பஞ்ச பாண்டவர் குகைக் கோயில்-(பஞ்ச பாண்டவர் கோயில்கள் மற்றும் ஐந்து பாண்டவர்களின் மண்டபங்கள்
எனவும் அழைக்கப்படுகிறது என்பது இந்தியாவில், தமிழ்நாட்டில், காஞ்சிபுரம் மாவட்டத்தில்,
வங்காள விரிகுடாவின் சோழ மண்டலக் கடற்கரையில், மாமல்லபுரத்தில் அமைந்துள்ள நினைவுச் சின்னமாகும். –
இதுவே மாமல்லபுரத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய குகைக்கோயில் ஆகும்.
கி.பி. 7 ஆம் நுாற்றாண்டில் இந்தியாவின் குடைவரைக் கட்டிடக் கலைக்கான உதாரணமாகத் திகழ்கிறது.
இந்தக் கோயிலானது, மாமல்லபுரத்தில் காணப்படும் பல குகைக் குடைவு மண்டபங்களுள்,
விசுவகர்ம இந்துக் கோயில் கட்டிடக்கலை சிற்பிகளின் குடவரைக் கோயில்கள் கட்டுமானத் திறமைக்கான
மிகச்சிறந்த நற்சான்றுகளில் ஒன்றாகத் திகழ்கிறது.
மாமல்லபுர மரபுச்சின்னங்களின் பகுதியாக விளங்கும் இந்தக் கோயில், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல்,
பண்பாட்டு நிறுவனத்தின் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக 1984 ஆம் ஆண்டில்
தெரிவிற்கான வரைமுறைகள் i, ii, iii மற்றும் iv இன் படி தெரிவு செய்யப்பட்டது.
பஞ்ச பாண்டவர் மண்டபம் அல்லது பஞ்ச பாண்டவர் குகைக்கோயிலானது, மாமல்லபுரம் நகரில் அர்ச்சுணன் தபசு
திறந்த வெளி பாறைச்சிற்பங்களின் அருகில் அமர்ந்துள்ளது.
இது தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வங்காள விரிகுடாவின் சோழமண்டலக் கடற்கரையில். மாமல்லபுரத்தில் இதர குகைக்கோயில்களுடன்
குன்றுகளின் தொடரின் உச்சியில் அமைந்துள்ளது.
இந்த இடம் சென்னையிலிருந்து தோராயமாக 58 கிலோமீட்டர் (36 மைல்கள்) தொலைவிலும்.
செங்கல்பட்டு நகரிலிருந்து 32 கிலோமீட்டர் (20 மைல்கள்) தொலைவிலும் அமைந்துள்ளது.
பல்லவ கட்டிடக் கலையின் ஒரு பொதுவான பாணியாக சிங்கத்தின் உருவத்தை அடித்தளமாகக் கொண்டுள்ள
தாழ்வாரத்தின் தூண்கள் அமைந்துள்ளன.
இந்தக் குகையின் கட்டிடக்கலை சிறப்பியல்புகளிலிருந்து, இது 7 ஆம் நூற்றாண்டின் மத்தியில் நரசிம்மர்வர்மன் I
(மாமல்ல காலம்) முதல் நரசிம்மவர்மன் II (ராஜசிம்மா) வரையிலான காலகட்டத்தில் கட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இந்தக் குகைக் கோயிலானது முழுமை பெறாத நிலையில் உள்ளது.
நுழைவு வாயிலானது கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
இந்தக் கோயிலானது, 50 அடி அளவில், மாமல்லபுரம் குகைக்கோயில்களிலேயே அதிக நீளமான நிலக்குடைவினைக் கொண்டதாகும்.
குகையின் தொடக்கத்தின் நீளம் முதன்மை சன்னதிக்குச் செல்ல
குகைக்குள் ஒரு சுற்றுவட்டப் பாதை உருவாக்கப்படுவதைக் காட்டுகிறது.
நுழைவு வாயிலில் உள்ள இரு தூண்களும், பல்லவர் கால பாறை குடைவு வகை கட்டிடக் கலை பாணியிலான,
உட்கார்ந்த நிலையில் உள்ள இரு சிங்கங்கள் மீது நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த குகைக் கோயிலின் முகப்புத் தோற்றத்தில், இருபுறத்திலும் பாறையோடு முட்டிக்கொண்டுள்ள இரண்டு
செவ்வகத் தூண்களைத் தவிர்த்து, மொத்தம் ஆறு தூண்கள் சிங்கத் தோற்ற அடிப்பகுதியைக் கொண்டுள்ளன.
மற்ற குகைகளுடன் ஒப்பிடுகையில், குகைக்குள் செதுக்கப்பட்ட தளவமைப்பு மற்றும் கட்டடக்கலை
கூறுகளில் பின்வரும் மேம்பாடுகள் காணப்படுகின்றன.
முதலாவது, தென்னிந்தியாவின் வழக்கமான அமைப்புள்ள கோயில்களிலிருந்து மாறுபட்ட சுற்றுவட்டப்பாதை,
மற்றொன்று முகப்புத் தோற்றத்தை அமைக்கின்ற சிங்க சிலை வடிவத் தூண்கள் வளைவாக அமைக்கப்பட்ட விதம் ஆகியவையாகும்.
ஒவ்வொரு சிங்க வடிவத் தூண்களும் மூன்று சிங்கங்களைக் கொண்டதாக உள்ளது.
ஒன்று முகப்புப் புறத்திலும், மற்ற இரண்டு சிங்கங்களும் பக்கவாட்டிலும்,
ஒருபுறம் சிங்கமே இல்லாமல் வெறுமையாகவும் காட்சியளிக்கின்றன,
—————————-
கடைசி இரண்டு ஹிந்து இருந்தாலும் அவர்கள் இரண்டு இதிஹாஸசங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பார்கள், அவை ஸ்ரீ ராமாயணம், மஹாபாரதம் என்றார் ஸ்வாமி விவேகானந்தர்.
பாரத தேசமெங்கும் ஸ்ரீ ராமாயணத்தையும் , மஹாபாரதத்தையும் தெரியாத, போற்றாத மக்கள் எந்த மொழியிலும் இல்லை.
பாரத மொழிகள் அனைத்தும் இந்த இரு இதிகாசங்களைப் போற்றுகின்றன, என்று உறுதியாகச் சொல்லலாம்.
தமிழகமும் ஸ்ரீ ராமாயணத்துடனும், மஹாபாரதத்துடன் தொடர்புடையது. தமிழ் இலக்கியங்களில் ஸ்ரீ ராமாயண, மஹாபாரதக் குறிப்புகள் உள்ளன.
தமிழகத்தில் ஸ்ரீ ராமனின் திருவடிகள் பட்டுள்ளன. இன்றும் அதற்கு ஆதாரமாய் உள்ளது ஸ்ரீ ராமர் பாலம்.
சங்க இலக்கியத்தில் புறநானூற்றில் 358வது பாடல் வான்மீகியார் என்பவர் பாடியது.
இது ஸ்ரீ வால்மீகி ரிஷி பாடியது அல்ல, என்றாலும் ஸ்ரீ ராமாயணத்தை நமக்கு அளித்த ஸ்ரீ வால்மீகியின் பெயரை வைக்குமளவுக்கு ஸ்ரீ வால்மீகியின் புகழ் தமிழகத்தில் பரவியிருந்ததைக் காட்டும் அகச்சான்றாகும்.
புறநானூறு 378வது பாடல் ஸ்ரீ ராமாயண ஸம்பவத்தைச் சுட்டிக் காட்டுகிறது.
மஹாபாரதத் தாக்கமும் தமிழ்ச் சங்க இலக்கியத்திலும் தமிழ் மக்களிடமும் காணலாம். தர்மன், ஸஹாதேவன், அர்ஜு(ன)ன் போன்ற பெயர்கள் தமிழக மக்களிடம் பரவலாக உள்ளது இதற்குச் சான்று.
சங்க இலக்கிய நூலான புறநானூறு இரண்டாவது பாடல் பாண்டவர்கள், கௌரவர்கள் என்னும் இரு தரப்புக்கும் போர் மூண்டபோது இருதரப்புக்கும் உணவு வழங்கியவன் உதியன் சேரலாதன் என்ற தமிழக மன்னன் என்று முரஞ்சியூர் முடிநாகனார் என்னும் புலவர் பாடுகிறார்.
சிலப்பதிகாரம் வஞ்சிக்காண்டம், புறநானூறு கூறிய தகவலை உறுதி செய்கிறது.
பாண்டிய மன்னன் ஒருவன் பாண்டவர்கள் தரப்பில் போரிட்ட தகவலும் அவனது வீரத்தை அஸ்வத்தாமன் புகழ்வதும் வியாசரால் மஹாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படி ஸ்ரீ ராமாயணம், மஹாபாரதத்தூக்கும் தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் உள்ள தொடர்பு தொன்மையானது என்றால் மறுக்கமுடியாதது.
தமிழகத்தில் திரௌபதி கோயில்கள் இல்லாத கிராமங்கள் அரிது என்றே சொல்லலாம்.
திரௌபதி வரலாறு: திரௌபதி யார்? அவள் பிறப்பின் ரகசியம்!
குரு துரோணாச்சார்யாரின் அறிவுரை படி அர்சுனன் பாஞ்சால தேசத்து மன்னன் துருபதனை வீழ்த்தி பாதி ராஜ்யத்தை கைப்பற்றுகிறான்.
இதனால் மணமுடைந்த துருபதன் அவர்களை பழி தீர்க்க வாரிசு வேண்டி மிகப் பெரிய யாகத்தை நடத்துகிறான்.
அந்த அக்குரோசமான ஜுவாலையில் இருந்து கரிய நிறத்தில் அழகிய பெண் ஒருத்தி வெளியே வருகிறாள். தோன்றும் போதே வானில் பெரிய அசரீரி ஒலிக்கிறது.
“ குரு வம்சமானது இவளாளே அழியும்” என்று கூறியது. அப்படிப்பட்ட அந்த தீயில் தோன்றிய பெண்ணே “திரௌபதி” ஆவாள்.
இவளே பாஞ்சால நாட்டை சார்ந்ததால் பாஞ்சாலி என்றும், யாகத்தில் தோன்றியதால் யாகசேனி என்றும், கரிய நிறம் கொண்டதால் கிருஷ்ணை என்றும் பெயர்க் கொண்டாள்.
திரௌபதியின் சிறப்பு
அழகில் சிறந்தவள். எவரேனும் கண்டாலும் ஆசை கொள்ளும் அளவிற்கு பேரழிகி. அவளின் உடலில் இருந்து இயற்கையாகவே நீல தாமரையின் மணம் வீசுமாம்.
அழகிலும் அறிவிலும் சிறந்த பெண்ணாக விளங்குபவள். சர்வ லக்சணங்களும் பொருந்திய தேவலோக பெண்ணைப் போல் விளங்கினாள்.
திரௌபதியின் சுயம்வரம்
துருபதன் திரௌபதிக்கு திருமணம் நடத்த சுயம்வரம் அறிவித்தார். பல்வேறு தேச இளவரசர்களும், அரசர்களும் கலந்து கொண்டனர். துருபதன் தன் மகளை மணக்க போட்டி அறிவித்திருந்தார்.
இயந்திரத்தில் சுற்றும் குறியை யார் சரியாக வில்லால் அடிகிறாரோ அவருக்கே தனது மகளை திருமணம் செய்து தருவதாக கூறினார்.
அர்சுனனே போட்டியில் வென்றார் பாஞ்சாலியை மணக்க ஆயத்தமானார்.
வெற்றி கொண்ட திரௌபதியுடன் குந்தியை காணச் சென்று, வென்ற விஷயத்தை கூறினார் அந்நிலையில் குந்தி வென்றது ஒரு பெண் என்று அறியாது.
வென்ற பொருளை ஐவரும் சமமாகப் பிரித்து கொள்ளுமாறு கூறினார். அனைவரும் அதிர்ந்தனர்.
குந்தியும் உண்மை அறிந்து அதிர்ந்தார். இருப்பினும் அன்னையின் வாக்கின் படி அனைவரும் ஒப்பு கொண்டனர்.
ஐவருடன் திருமணம் நடக்க காரணம் என்ன?
பின்பு பஞ்ச பாண்டவர்கள் ஐவரும் திருமணம் ஏற்பாடனது. பாஞ்சாலியின் தந்தை துருபதனுக்கு மனம் ஒப்பவில்லை. இது குறித்து அவர் யுதிஷ்டிரனிடம் கேட்டார்.
தர்மம் தவறாத யுதிஷ்டிரனும் இந்த திருமணத்தில் எந்த தவறும் இருப்பதாக தோன்றவில்லை. மேலும் சில உயர்ந்த தர்மத்தை காக்க சட்டங்களை மீறலாம் என்று கூறினார்.
இந்த திருமணமானது நடமுறைக்கு மாறாது ஆனாலும் மிகப்பெரிய தர்மத்தை நிலைநாட்ட போகிறது. ஆனாலும் துருபதன் ஏற்க தயங்கினார்.
திரௌபதி பிறப்பு ரகசியம்
பாண்டவர்கள் அனைவரும் முற்பிறவியில் தேவர்கள். பாஞ்சாலி ஒருத்தி அல்ல நான்கு தேவர்களின் மனைவியின் சக்தியாவாள்.
எமனின் மனைவி சியாமளா, வாயுவின் மனைவி பாரதி, இந்திரனின் மனைவி சசி, இரண்டு அசுவினி குமாரர்களின் மனைவி உஷா ஆகியோரின் சக்தி ஆவாள்.
பஞ்ச பாண்டவர்கள்
1. தர்மன் – எமதர்மன்
2. பீமன் – வாயு
3. அர்சுனன் – இந்திரன்
4. நகுலன் & சகாதேவன் – அசுவினி குமார்கள்.
எனவே தான் அந்த தேவர்களின் அம்சமாக தோன்றிய பாண்டவர்கள் ஐவரும் இவளை மணக்க நேரிட்டது என்பதை வியாசர் ஞான திருஷ்டியின் மூலம் துருபதனிற்கு உணர்த்தினார்.
துருபதனும் திரௌபதியின் பிறப்பு ரகசியம் அறிந்து ஒப்புக் கொண்டு திருமணம் நடந்தேறியது.
திரௌபதியின் கற்பு நெறி
ஐவரின் மனைவியாயினும் திரௌபதி ஐந்து பத்தினி கன்னிகைகளில் ஒருவராகப் போற்றப்படுகிறார்.
சீதை, அகலிகை, தாரை, மண்டோதரி, திரௌபதி என்று கற்பு நெறி தவறாது வாழ்ந்த மாதர்களை போன்றுகின்றோம்.
திரௌபதி ஐந்து கணவர்களையும் சமமாக மதித்தாள். ஐவரை தவிற பிரிதொருவரை நினைக்கவில்லை.
மேலும் ஒருவரிடம் கூடிய பிறகு மற்றொருவரிடம் செல்லும் போது மீண்டும் கன்னித் தன்மையை அடையும் வரம் பெற்றிருந்தாள்.
எனவே கணவர் ஐவருடன் ஒழுக்கம் தவறாமல் வாழ்ந்தாள். வேறு எவர் மீதும் எந்த ஒரு இச்சையும் கொண்டதில்லை.
திரௌபதியின் சபதம்
கற்பு நெறி தவறாத திரௌபதியினை சூதில் வென்று துரியோதனன் சபையில் துச்சாதனன் அவளை நிர்வாணபடுத்த துகிள் உறித்தான்.
கிருஷ்ண பக்தியினால் அவள் காப்பாற்ற கிருஷ்ணனை அழைத்தாள். அவள் கற்பு தவறாத மங்கை. ஆதலால் அவள் துகில் நீண்டுக் கொண்டே சென்றது. மானம் காத்தருளினான் கிருஷ்ணன்.
தன் மானத்தை பங்க படுத்திய துச்சாதனனின் மார்பின் குருதியை தன் தலையில் பூசும் வரை கூந்தலை வாரி முடியேன் என சபதம் எடுத்தாள்.
தன் தொடையில் அமர சொன்ன துரியோதனின் தொடை நொருங்கும் வரை தன் சினம் தீராது என சபதம் மேற்கொண்டாள். அதன்படியே மகாபாரத யுத்தம் மூண்டு கௌரவர்கள் அனைவரும் மாய்ந்தனர்.
திரௌபதி என்கிற பத்தினி தெய்வம்
பல்வேறு இன்னல்கள் வந்த போதிலும் தன் கணவர்கள் ஐவருக்கும் உறுதுணையாய் நின்று கௌரவ வம்சத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டினார்.
அந்த பத்தினி தெய்வத்திற்கு இன்றளவும் பல்வேறு இடங்களில் கோயில்கள் அமைத்து வழிபாடுகள் நடைபெறுகின்றன.
பக்தி, கற்பு, பெண்ணியம் மற்றும் ஒழுக்கத்திற்கும் சான்றாக விளங்கிய அந்த மகாசக்தியே திரௌபதி அம்மன் ஆவாள்.
——————-
குமரி மாவட்டத்தில், கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் மிகவும் புனிதம் மிக்கதாக போற்றப்படுகிறது.
அந்தப் பகுதியில் இயற்கை எழில் சூழ்ந்த சுற்றுலாத் தலமாக விளங்கும் இடம் சொத்தவிளை கடற்கரை.
இந்தக் கடற்கரையை ஒட்டியவாறு பஞ்சபாண்டவர்களில் நான்குபேர் தண்ணீர் அருந்தி இறந்துபோன நஞ்சுப் பொய்கையும்
அதையொட்டி மஹாவிஷ்ணு ஆலயமும் அமைந்திருக்கிறதுபஞ்ச பாண்டவர்களில் தர்மனைத் தவிர மற்ற நால்வரும் தண்ணீர் குடித்து செத்துப்போனதால் இந்த பகுதிக்கு செத்தவிளை எனப் பெயர் இருந்திருக்கிறதகாலப்போக்கில் மருவி சொத்தவிளை என மாறியிருக்கிறது.
பாண்டவ சகோதரர்களில் நான்குபேர் தடாகத்தில் தண்ணீர் குடித்ததால் மாண்டுபோனது பற்றி மஹாபாரதத்தில் சொல்லப்படும் சம்பவத்தைப் பார்ப்போம்.
மஹாபாரதத்தில் சகுனியின் சூழ்ச்சியால் சூதாட்டத்தில் துரியோதனனிடம் நாட்டை இழந்தனர் பஞ்ச பாண்டவர்கள்.
சூதாட்டத்தில் தோற்றுப்போனதால் 12 வருடங்கள் வனவாசமும், ஓர் ஆண்டு அஞ்ஞாத வாசமும்
(தலைமறைவு வாழ்க்கை) செய்யும் நிலை பஞ்சபாண்டவர்களுக்கு ஏற்பட்டது.
பாண்டவர்களும் பாஞ்சாலியுடன் வனவாசத்தில் ஈடுபட்டனர்.
12 ஆண்டுகால வனவாசம் ஒருசில தினங்களில் முடிவுறும் தருவாயில் இருந்த சமயத்தில்தான் அந்தச் சம்பவம் நேர்ந்தது.
அந்தணர் ஒருவருடைய வேள்வி தீ மூட்டும் அரணிக்கட்டை ஒரு மானின் கொம்புகளில் மாட்டிக்கொண்டது.
மருண்டு போன மான் திக்குத் தெரியாமல் ஓட்டம் பிடித்தது. மானிடமிருந்து அரணிக்கட்டையை மீட்டுத் தரும்படி பாண்டவர்களிடம் அந்தணர் வேண்டினார்.
பாண்டவர்கள் மானைத் துரத்தியபடி ஓடினர்.
வனத்தில் வெகுதூரம் சென்றபிறகும் மானைப் பிடிக்கமுடியாமல் தளர்ந்துபோய் ஓர் ஆலமரத்தடியில் அமர்ந்தனர்.
அந்தணருக்கு உதவமுடியாமல் போய்விட்டதே என்று பாண்டவர்கள் மிகவும் வருந்தினர்.
தண்ணீர் தேடிச்சென்ற நகுலன் வனத்தில் ஸ்படிகம் போன்று தூய்மையான தடாகத்தை கண்டான்.
முதலில் தனது தாகத்தை தணித்துக்கொண்டு அம்புகள் வைக்கும் தூணியில் சகோதரர்களுக்கு தண்ணீர் எடுத்துச்செல்ல திட்டமிட்டான்.
அவன் பொய்கையில் இறங்கி தண்ணீர் பருக யத்தனித்தபோது அசரீர் ஒலித்தது.
“இந்தத் தடாகம் எனக்குச் சொந்தமானது. முதலில் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்.
அதன்பிறகு நீர் பருகலாம்” என்றது அசரீரி.
சுற்றும் முற்றும் பார்த்த நகுலன் யாரும் கண்ணுக்கு புலப்படாததால் அசரீரியை அலட்சியப்படுத்திவிட்டு தண்ணீர் குடித்தான்.
ஒரு மிடறு தண்ணீர் குடித்த மாத்திரத்திலேயே நகுலன் செத்தவன் போன்று கீழே விழுந்தான்.
வெகுநேரம் ஆகியும் தண்ணீர் எடுக்கச்சென்ற நகுலனைக் காணாததால் இரண்டாவதாக சகாதேவன்
அனுப்பப்பட்டான். அவனும் திரும்ப வரவில்லை.
மூன்றாவதாக அர்ஜூனன் சென்றான்.
உடலில் காயம் ஏதும் இல்லாமலே சகோதரர்கள் இருவரும் மரணித்து தரையில் கிடந்ததைப் பார்த்துத் திகைத்தான்.
கண்ணுக்குத் தெரியாத எதிரியை நோக்கி மந்திர அஸ்திரம் ஒன்றை எய்தான் அர்ஜூனன்.
அப்போதும் அதே குரல் ஒலித்தது “உன் பாணம் என்னை ஒன்றும் செய்யாது.
முதலில் நான் கேட்கும் கேள்விகளுக்கு விடை சொல். அதன்பிறகு நீர் எடுத்துச்செல்” என்றது.
”முதலில் தாகத்தைத் தீர்த்துக் கொண்டு உன் கேள்விகளுக்கு விடை சொல்லுகிறேன்
என்று கூறியபடி தண்ணீர் குடித்த அர்ஜூனனும் மாண்டு வீழ்ந்தான்.
மூன்று சகோதரர்களும் திரும்பி வராததால் தருமன் மனக்கவலை அடைந்தான்.
அவர்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் என நினைத்தான்.
“தம்பிகளுக்கு என்னதான் ஆனது என்று பார். எனக்கு மிகவும் தாகமாக இருக்கிறது
கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா” என்று பீமனிடம் தருமன் கூறினார்.
தண்ணீர் எடுக்கச்சென்ற பீமன் பொய்கை அருகே தனது மூன்று சகோதரர்களும் சடலமாகக் கிடப்பதைப் பார்த்து பொங்கி எழுந்தான்.
இது யக்ஷர்களின் வேலையாகத்தான் இருக்கும்.
முதலில் தாகத்தை தணித்துக் கொண்டு அவர்களை ஒழித்துக் கட்டுகிறேன் என சூளுரைத்தபடி பீமன் தடாகத்தில் இறங்கினான்.
மீண்டும் அதே அசரீரி ஒலித்தது. ‘எனக்கு நிபந்தனை விதிக்க இவன் யார்?’ என அலட்சியமாக
நினைத்தபடி தண்ணீரைக் குடித்த பீமன் முந்தைய மூவரைப் போன்றே மாண்டு விழுந்தான்.
தண்ணீர் எடுக்கப்போன தம்பிகள் நீண்டநேரம் ஆகியும் வராததால் வருந்தியபடி தண்ணீர் தேடி தானே நடக்கலானார் தருமன்.
தடாகம் அருகே வந்தவர் தனது நான்கு சகோதரர்களும் மாண்டுகிடப்பதைக் கண்டு மிகவும் வருந்தினார்.
இங்கு போர் நடந்ததற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்று நினைத்தவர்
உடல் தளர்ச்சியை நீக்கிக்கொள்ள முதலில் தாகம் தணிக்க முற்பட்டார்.
அப்போது மீண்டும் அசரீரி ஒலித்தது.
“என் பேச்சை பொருட்படுத்தாமல் தண்ணீர் குடித்ததால் உன் உடன்பிறந்தவர்கள் மாண்டுபோனார்கள்.
முதலில் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல். என்னை அலட்சியப்படுத்தினால்
உன் தம்பிகளின் கதிதான் உனக்கும் ஏற்படும்” என்று குரல் ஒலித்தது.
அசரீரிக்கு மதிப்பளித்து தண்ணீர் குடிக்காமல் கரையேறிய தர்மர் “இந்தப் பொய்கை உனக்குச் சொந்தம் எனக் கூறுகிறாய்.
உனது அனுமதி இல்லாமல் தண்ணீர் எடுக்க எனக்கு உரிமை இல்லை.
உன் கேள்விகளைக் கேள் முடிந்த அளவுக்கு பதில் சொல்லுகிறேன்” என்றார்.
எதை இழப்பதால் இன்பம் ஓங்குகிறது என்ற அசரீரியின் கேள்விக்கு
சினத்தை இழப்பதால் என பதில் சொன்னார் தருமன்.
இதுபோன்று பல கேள்விகளை அசரீரி கேட்டபோது அசராமல் பதில் சொன்னார் தருமன்.
தருமனின் பதில்களால் மகிழ்ந்துபோன அந்த குரல் இறுதியில்
“மடிந்து போன நால்வரில் யாராவது ஒருவருக்கு நான் உயிர் தருகிறேன்.
யாருக்கு உயிர் கொடுக்கவேண்டும்” எனக் கேட்டது.
”நகுலனை எனக்குத் திருப்பிக்கொடுங்கள்” என தருமர் வேண்டினார்.
“யாராலும் வெல்ல முடியாத சிறந்த போர்வீரர்களான பீமன், அர்ஜூனன் ஆகியோரில்
ஒருவரைக் கேட்காமல் இரண்டாம்தர வீரனாக இருக்கிறவனை எதற்குத் தேர்ந்தெடுக்கிறாய்” என அசரீரி கேட்டது.
அதற்கு தருமன், “என் தந்தை பாண்டுவுக்கு குந்தி, மாத்ரி ஆகிய இரண்டு மனைவிகள்.
நான், பீமன், அர்ஜூனன் ஆகியோர் குந்திக்கு பிறந்தோம்.
மாத்ரிக்கு நகுலன், சகாதேவன் ஆகியோர் பிறந்தனர்.
என் தாய்க்கு பக்திப் பூர்வமாக சேவைசெய்ய நான் உயிரோடு இருக்கிறேன். மற்றொரு தாயான மாத்ரி இறந்துவிட்டாள்.
அவளுக்குச் செய்யவேண்டிய சிராத்தம் போன்ற கடமைகளைச் செய்ய ஒரு மகன் வேண்டும் என்பதால்
நகுலனை உயிர்ப்பிக்க வேண்டுகிறேன்.
போர்புரிந்து வெற்றிபெறுவது என் வாழ்கையின் குறிக்கோள் அல்ல” என்றான்.
தருமனின் இந்த பதிலைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்த தர்மதேவன் (யமதர்மன்) அங்கு பிரசன்னமானார்.
“தருமா நான் உனக்கு தெய்விகத் தந்தையாவேன். அந்தணரின் அரணிக்கட்டையை மான் வடிவில் எடுத்து வந்தது நான்தான்.
உனது தர்ம சிந்தனையால் நான் மகிழ்ச்சியடைந்தேன். உனது நான்கு சகோதரர்களும்
மீண்டும் உயிர் பெற்று எழுவார்கள்” என்று வரம் வழங்கிவிட்டு மறைந்தார்
தர்மதேவன். தருமனின் நான்கு சகோதரர்களும் தூங்கி எழுவது போன்று கண் விழித்தார்கள்.
அரணிக் கட்டையும் கிடைத்தது.
அந்தணருக்கு அரணிக்கட்டையை கொடுத்த பாண்டவர்கள் ஒரு வருடம் அஞ்ஞாத வாசத்துக்குத் தயாரானார்கள்.
மகாபாரத சம்பவத்தில் நகுலன் தொடங்கி பீமன் வரையில் நால்வரும் நீர் அருந்தி செத்துப்போன நஞ்சுப் பொய்கைதான்
சொத்தவிளை கடற்கரையை ஒட்டி மகா விஷ்ணு கோயிலுடன் இணைந்திருக்கிறது என்கிறார்கள் இப் பகுதி வாசிகள்.
சொத்தவிளை குறித்து ஆய்வு செய்து புத்தகம் வெளியிட்டிருக்கும் பேராசிரியர் ப.சர்வேஸ்வரன் கூறும்போது,
“சொத்தவிளை நஞ்சுப் பொய்கை மகாவிஷ்ணு ஆலயம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்டது.
மண்ணுக்கு அடியில் கிடைக்கும் வெள்ளைக் கல் கொண்டு நேர்த்தியாக இக்கோயிலின் மூலஸ்தானம் அமைக்கப்பட்டுள்ளது.
மகாவிஷ்ணு, மகாலட்சுமி தேவியும் காட்சிதருகிறார்கள்.
ஆரம்பத்தில் மகாவிஷ்ணுவின் பஞ்சலோக ரூபம் இருந்திருக்கிறது.
பிற்காலத்தில் பஞ்சலோக ரூபம் காணாமல் போனது.
மஹா விஷ்ணு, லட்சுமி தேவியும் நின்ற கோலத்தில் காட்சியளிக்கின்றனர்.
வலப்புறம் சந்நிதியில் சிவலிங்கமும், லிங்கத்தின் எதிரே நந்தியெம்பெருமானும் காட்சியளிக்கிறார்கள்.
இக் கோயிலின் புனிதத் தீர்த்தமான நஞ்சுப் பொய்கையில் கால்நடைகள் நீர் அருந்தாது.
நஞ்சுப் பொய்கை என்பதால் பொதுமக்களும் பயன்படுத்துவது இல்லை.
மதுரை, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் பலர் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டு
நஞ்சுப் பொய்கையிலிருந்து தீர்த்தம் எடுத்துச் செல்கிறார்கள்.
இந்தத் தீர்த்ததால் உடலில் ஏற்படும் ஆறாத புண்ணும் ஆறிவிடுவதாக கூறுகிறார்கள்.
எவ்வளவு கோடையாக இருந்தாலும் இந்தப் பொய்கை வறண்டுபோகாது.
2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் இந்தக் கோயிலில் தண்ணீர் தேங்கினாலும் எந்தச் சேதாரமும் ஏற்படவில்லை.
நஞ்சுப் பொய்கை பற்றி கேள்விப்பட்டு பக்தர்கள் வருகை இப்போது அதிகரித்துள்ளது” என்றார்.
பொய்கையைப் பார்த்தவண்ணம் வினை தீர்க்கும் விநாயகர் சந்நிதி அமைந்திருக்கிறது.
பொய்கைக் கரையில் யம தர்மனுக்கு வடக்குப் பார்த்து பீடம் அமைக்கப்பட்டிருக்கிறது.
நவகிரக சந்நிதி, மகா விஷ்ணுக் கோயிலைப் பார்த்தவாறு ஆஞ்சநேயர் சந்நிதியும் உள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக மஹா விஷ்ணு, சிவன் சந்நிதிக்கு மத்தியில் பஞ்சபாண்டவர் பீடம்
ஒன்று அமைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது.
பஞ்சபாண்டவர் பீடத்தில் தனியாக படையல் இடப்படுகிறது.
“விநாயகர் சதூர்த்தி, வைகுண்ட ஏகாதசி தினங்களில் கோயில் விழாக்கள் நடக்கிறது.
பிரதோஷம், அனுமன் ஜயந்தியின்போதும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
ஞாயிற்றுக் கிழமை தோறும் மாலை 4.30 மணிமுதல் 6.30 மணி வரை சிறப்பு பூஜை நடக்கிறது.
இதில் ஏராளமான பக்கதர்கள் கலந்து கொள்வார்கள்” என்கிறார் கோயில் பூசாரி ராமன்.
எங்கிருக்கிறது எப்படிச் செல்வது?
நாகர்கோவிலிலிருந்து 12 கி.மீ. தொலைவில் சொத்த விளை நஞ்சுப் பொய்கை மஹா விஷ்ணு ஆலயம் அமைந்திருக்கிறது.
நாகர்கோவில் மீனாட்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து அம்பலப்பதி, மணக்குடி
செல்லும் அனைத்துப் பேருந்துகளிலும் செல்லலாம்.
சொத்த விளை நஞ்சுப் பொய்கை மஹா விஷ்ணு ஆலயம் வருபவர்கள் நடந்து செல்லும்
தூரத்தில் உள்ள சொத்தவிளை கடற்கரையின் அழகை ரசிக்கலாம்.
அய்யா வைகுண்டரின் ஐந்து பதிகளில் ஒன்றான அம்பலப்பதி கோயிலும் அருகில்தான் அமைந்துள்ளது.
சொத்த விளை வரும் பக்தர்கள் மனதுக்கு நிம்மதி நிச்சயம்.
மஹாபாரதத்துடன் தொடர்புள்ள ஒரு ஸ்தலம்தான் பாண்டூர். இத்திருத்தலம் மாயூரம் எனப்படும் மயிலாடுதுறைத் தாலுகாவில் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து மாப்படுகை வழியாக 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
பாண்டூர் அக்ரஹாரத்தில் உள்ளது இந்த ஸன்னிதி
அக்ரஹாரம் என்பது மேற்குப் புறம் பெருமாள் ஸன்னிதியுடன் இருக்கும். கிழக்கு நோக்கி பெருமாள் ஸேவை ஸாதிப்பார். பழமையான எந்த ஒரு அக்ரஹாரத்து அமைப்பும் அப்படித்தான் இருக்கும்.
பாண்டவ நல்லூர் என்றழைக்கப்பட்ட இந்த ஊரின் பெயர் இப்போது “பாண்டூர்” என்பதாகும். பஞ்சபாண்டவர்களுக்கு எல்லா விதத்திலும் எப்போதும் துணை நின்றவர் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா. மஹாபாரதமே “தூது சென்றவன் ஏற்றம் சொல்லும் நூல்” என்று சிறப்பிக்கப்படுகிறது.
பாண்டவர்களுக்கு ஸஹாயம் செய்ததால் பாண்டவ ஸஹாயப் பெருமாள் என்று பெயர். அதாவது இந்த ஸன்னதி பெருமாள் ஸ்ரீ கிருஷ்ணரைக் குறிக்கும் பெயர் கொண்டவர். ஸ்ரீ பூமி நீளா தேவி ஸமேத பாண்டவ ஸஹாய பெருமாள் ஸன்னிதி.
தென்னச்சார்ய ஸம்ப்ரதாயம் , வைகானஸ ஆகமம்.
ஸன்னிதி நுழைவாயில் மேல்புறம் ஸ்ரீமந் நாராயணன் இரு தேவிகளுடன் காட்சி தருகிறார். இடது மற்றும் வலது புறத்தில் ஸ்ரீ கருடன் கைகளைக் கூப்பியவண்ணம் காட்சி தருகிறார்.
உள்ளே ஸன்னதி முன் மண்டபத்தில் நுழைந்தவுடன் அங்கு பெருமாளை நோக்கி கைகளை கூப்பியபடி ஸ்ரீ கருடனின் காட்சி.
அர்த்த மண்டப வெளிச் சுவற்றில் ஸ்ரீ கிருஷ்ணரின் ஓவியம்
அடுத்து அர்த்த மண்டபம் நாயக்கர் காலக் கட்டிடக் கலையைப் பறைசாற்றுகிறது அதில் இடது புறம் ஸ்ரீ மஹாலக்ஷ்மித் தாயார் கிழக்கு நோக்கியபடி (முன்பு தாயாருக்குத் தனி ஸன்னிதி இருந்திருக்கும்), வலது புறம் வளைவுகளின் உள்புறம். கிழக்கு நோக்கியபடி, ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீ நம்மாழ்வார், வடதிசையில் தெற்கு நோக்கியபடி விஷ்வக்ஸேசனர்.
இரண்டாவது வளைவில் ஜெயகார்ய ஸித்தி ஆஞ்சநேயர் கைகளைக் கூப்பியபடி.. அருள் பாலிக்கிறார்.
மஹாபாரதத்தின் குருக்ஷேத்திரப் போரில் ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனனுக்குத் தேரோட்ட அர்ஜுனனின் தேரில் ஸ்ரீ ஆஞ்சநேயர் கொடியில் இருந்தார். அர்ஜுனனுக்கு ஸ்ரீ கிருஷ்ணர் ஸஹாயமாக இருந்தது போல ஸ்ரீ ஆஞ்சநேயரும் இருந்ததை நினைவுறுத்துகிறார் இந்த ஆஞ்சநேயர்.
துவார பாலகர்களின் சித்திரம்………
அடுத்துச் சிறு மண்டபம் அதனைத் தாண்டி கர்பக்ரஹகம் அதில் ஸ்ரீ பூமி நீளா ஸமேத பாண்டவ ஸகாயப் பெருமாள் கருணை பொங்கும் முக அழகுடன் தேவிமார்களுடன் காட்சி தருகிறார்.
பெருமாள் திருமேனி மட்டும் ஒரே வடிவில் இரண்டு திருமேனிகள் இந்த ஸன்னிதியில் உள்ளன. மாயன் என்பது ஸ்ரீ கிருஷ்ணனைக் குறிப்பது வழக்கம் அதனாலோ என்னவோ ஒரே வடிவில் இரண்டு மூர்த்தியாக முன் பின் என்று காட்சி தருகிறார்.
வலது கை வரத ஹஸ்தம் இடது கை இடுப்பில், மற்ற இரு கைகளில் இடது கையில் சங்கு, வலது கையில் சக்கரம் ஏந்தியபடி சதுர்புஜ ஸேவையில் தேவிமார்களுடன் காட்சிதருகிறார் பெருமாள்.
ஸ்தல விருக்ஷசம் பாரி ஜாதம் (பவழமல்லி). பவழமல்லி மரத்தின் வேரில் ஸ்ரீ ஆஞ்சநேயர் இருப்பதாகவும் , பூவில் ஸ்ரீ கிருஷ்ணர் இருப்பதாகவும் ஐதீஹ்யம்.
இந்த ஸன்னிதி ஸ்ரீ கிருஷ்ணருடன் தொடர்புடையது என்பதால் இந்த ஸன்னிதி ஸ்தல விருக்ஷம் பவழமல்லியாக இருப்பதும் சிறப்பு.
ஹேவிளம்பி ஆவணி 11 இல் ஸம்ப்ரோஷணம் (27/8/17) நடைபெற்றுள்ளது.
பாண்டவர்களுக்குத் தூது சென்று அர்ஜுனனுக்குத் தேரோட்டித் தனது கருணையைக் காட்டிய ஸ்ரீ கிருஷ்ணனைப், பாண்டவர்களுக்கு ஸஹாயம் செய்த ஸ்ரீ கண்ணனை ஸேவிக்க நீங்களும் செல்லலாமே…
——————
துரோணாச்சாரியார் கோயில் (Dronacharya Temple) மகாபாரதத்தில் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின் ஆசிரியரான துரோணாச்சாரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஒரே கோயிலாகும். இது இந்தியாவின் அரியானா மாநிலத்தில் இருக்கும் குருகிராமில் உள்ள பீம் நகர் கிராமத்தில் அமைந்துள்ளது.
காஞ்சிபுரம் பாண்டவேசுவரர் கோயில் (பாண்டவேசம்) என்று அறியப்படும் இது, காஞ்சியிலுள்ள சிவக் கோயில்களில் ஒன்றாகும் .
மேலும், (இச்சிவலிங்கம் தற்போது இல்லை; கட்டிடங்கள் கட்டும்போது இது காணாது போய்விட்டது என்று சொல்லப்படுகிறது.)
இக்கோவில் குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப் படலமாகச் சொல்லப்பட்டு காணப்படுகிறது
தல வரலாறு
பாண்டவர்கள், திரௌபதி, உரோமேசர் முனிவர் முதலிய முனிவர்களும் அவர்களின் மனைவியர்களும்
தீர்த்த யாத்திரை மேற்கொண்டு ஆங்காங்குச் சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வணங்கி வந்தனர்.
காஞ்சிக்கு வந்த அவர்கள் தத்தம் பெயர்களில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.
பாண்டவர்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்டது பாண்டவேசம் எனப்பட்டது.
பாண்டவேசம் எனப்படும் இச்சிவலிங்கத்திற்கு தென்திசையில் ஈசானன், கயிலாயநாதர் என்னும் பெயரில்
சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வடகிழக்கு திசைக்கு திசைப் பாலகனாகும் பேற்றை அடைந்தான் என்பது வரலாறு
அமைவிடம்
தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரம் வடகிழக்கு பகுதியில், (பெரிய காஞ்சிபுரம் (சிவகாஞ்சி)
ரயில்வே ரோடில் சென்று தோட்டப்பகுதியில், வெட்ட வெளியில் (தற்போது கட்டிடங்கள் நிறைந்துள்ளது) உள்ளது.
மேலும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின்
வடகிழக்கே சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் (தற்போது இல்லை) அமைக்கப்பட்டுள்ளது.
—————–
கீழையில் – கீழையூர்
இறைவர் திருப்பெயர்: செம்மலைநாதர்
இறைவியார் திருப்பெயர்: வண்டமரும் பூங்குழலாள்
தல மரம்:
தீர்த்தம் :
வழிபட்டோர்:பஞ்ச பாண்டவர்கள்.
- மக்கள் தற்போது கீழையூர் என்று வழங்குகின்றனர்.
- வனவாசத்தின்போது பாண்டவர்கள் இங்கு வந்து ஐந்து சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக வரலாறு சொல்லப்படுகிறது. மூலத்தானத்தில் விளங்கும் லிங்கம் அருச்சுனனின் பிரதிஷ்டையாகச் சொல்லப்படுகிறது
-
வைப்புத்தலப் பாடல்கள் : சுந்தரர் - ஈழ நாட்டுமா தோட்டந்தென் (7-12-7).
- இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள – வைப்புத் தலமாகும்.
- கோயிலுள் இரு பலாமரங்கள் நன்கு காய்த்து வருமானத்திற்கு உதவுகின்றன.
- இவ்வூரை’அருமொழி தேவ வளநாட்டு அளநாட்டுக் கீழையூர்’ என்று கல்வெட்டுக் குறிக்கின்றது.
-
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு நாகப்பட்டினம் – திருத்துறைப்பூண்டி சாலையில் சென்று – ‘கருங்கண்ணி’யைத் கடந்தால் – கீழையூரை அடையலாம்.
- —————
-
உய்ய வந்த பெருமாள் கோயில் திருவித்துவக்கோடு
- திருவித்துவக்கோடு என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். குலசேகராழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பட்டாம்பி என்னும் நகருக்கு அருகில் அமைந்துள்ளது. ‘திருமிற்றக்கோடு’, ‘திருவீக்கோடு’, ‘ஐந்து மூர்த்தி திருக்கோவில்’ என்றும் இதனை வழங்குவர்.தலவரலாறு
இந்துத் தொன்மங்களின்படி துவாபர யுகத்தில் பஞ்ச பாண்டவர்கள் வனவாச காலத்தில் தென்னிந்தியாவில் பயணம் செய்கையில் இங்குள்ள நீளா நதிக்கரையோரம் ஒரு அழகான இடத்தைக் கண்டனர். அங்கு நிலவிய தெய்வீகம் கலந்த அமைதியைக் கண்டதும் சில காலம் அங்கேயே தங்கி இருக்க எண்ணினர். நாள் வழிபாட்டிற்காகச் சிலைகளையும், ஆலயத்தையும் நிர்மாணித்தனர்.
முதலில் அர்ஜுனன் மஹாவிஷ்ணுவின் சிலையையும் அதற்கு வடக்கே தருமர் ஒரு சிலையையும் தென்புறத்தில் பீமன் ஒரு சிலையையும் அதற்குப் பின்புறம் (தென்புறத்திலே) நகுலனும் சகாதேவனும் ஒரு சிலையையும் நிர்மாணித்தனர். அவர்களது வெகு காலத்திற்குப் பின்னால் பாண்டிய மன்னன் ஒருவனால் மிகப்பெரிய சுற்றுமதில் கட்டப்பட்டது.
- நெடுங்காலம் 4 மூர்த்திகளால் ஆனதாகவே இக்கோவில் இருந்தது. சுமார் 2000 (1800) ஆண்டுகட்கு முன்பு தென்னாட்டைச் சேர்ந்த முனிவர் ஒருவர் காசிக்குச் சென்றிருந்தார். அங்கேயே வெகு காலம் தங்கி வாழ்ந்திருந்தார். அவரது அன்னையார் மரணத் தறுவாயில் இருப்பதாகச் செய்தி வந்ததையடுத்து அவர் திரும்பிவரும்போது அவரது பக்தி ஈடுபாட்டினால் காசி விசுவநாதரும் அம்முனிவரது குடையில் மறைந்து வந்ததாகக் கூறுவர்.வரும் வழியில் இந்தச் சன்னதிக்கு வந்த முனிவர் நீளா நதியில் நீராடச் செல்லும்போது நான்கு மூர்த்திகட்கு முன்புறம் இருந்த ஒரு பலி பீடத்தில் தமது குடையை வைத்துவிட்டுச் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது அந்தப் பலி பீடம் நான்காக வெடித்து அவ்வெடிப்பிலிருந்து சுயம்புவாக சிவலிங்கம் ஒன்றும் தோன்றியிருந்ததாம். குடையும் மறைந்துவிட்டது. இவ்விதம் இது ஐந்து மூர்த்தி தலமாயிற்று. தற்போது இந்த சிவலிங்கத்தை சுற்றிலும் தனியே ஒரு கோவில் கட்டப்பட்டுவிட்டது.
இறைவன், இறைவி
இத்தலத்தின் இறைவன் தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். உய்யவந்த பெருமாள், அபயப்ரதன் என அழைக்கப்படுகிறார். இறைவியின் பெயர் வித்துவக்கோட்டு வல்லி, பத்மாசனி நாச்சியார். என்பதாகும். இத் தலத்தீர்த்தம் சக்ர தீர்த்தம். விமானம் தத்துவ காஞ்சன விமானம் என்ற அமைப்பினை சேர்ந்தது.
சிறப்புக்கள்
கேரள நாட்டு ஆழ்வாரான குலசேகராழ்வாரால் மட்டும் 10 பாக்களில் பாடல் பெற்றது. திருமாலுக்கும் சிவனுக்கும் இங்கு ஒரே இடத்தில் சன்னதியிருப்பது சிறப்பானதாகும் திருமாலும் சிவனும் இணைந்திருக்கும் கோவில்கள் குறிப்பாக 108 வைணவத் திருத்தலங்களில்10க்கு மேற்பட்ட தலங்கள் உள்ளன. பாண்டவர்களின் வருகைக்கு முன்பே இத்தலம் இருந்ததென்பது ஆய்வாளர்களின் முடிவாகும்.
- —————-
-
திருப்பார்த்தன் பள்ளி தாமரைக் கேள்வன் கோயில்
- 108 வைணவ திவ்ய தேசங்களில், மயிலாடுதுறை மாவட்டம் திருப்பார்த்தன் பள்ளி தாமரையாள் கேள்வன் கோயில், 39-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. ராமபிரான் யாககுண்டத்தில் இருந்து காலைத் தூக்கி எழுந்து வருவது போல இரு தேவியருடன் அருள்பாலிப்பது தனிச்சிறப்பு.
- திருமங்கையாழ்வார் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளார்.கவள யானைக் கொம்பு ஒசித்த கண்ணன் என்றும் காமருசீர்க்
குவளை மேகம் அன்ன மேனி கொண்ட கோன் என் ஆனை என்றும்
- தவள மாடம் நீடு நாங்கைத் தாமரையாள் கேள்வன் என்றும்பவள வாயாள் என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே.
-
மூலவர்: தாமரையாள் கேள்வன்
உற்சவர்: பார்த்தசாரதி
தாயார்: தாமரை நாயகி
தீர்த்தம்: கட்க புஷ்கரிணி
விமானம்: நாராயண விமானம்
தல வரலாறு
கௌரவர்களிடம் நாட்டை இழந்த பாண்டவர்கள், வனவாசம் மேற்கொண்டனர். அப்போது அர்ஜுனனுக்கு தாகம் எடுத்ததால், தண்ணீர் தேடி அலைந்தான். சிறிது தூரம் நடந்ததும், அங்கு அகத்திய முனிவர் தனது ஆசிரமத்தில் தியானத்தில் ஆழ்ந்திருப்பதைக் காண்கிறான். அவர் அருகே கமண்டலம் இருப்பதைக் கண்டதும், அதில் தண்ணீர் இருக்கும் என்று எண்ணி மகிழ்ந்தான். முனிவர் தியானம் செய்து முடிக்கும்வரை தன்னால் பொறுத்திருக்க முடியாது என்பதால், அவர் தியானத்தை கலைத்து தனக்கு தண்ணீர் வேண்டும் என்று கேட்டான். அவரது அனுமதியுடன் கமண்டலத்தைத் திறந்து பார்த்தால் அதில் நீர் இல்லை.
அகத்திய முனிவர், “நமக்கு எது வேண்டும் என்றாலும், கொடுக்கும் கடவுளான கிருஷ்ணரிடம் தானே கேட்டிருக்க வேண்டும்” என்று அர்ஜுனனிடம் கூறினார். உடனே அர்ஜுனன் கிருஷ்ணரை அழைத்தான். கூப்பிட்ட குரலுக்கு உடனே கிருஷ்ணர் அர்ஜுனன் முன் தோன்றினார். தன் கையில் இருந்த கத்தியை அர்ஜுனனிடம் கொடுத்த கிருஷ்ணர், அதைப் பயன்படுத்தி எந்த இடத்தில் தோண்டினாலும் தண்ணீர் கிடைக்கும் என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு மறைந்தார். கிருஷ்ணர் கூறியபடி, அர்ஜுனன், கத்தியால் தரையை கீறி, கங்கையை வரவழைத்து தன் தாகத்தைத் தீர்த்துக் கொண்டான். அகத்திய முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்க, கிருஷ்ணர் (பார்த்தசாரதி) இங்கேயே கோயில் கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சி நடைபெற்ற இடம் பார்த்தன்பள்ளி என்று தல வரலாறு தெரிவிக்கிறது.
ராமபிரானின் அருட்காட்சி
அயோத்தியை ஆளும் தசரத மன்னர், குழந்தை வரம் பெற, புத்திர காமேஷ்டி யாகம் செய்தார். அப்போது, ஸ்ரீமன் நாராயணனே தனக்கு மகனாக (ராமபிரானாக) அவதரிக்கப் போகிறார் என்பதை அறிந்தார் தசரதர். தன் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்வதற்காக திருமாலை அழைத்தார். அப்போது யாக குண்டத்தில் இருந்து நாராயணன், ஸ்ரீதேவி, பூதேவியுடன் தோன்றி, தான் எவ்வாறு இருப்பேன் (ராமபிரான்) என்பதை தசரதருக்கு உணர்த்தினார். ராமாவதாரத்தின்போது, ராமபிரானுடன் இருவரும் (ஸ்ரீதேவி, பூதேவி) வாழ முடியாது என்பதால், அப்போதே ராமபிரானை தரிசித்தனர். ராமபிரான் யாககுண்டத்தில் இருந்து காலைத் தூக்கி எழுந்து வருவது போல காட்சி தரும் நிகழ்ச்சி, சிலையாக வடிக்கப்பட்டு இத்தலத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவருடன் இரு தேவியரும் உள்ளனர் என்பது தனிச்சிறப்பு.
கோயில் அமைப்பும், சிறப்பும்
ராஜகோபுரம் 3 நிலை கொண்டதாக அமைந்துள்ளது. நாராயண விமானத்தின் கீழ் உள்ள கருவறையில் மூலவர் மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். உற்சவர் பார்த்தசாரதி பெருமாள் கையில் கத்தியுடன் அருள்பாலிக்கிறார், அருகே கோலவல்லி ராமர் கையில் சங்கு, சக்கரம், கதை, வில், அம்புடன் உள்ளார். அர்ஜுனர், இந்திரன், பதினோரு ருத்திரர்கள் திருமால் தரிசனம் கண்டுள்ளனர்.
பார்த்தனுக்காக உண்டான கோயில் என்பதால் பார்த்தன்பள்ளி ஆயிற்று. அர்ஜுனனுக்கும் இவ்விடத்தில் ஒரு கோயில் உண்டு. வருணன் இத்தல பெருமாளை நோக்கி கடும் தவம் புரிந்து, தனக்கு பார்த்தசாரதியாக காட்சி தருமாறு வேண்டியதால், பெருமாளும் அவ்வாறே அருள்பாலித்ததால், பார்த்தசாரதி பள்ளி என்று இவ்வூருக்கு பெயர் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
திருவிழாக்கள்
வைகுண்ட ஏகாதசி விழா, ஸ்ரீராம நவமி உற்சவம், தைப்பூச தீர்த்தவாரி, தை அமாவாசைக்கு மறுநாள் நடைபெறும் கருடசேவை, ஆடி அமாவாசை தீர்த்தவாரி உற்சவ தினங்களில் சுவாமி, தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் ஆராதனைகள் நடைபெறும். குழந்தை வரம் வேண்டுபவர்கள் இத்தலத்தில் வந்து நேர்த்திக் கடன் செலுத்தி வழிபாடு செய்கின்றனர்.
அமைவிடம்: சீர்காழியிலிருந்து 15 கிமீ தொலைவிலும் திருவெண்காட்டில் இருந்து 4 கிமீ தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது.
—————————-
மத்தியப்பிரதேசத்தில் உள்ள ராய்சன் மாவட்டத்தில் அமைந்திருக்கும் பீமேட்கா குகைகள் 3 லட்சம் ஆண்டுகள் பழமையானது.
இந்த குகைகள் வரலாற்றுக்கு முந்தைய (தற்போது இந்தியா என்றழைக்கப்படும் பழைய தேசங்கள்) மனித வாழ்க்கையை அறிய உதவும் தடயங்களாக திகழ்கின்றன.
இங்கு காணப்படும் 30, 000 ஆண்டுகள் பழமையான ‘பாலியோலித்திக்’ வகை ஓவியங்கள் அக்கால மக்களின் வேட்டை, நடனம் மற்றும் அவர்களின் பல்வேறு வாழ்க்கை முறையை எடுத்துச்சொல்லும் விதமாக இன்றும் நம்மிடையே இருக்கன்றன.
பீம்பேட்கா என்றால் பீமன் அமர்ந்த இடம் என்பது பொருளாகும். அதாவது மகாபாரத காலத்தில் பாண்டவர்களில் ஒருவனான பீமன் இங்கு அமர்ந்ததால் இந்த குகைகளுக்கு இப்பெயர் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது
பல்லாயிரம் ஆண்டுகளாக காற்றிலும், மழையிலும் கிடந்து இயற்கையாக ஒரு ஆமையின் வடிவத்தில் காட்சி தரும் பாறை.
ஸ்பெயினுடன் பாண்டவர்களுக்கு என்ன தொடர்பு? வி.எஸ். வாகன்கர் என்பவர் 1957-ஆம் ஆண்டு ரயிலில் போபால் செல்லும்போது பீம்பேட்கா பாறை வடிவங்களை கண்டு அவை ஸ்பெயின் மற்றும் ஃபிரான்ஸ் நாட்டில் உள்ள சில பாறை அமைப்புகளோடு ஒத்துப்போவதைப் பார்க்கிறோம்
யுனெஸ்கோவின் பெருமிதம் பீம்பேட்கா குகைகள் யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.
—————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
“பஞ்ச“ என்ற வடமொழிச் சொல்லுக்கு “ஐந்து“ என்று பொருள்.
இந்த அரங்கத்தம்மா “பெற்ற தாயினும்“ மேலாக அருள் புரிபவள்.
பஞ்ச சயன ரங்கத்தின் முற்றுப்புள்ளியான ஸ்ரீஅப்பாலரங்கன் உறையும் கோவிலடிக்கு பயணிப்போம். திரு அன்பிலிலிருந்து ஒரு புதியபாலம் ஒன்று காவிரியின் குறுக்கே சமீபத்தில் கட்டப்பட்டுள்ளது. அன்பில் பெருமாளின் அரவணைப்பைப் பெற்றபின் இந்த பாலம் வழியே சீக்கரமாகவே இந்த சன்னிதியினை அடையலாம்.