எம்பெருமான் சர்வ சக்தன் என்பதைப் பால காண்டத்திலும், பக்த ரக்ஷண தீக்ஷிதன் என்பதை அயோத்யா காண்டத்திலும் –பாகவத பரதந்த்ரன் என்பதை ஆரண்ய காண்டத்திலும் சரணாகதி தர்மம் அபயப் பிரதான வைபவ மிவற்றை யுத்த காண்டத்திலும், ஏனைய தர்மங்களை மற்ற இடங்களிலும் கம்பர் வெளி யிட்டிருப்பதைப் பரக்கப் பார்க்கலாம்,
கிஷ்கிந்தா காண்டத்தில் ௮னுமப் படலத்தில் ,-மாற்றமஃது உரைத்தலோடும்’” இல்லாத வுலகத்தெங்கும்”, என்னும் செய்யுள்களாலும் ** அஞ்சனைக்கொரு சிறுவன்” என்று தொடங்கி , துன்பினைத் துடைத்து மாயத் தொல்வினை”’ என்னுமளவான செய்யுள்களாலும் சொல்லப்பட்ட ஆசார்ய லஷணமான சாஸ்திரார்த்த தத்வ ஞானமும், சதாசார சீலமும் பரத்வ நிச்சயமு முடையனாய், இயல்பாகவே பராநுகூல பரனும் ஸ்வ ப்ரயோஜனத்தில் விருப்ப மில்லாதவனுமா யிருப்பானொருவன்,-மஞ்செனத் திரண்ட கோல மேனிய’”என எம்பெருமானை ஸாக்ஷாத் கரித்தவாறே அவனனுக்ரஹத்தால் லோகத்தாரை உஜ்ஜீவிக்கச் செய்யம் சதாசாரிய னாவனென்பது :’மாணியாம் படிவமன்று ” என்னுஞ் செய்யுளால் குறிக்கப் பட்டிருக்றது –
இப்படியான சதாசார்யனைச் சிஷ்ய யாத்திரையில் பிரவிர்த்திப்பித்து, சம்சார துக்கத்தில் அகப்பட்டுழலும் அவரை உடைமை யென்னும் மமகார நிவர்த்தி கண்டு உஜ்ஜீவிக்கும்படி எம்பெருமான் திருவுள்ளம் பற்றுவன் என்பதை, ““அணிகலக் குறியினாலே , வென்றி யானடியன் தன்னை வேறு கொண்டிருந்து கூறித், தென்றிசைச் சேறி யென்றான வனருள் சிதைவதாமோ என்னும் சுந்தர காண்டச் செய்யு ளாலும் தெளியலாம்,
இராமாவதார ரஹஸ்யத்தை ஹனுமான் வாக்கால், இராவணனுக்கு அறிவுறுத்தி யிருப்பதையும்,-அன்னவர்க் கடிமை செய்வேன் நாமமுமனுமனென்பேன்”?
என்ன ஹனுமான வாக்கால் காட்டும் ஆண்டானடிமைத் திறனையும் கருதுமிடத்து ஹனுமானை ஈசனருள் பெற்று உலகத்தார்க்கு உறுதி பயக்கும் உண்மைப் பொருளை உபதேசிக்கும் நல்லாசிரியனாகவும், பரமபதியின் பிரிவாற்றாமல் துன்புறும் சீதைப் பிராட்டியாருக்கு பதியின் அருள் சின்னத்தைக் காட்டி துயரை நீக்கி பதியை யடைய ஹேது வாயிருந்த திருவாழியை சேதனர்கள் சம்சாரத் துக்கத்தினின்று கரையேறி
எம்பெருமானை யடையும் ஹேதுவான திருமந்த்ரமாகவும் உய்த்து உணரவைத்துக்
கம்பர் சுந்தர காண்டத்தில் ஆசார்ய தர்மத்தையும் திருமந்திர மேம்பாட்டையும் வெளியிட்டிருப்பது நன்கு தெளியத் தக்கது-சுந்தர காண்டத்தில் இந்
துண்ணிய கருத்துக்களடங்கிய உருக்காட்டு படலத்தில் 10 செய்யுள்கள் காணத்தக்கது –௮றுபத்து மூன்றாவது மீட்டுமுரை”யென்ற செய்யுள் முதல் எழுபத்து இரண்டாவது
-பாழிய பணைத் தோள்” என்ற செய்யுளீறாகப் பத்துப் பாசுரங்களிலும் உள்ளுறைப் பொருள் உணர வேண்டும்-இக் காண்டத்தில் ஜீவாத்மாவினுடைய ஸ்வரூபத்தையும், ஆசாரிய கிருத்தியத்தையும் மிகக் தெளிவாயும் அழகாயும்சித்தாந்தம் செய்திருப்பதால், சுந்தர காண்டமெனப் பெயர் கிடைத்தது என்பதேயாம்.
ததோ ராவணநீதாயாஃ ஸீதாயாஃ ஷத்ருகர்ஷநஃ. இயேஷ பதமந்வேஷ்டுஂ சாரணாசரிதே பதி৷৷5.1.1৷৷-முதல் ஸ்லோகார்த்தம் -மேலே கிஷ்கிந்தா காண்டத்திற் கண்டபடி நிகழ்ந்த பிறகு சத்துருவை நாசம் பண்ணத் தகுந்த ஹநுமான் இராவணனாற் பெயர்த்துக் கொண்டு போகப்பட்ட சீதாப் பிராட்டியினுடைய இருப்பிடத்தைக் தேடுவதற்காக ஆகாய மார்க்கத்திற் பிரவேசிக்க எண்ணங் கொண்டார்?!-சேதனர்களை உய்யக் கொள்வதற்காகவே ஏற்படுத்திய முத்ரையையும் ஆஜ்ஜையையும் பெற்ற பிற்பாடு அஜ்ஞானமான பகைவனை வேரோடு வெல்லத் தக்க ஆசாரியன், (ஹூுமான்) பூர்வாசாரியர்களால் அநுஷ்டிக்கப்பட்ட
ஸத் ஸம்பிரதாய மார்க்கத்தில் நிலைத்தவராய், அவிவேகத்தால் தனக்கு ஸ்வாதினம் பண்ணப்பட்ட சேதனனுடைய ஸம்ஸார மண்டலத்தையும்,பகவத் ப்ராப்தியிலுண்டான எண்ணத்தையும், ஸாத்விக ஸம்பாஷண முதலான அடையாளத்தையும் தேட நினைத்தார்-
கழுந்தரா யுன கழல் பணியாதவர் கதிர் மணி முடிமீதே
அழுந்த வாளிகள் தொடு சிலை ராகவ வபி நவகவிநாதன்
விழுந்த நாயிற தெழுவதன் முன் மறை வேதியருடன் ஆராய்ந்து
எழுந்த நாயிறு விழுவதன் முன்கவி பாடின தெழ நூறே.–தனியன்
“தேவபாடை யினிக் கதை செய்தவர்
மூவரானவர் தம்முள் முந்திய
நாவினா ருரையின்படி நான் றமிழ்ப்
பாவினா லிதுணர்த்திய பண்பரோ?, —வால்மீகி வசிஷ்டர் போதாயனர் -மூவர்
தமிழிலே தாலை நாட்டி—பார் மேல், நம்பு பா மாலையாலே நரருக்கின் றமுதமீந்தான்”
மீட்டிமுரை வேண்டுவன வில்லையென மெய்ப் பேர்
தீட்டியது தீட்டரிய செய்கையது செவ்வே
நீட்டி தென நேர்ந்தனனெனா நெடிய கையாற்
காட்டினனொராழியது வாணுதலி கண்டாள்–சுந்தர காண்டம் உருக் காட்டு படலம். பாட்டு-63,
மீட்டுமுரை – முன்னமே-பகவானுடைய சொருபத்தையும், செளலப்யத்தையும் காருண்யத்தையும், சேதனனுக்கும் பகவானுக்குமுள்ள சம்பந்தத்தையும், சேதனனுடைய பூர்வ வாசனையையும், ஆசாரியன் (ஹநுமான்) எடுத்துச் சொன்ன பின் மற்றும் சொல்ல வேண்டிய விஷயம்
வேண்டுவனவில்லை–இனி மேல், சேதனனால் கேட்கப் பெறுவதும், ஆத்மா உஜ்ஜீவிக்கும் பொருட்டுள்ள அவசியமானதுமான உபாயம் வேறு யாதொன்றுமில்லை்
என– என்று, (இவ் விதமாகச் சொல்லி,)
மெய்ப்பேர் தீட்டியது –நாராயண என்னும் பெயரும் உயிருமான திரு நாமத்துடன் ஓம் நமோ என்னும் உடலாகிய (மெய்யாகிய) எழுத்துக்களைச் சேர்த்துச் செய்த திவ்ய மங்கள கரமான அஷ்டாஷரம் என்ற திரு மந்தரமொன்றுண்டு,
தீட்டரியசெய்கையது–அந்தத் திருமந்திரமானது எழுதவரிது, எழுதற்பாலதன்று, எழுதாக்கிளவி, (வேத வாக்கியம்) அதை எழுத முடியாது, எழுதுதற்கடங்காது, எழுதிக் கற்றுக் கொள்வதிற் பயனில்லை,௮து உபதேச மந்திரம், உபதேசக் க்ரமத்தா லடையத் தக்கது யொழிய வேறல்ல. (ஆகையால்)செவ்வே–நேராக (முறைப்படி) ௮தாவது குரு பரம்பரா பூர்வமாக, அல்லது உபதேச விதிப்படி
நீட்டிதென–நீ சேதனனுககு இந்த அஷ்டாக்ஷர மந்த்ரத்தை உபதேசம் பண்ணு என்று சொல்லி,
நேர்ந்தனன் -எனக்குப் பகவான் கொடுக்தார், ௮தாவது ஆஞ்ஞாபித்தார், என–என்று உபதேசம் பண்ணக் கருதி, நெடிய கையால்– விசேஷ அர்த்த புஷ்டி யுள்ளதும், ஞான வித்தகந் தரித்த செங்கை ‘என்பதற்கிணங்க ஞானக் குறியுமாகிய சின் முத்ரையினால் காட்டினனொராழி – தனது இருக்கையை வட்ட வடிவாய்ச் சின் முத்ரா ரூபமாக வைத்துக் கொண்டு, பகவத் ஆஜ்ஞா ரூபமான வேத வாக்கியமாயும், மிகவும் ஆழ்ந்த பொருள்களை யுடையதாயு மிருப்பதால் ஆழியென்று சொல்லத் தக்கதாயுள்ள திருவஷ்டாக்ஷர மந்த்ரத்தை ஹனுமானாகிய வாசாரியன் சீதை யாகிய சேசனனுக்கு உபதேசித்தார்.
அது வாணுதலி கண்டாள்–சேதனனும் உபதேதசம் பெற்ற பின் அந்தத் திருமந்திரத்தின் பெருமையை ௮றிந்தான்- அதனால் அகம் மகிழ்ந்தான்-௮கத்தினழகு முகத்தில் தெரியுமாதலால் ஆத்மா வடைந்த ஆனந்தத்தை வெளிப் படுத்திக் காட்டிய முக மலர்ச்சி கொண்டு, வாணுதலி கண்டாள் எனக் கூறப்பட்டன. இன்னும், திருமந்திர உபதேசத்துக்குரி வைஷ்ணவ சின்னமான ஊர்த்துவ புண்டர மணிந்த நெற்றியும் பகவத் பார தந்திரியமுமுடைய சேதனனென்பது தோன்ற வாணுதலி யென்றாரென்பதும் பொருந்தும்-எனவே ௮னுமான் சீதைக்கு ஸ்ரீராமனது கணையாழியைக் கொடுத்தார் என்பது இச் செய்யுளுக்குச் சாமானியக் கருத்தாயிருப்பினும், விசேஷார்த்தமாக, அனுமானாகிய ஆசாரியன் ராஷஸ மண்டலமாக சம்சார பந்தத்தால் நலிவடையா நின்ற சீதையாகிய சேதனனுக்குத் திரு வாழியாகிய திருவஷ்டாஷாரத்தை வேத விதிப்படி. பிரஸாதித்தார் என்பதையும் இச் செய்யுள் ௮டக்கிக் கொண்டி ருக்கிறது.
“அது வாணுதலி கண்டாள்” என்று சொன்ன பின் அந்தச் சேதனலுக்குண்டான பரவசச்தை வெளிப்படுத்த விரும்பிப் பின் வரும் இரண்டு செய்யுள்களின் முலம் பலவித திருஷ்டாந்தங்களுடன் உபபாதிக்கிறார்,
இறந்தனர் பிறந்த பயனெய்தினர் கொலென்கோ
மறந்தனரறிந் துணர்வு வந்தனர் கொலென்கோ
துறந்த வுயிர் வந்திடை சொடர்ந்தது கொலென்கோ
திறந்தெரிவ தென்னை கொலி நன்னுதலி செய்கை–64-
(இதுவும் உபதேச அநந்தரம்)
இந் நன்லுதலி செய்கை-இத் திவ்விய முக மலர்ச்சியை யடைய சேதனனுக்கு ஜாயமான கடாஷத்தாலுண்டான ஆனந்த அனுபவத்தை (எவ் வனுபவத்துக்கு ஈடாகச்
சொல்லுதல் கூடுமென்று ஆராய்ந்தால்) இறந்தனர் – ஜீவாத்மா சம்சார பந்தத்திலகப்பட்டு இந்திரியங்களாற் கட்டுண்டு பூர்வ ஞானமே மேலிடாது அஞ்ஞானமான அந்தகாரத்தி லகப்பட்டுழன்று ஜென்ம மெடுத்தும் ஜென்ம சாபல்யமான கிருத்தியங்கள் யாதொன்னுஞ் செய்யாமல், திருவடிகளை அடைய வேண்டிய கருமங்களிருந்தும் விலகி ஜீவப் பிரேதம் போலிருக்கும் பயனற்ற ஆத்ம கோடிகள் ; பிறக்க பயனெய்தினா் கொலென்கோ – திடீரென்று பகவத் ஜாயமான கடாஷ விசேஷத்தாலே உலகில் பிறந்து ௮டைய வேண்டிய புருஷார்த்தங்களை அடைந்தால் அந்த ஜீவர்களுக்கு எவ் வளவு ஆனந்த முண்டாகுமோ ௮வ்வளவு சந்தோஷம் உண்டாயிற்றென்று சொல்லலாமோ ; (அல்லது) அறிந்து – சத் சம்பிரதாய மார்க்கக்தை யனுஷ்டித்து வந்து, பகவத் சரணாரவிந்தங்களில் ஈடுபட்டிருந்து வந்து; (இப்பால்)மறந்தனர் – ஜென்மாந்தர வாசனையையும், பகவானுடைய சராணாரவிந்தங்களின் வைபவத்தையும் ஒரு கால விசேஷத்தில் மாயையினால் அடியோடு மறந்திருக்க ஒரு ஜீவன் உணர்வு வந்தனர் கொலென்கோ- மறுபடியும் குருமுகமாகப் பூர்வ அனுஷ்டானத்தையும் தன் நிலைமையையும் திடீரென்று அறிந்து உஜ்ஜீவுக்கும் படியான ஒரு ஹேது நேர்ந்தால் ௮ப்போது என்ன குதூகலமுண்டாகுமா அதற்குச் சமமாகச் சொல்லலாமோ ;(அல்லது) துறந்த உயிர்-போன பிராணன்; வந்து இடை தொடர்ந்தது கொலென்கோ – மறுபடியும் உடலுட்புகுந்து உடலும் உயிரும் கூடிற்று என்றால் எவ்வளவு ஆனந்தமுண்டூ அவ்வளவு ஆனந்தத்தை இந்தச் சேதனன் அடைந்தானென்று தான் சொல்லலாமோ, (செய்கை) திறந் தெரிவது என்னை கொல் -௮ந்த ஆனந்தத்தின் அளவையும் பெருமையையும் வன்மையையும் என்ன வென்றெடுத்துரைப்பது,
