ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த-ஸ்ரீ யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம்-பகுதி-2-

ஸ்ரீ ஶைலேஶ தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்
யதீந்திர ப்ரவணம் வந்தே ரம்யாஜமாதரம் முநிம்

துறவிகளின் அரசரான பகவத் ராமாநுஜரிடம் அளவற்ற அன்பு கொண்டவரும் ஞானம், பக்தி போன்ற குணங்களின் கடலான ஸ்ரீ ஶைலேஶரின் கருணைக்கு பாத்திரமான ரம்யஜாமாத்ரு முநியை (மணவாள மாமுனிகள்) நான் வணங்குகிறேன்).

ஸ்ரீஶடாரி குரோர்திவ்ய ஸ்ரீபாதாப்ஜ மதுவ்ரதம்
ஸ்ரீமத் யதீந்த்ர ப்ரவணம் ஸ்ரீலோகார்ய முநிம் பஜே

(ஸ்ரீ ஶடகோபாசார்யரின் திருவடியும் ஸ்ரீ யதீந்த்ர ப்ரவண ப்ரபாவ ப்ரபந்தத்தை அருளியவருமான தாமரை மலரினின்று வழியும் தேன் போன்ற பிள்ளை லோகம் ஜீயரின் திருவடிகளை வணங்குகிறேன்).

குருநாதனெங்கண் மணவாளயோகி குணக்கடலைப்
பலநாளும் அண்டிப்பருகிக் களித்திந்தப் பாரினுள்ளே
உலகாரியன் முநிமேகம் இந்நாளென்னுள்ளம் குளிர
நலமான சீர்மை மழை நாளும் பொழிந்தது இந்நிலத்தே

(மணவாள மாமுனிகளின் குணங்கள் என்னும் கடலிலிருந்து பருகி அனுபவித்தவர் நம் ஆசார்யர் (பிள்ளை லோகம் ஜீயர்). இவ்வுலகில் மேகம் போல இருக்கும் அத்தகைய பிள்ளை லோகம் ஜீயர், தம் மேன்மையான குணங்கள் எனும் மழையை இந்த பூமிக்கு அனுதினமும் என் மனம் குளிரக் கடாக்ஷித்தார்)


இனி நம்பெருமாள் விருத்தாந்தம்
பின்பு நம்பெருமாளும்‌ *அரங்கதகருள் முனைவனைத்‌- திருமாலிருஞ் சோலை நின்றான்‌ என்கிற சேர்த்தியாலே -சிலம்பாறு பாயும் தென் திருமாலிருஞ் சோலையிலே யெழுத்தருளி! இவ்விடம் ஆயிரம் ஆறுகளும் சுனைகள்‌ பலவாயிரமும்‌ ஆயிரம்‌ பூம் பொழிலுமுடைத்தாய்‌ திருப் பொன்னியாலே சூழப்பட்ட ஆராமம்‌ சூழ்ந்த யரங்கத்தைப் போலே அதி மநோ ஹரமாயிருக்கையாலே, பிள்ளையைப் பிரிந்த க்லேசமெல்லாம்‌ மாறி

சிகரிஷு விபிநேஷ்வப் யாபகா ஸ்வச்ச தோயா ஸூ
அநுபவசி ரசஞ்ஜோ தண்டகாரண்ய வாசாந்
ததிஹ தத் அநு பூதவ் சாபிலாஷோத்ய ராம
ஸ்ரயஸி வந கிரீந்த்ரம் ஸூந்தரீ பூய பூயஸ் –-ஸுந்‌, ஸ்தவம்‌
103 —

தண்டகாரண்யம் போன்ற காடுகள்-கோதாவரி கங்கை போன்ற நதிகள் –இவற்றால் உண்டான விலக்ஷண ஆனந்தத்தை அனுபவிக்க வேண்டியே இங்கே அழகராக சேவை சாதித்து அருளுகிறீர்-சித்ரா கூடாதி பர்வத ஸ்தானத்தில் இத்திருமலையும் தண்டகாரண்யம் -ஸ்தானத்தில் வனராஜிகளும்-கங்கா நதி ஸ்தானத்தில் நூபுர கங்கையும் கொள்ளக் கடவன ரசிகரான தேவரீர் சித்ரா கூடாதி பர்வத ராஜங்களிலும் -என்னும்படியான வனங்களிலும் தண்டகாரண்ய வாசாந் -அநுபவசி –சித்ரகூட மனு ப்ராப்ய-பரத்வாஜஸ்ய சாஸனாத் ரம்யமா வசதம் க்ருத்வாரமமானா வநே த்ரய தேவ கந்தர்வ சங்கா சாஸ் தத்ர சே ந்யவசன் ஸூகம் –இத்யாதிப்படியே ஆரண்ய வாச ஸூகத்தை அனுபவித்தீர்-அநுபவசி -வர்த்தமான பிரயோகம் –அனுபவம் தொடர்ந்து கொண்டே இருப்பது பற்றி-இங்கனம் திருஉள்ளத்துக்கு பங்காக அனுபவித்த ராசிக்ய அதிசயத்தாலே மீண்டும் அவ்வனுபவங்களைச் செய்து போர திரு உள்ளம் பற்றினவராய்க் கொண்டு அழகராக திருவவதரித்து திருமாலிருஞ்சோலை மலையை உறைவிடமாகக் கொண்டு அருளிற்று–என்கிறபடியே வந வாஸ லாஞ்சையை யுடையராய்‌ வநகரி ப்ரஸ்தமான அங்கே சிலகால மெழுந்தருளி யிருந்து விச்ரமித்தருளி, அழகிய மணவாளன்‌ கிணற்றையும்‌ அறஞ்சுவராகி நின்ற வரங்கரான தாம்‌ தார்‌மிகன்‌ வைத்த தணணீர்ப் பந்தலோ பாதியாக உண்டாக வைத்து, பின்பு அனைத்துப் பரிகரத்துடனே கொல்லி காவவன்‌ கூடல் நாயகன்‌ கோழிக் கோன்‌ குலசேகரன்‌ என்று அதுவே நிரூபகமாம்படியான ஸ்ரீகுலசேகரப் பெருமாளாண்டருளிய தேசத்தை விரும்பி யெழுந்தருளி அவ்வவ தேசங்களிலே சில நாள்‌ இனிதமர்ந்‌திருந்து; அநந்தரம்‌ கோழிக்கோடேற எழுந்தருள:

(தன்வந்திரி சந்நிதி சேதம் -தங்க கொடிக் கம்பம் சேதம் -முதலாம் சடையவர்மன் சீர் படுத்தி –
விஜய ஸ்தம்பம் -திருப்பாண் ஆழ்வார் சந்நிதிக்கு எதிராக உள்ளது -ராமானுஜர் விஜயத்துக்காக வைத்த ஸ்தம்பம்-கூர நாராயண ஜீயர் ரஷித்த விருத்தாந்தம் -தகடுகளில் மந்த்ரம் பதித்து வைத்தார் –விருப்பண்ண உடையார் சக்கரத்தாழ்வார் சேதத்தில் இருந்து ரக்ஷித்தார் -இவற்றை கோயில் ஒழுகு விவரிக்கும்)

சுடர் கொள் சோதியைத்‌ தேவரும்‌ முனிவருந் தொடர என்கிறபடியே மற்ற திவ்ய தேசத் தெம்பெருமானகளும்‌ நம்மாழ்வாரும்‌ அங்கே வலசையாக எழுந்தருள, அவர்களையும்‌ ஆதரித்தரு௭
ஆழ்வாரைத் தம்முடைய திவ்ய ஸிம்ஹாஸனத்திலே வைத்துக்‌ கொண்டு. அடி யடையாதாள் போலணுகி யடைந்த இவரைக்‌ கண்டு கொண்டிருந்து, தம்முடைய திவ்ய ஸிம்ஹாஸனமான வட்ட
மணையையும்‌ முத்துச் சட்டையையும்‌, பகல் திரு முன் பந்தத்தையும்‌ ப்ரஸாதித்து க்ருபை பண்ணி அங்கு நின்றும்‌ புறப்பட்டு
ஆழ்வாருடனே தேனைக் கிடம்பைக்கு (திருக்கணாம்பி -தமிழ் மாடு கர்நாடகம் கேரளா -மூன்றுக்கும் எல்லை )எழுந்தருளி அங்கே சிறிது காலமெழுந்‌தருளி யிருந்து, *’கூட வருகிறேன்‌” என்ற ஆழ்வாரை நிறுத்தி, புங்கனூர்‌ வழியாக வெழுந்தருளி அங்கே யிருந்து திருநாராயண புரத்தேற ப்ரதஷிணமாக வெழுந்தருளி, அங்கே சில நாள்‌ விஹரித்து, திலதமுலகுக்காய்‌ தின்ற திருவேங்கடத்தை யடைந்து

ஸுரம்ய மாஸாத்யது சித்ர கூடம்‌ நதீஞ்சதாம்‌(மால்யவதீம்‌ ஸுதீர்த்தாம்‌ |,நநந்த ராமோ ம்ருக பக்ஷி ஜுஷ்டாம்‌ ஜஹெளச துக்கம்‌ புர விப்ரவாஸாத்‌[ஸ்ரீரா ஆர. 59-38 )ஸ்ரீ ராம பிரான்‌ மிக அழகியதான திரி கூடத்தையும்‌ நல்ல நீருடையதும்‌ விலங்குகள்‌ பக்ஷிகளால்‌ விரும்பப் பட்டதுமான அந்த மால்யவதீ என்னும்‌ நதியை யுமடைந்து அயோத்தி யினின்றும்‌ பிரினால் உண்டான துக்கத்தையும்‌ மறந்தான்‌ ]–என்கிற படியே *நன் மணி வண்ணனாரான குளிரருவி வேங்கடத்தில்‌ கூடி யிருந்து குளிரப் பெற்று, ‘ மந்திபாய்‌ வட வேங்கட மாலை வானவர்கள்‌ சந்தி செய்ய நின்றான்‌ அரங்கத்தரவினணையான்‌ என்னும்படியே ஏகமான ஆகாரத்தாலே அங்கே அநேக காலம்‌ திவ்யோத்ஸவாதி வைபவங்களுடனே வாழ்ந்து கொண்டெழந் தருளி யிருந்தார்‌.

(லோக குரும் குருபிஸ் சஹா பூர்வை கூர குலோத்தம தாசம் உதாரம்
ஸ்ரீ நக பதி அபிராம வரே ஸௌ தீப்ரசயம் வரயோகி ந மீடே–ரஹஸ்யரார்த்த பரம்பரை பற்றிய தனியன் -மா முனிகள்-
பூர்வர்கள் அனைவரையும் லோக குருவையும் சொல்லி கூர குலோத்தமை தாசர் அருள் பெற்ற இவர்களையும் சொல்லி அருளுகிறார் –
நகபதி திருமலை ஆழ்வார் திருவாய் மொழிப் பிள்ளை –
அபிராம வர சவ்–அழகிய மணவாள பெருமாள் பிள்ளை -மாப்பிள்ளை-தீப்ரசயம் வரயோகி-
திகழக் கிடந்தான் திரு நாவீறுடையான் தாதர் -மா முனிகளின் திருத் தகப்பனார் –)

இனி ஆம்வார்‌ வ்ருத்தாந்தம்‌
கோழிக் கோட்டினின்றும்‌ பெருமாள்‌ புறப்பட்டெழுந்‌தருளுகிற போது கூடப் புறப்பட்டருளாமல்‌, ஸ்தாநத்தார்‌ ஸ்தலத்தார்‌ பரஸ்பர வைஷம்யத்தாலே தடங்கல்‌ பண்ண அந்த ஸமயத்திலே மேற்கும்‌ கள்ளர் பற்றாய்‌, கிழக்கும்‌ கள்ளர்‌ பற்றாய்‌ வடக்கும்‌ துருஷ்க மயமாயிருந்த படியினாலே அத்திசைகளில்‌ இருக்கப்‌ போகாமல்‌ ஆழ்வாரை வலசையாகத்‌ தென் மேற்கு மூலையிலே பஹுதூரம்‌ எழுந்தருளப்‌ பண்ணிக்‌ கொண்டு செல்ல, அங்கே கள்ளர் பயம் மிக, வேறு கத்யந்தர மில்லாமையாலே அத்யுந்நததமான ஒரு சரிவு கண்டு (முத்தரப்பு மலை -இன்றும் உள்ளது -)ஆழ்வாரை ஒரு திருப் பெட்டகத்திலே யெழுந்தருளப் பண்ணி, சங்கிலி கட்டி ‘அந்த அரங்கிலே பாங்காக எழுந்தருளப்‌ பண்ணி விட்டு திருவாபரணங்களையும்‌ திருப் பொஷகத்தையும்‌ நிக்ஷேபித்து எல்லோரும்‌ மலையினின்றும்‌ இறங்கின வளவிலே கள்ளர்‌ பள்ளர்‌ கையிலகப்பட்டவர்கள்‌ உடைகளை சூறை கொடுத்து விட, அதற்கும் தப்பினவர்கள்‌ தங்கள்‌ தங்களுடைய இடம்‌ போய்ச் சேர்ந்தார்கள்‌-

அவர்களிலே தோழப்பர்‌ என்பாரொருவர்‌ ஆழ்வார்‌ திருவடிகளிலே அத்யந்த ப்ரவணராய்‌ அபிமானியா யிருக்கையாலே,தாம் மதுரையிலே சென்று திருமலை யாழ்வாருக் கறிவிக்கக்‌ காத்‌திருந்து இச் செய்தியை யெல்லாம் தெரியுச்‌ செய்ய , திருமலை யாழ்‌வாரும்‌ எல்லாவற்றையுங் கேட்டு அபிமானித்து (திருவிதாங்கூர் )மலையாள ராஜாவுக்கு தம்முடைய ஸ்ரீ முகமும்‌ கொடுத்து, அத்தரங்கராய்‌ ராஜ வல்லபராய் ஸ்ரீகார்‌யத்திலே அபிமானிகளா யிருக்கும் ஸ்வ படர்களையும் கூட்டி, த்ரவ்யமும்‌ ஸாதித்து அனுப்பி யருள-அவர்களும் அப்படியே திருவாங்கோட்டூரிலே. செல்ல, கலஹம்‌ தெளிந்தபடியினாலே ஹ்ருஷ்டராய்‌ ராஜாவைக்‌ கண்டு செய்‌தியைச்‌ சொல்ல, திருமலை யாழ்வாருடைய ஸ்ரீமுகத்தை ஸிரஸா வஹித்தித்துக்‌ கொண்டு. ப்ரியப்பட்டு, தோழப்பருக்கு பஹுமானம்‌, பண்ணி, ஆழ்வாரைத்‌ திருக் கணாம்பியிலே யெழுந்தருளப்‌ பண்ணி வைக்கும்படி மநுஷ்ய ஸாமக்ரியையும்‌ அர்த்த ஸாமுக்ரியையும்‌ பூர்ணமாகக்‌ கொடுத்தனுப்ப, அவர்களும்‌ முத்‌திரிப்பு என்‌கிற ஊரிலே சென்று சங்கிலிகஞம்‌ ஊஞ்சற் பலகைகளும் சேர்த்துக்‌, கொண்டு மலையிலேயேறி,-சரிவிலே யிழிவாரார்‌?’? “என்று, சித்திக்க, ப்ராண ஸந்தேஹிகளாகையாலே எல்லாரும்‌ பின்‌ வாங்கி யிருக்க தோழப்பர் “நாமே, இழிகிறோம்‌” என்று துணிய: அவருக்கு அப்போது ஸ்தலத்தார்‌ சொன்ன கட்டளை : உமக்கு, ஆழ்வார்‌ ஸந்நிதியில்‌ வகுளாபரண பட்டரோடொத்த ஸ்வதந்த்‌ரமும்‌, திரு மஞ்சன காலத்திலே ஸஹஸ்ர தாரை கண்டருளிய திருவந்திக் காப்பு ஆனவுடனே ஆழ்வார்‌ திருமுடியிலே சாத்தி யிருக்கிற அலுங்கலும்‌ பூந் தொடையலையும்‌, ஆழ்வார்‌ தோழப்பர்‌” என்‌று உமக்கு அருளப்பாடிட்டு நித்யமாக ஸாதிக்கிறோம்‌” என்று சொல்லி, அனைவரும்‌ உகந்து ஓமறைந்து ஆழ்வார் தோழப்பரைத்‌ தூங்கு பலகையிலே ஏற்றிச்‌ சரிவிலே விட்டு ஸாவதாநமாகப்‌ பார்த்திருக்க அவரும்‌ அதிலிறங்கித்‌ திருப் பெட்டகத்தைத் தேட, ஒரு ஷேமகாரி பஷி திருப் பெட்டகத்தின்‌ மேலே யிருந்து நெடும் போது சப்திக்க, ‘இதுவெறுமனன்று’ என்று உகந்து திருப் பெட்‌டகம் கண்டு ஸேவித்து சிறிது பொழுது ஆழ்வாரை த்யாநிக்க-உடனே அப் பஷி அப்புறத்திற் செல்ல, திருக் காப்பு நீக்‌கி ஆழ்வாரைக் கண்டு கொண்டு ஸேவித்து க்ருதார்த்தராய்த்‌ திருப் பெட்டகத்தை திருக் காப்பு சேர்த்துக்‌ கட்டி தூங்கு பலகையிலே ஏறி யருளப் பண்ணி: சங்கலியைக்‌ குலுக்க, அவர்களும் மேலே சேர்த்துக் கொள்ள தோழப்பர்‌ எழுத்தாணியையும் ஓலையையும் கொண்டு போனவராகையாலே அங்கு நடந்த வ்ருத்தாந்தத்தை யெழுதி வைக்கக் கண்டு அனைவரும்‌ சந்தோஷப்பட்டு சேவித்துத் திருப் பெட்டகத்தைப் பலகையினின்றும் இறக்கி யருளப் பண்ணி தோழப்பர் வரும்படிக்குத் திரும்பி பலகையை விட வந்து சேர்ந்தவுடனே தோழப்பரும் ஏறி சங்கிலியைக்‌ குலுக்க

அவர்களும் சங்கிலியை ஏத்த நடுவே. தட்டுப்‌ பட்டுத்‌ தோழப்பர்‌ விழுந்து விட்டார்‌. பிற்பாடு அவர்‌ குமாரரான அப்பன்‌ பிள்ளைக்கு எல்லாருமாக சமாதானம்‌ சொல்லி ஆழ்வாருடைய சமீபத்திலேயே திருமேனி விட்டவராகையாலே அவருக்கு நீர்‌ சோகிக்க வேண்டா- ஆழ்வார்‌ உம்மை புத்ரராக அபிமானித்தருளினார் -உமக்கு சந்திதியிலே முன்‌ கட்டளை ப்ரகாரத்துக்கு, ஆழ்வான்‌ தோழப்பர் என்று, அருள் பாடும்‌. வரிசைகளும்‌ நடப்பிக்கிறோம் !” என்று சொல்லி, ஆழ்வாரை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு முத்திரப்பிலே சென்று ஆழ்வாருக்கு அஞ்சு நாள் ஸ்ம்ப்ரோஷணம்‌ கண்டருளப்‌ பண்ணி மலையினின்றும்‌ புறப்பட்ட வன்று தொடங்கி திருவடி நம்பியாரும்‌ ஸ்தலத்தாரும்‌ ஆழ்வாரப்பனும்‌ நன்றாக ஆராதித்துக்‌ கொண்டு போந்தார்கள்‌.-அனைத்துப்‌ பரிகரத்துடன்‌. திருக்கணாம்பியில்‌ எழுந்தருளப் பண்ணி ஸம் ப்ரோஷணம்‌ செய்து நித்தியப்படி திருவாராதனம் முதலான. விசேஷ உத்சவங்கள் எல்லாம்‌ நடத்‌திக் கொண்டு ஆழ்வார்‌ திருவடிகளில்‌.அதிப்ரவணராய்‌ அபிமானிகளாய் வாழ்ந்து. கொண்டிருந்தார்கள்‌-

கள்ளர் பற்றி லுள்ளார் இச் செய்தியைக் கேட்ட மாத்திரத்திலே தெய்வ யோகத்தாலே ஆநுகூல்யம்‌ பிறந்து ஆழ்வார்‌ திருவடிகளிலே ப்ரவணராய் அநேகமாக ஸத்கரித்து முன்பு பறித்‌ததையும்‌ ஸமர்ப்பிக்க, அழகிய மணவாளன்‌ ப்ரஸாத லப்தமான பொற்றகடு சேர்த்த வட்ட மணையையும்‌, முத்துச்‌ சட்டையையும்‌!வெள்ளி தீவர்த்திக் கோலையும்‌, சித்தையையும்‌ மைர்ப்பித்து ஆழ்வாரைத்‌. திருக்கணாம்பி யிலெழுந்தருளப்‌ பண்ணும்‌ படிக்குத்‌ திருப் பல்லக்கு முதலானவைகளைச் சேர்த்து மார்க்க கோதஷம்‌ பண்ணி மங்கள வாத்தியங்களுடனே எழுந்தருளப்‌ பண்ணினார்கள்‌. ஒரு பெரிய திருவடி பக்ஷியும்‌ ஆழ்வாருக்கு மேலாக ஆகாசத்திலே சூழ்ந்து கொண்டு திருக்கணாம்பியிலே ஆழ்வார் எழுந்தருளி யிருக்கற கோயில்‌ மரத்திலே கூண்டு கட்டி வஸிக்க இந்த ஆச்சர்யத்தைக்‌ கண்டு எல்லாரும்‌ ஆழ்வாரை ஸேவித்து அவர்‌ ப்ரபாவத்தைக்‌ கொண்டாடிக்‌ கொண்டு தங்கள்‌ தங்கள்‌ சக்திக்குத் தக்கபடி, சிறப்பு ஆராதனமும்‌ நித்ய உத்சவமும் யதோ உசிதம்‌. விசேஷ உத்சவமும்‌ நடப்பித்துக் கொண்டு போந்‌தார்கள் -இந்த அதிசயங்களை யெல்லாம்‌ திருவநந்தபுரம்‌, திருவட்டாறு திருவண்பரிசாரம்‌, திருவல்லவாழ்‌ முதலான திவ்ய தேசங்‌களிலுள்ள போற்றிமார்‌ நம்பூதரிமார்கள்‌ கேட்டு உடனே வந்து ஆழ்வாரை ஸேவித்து வித்தராய்‌ அவரை விட்டுப்‌ பிரிய மாட்டாமல்‌ உதய காலத்திலே எப்போதும்‌ போலே திருமஞ்சனங் கொண்டருளி தத்யோதநமும்‌ நெய்த் தோசைப் படியும்‌, பாகூட்டின கட்டிப்‌பொரியும்‌, பாற்கஞ்சிக் கடாரமும்‌ நித்யப்படியாக அமுது செய்‌தருளி விநியோகமாய்‌, பிற்பாடு ஒரைவகைகளும்‌ அமுது செய்‌தருளி, மத்யாஹ்ந காலத்திலே நாயகமலங்காரத்துடனே வரிசையாக சம்பாவவஸரமும்‌ அமுது செய்தருளி, திருப் பணியார வகைகளும்‌ அமுது செய்து பின்பு உச்சிக் காலமும்‌ அமுது செய்தருளி காலோசிதமான உபசாரங்களுடனே விச்ரமித்தருளத்‌ திருக் காப்‌புச்‌ சேர்த்து மீளவும்‌ போது போக, நாலு நாழிகைக்குத்‌ திருக்‌ காப்பு நீக்கி ஸாயங்காலம்‌ திருவாராதனங் கண்டருளி ‘அஸ்தமன ஸமயத்திலே உப்புச் சாற்றமுதும்‌, சம்பாவும்‌, தோசைப் படியும்‌ பொரியும்‌ அமுது செய்து விநியோகமாய்‌, பிற்பாடு அத்தாளம்‌ அமுது செய்த்ருளி, இராக் காலமுமாய்‌ ஸ்ரீபலிதுடி, திருவுற்றசாதம்‌, அரவணை, சுக்கு கஷாயம்‌, இவைகளெல்லாம்‌ அமுது செய்‌யும்படி போற்றிமார்‌ திட்டம்‌ பண்ணி நடப்பித்துப்‌ போந்தார்‌கள்‌. திருநகரியைப் போலே-பரிஜனங்களும்‌ பூர்ணமாய்‌ ஏழு மடாதிபதிகளும்‌ ஒன்று பட்டு ஆழ்வார்‌ திருவடிகளிலே அதி ப்ரவணராய்‌ அபிமானிகளாய்‌ தத்தத் காலோசிதமான உத்ஸவங்களை நன்றாக நடப்பித்துக்‌ கொண்டு வாழ்ந்தருளி யிருந்தார்க்கள்‌.

இனி கோயில்‌ வ்ருத்தாந்தம்‌
பெருமாள்‌ புறப்பட்டருளின பின்பு-அபிவ்ருஷ பரிம்‌லாநா: என்னும்படி அயோத்தி யென்னுமணி நகரமானது அழகழிந்தாற் போலே நம் பெருமாள்‌ புறப்பட்டருளின பின்பு அற்ற பற்றர்‌ சுற்றி வாழும்‌ அந்தணீரங்கம்‌ என்றும்‌, நல்லார்கள்‌ வாழும்‌ நளிரங்கம்‌ என்றும்‌, தென்னாடும்‌ வடநாடும்‌ தொழ நின்ற திருவரங்கம்‌ என்னும்படியான கோயிலானது அழகழிந்தது.-பின்னும்‌ அங்கே வந்து ஆக்ரமித்தவன்‌ செய்தபடி: -திட்‌ கொடி மதிளைப்‌ பிடுங்கி கண்ணனூரிலே தனக்கு ஆவரணமாகக்‌ கட்டுவித்து, பின்னையும்‌ அங்கே உபத்ரவங்களைப் பண்ண உபக்ரமிக்க , அவ்வளவிலே, சிங்கப் பிரான்‌ என்னும்‌ பேரை யுடையராய்‌ பெருமாள்‌ திருவிளையாட்டமான அழகிய மணவாளர்‌ காணிய ப்ராஹ்மணராய்‌ தமிழ்‌ விரகரான ஒருவர்‌ துருஷ்கன்‌ வாசலிலே காரியம்‌ ஆராய்ந்து நின்று அவன்‌ நினைத்தபடி ஒன்றும்‌ செய்யாமல்‌ அவனுக்கு அநுகூலமாகவே சொல்லிக்‌ கொண்டு, மதிள்கள்‌, மாளிகைகள்‌, கோபுரங்கள்‌ துன்னு மணி மாடங்கள்‌, சாலைகள்‌ தொடத்‌கமானவற்றையும்‌, செம்பொனாய வருவரை யனைய கோயில்‌ மணி யனாரையும்‌ காத்து ரக்ஷித்துக் கொண்டு போந்தார்‌. அது கண்டு அங்குண்டான ஆசார்யர்கள்‌ எல்லாரும்‌ அவரை அநுவர்த்தித்து நல் வார்த்தை சொல்லிக்‌ கொண்டு போந்தார்கள்‌.

திருவாய்மொழிப் பிள்ளை வையவம்‌.
பிள்ளை லோகாசாரியர்‌ திருவடிகளில் ஆச்ரயித்தவளான ஸாத்விகை அம்மையார்‌ அவர்‌ விச்லேஷம்‌ பொறுக்க மாட்டாமல்‌ பரமபதத்துக் கெழுந்தருள, அவள்‌ குமாரரான திருமலை யாழ்வாரை அவர்‌ சிறிய தாயாரான அம்மையார்‌ போஷித்துப்‌ போந்தார்‌.- திருமலையாழ்வாரும்‌ பால்யங்‌ கடந்து ப்ராப்த யெளவநராய்‌ ப்ரவபுத்வமுலடயராய்‌, சதிரிளமடவார்‌ தாழ்ச்சியை மதித்து, அணி மென் குழலாரின்பக் கலவியமுதுண்டு கொண்டு திரிய, இவர்‌ சதிருடைய தமிழ்‌ விரகராயிருக்கையாலே இவரைத்‌ திருத்துவதாகக்‌ கூர குலோத்தம தாஸர்‌ திருவுள்ளம் பற்றி இவர்‌ முன்பே திரு விருத்தத்தை அநுஸந்தித்துக்‌ கொண்டு எழுந்தருள, இவர்‌ (திருமலை யாழ்வார்‌) அர்த்தவானாய்‌ அதற்குப்‌ பொருள்‌ கேட்க,நாயனும்‌, “உனக்குச்‌ சொல்ல வொண்ணாது’ என்று குத்ஸித்து உமிய, (திருமலையாழ்வார்‌ அப்போது ராஜ ப்ரதிநிதியாய்‌ ராஜ்ய பாரம்‌ பண்ணிக் கொண்டிருந்தார்‌. ராஜா இறந்து ராஜ புத்ரர்கள்‌ பாலர்களாயிருந்தபடியால்‌ ராஜ பத்நி ராஜய பாரத்தை இவரிடம்‌ ஓப்புவித்திருந்ததாகத்‌ தெரிகிறது) திருப் பல்லக்கிலே இருந்த இவர்க்கு (திருமலை யாழ்‌வாருக்கு) பிள்ளை லோகாசாரியர்‌ விசேஷ கடாக்ஷம்‌ பண்ணி யிருக்கையாலே உமிழ்ந்தற்குக்‌ கோபியாமல்‌ ஸ்வ படரை விலக்கி அச் செய்தியை அம்மையாருக்குச்‌ சொல்ல, அவளும்‌ பிள்ளை லோகாசரியர்‌ திருவடிகளிலுண்டான ஸம்பந்தத்தை ஸ்மரிப்பிக்க,இவர்க்கு அநுதாபம்‌ பிறந்து ஆச்ரயணோந் முகராயிருக்க–அக் காலத்திலே சிங்கப்பிரானுக்குத்‌ திருமணத் தூண்‌ நம்பி!”என்று திருநாமமா யிருக்க, அவர்க்கு எல்லாரும்‌ ப்ரீத்யதிசயத்‌தாலே அனுவர்த்தித்து நல் வார்த்தை சொல்ல அவரும்‌, ‘பலரும்‌ அருளிச்‌ செய்கையாலே எனக்கொன்றும்‌ தெரிகிறதில்லை; வாக்மியா யிருப்பாரொருவரைத்‌ தெளிவா யருளிச்‌ செய்யும்படி கற்பிக்க வேணும்‌ என்ன; அவர்களும்‌, திருமலை யாழ்வாருடைய வாக் வ்யவஹார ஸாமர்‌தயத்தைக்‌ கண்டு “நீர்‌ சொல்லும்‌!” என்று நியமிக்க, அவரும்‌ அப்படியே சொல்ல, அவ் வார்த்தைகள் அஸம்ப்‌ரதாயமாயிருந்த படியையும்‌, அவருடைய ஆச்ரய ருசியையும் கண்டு, இவரை ஸத் ஸம்ப்ரதாய ப்ரவர்‌த்தகரர்க்கக்‌ கடவோமென்று -ஒது முடும்பை யுலகாசிரியரனருள்‌ ஏதும் மறவாத எம்பெருமானான கூரகுலோத்தமதாஸர்‌ இவரை அநுவர்த்தித்துத்‌ தம்முடைய நிர்ஹேதுக க்ருபையாலே செயல்‌ நன்றாகத்‌ திருத்துவதாக மதுரையிலே சென்று ஸமயம்‌ பார்க்க, ஒரு நாளளவிலே திருமலையாழ்வார்‌ யானை மேலேறிப்‌ புறப்பட, தாம்‌ மேட்டு நிலத்திலே நின்று தம்மைக்‌ காண்பித்துக்‌ கொள்ள, திருமலை யாழ்‌வார்‌ இவரைக்‌ கண்டவுடனே பிள்ளை லோகாசாரியராக ப்ரதிபத்தி பண்ணி, யானையினின்றும்‌ சடக்கென இறங்கி நாயன்‌ திரு வீதிகளில் தீர்க்க ப்ரணாமம்‌ பண்ண, நாயனும்‌ இவரை எடுத்‌ தணைத்து ஸ்வாசார்ய ப்ரபாவத்தை யிட்டு இவரைக்‌ கொண்டாட, திருமலை யாழ்வாரும்‌ இவரை (நாயனை) உள்ளே எழுந்தருளப்‌ பண்ணு வித்துக்‌ கொண்டு சென்று ஸத்கரித்து ஹிதம்‌ கேட்க, பிள்ளைலோகாசாரியர்‌ சரம காலத்திலே அருளிச்‌ செய்தபடிகளை யெல்லாம்‌ ஸவிஸ்தாரமாக அருளிச்‌ செய்யக்‌ கேட்டு உகந்து-தேவரீர்‌ அடியேனை க்ருபை பண்ணி இங்கே யெழுந்தருளி யிருந்து ப்ராத காலத்திலே திருமண்காப் பவஸரத்திலே எழுந்தருள வேணும்‌’* என்று வேண்டிக் கொண்டு, வைகை யாற்றின்‌ கரையிலே ஸந்த்யா மடத்தருகே ஒரு திருவீதியையையும்‌ அதில்‌ இவர்க்‌கொரு திருமாளிகையுஞ்‌ சமைத்து ஜாத்யாச்ர நிமித்த துஷ்டங்‌கள் ஏதோ அவைகளைப்‌ பரிஹரித்துத்‌ தளிகைக்கு நடக்கும்படி அமரிக்கை பண்ணினார்‌.

கூரகுலோத்தம தாஸ நாயனும்‌ நித்யமாகத்‌ திருமண்காப்பு வேளைக்கு எழுந்தருள, இவர்‌ திருமண்‌ சேர்க்கச்‌ செய்தே லோகா சார்யாய’ என்று தொடங்கி தனியன்களை யநுஸந்திக்கக் கண்டு மிகவும்‌ ப்ரியப்பட்டு அன்று தொடங்கி கிஞ்சித் கிஞ்சித் காலம்‌ அவரிருக்குமளவும்‌ அநுவர்த்திக் கொண்டிருந்து ரஹஸ்யார்‌த்தங்களை ப்ரஸாதிக்க, அவரும்‌ நன்றாக அநுவர்த்‌தித்துக் கொண்டு ப்ரதி பத்தி யுடனே கேட்டு வந்தார்‌. ஒருநாள்‌ ராஜ காரியாவஸரத்தினாலே சொன்ன அர்த்தத்தைக்‌ கேளாமல்‌ ‘பொறுத்தருள வேணும்‌’ என்ன; மற்றை நாள்‌ இவரெழுந்தருளாமலிருக்க, அற்றைத் தினம் பராமர்சமின்‌றிக்கே யொழிய,-பிற்றை நாள்‌ நாயனெழுந்தருள வில்லை யென்று பராமர்சித்து உடனே ஆளை விட, அவர்கள்‌ சென்று அறிவித்த விடத்து பேசாமலிகுந்து விட, அவர்கள்‌ சென்று திருமலையாழ்‌வாருக் கறிவிக்க, அவர்‌, மற்றை நாளும்‌ நாயனெழுந்தருளாத படியினாலே தம்முடைய ஆர்த்தி யெல்லாம்‌ தோன்றும்படி கால் நடையாக நாயன்‌ திருமாளிகைக்குச்‌ செல்ல, நாயன்‌ நெடும் போது விளம்பித்து ஸேவை ஸாதிக்க ஸேவித்து, திருவடிகளிலே விழுந்து போர க்லேஸிக்க, நாயனாரும்‌ ௨கந்தருளி ஷமித்தோம்‌” என்று சொல்ல, காலஷேப ஸமய மாகையாலே அது நிறைவேறுந் தனையுமிருந்து அவர்களுடன்‌ ஸ்ரீபாத தீர்த்த ஸ்வீகாரம்‌ பண்ணின பின்பு நாயனாரும்‌ திருமலை யாழ்வாரை அமுது செய்யும்படி நியமிக்க,திருமலை யாழ்வாரும்‌ தளிகையை ஸ்வீகரிக்க அபேஷிக்க, உகத்தருளி தளிகை ப்ரஸாதம்‌ ஸாதித்தருள, திருமலை யாழ்வாரும்‌ ப்ரஸாத ஸ்வீகாரம்‌ செய்த மாத்ரத்தில்‌ பரம விரக்தராய்‌ “”கூர குலோத்தம தாஸ நாயன்‌ திருவடிகளே சரணம்‌”என்று பல காலு மநுஸத்தித்துக்‌ கொண்டு சென்று, ராஜ கார்ய ஸமயத்திலேயும்‌, ஒருவரை பேர்‌ சொல்லி யழைக்கும்‌ போதும்‌ இப்படியே சொல்லத் தொடங்கினா ராகையாலே இவருக்கு உந்மாதம்‌ பிடித்ததாக வேணுமென்று ராஜபத்‌நிக் கறிவிக்க, அவளும்‌ திருமலை யாழ்வாரை யழைத்து வார்த்தை சொல்ல, இவரும்‌ உத்தரத்துக்கு ப்ரத்யுத்தரம்‌ சொல்லாமல்‌ கூர குலோத்தம தாஸ நாயன்‌ திருவடிகளே சரணம்‌; ஸகல கார்யமும்‌ பத்ரம்‌”” என்று இப்படியே சொல்ல. அவளும்‌ நாங்கள்‌ ஸ்த்ரீ பாலர்களா யிருக்கிறபடியால்‌ பிள்ளை ப்ரபுத்தனாகும்‌ தனையும்‌ எல்லாவற்றிற்கும்‌ தேவரீருண்டென்றிருந்தோம்‌; அப்படி யின்றிக்கே யொழிந்ததோ?’ என்று சோகிக்க, “நீர் சோகிக்க வேண்டா; பிள்ளை ஸமர்த்தனானான்‌, எனக்கு நாயன்‌ திருவடிகளை ஸேவித்துக் கொண்டிருக்க வேணும்‌; நீர்‌ தவிர்க்க வேண்டா; ராஜ கார்யத்தை அடிக்கடி விசாரித்துக் கொண்டு பிள்ளைக்கும்‌ புத்தி சொல்லிக் கொண்டு வருகிறேன்‌” என்று சொல்லி ஸமாதானம்‌ பண்ணி, ராஜ கார்யமும்‌ விசாரித்துக் கொண்டு நாயன்‌ திருவடிகளை யநுவர்த்தித்து ஸகலார்த்‌தங்களையும்‌ அருளிச் செய்யக் கேட்டு க்ருதார்த்தராய்‌ சிறிது நாள்‌ அங்கே தானே யிருந்து பிற்பாடு திருப் புல்லாணிக்கு ஸமீபத்திலே நாயனெழுந்தருளி யிருக்கிற சிக்கிலி என்‌கிற வூரிலே யெழுத்தருளி குருகுல வாஸம்‌ பண்ணிக் கொண்டிருந்தார்‌. நாயனாரும்‌ தமக்குப்‌ பிள்ளை லோகாசாரியர்‌ ப்ரஸாதித்த பரமார்த்தங்களை யெல்லாம்‌ இவருக்கு ப்ரஸாதித் தருளினராகையாலே கூர குலோத்தமை தாஸ முதாரம்‌ என்றருளிச் செய்தார்‌.

அநந்தரம்‌ நாயன்‌ தம்முடைய சரம காலத்திலே திருமலை யாழ்வாரை யழைத்தருளி ‘“விளாஞ்சோலைப்பிள்ளை யிடத்திலே இன்னம்‌ உமக்கு வேண்டிய அர்த்த விசேஷங்களை யெல்லாம்‌ கேளும்‌’‘ என்றும்‌, திருக்கண்ணங்குடிப்பிள்ளை யிடத்திலே திருவாய்‌மொழியைக்‌ கேளும்‌’” என்றருளிச்‌ செய்து, பிள்ளை லோகாசாரியர்‌ திருவடிகளை த்யாநித்துக் கொண்டு திருநாட்டுக்‌ கெழுந்தருளினார்‌ . அவர்‌ குமாரரைக்‌ கொண்டு நாயனுக்கு தீர்த்த திருவத்யயனமும்‌ நடத்தி யருளினார்கள்‌.
கூர குலோத்தம தாஸ நாயன்‌ திருநஷத்ரம்‌ ஐப்பசியில்‌ திருவாதிரை; அவர்‌ தனியன்‌
லோகாசார்ய க்ருபா பாத்ரம்‌ கெளண்டின்ய குல பூஷணம்‌ |
ஸமஸ்தாத்ம குணாவாஸம்‌ வந்தே கூரகுலோத்தமம்‌ ॥
ஸ்வயமாஹுய ஸைலேஸ குரவே அர்த் ப்ரதாநத: |
லப்தோ தாராபிதம்‌ கூர குலோத்தம மஹம்‌ பஜே ॥

பிள்ளை லோகாசாரியருடைய க்ருபைக்குக்‌ கொள்கலமாய்‌ கெளண்டின்ய குலத்துக்கணியாய்‌, எல்லா ஆத்ம குணங்களுக்குமிருப்பிடமான கூர குலோத்தம தாஸ நாயனாரை அடி பணிகிறேன்‌.
தானே வலிய அழைத்து திருமலை யாழ்வாருக்கு விசேஷார்த்‌தங்களை ப்ரஸாததித்ததனால்‌ பெறப்பட்ட -௨தரார்‌” என்கிற பெயரை யுடைய கூர குலோத்தம தாஸ நாயனாரை ஸேலிக்கிறேன்‌.

அநந்தரம்‌ திருமலையாழ்வாரும்‌ ‘திருக்கண்ணங்குடிப்பிள்ளை யருகே: எழுந்தருளி ஸேவித்து, ‘அடியேனுக்குத்‌ திருவாய்‌ மொழியின்‌ அர்த்தமருளிச் செய்யவேணும்‌‘ என்று வேண்ட,
அவரும்‌ அப்படியே தொடங்கி யருளிச்‌ செய்ய, அவர்‌ தாத்பர்ய ப்ரதாநராய்க் கொண்டு தாத்பர்யார்த்தங்களையே ப்ரஸாதிக்க, இவர்‌ சப்தத்துக்கிசைய அருளிச் செய்ய வேணும்‌” என்று நிர்ப்பந்திக்க,ஆகில்‌ திருப்புட்குழி ஜீயர்‌ பாடேறப்‌ போய்க் கேளும்‌” என்ன,
அப்படியே புறப்பட்டுப்‌ பெருமாள்‌ கோயிலிலே எழுந்தருளின அற்றை நாள்‌ அவர்‌ திருநாட்டுக்கெழுத்தருளின பன்னிரண்டாம்‌ திவஸமாய்‌ அவர்க்குத்‌ திருநாராயண பலி நடக்க அத்தைக்‌ கண்டு மிகவும்‌ துக்கித்திருக்க, பெருமாள் கோயிலாசார்யர்களும்‌ கோயில்‌ பரிகரமனைத்துக்‌ கொத்தும்‌ திருமலை யாழ்வாரை கோயிலுக்கெளுந்தருளப் பண்ணுவித்துக்‌ கொண்டு போய்‌ பெருந்‌
-தேவியாரையும்‌ பேரருளாளனையும்‌ ஸேலிக்கப் பண்ணி , தீர்த்தம்‌ ஸ்ரீசடகோபன்‌, சாத்துப்படி, திருத்துழாய்‌, திருமாலை முதலான வரிசைகள்‌ ப்ரஸாதித்து பஹாுமாளம்‌ பண்ணி தர்சந ப்ரவர்த்தகராக வாழ்த்தினார்கள்‌. பிற்றை நாள்‌ திருநாராயண புரத்திலிருந்து
நாலூர்ப்பிள்ளையும்‌ அவர் குமாரரான நாலூராச்சான்‌ பிள்ளையுமெழுந்தருளிப்‌ பேரருளாளனை மங்களாசாஸனம்‌ பண்ண வெழுந்‌தருள, அந்த வேளையில்‌ திருமலை யாழ்வார்‌ ஸத்நிதியிலே மங்களாசாஸனம்‌ பண்ணிக் கொண்டு எழுந்தருளியிருக்க, இவர்கள்‌ திருமலையாழ்வார்‌ எழுந்தருளின செய்தியும்‌ உள்ளே மங்களாசாஸனம்‌ பண்ணி யருளுகிறதும்‌ அறியாமல்‌ ஸந்நதியிலே பின்னே நின்று, ”உள்ளே ஸேவிக்கிறவரார்‌?” என்று கேட்க, கோயில்‌ திருமலை யாழ்வார்‌’”’ என்ன, ‘ கோயில்‌ திருமலை பெருமாள்‌ கோயிலன்றோ!’” என்றருளிச்‌ செய்து கொண்டு அவர்‌ ஸத்நிதி வைஷ்ணவர்களுக்குப்‌ பின்னே நின்று ஸ்ரீசடகோபனுக்கு திரு முடியை உயர வெடுத்ருள, ஸ்ரீ சட கோபன்‌ திருமுடியிலே தரிக்கிற வளவிலே தம்முடைய திருவிரலாலே ஊன்‌ற, அர்ச்சகரும்‌ சீக்கிர்மாக ஸந்நிதியிலே ஸ்ரீசடகோபனை யெழுந்தருளப்‌ பண்ணி வைத்து திருமலை யாழ்வார்‌ கைப்பிடித்து, பின்னே வருகிற நாலூர்‌பிள்ளையை ‘அருளாளர்‌ திருவடி யூன்றியவரே!”” (கோல வராஹரான நாலூர் பிள்ளைக்கு இந்தத் திருநாமம் )என்றழைத்துத்‌ திருமலை யாழ்வாரை அவர் கையில்‌ காட்டிக்‌ கொடுத்து, “இவருக்கு மூவாயிர வ்யாக்யானம்‌ ஸாதிக்கும்படி ஜ்யோதிஷ்குடியிலே. நியமித்தோம்‌; (பிள்ளை லோகாச்சார்யார் பேர் அருளாளன் தானே )இவர்‌ வந்தார்‌; திருப்புட்குழி ஜீயர் பாடே ஈடுகேளாத இழவு தீர அத்தையும்‌ இவருக்கு ஸாதியும்‌”’ என்று பரவசராய்‌ நியமிக்க, பிள்ளையும்‌, “அடியேன்‌ க்ருதார்‌த்தனாளேன்‌; திருக்‌ கண்ணங்குடிப்பிள்ளை போராத விவருக்குத்‌ தினவுகெடச்‌ சொல்ல வல்லேனோ?’” என்று சிந்தித்து நிற்க, மனமொத்த நாதனான பேரருளாளன்‌ ‘*ஆத்மாவை புத்ர நாமாஸி” என்று ஆச்சான்‌ பிள்ளை ஸாதித்தால்‌ நீர்‌ ஸாதித்ததாம்‌” என்று நியமித்தருள–நாயன்தே நாயன்தே ” என்று உகந்து புறப்பட்டருளி -வாரீர்‌ திருமலை யாழ்வாரே! நாம்‌ போர ஜரித்தோம்‌; நீர்‌ அதி நிபுணர்‌; உமக்குத்‌ தகும்படி சொல்ல வல்லவர்‌ இவர்‌? என்று *நல்ல மகனாரான ஆச்சான் பிள்ளை கையிலே காட்டிக்‌ கொடுத்து, தமக்குத்‌ திருநாராயணபுரத்துக்‌ கெழுந்தருளத்‌ திருவுள்ளமாய்‌ புறப்பட்டெழுந்தருளினார்‌.

(ஆங்கு அவர்பால் பெற்ற சிறியாழ்வானப் பிள்ளை
தாம் கொடுத்தார் தம் மகனார் தம் கையில் -பாங்குடனே
நாலூர் பிள்ளைக்கு அவர் தாம் நல்ல மகனார்க்கு அவர் தாம்
மேலோர்க்கு ஈந்தார் அவரே மிக்கு —49-)

திருமலையாழ்வாரும்‌,”க்ருதார்த்தனானேன்‌” என்று ஆச்சான்‌ பிள்ளை திருவடிகளிலே ந்யஸ்த பரராயிருக்க, இவரைக்‌ கைக்‌கொண்டருளித்‌ திருவாய்மொழி யீடு தொடங்கி நடத்தி யருளாநிற்க, இத்தைத்‌ திருநாராயணபுரத்தில்‌ ஆயி, பிள்ளை தொடக்கமானவர்கள்‌ கேட்டு, இவரை யெழுத்தருளும்படி எம்பெருமானாருடைய திருமுகமாக திவ்யாஜ்ஞையிட்டுவிட, அதைக்‌ கண்டு ஆச்சான் பிள்ளை திருமலை யாழ்வாரைக்‌ கூட்டிக்‌ கொண்டு திருநாராயணபுரத்தேற எழுந்தருள அவர்களும்‌ எதிர் கொண்டு திருவடிகளை ஸேவித்து எழுந்தருளப்‌ பண்ணிக்‌ கொண்டு போர,

ஆகுஹ்யாமல யாதவாத்ரி சிகரம்‌ கல்யாண தீர்த்தம்‌ தத:
ஸ்நாத்வா லக்ஷ்மண யோகிந: பதயுகம்‌ நத்வாதுகத்வாதந : |
ஸ்ரீ நாராயயணமேத் யத்ய தத்ர தரணீ பத்மாலயா மத்யகம்‌
பஸ்யேயம்‌ யதிகிம்‌ தப: பலமத: ஸம்பத் குமாரம்‌ ஹரிம்‌ ॥

தூய்தான யாதவாத்ரியினுடைய உச்சியிலேறி திருக்கல்‌யாணி தீர்த்த புஷ்கரியிணியில்‌ நீராடி இளையாழ்வாருடைய (எம்பெருமானாருடைய) திருவடிகளைத்‌ தொழுது, மேலே சென்று திரு நாராயணனை ஆஸ்ரயித்து, அங்கு ஸ்ரீபூமிப் பிராட்டியார்‌, பெரியபிராட்டியார்‌ இவர்கள்‌ நடுவில்‌ எழுந்தருளி யிராநின்றுள்ள சம்பத்குமார்‌ (செல்வப்பிள்ளை) எனும்‌ எம்பெருமானைக்‌ காண்‌பேனாகில்‌ இதைக் காட்டிலும்‌ வேறான தப:பலனானது என்ன இருக்கிறது?] என்று சொல்லுகிற படியே க்ரமத்திலே பெரிய ப்ரீதியோடே சென்று திரு நாராயணன்‌ திருவடிகளை அரணாகப் பற்றி அங்கே இனிததமர்‌ந் தெழுந்ருளி யிருக்கிற எம்பெருமானாரை ஸேவித்து அவர்‌ புருஷகாரமாக யதுகிரி நாயகியாரையும்‌ செல்வப்‌ பிள்ளையையும்‌ திரு நாராயணனையும்‌ ஸேவித்து -அங்கே யெழுந்தருளி இருந்து எம்பெருமானார்‌ ஸந்நிதியிலே தொடங்கி *உறுபெருஞ்‌ செல்வம்‌ இத்யாதிப்‌படியே அவருக்குகப்பாக அங்கே ஆச்சான்‌ பிள்ளையுடனே ஈடு முப்பத்தாரறாயிரமுங்‌ கேட்டார்கள்‌; அவரும்‌ மேலோர்க்கீந்தார்‌ என்னும்படி ப்ரஸாதித்தருளினார்‌ -திருமலை யாழ்வாரும்‌ அவர்‌ திருவடிகளைப்‌ பழுக்க ஸேவித்து -அரிய வருளிச்‌ செயல் பொருளை ஆரியர்களெல்லாரும்‌ உகக்கும்படி கேட்டருளினார் -பின்பு தேவ ராஜரும்‌ இவருடைய ஜ்ஞாந பக்தி வைராக்‌யாதி குண பூர்த்தியைக்‌ கண்டுகந்து இவரை விசேஷாபிமானம்‌ பண்ணி யருளி தம்முடைய திருவாராதனமான *இன வாயர் தலைவனை இவர்க்கு ப்ரஸாதித்தருளினார்‌.

தேவாதி பாத் ஸமதிகம்ப ஹைஸ்ர கீதேர்‌ பாஷ்யம்‌ நிகூடமபிய ப்ரதயாம்‌ சமார | குந்தி புரோத்பவமமும்‌ ஸரணம் பஜேஹம்‌ ஸ்ரீ சைலநாதமுருபக்தி ப்ருதம்‌ ஸடாரெள

உறுபெருஞ்செல்வமும்‌ என்று தொடங்கி, -மாறன்‌ விளங்கிய சீர்‌ நெறி தரும்‌ செந் தமிழாரணமே -என்கிறபடியே உடையவருக்கு உகப்பாக நல்லருள்‌ நம்‌ பெருமாள்‌ நாராயணன்‌ நாமங்களாய்‌(திருவாய்‌ 5-9 10), கேட்‌டாரார்‌ வானவர்கள்‌ செவிக்கினிய செஞ்சொல்‌ (திருவாய்‌ 10-6-11)ஆன திருவாய்மொழி தொடங்கி ஈடு முப்பத்தாறாயிரமும்‌ அத்ருப்‌ தாம்ருத ரூபமான இதின்‌ சப்த ஸ்வாரஸ்யம்‌, அர்த்த ஸ்வாரஸ்யம்‌ த்வநி வ்யங்க்யம்‌, பாவார்த்தம்‌, ஸ்வாபதேசம்‌, அந்யாபதேசம்‌, எல்லாம்‌ ஸம்சய விபர்யமற நன்றாகத்‌ தெரியும்படி *மேலோர்க்‌ கீந்தார்‌ அவரேமிக்கு (௨ப.ர.மா 49) என்னும்‌ படி நாலுராச்சான்‌ பிள்ளை தம்‌ பரம க்ருபையாலே ப்ரஸாதித்தருள, பிள்ளை முதலானவர்கள்‌ கேட்டார்கள்‌, அத்தைப் பற்றி

ஸ்ரீஸைல நாத குரு மாத்ர குருத்தமாப்யாம்‌ ஸ்ரீஸூக்தி தேஸிக வரேண ச யஸ் த்ரிதைவம்‌ |
வ்யக்தஸ் ஸடாரி க்ருதிபாஷ்ய ஸு ஸம்ப்ரதாயோ விஸ்தாரமேதி ஸஹி வைஷ்ணவ புங்கவேஷு ॥-
என்றும்‌

கோலாதிபாத்‌ பிதுரவாப்ய ஸஹஸ்ர கீதேர்‌ பாஷ்யம்‌ ஹி பூர்வதக தேஸிக வர்யகுப்தம்‌ |
த்‌ரேதா ப்ரவர்த்ய புவிய: ப்ரத்யாஞ்சகார தம்‌ தேவ ராஜ குருவர்ய மஹம்‌ ப்ரபத்பே –
என்றும்‌ அநுஸந்தித்தார்கள்‌.
யாதொரு ஆழ்வாரருளிய திருவாய்‌ மொழியின்‌ பாஷ்யமான ஈட்டின்‌ நல்ல ஸம்ப்ரதாயமானது திருவாய்மொழிப் பிள்ளை திருநாராயணபுரத்தாய்‌ திருவாய்மொழி யாசார்யர்‌ என்னும்‌ இம் மூவராலும்‌ இப்படி மூன்று விதமாக வெளியாயிற்றோ, அது வன்றோ ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரேஷ்டர்களிடம்‌ (இப்போது) பல படியாகப்‌ பரவுதலைப்‌ பெற்றுள்ளது. யாவ ரொருவர்‌–பூர்வாசார்யர்களால்‌ மறைத்து வைக்கப்‌ பெற்ற திருவாய்மொழியின்‌ ஈட்டை தம்‌ தமப்பனாராகிய நாலுர் பிள்ளை யிடமிருந்து பெற்று (மூவரின்‌ மூலமாக) மூன்று விதமாகப் பிரவர்த்திப்பித்து பூமியில்‌ அது தன்னை ப்ரஸித்தமாக்கினாரோ,அந்த நாலுராச்சான்‌ பிள்ளையை அடியேன்‌ சரணமடைகிறேன்‌-திருவாய்மொழிக்கு ஈடு முப்பத்தாறாயிரம்‌ ஸாதித்த வுடன் நாலுராச்சான் பிள்ளை திருமலை யாழ்வாருடன்‌ ஸ்வ ஸ்தானத் தேற எழுந்தருளினார்‌.-

யாவரொரு திருமலையாழ்வாரானவர்‌ தேவாதிபர்‌ என்ற நாலூராச்சான் பிள்ளையிடமிருந்து ரஹஸ்யமான திருவாய்மொழி யாயிரத்தினுடைய பாஷ்யமான ஈடு முப்பத்தாறாயிரப்‌ படியைப்‌ பெற்று, பின்னர்‌ அத்தைப் ப்ரஸித்தமாக்கினாரோ, நம்மாழ்வார்‌ விஷயத்தில்‌ மிகவும்‌ பக்தியுடையவராய்‌, குந்‌தி நகரத்தில்‌ அவதரித்‌தவரான புகழ் பெற்ற அந்தத்‌ திருமலையாழ்வாரை சரணம்‌ பற்றுகிறேன்‌ –என்கிற படியே தேவப் பெருமாள்‌ கைக் கொண்டருளுந்‌ திருமலை யாழ்வாருக்கு ஆழ்வார்‌ திருவடிகளிலே ப்ராவண்யமதிசயித்து அவர்‌ திருவடி தொழ வேணுமென்கிற அபிநிவேசத்‌தை யுடையராய்‌, ‘ஆஜகாம முஹார்த்தேந” என்கிறபடியே அவரெழுந்தருளி யிருக்கும்‌ திருக்கணாம்பி யென்கிற திருப்படை வீட்டைக்‌ குறித்து அங்கே சென்று அவர்‌ திருவடிகளை ஸேவித்துத்‌ தம்முடைய அபிநிவேசமெல்லாம்‌ தீர்ந்து;

(சடகோபர் தாசர் திருவாய்மொழிப்பிள்ளை இவை பட்டப்பெயர் -திருமலை ஆழ்வார் இயல் பெயர் –
1371-பரிதாபி ஸம்வத்சரம் வைகாஸி 17 நம்பெருமாள் மீண்டு அருளினார்
கோட்டூரில் அண்ணர்-திருகுமாரத்தியை ஸ்ரீ ரெங்கநாச்ச்யார் மணந்தவர் திகழக் கிடந்தான் பாடிய திரு நா வீறுடைய பிராணன் தாதர் அண்ணர் வீப்ர ஸயான குரு கோமடத்தாழ்வான் திருவம்சம் -இவர் திருக் குமாரர் நம் பெரிய ஜீயர் -சாதாரண வருஷத்தில் திருவவதாரம் -)

அநந்தரம்‌ ஆழ்வாரைத்‌ திருநகரியிலே திருக்குடி புகுவிப்பதாகத் திருவுள்ளமாய்‌, தாம் முந்தி திருநகரியேற யெழுந்தருளி, காடுவெட்டி நாடாக்கி, -நல்லார்‌ பலர்வாழ்‌ குருகூர்‌ என்னும்படி குடியேற்றி ஆழ்வாரை யெழுந்தருளப்‌ பண்ணுவித்துக்‌ கொண்டு குருகூர்ச் சடகோபன்‌ என்னும்படி யதா ஸ்தாதத்திலே திருப்ரதிஷ்டை பண்ணி யருளி
ஸடகோப முநிம்‌ வந்‌தே ஸடாநாம்‌ புத்தி தூஷணம்‌ |
அஜ்ஞாநாம்‌ ஜ்ஞாந ஜந கம்‌ திந்த்ரிணீ மூல ஸம்ஸ்ரயம்‌ ॥

வஞ்சகர்களுடைய புத்தியை நாசம்‌ செய்பவராய்‌, ஜ்ஞானமில்லாத மூடர்களுக்கு ஜ்ஞானம்‌ பிறப்பிப்பவராய்‌, திருப்புளியினடியில்‌ எழுந்தருளி யிருக்கும்‌ ஸ்ரீசடகோப முநிவரை அடி பணிகிறேன்‌- என்கிறபடியே உறங்காப் புளி நிழல் தன்னிலே ஏறி யருளப்‌ பண்ணி ஸேவித்து நிற்க இவர்க்கு சடகோப தாஸர்‌ என்று தம்‌முடைய திரு நாமத்தை யாதார்த்த நாமமாம்படி ப்ராஸாதித்‌தருள, இருவரும்‌ “ப்ரஸாத லப்‌த பரம ப்ராப்ய கைங்கர்ய ஸாலிநே –ஆழ்வாரின்‌ அநுக்ரஹத்தினால்‌ பெற்ற நிரதிசயமான பேறான
கைங்கர்யத்தினால்‌ விளங்கா நின்‌ற திருமலை யாழ்வார்‌- என்னும்படி,
பெரிய வண் குருகூர் நகர்‌ நம்பிக்காளுரியனாய்‌, புகழ் வண்‌ குருகையும்‌ பொற் கோபுரமும்‌ புரிசை சூழ் கழனி தண் பொருநை மன்னாழ்வார்‌ மறைத் தமிழாயிரமுநம் திகழும்படி செய்த ஸ்ரீசைலேசர்‌’–என்னும்படி ஆழ்வார்‌ திருவடிகளிலே ௮சேஷ சேஷ வ்ருத்திகளிலும்‌ அந்வயித்து அதுவே யாத்ரையாய்ப்‌ பேரா நிற்கிற காலத்திலே

(இன்றும் இனவாயர் தலைவன் திவ்ய விக்ரஹம் திருவாய் மொழிப்பிள்ளை திருமாளிகையில் சேவிக்கலாம் -விளாஞ்சோலைப் பிள்ளை யுடைய திருவாராதன திவ்ய மங்கள விக்ரஹம்)

திருமலை யாழ்வாரும்‌ விளாஞ்சோலைப் பிள்ளையும்‌
விளாஞ்சோலைப்‌ பிள்ளையை ஸேவித்து விசேஷார்த்தங்களைக்‌ கேட்க வேணும்‌” என்று திருவுள்ளமாய்த்‌ திருவநந்தபுரத்தே யெழுந்தருளி ஆழ்வாருடைய தமர்களில்‌ ப்ரதானரான வாசி தோற்ற –படமுடை யரவிற்‌ பள்ளி பயின்றவன்‌ பாதங்கண்டு பணிந்து, அநந்தரம்‌ “கண்ணன்‌ கழலினை காட்டுமுலகாரியன்‌ தாள்‌ நண்ணு நலந் திகழ்‌ நாரணனை”’ என்று சொல்லும்‌ படியான விளாஞ்சோலைப் பிள்ளையைத்‌ திருவடி தொழுவதாக அவரெழுந்‌தருளி யிருக்கிற -வாசமே கமழுஞ்‌ சோலையான திருச்சோலைக்‌ குள்ளே சென்று ஸேலிக்க,! ”குரு பதாம் புஜம்‌ த்யாயேத்‌ குரோர்‌
நாம ஸதா ஜபேத்‌”
-ஆசாரியனின்‌ தாமரை யடிகளை எப்போதும்‌ சிஷ்யன்‌ தியானிக்கக் கடவன்‌; ஆசாரியனின்‌ திருநாமத்தை விடாமல்‌ அநுஸந்திக்கக் கடவன்‌-
ஸ்ரீ லோகார்ய முகார விந்த மகில ஸ்ருத்யர்த்த கோஸம்‌ ஸதாம்‌ |
தத் கோஷ்டீஞ்ச ததேக லீந மநஸா ஸஞ்சிந்த யந்தம்‌ ஸதா ॥

ஸகல வேதார்த்தங்களாகிய செல்வம்‌ சேமிக்கப்பட்ட பொக்கிஷமான பிள்ளை லோகாசார்யருடைய தாமரை போன்ற திருமுக மண்டலத்தையும்‌ ஸத் புருஷர்களினுடைய இருப்பிடமான அவருடைய கோஷ்டியையும்‌ எப்போதும்‌ அவற்றிலேயே லயமடைந்த மனஸ்ஸோடு த்யானித்துக் கொண்டிருக்கிற விளாஞ்‌ சோலைப்‌ பிள்ளையை- என்றும்‌ சொல்லுகிறபடியே பிள்ளை லோகாசாரியருடைய திவ்ய மங்கள விக்ரஹத்தையும்‌ அவருடைய திருவோலக்கத்தையும்‌ த்யானித்துக்‌ கொண்டு தம்முடைய திரு மேனியிலே சிலந்தி நூலிழைக்கும்படி அஸ்தமிதாந்ய பாவராய்‌ நாலாறு நாள்‌ ஸமாதியாக வெழுந்தருளி யிருந்து அநுபவித்து,பின்பு இவரைக்‌ கண்டு இவர்க்கு ஸகலார்த்தங்களையும்‌ ஸாதிக்க இவரும்‌ கேட்டு க்ருதார்த்தராய்க்‌ வேதிகப்‌ பொன்னான இவர்‌ ஸம்பந்தத்தாலே தம்முடைய ஐந்மக் கொத்தையைக்‌ கழித்துக்‌ கொண்டு மீண்டு திருநகரி யேறே வெழுந்தருளினார்‌. விளாஞ்‌ சோலைப்‌ பிள்ளையும்‌ ஸ்ரீவசந பூஷணத்தின்‌ தாத்பர்யங்களை ஏழு -ஸப்த-காதையாக ஸங்க்ரஹித்து அருளிச்‌ செய்து ஸர்வர்க்கும் உபகரித்தருளி தாமும்‌ –செறிபொழிலந்தபுரத்து அண்ணலார்‌ கமல பாதமணுகுவார்‌ அமரராவார்‌-என்கிறபடி அயர்வறுமரர்‌களோடே கூடி அடிமை செய்ய வேணுமென்கிற ப்ராப்ய த்வரையாலே தடுத்தும்‌ வளைத்தும்‌ பெற வேண்டும்படி பரமபக்தி தலை யெடுத்து அவா வற்று வீடு பெற்றார்‌. (பாவோ நாந்யத்ர சச்சதி’ என்கிற திருவடியைப்‌ போல இவரும்‌ அஸ்தமிதாந்ய பாவராய்‌ நாலாறு நாள்‌ ஸமாதியாக எழுந்தருளி யிருந்து ஸ்வாசார்ய விக்ரஹா நுபவம்‌ பண்ணி யருளுகிறவர்‌ திருக் கண்களை விழித்து நீர்‌ யார்‌? இங்கு வந்த கார்யமென்‌?” என்று கேட்டருள இவரும்‌ அடைவே எல்லாம்‌ விண்ணப்பம்‌ செய்யக் கேட்டு ஸந்தோஷித்து இவருக்கு ஸ்ரீவசந பூஷண தாத்பர்யங்களை-ஸப்த-ஏழு காதையாக ஸங்க்ரஹித்து அருளிச்‌ செய்து ஸர்வர்க்கும் உபகரித்தருளினார் )

அப்போது நம்பிமார்‌ (அநந்த சயனனை) திருவாராதனம்‌ செய்யா நிற்க, விளாஞ்சோலைப்பிள்ளை திருவடி தொழச்‌ சென்று கர்ப்ப க்ருஹகத்திலே புகுந்து திருவடி யருகே நிற்கக் கண்டு நம்பிமாரும்‌ அது மலையாள தேசமாகையாலே புலையரான விளாஞ்‌ சோலைப் பிள்ளை யகத்து (அருகே) நாம்‌ போகிறதில்லை” என்று திருக் காப்பு சேர்த்துக்‌ கொண்டு புறப்பட, அவ்வளலிலே பிள்ளை ஸ்ரீபாதத்து முதலிகள்‌ ”விளாஞ்சோலைப் பிள்ளை வோகாசார்யர்‌ திருவடிகள்‌ சேர்த்தார்‌?” என்று நூற்றத்தாதி இயலுனே பரியட்‌டம்‌ திருமாலைக்குக்‌ கோயில்‌ வாசலிலே வரக்‌ கண்டு நம்பிமார்‌ ப்ரத்யஷமாகக்‌ கண்ட ஆஸ்சர்யத்தை அனைவரக்கும்‌ வெளிப்‌ படுத்தினார்களென்று ப்ரஸித்தமிறே, இச் செய்தியை யறிந்து திருமலையாழ்வார்‌ ஸ்ரீபாதத்து முதலிகள்‌.
கத்வா நந்தபுரம்‌ ஜகத் குரு பதத்யாநே ரதம்‌ குத்ர சித்‌தம்‌
நாராயண தாஸ மேத்ய விமலம்‌ ஈத்வா ததங்க்ரிம்‌ முதா |
தஸ்மாதார்ய ஜநோக்தி மெளக்தி கக்ருதம்‌ வேதாந்த வாக் பூஷணம்‌
ஸ்ரீவாக் பூஷணமப்ய வாப்பஸ ருதம்‌ ஸ்ரீஸைல நாதோ பவத்‌ ॥

அந்தத் திருமலையாழ்வார்‌ திருவநந்த புரத்தை யடைந்து ஓரிடத்தில்‌ (புறச் சோலையில்‌) பிள்ளை லோகாசாரியருடைய திருவடிகளை தியானம்‌ பண்ணுவதில்‌ விருப்பமுள்ள அந்த நாராயண தாஸரை(விளாஞ்சோலைப்‌ பிள்ளையை) அடைந்து நிர்மவமான அவர்‌ திருவடிகளை மகிழ்ச்சியுடனடி பணித்து அவரிடமிருந்து பூர்வாசார்யர்களுடைய ஸ்ரீஸூக்திகளாகிற முத்துக்‌களால் அமைக்கப் பெற்ற வேதாந்த வாக்யங்களுக்கு ஆபரணமான ஸ்ரீவசந பூஷணத்தைப்‌ பெற்று (மேலான) ஆசார்யரானார்‌ ] என்று அநுஸந்தித் தருளினார்கள்‌-

இத்தைத்‌ திருமலையாழ்வார்‌ கேட்டருளி சிஷ்ய புத்ரர்கள்‌ செய்யும்‌ க்ருத்யங்களை யெல்லாம்‌ பிள்ளை விஷயத்திலே அநுஷ்‌டான சேஷமாம்படி அநுஷ்டத்துக்‌ காட்டி யருளினார்-(பயிலுஞ்சுடரொளி, நெடுமாற்கடிமை திருவாய்மொழிகளில்‌ காட்டப்பட்ட ஸாரார்த்தமாய்‌ பெரிய் நம்பி மறாதே,
நம்பி விஷயத்தில்‌ அநுஷ்டித்ததை நினைப்பூட்டும்‌,
)இப்படி இவருடைய சரம சேஷி விஷய சரமாநுவர்த்தநத்தை யறிந்தவர்கள்‌
பற்றாத வெங்கள்‌ மணவாள யோகி பதம் பணிந்தோன்‌
நற்றேவராச னலந் திகழ்‌ நாரண தாதருடன்‌
கற்றாரெங் கூர குலோத்தம தாதன்‌ கழல்‌ பணிவோன்‌
மற்றாரு மொவ்வாத்‌ திருவாய்மொழிப்‌ பிள்ளை வாழியவே–
என்று அநுஸந்தித்தார்கள்‌.
வாழி நலந் திகழ்‌ நாரண தாதன்‌ வடிவும்‌
வாழி யவனமுத வாய் மொழிகள்‌–வாழியவே
ஏறு திருவுடை யானெந்தை உலகாசிரியன்‌ சொல்‌
தேறு திருவுடையான்‌ சீர்‌
— என்று தாமும்‌ அநுஸந்தித்தருளினார்‌. பின்பு திருமலை யாழ்வார்‌ தம்முடைய திருமகனாரை புத்ராபிமானம்‌ பண்ணி, தேவப்‌ பெருமாள்‌ என்று நாலுராச்சான் பிள்ளை திருநாமம்‌ சாத்தி யருளினார்‌.

இனி பிள்ளை லோகாசாரியர்‌ சிஷ்யராய்‌ கொல்லி காவல தாஸரான கோட்டூர்‌ அழகிய மணவாளப்‌ பெருமாள் பிள்ளையும்‌(இவர்‌ மணவாள மா முனிகளின்‌ மாதா மஹர்‌,) லோகாசாரியர்‌ ப்ராஸாதித்தருளின அர்த்த விசேஷங்களை அநுஸந்தித்துக்கொண்டு சிக்கல்‌ கிடராம்‌ என்கிற க்ராமத்திலே சிலநாள் எழுந்தருளியிருந்தார்‌. பின்‌பு திகழக் கிடந்தான்‌ திருநாவீறுடைய
பிரான்‌ தாதரண்ணரையர்(மா முனிகளின்‌ தகப்பனார்‌; இவர்‌ 74 ஸிம்ஹாஸனாதி பதிகளில்‌ கோமடத்‌தாழ்வான்‌ என்பவரின்‌ திருவம்ஸ்யர்‌ )அவர்‌ குமாரத்தியான ஸ்ரீ ரங்க நாச்சியாரைத்‌ திருமணம்‌ புணர்ந்து அவர்‌ திருமாளிகையிலே யெழுந்தருளி யிருந்து தமக்கு ஜ்ஞாதவ்யார்த்தங்களை யெல்லாம்‌ அவர்‌ ஸந்நிதியிலே கேட்டருளி
பிள்ளை லோகாசாரியர்‌ ஸந்நிதியிலே கேளாத இழவெல்லாம்‌ தீர்ந்து அந்த க்ருதஜ்ஞதைக்கு
வாழி மணவாளன்‌ வாழி யவன்‌ வீர நகர்‌
வாழி யவன்‌ குரவை மண்ணின்‌ மேல்‌–வாழி
உலகாசிரியனுரைத்த பொருள்களெல்லாம்‌
பல காலும் உரைக்குமவன்‌ பண்பு

என்றநுஸந்தித்து அவரைப்‌ பிள்ளை லோகாசாரியராகவே ப்ரதிபத்தி பண்ணிக்‌ கொண்டு அவருக்கு அநந் யார்ஹராய்‌ அநுவர்த்‌தித்துப் போந்தார்‌. இப்படி அவருக்கு அசேஷ ரஹஸ்யங்களையும்‌ ஸாதித்து சில நாள்‌ கழிந்தவாறே அழகிய மணவாளப் பெருமாள்‌ பிள்ளையும்‌ திருநாட்டுக் கெழுந்தருளினார்‌.

அழுகிய மணவாளா மா முனிகள் திருவவதாரம்‌
இப்படி ப்ரப்த்தி மார்க்கமானது ஸங்குசிதமாக நடந்து செல்லுகிற காலத்திலே ஸ்ரீய:பதியாய்‌ பரம காருணிகனாய்‌-திருவரங்கத் தரவணையிலே – உறங்குவான்‌ போல்‌ யோகு செய்த-என்கிறபடியே ஜகத் ரஷண சிந்தா யுக்தனாய்க்‌ கண் வளர்ந்தருளுகிற பெரிய பெருமாள்‌ மீண்டும்‌ தர்சநம்‌ இப்படி ஒராண் வழியாய்‌ வருகிறபடியைக்‌ கண்‌டு ‘எம்பெருமானாரைப்‌ (போலே லோகமெல்லாம்‌ உஜ்ஜீவிக்கும்படி ஒரு விஷயத்தை உண்டாக்குவோம்‌”’என்று யோசித்து இனி இதற்கு ஆவாரார்‌ என்று தேடி மீண்டும்‌ திருவநந்தாழ்வானையே. கடாக்ஷித்து ஜகத்தைத் திருத்தும்படி நியோகித்தருள அவரும்‌ அப்படியே

1–ததஸ் ததிங்கிதம்‌ தஸ்ய ஜாநந்நேவ ஜகக்நிதே: | தஸ்மிந் தாம்நி ஸடாராதே:புரே புநரவாதரத்‌ ॥ என்றும்‌
2–ஸம்ஸந்தி ஸமயம்‌ தஸ்ய துலாம் ப்ராப்தே த்விஷாம் பதெள |
மூலம்‌ ஹி ஸர்வ ஸித்தீநாம்‌ மூலருஷம்‌ ப்ரசஷதே ॥ என்றும்‌
3–யந் மூலயாஸ்வ யுஜமாஸ் யவதார மூலம்‌ காந்தோ பயந்த்ரு யமிந। கருணைக ஸிந்தோ:
நஸீத் அஸத்ஸு கணிதஸ்ய மமாபி ஸத்தா மூலம்‌ ததீத வஷகதுப்யுதயைக மூலம்‌ ॥என்றும்‌

1-அப்போது திருவநந்தாழ்வான்‌ பெரிய பெருமாளுடய திருவுள்ளத்தை யறிந்தவராய்‌, அதன்படியே சடகோபுனுடைய இருப்பிடமான அந்தத்‌ திருநகரியிலே மீண்டும்‌ அவதரித்தருளினார்‌-
2-ஸுரியன்‌ துலா ராசியை அடைந்திருக்கும் போது எல்லாகாரிய ஸித்திக்கும்‌ காரணமான மூல நக்ஷத்ரத்தை அந்தத்‌ திருவநந் தாழ்வானின்‌ அவதார காலமாக பூர்வாசாரியர்கள்‌ அருளிச்‌ செய்‌கிறார்கள்‌.
3–எந்த ஐப்பசி மாதத்தில்‌ மூல நஷாத்ரமானது கருணைக் கடலான மணவாள மா முனிகளின்‌ அவதாரத்துக்கு அடியாயிற்றோ அதே மூலமானது அஸத்துக்களில்‌ ஒருவனாக மதிக்கப்பட்ட
(தாழ்ந்தவனான) அடியேனுக்கும்‌ ஸத்தைக்குக்‌ காரணமாகவும்‌, உலகெல்லாம்‌ வாழ்வதற்கு முக்கிய காரணமாகவும்‌ அமைந்தது] என்றும்‌ சொல்லுகிற படியே திருவநந்தாழ்வானும்‌ தம்முடைய திருவவதாரத்துக்கு இடம்‌ பார்த்து ஆழ்வார்‌ திருநகரியிலே அண்ணர் தேவிகள்‌ கர்ப்பத்தை யடைந்து நவமாஸம்‌ சென்றவாறே

செந்தமிழ் வேதியர் சிந்தை தெளிந்து சிறந்து மகிழ்ந்திடுநாள்!
சீருல காரியர் செய்தருள் நற்கலை தேசு பொலிந்திடுநாள்!
மந்த மதிப்புவி மானிடர் தங்களை வானி லுயர்த்திடுநாள்!
மாசறு ஞானியர் சேரெதிராசர் தம் வாழ்வு முளைத்திடுநாள்!
கந்த மலர்ப்பொழில் சூழ்குருகாதிபன் கலைகள் விளங்கிடுநாள்!
காரமர் மேனியரங்க நகர்க்கிறை கண்கள் களித்திடுநாள்!
அந்தமிழ்சீர் மணவாள முனிப்பர னவதாரம் செய்திடுநாள்!
அழகு திகழ்ந்திடு மைப்பசியில் திருமூலமதெனுநாளே

பாதோபாவம்‌ கதாயாம்‌;கலியுக ஸரதி ஸ்ரத்தராயே ஸகாப்தே .
வர்ஷே ஸாதாரணாக்யே ஸமதிகததுலே வாஸரே தீர ஸங்க்‌யே |
வாரே ஜைவேசதுர்த்மாம்‌ ஸமஜநிசதிதெள ஸூக்லபஷே
ஸு*கர்மா ப்ராஜம்‌ மூலக்யதாரே யதிபதி ரபரோ ரம்ய ஜாமாத்ருந்‌ நாமா 1

கல்யப்தம்‌ 4471 என்ற எண்‌ அடைந்த வளவில்‌ சகாப்தம்‌ 1292ல்‌ ஸாதாரண வருஷத்தில்‌ சூரியன்‌ துலா ராசியை அடைந்துள்ள போது 26-ம்‌ தினத்தில்‌ வியாழக் கிழமையில்‌ விளங்கா நின்ற மூல நக்ஷத்ரத்தில்‌ சுக்ல பக்ஷ சதுர்த்தி திதியிலே ஸதாசார சீலராய்‌ ரம்ய ஜாமாத்ரு முநி என்னும்‌ !திருநாம முடையராய்‌ யதிபதி புநரவதாராய்‌ மணவாளமாமுனிகள்‌ அவதரித்தார்‌–என்கிறபடியே கலி யுகம்‌ பிறந்து நாலாயிரத்து நானூற்று எழுபத்தொரு வருஷத்துக்குப்‌ பின்பு’ ஸாதாராண வருஷம்‌ ஐப்பசி மாசத்தில்‌ சுக்ல பக்ஷத்தில்‌ சதுர்த்தியும்‌ வியாழக் கிழமையும் கூடின க்ர்ன திருமூலத்திலே (ஆங்கில கணக்கில் 1370)உபயவிபூதியும்‌ கொந்தளிக்கும்‌, குடியை யுடையரான திகழக்கிடந்தான்‌ திருநாவீறுடைய பிரான்‌ தாதரண்‌ண அரையருக்கு குமாரராகத்‌ திருவவதரித் தருளினார்‌. அநந்தரம்‌,

யஸ்மிந் ஸ்வ பாத பத்மேந பஸ்பர்ஸ ப்ருதிவீ மிமாம்‌ |
கலிஸ்ச தத் ஷணேநைவ துத்ருவே தூரதஸ்தராம்‌ ॥

எப்போது அவர்‌ தமது திருவடித்‌ தாமரைகளால்‌ இந்த பூமியைத்‌ தொட்டாரோ அப்போதே கலி புருஷனும்‌ வெகு தூரம்‌ ஓடி விட்டான் என்று இவர்‌ கால் காண கலி கால்‌ பறந்தோடிற்று:

இப்படி ஸமஸ்தாத்ம ஸமுஜ்ஜீவந ஜந்மாவாக அவதரித்‌தருளின தம்முடைய குமாரருக்கு அண்ணரும்‌ ஜாத கர்மம்‌ செய்‌தருளி பத்து நாளுங்கடந்த விரண்டாம் நாள்‌ திருவிலச்சினையும்‌ ப்ராஸாதித்து (முன்காலத்‌தில் குழந்தை பிறந்து புண்யாஹவாசநமானவுடன்‌ ‘புஷ்ப ஸமாஸ்ரயணம்‌” என்ற ஸம்ஸ்காரம்‌ பண்ணி வைத்தார்கள்‌. இதில் குழந்தைக்கு ஸுதர்ஸந பாஞ்சஜன்ய இலச்சினைகளை அக்நியால்லாமல்‌ திருமண்‌ ஸ்ரீ சூர்ணங்களால்‌ புஜங்களில் ஓத்துவது அநுஷ்டானம்‌. இத்த ஸம்ஸ்காரம்‌ இன்றும்‌ சில வைஷ்ணவர்களின்‌ ௮நுஷ்டாநத்திலுள்ளது. )
அததஸ்ய குரு: ஸ்ரீமாந் மத்வாதம்‌ திவ்ய தேஜஸம் |
அபிராம வராதீஸ இதி நாம ஸமாதிஸத்‌ ॥

ஸ்ரீமானாய்‌–அந்தக்‌ குமாரரின்‌ தமப்பனாரான அண்ணர்‌ அந்தக்‌ குமாரை, அப்ராக்ருகதா தேஜஸ்ஸை யுடையவராகக்‌ கருதி அவருக்கு அழகிய மணவாளப் பெருமாளென்று திருநாமம்‌ சாத்தினார்‌] என்கிறபடியே-பணமாடரவணைப்‌ பற்ப காலமும்‌ பள்ளி கொள் மணவாளரான அழகிய மணவாளப்‌ பெருமாளுடய திருநாமம் சாத்தி ஆயர் புத்திரனல்லனருந்‌ தெய்வம்‌ என்றும்‌
என்னையுமெங்கள்‌ குடிமுழுதாட்கொண்ட மன்னன்‌ என்றும் சொல்லுகிறபடியே விசேஷ ப்ரதிபத்தியுடனே மாதுல க்ருஹமான சிக்கல்‌ கிடாரத்திலே வர்த்திப்பித்துக்‌ கொண்டு போர, இவரும்‌
பரபக்தி:பரஜ்ஞாநம்‌ பரம பக்திரித்பபி |
வபுஷா வர்த்தமாநேந தத்‌ தஸ்ய வவ்ருதே த்ரயம்‌ ॥

அந்த அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனாருடைய வளரும்‌ தேஹத்துடனே பர பக்தி பர ஜ்ஞானம்‌ பரம பக்தி என்னும்‌ படியான மூன்றும்‌ வளர்ச்சி யடைந்தன-என்றும்‌
உன்‌ வளர்த்தி யூடே வளர்கின்றதா லுன் தன்‌ மாயை தானே என்றும் சொல்லுகிற படியே நாடோறும்‌ வர்த்தித்துக்‌ கொண்டு போரா நிற்க தம்முடைய திவ்ய வபுஸ்ஸோடே பரிணதங்களாய்‌ வளருகிற
பர பக்த்யாதிகளை வடிவாக வுடையராய்‌ வளர்ந்து செல்லுகிற காலத்திலே மீளவும்‌ தமப்பரான அண்ணர்‌
ப்ராப்தான் ப்ராதமிகே வர்ணே கல்பஜ்ஞா:கல்பயந்தி யாந் |
காலே காலே ச ஸம்ஸ்காராந்‌ தஸ்ய சக்ரே க்ரமேண ஸ :

கல்பத் ஸூத்ரங்களை யறிந்தவர்கள்‌ முதல்‌ வருணத்தவரான அந்தணர்கட்கு உரித்தாக எந்த ஸம்ஸ்காரங்களை (சடங்குகளை) விதித்தனரோ அந்த ஸம்ஸ்காரங்களை அவர்‌ (அண்ணர்‌) தமது குமாரருக்கு முறைப்படிப்‌ பண்ணினார்‌- ‘என்கிறபடியே செளள உபநயநங்களையும சாஸ்த்ர ப்ரகாரத்தாலே தத் தத் காலத்திலே செய்வித்‌து வேத சாஸ்த்ரங்களையும்‌ அதிகரிப்பித்துக்‌ கொண்டு போரா நிற்க அநந்தரம்‌,
ஆதாம்ரபாத மாஜாநு புஜமம்புஜலோசநம்‌ |
ஆகாரமஸ்ய ஸ்ம்பஸ்பந்‌ முக்தோபி முமுதே ஜந
– என்றும்‌
ஸெளஸீல்யேந ஸுஹ்ருத்வேந காம்பீர்யேண கரீயஸா |
ரஞ்ஜநேந ப்ரஜாநாஞ்ச ராமோ அயமிதி மேநிரே ॥

அறிவில்லாத ஐநங்களும்‌ செந் தாமரை போல்‌ சிவத்த திருவடிகளையும்‌ முழந்தாள்‌ வரையிலும்‌ நீண்டுள்ள திருக் கைகளையும்‌, செந்தாமரையை யொத்த திருக் கண்களையு முடைத்தான இவருடைய திருமேனியை ஸேவித்து மகழ்வெய்தினர்‌-
தாழ்ந்தவர்களுடனும்‌ நன்கு கலந்து பழகுமியல்பாலும்‌ யாவரிடத்துத்‌ ப்ரீதி யுடையரா யிருப்பதாலும்‌ மிகவும்‌ கம்பீரமான ஸ்வபாவத்தாலும்‌, ஜநங்களை மகிழ்விக்கையாலும்‌, இவர்‌ ராமபிரான்‌ என்று எண்ணினார்கள்‌–என்கிறபடியே அகல ஐநங்களையும்‌ ஆநந்திப்‌பித்துக் கொண்டு
காலேந ஸகலா நாம்ச கலாநாமேக மாஸ்பதம்‌ |:
ஸூஸூபே ஸதநம்‌ பூர்ண: ஸுதாம் ஸூரிவ நிர்மல: ॥

பின்னர்‌ எல்லா வித்யைகளுக்கும்‌ சிறந்த கொள்கலமான அழகிய மணவாளப் பெருமாள்‌ களங்க மில்லாத பூர்ண சந்த்ரன்‌ போலே எப்போதும்‌ விளங்கினார்‌ -என்கிற படியே-(மேகோபராக திரோஹிதனாய்‌ க்ருஷ்ணபஷே க்ஷயிஷ்ணுவாய்‌ ஸ களங்கனான தோஷா கரனைப்‌ போலன்றிக்கே அகளங்கித ஸதா ஸம்பூர்ண கலாயுத ராகா சந்த்ரனைப் போலே ஷோடஸ வார்‌ஷிகரானவாறே ஷோடஸ ஸம்ஸ்கார ஸம்ஸ்க்ருதராய்‌ கலா பூர்த்தியால்‌ வந்த பரபூர்ண ஜ்ஞாநமுடையராய்‌ அத்தால்‌ அத்யந்தம்‌ ப்ரகாஸகராய்‌ போரா நிற்க ) பால சந்த்ரனாவன்‌ நாடோறும்‌ கலைகளாலே வர்த்தித்துக் கொண்டு பூர்ணனாய்‌ விளங்குமா போலே இவரும்‌ ஸகல கலா பூர்த்தியால்‌ வத்த பரி பூர்ண ஜ்ஞாதத்தாலே நிரதிஸய வைபவத்தை யுடையரா யெழுந்தருளி யிருந்தார்‌.

(1286-1406 திருவாய் மொழிப்பிள்ளை
1323-1371-நம்பெருமாள் விஜயம் -15 ஆண்டுகள் திருநாராயண புரம் -23 ஆண்டுகள் திருமலையில் –
வீரபாண்டியன் கலியுக ராமன் -சித்திரை வீதிக்கு முன் பெயர் –
இவன் தம்பி -சுந்தர பாண்டியன் -கைங்கர்யம் நிறைய பண்ணி யுள்ளான் -பராக்கிரம பாண்டியன் இவன் பிள்ளை -இவர் மந்திரி திருவாய் மொழிப் பிள்ளை –
1371-சாதாரண வர்ஷம் ஐப்பசி மூலம் மா முனிகள் திருவவதாரம்)

இனி கோயில்‌ வருத்தாந்த்தம்‌
அக் காலத்தில்‌ அங்கிருந்த மஹாத்மாக்கள்‌ நாடோறும்‌ பூர்வம்‌ போலே ஸ்ரீமந்‌ ஸ்ரீரங்க ச்ரிய மநுபத்ரவா மநுதிநம்‌ ஸம்வர்‌த்தய*” என்று ஸ்ரீரங்க ஐஸ்ர்வர்யம்‌ நித்யமாய்‌ நிர்வதிகமாய்‌ நிர் விக்நமாய்ச்‌ செல்ல வேணுமென்று –
திருப்பல்லாண்டும்‌,
ஏழை யேதலனும்‌,
ஆழி யெழச் சங்கும்‌ அநுஸந்தித்துப்‌ பெருமாளை ப்ரபத்தி பண்ணிப்‌ போருகையாலே
, அந்த மங்களாஸாஸநம்‌ பலித்து செஞ்சியில்‌ கோபணார்யனென்பானொரு வைஷ்ணவ ப்ரபு திருப்பதிக்குச்‌ சென்று திருவேங்கடத் தெம்பெருமானைத்‌ திருவடி தொழுது மீண்டு வருகிறவன்‌ அங்கே நம்பெருமாளை ஸேவித்து திருப்பதி யினின்றும்‌ நம்பெருமாளைத்‌ தன்னுடைய நகரமான செஞ்சி யேற எழுந்தருளுவித்துக் கொண்டு வந்து சிங்கராயபுரத்‌திலே யெழுந்தருளப் பண்ணிக்‌ கொண்டிருந்து பக்தி புரஸ்ஸரமாக ஆராதித்துக் கொண்டிருக்க, திருமணத்தூண்‌ நம்பியாகிய சிங்கப்‌ பிரானும்‌ காட்டிக்‌ கொடுக்க, பகவத் விட்டுக்களான துருஷ்கரை யடக்க ஸமயம்‌ பார்த்து, நிரவதிக பல ஸஹிதராய்ச்‌ செஞ்சியார்‌ சென்று நிஸ்ஸேஷமாக நிரஸித்து ஸ்வ நகரத்தினின்றும்‌ திரு வரங்கன் திருப்பதி யேற நம்பெருமாளைப்‌ பிராட்டிமாருடனே எழுத்தருளப் பண்‌ணி வைத்துக் கொண்டு யதாஸ்தாநத்தில்‌ பெரிய பெருமாளுடனே சேர்த்து ப்ரதிஷ்டிப்பித்து அனைத்தழகும்‌ கண்டருளப் பண்ணினானிறே –

ஆநீயா நீல ச்ருங்கத் யுதிரசித ஐகத் ரஞ்ஜநா தஞ்ஜநாத்ரேஸ்‌ செஞ்ஜ்யா
யாராத்ய கஞ்சித்‌ ஸமயமத நிஹத் யோத் தநுஷ்காந்‌ துருஷ்காந்‌ |
லக்ஷ்மீ க்ஷமாப்யா முபாப்யாம்‌ ஸஹ நிஜ நிலயே அஸ்தாபயத்‌ ரங்கநாதம்‌
ஸம்யக் சர்யாம்‌ ஸபர்யா மக்ருத நிஜயஸோ தர்பணோ கோபர்ணார்ய: ॥

தனது, கண்ணாடி போல்‌ பளபளக்கின்ற புகழை யுடைய கோபணார்யனென்பவன்‌, முழுவதும்‌ கறுத்த கொடி முடியின்‌ காந்தியினால்‌ உலகுக்கு மகழ்ச்சியை யூட்டுகின்ற அஞ்ஜநாசல மென்னும்‌ திருவேங்கட்மலையிலிருந்து எழுந்தருளி வித்துக் கொண்டு வந்து, செஞ்சியில்‌ சில நாட்கள்‌ ஆராதித்து பின்பு வில்லேந்தித்‌ சண்டை யிட வந்த துருஷ்கர்களைக்‌ கொன்று, ஸ்ரீதேவி பூதேவிகளோடு கூட ரங்க நாதனை அவர்‌ தமது ஸ்தானமாகிய திருவரங்கத்தில்‌ ஸ்தாபித்தான்‌. திருவாராதனத்தையும்‌ மிகவும்‌ ஒழுங்குடையதாக நடத்தினான்‌ -என்று இவ்வார்த்தை அபியுக்தருமருளிச் செய்தாரிறே,

கொங்குங்‌ குடந்தையுங்‌ கோட்டியூரும்‌ பேரும்‌ எங்குந்திரித்து விளையாடும்‌ என்கிறபடியே மயல்மிகுபொழில்சூழ்‌ மாலிருஞ்‌சோலையிலும்‌ -விரையார்‌ பொழில்‌ வேங்கடத்திலும்‌ விஹரித்து!
ப்ரதிபக்ஷ நிரஸந பூர்வகமாக கோயிற்பிள்ளாய்‌! இங்கே போதராயே என்னும்‌ படியான தாம்‌ மீண்டு கோயில் ஏற வெழுந்தருளி , பஹு ப்ரியமான சகாப்தம்‌(சகாப்தம்‌ 1293 பரீதாபி வைகாசி என்று கோயிலோழுகு,) ஆயிரத்திருநூறு சென்ற வர்த்தமான பரீதாபி ஸம்வத்ஸரம்‌ வைகாசி மாஸம்‌ பதினேழாந்தேதியில் அரங்க நகரானது -ராமஸ் ஸீதா மநுப்ராப்ய ராஜ்யம்‌ புநரவாப்‌தவாந்‌’–இராமபிரான்‌ ஸீதையைப் பெற்றுத் திரும்பி மறுபடியும்‌ ராஜ்யத்தை அடைந்தான்‌-என்றும்‌, திருமகளோடினிதமர்ந்த செல்வன்‌ என்றும்‌, வீற்றிருந்த மணவாளர்‌ மன்னு கோயில்‌ என்றும்‌ சொல்லுகிறபடியே அழகிய மணவாளரான தாம்‌ நாய்ச்சிமாருடனே கூடி சேர பாண்டியன்‌ என்கிற திவ்ய ஸிம்ஹாஸநத்திலே சேர்த்தியுடனே யேறி யருளி இனிதுடன்‌ வீற்றிருத்து-செங்கோலுடைய திருவரங்கச்‌ செல்வனார்‌ என்னுமது தோன்ற திருவாரதனங் கண்டருளி வாழ்ந்தருளா நிற்க:

(முதலான சடைய வர்மன் -பாண்டியன் கொண்டை சமர்ப்பித்தவன் ஸ்ரீ ரெங்கவிமானத்துக்கு பொன் வேய்ந்தவன்-பூ பல ராயன் சிங்காசனனம் பெயர் கர்ப்பக்ருஹ -உள்ளே இருக்கும் -சேர பாண்டியன் சிங்காசனனம் -மூன்றாம் குலோத்துங்கன் -வெளியில் திருமஞ்சனம் இதில் தான் செய்து அருளுவார் -)

அச்செய்தியை தேசாந்தரஸ்தரான ஸ்ரீவைஷ்ணவர்களெல்‌லாரும்‌ கேட்டு,
பஹுநிநாம வர்ஷாணி கதஸ்ய ஸூ மஹத்வரநம்‌ 1
ஸ்ருணோம்யஹம ப்ரீதிககும்‌ மமநாதஸ்ய கீர்த்தநம்‌ ॥

பலவாண்டுகள்‌ மிகப் பெரிய கானகத்தை யடைத்த நம்பெருமாளுடையதாய்‌ மகிழ்ச்சியை உண்டாக்குகிற (திரும்பி யெழிந்தருளினாரென்னும்‌) நல் வார்த்தையைக்‌ கேட்கப் பெற்தேன்‌-என்கிறபடியே நெடுங்காலத்திற்காக இப்போது பெருமாள் எழுந்தருளப் பெற்றதே! என்று போர ப்ரீதராய்‌ அப்போதே யாவரும் வந்தடி வணங்கி, ‘*ப்ரஹ்ருஷ்ட முதிதோ லோக; -மக்கள்‌ மிகவும்‌ களிப்படைந்தனர்‌- என்றபடியே அத்யந்தம்‌ ஹ்ருஷ்டாரயிருக்க பெருமாளும்‌ ‘விஜ்வர: ப்ரமுமோதஹ”-ஜ்வரம்‌-கவலை- நீங்கியவராய்‌ மிகவும்‌ மகழ்வெய்தினார்‌- என்கிறபடியே துளக்கற்றமுதமாய்‌ எங்கும்‌ பக்க நோக்கறியாதே -ஸர்வரையுங்‌ குளிரக் கடாஷித்துக்‌ கொண்டு அன்பொடு தென் திசை நோக்கி அழகிய மணவாளப் பெருமாள்‌ நாயனாரைக்‌ கடாக்ஷித்துக் கொண்டு எழுந்தருளி யிருந்தார்‌.

அழகிய மணாவாளப் பெருமாள்‌ திருமலை யாழ்வாரை ஆஸ்ரயித்தல்‌
அக் காலத்தில்‌ திகழக் கிடந்தான்‌ திருநாவீறுடைய பிரான்‌ தாதரண்ணர்‌ தம்முடைய திருக் குமாரராக வளர்ந்தருளுகிற பரம போகீந்த்ரரான அழகிய மணவாளப் பெருமாள்‌ நாயனாருக்குத்‌ திருக் கல்யாணமுஞ்‌ செய்வித்து, பின்பு அருளிச் செயல்களையும்‌ ரஹஸ்யங்களையும்‌ தாமே யோதுவித்தருளினார்‌. அவரும்‌ அந்த உபகாரத்துக் கீடுபட்டு
ஸ்ரீ ஜிஹ்வாவ ததீஸ தாஸ மமல மஸேஷ ஸாஸ்த்ர விதம்‌ |
ஸுந்தர வர குரு கருணாகந்‌ தனிது ஜ்ஞாந மந்திரம் ச லேய ॥-ஸ்ரீஜிஹ்வார்க்யாதீஸம்‌ என்றும்‌ பாடமுண்டு-

கோட்டூரழகிய மணவாளப் பெருமாள்‌ பிள்ளையினருளால்‌ விருத்தி யடைந்த ஜ்ஞாநத்திக் கிருப்பிடமாய்‌, எல்லா சாஸ்த்ரங்களையும்‌ குறை யறக்‌ கற்றறிந்தவரான திருநாவீறுடைய பிரான்‌ தாதரண்‌ணரை த்யானிக்கிறேன்‌ -என்றும்‌
வாழி திருநாவீறுடைய பிரான்‌ தாதனருள்‌
வாழியவன்‌ மாமை வாக்கின்பம்‌–வாழியவன்‌
வீரன்‌ மணவாளன்‌ விரை மலர்ததாள்‌ சூடி.
பாரமதைத்‌ தீர்த்தளித்த பண்பு
‘-என்று அநுஸந்தித்தருளினாரிறே.

பின்பு சிலகாலம் சென்‌றவாறே அண்ணரும்‌ திருநாட்டுக்கெழுந்தருள, அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனாரும்‌ அவரை ஸம்ஸ்கரித்துப்‌ பள்ளிப் படுத்தி திருவத்யயநமும்‌ பெருக்க நடத்தி யருளினார்‌
அநத்தரம்‌ ஆழ்வார்‌ திருதகரியிலே தர்‌சந ப்ரவர்த்தகரா யெழுத்தருளி யிருக்கிற திருமலையாழ்வாரும்‌, “இனி தர்சநப்‌ ப்ரவர்த்தகராவாரார்‌?” என்று விசாரித்துக் கொண்டு-தொண்டர்க்கமுதுண்ணச்‌ சொன்‌ மாலைகளான திருவாய்‌ மொழி, நிலத் தேவரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும்‌, பக்தாம்ருதம் என்னும்படி பரம போக்யமாக வவதரித்ததாகையாலே சப்த ரஸம்‌, அர்த்த ரஸம்‌, பாவ ரஸம்‌, என்கிற விவற்றை அநவரதம்‌ அநுஸந்தித்துக் கொண்டு ததேக் நிஷ்டராய்‌ தத் வ்யதிரிக்த சாஸ்த்‌ரங்களை த்ருணவத் ப்ரதிபத்தி பண்ணி யிருக்கையாலே திருவாய்‌ மொழிப் பிள்ளை என்று திருவாய்மொழி ஸம்பந்தத்தையே தமக்கு நிரூபகமாக வுடையராரய்‌ ஆழ்வார்‌ திருவடிகளிலே கைங்கர்யமே அநவரதமுஞ் செய்து கொண்டு போரா நிற்கிற திருவாய்மொழிப்‌ பிள்ளையினுடைய திவ்ய கடாக்ஷத்திற்கு விஷயமாமபடி அழகிய மணவாளப்பெருமாள்‌ நாயனாரும்‌ திருவநந்தாழ்வான்‌ சகந் தன்னைத்‌ திருத்த மருவிய குருகூர்‌ வளநகர்‌ வந்து-என்‌கிற படியே ஸ்வ மாதுல க்ருஹமான சிக்கில் கடாரத்திலிருந்து தமக்கு ஜந்ம பூமியான திருநகரி யேற வெழுந்தருளி பொருநற் சங்கணித்‌ துறையிலே சங்கங்கள்‌ சேறுமா போலே சங்க வண்ண நம்பி யுடைய அவதாரமாகையாலே சுத்த ஸ்வபபாவரான தாமும்‌ திருவாய்‌ மொழிப் பிள்ளை திருத்‌ தாள்‌ சேர்ந்து என்கிறபடியே மெய்ஞ்ஞானத்‌ துறையான பிள்ளை திருவடிகளிலே ஆச்ரயித்து ”அஸிஸரிய தயம்‌ பூய: ஸ்ரீ ஸைலாதீஸ தேஸிகம்‌” -இந்த அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ திருமலை யாழ்வாரென்னும்‌ ஆசார்யரை ஆஸ்ரயித்தார்‌-என்கிறபடியே தேசந் திகழுந்‌ திருவாய்மொழிப் பிள்ளை வாச மலர்த்தாளடைந்து வைத்து என்னும்படி விலஷாண ஸம்பந்த யுக்தராய்‌;
ததஸ்‌ ஸ்ருதிதரஸ் ஸோயம்‌ தஸ்மாத் தஸ்ய ப்ரஸாதத: |
அஸேஷாந ஸ்ருணோத் திவ்யாந்‌ ப்ரபந்தாந்‌ பந்தநச்சித: ॥

பின்னர்‌ ஸாங்க வேதாத்யயநம்‌ பண்ணிய இவ் வழகிய மணவாளப்‌ பெருமாள்‌ திருமலை யாழ்வாருடைய அருளால்‌ அவரிடமிகுத்து ஸம்ஸார பந்தத்தை யறுப்பதான எல்லா வருளிச் செயல்‌களின்‌ தாத்பர்யங்களையும்‌ கேட்டறிந்தார்‌-என்கிறபடியே த்ராவிட வேத ததங்கோபாங்கங்களான ஸமஸ்த திவ்ய ப்ரபந்த தாத்பர்யங்களையும்‌ அவருபதேச முகத்தாலே.லபித்து மிக்க வேதியர்‌ வேதத்‌த்தின் உட்ப் பொருளான சரம பர்‌வத்திலே நிஷ்ட்டராய்‌- ஸேஷித்வ ஸரண்யத்வ ப்ராப்யத்வங்கள்‌ மூன்றையும்‌ பிள்ளை விஷயத்திலே அநுஸந்தித்து, (அன்னையுமத்தனு மாசாரியனு மனைத்துறவும்‌, மன்னிய பேறுமுபாயமும்‌ தெய்வமும்‌ மற்றுமெல்லாம்‌, என்னை யளித்த திருவாய்மொழிப்‌ பிள்ளையென்று நெஞ்சே! உன்னி யிராது மற்றோன்‌றில்‌ புல ஓதுவதே’ என்றும்‌, விண்ணும்‌ திருமலையாழ்‌ வாழ்வார் வடிவு விரை புடை சூழ்‌, மண்ணும்‌ திருமலை யாழ்லார்‌ வடிவு மற்றொங்கும்‌, கண்ணும்‌ திருமலை யாழ்வார்‌ வடிவன்றித்‌ காண்டகிறிலேன்‌, என்றும்‌ திருலையாழ்வார்‌ வடிவெங்கும்‌ யாவர்க்குமே–என்றும்‌. )ததேக நிஷ்டரா யெழுந்தருளி யிருக்கிற இவரை:

நாயனாரை திருவாய்மொழிப் பிள்ளை உடையவர் திருவடிகளில் ஈடுபடுத்தல்‌
பிள்ளை தாமே உகந்து உடையவர்‌ திருவடிகளைக்‌ காட்டிக்‌ கொடுத்தருள உன் பதயுகமேர் கொண்ட வீட்டை எளிதினிலெய்துவன்‌ என்கிறபடியே பரம புருஷார்த்தத்தை ஸுலபமாக லபித்து அத்யந்த ஹ்ருஷ்டராய்‌ எழுந்தருளி இருக்க, அவ்வளவில்‌ பிள்ளையும்‌ ஆழ்வார்‌ திருவடிகளிலே ப்ராவண்யாதிசயத்தாலே அவரடி பணிந்துய்ந்த எம்‌பெருமானார்‌ திருவடிகளிலும்‌ அதி ப்ராவண்யத்தை யுடையவாராய்ப்‌ போருகையாலே ராமாநுஜ பதாம் போஜ த்வந்த்வ கைங்கர்யத்திலே அந்வயிக்க வேணுமென்று திருவுள்ளமாய்‌ அப்படியே தத் கைங்கர்யத்திலே அந்வயித்து
அவகாஹித்து அதுவே தமக்கு தாரகாதிகளாகச்‌ செய்து கொண்டு போருகிறவர்‌, உடையருக்குத்‌ தனிக் கோயில்‌ தொடக்கமான அனைத்தழகுங் கண்டருளப்‌ பண்ணி, கோயிலை வளைய ராமாதுஜ சதுர்வேத மங்கலம்‌.என்கிற திரு வீதியையும்‌ உண்டாக்கி, அங்கே ராமாநுசனைத் தொழும்‌ பெரியோரையும்‌ ப்ரதிஷ்டிப்பித்து, தாமும்‌ ஸூக ப்ரதிஷ்டிதராய்‌ எழுந்தருளி யிருந்தார்‌.
நாயனார் யதீராஜ விம்சதீ விண்ணப்பம் செய்தல்‌
அநந்தரம்‌ நாயனாரும்‌ தமக்குப்‌ பிள்ளை ப்ராப்யமாகக்‌ காட்டி யருளின உடையவர்‌ திருவடிகளிலே யதீந்த்ர ப்ரவணர்‌ என்னும்படி அத்யந்தம்‌ ப்ராவண்யத்தை யுடையராய்‌ தம்முடைய ப்ரேமாநுகுணமாக யதிராஜ விம்சதியை அவ்வெம்பெருமனார்‌ விஷயமாக அருளிச்‌ செய்ய, அந்த உபகாரத்திற்கு
வல்லார்கள்‌ வாழ்த்துங் குருகேசர்‌ தம்மை மனத்து வைத்துச்‌
சொல்லார வாழ்த்தும்‌ மணவாள மா முனி தொண்டர்‌ குழாம்‌
எல்லாந் தழைக்க எதிராச விம்சதி யின்றளித்தோன்‌
புல்லாரவிந்தத்‌ திருத்தாளிரண்டையும்‌ போற்று நெஞ்சே
-என்று பின்புள்ளாரும் அநுஸந்தித்து ஈடுபடும்படியாயிற்று,

இவருடைய விண்ணப்பமான விம்சதியைப்‌ பிள்ளையுங் கேட்டு உகந்தருளித்‌ திருப்புளி யாழ்வாரடியிலே தாம்‌ கண்ட(கண்டெடுத்த) தம் முடையவரையும்‌ (இந்த ஸன்னிதியில்‌ ப்ரதிஷ்டிப்பிதுள்ள உடையவர்‌ திருமேனி(உத்ஸவர்‌) பற்றி பெரியோர்‌ வாய் வழி வரும்‌ வரலாறு: மதுரகவிகள்‌ ஆழ்வாரின்‌ ஸ்வப்ந முக நியமனப்படி ஆழ்வார்‌ திருமேனி எழுந்தருளப்‌ பண்ணுவதாக தாம்ரபரணி நீரைக்‌ காய்ச்ச-முதலில்‌ உடையவர்‌ திருமேனி ஆவிர்ப்பவித்தாகவும்‌, மதுரகவிகள்‌
மாநஸிகமாய்‌ “இது உமது திருமேனி யல்லவே” என்று ஆழ்வாரை வேண்ட, ஆழ்வாரும்‌ இது *பொலிக பொலிக திருவாய்‌ மொழிக்கு விஷயமான பவிஷ்யதாசார்ய விக்ரஹம்‌; கலியுங்‌ கெடும்‌ கண்டு கொண்மின்‌ என்னும்படி இவர்‌ அவதரிக்கப்‌ போகிறார்‌. இவரை ஆராதியம்‌. மீண்டும்‌ தாம்ரபரணி நீரைக்‌ காய்ச்சும்‌; நாம்‌ அர்ச்சையாக ஆவிர்ப்பவிக்கிறோம்‌” என்று நியமிக்க, மதுரகவிகளும்‌ அப்படியே செய்ய, இன்றும்‌ உபதேச முத்ரையுடன்‌ ஸேவை தரும்‌ ஆழ்வார்‌ திருமேனி ஆவிர்ப்பாவித்தாகவும்‌
சொல்வர்‌. ஆழ்வார்‌ திருமேனிக்கும்‌ முன்னரே ஆவிர்ப்பவித்த உடையவர்‌ திருமேனியே இன்றும்‌ ஆழ்வார்‌ திருநகரி உடையவர்‌ ஸன்னிதியில்‌ ஸேவிப்பது என்று பெரியோர்‌ பணிக்கும்படி. )
இவர்க்கு ‘ப்ரஸாதித்தருளி இவரும்‌ ‘ஸ்ரீமந்யதீத்த்ர! தவ திவ்ய பாதாப்ஜ ஸேவாம்‌ ஸ்ரீஸைல நாத கருணா பரிணாமதத்தாம்‌” (யதிராஜ விம்சதி -19) என்று அநுஸந்தித்து ப்ரிதராய்‌, ‘ யதீந்தர்மேவ நீரந்த்ரம்‌ நிஷேவேதைவதம்பரம்‌--எம்பெருமானாரையே பரதெய்வமாக அத்யவஸித்து நித்யமாய்‌ கைங்கர்யம்‌ பண்ணிக்‌ கொண்டிருந்தார்‌–என்கிறபடியே அவருக்கு உகப்பாக ததாராதன பரராய்‌ ததேக நிஷ்டரா யெழுந்தருளி யிருக்க, இப்படி ஆழ்வாருடையவும்‌ எம்பெருமானாருடையவும்‌ கைங்கர்யமே புருஷார்த்தமாக வெழுந்தருளி யிருக்கிற பிள்ளையும்‌ அப்போதைக்கப்‌போது அபிநவங்‌களாய்‌ வர்த்தித்துக் கொண்டு போகிற இவருடைய ஜ்ஞான பக்த்யாதிகளைக்‌ கண்டு (ஜ்ஞான பக்தி வைராக்யங்கள்‌ இட்டு மாறினாப்‌ போலே வடிவிலே தொடை கொள்ளலாம்படியான இவருடைய பரமாஸ் திகத்வத்தைக்‌ கண்டு-)அபிமத விஷயத்தைக்‌ கண்டாற்‌ போலே ஆதரித்துப்‌ போரா நிற்க;

பின்பொருநாள்‌ தமது திரு நந்த்த வனத்தில்‌ விளைகிற பச்சைக் கறியமுதை இவர்க்குப்‌ போக விட்டருள, இவரும்‌ “இப்படிச்‌ செய்‌தருளுவதே?’” என்று விண்ணப்பஞ்‌ செய்ய, பிள்ளையும்‌ உம்மைப் போலே வொரு விஷயத்தைப்‌ பெறாமையாலே அர்ச்சாவதாராத்திலே மண்டினோம்‌*’ என்று அருளிச்‌ செய்து தாமும்‌ விரக்தராய் விருக்கச்‌ செய்தேயும்‌ இவருடைய ளெளகுமார்யத்துக் கநுகுண மாக அமுது செய்தருளுகை தொடக்கமான எல்லா உபுசாரங்களையு மாராய்ந்து கொண்டு போருகிறபடியையும்‌, அங்கீ கரித்த வன்று தொடங்கி பங்க்தி பாவநராம்படி அபிமானித்து ஆதரித்துக்‌ கொண்டு போருகிற படியையுங்‌ கண்டு ஸ்ரீ பாதத்து முதலிகளுக்கு இவரிடத்தலே அஸுயை நடந்து செல்ல, இத்தை ஸர்வஜ்ஞரான பிள்ளை அறிந்தருளி அவர்கள்‌ அபசாரப்படாதபடி இவருடைய சேஷாஹிபதி வேஷாந்தரத்தை எல்லோரும்‌ ப்ரத்யஷீ கரிக்கும் படி வாக் சாதுர்யங்களாலே காட்டி யருளி, அவர்களுக்கும்‌ இவரிடத்‌திலே விசேஷ ப்ரதி பத்தியை விளைவித்துப்‌ போரா நிற்க, இவரும்‌ பிள்ளை திருவுள்ளத்தை உகப்பித்துக்‌ கொண்டு அங்குத்தைக்கு விதேயரா யிருக்கிற காலத்திலே ஈடு முப்பத்தாறாயிரம்‌ பாட மிட்டருளி மற்று முண்டான வ்யாக்யானங்களையும்‌ பாட ப்ராயமாகப்‌ பண்ணி யிருக்கிற காலத்திலே நாயனாருக்கு திருக் குமாரர்‌ ‘திருவவதரிக்க, “’திருநாமமேது?” என்று பிள்ளையைக்‌ கேட்டருள, “ஒருக்கால்‌ சொன்னாற் போலே தூற்றெட்டு தரம்‌ சொல்லி யிருக்கிறதே!’” என்றருளிச்‌ செய்ய, எம்யைனிராமானுசன்‌ என்று : திரு நாமம்‌ சாத்‌தி யருளித்‌ தாமும்‌ *இராமானுசன்‌ திருநாமம்‌ நம்ப வல்லராய்‌ வாழ்ந்து கொண்டு போரா நிற்க; ஒரு நாள்‌ ஒரு திருவாதிரை நக்ஷத்ரத்திலே பிள்ளையும்‌ முதலிகளும்‌ அமுது செய்தருளா நிற்க,

இன்றோ வெதிராசரிவ்வுலகில்‌ தோன்றிய நாள்‌
இன்றோ கலி யிருள்‌ நீங்கு நாள்‌-
-என்று பிள்ளை ஈடுபட்டருளி மேல்‌ அருளிச்‌ செய்ய மாட்டரமல்‌ இத்தையே பலகாலுமருளிச்‌ செய்து கொண்டிருக்க
இன்றோ தான்‌ வேதியர்கள்‌ வாழ, விரை மகிழோன்‌ தான்‌ வாழ
வாதியர்கள்‌ வாழ்வடங்குநாள்‌–
என்று நாயனார்‌ தலைக்கட்டி யருள, இதைக் கேட்ட பிள்ளை மிகவும்‌ ப்ரீதராய்‌ அமுது செய்யா நிற்க மத்யே தளிகைப்‌ ப்ரஸாதம்‌ பரஸாதித்து பிகவும்‌ க்ருபை பண்ணி யருளினார்‌. இப்படி சிஷ்யாசார்ய க்ரமம்‌ நன்றாக நடந்து செல்லுகிற காலத்திலே ஸ்ரீபராங்குச தாஸரான்‌ பெரிய நம்பியை ஆஸ்ரயித்த ஏற்றம்‌ எம்பெருமானார்க்கு உண்டானாற் போல சடகோப தாஸரான பிள்ளையை யாஸ்ரயித்த வேற்றம்‌ இவர்க்குண்டாயிற்றென்று எல்லாரு மிவரை உடையவருடைய அவதார விசேஷமென்று ஆதரித்துக் கொண்டு போந்தார்‌கள்‌.

இப்படி அவதார விசேஷமான இவர்‌
வடமாமலை முதல்‌ மல்லனந்தபுரி யெல்லை மல்கித்‌
திடமாக வாழுந் திருவுடைய மன்னிரில்‌ தேசுடையோன்‌
திடமான ஞான விரக்தி பரமிவை சேர நின்ற
சடகோப தாதர்‌ குருகூர் வாழ்‌ பிள்ளையைச்‌ சேரு நெஞ்சே
-என்றும்‌
நம ஸ்ரீஸைல நாதாய குந்‌தீ நகரா ஜத்மநே !,ப்ரஸாத லப்த பரம
ப்ராப்ய கைங்கர்யய ஸாலிநே ॥
என்றும் -குந்தி புரத்தில்‌ திருவவதரித்தருளி ஆழ்வாரருளால் பெறப்பட்ட நிரதிசய ப்ராப்பமான கைங்கர்யத்தினால்‌ விளங்கும் திருவாய் மொழிப் பிள்ளயை வணங்குகிறேன்‌ —
செந்தமிழ்‌ வேதத் திருமலை யாழ்வார்‌ வாழி
குந்தி நகர்க்‌ கண்ணல்‌ கொடை வாழி—உந்திய சீர்‌
வாழியவனமுத வாய்‌ மொழி கேட்டப் பொருளில்‌
தாழுமற்றன்பர்‌ திருத்தாள்‌-
-என்றும் இத்தனியன்களை பிள்ளை விஷயத்தில்‌ தாமுமநுஸத்தித்‌தருளினார்‌. அநந்தரம்‌ உகப்புடனே இங்கிருக்கும்‌ காலத்திலே பிள்ளை
அப்யர்ச்ய நந்ததநயம்‌ கரபங்கஜாத்த வேணும்‌ ததீய சரண
ப்ரவணார்த்ரசேதா: |
கோதாபிதுர் கஹந ஸூக்தி நிபந்தநஸ்ய வ்யாக்யாம் வயதாத்‌
த்ரவிட வேத குரு: ப்ரஸந்நாம்‌-என்றும்‌ ॥

செந்தாமரைக் கைகளாலே தரிக்கப்பட்ட புல்லாங்குழலை யுடைய இன வாயர்‌ தலைவனை நன்றாக வாராதித்து, ‘ அக் கண்ணன்‌ கழலிணையில்‌ ப்ரேமத்துடன்‌ ஆழ்ந்த மனத்தை யுடைய திருவாய்‌
மொழிப் பிள்ளை பெரியாழ்வா ருடைய கம்‌பீரமான பாசுரங்களுக்குத்‌ தெளிவான வியாக்கியானத்தை அருளிச்‌ செய்தார்‌

அநந்தன்‌ திருமலை யாழ்வாரென வந்த வதரித்து
தனம் தன்கைப்படிற்றானம்‌ செய்வனென்று தரணி தனில்‌.
அநந்தம்‌ புரிய சடகோபனருட்‌ காட்செய்வது
இனந் தனிலொக்கு மென்று எல்லோரும்‌ பாவித்திருப்பதுவே
-என்றும்‌ பிள்ளையுடைய வைபவத்தை மற்றுமுண்டானவர்களும்‌ அநுஸந்தித்தார்கள்‌.

அழகிய மாணவாள எம் பெருமாளுக்குப்‌ பிள்ளை சரம நியமனம்‌.
இப்படி ஜ்ஞான பக்தி வைராக்யங்களை வடிவாக வுடையராய்‌, அத்தாலே வந்த மஹா ப்ரபாவத்தை யுடையரான பிள்ளை கைங்கர்யஸ்ரீயோடே நெடுங்காலம்‌ வாழ்ந்தருளி, பின்பு நித்ய விபூதியிலே
நித்ய கைங்கர்யாதராய்‌ வாழ்க்கையில்‌ நினைவாய்‌,
உத்தமனே! உலகாரியனே! மற்றொப்பாரை யில்லா
வித்தகனே ! நல்ல வேதியனே ! தண் முடும்பை மன்னா!
சுத்த நன்ஞானியர்‌ நற்றுணையே! சுத்த ஸத்துவனே!
எத்தனை காலமிருந் துழல்வேன்‌ இவ்வுடம்பு கொண்டே-
-என்று
அதற்கு ப்ரதி பந்தகம்‌ திருமேனி யோட்டை ஸம்பந்தமென்று அறுதி யிட்டு தத் விமோசனத்தையும்‌ தம்‌ தேசிகரிடத்திலே யபேக்ஷித்துக் கொண்டே யிருக்க, ௮வ்‌ வளவிலே திருமேனியிலே நோவு சாத்தி மிகவும் தளர்ந்து கண் வளர்ந்தருளுகிறவர்‌ பெரிய கிலேசத்துடனே முசித்து எழுந்தருளியிருக்க, “இது என்‌?” என்று நாயனார்‌ தொடக்கமான முதலிகள்‌ கேட்டருள, காலம்‌ கலிகால மாகையாலே ஆழ்வார்கள்‌ திவ்ய ஸூக்தகளான அருளிச் செயலிலே ருசி விஸ்வாஸங்களை யுடையராய்‌ இத்தை வளர்த்துப் போருவார்‌ ஆர்‌? என்று மிகவும்‌ க்லேசமா யிரா நின்றது” என்ன, பின்பு நாயனாரும்‌ திருவடியிலே ஸேவித்து அடியேன்‌ அப்படியே செய்‌கிறேன்‌’? என்ன, ”கேவலம்‌ வார்த்தை போராது” என்ன
நாயனாரும்‌ திருவடிகளைத் தொட்டு சபத பூர்வகமாக அப்படியே செய்கிறேன்‌” என்றருளிச் செய்ய, பின்பு திருவுள்ளம்‌ தேறி,நாயனாரை யழைத்தருளி, ஸம்ஸ்க்ருத சாஸ்த்ரங்களிலே பல காலும்‌ கண் வையாமல்‌ ஸ்ரீபாஷ்யத்தை ஒருக்கால்‌ கேட்டு தமக்கும்‌ எம்பெருமானாருக்கும்‌ ப்ரியமாகத்‌ திருவாய்மொழி முதலான அருளிச் செயலிலே அநவரதம்‌ பரிசீலனை பண்ணிக் கொண்டு பூர்வர்களைப் போலே பெருமாளுக்கு மங்களா சாசன பரராய்க்‌ கொண்டு கோயிலிலே நித்ய வாஸமாக எழுந்தருளியிரும்‌”‘ என்று நியமித்தருளி மற்று முண்டானவர்களை யழைத்தருளி நாயனார்‌ திருக்கையிலே காட்டிக் கொடுத்தருளி இவரை அவதார விசேஷமென்று ஆதரித்துப் போருங்கோள்‌” என்று அருளிச் செய்து ந்யஸ்த பரராய்‌ பின்பு மாக வைகுந்தம்‌ காண்பதற்கு என் மனமேக மெண்ணும்‌ என்கிறபடியே அதிலே அபிவ்ருத்த மநோ ரதராய்‌ பிள்ளை லோகாசாசியர்‌ திருவடிகளைத் த்யானித்துக்‌ கொண்டு வைசாக பஹுள அஷ்டமியில்‌ திருநாட்டுக் கெழுந்தருளினார்‌.(ஊூனொழிந்தால்‌ நானிருந்ந உயர்திவத்து வாரும்‌ என்ற ஸ்வாசாரியரான பின்னைலோகாசாரியர்‌-)

திருவாய் மொழிப் பிள்ளையின் தன்னேற்றம்
அநந்தரம்‌ நாயனார்‌ தொடக்கமான முதலிகளெல்லாரும்‌ ஆசார்ய வியோகா அஸஹிஷ்ணுக்களாய்‌ அத்யந்தம்‌ ஆர்த்தராய்‌ க்லேசித்துத்தேறி ப்ரஹ்மமேத ஸம்ஸ்காரத்தாலே பள்ளிப்படுத்து தீர்த்தம்‌ கொண்டாடி பதிமூன்றாந்‌ திவஸத்திலே திருவத்யயனமும்‌ நன்றாக நடத்தி யருளினார்கள்‌ -நாயனாரும்‌ ப்ரதிவருஷம்‌ வைகாசி மாஸத்தில்‌ அபர பக்ஷத்தில்‌ அஷ்டமி தோறும்‌ ஸ்ரீ வைஷ்ணவர்களை நன்றாக அமுது செய்யப்‌ பண்ணி யருளி “’முப்பழமுமுண்டாகப்‌ பெறுவதே தீர்த்த திவஸம்‌!!’ என்று பரிபாலித்துக்‌ கொண்டு (ஆசார்ய நியமனத்தில் படியே திருவாய்மொழி முதலானஅருளிச் செயல்களை வயாக்யானத்துடன்‌ அநுஸந்தித்துக்‌ கொண்டு-) எழுந்தருளி யிருந்தார்
பெண்களும்‌ பேதைகளும்‌ உஜ்ஜீவிக்கும்படி பரமார்த்த விசேஷங்களை ஸுக்ரஹமாகப்‌ பண்ணப் பெற்ற தன்னேற்றமும்‌ பிரிவில்‌ தரியாமையை முன்னிட்டு பின்‌ தொடரந்தடிமை செய்யப்‌ பெற்ற தன்னேற்றமும்‌, பிள்ளை லோகாசாரியருக்கே உள்ள தொன்றிறே, ஸரரீரமர்த்தம்‌ ப்ராணஞ்ச ஸத் குருப்யோ நிவதயேத்‌” (உடல்‌ தனம்‌, உயிர்‌ யாவற்றையும்‌ ஸதாசாரியர்‌ பொருட்டுப்‌ பயன்படுத்த வேண்டும்‌) என்கிறபடியே பரமாசாரியரான பராங்குசரையும்‌ தத் ப்ரிய சிஷ்யரான உடையவரையும்‌ திரு நகரியிலே ப்ரதிஷ்டிப்பித்து அனைத்தழகுங் கண்டருளப்‌ பண்ணின தன்னேற்றமும்‌, ஆழ்வார்களின்‌ அருளிச்‌ செயல்களை ருசி விச்வாஸ பூர்வமாக ப்ரவர்த்திப்பித்துக்‌ கொண்டு போந்த
தன்னேற்றமும்‌, திருவாய்மொழிப்பிள்ளை யொருவர்க்கே யுள்ள தொன்றிறே.
இவர்‌ திருநக்ஷத்ரம்‌ வைகாசி விசாகம்‌, இவர்‌தனியன்‌:
நமஸ்‌ ஸ்ரீ ஸைல நாதாய குந்தீ நகர ஜந்மநே |
ப்ரஸாத லப்த பரம ப்ராப்ய கைங்கர்ய ஸாலிநே ॥

அநந்தரம்‌ நாயனாரும்‌ ஆசாரியன்‌ நியமித் தருளின படியே திருவாய்மொழி முதலான அருளிச்‌ செயல்கள் வ்யாக்யானமாக அநு ஸந்தித்துக்‌ கொண்டு.
ததஸ்து மூல பூதேஷு தேஷு திவ்யேஷு யோகிஷு
வவ்ருதே வர்த்தயந் பக்திம்‌ வகுளா பரணாதிஷு
ததா தத்தத் ப்ரபந்தார்த்த ஸம் ப்ரதாய ப்ரவர்த்தகாந்‌
அயமாத்ரியத ஸ்ரீமாந்‌ ஆசார்யாநாதி மாநபி

பின்னர்‌ ஸ்ரீமானான இவ் வழகிய மணவாளப் பெருமாள்‌ ப்ரபந்ந ஜந கூடஸ்தர்களாய்‌ பெரு மதிப்புற்ற நம்மாழ்வார்‌ முதலான ஆழ்வார்களிடத்தில்‌ பக்தியை வளர்த்துக்‌ கொண்டு(தாமும்‌) வளர்ந்தருளினார்‌; அப்படியே அந்த ஆழ்வார்களருளிச்‌ செய்த ஸம்ப்ரதாயார்த்தங்களை அநுஷ்டானத்தால்‌ ப்ரவர்த்தியா நின்ற பூர்வாசாரியர்களையும்‌ (ஆசார்யகளிடமும்‌) ஆதரித்துப்‌ போந்தார்‌ (மிக்க ஆதரம்‌ காட்டினார்‌] என்கிறபடியே விலஷண ப்ரமாண ப்ரமேய ப்ரமாதாக்களிடத்தில்‌ விசேஷ ப்ரதிபத்தியை யுடையராய்த்‌ திருநகரியிலே தர்சநத்தை வளர்த்துக்‌ கொண்டு போருகிற நல்லடிக்‌ காலத்திலே

அழகிய வரதர்‌ நாயனாரை ஆஸ்ரயித்தது.
ஸ்ரீஸெளம்ய ஜாமாத்ரு முநீஸ் வரஸ்ய ப்ரஸாத ஸம்பத்‌ ப்ரதமாஸ்பதாய” ஸ்ரீஸெளம்ய ஜாமாத்ரு முநீஸ்வரருடைய (அழகிய மணவாளர்‌ பின்னர்‌ உத்தமாஸ்ரமம்‌ பெற்று ஸெளம்ய ஜாமாத்ரு முனி- மணவாள மாமுனியானார்‌. ) அருட்‌ செல்வத்துக்கு முதல்‌ கொள்கலமான] என்கிறபடியே
அழகிய வரதர்‌ (இவரே பின்னர்‌. ‘ஒண்ணான ஸ்ரீவானமாமலை ஜீயரானவர்‌,-பொன்னடிக் கால்‌ ஜீயர்‌-என்றழைக்கப்பட்டவர்‌ ) சேனை முதலியார்‌ தொடக்கமானவர்கள்‌ இவர்‌ வைபவத்தைக்‌ கேட்டுத்‌ திருவடிகளிலே ஆஸ்ரயித்தார்கள்‌ —அவர்களிலே அழகிய வரதர்‌, அப்போதே ஸந்யசித்து ‘ராமாநுஜ ஜீயர்‌’” என்னும்‌ திருநாமத்தை யுடையலராய்‌, நாயனாருக்கு நிழலுமடிதாறு மானோம்‌ என்னும்படி ஸதா பாதரேகா ஸமராய் நாயனாரை நித்ய ஸேவை பண்ணிக்‌ கொண்டு போந்தாரராய்‌, நாயனாருக்கு நிழலுமடிதாறு மானோம்‌ என்னும்படி ஸதா பாதரேகா ஸமராய் நாயனாரை நித்ய ஸேவை பண்ணிக்‌ கொண்டு போந்தார்‌.

நாயனார் திரு வரங்கத்து எழுந்தருளுதல்
இப்படி அந்தரங்கரானவர்களோடே கூட எழுந்தருளி யிருக்‌கிறவர்‌ –ஸூபேந மநஸாத் யாதம்‌: என்கிறபடியே அப்போதொரு சிந்தை செய்து,-நமக்கெல்லாம்‌ நற்சீவனமான நம் பெருமாளை சேவித்துக் கொண்டு அத்தலைக்கு அதிசயாவஹராய்‌ மங்களாசாஸனம்‌ பண்ணிக்‌ கொண்டு யாவத் தேஹாவஸாதம்‌ அங்கே யிருக்கை யன்றோ தமக்கு ப்ராப்தம்‌” என்று அறுதியிட்டு, அப்போதே ஆழ்வார்‌ திருமுன்பே சென்று ஸேலித்து, நண்ணா வசுரர்‌ நலிவெய்த நல்லவமரர்‌ பொலிவெய்த, எண்ணாதனக
ளெண்ணும்‌ நன்முனிவர்‌ இன்பந் தலைச்சிறப்ப, பண்ணார்‌ பாடலின்‌ கவிகளைப்பாடி தேவரீர்‌ மங்களாசாஸனம்‌ செய்தருளுகையாலே பெருமாளுடைய ப்ரதிபந்தங்ளெல்லாம்‌ நிரஸ்தமாய்ப்‌ பண்டு போல அனைத்தழகும்‌ கண்டருளுகிறார்‌; அடியேன்‌ பெருமாளை ஸேவிக்க விடை கொள்ளுகிறேன்‌
” என்று விண்ணப்‌பஞ்‌ செய்ய, அப்படியே நம்மாழ்வாரும்‌ விடை கொடுத்தருளினார்‌.

அநந்தரம்‌,
தத: கதிபயைர் திவஸைஸ்‌ ஸகுருர்‌ திவ்ய தர்ஸந |
ஆஜகாம பரந்தாம ஸ்ரீரங்கம்‌ மங்களம்‌ புவ:

பின்பு திவ்யமான திருமேனித்‌ தேற்றத்தை யடைய அந்த நாயனார்‌ சில தினங்களில்‌ உயர்ந்த திவ்ய தேசமாய்‌ பூமிக்கு மங்களகரமான ஸ்ரீரங்கத்துக்கு வ்ந்து சேர்ந்தார்‌- என்கிறபடியே முதலிகளும்‌ தாமுமாக, எம்பெருமான்‌ திருவரங்கம்‌ எங்கே என்று நாடிக்‌ கொண்டு புறப்பட்டெழுந் தருளுகிறவர்‌ – வில்லி புத்தூருறைவான் தன்‌ பொன்னடி காண்பதோராசையினாலே அங்கே எழுந்தருளி வட பெருங் கோயிலுடையானையும்‌ பெரியாழ்வாரையும்‌ திருவடி தொழுது. அநந்தரம்‌ அன்ன வயல் புதுவை யாண்‌டாளையும்‌ ”நீளா துங்கஸ்‌ தந கிரிதடீ” என்று தொடங்கி, கோதா”தஸ்யை நமஇதமிதம்‌ பூய,” என்கிறபடியே ஸேவித்து,

தேவஸ்ய மஹிஷீம்‌ திவ்யாம்‌ ஆதெள கோதாமுபாஸநத்‌ |
யந் மெளலி மாலிகாமேவ ஸ்வீகரோதி ஸ்வயம்‌ ப்ரபு –

எந்த ஆண்டாளுடைய திருக் குழலில்‌ ‘ சாத்தின திருமாலையையே ஸ்வாமியான அழகிய மணவாளன்‌ ஆதரவுடன்‌ சாத்திக்‌ கொள்கிறானோ, அந்த அழகிய மணவாள தேவனுடைய திவ்ய மஹிஷியான கோதையை முதல்‌ முன்னம்‌ ஸேவித்தார்‌ – என்கிறபடியே
சூடிக் கொடுத்தவள்‌ தொல்லரளால்‌ வாழ்கின்ற வள்ளலாய்‌-அங்கு நின்றும்‌ புறப்பட்டு -மாலிருஞ்சோலை தொழக் கருதி, -நெறி படவதுவே நினைவது நலமே-என்கிறபடியே மார்க்க சிந்தை பண்ணி அவ் வழியாலே அங்கே புக்கு, *பதியதுவேத்தி, அநந்தரம்‌ அழகர் தம்‌ கோயிலிலே புக்கு , திருமாலிருஞ்சோலை நின்றான்‌ கனை கழல்களைக் கண்டு வணங்கத்‌ தொழுது, -முடிச் சோதியில்‌ படியே-முடியார்‌ திருமலையில்‌” என்று தொடங்கி, -முற்றுமநுபவித்தார்‌- என்னும்படி அநுபவித்து தீர்த்‌த ப்ரஸாதங்களும்‌ ப்ரஸாதிக்க ப்ரஸாதப்படடு
விஞ்ஞாபநம்‌ வந கிரீஸ்வர! ஸத்ய ரூபா மங்கீ குருஷ்வ கருணார்ணவ மாமகீநாம் |
ஸ்ரீ ரங்க தாமநி யதா புரமேஷ ஸோஹம்‌ ராமாநுஜார்ய வஸாக பரிவர்த்திஷீய ॥

கருணைக் கடலான திருமாலிருஞ் சோலை யழகரே! யதார்த்தமான அடியேனது விண்ணப்பத்தைத்‌ திரு வுள்ளம்‌ பற்றி யருளவேணும்‌; அது ஏதெனில்‌; அடியேன்‌ முன்பு போலத்‌ திருவரங்கம்‌ பெரிய கோயிலிலே எம்பெருமானாருடைய திருவடிகளிலே சேர்ந்து வாழ்வேனாம்படி அருள் புரிய வேண்டும்‌-என்று தாமும்‌ இத்தை யநுஸந்தித்து அப்படியே ப்ரார்த்தித்தருள, அரங்கனென்னம்மானுக்கே காதல்‌ செய்யும் தொண்டராய்‌ அதி த்வரை யுடனே கோயிலேற எழுந்தருள:

அநந்தரம்‌
எண்டிசைக்‌ கணங்களுமிறைஞ்சியாடு திர்த்த நீர்‌-என்றும்‌,
கங்கையில்‌ புநிதமாய காவிரி என்றும்‌ சொல்லுகிறபடியே (காபாலி ஸ்ப்ர்ஸ ரஹிதராய்‌, ‘காவேரீ விரஜா ஸேயம்‌” என்கிற இவ் விரஜை யாறு இது வென்னும்‌ திருக் காவிரியிலே நீராடி-) திருக் காவேரியிலே நீராடி யருளி கேசவாதி பன்னிரண்டு திரு நாமங்களையும்‌ சாத்தி யருளி திருவரங்கப் பெரு நகரைத்‌ தண்டன் ஸமர்ப்பித்து நிற்க, அவ்வளவிலே தம்மை எதிர் கொள்ள வந்த அணியரங்கன்‌ திருமுற்றத்தடியார்‌ தங்களின்பமிகு பெருங்‌ குழுவு கண்டு தண்டன் ஸமர்ப்பித்து அவர்களுடனே கூட வுள்ளே புக்கு, வழியிலுள்ள வண்டினமுரலுஞ்சோலை தொடக்கமான திருச் சோலைகளையும்‌ அநுபவித்துக்‌ சொண்டு அவ்வருகே யெழுந்தருளி

மாடமாளிகை சூழ்‌ திரு வீதியும்‌ மன்னு சேர்‌ ‘திரு விக்ரமன்‌ வீதியும்‌
ஆடல்மாறனகளங்கன் வீதியும்‌ ஆலி நாடன மர்ந்துறை வீதியும்‌
கூடல்‌ வாழ் குலசேகரன் வீதியும்‌ குலவுந் ராச மகேந்திரன்‌ வீதியும்‌
தேடு தன்‌வன்மாவின்‌ வீதியும்‌ தென்னரங்கர்‌ திருவாவரணமே

என்று சொல்லப்‌ படுகிற திருவீதிகளையும்‌ திருமதிள்களையும்‌ திருக்‌ கோபுரங்களையும்‌ கண்டு களித்துக்‌ கொண்டு எழுந்தருளி, தமக்கு ஆசார்ய துல்யரான கோட்டூரிலண்ணர்‌ திருமாளிகை யேற வெழுந்‌தருளினார்‌ -அவர்‌ திரு மெய்யத்திலே திருவாய்மொழி வ்யாக்யாநம்‌ இருபத்தி நாலாயிரத்தையும்‌ ஸாதித்துக்‌ கொண்டெழுந்தருளி யிருந்து பின்பு பெருமாளெழுந் தருளுகையாலே இங்கே நித்யவாஸமாக எழுந்தருளி யிருக்கிறவரை நாயனாரும்‌ அத்யாதரத்துடனே ஸேவித்தருள –அவரும்‌ உகந்தருளி இவரை அவதார விசேஷமென்‌றிந்து ஆதரித்து , பெருமாளை ஸேவிக்கப் பண்ணுவதாக எழுந்தருளப்‌ பண்ணி வைத்துக்‌ கொண்டு புறப்பட்டு, அக் காலத்திலே
கோயிலதிபதியா யிருந்த திருமலை தந்த பெருமாள்‌ பட்டருடைய அநுமதிக்காக அவர்‌ திருமாளிகையிலே எழுந்தருள; அவரும்‌ அப்ப்யுத்தாத பிரணாமாதிகள்‌ தொடக்கமான உபசாரங்களைப்‌ பண்ணி ஆஸநத்திலே எழுந்தருளுவித்து, ‘தேவரீரை ஸேலிக்கப் பெற்றோமே!?’ என்று பெரிய ப்ரீதியோடே ஆதரித்து “திருவாய்‌ மொழியிலே ஒரு பாட்டுக்கு அர்த்த மருளிச்‌ செய்ய வேணும்‌” என்ன, நாயனாரும்‌ ஆழ்வாருடைய வைபவத்தை ஐதிஹ்யமாகப்‌ ப்ரதிபாதிக்கிற பாட்டை யெடுத்து (துவளில்‌ மா மணி மாடம்‌, என்ற திருவாய்மொழியாக இருக்கலாம்‌ -இத் திருவாய்மொழி ஆழ்வார் ப்ரக்ருதி சொல்கிறது என்று நம்‌ முதலிகளெல்லாரும்‌ போர விரும்பி இருப்பார்கள் -என்று ஈட்டவதாரிகை )உபந்யஸித்தருள, பட்டரும்‌ போர வித்தராய்‌, ”இவர்‌ முப்பத்தாறாயிரப் பெருக்கர்‌ * என்று மிகவும்‌ உபலாளித்து “பெருமாளை மங்களாசாஸனம்‌ பண்ணி யருள”என்று அருளிச்‌ செய்து, அங்குண்டானண ஸ்ரீவைஷ்ணவர்‌களையும் கூட்டி யனுப்பி யருள, அவர்‌களும்‌’ அப்படியே புறப்பட்டருளி : ப்ரதமம்‌, பொன்னரங்கமென்னில்‌ மயலே பெருகுமிராமானுசன்‌ மன்னு மா மலர்த் தாளைக் கிட்டி, -யோ நித்யமச்யுத” என்று தொடங்கி , ‘ராமாநுஜஸ்ய சரணெ சரணம்‌ பரபத்யே!’ என்று அநுஸந்தித்து ஸேவித் தருளி.

இவ்வுலகந்தன்னி லெதிராசர்‌ கொண்டருளும்‌
எவ்வுருவும்‌ யான் சென்றிறைஞ்சினக்கால்‌–அவ்வுருவம்‌
எல்லா மினிதேலுமெழிலரங்கத் திருப்புப்‌ போல்‌
நில்லாதென்னெஞ்சு நிறைந்து

என்றநுபவித்தருளி பின்பு பூமகள்‌ கோன்‌ தென்னரங்கள்‌ பூங்கழற்குப் பாதுகமாய்த்‌, தாம்‌ மகிழுஞ்‌ செல்வச் சடகோபரையும்‌ ஸேவித்தருளி, ப்ரதக்ஷிணமாக வெழுந்தருளி அங்கயல்‌ பாய் வயல்‌ தென்னரங்கனணி யாகம்‌ மன்னும்‌ பங்கய மா மலர்ப்‌ பாவையான ஸ்ரீரங்கநாச்சியாரையும்‌, ‘ஸ்ரீரங்க ராஜ மஹிஷீம்‌ ஸ்ரியமாஸ்ரயாம:”‘என்று திருவடி தொழுது, பூவளரும்‌ திருமகளாரருள்‌ பெற்று உள்ள புக்குத்‌ திருமண்டபங்களையும்‌ திருமடைப் பள்ளியையும்‌ கருவுகூலங்களையுங் கண்டு களித்தருளி ஸ்ரீபலிபீடத்தருகே தண்டன்‌ ஸமர்ப்பித்து உள்ளில்‌ திருச்‌ சுற்றையும்‌ ப்ரதக்ஷிணமாக வெழுந்தருளி, அநந்தரம்‌ வேத ஸ்ருங்கமாய்‌ அயன்‌ பணிந்த கோயிலான ப்ரணவாகார விமாநத்தையும்‌ ஸேனை
முதலியாரையும்‌ ஸேவித்தருளி, அழகிய மணவாளன்‌ திரு மண்டபத்தில்‌ எழுத்தருளி, -ஆழி வண்ண। நின்‌ அடியிணை யடை ந்தேன்‌ அணி பொழில்‌ திருவரங்கத்தம்மானே என்று தண்டன்‌ ஸமர்ப்‌பித்துப்‌ பெரிய திருவடியையும்‌ திருவடி தொழுது, த்வார பாலகர்‌கள் அநுமதியுடனே யுள்ளே புகுந்து திருமணத் தூணருகே சென்று மாயோனை வாயார வாழ்த்தி, அரங்கமா கோயில்‌ கொண்ட கரும்பினைக்‌ கண்டு கண்ணினை களித்து அமலனாதிபிரானில்‌ படியே பாதாதி கேசாந்தமாக வநுபவித்தருளி, பழுதே பலபகலும்‌ போயின என்று இழந்த நாளுக்கு அநுதபித்து, அரங்கத் தரவணைப்‌ பள்ளியானாய்க் கண்வளர்ந் தருளுகிற சேர்த்தியைக்‌ கண்டு படுத்த பைந்நாகப் பள்ளி கொண்டானுக்குப்‌ பல்லாண்டு கூறுதுமே-என்கிறபடியே திருப்பல்லாண்டை யநுஸந்தித்து மங்களசாஸனம்‌ செய்தருளி, அநந்தரம்‌ பாயு நீரரங்கந்தன்னுள்‌ பாம்பணைப் பள்ளி கொண்ட மாயனார்‌ திரு நன் மார்வும்‌ என்று தொடங்கி ஆய சீர் முடியுந்‌ தேசுமடியரோர்க்ககலாமே என்று ஸேவித்து, அதற்கு மேல் பெரிய பெருமாளுடைய வ்யூஹ சவ்ஹார்தாதி குணங்களை யநுபவித்து அநந்தரம்‌ திவ்ய ஸிம்ஹாஸந ஸமான சேர பாண்டியனிலே மலர் மடந்தை மண் மடந்தைகளாகிற உபய நாய்ச்சிமாருடனே எழுந்தருளி யிருக்கிற நம்பெருமாளை

அப்ப ஜந்யஸ்த பதாப்ஜம்‌ அஞ்சித கடீ ஸம்வாதி கெளஸேயகம்‌
கிஞ்சித்தாண்டவ கந்தி ஸம்ஹநநகம்‌ நிர் வ்யாஜ மந்தஸ்மிதம்‌ |
சூடாசும்பி முகாம்புஜம்‌ நிஜ புஜா விஸ்ராந்தி!திவ்யாயுதம்‌ :
ஸ்ரீ ரங்கே ஸரதஸ்சதம்‌ ததஇத: பஸ்யேம லக்ஷ்மீஸகம்‌ [ஸ்ரீரங்க ராஜஸ்தவம்‌, பூர்‌-74:)

ஆஸந பத்மத்திலழுத்தின திருவடித்‌ தாமரைகளை யுடையவரும்‌, சிறந்த திருவரைக்குப்‌ பாங்கான பட்டுத்‌ திருப்பரிவட்டத்தை யணிந்தவரும்‌, சிறிது நர்த்ததஞ்‌ செய்வது போல்‌ விளங்குகிற திருமேனியை யுடையவரும்‌ இயல்பான புன்முறுவலை யுடையவரும்‌, திருவபிஷேகத்தைத்‌
தழுவி யிருக்கின்ற முக கமலத்தை யுடையவரும்‌, தமது திருக் கையில்‌ இளைப்பாறுகின்ற திவ்யாயுதங்களை யுடையவருமான திருமகட்‌கன்பனான அழகிய மணவாளனைத்‌ திருவரங்கத்தலே இன்னமொரு நூற்றாண்டளவும்‌ அங்குமிங்கும்‌ (எழுந்தருளுமிட மெல்லாம்‌) ஸேவிக்கக்‌ கடவோம்‌] என்கிறபடியே ஸேவித்தருளி ,திருக்கையிலே பிடித்த திவ்யாயுதங்களும்‌ வைத்தஞ்சலென்ற
கையும்‌ கவித்த முடியும்‌ முகமும்‌ முறுவலும்‌ ஆஸந பத்மத்திலே அழுத்திய திருவடிகளுமாய்‌ நிற்கிற நிலையே நமக்குத்‌ தஞ்சம்‌(முழுஷுப்படி த்வயம்‌-21)
என்று அநுஸந்திதருளி, அத நன்‌ நிதியைக்‌ கண்டாப்‌ போலே பூர்வர்கள்‌ தநமாயிருக்கிற ஸ்ரீநிதியான நம் பெருமாளைக்‌ கண்டு கொண்டு, சிவந்த திருமுக மண்டலத்‌தையும்‌ கஸ்தூரித்‌ திருநாமத்தையும்‌ (மதி நுதல்‌ கஸ்தூரி திருநாமத்தையும்‌, மறுவல் பூத்த பவன வாயையும்‌, கவித்த கதிராயிரமிரவி கலந்தெறித்தா லொத்த நீண் முடியையும்‌, கையினார்‌ சுரிசங்கனலாழி எழிலையும்‌, அஞ்சலென்ற கையையும்‌, திருவரை பூத்தாப் போலிருக்கற அந்தி போல்‌ நிறத்தாடையும்‌ ஆஸந பத்மத்திலே அழுத்தின செம் பங்கயத் பதாள்களையும்‌ கோல மா மணி யாரமும்‌ முத்துத் தாமமும்‌ முடிலில்லதோரெழிலையும் கண் வாங்க மாட்டாதே நிர்நிமேஷத்ரு ஸஞ்சலராய்‌-)வைத்த கண்‌ வாங்காதே அநிமிஷரா யநுபவித்துக்‌ கொண்டு நிற்க, தேசாந்தர கதனான புத்ரனைக்‌ கண்ட மாதா பிதாக்களைப்‌ போலே தந்தையுந் தாயுமான தாம்‌ இவரைக்‌ கண்டு ப்ரஸந்ந வதநேகஷணராய்‌ கருணாம்ருத ஸ்ஷ்டியாலே குளிரக்‌ கடாக்ஷித்தருளி ‘”தமக்காவாரை தாமே தேடிக்‌ கொள்வோம்‌” என்று அருளிச்‌ செய்து எம்பெருமானாரை விஷயீகரித்தாப்‌ போலே இவரையும்‌ விஷயீகரித்தருளினார்‌

பின்பு தீர்‌த்த ப்ரஸாதங்களையும்‌ ஸ்ரீ சடகோபனையும்‌ திருமாலை ப்ரஸாதத்தையும்‌ ப்ரஸாதிக்கப்‌ பெற்று, முடியும்‌ மாலையும்‌ பெற்றாப்‌ போலே தென்னங்கர்‌ சீரருளுக்கிலக்காகப்‌ பெற்று
அத்யந்தம்‌ ப்ரீதராய்‌ அண்ணரைப்‌ பார்த்து தேவரிருக்காக நம்பெருமாள்‌ இப்படி வாழ்வித்தருளினார்‌’” என்று அருளிச்‌ செய்து, அநந்தரம்‌ அண்ணருடனே கூடப் புறப்பட்டருளி அவர்‌ திருமாளிகையிலே எழுந்தருள, பட்டரும்‌ அனேக பதார்த்தங்‌களுடன்‌ சிறப்பு வரக்‌ காட்டி யருள அத்தை யங்கீ கரித்து அண்ணர்‌ திருமாளிகையிலே யமுது செய்து எழுந்தருளி யிருக்க அவரும்‌ பூர்வாசாரியர்கள்‌ ‘ போத மநுட்டானங்களை யருளிச்‌ செய்யக்‌ கேட்டுத்‌ திருவுள்ளந் தேறி அவருடனே கூடப் புறப்பட்டு பூர்வர்கள்‌
எழுந்தருளியிருந்த திருமாளிகைகளைச்‌ சென்று ஸேலித்து, பின்பு பிள்ளை லோகாசாரியர்‌ திரு மாளிகை நோக்கி யெழுந்தருளி,
வாழி யுலகாசிரியன்‌ வாழி யவன்‌ மன்னு குலம்‌
வாழி முடும்பை யென்னும்‌ மாககரம்‌–வாழி
மனஞ்சூழ்ந்த பேரின்மல்கு மிக நல்லார்‌
இனஞ் சூழ்ந்திருக்கு மிருப்பு
–என்றும்‌,
மணவாளன்‌ மாறன்‌ மனமுரைததான்‌ வாழி
மணவாளன் மன்னு குலம் வாழி–மணவாளன்‌
வாழி முடும்பை வாழி வடவீதி தான்‌
வாழியவன்‌ உரை செய்த நூல்‌
–என்றும்‌
அநுஸந்தித்துத்‌ திருமாளிகை வாசலிலே தண்டன்‌ சமர்ப்‌பித்து அஞ்ஜலித்துக்‌ கொண்டு,

ஆத வாணிம்‌ புண்ய ஸுதாபகாம்‌ ஸடஜித்ஸ் ஸ்வைரம்‌ விகாஹ் யாதராத்‌
ஆநீயாம்ருத மத்ர சக்ர துகுபெள லோகோபகரராத்மகெள |
யெள வாக் பூஷண தேஸி கேந்த்ர ஹ்ருதயாபிக்யெள ப்ரபந்தாவிமெள
தே வந்தே புவநார்ய ஸூந்தர வரெஎ க்ருஷ்ணாத்மஜெள தேஸிகவ் ॥

இங்கு உலகத்தவருக்கு உதவுமியல் புடையராய்‌ எந்த இரு ஆசாரியர்கள்‌ நம்மாழ்வாருடைய திருவாய்மொழியாகிற புண்யமான அமுத ப்ரவாஹத்தில்‌ ஆதரத்துடன்‌ யதேச்சையாயாழ்ந்து அதில்‌ நின்றும்‌ ௮ம்ருதத்தைக் கொண்டு எந்த ஸ்ரீவசந பூஷணம்‌ ஆசார்ய ஹ்ருதயம்‌ என்ற பெயரை யுடைய இரு ப்ரபந்தங்‌களையுமருளிச்‌ செய்தார்களோ, வடக்குத்‌ திருவீதிப் பிள்ளையின்‌ குமாரர்களான பிள்ளை லோகாசாரியர்‌ அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனார்‌ என்ற ஆசாரியர்களை அடி பணிகிறேன்‌-

ஆர்யஸ் ஸெளம்ய வர ஸடாரிகலிஜித்‌ பட்டேஸ :॥ முக்யாத்மமாம்‌
பக்தாநாம்‌ விமலோக்தி மெளக்திக மணீநாதாய சக்ரே ப்ருஸும்‌ |
க்ருத்வா ஸாதுரஹஸ்த்ரயார்த்த மகிலம்‌ கூடம்‌ விபஸ் சித்ரியம்‌
லோகார்யா வரஜஸ்ஸூ ஸிக்ஷ்க வரஸ் சூடாமணிஸ் ஸோபதே

பிள்ளை லோகாசாரியரின்‌ திருத் தம்பியராய்‌ ஸத் ஸம்ப்ரதாயார்த்தங்களை சிக்ஷித்து அருளிச் செய்பவராய்‌, யாவருக்கும்‌ பூஜ்யராய்‌ சிரோ பூஷணமான அழகிய மணவாளப் பெருமாள்‌ நாயனார்‌,நம்மாழ்வார்‌, திருமங்கையாழ்வார்‌. பெரியாழ்வார்‌, முதலான பக்தாக்ரேஸரர்களின்‌ தூய வாக்குக்களாகிற மணி, முத்துக்களைக்‌ கொண்டு ரஹஸ்ய த்ரயத்தின்‌ ஆழ் பொருள்களை யெல்லாம்‌ பூர்வாசாரியர்களின்‌ திருவுள்ளத்துக் கிசைய விளக்கி வெளியிட்டு மிகவும்‌விளக்கமுறுகிறார்‌.

யஸ்யாஹம்‌ குல தைவதம்‌ ரகுபதேரா ரதநம்‌ ஸ்ரீஸக:
காவேரீ ஸரிதிந்தரீ பநகரீ வாஸஸ்தலீ புண்யபூ: |
க்ருஷ்ணோ மாந்ய குருர்‌ வரேண்ய மஹிமா வேதாந்த வித்யாநிதி;
ப்ராதா சவ்ம்ய வரஸ்‌ ஸ்வயந்து புவநாசார்யோஸி கஸ்தே ஸம:

யாருக்கு சக்ரவர்த்தி திருமகனுடைய திருவாராதனமான அழகிய மணவாளன்‌ குலதெய்வமோ, திருக் காவேரியின்‌ நடுவிலுள்ள புண்ய பூமியான கோயிலானது இருப்பிடமோ, பெரும்‌ ‘ புகழாளராய்‌ பூஜ்யரான வடக்குத்‌ திருவீதிப் பிள்ளை தந்‌தையுமாசார்யருமாவரோ, உபய வேதாந்த நிதியான அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனார்‌ இளைய ஸஹோதரரோ, அப்படியான தேவரீரே ஜகத்துக்கெல்லாம்‌ ஆசாரியராக உள்ளீர்‌; இப்புடிபட்ட தேவரீருக்கு யார்‌ ஒப்பாவார்‌? என்கிறபடியே பிள்ளை லோகாசாரியருடைய ஸமாப்யதிக ரஹிதமான பெருமையைப்‌ பேசா நின்று கொண்டு -ரஹஸ்யம்‌ விளைந்த மண்ணன்றோ?’ என்று மிகவுமாதரித்தருளி, அங்கே யெழுந்தருளி யிருந்து பிள்ளலோகாசாரியர்‌’ வைபவங்களை யெல்லாம்‌ ௮ண்ணரருளிச் செய்யக்‌ கேட்டு, இவ்வளவாகிலும்‌ பெற்றோமே!!’ என்று ப்ரீதராய்‌ அண்ணரை ஸேவித்துக் கொண்டு ஆசாரியர்களுக்கு ஆவாஸ் பூமியான கோயிலிலே எழுந்தருளி யிருக்க, பின்னையும்‌ ஒருநாள்‌ வரையிலே நம்பெருமாளை இவர்‌ திருவடி தொழச்‌ சென்றவாறே தீர்த்தம்‌ திருமாலை பரியட்டத்துடனே தம்முடைய தேனே மலரும்‌ திருப்‌ பாதத்தை இவர்‌ திருமுடி சூடுவித்து

தஸ்மிந்‌ ஸஸ்மித நேத்ரேண ஸ்ரீமதா ஸேஷ ஸாயிநா |
ஸத்க்ருத: க்ருதவாந் வாஸம்‌ கிஞ்சித்தத்ர ததந்திகே

மலர்ந்து நீண்ட வப் பெரியவாய கண்களை யுடைய ஸ்ரீமானான பெரிய பெருமாளாலே அநுக்ரஹிக்கப் பட்டவராய்‌ சில நாட்கள்‌ அவர்‌ திருவடி வாரத்தில வாழ்ந்திருந்தார்‌- என்கிறபடியே,
திருப்பவளச் செவ்வாய்‌ முறுவல்‌ கொண்டு நம் முடையவரைப்‌ போலே நீரும்‌ நம் வீட்டில்‌ கார்யத்தையும்‌ தர்சந ரஹஸ்யங்களையும்‌ ஆராய்ந்து கொண்டு உம்முடைய சரீராவஸானத்தளவும்‌ இங்கேயே இரும்‌” என்று அருளிச் செய்ய; இவரும்‌ ‘ மஹா ப்ரஸாதம்‌” என்று அங்கீகரித்து நியமித்தபடியே அங்கே எழுந்தருளி யிருந்தார்‌-அக் காலத்திலே அங்குண்டான ரஹஸ்ய ப்ரபந்தங்களை யெல்‌லாம்‌ திருக் கண் சாத்தி ஜீர்ணோத்தாரணம்‌ பண்ணி யருளி அவற்றை ப்ரகாசிப்பித்துக் கொண்டு-எழுந்தருளி யிருக்க; பின்பு ஒரு நாள்‌ பெருமாள்‌ திருவாராதனம்‌ நடத்திக் கொண்டு போருகிற உத்த நம்பி தாழ்வாக நடத்துகிற படியையும்‌ அமுது செய்தருளுகிற தளிகைக் குறைகளையுங் கண்டு ”இவனை நிரஸித்தருளி அநுகூலரானவர்களைக்‌ கொண்டு குறைவறக் கண்டருளப் பண்ண வேணும் ‘
என்று வானமாமலை ஜீயரருளிச் செய்ய (அழகிய வரதர்‌ என்று திருநாமமுடையராய்‌ அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனாரை பால்யத்திலேயே ஆஸ்ரயித்துப்‌ பின்னர்‌ ஆஸ்ரம ஸ்வீகாரம்‌ செய்தருளி ஸ்ரீவானமா மலை ஜீயர்‌” என்றுஅழைக்கப்பட்டார்‌; )அத்தைக் கேட்டருளி தேவரீருடைய திருப்பணி திருவாராதநம்‌, குறைவற நடத்திப்‌ போம்படி இவனை யநுகூலனாகத்‌ திருத்திப் பணி கொணடருள வேணும்‌ என்று மங்களாசாஸனம்‌ பண்ணாீ!’ என்‌றருளிச் செய்து, தாமும்‌ அப்படியே மங்களாசாஸனம்‌ பண்ணி யருளி, (இவ்விடத்தில்‌ ஜீயர்‌, அழகிய மணவாள நாயனாரை, ”தேவரீர்‌ பெருமாளைக் குறித்து ‘இவனை நசிப்பித்து அநுகூலரைக் கொண்டு திருப்பணி திருவாராதனம்‌ குறைவறக்‌ கொண்டருளவேணும்‌” என்று ப்ரபத்தி பண்ண வேண்டிக் கொள்ளும்‌” என்ன; நாயனாரும்‌ அது கேட்டருளி அழகிய வரதரைக் குறித்து பெருமாளுக்கு-)

நாயனார் திருவேங்கட யாத்திரை எழுந்தருளுதல்‌
அநந்தரம்‌ வட திருவேங்கடமென்று ப்ரஸித்தமான வட மா மலை முதலான வடதிசை யிலுண்டான திருப்பதிகளைத்‌ திருவடி தொழுகையிலே மிகவுந் திருவுள்ளத்தை யுடையராய்‌ -ததஸ்தே நாப்ய நுஜ்ஞாதோ யாதோ தரணி முத்தராம்‌” -பின்னர்‌ பெருமாளால்‌ அநுமதிக்கப்‌ பட்டவராய்‌ வட தேசத்திலுள்ள திருப்பதிகளைச்‌ சென்றடைந்தார்‌-என்கிறபடியே பெருமாள்‌ ஸந்நிதியிலே
சென்று ஸேவித்து நின்று, அடியேன்‌ திருமலைச்குப்‌ போய் திருவேங்‌கடமுடையானைத்‌ திருவடி தொழ விடை கொள்கிறேன்‌” என்று விண்ணப்பம்‌ செய்ய, பெருமாளும்‌ தீர்த்த ப்ராஸதங்களும்‌ பரியட்‌டமும்‌ ஸ்ரீசடகோபனும்‌ ப்ரஸாதித்து ”போய் வாரும்‌’ என்று விடை கொடுத்தருள;

திருக் கோவலூர்‌, திருக் கடிகை மங்களாசாஸனம்‌
அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனாரும்‌ *அணியரங்கத்‌தினின்றும்‌ பெரிய திருமலை யேறப்‌ போவாராய்‌ அப்போதே புறப்‌பட்டருளி, முப்போதும்‌ வானவரேத்தும முனிவர்கள்‌ வெள்ளறையிலே சென்று புக்கு பங்கயச் செல்வியார்‌ புருஷகாரமாகச்‌ செந்தாமரைக்‌ கண்ணரை ஸேவித்துத்‌ தீர்த்த ப்ரஸாதங்களும்‌ ப்ரஸாதப்‌பட்டு | பாதேயம்‌ புண்டரீக நாம ஸங்கீர்ந்தநம்ருதம்‌-செய்ய தாமரைக் கண்ணனின்‌ திருநாமங்களைப்‌ பாடுவதான அம்ருதம்‌ வழிக்கு உணவாகிறது-என்கிறபடியே! த்வய வசந பாதேயத்துடனே -பூங்கோவலுர்‌ தொழுதும்‌ போது நெஞ்சே! என்று பெரிய த்வரையோடே புறப்பட்டு அவனடி நிழற்றடங்‌களை யுடையராய்‌ விச்ரமித்து விடாயாறி, ஊரைச்‌ சென்று கிட்டி ,
உள்ளே புக்கு முதலாழ்வார்களை த்‌ திருவடி தொழுது அவர்கள்‌புருஷகாரமாக ”த்ரிவிக்ரம மபிகம்ய”’ என்கிறபடியே ஆழ்வார்கள்‌ நாயனாரையும்‌ ஆயனாரையும்‌ ஸேவித்து, தூவடிவில் பார்‌ மகள்‌[திருமொழி 2-10-9) என்று-தொடங்கி திருக்கோவலூரதனுட்‌ கண்டேன்‌ நான்‌ என்றபடியே அநுபவித்து, நீயும்‌ திருமகளும் நின்றாயால்‌ (முதல்‌ திரு-86) என்கிற பாட்டை யநுஸந்தித்து,
அன்‌றிவ்வுலகமளந்தாய்‌ அடிபோற்றி என்று மங்களசாஸநம்‌ பண்ணி யருளித்‌ தீர்த்தம்‌ ப்ரஸாதப்பட்டு, பூங்கோவலாயனழகு பின்னே தள்ள திருவங்கடத்தானருள்‌ முன்னே நடத்த’ புறப்‌பட்டு, குன்றமேந்திக்‌ குளிர்‌ மழை காத்தவன்‌ அன்று ஞாலமளந்த பிரான்‌ பரன்‌ சென்று சேர்‌ திருவேங்கடமாமலை (திருவாய்‌, 3-3-4)என்றும்‌ திருவேங்கடத்தாயன்‌ என்றும்‌ மொய்த்த சோலை மொய்‌ பூந்தடம்‌ என்றும்‌ சொல்லப்படுகிற நீர்மையை யுடைய திருவேங்‌கடமுடையானைத்‌ திருவடி தொழுகையிலே திருவுள்ளமாய்‌ பெருங்‌ கூட்டத்துடனே போவான் வழி கொண்டு அதி த்வரையுடனே (இதிலிருந்து திருக் கடிகை மங்களாசாஸனம்‌, )யெழுந்தருளுகையில்‌ நீள்‌ சோலை வண் பூங் கடிகையில்‌ தக்கானையும்‌, கடிகைத் தடங்குன்றில்‌ அக்காரக் கனியையும்‌ அடைந்து மங்களாசாஸநம்‌ பண்ணிப்‌ புறப்படா நிற்கச்‌ செய்தே எறும்பியிலுள்ள பெரியோர்களும்‌ பச்சையுடன்‌ வந்து ஸேவித்து நிற்க ,அவர்களை ஆதரித்துப்‌ புறப்பட்டருளினார்‌.

இனி திருமலை வ்ருத்தாந்தம்‌
திருப் புரட்டாசி முதல்‌ திருநாள்‌ ராத்ரி பெரிய கேள்வி ஜீயருடைய ஸ்வப்நம்‌: ஆழ்வார்‌ தீர்த்தத்திற்குத்‌ தெற்கிலுள்ள திருத்‌ தோப்பருகே ஒருவர்‌ வடக்கு முகமாக நிற்கிறதாகவும்‌ திருமலையாழ்வார்‌ மேல் கோடி தொடங்கி கிழக்கு முடிவு மட்டும்‌ ஸ்தூலமாய்‌ அதி தீர்க்கமா யிருக்கிற திருமேனி யுடையராய்‌ மேற்கே திருமுடியும்‌ இழக்கே திருவடிகளும்‌, தெற்கு திக்கைக்‌ கடாக்ஷித்துக்‌ கொண்டு பெரிய பெருமாளைப்‌ போல ஒரு ஸ்ரீவைஷ்ணவர்‌ கண்‌ வளர்‌ந்தருளுகிறதாகவும்‌;- ஒரு ஜீயர்‌ திருவடி பார்ச்வத்திலே நிற்‌கிறதாகவும்‌ கண்டு ‘“இவரார்‌?” என்று போவார்‌ வருவாரைக் கேட்க, அவர்கள்‌ சொன்னபடி: ‘இவர்‌ முப்பத்தாரறாயிரப்‌ பெருக்‌கரான அழகிய மணவாளப்‌ பெருமாள்‌ நாயனார்‌; அவர்‌ பொன்‌னடிக்கால்‌ ஜீயர்‌” என்று,சொல்ல, கண் விழித்து ‘“இதொரு ஸ்வப்நமிருந்தபடி என்‌!” ‘ என்று அதி ப்ரீதியுடனே “எழுந்திருந்து பெருமாள்‌ திருலீதியில்‌ ப்ராதகாலம்‌ புறப்பாட்டிற்கு மங்களா சாஸநத்துக்‌ கெழுந்தருளி இயல்‌ தொடங்குகிற விடத்திலே இச்‌ செய்தியை ஸ்வாமிகளுக் கறிவிக்க இத்தை தோழப்பய்யங்கார்‌ கேட்டருளி

ஸ்வப்நே ப்ருஹத் யதீந்த்ரஸ்ய ஸ்ரீஸைல ஸமிதோ மஜாாந்‌ |
ஸயாந புருஷோத்ருஷ்ட: ஸெளம்ய ஜாமாத்ரு தேஸிக: |
ததர்ச பஸ்சாத்‌ தஸ்யைவ பாதமூலே யதீஸ்வரம்‌ |
ப்ராஞ்ஜலிம்‌ நிப்சுதம் ப்ரஹ்வம்‌ ஸ்வர்ணாதிபதி பத ஸம்ஜ்‌ஞகம்‌ ॥

பெரிய ஜீயருடைய ஸ்வப்நத்தில்‌: திருமலையோடு ஓத்த’ அளவுடையவராய்‌, மணவாளமாமுனி யென்கிற மிகப்‌ பெரிய புருஷர்‌ படுத்துக்‌ கொண்டிருப்பவராகக்‌ காணப்பட்டார்‌.
அவரது திருவடி வாரத்தில்‌ விநயத்துடன்‌ குனிந்து கை கூப்பி நிற்கும்‌ பொன்னடிக்கால ஜீயரையும்‌ அப் பெரிய ஜீயர்‌ கண்டார்‌-என்று ஸ்லோகமாக அருளிச்‌ செய்தார்‌. இத்தை எல்லாரும்‌ கேட்டு உகந்திருக்க, அப்போது தேசாந்தரத்தினினில்‌ நின்றும் வந்த பெரியோர்‌களில்‌ சிலர்‌ இப்படி ஸேவை ஸாதித்தவர்‌ கோயில்‌ நாயனார்‌ என்ன, வேறு சிலர்‌ அவர்‌ திருநாளுக் கெழுந்தருளுகிறார்‌ – என்ன,
மற்றும்‌ சிலர்‌ நாயனார்‌ தம்முடைய சிஷ்யரான வானமாமலை ஜீயரைத்‌ தமக்கு ப்ராண ஸூஹ்ருத்தென்றும்‌. பொன்னடிக்கால்‌ ஜீயரென்றும்‌ அருளிச்‌ செய்வர்‌ என்ன; ஆனால்‌ இந்த விசை
திருநாளுக்கு மஹாதிசய முண்டாயிற்று- என்று அனைவரும்‌ போர உகந்து எதிர்பார்த்துக்‌ கொண்டு எழுந்தருளியிருக்க நாயனாரும்‌ பயண கதியிலே யெழுந்தருளித்‌ திருமலை யாழ்‌வாரைக்‌ கண்டருளி திருவேங்கடமாமலை யொன்றுமே தொழ நம்‌ வினையோயுமே (திருவாய்‌ 3-3-8)என்று திருமலையாழ்வாரைத்‌ தண்டன்‌ ஸமர்ப்பித்து, வைத்த கண் வாங்காதே அநுபவித்துக்‌ கொண்டு சென்று ”ஸுவர்ண முசகரீம்‌ தத்ர ஸங்கதாம்‌ மங்களஸ்வதாம்‌- அத் திருமலையோடு சேர்த்து நல்ல ஓசை யுடைய ஸுவர்ண முகி நதியை- என்று மங்களாவஹமான ஸ்வர்ண முகியைக்‌ கட்டி அங்கே நீராடி யருளி, கேசவாதி த்வாதச நாமங்களையும்‌ சாத்தி யருளின வளவிலே ஸ்ரீகோவிந்த ராஐருடைய அபய ஹஸ்தம்‌, களபம்‌ திருமாலை தொடக்கமான வரிசைசள்‌ வர. அங்கீ கரித்தருளி
ஸ்ரீவைஷ்ணவர்களுக் கெல்லாருக்கும்‌ ப்ரஸாத விநியோகம்‌ செய்தருளித்‌ தாமும்‌ ஸ்வீகரித்துப்‌ புறப்பட்டு கோவிந்தராஐரை மங்களாசாஸநம்‌ செய்தருளி, வரிசை பெற்று திருமலை யடிவாரத்திலே
அழகிய சிங்கரைத்‌ தொழுது, -ஏவம்வித்‌ பாதேநாத்யாரோஹதி”- இப்படி உபாஸிப்பவன்‌ காலால்‌ ஏறுகிறான்‌ -என்‌கிற படியே ஏறியருளி, பரிஷத்‌ திருவேங்கட முடையானைத்‌ தொழுது
கர்ப்பூரக்காலிலே தீர்த்த ஸ்வீகாரம்‌ செய்தருளி, காட்டழகிய சிங்கரைத்‌ தொழுது, மாம்பழ வெம்பெருமானாரைத்‌ தண்டன்‌ ஸமர்ப்பித்து விச்ரமித்துப்‌ புறப்பட்டருள; இச் செய்தி கேட்டுப்‌
பெரிய கேள்வி ஜீயரும்‌ ஏகாங்கி ஸ்ரீவைஷ்ணவர்களும்‌, அனைத்துத்‌ கொத்துப்‌ பரிகாரத்துடனே பூவார் கழல்களை எழுந்தருளப்‌ பண்ணி வைத்துக்‌ கொண்டு, பெரிய பரிவட்டம்‌, ஸ்ரீபாத ரேணு,அபய ஹஸ்தம்‌ முதலான வரிசைகள்‌ கூட்டி மங்கள வாத்யங்களுடனே எதிர்‌ கொண்டு ப்ராஸாதிக்க ஸ்லீகரித்து

(அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம்
ஆச்ரிதாநாம் ஸுஸரணம் வந்தே அநந்தார்ய தேசிகம்-
-ஆத்மாவுக்கு இருக்கவேண்டிய அனைத்து குணங்களுக்கும் இருப்பிடமானவரும், அறியாமையாகிற இருளை மீதமில்லாமல் போக்குபவரும், தம்மை அடைந்த சிஷ்யர்களுக்கு அகலாத தஞ்சமாக இருப்பவருமான அனந்தாழ்வான் என்னும் ஆசார்யரை வணங்குகிறேன்.
ஸ்ரீமத்ராமாநுஜாசார்ய ஸ்ரீபாதாம்போருஹத்வயம்|
ஸதுத்தமாங்க ஸந்தார்யம் அநந்தார்யமஹம் பஜே||
-ஸ்வாமி ராமாநுஜருடைய திருவடித்தாமரைகளாக இருப்பவரும், அதனால் நல்லோர்கள் சென்னிக்கு அணியாக இருப்பவருமான அநந்தாழ்வானை வணங்குகிறேன்.)

மொண்ணைத் திருக் கோபுரத்தருகே திவ்ய விமானத்தையும்‌ திரு நாராயண
கிரியையும்‌ த்வஜ ஸ்தம்‌பத்தையும்‌ பொற் கோபுரத்தையும்‌ கண்டு களித்துத்‌ தண்டன்‌ ஸமர்ப்‌பித்து உள்ளே புக்கு, அவா வறச் சூழ்ந்தான்‌ திருவாசலிலே தண்டன்‌ ஸமர்ப்பித்து திருவீதிகளையும்‌ திரு மாளிகைகளையும்‌ கண்டு களித்துக்‌ கொண்டு ப்ரதக்ஷிணமாக வெழுந்தருளி ஸ்வாமி புஷ்கரிணியிலே நீராடி யருளி, திருமண்காப்புச்‌ சாத்தியருளி, வேங்கட வராஹத்தை ஸேவித்து, தீர்த்தம்‌ ப்ரஸாதம்‌, ஸ்ரீ சடகோபன்‌ சந்தனம்‌ ப்ரஸாதிக்க ஸ்வீகரித்துப்‌ புறப்பட்டருளி திருத் தேர்களையும் கண்டு களித்து, உள்ளே யெழுந்தருளி அழகிய மணவாளன்‌ திருமண்டபத்தை தண்டன்‌ ஸமர்ப்பித்து ஸ்ரீபலிபீடத்தையும்‌ செண்பகத்‌ திருவாசலையும்‌ அத்தாணிப்‌ புளியையுந்‌ தண்டன்‌ ஸமர்ப்பித்துச்‌ செண்பகச் சுற்று ப்ரதஷிணமாக வெழுந்தருளிச்‌ சாலை வாசலாலே
யுள்ளே புக்கு நெய்க்கிணறு முதலான சாலை வரிசைகளைக்‌ கண்டு களித்துத்‌ திருமடைப் பள்ளியையும்‌ யமுனைத் துறைவனையுந்‌ தொழுது, புஷ்கரிணியிலே தீர்த்த ஸ்‌வீகாரம்‌ பண்ணி ஸ்வர்ணமண்டபமேறி நாராயண கிரியைச்‌ தொழுது, செண்பகத்‌ திருவாசலாலே யுள்ளே புக்கு, தேவப் பெருமாள்‌ எழுந்தருளியிருந்த பொன்‌விஞ்சு பெருமாள்‌ கோயிலையும்‌ அழகப் பிரானாரையும்‌ திவ்ய விமானத்தையும்‌ தொழுது திருமடைட்பள்ளி நாய்ச்சியாரையும்‌ ஸேவித்து தசாவதாரங்களையுந்‌ தொழுது, திருமாமணி மண்ட.பமான யாகமண்டபத்திலே நாய்ச்சிமாருடன்‌ மலைக்கினிய நின்ற பெருமாளையும்‌ தண்டன்‌ ஸமர்ப்பித்து, தீர்த்தம்‌, ஸ்ரீ சடகோபன்‌, ஸ்ரீபாதரேணு ப்ரஸாதிக்க ஸ்வீகரித்தருளி, திவ்ய விமானத்தைத்‌ தொழுது ஸேனை முதலியாரையும்‌ வணங்கி, ராமநுஜஸ்ய சரணெள சரணம்‌ ப்ரபத்யே’ என்று எம்பெருமானாரைத்‌ தண்டன்‌ ஸமர்ப்பித்து, தீர்த்தம்‌ அநந்தாழ்வான்‌, ப்ரஸாதம்‌, சந்தனம்‌, ப்ரஸாதிக்க ஸ்வீகரித்து, அழகிய சிங்கரையும்‌, திருநிலைக்‌ கண்ணாடி போலிருக்கிற பெரிய திருவடி நாயனாரையும்‌ ‘தொழுது உண்டியிலே திருமுன்காணிக்கையும்‌ ஸமர்ப்பித்து த்வார பாலகருடைய அநுமதி கொண்டு உள்ளே புக்கு, மத்யே சக்ரவர்த்தி
திருமகனாரையும்‌ தொழுது” குலசேகரன்‌ படியருகே சென்று, பொன்னம்‌ புயல் போல்‌ மரகதம் போல்‌ பூவை மலர் போல்‌ கருவிளை போல்‌ பொங்கார்கடல் போல்‌ பொலிந்திருண்ட புழுகிற்றுளைந்த
செஞ்சோதி, அன்னம்‌ பயிற்றி நடமாட அலர்மேல்‌ மங்கையுறை மார்பனாய்‌, ”ஸிஷேவே தேவதேவேசம்‌ சேஷ சைல நிவாஸிதம்‌”-திருமலையில்‌ நித்ய வாஸம்‌ பண்ணும்‌ தேவாதிதேவனான திரு
வேங்கட முடையானை ஸேலித்தார்‌-என்கிற படியே,எழில் கொள் சோதியான திருவேங்கடத்தெந்தையை அநபவித்து நிற்க-அப்பனும்‌ தீர்த்த ப்ரஸாதம்‌ திருமாலை, ஸ்ரீ சடகோபன்‌ இவை ப்ரஸாதிக்க, பெற்று க்ருதார்த்தராய்‌–

நாயனார்‌ பெருமாள்‌ கோயிலுக்கு எழுந்தருளுதல்‌
அங்கு நின்றும்‌ புறப்பட்டு நடுவே இரண்டு மூன்று நாள்‌ வஸித்து அதன்‌ பின்பு உலகேத்து மாழியானத்தியூரேற வெழுந்தருளி
தூரஸ்திதேபி மயித்ருஷ்டி பதம் ப்ரபந்நேது:கம்விஹாய பரமம்‌ ஸுகமேஷ்யதீதி |
மத்வேவயத்கக நசும்பி நதார்த்திஹந்து! தத் கோபுரம்‌ பகவதஸ் ஸரணம் ப்ரபத்யே॥

நான்‌ தூரத்திலிருந்தாலும்‌ ஒருவன்‌ கண்களுக்குப்‌ புலப்படுவேனாகில்‌, அவன்‌ துக்கத்தை விட்டு உயர்ந்த ஸுகத்தை அடைவான்‌ என்று நினைத்துப் போலும்‌ வானளாவி நிற்கிற–ப்ரணதார்த்தி ஹரனான பேரருளாளனுடைய எந்தக்‌ கோபுரமொன்றுண்டோ- அதைச்‌ சரணமடைகிறேன்‌- என்று திருக்‌ கோபுர நாயனாரை தண்டன்‌ ஸமர்ப்பித்து உள்ளே சென்று புண்ய கோடி விமானத்தையும்‌ தண்டன்‌ ஸமர்ப்பித்து திரு வநந்த ஸரஸ்ஸிலே நீராடி யருளித்‌ திருமண்‌ காப்பு சாத்தி யருளி
அடைவே ஆழ்வார்களையும்‌ ஸேவித்து பலி பீடத்தருகே தண்டன்‌ ஸமர்ப்பித்து உள்ளே புக்கு, சேர்ந்த வல்லி நாய்ச்சியாரையும்‌ சக்ரவர்த்தி திருமகனாரையும்‌ திருவநந்தாழ்வானையும்‌ தொழுது
ப்ரக்ஷிணமாக வெழுந்தருளித்‌ திருப்புற்றுக்குக்‌ கீழாக இளையாழ்‌ வாரை ஆம்முதல்வனிவன்‌ என்று: கடாக்ஷித்தருளிய யமுளைத்துறைவன்‌ திரு முற்றத்தையும்‌ அவரெழுந்தருளி யிருக்கிற கரியமாணிக்‌கத்தாழ்வார்‌ ஸோபாநத்தையும்‌ ஸேவித்து, பேரருளாளர்‌ பெருந் தேவியாரையும்‌
ஆகார த்ரய ஸம்பந்நாம்‌ அரவிந்த நிவாஸிநீம்‌ |
அஸேஷ ஜகதீஸித்ரீம்‌ வந்தே வரத வல்லபாம்‌ ॥

அநத்யசேஷத்வ, அநந்ய சரணத்வ, அநத்ய போக்யத்வமாகிற மூன்று ஆகாரங்களோடே கூடியவளாய்‌, தாமரை மலர்மேல்‌ நித்ய வாஸம்‌ செய்யுமவளாய்‌ எல்லா வுலகங்களுக்கும்‌ ஈஸ்வரியாய்‌ தேவப் பெருமாளுக்கு வல்லபையான பெருந்தேவியாரை அடிபணிகிறேன் -என்று அநுஸந்தித்து ஸேவித்து பங்கயத்தாள் திருவருளும் கொண்டு அங்கே பெரிய திருவடியையும் தொழுது உள்ளே
புகுந்து தானவனை வன் நெஞ்சங்‌ கீண்ட சிங்கப் பிரானையும்‌ ஸேவித்‌துச்‌ சூடிக் கொடுத்த நாய்ச்சியாரையும்‌ ஸேனை முதலியாரையும்‌ ஸேவித்து அவ்வருகே ப்ரதக்ஷிணமாக வெழுந்தருளி ஸ்ரீ ஹஸ்திகிரீ யருகே சென்று, ‘*ஏஷதம்‌ கரிகிரீம்‌ ஸமாஸ்ரயே”‘ என்று தண்டன்‌
ஸமர்ப்‌பித்து மலையாள நாய்ச்சியாரையும்‌ ஸேவித்து, பத க்ரமத்‌திலே படிகடந்தேறி, கச்சிக்கு வாய்த்தான்‌ திருமண்டபத்திலே திருக்கச்சி நம்பி முன்னாக வரதராஜர்‌ திருவரங்கப் பெருமாள அரையருக்கு இராமானுசனைத் த்யாகம்‌ செய்தருளிய ஸ்தலமன்றோ-என்று அஞ்சலித்து, அவ் விடத்தில்‌ அநவரத ஸந்நிதி பண்ணித்‌ கொண்டிருக்கிறவர்கள்‌ புருஷகாரமாக
ஸிந்துரர்ஜஸி ரோரத்ந மிந்திரா வாஸ வக்ஷலம்‌ |
வவந்தே வரதம்‌ வேதிமேதிநீ க்ருஹ மேதிரம்‌ ॥

திருவத்தி மா மலைக்குத்‌ தலைக் கணி மணியாய்‌ அலர்மேல் மங்கை வுறை திருமார்பை யுடையனாய்‌ யாக பூமிக்கு ஸ்வாமியான வரத ராஜனை அடிபணிந்தார்‌ -என்கிற படியே புண்ய கோட்‌ யாக்யாதமான விமான மத்யத்திலே எழுந்தருளி யிருக்கிற பேரருளாளரை:
ராமாநுஜாங்க்ரி ஸரணேஸ்மி குல ப்ரதீப.
த்வாஸீத்‌ ஸ யாமுந முநேஸ்‌ ஸ ச நாத வம்ஸ்ய: |
வம்ஸ்ய.பராங்குஸ முநேஸ்‌ ஸ ச ஸோபி தேவ்யா:
தாஸஸ்தவேதி வரதாஸ்மி தவேக்ஷணிய ॥

பேரருளாளனே! அடியேன்‌ எம்பெருமானார்‌ திருவடிகளை சரணம்‌ பற்றியவன்‌; அந்த எம்பெருமானாரோ ஆளவந்தாருடைய ஜ்ஞாத பரம்பரைக் கணி விளக்கானவர்‌, அவ் வாளவந்தார்‌ தாமும்‌ ஸ்ரீமத்‌ நாதமுனிகளுடைய வம்சத்தவர்‌. அந்த நாதமுனிகளும்‌ நம்மாழ்‌வாருடைய ஜ்ஞாந பரம்பரையினர்‌, அந்த ஆழ்வாரும்‌ பிராட்டிக்‌ கடியவர்‌; இப்படி பாரம்பர்யத்தாலே அடியேன்‌ தேவரீருக்கு கடாஷிக்கத் தக்கவனாகிறேன்‌ -என்றநுஸந்தித்து தண்டன்‌ ஸமர்ப்‌பித்து, அநந்தரம்‌ திருப்பல்லாண்டையும்‌ வரதராஜ அஷ்டகத்தையும்‌ ஸ்தோத்ர கத்யங்களையும்‌ அநுஸந்தித்து மங்களாசாஸனம்‌ பண்ணி யருள , தேவப் பெருமாளும்‌, ‘நம்மிராமானுசனைப் போலே யிருப்‌ பாரோருவரைப்‌ பெறுவதே!’ என்று மிகவும்‌ க்ருபை பண்ணி தீர்த்‌த ப்ரஸாதங்களையும்‌ ஸ்ரீசடகோபனையும்‌ ப்ரஸாதித்தருளி விடை கொடுத்தருள. அங்கு நின்றும்‌ புறப்பட்டருளி–
தீப ப்ரகாஸ நர கேஸரி வித்ருமாப வைகுண்ட வாமந யதோக்தகர அஷ்ட பாஹுூந்‌ | அந்யாந் ஸுதா பணி பாண்டவ தூத ஹேம வர்ணாதிமாந்‌ வாகுரு:க்ரமஸஸ்‌ ஸிஷேவே ॥
ஸ்ரீ அழகிய மண்வாள குருவானவர்‌, தீப ப்ரகாசர்‌, அழகிய சிங்கர்‌,
பவழ வண்ணர்‌, வைகுண்ட நாதர்‌, வாமனன்‌ (உலகளந்தார்‌]
யதோக்தகாரி, அட்டபுய கரத்தான்‌, இவர்களையும்‌ ஸுதாகரர் ஊரகத்தான்‌, பாண்டவ தூதர்‌, ஹேம வர்ணர்‌, இவர்கள்‌ முதலான மற்றுமுள்ள எம்பெருமான்களையும்‌ முறைப்‌படி ஸேவித்தார் -என்கிற படியே-நிறைந்த சீர்‌ நீள்‌ கச்சியிலுண்டான திருவெஃகா முதலான திருப்பதிகளையும்‌ திருவடி தொழுது

நாயனார் ஸ்ரீ பெரும் பூதூரேற எழுந்தருதளுல்‌-அநந்தரம்‌;,
யதீந்ரத் ஜநநீம் ப்ராப்ய புரீம்‌ புருஷ புங்கவ: |
அந்த.கிமபி ஸம்‌ பஸ்யந் நத்ராக்ஷீல் லஷ்மணம்‌ முநிம்‌ –

ஆண்களின்‌ சிறந்தவரான அழகிய மணவாளர்‌ யதிராஜரின்‌ அவதார ஸ்தலமான ஸ்ரீபெரும்பூதுரை யடைந்து ஊரிலுள்ள சிறப்‌புக்களைக்‌ கண்டு களித்துக்‌ கொண்டு சென்று இளையாழ்வாரை ஸேவித்தார்‌-என்கிறபடியே ஸ்ரீ பெரும்பூதூர் ஏற வெழுந்தருளி ஊரருகே நின்று
இதுவோ பெரும்‌ பூதூர்‌? இங்கே பிறந்தோ
எதிராச ரெம்மிடரைத்‌ தீர்த்தார்‌? – இதுவோ தான்‌ :
தேங்கும்‌ பொருநல்‌ திருநகரிக் கொப்பான
ஓங்கு புகழுடைய வூர்‌
-என்று ஊரை யநுபவித்து ஊரிலே ப்ரவேசித் தருளி, ‘
எந்தை எதிராச ரெம்மை யெடுத்தளிக்க
வந்த பெரும்பூதூரில்‌ வந்தோமோ!–சிந்தை
மருளோ? தெருளோ? மகிழ் மாலை மார்பன்‌
அருளோ விப் பேற்றுக் கடி-
-என்று அலாப்ய லாபமாக ப்ராப்ய கெளரவத்தை யநுஸந்தித்து வித்தரா யுள்ளே புக்கு, ஆண்டுகள்‌ நாள்‌ திங்களாய்‌ (இரா-31) என்று தொடங்கி இராமானுசனைப்‌ பொருந்தினமே என்று விஸ்மித ஹருதயராய்‌ ஸேவித்து,

என்னெஞ்சே! எங்களிராமானுசனென்‌னும்‌
நன்னெஞ்சே! நல்லை காண்‌, இன்னுமின்னும்‌
பெரும்பூதாரென்னாய்‌ போரப்‌
பெரும் போகமெல்லாம்‌ பெற
— என்று
ஸஹ்ருத யநுபவம்‌ பண்ணி சரம பர்வத்திலே நிலை நின்று ஸேலித்து, இராமனுசனிணையடிகளை அடைந்து ‘யோ நித்யம்‌” என்று தொடங்கி ‘ ராமாநுஜஸ்ய ஸரணென ஸரணம்‌ ப்ரபத்யே-என்று அநுஸந்தித்து தண்டன் ஸமர்ப்பித்து எதிராஜன்‌ வடிவைத்‌ தன்‌ கண்ணுள்ளும்‌ நெஞ்சுள்ளும்‌ நின்று நீங்காதபடி நிலை நிறுத்திக்‌ கொண்டு தீர்த்த ப்ரஸாதங்களும்‌ பெற்று -சீராரும்‌
எதிராசர்‌ திருவடிகள்‌ வாழி என்று தொடங்கி, ‘ தேவரீர்‌ நித்ய மங்களராய்‌ வாழ்ந்தருள வேணும்‌’ என்று மங்ளாசாஸனம்‌ செய்தருளி, ஸ்ரீபாஷ்ய ஸ்ரவணத்துக்கு உடையவரநுமதி கொண்டு -ஸ்ரீபாஷ்யத்துக்கு அநுமதி கொண்டு -அநந்தரம்‌ கோயிலிலே யெழுந்தருளியிருக்க, ராத்ரி ஸ்வப்நத்திலே எம்பெருமானாரெழுந்தருளி நாயனாரை அழைத்தருளி ஸ்ரீபாஷ்ய கோசத்தை ஸாதித்து, “நாமே உமக்குப்‌ பெருமாள் கோயிலிலே ஸ்ரீ பாஷ்யம் சாதிக்கிறோம் -கிடாம்பி நாயனார் பாடேறேச் செல்லும் நமக்கும்‌ திருவாய்மொழிப் பிள்ளைக்கும்‌ ப்ரியமாக வாசித்து பின்பு அருளிச்செயல்‌ வ்யாக்யானங்களையே பஹுமுகமாக ப்ரவர்த்திப்பியும்‌’” என்று அருளிச் செய்கையாலே,
ராமாநுஜயதி பணித ஸ்ரீபாஷ்யார்த்த ஸ்ரவணத்திலே ஸ்ரத்தையுடைராய்‌ மீண்டு பெருமாள்‌ கோயிலேற வெழுந்தருளி:

நாயனார்‌ கிடாம்பி நாயனார் பாடே ஸ்ரீ பாஷ்யம் கேட்டது
அங்கே கிடாம்பி யாச்சான்‌ திருவம்ஸ்யரான கிடாம்பி நாயனாரை ஸேவித்து (அவர் பக்கலிலே ஸ்ரீபாஷ்யம்‌ ஸேவித்தருளி, பேரருளாளரையும்‌ ஸேவித்து, சிறிது காலம்‌ எழுந்தருளி யிருந்து ஸ்ரீபாஷ்யம்‌ அநுஸந்தித்துத்‌ தலைக்கட்டினவாறே –செந் தமிழும்‌ வட கலையுந்‌ திகழ்ந்த நாவர்‌ என்கிறபடியே உபய வேதாந்தாசார்யராய்‌ வேதாந்த லிழுப்‌ பொருளின்‌ மேலிருந்த விளக்கை விட்டுசித்தன்‌ விரித்தனன்‌ என்கிறபடியே தந் முகேந பேரருளாளருடைய வைபவத்தை ப்ரகாசிப்பித்துக்‌ கொண்டு, தேவ ராஜரை ஸேலித்து அவரநுமதி கொண்டு, அங்குண்டான தர்ஸந க்ரந்தங்களை எடுப்‌பித்துக் கொண்டு கோயிலேற எழுந்தருளினார்‌)அங்கே ஸ்ரீபாஷ்யம்‌ கேட்டருளா நிற்க,கிடாம்பி நாயனாருக்கு ஸஹ பாடியாயிருக்கிற ஐயைகளப்பாவும்‌ செல்வ நாயனாரும்‌ போர ஆதரித்து வைத்துக் கொண்டு பாடம்‌ நடத்த அப்பா, நாயனாருடைய வாசகதாடியையும்‌ க்ரஹண தாரண வாகவ்யவஹார சாதுர்யததையும்‌ கண்டு போர வித்தராய்‌ (கிடாம்பி )நாயனாரைப் பார்த்து, இவருடைய புத்திக்கநுகுணமாக ஸாதிக்‌க வில்லையே” என்ன, நாயனாரும்‌ அப்பாவை, நாளை இவருக்கு சிந்தனை பண்ணுவியும்‌’? என்று ஸாபிப்ராயமாக ஒரு வார்த்தை யருளிச் செய்ய, அப்பா, அதி நிபுராகையாலே’ பிற்றை நாள்‌ தொடங்கி நாயனாருக்கு சிந்தனை பண்ணுவிப்பதற்கு எழுந்தருளி யிருக்க, நாயனாரும்‌ ஸஹஸ்ர முகமாக உபன்யஸிக்கக் கண்டு ஐயைகள்‌ ‘ப்ரஸாதித்த அர்த்தங்கள்‌ ஒன்றும்‌ தப்பாமல்‌ பின்னையும்‌ போஷித்து விசேஷார்த்தங்களுடனே ஸாதித்தருளினீர்‌’- என்று அதிலே ஹர்ஷ யுக்தராய்‌ நெடும் போது பரவசராயிருக்க,-இத்தைக் கேட்டு கிடாம்பி நாயனாரும்‌ ஆங்கே யெழுந்தருள, அவர்‌ சிஷ்யர்களான வித்வஜ் ஜநங்கள்‌ நாயனாரோடே தர்க்கிக்க வேணு மென்றபேக்ஷிக்க, நாயனாரும்‌, ”நமக்கு இதர சாஸ்த்ர வ்யவஹாரத்துக்கு ஆசார்ய வாக்ய நிரோதமுண்டு” என்று அப்பாவுக்கு அருளிச் செய்ய, அப்பாவும்‌, “இவர்களும்‌ ஸ்ரீ வைஷ்ணவர்களன்றோ? இவர்களோடு ப்ரஸங்கித்தால்‌ ஸ்வரூப விரோதம்‌ வராது, அவர்‌களபிநிவேசத்தைச்‌ செய்தருள வேணும்‌’? என்றருளிச் செய்து அவர்களை முன்னே கொணர்ந்து விட, அவர்களுக்குத் தக்கதாக தர்க்க சப்த மீமாம்ஸைகளிலே பஹுமுகமாக உபந்யஸித் தருளின வளவிலே எல்லாரும் வித்தராய்‌ திருவடிகளிலே தீர்க்‌க ப்ரணாமம்‌ பண்ணிப்‌ புறப்பட்டு நாயனார் பாடே சென்று, ,’நாயனாரை இத்‌தனை நாளும்‌ ஸாதாரணமாக எண்ணி யிருந்தோம்‌; அவரிடத்திலே ஸகல சாஸ்த்ரங்களும்‌ ஒருமிடறு செய்திருக்கின்‌றன!” என்று ஆச்‌சர்யப்பட, ‘அவர்‌ ஒரு அவதார லிசேஷங் காணுங்கோள்‌”” என்று அருளிச் செய்து விட்டு அவரைக் கொண்டு அருளிச் செயல்‌ வ்யாக்‌யானங்களை ப்ரவர்த்திப்பிக்கத திருவுள்ளமாய்‌, பின்பு அதி த்வரை யுடனே ஸ்ரீபாஷ்யம்‌ நடத்திக்கொண்டு போர, நாயனார்‌ பல காலும்‌ ஈடு முப்பத்தாறாயிரப்படியை உருச் சொல்லிக்‌ கொண்டு போருகிறதைக்‌ கண்டு ஆச்சர்யப்பட்டு, ஒருவரு மறியாமல்‌ ஏகாந்‌தத்திலே நாயனார்‌ பாடே சென்று “முப்பத்தாறாயிரப்‌ பெருக்கர்‌’- என்று உமக்குத்‌ திருநாமஞ் சாத்தினது வெறுமனன்று; இந்த புத்தி ஸாமர்த்யம்‌ எங்குங் கண்ட தன்று; நமக்கொரு மநோ ரதமிருக்கிறது-அவஸ்யம்‌ செய்ய வேணும்‌’- என்று மறுக்க வொண்ணாதபடி அநுவர்த்திக்க, நாயனாரும்‌ இதுக்கென்‌ செய்வோ மென்று சிந்தித்துக் கொண்டு ஏதென்று கேட்க நாயனாரும்‌, ‘*தேவரீர்‌ அவதார விசேஷமென்று நிச்சயமாக வறிந்தேன்‌; எனக்கு அத்தை யொளிக்க வேண்டா. உள்ளபடி காட்ட வேண்டும்‌” என்றருளிச் செய்ய-ஆகில்‌ ஆசார்யராகிய தேவரீருக்கு ஒளிக்க ஒண்ணாதே; பெரிய பெருமாளுடைய ரஹஸ்ய நியோகத்தை’ ஒருவருமறிய வேண்டா: என்று விண்ணப்பஞ்‌ செய்து கொண்டு ஏகாந்த ஸ்லத்திலே மங்கள தீபத்தை ஸ்ப்புரித்து, ”அஞ்சாமலிருக்க’ வென்று விண்ணப்பஞ்‌ செய்து, அஹிபதி நிஜாகாரத்தைக்‌ காட்டக் கண்டருளி பீதி யுக்தராய்‌ – இத்தை உப ஸம்ஹரிக்க வேணும்‌ – என்றபேஷிக்க” உபஸம்‌ஹரித்து எப்போதும் போலே நாயனா ரெழுந்தருளி யிருக்கக் கண்டு விசேஷ ப்ரதி பத்தி யுடனே அத்யாதரம்‌ பண்ணிக் கொண்டு தேவ ரஹஸ்யம்‌ நடத்திக் கொண்டு நாடோறும்‌ அமுது செய்தருளின படியையும்‌ ஆராய்ந்து கொண்டு :திருமேனி ளெஎகுமார்யத்திற்கு அநுரூபமாம்படி பண்ணிக் கொண்டு வாரும்‌-என்று அடிக்கடி யருளிச் செய்து கொண்டு ஸ்ரீபாஷ்யம்‌ தலைக் கட்டி யருளும்படி தம்முடைய திருமாளிகையிலே கறக்கிற பசுவின் பாலை ஸாவதானமாகத்‌ திருத்தி நாயனார்‌ அமுது செய்யும்‌ படிக்கு ஸாதித்து உகப்புடனே ஸ்ரீபாஷ்யம்‌ நிறைவேற்றி “செந்தமிழும்‌ வடகலையுந்‌ திகழ்ந்த நாவர்‌ என்கிறபடியே உபய வேதாந்‌தாசார்யராய்‌ வேதாந்த விழுப் பொருளின்‌ மேலிருந்த விளக்கை விட்டு சித்தன்‌ விரித்தனனே -என்கிறபடியே தந் முகேநே பேரருளார்‌ வைபவத்தை ப்ரகாஸிப்‌பித்துக் கொண்டு (ஓராண்டு காலம்‌ யதோக்தகாரி ஸந்நிதியில்‌ ஸ்ரீபாஷ்யமும்‌ பகவத் விஷயமும்‌ ஸாதித்தருளினதாகவும்‌ அது காரணமாகவே அந்த ஸந்நிதியில்‌ மணவாள மா முனிகள்‌ உபதேச ஹஸ்த முத்ரையுடன்‌ ஸேவை ஸாதிப்பது என்றும்‌ பெரியோர்கள்‌ பணிக்கக்‌ கேட்டிருக்கை )அங்கே சில நாளெழுந் தருளி யிருந்து:-அநந்தரம்‌ அங்குண்டான பகவத் விஷய ஸ்ரீ கோசங்களை யெடுப்பித்துக் கொண்டு கோயிலிலே யெழுந்தருள-

தத: ப்ரதிநிவ்ருத்தம் தம்‌ புருஷோ புஜ கேஸய: | ப்ரத்யுத் கம்ய ப்ரபுஸ்ஸ்வைரம்‌ புந . ப்ராவேஸ யத்புரம்‌ ॥
பின்னர்‌ அரவணையில்‌ பள்ளியானான ஸ்ரீரங்கதாதன்‌ திரும்பவும்‌ எழுந்தருளின அவ் வழகிய மணவாளப்‌ பெருமாளை எதிர்‌ கொண்டு, தம்மிஷ்டப் படியே மீண்டும்‌ திருவரங்கத்தில்‌ ப்ரவேஸிப்‌பித்தார்‌-என்கிறபடியே பெருமாளாலே ப்ரத்யுத்கதராய்‌க் கொண்டு திருவரங்கப்‌ பெரு நகரிலே ப்ரவேஸித்துப்‌ பெருமாளை ஸேவித்தருள, பெருமாளும் போர வுகந்தருளி தீர்‌த்த ப்ரஸாதங்கள்‌ ப்ரஸாதித்து,
நித்யம்‌ ரங்கே நிவாஸய ப்ரார்த்தித: பணி ஸாயிநா ;
பஸ்யந்‌ பதாம் புஜம்‌ தஸ்ய பாலயாமாஸ ஸாஸநம்‌ ॥

இந்த வரங்கத்தே இனிதிரும்‌*” என்று ஸ்ரீ ரங்கஸாயியான பெருமாளால்‌ ப்ரார்த்திக் கப்பட்டவராய்‌ அழகிய மணவாளப் பெருமாளுடைய திருவடிகளை ஸேவித்துக்‌ கொண்டு அந்த நியமனதைப்‌ பரிபாலித்தார்‌ -என்கிறபடியே, ”இங்கேயே நித்ய வாஸம்‌ பண்ணும்‌” என்று நியமித்தருள, இவரும்‌ அப்படியே ஸம்மதி பண்ணி யெழுந்தருளி யிருக்க, அங்குண்டான பெரியோர்‌களெல்லாரும்‌ “தேவரீர்‌ இங்கே பெருமாளை மங்களாசாஸனம்‌ பண்ணிக்‌ கொண்டு எழுந்தருளி யிருக்க வேணும்‌” என்று ஆதரிக்க, அப்படியே -இன்பமிகு பெருங்குழுவுடனே யெழுந்தருளியிருக்க இசைந்து,
ஸ்ரீமத் ரங்கம்‌ ஐயது பரமம்‌ தாம தேஜோ நிதாநம்‌
பூமா தஸ்மிந்‌ பவது குஸலீ கோபி பூமா ஸஹாய: |
திவ்யம்‌ தஸ்மை திஸது விபவம்‌ தேஸீகோ தேஸகாநாம்‌
காலே காலே வரவரமுநி கல்பயந்‌ மங்களாநி ॥

பிறரை வெல்லும்‌ ஆற்றலுக்கு உயர்ந்த ஸ்தானமாய்‌, நித்ய ஸ்ரீயுடலன் கூடியதாய்‌ ஸ்ரீரங்கம்‌ என்கிற மேலான திவ்ய தேசமானது நன்றாக விளங்கட்டும்‌; அங்கு ஸ்ரீதேவி பூதேவிகளோடு கூடிய அநிவாச்யனான பெரிய பெருமாள்‌ பாங்காக எழுந்தருளி யிருக்க வேணும்‌; ஆசார்யர்களுக்கெல்லாம்‌ முதல்வரான வரவர முநி அநுதிமும்‌ மங்களாசாஸனங்களைப்‌ பண்ணிக்‌ கொண்டு அப் பெருமானுக்கு ஸ்ரேஷ்டமான வைபவங்களை உண்டாக்‌க வேணும்‌- என்று காலகாலங்களிலே மங்களாசாஸநம்‌ பண்ணி யருள அத்தாலே *அரங்கர் தஞ்சீர்‌ தழைப்ப என்கிற படியே பெரிய பெருமளுடைய திருச்செல்வம்‌, சிறந்த செல்வம்‌ மல்கி என்றும்‌ நீங்காத செல்வம்‌ நிறைந்து என்றும்‌ ஸம்ருத்தமாயிற்று-

நாயனார்‌ ஸந்யாஸாஸ்ரமம்‌ ஸ்வீகரித்தல்
அக் காலத்திலே பெருமாளுடைய ஸேவைக்கு விருத்தமான ஒரு ஆசெளச விசேஷத்தைத்‌ தெற்கினின்றும்‌ சிலர் வந்து விண்ணப்‌பஞ் செய்யக்‌ கேட்டருளி தென்னரங்கள்‌ கழல்‌ சென்னி வைத்துத்‌தானதில்‌ மன்னி யிருக்கிற தமக்கு தத்‌ விஸ்லேஷம்‌ அத்யந்தம்‌ துஸ் ஸஹமாய்‌ த்வத் பாத பத்ம ப்ரவணாத்ம வ்ருத்தேர்பவந்தி ஸர்வே ப்ரதி கூல ரூபா:” -தேவரீருடைய திருக் கமல பாதங்களில்‌ ஈடுபாடுள்ள மனமுடையவனுக்கு எல்லாம்‌ விரோதிகளாகவே ஆகின்றன-என்கிறபடியே பகவதநுபவ விரோதிகளான பரிகரங்‌களெல்லாம்‌ அத்யத்தம்‌ ப்ரதிகூலங்களா யிருக்கின்‌றன வென்று அறுதி யிட்டு அப்போதே தமக்கு ஸப்ரஹ்மசாரியான சடகோப ஜீயர்‌ ஸத்நிதியிலே யெழுந் தருளி
சந்தம்‌ தஸ்யைஷ விஜ்ஞாய நந்தந் நந்தந்‌ நிரந்தரம்‌ |
ஸர்வம்‌ ஸங்கம்‌ பரித்யஜ்ய துங்கம்‌ ப்ராவிஸதாஸ்ரமம்‌ ॥

இவ் வழகிய மணவாள நாயனார்‌ அந்த சடகோப ஜீயருடைய திருவுள்ளக்‌ கருத்தை யறிந்து மிகவும்‌ ௨கந்துகந்து, ஸர்வ ஸம்‌பந்தங்களையும்‌ விட்டு விட்டு உயர்ந்தான ஸந்நியாஸாஸ்ரமத்தில்‌ ப்ரவேசித்தார்‌-என்கிறபடியே ஸர்வஸங்க பரித்யாக பூர்வகமாக ஸந்யஸித்தருளி, த்ரி தண்ட காஷாயங்களை அவர்‌ திருக் கைகளாலே ஸாதிக்க தரித்தருளி துரீயாச்ரமத்தை யடைந்து அதற்கு அநுகுணமாக ‘சடகோப ஜீயர்‌” என்று பிள்ளை திரு நாமத்தை யுடையராய்‌, அற்ற பற்றராய்‌, பற்றிலார்‌ பற்ற நின்ற பெருமாள்‌ திரு முன்பே யெழுந்தருளி ஸேவித்து,
மங்களம்‌ ரங்க துர்யாய நம: பந்நக ஸா யிநே |
மங்களம்‌ ஸஹ்ய ஜாமத்யே ஸாந்நித்ய க்ருத சேதஸே ॥

ஸ்ரீ ரங்கநாதனுக்கு மங்கள முண்டாக வேணும்‌. அரவணை மேல் துயிலும்‌ பெருமாளை அடி பணிகிறேன்‌. உபய காவேரி மத்யத்தல்‌ நித்ய ஸாந்நித்யம்‌ பண்ணி யிருப்பதில்‌ நிலைத்த திருவுள்ளமுடைய பெருமாளுக்கு மங்களமுண்டாகுக-என்று மங்களாசாஸநம்‌ பண்ணிக்‌ கொண்டெழுந்தருளி நிற்க, பெருமாளும்‌ இவரை ஆதரித்தருளி, தம்முடைய திரு நாமமான முந்தின திருநாமத்‌தையே முடிய நடத்த வேணுமென்‌றருளிச் செய்து, ”உமக்கு பல்‌லவராயன்‌ மடத்தை ப்ரஸாதிக்கிறோம்‌; யாவச் சரீர பாதம்‌ எம்பெருமானாரைப்‌ போலே இங்கே இரும்‌” என்று நியமித்தருளி, எம்‌பெருமானார்‌ காலத்தில்‌ கந்தாடை யாண்டான்‌ தம்முடைய ஆசார்‌யரான ஆட் கொண்ட வில்லிஜீயர்‌ எழுந்தருளியிருக்கும்‌ படி மடமாக்கி, அவருடைய திருவராதனமான என்னைத் தீமனங்‌ கெடுத்‌தார்க்கு மத்யாஹ்ந கால அவஸரத்திலே அமுது செய்யப்‌ பண்ணும்‌ படி பெருமாள்‌ ஸந்நிதியிலே நித்யம்‌ ஒரு தளிகையும்‌ திருவிளக்கு நெய்‌ முதலியவையும்‌ நடக்கும்படி பொலிவிட்டு நடந்து வந்ததாயும்‌, சில நாள்களுக்குப்‌ பின்பு முதலியாண்டான்‌ திருவம்‌சத்தார்‌ பரஸ்பர விவாதத்தாலே ஸ்ரீபண்டாரத்தில்‌ சேர்த்ததாயும்‌ பூர்வ காலத்திலே அதி விலஷணமான ராமாநுஜ கூடம்‌ பல்லவராயன்‌ நடத்தின படியாலே பல்லவராயன்‌ மடமாயிற்று;

திருவாராதநமும்‌ என்னைத் தீ மனங்கெடுத்தார்‌, என்று திருநாமம்‌; அந்த மடத்தையும்‌, திருவாராத நத்தையும்‌ ப்ரஸாதித்து மிகவும்‌ க்ருபை பண்ணி யருளி நிஸ்ருஷ்டாத்மா ஸுஹ்ருத்ஸுச:-நண்பர்களிடத்தில்‌ தம் பொறுப்பை வைத்தவர்‌-என்கிறபடியே தாமும்‌ அவ் விடத்திலே ந்யஸ்த பரராய்‌ தீர்த்த ப்ரஸாதங்களையும்‌ ப்ரஸாதித்து, பரிவட்டம்‌ ஸ்ரீசடகோபன்‌ ப்‌ரஸாதித்து ‘-நம்முடைய அழகிய மணவாள ஜீயரை மடத்திலே விட்டு வாருங்கோள்‌-என்று உத்தம நம்பி முதலான அனைத்துப்‌ பரிகரத்தையும்‌ இவர்‌ பின்னே அனுப்பி யருள, அவர்களும்‌ அப்படியே ஸேவித்துச்‌ கொண்டு போய்‌ மடத்தில்‌ யெழுந்தருளப்‌ பண்ணி, அடியார்கள்‌ வாழ, அரங்க நகர் வாழ…….. மணவாள மா முனியே இன்னு மொரு நாற்றாண்டிரும்‌ என்று ஸேலித்து மீண்டார்கள்‌.
பின்பு மடம்‌ முழுவதையும்‌ வான மாமலை ஜீயர்‌ முதலான முதலிகளைக்‌ கொண்டு செப்பமிடுவித்து, ‘திருமலையாழ்வார்‌” என்று திருவாய்மொழிப் பிள்ளை பெயராலே யொரு வியாக்கியான மண்டபத்தையு (காலக்ஷேப கூடம்‌) முண்டாக்கி பிள்ளை லோகாசாரியர்‌ திருமாளிகையிலிருந்து ரஹஸ்யம்‌ விளைந்த மண்ணால்‌ தாம்‌ எழுந்தருளியிருக்கிற இடத்திற்கு மண் காப்புச்‌ சாத்துவித்து அவ்விடத்தை குருகுல ஸமமாகவே எண்ணி, ஸ்வாசார்ய பாத பங்கஜ த்வந்த்வச்சாய மத்யே ஸுகாஸீநராய்‌ இனிதமர்ந்து வியாக்யானித்துக்‌ கொண்டெழுந்தருளி யிருந்து, பிள்ளை நம்மாழ்வார்‌ திரு நாமத்தாலே விளங்கி யருளினாப்‌ போலே தாமும்‌ நம் பெருமான்‌ திரு நாமத்‌தாலே மிகவும்‌ விளங்கி யருளினார்‌. இப்படி ‘ரங்க மங்கள துர்யாய ரம்ய ஜாமாத்ரு யோகிநே ”’ ஸ்ரீரங்கத்துக்கு மங்களாசாஸன பரரான மணவாளமாமுனிகளுக்கு மங்களமுண்டாகுக- என்னும்படி கோயிலுக்கு மிசவும்‌ மங்களாசாஸன பரராய்‌ எழுந்தருளி யிருக்கும் நாளிலே,

ஆசாரஜ்ஞாந வைராக்ரை ராகாணே ச தாத்ரும: |
ஸ்ரீமாந்‌ ராமாநுஜஸ் ஸோயமித்யாஸம்‌ ஸந்‌ மித.ப்ரஜா:

ஆகாரத்தினாலும்‌, ஆசாரம்‌, ஜ்ஞாநம்‌, வைராக்யம்‌ இவற்றினாலும்‌, எம்பெருமானாரைப்‌ போலலே இந்த மணவாள மா முனிகளும்‌ உள்ளமையால்‌ ஸ்ரீமானான அந்த ராமாநுஜ முனிவரே இவர்‌ என்று ஜனங்கள்‌ பரஸ்பரம்‌ புகழ்ந்து பேசினர்‌ -என்னும்படியான திருவரங்கள்‌ திருமுற்றத் தடியவ ரெல்லாரும்‌ ‘இவர்‌ எம்பெருமானார்‌ அவதாரம்‌” என்று அறுதியிட்டு இவர்‌ திருவடிகளிலே ஆஸ்ரயித்து அத்யந்தம்‌ விலஷணராய்‌, ‘ பரமந போநிவாஸ பணி புங்கவ ரங்க பதேர் பவந மிதம்‌ ஹிதாய ஜகதோ பவதா அதிகதம்‌”” (பரமபதத்‌தில்‌ எழுந்தருளி யிரா நின்ற திருவநத்தாழ்வானே! இந்த அழகிய
மணவாளனுடைய வாஸஸ்தானமான இத் திருவரங்கமானது தேவரீரால்‌ லோக ஷேமத்தின்‌ பொருட்டு அடையப்பட்டது-என்றும்‌
வன் பெரு வானகமுய்ய, அமரருய்ய, மண்ணுய்ய மண்ணுலகில்‌
மனிசருய்ய, துன்பமிகு துயரகல, அயர்வொன்றில்லாச்‌ சுகம்‌ வளர
அக மகிழுந் தொண்டர்‌ வாழ அன்பொடு தென் திசை நோக்கப்‌பள்ளி கொள்ளும்‌
(பெரு திரு 1-10) பெரிய பெருமாள்‌ ஐகத் ரக்ஷணார்த்தமாக இங்கே யெழுந்தருளினாற் போலாயிற்று இவர்‌ இங்கே எழுந்தருளினது என்று மிகவும்‌ ஆதரித்துக் கொண்டு போந்தார்கள்‌.

திருமஞ்சந அப்பாவும்‌ பட்டர் பிரான்‌ ஜீயரும்‌ ஜீயரை ஆஸ்ரயித்தல்‌
இப்படி எழுந்தருளி யிருக்கிற காலத்திலே ஜீயர்‌ அருணோதயத்‌துக்குத்‌ திருக் காவேரியில்‌ நீராட எழுந்தருளுவர்‌; அக் காலத்திலே அத்யந்தம்‌ ஸத்வ நிஷ்டராய்‌ பெருமாள்‌ ஸந்நிதியிலே அநந்ய ப்ரயோஜனராய்‌ கைங்கர்யம்‌ பண்ணிப் போருகிற திருமஞ்ஜநம்‌ அப்பா வென்றொருவர்‌ கூடவே சென்று ஜீயர் நீராடுகிற ஸ்தானத்‌திற்குப்‌ பின்பே யிருந்து அந்த ப்ரவாஹ தீர்த்தத்தில்‌ தப்பாமல்‌ நீராடிக்‌ கொண்டு போக அவருக்கு ஞாநோதயமாய்‌ ஜீயர்‌ திரு வடிகளிலே நிரவதிக ப்ராவண்யமுண்டாய்‌ ஆஸ்ரயித்துக்‌கு க்ருதார்த்‌தரானார்‌. இந்த அர்த்தத்தை
உஷஸ்யயம் வாரிணி ஸஹ்யஜாயா: ஸ்நாதோ யதீந்த்ர ப்ரவணோ முநீந்த்ர: |
தத்ரைவ பஸ்சாதவ காஹ்ய தீர்த்தே ஸ்ரீ தீர்த்தாதாதஸ்‌ கமுபாஸரி தோபூத்‌ ॥

உஷ: காலத்தில்‌ யதீந்த்ர ப்ரவணாரான மா முனிகள்‌ நீராடிய காவிரி ப்ரவாஹத்தில்‌ பின்னர்‌ அமிழ்ந்தாடின திருமஞ்சனம்‌ ௮ப்பா அவரிடம்‌ ப்ராவண்யமுடையராய்‌ அவரை(மாமுனிகளை) ஆஸ்ரயித்‌தவரானார்‌] என்று அநுஸந்தித்தார்கள்‌. அப்பாவும்‌ ஜீயர்‌ திருப்‌ பவளத்தாலே ஸகலார்த்தங்களையும்‌ ஸ்ரவித்து, ”சாயா வாஸத்வ மநுகச்சேத்‌ –நிழலுறடிதாறுமா னோம்‌ என்கிறபடியே சாயாவத்‌ பரதந்த்‌தரராய்த்‌ திருவடிகளைப்‌ பிரியாமல்‌ அங்குத்தைக்கு அந்தரங்கராய்‌ எழுந்‌தருளி யிருத்தார்‌
(தீர்த்த தாதஸ் –திருமஞ்சனம் அப்பா)

அநந்தரம்‌ ‘கோவிந்த தாஸரப்பர்‌” என்னும்‌ நிரூபகத்தை யுடையவரான பட்டர்‌ பிரான் ஜீயர்‌, திருவடிகளிலே வந்து ஆஸ்ரயித்து தத் பாத பத்ம ஸேவைகதா ரகராய் ஸேலித்துக் கொண்டு எழுந்தருளி யிருந்தார்‌-கோவிந்ததாதர்‌–பட்டர்பிரான்‌ ஜீயர்‌ மாமுனிகளின்‌ அஷ்ட திக் கஜங்கனில்‌ ஒருவரானர்‌; பட்டர்‌ பிரான்‌ ஜீயர்‌ வந்து தண்டமிழோர்‌ மன்னு புகழ்‌ தொண்டை மண்டலத்தில்‌ வந்துதித்து தன்னுடைய வாசாரம்‌தப்பாமல்‌ இந்நிலத்திலாசரிததுக் காட்டி, யரங்கத்தே சென்று புகுந்து ஈஸரவணை மேல் எம் பெருமான்‌ வாச மலர்த்தாள்‌ பரவும்‌ மணவாள யோகி மலர்த் தாள்‌ தனிலிறைஞ்சி நண்ணி நில மேல்‌ சிச்சனாகாரம்‌ தெரிவிப்போம்‌’” என்று வந்த கோவிந்ததாதன்‌–என்கிறபடியே மணவாள மாமுனியை யாஸ்ரயித்து, *கோவிந்‌ தாஹ்வாநபாயிநீ’ என்கிறபடியே எம்பாரைப் போலே இவரும்‌ அவருக்கு நிழலுமடி தாறும்‌ போல வரவர முனி சரணத்தை அரை க்ஷணமும்‌ பிரிய க்ஷமரன்றிக்கே பிரியா வடிமை செய்து தத்பாத ஸேவைகதாரகராய்‌ வாழ்ந்து கொண்டிருந்தார்‌

அதன் பின்பு மணவாள மாமுனியும முகில்வண்ண்னடி மேல்‌ சொன்ன சொல் மாலையாயிரம்‌ என்றும்‌ மதிளரங்கர்‌ வண்‌புகழ்‌ மேலான்ற தமிழ்‌ மறைகளாயிரம்‌ என்றும்‌-இப்படி பெரிய பெருமாள்‌ விஷயமாக ப்ரதி பாதிக்கப்படுகிற திருவாய்மொழியினுடைய ஈடு முதலான வ்யாக்யானங்களையும்‌ மற்றுமுண்டான ஆழ்வார்கள்‌ அருளிச்‌ செய்த வ்யாக்யானங்களையும்‌ வ்யக்தமாக ப்ரஸாதித்திக்‌ கொண்டும்‌, ஸ்ரீவசந பூஷணாதி திவ்ய ரஹஸ்ய தாத்பர் யங்களையும்‌ தர்சிப்பித்துக் கொண்டும்‌ ராமாநுஜார்ய வசகராய்‌ நாடோறும்‌ ஸேவித்துக்‌ கொண்டும்‌ குரோர்‌ நாம ஸதா ஜபேத்‌”, என்று எம்பெருமானார்‌ திருநாமமாய்‌-சயந்தரு கீர்த்தியாய்‌-ஸ்ரீவைஷ்ணவ காயத்ரியான நூற்றந்தாதியை ‘அநவரதம்‌ அநுஸந்தித்துக்‌ கொண்டும்‌ ”வகுள பூஷண வாகம்‌ருதாராநம்‌” என்று தொடங்கி தம்முடைய அபேக்ஷிதங்களையும்‌ அவர்‌ திருவடிகளிலே நித்யமாக ப்ரார்த்திக்‌ கொண்டும்‌ தத் ப்ரஸாதைக தாரகராய்‌ தத்‌ வைபவத்தை ப்ரகாசித்துக்‌ கொண்டும் அஸத்ருச வைபவராய்‌ திருமாலை யாழ்வாருடைய அடி நிழலிலே (தத்‌ ப்ரஸாததைக ப்ரயோஜநராயிருக்க, ஸ்ரீபாதத்து முதலிகள்‌ தப்பா மறை மொழியானெதிராசன்‌ தண்டாமரைத்‌ தாள்‌, இப்பாரிடந்தனிலிட்டு வைத்த தனமிதன, வைப்பாகிய மனத்தான்‌ மணவாள மா முனியை இனி ஒப்பார்களில்லை உலகேழிலும் உம்பரிலுமே என்று உபய விபூதியிலும்‌ இவர்‌ அஸத்ருஸ வைபவ யுக்தராய்‌: தேசந் திகழ எழுந்தருளி யிருக்கிற காலத்திலே பெரிய பெருமாளுடைய நியமானத்தாலே தமக்குத்‌ திருவாராதனமாக ஸ்ரீரங்தராஜரை எழுந்தளருப்‌ பண்ணி வைத்துப்‌ பிள்ளை லோகாசாரியருடைய திருநஷத்ரமான ஐப்பசி மாஸம்‌ திருவோணத்‌ திரு நன்னாளிலே திரு ப்ரதிஷ்டையுங்‌ கொண்டருளப்பண்ணி, தமது திருக் கைகளாலே ஆராதநமுஞ்‌ செய்து ‘ ஐந்மர்க்ஷே ஸ்ரவணோபி வா” என்றும்‌ நீ பிறந்த திருவோணம்‌ என்றுஞ்‌ சொல்லுகிற படியே பிள்ளை லோகா சாரியர்‌ திரு நக்ஷத்ரமான திருவோணம்‌ முதலான மற்றுமுள்ள ஆசாரியர்கள்‌ திரு நக்ஷத்ரங்களையும்‌ *செந்தெலரிசி சிறுபருப்புச்‌ செய்த வக்காரம்‌ நறு நெய் பாலால்‌ பன்னிரண்டு திருவோணமட்டேன்‌ (பெரியா திரு, 2-9-7) என்கிறபடியே அக்கார வடிசிலாலே அமுது செய்தருளப்‌ பண்ணிப் பரிபாலித்துக் கொண்டும்‌ பூர்வாசாரியர்களுடைய வசநாநுஷ்டானங்களையும்‌ தம்முடைய உக்த்யநுஷ்டாநங்களாலே ப்ரகாசிப்பித்துக் கொண்டும்‌ ஸ்ரீரங்கஸ்ரீக்கு மங்கள தீபம்‌ போலே எழுந்தருளி யிருந்தார்‌.(விசத வாக் ஸிரோமணி –பிரமாணத் திரட்டு அருளிச் செய்து -)

இப்படி திசை விளக்காய்‌ நிற்கிற திருவரங்கத்திலே திக்குற்ற கீர்த்தி யிராமனுசனைப் போலே
சிர விரஹதஸ் சிந்தா ஸந்தாந நஜர்‌ ஜர சேதஸம்‌ புஜக ஸயநம்‌தேவம்‌ பூய! ப்ரஸாதயிதும்‌ த்ருவம்‌ |
யதிகுலபதிஸ்‌ ஸ்ரீமான் ராமாநுஜஸ் ஸம பூதயந்த்விதி ஸமதுஷக்‌ ஸர்வே ஸர்வத்ர தத்ர ஸுதீஜநா-
என்றும்‌,
வெகுகாலம்‌ பிரிந்திருந்ததால்‌, மிகவும்‌ நினைப்பதினால்‌ மனம்‌ தளர்ந்த அரவணை மேல்‌ பள்ளிகொண்டுள்ள பெருமாளை ஆஸ்வாஸிப்பிப்பதற்கு யதீந்த்ரரான ஸ்ரீமாந்‌ ராமநுஜரே இந்த மணவாளமாமுனிகளாக அவதரித்தார்‌ என்று வித்வஜ் ஜனங்கள்‌ எங்கும்‌ சொல்லி மகிழ்ந்தனர்‌.
அதுக்கும்‌ மேலே
(2) ஸமுநிஸ் ஸெளம்ய ஜாமாதா ஸர்வேஷாமேவ பஸ்யதாம்‌ |
ஸ்ரீஸகஸ்ய நிதேஸேந ஸூ ஸூபே தேஸிகே ஸ்ரியா -என்றும்‌

அழகிய மணவாள னென்று பெயருள்ள அந்த முனிவர்‌(ஆசாரியர்‌) திருமகளனபனான பெருமாளுடைய நியமனத்தினால்‌ எல்லோரும்‌ காண ஆசார்ய ஸ்ரீயுடன்‌ விளங்கினார்‌. தேஸிக ஸ்ரீயாலே மிகவும்‌ விளங்கா நிற்க இதை தேசாந்தரஸ்த ரெல்லாருங்‌ கேட்டு
(3) ததஸ் ஸமுத் ஸுகாஸ் ஸர்வே ஸதஸோத ஸஹ ஸ்ரஸ :
ஸரணம் தஸ்ய ஸம்ஸ்ரித்ய சரணேள தந்யதாம்‌ கதா: ॥ –

பிறகு மிக மகிழ்ந்த யாவரும்‌ நூற்றுக் கணக்கிலும்‌ ஆயிரக்‌ கணக்கிலும்‌ அந்த மணவாளமாமுனிகளுடைய திருவடிகளைப்‌ புசுலாப் பற்றி தந்யரானார்கள்‌-என்கிறபடியே ஸமீபஸ்தரோடு தூரஸ்தரோடு வாசியற அஸங்க்யாதராய்‌ ஆஸ்ரயிக்க, அவர்களை யெல்லாம்‌ பரம க்ருபையாலே திருத்தித் திருமகள்‌ கேள்வனுக்‌காக்கி என்றும்‌, அரங்கன்‌ செய்ய தாளிணை யோடார்த்தான்‌ என்றும்‌ சொல்லுகிறபடியே அரங்கன்‌ மெய்யடியார்கள்‌ என்றும்‌ திருமாலடியார்கள்‌ என்றும்‌ நிரூபகமாம்படி அத் தலைக்கு ஆளாக்கி யருள, அவர்களும்‌ அபகத மத மனை–இத்யாதிப்‌படியே குற்றமின்றிக்‌ குணம்‌ பெருக்கிக்‌ குருக்களுக்க நுகூலராய்‌,
-வரவர முநி ப்ருத்யர்‌” என்று நிரூபிக்கும்படி அங்குத்தைக்கு அந்‌தரங்கராய்த்‌ திருவடிசுளிலே நித்ய ஸேவை பண்ணிக்‌ கொண்டு அவர்‌ பிரஸாதித் தருளுகிற பகவத் விஷயங்களையுங்‌ கேட்டுக்‌
கொண்டு ஆசார்யாபிமானத்திலே ஒதுங்கி அநுகூலராயிருக்க-

அப்பா குமாரத்தி ஆச்சியார்‌ ஜீயரை ஆஸ்ரயித்தல்‌
ஜீயர்‌ ப்ராத காலத்தில்‌ நீராட்டத்திற்குப்‌ புறப்பட்டெழுந்‌தருளா நிற்கச்‌ செய்தே ஒரு நாள்‌ அசிந்திதமாக வர்ஷம்‌ வர, அதனால்‌ ஒரு வைஷ்ணவர்‌ க்ருஹத்தின்‌ வாசல்‌ திண்ணையை உத்‌தேசித்து எழுந்தருளா நிற்க அந்த க்‌ருஹ யஜமானை கண்டு அத்யந்‌தம்‌ ப்ராவண்யத்தாலே புடவைத்‌ தலைப்பாலே திண்ணையைத்‌ துலக்கி, “ஸ்வாமீ நீர் .இங்கே எழுந்தருள வேணும்‌” என்று ஸ விநய பக்தியோடே ஸேவித்து நிற்க, ஜீயரும்‌ திருவடி நிலைகளைக்‌ கீழே வீட்டுத்‌ திண்ணை மேலே ஏறி யருள அந்த அம்மை மழையிலே நனைகிற திருவடி நிலைகளை எழுந்தருளப்‌ பண்ணித் தம்‌ சிரஸ்ஸிலே தீர்த்‌தத்தோடு தரித்துக்‌ கொண்டு, பிற்பாடு தலைப்பாலே திருவொற்று வாடை சாத்தி மீளவும்‌ சிரஸா வஹித்து, திரு முன்பே எழுந்தருளப்‌ பண்ணி நிற்க, ஜீயரும்‌, ‘நீயார்‌? பேரேது? இது ஆருடைய திரு மாளிகை ?” என்று கேட்டருள, “தேவரீர்‌ திருவடி ஸம்பந்தியா யிருக்கிற திருமஞ்சனம்‌ அப்பாவுடைய பெண்‌- அடியேன்‌ பெயர்‌ ஆச்சி. இது அவருடைய மணவாளப்‌ பிள்ளை கந்தாடை ஐயங்‌கார்‌ க்ருஹம்‌ (முதலி யாண்டான்‌ திரு வம்ச்யரான சிற்றண்ணர்‌ )என்று விண்ணப்பம்‌ செய்யக்‌ கேட்டு உகந்தருளி,தம்முடைய அப்பாச்சியாரோ!’”’ என்று அருளிச்‌ செய்து கடாஷித்துக்‌ கொண்டு வர்ஷம்‌ நிவர்த்தமான வுடனே திருக் காவேரிக்‌ கெழுந்தருளினார்‌.

ஆச்சியாரும்‌ திருவடி நிலைகளின்‌ திருமஞ்சனம்‌, தலையிலே ஊறி ஜீயர் கடாஷம்‌ பெற்றவளாகையாலே உடனே ஜ்ஞாநோதயமுண்டாய்‌, அப்போதே ஜீயர்‌ திருவடிகளிலே ஆஸ்ரயிக்க வேணு மென்னும்‌ ருசி பிறந்து, பிறந்தகத்திலே சென்று பிதாவுக் கறிவிக்க அவரும்‌ உகந்து, தம்முடைய தெளஹித்ரர்களும்‌ அறியா மலிருக்க வேணுமென்று அருளிச் செய்து, ஜீயர்‌ திருவடிகளில்‌ ஆச்ரயண மான பின்பு தம்முடைய திரு மாளிகையிலே தானே ஒரிடத்திற்கும்‌ புறப்பாடமல்‌ சில நாளிருக்கும்‌ படிக்கு ஆலோசனை பண்ணிய அப்பா, தம்முடைய குமாரத்தியாரைக்‌ கூட்டிக் கொண்டு மடத்திலே எழுந்தருளி ஜீயரை தண்டன்‌ ஸமர்ப்பித்து இச் செய்தியை விண்ணப்பஞ் செய்ய; ஜீயரும்‌, கந்தாடை
அய்யங்கார்கள்‌ ஸம்பந்தத்தைப்‌ பார்க்க வேண்டாவோ? காரியப்‌ படாது” என்றருளிச் செய்ய, அப்பாவும்‌ தம்முடைய குமாரத்தியாருடைய ஆஸ்திக்யாத்ரார்‌த்திகளை விண்ணப்‌பஞ் செய்து-ப்ரதிஹதி ஒன்றும்‌ வாராது; க்ருபை செய்தருள வேனும்‌” என்று விண்ணப்பஞ் செய்ய, -ஆகில்‌ இவளை யிட்டு இந்தத் திருவம்சத்திற்‌ கெல்லாம்‌ ஆநுகூல்ய முண்டாமென்று –ஸூபேந மநஸா த்யாதம்‌’-என்கிறபடியே அப்போது ஒரு சிந்தை செய்து ஆச்சியாருக்கு ஸமாஸ்ரயணம்‌ ஸாதித்தருளி ஹிதங்களையும்‌ ஜ்ஞாதவ்யார்த்தங்‌களையும்‌ உகந்து ப்ரஸாதித்தருளினார்‌, அப்பாவும்‌ தம்முடைய குமாரத்தியாரைத்‌ தம்முடைய திருமாளிகையிலே தானே சில நாளிருக்கும்படிக்கு நியமித்து அவருடைய குமாரர்‌ அண்ணா தொடக்கமானவர்களுக்கு ஒரு கார்யாந்தரத்தை அருளிச் செய்து பரிஹரித்து வைத்தருளினார்‌. இப்படி ஆச்சியாருக்கு ஸ்ரீபாத தீர்த்த வஹநத்தினாலே வந்து அதிசயத்தை
ஸ்ரீபாதுகாம்புஜ நிதாத்ம விவேகரங்க பூநாத தீர்த்த ஜலதாதஜ மாத்ரு தேவம்‌ |
த்வந்த்வச்சிதம்‌ நிகில தேஸி௧ வந்த்யபாதம்‌ ஸெளம்யோ பயந்த்ரு முநி வர்யமஹம்‌ நமாமி

என்று அநுஸந்தித்தார்கள்‌ -தமது பாதுகையின்‌ தீர்த்தத்‌தினால்‌ ஆத்ம விவேகத்தைப்‌ பெற்ற திருமஞ்ஜனம்‌ அப்பாவின்‌ பெண்ணான ஆச்சிக்குத் தேவதையும்‌, சீதோஷ்ணம்‌ ஸூக துக்கம்‌ முதலிய த்வத்வங்களை அறுப்பவரும்‌, ஆசார்யர்களனைவராலும்‌ வணங்கத் தக்க திருவடிகளை யுடையவருமான அழகிய மணவாள மாமுனிவரை அடியேன்‌ வணங்குகிறேன்‌-அநந்தரம்‌ கந்தாடை யண்ணன்‌ திருத் தகப்பனார்‌’ தேவ ராஜ தோழப்பருடைய தீர்த்தம்‌ வர-அற்றைக்கு சிற்றண்ணர்‌ தேவியாரான ஆச்சியாரைத்‌ தளிகை பண்ண அழைத்து விட, அவரும்‌ அப்படியே பாவநத்வ போக்யத்‌வங்களுடேன்‌ தளிகை பண்ண, பெருமாளமுது செய்தருளி முத்தின ஸ்ரீவைஷ்ணவர்களும்‌ அமுது செய்தருளி இஷ்ட பங்க்தியும்‌ அண்ணன்‌ தொடக்கமானாரும்‌ அமுது செய்தருளின அநத்தரம்‌ அண்ணன்‌ வாசல்‌ திண்ணையிலே எழுந்தருளியிருக்க;

சிங்கரையார் வ்ருத் தாந்தம்‌
ஓரு ஸ்ரீவைஷ்ணவர்‌ ஜீயர்‌ மடத்தில்‌ நின்றும்‌ புறப்பட்டுவர அவரைக்‌ கண்டு உமக்கு எந்த ஊர்‌?’என்று கேட்டருள, அவரும்‌ வள்ளுவ ராஜேந்த்ரம்‌ -என்ன இங்கே வந்த காரியமேது?’என்ன, ‘அடியேன்‌ ஜீயர்‌ திருவடிகளிலே ஆஸ்ரயிக்கக்‌ காத்திருக்‌கிறேன்‌: ப்ராப்‌தி காலம்‌ வர வேணும்‌ என்ன–இந்த ஸ்தலத்தில்‌ ஆசார்ய புருஷர்கள்‌ திரட்சியாக வுண்டே, மற்றோரிடத்தில்‌ ஆனாலோ? ‘என்ன, “இங்கே பகவந் நியமனமாயிருக்கிறது’ ‘ என்ன,
-அது எப்படி?” என்ன, அது ரஹஸ்யம்‌” என்ன, “உம்முடைய பெயரேது?’ என்ன, ”சிங்கரையர்‌” என்ன, இவர்‌ பகவத்‌ ப்ரஸாத பாத்ர பூதராக வேணுமென்று திருவுள்ளத்திலே எண்ணி, இவர்‌
கையைப்‌ பிடித்துக்‌ கொண்டு உள்ளே சென்று தீர்த்த ப்ரஸாதங்‌களையும்‌ சந்தனம்‌ அடைக்காய்களையும்‌ ப்ரஸாததித்து ஆதரித்தருளி இவ் விரா திருமாளிகையிலே சயியும்‌” என்று நியமித்தருளித்‌ தாமும்‌ திருத் தம்பிமார் கந்தாடை யப்பனும்‌, திருக் கோபுரத்து நாயனார் பட்டரும்‌ எழுந்தருளி யிருக்க, திருவத்யயநத் தளிகை கைங்கர்யமெல்லாம்‌ நிறைவேறி ஆச்சியார்‌ அலஸையாய்‌ உள்ளே படுக்‌கையிலே சாயும்‌ போது -ஜீயர்‌ திருவடிகளே சரணம்‌, பிள்ளை திருவடிகளே சரணம்‌, வாழி உலகாரியன்‌” என்று சயிக்க, இந்த சப்தத்தை மூவரும்‌ கேட்டு இதேது என்று விஸ்மித வ்யாகுலராயிருக்க, இவர்களில்‌ பாட்டர்‌ உள்ளே சென்று கேட்கிறேன்‌!”என்று போய்‌ மதினியாரே! என்றழைக்க, ஆச்சியார்‌ பயப்பட்டு,தாம்‌ சொன்னது இவர்‌ செவிப்பட்டதென்று பேசாமலிருக்க,
அண்ணனும்‌ அப்பனும்‌ அவரை யழைத்து “எல்லாம்‌ பொழுது விடிந்தவாறே தெரியும்‌, அவரை எழுப்ப வேண்டாம்‌” என்று மூவரும் கண் வளர்ந்தருள; அண்ணனுக்கு பய பக்திகள்‌ மிக்கு
மென்மலர்ப் பள்ளி வெம் பள்ளியாகி, ப்ராதாக்களறியாமல்‌ சிங்கரையர்‌ சயநித்த விடத்திலே எழுந்தருளி அவரை யெழுப்பி சில ஆத்யாத்மிக தர்மங்களை யருளிச்‌ செய்ய, அவர்‌ கேட்டு ௨கந்திருக்க அந்த வேளையிலே ‘ஜீயர்‌ திருவடிகளிலே ஆஸ்ரயிக்கும்படி உமக்கு பகவந் நியமனமான பெருமையை அறிய வேணுமென்று அத்யபி நிவேசமா யிருக்கிறது” என்றருளிச் செய்யக் கேட்டு அவர்‌ சொன்னது:-எங்களூரிலே யுண்டாகிற காய்‌ கிழங்குகளை யதா சக்தி ஸம்‌பாதித்து “இந்த ஸ்தலத்திலே பெரியோர்கள்‌ திரு மாளிகைகளுக்கு அடிக்கடி ஸமர்ப்பித்துப் போருவதுண்டு; அத்தை ஒரு நாள்‌ ஒரு ஸ்ரீவைஷ்ணவர்‌ கண்டு இன்றைக்கு மடத்திலே ஸமர்ப்பியும்‌ என்ன, பாக்யமாயிற்று என்று கொண்டு ஸமர்ப்பித்தேன்‌; அத்தை ஜீயர்‌ கண்டு இது எங்கே விளைந்தது? எந்த நீர்‌ பாய்ந்தது?
நீரிறைத்தவரார்‌? எதற்காகக்‌ கொணர்ந்தீர்‌?” என்று கேட்டருள
அடியேன்‌ அதி விநயமயயும்‌ உசிதமாயும்‌ விண்‌ணப்பம்‌ செய்தபடி-பரிசுத்த ஸ்தலத்திலேயே விளைந்தது, அடிச் சேரியிலே தேவரீர்‌ தாஸ வர்க்கங்கள்‌ நீரியிரைத்துப்‌ பாய்ச்சினது, ஸ்ரீ பாகவத
ஸ்வத்து” என்று விண்ணப்பம்‌ செய்ய, அது கேட்டு ௨கந்தருளி அத்தை அங்கீகரித்தருளி கோயிலுக்குப் போய்‌ பெருமாளை ஸேவித்‌துப்‌ போருமென்று விடை கொடுக்கப்‌ பெருமாள் ஸந்நிதியிலே
செல்ல, அருகே யிருந்த அர்ச்சகர்‌-இன்றைக்குக்‌ காய்கறி யாருக்கு ஸமர்ப்பித்திர்‌?’* என்ன? ஜீயர்‌ மடத்திலே” என்ன, அர்ச்சகர்‌ ப்ரியப்பட்டுப்‌ பரவசராய்‌ அடியேன்‌ முதுகைத்‌ தட்டி ‘நீர்‌ பாக்யவான்‌; உமக்கு விலஷண ஸம்பந்த முண்டாகப்‌ போகிறது-என்று தீர்த்தம்‌, சந்தனம்‌ திருமாலை, வேளையம்‌, அபய ஹஸ்தம்‌, ஸ்ரீ சடகோபன்‌ ப்ரஸாதித்து பஹுமானம்‌ பண்ண, :அடியேனை இன்றைக்கு இத்தனை க்ருபை பண்ணி யருளுவதே! என்று ஸந்நிதியினின்றும்‌ புறப்பட்ட வளவிலே, ‘இவனை மல்லுக்கட்‌டிப்பிடி? என்கிற வார்த்தை கேட்க, அவ் வார்த்தை ஸாபிப்ராயமாக இருக்‌கிறதென்று மீண்டும்‌ மடத்திலே சென்று தண்டன்‌ ஸமர்ப்பித்து
தேவரீருக்காகப்‌ பெருமாள்‌ போர க்ருபை பண்ணி யருளினார்‌-என்று -இச் செய்தியை யெல்லாம்‌ விண்ணப்பஞ்‌ செய்து ஊருக்கு விடை கொள்ளுகிறேனென்ன; அங்குள்ளார்‌ அடியேனை யாதரித்து
ப்ரஸாதமும்‌ ப்ரஸாதித்தனுப்ப அத்தை வழியிலே ப்ரஸாதப்‌பட்டுச்‌ செல்ல, உடனே சித்த சுத்தி பிறந்து ஆஸ்ரயண ருசி யுண்டாயிற்று; அன்று ராத்திரி ஸ்வப்நத்திலே பெரிய பெருமாள்‌ ஸந்நிதியிலே திருமணத் தூணருகே நின்று ஸேவித்துக்‌ கொண்டிருக்க பெரிய பெருமாள்‌ அணையில்‌ வைத்த திருக் கையை உயர வெடுத்துத்‌ திருவநந்தாழ்வானைக்‌ காட்டி இவர்‌ கிடாய்‌ அழகிய மணவாளச்‌ சீயர்‌, இவரோடு உனக்கு ஸம்பந்த முண்டாக்கிக்‌ கொள்‌” என்றருளிச்‌ செய்ய, இந்த ஸ்வப்நத்தைக்‌ கண்டு க்ருதார்த்தனாய்‌ ஜீயர்‌ திருவடிகளில்‌ ஆஸ்ரயிக்கக் காத்திருக்கிறேன்‌’ என்று சிங்கரையர்‌ விண்ணப்பஞ் செய்யக்‌ கந்தாடை அண்ணன்‌ கேட்டருளி பய பக்திகள்‌ விஞ்சி நெடும்போது சிந்தித்து உள்ளே யெழுந்தருளித்‌ திருப் படுக்கையிலே சாய்ந்தருள, ஸ்வப்நமான ப்ரகாரம்‌:-

(ஸகல வேதாந்த ஸாரார்த்த பூர்ணாசயம்
விபுல வாதூல கோத்ரோத்பவாநாம் வரம்
ருசிர ஜாமாத்ரு யோகீந்த்ர பாதாச்ரயம்
வரத நாராயணம் மத் குரும் ஸம்ச்ரயே
-தேவராஜ தோழப்பர் திருக் குமாரர் –வரதநாராயண குருவான அண்ணன்=திருமஞ்சனம் அப்பாவுக்கும் தேவராஜர் திருநாமம் உண்டு -திருவரங்கத்தில் இருந்து கொண்டே பேர் அருளாளன் திருநாமம் கொண்டவர்கள்)

கந்தாடை யண்ணன்‌ கண்ட ஸ்வப்நம்‌.
ஒரு ஸ்ரீவைஷணவர்‌ மெத்தையினின்றும்‌ ஏணி வழியாலே இறங்கி வந்து பெரிய கசையாலே தம்மை யடிக்க, தமக்கு நிவர்த்‌திப்பிக்க சக்தி யுண்டாயிருக்கச் செய்தேயும்‌, “நம்மிடத்தில்‌ ஸ்வரூப விருத்தமான நடக்கை யுண்டாயிருப் பதினாலே சிக்ஷித் தருளுகிறார்‌ ‘ என்றெண்ணி, –ஸாஸ்த்ர ஷாராக்நி கர்மாணி ஸ்வ புத்ராய யதா பிதா–தன்‌ மகன்‌ புண்ணை ஆற்றுதற்காகத்‌ தகப்பன்‌ கத்தியாலறுப்பது, காரமான மருந்தை யிடுவது தீயினால்‌ கடுவது முதலிய செயல்களை ஹித புத்தியாலே செய்விக்குமா போலே- என்றநுஸந்தித்துக்‌ கொண்டிருக்க, கசையும்‌ துணிக்கை துணிக்‌கையாக அறுந்து போக, அந்த ஸ்ரீவைஷ்ணவர்‌ அண்ணன்‌ திருக்‌ கைகளைப்‌ பிடித்திழுக்க, அண்ணன்‌ ஏது செய்ய வேண்டுமென்ன ஏணி மேலேறி மெத்தை மேலை போவென்ன அண்ணனும்‌ அப்‌படியே செய்ய அந்த ஸ்ரீவைஷ்ணவர்‌ தாமும்‌ ஏறி வந்து எடுத்துக்‌ கட்டி மேலே கொண்டு போசு, அங்கே ஒரு ஜீயர்‌ ஒரு திருவடியைத்‌ தொங்க விட்டுக்‌ கொண்டும்‌ ஒரு திருவடியை குஞ்சித்துக்‌ கொண்‌டும்‌, த்ரிதண்டத்தைத்‌ தோளிலே சாத்திக்‌ கொண்டும்‌ திருக்கையிலே கசையைப்‌ பிடித்துக்‌ கொண்டும்‌ அக்நி கல்பராய்‌ மிகவும்‌ குபிதராயிருக்க, அவர்‌ முன்னே அண்ணனைப்‌ பிடித்துக்‌ கொண்டு போக , ஜீயர்‌ அண்ணனை பஹுவாக அடிக்க, கசையும்‌ துணிக்கையான வாறே இன்னுமடிக்கத் தக்கதாக உப தண்டத்தை வாங்கப்‌ புக, அத்த ஸ்ரீ வைஷ்ணவர்‌ தண்டன்‌ ஸமர்ப்பித்து அஞ்சலி ஹஸ்‌தரராய்‌ ஜீயர்‌ திருமுக மண்டலத்தைப்‌ பார்த்து ‘இவன் சிறு பிள்‌ளை பஹுவாக அடிபட்டான்‌. இனி க்ஷமித்தருளித்‌ திருவுள்ள மிரங்கி க்ருபைப்‌ பண்ணி யருள வேணும்‌” என்ன; அவரும் இறங்கி யருளி அண்ணனை அழைத்து மடியிலே வைத்து உச்சி மோந்து திருக் கைகளாலே திருமேனி யெங்குந்‌ தடவி நீயும்‌ உத்தம நம்பியும்‌ போர அபசாரப்‌ பட்டீர்கள்‌” என்ன, ”அழகிய மணவாள ஜீயர் ப்ரபாவ மறியாமல்‌ அவிவேகம்‌ வந்தது; இனி க்ஷமித்தருள வேணும்‌!என்று திருவடிகளைப்‌ பிடித்துக்‌ கொள்ள, ஜீயர்‌ இரங்கி யருளி, நாம்‌ ஸ்ரீபாஷ்யகாரர்‌, இவர்‌ முதலியாண்டான்‌’ என்று தம்மையும்‌ அந்த ஸ்ரீவைஷ்ணவரையுங் காட்டி,
த்வதீயாந்‌ அபராதாந்யீரந்‌ த்வத் ஸம்பந்தி க்ருதாநபி |
க்ஷமாம் யஹம்‌ தாஸரீதஸ்‌ ஸம்பந்தம்‌ மா அந்யதாக்ருதா: ॥

நீர்‌ செய்த தவறுகளையும்‌ உம்‌முடைய ஸம்பந்திகள்‌ செய்த தவறுகளையும்‌ பொறுத்துக்‌ கொள்ளுகிறேன்‌ நான்‌, முதலியாண்டான்‌ ஸம்பந்தத்தை வ்யர்த்தமாக்காதீர்‌- என்றிந்த ஸ்லோகத்தை யுநு ஸந்தித்து ”நாமே திருவநந் தாழ்வான்‌, நாமே வரவர முனி; அவர்‌(அழகிய மணவாள ஜீயர்‌) திருவடிகளிலே நீயும்‌ உன்னுடைய ஸம்பந்திகளும்‌ ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள்‌” என்று விட,
அண்ணனும்‌ திருக் கண்கள்‌ [விழித்து நெடும் போது ‘*ஈதொரு ஸ்வப்ந மிருந்தபடி யென்‌!” என்று விஸ்மிதராய்‌ கண்டவற்றை யெல்லாம்‌ புந:புந: சிந்தித்து மறவாமல்‌ திருவுள்ளத்திலே கட்டிபண்ணி, திருத் தம்பிமார்களை யெழுப்பி ஸ்வப்ந வ்ருத்தாந்தங்களை யருளிச் செய்யத்‌ தொடங்கி நடுவே நடுவே ஹர்ஷ பரவசராய்‌-ஸ்தப்தராயிருந்து அருளிச் செய்து தலைக் கட்டி யருளினார்‌.

இப்படி அண்ணனுக்கு எம்பெருமானார்‌ ஸாதித்தருளின அர்த்தத்தையும்‌ அண்ணன்‌ விண்ணப்ஞ்செய்த அர்த்தத்தையும்‌ அதற்கு உத்தரத்தையும்‌,
வாதூல துர்ய வரதார்ய குரோர்‌ பபாண ஸ்வப்நே யதீத்ர வபுரேத்ய க்ருபா பரோந்ய: |
ஸேஷோப் யஹம்‌ வர வரோ முநிரப் யஹம்‌ த்வம்‌ |மாம் ஆஸ்ரயேதி தமஹம்‌ கலயாமி சித்தே ॥
அத்யந்த பாப நிரத:கதமார்ய வர்ய-த்வாம் ஆஸ்ரயேஹமிதி தம்‌ க்ருபணம்‌ வதந்தம்‌ |
த்ருஷ்ட்வா க்ஷமாமி நநு தாஸரதேஸ் த்வதீய ஸர்வ அ பராதமிதி தம்‌ ப்ரவதந்த மீடே ॥

யாவர் ஓருவர்‌ வாதூல குலஸ்ரேஷ்டரான அண்ணனுடைய ஸ்வப்நத்தில்‌ எம்பெருமானார்‌ திரு மேனியாக ஸேவை ஸாதித்துப்‌ பரம க்ருபை யுடையராய்‌’ ஆதிசேஷனும்‌ நாமே, மா முநிகளும்‌ நாமே நீர்‌ நம்மை ஆஸ்ரயியும்‌” என்று அருளிச் செய்தாரோ அவரை அடியேன்‌ மனதில்‌ த்யானம்‌ செய்கிறேன்‌. பாப கார்யத்தில்‌ மிகவும்‌ ஊன்றிய அடியேன்‌ ஆசார்ய ஸ்ரேஷ்டராள தேவரீரை எப்படி ஆஸ்ரயிப்பேன்‌ என்று நமாகக்‌ கூறுகிற அவ் வண்ணனைப்‌ பார்த்து ஒ அண்ணனே! முதலியாண்டானுக்காக உம்முடைய ஸர்வாபாரதங்களையும்‌ பொறுத்துக்‌ கொள்ளுகிறோம்‌” என்று அருளிச் செய்யும்‌ அந்த ஜீயரை ஸ்தோத்ரம்‌ செய்கிறேன்‌- என்று பெரியோர்கள்‌ அநுஸத்தித்தார்கள்‌. அண்ணன்‌ தம்பிமார்களைக்‌ கூட்டிக்‌ கொண்டு “அத்யமே ஸபலம்‌ .ஐந்ம ஸுப்ர பாதாச மே நிமா” (விஷ்ணு 5) 7-3) இன்று என்‌ பிறவி பயன்‌ பெற்றது எனக்கு நேற்றிரவு இன்று நல்ல விடிவாயிற்று-என்று சொல்லிக்‌ கொண்டு புறப்பட்டு ஆச்சியாரருகே சென்று தண்டனிட்டு அவர்‌ பயப்படாத படிக்கு முந்துற ஸ்வப்ந வ்ருத்தாந்தத்தை யருளிச் செய்ய, ஆய்ச்சியார்‌ தமக்கு ஜீயர்‌ ஸம்பந்த முண்டான படியையும்‌ ‘அதற்கு மூல பூதமான ஜீயருடைய பாதுகா தீர்த்த வைபவத்தையும்‌ தம்முடைய திருத் தமப்பனாரான அப்பாவுக்கு ஜீயர்‌ நீராடி யருள அந்த தீர்த்தத்தலே அவகாஹித்ததால்‌ வந்த ஜ்ஞாநாதிக்யத்தையும்‌ ஆச்சியார்‌ முகத்தாலே கேட்டருளி அத்யந்த ஹ்ருஷ்டராய்ப்‌ புறப்பட்டு சிங்கரையரைக் கண்டு உகந்து அவருக்கு. எல்லாவற்றையு மருளிச்‌ செய்து கொண்டு திருக் காவேரிக்‌ கெழுந்தருளி நீராடி நித்ய கர்மாநுஷ்டாநங்களாகிப்‌ புறப்‌ பட்டருளி;

அண்ணன்‌ ஜீயர்‌ திருவடிகளில்‌ ஆஸ்ரயிக்க ஒருப்பட்டது
சுப ஸூசகங்களா யிருக்கிற நிமித்தங்களைச்‌ செய்து கொண்டு
ததா கதாம் தாம்‌ வ்யதிதாம நிந்திதாம்‌ வ்யபேத ஹர்ஷாம்‌ பரிதீந மாநஸாம்‌ |
ஸூபாந் நிமித்தாநி ஸூபாநி பேஜிரே நரம்‌ ஸ்ரியா ஜுஷ்ட மிவோப ஜீவிந:

சொல்ல முடியாத துன்பமுடையவரும்‌, இனி மேல்‌ தான்‌ அதிகமான துன்பங்கள்‌ நேரப் போகின்றன வென்று நினைத்தவளும்‌ குற்றமற்றவளும்‌, சிறிதும்‌ மகிழ்ச்சி யில்லாதவளும்‌, அறவே மனமழியப்‌ பெற்றவளுமான அந்த ஸீதாப் பிராட்டியை, யாசகர்கள்‌ பணமுள்ளவனை அடைந்து ஸத்தை பெறுமா போலே சில சுப ஸுசனைகளும்‌ அடைந்து ஸத்தை பெற்றன-என்கிறபடியே போய்‌ திருமாளிகையிலே யெழுந்தருளி ஆச்சியாரைக் கண்டு
ரங்கேஸ கைங்கர் ஸு தீர்த்த தேவ ராஜார்ய ஜ அம்பாகலு பாக்ய ஸீலா |
ரம்யோ பயந்து: பத ஸம்ஸ்ரயேணயா யஸ்மத் குலம்‌ பாவந மாத நோதி ॥

யாவருளாருத்தி மாமுனிகளின்‌ திருவடிகளை ஆஸ்ரயித்து நமது

குலத்தைப்‌ பாவனமாக ஆக்கினாளோ, திருவரங்கனுக்குத்‌ தொண்‌டரான திருமஞ்சனம்‌ தேவராஜர்‌ என்னும்‌ அப்பாவின்‌ புதல்வியான அந்த ஆச்சியார்‌ பாக்யசாலிநி யல்லவா? என்‌று அநுஸந்‌தித்தருளி “உம்முடைய திருக் கைகளாலே ‘ ப்ரஸாதப்‌பட்ட்ன்றோ இப்பேறு ஸித்தத்தது” என்று உகந்தருளி, உத்தம நம்பியை யழைத்து வரப்‌ போக விட்டு, தாமும்‌ தம்முடைய தாயாதரான கந்தாடை அய்யங்கார்கள்‌ எல்லாருக்கும்‌ இச் செய்தியை அருளிச்‌ செய்து அவர்களுக்கு ஜீயர்‌ ஸம்பந்த முண்டாக்கும்படி திருவுள்ளமாய்‌ அவர்களுடைய அகங்களிலே எழுந்தருள,ஆச்சியார்‌ குமாரரான அண்ணாவும்‌ -தாசரதி அப்பையும்‌, தந்தையரான எம்பாவும்‌ அண்ணன்‌ திருவடிசுளிலே தீர்க்க ப்ரணாமத்துடனே ‘தேவரீருக்கு ஸாதித்த ஸ்வப்நமே அடியோங்களுக்‌கும்‌” என்று விண்ணப்பஞ்செய்ய, அவர்களையுங்‌ கூட்டிக் கொண்டு லக்ஷ்மணா சாரியரென்று ப்ரஸித்தரா யிருந்தவருடைய பெளத்ரராய் இருக்கிற எம்பா வண்டையிலே எழுந்தருளி ஆஸ்ரயித்து (இந்த எம்பா என்னும்‌ ஸ்வாமி, அப்போது திருமண்‌ காப்பு வேளையா யிருக்க கோபத்தில்‌ அதையும்‌ பூர்த்தியாக அணியாமல்‌ உள்ளே எழுந்தருளி விட்டபடியினால்‌ ”ஒத்தைக்‌ கொம்பு எம்பா” என்று திருநாமம்‌ பெற்றதாக கர்ண பரம்பரைச்‌ செய்தி: பிறகு இவர்‌ ஸ்ரீரங்கத்திலிருந்து திருமழிசை எழுந்தருளி விட்டதாகச்‌ சொல்லப்‌ படுகிறது. )இச் செய்தியை அருளிச் செய்ய அவர்‌ குபிதராய்‌ ‘*அபிஜந வித்யா வ்ருத்தநங்களுடைய மஹா குலத்திகே பிறந்து இப்படி யானாயோ?’? என்று நாநா பெளருஷ உக்திகளைப்‌ பண்ணி விட, அவருக்கு புத்ர கோடிகளாய்ப்‌ பெரிய ஆயி திரு வம்சத்தராயுள்ள அப்பா முதலானார்‌ பதின்மர்‌ க்ருஹங்‌ளிலு மெழுந்தருளி ஹிதமருளிச்‌ செய்ய, அவர்களுக்கு அநபிதமாய்த்‌ தோன்றி பரிஹரிக்க, திருவுள்ளத்தில்‌ குறையோடே புறப்பட்டருளித்‌ தம்முடைய திரு வம்சஸ்த்தராய்‌ தமக்கு ப்ராத்ருரு கோடிகளா யுள்ளவர்கள்‌ திரு மாளிகைகளுக்கும்‌ புத்ர கோடிகளுடைய இருபது திருமாளிகைகளுக்கும்‌ எழுந்தருள, அவர்கள்‌ அதி ப்ரவணராய்‌ இருந்து கொண்டு தண்டன்‌ ஸமர்ப்பித்து அண்ணர் அருளிச்‌ செய்த ஹிதங்களை யெல்லாங் கேட்டு, தங்கள்‌ தங்களுக்‌குண்டான ஸ்வப்நங்களையும்‌ உப ச்ருதிகளையும்‌ சகுநங்களையும்‌ அழகிய மணவாள மா முனியினுடைய வைபவங்களையுஞ்‌ சொல்லிக்‌ கொண்டு ஆஸ்ரயணத்துக்கு த்வரிக்க, தமக்கு ப்ராத்ரு கோடிகளா யுள்ளவர்களையும்‌ புத்‌ர கோடிகளா யுள்ளவர்களையும்‌ தங்கள்‌ தங்கள்‌ பார்யாதிகளையுங்‌ கூட்டிக் கொண்டு உபஹார புரஸ்ஸரமாக மடத்துக்குப்‌ புறப்படும்படி நியமித்து,

தம்முடைய திருமாளிகையிலே திருத் தாயார்‌ திருத் தமப்பனார்‌ முதலானவர்களையும்‌ ;விட்டு குரு குல வாஸமாக தாரக போஷக போக்யங்களெல்லாம்‌ அண்ணன்‌ திருவடிகளே யென்றிருக்கிற திருவாழியாழ்வார்‌ பிள்ளையையும்‌, சுத்த ஸத்வம்‌ அண்ணனையும்‌,திருத் தம்பிமாரையும்‌ மற்றும்‌ பெரியோர்களையும்‌ அழைத்து வைத்துக் கொண்டு சுத்த ஸத்வ மண்ணன்‌ பாக்யாதிசயத்தாலே ஸ்வத ஏவே மிகவும்‌ பாகவத ப்ராவண்ய முடையராய்‌ ஜீயருடைய திநசர்யையை அடிக்கடி ஆராய்ந்து கொண்டு அதி ப்ரீதராய்‌ அண்ணன்‌ திருவுள்ளம்‌ சிறிது கலங்கினாலும்‌ –குரும்‌ ரஹஸி போதயேத்‌” என்கிற படியே திருவடிகளுக்கு ஹித பராய்‌ ஜீயரிடத்‌திலே ப்ரீதி வரும்படி யருளிச்‌ செய்து கொண்டு போருகிறவரா யிருப்பார்‌; அத்தைத்‌ திரு வுள்ளத்திலே வைத்து அண்ணன்‌ அருளிச்‌ செய்தபடி: இவருக்‌கு சுத்த ஸத்வம்‌ என்கிற திருநாமம்‌ யதார்த்தமாயிற்று; நமக்குப்‌ போர நல் வார்த்தை சொல்லிப்‌ போருவர்‌, இவருடைய ஹ்ருதயாநு ஸாரியாய்‌ யாவத் கார்யமும்‌ கடித்தது; இனி ஒரு குறையுமில்லை” என்றருளிச்‌ செய்து கொண்டு தம்முடையவர்களும்‌ மற்றக்‌ கந்தாடை அய்யங்கார்‌களும்‌ அவரைக்‌ கடாஷித்துக்‌ கொண்டிருக்க-

அண்ணன்‌ ஸ்வ ஸம்பந்திகளுடன்‌ ஜீயர்‌ மடத்துக்‌ கெழுந்தருளுதல்‌
அவர்களில்‌ சிலரை எம்பா மாறுபடுத்தி விட, சென்று அண்ணனுக்கு இச் செய்தியை அறிவிக்க, மிகவும்‌ கோபித்தருளி-அவர்களை விடும்‌’ என்று மற்றவர்களை யெல்லாம்‌ கூட்டிக் கொண்டு ஜீயர்‌ ஸந்நதிக் கெழுத்தருளுவதாக ஆச்சியாரை யழைத்து ஸமயமறிந்து திருவுள்ளத்தில்‌ படுத்தும்படிக்கு அனுப்பி யருள அவரும்‌ சென்று திருமலை யாழ்வாரில்‌ ஸ்ரீ வைஷ்ணவ கோஷ்ட்டியிலே ஜீயரெழுந்தருளி யிருக்கிறபடியினாலே கிட்டி விண்ணப்பஞ்‌ செய்ய ஸங்கோசப்பட்டு ஒரு ஸாத்விக ஸ்ரீவைஷ்ணவரை யழைத்து “ஸ்வாமியை உள்ளே யெழுந்தருளும்படி ஏகாந்தமாக திருச் செவியிலே லிண்ணப்பஞ் செய்யும்‌” என்ன அவர்‌ ,”ஏதுக்கு”?என்ன, அண்ணன்‌ முதலான கந்தாடை அய்யங்கார்‌களெல்‌லாருங் கூடி எழுந்தருளுகிறார்கள்‌” என்று ஆச்சியார்‌ உள்ளே சென்றார்‌-

அசட்டாச்சான்‌-
அந்த ஸ்ரீவைஷ்ணவர்‌, ஆச்சியார்‌ சொன்னதை அந்யதாவாக க்ரஹித்து ஓடிச் சென்று, ‘ஸ்வாமீ! சீக்கிரமாக எழுந்தருள। கந்தாடை அய்யங்கார்கள்‌ கூடி வருகிறார்களாம்‌’, என்ன-ஜீயர்‌ துணுக்கென்று எழுந்திருந்து புறக்கடைக்கு எழுந்தருள உள்ளே எழுத்தருளக் காணாமையாலே ஆச்சியார்‌ அந்த ஸ்ரீ வைஷ்ணவர்‌ என்ன விண்ணப்பஞ்‌ செய்தாரோ வென்று பயப்பட்டு, சோபந வார்த்தையை விண்ணப்பஞ்‌ செய்ய வேணுமென்று புறக்கடையில்‌ புகுவதற்கு ஸமயமாகக் காணாமையாலே, புறம்பே ஒளிக்க–அண்ணன்‌ முதலானார்‌ பெருங்கூட்டமாகத்‌ திருமுன் காணிக்கைகளும்‌ பலங்களும்‌ முன்னே பிடித்துக் கொண்டு மடத்து வாசலிலே எழுந்தருளி வானமாலை ஜீயர்‌ முதலானவர்களை புரஸ்கரித்தருளி அவர்களுடனே அண்ணன்‌ அதி விநீதராய்‌ ‘ஜீயர்‌ திருவடிகளே ப்ராப்ய ப்ராபகமாக வந்தடைந்தோம்‌; தேவரீர்‌ அங்கீகரிப்பித்தருள வேண்டும்‌:’ என்ன, வானமாமலை ராமாநுஜ ஜீயர்‌ இது கேட்டு அதி ப்ரிதராய்‌ ஸ்தப்தராயிருந்து பிற்பாடு ஸந்நிதிக் கெழுந்‌தருள; அதற்குள்ளே ஆய்ச்சியார்‌ அதி த்வரையுடனே ஸமயமானவாறே ஜீயர்‌ திருவடிகளிலே தண்டன்‌ ஸமர்ப்பித்து, இற்றைக்கு சோபநம்‌; அண்ணன்‌ முதலானாரெல்லமும்‌ திரளாகத்‌ திருவடிகளிலே ஆஸ்ரயிக்க எழுந்தருளுகிறார்கள்‌” என்ன, அவ்வளவிலே வானமாமலை ராமாஜஜீயரு மெழுந்தளி ஹர்‌ஷ பரவசராய்‌ விண்ணப்பஞ்‌ செய்ய ஜீயர்‌ கேட்டு உகந்து, இவற்றிகெல்‌லாம்‌ மூல பூதை ஆச்சியாரன்றோ!’ என்று திருவுள்ளம் பற்றி,திருமலை யாழ்வாரிலே வந்து விண்ணப்பஞ்‌ செய்த ஸ்ரீவைஷ்ணவரை யழைத்தருளி உம்முடைய பேரேது?” என்று விநோதமாகக் கேட்டருள, அவரும்‌ “அடியேன்‌ ராமாநுஜ தாஸன்‌” என்ன, அப்படியன்று, அசட்டாச்சான்‌- என்று அவரைப்‌ பரிஹஸித்து திருவுள்ளத்தில்‌ உகப்போடே

அண்ணன்‌ ஐியரை ஸேவித்தல்‌
வித்யா விமுக்தி ஜநநீ விநயாதிகத்வ மாசார ஸம்பதநுவேல விகாஹஸீலம்‌
ஸ்ரீ லஷ்மணார்ய கருணா விஷயீ க்ருதாநாம்‌ சித்ரம்‌ ந தாசரதிவம்ஸ ஸமுத்பவாநாம்‌

மோக்ஷத்துக்கு உதவக்‌ கூடிய ஜ்ஜாநமும்‌ அதிசயிச்கத் தக்க விநயமும்‌, அநுஷ்டானச்‌ செல்வமும்‌ வேளைக்கு வேளை வளரும்‌ சீலமும்‌ எம்பெருமானார்‌ கருணைக்கு இலக்கான ஸ்ரீமுதலியாண்‌டான்‌ திரு வம்சத்தினருக்கு வாய்த்திருப்பதில்‌ வியப்பில்லை] என்று அருளிச்‌ செய்து (இந்த ஸ்லோகத்தை மாமுனிகள்‌ வேடலப்பை விஷயமாக அருளிச்‌ செய்ததாகவும்‌ கூறுவர்‌, வேடலப்பை விஷயம்‌ பின்னர்‌ வரும்‌, ௮ங்கு இது மிகப்‌ பொருந்தும்‌. ) புறப்பட்டருளி மடத்து வாசலிலே அவர்களெல்‌லாரையுங்‌ கண்டு ஸ்ரீ ராமாநுஜ யோகீந்த்ர கருணா பரிப்ரும்ஹிதாம்‌ |
ஸ்ரேயஸீம் அநகாம்‌ வந்தே ஸ்ரீமத் வாதூல ஸந்ததிம்‌ ॥

ஸ்ரீராமாநுஜர்‌ என்னும்‌ யோகியர்‌ தலைவர்‌ கருணையால் மல்கியதும்‌ சிறந்ததும்‌ குற்றமற்றதுமான ஸ்ரீமத் வாதூல குலக்‌ கொடி வழியை வணங்குகிறேன்‌] என்றநுஸந்தித்தருள, அவர்களெல்‌லாரும்‌ திருவடிகளிலே தீர்க்க ப்‌ரணாமம்‌ பண்ணி, ‘ந கர்மணா ந ப்ரஜியா தநேந:’வேதாஹமேதம்‌’ என்கிற பஞ்சாதிகளை அநுஸந்தித்து, உபஹாரங்களை ஸமர்ப்பிக்க, அங்கீகரித்தருளி,உள்ளே எழுந்தருளி திருவோலக்கமாக எழுந்தருளி யிருந்து
பொலிக பொலிக, என்கிற திருவாய்‌ மொழிக்கும்‌, திருப் பல்‌லாண்டுக்கும்‌ ஸங்க்ரஹமாக அர்த்தோபந்யாஸம்‌ செய்தருளி இப்படி ஸ்ரீவைஷ்ணவ ஸம்ருத்தி நித்யமாய்ச் செல்லவும்‌ எல்லாரும்‌ மங்களாசாஸந பரராகவும்‌ ஆசீர்வதித்தருளி எழுந்தருளி யிருக்க;
அண்ணன்‌ வானமாமலை ஜீயருடனே ஸமாஸ்ரயணத்துக்கு த்வரித்‌தருள, அழகிய மணவாள மாமுனியும்‌ எழுந்திருந்து அப்பாலே ரஹஸ்ய ஸ்தலத்திலே எழுந்தருளி யிருந்து வானமாமலை ஜீயரைக்‌ கொண்டு அண்ணனை அழைப்பித்து, ‘தேவரீர்‌ மஹா குல ப்ரஸூதரும்‌ எல்லாருக்கும்‌ குருகுலமன்றோ! இப்படி எதுக்கு?’! என்ன;
அப்படி யொன்றும்‌ அருளிச்‌ செய்ய வேண்டா’! என்று தாம்‌ முன்‌ விருந்த இருப்புக்கு ஷாபணம்‌ பண்ணிக்‌ கொண்டு” ஸ்வப்ந வ்ருத்‌தாந்தத்தை முதலிலிருந்து தப்பாமல்‌ விண்ணப்பஞ்‌ செய்யக்‌ கேட்‌டருளி, ”ஈயானுடைய திருவம்சஸ்த்தராய்‌ அநுகூலித்தவர்‌ சிலருண்டே ; அவர்களுக்கும்‌ வேறே சில பாக்யாதிகர்களுக்கும்‌ பெருமாள்‌ இரங்கி ஸ்வப்நாதிகளாலே தேவரீர்‌ நியமனத்திலே கூட்டுகிறார்‌. அவர்களையுங்‌ கூட்டிக்‌ கொண்டு இற்றைக்கு மூன்று நாள்‌ கழித்து நாலாம்‌ நாள்‌ தேவரீர்‌ திருவுள்ள ப்ரகாரத்திற்கு எல்லோருக்கும்‌ ஸமாஸ்ரயணமாகிறது” என்று நிர்ணயித் தருளிப்‌ புறப்‌பட்டுத்‌ திருவோலக்கத்திலே யெழுந்தருளின வநந்தரம்‌ சாத்துப்‌ப்டி அடைக்காயமுது விநியோகமாய்‌ எல்லாரும்‌ தம் தம்‌ திருமாளிகைகளுக் கெழுந்தருளினார்கள்‌.

மீண்டும்‌ பெருமாள்‌ சிலரைத் திருத்துவதாகத்‌ திருவுள்ளம் பற்றி
புநஸ் ஸ்வப்நா பதேஸேந தேஸே தேஸே நிரங்குஸ . |
அயமர்ச்சா வதாரத்வ ஸமாதி மவதீரயத்‌
அத்ய மர்த்யந்‌ ததே தஸ்ய தத்வ மாத்யந்திகம்‌ ஹிதம்‌ |-
அஸங்குசித மாசக்யெள புஜங்க ஸயந: புமாந்‌ ॥

அரவ்ணையில்‌ துயிலும்‌ ப்ரம புருஷன்‌ மறுபடியும்‌ ஓவ்வோரிடத்திலும்‌, ஸ்வப்ந மென்கிற வ்யாஜத்தினால்‌, தன்னைத்‌ தடுப்பார்‌ யாருமில்லாமையாலே-அர்ச்சாவதாரத்வத்தின்‌ மெய்ப்பாட்டினை- பேசாமலிருக்கும்‌ ஸ்வபாவத்தை உதறித் தள்ளி விட்டு, தேவர்களையும்‌ விஞ்சிய-இம் மாமுனிகளுடைய உண்மைத்‌ தன்மையையும்‌ மோக்ஷத்திற்கு அந்திமோபாய மாயிருக்கும்‌ தன்மையையும்‌ விவரமாக அருளிச்‌ செய்தான்‌–என்று இத்யாதிகளாலே ”குருஸ்ச ஸ்வப்ந த்ருஷடஸ்ச” என்கிறபடியே அவர்கள்‌ ஸ்வப்நத்திலே அர்ச்சாவதார ரூபியாய்‌ வந்து நாமே இப்படி ஆசார்ய ரூபேண அவதரித்தோம்‌; நீங்களுமப்படியே ஆசார்யம்மாம்‌ விஜாநீயாத்‌ பவ பந்த விமோசநம்‌”‘ -ஸம்ஸார பந்தத்தை விடுவிக்கும்‌ நாமே மாமுனிகளென்று அறியக் கடவர்கள்‌- என்கிறபடியே விசேஷ:ப்ரதிபத்தி பண்ணி ஆஸ்ரயியுங்கோள்‌” என்றருளிச் செய்ய;

அநந்தரம்‌:
அண்ணன் ஜீயரிடம்‌ ஸமாஸ்ரயணம் பெற்றது
ராமாநுஜ பதாம் போஜ ஸெளகந்த்ய நித யோபியே |
அஸாதாரண மெளந்நத்ய மவதூய நிஜம்தியா
உத்தேஜ யந்தஸ்‌ ஸ்வாத்மாநம்‌ தத்ஜேஸ் ஸம்பதா ஸதா |
ஸ்வேஷா மதிசயம்‌ மத்வா தத்வேந ஸரணம்‌ யயு: ॥

எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகளில்‌ நறு மணத்தையே நிதியாகப் பெற்றவர்களும்‌ தம்முடையதான பிறர்க்கில்லாத உயர்த்தியை புத்தி பூர்வகமாக உதறி விட்டுத்‌ தம்மை அதிகமாக ப்ரகாசிக்கும்படி செய்ய நினைத்தவர்களாய்‌, அம் மா முனிகளின்‌ தேஜஸ் ஸம்ருத்தியினால்‌ தமக்குப்‌ பெருமை உண்டாகுமென்று எண்ணி ௮ம் மா முனிகளைப்‌ பூர்ணமாகச்‌ சரணமடைத்தனர்‌-என்றபடியே ராமா நுஜ பரிக்ருஹீதராய்‌ அபிஜந வித்யாவ்ருத்தங்‌களா லுயர்ந்திருக்கிற கந்தாடை அண்ணன்‌ முதலான ஆசார்ய புருஷர்கள்‌ எல்லாரும்‌ தந்தம்‌ உயர்த்திகளைப்‌ பாராமல்‌ ஜீயர்‌ திருவடி ஸம்பந்தமே தங்களுக்கு ஸர்வாதிசயங்களுமாக வெண்ணி ஜீயர்‌ திருவடிகளை சரணமாக வந்தடைந்திருக்க அண்ணன்‌ ஜீயர்‌ திரு முன்பே சென்று, ‘தேவரீர்‌ அடியோங்களை க்ருபை பண்ணுகைக்கு இட்டிருந்த நாளும்‌ வந்தது; எம்பா முதனாராலே ப்ரதிபாதிக்கப்பட்ட நம்முடையவர்களுக்கு பெருமாள்‌ ஸ்வப்நாதி வ்யாஜத்தாலே திருந்தத் திருந்தி –தேவரீர்‌ திருவடிகளே ப்ராப்யமாக வந்து இந்த கோஷ்டியிலே கூடி யிருக்கிறார்கள்‌. எல்லாரையும்‌ க்ருபை பண்ணி யருளத்‌ திருவுள்ளமாக வேணும்‌” என்று விண்ணபஞ் செய்ய; ஜீயரும்‌ வானமாமலை ஜீயரை அழைத்து அதற்கு வேண்டியவைகளை ஸந்நத்தமாக்க நியமித்தருளி, தாமும்‌ திருவாராதநஞ் செய்தருளி -திருப்பணியாரமும்‌ பழவமுதும்‌ பூர்ணமாகக்‌ கண்டருளப்‌ பண்ணி, ஸந்நிதி முன்பாக எழுந்தருளி யிருந்து ஸமாச்ரயணமாக வேண்டியவர் களெல்லாரையும அழைத்து அண்டையிலே வைத்துக் கொண்டு செய்யுங் கிரிசைகளெல்லாஞ்‌ செய்தருளி, தாப புண்ட்ரஸ் ததா நாம மந்த்ரோ யாகஸ்ச பஞ்சம:” திருவிலச்சினை, திருமண்காப்பு, தாஸ்ய நாமம்‌, மந்த்‌ரோபதேஸம்‌, தேவ பூஜை என்று ஐந்து-என்கிறபடியே பஞ்ச ஸம்ஸ்‌காரங்களையும்‌ செய்தருளி பரமைகாந்த்ய மஹா பலத்தையும்‌ பூர்ணமாக்கி உகந்தருளி நெடும் போது அண்ணனை -இருந்தான்‌ கண்டு கொண்டு என்கிறபடியே கடாக்ஷித்துக்‌ கொண்டிருந்து;

அப்பாச்சியாரண்ணா வானமாமலை ஜீயரை ஆஸ்ரயித்தல்‌
வானமாமலை ராமநுஜ ஜீயரைக்‌ காட்டி யருளி-இவர்‌ தமக்கு ப்ராண ஸுஹருத்து, தமக்குண்டான அதிசயமெல்லாம்‌ இவர்க்கு முண்டாக வேணும்‌, முதலியாண்டான்‌ திரு வம்சத்திலே நமக்கு ஸம்பந்த முண்டானாற் போல இவர்க்கு முண்டாக வேணும்‌’ என்று அருளிச் செய்ய அண்ணன்‌, திருவுள்ளக் கருத்தறிந்து அடியேனை அங்கே ஆஸ்ரயிப்பித் தருளாதே யொழிந்ததே”’ என்று விண்ணப்பஞ் செய்ய, ‘ நமக்கு ப்ராப்தமானதை விடப் போமோ?!”என்ன, அண்ணன்‌ தம்முடைய அநுபந்திகளை ஸாபிப்ராயமாசப்‌ பின்னே கடாக்ஷித்தருள, பாவஜ்ஞராய்‌ ஆச்சியாருடை குமாரராயிருக்கிற அண்ணா எழுந்திருந்து தண்டன்‌ ஸமர்ப்பிக்க – என்ன வென்று கேட்டருள, *‘அடியேனை எங்களாண்டவன்‌ வானமாமலை ராமாநுஜ ஜீயருடைய திருவடிகளிலே ஆஸ்ரயிப்பிக்க வேணும்‌ என்ன, ஜீயரும்‌ மிகவுகந்தருளி, நம்மப்பாச்சி யாரண்ணாவோ- என்றருளிச் செய்து,(‘ஸ்ரீ தீர்த்த தேவராஜஸ்ய தநயாப் பேதி விச்ருதா. தஸ்யாஸ் தநுஜோ வரத:”‘ என்று இவர்‌ போற்றப்படுகிறார்‌.-திருமஞ்சனம்‌ அப்பா என்ற தேவராஜருடைய குமாரத்தியாய்‌ ஆச்சி என்று ப்ரஸித்தை யானவருடைய குமாரரான வரதாசாரியர்‌, ஜீயர்‌ இவருக்கிட்ட பெயர்‌ அப்பாச்சியாரண்ணா என்பது.) ‘அவரைக்‌ கையைப் பிடித்துத்‌ தம்முடைய அண்டையிலே வைத்துக் கொண்டு தாம்‌ எழுந்தருளி யிருந்த ஆஸநத்திலே வானமாமலை ஜீயரை யிருத்தித்‌ தம்முடைய திருக் கைகளிலிருந்த ஆழ்வார்களை அவர்‌ திருக் கைகளிலே ஸாதித்தருளி, இவர்க்கு ‘ஸாதியும்‌’ என்ன, அவர்‌ சற்று இறாய்க்க, “அப்படி, செய்ய வேண்டா, நமக்கு ப்ரியமானதைச்‌ செய்யும்‌” என்றருளிச்‌ செய்து ௮ண்ணாவை ப்ரீத்யதிசயத்தாலே தழுவிக் கொண்டிருந்து ஆஸ்ரயிப்பித் தருளினார்‌; உடனே அண்ணாவுடைய திருத் தம்பியாரன தாசரதி அப்பையும்‌ அங்கே ஆஸ்ரயித்தார்‌. உடனே வானமாமலை. ராமாநுஜ ஜீயர்‌ போதும்‌, இனி அடியேனை விட வேணும்‌” என்று எழுந்திருந்து தூரப் போய்‌ தண்டன்‌ ஸமர்ப்‌பித்து நிற்க, “அப்படியே யாகிறது; எழுந்தருளி யிருக்க’ என்றருளிச் செய்து, தாமும் முன் போலே எழுந்தருளி யிருந்து கந்தாடை அப்பன்‌ முதலான அண்ணன்‌ ப்ராதாக்களுக்கும்‌, ப்ராத்ரு கோடிகளா யுள்ளவர்களும்‌, புத்ர கோடிகளா யுள்ளவர்களும்‌ ஸ்வ பார்யாதி வர்க்கங்களுடனே நூற்றிருபது திருநாமம்‌ மற்றும்‌ சிங்கரையர்‌ முதலான பகவத் க்ருபா பாத்ர பூதரான அநேகம்‌ பேர்களும்‌ ஆஸ்ரயித்தார்கள்‌. அந்த ஸமயத்தில்‌ கோயில்‌ பரிகரமனைத்துக்‌ கொத்தும்‌ ஸகல மங்கள வாத்யங்களுடனே பெருமாளுடைய ப்ரஸாதங்‌கள் கொண்டு வர, ஜீயர்‌ எதிர் கொண்டு ப்ரணாம புரஸ்கரமாக ஆதரித்து உள்ளே எழுந்தருளப்‌ பண்ணிக்‌ கொண்டு போயிருக்க, அண்ணன்‌ அவர்களை யதோசிதம்‌ ஆதரித்து பஹுமாநஞ்‌ செய்தருளி, அவர்‌களுடனே ஜீயர்‌ தொடக்கமானவர்களும்‌ அன்று ஆஸ்ரயித்தவர்‌களும்‌ கோயிலிலே எழுந்தருளி எம்பெருமானார்‌, ஆழ்வார்‌ பெருமாள்‌, நாய்ச்சியார்‌, எல்லாரையும்‌ “தேவீ கோதா”-இத்யாதிப்படியே மங்களாசாஸனம் செய்தருளி மீண்டும்‌ மடத்திலே எழுந்தருளித் ததியாராதனமும்‌ மஹோத்ஸவமாக நடந்தது.
ஜகத் ரக்ஷாபரோ ஆநந்த'” என்று தோழப்பர்‌ ஸ்வப்நத்திலே பேரருளாளர்‌ அருளிச்‌ செய்த படி பலிக்கக் கண்‌டோம்‌” என்று எல்லாரும்‌ உகந்தருளினார்கள்‌.

இப்படி ஆஸ்ரயித்தவர்களெல்லாரும்‌ ஜீயருடைய அதி மானுஷமான அத்புத சரிதங்கள் எல்லாவற்றையும்‌ ஸேலித்து
சிர விரஹதஸ் சிந்தா ஸந்தாந ஜர்‌ஜ ஜர சேதஸம்‌
புஜக சயநம்‌ தேவம் பூய: ப்ரஸாத யிதும்‌ த்ருவம்‌ |
யதி குலபதி ஸ்ரீமாந் ராமாநுஜ ஸ்வய மித்யபூ
திதிதி ஸமதுஷந் ஸர்வே ஸர்வத்ர தத்ர ஸுதீ ஜநா; ॥

யதி குல நாதரான ஸ்ரீமத் ராமானுஜர்‌-தம்மை வெகு நாட்கள்‌ பிரிந்ததனால்‌ இடைவிடாமல்‌ தம்மையே நினைத்து நினைத்துத்‌ தளர்ந்த திருவுள்ளங் கொண்ட அரவணையானான ஸ்ரீரங்கநாதப்‌ பெருமாளை மறுபடியும் மகிழ்விக்கக் கருதியே போலும்‌, தாமே மணவாள மாமுனிகளாக அவதரித்‌தருளினாரென்று அங்கு எல்லா விடத்திலும்‌ உள்ள ஞானியர்‌ அனைவரும்‌ மிக மகிழ்ந்தனர்‌–என்கிறபடியே யதி புந அவதாரமாக வெண்ணித்‌ தாங்களும்‌ சிரோபாஸித ஸத் வ்ருத்தரென்னும்படி அவர்‌ திருவடிகளைப்‌ பழுக்க ஸேவித்து, அங்குத்தைக்குப்‌ பரிவராயிருந்தார்கள்‌. இப்படி ஜீயர்‌ சிஷ்ய ஸம்பத்துடனே இனிதாக வாழ்ந்தருளுகிற போது திருவாழி யாழ்வார்‌ பிள்ளையை ஸ்ரீ கோசங்களை யெல்லாம்‌ அப்போதைக்‌கப் போது சோதித்து ஸம் ரஷணம்‌ பண்ணிக் கொண்டு வரவும்‌ ஏறி யருளப்‌ பண்ண வேண்டிய ஸ்ரீ கோசங்களை லேகரிகளை யிட்டு நன்றாக ‘ஏறி யருளப் பண்ணவும்‌ தாமபேக்ஷித்த அவஸரங்களிலே அபேக்ஷிந்த ஸ்ரீகோசங்களை ஸமர்ப்பிக்கவும்‌ ஈடு முப்பத்தாறாயிரப்‌படி அர்த்தமாம்‌ படி சிறிது வ்யாக்யானங்களைக்‌ கூட்டி ப்ரதி ஏறி யருளப் பண்ணி வைக்கவும்‌ நியமிக்க, அவரும்‌ அப்படியே எல்லாவற்றையும்‌ செய்து கொண்டு போந்தார்‌.

ஆண்ட பெருமாள்‌ அண்ணனை ஆஸ்ரயித்தது
ஒரு நாள்‌ சுத்த ஸத்வம்‌ அண்ணனை யழைந்தருளி போர வுகந்‌தருளி “ஆழ்வாருக்கு ஸ்ரீ மதுர கவிகளைப் போலே நீர்‌ அண்ணனுக்கு அபிமத விஷயமாக விருக்கப்‌ பெற்றிரே; *தன்னாரியனுக்குத்‌ தானடிமை செய்வது இந் நாடு தன்னிலிருக்கும்‌ நாளன்றோ; ஸகல சுச்ரூஷைகளும்‌ பண்ணிக் கொண்டு வாழும்‌”- என்று ஆசீர்வதித்து;குமண்டூர்‌ ஆச்சான் பிள்ளை பெளத்ரராயும்‌ ஜ்ஞாநாதிகராயும்‌ ஸகல சாஸ்த்ர பாரங்கதரா யுமிருக்கற ஆண்ட பெருமாளை ஜீயர்‌ அண்ணனிடம்‌ “உம்முடைய திருவடிகளுக்கு அந்தரங்கராய்‌ தர்சந ப்ரவர்த்தாராம்படி விநியோகித்துக்‌ கொள்ளும்‌” என்று விட, அண்ணனும்‌ அப்படியே செய்தருளினார்‌-

(வரவரமுநி ப்ருத்யர்‌” என்று நிரூபகமாம்படி திருவடிக்கு அந்தரங்கராய்‌ ஆசார்யாபிநைக நிஷ்டராயிரா நிற்க -இது கண்டு கந்தாடை அண்ணன்‌ முதலானோர்‌ இவர்‌ திருவடிகளில்‌ ஆச்ரயணோந் முகராயிருக்க, அவ்வளவிலே பெருமாளும்‌ அவர்கள்‌ ஸ்வப்நத்திலே அஸங்குசிதமாசக்யே புஜங்க ஸயந : புமாந்‌” (சேஷஸாயியான ரங்கநாதன்‌ விரிவாக அருளிச்‌ செய்தார்‌) என்கிறபடியே விசதமாக ஜீயர்‌ திருவடிகளே ஆஸ்ரயிக்கும்படி நியமித்தருள்‌, அவர்‌ திருமுகப்படியே ” ராமாநுஜ பதாம் போஜ ஸெளகந்த்ய நிதயோபியே”’ என்று தொடங்கி “ஸ்ருத்வைவ வைபவம்‌ தஸ்ய தத்வேத ஸரணம்‌ யயு.” [எவர்கள்‌ எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகளின்‌ பரிமளத்தையே தமக்கு நிதியாக நினைத்திருத்தார்‌களோ அவர்களும்‌ அந்த மணவாள மாமுனிகளுடைய வைபவங்களை உள்ளபடி கேட்ட மாத்திரத்தலேயே அவரைச்‌ சரணம்‌ பற்றினார்கள்‌-என்கிறபடியே, ராமாநுஜ பரிக்ருஹீதராய்‌
அபிஜந வித்யா வ்ருத்தங்களாலும்‌ உயர்ந்திருக்குமவர்களான கந்‌தாடை அண்ணன்‌ முதலான ஆசார்ய புருஷர்களாயுள்ள அனைவர்‌களும்‌ தந்தாமுயர்த்திகளைப்‌ பாராமல்‌ இவர்‌ திருவடி ஸம்பந்தமே தங்களுக்கு தாரகமென்று அறுதியிட்டு வந்து ஜீயர்‌ திருவடிகளையே சரணமாகப்‌ பற்றி உஜ்ஜீலித்தார்கள்‌.
இப்படி ஆஸ்ரயித்தவர்களெல்லாரும்‌ ஜீயருடைய அதி மாநுஷமான அற்புத சரித்‌திரங்‌களெல்லாம்‌ கண்டு யதி புநரவதாரமாக எண்ணி, தாங்களும்‌-சிரே பாஸித ஸத் வ்ருத்தர்‌:”’ என்னும்படி அவர்‌ திருவடிகளைப் பழுக்க ஸேவித்துக்‌ கொண்டு அங்குத்தைக்கு அந்தரங்கராய்‌ இருந்தார்கள்‌– என்று மட்டுமே தெலுங்குப்பதிப்பில்‌ காண்பது, மேலே வேடலப்பை, ஹஸ்திகிரி நாதரண்ணா விஷயங்கள்‌ பேசப்பட்டு, ஜீயருக்கு பூர்வாச்ரம ஸந்ததி லிஷயம்‌ பேசப்பட்டுள்ளது, வேடலப்பை, அண்ணா பற்றியவை இப்பதிப்‌பில்‌ பின்னர்‌ வரும்‌.)

—==-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading