Archive for the ‘Abimana Desam’ Category

“ஸ்ரீ கோட்டே வரதராஜர் கோயில்”-ஸ்ரீ ஸத்யா காலம்–ஸ்ரீ தேசிகர் மஹாத்ம்யம் —

January 23, 2024

தினமும் காலை எழுந்தவுடன் பூலோக வைகுண்டமாம் ஸ்ரீரங்கத்தை நோக்கி இரண்டு அடி வைக்க வேண்டும் என்பது பெரியோர்கள் வாக்கு.
ஸ்ரீரங்கத்தில் இருப்பவர்கள் என்ன செய்யலாம் ? கர்நாடகா இருக்கும் திக்கில் இரண்டு அடி வைக்கலாம். காரணம் இருக்கு.

பாகவதத்தில் ’பக்தி’ என்ற இளமையான பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் – ஞானம், வைராக்கியம்.
பக்தி இளமையுடன் இருக்க, குழந்தைகள் கிழவர்களாக இருப்பதைக் கண்ட நாரதர் வியப்புடன் ஏன் என்று விசாரிக்க,
அதற்குப் பக்தி கூறிய பதில் இது.
“நான் இளமையோடுதான் இருந்தேன். நான் பிறந்தது தமிழகத்தில். கர்நாடகத்தில்தான் வளர்ந்தேன்.
பிறகு அங்கிருந்து மஹாராஷ்டிரத்தை அடைந்து அங்கிருந்து குஜராத் … என்று பல இடங்களுக்குச் சென்ற எனக்கு வயதாகிவிட்டது.
கூடவே வந்த ஞானமும், வைராக்கியத்துக்கும் வயதானது. கடைசியாக யமுனைக் கரையை அடைந்து,
பிருந்தாவனம், மதுரா, கோவர்த்தனம் சென்ற போது மீண்டும் எனக்கு இளமை கிடைத்தது.
கண்ணன் விளையாடிய இடங்களின் ஸ்பரிசம் பட்டவுடன் எதுவும் நடக்கும்.

அதே போல நம் ஆசாரியர்கள் இரண்டு பேர் ஸ்பரிசம் பட்ட மண் கர்நாடகா. ஸ்பரிசம் மட்டும் இல்லை,
ஸ்வாமி ஸ்ரீராமானுஜர், வேதாந்த தேசிகன் போன்றவர்களைப் பாதுகாத்து கொடுத்த இடம்.

கூரத்தாழ்வான் கிருமி கண்ட சோழன் கொடுமையிலிருந்து ஸ்ரீராமானுஜரை மேல்கோட்டை தப்பவைத்து
அதனால் அவர் கண்களை தியாகம் செய்து பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
ஸ்ரீராமானுஜர் சுமார் 12 ஆண்டு காலம் மேல்கோட்டையில் இருந்துள்ளார்.

அதே போல் ஸ்ரீரங்கம் திருவரங்கத்தில் ஸ்வாமி தேசிகன் எழுந்தருளியிருந்த காலத்தில் முகம்மதியர் படையெடுப்பால் பெருந்துன்பம் விளைந்தது.
முகம்மதியர்படை கோயிலில் புகுந்து பாழ்செய்த போது பிள்ளைலோகாச்சாரியார் நம்பெருமாளை எழுந்தருளிக்கொண்டு செல்ல,
ஸ்ரீவேதாந்த தேசிகன் ஸ்ரீரங்கத்தில் தலைமை தாங்கிய சுதர்சன பட்டர் எழுதிய ‘ச்ருத ப்ரகாசிகை’ என்ற ஸ்ரீராமானுஜர் சொன்ன
உரைக் குறிப்புகள் அடங்கிய ஸ்ரீபாஷ்ய உரை நூலையும் அவருடைய இரண்டு புதல்வர்களையும் காப்பாற்றி
பிணமோடு பிணமாக இரவு கழித்து சத்தியமங்கலம் காடு வழியாக கர்நாடகா வந்தடைந்தார்.

திருநாராயணபுரம், ஸத்யாகாலம் என்ற இடத்தில் இவர் தங்கியிருந்தார்.
ஸ்ரீராமானுஜர், ஸ்ரீ வேதாந்த தேசிகன் மட்டும் இல்லை, நம் ‘நம்பெருமாளே’ சில காலம் திருநாராயண புரத்தில் தங்கியிருக்கிறார் !.

மேலும் இந்த இடத்துக்குச் சிறப்பு இருக்கிறது .
ஸ்வாமி ஸ்ரீராமானுஜர் மீது அளவுகடந்த பக்தி கொண்ட இருவர் மேல்கோட்டை பக்கம் உதித்தவர்கள்.
கிரங்கனூர் என்னும் கிராமத்தில் பிறந்த ஸ்ரீராமானுஜரின் மனதில் உள்ளதை ஆணையாக ஏற்று, திருமலையில்
திருவேங்கடமுடையானுக்கு நந்தவனம் அமைத்த அனந்தாழ்வார் என்ற அனந்தான் பிள்ளை.

மற்றொருவர் சாலக்கிரமம் என்னும் இடத்தில் பிறந்து ஆச்சர்ய அபிமானமே உத்தாரகம் என்று நமக்கு எடுத்துக்காட்டிய நம் வடுகநம்பி ஸ்வாமிகள்.
ஸத்யாகாலத்திலும் திருநாராயண புரம் இரண்டு இடத்திலேயும் அவர் 12 வருடம் வாசம் செய்துள்ளார்

ஸத்யாகாலம் பெங்களூர் கொல்லேகால் போகும் வழியில் இருக்கும் சின்ன கிராமம்.
போகும் வழி எல்லாம் மங்களகரமாக எல்லோர் இல்லத்தின் வாசலில் செழிப்பாக துளசியை காண முடிந்தது.
எங்கும் பச்சை வயல்கள்…. ஊருக்குள் நுழையும் முன் சில நூற்றாண்டு முன் ஒரு காலட்சேபத்தில் நுழைந்த குழந்தையின் கதை பற்றி நினைவு வருகிறது.

காஞ்சிபுரத்தில் ஸ்ரீபாஷ்ய காலட்சேபம் நடக்கிறது. காலட்சேபம் செய்பவர் ‘நடாதூர் அம்மாள்’.
அங்கே நல்ல தேஜ்ஸுடன் ஐந்து வயதுக் குழந்தை தன்னுடைய மாமாவான கிடாம்பி அப்புள்ளாருடன் உள்ளே நுழைகிறார்கள்
( நடாதூர் அம்மாளுடைய சிஷ்யர் கிடாம்பி அப்புள்ளார் )
கால்டஷேபத்தை நடதூர் அம்மாள் நிறுத்தி விட்டு குழந்தையின் அழகைப் பார்த்து
“யார் இந்தக் குழந்தை ?” என்று கேட்க ”என்னுடைய மருமகன்” தான் என்கிறார்
அப்புள்ளார் கூடவே இந்தக் குழந்தைக்கு பாடம் எடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் வைக்கிறார்.
அதற்கு அம்மாள், தனக்கு வயதாகிவிட்டது அதனால் உன் மருமகனுக்கு நீயே ஆசிரியராக இருந்து பாடம் எடு என்று நியமித்துவிட்டு,
தொடர்ந்து காலட்சேபத்தை தொடர முற்படும் போது நிறுத்திய இடம் நினைவுக்கு வரவில்லை.
அப்போது சிறுவன் உள்ளே நுழைந்த போது தான் என்ன கேட்டானோ அதை அப்படியே ஒப்பிக்கிறான்.

நடாதூர் அம்மாள் சிறுவனை அணைத்துக் கொண்டு ”ஸ்ரீவைஷ்ணவ கொள்கையைப் பரவச் செய்து, பெரும் புகழுடன் விளங்குவாய்” என்று ஆசிர்வதிக்கிறார்.
அவர் ஆசிர்வாதம் பலித்தது. அந்தச் சிறுவன் தான் ஸ்ரீ வேதாந்த தேசிகன்.
ஊருக்குள்ளே பெரும் ஆலமரம் ஒன்று தெரிகிறது. அதைச் சுற்றி பல மஞ்சள் தோட்டம்.
ஸ்ரீதேசிகனே பிரமாண்ட ஆலமரம் மாதிரி கீழே அவர் சிஷ்யர்கள் மஞ்சள் செடிகளாக காட்சி அளிப்பது மாதிரி இருக்கிறது.

ஸ்ரீதேசிகன் 1268 ஆம் வருடம் திருத்தண்கா ‘தூப்புல்’ ( பொருள் : தூய புல் ) என்ற பகுதியில் அவதரித்தார். இயர் பெயர் வேங்கட நாதன்.

புரட்டாசி திருவோணம் திருவேங்கடமுடையான் திருநக்ஷத்ரம் ! திருவேங்கமுடையானின் கண்டம் என்னும் மணியின் அம்சமாக இவரைப் போற்றுவர்.
தேசிகன் என்றால் ஆசாரியன் என்று பொருள் அதனால் இவரை வேதாந்த தேசிகன் என்று அழைப்பர் –
வேதாந்தத்துக்கு அதாவது தமிழ், சமிஸ்கிரதம் என்ற உபய வேதாந்தத்துக்கும் ஆசாரியன்

உள்ளே நுழையும் போது கோயில் கோபுரம் புதுப் பொலிவுடன் தெரிகிறது. பத்தாண்டுகளுக்கு முன் சம்பரோக்‌ஷனம் நடந்தது என்று தகவல்.
“ஸ்ரீ கோட்டே வரதராஜர் கோயில்” என்ற எழுதியிருக்கிறது.
( “கோட்டே” என்ற அடைமொழியுடன் பல கோயில்கள் கர்நாடகாவில் பார்க்கலாம். )
கர்நாடகாவில் பெரும்பாலும் நரசிம்மர், நாராயணன், கிருஷ்ணர், வேங்கடேச பெருமாள் கோயில்கள் தான் அதிகம்.
இங்கே வரதர் எப்படி வந்தார் என்று யோசிக்கும் போது “வாங்கோ வாங்கோ” என்று உற்சவம் நடத்துபவர்கள் அழைக்க
உள்ளே துவஜஸ்தம்பம் சேவித்துவிட்டு உள்ளே சென்ற போது நேராக வரதர் நீல நிற உடையுடன் காட்சி அளித்தார்.
காஞ்சிபுரம் போல பெரிய வரதர் இல்லை, சின்னவர் தான் !
தீர்த்தம், சடாரி வாங்கிக்கொண்டு புறப்படும் போது
பக்கத்தில் இருந்த மண்டபத்தில் நாதஸ்வர இசை ஒலிக்க அங்கே பெருமாளுக்கு கல்யாண உற்சவம் நடந்துகொண்டு இருக்க அதைச் செவிக்க சென்றேன்.

கல்யாண உற்சவம் நடந்துகொண்டு இருக்க, வரதராஜர் பற்றி நினைத்துக்கொண்டேன்.
தேவர்களுக்கும் பிரம்மாவுக்கு கேட்ட வரத்தைத் தந்ததால் அவர் வரதர் என்று பெயர் பெற்றார்.
பிரம்மாவுக்கு மட்டுமா ? ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீராமானுஜரை சம்பிரதாயத்துக்குத் தர வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.
யாதவ பிரகாசர் கொலை முயற்சியிலிருந்து தப்ப வைத்து விந்திய மலைக் காடுகளில் வரதரும், தாயாரும் வேடுவன்,
வேடுவச்சி மாதிரி வந்து சரியான பாதையை வகுத்து கொடுத்தனர்.

ஆளவந்தார் ஆசாரியன் திருவடியை அடைந்த பின் திருவரங்கப் பெருமான் அரையர் பாட்டு பாடி
வரதன் மனதைக் குளிர வைத்து ஸ்ரீராமானுஜரை கேட்டு பெற்றுக்கொண்டார் ஸ்ரீரங்கம் வந்தார்.
வரதன் கேட்பதை தருவான்.
ஸ்ரீராமானுஜரை காக்கும் பொருட்டு தன் கண்களை இழந்த கூரத்தாழ்வான் நிலை கண்டு வருத்தப்பட்ட ஸ்ரீராமானுஜர்
வரதனை “துயரறு சுடர் அடி தொழுதெழு என் மனனே” என்று வேண்டிக்கொள்ளச் சொல்ல
கூரத்தாழ்வான் ‘வரதராஜஸ்தவம்’ பாட வரதன் உடனே பார்வையை கொடுத்தார்
( ஆனால் கூரத்தாழ்வான் ஸ்ரீராமானுஜரை மட்டும் பார்த்தால் போதும் என்று கூறிவிட்டார் ! ).
இன்றும் ஸ்ரீராமானுஜர் சன்னதியில் கூடவே காஞ்சி வரதராஜர் தான் நித்திய திருவாராதன பெருமாளாகக் காட்சி அளிப்பார்.
ஸ்ரீரங்கத்தில் கூட உடையவர் பக்கத்தில் ஸ்ரீவரதராஜர் தான் ! .
அடுத்த முறை ஸ்ரீவரதராஜர் எங்காவது இருந்தால் அங்கே ஸ்ரீராமானுஜர் கூடவே இருப்பதை நீங்கள் கவனிக்கலாம்.

வரம் கொடுக்கும் பேரருளாளன் ஸத்யாகலத்துக்கு எதற்கு வந்தார் – ஸ்வாமி தேசிகனுக்கு வரம் கொடுக்க தான்.

கல்யாண உற்சவம், பிரசாதம் எல்லாம் முடிந்த பின் நேராக ஸ்வாமி தேசிகன் அபீதிஸ்தவம் எழுதிய அரச மரத்தைத் தேடி சென்றேன்.
மாலை வேளை, பசுமையான நெல் வயலில் வாசனை என்று அந்த இடமே ரம்மியமாக இருந்தது.
காவிரி ஆறு எந்த சலசலப்பும் இல்லாமல் சூழ்நிலைக்கு ஏற்ப அமைதியாக சென்றுகொண்டு இருந்தாள்.

ஸ்வாமி தேசிகன் இங்கே தான் தனது காலை அனுஷ்டானங்களைச் செய்தார் என்ற நினைப்பே மனதுக்கு நெகிழ்வாக இருந்தது.
இதை எல்லாம் சேவித்துவிட்டு மறுநாள் காலை மீண்டும் வரலாம் என்று திரும்பினேன்.

இரவு பெருந்தேவி தாயார் சன்னதிக்கு சென்று சேவித்தேன்.அங்கேயே சின்னதாக ஸ்வாமி தேசிகன் சன்னதி கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.

பொதுவாக ஸ்வாமி தேசிகன் வலக் கையில் உபதேச முத்திரையும் இடது கையில் ஓலைச் சுவடியும் இருக்கும். அந்த ஓலைச் சுவடி ஸ்ரீராமானுஜரின் ஸ்ரீபாஷ்யம்.
இங்கேயும் அப்படியே காட்சி அளித்தார். பொதுவாக அமர்ந்த நிலையில் இருக்கும் ஸ்ரீதேசிகன் இங்கே நின்றுகொண்டு சேவைச் சாதிக்கிறார்.

திருவாய்மொழிக்கு ”ஈன்ற முதல் தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த இதத் தாய் இராமாநுசன்” என்று கூறும் தனியன் மாதிரி
ஸ்ரீபாஷியத்தை ஈன்ற தாய் இராமானுசன், அதை மொய்ம்பால் வளர்த்த பெருமை நம் ஸ்வாமி தேசிகனையே சாரும்.
சரி ஸ்த்யாகாலத்தில் ஸ்வாமி தேசிகன் என்ன செய்தார் ?

பிணமோடு பிணமாக இரவு கழித்து தேசிகன் சத்தியமங்கலம் காடு வழியாக கர்நாடகா வந்தடைந்தார் என்று முன்பு பார்த்தோம்.
சத்யாகாலம் வந்த ஸ்வாமி தேசிகன் இங்கே தினமும் முன்பு பார்த்த காவிரிக் கரையில் தினமும் தன்னுடைய
காலை அனுஷ்டானங்களை முடித்து, அங்கே இருக்கும் அரச மரத்து அடியில் உட்கார்ந்து தியானம் செய்வார்.
இந்த மரத்துக்கு அடியில் தான் அபீதிஸ்தவம் இயற்றினார். 29 ஸ்லோகங்கள் கொண்டது.
அதில் ஸ்ரீதேசிகன் நம்பெருமாளைப் பிரிந்து திருவுள்ளம் மிகப் புண்பட்டு இந்த உயர்ந்த ஸ்தோத்ரத்தை அருளிச்செய்தார்.

பெரிய பெருமாளுக்கு திருவாராதனம் நின்றுவிட்டது, நம்பெருமாள் ஸ்ரீரங்கத்தை விட்டுப் போக வேண்டிய சூழ்நிலை என்று
அடுக்கடுக்காக நிகழ்வுகளை நினைக்கும் போது ஸ்வாமிக்கு உண்டான மனநோவு கணக்கிடமுடியாத ஒன்று.
திருவரங்கத்தில் ஏற்பட்ட ஆபத்தை நீக்கி, உத்ஸவமூர்த்திகள் மறுபடி பெரிய பெருமாளுடன் சேர்ந்து
திருவாராதனம் கண்டருளும்படி இந்த ஸ்தோத்ரத்தால் பிராத்திக்கின்றார்.
பிறகு கோயிலுக்கு வந்து ஸ்ரீரங்கம் நம்பெருமாள் என்ன ஆனாரோ என்று கவலையுடன் ஸ்ரீவரதராஜரையும், பெருந்தேவி தாயாரையும் வேண்டிக் கொள்வாராம்.

ஸ்வாமி தேசிகனின் ஸ்தோத்திரம் வரதனை உருகச் செய்திருக்க வேண்டும்.
விசயநகர பேரரசரின் செஞ்சிக் படைத் தலைவனான கொப்ப‌ணார்ய‌ன் என்னும் பாகவதோத்தமனால் நம்பெருமாள் மீண்டும் திருவரங்கம் எழுந்தருளினார்.
விஜயநகர பேரரசர்கள் பூர்வீகம் கர்நாடகா.
மீண்டும் ஸ்வாமி தேசிகன் சன்னதிக்கு வாசகர்களை அன்புடன் அழைக்கிறேன்.

மூலவர் அவருக்குக் கீழே ஆமை ஒன்றும் அதற்கு மேல் உற்சவர் தேசிகன்! நின்று கொண்டு சேவைச் சாதிக்கிறார்.
மனதில் இரண்டு கேள்விகள் உடனே எழுகின்றன ஒன்று அந்த ஆமை ?
அடுத்தது பொதுவாக ஸ்வாமி தேசிகன் அமர்ந்துகொண்டு தானே இருப்பார் இங்கே ஏன் நின்று கொண்டு இருக்கிறார் ?

காலை அனுஷ்டானங்கள் முடித்துவிட்டு கோயிலுக்கு செல்லும் போது ஒரு நாள் ஆமை ஒன்று அவரைப் பின் தொடர்ந்தது.
வேகமாக நடந்த தேசிகனை ஆமையும் வேகமாகப் பின் தொடர்ந்தது. ஸ்வாமி தேசிகன் அதைக் கண்டுகொள்ளவில்லை.
அன்று இரவு ஸ்வாமியின் கனவில் சாத்விகமான ஒருவர் தோன்றி ”உங்களுக்கு நான் கைங்கரியம் செய்ய விரும்புகிறேன்”
என்று கூறி இதையும் ஸ்வாமி தேசிகன் கண்டுகொள்ளவில்லை.

மறுநாள் கனவில் பெருமாள் தோன்றி முதல் நாள் கனவில் தோன்றியவருக்கு அருள் புரிய கட்டளையிட்டார்.
காலை அனுஷ்டானம் செய்ய சென்ற போது அங்கே ஆமை கல்லாக, கூர்மாசனமாக மாறியிருந்தது.
அன்றிலிருந்து ஸ்வாமி தேசிகன் அதன் மீது அமர்ந்து தன்னுடைய அனுஷ்டானத்த செய்யத் தொடங்கினார்.

1929ஆம் ஆண்டு ஸ்ரீ அபிநவ ரங்கநாத ஜீயர் (பரகால மடம்) ஸ்வாமி இங்கு வந்த போது, இந்த கூர்மாசனம்
நாளடைவில் காவிரி ஆற்றோடு அடித்துக்கொண்டு போகும் அபாயம் இருப்பதை யூகித்து அதை எடுத்து
ஸ்வாமி தேசிகனின் சன்னதியில் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்தார்.
ஸத்யாகாலத்தில் மட்டும் தான் ஸ்வாமி தேசிகன் நின்றுகொண்டு சேவை சாதிக்கிறார். ஏன் தெரியுமா ?
நம்பெருமாள் வந்துவிட்டார் என்ற செய்தி வந்தவுடன் புறப்பட தயார் நிலையில் இருக்கிறார்.

எவ்வளவு வருடங்கள் இங்கே இருந்தார், எப்போது வந்தார் என்பது எல்லாம் ஆராய்ச்சிக்கு உட்பட்டது.
ஆனால் ஸ்வாமி தேசிகன் இங்கே வந்திருக்கிறார் என்பது உண்மை. இங்கே இருக்கும் மக்களுக்கு ஸ்வாமி தேசிகன் மீதும் இந்தக் கோவிலின் மீதும் அதி விசுவாசமும் ப்ரீதியும் கொண்டுள்ளனர்
இன்றும் இந்த ஊர் மக்கள் தங்களின் வீட்டில் ஒரு ஆண் குழந்தைக்கு “தேசிகாச்சார்” என்று பெயர் வைக்கிறார்கள் !

முன்பு பக்தி, ஞானம், வைராக்கியம் என்று மூன்று சொற்களை பார்த்தோம்.
ஒரு பொருளைப் பற்றி அறிவு ஏற்பட்டால் அது ஞானம். அப்பொருளிடத்து அன்பு ஏற்பட்டால் அதுவே பக்தி.
அந்தப் பொருளின் அருமை பெருமைகளை உணர்ந்து மற்ற பொருட்களின் மீது நமக்குப் பற்றற்ற தன்மை ஏற்பட்டால் அதுவே வைராக்கியம்.
இங்கே பொருள் என்பது பெருமாள். அது மூன்றும் பூர்ணமாக பெற்றவர் நம் ஸ்வாமி தேசிகன்.

அவர் வாழ்கையில் பல சம்பவங்கள் இதை எடுத்துக் காட்டுகின்றன.
தன் ஆயுள் முழுவதும் ஸ்வாமி தேசிகன் உஞ்சவிருத்தி செய்து தான் வாழ்க்கை நடத்தியவர்.
அவர் சன்னியாசம் வாங்கவில்லை ஆனால் இல்லத்துறவி !.
அவர் வாழ்ந்த காலத்தில் செல்வந்தராகவும், வேந்தியாகவும் இருந்த வித்யாரணயர் ஸ்வாமி தேசிகனின் ஏழ்மையைப் போக்கி இவரையும் செல்வந்தராக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசனைச் சந்திக்க வேண்டும் என்று ஒரு கடித்ததை அனுப்பினார்.
ஸ்வாமி தேசிகன் அதற்குப் பதிலாக ‘வைராக்கிய பஞ்சகம்’ என்று ஐந்து ஸ்லோகங்கள் எழுதினார்.

ஒரு சாண் வயிற்றுக்கு என்சாண் உடம்பைக் குறுக்கி எதுவும் செய்ய மாட்டேன் என்று திட்டவட்டமாக சொல்லுகிறார்.
அதில் முன்னோர்கள் ஈட்டிய செல்வம் எதுவும் இல்லை, சொந்த வருவாயும் இல்லை
ஆனால் மூதாதையர்கள் காட்டிய வரதராஜர் என்ற பேரருளாளப் பெருஞ்செல்வம் இருக்கிறது என்கிறார் !.
எதற்குக் கையேந்த வேண்டும் – உணவுக்கு, தண்ணீர், உடை. இதற்குத் தேசிகன் என்ன சொல்லுகிறார் ?
அறுவடை செய்த பின் அங்கே சிந்திய நெல்மணிகள் ஒரு கையளவு கிடைக்குமே அது பசியை தீர்க்க பேதுமானதாகாதா ?
நதி, குளத்தில் இருக்கும் நீர் தாகத்தை தீர்க்காதா ? வயல் சுற்றி முள் வேலிகளில் கிழிந்த துணிகள் மாட்டிக்கொண்டு இருக்குமே
அது என் மானத்தை மறைப்பதற்கு போதுமானது. தகுதியற்ற மனிதர்களை எதற்குப் பாராட்டி செல்வம் சேர்க்க வேண்டும் ?
வைராக்கியமே இவருடைய செல்வம்!.

தன் வாழ்நாளில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட படைப்புகளை ஸம்ஸ்க்ருதம், தமிழ் மற்றும் மணிப்ரவாளத்தில் அருளியுள்ளார்.

ஸ்தோத்ரங்கள் – 28
வேதாந்த கிரந்தங்கள் – 14
வ்யாக்யாந கிரந்தங்கள் 8
ரஹஸ்ய கிரந்தங்கள் 31
தமிழ் பிரபந்தங்கள் – 24
காவியங்கள் 4
நாடகம் 1
அனுஷ்டான கிரந்தங்கள் – 2
மொத்தம் 112

மறுநாள் காலை சூரியோதயத்தின் போது காவிரிக்கரைக்கு துலா ஸ்நானம் செய்ய கிளம்பினேன்.
ஆல மரத்தின் மீது “கீசுகீ சென்றெங்கும்” சத்தம் வேறு வித்தியாச சத்தத்துடன் ”கலந்து பேசின பேச்சரவம்” கேட்க
என்ன என்று பார்த்த போது கிளிகளும் மரத்துக்கு மேல் ஒரு கருடனும் இருப்பதைக் கண்டேன்.

கருடனைப் பார்த்த போது ஸ்வாமி தேசிகனுடைய ஞானம் நினைவுக்கு வந்தது.
ஸ்வாமி தேசிகனுடைய வைராக்கியம் பற்றி முன்பு பார்த்தோம் அதே போல் ஸ்வாமி தேசிகனின் ஞானம் அளவிட முடியாதது.
கருடனுக்கும் ஞானத்துக்கும் என்ன சம்பந்தம் ?
கிடாம்பி அப்புள்ளார் ஸ்ரீதேசிகனுக்கு ஆசாரியன் என்று பார்த்தோம்.
அவர் ஸ்ரீதேசிகனுக்கு கருட மந்திரத்தை உபதேசித்தார். ஸ்ரீதேசிகன் இந்த மந்திரத்தை திருவஹீந்திரபுரத்துக்கு சென்று
அங்கே இருக்கும் ’ஔஷாதாத்ரி’ என்ற சிறிய மலை மீது அமர்ந்து ஜபிக்க தொடங்கினார்.
பெரிய திருவடியின் அனுக்ரஹம் அவருக்குக் கிடைத்தது. கருட பகவான் ப்ரத்யக்ஷமாகி அவருக்கு
ஸ்ரீஹயக்ரீவ மந்திரத்தை உபதேசம் செய்து ஒரு ஹயக்ரீவ விக்கிரகத்தையும் கொடுத்து மறைந்தார்.

ஸ்ரீ தேசிகன் அதே ஔஷதகிரியில் ஹயக்ரீவ மந்திரத்தை ஆயிரமாயிரம் தடவை ஸ்தா ஜபித்துக்கொண்டு தியானத்தில் இருந்தார்.
ஸ்ரீஹயக்ரீவர் மகிழ்ந்து, பிரத்யக்ஷமாகி தனது ”திருவாய் அமுதத்தை” அவருக்கு பிரசாதித்து அருளினார்
அதற்குப் பிறகு ஸ்ரீதேசிகருடைய திருவாக்கிலிருந்து ப்ரவாயமாக ஸ்தோத்திரங்களும் பகவத் விஷயமும் பெருக்கெடுத்தோடியது.

இருபது வயதுதில் எல்லாவற்றையும் கற்றறிந்தார்.
குருபரம்பரையில் ஸ்ரீ ஆளவந்தார், ஸ்ரீராமானுஜர் அதற்குப் பிறகு ஸ்ரீவேதந்த தேசிகனுக்கு மட்டுமே இந்தப் பெருமை உண்டு.

ஹயக்ரீவரிடம் ஞானம் பெற்ற ஸ்ரீதேசிகன், ”“செய்ய தமிழ் மலைகள் நாம் தெளிய ஓதி தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோம்” ” என்று
வடமொழி வேதாந்தங்களை எவ்வளவு கஷ்டப்பட்டு கற்றாலும், அவற்றால் கலங்கிய ஞானமே உண்டாகும்.
ஆழ்வார் செயல்களைக் கொண்டு தான் தெளிவு பெற்றேன் என்கிறார் ஸ்ரீ தேசிகன்.
திருவாய் அமுதத்தை பிரசாதித்த ஸ்ரீ தேசிகன் திருவாய்மொழியின் சாரப்பொருளை
‘த்ரமிடோப நிஷத் தாத்பர்ய ரத்னாவளி’, ‘திரமிடோ பநிஷத் ஸாரம்’ என்ற நூல்களில் விளக்கியுள்ளார்.
பரம நாத்திகனும் ஒரு முறை திருவாய்மொழியை சேவித்தால் பகவானிடத்தில் ஈடுபடச் செய்துவிடும் என்கிறார்.
“கலியனுரை குடிகொண்ட கருத்துடையோன்” என்று திருமங்கை ஆழ்வாரை மனதில் தேக்கிக் கொண்டவர்;
திருப்பாணாழ்வாரின் “அமலனாதி பிரான்” பாசுரங்களுக்கு முநிவாஹன போகம் என்று உரையை அருளிச் செய்தார்.
ஸ்ரீ கோதா ஸ்துதி என்று ஆண்டாளைக் கொண்டாடுகிறார்.
பாதுகா ஸஹஸ்ரத்தில் பெரும்பாலும் ஆழ்வார்கள் கொண்டே அருளிச்செய்துள்ளார்.
பிரபந்த சாரம் என்று ஆழ்வார்கள் அவதரித்த நாள், ஊர், மாதம், பிரபந்தங்களின் எண்ணிக்கை என்ற சுலபமான அதே சமயம் அருமையான செய்யுளை அருளியிருக்கிறார்.
“சந்தமிகு தமிழ் மறையோன் துப்புல் தோன்றும் வேதாந்த குரு” என்று அருளிச் செயல்களில் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டுள்ளார்.

ஸ்நானம் செய்து விட்டு ஸ்வாமி தேசிகன் அமர்ந்து அனுஷ்டானம் செய்த ஆல மரத்தின் பக்கம் ஸ்ரீரங்கம் நோக்கி அமர்ந்துகொண்டு
கிளிகள் ஒலி எழுப்பத் தலைக்கு மேலே கருடன் சுற்றிக்கொண்டு இருக்க அபீதிஸ்தவம் இரண்டு முறை பாராயணம் செய்தேன்.

பிறகு ஆல மரத்துக்கு அடியில் வளர்ந்திருக்கும் துளசியின் இலைகளை இரண்டை பிரசாதமாக எடுத்துக்கொண்டேன்.
ஸ்ரீதேசிகன் அமர்ந்த மரத்தடியில், ஸ்ரீதேசிகனை நேரில் தரிசித்த மரத்தின் மரப்பட்டை ஒன்றை எடுத்துக்கொண்டு வந்தேன்.
சூரியன் மெல்ல மெல்ல வந்து பயிர்களின் மீது படும் போது வண்ணங்கள் மாறுவதைப் பார்த்துக் கொண்டு இருந்து விட்டு கோயிலுக்கு திரும்பினேன்.
ஸ்வாமி தேசிகன் வாத்தியங்கள் இசைக்கப் புறப்பாடு கண்டருளினார்.
பெருமாளின் புறப்பாடு போது பொதுவாக இரண்டு திருச்சின்னம் ஊதுவார்கள்,
ஆனால் காஞ்சியில் ஒன்று தான். காஞ்சியில் இந்தத் திருச்சின்னம் ஊதும் போது ஸ்ரீதேசிகனுக்கு வரதனின்
அழகு கண்ணில் தோன்றி திருச்சின்ன மாலை என்று ஒன்றை அருளினார்.
அதைச் செவியுற்ற வரதன், எனக்கு ஒரு திருச்சின்னம் போதும், இன்னொன்று தேசிகன் அருளியது இருக்கிறதே என்று சொன்னாராம்.

மீண்டும் ஸ்வாமி தினமும் அனுஷ்டானம் செய்யும் காவிரிக்கரைக்கு வந்தோம்.
திருமஞ்சனம், தீர்த்தவாரி என்று அடுத்தடுத்து அனுபவித்துவிட்டு பிரியாவிடை கொடுத்துவிட்டுத் திரும்பினேன்.

தன் வாழ்நாள் முழுவதும் சற்றும் ஓய்வில்லாமல் வடமொழி, தென்மொழி என்று மொத்தம் 112 கிரந்தங்கள் அருளியுள்ளார்.
ஒரு இரவில் ஒரு யாம காலத்திற்குள் ( மூன்று மணி காலம் ) ஸ்ரீரங்கநாத பாதுகையைப் பற்றி பாதுகா ஸ்ஹஸ்ரம்
இயற்றி, வேதாந்தாசார்யர் என்ற விருதை அரங்கனும், ’ஸ்ர்வதந்த்ரஸ்வதந்தரர், கவிதார்க்கிககேஸரி’ என்ற விருதை ரங்க நாச்சியாரும் கொடுத்து கவுரவித்துள்ளார்கள்.
கோணலான கற்களை சாமர்த்தியமாகப் பொருத்தி கிணறு கட்டினார்,
பக்தி, ஞான, வைராக்கியத்துடன் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த இந்த மஹான் ஒரு ’ஸ்ரீவைஷ்ணவ ஃபலூடா’

ஸ்ரீவேதாந்த தேசிகன் தனியன் :
ஸ்ரீமான் வேங்கடநாதார்ய: கவிதார்க்கிக கேசரீ |
வேதாந்தாசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

பொருள் : எதிர்த்து தர்க்கம் செய்யும் பண்டிதர்களுக்குச் சிங்கம் போலவும்,
ஞானம், பக்தி, வைராக்கியம் போன்ற சிறந்த செல்வத்தைப் பெற்றவரும்.
வேங்கடநாதன் என்ற திரு நாமம் உடையவரான ஸ்ரீ வேதாந்த தேசிகன் என் நெஞ்சில் எப்பொழுதும் வாழ்வாராக.

 தூப்புல் “, என்ற அக்ஹாரம், காஞ்சீபுரத்தில் திருதண்கா என்ற திவ்ய-தேஸத்தின் அருகாமையில் உள்ளது.  தூப்புல் என்றால் பரிசுத்தமான புல் என்று பொருள்.  அதனை விச்வாமித்ரம் ( தர்பம் ) என்றும் கூறுவர். இந்த அக்ரஹாரத்தில் அவை விளைந்ததாலோ, இல்லை அங்கு விச்வாமித்ர கோத்ரத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் இருந்ததாலோ, அந்தப்பெயர் வந்திருக் கலாம்.  அங்கு அநந்தஸோமயாஜி என்பவர் யஜ்ஞங்களை அனுஷ்டித்துக் கொண்டு வாழ்ந்து வந்தார்.  அவருடைய குமாரரான, புண்டரீகாக்ஷ தீக்ஷதரின் குமாரர், அநந்தஸூரி என்பவர்.  அவருக்கு, ஸ்ரீரங்காச்சாரியின், குமாரத்தியும், அப்பிள்ளாரின் ஸகோதரியுமான,தோதாரம்பாவை திருமணம் செய்து வைத்தனர்.  இந்த தம்பதிகள் இனிதே வாழ்ந்து வந்தனர்.  அவர்க-ளுக்குச் சிலகாலம் குழந்தையில்லாமல் இருந்தது. அவர்கள் ஸ்வப்னத்தில் திருவேங்கடமுடையான், தோன்றி, “ நீங்கள் திருமலையில், எம் சந்நி-தானத்திற்கு வாருங்கள் உங்க ளுக்கு புத்ர பாக்யம் சித்திக்கும் “ என்று கூற இருவர்கனவிலும் ஒருசேர வேங்கடவன் வந்த கார ணத்தால் இருவரும் சந்தோஷப் பட்டனர்.  எம்பெருமான் கருணைத் தங்கள் பக்கம் இருக்கின்றது என மகிழ்ந்து உடனே திருமலைக்கு யாத்திரை கிளம்பினர்.

வேங்கடத்திற்கு நிகரான க்ஷேத்ரமும் கிடையாதுவேங்கடவனுக்கு நிகரான தெய்வமும் கிடையாது.  அவன் இந்தக் கலியுகத்தின் கண்கண்ட தெய்வம்.  ஸ்ரீவைகுண்த்தை விட்டுஸ்வாமி புஷ்கரணி தீரத்தில் பிராட்டியுடன் நித்யவாசம் புரிகின்றான்.  கலியுகத்தில் பாவம் செய்தவர்களுக்கு இவனையன்றி வேறு புகலிடம் கிடையாது என்பதை நாம் எல்லோரும் அறிந்ததே.  அத்தகய ப்ஸித்தி வாய்ந்த திருமலைக்கு,
அந்த தம்பதிகள் வந்து சேர்ந்தனர்.  அங்கு ஸ்வாமி புஷ்கரணியில் தீர்தாமாடி, நித்ய கர்மானுஷ்டானங்களை முடித்துக் கொண்டு, ஸ்ரீநிவாஸனை பாதாதி கேசம் சேவித்தனர்.  பிறகு தாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்து உணவருந்தி, அன்று இரவு அங்கேத் தங்கினர்.  என்னே ஆச்சர்யம், ஒரு ஒரு பாலகன் திருவேங்கட-முடையான் ஸந்நிதியிலிருந்து வெளிப்பட்டு வந்து, “ ஸ்ரீராமாநுஜ-ஸித்தாந்தத்தைப் பரப்ப இருக்கும் ஒரு புத்ர ரத்னத்தை உங்களுக்குத் தந்தோம் பெற்றுக் கொள்ளுங்கள் “ என்று கூறி, கோயில் திரு மணியை அநந்த ஸூரியிடம் தர, அவர் தைத் தம் மனைவியிடம் தர, அந்த அம்மையார் அதனை வாங்கி வாயில் போட்டு விழுங்கினார்.  ஸ்வப்னம் கலைந்த வராய் அநந்தஸூரி பதைபதைத்து எழுந்திருந்து பார்க்க, அவர் மனை வியாரும் பதைபதைப்புடன் எழுந்திரு ந்தார் காரணம் ! அதே போன்ற கனவை அவரும் கண்டதாலேயே.  இருவரும் தாங்கள் கண்டக் கனவைப் பரிமாறிக்கொண்டனர்.  அருகில் இருந்து அவற்றைக் கேட்டவர்களும் ஆச்சர்யத்தில் மூழ்கினர்.

 மறுநாள் காலை, கோயில் ஸந்நிதி திறக்கப்பட்டதும், உள்ளே “ கண்டை “  ( மணி )யில்லாததை அர்ச்சகர் கண்டு அலறினார்.   இதனை அறிந்த கோயில் அதிகாரிகள் மணி காணாமல் போனதற்கு அர்ச்சகர்களின் அஜாக் ரதையே காரணம் என்று அவர்களைத் தண்டிக்கத் தீர்மானித்தனர்.  ஆனால் அப்போது அருகே இருந்த திருமலை ஜீயர் ஸ்வாமிகள், “ திரு வேங்கட முடையான், ஒருபாலகனாக தம் திருமணியை ஒரு தம்பதிகளுக் குத்தர, அந்த மணியை அப்பெண்மணி வாங்கி விழுங்குவது போல கனவு கண் டோம் “ என்று கூறினார்.  அங்கு இருந்த வேறு சிலரும் தாங்களும் அது போன்றே கனவு கண்டதாக்க் கூறவே அர்ச்சகர் தண்டனையிலிருந்து தப்பினார்.  கோயில் அதிகாரிகள் அநந்தஸூரியையும், தோதாரம்பா வையும் அழைத்துக் கேட்ட போது, அவர்களும் அதுபோன்ற கனவு தங்களுக்கு வந்ததாகக் கூறினர். அதைக்கேட்ட அனைவரும் வாயடைத்து நின்றனர்.  அந்த நாளிலிருந்து தோதாரம்பையார் கர்பவதியானார்.

 சாதாரணமாகப் பெண்கள் பத்து மாதம்தான் கர்பம் தரிப்பர்.  ஆனால், தோதாரம்மையோ கர்பம் தரித்த பன்னிரண்டாவது மாதம்தான் அதாவது விபவ வருஷம் ( 1269 A.D  )  புரட்டாசிமாதம், ச்ரவண நக்ஷத்ரத்தில் திரு வேங்கடமுடையானின் தீர்த்தவாரி தினத்தன்று, அதி தேஜஸ்வியான ஒரு ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தார்.  திருமலையப்பனின் மணியின் அவதாரமாகப் பிறந்த இந்த குழந்தைக்கு,” வேங்கடநாதன் “ என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.  யதாகாலத்தில் முறையே வேங்கடநாதனுக்கு அன்ன ப்ராசனம் சிறப்பாக நடத்தப்பட்டது.

 அன்று பேரருளாளன் பெருந் தேவித் தாயாரை தரிசிக்க, பெற்றோர்கள் குழந்தையை, கோயி-லுக்கு அழைத்துச் சென் றனர்.  அங்கு தீபாரத்தி நடக் கும் பொழுது, அர்ச்சகர் வாயிலாக வரதராஜப் பெரு மாளே “ ராமாநுஜ ரைப்போன்று இந்த குழந்தையும் தர்ஸன ஸ்தாபகராக விளங்குவான் “ என்றார்.  அது கேட்ட பெற்ரோர்களும், சுற்றியிருந்தவர்களும் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

 ஸ்ரீவேங்கடநாதனுக்கு, வயது ஐந்து !-தகப்பனார் அக்ஷராப்யாஸம் செய்து வைத்தார்.  பிறகு ஒரு நாள் அப்பிள்ளார் பாலகனை தேவாதிராஜன் ஸந்நிதிக்கு அழைத்துச்சென்றார்.  அதுசமயம் மலைமேல், நடாதூரம்மாள் காலக்ஷேபம் நடந்துக்கொண்டி ருந்தது.  அங்கு சென்று அம்மாளை சேவித்த அப்பிள்ளார், குழந்தை யையும் சேவிக்கச்சொன்னார்.   நடாதூரம்மாள் குழந்தையை குளிர கடாக்ஷித்தார்.  அப்போது காலக்ஷேப கோஷ்டியிலிருந்த, வடக்குத் திருவீதிப்பிள்ளை, “ சுடர்போன்று திகழும் இந்த பாலகன் யார் ? “ என்று வினவ, அருகில் இருந்தவர்கள், “ அப்பிள்ளாரின் மருமான் இவன்.  திருவேங்கடமுடையானின் திருமணி அம்ஸமாகப் பிறந்த குழந்தை.  பரா-ஸரரைப் போன்றே பன்னிரண்டு மாதங்கள் தாயார் வயிற்றில் கர்பவாஸம் இருந்து அவதரித்தவர். “ என்று கூறினர். சிறிது நேரம் மௌனம் சாதித்த அம்மாளும், மேற்கொண்டு காலக்ஷேபத்தைத்தொடர, “ யாம் விட்ட இடம் எது ? “ என்று கேட்க, கேட்டுக்கொண்டிருந்தவர்கள், தெரியாது விழித்தனர்.  குழந்தை வேங்கடநாதன், தாம் வந்தபோது அம்மாள் என்ன விஷயம் சாதித்துக்கொண்டிருந்தாரோ, அதைச்சொல்லி, ” இதுவே தாங்கள் கடைசீ-யாக உபதேஸித்த விஷயம், “ என்று விண்ணப்பிக்க, அதனைக்கேட்ட நடாதூரம்மாள், பாலகனை, அருகில் அழைத்து, அணைத்து உச்சிமோந்து, புல ஸ்த்யர், பராஸரரை அநுக்ரஹித்தது போன்று, “ ப்ரதிஷ்டாபித வேதாந்த : ப்ரதிக்ஷிப்த பஹிர்மத: பூயா: த்ரைவித்யமாந்ய: த்வம் பூரிகல்யாண பாஜநம் “ என்று அநுக்ரஹித்து விட்டு, அப்பிள்ள்ரிடம்,  “ இவன் ஒரு அவதார புருஷன்” , ஸ்ரீபாஷ்யகாரரின் ஸ்ரீபாஷ்யங்களை உபதேஸிக்கும்படி விண்ணப்பித்தார்.  பிறகு பிள்ளான், எங்களாழ்வானுக்கும் ” இந்த குழந்தை நமக்களித்த ஸத்பாத்திரம்.  நமக்கு வயதாகிவிட்டக் காரணத்தால், இவ னுக்கு உபதேஸிக்கும் பாக்யம் பெற்றிலேன்” என்று நியமித்தார்.  பிறகு கிடாம்பி அப்பிள்ளாரை அழைத்து,  “ நீர் இந்தக் குழந்தைக்கு, எம்பெரு மானார் திருவுள்ளம் உகக்கும்படி ஸாமாந்ய சாஸ்த்ரங்களுடன், ஸ்ரீபாஷ் யாதி க்ரந்தங்களையும், மந்தரமந்த்ரார்த்தங்களையும் உபதேஸிக்கக்கடவீர்  “ என்று கூறி, அப்பிள்ளாரின் கரத்தில் குழந்தையை பிடித்துக் கொடுத்தார்.

 வேங்கடநாதனுக்கு, தந்தை ஏழாம் வயதில், உபநயனம் செய்து வைத்தார்.  அதன் பிறகு, வேங்கடநாதன் தந்தையிடம், வேதாத்யயனம் செய்ய ஆரம்-பித்தார்.  ஆளவந்தாரை போன்று அதிமேதாவியாக விளங்கும் தம்குமார ரைக்கண்டு மனம் பூரித்தார் அநந்தஸூரி.

 அதன் பிறகு அம்மாள் நியமனப்படி, அப்பிள்ளார் தம் மருமானுக்கு, சப்த தர்க, மீமாம்ஸாதி, ஸகல ஸாமாந்ய சாஸ்த்ரங்களையும் போதித் தார். மேலும், ஸ்ரீபாஷ்யம், கீதாபாஷ்யம், பகவத்விஷயம் இத்யாதி வேதாந்த க்ரந்தங் களையும் விசேஷார்த்தங்க-ளுடன், உபதேஸித்தார்.  இவற்றையெல்லாம் கற்ற வேங்கடநாதன், நாதமுனிகள், ஆளவந்தார், எம்பெருமானாருக்கு ஈடாக எழுந்தருளியிருந்தார்.   மேலும் ஒரு ஆச்சார்யனாகத்தகுந்த குண பூர்த்தியுடன் மிக தேஜஸ்வியாகத்திகழ்ந்தார்.

நம்தூப்புல் மணிக்கு, திரு-மங்கை என்னும் பெண் மணியைப் பாணிக்ரஹணம் செய்து வைத்தனர் பெற்-றோர்.  இந்த திருமணம் அப்பிள்ளார் நியமனப்படியே நடந்தேறியது.  அவர் தன் மருமானுக்கு, எந்த கெடு-தலும் நேராமலிருக்க ரக்ஷை செய்து, வைநதேயன் மந்தரத்தையும் உபதேஸித்தருளினார்.  மேலும்,” ராமாநுஜ சித்தாந்த ஸ்தாபக-ராகத்திகழ்வாய் ” என்று ஆசீர்வதித்தார்.  ஸ்வாமியும் பெருமாள் கோயி-லில் நித்ய கர்மானுஷ்டானங்களை முறைப்படி அனுஷ்டித்து வந்தார்.  பகவத், பாகவத,
ஆச்சார்ய கைங்கர்யங்களைப்
பண்ணிக் கொண்டு பலருக்கும் சாமான்ய விசேஷ சாஸ்த்ரங்களை உபதேஸித்து வந்தார்.

 சிலகாலம் சென்றதும், அப்பிள்ளார் திருமேனிக்கு, அஸௌகர்யம் உண்டாயிற்று.  அப்போது தன் மருமானை அழைத்து, “ உம்மால் ராமாநுஜ சித்தா-ந்தம் நிர்தாரிக்கப்பட வேண்டுமென்பது உடையவர் திருவுள்ளமென்று நடாதூரம்மாள் அருளிச்செய்திருக்கின்றபடியால் அவர் வழியாக வந்த உடையவர் பாதுகைகளை உமக்கு தரு கின்றோம். “ என்று சொல்லிப் பாதுகைகளை அளித்தார்.  ஸ்வாமியும் அவற்றை மிக பயபக்தியுடன் ஸ்வீகரித்துத் திருவாராதனத்தில் எழுந்தருளப் பண்ணி ஆராதித்து வந்தார்.

 அப்பிள்ளார் பரமபதித்த பிறகு, அவருடைய திருக்குமாரர் பத்மநாபாச்சார்யரைக்கொண்டு, சர்ம கைங்கர்யங்களை நன்கு நடத்திவைத்தார்.  வீர வல்லி பெருமாளையன், மற்றும்  வீரவல்லி கிருஷ்ணமாச்சாரி போன்ற வர்கள் நம் ஸ்வாமியிடம் காலக்ஷேபம் பண்ணினார்கள்.

 இவ்வாறு ஸித்தாந்த ப்ரவசனம் செய்து கொண்டிருந்தபோது, அப்பிள்ளார் உபதேஸித்த வைநதேய மந்த்ரத்தை ஆவ்ருத்தி செய்து ஸித்திபெற எண்ணினார்.-அதற்காக, அடியவர்கருளும் தெய்வநாயகன் நித்யவாஸம் செய்யும் திருவஹீந்த்ர புரத்திற்கு எழுந்தருளினார்.

 அங்கு கருட நதியில் நீராடி நித்ய கர்மானுஷ்டானங்களை முடித்துக்கொண்டு, செங்கமலவல்லி நாச்சி யாரையும், தேவநாதனையும் தொழுது ஔஷதகிரிக்கு எழுந்தருளினார்.  அங்கு ந்ருஸிம்ஹனை ஸேவித்து அந்த சந்நி திக்கு சமீபத்தில் இருந்த ஓர் அச்வத் விருக்ஷத்தின் ( அரசமரத்தின் )அடியில் ஆஸமிட்டு அமர்ந்து வைந தேயன் மந்த்ரத்தை ஜபித்துவந்தார்.  வைநதேயன் அவர் முன்பாக ப்ரத்யக்ஷமாகி ஹயக்ரீவ மந்த்ரத்தை உபதேஸித்தருளினார்.   அன்று முதல் ஸ்வாமியும், ஹயக்ரீவ மந்தரத்தை ஜபிக்க , இவர் தபஸி னால் ப்ரீதியடைந்த ஹயக்ரீவப் பெருமாள் இவர் முன் ப்ரத்ய க்ஷமாகி தம்முடைய லாலாமயமான அம்ரு தத்தைக் கொடுத்து அநுக்ரஹத்து விட்டுமறைந்தார்.

 ஸ்ரீஹயக்ரீவரின் லாலா அமுதத்தை பருகிய நம் ஸ்வாமியிடம் அனைத்து வித்யைகளும் தாமாகவே வந்து சேர்ந்தன்.  அவர் முதலில் ஹயக்ரீவன் விஷயமாக, “ ஹயக்ரீவ ஸ்தோத்ரத்தை”  அருளிச்செய்தார்.  பிறகு ஹயக்ரீவ மந்த்ரத்தை தமக்கு உபதேஸித்தருளிய கருடன் விஷயமாக     “ கருட பஞ்சாசத் “  அருளினார்.  தொடர்ந்து திருவஹீந்த்ர எம்பெருமான் தேவநாதன் விஷயமாக    “ தேவநாயக பஞ்சாசத் “ ப்ராக்ருத மொழியில்,     “ அச்சுத சதகம் “அழகிய செந்தமிழில் மும்மணிக்கோவை கந்துபா, கழற்பா, அம்மானைப்பா, ஊசற்பா, ஏசற்பா, நவரத்னமாலை ஆகியவற்றை இயற்றி னார். ஸ்ரீதேவநாதனையும், செங்கமல நாச்சியாரையும் மங்களா சாஸனம் செய்து கொண்டு சிலகாலம் அங்கேயேத் தங்கியிருந்த ஸ்வாமிகள்,   “ பரமதபங்கம் “  என்ற க்ரந்தத்தையும் அருளினார்.  அங்கேயே கோயிலில் எழுந்தருளி யிருக்கும் ஸ்ரீராமன் விஷயமாக,     “ ரகுவீரகத்யம்”, கோபாலனைப்பற்றி      “ கோபாலவிம்சதி “ ஆகியவற்றையும் அருளிச்செய்தார்.

 பிறகு, பேரருளாளனைக்காண விழைந்தவராக, அங்கிருந்து புறப்பட்டவர் வழியில், திருக்கோயிலூர் அடைந்தார்.  அங்கு ஆயனாரை தரிசித்தவர் அந்த எம்பெருமான் விஷயமாக, “ தேஹளீகஸ்துதி ” யை அருளிச்செய்தார்.

 பிறகு அங்கிருந்து திருக்கச்சி என அழைக்கப்படும் காஞ்சீபுரம் வந்து சேர்ந்தார்.  அநந்தஸரஸில் நீராடி நித்யகர்மாநுஷ்டானங்களை முடித்துக் கொண்டு, பெருந்தேவித் தாயாரை மங்களாசாஸனம் செய்து விட்டு பேரருளாளன்  வரதராஜன் சந்நிதிக்கு எழுந்தருளினார்.  பெருமாளை ஆபாதசூடம் சேவித்து மகிழ்ந்தார்.

 எம்பெருமானார் கத்யத்தில் அருளிச்செய்துள்ள ப்ரபத்யர்த்தத்தை, தம் ஆச்சார்யரான அப்பிள்ளார் உபதேஸித்தபடி, அங்க பஞ்சக பஞ்சக ஸம்பந்தமான ஆத்ம ரக்ஷாபர ஸமர்பணத்தை ( சரணா கதியை ) பேரருளாளன் திருவடிகளில் ஸமர்பித்து விட்டு, தூப்புல் அக்ரஹாரம் வந்து சேர்ந்தார்.  அங்கு காலக்ஷேபங்களை அரு ளிச்செய்துகொண்டு இருந்தார்.  அப்போதுதான் சரணாகதி விஷயமாக,   “ ந்யாஸதஸகத்தை “ யும் வரதராஜன் விஷயமாக,   “ வரதராஜபஞ்சாசத் “ என்ற ஸ்தோத்ரத்தையும் அடைக்கலபத்து, அர்த்த பஞ்சகம், ஸ்ரீவைஷ்ணவதினசர்யை, திருச்சின்ன மாலை, பன்னிருநாமம், என்று ஐந்து தமிழ்ப்ரபந்தங்களையும் அருளிச் செய்து, “ அத்திகிரி மஹாத்ம்யம் “ என்ற க்ஷேத்ர மகிமையையும் அருளிச் செய்தார்.  தீப ப்ரகாஸர் விஷயமாக, “ சரணாகதி தீபிகை ” யும் யதோக்தகாரி விஷயமாக, “ வேகாஸேது ஸ்தோத்ரத்தை “ யும் அஷ்டபுஜ பெருமாள் விஷயமாக, “ அஷ்டபுஜாஷ்டகத்தை “ யும் ஆளரி விஷயமாக “ காமாஸி காஷ்டகம் “ , திருப்புட்குழி எம்பெருமான் விஜயராகவன் மீது “ பரமார்த்த ஸ்துதி “ யும் அருளிச்செய்தார்.

 பிள்ளானின் குமாரர் புண்டரீகாக்ஷர்.  அவர் விஜயநகர மன்னனின் அத்யக்ஷராக இருந்தார்.  அவர் அப்பிள்ளாரின் குமாரத்தியை விவாஹம் செய்து கொண்டிருந்தார்.,  அவள் தன் தகப்பனாரின் க்ருஹத்தில் ப்ரசவிக்க காஞ்சீபுரம் வந்திருந்தாள்.  அவளுக்கு சோபக்ருத் ஆண்டு, புரட்டாசிமாதம், ச்ரவண நக்ஷத்ரத்தில் ஒர் ஆண்குழந்தை பிறந்தது. அதற்கு தூப்புல்மணி ஸ்ரீநிவாஸன் எந்ற பெயரைச்சூட்டி, ரக்ஷையும் செய்துவைத்தார்.  புண்டரீகாக்ஷருக்கு குழந்தை பிறந்த செய்தி அனுப்பிவைக்கப்பட்டது.

 செய்திகேட்ட புண்டரீகாக்ஷரும் புறப்பட்டு காஞ்சீபுரம் வரத்தயாரானார்.  அப்போது அவர் ஸ்ரீபாஷ்யகாரர், பிள்ளான் முதலியவர்களால் ஆராதிக்-கப்பட்டு, பிற்பாடு புண்டரீகாக்ஷரிடம் வந்து சேர்ந்த ஸ்ரீஹயக்ரீவரை வேங்கடநாதனிடம் சமர்பித்துவிட வேண்டும் என்று தாம் கண்ட கனவை விஜயநகர மன்னனிடம் கூற, மன்னன் புண்டரீகாக்ஷரையும், ஹயக்ரீ வரையும் ஸகல ராஜமரியாதைகளுடன்  காஞ்சீபுரம் அனுப்பிவைத்தார்.  காஞ்சீமாநகரிலும், புண்டரீகாக்ஷரை பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்றனர்.  ஸ்ரீஹயக்ரீவன் நம் ஸ்வாமி ஸ்வப்னத்திலும் வந்து கூறியதால், அவரும் எதிர்கொண்டு அழைத்தார்.  பிறகு முறையே குசல ப்ரச்நம் முடிந்தவுடன், புண்டரீகாக்ஷர் ஹயக்ரீவரை ஸ்வாமிகளிடம் அளிக்க ஸ்வாமிகளும் அந்த மூர்த்தியை தம் பிதாமஹ, ப்ரபிதாமஹாதிகள் ஆராதித்து வந்த பேரருளாளன் விக்ரஹத்துடன் எழுந்தருளச்செய்து ஆராதித்து வந்தார்.

 தம் அவதாரத்திற்கு முக்ய காரணமாக விளங்கிய திருவேங்கடமுடையானை தரிசிக்கவேண்டுமென்று ஸ்வாமிகள் எண்ணி யாத்ரை புறப்பட்டார்.  வழியில் சோளிங்கரை அடைந்தவர் அங்கு அக்காரக்கனியை மங்களாஸாஸனம் செய்துவிட்டு, பிறகு சிலகாலம் திருச்சானூரில் தங்கி அலர் மேல்மங்கைத் தாயார், கீழ்திருப்பதியில் கோவிந்தராஜன் ஆகியவர்களை ஸேவித்துவிட்டு திருமலைக்கு எழுந்தருளினார்.

 ஸ்வாமி புஷ்கரணியில் நீராடி, நித்ய கர்மா-நுஷ்டானங்களை முடித்துக் கொண்டு, முதலில் ஸ்ரீவராஹனை ஸேவித்துவிட்டு, ஸ்ரீநிவாஸன் ஸந்நிதிக்கு எழுந்தருளி பாதாதிகேசம் கண் களால்அனுபவித்துவிட்டுதீர்த்தப்ரஸாதங்களைபெற்றுக்கொண்டார்.  திருவேங்கடமுடையான் தயையைப்பற்றி              “ தயாசதகம் “ என்ற நூறு ஸ்லோகங் களை இயற்றினார்.  பிறகு சிலநாட்கள் அங்கு தங்கியிருந்து, திரும்ப மனமின்றி புறப்பட்டார்.  ஸ்ரீநிவாஸனின் விபவம் ஒன்றும் குறைவின்றி நித்ய ஸ்ரீர்நித்ய மங்களமாக இருக்கவேண்டுமென்று  “ ப்ரஸமிதகலிதோஷம் “என்ற ஸ்லோகத்தை அருளிச்செய்து மங்களாசாஸனம் செய்தார்.

 திருமலையைவிட்டுப் புறப்பட்வர் வடதேஸத் திலுள்ள திவ்யதேசங்களுக்கு யாத்ரை சென்றார்.  செல்லும் வழியில் துங்கபத்ரா நதிக்கரையில் வித்யாரண்யரை சந்தித்தார்.

 பால்ய நாட்களிலிருந்து இருவரும் அன்புடன் பழகி வந்தவர்கள்.  இப்போது வித்யாரண்யர் ஸந்யாஸ ஆச்ரமத்தை ஸ்வீகரித்துக்கொண்டு, கங்காயாத்ரை புறப்பட்டு இருந்தார்.  நம் ஸ்வாமியைக்கண்டதும் மிக்க சந்தோஷத்துடன் க்ஷேமசமாசாரங்களைப் பரிமாறிக்கொண்டார்கள்.  அப்போது அந்த தேஸத்து அரசனின் மகளை ப்ரஹ்மராக்ஷஸ் பிடித்துக்கொண்டு இருப்பதாயும், அதனை ஓட்டவேண்டுமென்று ராஜாவின் ப்ரதிநிதி வித்யாரண்யரை அணுக, அவர் நம் ஸ்வாமியிடம் கேட்டுக்கொண்டார்.  அதற்கு ஸ்வாமிகள் சம்மதிக்காமல் அங்கிருந்து புறப்பட்டு த்வாரகை, கோகுலம், ப்ருந்தாவன், மதுரா, மாயை, அவந்தி, அயோத்யா போன்ற முக்தி தரும் க்ஷேத்ரங்களுக்குச் சென்று சேவித்தார்.

பிறகு அங்கிருந்து புறப்பட்டுஸ்ரீகூர்மம், புருஷோத்தமம், அகோபிலம், திருஎவ்வுள், திருநின்றவூர், திருவல்லிக்கேணி,திருகடல்மல்லை ஆகிய திவ்யதேசத்து எம்பெருமான்களை மங்களா சாஸனம் செய்துவிட்டு ஸ்ரீபெரும்பூதூருக்கு எழுந்தருளினார்.  யதிராஜனை ஸேவித்தார்.  எம்பெருமானாரால் குளிரக் கடாக்ஷிக்கப்பெற்றவராய் மீண்டும் காஞ்சீ-புரத்திற்கே வந்து ஸித்தாந்த ப்ரவசனம் பண்ணிவந்தார்.

 ஒரு சமயம் காஞ்சீபுரத்திற்கு அருகாமை யிலுள்ள திருப்புட்குழி என்ற திவ்ய தேஸத்தில் வைஸூரி என்ற கொடிய வியாதியால் மக்கள் அவதி யுற்றனர். பலர் இறந்தனர்.  செய்தி கேட்ட நம் ஸ்வாமிகள் வாளாயிருக்காமல் உடனை அங்கு சென்று,” ப்ரதிபட ஸ்ரேணிபூஷண “ என்று தொடங்கும் சக்ரத்தாழ்வார் மீதான “ சுதர்னாஷ்டகம் “ என்ற எட்டு ஸ்லோகங்களை அருளிச்செய்ய, அந்த வியாதியிலிருந்து மக்கள் விடுபட்டதுடன் அவர் பெருமையை உணர்ந்தனர்.  இந்த ஸ்லோகத்தை சொல்வதால், வியாதிகள் மட்டுமல்ல, பேய், பிசாசு தொல்லைகளி லிருந்தும் விடுபடலாம் என்பது உறுதி.

 வேருவொரு சமயம், ஒருஸந்யாஸி, ஸ்வாமி களிடம் வாதம் செய்யவந்தான்.  அவன் வாதத்தில் தோற்றான்.  அதனால் கோபமுற்ற வனாக, சில கெட்ட மந்திரங்களின் உதவியால் அவற்றை ஜபித்து குளத்து நீரை ஒருகை எடுத்துப் பருகினான்.

 உடனே நம் ஸ்வாமியின் வயிறு பெருக்க ஆரம்பித்தது.  அவரால் உபாதையை தாங்க முடியவில்லை.  அதன் காரணத்தை உணர்ந்தவராக, எதிருலிருந்த ஒரு கம்பத்தில் ஒரு கோடு இழுத்தார்.என்னே ஆச்சர்யம் அவர் வயிற்றிலிருந்த ஜலம் கம்பத்தின் வழியாக வெளியேற அவர் வயிறும் முன்போல ஆனது.  இதனை அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த அந்த ஸந்யாஸி ஸ்வாமியின் கால்களில் விழுந்து தன்னை மன்னிக்க வேண்டுனான்.

 விஜயநகரத்து மன்னனின் மகளைப் பீடித்திருந்த ப்ரஹ்மராக்ஷஸை வித்யாரண்யர் விரட்டியதால் மன்னனின் அரஸசபையில் அத்யக்ஷகரானார்.  அப்போது தம் நண்பரான தூப்புல் மணி உஞ்சவ்ருத்தி செய்து, ஜீவனம் நடத்துவதாகக்கேள்வியுற்று வருந்தியதுடன் அவருக்கு உதவும் எண்ணத்துடன், விஜயநகரத்திற்கு வந்துவிடும்படி ஒரு கடிதம் எழுதி அனுப்பினார்.   அதில், “ப்ரஸித்தி பெற்ற தூப்புல்குல திலகமே! அடியேன் மூலம் தேவரீருடைய கீர்த் தியை மஹாராஜா அறிந்து, தங்களை நேரில் தரிசிக்க விழைகிறார்.  தேவரீரை தனத்தால் ஆராதித்து உம் வாயிலிருந்து வரும் அம்ருதத்தில் திளைக்க ஆசைப் படுகின்றார்.  ஆகையால் தாங்கள் சிஷ்யர்களுடன் விஜயநகரத்திற்கு எழுந்தருளி மஹாராஜாவையும், தங்களிடம் அன்புகொண்ட அடியேனை யும் மகிழ்விக்க வேண்டுகின்றேன்.“  என்று எழுதியிருந்தார்.  அந்தக்கடிதத்தைப் படித்த ஸ்வாமிகள் அதற்கு,  “ க்ஷோணீ கோண ஶதாம்ஶ பாலந கலா து³ர்வார க³ர்வாநல-
க்ஷுப்⁴யத்க்ஷுத்³ர நரேந்த்³ர சாடு ரசநா த⁴ந்யாந் ந மந்யாமஹே ।
தே³வம் ஸேவிதுமேவ நிஶ்சிநுமஹே யோঽஸௌ த³யாலு: புரா
தா³நா முஷ்டிமுசே குசேல முநயே த³த்தே ஸ்ம வித்தேஶதாம் ॥ வைராக்³யபஞ்சகம்-1 ॥ “ என்ற ஸ்லோகத்தை பதிலாகஎழுதியனுப்பினார்.  அதில்,      “ இந்த பூமண்ட லத்தில், ஏதோவொரு மூலையில் ஏகதேஸத்தை அரசர்கள் ஆள்கின்றனர்.  அவர்களை நம்முடைய அழகிய வார்த்தைகளினால்பாட, துதிக்க விரும்பவில்லை.  அதனால் கிடைக்கும் பணத்தையும், ஒரு பொருட் டாக நாம்மதிக்கவில்லை.  பகவானையே த்யானம் செய்ய நிச்சயித்துள் ளோம்.  அவன் ஒருவனே ஸர்வ பலனையும் கொடுக்க வல்லவன்.  குசேலனுக்கு கண்ணபரமாத்மா சகல சம்பத்தையும் அருளியதை நாம் கேள்விப் பட்டிருக்கின்றோம். இல்லையா?“ என்பதே அந்த ஸ்லோகத்தின் பொருள்.

 சிலகாலம் கழித்து மற்றுமொரு கடிதம் அனுப்பி வைத்தார் வித்யா-ரண்யர்.  அதனையும் படித்துவிட்டு, நம் ஸ்வாமிகள்,  ஐந்து ஸ்லோக-ங்களை பதிலாக அனுப்பி வைத்தார். அந்த ஐந்து ஸ்லோகங்களே         “ வைராக்ய பஞ்சகம் “ எனப்படும்.

வைராக்³யபஞ்சகம் ॥
க்ஷோணீ கோண ஶதாம்ஶ பாலந கலா து³ர்வார க³ர்வாநல-
க்ஷுப்⁴யத்க்ஷுத்³ர நரேந்த்³ர சாடு ரசநா த⁴ந்யாந் ந மந்யாமஹே ।
தே³வம் ஸேவிதுமேவ நிஶ்சிநுமஹே யோঽஸௌ த³யாலு: புரா
தா³நா முஷ்டிமுசே குசேல முநயே த³த்தே ஸ்ம வித்தேஶதாம் ॥ 1 ॥

இந்த பூமண்ட லத்தில், ஏதோவொரு மூலையில் ஏகதேஸத்தை அரசர்கள் ஆள்கின்றனர்.  அவர்களை நம்முடைய அழகிய வார்த்தைகளினால்பாட, துதிக்க விரும்பவில்லை.  அதனால் கிடைக்கும் பணத்தையும், ஒரு பொருட் டாக நாம்மதிக்கவில்லை.  பகவானையே த்யானம் செய்ய நிச்சயித்துள் ளோம்.  அவன் ஒருவனே ஸர்வ பலனையும் கொடுக்க வல்லவன்.  குசேலனுக்கு கண்ணபரமாத்மா சகல சம்பத்தையும் அருளியதை நாம் கேள்விப் பட்டிருக்கின்றோம். இல்லையா?

ஶிலம் கிமநலம் ப⁴வேத³நலமௌத³ரம் பா³தி⁴தும்
பய: ப்ரஸ்ருʼதி பூரகம் கிமு ந தா⁴ரகம் ஸாரஸம் ।
அயத்ந மல மல்லகம் பதி² படச்சரம் கச்சரம்
ப⁴ஜந்தி விபு³தா⁴ முதா⁴ ஹ்யஹஹ குக்ஷித: குக்ஷித: ॥ 2 ॥

ஒருவன் உண்ண உணவும், குடிக்கநீரும், உடுக்க உடையும் வேண்டி அரசனை அண்டி வாழ வேண்டுமென்பதில்லை.  நிலங்களில் சிதறி கிடக்கும் நெல்மணிகளும், குளத்துநீரும், வீதியில் கிடக்கும் கந்தல் ஆடைகளுமே போதும்.

ஜ்வலது ஜலதி⁴ க்ரோட³ க்ரீட³த்க்ருʼபீட³ ப⁴வ ப்ரபா⁴-
ப்ரதிப⁴ட படு ஜ்வாலா மாலாகுலோ ஜட²ராநல: ।
த்ருʼணமபி வயம் ஸாயம் ஸம்பு²ல்ல மல்லி மதல்லிகா
பரிமலமுசா வாசா யாசாமஹே ந மஹீஶ்வராந் ॥ 3 ॥

சமுத்ரத்திலுள்ள படபாக்நி போல் நம் வயிற்றில் உள்ள ஜாடராக்நி விருத்தியடைந்து பசிதாகத்தால் நாம் பீடிக்கப்பட்டாலும் மாலையில் தானாக மலரும் மல்லிகையின் வாசம் போன்ற நறுமணம் கொண்ட நம் வாக்கினால் அரசர்களிடம் ஒருபோதும் யாசிக்கமாட்டோம்.

து³ரீஶ்வர த்³வார ப³ஹிர்விதர்தி³கா-
து³ராஸிகாயை ரசிதோঽயமஞ்ஜலி: ।
யத³ஞ்ஜநாப⁴ம் நிரபாயமஸ்தி மே
த⁴நஞ்ஜய ஸ்யந்த³ந பூ⁴ஷணம் த⁴நம் ॥ 4 ॥

அர்ஜுனனுக்கு சாரதியாக இருந்த கருமை நிற கண்ணன் என்கின்ற தனம், நமக்கு நிறைய இருக்கின்றது.  அந்த தனம் குறைவில்லாதது ஆகும். ஆகவே துஷ்டர்களான அரசர்களின் வாசல் திண்ணையில் தனத்திற்காகத் துக்கத்துடன் காத்திருக்கும் நிலை நமக்கு வேண்டாம்.  அரியை துதித்து உடன் கிடைக்கும் தனமே சிறந்தது.  சிவ, ஸநகாதி களால் த்யானம் செய்யவும் முடியாத எம்பெருமான் என்ற தனம், எப்போதும் கிட்டும். அதற்கு விடையென்ன என்று கூறுகின்றோம் கேளும்.

ஶரீர பதநாவதி⁴ ப்ரபு⁴ நிஷேவணாபாத³நாத்
அபி³ந்த⁴ந த⁴நஞ்ஜய ப்ரஶமத³ம் த⁴நம் த³ந்த⁴நம் ।
த⁴நஞ்ஜய விவர்த⁴நம் த⁴நமுதூ³ட⁴ கோ³வர்த⁴நம்
ஸுஸாத⁴நமபா³த⁴நம் ஸுமநஸாம் ஸமாராத⁴நம் ॥ 5 ॥

அரசர்களின் பெரும் தனம் நம் பசி, தாகங்களைத் தற்காலிகமாகப் போக்கக் கூடியதே.  நம் மரண பர்யந்தம் அவர்கள் தனத்தை எதிர் பார்த்துக்கொண்டு இருக்கக்கூடிய கஷ்டத்தை அது அளிக்கும்.  ஆகவே அது ப்யோஜன மற்றது.  நம்மால் துதிக்கப்படும் பகவான் என்கின்ற தனம் தனஞ்ஜெயனுக்கு கீதையை உபதேஸித்து மேன் மையை உண்டுபண்ணியது. ஆகவே பகவானாகிற தனம் கோவர்தன கிரியைத்தூக்கி, கோபர்களையும், கோக்களையும் ரக்ஷித்தது.  மேலும் தன்னை அண்டிய தேவர்களையும், வித்வான்களையும் ஸந்தோஷப் படுத்தக்கூடியது.  ஆகையால் பகவான் என்கின்ற தனமே மிக உயர் ந்தது. சொந்தமாக சம்பாதித்தோ இல்லை பரம்பரை சொத்தோ இருந்   தால் இவ்விதம் அரசர்களின் உதவியை அலக்ஷியப் படுத்தலாம்.  ஒன்றுமே இல்லாது உஞ்சவிர்த்தி செய்யும் நாம் இப்படி பேசலாகாது என எண்ணவேண்டாம்.

நாஸ்தி பித்ரார்ஜிதம் கிஞ்சிந்ந மயா கிஞ்சிதா³ர்ஜிதம் ।
அஸ்தி மே ஹஸ்தி ஶைலாக்³ரே வஸ்து பைதாமஹம் த⁴நம் ॥ 6 ॥

நாம் சம்பாதிப்பதோ, நம் முன்னோர்கள் சம்பாதித்தது என்றோ எதுவுமில்லை.  நம் பிதாமஹர்  ( ப்ரஹ்மா )  ஸம்பாதித்த தனம் ஒருவராலும் அபஹரிக்கமுடியாதது.  அது அத்திகிரியில் இருக்கின்றது.  அதாவது ப்ரஹ்மனின் யாகத்தில் அவதரித்த பேரருளாளனே நமக்குப் பெரிய தனம்.

॥ இதி வேதா³ந்த தே³ஶிகேந ரசிதம் வைரக்³யபஞ்சகம் ஸம்பூர்ணம் ॥

இப்படி ஸ்வாமி வைராக்யத்துடன் வாழ்க்கையை நடத்திவந்தது எல்லோரும் அறிந்த ஒன்றே.  இவர் கஷ்டத்தை நீக்க விரும்பிய ஒரு பெரும் தனவந்தர், சில தங்க மணிகளை         ( அவைநெல் மணி களைப்போன்றே காணப்படும் ) தாமிடும் பிக்ஷையுடன் கலந்து ஸ்வாமிகள் உஞ்சவிர்த்திக்கு வரும்போது அவருக்கு அளித்தார்.  ஆனால் ஸ்வாமிகளோ அதனை கவனிக்காமல், தம் தேவியாரிடம் தந்து அமுது செய்யும் படிக் கூறினார்.  தேவிகள் செம்பிலிருந்த தான்யங் களைக் கீழே சேர்த்தபோது தங்கமணி களும் கலந்திருப்பதைப்பார்த்தார்.

 ஆனால் அதுவரை அந்த அம்மையார் அதுபோன்ற தங்க மணிகளைப்-பார்த்ததேயில்லையாதலால் பயந்து போய் ஸ்வாமிகளை அழைத்து,     “ இன்று பிக்ஷையுடன் பள பளப்பாக ஏதோ த்ரவியமும் கலந்து இருக்-கிறது சற்றுவந்து பாருங்களேன் “ என்று அழைக்க, ஸ்வாமிகள் வந்து பார்த்துவிட்டு     “ அவைபுழுக்கள் “   என்று கூறிவிட்டு, ஒருகுச்சியால் அவற்றையெல்லாம் ஒதுக்கித் தள்ளி னார்.  ஆகவே தேவியார், ஸ்வா-மிகள் அருளிச்செய்த நவரத்னமாலை, மும்மணிக்கோவையையுமே தமக்கு விலையுயர்ந்த ஆபரணங்களாகக் கருதி வாழ்ந்துவந்தார்.

 நம் ஸ்வாமிகளின் அறிவுத்திறனைக்கண்டு அஸூயைக்கொண்ட சிலர் ஒரு ப்ரஹ்மசாரியிடம் “ நீ திருமணம் செய்துகொள்ள பணம் வேண்டு-மென்றால் நீ வேங்கடநாதனிடம் சென்றுகேள்.  அவர் தங்காசுகளாக வைத்துக்கொண்டிருக்கிறார்.“ என்று கூறி அவனை அவனிடம் அனுப்பி வைத்தனர்.

 அந்த ப்ரஹ்மசாரியும், அதுபோன்றே ஸ்வாமிகளிடம் சென்று உதவி கேட்க, அவரும் அதன் பிண்ணணியை அறிந்த வராக பெருந்தேவித் தாயாரைக் குறித்து “ ஸ்ரீஸ்துதி “ என்ற ஸ்லோகத்தை அருளிச் செய்ய வானத்திலிருந்து தங்கக் காசுகள் மழையென வானிலிருந்து பொழிந்தது.  அதனை அந்த ப்ரஹ்மசாரியும் தன் மேல் உத்ரியத்தில் பிடித்துக்கொண்டான்.  பிறகு ஸ்வாமிகளைத் தண்டன் சமர்ப்பித்துவிட்டு அவற்றை எடுத்துச் சென்றான்.  இதனைப்பார்த்த அந்த விரோதிகள் அனைவரும் தலை கவிழ்ந்தனர்.  இந்த நிகழ்ச்சியைக் கேள்வியுற்ற வித்யாரண்யருக்கு ஸ்வாமிகளிடம் பன்மடங்கு மதிப்பு வளர்ந்தது.

 ஒருசமயம், சில அத்வைதிக வித்வான்கள் கூட்டமாக ஸ்ரீரங்கத்திற்கு வந்திருந்து, “  ராமாநுஜஸித்தாந்தத்தைச் சேர்ந்தவர்கள் இப்போது நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு, பதில் சொல்ல வேண்டும் இல்லை யெனில் அத்யயன உத்ஸவத்தை நடத்தக்கூடாது, எங்கள் மதத்தில் சேர்ந்து விடவேண்டும் “ என்று கோஷமிட்டனர்.  ஸ்ரீரங்கவாஸிகளான ஸுதர்ஸன பட்டர் போன்றவர்கள் வயோதிகர்களாக ஆகிவிட்டபடியால், பெருமாள் கோயிலக்கு எழுந்தருளியிருந்த நம் ஸ்வாமிகளுக்கு ஸுதர் ஸன பட்டர் “ தேவரீர் உடனே புறப்பட்டு திருவரங்கம் எழுந்தருள வேண்டும்.  இது ஸ்ரீரங்கநாதனுடைய ஸேநாபதியின் சாஸனம் “ என்ற ஓலையை அனுப்பி வைக்க, ஸ்வாமிகளும் பேரருளாளன் நியமனம் பெற்று, திருவரங்கம் வந்து சேர்ந்தார்.

 வடத்திருக்காவேரியில் நித்ய கர்மாநுஷ் டானங் களை முடித்து கொண்டு கோயிலுக்கு எழுந்தருளி னார்.  ஸ்வாமிகள் எழுந்த ருளிய செய்தி கேள்வியுற்ற கோயில் நிர்வாகிகள் அவரு க்கு, பூர்ண கும்ப மரியாதை செய்து வரவேற்றனர்.  ஸ்ரீ ரங்கநாச்சியாரை ஸேவித்து ப்ரதக்ஷணமாக வந்து ஸ்ரீரங் கநாதன் ஸந்நிதிக்கு எழுந்தருளினார்.  அமலனாதிபிரான் பாசுரத் தைச் சொல்லி பெருமாளை பாதாதிகேசம் ஸேவித்து, தீர்த்த   ப்ரஸா தங்களை ஸ்வீகரித்துக் கொண்டார்.  ஸந்நிதிக்கு வெளியில், பெரிய மண்டபத்தில் ஸுதர்ஸனபட்டர் முத லானவர்கள் இருந்தனர்.  அப்போது அங்கிருந்த அத்வைத வித்வான்கள், ஸ்வாமி களுடன் வாதம் செய்ய ஆரம் பித்தனர்.  ஸ்வாமிக்கும் அவர்களுக் கும் ஏழுநாட்கள் வாதம் நடந்தது.  எட்டாவது நாள் ஸ்வாமிகள் வாதத்தில் வென்றார்.

 இந்த வாதங்களை தினதோறும் வீரவல்லிபெருமாளையன் என்பவர் கேட்டு இரவு வேளை அவற்றை எழுதிமுடித்து, எட்டாவது நாள் வாதம் முடிந்ததும் ஸ்வாமிகளிடம் அவற்றைக் காண்பித்தார்.  ஸ்வாமிகளும் அவற்றைக் கடாக்ஷித்து, “  ஸததூஷணி “  என்று பெயரிட்டார்.  அந்த அத்வைத வித்வான்கள் ஸ்வாமிகளிடம் அடிபடிந்தனர். ஸ்வாமிகளும் ஸ்ரீரங்கநாதன் நியமனப்படி அங்கேயே எழுந்தருளியிருந்து காலக்ஷேபங்களை சாதித்து வந்தார்.

இவர் செய்தருளிய ஸ்ரீபாஷ்ய ப்ரவசனத்தைக் கண்டு பெரியபெருமாள் மனமுவந்து, “ வேதாந்தசார்யர் “  என அழைத்தார்.  ஸ்ரீரங்கநாச்சியாரும் தம்பங்கிற்கு, “ ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரர் “
என்ற விருதை வழங்கினார்.  இவற்றைக்கேள்வியுற்ற ஸுதர்ஸனபட்டர் முதலானோர் மிக சந்தோஷ
மடைந்தனர். இப்படி திவ்ய தம்பதிகளின் அனுக்ரஹத்தை நம் ஸ்வா மிகள் பெற்றார்.  ஸ்வாமிகளின் வைபவத்தைக்கேள்வியுற்ற உள்ளூர், வெளியூர் வாசிகள் வந்து அவரை வணங்க ஆரம்பித்தனர்.  நம் வேதா ந்த தேசிகர், பெரிய பெருமாள் விஷயமாக “ பகவத்யான ஸோபனத் தையும் “ மற்றும், “ பூஸ்துதி” “தசாவதாரஸ்தோத்ரத்தையும்”அருளிச் செய்தார்.

 சித்திரை மாதம் திருவாதிரை நன்னாளில் எம்பெருமானார் விஷயமாக                   ”  யதிராஜ ஸப்ததி “ யை அருளிச்செய்தார்.  பின்பு உடையவர் நியமனப் படி, தத்த்வ முக்தாகலாபம், அதற்கு வ்யாக்யானமாக ஸர்வார்த்த ஸித்தி, ந்யாய ஸித்தாஞ்ஜனம், ந்யாய பரிசுத்தி, ஸேஸ்வரமீமாம்ஸை, மீமாம்ஸபாதுகை,   தத்த்வபீடிகை, அதிகரணஸாராவளி, கீதாபாஷ்ய விவரணமாக தாத்பர்யசந்த்ரிகை, ஈசாவாஸ்ய உபநிஷத் பாஷ்யம், ஸச்ச ரித்ர ரக்ஷை, ந்யாஸவிம்ஸதி, ஸ்ரீபாஞ்சராத்ர ரக்ஷை, கீதார்த்த ஸங்க் ரஹ ரக்ஷை, நிக்ஷேபரக்ஷை, மேலும் கத்யத்ரயம், ஸதுஸ்லோகி, ஸ்தோ த்ர ரத்னத்திற்கும் வ்யாக்யானமான ரஹஸ்யரக்ஷை ஆகிய க்ரந் தங்களை அருளிச் செய்தார்.இவற்றைக் கேட்டு உகந்த ஸுதர்ஸன பட் டர் முதலான பெரியவர்கள் நம் ஸ்வாமிக்கு “ கவிதார்க்கிக ஸிம் ஹம் “ என்ற விருதை வழங்கி கௌரவித்தனர்.

விஜயநகரத்தில் அக்ஷோப்ய முனிக்கும், வித்யாரண்யருக்கும் வேதாந்த த்தில் விவாதம் நடைபெற்றது.  இருவருடைய வாதங்களையும் பத்தி ரிகை மூலமாக தேசிகனுக்கு அனுப்பி வைத்தனர். அதில், ” எங்களில் யாரு டைய வாதம் சரியானது, என்று நிர்ண யம் செய்து அனுப்ப வேண் டும் ” என்று கேட்டிருந்தார்.  அதன்படி ஸ்வாமி களும் படித்துப்பார்த்து, அக்ஷோப்ய முனியே  ஜெயித்ததாக ஒரு ஸ்லோ கத்தின் மூலம் எழுதியனு ப்பினார்.  வித்யாரண்யர் நம் ஸ்வாமிக்கு பால்ய சிநேகிதராக இருந்தும் பக்ஷபாதமின்றி முடிவு கூறியது கேட்டு மன்னன் ஸந்தோஷ மடைந்தான்.  வித்யாரண்யர் மிக கோபம் கொண்டு ஸததூஷணியை அனுப்பிவைத்தால் அதனைப்படித்து அதிலுள்ள குற்ற ங்குறைகளை சுட்டிக் காட்டி பதில் அனுப்புவதாக ஒரு கடிதம் எழுதி யனுப்பினார்.  உடனே ஸ்வாமியும் அனுப்பிவைக்க, அதனை நன்கு பரிசோதித்துப் பார்த்து ஒரு குற்றமும் கண்டுபிடிக்க முடியாது போன தால், அதன் தலையில் ஒரு புள்ளியைக்குத்தித் திருப்பியனுப்பினார்.  அதனையும் ஸ்வாமி கடாக்ஷித்து “சகாரஸமர்த்தநம்”   என்ற க்ரந்தத்தைச் செய்து முன்பு வித்யாரண்யர் இட்ட புள்ளியின் பக்கத்தில் மற்றொரு புள்ளியை யும் வைத்து இரண்டையும் வித்யாரண்யருக்கு அனுப்பிவைத்தார். அவரும் அதனைப் பார்த்துவிட்டு, “ விஷ்ணுவின் கண்டாம்ஸரான ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரரை நான் ஜெயிக்க வல்ல வனோ “ என்று சொல்லியனுப்பினார்.  அன்றுமுதல் நம் ஸ்வாமிகளிடம் அதிக பக்தியுள்ளவராக மாறினார்.

 கிருஷ்ணமிச்ரர் என்பவர் நம் ஸ்வாமியின் பெயரையும், புகழையும், ஸஹிக்காதவராய் வாதத்திற்கு அழைத்தார்.  மூன்றுநாட்கள் நடந்த வாதத்தில் நம் ஸ்வாமிகள்தான் ஜெயித்தார் என்று சொல்லவும் வேண் டுமோ ! பிறகு அவர் தாம் எழுதிய “ ப்ரபோத சந்த்ரோதயம் “என்னும் நாடகத்தை எழுதி அவரிடம் கடாக்ஷிக்க அளித்தார்.  அதனைப் பெற்றுக் கொண்ட ஸ்வாமியும் அதை கடாக்ஷித்து “ஸங்கல்ப ஸூர்யோதயம்” என்ற நாடகத்தை எழுதி அவருக்கு அளித்தார்.  கிருஷ்ணமிச்ரரும் மிகவும் சந்தோஷமடைந்தார்.  ஸுதர்ஸன பட்டர் முதலானவர்கள் சந்த்ரோதயத்தை பார்த்தவுடன் அதற்கு பதிலளிக்குமுகமாக ஸங்கல்ப ஸூர்யோதயம் எழுதியது கண்டுவியந்தனர்.

 கிருஷ்ணமிச்ரர் தோற்று போனதைக் கேள்வியுற்ற, டிண்டிமர் என்ற மற்றுமொரு பண்டிதர் நம் ஸ்வாமியுடன் வாதிட வந்தார்.  அதுமட்டு மல்ல நான் ஒரு மஹா பண்டிதன் பல ராஜசபைகளிலுள்ள பல பண்டி தர்களை வென்றிருப்பவன் அப்படியிருக்க  ஒரு சிறுவன் தன்னைப் பண்டிதன் என்று இங்கு கூறிக்கொண்டு இருக்கிறானாமே.  அவன் தைரியமிருந்தால் என்னுடன் வாதத்திற்கு வரட்டும் என்று கோஷ மிட்டுக் கொண்டே வந்தார்.   ஆனால் நம் ஸ்வாமியோ இவன் கோஷத்தைக்கண்டு பயப்படவேண்டாம்.  உள்ளே புகுந்து பார்த்தால் ஒரு எழுத்தும் கிடைக்காது.  அது அவர் பெயரிலிருந்தே தெரிகிறது.                      “ டிண்டிரம் “என்றால் கடல் நுரை.  கடல் நுரையைத்தொட்டாலே உடைந்துவிடும்.  டிண்டிரத்திற்கும், டிண்டிமனுக்கும் என்ன பேதம் இருக்கப்போகிறது என்று பொருள்பட “ நிரக்ஷர்ருக்ஷி “ என்று பொருள்படும் ஸ்லோகத்தைச் செய்து பதிலாகத்தந்தார்.  பிறகு இருவருக்கும் வாதம் நடந்தது.  டிண்டிமர் தோற்றார்.  பிறகு அவர் தாம் செய்த “ ராகவாப்யுதம் “ என்ற காவ்யத்தை நம் ஸ்வாமிகளிடம் தந்து கடாக்ஷிக்க வேண்டினார்.  அதனைக் கடாக்ஷித்த ஸ்வாமிகளும், “ யாதவாப்யுதம் “ அருளினார்.  ஸ்வாமிகளின் கவிதா சாமரத்தியத்தை டிண்டிமர் கண்டு வாய்பிளந்தார்.

 பிறகு ஸ்வாமிகள் தென்தேஸத்திலுள்ள திருமாலிருஞ்சோலை,திருக்கோட்டியூர் முதலிய திவ்யதேஸங்களுக்கு எழுந்தருளி பின்பு ஸ்ரீவில்லிபுத்தூர் வந்துசேர்ந்தார்.

 அங்கு பெரியாழ்வார், ரங்கமன்னார், ஆண்டாள் எல்லோரையும் மங்களாசாஸனம் செய்தவர் “ கோதாஸ்துதி “ யும் அருளிச்செய்தார். அங்கிருந்து ஆழ்வார் திருநகரி எழுந்தருளி ஆழ்வாரை தரிசித்த பின்னர் திருவரங்கம் திரும்பி அங்கிருந்து பெருமாள் கோயிலுக்கு வந்து சேர்ந்தார்.

 சில அஸூயை பிடித்தவர்கள் பேச்சைக்கேட்டு, ஒரு பாம்பாட்டி நம் ஸ்வாமிகளிடம் வந்தான்.  மந்த்ரத்தால் என்னை ஜெயித்தால், நீர் ஸர்வதந்த்ர ஸ்வந்த்ரர் என்ற பட்டத்தை வைத்துக் கொள்ளலாம்.

இல்லாவிடில் அதனை விட்டு விடவேண்டுமென்று அட்டகாசம் செய்-தான்.  தமக்கு சமமில்லாத அவனுடன் அவர் பேச மறுத்தார்.  ஆனால் சிஷ்யர்களின் வேண்டு கோளுக்கு இணங்கி, அவனை ஜெயிக்க திருவுள்ளம் கொண்டார்.  கீழே ஏழு கோடுகளை இட்டு அதன் மீது தாம் உட் கார்ந்து கொண்டார்.  பாம்பாட்டி ஒரு கொடிய நாகத்தை அவர்மீது ஏவினான்.  அந்த நாகத்தால் முதல் கோட்டைக்கூட தாண்ட முடிய வில்லை.  பின்பு அதைவிட கொடிய நாகத்தை ஏவினான்.  அதுவோ முதல் இரண்டு கோடுகளைத் தாண் டியவுடன் சுருண்டது.  கடைசீயில் அவன் கோபத்துடன் “ சங்க பாலன் “ என்ற பெரிய விஷப் பாம்பை ஏவினான்.  அது ஏழுகோடுகளையும் தாண்டி சீறிபாய்ந்தது.  ஸ்வாமி,   “ கருடதண்டக” த்தை அருளி வைநதேயனை ஸ்தோத்ரம் செய்திட என்னே ஆச்சரயம்! எல்லோர் கண் முன்பு, வானத்திலி ருந்து பறந்து வந்த ஒரு கருடன் சங்க பாலனைக் கவ்விச் சென்றது.  பாம்பாட்டி தன் தலையைத் தாழ்த்தி வணங்கித் தவற்றிர்க்கு மன்னிப்புக்கோறி தன் சங்க பாலனை மீட்டுத்தரும்படி வேண்டினான்.  ஸ்வாமிகளும் அவன் நிலையைக் கண்டு பரிதாபப் பட்டுகருடபஞ்சாசத் “ அருளி கருத்மானை ப்ரார்த் திக்க அவரும் சங்க பாலனை திருப்பித்தந்தார்.  இதனை சுற்றி யிருந்து பார்த்த அனைவரும் வியந்து, மகிழ்ந்தனர்  .

 வேங்கடநாதனுக்கு திவஹீந்த்ரபரத்தில் வாசம் செய்யவேண்டுமென்ற அவா எழவே, காஞ்சீபுரத்திலிருந்து புறப்பட்டார்.  திருக்கோயிலூர் சமீபம் வந்தவருக்கு, தளிகைசெய்து பெருமாளுக்கு திருவாராதனம் செய்ய வழியில்லாமல் போகவே ஹயக்ரீவருக்கு, தீர்த்தத்தை மட்டுமே ஸமர்பித்து, அதை தாமும் ஸ்வீகரித்துக்கொண்டார்.  அன்று இரவு ஒரு வைச்யன் வீட்டுத்திண்ணையில் படுத்துக் கொண்டார்.  ஆகாரம் ஏதும் உட்கொள்ளாததாலும், வெகுதூரம் நடந்துவந்த களைப்பாலும் நன்றாக உறங்கிப்போனார். அப்போது என்னே ஆச்சர்யம் ஒரு வெள்ளைக் குதிரை வைச்யன் வீட்டுத்திண்ணையில் அடுக்கி வைத்திருந்த கடலைமூட்டை யிருந்த கடலைகளை தின்ன ஆரம்பித்தது.  சபதம் கேட்டு வெளியே வந்த வைச்யன் எவ்வளவு விரட்டியும் அந்தக் குதிரை சிறிதும் நகரவில்லை.  அவன் உறங்கிக்கொண்டிருந்த ஸ்வாமி களை எழுப்பி, “ ஐயா, உங்கள் குதி ரையை பிடித் துக் கட்டு ங்கள்.  அது கடலை முழு வதையும் தின்றுவிடப் போகிறது.” என்றான்.  இதைக்கேட்ட ஸ்வாமிகள், ஆச்சர்யத்துடன், “ உங்கள் வீட்டில் பால் இருந்தால் கொண்டு வாருங்கள் “ என்றதும், அவனும் கொண்டு வந்தான்.

 அதை ஸ்வாமிகள் ஹயக்ரீவருக்கு, நைவேத்யம் செய்து, பகவானுக்கு நிவேதனம் செய்ததைத் தானும்பருகி அதை அந்த வெள்ளைக்குதிரைக்கும் கொடுத்தார்.  அதை பருகிவிட்டு பின் அது மாயமாய் மறைந்து போனது.  அதனைக்கண்கூடாகக் கண்ட வைச்யன் மிகவும் சந்தோஷப்பட்டு, தாம் பெரும்பாக்யம் செய்திருப் பதாகவும் கூறி, ஆராதன த்திற்கு வேண்டிய த்ரவ்யங்களையும் ஸ்வாமி களிடம் தந்து அவரை வழியனுப்பி வைத்தான்.

 பிறகு, திருக்கோயிலூர் வழியாக திருவஹீந்த்ரபுரம் சென்றடைந்தார்.  அங்கு சிஷ்யர்களுக்கு,வேதாந்த க்ரந்தங்களை உபதேஸித்துக் கொண்டிருந்தார்.  அப்போது சில துஷ் டர்கள், ஒரு கொத்த னாருக்கு பணம் கொடுத்து, அவனை ஸ்வாமிகளை வம் பிற்கு அழைக்கச் செய்தனர்.  அவனும் ஸ்வாமிகளிடம் சென்று, “ நீரே ஒரு கிணற்றை வெட்டிக்கட்டி னால் தான் உம்மை ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரர் என்று ஏற்றுக் கொள்ளமுடியும். ஸர் வமும் தங்களுக்குத் தெரிந்தி ருக்க வேண்டாமா ? “ என்றதும் ஸ்வாமிகளும், ஹயக்ரீவனுக்கு ஒரு கிணறு வெட்ட சம்மதித்து, அந்தக் கொத்தனார் கொடுத்தக் கற்களைக்கொண்டே அழகிய தோர் கிணறு வெட்டினார். அந்த கொத்தனாரும் வெட்கித் தலைகவிழ்ந்தார்.

பிறகு ஸ்வாமிகள்வீரநாராயணபுரம், திருவாலி முதலிய தலங்களுக்கு எழுந்தருளி நாதமுனிகளையும், திருமங்கை ஆழ்வாரையும் சேவித்துக்கொண்டு ஸ்ரீரங்கம் எழுந்தருளினார்.

 குறைந்த ஞானமேயுள்ள சில ஸாதுக்கள், நாங்களும் அறியும் வண்ணம் சில க்ரந்தங் களை அருளிச்செய்ய வேண்டும் என்று கேட்க, ஸ்வாமிக ளும் அதற்கு சம்மதித்தார்.  புருஷார்த்தத்தை அடைய உபாயம் வேண்டும், உபாயத்தையறிய ததத்வம் தெரியவேண்டும், தத்வஞானம் உண்டாக ஒருஸதாச்சார்யன் வேண்டும்.  ஸதாச்சார்யனுக்கு ஸம்ப்ரதாய சுத்தி வேண்டும் என்று திருவுள்ளம் கொண்டு முதன்முதலில், ஸம்ப்ரதாய பரிசுத்தி என்னும் ரஹஸ்ய க்ரந்தத்தை அருளிச்செய்தார்.

 பின்பு தத்வபதவீ, ரஹஸ்யபதவீ, தத்வநவநீதம், ரஹஸ்யநவநீதம், தத்வமாத்ருகை, ரஹஸ்ய மாத்ருகை, தத்வரத்னாவளீ, ரஹஸ்யரத்னாவளீ, ரஹஸ்ய ரத்னாவளீஹ்ருதயம், தத்வத்ரயசுளகம், ஸாரஸங்க்ஷேபம், ஸாரஸாரம், அபயப்ரதானஸாரம், தத்வசிகாமணி, ரஹஸ்யசிகாமணி, அஞ்சலி வைபவம், ப்ரதான ஸதகம், உபகாரஸங்க்ரஹம், ஸாரஸங்க்ரஹம், பரமபதஸோபானம், ஆகிய ரஹஸ்ய க்ரந்தங்களை அருளிச்செய்து அவர்களுக்கு உபதேஸித்தார்.

 ஸ்வாமிதேசிகன் திருவடிகளில் முதன்முதலில் ஆச்ரயித்த வீரவல்லி பெருமாளைய்யன் என்பவர் விரக்தராய் தாம் ஸந்யாஸம் பெற்று கொள்ள விரும்பினார்.  ஸ்வாமியும் சம்மதித்தாயிற்று.  அவருக்கு பேரருளாள ஜீயர் என்று நாமம் சூட்டப்பட்டது.  அதுபோன்றே வீரவல்லி கிருஷ்ணமாச்சாரிக்கு வெண்ணைக்கூத்த ஜீயர் என்றும், கோமாண் டூரப்பனுக்கு ப்ரபாகரஜீயர் என்ற திருநாமங்களும் சூட்டப்பட்டது.

சீரொன்று தூப்புல் திருவேங்கட முடையான்
பாரொன்றுச் சொன்ன பழமொழியுள் – ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு.

இந்த பாசுரமே இப்போது ரஹஸ்ய க்ரந்த காலக்ஷேபங்களின்போது, தனியனாக அனுஸந்தானம் செய்யப்படுவது வழக்கத்திலுள்ளது.

 கர்மாவலம்பகா : கேசித், கேசித், ஜ்ஞாநாவலம்பாகா :  Iவயம்து ஹரிதாஸானாம் பாதரக்ஷாவல்பாகா :  II

 “ சிலர் கர்மயோகத்தை, சிலர் ஞானயோகத்தை அநுஷ்டிப்பவர்கள்.  நாம் விஷ்ணுபக்தர்களின் பாதரக்ஷைகளை அவலம்பிப்பவர்கள்.”என்று கூறியபடி, ஸ்வாமிகள் முகமலர்ச்சியுடன் வீற்றிருந்தார் தம் வீட்டுவாசலில்.  ஸ்வாமிகளின் ஆத்ம குணத்தைக்கண்ட அந்த அஸூயை கொண்டவர்கள் வெட்கித்தலை கவிழ்ந்தனர்.

பின்பு ஒருநாள் அநந்தஸூரிகளின் ச்ரார்தம் வந்தது.  அதற்கு மூன்று ஸ்வாமிகளை முன்னமே ப்ரார்த்தித்து இருந்தார்.  ஆனால் சில பொறாமை பிடித்தவர்கள் ச்ரார்த தினத்தன்று காலை அந்த மூவருக்கும் நிறம்ப பணம் தந்து, ஸ்வாமிகள் இல்லத்திற்குச்செல்லாமல் தடுக்க முயன்றனர்.  ஆனால் அந்த மூவரும் அவர்கள் பேச்சைக்கேளாமல் போனதால் அவர்கள் மீது ஒரு மந்தரப் பொடியைத் தூவி அவர்கள் புத்தியை பேதலிக்கச்செய்து அவர்களை ஆகாரம் உட்கொள்ள வைத் தனர்.  மேலும் பேரருளாள ஜீயர் முதலானவர்களுக்கும் சரீரத்தில் வியாதி உண்டாகும்படி செய்து அவர்களையும் ஸ்வாமிகள் இல்லத் திற்கு போகமுடியாமல் தடுத்ததுடன் தள்ளியிருந்து நடப்பதை வேடி க்கைப்பார்க்க காத்திருந்தனர்.  ஸ்வாமிகளும் எதா காலத்தில் தீர்த்தா மாடி, திருவாராதனங்களை செய்துவிட்டு, ச்ரார்தத்தை ஆரம்பித்தார்.  ஹோமங்களைச்செய்து கூர்ச்சத்தில் தேவ, பித்ரு, விஷ்ணுவை ஆவா ஹனம் செய்து வரித்து ச்ரார்தத்தை செய்து கொண்டிருந்தார்.

பின்பு இலையில் பகவத் நிவேதனம் செய்யப்பட்ட அன்னம், பக்ஷ்யங்கள் ஆகியவற்றை பரிமாறினார். விஷ்ணு ஸூக்திகளை ஜபிக்க ஆரம்பித்தார்.  என்னே ஆச்சர்யம் ! சில நிமிடங்களில் இலையில் பரிமாற பட்டவை யாவும் மிச்சமின்றி உண்ணப்பட்டு இருந்தது.  கடைசீயில் “ ஸகலம் ஸம்பூர்ணம் “ என்ற ஒலிகேட்டது.  உத்வாஸநாதிகளைச் செய்ததும் மூன்று ஸ்வாமிகள் அஸூயை கொண்டவர்கள் முன்பாக தாம்பூலம் போட்டுக்கொண்டபடிச் சென்றனர்.  ஸ்வாமிகள் பிண்டதாநாதிகளை செய்து ச்ரார்தத்தை பூர்த்தி செய்தார்.  அந்த அஸூயைப் பிடித்தவர்கள், ஸ்வாமிகளிடம் வந்து, “ இன்று ச்ரார்தத்தில் அந்வயித்த வர்கள் யார் என்று கேட்க “,“ கோயில், திருமலை, பெருமாள்கோயில் எம்பெருமான்கள் “ என்று பதிலளித்தனர்.  இதனைக்கேட்டு பயந்த அவர்கள் ஸ்வாமிகளின் பாதத்தில் வீழ்ந்து மன்னிப்பு கோறினர்.

அன்று ஏகாதசி தினம்.  சில கெட்டவர்களின் பேச்சைக்கேட்டு அர்ச்சகர் ஒருவர், ஸ்வாமி பெரிய பெருமாளை மங்களா சாஸனம் பண்ணியதும், அவரிடம் வெண் பொங்கலைக் கொடுத்து, இதை உண்ண வேண்டும்.  “ இது பகவானின் நியமனம் “. என்று கூற, அதைப்பெற்றுக் கொண்ட ஸ்வாமி “ ச்ருதி, ஸ்ம்ருதிகள் எமது ஆஜ்ஞை.  அவற்றில் கூறியபடி நடக்கவேண்டும்.  அவ்விதம் நடக்காதவன் த்ரோகி.  அவன் என் பக்தனானாலும், வைஷ்ணவனல்லன் என்று முன்பு நீரே கூறியிருக்கிறீர்  ப்ரபோ ரங்கநாதா, இப்போது .அதற்கு எதிராக சாப்பிடும்படி நியமித்தது சரியா? “.என்று கேட்டதும் பெரியபெருமாள், வேறொரு அர்ச்கர்மீது ஆவேசித்து, “ நாம் அதுபோல் நியமிக்கவில்லை “. என்று சொல்லசிறிய லாபத்திற்காக தாம் அபசாரப் பட்டதற்கு  மன்னிக்கவேண்டுமென்று மண்டியிட்டார் பொங்கல் கொடுத்த அர்ச்சகர்.

வேறொரு சமயம்,ஒரு கவிதா சாதுர்ய முடையவர், ஸ்ரீரங்கநாதன் முன்பு ஸ்வாமிகளைப்பார்த்து, “ ஓர் இரவில் ஓராயிரம் ச்லோகங்களை செய்பவரே கவிதார்கிக ஸிம்ஹம் என்ற விருதிற்கு தகுதியுள்ளவர்.  நான் ஸ்ரீரங்கநாதன் விஷயமாக பதகமல ஸஹஸ்ரம் எழுதப் போகி றேன்.“ என்று சொல்லி போட்டிக்கு அழைத்தார்.  நம் ஸ்வாமிகளும் பாதுகா ஸஹஸ்ரத்தை எழுதுவதாக ஒப்புக்கொண்டார்.  இரண்டாவது ஜாமத்திலேயே 1008 ச்லோகங்களைக்கொண்ட ஸ்ரீபாதுகா ஸஹஸ்ர த்தை எழுதி முடித்தார்.  மூன்றாவது ஜாமத்தில் யோகத்திற்கு எழுந்த ருளினார்.  நான்கவது ஜாமத்தில் வழக்கப்படி எழுந்து, நித்ய கர்மாக் களைச் செய்ய ஆரம்பித்தார்.  அநுஷ்டானங்களை முடித்துக்கொண்டு கோயிலுக்குச் சென்று ஸ்ரீபாதுகா ஸஹஸ்ரத்தை பெருமாள் திருவடி களில் சமர்பித்தார்.  பதகமல ஸஹஸ்ரத்தை செய்வதாக வாக்களித் தவர் 300 ச்லோகங்களே தாம் செய்திருப்பதாகச்சொல்லி தலை கவிழ்ந்தார்.  அப்போது ஸ்வாமி,

ஸுதே ஸுகரயுவதி :ஸுதஸமதமபி அத்யந்த துர்ப்பகம் ஜடிதி

கரீணி சிராய ஸுதே ஸகலமஹீ பாலலாலிதம் கலபகம்  I I

“ பன்றி நூற்றுக்கணக்கான கன்றுகளை ஈன்றெடுக்கின்றது.  எல்லா அரசர்களாலும் கொண்டாடப்படும் குட்டியை யானை, பன்னிரண்டு ஆண்டுகளன்றோ கர்பத்தில் வைத்திருந்து பெற்றெடுக்கின்றது.” என்று பொருள்பட அருளினார்.

ஆபாதசூடம் அநபர்யிரு தர்ஸநே அஸ்மிந்

ஆசாஸநீயமபரம் ந விபக்ஷ ஹே தோ :  I

ஆபாத சாந்தி மதுராந் புநரஸ்மதீயாந்

அந்யோந்ய வைரஜநநீ விஜஹாத்வஸுயா I I

ராமாநுஜதர்சனம் அடிமுதல் நுனிவரை தோஷமில்லாதது.  மற்றவர்களு க்குச் சொல்ல வேண்டிய சமாதானம் இனி ஒன்றுமில்லை. சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லியாயிற்று.  மிகவும் சாந்தரகளான நமக்குள் விரோதத்தை உண்டுபண்ணும் அஸூயை நம்மை விட்டு விலகட்டும். என்று விண்ணப்பித்துக் கொண்டார்.  மேலும் பல க்ரந்தங்களை அருளிச்செய்தார்.

நம்மாழ்வார் நியமனப்படி த்ரமிடோபநிஷத்ஸாரம், த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி, நிகமப்பரிமளம், ஆகிய க்ரந்தங்களை அருளிச் செய்தார்.  அமலநாதிபிரான் பாசுரங்களுக்கு, முநிவாஹன போகத்தை யும்; கண்ணிநுண் சிறுதாம்பு பாசுரங்களுக்கு, மதுரகவிஹ்ருதயம்; என் பனவற்றையும் அருளிச்செய்தார்.  திருமந்த்ர சுருக்கு, த்வயச்ருக்கு, சர்மஸ்லோக ச்ருக்கு கீதார்த்த ஸங்க்ரஹ ச்ருக்கு, ஆகார நியமம் முதலியவற்றையும் செய்தார்.

இவருடைய பெருமை வட மாநிலங்களிலும் பரவ, ஸ்ரீஸ்வாமிகளின் திருவடிகளில் பக்தி கொண்ட மாதவனுடைய பிள்ளை, ஸர்வஜ்ஞ சிங் கப்ப நாயக்கர் சில வைஷ்ணவர்களை ஸ்ரீரங்கத்திற்கு அனுப்பித் தமக்கு நல்லுபதேஸம் செய்தருள வேண்டுமென்று ப்ரார்த்திக்க, ஸ்வாமிகளும் “ ஸ்வாதீந த்ரிவித சேதநாசேத ஸ்வரூபஸ்திதி ப்வர்த்தி பேதம் “ என்று ஆளவந்தாரும், எம்பெருமானாரும் அருளிச்செய்த வாக்யங்களின் விரிவாக, தத்வ ஸந்தேஸத்தை அருளிச்செய்தார்.  மேலும் ரஹஸ்ய ஸந்தேசவிவரணம், ஸுபாஷிதநீவி, இவற்றை அருளிச்செய்து கொடுத்த னுப்பினார்.  அவ்வரசன் ஸ்வாமிகளின் ஸ்ரீமுகத்தை எல்லா மரியாதை களுடன் எதிர்கொண்டு வந்து ஏற்று அவற்றை சேவித்து ஸ்வாமியின் நியமனப்படி சரணாகதியை செய்துகொண்டு ஸ்வாமிகளின் திருவடி களில் அசஞ்சலமான பக்தி கொண்டவனாக வாழ்ந்து வந்தான்.

ஸ்ரீஸ்வாமி தேசிகனுக்கு, பல ஆண்டுகளாக குழந்தையே இல்லாமல் இருந்தது. பேரருளாளன் அநுக்ரஹத்தால் நளவருஷம், ஆவணி மாதம், ரோஹிணி நக்ஷத்ரத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.  அந்தக் குழந்தை க்கு, ஜாதகர்மா செய்து வைக்கப் பட்டு  “ வரதன் “ என்ற நாமம் சூட்டப் பட்டது.  குமாரன் வரதாச்சாரிக்கு, அக்ஷராப்யாஸம் செய்து, எல்லா சாஸ்த்ரார்கங்களையும், மந்த்ரார்த்தங்களையும் தாமே உபதேஸித்தார். புலிக்குப் பிறந்தது பூனையாகுமா ? அவர் குமாரரும், அதிமேதாவியாக விளங்கினார்.  மகனுக்கு விபவ ஆண்டு ஸ்ரீபாஷ்ய க்ரந்தத்தை உபதேஸி த்தார்.  அப்போது குமாரர் வரதாச்சாரியார்,

ஸ்ரீமாந் வேங்க நாதார்ய :  கவிதார்க்கிக கேஸரீ  I

வேதாந்தாத்சார்ய வர்யோமே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி  I I

என்ற தனியனை விண்ணப்பித்து சேவித்தார்.  அப்போது அருகிலிருந்த ஸுதர்ஸனபட்டர் மற்றுமுள்ளவர்களும் அதனைக் கேட்டு மகிழ்ச்சியுற்ற னர். இனி இந்த தனியனையே உச்சரிக்க வேண்டுமென்றும் ஒருமனதாகத் தீர்மானித்தனர்.  ஆனால் அதுநாள்வரை ஸ்வாமியின் ப்ரதான சீடரான வீரவல்லி பெருமாளய்யன் அருளிய :

நம : பதம் இதம்பூயாத் தஸ்மை வேங்கட ஸூரயே I

யத்வாகம் க்ருதஸேகேந ஸஞ்சீவித மிதம் ஜகத் I I

என்ற தனியனையே பயன் படுத்தி வந்தனர் என்பது இங்கு குறிப்பிட வேண் டிய ஒன்று.  எங்கனம் எம்பெருமானாரின் ஜ்ஞான புத்ரனான  திருக் குரு கைப் பிள்ளானிடம் கூரத்தாழ்வார் போன்றவர்கள் பக்தியுள்ள வர்களாக இருந்தார்களோ, அதுபோன்றே பேரருளாள ஜீயர் போன்றவர்கள் ஸ்வாமி களின் குமாரரிடம் மிகுந்த பக்தி செலுத்தி வந்தார்கள்.

ஒரு சமயம் கந்தாடை லக்ஷ்மணாச்சார்யர் என்பவர் பல்லக்கில் ஸ்வா மிகள் வஸிக்கும் வீதி வழியாக வந்துகொண்டு இருந்தார்.  அவர் ஒரு ஆச்சார்ய புருஷர்.    அப்போது ஸ்வாமிகள் தம் வீட்டுத்திண்ணையில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தார்.  அவர் தாம் படித்துக்கொண்டிருந்த க்ரந்தத்தில் லயித்திருந்ததால், வீதியில் என்ன நடக்கின்றது என்பதை அறியவில்லை,  இதனைக்கண்ட லக்ஷ்மணாச்சார்யரின் சீடன் ஒருவன் ஷ்வாமிகளிடம் ஓடிவந்து, “  எங்கள் ஆச்சார்யர் வீதியில் பல்லக்கில் எழுந்தருளும் போது உட்கார்ந்திருக்கின்றீரே ? உமக்கு கண்ணில்லையா ?“ என்று சொல்லிவிட்டு அவர் கால்களைப்பிடித்திழுத்து, கீழே தள்ளிவிட்டு சென்றான்.  ஸ்வாமிகள் மிக சிரப்பட்டு எழுந்திருந்து, லக்ஷ்மணாச்சார்யர் இருக்குமிடம் வந்து தம்மை மன்னிக்கும் படி கைகூப்பி வணங்கி விட்டு மீண்டும் தம் வீட்டுக்குத்திரும்பினார்.  அன்றே ஸ்ரீரங்கத்தைவிட்டுத் தம் குடும் பத்தினருடன், திருநாராயணபுரம் புறப்பட்டார்.

வழியில் சத்யாகாலத்தில் காவேரியில் தீர்த்தாமாடி விட்டு, காவேரிக்கரையிலுள்ள வரதராஜ பெருமாள் சந்நிதியில் வஸிக்க ஆரம்பித்தார்.

தம் சிஷ்யர்கள் அபசாரப்பட்டதால், ஸ்வாமி ஸ்ரீரங்க த்தை விட்டே புறப்பட்டுச் சென்றுவிட்டார் என்பதை லக்ஷ்மணாச்சார்யர் அறியமாட்டார்.  அவர் உடலில்      “ வைவர்ணம் “என்ற வியாதியின் கொடுமை அதிகமாக இருந்தது.  தம் சக்தியை இழந்தார்.  அவருக்கு புத்ரபாக்யமும் கிடையாது.  அகாலத்தில் தமக்கு மரணம் நேர்ந்துவிடுமோ என்று பயந்தார்.  அவர் மனைவி, தம் கணவனிடம்,  “ உம் உடம்பில் வைவர்ணம் வர ஏதாவது பாகவத அபச்சாரம் நேரிட்டதா ? ” என்று கேட்டவுடன், அவர்   “ யாம்  புத்தி பூர்வமாக ஏதும் செய்யவில்லை.“ என்று சொன்னவர், “சிஷ்ய பாபம் குரோபி” என்று இருப்பதால், சிஷ்யர்களில் எவராவது அபச்சாரம் செய்திருப் பார்களோ என்ற சந்தேஹத்தில் அவர்களைக் கூப்பிட்டுக் கேட்டபோது, ஒருவன் “ நம் ஆச்சார்யர் வீதியில் வரும்போது எழுந்திருந்து மறியாதை செய்யாது புத்தகம் படித்துக்கொண்டிருந்த வேதாந்த தேசிகரை கீழே தள்ளி னோம்.  அவர் அன்றே இந்த ஊரைவிட்டு போய்விட்டார் “ என்றான்.

இதனைக் கேட்டதும் தம்பதிகள் மூர்ச்சை அடைந்தனர்.  பிறகு அவர்களே தெளிந்து  எழுந்து, “ பீடாகரன் என்று பெயர் கொண்ட உனக்கு பொருத்த மானதே “ என்று அந்த சிஷ்யனைக் கடிந்துகொண்டு, ஸ்வாமிகள் இருக்கு மிடம் அறிந்து உடனே புறப்பட்டு சத்யமங்கலம் சென்று ஸ்வாமிகளை தண்டம் சமர்பித்து நின்றனர்.   தேசிகன், “ இங்கு எதற்காக வந்தீர்கள்? தேவரீர் திருமேனியில் வைவர்ணம் வரக்காரணமென்ன?” என்று கேட்டதும் லக்ஷ்மணாச்சார் வருத்தத்துடன், “ என் சிஷ்யர்களில் ஒருவன் உம்மிடம் பட்ட அபச்சாரத்திற்கு, கிடைத்த தண்டனை இது. அடியேனை மன்னித் தருள வேண்டும்.  மேலும் ஒருவருடகாலம் உம் ஸ்ரீபாத தீர்த்தத்தை ஸ்வீகரிக்க நிச்சயித்துள்ளோம். “ என்று கூறி அதுபோன்றே வாழ்ந்துவர, அவர் வ்யாதி குணமாயிற்று.  லக்ஷ்மணாச்சார்யர் மனைவியும் கர்ப முற்றார்.  ஒருவருஷம் கழிந்ததும், ஸ்வாமிகளை மீண்டும் ஸ்ரீரங்கத்திற்கே வரவேண்டுமென ப்ரார்த்தித்துவிட்டு அவர்கள் ஸ்ரீரங்கம் திரும்பிச் சென் றனர்.  சிலமாதங்கள் கழித்து அந்த தம்பதிகளுக்கு, ஸ்வாமிகளின் ஸ்ரீபாத தீர்த்த மகிமையால் ஒரு ஆண்குழந்தை பிறந்தது.  அதற்கு தீர்த்த பிள்ளை என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.  தம்தகப்பனாரின் பெயருடன் ஸ்வாமி களின் திருப்பெயரையும் சேர்த்து, “ ஆயிஆழ்வான்பிள்ளை “ என்ற பெயரும் சூட்டினர்.

சத்யமங்கலத்திலிருந்த ஸ்வாமிகளுக்கு, ஒருநாள் ரங்கநாதனை சேவிக்க வேண்டுமென்ற எண்ணம் எழவே தம் குமாரரையும், மனைவியையும் சத்ய மங்கலத்திலேயே விட்டுவிட்டு, பேரருளாள ஜீயர் முதலானவர்களுடன் திருவரங்கம் திரும்பினார்.  வெகுநாட்கள் விட்டு பிரிந்த தாபம் தீர,பெரு மாளை சேவித்து மகிழ்ந்தார்.  அங்கு தங்கியிருந்தபோது, ஒரு வித்வான் தேசிகனிடம் வந்து, வேதாந்த வாக்யார்த்தம் சொல்ல வந்திருப்பதாகச் சொன்னார்.  ஸ்வாமிகள் பேரருளாள ஜீயரை அழைத்து நீர் அவரிடம் வேதாந்த வாக்யார்த்தம் சொல்லவும் என பணித்தார்.

அதன்படியே மஹாவித்வானிடம் சததூஷணி முதலிய க்ரந்தங்களைக் கொண்டு வாதம் செய்து மூன்று நாட்களில் அவரை வென்றார்.  ஸ்வாமிகளிடம் வந்து தண்டம் சமர்பித்துத் தாம் வாதம் செய்த விதத்தை விவரித்தார்.  அதனைக்கேட்ட ஸ்வாமிகள், “ நீர் ப்ரஹ்மதந்த்ர ஸ்வதந்த்ரர் “ என்றார்.அதுமுதல் பேரருளாளஜீயர் அங்கனமே அழைக்கப்பட்டார்.

அந்தசமயம், அந்த தேஸத்தில் துருக்கர்களுடைய உபத்ரவம் அதிகமாக இருந்தது.  அதனால் கோயில் அதிகாரிகள் பெரிய பெருமாள் முன்பாக ஒரு கல்திரையை எழுப்பி ஏதோ ஒரு விக்ரஹத்தை முன்பாக வைத்துவிட்டு, அழகியமணவாளப் பெரு மாளையும், நாச்சிமார்களையும் திருவேங்கடத்தில் எழுந்தருளப் பண் ணினர்.  துருக்கர்சேனை அங்குள்ள ஸ்ரீவைஷ்ணவர்களை ஹிம்ஸித்து வந்தது.  அப்போது ஸுதர்ஸனபட்டர் தேசிகனிடம், ஸ்ருத ப்ரகாசி யைக்கொடுத்து, “ இதை சோதித்தருள வேண்டும்.  அது உம்மாலேயே ப்ரவசனம் பண்ணி ப்ரசுரமாக வேண்டும் “ என்று சொல்லிக்கொடுத்துவிட்டு, தம் இரு குமாரர்களையும் அவரிடம் ஒப்படைத்து  “ இவர்களையும் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் “ என்று கூறிவிட்டு பெருமாள் பின்னேயே சென்றார்.  அப்போது துருக் கர்கள் ஸுதர்ஸனபட்டரைக் கொன்று விட்டா ர்கள்.  ஸ்ரீதேசிகன் ஸ்ருதப்ரகாசி கையைப் பூமியில் புதைத்து விட்டு, தாம் அந்த இரு குழந்தைகளுடன் பிணக்குவியல் மத்தியில் அந்த இரவெல்லாம் படுத்திருந்து, பிறகு அந்தக்ரந்தங்களையும் எடுத்துக்கொண்டு இரு குழந்தைகளுடன் ஸத்யமங்கலம் போய்ச்சேர்ந்தார். பிறகு அவர் ஸ்ருத ப்ரகாசி கையை, தம் சிஷ்யர்களுக்கு உபதேஸித்து வந்தார்.  ஸுதர்ஸனபட்டர் குமாரர்களுக்கும் உபநயாதி களைச் செய்து வைத்து அவர்களுக்கும் உபதேஸம் செய்துவைத்தார்.

ஒருசமயம் தம் குடும்த்தினருடனும், சிஷ்யரகளுடனும் திருநாராயண புரம் சென்றார்.  அங்கு செல்வபிள்ளை, யதுகிரிதாயார், ராமாநுஜர்ஆகியோரை மங்களாசாஸனம் செய்து மகிழ்ந்தார்.

அப்போது திருநாராயணப்பெருமாள் அர்ச்சகர் முகமாக, “ உமக்குப் பிறகு உமதுமகன் வரதாச் சாரியார் ராமாநுஜ சித்தாந்தத்தை பரப்பக்கடவது. “ என்று சொல்ல ஸ்வாமிகள் மிகவும் மகிழ்ச்சி யடைந்தார்.  அங்கேயே சிலகாலம் தங்கி யிருந்தார்.  குமாரவரதாச் சாரியாரும், திருநாரா யண புரத்திலேயேபகவத்விஷய காலக்ஷேப ங்களை செய்ய ஆரம்பித்தார்.  ப்ரஹ்மதந்த்ர ஸ்வதந்த்ர ஜீயர் மற்றும் வெண்ணைக்கூத்தஜீயர் முதலானவர்கள் குமாரரிடம் காலக்ஷேபம் கேட்க விழைய, அவர்களுக்கு பஹுதான்ய வருஷம், ஆவணிமாதம், ஹஸ்த நக்ஷத்ர தினத்தில் கவத் விஷய காலக்ஷேபத்தை ஆரம்பித்தார்.

அப்போதுப்ரஹ்மதந்த்ர ஸ்வதந்த்ரஜீயர் “ஸ்ரீமல்லக்ஷமணயோகீந்த்ர  “                                              என்ற தநியனையிட்டு ஆரம்பித்தார்.  பின்பு தேசிகன் விஷயமாக,  “ ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய:  “ என்ற தனியனை ஸ்ரீபாஷ்ய காலக்ஷேப ஆரம்பத்திலும்,  “ ராமாநுஜதயாபாத்ரம் “ என்ற தனியனை பகவத்விஷய காலக்ஷே ப ஆர ம்பத்தின்போதும் பயன்படுத்தும்படி நிய மித்தார்.  அவர் நியமனப்படியே இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.       பிறகு ஸ்வாமிகள்,  — நவநவபஹுபோகாம் நாத நாராயண த்வம் விரசய துரிதௌகைஸ்தாம் அநாக்ராதகந்தாம் … “ என்ற ஸ்லோகத்தை திருநாராயணன் விஷயமாக அருளிச்செய்து மங்களா சாஸனம் செய்து அங்கிருந்து சத்யமங்கலம் திரும்பினார்.

அழகிய மணவாளப்பெருமாளை இதுநாட்கள் விட்டுப்பிரிந்திருந்த, துக்கம் தாளாமல், “ அபீஸ்தவம் “ என்ற ஸ்தோத்ர த்தை அருளிச்செய்தார்.  இதனால் மகிழ்ச்சி யுற்ற ரங்கநாதன் மீண்டும் திருமலையிலி ருந்து ஸ்ரீரங்கம் வந்து சேர கோபண்ணராயன் என்ற குறுநில மன்னன் மூலம், அழகியமண வாளனை கொண்டுவரச்செய்து செஞ்சியில் சிலகாலம் ஆராதிக்கவைத்து, பிறகு ஸ்ரீரங்கம் கொண்டுவந்து சேர்க்கச்செய்தார்.

அழகிய மணவாளன் திரும்பிவந்த செய்திகேட்ட ஸ்வாமிகள் மிக சந்தோஷ மடைந்தார்.  தம் குடும்பத்தினருடன் மீண்டும் ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தார்.  அப்போது சித்ரகூடத்திலிருந்து ஒரு ஸ்ரீவைஷ்ணவர் வந்து, தில்லையில் பரஸ்பரம் சண்டை நடந்து கொண்டிருக்கின்றது என்று கூற, இப்போது அரசர்கள் அனுகூலமாக இருந்தால் மீண்டும் கோவிந்தராஜனை அங்கு ப்ரதிஷ்டை செய்யலாம் என்று விண்ணப்பித்தார்.

பிறகு அந்த செய்தியை கோபண்ணராய ருக்கு, தெரிவிக்க, அவரும் மீண்டும் கோவிந்தராஜனை தில்லையில் கொண்டு வந்து ப்ரதி ஷ்டை செய்தார்.  தேசிகனும் தில்லைக்குச்சென்று மங்களாசாஸனம் செய்து, கோபண்ணராயருக்கு, நன்றிகூறி விடையளித்துவிட்டு மீண்டும் திருவரங்கம் திரும்பினார்.  இதனால் தில்லையிலிருந்த சில சைவர்கள், ஸ்வாமிகளிடம் விரோதம் காட்டினார்கள்.  அவரை பேசவிடாமல் செய்யும் முயற்சியில் இறங்கினார்கள்.  ஸ்ரீரங்கம் வந்து, கோயில் அதிகாரிகளை தங்கள் கையில் போட்டுக்கொண்டு, அத்யயன உத்ஸவம் நடைபெற விடா மல் தடுத்தனர்.  மேலும் க்ஷுத்ர மந்திரத்தைப் பயன்படுத்தி ஸ்வாமி களைவாய்ப் பேசமுடியாமல் செய்தனர்.  இதனையறிந்த ஸ்வாமிகள், மானசீகமாக த்வய மந்த்ரத்தை ஜபித்து,  “ஸ்ரீமதேராமாநுஜாய நம: “ என்று சொல்ல வாய்பேசும் திறனை மீண்டும் பெற்றார்.  ஸ்வாமிகள் தம்முடைய மஹாமந்த்ர ஸித்தி ப்ரபாவத்தினால் எதிரிகளின் வாயைக்கட்டிப்போட்டார்.  பின்பு அவர்களிடம் வந்து மன்னிப்பு கோறி ப்ராணபிச்சை கேட்டனர்.  ஸ்வாமிகளும் அவர்களை மன்னித்து, அவர்களிடமிருந்து, க்ஷுத்ர மந்த் ரத்தை விலகச் செய்தார்.  கோயில் அதிகாரிகளும் ஸ்வாமிகளிடம் வந்து மன்னிப்புகேட்டு அத்யயன உத்ஸவம் நடைபெற ஏற்பாடு செய்தனர்.  பிறகு ஸ்வாமிகள் “  ஸாரதீபம் ”, “ விரோதபரிஹாரம் “ என்ற க்ரந்தங்களை அருளிச்செய்தார்.

ஆழ்வார்கள் அவதரித்த நாள், ஊர், திங்கள் முதலியவற்றை விவரிக்கும் ப்ரபந்தஸார த்தை எழுதினார்.  மாயாமதத்தைச்சேர்ந்த சில்பி ஒருவர் தங்கள் மதத்தை ஸத்தூஷணி முதலிய க்ரந்தங்கள் மூலம் தாக்கியதால் ஸ்வாமிகள்மீது கோபமுற்று, ஸ்வாமிகளை சில்ப சாஸ்த்ரத்தில் வென்றுவிடும் முயற்சியில் இறங்கினர்.  ” நீர் உண்மையில் ஸர்வந்தர ஸ்வந்த்ரர் எனறால் உம்ப்போலவே ஒரு விக்ரஹத்தை சில்ப லக்ஷண ங்களுடன் செய்து காட்டுங்கள் “ என்று கூற,தேசிகனும் சம்மதிக்க, அன்று இரவு, ஸ்ரீரங்கநாதன் கனவில் தோன்றி “ வலக்கையல் ஞான முத்திரையும், இடக்கையில் ஸ்ரீகோசமும் உடைய வீற்றிருக்கம் கோலத்தில் செய்யக் கடவது “ என்று அனுக்ரஹிக்க, ஸ்வாமிகளும் செய்து முடித்தார்.

சில்பிகள் அதனைக்கண்டு வியந்தனர்.  ஸ்வாமி அந்த சில்பியிடமே அதற்குத்தகுந்த பீடமும் செய்யச் சொல்ல அவரும் விக்ரஹத்திற்குத் தகுந்த பீடத்தைச் செய்து காட்டினார்.  அப்போது விக்ர ஹத்தின் கன்னப்பகுதியில் அதிகமாக இருப்பதாக எண்ணி உளியால் சீவினார்.  அப்போது விக்ர ஹத்திருமேனியிலிருந்து, இரத் தம் கசிய அதனைக்கண்ட சில்பி பயந்தே போனார்.  ஸ்வாமிகளின் பாதத்தைப் பணிந்தார்.  ஸ்வாமிகளும் அவரை சமாதானப்படுத்தி, பின்பு  “ சில்பார்த்த ஸாரம் “ என்ற நூலை எழுதினார்.   அப்போது ஸ்வாமிகளுக்கு, நூறு திருநக்ஷத்ரங்களுக்கு மேல் !

அளவற்ற பெருமைகளைக் கொண்ட நம் ஸ்வாமிகள் ஸௌம்ய வருஷம் ( 1370 )கார்த்திகை மாதம் பூர்ணிமையில் தம் திருவாராதனப்பெருமாள்  பேரருளாளனை யும் அப்பிள்ளார் அளித்திருந்த சுதர்ஸன, பாஞ்சஜன்ய முத்திரைகளை தம் திருக்குமாரரிடம் அளித்து ஆராதித்து வரும்படிக் கூறி, ஸ்ரீஹயக்ரீவரை, ப்ஹ்மதந்த்ர ஸ்வந்தர ஜீயரிடம் அளித்துவிட்டு நேராக வடக்கு திருவீதியிலுள்ள தம் இல்லத்தில் தமது திருமுடியை குமாரர் மடியிலும், ப்ரஹ்மதந்த்ரர் மடியில் பாதங்களையும் வைத்துக்கொண்டு அப்பிள்ளார் திருவடிகளை த்யானித்தபடியே திருநாட்டிற்கு எழுந்தருளினார்.

குமாரர் வரதாச்சாரியார் –கவிதார்கிக ஸிம்ஹாய கல்யாணுண ஸாலிநே Iஸ்ரீமதே வேங்கடேஸாய வாந்தகுர்ரவே நம :  IIஎன்ற ஸ்லோகத்தை அருளிச்செய்து அவர் சர்மதிருமேனியை சேவித்து பின்பு சர்ம கைங்கர்யங்களை நன்கு நடத்தி முடித்தார்.  பின்பு ஸ்ரீரங்கநாச்சியார் நியமனப்படி அந்த ஸந்நிதியிலேயே ஸ்ரீதேசிகர் விக்ரஹத்தை ப்ரதிஷ்டை செய்தார்.அன்று ஒலிக்க ஆரம்பித்த மணியோசை இந்த உலகம் உள்ளளவும் ஒலிக்கும்.

வஞ்சப் பரசமயம் மாற்ற வந்தோன் வாழியே!
மன்னுபுகழ் பூதூரான் மனம் உகப்போன் வாழியே!
கஞ்சத் திருமங்கை உகக்க வந்தோன் வாழியே!
கலியன் உரை குடிகொண்ட கருத்துடையோன் வாழியே!
செஞ்சொல் தமிழ்மறைகள் தெளிந்து உரைப்போன் வாழியே!
திருமலைமால் திருமணியாய் சிறக்க வந்தோன் வாழியே!
தஞ்சப் பரகதியைத் தந்தருள்வோன் வாழியே!
செந்தமிழ் தூப்புல் திருவேங்கடவன் வாழியே!
நானிலமும் தான் வாழ நான்மறைகள் தாம் வாழ
மாநகரின் மாறன் மறை வாழ – ஞானியர்கள்
சென்னி அணி சேர் தூப்புல் வேதாந்த தேசிகனே!
இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்
————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருவத்தியாள நல்லூர் –ஸ்ரீ ஆனை அழுங்குங்குளம்-ஸ்தல மான்மியம் –ஸ்ரீ மதுரகவி ஸ்ரீநிவாச அய்யங்கார் ஸ்வாமிகள் —

November 29, 2023

நல்ல தமிழ் அறிந்தோருக்கு மிகவும் பரிச்சயமான மதுரகவி ஸ்ரீநிவாச அய்யங்கார் இயற்றி அருளிய லக்ஷக்கணக்கான
தமிழ்ப் பாடல்களில் ஒன்று மதுரகவி திருவத்தியாள நல்லூர் ஸ்தல மான்மியம் என்பது.
திருவத்தியாள நல்லூர் எது? இதுவே மணவை என்றும் சொல்லப்படும் திருநெல்வேலி மாவட்டம்
அம்பாசமுத்திரம் வீரவ நல்லூரை அடுத்துள்ள ஒரு அழகான சிற்றூர்.

பொதியமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. என்ன சிறப்பு?
ஊரின் மற்றொரு பெயரையும் சொல்லிவிட்டால் படிப்பவர்களில் அநேகமாக அனைவருக்குமே தெரிந்துவிடும்.
ஆனை அழுங்குங்குளம் என்ற அழகான பெயர். அழுங்கும் என்றால் வருந்துதல், ஆனை வருந்திய குளம் அதாவது-மடு.
இது தான் அன்று ஆதிமூலமே என்று அழைத்த ஆனையின் குரலுக்கு அரக்கப் பரக்க நாராயணன் ஓடி வந்து
அபயம் அளித்த ஊர் என்று. கஜேந்திர மோக்ஷம் நிகழ்ந்த அந்த ஊரின் ஸ்தல மான்மியத்தை
தன் மதுர கவிகளால்  சுவை சொட்டச் சொட்ட அருளி யிருக்கிறார் நம் ஸ்ரீ மதுர கவி ஸ்வாமிகள்
அவற்றுக்கு ஸ்ரீ கம்பன் திரு இராமன் ஸ்வாமிகள் அளித்துள்ள எளிமையான சிறு குறிப்புகளையும் சேர்ந்து பார்ப்போம்

காப்புகள்

சித்தி யாளத் தினம் முனி வோர் புகழ்
அத்தி யாள நல் லூரருண் மான்மியம்
பத்தி யாளர் பரவும் படி சொல
முத்தி யான முதலடி போற்றுவாம்.   –1-

சித்தி ஆள – மோட்ச நிலை அடைய;
தினம் – நாள்தோறும்;
முனிவோர் – ரிஷிகள்;
புகழ் – போற்றும்;
அத்தியாளநல்லூர் – அத்தியாள நல்லூர் என்ற தலத்தின்;
அருள் மான்மியம் – அருள்சேர் புராணம்;
பத்தியாளர் – பக்தர்கள்;
பரவும்படி சொல – படித்து வணங்கும்படி கூற;
முத்தியான – பரமபதநாதனான;
முதல் அடி – மூலப்பொருளின் திருவடி;
போற்றுவாம் – துதிப்போம்

நம்மாழ்வார் துதி

ஆறன் பாயணி வோன் அரன் ஆதியோர்
தேறன் பார் திரு வாய்மொழி செப்பு நா
வீறன் பார் புகழ் மேன்மைக் குருகை வாழ்
மாறன் பாத மலர்தினம் வாழ்த்துவாம்.  –2-                                                                               .

ஆறு அன்பாய் அணிவோன் அரன் — கங்கையை அன்பாகச் சூடிய சிவன்;
ஆதியோர் – முதலாம் இறைவர்கள்;
தேறு அன்பார் — தெளிகின்ற அன்புசால்;
திருவாய்மொழி – திருவாய்மொழிப் பிரபந்தம்;
செப்பும் – கூறும்;
நா வீறன் – நா வண்மையன்;
பார் புகழ் – உலகு புகழும்;
மேன்மை – மேலான;
குருகை வாழ் மாறன் — குருகை நகர் வாழ் நம்மாழ்வார்;
பாத மலர் – திருவடித் தாமரை;
தினம் – நாள்தோறும்;
வாழ்த்துவாம் – போற்றுவோம்.

முத்திதரு மாநெறியை முன்னி அயல்நின்ற
அத்துவித பாசமற ஆங்குயிர்கள் எல்லாம்
சொத்தமல னுக்கெனல்வி ளக்குசுகு ணப்பேர்
வத்துமுனி யுத்தமனை மன்னும் உளம் வைப்பாம்.     .3.

முத்தி தரும் – வீடு பேற்றுக்கு;
மாநெறியை முன்னி – சிறந்த மார்க்கம் நினைந்து;
அயல் நின்ற – அண்மையில் இருந்த;
அத் துவித – அந்தத்துவைதம் (இருவகை) என்ற;
பாசம் அற – பற்று ஒழிய;
ஆங்குயிர்கள் எல்லாம் – ஜீவராசிகள் அனைத்தும்;
சொத்தமலனுக்கு எனல் — இறைவனின் சொத்து என்பதை;
விளக்கு – பொலியச் செய்;
சுகுணப்பேர் – நற்குணமென்ற பெயருடைய;
வத்து முனி – பொருளாம் முனிவன் (இராமாநுஜன்);
உத்தமனை – சிரேஷ்டனை;
மன்னும் உளம் வைப்பாம் – விளங்கும் மனத்தில் (வைப்போம்) துதிப்போம்.

ஆழி சூழ்தரும் அவனிஓர் குடைநிழ லளிக்கும்
ஆழி நாயகற்(கு) அன்புறு தூதனாய் அடல்கொண்(டு)
ஆழி தாயணி வீழிவாய் அழகுறும் சீதைக்(கு)
ஆழி நல்கும்எம் அனுமனைப் பரவியன் புறுவாம்.     .4.

ஆழிசூழ் தரும் அவனி — கடல்சூழ் புவியை;
ஓர் குடை நிழல் – ஒரே ஒரு வெண்கொற்றக் குடையின் கீழ்;
அளிக்கும் – ஆளும்;
ஆழி நாயகற்கு – சக்கரம் தரித்த திருமால் ராமனுக்கு;
அன்புறு தூதனாய் – பக்திசார் தூதனாக;
அடல் கொண்டு – வலிமையுடன்;
ஆழிதாய் – கடல் தாவி;
அணிவீழிவாய் அழகுறும் – அழகிய கொவ்வைச் செவ்வாய் எழில் சேர்;
சீதைக்கு – ஜானகிக்கு;
ஆழி நல்கும் – கணையாழி தரும்;
எம் அனுமனை – எங்களாஞ்சநேயனை;
பரவி – துதித்து;
அன்புறுவாம் – அவனன்பைப் பெறுவோம்.

பொய்கையொடு பூதம் பேய் மழிசை வேந்தன்
பொற்குருகை வரு மாறன் திருக்கோ ளூர்வாழ்
அய்யனருட் சேரலர்கோன் விண்டு சித்தன்
ஆண்டாள்மெய்த் தொண்டரடிப் பொடியார் பாணன்
மெய்யுறுசீர் வாட்கலியன் புரையில் கேள்வி
வேதாந்த தேசிகன்விண் மண்ணோர் போற்று
மையறுமா மணவாள முனிவன் பாத
மரைப்போதெப் போதுமுளம் வைத்து வாழ்வாம்.           .5.

திருக்கோளூர் வாழ் அய்யன் – மதுரகவி;
பொய்கை, பூதம், பேய் எனும் முதலாழ்வார்கள்,
திருமழிசை ஆழ்வார், நம்மாழ்வார், மதுரகவி, குலசேகர ஆழ்வார்,
பெரியா.ழ்வார், ஆண்டாள், தொண்டரடிப்பொடி, திருப்பாணன், திருமங்கைமன்னன்
ஆகிய பன்னிரு ஆழ்வார்களுடன்,
புரையில் கேள்வி – குற்றமற்ற ஞானம் உடைய வேதாந்த தேசிகன்,
விண்ணும் மண்ணும் போற்றுகின்ற மணவாள மாமுனிகள்,
இவர்களது பாதமரைப்போது – திருவடி மலர்கள், எப்போதும் உளம் வைத்து, வாழ்வோம்.

வேரி யம்பொழில் வில்லிபுத் தூர்நலம் மேவ
சீரி யன்றமா மறையவர் தமக்கொரு திலகன்
பேரி யன்றமெய் வீரரா கவனெனப் பேசும்
ஆரி யன்கழல் அனுதினம் முடிமிசை அணிவாம். –6-                    

வேரி அம்பொழில் – எழிலும் மணமுமுள்ள சோலைசேர்,
வில்லிபுத்தூர் – ஸ்ரீவில்லிபுத்தூர்,
நலம் மேவ – நன்மை அடைய,
சீரியன்ற – சிறப்புப் பெற்ற,
மா மறையவர் தமக்கு — வேதியர்களுக்கு,
ஒரு திலகன் –ஒப்பற்ற திலகம் போன்றவன்,
பேர் இயன்ற – பெருமை சார்ந்த,
மெய் – உண்மையுள்ள,
வீரராகவனென – வீரராகவன் என்று,
பேசும் –கூறும்,
ஆரியன் கழல் – குரவன் (ஆசார்யன்) பாதம்,
அனுதினம் – தினந்தோறும்,
முடி மிசை அணிவாம் – தலை மேல் சூடுவோம்.

அவையடக்கம்

சித்தி யாடரு தேவர்மா தவர்தினம் வழுத்தும்
அத்தி யாளநல் லூரருள் மான்மிய மதனை
பத்தி யாற்றமிழ்ப் பாவினாற் பாடினன் சிறந்த
புத்தி யாளரென் புலமையை நகுவரோ புலவீர்.     .7.

சித்தி ஆள் தரு – மோட்சம் கைவந்த; தேவர் – வானவர்; மாதவர்—மகரிஷிகள்; தினம் வழுத்தும் – நாளும் துதிக்கும்; அத்தியாளநல்லூர் அருள் மான்மியமதனை – அத்தியாள நல்லூர்ப் புராணத்தை; பத்தியால் – அன்பால்; தமிழ்ப்பாவினால் – தமிழ்ப் பாடல்களால்; பாடினன் – இசைத்தனன்; சிறந்த புத்தியாளர் – பேரறிஞர்கள்; என் புலமையை – என் கல்வியறிவை; நகுவரோ—பழிப்பரோ; புலவீர் – அறிஞர்களே!

எண்ணும் எண்ணெயும் ஆமென எவற்றினும் உறையும்
கண்ணன் மாதவன் கரியவன் கசேந்திர வரதன்
அண்ண னாயிரம் பெயரவ னருளினால் இந்தப்
புண்ணியக் கதை சொற்றிடத் துணிந்தது போலாம்.       .8.

எண்ணும் எண்ணெயும் ஆம் என – எள்ளும் எண்ணெயும் போல; எவற்றினும் – அனைத்தினுள்ளும்; உறையும் – விளங்கும்; கண்ணன் மாதவன் கரியன் – மாதவப் பேருடைய கார்வண்ணக் கண்ணன்; கசேந்திர வரதன் – ஆனையரசுக்கு அருளியவன்; அண்ணன் – பெரியவன்; ஆயிரம் பெயரவன் – சகசிரநாமன்; அருளினால் –கிருபையால்; இந்தப் புண்ணியக் கதை – இந்தத்தரும காதை; சொற்றிடத் துணிந்தது – கூறத்துணிந்தது; போல் ஆம் – அசை.

எழுத்து சொற்பொருள் யாப்பலங் காரமென் றிசைக்கும்
வழுத்(து) இலக்கண வகைசிறி(து) அறிந்திலன் மாட்சி
பழுத்த நுண்ணறி வாளர்முன் பாடிடத் துணிதல்
சுழுத்தி யிற்பரம் புருடனைத் தெரிந்துசொல் லுதலே.      .9.

எழுத்து சொற்பொருள் யாப்பு அலங்காரம் என்று – ஐந்திலக்கணம் என; இசைக்கும் – கூறும்; வழுத்திலக்கண வகை – சிறந்த இலக்கண வகை ; சிறிது அறிந்திலன்—கொஞ்சமும் தெரியாதவன்; மாட்சி – சிறப்பு; பழுத்த – கனிந்த; நுண்ணறிவாளர் முன் – கூர்மையான அறிஞர்முன்; பாடிட – இசைக்க; துணிதல் – தொடங்குவது; சுழுத்தியில் – புலன்கள் உறங்குகையில்; பரம் புருடனை – பரமாத்மாவை; தெரிந்து – அறிந்து ; சொல்லுதல் – கூறுதலாம்

நாட்டுச் சிறப்பு

மாம ணித்திர ளருவிசால் பொதியமால் வரையிற்
றேம லர்த்திரள் செந்திரு முகமெனச் செழிப்பப்
பூம ணிக்குளம் பொலிதர வருபெரும் பொருனைக்
காமர் பெற்றது பாண்டிய நாடெனக் கரைவார்.    .10.

.மாமணித் திரள் – பேரழகு திரண்ட; அருவிசால் – நீர்வீழ்ச்சிகளமைந்த; பொதியமால் வரையில் – பொதிகை மாமலையில்; தேமலர்த் திரள் – மிகுதியான மணம்நிறை புஷ்பங்கள்; செந்திரு முகமென – செய்ய இலக்குமி முகம்போல்; செழிப்ப – வளமுடன் விளங்க; பூமணிக்குளம் பொலிதர – பொலிவுள்ள அழகிய நெற்றிபோல் விளங்க; வருபெரும் பொருனை – வரும் பெரிய பொருனை நதியின்; காமர் –எழில்; பெற்றது – கொண்டது; பாண்டிய நாடென; கரைவார் – கூறுவார்கள்

வேறு

காவெலாம் மயிலின் ஈட்டம் கரைஎலாம் பணிலம் வாசப்
பூவெலாம் வண்டு செந்தேன் பொழிமதுத் தடத்துப் பொய்கைத்
தாவெலாம் அன்னம் பண்ணைத் தலனெலாம் தரளம் சார்ந்த
மாவெலாம் குயில்கள் அந்த வனமெலாம் மணியின் சும்மை            .11.

காஎலாம் – சோலை எங்கும்; மயிலின் ஈட்டம் – மயிலின் கூட்டம்; கரை எலாம் – வரப்புகளில் எங்கும்; பணிலம் – சங்குகள்; செந்தேன் பொழி – செவ்விய தேன் சொரியும்; வாசப் பூ எலாம் – மணமுள்ள மலர்கள் எல்லாம்; வண்டு – தும்பிகள்; மதுத்தடத்து – இனிய தடாகத்தும்; பொய்கை – குளங்களின்; தா எலாம் – பள்ளங்கள் யாவிலும்; அன்னம் – அன்னப் பட்சிகள்; பண்ணைத் தலனெல்லாம் – வயல்களெல்லாம்; தரளம் – முத்துக்கள்; சார்ந்த – அருகுள்ள; மாஎலாம் – மாமரங்களிலெல்லாம்; குயில்கள் – கோகிலங்கள்; அந்த வனமெலாம் – அந்தக் காடுகள் முற்றும்; மணியின் – நவமணிகளின்; சும்மை – தொகுதி.

கரும்பொடு தென்னை பூகம் கதலிபால் வருக்கை காமர்
அரும்புதண் ஆதம் வானம் அளாவுகுங் குமங்கள் எல்லாம்
விரும்பிவந் தேற்போர்க்(கு) ஈயும் வித்தக ரென்னத் தோன்றச்
சுரும்பின மவர்பா லேற்கும் தீனரிற் பரந்து சூழும்.                       .12.

கரும்பொடு – கன்னலுடன்; தென்னை –தென்னை மரம்; பூகம் –பாக்கு மரம்; கதலி – வாழை; பால் வருக்கை – பால்மர வர்க்கங்களான பலா போன்றவை; காமர் – அழகு; அரும்பு – விரியும்; தண் ஆதம் – குளிர்ந்த மாமரம்; வானம் அளாவு – வானம் முட்ட ஓங்கிய; குங்குமங்கள் – குங்கும மரங்கள்; எல்லாம் –யாவும்; விரும்பி வந்து – ஆசையுடன் உற்று; ஏற்போர்க்கு – இரப்பவர்களுக்கு; ஈயும் – அளிக்கும்; வித்தகர் என்னத் தோன்ற – அறிஞர் எனக் காட்சி தர; சுரும்பினம் – வண்டுகள்; அவர்பால் – அவ்வித்தகரிடம்; ஏற்கும் –இரக்கும்; தீனரில் – வறிஞர்போல்; பரந்து சூழும் – பரவலாகச் சுற்றி இருக்கும்.

திருவொடு செருக்கும் வல்ல செய்கையும் மறமும் கோளும்
பொருளும்புன் மதியும் பெற்ற பூரியர் தலைபோல் நின்று
மருளறு ஞானத் தோர்தம் முடிஎன வளைந்து பாரில்
இருளுற வானுற் றோங்கும் இரும்பணை யாவும் செந்நெல்.       .13.

திருவொடு – செல்வமுடன்; செருக்கும் – அகந்தையும்; வல்ல செய்கையும் – வலிய செயலும்; மறமும் – பாவமும்; கோளும் – புறங்கூற்றும்; பொருளும் – மக்களும்; புன்மதியும் – இழிந்த புத்தியும்; பெற்ற – கொண்ட; பூரியர் – கீழ்மக்கள்; தலைபோல் – சிரம்போல்; நின்றும் – நிமிர்ந்தும்; மருளறு – மயக்கமற்ற; ஞானத்தோர் – அறிஞர்; தம்முடி என – தங்கள் தலைபோல; வளைந்து – குனிந்து; பாரில் – பூமியில்; இருளுற – இருட்டுச் சார; வானுற்று – விண்ணையடைந்து; ஓங்கும் – உயரும்; இரும்பணை யாவும் – பெரும் பண்ணைகள் எல்லாம்; செந்நெல் – செம்மையான நெற்கள் நிலவும்.

—————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஒத்தக்கடை நரசிங்கமங்கலம்– திரு நாராயண நல்லூர் கண்ணாழ்வார் (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்

November 24, 2023

யானை மலையின் நீளம் சுமார் 4 கி.மீ, அதாவது 4000 மீட்டர் நீளம்,1200 மீட்டர் அகலம், 400 மீட்டர் உயரம் கொண்டது. இம்மலையை சற்று தூரத்தில் இருந்து பார்த்தால் ஒரு யானை படுத்திருப்பது போல தோன்றுவதால் இம்மலை யானை மலை என பெயர் பெற்றுள்ளது. யானைமலையை நரசிங்கமங்கலம் என்றும் அழைப்பர்.

கி.பி. 770 ஆம் நூற்றாண்டில் மதுரையை அரசாண்டவன் மாறஞ்சடையன் பராந்தக நெடுஞ்சடையன் என்னும் பாண்டிய மன்னன் ஆவார். மூவேந்த மங்கலப் பேரதையன் ஆகிய மாறன்காரி கலிக்குடா வைத்தியன் என்பவர் பாண்டிய மன்னனுடைய மந்திரியாக பதவி வகித்தார். இவர் யானை மலைக்கு வட மேற்கே நரசிங்கப் பெருமாளுக்கு குடை வரை கோவில் ஒன்றை கட்ட தீர்மானித்து, பூர்வாங்க வேலைகளை தொடங்கினார். குடை வரை கோவில் நிறைவு பெரும் தருவாயில் இவர் நோய்வாய் பட்டு இறந்துபோகவே, இவருடைய தம்பி பாண்டா மங்கல விசைய அதையன் ஆகிய மாறன் எயினன் என்னும் பெயர் கொண்டவர் மந்திரியாக பதவி ஏற்று, இக்கோவில் திருப்பணியை செய்து குடமுழுக்கும் செய்தார் என இங்கு காணப்படும் கல்வெட்டு ஒன்று கூறுகிறது. .இதனை தொடர்ந்து யானைமலையை நரசிங்கமங்கலம் என அழைத்தனர். இக் குடைவரைக் கோயிலில் கிரந்த, வட்டெழுத்து, தமிழ் கல்வெட்டுகள் உள்ளன. இக்கல்வெட்டுகளில் முற்காலப் பாண்டியர், சோழர், சோழ பாண்டியர், பிற்காலப் பாண்டியர், விஜயநகர மன்னர் ஆகியோர் பல்வேறு காலகட்டங்களில் திருப்பணிகள் பல இக்கோயிலுக்குச் செய்திருக்கின்றனர் என் கூறுகிறது.

யானை மலையின் உச்சியில் குகை தளம் காணப்படுகிறது. இக்குகை தளத்தில் சமணர் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குகை தளத்தில் கி.பி.முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி கல்வெட்டுகள் காணப்படுகிறது. இக்கல்வெட்டில் ” இவ குன்றத்தூ உறையுள் பா தந்தான் ஏரி ஆரிதன் அத்துவாயி அரிட்ட காயிபன்” என்னும் இரண்டு வரிவாசகம் இடம் பெற்றுள்ளது. “இவ” என்பது “இபம்” என்கிற வடமொழிச் சொல்லின் மறு வடிவம். இதன் பொருள் “யானை” என்பதாகும். குன்றம் என்றால் மலை. இதில் “இவ குன்றம்” என்றால் யானைமலை என்று பொருள். பா’ என்றால் படுக்கை. இக்கல்வெட்டில் உள்ள வரிகள் “தங்குவதற்கான கற்படுக்கை” என பொருள் படும். “ஏரிஆரிதன்”, “அத்துவாயி அரட்டக்காயிபன்” ஆகிய இரண்டு சமண துறவியர் பெயர் காணப்படுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே செழித்துக்கிடந்த இப்பகுதியில், சமணத் துறவியர் இருவரும் மலை உச்சியில் கற்படுக்கை அமைத்து தவம் மேற்கொண்டிருந்தனர் என்பது இக்கல்வெட்டு சொல்லும் செய்தியாகும்.

யானைமலையில் அமைந்துள்ள சமணர்கள் வாழ்ந்த குகையின் நெற்றிப்பகுதியில் 9 புடைப்புச்சிற்பங்கள் காணப்படுகின்றன. முக்குடையின் கீழ் அமர்ந்துள்ள சமணதீர்தங்கரர் மகாவீரர், பார்தவநாதர், பாகுபலி, இயக்கிஅம்பிகா,தாமரை மலர்கள் ஆகிய சிற்பங்கள் 2000 ஆண்டுகளுக்கு பின்பும் பார்பவர்களை வியப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகின்றன.

இங்கு கருவறையில் நரசிங்கப் பெருமாள் யோக நரசிம்மராகக் காட்சி தருகிறார். சுமார் 6 அடி அகலமும் நீண்டு உயர்ந்த பிரமாண்டத் திருமேனியராக அமர்ந்திருக்கும் நரசிம்மப் பெருமாளின் திருமேனி இம்மலையின் தாய்ப்பாறையிலேயே அமைக்கப்பட்டுள்ளது. பெருமாளின் அற்புதத் திருவுருவம் காண்பவர் உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும். அந்தத் தருணத்தில் நம் கவலைகள் எல்லாம் மறந்து மனம் லேசாவதை இங்கு தரிசனம் செய்யும் அனைவரும் உணர்வார்கள்.

இக்கோயிலில் நின்றகோலத்தில் நரசிம்ம மூர்த்தியின் உற்சவத் திருமேனி உள்ளது. ஆனால் இத்திருமேனி ஆலய வளாகத்தை விட்டு வெளியே வருவதில்லை. மாறாக, உற்சவ காலங்களில் அருகில் இருக்கும் காளமேகப் பெருமாள் உற்சவ மூர்த்தியே இங்கு எழுந்தருள்கிறார்.

இங்கு கருவறைக்கு முன் உள்ள அர்த்த மண்டபம், பிற மண்டபங்கள் அனைத்தும் பிற்காலக் கட்டுமானங்களே எனலாம். ஆலய வளாகத்தின் வடகீழ் பகுதியில் உள்ள நரசிங்கவல்லித் தாயாரின் சந்நிதியும் பிற்காலக் கட்டுமான பாணியிலேயே அமைந்துள்ளது.

இங்கு ஆலயத்தை ஒட்டியே நன்னீர்ப் பொய்கை அமைந்துள்ளது. இந்தத் தீர்த்தம் கங்கைக்கு இணையான புண்ணிய தீர்த்தமாகப் போற்றப்படுகிறது. இந்தத் தீர்த்தம் உடல் மற்றும் மன நோய்களைப் போக்கும் ஆற்றல் கொண்டது என்கின்றன தலபுராணங்கள்.

இங்கு பெருமாளுக்கு மாசி மாதப் பௌர்ணமித் திருவிழா மிக விசேஷமாக நடைபெறும். குறிப்பாக கஜேந்திர மோட்சம் இத்திருக்குளத்தில் நிகழ்த்தப்படும்

———-

காலம் – பதினொன்றாம் நூற்றாண்டு; இடம் – மதுரை, திருவானைமலை – திருமாலிருஞ் சோலை செல்லும் பாதை.

‘தட தட தட..’ என்று வெண்ணிறப் புரவிகள் அந்த வண்டிப் பாதையில் அதிவேகத்தில் பறந்து கொண்டிருந்தன. உயர்சாதிப் புரவி ஒன்றில் ஆஜானுபாகுவான ஓர் இளைஞன் வந்து கொண்டிருந்தான். அவனைப் பார்க்க ஒரு மன்மதனைப் போல இருந்தாலும், முகத்தைச் சற்றே மறைத்துத் துகிலொன்று கட்டியிருந்தான். அவனைத் தொடர்ந்து இரண்டு பிரிவுகளில் சிலர் வர, கூப்பிடு தூரத்தில் மேலும் சிலர் வந்து கொண்டிருந்தார்கள். இளைஞன் போய்க் கொண்டிருந்தபோது திடீரென்று வலது திசையில் ஏதோ பேச்சுக்குரல் கேட்டது. அதுவோ அடர்ந்த காடு. அந்த வழி திருமாலிருஞ்சோலை மலையிலிருந்து நரசிங்கமங்கலத்தை இணைக்கும் வண்டிப்பாதை.

வேகமாகப் பறந்து கொண்டிருந்த அந்தப் புரவியை இளைஞன் கணுக்கால் அசைவில் நிறுத்தினான். அதைக் கண்டு, பின்னால் வந்த அனைவரும் சற்று அதிர்ச்சியோடு, ‘இவர் இந்த காட்டுப் பகுதிகளில் நிறுத்த வேண்டிய அவசியமில்லையே’ என்று எண்ணியபடி, என்னவென்று அறிய அவனை நோக்கி வேகமாக விரைந்தார்கள்.

சப்தம் வந்த திசையில், அந்த அடர்ந்த காட்டுப்பகுதியில் நான்கைந்து பேர் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்க்கும்போது ஸ்ரீவைஷ்ணவ இராமானுஜ அடியார்கள் போன்று அந்த இளைஞனுக்குத் தெரிந்தது. அந்த இடத்திலிருந்து மேற்கே சற்று தூரத்தில் ஒரு ஏரி இருந்தது. அங்கிருந்து வரும் இதமான குளிர்க் காற்றில் இவர்கள் மேலாடைகள் பறந்து கொண்டிருந்தன. அவர்கள் அந்த ஏரியை நோக்கிச் செல்வதற்கு முற்பட்டு அதை நோக்கி நடந்து கொண்டிருப்பதையும் அந்த இளைஞன் கவனித்தான். இந்த அடர்ந்த காட்டுப்பகுதிகளில் இவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று அந்த இளைஞனுக்கும் அறிந்து கொள்ளத் தோன்றியது. அவர்களை நோக்கி விரைந்தான். தங்களை நோக்கி ஒருவர் வருவதைக் கண்டு, சற்றே தயங்கி நின்றார்கள். இதைக் கவனித்த இளைஞனோடு வந்த மற்றவர்களும் அங்கு விரைந்தார்கள்.

“தாங்கள் எல்லாம் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? இந்த அடர்ந்த காட்டுப் பாதையில் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமானால் என்னிடம் சொல்லுங்கள்” என்றார் இளைஞன்.

ஏற்கெனவே ஒருவித பயத்தில் இருந்த அந்த அடியார்கள், இந்தக் காட்டுப்பகுதியில் யாரோ ஒருவர் திடீரென்று வந்து கேட்டதால் மேலும் அதிர்ந்தார்கள். அதை இளைஞனும் புரிந்துகொண்டான. அவர்களின் தோற்றம் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவர்கள் போல் தெரியவில்லை.

‘தயங்காமல் கூறலாம், நீங்கள் அனைவரும் வேற்று ஊரிலிருந்து வருபவர்கள் போல் தெரிகிறது’ என்ற இளைஞனின் மொழிக்கு, ‘நாங்கள் ஸ்ரீரங்க தேசத்தவர்கள். இங்கு திருமாலிருஞ்சோலை வந்தோம். உச்சியானதால் இந்தப் பொழுதின் கர்மாக்களைச் செய்ய அந்த ஏரியை நோக்கிப் போய் கொண்டிருக்கிறோம்’ என்று அந்த நால்வரில் ஒருவர் பதில் தந்தார். இளைஞனுக்கு அவர்களிடமிருந்து மேலும் சில விஷயங்கள் தெரியக்கூடும், அதனால் அவர்களைப் பின்தொடர்வது நல்லது என எண்ணினான்.

‘சரி, நானும் வருகிறேன். புரவிக்கும் கொஞ்சம் நீர் தேவைப்படுகிறது’ என்று கூறி பின்தொடர்ந்தான்.

‘இப்போது திருவரங்கம், திரிசிராமலை சோழ தேசத்தில் உள்ளது. உங்களுக்கு இந்த ஏரி பற்றி எதுவும் தெரியாதென்று நினைக்கிறேன்’ என்றான் இளைஞன்.

‘இல்லை. நாங்கள் இப்போதுதான் இந்த வழி வருகிறோம். நரசிங்க மங்கலம் சென்று கொண்டிருக்கிறோம்’ என்றார் ஒருவர்.

‘ஓ! நல்லது. நானும் அவ்வழிதான் போகிறேன். நரசிங்கமங்கலம் இதே சோழர்களோடு போரிட்டு வென்ற பின் நெடுஞ்சடையன் பராந்தகப் பாண்டியன் நரசிம்மர் திருக்கோவிலும், சதுர்வேதி மங்கலமும் கட்டமைத்தார். பின்னர் இந்தப் பகுதியும் சிலகாலம் சோழர்களுக்குப் போயிற்று. அப்போது பராந்தகச் சோழன் காலத்தில், சோழநாட்டுப் புறங்கரம்பை நாட்டைச் சேர்ந்த அருணிதிகலியன் என்பார் இந்தக் கோவிலுக்குச் சில தானங்கள் தந்து, ஒரு ஏரியும் ஏற்படுத்தினார். அவர் தானமாய் தந்த வயல்கள் இதன் மூலம் நீர் பெறுகிறது. அதன் வருவாய் இறையிலியாக நரசிம்மர் கோவிலுக்கும், அங்கு கைங்கரியம் செய்யும் அந்தணர்களுக்கும் செல்கிறது. பின்னர் வந்த பாண்டிய மன்னர்கள் இவற்றை முறைப்படுத்தினர்’ என்று அந்த இளைஞன் விளக்கி வரும்போதே அந்த ஏரியும் வந்தது.

‘ஸ்வாமி, அடியேன் ஆரணந் தோழ நின்றான். நீங்கள் சொல்லும் போதே நரசிங்கமங்கலம் பெருமான் கண்முன்னே வருகிறார். இந்த ஏரியின் திருநாமம் என்னவோ?’ என்றார் ஒருவர்

‘கலியனேரி’ என்றான் இளைஞன்.

‘ஆஹா. என்ன புண்ணியம் செய்தோம்’ என்று அவர்கள் அந்த ஏரியை நோக்கி விழுந்து வணங்கினார்கள்.

மிதமான அலைகள் அடித்துக் கொண்டிருந்தன. அந்த அலைகள் அவர்களை அழைப்பது போல் இருந்தது. அவர்களில் ஒரு முதியவர், ‘அன்றாயர் குலமகளுக்கு அரையன் தன்னை அலை கடலைக் கடைந்து அடைத்த அம்மான் தன்னை..’ என்ற திருமங்கையாழ்வாரின் திருநெடுந்தாண்டகம் ஒன்றைச் சொல்லிக்கொண்டே ஏரி நோக்கி விரைந்தார். அனைவரும் அவரைத் தொடர்ந்தார்கள். அந்த இளைஞன் உட்பட அனைவரும் உச்சிகால கர்மாவை தங்கள் முறைப்படி முடித்தார்கள்.

‘அரசே தாங்களா?’ என்றார் அந்த நால்வரில் ஒருவர், அந்த இளைஞனைப் பார்த்து. ஆம், அந்த இளைஞர் தன் தலைக்கச்சு எல்லாம் களைந்திருந்தார்.

‘ஆம், நான்தான் விசயா’ என்று விடை பகர்ந்த இளைஞனை விசயன் உட்பட அனைவரும் வியந்து பார்த்தனர்.

‘என்ன சொல்கிறாய் விசயா. அரசரா?’ என்றார் முதியவர்.

‘ஆம் ஸ்வாமி. எம்மண்டலமும் கொண்டருளிய ஸ்ரீவல்லபப் பாண்டியன்’ என்றான் விசயன்.

‘இப்போதாவது நீங்கள் எல்லாம் யார், இங்கு பாண்டிய நாட்டில் என்ன விஷயமாய் இருக்கிறீர்கள் என்று சற்றே கூறலாம். என்னால் முடிந்த உதவியைச் செய்வேன்’ என்றார் அரசன்.

அங்கு மர நிழலில் அனைவரும் அமர்ந்திருந்தார்கள். அந்த முதியவர் தொடங்கினார். ‘அரசே, சோழ மண்டலத்தில் குழப்பங்கள் அதிகம் இருப்பது தாங்கள் அறிந்ததே. சில வருடங்களுக்கு முன் சோழன் செய்த கொடுமையால் தாயைப் பிரிந்து இருக்கும் சேய் போல் நாங்கள் உள்ளோம். இந்த உலகத்திற்க்கே ஆசாரியரான எங்கள் இராமானுசர் இப்போது வடக்கே இருக்கிறார். சோழன் செய்த கொடுமையால் நாங்கள் அனைவரும் அரங்கமாநகரை விட்டு ஆங்காங்கு இருக்கிறோம்..’ என்று சொல்லும் போதே அவர் அழத் தொடங்கிவிட்டார்.

‘ஆம். யாம் அறிந்தோம். இராமானுஜருக்கும், திருவரங்க வைணவர்களுக்கும் சோழன் செய்த கொடுமைகளைக் கொஞ்சமும் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. இன்னும் சில திங்கள்களில் நிலைமை அரங்கன் அருளால் சீராகும்’ என்றார் அரசர். பின் ஏதோ சொல்லத் தொடங்கினார். ‘கூரத்தாழ்வானும், பெரிய நம்பியும் கூட…’ என்றவுடன் விசயன், ‘அரசே, இருவரின் கண்களும் சோழனால் பறிக்கப்பட்டன. அந்தக் கொடுமையால் பெரிய நம்பி ஸ்வாமி வைகுந்தம் அடைந்தார். ஸ்வாமி கூரத்தாழ்வான் திருமாலிருஞ்சோலையில் இருந்தார். அங்கிருந்து தான் நாங்கள் வருகிறோம்.’

‘அது பற்றித்தான் கேட்க வந்தேன். ஸ்வாமி கூரத்தாழ்வானைத் தரிசித்தீர்களா? நலமுடன் இருக்கிறாரா?’ என்றார் அரசர்.

‘அழகன் மடியில் இருக்கும் போது கவலையில்லை. ஆனால் ஸ்வாமி திருவரங்கத்து எம்பெருமானையும், எம்பெருமானாரையும் நினைத்து ‘சேர்வது அடியேன் எந்நாளோ?’ என்று உருகிக் கொண்டிருக்கிறார். இந்தத் தசையிலும் அவரையும் மேலிட்டு ‘சுந்தரபாஹு ஸ்தவம்’ என்று திருமாலிருஞ்சோலை அழகர் மீது கவி புனைந்திருந்தார். அவற்றை இப்போதுதான் அனுபவித்து வந்தோம்.’

‘ஆஹா. ஸ்வாமிக்கு ஈடில்லை. இந்தக் கொடிய நேரத்திலும் திடமாய் இருந்து நம் அனைவரையும் அவர்தான் வழிப்படுத்த வேண்டும்’ என்றார் அரசர்.

‘அரசே, அழகனும், பரமஸ்வாமி பெருமானும் ஸாத்சாத் அந்த இராம, கிருஷ்ண அவதாரங்கள்தான். ஆழ்வார்கள், உபநிஷத்துக்கள் அனுபவித்ததை எல்லாம் நம் ஆழ்வான் இந்த ஸ்தவத்தில் காட்டியுள்ளார்.  ‘ஸர்வாபீஷ்டம் மம மத்குருரோச் ச ததஸே நோ கிம் வநாத்ரீச்வர’, எங்களுக்கும், ஆசாரியர் இராமானுஜருக்கும் ப்ரியமானதைத் தந்தருள வேண்டும், முன்பு போல் மீண்டும் திருவரங்கம் வந்து எம்பெருமான் கைங்கர்யம் செய்யவேண்டும்’ என்ற இந்த வரிகளைத்தான் அவர் திரும்பத் திரும்பச் சொல்லிவந்தார். எங்களுக்கும் அவ்வாறேதான் அந்த அரங்கனிடம் வேண்டுதலாய் இருந்தது. எங்கள் இராமானுஜர் மீண்டும் திருவரங்கம் பெரிய கோவில் வரவேண்டும். அந்த மாநிதியைக் காப்பாற்றி இந்த தரிசனத்தை மேலும் வளர்க்கவேண்டும்’ என்றார் அந்தப் பெரியவர்.

‘ஆம், அதோடு இந்தப் பாண்டிய நாடும் இழந்த தன் இராஜ்யங்களைத் திரும்ப அடைய வேண்டும். அந்த சோழன் உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறது. முன் போல் இப்போது யாருக்கும் தொந்தரவு தரும் நிலையில் சோழ நாடு இல்லை. அரசன் வீழ்ந்த நிலையில் நாடு ஒரு குழப்ப நிலையில்தான் இருக்கிறது. நீங்கள் அனைவரும் இப்போது திருவரங்கம் மீண்டும் செல்லலாம்.’

‘ஆம் மன்னா, இது பற்றி உறங்காவில்லி தாசர் எங்களிடம் சொன்னார்’ என்ற விசயனை இடைமறித்து ‘யார் மல்லர்கள் தலைவன் தனுர்தாசரா?’ என்றார் சீவல்லபன்.

‘ஆம், அவர்தான் அரசே. இப்போது திருமாலிருஞ்சோலையில் எங்களோடு இருந்தார். அவர்தான் இந்த விஷயங்களைச் சொல்லி, கூரத்தாழ்வான் ஸ்வாமியை திருவரங்கம் அழைத்துக் கொண்டு செல்கிறார்.’

‘ஆஹா, நல்ல காரியம். இந்தப் பாண்டியன் செய்ய நினைத்ததைச் செய்திருக்கிறார். அரசாங்கத்தில் இருந்தவருக்கு மதிநுட்பம் சொல்லித்தர வேண்டுமா என்ன? இந்தப் பாண்டிய நாடு மட்டும் இப்போது சோழனுக்கு அடிமைப்பட்டிருக்காவிட்டால், உங்களைப் போன்ற திருமால் அடியார்கள் இப்படி ஒவ்வொரு ஊர்களிலும் தஞ்சம்புகும் நிலை இருக்காது. கூடிய சீக்கிரம் இந்த ஆட்சி முடிவுக்கு வரட்டும்’ என்று பெருமூச்சு விட்டு அரசர் தொடர்ந்தார்,

‘ஒரு விந்தை பார்த்தாயா விசயா, இராமனுசரால் திருவரங்கனின் செந்தாமரைக் கண்களைக் காட்டி திருத்தப்பட்ட தாசர், அதே கண்ணழகை தினமும் தரிசித்த ஆழ்வான் இப்போது தன் கண்களை இழந்து, அந்த அரங்கனை மனக்கண்ணால் தரிசிக்க தாசரோடு திருவரங்கம் செல்கிறார். எல்லாம் அந்த அரங்கன் விளையாட்டா?’ என்று அரசரும் வருந்தினார்.

‘மன்னா, சரியாகச் சொன்னீர்கள். அவை என்ன சாதாரண கண்களா? அரங்கருக்கே அந்த அழகு கண்களில்தானே உள்ளது. நீண்ட அப்பெரியவாய கண்கள் எல்லாரையும் பேதமை செய்யாமலா இருக்கும்.

எழிலுடைய அம்மனைமீர்! என்னரங்கத்து இன்னமுதர்*

குழலழகர் வாயழகர் கண்ணழகர்* கொப்பூழில்

எழுகமலப் பூவழகர் எம்மானார்* என்னுடைய

கழல்வளையைத் தாமும் கழல்வளையே யாக்கினரே

எப்படி வேதத்தில் ‘ஜிதந்தே புண்டரீகாக்ஷ’ என்னும்படி ‘என்னை உன்னைக்கேயாக்க வேண்டும்’ என்று அந்த செந்தாமரைக் கண்ணழகிற்குத் தோற்றது பற்றி சொல்லியதோ அது போலே ஆண்டாள் நாச்சியார் எவ்வளவு அற்புதமாய்ச் சொல்கிறார், தாம் அந்த அரங்கனின் கண்ணழகுக்குத் தோற்று, கைவளை கழல்வளையாய்ப் போனது என்று. இவற்றை எல்லாம் இப்போது இழந்து நாம் இருக்கிறோமே?’ என்று வருத்தத்துடன் பகிர்ந்தார் அந்த முதியவர்.

‘ஆஹா. அருமை ஸ்வாமி. ஆண்டாள் நாச்சியாரின் அமுத மொழிகளுக்கு ஈடு உண்டா? வேதத்தைத் திரட்டி நம் திராவிட மொழியில் அல்லவா கொடுத்திருக்கிறார். அடியேனுக்கு இந்த இடத்திலும் உங்கள் உபதேசம் கிடைத்தது என் புண்ணியம் ஸ்வாமி’ என்று அரசர் சொல்லும் போதே,

‘மன்னா, வெகு நேரம் கடந்துவிட்டது.’ என்று அமைச்சர் சுந்தர தீரதரன் குரல் கேட்டு திரும்பிய அரசர்,

‘ஆம் அமைச்சரே. நானும் அதைக் கவனிக்கவில்லை. திருமாலடியார்களோடு இருக்கும் போது கிழமை செல்வது கூடத் தெரியாது.’

‘ஸ்வாமி, நான் ஒரு அவசர வேலையாய் சோழ நாடு சென்றுவிட்டு இப்போது மதுரை அரண்மனை சென்று கொண்டிருக்கிறேன். உங்களுக்கும் எதுவும் வேண்டுமானால்..’ என்ற அரசரை முதியவர் வணங்கி,

‘நன்று மன்னா. ’திருவுடை மன்னரைக் காணில்’ என்று ஆழ்வார் சொன்னது போல் இந்த இடத்தில் வந்து எங்களுக்கு ஆறுதலாய் இருந்தீர்கள். நாங்களோ, கானகம் சென்ற இராமனைக் காண கங்கைக் கரையில் பரதன் இருந்தது போல் இந்த ஏரியில் நிற்கிறோம்..’ என்றார் முதியவர்.

‘இராமாநுசரிடம் இந்த விஷயத்தைச் சொல்லி அவரையும் திருவரங்கம் அழைத்து வரச் செய்யலாமா?’ என்றார் அரசர்.

‘அதைத்தான் நாங்களும் பேசிக்கொண்டு வந்தோம். இந்த பாலகன் அம்மங்கி வரதன், தான் செல்வதாய்ச் சொல்கிறான்’ என்றார் முதியவர். அந்த பாலகன் மிகுந்த தேஜஸோடு இருந்தார்.

‘ஓ, நல்லது. நான் அதற்கு ஏற்பாடு செய்கிறேன். நீங்கள் சில காலம் இங்கு நரசிங்க மங்கலத்தில் வாசம் செய்ய வேண்டும். நான் ஓரிரு நாட்களில் வந்து பார்க்கிறேன்’ என்ற அரசர், அமைச்சரையும், மற்றை சிலரையும் அழைத்து சிறு ஆலோசனை செய்து, ஏதோ உத்தரவுகள் பிறப்பித்தார். அவர்களிடம் விடை பெற்று மதுரை நோக்கி விரைந்தார்.

அரசர் உத்தரவுப்படி சிலர் அந்த திருமால் அடியார்களுக்கு பாதுகாப்பாய் நரசிங்க மங்கலம் சென்றனர். முதியவருடன் சிலர் அங்கு இருக்க, வரதன் மட்டும் திருவரங்கம் நோக்கிப் பயணமானார்.

அங்கிருந்து கிளம்பிய அரசன் மதுரை செல்லாமல், அமைச்சருடன் வழியில் இருக்கும் இராஜேந்திரச்சோழ சதுர்வேதி மங்கலம் சென்றார். அங்கு ஏற்கெனவே திட்டமிட்டபடி நாட்டுத் தலைவர்கள், அரையர்கள், பிரதானிகள் இருந்தனர். அது ஒரு மந்திராலோசனை போல் இருந்தது. சோழ பாண்டியர்களால் சிதறிக் கிடந்த சில பாண்டிய வாரிசுகளும் இருந்தனர்.

‘அவையோரே, இன்றுதான் கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து வருகிறோம். சோழநாடு நல்ல நிலையில் இல்லை. இந்நிலைமை நமக்குச் சாதகமாய்த்தான் இருக்கிறது. நம் மன்னன் வீரகேசரி, வீரராஜேந்திர சோழனோடு நடந்த போரில் வீர சுவர்க்கம் அடைந்தார். அது முதல் இங்கு, ஏற்கெனவே இருந்த சோழபாண்டியன் என்ற சோழ அரசுப்பிரதிநிதி ஆண்டுவருகிறார். இப்போது ஸ்திரமான சோழ மன்னன் இல்லை. இப்போது நாம் சோழ நாட்டைப் பிடிக்க வேண்டாம். அது விவேகமும் இல்லை. நாம் இழந்த பாண்டிய நாட்டில் மீண்டும் யாருக்கும் அடி பணியாத கயல் கொடி பறக்க வேண்டும். அதற்கே நாம் இங்கு கூடியிருப்பது. இப்போது கூட சோழன் பெயரில் இருக்கும் ஊரில்தான் நாம் சந்திக்க வேண்டியுள்ளது. இந்நிலைமை மாறவேண்டும்’ என்று முழங்கினார் ஸ்ரீவல்லபன்.

‘மன்னா, உங்கள் கட்டளைக்குக் காத்திருக்கிறோம். படைகள் எல்லாம் மறைவிடங்களில் தயார் நிலையில் இருக்கிறார்கள். ஆபத்துதவிகள், நாட்டுத் தலைமை அனைவரும் ஆங்காங்கு செய்தி அனுப்பிவிட்டார்கள். இன்னும் ஒரு இரவில் நாம் மதுரையம்பதி கோட்டையை முற்றுகையிட்டு, சோழபாண்டியர்களையும் வெளியேற்றி, நம் சுதந்திர மீன் கொடியைப் பறக்க விடலாம்’ என்றார் அமைச்சர் தீரதரன்.

‘சரி, இதுதான் நல்ல சந்தர்ப்பம். இப்போது அவர்களை வெளியேற்றினால் சோழப் படைகளும் இங்கு வராது. இவர்களை நிரந்தரமாய் மதுரைவிட்டே வெளியேற்றி, இனி திரை செலுத்தாத பழைய பாண்டிய மண்டலமாய் இருக்கலாம்’ என்ற மன்னன், மேலும் சில ஆலோசனைகளைச் சொல்லி, ஆங்காங்கு இருக்கும் சோழ பிரதிநிதி, படைகளை வெளியேற்ற வியூகம் வகுத்தார்.

மறுநாள் அந்தந்த நாட்டுத் தலைவர்கள் தங்களின் சிறுபடையுடன், சோழ படையை எதிர்கொண்டனர். சோழப் படைகள் இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்குக் கட்டளையிட சோழபாண்டிய பிரதிநிதிகள் அப்போது பாண்டிய நாட்டில் இல்லாதது ஸ்ரீவல்லபனுக்குக் கை கொடுத்தது. இரண்டு நாட்களில் சோழ நாட்டிலிருந்தும் உதவி கிடைக்காததால், சோழப்படைகள், மற்றை பிரதானிகள் எல்லாம் சோழ தேசம் திரும்பினர். அங்கும் உள்நாட்டுக் குழப்பம் இருந்தது. ஏற்கெனவே இருந்த பாண்டியர்களின் தாயாதி பிரச்சினை இருந்தது. ஆனாலும், ஸ்ரீவல்லபன் மதுரையின் பிரதான அரண்மையில் அமர்ந்தான்.

அன்றைய பொழுது பாண்டிய நாட்டில் நற்பொழுதாய்ப் புலர்ந்தது. ஆலவாயண்ணல் திருக்கோவிலில் யாழ் கொண்டு மருதம் இசைத்துக் கொண்டிருந்தனர் பாணர்கள். வீதியெங்கும் விழாக்கோலம். மிக நீண்ட ஆண்டுகளுக்குப் பின் பாண்டியநாடு தன்னாட்சி அடைந்திருந்தது. வீரப்போர் செய்து ஈட்டிய வெற்றி இல்லாததால், ஸ்ரீவல்லபன் இந்த வெற்றியைப் பெரிதாய்க் கொண்டாட இசையவில்லை. எந்த நேரமும் சோழர்கள் மீண்டும் போர் தொடுப்பார்கள் என்று எண்ணியிருந்தார். சில நாட்களில் அந்த திருமாலடியார் விசயன் அரசரைக் காண சோழ நாட்டிலிருந்து வந்தான்.

‘மன்னா, சோழ மன்னன் இப்போது இல்லை. சோழ நாட்டில் இன்னும் குழப்பம் தீரவில்லை. அடுத்த அரசனாய் குலோத்துங்கன் விரைவில் பட்டமேற்பார் என்ற பேச்சு வருகிறது’ என்றான் விசயன்

‘ஆம் விசயா, இப்போதுதான் அது பற்றி அமைச்சருடன் பேசிக் கொண்டிருந்தேன். நாம் இன்னும் முன்னேற்பாடாய் இருக்க வேண்டும். நீ காவிரிக் கரையில் கண்காணித்து வா. நாங்கள் இங்கு தயாராய் இருக்கிறோம். அப்புறம் வரதன், இராமானுஜரை சந்தித்தானா? ஸ்வாமியும் ஸ்ரீரங்கம் வந்துவிட்டாரா?’ என்று மிகுந்த ஆவலாய்க் கேட்டார் அரசர்.

‘அதைப் பற்றிச் சொல்லத்தான் வந்தேன். சோழ நாட்டிலுள்ள நிலையை அறிய மாருதி சிறியாண்டான் என்பாரை இராமானுசர் திருநாராயணபுரத்திலிருந்து அனுப்பியிருந்தார். கூரத்தாழ்வான், திருமாலிஞ்சோலையிலிருந்து திருவரங்கம் செல்வதற்கும், சிறியாண்டான் அங்கு வருவதற்கும் சரியாய் இருந்தது. இராமானுசர் எக்காலமும் அறிந்தவராயிற்றே. வரதனை தாங்கள் சொன்னபடி திருவரங்கப் பெருமான் பிரசாதங்களுடன் மேலும் ஒருவர் துணையோடு அனுப்பி வைத்தேன். அவரிடமிருந்து தகவல் வந்தது. இராமானுஜரை திருநாராயணபுரத்தில் சந்தித்ததாகவும், இங்குள்ள நிலை பற்றிச் சொன்னதாய் இருந்தது. இராமானுஜர் இவர்களைக் கண்டவுடன் மிக சந்தோஷித்து, இன்னும் சில திங்கள்களில் திருவரங்கம் திரும்புவதாய்ச் சொன்னதாகவும் இருந்தது. அதையும் நரசிங்க மங்கலத்தில் இருக்கும் ஸ்வாமியிடம் சொல்லலாம் என்று வந்தேன்’ என்றான் விசயன்.

‘ஆஹா. நன்னாளில் நல்ல செய்தியோடுதான் வந்தாய். இராமானுஜர் விரைவில் திருவரங்கம் திரும்ப வேண்டும். இப்போது நரசிங்க மங்கலம் நானும் வருகிறேன். நரசிம்மரைத் தரிசிக்க வேண்டும்’ என்ற அரசனும், விசயனும் அன்று மாலையே சென்றனர்.

அவர்கள் அதே இராஜேந்திரச்சோழ சதுர்வேதி மங்கலத்தைத் தாண்டித்தான் போனார்கள். சில நாட்கள் முன் மந்திர ஆலோசனை நடந்த அந்த மண்டபம் இருந்தது. மன்னனை அது ஏனோ ஈர்த்தது. அன்று திருமால் அடியார்களுடன் கலியனேரியில் பேசிக்கொண்டிருந்தது, திருவரங்கன் கண்ணழகு பற்றி அந்த ஸ்வாமி சொன்னது, ஆண்டாள் பாசுரம் எல்லாம் அவர் கண் முன் வந்து போனது. திருவரங்கன் கண்கள் ஏதோ சொல்வது போல் இருந்தது.

ஒரு முடிவுக்கு வந்தவராய் மேலும் பயணத்தைத் தொடந்தார். நரசிம்மரைத் தரிசித்துவிட்டு அங்கேயே இருக்கும் அந்த முதியவரைக் காணச் சென்றார். அவர், அடியார்களுக்கு திருவாய்மொழியின் ஒரு பாடலுக்கு பொருள் விளக்கிக்கொண்டிருந்தார். அது திருவேங்கடம் பற்றியது.

அண்ணல் மாயன் அணிகொள் செந்தாமரைக்

கண்ணன் செங்கனிவாய்க் கருமாணிக்கம்

தெண்ணிறை சுனைநீர்த் திருவேங்கடத்து

எண்ணில் தொல்புகழ் வானவர் ஈசனே.

செந்தாமரைக் கண்ணன்’ என்ற இடம் பற்றி விளக்கினார் அவர். அங்கு அமர்ந்து கேட்ட மன்னன், ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தான். பின்னர் அந்த ஸ்வாமியிடம் தனியே சந்தித்து விசயன் சொன்ன விஷயங்களை எல்லாம் சொன்னார். பின் தன் முடிவையும் சொன்னார்.

‘ஸ்வாமி, தாங்கள் இன்னும் சில காலம் இந்த பாண்டிய மண்டலத்தில் இருந்து நல்லுரைகளை வழங்க வேண்டும். இங்குள்ள ஜனங்களை அறவழியில் செலுத்த, மீண்டும் பாண்டிய தேசம் பழைய பொலிவு பெற அருளவேண்டும். இங்கிருந்து சில காத தூரம் இருக்கும் கிராமத்தில் ஒரு கோவில் நிர்மாணிக்க வேண்டும் என்று, வரும்போதுதான் எண்ணிக்கொண்டு வந்தேன். வந்த போதே, நீங்கள் சொன்ன பாடலும் அது போலவே அமைந்தது. எம்பெருமான் திருக்கண் கடாக்ஷம் எப்போதும் நமக்கும் வேண்டும். ஆகவே, ‘செந்தாமரைக்கண் ஆழ்வார் கோவில்’ என்று ஒரு கோவிலை விரைவில் நிர்மாணிக்கப் போகிறேன். தாங்கள் அங்கிருந்து கைங்கர்யங்கள் செய்ய வேண்டும். எம்பெருமானார் திருநாராயணபுரத்தில் இருப்பதால், புதிதாய் நிர்மாணிக்கும் கோவில் மற்றை பிடாகை நிலங்களையும் சேர்த்து ‘திருநாராயண நல்லூர்’ என்று பெயர் பெறட்டும். அதற்கான வேலைகளைத் தாங்கள் சம்மதித்தால் இப்போதே தொடங்குகிறேன்’ என்று அரசன் ஒரே மூச்சாய்ச் சொன்னதைக் கேட்டு அவர் திகைத்து நின்றார்.

‘அரசே, நான் சொல்ல என்ன இருக்கிறது. அரங்கனும், அழகனும் அதைத்தான் விரும்புகிறார்கள் போல் இருக்கிறது. எம்பெருமானார் திருவரங்கம் திரும்பியவுடன் நான் சிலகாலம் அங்கு சென்று வர வேண்டும். அதற்க்கு மட்டும் தாங்கள் அனுமதிக்க வேண்டும்’ என்றார் முதியவர்.

‘நல்லது. நிலைமை சீரானவுடன், அதற்கும் நானே ஏற்பாடு செய்கிறேன். நான் இப்போதே கோவில் திருப்பணிகளைத் தொடங்குகிறேன்’ என்று விடை பெற்றுச் சென்றார். அரண்மனை சென்றவுடன், அருகிருந்த பிடாகையிலிருந்து நிலங்கள் சேர்க்கப்பட்டு, ‘திருநாராயண நல்லூர்’ தனியாய் உருவாகி, மருதூர் என்ற கிராமத்தில் கண்ணாழ்வார் கோவிலுக்கு நிலம், வயல்கள், தீர்த்தக் குளம் என்று எல்லாம் வரையறுக்கப்பட்டு அதற்கான திருமுகம் எழுதப்பட்டு, நாட்டுத் தலைவர்கள் மூலம் பணிகள் நடந்தன.

பாண்டிய மண்டலத்தின் சிறந்த சிற்பிகள் பணி செய்தார்கள். அருகிலிருந்த மலையிலிருந்து தேவையான கற்பாறைகள் கொண்டுவரப்பட்டன. அரசன் அவ்வப்போது வந்து திருப்பணிகளைக் கண்காணித்துப் போனார். அர்த்த மண்டபம், மகாமண்டபம், சதுர கர்ப்பகிரகம் மற்றும் சிறந்த சிற்பவேலைகளோடு மிகவும் பிரமாண்டமாய் திருக்கோவில் நிர்மாணிக்கப்பட்டது. பாண்டியக் கட்டடக் கலையான யாளிகள் பிரம்மாண்டமாய்த் தூண்களில் அலங்கரித்தன. தனிக்கோவில் நாச்சியாருடன் கோவில் இருந்தது. கோவில் கர்ப்பகிரகம் சுற்றி மூடிய திருச்சுற்று, பிரதட்சனபாதம் கொண்டு சாந்தார வகைக் கோவிலாய், வேதத்தின் ஆறு அங்கங்கள் போல், கோவிலும் ஆறு அங்கங்களைக் கொண்டு, மூன்று வேதங்களைக் குறிக்க மூன்று தளங்களுடன், த்ரி-தள விமானத்துடன் முழுதும் கற்களால் உருவானது. கோவிலின் வெளியில் சந்திர புஷ்கரணி கட்டப்பட்டு, அது, ஸம்ப்ரோக்ஷணம் செய்யும் இரண்டு நாள்களுக்கு முன் பெய்த மழையில் நிரம்பியிருந்தது. உற்ஸவர், மூலமூர்த்தி நேர்த்தியான திருக்கண்களோடு, எம்பெருமான் திருமேனிகள் அமைந்தன. மங்கள தினத்தன்று, யாரும் எதிர்பாராது போல், உதயத்தில் சூரிய ஒளி, மண்டபங்கள் தாண்டி கர்ப்பகிரஹம் வரை வந்த போது, எம்பெருமான் கண்கள் மேலும் பிரகாசமாய்த் தெரிந்தது. அன்று உறங்காவில்லி தாசர் கண்ட கண்கள் போல், இன்று ஸ்ரீவல்லபன் எம்பெருமானைக் கண்ணாரத் தரிசித்து மகிழ்ந்தார். அருகில் அந்த பெரியவர் ஆழ்வார் பாசுரங்களை ஓதிக் கொண்டிருந்தார்.

*

காலம் இருபதாம் நூற்றாண்டு

‘ஆஹா, என்ன உன்னதமான கனவு இன்று. ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு முன் நடந்தது அப்படியே கண்முன் வந்தது போல் இருந்தது. நான் இன்னும் எத்தனை தவம் செய்தாலும் இது போல் அனுபவம் கிடைக்காது. இதைச் சொல்லத்தான் இந்த அதிகாலையில் இங்கு வந்தேன்’ என்று தன் கனவின் அனுபவத்தை உணர்ச்சியாய் சுந்தரராம பட்டர் இராகவ தீக்ஷிதரிடம் சொன்னார். இருவரின் கண்களிலும் கண்ணீர் ததும்பியது.

‘அருமை பட்டரே என்னையும் அந்தக் காலத்திற்கே அழைத்துச் சென்றுவிட்டீர். நான் இன்று இரண்டாம் காலம் பூஜைக்குத்தான் சொக்கலிங்கபுரம் கோவில் செல்கிறேன். இப்போது உங்களோடு மருதூர் வருகிறேன். நீங்கள் சொன்னதிலிருந்து பெருமானை தரிசிக்கவேண்டும் போல் இருக்கிறது’ என்று தீக்ஷிதர் சொல்ல இருவரும் மருதூர் கண்ணாழ்வார் கோவில் வந்தனர். அது மார்கழி மாதம். திருப்பள்ளியெழுச்சி பூஜைகளைச் செய்யத் தொடங்கினார் சுந்தரராம பட்டர். சிறிது நேரத்தில் தீக்ஷிதர், பட்டரை அழைத்துக் கொண்டு, கோபுரத்தடியில் இருக்கும் விரிவான கல்வெட்டைக் காட்டினார். அவர் அன்று கண்ட கனவின் ஒருபகுதி கண்களின் முன்னால் கல்லில் எழுத்துக்களாய் இருந்தது. அதை அவரால் தொடர்ப்புபடுத்திக் கொள்ள முடிந்தது.

ஸ்வஸ்திஸ்ரீ திருமடந்தையுஞ் செயமடந்தையும் திருப்புயங்களில் இனித்திருப்ப இருநிலமும் பெருமை எய்த…

இராஜேந்திரச்சோழ சதுர்வேதிமங்கலத்து மேல்பிடாகை திரவிய நண்ண ஈமருதூர் கண்ணாழ்வார்…

தேவர் மொழிந்தருளினபடி இவ்வாழ்வாற்கு தேவதான இறையிலியாக திருமாற்றுளரு…

கோவிலும் திருமுற்றமும் திருநந்தவனமும் தீர்த்தக்குளமும் திருவீதியும் உட்பட.. போகும் கேசவனேரி குளம் இரண்டும்..

முதலாக்கி இருபத்திரண்டாவது முதல் திருநாராயண நால்லூரென்னும்… ‘

‘அடியேன் இதுவரை இந்தக் கல்வெட்டை விரிவாய்ப் படித்ததில்லை. அடியேன் முன்னோர்கள்தான் சொல்லி இருக்கிறார்கள். நாங்கள் மதுரை நகரத்திலிருந்து இங்கு கைங்கர்யம் செய்ய வந்ததாகவும், எம்பெருமான் திருமஞ்சனத்தின் போது அவரின் திருமார்பில் இருக்கும் லக்ஷ்மி விக்ரஹம் களையப்பட்டிருக்கும். அப்போது பிரிவாற்றாமை இல்லாமல் இருக்க நாச்சியார் திருமொழி சேவிக்க வேண்டும் என்பது எங்களுக்கு முதலில் தரப்பட்ட கைங்கர்யம். இது இராமானுசர் திருமலையில் ஏற்படுத்தியது. அதை பாண்டியன் இங்கும் கொண்டு வந்தார் போலும். பின்னாளில் கோவிலில் அர்ச்சக கைங்கர்யமும் சேர்த்தே கிடைத்தது’ என்று பட்டர் தீக்ஷிதரிடம் சொன்னார்.

பட்டர் மேலும் அன்றைய திருமஞ்சனம், அலங்காரம் எல்லாம் விரைவாய், மிகவும் ஆதுரத்தோடு செய்தார். தீக்ஷிதர் அன்று அந்தக் கோவிலிலேயே வேதங்கள் சொல்லிக்கொண்டிருந்தார். அலங்காரம் நிறைவுற்று, உற்ஸவர் மூர்த்திகளைத் தரிசிக்கும் போது முன்பு எப்போது இல்லாதபடி மிகப் பிரகாசமாய் இருந்தார். அவர் கண்களிலிருந்து பேசுவது போல் இருந்தது. அன்று இருவருக்கும் கண்ணாழ்வார், கண்ணழகராகவே இருந்தார். இருவருமே கோவிலைவிட்டு அகல மனம் இல்லாதவராகவே இருந்தனர்.

பட்டர் வீடு வந்தவுடன், மனைவியிடம் அனைத்தையும் சொன்னார். அவரின் பிள்ளை ஸ்ரீதரன் வெளியூரில் குடும்பத்தோடு தங்கி, அரசாங்க உத்யோகம் பார்த்து வருகிறார். பட்டர் அவருக்கு நடந்த அனைத்தையும் கடிதத்தில் அனுப்பினார். இதுபோல் அவ்வப்போது அங்கு நடக்கும் விஷயங்கள் அனைத்தையும் கடிதத்தில் அனுப்பிவிடுவார், வீட்டில் கன்று போட்டாலும் கூட.

இவ்வாறாக நாட்கள் சென்றன. பட்டரும் மிகவும் உவப்போடு கைங்கர்யம் செய்துவந்தார். ஆனால் யாரும் எதிர்பார்க்காதது அன்று நடந்திருந்தது.

சிலநாட்களில், மீண்டும் ஒரு கடிதம் ஸ்ரீதருக்கு வந்தது. இம்முறை அவன் அம்மா கடிதம் எழுதியிருந்தார். கடிதத்தைப் படித்ததும் ‘ஆ.. ‘ என்ற பெருங்குரலோடு கீழே சரிந்தான். கடிதத்தின் சாராம்சம் இதுதான். ‘தை மாதம் பிறந்து சில நாட்கள் சென்றிருந்தன. பட்டரும் தீக்ஷிதரும் கோவில் சென்றிருந்தனர். கோவில் கருவறைக் கதவுகள் உடைக்கப்பட்டிருந்தன. உற்ஸவர் வழக்கமான இடத்தில் இல்லை. கடந்த மூன்று நாட்களாய் பட்டரும் தீக்ஷிதரும் எதுவும் உண்ணவில்லை. ஊரே உற்ஸவர்க்காய்க் காத்திருக்கோம்’ என்று உருக்கமாக இருந்தது சில வரிகள் மட்டுமே இருந்த கடிதம்.

ஸ்ரீதரின் மற்றொரு கையில் இருந்த சுதேசமித்திரன் நாளிதழ் தலைப்புச் செய்தியில் ‘மதராஸ் மாகாணம் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம்’ என்றிருந்தது.

அடிக்குறிப்பு:

  1. நரசிங்கமங்கலம் – இன்று நரசிங்கம் என்று வழங்கப்படுகிறது. மதுரை யானைமலை அடிவாரத்தில், ஒத்தக்கடை – திருமோகூர் வழியில் உள்ளது. திருமாலிருஞ்சோலை – அழகர் கோவில்.
  2. ஒரு சோழ மன்னன் ‘சிவனே முழுமுதற் தெய்வம்’ என்று வைணவர்கள் ஒத்துக்கொள்ள நிர்பந்திக்கப்பட்டதால், இராமானுஜர் சோழ மண்டலம் விட்டே சென்று, பல ஆண்டுகள் மேல்கோட்டையில் (திருநாராயணபுரம்) இருந்தார். கூரத்தாழ்வானுக்கும், பெரிய நம்பிக்கும் அரசனால் கண்கள் பறிக்கப்பட்டன. பின்னர் சில காலத்தில் அந்த அரசன் இறந்துபட்டான். அந்த மன்னனை ‘கிருமி கண்ட சோழன்’ என்றே வைணவ நூல்கள் சொல்கின்றன.
  3. சோழ நாட்டில் நடந்த விஷயங்களையும், திருவரங்க பெருமாள் பிரசாதங்களையும், திருநாராயணபுரம் கொண்டு சென்றார் அம்மங்கி அம்மாள். அங்கு இராமானுசர் அவரை வாரி அணைத்துக்கொண்டு, மந்த்ர உபதேசம் செய்தார் என்று குருபரம்பரா பிரபாவம், வார்த்தாமாலை போன்ற வைணவ நூல்கள் சொல்கின்றன. மாருதி சிறியாண்டான் பற்றிய குறிப்பும் குருபரம்பரா பிரபாவம் நூலில் வருகிறது.
  4. அரசு தொல்லியல்துறையின் இந்தக் கோவில் கல்வெட்டு பற்றிய குறிப்பில் ‘ஸ்வஸ்திஸ்ரீ’ என்ற பதம் கிரந்த எழுத்தில் இருக்கிறது. இன்றும் இந்தக் கோவில் பாழடைந்து கவனிப்பார் இன்றி இருப்பதாகவே தெரிகிறது.

————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கோமதி அம்மன் அஷ்டகம் -(ஸ்ரீ ஆதி சங்கரபகவத்பாதாள் இயற்றியது)–ஸ்ரீ கோமதி அம்மன் திருக்கோயில் ஸ்தல வரலாறு —

November 17, 2023
ஸ்ரீ குருப்யோ நம  :
(ஸ்ரீ ஆதி சங்கரபகவத்பாதாள் இயற்றியது)
சங்கரநயினார் கோவில் ஸ்தல மஹாத்மியம்
பூகைலாசே மனோக்யே புவன வ்ருதே
நாக தீர்த்தோப கண்டே ரத்னபராஹாரமத்யே
ரவிசதுர்ச மஹாயோகபீடே நிஷண்ணம்
ஸம்ஸார   வ்யாதி வைதயம் சகலஜனனுதம்
 சங்க பத்மார்ச்சிதாங்க்ரீம்
கோமத்யம்பாஸமேதம் ஹரிஹரவபுஷம்
ஸ்ரீ சங்கரேசம் நமாமி
ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதாள் அருளியது 
ஸ்ரீ கோமதி அஷ்டகம் 
லக்ஷ்மீவாணீ  நிஷேவிதாம் புஜபதாம்
லாவண்ய சோபாம், சிவாம்
லக்ஷ்மீ வல்லப பத்மஸம்பவநுதாம்
லம்போத ரோல்லாஸினீம்
நித்யம் கெளசிக வந்த்ய மானசரணாம்
ஹ்ரீங்கார மந்த்ரோஜ்வலாம்
ஸ்ரீ புன்னாக வநேச்வரஸ்ய மஹிஷீம்
த்யாயேத் ஸதா  கோமதி (1)
தேவீம் தாநவராஜ தர்பஹரிணீம்
தேவேந்த்ர ஸம்பத் ப்ரதாம்
கந்தர்வோரக யஷ ஸேவிதபதாம்
ஸ்ரீ சைல மத்யஸ்திதாம்
ஜாதீ சம்பக மல்லிகாதி குஸுமை
ஸம்சோபிதாங்கிரி  த்வாயாம்
ஸ்ரீ புன்னாக வனேச்வரஸ்ய மஹிஷீம்
த்யாயேத் ஸதா கோமதி (2)
உத்யத்கொடி விகர்த்தனத்யுதி நிபாம்
ஔர்வீம்   பவாம்  போநிதே
உத்யத் தாரக நாத்துல்ய வதனாம்
உத்யோதயந்தீம் ஜகத்
ஹஸ்தர்யஸ்த சுகப்ரணாள ஸஹிதாம்
ஹர்ஷப்ரதாம் அம்பிகாம்
ஸ்ரீ புன்னாக வனேச்வரஸ்ய  மஹிஷீம்
த்யாயேத் ஸதா கோமதி (3)
கல்யாணீம் கமணீ யமூர்த்தி சகிதாம்
கர்ப்பூர தீயோஜ்வலாம்
கர்ணாந்தாயத லோசனாம் களரவாம்
காமேஸ்வரீம் சங்கரீம்
கஸ்தூரீ திலகோஜ்வலாம் சகருணாம்
கைவல்ய ஸௌக்யப்ரதாம்
ஸ்ரீ புன்னாக வனேச்வரஸ்ய  மஹிஷீம்
த்யாயேத் ஸதா கோமதி (4)
வைடூர்யாதித ஸமஸ்ரத்ன கசிதே
கல்யாண ஸிம்ஹாஸனே
ஸ்தித்வா சேஷஜனஸ்ய பாலனகரீம்
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரீம்
பத்தாபீஷ்ட பலப்ரதாம் பயஹராம்
பண்டஸ்ய யுத்தோத்ஸுகாம்
ஸ்ரீ புன்னாக வனேச்வரஸ்ய  மஹிஷீம்
த்யாயேத் ஸதா கோமதி (5)
சைலாதீச ஸுதாம் ஸரோஜ நயநாம்
ஸர்வாக வித்வம்ஸினீம்
ஸன்மார்க்க ஸ்திதலோகரக்ஷ ஜனனீம்
ஸர்வேச்வரீம்  சாம்பவீம்
நித்யம் நாரத தும்புருப்ரப்ருதிபி
வீணா விநோதஸ்திதாம்
ஸ்ரீ புன்னாக வனேச்வரஸ்ய  மஹிஷீம்
த்யாயேத் ஸதா கோமதி (6)
பாபாரண்ய தவானவாம் ப்ரபஜதாம்
பாக்யப்ரதாம் பக்திதாம்
பக்தாபத்குலசைல போதன பவிம்
ப்ரத்யஷ  மூர்த்திம் பராம்
மார்க்கண்டேய பராசராதி முனியி
ஸம்ஸ் தூயமானாமுமாம்
ஸ்ரீ புன்னாக வனேச்வரஸ்ய  மஹிஷீம்
த்யாயேத் ஸதா கோமதி (7)
சோராரண்யா நிவாஸினாம்  ப்ரதிதினம்
ஸ்தோத்ரேண  பூர்ணாந நாம்
த்வத்பாதாம் புஜஸக்த பூர்ணமனஸாம்
ஸ்தோகேத ரேஷ்ட ப்ரதாம்
நாநா வாத்யவைச்ச சோபிதபதாம்
நாராயணஸ்யானுஜாம்
ஸ்ரீ புன்னாக வனேச்வரஸ்ய  மஹிஷீம்
த்யாயேத் ஸதா கோமதி (8)
– சுபம்-
————
கோமதி அம்மன் அஷ்டகம் !
1.பூனகலாஸே மனோக்ஞே புவன வனவ்ருதே
நாகதீர்த்தோபகண்டே
ரத்னப்ராகார மத்யே ரவிசந்த்ர மஹாயோக
பீடே நிஷண்ணம் |
ஸம்ஸார வ்யாதி வைத்யம் ஸகலஜனநுதம்
சங்கபத்மார்ச்சிதாங்க்ரிம்
கோமத்யம்பாஸமேதம் ஹரிஹரவபுஷம்
சங்கரேசம் நமாமி ||
பூசைலாசமெனப்படும் சங்கரநாராணர் கோவிலில் உலகமாகிற காட்டினால் சூழப்பெற்றதும், நாகதீர்த்த மெனப்படும் குளத்தின் அருகிலுள்ளதும், ரத்தினங்களாலான பிராகாரத்தின் நடுவில் உள்ளதுமான சூரிய, சந்திரராகிற யோகபீடத்தில் வீற்றிருப்பவரும், சங்கு, தாமரை முதலிய ரேகைகளைத் திருவடியில் கொண்டவரும், பிறப் பிறப்பு என்கிற நோய்க்கு வைத்தியராயும், கோமதி அம்பாளுடன் கூடியவரும், முக்கண்ணன், திருமால் இரண்டையும் ஒரே உருவத்தில் கொண்டவருமான ஸ்ரீ சங்கரேச்வரரான ஸ்ரீசங்கரலிங்கரை வணங்குகின்றேன்.
————-

தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில் அமைந்துள்ளது சங்கரநயினார் கோவில். இக்கோயிலின் இறைவன் சங்கரலிங்கசுவாமி; இறைவி கோமதி அம்மன் என்ற ஆவுடையம்மன். உக்கிரப் பாண்டியன் என்னும் மன்னனால் கட்டப்பட்ட இக்கோயிலின் தொன்மை கி.பி.1022 ( கோவிலமைப்பு ). இக்கோவிலில் ஆடித் தவசு விழா ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது

ஸ்ரீ கோமதி அம்மன், சிவனை வேண்டி ஊசி முனை மேலிருந்து தவம் செய்யும் யோகினி. சங்கன், பதுமன் என்ற இரு நாக மன்னர்களிடையே சண்டை மூண்டது. சங்கன் தன் கடவுளான சிவனே அதிக ஆற்றல் உள்ளவர் என்றும் பதுமன் தன் விருப்பக் கடவுளான திருமாலே அதிக ஆற்றல் உடையவர் என்றும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இருவரும் அம்மனிடன் சென்று முறையிட்டனர். சங்கன், பதுமன் மட்டுமின்றி, இறைவனின் முழு வடிவத்தை உலக மக்கள் உணர வேண்டும் என அம்மன் சிவனிடம் வேண்ட, அம்மனின் வேண்டுகோளுக்கு இணங்க சிவன், சங்கரநாராயணராகக் (சங்கரன்-சிவன்; நாராயணன்-திருமால்) காட்சியளித்தார்கள். கடவுளர் இருவருமே சமம் என்றும், அன்பினாலும் தியாகத்தாலும் மட்டுமே இவர்களை அடைய முடியும் என்றும், சிவனும் திருமாலும் இணைந்த சங்கரநாராயணர் தோற்றத்தால் உணர்த்தப்பட்டது. நாகர் இருவரும் இறைவனை வழிபட்டு, கோமதி அம்மனுடன் தங்கினர். நாகங்கள் அம்மனுடன் குடியிருப்பதால், இந்தத் தேவியை வணங்குவதன் மூலம், பயத்தைப் போக்கலாம். இங்கு உள்ள புற்று மண் மிகவும் பிரசித்தி பெற்றது. புற்று மண்ணை நெற்றியில் திருநீராக எண்ணி பக்தியுடன் பக்தர்கள் இட்டுக்கொள்வார்கள். பாம்பாட்டி சித்தர் இவ்வூரிலே வாழ்ந்து, தேவியின் மகிமைகளை உலகறியச் செய்தார். இவரது சமாதியும் கோவிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது. இத்தலம் தென்பாண்டி நாட்டின் பஞ்சபூத தலங்களில் மண்தலம் (ப்ரித்திவி) ஆகும்

காவற் பறையன்

மணிக்ரீவன் என்ற தேவன் பார்வதி தேவியின் சாபத்தாற் பறையனாகிப் புன்னைவனக் காவலராக இருந்தார். அதனால் அவர் காப்பறையன் என்றும், காவற் பறையன் என்றும் பெயர் பெற்றார்.

கரிவலம்வந்தநல்லூர்ப் பால்வண்ண நாதருக்குப் புன்னைவனத்திலே ஒரு பூந்தோட்டம் இருந்தது. அதற்கும் அவரே காவல்.

தோட்டத்தின் ஒரு பக்கம் புற்றொன்று வளர்ந்தது. அதை ஒரு நாள் அவர் வெட்ட அதிலிருந்த பாம்பின் வாலும் வெட்டுப் பட்டது. அப்போது அவர் புற்றின் பக்கத்தில் சிவலிங்கம் இருப்பதையும் கண்டார்.

அதே சமயத்தில் உக்கிரபாண்டியர் அடுத்த வனத்தில் வந்திருப்பதாக அறிந்து செய்தி தெரிவிக்க ஓடினார்

உக்கிரபாண்டிய அரசர் கோவில் கட்டி ஊர் உண்டாக்கியது

திருநெல்வேலிக்கு மேலே பொருநையாற்றின் கரையிலுள்ள மணலூரில் அரசாண்டிருந்த உக்கிரபாண்டியர் அடிக்கடி மதுரை சென்று மீனாட்சியம்மையையும், சொக்கப்பெருமானையும் வழிபாடு செய்யும் வழக்கமுடையவர். காவற்பறையன் புற்றை வெட்டிச் சிவலிங்கத்தைக் கண்ட அன்று, பாண்டியருடைய யானை கொம்பினால் தரையைக் குத்திக் கீழே விழுந்து புரண்டது. பாண்டியர் ஒன்றும் செய்ய அறியாது திகைத்திருந்த போதுதான் காவற்பறையன் ஓடிவந்து அரசரிடம் செய்தி தெரிவித்து உடன் வர அழைத்தார். உக்கிரபாண்டியர் சென்று புற்றினையும் புற்றிடங் கொண்டாரையும், கூழைவாலினதாக்கிய பாம்பினையும் கண்டார். சங்கரனார் அசரீரியாக ஆனைதரப் பாண்டியர் காடு கெடுத்து நாடாக்கிக் கோவில் கட்டிச் சங்கரநயினார் கோவில் ஊரையும் தோற்றுவித்தார். கோவிலில் கோபுரத்தைத் தாண்டியதும் ( கோவில் நிர்வாக அலுவலக இடப்புறத் தூணில் ) காவற்பறையன் திருவுருவத்தை இப்போதும் காணலாம்.

காவற்பறையன் அவர்களுக்கு ஊரில் தெற்கே ஒரு சிறு கோயில் இருக்கிரது. அது இருக்கும் தெரு காப்பறையந்தெரு என்று வழங்கிவந்தது. காப்பறையன் தெரு, தற்போது முத்துராமலிங்கம் தெருவென ஆகிவிட்டது. ஆனால், காவற்பறையன் கோவில் அதே தெருவில் இன்றும் உள்ளது. நித்திய பூஜைகளும் உண்டு. சித்திரைவிழா ஆரம்பமாகுமுன்பு, காவற்பறையனுக்குச் சிறப்பு வழிபாடு நடத்திய பின்னரே பெரிய கோயிலிலே கொடி ஏற்றம் நிகழும்.

சங்கரலிங்கப் பெருமான் திருச்சந்நிதியுட் செல்லும்போது பலிபீடம், கொடிமரம் இவற்றைத் தாண்டியவுடன் தூண்களில் உக்கிரபாண்டியனையும், உமாபதி சிவாச்சாரியாரையும் காணமுடியும். யானை தனது பெரிய கொம்பினால் குத்தியமையினாலே அவ்விடத்தில் உண்டாயிருக்கிர ஊர் பெருங்கோட்டூர் என்று பெயர் பெற்றது. ( கோடு – கொம்பு ) உக்கிரபாண்டியர் கோயிற் பூஜைக்கு மிகுந்த நிலங்களைக் கொடுத்து ஒரு சித்திரை மாதத்திலே யானை மேலேறிக்கொண்டு தாம் இறைவனைக் காணக் காரணமாயிருந்த இடமாகிய பெருங்கோட்டூருக்குப் போய் யானை பிடிமண் எடுத்துத் தரக் கொண்டுவந்து பெருந்திருவிழா நடத்தி மகிழ்ந்தார். இத்திருவிழா இன்றும் நடைபெறுகின்றதை நாம் காணலாம்.

ஸ்ரீ கோமதி அம்மன் – மஹா யோகினி சக்தி பீடம்

தந்தையாகிய தட்சனால் அவமதிக்கப்பட்ட தாட்சாயிணி அந்த யாகம் அழியுமாறு சபித்து விட்டு, தட்சன் தந்த உடல் தனக்கு வேண்டாமென தட்சன் நடத்திய யாகத்தின் தீயிலேயே எரிந்து போகிறாள். சிவனால் படைக்கப்பட்ட வீரபத்திரர் அந்த யாகத்தை அழித்தார். மனைவி இறந்த வருத்தத்தில், சிவன் தன் மனைவி தாட்சாயிணியின் இறந்த உடலை எடுத்துக் கொண்டு ஊழித்தாண்டவம் ஆடினார்.

சிவனின் ஆட்டத்தை நிறுத்த விஷ்ணு தன் சக்ராயுதத்தால் தாட்சாயிணியின் உடலை 51 துண்டுகளாக வெட்டி வீழ்த்தினார். பிறகு சிவன் சாந்தமானார். சிதறிய தாட்சாயிணியின் உடல் பகுதிகள் விழுந்த 51 இடங்கள் பிரதான சக்தி பீடங்களாயின. அந்த உடல் பாகங்களில் இருந்து ரத்தம் , சதை பாகங்கள் தெறித்து விழுந்த பகுதிகள் உப சக்தி பீடங்கள் ஆயின .

அந்த வகையில் அம்பிகையின் நெற்றியின் உள்பகுதி, அதாவது குண்டலினி எழும்பி பாம்பு போல் படம் விரித்து ஆடும் பகுதியான சஹஸ்ராரம் விழுந்த பகுதிதான் சங்கரன்கோவிலில் அமைத்துள்ள ஸ்ரீ கோமதி அம்மன் சன்னதி ஆகும் .

அன்னையின் அருள்ட்சொருபம்

ஸ்ரீ கோமதி அம்மன் கோவில், சங்கரன்கோவில் ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி கோவிலில் உள்புறம் தனி தங்கக்கொடிமரத்துடன் தனி கோவிலாக கிழக்கு நோக்கி அமைந்துள்ளது . தனி நந்தி பலிபீடம் அமைத்துள்ளது . ஸ்ரீ கோமதி அம்மன் அழகே உருவானவளாக ஸ்ரீசக்ர பீட பஞ்ச பிரம்மாசனத்தின் மேல் வலது இடை நெளிந்து , வலது கையில் மலர்பாணம் மற்றும் பூச்செண்டு எந்தியவளாக , இடது கையை பூமியைநோக்கி தளரவிட்டவளாக இளமங்கை கோலத்தில் புன்னகை பூத்த முகத்துடன் சர்வாலங்கார பூசிதையாக கருணை பொங்க காட்சி தருகிறாள் . மேலும் இது தசமஹா வித்யா பீடத்தில் சோடஷி பீடமாகும் . அன்னை சோடஷி ரூபமாக ஸ்ரீ லலிதாமஹா திரிபுர சுந்தரியாக, கமேஸ்வரியாக காட்சி தருகிறாள். அன்னையின் நான்கு கரங்களில் பாசம் அங்குசம் வைத்துள்ள மேல் இரு கைகளும் மற்றும் கரும்பு வில்லும் இங்கு அரூபமாக உள்ளன . அவற்றை நாம் நம் கண்களால் காண முடியாது என்றும், தவ வலிமை பெற்ற யோகிகளால் மட்டுமே அவற்றை காண முடியும் என்றும் , யாருக்கு அந்த தரிசனம் கிடைக்கபெறுகிறதோ அவர்களுக்கு அஷ்டமா சித்திகளும் வசப்படும் என்றும் கூறப்படுகிறது.

அன்னையின் சிறப்பு

அன்னை பராசக்தி கோமதி அம்பிகை ஹரியும் ஹரனும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்த , ஸ்ரீ சங்கர நாராயண கோலம் காண இந்த ஸ்தலத்தில் தவம் இயற்றினாள் . ஆடி பௌணமி உத்தராட நக்ஷத்திர தினத்தில் ஸ்ரீ சங்கரநாராயண தரிஷனம் அன்னை கோமதிக்கு கிட்டியது . இதை உணர்த்தும் விதமாக இங்கே ஆடி தபசு பிரம்மோத்சவம் ஆடி மாதத்தில் கொண்டாடபடுகிறது . இவ்விழாவில் அன்னை கோமதிக்கு தங்ககொடிமரத்தில் கொடியேற்றம் செய்யப்பட்டு 10 நாட்கள் அன்னையே காலையிலும் மாலையிலும் இரவிலும் வீதி உலா கண்டருள்கிறாள் . 11ஆம் நாள் இறைவன் , இறைவிக்கு சங்கரநாராயண கோலத்தில் காட்சியளிக்கிறார் . மேலும் இது அன்னையின் சஹஸ்ராரம் விழுந்த ஸ்தலமாகையால் அன்னை இங்கே மஹா யோகிநியாக , தபஸ் ஸ்வரூபிணியாக காட்சியளிக்கிறாள் . அம்பிகை சன்னதியின் முன்பு ஆக்ஞா சக்கரம் பதிக்கப்பட்டுள்ளது . இதில் அமர்ந்து பக்தர்கள் நினைத்த காரியம் நிறைவேற வேண்டிக்கொண்டு பயனடைகிறார்கள் . மேலும் மனநிலை சரியில்லாதவர்கள் , பேய் பிசாசு மற்றும் துர்சக்தியால் பீடிக்கப்பட்டவர்கள் இந்த சக்கரத்தின் மேல் அமர்ந்து குணமடைந்து செல்வது கண்கூடு . இங்கு அம்பிகையின் புற்றுமண் பிரசாதம் வெகுசிறப்பு. இதை உண்டால் வயிற்றுவலி மற்றும் உடல்வியாதிகள் தீரும் என்பது அனேக பக்தர்களின் நம்பிக்கை.

குழந்தை வரம் வேண்டியும் பிரார்த்தனைகள் நடக்கிறது . இங்கேதான் 18 சித்தர்களில் ஒருவரான பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி அமைத்துள்ளது.

பாம்பாட்டி சித்தர் கோமதி அம்மனை வாளைகுமாரியாகவும் , குண்டலினி சக்தியாகவும் , பாம்பு வடிவமாகவும் வழிபட்டிருக்கிறார் . எனவே காளஹஸ்திக்கு அடுத்தபடியாக இது கால சர்ப்ப தோஷம் போக்கும் ஸ்தலமாகவும் , ராகு கேது தோஷம் நீக்கும் ஸ்தலமாகவும் விளங்குகிறது . செவ்வாய் தோஷத்தை நீக்கி திருமணத்தடை அகற்றும் ஸ்தலமாகவும் சங்கரன்கோவில் விளங்குகிறது .

அன்னைக்கு பூஜைகள் :

கோவிலில் ஆறு கால பூஜைகள் நடக்கிறது . சுவாமிக்கு நடக்கும் அத்தனை பூஜை உபசாரனைகளும் அம்பிகைக்கும் நடக்கிறது . அம்பிகை கோவிலில் தங்க ஊஞ்சல் உள்ள பள்ளியறை உள்ளது . பள்ளிஎழுச்சி பூஜை முடிந்த பின் முதல் பெரிய தீபாராதனை அம்பிகைக்கே முதலில் நடக்கிறது . வொவ்வொரு தமிழ் மாத பிறப்பன்றும் கோமதி அம்பிகையின் தங்க ரத உலா நடக்கிறது . திங்கள் கிழமை மலர்ப்பாவாடையும் , செவ்வாய்கிழமை வெள்ளிபாவாடையும் , வெள்ளிகிழமை தங்க பாவாடையும் அம்பிகைக்கு சார்த்தபடுகிறது . வொவ்வொரு பவுர்ணமி அன்றும் அம்பிகைக்கு நவாவர்ண பூஜை நடைபெறுகிறது . தினமும் லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை நடக்கிறது . சிறுப்பு நாட்களில் அம்மனுக்கு சந்தனக்காப்பு நடக்கிறது . கோமதி அம்மனுக்கு தினமும் காலையிலும் , உச்சி வேளையிலும் , சாயங்கால பூஜையிலும் , இரவு பள்ளியறை பூஜைக்கு முன்பும் , 4 வேலைகள் அபிஷேகம் நடக்கிறது . இங்கு தங்கம், வெள்ளி காணிக்கை செலுத்துவதும்,முடி காணிக்கையும், மாவிளக்கு போட்டு பிரார்த்தனை செய்வதும் பிரதானமாக உள்ளது .

கோயிலும், அதன் பகுதிகளும்

கோயிலின் தென்பகுதியில் சங்கரலிங்கப் பெருமான் சந்நிதி அமைந்துள்ளது. வட பகுதியில் கோமதி அம்பிகை சந்நிதி அமைந்துள்ளது. இவ்விரண்டு சந்நிதிகளுக்கும் தனித்தனிக் கருப்பக் கிரகம், அர்த்த மண்டபம், அந்தராள மண்டபம், மணி மண்டபம், மா மண்டபம், பரிவார மண்டபம், சுற்று மண்டபங்கள் இருக்கின்றன. தென் பகுதியில் உள்ள சங்கரலிங்கப் பெருமான் சந்நிதியில் கொடிமரம், பலிபீடம், உத்திராட்சத் தொட்டில் ( மேல் நோக்கிப் பார்த்தல் வேண்டும் ) தாண்டி உள்ளே செல்ல முகப்பில் அதிகார நந்தியும் சுயஜா தேவியும் அமைந்திருக்கின்றன. கீழப் பிரகாரம் வலதுபுறத் தூணில் இக்கோயிலைக் கட்டிய உக்கிர பாண்டிய அரசன் உருவச் சிலையும் இடதுபுறத் தூணில் உமாபதி சிவமும் நின்று வணங்கும் கோலத்தில் தோற்றமளிக்கின்றனர். தெற்குப் பிரகாரத்தில் சைவ சமய குரவர், மாணிக்க வாசகர், திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர், சுந்தரமூர்த்தி ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். இதனைத் தொடர்ந்து திருத்தொண்டர் புராணமியற்றிய சேக்கிழார் சுவாமிகள், மகா விஷ்ணு, அறுபத்து மூன்று நாயன்மார்கள், சுரதேவர், காந்தாரி, பிரம்ம சக்தி, ஈச சக்தி, குமார சக்தி, விஷ்ணு சக்தி, வரஹா சக்தி, இந்திர சக்தி, சாமுண்டி சக்தி எழுந்தருளியுள்ளனர். அடுத்து சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி இருக்கின்றார். வடக்குப் பிரகாரம் தென்பக்கம் ஒரு புற்றில் வன்மீகநாதர் இருக்கின்றார். சண்டிகேஸ்வரர் சந்நிதியும் இங்கே உள்ளது. வடபக்கம் சனி பகவான், காசி விசுவநாதர், பைரவர், துர்கா தேவியைக் காணலாம். கீழ்ப் பிரகாரத்தில் சந்திர சூரியர்கள் உள்ளனர்.

மஹா யோகினி சக்தி பீடம்

கோயிலின் தென்பகுதியில் சங்கரலிங்கப் பெருமான் சந்நிதி அமைந்துள்ளது. வட பகுதியில் கோமதி அம்பிகை சந்நிதி அமைந்துள்ளது. இவ்விரண்டு சந்நிதிகளுக்கும் தனித்தனிக் கருப்பக் கிரகம், அர்த்த மண்டபம், அந்தராள மண்டபம், மணி மண்டபம், மா மண்டபம், பரிவார மண்டபம், சுற்று மண்டபங்கள் இருக்கின்றன. தென் பகுதியில் உள்ள சங்கரலிங்கப் பெருமான் சந்நிதியில் கொடிமரம், பலிபீடம், உத்திராட்சத் தொட்டில் ( மேல் நோக்கிப் பார்த்தல் வேண்டும் ) தாண்டி உள்ளே செல்ல முகப்பில் அதிகார நந்தியும் சுயஜா தேவியும் அமைந்திருக்கின்றன. கீழப் பிரகாரம் வலதுபுறத் தூணில் இக்கோயிலைக் கட்டிய உக்கிர பாண்டிய அரசன் உருவச் சிலையும் இடதுபுறத் தூணில் உமாபதி சிவமும் நின்று வணங்கும் கோலத்தில் தோற்றமளிக்கின்றனர். தெற்குப் பிரகாரத்தில் சைவ சமய குரவர், மாணிக்க வாசகர், திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர், சுந்தரமூர்த்தி ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். இதனைத் தொடர்ந்து திருத்தொண்டர் புராணமியற்றிய சேக்கிழார் சுவாமிகள், மகா விஷ்ணு, அறுபத்து மூன்று நாயன்மார்கள், சுரதேவர், காந்தாரி, பிரம்ம சக்தி, ஈச சக்தி, குமார சக்தி, விஷ்ணு சக்தி, வரஹா சக்தி, இந்திர சக்தி, சாமுண்டி சக்தி எழுந்தருளியுள்ளனர். அடுத்து சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி இருக்கின்றார். வடக்குப் பிரகாரம் தென்பக்கம் ஒரு புற்றில் வன்மீகநாதர் இருக்கின்றார். சண்டிகேஸ்வரர் சந்நிதியும் இங்கே உள்ளது. வடபக்கம் சனி பகவான், காசி விசுவநாதர், பைரவர், துர்கா தேவியைக் காணலாம். கீழ்ப் பிரகாரத்தில் சந்திர சூரியர்கள் உள்ளனர்.

சங்கரலிங்கப்பெருமானின் மற்றொரு சிறப்பு. ஆண்டுதோறும் செப்டம்பர் மற்றும் மார்ச் மாதங்களில் 21, 22, 23 தேதிகளில் சூரிய ஒளி மானுடர்கள் சென்று தரிசனம் செய்யும் வாசல்கள் வழியாகவே நீள வாக்கில் சென்று, லிங்கத்தின் வலப்புறமாக விழத்துவங்கி சிறிது சிறிதாக நகர்ந்து சிவலிங்கத் திருமேனி முழுவதும் வியாபிக்கும். சிலசமயம் நான்கு நாட்கள் கூட விழும். இது போன்ற கோயில்கள் தமிழ் நாட்டில் சில உள்ளன. நான்கு நாட்கள் சூரியக் கதிர்கள் தவறாமல் விழும் களக்காடு கோவிலை உதாரணமாகக் கூறலாம்.

`

மஹா யோகினி சக்தி பீடம்

சங்கரனார் கோயில் ஓர் அழகிய கோயில். மகா மண்டபத்தைச் சுற்றி பல திருவுருவங்கள் நான்கு பக்கங்களிலும் செதுக்கப்பட்டிருக்கின்றன. உருவங்கள் சிறிதெனினும் சிற்பச் செறிவு பாராட்டத்தக்கது. அவையாவன : துவாரபாலகர், யோக நரசிம்மம், கார்த்த வீரியன், தசகண்ட இராவணன், ஹிரண்ய சம்ஹார மூர்த்தி, கணபதி, வீணா காளி, பத்திரகாளி, மாறியாடும் பெருமாள், அகோர வீரபத்திரர், நடராஜர், துவாரபாலகர் 2, ரிஷபாரூடர், உபதேச தஷ்ணமூர்த்தி, ருத்ர மூர்த்தி, ஐம்முகப் பிரம்மா, ஸிம்ஹவாஹன கணபதி, ஸ்ரீ இராமர், மன்மதன், வெங்கடாசலபதி, செண்பக வில்வவாரகி, சங்கரநாராயணர், சந்திர சேகரர், துவார பாலகர் 2 , உக்கிரபாண்டிய அரசர், ஸிம்ஹாசனேஸ்வரி, மஹாவிஷ்ணு, பாலசுப்பிரமணியர், துர்க்காதேவி, ஸ்ஹண்முகர், மகிஷாசுர மர்த்தினி, கபாலி, கால பைரவர், ஊர்த்துவ தாண்டவர், தில்லைக்காளி, கஜசம்ஹார மூர்த்தி, தக்ஷசம்ஹார மூர்த்தி, உச்சிட்ட கணபதி, ராமர், லட்சுமணர், பரமேஸ்வரர், மயூராரூடர், மஹா விஷ்ணு, வீரபத்திரர், பைரவர், த்ரிவிக்கிரமர், வாமனாவதாரம், ஹம்சாரூடர், துவாரபாலகர். மேலும், இம்மதிலைச் சுற்றி தென்பக்கம் தக்ஷிணாமூர்த்தி, மேல்பக்கம் நரஸிம்மமூர்த்தி, வடபக்கம் பிரம்மாவும் எழுந்தருளியுள்ளார்கள்,

திருக்கோயில் கர்ப்பக்கிரஹத்தில் சங்கரலிங்கப் பெருமான் சிறிய உருவமாயெழுந்தருளியிருக்கிறார். கூடவே மனோன்மணி தேவியும் வீற்றிருக்கின்றாள். மண்டபத்தில் தெற்கு பார்க்க நடராஜ மூர்த்தி ஊன நடனமும், ஞான நடனமும் செய்தருள்கின்றார்.சிவகாமியம்மையாரும் தாளம் போடுகின்றனர். காரைக்காலம்மையார் கூடவே இத்திருக்கூட்டத்தைக் கண்டு ஆனந்தத்தில் மூழ்கி பாடிக்கொண்டிருக்கின்றாள்.,

ஆடித் தபசு

சங்கரநாராயணர் திருக்கோவில்

ஆடி மாதத்தின் உத்திராட நாளில் சங்கரநாராயணர் கோமதி அம்மனுக்கும், சங்கன், பதுமன் ஆகியோருக்கும் காட்சியளித்த நாளை நினைவுகூரும் வகையில் இவ்விழா ஆடி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. அம்பலவாணதேசிகர் ஓர் மந்திரச் சக்கரத்தைப் பதித்துள்ளார். அந்த சக்கர பீடத்தில், . அம்மனுக்கு வழங்கப்படும் நைவேத்தியங்களில் மாவிளக்கு முக்கியத்துவம் பெறுகிறது. கோவிலுக்கு வருவோர், தங்கம், பித்தளை, வெண்கலச் சாமாங்கள், துணி, ஆடு, கோழி, உப்பு, மிளகாய், மிளகு, காய்கறிகள், பலவகைத் தானியங்கள் மற்றும் பாம்பு, தேள் ஆகியவற்றின் வெள்ளியால் செய்யப்பட்ட சிறு தகடுகளை காணிக்கையாகச் செலுத்துகின்றனர். இவை ஏலம் போடப்படும். உண்டியல்கள் மூலமாக ரொக்கப் பணமும் சாமான்களும் வரும்

சிவன், அம்பாள் சன்னதிகளுக்கு நடுவில் சங்கரநாராயணர், சன்னதி உள்ளது. அம்பாள் சந்நிதிகளில் பீடத்திற்கு அடியில் அல்லது அம்பிகையின் பாதம் முன்பு ஸ்ரீசக்ரம்

அம்மன் – கோமதி அம்மன் தல விருட்சம் – புன்னை தீர்த்தம் – நாகசுனை தீர்த்தம் ஊர் – சங்கரன்கோவில் மாவட்டம் – திருநெல்வேலி அரியும் சிவனும் ஒன்று என்பதை நிரூபிக்க அம்பாள் பார்வதி, “கோமதி” என்னும் பெயரில் பூலோகம் வந்து தவமிருந்த இடமே சங்கரன்கோவில். சங்கன் என்னும் நாக அரசன்
சிவன் மீதும், பதுமன் என்ற அரசன் திருமால் மீதும் பக்தி கொண்டிருந்தனர். இருவருக்கும் சிவன் பெரியவரா திருமால் பெரியவரா என்ற வாதம் எழுந்தது. தீர்ப்பு வேண்டி பார்வதியிடம் முறையிட்டனர். இருவரும் சம சக்தி கொண்டவர்களே என்பதை அவர்களுக்கு காட்ட, இருவரும் இணைந்து காட்சி தரும்படி அம்பாள் தவமிருந்தாள். அவளுடன் தேவர்கள் பசுக்கள் வடிவில் வந்து வணங்கி வந்தனர். பசுவை ”கோ” என்பர். தவக்காலத்தில் அம்பாளின் முகம் “மதி” போல் பிரகாசித்தது. எனவே அவள் “கோமதி” “கோமதி” எனப்பட்டாள். “ஆவுடையம்மாள்” என்றும் இவளை அழைத்தனர்.

—————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ தேன்கனிக்கோட்டை வேட்டையாடிய பிரான் திருக் கோயில்

November 17, 2023

மூலவர் திருவடிகளில் தாயார் இங்கும்
உத்சவர் திருவடிகளில் தாயார் இல்லை
ஆய் ஸ்வாமிகள் பரம்பரையில் வந்தவர் தீர்த்தக்காரர்கள்
கோயில் திருமலை பெருமாள் கோயில் திரு நாராயண புரம் நான்கு திவ்ய தேசங்களுடன் தொடர்பு
உகாதி -நான்கு நாள்கள் உத்சவம் -கல்யாண உத்சவமம் நடைபெறும்

வைகுண்ட வாசல் சங்கராந்தி அன்றும் மூன்று நாள்கள் திறப்பார்களாம்-மாலைகள் எங்கும் காணும் படி சேவை உண்டாம்
திரு வெள்ளறை அர்ச்சகர்கள் இங்கு வந்து அர்ச்சனை பண்ணுகிறார்களாம்
திரு ஆடிப்பூரம் -தாயார் இங்கு -13 நாள்கள் உத்சவம் -மூன்று நாள்கள் சேர்த்தி சேவை உண்டாம்

வைகாசி விசாகம் கருட சேவை இங்கும் உண்டு
அடுத்த மூன்றாம் நாளும் திருவரங்கம் போல் இங்கும் கருட சேவை உண்டாம்

செய்ய தாமரை -பதிகம் -தஞ்சமாகிய தந்தை -பாசுரம்-பதிகம் இந்த திவ்ய தேசத்துக்கே சமர்ப்பித்தார்கள் -அர்ச்சையின் எல்லை யான திவ்ய தேசம் என்பதால்

Sri U Ve KS Narayanan Swami || || (Abhimana Sthala Dharshanam) ” Denkanikottai” ||

வேட்டையாடி வருவானை
வேங்கடத்துக்கு உய்த்திடுமின்
நாச்சியார் மங்களா சாசனம் -இதற்கு என்று அவனே இவன் என்பார்-ஏகாந்தமான திவ்ய தேசம்

வேட்டையாடிய பிரான் கோயில் அல்லது பேட்ராய சாமி கோயில் (பேட்டே என்ற கன்னட சொல்லுக்கு வேட்டை என்று பொருள்) என்பது
கிருட்டிணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் உள்ள கோயிலாகும். இக்கோயில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையானது என்று கருதப்படுகிறது.
இந்த கோவிலை பற்றிய சிறப்புகளை ஸ்கந்த புராணம் எனும் நூலில் 8-ஆம் அத்தியாத்தில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

தலவரலாறு

சுமார் 3000 வருடங்களுக்கு முன்பு கண்வ முனிவர் தவம் செய்தபோது தேவகண்டன் என்ற அரக்கன் புலியுருவில் வந்து அவர் தவத்துக்கு இடையூறு செய்தான். அப்போது கண்வ முனிவர் பெருமாளை வேண்டினார். பெருமாள் கண்வ முனிவர் முன் தோன்றி “டெங்கனி” என்ற கட்கத்தை கொண்டு தேவகண்டன் என்ற அரக்கனை வேட்டையாடி கொன்றதால் இங்குள்ள பெருமாளுக்கு ‘வேட்டையாடிய பிரான்’ எனப் பெயர் பெற்றதாக தலவரலாறு கூறுகிறது.

தேன்கனிக்கோட்டை என பெயர் வரக் காரணம் பெருமாள் ‘டெங்கனி’ என்ற கட்கத்தை கொண்டு வதம் செய்ததால் டெங்கனிபுரம் என்ற பெயர் வந்ததாகவும் பின் டெங்கனிபுரத்தில் இருந்த தரை கோட்டையால் டெங்கனிக்கோட்டை என்ற பெயர் பெற்றதாகவும் அதன் பின் அந்த பெயர் மருவி தேன்கனிக்கோட்டை என்று தற்போது அழைக்கப்படுகிறது.

மங்கலாசாசனம்

இத்திருப்பதிக்கு ஏற்றம் செய்து உபந்யாச ரத்னேயாதி அநேகபிருதாந்திகரான வித்வான் பூவராஹாச்சார்ய சுவாமிகள் மங்களாசாசனம் செய்திள்ளார்.

கோயிலின் அமைப்பு

வேட்டையாடிய பிரான் ஸ்ரீதேவி, பூதேவி உடன் காணப்படுகிறார். இராமர், லட்சுமணன், சீதை, அனுமான் ஆகியோருக்கும் தனிச்சந்நிதி அமைந்துள்ளது. ஆனுமாருக்கு தனிச் சன்னதியும் உள்ளது.

வேணுகோபாலன், ருக்மிணி, சத்யபாமா உடன்சந்நிதியில் காணப்படுகின்றார். ஆழ்வார்கள் சன்னதியும், இராமானுசருக்கு ஒரு தனி சன்னதியும் உள்து.

திருவிழா

இக்கோயிலில் கன்னட பஞ்சாங்கத்தின்படி திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. ஆண்டுதோறும் தமிழ் மாதமான சித்திரையில் தேர்த்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு, கர்நாடக, ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிர என பல்வேறு மாநிலங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் விழாவில் கூடுகின்றனர். கிருஷ்ண ஜெயந்தியன்று திருமஞ்சன உற்சவம் நடக்கிறது.மறுநாள் உறியடி உற்சவம் நடக்கிறது.

மூலவர்

பேட்டைராயசுவாமி

உற்சவர்

தேவபெருமாள்

தாயார்

சௌந்தர்யவல்லி

தல விருட்சம்

இலந்தை மரம்

தீர்த்தம்

சுவாமி புஷ்கரணி

பழமை

500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

டென்கனிக்கோட்டை

ஊர்

தென்கனிக்கோட்டை

மாவட்டம்

தர்மபுரி

மாநிலம்

தமிழ்நாடு

கோயில் அமைந்துள்ள இடத்திற்கு அந்த காலத்தில் அத்திரி வனம் என்று பெயர். அந்த காட்டில் கண்வர் (சகுந்தலையின் வளர்ப்புத் தந்தை) தவம் செய்ய வந்தார். தவம் செய்து கொண்டிருக்கும் போது தேவகண்டகவன் என்ற யக்ஷன் சாபம் ஏற்பட்டு புலித் தலை, மனித உடம்போடு அலைந்த கொண்டிருந்ததால் கண்வர் ரிஷியின் தவத்திற்கு இடையூறு ஏற்பட்டது. அதனால் துன்பம் ஏற்பட்ட கண்வ ரிஷி திருவேங்கட மலையானை நினைத்து வழிபட்டு தன்னை காக்க வேண்டுமென்று வேண்டிக்கொண்டான். திருவேங்கடமலையானும் இவன் புலித் தலையோடு இருந்ததால் வேட்டைக்கார ரூபத்தில் வந்து போரிட்டு டெங்கினி என்ற கதையால்(ஆயுதத்தால்) அவரை அடித்து சம்காரம் செய்து, முனிவரின் தவத்தை காப்பாற்றினார். முனிவரின் பிரார்த்தனையின் பேரில் பேட்டைராய சுவாமி என்ற பெயரில் பூதேவி ஸ்ரீதேவியோடு இங்கு எழுந்தருளியதாக வரலாறு கூறுகிறது.

விஷ்ணு கார்த்திகை அன்று சுவாமி புது வஸ்திரத்தை நெய்யால் துவைத்து தீபாராதனை காட்டி, கோபுரத்தின் உச்சியிலிருந்து கம்பால் தொங்க வைத்து கற்பூரத்தால் கொளுத்துவார்கள். இவ்வாறு செய்வதால் தீமைகள் அழிக்கப்படுகின்றன என்பது ஐதீகம். எல்லா ஜீயர்களும் ஆச்சார்யார்களும் மங்களாசாசனம் செய்த தலம். வானமாமலை தற்போது முன்பிருக்கும் பட்டம், திருமலை பெரிய ஜீயர், திருப்பெரும்புதூர் எம்பார் ஜீயர், வரத எத்திராஜ ஜீயர், காஞ்சி அழகிய மணவாள ஜீயர், தற்போது இருக்கும் ஆண்டவன் சுவாமி மேல்கோட்டை (கர்நாடகா) எதிகிரி எத்திராய ஜீயர் இவர்களால் மங்களாசாசனம் செய்யப் பட்டது. பழமை வாய்ந்த கோயில் இது. திருப்பதியில் உள்ளபடியே நின்று சேவை சாதிக்கும் மூல மூர்த்தியின் திருக்கோலம் மிக அழகாக உள்ளது.

மூலவர் பூ தேவி, ஸ்ரீதேவியோடு ஒருசேர மூலஸ்தானத்தில் இருப்பது விசேசம். இருமருங்கிலும் உள்ள பிராட்டிமார்கள் முகபாவங்களும் வேறுபட்டது. ஸ்ரீதேவியினுடைய முகபாவம் கூம்பிய தாமரை போலவும், பூதேவியுனுடைய முகபாவம் அலர்ந்த தாமரைப் போலவும் உள்ளது. நின்றிருக்கும் மூலவரை வைகுண்ட ஏகாதசியன்று பரமபத நாதனைப்போல் உட்கார்ந்த திருக்கோலத்தில் அலங்கரித்து பூஜை செய்கிறார்கள். தாயார் வீரலட்சுமி உட்கார்ந்திருக்கிறார். ஆடிப்பூரம் அன்று அமர்ந்திருக்கும் மூலவர் தாயாருக்கு நின்ற கோலத்தில் மடிசார் புடவை கட்டி ஆண்டாள் திருக்கோலம் சாத்தப்படுகிறது. இக்கோயிலின் தேர் 30 அடி உடையதே. ஆனால் அதன்மேல் 4 பக்கமும் 4 வாசல் வைத்து இருக்கிறது. மூலவர் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

கஜினி முகமது படையெடுப்பின்போது கோயிலில் இருந்த மூலமூர்த்தியை கட்திரைக்குள் மறைத்து வைத்து, உற்சவமூர்த்தியை முதுகினில் ஏற்றிக்கொண்டு காட்டில் மறைந்திருந்து பிறகு இந்து அரசர் காலத்தில் திரும்பி உற்சவமூர்த்தியை பிரதிஷ்டை செய்த புகழ் வேங்கடபதி தாசர் என்பவரைச்சாரும். இவ்வழிவந்தவர்களே கிராமதிகாரிகளாக இருந்து வருகின்றனர். திருப்பதி கோயிலைப் போன்று இக்கோயிலில் ஆனந்த விமானம் அமைந்துள்ளது.

திருவிழா:

பங்குனி – சித்திரை கல்யாண உற்சவம் – தெலுங்கு உகாதியிலிருந்து ஆரம்பித்து 15 நாட்கள் மிக விமரிசையாக கல்யாண உற்சவம் நடக்கும். பிரம்மோற்சவம் – 9 நாட்கள் திருவிழா – தீர்த்தவாரி, பூர்ணாகுதியோடு முடியும். காலை மாலை வாகனங்களில் சுவாமி புறப்பாடு இருக்கும். – இராம பாணம் விசேஷம், பூப்பல்லக்கு வாண வேடிக்கை ஆகியவை மிக சிறப்பாக நடக்கும். மார்கழி மாதம் – காலை உச்சிகால பூஜை – பகல் பத்து இராப்பத்து உற்சவம் திருவாடிபூரம் உற்சவம் – சயன உற்சவம் – 10 நாட்கள் வைகுண்ட ஏகாதசி – திருவரங்க பெருமாள் கோயிலில் நடக்கும் பூஜைகளைப் போலவே இங்கும் பூஜைகள் நடக்கும். புரட்டாசி சனிக்கிழமைகள் இத்தலத்தில் மிகவும் விசேஷமானவை.

கோரிக்கைகள்:

இங்குள்ள பெருமாளை வழிபடுவோர்க்கு உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது.

குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் வழிபட வருகிறார்கள்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் தேரடி பிரசாதம் (சர்க்கரை பொங்கல்) பெற்று சாப்பிட்டால் தீர்வு கிடைக்கிறது.

தாயாரை 18 நாட்கள் பூஜித்து சுலோகம் சொன்னால் கல்யாண வரம் கை கூடப் பெறலாம்.

நேர்த்திக்கடன்:

பூணூல் உற்சவம் கல்யாண உற்சவம் நடத்துகிறார்கள். தவிர மொட்டை அடித்தல், சுவாமி புறப்பாடு செய்தல், தோமாலை செலுத்தல், வஸ்த்திரம் சாத்துதல் ஆகியவற்றையும் பக்தர்கள் நேர்த்திகடன்களாக செய்கிறார்கள். நெய், பால், மஞ்சள், இளநீர், சர்க்கரை, பஞ்சாமிர்தம் ஆகியவற்றை அபிஷேகம் நடத்துகிறார்கள். கார்த்திகை தீபத்தன்று நெய்விளக்கு போடுகிறார்கள்.

———-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திரு நாராயண புர மங்களா ஸாஸனம்

October 23, 2023

செவ்வடி திருக்காப்பு -கரியான் ஒரு காளையின் திருவடி செய்யாள் இருப்பதால் சேவடி
திரு நாராயண புர மங்களா ஸாஸனம்

புள்ளரையன் கோயில் என்பதும் இத்தையே
திவ்ய ஸூரிகள் -நித்ய ஸூரிகளில் வ்யாவ்ருத்தி

திருப் பொலிந்த சேவடி இங்கு தானே

ஸ்ரீ ரெங்க மங்கள மணி கருணா நிவாஸம் -மூலவர் உத்சவர் இருவருக்கும் ப்ராதான்யம் ஆகவே இரண்டு பத பிரயோகங்கள்
ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காளமேகம் மூலவருக்கு பிரதான்யம்
ஸ்ரீ ஹஸ்தி சைல சிகர உஜ்ஜ்வல பாரிஜாதம் -உத்சவருக்கு பிரதான்யம்
ஸ்ரீ சம் நமாமி சிரஸா யது சைல தீபம் -இருவருக்கும் ப்ராதான்யம்

தக்ஷிண பத்ரிநாத்
ராமபிரான் ராமானுஜ பிரியன்
வைரமுடி -சேவை=கண்ணை மூடி சமர்ப்பித்து கருடனுக்கே முதல் சேவை இன்றும்

போக மண்டபம் புஷ்ப மண்டபம் தியாக மண்டபம் ஞான மண்டபம்

திருவல்லிக்கேணி அருளிச் செயல் மண்டபம் என்பர்

கல்யாண புஷ்கரணியில் 1237 கருடன் சந்நிதி -திருமண ஏந்தி ஸேவை -எம்பெருமானார் எடுத்த திருமண் -தனமாக ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அளிக்கிறார்
பஹு தான்ய வருஷம் 1098-எம்பெருமானார் 82 திரு நக்ஷத்ரம் தை சுக்ல பக்ஷம் புனர்வஸு

கிருத யுகத்தில் வேதகிரி -ஸநத்குமாரரால் ஆராதனம்
த்ரேதா யுகத்தில் நாராயண கிரி
த்வாபர யுகத்தில் யாதவகிரி -நம்பி மூத்த பிரான் கிருஷ்ணன் -ஆராதனம்
கலியுகம் -யதிசைலம் -ராமாநுகர்
மாசி கேட்டை -உத்சவம் செல்லப்பிள்ளை இங்கு வந்து ப்ரதிஷ்டை செய்த நாள்
தமர் உகந்த மேனி
பாங்கூர் சத்திரம் -ரெங்கசாமி ரகுநந்தனன் -9620606866

மேல் நாட்டு -ஆராவமுது அனுசந்திக்க நாதமுனிகள் -பிரமாணம் ரக்ஷணம்
ராமானுஜர் ரக்ஷணம் -பிரமாதா ரக்ஷணம்
தத்தாத்ரேயர் -நாராயண கிரி -வேதம் ரக்ஷணம்
கடாரத்தில் பூரித்து வைத்தேன் -இன்றும் கடாரம் சொல்
குப்பாயம் -shirt -ஆண்டாள் பெரியாழ்வார்
உகிரால் கீண்டு சாப்பிடு -நகம் சொல்லாமல்
மரி குட்டிக்கு
பழமை ரக்ஷணம்
ப்ரமேயம் ரக்ஷணம் -அழகிய மணவாளன் -பல வருஷங்கள் இங்கு இருந்து ரக்ஷிக்கப் பட்டார்

திருமேனிக் காவலுக்கு மிதுனமாக எழுந்து அருள எம்பெருமானாரும் சேர்ந்து எழுந்து அருளுவார் இன்றும்

பேசும் எதிராஜர் -உத்சவரே பதில் சொல்லிக் காட்டி அருளினார்
ஏகதா பவதி -நித்ய ஸூரிகள் போல் இவரும் -தமர் உகந்த திருமேனி இங்கு

ஆலிங்கனம் பண்ணிக் கொண்டார் தான் உகந்த -தானான திருமேனியும் இவரே

சரம ஸந்தேஸம் திரு நாராயண புரம்
படித்தவா பாஷ்யம் தத் பிரவசனம்
தத் அசக்தவ் சடாரி போத்த்ரி ஸப்தா ஸ்ரத்தா
திவ்ய தேச  கைங்கர்யம் வா
ப்ரபந்ந த்வயம் அனுசந்தானம்
பரிசார்யா -ஸ்ரீ வைஷ்ணவன் அபிமானத்தில் ஒதுங்கி இருப்பது
திருநாராயண புரத்தில் குடில் க்ருத்வா -யதுகிரி தடே நித்ய வாஸம்-ஆறு விஷயங்கள்

————

திருநாரணன் தாள் காலம்பெற சிந்தித்து உய்ம்-மினோ – 4-1-1-

ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ.–4-1-1-

உபாயத்வம் அடியிலே தொடக்கத்திலே அருளிச் செய்கிறார் –
ஏகாதி பத்தியம் பண்ணும் ராஜாக்களே பிச்சை ஆகையால் நிருபாதிக சம்பந்த உக்தன் -நித்ய ஸ்ரீ –திருவடிகளைப் பற்றுங்கோள்

ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்-மண்டல நாதன் -ஏக அதிபதி -ஓட -நெடுங்காலம் -லோகத்துடன் பொருந்தி
ஆண்டவர் -ராஜ்ய ரஷணம் பண்ணிப் போந்தவர்கள்
ஐஸ்வர்யம் பக்னம் ஆனவாறே -லஜ்ஜித்து-இரவிலே- பிச்சை பெற தேடி
மயிர் நீப்பின் உயிர் வாழா கவரி மான் இல்லையே

கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்-கருப்பு நாய் -இருட்டு அறியாமல் காலை வைக்க
கவ்வப்பட்ட கால் -உடைய ஒட்டாஞ்சில் –

பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்-மகா பிருத்வியில் உள்ளார் அனைவரும் காண -இவரால் முன் நாள் நலியப்பட்டவர்கள்
இந்த ஜன்மம் தன்னிலே -கை மேல் பலன் -லஜ்ஜையையும் விட்டு தாமே அர்த்தித்து -தாமே கொள்வர்
ஐஸ்வர்யம் அஸ்தரம்

திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ-நித்ய ஸ்ரீ -நிருபாதிக சேஷி -திரு உடன் கூடிய தாள் -கை விடாத –
கால விளம்பம் பெறாமல் சடக்கென –பிராப்யமாக -அனுசந்தித்து உஜ்ஜீவியுங்கோள்

ஒற்றை வெண்கொற்றக்குடையின் நிழலிலே தன் ஆணையானது தடையின்றிச் செல்லும்படி உலகத்தை எல்லாம் ஒருசேர ஆண்ட சக்கரவர்த்திகள்,
கரிய நாயால் கவ்வப்பட்ட காலையுடையவர்களாய் உடைந்த பானையை உடையவர்களாய்ப் பெரிய நாட்டிலேயுள்ள மக்கள் எல்லாரும் காணும்படியாக
இப்பிறவியிலேயே இரந்து உண்ணும் தொழிலைத் தாங்களே மேற்கொள்வார்கள்;
ஆதலால், திருமகள் கேள்வனான நாராயணனுடைய திருவடிகளைக் காலம் நீட்டிக்காமல் (மிக விரைவில் என்றபடி) மனத்தால்
நினைத்து உஜ்ஜீவிக்கப் பாருங்கோள்,’ என்கிறார்.

நாயகம் – முதன்மை. ‘ஆக ஓட ஆண்டவர்’ என்க. ‘ஆண்டவர் கொள்வர்’ எனக் கூட்டுக.
‘காலர், பானையர்’ என்பன, முற்றெச்சங்கள். ‘கவர்ந்த’ என்பது ஈண்டுச் செயப்பாட்டு வினையின்கண் வந்தது.
இத்திருவாய்மொழி, கலிநிலைத்துறை.

‘சார்வபௌமராய்ப் போந்த இராசாக்கள் அந்த இராச்சிய ஸ்ரீயை இழந்து இரந்து உயிர் வாழ வேண்டும்படி வறியர் ஆவார்கள்;
ஆன பின்பு, திரு மறு மார்பன் -‘ஸ்ரீவத்ஸவக்ஷா நித்யஸ்ரீ – ஸ்ரீவத்சத்தை மார்பிலேயுடையவன், நித்தியமான ஸ்ரீயையுடையவன்’ என்கிறபடியே,
அழியாத செல்வமான ‘சர்வேசுவரனைப் பற்றப் பாருங்கோள்,’ என்கிறார்.-
ஈசான சீல நாராயணன் -பகவத் பாதர் ஆதி சங்கரர் –

ஒரு நாயகமாய் –
தனி அரசாக. ‘உலகங்கட்கு எல்லாம் தலைவன்’ எனப்படுகின்ற சர்வேசுவரனுடைய
ஐஸ்வரியத்தைப் பௌண்ட்ரக வாசுதேவன் பின்பற்றினாற் போலே பின் பற்றுகிறவாற்றைத் தெரிவித்தபடி.
அநுகாரம்-சர்வேஸ்வரனைப் போலே -இவர்கள் தங்களை நினைத்து

நாயகம் -ஆழ்வார் கொண்டாட வில்லை -அவர்கள் அபிப்ராயத்தாலே –
‘செங்கதிர்க் கற்றை காலும் திகிரியஞ் செல்வன் யானே! சங்கொடு தழல்வாய் நேமி தாங்குதல் விடுத்தால் உய்ந்தான்;
அங்கவை விடுகலானேல் ஆடமர்க் கெழுக’ என்னா வெங்கடக் களிறட் டார்க்கு விடுத்தனன் தூது மன்னோ.’–பாகவதம்
நிலை நில்லாத ஐஸ்வரியத்தைப் பற்றி நீர்க்குமிழி போலே உடைந்து போகின்ற மனிதர்களாதலின், ‘நாயகம் ஆய்’ என்கிறார்.

ஓட –
இப்படி ஆளுவது எத்துணைக்காலம்?’ என்றால், நெடுங்காலம். என்றது, ‘அறுபதினாயிரம் யாண்டு’ என்கிறபடியே நெடுக என்றபடி.
‘இப்படி நெடுங்காலம் ஆள்வது எவ்வளவு?’ என்னில்,

உலகு –
கடல் சூழ்ந்த பூமிப்பரப்பு அடங்கலும்; ‘எங்கிருந்து சூரியன் உதிக்கின்றானோ, எங்கு மறைகின்றானோ,
அதற்கு இடைப்பட்ட பூமி முழுதும்
யுவநாஸ்வனுடைய புதல்வனான மாந்தாதா என்ற அரசனுடைய பூமி என்று சொல்லப்படுகிறது,’ என்கிறபடியே,
முந்திரிகை நிலம்-கை மண் அளவு -ஷேத்திர அல்ப அம்சம் – உடையவனைப் போலே ஆயிற்று ஆள்வது.

உடன் ஆண்டவர் –
இந்தப் பூமிப்பரப்பில் ஓர் இடம் குறை கிடவாதபடி ஆண்டவர் என்னுதல்.

அன்றிக்கே,
‘பாப காரியங்களை நினைத்தவர் முன்பே கையும் வில்லுமாய் நின்று நோக்கிக் கொண்டு போந்த
கார்த்த வீரியார்ச்சுனனைப் போன்று ஆண்டவர்கள்’ என்னுதல்.

ஆண்டவர் –-ரஷிப்பவர் என்றுமாம் –

‘இப்படிச் சக்கரவர்த்திகளாய் இருந்துகொண்டு தனி அரசாக நெடுநாள் உலகத்தை ஆண்டு
போந்தவர்கள் பின்னை என் செய்வார்கள்?’ என்னில்,
‘இராச்சியம் என்பது, வைத்யம் செய்ய முடியாததும் நாசத்தை விளைவிப்பதுமான பெரியது ஒரு நோய்;
அதன்பொருட்டு அரசர்கள் சகோதரனையும் பிள்ளையையும் விடுகிறார்கள் அல்லவா?’ என்கிறபடியே,
அவற்றை இழந்து வருந்துவார்கள் என்கிறார் மேல்:

கருநாய் கவர்ந்த காலர் –
‘இப்படி நெடுநாள் மதிப்போடே வாழ்ந்து போந்தவன் எளிமைப்பட்டு வாழ்கிறது என்?’
‘ஒரு பட்டினி விடுவோம்’ என்று இருக்க மாட்டானே!
வாழ்க்கையில் உண்டான நசையாலே பிக்ஷை எடுப்பதற்குப் பார்ப்பான்; முன்பு குறைவற வாழ்ந்துபோந்தவன் ஆகையாலே,
பலர் காண வெளியில் புறப்படமாட்டானே! நிலா நாளிலே இருட்டுப் புரைகளிலும் இருட்டுநாளிலும் ஆயிற்றுப் புறப்படுவது;
இருள் ஓர் இடத்திலே திரண்டாற்போலே கறுத்த நாய்கள் கிடக்கும்; அதனை அறியாதே அவற்றின் வாயிலே காலை இடும்;
அவை கடிக்கும்.

அன்றிக்கே,
கருநாய் என்பதற்கு, கருமை –-கறுமை- சீற்றமாய், வெட்டிய நாய் என்னுதல்.

அன்றிக்கே, கரு நாய் – கருவையுடைத்தான நாய் என்னுதல்;
என்றது, குட்டி இட்ட நாய், என்றும் குட்டியைக் காத்துக்கொண்டு கிடக்குமாகையாலே,
‘அதற்கு ஏதேனும் தீங்கு வருகிறதோ!’ என்று
கண்டாரை ஓடிக் கடிக்குமே அன்றோ? அதனைச் சொல்லுகிறது என்றபடி.

காலர் –
‘வீரக் கழல் இட்ட கால்’ என்றே அன்றோ முன்னர்ச் சொல்லிப்போருவது?
இப்போது, ‘நாய் கடித்த காலர்’ என்றாயிற்றுச் சொல்வது என்பார், ‘நாய் கவர்ந்த காலர்’ என்கிறார்.

சிதைகிய பானையர் –
கண்ட இடம் எங்கும் பொளிந்து உபயோகித்தற்குத் தகுதியின்றிக்கே பொகட்டுக் கிடந்தது ஒன்றனை எடுத்துக் கொள்ளும்.
இட்டது உண்டாகில் ஒரு மூலையிலே கீழே போம்படி ஆயிற்று இருப்பது என்பார்,
சிதைகிய’ என்றும், ‘முன்பு பொற்கலத்திலே உண்டு வாழ்ந்தவனுக்கு
இப்போது ஒரு புத்தோடு கிடையாதபடியாயிற்று’ என்பார்,
‘சிதைகிய பானையர்’ என்றும் அருளிச்செய்கிறார்.

பெரு நாடு காண –
முன்பு பச்சை கொண்டு வந்தவர்கள் ஓர் யாண்டு ஆறு மாதங்களும் உள்ளும் புகப்பெறாதே நின்று உலரும் இத்தனை அன்றோ?
அதற்கும் போர இப்போது தடை அற்று இருந்ததே குடியாகக் காணும்படியாக,

அன்றிக்கே,
முன்பு போர வாழ்ந்து எளிமைப்பட்டவன் ஆகையாலே எல்லாரும் காண வருவர்கள் ஆதலின்,
‘பெரு நாடு காண’ என்கிறார் என்னுதல்.
‘இப்படிச் செய்வது ஒரு பிறவியில் வாழ்ந்து மற்றொரு பிறவியிலேயோ?’ என்னில்,

இம்மையிலே –
அப்படி வாழ்ந்த இந்தப் பிறவியிலே.

பிச்சை –
முன்பு அரசர்களுக்கு இராச்சியம் வழங்கினானாய் அன்றோ போந்தது?
இப்போது ஒரு பிச்சை மாத்திரமேயாயிற்று இவன் விரும்புவது.
முன்பு இராசாக்கள் கொண்டு வந்த பச்சையை, சிலர் இடத் தாம் கொண்டார் என்பது ஆகாமைக்கு
ஆள் வைத்தே அன்றோ வாங்குவது?
இப்போது தாமே கொள்வர்.

அன்றிக்கே.
இடுகின்றவர்கள் பக்கல் நினைவு இன்றிக்கே, தம் விருப்பம் மாத்திரமே உள்ளது என்பார்,
தாம் கொள்வர்’ என்கிறார் என்னுதல்.

இராச்சியத் திரு இங்ஙனேயான பின்பு,
திருநாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ –
‘ஸ்ரீமானான நாராயணன் திருவடிகளை அடைந்து உய்வு பெற்றுப் போருங்கோள்,’
பெடையடர்த்த மடவன்னம் பிரியாது மலர்க்கமலம் மடலெடுத்து மதுநுகரும் வயலுடுத்த திருநறையூர்
முடையடர்த்த சிரமேந்தி மூவுலகும் பலிதிரிவோன் இடர்கெடுத்த திருவாளன்
இணையடியே அடைநெஞ்சே!’–பெரிய திருமொழி.6: 9 : 1.
இடர் கெடுத்த திருவாளன் இணை அடி’ என்றும்,
‘அங்கு ஸ்ரீமந் நாராயணனிடத்தில் நான் பிச்சையை யாசித்தேன்,’ என்றும்
வருகின்ற பிரமாணங்களைக் காணல் தகும்.
இதனால், ஓடு கொண்டு இரப்பார்க்கு எல்லாம் இவனை ஒழியக் கதி இல்லை என்பது போதரும்;
கபாலித்வம்– தத்ர நாராயாண ஸ்ரீ மான் -மயா பிஷாம் –ஸ்வப்ன லப்த தனம் போலே –
கபாலம் போனதே -சிவன் பார்வதிக்கு சொன்னது -பிண்டியார் –சாபம் தீர்த்த ஒருவனூர் –
கபால போஜனம் –‘ஓட்டு ஊண் ஒழித்தவன்’ அன்றோ?

தாள் –
‘பிள்ளாய்! உன் உள்வெதுப்பு ஆறுவது எப்போது?’ என்ன,
‘நானும் எனக்கு வகுத்த முடி சூடி அவரும் தமக்கு வகுத்த முடி சூடின அன்றே,’ என்றான் அன்றோ ஸ்ரீ பரதாழ்வான்?
அப்படித் தலையாகப் பிரார்த்திக்கப்பட்ட திருவடிகளை
‘அடி சூடும் அரசு’ என்னக் கடவது அன்றோ?

காலம் பெற – அரை நாழிகையாகிலும் முற்பட்டது உடலாக; ‘வாழ்வு சாதலை முடிவாக உடையது;
உருவம் யௌவனம் இவைகள் முதுமையை முடிவாக உடையன;
செல்வம் நாசத்தை முடிவாக உடையது,’ என்னும் இவற்றை அறிந்த
எவன்தான் தைரியத்தை அடைவான்?’ என்ப ஆதலின்,
நாளைச் செய்கிறோம் என்னுமது அன்று என்பார், ‘காலம் பெற’ என்கிறார்.

அன்றிக்கே,
‘ஒரு முகூர்த்த காலமாவது ஒரு கண நேரமாவது வாசுதேவனை நினைக்கவில்லை என்பது யாது ஒன்று உண்டு?
அதுவே, இவனுக்கு ‘அஸந்நேவபவதி – இல்லாதவன் ஆகிறான்’ என்னும்படி வருகிற கேடு ஆகிறது;
கேடு வருகைக்கு அவகாசமும் அதுவே; திரிபு உணர்ச்சி ஆகிறதும் அதுவே; விலக்கப்பட்ட ஒழுக்கம் ஆகிறதும் ஆதுவே,’
என்ப ஆதலின், ‘காலம் பெற’ என்கிறார் என்னலுமாம்.

சிந்தித்து –
“இனி வழி இல்லை’ என்று கண்ணழிவு சொல்ல வேண்டா;
அவன் தந்த உறுப்புகளை அவனுக்கு ஆக்க அமையும்;
நெஞ்சிலே அடி பட நினைக்க அமையும்’ என்றபடி.–
நெஞ்சிலே திருவடி பட –
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும்
இடைவெளி இல்லாமல் சிந்திக்க இடை வெளி இல்லாமல் உஜ்ஜீவிப்போமே

உய்ம்மின் –
அந்த நினைவு பலத்தோடே கூடி இருக்குமாதலின், ‘உய்ம்மின்’ என்கிறது.
‘அந்தப் பகவானை நினைப்பதில் என்ன சிரமம் இருக்கிறது? நினைத்தால் மங்களத்தைக் கொடுக்கிறார்;
இரவு பகல் எந் நேரத்திலும் அவரை நினைக்கின்றவர்களுக்குப்
பாவங்களின் நாசமும் உண்டாகின்றன,’ என்றான் ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான்.
‘பேறு எல்லார்க்கும் வேண்டும்’ என்று இருக்கையாலே எல்லார்க்குமாக
‘உய்ம்மின்’ எனப் பன்மையாக அருளிச்செய்கிறார்.

தாள் சிந்தித்து உய்ம்மின் –
அடி அற்றால் வாடும் அத்தனையே அன்றோ? –அடி உற்றால் வாழலாம் அடி அற்றால் வாடலாம்
ஆதலால், அடியைப் பேணி நோக்கி உய்ந்து போருங்கள்.
உபாயமாகவும் ப்ராப்யமாகவும் உய்ம்மினோ –உஜ்ஜீவித்து ஆனந்தம் அடைவோம்

————————

நடையா உடை திருநாரணன் தொண்டர்தொண்டர் கண்டீர் – 3-7-4-

உடை ஆர்ந்த ஆடையன் கண்டிகையன் உடை நாணினன்
புடையார் பொன் நூலினன் பொன்முடியன் மற்றும் பல்கலன்
நடையா உடைத் திரு நாரணன் தொண்டர் தொண்டர் கண்டீர்
இடையார் பிறப்பிடை தோறு எமக்கு எம் பெரு மக்களே.–3-7-4-

திரு நாரணன் –
அங்குத்தைக்கு லக்ஷ்மீ சம்பந்தமும் அவ்வாபரணங்களைப் போலே காணும்; ‘உன் திருமார்வத்து மாலை நங்கை’ என்பர் மேல்.
அணிகலன்களைச் சொல்லுகிற இடத்தில் பிராட்டியை அருளிச் செய்வதற்குக் காரணத்தை அருளிச்செய்கிறார், ‘அங்குத்தைக்கு’ என்று தொடங்கி.
‘திருவாபரணங்களோடு சேர்த்துச் சொல்லப்படுகையால் பிராட்டியையும் திருவாபரணவகையில் கோடல் வேண்டும்,’ என்பதாம். அதற்குக் காட்டும்
பிரமாணம், ‘உன் மார்வத்து மாலை நங்கை’ என்பது. இது, திருவாய்.-10. 10 : 2.
திரு மார்பு ஆர மார்பு -திருவார மார்பு போலே –
அன்றிக்கே,
திரு ஆபரண ஆழ்வார்களாகிறார் நித்திய சித்த புருஷர்களாகையாலே இவர்களையுடையவன் திரு நாரணன் என்கையாலே,
இம்மிதுனமே உலகத்துக்குச் சேஷி என்கிறார்,’ என்னுதல்.
திரு’ என்பதனை ஆபரண கோடியிலே சேர்த்து அருளிச்செய்தார் மேல்.
திரு’ என்பதனை ‘நாரணன்’ என்ற பதத்தோடே கூட்டிச் சேஷித்வத்திலே நோக்காக அருளிச்செய்கிறார்,
திருவாபரண ஆழ்வார்களாகிறார்’ என்று தொடங்கி. மிதுனம் – இரட்டை. சேஷி – இறைவர்

———–

நவை இல் திருநாரணன் சேர் திருநாவாய் – 9=8-3-

எவைகோல் அணுகப் பெரும் நாள் என்று எப்போதும்
கவை யில் மனம் இன்றி கண்ணீர்கள் கலுழ்வன்
நவை இல் திரு நாரணன் சேர் திருநாவாய்
அவையுள் புகலாவது ஓர் நாள் அறியேனே–9-8-3-

நவை இல் திரு நாரணன் சேர் திருநாவாய்-குற்றம் அற்ற -சோபாதிக பாந்தவ்யம் இல்லையே -துர்லபத்வ குற்றம் இல்லாமல்
சுலபன்-திரு நாரணன் – -நிருபாதிக பந்து

நவை இல் திரு நாரணன்-சேர்
பற்றுதற்கு அரியனாய் இருக்கை முதலான-குற்றம் இன்றிக்கே-ஸ்ரீ மானான நாராயணன் -என்றது –
எளிமைக்கு ஊற்றான பிராட்டியோடு கூடத்-திரு நாவாயிலே வந்து-சுலபனானவன் -என்றபடி –

————–

தெண் திரை சூழ் திருப்பேர் கிடந்த திருநாரணா இங்கே போதராயே – 2-9-4-

கொண்டல் வண்ணா இங்கே போதராயே கோவில் பிள்ளாய் இங்கே போதராயே
தெண்  திரை சூழ் திருப் பேர் கிடந்த திரு நாரணா இங்கே போதராயே
உண்டு வந்தேன் அம்மம் என்று சொல்லி ஓடி அகம் புக வாய்ச்சி தானும்
கண்டு எதிரே சென்று எடுத்து கொள்ளக் கண்ண பிரான் கற்ற கல்வி தானே -2 9-4 – –

தெளிந்த திரைகளை உடைத்தான புனலாலே சூழப்பட்ட ஸ்ரீ திருப் பேரிலே கண் வளர்ந்த
ஸ்ரீ மானான நாராயணனே –
இங்கே அம்மம் உண்ணப் போதராயே –

——–

திரு பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய் —5-4-7-

பருப்பதத்து கயல் பொறித்த பாண்டியர் குல பதி போல்
திருப் பொலிந்த சேவடி என் சென்னியில் மேல் பொறித்தாய்
மருப்பொசித்தாய் மல்லடர்த்தாய் என்று என்று உன் வாசகமே
உருப் பொலிந்த நாவினேனை யுனக்கு உரித்து ஆக்கினையே -5 -4-7 –

திருப் பொலிந்த சேவடி –
அழகு விஞ்சி இருப்பதாய்
ருஜுவான திருவடிகள் –
ஆர்ஜவ குணம் இருக்கிற படி
இவன் செவ்வை கேடே தனக்கு செவ்வையாகை –

ஐஸ்வர்ய சிஹ்னங்களை உடைத்தான திருவடிகள்
கதா புனவில் சொல்லுகிறபடியே –
பார்த்திவவ் யஞ்ஞாநான் விதமான திருவடிகள் (ஸ்ரீ ராமாயணம் -)

——————-

திருப் பாத கேசத்தை தென் புதுவை பட்டன்–1-2-21-

சுருப்பார் குழலி யசோதை முன் சொன்ன
திருப் பாத கேசத்தை தென் புதுவை பட்டன்
விருப்பால் உரைத்த இருபதோடு  ஒன்றும்
உரைப்பார் போய் வைகுந்தத்து ஒன்றுவர் தாமே -1-2-21-

யசோதை பிராட்டி உடைய சிநேகத்தை  உடையராய் கொண்டு அனுபவித்ததும் –
இவள் பாதாதி கேசம் அனுபவித்து பிறர்க்கு காட்டின கட்டளையிலே பேசினதுமான இதுவே –
அவளோடு இவருக்கு சாம்யம் ஆகையாலே –
அசோதை முன் சொன்ன திருப் பாத கேசத்தை தென் புதுவை பட்டன் விருப்பால் உரைத்த -என்று அருளிச் செய்தார் ஆய்த்து-

—————–

வாராய் உன் திருப்பாத மலர் கீழ் – 2-9-7-

வாராய் யுன் திருப்பாத மலர்க்கீழ்
பேராதே நான் வந்தடையும் படி
தாராதாய் உன்னை என்னுள் வைப்பில் என்றும்
ஆராதாய் எனக்கு என்றும் எக்காலே –2-9-7-

வாராய் யுன் திருப்பாத மலர்க்கீழ் பேராதே நான் வந்தடையும் படி தாராதாய்
உன்னுடைய நிரதிசய போக்யமான திருவடிகளின் கீழே புனராவ்ருத்தி இல்லாத பேற்றை நான் பெறும்படி உன்னை எனக்குத் தாராதே இருக்கிறவனே –
வாராத இன்னாப்பாலே –தாராதாய் -என்று இத்தை அவனுக்கு நிரூபகமாகச் சொல்லுகிறார் –மயர்வற மதி நலம் அருளினான் -என்றும் –வீடு திருத்துவான் -என்றும்- கேசவன் தமர் -என்றும் அருளிய இவர்- இன்னாப்பாலே இப்படி அருளிச் செய்கிறார்-அருளாத நீர் -முன்பு சொன்னால் போலே –தாராதாய் -என்று திரு நாமம் சாத்துக்கிறார் –இந்த திரு நாமம் வேண்டாம் என்றால் வாராய்-
தாராதாய் -என்ற வசவாலே -அந்ய பரோக்தியிலே பிராப்யத்தை நிஷ்கர்ஷிக்கிறார்–(பேராதே நான் வந்து-உன் திருவடிகளை -அடைந்து-உன் உகப்புக்காக -கைங்கர்யம் செய்வதே பிராப்தி )

——————–

திருப் பாதங்கள் (1)
கண்டுகொண்டு என் கைகள் ஆர நின் திருப்பாதங்கள் மேல் – 4-7-8-

கண்டு கொண்டு, என் கைகள் ஆர, நின் திருப்பாதங்கள் மேல்
எண் திசையும் உள்ள பூக் கொண்டு ஏத்தி, உகந்துகந்து,
தொண்டரோங்கள் பாடி ஆட, சூழ் கடல் ஞாலத்துள்ளே
வண் துழாயின் கண்ணி வேந்தே! வந்திட கில்லாயே.–4-7-8-

நின் திருப்பாதங்கள் மேல்-பிராப்தனான உன் திருவடிகளில்

நின் திருப்பாதங்கள் மேல் –
உனக்குத் தாரகமுமாய் இனிய பொருளுமான திருவடிகளிலே. பிடித்துச் சுவைத்து உண்ணும் பாதக் கமலம் ஆதலின்,-பெரியாழ்வார்
திருமொழி 1. 2 : 1. தாரகம் தானேயாய் நின்றது.-‘சுவைத்துண்ணும் பாதம்’ என்றதிலே நோக்கு.
திரு’ என்றதனாலே, போக்கியமும், ‘பாதம்’ என்றதனாலே, தாரகமும் பெறப்படுதலின்,
‘தாரகமுமாய் இனிய பொருளுமான’ என்கிறார்.
அன்றிக்கே,
‘உன் தேனே மலரும் பாதமாதலின்,-திருவாய். 1. 5 : 5.- எனக்கு வகுத்ததுமாய் இனிய பொருளுமான உன் திருவடிகளிலே’ என்னுதல்
முன்பும் விஷயங்களிலே தொடர்ந்து செல்லுமது உண்டே அன்றோ?
அங்ஙன் அன்றிக்கே,
அடையத் தக்கவனாக உன் திருவடிகளிலே; ‘உன்னுடைய தாமரை போன்ற பாதங்களை அடைவதனாலே பிறவியின் பயனை
அடைந்தவனாகக் கடவேன்,’ என்பதனைக் கேட்ட ஆளவந்தார்,
‘வார்த்தை அழகியது! வகுத்த விஷயத்திலேயாகப் பெற்றிலோம்,’ என்று அருளிச்செய்தார்.
‘போக்கியதையுண்டானாலும் அடையத்தக்கதாய் இராதாகில், அது தியாஜ்யம்,’ என்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார்,
‘உன்னுடைய’ என்று தொடங்கி. இது, மாலதீ மாதவ நாடகம்.

————–

நின் திருப்பாதத்தை யான் நிலம் நீர் எரி கால் விண் உயிர் – நாலாயி:3617/2

————-

தேனே மலரும் திருப்பாதம் சேருமாறு வினையேனே – 1-5-5-

மானேய் நோக்கி மடவாளை மார்பில் கொண்ட மாதவா
கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறிந்தாய் கோவிந்தா
வானார் சோதி மணி வண்ணா மதுசூதா நீ யருளாய் உன்
தேனே மலரும் திருப்பாதம் சேருமாறு வினையேனே –1-5-5-

உன் தேனே மலரும் திருப்பாதம்-
இவை ஒன்றும் இல்லை யானாலும் அடியில் உன் போக்யதையை பார்த்தால் தான் விடப் போமோ
விஷ்ணோ பதே பரமே மத்வ உத்ச -என்னக் கடவது இறே
இவர் பெரு நிலம் கடந்த நல்லடிப் போது இறே ஆசைப் பட்டது -இவர் ஆசைப் பட்ட படியே திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் -என்று
அந்த திருவடிகளையே காட்டிச் சேர விட்டான் –தேன் போன்ற கங்கை என்றுமாம்
உன் தேனே மலரும் திருப்பாதம் –என்று அத்தையே அபேஷிக்கிறார்
——————-

வேதம் வல்லார்களை கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து இவள் நோய் இது தீர்த்து கொள்ளாது போய் – 4-6=8=

வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்
பாதம் பணிந்து,இவள் நோய் இது தீர்த்துக் கொள்ளாது போய்,
ஏதம் பறைந்து,அல்ல செய்து,கள்ளூடு கலாய்த்தூஉய்,
கீத முழவிட்டு, நீர் அணங்கு ஆடுதல் கீழ்மையே.–4-6-8-

வேதம் வல்லார்களைக் கொண்டு –
‘சர்வேசுவரனே பலமும் பலத்தை அடைதற்குரிய வழியும்,’ என்கிற வேத தாத்பரியம் கைப்பட்டவர்களைப் புருஷகாரமாகக் கொண்டு என்றது,
‘வேறாக, ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சார்த்தி இருப்பார் தவம்,’ என்கிறபடியே,
அவர்கள் காலிலே விழப்பெறில் விரைவில் நோய் தீர்தல் கூடும். அது கூடாதே அன்றோ? -இது உலகில் நடை பெறாதே –
தம்மைப் போன்றவர்களாக நினைத்திருக்கையாலே ருசி விசுவாசங்கள் அவர்கள் பக்கல் கனக்கப் பிறவாதே அன்றோ?
ஆன பின்னர், அவர்களைப் புருஷகாரமாகக் கொண்டு அவனைப் பற்றுதற்குப் பாருங்கோள் என்கிறாள்,’ என்றபடி.
இங்கு இருக்கும் நாள்களுக்குப் புருஷகாரமாக முமுக்ஷூக்கள் உளர்; அங்குதானே நித்தியசூரிகள் உளரே அன்றோ?
‘அந்த அமாநவன் முத்தர்களைப் பரம்பொருளிடம் சேர்ப்பிக்கின்றான்,’ என்கிறபடியே,
அவர்கள் கொடுபுக்கு இருத்தலே அன்றோ அவ்வோலக்கத்தில் இருப்பது?

வேதம் வல்லார்களைக் கொண்டு சர்வேசுவரன் திருப்பாதம்’ என்னாதே,
‘விண்ணோர் பெருமான் திருப்பாதம்’ என்று அருளிச்செய்வதனால்
நித்தியஸூரிகளும் புருஷகாரமாய் இருப்பவர்கள் என்பது தோன்றுகிறது;
அதனை விளக்குகிறார், ‘இங்கிருக்கும்’ என்று தொடங்கி.
இவர்கள் இருவரும் புருஷகாரமாய் இருப்பது, முமுக்ஷூத்வ அவஸ்தையிலும், முத்த அவஸ்தையிலும் ஆம்.
‘அவர்கள் புருஷகாரமாய் இருப்பர்களோ?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘அந்த அமாநவன்’ என்று தொடங்கி. இது, சாந்தோக்யஉபநிட. 4 : 15.
அமாநவனைச் சொன்னது, நித்திய சூரிகளுக்கும் உபலக்ஷணம்.
இங்கு, ‘முடியுடை வானவர் முறைமுறை எதிர்கொள்ள’ என்ற தமிழ் மறை அநுசந்திக்கத் தகும். இது, திருவாய். 10. 9 : 8.

விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து –
அயர்வு அறும் அமரர்கள் அதிபதி திருவடிகளிலே பணிந்து. இவள் நோய் இது தீர்த்துக்கொள்ளாது –
நோய் கொண்டவள் இவள்; நோய்தான் இது; இதற்குத் தகுதியான பரிஹாரத்தைச் செய்யாமல்.

—————–

சொல்ல மாட்டேன் அடியேன் உன் துளங்கு சோதி திருப்பாதம்
எல்லை இல் சீர் இள நாயிறு இரண்டு போல் என் உள்ளவா – 8-5-5-

சொல்ல மாட்டேன் அடியேன் உன் துளங்கு சோதித் திருப்பாதம்
எல்லையில் சீரிள நாயிறு இரண்டு போல் என்னுள்ளவா
அல்லல் என்னும் இருள் சேர்த்தற்கு உபாயம் என்னே ஆழி சூழ்
மல்லை ஞாலம் முழுதுண்ட மா நீர்க் கொண்டல் வண்ணனே-8-5-5-

சொல்ல மாட்டேன் –
என் உள்ளத்தில் நின்று நலிகிற படிக்கு பாசுரம்-இடப் போகிறது இல்லை –

அடியேன் –
சம்பந்தத்தால் தவிர மாட்டுகின்றிலேன் –

உன் துளங்கு சோதித் திருப்பாதம்
மாட்டாத பிரகாரம் ஏது -என்ன –விளங்கா நின்றுள்ள ஒளியை உடைய உன் திருவடிகள்

எல்லையில் சீரிள நாயிறு இரண்டு போல் என்னுள்ளவா-
அளவிறந்த அழகை உடைய-இளம் சூரியர் இருவர் போலே-என் உள்ளத்தே நின்று நலிகிற படி-
கண்களால் பருகலாம் படி இருக்கையாலும்
வருத்தத் தொடங்கின இத்தனை என்று தோற்றுகையாலும்-இள நாயிறு -என்கிறார்-

அன்றிக்கே –
இள நாயிறு -என்பதற்கு
என்னை வருத்த வருத்த இளமை மிகுகிறபடி -என்னலுமாம்
என் உள்ளவா சொல்ல மாட்டேன் -என்று கூட்டுக –

மீனோடு ஆமை –இன்னம் கார் வண்ணனே -அவதரித்து அவதரித்து இளகிப் பதித்த படி —
யுவ குமாரா என்னுமா போலே இள நாயிறு -சேவை சாதிக்காமல் ஆழ்வாரை துடிக்கப் பண்ணப் பண்ண -இளமை கூடி
வா போகு-சக்கரவர்த்தி பஞ்ச விம்சதி போலே

அல்லல் என்னும் இருள் சேர்த்தற்கு உபாயம் என்னே –
இதற்கு -உன்னைக் காட்டாதே அருமைப் படுத்தப் பார்த்தாய் ஆகில்-
நாட்டார் -தண்ணிது-என்கிற அஞ்ஞானம் வருவதற்கு ஒரு உபாயம் ஏதோ -என்று அருளிச் செய்வர் பட்டர் –
அப்போது மறந்து பிழைக்கலாம் என்னுமதனாலே –

அன்றிக்கே
உன் திருவடிகள் என் உள்ளத்திலே பிரகாசியா நிற்க துக்கத்துக்கு காரணமான-
அறிவின்மை வருவதற்கு உபாயம் உண்டோ -என்று அருளிச் செய்வர் அம்மாள் –என்னே -பிரிநிலை ஏகாரம் -உபாயம் இல்லை என்றவாறு –

உண்டாகில் உண்டு உடுத்துத் திரியலாமே உலகத்தாரைப் போன்று –
சூர்யன் இருக்க இருள் வராதே -தேஜஸ் இருள் சேராதே பால ஆதித்யர் -உதித்த பின்பு -அல்லல் -துக்கம் என்றவாறு –

——————

தொழும் திருப்பாதன் இராமாநுசனை தொழும் பெரியோர் – 105-

செழும் திரைப் பாற்கடல் கண்டுயில்மாயன் திருவடிக் கீழ்
விழுந்திருப்பார் நெஞ்சில் மேவு நன்ஞானி நல் வேதியர்கள்
தொழும் திருப்பாதன் இராமானுசனைத் தொழும் பெரியோர்
எழுந் திரைத்தாடுமிடம் அடியேனுக் கிருப்பிடமே – – -105 –

விலஷணமான ஜ்ஞானத்தை உடையவராய் –
பரம வைதிகரானவர்கள் ப்ராணாமாத்ய அநு வர்த்தங்களைக் பண்ணா நின்றுள்ள திருவடிகளை வுடையரான ஸ்ரீ எம்பெருமானாரை
நித்யாஞ்சலி புடாஹ்ருஷ்டா -பார மோஷ -என்கிறபடியே சதா அனுபவம் பண்ணா நின்று உள்ள வைபவத்தை உடையவர்கள் –
(தூங்கும் கண்ணன் -கண் துயில் மாயன் -கண் வளரும் கமலக் கண்ணன் -பற்றாமல் உண்டோ கண்கள் துஞ்சுதலே –
இவரை பற்ற அன்றோ அடுப்பது-)-அவ் அனுபவ ஜனித ஹர்ஷ பிரகர்ஷத்தாலே உடம்பு இருந்த இடத்தில் இராதே
கிளர்ந்து கடல் இரைத்தால் போலே இரைத்துக் கொண்டு சசம்பிரம வியாபாரங்களை பண்ணும் இடம்
அவர்கள் அடியனான எனக்கு வஸ்த்வ்ய தேசம்

ஏஷ நாராயணஸ் ஸ்ரீ மான் -ஷீரார்ணவ நிகேதன -என்றும் –
வெள்ளத்தரவில் துயில் அமர்ந்த வித்தினை -என்றும் சொல்லுகிறபடி அநந்த அவதார கந்தமாய்க் கொண்டு
ஸ்ரீ திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற ஸ்ரீ சர்வேஸ்வரன் -என்றபடி –

செழும் திரை பாற்கடல் பள்ளி கொள் மாயன் –என்றும் பாடம் சொல்லுவார்கள் –
திருவடிக் கீழ் விழுந்து இருப்பார் -பாற் கடலான் பாதம் வழுவா வகை நினைந்து – என்கிறபடியே
அப்படிப் பட்ட ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய கல்யாண குணங்களை அனுபவித்து -அவற்றிலே ஈடுபட்டு –
உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்றபடி –
அவனுடைய திருவடிகளின் கீழே நிழலும் அடி தாறும் போலே பிரியாதே விழுந்து இருக்குமவர்களான –
கலக்கமிலா நல் தவ முனிவராலே —

நெஞ்சில் மேவும் நல் ஞானி –
இது ஒரு ஞான வைபவமே என்று இத்தையே பலகாலும் அவர்கள் ஸ்லாகித்துக் கொண்டு – போருகையாலே அவர்கள்
நெஞ்சிலே வைக்கப்பட்ட ஞான வைலஷன்யத்தை உடையவராய் –
மேவுதல் -விரும்புதல் –

செழும் திரை — மேவு நன் ஞானி
தனக்கு ஸ்ரீ எம்பெருமானார் உபதேசித்த நன் ஞானம் –பாற்கடல் கண் துயிலும் ஸ்ரீ மாயன் குணங்களிலே ஈடுபட்டு –
அதன் கண்ணே நிலை நிற்கும் -ரசிகர்களான ஸ்ரீ சனகாதி முனிவர்களாலும் –
ஸ்ரீ எம்பெருமானாருக்கு வாய்த்த இந்த சாஸ்திர தாத்பர்ய ஞானத்தின் சீர்மை இருந்தபடி என் -என்று
நெஞ்சார எப்பொழுதும் கொண்டாடும்படி உள்ளதாம் – அத்தகைய ஞானம் வாய்ந்தவர் ஸ்ரீ எம்பெருமானார் -என்கிறார் .

ஸ்ரீ எம்பெருமான் கண் துயிலும் ஸ்ரீ திருப்பாற் கடலிலே அலைகள் செழுமை வாய்ந்து உள்ளன –
செழுமை -அழகு -பெருமையுமாம் –
கோலக் கருமேனி செங்கண் மால் திரு மேனியைத் தீண்டப் பெற்ற பெரும் களிப்பினால் –
கைகளைத் தூக்கி ஆரவாரத்துடன் ஆடுவது போன்று உள்ளது அந்தக் கடல் –
அங்கே போய் ஸ்ரீ மாயனை வழி படுகின்றனர் ஸ்ரீ ப்ரஹ்ம பாவனையில் நிற்பவர்களான சனகாதி முனிவர்கள் –
தன்னிடம் வந்து பள்ளி கொண்ட ஸ்ரீ பரமனை கடல் தன் அலைகள் ஆகிற கைகளாலே திருவடிகளை அலைத்து –
ஊஞ்சலில் ஆட்டி உறங்கும்படி -செய்வதனால் ஸ்ரீ எம்பெருமான் கண் துயில்வதாக தோற்றுகிறது -பக்தர்களுக்கு –

கடலோதம் தம் கால் அலைப்ப கண் வளரும் -ஸ்ரீ முதல் திருவந்தாதி – 13- என்றார் ஸ்ரீ பொய்கை ஆழ்வாரும் .
உண்மையில் உறங்குகிறானா அவன் – அவனுறங்கி விட்டால் உலகின் கதி என்னாவது -ஸ்ரீ மாயன் அல்லனோ –
பொய் உறக்கம் கொள்கிறான் -உறங்குவான் போல் உலகு உய்யும் வழியை யோசனை செய்கிறான் –
உறங்குவான் போல் யோகு செய்வதாக கூறுகிறார் ஸ்ரீ திருவாய் மொழியில் ஸ்ரீ நம் ஆழ்வார் –
நித்ராசி ஜாகர்யயா -விழிப்புடன் உறங்குகின்றாய் -ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம் -என்று ஸ்ரீ பட்டர் அருளிச் செய்த படி –
உலகினை காக்கும் விஷயத்தில் விழிப்புடன் உறங்குகின்ற ஆச்சர்யத்தில் ஈடுபட்டு –
ஜிதந்தே புண்டரீகாஷா -ஸ்ரீ தாமரைக் கண்ணனே உன் அழகுக்கு தோற்றோம் -என்றபடி
குணத்திற்கு தோற்று திருவடிகளிலே விழுகிறார்கள் அந்த ஸ்ரீ சனகாதி முனிவர்கள் –

இது ஒரு நாள் நிகழும் நிகழ்ச்சி யன்று –
பாற்கடலான் பாதம் வழுவா வகை நினைந்து வைகல் தொழுவாரை -ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி – 89- என்றபடி
நாள் தோறும் நடை பெரும் நிகழ்ச்சியாகும் –
ஆகவே வரும் போதெல்லாம் வியக்கத்தக்க குணத்திற்கு தோற்று திருவடிக் கீழ் விழுவதும் அவர்கட்கு மாறாத இயல்பாகி விட்டது –
இது தோற்ற -ஸ்ரீ மாயன் திருவடிக் கீழ் விழுந்திருப்பார் -என்று அருளிச் செய்தார் –
ஸ்ரீ மாயன்-ஆச்சர்யப் படத் தக்கவன்
பாற்கடல் பள்ளிகொள் மாயன் -என்றும் ஒரு பாடம் உண்டு

இங்கனம் மாயன் குணத்திற்கு தோற்று திருவடிக் கீழ் வீழ்தலின் இருப்பு உடையார் உள்ள -ஸ்ரீ சனகாதி முனிவர்கள் –
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஸ்ரீ நம் ஆழ்வாரால் –
கலக்கமில்லா நல் தவ முனிவர் -ஸ்ரீ திருவாய் மொழி – 8 3-10 – என்று போற்றப்படும் ஏற்றமுடைய தங்களது நெஞ்சிலே
ஸ்ரீ எம்பெருமானாருடைய நல் ஞானம் மேவுதற்கும் இடம் ஏற்பட்டு விடுகிறதாம் –
பல காலும் அவர்கள் ஸ்ரீ எம்பெருமானார் உடைய நல் ஞானத்தை கொண்டாடிப் பேசுகையாலே –அவர்கள் நெஞ்சிலே
அந்த ஞானம் இடம் கொண்டமை தெரிகிறது .
நூல்களிலே ஸ்ரீ சனகாதி முனிவர் பேச்சுக்களாய் வரும் இடங்களிலே சரம பர்வ விஷயமாக ஸ்ரீ எம்பெருமானார் அளித்த
ஞானமே பலகாலும் கொண்டாடப் பட்டுள்ளமையைக் கண்டு ஸ்ரீ அமுதனார் இங்கனம் கூறுகிறார் -என்க –
மேவு நல் ஞானி ஸ்ரீ எம்பெருமானது குணத்தை ரசித்து அனுபவிக்கும் நெஞ்சிலும் இந்த நல் ஞானம்
ரசிக்க தக்கதாய் இருத்தலின் பலகால் கொண்டாடும்படி இடம் பெறுகிறது .
மேவுவது விசேஷணமான ஞானம்-அதனை உடையவன் ஞானி அல்லன் .

நல் வேதியர் –
பரம வைதிகர் ஆனவர்கள் –தொழும் திருப் பாதன்
லஷ்மணாய முநயே தஸ்மை நமஸ் குர்மஹே- என்றும் –
தஸ்மை ராமானுஜார்யாய நம பரம யோகினே -என்றும் –
பிரமாணம் லஷ்மண முநி ப்ரதி க்ர்ஹ்ணா து மாமாம் – என்றும் –
ராமானுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்த்நா-என்றும் சொல்லுகிறபடியே
பிரணமாத்ய அனுவர்த்தனந்களை பண்ணா நின்றுள்ள திருவடிகளை உடையனான –

இராமானுசனை –
ஸ்ரீ எம்பெருமானாரை –

—————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Goda Ranganatha Swamy Temple, Edulabad, Ranga Reddy District, Telangana

August 20, 2023

This Temple was built around 600 years ago by Appalacharya Appanna Iyengar. It was built much before the Mughals invaded India. Though the Presiding Deity here is Lord Godha Ranganatha Swamy it is actually Goddess Godha alias Kodhai who gains more prominance here. There are only two Temples in the whole of India for Goddess Aandal Amma. One is in Srivilliputhur in Tamil Nadu, while this Temple is the second and hence it is called as Uthara Srivilliputhur. Godha Devi here is called as Kodhai in Srivilliputhur. While Aandal Amma is a Swayambu here Sri Ranganatha Swamy is found with a mild limp and some support for his elbow. It is said that while Sri Ranganathar was flying high on his Garuda Vahan He tried to jump off it in His anxiety to meet Aandal and hence got the limp on His Elbow. During the Mughal period in the 15th and 16th century Edulabad was known as Rayapuram. It is strongly believed that any unmarried girls who visit here and offer poojas and bangles to the Goddess Goda Devi will get married very soon.  The main festivals are Brahmothsavam and Shravana Month,  Shakaranthi, Ugadhi, Dasara and Diwali which attract enormous number of Devotees here that time.   This Temple is situated near the Lakshminarayana Lake.

Temple Phone Number: 96408-18360

Temple Timing: 6 AM to 12 Noon and 5 PM to 8 PM

Distance from Chennai to Edulabad is 612 Kms

According to history, between the 15th and the 16th century, during the regime of Quli Qutub Shah, Edulabad was known as Rayapuram. At that time, Srinivasa Desika Chary and his family happened to visit this place on a pilgrimage. When Desika Chary died due to ill-health, his wife Alivelamma and her son Appala Desika Chary, settled down at this place. In the same year, a sage came to this place and gave Manthropadesam to the mother and child and told them to construct a temple at this place. In those days, the place was a hillock with dense forest inhabited by wild animals and birds including Garuda Pakshis. Garuda Pakshi is the vahana of Lord Vishnu and as such, this place also came to be known as Garudadri. Alivelamma and her son Appala Desika Chary went to Sri Ranganatha Swamy temple at Srivilliputhur in Tamil Nadu to seek darshan. On the same day, Appala Desika Chary had a dream of Goda Devi, where she asked him to be taken to Rayapuram. The next day, to their surprise, they found an idol in a golden cradle which resembled Goda Devi. They brought the idol to Rayapuram and constructed a small structure.

As the years rolled by, the locals and nearby villagers, thronged the temple in large numbers and developed the temple in a phased manner. The main festivals at the temple include Brahmostsavam and Goda Devi Kalyamam in Sravana Masam (August) followed by all special and visishta sevas during festivals like Sankranti, Ugadi, Dasara, Diwali, among others. There is a strong belief that if unmarried girls perform puja and offer bangles, they will be blessed with marriage offers soon. That is why Goda Devi is also popularly known as Gajula Andalamma.

A young girl was playing around the village when she spotted some colourful bangles. She immediately went to the seller and asked for some bangles. She told him, she had no money, but he could come to this particular house and get paid. She wore the bangles and vanished.

The next day the bangle seller came knocking at the door of a humble man, a priest, and asked for the money. The man argued that he had no daughter but he suddenly thought of the idol inside. When they both went in and checked, there she was standing, her arms full of colourful bangles.

The bangle seller was so impressed that he immediately got a pair of gold bangles made, which apparently Godamma still wears.

  Idols of Lord Ranganatha Idols of Lord Ranganatha

“People offer bangles as prasadam after their wish is fulfilled,” says Mr Tiruvadandam Porethi Lakshmana Charyulu, the main archaka and the sixth generation of the family which has been looking after the Sri Godha Sametha Mannaru Ranganayaka Swamy temple.

“This ancient temple for Andal was built by our ancestors. Appalacharya Appana Iyengar built this temple around 600 years ago,” he says. A powerful deity, people come here with wishes.

Goddess Andalamma Goddess Andalamma

“This temple was built much before the Moghuls came to India, Though there is no proof, this is a 13th century temple,” says Mr Tiruvadandam Porethi Govindarajulu, the seventh generation of the family.

Working as a branch manager at Akshara Advertising has not diminished his devotion to the temple and the Goddess. “I do not know if the next generation will be interested in doing pujas and looking after this ancient temple,” he says.

jpg

“Only Emperor Aurangzeb must have been against Hindu temples, because here at Edulabad when we have rathothsavams Muslims vie with each other to pull the chariot through the village,”  he said.

The temple is located in Edulabad village, Ghatkesar mandal, off the Warangal highway and sits quietly near a lake, near several educational institutions. The Lakshminarayana lake is replenished with water from the Erumela vagu. About 2,000 acres of land are cultivated with the water.

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ (ஜகன்நாத்- புரி)ரத யாத்திரை —

July 7, 2023

சலபேகாவின் கதை: அன்பு மற்றும் பக்தியின் ஒரு உருவகம்

பக்த் சலபேகா 17 ஆம் நூற்றாண்டில் பிறந்தார்
மற்றும் ஒடிசாவில் வாழும் ஒரு புகழ்பெற்ற மத ஒரியா கவிஞரானார்.
அவரது தாயார் ஒரு இந்து பிராமணர் மற்றும் அவரது தந்தை ஒரு பெங்காலி முஸ்லீம்.
வங்காள நவாப் ராணுவத்தில் சுபேதாராக இருந்த லால்பேக் ஒடிசாவுக்கு எதிரான பிரச்சாரத்தில் பங்கேற்றார்.
ஒருமுறை லால்பேக், பூரியில் உள்ள தண்டமுகுந்தபூரில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது, ​​
ஒரு அழகான பிராமண விதவை ஒருத்தி குளித்தலை விட்டு திரும்பி வருவதைக் கண்டார்.
அவளுடைய இளமை மற்றும் அழகில் மயங்கிய அவன் அவளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று திருமணம் செய்துகொண்டான்.
பின்னர் அவர் பாத்திமா பீவி என்று அறியப்பட்டார்.

அவரது குழந்தை பருவத்திலிருந்தே, அவரது தாயார் அவருக்கு விஷ்ணுவின் புராணக் கதைகளை விவரித்தார்.
இறைவன் மீது மிகுந்த பக்தியை வளர்த்துக் கொண்டார்.
சலாபேகா வளர்ந்தவுடன், அவர் தனது தந்தையுடன் பிரச்சாரங்களில் பங்கேற்றார்.
ஒருமுறை அவர் பலத்த காயம் அடைந்தார்,
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிர் பிழைப்பதை நிராகரித்தனர்.
சில பக்தர்கள் கிருஷ்ணர் மற்றும் ஜகந்நாதரைப் பற்றி பஜனைப் பாடுவதை அவர் கேட்டார்.
அவரும் பகவானின் திருநாமங்களை உச்சரிக்கத் தொடங்கினார்,
யானைகளின் அரசனான கஜேந்திரனை முதலையிடம் சிக்கியபோது விஷ்ணு காப்பாற்றியதைத்
தன் தாயார் கூறியதை நினைவு கூர்ந்தார்.
துருவ மகாராஜா மற்றும் ஸ்ரீ பிரஹலாதாவைப் போலவே, சலபேகாவும் இறைவனின் கருணையில்
தீவிர குழந்தை நம்பிக்கை கொண்டிருந்தார்.
பிரபஞ்சத்தின் அதிபதியான ஜகன்னாதர் தன்னை குணப்படுத்த முடியும் என்று அவர் நினைத்தார்.
அவர் ஜெகநாதரிடம் தொடர்ந்து பிரார்த்தனை செய்து இறுதியாக குணமடைந்தார்.

சலபேகாவின் அற்புதமான மீட்பு அவரது வாழ்க்கையில் ஒரு முக்கிய தருணமாக மாறியது.
அந்த சம்பவத்திற்குப் பிறகு, அவர் ஜெகநாதரின் தீவிர பக்தரானார்.
இந்த காரணத்திற்காக அவரது தந்தை அவரை நிராகரித்தார்.
எப்பொழுதும் ஜகந்நாதரின் நாமத்தை உச்சரித்துக்கொண்டே சுற்றித் திரிந்த அவர் இறுதியாக பூரியை அடைந்தார்.
ஜெகநாதரை மகிமைப்படுத்தும் வகையில் அவர் பல பிரார்த்தனைகளை எழுதினார்,
ஆனால் அவர் பிறப்பால் முஸ்லீம் என்பதால் பூரியில் உள்ள ஜெகநாதரின் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.
இருப்பினும், இது இறைவனை தியானிப்பதில் இருந்து அவரைத் தடுக்கவில்லை.
பகவான் ஜெகந்நாதர் தனது பக்தர்களைச் சந்திக்க ஊர்வலமாகச் செல்லும்போதும்,
அவரது அருளால் அவர்களை ஆசீர்வதிப்பதற்காகவும் அவர் வருடாந்திர ரத யாத்திரையை
ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்.

ரத யாத்திரை (ஜகன்நாத் புரி)
768px-நந்திகோச_ரத்திருவிழா ரத யாத்ரா, கார் திருவிழா, குண்டிச்சா யாத்ரா, கோசா யாத்ரா, நவதீன யாத்ரா, தசாவதார யாத்ரா மற்றும் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது.
ரத யாத்திரை கொண்டாட்டத்திற்கான தயாரிப்பு மிகவும் முன்னதாகவே தொடங்குகிறது, ஏனெனில் பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்களின் உதவியுடன் தேர்களை கட்டுவதற்கும் அலங்கரிப்பதற்கும் மூதாதையர் உரிமைகளைக் கொண்ட தச்சர்களால் ரதங்கள் அல்லது தேர்களை நிர்மாணித்து அலங்காரம் செய்வது. மூன்று தேர்களும் யாத்திரையின் சிறப்பம்சங்கள் மற்றும் கயிறுகளால் இழுக்கப்படுகின்றன.
ஜகந்நாதரின் தேர் 18 சக்கரங்களைக் கொண்ட 45.6 அடி உயரம் கொண்டது, நந்திகோசா என்று அழைக்கப்படுகிறது.ஜகந்நாத பகவான் கிருஷ்ணருடன் அடையாளம் காணப்படுகிறார், அவர் பீதாம்பரர் என்றும் அழைக்கப்படுகிறார், அவர் தங்க மஞ்சள் நிற ஆடைகளை அணிந்திருப்பார், எனவே இந்த தேரின் விதானத்தில் மஞ்சள் கோடுகள் வேறுபடுகின்றன. பாலபத்ரரின் தேர் 44 அடி உயரத்தில் 16 சக்கரங்களுடன் தலத்வஜா என்று அழைக்கப்படுகிறது .
தலத்வஜ_ரத்

அதன் கொடியில் பனை மரத்துடன் சிவப்பு மற்றும் நீல நிற துணியால் மூடப்பட்டிருக்கும்.

பத்மத்வஜ_ரத்சுபத்ராவின் தேர் துவாரபடலனா என்று அழைக்கப்படுகிறது , அதாவது “பெருமையின் மிதி”, பன்னிரண்டு சக்கரங்களுடன் நாற்பத்து மூன்று அடி உயரம் கொண்டது.

இந்த தேர் சிவப்பு மற்றும் கருப்பு துணியால் அலங்கரிக்கப்பட்டுள்ளது – கருப்பு பாரம்பரியமாக சக்தி மற்றும் தாய் தெய்வத்துடன் தொடர்புடையது.

ரத யாத்திரைரத யாத்திரை என்பது ஜகந்நாதர் தனது உடன்பிறந்த சகோதரிகளான பலபத்ரா மற்றும் சுபத்ராவுடன் ராணி குண்டிச்சா கோவிலுக்கு வருகை தந்ததைக் குறிக்கும் வகையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்து பண்டிகைகளில் ஒன்றாகும். ஜெகநாத் பூரி ரத யாத்திரையுடன் தொடர்புடைய மிகவும் பிரபலமான சடங்கு செரா பஹாரா. திருவிழாவின் போது, ​​கஜபதி மன்னன் தெய்வங்களையும் தேர்களையும் சுற்றி துடைப்பார். துடைப்பம் (தங்கம் கைப்பிடி) கொண்டு சாலையை சுத்தம் செய்து சந்தன நீரையும் பொடியையும் தூவி விடுகிறார். ஜகந்நாதரின் பார்வையில் அரசராக இருந்தாலும் சரி, சாமானியராக இருந்தாலும் சரி, ஒவ்வொரு பக்தரும் சமம் என்பதை இந்த வழக்கம் காட்டுகிறது. இந்த சடங்கு இரண்டு நாட்களில் நடைபெறும், முதலில் ரத யாத்திரை தொடங்கும் போது முப்பெரும் தெய்வங்கள் செல்லும் போது மற்றும் கடைசி நாளில் மீண்டும் பூரி கோவிலுக்கு சம்பிரதாயமாக கொண்டு வரப்படும்.

மூன்று தேர்களும் படா தண்டா எனப்படும் பூரியின் பிரதான வீதிக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த பயணத்தின் போது, ​​பகவான் ஜகந்நாதர் தனது வான வட்டுடன் இருக்கிறார், சுதர்சன சக்கரம் குண்டிச்சா கோயிலுக்கும் அவர்களின் அத்தையின் வீட்டிற்கும் (மௌசிமா கோயில்) கொண்டு செல்லப்படுகிறது, அங்கு தெய்வங்கள் ஒன்பது நாட்கள் தங்கி மகிழ்ந்து இனிப்பு அப்பத்தை ( போடா பிதா ) பரிமாறுகிறார்கள். ஜெகநாதருக்குப் பிடித்த உணவு.

பூரி ரத யாத்திரை திருவிழாவின் கொண்டாட்டம் மற்றும் கவனிப்பு புராணங்களின் காலத்திற்கு முந்தையது. பூரியை சுற்றுலாப் பயணிகளின் விருப்பமான இடமாக மாற்றும் முக்கிய காரணிகளில் ஒன்று, இது சார் தாம் கோவில்களில் ஒன்றாகும். பூரி ஜெகநாதர் ரத யாத்திரையின் மகத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு “juggernaut” என்ற ஆங்கில வார்த்தை உருவாக்கப்பட்டது!

ரத யாத்திரையின் விவரணைகளை பிரம்ம புராணம், பத்ம புராணம், மற்றும் ஸ்கந்த புராணம் மற்றும் கபில சம்ஹிதையில் காணலாம். தேரின் கருத்து கதா உபநிடதத்தில் பின்வரும் வார்த்தைகளில்
விளக்கப்பட்டுள்ளது : “ஆத்மானம் ரதினம் வித்தி ஷரீரம் ரதமேவது புத்திம் து சாரதிம் வித்தி மனஹ் ப்ரக்ரஹமேவ ச” – உடலே தேர், ஆன்மாவே தேரில் நிறுவப்பட்ட தெய்வம். மனதையும் எண்ணங்களையும் கட்டுப்படுத்தும் தேரோட்டியாக ஞானம் செயல்படுகிறது. ஸ்கந்த புராணம் ரத யாத்திரையின் புனிதத்தன்மையை பின்வரும் வார்த்தைகளில் மகிமைப்படுத்துகிறது:

“குண்டிச்ச மண்டபம் நாமம் யத்ரஹமஜனம் புர அஸ்வமேத ஸஹஸ்ரஸ்ய மஹாபேதி ததத்வபத்” – தேர் ஊர்வலத்தின் இறுதித் தலமான குண்டிச்சா கோயிலில் உள்ள ஸ்ரீமந்திர மூர்த்திகளைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர்கள் ஆயிரம் குதிரைகளைப் பலியிட்டதன் பலனைப் பெறுகிறார்கள்.

2012 புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜெய் ஜெகநாத்ஜகந்நாதர் பகவான் கிருஷ்ணருடன் அடையாளப்படுத்தப்படுகிறார். ஜகந்நாதரின் பிரசன்னத்தின் காரணமாக புனித நகரமான பூரி – ஸ்ரீக்ஷேத்திரத்தில் மரணத்தின் கடவுளான யமனின் செல்வாக்கு குறைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது, எனவே இது “யமனிகா தீர்த்தம்” என்றும் அழைக்கப்படுகிறது .

தேரின் மீது ஜகந்நாதரின் ஒரு பார்வை மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது, மேலும் புனிதர்கள், கவிஞர்கள் மற்றும் புனித நூல்கள் இந்த சிறப்பு திருவிழாவின் புனிதத்தன்மையை மீண்டும் மீண்டும் போற்றியுள்ளன. திருவிழாவின் புனிதத்தன்மை என்னவென்றால், தேர் அல்லது கயிறுகள் இழுக்கப்படும் ஒரு தொட்டு கூட பல புண்ணிய செயல்கள் அல்லது பல ஆண்டுகளாக தவம் செய்த பலன்களை வழங்க போதுமானதாக கருதப்படுகிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் தேர், சக்கரங்கள், பிரமாண்ட வீதிகள் அனைத்தும் பகவான் ஜகந்நாதருடன் ஒன்றிவிடுகின்றன என்பதை வலியுறுத்தும் புகழ்பெற்ற ஒரியப் பாடல் ஒன்று உள்ளது.

ஒலிம்பஸ் டிஜிட்டல் கேமராபக்த சலபேகா கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படாததால், இறைவனை அருகில் இருந்து பார்க்க நினைத்தார். அவர் ஸ்ரீமந்திரத்திற்கு அருகில் உள்ள ஒரு வீட்டில், இறைவனின் தரிசனம் பெறுவதற்காக வசித்து வந்தார். ஜகந்நாதரின் தேர் அவரது வீட்டிற்கு அருகில் வந்ததும், அவர் அழத் தொடங்கினார். திடீரென்று, தேர் அங்கே நின்றது, சாலபேகா ஜெகநாதரைக் கண்டார். அன்றிலிருந்து அவருக்கு இறைவனை தரிசனம் செய்ய அனுமதித்த அர்ச்சகர்களுக்கு இந்த அதிசயம் தெரிந்தது.

சலபேகாவின் பக்திப் பாடல்கள் அனைத்திலும் பொதுவான கருப்பொருள் ஒன்று உள்ளது. அவர் தனது பிறப்பு மற்றும் இந்து அல்லது முஸ்லீம் அல்லாத அவரது பரம்பரை குறித்து தன்னைத்தானே தண்டிக்கிறார். சுருக்கமாக, அவர் கூறுகிறார், ‘என் தந்தை முகலாயரின் மகன், என் தாய் ஒரு பிராமணர், ஓ என் ஆண்டவரே, நீங்கள் எனக்கு ஒரு தாழ்ந்த பிறப்பைக் கொடுத்தீர்கள்.’ இருண்ட ஜகந்நாதரைப் போற்றிப் பாடிய அவர், காட்டு யானை கிராண்ட் அவென்யூவில் வந்து தேரில் ஏறிச் செல்வது போல் அசைந்து அசைந்து, தன் பக்தர்களின் பாவங்கள் எல்லாம் கொடியதாயினும், நொடிப்பொழுதில் அழித்துவிடுகிறார் என்று கூறுகிறார். அல்லது மன்னிக்க முடியாதது.

ஜகன்னாத் - நகல்ஒருமுறை ரத யாத்திரை திருவிழாவின் போது, ​​சலபேகா வெளியூர் சென்றதால், ஊர்வலத்தின் போது அவரை அடைய முடியவில்லை. அவர் வரும் வரை தனது தேரில் காத்திருக்குமாறு ஜெகநாதரை வேண்டிக் கொண்டார், அதைத்தான் இறைவன் செய்தார்!

ரதம் சலபேகாவின் வீட்டை அடைந்ததும் நின்றது. அர்ச்சகர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் ஜெகநாதரின் தேர் நகரவில்லை என்று புராணங்கள் கூறுகின்றன. சலபேகா அந்த இடத்தை அடைந்து இறைவனுடன் உறவாடி, அதன் பிறகுதான் தேர் நகர்ந்தது!

தேர் நிலையாக இருந்த இடம் பின்னர் ஜகந்நாதரின் நினைவாக பல பஜனைகளை இயற்றுவதற்காக சாலபேகாவால் பயன்படுத்தப்பட்டது.

சலபேகாஅவரது மரணத்திற்குப் பிறகு அவரது உடல் அங்கேயே தகனம் செய்யப்பட்டது மற்றும் அவரது சமாதி பூரியில் உள்ள கிராண்ட் சாலையில் உள்ளது. அவர் ஜெகநாதரின் பக்தர்களால் நினைவுகூரப்படுகிறார் மற்றும் அவரது பஜனைகள் இன்றுவரை பாடப்படுகின்றன.

அவர் ஜெகநாதரின் ஆசீர்வாதத்தைப் பெற்றார் மற்றும் ஒரு சிறந்த பக்தராகக் கருதப்படுகிறார்.

சலபேகாவைக் கௌரவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ரத யாத்திரையின் போது, ​​ஜகந்நாதரின் தேர் அவரது சமாதிக்கு அருகில் சிறிது நேரம் நிலைத்திருக்கும்.

பக்த சலபேகாவின் மற்றொரு கதை:
சாலபேகா தனது அருளை அவர் மீது பொழிந்தபோது மற்றொரு நிகழ்வு இருந்தது. சலாபேகா டெல்லியில் இருந்து பாலசோர் வழியாக பூரிக்கு வந்து ஷியாம்சுந்தர் கோவில் அருகே தங்கியிருந்தார். மாலை தொழுகையின் போது, ​​சலபேகா இறைவனை உள்ளே பார்க்க விரும்பினார், ஆனால் அவர் ஒரு முஸ்லீம் என்பதால் அதற்கு அனுமதிக்கப்படவில்லை. ஒரு நாள் மாலைப் பூசாரி தனது சிம்மாசனத்தில் இறைவன் காணாமல் போனதைக் கண்டு அரசனிடம் தெரிவித்தார். அன்றிரவே பாலசோரின் அரசன் ஒரு கனவில் இறைவனின் பெரும் பக்தர் ஒருவர் கிருஷ்ணரை தரிசனம் செய்வதற்காக வெளியில் காத்துக் கொண்டிருப்பதைக் கண்டார். சலபேகா இறைவனைக் காணும்படி சுவரில் துளையிடுவதற்கு மன்னர் ஏற்பாடு செய்தார். சாலபேகா துளை வழியாக பார்த்தவுடன், தெய்வங்கள் அதிசயமாக மீண்டும் தோன்றின.

பகவான் தனது தீவிர பக்தர்களுக்கு அக்ரனியாக இருந்து அவர்களை மோட்சத்திற்கு அழைத்துச் செல்கிறார்.

குண்டிச்சா கோயிலில் இருந்து திரும்பும் வழியில் , மூன்று தெய்வங்களும் மவுசி மா கோயில் (அத்தையின் இருப்பிடம்) அருகே சிறிது நேரம் நின்று , கடவுளுக்கு விருப்பமானதாகக் கருதப்படும் ஒரு சிறப்பு வகை பான்கேக் என்ற போடா பிதாவை பிரசாதமாக வழங்குகிறார்கள். ஏழு நாட்கள் தங்கிய பிறகு, தெய்வங்கள் தங்கள் இருப்பிடத்திற்குத் திரும்புகின்றன.

ஜகன்னாதர், பாலபத்ரா மற்றும் சுபத்ரா ஆகிய மூன்று தேர்களும் ஒவ்வொரு ஆண்டும் பாசி, தௌசா போன்ற குறிப்பிட்ட மரங்களைக் கொண்டு புதிதாகக் கட்டப்படுகின்றன. அவை பரம்பரை உரிமைகள் மற்றும் சிறப்புரிமைகளைக் கொண்ட தச்சபல்லாவின் முன்னாள் அரசர்களின் சிறப்புக் குழுவால் கொண்டு வரப்படுவது வழக்கம் . அதற்கு. மரக்கட்டைகள் மகாநதி ஆற்றில் மரக்கட்டைகளாக மிதப்பது வழக்கம். இவை பூரி அருகே சேகரிக்கப்பட்டு பின்னர் சாலை வழியாக கொண்டு செல்லப்படுகின்றன. [4]

மூன்று தேர்களும் கிராண்ட் அவென்யூவான படா தண்டாவில் பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்படும் தனித்துவமான திட்டத்தின்படி அலங்கரிக்கப்பட்டுள்ளன. சிங்கத்வாரா அல்லது சிம்ம வாசல் என்றும் அழைக்கப்படும் அதன் கிழக்கு நுழைவாயிலுக்கு அருகில் உள்ள கோவிலின் முன் பரந்த அவென்யூ முழுவதும் தேர்கள் வரிசையாக நிற்கின்றன

ஒவ்வொரு தேர்களையும் சுற்றி ஒன்பது பார்ஸ்வ தேவதைகள், தேர்களின் பக்கங்களில் வெவ்வேறு தெய்வங்களைக் குறிக்கும் மரப் படங்கள் வரையப்பட்டுள்ளன. ஒவ்வொரு தேருக்கும் ஒரு தேரோட்டியும் (சாரதி) நான்கு குதிரைகளும் உள்ளன.

தேர் விவரங்கள் ஜகந்நாத் பாலபத்ரா சுபத்ரா
தேரின் பெயர் நந்திகோஷா (ନନ୍ଦିଘୋଷ) தலத்வாஜா (ତାଳଧ୍ୱଜ) தர்படலானா (ଦର୍ପଦନ)
தேரின் மாற்றுப் பெயர் கருடத்வஜா, கபித்வஜா லங்காலத்வஜா தேவதாலனா, பத்மத்வஜா
படம்
Lord Shri Jagannath on His Chariot Nandighosha.jpg
Chariot Taladhwaja of Lord Balabhadra.jpg
Chariot Devidalana of Goddess Subhadra.jpg
சக்கரங்களின் எண்ணிக்கை 16 14 12
பயன்படுத்தப்பட்ட மரத் துண்டுகளின் மொத்த எண்ணிக்கை 832 763 593
உயரம் 44′ 2″ 43′ 3″ 42′ 3″
நீளம் மற்றும் அகலம் 34’6″ x 34’6″ 33′ x 33′ 31’6″ x 31’6″
விதானங்களின் நிறங்கள் சிவப்பு, மஞ்சள்(விஷ்ணுவுடன் தொடர்புடைய மஞ்சள்) சிவப்பு, நீல பச்சை சிவப்பு, கருப்பு(தெய்வத்துடன் தொடர்புடைய கருப்பு)
பாதுகாவலர் கருடன் வாசுதேவா ஜெயதுர்கா
தேரோட்டி தாருகா மாதலி அர்ஜுனா
கொடி பெயர் த்ரைலோக்யமோஹினி உன்னனி நாதாம்பிகா
கொடி சின்னம் பனை மரம்
குதிரைகளின் பெயர்
  1. சங்கா
  2. பலஹாகா
  3. ஸ்வேதா
  4. ஹரிதாஷ்வா
  1. திப்ரா
  2. கோர
  3. திர்காஷர்மா
  4. ஸ்வர்ணனவ
  1. ரோச்சிகா
  2. மோச்சிகா
  3. ஜிதா
  4. அபராஜிதா
குதிரைகளின் நிறம் வெள்ளை கருப்பு சிவப்பு
தேர் கயிற்றின் பெயர் சங்கசூடா நாகினி பாசுகி நாகா ஸ்வர்ணசூடா நாகினி
பரிவார தெய்வம் மதன்மோகன் ராமகிருஷ்ணா சுதர்சன
கேட் கீப்பர்கள் ( துவாரபால )
  1. ஜெயா
  2. விஜயா
  1. நந்தா
  2. சுனந்தா
  1. கங்கை
  2. ஜமுனா
ஒன்பது பார்ஷ்வதேவதா (துணை தெய்வங்கள்)
  1. பஞ்சமுகி மகாபீர் ( ஹனுமான் )
  2. ஹரிஹர
  3. மதுசூதனன் ( விஷ்ணு )
  4. கிரிதர் ( கிருஷ்ணா )
  5. பாண்டு நரசிங்க
  6. சித்தமணி கிருஷ்ணா
  7. நாராயண (விஷ்ணு)
  8. சத்ர பங்கா ரபனா (ராம)
  9. ராமர் அனுமன் மீது அமர்ந்தார்
  1. விநாயகர்
  2. கார்த்திகேயா
  3. சர்வமங்களா
  4. பிரலம்பரி (பலராமன்)
  5. ஹலாயுதா (பலராமன்)
  6. மிருத்யுஞ்சயா ( சிவன் )
  7. நாதம்வர (சிவன்)
  8. முக்தேஸ்வர் (சிவன்)
  9. ஷேஷதேவா
  1. சண்டி
  2. சாமுண்டா
  3. உக்ரதாரா
  4. பனதுர்கா ( துர்கா )
  5. சுலிதுர்கா (துர்கா)
  6. வாராஹி
  7. ஷ்யாமகாலி
  8. மங்கள
  9. விமலா

சந்தன யாத்திரை–

சந்தன் யாத்திரை அல்லது “சந்தன மர விழா” என்பது 42 நாட்கள் நடைபெறும், இது தேர்களுக்கான கட்டுமானப் பணியின் தொடக்கத்தைக் குறிக்கிறது. காலம் பாதியாக பிரிக்கப்பட்டுள்ளது, ஒவ்வொன்றும் 21 நாட்கள் கொண்டது. முதல் பாதி பஹர் சந்தன் என்று அழைக்கப்படுகிறது , இதன் மூலம் தலைமை தெய்வங்களின் பிரதிநிதித்துவ படங்கள் வண்ணமயமான ஊர்வலங்களில் எடுத்துச் செல்லப்பட்டு ஒவ்வொரு நாளும் நரேந்திர தொட்டியில் ஒரு சடங்கு படகு சவாரி வழங்கப்படுகிறது. இந்த தெய்வங்களில் மதன் மோகன் (ஜகன்நாத்), ராம-கிருஷ்ணா, லக்ஷ்மி, சரஸ்வதி மற்றும் பஞ்ச பாண்டவர் – ஐந்து முக்கிய சிவன் கோவில்களின் தலைமை தெய்வங்கள். பிதார் சந்தன் என்று அழைக்கப்படும் பிந்தையது , பொதுமக்களுக்குத் திறக்கப்படாத பல்வேறு சடங்குகளைக் கொண்டுள்ளது. [5]வைசாகத்தின் பிரகாசமான பதினைந்து நாட்களில் மூன்றாவது நாளான அக்ஷய திருதியை அன்று சடங்கு தீ வழிபாட்டுடன் தேர்களின் கட்டுமானம் தொடங்குகிறது. இது பூரி மன்னரின் அரண்மனைக்கு முன்பாகவும், பூரி கோவிலின் பிரதான அலுவலகத்திற்கு எதிரேயும் நடைபெறுகிறது. பின்னர், தேவர்கள் தொட்டியின் நடுவில் உள்ள ஒரு சிறிய கோவிலில், தண்ணீர், சந்தனப் பசை, வாசனைகள் மற்றும் மலர்களால் நிரப்பப்பட்ட கல் தொட்டிகளில் சடங்கு ஸ்நானம் செய்கிறார்கள்.இந்த சந்தன விழாவானது ஸ்னான யாத்திரை அல்லது “ஸ்நான திருவிழாவில்” முடிவடைகிறது, இது ஜ்யேஷ்ட மாதத்தின் முழு நிலவு நாளில் நடைபெறுகிறது. ஜகன்னாதர், பால்பத்ரா மற்றும் சுபத்ரா ஆகிய தெய்வங்கள் 108 பானை நீரில் குளித்து, பின்னர் இரண்டு வாரங்களுக்கு அடையாள மற்றும் சடங்குகளுடன் குணமடைகின்றன. அவை பொதுமக்களின் பார்வைக்கு தடை செய்யப்பட்டுள்ளன. [6]மூன்று சிறப்பு பட்டா சித்திரங்கள், அனாசரா பட்டீஸ் எனப்படும் ஸ்டார்ச் இறுகிய துணியில் இயற்கை வண்ணங்களின் பாரம்பரிய ஒரியா ஓவியங்கள், பொது மக்களின் பார்வையில் இருந்து தெய்வங்களை மறைக்கும் மூங்கில் திரையில் கட்டப்பட்டுள்ளன, பொதுமக்களால் பார்க்க முடியும். இந்த காலகட்டத்தில், தெய்வங்களுக்கு அவர்களின் நோய் தீர்க்க வேர்கள், இலைகள், பெர்ரி மற்றும் பழங்கள் மட்டுமே கொடுக்கப்படுகின்றன. இந்த சடங்கு ஜெகன்னாத வழிபாட்டு முறையின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சியில் வலுவான பழங்குடி கூறுகளை நினைவூட்டுகிறது. அசல் பழங்குடி வழிபாட்டாளரான பிஸ்வபாசுவின் மகள் லலிதா, வேட்டையாடுபவர்களின் தலைவன் மற்றும் பிராமண பாதிரியார் வித்யாபதி ஆகியோரின் சந்ததியினர் தைதாபதிகள் அல்லது தைதாக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். குணமடையும் காலத்திலும், ரத ஜாத்ரா அல்லது தேர் திருவிழாவின் முழு காலத்திலும் தெய்வத்திற்கு சேவை செய்யும் பாக்கியம் அவர்களுக்கு உள்ளது.

ஒவ்வொரு தேர்களையும் சுற்றி ஒன்பது பார்ஸ்வ தேவதைகள், தேர்களின் பக்கங்களில் வெவ்வேறு தெய்வங்களைக் குறிக்கும் மரப் படங்கள் வரையப்பட்டுள்ளன. ஒவ்வொரு தேருக்கும் ஒரு தேரோட்டியும் (சாரதி) நான்கு குதிரைகளும் உள்ளன.

தேர் விவரங்கள் ஜகந்நாத் பாலபத்ரா சுபத்ரா
தேரின் பெயர் நந்திகோஷா (ନନ୍ଦିଘୋଷ) தலத்வாஜா (ତାଳଧ୍ୱଜ) தர்படலானா (ଦର୍ପଦନ)
தேரின் மாற்றுப் பெயர் கருடத்வஜா, கபித்வஜா லங்காலத்வஜா தேவதாலனா, பத்மத்வஜா
படம்
Lord Shri Jagannath on His Chariot Nandighosha.jpg
Chariot Taladhwaja of Lord Balabhadra.jpg
Chariot Devidalana of Goddess Subhadra.jpg
சக்கரங்களின் எண்ணிக்கை 16 14 12
பயன்படுத்தப்பட்ட மரத் துண்டுகளின் மொத்த எண்ணிக்கை 832 763 593
உயரம் 44′ 2″ 43′ 3″ 42′ 3″
நீளம் மற்றும் அகலம் 34’6″ x 34’6″ 33′ x 33′ 31’6″ x 31’6″
விதானங்களின் நிறங்கள் சிவப்பு, மஞ்சள்(விஷ்ணுவுடன் தொடர்புடைய மஞ்சள்) சிவப்பு, நீல பச்சை சிவப்பு, கருப்பு(தெய்வத்துடன் தொடர்புடைய கருப்பு)
பாதுகாவலர் கருடன் வாசுதேவா ஜெயதுர்கா
தேரோட்டி தாருகா மாதலி அர்ஜுனா
கொடி பெயர் த்ரைலோக்யமோஹினி உன்னனி நாதாம்பிகா
கொடி சின்னம் பனை மரம்
குதிரைகளின் பெயர்
  1. சங்கா
  2. பலஹாகா
  3. ஸ்வேதா
  4. ஹரிதாஷ்வா
  1. திப்ரா
  2. கோர
  3. திர்காஷர்மா
  4. ஸ்வர்ணனவ
  1. ரோச்சிகா
  2. மோச்சிகா
  3. ஜிதா
  4. அபராஜிதா
குதிரைகளின் நிறம் வெள்ளை கருப்பு சிவப்பு
தேர் கயிற்றின் பெயர் சங்கசூடா நாகினி பாசுகி நாகா ஸ்வர்ணசூடா நாகினி
பரிவார தெய்வம் மதன்மோகன் ராமகிருஷ்ணா சுதர்சன
கேட் கீப்பர்கள் ( துவாரபால )
  1. ஜெயா
  2. விஜயா
  1. நந்தா
  2. சுனந்தா
  1. கங்கை
  2. ஜமுனா
ஒன்பது பார்ஷ்வதேவதா (துணை தெய்வங்கள்)
  1. பஞ்சமுகி மகாபீர் ( ஹனுமான் )
  2. ஹரிஹர
  3. மதுசூதனன் ( விஷ்ணு )
  4. கிரிதர் ( கிருஷ்ணா )
  5. பாண்டு நரசிங்க
  6. சித்தமணி கிருஷ்ணா
  7. நாராயண (விஷ்ணு)
  8. சத்ர பங்கா ரபனா (ராம)
  9. ராமர் அனுமன் மீது அமர்ந்தார்
  1. விநாயகர்
  2. கார்த்திகேயா
  3. சர்வமங்களா
  4. பிரலம்பரி (பலராமன்)
  5. ஹலாயுதா (பலராமன்)
  6. மிருத்யுஞ்சயா ( சிவன் )
  7. நாதம்வர (சிவன்)
  8. முக்தேஸ்வர் (சிவன்)
  9. ஷேஷதேவா
  1. சண்டி
  2. சாமுண்டா
  3. உக்ரதாரா
  4. பனதுர்கா ( துர்கா )
  5. சுலிதுர்கா (துர்கா)
  6. வாராஹி
  7. ஷ்யாமகாலி
  8. மங்கள
  9. விமலா

சந்தன யாத்திரைதொகு

சந்தன் யாத்திரை அல்லது “சந்தன மர விழா” என்பது 42 நாட்கள் நடைபெறும், இது தேர்களுக்கான கட்டுமானப் பணியின் தொடக்கத்தைக் குறிக்கிறது. காலம் பாதியாக பிரிக்கப்பட்டுள்ளது, ஒவ்வொன்றும் 21 நாட்கள் கொண்டது. முதல் பாதி பஹர் சந்தன் என்று அழைக்கப்படுகிறது , இதன் மூலம் தலைமை தெய்வங்களின் பிரதிநிதித்துவ படங்கள் வண்ணமயமான ஊர்வலங்களில் எடுத்துச் செல்லப்பட்டு ஒவ்வொரு நாளும் நரேந்திர தொட்டியில் ஒரு சடங்கு படகு சவாரி வழங்கப்படுகிறது. இந்த தெய்வங்களில் மதன் மோகன் (ஜகன்நாத்), ராம-கிருஷ்ணா, லக்ஷ்மி, சரஸ்வதி மற்றும் பஞ்ச பாண்டவர் – ஐந்து முக்கிய சிவன் கோவில்களின் தலைமை தெய்வங்கள். பிதார் சந்தன் என்று அழைக்கப்படும் பிந்தையது , பொதுமக்களுக்குத் திறக்கப்படாத பல்வேறு சடங்குகளைக் கொண்டுள்ளது. [5]வைசாகத்தின் பிரகாசமான பதினைந்து நாட்களில் மூன்றாவது நாளான அக்ஷய திருதியை அன்று சடங்கு தீ வழிபாட்டுடன் தேர்களின் கட்டுமானம் தொடங்குகிறது. இது பூரி மன்னரின் அரண்மனைக்கு முன்பாகவும், பூரி கோவிலின் பிரதான அலுவலகத்திற்கு எதிரேயும் நடைபெறுகிறது. பின்னர், தேவர்கள் தொட்டியின் நடுவில் உள்ள ஒரு சிறிய கோவிலில், தண்ணீர், சந்தனப் பசை, வாசனைகள் மற்றும் மலர்களால் நிரப்பப்பட்ட கல் தொட்டிகளில் சடங்கு ஸ்நானம் செய்கிறார்கள்.இந்த சந்தன விழாவானது ஸ்னான யாத்திரை அல்லது “ஸ்நான திருவிழாவில்” முடிவடைகிறது, இது ஜ்யேஷ்ட மாதத்தின் முழு நிலவு நாளில் நடைபெறுகிறது. ஜகன்னாதர், பால்பத்ரா மற்றும் சுபத்ரா ஆகிய தெய்வங்கள் 108 பானை நீரில் குளித்து, பின்னர் இரண்டு வாரங்களுக்கு அடையாள மற்றும் சடங்குகளுடன் குணமடைகின்றன. அவை பொதுமக்களின் பார்வைக்கு தடை செய்யப்பட்டுள்ளன. [6]மூன்று சிறப்பு பட்டா சித்திரங்கள், அனாசரா பட்டீஸ் எனப்படும் ஸ்டார்ச் இறுகிய துணியில் இயற்கை வண்ணங்களின் பாரம்பரிய ஒரியா ஓவியங்கள், பொது மக்களின் பார்வையில் இருந்து தெய்வங்களை மறைக்கும் மூங்கில் திரையில் கட்டப்பட்டுள்ளன, பொதுமக்களால் பார்க்க முடியும். இந்த காலகட்டத்தில், தெய்வங்களுக்கு அவர்களின் நோய் தீர்க்க வேர்கள், இலைகள், பெர்ரி மற்றும் பழங்கள் மட்டுமே கொடுக்கப்படுகின்றன. இந்த சடங்கு ஜெகன்னாத வழிபாட்டு முறையின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சியில் வலுவான பழங்குடி கூறுகளை நினைவூட்டுகிறது. அசல் பழங்குடி வழிபாட்டாளரான பிஸ்வபாசுவின் மகள் லலிதா, வேட்டையாடுபவர்களின் தலைவன் மற்றும் பிராமண பாதிரியார் வித்யாபதி ஆகியோரின் சந்ததியினர் தைதாபதிகள் அல்லது தைதாக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். குணமடையும் காலத்திலும், ரத ஜாத்ரா அல்லது தேர் திருவிழாவின் முழு காலத்திலும் தெய்வத்திற்கு சேவை செய்யும் பாக்கியம் அவர்களுக்கு உள்ளது.

குண்டிச்சா கோவிலில் இருந்து தேர்களின் தேர்கள் பிரதான கோவிலுக்கு திரும்பிய பிறகு, தெய்வங்கள் தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு தேர்களில் வழிபடப்படுகின்றன. இந்த கொண்டாட்டம் சுனா பேஷா என்று அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வு முதன்முதலில் 1460 இல் மன்னர் கபிலேந்திர தேவாவால் தொடங்கப்பட்டது என்று பாரம்பரியம் கூறுகிறது, போரில் வெற்றிபெற்று திரும்பிய பிறகு அவர் ஜெகநாதருக்கு தங்கத்தை தானம் செய்தார்.  தெய்வங்கள் கிட்டத்தட்ட 208 கிலோ எடையுள்ள தங்க நகைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. 2014 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் தேதி நடைபெற்ற இந்த நிகழ்வை கிட்டத்தட்ட ஒன்பது இலட்சம் பக்தர்கள் கண்டுகளித்தனர் 

ஹேரா பஞ்சமி–

ஹேரா பஞ்சமி என்பது பூரியின் பிரமாண்ட ஜெகநாதர் கோயிலில் ரத யாத்திரையின் போது அனுசரிக்கப்படும் ஒரு சடங்கு . இது லட்சுமி தேவியின் சடங்கு என அறியப்படுகிறது . ரத யாத்திரையின் ஐந்தாவது நாள், அதாவது பிரகாசமான பதினைந்து நாட்களில் ஐந்தாவது நாள்ரத யாத்திரையின் ஐந்தாவது நாள், அதாவது, ஆஷாடத்தின் ஹேரா பஞ்சமி என்று அழைக்கப்படுகிறது. ரத யாத்திரையின் போது, ​​பகவான் ஜகந்நாதர் தனது மனைவி மகாலட்சுமியை விட்டுவிட்டு, தனது தெய்வீக ஆயுதமான ஸ்ரீ சுதர்சனத்துடன் தனது சகோதரர் ஸ்ரீ பாலபத்ரா மற்றும் சகோதரி மா சுபத்ராவுடன் தெய்வீக வெளியீடாக வெளியே வருகிறார். தெய்வத்தின் மீதான கோபத்தை தேவி வெளிப்படுத்துகிறாள். அவள் குண்டிச்சா கோயிலுக்கு செல்கிறாள், அடப்பா மண்டபம் ஒரு சுவர்ண மஹாலக்ஷ்மி வடிவில் பல்லக்கில் உள்ளது மற்றும் அவரை சீக்கிரம் கோவிலுக்கு வருமாறு அச்சுறுத்துகிறது. அவளை மகிழ்விப்பதற்காக, தெய்வம் அவளுக்கு ஆக்யன் மாலையை (சம்மத மாலை) வழங்குவதன் மூலம் ஒப்புக்கொள்கிறது. தேவி கோபமடைந்ததைப் பார்த்து, சேவகர்கள் குண்டிச்சாவின் பிரதான கதவை மூடுகிறார்கள். மகாலட்சுமி நாகச்சனா வாசல் வழியாக பிரதான கோயிலுக்குத் திரும்புகிறார். ஒரு தனித்துவமான சடங்கில், நந்திகோச தேரின் ஒரு பகுதியை சேதப்படுத்தும்படி தேவி தனது உதவியாளர்களில் ஒருவருக்கு கட்டளையிடுகிறார். இதைத் தொடர்ந்து அவள் குண்டிச்சா கோயிலுக்கு வெளியே ஒரு புளிய மரத்தின் பின்னால் ஒளிந்து கொள்கிறாள். சிறிது நேரத்திற்குப் பிறகு, ஹெரா கோஹ்ரி லேன் [17] எனப்படும் தனிப் பாதை வழியாக, ரகசியமாகத் தன் வீட்டுக் கோவிலுக்குத் தப்பிச் செல்கிறாள் .

ஸ்ரீமந்திரத்தின் முக்கியமான செயல்பாடாக ஹேர பஞ்சமியின் சடங்குகள் ஸ்கந்த புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன . கோயிலின் வரலாற்றின் படி, இந்த “உத்சவ்” மகாராஜா கபிலேந்திர தேப் காலத்தில் தொடங்கியது. அவரது ஆட்சிக்கு முன், ஹீரா பஞ்சமி விழா மந்திரங்களை ஓதுவதன் மூலம் ஒரு குறியீட்டு வழியில் அனுசரிக்கப்பட்டது. மதலா பஞ்சியில் கூறப்பட்டுள்ளபடி , ராஜா கபிலேந்திர தேப் இந்த நடைமுறைக்கு பதிலாக தங்கத்தால் செய்யப்பட்ட மகாலட்சுமியின் சிலையை அறிமுகப்படுத்தி கொண்டாட்டத்தை மிகவும் யதார்த்தமாக்கினார். 

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பண்டரிபுரம் ஸ்ரீ விட்டல கோவில்

May 24, 2023

ஸ்ரீ  பண்டரிபுரம் ஸ்ரீ விட்டல கோவில்

ஸ்ரீ விட்டல் என்னும் விட்டோபாவும் (கிருஷ்ணன்) ருக்மிணியும் தரிசனம் தரும் விட்டல கோவில் இடம்பெற்ற பண்டரிபுரம் , சோலாப்பூரிலிருந்து 72 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது , பண்டரீபுரம் ரயில் நிலையத்தில் இறங்கியும் கோவிலுக்குப் போகலாம்.

1195-ம் ஆண்டுமுதல் வரலாற்றுக் குறிப்புகளில் இடம்பெறும் கோவில் இது.

இந்த ஊரில் மேலும் பல கோவில்களும் புனிதர்களின் மடங்களும் பக்தர்களைக் கவர்ந்து இழுக்கின்றன . பீமா என்னும் நதி இந்த ஊரின் நடுவே சந்திரபாகா என்ற பெயரில் பாய்கிறது . தமிழ் நாட்டில் தேவாரம், திவ்யபிரபந்தம் உள்ளது போலவே மஹாராஷ்டிரத்தில் மராத்தி மொழியில் அபங்கம் என்னும் பக்தி பாடல்கள் உள்ளன. அவற்றில் இந்த நதியின் பெயரும் இறைவனின் பெயரும் அடிக்கடி வரும்.

நாமதேவ் பயரி என்னும் இடத்தைத் தாண்டி பஸ்ச்சிம  வாயில் வழியாக நுழைந்தால்
கீழ்கண்ட கடவுளரின் கோவில்களைக் காணலாம் :
கணபதி,
தத்தாத்ரேயர்,
கருடன்,
மாருதி என்னும் அ
கருட கம்பம் ,
நரசிம்மர்,
ஏகமுக தத்தாத்ரேயர்,
ராமேஸ்வர லிங்கம்,
கால பைரவர்,
லெட்சுமி நாராயணன்,
காசி விஸ்வநாதர் ,
சத்ய பாமா,
ராதிகா,
சித்தி விநாயகர் ,
மஹா லெட்சுமி,
கண்டோபா ,
அமிதா பாய் ,
சனைச்சரன் ,
குப்த லிங்கம்,
கனோபத்ர சந்நிதிகள்.

ஸ்ரீ விட்டல் சந்நிதி

இதுதான் பிரதான கோவில்;
நகரின் நடுவில் அமைந்துள்ளது கோவிலுக்கு எட்டு வாசல்கள் இருக்கின்றன.
கிழக்கு வாசலை நாமதேவர் என்ற மகானின் பெயரில் அழைக்கின்றனர்.
அவர் இறந்த பின்னர் அவருடைய வேண்டுகோளின் பேரில் அவருடைய உடற்பகுதிகள் புதைக்கப்பட்ட
இடத்தின் மீது கட்டப்பட்ட படிகளை உடையது நாமதேவ் ப்யாரி .
அதைத் தாண்டிச் சென்றால் வருவது முக்தி மண்டபம்.
அங்கே மூன்று அறைகள் உண்டு.
பின்னர் நாம் நுழைவது மரத் தூண்களைக் கொண்ட சபா மண்டபம்.;
அடுத்தது 16 கம்பங்களை-தூண்களை உடைய சோல் கம்ப ;
அதில் ஒரு தூண் தங்கத் தகடால் மூடப்பட்டிருக்கும்

இது கருட கம்பம் எனப்படும் . அதனருகே உள்ள கற்பலகையில் பொது .ஆண்டு CE 1208 கல்வெட்டைக் காணலாம் . பின்னர் 4 தூண்களை உடைய சோகாம்ப் வரும்.

பின்னர் வெள்ளிக்கூரை வேய்ந்த மண்டபத்தில் ஸ்ரீ விட்டல் நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருவார்
அவரைக் கண்டு ஆசிபெற ஆண்டுதோறும் பத்து லட்சம் பக்தர்கள் வருகிறார்கள்.
விட்டல் ,
விட்டோபா,
விட்டல் நாத் ,
பண்டரிநாதன் ,
பாண்டுரங்கன் என்ற பல பெயர்களில்
அவரைப் போற்றியவாறு பக்தர்கள் பவனி வருவார்கள் .
பின்னர் ருக்மிணி சந்நிதி வருகிறது.
அவரையும் தரிசித்த பின்னர் வெளியே செல்லலாம்.

பாத ஸ்பர்ச தரிசனம் – காலைத் தொட்டு வணங்கலாம்

ஜாதி, குலம் , கோத்ரம் வேறு பாடின்றி அனைவரும் விட்டோபா சிலை அருகில் சென்று, தொட்டு வணங்கலாம்.
விடோபாவின் பாதங்களில் பக்தர்கள் தலையை வைத்து வழிபடுவது மரபு.
இந்த சம்பிரதாயத்தை வேறு    எந்தக் கோவிலிலும் காணமுடியாது
இதற்கான வரிசையில் நின்றால் 3 மணி நேரம் காத்திருக்க வேண்டும்.
விழாக் காலங்களில் 5 மணியும்
ஏகாதசி மற்றும் யாத்திரை ஊர்வலம் வரும் நாட்களில் 36 மணி நேரமும்
காத்திருக்க நேரிடலாம் ;
இவரிடம் திருப்பதி பாலாஜியும் கூடத் தோற்றுவிடுவார்!!

முக தரிசனம்

கியூவரிசையில் நிற்க இயலாதோர், முக தரிசனம் செய்யலாம்.
இதை அரை மணி நேரத்தில் முடித்து விடலாம்.
ஆயினும் விட்டலையும் ருக்மிணியையும் 25 அல்லது 15 மீட்டர் தொலைவிலிருந்தே காண முடியும் .
தமிழ் நாட்டுக் கோவில்களில் ஆறு கால பூஜை இருப்பது போல இங்கும்
அதிகாலை முதல், பல ஆரத்திகள், தீவாராதனைகள் நடைபெறும்

இஷ்டிகா பெண்களுக்கும் இஷ்ட பிரமனுக்கும்
விட்டல் செங்கல் ஸ்தானம்
சந்த்ர பா ஆபக -சந்திரன் ஒளியே நதி
புண்டரீகனுக்காக சீன்களில் காத்து நின்று
அவனையே பார்த்துக் கொண்டு நிற்பதால் புண்டரீக நாயகன் பாண்டுரெங்கன்
அதி பாவநத்வம் -நாம் கூட ஸ்பர்சித்தாலும் தூய்மை கெடாதவன்

———

நகரிலுள்ள ஏனைய கோவில்கள் :
பத்மாவதி கோவில்,
லகுபாய் அம்பா பாய்,
கோபால்பூர்,
விஷ்ணு பாத,
புண்டரீக ,
நாமதேவ்,
ஞான தேவ் ,
துகாராம் ,
கால மாருதி,
தம்பத மாருதி,
வியாச நாராயண,
யாமை துர்கா ,
கஜான மஹராஜ்,
ராம் பாக் ,
லக்ஷ்மண் பாக் கோவில்கள் .

அருகிலுள்ள முக்கிய இடங்கள்

கைக்கடி மஹராஜ் மடம் , தனபுரி மஹராஜ் மடம், குஜராத்தி தேவஸ்தான,ம்.

வாரி விழாவின்போது, பல சந்யாசிகள் பெயர்களில் பக்தர்கள் சுமந்துவரும் பல்லக்குகள்,
கோவிலுக்கு ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் வர்காரி என்னும் இடத்தில் நிறுத்தப்படும்
மஹான் ஞானேஸ்வர் பெயரில் ஆலந்தி நகரிலிருந்து 2 லட்சம் பக்தர்களுடனும்
தேஹு என்னும் இடத்திலிருந்து மேலும் பல்லாயிரம் துகாராம் பக்தர்களும் ,வருவார்கள்.
பிற இடங்களில் மேலும் எட்டு லட்சம் பேர் சேருவர் .
இது 800 ஆண்டுகளாக நடைபெறுகிறது
ஆஷாட ஏகாதசி விழாதான் மிகப் பெரியது
சித்திரை,
ஆடி,
கார்த்திகை,
மாசி ஆகிய நாலு மாதங்களில்
இந்த பவனிகள் நடைபெறுகின்றன.

 

வாரி என்பது கால் நடையாக பவனி வருதல்,
வர்காரி என்பது அப்படி காலில் நடந்து வரும் பக்தர்கள் ஆவர்..
பக்தர்களின் பரவசம்மிகுந்த ஊர்வலங்கள், நம்மூர் காவடி ஊர்வலங்களை நினைவப்படுத்தும்.

காஞ்சி மஹா சுவாமிகள் (1894-1994), சாதாரா நகரில், 1980-ல்
வியாச பூஜை காலத்தில்  சில மாதங்களுக்கு முகாமிட்டிருந்தார்.
அப்போது சிதம்பரம் மாதிரியில் வடக்கிலும் ஒரு கோவில் அமைக்க திட்டமிட்டார்.

ஏழு குன்றுகள் சூழ்ந்ததால் இது சாதாரா என்று அழைக்கப்படுகிறது .
சுவாமிகளின் திட்டத்தைக்  கேட்டவுடன் ஊர்ப் பிரமுகரும்
காஞ்சி சங்காராச்சார்யார் ஸ்ரீ சந்திர சேகர சரஸ்வதியின் பக்தருமான சாமண்ணா ,
தனது நிலத்தைக் கோவில் கட்ட தானம் செய்தார்.
அப்போதைய கர்நாடக, தமிழ்நாடு, மஹாராஷ்டிர அரசுகள், அந்தக் கோவிலுக்கு நிதி உதவி செய்தன.
கேரள மாநிலம், நல்ல ஜாதி மரங்களைக் கோவில் கட்ட கொடுத்து உதவியது.
தர்ம சிந்தனையாளர்களும் பொருளுதவி செய்தனர் .

சிதம்பரம் போலவே எழுந்த இந்தக் கோவிலின் கும்பாபிஷேகம்
ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் 1984-ம் ஆண்டு நடத்தப்பட்டது
கோவில் கட்டும் பணி 1981ல் துவங்கி மூன்றே ஆண்டுகளில் நிறைவு அடைந்தது.
சிதம்பரத்திலிருந்து வரும் தீட்சிதர்களே உத்தர சிதம்பரம் நடராஜருக்கும்
அபிஷேக ஆராதனைகள் செய்யவேண்டும் என்றும் சுவாமிகள் விரும்பினார்.
அதன்படி இப்போதும்
ரொடேஷன் Rotation முறையில் சிதம்பரம் தீட்சிதர்களே இக் கோவிலுக்கு வந்து பூஜை செய்கின்றனர்.

மும்பை நகரத்தில் மட்டுமே இருபது புகழ்மிகு இந்துக் கோவில்கள் உள்ளன. இதோ அவற்றின் பெயர்கள் :-

1.சித்தி விநாயகர் கோவில்

2.மகாலெட்சுமி கோவில்

3.மும்பாதேவி கோவில்

4. குட்டி சபரிமலை கோவில்

5. ஹரே கிருஷ்ணா கோவில் கோவில்

6.வைஷ்ணவ தேவி கோவில்

7.பாபுல்நாத் சிவன் கோவில்

8.வாகேஸ்வரர் சிவன் கோவில்

9.ராதா கோபிநாத் கோவில்

10.பாலாஜி/ வெங்கடேஸ்வரா கோவில்

11.சுவாமிநாராயண் கோவில்

12.பிரபாதேவி கோவில்

13.கண்டேஸ்வரர் ஹனுமான் கோவில்

14.இச்சாபுரி கணேஷ் கோவில்

15.ஆர்ய சமாஜ் கோவில்

16.சிருங்கேரி மடம் கோவில்

17.சுவர்ணா கோவில்

 18.ஸஹர் ஐயப்ப சிவா பார்வதி கோவில்

19.BAPS சுவாமிநாராயண கோவில்

20.சமணர் கோவில் (Jain Temple)

மும்பா தேவி கோவில்

மும்பை என்ற பெயருக்கே காரணமாக அமைந்த மிகப்பழைய கோவில் இது.
துர்கா தேவியின் வேறு பெயர் மும்பா தேவி.
மதுரைக்கு மீனாட்சி,
காஞ்சிக்குக் காமாட்சி,
காசிக்கு விசாலாக்ஷி என்பது போல
ஒவ்வொரு ஊருக்கும் உரித்தான கடவுள் உண்டு.
அவ்வகையில் மும்பை நகரின் தெய்வம் மும்பா தேவி .
விவசாயிகளும், மீனவர்களும், சந்திர வம்ச க்ஷத் ரியர்களும் காலா காலமாக வழிபடும் தெய்வம் அவள் .
தற்போதைய கட்டிடங்கள் 1675-ம் ஆண்டு கட்டப்பட்டவை.
ஒரு மேடை மீது காட்சி தரும் தேவிக்கு கிரீடம், நகைகள் ஆகியன அழகு சேர்க்கின்றன.
கருங்கல்லிலான  தேவிக்கு முகத்தில் ஆரஞ்சு வர்ணம் பூசப்பட்டுள்ளது
கோவிலுக்குள் பிற தெய்வச் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன.
செவ்வாய் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை திறந்திருக்கும் இக்கோவிலுக்கு
செவ்வாயன்று நிறைய பக்தர்கள் வருகின்றனர்.

சித்தி விநாயகர் கோவில்

பிள்ளையார், எல்லா இந்துக்களுக்கும் முதற் கடவுள் என்ற போதிலும் மஹாராஷ்டிர மக்களுக்கு தேசீய கடவுளும் ஆகும்.
வங்காளத்தில் துர்கா பூஜை போல மஹாராஷ்டிரத்தில் கணேஷ் சதுர்த்தி ஒரு வாரத்துக்குக் கொண்டாடப்படும்.
மும்பை நகர சித்தி விநாயகருக்குக் கூடுதல் சிறப்பு என்னவென்றால்
பாலிவுட் நடிகர் நடிகையரும் அரசியல்வாதிகளும் வருகை தந்து கோவிலின் பெருமையை உயர்த்திவிட்டனர் ;
எல்லோருக்கும் வரம் தரும் சக்தி உடையவர் என்பது இதன் பொருள்.
1801-ம் ஆண்டில் கட்டப்பட்டது.

இங்குள்ள பிள்ளையார் வலம் சுழி பிள்ளையார்
இந்த மாநிலத்தின் பெரிய வரும்படி தரும் கோவில்களில் இதுவும் ஒன்று.
அந்தக் காலத்திலேயே ஆண்டு வருமானம் 25 கோடிரூபாய்
கோவிலின் மரக்கதவுகளில் பல தெய்வ உருவங்களைக் காணலாம் .
தங்கத் தகடுகளுக்கு இடையே கர்ப்பக்கிரகம் ஜொலிக்கும். அதிகமான பக்தர்கள் வரும் கோவில் இது.

மகாலெட்சுமி கோவில்

மும்பை நகருக்குச் செல்லுவோர்
சித்தி விநாயகர் கோவிலையும்
மஹா லக்ஷ்மி கோவிலையும்
தரிசிக்காமல் வர மாட்டார்கள்.
உலகின் செல்வச் செழிப்பு மிக்க நகர்களில் பம்பாயும் ஒன்று.
இதற்குக் காரணம் மஹாலெட்சுமியும்
மும்பா தேவியும் என்பது மக்களின் நம்பிக்கை
இந்து சமய வணிகர் தாக்ஜி தாதாஜி  இந்தக் கோவிலை 1831ம் ஆண்டில் கட்டினார்
இங்கு மூன்று தேவிகள் காட்சி தருகின்றனர்.
மகாலெட்சுமியானவள் கைகளில் தாமரை மலர்களை ஏந்தி நிற்கிறாள்;
மஹா காளியும் மஹா ஸரஸ்வதியும் இருபுறங்களில் நிற்கிறார்கள் .
மூவரும் தங்க வளையல்கள், மூக்குத்திகள், இரத்தின மாலைகளுடன் ஜொலிக்கின்றனர்
வசந்த காலத்தில் வரும் நவராத்திரியும்
ஆஸ்வீன மாத பெரிய நவராத்ரியும்
(தமிழக கணக்குப்படி புரட்டாசி நவராத்ரி)
மிகப் பெரிய பண்டிகைகள் .
கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகள் எல்லாம் மின் விளக்குக்களால் அலங்கரிக்கப்படுகிறது.

இந்தக்கோவில் பற்றி செவி வழிக் கதைகளும் உலவுகின்றன.
பிரிட்டிஷ் கவர்னர் ஹார்ன்பி என்பவர் வோர்லி, மலபார் என்னும் இரண்டு இடங்களை இணைக்க
ஒரு கடற் பாலம் கட்டுவதற்குத் திட்டமிட்டு அந்தப் பணியை ராம்ஜி ஷிவ்ஜி பிரபு என்ற
தலைமை என்ஜினீயரிடம் ஒப்படைத்தார்.
ஆனால் பாலம் கட்ட முடியாதபடி பல இடையூறுகள் தலையெடுத்த வண்ணமிருந்தன.
ஒரு நாள் ராம்ஜியின் கனவில் மகாலெட்சுமி தோன்றி,
தான் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடப்பதைத் தெரிவித்தாள்.
முஸ்லீம் படை எடுப்பாளர்களால் கடலுக்குள் தூக்கி எறியப்பட்டிருந்த சிலைகளை
ராம்ஜி மீட்டு, கோவில் கட்ட வழிவகை செய்தார் .
பின்னர் பாலம் கட்டும் பணி  இனிதே நிறைவேறியது .
ஒரு குன்றின் மீது அமைந்த இந்தக்கோவில்,
இன்று ஏராளமான பக்தர்களைக் கவர்ந்து இழுக்கிறது.

பாலாஜி – வெங்கடேச்வர சுவாமி கோவில்

பாலாஜி கோவில், தமிழ்நாட்டு கோபுரம் போல பெரிய உயரமான கோபுரத்துடன் திகழ்கிறது.
ஏனைய மராட்டிய கோவில்களின் தோற்றத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது .
Nerul நெருள் ரயில் நிலையத்துக்கு அருகில் குன்றின் மேல் அமைந்த இந்தக் கோவில்,
பக்தர்களுக்கு திருப்பதியை நினைவுபடுத்தும்.
தென்னிந்திய மக்களைக் கவர்ந்து இழுக்கும் கோவிலுக்குள் ராமானுஜர், ருக்மிணி , லட்சுமி, ராம , லட்சுமண, ஹனுமான் சந்நிதிகளும் இடம்பெற்றுள்ளன
60 அடி  உயர கோபுரமும், உள்ளே அமைந்த நந்தவனமும் (தோட்டமும்) கோவிலுக்கு அழகு சேர்க்கின்றன .

ஸ்வாமி நாராயணர் கோவில்

ஸ்வாமி நாராயண பக்தர்களில் இரண்டு பிரிவினர் இருக்கின்றனர்.
அவர்கள் தனித்தனியே கோவில்களைக் கட்டி வழிபடுகின்றனர்.
இந்த ஸ்வாமி நாராயண கோவில் மிகவும் பழமையானது
ஸ்வாமி நாராயண சம்பிரதாயத்தினர்ன் நடத்ததும் இக்கோவில் 1903ம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது
ஸ்வாமி நாராயணனுடன்,
கிருஷ்ணா,
லட்சுமி நாராயணன்,
ராதா,
கணஷ்யாம் சிலைகளும் அலங்கரிக்கின்றன
ஜன்மாஷ்டமி , ராம நவமி பண்டிகை காலங்களில் பக்தர்கள் பெருமளவில் வருகை புரிகின்றனர்.

மாதா வைஷ்ணவ தேவி கோவில்

ஜம்மு காஷ்மீரின் ஜம்மு பகுதியில் இருக்கும் வைஷ்ணோ தேவி கோவில் உலகப் பிரசித்தி பெற்ற பெரிய தலம் .
அந்தக் கோவில் ஒரு குகைக்குள் இருப்பதால் ஊர்ந்து சென்றுதான் கோவிலுக்குள் நுழைய முடியும்.
அதே பாணியில் மும்பை நகர வைஷ்ணவ தேவி கோவில் அமைக்கப்பட்டுள்ளது .
நகரின் நடுப்பகுதியில் இருக்கிறது. இந்தக் கோவில்
மாறுபட்ட புதிய அனுபவத்தை நல்கும் இடமாகத் திகழ்கிறது

————–

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாவலூர் அருகில் உள்ள பரிக்கல் கிராமத்தில் புகழ்பெற்ற  ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோயில்  இருக்கிறது

இந்தக் கோவில் ஆயிரம் ஆண்டுப் பழமை உடையது.
மத்வ பீடத்தைச் சேர்ந்த வியாசராஜ சுவாமிகள் 738 இடங்களில் ஆஞ்சனேயர் கோவில்  அமைக்க எண்ணி
இந்தக் கிராமத்தையும் தேர்ந்தெடுத்தார் .
ஆனால் பல தடைகள் ஏற்பட்டன.
பின்னர், வசந்த ராஜா என்பவர் கோவில் கட்ட முற்பட்டபோதும் தடைகள் ஏற்பட்டதாம்.
அதற்குப்பின்னர் கனகவல்லி சமேத லட்சுமி நரசிம்ம மூர்த்தி ஸ்தாபிக்கப்பட்டது.
தாயாரை அணைத்த வண்ணம்  பெருமாள் இருப்பதால், நரசிம்மனின் உக்கிரம் தணிந்து ,
அருள் சுரக்கும் கோவில் இது .

இங்கு வருவோருக்குப் பதவி உயர்வு கிடைக்கும்,
திருமணத் தடைகள் நீங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
மேலும் மன நோயால் பாதிக்கப்பட்டோரின் நோயும் நீங்கும்.

திரை போட்டிருந்ததால், நாங்கள் வரிசையில் நின்று காத்திருந்தோம்.
மன நோயால் பாதிக்கப்பட்ட ஒரு TEEN AGE BOY டீன்  ஏஜ் பையனை அவனது தந்தை அழைத்து வந்திருந்தார்.
அவன் ஆடிக்கொண்டும் சப்தம் போட்டுக்கொண்டும் இருந்தான்.
கோவிலுக்குப் பலரும் எண்ணெயும் கொண்டுவந்து கொடுத்தார்கள்.

இங்கு மூலவருடன் ஆஞ்சனேயரும் உள்ளார்.

கிராம மக்கள் திரித்த ஊர்ப்பெயர் !-
இரு முறை கோவில் கட்டுவதில் தடை  ஏற்பட்டதற்கு பரகால என்ற அசுரனே காரணம்  என்றும்
அதனால் அவன் வேண்டிக்கொள்ள, ஊர்ப்பெயரை பெருமாள்
பரகால என்றிருக்க அனுமத்தித்ததாகவும்  தவறாக கதை கட்டப்பட்டிருக்கிறது.
உண்மையில் நரசிம்மர் அழித்தது ஹிரண்ய கசிபு என்ற அசுரனை.
அவர் அப்படிச் செய்ததற்கு காரணம். நாராயணன் பெயரை சொல்லிக்கொண்டிருந்த
பிரஹ்லாதனைக் காப்பாற்றுவதற்காக என்பது எல்லோரும் அறிந்த கதை .

பிரஹலாதன் பெயர் மருவி
பரகால  என்றும்
பரிக்கல் என்றும்
மருவியது என்பதே பொருத்தம்!!

தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்று நரசிம்மரை  நமக்குக் காட்டிய
பிரஹலாதன் பெயரை கிராம மக்கள் தெளிவாக எழுதி ஒட்டவேண்டும் .
பரகால அரக்கன் அல்ல; பக்தன்; அதாவது பிரகலாதன்!

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஒப்பிலியப்பன் – திருவோண விரதம்–நல் வாழ்வருளும் ஸ்ரீ நரசிம்மர் ஸ்ரீ திருத் தலங்கள்

May 16, 2023

ஸ்ரீ  மார்க்கண்டேய முனிவர் தவியாய் தவித்தார். திருமகளே தனக்கு மகளாக அவதரிக்க வேண்டும் என்றும், நாராயணனே தனக்கு மருமகனாக அமைய வேண்டும் என்றும் ஆவல் கொண்ட அவர், அந்த இரண்டாவது எண்ணம் ஈடேறாமல் போய்விடுமோ என்று தவித்தார். திருமகள் அவருக்கு மகளாக அவதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையால், திருமாலுக்கு, தன்னுடைய சொந்த திட்டமும் நிறைவேற வேண்டியிருந்தது. முதலில் திருமாலின் திட்டம் என்ன என்று பார்ப்போம்.

துளசி, ஸ்ரீ மன் நாராயணனின் பாதங்களை அர்ச்சனைப் பொருளாக அலங்கரித்தாள். ஓர் இலையாக அவர் பாதத்தில் வீழ்ந்து கிடக்கும் தான் ஏறிட்டு அவர் திருமுக மண்டலத்தைக் காண இயலாது தவித்தாள். எத்தனை நாள் தான் பாத தரிசனம்! பரந்தாமனின் பேரெழில் முகத்தைக் காணத் தனக்கு எப்போது தான் கொடுத்து வைக்கும் என்று ஏங்க ஆரம்பித்தாள். தன்னுடைய இந்தக் குறையை வைகுந்த வாசனிடமே முறையிட்டாள். மெல்லச் சிரித்துக் கொண்டார் நாராயணன்.

தன் முகத்தை தரிசிக்க வேண்டும் என்பது தான் துளசியின் ஏக்கமா அல்லது திருமகள் மட்டும் மார்பில் நிரந்தரமாக வீற்றிருக்க தான் மட்டும் பாதத்திலேயே கிடக்க வேண்டியிருக்கிறதே என்ற பொறாமையா என்று யோசித்தார். ஆனாலும் அவளுக்கும் பெருமை சேர்க்க மனம் கொண்டார். ஆகவே, துளசியிடம், ‘‘மஹாலக்ஷ்மி, பல காலம் தவம் மேற் கொண்டு, என் அன்பை வென்று, பிறகுதான் என் மார்பில் இடம் கொண்டாள். அதேபோல நீயும் தவமியற்றினால் உனக்கு உரிய அங்கீகாரம் அளிப்பேன்,’’ என்று அறிவுறுத்தினார்.

அதோடு, திருமகள் மார்க்கண்டேய முனிவரின் மகளாக அவதரிக்கப் போகிறாள் என்றும், அவளை மணந்து கொள்ள தான் பூவுலகிற்கு வரப்போவதாகவும், அப்போது, அங்கே தவமியற்றக் கூடிய துளசிக்குத் தான் தரிசனம் தர முடியும் என்றும் வாக்களித்தார். அதுமட்டுமல்ல; ஸ்ரீதேவியை மணம் முடிக்குமுன், அதாவது தாங்கள் இருவரும் மாலை மாற்றிக்கொள்ளும் முன் துளசியையே தன் முதல் மாலையாகத் தான் தன் மார்பில் ஏற்றுக் கொள்வதாகவும் சொல்லி அவளை சந்தோஷப்படுத்தினார்.

மிகுந்த உற்சாகத்துடன் துளசி பூலோகம் வந்தாள். திருக்குடந்தையில் அமைந்திருந்த மலர்க் காட்டில், ஒரு செடி வடிவாக தவத்தை மேற் கொண்டாள். இதற்கிடையில் திருமகளே தனக்கு மகளாக வந்துதிக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் தவம் மேற்கொள்ள சரியான இடத்தைத் தேர்ந்தெடுக்க வந்த மார்க்கண்டேயர், இந்த மலர்க் காட்டை கண்டதும் மனம் ஈர்க்கப்பட்டு உட்புகுந்தார். வெறும் காய், கனிகள், கிழங்குகளை மட்டுமே உட்கொண்டு தவம் இயற்றினார்.

எல்லாம் கூடி வந்ததை, இதை யெல்லாம் ஏற்கெனவே திட்டமிட்டு காய் நகர்த்திய பரந்தாமன், ஸ்ரீதேவியிடம், திருக் குடந்தை மலர்க் காட்டில் துளசிச் செடிக்குக் கீழே ஒரு குழந்தையாய் வடிவெடுத்து மார்க்கண்டேயருக்காகக் காத்திருக்குமாறும், பின்னொரு நாளில், அவளைத் தானே மண முடிக்க பூவுலகம் வருவதாகவும் தெரிவித்தார்.

அதன்படி, துளசிச் செடியின் அடியில் திருமகள் ஒரு குழந்தையாய் ஒளி வீசி, மலர்ச் சிரிப்பால் அந்த வனத்தையே மகிழ்வனமாக்கினாள். தவம் முடித்த மார்க்கண்டேயர் மெல்ல நடந்து வருகையில், துளசிச் செடிக்கு அடியில் ஒரு பேரொளி தன்னை ஈர்ப்பதைக் கண்டார். அங்கே பொன்னே உருவாக, பாரிஜாத மணமாக, தெய்வீகக் குழந்தை ஒன்று தனக்காகவே கிடப்பது கண்டு உள்ளம் பூரித்தார்.

துறவு, தவம், பற்றற்றத் தன்மை எல்லாம் அந்தக் கணத்தில் அவரிடமிருந்து விடைபெற்றன. அப்படியே அந்தக் குழந்தையை அள்ளி எடுத்து நெஞ்சார அணைத்துக் கொண்டார். தன் விருப்பப்படியே ஸ்ரீதேவியே தனக்கு மகளாகக் கிடைத்து விட்டதை அவர் உணர்ந்தார். அவர் அப்படி உணர்ந்ததை, தானும் தென்றல் சிலுசிலுப்பில் மெல்ல அசைந்து துளசிச் செடியும் ஆமோதித்தது. திருமாலின் மார்பகத்தை அலங்கரிக்கப் போகும் அந்தத் திருநாளுக்காகக் காத்திருந்தது.

பூமியிலிருந்து கிடைத்தவள் என்பதால், மகளை பூமிதேவி என்றழைத்துக் கொண்டாடினார் முனிவர். அவளை சீரும் சிறப்புமாக வளர்த்து வந்தார். அவள் மணப் பருவம் எய்திய போது தன்னுடைய இரண்டாவது உள்ளக் கிடக்கை நிறைவேறும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தார். என்ன வேடிக்கை! முற்றும் துறந்த துறவியின் உள்ளம் லௌகீகத்துக்குத் திரும்புகிறது! இதுவும் இறை சார்ந்த, பக்தி மேன்மையின் வெளிப்பாடுதானோ!

மருமகனை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தார் முனிவர். அவரது குடில் நோக்கி ஒரு பெரியவர் வந்தார். தள்ளாடும் நடை, கிழிசல் உடை, நரை முடி, இடுங்கிய கண்கள் என்று முதிய தோற்றம். வந்தவர் மார்க்கண்டேயரிடம் நேரடியாகவே கேட்டார்: ‘‘வாசலில் பேரழகாக நின்று கொண்டிருக்கிறாளே, அவள் உன் பெண்ணா? அவளை எனக்கு மணமுடித்துக் கொடு!’’

அதிர்ந்து போனார் முனிவர். என்னக் கொடுமை இது! எந்த வயதில் எந்த ஆசை வருவது என்ற விவஸ்தையே இல்லையா? ‘நான் பெருமாளுக்காகக் காத்திருக்கிறேன், இங்கே பிச்சைக்காரர் வந்து திருமணப் பேச்சு நடத்துகிறாரே’ என்று மனசுக்குள் அங்கலாய்த்தார். ‘‘பெரியவரே, உங்கள் வயது என்ன, என் மகள் வயது என்ன? அதோடு, இவளால் உங்களுக்கு சரியாக உணவு படைக்கவும் தெரியாதே. சமையலில் உப்பு போட வேண்டும் என்ற பக்குவமும் அறியாத சிறு பெண் இவள்,’’ என்று மன்றாடினார்.

‘‘அடடா, என்ன பொருத்தம் பாருங்கள்! வயது காலத்தில் எனக்கு உப்பு போட்ட பண்டம் ஆகாது என்பதை உங்கள் மகள் தெரிந்து வைத்திருக்கிறாள். இதைவிட வேறென்ன வேண்டும்? இப்படி என்னை அக்கறையுடன் கவனித்துக் கொள்ள இவளைவிட வேறு யார் எனக்குக் கிடைப்பார்கள்!’’ என்று முதியவர் நடுங்கும் குரலில் சொன்னார். இந்த பதிலைக் கேட்டுத் திடுக்கிட்டார் முனிவர். தட்டிக் கழிக்கவே முடியாது போலிருக்கிறதே என்று குழம்பி நின்றார்.

‘‘நீ உன் பெண்ணை எனக்கு மண முடித்துக் கொடுக்க வில்லை யானால் நான் என் உயிரைத் துறப்பேன்,’’ என்று சொல்லி மேலும் மிரட்டினார் முதியவர். பரிதாபமாக மகளைப் பார்த்தார் மார்க்கண்டேயர். அவளோ, பளிச்சென்று, ‘‘இந்தக் கிழவருக்கு என்னை மணமுடித்தால் நான் என் உயிரைத் துறப்பேன்.’’ என்றாள்!

இது என்ன சோதனை என்று பரிதவித்தார் முனிவர். இனியும் இந்த பக்தரைத் தவிக்க விடுவது முறையல்ல என்று கருதியதால், அவர் முன் நின்றிருந்த முதியவர் மறைந்து சர்வாலங்கார பூஷிதனாக மஹா விஷ்ணு தோன்றினார். பூமி தேவியும் வெட்கப் புன்முறுவலுடன் அவரைப் பார்த்தாள். அப்போது தான் திருமாலும், மஹாலக்ஷ்மியும் தன்னிடம் நாடகமாடியிருக்கிறார்கள் என்று முனிவருக்குப் புரிந்தது. திருமால் முனிவரைப் பார்த்து, ‘‘மார்க்கண்டேயரே, உம் மகள் எப்படி சமைத்துப் போட்டாலும் அதை நான் விரும்பி உண்பேன்.

உப்பிடப் படாதது ஒரு குறையே அல்ல. அதுவே உடல்நலம் காக்கும்,’’ என்று ஆறுதலும் அளித்தார். நெகிழ்ந்துபோனார் முனிவர். உணவுச் சுவை தான் யாரையும் எளிதாக வீழ்த்தக் கூடியது. அதையும் தன் மகளுக்காகத் தியாகம் செய்ய முன்வந்திருக்கும் இந்த மருமகன், ஒப்பிலா அப்பன் தான் என்று நெஞ்சு விம்மினார். பிறகு திருமாலிடம், ‘‘தாங்களும் என் மகளும் திருமணக் கோலத்திலேயே இத் தலத்தில் அர்ச்சாவதாரம் கொள்ள வேண்டும்.

தங்களுக்கு நிவேதிக்கப்படும் பிரசாதங்களில் உப்புச் சுவை இருத்தல் கூடாது,’’ என்று கேட்டுக் கொண்டார். இந்தக் கோரிக்கைகளை அப்படியே ஏற்றுக் கொண்டார் பெருமாள். அதன்படி, இப்போதும் இந்த ஒப்பிலியப்பன் கோயிலில் உப்பில்லாமல்தான் பிரசாதங்கள் தயாரிக்கப்படுகின்றன, பெருமாளுக்கு நிவேதனம் செய்யப்படுகின்றன, பக்தர்களுக்கும் வழங்கப்படுகின்றன.

அது உப்பில்லாத பிரசாதம் என்பது தெரியாவிட்டால், அந்த பிரசாதம் அற்புதமான சுவை கொண்டதாக இருக்கும்; தெரிந்தாலும், கொஞ்சம் மனசளவில் தயக்கம் இருக்குமே தவிர, மற்றபடி ருசியில் உப்பிட்ட உணவைவிட பெரிதாக எந்த வித்தியாசமும் தெரியாது. அது மட்டுமல்ல, ‘இந்தக் கோயிலுக்குள் வருபவர்கள் உப்பையோ, உப்பிட்ட உணவுப் பொருளையோ கொண்டு வரக் கூடாது; அப்படிக் கொண்டு வந்தால் அவர்கள் நரகத்துக்கு தான் போவார்கள்’ என்று ஐதீகம் இருப்பதாகவும் சொல்லி அச்சுறுத்துகிறார்கள்! ஒப்பிலியப்பன் தரிசனத்தை விடவா உப்பில்லாத இந்த பிரசாதம் பெரிது!

நம்மாழ்வார் இந்தப் பெருமாளை பொன்னே, மணியே, முத்தே என்றெல்லாம் வாழ்த்திக் கொஞ்சி மகிழ்கிறார்.

என் அப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்
பொன் அப்பன், மணி அப்பன், முத்து அப்பன், என் அப்பனுமாய்
மின்னப் பொன் மதிள்சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்த அப்பன்
தன் ஒப்பார் இல் அப்பன் தந்தனன் தனதாள் நிழலே– என்கிறார்

அவர். அதாவது, ‘பொன், மணி, முத்து போன்றவன் என் தலைவனான இந்தப் பெருமாள். தன் பக்தனுக்கு உதவி செய்வதில் ஒப்பாரும், மிக்காரும் இல்லாத தனித் தலைவன். என் தந்தை. மதில்களால் சூழப்பெற்ற திருவிண்ணகர் என்ற இந்த திவ்ய தேசத்தில் கொலுவிருக்கும் இவன் என் தலைவன் மட்டுமல்ல; என்னைப் பெற்ற தாய்; என்னை வளர்க்கும் தாய். தனது திருவடி நிழலால் என்னை என்றென்றும் காப்பான்,’ என்று உள்ளம் உருகிப் பாடுகிறார் நம்மாழ்வார்.

இந்தப் பாசுரத்தை ஒட்டியே இந்தக் கோயிலில், என்னப்பன், பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், திருவிண்ணகரத்தான் என்று பெருமாள் ஐவராக கொலுவிருக்கிறார். தங்க விமானம் கொண்டு பரிமளிக்கிறார் ஒப்பிலியப்பன். நெடிதுயர்ந்த நின்ற கோலம். கண்களாலேயே மென்மையாக அழைக்கிறார். தங்கக் கவசம் பூண்டு ஜொலிக்கிறார். இவர் காலடியில் இடது பக்கம் மார்க்கண்டேயரும், வலது பக்கம் பூமிதேவியும் மண்டியிட்டு இவருக்கு வணக்கம் செலுத்துகிறார்கள்.

திருப்பதி வெங்க டேசப் பெருமாளுக்கு நேர்ந்து கொண்ட பிரார்த்தனைகளை இவருக்கு நிறைவேற்றி, திருப்பதிக்குப் போக முடியாத குறையைத் தீர்த்துக் கொள்ளலாம் என்கிறார்கள். இந்தப் பெருமாளும் பார்ப்பதற்கு ஸ்ரீநிவாசன் போலவே இருக்கிறார். அதனால் தானோ என்னவோ இவருக்கும் தனி சுப்ரபாதம் உண்டு. திருமண வரம் அளிக்கும் பரந்தாமன் இவர். இந்தக் கோயிலில் தனியே இருக்கும் திருமண மண்டபத்தில் ஒவ்வொரு முகூர்த்த நாளன்றும் நிறைய பக்த ஜோடிகளுக்கு பெருமாள் அருளுடன் திருமணம் நடைபெறுகிறது என்கிறார்கள்.

பூமிதேவித் தாயார் பெருமாளுடனேயே அவர் கருவறையில் வீற்றிருப்பதால், இவருக்குத் தனி சந்நதி இல்லை. தரணிதேவி, வசுந்தரா என்றும் தாயார் அழைக்கப்படுகிறார். வழக்கம்போல அனுமன், கருடாழ்வார், சக்கரத்தாழ்வார், ராமர் முதலானோரும் தத்தமது சந்நதிகளில் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்கள். பிராகாரச் சுற்றில் ராமாயண, தசாவதாரக் காட்சிகள், ஆண்டாள், ஆழ்வார்கள், ஆசார்யார்கள் ஆகியோர் பேரெழில் ஓவியங்களாக நம்மை ஆசிர்வதிக்கிறார்கள்.

108 திவ்ய தேச பெருமாள்களையும் இங்கே தரிசிக்கலாம். ஆமாம், அந்தத் தோற்றங்களையும் சுதை சிற்பங்களாக, கவினுற வடிவமைத்திருக்கிறார்கள். இங்குள்ள அஹோராத்ரி புஷ்கரிணி மிகச் சிறப்பு வாய்ந்தது. பொதுவாகவே எந்த நீர்நிலையிலும் இரவு நேரத்தில் நீராடலாகாது என்பது சாஸ்திரம். ஆனால் இந்தத் தலத்தின் அஹோராத்ரி திருக்குளத்தில் மட்டும் ஒரு நாளின் எல்லா நேரத்திலும், இரவு, பகல் என்று பாராமல் நீராடலாம் என்று சாஸ்திர விதி தளர்த்தப்பட்டிருக்கிறது.

இந்த தீர்த்தம் எல்லாவகையான தோஷங்களையும் போக்கவல்லது. தேவ சர்மா என்ற வேதம் அறிந்த அந்தணன் ஒருவன் தன் குல ஒழுக்கம் மீறி, புலன் அடக்கமில்லாமல் திரிந்தான். இந்த வகையில் ஜைமினி முனிவரின் மகளிடம் அவன் முறைகேடாக நடந்து கொள்ள முயன்ற போது, வெகுண்ட முனிவர் அவனை சக்கரவாகப் பறவையாக உருமாறுமாறு சபித்தார்.

அப்படியே பறவையான அவன் இந்த அஹோராத்ரி புஷ்கரணியின் கரையில் ஒரு மரத்தில் அமர்ந்திருந்தான். அப்போது திடீரென புயல் வீச, அந்த மரம் அப்படியே குளத்தில் சாய்ந்தது. அந்த குளத்து நீர் பறவையின் மீது தெளிக்கப்பட, தேவசர்மா தன் சுய உருவம் பெற்றான்; முக்தியும் அடைந்தான். அந்த அளவுக்கு இந்தத் திருக்குளம் சக்தி வாய்ந்தது. வேதசர்மா இவ்வாறு சாபவிமோசனம் பெற்றது ஓர் இரவில் என்பதால், இந்தக் குளத்தில் இரவு நேரத்திலும் நீராடலாம் என்ற வழக்கம் வந்ததாகச் சொல்கிறார்கள்.

தியான ஸ்லோகம்

திருவிண்ணகரம் சென்று ஒப்பிலியப்பனை தரிசிக்கும் வரை அவரது தியான ஸ்லோகத்தைச் சொல்லிக்கொண்டிருக்கலாம்:

ஸ்ரீமத் விஷ்ணௌ விமாநே ககந நகரகே பத்மினீ புண்ய பூர்ணா
(அ) ஹோராத்ராக்யா ஜநாநாமபி மதபலதோ வேங்கடேச ஸ்வரூப:
பூம்யா தேவ்யா ஸமேதஸ் த்வ லவணஹவிஷ: ப்ராசனப்ரீதிரேஷ:
புத்ரீ ப்ரீத்யை ம்ருகண்டோ: ஹரிதிகபிமுகோ த்ருச்யதே பீஷ்டதாயீ– ஸ்ரீவிஷ்ணு ஸ்தல தர்சனம்

பொதுப் பொருள்: ககந நகரம் என்ற திருவிண்ணகர் திவ்ய தேசத்தில் எழுந்தருளியுள்ள எம்பெருமானே நமஸ்காரம். விஷ்ணு விமான நிழலில், அஹோராத்ர புஷ்கரணிக் கரையில், வேண்டுவோர் வேண்டுவனவற்றை எல்லாம் அருளும் வேங்கடேசப் பெருமானாய், பூதேவி சமேதராய் திகழும் பெருமாளே நமஸ்காரம். தேவியின் மீதுள்ள பெரு விருப்பத்தால் உப்பு, இல்லாத அமுதை ஏற்பவராய் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் மார்க்கண்டேய முனிவருக்குக் காட்சி அருள்பவரே நமஸ்காரம். தன்னை சேவிப்பவர் விருப்பங்களை நிறைவேற்றும் எம்பெருமானே நமஸ்காரம்.

மாதம்தோறும் திருவோண நட்சத்திரத்தன்று விரதம் மேற்கொள்வது திருவோண விரதம் ஆகும். இது பெருமாளுக்கு உரிய நட்சத்திரம். திருவோண விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி செல்வச் செழிப்பு ஏற்படும். மனக்குறைகள் அகன்று சந்தோஷ வாழ்வு மலரும். பெண்கள் விரும்பியதை அடைவர். அத்துடன் சந்திர தோஷமும் நீங்க பெற்று வாழ்வில் மகிழ்ச்சி அடைவர். திருவோண விரதத்தை ஒருமுறை வாழ்வில் இருந்தால் கூட அத்தனை பாக்கியங்களும் கிடைக்கும் என்பது நியதி. 27 நட்சத்திரங்கள் இருந்தாலும் எம்பெருமானாருக்கு உரிய திருவாதிரை மற்றும் எம்பெருமானுக்கு உரிய  திருவோணம் இவ் விரண்டு நட்சத்திரங்கள் தான் ‘திரு’ என்ற அடைமொழியுடன் சிறப்பித்துக் கூறப்படுகிறது.

ஒப்பிலியப்பன் பெருமாள் மார்கண்டேயன் மகளாக இருக்கும் பூமாதேவியை மணந்து கொள்ள பெண் கேட்டதும் பங்குனி மாத திருவோண நட்சத்திரத்தில் தான். அவரை மணம் முடிந்ததும் ஐப்பசி மாத திருவோண நட்சத்திரம் அன்று தான். எனவே ஒப்பிலியப்பன் பெருமாள் கோவில்களில் திருவோண நட்சத்திரம் அன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெருமானின் அருளாசி பெற திருவோண நட்சத்திர விரதத்தை அனைவரும் கடைபிடிக்கலாம். மிக எளிதாக வீட்டிலேயே கடைபிடிக்கக் கூடிய திருவோண விரதத்தை ஏதாவது ஒரு நாளில் கடைபிடித்தால் கூட அவர்களுக்கு பெருமாளின் அருளும், சந்திர தோஷமும் விலகும் என்பது நியதி.

தோஷங்களில் சந்திர தோஷமும் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. சந்திர தோஷம் இருப்பவர்களுக்கு மனநிலையில் சீரற்ற தன்மை இருக்கும். தான் செய்வது சரியா? தவறா? என்கிற பதற்றம் நீடிக்கும். ஏதாவது ஒரு மாதத்தில் வரும் திருவோண நட்சத்திரத்தில் பெருமாளுக்கு விரதமிருந்து வழிபாடு செய்தால் சந்திர தோஷம் முற்றிலுமாக நீங்கி நல்வாழ்வு பிறக்கும் என்பதை ஜோதிட சாஸ்திரம் உறுதியாக கூறுகிறது. அன்று மாலையில் சந்திர தரிசனம் செய்து சந்திரனின் அருளை முழுமையாக பெற்றுக் கொள்ளலாம்.

திருவோண விரதம் எப்படி இருப்பது?

மாதா மாதம் வரும் திருவோண நட்சத்திரத்தை முன் கூட்டியே குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். திருவோண நட்சத்திரத்திற்கு முந்தைய நாள் இரவே உணவேதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. அன்று இரவில் பெருமாள் மந்திரங்களை உச்சரிப்பது, விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது நல்ல பலன் கொடுக்கும். மறுநாள் அதிகாலையில் எழுந்து சுத்தமாக நீராடி நல்ல உடை உடுத்திக் கொண்டு பெருமாள் கோவிலுக்கு சென்று அங்கு அவருக்கு துளசி மாலை சாற்றி வழிபடலாம். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே பூஜை அறையில் பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி விளக்கேற்றி வழிபட வேண்டும். பூஜையில் துளசி தீர்த்தம் வைத்து அந்த தீர்த்தத்தை நீங்கள் பருகலாம்.

மதியம் நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவில் உப்பு சேர்க்கக் கூடாது. உப்பு சேர்க்காத உணவை சாப்பிட்டால் ஒப்பிலியப்பன் பெருமானின் அருளாசி பரிபூரணமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை. உப்பு சேர்க்காமல் உணவு தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு மாலையில் நெய்விளக்கு ஏற்றி பெருமாளுக்கு மந்திரங்களை உச்சரித்து பூஜை செய்யுங்கள். இரவில் பால் மற்றும் பழம் போன்றவற்றை எடுத்துக் கொண்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.

இவ்விரதத்தை பக்தி சிரத்தையுடன் கடைப்பிடித்து காலையில் வழிபாடு செய்யும் பொழுது நோய்கள் அனைத்தும் குணமாகும். மதிய வழிபாடு செய்யும் பொழுது செல்வம் அத்தனையும் பெருகும். மாலையில் வழிபாடு செய்யும் பொழுது செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும். இரவில் இறுதியாக நான்காம் ஜாம வழிபாடு செய்யும் பொழுது முக்தி பேறு கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே இவ்வாறு திருவோண விரதத்தை முறையாக கடைபிடித்தால் ஏழேழு பிறவிக்கும் 16 செல்வங்களும் அடையலாம்.

—————–

நல்வாழ்வருளும் நரசிம்மர் திருத்தலங்கள்

திருவரங்கம் பெரிய கோயில் மேட்டழகிய சிங்கர் திருவரங்கம் பெரிய கோயிலில் தாயாரைச் சேவித்து விட்டு வெளியே வந்ததும், வடக்கு நோக்கியிருக்கின்ற, படியேறிச் செல்ல வேண்டிய, மாடக் கோயிலில் அழகிய சிங்கரான நரசிம்மப் பெருமாள் ஹிரண்யனை வதம் செய்யும் கோலத்தில் எழுந்தருளி யிருக்கிறார். அதே சமயத்தில், வலது கையை மேலே உயர்த்தி ‘அஞ்சேல்’ என்று அபயம் வழங்கி அருள் பாலிக்கிறார். கம்பநாட்டாழ்வான் இம்மேட்டழகிய சிங்கர் முன்னிலையில், ஸ்ரீரங்கநாச்சியாரை (தாயாரை) நோக்கி அமர்ந்து இந்த மண்டபத்தில் தான், தம் ராமாயணத்தை அரங்கேற்றினார். இந்த இராமாயணத்திற்குக் கம்பர் சூட்டிய பெயர் ‘இராமாவதாரம்’ ஆகும்.

திருவரங்கம் பெரிய கோயிலைச் சேர்ந்த காட்டழகிய சிங்கப் பெருமாள்

திருவரங்கம் இரயில் நிலையத்துக்கு அருகிலேயே காட்டழகிய சிங்கர் திருக்கோயில் அமைந்துள்ளது. திருவரங்க நகரின் கிழக்குப் பகுதியில் இந்த கோயில் அமைந்துள்ளது. சடையவர்மன் சுந்தரபாண்டியன் (கலி 4398-கி.பி 1297) பெரிய பெருமாளான அரங்கநகர் அப்பனிடத்தில் அன்பினால் மிக்க அடிமை பூண்டவன். இங்கே, பெருமாள் மேற்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறார். உயர்ந்த விமானம், கர்ப்பக் கிரகம், அந்தராளம், முகமண்டபம், மஹா மண்டபம் மற்றும் கருடன் சந்நதியோடு இந்த கோயில்
உள்ளது.

‘கிழக்கில் காட்டழகிய சிங்கர் புராண ஸித்தம்’ என்று கோயிலொழுகுதலபுராணம் கூறுகிறது. பெரியாழ்வார் காலத்து மன்னனான அவருடைய சிஷ்யனான வல்லபதேவ பாண்டியன் இக்கோயிலில் திருப்பணிகளைச் செய்துள்ளான். மாதம்தோறும் ஸ்வாதி நட்சத்திரத்தன்று விசேஷ திருமஞ்சனம் நடைபெறும். காட்டழகிய சிங்கரைத் தரிசிக்காமல் ஸ்ரீரங்க யாத்திரை நிறைவாகாது. இந்த பெருமாளைச் சேவித்தால் வேதாந்த ஞானம் ஸித்திக்கும்.

வழி: ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்துக்குக் கிழக்கில் மிக அருகிலேயே (நடக்கும் தொலைவிலேயே) இந்தச் சந்நதி அமைந்து உள்ளது. ‘சிங்கர் கோயில்’ என்று கேட்க வேண்டும்.

தேவர் மலை அழகிய சிங்கர்

கமலவல்லி நாச்சியாருடன் கதிர் நரசிங்கப் பெருமாள் அருள்புரியும் மிகப் பழமையான திருத்தலம்தான் தேவர்மலையாகும். கொங்கு நாட்டில் கரூர் – பாளையம் அருகிலுள்ள இத்திருத் தலத்தில் அழகிய சிங்கர் உக்கிர நரசிம்மராக கூறப்பட்டாலும், கமலவல்லித் தாயாருடன் எழுந்தருளியிருப்பதால், அன்பர்களுக்கு லட்சுமி நரசிம்மராகவும், துஷ்டர்களுக்கு உக்கிர நரசிம்மராகவும், விளங்குகிறார். பாண்டியர்களாலும், விஜயநகர, நாயக்க மன்னர்களாலும், திருப்பணி செய்யப் பெற்ற பழமையான திருக்கோயில் இது.

கமலவல்லித் தாயாருக்கு மகாமண்டபம், அர்த்த மண்டபம், கொடிமரம் ஆகியவை பெருமாளுக்கு உள்ளவை போலவே, அமைக்கப் பெற்றுள்ளன. “மோட்ச தீர்த்தம்’’ எனும் ஸ்ரீ நரசிம்ம தீர்த்தம் இத்திருத் தலத்தின் முக்கியமான தீர்த்தமாகும்.

வழி : சென்னை – திருச்சி – கரூர் அல்லது சென்னை – ஈரோடு – கரூர் வழித்தடத்தில்செல்லும் ரயிலில் கரூரில் இறங்கி, சிந்தாலவாடி, தான்தோன்றி மலை கோயில்களை சேவித்து விட்டு தேவர்மலை கதிர் நரசிங்கப் பெருமாளைச் சேவித்து விடலாம்.

சிந்தலவாடி

திருக்காவிரியின் கரைகளிலிருக்கும் அழகிய திவ்ய க்ஷேத்ரங்களில் சிந்தாலவாடியும் ஒன்று. கொங்குநாட்டில், கரூர் நகரிலிருந்து 30 கி.மீ. தொலைவில் சிந்தாலவாடி இருக்கிறது. மத்வ சம்பிரதாய வைஷ்ணவர்களின் நிர் வாகத்தின் கீழ் இத்திருக்கோயில் இயங்குகிறது. பானகம், ததியன்னம் (தயிர்சாதம்), பழப் பிரசாதங்கள் போன்றவற்றைப் பெருமாளுக்கு அமுதுசெய்விக்கலாம் (நைவேத்யம் செய்யலாம்). பகவானின் திருநாமம் ஸ்ரீயோக நரசிம்மப் பெருமாள். மிகவும் பழமையான திருக்கோயில் இது.

வழி : திருச்சி – கரூர் வழித்தடத்தில், ரயில் அல்லது பேருந்தில் சென்றால், லாலாப்பேட்டை என்னும் ஊரில் இறங்கி, அங்கிருந்து சிந்தலவாடிக்கு மாநகர பேருந்தில் செல்லலாம்.

தஞ்சை மாமணிக்கோயில் வீரநரசிம்மப் பெருமாள்
(தஞ்சையாளி நகர்)

த்வமேவ மாதா ச பிதா த்வமேவ
த்வமேவ பந்து ச ஸகாத்வமேவ
த்வமேவ வித்யாத் ரவிணம் த்வமேவ
த்வமேவ ஸர்வம் மம தேவதேவ

(நீயே அன்னை, நீயே தந்தை, நீயே உறவு, நீயே நண்பன், நீயே வித்தை (கல்வி), நீயே செல்வம், நீயே எனக்கு எல்லாம் என் தேவதேவனே!)என்று நரசிம்மனை விளிப்போமாக! திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட திவ்ய தேசம் இது. மணிக்குன்றப்பெருமாள், நீலமேகப் பெருமாள் ஆகிய பெருமாள்கள் இருவர் தனிக்கோயில்களில் அருகிலேயே எழுந்தருளியுள்ளனர். தஞ்சை மாமணிக்கோயில் எனும் திவ்யதேசம் மூன்று கோயில்களும் சேர்ந்ததே. திருத்தஞ்சை மாமணிக்கோயில், திருவையாறு தியாகராஜர் பிருந்தாவனம், திருக்கண்டியூர், கல்யாணபுரம், புது அக்ரஹாரம் ஆகியன அருகிலுள்ள திருத்தலங்களாம்.

வழி: தஞ்சாவூர் ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது. நகரப் பேருந்திலும் சென்று வரலாம்.

வல்லம்
(விக்கிரம சோழ விண்ணகரம்)

ஸ்ரீரங்கத்தில் ஆறாவது திருச்சுற்றான திரிவிக்கிரம சோழன் திருச்சுற்று, விக்கிரம சோழனின் கைங்கர்யம் என்று கோயிலொழுகு கூறுகிறது. அதே போல், திருச்சியிலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் ‘விக்கிரம சோழ விண்ணகரம்’ என்று ஒரு திருத்தலம் உண்டு. அதன் இப்போதைய பெயர் வல்லம் என்பதாகும். ‘வல்லம்’ எனில் ‘பெரியது, வலியது’ என்றும் பொருள் உண்டு. மலையாளத்தில் ‘வல்லிய’ என்னும் பிரயோகம் இன்றும் ‘பெரியது, வலியது’ என்ற பொருளில் வழங்கப்படுகிறது. வலிமை மிக்க இரணியனை வகிர்ந்து கொன்ற ஸ்ரீநரசிம்மரின் தலமாதலால் ‘வல்லம்’ என்று பெயர் வந்தது போலும். இங்கே பெருமானின் பெயர் தேவராஜன். தாயாரின் பெயர் கமலவல்லித் தாயார்.

இந்திரனுக்கு அகலிகையிடம் பெற்ற சாபம் நீங்கிய தலம் இதுவே என்று சொல்லப்படுகிறது. காவிரியும், கௌதம தீர்த்தம் என்னும் திருக்குளமும் இத்திருத்தலத்தின் தீர்த்தங்களாகும். இங்கு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீயோக நரசிம்மர் தெற்கு நோக்கி அருள்புரிகிறார். எனவே, இது யம பயம் நீக்கும் திருத்தலமாகும். இதய நோய், புற்று நோய் போன்ற கொடிய நோய்கள் கூட நீங்கி, அன்பர்கள் நலம் பெறும் பிரார்த்தனை ஸ்தலமாக இது விளங்குகிறது.

வழி: தஞ்சாவூர் – திருச்சி சாலை வழித்தடத்தில் தஞ்சாவூரிலிருந்து 10 கி.மீ. தொலைவிலும், திருச்சியிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும் வல்லம் திருத்தலம் இருக்கிறது.

கொண்டி ராஜபாளையம் அழகிய சிங்கர்

அஹோபில திவ்விய தேசத்தில் ஸ்ரீராமபிரான் தமது முந்தைய அவதாரமான நரசிம்ம மூர்த்தியை ஸ்ரீந்ருஸிம்ஹ பஞ்சாம்ருத ஸ்தோத்திரத்தால் மங்களாசாஸனம் செய்தார் என்று ஹரிவம்சத்தில் கூறப்பட்டிருக்கிறது. இதைச் சுட்டிக் காட்டும் விதமாக இவ்வாலயத்தில் மூலமூர்த்தியான நரசிம்மப் பெருமாளுக்கு எதிரில் ஸ்ரீகோதண்டராமரைப் பிரதிஷ்டை செய்திருப்பதாகச் சொல்கிறார்கள். இதனால் இத்திருக்கோயிலுக்கு அஹோபில திவ்யதேச ஸாம்யம் உண்டு எனலாம். மூலவர் யோக நரசிம்மர், சோழஸிம்ஹபுரத்தைப் போலே உற்சவர் பிராட்டியைத் தொடையில் தாங்கிய மாலோலர், அஹோபிலத்தைப் போலே. ‘மா’ என அழைக்கப்படும் பிராட்டியினிடத்திலேயே மண்டியிருப்பதால், பரமபுருஷனை, ‘மாலோலன்’ என்பார்கள்.

வழி: தஞ்சாவூர் நகருக்குள்ளேயே கிழக்கு ராஜவீதியிலிருந்து கிழக்கு வாயிலுக்குச்செல்லும் சாலைப் பகுதியே கொண்டிராஜபாளையம் அழகிய சிங்கர் கோயில் உள்ளது.

கும்பகோணம் ஸ்ரீவிஜயீந்திர நரசிம்மர்

மத்வ மகான் ஸ்ரீவிஜயீந்திரரை வாதத்தில் வென்று மாயாவாதத்தை நிலைநாட்ட முடியாது என்று உணர்ந்த கங்காதர பண்டிதர் என்ற வித்வான், தவறான வழிகாட்டுதலால் விஜயீந்திரரைக் கொன்று விடுவதற்காக கொடிய விஷத்தைக் கொண்டு வந்திருந்தார். வாதப்போர் தொடங்கும் முன்பு விஜயீந்திரரைக் கண்டதும் அவருடைய தேஜஸ்ஸால் வசீகரிக்கப்பட்டார். தம் தவறை உணர்ந்து எடுத்துச் சொல்லி கண்ணீர்விட்டார். விஜயீந்திரரோ, ‘நீர் எமக்காகவே கொண்டுவந்ததை மறுக்காமல் கொடும்’ என்று அவரிடமிருந்து விஷத்தைப் பறித்து அருந்திவிட்டார். கொடிய விஷமாதலால் உடனே விஜயீந்திரரின் திருமேனி கருக ஆரம்பித்து. ‘சுவாமி… சுவாமி….’ என்று கங்காதரர் முதற்கொண்டு அனைவரும் கதறினார்கள்.

விஜயீந்திரர், ‘அன்பர்களே! எம் ஆசார்யர் ஸ்ரீவியாஸ ராஜரும் அவருடைய பூர்வ ஜன்மமான பிரஹலாதரும் விஷத்தை உண்டு ஜீரணித்தவர்களே. இதோ எம் அப்பன் நரசிம்மனைப் பாடுகிறோம். எமக்கு ஒன்றும் ஆகாது’ என்று ஸ்ரீநரஸிம்ஹாஷ்டகத்தைக் கம்பீரமாகப்பாடலானார். அவையோர் கண் முன்னாலேயே அங்கிருந்த நரசிம்மரின் திருக்கழுத்து கறுத்தது. விஜயீந்திரரின் திருமேனியின் கருநீல நிறம் மாறி முன்போல் ஆனது. இவ்வரலாறை இன்றளவும் நமக்குக் காட்ட இம்மடத்திலுள்ள நரசிம்மரின் கழுத்து கருநீலமாகவே இருக்கிறது. ஸ்ரீநரசிம்மாஷ்டகம் மிகவும் சக்திவாய்ந்த பாராயணப் பாமாலையாக விளங்குகிறது.

வழி: கும்பகோணம் நகரில் காவிரிக் கரையில் ஸ்ரீவிஜயீந்திரரின் மூலப் பிருந்தாவனம் சோலையப்பன் தெருவில் இருக்கிறது.

அரியலூர்

அரியலூரின் மையப் பகுதியில் பழமையான ஸ்ரீகோதண்ட ராம சுவாமி கோயில் இருக்கிறது. இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி மிகவும் விரைவில் வரமளிக்கக் கூடிய பிரார்த்தனைப் பெருமாள் ஆவார். இந்த நரசிம்ம மூர்த்தி தசாவதார மண்டபத்திலே எழுந்தருளி அருள் பாலிக்கிறார். மகத்தான சக்திமிக்க அர்ச்சா மூர்த்தி.

வழி: அரியலூர் ரயில் நிலையத்திலிருந்து சிறிது தொலைவில் இத்திருத்தலம் இருக்கிறது.

திருக்குறையலூர்
உக்கிர நரசிம்மப் பெருமாள்

வேதத்துக்குப் புறம்பானவர்களால் ஏற்படும் தொல்லைகள், வேதத்துக்குப் பகையானவர்களால் ஏற்பட்ட துர்வாதங்களால் ஏற்பட்ட மதிமயக்கங்கள் ஆகியவை இப்பெருமானால் அழிக்கப்படும். சிறிய ஆலயத்தில் தம் கருணையினால் உகந்து எழுந்தருளியிருக்கும் இப்பெருமாளின் கீர்த்தி பெரிதினும் பெரிது. நரசிம்ம புராணத்தில் வரும் ஸ்ரீநரசிம்ம ஸஹஸ்ர நாமத்தின் ஸ்வரூபம் இவர். ஸாத்விக வித்தைகள் (நற்கல்விகள்) அதாவது வேதம், திவ்யப் பிரபந்தம், தெய்வீக இசையாகிய திருநாம சங்கீர்த்தனம், ஜோதிடம், நாட்டியம், இலக்கணம், வைத்தியம் போன்ற இகபரசுகம் தரும் நற்கல்விகளை அருள்பவர் இவர்.

வழி: மங்கை மடத்திலிருந்து வண்டி அமர்த்திக்கொண்டு குறையலூர் போகலாம். சீர்காழியிலிருந்து, மயிலாடுதுறையிலிருந்தும் ‘மங்கை மடம்’ என்ற பெயர்ப்பலகையுடனேயே பேருந்துகள் செல்கின்றன.

திருவாலி லட்சுமி நரசிம்மர்

தூவிரிய மலருழக்கிக் துணையோடும் பிரியாதே
பூவிரிய மதுநுகரும் பொறிவரிய சிறுவண்டே!
தீவிரிய மறைவளர்க்கும் புகழாளர் திருவாலி
ஏவரிவெஞ் சிலையானுக் கென்னிலைமை யுரையாயே (பெரிய திருமொழி 3-6-1)

திருவாலியில் உறையும் லட்சுமி நரசிம்மனை நோக்கி நம் பிரார்த்தனைகளைத் தனியே சொல்ல வேண்டியதில்லை. மேற்கண்ட பாசுரத்தைப் பேசித் துதிக்கும் போது அவனே நம் நிலைமையைக் கண்டு, வேண்டியதைச் செய்து முடிப்பான். திருமணத் தடையால் வருத்தமுற்றிருப்பவர்களும், திருமணம் நடந்து துணையைப் பிரிந்து வாழ்பவர்களும் இப்பெருமானை வணங்கினால் தனிமைத் துன்பம் மறையும். சத்ஸங்கமில்லாமல் வருந்தும் பாகவதர்கள், ஸத்ஸங்கம் கிடைக்கப் பெறுவார்கள். லட்சுமி தேவியை அருகில் தொடையிலேயே அமர்த்திக் கொண்ட ஸ்ரீலட்சுமி நரசிம்மர் இவர்.

வழி: சீர்காழியில் இருந்து, சுமார் 10.கிமீ., தொலைவில் திருவாலி லட்சுமி நரசிம்மர் கோயிலை அடைந்துவிடலாம். திருநகரி உக்கிர நரசிம்மர், யோக நரசிம்மர்திருவாலியும் திருநகரியும் சேர்ந்து ஒரே திவ்யதேசமாகக் கணக்கிடப்படுகின்றன. திருமங்கையாழ்வாரைத் தடுத்தாட்கொண்ட வயலாளி மணவாளனெனும் கல்யாண ரங்கநாதன் உறையும் திவ்ய தேசம் இது. இக்கோயிலிலுள்ள கல்கேணியில் ஊறும் தீர்த்தம் மிக்க சுவையையுடையது. திருமங்கையாழ்வாரை ஆழ்வாராக்க எம்பெருமானுக்கு உதவியாயிருந்த அவர் தர்மபத்தினி குமுதவல்லி நாச்சியாரும் அவருடன் எழுந்தருளியிருக்கிறார். திருநகரி கோயிலுக்குள்ளேயே உக்கிர நரசிம்மர் எழுந்தருளியுள்ளார். யோக நரசிம்மரும் கோயிலுக்குள்ளேயே எழுந்தருள்யுள்ளார்.

வழி: சீர்காழியிலிருந்து திருநகரிக்கு நகரப் பேருந்துகள் செல்கின்றன சுமார் 7 கிலோ மீட்டரில் அடைந்துவிடலாம்.

மங்கை மடம் அழகிய சிங்கர்

திருமங்கையாழ்வார் பாகவதர்களுக்கு விசேஷமாக ததீயாராதனம் செய்த இடமே ‘மங்கை மடம்’ என்னும் இடமாகும். இங்குதான் தம் ராஜ்ஜியத்தை இழந்து, ஆழ்வார் அன்பர்களுக்கு அன்னமிட்டு வழிபட்டார் என்பதை நினைக்கும் போது நம் கல்நெஞ்சும் கரைவதை உணரமுடிகிறது. இங்கு பிராட்டிமார்களுடன் அழகிய சிங்கப் பெருமாள் எழுந்தருளியுள்ளார். சிங்கவேள் குன்றமாகிய அஹோபில திவ்ய தேசத்தின் அபிமான ஸ்தலமாக இத்திருத்தலம் அமைந்துள்ளது.

வழி: திருநகரி – திருவெண்காடு – பார்த்தன்பள்ளி சாலைகள் யாவும் மங்கை மடத்தில்தான் சந்திக்கின்றன. சீர்காழியிலிருந்து 7 கி.மீ. தொலைவில் இருக்கிறது.

கடலங்குடி

திருநாங்கூர் திருப்பதிகள் எனும் 11 திவ்ய தேசங்களின் அருகில் கடலங்குடி இருக்கிறது. இன்று இது சிறிய கிராமம். ஐந்து நிலை ராஜகோபுரம், வசந்த மண்டபம், அர்த்த மண்டபம், மணி மண்டபங்கள் மற்றும் மணவாள மாமுனிகள் தீர்த்தம், அனந்த தீர்த்தம், அனுமன் தீர்த்தம், காவிரி என்று தீர்த்தங்கள் பலவற்றைக் கொண்டிருக்கிறது.

இங்கு யோக நரசிம்மர் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக தனிச்சந்நதியில் அருள் புரிகிறார். இவர் மிகவும் சக்தி வாய்ந்த வரப்ரசாதி. விஜயநகர மன்னர்களால் பற்பல திருப்பணிகள் செய்யப் பெற்ற இந்த அழகிய திருக்கோயில் திருஅத்தியூர் (காஞ்சி), சோழஸிம்ஹபுரம் (சோளிங்கர்), குலோத்துங்க சோழ விண்ணகரம் (இராஜ மன்னார்குடி) ஆகிய திவ்ய க்ஷேத்ரங்களின் மகிமையைக் கொண்டது.

வழி: நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை வட்டத்தில் ‘மணல்மேடு’ கிராமம் வழியாக பந்தநல்லூர் செல்லும் பேருந்தில் சென்றால் ‘கடலங்குடி’ திருத்தலத்தை அடையலாம்.

முகாசாபரூர்

திருமால் நெறி விரிந்து பரந்திருக்கும் நடுநாட்டில், கடலூர் மாவட்டத்தில் உளுந்தூர்ப்பேட்டை- விருத்தாசலம் சாலையில் மங்கலம் பேட்டையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கும் சின்னஞ்சிறு கிராமமாக இன்று முகாசாபரூர் விளங்குகிறது.

இவ்வூரில் மிகவும் பழமையான பெருந்தேவித் தாயார் சமேத வரதராஜப்பெருமாள் கோயில் இருக்கிறது. இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ருணவிமோசன லட்சுமி நரசிம்மர் மிகுந்த சக்தி வாய்ந்த பிரார்த்தனைப் பெருமாள் ஆவார்.‘அனந்த சரஸ்’ எனும் அல்லிக் குளமே புஷ்கரணியாகும். ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், பிராட்டியை இடது மடியில் அமர்த்திக் கொண்ட வாத்ஸல்யம் (குற்றத்தையும் குணமாகக்கொள்ளும் தாய்மைக் குணம் அதாவது, தாய்ப்பசு தன் கன்றின் உடலிலுள்ள அழுக்குகளை நாவால் வருடிச் சுத்தப்படுத்தும் உயர்ந்த குணம்) எனும் திவ்ய கல்யாண குணம் ததும்பும் அழகிய திருக்கோலம் இதுவாகும்.

வெல்லப் பானகம், கல்கண்டுப் பானகம், எலுமிச்சைப் பானகம், பஞ்சாமிர்தம், தேன், பால் போன்றவை இந்த மாலோல நரசிம்மருக்குப் பிரியமானவையாகும். ஸ்ரீவரதராஜப் பெருமாளையும், பெருந்தேவித் தாயாரையும், ஸ்ரீலட்சுமி நரசிம்மரையும் ஒருமுறை சேவித்தவர்கள், மீண்டும் மீண்டும் சேவிக்க விரும்புவார்கள்.

வழி: சென்னை – விழுப்புரம் – திருச்சி- ரயில்- பேருந்துப் பாதையில் உளுந்தூர்ப்பேட்டையிலோ அல்லது விருத்தாசலத்திலோ இறங்க வேண்டும். பின்னர், இரு ஊர்களுக்கும் இடையில் இருக்கும் மங்கலம்பேட்டையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் முகாசாபரூர் உள்ளது.

————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –