தினமும் காலை எழுந்தவுடன் பூலோக வைகுண்டமாம் ஸ்ரீரங்கத்தை நோக்கி இரண்டு அடி வைக்க வேண்டும் என்பது பெரியோர்கள் வாக்கு.
ஸ்ரீரங்கத்தில் இருப்பவர்கள் என்ன செய்யலாம் ? கர்நாடகா இருக்கும் திக்கில் இரண்டு அடி வைக்கலாம். காரணம் இருக்கு.
பாகவதத்தில் ’பக்தி’ என்ற இளமையான பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் – ஞானம், வைராக்கியம்.
பக்தி இளமையுடன் இருக்க, குழந்தைகள் கிழவர்களாக இருப்பதைக் கண்ட நாரதர் வியப்புடன் ஏன் என்று விசாரிக்க,
அதற்குப் பக்தி கூறிய பதில் இது.
“நான் இளமையோடுதான் இருந்தேன். நான் பிறந்தது தமிழகத்தில். கர்நாடகத்தில்தான் வளர்ந்தேன்.
பிறகு அங்கிருந்து மஹாராஷ்டிரத்தை அடைந்து அங்கிருந்து குஜராத் … என்று பல இடங்களுக்குச் சென்ற எனக்கு வயதாகிவிட்டது.
கூடவே வந்த ஞானமும், வைராக்கியத்துக்கும் வயதானது. கடைசியாக யமுனைக் கரையை அடைந்து,
பிருந்தாவனம், மதுரா, கோவர்த்தனம் சென்ற போது மீண்டும் எனக்கு இளமை கிடைத்தது.
கண்ணன் விளையாடிய இடங்களின் ஸ்பரிசம் பட்டவுடன் எதுவும் நடக்கும்.
அதே போல நம் ஆசாரியர்கள் இரண்டு பேர் ஸ்பரிசம் பட்ட மண் கர்நாடகா. ஸ்பரிசம் மட்டும் இல்லை,
ஸ்வாமி ஸ்ரீராமானுஜர், வேதாந்த தேசிகன் போன்றவர்களைப் பாதுகாத்து கொடுத்த இடம்.
கூரத்தாழ்வான் கிருமி கண்ட சோழன் கொடுமையிலிருந்து ஸ்ரீராமானுஜரை மேல்கோட்டை தப்பவைத்து
அதனால் அவர் கண்களை தியாகம் செய்து பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
ஸ்ரீராமானுஜர் சுமார் 12 ஆண்டு காலம் மேல்கோட்டையில் இருந்துள்ளார்.
அதே போல் ஸ்ரீரங்கம் திருவரங்கத்தில் ஸ்வாமி தேசிகன் எழுந்தருளியிருந்த காலத்தில் முகம்மதியர் படையெடுப்பால் பெருந்துன்பம் விளைந்தது.
முகம்மதியர்படை கோயிலில் புகுந்து பாழ்செய்த போது பிள்ளைலோகாச்சாரியார் நம்பெருமாளை எழுந்தருளிக்கொண்டு செல்ல,
ஸ்ரீவேதாந்த தேசிகன் ஸ்ரீரங்கத்தில் தலைமை தாங்கிய சுதர்சன பட்டர் எழுதிய ‘ச்ருத ப்ரகாசிகை’ என்ற ஸ்ரீராமானுஜர் சொன்ன
உரைக் குறிப்புகள் அடங்கிய ஸ்ரீபாஷ்ய உரை நூலையும் அவருடைய இரண்டு புதல்வர்களையும் காப்பாற்றி
பிணமோடு பிணமாக இரவு கழித்து சத்தியமங்கலம் காடு வழியாக கர்நாடகா வந்தடைந்தார்.
திருநாராயணபுரம், ஸத்யாகாலம் என்ற இடத்தில் இவர் தங்கியிருந்தார்.
ஸ்ரீராமானுஜர், ஸ்ரீ வேதாந்த தேசிகன் மட்டும் இல்லை, நம் ‘நம்பெருமாளே’ சில காலம் திருநாராயண புரத்தில் தங்கியிருக்கிறார் !.
மேலும் இந்த இடத்துக்குச் சிறப்பு இருக்கிறது .
ஸ்வாமி ஸ்ரீராமானுஜர் மீது அளவுகடந்த பக்தி கொண்ட இருவர் மேல்கோட்டை பக்கம் உதித்தவர்கள்.
கிரங்கனூர் என்னும் கிராமத்தில் பிறந்த ஸ்ரீராமானுஜரின் மனதில் உள்ளதை ஆணையாக ஏற்று, திருமலையில்
திருவேங்கடமுடையானுக்கு நந்தவனம் அமைத்த அனந்தாழ்வார் என்ற அனந்தான் பிள்ளை.
மற்றொருவர் சாலக்கிரமம் என்னும் இடத்தில் பிறந்து ஆச்சர்ய அபிமானமே உத்தாரகம் என்று நமக்கு எடுத்துக்காட்டிய நம் வடுகநம்பி ஸ்வாமிகள்.
ஸத்யாகாலத்திலும் திருநாராயண புரம் இரண்டு இடத்திலேயும் அவர் 12 வருடம் வாசம் செய்துள்ளார்
ஸத்யாகாலம் பெங்களூர் கொல்லேகால் போகும் வழியில் இருக்கும் சின்ன கிராமம்.
போகும் வழி எல்லாம் மங்களகரமாக எல்லோர் இல்லத்தின் வாசலில் செழிப்பாக துளசியை காண முடிந்தது.
எங்கும் பச்சை வயல்கள்…. ஊருக்குள் நுழையும் முன் சில நூற்றாண்டு முன் ஒரு காலட்சேபத்தில் நுழைந்த குழந்தையின் கதை பற்றி நினைவு வருகிறது.
காஞ்சிபுரத்தில் ஸ்ரீபாஷ்ய காலட்சேபம் நடக்கிறது. காலட்சேபம் செய்பவர் ‘நடாதூர் அம்மாள்’.
அங்கே நல்ல தேஜ்ஸுடன் ஐந்து வயதுக் குழந்தை தன்னுடைய மாமாவான கிடாம்பி அப்புள்ளாருடன் உள்ளே நுழைகிறார்கள்
( நடாதூர் அம்மாளுடைய சிஷ்யர் கிடாம்பி அப்புள்ளார் )
கால்டஷேபத்தை நடதூர் அம்மாள் நிறுத்தி விட்டு குழந்தையின் அழகைப் பார்த்து
“யார் இந்தக் குழந்தை ?” என்று கேட்க ”என்னுடைய மருமகன்” தான் என்கிறார்
அப்புள்ளார் கூடவே இந்தக் குழந்தைக்கு பாடம் எடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் வைக்கிறார்.
அதற்கு அம்மாள், தனக்கு வயதாகிவிட்டது அதனால் உன் மருமகனுக்கு நீயே ஆசிரியராக இருந்து பாடம் எடு என்று நியமித்துவிட்டு,
தொடர்ந்து காலட்சேபத்தை தொடர முற்படும் போது நிறுத்திய இடம் நினைவுக்கு வரவில்லை.
அப்போது சிறுவன் உள்ளே நுழைந்த போது தான் என்ன கேட்டானோ அதை அப்படியே ஒப்பிக்கிறான்.
நடாதூர் அம்மாள் சிறுவனை அணைத்துக் கொண்டு ”ஸ்ரீவைஷ்ணவ கொள்கையைப் பரவச் செய்து, பெரும் புகழுடன் விளங்குவாய்” என்று ஆசிர்வதிக்கிறார்.
அவர் ஆசிர்வாதம் பலித்தது. அந்தச் சிறுவன் தான் ஸ்ரீ வேதாந்த தேசிகன்.
ஊருக்குள்ளே பெரும் ஆலமரம் ஒன்று தெரிகிறது. அதைச் சுற்றி பல மஞ்சள் தோட்டம்.
ஸ்ரீதேசிகனே பிரமாண்ட ஆலமரம் மாதிரி கீழே அவர் சிஷ்யர்கள் மஞ்சள் செடிகளாக காட்சி அளிப்பது மாதிரி இருக்கிறது.
புரட்டாசி திருவோணம் திருவேங்கடமுடையான் திருநக்ஷத்ரம் ! திருவேங்கமுடையானின் கண்டம் என்னும் மணியின் அம்சமாக இவரைப் போற்றுவர்.
தேசிகன் என்றால் ஆசாரியன் என்று பொருள் அதனால் இவரை வேதாந்த தேசிகன் என்று அழைப்பர் –
வேதாந்தத்துக்கு அதாவது தமிழ், சமிஸ்கிரதம் என்ற உபய வேதாந்தத்துக்கும் ஆசாரியன்
உள்ளே நுழையும் போது கோயில் கோபுரம் புதுப் பொலிவுடன் தெரிகிறது. பத்தாண்டுகளுக்கு முன் சம்பரோக்ஷனம் நடந்தது என்று தகவல்.
“ஸ்ரீ கோட்டே வரதராஜர் கோயில்” என்ற எழுதியிருக்கிறது.
( “கோட்டே” என்ற அடைமொழியுடன் பல கோயில்கள் கர்நாடகாவில் பார்க்கலாம். )
கர்நாடகாவில் பெரும்பாலும் நரசிம்மர், நாராயணன், கிருஷ்ணர், வேங்கடேச பெருமாள் கோயில்கள் தான் அதிகம்.
இங்கே வரதர் எப்படி வந்தார் என்று யோசிக்கும் போது “வாங்கோ வாங்கோ” என்று உற்சவம் நடத்துபவர்கள் அழைக்க
உள்ளே துவஜஸ்தம்பம் சேவித்துவிட்டு உள்ளே சென்ற போது நேராக வரதர் நீல நிற உடையுடன் காட்சி அளித்தார்.
காஞ்சிபுரம் போல பெரிய வரதர் இல்லை, சின்னவர் தான் !
தீர்த்தம், சடாரி வாங்கிக்கொண்டு புறப்படும் போது
பக்கத்தில் இருந்த மண்டபத்தில் நாதஸ்வர இசை ஒலிக்க அங்கே பெருமாளுக்கு கல்யாண உற்சவம் நடந்துகொண்டு இருக்க அதைச் செவிக்க சென்றேன்.
கல்யாண உற்சவம் நடந்துகொண்டு இருக்க, வரதராஜர் பற்றி நினைத்துக்கொண்டேன்.
தேவர்களுக்கும் பிரம்மாவுக்கு கேட்ட வரத்தைத் தந்ததால் அவர் வரதர் என்று பெயர் பெற்றார்.
பிரம்மாவுக்கு மட்டுமா ? ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீராமானுஜரை சம்பிரதாயத்துக்குத் தர வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.
யாதவ பிரகாசர் கொலை முயற்சியிலிருந்து தப்ப வைத்து விந்திய மலைக் காடுகளில் வரதரும், தாயாரும் வேடுவன்,
வேடுவச்சி மாதிரி வந்து சரியான பாதையை வகுத்து கொடுத்தனர்.
ஆளவந்தார் ஆசாரியன் திருவடியை அடைந்த பின் திருவரங்கப் பெருமான் அரையர் பாட்டு பாடி
வரதன் மனதைக் குளிர வைத்து ஸ்ரீராமானுஜரை கேட்டு பெற்றுக்கொண்டார் ஸ்ரீரங்கம் வந்தார்.
வரதன் கேட்பதை தருவான்.
ஸ்ரீராமானுஜரை காக்கும் பொருட்டு தன் கண்களை இழந்த கூரத்தாழ்வான் நிலை கண்டு வருத்தப்பட்ட ஸ்ரீராமானுஜர்
வரதனை “துயரறு சுடர் அடி தொழுதெழு என் மனனே” என்று வேண்டிக்கொள்ளச் சொல்ல
கூரத்தாழ்வான் ‘வரதராஜஸ்தவம்’ பாட வரதன் உடனே பார்வையை கொடுத்தார்
( ஆனால் கூரத்தாழ்வான் ஸ்ரீராமானுஜரை மட்டும் பார்த்தால் போதும் என்று கூறிவிட்டார் ! ).
இன்றும் ஸ்ரீராமானுஜர் சன்னதியில் கூடவே காஞ்சி வரதராஜர் தான் நித்திய திருவாராதன பெருமாளாகக் காட்சி அளிப்பார்.
ஸ்ரீரங்கத்தில் கூட உடையவர் பக்கத்தில் ஸ்ரீவரதராஜர் தான் ! .
அடுத்த முறை ஸ்ரீவரதராஜர் எங்காவது இருந்தால் அங்கே ஸ்ரீராமானுஜர் கூடவே இருப்பதை நீங்கள் கவனிக்கலாம்.
வரம் கொடுக்கும் பேரருளாளன் ஸத்யாகலத்துக்கு எதற்கு வந்தார் – ஸ்வாமி தேசிகனுக்கு வரம் கொடுக்க தான்.
கல்யாண உற்சவம், பிரசாதம் எல்லாம் முடிந்த பின் நேராக ஸ்வாமி தேசிகன் அபீதிஸ்தவம் எழுதிய அரச மரத்தைத் தேடி சென்றேன்.
மாலை வேளை, பசுமையான நெல் வயலில் வாசனை என்று அந்த இடமே ரம்மியமாக இருந்தது.
காவிரி ஆறு எந்த சலசலப்பும் இல்லாமல் சூழ்நிலைக்கு ஏற்ப அமைதியாக சென்றுகொண்டு இருந்தாள்.
ஸ்வாமி தேசிகன் இங்கே தான் தனது காலை அனுஷ்டானங்களைச் செய்தார் என்ற நினைப்பே மனதுக்கு நெகிழ்வாக இருந்தது.
இதை எல்லாம் சேவித்துவிட்டு மறுநாள் காலை மீண்டும் வரலாம் என்று திரும்பினேன்.
இரவு பெருந்தேவி தாயார் சன்னதிக்கு சென்று சேவித்தேன்.அங்கேயே சின்னதாக ஸ்வாமி தேசிகன் சன்னதி கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.
பொதுவாக ஸ்வாமி தேசிகன் வலக் கையில் உபதேச முத்திரையும் இடது கையில் ஓலைச் சுவடியும் இருக்கும். அந்த ஓலைச் சுவடி ஸ்ரீராமானுஜரின் ஸ்ரீபாஷ்யம்.
இங்கேயும் அப்படியே காட்சி அளித்தார். பொதுவாக அமர்ந்த நிலையில் இருக்கும் ஸ்ரீதேசிகன் இங்கே நின்றுகொண்டு சேவைச் சாதிக்கிறார்.
திருவாய்மொழிக்கு ”ஈன்ற முதல் தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த இதத் தாய் இராமாநுசன்” என்று கூறும் தனியன் மாதிரி
ஸ்ரீபாஷியத்தை ஈன்ற தாய் இராமானுசன், அதை மொய்ம்பால் வளர்த்த பெருமை நம் ஸ்வாமி தேசிகனையே சாரும்.
சரி ஸ்த்யாகாலத்தில் ஸ்வாமி தேசிகன் என்ன செய்தார் ?
பிணமோடு பிணமாக இரவு கழித்து தேசிகன் சத்தியமங்கலம் காடு வழியாக கர்நாடகா வந்தடைந்தார் என்று முன்பு பார்த்தோம்.
சத்யாகாலம் வந்த ஸ்வாமி தேசிகன் இங்கே தினமும் முன்பு பார்த்த காவிரிக் கரையில் தினமும் தன்னுடைய
காலை அனுஷ்டானங்களை முடித்து, அங்கே இருக்கும் அரச மரத்து அடியில் உட்கார்ந்து தியானம் செய்வார்.
இந்த மரத்துக்கு அடியில் தான் அபீதிஸ்தவம் இயற்றினார். 29 ஸ்லோகங்கள் கொண்டது.
அதில் ஸ்ரீதேசிகன் நம்பெருமாளைப் பிரிந்து திருவுள்ளம் மிகப் புண்பட்டு இந்த உயர்ந்த ஸ்தோத்ரத்தை அருளிச்செய்தார்.
பெரிய பெருமாளுக்கு திருவாராதனம் நின்றுவிட்டது, நம்பெருமாள் ஸ்ரீரங்கத்தை விட்டுப் போக வேண்டிய சூழ்நிலை என்று
அடுக்கடுக்காக நிகழ்வுகளை நினைக்கும் போது ஸ்வாமிக்கு உண்டான மனநோவு கணக்கிடமுடியாத ஒன்று.
திருவரங்கத்தில் ஏற்பட்ட ஆபத்தை நீக்கி, உத்ஸவமூர்த்திகள் மறுபடி பெரிய பெருமாளுடன் சேர்ந்து
திருவாராதனம் கண்டருளும்படி இந்த ஸ்தோத்ரத்தால் பிராத்திக்கின்றார்.
பிறகு கோயிலுக்கு வந்து ஸ்ரீரங்கம் நம்பெருமாள் என்ன ஆனாரோ என்று கவலையுடன் ஸ்ரீவரதராஜரையும், பெருந்தேவி தாயாரையும் வேண்டிக் கொள்வாராம்.
ஸ்வாமி தேசிகனின் ஸ்தோத்திரம் வரதனை உருகச் செய்திருக்க வேண்டும்.
விசயநகர பேரரசரின் செஞ்சிக் படைத் தலைவனான கொப்பணார்யன் என்னும் பாகவதோத்தமனால் நம்பெருமாள் மீண்டும் திருவரங்கம் எழுந்தருளினார்.
விஜயநகர பேரரசர்கள் பூர்வீகம் கர்நாடகா.
மீண்டும் ஸ்வாமி தேசிகன் சன்னதிக்கு வாசகர்களை அன்புடன் அழைக்கிறேன்.
மூலவர் அவருக்குக் கீழே ஆமை ஒன்றும் அதற்கு மேல் உற்சவர் தேசிகன்! நின்று கொண்டு சேவைச் சாதிக்கிறார்.
மனதில் இரண்டு கேள்விகள் உடனே எழுகின்றன ஒன்று அந்த ஆமை ?
அடுத்தது பொதுவாக ஸ்வாமி தேசிகன் அமர்ந்துகொண்டு தானே இருப்பார் இங்கே ஏன் நின்று கொண்டு இருக்கிறார் ?
காலை அனுஷ்டானங்கள் முடித்துவிட்டு கோயிலுக்கு செல்லும் போது ஒரு நாள் ஆமை ஒன்று அவரைப் பின் தொடர்ந்தது.
வேகமாக நடந்த தேசிகனை ஆமையும் வேகமாகப் பின் தொடர்ந்தது. ஸ்வாமி தேசிகன் அதைக் கண்டுகொள்ளவில்லை.
அன்று இரவு ஸ்வாமியின் கனவில் சாத்விகமான ஒருவர் தோன்றி ”உங்களுக்கு நான் கைங்கரியம் செய்ய விரும்புகிறேன்”
என்று கூறி இதையும் ஸ்வாமி தேசிகன் கண்டுகொள்ளவில்லை.
மறுநாள் கனவில் பெருமாள் தோன்றி முதல் நாள் கனவில் தோன்றியவருக்கு அருள் புரிய கட்டளையிட்டார்.
காலை அனுஷ்டானம் செய்ய சென்ற போது அங்கே ஆமை கல்லாக, கூர்மாசனமாக மாறியிருந்தது.
அன்றிலிருந்து ஸ்வாமி தேசிகன் அதன் மீது அமர்ந்து தன்னுடைய அனுஷ்டானத்த செய்யத் தொடங்கினார்.
1929ஆம் ஆண்டு ஸ்ரீ அபிநவ ரங்கநாத ஜீயர் (பரகால மடம்) ஸ்வாமி இங்கு வந்த போது, இந்த கூர்மாசனம்
நாளடைவில் காவிரி ஆற்றோடு அடித்துக்கொண்டு போகும் அபாயம் இருப்பதை யூகித்து அதை எடுத்து
ஸ்வாமி தேசிகனின் சன்னதியில் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்தார்.
ஸத்யாகாலத்தில் மட்டும் தான் ஸ்வாமி தேசிகன் நின்றுகொண்டு சேவை சாதிக்கிறார். ஏன் தெரியுமா ?
நம்பெருமாள் வந்துவிட்டார் என்ற செய்தி வந்தவுடன் புறப்பட தயார் நிலையில் இருக்கிறார்.
எவ்வளவு வருடங்கள் இங்கே இருந்தார், எப்போது வந்தார் என்பது எல்லாம் ஆராய்ச்சிக்கு உட்பட்டது.
ஆனால் ஸ்வாமி தேசிகன் இங்கே வந்திருக்கிறார் என்பது உண்மை. இங்கே இருக்கும் மக்களுக்கு ஸ்வாமி தேசிகன் மீதும் இந்தக் கோவிலின் மீதும் அதி விசுவாசமும் ப்ரீதியும் கொண்டுள்ளனர்
இன்றும் இந்த ஊர் மக்கள் தங்களின் வீட்டில் ஒரு ஆண் குழந்தைக்கு “தேசிகாச்சார்” என்று பெயர் வைக்கிறார்கள் !
முன்பு பக்தி, ஞானம், வைராக்கியம் என்று மூன்று சொற்களை பார்த்தோம்.
ஒரு பொருளைப் பற்றி அறிவு ஏற்பட்டால் அது ஞானம். அப்பொருளிடத்து அன்பு ஏற்பட்டால் அதுவே பக்தி.
அந்தப் பொருளின் அருமை பெருமைகளை உணர்ந்து மற்ற பொருட்களின் மீது நமக்குப் பற்றற்ற தன்மை ஏற்பட்டால் அதுவே வைராக்கியம்.
இங்கே பொருள் என்பது பெருமாள். அது மூன்றும் பூர்ணமாக பெற்றவர் நம் ஸ்வாமி தேசிகன்.
அவர் வாழ்கையில் பல சம்பவங்கள் இதை எடுத்துக் காட்டுகின்றன.
தன் ஆயுள் முழுவதும் ஸ்வாமி தேசிகன் உஞ்சவிருத்தி செய்து தான் வாழ்க்கை நடத்தியவர்.
அவர் சன்னியாசம் வாங்கவில்லை ஆனால் இல்லத்துறவி !.
அவர் வாழ்ந்த காலத்தில் செல்வந்தராகவும், வேந்தியாகவும் இருந்த வித்யாரணயர் ஸ்வாமி தேசிகனின் ஏழ்மையைப் போக்கி இவரையும் செல்வந்தராக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசனைச் சந்திக்க வேண்டும் என்று ஒரு கடித்ததை அனுப்பினார்.
ஸ்வாமி தேசிகன் அதற்குப் பதிலாக ‘வைராக்கிய பஞ்சகம்’ என்று ஐந்து ஸ்லோகங்கள் எழுதினார்.
ஒரு சாண் வயிற்றுக்கு என்சாண் உடம்பைக் குறுக்கி எதுவும் செய்ய மாட்டேன் என்று திட்டவட்டமாக சொல்லுகிறார்.
அதில் முன்னோர்கள் ஈட்டிய செல்வம் எதுவும் இல்லை, சொந்த வருவாயும் இல்லை
ஆனால் மூதாதையர்கள் காட்டிய வரதராஜர் என்ற பேரருளாளப் பெருஞ்செல்வம் இருக்கிறது என்கிறார் !.
எதற்குக் கையேந்த வேண்டும் – உணவுக்கு, தண்ணீர், உடை. இதற்குத் தேசிகன் என்ன சொல்லுகிறார் ?
அறுவடை செய்த பின் அங்கே சிந்திய நெல்மணிகள் ஒரு கையளவு கிடைக்குமே அது பசியை தீர்க்க பேதுமானதாகாதா ?
நதி, குளத்தில் இருக்கும் நீர் தாகத்தை தீர்க்காதா ? வயல் சுற்றி முள் வேலிகளில் கிழிந்த துணிகள் மாட்டிக்கொண்டு இருக்குமே
அது என் மானத்தை மறைப்பதற்கு போதுமானது. தகுதியற்ற மனிதர்களை எதற்குப் பாராட்டி செல்வம் சேர்க்க வேண்டும் ?
வைராக்கியமே இவருடைய செல்வம்!.
தன் வாழ்நாளில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட படைப்புகளை ஸம்ஸ்க்ருதம், தமிழ் மற்றும் மணிப்ரவாளத்தில் அருளியுள்ளார்.
ஸ்தோத்ரங்கள் – 28
வேதாந்த கிரந்தங்கள் – 14
வ்யாக்யாந கிரந்தங்கள் 8
ரஹஸ்ய கிரந்தங்கள் 31
தமிழ் பிரபந்தங்கள் – 24
காவியங்கள் 4
நாடகம் 1
அனுஷ்டான கிரந்தங்கள் – 2
மொத்தம் 112
மறுநாள் காலை சூரியோதயத்தின் போது காவிரிக்கரைக்கு துலா ஸ்நானம் செய்ய கிளம்பினேன்.
ஆல மரத்தின் மீது “கீசுகீ சென்றெங்கும்” சத்தம் வேறு வித்தியாச சத்தத்துடன் ”கலந்து பேசின பேச்சரவம்” கேட்க
என்ன என்று பார்த்த போது கிளிகளும் மரத்துக்கு மேல் ஒரு கருடனும் இருப்பதைக் கண்டேன்.
கருடனைப் பார்த்த போது ஸ்வாமி தேசிகனுடைய ஞானம் நினைவுக்கு வந்தது.
ஸ்வாமி தேசிகனுடைய வைராக்கியம் பற்றி முன்பு பார்த்தோம் அதே போல் ஸ்வாமி தேசிகனின் ஞானம் அளவிட முடியாதது.
கருடனுக்கும் ஞானத்துக்கும் என்ன சம்பந்தம் ?
கிடாம்பி அப்புள்ளார் ஸ்ரீதேசிகனுக்கு ஆசாரியன் என்று பார்த்தோம்.
அவர் ஸ்ரீதேசிகனுக்கு கருட மந்திரத்தை உபதேசித்தார். ஸ்ரீதேசிகன் இந்த மந்திரத்தை திருவஹீந்திரபுரத்துக்கு சென்று
அங்கே இருக்கும் ’ஔஷாதாத்ரி’ என்ற சிறிய மலை மீது அமர்ந்து ஜபிக்க தொடங்கினார்.
பெரிய திருவடியின் அனுக்ரஹம் அவருக்குக் கிடைத்தது. கருட பகவான் ப்ரத்யக்ஷமாகி அவருக்கு
ஸ்ரீஹயக்ரீவ மந்திரத்தை உபதேசம் செய்து ஒரு ஹயக்ரீவ விக்கிரகத்தையும் கொடுத்து மறைந்தார்.
ஸ்ரீ தேசிகன் அதே ஔஷதகிரியில் ஹயக்ரீவ மந்திரத்தை ஆயிரமாயிரம் தடவை ஸ்தா ஜபித்துக்கொண்டு தியானத்தில் இருந்தார்.
ஸ்ரீஹயக்ரீவர் மகிழ்ந்து, பிரத்யக்ஷமாகி தனது ”திருவாய் அமுதத்தை” அவருக்கு பிரசாதித்து அருளினார்
அதற்குப் பிறகு ஸ்ரீதேசிகருடைய திருவாக்கிலிருந்து ப்ரவாயமாக ஸ்தோத்திரங்களும் பகவத் விஷயமும் பெருக்கெடுத்தோடியது.
இருபது வயதுதில் எல்லாவற்றையும் கற்றறிந்தார்.
குருபரம்பரையில் ஸ்ரீ ஆளவந்தார், ஸ்ரீராமானுஜர் அதற்குப் பிறகு ஸ்ரீவேதந்த தேசிகனுக்கு மட்டுமே இந்தப் பெருமை உண்டு.
ஹயக்ரீவரிடம் ஞானம் பெற்ற ஸ்ரீதேசிகன், ”“செய்ய தமிழ் மலைகள் நாம் தெளிய ஓதி தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோம்” ” என்று
வடமொழி வேதாந்தங்களை எவ்வளவு கஷ்டப்பட்டு கற்றாலும், அவற்றால் கலங்கிய ஞானமே உண்டாகும்.
ஆழ்வார் செயல்களைக் கொண்டு தான் தெளிவு பெற்றேன் என்கிறார் ஸ்ரீ தேசிகன்.
திருவாய் அமுதத்தை பிரசாதித்த ஸ்ரீ தேசிகன் திருவாய்மொழியின் சாரப்பொருளை
‘த்ரமிடோப நிஷத் தாத்பர்ய ரத்னாவளி’, ‘திரமிடோ பநிஷத் ஸாரம்’ என்ற நூல்களில் விளக்கியுள்ளார்.
பரம நாத்திகனும் ஒரு முறை திருவாய்மொழியை சேவித்தால் பகவானிடத்தில் ஈடுபடச் செய்துவிடும் என்கிறார்.
“கலியனுரை குடிகொண்ட கருத்துடையோன்” என்று திருமங்கை ஆழ்வாரை மனதில் தேக்கிக் கொண்டவர்;
திருப்பாணாழ்வாரின் “அமலனாதி பிரான்” பாசுரங்களுக்கு முநிவாஹன போகம் என்று உரையை அருளிச் செய்தார்.
ஸ்ரீ கோதா ஸ்துதி என்று ஆண்டாளைக் கொண்டாடுகிறார்.
பாதுகா ஸஹஸ்ரத்தில் பெரும்பாலும் ஆழ்வார்கள் கொண்டே அருளிச்செய்துள்ளார்.
பிரபந்த சாரம் என்று ஆழ்வார்கள் அவதரித்த நாள், ஊர், மாதம், பிரபந்தங்களின் எண்ணிக்கை என்ற சுலபமான அதே சமயம் அருமையான செய்யுளை அருளியிருக்கிறார்.
“சந்தமிகு தமிழ் மறையோன் துப்புல் தோன்றும் வேதாந்த குரு” என்று அருளிச் செயல்களில் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டுள்ளார்.
ஸ்நானம் செய்து விட்டு ஸ்வாமி தேசிகன் அமர்ந்து அனுஷ்டானம் செய்த ஆல மரத்தின் பக்கம் ஸ்ரீரங்கம் நோக்கி அமர்ந்துகொண்டு
கிளிகள் ஒலி எழுப்பத் தலைக்கு மேலே கருடன் சுற்றிக்கொண்டு இருக்க அபீதிஸ்தவம் இரண்டு முறை பாராயணம் செய்தேன்.
பிறகு ஆல மரத்துக்கு அடியில் வளர்ந்திருக்கும் துளசியின் இலைகளை இரண்டை பிரசாதமாக எடுத்துக்கொண்டேன்.
ஸ்ரீதேசிகன் அமர்ந்த மரத்தடியில், ஸ்ரீதேசிகனை நேரில் தரிசித்த மரத்தின் மரப்பட்டை ஒன்றை எடுத்துக்கொண்டு வந்தேன்.
சூரியன் மெல்ல மெல்ல வந்து பயிர்களின் மீது படும் போது வண்ணங்கள் மாறுவதைப் பார்த்துக் கொண்டு இருந்து விட்டு கோயிலுக்கு திரும்பினேன்.
ஸ்வாமி தேசிகன் வாத்தியங்கள் இசைக்கப் புறப்பாடு கண்டருளினார்.
பெருமாளின் புறப்பாடு போது பொதுவாக இரண்டு திருச்சின்னம் ஊதுவார்கள்,
ஆனால் காஞ்சியில் ஒன்று தான். காஞ்சியில் இந்தத் திருச்சின்னம் ஊதும் போது ஸ்ரீதேசிகனுக்கு வரதனின்
அழகு கண்ணில் தோன்றி திருச்சின்ன மாலை என்று ஒன்றை அருளினார்.
அதைச் செவியுற்ற வரதன், எனக்கு ஒரு திருச்சின்னம் போதும், இன்னொன்று தேசிகன் அருளியது இருக்கிறதே என்று சொன்னாராம்.
மீண்டும் ஸ்வாமி தினமும் அனுஷ்டானம் செய்யும் காவிரிக்கரைக்கு வந்தோம்.
திருமஞ்சனம், தீர்த்தவாரி என்று அடுத்தடுத்து அனுபவித்துவிட்டு பிரியாவிடை கொடுத்துவிட்டுத் திரும்பினேன்.
தன் வாழ்நாள் முழுவதும் சற்றும் ஓய்வில்லாமல் வடமொழி, தென்மொழி என்று மொத்தம் 112 கிரந்தங்கள் அருளியுள்ளார்.
ஒரு இரவில் ஒரு யாம காலத்திற்குள் ( மூன்று மணி காலம் ) ஸ்ரீரங்கநாத பாதுகையைப் பற்றி பாதுகா ஸ்ஹஸ்ரம்
இயற்றி, வேதாந்தாசார்யர் என்ற விருதை அரங்கனும், ’ஸ்ர்வதந்த்ரஸ்வதந்தரர், கவிதார்க்கிககேஸரி’ என்ற விருதை ரங்க நாச்சியாரும் கொடுத்து கவுரவித்துள்ளார்கள்.
கோணலான கற்களை சாமர்த்தியமாகப் பொருத்தி கிணறு கட்டினார்,
பக்தி, ஞான, வைராக்கியத்துடன் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த இந்த மஹான் ஒரு ’ஸ்ரீவைஷ்ணவ ஃபலூடா’
ஸ்ரீவேதாந்த தேசிகன் தனியன் :
ஸ்ரீமான் வேங்கடநாதார்ய: கவிதார்க்கிக கேசரீ |
வேதாந்தாசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||
பொருள் : எதிர்த்து தர்க்கம் செய்யும் பண்டிதர்களுக்குச் சிங்கம் போலவும்,
ஞானம், பக்தி, வைராக்கியம் போன்ற சிறந்த செல்வத்தைப் பெற்றவரும்.
வேங்கடநாதன் என்ற திரு நாமம் உடையவரான ஸ்ரீ வேதாந்த தேசிகன் என் நெஞ்சில் எப்பொழுதும் வாழ்வாராக.
தூப்புல் “, என்ற அக்ஹாரம், காஞ்சீபுரத்தில் திருதண்கா என்ற திவ்ய-தேஸத்தின் அருகாமையில் உள்ளது. தூப்புல் என்றால் பரிசுத்தமான புல் என்று பொருள். அதனை விச்வாமித்ரம் ( தர்பம் ) என்றும் கூறுவர். இந்த அக்ரஹாரத்தில் அவை விளைந்ததாலோ, இல்லை அங்கு விச்வாமித்ர கோத்ரத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் இருந்ததாலோ, அந்தப்பெயர் வந்திருக் கலாம். அங்கு அநந்தஸோமயாஜி என்பவர் யஜ்ஞங்களை அனுஷ்டித்துக் கொண்டு வாழ்ந்து வந்தார். அவருடைய குமாரரான, புண்டரீகாக்ஷ தீக்ஷதரின் குமாரர், அநந்தஸூரி என்பவர். அவருக்கு, ஸ்ரீரங்காச்சாரியின், குமாரத்தியும், அப்பிள்ளாரின் ஸகோதரியுமான,தோதாரம்பாவை திருமணம் செய்து வைத்தனர். இந்த தம்பதிகள் இனிதே வாழ்ந்து வந்தனர். அவர்க-ளுக்குச் சிலகாலம் குழந்தையில்லாமல் இருந்தது. அவர்கள் ஸ்வப்னத்தில் திருவேங்கடமுடையான், தோன்றி, “ நீங்கள் திருமலையில், எம் சந்நி-தானத்திற்கு வாருங்கள் உங்க ளுக்கு புத்ர பாக்யம் சித்திக்கும் “ என்று கூற இருவர்கனவிலும் ஒருசேர வேங்கடவன் வந்த கார ணத்தால் இருவரும் சந்தோஷப் பட்டனர். எம்பெருமான் கருணைத் தங்கள் பக்கம் இருக்கின்றது என மகிழ்ந்து உடனே திருமலைக்கு யாத்திரை கிளம்பினர்.
வேங்கடத்திற்கு நிகரான க்ஷேத்ரமும் கிடையாது, வேங்கடவனுக்கு நிகரான தெய்வமும் கிடையாது. அவன் இந்தக் கலியுகத்தின் கண்கண்ட தெய்வம். ஸ்ரீவைகுண்த்தை விட்டு, ஸ்வாமி புஷ்கரணி தீரத்தில் பிராட்டியுடன் நித்யவாசம் புரிகின்றான். கலியுகத்தில் பாவம் செய்தவர்களுக்கு இவனையன்றி வேறு புகலிடம் கிடையாது என்பதை நாம் எல்லோரும் அறிந்ததே. அத்தகய ப்ஸித்தி வாய்ந்த திருமலைக்கு,
அந்த தம்பதிகள் வந்து சேர்ந்தனர். அங்கு ஸ்வாமி புஷ்கரணியில் தீர்தாமாடி, நித்ய கர்மானுஷ்டானங்களை முடித்துக் கொண்டு, ஸ்ரீநிவாஸனை பாதாதி கேசம் சேவித்தனர். பிறகு தாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்து உணவருந்தி, அன்று இரவு அங்கேத் தங்கினர். என்னே ஆச்சர்யம், ஒரு ஒரு பாலகன் திருவேங்கட-முடையான் ஸந்நிதியிலிருந்து வெளிப்பட்டு வந்து, “ ஸ்ரீராமாநுஜ-ஸித்தாந்தத்தைப் பரப்ப இருக்கும் ஒரு புத்ர ரத்னத்தை உங்களுக்குத் தந்தோம் பெற்றுக் கொள்ளுங்கள் “ என்று கூறி, கோயில் திரு மணியை அநந்த ஸூரியிடம் தர, அவர் தைத் தம் மனைவியிடம் தர, அந்த அம்மையார் அதனை வாங்கி வாயில் போட்டு விழுங்கினார். ஸ்வப்னம் கலைந்த வராய் அநந்தஸூரி பதைபதைத்து எழுந்திருந்து பார்க்க, அவர் மனை வியாரும் பதைபதைப்புடன் எழுந்திரு ந்தார் காரணம் ! அதே போன்ற கனவை அவரும் கண்டதாலேயே. இருவரும் தாங்கள் கண்டக் கனவைப் பரிமாறிக்கொண்டனர். அருகில் இருந்து அவற்றைக் கேட்டவர்களும் ஆச்சர்யத்தில் மூழ்கினர்.
மறுநாள் காலை, கோயில் ஸந்நிதி திறக்கப்பட்டதும், உள்ளே “ கண்டை “ ( மணி )யில்லாததை அர்ச்சகர் கண்டு அலறினார். இதனை அறிந்த கோயில் அதிகாரிகள் மணி காணாமல் போனதற்கு அர்ச்சகர்களின் அஜாக் ரதையே காரணம் என்று அவர்களைத் தண்டிக்கத் தீர்மானித்தனர். ஆனால் அப்போது அருகே இருந்த திருமலை ஜீயர் ஸ்வாமிகள், “ திரு வேங்கட முடையான், ஒருபாலகனாக தம் திருமணியை ஒரு தம்பதிகளுக் குத்தர, அந்த மணியை அப்பெண்மணி வாங்கி விழுங்குவது போல கனவு கண் டோம் “ என்று கூறினார். அங்கு இருந்த வேறு சிலரும் தாங்களும் அது போன்றே கனவு கண்டதாக்க் கூறவே அர்ச்சகர் தண்டனையிலிருந்து தப்பினார். கோயில் அதிகாரிகள் அநந்தஸூரியையும், தோதாரம்பா வையும் அழைத்துக் கேட்ட போது, அவர்களும் அதுபோன்ற கனவு தங்களுக்கு வந்ததாகக் கூறினர். அதைக்கேட்ட அனைவரும் வாயடைத்து நின்றனர். அந்த நாளிலிருந்து தோதாரம்பையார் கர்பவதியானார்.
சாதாரணமாகப் பெண்கள் பத்து மாதம்தான் கர்பம் தரிப்பர். ஆனால், தோதாரம்மையோ கர்பம் தரித்த பன்னிரண்டாவது மாதம்தான் அதாவது விபவ வருஷம் ( 1269 A.D ) புரட்டாசிமாதம், ச்ரவண நக்ஷத்ரத்தில் திரு வேங்கடமுடையானின் தீர்த்தவாரி தினத்தன்று, அதி தேஜஸ்வியான ஒரு ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தார். திருமலையப்பனின் மணியின் அவதாரமாகப் பிறந்த இந்த குழந்தைக்கு,” வேங்கடநாதன் “ என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர். யதாகாலத்தில் முறையே வேங்கடநாதனுக்கு அன்ன ப்ராசனம் சிறப்பாக நடத்தப்பட்டது.
அன்று பேரருளாளன் பெருந் தேவித் தாயாரை தரிசிக்க, பெற்றோர்கள் குழந்தையை, கோயி-லுக்கு அழைத்துச் சென் றனர். அங்கு தீபாரத்தி நடக் கும் பொழுது, அர்ச்சகர் வாயிலாக வரதராஜப் பெரு மாளே “ ராமாநுஜ ரைப்போன்று இந்த குழந்தையும் தர்ஸன ஸ்தாபகராக விளங்குவான் “ என்றார். அது கேட்ட பெற்ரோர்களும், சுற்றியிருந்தவர்களும் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.
ஸ்ரீவேங்கடநாதனுக்கு, வயது ஐந்து !-தகப்பனார் அக்ஷராப்யாஸம் செய்து வைத்தார். பிறகு ஒரு நாள் அப்பிள்ளார் பாலகனை தேவாதிராஜன் ஸந்நிதிக்கு அழைத்துச்சென்றார். அதுசமயம் மலைமேல், நடாதூரம்மாள் காலக்ஷேபம் நடந்துக்கொண்டி ருந்தது. அங்கு சென்று அம்மாளை சேவித்த அப்பிள்ளார், குழந்தை யையும் சேவிக்கச்சொன்னார். நடாதூரம்மாள் குழந்தையை குளிர கடாக்ஷித்தார். அப்போது காலக்ஷேப கோஷ்டியிலிருந்த, வடக்குத் திருவீதிப்பிள்ளை, “ சுடர்போன்று திகழும் இந்த பாலகன் யார் ? “ என்று வினவ, அருகில் இருந்தவர்கள், “ அப்பிள்ளாரின் மருமான் இவன். திருவேங்கடமுடையானின் திருமணி அம்ஸமாகப் பிறந்த குழந்தை. பரா-ஸரரைப் போன்றே பன்னிரண்டு மாதங்கள் தாயார் வயிற்றில் கர்பவாஸம் இருந்து அவதரித்தவர். “ என்று கூறினர். சிறிது நேரம் மௌனம் சாதித்த அம்மாளும், மேற்கொண்டு காலக்ஷேபத்தைத்தொடர, “ யாம் விட்ட இடம் எது ? “ என்று கேட்க, கேட்டுக்கொண்டிருந்தவர்கள், தெரியாது விழித்தனர். குழந்தை வேங்கடநாதன், தாம் வந்தபோது அம்மாள் என்ன விஷயம் சாதித்துக்கொண்டிருந்தாரோ, அதைச்சொல்லி, ” இதுவே தாங்கள் கடைசீ-யாக உபதேஸித்த விஷயம், “ என்று விண்ணப்பிக்க, அதனைக்கேட்ட நடாதூரம்மாள், பாலகனை, அருகில் அழைத்து, அணைத்து உச்சிமோந்து, புல ஸ்த்யர், பராஸரரை அநுக்ரஹித்தது போன்று, “ ப்ரதிஷ்டாபித வேதாந்த : ப்ரதிக்ஷிப்த பஹிர்மத: பூயா: த்ரைவித்யமாந்ய: த்வம் பூரிகல்யாண பாஜநம் “ என்று அநுக்ரஹித்து விட்டு, அப்பிள்ள்ரிடம், “ இவன் ஒரு அவதார புருஷன்” , ஸ்ரீபாஷ்யகாரரின் ஸ்ரீபாஷ்யங்களை உபதேஸிக்கும்படி விண்ணப்பித்தார். பிறகு பிள்ளான், எங்களாழ்வானுக்கும் ” இந்த குழந்தை நமக்களித்த ஸத்பாத்திரம். நமக்கு வயதாகிவிட்டக் காரணத்தால், இவ னுக்கு உபதேஸிக்கும் பாக்யம் பெற்றிலேன்” என்று நியமித்தார். பிறகு கிடாம்பி அப்பிள்ளாரை அழைத்து, “ நீர் இந்தக் குழந்தைக்கு, எம்பெரு மானார் திருவுள்ளம் உகக்கும்படி ஸாமாந்ய சாஸ்த்ரங்களுடன், ஸ்ரீபாஷ் யாதி க்ரந்தங்களையும், மந்தரமந்த்ரார்த்தங்களையும் உபதேஸிக்கக்கடவீர் “ என்று கூறி, அப்பிள்ளாரின் கரத்தில் குழந்தையை பிடித்துக் கொடுத்தார்.
வேங்கடநாதனுக்கு, தந்தை ஏழாம் வயதில், உபநயனம் செய்து வைத்தார். அதன் பிறகு, வேங்கடநாதன் தந்தையிடம், வேதாத்யயனம் செய்ய ஆரம்-பித்தார். ஆளவந்தாரை போன்று அதிமேதாவியாக விளங்கும் தம்குமார ரைக்கண்டு மனம் பூரித்தார் அநந்தஸூரி.
அதன் பிறகு அம்மாள் நியமனப்படி, அப்பிள்ளார் தம் மருமானுக்கு, சப்த தர்க, மீமாம்ஸாதி, ஸகல ஸாமாந்ய சாஸ்த்ரங்களையும் போதித் தார். மேலும், ஸ்ரீபாஷ்யம், கீதாபாஷ்யம், பகவத்விஷயம் இத்யாதி வேதாந்த க்ரந்தங் களையும் விசேஷார்த்தங்க-ளுடன், உபதேஸித்தார். இவற்றையெல்லாம் கற்ற வேங்கடநாதன், நாதமுனிகள், ஆளவந்தார், எம்பெருமானாருக்கு ஈடாக எழுந்தருளியிருந்தார். மேலும் ஒரு ஆச்சார்யனாகத்தகுந்த குண பூர்த்தியுடன் மிக தேஜஸ்வியாகத்திகழ்ந்தார்.
நம்தூப்புல் மணிக்கு, திரு-மங்கை என்னும் பெண் மணியைப் பாணிக்ரஹணம் செய்து வைத்தனர் பெற்-றோர். இந்த திருமணம் அப்பிள்ளார் நியமனப்படியே நடந்தேறியது. அவர் தன் மருமானுக்கு, எந்த கெடு-தலும் நேராமலிருக்க ரக்ஷை செய்து, வைநதேயன் மந்தரத்தையும் உபதேஸித்தருளினார். மேலும்,” ராமாநுஜ சித்தாந்த ஸ்தாபக-ராகத்திகழ்வாய் ” என்று ஆசீர்வதித்தார். ஸ்வாமியும் பெருமாள் கோயி-லில் நித்ய கர்மானுஷ்டானங்களை முறைப்படி அனுஷ்டித்து வந்தார். பகவத், பாகவத,
ஆச்சார்ய கைங்கர்யங்களைப்பண்ணிக் கொண்டு பலருக்கும் சாமான்ய விசேஷ சாஸ்த்ரங்களை உபதேஸித்து வந்தார்.
சிலகாலம் சென்றதும், அப்பிள்ளார் திருமேனிக்கு, அஸௌகர்யம் உண்டாயிற்று. அப்போது தன் மருமானை அழைத்து, “ உம்மால் ராமாநுஜ சித்தா-ந்தம் நிர்தாரிக்கப்பட வேண்டுமென்பது உடையவர் திருவுள்ளமென்று நடாதூரம்மாள் அருளிச்செய்திருக்கின்றபடியால் அவர் வழியாக வந்த உடையவர் பாதுகைகளை உமக்கு தரு கின்றோம். “ என்று சொல்லிப் பாதுகைகளை அளித்தார். ஸ்வாமியும் அவற்றை மிக பயபக்தியுடன் ஸ்வீகரித்துத் திருவாராதனத்தில் எழுந்தருளப் பண்ணி ஆராதித்து வந்தார்.
அப்பிள்ளார் பரமபதித்த பிறகு, அவருடைய திருக்குமாரர் பத்மநாபாச்சார்யரைக்கொண்டு, சர்ம கைங்கர்யங்களை நன்கு நடத்திவைத்தார். வீர வல்லி பெருமாளையன், மற்றும் வீரவல்லி கிருஷ்ணமாச்சாரி போன்ற வர்கள் நம் ஸ்வாமியிடம் காலக்ஷேபம் பண்ணினார்கள்.
இவ்வாறு ஸித்தாந்த ப்ரவசனம் செய்து கொண்டிருந்தபோது, அப்பிள்ளார் உபதேஸித்த வைநதேய மந்த்ரத்தை ஆவ்ருத்தி செய்து ஸித்திபெற எண்ணினார்.-அதற்காக, அடியவர்கருளும் தெய்வநாயகன் நித்யவாஸம் செய்யும் திருவஹீந்த்ர புரத்திற்கு எழுந்தருளினார்.
அங்கு கருட நதியில் நீராடி நித்ய கர்மானுஷ்டானங்களை முடித்துக்கொண்டு, செங்கமலவல்லி நாச்சி யாரையும், தேவநாதனையும் தொழுது ஔஷதகிரிக்கு எழுந்தருளினார். அங்கு ந்ருஸிம்ஹனை ஸேவித்து அந்த சந்நி திக்கு சமீபத்தில் இருந்த ஓர் அச்வத் விருக்ஷத்தின் ( அரசமரத்தின் )அடியில் ஆஸமிட்டு அமர்ந்து வைந தேயன் மந்த்ரத்தை ஜபித்துவந்தார். வைநதேயன் அவர் முன்பாக ப்ரத்யக்ஷமாகி ஹயக்ரீவ மந்த்ரத்தை உபதேஸித்தருளினார். அன்று முதல் ஸ்வாமியும், ஹயக்ரீவ மந்தரத்தை ஜபிக்க , இவர் தபஸி னால் ப்ரீதியடைந்த ஹயக்ரீவப் பெருமாள் இவர் முன் ப்ரத்ய க்ஷமாகி தம்முடைய லாலாமயமான அம்ரு தத்தைக் கொடுத்து அநுக்ரஹத்து விட்டுமறைந்தார்.
ஸ்ரீஹயக்ரீவரின் லாலா அமுதத்தை பருகிய நம் ஸ்வாமியிடம் அனைத்து வித்யைகளும் தாமாகவே வந்து சேர்ந்தன். அவர் முதலில் ஹயக்ரீவன் விஷயமாக, “ ஹயக்ரீவ ஸ்தோத்ரத்தை” அருளிச்செய்தார். பிறகு ஹயக்ரீவ மந்த்ரத்தை தமக்கு உபதேஸித்தருளிய கருடன் விஷயமாக “ கருட பஞ்சாசத் “ அருளினார். தொடர்ந்து திருவஹீந்த்ர எம்பெருமான் தேவநாதன் விஷயமாக “ தேவநாயக பஞ்சாசத் “ ப்ராக்ருத மொழியில், “ அச்சுத சதகம் “அழகிய செந்தமிழில் மும்மணிக்கோவை கந்துபா, கழற்பா, அம்மானைப்பா, ஊசற்பா, ஏசற்பா, நவரத்னமாலை ஆகியவற்றை இயற்றி னார். ஸ்ரீதேவநாதனையும், செங்கமல நாச்சியாரையும் மங்களா சாஸனம் செய்து கொண்டு சிலகாலம் அங்கேயேத் தங்கியிருந்த ஸ்வாமிகள், “ பரமதபங்கம் “ என்ற க்ரந்தத்தையும் அருளினார். அங்கேயே கோயிலில் எழுந்தருளி யிருக்கும் ஸ்ரீராமன் விஷயமாக, “ ரகுவீரகத்யம்”, கோபாலனைப்பற்றி “ கோபாலவிம்சதி “ ஆகியவற்றையும் அருளிச்செய்தார்.
பிறகு, பேரருளாளனைக்காண விழைந்தவராக, அங்கிருந்து புறப்பட்டவர் வழியில், திருக்கோயிலூர் அடைந்தார். அங்கு ஆயனாரை தரிசித்தவர் அந்த எம்பெருமான் விஷயமாக, “ தேஹளீகஸ்துதி ” யை அருளிச்செய்தார்.
பிறகு அங்கிருந்து திருக்கச்சி என அழைக்கப்படும் காஞ்சீபுரம் வந்து சேர்ந்தார். அநந்தஸரஸில் நீராடி நித்யகர்மாநுஷ்டானங்களை முடித்துக் கொண்டு, பெருந்தேவித் தாயாரை மங்களாசாஸனம் செய்து விட்டு பேரருளாளன் வரதராஜன் சந்நிதிக்கு எழுந்தருளினார். பெருமாளை ஆபாதசூடம் சேவித்து மகிழ்ந்தார்.
எம்பெருமானார் கத்யத்தில் அருளிச்செய்துள்ள ப்ரபத்யர்த்தத்தை, தம் ஆச்சார்யரான அப்பிள்ளார் உபதேஸித்தபடி, அங்க பஞ்சக பஞ்சக ஸம்பந்தமான ஆத்ம ரக்ஷாபர ஸமர்பணத்தை ( சரணா கதியை ) பேரருளாளன் திருவடிகளில் ஸமர்பித்து விட்டு, தூப்புல் அக்ரஹாரம் வந்து சேர்ந்தார். அங்கு காலக்ஷேபங்களை அரு ளிச்செய்துகொண்டு இருந்தார். அப்போதுதான் சரணாகதி விஷயமாக, “ ந்யாஸதஸகத்தை “ யும் வரதராஜன் விஷயமாக, “ வரதராஜபஞ்சாசத் “ என்ற ஸ்தோத்ரத்தையும் அடைக்கலபத்து, அர்த்த பஞ்சகம், ஸ்ரீவைஷ்ணவதினசர்யை, திருச்சின்ன மாலை, பன்னிருநாமம், என்று ஐந்து தமிழ்ப்ரபந்தங்களையும் அருளிச் செய்து, “ அத்திகிரி மஹாத்ம்யம் “ என்ற க்ஷேத்ர மகிமையையும் அருளிச் செய்தார். தீப ப்ரகாஸர் விஷயமாக, “ சரணாகதி தீபிகை ” யும் யதோக்தகாரி விஷயமாக, “ வேகாஸேது ஸ்தோத்ரத்தை “ யும் அஷ்டபுஜ பெருமாள் விஷயமாக, “ அஷ்டபுஜாஷ்டகத்தை “ யும் ஆளரி விஷயமாக “ காமாஸி காஷ்டகம் “ , திருப்புட்குழி எம்பெருமான் விஜயராகவன் மீது “ பரமார்த்த ஸ்துதி “ யும் அருளிச்செய்தார்.
பிள்ளானின் குமாரர் புண்டரீகாக்ஷர். அவர் விஜயநகர மன்னனின் அத்யக்ஷராக இருந்தார். அவர் அப்பிள்ளாரின் குமாரத்தியை விவாஹம் செய்து கொண்டிருந்தார்., அவள் தன் தகப்பனாரின் க்ருஹத்தில் ப்ரசவிக்க காஞ்சீபுரம் வந்திருந்தாள். அவளுக்கு சோபக்ருத் ஆண்டு, புரட்டாசிமாதம், ச்ரவண நக்ஷத்ரத்தில் ஒர் ஆண்குழந்தை பிறந்தது. அதற்கு தூப்புல்மணி ஸ்ரீநிவாஸன் எந்ற பெயரைச்சூட்டி, ரக்ஷையும் செய்துவைத்தார். புண்டரீகாக்ஷருக்கு குழந்தை பிறந்த செய்தி அனுப்பிவைக்கப்பட்டது.
செய்திகேட்ட புண்டரீகாக்ஷரும் புறப்பட்டு காஞ்சீபுரம் வரத்தயாரானார். அப்போது அவர் ஸ்ரீபாஷ்யகாரர், பிள்ளான் முதலியவர்களால் ஆராதிக்-கப்பட்டு, பிற்பாடு புண்டரீகாக்ஷரிடம் வந்து சேர்ந்த ஸ்ரீஹயக்ரீவரை வேங்கடநாதனிடம் சமர்பித்துவிட வேண்டும் என்று தாம் கண்ட கனவை விஜயநகர மன்னனிடம் கூற, மன்னன் புண்டரீகாக்ஷரையும், ஹயக்ரீ வரையும் ஸகல ராஜமரியாதைகளுடன் காஞ்சீபுரம் அனுப்பிவைத்தார். காஞ்சீமாநகரிலும், புண்டரீகாக்ஷரை பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்றனர். ஸ்ரீஹயக்ரீவன் நம் ஸ்வாமி ஸ்வப்னத்திலும் வந்து கூறியதால், அவரும் எதிர்கொண்டு அழைத்தார். பிறகு முறையே குசல ப்ரச்நம் முடிந்தவுடன், புண்டரீகாக்ஷர் ஹயக்ரீவரை ஸ்வாமிகளிடம் அளிக்க ஸ்வாமிகளும் அந்த மூர்த்தியை தம் பிதாமஹ, ப்ரபிதாமஹாதிகள் ஆராதித்து வந்த பேரருளாளன் விக்ரஹத்துடன் எழுந்தருளச்செய்து ஆராதித்து வந்தார்.
தம் அவதாரத்திற்கு முக்ய காரணமாக விளங்கிய திருவேங்கடமுடையானை தரிசிக்கவேண்டுமென்று ஸ்வாமிகள் எண்ணி யாத்ரை புறப்பட்டார். வழியில் சோளிங்கரை அடைந்தவர் அங்கு அக்காரக்கனியை மங்களாஸாஸனம் செய்துவிட்டு, பிறகு சிலகாலம் திருச்சானூரில் தங்கி அலர் மேல்மங்கைத் தாயார், கீழ்திருப்பதியில் கோவிந்தராஜன் ஆகியவர்களை ஸேவித்துவிட்டு திருமலைக்கு எழுந்தருளினார்.
ஸ்வாமி புஷ்கரணியில் நீராடி, நித்ய கர்மா-நுஷ்டானங்களை முடித்துக் கொண்டு, முதலில் ஸ்ரீவராஹனை ஸேவித்துவிட்டு, ஸ்ரீநிவாஸன் ஸந்நிதிக்கு எழுந்தருளி பாதாதிகேசம் கண் களால்அனுபவித்துவிட்டுதீர்த்தப்ரஸாதங்களைபெற்றுக்கொண்டார். திருவேங்கடமுடையான் தயையைப்பற்றி “ தயாசதகம் “ என்ற நூறு ஸ்லோகங் களை இயற்றினார். பிறகு சிலநாட்கள் அங்கு தங்கியிருந்து, திரும்ப மனமின்றி புறப்பட்டார். ஸ்ரீநிவாஸனின் விபவம் ஒன்றும் குறைவின்றி நித்ய ஸ்ரீர்நித்ய மங்களமாக இருக்கவேண்டுமென்று “ ப்ரஸமிதகலிதோஷம் “என்ற ஸ்லோகத்தை அருளிச்செய்து மங்களாசாஸனம் செய்தார்.
திருமலையைவிட்டுப் புறப்பட்வர் வடதேஸத் திலுள்ள திவ்யதேசங்களுக்கு யாத்ரை சென்றார். செல்லும் வழியில் துங்கபத்ரா நதிக்கரையில் வித்யாரண்யரை சந்தித்தார்.
பால்ய நாட்களிலிருந்து இருவரும் அன்புடன் பழகி வந்தவர்கள். இப்போது வித்யாரண்யர் ஸந்யாஸ ஆச்ரமத்தை ஸ்வீகரித்துக்கொண்டு, கங்காயாத்ரை புறப்பட்டு இருந்தார். நம் ஸ்வாமியைக்கண்டதும் மிக்க சந்தோஷத்துடன் க்ஷேமசமாசாரங்களைப் பரிமாறிக்கொண்டார்கள். அப்போது அந்த தேஸத்து அரசனின் மகளை ப்ரஹ்மராக்ஷஸ் பிடித்துக்கொண்டு இருப்பதாயும், அதனை ஓட்டவேண்டுமென்று ராஜாவின் ப்ரதிநிதி வித்யாரண்யரை அணுக, அவர் நம் ஸ்வாமியிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு ஸ்வாமிகள் சம்மதிக்காமல் அங்கிருந்து புறப்பட்டு த்வாரகை, கோகுலம், ப்ருந்தாவன், மதுரா, மாயை, அவந்தி, அயோத்யா போன்ற முக்தி தரும் க்ஷேத்ரங்களுக்குச் சென்று சேவித்தார்.
பிறகு அங்கிருந்து புறப்பட்டுஸ்ரீகூர்மம், புருஷோத்தமம், அகோபிலம், திருஎவ்வுள், திருநின்றவூர், திருவல்லிக்கேணி,திருகடல்மல்லை ஆகிய திவ்யதேசத்து எம்பெருமான்களை மங்களா சாஸனம் செய்துவிட்டு ஸ்ரீபெரும்பூதூருக்கு எழுந்தருளினார். யதிராஜனை ஸேவித்தார். எம்பெருமானாரால் குளிரக் கடாக்ஷிக்கப்பெற்றவராய் மீண்டும் காஞ்சீ-புரத்திற்கே வந்து ஸித்தாந்த ப்ரவசனம் பண்ணிவந்தார்.
ஒரு சமயம் காஞ்சீபுரத்திற்கு அருகாமை யிலுள்ள திருப்புட்குழி என்ற திவ்ய தேஸத்தில் வைஸூரி என்ற கொடிய வியாதியால் மக்கள் அவதி யுற்றனர். பலர் இறந்தனர். செய்தி கேட்ட நம் ஸ்வாமிகள் வாளாயிருக்காமல் உடனை அங்கு சென்று,” ப்ரதிபட ஸ்ரேணிபூஷண “ என்று தொடங்கும் சக்ரத்தாழ்வார் மீதான “ சுதர்னாஷ்டகம் “ என்ற எட்டு ஸ்லோகங்களை அருளிச்செய்ய, அந்த வியாதியிலிருந்து மக்கள் விடுபட்டதுடன் அவர் பெருமையை உணர்ந்தனர். இந்த ஸ்லோகத்தை சொல்வதால், வியாதிகள் மட்டுமல்ல, பேய், பிசாசு தொல்லைகளி லிருந்தும் விடுபடலாம் என்பது உறுதி.
வேருவொரு சமயம், ஒருஸந்யாஸி, ஸ்வாமி களிடம் வாதம் செய்யவந்தான். அவன் வாதத்தில் தோற்றான். அதனால் கோபமுற்ற வனாக, சில கெட்ட மந்திரங்களின் உதவியால் அவற்றை ஜபித்து குளத்து நீரை ஒருகை எடுத்துப் பருகினான்.
உடனே நம் ஸ்வாமியின் வயிறு பெருக்க ஆரம்பித்தது. அவரால் உபாதையை தாங்க முடியவில்லை. அதன் காரணத்தை உணர்ந்தவராக, எதிருலிருந்த ஒரு கம்பத்தில் ஒரு கோடு இழுத்தார்.என்னே ஆச்சர்யம் அவர் வயிற்றிலிருந்த ஜலம் கம்பத்தின் வழியாக வெளியேற அவர் வயிறும் முன்போல ஆனது. இதனை அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த அந்த ஸந்யாஸி ஸ்வாமியின் கால்களில் விழுந்து தன்னை மன்னிக்க வேண்டுனான்.
விஜயநகரத்து மன்னனின் மகளைப் பீடித்திருந்த ப்ரஹ்மராக்ஷஸை வித்யாரண்யர் விரட்டியதால் மன்னனின் அரஸசபையில் அத்யக்ஷகரானார். அப்போது தம் நண்பரான தூப்புல் மணி உஞ்சவ்ருத்தி செய்து, ஜீவனம் நடத்துவதாகக்கேள்வியுற்று வருந்தியதுடன் அவருக்கு உதவும் எண்ணத்துடன், விஜயநகரத்திற்கு வந்துவிடும்படி ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். அதில், “ப்ரஸித்தி பெற்ற தூப்புல்குல திலகமே! அடியேன் மூலம் தேவரீருடைய கீர்த் தியை மஹாராஜா அறிந்து, தங்களை நேரில் தரிசிக்க விழைகிறார். தேவரீரை தனத்தால் ஆராதித்து உம் வாயிலிருந்து வரும் அம்ருதத்தில் திளைக்க ஆசைப் படுகின்றார். ஆகையால் தாங்கள் சிஷ்யர்களுடன் விஜயநகரத்திற்கு எழுந்தருளி மஹாராஜாவையும், தங்களிடம் அன்புகொண்ட அடியேனை யும் மகிழ்விக்க வேண்டுகின்றேன்.“ என்று எழுதியிருந்தார். அந்தக்கடிதத்தைப் படித்த ஸ்வாமிகள் அதற்கு, “ க்ஷோணீ கோண ஶதாம்ஶ பாலந கலா து³ர்வார க³ர்வாநல-
க்ஷுப்⁴யத்க்ஷுத்³ர நரேந்த்³ர சாடு ரசநா த⁴ந்யாந் ந மந்யாமஹே ।
தே³வம் ஸேவிதுமேவ நிஶ்சிநுமஹே யோঽஸௌ த³யாலு: புரா
தா³நா முஷ்டிமுசே குசேல முநயே த³த்தே ஸ்ம வித்தேஶதாம் ॥ வைராக்³யபஞ்சகம்-1 ॥ “ என்ற ஸ்லோகத்தை பதிலாகஎழுதியனுப்பினார். அதில், “ இந்த பூமண்ட லத்தில், ஏதோவொரு மூலையில் ஏகதேஸத்தை அரசர்கள் ஆள்கின்றனர். அவர்களை நம்முடைய அழகிய வார்த்தைகளினால்பாட, துதிக்க விரும்பவில்லை. அதனால் கிடைக்கும் பணத்தையும், ஒரு பொருட் டாக நாம்மதிக்கவில்லை. பகவானையே த்யானம் செய்ய நிச்சயித்துள் ளோம். அவன் ஒருவனே ஸர்வ பலனையும் கொடுக்க வல்லவன். குசேலனுக்கு கண்ணபரமாத்மா சகல சம்பத்தையும் அருளியதை நாம் கேள்விப் பட்டிருக்கின்றோம். இல்லையா?“ என்பதே அந்த ஸ்லோகத்தின் பொருள்.
சிலகாலம் கழித்து மற்றுமொரு கடிதம் அனுப்பி வைத்தார் வித்யா-ரண்யர். அதனையும் படித்துவிட்டு, நம் ஸ்வாமிகள், ஐந்து ஸ்லோக-ங்களை பதிலாக அனுப்பி வைத்தார். அந்த ஐந்து ஸ்லோகங்களே “ வைராக்ய பஞ்சகம் “ எனப்படும்.
வைராக்³யபஞ்சகம் ॥
க்ஷோணீ கோண ஶதாம்ஶ பாலந கலா து³ர்வார க³ர்வாநல-
க்ஷுப்⁴யத்க்ஷுத்³ர நரேந்த்³ர சாடு ரசநா த⁴ந்யாந் ந மந்யாமஹே ।
தே³வம் ஸேவிதுமேவ நிஶ்சிநுமஹே யோঽஸௌ த³யாலு: புரா
தா³நா முஷ்டிமுசே குசேல முநயே த³த்தே ஸ்ம வித்தேஶதாம் ॥ 1 ॥
இந்த பூமண்ட லத்தில், ஏதோவொரு மூலையில் ஏகதேஸத்தை அரசர்கள் ஆள்கின்றனர். அவர்களை நம்முடைய அழகிய வார்த்தைகளினால்பாட, துதிக்க விரும்பவில்லை. அதனால் கிடைக்கும் பணத்தையும், ஒரு பொருட் டாக நாம்மதிக்கவில்லை. பகவானையே த்யானம் செய்ய நிச்சயித்துள் ளோம். அவன் ஒருவனே ஸர்வ பலனையும் கொடுக்க வல்லவன். குசேலனுக்கு கண்ணபரமாத்மா சகல சம்பத்தையும் அருளியதை நாம் கேள்விப் பட்டிருக்கின்றோம். இல்லையா?
ஶிலம் கிமநலம் ப⁴வேத³நலமௌத³ரம் பா³தி⁴தும்
பய: ப்ரஸ்ருʼதி பூரகம் கிமு ந தா⁴ரகம் ஸாரஸம் ।
அயத்ந மல மல்லகம் பதி² படச்சரம் கச்சரம்
ப⁴ஜந்தி விபு³தா⁴ முதா⁴ ஹ்யஹஹ குக்ஷித: குக்ஷித: ॥ 2 ॥
ஒருவன் உண்ண உணவும், குடிக்கநீரும், உடுக்க உடையும் வேண்டி அரசனை அண்டி வாழ வேண்டுமென்பதில்லை. நிலங்களில் சிதறி கிடக்கும் நெல்மணிகளும், குளத்துநீரும், வீதியில் கிடக்கும் கந்தல் ஆடைகளுமே போதும்.
ஜ்வலது ஜலதி⁴ க்ரோட³ க்ரீட³த்க்ருʼபீட³ ப⁴வ ப்ரபா⁴-
ப்ரதிப⁴ட படு ஜ்வாலா மாலாகுலோ ஜட²ராநல: ।
த்ருʼணமபி வயம் ஸாயம் ஸம்பு²ல்ல மல்லி மதல்லிகா
பரிமலமுசா வாசா யாசாமஹே ந மஹீஶ்வராந் ॥ 3 ॥
சமுத்ரத்திலுள்ள படபாக்நி போல் நம் வயிற்றில் உள்ள ஜாடராக்நி விருத்தியடைந்து பசிதாகத்தால் நாம் பீடிக்கப்பட்டாலும் மாலையில் தானாக மலரும் மல்லிகையின் வாசம் போன்ற நறுமணம் கொண்ட நம் வாக்கினால் அரசர்களிடம் ஒருபோதும் யாசிக்கமாட்டோம்.
து³ரீஶ்வர த்³வார ப³ஹிர்விதர்தி³கா-
து³ராஸிகாயை ரசிதோঽயமஞ்ஜலி: ।
யத³ஞ்ஜநாப⁴ம் நிரபாயமஸ்தி மே
த⁴நஞ்ஜய ஸ்யந்த³ந பூ⁴ஷணம் த⁴நம் ॥ 4 ॥
அர்ஜுனனுக்கு சாரதியாக இருந்த கருமை நிற கண்ணன் என்கின்ற தனம், நமக்கு நிறைய இருக்கின்றது. அந்த தனம் குறைவில்லாதது ஆகும். ஆகவே துஷ்டர்களான அரசர்களின் வாசல் திண்ணையில் தனத்திற்காகத் துக்கத்துடன் காத்திருக்கும் நிலை நமக்கு வேண்டாம். அரியை துதித்து உடன் கிடைக்கும் தனமே சிறந்தது. சிவ, ஸநகாதி களால் த்யானம் செய்யவும் முடியாத எம்பெருமான் என்ற தனம், எப்போதும் கிட்டும். அதற்கு விடையென்ன என்று கூறுகின்றோம் கேளும்.
ஶரீர பதநாவதி⁴ ப்ரபு⁴ நிஷேவணாபாத³நாத்
அபி³ந்த⁴ந த⁴நஞ்ஜய ப்ரஶமத³ம் த⁴நம் த³ந்த⁴நம் ।
த⁴நஞ்ஜய விவர்த⁴நம் த⁴நமுதூ³ட⁴ கோ³வர்த⁴நம்
ஸுஸாத⁴நமபா³த⁴நம் ஸுமநஸாம் ஸமாராத⁴நம் ॥ 5 ॥
அரசர்களின் பெரும் தனம் நம் பசி, தாகங்களைத் தற்காலிகமாகப் போக்கக் கூடியதே. நம் மரண பர்யந்தம் அவர்கள் தனத்தை எதிர் பார்த்துக்கொண்டு இருக்கக்கூடிய கஷ்டத்தை அது அளிக்கும். ஆகவே அது ப்யோஜன மற்றது. நம்மால் துதிக்கப்படும் பகவான் என்கின்ற தனம் தனஞ்ஜெயனுக்கு கீதையை உபதேஸித்து மேன் மையை உண்டுபண்ணியது. ஆகவே பகவானாகிற தனம் கோவர்தன கிரியைத்தூக்கி, கோபர்களையும், கோக்களையும் ரக்ஷித்தது. மேலும் தன்னை அண்டிய தேவர்களையும், வித்வான்களையும் ஸந்தோஷப் படுத்தக்கூடியது. ஆகையால் பகவான் என்கின்ற தனமே மிக உயர் ந்தது. சொந்தமாக சம்பாதித்தோ இல்லை பரம்பரை சொத்தோ இருந் தால் இவ்விதம் அரசர்களின் உதவியை அலக்ஷியப் படுத்தலாம். ஒன்றுமே இல்லாது உஞ்சவிர்த்தி செய்யும் நாம் இப்படி பேசலாகாது என எண்ணவேண்டாம்.
நாஸ்தி பித்ரார்ஜிதம் கிஞ்சிந்ந மயா கிஞ்சிதா³ர்ஜிதம் ।
அஸ்தி மே ஹஸ்தி ஶைலாக்³ரே வஸ்து பைதாமஹம் த⁴நம் ॥ 6 ॥
நாம் சம்பாதிப்பதோ, நம் முன்னோர்கள் சம்பாதித்தது என்றோ எதுவுமில்லை. நம் பிதாமஹர் ( ப்ரஹ்மா ) ஸம்பாதித்த தனம் ஒருவராலும் அபஹரிக்கமுடியாதது. அது அத்திகிரியில் இருக்கின்றது. அதாவது ப்ரஹ்மனின் யாகத்தில் அவதரித்த பேரருளாளனே நமக்குப் பெரிய தனம்.
॥ இதி வேதா³ந்த தே³ஶிகேந ரசிதம் வைரக்³யபஞ்சகம் ஸம்பூர்ணம் ॥
இப்படி ஸ்வாமி வைராக்யத்துடன் வாழ்க்கையை நடத்திவந்தது எல்லோரும் அறிந்த ஒன்றே. இவர் கஷ்டத்தை நீக்க விரும்பிய ஒரு பெரும் தனவந்தர், சில தங்க மணிகளை ( அவைநெல் மணி களைப்போன்றே காணப்படும் ) தாமிடும் பிக்ஷையுடன் கலந்து ஸ்வாமிகள் உஞ்சவிர்த்திக்கு வரும்போது அவருக்கு அளித்தார். ஆனால் ஸ்வாமிகளோ அதனை கவனிக்காமல், தம் தேவியாரிடம் தந்து அமுது செய்யும் படிக் கூறினார். தேவிகள் செம்பிலிருந்த தான்யங் களைக் கீழே சேர்த்தபோது தங்கமணி களும் கலந்திருப்பதைப்பார்த்தார்.
ஆனால் அதுவரை அந்த அம்மையார் அதுபோன்ற தங்க மணிகளைப்-பார்த்ததேயில்லையாதலால் பயந்து போய் ஸ்வாமிகளை அழைத்து, “ இன்று பிக்ஷையுடன் பள பளப்பாக ஏதோ த்ரவியமும் கலந்து இருக்-கிறது சற்றுவந்து பாருங்களேன் “ என்று அழைக்க, ஸ்வாமிகள் வந்து பார்த்துவிட்டு “ அவைபுழுக்கள் “ என்று கூறிவிட்டு, ஒருகுச்சியால் அவற்றையெல்லாம் ஒதுக்கித் தள்ளி னார். ஆகவே தேவியார், ஸ்வா-மிகள் அருளிச்செய்த நவரத்னமாலை, மும்மணிக்கோவையையுமே தமக்கு விலையுயர்ந்த ஆபரணங்களாகக் கருதி வாழ்ந்துவந்தார்.
நம் ஸ்வாமிகளின் அறிவுத்திறனைக்கண்டு அஸூயைக்கொண்ட சிலர் ஒரு ப்ரஹ்மசாரியிடம் “ நீ திருமணம் செய்துகொள்ள பணம் வேண்டு-மென்றால் நீ வேங்கடநாதனிடம் சென்றுகேள். அவர் தங்காசுகளாக வைத்துக்கொண்டிருக்கிறார்.“ என்று கூறி அவனை அவனிடம் அனுப்பி வைத்தனர்.
அந்த ப்ரஹ்மசாரியும், அதுபோன்றே ஸ்வாமிகளிடம் சென்று உதவி கேட்க, அவரும் அதன் பிண்ணணியை அறிந்த வராக பெருந்தேவித் தாயாரைக் குறித்து “ ஸ்ரீஸ்துதி “ என்ற ஸ்லோகத்தை அருளிச் செய்ய வானத்திலிருந்து தங்கக் காசுகள் மழையென வானிலிருந்து பொழிந்தது. அதனை அந்த ப்ரஹ்மசாரியும் தன் மேல் உத்ரியத்தில் பிடித்துக்கொண்டான். பிறகு ஸ்வாமிகளைத் தண்டன் சமர்ப்பித்துவிட்டு அவற்றை எடுத்துச் சென்றான். இதனைப்பார்த்த அந்த விரோதிகள் அனைவரும் தலை கவிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியைக் கேள்வியுற்ற வித்யாரண்யருக்கு ஸ்வாமிகளிடம் பன்மடங்கு மதிப்பு வளர்ந்தது.
ஒருசமயம், சில அத்வைதிக வித்வான்கள் கூட்டமாக ஸ்ரீரங்கத்திற்கு வந்திருந்து, “ ராமாநுஜஸித்தாந்தத்தைச் சேர்ந்தவர்கள் இப்போது நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு, பதில் சொல்ல வேண்டும் இல்லை யெனில் அத்யயன உத்ஸவத்தை நடத்தக்கூடாது, எங்கள் மதத்தில் சேர்ந்து விடவேண்டும் “ என்று கோஷமிட்டனர். ஸ்ரீரங்கவாஸிகளான ஸுதர்ஸன பட்டர் போன்றவர்கள் வயோதிகர்களாக ஆகிவிட்டபடியால், பெருமாள் கோயிலக்கு எழுந்தருளியிருந்த நம் ஸ்வாமிகளுக்கு ஸுதர் ஸன பட்டர் “ தேவரீர் உடனே புறப்பட்டு திருவரங்கம் எழுந்தருள வேண்டும். இது ஸ்ரீரங்கநாதனுடைய ஸேநாபதியின் சாஸனம் “ என்ற ஓலையை அனுப்பி வைக்க, ஸ்வாமிகளும் பேரருளாளன் நியமனம் பெற்று, திருவரங்கம் வந்து சேர்ந்தார்.
வடத்திருக்காவேரியில் நித்ய கர்மாநுஷ் டானங் களை முடித்து கொண்டு கோயிலுக்கு எழுந்தருளி னார். ஸ்வாமிகள் எழுந்த ருளிய செய்தி கேள்வியுற்ற கோயில் நிர்வாகிகள் அவரு க்கு, பூர்ண கும்ப மரியாதை செய்து வரவேற்றனர். ஸ்ரீ ரங்கநாச்சியாரை ஸேவித்து ப்ரதக்ஷணமாக வந்து ஸ்ரீரங் கநாதன் ஸந்நிதிக்கு எழுந்தருளினார். அமலனாதிபிரான் பாசுரத் தைச் சொல்லி பெருமாளை பாதாதிகேசம் ஸேவித்து, தீர்த்த ப்ரஸா தங்களை ஸ்வீகரித்துக் கொண்டார். ஸந்நிதிக்கு வெளியில், பெரிய மண்டபத்தில் ஸுதர்ஸனபட்டர் முத லானவர்கள் இருந்தனர். அப்போது அங்கிருந்த அத்வைத வித்வான்கள், ஸ்வாமி களுடன் வாதம் செய்ய ஆரம் பித்தனர். ஸ்வாமிக்கும் அவர்களுக் கும் ஏழுநாட்கள் வாதம் நடந்தது. எட்டாவது நாள் ஸ்வாமிகள் வாதத்தில் வென்றார்.
இந்த வாதங்களை தினதோறும் வீரவல்லிபெருமாளையன் என்பவர் கேட்டு இரவு வேளை அவற்றை எழுதிமுடித்து, எட்டாவது நாள் வாதம் முடிந்ததும் ஸ்வாமிகளிடம் அவற்றைக் காண்பித்தார். ஸ்வாமிகளும் அவற்றைக் கடாக்ஷித்து, “ ஸததூஷணி “ என்று பெயரிட்டார். அந்த அத்வைத வித்வான்கள் ஸ்வாமிகளிடம் அடிபடிந்தனர். ஸ்வாமிகளும் ஸ்ரீரங்கநாதன் நியமனப்படி அங்கேயே எழுந்தருளியிருந்து காலக்ஷேபங்களை சாதித்து வந்தார்.
இவர் செய்தருளிய ஸ்ரீபாஷ்ய ப்ரவசனத்தைக் கண்டு பெரியபெருமாள் மனமுவந்து, “ வேதாந்தசார்யர் “ என அழைத்தார். ஸ்ரீரங்கநாச்சியாரும் தம்பங்கிற்கு, “ ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரர் “
என்ற விருதை வழங்கினார். இவற்றைக்கேள்வியுற்ற ஸுதர்ஸனபட்டர் முதலானோர் மிக சந்தோஷமடைந்தனர். இப்படி திவ்ய தம்பதிகளின் அனுக்ரஹத்தை நம் ஸ்வா மிகள் பெற்றார். ஸ்வாமிகளின் வைபவத்தைக்கேள்வியுற்ற உள்ளூர், வெளியூர் வாசிகள் வந்து அவரை வணங்க ஆரம்பித்தனர். நம் வேதா ந்த தேசிகர், பெரிய பெருமாள் விஷயமாக “ பகவத்யான ஸோபனத் தையும் “ மற்றும், “ பூஸ்துதி” “தசாவதாரஸ்தோத்ரத்தையும்”அருளிச் செய்தார்.
சித்திரை மாதம் திருவாதிரை நன்னாளில் எம்பெருமானார் விஷயமாக ” யதிராஜ ஸப்ததி “ யை அருளிச்செய்தார். பின்பு உடையவர் நியமனப் படி, தத்த்வ முக்தாகலாபம், அதற்கு வ்யாக்யானமாக ஸர்வார்த்த ஸித்தி, ந்யாய ஸித்தாஞ்ஜனம், ந்யாய பரிசுத்தி, ஸேஸ்வரமீமாம்ஸை, மீமாம்ஸபாதுகை, தத்த்வபீடிகை, அதிகரணஸாராவளி, கீதாபாஷ்ய விவரணமாக தாத்பர்யசந்த்ரிகை, ஈசாவாஸ்ய உபநிஷத் பாஷ்யம், ஸச்ச ரித்ர ரக்ஷை, ந்யாஸவிம்ஸதி, ஸ்ரீபாஞ்சராத்ர ரக்ஷை, கீதார்த்த ஸங்க் ரஹ ரக்ஷை, நிக்ஷேபரக்ஷை, மேலும் கத்யத்ரயம், ஸதுஸ்லோகி, ஸ்தோ த்ர ரத்னத்திற்கும் வ்யாக்யானமான ரஹஸ்யரக்ஷை ஆகிய க்ரந் தங்களை அருளிச் செய்தார்.இவற்றைக் கேட்டு உகந்த ஸுதர்ஸன பட் டர் முதலான பெரியவர்கள் நம் ஸ்வாமிக்கு “ கவிதார்க்கிக ஸிம் ஹம் “ என்ற விருதை வழங்கி கௌரவித்தனர்.
விஜயநகரத்தில் அக்ஷோப்ய முனிக்கும், வித்யாரண்யருக்கும் வேதாந்த த்தில் விவாதம் நடைபெற்றது. இருவருடைய வாதங்களையும் பத்தி ரிகை மூலமாக தேசிகனுக்கு அனுப்பி வைத்தனர். அதில், ” எங்களில் யாரு டைய வாதம் சரியானது, என்று நிர்ண யம் செய்து அனுப்ப வேண் டும் ” என்று கேட்டிருந்தார். அதன்படி ஸ்வாமி களும் படித்துப்பார்த்து, அக்ஷோப்ய முனியே ஜெயித்ததாக ஒரு ஸ்லோ கத்தின் மூலம் எழுதியனு ப்பினார். வித்யாரண்யர் நம் ஸ்வாமிக்கு பால்ய சிநேகிதராக இருந்தும் பக்ஷபாதமின்றி முடிவு கூறியது கேட்டு மன்னன் ஸந்தோஷ மடைந்தான். வித்யாரண்யர் மிக கோபம் கொண்டு ஸததூஷணியை அனுப்பிவைத்தால் அதனைப்படித்து அதிலுள்ள குற்ற ங்குறைகளை சுட்டிக் காட்டி பதில் அனுப்புவதாக ஒரு கடிதம் எழுதி யனுப்பினார். உடனே ஸ்வாமியும் அனுப்பிவைக்க, அதனை நன்கு பரிசோதித்துப் பார்த்து ஒரு குற்றமும் கண்டுபிடிக்க முடியாது போன தால், அதன் தலையில் ஒரு புள்ளியைக்குத்தித் திருப்பியனுப்பினார். அதனையும் ஸ்வாமி கடாக்ஷித்து “சகாரஸமர்த்தநம்” என்ற க்ரந்தத்தைச் செய்து முன்பு வித்யாரண்யர் இட்ட புள்ளியின் பக்கத்தில் மற்றொரு புள்ளியை யும் வைத்து இரண்டையும் வித்யாரண்யருக்கு அனுப்பிவைத்தார். அவரும் அதனைப் பார்த்துவிட்டு, “ விஷ்ணுவின் கண்டாம்ஸரான ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரரை நான் ஜெயிக்க வல்ல வனோ “ என்று சொல்லியனுப்பினார். அன்றுமுதல் நம் ஸ்வாமிகளிடம் அதிக பக்தியுள்ளவராக மாறினார்.
கிருஷ்ணமிச்ரர் என்பவர் நம் ஸ்வாமியின் பெயரையும், புகழையும், ஸஹிக்காதவராய் வாதத்திற்கு அழைத்தார். மூன்றுநாட்கள் நடந்த வாதத்தில் நம் ஸ்வாமிகள்தான் ஜெயித்தார் என்று சொல்லவும் வேண் டுமோ ! பிறகு அவர் தாம் எழுதிய “ ப்ரபோத சந்த்ரோதயம் “என்னும் நாடகத்தை எழுதி அவரிடம் கடாக்ஷிக்க அளித்தார். அதனைப் பெற்றுக் கொண்ட ஸ்வாமியும் அதை கடாக்ஷித்து “ஸங்கல்ப ஸூர்யோதயம்” என்ற நாடகத்தை எழுதி அவருக்கு அளித்தார். கிருஷ்ணமிச்ரரும் மிகவும் சந்தோஷமடைந்தார். ஸுதர்ஸன பட்டர் முதலானவர்கள் சந்த்ரோதயத்தை பார்த்தவுடன் அதற்கு பதிலளிக்குமுகமாக ஸங்கல்ப ஸூர்யோதயம் எழுதியது கண்டுவியந்தனர்.
கிருஷ்ணமிச்ரர் தோற்று போனதைக் கேள்வியுற்ற, டிண்டிமர் என்ற மற்றுமொரு பண்டிதர் நம் ஸ்வாமியுடன் வாதிட வந்தார். அதுமட்டு மல்ல நான் ஒரு மஹா பண்டிதன் பல ராஜசபைகளிலுள்ள பல பண்டி தர்களை வென்றிருப்பவன் அப்படியிருக்க ஒரு சிறுவன் தன்னைப் பண்டிதன் என்று இங்கு கூறிக்கொண்டு இருக்கிறானாமே. அவன் தைரியமிருந்தால் என்னுடன் வாதத்திற்கு வரட்டும் என்று கோஷ மிட்டுக் கொண்டே வந்தார். ஆனால் நம் ஸ்வாமியோ இவன் கோஷத்தைக்கண்டு பயப்படவேண்டாம். உள்ளே புகுந்து பார்த்தால் ஒரு எழுத்தும் கிடைக்காது. அது அவர் பெயரிலிருந்தே தெரிகிறது. “ டிண்டிரம் “என்றால் கடல் நுரை. கடல் நுரையைத்தொட்டாலே உடைந்துவிடும். டிண்டிரத்திற்கும், டிண்டிமனுக்கும் என்ன பேதம் இருக்கப்போகிறது என்று பொருள்பட “ நிரக்ஷர்ருக்ஷி “ என்று பொருள்படும் ஸ்லோகத்தைச் செய்து பதிலாகத்தந்தார். பிறகு இருவருக்கும் வாதம் நடந்தது. டிண்டிமர் தோற்றார். பிறகு அவர் தாம் செய்த “ ராகவாப்யுதம் “ என்ற காவ்யத்தை நம் ஸ்வாமிகளிடம் தந்து கடாக்ஷிக்க வேண்டினார். அதனைக் கடாக்ஷித்த ஸ்வாமிகளும், “ யாதவாப்யுதம் “ அருளினார். ஸ்வாமிகளின் கவிதா சாமரத்தியத்தை டிண்டிமர் கண்டு வாய்பிளந்தார்.
பிறகு ஸ்வாமிகள் தென்தேஸத்திலுள்ள திருமாலிருஞ்சோலை,திருக்கோட்டியூர் முதலிய திவ்யதேஸங்களுக்கு எழுந்தருளி பின்பு ஸ்ரீவில்லிபுத்தூர் வந்துசேர்ந்தார்.
அங்கு பெரியாழ்வார், ரங்கமன்னார், ஆண்டாள் எல்லோரையும் மங்களாசாஸனம் செய்தவர் “ கோதாஸ்துதி “ யும் அருளிச்செய்தார். அங்கிருந்து ஆழ்வார் திருநகரி எழுந்தருளி ஆழ்வாரை தரிசித்த பின்னர் திருவரங்கம் திரும்பி அங்கிருந்து பெருமாள் கோயிலுக்கு வந்து சேர்ந்தார்.
சில அஸூயை பிடித்தவர்கள் பேச்சைக்கேட்டு, ஒரு பாம்பாட்டி நம் ஸ்வாமிகளிடம் வந்தான். மந்த்ரத்தால் என்னை ஜெயித்தால், நீர் ஸர்வதந்த்ர ஸ்வந்த்ரர் என்ற பட்டத்தை வைத்துக் கொள்ளலாம்.
இல்லாவிடில் அதனை விட்டு விடவேண்டுமென்று அட்டகாசம் செய்-தான். தமக்கு சமமில்லாத அவனுடன் அவர் பேச மறுத்தார். ஆனால் சிஷ்யர்களின் வேண்டு கோளுக்கு இணங்கி, அவனை ஜெயிக்க திருவுள்ளம் கொண்டார். கீழே ஏழு கோடுகளை இட்டு அதன் மீது தாம் உட் கார்ந்து கொண்டார். பாம்பாட்டி ஒரு கொடிய நாகத்தை அவர்மீது ஏவினான். அந்த நாகத்தால் முதல் கோட்டைக்கூட தாண்ட முடிய வில்லை. பின்பு அதைவிட கொடிய நாகத்தை ஏவினான். அதுவோ முதல் இரண்டு கோடுகளைத் தாண் டியவுடன் சுருண்டது. கடைசீயில் அவன் கோபத்துடன் “ சங்க பாலன் “ என்ற பெரிய விஷப் பாம்பை ஏவினான். அது ஏழுகோடுகளையும் தாண்டி சீறிபாய்ந்தது. ஸ்வாமி, “ கருடதண்டக” த்தை அருளி வைநதேயனை ஸ்தோத்ரம் செய்திட என்னே ஆச்சரயம்! எல்லோர் கண் முன்பு, வானத்திலி ருந்து பறந்து வந்த ஒரு கருடன் சங்க பாலனைக் கவ்விச் சென்றது. பாம்பாட்டி தன் தலையைத் தாழ்த்தி வணங்கித் தவற்றிர்க்கு மன்னிப்புக்கோறி தன் சங்க பாலனை மீட்டுத்தரும்படி வேண்டினான். ஸ்வாமிகளும் அவன் நிலையைக் கண்டு பரிதாபப் பட்டுகருடபஞ்சாசத் “ அருளி கருத்மானை ப்ரார்த் திக்க அவரும் சங்க பாலனை திருப்பித்தந்தார். இதனை சுற்றி யிருந்து பார்த்த அனைவரும் வியந்து, மகிழ்ந்தனர் .
வேங்கடநாதனுக்கு திவஹீந்த்ரபரத்தில் வாசம் செய்யவேண்டுமென்ற அவா எழவே, காஞ்சீபுரத்திலிருந்து புறப்பட்டார். திருக்கோயிலூர் சமீபம் வந்தவருக்கு, தளிகைசெய்து பெருமாளுக்கு திருவாராதனம் செய்ய வழியில்லாமல் போகவே ஹயக்ரீவருக்கு, தீர்த்தத்தை மட்டுமே ஸமர்பித்து, அதை தாமும் ஸ்வீகரித்துக்கொண்டார். அன்று இரவு ஒரு வைச்யன் வீட்டுத்திண்ணையில் படுத்துக் கொண்டார். ஆகாரம் ஏதும் உட்கொள்ளாததாலும், வெகுதூரம் நடந்துவந்த களைப்பாலும் நன்றாக உறங்கிப்போனார். அப்போது என்னே ஆச்சர்யம் ஒரு வெள்ளைக் குதிரை வைச்யன் வீட்டுத்திண்ணையில் அடுக்கி வைத்திருந்த கடலைமூட்டை யிருந்த கடலைகளை தின்ன ஆரம்பித்தது. சபதம் கேட்டு வெளியே வந்த வைச்யன் எவ்வளவு விரட்டியும் அந்தக் குதிரை சிறிதும் நகரவில்லை. அவன் உறங்கிக்கொண்டிருந்த ஸ்வாமி களை எழுப்பி, “ ஐயா, உங்கள் குதி ரையை பிடித் துக் கட்டு ங்கள். அது கடலை முழு வதையும் தின்றுவிடப் போகிறது.” என்றான். இதைக்கேட்ட ஸ்வாமிகள், ஆச்சர்யத்துடன், “ உங்கள் வீட்டில் பால் இருந்தால் கொண்டு வாருங்கள் “ என்றதும், அவனும் கொண்டு வந்தான்.
அதை ஸ்வாமிகள் ஹயக்ரீவருக்கு, நைவேத்யம் செய்து, பகவானுக்கு நிவேதனம் செய்ததைத் தானும்பருகி அதை அந்த வெள்ளைக்குதிரைக்கும் கொடுத்தார். அதை பருகிவிட்டு பின் அது மாயமாய் மறைந்து போனது. அதனைக்கண்கூடாகக் கண்ட வைச்யன் மிகவும் சந்தோஷப்பட்டு, தாம் பெரும்பாக்யம் செய்திருப் பதாகவும் கூறி, ஆராதன த்திற்கு வேண்டிய த்ரவ்யங்களையும் ஸ்வாமி களிடம் தந்து அவரை வழியனுப்பி வைத்தான்.
பிறகு, திருக்கோயிலூர் வழியாக திருவஹீந்த்ரபுரம் சென்றடைந்தார். அங்கு சிஷ்யர்களுக்கு,வேதாந்த க்ரந்தங்களை உபதேஸித்துக் கொண்டிருந்தார். அப்போது சில துஷ் டர்கள், ஒரு கொத்த னாருக்கு பணம் கொடுத்து, அவனை ஸ்வாமிகளை வம் பிற்கு அழைக்கச் செய்தனர். அவனும் ஸ்வாமிகளிடம் சென்று, “ நீரே ஒரு கிணற்றை வெட்டிக்கட்டி னால் தான் உம்மை ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரர் என்று ஏற்றுக் கொள்ளமுடியும். ஸர் வமும் தங்களுக்குத் தெரிந்தி ருக்க வேண்டாமா ? “ என்றதும் ஸ்வாமிகளும், ஹயக்ரீவனுக்கு ஒரு கிணறு வெட்ட சம்மதித்து, அந்தக் கொத்தனார் கொடுத்தக் கற்களைக்கொண்டே அழகிய தோர் கிணறு வெட்டினார். அந்த கொத்தனாரும் வெட்கித் தலைகவிழ்ந்தார்.
பிறகு ஸ்வாமிகள்வீரநாராயணபுரம், திருவாலி முதலிய தலங்களுக்கு எழுந்தருளி நாதமுனிகளையும், திருமங்கை ஆழ்வாரையும் சேவித்துக்கொண்டு ஸ்ரீரங்கம் எழுந்தருளினார்.
குறைந்த ஞானமேயுள்ள சில ஸாதுக்கள், நாங்களும் அறியும் வண்ணம் சில க்ரந்தங் களை அருளிச்செய்ய வேண்டும் என்று கேட்க, ஸ்வாமிக ளும் அதற்கு சம்மதித்தார். புருஷார்த்தத்தை அடைய உபாயம் வேண்டும், உபாயத்தையறிய ததத்வம் தெரியவேண்டும், தத்வஞானம் உண்டாக ஒருஸதாச்சார்யன் வேண்டும். ஸதாச்சார்யனுக்கு ஸம்ப்ரதாய சுத்தி வேண்டும் என்று திருவுள்ளம் கொண்டு முதன்முதலில், ஸம்ப்ரதாய பரிசுத்தி என்னும் ரஹஸ்ய க்ரந்தத்தை அருளிச்செய்தார்.
பின்பு தத்வபதவீ, ரஹஸ்யபதவீ, தத்வநவநீதம், ரஹஸ்யநவநீதம், தத்வமாத்ருகை, ரஹஸ்ய மாத்ருகை, தத்வரத்னாவளீ, ரஹஸ்யரத்னாவளீ, ரஹஸ்ய ரத்னாவளீஹ்ருதயம், தத்வத்ரயசுளகம், ஸாரஸங்க்ஷேபம், ஸாரஸாரம், அபயப்ரதானஸாரம், தத்வசிகாமணி, ரஹஸ்யசிகாமணி, அஞ்சலி வைபவம், ப்ரதான ஸதகம், உபகாரஸங்க்ரஹம், ஸாரஸங்க்ரஹம், பரமபதஸோபானம், ஆகிய ரஹஸ்ய க்ரந்தங்களை அருளிச்செய்து அவர்களுக்கு உபதேஸித்தார்.
ஸ்வாமிதேசிகன் திருவடிகளில் முதன்முதலில் ஆச்ரயித்த வீரவல்லி பெருமாளைய்யன் என்பவர் விரக்தராய் தாம் ஸந்யாஸம் பெற்று கொள்ள விரும்பினார். ஸ்வாமியும் சம்மதித்தாயிற்று. அவருக்கு பேரருளாள ஜீயர் என்று நாமம் சூட்டப்பட்டது. அதுபோன்றே வீரவல்லி கிருஷ்ணமாச்சாரிக்கு வெண்ணைக்கூத்த ஜீயர் என்றும், கோமாண் டூரப்பனுக்கு ப்ரபாகரஜீயர் என்ற திருநாமங்களும் சூட்டப்பட்டது.
சீரொன்று தூப்புல் திருவேங்கட முடையான்
பாரொன்றுச் சொன்ன பழமொழியுள் – ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு.
இந்த பாசுரமே இப்போது ரஹஸ்ய க்ரந்த காலக்ஷேபங்களின்போது, தனியனாக அனுஸந்தானம் செய்யப்படுவது வழக்கத்திலுள்ளது.
கர்மாவலம்பகா : கேசித், கேசித், ஜ்ஞாநாவலம்பாகா : Iவயம்து ஹரிதாஸானாம் பாதரக்ஷாவல்பாகா : II
“ சிலர் கர்மயோகத்தை, சிலர் ஞானயோகத்தை அநுஷ்டிப்பவர்கள். நாம் விஷ்ணுபக்தர்களின் பாதரக்ஷைகளை அவலம்பிப்பவர்கள்.”என்று கூறியபடி, ஸ்வாமிகள் முகமலர்ச்சியுடன் வீற்றிருந்தார் தம் வீட்டுவாசலில். ஸ்வாமிகளின் ஆத்ம குணத்தைக்கண்ட அந்த அஸூயை கொண்டவர்கள் வெட்கித்தலை கவிழ்ந்தனர்.
பின்பு ஒருநாள் அநந்தஸூரிகளின் ச்ரார்தம் வந்தது. அதற்கு மூன்று ஸ்வாமிகளை முன்னமே ப்ரார்த்தித்து இருந்தார். ஆனால் சில பொறாமை பிடித்தவர்கள் ச்ரார்த தினத்தன்று காலை அந்த மூவருக்கும் நிறம்ப பணம் தந்து, ஸ்வாமிகள் இல்லத்திற்குச்செல்லாமல் தடுக்க முயன்றனர். ஆனால் அந்த மூவரும் அவர்கள் பேச்சைக்கேளாமல் போனதால் அவர்கள் மீது ஒரு மந்தரப் பொடியைத் தூவி அவர்கள் புத்தியை பேதலிக்கச்செய்து அவர்களை ஆகாரம் உட்கொள்ள வைத் தனர். மேலும் பேரருளாள ஜீயர் முதலானவர்களுக்கும் சரீரத்தில் வியாதி உண்டாகும்படி செய்து அவர்களையும் ஸ்வாமிகள் இல்லத் திற்கு போகமுடியாமல் தடுத்ததுடன் தள்ளியிருந்து நடப்பதை வேடி க்கைப்பார்க்க காத்திருந்தனர். ஸ்வாமிகளும் எதா காலத்தில் தீர்த்தா மாடி, திருவாராதனங்களை செய்துவிட்டு, ச்ரார்தத்தை ஆரம்பித்தார். ஹோமங்களைச்செய்து கூர்ச்சத்தில் தேவ, பித்ரு, விஷ்ணுவை ஆவா ஹனம் செய்து வரித்து ச்ரார்தத்தை செய்து கொண்டிருந்தார்.
பின்பு இலையில் பகவத் நிவேதனம் செய்யப்பட்ட அன்னம், பக்ஷ்யங்கள் ஆகியவற்றை பரிமாறினார். விஷ்ணு ஸூக்திகளை ஜபிக்க ஆரம்பித்தார். என்னே ஆச்சர்யம் ! சில நிமிடங்களில் இலையில் பரிமாற பட்டவை யாவும் மிச்சமின்றி உண்ணப்பட்டு இருந்தது. கடைசீயில் “ ஸகலம் ஸம்பூர்ணம் “ என்ற ஒலிகேட்டது. உத்வாஸநாதிகளைச் செய்ததும் மூன்று ஸ்வாமிகள் அஸூயை கொண்டவர்கள் முன்பாக தாம்பூலம் போட்டுக்கொண்டபடிச் சென்றனர். ஸ்வாமிகள் பிண்டதாநாதிகளை செய்து ச்ரார்தத்தை பூர்த்தி செய்தார். அந்த அஸூயைப் பிடித்தவர்கள், ஸ்வாமிகளிடம் வந்து, “ இன்று ச்ரார்தத்தில் அந்வயித்த வர்கள் யார் என்று கேட்க “,“ கோயில், திருமலை, பெருமாள்கோயில் எம்பெருமான்கள் “ என்று பதிலளித்தனர். இதனைக்கேட்டு பயந்த அவர்கள் ஸ்வாமிகளின் பாதத்தில் வீழ்ந்து மன்னிப்பு கோறினர்.
அன்று ஏகாதசி தினம். சில கெட்டவர்களின் பேச்சைக்கேட்டு அர்ச்சகர் ஒருவர், ஸ்வாமி பெரிய பெருமாளை மங்களா சாஸனம் பண்ணியதும், அவரிடம் வெண் பொங்கலைக் கொடுத்து, இதை உண்ண வேண்டும். “ இது பகவானின் நியமனம் “. என்று கூற, அதைப்பெற்றுக் கொண்ட ஸ்வாமி “ ச்ருதி, ஸ்ம்ருதிகள் எமது ஆஜ்ஞை. அவற்றில் கூறியபடி நடக்கவேண்டும். அவ்விதம் நடக்காதவன் த்ரோகி. அவன் என் பக்தனானாலும், வைஷ்ணவனல்லன் என்று முன்பு நீரே கூறியிருக்கிறீர் ப்ரபோ ரங்கநாதா, இப்போது .அதற்கு எதிராக சாப்பிடும்படி நியமித்தது சரியா? “.என்று கேட்டதும் பெரியபெருமாள், வேறொரு அர்ச்கர்மீது ஆவேசித்து, “ நாம் அதுபோல் நியமிக்கவில்லை “. என்று சொல்லசிறிய லாபத்திற்காக தாம் அபசாரப் பட்டதற்கு மன்னிக்கவேண்டுமென்று மண்டியிட்டார் பொங்கல் கொடுத்த அர்ச்சகர்.
வேறொரு சமயம்,ஒரு கவிதா சாதுர்ய முடையவர், ஸ்ரீரங்கநாதன் முன்பு ஸ்வாமிகளைப்பார்த்து, “ ஓர் இரவில் ஓராயிரம் ச்லோகங்களை செய்பவரே கவிதார்கிக ஸிம்ஹம் என்ற விருதிற்கு தகுதியுள்ளவர். நான் ஸ்ரீரங்கநாதன் விஷயமாக பதகமல ஸஹஸ்ரம் எழுதப் போகி றேன்.“ என்று சொல்லி போட்டிக்கு அழைத்தார். நம் ஸ்வாமிகளும் பாதுகா ஸஹஸ்ரத்தை எழுதுவதாக ஒப்புக்கொண்டார். இரண்டாவது ஜாமத்திலேயே 1008 ச்லோகங்களைக்கொண்ட ஸ்ரீபாதுகா ஸஹஸ்ர த்தை எழுதி முடித்தார். மூன்றாவது ஜாமத்தில் யோகத்திற்கு எழுந்த ருளினார். நான்கவது ஜாமத்தில் வழக்கப்படி எழுந்து, நித்ய கர்மாக் களைச் செய்ய ஆரம்பித்தார். அநுஷ்டானங்களை முடித்துக்கொண்டு கோயிலுக்குச் சென்று ஸ்ரீபாதுகா ஸஹஸ்ரத்தை பெருமாள் திருவடி களில் சமர்பித்தார். பதகமல ஸஹஸ்ரத்தை செய்வதாக வாக்களித் தவர் 300 ச்லோகங்களே தாம் செய்திருப்பதாகச்சொல்லி தலை கவிழ்ந்தார். அப்போது ஸ்வாமி,
ஸுதே ஸுகரயுவதி :ஸுதஸமதமபி அத்யந்த துர்ப்பகம் ஜடிதி
கரீணி சிராய ஸுதே ஸகலமஹீ பாலலாலிதம் கலபகம் I I
“ பன்றி நூற்றுக்கணக்கான கன்றுகளை ஈன்றெடுக்கின்றது. எல்லா அரசர்களாலும் கொண்டாடப்படும் குட்டியை யானை, பன்னிரண்டு ஆண்டுகளன்றோ கர்பத்தில் வைத்திருந்து பெற்றெடுக்கின்றது.” என்று பொருள்பட அருளினார்.
ஆபாதசூடம் அநபர்யிரு தர்ஸநே அஸ்மிந்
ஆசாஸநீயமபரம் ந விபக்ஷ ஹே தோ : I
ஆபாத சாந்தி மதுராந் புநரஸ்மதீயாந்
அந்யோந்ய வைரஜநநீ விஜஹாத்வஸுயா I I
ராமாநுஜதர்சனம் அடிமுதல் நுனிவரை தோஷமில்லாதது. மற்றவர்களு க்குச் சொல்ல வேண்டிய சமாதானம் இனி ஒன்றுமில்லை. சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லியாயிற்று. மிகவும் சாந்தரகளான நமக்குள் விரோதத்தை உண்டுபண்ணும் அஸூயை நம்மை விட்டு விலகட்டும். என்று விண்ணப்பித்துக் கொண்டார். மேலும் பல க்ரந்தங்களை அருளிச்செய்தார்.
நம்மாழ்வார் நியமனப்படி த்ரமிடோபநிஷத்ஸாரம், த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி, நிகமப்பரிமளம், ஆகிய க்ரந்தங்களை அருளிச் செய்தார். அமலநாதிபிரான் பாசுரங்களுக்கு, முநிவாஹன போகத்தை யும்; கண்ணிநுண் சிறுதாம்பு பாசுரங்களுக்கு, மதுரகவிஹ்ருதயம்; என் பனவற்றையும் அருளிச்செய்தார். திருமந்த்ர சுருக்கு, த்வயச்ருக்கு, சர்மஸ்லோக ச்ருக்கு கீதார்த்த ஸங்க்ரஹ ச்ருக்கு, ஆகார நியமம் முதலியவற்றையும் செய்தார்.
இவருடைய பெருமை வட மாநிலங்களிலும் பரவ, ஸ்ரீஸ்வாமிகளின் திருவடிகளில் பக்தி கொண்ட மாதவனுடைய பிள்ளை, ஸர்வஜ்ஞ சிங் கப்ப நாயக்கர் சில வைஷ்ணவர்களை ஸ்ரீரங்கத்திற்கு அனுப்பித் தமக்கு நல்லுபதேஸம் செய்தருள வேண்டுமென்று ப்ரார்த்திக்க, ஸ்வாமிகளும் “ ஸ்வாதீந த்ரிவித சேதநாசேத ஸ்வரூபஸ்திதி ப்வர்த்தி பேதம் “ என்று ஆளவந்தாரும், எம்பெருமானாரும் அருளிச்செய்த வாக்யங்களின் விரிவாக, தத்வ ஸந்தேஸத்தை அருளிச்செய்தார். மேலும் ரஹஸ்ய ஸந்தேசவிவரணம், ஸுபாஷிதநீவி, இவற்றை அருளிச்செய்து கொடுத்த னுப்பினார். அவ்வரசன் ஸ்வாமிகளின் ஸ்ரீமுகத்தை எல்லா மரியாதை களுடன் எதிர்கொண்டு வந்து ஏற்று அவற்றை சேவித்து ஸ்வாமியின் நியமனப்படி சரணாகதியை செய்துகொண்டு ஸ்வாமிகளின் திருவடி களில் அசஞ்சலமான பக்தி கொண்டவனாக வாழ்ந்து வந்தான்.
ஸ்ரீஸ்வாமி தேசிகனுக்கு, பல ஆண்டுகளாக குழந்தையே இல்லாமல் இருந்தது. பேரருளாளன் அநுக்ரஹத்தால் நளவருஷம், ஆவணி மாதம், ரோஹிணி நக்ஷத்ரத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை க்கு, ஜாதகர்மா செய்து வைக்கப் பட்டு “ வரதன் “ என்ற நாமம் சூட்டப் பட்டது. குமாரன் வரதாச்சாரிக்கு, அக்ஷராப்யாஸம் செய்து, எல்லா சாஸ்த்ரார்கங்களையும், மந்த்ரார்த்தங்களையும் தாமே உபதேஸித்தார். புலிக்குப் பிறந்தது பூனையாகுமா ? அவர் குமாரரும், அதிமேதாவியாக விளங்கினார். மகனுக்கு விபவ ஆண்டு ஸ்ரீபாஷ்ய க்ரந்தத்தை உபதேஸி த்தார். அப்போது குமாரர் வரதாச்சாரியார்,
ஸ்ரீமாந் வேங்க நாதார்ய : கவிதார்க்கிக கேஸரீ I
வேதாந்தாத்சார்ய வர்யோமே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி I I
என்ற தனியனை விண்ணப்பித்து சேவித்தார். அப்போது அருகிலிருந்த ஸுதர்ஸனபட்டர் மற்றுமுள்ளவர்களும் அதனைக் கேட்டு மகிழ்ச்சியுற்ற னர். இனி இந்த தனியனையே உச்சரிக்க வேண்டுமென்றும் ஒருமனதாகத் தீர்மானித்தனர். ஆனால் அதுநாள்வரை ஸ்வாமியின் ப்ரதான சீடரான வீரவல்லி பெருமாளய்யன் அருளிய :
நம : பதம் இதம்பூயாத் தஸ்மை வேங்கட ஸூரயே I
யத்வாகம் க்ருதஸேகேந ஸஞ்சீவித மிதம் ஜகத் I I
என்ற தனியனையே பயன் படுத்தி வந்தனர் என்பது இங்கு குறிப்பிட வேண் டிய ஒன்று. எங்கனம் எம்பெருமானாரின் ஜ்ஞான புத்ரனான திருக் குரு கைப் பிள்ளானிடம் கூரத்தாழ்வார் போன்றவர்கள் பக்தியுள்ள வர்களாக இருந்தார்களோ, அதுபோன்றே பேரருளாள ஜீயர் போன்றவர்கள் ஸ்வாமி களின் குமாரரிடம் மிகுந்த பக்தி செலுத்தி வந்தார்கள்.
ஒரு சமயம் கந்தாடை லக்ஷ்மணாச்சார்யர் என்பவர் பல்லக்கில் ஸ்வா மிகள் வஸிக்கும் வீதி வழியாக வந்துகொண்டு இருந்தார். அவர் ஒரு ஆச்சார்ய புருஷர். அப்போது ஸ்வாமிகள் தம் வீட்டுத்திண்ணையில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தார். அவர் தாம் படித்துக்கொண்டிருந்த க்ரந்தத்தில் லயித்திருந்ததால், வீதியில் என்ன நடக்கின்றது என்பதை அறியவில்லை, இதனைக்கண்ட லக்ஷ்மணாச்சார்யரின் சீடன் ஒருவன் ஷ்வாமிகளிடம் ஓடிவந்து, “ எங்கள் ஆச்சார்யர் வீதியில் பல்லக்கில் எழுந்தருளும் போது உட்கார்ந்திருக்கின்றீரே ? உமக்கு கண்ணில்லையா ?“ என்று சொல்லிவிட்டு அவர் கால்களைப்பிடித்திழுத்து, கீழே தள்ளிவிட்டு சென்றான். ஸ்வாமிகள் மிக சிரப்பட்டு எழுந்திருந்து, லக்ஷ்மணாச்சார்யர் இருக்குமிடம் வந்து தம்மை மன்னிக்கும் படி கைகூப்பி வணங்கி விட்டு மீண்டும் தம் வீட்டுக்குத்திரும்பினார். அன்றே ஸ்ரீரங்கத்தைவிட்டுத் தம் குடும் பத்தினருடன், திருநாராயணபுரம் புறப்பட்டார்.
வழியில் சத்யாகாலத்தில் காவேரியில் தீர்த்தாமாடி விட்டு, காவேரிக்கரையிலுள்ள வரதராஜ பெருமாள் சந்நிதியில் வஸிக்க ஆரம்பித்தார்.
தம் சிஷ்யர்கள் அபசாரப்பட்டதால், ஸ்வாமி ஸ்ரீரங்க த்தை விட்டே புறப்பட்டுச் சென்றுவிட்டார் என்பதை லக்ஷ்மணாச்சார்யர் அறியமாட்டார். அவர் உடலில் “ வைவர்ணம் “என்ற வியாதியின் கொடுமை அதிகமாக இருந்தது. தம் சக்தியை இழந்தார். அவருக்கு புத்ரபாக்யமும் கிடையாது. அகாலத்தில் தமக்கு மரணம் நேர்ந்துவிடுமோ என்று பயந்தார். அவர் மனைவி, தம் கணவனிடம், “ உம் உடம்பில் வைவர்ணம் வர ஏதாவது பாகவத அபச்சாரம் நேரிட்டதா ? ” என்று கேட்டவுடன், அவர் “ யாம் புத்தி பூர்வமாக ஏதும் செய்யவில்லை.“ என்று சொன்னவர், “சிஷ்ய பாபம் குரோபி” என்று இருப்பதால், சிஷ்யர்களில் எவராவது அபச்சாரம் செய்திருப் பார்களோ என்ற சந்தேஹத்தில் அவர்களைக் கூப்பிட்டுக் கேட்டபோது, ஒருவன் “ நம் ஆச்சார்யர் வீதியில் வரும்போது எழுந்திருந்து மறியாதை செய்யாது புத்தகம் படித்துக்கொண்டிருந்த வேதாந்த தேசிகரை கீழே தள்ளி னோம். அவர் அன்றே இந்த ஊரைவிட்டு போய்விட்டார் “ என்றான்.
இதனைக் கேட்டதும் தம்பதிகள் மூர்ச்சை அடைந்தனர். பிறகு அவர்களே தெளிந்து எழுந்து, “ பீடாகரன் என்று பெயர் கொண்ட உனக்கு பொருத்த மானதே “ என்று அந்த சிஷ்யனைக் கடிந்துகொண்டு, ஸ்வாமிகள் இருக்கு மிடம் அறிந்து உடனே புறப்பட்டு சத்யமங்கலம் சென்று ஸ்வாமிகளை தண்டம் சமர்பித்து நின்றனர். தேசிகன், “ இங்கு எதற்காக வந்தீர்கள்? தேவரீர் திருமேனியில் வைவர்ணம் வரக்காரணமென்ன?” என்று கேட்டதும் லக்ஷ்மணாச்சார் வருத்தத்துடன், “ என் சிஷ்யர்களில் ஒருவன் உம்மிடம் பட்ட அபச்சாரத்திற்கு, கிடைத்த தண்டனை இது. அடியேனை மன்னித் தருள வேண்டும். மேலும் ஒருவருடகாலம் உம் ஸ்ரீபாத தீர்த்தத்தை ஸ்வீகரிக்க நிச்சயித்துள்ளோம். “ என்று கூறி அதுபோன்றே வாழ்ந்துவர, அவர் வ்யாதி குணமாயிற்று. லக்ஷ்மணாச்சார்யர் மனைவியும் கர்ப முற்றார். ஒருவருஷம் கழிந்ததும், ஸ்வாமிகளை மீண்டும் ஸ்ரீரங்கத்திற்கே வரவேண்டுமென ப்ரார்த்தித்துவிட்டு அவர்கள் ஸ்ரீரங்கம் திரும்பிச் சென் றனர். சிலமாதங்கள் கழித்து அந்த தம்பதிகளுக்கு, ஸ்வாமிகளின் ஸ்ரீபாத தீர்த்த மகிமையால் ஒரு ஆண்குழந்தை பிறந்தது. அதற்கு தீர்த்த பிள்ளை என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர். தம்தகப்பனாரின் பெயருடன் ஸ்வாமி களின் திருப்பெயரையும் சேர்த்து, “ ஆயிஆழ்வான்பிள்ளை “ என்ற பெயரும் சூட்டினர்.
சத்யமங்கலத்திலிருந்த ஸ்வாமிகளுக்கு, ஒருநாள் ரங்கநாதனை சேவிக்க வேண்டுமென்ற எண்ணம் எழவே தம் குமாரரையும், மனைவியையும் சத்ய மங்கலத்திலேயே விட்டுவிட்டு, பேரருளாள ஜீயர் முதலானவர்களுடன் திருவரங்கம் திரும்பினார். வெகுநாட்கள் விட்டு பிரிந்த தாபம் தீர,பெரு மாளை சேவித்து மகிழ்ந்தார். அங்கு தங்கியிருந்தபோது, ஒரு வித்வான் தேசிகனிடம் வந்து, வேதாந்த வாக்யார்த்தம் சொல்ல வந்திருப்பதாகச் சொன்னார். ஸ்வாமிகள் பேரருளாள ஜீயரை அழைத்து நீர் அவரிடம் வேதாந்த வாக்யார்த்தம் சொல்லவும் என பணித்தார்.
அதன்படியே மஹாவித்வானிடம் சததூஷணி முதலிய க்ரந்தங்களைக் கொண்டு வாதம் செய்து மூன்று நாட்களில் அவரை வென்றார். ஸ்வாமிகளிடம் வந்து தண்டம் சமர்பித்துத் தாம் வாதம் செய்த விதத்தை விவரித்தார். அதனைக்கேட்ட ஸ்வாமிகள், “ நீர் ப்ரஹ்மதந்த்ர ஸ்வதந்த்ரர் “ என்றார்.அதுமுதல் பேரருளாளஜீயர் அங்கனமே அழைக்கப்பட்டார்.
அந்தசமயம், அந்த தேஸத்தில் துருக்கர்களுடைய உபத்ரவம் அதிகமாக இருந்தது. அதனால் கோயில் அதிகாரிகள் பெரிய பெருமாள் முன்பாக ஒரு கல்திரையை எழுப்பி ஏதோ ஒரு விக்ரஹத்தை முன்பாக வைத்துவிட்டு, அழகியமணவாளப் பெரு மாளையும், நாச்சிமார்களையும் திருவேங்கடத்தில் எழுந்தருளப் பண் ணினர். துருக்கர்சேனை அங்குள்ள ஸ்ரீவைஷ்ணவர்களை ஹிம்ஸித்து வந்தது. அப்போது ஸுதர்ஸனபட்டர் தேசிகனிடம், ஸ்ருத ப்ரகாசி யைக்கொடுத்து, “ இதை சோதித்தருள வேண்டும். அது உம்மாலேயே ப்ரவசனம் பண்ணி ப்ரசுரமாக வேண்டும் “ என்று சொல்லிக்கொடுத்துவிட்டு, தம் இரு குமாரர்களையும் அவரிடம் ஒப்படைத்து “ இவர்களையும் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் “ என்று கூறிவிட்டு பெருமாள் பின்னேயே சென்றார். அப்போது துருக் கர்கள் ஸுதர்ஸனபட்டரைக் கொன்று விட்டா ர்கள். ஸ்ரீதேசிகன் ஸ்ருதப்ரகாசி கையைப் பூமியில் புதைத்து விட்டு, தாம் அந்த இரு குழந்தைகளுடன் பிணக்குவியல் மத்தியில் அந்த இரவெல்லாம் படுத்திருந்து, பிறகு அந்தக்ரந்தங்களையும் எடுத்துக்கொண்டு இரு குழந்தைகளுடன் ஸத்யமங்கலம் போய்ச்சேர்ந்தார். பிறகு அவர் ஸ்ருத ப்ரகாசி கையை, தம் சிஷ்யர்களுக்கு உபதேஸித்து வந்தார். ஸுதர்ஸனபட்டர் குமாரர்களுக்கும் உபநயாதி களைச் செய்து வைத்து அவர்களுக்கும் உபதேஸம் செய்துவைத்தார்.
ஒருசமயம் தம் குடும்த்தினருடனும், சிஷ்யரகளுடனும் திருநாராயண புரம் சென்றார். அங்கு செல்வபிள்ளை, யதுகிரிதாயார், ராமாநுஜர்ஆகியோரை மங்களாசாஸனம் செய்து மகிழ்ந்தார்.
அப்போது திருநாராயணப்பெருமாள் அர்ச்சகர் முகமாக, “ உமக்குப் பிறகு உமதுமகன் வரதாச் சாரியார் ராமாநுஜ சித்தாந்தத்தை பரப்பக்கடவது. “ என்று சொல்ல ஸ்வாமிகள் மிகவும் மகிழ்ச்சி யடைந்தார். அங்கேயே சிலகாலம் தங்கி யிருந்தார். குமாரவரதாச் சாரியாரும், திருநாரா யண புரத்திலேயேபகவத்விஷய காலக்ஷேப ங்களை செய்ய ஆரம்பித்தார். ப்ரஹ்மதந்த்ர ஸ்வதந்த்ர ஜீயர் மற்றும் வெண்ணைக்கூத்தஜீயர் முதலானவர்கள் குமாரரிடம் காலக்ஷேபம் கேட்க விழைய, அவர்களுக்கு பஹுதான்ய வருஷம், ஆவணிமாதம், ஹஸ்த நக்ஷத்ர தினத்தில் கவத் விஷய காலக்ஷேபத்தை ஆரம்பித்தார்.
அப்போதுப்ரஹ்மதந்த்ர ஸ்வதந்த்ரஜீயர் “ஸ்ரீமல்லக்ஷமணயோகீந்த்ர “ என்ற தநியனையிட்டு ஆரம்பித்தார். பின்பு தேசிகன் விஷயமாக, “ ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய: “ என்ற தனியனை ஸ்ரீபாஷ்ய காலக்ஷேப ஆரம்பத்திலும், “ ராமாநுஜதயாபாத்ரம் “ என்ற தனியனை பகவத்விஷய காலக்ஷே ப ஆர ம்பத்தின்போதும் பயன்படுத்தும்படி நிய மித்தார். அவர் நியமனப்படியே இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிறகு ஸ்வாமிகள், — நவநவபஹுபோகாம் நாத நாராயண த்வம் விரசய துரிதௌகைஸ்தாம் அநாக்ராதகந்தாம் … “ என்ற ஸ்லோகத்தை திருநாராயணன் விஷயமாக அருளிச்செய்து மங்களா சாஸனம் செய்து அங்கிருந்து சத்யமங்கலம் திரும்பினார்.
அழகிய மணவாளப்பெருமாளை இதுநாட்கள் விட்டுப்பிரிந்திருந்த, துக்கம் தாளாமல், “ அபீஸ்தவம் “ என்ற ஸ்தோத்ர த்தை அருளிச்செய்தார். இதனால் மகிழ்ச்சி யுற்ற ரங்கநாதன் மீண்டும் திருமலையிலி ருந்து ஸ்ரீரங்கம் வந்து சேர கோபண்ணராயன் என்ற குறுநில மன்னன் மூலம், அழகியமண வாளனை கொண்டுவரச்செய்து செஞ்சியில் சிலகாலம் ஆராதிக்கவைத்து, பிறகு ஸ்ரீரங்கம் கொண்டுவந்து சேர்க்கச்செய்தார்.
அழகிய மணவாளன் திரும்பிவந்த செய்திகேட்ட ஸ்வாமிகள் மிக சந்தோஷ மடைந்தார். தம் குடும்பத்தினருடன் மீண்டும் ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தார். அப்போது சித்ரகூடத்திலிருந்து ஒரு ஸ்ரீவைஷ்ணவர் வந்து, தில்லையில் பரஸ்பரம் சண்டை நடந்து கொண்டிருக்கின்றது என்று கூற, இப்போது அரசர்கள் அனுகூலமாக இருந்தால் மீண்டும் கோவிந்தராஜனை அங்கு ப்ரதிஷ்டை செய்யலாம் என்று விண்ணப்பித்தார்.
பிறகு அந்த செய்தியை கோபண்ணராய ருக்கு, தெரிவிக்க, அவரும் மீண்டும் கோவிந்தராஜனை தில்லையில் கொண்டு வந்து ப்ரதி ஷ்டை செய்தார். தேசிகனும் தில்லைக்குச்சென்று மங்களாசாஸனம் செய்து, கோபண்ணராயருக்கு, நன்றிகூறி விடையளித்துவிட்டு மீண்டும் திருவரங்கம் திரும்பினார். இதனால் தில்லையிலிருந்த சில சைவர்கள், ஸ்வாமிகளிடம் விரோதம் காட்டினார்கள். அவரை பேசவிடாமல் செய்யும் முயற்சியில் இறங்கினார்கள். ஸ்ரீரங்கம் வந்து, கோயில் அதிகாரிகளை தங்கள் கையில் போட்டுக்கொண்டு, அத்யயன உத்ஸவம் நடைபெற விடா மல் தடுத்தனர். மேலும் க்ஷுத்ர மந்திரத்தைப் பயன்படுத்தி ஸ்வாமி களைவாய்ப் பேசமுடியாமல் செய்தனர். இதனையறிந்த ஸ்வாமிகள், மானசீகமாக த்வய மந்த்ரத்தை ஜபித்து, “ஸ்ரீமதேராமாநுஜாய நம: “ என்று சொல்ல வாய்பேசும் திறனை மீண்டும் பெற்றார். ஸ்வாமிகள் தம்முடைய மஹாமந்த்ர ஸித்தி ப்ரபாவத்தினால் எதிரிகளின் வாயைக்கட்டிப்போட்டார். பின்பு அவர்களிடம் வந்து மன்னிப்பு கோறி ப்ராணபிச்சை கேட்டனர். ஸ்வாமிகளும் அவர்களை மன்னித்து, அவர்களிடமிருந்து, க்ஷுத்ர மந்த் ரத்தை விலகச் செய்தார். கோயில் அதிகாரிகளும் ஸ்வாமிகளிடம் வந்து மன்னிப்புகேட்டு அத்யயன உத்ஸவம் நடைபெற ஏற்பாடு செய்தனர். பிறகு ஸ்வாமிகள் “ ஸாரதீபம் ”, “ விரோதபரிஹாரம் “ என்ற க்ரந்தங்களை அருளிச்செய்தார்.
ஆழ்வார்கள் அவதரித்த நாள், ஊர், திங்கள் முதலியவற்றை விவரிக்கும் ப்ரபந்தஸார த்தை எழுதினார். மாயாமதத்தைச்சேர்ந்த சில்பி ஒருவர் தங்கள் மதத்தை ஸத்தூஷணி முதலிய க்ரந்தங்கள் மூலம் தாக்கியதால் ஸ்வாமிகள்மீது கோபமுற்று, ஸ்வாமிகளை சில்ப சாஸ்த்ரத்தில் வென்றுவிடும் முயற்சியில் இறங்கினர். ” நீர் உண்மையில் ஸர்வந்தர ஸ்வந்த்ரர் எனறால் உம்ப்போலவே ஒரு விக்ரஹத்தை சில்ப லக்ஷண ங்களுடன் செய்து காட்டுங்கள் “ என்று கூற,தேசிகனும் சம்மதிக்க, அன்று இரவு, ஸ்ரீரங்கநாதன் கனவில் தோன்றி “ வலக்கையல் ஞான முத்திரையும், இடக்கையில் ஸ்ரீகோசமும் உடைய வீற்றிருக்கம் கோலத்தில் செய்யக் கடவது “ என்று அனுக்ரஹிக்க, ஸ்வாமிகளும் செய்து முடித்தார்.
சில்பிகள் அதனைக்கண்டு வியந்தனர். ஸ்வாமி அந்த சில்பியிடமே அதற்குத்தகுந்த பீடமும் செய்யச் சொல்ல அவரும் விக்ரஹத்திற்குத் தகுந்த பீடத்தைச் செய்து காட்டினார். அப்போது விக்ர ஹத்தின் கன்னப்பகுதியில் அதிகமாக இருப்பதாக எண்ணி உளியால் சீவினார். அப்போது விக்ர ஹத்திருமேனியிலிருந்து, இரத் தம் கசிய அதனைக்கண்ட சில்பி பயந்தே போனார். ஸ்வாமிகளின் பாதத்தைப் பணிந்தார். ஸ்வாமிகளும் அவரை சமாதானப்படுத்தி, பின்பு “ சில்பார்த்த ஸாரம் “ என்ற நூலை எழுதினார். அப்போது ஸ்வாமிகளுக்கு, நூறு திருநக்ஷத்ரங்களுக்கு மேல் !
அளவற்ற பெருமைகளைக் கொண்ட நம் ஸ்வாமிகள் ஸௌம்ய வருஷம் ( 1370 )கார்த்திகை மாதம் பூர்ணிமையில் தம் திருவாராதனப்பெருமாள் பேரருளாளனை யும் அப்பிள்ளார் அளித்திருந்த சுதர்ஸன, பாஞ்சஜன்ய முத்திரைகளை தம் திருக்குமாரரிடம் அளித்து ஆராதித்து வரும்படிக் கூறி, ஸ்ரீஹயக்ரீவரை, ப்ஹ்மதந்த்ர ஸ்வந்தர ஜீயரிடம் அளித்துவிட்டு நேராக வடக்கு திருவீதியிலுள்ள தம் இல்லத்தில் தமது திருமுடியை குமாரர் மடியிலும், ப்ரஹ்மதந்த்ரர் மடியில் பாதங்களையும் வைத்துக்கொண்டு அப்பிள்ளார் திருவடிகளை த்யானித்தபடியே திருநாட்டிற்கு எழுந்தருளினார்.
குமாரர் வரதாச்சாரியார் –கவிதார்கிக ஸிம்ஹாய கல்யாணுண ஸாலிநே Iஸ்ரீமதே வேங்கடேஸாய வாந்தகுர்ரவே நம : IIஎன்ற ஸ்லோகத்தை அருளிச்செய்து அவர் சர்மதிருமேனியை சேவித்து பின்பு சர்ம கைங்கர்யங்களை நன்கு நடத்தி முடித்தார். பின்பு ஸ்ரீரங்கநாச்சியார் நியமனப்படி அந்த ஸந்நிதியிலேயே ஸ்ரீதேசிகர் விக்ரஹத்தை ப்ரதிஷ்டை செய்தார்.அன்று ஒலிக்க ஆரம்பித்த மணியோசை இந்த உலகம் உள்ளளவும் ஒலிக்கும்.
மன்னுபுகழ் பூதூரான் மனம் உகப்போன் வாழியே!
கஞ்சத் திருமங்கை உகக்க வந்தோன் வாழியே!
கலியன் உரை குடிகொண்ட கருத்துடையோன் வாழியே!
செஞ்சொல் தமிழ்மறைகள் தெளிந்து உரைப்போன் வாழியே!
திருமலைமால் திருமணியாய் சிறக்க வந்தோன் வாழியே!
தஞ்சப் பரகதியைத் தந்தருள்வோன் வாழியே!
செந்தமிழ் தூப்புல் திருவேங்கடவன் வாழியே!
மாநகரின் மாறன் மறை வாழ – ஞானியர்கள்
சென்னி அணி சேர் தூப்புல் வேதாந்த தேசிகனே!
இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.













