மணவாள மாமுனிகள் வைபவ பரமான யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம் எனும் இந்த திவ்ய க்ரநததத்தை அருளிச் செய்த பிள்ளை லோகார்ய (பிள்ளைலோகம்) ஜீயர் மணவாளமாமுனிகள் திருவடிகளில் மதுரகவி நிஷ்டராய் அந்தரங்கரான கோவிந்தப்ப தாதர்(தாஸர்) என்பவரின் திரு வம்சத்தில் உதித்தவர். இந்த கோவிந்தப்பர் ஆஸ்ரம ஸ்வீகாரம் பண்ணி பட்டர் பிரான் ஜியர் என்று திருநாமம் பெற்று மாமுனிகளின் அஷ்ட திக் கஜங்களில் ஒருவராய் விளங்கினார். கோவிந்தப்பருடைய குமாரர் அழகிய மணவாளர்-அழகிய மணவாளருடைய பெளத்ரரான வரதாசாரியர் என்பவர்
உததமாஸ்ரமம் ஸ்வீகரிதது பிள்ளை லோகம் ஜீயர் என்று ப்ரஸித்தி பெற்ரார் . இவர் மணவாள மாமுனிகள் அருளிச் செய்த யதிராஜ விம்சதி, உபதேச ரத்தினமாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி, ஆர்த்தி ப்ரபந்தம் இவைகளுக்கு மணி ப்ரவான வ்யாக்யானங்கள் அருளிச் செய்துள்ளார். ராமாநுஜார்ய திவ்ய சரிதம் என்னும் வைபவ க்ரந்தம், இராமானுச நூற்றந்தாதி வ்யாக்யானம், நாலாயிர தனியன்கள் வ்யாக்யானம் இவைகளையும் அருளிச் செய்துள்ளார். இவருடைய திருநஷத்ரம் சித்திரையில் திருவோணம்,-திருக் கடல் மல்லையில் கடல் கொண்டு விட்ட தல சயனத் துறைவார் ஸந்திதியை இப்போதுள்ள விடத்தில் கட்டி, அதில் பெருமாளையும் பூதத் தாழ்வாரையும் திருப்ரதிஷ்டை கண்டருளப் பண்ணி அந்த ஸந்நிதியில் தீர்த்தம் முதலிய சிறப்புகளைப் பெற்று வாழ்ந்திருந்தார் இன்றும் இவருடைய பூர்வாச்ரம ஸந்ததியினர் இச் சிறப்புகளை அநுபவித்து வருகின்றனர்.
—–
ஸ்ரீஸைலேஸ தயா பாத்ரம் தீ பக்த்யாதி குணார்ணவம்’ |
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம்
மணவாள மா முனிகள் லிஷயமாக இந்தத் தனியனை , ஸ்ரீரங்க நாதன் தான் மாமுனிகளுக்குச் சிஷ்யனாயிருத்து அருளிச் செய்தது ப்ரஸித்தம். இது நமக்கு மந்த்ர ரத்னததுக் கொப்பான மஹா
மந்த்ரமாகும்.
வாழி திருவாய்மொழிப் பிள்ளை மாதகவால் வாழும் மணவாள மாமுனிவன்” என்று பேசும்படி பெரிய ஜீயர் திருவாய் மொழிப் பிள்ளை திருவடிகளை ஆஸ்யித்துத் திருவாய்மொழி முதலான திவ்ய ப்ரபந்த தாத்பர்யங்களையும் அவரடி பணிந்து பெற்று, தாம் பெற்ற அர்த்தங்களை எல்லாரும் கேட்டு உஜ்ஜீவிக்கும் படியாக நடத்த வேணும் என்று அதற்கநுகுணமாக ஈடுபட்டிருக்க, இவரை நம்பெருமாள் அர்ச்சகர் மூலம் அழைத்தருளி, “திருவாய்மொழியின் அர்த்தத்தை நாமும் நம் மடியார்களும் கேட்டு வாழும்படி பெரிய திரு மண்டபத்திலே நடத்தும் என்று தம் திருவடிகளை ஊன்றுவிதது அருள்பாடிட்டு. நியமித்த௫ள, இவரும் அப்படியே நடத்த, உயர்வற வுயர் நலம்-தொடங்கி அவாவறச் சூழ்” என்கிற சாற்றுப் பாட்டான வாறே
இவர் உபன்யாஸம் நடத்துவதைக் கேட்டருளி, மிகவும் உகந்து முப்பத்தாறாயிரப் பெருக்கர் என்று இவருக்குத் திரு நாமம் சாத்தியருளி ஸ்ரீ சைலேச தயா பாத்ரம்’–என்கிற தனியனும் அனு ஸந்தித்தருளினார். இப்படிப் பெரிய பெருமாள் நிர்ஹேதுகமாகத் தம்மை விஷயீ கரித்து நியமித்தருளியதற்கு ஜீயர் அருளிச் செய்த திருநாமம் (பாசுரம்):
நாமார் ? பெரிய திருமண்டபமார்? நம் பெருமாள் ,
தாமாக நம்மைத் தனித்தழைத்து– நீ மாறன்
செந்தமிழ் வேதத்தின் செழும் பொருளை நாளு மிங்கே
வந்துரை யென்றேவுவதே வாய்ந்து.
இப்படி நம் பெருமாள் அருளிச் செய்த பெரிய ஜீயரது தனியனுக்கு அர்த்தம்–திருவாய் மொழிப் பிள்ளை யினுடைய க்ருபைக்கு விஷய பூதராய், ஞான பக்தி வைராக்ய மஹோ ததியாய் ஸ்ரீபாஷ்யகாரர் விஷயத்திலே ப்ராவண்யத்தை யுடையராய்க் கொண்டிருக்கிற கோயில் அழகிய மணவாளச் சியரை ளேலிக்கறேன்”-என்றபடி.
ஸ்ரீ சைலேச தயா பாத்ரம் : நம்மாழ்வாருளாலே அவர் திருவடிகளான எதிராசர் திருவடிகளை எப்போதும் மறவாமல் இறைஞ்சி ஏத்தும் திருவாய் மொழிப் பிள்ளை சீரருளுக்கு ஏற்ற கலமாயிருப்பவர் மணவாளமாமுனிகள்–ஸ்ரீசைல பூர்ணர்-(பெரிய திருமலை நம்பி) கிருபையால் பக்தி வெள்ளத்தைப்
பெற்றது -முன்பு ராமாநுசனாக ; தீர்த்தங்களாயிரத்தை ஸ்ரீ சைலேசர் தயையால் பெற்றது பின்பு மா முனிகளாக ) ஸ்ரீ சைலேசரான பெரிய திருமலை நம்பி க்ருபையாலும் ஸ்ரீசைல தேசிகர் ( திருவாய் மொழிப் பிள்ளை) தயையாலும் இராமாயணமென்னும் பக்தி வெள்ளமும். தீர்த்தங்கள் ஆயிரமான திருவாய் மொழியும் யதீந்த்ர ப்ரவணரான இவரிடம் குடி கொண்டுள்ளன
தீ பக்த்யாதி குணார்ணவம்-
ஞானம், பக்தி வைராக்யம் முதலான குணங்களுக்குக் கடலாயிருப்பவர் மணவாள முனிகள். முன் நிலைகளான இளைய பெருமாள் (லஷ்மணர்) இளையாழ்வார் (உடையவர்) இரண்டிலும் ஞான பக்த்யாதிகள் பூர்ணமாய் உண்டு-பெரிய ஜீயருடைய அந்தப்ரேமாதிகள் பெரிய பெருமாள விஷயத்துச்குச் சேர இரட்டித் திருக்கும் -.
யதீந்த்ர பிரவணம் -இனி நம் பெருமாளிடத்தில் ப்ராவண்யம் அதன். எல்லை நிலமான எம்பெருமானார் அளவும் செல்லதைச்சொல்வது -யதீந்த்ர ப்ரவணம்’-அவர் (எம்பெருமானார்) பராங்குச பக்தர். இவர் (மா முனிகள்) யதீந்த்ர ப்ரவணர் இவரை அனைவரும் கால் கட்டுகிறது இவர் யதீந்தர ப்ரவணராகையாலே–
வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம்-அழகிய மணவாள மா முநி-என்று திருநாமத்தை யநுஸந்தித்து அவர் கால்களில் விழுகிறார்.
இப்படிகளால் ஏற்றங்களை யுடைய இவர் ஸ்துதி ரூபாமான இத் தனியன் -யத் வேதா தெளஸ்வர : ப்ரோக்தா வேதாத்தேச ப்ரதிஷ்டித;'” என்று வேதத்துக்கு ஓம் என்னுமா போலே, ஸகல
திவ்ய ப்ரபந்தங்கள், அவைகளின் வ்யாக்யான விசேஷங்கள்,இவைகளில் ஸாரமான ரஹஸ்யங்கள், இவை. எல்லாவற்றினுடைய முதலிலும் முடிவிலும் அகில திவ்ய தேச விலக்ஷண அதிகாரிகளாலும் அநுஸத்திக்கப் படுமthaaய் இருக்கும்.
ப்ரணவத்தில் அகாரம் பகவத் வாசகமாயும் மகாரம் ஜீவ வாசகமாயும் உகாரம் இருவருடைய உறவை ப்ரகாஸிப்பதாகவும் இருக்கும்.-
அவ்வானவர்க்கு மவ்வானவரெல்லம்
உவ்வானவரடிமை யென்றுரைத்தார்- இவ்வாறு
கேட்டிருப்பார்க்கு ஆள் என்று கண்டிருப்பார் மீட்சியில்லா
நாட்டிருப்பார் என்றிருப்பன் நான் -ப்ரமேய ஸாரம் – 1 இந்த ஸ்லோகத்திலே பதங்கள் தோறும் இவ் வர்த்தம் காணலாம்.
ஸ்ரீ சைலேச தயா பாத்ரம் : ஸ்ரீஸைலேச என்று அகார வாச்யனான ஸர்வேஸ்வரனைச் சொல்லி, தயா பாத்ரம் என்று வேறு யாவர்க்கு மில்லாமல் அவனுக்கே உள்ளவனான சேதனன் அவன்
க்ரூபைக்கு பாத்ரம் என்பதைச் சொல்கிறது, மேலும், ஆசார்யனை அவன். தானாகவே சொல்லுவது விசேஷாதிஷ்டானத்தாலே.-“ஆசார்யஸ் ஸ ஹரிஸ் ஸாக்ஷாத்” என்று ப்ரமாணம்.
தீ பக்த்யாதி குணார்ணவம்: என்கிற இப் பதத்தாலும் (தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்குமுணர்வு”‘ என்றும், ஆதியம் சோதிக்கே ஆராத காதல்’‘ என்றும் உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள்‘ என்றும் சொல்லுகிறபடியே ஞான பக்தி வைராக்கியங்களைச் சொல்லுகையாலே, அகாரத்தில் சொன்ன பகவத் சேஷத்வத்தை பக்தியால் சொல்லுகிறது. ஸ்வருபமும்-உன்னிணைத் தாமரைகட்கு அன்புறுகி நிற்குமதே. எம்பெருமானைப் பற்றியே ஜ்ஞானமாதலால், சேஷத்வம் பற்றிய ஞானமே ஞானம். தேவதாந்தர த்யாக ப்ரதானமா யிருப்பது வைராக்யம்.
யதீந்த்ர ப்ரவணம் –-யதீந்த்ரராகை யாவது–பகவத் பரதந்த்ரரான தம் நிலையை நினைத்து துரும்பும் நறுக்காமல் வெறுமனே இருப்பவர்களைத் திருத்தித் திருமகள் கேள்வனுக்காக்கி அடிமை செய்விக்கை. இது பற்றி எம்பெருமானாரிடம் ப்ரவணராகிறார் . பகவதநத்யார்ஹ சேஷத்வம் அவனடியார் வரையிலும் செல்ல வேணும். மேலுர், யதிந்தர சப்தம் அஸாதாரணமாக ராமானுஜனைச் சொல்லுவது, ராம சப்தத்தாலே அகாரார்தமும், அநுஜ சப்தத்தாலே கைங்கர்ய பரனான ஆத்ம ஸ்வரூபத்தையும் சொல்லிற்று. ராமாநுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்தா’ என்றபடி ப்ராவண்ய நிலை–
வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம்: இத்தாலும் உக்தார்த்தமே- சொல்லுகிறது. ரம்ய ஜாமாத்ரு சப்தத்தாலே அகார வாச்யனான பகவானைச் சொல்லி முநி சப்தத்தாலே பகவத் தநந்யார்ஹ சேஷத்வ ஜ்ஞானருடைய பரம சேதனனைச் சொல்லுகிறது – ரம்ய ஜாமாத்ரு மநநம் கரோ தீதி ரம்ய ஜாமாத்ரு முநி;-ஆக இவை எல்லா வற்றாலும் ப்ரணவார்த்தமாக யோஜிக்கத் தட்டில்லை.
பெருமாளுடைய கார்யத்தை கவனியாமலிருக்க, பெருமாள் இளையோனை நோக்கி, லஷ்மணா! நீ ஸுக்ரீவனிடம் சென்று நான் சொன்னதாகச் சொல்லு. செய் நன்றி மறந்த பாபிஷ்டன் புருஷர்களிற் கடையானவன்- வாலி சென்ற வழி ஸூக்ரீவனுக்கும் திறந்திருக்கிறது அவனை உற்றார் உறவினரோடும் யம புர மனுப்பச் சித்தமாயிருக்கிறேன்.” இப்படி மனஸ்தாபப்பட நேர்ந்து விட்டதனால் முன்பு சைலேச தயா பாத்ர பூதனான வொருவனை வணங்கின குறை தீர இப்போது ஸ்ரீசைலேச தயா பாத்ர பூதரை வணங்கி வாழ்கிறேன் என்றதாயிற்று,-திருமலை யாழ்வாரென்கிற திருவாய் மொழிப் பிள்ளையின் இன்னருளுக்கு இலக்கான மா முனிகளை வணங்குகிறேன் என்கை.
தீ பக்த்வாதி குணார்ணவம் : ராமாவதார காலத்தில் லவணார்ணவமான ஸமுத்ரத்தின் காலிலும் குனிந்தமை ப்ரஸித்தம் –ஸமுத்ரம் ராகவோ ராஜா சரணம் கந்துமர்ஹதி” என்ற விபீஷணாழ்வானுடைய வாக்கின் படி லவணார்ணவத்தை நோக்கிச் சரணாகதி பண்ணி யிருந்து அங்கும் மந ஸ்தாபமே மிகுந்தது. ௮க் கடலரசன் முகங்காட்டிற்றிலனாக, மிகவும் சீறிச் சிவந்து, சாபமாதய ஸ சவ் மித்ரே! சாராம்ச்ச ஆசீ விஷோபமாந் ஸாகர மாயோசயிஷ்யாமி”-லஷ்மணா! வில்லையும் கொடிய அம்புகளையும் கொண்டு வா; இதோ கடலை வெறுந்தரையாக்கி விடுகிறேன்! ‘ என்று கூறி சரணாகதி பண்னின விடத்தில் நிக்ரஹத்திலே யன்றோ நின்றது. அப்படியான குறை தீர அந்த லவணார்ணவத்தை விட்டு தீ பக்க்யாதி குணார்ணவத்தை அடி பணிந்து வாழப் பார்க்கிறபடி,
ஞானபக்தி வைராக்யங்களுக்குக் கடலான மாமுனிகளை வணங்குகி்றேனென்றபடி
யதீந்த்ர ப்ரவணம்! ‘மந்திபாய் வடவேங்கடமாமலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான் அரங்கத் தரவினணையான்’! ஸ்ரீரங்க நாத பெருமாள திருவேங்கடமுடையானாகவும் நிற்கிற நிலையிலே ”அப்பனுக்குச் சங்காழி அளித்தருளும் பெருமாள்! என்று போற்றப் படும் ஸ்ரீராமாநுஜரிடம் திருவாழி திருச்சங்கு பெற்றதனால் அத்த யதீந்ரரிடத்தில் சிஷ்ய வ்ருத்தி கொண்டிருந்தது ப்ரஸித்தம், அங்கு மநஸ்தாபம் ஒன்று நேரவில்லை யாயினும் தன்னை யுற்றாட் செய்யும் தன்மையினார்” (ராமாதுச.தூற்-97) என்கிற பாட்டைத் திருச் செவி சாத்தின பின்பு “யதீந்த்ரரிடத்தில் சிஷ்ய வ்ருத்தி செய்வதிற் காட்டிலும் யதீந்த்ர ப்ரவணனார் திறத்திலே சிஷ்ய வ்ருத்தி செய்வது தான் சிறந்தது என்று தோன்றி விட்டது. ராமானுசன் தன்னை யுற்று ஆட் செய்வதிற் காட்டிலும் தன்னை யுற்று ஆட் செய்யும் தன்மையினேரை யுற்று ஆட் செய்வாரே சிறந்தவர் என்பது இந்தப் பாட்டில் காட்டப்பட்ட தன்றோ? அதனால் யதீந்த்த்ர ப்ரவணரை யிறைஞ்சுகிறேன் என்றதாயிற்று, மா முனிவனுக்கு யதீந்த்ர ப்ரவணரென்ற திரு நாமம் சிறப்பாகக் கிடைத்தது ஓன்று –
வந்தே ராம்ய ஜாமாதரம் முநிம் : இராமனாயும் க்ருஷ்ணனாயும் அவதரித்த ஸமயங்களில் இரண்டு முனிவர்களிடத்திலே சிஷ்ய விருத்தி செய்திருந்தானெம்பெருமான் -அதாவது விச்வாமித்ர முனிவரிடத்திலும் சந்திபினி முனிவரிட ததிலும். அவ் லிருவரிடத்திலும் வெறுப்பே யாயிற்று. மிதிலையில் ஜனகருடைய யாகசாலையில் கெளதம புத்ரரான சதாநந்தர் (பாலகாண்டம் 51-ம் சர்க்கம் முதலாக] விச்வாமித்ரருடைய பழைய வரலாற்றை எல்லாம் சொல்ல, மேனகையுடன் கூடியது, சண்டை யிட்டது முதலான ரஜோ குண தமோ குண கார்யங்களைக் கேட்ட போது “இப்படிப்பட்ட ஒருவரையா ஆசார்யனாகக் கொண்டோம்” என்று வெறுத்திருக்க நேர்ந்தது. க்ருஷ்ணாவதாரத்திஸ் ஸாந்தீபினி முனிவரிட த்தில் ஸகல ௧லைகளையும் பயின்று முடிவில், குரு தஷிணை ஸமர்ப்பிக்க நின்ற வளவிலே -மாதவத்தோன் புத்திரன் போய் மறி கடல் வாய் மாண்டாளை ஒதுவித்த தக்கணையா உருவுருவே கொடுத்தான்! என்கிறபடியே என்றோ ப்ரபாஸ தீர்த்தத்தில மாண்டு போன மகனை மீட்டுத் தர வேண்டும் என்று வேண்டி அப்படியே பெற்றான் -கண்ண பிரான் ஸாக்ஷாத் ஸ்ரீமன் நாராயணன் என்று அறிந்து வைத்தும் அவனிடம் மோக்ஷத்தை வேண்டாமல் ஷுத்ர புருஷார்தத்தையே வேண்டினமையால் அvaன் பக்கலிலும் வெறுப்பாவயிருந்தது, இப்படி வெறுப்புக்கு இலக்கான இரண்டு முனிகளையும் விட்டு ஸமஸ்த கல்யாண குணக் கடலாய் வைராக்ய நிதியான ரம்ய ஜாமாத்ரு முனியை வணங்கி வாழ்கின்றேனென்கிற தாயிற்று–
இவ்வளவு அர்த்த விசேஷங்களைக் கொண்ட இந்த ஸ்லோகம் எம்பெருமான் தானே சொல்லி யிருக்கவேண்டும். இவையெல்லாம் அவன் நெஞ்சு தன்னில் உறையும் விஷயங்களாகையால் பிறரொருவர்க்கு. ஏறிட்டுக் கொள்ளவும் முடியாது. ஆகவே இந்தத் தனியன் தெய்வ வாக்கே என்பது திண்ணமாயிற்று
ஸ்ரீ மத் உபயவே. காரப்பங்காடு வேங்கடாசாசியர் ஸ்வாமிகள் வழங்கும் செம் பொருள் :
ஸாஷாத் ஸர்வேஸ்வரனான ஸ்ரீரங்க நாதனாலேயே அருளிச் செய்யப்பட்ட இந்த மந்த்ரத்தை விட உத்க்ருஷ்டமான மந்த்ரமே இல்லை என்றால் மிகையாகாது,ஸ்ரீசைலேச தயா பாத்ரம் என்று “ஸ்வாசார்யரான திருவாய்மொழிப் ‘ பிள்ளையினுடைய பூர்ண கிருபைக்கு பாத்ரமாயிருந்தவர் ஸ்வாமி மணவாளமாமுனிகள், இப்படி சொல்லப்பட்ட ஆசார்யாபிமானத்தின் பலனை பகவத் ப்ராப்தியாகச் சொல்லாமல் யதீந்த்ர ப்ராவண்யமும் தீ பக்த்யாதி குணார்ணவத்வமுமாகக் காட்டப் படுகின்றன -இங்கு ஸ்வாமி எம்பெருமானாரிடம் அதிகமான ப்ரேமை யுடையவராய் யதீந்த்ர ப்ரவணராய்த் திகழ்ந்ததும், ஞான பக்தி வைராக்யங்களாகிற குணங்களுக்குக் கடலாக விளங்கியதும் எந்தை திருவாய்மொழிப் பிள்ளை இன்னருளால் வந்த-என்று ஸ்வாமியே உணர்த்தும்
‘ஸ்வாசார்ய (ஸ்ரீசைலேசரின்) க்ருபை. தனமுள்ளவன் ஸுக அநுபவம் பண்ணுகிறான். அவனுக்கு ஸுகாநுபவம் கேவலம் தனமுள்ளமையால் ஏற்படுமாப் போலே; ஸ்வாமிக்கு யதீந்த்ர ப்ராவண்யம், ஆத்ம குண பூர்த்தி ஆகிய பெருமைகள், ஸ்வாசார்ய கிருபையால்–இவர் ஸ்ரீசைலேச தயா பாத்ரராகையாலே –ஏற்பட்டவை, ௨பகாரகரான ஸ்வாசார்யருடைய க்ருபையால்
உத்தாரகரான யதிராஜ ஸம்பந்தமும் அபிமானமும், ஏற்படுகின்றன –ராமாநுஜார்ய கருணைவது மத்கதிஸ்தே” என்று யதிராஜ விம்சதியிலும், :மாசில் திருமலையாழ்வார் என்னை
நேசத்தால் நின்பால் சேர்த்தார் ‘; உந்தனபிமானமே உத்தாரகமென்று சிந்தை செய்திருக்கச் செய்த நீ அந்தோ! எதிராசா! சதிராக நின் திருத்தாள் தா;” அவர்க்காய் (ஸ்வாசாரியருக்காக)
எதிராசர் எம்மைக் கடுகப் பரமபதம் தன்னில் ஏற்றுவர், என்ன பயம் நமக்கே?; எதிராசர் தம் அபிமான மென்னும் போதத்தை ஏறிப் பவமாம் புணரிதனைக் கடந்து பாதக் கரையைக் குறுகுவனே !-என்றெல்லாம் ஆர்த்தி ப்ரபந்தத்திலும் எம்பெருமானாரிடத்தல் தம்து மதுரகவி நிஷ்டையையும் ப்ராவண்யத்தைபும வெளியிட்டுள்ளார் –ஸ்ரீ ஸ்வாமி உபதேச ரத்தின மாலையிலும் நூற் பயனாக -எந்தை எதிராசரின் னருளுக் கிலக்காகி சதிராக வாழ்ந்திடுவர்” என்றுரைத்தார். ஆக நாராயண சதுரஷரியினும் எதிராஜ, ராமாநுஜ சதுரக்ஷரிகள் மிகச் சீரியவை என்பது மாமுனிகள் காட்டும் பரமார்த்சம் இதுவே ஸார தமமான செம் பொருள். இந்தத் தனியனில் நம்பெருமாள் அருளும் பரமார்த்தம். எம்பெருமான் திருநாமத்தையும் உள்ளடக்கியுள்ள ரம்ய ஜாமாத்ரு முநி என்ற திரு நாமத்தை அநுஸந்தித்து வந்தே ரம்ய ஜாமாதாம் முநிம் என்று ஸ்வாமியை சரணம் பற்றுவோம்,
ஸ்ரீமத் உபயவே நல்லான் சக்ரவர்த்தி ஸ்ரீ ராம க்ருஷ்ணய்யங்கார் ஸ்வாமிகள்
திருமகள் கேள்வனே முழு முதற் கடவுள். உலகனைத்தையும் ஈன்றெடுத் தளிப்பவன் அவனே, அத் தகையோன் தன்னை ஈன்றெடுத் தளிக்கு மொருவனைப் பெற நெடு நாட்களாக அவாவி வந்தனன். அவ்வவா தயரதனைத் தந்தையாகப் பெறும் வாய்ப்பினால் நிறைவேறியது உலகிற்கோர் ‘முந்தைத் தந்தை சக்ரவர்த்தித் திருமகனானான்.
உடல் கொடுப்பவன் தந்தை ; மெய்யுணர்வை அளிப்பவன் ஆசார்யன்; தந்தையினும் ஆசார்யன் சிறந்தவன். தந்தை தருமூடல் அழியும்; ஆசார்யன் அளிக்கும் மெய்யுணர்வு அழியாது.
அத்தகைய ஆசாரியனாயிருப்பவனும் திரு மகள் கேள்வனே; நமது குரு பரம்பரையில் அவனே முதலாசாரியனாய் விளங்குகிறான்.-அவனுக்கு வேறொரு குரு இல்லை. அத்தகையான் தனக்கு
அறிவுரை கூறும் குரு ஒருவனைப் பெற நெடுங்காலமாக அவாவி வந்தனன், அவ்வவா மணவாளமாமுனிகளைக் குருவாகப் பெறும் வாய்ப்பினால் நிறைவேறியது. ஆதி குரு மணவாளமாமுனிகளுடைய சீடனானான். எல்லாம் இயல்பாக அறிபவன் ஆதி குரு ,
அவனே மா முனிகளைக் குருவாய்ப் பெற விரும்பினால் மாமுனிகளின் மதி நுட்பத்தை நாம் என்னென்பது!
மணவாளமா முனிகளிடமே அஸாரமானவைகளை நீக்கி ஸார தம மந்த்ர ரத்நார்த்தமான திருவாய்மொழியின் வியாக்யான மான ஈடு என்னும் திவ்ய சாஸ்திரத்தை ஒராண்டு முழுதும் விழுமிய வேட்கையுடன் அரங்கள் கோட்டான். ‘*தத்தேரங்கீ நிஜமபிபதம் தேசிகா தேச காங்க்ஷ” என்கிறபடி அரங்கன் குரு வாக்கை மறுக்க கிலாதவன், கண்ணனைப் போல் படித்ததாகப் பேராக்கிக் கொள்ளாமல் கேட்டறிந்து ரஸிக்கும் சிஷ்யனாய்ப் பேரின்பம் கண்டனன் அரங்கன். அர்ச்சை வடிவினனாய்க் கேட்கும் அரங்கன் தன் ஈஸ்வரத் தன்மையை மறைத்து வடிகட்டின சீடத் தன்மை வாய்ந்தனனாய் ஈடு கேட்பதில் மிக்க ஈடுபாடு கொண்டான்-
ஈஸ்வரத்தன்மை விஞ்சிநின்ற ஸாந்தீபநீ சிஷ்யன் கண்ணன் பண்டே இறந்து போன குருவின் மகனை உயிர்ப்பித்து குரு தக்ஷிணை வழங்கினான். ஈஸ்வரத் தன்மை மறைந்த சிஷ்யத் தன்மை விஞ்சி நின்ற மா முனிவரின் சிஷ்யனாக அரங்கனோ ‘ஸ்ரீசைலேச தயா பாத்ரம்’ என்று தொடங்கும் தனியனை ஸமர்ப்பிப்பதன்றி வேறு குரு தக்ஷிணை தர வழியின்றி நிற்கின்றான். எம்பெருமானார் தனியனான யோ நித்யமச்புத’ என்று தொடங்கும் ஸ்லோகம் போல் பெரிதாக அமைத்திலது மாமுனிகள் தனியன். உவகையால் உள்ளம் உடை குலைப் பட்டிருக்கிற அரங்கனுக்கு ஸ்லோகம் சிறிதாகவே அமைந்தது.–
வஸிஷ்ட்டரும் ஸாந்தீபிநீ யும் அவதார நிலையில் ராமனுக்கும் கண்ணனுக்கும் ஆசார்யராயிருந்தனர். மாமுனிகளோ அர்ச்சை நிலையில் ஆசார்யராய் வீறு பெற்று இருக்கிறார் -. ஆழ்வார் ஆசார்யர்கள் அர்ச்சை நிலையில் ஆசார்யராய் விளங்கினாலும் மாமுனிகளுக்கு உள்ள ஏற்றமவர்களுக்கும் இல்லை, நம்மாழ்வார் பல காலும் அர்ச்சாவதார பரமான திருவாய்மொழியில் உபதேசிப்பதும் ஈச்வரனிடத்தில் சிஷ்ய லக்ஷணம் அமைந்திருப்பதும் ஆசார்ய ஹ்ருதயத்தில் நன்கு காட்டப்பட்டுள்ளன. ஆண்டாள் கண்ணனை எழுப்பி“உனக்கே நாமாட்செய்வோம்” என்று கற்பித்திருக்கிறாள் – ஆயினும் மாமுனிகள் போலத் தொடர்ந்து ஒரு நூலை விரித்துரைத்து அவர்கள் கற்பித்திலர் என்பது கருத்தக்கது, திருமங்கை மன்னன் ஒலிமிக்க பாடலை அவரிடமே கற்க விரும்பினான் எம்பெருமான்.
நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே ”’ என்று கற்பிக்கத் திருமங்கை மன்னனும் முற்படுகிறார்,
ஆழ்வார்களோடு ஒரே கோவையாகக், கருதப்படுகிறவர் எம்பெருமானார். அவரிடம் பலகால் சிஷ்யனாகி யிருக்கிறான்-எம்பெருமான், வட வேங்கடவன் வடமொழி வேதாந்தத்தைச்
சுருக்கமாக ஸ்ரீபாஷ்யகாரரிடம் கேட்டான். அவ்வுபதேசமே -“வேதார்த்த ஹங்க்ரஹம்’? என்னும் நூலாய் விளங்குகிறது.-உபதேசித்த ஸ்ரீபாஷ்யகாரர் இன்னும் ஞாந முத்ரைக் கையுடன் விளங்குவதை நாம் திருமலையிலே ஸேவிக்கலாம். சங்காழி அளிக்கப் பெற்று அப்பன் ஸ்ரீபாஷ்யகாரருக்குச் சிஷ்யனாய். உய்வு பெற்றதும் உலகறிந்ததே. திருக்குறுங்குடி நம்பி ரஹஸ்ய உபதேசம் பெற்று ஸ்ரீராமாநுஜ சிஷ்யராகி “ஸ்ரீவைஷ்ணவ நம்பி’*என்று பேர் பெற்றதும் ப்ரஸித்தம்–
வட வேங்கடவன் வடமொழி மறைப் பொருளை ஸ்ரீபாஷ்யகாரரிடம் ஸங்க்ரஹமாகத் தான் கேட்டான். தென்னரங்கனோ தென் மொழி மறை முழுதும் விரித்துரைக்கத் தினவு தீரும்படி. ஈடு முப்பத்தாறாயிரப் பெருக்கரிடம் கேட்டான். ஸ்ரீரங்கநாதன் யதி நாதனோடு ஸம்பாஷணை செய்து கொண்டிருந்தது ஐதிஹ்யத்தாலும் கத்யத்தாலும் தெரிகிறது. திருவாய்மொழியின் வளர்ப்புத் தாயான அந்த யதி நாதனிடம் ஸ்ரீரங்கநாதன் தென்மொழி மறைப் பொருளைக் கேட்டிருக்கலாம். கேட்டிலன், ஏன்? த்ரமிடோபநிஷத் பாஷ்யம் எனப்படும் ஈடு அக் காலத்தில் இல்லையே! நம்பிள்ளையிடம் ஈடு கேட்டிருக்கலாம், கேட்டிலன்: காரணம், பெருக்கிச் சொல்லி விளக்கும் வாக்குப் படைத்த மணவாளமாமுனிகள் திருவாயாலே விளக்கமுறக் கேட்டு மகிழ வேண்டும் என்கிற பேரவா தான். மணவாளமாமுனிகளால் தான் அரங்கனது நெடுநாளைய ஆசை நிறைவேறியது,வடக்கே ஸ்ரீபெரும்பூதாரில் வடமொழி வேதாந்தத்தை வளர்க்க அவதரித்த ஸ்ரீபாஷ்யகாரர் தெற்கே தென் மொழி மறை தோன்றிய ஆழ்வார் திருநகரியிலேயே அதனைப் பரப்ப மீண்டும் மாமுனிகளாய் அவதரித்ததும், மாமுனிகளுக்குத் தென் மொழி மறையிலேயே கண் செலுத்துமாறு ஆசார்ய நியமநம் ஆனதும், ஸர்வஜ்ஞனும் ஸத்ய ஸங்கற்பனுமான அரங்கனது ஆசை நிறை வேறுவதற்காகவே அமைந்தன என்பதுணரத்தக்கது. ஆக அரங்கன் ஈடு கேட்டதால் வந்த பெருமை வேறெந்த ஆசாரியருக்கும் இல்லாத தனிப் பெருமையாக மாமுனிகளுக்கு அமைந்தது என்பதல் ஐயமில்லை.
திருவாய்மொழி மதிளரங்கரையே ஓதுவதாக தாம் கருதுகிறோம்.-மதுரகலியாழ்வார் நேரே நம்மாழ்வாரிடமே திருவாய்மொழி கேட்டார்- அவருடைய நுண்ணறிவுக்கு அதன் உட்பொருள் புலனாயிற்று. தம் நெஞ்சில் உட்பொருள் நிற்கும்படி நம்மாழ்வார் தமக்கு அருளிச் செய்ததாக அவர் கூறிக் கொள்கிறார். “வேதத்தின் உட் பொருள் நிற்கப் பாடி என்னெஞ்சுள் நிறுத்தினன்’* என்பது
அவர் திருவாக்கு. வேதத்தின் ‘ பொருள் எம்பெருமான்; “வேதப் பொருளே என் வேங்கடவா’! என்று காண்க. உட்பொருள். பாகவதர். பாகவதருக்கு ஆட்படும் மனப் பான்மையை நம்மாழ்வார் அ௫ளினார் என்றபடி, அவர் ஆட்பட்ட பாகவதர் நம்மாழ்வரே. திருவாய் மொழியின் உட்பொருள் மதுரகவியாருக்கு நம்மாழ்வாராயினர். ‘தேவுமற்றறியேன்” என்று நம்மாழ்வாரைத் தவிர வேறு தெய்வமில்லை என்று அவர் முடிவு கட்டினார். திருவாய் மொழியை ஓதி முடிக்கும் போதெல்லாம் -ஆழ்வார் திருவடிகளே சரணம்” என்று தான் முடிவு கட்டினதைச் சொல்லி முடிப்பது வாடிக்கை யாயிற்று, பின்னர் நாதமுனிகள் நம்மாழ்வாரை ஸாக்ஷாத்கரித்து த்ரமிடோபநிஷத்தைப் பெற்று அதனைத் தன் ஸந்தானத்துக்கும் உபகரித்து மதுரசவிகளைப் போலவே “ஆழ்வார். திருவடிகளே சரணம்” என்று சொல்லி முடிப்பதை வாடிக்கை யாக்கினார்,
உரை நூல் இடுவித்தும் காலஷேப கோஷ்ட்டிகளை நடத்தியும் நடப்பித்தும் திருவாய் மொழியை வளர்த்த எம்பெருமானார் காலத்திலே ‘ பெரியோர் அவரை நம்மாழ்வார் திருவடியாகக்
கொண்டு நம்மாழ்வார் திருவடி உத்தேச்ய மன்றோ என்னும் கருத்துடன் ஸ்ரீராமாநுஜனையும் வேதத்தின் உட்பொருளாக ஏற்றனர். ஏற்கவே முன்னவர் கட்டின முடிவுடன் தங்கள்
முடிவையும் சேர்த்து “ஆழ்வார் திருவடிகளே சரணம்-“எம்பெருமானார் திருவடிகளே சரணம்,” எனறு அதன் மொழி மறையை ஒது முடிக்கும்போதெல்லாம் அவர்கள் அநுஸந்திப்பாராயினர், தற் காலத்தில் “ஜீயர் திருவடிகளே சரணம்” என்பதையும் சேர்த்து அநுஸந்தித்து முடிப்பது ஸம்ரதாயமா யிருக்கிறது-இந்த ஸம்ப்ரதாயம் அரங்கன் திருவுள்ளத்துக்கு மிகவும் ஒத்தது என்பது அவன் தனியன் ஸமர்ப்பித்துத் தென் மொழி மறை ஓதும் போதல்லாம் முன்னும் பின்னும் அதனை அநுஸந்திக்க வேண்டு மென்று திவ்யாஜ்ஜை பிறப்பிப்த்ததனால் நன்கு விளங்குகிறது. ஜீயர் என்பது இங்கே மணவாள மாமுனிகளை, -பெரியஜீயர்” என்று வழங்குவது முண்டு.
ஆழ்வார், எம்பெருமாளனார், ஜீயர், என்று மூன்று திருநாமங்களைச் குறிப்பிட்டாலும் மூவரிலும் வேறுபாடின்மையின் உட்பொருள் மாறுபடவில்லை . திருவடியாதலின் நம்மாழ்வாரினும் எம்பெருமானார் வேறுபடாமலிருப்பதும், எம்பெருமானார் எடுத்த புநரவதாரமே ஜீயராதலின் அவரும் வேறுபடாம லிருப்பதும் காண்க. ஆக இம் மூவரையும் மாமுனிகள் காலத்திலுள்ள பெரியோர் உட்பொருளாகக் கருதி “ஆழ்வார் திருவடிகளே சரணம்,எம்பெருமானார் திருவடிகேளே சரணம், ஜீயர் திருவடிகனே சரணம்” என்று ஒதி முடிப்பது ஏற்புடையதே என்க,-இம் மூவரை மட்டும் உட்பொருளான பாகவதர் என்று பெரியோர் விசேடித்துக் கொண்டதற்குக் காரணம் இவர்கள் மூவரும் முறையே தமிழ்மறைக்கு ஈன்ற தாயாகவும், வளர்ப்புத் தாயாகவும் பெருக்கி வாழ்வளிக்கும் வள்ளாலகவும் விளங்கியதே என்க,மேலும் பகவத், பாகவத, ஆசார்யர்கள் மூவரும வேதப் பொருளாவர். பகவான் புறப் பொருள். ஏனையோர் உட் பொருள்கள்,அவர்களுள் ஆசார்யனை உட் பொருளாகக் கொண்டால் ‘*குருரேவ பரம் ப்ரஹ்ம:” என்றபடி அவர் பகவானாகவும், அவர் இயல்பினில் பாகவதராகவும் இருத்தலின்; முப் பொருளாகவும் இருத்தல் ஆசார்யனுக்கே அமைகிறது. ஏனைய ஆசார்யர்கள் இம் மூவருமே யாதலின் ரஸிகப் பெருமக்கள் இம் மூவரையும் வேதத்தின் உட்பொருளாகக் கொண்டது மிகவு மேற்புடையா தயிற்று.-திருவாய்மொழியில் முதலில் தோன்றும் புறப்பொருள் மதிளரங்க மணவாளன், முடிவெல்லையாய்த் தோன்றும் உட் பொருள் கோயில் மணவாள மாமுனிகள், அரங்கனுடைய உலகமளந்த பொன்னடி புறப் பொருளின் ஸாரம். மாமுனிகளின்
**பொன்னடியாம் செங்கமலம்” உட் பொருளின் ஸாரம் –ஸாரமான இவ்விரு பொருள்களும் நெஞ்சில் இருக்கும்படி ஈடு முப்பத்தாறாயிரத்தைப் பெருக்கி மா முனிகள் உரைப் பதைச் செவிமடுத்த அரங்கன் அரும் பொருளை இங்ஙன் எளிமைப்படுத்துவதே! என்று நாவன்மையை வியந்து, தக்க கைம்மாறு காணகிலாது சாத்து முறையின் போது நன்றி யறிவுடன் *ஸ்ரீசைலேச”த் தனியனாம் மந்த்ர ரத்நத்தை ஸமர்ப்பித்ததாக மாமுனிகள் காலத்தவரான எறும்பி யப்பாவே ௮ருளிச் செய்கிறார்–
ஆத்மாநாத்ம ப்ரமிதி விரஹாத் பத் யுரத் யந்த தூர:
கோரே தாபத்ரிதயகுஹரே கூர்ணமாநோ ஜநோயம்,
பாதச் சாயாம் வரவர முநே! ப்ராபிதோ யத் ப்ரஸாதாத்
தஸ்மை தேயம் ததிஹ கிமிவ ஸ்ரீநிதேர்வர்த்ததே தே.(வரவரமுநி சதகம்-63)
(தேஹாத்ம விவேகம் கூட இல்லாமையால் எம்பெருமானுக்கு நெடுந் தூரத்திலுள்ளவரும், கோரமான தாப த்ரயப் படுகுழியிற் சுழலுகின்றவருமான என்னைப் போன்ற மக்கள் எவருடைய அனுக்ரஹத்தால் திருவடி நிழலிற் சேர்க்கப்பட்டனரோ, அத்தகைய தேவரீருக்குத் திருமகள் கேள்வனும் இவ் விஷயத்தில் வழங்கலாம்படியான வேறு கைம்மாறு யாது உள்ளது? என்னைப் போன்றவரையும் திருவடி நிழலிற் சேர்த்து வைத்த பேருதவிக்குத் தனியன் ஸமர்ப்பித்தது தவிரத் திருமாலுக்கும் வேறு கைம்மாறு செய்ய இயலாதென்பது கருத்து.)
இந்த ஸ்லோகத்தில் “பாதச் சாயா” என்னுமிடத்தில் பற்றப்படும் திருவடி என்னும் உபாயமும், நிழல் என்று ஒதுங்கும் இடமாகிய ௨பேயமும் தோன்றுகின்றன. அரங்கன் திருவடியே உபாயம்; நிழல் தந்து தாபந் தவிர்க்கும் அவ்வடியே உபேயம் என் றதாயிற்று, இது திருவாய்மொழியின் புறப்பொருளாக முதலிற் புகட்டப் படுவதாகும். இதே பாதச் சாயா’ என்பது பின்னர்ப் புகட்டப்படும் உட்பொருளின் முடிவு நிலத்தையும் காட்ட வற்றாயுள்ளது. திருவாய் மொழியின் உட்பொருளின் முடிவு நிலமான மணவாள மாழனிகளையே குறிப்பதாகவும் நுண்ணறிவுடையோர் கொள்ளும்படி இது அமைந்துள்ளது. “*விஷ்ணு: சேஷீ ததீய। சுப குண நிலயோ விக்ரஹ: ஸ்ரீசடாரி;; ஸ்ரீமாந் ராமாநுஜார்ய:
பத கமல யுகம்பாதி ரம்யம் ததீயம்?”’ என்றபடி எம்பெருமானது நற் குணம் நிரம்பிய திருமேனியாக நம்மாழ்வாரையும், அவருடைய இணைத் தாமரையடியாக ராமாநுஜனையும் கொள்ளும்
மரபிலே அரங்கன் திருவடியாகிறார் ராமாநுஜன், அவர் திறத்து அத்யந்த பாரதந்த்ரியத்தை அநுஸந்திப்பதனால் நிழல் போன்றவரான யதீந்த்ர ப்ரவணர் திருவடி. நிழலாகிறார் ஆகலே, அடிப்படையான தேஹாத்ம விவேகமே யில்லாத பாமரரையும் பேற்றின் எல்லை நிலமான தன்னையே [மணவாள மாமுனிகளையே) சேர்ப்பிக்கும் வித்தகத்தைக் கண்டு இவ்வரிய பொருளை ௨லகம் மறவாது என்றும் நெஞ்சில் நிலை நிறுத்தற்கும், தன் நன்றியை வெளிப்படுத்தற்கும் ஸ்ரீசைலேசத் தனியன் வெளியிட்டுத் தமிழ் மறைத் தொடக்கத்திலும் முடிவிலும் அதனை யாவரும் எங்கும் அநுஸந்திக்க வேண்டுமெனறு ஸ்ரீரங்கநாதன் கட்டளை யிட்டருளினான்.
வேதப் பொருள் ஹரியே என்பது தோன்ற முதலிலு மிறுதியிலும் ஹரி: என்று வேதமோதும் போது சொல்வது போலத் தமிழ் மறை ஓதும் போது அதன் உட்பொருளின் மூடிவு நிலமான
ரம்ய ஜாமாத்ரு முனிவரை முதலிலும் இறுதியிலும் தான் ஸமர்ப்பித்த தனியனால் அநுஸந்திக்கு வேண்டும் என்பது ரங்கநாதன் திருவாணை. வடமொழி மறை எல்லாருக்கும் பொதுவானது.ஆதலின் உட்பொருளைக் கூறாது புறப்பொருளாகிய ஹரியையே முதலிலும் இறுதியிலும் கூறுகிறோம். உட்பொருளை . ஹரி ‘சப்தத்திலும் ப்ரணவத்திலும் பரம ஸாத்விகர்கள் அநுஸந்திப்பர், தென் மொழி மறையோ பரம ஸாத்விகர்க்கே ஏற்பட்டதாதலின் ரம்யஜா மாத்ரு முனியாகிய உட்பொருளையே அநுஸந்திக்க வேண்டு மென்பது ஸ்ரீரங்கராஜ திவ்யாஜ்ஞை. ஸம்ஸார மோக்ஷ ஹேதுவான ஹரியை அநுஸந்திப்பது இம்மை மறுமை வீடுகளைப் பற்றிக் கலந்து பேசும் வடமொழி மறைக்கு ஏற்கும். வடி கட்டின வீட்டின்பம் பேசும் தென்மொழி மறைக்கு மோக்ஷ ஹேதுவான ரம்ய ஜாமாத்ரு முனிவரை வந்திப்பதே பொருந்தும்.
மணவாள மாமுனிகளே உட்பொருள் என்பதைத் தாமே அவர் வெளிப்படையாகக் கூறா விடினும் அவரிடம் காலக்ஷேபம் கேட்ட பெரியோர் இந்நுண் பொருளை உணர்த்திருந்தனர்,தமக்குள் அந்த ரஹஸ்யத்தை அவர்கள் பேணிப் பாதுகாத்தனர்,கருணை வாய்ந்த திருவரங்கன் ஓராண்டு கேட்டு வந்து இந்த உண்மையான ஒண் பொருளைக் கோஷ்ட்டியில் அந்வயிக்காதவர்களும் பிற்பட்டவர்களும் இழக்க வொண்ணாதென்று தான் அருளிச் செய்த தனியனை முதலிலும் முடிவிலும் சொல்லுமாறு தென் மொழி மறையை அநுஸந்திப்பவர்களுக்குக் கட்டளை யிட்டு இவ் வொண் பொருளை நாமும் ௨ய்த்துணருமாறு செய்திருக்கிறான். அந்தக் கட்டளையின் பலனே நாம் இன்று முடிவுப் பொருளாய் அநுஸந்திக்கும் “ஜீயர் திருவடிகளே சரணம்” என்பது,
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
Leave a Reply