இழந்த மணி புற்றர வெதிர்ந்த தெனலானாள்
பழந்தன மிழந்தன படைத்தவரை யொத்தாள்
குழந்தையை யுயிர்த்த மலடிக்குவமை கொண்டாள்
உழந்து விழி பெற்றதொருயிர்ப் பொறையு மொத்தாள்–65-
(தவிரவும்,) புற்றரவு – இந்த சம்சார மண்டலத்தில் ஜீவாத்மா;
இழந்த மணி – (தான் அயர்வுற்றிருந்த போது, ௮தாவது தான் மாயையினால்
மயக்குற்று மெய்ம்மறந்து புத்தி ஸ்திரமில்லாமற் சஞ்சல மடைந்திருந்த காலத்தில்) தன்னை விட்டகன்ற உயர்ந்த ரத்ன சமானமான அழுக்கற்ற
நல்லறிவை;
எதிர்ந்ததெனலானாள் – மறுபடியும்
அடைந்தால், அச்சேதனனுக்கு ௮ப்போதுண்டாகும் களிப்பை ஓக்கும்;(அல்லது) இழந்தன தானே தன்னுடைய கர்மானுஷ்டானங்களினாலும், ௮விவேகத்தினாலும், சுயேச்சையினாலான
கிருத்தியங்களினாலும் இழந்த மோக்ஷத்தை;
பழந்தனம் – மிகப் பழமையாயும் அநாதி பூர்வகமாயும்
௮நாதி காலங்களாககத் தன்னைக் காப்பாற்றுவதற்கு
ஹேதுவாயுமுள்ள ஒரு சாரமான மூல மந்திரமானதும், பூமியிலுள்ள மநோ ரதங்களையும் சுவர்க்க
போகங்களையம் முக்தியையும் சாதித்துக் கொள்வதற்கு ஆதாரமானதுமான ஒப்பற்ற பொருளை;
படைத்தவரை யொத்தாள் – மீண்டும் புதையல் கண்டெடுத்தாற் போல் ௮திக வியப்புடன் புதிதாக
கிட்டினது போலடைந்தால் அப்போது சேதனனுக்குண்டாரும் ஆநன்தத்திற்கு ஒப்பாகுமென்று சொல்லற் பாலதாம்; (அல்லது) குழந்தையை – தென் புலத்தாரைத் தான் பருவ காலங்களிற் கொடுக்கும் நன்னீர் முதலாயுள்ள கருமங்கள் யாவும் வேத விதிப்படி செய்வதால் கரை யேற்றும்
தன்மை யுடைய ஆண் குழந்தையை;
(இனி உள்ளுரை )
ஜீவாத்மா எத்தனையோ கோடி ஜென்மமெ
டுத்துழலும் போது *பூதமைந்தும், விலங்கிய விகாரப் பாட்டின் வேறுபாடுற்ற வீக்கம், கலங்குவது”? என்பதற்கிணங்க அந்த வீக்கமாகிய பிறப்பின் மிகுதியற்று மறுபிறப்பில்லாமல் உய்யும்படிக்கான ஓர் உபாயத்தை; (திவ்விய ௮ஷ்டாஷர
மந்த்ர அனுக்கிரஹத்தை)
உயிர்த்த – நூதனமாக எதிர்பாராது அடைந்த;
மலடிக்குவமைகொண்டாள் – நெடு நாளாகக் காத்திருந்தும் பிரயத்தனப்
பட்டும் கிட்டாமல் இனிக் கிடைப்பதரிதென்று
மனங்கலங்கச் சோர்வும் ஏக்கமுமுற்றிருக்கும் ஒரு
ஜீவாத்மாவுக்கு ௮ப்போதுண்டாகும் பர வசத்தை நிகரக்குமென்று சொல்லலாம்; (அல்லது) உழந்து -அஞ்ஞான மிகுதியால் தன்னுடைய ஞானக்கண் ணடைக்கப்பட்டு ௮தனால்,தெளிவான நடையற்று
நன்னெறி விட்டு விலகி உழல்கின்ற போது
விழி பெற்றது -சன்மார்க்கமும் மோஷ ஹேதுவுமான
நன்னெறியை ஊட்டும் படிக்குள்ள ஓர் உபாயத்தை யடைந்த;
ஓர் உயிர்ப்பொறையும் ஒத்தாள்-ஒரு ஜீவாத்மா அல்லது ஒரு சேதனனுக்குள்ளது
போல் ஆயிற்று.
ஆகவே, இந்த இரண்டு செய்யுள்களாலும் அனுமான் சீதா பிராட்டிக்குக் கணையாழியைக் காட்டினவுடன் ௮வள் மிகக் களிப்புற்றாளென்பது சாமான்யக் கருத்தாயினும் . விசேஷார்த்தமாகத் திருவஷ்டாக்ஷர வுபதேச பூர்வமாகச் சேதனனுக்குண்டாகும் ஆத்மானந்த வைபவத்தைப் பூர்வாசாரியர்களாற் பலவித திருஷ்டார்தங்களுடன்
விரித்தெழுதப் பெற்றதற்கிணங்க இவ் விடத்திலும்கூறப் பட்டது.
———–
இனிப் பின்வரும் இரண்டு செய்யுள்களால் திரு மூல மந்திரத்தை உபதேசம் பெற்ற பின் அந்தச் சேதனன் ௮தைக் கொண்டாடி யனுபவித்த விதத்தை விரித்துக் காட்டுகிறார்–
வாங்கி நண் முலைக் குவையில் வைத்தனள் சிரத்தால்
தாங்கி நண் மலர்க்கண் மிசை யொத்தின டடந்தோள்
வீங்கி நண் மெலிந்தனள் குளிர்ந்தனள் வெதுப்போ
டேங்கினள் உயிர்த்தனல் இதின்னது எனலாமே,–66-
வாங்கினள் –சேதனன் ௮ஷ்டாஷ மந்திரத்தை வானமீகி பகவான் பிரயோகித்ததற்கு இணங்க மனசில் வாங்கினன் என்றார் ; மனசில் நிலை பெறச் செய்தான் என்றபடி-
முலைக் குவையில் வைத்தனள் – பகவத் அனுபவ முச்கிய சாதனமான சேஷத்வ பாரதந்தர்ய ஸ்வரூப ஞானத்தைப் பிறப்பிக்கும் த்வயம் என்னும் மந்த்ரத்துடன் சேர்த்து அந்த மந்திரத்தை அனுசந்தித்தான்-
சிரத்தால் தாங்கினள் – அந்த த்வயார்த்தத்துக்குள் உத்தர வாக்கியார்த்தத்தில் ஊன்றினான்; ௮தாவது சர்வ ஸ்லாக்கியமானதும் சாரமானதுமான மந்திரத்தை ௮தனுடைய கெளரவமும், தன்னுடைய பாரதந்தர்யமும் தோற்ற அதை ப்ரதானமாகவும் மூலாதாரமாகவும் கொண்டாடினான் என்றபடி-
மலர்க்கண் மிசை யொத்தினள் -தன்னுடைய ஞானக் கண்களால் ௮ம் மந்திரத்தின் பெரும் பயனை ௮னுபவித்தான்-
தடந் தோள் வீங்கினள் – பெரிய தோள்களாகிய பகவத் பாகவத கைங்கரிய சாதனங்களைப் பெருக்கினான்- மெலிந்தனள் – பகவத் கைங்கரியத்தில் த்வரை யுடையனாய் ௮து எப்பொழுது கிட்டுமோ வென்னும் ஏக்கத்தாற் சோர்வுற்றான்.
குளிர்ந்தனள் – இந்த மந்திராநுசந்தானமே சகல வித கைங்கரியமுமாகி ௮வன் திருவடி சேவை கிடைப்பிக்கச் செய்வதென்ற நிச்சயத்தால் ஸந்தோஷத்தை யடைந்தான்- வெதுப்போடு ஏங்கினாள்
“ஒரு கணத் திரண்டு கண்டேனொளி மணி யாழி யான்ற
திரு முலைத் தடத்து வைத்தாள் வைத்தலுஞ் செல்வ நின்பால்
விரக மென்பதின் வந்த வெங் கொழுந் தீயினால் வெந்
துருகிய துடனே யாறி வலித்தது குளிர்ப் புள்ளூற–
என்பதற்கிணங்க, ஈசனுக்கு உகப்பாகச் செய்யும் சத் கர்மங்களில் ஏதேனும் குறைவு பட்டு விடுமோ வென்று மனக் கலக்கங்கொண்டு பரி தபித்தான் உயிர்த்தனள் – இன்னதென்று தோன்றாது பெருமூச்செறிந்தான்-இது இன்னதெனலாமே – இப்படியாகச் சேதனனால் செய்யப்பட்ட பல செய்கையை இன்னின்ன எண்ணங் கொண்டு இன்ன காரணத்தோடு இன்னின்ன செய்கைகள் செய்து கொண்டாடினான் என்று சொல்வது எளிதாமோ என்பதாம்.
மோக்கு முலை வைத்துற முயங்கு மொளிர் நன்னீர்
நீக்கி நிறை கண்ணிணை ததும்ப நெடு நீள
நோக்கு நுவலக் கருதுமொன்று நுவல்கில்லாள்
மேக்கு நிமிர் விம்மலள் விழுங்கலுறுகின்றாள்--67-
மோக்கும்–சேதனன் திருமந்திரத்தை
௮நு சந்தானம் செய்துகொண்டே அதன் அர்த்தத்தை யனுபவிப்பான்-
முலை வைத்துற முயங்கும் – அதை த்வயதத்தோடு நன்றாகப் பொருந்தும்படி. சேர்ப்பான்- அதாவது அத்வைத பாவமின்றி விசிஷ்டாத்வைத சித்தாந்த பரமாக அர்த்தத்தை நயிப்பிப்ப னென்றபடி-
கண்ணிணை ததும்ப வொளிர் நிறை நன்னீர் நீக்கி -உயர் மழைக் கண்ணீரா லாயிரங் கலசமாட்டி யேங்கனெ ளிருந்த தல்லா லியம்பலள்? என்றபடி
தனக்குண்டான ஆஹ்லாதத்தால் அஜ்ஞானம் மேலிட்டுத் தன்னாற் சரியான கைங்கரியம் செய்து ஆதரிக்க முடியுமோ வென்று ஏக்கங்கொண்ட மனோ சாஞ்சல்யத்தை நீக்கி;
நெடு நீள நோக்கும் – திரு ௮ஷ்டாக்ஷரத்தின் ஆழ்ந்து கிடக்கும் அர்த்த விசேஷங்களை யெல்லாம் நெடுந்தூரம் ஆராய்வன்,
நுவலக் கருதும் – அதன் பெருமையைக் கண்டு பூரித்துப் பலமாக ஸ்தோத்திரம் செய்ய ஆசையை உடைவனாவான். ஒன்னும் நூவல் இல்லாள் – அடங்காத ஆனந்தத்தைப் பெற்ற படியால் யாதொன்றும் வாய் திறந்து சொல்ல மடியாது திகைத்து நிற்பான்.
மேக்கு நிமிர் விம்மலள் -ஞான ஆனந்தத்தாலுண்டான ஆத்ம புஷ்டி யுடையனாய்.
விழுங்க லுறுகின்றாள் – அக்காரக் கனியான எம்பெருமானை விழுங்குவது போல அவகாஹித்துத் தொடங்கினான் என்பதாம்–
மேலே கண்டவிதமாகத் திருமந்திரத்தை அனுபவித்ததன் மேல், பின் வரும் இரண்டு செய்யுள்களால் இந்தச் சேதனனுக்குண்டான தேஜஸ்ஸையும் ௮வன் பெற்ற பேருதவியையும் உணர்த்துகிறார் –
நீண்ட விழி நேரிழை தன் மின்னினிற மெல்லாம்
பூண்ட தொளிர் பொன்னனைய பொம் மனிற மெய்யே
ஆண்ட கை தன் மோதிர மடுத்த பொருளெல்லாம்
தீண்டள வில் வேதிகை செய் செய்வ மணி கொல்லோ. –68-
நீண்ட விழி நேரிழை தன் –திருமந்த்ரார்த்த ஞான தைர்க்யத்தை அடைந்த சேதனனுக்கு
மின்னினிற மெல்லாம்-அப்பியாச தசையில் மின் போல் தோன்றி மறைந்து வந்த ஸ்வரூப ஞானம் எல்லாம்
மெய்யே -பாவந ப்ரகர்ஷத்தாலே ப்ரத்யக்ஷ ஸமான ஆகாரமாய்
ஓளிர் பொன்னனைய பொம் மனிறம் பூண்டது –தப்த காஞ்சனம் போல் இடை வீடின்றி -அதாவது- சேதனனுடைய மன நிலை நிஷ்களங்க மாயிற்று ; (ஏனெனில்) ஆண்ட கை தன் மோதிரம் –திரு ௮ஷ்டாஷர மந்தர மானது
அடுத்தபொருளெல்லாம் – உபதேசம் பெற்ற எந்த ஜீவனையும்,
தீண்டள வில் வேதிகை செய் —ஸ்ரவண மாத்திரத்தாலே ஸ்வரூப பிரகாசத்தை உண்டாக்குவதால்
செய்வ மணி கொல்லோ-ஸ்பர்சன வேதி
யென்னும் தெய்வத் தன்மை பொருந்திய மணி விசேஷமோ – அல்லது ஞான ஆனந்த ஸ்வரூபம் தானோ -மூலத்தில் ஐக்கியம் தானோ என்று வியக்கத் தக்கதாயுள்ளதோ என்பதாம்
இருந்து பசியாலிட ருழந்தவர்கள் யெய்தும்
அருந்துமமுதாகிய தறத்தவரை யண்மும்
விருந்து மெனலாகியது வீயுமுயிர் மீளும்
மருந்து மெனலாகியது வாழி மணியாழி-69-
வாழி – பெருமை பொருக்திய நித்தியமான வாழ்வை அளிக்கத் தகுந்த;
மணியாழி -திரு மூல மந்திரமானது ; பசியால் – இந்திரியங்களின் ஈடுபாட்டால்; இருந்திட ருழந்தவர்கள் மெய்ச் நெறி செல்லாதுய் நெறி யறிவின்றி- துக்கத்திலாழ்ந்து கஷ்டப்படுற ஒரு ஆத்மாவுக்கு;
எய்தும் ௮ருந்துமமுதாகியது – கால விசேஷத்தில் இந்திரிய அனுபோகங்களினின்றும் விலகி உய்யுமநெறி யடைவதற் கேற்பட்ட தொரு ஒப்பற்ற உபாயம் கிடைத்தாற் போலாயிற்று;
அறத்தவரையண்மும்-சன்மார்க்கம் அமைந்தவர்களைத் தேடிச் சேரும்.
விருந்துமென லாகியது -விருந்து போலவே சந்தோஷ ஹேதுவுமாயிற்று ;
வீயுமுயிர் மீளும் மருந்துமெனலாகியது – இறுதி யினுயிர் தந்தீயு மருந்தொத்த தனைய தெக்தாய்”எம்பிரானாமஞ் சொல்லி,௨ருக்கின னுணர்வைத் தந்தானுயிர் -என்பதற்கு இணங்க யாதொரு பயனுமற்றுத் திருவடிகளைச் சேராது வியர்தமாகப் போகும் நிலையில் நின்ற ஒரு ஆத்மா உஜ்ஜீவிப்பதற்கு ஹேதுவான ஒரு ௮மிர்த சஞ்சீவி போலும் ஆயிற்று என்பதாம்-
இவவிரு செய்யுள்களாலும் திருமந்திரத்தின் ஸ்வபாவத்தையும், அதன் பெருமையையும், ௮தனால், சேதனனுக் குண்டான மேன்மையையும் சொல்லி, இனி அடுத்து வரும்செய்யுளால் அந்தச் சேதனன் கிருதக்ஞதையுடன் ஆசாரியனை ஸ்தோத்திரம் செய்ய ஆரம்பித்ததைச் சொல்லுகிறார் –
இத்தகையளாகி யுயிரேமுற விளங்கும்
முத்த நகையாள் விழியினாலி முலை முன் றில்
தத்தி யுகமென்குதலை தள்ள வுயிர் தந்தாய்
உத்தம வெனா வினைய வாசக முரைத்தாள்.-70-
இத்தகையளாகி – மேற் சொன்ன
படிக்குள்ள வைபவங்களைப் பெற்று; உயிரேமுறவிளங்கும் முத்த நகையாள் – அத்தியானந்தத்தை யடைந்த சேதனன்; விழியினாலி – திருமந்திரத்தின் அர்த்த ஜ்ஞான சாரம்;
முலை முன்றில் தத்தி யுக – த்வயார்த்தத்தில் ததும்பி வழிய அனுசந்தித்து;
மென்குதலைதள்ள – மிருது பாஷியாய்
ஸ்தோத்திர பூர்வகமாக ஆசாரியனைப் பார்த்து-
உயிர் தந்தாய் – உஜ்ஜீவிக்கும் பொருட்டு உபதேசம் செய்து ௮னுக்கிரகித்க எம்பெருமானே!
உத்தம-பரமபுருஷனே!
என-என்றழைத்து ஸ்தோத்தரத்துக்கு ஆரம்பித்து;
இனையவாசகமுரைக்
தாள் – பின் வருமாறு சேதனன் சொல்லலுற்றான் என்பதாம்,
இச் செய்யுளுக்குப் பிராட்டி கணை யாழியைக் கண்டு மகிழ்ந்து ஆனந்த பாஷ்பத்துடன் தன்னை உயிர் வைத்துக் கொள்ளும்படிக்கான ஹேதுவைச் செய்து மணியாழியைக் கொடுத்து
உதவின ௮னுமனைப் பார்த்துத் தன்னுடைய நன்றி யறிதலை வெளிப்படுத்தினாளென்பது சாமானனியக் கருத்தாயினும், வேதார்த பரமாகத் திரு மூல மந்திர உபதேச அநந்தரம் ஞநான பிரகாசமுள்ள சேதனன், ஆத்மானந்தப் பெருக்குடன் திரு மந்திர சாரத்தை த்வயஅர்த்தத்திலூன்றி அனுசந்தித்து உபதேசத்தால் தன்னை உஜ்ஜீவிக்கச் செய்த பரமாசாரியனுக்குத் தன் கிருதஜ்க்ஷதையை வெளிப்படுத்துகிறான் என்னும் கருத்துத் தோன்றுமாறு காண்க,
இனி வரும் இரண்டு செய்யுள்களால் உத்தமமான தத்து வத்தையும், வேதாந்தக் குறிப்பையும் மங்களாசாசன மகிமையையும் விசேஷமாக எடுத்துச் சொல்லுகிறார் –
மும்மையா முலகம் தந்த முதல்வன் தூதாய்ச்
செம்மையால் உயிர் தந்தாய்க்கு செயலென்னா வெளியதுண்டே
அம்மையாய் யத்தனாய் யப்பனே யருளின் வாழ்வே
இம்மையே மறுமை தானு நல்கினை யிசையொடென்றாள்–71-
மும்மையாமுலகக்தந்த – பதினான்குலகத் தையும், க்ருதகம், அக்ருதகம், கருதாகிருதகம்
என்று மூன்று வகையாகப் பிரித்தபடி எல்லா உலகர்களையும் சிருஷ்டித்த முதல்வற்கு– சிருஷ்டியால் முதல்வனாகிய பிரமனுக்கு
முதல்வன்-*முதலாவார் மூவரே யம் மூவருள்ளும், முதலாவான் மூரிநீர் வண்ணன்” என்னும் பூதனான சாக்ஷாத் பரமாத்ம
தூதாய்–அஜ்ஞாநமடைந்த சேதநனுக்கு
அறிவிக்கச் செய்ய வேண்டியதற்காக ஞானம் அனுஷ்டானம் நிறைந்த ஆச்சார்யனுடைய கிருபையால்–
செம்மையால் நேரான வழியான சரணாகதி முறைப் படி ;
உயிர் தந்தாய்-ஈடேற்றி உய்யச் செய்த பரம
கிருபாளுவுமாகிய வுனக்கு;
செயல் என்னா வெளிய துண்டே – நீ செய்த பேருதவிக்கு நான் செய்யக்
கடவ கைம்மாறு யாதொன்றுமில்லையே ௮தாவது ஞான உதயமானபின்பு ‘நான்’ எனது என்பது இல்லை யாதலின் தன்னுடைய பாரதந்திரியம்
துலங்க இவ்வாறு சேதனன் சொல்லலுற்றான் என்பதாம் –
அம்மையாய் –பிரிய பரையாகிய
மாதாவைப் போலும் ;
௮த்தனாய் –ஹித பரனாய
பிதாவைப் போலும் அனுக்கிரகஞ் செய்த; அப்பனே–பகவத் ஸ்வரூபனான ஆசார்ய மூர்த்தியே,
அருளின் வாழ்வே -கிருபைக்கு இருப்பிடமாயுள்ளவனே !
இம்மையே மறுமை தானும் இசையொடு
நல்கை- த்வயானுபவத்தைக் கொடுத் தருளினய், அதன் மூலம் புகழையும் புண்ணியத்தையும் கட்டிக் கொண்டாய் என்றாள் –என்று சேதனன்
ஸ்தோத்திரம் செய்தான். (தவிரவும்)
பாழிய பணைத் தோள் வீர துணையிலேன் பரிவு தீர்த்த
வாழியர் வள்ளலே யான் மறுவிலா மனத்தேனென்னின்
ஊழியோர் பகலா யோதும் யாண்டெலா முலகமேழும்
ஏழும் வீவுற்ற ஞான்று மின்றென விருத்தி யென்றாள்–72–
பாழிய பணைத் தோள் வீர-“மாணியாம் வேடம் தாங்கி மலர் அயற்கு அறிவு மாண்டோர், ஆணியா யலகுக்கெல்லாம் அறம் பொருணிரப்பு மண்ணல்”‘ என்றபடி.
பகவத பாகவத கைங்கர்ய சாதனமான பாஹு பல
முடையவனே
துணையிலேன் பரிவு தீர்த்த-யாதொரு ஆதாரமும் இன்றிக் கடைத்தேறும் வழி யற்றுக் கலங்கக் கிடந்த அடியேனுடைய துக்கத்தையும் அஜ்ஞானத்தையும் நிவிர்த்தித்த
வாழியர் வள்ளலே – நித்திய மங்களமான வாழ்வை அன்புடனும் ஆதரத்துடனும் ௮ளித்த உதார குணமுடை.யவனே!
யான் மறுவிலா மனத்தேனென்னின்—-
அஜ்ஞாந அந்தகாரத்துள் மூழ்கி ஆத்ம நாசமடையா நின்ற நான் உன்னுடைய ஸந்தர்சனத்தாலே ஸ்வரூப யதாத்ம்ய ஞானத்தை யடைந்து உஜ்ஜீவித்தேனாகையால்.
ஊழியோர் பகலா யோதும் யாண்டெலா முலகமேழும் ஏழும் வீவுற்ற ஞான்று மின்றென விருத்தி யென்றாள்–நீ பல்லாண்டு பல்லாண்டாய் நெடும்காலம் நிலை பெற்று என் போன்ற இன்னும்
௮நேக சேதனர்களையும் உயிர்ப்பிக்கக் கடவை என்று சொல்லிச் சேதனன் ௮திக வினயத்துடன் மங்களாசாசனம் செய்தான் என்றபடி –
————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸ்ரீ சேஷையங்கார் ஸ்வாமிகள்- திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply