ஸ்ரீ ராம ரஷா ஸ்தோத்ரம்–ஸ்ரீ தில்லை விளாகம் ராமர்–ஸ்ரீ சிம்மாசலம் ஸ்ரீ லக்ஷ்மி வராஹ நரசிம்ஹ பெருமாள்–ஸ்ரீ மங்களகிரி பானக நரஸிம்ஹர் —

ஶ்ரீ ராம ரக்ஷா ஸ்தோத்ரம்

ஓம் அஸ்ய ஶ்ரீ ராமரக்ஷா ஸ்தோத்ரமன்த்ரஸ்ய
பு³த⁴கௌஶிக ருஷி:
ஶ்ரீ ஸீதாராம சன்த்³ரோதே³வதா
அனுஷ்டுப் ச²ன்த:³
ஸீதா ஶக்தி:
ஶ்ரீமத்³ ஹனுமான் கீலகம்
ஶ்ரீராமசன்த்³ர ப்ரீத்யர்தே² ராமரக்ஷா ஸ்தோத்ரஜபே வினியோக:³ ॥

த்⁴யானம்
த்⁴யாயேதா³ஜானுபா³ஹும் த்⁴ருதஶர த⁴னுஷம் ப³த்³த⁴ பத்³மாஸனஸ்த²ம்
பீதம் வாஸோவஸானம் நவகமல த³ல்த³ஸ்பர்தி² நேத்ரம் ப்ரஸன்னம் ।
வாமாங்காரூட⁴ ஸீதாமுக² கமலமிலல்லோசனம் நீரதா³ப⁴ம்
நானாலங்கார தீ³ப்தம் த³த⁴தமுரு ஜடாமண்ட³லம் ராமசன்த்³ரம் ॥

(மஞ்சள் ஆடை உடுத்தி வில்லும் அம்பும் தாங்கி பத்மாசனத்தில் கருணை பொங்கும் கடாக்ஷங்களுடன்
அடர்ந்து படர்ந்த விரிந்த கூந்தலுடன் ஆஜானுபாஹுவாய் வீற்று இருந்து அருளும் பெருமாளையும்
இடது பக்கத்தில் மேகவண்ண திவ்ய மங்கள விகிரகத்துடன் தெய்விக அணிகலன் பூஷிதமாய்
தாமரை திருமுகத்துடன் இருந்து அருளும்
பிராட்டியையும் நமஸ்கரிக்கிறேன்)

ஸ்தோத்ரம்
சரிதம் ரகு⁴னாத²ஸ்ய ஶதகோடி ப்ரவிஸ்தரம் ।
ஏகைகமக்ஷரம் பும்ஸாம் மஹாபாதக நாஶனம் ॥ 1 ॥

(பெருமாள் சரித்திரத்தையும் அழகையும் விவரிக்க நூறு கோடி வார்த்தைகளாலும் இயலாது
விஸ்தாரமாக ஸத்ய லோகத்தில் ஸ்ரீ ராமாயணம் உண்டே
இங்கு அவற்றுள் ஒரு பதம் -ஒரு எழுத்தே அனைத்து சம்சார பாபங்களையும் ஒழிக்கும் அன்றோ)

த்⁴யாத்வா நீலோத்பல ஶ்யாமம் ராமம் ராஜீவலோசனம் ।
ஜானகீ லக்ஷ்மணோபேதம் ஜடாமுகுட மண்டி³தம் ॥ 2 ॥

ஸாஸிதூண த⁴னுர்பா³ண பாணிம் நக்தம் சரான்தகம் ।
ஸ்வலீலயா ஜக³த்த்ராது மாவிர்பூ⁴தமஜம் விபு⁴ம் ॥ 3 ॥

ராமரக்ஷாம் படே²த்ப்ராஜ்ஞ: பாபக்⁴னீம் ஸர்வகாமதா³ம் ।
ஶிரோ மே ராக⁴வ: பாது பா²லம் (பா⁴லம்) த³ஶரதா²த்மஜ: ॥ 4 ॥

(நீலோத் பலம் -நீல நிற அல்லிப்பூ நிறத்தவன்-புண்டரீகாக்ஷன் -திரு அபிஷேகம் சாத்தி அருளி –
திருக்கரங்களில் கத்தி வில் அம்பு ஏந்தி அருளி துஷ்ட நிரசனத்துக்காக திரு அவதாரம் செய்து அருளி
லோக ரக்ஷணம் செய்து அருளும் கருணா மூர்த்தியான பெருமாளையும் சீதாப்பிராட்டியார் இலக்குமணன் உடன் இருக்கும் சேர்த்தியை
த்யானம் செய்து இந்த ஸ்ரீ ராம ரஷா ஸ்தோத்ரம் பாராயணம் செய்து
ஸர்வ அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக இஷ்ட பிராப்தி சித்திகளைப் பெறுவோம்
பெருமாள் -சக்ரவர்த்தி திருமகன் -தலையையும் நெற்றியையும் காக்கட்டும்)

கௌஸல்யேயோ த்³ருஶௌபாது விஶ்வாமித்ரப்ரிய: ஶ்ருதீ ।
க்⁴ராணம் பாது மக²த்ராதா முக²ம் ஸௌமித்ரிவத்ஸல: ॥ 5 ॥

(கௌசல்யை குமரன் கண்களைக் காக்கட்டும் –
விச்வாமித்ர ரிஷி பிரியமான சிஷ்யன் காதுகளைக் காக்கட்டும்
யஜ்ஜ்ங்களை ரக்ஷிக்கும் பெருமாள் மூக்கினைக் காக்கட்டும்
சுமித்ரா தேவி குமாரனை நேசிக்கும் பெருமாள் முகத்தைக் காக்கட்டும்)

ஜிஹ்வாம் வித்³யானிதி⁴: பாது கண்ட²ம் ப⁴ரதவன்தி³த: ।
ஸ்கன்தௌ⁴ தி³வ்யாயுத:⁴ பாது பு⁴ஜௌ ப⁴க்³னேஶகார்முக: ॥ 6 ॥

(அறிவின் புதையல் என் நாக்கினையும்
பரதாழ்வானால் ஆஸ்ரயிக்கப்படும் பெருமாள் தொண்டையினையும்
தெய்வீக திவ்ய ஆயுதங்களைத் தாங்கியவர் தோள்களையும்
சிவ தனுஸ்ஸை உடைத்தவர் கரங்களையும் காக்கட்டும்)

கரௌ ஸீதாபதி: பாது ஹ்ருத³யம் ஜாமத³க்³ன்யஜித் ।
மத்⁴யம் பாது க²ரத்⁴வம்ஸீ நாபி⁴ம் ஜாம்ப³வதா³ஶ்ரய: ॥ 7 ॥

(சீதா தேவியின் பதி என் கைகளையும்
பரசுராமரை வெற்றி கொண்டவர் என் ஹ்ருதயத்தையும்
கரணை நிரசித்தவர் என் மத்ய பாகத்தையும்
ஜாம்பவானுக்குப் புகலிடம் அளித்த பெருமாள் என் தொப்புள் கொடியையும் காக்கட்டும்)

ஸுக்³ரீவேஶ: கடிம் பாது ஸக்தி²னீ ஹனுமத்-ப்ரபு⁴: ।
ஊரூ ரகூ⁴த்தம: பாது ரக்ஷ:குல வினாஶக்ருத் ॥ 8 ॥

(சுக்ரீவனின் தலைவன் என் இடுப்பையும்
திருவடி ஹ்ருதய வாஸம் செய்து அருளும் பெருமாள் என் சக்தினியையும் -அதாவது -வலது முழங்காலுக்கு மேல் உள்ள பகுதியையும்
ரகு வம்ச சிறந்த அரசர் இடது முழங்காலுக்கு மேல் உள்ள பகுதியையும் காக்கட்டும்)

ஜானுனீ ஸேதுக்ருத்-பாது ஜங்கே⁴ த³ஶமுகா²ன்தக: ।
பாதௌ³ விபீ⁴ஷணஶ்ரீத:³ பாது ராமோகி²லம் வபு: ॥ 9 ॥

(சேது காட்டியவர் என் முழங்கால்களையும்
ராவணனை அழித்தவர் தொடைகளையும்
செல்வ விபீஷணனுக்கு அனைத்தையும் அளித்தவர் என் பாதங்களையும் மற்றும் உடம்பையும் காக்கட்டும்)

ஏதாம் ராமப³லோபேதாம் ரக்ஷாம் ய: ஸுக்ருதீ படே²த் ।
ஸ சிராயு: ஸுகீ² புத்ரீ விஜயீ வினயீ ப⁴வேத் ॥ 10 ॥

(சாத்விகர்கள் இந்த ஸ்ரீ ராம ரஷா ஸ்தோத்ரத்தை நித்தியமாக பாராயணம் செய்வர்-சாத்விக கொண்ட பெண்டிர் மக்களுடன்
அவர்கள் விநயத்துடன் இங்கும் லீலா விபூதியை ஆண்டும் அங்குச் சென்றும் நித்ய கைங்கர்யசெல்வம் பெறுவர் )

பாதால்த-³பூ⁴தல-வ்யோம-சாரிண-ஶ்சத்³ம-சாரிண: ।
ந த்³ரஷ்டுமபி ஶக்தாஸ்தே ரக்ஷிதம் ராமனாமபி⁴: ॥ 11 ॥

(இத்தைப் பாராயணம் செய்பவர் மூ உலக அதிபதியான இந்திரனும் நிமிர்ந்து பார்க்க முடியாது
புண்ணிய சக்தி வாய்ந்த மந்த்ரம் இது)

ராமேதி ராமப⁴த்³ரேதி ராமசன்த்³ரேதி வா ஸ்மரன் ।
நரோ ந லிப்யதே பாபைர்பு⁴க்திம் முக்திம் ச வின்த³தி ॥ 12 ॥

(ஸ்ரீ ராம நாம சங்கீர்த்தனம் செய்பவர்களை பாப்பம் தீண்டாது
இங்கும் மகிழ்வுடன் வாழ்ந்து அங்கும் பரம புருஷார்த்த கைங்கர்யம் பெறுவர்)

ஜகஜ³்ஜைத்ரைக மன்த்ரேண ராமனாம்னாபி⁴ ரக்ஷிதம் ।
ய: கண்டே² தா⁴ரயேத்தஸ்ய கரஸ்தா²: ஸர்வஸித்³த⁴ய: ॥ 13 ॥

(இத்தை மனப்பாடமாக வைத்து பாராயணம் செய்பவர்கள் அனைத்து வெற்றிகளையும் அடைவார்கள்
ஸமஸ்த அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமாக ஸமஸ்த இஷ்ட பிராப்தியும் பெறுவர்)

வஜ்ரபஞ்ஜர நாமேத³ம் யோ ராமகவசம் ஸ்மரேத் ।
அவ்யாஹதாஜ்ஞ: ஸர்வத்ர லப⁴தே ஜயமங்க³ல்த³ம் ॥ 14 ॥

(இந்திர வஜ்ராயுதத்துக்கும் மேலான இந்த வஜ்ரா ராம கவசம் அனைத்து அபீஷ்டங்களையும் அருளும்
ஸகல வித புண்யமும் ஐயமும் அடைவிக்கும்(

ஆதி³ஷ்டவான்-யதா² ஸ்வப்னே ராமரக்ஷாமிமாம் ஹர: ।
ததா² லிகி²தவான்-ப்ராத: ப்ரபு³த்³தௌ⁴ பு³த⁴கௌஶிக: ॥ 15 ॥

(பவித்ரமான இந்த கவசம் சிவபெருமானால் புத கௌசிக முனிவருக்கு கனவில் உபதேசிக்கப்பட்டு
உரைத்த படியே அவரால் ஈடுபடுத்தப்பட்ட ஸ்லோகம்)

ஆராம: கல்பவ்ருக்ஷாணாம் விராம: ஸகலாபதா³ம் ।
அபி⁴ராம-ஸ்த்ரிலோகானாம் ராம: ஶ்ரீமான் ஸ ந: ப்ரபு⁴: ॥ 16 ॥

(நம்மையும் பொருளாக்கி தன்னையே தந்து அருளும் கற்பகம் ராமபிரான்
ஈடில்லா அழகன் -ஒப்பில்லா அப்பன் -ஸர்வ சேஷீ)

தருணௌ ரூபஸம்பன்னௌ ஸுகுமாரௌ மஹாப³லௌ ।
புண்ட³ரீக விஶாலாக்ஷௌ சீரக்ருஷ்ணாஜினாம்ப³ரௌ ॥ 17 ॥

ப²லமூலாஶினௌ தா³ன்தௌ தாபஸௌ ப்³ரஹ்மசாரிணௌ ।
புத்ரௌ த³ஶரத²ஸ்யைதௌ ப்⁴ராதரௌ ராமலக்ஷ்மணௌ ॥ 18 ॥

ஶரண்யௌ ஸர்வஸத்த்வானாம் ஶ்ரேஷ்டௌ² ஸர்வத⁴னுஷ்மதாம் ।
ரக்ஷ:குல நிஹன்தாரௌ த்ராயேதாம் நோ ரகூ⁴த்தமௌ ॥ 19 ॥

(பெருமாள் அலகுக்குத் தோற்று சூர்ப்பணகை ஸ்தோத்ரம் -)

(வாலிப பருவம் -அழகியான் தானே -புண்டரீகாக்ஷன் -மான் தோல் மரவுரி தரித்தவர்
காய்கனி புஜிப்பவர் -ப்ரஹ்மசாரியம் அனுஷ்டிப்பவர் -அனைவருக்கும் ஒரே புகலிடம்
அசுரர் குலங்களை வெட்டிக்களைந்தவர்
இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் -இவர்கள் நம்மை ரக்ஷிக்கட்டும்)

ஆத்த ஸஜ்ய த⁴னுஷா விஷுஸ்ப்ருஶா வக்ஷயாஶுக³ நிஷங்க³ ஸங்கி³னௌ ।
ரக்ஷணாய மம ராமலக்ஷணாவக்³ரத: பதி² ஸதை³வ க³ச்ச²தாம் ॥ 2௦ ॥

(அமோக வில் -அம்புறாத் துணியில் எடுக்க எடுக்க குறைவற்ற பாணங்களால் நிரம்பியே இருக்கும்
இருவரும் நம் முன்னால் இருந்து ரக்ஷித்து அருளட்டும்(

ஸன்னத்³த:⁴ கவசீ க²ட்³கீ³ சாபபா³ணத⁴ரோ யுவா ।
க³ச்ச²ன் மனோரதா²ன்னஶ்ச (மனோரதோ²ஸ்மாகம்) ராம: பாது ஸ லக்ஷ்மண: ॥ 21 ॥

ராமோ தா³ஶரதி² ஶ்ஶூரோ லக்ஷ்மணானுசரோ ப³லீ ।
காகுத்ஸ: புருஷ: பூர்ண: கௌஸல்யேயோ ரகூ⁴த்தம: ॥ 22 ॥

9எப்போதும் தயார் நிலையில் இருந்து -கவசம் அணிந்து திருக்கைகளிலே கத்தி வில் அம்பு ஏந்தி
நமக்கு முன்னால் இருந்து அனைத்து அபீஷ்டங்களையும் அளித்து ரக்ஷிக்கட்டும்)

வேதா³ன்தவேத்³யோ யஜ்ஞேஶ: புராண புருஷோத்தம: ।
ஜானகீவல்லப:⁴ ஶ்ரீமானப்ரமேய பராக்ரம: ॥ 23 ॥

இத்யேதானி ஜபேன்னித்யம் மத்³ப⁴க்த: ஶ்ரத்³த⁴யான்வித: ।
அஶ்வமேதா⁴தி⁴கம் புண்யம் ஸம்ப்ராப்னோதி ந ஸம்ஶய: ॥ 24 ॥

(ஸ்ரீ ராம நாம சங்கீர்த்தனம் அஸ்வமேத யாகத்தை விட பன்மடங்கு ஸ்ரேஷ்டம்-இதில் எவ்வித சங்கையும் வேண்டாம் )

ராமம் தூ³ர்வாத³ல்த³ ஶ்யாமம் பத்³மாக்ஷம் பீதவாஸஸம் ।
ஸ்துவன்தி நாபி⁴-ர்தி³வ்யை-ர்னதே ஸம்ஸாரிணோ நரா: ॥ 25 ॥

(இவ்வுலக பந்த விடுதலையும் அடைவிக்கும்(

ராமம் லக்ஷ்மண பூர்வஜம் ரகு⁴வரம் ஸீதாபதிம் ஸுன்த³ரம்
காகுத்ஸ்த²ம் கருணார்ணவம் கு³ணனிதி⁴ம் விப்ரப்ரியம் தா⁴ர்மிகம் ।
ராஜேன்த்³ரம் ஸத்யஸன்த⁴ம் த³ஶரத²தனயம் ஶ்யாமலம் ஶான்தமூர்திம்
வன்தே³ லோகாபி⁴ராமம் ரகு⁴குல திலகம் ராக⁴வம் ராவணாரிம் ॥ 26 ॥

ராமாய ராமப⁴த்³ராய ராமசன்த்³ராய வேத⁴ஸே ।
ரகு⁴னாதா²ய நாதா²ய ஸீதாயா: பதயே நம: ॥ 27 ॥

ஶ்ரீராம ராம ரகு⁴னந்த³ன ராம ராம
ஶ்ரீராம ராம ப⁴ரதாக்³ரஜ ராம ராம ।
ஶ்ரீராம ராம ரணகர்கஶ ராம ராம
ஶ்ரீராம ராம ஶரணம் ப⁴வ ராம ராம ॥ 28 ॥

ஶ்ரீராம சன்த்³ர சரணௌ மனஸா ஸ்மராமி
ஶ்ரீராம சன்த்³ர சரணௌ வசஸா க்³ருஹ்ணாமி ।
ஶ்ரீராம சன்த்³ர சரணௌ ஶிரஸா நமாமி
ஶ்ரீராம சன்த்³ர சரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 29 ॥

மாதா ராமோ மத்-பிதா ராமசன்த்³ர:
ஸ்வாமீ ராமோ மத்-ஸகா² ராமசன்த்³ர: ।
ஸர்வஸ்வம் மே ராமசன்த்³ரோ த³யால்து³:
நான்யம் ஜானே நைவ ஜானே ந ஜானே ॥ 3௦ ॥

த³க்ஷிணே லக்ஷ்மணோ யஸ்ய வாமே ச (து) ஜனகாத்மஜா ।
புரதோ மாருதிர்யஸ்ய தம் வன்தே³ ரகு⁴னந்த³னம் ॥ 31 ॥

லோகாபி⁴ராமம் ரணரங்க³தீ⁴ரம்
ராஜீவனேத்ரம் ரகு⁴வம்ஶனாத²ம் ।
காருண்யரூபம் கருணாகரம் தம்
ஶ்ரீராமசன்த்³ரம் ஶரண்யம் ப்ரபத்³யே ॥ 32 ॥

மனோஜவம் மாருத துல்ய வேக³ம்
ஜிதேன்த்³ரியம் பு³த்³தி⁴மதாம் வரிஷ்டம் ।
வாதாத்மஜம் வானரயூத² முக்²யம்
ஶ்ரீராமதூ³தம் ஶரணம் ப்ரபத்³யே ॥ 33 ॥

கூஜன்தம் ராமராமேதி மது⁴ரம் மது⁴ராக்ஷரம் ।
ஆருஹ்யகவிதா ஶாகா²ம் வன்தே³ வால்மீகி கோகிலம் ॥ 34 ॥

ஆபதா³மபஹர்தாரம் தா³தாரம் ஸர்வஸம்பதா³ம் ।
லோகாபி⁴ராமம் ஶ்ரீராமம் பூ⁴யோபூ⁴யோ நமாம்யஹம் ॥ 35 ॥

ப⁴ர்ஜனம் ப⁴வபீ³ஜானாமர்ஜனம் ஸுக²ஸம்பதா³ம் ।
தர்ஜனம் யமதூ³தானாம் ராம ராமேதி க³ர்ஜனம் ॥ 36 ॥

ராமோ ராஜமணி: ஸதா³ விஜயதே ராமம் ரமேஶம் பஜ⁴ே
ராமேணாபி⁴ஹதா நிஶாசரசமூ ராமாய தஸ்மை நம: ।
ராமான்னாஸ்தி பராயணம் பரதரம் ராமஸ்ய தா³ஸோஸ்ம்யஹம்
ராமே சித்தலய: ஸதா³ ப⁴வது மே போ⁴ ராம மாமுத்³த⁴ர ॥ 37 ॥

ஶ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே ।
ஸஹஸ்ரனாம தத்துல்யம் ராம நாம வரானநே ॥ 38 ॥

இதி ஶ்ரீபு³த⁴கௌஶிகமுனி விரசிதம் ஶ்ரீராம ரக்ஷாஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ।

———-

ஶ்ரீராம ஜயராம ஜயஜயராம ।

திருவாரூர் மாவட்டத்தில், பட்டுக்கோட்டையிலிருந்து வேதாரண்யம் செல்லும் வழியில் அமைந்துள்ளது தில்லைவிளாகம் திருத்தலம். இங்கே அமைந்துள்ள கோதண்டராம சுவாமி திருக்கோயிலில் தெய்வீகப் பொலிவுடன் திகழும் இராம விக்ரகம் – மிகவும் பிரசித்தம். தில்லைச் சிதம்பரத்தில் நடராஜரோடு சேர்ந்து கோவிந்தராஜருக்கும் சன்னிதி இருப்பதுபோல, இங்கு நடராஜருக்கு சந்நிதி உண்டு. இத்தலத்திற்கு “ஆதி தில்லை” என்றும் பெயருண்டு.

“ராம சரம்” என்னும் அம்பினை ஒரு கையில் ஏந்தியவாறு, ஜானகி அன்னையுடனும், தம்பி இலக்குவனுடனும் நின்ற கோலத்தில் மட்டுமே விளங்குவதால் “தில்லை சித்ரகூடம்” என இத்தலம் வழங்கப்படும்.

தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள் திறல்விளங்கு மாருதியோ டமர்ந்தான் றன்னை
எல்லையில்சீர்த் தயரதன்றன் மகனாய்த் தோன்றிற் றதுமுதலாத் தன்னுலகம் புக்க தீறா
கொல்லியலும் படைத்தானைக் கொற்ற வொள்வாள் கோழியர்கோன் குடைக்குலசே கரஞ்சொற் செய்த
நல்லியலின் தமிழ்மாலை பத்தும் வல்லார் நலந்திகழ்நா ரணனடிக்கீழ் நண்ணு வாரே.

என்று பத்தாம் திருமொழியில், குலசேகர ஆழ்வார் பாடும் “தில்லை சித்ரகூடம்” இவ்விடம்தான் என்பது தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்களின் கூற்று.

“எம்பார்” கோவிந்த தாசர், இராமனுஜருடைய “திருவடி நிழல்”(இராமனுஜ கோவிந்த தாசர்)  எனப்பெயர் பெற்றவர். “சிம்மாசலம் வராக நரசிம்மர் பாமாலை”, “மங்களகிரி பானக நரசிம்மர் பாமாலை”ஆகிய பாடற்தொகுதிகளை இயற்றியுள்ளார். சோழ நாட்டுத் திருத்தலங்களை பெரிதும் பாடியிருக்கும் இவரது பாடல்களில், தில்லை விளாகம் இராமபிரானப் பாடும் பாடலொன்றை இங்கே பார்க்கலாம்.

இராகம்: தன்யாசி
தாளம்: ரூபகம்

பல்லவி
தில்லை விளாகம் ராமனைக் கண்டால்
இல்லை யென்றாகும் நம் வினைகளே

அனுபல்லவி
தொல்லை நோய்களைத் தொலைக்கும் வில்லினை
அல்லும் பகலும் தரித்த நம் தலைவனை

சரணம்
சோழ நாட்டிலே சோற்றுக் கலைவதா
தாழ வந்த நம் ராமனை மறப்பதா
ஏழை என்றாலும் உள்ள ஜீவனில்லையோ
நாழியும் மறவா நம் நாதனில்லையோ
(மத்யம காலம்)
கோவிந்த நாமனை காவிரி நாடனை
சேவிக்க வேணும் ஜானகி ராமனை

பத்தாம் திருமொழியில், குலசேகர ஆழ்வார் பாடும் “தில்லை சித்ரகூடம்” இவ்விடம்தான் என்பது தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்களின் கூற்று

சிம்மாசலம் ஸ்ரீ லக்ஷ்மி வராஹ நரசிம்ஹ பெருமாள்

இந்த கோயில் விசாகப்பட்டினத்திற்கு அருகில் கடற்கரையோரம் ரத்னகிரி மலையின் வனப் பகுதிக்கு நடுவில் அமைந்துள்ளது.

மலையடிவாரத்திலிருந்து மேலே செல்வதற்கு வண்டியில் இருபது நிமிடம் பிடிக்கிறது. படியில் ஏறிச் செல்ல விரும்புவோர் 1000 படிகள் எற வேண்டும்.
விஷ்ணு பக்தனான தன் மகன் பிரகலாதனைக் கொல்ல இரண்யகசிபு எவ்வளவோ முயற்சிகள் செய்தும் அவை பயனற்றுப்போன நிலையில், பிரகலாதனைக் கடலில் வீச ஆணையிட்டான்.ஆனால், அவ்வாறு வீசும்போது விஷ்ணு அந்த மலைமீது இறங்கி பிரகலாதனைக் காத்தார்.
அதுதான் சிம்மாத்ரி (இன்றைய சிம்மாச்சலம்). முனிவர்கள் பக்தர்களின் வேண்டுகோளின்படி வராக நரசிம்மராக அங்கேயே குடிகொண்டார்.

வராஹ நரசிம்மரின் கட்டளைப்படி இன்றுவரை சந்தன மேனியுடனே நரசிம்மர் காட்சியளிக்கிறார். வைகாசி மாதம் வளர் பிறையில் மூன்றாம் நாள் சந்தன பூச்சு விலக்கப்பட்டு நரசிம்மரின் உண்மை தரிசனம் காட்டப்படுகிறது.

மற்ற நாட்களில் சந்தனகாப்பிட்ட தரிசனம் தான்.

சந்தனகாப்பு என்றால் எவ்வளவு தெரியுமா?
வைகாச சுக்ல த்ருதீயை, வைகாச பவுர்ணமி, ஜ்யேஷ்ட பவுர்ணமி, ஆஷாட பவுர்ணமி என்று வருஷத்தின் நான்கு தடவைகள், சுமார் 500 கிலோ சந்தனம் சாத்துகிறார்கள்.

எல்லா நாட்களும் சந்தனகாப்புடன் காட்சியளிக்கிறார் இந்த வராஹ நரசிம்மர்  என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

ராமானுஜர் ஸ்ரீ கூர்மத்தில் வைணவத்தை நிலைநாட்டியபின், தெற்கே அடுத்த தலமான சிம்மாசலமான இம்மலையை அடைந்தார்.

விசாகப்பட்டினத்திற்கு பதினைந்து மைல் தூரத்தில் இருக்கும் மலைக் கோயில் இது.
இங்கு கோயில் கொண்டிருக்கும் வராக நரசிம்மர், பின்னாளில் ஹிரண்யகசிபுவை வதைத்தபின் இங்கு பிரஹலாதன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வராக முகத்துடன் மனித உடலோடு, சிங்கத்தின் வால்கொண்டு, வராக நரசிம்மனாக காட்சி அளிக்கிறார்.

பிரஹலாதன் பெருமாள் காத்தருளிய அந்த இடத்தில் நரசிம்மருக்கு கோயிலைக் கட்டிய இடமே சிம்மாசலம்.

பெருமாளைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

அருகிலேயே சென்று பார்க்க அனுமதிக்கிறார்கள்.

வெளியே வந்து காங்கதாரா அருவி, எங்கிருந்து வருவதென்று தெரியவில்லை.

ஐந்து இடங்களில் சிறிய முகத்துவாரம் வழியாக வருவதை தலையில் தெளித்துக்கொள்ளலாம்.

சனக, சனந்தன, சனாத, சனத்குமாரர்களுக்கும், தேவர்கள், நாரதர், ரிஷிகளுக்கும், இவர்  தரிசனமளித்ததாக தலபுராணம் கூறுகிறது.

இங்குள்ள நரசிம்ம தீர்த்தம், கங்காதாரா தீர்த்தம் எனும் இரு அருவிகளிலும் நீராடி வராஹநரசிம்மரை வணங்க தீரா நோய்கள் தீர்ந்து பாவங்கள் விலகும் என்பது ஐதீகம்.

உடல் வளமும் உள்ள வளமும் பெற இந்த வராஹ லட்சுமிநரசிம்மர் பேரருள்  புரிகிறார்.

————-
ஸ்ரீ மங்களகிரி பானக நரஸிம்ஹர்
மங்களகிரி என்றால் மங்களகரமான மலை என்று பொருள். மங்கள+கிரி=மங்களகிரி.
இந்தியாவில் உள்ள பல பெருந்தலங்களில் இதுவும் ஓன்று.
ஸ்ரீ மகாலட்சுமி வாசம் செய்வதால் இந்த மலை மங்களகரமான மலை எனப் பெயர் பெற்றது.
மங்களகிரியில் மொத்தம் மூன்று நரசிம்ம சுவாமி கோயில்கள் உள்ளன.
ஒன்று, மலையில் அமைந்துள்ள பானக நரசிம்மர் சுவாமி கோயில்.
இரண்டு, மலை அடிவாரத்தில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில்.
மூன்றாவது, மலை உச்சியில் உள்ள கண்டல நரசிம்ம சுவாமி ஆகும்.
இந்த மலை யானை வடிவில் அமைந்துள்ளது.
எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் இம்மலை யானை வடிவிலேயே காண்பது இதன் தனிச் சிறப்பாகும்.
இம்மலை உருவான கதை மிகவும் சுவாரசியமானது. பழங்காலத்தில் பாரியாத்ரா என்ற ஒரு அரசன் இருந்தான்.
அவனது மகன் ஹரஸ்வ ஸ்ருங்கி பல புனித இடங்களுக்கும் சென்று தவம் புரிந்து கடைசியில் புனிதத் தலமான மங்களகிரியை வந்தடைந்தான்.
அங்கு மூன்று ஆண்டு காலம் கடுமையான தவம் புரிந்தான்.
அப்பொழுது அனைத்து தேவர்களும் தோன்றி அவனிடம் அங்கேயே தொடர்ந்து தவம் புரியுமாறு கூறினர்.
அவனும் ஸ்ரீமகாவிஷ்ணுவை நினைத்து தியானம் செய்தான்.
அப்பொழுது அவனது தந்தையான பாரியாத்ரா தன் மகனை தன்னோடு அழைத்துச் செல்ல வந்தான்.
ஆனால், ஹரஸ்வ ஸ்ருங்கியோ யானை வடிவம் பெற்ற மலையாக மாறி பகவான் ஸ்ரீமகா விஷ்ணுவின் இருப்பிடமாக உருவெடுத்தான்.
திருமால் நரசிம்ம வடிவில் அங்கு எழுந்தருளினார். அங்குள்ள மக்கள் அந்த இறைவனை பானக நரசிம்ம சுவாமி என்று அழைத்தனர்.
மகாவிஷ்ணு ஒரிசா மாநிலத்தின் பூரி க்ஷேத்திரத்தில் ஜகந்நாதராக நின்று உணவருந்திவிட்டு,
ஆந்திர மாநிலத்து சிம்மாசலத்தில் உடலை சந்தனக் குழம்பில் குளிர வைத்துக்கொண்டு,
மங்களகிரியில் பானகம் அருந்தி,
திருப்பதியில் ஆட்சி செய்துகொண்டு,
ஸ்ரீரங்கத்தில் சயனித்திருந்து ஜகத்கல்யாண மூர்த்தியாகத் திகழ்வதாகப் புராணங்கள் கூறுகிறது.
திருமால் இரண்யனை வதம் செய்து தன் பக்தன் பிரகலாதனைக் காக்க தூணில் தோன்றிய கணநேர அவதாரம் நரசிம்ம அவதாரம்.
சிம்ம முக நரசிம்மர் அருட்பாலிக்கும் கோயில்கள் பல உண்டு.
அவற்றில் ஆந்திர மாநிலத்தில் விஜயவாடாவிலிருந்து குண்டூர் செல்லும் சாலையில் 26 கி.மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும்
மங்களகிரி என்ற புனிதத் தலத்திலுள்ள மலைக் குகைக்கோயில் தனிச்சிறப்பு வாய்ந்தது.
சங்கு சக்கரத்தை இரு கைகளில் ஏந்தி, வாய் திறந்த முகம் மட்டும், தானாகத் தோன்றிய ஸ்வம்வ்யக்த அதாவது
தானே தோன்றிய மூர்த்தமாக அமைந்து, பக்தர்கள் நிவேதனம் செய்யும் பானகத்தில் பாதியை மட்டும் அருந்தி
அருட்பாலிக்கும் பானக நரசிம்மர் கோயில் அது.

பாரதத்திலுள்ள மலைகளில் மஹேந்திரம், மலையம், ஸஹ்யம், சுக்திமான், ருக்‌ஷம், விந்தியம், பாரியாத்ரம் என்பவை
ஸப்த  குல பர்வதங்கள் என விஷ்ணு புராணம் கூறுகிறது.
ஸர்வ சுகஸ்வ ரூபிணியான மகாலட்சுமி அமிர்தத்தை மகாவிஷ்ணுவுக்கு நிவேதனம் செய்து தவக்கோலத்தில்
நின்றதன் காரணமாக, பாரியாத்ர பர்வதத்திற்கு மங்களகிரி என்ற பெயர் வந்தது.
ஹஸ்திகிரி, தர்மாத்ரி, கோத்தாத்ரி, முக்தியாத்ரி என்பவை அதன் ஏனைய பெயர்கள் என புராணங்கள் கூறுகின்றன.
வேத புராணத்தில் இத்தலத்திற்கு சபலதா என்ற பெயரும் உள்ளதாக சொல்லியிருக்கிறது.
இந்த மலைப் பிராந்தியத்தில் மேய்ந்து வந்த பசு ஒன்று தினமும் மாலையில் பாலின்றி திரும்புவதைக் கண்ட
பசுவின் சொந்தக்காரன் அதைக் கண்காணித்தபோது, ஒருநாள் மாலை வேளையில் நிழல் உருவம் ஒன்று
பசுவின் பாலை அருந்திவிட்டு குகையொன்றில் சென்று மறைவதைக் கண்டான்.
அன்றைய இரவு அவனது கனவில் மகாலட்சுமி சமேதராய் நரசிம்மர் தோன்றி,
மொமூச்சி என்ற கொடிய அரக்கனுக்காகத் தாம் அந்தக் குகையினுள் மறைந்திருப்பதாகக் கூறினார்.
மறுநாள் பசுவின் சொந்தக்காரன் அந்தக் குகை துவாரத்தில் தனது பசுவின் பாலை ஊற்ற,
அதில் பாதி பிரசாதமாக வெளியே வழிந்ததை அவன் தன் வீட்டுக்கு எடுத்துச் சென்றான்.
இந்தச் சம்பவத்தை அவன் அந்தப் பிராந்தியத்தை ஆண்டு வந்த திரிலோக விஜயன் என்ற அரசனிடம் கூற,
அரசன் நரசிம்மருக்கு குகை மீது கோயில் கட்டியதாக பானக நரசிம்ம தலத்தின் புராணம் கூறுகிறது.
கொடிய அரக்கனான மொமூச்சி கொட்டைப் பாக்கில் பொருந்திய ஊசி முனைமீது ஒற்றைக்கால் கட்டை விரலில்
சூரியனை நோக்கி நின்று கொண்டு கைகூப்பி பிரம்மனைக் குறித்து தவம் செய்தபொழுது,
அந்த தவவலிமையில் ஈரேழு புவனங்களும் ஆடின.
இதையடுத்து அன்ன வாகனத்தின் மீது அமர்ந்து நொமூச்சிக்கு காட்சி தந்த பிரம்மன்,
எந்த மானிடனாலோ அல்லது ஆயுதத்தினாலோ தனக்கு இறப்பு ஏற்படக்கூடாது என்று அவன் கேட்ட வரத்தைக் கொடுத்தருளினார்.
இதைத் தொடர்ந்து தேவர்களைத் துன்புறுத்தி வந்த நொமூச்சியிடமிருந்து தம்மைக் காக்கத் தேவர்கள் திருமாலிடம் முறையிட,
திருமாலும், நரசிம்மராக மங்களகிரி குகைக்குள் தங்கியிருந்தது, மொமூச்சியை எதிர்நோக்கி நின்றார்.
அச்சமயம் இந்திரன் விடுத்த சக்ராயுதத்தை நரசிம்மர் தனது நகங்களில் ஏற்றுக்கொண்டு
குகையருகில் மொமூச்சியை சம்ஹாரம் செய்தருளினார் என ஈசன் உமையவளுக்குக் கூறியதாக,
பிரம்ம வைவர்த்த புராணத்தின் பவானி சங்கர கீதை கூறுகிறது.
இதன் காரணமாகவோ என்னவோ, இத்தல நரசிம்மரது நகங்கள் சுதர்சன சக்கரத்தின் அம்சமாகக் கருதப்படுகின்றன.
தொடர்ந்து குகையில் தங்கிய நரசிம்மரது உக்ரம் தணியாமல் தகிக்க,
பிரம்மன், நாரத மகரிஷி மற்றும் இந்திராதி தேவர்கள் அவரை தோத்திரங்களால் துதிக்க,
நரசிம்மர், ஆகாய கங்கையில் நீராடி, தேவர்களை அமிர்தத்தை எடுத்து வரச்சொல்லி அருந்திவிட்டு,
அதில் பாதி அமிர்தத்தைப் பிரம்மாதி தேவர்களுக்குப் பிரசாதமாக அளித்தார்.
அச்சமயம் அவரது உக்ரம் தணியத் தொடங்கியதாம்.
அவ்வாறு கிருதயுகத்தில் அமிர்தத்தை அருந்திய உக்ர நரசிம்மர்
திரேதாயுகத்தில் பசு நெய்யையும், துவாபர யுகத்தில் பசுவின் பாலையும்,
நிகழும் கலியுகத்தில் பானகத்தையும் அருந்தி சாந்தமாக நின்று அருட்பாலிப்பதாக கூறப்படுகிறது.
இவ்வாறு திருமால் பானக நரசிம்மராக வீற்றிருக்கும் குகைக்கோயில் மங்களகிரியிலுள்ள மலை மீது சுமார் 800 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
அகன்ற நானூறு படிகளின் வழியாக சிரமமின்றி ஏறி, பானக நரசிம்மர் கோயில் சந்நதியை அடையலாம்.
மலையடிவாரத்தில் கோயில் கொண்டிருக்கும் பிரமராம்பிகை சமேத மல்லேஸ்வரரையும்,
தொடர்ந்து அருகில் கருடாழ்வாரையும் தரிசித்து விட்டு பக்தர்கள் மலை ஏறத் தொடங்குகின்றனர்.
சுமார் 50 படிகள் ஏறியபின் மேற்கு நோக்கி நின்று அருள்புரியும் வேங்கடேஸ்வர ஸ்வாமியைத் தரிசிக்கிறோம்.
ஒரு சமயம் சர்வசுந்தரி என்ற அப்ஸரஸ் பெண் இட்ட சாபத்தினால் நாரத மகரிஷி பால் விருட்சமாக மாறி நின்றார்.
புத்திரப்பேறு கிடைக்காத பெண்கள் ருதுஸ்நானம் முடிந்த தினம் அப்பால் விருட்சத்தைச் சுற்றி வந்து பழங்களை விநியோகம் செய்ய,
அவர்களுக்குப் புத்திரகடாட்சம் ஏற்படும் என்ற நம்பிக்கை இங்குள்ள மக்களிடையே நிலவுகிறது.
வேங்கடேஸ்வர ஸ்வாமி சந்நதியருகே வளர்ந்த பால் சொட்டு செடியை பிற்காலத்தில்
மலையடிவாரத்திலுள்ள கருடாழ்வார் சந்நதியருகில் நட்டதாகக் கூறப்படுகிறது.
வேங்கடேஸ்வரரைத் தரிசித்து, தொடர்ந்து படி ஏறிச் சென்றால் துவஜஸ்தம்பம் அருகே நெய் தீபம் ஏற்றச் சொல்கிறார்கள்.
இந்த விளக்கில் முன்னூற்று அறுபத்தைந்து திரிகள் இருப்பதாகவும்,
ஒரு தீபம் ஏற்றினால் ஒர் ஆண்டு தீபம் ஏற்றிய பலன் கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள். தீபம் ஏற்றும் இடம் தூய்மையாக இருக்கிறது.
இதே இடத்தில்தான் பானகச் சீட்டை விலை கொடுத்து வாங்க வேண்டும்.
அர்த்த மண்டபத்துடன் உள்ளே தீப ஒளி மட்டும் வீசும் இருள் சூழ்ந்த குகை சந்நதியை அடைகிறோம்.
இக்குகை கருவறைச் சுவரில் அமைந்த பெரிய பிறை ஒன்றில் மேற்கு திசை நோக்கி பானக நரசிம்மர்,
சங்கு – சக்கரத்தை இரு கைகளில் ஏந்தி, பல் வரிசைகள் வெளியே தெரியும். சிம்ம முகவாய்
அகன்று திறந்த வண்ணம் முகத்துடன் மட்டும் ஸ்வயம் வ்யக்த மூர்த்தமாகக் காட்சி தருகிறார்.
இந்தப் பானக நரசிம்மருக்கு பிரத்யேக உருவம் கொண்ட விக்ரகம் எதுவும் கிடையாது.
ஆனால் 15 செ.மீ. அகலம் உடைய வாய்ப்பகுதி மட்டும் உண்டு. கடவுளின் இந்த வாய்ப்பகுதியானது வெங்கலத் தகட்டினால் சுற்றி மூடப்பட்டிருக்கும்.
இந்தக் கோயில் உச்சி காலம் வரையே திறந்து வைக்கப்படும். ஏனென்றால் இரவில் தேவதைகள் வந்து பூஜை செய்வதாக ஐதீகம்.
அங்குள்ள அந்த நரசிம்ம சுவாமியின் வாயில் பானகம் எனப்படும் வெல்லம் கரைத்த நீர் தீர்த்தமாக விடப்படும்.
அப்படி விடும் பொழுது இறைவன் அதை நிஜமாகவே பருகுவது போல் “மடக் மடக்” என பருகும் சத்தம் கேட்கும்.
சற்று நேரம் கழித்து அந்த சத்தம் நின்று விடும். அப்படி அந்த சத்தம் நின்றதும் மிச்சம் உள்ள பானகம் அப்படியே வாய்வழியாக வெளியேறிவிடும்.
இது ஒரு நாள், இரு நாள் நடைபெறும் அதிசயம் அல்ல.
தினந்தோறும் எப்பொழுதெல்லாம் பக்தர்கள் நரசிம்மருக்கு பானகத்தை படைக்கின்றனரோ
அப்பொழுதெல்லாம் இந்த அதிசயம் நடந்து கொண்டு தான் இருக்கின்றது.
இப்படி இறைவன் வாயிலிருந்து வெளிவரும் பானகத்தை முக்கிய பிரசாதத் தீர்த்தமாக பக்தர்களுக்கு வழங்குகின்றனர்.
கருவறைக்கு வெளியே மகாமண்டபத்தில் கோயில் சிப்பந்திகள் பானக நிவேதனம் செய்ய விரும்பும் பக்தர்கள் சார்பில்
அவ்வப்போது பானகத்தைக் கரைத்து செம்பிலோ, சிறிய அல்லது பெரிய குடத்திலோ நிரப்பி சந்நதிக்கு எடுத்து வருகின்றனர்.
பானக அளவுக்குத் தக்கபடி இதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சந்நதியிலுள்ள வைஷ்ணவ பட்டர் பெரிய வலம்புரி சங்கினால் திறந்த வாய்க்குள் ஊற்ற,
இப்புனித பானகம் உள்ளே சென்று மறைந்து விடுகிறது.
பானக பாத்திரத்தின் கொள்ளளவு எதுவாக இருந்தாலும், நிவேதனத்துக்கு எடுத்துச் செல்லும் பானகத்தில் பாதியளவு மட்டுமே வாய்க்குள் செல்கிறது. தொடர்ந்து ஊற்றப்படும் பானகம் வெளியே வழிந்துவிட, அவ்வாறு மீறும் பானகத்தை அந்த பக்தருக்குப் பிரசாதமாகக் கொடுத்து விடுகின்றனர்.
பானகமே பிரதான பிரசாதம். இதனால் இந்த கடவுளுக்கு பானக நரசிம்மர் என்று பெயர் வந்தது.
அவ்வாறு புனித பானகம் தயார் செய்யும் இடத்தில் நீருடன் கலந்த வெல்லத் துண்டுகள் கீழே சிதறிக் கிடந்த போதிலும், அங்கு ஈக்கள் மொய்க்காதது இத்தலத்தின் ஒரு சிறப்பு அம்சமாகும்.
இந்தப் பானகத்தைத் தயாரிப்பதற்கு இம்மலைக் கோயிலின் கிழக்கேயுள்ள கல்யாணஸரஸ் என்ற சுனையிலுள்ள நீரே உபயோகிக்கப்படுகிறது.
தேவர்கள் கட்டியதாகக் கருதப்படும் இச்சுனையில் சகல புண்ணிய தீர்த்தங்களும் கலந்துள்ளனவாம்.
மோட்சகாரகராக நின்றருள் புரியும் பானக நரசிம்மரைத் தரிசித்து பானக பிரசாதத்தை அருந்தி விட்டு,
இக்கோயிலின் அருகேயுள்ள ஐம்பது படிக்கட்டுகளில் ஏறி தாயார் ராஜ்ய லட்சுமி சந்நதியை அடையலாம்
வைரக்கண் மலர்களும் வைர பிறை சந்திரன் பொட்டும், நெற்றியில் துலங்க,
மகாலட்சுமி ராஜ்யலட்சுமி என்ற திருப்பெயருடன் கைகளில் பத்மமும், வரத அபய முத்திரைகளுடனும் ஸ்வயம் வ்யக்த மூர்த்தமாக காட்சி தருகிறாள்.
அஷ்ட ஐஸ்வர்ய ப்ரதாயினியான மகாலட்சுமி இங்கு ஞான பிரதாயினியாக விளங்குவதால்,
ராஜ்யலட்சுமியை ஆந்திர மக்கள் மாறு கொண்ட லெக்ஷ்மம்மா என்று பரிவுடன் அழைக்கின்றனர்.
ராஜ்யலட்சுமி சந்நதிக்குச் செல்லும் வழியில் ஓரிடத்தில் இத்தலத்தின் க்ஷேத்ரபாலராக விளங்கும் ஆஞ்சநேயர்
நின்ற கோலத்தில் கல்லில் செதுக்கப்பட்டு வண்ணச் சிறப்புமாகக் காட்சி தருகிறார்.
ராமபிரான் ராவண யுத்தம் முடிந்து திரும்பும் வழியில் அனுமனை இத்தலத்தில் க்ஷேத்ரபாலராகத் தங்கி இருக்கும்படி அருளாசி கூறினாராம்.
ராஜ்யலட்சுமி சந்நதிக்குக் கிழக்கே ஒரு சிறு சந்நதியில் வல்லபாசார்யார் மூர்த்தத்துடன் தியான பீடம் அமைந்துள்ளது.
ராஜ்யலட்சுமி சமேத நரசிம்மரைப் பூஜித்து வந்த வல்லபாசாரியார், இங்குள்ள ஆலமரத்தடியில் அமர்ந்து தியானித்து ஞானஒளி பெற்று
ராஜஸ்தான், காஷ்மீர், ஹரியானா, மத்திய பிரதேசம் ஆகிய வடமாநிலங்களில்
இந்துமத தர்ம சித்தாந்தங்களைப் பிரசாரம் செய்து அருந்தொண்டு புரிந்தார்.
இதையடுத்து அத்தியான பீடம் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ராஜ்யலட்சுமி சந்நதியின் மேற்குபுறமாக சிறு கோயிலில், அழகான சிறிய பள்ளிகொண்ட ரங்கநாதரது மூர்த்தம் சந்நதி கொண்டுள்ளார்.
இச்சந்நதியில் நித்யபூஜை நடப்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.
இச்சந்நதிகளைத் தாண்டி, மலைமீது கண்டால்ராயன் கூண்டு என்ற குகை அறையில் தீபம் ஒன்று உள்ளது.
இத்தீபத்தில், கன்றை ஈன்ற பசு அல்லது எருமை சுரக்கும் முதல் மாத பாலிலிருந்து எடுத்த நெய்யை ஊற்றி எரிய விடுபவர்களது
கால்நடைக்கு பால் அதிகம் சுரக்கும் என்ற நம்பிக்கையும் மக்களிடையே நிலவுகிறது.
இத்தீப ஒளியை ஏற்றி தரிசிப்பவர்களுக்கு வாழ்க்கையில் ஏற்படும் கண்டங்களும், கஷ்டங்களும் தீரும் எனக் கருதப்படுகிறது.
குசிகுமாரன் என்ற பெண் பித்தன் தான் நெருங்கிய வேசிகள் நரசிம்மரிடம் அதிக பக்தி கொண்டிருந்தது
தனக்கு இடையூறாக இருந்ததைக் கண்டு, கோபம் கொண்டு நரசிம்மரை நிந்தனை செய்தான்.
அன்றிரவு அவனது கனவில் நரசிம்மர் தோன்றி அவனுக்கு அருள் கூர்ந்ததையடுத்து,
மறுநாள் தீபத்தை ஏற்றி ஞானஒளி பெற்றான் என்பது ஒரு கதை.
மங்களகிரி மலையடிவாரத்தில் அமைந்த பெரிய கோயிலில் மகாவிஷ்ணு லட்சுமி நரசிம்மராக சந்நதி கொண்டுள்ளார்.
ராஜா வாஸிரெட்டி வேங்கடாத்ரி நாயுடு என்ற செல்வந்த பிரபு கட்டிய பதினொன்று அடுக்குகளைக் கொண்டு
குறுகலாக, உயரமாக அமைந்த ராஜகோபுரத்தைத் தாண்டி உள்ளே சென்றால்,
நான்கு சக்கரங்கள் பூட்டிய ரதம் போன்றமைந்த சிறிய சந்நதியில் கருடாழ்வாரைத் தரிசிக்கலாம்.
உள்ளே கருவறையில் நரசிம்ம ரூபமாக மகாவிஷ்ணு மகாலட்சுமியை மடித்த தன் இடது, தொடை மீது அமர்த்தி அணைத்துக்கொண்டு,
இரு கைகளில் சங்கு சக்கரம் ஏந்தி வரத அபய முத்திரைகள் தாங்கிய வலது கரத்துடன்,
நூற்றெட்டு சாளக்கிராமங்களாலான மாலை அணிந்து, வலதுகாலைத் தொங்க விட்டு லட்சுமி நரசிம்மராகக் காட்சி தருகிறார்.
ஆதிசங்கரர் கயிலாயத்திலிருந்து கொண்டுவந்த மந்திர சாஸ்திர ஆதார நூல்களில்
பிரபஞ்சஸாரம், மந்த்ர மஹார்ணவம், மந்திரமஹோததி ஆகியவை பிரசித்தி பெற்றவை.
பிரபஞ்சஸாரத்தில் மகாவிஷ்ணு நரசிம்மருஷி என்றே குறிப்பிடப்பட்டுள்ளார்.
கூரநாராயண ஜீயர் இயற்றிய சுதர்சன சதகத்தில் நரசிம்மரது உருவ லட்சணங்களின் வர்ணனையில்,
ஜ்வாலாகேசமும் த்ரிநேத்ரமும் (முக்கண்கள்) பிரதான அம்சமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
லட்சுமி நரசிம்மரது மூன்றாவது கண் அவர் நெற்றியில் துலங்கும் சிவப்பு திருமண்ணின் கீழ் மறைந்திருப்பதாக ஐதீகம்.
லட்சுமி நரசிம்மர் மூர்த்தத்தின் அருகே வைஷ்ணவ சம்பிரதாயத்தின் ஆதிபுருஷரான வைகானஸ மகரிஷி மூர்த்தமாக அமர்ந்துள்ளார்.
தவிர லட்சுமி நரசிம்மர், நரசிம்மர், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் சக்கரத்தாழ்வார் ஆகியோரது பஞ்ச லோக மூர்த்தங்கள் இச்சந்நதியிலுள்ளன.
இக் கோயிலில் பெரிய தட்சிணாவர்த்த வலம்புரிசங்கு ஒன்று உள்ளது.
முந்நாளைய திருவாங்கூர் சமஸ்தான மன்னர் வஞ்சிமார்த்தாண்ட வர்மா காணிக்கையாகக் கொடுத்த
இச்சங்கில் ஓங்கார நாதம் கேட்பதாகக் கூறப்படுகிறது. விழாக்காலங்களில் இச்சங்கு உபயோகிக்கப்படுகிறது.
லட்சுமி நரசிம்மரின் கருவறைக்கு வெளியே மகாமண்டபத்திலுள்ள ஒரு சிறு அறையில்
பன்னிரெண்டு ஆழ்வார்களின் சிலாமூர்த்தங்கள் வைக்கப்பட்டுள்ளன.
சந்நதிக்கு வெளியே கோயில் வடக்குப் பிராகாரத்தில் அமைந்த அழகிய சிறு கோயிலில், வைரக் கண் மலர்களும்,
கரங்களில் பத்மம் ஏந்தி, வரத அபயக் கரங்களுடன் பத்மாஸன கோலத்தில் கம்பீரமாக வீற்றிருந்து ராஜ்யலட்சுமி அருட்பாலிக்கிறாள்.
இக்கோயிலில் விநாயகர், கோதண்டராமர், கோதண்டராமர், வாஸவி, கன்னிகா பரமேஸ்வரி, லட்சுமி சமேத ஸத்ய நாராயண சுவாமி ஆகியோரது சிறிய சந்நதிகளும் உள்ளன.
பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் இக்கோயிலில் லட்சுமி நரசிம்மருக்கு பானகம் நிவேதனம் செய்து பூஜித்ததாகக் கூறப்படுகிறது.
தர்மரது கனவில் நரசிம்மர் தோன்றி தன்னைப் பிரதிஷ்டை செய்து ஆலய நிர்மாணம் செய்யும்படி அருளாசி கூறியதாகப் பிரம்ம வைவர்த்த புராணம் கூறுகிறது.
கடந்த எட்டாவது நூற்றாண்டில் ஆதிசங்கரர் மங்களகிரிக்கு விஜயம் செய்தார்.
மண்டனமிச்ரரின் மனைவியும் கலைமகளின் அம்சமுமான அவரது மனைவி உபயபாரதி விடுத்த கேள்விகளுக்குப் பதிலளிக்க ஒரு மாத அவகாசம் கேட்டு, காம சாஸ்திரத்து நுணுக்கங்களை அறிய, இறந்த அபமருகராஜன் என்ற மன்னனது பூத உடலில் பரகாய பிரவேசம் செய்தார் ஆதிசங்கரர்.
இதை அறிந்த அரசனது ஆட்கள், சீடர்கள் மறைத்து வைத்திருந்த ஆதிசங்கரரது பூத உடலைத் தேடிக் கண்டுபிடித்து நெருப்பு வைத்து விட்டனர்.
இது தெரிய வந்த ஆதிசங்கரர் அரசனது உடலினின்று நீங்கி தனது உடலில் பிரவேசித்தபொழுது, அவரது உடலின் கைப்பாகம் தீயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது.
தன் கைகளில் ஏற்பட்ட ரண உபாதையை நீக்கி தன்னைக் கைதூக்கி விடும்படி இத்தலத்தில் லட்சுமி நரசிம்மரைத் துதித்து, லட்சுமிநரசிம்ம கராவலம்ப ஸ்தோத்திரத்தைப் பாடினார் என்று கூறப்படுகிறது.
கடந்த பதின்மூன்றாம் நூற்றாண்டில் சைதன்ய மகாப்பிரபுவும்,
பின்னர் ராமானுஜர், மத்வாசாரியார் ஆகிய பெரியோர்கள் மங்களகிரி நரசிம்மரைத் தரிசித்துச் சென்றுள்ளனர்.
போருக்குச் செல்லுமுன் நரசிம்மரைத் தரிசிப்பதை வழக்கமாகக் கொண்ட விஜயநகர சக்ரவர்த்தி கிருஷ்ணதேவராயர்
கடந்த பதினான்காம் நூற்றாண்டில் கொண்டபள்ளி பிராந்தியத்தை வென்றுவிட்டு, அதற்கு காணிக்கையாக நிலமும், பொன்னும் இக்கோயிலுக்கு அளித்தார்.
மங்களகிரி நரசிம்மர் கோயிலில் வைகானஸ சம்பிரதாயமே அனுஷ்டிக்கப்படுகிறது.
பங்குனி மாத பௌர்ணமியன்று நரசிம்ம ஜெயந்தி உற்சவத்தையொட்டி தேரோட்டம் நடைபெறுகிறது.
ஆவணி பௌர்ணமியில் வைகானஸ உற்சவமும்,
மாசி மாதம் பீஷ்ம ஏகாதசியையொட்டி பிரம்மோற்சவம், தெப்போற்சவம்,
நவராத்திரி, கார்த்திகை பௌர்ணமி ஆகிய நாட்கள் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.
மங்களகிரி கல்யாணஸரஸ் சுனையில் நீராடுவதும், இத்தலத்தில் ஒருநாள் ஜபதபங்கள் செய்வதும் ஜீவன் முக்திக்கு வழிகோலும் என்றும்,
பிரம்மஹத்தி தோஷம் நீங்கக்கூடும் என்றும் பவானி சங்கரகீதை கூறுகிறது.
இதையொட்டி மங்களகிரி ஒரு மோட்ச தலமாக இருந்து, முக்திகிரி என்ற பெயரைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆந்திர மாநிலம், விஜயவாடா அருகே உள்ள குண்டூரிலிருந்து13 கி.மீ. தூரத்தில் மங்களகிரி உள்ளது.

——————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ சீதா பிராட்டி சமேத சக்ரவர்த்தி திருமகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பானக லஷ்மீ நரஸிம்ஹர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஸிம்ஹாஸல லஷ்மீ வராஹ நரஸிம்ஹ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading