்ணுபுரா – 1-5-28 தா: – அந்த ஜனங்கள், பூர்வை:முன்பு செய்யப்பட்ட,குசலாகுசலை: – நல்லதாயும் கெட்டதாயும் இருக்கிற, கர்மபி: – கர்மங்களினால், பாவிதா:- உண்டாக்கப்பட்ட
    வைகள்.-என்றும்-(ஹந்யதே தாத க: கேந யத: ஸ்வக்ருதபுக புமா -தாத – தகப்பனாரே, க: – எவன், கேந – எவனால், ஹந்யதே- கொல்லப்படுகிறான், யத:- எந்தக் காரணத்தினால், புமாந்-
    மனிதன், ஸ்வக்ருதபு க் – தன்னால் செய்யப்பட்ட கர்மத்தின் பலனை அனுபவிக்கிறானோ- என்றும்( சுபேத்வஸௌ துஷ்யதி துஷ்க்ருதே து ந துஷ்யதேஸௌ-பரமஸ் சரீரீ சாந்தி-199-25. சரீரீ – எல்லா வஸ்துக்களையும் தனக்குச் சரீரமாகவுடைய, அஸௌ – இந்த, பரம்:- பரமாத்மா, சுபேது-நல்ல கர்மங்கள் செய்யும்பொழுது, துஷ்யதி – ஸந்தோஷப்படுகிறான், துஷ்க்ருதேது – பாப கர்மங்களைச் செய்யும்பொழுதோ எனில், நதுஷ் யதே- ஸந்தோஷப்படுவதில்லை. -) என்றும்,.-நானே நானாவித நரகம்புகும் பாவம் செய்தேன் ‘என்றும் ப்ரமாணஸித்தமாய், ப்ரவாஹாநாதியான விருத்தாநுஷ்ட்டானம் என்றபடி.

    7–இப்படி அபராத அநு ரூபமாக தண்ட தரனாய்ப் போருகிற சரண்யனுடைய வசீகரணங்களில் பிரதானம் சர்வ அகிஞ்சன அதிகாரமான ஆத்ம ரக்ஷ பர சமர்ப்பணம்-என்றது-அநித்யமஸுகம் லோகம் இமம் ப்ராப்ய பஜஸ்வ மாம்-கீதை -9 33 அநித்யம் அழியக்கூடியதாயும், அஸ கம் – துக்க மயமாயும் இருக்கிற, இமம் – இந்த, லோகம் லோகத்தை, ப்ராப்ய – அடைந்திருக்கிற நீ, மாம் -என்னை, பஜஸ்வ – அடை.)
    என்றும்,-(ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ரணம் வ்ரஜ-கீதை-18-65. ஸர்வதர்மாந் – எல்லாத் தர்மங்களையும், பரி த்யஜ்ய – நன்றாய் விட்டுவிட்டு (அதாவது ப்ரபத்திக்கு அங்கமாக அனுஷ்டிக்காமல் என்றபடி), மாம் ஏகம் – என்னை ஒருவனையே, சரணம் சரணமாக, வ்ரஜ – அடை.)என்றும்-பிதரம் மாதரம் தாராந் புத்ரார் பந்தூந் ஸகீந குரூங் 1
    ரத்நாநி தநதாந்யாநி க்ஷேத்ராணி ச கருஹாணி ச | ஸர்வதர்மாம்ஸ்ச ஸந்த்யஜ்ய ஸர்வகாமாம்ஸ் ச ஸாக்ஷராந்ங்1லோகவிகராந்த சரணெள பரணம் தே அவரஜம்விபோ! -ஜிதந்தாஸ்தோத்ரம்
    பிதரம்-தகப்பனாரையும், மாதரம்- தாயாரை யும்,தாரா-பத்னி களையும்.புத்ரா பிள்ளைகளையும் பந்தூ – பந்துக்களையும் ஸகீர்-ஸகிகளையும், குரூந்-குருக்களையும்,ரத்நாநிரத்னங்களையும்தநதாந் யா -பணம்தாயங்களையும், க்ஷேத்ராணி-நிலங்களையும், க்ருஹாணிச – வீடுகளையும், ஸர்வதர்மாம்ச்ச- எல்லாத் தர்மங்களையும், ஸாக்ஷரார் -கைவல்யத்துடன் சேர்ந்த, ஸர்வகாமாச்ச – எல்லாக் காமங்களையும் (ஐச்வர்யங்களையும்), ஸந்த்யஜ்ய – விட்டுவிட்டு, விபோ -விபுவாகிய)என்றும்,(வ்ருதைவ பவதோ யாதா பூயஸ் ஜந்மஸந்ததி: 1தஸ்யாம் அந்யதரஜ்ஜந்ம ஸஞ்சிந்த்ய ஸ்ரணம் வ்ரஜேத்-சாண்டி – ஸ்ம்ருதி பவத: – உனக்கு, பூயஸ் – அதிகமான, ஜந்மஸந்ததி: – ஜன்மங்களின் பரம்பரை, வ்ருதைவ – வீனாகவே, யாதா – போய்விட்டது, தஸ்யாம் – அவற்றிற்குள், அந்யதரத் – ஒன்னாகிய, ஜந்ம – ன்மமாக, ஸஞ்சிந்த்ய – (இந்த ஜன்மத்தையும்) நினைத்துக் கொண்டு, சரணம் வ்ரஜேத் – சரணமாக அடை.)என்றும்,அஹமஸ்ம்யபராதாநாம் ஆலயோகிஞ்சநோகதி: 1தவமேவ உபாய பூதோ மே வேதி ப்ரார்த்தநாமதி: ஸரணாகதிரித்யுக்தா ஸாதேவேஸ்மிந் ப்ரயுஜ்யதாம் |தஸ்யாநுபந்தா : பாப்மாந ; ஸர்வே நய்யந்தி தத்க்ஷணாத|-அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை – 37 – 30. அஹம் – நான், அபராதாநாம் – குற்றங்களுக்கெல்லாம், ஆலய: – இருப்பிடமாகவும், அகிஞ்சந : – வேறு ஒரு உபாயம் இல்லாதவனாயும், அகதி: – வேறு ரக்ஷகாகள் இல்லாதவனாகவும், அஸ்மி – ஆகிறேன், த்வமேவ – நீரே, மே எனக்கு, உபாயபூத: – உபாயமாக, பவ – ஆகவேண்டும், இதி – என்கிற, ப்ரார்த்தநாமதி:- ப்ரார்த்திப்பதாகிய புத்தி, சரணாகதி:, இதி என்று, உக்தா – சொல்லப்பட்டது, ஸா – அது, அஸ்மிந் – இந்த,தேவே – தேவனாகிய பகவானிடத்தில், ப்ரயுஜ்யதாம் – ப்ரயோகிக்கத் தக்கது, தஸ்ய – இப்படிச் செய்தவனுக்கு, அநுபந்தா:- தடையாய் இருக்கிற, ஸர்வே – எல்லா, பா மா : – பாபங்களும், தத்க்ஷணாத்-அந்த க்ஷணத்திலேயே, நச்யந்தி – சித்து விடுகின்றன.)என்றும்,(பக்த்யா பரமயாவாபி ப்ரபத்த்யா வா மஹாமதேப்ராப்யோஹம் நாந்யதா ப்ராப்ய : மமகைங்கர்யலிப்ஸுபி: [!-மஹாமதே – புத்திமானாகிய ஓ! ரிஷியே, அஹம் – நான், மம -என்னுடைய, கைங்காபலிப்ஸுபி: – கைங்கர்யத்தைச் செய்யவேண்டும் என்கிற ஆசையுடையவாகளினால், பரமயா – உயர்ந்ததான, பக்த்யா- பக்தியினாலாவது, ப்ரபத்த்யாவா – ப்ரபத்தியினாலாவது,ப்ரா ப்ய: – அடையத் தகுந்தவன், அந்யதா – வேறு விதமாக, ந ப்ராப்ய: அடையத் தகுந்தவனல்ல.)என்றும்,

    சரணம் தவாம் ப்ரபந்நா யே த்யா நயோக விவர்ஜிதா தேபி ம்ருத்யுமதிக்ரம்ய யாந்தி தத்வைஷ்ணவம் பதம் |1-த்யாநயோக விவர்ஜிதா: – த்யான யோகம் செய்யாதவர்களான,யே – எவர்கள், த்வாம்- உம்மை சரணம் ப்ர பந்நா: – சரணமாக அடைந்தார்களோ, தேபி – அவர்களும், ம்ருத்யும்- ஸம்ஸாரத்தை, அதிக்ரம்ய – தாண்டி, தத் – அந்த, வைஷ்ணவம் – விஷ்ணுவினுடையதான-பதம் – ஸ்தாநத்தை, யாந்தி – அடைகிறார்கள்.)என்றும்,

    முமுக்ஷவுக்கு ஸரண்ய ப்ரஸாதநங்களாகச் சொல்லப்பட்ட உபாயங்களில் வைத்துக்கொண்டு,-நிக்ஷேபாபர பர்யாயோ ந்யாஸ: பஞ்சாங்க ஸம்யுத: ஸந்யாஸஸ் த்யாக இதயுக்த: லரணாகதிரித்யபி !!-லக்ஷ்மீதந்த்ரம் – 17-74 நிக்ஷேபாபர பர்யாய:- நிக்ஷேபம் என்று மற்றொரு பெயரையுடைய, பஞ்சாங்க ஸம்யுத: – ஐந்து அங்கங்களுடன் கூடிய, ந்யாஸ : – பரந்யாஸம், ஸந்யா :- ஸந்யாஸம்என்றும்,த்யாக இதி – த்யாகம் என்றும், சரணாகதிரித்யபி – சரணாகதி என்றும் உக்த:- சொல்லப்பட்டது.)-என்றும்,

    ஆத்மாத்மீய பரந்யாஸோ ஹி ஆத்ம க்ஷேப உச்யதே–லக்ஷ்மீதந்த்ரம்-17 – 79. ஆத்மாத்மீய பரந்யாஸ.- தன்னுடையவும் தன்னைச் சேர்ந்த வஸ்துக்களினுடையவும் பரத்தை ஸமர்ப்பிப்பது(அவற்றைரக்ஷிக்க வேண்டிய பொறுப்பை பகவானிடம் ஸமர்ப்பிப்
    பது), ஆத்மநிக்ஷேப – ஆத்ம நிக்ஷேபம் என்று, உச்யதே – சொல்லப்படுகிறது.என்றும் சொல்லப்பட்ட ஸ்வ ரக்ஷா பரஸமர்ப்பணம்,-(இதம் Uரணம் அஜ்ஞாநாம் இதமேவ விஜர்நதாம் 1இதம் திதீர்ஷதாம் பாரம் இதம் ஆநந்த்யமிச்சதாம்|1-லக்ஷ்மீதந்த்ரம் – 17-100. இதம் – இந்த சரணாகதி, அஜ்ஞாநாம் – ஜ்ஞாநம் இல்லாதவர்களுக்கும், சரணம் – உபாயம், விழாநதாம் – (பகவானுடைய ஸ்வரூபாதிகளை) விகேஷமாக அறிந்தவர்களுக்கும், இதமேவ – இதுவே (உபாயம் ), பாரம் – கரையை, திதீர்ஷதாம் – தாண்ட வேண்டும் என்கிற ஆசை யுடையவர்களுக்கும், இதம் இதுவே.உபாயம், ஆநந்த்யம் இச்சதாம் – (தர்ம பூதஜ்ஞானத்தின் வழியாக)அளவில்லாமல் இருப்பதை, இச்சதாம் -ஆசைப்படுகிறவர்களுக்கும், இதம் – இதுவே உபாயம்.)

    (தாவதார்த்திஸ் ததாவாஞ்சா தாவந்மோஹ: ததா அஸுகம்-யாவந் ந யாதி பரணம் த்வாம் அனேஷாகநா நம்!!-விஷ்ணு புராணம் – 1-19-13. அசேஷாக நாசநம் – எல்லாப் பாபங்களையும் போக்கடிக்கக் கூடியவரான, த்வாம் உம்மை,யாவத்எதுவரையில், சரணம்- சரணமாக, நயாதி – அடையவில்லையோ,தாவத் – அது வரையில், ஆர்த்தி: (கையில் கிடைத்த பொருள் நாச)மடைவதினால் உண்டான) துக்கமும்,ததா – அப்படியே, வாஞ்சா- புதியஜச்வர்யாதிகளில் ஆசையும், தாவத் – அது வரையில், மோ: – ஆத்மஸ்வரூபத்தை அறியாமையும், தாவத் -அதுவரையில், ததா – அப்படியே, அஸுகம் – பகவதநுப்வமில்லாமையும்.)(ப்ரபத்தே : கவசிதபயேவம் பராபோ ந வித்யதே ஸா ஹி ஸர்வத்ர ஸர்வேஷாம் ஸர்வகாமபலப்ரதா உபாயபக்தி: ப்ராரப்த வ்யதிரிக்காகநாலிநீஸாத்யபக்திஸ் து ஸாஹந்த்ரீப்ராரப்தஸ்யாபி பூய 11)ஸநத் குமார ஸம்ஹிதை – ப்ரபத்தே: – ப்ரபத்திக்கு, க்வசிதபி – ஓர் இடத்திலும், ஏவம் – இவ்விதமாக, பராபேக்ஷா – வேறு உபாயத்தைப் பற்றிய அபேக்ஷை, ந வித்யதே – இல்லை. ஹி-எந்தக் காரணத்தினால், ஸா – அந்த ப்ரபத்தி, ஸர்வத்ர – எல்லா இடத்திலும், ஸர்வேஷாம் – எல்லோருக்கும், ஸர்வ காம பலப்ரதா-எல்லா இஷ்ட பலங்களையும் கொடுக்கக் கூடியதோ, உபாயபக்தி: -பக்தி யோகம், ப்ராரப்த வயதிரிக்தாகநாசி – பலன் கொடுக்க ஆரம்பித்த காமங்களைத் தவிர மற்ற கர்மங்களை நாசம் செய்யக் கூடியது, ஸா – அந்த, ஸாத்ய பக்திஸ்து – ப்ரபத்தியோ எனில், ப்ராரப் தஸ்யாபி – பலன் கொடுக்க ஆரம்பித்த கர்மத்திற்கும், பூயஸ் – மிகவும் பெரிதான, ஹந்த்ரீ – நாசம் செய்யக்கூடிய காரணம்.)

    ஸத்கர்ம நிரதாஸ்த்தா: ஸாங்க்யயோகவிதஸ்ததா|-நார்ஹந்தி ரணஸ்தஸ்ய கலாம் கோடிதமீமபி1-லக்ஷ்மீ தந்த்ரம் – 17-62. ஸத்கர்ம நிரதா: – நல்ல கர்மங்களில் நிஷ்ட்டையுடையவர்களும் (கர்ம யோகிகளும்), சுத்தா : – அதின்பலமான மனதின் சுத்தியை அடைந்தவர்களும், ததா – அப்படியே, ஸாங்க்ய யோகவித – ஜ்ஞான யோகம் பக்தி யோகம் இவைகளை அநுஷ்ட்டிப்பவர்களும், சரணஸ்த்தஸ்ய – சரணாகதியில் நிஷ்ட்டை யுடையவனுடைய, கோடிதமீம் – கோடியில் ஒன்ாகிய, கலாமபி -பாகத்தையும். நார்ஹந்தி – பெறமாட்டார்கள்.)இத்யாதிகளில் சொல்லுகிறபடியே வர்ண விரேபஷாதி ரஹிதமாய், அத்யந்தாகிஞ்சநருக்கும் அதிகரிக்கையாலும், உபாயாந்தர பர்யந்த ஸகல ஸாதகமாகையாலும், ஆர்த்தியில் தாரதம்யத்துக்கு அநுகுணமாக ப்ராரப்த கர்மத்தையும்
    கழிக்க வற்றாகையாலும், ஸுகரமாகையாலும், துஷ்கர பரிகரநிரபேக்ஷமாய் ஸக்ருத் கர்த்தவயமாகையாலும், ஸர்வருக்கும் ஸ்வாபிமத அவிளம்பித பலஸித்திக்கு இதுவே ப்ரதாநம் என்றபடி.-இதில் சொன்ன ப்ரபத்தி ரூபமான ஸ்வரக்ஷாபரஸமர்ப்பணமாவ து ஸ்வரக்ஷணார்த்த ஸ்வப்ரவருத்த்யபிமாந நிவ்ருத்தியோடும் ப்ரார்த்தனையோடும் கூடின ஸரண்யைக ஸாத்யஸ்வரக்ஷணத்வ அத்யவஸாய விஸஷம்.

    ————-

    8-இது ஸபரிகரமாக ஸக்ருத் கர்த்தவ்யம் ‘ என்றது-ஸக்ருத் கருத; ஸாஸ்த்ரார்த்த :-சாஸ்த்ரார்த்த: – சாஸ்த்ரத்தின் அர்த்தமான கர்மம், ஸக்ருத் க்ருத: – ஒரு தடவையாலே செய்யப்பட்டதாகிறது.)என்கிற ஸாமாக்ய ப்ராப்தியாலும்,-ஆவருத்தி: அஸகருதுபதேஸாத் )
    சாரீரக ஸூத்திரம் – 4- 1 – 1. அஸக்ருத் – அனேகம்தடவை, ஆவ்ருத்தி: – ஆவருத்தி செய்யத் தக்கது. உபதேசாத்அப்படி சாஸ்த்ரத்தில் சொல்லப்பட்டிருப்பதினால்.என்கிற வியேஷஹேது இல்லாமையாலும்,-ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே 1 அபயம் ஸர்வபூதேப்ய: ததாம்யேதத் வ்ரதம் மம-யுத்த – 18 – 33. ஸக்ருதேவ – ஒரு தடவையே ப்ரபந்நாய – ப்ரபத்தி செய்தவனுக்கும், தவ – உனக்கு, அஸ்மி – தாஸனாக ஆகிறேன் இதி – என்று,யாசதே ச – பரார்த்திக்கிறவனுக்கும், ஸர்வபூதேப்ய: – எல்லாப்ராணிகளுக்கும், அன்றிக்கே எல்லா ப்ராணிகளிடமிருந்தும், அபயம் – பயம்இல்லாமையை, ததாமி – கொடுக்கிறேன், ஏதத் – இது, மம – என்னுடைய, வரதம்)ஸக்ருதேவஹி லாஸ்த்ரார்த்த: க்ருதோயம்தாரயேந் நரம்-லக்ஷ்மீதேந்த்ரம் – 17- 19. அயம் – இந்த . சாஸ்த்ரார்த்த: -சாஸ்த்திரத்தின் அர்த்தமான ப்ரபத்தி, ஸக்தேவ – ஒரு தடவை, கருத செய்யப்பட்டதாய்க் கொண்டு, நரம் – மனிதனை,தாரயேத் – ஸம்ஸாரத்தைத் தாண்டி வைக்கும்.)நநு ப்ரபந்ந: ஸக்ருதேவ நாத தவாஹமஸ்மீதி ச யாசமாந-ஸ்தோ – 4. நாத – ஓ! நாதனாகிய பகவானே, க்ரு
    தேவ – ஒரு தடவை. ப்ரபந்ந: – ப்ரப நனாயும், தவ – உமக்கு, அஹம் – நான், அஸ்மி- தாஸனாக ஆகிறேன், இதி ச – என்றும், யாசமா : – ப்ரார்த்திக்கின்றவன்)ஸக்ருத்ப்ரார்த்தநா மாத்ரேண பேக்ஷிதம் தாஸ்யதி-ஸக்ருத் ப்ரார்த்தநா மாத்ரேண – ஒருதரம் ப்ரார்த்தித்தமாத்திரத்தினால், அபேக்ஷிதம் – இஷ்டத்தை,தாஸ்யதி – கொடுக்கப்போகிறான்.)இத்யாதி ப்ரமாண ஸம்ப்ரதாயங்களாலும், ப்ரபத்தி மந்த்ரங்களில் வர்த்தமாந வயபதேலம் அநுஷ்ட்டாநகால அபிப்ராயமாகையாலும், த்ரெளபதீ விபீஷண கஜேந்த்ர ஸமுக காககபோதாதி வருத்தாந்த விலேஷங்களாலும் ஆநுகூல்ய ஸங்கல்பாத்யங்க பஞ்சகஸம்யுக்தமான பரஸமர்ப்பணத்துக்கு ஸக்ருதநுஷ்ட்டாநமே லாஸ்த்ரீயம் என்றபடி.

    (9) இஸ்ஸமர்ப்பணத்தைத் தான் அநுஷ்ட்டிக்கவுமாம், தனக்காக ஆசார்யாதிகள் அநுஷ்ட்டிக்கவுமாம் ‘ என்றது-சாஸ்த்ரபலம் ப்ரயோக்தரி-பூர்வமீமா-3-7-18 சாஸ்த்ரபலம் சாஸ்த்ரத்தின் ப்ரயோ ஜனம் அதாவது ஒரு கர்மத்தை அநுஷ்டிப்பதினால் உண்டாகும் பலன், ப்ரயோக்தரி – அந்தக் கர்மத்தை அநுஷ்டித்தவனிடத்தில் உண்டாகிறது.)என்று வ்யவஸ்தை உண்டாயிருக்கச் செய்தே புத்ராதிகளைப் பற்றவும் பித்ராதிகள் சில ஸுக்ருதங்களை அநுஷ்டிக்கை சாஸ்த்ரீயமாகையாலும்,-(ஸதிஸது பகவாங் அ ே ஷ பும்ஸாம் ஹரி: அபஜந்மஜராதி காம்ஸம்ருத்திம்-விஷ்ணு புராணம் 6. ஸ: – அந்தப் பகவானாகிய, ஹரி: – விஷ்ணு, அசேஷபும்ஸாம் – எல்லா ஜீவாத்மாக்களுக்கும், அபஜந்ம
    ஜராதிகாம் – பிறப்பு கிழத்தனம் முதலியவை இல்லாததான, ஸம்ருத்திம் – ஸம்பத்தை, திசது – கொடுக்கட்டும்.)(மயாத்ய பக்த்யா பரமேஸ்வரேமே ஸ்ம்ருதே ஜகத்தாதரி வாஸுதேவே-செளநகஸம்ஹிதை. ஜகத்தாதரி-லோகங்கனை ஸ்ருஷ்டித்தவரான, பரமேச்வரேசே – ஈசுவரர்களுக்கெல்லாம் ஈசுவரனான, வாஸ தேவே. – வாஸ தேவன், மயா – என்னால், அத்ய – இப்பொழுது, பக்த்யா – பக்தியினால், ஸ்ம்ருதே (ஸதி) – த்யானம் செய்யப்பட்டிருக்கும் பொழுது)என்கிற பராபர பௌநக வாக்யங்களாலும்,மற்றும்பலமஹர்ஷிகளுடைய வருத்தாந்த ரகாரத்தாலும், ப்ரஹ்லாத விபீஷணதஸரத த்ரௌபதீ ப்ரப்ருதிகள் ஸ்வஸம்பந்திகளிலே சிலரைப்பற்ற ப்ரபத்தி பண்ணக் காண்கையாலும், லோகத்திலும்
    (இவ்)அநுஷ்ட்டாநம் உண்டாகையாலும்,)வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து இவள் நோயிது தீர்த்து (திருவாய் – 4-6 – 8)என்று ஆழ்வார் அருளிச் செய்த ந்யாயத்தாலும்,)வில்லிபுதுவை விட்டுசித்தர் தங்கள் தேவரை
    வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே -10-10.
    -என்று நாச்சியார் அருளிச் செய்கையாலும், இப்படிப் பூர்வாசார்ய அநுஷ்ட்டாந ஸம்ப்ரதாயங்களாலும் இப்ரபத்தியைத்தான் அநுஷ்ட்டித்தால் பலஸித்தி யுண்டாமாப்போலே தனக்காக ஆசார்யாதிகள் அநுஷ்ட்டித்தாலும் பலஸித்திக்குக் குறைவில்லைஎன்றபடி.)த்வய்யாசார்யை: விநிஹிதபராஸ்தாவகா ரங்கநாத-ந்யாஸ திலகம் 11. ரங்கநாத – ஓ! ரங்கநாதனே, த்வயி -உம்மிடத்தில், ஆசார்யை: – ஆசார்யர்களினால், விநிஹிதபரா: -ஸமர்ப்பிக்கப்பட்ட பரத்தையுடையவர்களரன, தாவகா : – உன்னை ஆச்ரயித்தவர்களும் (உமது கைங்கர்யத்திலே ஆசையுடையவர்கள் முதலியவர்களும் எனக்கு ருசிக்கட்டும் என்றுமேல்)(அந்தோநந்த க்ரஹணவக:-ந்யாஸ திலகம் -21. அநந்த – குருடனல்லாதவனை, கா ஹண – பிடித்துக் கொள்ளுவதினால், வசக: – அவனுக்குப்பின் செல்லுகிற, அந்த: – குருடன் (எப்படி வழி நடக்கிறானோ , நொண்டி யாயிருப்பவன் ஓடத்தின் நடுவில் வைக்கப்பட்டவனாய் ஓடக்காரனால் எப்படி அக்கரைக்குக் கொண்டு போகப்படுகிறானோ, அப்படியே தயாளுவான ஆசார்யன் எனக்கு உம்மை அடைகிற விஷயத்தில் சக்தியுடையவனாகிறான் என்றுமேல்)என்கிற ந்யாஸ திலகத்தில் ல்லோகங்களையும் இங்கே அநுஸந்திப்பது.

    ————-

    (10)இதற்குக் கோலி(ரி)ன பலத்தைப் பற்றப் புந: ப்ரபத்தி முதலான கர்த்தவ்ய ஸேஷமில்லை ‘ என்றது-( ஸக்ருதேவ ப்ரபங்நஸ்ய க்ருத்யம் நைவாஸ்தி கிஞ்சந-க்ருதேவ – ஒரே தடவை, ப்ரபங்கஸ்ய – ப்ரபத்தி செய்த வனுக்கு, க்ருத்யம் செய்ய வேண்டியது, கிஞ்சந – ஒன்றும், நை வாஸ்தி இல்லை.)இத்யாதிகளிற்படியே செய்த வேள்வியனான இவனுக்கு ஸ்வாபிமத பல விஸேஷத்தைப் பற்ற ஸாங்கமாகப் பண்ணின ப்ரபத் திக்கு ஸ்வரூபாவ்ருத்தி ரூபமாகவாதல் அங்கமாகவாதல் ஒரு கர்த்தவ்ய ஸேஷமில்லாமையாலே ஸ்வாதிகாராநுகுணமாக ஸ்வாமி ஸந்தோஷாதிஸய ஹேதுவாய்க் கொண்டு ஸ்வயம் ப்ரயோஜநமான கைங்கர்ய விஸேஷங்களுக்கும், பக்தி தத்த்வ ஜ்ஞாநாதிகளைப் பற்றவாதல், பகவத் பாகவத ஸம்ருத்யாதிகளைப் பற்றவாதல், விளம்பா மதையாலேயாதல்,-அபாயஸம்ப்லவே ஸத்ய: ப்ராயஸ்சித்தம் ஸமாசரேத் ப்ராயஸ்சித்திரியம் ஸாத்ர யத் புநர் ஸ்ரணம் வ்ரஜேத்-லக்ஷ்மீதந்த்ரம்-17-91. அபாய ஸம்ப்லவே – பாபம் நேர்ந்ததேயானால், ஸத்ய: – அப்பொழுதே, ப்ராயச் சித்தம் – ப்ராயச் சித்தத்தை. ஸமாசரேத் – செய்ய வேண்டும், இயம் – இந்த, ப்ராயச்சித்தி – ப்ராயச் சித்தமும், புந:- மறுபடியும், சரணம் வ்ரஜேத் -சரணமாக அடையவேண்டும், இதி யத் – என்று சொல்லப்படுகிற எந்தப் புரு:ப்ரபத்தியோ, ஸா – அது தான்.)என்கிற நைமித்திச வேஷத்தாலேயாதல், புந: ப்ரபத்தி பண்ணுமதுக்கும் பூர்வ ப்ரபத்தியினுடைய நைரபேக்ஷயத்தோடு விரோதமில்லை என்றபடி.

    ———————-

    (11) . இப்படி கருதக்ருத்யனான ப்ரபங்கனுக்கு வர்ணாஸ்ரமாதி தர்மங்கள் ஸ்வதந்த் ராஜ்ஞாஸித்தங்களான கைங்கர்ய விஸேஷங்கள்’ என்றது-மற்றொரு பல விஸேஷத்தைப் பற்றவன்றிக்கே அகரணத்தில் ஆஜ்ஞாதி லங்கந தோஷம் வரும்படிகளாய்-செய்யேல் தீவினை என்று அருள் செய்யும்–திருவாய் மொழி – 2-9 – 3-என்று ஸ்வதந்த்ர பகவதாஜ்ஞாரூப லாஸ்த்ர விஹிதங்களான வர்ணாஸ்ரமாதி தர்மங்கள் தத்த்வ ஹித நிஷ்கர்ஷமுடையனாய்-(தேவர்ஷி பூதாத்ம ருணாம் பித்ரூணாம்-ந கிங்கரோ நாயம் ரிணீச ராஜங் ஸர்வாத்மநா யஸ்ரணம் மரண்யம் நாராயணம் லோக குரும் ப்ரபந்ந: II-பாகவதம் – 11-5 -41. ராஜந்-ஓ! ராஜாவே, ய:- எவன் சரண்யம் – சரணமாக அடையக் கூடியவனாயும், லோக குரும் – லோகங்களுக்கெல்லாம் குருவாயும் இருக்கிற, நாராயணம் – நாராயணனை, ஸர்வாத்மநா – எல்லா ப்ரகாரத்தாலும், சரணம் ப்ரபந்ந: -சரணமாக அடைந்தானோ, அயம் – இவன், தேவர்ஷிபூதாத்மந்ருணாம்-தேவதைகள், ரிஷிகள், ப்ராணிகள், தான், மனிதர்கள், இவர்களுக் கும், பித்ரூணாம் – பித்ருக்களுக்கும், ந கிங்கர: : வேலைக்காரனுமல்ல,
    ந ரிணீ ச – கடன்காரனுமல்ல.)இத்யாதிகளிற்படியே அந்ய பஜநாதி தோஷரஹிதனான இவனுக்கு பக்தி வஞ்சநம் பண்ணாதே அவர்ஜநீயங்களான ஸ்வாமியுகந்த கைங்கர்யம் என்றபடி.

    பகவத் கைங்கர்ய ரதியான ப்ரபங்கனைப் பற்றவே-(உபாயாபாய ஸந்த்யாக மத்யமாம் வருத்திமா ரித: |மாமேவ ரணம் ப்ராப்ய மாமேவாந்தே ஸமல்நுதே-லக்ஷ்மீதந்த்ரம். உபாய அபாய ஸந்த்யாகீ – (பலன்களுக்கு உபாயங்களான) காம்ய கர்மங்களையும், (அநிஷ்ட பலத்திற்குக்காரணமான ) பாபத்தையும் விட்டவனாய், மத்யமாம் – நடுவான, வ்ரு த்திம் – நிலையை, ஆச்ரித – அடைந்தவனாய், மாமேவ – என்னையே, சரணம்ப்ராப்ய – சரணமாக அடைந்து, மாமேவ – என்னையே, அந்தே- கடைசியில், ஸமச்நுதே -அநுபவிக்கிறான்.)என்றும்,அவிப்லவாய தர்மாணாம் பாலநாய குலஸ்யச 1 ஸங்கரஹாய ச லோகாநாம் மர்யாதா ஸ்த்தாபநாய ச || ப்ரியாய மம விஷ்ணோச தேவதேவஸ்ய லார்ங்கிண: 1 மநீஷீ வைதிகாசாரம் மநஸாபி நலங்கயேத் II-லக்ஷமீதந்த்ரம், 17 – 93-94. தர்மாணாம் – தர்மங்களுக்கு அவிப்லவாய – நாசம் உண்டாகாமல் இருப்பதற்காகவும், குலஸ்ய -குலத்தை,பாலநாய ச – ரக்ஷிப்பதற்காகவும், லோகாநாம் – லோகங்களை,ஸங்க்ரஹாய – சேர்ப்பதற்கும், மர்யாதாஸ்த்தாபநாயச -வர்ணாச்ரமங்களுடைய வ்யவஸ்தைபை ஸ்த்தாபிப்பதற்கும், தேவதேவ ஸ்ய -தேவதைகளுககெல்லாம் தேவனயும், சார்ங்கிண: – சார்ங்கம் என்னும் வில்லைத் தரித்துக் கொண்டவனாயும் இருக்கிற, விஷ்ணோ:- விஷ்ணுவிற்கும், மம ச – எனக்கும், ப்ரியாய – ப்ரியம் உண்டாவதற் காகவும், மநீஷீ – புத்திமானாகிய மனிதன், ஸ்வதிகாசாரம் – வேதங்களில் சொல்லப்படுகிற தர்மங்களின் அநுஷ்ட்டாகத்தை, மநஸாபி -மனதினாலும்கூட, நலங்கயேத் – தாண்டக்கூடாது.)என்றும் சொல்லுகிற ப்ரமாண வர்கத்தையும், ஸ்ரீபாஷ்யகாராதிக (ள்)ளும் அருளிச்செய்த நித்யங்களையும் இங்கே அநுஸந்திப்பது.

    ———-

    (12) ‘ இவனுக்கு ஆஜ்ஞாநுஜ்ஞா ஸித்தங்களான கைங்கர்யங்கள் எல்லாம் ஸ்வயம் ப்ரயோஜநங்கள்’ என்றது–ஆஹாரத்தி ஆசார நியமம் அபராத பரிஹாரம் முதலான
    முன்பு சொன்ன ஆஜ்ஞாஸித்தங்களான வர்ணாரமாதி தர்மங்களும்,-பண்டைநாளாலே நின்திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு நின்கோயில் சீய்த்து’-திருவாய்மொழி – 9-2-1.இத்யாதிகளில்படியே இச்சையுள்ளபோது செய்யவுமாம் அதில்லாதபோது தவிரவுமாம்படி ஏற்றமாகநிற்கிற அந்தராத்ம(ராந்தர )குணாநுஸந்தாந ஸ்துதி ஸங்கீர்த்தந ஸம்மார்ஜ்ஜந உபலேபந மாலாகரண தீபாரோபனாதி கைங்கர்யங்களுமெ(ளெல்லாம் ஸர்வவிதபந்துவான ஸர்வஸ்வாமியினுடைய ஸம்ப்ரீதி ஹேதுவாகையாலே அநுரக்த பார்யாதிகளுடைய ரூஷணாதிகள் போலவும், முகதனுடைய வ்யாபாரங்கள் போலவும்,-(ப்ரஹர்ஷயிஷ்யாமி-ஸ்தோ -48. ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸந்தோஷிப்பிக்கப் போகிறேன்.)என்னும் ப்ரயோஜநமொழிய மற்றொரு ப்ரயோஜந விஸேஷத்தைக் கணிசிகக வேண்டாதபடி,(துர்கதாவபி ஜாதாயாம்– துர்க்கதெள – கெட்ட தசை, ஜாதாயாமபி – உண்டாயிருந்த போதிலும், (உம் மிடத்திலேயே பக்தி இருக்கவேண்டும்)(காமயே வைஷ்ணவத்வம் து-ஜிதந்தா – 1 – 13. வைஷ்ணவத்வம் – வைஷ்ணவனாபிருக் கையை, காமயே – ஆசைப்படுகிறேன்)ஸர்வேஷு தேச காலேஷு-ஸர்வேஷு – எல்லா., தேச காலேஷு – தேசங்களிலும் காலங்களிலும் (உனக்குக் கைங்கர்யம் செய்யக் கடவேன்) இத்யாதிகளிற்படியே இவைதன்னை(ம்மை)யே உத்தேஸித்து ப்ரவ்ருத்திக்கும்படி ஸ்வரூபேண ஸ்வாதுக்களாயிருக்கும் என்றபடி

    ———-

    (13) கரணாகரணரூபங்களான அபசாரங்கள்புகுந்தாலும் ப்ரபந்நனுக்கு நரகாதிகள் இல்லை ‘ என்றது-அங்கமாகவாதல் ஸ்வதந்த்ரமாகவாதல் பகவத் ப்ரபத்தியைக்
    கைமுதலாகப் பற்றின பரமைகாந்திக்கு ப்ரபல ப்ராரப்த துஷ்க்ருத விஸேஷத்தாலே புத்தி பூர்வகமாக அக்ருத்யகரண க்ருத்யாகரண ரூபமான ஆஜ்ஞாதிலங்கநம் பிறந்ததாகில்-(த்ருஷ்டோ தர்மவ்யதிக்ரம: ஸாஹஸம் ச பூர்வேஷாம் தேஷாம் தேஜோவிசேஷேண ப்ரத்யவாயோ நவித்யதே 1-1கெளதம தாம ஸூத்ரம்.-பூர்வேஷாம் – முன்னோர்களுக்கு, தர்மவ்யதிக்ரம்:- தர்மத்தை மீறிநடப்பதும், ஸாஹஸம்ச – ஸாஹஸ கார்யமும், த்ருஷ்ட :- காணப் பட்டிருக்கிறது, )என்னும் விஷயமன்றிக்கே நம்மளவில்-(ததந்வீக்ஷ்ய ப்ரயுஞ்ஜாநஸ் ஸீதத்யவர:-2தேஷாம்- அவர்களுடைய, தேஜோ விசேஷேண – மி.குந்த தேஜஸஸினால், ப்ரத்யவாய:-தோஷம், ந வித்யதே – இல்லை. 2மனு பார்த்து, தத்- அந்தப் பெரியோர்களின் அதிக்ரமத்தை, அந் ய ப்ரயுஞ்ஜாந: – செய்கிற, அவர: – ஜ்ஞாநசக்த்யாதிகளால் தாழ்ந்தவனாயிருக்கும் மனிதன், ஸ்ததி – துக்கப்படுகிறான். )என்னும்படி நிற்கையாலும், தர்மாதிகரமம் பண்ணின மஹாத்மாக் களுககும் ஸுக்ருத விநாபாதி ப்ரத்யவாயம் சொல்லுகையாலும், அவ்வக்ருத்யகரணங்கள் ப்ரத்யவாய ஹேதுக்களாய் நின்றால்-ஸ்வபுருஷமபிவீக்ஷ்ய பாஹஸ்தம் வததி யம: கில தஸ்ய கர்ண மூலே பரிஹர மது தநப்ராப நாங் ப்ரபுரஹமந்ய நகுணாம் ந வைஷ்ணவாநாம் !-வாமந புராணம் – 94 31. பாசஹஸ்தம் – பாசத்தைக் கையில் வைத்துக் கொண்டிருக்கிற, ஸ்வபுருஷம் தன்னுடைய வேலைக் காரனை, அபிஷீஷ்ய பார்த்து யம: – யமன், தஸ்ய- அவனுடைய,கர்ணமூலே – காதின்ஸமீபத்தில், வததி – சொல்லுகிறான், மது தநப்ரபங்நாந்- மதுவைக் கொன்றவனாகிய பகவானை ஆச்ரயித்தவர்களை, பரிஹர – விட்டுவிடு, அஹம்-நான், அந்ய ந்ருணாம் – வேறுமனிதர்களுக்கு ப்ரபு: – யஜமாநன், வைஷ்ணவாநாம் -வைஷ்ணவர்களுக்கு, ந -(யஜமாநன்) அல்ல.

    (தேவம் சார்ங்கதரம் விஷ்ணும் யே ப்ரபந்நா: பராயணம் ந தேஷாம் யமஸாலோக்யம் ந ச தே நரகௌக :-வாமந் புராணம் – 9443. யே – எவர்கள், சார்ங்கதரம் சார்ங்கத்தைத் தரித்துக்கொண்டவனாயும், தேவம்-தேவனாயும் இருக்கிற, விஷ்ணும் – விஷ்ணுவை, பராயணம் – பரமகதியாக, ப்ரபந்நா:ஆச்ரயித்திருக்கிறார்களோ, தேஷாம் – அவர்களுக்கு, யம ஸாலோக்யம்-யமலோகத்தில் வஸிக்கும் தன்மை, ந – இல்லை, தே – அவர்கள்
    நரகௌகஸ் : நரகத்தில் இட முடையவர்களும் அதாவது வஸிப்பவர்களும், ந – அல்ல.)(யே ந்ரும்ஸா: துராத்மா : பாபாசார ரதாஸ்ததா தேபி யாந்தி பரம் தாம நரா நாராயணாரயா:-யே – எந்த மனிதர்கள், ந்ருசம்ஸா: – தயை இல்லாதவர்களோ, துராத்மா : – கெட்ட ஸ்வபாவமுடையவர்களோ, ததா – அப்படியே,பாபாசாரரதா: – பாபத்தைச் செய்வதிலேயே ஆசையுடையவ.களோ,தே – அந்த, நரா :அபி – மனிதர்களும், நாராயணாச்ரயா: நாராயணனை ஆச்ரயித்தவர்களாய்க் கொண்டு, பரம் – உயர்ந்ததாம- ஸ்தாநத்தை, யாந்தி – அடைகிறார்கள்.)இத்யாதிகளில்படியே நரகாதி மஹாக்லேசம் வாராதே யதா ஸம்பவம் அநுதாப ஸ்பிக்ஷா உபக்லேயங்களாலே அபராத நிஸ்தாரமுண்டாம் என்றபடி.

    கிங்கரா தண்டபாபௌ வா நயமோ ந ச யாதநா : 1ஸமர்த்தாஸ்தஸ்ய யஸ்யாத்மா கோவாலம்பநஸ் ஸதா ||-யஸ்ய – எவனுடைய, ஆத்மா – ஆத்மாவானது, ஸதர் – எப்பொழுதும், கேசவாலம்ப :- பகவானை ஆச்ரயித்திருக்கிறதோ, தஸ்யஅவனுக்கு, (அதாவது அவனுக்குத் துக்கத்தை உண்டாக்கும் விஷயத்தில்), கிங்கரா: – கிங்கரர்களும், யம – யமனும், தண்ட பாசெளவாயமனுடைய தண்டமும் பாசமும்,யாதநா : -நரக துக்கங்களும், நஸமர்த்தா: – சக்தி உடையவர்களல்ல.-‘நமன்கூறு செய்து கொண்டிறந்த குற்றமெண்ணவல்லனே’-திருச்சந்தவிருத்தம் 116–நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்றுமில்லை-திருவாமொழி 5- 2-1-இத்யாதிகளையும் இங்கே அநுஸந்திப்பது..

    ————–

    (14) ராஜகுமாரனுக்கும் அவதாநம் பண்ணி நடக்க வேண்டுமா போலே, லகு ப்ரத்யவாயமும் வாராமைககாக அபசாரங்கள்-தூர பரிஹரணீயங்கள் ‘ என்றது-(பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய த்வமஸ்ய பூஜ்யசகுருர் கரியாந்)இத்யாதிகளில் சொல்லப்பட்ட ஸ்வபாவங்களு (ளையு)டைய பகவான் இவனைப் புத்ராதிகளைப் போலே பக்ஷபாதியாய் ரக்ஷிக்கும் படி நிற்கிற பாகவதனுக்கு யம விஷயகமநம் இல்லை என்றும் அபசாரங்கள் புகுந்தால் அவை நீங்குகைக்குச் சில உபக்லேஸங்கள் அளவும் பலமாய் விடும் என்றும் சொல்லுகிற ஸ்த்ரார்த்தங்களின்படியே புத்தி பூர்வாபராதம் பிறந்தால் அநுதாபம் பிறந்து, புந: ப்ரபத்தி பண்ணாதபோது க்ஷாரூப ப்ரத்யவாய விஸேஷங்கள் வரும்படியாயிருக்கையாலே,இப்படி ஈஸ்வர நிக்ரஹங்களுக்கு இலக்காகாமைக்காக,

    த்வாரி யஸ்ய த்வாராணி ஸுகுப்தாநி மநீஷிண: 1 உபஸ்தம் உதரம் பாணி: வாக் சதுர்த்தீ ஸ வை புமாந் |-யஸ்ய – எந்த, மநீஷிண: – விவேகியாகிய புருஷனுக்கு, உபஸ்தம், உதரம்- வயிறு, பாணி: – கை, சதுர்த்தி – நான்காவதானவாக்கு – நாக்கு இவைகளான, வாராணி-பாபம் வருவதற்கு வழியானசத்வாரி-நான்கு இந்த்ரியங்களும், குப்தாநி – காப்பாற்றப் பட்டிருக்கிறதோ ஸவை – அவனே, புமாந் – மனிதன்.-இத்யாதிகளிற் சொன்ன அவதாந விஸேஷமுடையவனாய் அநாகதாநவீ (வேஷ)ணம் பண்ணின இவன்,-” நயவேன் பிறர் பொருளை நள்ளேன் கீழாரோடு ‘–முதல் திருவந்தாதி 64 ‘ செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்–திருப்பாவை 2-இத்யாதிகளிற்படியே ஏற்கவே அபராதங்கள் புகுராதபடி வர்த்திக்க ப்ராப்தம் என்றபடி.-(விஹிதே ப்ரதிஷித்தே ச யதாமதி யதாபலம் த்வய்யாஹிதபர: ஸ்ரீமந் வர்த்தே ராஜகுமாரவத் !-விஹிதே – சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட கார்யத்திலும், ப்ரதிஷித்தே ச – தடுக்கப்பட்ட கார்யத்திலும் யதாமதி – என்னுடைய புத்திக்குத் தக்கபடியும் யதாபலம் – சக்திக்குத் தக்கபடியும், ஸ்ரீமக் ச்ரிய:பதியாகிய நாராயணனே ! த்வயி – உம் டத்தில், ஆஹிதபர: – ஸமர்ப்பிக்கப்பட்ட பரத்தை யுடையவனாக, ராஜ குமாரவத்- ராஜ குமாரனைப்போலே, வர்த்தே- இருக்கிறேன்.)என்கிற வசநத்துக்கு அவய கர்த்த யங்களில் ப்ரவ்ருத்தி ரூபமாகவும் பரிஹரணீயங்களில் நிவ்ருத்தி ரூபமாகவும் பண்ண வேண்டும் வ்ருத்தியில் எனக்குள்ள ஜ்ஞாந பலங்களுக்கு அநுரூபமாக உபாய புத்தியையும் அதிலங்கநத்தில் பரம பல ப்ரதிபந்தக புத்தியையும் விட்டு ப்ரவர்த்தியா நின்றேன் என்கையிலே தாத்பர்யம்.

    ————-

    (15) ப்ரபத்திக்குக் கோலி(ரி)ன பலத்திற்கு ஒன்றாலும் ப்ரதிபந்தகமில்லை ‘ என்றதுமித்ர பாவேந ஸம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சந தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் ஸதாமே தகர்ஹிதம் !!-யுத்த – 18 – 3 மித்ரபாவேக – ஸ்நேஹிதனா யிருக்க வேண்டும் என்கிற எண்ணத்தினால், ஸம்ப்ராப்தம் – நன்றாய் வந்து அடைந்தவனை, கதஞ்சந – ஒரு விதத்தினாலும், ந த்யஜேயம்- விடமாட்டேன். தஸ்ய- அவனுக்கு, தோஷ – தோஷம், யத்யபி ஸ்யாத் – இருந்தாலும் இருக்கட்டும், ஏதத் – இது (தோஷமிருப்பவனையும் காப்பாற்றுவது
    என்பது), ஸதாம் – பெரியோர்களுக்கு, அகர்ஹிதம் – நிந்திக்கத்தகாதது (ஸ்தோத்ரம் பண்ணத்தக்கது என்றபடி)(கெளந்தேய ப்ரதிஜா ஹி ந மே பக்த: ப்ரணம்யதி-கீதை – 9-31 கெளந்தேய – ஓ! அர்ஜுந, மே – என்னுடைய, பக்த:- பக்தன், ந ப்ரணச்யதி – நாசமடைகிறதில்லை என்கிற விஷயத்தில், ப்ரதிஜா ஹி – நீ ப்ரதிஜ்ஞை செய்.)(ஸர்வதர்மாந்பரித்யஜ்ய மாமேகம் பரணம் வ்ரஜ | அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச: 11-கீதை 18 – 66 ஸர்வதர்ம ந்- எல்லாத் தர்மங்களையும், பரித்
    யஜ்ய – விட்டுவிட்டு, ( அங்கமாக அநுஷ்ட்டிக்காமல் என்றபடி), மாமேகம் – என்னை ஒருவனையே, சரணம் – சரணமாக, வரஐ-அடை,அஹம்-நான், த்வாம் – உன்னை, ஸர்வபாபேப்ய: – எல்லாப் பாபங்களிலிருந்தும் மோக்ஷயிஷ்யாமி – விடுவிக்கிறேன், மா சுச: – நீ துக்கிக்காதே,)(மாமேகமேவ ரணமாத்மா நம் ஸர்வதேஹிநாம் | யாஹி ஸர்வாத்ம பாவேந யாஸ்யஸி ஹ்யகுதோபயம் || –ஸர்வதேஹிநாம் – எல்லா ப்ராணிகளுக்கும், ஆத்மாநம்-ஆத்மாவாகிய, மாம்- என்னை,ஏகம்-ஒருவனையே,ஸர்வாத்மபாவேந்
    எல்லாவற்றிற்கும் இவன் அந்தராத்மா என்கிற புத்தியினால், சரணம்யாஹி – சரணமாக அடை, அகுதோ பயம் – ஒரு ப்ராணியிடத்திலிருந்தும் பயமில்லாமையை, யாஸ்யஸி – அடையப்போகிறாய்.) என்கிறபடியே சரண்யாபிப்ராய விசேஷத்தாலும்,)

    (தேஷாம் து தபஸாம் ந்யாஸமதிரிக்தம் தப ஸ்ருதம் -அஹிர்புத்ந்யஸம்ஹிதை- 37 – 36 தேஷாம் – அந்த, தபஸாம்-தபஸ்ஸுக்களுக்குள், ந்யாஸம் – சரணாகதி, அதிரிக்கம் – மேற்பட்ட
    தான,தப :- தபஸ்ஸாக, ச்ருதம் – சருதிகளில் சொல்லப்பட்டிருக்கிறது)என்கிற ப்ரபாவாதி யத்தாலும்,-(நேஹாபிக்ரம நாலோஸ்தி ப்ரத்யவாயோ நவித்யதே ஸ்வல்பமப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத் | -கீதை – 2 – 40 இஹ – இந்தநிவ்ருத்தி தர்மமாக அனுஷ்ட்டிக்கப்படுமதில், அபிக்ரம நாச ள் – ஆரம்பிக்கப்பட்டதற்கு நாசம், நாஸ்தி-
    இல்லை, (நடுவில் விட்டுப்போனாலும்), ப்ரத்யவாய : – தோ ஷம், நவித்யதே காணப்படவில்லை, – அஸ்ய- இந்த. தர்மஸ்ய – நிவ்ருத்திதர்மத் தினுடைய, ஸ்வல்பமபி, – கொஞ்சமும், மஹதோபயாத் – பெரிய பயத்திலிருந்து, த்ராயதே – காப்பாற்றுகிறது.) என்கிற நிவ்ருத்திதர்மாந்தரத்தில் சொன்ன நிஷ்கர்ஷம் நிஷ்காமனுடைய ப்ரபத்தியில் கைமுதிக நயாய ஸித்தமாகையாலும்,)(யாசநாத் நயதி தருவம்-யாசநாத் -(இதர பலன்களை யாசிப்பதினால்,த்ருவம் -நிச்சயமாக, நச்யதி -நாசமடைகிறான்.)(உபாயாபாய ஸம்யோகே நிஷ்ட்டயா ஹீயதேநயா-உபாயாபாய ஸம்யோகே – காம்யகர்மங்களுடையவும் நிஷித்த கர்மங்களினுடையவும் ஸம்பந்தம் ஏற்பட்டால், அநயா – இந்த, நிஷ்ட்டயா நிஷ்ட்டையினால், ஹீயந்த – குறைந்துவிடுகிறான்.)என்றது(ஏஷா ஸா வைதிகீ நிஷட்டாஹி உபாயாபாய மத்யமா-ஏஷா – இது, ஸா – அப்படிப்பட்ட, வைதிகீ- வேதத்தில் சொல்லப்பட்ட, உபாயாபாய மத்யமா – உபாயம் அபாயம் இவை இரண்டிற்கும் நடுவில் இருக்கிற, நிஷ்ட்டா – நிலைமை.)என்கிறபடியே உபாயாபாய த்யாக விரிஷ்ட மத்யம வருத்தியினுடைய விரேஷண வைகல்ய மாத்ர பரமாகையாலும்,

    (ராக்ஷஸாநாம் அவிஸ்ரம்பாத் ஆஞ்ஜநேயஸ்ய பந்தநே யதா விகளிதா ஸத்ய: த்வமோகாப்யஸ்த்ரபந்தநா | ததா பும்ஸாமவிஸ்ரம்பாத் ப்ரபத்தி: ப்ரச்யுதா பவேத்
    தமாத் விஸ்ரீம்பயுகதாநாம் முக்திம் தாஸ்யதிஸாசிராத் ;-ஸநத்குமார ஸம்ஹிதை
    ஆஞ் நேயஸ்ய பந்தநே – ( ப்ரஹ் மாஸ்த்ரத்தினால்) ஹனுமாரைக்கட்டுவதில், ராக்ஷஸாநாம் – ரா ஸர் களினுடைய அவிஸ்ரம்பாத் – நம்பிக்கை யில்லாமையினால், அமோ காபி – வீண் போகாததாய் இருந்தபோதிலும், அஸ்த்ரபந்தநா-அஸ்த் ரத்தின் கட்டு, யதா – எப்படி, ஸத்ய: – அப்பொழுதே, விகளிதா – நழு விப்போய் விட்டதோ, ததா – அப்படியே, பும்ஸாம் – மனிதர்களுடைய, அவிஸ்ரம்பாத் – நம்பிக்கையில்லாமையினால், ப்ரபத்தி: – ப்ரபத்தியா
    னது, ப்ரச்யுதா – நழுவினதாக, பவேத் – ஆகும், தஸ்மாத் – ஆகையி னால், விஸ்ரம்பயுக்தாநாம் – நம்பிக்கையுடையவர்களுக்கு,ஸா – அந்த, ப்ரபத்தி, அசிராத் – சீக்ரத்திலேயே, முக்திம் – மோஷத்தை,தாஸ்யதி- கொடுக்கப்போகிறது.) என்றது ப்ரபத்த்ய ஷ்ட்டாங் காலத்தில் விஸ்வாஸ ரூபாங்க வைகல்ய பரிஹார பரமாகையாலும்,

    (யஜ்ஞோ அந்ருதேந க்ஷரதி தப: ‘க்ஷரதி விஸ்மயாத் ஆயு : விப்ராவமாநேந தாநம் க்ஷரதி கீர்த்தநாத் |-மனுஸ்ம்ருதி – 4 – 237 யஜ்ஞ: – யாகம், அந்ருதேந – பொய் சொல்லுவதினால், ரதி – நாசம் அடைகிறது, தப: – தபஸ்ஸு, விஸ் மயாத் – கர்வத்தினால், க்ஷரதி,ஆயு: – ஆயுஸ், விப்ராவமாநேந-ப்ராஹ்மணர்களை அவமதிப்பதினால், க்ஷரதி, தா நம் – தாநம் செய்வது, கீர்த் தநாத்- தானே சொல்லிக்கொள்ளுவதினால், க்ஷரதி-இத்யாதிகளில் போலே மற்றும் ப்ரபத்திக்கு விரேஷித்து ப்ரதிபந்தகாதிகளைச் சொல்லுவதொரு விபேஸஷ வசநமில்லா
    மையாலும், லோகவேதங்களில் ஓர் இடத்திலும் ஸமர்த்த காருணிக விஷய ரணாகதிக்குப் பலஹாநி காணுணாமையாலும், அபவாத பீதரான ஸ்ரீ பரதாழ்வான்-சேஷ்யே புரஸ்தாத் பலாலாயா-அயோ – 111-14 சாலாயா (ஆச்ரமத்தின் ) பர்ணசாலையின்,vபுரஸ்தாத் – முன் பாகத்தில், சேஷ்யே- படுத்துக்கொள்ளபோகிறேன்.-(ரஸா யாசதஸ்தஸ்ய வசநம் நகருதம் மயா–யுத்- 124-19 சிரஸா – தலையினால்(வணங்கி)யாசத – ப்ரார்த்தித்த, தஸ்ய – அந்தப் பரதனுடைய, வசநம் – வார்த்தை,மயா -என்னால், ந க்ருதம் செய்யப்படவில்லை.)இத்யாதி மாத்ரத்தைக் கொண்டு ப்ரபத்தி பண்ணினார் என்று சொல்லுமதற்கு யதாபிப்ராயம் யதாகாலம் அபிமதஸித்தி யுண்டாகையாலும்,-(தாவதார்த்திஸ் ததா வாஞ்ச்சா தாவந்மோஹஸ் ததா ஸு கம் |யாவந்ந யாதி ரணம் த்வாமபே ஷாகநாயநம்
    விஷ்ணு புராணம் – 1-19-13. அசேஷாக நாசநம் – எல்லாப்பாபங்களையும் போக்கடிக்கக் கூடியவரான, த்வாம் உம்மை,யாவத்எதுவரையில், சரணம்- சரணமாக, நயாதி – அடையவில்லையோ,தாவத் – அது வரையில், ஆர்த்தி: (கையில் கிடைத்த பொருள் நாசமடைவதினால் உண்டான) துக்கமும்,ததா – அப்படியே, வாஞ்சா- புதிய
    ஜச்வர்யாதிகளில் ஆசையும், தாவத் – அது வரையில், மோ: – ஆத்மஸ்வரூபத்தை அறியாமையும், தாவத் – அதுவரையில், ததா – அப்படியே, அஸுகம் – பகவதநுப்வமில்லாமையும்.-என்று பகவத் ப்ரபந்நனுக்கு அபிமதபலம் அப்போதே ஸித்திக்கும்படி நிற்கையாலும், ஸர்வ க்தியாய்ப் பரம காருணிகனான ஸர்வே வரனைப் பற்றி ப்ரபத்தி பண்ணுகிறவன் யாதொரு காலத்திலே யாதொரு பலம் வரவேண்டுமென்று கோலி(K)னான், அந்தக் காலத்திலே அந்தப் பலம் அவனுக்கு வருகை நியதம்.நடுப்புகுந்த நிஷித்த காம்யங்களும் அதுககு பரதிபந்தகங்களன்றிக்கே அதிகாராநுகுண ப்ராயசித்தாதிகளதீர்ந்து விடும் என்றபடி.

    ———-

    (16) ‘புத்திபூர்வ அபசாரங்கள் புகுந்தாலும் ப்ராயசித்த விசேஷம் அதிகாரி விசேஷ நியதம் ‘ என்றது-சரீரம் பலமாயம் ச வய: காலம் ச கர்மச ம் ஸமீக்ஷ்ய தர்மவித் புத்த்யா ப்ராயசித்தா நிர்த்திலேத்-சரீரம் – தேஹத்தையும், பலம் – பலத்தையும், ஆயம்ச- வரும் படியையும், வய:- வயதையும், காலம்ச – காலத்தையும், கர்மச – (ப்ரா யச்சித்தத்திற்குக் காரணமாக ஏற்பட்ட) கர்மத்தையும், புத்த்யா-தன்னுடைய புத்தியினால், ஸமீ ய – யோசித்து, தர்மவித் – தர்மத்தை அறிந்தவன், ப்ராயச்சித்தாநி – ப்ராயச்சித்தங்களை, நிர்த்திசேத் விதிக்கவேண்டும்.)அபி சேத்பாதகம் கிஞ்சித் யோகீ குர்யாத் ப்ரமாதத: யோகமேவஹி குர்வீத நாந்யம் யத்நம் ஸமாசரேத்-யோ – யோகம் செய்பவன், ப்ரமாதத: – அஜாக்ரதை யினால், கிஞ்சித் – ஒரு, பாதகம் – பாபத்தை, குர்யாத்சேத் – செய் வானேயாகில், யோகமேவ – யோகத்தையே, குர்வீத – செய்யக் கட வன், (அதற்குப் பரிஹாரமாக), அந்யம் – வேறு, யத்நம் – ப்ரயத்தின த்தை,ந ஸமாசரேத் – செய்யக்கூடாது.)(உப்பாதகயுக்தோபி மஹாபாதகவா பி 1 யாமிந்யா: பாதமேகம் து ப்ரஹ்மத்யாநம் ஸமாசரேத்-விஷ்ணு தர்மம்- 66-72. உ பாதக யுக்தோபி – உபபாத கத்தைச் செய்தவனாயிருந்தபோதிலும், மஹாபாதகவாநபி-மஹாபாத கத்தைச் செய்தவனாயிருந்தபோதிலும், யாமிந்யா:-ராத்திரியினுடைய,ஏகம் – ஒரு பாதம் – கால் பாகத்தில், ப்ரஹ்மத்யா நம் – பசுவானுடைய த்யானத்தை, ஸமாசரேத் – செய்யவேண்டும்,

    (அத பாதகபீதஸ் த்வம் ஸர்வபாவோ பாரத விமுக்தாந்ய ஸமாரம்போ நாராயணபரோ பவ-அத – அப்படிக்கில்லா விடில், பாரத – ஓ ! யுதிஷ்டிரனே, பாதகபீத: – பாபங்களில் இருந்து பயந்தவனாகிய, த்வம் – நீ, ஸர்வபாவேந – எல்லாவித அபிப்ராயத்தினாலும், விமுக்தாந்ய ஸமாரம்ப : – வேறு ப்ரயத்தினங்களை விட்டு விட்டு,நாராயணபர:- நாராயணனை ஆச்ரயித்தவனாக,பவ – ஆகக்கடவாய்.)(மேருமந்தரமாத்ரோபி ராசி: பாபஸ்ய கர்மண: 1
    கேசவம் வைத்யமாஸாத்ய துர்யாதிரிவ நச்யதி ||
    -பாபஸ்யகர்மண: – பாபகர்மங்
    களின், ராசி – கும்பல், மேருமந்தர மாத்ரோபி – மேரு பர்வதம், மந்தபர்வதம் இவைகளின் அளவாக இருந்தபோதிலும், கேசவம் -பகவானாகிய,வைத்யம் ஆஸ த்ய – வைத்யனை அ டைர்து (வைத்யனை அடைந்த )துர்வ்யாதிரிவ – கெட்டவ்யாதியைப் போல, நச்யதி – நசித்து விடுகிறது.)நாம்நஸ்தே யாவதீ லக்தி: பாபநிர்ஹரணேஹரே | ஸ்வபசோபி நர: கர்த்தும் மஸ்தாவந் ந கில்பிஷம்II-ரே – பகவானே ! தே – உம்முடைய, நாம்ந்: – திருநாமத்திற்கு, பாப நிர்ஹரணே – பாபத்தைப் போக்கடிப்பதில், யாவதீசக்தி:எவ்வளவு சக்தி, அஸ்தி – இருக்கிறதோ, தாவத் – அவ்வளவு, கில்பிஷம் – பாபத்தை, ச்வபச :- சண்டாளனாகிய, நர: அபி – மனிதனும்,கர்த்தும் – செய்வதற்கு, ந ம :- சக்தியுடையவனல்லன்.)அவ ேநாபி யந்நாம்நி கீர்த்திதே ஸர்வபாதகை: புமாங்விமுச்யதே ஸத்ய: ஸிம்ஹத்ரஸ்தை: ம்ருகைரிவ|1-விஷ்ணு புராணம் 6-8-19. யந்நாம்நி – எந்தப் பகவானுடைய திருநாமம், அவசேநாபி – எண்ணமில்லாமலே, கீர்த்திதே -சொல்லப் பட்டிருக்கு மளவில், புமாந் – மனிதன், ஸத்ய :- அப்பொழுதே,ஸிஹ்மத்ரஸ்தை: – ஸிஹ்மத்தினிடத்தில் இருந்து பயந்திருக்கிற, ம்ருகைரிவ – மருகங்களினாலே போல, ஸர்வபாதகை:- எல்லாப்பாபங்களினாலும் விழுச்யதே – விடப்படுகிறான்.)

    (அயம்ஹி க்ருத நிர்வேபோ ஜந்மகோட்யம்ஹஸாமபி 1யத் வ்யாஜஹார விவபோ நாம ஸ்வஸ்த்யயநம் ஹரே:1-அயம் – இவன், ஐந்மகோட்யம்ஹஸாமபி-கோடி ஜன்மங்களில் செய்த பாபங்களுக்கும், க்ருத நிர்வேச: – ப்ராயச்சித்தம் செய்தவன், யத் – எந்தக் காரணத்தினால், விவச: – பரவசனாய், ஸ்வஸ்த்யயநம் – மங்களத்தைக் கொடுக்கக் கூடிய, ஹரே:- பகவானுடைய,நாம – திரு நாமத்தை,வயாஜஹார – சொன்னானோ.)(ப்ராயசித்தாந்யபேஷாணி தப: கர்மாத்மகாநி வை யாநி தேஷாம சேஷானாம் க்ருஷ்ணா நுஸ்மரணம் பரம் | 1-விஷ்ணு புராணம்- 5-6-39,40. அசேஷாணி – எல்லா, த :கர்மாத்மகாநி – தபஸ் , யாகம், முதலிய கர்மங்களாக இருக்கிற,யாநி -எந்த, ப்ராயச்சித்தாநி – ப்ராயச்சித்தங்களோ, அசேஷாணாம் தேஷாம் – அவைகள் எல்லாவற்றிற்கும், க்ருஷ்ணாநுஸ்மரணம்- க்ருஷ்ணனை நினைப்பது, பரம் – உயர்ந்தது. பாபே – பாபமானது க்ருதே – செய்யப்பட்டிருக்கும்பொழுது, யஸ்ய – எந்த, பும்ஸ: – மனிதனுக்கு,
    அனுதாப : – அனுதாபமானது. ப்ரஜாயதே – உண்டாகிறதோ, தஸ்யஅவனுக்கு, ஏகம் – ஒன்றாகிய, ஹரிஸம்ஸ்மரணம் – பகவானை நினைப்பதே, பரம்- உயர்ந்தப்ராயச்சித்தம்.)

    அதிபாப ப்ரஸக்தோபி த்யாயர் நிமிஷம் அச்யுதம் பூயஸ்தபஸ்வீ பவதி பங்க்தி பாவநபாவந:/!-தி பாப ப்ரஸக்தோபி – அதிகமான பாபத்துடன், கூடினவனாயிருந்த போதிலும், நிமிஷம் – ஒரு நிமிஷம் அச்யுதம் – பகவானை,த்யாயர் – த்யாநம் செய்கிறவன், பூய – அதிகமாக, தபஸ்வீ ரிஷியாகவும்,பங்க்திபாவந பாவந : – பங்க்திபைப்பரிசுத்தம் செய்யக்கூடியவர்களையும் பரிசுத்தம்செய்யக்கூடியவனாய், பவதி – ஆகிறான்)(நாராயணம் ஜபேர் நித்யம் ப்ரணம்ய புருஷோத்தமம்ஸ்வபர் நாராயணம் தேவம் கச்சந் நாராயணம் ததா 1-(புஞ்ஜந் நாராயணம் விப்ர: திஷ்ட்டர் ஜாக்ரத்ஸநாதநம் |உந்மிஷந் நிமிஷந் வாபி நமோ நாராயணேதி வை | )(போஜ்யம் பேயம் ச லேஹ்யம் ச நமோ நாராயணேதிய : 1அபிமந்த்ர்ய ஸ்ப்ரு ந் புங்க்தே ஸ யாதி பரமாம் கதிம் |ஸர்வபாப விநிர்முக்த: ப்ராப்நோதி பரமாம் கதிம்- நித்யம்- தினம்தோறும்,புருஷோத்தம -புருஷோத்தமனாகிய நாராயணம் – நாராயணனை, ப்ரணம்ய – ஸே வித்துவிட்டு, ஜபேத்-ஜபிக்க வேண்டும், விப்ர:- ப்ராஹ்மணன், ஸ்வபர்- தூங்கும்பொழுதும், தேவம்-தேவனாகிய, நாராயணம் – நாராயணனை,ததா – அப்படியே, கச்சந்- நடந்துபோய்க் கொண்டிருக்கும் பொழுதும், நாராயணம்- நாராயணனை, புஞ்ஜந் – சாப்பிடும்பொழுதும், நாராயணம் – நாராயணனை,திஷ்ட்டக் – நின்று கொண்டிருக்கும் பொழுதும், ஜாக்ரத் விழித்துக்
    கொண்டிருக்கும் பொழுதும், உங்மிஷந்- கண்களைத் திறந்துகொண்டிருக்கும் பொழுதும், நிமிஷந்வாபி-மூடிக்கொண்டிருக்கும்பொழுதும்,-நமோநாராயணேதி – நமோ நாராயணா (என்ற அஸந்தாநம்செய்யவேண்டும்),போஜ்யம் – சாப்பிடக் கூடிய வஸ்துவையும், பேயம்சா – பருகக்கூடிய வஸ்துவையும், லே யம்ச – நக்கி சாப்பிடக்கூடியவைகளையும்,
    ய: – எவன், நமோ நாராயணேதி – நமோ நாராயணா என்று, அபிமந்த்ர்ய – மந்திரத்தைச் சொல்லி, ஸ்ப்ருசந்- தொட்டுவிட்டு, புங்க்ே சாப்பிடுகிறானோ,ஸ : – அவன், பரமாகதிம் – உயர்ந்த கதியை, யாதி -அடைகிறான், ஸர்வபாப விநிர்முக்த: – எல்லாப் பாபங்களிலிருந்தும்
    விடுபட்டவனாய், பரமாம் கதிம் – உயர்ந்த கதியை, யாதி – அடைகிறான். )இத்யாதிகளில் படியே ஏக நிமித்தம் தனக்கே வித்வத் அவிதவத் வர்ண ஆச்ரம வயோவஸ்த்தாதி வைஷம்யத்தாலே ப்ராயஸ்சித்தம் நாநா ப்ரகாரமாய்ப் போருகிறபடியே ப்ரபங்கனைப்பற்ற

    (அபாயஸம்ப்லவே ஸத்ய: ப்ராயசித்தம்ஸமாசரேத்-ப்ராயஸ்சித்திரியம் ஸாத்ர யத்புந: ஸ்ரணம் வ்ரஜேத்1-லக்ஷ்மீதந்த்ரம்-17-91. அபாய ஸம்ப்லவே – பாபம் நேர்ந்ததேயானால், ஸத்ய: – அப்பொழுதே, ப்ராயச் சித்தம் – ப்ராயச் சித்தத்தை. ஸமாசரேத் – செய்ய வேண்டும், இயம் – இந்த, ப்ராயச்சித்தி – ப்ராயச் சித்தமும், புந:- மறுபடியும், சரணம் வ்ரஜேத் -சரணமாக அடையவேண்டும், இதி யத் – என்று சொல்லப்படுகிறஎந்தப் புரு:ப்ரபத்தியோ, ஸா – அது தான்.)என்றபடிக்கு விசேஷ வசநமுண்டாகையாலும்,

    (யதி கிஞ்சித் அதிக்ராந்தம் விச்வாஸாத் ப்ரணயே வா ப்ரேஷ்யஸ்ய க்ஷமிதவ்யம் மே நகல்சிந்நாபராத்யதி 1 -கிஸ்கி-30-11. விச்வாஸாத் – நம்பிக்கையினா லாவது, ப்ரணயேந வா-ப்ரீ தியினாலாவது, ப்ரேஷ்யஸ்ய – தாஸனாகிய, மே – என்னுடைய, அதிக்ராந்தம் – மீறி நடந்தது தேவரீர் திருவுள்ளத் திற்கு கிஞ்சித்யதி-ஏதாவது ஒன்று இருந்தால், (அது), மிதவ்யம் – பொறுத்துக் கொள்ளத்தக்கது, கச்சித் – ஒருவனும், நாபராத்யதிஅபராதம் செய்வதில்லை என்பது, ந – இல்லை.) இத்யாதிகளிற் சொன்ன ந்யாயத்தாலும், இப்படிக்கு ஸத் ஸம்ப்ர தாயா நுஷ்ட்டாநம் உண்டாகையாலும், பரமாத்ம நிஷ்ட்டனுக்கு அக்ருத்ய கரண க்ருத்யாகரணங்களால் பாபம் பிறவாது என்கிற வாக்யமும் ஸ்துதிபரம், உத்தராக அஸ்லேஷ வசநமும் ப்ரா மாதிக விஷயமாக பாஷ்யாதிகளிலே ஸ்த்தாபிக்கையாலும்

    (அநந்யஸாத்யே ஸ்வாபீஷ்டே மஹாவிச்வாஸபூர்வகம் 1 ததேகோபாயதா யாசநா ப்ரபத்தி : ரணாகதி: -பரதமுனி லக்ஷண வாக்யம். ஸ்வாபீஷ்டே – தன்னுடைய இஷ்ட பலம், அநந்ய ஸாத்யே – வேறு ஒன்றினாலும் ஸாதிக்கத்தகாத தாக இருக்கும் பக்ஷத்தில், மஹாவிச்வாஸ பூர்வகம் – மஹா விச்வா ஸத்தை முன்னிட்டு, ததேகோபாயதா யாச்நா – அந்தப் பகவான் ஒரு வனே உபாயமாக இருக்க வேண்டும் என்று யாசிப்பது, ப்ரபத்தி, சரணாகதி: – ப்ரபத்தி என்றும், சரணாகதி என்றும் சொல்லப்படுகிறது.)இத்யாதி ப்ரபத்தி லக்ஷண வாக்யா நுகுணமாகப் புத்தி பூர்வாபசாரங்கள் புகுந்ததாகிலும் அவற்றுக்கு ப்ரதிபதோக்த ப்ராயஸ்சித்த யோக்யதையில்லாதபோதும் ப்ரபந்நனுக்கும்,

    (யத்யேநகாம காமே ந ஸாத்யம் ஸாதநாந்தரை: 1முமுக்ஷணா யத்ஸாங்க்க்யே யோகேந நச பக்தித: ||| ப்ராப்யதே பரமம் தாம யதோ நாவர்த்ததே யதி: 1தேந் தேநாப்யதே தத்தந் ந்யாஸேநைவமஹாமுநே !)(பரமாத்மா ச தேநைவ ஸாத்யதே புருஷோத்த.): 1-அஹிர்புத் ய ஸம்ஹிதை – 37-25. காம காமே – காம்யபலத்தை ஆசைப்படுகிற, யேந – எந்தப் புருஷனால், யத்-எந்தக் காம்யபலம், ஸாதநாந்தரை: – இதர உபாயங்களினால், நஸாத்யம் – ஸாதிக்கமுடியாததோ, மு க்ஷ னா – மோக்ஷத்தில் ஆசையுடையவனாகியமனிதனால், யத: – எந்தப் பலனிலிருந்து, யதி:- யதியானவன், நாவ த்ததே- திரும்பிவருகிறதில்லையோ, (அப்படிப்பட்ட) யத் – எந்த, பரம்தாம – பரமபதம், ஸாங்க்யே- ஐஞாந யோகத்தினாலும், பக்தித
    பக்தியோகத்தினாலும், ந ப்ராப்யதே – அடையப்படுகிறதில்லையோ-தே தேந -அந்தந்த மனிதனால், தத்தத்- அந்தந்தப் பலன், மஹாமுநே-ஓ! மஹர்ஷியே, ந்யர்ஸேநைவ – சரணாகதியினாலேயே, ஆப்யதே -அடையப்படுகிறது புருஷோத்தம புருஷச்ரேஷ்டனான,பரமாத்மாசபரமாத்மாவும், தேநைவ – அந்தச்சரணாகதியினாலேயே, ப்ராப்யதே-அடையப்படுகிறான்.) என்றும்,(ஸா ஹி ஸர்வத்ர ஸர்வேஷாம் ஸர்வகாமபலப்ரதாஸநத்குமார ஸம்ஹிதை-ஹி எந்தக் காரணத்தினால், ஸா அந்தச் சரணாகதி,ஸர்வேஷாம் – எல்லா ஜனங்களுக்கும், ஸர்வத்ர – எல்லா இடத்திலும், ஸர்வகாம பலப்ரதா – எல்லாக்காம்ய பலன்களையும் கொடுக்கக் கூடியதோ.)என்றும் ப்ரதிபாதிதமான ப்ரபாவத்தையுடைத்தான ப்ரபத்தி தன்னையே மீண்டும் ப்ரயோகிக்கு மதுவே ஸ்வாதிகாராநு குணப்ராயசித்தமாகக் கடவது என்றபடி.

    ————–

    (17) இப்படி ப்ராயசித்தத்திலே மூட்டுகிறதும் கடிந ப்ரக்ருதிகளுக்குக் கசை காட்டுவாரைப் போலே அவன் பண்ணுகிற சிக்ஷைகளும் எல்லாம் சரண்ய ப்ரஸாதபலம் ‘ என்றது-யம் ஹி ரக்ஷிதும் இச்சந்தி புத்த்யா ஸம்யோஜயந்தி தம்-யம் – எவனை, ரக்ஷிதும் -காப்பாற்றுவதற்கு, இச்சந்தி (தேவதைகள் விரும்புகி ர்களோ), தம் – அவனை, புத்த்யா – நல்ல புத்தியோடு, ஸம்யோஜயந்தி – சேர்க்கிறார்கள், அவனுக்கு நல்லபுத்தி யைக்கொடுக்கிறார்கள் என்றபடி.)-என்கிற ஸாமான்ய ந்யாயத்தாலும்,

    (ரக்ஷதே பகவார்விஷ்ணு. பக்தாநாத்மா சரீரவத் |1-பகவார் – பகவானாகிய விஷ்ணு: – விஷ்ணு,பக்தாந் தன்னிடத்தில் பக்தியுடையவர்களை, ஆத்மசரீரவத் – தன்னுடைய சரீரத்தைப்போல,ரக்ஷதே – காப்பாற்றுகிறான்.)என்கிற விஸேஷ வசநத்தாலும் ஆர்விஷயத்தில் ஈய்வரன்செய்யுமவையெல்லாம் ப்ரஸாத பலமாக வேண்டுகையாலே ஹிதைஷிகளான பித்ராதிகளைப்போலே அநுதாபாதிகளை விளைப்பித்து,
    பாஸ்த்ர முகத்தாலே ப்ராயசித்த விஸேஷத்தை அறிவித்து, ப்ராயஸ்சித்தத்திலே மூட்டுகிறதும், விநீதரல்லாத புத்ராதிகளைக் கசாதிகளாலே பயம் பிறப்பிக்குமாபோலே உபக்லோங்களை விளைவித்துபரதியை உண்டாக்குமதுவும் ஸர்வபூத நிஸர்க்க
    ஸுஹ்ருத்தான ஸர்வலோக பரண்யனுடைய இரக்கமடியாக வருகிறது என்று க்ருதஜ்ஞராக ப்ராப்தம் என்றபடி.

    ———-

    (18) இங்கு இருந்த காலம் தர்மா நுபந்தியான போகத்திலும் போக புத்தியாலே ப்ராவண்யம் பிறந்ததாகில் இது தன் அதிகாரா நுரூபமான கைங்கர்யாமருத ரஸத்திற்குத் தண்ணீர்த்
    துரும்பு எ
    ன்றது-(ராகாத்யபேதம் ஹ்ருதயம் வாகதுஷ்டார ருதா திநா ஹிம்ஸாதிரஹித: காய கேசவாராதநம் த்ரயம் 11-ராகாத்யபேதம் – காமம் முதலியவைகள் இல்லாத, ஹ்ருதயம் – மனதும், அந்ருதாதிநா – பொய் முதலியவைகளினால், அதுடா – தோஷத்தை யடையாத, வாக்-வாயும், ஹிம்ஸாதிரஹித:- அயலாருக்கு ஹிம்ஸை முதலியது செய்யாத, காய:- சரீரமும்,த்ரயம் – இந்த மூன்றும், கேசவாராதநம் – பகவானுடைய ப்ரீதிக்குக் காரணமானவைகள்)

    அஸக்திரநபிஷ்வங்க: புத்ரதார கருஹாதிஷ-கீதை – 13-9. அஸக்தி – (ஆத்மாவைத் தவிர வேறு வஸ்துக்களில்) பற்று இல்லாமையும், புத்ரதார க்ருஹாதிஷ – பிள்ளை, பத்நீ வீடு முதலியவைகளில், அநபிஷ்வங்க: – அதிகப் பற்றில்லாமையும்.)இத்யாதிகளிற்படியே ஆத்மகுணயுக்தனாய் இருந்தா னொருவனாகிலும் க்ருஹஸ்த்தாவஸ்த்தையிலே தர்மாவிருத்த போகங்கள் ஸாஸ்த்ர பலத்தால் வரவேண்டி(யதாதலால்) அத்தால் முமுஷுவான இவனுக்கு,-(சரீரம் வ்ரணவத் பஸ்யத் அந்நம் து வரணலேப நம் வ்ர ணஸேசநவத் பாநம் வஸ்த்ரம்து வ்ரணபட்டவத் -சரீரம் – தேஹத்தை வரணவத் – புண்ணைப் போலவும், அந்நம் – ஆஹாரத்தை, ரணலேபநம்-புண்ணுக்குப் பூசும் ஒளஷதம் போலவும்,பாநம் தண்ணீர்முதலியவற்றைக்குடிப்பதை வரண ஸேசநவத்-புண்ணை நனைப்பது போலவும் வஸ்த்ரம் – துணியை, வ்ரணபட்டவத் -புண்ணுக்குக் கட்டுகிற கட்டைப் போலவும், பச்யேத் – பார்க்கவேண்டும் (எண்ணவேண்டும்).)இத்யாதிகளிற்படியே வைராக்ய ஜ்ஞாந பக்த்யாதிகளுக்கு அநுகூலமான ஒளஷதாதி கரமத்தாலே புத்திபண்ண ப்ராப்தமாயிருக்க, அநாதி துர்வாஸநா பரிபாக வியே ஷத்தாலே ப்ரயோஜ நாந்தர பரனுடைய விலக்கடி இவனுடைய புத்தியிலே வருமதாகில் இத்தால் வருவதொரு ப்ரதாந பல ப்ரதிபந்தம் இல்லையேயாகிலும் இபபோது இங்கு இருந்து அநுபவிக்கிற கைங்கர்ய ரஸத்துக்கு ஸகோசாதி ஹேதுவாகையாலே,

    (யந் முஹுர்த்தம் க்ஷணம் வாபி வாஸுதேவோ ந சிந்தயதேஸாஹாநி: தந்மஹச்சித்ரம் ஸாப்ராந்தி: ஸா ச விகரியா |1-பாஞ்ச முஹூ த்தம் – ஒரு முஹூர்த்த காலமாவது. ணம்
    வாபி – ஒரு க்ஷணகாலமாவது, வாஸுதேவ: – பகவான், நசிந்த்யதே சிந்திக்கப் படவில்லை என்பது, யத் – எதுவோ, ஸா – அதுவே, ஹாநி :- நஷ்டம், தத் – அது, மஹத்- பெரியதான, சித்ரம் – தோஷம்,-காமம் குரோதம் முதலியவைகள் புகுவதற்கு வழி என்றபடி, ஸா -அது , ப்ராந்தி: – ப்ரமம், ஸாச – அதுவே, விக்ரியா – ஆத்மாவிற்கு மாறுதல்.-ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம் பாவியேனைப் பல காட்டிப் படுப்பாயோ-திருவாய்— 6-9-9-என்று பீதனாக ப்ராப்தம் என்றபடி.-ப்ருதிவீம் ரத்நஸம்பூர்ணாம் ய: க்ருஷ்ணாய ப்ரயச்சதி-தஸ்யாப்யந்ய மநஸ்கஸ்ய ஸுலபோ ந ஜநார்த்தந:-ய:- எவன், ரத்நஸம்பூாணாம் – ரத்நங்கள் நிறைந்த, ப்ருதிவீம் பூமியை. க்ருஷ்ணாய – ஸ்ரீ க்ருஷ்ணன் பொருட்டு, ப்ரயச்சதி கொடுக்கிறானோ, தஸ்யாபி – அப்படிப் பட்டவனாயிருந்த போதிலும். அந்யமநஸ்கஸ்ய – வேறு ப்ரயோஜநங்களில் ஆசையையுடைய மனித னுக்கு. ஜநார்த்த : – பகவான், ந ஸுல :அடையக் கூடியவனல்லன்-(பராங்முகாநாம் கோவிந்தே விஷயாக்ராந்த சேதஸாம் || தேஷாம் தத் பரமம் ப்ரஹ்மதூராத் தூரதரே ஸ்த்திதம்||-விஷ்ணு தர்மம்–99-13. கோவிந்தே – பகவானிடத்தில், பராங்முகாநாம-பக்தியிலலாதவாகளாயும், விஷயாக்ராந்த சேதஸாம் சபதாதி விஷயங்களினால் ஆக்ரமிக்கப்பட்டமனதை உடையவர்களாயும் இருக்கிற, தேஷாம் – அந்த மனிதர்களுக்கு, பரமம்ப்ரஹ்ம – பரப்ரஹ்மமானது, தூராத்தூரதரே – வெகு தூரத்தில், ஸ்திதம் – இருக்கிறது.)இத்யாதிகளில் (அ)வர் ஜ நீய போகங்களன்றிக்கே மோக்ஷ ருசியை விலக்கும்படியான ப்ரயோஜநாந்தரங்களில் ப்ராவண்யத்தை யுடையார்க்கு ஸர்வேஸ்வரன துர்லபன் என்கிறது.

    (அதோபாய ப்ரஸ தோபி புக்த்வா போகாந் அநாமயாங்1 அந்தே விரகதி மாஸாத்ய விதே வைஷ்ணவம் பதம் |-க்ஷ்மீதந்த்ரம்-17- 103 அத- அப்படிக் கில்லாமல், உபாயப்ரஸக்தோபி –
    காம்ய கர்மங்களை அனுஷ்ட்டித்துக் கொண்டிருப்பவனும்,அநாமயாந் – ஒரு தொந்தரவும் இல்லாத, போகாந்- போகங்களை, புக்த்வா- அனுபவித்து விட்டு, அந்தே – கடைசியில், விரக்திம் – வைராக்யத்தை, ஆஸாத்ய – அடைந்து, வைஷ்ணவம்பதம் – மோக்ஷத்தை,
    விசதே – அடைவிறான். )என்றது மோக்ஷருசியும் ஸ்வர்ககாதி ருசியும் நடப்பார்க்கு விளம்
    பம் வரும் என்கிறது,-அப்ராப்தித: பரிஹர ஸ்வபரை: ஸ்வரக்ஷாம் 1) என்கிற நிபேரக்ஷையில் ஸ்லோகத்தையும் இங்கே அநுஸந்திப்பது.(நிக்ஷேபாக்ஷை, ஸ்வபரை: தன்னாலும் அயலாராலும் ஸ்வரக்ஷாம் – தன்னை ரக்ஷித்துக்கொள்ளுவதை, அப்ராப்தித: – ப்ராப்தி இல்லாமையினாலே, அதாவது கடமை யில்லாமையினாலே, பரிஹரந் – பரிஹரித்தவனாயும், (பகவானுடைய பாயோஜனத்திற்காகவே எல்லா வஸ்துக்களும் ஏற்பட்டிருக்கின்றன என்கிற ஜ்ஞாநத்தினால் தன்னுடைய ப்ரயோஜநத்திற்காகவாவது மற்றவர்களுடைய ப்ரயோஜநத்திற்காகவாவது ஏற்பட்டது என்கிற புத்தியைப் பரிஹரித்தவனாய்,-பகவானுடைய ப்ரீ தியைத் தவிரத் தனக்கு வேறு ஒரு ஸுகம் இல்லா
    மையினால் ஒரு விதத் தோஷமும் இல்லாத ப்ரபந்நன் தன்னுடைய ஸுகங்கள் எல்லாவற்றையும் ஸ்வாமியான பகவானுடைய அனுபவத்திற்கு உள்ளடங்கிய வாகவே அனுபவிக்கிறான் என்று மேல்)

    (19) · இப்படி நிஷித்த போக ப்ராவண்யம் கைங்கர்யா ம்ருத ரஸத்துக்கு விருத்த மாகையாலே விஷம் போலே தூர பரிஹரணீயம்-என்றது-ஸத்த்வ நிஷ்ட்டனாய் ஸ் வா மிக்கு அநபிமதத்தில் விமுகனாக ப்ராப்தனாயிருக்க ஸர்வருக்கும் ஸ்வப்நாத்ய வஸ்த்தைகளிலே
    நிஷித்த ப்ரவ்ருத்திகள் வருமா போலவும், அவஹிதரான ருஷிகளும் கூட ஓர் அளவுகளிலே தேவாதிகளினாலே மோஹிதராய் அகப்படுமா போலவும் முமு வுக்கு நிஷித்தபோக ப்ராவண்யம் வருமாகில்-(அபாயா விரத: ஸர்வத் மாம் சைவ ரணம் கத: 1
    தநூக்ருத்யாகிலம் பாபம் மாம் ப்ராப்நோதி நர: நை : 1 -லக்ஷ்மீதந்த்ரம்– 17-102
    .சச்வத் – அடிக்கடி, அபாய விரத-நி த்த கார்யங்களில் இருந்து ஓய்வை அடையாதவனாயும், மாம்
    சைவ – என்னையே, சரணம்கத: – சரணமாக அடைந்தவனாயும் இருக்கிற, நர: – மனிதன், அகிலம் – எல்லா, பாபம் – பாபத்தையும், தநூக்ருத்ய – கழித்து விட்டு, ச ை – மெள்ள (தாமதமாக) மாம் – என்னைப்ராநோதி – அடைகிறான்.) இத்யாதிகளிற்படியே இங்கு ப்ராயசித்தம் தண்ட விபேஷங்கள் வருமதுக்குமேலே அஸத் கல்பனான தனக்கு உஜ்ஜீவ
    நமுமாய், போகமுமாகையாலே அம்ருத கல்பமான கைங்கர்யா நுபவத்திற்கு அநதிகாராதிகளைப் பண்ணுகையாலே,-(விஷஸ்ய விஷயாணாம் ச தூரம் அத்யந்தமந்தரம் |உபபுக்தம் விஷம் ஹந்தி விஷயா: ஸ்மரணாதபி 11–விஷஸ்ய – விஷயத்திற்கும், விஷயாணாம் ச – சப்தம் முதலிய விஷயங்களுக்கும், அத்யந்தம் தூரம் – அதிகத் தூரமான, அந்தரம் -வித்யாசம் இருக்கிறது, விஷம் – விஷமானது, உபபுக்தம் – சாப்பிடப்பட்டதாய்க் கொண்டு, ஹந்தி – கொல்லுகிறது, விஷயா: – விஷயங்கள், ஸ்மரணாதபி – நினைப்பது, மாத்திரத்தினாலும், கொல்லுகின்றவை)இத்யாதிகளை அநுஸந்தித் து ஸந்நிதி பரித்யாகம் பண்ண வொட்டாத பாபத்தில் அகப்படாதபடி நிபுணநிரூபணம் பண்ணி ஸர்ப்பாதிகள் இல்லாத தேலங்களிலே வர்த்திக்குமா போலே நிஷித்தபோக ஸம்பாவனை இல்லாத தேலங்களிலே வர்த்திக்கவும்,

    (பாபம் ப்ரஜ்ஞாம் நாயதி க்ரியமாணம் புந புந: 1 நஷ்ட ப்ரஜ்ஞ: பாபமேவ புநராரபதே நர: 1 -பார – உத்யோக — 35-73. பாபம் – பாபமானது, புந: புரு:- அடிக்கடி, க்ரியமாணம் -செய்யப்பட்டதாய்க்கொண்டு, ப்ரஜ்ஞாம் – புத்தியை, நாசயதி -நாசம் செய்கிறது, நஷ்டப்ரஜ்:-இழந்த புத்தியை யுடைய, நர: – மனிதன், புந: – மறுபடியும்,பாபமேவ – பாபத்தையே,
    ஆரபதே – செய்ய ஆரம்பிக்கிறான்.)இத்யா திகளிற் சொன்ன பாபாரம்பக பாபத்துக்கும் ப்ராயஸ்சித்தமாக ஏற்கவே ப்ரபத்திபண்ணவும் ப்ராப்தம் என்றபடி இப்படி வர்த்திக்குமவன்-அஹேரிவ கணாத்த: ஸந்மா நாத் மரணாதிவ | குணபாதிவ ய: ஸ்த்ரீப்ய; தம் தேவா ப்ராஹ்மணம் விது: |!-பாரதம்-சாந்தி – 251-13 கணாத் – கும்பலிலிருந்து, அறேரிவ – பாம்பினிடத்திலிருந்து போலவும், ஸமாநாத் – ப மாநத்தில்இருந்து, மரணாதிவ – மரணத்தினிடத்திலிருந்து போலவும். ஸ்த்ரீப்ய:-ஸ்த்ரீகளிடமிருந்து, குணபாதிவ – பிணத்தின் இடத்தில் இருந்து போலவும், ய: – எவன், பீத: – பயப்படுகிறானோ, தம் – அவனை, தேவா :- தேவதைகள், ப்ராஹ்மணம் – ப்ராஹ்மணனாக விது: -அறிகிர்கள்.). இத்யாதிகளிற்படியே தேவர்களுக்கும் பஹுமாக விஷயமாம்.

    (பரரந்த்ரேஷு ஜாத்யந்தா: பரதாரேஷ்வபும்ஸகா: பரிவாதேஷு யே மூகா: தேதீவ தயிதா மம-விஷ்ணு தர்மம்-78-22.யே- எவர்கள், பரரந்த்ரேஷ – அயலாருடைய தோஷங்களில், ஜாத்யந்தா: – பிறவிக் குருடர்களோ, பரதாரேஷு – பிறருடைய பார்யைகள் விஷயத்தில், அபும்ஸகா: – ந ம்ஸகர்ளோ, பரிவாதேஷ – மற்றர்க்ளை நிந்திக்கும் விஷயத்தில், மூகா:- மைகளோ. தே – அவர்கள், மே – னெக்கு, அதீவமிகவும், தயிதா: – ப்ரியமானவர்கள்.-தந்மயத்வேந கோவிந்தே யே நரா: ந்யஸ்தசேதஸ: 1 விஷயத்யாகிநஸ்தேஷாம் விஜ்ஞேயம் ச ததந்திகே !!-விஷ்ணு தர்மம்—99-15. யே – எந்த,நரா : – மனிதர்கள் கோவிந்தே- பகவானிடத்தில், தந்மயத்வேக – தந்மயமாய் இருப்பதினாலே (அவன் ஒருவனையே த்யானம் செய்து கொண்டிருப்பதினாலே)ந்யஸ்த சேதஸ: – ஸமர்ப்பிக்கப்பட்ட மனதையுடையவர்களாய், விஷ யத்யாகி : – சப்தாதி விஷயங்களை விட்டவர்களோ, தேஷாம் – அவர்களுக்கு, தத் – அந்தப் பரப்ரஹ்மம், அந்திகே – ஸமீபத் ல் இருப்ப தாக,விஜ்ஞேயம் – அறியத்தக்கது.)(க்ஷகேபிதே யத்விரஹோ திதுஸ்ஸஹ: -ஸ்தோ – 56. தே – உமக்கு, க்ஷணேபி – ஒரு க்ஷணப் பொழுதும், யத்விரஹ: – எவர்களுடைய பிரிவு. அதிதுஸ்ஸஹ: -மிகவும் பொறுக்கமுடியாததோ.)என்றபடி ஸர்வேஸ்வரனுக்கு நிரஸதிய ப்ரீதிஹேதுவாம்,

    ————-

    (20) கைங்கர்யமாவது ஸ்வாமி உகந்த ஏவல்தொழில் செய்கையாகையாலே இது யதாயாஸ்த்ரம் பண்ணினால் உகப்பாம்-என்றது-நித்ய (ரும்)முக்தரும் பகவத் ப்ரீதிஹேதுக்களை நிரபேக்ஷ ஸர்வ விஷயஜ்ஞாநத்தாலே ஸாக்ஷாத்கரித்துக் கைங்கர்யம் பண்ணுமாபோலே யன்றிக்கே பத்த தசையில் கரணஸாபேக்ஷதை உண்
    டாகையாலும், ப்ரத்யக்ஷாதிகளுக்கு நிலமல்லாத விஷயத்தில்-(பித்ரு தேவமநுஷ்யாணாம் வேதசக்ஷ : ஸநாதந: )பாகவதம் பித்ருதேவ மநுஷ்யாணாம்பித்-ருக்கள், தேவதைகள்’ மனிதர்கள் இவர்களுக்கு ஸநாத : – அநாதியான, வேத:- வேதமானது, சக்ஷ : -கண்.)மாநம் ப்ரதீபமிவ காருணிகோ ததாதி-ப்ரதீபமிவ – விளக்கைப்போல, மாநம் – சாஸ்திரத்தை,காரு
    ணிக: – மிகுந்ததயை யுடைய பகவான்,ததாதி – கொடுக்கிறார்)இத்யாதிகளிற்படியே சாஸ்த்ர மொழியக் கண்ணும் கைவிளக்கும் இல்லாமையாலும்,(ய: சாஸ்த்ரவிதி முத்ஸ்ருஜ்ய வர்த்ததே காமகாரத: |ந ஸ ஸித்திமவாப்நோதி ந ஸுகம் ந பராம் கதிம் II)-கீதை 16 -23 ய :- எவன், சாஸ்த்ரவிதிம் – சாஸ்த்ரத்தில் சொல்லப்பட்டிருக்கும் விதியை, உத்ஸருஜ்ய – விட்டுவிட்டு, காம காரத:- தன் இஷ்டப்படி, வர்த்ததே – இருக்கிறானோ, ஸ: – அவன்,
    ஸித்திம் – ஸித்திய்ை, நா அவாப்நோதி – அடைவதில்லை, ஸுகம் ஸுகத்தையும், ந – அடைவதில்லை, பராம்கதிம் – மோக்ஷத்தையும் நா – அடை வதில்லை.

    (அ சாஸ்த்ரமாஸுரம் க்ருத்ஸ்நம்| -கீதார்த்த ஸங்க்ரஹம் —21 அசாஸ்த்ரம் – சாஸ்த்ரத்தில்
    விதிக்கப்படாதது, கருத்ஸ்நம் – எல்லாம ஆஸுரம் – அ ரஸ்வபாவமுடையவர்களுக்குப் பொருத்தமானது-என்றருளிச் செய்தது இங்குத்தை ஸ்வயம் ப்ரயோஜந கைங்கர்யத்திலும் ஸமாந ந்யாயமாகையாலும்,-அறிவிலேனுக்கு அருளாய்‘-திருவாய்– 6-9- 8.-அறியாத பிள்ளைகளோம் ‘-திருப்பாவை — 28.-என்று நிற்க ப்ராப்தமான அவஸ்த்தையிலே ஸ்வாபிமதமாத்ரத்தாலே ஒன்றைக் கைங்கர்யம் என்று செய்தால் இது ஸ்வாமிக்கு அபிமதமாகையிலே நியமம் இல்லாமையாலும்,-லோகே ப்ரியதமாநி ஆத்மநச இஷ்டாநி பாஸ்த்ர அவிருத்தாநி-நித்யம்,லோகே – லோகத்தில், ப்ரியதமாநி – மிகவும் ப்ரியங்
    களாயும், ஆத்ம : – தனக்கும், இஷ்டாநி – இஷ்டங்களாயும் -சாஸ்த்ர அவிருத்தாநி – சாஸ்த்ரத்திற்கு விரோத மில்லாததாகவும் இருக்கும் வஸ்துக்களைக் கொண்டு பகவானுக்கு ஆராதனம் செய்யவேண்டும்.)என்று நித்யத்திலே ஸ்ரீபாஷ்யகாரர் அருளிச் செய்கையாலும்,-(ஸ்வயம் துருசிரே தேபே க்ரியதாம் இதி மாம் வத)என்கிற கட்டளையிலே-(கிம்கரோமி-ஆரண், – ஸ்வயம்து – தர்மே. ருசிரே – அழகான, தேசே- இடத்தில், க்ரியதாம் – செய், இதி – என்று, மாம்- என்னை,வத – சொல்லும,)என்று தாஸன் நிற்க.-இதம் குரு ‘ என்று ஸ்வாமி சொல்லச் செய்யுமது கைங்கர்யமாக வேண்டுகையாலும், செய்த வேள்வியனான ப்ரபந்நனுக்கும் .யாவச் சரீரபாதம் யதாதிகாரம் யதா சாஸ்த்ரம் நடந்தால், இதுவும்-(ப்ரஹர்ஷயிஷ்யாமி)என்கிற ப்ரதாந பல பர்யந்தமாம் என்றபடி..

    —————-

    (21) ‘பகவத் கைங்கர்யமும் பாகவத கைங்கர்யமும் சேர அநுஷ்ட்டிக்க அரிதானபோது பரமபுருஷார்த்த காஷ்ட்டையான பாகவத கைங்கர்யமே உபாதேயதமம்‘ என்றது
    ப்ரணவத்தில் க்ஷித ஸ்வரூபனாகையாலே சதுர்த்தியில் அபிப்ரேதமான பகவத் கைங்கர்யம் ஸ்வரூப ப்ராப்தமாய் நின்றது, ந மஸ்ஸிலே ஸுபபிக்ஷித ஸ்வரூபனாகையாலே பாகவத கைங்கர்யமும் இவனுக்கு ப்ராப்தமாயிருந்தது, இப்படியானால் இரண்டும் சேர அநுஷ்ட்டிக்க வரும்போது சேர அநுஷ்ட்டிக்கவும், இரண்டத்து ஒன்றைவிட வேண்டும் படியான ஆபத் தலையிலே,-தஸ்மாத் விஷ்ணுப்ரஸாதாய வைஷ்ணவாங் பரிதோஷயேத் ப்ரஸாதஸுமுகோ விஷ்ணு: தேநைவ ஸ்யாந் ந ஸம் ய: I|-இதிஹாஸ ஸ முச்சயம -27-27. தஸ்மாத் – ஆகையினால் விஷ்ணுப்ரஸாதாய – பகவானுடைய அனுக்ரஹம் உண்டாவதற்காக,-வைஷ்ணவாங் – வைஷ்ணவர்களை, பரிதோஷயேத் – ஸந்தோஷப் படுத்த வேண்டும், தேநைவ – அதினாலேயே, ப்ரஸாதஸ – முக:-அநுக்ரஹத்தினால் ஸ முகராய், விஷ்ணு: – பகவான், ஸ்யாத்- ஆவார். நஸம்சய:- ஸந்தேஹமில்லை.

    (மம மத்பக்தபக்தேஷ ப்ரீதிரப்யதிகா பவேத் 1 தஸ்மாத் மத்பக்தபக்தாஸ்ச பூஜ யா விஸேஷத: II-பார -ஆச்வ – 116- 23. மம – எனக்கு, மத்பக்தபக்தேஷ என்னுடைய பக்தர்களிடத்தில் ப்ரீதி செய் வர்களிடம், ப்ரீதி: – ப்ரீதியானது, அப்யதிகா – மிக அதிகமாக, பவேத் – உண்டாகும், தஸ்மாத் ஆகையினால், மத்பக்தபக்தா:ச- என்னுடைய பக்தர்களின் பக்தர்களும், விசேஷத: – விசேஷமாக, பூஜரீயா::- பூஜிக்கத்தக்கவர்கள்.-ஆராதநாநாம் ஸர்வேஷாம் விஷ்ணோராராதநம் பரம் 1 தஸ்மாத் பரதரம் ப்ரோக்தம் ததீயாராதநம் பரம் I-பாத்மோ- 29 – 81 – ஸர்வேஷாம் – எல்லா, ஆரதநாநாம் ஆராதநங்களுக்கும், விஷ்ணோ: – விஷ்ணுவினுடைய, ஆராதநம், பரம் – ச்ரேஷ்டம், தஸ்மாத் – அந்த விஷ்ணுவினுடைய ஆராதத்தைக் காட்டிலும், பரம் – உயர்ந்ததான, தீயாராதநம் – பாகவதர்களுடைய ஆராதநம், பரதரம் – மிகவும் சிறந்ததாக, ரோக்தம் சொல்லப்பட்டது.-அநாத்ருதஸ்தம் கேஹீ புருஷம் நாபிநந்ததி 1ததாநர்ச்சித ஸத்பக்தம் பகவார் நாபிநந்ததி ||-சாண்டி- ஸ்ம்ருதி – 4-86. கே – க்ருஹஸ்தன், அநாத்ருத ஸுதம்-தன்னுடைய பிள்ளையை அநதரவு செய்த, புருஷம் – புருஷனைப் பற்றி, நாபிநந்ததி -(எப்படி) ஸந்தோஷிக்கிறதில்லையோ, ததா-அப்படியே, அநர்ச்சிதஸத்பக்தம் – தன்னுடைய பக்தனை ஆராதநம் செய்யாத புருஷனைப்பற்றி, பகவாந்- பகவான், நாபிநந்ததி – ஸந்தோவிக்கிற ல்லை.

    ஸ்வாராதநம் விஹாயாபி ஸ்வபக்தாநர்ச்சயந்தி யே |தேப்ய: ப்ரஸந்நோபகவாந் ஸித்திமிஷ்டாம் ப்ரயச்சதி|-ஸ்வாராதநம் – தன்(பகவா)னுடைய ஆராதநத்தை, விஹா
    யாபி – விட்டுவிட்டாவது, யே – எவர்கள், ஸ்வபக்தாங்-தன்னுடைய பக்தர்களை, அர்ச்சயந்தி- பூஜிக்கிறார்களோ, தேப்ய:- அவர்கள் விஷயத்தில், ப்ரஸந்த அநுக்ரஹத்தை யுடையவனாகிய, பகவாங், இஷ்டாம்- அவர்களுக்கு இஷ்டமான, ஸித்திம் ஸித்தியை, ப்ரயச்சதி- கொடுக்கிறார்.-இத்யாதி ப்ரமாண விலேஷங்களாலும்,
    ‘ஏத்தியிருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சாத்தியிருப்பார் தவம் ‘ -நான்.திருவந்தாதி-19-என்கிற ந்யாயம் ஸ்வயம் ப்ரயோஜந கைங்கர்யத்திலும் ஸமாமாகையாலும், பாகவத கைங்கர்யம் தன்னிலே பகவத் கைங்கர்யத்தைக் கண்டு கருதார்த்தனாய் இருக்க ப்ராப்தம் என்றபடி.

    ————

    (22) ‘ இவை இரண்டிலும் ப்ரதாநம் ஆசார்யகைங்கர்யம் ‘ என்றது-பகவான் பக்கலிலேபோல ஆசார்யன் பக்கலிலும் அநுவர்த்திப்பான் என்று அதிதேசித்தவளவன்றிக்கே-(குரோர் குருதரம் நாஸ்தி குரோரந்யம் ந பாவயேத் ]குரோர் வார்த்தாம் கதாம் சைவ குரோர் நாம ஸதா ஜபேத்!!-(குருரேவ பரம் ப்ரஹ்ம குருரேவ பராகதி: 1குருரேவ பராவித்யா குருரேவ பரம் தநம்| )(குருரேவ பர:காம: குருரேவ பராயணம்-குரோ:- ஆசார்யனைக் காட்டிலும், குருதரம்-பெரிய (உயர்ந்த)வஸ்து, நாஸ்தி – இல்லை.குரோ – ஆசார்யனைக் காட்டிலும், அந்யம்-வேறு ஒருவனை,நபாவயேத் – நினைக்கக் கூடாது, குரோ :- ஆசார்யனுடைய, வார்த்தாம் உபதேச ரூபமான வார்த்தைகளையும், கதாம்சைவ – (அவருடைய) சரித்திரத்தையும் குரோ:, நாம -திருநாமத்தையும், ஸதா-எப்பொழுதும், ஜபேத்- ஜபிக்க வேண்டும்,குருரேவஆசார்யனே, பரம்ரஹ்ம் – பரப்ரஹ்மம், குருரேவ, பரா கதி அடையவேண்டிய உயர்ந்த ப்ரயோஜனம், குருரேவ, பரா வித்யா – உயர்ந்த(மோஷோபயோகமான ) வித்யை, குருரேவ, பரம் – உயர்ந்த
    தநம் – பொருள், குருரேவ, பர – உயர்ந்த,காம:- ஆசைப்படவேண் டிய புருஷார்த்தம், குருரேவ, பராயணம் – ஆச்ரயிக்கப்பட வேண்டிய வஸ்து.–இத்யாதிகளிலே ஆசார்ய கைங்கர்ய ப்ராதாந்யம் ப்ரமிதமாகையாலும், பகவத் பாகவத கைங்கர்யங்களும் ஆசார்யா நுஜ்ஞை
    யால் நடக்கவேண்டுகையாலே ஆசார்யகைங்காயத்தை நிரூபித்துப் பார்த்தால் இது பகவதாஜ்ஞா ஸித்தமாகையாலே பகவத் கைங்கர்யமும் ஆசார்யனுடைய பாகவதத்வ ஸாமாந்யத்தாலே இதுதானே பாகவத கைங்கர்யமுமாய் நிற்கையாலே

    (சக்ஷ ர்கம் யம் குரும் த்யக்த்வா சாஸ்த்ரகம்யம் து ய: ஸ்மரேத் ஹஸ்தஸ்த்தமுதகம் த்யக்த்வா கநஸ்தமபிவாஞ்ச்சதி ||-சக்ஷ ர்கம்யம் – கண்ணுக்கு விஷயமாயுள்ள, குரும்-
    ஆசார்யனை, த்யக்த்வா – விட்டுவிட்டு, சாஸ்த்ரகம்யம் – சாஸ்த்ரத்தினால் அறியப் படுகிற பரமாத்மாவை, ய: – எவன், ஸ்மரேத் – நினைப்பானோ, (அவன்) ஹஸ்தஸ்த்தம்- கையில் இருக்கிற, உதகம்-ஜலத்தை, த்யக்த்வா- விட்டுவிட்டு, கநஸ்த்தம் – மேகத்தில் இருக்
    கும் ஒலத்தை, அபிவஞ்சதி – ஆசைப்படுகிறான். )-ஸுலபம் து குரும் த்யக்த்வா துர்லபம் உபாஸதே|லப்தம் த்யக்த்வா தநம் மூட: குப்தமந்வேதே க்ஷிதெள II-ஸூலபம் – ஸலபனாகிய, குரும் – ஆசார்யனை, த்யக்த்வா- விட்டுவிட்டு, ய: – எவன், துர்பைம் – துர்லபனான பகவானை, உமாஸதே – உபாஸிக்கிறானோ, அந்த மூடன், லப்தம் – கையில் கிடைத்த, தநம் – பணத்தை த்யக்த்வா – விட்டு விட்டு தௌ) இத்யாதிகளிற்படியே ஆசார்ய கைங்கர்யத்தை விட்டு பகவத் கைங்கர்யாதிகளிலே இழியக் கடவனல்லன்.

    கண்ணி நுண் சிறுத்தாம்பின்படியே ஆசார்ய கைங்கர்ய ப்ரதாநனாய் நின்று-திரிதந்தாகிலும் தேவபிரானுடைக்
    கரிய கோலத் திருவுருக்காண்பன் நான்
    பெரிய வண்குருகூர் நகர் நம்பிக்கு ஆள்
    உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே ‘-
    இத்யாதிகளிற் படியே ஆசார்யாபிமதமென்று யதாகாலம் பகவத் பாகவத கைங்கர்யங்களை அநுபவிக்க ப்ராப்தம் என்றபடி.

    ————–

    23-இக் கைங்கர்யபரனுக்குப் பரமைகாந்திகள் உகந்த இடமே உசித ஸ்த்தாநம் ‘ என்றது
    தர்ம ஸீலரா யிருப்பார்க்கு வாஸஸ்த்தாநமாக ஸாஸ்த்ரங்கள் வகுத்த புண்ய தேஸங்கள் கலிகாலர்தி தோஷங்களாலே ம்லேச்சாதி பரிக்ருஹீதங்களாய்-(நாதர்மஜநபூயிஷ்ட்டம்-அதர்மங்களைச்செய்கிற ஜனங்களால் நிறைந்த இடத்தில் வாஸம் செய்யக்கூடாது.).
    இத்யாதிகளிற்படியே பரித்யாஜ்யங்களாகையாலும், புண்ய தே ங்களுக்குச் சொல்லும் சில லக்ஷணங்களுக்கு அவ்யாப்தி அதிவ்யாப்திகள் உண்டாகையாலே இவை ப்ராயிகங்களாகையாலும்,-ஆத்மநஸ்துஷ்டிரேவ ச-ஆத்ம :- தனக்கு, துஷ்டி: ஏவச – ஸந்தோஷமுமான )இத்யாதிகளைப் பார்த்துத் தன் அபிமத மாத்ரத்தாலே ஒரு தே பலத்தை அறுதியிட்டுக் கொள்ளப் பார்த்தால் அது தப்பவும் கூடு மாகையாலும்,

    மேலும்‌ பகவானுக்கோ பாகவதனுக்கோ கைங்கர்யங்கள்‌ செய்வதானால்‌ ஆசார்யனது அநுமதி பெற்றே செய்ய வேண்டும்‌ மேலும்‌ ஆசார்ய கைங்கர்யத்தைப்‌ பற்றி ஆராய்ந்து பார்த்தால்‌ இது எம்பெருமானுடைய கட்டனையாகிய சாஸ்தரங்கனால்‌ விதிக்கப்பட்டதாயுள்ளமை பற்றி ஆசார்ய கைங்கர்யமே பகவானுக்குச்‌ செய்யும்‌. கைங்கர்யமுமாகின்றது. அவனது நியமநத்தின்படி செய்வதுதானே அவனுக்குச்‌ செய்யும கைங்கர்யம்‌! மேலும்‌ ஆசார்யனுக்குச்‌ செய்யும்‌ கைங்கர்யமே பாகவத கைங்கர்யமுமாகி விடுகின்றது. ஆசார்யனும்‌ ஒரு பாகவதன்‌ தானே! இவ்வாறு ஆசார்யனுக்குச்‌ செய்யும்‌ கைங்கர்யமே பகவத்‌ கைங்கர்யம்‌ - பாகவத கைங்கர்யம்‌ என்ற இரண்டு உருவையும்‌ கொள்வதால்‌ இதுவே எல்லாவற்றினும்‌ முக்கியமானதாகும்‌. ஆசார்ய கைங்கர்யத்தை விட்டு பகவத்‌ கைங்கர்யத்தையோ பாகவத கைங்கர்யத்தையோ செய்யக்கூடாது.-சாஸ்தரங்களும்‌ கண்ணுக்கு இலக்காய்‌ மிக எனியனாய்‌  நிற்கும்‌ ஆசார்யனை விட்டுக்‌ கண்ணுக்குப்‌ புலப்படாது சாஸ்தரத்தாலேயே அறிய வேண்டியவனாய்‌ அரியனரம்‌ நிற்கும்‌ எம்பெருமானை விரும்பு மவன்‌ கையில்‌ உள்ள நீரைக்கொட்டி விட்‌டு மழை நீரை எதிர்பார்ப்பவனாகவும்‌ கையில்‌ உள்ள செல்வத்தை உதறிவிட்டுப்‌ பூமியில்‌ மறைந்துள்ள புதையலைத்‌ தேடுமவனாகவும்‌ கூறிப்‌ பழிக்கின்றன. ஸ்ரீமதுரகவிகளும்‌ கண்ணிநுண்‌ சிறுத்தாம்பு என்னும்‌ பிரபந்தத்தில்‌ தமக்கு ஆசார்மனாகிய ஆழ்வாருடைய  கைங்கர்யமே தமக்கு முக்கியமென விளக்கியுள்ளார்‌. மேலும்‌ அதில்‌ தம்‌ ஆசார்யனான ஆழ்வாருடைய' திருவு ள்ளத்துக்கு உகப்பாயிருக்கிற தென்பதற்காகவே எம்பெருமானைத்‌ தாம்‌  ஸேவிப்பதாகக்‌ கூறுகின்றார்‌. அவ்வாறே ஒவ்வொரு சேதநனும்‌ ஆசார்யனுக்குக்‌ கைங்கர்யம்‌ செய்வதையே முக்கியமாகக்‌ கொள்ள வேண்டும்‌. இதைச்‌ செய்ததுயோக எஞ்சிய காலங்களில்‌ ஆசார்யன்‌ திருவுள்ளத்துக்கு உகப்பான செயல்‌ என்று நினைத்து அந்த அந்தக்‌  காலத்துக்கு ஏற்றவாறு பகவானுக்கும்‌ பாரகவதர்களுக்கும்‌  கைங்கர்யம்‌ செய்து ஆநந்தத்தை அநுபவிப் பது சேதநனது கடமையாகும்‌.
    --------------

    23–இக் கைங்கர்ய பரனுக்கு பரமை காந்திகள் உகந்த இடமே உசித ஸ்தானம்.
    தர்மத்தைச்‌ செய்தலையே கடமையாகக்‌ கொண்ட ஸாத்துவிகர்கண்‌ வசிப்பதற்கு. உரிய இடங்களாகச்‌ சில புண்ணியத்தலங்களைச்‌ சாஸ்த்ரங்கள்‌ வகுத்துள்ளன. அனால்‌ இது கலிகாலம்‌. இன்னும்‌ பல குற்றங்கள்‌, நல்ல புண்ணியத்‌ தலங்கனையெல்லாம்‌ ம்லேச்சர்‌ முதலியவர்கள்‌ ஆக்ரமித்துக்‌ 
    கொண்டு விட்டனர்‌. ஆதலால்‌ சாஸ்த்ரங்கள்‌ குறிப்பிட்டதற்காக அவற்றில்‌ போய்‌ வசிக்க முடியுமா? அதலால்‌ அத்தலங்கள்‌  விலக்குதற்கு உரியனவேயாகும்‌-
    மேலும்‌ புண்ணியத்தலத்துக்கு - இலக்கணங்கள்‌ (அடையாளங்கள்‌) நூல்களில்‌ கூறப்பட்டுள்ளன. ஆனால்‌ புண்ணியத்தலங்களென ஏற்றுக்‌ கொண்ட சில தலங்களில்‌ இந்த இலக்கணம்‌ பொருந்தவில்லை. புண்ணியத்‌ தலமாகக்‌ கொள்ளாத  சில இடங்களில்‌ புண்ணியத்‌ தலத்துக்குக்‌ கூறிய இலக்கணம்‌  பொருந்துகின்றது. ஆகவே இலக்கணத்தை வைத்துக்‌ கொண்டு  புண்ணியத்‌ தலத்தை நிச்சயித்துக்‌ கூற முடியாது. பெரும்பாலும்‌  புண்ணியத்‌ தலங்களுக்கு இந்த இலக்கணங்கள்‌ இருக்கக்‌  கூடுமென்ற கருத்தாலேயே இலக்கணம்‌ கூறப்பட்டதாகக்‌ கொள்ள வேண்டும்‌. 
    தன்‌ மனம்‌ தடையின்றி! ஒரு தலத்தை விரும்பிச்‌  செல்வதாலேயே அதைப்‌ புண்ணியத்‌ தலமாகக்‌ கொண்டு  வசிக்கலாமே என்று கூறவும்‌ முடியவில்லை. மானிடராகிய நம்‌ அறிவைக்‌ கொண்டு ஒன்றை முடிவு செய்யப்‌ பார்ப்பதில்‌ தவறுதலும்‌ ஸம்பவிக்கக்‌ கூடுமன்றோ! புண்யமல்லாததையப்‌ 
    புண்ணியத்‌ தலமென்று நாம்‌ முடிவு செய்து விடவும்‌ கூடுமே! மேலும்‌ ஒரு மனிதன்‌ தனியாய்‌ நின்று ஒரு முடிவைச்‌ செய்து விடக்கூடாதென்று சாஸ்தரமும்‌ தடை செய்கின்றதே! 
    இன்னும்‌ சிலரைக்‌ கலந்து கொண்டு அவர்கள்‌ புண்ணியத்‌  தலமெனக்‌ குறிப்பிடுவதை ஏற்றுக்‌ கொள்ளலாமே என்று கூறலாம்‌. அனால்‌ அந்த மணிதர்கள்‌ ரஜேோ குணம்‌ தமேர குணம்‌ 
    உடையராயிருக்கக்‌ கூடும்‌. அதனால்‌ அவர்கள்‌ அறிவு கலங்கித தவறான வழியைக்‌ காட்டவும்‌ கூடும்‌. சில ஸமயங்களில்‌ அவர்களின்‌ கலக்கம்‌ நமக்கு உள்ள தெளிவையும்‌ போக்கி நம்மையும்‌ கலக்கி 
    விடக்கூடும்‌.பின்‌ எவ்வாறுதான்‌ புண்ணியத்தலத்தை நிர்ணயம்‌ செய்வது? இவ்வாறு - மஹான்கள்‌ தேர்ந்தெடுத்து எழுந்தருளியிருக்கும்‌ இடமே நமக்கு வஸிக்க ஏற்றதாகும்‌. எத்தகைய மஹான்கள்‌? ஒருவனுக்கு விசேஷமான ஞானம்‌ ஏற்பட வேண்டுமானால்‌ அவனுக்கு ஸத்துவ குணம்‌ தலையெடுக்க 
    வேண்டும்‌. அவ்வாறு ஸத்துவ குணம்‌ தலையெடுக்க வேண்டும்‌. அவ்வாறு ஸத்துவ குணம்‌ நிரம்பிய பெரியோர்கள்‌ எம்பெருமானையன்றி வேறெருவருக்கும்‌ தங்களை அடியராகக்‌ கருதமாட்டார்கள்‌. ப்ரபத்தியையன்றி வேறோர்‌ உபாயத்தைக்‌ கைக்கொள்ள மாட்டார்கள்‌; மோக்ஷத்தையன்றி வேறொரு 
    பயனையும்‌ நாடமாட்டார்கள்‌. இவ்வாறு நல்ல விவேகம்‌ பெற்ற பரமைகாந்திகள்‌ தங்களுக்குக்‌ கடமையாக ஏற்பட்ட பகவத்‌ கைங்கர்யத்தைச்‌ செய்வதற்கு இதுவே ஏற்ற இடமென்று ஓர்‌ 
    ஆகோ்ஷேபமுமின்றி ஒருமுகமாய்‌ நிச்சயித்துக்‌ கொள்வார்கள்‌. அந்த இடத்தில்‌ மகிழ்ச்சியுடனும்‌ சிரத்தையுடனும்‌ வாஸம்‌ செய்யத்‌ தொடங்குவார்கள்‌. அதுவே புண்யகேகஷேத்ரமாகும்‌. அந்த இடம்‌ 
    சாஸ்தரத்தில்‌ விதித்த ஆர்யாவர்த்தம்‌ முதலிய க்ஷேத்ரங்களில்‌ சேராதிருப்பினும்‌ தோஷமில்லை. இன்னும்‌ புண்ய க்ஷேத்ரங்களுக்குச்‌ சொல்லிய அடையாளங்கள்‌ இல்லாவிடினும்‌ பாதகமில்லை. 
    மேலும்‌ இந்திரியங்களை வென்ற பாகவதன்‌ வஸிக்குமிடமே குருக்ஷேத்ரம்‌ - நைமிசம்‌ - புஷ்கரம்‌ அகிய எல்லா கோ்ஷேத்ரமுமாகுமென்றும்‌, பாகவதர்கள்‌ வஸிக்குமிடத்தில்‌ -எம்பெருமானும்‌ வஸிக்கிறனென்றும்‌, பாகவதர்கள்‌ அரை நிமிஷம்‌ வஸித்தாலும்‌ அந்த இடமே புண்ணியத்‌ தலமாகுமென்றும்‌ இவ்வாறெல்லாம்‌ சாஸ்த்ரங்கள்‌ கூறுகின்றன. ஆதவின்‌ பாகவதர்கள்‌ வஸிக்கும்‌ இடமே எல்லாத்‌ தலங்களிலும்‌ மேம்‌ பட்ட புண்ய க்ஷேத்ரமாகும்‌. ஆகவே வேறு பயனை நாடாது 
    எம்பெருமான்‌ திருவுள்ளம்‌ உகப்பதையே பயனாகக்‌ கொண்டு பாகவத கைங்கர்யம்‌ - பாகவத கைங்கர்யம்‌ - ஆசார்ய கைங்கர்யம்‌ ஆகிய மூவகைக்‌ கைங்கர்யங்களிலும்‌ ஈடுபட்டுள்ள 
    பரமைகாந்தியான ப்ரபந்நன்‌ ஸகல கைங்கர்யங்களையும்‌ செய்வதற்குப்‌ பரங்கான இடம்‌ அதுவேயாகும்‌. அந்த இடத்தின்‌ பருமை. எத்தகைய தடைவரினும்‌ அதைப்‌ போக்கிக்‌ 
    கைங்கர்யத்தை நன்கு நடைபெறச்‌ செய்யும்‌.
    பரமைகாந்தி என்பவன்‌ எத்தகையன்‌? மேம்பட்ட தத்துவம்‌ - மேம்பட்ட உபாயம்‌ - மேம்பட்ட பலன்‌ அகிய மூன்றும்‌ எம்பெருமானே என்ற உறுதியுடன்‌ ப்ரமாணங்கள்‌ கூறுகிறபடி அவனையன்றி வேறொருவனும்‌ அவ்வாறு ஆகமாட்டானென்ற விசேஷ உறுதியுடையவன்‌. பாகவதன்‌ - வைஷ்ணவன்‌ என்ற சொற்களுக்கும்‌ இத்தகைய உறுதியையுடைய பரமைகாந்தியே முக்கியப்‌ யொருளாவான்‌. 
    -------------

    24—இப்படி துல்ய சீலரைக் கிடையாத போது விபரீத சம்சர்க்கம் ஏகாந்த வாச பரிஹார்யம்

    கெட்ட மனிதனிடம்‌ எத்தகைய கல்வி இருப்பினும்‌ அவனுடன்‌  பழகக்‌ கூடாது. பகவத பக்தி இல்லாத. துஷ்‌ டனுடன்‌ ஸஹவாஸம்‌  செய்வதைக்‌ காட்டிலும்‌ தீயின்‌ கொழுந்து நடுவே வஸிப்பது 
    நல்லது என்று ப்ரமாணம்‌ கூறுகின்றது. கெட்டவனுடன்‌ பழகுவது பாம்புடன்‌ ஒரே வீட்டில்‌ வஸிப்பது போன்றது. துஷ்டர்களின்‌  ஸம்பந்தத்தை மிக்க தூரததிலேயே. விலக்க வேண்டும்‌.
    நல்ல ஸாத்துவிகர்களுடன்‌ பழக வேண்டும்‌. நாடு மிகவும்‌ கெட்டிருப்பதால்‌ நல்லவர்கள்‌ கிடைப்ப்து கஷ்டமாயிருக்கலாம்‌. அப்படியானால்‌ ஏகாந்தமான இடத்தை நாடி அதில்‌ வஸிக்க வேண்டும்‌. அங்கு உறுதியான விரதங்கொண்டு உலக சுகங்களில்‌ அதிகமாய்‌ ஈடுபடாமல்‌ பிறரைத்‌ துன்புறுத்தாமல்‌ பரமாதமாவின்‌ தியானத்தில்‌ இருப்பவனுக்கு மோக்ஷம்‌ கிடைய்பது நிச்சயம்‌ என்று சாஸ்த்ரம்‌ கூறுவதன்‌ கருத்தை உணர வேண்டும்‌. நமக்கு எம்பெருமானையன்றி வேறு மனிதர்‌ துணையாக மாட்டாரென்று அறிந்து இயன்றவரை அவர்களிடமிருந்து விலகியிருக்க வேண்டும்‌. 
    எம்பெருமானது ஸங்கல்பத்துக்கு வசப்பட்டிருப்பதை  அநுஸந்தித்துக்‌ கொண்டிருக்க வேண்டும்‌. நம்‌ உயிர்த்‌  துணைவனான எம்பெருமானுடன்‌ பரமபதத்தில்‌ கூடி வாழப்‌  போவதை நினைத்துக்‌ கொண்டேயிருக்க வேண்டும்‌.

    25. இவனுக்குக்‌ கதிசிந்தநாதிகள்‌ சிததஸந்தோஷ  ஹேதுவான காலயாபநம்‌.

    பக்தியோகம்‌ ப்ரஹ்மவித்யை என வழங்கும்‌. அவ்வாறே  ப்ரபத்தியும்‌ ப்ரஹ்மவித்யை எனப்படும்‌. இவை இரண்டுமே மோக்ஷத்துக்குச்‌ சாதனமாகும்‌. பக்தியோகமாகிய ப்ரஹ்ம வித்யையைச்‌ செய்பவனுக்குச்‌ சாஸ்த்ரங்கள்‌ பல அங்கங்களை விதித்துள்ளன.அவற்றுள்‌ சில முக்கியமான அம்சங்களை அடிக்கடி சிந்திக்க வேண்டுமென்றும்‌ இந்தச்‌ சிந்தனையும்‌ பக்தியோகத்துக்கு 
    விசேஷமான அங்கமாகுமென்றும்‌ சாஸ்த்ரம்‌ கூறுகின்றது. அந்த அம்சங்களாவ - (1) பக்தியோகத்தைத்‌ தொடங்குமுன்‌ உள்ள பாபங்கள்‌ ஒழிந்துவிடுதலும்‌ பிறகு தெரியாமல்‌ செய்யும்‌ பாபங்கள்‌ ஒட்டாமையும்‌. (2) சரீரத்தினின்று ஜீவன்‌ வெளியேறும்‌ முறை. (3) முக்தி பெறும்‌ போது அவனுடைய புண்ய பாபங்கள்‌ கழிந்து புண்யங்கள்‌ அவனுடைய நண்பர்களிடமும்‌ பாபங்கள்‌ அவன்‌ 
    பகைவர்களி டமும்‌ புகுதல்‌. (4) அக்நி முதலிய தேவர்கள்‌ வழி நடத்திக்‌ கொண்டு செல்லும்‌ முறை (5) மோக்ஷம்‌ சென்றபின்‌ பெறப்போகும்‌ அநுபவாநந்தம்‌ என்பன. இவ்வம்சங்களைப்‌ பக்தியோகம்‌ செய்பவன்‌ அடிக்கடி சிந்தித்தேயாக வேண்டும்‌. இதைச்‌ செய்யாவிடின்‌ அங்கங்கள்‌ நிறைவேறாததுடன்‌ 
    அங்யொன பக்தி யோகமும்‌ நிறைவேறாது போய்விடும்‌.
    ப்ரபத்தியும்‌ ஒரு ப்ரஹ்ம வித்யையாதலால்‌ இதைச்‌  செய்பவனும்‌ ழே கூறிய சிந்தனையை ப்ரபத்திக்கு அங்கமாகச்‌  செய்தாக வேண்டும்‌ எண்று ஊஹிக்கக்‌ கூடும்‌. உண்மை நிலை 
    வேறு. ப்ரபத்திக்கு உரிய அங்கங்களைக்‌ கூறுமிடத்தில்‌ இந்தச்‌  சிந்தனையை விசேஷ அங்கமாகக்‌ கூறவில்லை. ஆநுகூல்ய  ஸங்கல்பம்‌ முதலிய ஐந்து அங்கங்களைத்‌ தான்‌ 
    வெளிப்படையாய்ச்‌ சாஸ்த்ரம்‌ கூறியுள்ளது. இவற்றுடன்‌, தத்துவங்களை அறிந்து மோக்ஷத்தை மட்டுமே விரும்பி ப்ரபத்தி  செய்பவனுக்கு மற்றொன்றையும்‌ அங்கமாக விதித்துள்ளது.
    அதாவது - தான்‌ ப்ரபத்தியை ஸ்வதந்தரமாகச்‌ செய்வதான எண்ணம்‌ - தன்‌ பயனுக்காகச்‌ செய்வதான எண்ணம்‌ முதலியவற்றை விடுகை. இதுவும்‌ மோக்ஷத்துக்காகச்‌ செய்யும்‌ ப்ர பத்திக்கு அங்கமாகும்‌. இவற்றைத்‌ தவிர ப்ரபத்திக்கு வேறு அங்கமே இடையாது. ப்ரபத்தி வேறு எதையுமே எதிர்பார்க்காது 
    என்று கூறும்‌ ப்ரமாணத்துக்குக்‌ கீழே குறிப்பிட்ட ஐந்து அங்கங்களையன்றி வேறு அங்கங்களை எதிர்பாராது என்றே கருத்துக்‌ கூறியாக வேண்டும்‌. இன்னும்‌ சில அங்கங்களைச்‌ சேர்ததுக கொண்டு இந்த ப்ரமாணத்தைக்‌ குறுக்கிக்‌ கொள்ள வேண்டிய அவசியமும்‌ இல்லை. ஆகவே &ழ்க்‌ கூறிய ஐந்து 
    அம்சங்களின்‌ சிந்தனை ப்ரபத்திக்கு அங்கமாகாது. 
    அப்படி அவற்றால்‌ ப்ரபத்தி நிறைவேற உதவி ஒன்றும்‌ இல்லாவிடின்‌ அவற்றின்‌ நினைவுதான்‌ எதற்காக? என்று கேட்கலாம்‌. வரப்போகிற ஆநந்தங்களை இப்பொழுது இங்கு நினைத்துக கொள்வதால்‌ உள்ளத்துக்கு மகிழ்ச்சியன்றோ ஏற்படுகின்றது! அது தகுந்த முறையில்‌ நல்ல பொழுது 
    பயோக்காகவு மன்றோ இருக்கும்‌! உலகில்‌ தன்‌ நாயகனைப்‌ பிரிந்து நிற்கும்‌ ஒரு தர்மபத்நி தூரதேசத்தினின்று திரும்பி) வரவிருக்கும்‌ நாயகனை நினைந்து கொண்டு மகிழ்ந்து இன்பமாய்ப்‌ பொழுது போக்குவதைக்‌ காண்கின்றோமே! அவ்வாறே இங்கும்‌. ஆழ்வார்‌ ஸ.்ரீவைகுண டத்தை ஸேவிப்பதற்குத்‌ தமது உள்ளம்‌ இரவு பகலென்ற வேற்றுமையன்றி எப்பொழுதும்‌ அதையே 
    சிந்திப்பதாகக்‌ கூறுகின்றார்‌. 
    இந்தச்‌ சிந்தனைகளெல்லாம்‌ ப்ரபத்திக்கு அங்கமாக மாட்டா என்பது உண்மைதான்‌. அதற்காக அவை வேண்டாமென்று புறக்கணித்து விட முடியுமா? நரம்‌ புறக்கணிக்க முயன்றாலும்‌ விலக்க முடியாதே! நமக்கென்று ஏற்பட்ட மோக்ஷ£நு.பவத்தில்‌ மனத்துக்கு ஏற்பட்ட ஈடுபாட்டின்‌ மிகுதியாலன்றோ 
    அச்சிந்தனைகள்‌ தாமாகவே வருகின்றன! த்வயத்தை அர்த்தத்துடன்‌ எப்பொழுதும்‌ அநுஸந்திக்க வேண்டுமென்றும்‌, ஸ்ரீரங்கம்‌ முதலிய திவ்ய தேசங்களில்‌ சரீரம்‌ கழியுமளவும்‌ வஸிக்க வேண்டுமென்றும்‌, பகவதார ரதநம்‌ செய்து கொண்டே நாள்களைக்‌ கழிக்க வேண்டுமென்றும்‌ ப்ரமாணங்கள்‌ கூறுகின்றனவே! இவை எல்லாம்‌ ப்ரபத்திக்கு அங்கமா? அல்லவே! எதற்காக இவையெல்லாம்‌? என்று கேட்க முடியுமா? இவற்றிலெல்லாம்‌ ஆநந்தமான பொழுதுபயேோக்கையன்றேர காண்கின்றோம்‌! அசோக வனத்‌; சிறையிருந்த பிராட்டி தண்‌ உள்ளததாலேயே தூரத்திலிரு பெருமாளுக்கு அருகே செல்லப்‌ பாரித்ததையும்‌ அருகில்‌ அரக்கியரையேர பழுத்துக்‌ குலுங்குகின்ற கணி. முதலியவற்றையேோ பாராமல்‌ இராமனையே சிந்தித்‌; தேறுதலுற்றதையும்‌ இங்கு உவமானமாக அநுஸந்திக்கலாம்‌

    26. சாதக விருததியான இவனுக்கு அந்திம ப்ரத்யயம் ஸ்வ யத்‌ந ஸாத்‌யமன்று. 
    வராஹப்பெருமா பிராட்டிக்கு உபதேசித்த சரம சுலோகத்தில்‌ கூறியதாவது - சரீர இந்திரியம்‌ முதலியன நல்ல நிலையில்‌ இருக்கும்பேோ ப்ரபத்தியைச்‌ செய்தவனுக்கு மரண காலத்தில்‌ அவன முயற்சியின்றியே என்னைப்‌ பற்றிய நினைவு வரும்படி நாே செய்து மோக்ஷத்திற்கு அழைத்துச்‌ செல்வேன்‌ என்று. சரஸ்த்ரமு ப்ரபந்நன்‌ புண்ணியத்‌ தலத்திலோ இழிவான இடத்திலோ நல்‌ 
    நினைவு இன்றி மரணமடைந்தாலும்‌ மோக்ஷத்தை அடைகின்றா என்று கூறுகின்றது. 
    
    ஸ்ரீ சரணாகதி கதயததிலும்‌ ஸ்ரீ பாஷ்யகாரர்‌ எம்பெருமா வாக்யமாக அருளிச்‌ செய்யும்போது ப்ரபந்நன்‌ மரண காலத்தி தன்‌ ஸங்கல்பத்தால்‌ பூர்ணமான ஞானத்தோடு இருப்பானென்று முந்திய நல்ல நினைவுகள்‌ பழக்கம்‌ எல்லா மாறாமல்‌ இருக்கயெறுவானன்றும்‌ விளக்கியுள்ளார்‌. பெரியாழ்வாரும்‌ தம்‌ மரண  வேதனை ஸமயத்தில்‌ எம்பெருமானைப்‌ பற்றிய நினைவு வராமற்யோகுமென்றும்‌ அதற்காக இப்பொழுதே அவனை அநுஸந்தித்து விடுவதாயும்‌ அருளிச்‌ செய்துள்ளார்‌. 
    இவற்றினாலெல்லாம்‌ நாம்‌ அறிந்து கொள்வது யாது? 
    பரபந்நராகிய நாம்‌ எம்பெருமானிடம்‌ பொறுப்பை முன்பே ஸமர்ப்பித்து விட்டபடியால்‌ மோக்ஷம்‌ பெறும்‌ விஷயத்தில்‌ பொறுபப்பின்றிக்‌ கவலையின்றி இருக்கன்றோமே! அவ்வாறே மரண காலத்தில்‌ இறுதி நினைவு நல்லதாய்‌ வரவேண்டுமே என்ற கவலையும்‌ இல்லாதிருப்போம்‌. எம்பெருமான்‌ திருவருளால்‌ நல்ல நினைவு தானாகவே அவசியம்‌ வரும்‌. 
    பக்தியோகம்‌ செய்பவர்கள்‌ மட்டுமே மரணகாலத்தில்‌ மிக்க முயற்சி கொண்டு எம்பெருமானை உள்ளத்தில்‌ இருத்திக்‌ கொண்டேயோக வேண்டும்‌ என்ற நிர்ப்பந்தம்‌ உண்டு. ப்ரபததியைச்‌ செய்தவருக்கு இந்த நிர்ப்பந்தம்‌ கிடையாதே! ப்ரபந்நன்‌ ப்ரபத்திக்குப்‌ பின்‌ மரணம்‌ வரையில்‌ இங்கு இருக்க வேண்டிய முறை என்ன? மழை நீரையே எதிர்பார்த்து அண்ணாந்து நிற்கும்‌ சாதகப்பறவை போல்‌ மோக்ஷம்‌ பெறுதற்குக்‌ கண்ணனாகிய காளமேகத்தின்‌ கருணையாகிய இனிய நீரை 
    எதிர்பார்த்திருக்க வேண்டியது ஒன்றே இவனுக்கு உரிய கடமையாகும்‌. 
    செய்ய வேண்டியன வருமாறு - ஸாததுவிகர்களான யெரியோர்களின்‌ திருவுள்ளம்‌ உகக்கச செய்ய வேண்டும்‌. ஸாதுக்களின்‌ செய்கையைப்‌ பின்பற்றி நடக்க வேண்டும்‌. 
    ப்ரஹ்மவித்துக்களிடம்‌ அபசாரம்‌ செய்வதற்கு அஞ்ச வேண்டும்‌. 
    அறம்‌ - பொருள்‌ - இன்பம்‌ அகியவற்றிலேயே ஈடுபட்டு . நிற்பவர்கனைத்‌ துரும்பாகக்‌ கருதிப்‌ புறக்கணிக்க வேண்டும்‌. 
    எப்பொழுதும்‌ சேஷியாய்‌ எல்லாவற்றையும்‌ பொறுப்பவனாயுள்ள சீரிய: பதியிடம்‌ பொறுப்பையெல்லாம்‌ ஸமர்ப்பித்துவிட்டுச சாதகப்‌ பறவை போல்‌ நின்று க்ஷேமத்தையடைய வேண்டும்‌. 

    27—இப்படி க்ஷண க்ருத்யமான ஆத்ம சமர்ப்பன யாகத்துக்கு பகவத் சங்கல்ப சாத்தியமான தேக அவசானம் அவப்ரதம்

    ஆத்மாவை எம்பெருமானிடம்‌ ஸமர்ப்பிததலாகிய ப்ரபத்தியை ஒரு வேள்வியாக உபநிடதம்‌ விதிக்கின்றது.ஆத்மாவே ஒரு ஹவிஸ்ஸாகும்‌. அதை எம்பெருமானிடம்‌ ஸமர்ப்பிப்பதே ஒரு வேள்வியாகும்‌. இது ஒரே க்ஷணத்தில்‌ செய்யக்‌ கூடியதே. இந்த ப்ரபத்தியாகிய வேள்வியைச்‌ 
    செய்தவனுக்கு இச்‌ சரீரம்‌ கழிவதை அவப்ருதமென்கிறது உபநிடதம்‌. ஒவ்வொரு யாகத்திற்கும்‌ முடிவுக்குப்‌ பிறகு செய்ய வேண்டியது அவப்ருத ஸ்நாநம்‌ எனப்படும்‌. அத்துடன்‌ யாகம்‌ பூர்த்தியாகும்‌. அவ்வாறே ப்ரபத்தியாகிய வேள்விக்குப்‌ பிறகு நேரும்‌ மரணம்‌ பூர்த்தியாகிய அவப்ருதமாகும்‌.
    இங்கு ஒரு கேள்வி எழலாம்‌. மரணத்தை அவப்கருதமென்று  கூறுவதாயின்‌ வேள்வியின்‌ அவப்ருத ஸ்நாநம்‌ மனிதம்‌ செய்ய வேண்டியிருப்பது போல்‌ மரணமும்‌ மனிதன்‌ செய்ய வேண்டியதாகவன்றோ ஏற்படும்‌! மரணத்தை மனிதன்‌ எவ்வாறு செய்ய முடியும்‌? மரணம்‌ அவரவர்‌ கர்மத்துக்கு ஏற்றவாறு ஏதோ ஒரு காலத்திலோ பகவானுடைய ஸங்கல்பத்தால்‌ மட்டுமே தானே வரக்கூடியதன்றோ! இதை மனிதன்‌ செய்ய வேண்டியதான அவப்ருதமாக எவ்வாறு கூற முடியும்‌? என்பது. 
    ஒருகால்‌ மரணத்தை அவப்ருதமாக மனத்தில்‌ நினைத்துக்‌ கொள்ள வேண்டும்‌ என்று விதிப்பதாய்க்‌ கூறிவிடலாமா? இதுவும்‌ யொருந்தாதே! அவன்‌ ஸங்கல்பத்தாலே தானே வரக்கூடிய மரணத்தை அதற்கு முரண்பாடாக மனிதன்‌ செய்ய வேண்டிய அவப்ருதமாக எப்படி நினைத்துக்‌ கொள்ள முடியும்‌? ப்ர பந்நர்கள்‌ மரணத்துக்கு அஞ்சாமல்‌ பிரியமான விருந்தாளியை வரவேற்பது யோல்‌ எதிர்பார்ப்பதாக ப்ரமாணம்‌ கூறுவதால்‌ மரணம்‌ தானே வருவதென்று தெரிகின்றதே! பின்‌ மரணத்தை அவப்ருதமாகக்‌ 
    கூறியதன்‌ கருத்துயாதென்று பார்க்க வேண்டும்‌. 
    அது வருமாறு - உபநிடதம்‌ ந்யாஸ வித்யை என்னும்‌ பர பத்தியை விதிக்கும்‌ இடங்களில்‌ அத்மாவை ஸமர்ப்பித்து ப்ரபத்தி செய்தலை ஒரு வேள்வியாகவே பேசியுள்ளது. மற்ற ப்ரமாணங்களும்‌ அந்த ப்ரபத்தியை அதற்கு ஏற்பட்ட அங்கங்களுடன்‌ ஒரே முறை செய்ய வேண்டுமென்று கூறுகின்றன. 
    உபநிடதத்தில்‌ ப்ரபத்தியை விதித்துள்ள பகுதிக்குப்‌ பின்பகுதி பரபந்நன்‌ செய்ய வேண்டிய காரியங்கள்‌ அனைத்தும்‌ தாமே நன்கு நிறைவேறி விட்டனவாகும்‌ என்று புகழ்கன்றது. இந்தப்‌ புகழ்ச்சி எந்த அம்சத்தைக்‌ காட்டுகின்றது? என்று ஆராய்ந்தால்‌ முற்பகுதியில்‌ கூறிய ப்ரபத்தியைச்‌ செய்தவன்‌ அதன்‌ பலனுக்காக-இனிச்‌ செய்ய வேண்டிய எஞ்சிய செயல்‌ எதுவும்‌ இல்லையென்பதையே காட்டுகின்றது. ஆகவே மரணத்தை அவப்ருதமென்று கூறியதன்‌ தாற்பரியம்‌ இந்த ப்ரபத்தியாகிய யாகத்துக்கு வேறோர்‌ அவப்ருதம்‌ கிடையாதென்பதும்‌ சரீரம்‌ கழிந்தவுடனேயே ஸரீ வைகுண்டமென்னும்‌ திவ்யலோகத்தை 
    அடைந்துவிடலாமேன்‌ பதுவுமேயாகும்‌. 

    28—சதாசார்ய பரிக்ராகத்திற்கு முன்புள்ள அநாதி காலம் எல்லாம் ஒரு காள ராத்திரி

    சேதநன்‌ இதுவரை எத்தனை பிறவிகளை எடுத்துள்ளான்‌ என்பதைக்‌ கூறமுடியுமா? முடியாது. மோக்ஷம்‌ பெறும்‌ வரை இவனுடைய கர்மங்களால்‌ ப்ரக்ருதி என்னும்‌ திரை இவனுக்கு நல்ல விஷயம்‌ புலப்படாமல்‌ மறைத்துக்‌ கொண்டேயிருக்கின்றது. இந்த ப்ரக்ருதி என்பது யாது? ஸத்துவம்‌ - ரஜஸ்‌ - தமஸ்‌ என்னும்‌ மூன்று  குணங்களையுடைய ஒரு வஸ்து. இது சேதநனுக்கு உள்ள அறிவ பயன்படாதபடி ஒரு திரையாய்‌ நின்று மறைத்து விடுகின்றது. 
    விதையினால்‌ முனை உண்டாகின்றது. முளையினால்‌ விதை உண்டாகின்றது. எதற்கு எது காரணம்‌? எது முதலில்‌ வந்தது? விடை கூறமுடியூமா? காரணம்‌ கண்டுபிடிக்க முடியாமல்‌ அநாதியாய்‌ 
    வருகின்றது இந்த முறை. அவவாறே சேதநனுக்குக்‌ கர்மத்தால்‌ அஜ்ஞாநம்‌ வருகின்றது - அஜ்ஞாநுதீதால்‌ கர்மங்களைச்‌ செய்கின்றான்‌. எதற்கு எது காரணம்‌ என்று கூறமுடியாமல்‌ 
    அநாதியாய்க்‌ கர்மமும்‌ அஜ்ஞாநமும்‌ மாறி மாறித தொடர்ந்து வருகின்றது. சேதநன்‌ செய்கிற அபசாரத்துக்கு அளவில்லை. ஆற்று வெள்ளம்‌ தெடர்ந்து வருவதுபோல்‌ சேதநன்‌ செய்யும்‌ 
    அபசாரங்களும்‌ தொடர்ந்தே நடைபெறுகின்றன. ஒரு நீண்ட சங்கிலித்‌ தொடரில்‌ ஒரு வளையத்தில்‌ மற்றொரு வளையமாகக்‌ கோத்துக்‌ கொண்டு தொடருவதுயோல்‌ ஓர்‌ அபசாரத்தின்‌ முடிவில்‌ 
    மற்றோர்‌ அபசாரமாகச்‌ செய்து கொண்டே போகின்றான்‌ சேதநன்‌.
    இவன்‌ இருக்கும்‌ இடமோ அஞ்ஞானத்தையே விளைவிக்கும்‌ பெரிய நிலமாகும்‌. அதில்‌ அகப்பட்டுத்‌ தவிக்கும்‌ இவனுக்குத திருமந்திரம்‌ - தவயம்‌ - சரம சுலோகம்‌ ஆகிய ரஹஸ்யங்களையோ 
    அவற்றின்‌ பொருளையோ அறியும்‌ வாய்ப்பு ஏது? ஆகவே தன்‌ ஸ்வரூபத்தை எவ்வாறு அறிய முடியும்‌? தன்‌ அதமா தன்னை அறு வதற்கு வேறொரு ஞானத்தை எதிர்பாராமல்‌ ஸ்வயம்ப்ரகாசமாய்‌ அதாவது தானே ?நான்‌ நான்‌” என்று தோன்றிக்‌ கொண்டேடயிருக்கின்றதே! இந்த ஆத.மாவைப்‌ பற்றியுள்ள அம்சங்களை அறிகன்றானா? அதுவுமில்லை. தன்‌ அதமாவைப்‌ பற்றியே அறியமுடியாத இவன்‌ பரமாதமாவை எவ்வாறு அறிவான்‌? எல்லாக்‌ காலங்களிலும்‌ எல்லாவிடததிலும்‌ ஒர்‌ இடமும்‌ விடாது பரந்து விபுவாய்‌ நிற்கும்‌ எம்பெருமானாகிய அழியாத ஒரு சேமநிதி இவனிடமும்‌ அந்தர்யாமியாய்‌ 
    இருக்கின்றதே! எப்பொழுதும்‌ அருகில்‌ உள்ள இதை அறிய முடிகின்றதா இவனால்‌? நல்ல அறிவைப்‌ பெறுவதற்குச்‌ சிறிது முயற்சி கூட இவனுக்கு இல்லையே! அகவே அநாதியான ஸம்ஸார ஸம்பந்தததால்‌ உறங்கிக்‌ கொண்டு கிடக்கும்‌ இவனுக்கு அநாதியான காலமெல்லாம்‌ பயங்கரமான 
    காளராதரியாகவல்லவோ கழிந்துள்ளன! 
    இவ்வாறு அஞ்ஞானவிருளில்‌ மூழ்கிக்‌ கிடக்கும்‌ இவனுக்கு  ஏதோ ஒரு ஸாக்ருத விசேஷத்தால்‌ இவன்‌ ஞானமெனும்‌ பகலைக்‌ காண ஒரு வழி ஏற்படுகின்றது. ஒரு சிறந்த அசார்யன்‌ வந்து இவனை ஏற்றுக்‌ கொள்கின்றான்‌. இது இவன்‌ பிறகு காணப்போகும்‌ பெரும்‌ பகலுக்கு அருணோதயம்‌ போலாகின்றது. 
    அந்த ஆசார்யன்‌ இவனது அஞ்ஞானவிருளைப்‌ போக்க முற்படுகின்றான்‌; சாஸ்த்ரார்த்தங்களையெல்லம்‌ ஒன்று திரட்டி இவனுக்கு உபதேசிக்கின்றான்‌; இவனை நல்ல ஆசாரத்தில்‌ நிலைநிற்கும்படி செய்கின்றான்‌; தானும்‌ அநுஷ்டித்துக்‌ காட்‌ டுகின்றான்‌; ' இவனுடைய அஞ்ஞானவிருளையெல்லாம்‌ ஒழிக்க வல்ல ஞானமாகிய ஒளிவிளக்கைத்‌ தருகின்றான்‌. -இவவாது நல்வழிகாட்டி ஒப்பற்ற மஹோபகாரம்‌ செய்த ஆசார்யன்‌ விஷயத்திலே இவன்‌ எப்படி நடந்து கொள்ள வேண்டும்‌? அவன்‌ செய்த உதவிக்கு இவண்‌ எதாவது கைம்மாறு காணமுடியுமா? இவனுக்கு மேம்பட்ட தேவர்களுக்குமே 
    காணமுடியாதே! ஆதலின்‌ இவன்‌ தன்னை ஆசார்யன்‌ விஷயத்தில்‌ எந்நாளும்‌ கடன்ப ட்டவனாகக்‌ கருத வேண்டும்‌. இந்த உணர்ச்சியை எந்நாளும்‌ உள்ளத்துக்‌ கொண்டு இந்த ஸம்ஸார லோகத்தில்‌ மட்‌டுமன்றி ஸ்ரீவைகுண்டம்‌ சென்றாலும்‌ இந்த ஆசார்யன்‌ திருவடிகளே தனக்குத்‌ தஞ்சம்‌ என்ற உறுதியுடன்‌ இருப்பதுவே இவன்‌ கடமையாகும்‌. 

    29—பின்பு தேச அவசனத்து அளவும் நல் விடிவு

    பலன்பெற முக்கிய காரணம்‌ ஆசார்யன்‌ சிஷ்யனை ஏற்றுக்‌ கொள்ளுதல்‌. ஆசார்யன்‌ ஏற்றுக்‌ கொண்டவடனேயே மோக்ஷம்‌ வந்து விடுனெறதா? இல்லை. சேதநன்‌ ப்ரபத்தி செய்யும்போது 
    உடனே மோக்ஷத்தைக்‌ கேட்கவில்லையே! இச்சரீர முடிவில்‌ மோக்ஷம்‌ வந்தால்‌ போதுமென்றுதானே கேட்டு பிரபத்தி செய்கின்றான்‌. அதுவரையில்‌ இந்தச்‌ சரீரமாகிய சிறைக்கூடத்தில்‌ இவன்‌ இருந்துதானே தீர வேண்டும்‌! இந்தச்‌ சிறைக்‌ கூடத்துக்குத்‌ தூண்கள்‌ யாவை? சரீரத்தில்‌ உள்ள எலும்புகள்தாம்‌. இந்தச்‌ சேதநன்‌ அசார்யனருனால்‌ ஞானம்‌ யெற்றிருப்பினும்‌ அஞ்ஞான இருள்‌ கலவாது நடக்க முடிகின்றதா? 
    இச்சரீரம்‌ உள்ளவரையில்‌ பலன்‌ கொடுக்கத்‌ தொடங்கிய கர்மங்களையும்‌ அவற்றால்‌ வரும்‌ பலன்களையும்‌ ப்ர பந்நன்‌ ஏற்றுக கொண்டுதானே இருக்கின்றான்‌. ஆதவின்‌ அக்கர்மங்களின்‌ 
    விளைவாகச்‌ சிறிதளவாவது அஞ்ஞானவிருள்‌ கலந்துதான்‌ வாழ்க்கை நடத்த முடியும்‌. அதனால்‌ பெருந்தீ ங்கு ஒன்றும்‌ வந்துவிடாது, சிறந்த ஆசார்யனுடைய அநுக்ரஹத்தையன்றோ பெற்றிருக்கின்றான்‌! அதன்‌ வலிமையால்‌ இவனுக்கு ஞானமும்‌ வைராக்யமும்‌ பக்தியும்‌ பூ மலர்வது போல்‌ நிச்சயமாய்‌ மலரும்‌. இதனால்‌ வரும்‌ மகிழ்ச்சியையும்‌ அநுபவித்துக்‌ கொண்டிருப்பான்‌. 
    இந்த நிலையில்‌ இவனது விவேகம்‌ இவனைத தட்‌டியெழுப்புகின்றது. ப்ரக்ருதி பல சிற்றின்பங்களைக்‌ காட்டி இதுவரை தன்னில்மயங்கிப்‌ படுத்திருக்கும்படி செய்திருந்தது - இப்பொவுதுஅவ்வுறக்கத்தினின்று விழித்துக்‌ கொள்கின்றான்‌. எம்பெருமானை அறிவதிலோ காண்பதிலோ அநுபவிப் பதிலோ 
    சிறிதும்‌ ஐயமின்றி நிலையான மனவுறுதியோடு நிற்கின்றான்‌. 
    உலக சுகங்களை உதறித்‌ தள்ளுகின்றான்‌. இச்சரீர முடிவில்‌ கார்மங்கள்‌ முதலிய எல்லாப்‌ பொல்லாங்குகளும்‌ நீங்கி எல்லையற்று பேரின்பமாகிய மோக்ஷம்‌ வரப்போவதை நினைத்துக்‌ கொண்டு 
    இந்திரியங்களையெல்லாம்‌ எம்பெருமானிடமே ஈடுபடுத்திக்‌ கொண்டு இருக்க வேண்டியது ப்ரபந்நனது கடமையாகும்‌. ஆகவே இச்சீ ரம்‌ கழியுமளவும்‌ நல்ல விடியற்‌ காலப்பொழுதாகவே இருக்கும்‌.

    30—மேல் முழுக்க ஸ்வ ச்சந்த கைங்கர்ய மஹோத்சவ திவசம்

    முன்பு சேதநன்‌ செய்த ப்ரபததியாலே இவனைக கைவிடாமல்‌ காக்கப்பட வேண்டிய வஸ்துவாக எம்பெருமான்‌ ஏற்றுக்‌ கொண்டு விட்டான்‌. மோக்ஷம்‌ பெற ஆசைப்பட்டுத தாணே -சரணாகதி செய்தான்‌! ஆகவே செய்ய வேண்டிய கடமையை௫செய்து முடித்தவனாகி விட்டான்‌. உலகில்‌ ஒரு சுரங்கத்தினின்று ஒரு பெரிய இரத்தினத்தை எடுக்கும்போது சுற்றிலும்‌ மண்‌ பற்றுப்‌ பூசிக்கொண்டு ஒளி புலப்படாதிருக்கும்‌. மண்பற்றைக கழற்றிக்‌ கழுவி விட்டால்‌ அந்த இரத்தினத்தின்‌ ஒளி! எங்கும்‌ பரவும்‌. அவ்வாறே சுரங்கத்தினின்று எடுத்த இரத்தினம்‌ போல்‌ உள்ளான்‌ ப்ரக்ருதி ஸ.ம்பந்தத்தோடு கூடிய இந்தச்‌ சேதநன்‌. இவனுக்கு இச்சரீரம்‌ கழியுமளவும்‌ ஸ்தூலமான ப்ரக்ருதி ஸம்பந்தம்‌ உண்டு. 
    இவன்‌ சரீரமே ப்ரக்ருதியால்‌ ஆனதுதானே! சரீரம்‌ கழிந்து பரமபதத்துக்குச்‌ செல்லும்‌ நிலையில்‌ விரஜாநதிக்குப்‌ யோகும்‌ வரை ஸூ்ஷ்ம்மான சரீரத்தின்‌ வடிவில்‌ ப்ரக்ருதி ஒட்டிக்‌ கொண்டேயிருக்கும்‌. இந்த ஸ்தூல - ஸகிக்ஷூமமான இரண்டு ஸம்பந்தத்தையும்‌ எம்பெருமான்‌ கழிப்பது இரததினத்தின்‌ 
    மண்பற்றைக்‌ கழற்றுவது யோலாகும்‌. 
    பின்‌ இவனுடைய ஞானம்‌ எல்லாவற்றையும்‌ அறியக்கூடியதாய்‌ மலர்ச்சி பெற்றுவிவிடும்படி செய்கின்றான்‌ எம்பெருமான்‌. இது இரத்தினம்‌ இயற்கையொளியைப்‌ புலப்படுததும்படி எம்பெருமான்‌ செய்வது போன்றதாகும்‌. திருமார்பில்‌ எப்பொழுதும்‌ அணிந்துள்ள கெளஸ்துப ரத்தம்‌ எப்படி எம்பெருமானுக்கு மகிழ்ச்சியை விளைவிக்கின்றதோ, அவ்வாறே அதன்‌ அம்சமான ஜீவனும்‌ அவனுக்கு மகிழ்ச்சியை வினைவிப்பான்‌. ச்ரிய:பதியான எம்பெருமான்‌ திருவடிகளில்‌ ஸ்ரீவைகுண்டத்தில்‌ எல்லா இடத்திலும்‌ எந்நாளும்‌ எந்த நிலையிலும்‌ எல்லாக்‌ கைங்கர்யங்களையும்‌ செய்து கொண்டிருப்பான்‌. 
    எம்பெருமானுக்கு, இன்ன இடத்தில்தான்‌ இருப்பான்‌, இன்ன ஸமயத்தில்தான்‌ இருப்பான்‌, இன்ன வஸ்துவாகததான்‌ இருப்பான்‌ என்ற வரையறை எவ்வாறு இல்லையோ, அவ்வாறே சாஸ்த்ரங்களாலும்‌ ப்ரமாணங்களாலும்‌ காட்டப்பட்டுச்‌ சேதநன்‌ மோக்ஷத்தில்‌ செய்யும்‌ கைங்கர்யத்துக்கும்‌ வரையறை கிடையாது. இவ்வாறு பரமபதததில்‌ கைங்கர்யம்‌ செய்வதே ஒரு மஹோத்ஸவமாகும்‌. 
    இந்த உதஸவத்தைத்‌ தரக்‌ காரணமாயுள்ளவன்‌ யாவன்‌? அவவெம்பெருமானே. உண்மையான அதமஸ்வரூபம்‌ அப்பொழுதே தோன்றும்‌. அது தோன்றுவதே ஒரு முறையே விடிந்து வந்த தொடர்ந்து நிற்கும்‌ நற்பகலாகும்‌. இந்தப்‌ பகலுக்குப்‌ பிறகு மாலைப்பொழுது வரவே வராது. இந்த நற்பகல்‌ வரக்காரணம்‌ யார்‌? அவ்வெம்பெருமானே. உலகில்‌ பகற்பொழுது  வரக்‌ காரணம்‌ யார்‌? சூரியன்தானே! இங்கு மோக்ஷ£நுபவமாகிய நற்பகல்‌ வருவதற்குக்‌ காரணம்‌ எம்பெருமானாகுிய சூரியனே என்று உணர வேண்டும்‌. 
    உலகில்‌ உள்ள சூரியணுக்கு உதயம்‌ - அஸ்தமனம்‌ - இரகணம்‌ இவை எல்லாம்‌ உண்டு. இந்த எம்பெருமானாகிய மஹாஸ_ூர்யனுக்கோ அவை ஒன்றும்‌ கிடையாது. சூரியனை விட்டு ஒளி பிரியாதிருப்பதுபோல்‌ பிராட்டி அவனை விட்டுக்‌ கணப்பொழுதும்‌ பிரியாதிருக்கின்றாள்‌. உலகில்‌ உள்ள சூரியனது உருவத்தை அளவிட்டு விடலாம்‌. இந்த மஹாஸ_ூர்யனை அளவிட முடியாது. இந்த ஸூர்யன்‌ எப்பொழுதும்‌ ப்ரகாசித்தலே தனக்கு ஸர்வமங்களங்களையும்‌ சாச்வதமாகப்‌ பெறுதலாக அநுஸந்தித்துக்‌ கொண்டிருப்பதுவே சேதநனது கடமையாகும்‌. 
    சிலர்‌ எம்பெருமான்‌ ஜீவனை அடைகின்றானேயன்றி ஜீவன்‌ எம்பெருமானை அடைவதில்லையென்றும்‌, லாபமும்‌, நஷ்டமும்‌ எம்பெருமானுக்கேயன்றி ஜீவனுக்கு இல்லையென்றும்‌ இன்னும்‌ இவ்வாறு பல கொள்கைகளைக்‌ கூறுகின்றனர்‌. இக்‌ கொள்கைகளைக்‌ கண்டிக்க வேண்டிய அவசியமில்லை. 
    இக்கொள்கைகளின்‌ உட்கருத்தை நாம்‌ நல்லதாகவே கொண்டுவிட முடியும்‌. எவ்வாறெனில்‌ - ஜீவன்‌ எம்பெருமானுக்கு அடியனா யிருத்தலிலேயே சுவை கண்டவன்‌. மோக்ஷத்தில்‌ இவனுக்கு 
    ஞானமலர்ச்சி முதலிய பல விசேஷங்கள்‌ வருகின்றன. இவையெல்லாம்‌ ஸர்வேசுவரனுக்கு மிகவம்‌ போக்யமாயுள்ளன. புஷ்பம்‌ சந்தனம்‌ முதலியவற்றைத்‌ தரித்தால்‌ அவற்றின்‌ மணம்‌ முதலியன தரிப்பவர்க்கே மகிழ்ச்சியை விளைவிப்பதுபோல்‌ ஆதமாக்களெல்லாம்‌ எம்பெருமானுக்கே சேஷமாயிருப்பதால்‌ ஜீவனுக்கு வரும்‌ விசேஷங்களால்‌ மகிழ்ச்சியடை பவனும்‌ ஸர்வேச்வரனேயோவான்‌ என்ற கருத்தைக்‌ கொண்டன. அவர்களின்‌ கொள்கைகள்‌ என்று கூறிவிடுதல்‌ நன்று.
     
    சிறுபயனிற்‌ படியாத தகவோரெம்மைச்‌ சேர்க்கவடைக்கலங்கொண்ட திருமால்‌, தானே 
    மறுபிறவியறுத்தழியா வானில்‌ வைக்கும்‌ மனமே நீ மகிழாதேயிருப்பதென்கொால்‌ 
    உறுவதுனக்குரைக்கேனிங்கிருக்குங்காலம்‌ ஒரு பிழையும்‌ புகுதாத வுணர்த்தி வேண்டிப்‌ 
    பெறுவதெலாமிங்கே நாம்‌ பெற்று வாழப்‌ பேரடிமையாலேதென்றிகழேல்‌ நீயே. 

    ரக்ஷ்ந்த்வநந்யரக்ஷ்யாம்‌ லக யஸீமபி கரீயஸீம்‌ ஸந்த:1 
    
    லக்ஷமீஸஹாய ஹ்ருத்யாம்‌ ரஹஸ்யரத்நாவளிம்‌ ரம்யாம்‌2 
    பெரிய இரத்தின ஹாரத்தையும்‌ முத்துமாலையையும்‌ தண்‌ திகுமார்புக்கு ஏற்ற திருவாபரணமாகத்‌ தரித்திப்பதுபோல்‌ இந்த ரஹஸ்ய க்ரந்தமாகிய ஹாரத்தையும்‌ தன்‌ திருவுள்ளத்துக்கு உவப்பான அணியாகக்‌ கொள்ளும்படியிருக்கின்றது. 
    இரததின.மாலை உருவில்‌ சிறியதாயிருப்பினும்‌ ப்ரகாசம்‌ விலை முதலியவற்றால்‌ மிக்க பெருமையுடையதாயிருக்கும்‌. அவ்வாறே இந்தக்‌ ரெந்தமும்‌ உருவில்‌ சிறியதாயிருப்பினும்‌ அவசியம்‌ அறிய வேண்டிய ஸகல ஸாரார்த்தங்களின்‌ சுருக்க.மாதலின்‌ மிகுத்த பெகுமையூடையதாயுள்ளது.-ஸாரம்‌ அஸாரம்‌ இவற்றைப்‌ பற்றிய பகுத்தறிவு மிக்கவர்களாய்ப்‌ பொறாமையற்றவர்களாய்ச்‌ 
    சாஸ்தரங்களுக்கு வசப்பட்டவர்களான பெரியோர்களே இந்நூலை உரிய முறையில்‌ காப்பார்கள்‌

    ஒன்றே புகலென்றுணர்ந்தவர்‌ காட்டத்‌ திருவருளால்‌ 
    அன்றேயடைக்கலங்கொண்ட நம்மத்திகிரித்‌ திருமால்‌ * 
    இன்றேயிசையினிணையடி சேர்ப்பரினிப்‌ பிறவோம்‌ 
    நன்றே வருவதெலாம்‌ நமக்குப்‌ பரமொன்றிலதே.
    ஒன்றே புகல்‌” என்ற பாசுரம்‌ இந்த ரஹஸ்யமாகிய இரத்தினஹாரத்தைக்‌ கோக்கும்‌ நூலின்‌ ஸ்தாநத்தில்‌ உள்ளது. இந்தப்‌ பாசுரத்தில்‌ ஆசார்யன்‌ மூலமாகப்‌ பிர பத்தியைச்‌ செய்து அந்தப்‌ பொறுப்பை எல்லாம்‌ ஸர்வேச்வரனிடம்‌ ஸமர்ப்‌ பித்துவிட்டு அந்தப்‌ பொறுப்பையும்‌ எம்பெருமானால்‌ 
    ஏற்றுக்‌ கொள்ளப்‌ பெற்றவனான சேதநன்‌ தான்‌ ஒரு பொறுப்பும்‌ அற்றவனாய்த தன்னை நினைத்துக்‌ கொள்ள வேண்டிய நிலை காட்டப்‌ படுகின்றது 

    —————————————-

    கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
    ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

    ———————————————————

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ நயினாராச்சார்யர் சுவாமி திருவடிகளே சரணம்-
    ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –