ஸ்ரீ மணவாள மா முனிகள்‌ விஷயமான ஸ்தோத்ரங்கள்‌–

ஸ்ரீ சைல அஷ்டகம் -ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள்-

ஸ்ரீ சைல தனியன் அவதார பெருமை –
ஸ்ரீ ஆனி திரு மூலம் -ஸ்ரீ சைல தனியன் அவதார திரு நாள் –

ஸ்ரீ எறும்பி அப்பா -தனியன் –

ஸுவ்ம்ய ஜா மாத்ரு யோகீந்த்ர சரணம் புஜ ஷட் பதம்
தேவ ராஜ குரும் வந்தே திவ்ய ஞான ப்ரதம் ஸூபம்

சேஷ ஸ்ரீ மான் அஜனி ஹி புரா ஸுவ்ம்யா ஜாமாத்ரு யோகீ
போகீ பூதஸ்த தனு பகவான் ராகவஸ் யனு ஜன்மா
பூத்வா பவ்யோ வர வர முனிர் பூயஸா பாஸமான
ரஷத்வஸ்மான் ரகு குல பதே ஆஸ்திதோ பத்ர பீடம் –1-

போகீந்த்ர சாயினம் -அனந்த பத்ம நாதர் ஸ்வாதி திருநாள் கீர்த்தனை
பூதஸ்த தனு-பூத பூரி அவதார ராமானுஜர்
பகவான் ராகவஸ் யனு ஜன்மா -இளைய பெருமாள்
பத்ர பீடம்-மங்களா சாசன பதம் -ஆதி சேஷ பீடம் -ஸூ சகம் -இங்கு ஈடு கால ஷேபம் சாதிக்க பீடம்

———–

ஸ்ரோதும் திராவிட வேத பூரி விவ்ருதம் ஸுவ்ம்யோ பயந்துர் முநே
உத கண்டாஸ்தி மமை ந மாந யததம் தார்ஷ்யா ஸ்ரயம் மண்டபம்
ஆவிஸ் யார்ச்சகம் ஊசிவாநிதி முதா நிஸ் சேஷ லோகான்வித
ரங்கீ வத்ஸரம் ஏகம் ஏவம் அஸ்ருனோத் வ்யக்தம் யதோக்த க்ரமாத் -2-

முத -மகிழ்ந்து -இவர் மகிழ்ந்து கூப்பிட -அவரும் மகிழ்ந்து அவதாரம்
யதோக்த க்ரமாத்-ஆச்சார்ய சிஷ்ய லக்ஷணங்கள் பூர்ணமாக நிறைந்து –

————

ஸ்ரீ பூப்யாம் ரங்க நாதே சடஜித் உபநிஷத் வ்யாக்ரியாம் ஸ்ரோது காமே
சேஷஸ் சந்தோக்ஷ யிஷ்யன் வர வர முனி தாம் ப்ராப்யயோ வர்த்ததே அக்ரே
காஷாய ஸ்ரீ துளஸ் யம்புஜ மணி ஸூஸிகா யஜ்ஞ ஸூத்ர த்ரி தண்டை
பாந்தம் ஸூப்ரோர்த்வ புண்ட்ரம் ஸ்மர ஹ்ருதயம் சதா கோச முத்ராந்த ஹஸ்தம் –3-

ஸ்ரீ பூப்யாம் ரங்க நாதே-உபய தேவிகள் உடன் அரங்கன்
ஸ்ரீ துளஸ் யம்புஜ மணி-ஸ்ரீ துளஸீ தாமரை மணிமாலைகள் அணிந்து –

————

கிருபயா பரயாச ரெங்கராட் மஹிமானம் மஹதாம் பிரகாஷாயன்
லுலுபே ஸ்வயமேவ சேதஸா வர யோகி ப்ரவரஸ்ய சிஷ்யதாம் -4-

மஹத்வம் பிரகாசப்படுத்திய நிகழ்வு -தம்முடையவும் மா முனிகளுடையவும் அன்றோ இது –
லுலுபே-கிளர்ச்சி -வெளிப்படுத்தி –

————–

ஸமாப்தவ் க்ரந்தஸ்ய ப்ரதித விவித உபாய நசயே
பரம் சஜ்ஜி பூதே வர வர முநேர் அங்க்ரி சவிதே
ஹடாத் பாலக கஸ்சித் குத இதி நிரஸ்தோப் யுபகத
ஜகவ் ரெங்கே ஸாக்ய பரிணத சதுர்ஹாய ந இதம் –5-

ஜகவ்-வந்ததும் -நாம சங்கீர்த்தனம் செய்வதையும் காட்டும்
சதுர்ஹாய-நான்கு வயஸு பாலகன்

——————–

ஸ்ரீ மான் ரெங்கேஸ்வரோ யத் வகுல வர வஸோ பாஷ்ய ஸாரார்த்த ஜாதம்
ஸ்ருத்வா ஸுவ்ம்யோ பயந்தா முனி வர சரணே ஸாத்ர பாவம் ப்ரபந்ந
ஸ்ரீ சைலே ஸேதி பத்யம் ககபதி நிலேயே மண்டபே தத் ஸமாப்தவ்
உக்த்வாஸ் அத்யே தவ்யமே தன் நிகில நிஜ க்ருஹே ஸ்வாதி ஸத் தத் ததாதவ் –6-

ஸாத்ர பாவம்-ஸிஷ்ய பாவம் –
உக்த்வாஸ் அத்யே தவ்யம் ஏதன் -முதல் முதலில் இத்தையே சொல்ல வேண்டும்
நிகில நிஜ க்ருஹே-அனைத்து க்ருஹங்களிலும் திவ்ய தேசங்களிலும்

————–

வேதா தவ் பூர்வம் உக்த்வா ஹரி ரிதி ஸூ ஜநோ வக்தி பஸ் ஸாத்ய தோமித் யேவம்
வக்தவ்யம் ஏதத் வகுள தர வச அநுஸ்ர வாரம்ப காலே
ஸ்ரீ சைலே ஸேதி பத்யம் ப்ரதம மத ஸதாம் ஸம் ப்ரதாய ஏக நிஷ்டை
லஷ்மீ நாதேதி பத்யம் ஸ்வயம் இதி பகவான் ஆதி ஸத் ரெங்க நாத –7-

ஆதி ஸத்-ஆஜ்ஜை-

——————

யத் வத் வக்தும் ந யுக்தம் ப்ரணவ ஹரி பதாப் யந்த்ர அந்யத் பதம் தத்
கிருஷ்னே த்யே தத் கதாசின் முனி சத வசநைர் வைதிகைர் ப்ரஹ்ம நிஷ்டை
தத் வத் ரெங்கேச பக்தைர் சம தம நியதை ஸாதுபி தத்வ வித்பி
வக்தும் யுக்தம் ந மத்யே சபதி நியதை யோரேதையோ பத்ம மன்யத் –8-

ந மத்யே-ஹரி பிரணவம் நடுவில் வேறே ஒன்றும் சொல்லாதது போல்
ஸ்ரீ சைல பாத்யம் லஷ்மி நாத பாத்யம் நடுவில் வேறே ஒன்றுமே சொல்லக் கூடாது
என்பதும் நம் பெருமாள் ஆஜ்ஜை

—————-

பல ஸ்ருதி –

ஸடரிபு ரேக ஏவ கமலா பதி திவ்ய கவி
மதுர கவிர் யதா ச சடஜிந் முனி முக்ய கவி
யதி குல புங்க வஸ்ய புவி ரெங்க ஸூதா கவிராட்
வர வர யோகிநோ வரதராஜ கவியஸ் ச ததா

—————–

வந்தே தம் தேவராஜம் வர வர முனிம் ஹ்ருதயம் முத
ஆஸ்ரிதானாம் பிரபத்யே ஸர்வத்ர ஸதா

ஸ்ரீ எறும்பி அப்பா திருவடிகளை ஸதா காலமும் பற்றி ஸ்ரீ மா முனிகள் சம்பந்திகளாக உஜ்ஜீவிப்போம்

——————————————–

ஸ்ரீ பரவாதிகேசரியார்‌ அருளிய ஸ்ரீ சைல வைபவம்‌

கூறுகேன்‌ உலகீரே கும்குமத் தோளரங்கேசர்‌ மாறன்‌ மறைப்பொருள்‌ கேட்க மணவாள மாமுனியை
ஏறுமணை தனிலிருத்தி இருநிலத்தில்‌ தாமிருந்து வீறுடனே செவி சாத்தி விரையடி பூசனை யாற்றி, –1-

ஏறுமணை–உயர்ந்த ஆஸனம்‌
இருநிலத்தில்‌ -பூமியில்‌
விரையடி-திருவடிகளை
பூசனை யாற்றி-தொழுது

ஆறு இரண்டு புறஞ்சூழ அரங்க முதல்‌ நூற்றெட்டும்‌
கூறியசீர்‌ சயிலத்தைக்‌ கொண்டாடி உரைக்க வெனா
ஊறிய தேன்‌ பெருக்கெள்ன உன்னிஅதை உகந்துரைத்தான்‌
சேறுவளர்‌ கமலை மைந்தன்‌ சிந்தை மகிழ்ந்து ஒருப்பட்டே.—2–

ஆறு இரண்டு–இரண்டு காவேரிகள்‌
அரங்க முதல்‌ நூற்றெட்டும்‌ -திருவரங்கம்‌ முதலான 108 திருப்பதிகள்‌
சயிலத்தைக்‌ கொண்டாடி-ஸ்ரீ சைலேச …என்னும்‌ தனியன்‌
உன்னி-எண்ணி
மைந்தன்‌ -அன்பன்‌ (கமலை மைந்தன்‌ -லஷ்மீ காத்நன்‌; சரிய:பதி!
ஒருப்பட்டே–ஒப்புக்‌ கொண்டு,

பட்டர் பிரான்‌ முதலாய பதின்மர் கலை பழிச்சலிலும்‌
சிட்டார்களாய்த்‌ தினந் தோறும்‌ திருமணிடு வேளையிலும்‌
இட்டமுற உணும் பொழுதத்து ஓண்கரநீர்‌ ஏற்கையினும்‌
அட்டதிக்கும்‌ விளங்குரைத்தார்‌ ஆரியர்கள் அனைவருமே–3

பதின்மர்கலை -ஆழ்வார்கள்‌ பதின்மரும்‌ பாடியுள்ள புகழ் மாலைகள்‌
ஓண் கர நீர்‌ –பரிசேஷணத்தில் ஆசமநம்‌
ஆரியர்கள்னைவருமே, -ஆசாரியர்கள்‌

ஆரியர்கள்‌ கொண்டாடி ஆசரித்த தனியனைத் தான்‌
பேரியலும்‌ தொண்டர் குழாம்‌ பெரும் பேறாக்‌ கொண்டனரால்‌
சீரியராய்‌ வாழ வெண்ணில்‌ செக தலத்தீர்‌ கற்றுணர்மின்‌
தாரியலும்‌ அரங்கருக்கும்‌ தமிழ் மறைக்கும்‌ மணமாமே
–4–தார்‌-பூமாலை

மணவாளமாமுனியை வழுத்துறவோர்‌ பயன்‌ பெறுவர்‌
குணமாகக்‌ கொண்மின்‌ இதைக்‌ கொடும் பிறவிப்‌ பிணி அகல்வீர்‌
பணவாளராவிவராம்‌ பகைத்தாரே யுய்தலிலர்‌
மணமுடைய மந்திரமா மதிக் கொள்ளீர்‌ தனியனையே–5
-(மணவாளராவிவராம்‌ -பாடபேதம்_
வழுத்துறவோர்‌ -துதிப்பவர்கள்‌
பணவாள்‌ அரா–(மணவாளராவிவராம்‌ -பாடபேதம்)-பணா மணிகளுடைய ஆதி சேஷன்‌;

தனியனென்று பேர்‌ சாற்றித்‌ தண்ணரங்கர்‌ முன்னர்‌
இனிய திருப் பவளத்தாலே –முனிவரானார்‌
மாறன்மறை முப்பத்தாறாயிரத்தின்‌ மாண் பொருளைக்‌
கூற உபதேசித்தார்‌ கொண்டு–6-

மா முனிவர்‌–சடகோப மா முனிகள்‌
ஈடுமுப்பத்தாறாயிரம்‌
மாண் பொருளை-உயர்ந்த அர்த்தங்களை

தேசமெங்கும்‌ இது திருப்பதிகள்‌ தோறுரைக்க
நேசமுற அரங்கர்‌ நேமித்தார்‌–ஏசுமவர்‌
பாதகராய்‌ எரிவாய்‌ பாழ் நகரில்‌ துய்ப்பர்‌ இன்னல்‌
வேதனார்‌ உள்ள மட்டும்‌ எய்த்து –7-

துய்ப்பர்‌ இன்னல்‌–இன்னல்‌ படுவர்‌
வேதனார்‌-பிரம்மா
எய்த்து-வருந்தி

எய்யத்‌ துணிய இராவணியைக்‌ கொன்றவன்‌ காண்‌
செய்ய நெறி விளங்கும்‌ சேஷனவன்‌–வையக்‌
தனை வளர்க்குமாறு வர யோகி தானாய்‌
வினையறுத்து வீடருளும்‌ வேந்து–8-

இராவணியைக்‌ கொன்றவன்‌–ராவணன்‌ பிள்ளையான இந்த்தரஜித்தைக்‌ கொன்ற லக்ஷ்மணன்‌
வினையறுத்து–பாபங்களைப் போக்கி
வீடருளும்‌–மோக்ஷம்‌ தரும்‌
வேந்து–முனிவர்‌ பெருமான்‌

வேந்தராய்‌ மண்ணாண்டு விண்ணேறலாம்‌ எளிதாய்‌
தோய்ந்த உறவாயிருக்கில்‌ தொல்லுலகீர்‌–ஒர்ந்துய்ய
ஏதிகொடு காலனிழந்து அமர்மேவான்‌ விண்ணோர்‌
நாதனும்‌ வந்தே வணங்கு நன்‌கு — 9–

விண்‌-பரமபதம்‌
ஏதிகொடு–ஆயுதம்‌
நாதன்‌-பரமபத நாதன்‌

வணங்கினர்‌ சீர் பெற்றார்‌ வரன்‌ முறையால்‌ வீடணர் போல்‌
இணங்கினார்‌ ஒரொருவர்‌ இரு நிலத்தில்‌ சிறப்புற்றார்‌
பிணங்கினார்‌ பேய்ப் பிறவிப்‌ பேதையர்‌ கடமைக் கண்டே
உணங்கினார்‌ தாமதராய்‌ உட்சனந்தார்‌ தென்றவரே–10-

வீடணர்–விபிஷணன்‌
பிணங்கினார்‌ –மாறுபடுபவர்‌
பேதையர்‌ -அறிவிலிகள்‌
உணங்கினார்‌ -காய்கின்றவன்‌
தாமதராய்‌–மந்தர்‌

தென் கலையாம்‌ தமிழ் வேதச்‌ சீர்சைலத்‌ தனியனெனும்‌
நன்கலையும்‌ உள் கசிந்து நவிற்று பெருந்தகை மாந்தர்‌
மின் கலையும்‌ புரி நூலும்‌ மேனோக்கு புண்டரமும்‌
தென் கலையும்‌ வட கலையும்‌ திகழ் நாவர்‌ ஆகுவரே–11-

தென் கலை–அழகிய கலை
மின்‌-ப்ரகாசம்‌
மேனோக்கு புண்டரமும்‌ –ஊர்த்வ புண்ட்ரம்‌-திருமண்‌ காப்பு

ஆகுகலென்‌ இனி எனக்கோர்‌ ஆராவமுதாய்‌ என்‌
சோகமற உளத்தடத்து துலங்கு வர வர யோகி
சேகறு செம்மலர்த் தாளும்‌ சீர்‌ சைலத் தனியனும் இன்று
ஓகையுறப்‌ பெற்றனெனால்‌ ஒலி கடல்‌ தாரணியீரே. –12-

சேகறு-துயாறு
ஓகை–மகழ்ச்சி

தாரணியோர்‌ வாழ வெண்ணித்‌ தானே திரு வநந்தன்‌
பேரணியும்‌ குருகை நகர்‌ பிறங்க நனிப்‌ பேரருளால்‌
சீரணியும்‌ மணவாள மா முனியாய்ச்‌ செனித்தனால்‌
தாரணியும்‌ அரங்கருக்குத்‌ தமிழ் மறைத்‌ தேசிகனெனவே–13–

பிறங்க–விளங்க
செனித்தனன் -அவதரித்தனன்‌

தமிழ் மறை ஓதுவரேல்‌ தனியனது மற்றில்லை
திமிரமற மெய்ஞ் ஞானச்‌ செழுஞ்சுடர் சேர்‌ மனமுடையீர்‌
அமிழாமல்‌ சமுசாரத்து ஆழ் கடலைக்‌ கடத்தி ஒரு
நிமிடத்தில்‌ நித்தியராய்‌ நிறுத்தும்‌ பேரின்பத்தே
–14-திமிரமற-மயர்வற-இருள் போக

பத்துத் திசைகளினும்‌ பண மணிகள்‌ சுடரெறிப்ப
முத்தி தரும்‌ அரங்கருக்கு மூவணையாய்‌ சூழ்ந்திலங்கும்‌
எத் திசையும்‌ பணிந்தேத்தும்‌ எம்‌ பெரிய முனியாகும்‌
அத்தனெழில்‌ வர யோகி ஆயிர வாய்‌ அரவரசே-
-15-அத்தனெழில்‌ வர யோகி–ஆசார்யனான அழகிய மணவாள மா முனிகள்‌

அரவேறு மேவி யறி துயில்‌ கொள்ளும்‌ அரங்க நகருரை
வர யோகி சீர்சைலத்தின்‌ பெருமாப் புகழ்‌ வைபவத்தை
விரகால்‌ இசை மறையோர்‌ திலகன்‌ தமிழ் வீறுடைய
பரவாதி கேசரி பாப் பதினைந்து பணித்தனனே
–15-யோக நித்‌திரையில்‌ ஆழ்ந்த திருவரங்கன்‌ அருளிச் செய்த,

ஸ்ரீ மணவாள முனிகள் வைபவம் —ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணா அருளிச் செய்த பாதாதி கேச மாலை -ஸ்ரீ மா முனிகள் விஷய ஸ்ரீ அமலனாதி பிரான் —

ஸ்ரீ ரெங்க நாச்சியார் -திருத்தாயார்
அழகு பொலிவு -திகழக் கிடந்தான் திரு நாவீறு உடைய பிரான் தாதர் அண்ணர் ஐயர் -திருத் தகப்பனார்
அழகிய மணவாளன் -சிக்கில் -கிடாரம் -தாய் மாமன் -க்ரஹத்தில் வாழ்ந்தாராம்
எம் ஐயன் இராமானுஜன் -திருக்குமாரர் –

எம் எம் பச்யதி எம் எம் ஸ்பர்சதி–அக்றிணை பொருள்களும் –
கிம் புன பாந்தவா ஜனகா -புளிய மரத்தை மோஷம் புக வைத்து அருளினார் –
பாகவதர் அபிமானத்தில் ஒதுங்கி மோஷம் பெறலாமே –
உடையவர் சரம காலத்தில் அருளிச் செய்த ஆறு வார்த்தைகளில் இறுதியானது –
அழகிய மணவாள நகர் -முத்தப்ப நகர் -பாண்டியன் சமர்ப்பித்த -நகர் –
அந்த பாண்டிய மன்னன் திரு மால் இரும் சோலை திருக்கோயில் புநர் நிர்மாணம் செய்தானாம் –
பட்டர் பிரான் ஜீயர் -கோவிந்த தாசர் -வடுக நம்பி பரம்பரை -என்பர் –

———————————————————————

போதச் சிவந்து பரிமளம் வீசிப் புதுக் கணித்த
சீதக் கமலத்தை நீரே ஏற ஓட்டிச் சிறந்து அடியேன்
ஏதத்தை மாற்று மணவாள யோகி இனிமை தரும்
பாதக் கமலங்கள் கண்டேன் எனக்குப் பயம் இல்லையே –1-

புதுக்கணித்த -அலங்கரித்த
செய்ய தாமரைத் தாளிணை வாழியே போல்

—-

வேழக் குருத்தின் அழகைப் பழித்து விரை மருவும்
வாழைப் பருவத்தின் ஆகாரம் கொண்டு வளம் புனைந்த
ஏழைக்கு இரங்கும் மணவாள யோகி இரு குறங்கைக்
கேழற்ற நெஞ்சில் வைப்பேற்கு ஒரு கோலமும் கேடில்லையே –2-

குறங்கு -தொடை
கேழற்ற-ஒப்பில்லாத

———–

தேனமர் மாலை மணவாள யோகி திரு மருங்கு
வீனமிலாத இளமையின் எழில் சகனம்
வானிலை உய்த்த துவராடை இன்று என் மனத்தை விட்டுத்
தான் அசலாமல் என்னை ஊழி காலமும் தாங்கியதே –3–

மருங்கு -இடை
சகனம்-தொடையின் உள் பாகம்
வான் -பெருமை
துவராடை -காவி யூட்டிய ஆடை

————

வந்திக்க வாழ்வித்து அருள் மணவாள முனி வடிவைச்
சிந்திக்கவும் அரிதாம் அழகாற்றில் திகழ் சுழி போல்
உந்திச் சுழி எனது உள்ளம் குறை கொண்டாயதென்றும்
சந்தித்தவர் கண்ணும் நெஞ்சும் கொள்ளா நிற்கும் தாம் இருந்தே –4–

சூறை- கொள்ளை

வலம் சுழித்து ஒழுகு நீர் வழங்கு நீர் கங்கையின்
பொலம் சுழி என்றலும் புன்மை பூவொடு
நிலம் சுழித்து எழு மணி யுந்தி நேர் இனி
இலஞ்சியும் போலும் வேறு உவமை யாண்டாரோ -கம்பர் —சுந்தர காண்டம் உருக்காட்டு படலம் -45-

———–

ஆறும் வணங்கு மணவாள மா முனி அம்புயமும்
காரும் சுரபியும் போலே வழங்கும் கைத் தாமரையில்
சேரும் திருத் தண்டும் சேவித்த மானிடர் தீ வினையால்
ஈரும் படிப் பிறவார் திரு நாட்டு இன்பம் எய்துவரே –5-

அம்புயம் -திருத்தோள்
கார் -மேகம்
சுரபி -காம தேனு
திருத்தண்டு -திருக்கையில் ஏந்தும் முக்கோல்
ஈரும் படி -அறும் படி

கையும் ஏந்திய முக்கோலும் வாழியே

————

தடம் கொண்ட கோயில் மணவாள மா முனி தாமரைத் தார்
வடம் கொண்ட மார்பினில் வண் புரி நூலும் எனது நெஞ்சில்
இடம் கொண்டு அடங்க எழுதி வைத்தேன் இனி வல் வினைகாள்
திடம் கொண்டு நீசர் தம் தேயத்தில் ஏசிடும் தீதறவே –6–

தார் –கிண்கிணி மாலை
வடம் -மணி வடம்
வண் புரி நூல் -முப்புரி நூல்
எழுதி வைத்தேன் -சுவர் வழி எழுதிக் கொண்டேன் -பெரியாழ்வார்

துய்ய மார்பும் புரி நூலும் வாழியே

————

மங்காது உலகை அருள் மணவாள மா முனி மருவார்
சிங்கார மாலைத் திருத் தோள்களும் அவற்றே திகழும்
சங்காழியும் தொழுது ஏத்தினேனால் தமியேனுடைய
பங்காளும் வல்வினை எங்கோ கணத்தினில் பாறியதுவே –7-

மங்காது -குறையாது
மருவார் -வாசனை நிரம்பிய
தமியேன் -கதி அற்றவன்

சுந்தரத் திருத் தோளிணை வாழியே

———–

பொழியும் தமிழ் புனையும் மணவாள முனி கருணை
பொழியும் திரு விழியும் மூக்கும் பொலி மறைகள்
செழி யன்பு கொண்டு உரைக்கும் திரு நாவும் திரு முகமும்
வழி யன்பு கொண்டு வழுத்தினேன் பேரின்பம் மற்று இல்லையே –8–

வழுத்தினேன் -தொழுதேன்

மாறன் திருவாய் மொழிப் பொருளை மா நிலத்தோர்
தேறும் படி உரைக்கும் சீர்

கருணை பொங்கிய கண்ணினை வாழியே

————

பொருநல் துறையில் அருளால் இருந்த நம் புங்கவர் கோன்
அருள் நல் தமிழ் உரை மா மணவாள வரு முனிவன்
திரு நெற்றியும் திரு நாமமும் நாலும் திருச் சிகையும்
வருணத்து எழிலும் மனத்துள்ளே நின்று வாழ்விக்குமே –9-

புங்கவர் கோன் –ஆச்சார்ய சிகா மணி
நாலும் திருச்சிகை -தாழ் முடி
வருணம் -நிறம்

————

வாழி செந்தாமரைத் தாள் துவராடை மருங்கு கொப்பூழ்
வாழி முந்நூலுறை மார்பு முக்கோல் அங்கை வாழி திண் தோள்
வாழி செவ்வாய் விழி வாழி பொன் நாம மருவு நுதல்
வாழி பொற் கோயில் மணவாள மா முனி வாழ் முடியே -10-

செய்ய தாமரை தாளிணை வாழியே
சேலை வாழி திரு நாபி வாழியே
துய்ய மார்பும் புரி நூலும் வாழியே
சுந்தரத் திருத் தோளிணை வாழியே
கையும் ஏந்திய முக்கோலும் வாழியே
கருணை பொங்கிய கண்ணினை வாழியே
பொய்யிலாத மணவாள மா முனி
புந்தி வாழி புகழ் வாழி வாழியே –

ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணா ஸ்வாமிகள் அருளிச் செய்த சாத்து முறைப் பாசுரத்துடன் ஒப்பு நோக்குக

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் அருளிச் செய்த -ஸ்ரீ மா முனிகள் விஷய-ஸ்ரீ கண்ணி நுண் சிறுத்தாம்பு–

ஸ்ரீ ரெங்க நாச்சியார் -திருத்தாயார்
அழகு பொலிவு -திகழக் கிடந்தான் திரு நாவீறு உடைய பிரான் தாதர் அண்ணர் ஐயர் -திருத் தகப்பனார்
அழகிய மணவாளன் -சிக்கில் -கிடாரம் -தாய் மாமன் -க்ரஹத்தில் வாழ்ந்தாராம்
எம் ஐயன் இராமானுஜன் -திருக்குமாரர் –

—————

எக்குணத்தோர் எக்குலத்தோர் எவ்வியல்வோர் யாயிடினும்
அக்கணத்தே நம் இறைவராவாரே -மிக்க புகழ்
காரார் பொழில் கோயில் கந்தாடை அண்ணன் என்னும்
பேராளனை அடைந்த பேர் -தனியன் –

ஸ்ரீ வரத நாராயண குரு -என்னும் ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணனுக்கு –
சிஷ்யருக்கு ஸ்ரீ மா முனிகளே அருளிச் செய்த தனியன்
ஸ்ரீ பெரிய கோயிலே நிரூபணம் கோயிலில் வாழும் வைஷ்ணவர் என்றபடி –
ஸ்ரீ ராமானுஜருக்கு ஸ்ரீ முதலியாண்டான் பாதுகை அம்சம் போல் ஸ்ரீ அண்ணன் ஸ்ரீ மா முனிகளுக்கு பாதுகை ரத்னம்
ஸ்ரீ பெரிய பெருமாள் தாமே நம்முடைய அண்ணன் என்று அபிமானித்து அருளிச் செய்த திரு நாமம்

ஸ்ரீ வசன பூஷண திவ்ய ஸாஸ்த்ரம் -யார் அறிவார் -யார் அனுஷ்ட்டிப்பார் -ஓர் ஒருவர் உண்டாகில் –
அனுஷ்டான பர்யந்தம் மா முனிகள் இடம் தானே காணலாம்
ஆச்சார்யன் தனது சிஷ்யனை தனது ஆச்சார்யருடைய சிஷ்யனாகவே நினைத்து உபதேசிக்க வேண்டும் –
ச ப்ரஹ்மச்சாரிகள் என்ற நினைவு கொண்டு -மா முனிகள் அனுஷ்ட்டித்து காட்டியதும் இதுவே உதாஹரணம் –
ஆகவே அவரை ஆஸ்ரயித்தவர்களே தமக்கு இறைவர் ஆவார் என்று அருளிச் செய்கிறார் –

தான் ஹித உபதேசம் பண்ணும் போது தன்னையும் சிஷ்யனையும் பலத்தையும் மாறாடி நினைக்கை
க்ரூர நிஷித்தம் -ஸ்ரீ வசன பூஷண ஸூர்ணிகை –308-
சிஷ்யனாக நினைக்காமல் ச ப்ரஹ்ம சாரியாக-தன்னுடனே கற்பவனாகவே – –
தனது ஆச்சார்யருக்கு சிஷ்யராக நினைத்து உபதேசிக்க வேண்டும்

பரமனைப் பயிலும் திருவுடையார் யாவராலும் அவர் கண்டீர் எம்மை ஆளும் பரமர்
ஆழிப்பிரான் தன்னைப் பணியுமவர் கண்டீர் எம்மை யாளுடை நாதர்
கடல் மல்லைத் தல சயனத்து உறைகின்ற ஞானத்தின் ஒளி யுருவை நினைவார் என் நாயகரே
கடல் மல்லைத் தலை சயனத்து உறைவாரைக் கொண்டாடும் நெஞ்சுடையார் அவர் எங்கள் குல தெய்வம்
மத்யம பர்வம் ப்ரக்ருஷ்டம் அன்றோ
இந்தத் தனியன் யதீந்த்ர ப்ரவண ப்ரபாவத்தில் உள்ளது
மா முனிகள் அருளிச் செய்த தனியன்

———-

சதாச்சார்ய சம்பந்தம் பெற்ற மா முனிகளைத் தாம்
அகதிகராய் ஆஸ்ரயித்த விஷயத்தை அருளிச் செய்கிறார்

சீருற்ற செஞ்சொல் திருவாய் மொழிப் பிள்ளை செம் முகமும்
தாருற்ற மார்பும் தளிரேய் பதங்களும் தன் மனத்துப்
பூரித்து வாழும் மணவாள மா முனி பொன்னடிகள்
பாரில் தனித்த அடியேன் சரண் என்று பற்றினனே –1-

சீருற்ற செஞ்சொல் திருவாய் மொழிப் பிள்ளை -ஆச்சார்யரைப் பற்றும் பொழுது
அவரது ஆச்சார்யரைப் பற்றியும் சிந்திக்க வேண்டுமே
குரு பரம்பரையும் அனுசந்தேயம்
சீர்மையும் செம்மையும் -உடைய சொற்கள் –
இனிமையாகவும் -உண்மையாயும் -எக்காலத்துக்கும் பிரயோஜனமாயும் இருக்குமே
சீரூற்ற -சொற்களுக்கும் திருவாய் மொழிப்பிள்ளைக்கும் விசேஷணம்
திருவாய் மொழியையே நிரூபகமாகக் கொண்ட சீர்மை உண்டே –

மேலே அவரது வடிவு அழகு ஈடுபாடு
செம் முகமும் –
தாருற்ற மார்பும் -தாமரை மணி மாலை திருத்துழாய் மாலை
தளிரேய் பதங்களும்
தன் மனத்துப் பூரித்து வாழும் மணவாள மா முனி -ஸதா தியானத்துக்கு —
சிஷ்யரானவர் ஆச்சார்யர் உடைய சீர் வடிவை ஆசையுடன் நோக்குபவர் அன்றோ
தனது வாக்கின் படியே அனுஷ்ட்டித்து காட்டி அருளுபவர்

பொன்னடிகள் -பூணுபவர்க்கு ப்ராப்யமாயும் ப்ராபகமாயும் இருக்குமே பொன் –
மா முனிகள் திருவடித்தாமரைகள் -பாவானத்வம் போக்யத்வம் இரண்டும் உண்டே —
திருக்கமல பாதம் -திருப்பாதம் -கமல பாதம் போல் அன்றோ இவரதுவும்
பாரில் தனித்த அடியேன் சரண் என்று பற்றினனே-
ஆகிஞ்சன்யனான -அநந்ய கதியான தமியேன் ஆஸ்ரயித்து உஜ்ஜீவித்தேன்

————-

ஆழ்வான் ஸ்ரீ வைகுண்ட ஸ்தவத்திலே முதல் ஸ்லோகத்திலே எம்பெருமானாரை சரண் புகுந்து
அவர் உகப்புக்காக நம்மாழ்வாரை அடுத்த ஸ்லோகத்திலே சரண் புகுந்தால் போலவே இவரும்
அவர் உகப்புக்காக திருவாய் மொழிப்பிள்ளை திருவடிகளில் சரணம் புகுகிறார்

பற்றினன் செம்மைத் திருவாய் மொழிப் பிள்ளை பாதங்களே
உற்றனன் செம் மறை உள்ளதெல்லாம் இவை யுண்மை என்றே
கற்றனன் கோயில் மணவாள மா முனிக் கார் முகிலைப்
பெற்றனன் இங்கே அடியேன் இன் மேல் பிறவாமலுக்கே –2–

பற்றினன் செம்மைத் திருவாய் மொழிப் பிள்ளை ஆச்சார்யர் – தம்முடைய ஆச்சார்யர் இடமும்
சிஷ்யர் ப்ரீதியுடன் இருப்பதையே விரும்புவார்

உற்றனன் செம் மறை உள்ளதெல்லாம் இவை யுண்மை என்றே கற்றனன் -ஸமஸ்த வேதங்களும் அருளிச் செயல்களும்
ஸஹஸ்ர மாதா பிதாக்கள் போல் பிரதி பத்தி பண்ண வேண்டுமே
கோயில் மணவாள மா முனிக் கார் முகிலைப் பெற்றனன் -தனது பேறாகவே பொழியும் கார் முகில் –
காரேய் கருணை யதிராசருடைய புனர் அவதாரம் அன்றோ

இங்கே அடியேன் இன் மேல் பிறவாமலுக்கே-பேற்றுக்கு உபாயம் ஆச்சார்யர் அபிமானமே -இதுவே உத்தாரகம்

பக்தியில் அசக்தனுக்கு பிரபத்தி
பிரபத்தியில் அசக்தனுக்கு ஆச்சார்ய அபிமானம் தானே

———————-

மா முனிகளுக்கு திருவாய் மொழிப்பிள்ளை இன்னருளால் கிடைத்த எம்பெருமானார்
திருவடிகளிலே ப்ராவண்யத்தைப் பேசி
யதீந்த்ர ப்ரவணரான மா முனிகளை வாழ்த்த வேண்டி இருக்க –
அப்படிச் செய்யாதவர்களை நிந்திக்கிறார் –

பிறவாமல் வாழ்விக்கும் பேரருளாளர் பெருமை என்றும்
துறவாத சிந்தை எதிராசன் துய்ய பதங்கள் நெஞ்சில்
மறவாத சீலன் மணவாள மா முனி மா மலர்த்தாள்
பறையாத வாசகர் யாரவர் பஞ்ச மகா பாதகரே —3–

பிறவாமல் வாழ்விக்கும் பேரருளாளர் -வரம் கொடுப்பவர்களில் ராஜர் -தியாகராஜர் -சம்ப்ரதாயம் வளர்த்த வள்ளல்
விந்த்யா ஆடாவியில் பெரிய பிராட்டியார் உடன் வந்து ரக்ஷித்து
ஆ முதல்வன் இவன் என்று ஆளவந்தார் கடாக்ஷித்து பிராரத்தபடி ராமானுஜரை ஆக்கி அருளி
ஆறு வார்த்தை அருளி சங்கை தீர்த்து தர்சனத்துக்கு ஆக்கி அருளி
வாதத்தில் எஜ்ஜ மூர்த்தியை -வென்று அருளாள பெருமாள் எம்பெருமானார் ஆக்கிய பெருமை –

பெருமை என்றும் துறவாத சிந்தை எதிராசன் –காண் தகு தோள் அண்ணல் தென் அத்தியூரர் கழல் இணைக் கீழ்ப்
பூண்ட அன்பாளன் அன்றோ நம் இராமானுசன் -திருவாராதன பெருமாள் இவரே

துய்ய பதங்கள் நெஞ்சில் மறவாத சீலன் மணவாள மா முனி -யதீந்த்ர பிரவணர் இவர் ஒருவரே –
மா மலர்த்தாள் -மா முனிகள் திருவடிகள் தானே மா மலர்த்தாள்களாய் இருக்கும்

பறையாத வாசகர் யாரவர் பஞ்ச மகா பாதகரே -இவற்றை அறிந்தும் ஆஸ்ரயிக்காத
யார் ஒருவர் இருந்தால் அவர் மஹா பாதகர் தானே

—————-

அனுகூலர் அல்லாதவர்களை நிந்தித்து
அனுகூலர்களுக்கு அவரே மோக்ஷ உபாயமாகும் தன்மையைப் பேசி மகிழ்கிறார் –

பாதகம் உள்ளவை தாமே ஒழித்துப் பரிந்து அவர்க்குச்
சாதகமானதும் ஈதென்று கொண்டு சரண் கொடுக்கும்
மா தகவோன் மணவாள மா முனி மா மலர்த்தாள்
பாதுகையை முடி மேல் சரணாகக் கொண்டு பற்றினார்க்கே –4–

திருப் பாதுகையே தனது ஸ்பர்சத்தாலே பிரதிபந்தகங்களை ஒழித்து -பரிந்து ஒழித்து –
சாதகமும் ஈதே என்று தன் தாளும் அருளுவாரே

தகவு -மா -தகவு -பிரதிபலன் எதிர்பார்க்காமல் தன் பேறாக -நிர்ஹேதுகமாக –
மா விசேஷணம் -தகவுக்கும் -முனிகளுக்கும் -தாள்களுக்கும் –
ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் – இவரும் பாதுகா ஸ்தானீயம் அன்றோ –

பொன்னடியாம் செங்கமலப் பொதுக்களை உன்னிச் சிரத்தால் தீண்டில்
அமானவனும் நம்மைக் கரத்தால் தீண்டல் கடன் -அன்றோ

—————–

கீழே பாவநவத்தைப் பேசி இதில் போக்யத்வத்தைப் பேசுகிறார்
அல்லது
மோக்ஷம் அளிக்காமல் படுகொலை செய்தாலும் விட ஒண்ணாத
கண்ணுக்கும் நெஞ்சுக்கும் போக்யமான
திவ்ய மங்கள விக்ரஹத்தின் அழகைப் பேசுகிறார்

நற் கேசவன் தமர் நற் றவத்தோர் நயனங்களுக்குப்
பொற் கோல மேனியன் பூ தலத்தோர் செய்த புண்ணியமாம்
முக் கோல் தரித்த மணவாள மா முனி மூர்த்தி தனை
எக் கோடி காலமும் சிந்தை செய்வார் தமக்கீடு இல்லையே –5–

நற் கேசவன் தமர் நற் றவத்தோர் நயனங்களுக்குப்
பொற் கோல மேனியன் பூ தலத்தோர் செய்த புண்ணியமாம் -மோக்ஷ பிரதனாக இல்லாமல் இருந்தாலும்
திவ்ய மங்கள வடிவு அழகு விட ஒண்ணாதே

கேசவன் -நன்மை -கெடும் இடம் எல்லாம் கேசவா என்ன -நாம் அறியாத நன்மைகளையே தானே அருளுபவர் அன்றோ –
நன்மை -தமர்களுக்கு விசேஷணம் -ததீய சேஷத்வம் அறிந்து -இதுவே நல் தவம்
ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் -ஆச்சார்ய கைங்கர்யமே போது போக்கு -ஆச்சார்ய திருவடிகளே ப்ராப்யம்
இவர் கண்களுக்கு விருந்தாய் இருப்பாரே —

கோளரியை வேறாக ஏத்தி இருப்பரை வெல்லும் மற்று அவரை சாத்தி இருப்பார் தவம்
பொன் மேனி கண்டேன் -கோல மேனி காண வாராய் -இங்கு தான் பெண்ணாகவும் கோலமாகவும்
திருவாலே பொன்னாக பிரகாசிக்கும் கரிய முகில் புரையும் திரு மேனி அவனது
பொன் மேனி அவயவ சோபை -கோல மேனி -சமுதாய சோபை –இரண்டுமே இங்கு –

முக் கோல் தரித்த மணவாள மா முனி மூர்த்தி தனை -திவ்ய மங்கள விக்ரஹ சிந்தனையே
எக் கோடி காலமும் சிந்தை செய்வார் தமக்கீடு இல்லையே-கோடி கோடி யுகங்களாக –
கோடி -மூலை -க்ஷணம் காலமாகவாவது சிந்தித்தாலே அத்விதீயமாவோமே

கோளரியை வேறாக ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்றவரை சாத்தி இருப்பார் தவம் -நான்முகன் -18-என்று
ஆச்சார்ய அபிமானத்தை தவம் என்றது போல் இங்கு புண்ணியம் என்கிறார்

ஞாலம் உண்ட ஞான மூர்த்தி நாராயணன் கோல மேனி
மா முனிகளுடையதோ பொற் கோல மேனி

தேசிகர் -த்ரிஜகத் புண்ய பலம் த்ரி தண்ட ஹஸ்தம் -என்றார் யதிராஜ சப்ததியில்
அதே போல் இங்கு பூதலத்தோர் செய்த புண்ணியமாம் முக்கோல் தரித்த மா முனி என்கிறார்

கோடி மூலை சிறு பகுதி -க்ஷணப் பொழுதாவது மா முனிகளின் திவ்ய மங்கள விக்ரஹ
சிந்தை செய்வோருக்கு யாரும் ஈடில்லை என்றவாறு

———————

இல்லை என்றே எண்ணி என் பவக் காட்டை எரியிலிட்டு
நல்லருள் மாரி பெய்து என்னைத் தளிர்ப்பித்து நன்கு தன்பால்
தொல்லருள் ஞானம் விளைத்து ஆழ்ந்த போகத்தை துய்ப்பிக்கவே
வல்லவன் கோயில் மணவாள மா முனியை வாழ்த்துவனே —6–

இல்லை என்றே எண்ணி என் பவக் காட்டை எரியிலிட்டு-கர்மங்கள் ஆகிற காடு –
அநாதி பிறவிச் சூழலில் திக்கித் தடுமாறி -ஆர்ஜித்தவற்றை
அக்னியில் இட்டால் போல் -அழித்து –தீயினில் தூசாகும் -அதுக்கும் மேலே

நல்லருள் மாரி பெய்து என்னைத் தளிர்ப்பித்து -நிர்ஹேதுக கடாக்ஷ வர்ஷம் -குளிர்வித்து

நன்கு தன் பால் தொல்லருள் ஞானம் விளைத்து -நிலத்தில் விளைக்கும் -தொல் ஞானம் -அருள் ஞானம் –
பூர்வாச்சார்யர் வர்ஷித்த அர்த்த விசேஷங்களைத் தொகுத்து –
அனைத்தும் சேர்ந்த மடு அன்றோ இவர் -இதுவே தொல் ஞானம்
இவற்றை நிர்ஹேதுகமாக தமது பேறாக அருளியதே அருள் ஞானம்

ஆழ்ந்த போகத்தை துய்ப்பிக்கவே வல்லவன்-பரமபத அனுபவம் -ஞான கார்யமான அனுபவ ஜனித்த ப்ரீதி காரித
அசேஷ சேஷ வ்ருத்திகளும் பண்ணும் படி அருள வல்லவர் அன்றோ

கோயில் மணவாள மா முனியை வாழ்த்துவனே-இவருக்கு நிரூபகமே கோயில் மணவாள மா முனி

எந்தை எதிராசருக்கு அரங்கன் ஈந்த வரம் -இந்த திருவரங்கத்தில் இனிது இரும் என்ற திரு முக வார்த்தை
தம் தமக்கும் என்று கொண்டு இருந்தாரே –

த்வயம் அர்த்த அனுசந்தான ஸஹ அத்ரைவ ஸ்ரீ ரெங்கம் ஸூகம் ஆஸ்வ -வரம் -நியமனம் -இவருக்கும் தானே
உபகார ஸ்ம்ருதியாலே இவரை மங்களா சாசனம் பண்ணுகிறார் –

—————-

ஐந்தாம் பாட்டில் மானஸீக தியானத்தையும்
அடுத்து வாசக ஸ்தோத்ரம்
இதில் காயிக பிராணாமம்
நினைப்பதும் பேசுவதும் வணங்குவதும் ஒரே வியக்தியான மா முனிகளே என்கிறார்

வாழ்த்துவன் எந்தை மணவாள மா முனி மா மலர்த்தாள்
தாழ்த்துவன் யான் அவன் தாளிணைக் கீழ் சிரம் தாரணியில்
காழ்த்திடும் செல்ல முதல் முக்குறும்பும் கரிசறவே
பாழ்த்திடும் என் தன் அதி கோர பாவங்கள் பற்றறவே –7–

வாக்கு -செயல் -மனம் முக்கரணங்கள் ஒருப்பட்ட மஹாத்மாக்கள் -ஆர்ஜவ குணம் –
ஐந்தாதவது பாசுரம் மனம் ஈடுபட்டு -மணவாள மா முனி மூர்த்தி தனை எக் கோடி காலமும் சிந்தை செய்வார்
ஆறாவது பாசுரம் வாக்கு ஈடுபட்டு -இதிலும் -வாழ்த்துவன் எந்தை மணவாள மா முனி மா மலர்த்தாள் –
அடுத்து காயிக ஈடுபாடு -இதில் -தாழ்த்துவன் யான் அவன் தாளிணைக் கீழ் சிரம் தாரணியில் –
சிரம் அனைத்துக்கும் உப லக்ஷணம் -தண்டன் இட்டு வணங்கி

இவை மூன்றும் முக்குறும்பு போக்கவே
தன -அபிஜன -வித்யா கர்வங்கள் போக்கவே -எளிதில் போக்க முடியாதே –
நம் ஸ்ரீ வத்ஸாங்கர் -கூரத்தாழ்வான் போலே ஆகவே-

அருளிச் செயல்களில் ஆழ்ந்து இருப்பதால் உடையவரால் அபிமானிக்கப் பட்டு ஆழ்வான் –
அவர் அபிமானத்தாலே முக்குறும்பு அறுக்கப் பட்டவர் –
ஆச்சார்ய அபிமானத்தாலே நமது பிரதிபந்தகங்கள் போக்கப் பெறுவோம் -அதி கோர பாவங்கள் பற்றறவே-

————————-

வாழ்த்துவன் என்றாரே -நமக்கோ வாழ்த்த ஸாமர்த்யம் இல்லையே –
நீசர்களாய் இருக்கிறோமே என்னாகும் அவன் புகழுக்கு என்று இருக்கவே
சிந்திக்கவே பெறப் போகும் அனைத்தையும் இங்கு காட்டி அருளுகிறார் –
சிற்ற வேண்டாம் சிந்திப்பே அமையும் என்கிறார்

பாவங்கள் பற்றறும் பாசங்கள் பற்றறும் பற்றி வைகும்
கோவங்கள் பற்றறும் குற்றங்கள் பற்றறும் கோடி சன்ம
தாவங்கள் பற்றறும் தண்ண ரங்கன் புகழ் சாந்த குண
தீவன் கருணை மணவாள யோகியைச் சிந்திக்கவே –8-

பாவங்கள் பற்றறும் -பிரதிபந்தங்கள் போக்கி அருளுவார்
பாசங்கள் பற்றறும் -விஷயாந்தரங்களின் பற்று போக்கி அருளுவார் -இவை அன்றோ பாபங்களுக்கு வேர்ப்பற்றுகள் –

பற்றி வைகும் கோவங்கள் பற்றறும் –ராக த்வேஷங்கள் -காமம் கோபம் இத்யாதிகளை போக்கி அருளுவார்

குற்றங்கள் பற்றறும் -இவற்றால் வரும் குற்றங்களையும் போக்கி அருளுவார்

கோடி சன்ம தாவங்கள் பற்றறும் -தாப த்ரயங்கள் போக்கி அருளுவார் –

தண்ண ரங்கன் புகழ் சாந்த குண தீவன் -ஈடு கேட்டு அருளினான் இவர் திரு வாயாலே –

அரங்கன் புகழ் சாந்த குண தீவன்-இவரை ஆஸ்ரயித்தே பெரிய பெருமாள் ஆனார் –

அனைத்து ஆச்சார்யர்கள் வியாக்யானங்களும் இவர் இடம் சேர்ந்து உள்ளனவே -ஆகவே ரசிக்கும்
கருணை மணவாள யோகியைச் சிந்திக்கவே-சிந்தித்த -மாத்திரமே சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும்

——————-

பெருமையை நினைந்து சிந்திப்பவர்களையே அன்றி
பொறாமை கொண்டு நிந்தித்தாலும் கூட விடாமல் உஜ்ஜீவிக்கப் பண்ணி அருள்வார் என்கிறார் –

சிந்தித்து அரங்கரைச் சிந்தை பயம் கெடச் சென்னி தன்னால்
வந்தித்து நிச்சலும் வாயாரா வாழ்த்து மெய்ம்மா மறையோர்
புந்திக்குள் மேவும் வர யோகி தம்மைப் புகைந்து சிலர்
சிந்திக்கிலுமே விடார் இது காண் அவர் நீர்மை நெஞ்சே –9–

சிந்தித்து அரங்கரைச் சிந்தை பயம் கெடச் -இஹ லோகம் பயம் கெடவும் –
கைங்கர்யம் -குண அனுபவ போது போக்கு நிச்சலுமாகக் கிடைக்குமா -என்றும்
அங்கு சென்று நித்ய கைங்கர்யம் பெறுவது என்றோ என்னும் பயமும் இருக்குமே

சென்னி தன்னால் வந்தித்து -சிந்தனைக்கு மேலே காயிக விருத்தியும்

நிச்சலும் வாயாரா வாழ்த்து -வாயார ஸ்தோத்ரங்களைச் சொல்லியும்

மெய்ம்மா மறையோர் -கற்றதன் பலனை அனுஷ்டித்துக் காட்டுபவர்கள் -நன்மையால் மிக்க நான் மறையோர்
ஆச்சார்யர் உகந்த விஷயம் என்றே பகவத் விஷயத்தில் இழிவார்கள் அன்றோ –
மதுரகவி ஆழ்வார் -அனந்தாழ்வான் போல்வார் நிஷ்டைகள் –

புந்திக்குள் மேவும் வர யோகி -இப்படி உள்ளார் சிந்தைக்குள் அன்றோ மா முனிகள்

தம்மைப் புகைந்து சிலர் சிந்திக்கிலுமே -இப்படிப்பட்ட அவரை த்வேஷிப்பார் ஓர் ஒருவர் இருந்தாலும்

விடார் இது காண் அவர் நீர்மை நெஞ்சே–அவர்கள் உஜ்ஜீவனத்துக்காக -அவர்களையும் கூட விடாதவர் அன்றோ -மா முனிகள்

மித்ர பாவேந -வேண்டாவே -நிந்திப்பார்க்கும் -நாலூரானுக்கு இரங்கி அருளிய கூரத்தாழ்வான் போல் அன்றோ நம் ஸ்வாமி –

நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் -கூரத்தாழ்வான் –அவர் தேவிகள் குறைத்து ஆண்டாள் பிராட்டி –
நாலூரானுக்கும் -பட்டர் இடம் அபசாரம் பண்ணிய அரசன் -ராக்ஷஸிகள் பக்கல் கிருபை பண்ணி அருளியது போல் இங்கு மா முனிகளும்

——————–

பெரும் பாலோர் சிந்தித்து வந்தித்து வாழ்த்தி
ஸ்வாமியின் பெருமையை உள்ளபடி உணர்ந்து
இந்த சேவையே பரம பாவனம் போக்யம் என்று புகழ்ந்து நேசிக்கிறார்கள்

நெஞ்சே அனைய அடியார் நிறம் கொண்ட நிச்சயமாம்
மஞ்சேறு சோலை அரங்கப் பதி தனில் வாதியர்க்கு
நஞ்சேயனையே மணவாள யோகி இந்நாள் அளிக்கும்
தம் சேவை தன்னை இகழ்வார்க்கு அல்லால் அவர் தாம் இட்டரே –10-

நெஞ்சே அனைய அடியார் நிறம் கொண்ட நிச்சயமாம்-அவர் திரு உள்ளம் போல் விசால திரு உள்ளம் கொண்ட அடியார்கள்
மஞ்சேறு சோலை அரங்கப் பதி தனில் -மேகம் சூழ்ந்த திருவரங்கத்தில்

வாதியர்க்கு – வீணான வாதிகளுக்கு -கால ஷேபத்துக்கு அருளிச் செயல்களே இருந்தாலும் – –
மாயா வாதிகள் வந்தால் சிஷ்யர்களை இட்டே வெல்லும் சீர்மை -வேடலப்பர் இட்டு வென்ற

நஞ்சேயனையே மணவாள யோகி இந்நாள் அளிக்கும் தம் சேவை தன்னை -எம்பெருமானாரை நேரில் சேவிக்காத
இழவு தீர சேவை சாதித்து தர்சன நிர்வாஹம் பண்ணி அருளும் மா முனிகளை

இகழ்வார்க்கு அல்லால் அவர் தாம் இட்டரே-இகழ்வார் கல்லார் -பாட பேதம் -அறிவில்லாதவர் –
இவர்களுக்கும் கூட கிருபை -அடைந்தர்வர்கட்க்கு எல்லாம் அன்பராய் இருக்கிறாரே –

———————–

இட்டர்கள் வாழ எதிராசர் வாழ இரு நிலத்தே
சிட்டர்கள் வாழ நம் தேசிகர் வாழச் செகத்தில் உள்ள
துட்டர்கள் மாள மணவாள மா முனி தோன்றினனே
எட்டும் இரண்டும் அறியார் இங்கு ஏசினும் யாவருமே –11-

இட்டர்கள் வாழ -மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும் -நித்யம் –
இதுக்கு பிரயோஜனம் ஸ்ரீ வைஷ்ணவர்கள் வாழ
எதிராசர் வாழ -எம்பெருமானார் அதுக்கு வாழ வேண்டுமே

இரு நிலத்தே சிட்டர்கள் வாழ -ஆச்சார்ய அபிமானம் என்று இருப்பார்கள் வாழ

நம் தேசிகர் வாழ- நமது ஆச்சார்யர்கள் வாழ்வதாவது அவர் காலக்ஷேபங்களைக் கேட்டு அனுஷ்டித்த பின்பே

செகத்தில் உள்ள துட்டர்கள் மாள-மாறன் கலையே உணவாகப் பெற்றார் நமது ஸ்வாமி –
துஷ்டர்கள் தாங்களே மாண்டு போவார்கள் நம் ஸ்வாமி பிரபாவம் கேட்ட மாத்திரத்தாலே –
திருவாய் மொழியும் ஸ்ரீ ராமாயணமும் அரண் போல் ஸ்வாமியுடைய காலஷேபமே ரக்ஷை நமக்கு –
நடையாடும் மதிள் போல் –
நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த அன்றோ திருவாய் மொழி
ஸ்வாமி ஈட்டு ஸ்ரீ ஸூக்திகளையே வாய் வெருவிக் கொண்டு இருப்பாரே

மணவாள மா முனி தோன்றினனே-காண வாராய் என்று இருப்பார் கண்டு மகிழ்வதே பரம பிரயோஜனம் –
அவனுக்குப் போலே ஸ்வாமிக்கும் –
ஆகவே சாது பரித்ராணாம் முதலில் சொல்லி துஷ்ட நிரஸனம் பின்பு –
எட்டும் இரண்டும் அறியார் இங்கு ஏசினும் யாவருமே-திரு -அஷ்டாக்ஷரம் த்வயமும் இருக்கு என்று அறியாதவர்

—————-

பகவத் திரு அவதாரத்தைப் போல் என்றார் கீழே
இதில் அவன் அவதாரத்தை விட நம் ஸ்வாமி, திரு அவதாரத்தின் சீர்மை இதில்

யாவரும் உய்ய மணவாள யோகி தயாளு என்னப்
பூ மகள் மண் மகள் புண்ணியமாய் இந்த பூதலத்தே
தாம் அவதாரம் செய்யாது இருந்தால் சடகோபர் திரு
வாய் மொழியோடு கடலோசை யோடு என்ன வாசி யுண்டே –12-

யாவரும் உய்ய -ஸமஸ்த ஆத்ம உஜ்ஜீவன அர்த்தமாக
மணவாள யோகி தயாளு என்னப்-காரேய் கருணை ராமானுஜர் போல் தயையே வடிவாகக் கொண்டு

பூ மகள் புண்ணியமாய் மண் மகள் புண்ணியமாய் -உபய நாச்சியார் கடாக்ஷமே ஹேதுவாக —
சேதன ஸமூஹங்களை பரமபுருஷன் திருவடிகளிலே சேர்த்து அருளுவதற்காகவே
சகலரையும் திருத்தித் திரு மகள் கேள்வனுக்கே ஆள் படுத்தி அருளவே -பூ பாரம் தீர்த்து அருளவே –
ஒரு மடையாக நம் ஸ்வாமியைக் கடாக்ஷித்து அருளி –

இந்த பூதலத்தே தாம் அவதாரம் செய்யாது இருந்தால் -இருள் தரும் மா ஞாலமான இதில் நம் ஸ்வாமி
திரு அவதாரம் பண்ணி இருக்கா விட்டால்

சடகோபர் திரு வாய் மொழியோடு கடலோசை யோடு என்ன வாசி யுண்டே -அருளிச் செயல்களே போது போக்காக
இருக்க ஸ்வாமி ஈட்டைப் பெருக்கி அருளினார் அன்றோ –

சூழ் விசும்புக்குப் போவதற்கு முன்பு நம்மாழ்வார்

நந்திபுர விண்ணகர -திரு விண்ணகர அனுபவத்துக்குப் போவதற்கு முன்பு கலியன்

திருப்பேர் நகர் பல சுருதி -தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே –10-8-11-

கலியன் செஞ்சொலால் மொழிந்த மாலை கொண்டு இவை பாடி யாடக் கூடுவர் நீள் விசும்பே –5-9-10-

ஸ்வாமித்வம் -காட்டும் திவ்யதேச பதிகங்கள் -இவை போன்ற சாம்யங்களை அனுபவித்து போது போக்கப்
பெற்றுக் கொண்டு இருப்பது ஸ்வாமி காட்டி அருளியதாலேயே தானே –
மாறன் கலையே உணவாகப் பெற்ற நம் ஸ்வாமி –

————

வாசி யறிந்த வதரியில் நாரணார் மனம் கொள்
தேசுடை எந்தை மணவாள மா முனி சீர் தழைப்பச்
சி சைலேச தயா பாத்ரம் என்னும் சீர் மந்த்ரம்
தேசிகனாய்க் கண்டு உரைத்தார் இவ்வையகம் சீருறவே–13-

வாசி யறிந்த வதரியில் நாரணார் -திருமந்திரம் அருளிச் செய்த பிரதம ஆச்சார்யர்
தானே சிஷ்யனுமுமாய் இருந்து அருளினாலும் திருந்தாத ஜனங்கள் உஜ்ஜீவிக்க –

திருக்குறுங்குடி நம்பி எம்பெருமானார் இதன் கேட்டு அறிந்து ஸ்ரீ வைஷ்ணவ நம்பியான ரஹஸ்யம் வாசி அறிந்தவர் அன்றோ –
பெரிய பெருமாள் அருளிச் செய்த தனியனை முதல் முதலில் சொல்லி அருளியவர் இவர் தானே

தஞ்சமாய் இருக்கும் வார்த்தை கேட்ட ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு பூர்வ அர்த்தம் அருளிச் செய்து பிற் பகுதியை
இரண்டு ஆற்றுக்கு நடுவில் ஸ்ரீ ரெங்கம் சென்று அறிந்து கொள்ள உபதேசித்தார்
இவர்கள் வந்து சேரும் பொழுது ஈட்டு சாத்துமுறை ஆகப் போகும் நாளில் -அரங்கநாதன் –
முழுவதையும் அருளிச் செய்த வ்ருத்தாந்தம் யதீந்த்ர ப்ரணவ ப்ரபாவத்தில் உண்டே –
இவரே ஆச்சார்யர் என்று காட்டிக் கொடுக்கவே இங்கு அனுப்பி வைத்தான் —
இவர் பெருமை அறிந்த நாரணார் —

மனம் கொள் தேசுடை எந்தை மணவாள மா முனி -திரு உள்ளத்தில் எழுந்து அருளிய தேஜஸ்ஸூ —
சீர் தழைப்பச்-பெருமையை உலகோர் அறியும்படி
சி சைலேச தயா பாத்ரம் என்னும் சீர் மந்த்ரம்
தேசிகனாய்க் கண்டு உரைத்தார் -ஸ்வாமியை ஆச்சார்யராகக் கண்டு அருளிச் செய்தார் அன்றோ –

இவ்வையகம் சீருறவே-அத்தாலே-இந்த லீலா விபூதி சீர் பெற்று நித்ய விபூதியில் சிறந்து விளங்கிற்றே
இப்பிரபந்த சாரமே இந்த தனியன் தானே –
தீ -தொல் அருள் ஞானம் -முக்கோல் தரித்த நம் ஸ்வாமி –பாட்டுத் தோறும் அருளிச் செய்து —
நிகமித்து அருளுகிறார் நம் கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் –

வதரியாச் சிரமத்தில் இருமெய்த் தொண்டர்
வகையாக நாரணனை அடிவணங்கிக்
கதியாக ஓர்பொருளை அளிக்க வேண்டும்
கண்ணனே ! அடியேங்கள் தேற வென்ன
சதிராகச் சீசைல மந்திரத்தின்
சயமான பாதியை ஆங்கு அருளிச்செய்து
பதியான கோயிலுக்குச் சென்மின் நீவிர்,
பாதியையும் சொல்லுதும்யாம் தேற வென்றார். -ஸம்ப்ரதாய சந்த்ரிகை – 4

சென்றவர்கள் இருவருமே சேர வந்து
திருவரங்க்ன் தினசரியை கேளா நிற்பச்
சன்னிதிமுன் கருடாழ்வார் மண்டபத்தில்
தாம் ஈடு சாற்றுகின்ற சமயம் தன்னில்
பொன்னிதனில் நீராடிப் புகழ்ந்து வந்து
புகழரங்கர் சன்னிதிமுன் வணங்கி நிற்பச்
சன்னிதியினின்று அரங்கர் தாமே அந்தத்
தனியனுரை செய்து தலைக் கட்டினாரே. ஸம்ப்ரதாய சந்த்ரிகை – 5

————–

சீருற்ற செஞ்சொல் திருவாய் மொழிப் பிள்ளை செம் முகமும்
தாருற்ற மார்பும் தளிரேய் பதங்களும் தன் மனத்துப்
பூரித்து வாழும் மணவாள மா முனி பொன்னடிகள்-1-
என்று த்யான முகத்தால்
ஸ்ரீ சைல தயா பாத்ரத்வம் கூறப்பட்டது -காருணிகரே த்யானிக்கப் பட வேண்டியவர்கள்

தொல்லருள் ஞானம் விளைத்து-6-என்றும்
இந்த பூதலத்தே தாம் அவதாரம் செய்யாது இருந்தால் சடகோபர் திரு வாய் மொழியோடு
கடலோசை யோடு என்ன வாசி யுண்டே –12-என்றும்
தத்வ ஹித புருஷார்த்த ஞானத்தையும்
பகவத் விஷயார்த்த ஞானத்தையும் பிறருக்கு உண்டாகும் படி செய்வதைக் கூறும் முகத்தால்
மா முனிகளுக்கு உள்ள ஞானத்தையும்

சிந்தித்து அரங்கரைச் சிந்தை பயம் கெடச் சென்னி தன்னால் வந்தித்து நிச்சலும் வாயாரா வாழ்த்து
மெய்ம்மா மறையோர் புந்திக்குள் மேவும் வர யோகி–12-
என்று மா முனிகள் ஸ்ரீ ரெங்கநாத பக்தர்களால் த்யானம் செய்யப்படுகின்றமை கூறும் வாயிலாக
மா முனிகளுடைய ஸ்ரீ ரெங்கநாத பக்தியும் பேசப்பட்டன

முக் கோல் தரித்த மணவாள மா முனி -5-என்று வைராக்கியமும்
மணவாள மா முனிக் கார் முகிலை-2-என்று ஒவ் கார்யமும்
கருணை மணவாள யோகி-8- தயை என்று
தீ பக்த்யாதி -ஆதி யால் ஸங்க்ரஹிக்கிக்கப் பட்ட -தீ பக்த்யாதி குண ஆர்ணத்வம் கூறப்பட்டது

எதிராசன் துய்ய பதங்கள் நெஞ்சில்
மறவாத சீலன் மணவாள மா முனி-3-யதீந்த்ர ப்ரணத்வம் கூறப்பட்டது

மணவாள மா முனி -வரயோகி -மணவாள யோகி-பல இடங்களிலும் வருவதால்
ரம்ய ஜா மாத்ரு முனித்வம் கூறப்பட்டது

மணவாள மா முனியை வாழ்த்துவனே —6–என்றும்
வாழ்த்துவன் எந்தை மணவாள மா முனி மா மலர்த்தாள்
தாழ்த்துவன் யான் அவன் தாளிணைக் கீழ் சிரம்-7- என்பதால்
வந்தே பதார்த்தம் சொல்லப் பட்டது

ஆக இப்பிரபந்தம் ஸ்ரீ சைல தயா பாத்ர தனியன் விவரணம் என்பதும் தேறும்

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் அருளிச் செய்த ஸ்ரீ வரவர முனி அஷ்டகம்

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் தனியன் –

ஸகல வேதாந்த ஸாரார்த்த பூர்ணா ஷயம் விபுல வாதூல கோத்ர உத்பவாநாம் வரம்
ருசிர ஜாமாத்ரு யோகீந்திர பாதாஸ்ரயம் வரத நாராயணம் மத் குரும் ஸமாஸ்ரயே

பர்யங்கேபி பரம் தத்வம் ரங்க ஷாயிந மேவய
உத்திஷ்டத் யநு பூயாஹம் தம் வந்தே வர யோகிநம் –1-

உஷஸ் யுக்தாய லோகார்ய ப்ரமுக ஆச்சார்ய ஸூக்திபி
உச்சைஸ் ஸ்துத்வாத கோவிந்தம் தத் திவ்ய ஸ்தல காஞ்சிதம் –2-

காவேர்யா கமல உத்பாஸி ஸம்ஸ்ப்ருஷ்ய ஸலீலம் ஷுபம்
கோவிந்த குண ஷிலாதி த்யாத்வா அஷ்ரு கலிலாநந –3-

ரோமாஞ்சித சலத் காத்ர பக்த்யா பரமயைவ ய
புநாதி தீர்த்தம் சங்காஹ்ய தம் வந்தே வர யோகிநம் –4-

பகவத் ஸாஸ்த்ர நிர்த்திஷ்ட விதி நைவ நிமஜ்ஜ்ய
திவ்ய காஷாய ஸூத்த ஊர்த்வ புண்ட்ர மாலாதி பூஷித –5–

மஹா மந்த்ராதி ஸம் ஜப்ய விஷிஷ்டைஸ் பரி வாரித
ஸ்ரீ ரெங்க தாம ஸம் ஸேவ்ய தத் தத்வாந் யுப ப்ரும்ஹ்ய ச –6–

ஆராத்ய ரங்க ராஜாதீந் அநு யோகம் விதாய ச
அபு நாத் அம்ருதைர் ஆர்யாந் தம் வந்தே வர யோகிநம் –7-

வந்தே ஸுவ்ம்ய வராக்ரிய யோகிநம் அஹம் த்யான அம்ருதா ஸ்வாதிநம்
ஸ்ரீ ரெங்காதிப பாத பங்கஜ பரி சார்யா குணை காந்திநம்
ஆஜ்ஜா ஸாஸ்த்ர விதேர விஸ்யதமலம் ஸம்ஸாரி கந்தாஸஹம்
காலே ஷு த்ரி ஷு சைவ காமித பல ப்ராப்த் யை குரூணாம் குரும் — 8-

இது ஸ்ரீ எறும்பி அப்பா அருளிச் செய்த ஸ்ரீ பூர்வ தினசரி சுருக்கம் –
த்யான ஸ்லோகம் -போல் அமைந்துள்ளது

———–

ஸ்ரீ அழகிய மணவாள மா முனிகள் வைபவம் –ஸ்ரீ சம்பிரதாய சந்திரிகை–ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள்–

ஸ்ரீ ரெங்க நாச்சியார் -திருத்தாயார்
அழகு பொலிவு -திகழக் கிடந்தான் திரு நாவீறு உடைய பிரான் தாதர் அண்ணர் ஐயர் -திருத் தகப்பனார்
அழகிய மணவாளன் -சிக்கில் -கிடாரம் -தாய் மாமன் -க்ரஹத்தில் வாழ்ந்தாராம்
எம் ஐயன் இராமானுஜன் -திருக்குமாரர் –

எம் எம் பச்யதி எம் எம் ஸ்பர்சதி–அக்றிணை பொருள்களும் –
கிம் புன பாந்தவா ஜனகா -புளிய மரத்தை மோஷம் புக வைத்து அருளினார் –
பாகவதர் அபிமானத்தில் ஒதுங்கி மோஷம் பெறலாமே –
உடையவர் சரம காலத்தில் அருளிச் செய்த ஆறு வார்த்தைகளில் இறுதியானது –
அழகிய மணவாள நகர் -முத்தப்ப நகர் -பாண்டியன் சமர்ப்பித்த -நகர் –
அந்த பாண்டிய மன்னன் திரு மால் இரும் சோலை திருக்கோயில் புநர் நிர்மாணம் செய்தானாம் –
பட்டர் பிரான் ஜீயர் -கோவிந்த தாசர் -வடுக நம்பி பரம்பரை -என்பர் –

———————————————————————

ஆதியிலே அரவரசை அழைத்து அரங்கர்
அவனியிலே இரு நூறு ஆண்டு இரும் நீர் என்னப்
பாதியிலே உடையவராய் வந்து தோன்றிப்
பரமபதம் நாடி அவர் போவேன் என்ன
நீதியாய் முன் போலே நிற்க நாடி
நிலுவை தன்னை நிறைவேற்றி வாரும் என்னச்
சாதாரணம் என்னும் மா வருஷம் தன்னில்
தனித் துலா மூல நாள் தான் வந்தாரே—1-

நற்குரோதன வருட மகரமாத
நலமாகக் கன்னிகையை மனம் புணர்ந்து
விக்கிரம வற்சரக்கில் வீட்டிருந்து
வேதாந்த மறைப் பொருளைச் சிந்தை செய்து
புக்கத்தில் பெண் பிள்ளை போலே சென்று
புவனியுள்ள ஸ்தலங்கள் எல்லாம் வணங்கி வந்து
துக்கமற வைணவர்கள் தொண்டு செய்யத்
துரிய நிலை பெற்று உலகை உயக் கொண்டாரே –2-

செய நாமமான திருவாண்டு தன்னில்
ஸ்ரீ ரங்க ராஜருடைத் திருநாள் தன்னில்
செயமாகத் திருவீதி வாரா நிற்கத்
தென்னாட்டு வைணவர் என்று ஒருவர் வந்து
தயையுடைய மணவாளப் பெருமாணைனார்
தன முன்னே ஓரருத்தம் இயம்பச் சொல்லி
சயனம் செய்து எழுந்து இருந்து சிந்தித்து ஆங்கே
சந்தித்துக் கோயில் காத்து அருளினாரே –3-

வதரியாச் சிரமத்தில் இரு மெய்த் தொண்டர்
வகையாக நாரணனை அடி வணங்கிக்
கதியாக ஒரு பொருளை அளிக்க வேண்டும்
கண்ணனே அடியேங்கள் தேற வென்ன
சதிராகச் சீர்சைல மந்திரத்தின்
சயமான பாதியை ஆங்கு அருளிச் செய்து
பதியான கோயிலுக்கு சென்மின் நீவீர்
பாதியையும் சொல்லுதும் யாம் தேற வென்றார் –4-

சென்றவர்கள் இருவருமே சேர வந்து
திருவரங்கன் தினசரியைக் கேளா நிற்பச்
சந்நிதி முன் கருடாழ்வார் மண்டபத்தில்
தாம் ஈடு சாற்றுகின்ற சமயம் தன்னில்
பொன்னி தனில் நீராடி புகழ்ந்து வந்து
புகழ் அரங்கர் சந்நிதி முன் வணங்கி நிற்பச்
சந்நிதியின்று அரங்கர் தாமே அந்தத்
தனியனுரை செய்து தலைக் கட்டினாரே –5–

நல்லதோர் பரிதாபி வருடம் தன்னில்
நலமான ஆவணியின் முப்பத்தொன்றில்
தொல்லரிய சோதியுடன் விளங்கு வெள்ளித்
தொல் கிழமை வளர் பக் நாலாம் நாளில்
செல்வமிகு பெரிய திரு மண்டபத்தில்
செழும் திருவாய் மொழிப் பொருளை செப்பும் என்றே
வல்லி யுரை மணவாளர் அரங்கர் நங்கண்
மணவாள மா முனிக்கு வழங்கினாரே –6–

ஆனந்த வருடத்தில் கீழ்மை ஆண்டில்
அழகான ஆனி தனில் மூல நாளில்
பானுவாரம் கொண்ட பகலில் செய்ய
பௌரணையில் நாளிட்டுப் பொருந்தி வைத்தே
ஆனந்த மயமான மண்டபத்தில்
அழகாக மணவாளர் ஈடு சாற்ற
வானவரும் நீறிட்ட வழக்கே என்ன
மணவாள மா முனிகள் களித்திட்டாரே –7–

தேவியர்கள் இருவருடன் சீர் அரங்கேசர்
திகழ் திரு மா மணி மண்டபத்தில் வந்து
தாவிதமா இந்த உலகோர்கள் வாழத்
தமிழ் மறையை வர முனிவன் வரக் கேட்டே
ஆவணி மாசம் தொடங்க நடக்கும் நாளில்
அத்தியனத் திருநாள் அரங்க நாதர்
தாவமற வீற்று இருந்து தருவாய் என்று
தாம் நோக்கி சீயர் தமக்கு அருளினாரே –8–

அருளினதே முதலாக அரங்கருக்கும்
அன்று முதல் யரும் தமிழை அமைத்துக் கொண்டு
தெருளுடைய வியாக்கியை ஐந்துடனே கூட்டித்
திகழ் திரு மா மணி மண்டபத்தில் வந்து
பொருள் உரைக்கும் போது எல்லாம் பெருமாளுக்குப்
புண் சிரிப்பும் பாவனையும் மகிழ்வும் கொள்ள
அருளுடைய சடகோபர் உரைத்த வேத
மது கேட்டுச் சாற்றியது இத் தனியன் தானே –9-

நாமார் மெருஞ்சீர் கொள் மண்டபத்து நம் பெருமாள்
தாமாக வந்து தனித்து அழைத்து –நீ மாறன்
செந்தமிழின் வேதத்தின் செழும் பொருளை நாள் தோறும்
வந்துரையாய் என்னுரையால் வாய்ந்து –10-

சேற்றுக் கமல வயல் சூழ் அரங்கர் தம் சீர் தலைப்பப்
போற்றித் தொழும் நல்ல அந்தணர் வாழ விப்பூதலத்தே
மாற்றற்ற செம்பொன் மணவாள முனி வந்திலனேல்
ஆற்றில் கரைத்த புளி யல்லவோ தமிழ் ஆரணமே –11-

ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம்‌ அண்ணா அருளிச் செய்த்‌ ஸ்ரீ வரவர முநி ஸுப்ரபாதம்‌
வேதாத்த தேஸிக கடாக்ஷ விவ்ருத்த போகம்‌
காந்தோ பயந்த்ரு யமிந: கருணைக பாத்ரம்‌ |
வத்ஸாந்வவாய மநவத்ய குணைருபேதம்‌
பக்த்யா பஜாமி ப்ரவாதி பயங்கரார்யம்‌ ॥

ரவிருதிகஸ் த்வதாபி ந விநஸ்யதி மே திமிரம்‌
விகஸத பங்கஜம்‌ ஹ்ருதய பங்கஜமேவ ந மே |
வரவர யோகி வர்ய! வரணீய.! தயைகநிதே!
ஐயஜய தேவ ஜாக்ருஹி ஜநேஷு நிதேஹி தியம்‌ ॥–1-
ஸ்வப்‌நமிதம்‌ தவ ஸ்வ மஹிமா நுபவைக ரஸம்‌ ததாபி
ததாவிகம்‌ ததிதி ஜாது ந வேத்தி ஐந | வரவர யோகி வர்ய! ததிதப விஜஹாது பவாந்‌
அபரிமிதம்‌ ஹிதம்‌ த்ரிஜகதா மநு சிந்தயிதும்‌ ॥–2-
அவதரணம்‌ ததேவ ஜகதாம விவேக ப்ருதாம்‌
விவித ஹிதா வபோதந க்ருதே ஹி க்ருதம்‌ பவதா |
தத இஹ ஏஹி யோக ஸயநாத்‌ மம நாத
ஜநாந்‌ அம்ருத மயைர பாங்க வலயைரபி ஷேச யிதும்‌ –3-

ஸரதர வித்த ப்ருந்த ஸூஷமா பரிபோஷ ஜுஷா
தவ நயநேந கேசந பரே சரணே நிததா |
மது கபீர தீர சதுரை ருகிள நரி தரே வரத
துரம்‌ தரந்தி பவஸிந்துமமும்‌ தரிதும்‌ ॥–4–
பரம நபோ நிவாஸ! பணி புங்கவ! ரங்க பதே:
பவந மிதம்‌ ஹிதாய ஜூகோ பவதா ததிகதம்‌ |
ததபிஸ வை தேவ ந்ருகநிம் ப்ரசுபீகுருஷே
ததிஹ மஹத்‌ தவைவ குரு வைபவ யத் பிதுரம்‌ ॥–5-
த்வதபிமத ப்ரியஸ்த்வ தநு வர்‌த்தந தந்யதமாத்‌
அலமதிரிக்த இதயகில லோக ஸுபோ தமிதம்‌ |
அவநி தலம்‌ த்வதீப்ஸித மிதம்‌ ச ஹி தத்ர வஸந்
அயமகிலஸ்‌ததைவ நிருபாயமுபைதி பதம்‌ –6-

ஸத்வோத்தரைஸ் ஸதத ஸேவ்ய பதாம் புஜேந
ஸம்ஸார தாரக தயார்த்ர த்ருகஞ்சலேந |
ஸெளம்யோ பயந்த்ரு முநிநா மம தர்ஸிதெளா தே
ஸ்ரீ வேங்கடேஸ சரணெள சரணம்‌ ப்ரபத்யே
ஸ்ரீ மத் ஸுந்தர ஜாமாத்ரு முநி மாநஸ வாஸிநே |
ஸர்வ லோக நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்‌ ॥
–்ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணா ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்ரீ வேங்கடச ஸ்தோத்ரத்திலுள்ளவை)

ஸ்ரீ வரவர முநி விஷய முக்தகம்‌
ப்ரபத்யே பத பத்மாநி பரம ப்ரேம ஸம்பதாம்‌
ஸெளம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர சரணைக ஜுஷாம்‌ ஸதாம்‌
ஸம்பத் ஸ்வருபா நுகுணைக யஸ்மிந்‌ ஸர்வோத்தரோ யத்ர மந : ப்ரஸாத: |
ஸ்த்பிஸ் ஸமம் தேவ தமேவ தேஸம்‌ ப்ராப்யம்‌ ப்ரபத்யே பவதங்க்ரி மூலம்‌ ॥

யந் மூலாஸ் வயுஜமாஸ் யவதார மூலம்‌
காந்தோ பயந்த்ரு யமிந: கருணைக ஸிந்தோ: |
ஆஸீதஸத் ஸூகணிதஸ்ய மமாபி ஸத்தா மூலம்‌
ததேவ ஐகதப் யுதயைக மூலம்‌ ॥

ஸ்ரீ மத் ரங்கம்‌ ஐயது பரமம்‌ தாம தேஜோ நிதாம்‌
பூமா தஸ்மிந்‌ பவது குஸலீ கோ அபி பூமா ஸஹாய: |
திவ்யம்‌ தஸ்மை தாது விபவம்‌ தேஸிகோ தேஸிகோநாம்‌
காலே காலே வரவர முநி கல்பயந் மங்களாநி

அபகத மதமாதைரந்தி மோபாய நிஷ்டை:
அதிகத பரமார்த்தை ரர்த்த காமா நபேஷை : |
நிகல ஜந ஸுஹ்‌ருத்பிர் நிர் ஜிதக்‌ரோத லோபை:
வரவர முநி ப்ருக்யைரஸ்து மே நித்ய யோக ॥

ஸ்ரீமதே ரம்ய ஜாமாத்ரு முநீந்த்ராய மஹாத்மநே |
ஸ்ரீரங்கவாஸிநே பூயாத்‌ நித்ய ஸ்ரீர்‌ நித்ய மங்களம்‌ ॥

—————-————————————————————————————————————–————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரவாதி கேசரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிரதிவாதி பயங்கர அண்ணா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading