ஸ்ரீ எழுபத்தி நாலு சிம்மாசனாதிபதிகள் வைபவ சுருக்கம்

1-ஆளவந்தார் .குமாரர் சொட்டை நம்பி

2-பெரிய நம்பி குமாரர் புண்டரீகர்

3-திருக்கோட்டியூர் நம்பி குமாரர் தெற்காழ்வான்

4-திருமலையாண்டான் குமாரர் சுந்தரத்தோளுடையான்

5-பெரிய திருமலை நம்பி குமாரர்கள் ராமானுஜன் மற்றும் பிள்ளைத் திருமலை நம்பி

6-கூரத்தாழ்வான்

7-முதலியாண்டான்

8-நடுவிலாழ்வான்

9-கோமடத்தாழ்வான்

10-திருக்கோவலூராழ்வான்

11-திருமோகூராழ்வான்

12-பிள்ளைப் பிள்ளையாழ்வான்

13-நடாதூராழ்வான்

14-எங்களாழ்வான்

15-அநந்தாழ்வான்

16-மிளகாழ்வான்

17-நெய்யுண்டாழ்வான்

19-சேட்டலூர் சிறியாழ்வான்

20-கோயிலாழ்வான்

21-உக்கலாழ்வான்

22-அரணபுரத்தாழ்வான்

23-எம்பார்

24-கிடாம்பி ஆச்சான்

25-கணியனூர் சிறியாச்சான்

26-கொங்கிலாச்சான்

27-ஈச்சம்பாடியாச்சான்

28-திருமலை நல்லான்

29-சட்டம் பள்ளி ஜீயர்

30-ஈச்சம்பாடி ஜீயர்

31-திருவெள்ளறை ஜீயர்

32-ஆட்கொண்ட வில்லி ஜீயர்

33-திருநகரிப் பிள்ளான்

34-காராஞ்சி சோமயாஜியார்

35-அலங்கார வேடவர்

36-நம்பி கருந்தேவர்

37-செருப்புள்ளி தேவராஜ பட்டர்

38-பிள்ளையுறந்தையுடையார்

39-திருக்குருகைப்பிரான் பிள்ளான்

40-பெரிய கோவில் வள்ளலார்

41-திருக்கண்ணபுரத்தெச்சான்

42-ஆசூரிப் பெருமாள்

43-முனிப் பெருமாள்

44-அம்மங்கிப் பெருமாள்

45-மாருதிப் பெரியாண்டான்

46-மாறொன்றில்லா மாருதிச் சிறியாண்டான்

47-சோமாசியாண்டான்

48-ஜீயராண்டான்

49-ஈஸ்வராண்டான்

50-ஈயுண்ணிப் பிள்ளையாண்டான்

51-பெரியாண்டான்

52-சிறியாண்டான்

53-குறிஞ்சியூர்ச் சிறியாண்டான்

54-அம்மங்கியாண்டான்

55-ஆளவந்தராண்டான்

56-அருளாளப்பெருமானார் எம்பெருமானார்

58-தொண்டனூர் நம்பி

59-மருதூர் நம்பி

60-திருக்குறுங்குடி நம்பி

61-குரவை நம்பி

62-முடும்பை நம்பி

63-வடுக நம்பி

64-வங்கிபுரத்து நம்பி

65-ஸ்ரீ பராங்குச நம்பி

66-அம்மங்கியம்மாள்

67-பருத்திக்கொல்லையம்மாள்

68-உக்கலம்மாள்

60-சொட்டையம்மாள்

70-முடும்பையம்மாள்

71-குமாண்டூர் பிள்ளை

72-குமாண்டூர் இளைய வில்லி

73-கிடாம்பிப் பெருமாள்

74-ஆற்காட்டுப் பிள்ளான்

——————————

சொட்டை நம்பி
தனியன்
மகரே சைகபாத்யேச யாமுனாசார்ய நந்தநம்
கூரநாதகுரோ: பிஷ்யம் ஸேவே பகுணார்ணவம் |

இவர் ஆளவந்தார் குமாரர். தை மாதம் பூரட்டாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர். இவர் கூரத்தாழ்வான்-சிஷ்யர்.-‘என்னாச்சான்‘ என்பவருக்குத் தமப்பனார் இவர் ஒரு சமயம் திருக்கோட்டியூர் நம்பியிடம் கடுமையாகப் பேசி நடந்து கொண்டார். அவர்இவரை”நீ இங்கு இருக்காதே போ” என்று சொல்லி விட்டார்.இவர் தலைநகர் சென்று அரசாங்க உத்யோகம் பார்த்தார்.கடைசி காலத்தில் இவருடைய ஈடுபாட்டை சோதிக்க ஒரு ஸ்ரீவைஷ்ணவர் இவரிடம் “தற்சமயம் தேவரீர் என்ன நினைக்கிறீர்” என்று கேட்டதற்கு இவர் சொன்ன பதில் ”ஆளவந்தார் சம்பந்தத்தால் எனக்கு பரமபத ப்ராப்தி உண்டு. அங்கு ஸ்ரீ வைகுண்டநாதன் திருமுகம் நம்பெருமாள் திருமுகம் போல் குளிர்ந்திரா விட்டால் பரமபதத்தில் அண்டச் சுவரை முறித்துக் கொண்டு இங்கே வந்து விடுவேன்.ஆனால் பரமபதம் போனவர்கள் திரும்பி வரமுடியாதே” என்பதுதான்.திருவாய் மொழி 4-5-7 பாசுரத்தில் “தன் தனக்கு இன்றி நின்றானை” என்ற சொல் தொடருக்கு ஒரு வித்யாஸமான விளக்கம் சொல்லி எல்லாரையும் வியக்க வைத்தார்.தன் தனக்கு இன்றி நின்றானை’ என்பதற்கு, எம்பெருமானார் தெற்கே எழுந்தருளின நாளிலே, ஆளவந்தார் மகனார்சொட்டை நம்பி அருளிச்செய்த வார்த்தை: ‘தன் தனக்கு என்றது, தானான தனக்கு என்றபடி. ஒரு படிக்கு ஒப்பு இன்றிக்கே இருக்கிறது பரத்துவத்தில் அன்று; ‘என்னை நான் மனிதனாகவே நினைக்கிறேன்,’ என்கிறபடியே,அவதரித்து மனிச்சு ஏறிட்டுக்கொண்டு நிற்கிற நிலையிலே’ என்றாராம். அதாவது “ஆத்மாநம் மாநுஷம் மந்யே”’ என்று சொன்ன ராமபிரானுக்கே இந்தப் பெருமை சேரும்” என்றார்.இவருடைய குமாரர் “என்னாச்சான்”. என்னாச்சானுடைய குமாரர் “பிள்ளையப்பன்”

ஸ்ரீ ஆளவந்தாருக்கு நான்கு குமாரர்கள். திருவரங்கப் பெருமாள் அரையர்,தெய்வத்துக்கரசு நம்பி, பிள்ளையாரசு நம்பி, சொட்டை நம்பி. -நாதமுனிகளின் வம்சத்துப் பெயரான ‘சொட்டை’ குலமே இவருடைய திருநாமம்.-பெருமாளுக்கு அலங்காரம் செய்யும்போது இரண்டு துணிகளை ஒன்றாக ஊசி நூலைக்கொண்டு சேர்த்துத் தைக்கும்போது அர்ச்சக ஸ்வாமிகள் ‘ஊசியைக் கொண்டு வாரும்’ என்று சொல்லாமல்-code word-. ‘ஆண்டாளைக் கொண்டு வாரும்’ என்று தான் சொல்லுவார்கள்.-நம்பெருமாள் பல்லக்கில் புறப்பாடு கண்டருளும்போது அவருடைய திருவடிகளை இணைக்கும் கம்பிகளுக்குச் சொட்டை என்று பெயர்.-நம்பெருமாள் புறப்பாட்டுக்குண்டான சாமான்கள் அனைத்தும் ஓர் அறையிலிருக்கும். ஆனால் இந்தச் சொட்டை கம்பி, பாசக் கயிறு போன்றவை எல்லாம் நம்பெருமாள் கைலியினால் மூட்டைப் போலக் கட்டி அவை பெரிய பெருமாளின் திருவடிக்கு அருகிலேயே எப்போதும் இருக்கும். இந்த மூட்டைக்குப் பெயர் சொட்டை மெத்தை. -நம்பெருமாளைத் தழுவி நிற்கும் இந்தக் கம்பிகளையும், பெரிய பெருமாளின் திருவடிக்கருகில் இருக்கும் சொட்டை மெத்தையையும்  அவன் எப்போதும் சொட்டைக்குலமாகவே கருதுகிறான்.

——————-

புண்டரீகர்
தனியன்
ஸூசௌ மாஸ் யுத்தராஷாட ஜாதம் பூர்ண குரோஸ் ஸுதம் |
யதிராஜாங்க்ரி ஸத்பக்தம் புண்டரீகாக்ஷ மாச்ரயே

இவர் பெரிய நம்பிகள் குமாரர். அத்துழாயின் சகோதரர். இவர் ஆடிமாதம் உத்ராட நட்சத்திரத்தில் அவதரித்தவர். இவர்ராமானுஜரின் சிஷ்யர். இவர் ஒரு சமயம் சேரக் கூடாத ஸஹவாஸத்தினால் போகக் கூடாத இடத்திற்குப் போய் விட்டார். உடையவர் இவரைத் தேடிக் கண்டுபிடித்து திருத்திப் பணி கொண்டார்.

—————

தெற்காழ்வான்
தனியன்
கர்கடே பரவணே ஜாதம் ராமானுஜ பதாசரிதம்
காயபாந்வய ஸம்பூதம் நாராயண குரும் பஜே

இவர் திருக்கோட்டியூர் நம்பியின் குமாரர். ஆடித் திருவோணத்தில் அவதரித்தவர். காச்யப கோத்ரம்.-தேவகிப் பிராட்டியின் சகோதரர். இவருடைய பேரன் தெற்காழ்வான். பட்டருடைய சிஷ்யர். இந்தப் பேரன் பற்றி ஒரு சிறு குறிப்பு உண்டு. திருக்கோட்டியூரில்
கோளரி ஆழ்வான் என்று ஒருவர் இவருடைய நண்பர். ஆசார சீலர். தெற்காழ்வானுக்கு அவ்வளவு ஆசாரம் கிடையாது. ஒரு புண்ய தினத்தன்று தெற்காழ்வான் குளிக்காமல் இருந்தார். இதைப் பார்த்த கோளரி ஆழ்வான் இவரைப் பார்த்து “இன்றாவது குளித்து பாபத்தைப் போக்கிக் கொள்ளக் கூடாதோ” என்று சொன்னார். இதற்கு தெற்காழ்வான் “நம்முடைய பாபங்கள் குளிப்பதனால் போய் விடாது. சிங்கப்பிரானின் சக்ராயுதத்தால் மட்டுமே நம் பாபம் தொலையும்”-என்று பதில் சொன்னார். திருக்கோட்டியூரில் எழுந்தருளி
யிருந்த பொழுது இதைக் கேட்ட பட்டர் தெற்காழ்வானின் ஞானத்தையும் நம்பிக்கையையும் பாராட்டினார்.

சுந்தரத் தோளுடையான்
தனியன்
மாலாதாரகுரோ: புத்ரம் ஸௌந்தர்யபுஜதே மிகம்
ராமானுஜார்ய ஸத்சிஷ்யம் வந்தே வர கருணாநிதிம் I

இவர் திருமலையாண்டான் குமாரர். இவருக்கு பெரியாண்டான் என்று மற்றொரு திருநாமம் உண்டு.-காச்யப கோத்ரம். இவர் சித்திரை மாதம் சித்ரை நட்சத்திரத்தில் அவதரித்தார். திருமாலிருஞ்சோலை அழகர் சன்னிதியில் புரோகிதர். இவருடைய மூதாதையர்களில் ஒருவர் “கண்ணுக்கினியான்” திருமாலிருஞ்சோலை அழகரை ஒரு சமயம் ஆபத்திலிருந்து காப்பாற்றினார். அதனால் இந்த வம்சத்திற்கு ”ஆண்டான்”என்று பட்டப் பெயர் உண்டு. இவருடைய வம்சத்தில்“யாமுநாசார்யர்” என்ற மஹா வித்வான் வாதிகேசரி ஜீயரின் சிஷ்யர். யோக சாஸ்த்ரத்தில் மேதாவி.

————-

பிள்ளைத் திருமலை நம்பி
தனியன்
வ்ருஷே விசாக ஸம்பூதம் ராமானுஜ பதாச்ரிதம்
ஸ்ரீசைலபூர்ண சத்புத்ரம் ஸ்ரீசைலார்யமஹம் பஜே

இவர் பெரியதிருமலை நம்பி குமாரர். வைகாசி விசாகத்தில் அவதரித்தவர். இவருக்கு ராமானுஜன் என்ற சகோதரர் உண்டு. இவருடைய சகோதரியின் கணவர் அருளாளப் பெருமாள் எம்பெருமானாரின் குமாரர் ஸ்ரீ அலங்கார வேங்கடவர் என்ற 74 சிம்மாசனாதிபதி
களில் ஒருவர் (வ.எண். 35). இவருடைய மருமகன் புகழ் பெற்ற “விஞ்சிமூர் தாதாசார்யர்.

நடுவிலாழ்வான்
தனியன்
யேந ப்ரோல்லஸதே நித்யம் கார்க்யவம் மஹாம்புதி:
மந்மஹே தம் ஸதா சித்தே மத்யமார்யம் கலாநிதிம் II

இவர் கண்ணபிரான் குலமாகிய யதுவம்ச புரோகித ராகிய கர்கர் வம்சத்தைச் சேர்ந்தவர். திருநாராயணபுரத்தில் உடையவர்இருந்த காலத்தில் இவர்அவர்கூடவே இருந்தார். இவர்ஸ்ரீபாஷ்யம் சாதித்த காலத்தில் வங்கிபுரத்து ஆச்சியும் சொட்டை அம்மாளும் ஸ்ரீபாஷ்யம்கேட்டு இது அற்புதமாக இருந்தது என்று சொன்னார்கள். அவர்களிடம் இவர் எம்பெருமானார் திருவடிகளே தஞ்சமென்றிருங்கோள் என்று அருளிச் செய்தார்.
மணவாள மாமுநியின் அஷ்டதிக் கஜங்களில் ஒருவரான பரவஸ்து பட்டர் பிரான்ஜீயர் இவர் வம்சத்தில் தோன்றியவர்.-எம்பெருமானாருடைய சரம தசையிலே இவர் திருவரங்கம் எழுந்தருளினார். எம்பெருமானார் தன்னை ஆச்ரயித்த மாருதியாண்டான் மாறொன்றில்லா மாருதிச் சிறியாண்டான், அரணபுரத்தாழ்வான், ஆஸூரிப் பெருமாள், முனிப்பெருமாள், அம்மங்கிப் பெருமாள் முதலானோரை இவரை ஆச்ரயிக்கச் செய்தார்.
இவர்கள் அனைவரும் 74 சிம்மாசனாதிகளாக உடையவரால் நியமிக்கப்பட்டவர்கள் ஆவர்.
இவருடைய வம்ச பரம்பரை: – நடுவிலாழ்வான்ஆழ்வான் – வைத்த மாநிதி – அழகிய மணவாளர் -வரதாசார்யர் – வேங்கடத் துறைவார் – சடகோபாசாரியார் – போரேற்று நாயனார் – கோவிந்தாசார்யர் – கிருஷ்ணமாசார்யர் – ராமானுஜாசார்யர் – கோவிந்த தாஸரப்பர்என்ற பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர்.

கோமடத்தாழ்வான்கோமடத்துப் பிள்ளான் என்றும் இவர்அழைக்கப்படுவார். இவருடைய சிஷ்யர் காக்கைப் பாடியாச்சான் பிள்ளை. இவரிடம் மூன்று முறை ஸ்ரீபாஷ்யம் வாசித்தார்.
இவருடைய வம்ஸத்தில் பிறந்தவர் மணவாள மாமுநிகள். மணவாள மாமுநியின் தகப்பனார் “திகழக் கிடந்தார் திருநாவீறுடைய தாஸரண்ணர். மணவாள மாமுநிகளின் பூர்வாஸ்ரம் பேரரான ஜீயர் நாயனார்-கோவில் கந்தாடை அண்ணனின் அஷ்டதிக் கஜங்களில் ஒருவர்.

பிள்ளைப் பிள்ளையாழ்வான்
இவர் உயர் குடியில் பிறந்த ஒரு வித்வான். கூரத்தாழ்வானுடைய சிஷ்யர். பாகவதர்களிடத்திலே கடுமையாகப் பேசி அபசாரப்படுபவர். ஒரு புண்ய தினத்தன்று இவர் தீர்த்தமாடி கரை ஏறுகையில் இவரிடம் கூரத்தாழ்வான் ஒரு தானம் கேட்டார். புண்ய தின
மானதால் இவரும் சம்மதித்தார். “மனம், மொழி,மெய் எதனாலும் பாகவத அபசாரப்படாமல் வாழக் கடவேன்” என்று சத்யம் பண்ணித் தருவதே அந்த தானம். இவரும் தண்ணீர் வார்த்து தானம் பண்ணிக் கொடுத்தார். இருந்தாலும் ஒரு சமயம் பாகவத அபசாரப்பட்டு மனம் வருந்தினார். கூரத்தாழ்வானை சந்திக்க மனம் கூசினார். இதை அறிந்து கூரத்தாழ்வான் இவர் வீடு சென்று மன்னித்து இவரை மனம் தேற்றினார்.
பராசர பட்டர் காலத்தில் இவருடைய திருமாளிகையை இடிக்கும்படி வீரசுந்தரப்ரும்மராயர் என்ற அரசு அதிகாரி கட்டளையிட்டார். பட்டர் தடுத்தார். இருந்தும் இவர் திருமாளிகை இடிக்கப்பட்டதால் பட்டர் திருக்கோஷ்டியூர் சென்று விட்டார்.
“புள்ளும் சிலம்பின காண்” – விளக்கம் – எம் பெருமானை நினைப்பதற்கு விடியற்காலை வேளையில் பறவைகளின் ஒலி மிகவும் உத்தேசயம் என்பதை இவர் தெரிவிப்பார்.
திருவிருத்தம் வ்யாக்யானத்தில் – “குழந்தை தாய்ப்பால் பருகி விட்டு தாய் முகம் நோக்குவது போல் அடியார்கள் எம்பெருமான் திருவடிகளை முன்னிட்டுக் கொண்டு அவன் திருமேனி, குணங்களில் ஈடுபடுவார்கள்”’ என்பதை அடிக்கடி தெரிவிப்பார்.

நடாதூராழ்வான்
தனியன்
யஸ்மிந்பதம் யதிவரஸ்ய முகாத்ப்ரணேதுர், நிஷ்க்ராம தேவநிததே நிகமாந்த பாஷ்யம் |
தஸ்யைவ தம் பகவத: ப்ரிய பாகிநேயம், வந்தே குரும் வரதவிஷ்ணு பதாபிதாநம்

இவர் ராமானுஜருக்கு நித்ய அந்தரங்க கைங்கர்யங்களைச் செய்பவர். இவர் காஞ்சீ புரத்தில் ஸ்ரீவத்ஸ கோத்ரத்தில் அவதரித்தார். இவருக்கு வரத விஷ்ணு”என்ற பெயருண்டு. உடையவர் இவருக்கு ஸ்ரீபாஷ்ய சிம்மாசனாதிபதி என்ற விருது வழங்கினார். எங்களாழ்வான் இவருடைய சிஷ்யர். நடாதூரம்மாள் என்னும் வாத்ஸ்ய வரதாசார் இவருடைய பேரர். இவர் ராமானுஜரின் சகோதரியின் குமாரர். இவர் “மாநயாதாத்ம்ய
நிர்ணயம்” என்ற நூலை அருளியுள்ளார். இவருடைய அர்ச்சா விக்ரகம் திருவெள்ளறை கோவிலில் உள்ளது. இவரிடத்தில் பத்து பன்னிரண்டு பேர்கள் ஸ்ரீபாஷ்யம் கேட்டு மகிழ்ந்தனர்.

எங்களாழ்வான்
தனியன்
ஸ்ரீ விஷ்ணு சித்த பதபங்கஜ ஸங்கமாய சேதோ மம ஸ்ப்ருஹயதே கிமத: பரேண Iநோ சேத் மமாபி யதிசேகர பாரதீநாம் பாவ: கதம் பவிதுமர்ஹதி வாக்விதேய: 1
வாழித் திருநாமம்

சீராரும் வெள்ளரையில் சிறந்துதித்தோன் வாழியே சித்திரை ரோகிணி நாள் சிறக்க வந்தோன் வாழியே பார்புகழும் எதிராஜன் பதம் பணிந்தோன் வாழியே
பங்கயச் செல்வியின் பதங்கள் பரவுமவன் வாழியே திருக்குருகைப் பிரான் பிள்ளான் திருவருளோன் வாழியே தீதிலா பாடியத்தை தேர்ந்துரைப்போன் வாழியே தாரணியின் விட்ணுமதம் தழைக்க வந்தோன் வாழியே தண்ணளியோன் எங்களாழ்வான் தாளிணைகள் வாழியே

இவர் திருவெள்ளறையில் சித்திரை மாதம் ரோஹிணி நட்சத்ரத்தில் அவதரித்தார். நடாதூர் அம்மாள் இவருடைய சிஷ்யர். ஸ்ரீபாஷ்ய உபந்யாஸத்தில் வல்லவர். விஷ்ணு புராணத்துக்கு “விஷ்ணு சித்தீயம்” என்னும் வ்யாக்யானத்தை அருளிச் செய்தவர். நஞ்சீயருடைய திருவாராதனப் பெருமாளாகிய ”ஆயர் தேவு” இவர் கனவில் வந்து நாவல் பழம் கேட்டு அடிக்கடி தூக்கத்தைக் கெடுக்க இவர் இது பற்றி நஞ்சீயரிடம் முறையிட்டார். திருநாராயண புரத்திலிருந்து ராமானுஜர் ஸ்ரீரங்கம் வந்தபின் 7-8 வருடங்கள் கழிந்த பின் கூரத்தாழ்வானுக்கு பதிலாக இவர் ஸ்ரீபாஷ்யம் எழுத உசாத் துணையாக இருந்தார். அதனால் இவருக்கு உடையவர்” எங்களாழ்வான்” என்று பெயரிட்டார். உடையவரை விட இவர் 80 வயது சிறியவர். “ப்ரமேய சங்க்ரஹம்”, “ஸங்கதி மாலா’, ”கத்ய வ்யாக்யானம்”. இவை இவர் அருளிய நூல்கள். நடாதூரம்மாள் இவருடைய சிஷ்யர். நடாதூர் ஆழ்வான் நடாதூரம்மாளை இவரிடம் ஆச்ரயிக்கும் படி அனுப்பினார். நஞ்சீயர், நம்பிள்ளை காலங்களில் இவர் வாழ்ந்துள்ளார். இவர் திருக்குருகைப் பிள்ளான் திருவடிகளில் திவ்யப்ரபந்த காலக்ஷேபம் கேட்டார். இவருடைய பெண் செங்கமல நாச்சியார். இவருடைய மாப்பிள்ளை வரதாசார்யர்.

மிளகாழ்வான்
இவருடைய தேசத்து அரசன் வித்வான்களுக்கு ஒரு பரீட்சை வைத்தான். இவர் அதற்காக அரச சபைக்கு சென்றார். வாயிற் காப்போன் உள்ளே விடவில்லை.நான் பண்டிதனாயிற்றே. ஏன் என்னை உள்ளே விட வில்லை என்று கேட்டார். “நீர் வைஷ்ணவராயிற்றே.- அதனால்தான்” என்று பதில் கிடைத்தது இவர் ஆனந்தக் கூத்தாடினார். தன்னைப் பிறர் வைஷ்ணவராக மதித்தது இவருக்கு மகிழ்ச்சியை தந்தது.
இவர் வித்வானாகையால் முதலியாண்டானை வாதத்துக்கு அழைத்தார். “தோற்றவர் மற்றவரை தோளில் சுமக்க வேண்டும்” என்பது நிபந்தனை. மிளகாழ்வான் தோற்றார். ஆகையால் முதலியாண்டானுடைய பாதங்களை தலையில் ஏற்றார். அவர் இவரை ராமானுஜரிடம் ஆச்ரயிக்கச் செய்தார். ராமானுஜரும் இவரை ஏற்று நல்ல கௌரவம் கொடுத்தார்.
முதலியாண்டான் மிளகாழ்வானை “நீர் ஏன் அடிக்கடி திருவானைக்காவுக்கு (சிவஸ்தலம்) செல்கிறீர்” என்று கேட்டார். அதற்கு இவர் சொன்ன பதில் “நான் அவர்களுக்கு பகவத் சம்பந்தமான வார்த்தைகள் சொல்வேன். அதனால் அவர்களைத் திருத்தி பணி கொள்வேன்”. “‘அப்படி யாராகிலும் திருந்தினார்களா?” என்ற கேள்விக்கு “நான் எல்லோரையும் நாராயண சம்பந்திகளாக நினைக்கிறேன். ப்ரக்ருதி சம்பந்திகளாக காணவில்லை. ஒரு வஸ்துவும் அந்ய சம்பந்தமாக இராதே” என்று பதிலளித்தார்.

உக்கலாழ்வான்
இவர் ராமானுஜர் மடத்தில் பிரஸாத கலம் எடுக் கும் கைங்கர்யம் செய்வார்.

கணியனூர் சிறியாச்சான்
இவர் வங்கி புரத்து நம்பியின் சிஷ்யர். போசள நாட்டிலிருந்து இங்கு வந்தவர். மிகவும் சாது. பசும் புல்லைக் கூட மிதிக்க மாட்டார். நாச்சியார் திரு மொழியில் “ஈட்டீரிட்டு விளையாடி” என்ற சொல் தொடரை மிகவும் ரஸிப்பார். எல்லாம் வல்ல எம் பெருமான் தன்னுடைய எளிமையை காட்டி ரஸிப்ப தற்காக பிறவி எடுத்து ஆயர்களுடனும் மாடு கன்றுகளுடனும் எளிமையுடன் பழகி விளையாடுவதைக் கண்டு பரவசப்படுவார். இவர் சிறந்த அனுஷ்டானங்களை உடையவர். உடம்பெல்லாம் தழும்பாகும்படி எம்பெருமானைத் தொழுவார்.இவர் பற்றி கூரத்தாழ்வான் பட்டரிடம் “இவர் மேனி சிறுத்து ஞானம் பெருத்த சிறுமாமனிசர்” என்று கூறுவார்.ராமானுஜரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டு இவர் அடிக்கடி சொல்லும் ஸ்லோகம் பின்வருமாறு:
ஸத்யம் ஸத்யம் புந: ஸத்யம் யதிராஜோ ஜகத்குரு
ஸ ஏவ ஸர்வ லோகாநாம் உத்தர்த்தா நாத்ர ஸம்ய: II
“ராம பிரானுக்கு எல்லாப் பெருமைகளும் இருந்தாலும் கண்ணனைப் போல தன் அடியார்களுக்காக தூது சென்ற பெருமை இல்லையே” என்று இவர் பட்டரிடம் கேட்டார். “இது ராமபிரானுக்கு குறை இல்லை.அவர் அரச குலத்தில் பிறந்ததாலும் நாட்டிலும் குறை இல்லாததாலும் இவரை தூது அனுப்புவார் யாரும் இல்லை” என்று பட்டர் பதிலளித்தார்.“ராமபிரானுடைய அழகுக்கு சுப்ரமண்யனையோ மன்மதனையோ ஒப்பாகச் சொல்லக் கூடாது” என்று இவர் ஒரு சந்தர்பத்தில் பட்டரிடம் தெரிவித்தார்.”வால்மீகி ரிஷி ராமாயணத்தில் ராமருக்கு கண் எச்சில் பட்டு விடக் கூடாது என்பதற்காக, அவருடைய அழகை கொஞ்சம் குறைத்து “தேவ குமார ரூபம்” என்று எழுதி விட்டார்” என்று பட்டரிடமிருந்து சாமர்த்யமான பதிலைப் பெற்றார்.

ஆட்கொண்ட வில்லி ஜீயர்
தனியன்
ஞான வைராக்ய ஸம்பந்தம் ராமானுஜ பதாசரிதம்
சதுர்த்தா ரம ஸம்பந்நம் ஸம்யமீந்தரம் நமாம்யஹம் |
இவர்சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தார். எம்பெருமானார் நியமனத்தால் முதலியாண்டானின் குமாரர் கந்தாடையாண்டான் இவரை ஆச்ரயித்தார்.
இவர் ஒருநாள் வெளியில் சென்று கொண்டிருந்த பொழுது நஞ்சீயர் இவரை தண்டனிட்டு வணங்கினார். இவர் அவரிடத்தில் “தனக்கு பகவத் விஷயத்தில் உண்மையான ருசி இல்லை என்றும் பாகவதர்களைக் கண்டால் என்று மகிழ்ச்சி ஏற்படுகிறதோ அன்றுதான்
பகவத் ருசி ஏற்பட்டது என்று அர்த்தம்” என்றும் தெரிவித்தார்.

திருக்குருகைப் பிரான் பிள்ளான்
தனியன்
“ஸிம்ஹே ம்ருகலிரோத்பூதம் ராமானுஜபதாச்ரிதம் |
த்ராவிடாம்நாய தத்வக்ஞம் குருகாதிப மாஸ்ரயே I
த்ராவிடஸாரக்ஞ்ம் ராமானுஜ பதாச்ரிதம் 1
ஸுதியம் குருகேஸார்யம் நமாமி ஸ்மிரஸாந்வஹம் |

இவர் ஆவணி மாதம் மிருக சீர்ஷ நட்சத்ரத்தில் அவதரித்தார். இவர் பெரிய திருமலை நம்பியின் மூன்றாவது குமாரர். (பிள்ளை திருமலை நம்பி -ராமானுஜன் -முதல் இருவர்)பெரிய திருமலை நம்பி இவரை ராமானுஜருக்கு அபிமாந புத்ரராக கொடுத்தார். இவர் ராமானுஜர் திக்விஜய யாத்ரையாக திருக்குருகூர் சென்றிருந்த பொழுது இவரும் அவர் கூடவே சென்றிருந்தார். நம்மாழ்வார் செய்தருளின பேருபகாரத்துக்காக அவர் திருநாமம் சாத்துகைக்கு அர்ஹமாக ஒருவரைத்
தேடிய பொழுது “பிள்ளான்” என்ற பெயர் கொண்ட இவரை தேர்ந்தெடுத்தார். இவருக்கு ‘திருக்குருகைப் பிரான் பிள்ளான்’ என்று திருநாமம் சாத்தியருளினார்.
“திருக்குருகைப்பிரான்” என்று திருக்கோட்டியூர் நம்பிக்கு ஒரு பெயர் உண்டு. அவருடைய திருநாமமும் இவருக்குச் சேர்ந்திருப்பதைக் கண்டு எல்லா வித்வான்களும் மகிழ்ந்து இவரை கௌரவப்படுத்தினார்கள்.
இவர்சிறுபுத்தூரிலே எழுந்தருளியிருக்கும் பொழுது சோமாசியாண்டான் இவரிடம் மூன்று முறை ஸ்ரீபாஷ்யம் வாசித்தார். அவர் இவரிடம் “தனக்கு தஞ்சமாக ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேண்டும் என்று கேட்ட பொழுது இவர் “நீர் பாட்டம், ப்ரபாகரம், மீமாம்ஸை
இவையத்தனைக்கும் கர்த்தா, பாஷ்யம் வாசித்தோம் என்று மேன்மையடித்திராதே எம்பெருமானார் திருவடிகளே தஞ்சமென்றிரும்” என்று அருளிச் செய்தார்.
ராமானுஜர் கட்டளையின் பேரில் ஆறாயிரப்படி வ்யாக்யானம் எழுதியவர். (உபதேச ரத்னமாலை 41ம்பாசுரம்)-இவரிடம் எங்களாழ்வான் திவ்ய ப்ரபந்தத்துக்கு
அர்த்தம் கேட்டார். இவர் ராமானுஜருக்கு சரம கைங்கர்யம் செய்தார்.
இவர் கொங்கில் நாட்டுக்கு எழுந்தருளிய பொழுது ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆசார்யன் திருநாமத்தைச் சொல்லாமல் எம்பெருமான் திருநாமங்களையே சொல்லிக்
கொண்டிருந்தார்கள். அதனால் இவர் அந்தஇல்லத்தை விட்டு வெளியேறி விட்டார்.
“வளர்த்ததனால் பயன் பெற்றேன்” என்று உடையவர் சொல்லும் அளவுக்கு உடையவர், இவர்மீது அன்பு கொண்டிருந்தார்.
இவர் தன்னுடைய இறுதிக் காலத்தில் “கூவிக் கொள்ளும் காலம் இன்னும் குறுகாதோ” என்று சொல்வதைக் கண்ட நஞ்சீயர், அழத் தொடங்கினார். அப்போது இவர் “சீயரே நீர்கிடந்து அழுகிறதென்? அங்குபோய் பெறுகிற பேறு இதிலும் தண்ணிது (தாழ்ந்தது)
என்று தோற்றி இருந்ததோ?” என்று அருளிச் செய்தாராம்.

திருக்கண்ணபுரத்தெச்சான்
ஒரு சமயம் திருக்கண்ணபுரம் கோவிலைச் சுற்றி விரோதிகள் சூழ்ந்து கொண்டனர். இவர் உடனே திருமங்கையாழ்வார் பாசுரமான “செருவரை முன் ஆசறுத்த சிலையன்றோ கைத்தலத்தது” பாசுரத்தைப் பாடினார். உடனே எம்பெருமான் “இதோ ஒரு நொடியிலே
எதிரிகளை அழித்து விடுகிறேன்” என்று சொன்னாராம்.

17. அம்மங்கிப் பெருமாள்
இவர் ராமானுஜருக்கு பாலமுது காய்ச்சிக் கொடுப்பார்.

18. மாருதிப் பெரியாண்டான்
இவர் ராமானுஜருக்கு திருக்கைச் செம்பு பிடிப்பார்

19. மாறொன்றில்லா மாருதிச் சிறியாண்டான்
தனியன்
ஞாதும் கூரகுலாதிபம் க்ருமிகளாத் ப்ராப்தாபதம் ப்ரேஷித: 1
ஸ்ரீராமாவரஜேந கோஸலபதாத் த்ருஷ்ட்வா ததீயாம் ஸ்திதிம் |
ஸம்ப்ராதஸ்த்வரயா புராந்தகபுராத் கல்யாண வாபீதடே
யோ :ஸௌ மாருதிரித்ய ம்ஸத வயம் தஸ்மை நமஸ் குர்மஹே I
இவர் மடத்திற்கு அமுதுபடி, கனியமுது பால்,நெய் முதலானவை வாங்க ஏற்பாடு செய்வார்.
உடையவர் திருநாராயணபுரம் சென்ற பொழுது ஸ்ரீரங்கத்தில் கூரத்தாழ்வான் பெரிய நம்பி ஆகியோர்களுடைய நிலமையை அறிந்து வர ராமானுஜர் இவரையும் சிறியாண்டானையும் அம்மங்கி அம்மாளையும் ஸ்ரீரங்கத்தக்கு அனுப்பினார். இவர் அங்கு சென்று வந்து பெரிய நம்பி திருநாட்டுக்கு எழுந்தருளியதையும் கூரத்தாழ்வான் கண்களிழந்ததையும் உடையவருக்கு தெரிவித்தார்.

சோமாசியாண்டான்
தனியன்
நௌமி லக்ஷ்மணயோகீந்த்ர பாதஸேனவக தாரகம் |
ஸ்ரீராமக்ரது நாதார்யம் ஸ்ரீபாஷ்யாம்ருத ஸாகரம் |
இவர் சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தார். இவருடைய இயற்பெயர் ராமமிஸ்ரர்.-இவர் ஸோம யாகம் செய்ததால் சோமாசியாண்டன் என்று பெயர் வந்தது.
“எம்பெருமானாரே சரணம்” என்று சொல்வதில் இவருக்கு மிகவும் ஆர்வம்.-இவர் திருநாராயணபுரம் பெருமாள் செல்வப் பிள்ளைக்கு மிகவும் அந்தரங்கர். அவரைப் பாட்டுப்
பாடி மகிழ்விப்பார். ஒரு நாள் “தனக்கு மோக்ஷம் உண்டா” என்று செல்வப் பிள்ளையை கேட்டார். கிடையாது” என்று பதில் வந்தது. “நான் பாட்டுப் பாடி உம்மை மகிழ்வித்தேனே. அதற்கு பலன் கிடையாதா” என்று இவர் கேட்டார். “நீர் பாடினதுக்கு நான் ஆடினது சரியாகப் போய் விட்டது” என்று செல்வப்பிள்ளை பதில் சொன்னார். மேலும் “ராமானுஜரைப்
போல் அபிமானத்துடன் இருந்தால் மோக்ஷம் நிச்சயம்”. என்றும் சொன்னார். அது முதல் இவர் ராமானுஜரிடத்தில் மிகவும் ப்ரீதி விச்வாசமாக இருந்தார். ஸ்ரீரங்கத்தில் இவர் குலத்தைச் சேர்ந்தவர்களே வாக்ய பஞ்சாங்க மிராசு பெற்றவர்கள். இவர் “ஸ்ரீபாஷ்ய விவரணம்”,”குருகுணாவளி” ஆகிய க்ரந்தங்களை எழுதியுள்ளார்.

21. சிறியாண்டான்
இவர் மாறொன்றில்லா மாருதிச் சிறியாண்டானுடன் திருநாராயண புரத்திலிருந்து ஸ்ரீரங்கம் சென்று பெரிய நம்பி, கூரத்தாழ்வான் ஆகியோருடைய நிலையை அறிந்து வரச் சென்றார்.

22. தொண்டனூர் நம்பி
இவர் தொண்டனூரில் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அடிமை செய்வதையே இயல்பாகக் கொண்டவர். ஒரு சைவப் பண்டாரம் வீடுதோறும் சென்று பிச்சை எடுப்பான். ஒரு நாள் அவனுக்கு சோறு கிடைக்கவில்லை.ஒருவர் அவனை நோக்கி “நீ தொண்டனூர் நம்பி வீடு
சென்று “ஸ்ரீமதே ராமானுஜாய நம:” என்று சொல்லு.உனக்கு பிச்சை கிடைக்கும்” என்று சொன்னார். அவனும் அப்படியே பல முறை சொன்னான். நம்பி வெளியே வந்து பார்த்து “நீ சைவனாயிற்றே. ஏன் ராமானுஜர் நாமம் சொன்னாய்” என்று கேட்டார். அவன் நடந்த உண்மையை அப்படியே சொன்னான். நம்பி அவனுக்கு உணவு அளித்தார். இதற்காக ஸ்ரீவைஷ்ணவர்கள் நம்பியை குறை கூறினார்கள். அவர்களுக்கு நம்பி ஆசார்யன் திருநாம மஹிமை பற்றி எடுத்துச் சொன்னார்.அவர்கள் ஒப்புக் கொண்டனர். பின்னர் அந்த சைவப் பண்டாரம் ஸ்ரீவைஷ்ணவனாக மாறி கைங்கர்யங்களில் ஈடுபட்டான்.
“திருக்கோட்டியூரில் செல்வநம்பி தம்பதியர் போல் தொண்டனூர் நம்பி பாகவத சேஷத்வமே
யாத்ரையாய் போந்தார்” என்று திருவாய் மொழி-8-10-11 பாசுர வ்யாக்யானத்தில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
தொண்டனூர் நம்பி அநந்தாழ்வானுடன் ஸ்ரீரங்கம் சென்று ராமானுஜரை சந்தித்தார். ராமானுஜர் அவர்களை அருளாளப் பெருமாள் எம்பெருமானாரிடத்தில் ஆச்ரயிக்கும்படி கட்டளையிட்டார்.-இவர் ராமானுஜரிடம் விண்ணப்பித்து அந்த தேச அரசன் விட்டல தேவராயனுடைய மகளின் பிசாச பீடையைப் போக்கி அரசனை ஆச்ரயிக்கச் செய்தார்.

23. மருதூர் நம்பி
இவர் மைசூர் பிராந்தியத்திலிருந்து அநந்தாழ்வா னுடன் ஸ்ரீரங்கம் வந்து அருளாளப் பெருமாள் எம் பெருமானாரிடம் ஆச்ரயித்தார்.

24- மழுவூர் நம்பி
இவர் மைசூர் பிராந்தியத்திலிருந்து அநந்தாழ்வா னுடன் ஸ்ரீரங்கம் வந்து அருளாளப் பெருமாள் எம் பெருமானாரிடம் ஆச்ரயித்தார்.

25. முடும்பை நம்பி
தனியன்
ஸ்ரீராமானுஜ ஸம்யதீந்த்ரசரணம் ஸ்ரீவத்ஸ சிஹ்நப்ரியம் |
ஸேவே:ஹம் வரதார்ய நாமகமமும் ஸூக்த்யா ப்ரிஸித்தம் முதா 1
பால்யாத் பரிபூர்ண போத ஸடஜித் காதா ராகோஜ்வலம் 1
வாத்ஸ்யம் பூர்ணமுதாரம் ஆச்ரிதநிதிம் வாத்ஸல்ய ரத்னாகரம்
ஸ்ரீராமானுஜ யோகீந்த்ர பதபங்கஜ ஷட்பதம் |
முடும்பை பூர்ணமநகம் வந்தே வரதஸம் கஞ்கம்

இவர் காஞ்சிபுரத்துக்கருகில் முடும்பை என்னும் அக்ரஹாரத்தில் ஸ்ரீவத்ஸ கோத்ரத்தில் அவதரித்தவர்.-இவருடைய இயற்பெயர் ஸ்ரீவரதாசார்யர். இவர் ராமானுஜரின் ஸஹோதரியின் கணவர். ராமானுஜரை ஆச்ரயித்தார். கூரத்தாழ்வானின் அன்புக்கு பாத்ரமானவர். நல்ல ஞான அனுஷ்டானங்களை உடையவர்.-இவர் குமாரர் ராமானுஜ நம்பி. ராமானுஜ நம்பியின் குமாரர் முடும்பையாண்டான் என்னும் தாசரதி.-தாசரதி முடும்பையிலிருந்து ஸ்ரீரங்கத்திற்கு குடிபெயர்ந்தார். இவருடைய வம்ச பரம்பரை கீழ்கண்டவாறு:

தாசரதி –தேவப்பெருமாள் என்னும் வரதாச்சார்யார் -இளையாழ்வார் என்னும் லஷ்மணாச்சார்யார் –
இங்கிருந்து இரண்டு கிளைகள் -முதலில் -ஸ்ரீ கிருஷ்ண பாத குரு என்னும் வடக்குத்திருவீதிப்பிள்ளை -பிள்ளை லோகாச்சார்யார் -அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் –
அடுத்தது -ராமானுஜ குரு -அழகப்பயங்கார் -தேவராஜ குரு என்னும் பேரருளாள ஸ்வாமி–ராமானுஜம் பிள்ளை -இவர் மா முனிகளின் சிஷ்யர் பொன்னடிக்கால் ஜீயரின் அஷ்டதிக் கஜங்களில் ஒருவர் -இவர் திருக்குமாரர் ஆழ்வார் திருநகரி ஆதிநாதன் ஸ்வாமி-

“காஞ்சி ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா” வம்ஸத் தினரும் முடும்பை நம்பி வம்சத்தை சேர்ந்தவர்களே.
வடக்குத் திருவீதிப் பிள்ளை, பிள்ளை லோகா சாரியர், அழகிய மணவாளப் பெருமாள் யோரும் நாயனார் ஆகி முடும்பை நம்பி வம்சத்தைச் சேர்ந்தவர்கள்.
ஆழ்வார் திருநகரியில் கீழ்த் திருமாளிகை, மேலத்திரு மாளிகை, வடக்குத் திருமாளிகைகளைச் சேர்ந்த ஆசார்யர்கள் முடும்பை நம்பி வம்சத்தைச் சேர்ந்தவர்களாவர். 

26. வடுக நம்பி
தனியன்
“சைத்ரேத்வஸ்விநி ஸஞ்ஜாதம் ஸம்ஸாரார்ணவ தாரகம் 
ராமானுஜார்ய ஸ்த்சிஷ்யம் ஆந்த்ரபூர்ணமஹம் பஜே
ராமாநுஜார்ய ஸத்சிஷ்யம் ஸாலக்ராம நிவாஸிநம்
பஞ்சமோ பாய ஸம்பந்தம் ஆந்த்ரபூர்ணமஹம் பஜே
இவர் கி.பி. 1047 சித்திரை மாதம் அஸ்வதி நட்சத்ரத்தில் திருநாராயணபுரம் அருகிலுள்ள “ஸாலிக்கிராமம்” என்ற ஊரில் அவதரித்தார். இவருக்கு ஆந்த்ரபூர்ணர் என்று மற்றொரு திருநாமம் உண்டு. ராமானுஜருக்கு பாலமுது கைங்கர்யம் செய்து வந்தார். ஒரு உத்ஸவ நாள் இரவு நம்பெருமாள் புறப்பாடு கண்டருளி உடையவர் மடத்து வாசலில் எழுந்தருளும் போது உடையவர் பெருமாளை ஸேவிக்கப் போனார். அப்பொழுது வடுக நம்பியை பெருமாள் ஸேவிக்க அழைத்தார். “எனக்கு நீரே பெருமாள். உமக்காக பால் காய்ச்சிக் கொண்டிருக்கிறேன். பால் பொங்கி விடும். ஆகையால் பெருமாள் ஸேவிக்க வரவில்லை” என்று சொன்னார். “தேவுமற்றறியேன்” என்பது இவர் நிலை.-கூரத்தாழ்வானுக்கும் முதலியாண்டானுக்கும் பெருமாளிடத்திலும் ஈடுபாடு, ராமானுஜரிடத்திலும்
ஈடுபாடு. அதனால் அவர்களை “இருகரையர்” என்று இவர் சொல்லுவர்.

தினந்தோறும் உடையவர் திருவடி நிலைகளை தண்டனிட்டு உடையவர்வெளியிடங்களுக்கு புறப்படும் பொழுது அவர் திருமுன்பே கொண்டு வைப்பார்.
இவர் உடையவருக்கு எண்ணைக் காப்பு சாத்தி அருளுவார்.தினந்தோறும் இரவு உடையவர்பாலமுது செய்தருளும் போது அவரை பள்ளிக் கட்டிலில் ஏறியருளப்
பணணி அவரிடம் சந்தை சொல்லிக் கொள்வார்.-பசுக்களுக்கு புல் கொண்டு போடுவார்.
ஒரு சமயம் ஒரு ஸ்ரீவைஷ்ணவர். இவர் பக்கத்தில் இருந்த பொழுது “ஓம் நமோ நாராயணாய” என்று சொன்னார். “ஸ்ரீமதே ராமானுஜாய நம: ‘ என்று சொல்ல வில்லையே என்று சொல்லி அவர் இருந்த இடத்திலிருந்து இவர் வெளியேறி விட்டார்.
இவர் உடையவருடைய ஸ்ரீபாத தீர்த்தத்தைக் கொண்டு கீழ் நாட்டில் பஞ்சத்தைப் போக்கினார்.-இவர் உடையவரின் திருவடிச் சுவடுகளை திரு வாராதனம் செய்வார். ஒரு நாள் யாத்ரைக்கு புறப்படும் பொழுது உடையவர் திருவாராதநப் பெருமாளையும், உடையவர் திருவடிச் சுவடுகளையும் ஒன்றாகக் கொண்டு வந்தார். இதைக் கண்டு உடையவர் “‘வடுகா! இதென் செய்தாய்” என்ன. வடுக நம்பியும் “உங்கள் தேவரில் என் தேவருக்கு என்ன குறை?” என்று சொல்லி விட்டார்.-உடையவர் பெருமாளை ஸேவிக்கும் பொழுது”வடுகா; பெருமாள் கண்ணழகைப் பார்” என்று சொன்னார். வடுக நம்பி “என்னமுதனை (ராமானுஜரை)க்கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே” என்று
சொன்னார்.-இவருடைய மடியிலே முடியை வைத்து எம்பார் திருநாட்டுக்கெழுந்தருளினார்.
“ராமானுஜ அஷ்டோத்தர ப தநாம ஸ்தோத்ரம்”, “யதிராஜ வைபவம்” (114 ஸ்லோகங்கள்) “யதிராஜ மங்களம்” (21 சுலோகம்) இவர் அருளியவை.
“வடுக நம்பி திருநாட்டுக்குப் போனார்” என்று ஒருவர் சொல்வதைக் கேட்ட அருளாளப் பெருமாள் எம்பெருமானார் “இவர் உடையவர் ஸ்ரீபாதத்துக்குப் போனார்” என்று சொல்ல வேண்டும் என்று திருத்தி யருளினார்.

27. வங்கி புரத்து நம்பி
தனியன்
பாரத்வாஜ குலோத்பூதம் லக்ஷ்மணார்ய பதாசரிதம் |
வந்தே வங்கிபுராதீயம் ஸம்பூர்ணார்யம் க்ருபாநிதிம் |1
இவர் திருவாய் மொழியின் சாரம் “அர்த்தபஞ்சகம்” என்று அருளிச் செய்வார்.
பிராட்டிக்கு பதி என்பதே (ஸ்ரீயப்பதி) எம்பெருமானின் பெருமை. வைஷ்ணவ மதத்தின் பெருமையும்-அதுவே என்று அடித்துக் கூறுவார்.-இவருக்கு “திருவாராதநக்ரமம்” பற்றி சொல்லி கொடுப்பதில் ராமானுஜருக்கு கொஞ்சம் கால தாமதம் ஏற்பட்டது. அது பற்றி ராமானுஜர் இவரிடம் வருத்தம் தெரிவித்தார்.
எம்பெருமானே நம்மாழ்வாராக அவதரித்தார் என்பது இவர் கருத்து..
இவர்ஒரு சமயம்வீதியில் நம்பெருமாளைஸேவிக்க இடைச்சிகள் நின்ற பக்கம் சென்று ஸேவித்தார். அவர்கள் ஸேவிக்கும் பொழுது தமிழில் “பால் உண்பீர்! பழம் உண்பீர்” என்று சொன்னார்கள். இவர் “விஜயீபவ” என்று சொல்லி ஸேவித்தார். இது தெரிந்து கொண்ட முதலியாண்டான் இவரிடம் இவருடைய முரட்டு ஸம்ஸ்க்ருதத்திற்காக குறை சொல்லி விட்டு
“நாம் நாம்தான். அவர்கள் அவர்கள்தான்” என்று ஆய்ச்சியர்களின் பக்தியை மெச்சினார்.
எம்பெருமானாரும் வங்கி புரத்து நம்பியும் எழுந் தருளியிருந்த சமயத்தில் எம்பெருமானாரை ஸேவிக்க வந்தவர்களிடையே ஒரு விசாரம் ஏற்பட்டது. நமக்கு
தஞ்சமாக நினைத்திருக்கப்படுவது “க்ஷத்ரபந்துவின் வார்த்தை” என்று வங்கி புரத்து நம்பி சொன்னார்.-இல்லை காளியன் வார்த்தை” என்று எம்பெருமானார் சொன்னார். க்ஷத்ரபந்து சொன்னது “உன்னை வணங்குகின்ற எனக்கு அருள் புரிய வேண்டும்” என்பது. காளியன் சொன்னது “‘உன்னை வணங்கத் தெரியாத எனக்கு க்ருபை செய்து எனக்கு அருள் புரிய வேண்டும்”-என்பது. நிர்ஹேதுக க்ருபையின் பெருமையை எடுத்துரைக்க இந்த ஸம்வாதம் உதவியது. மணக்கால் நம்பியின் சிஷ்யரான வங்கி புரத்தாச்சியின் குமாரர் வங்கி புரத்து நம்பி.-74 சிம்மாசனாதிபதிகளில் ஒருவரான ‘சிறியாத்தான்” இவருடைய சிஷ்யர்.

28. பராங்குச நம்பி
தனியன்
கோவிந்த ராஜாவயஜோ மநீஷி பராங்குஸோ யாமுநவைமநஸ்யம் I
அபாசகார ப்ரஸபம் த்ருதீயம் விராஜதே வ்ருத்தமணி ப்ரதீப: ||
இவர் எம்பெருமாருடைய தம்பியான சிறிய கோவிந்த பட்டருடைய குமாரர். இவருடைய குமாரரான “கூரநாராயண ஜீயர்” பராசர பட்டருடைய சிஷ்யர்.
உடையவர் எம்பாரைப் பார்த்து “இந்தக் குழந்தைக்கு நம்மாழ்வார் திருநாமத்தைச் சாத்தும்” என்று கேட்டுக் கொண்டபடி இவருக்கு பராங்குச நம்பி என்று பெயர் சூட்டப்பட்டது.
தமிழில் வல்லவரான இவரை கூரத்தாழ்வான் “பாலேய் தமிழர்” என்று கூறுவார்.

29. அம்மங்கியம்மாள்
இவர் ஒருசமயம் நம்பிள்ளையின் நோய் தீர ஒரு மந்த்ரிக்கப்பட்ட யந்த்ரத்தை அவர் கையில் வைக்க முற்பட்டார். நம்பிள்ளை அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
உடையவர் திருநாராயணபுரம் சென்ற பொழுது ஸ்ரீரங்கத்தில் கூரத்தாழ்வான், பெரிய நம்பி இவர்களுடைய நிலைமையை அறிந்துவர மாறொன்றில்லா மாருதிச் சிறியாண்டானுடன் இவரும் சென்று வந்தார்.-இவர் நீதிப் பாடல்கள் பாடி எல்லோரையும் மகிழ்விப்பார்.
இவர் மரணத் தறுவாயில் இருக்கும் பொழுது இவர் படும் துன்பத்தைக் கண்டு நஞ்சீயர் வருத்தப்பட்டார். அப்பொழுது இவர்பெரிய திருமொழி 3.6.9 பாசுரத்தைச் சொல்லி நீயாள வளையாள மாட்டோமே “என்றார். நஞ்சீயரும் நம்பிள்ளையும் இவருடையநம்பிக்கைத் திறனைப் பாராட்டிப் பேசினார்கள். இவர்பல பாசுரங்களுக்கு ரஸமாக வ்யாக்யானம் செய்வார்.

30. பருத்திக் கொல்லையம்மாள்
உடையவர் திருமலைக்கு எழுந்தருளும் போது திருக்கோவலூர் சென்று அங்கிருந்து காஞ்சீபுரம் நோக்கி நடந்தார். அங்கே ஒரு இடத்தில் இரண்டு வழிகள் பிரிந்தன. அவை எங்கு போகும் வழிகள் என்று அங்கிருந்த இடையர்களைக் கேட்டார். அவர்கள்
“ஒன்று ராஜஸராயிருக்கும் எச்சான் இருப்பிடத்திற்குப் போகும் வழி. மற்றொன்று சாத்விகரான பருத்திக் கொல்லையம்மாள் இருப்பிடத்துக்குப் போகும் வழி என்று சொன்னார்கள். உடையவர் சாத்விகரான “பருத்திக் கொல்லை யம்மாள் குடிசைக்கு சென்றார். அவருடைய குடிசையில் அவர் இல்லை. அவருடைய தேவி சரியான புடவை இல்லாததால் கிழிந்த புடவையுடன் வெளியில் வர விரும்பவில்லை. இதை எப்படியோ
உணர்ந்த உடையவர் தனது உத்தரியத்தை எடுத்து குடிசைக்குள் எறிந்தார். பருத்திக் கொல்லையம்மாள் தேவி அதை உடுத்திக் கொண்டு வெளியில் வந்து உடையவரை தண்டம் சமர்ப்பித்தார். உடையவர் அவளை தளிகை பண்ணும்படி சொன்னார். தேவிகள் தளிகை பண்ணி முடித்தார். அவளுடைய கணவர் பருத்திக் கொல்லை யம்மாள் வந்து சேர்ந்து உடையவரை தண்டம் சமர்ப்பித்து விநயமாக ஸ்ரீபாத தீர்த்தம் ஸ்வீகரித்து ப்ரீதராய் எழுந்தருளியிருந்தார். உடையவரும் அவருடைய ஞான, பக்தி, வைராக்யங்களைக் கண்டு
சந்தோஷப்பட்டு அவருடன் எல்லாருமாகச் சேர்ந்து அமுது செய்தருளினார்கள்.
இவருடைய தேவிக்கு தீங்கு நினைத்த வைஸ்யன் ஒருவனை உடையவருடைய ஸ்ரீபாத தீர்த்தத்தால் இவர் திருத்திப் பணி கொண்டார்.

31. உக்கலம்மாள்
இவர் உடையவருக்கு திருவால பட்டம் கைங்கர்யம் செய்வார்.

32. சொட்டையம்மார்
இவர் திருநாராயண புரத்தில் உடையவர் சந்நிதியில் நடுவிலாழ்வானிடத்தில் ஸ்ரீபாஷ்யம் கேட்டார்.-இவருடன் வங்கி புரத்து ஆச்சியும் ஸ்ரீபாஷ்யம் கேட்டு மகிழ்ந்தார். நடுவிலாழ்வான் இவர்களை ஆசீர்வதித்து“எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்றிருங்கோள்” என்று அருளுரை வழங்கினார்.

33. கிடாம்பிப் பெருமாள்
இவர் கிடாம்பி ஆச்சானுடன் சேர்ந்து திருமடப்பள்ளி கைங்கர்யம் செய்வார். அறுசுவை உணவு தயாரிப்பார்.-உடையவர் ஸ்ரீபாஷ்யத்தை எழுதி முடித்தவுடன் இவரையும் கிடாம்பி ஆச்சானையும் ஸ்ரீபாஷ்ய ஸ்ரீகோசத்துடன் காஷ்மீர தேசத்துக்குச் சென்று சாரதா பீடத்தில் வைத்து அங்கீகாரம் பெறச் செய்தார்.

34. ஈச்சம்பாடி ஆச்சான்
ஈச்சம்பாடி என்னும் ஊர் திருமலைக்கு அருகில் உள்ளது. இவருடைய தகப்பனார் சுந்தரதேசிகர் அல்லது அழகப்பிரான். தாயார் திருமலை நம்பியின் குமாரத்தி. இருவரும் ஆளவந்தார் நியமனப்படி திருமலையில் கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார்கள். ராமானுஜர் திருமலைக்கு எழுந்தருளிய போது அவருக்கு சுந்தர தேசிகர் தாபநீய உபநிஷத்”, “ந்ருஸிம்ஹ மந்த்ரம்” இவைகளை உபதேசித்தார். திருமலை திருவேங்கடவ னுக்கு கைங்கர்யம் செய்து கொண்டிருந்த காலத்தில் சுந்தர தேசிகருக்கு கி.பி. 1026 தை மாதம் ஹஸ்த நட்சத் திரத்தில் ஒரு குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஆச்சான் ஸ்ரீநிவாஸாசார்யர் என்று பெயர் சூட்டப்பட்டது.-பின்னர் இவருக்கு சௌளம், உபநயநம், விவாஹம் நடந்தன. பின்னர் இவருடைய தகப்பனார் சுந்தரதேசிகருடைய நியமனப்படி இவர் ராமானுஜரை ஆச்ரயித்து எல்லா சாஸ்த்ரங்களையும் கற்று புத்ர, பௌத்ர சிஷ்யாதிகளுடன் தர்சன ப்ரவர்த்தநம் செய்தருளினார்.

ஏராரும் தையத்தம் இங்குதித்தோன் வாழியே
சுந்தரேசன் திருமகனாய் துலங்குமவன் வாழியே
பார்புகழும் யதிராஜன் பதம்பணிவோன் வாழியே
சீராரும் வேங்கடத்தில் திகழுமவன் வாழியே
பார் மகிழும் பாடியத்தை பகருமவன் வாழியே
உத்தமமாம் குலமதனில் தொல்புகழோன் வாழியே
தொண்டர் குழாம் கண்டுகக்கும் தொல்புகழோன் வாழியே
நல் ஈச்சம்பாடிவாழ் நம்மாச்சான் வாழியே-வாழித் திருநாமம்

35.ஈச்சம்பாடி ஜீயர்
இவர் ஈச்சம்பாடி ஆச்சானின் இளைய சகோதரர்.-இவர் கி.பி. 1030 ஆனி மாதம் திருவோண நட்சத்திரத்தில் அவதரித்தார். ஸ்ரீவெங்கடேசன் என்ற திருநாமம் சூட்டப்பட்டது. செளள, உபநயந, விவாஹாதிகளுக்குப் பின் தந்தையின் நியமநப்படி ராமானுஜரை ஆச்ரயித்து
அவரிடம் எல்லா சாஸ்த்ரங்களையும் கற்று புத்ர, பௌத்ர சிஷ்யாதிகளுடன் தர்சந ப்ரவர்த்தநம் செய்து கொண்டிருந்தார். பின்னர் ராமானுஜரிடமே ஸந்யாஸாஸ்ரம
ஸ்வீகாரம் பெற்று அதுமுதல் ஈச்சம்பாடி ஜீயர் என்று பெயர் விளங்கி அதிவிரக்தராய் சிஷ்ய, ப்ரசிஷ்யர்களுக்கு ஸ்ரீபாஷ்ய, திவ்ய ப்ரபந்த, ரஹஸ்ய, மந்த்ரார்த்தங்கள் ஸாதித்துக் கொண்டு எழுந்தருளியிருந்தார்.

ஆனிதனில் ஓணத்தில் அவதரித்தோன் வாழியே
வேங்கடத்தை பதியாக விரும்புமவன் வாழியே
பூவார்ந்த கழல்களையே போற்றுமவன் வாழியே
பதின்மர்கலை உட்பொருளை பகருமவன் வாழியே
அநவரதம் அரியுருவன் அடிதொழுவான் வாழியே
எப்பொழுதும் யதிபதியை ஏத்துமவன் வாழியே
முத்திதரும் முந்நூலும் முக்கோலும் வாழியே
எழில் ஈச்சம்பாடி உறை ஜீயர்தாள் வாழியே-வாழித் திருநாமம்

36. காராஞ்சி சோமயாஜியார்
இவர் உடையவரை ஆச்ரயித்தவர். உடையவர் இருக்குமிடம் சென்று கைங்கர்யம் செய்ய இவர் மனைவி இடம் தராததால் தான் இருக்கும் இடத்திலேயே உடையவர் விக்ரஹத்தைப் பண்ணி பூஜை செய்ய விரும்பினார். விக்ரகம் சரிவர அமையாததால் அதை அழித்து வேறு ஒரு விக்ரகம் பண்ணினார். ஒரு நாள் இரவு ஸ்வப்நத்தில் உடையவர் தோன்றி “ஏன் இப்படிச் செய்கிறீர்” என்று கேட்டார். இவர் கண் விழித்து எழுந்து நேரே ஸ்ரீரங்கம் புறப்பட்டுச் சென்று உடையவரை தண்டம் சமர்ப்பித்து நடந்ததை சொன்னார்.
உடையவர் முறுவல் செய்து அபயம் அளித்து இவருடைய கவலைகளை தீர்த்தார்.

37.ஆசூரிப்பெருமாள்
இவருக்கு ஆசூரி தேவர், ஆசூரி புண்டரீகாக்ஷர் என்ற திருநாமங்கள் உண்டு. இவர்ஹாரித கோத்ரத்தைச் சேர்ந்தவர். இவர் 74 சிம்மாசனாதிபதிகளில் ஒருவரான நடுவிலாழ்வானின் சிஷ்யர். எம்பெருமானாரின் ஆறு உபதேசங்களில் நாலாவது உபதேசமான திருநாராயண
புரம் வாஸத்தை ஆதரித்து, அங்கு சென்று தர்சன நிர்வாஹம் செய்தார். இவர் வம்சத்தில் அவதரித்தவர் “ஆய்”,“ஜநந்யாசார்யர்” – திருவாய் மொழிப் பிள்ளை மற்றும் மணவாள மாமுநிகள் காலத்தில் எழுந்தருளி யிருந்த ப்ரஸித்தி பெற்ற வித்வானாவார்.

37.ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் வைபவ சுருக்கம்
தனியன்
ராமானுஜ பதாம்போஜயுகளீயஸ்ய தீமத: |
ப்ராப்யம் சப்ராபகம் வந்தே ப்ரணதார்த்திஹரம் குரும்
ஆஸ்திகாக்ரேஸரம் வந்தே பரிவ்ராட் குரு பாசகம்
யாசிதம் குருகே ந ப்ரணதார்த்திஹரம் குரும் 1
இவர் சித்திரை மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் ஆத்ரேய கோத்ரத்தைச் சேர்ந்தவர்.-ஒரு சமயம் உடையவருக்கு ஒரு ஸ்ரீவைஷ்ணவர் உஞ்சவிருத்தி பிக்ஷை சமர்ப்பிக்கும் பொழுது உணவில் விஷத்தைக் கலந்து கொடுத்து கொல்ல நினைத்தார். பகவத் கிருபையினால் உடையவர் உயிர் தப்பினார். இந்தச் செய்தி கேட்டு திருக்கோட்டியூர் நம்பி.கோட்டியூரிலிருந்து ஸ்ரீரங்கம் வந்தார். அவரை எதிர்கொண்டு அழைக்க உடையவர் சென்றார். காவிரி ஆற்று மணலில் அவரை சந்தித்தார். கொதிக்கும் வெயிலில் ஆற்று மணலும் கொதித்தது. உடையவர் நம்பியை ஸேவிக்க ஸாஷ்டாங்க ப்ரணாமம் செய்தார். நம்பி அவரை எழுந்திருக்கும்படி சொல்லவில்லை. அதனால் உடையவர் எழுந்திருக்கவில்லை. கொதிக்கும் மணலில் உடையவர் திருமேனி வாடி வதங்கியது. அருகிலிருந்த கிடாம்பி ஆச்சான் இதைக் கண்டு பொறுக்காமல் இது என்ன சிஷ்ய ஆசார்ய க்ரமம்? விஷம் வைத்தவர் செயலை விட இது மிகக் கொடுமை” என்று திருக்கோட்டியூர்
நம்பிக்குச் சொல்லி உடையவருடைய திருமேனியை வாரி எடுத்து அணைத்துக் கொண்டார். இதை எதிர்பார்த்த திருக்கோட்டியூர் நம்பி இவருடைய பரிவைக்கண்டு மெச்சி இவரை உடையவருக்கு தளிகைக் கைங்கர்யம் செய்ய நியமித்தார்.
ஒரு சமயம் கிடாம்பி ஆச்சான் திருமாலிருஞ்சோலை அழகரை ஸேவிக்கும் பொழுது ஆளவந்தாரின் “ஸ்தோத்ர ரத்னத்திலிருந்து”, “அபராத ஸஹஸ்ர பாஜநம்”’ என்னும் ஸ்லோகத்தைச் சொன்னார். அதில்-”அகதிம்” என்ற சொல்லைக் கேட்டு அழகர் கிடாம்பி ஆச்சானை கடாக்ஷித்து “நீ ராமானுஜரின் அடியவனாக இருக்கும் பொழுது “அகதி” என்று சொல்லிக் கொள்ளக் கூடாது என்று தெரிவித்தார்.
ஒரு நாள் ஸ்ரீரங்கம் மடத்தில் ஸ்ரீவைஷ்ணவ ததி யாராதனம் நடந்து கொண்டிருந்த பொழுது கிடாம்பி ஆச்சான் ஒரு ஸ்ரீவைஷ்ணவருக்கு தாகத்திற்கு தீர்த்தம்
சாதித்தார். பக்கவாட்டில் நின்று கொண்டு தீர்த்தம் சாதித்தார். இதைப் பார்த்த உடையவர் இவர் முதுகில் அடித்து நேராக இருந்து கொண்டு தீர்த்தம் சாதிக்கச் சொன்னார். உடனே கிடாம்பி ஆச்சான் “பணிமானம் பிழையாமே அடியேனைப் பணிகொண்ட” என்ற
பாசுரத்தைச் சொல்லி உடையவருக்கு நன்றி தெரிவித்தார்.
இளையாழ்வார் என்ற ஒரு ஸ்ரீவைஷ்ணவர் ஆச்சானிடம் “எம்பெருமானாருடைய சிஷ்யரான வயது முதிர்ந்த நீர் வயது குறைவான பட்டரிடம் தாழ நின்று பழகுவது ஏன்” என்று கேட்டார். ஆச்சான் “ஒரு சமயம் எம்பெருமானார் “நம்முடைய அடங்கலும் நம்மை
நினைத்திருக்குமாப் போலே இவனை (பட்டரை) நினைத்திருங்கோள்’ என்று சொல்லியிருக்கிறார்-என்று பதில் சொன்னார்.
உடையவர் ஸ்ரீபாஷ்யம் எழுதி முடித்தவுடன் அந்த ஸ்ரீகோசத்தை இவரிடம் கொடுத்து காஷ்மீரத்தில் ஸ்ரீசாரதா பீடத்தில் வைத்து அங்கீகாரம் பெற்று வரும்படி சொன்னார். இவரும் அங்கு சென்று அங்கீகாரம் பெற்ற பொழுது சரஸ்வதி தேவி உடையவருக்கு “பாஷ்யகாரர்” என்ற பட்டம் வழங்கினார்.
காஷ்மீரம் போய் விட்டு திரும்பும் வழியில் ஒரு தயிர் விற்கும் கோபிகை தயிரை விலைக்குக் கொடுத் தாள். பணத்திற்கு பதில் மோக்ஷம் கொடுக்கும்படி கேட்டாள். மோக்ஷம் கொடுக்க திருவேங்கடவனுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்றும் இவர் சொன்னார் -அந்த கோபிகை “அப்படியானால் திருவேங்கடவனுக்கு நீர் ஒரு சீட்டு கொடும்” என்று கேட்டு வாங்கி திருமலைக்குச் சென்று வேங்கடவனிடம் சமர்ப்பித்தார்.-திருவேங்கடவனும் அவளுக்கு மோக்ஷம் கொடுத்தார்.-இவருக்கு “வேதாந்த உதயநன்” என்ற விருதுப்பெயரை ராமானுஜர் அனுக்ரஹித்தார். (ந்யாய சாஸ்த்ரத்தில் உதயநன் என்பவர் ஒரு சிறந்த நிபுணர்)இவர் குமாரர் கிடாம்பி ராமானுஜாசார்யர். அவருடைய குமாரர் கிடாம்பி ரங்க ராஜாசாரியர். அவருடைய குமாரர் கிடாம்பி அப்புள்ளார். கிடாம்பி அப்புள்ளாருடைய சகோதரி தோதாத்ரி அம்மையார் தோதாத்ரி அம்மையார் குமாரர் உலகம் புகழும் வேதாந்த தேசிகன்.-கிடாம்பி ஆச்சான் வம்சத்தில் பிறந்தவர். சமீப காலத்தில் இருந்த உ.வே. சிங்கப் பெருமாள் ஸ்வாமி யும் அவருடைய ஸ்வீகார புத்ரர் “காரப்பங்காடு வெங்கடாசார்யர் ஸ்வாமியும்” (1906-1971) தற்சமயம் திருமலை – திருப்பதி பெரிய ஜீயராக உள்ள “ஸ்ரீரங்க ராமானுஜ ஜீயர் ஸ்வாமி” கிடாம்பி யாச்சான் வம் த்தைச் சேர்ந்தவர்.
ராமானுஜருக்கு மாமாவான பெரிய திருமலை நம்பி கிடாம்பி ஆச்சானுடைய அத்தையின் கணவர். பெரிய திருமலை நம்பி கிடாம்பி ஆச்சானை ராமானுஜ ரிடம் ஆச்ரயிக்கச் செய்தார்.-நம்மாழ்வார் அருளிச் செய்துள்ள “திருவிருத்தத்திற்கு” கிடாம்பி ஆச்சான் தனியன் அருளிச் செய்துள்ளார்.

38.ஸ்ரீ அலங்கார வேங்கடவர் வைபவச் சுருக்கம்
தனியன்
ஸ்ரீமத் தயாபால முநேஸ்தநூஜம் தத்பாத ஸேவாதிகதப்ரபோதம் 1
ஸ்ரீமத் யதீந்த்ராங்க்ரி நிவிஷ்ட சித்தம், ஸ்ரீகௌஸிகம் வேங்கட சூரிமீடேII
ஸ்ரீராமாநுஜ பாத பத்ம யுகளம் ஸம்ஸ்ருத்ய ஸத்கோஷ்டி 1
ப்ரேம்ணாலங்க்ருத வேங்கடே குரு இத்யாக்யாம் பராம் ப்ராப்தவாந்
யோஸௌ கௌஸிக தேரிகோ குணநிதி: ஸ்ரீவிஞ்சபுர்யாம் ஸ்தித:
தத்பாதாப்ஜ யுகம் நமாமி ஸததம் ஸம்ஸார ஸந்தாரகம்||

திருமருவும் விஞ்சைநகர் செழிக்க வந்தோன் வாழியே
ஸ்ரீ பாடியகாரரடி சேர்ந்துய்ந்தோன் வாழியே
அருளாள மாமுனிவனருள் மைந்தன் வாழியே
அருமறைநூல் மாறனுரை ஆய்ந்துரைப்போன்வாழியே
மருளில் திருமலைநம்பி மணவாளன் வாழியே–மார்கழியில் ஆதிரைநாள் மகிழ்ந்துதித்தோன் வாழியே
திருவரங்கர் தாளிணையின்றம் பகர்வோன் வாழியே
திருவேங்கடா சிரியன் திருவடிகள் வாழியே–வாழித் திருநாமம்

இவர் அருளாளப் பெருமாளெம்பெருமானாரின் குமாரர். கௌசிக கோத்ரம். இவர் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்ரத்தில் அவதரித்தார். உடையவர் திருவடிகளில் ஆச்ரயித்தார். 74 சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். இவர் உடையவரின் மாமாவான பெரிய திருமலை
நம்பியின் புதல்வியை மணந்தார். இவருடைய குமாரர் பிற்காலத்தில் விஞ்சிமூர் தாதாசார்யர் என்ற பிரஸித்தி பெற்ற மஹாவித்வான் ஆனார்.

40. ஸ்ரீ அருளாளப் பெருமாளெம்பெருமானார் வைபவச் சுருக்கம்
தனியன்
கார்த்திகே பர ஜாதம் யதீந்த்ராப்ரிதமாரயே |
ஞானப்பரமேய ஸாராபிவத்தாரம் வரதம் மும்
ஞாந பக்த்யாத்த வைராக்யம் ராமாநுஜபதா ரிதம் 1
பஞ்சமோபாய ஸம்பந்தம் ஸம்யமீந்த்ரம் நமாம்யஹம்!!
தயாபாலந்தேவாய ஞாநஸாரப்ரதாயிநே
ப்ரமேயஸாரம் தததே நமோஸ்து ப்ரேமஹாலிநே

திருவாழும் தென்னரங்கம் சிறக்கவந்தோன் வாழியே
தென்னருளாளரன்பால் திருந்தினான் வாழியே
தருவாழும் எதிராசன் தாளடைந்தோன் வாழியே
தமிழ் ஞாநப்பிரமேயசாரம் தமர்க்குரைப்போன் வாழியே
தெருளாரு மதுரகவிநிலை தெளிந்தோன் வாழியே
தேசுபொலி மடந்தன்னை சிதைத்திட்டான் வாழியே
அருளாளமாமுநியாம் ஆரியன்தாள் வாழீயே
அருள்கார்த்திகைப் பரணியோன் அனைத்தூழி வாழியே-வாழித் திருநாமம்

அருளாளப் பெருமாளெம்பெருமானார் என்ற நம் பூர்வாசார்யர் முன்னால் யக்ஞ மூர்த்தி என்ற பெயரோடு அத்வைத ஸந்யாஸியாய் வித்வான்களை வாதத்தில் வென்று விருதுகள் பல பெற்று ப்ரகடநப்படுத்தி வந்தார்.-அவர் உடையவரையும் வாதத்தில் வெல்ல வேண்டும்
என்று ஸ்ரீரங்கம் வந்து அவருடன் வாதம் செய்தார். 17நாட்கள் வாதம் நடந்தது. இருவரும் அவரவர் தரப்பிற்கு ப்ரமாணங்களை அள்ளி வழங்கினார்கள். யக்ஞமூர்த்தி அத்வைதமாகிய மாயாவாத சித்தாந்தத்தை நிலை நிறுத்த முயன்றார். உடையவர்விஷ்டாத்வைத சித்தாந் தத்தை நிலைநிறுத்த முயன்றார். 17வது நாள் வாதப்
போர் முடிவில் இருவருக்குமே வாதப் போரில் வெல்ல முடியாது என்ற அவநம்பிக்கை வந்து கலங்கினார்கள்.-உடையவர் தனது ஆராதநப் பெருமாளாகிய “அருளாளப் பெருமாளை” த்யானம் செய்து வணங்கி நின்றார்.-அன்று இரவு அருளாளப் பெருமாள் “எம்பெருமானாரே, உமக்கு ஸமர்த்தனாயிருப்பதொரு சிஷ்யனை உண்டாக்கவே இந்த ஏற்பாடு. நீர் ஆளவந்தாருடைய மாயாவாத கண்டனம் என்ற நூலில் உள்ள யுக்தியை சொல்லி யக்ஞ மூர்த்தியை வெல்வீராக” என்று அருளிச் செய்தார். 18வது நாள் வாதத்தில் உடையவர் தேவப்பெருமாளின் ஆணைப்படி வாதத்தில் வென்றார்.-வாதத்திற்கு முன் செய்து கொள்ளப்பட்ட நிபந்தனைப்படி யக்ஞ மூர்த்தி தன் ஸித்தாந்தத்தை விட்டு விசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்தை ஏற்று ஏக தண்டத்தை முறித்துப் போட்டு சௌள (குடுமி) உபநயந, பஞ்சஸம்ஸ்கார, காஷாய த்ரிதண்டங்களை ஏற்றார். உடையவர் தன்னுடைய திருவாராதநப் பெருமாள் பெயரையும் தன்னுடைய பெயரையும் சேர்த்து. “அருளாளப் பெருமாள் எம்பெருமானார்” என்று திருநாமமிட்டு அவருக்கு ஒரு மடத்தையும் ஏற்படுத்திக் கொடுத்து சிஷ்ய சம்பத்களையும் ஏற்படுத்தினார்.
உடையவர் தம்மிடம் ஆச்ரயிக்க வந்த அநந்தாழ்வான், எச்சான், தொண்டனூர் நம்பி, மருதூர் நம்பி, மழுவூர் நம்பி ஆகியவர்களை இவரிடம் ஆச்ரயிக்கச்செய்தார். மேலும் தம்முடை ஆராதனப் பெருமாளுக்கு நித்திய ஆராதனம் செய்யும்படியும் நியமித்தார்.
இவர் ”ஞானசாரம்”, “‘பிரமேயாசாரம்” என்ற இரண்டு அற்புத நூல்களை அருளிச் செய்தார். பிள்ளைலோகாசார்யரும் வேதாந்த தேசிகனும் இந்த நூல்களில்உள்ள பாசுரங்களை மேற்கோள்களாகக் கையாண்டார்கள். மணவாள மாமுநிகள் இந்த இரண்டு நூல்களுக்
கும் உரை எழுதியுள்ளார்.
இவர் எம்பெருமானார் மடத்துக்கு சமமாக இன்னொரு மடம் இருக்கக் கூடாது என்று நினைத்து தன்னுடைய மடத்தை இடித்து விட்டார்.
கூரத்தாழ்வான் தமது குமாரரான பட்டருக்கு உபதேசம் செய்கையில் “இவரை சிறுமாமனிசர்” என்றுதெரிவித்து திருவாய் மொழி 8-10-3பாசுரத்தில் சொல்லப்பட்டபடி, “மேனி சிறுத்து கீர்த்தி பெருத்து இருந்தவர்” என்பதைச் சுட்டிக் காட்டினார்.
வடுக நம்பி “திருநாட்டுக்கெழுந்தருளியதாக ஒரு ஸ்ரீவைஷ்ணவர் வந்து சொன்ன பொழுது. “அப்படிச் சொல்லக் கூடாது உடையவர் திருவடி சேர்ந்தார் என்று சொல்ல வேண்டும்” என்று தெரிவித்தார்.
இவர் கடைசி காலத்தில் நோய் வாய்ப்பட்டிருந்த பொழுது இவரைப் பார்க்க கூரத்தாழ்வானும் உறங்காவில்லி தாஸரும் வந்தார்கள். கூரத்தாழ்வானுக்கு தாம்
விரும்பியவருக்கு பரமபதம் ஸாதிக்கும் சக்தி உண்டு.-இருந்தாலும் அவர் தனக்கு ஸாதிக்காமல் கஷ்டப்பட விடுகிறாரே என்ற வருத்தம் ஏற்பட்டது. ஆகையால்
அவரிடம் ‘தான் சீக்கிரம் ஆளவந்தார் திருவடியடைய வேண்டும்” என்று ப்ரார்த்தித்தார்.
இவர்கௌஸிக கோத்ரத்தைசேர்ந்தவர். இவருடைய பூர்வாஸ்ரமத்தில் இவருக்கு “அலங்கார வேங்கடவர்”என்று ஒரு குமாரர் உண்டு. அவர் உடையவரை ஆச்ரயித்து 74 சிம்மாசனாதிபதிகளில் ஒருவரானார்.-அவர் பெரிய திருமலை நம்பியின் குமாரத்தியை திருமணம் செய்து கொண்டார். விஞ்சிமூர் தாதாசார்யர் இவருடைய பேரர்.

41.ஸ்ரீ குமாண்டூர் இளையவில்லி வைபவச் சுருக்கம்
தனியன்
ஸ்ரீகௌசிகா ந்வய மஹாம்புதி பூர்ண சந்த்ரம்
ஸ்ரீபாஷ்யகார ஜ நீஸஹஜா தூநூஜம் 1
ஸ்ரீ சைலபூர்ண பதபங்கஜ ஸக்தசித்தம்
ஸ்ரீபாலதந்வி குருவர்ய மஹம் பஜாமி ||
ஸ்ரீயதீந்த்ர மாத்ஷ்வ ரீய: ப்ரதிதார்யபதே ஸ்தித: 11
மூலபூத: கௌசிகாநாம் தம் வந்தே பாலதந்விநம் II
இவர் சித்திரை மாதம் ரேவதி நக்ஷத்திரத்தில் அவதரித்தார். இவர் கௌசிக கோத்ரத்தைச் சேர்ந்தவர்.-ராமானுஜருடைய சிறிய தாயாரின் குமாரர். இவர்-பெரிய திருமலை நம்பியின் மருமகன். ஆகையால் அவரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இவர் வட மொழியில்பாலதந்வி என்று அழைக்கப்பட்டார்.-இவருடைய வம்ச பரம்பரை கீழ்க்கண்டவாறு.”

————–

74 சிம்மாசனாதிபதிகளும் அஷ்டத்திக் கஜங்களும்
74 சிம்மாசனாதிபதிகளும் ராமானுஜரால் நியமிக்கப்பட்டவர்கள் (1017-1138). பிற்பட்ட 300 ஆண்டுகளில் கால மாறுபாட்டால் ஏற்பட்ட நிலைமைகளாலும் துருஷ்கருடைய படையெடுப்பால் ஏற்பட்ட விபரீதங்களாலும் 74 சிம்மாசனாதிபதிகளின் இயக்கத்தில் தொய்வு ஏற்பட்டு ஸ்ரீவைஷ்ணவ மதம் நலிந்து காணப்பட்டது.
ஸ்ரீவைஷ்ணவ மதத்தின் ராஜதானியாகிய ஸ்ரீரங்கம் கோவிலில் கி.பி. 1310 முதல் 1371 வரை நம்பெருமாள் அங்கு எழுந்தருளியிருக்க முடியாமல் தெற்கு, மேற்கு, வடக்கு பிராந்தியங்களில் பாதுகாப்புக்காக செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. தெற்கே திருமாலிருஞ்சோலை மலை, ஜோதிஷ்குடி, மதுரை, மேற்கே கேரளம், கோழிக் கோடு, வடக்கே திருநாராயணபுரம், திருமலை, செஞ்சி ஆகிய இடங்களில் எழுந்தருளி, கி.பி. 1371ல்
தான் ஸ்ரீரங்கம் எழுந்தருள முடிந்தது. ஸ்ரீவைஷ்ணவ மதத்தை மீண்டும் உத்தாரணம் செய்ய 1370ல் மணவாள மாமுநி அவதரித்தார். அவர்கி.பி. 1414ல் ஸ்ரீரங்கம் எழுந்தருளி கோவில் நிர்வாகத்தையும் ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயங்களையும் மீண்டும் ஸ்தாபித்தார். அதற்காக, தானே அஷ்டதிக் கஜங்களை நியமித்து, மேலும் அவர்களில் ப்ரதானமானவர்களான வானமாமலை ஜீயருக்கும் கோவில் கந்தாடை அண்ணனுக்கும் அஷ்டதிக்கஜங்களை நியமிக்க அடிகோலினார். அவர்களில் பெரும்பாலோர் 74 சிம்மாசனாதிபதிகளின் வம்சங்களில் வழிவந்தவர்கள். இவர்கள் ஸ்ரீவைஷ்ணவமத புநருத்தாரணத்திற்கு செய்த சேவைகள் மிகவும் மதிக்கத் தக்கவை.

மணவாள மாமுநியின் அஷ்டதிக் கஜங்கள் விவரம்

1. வானமாமலை ராமானுஜ ஜீயர்

2. திருவேங்கடம் ஜீயர்

3. பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர்– நடுவிலாழ்வான் வம்சம்

4-கோவில் கந்தாடை அண்ணன்–முதலியாண்டான் வம்சம்

5. ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா–முடும்பைநம்பி வம்சம்
6. எறும்பியப்பா-

7.அப்பிள்ளார்
8. அப்பிள்ளை

வானமாமலை ராமானுஜ ஜீயரின் அஷ்டதிக் கஜங்கள்
1. அப்பாச்சியாரண்ணா முதலியாண்டான் வம்சம்
2. போரேற்று நாயனார் முதலியாண்டான் வம்சம்
3. சுத்தசத்வம் அண்ணா இளையவில்லி வம்சம்

4. ராமானுஜம் பிள்ளை முடும்பை நம்பி வம்சம்
5. சண்டமாருதம் மஹாசார்யர் இளையவில்லி வம்சம்
6. ஞானக்கண் ஆத்தான் முடும்பை நம்பி வம்சம்
7. திருக்கோட்டியூர் அரையர்
8. பள்ளக்கால் சித்தர்


கோவிலண்ணனின் அஷ்டதிக் கஜங்கள்
1. கந்தாடையப்பன் முதலியாண்டான் வம்சம்
2. திருக்கோபுரத்து நாயனார் முதலியாண்டான் வம்சம்
3. கந்தாடை நாயன் முதலியாண்டான் வம்சம்
4. சுத்த சத்வம் அண்ணன் இளையவில்லி வம்சம்
5. திருவாழி ஆழ்வார் பிள்ளை இளையவில்லி வம்சம்
6. ஜீயர் நாயனார் கோமடத்தாழ்வான் வம்சம்
7. ஆண்டபெருமாள் நாயனார்
8.ஐயன் அப்பா

—————-

அஷ்டதிக்கஜம் – திருவேங்கட ராமானுஜ ஜீயர் வைபவச் சுருக்கம்
தனியன்
ரம்யஜாமாத்ரு யோகீந்த்ர பதபங்கே ருஹா ரிதம்
ஸ்ரீவேங்கட ரகூத்தம்ஸ ஸோதரம் மநவை முநிம் |
ராமானுஜர் திருமலையில் கி.பி. 1119ல் “ஜீயர்” மடத்தை ஸ்தாபித்து ஜீயரைக் கொண்டு கோவில் நிர்வாகம் சிறப்புற நடக்க ஏற்பாடு செய்தார். அப்பொழுது அந்த ஜீயருக்கு அப்பன் சடகோப ராமானுஜ ஜீயர் என்று பெயர். அவர் 1119லிருந்து 1173 வரை பட்
டத்தில் எழுந்தருளி இருந்தார். அவருக்குப் பின் கி.பி. 1428 முதல் 1431 வரை மணவாள மாமுநிகளே 12வது பட்டமாக அந்த ஸ்தானத்தை அலங்கரித்தார். ஒரு ஜீயர் பரமபதம் எழுந்தருளிய பின் அடுத்த ஸ்வாமியை நியமிக்கத் தவறும் பொழுது ஏற்படும் சிக்கல்களை தவிர்ப்பதற்காக மணவாள மாமுநியே தனக்குப் பின் ஒரு பெரிய ஜீயரையும் அவருக்குப் பின் பட்டம் ஏற்க ஒரு சின்ன ஜீயரையும் நியமிக்க ஏற்பாடு செய்தார். அதன்
படி 1431ல், அப்பன் திருவேங்கட ராமானுஜ ஜீயரை நியமித்து அவரைக் கொண்டே அடுத்த ஜீயர் “அப்பன் சடகோப ராமானுஜ ஜீயரையும்” நியமிக்கச் செய்தார்.-அது முதல் திருமலையில் பெரிய கேள்வி ஜீயர், சின்ன கேள்வி ஜீயர் என்று இரண்டு ஜீயர்கள் இருந்து வருகின்றனர்.

2. அஷ்டதிக்கஜம் – பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர் வைபவச் சுருக்கம்
தனியன்
1. ரம்யாஜாமாத்ரு யோகீந்த்ர பாதஸேவைக தாரகம் :
பட்டநாத முநிம்வந்தே வாத்ஸல்யாதி குணார்ணவம் !
2-வ்ரு சிகே 5திதிபேஜாதம் பரவஸ்த்வம் பூஷணம் |
வரயோகி பதாதாரம் பட்டநாதமுநிம் பஜேI
3. வரயோகி பதாதாரம் பரவஸ்த்வம் பூஷணம் 1
பட்டநாதமுநிம் வந்தே தீபக்த்யாதி குணார்ணவம்
4. வ்ரு சிகே திதிபேஜாதாம் வரயோகி பதாச்ரிதம் |
கார்க்ய வம் ஸமுத்பூதம் பட்டநாதமுநிம் பஜோ
இவர் 74 சிம்மாசனாதிபதிகளில் ஒருவரான நடுவிலாழ்வான் வம்பலத்தில் கார்த்திகை மாதம் புனர்பூச நட்சத்ரத்தில் அவதரித்தார். இவருடைய தகப்பனார் பெயர் ராமாநுஜாசார்யர். இவருடைய திருநாமம் கோவிந்த தாஸரப்பன்.
இவர் மணவாள மாமுநியையே தெய்வமாக கொண்டாடி அவரிடம் 30 ஆண்டுகள் விடாமல் தொண்டு செய்தார். இவருக்கு மாமுநிகள் ‘அழகிய மணவாளப் பெருமாளை” திருவாராதனப் பெருமாளாகக் கொடுத்தார். மேலும் ஒரு முக்யமான ரகஸ்யத்தையும் அருளிச்செய்தார். இவர் ஒரு திருவாடிப் பூரத்திலே “சூடிக்கொடுத்த நாச்சியார்” ப்ரஸாதங்களைக் கொண்டு வந்து ஆதரத்துடன் மாமுநியிடம் கொடுத்தார். அதனால்
மாமுநி இவருக்கு “பரவஸ்து பட்டர் பிரான் தாஸர்” என்று திருநாமமிட்டார். இவர் மாமுநியிடம் ஸந்யாஸ ஆஸ்ரம ஸ்வீகாரம் பெற்று “பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர்” என்று திருநாமமிடப்பட்டார். இவர் “அந்திமோபாய நிஷ்டை’ என்ற நூலை இயற்றியுள்ளார்.
“பிள்ளை லோகம் ஜீயர்” என்ற ப்ரசித்தி பெற்ற ஸந்யாஸி, இவருடைய வம்ஸத்தில் பிறந்தவர். (கி.பி.1525) இவருடைய வம் பரம்பரை விவரம்:

இன்னுலகில் கச்சிதனில் வந்துதித்தோன் வாழியே
எழில் கார்த்திப் புனர்பூசத்திங்குற்றான் வாழியே-மன்னுமறைத் தண்டமிழை மகிழ்ந்துரைத்தான்.வாழியே
மணவாள யோகி மலர்த்தாள் பணிவோன் வாழியே
பன்னு சிச்சன்அனுட்டானம் அறிவித்தான் வாழியே
பாரில் அட்டதிக்கயத்தில் பேர்பெற்றான் வாழியே
சொன்னநெறி மதுரகவி போலுமவன் வாழியே
தூய்மைமிகு பட்டர்பிரான் துணையடிகள் வாழியே–வாழித் திருநாமம்

————–

3.அஷ்டதிக்கஜம் ஸ்ரீ கோவில் கந்தாடை அண்ணன் வைபவச் சுருக்கம்
தனியன்
ஸகல வேதாந்த ஸாரார்த்த பூர்ணாயம்
விபுல வாதூல கோத்ரோத்பவாநாம் வரம் 1
ருசிரஜாமாத்ரு யோகீந்த்ர பதாரயம்
வரத நாராயண மத்குரும் ஸம்ஸ்ரயோ

தேனமருமலர் முளரித் திருத்தாள்கள் வாழியே
திருச்சேலை யிடைவாழி திருநாபி வாழியே
தானமரு மலர்க்கண்கள் தனியுதரம் மார்பம்
தங்குதொங்கு முபவீதம் தடந்தோள்கள் வாழியே
மானபரன் மணவாள மாமுநி சீர்பேசும்
மலர்ப்பவளம் வாய்வாழி மணிமுறுவல் வாழியே
ஆனனமுந் திருநாம மணிநுதலும் வாழியே
அருள்வடிவன் கந்தாடையண்ணன் என்றும் வாழியே-வாழித் திருநாமம்

இவர் வாதூல கோத்ரத்தில் முதலியாண்டான் வம்சத்தில் கி.பி. 1389 புரட்டாசி மாதம் பூரட்டாதி நட்சத்திரத்தில் திருவரங்கத்தில் அவதரித்தார். இவருடைய தகப்பனார் தேவராஜ தோழப்பர். இவருக்கு 7 சகோதரர்கள். இவருடைய இயற்பெயர் வரத நாராயணகுரு. இவருடைய பால்யத்திலேயே இவருடைய தகப்பனார் பரமபதம் அடைந்தார். அதனால் கோவிலில் இவர் வம்சத்தாருக்கு கிடைக்க வேண்டிய மரியாதைகள் கிடைக்காமல் போயிற்று. ராமானுஜர் இவருடைய கனவில் தோன்றி மணவாள மாமுநியை ஆச்ரயிக்கும்
படி தெரிவித்தார்.
கி.பி. 1310ல் முகம்மதியர் படையெடுப்பால் ஏற்பட்ட குழப்பத்தில் இவருடைய வம்சத்திற்கு கிடைக்க வேண்டிய மரியாதைகள் நின்று போயிற்று. கி.பி. 1371ல் நம்பெருமாள் மீண்டும் கோயிலுக்கு திரும்பி வந்த போதிலும் கி.பி. 1415 வரை இவர் வம்சத்திற்கு
அந்த மரியாதைகள் கிடைக்கவில்லை. மணவாள மாமுநி இந்த வம்சத்தாருக்கு மீண்டும் மரியாதைகள் கிடைக்க ஏற்பாடு செய்தார்.-மாமுநிகள் இவருக்கு தம்மிடம் இருந்த அழகிய
சிங்கர் விக்ரஹத்தை திருவாராதநப் பெருமாளாக அளித்தார். மேலும் கீழ உத்தர வீதியில் 16 கால் மண்டபத்தை மடமாகக் கொடுத்தார். வேண்டும் பொழுது பண உதவிகளையும் செய்தார்.இவர் மணவாள மாமுநிகளிடம் மிகுந்த பக்தி விஸ்வாஸம் கொண்டிருந்தார். இவர் உத்தம நம்பியையும், அப்பிள்ளார், அப்பிள்ளை, எறும்பியப்பா (தேவராஜ குரு) ஆகியோரையும் மாமுநிகளிடம் ஆச்ரயிக்கச் செய்தார். மணவாள மாமுநிகளின் நியமனப்படி இவருடைய சிற்றண்ணர் குமாரர் அப்பாச்சியாரண்ணாவையும் தமையனார் போரேற்று நாயனாரையும் வான மாமலை ராமானுஜ ஜீயரிடம் ஆச்ரயிக்கச் செய்தார்.
இவர் மாமுநிகளின் பெருமையைக் கூறும் “கண்ணி நுண் சிறுத்தாம்பு” என்னும் 13 பாசுரங்கள் கொண்ட நூலை இயற்றியுள்ளார். மேலும் ”வரவரமுநி அஷ்டகம்”,
“ராமானுஜார்ய திவ்யாஞ்ஞா” என்னும் நூல்களையும் அருளிச் செய்துள்ளார். மணவாள மாமுநியின் “உபதேசரத்ன மாலைக்கு” முன்னம் “திருவாய் மொழிப் பிள்ளை”
என்ற தனியனை அருளிச் செய்தார்.-மாமுநிகள் இவருடைய ஆசார்யனுக்குரிய நியம
நிஷ்டைகளைக் கண்டு இவருக்கு “பகவத் சம்பந்தாசார்யர்” என்று விருதுகொடுத்து அழைத்தார். தன்னுடைய-8 அஷ்டதிக் கஜங்களில் ஒருவராக நியமித்தார்.
எறும்பியப்பாவும், ப்ரதிவாதி பயங்கரம் அண்ணாவும் தங்களுடைய ப்ரபந்தங்களான வரவரமுநி சதகங்களில்” இவருடைய பெருமையை எடுத்துக் கூறி யுள்ளனர்.
நம்பெருமாள் இவருக்கு “ஜீயர் அண்ணன்”என்று அருளப் பாடிட்டார்.
காஞ்சி பேரருளாளர் இவருக்கு “ஸ்வாமி அண்ணன்” என்று அருளப் பாடிட்டார்.

மாமுநிகள் இறுதிக் காலத்தில் இவர் திருக்கையினால் தளிகை சமைக்கச் செய்து விரும்பி உகந்து அமுதுண்டு மகிழ்வார்.-இவருடைய வம்சத்தின் பெருமைகளைக் கண்டு
மாமுநிகள் இவர் வம்சத்தாரை கீழ்கண்ட 7 கோத்ரக்காரர்களிடமே சம்பந்தம் வைத்துக் கொள்ள அறிவுறுத்தினார்.
1. முதலியாண்டான் வம்சம் வாதூல கோத்ரம்
2. முடும்பை நம்பி வம்சம் ஸ்ரீவத்ஸ கோத்ரம்
3. முடும்பையம்மாள் வம்சம் கௌண்டின்ய கோத்ரம்
4. ஆசூரிப் பெருமாள் வம்சம் ஹாரித கோத்ரம்
5. கிடாம்பி ஆச்சான் வம்சம் ஆத்ரேய கோத்ரம்
6. குமாண்டூர் இளையவில்லி வம்சம் கெளசிக கோத்ரம்
7. வங்கி புரத்து நம்பி வம்சம் பாரத்வாஜ கோத்ரம்
இவர் வைணவ மதத்தையும் எம்பெருமானார் தர்சனத்தையும் நிலைநாட்ட கீழ்கண்ட 8 அஷ்டதிக் கஜங்களை நியமித்தார்.
1. கந்தாடையப்பன் தம்பி
2. திருக்கோபுரத்து நாயனார் அழகிய சிங்கர் தம்பி
3. சுத்தசத்வம் அண்ணன் மருமகன்
4. திருவாழி ஆழ்வார் பிள்ளை மருமகன்
5. கந்தாடை நாயன் குமாரர்- 6-ஜீயர் நாயனார்-மாமுநிகள் குமாரர்-
7. ஆண்ட பெருமாள் நாயனார்–குமாண்டூர் ஆச்சான் பிள்ளை பௌத்ரர்
8. ஐயன் அப்பா


இவருடைய குமாரர் கந்தாடை நாயன் கி.பி. 1408 மார்கழி மாதம் உத்ரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்.-இவருடைய சிற்றண்ணர் குமாரர் அப்பாச்சியாரண்ணா காஞ்சீபுரம் கோவில் நிர்வாகங்களை கவனித்துக் கொண்டிருந்தார். இவர்காஞ்சீபுரம் சென்றிருந்த பொழுது
அப்பாச்சியாரண்ணாவை தேவப் பெருமாளுக்கு நித்ய திருமஞ்சன கைங்கர்யம் செய்து வரும்படி அறிவுரை வழங்கினார்.
திருமலை அநந்தாழ்வான் வம்சத்தில் பிறந்த குன்னத்தூர் ஐயன் என்ற மகாவித்வான். இவரிடத்திலும் இவர் குமாரர் பேரர்களிடத்திலும் மிக்க அன்பு பூண்டு கைங்கர்யங்கள் பல செய்தார். இவர் விபவ வருஷம் (கி.பி. 1448) சித்திரை மாதம் கிருஷ்ணபக்ஷ திருதியை யன்று ஆசார்யன் திருவடிஅடைந்தார்.

4. அஷ்டதிக்கஜம் ஸ்ரீ ப்ரத்வாதி பயங்கரம் அண்ணா’ வைபவச் சுருக்கம்
தனியன்
கர்கடே புஷ்ய ஸஞ்ஜாத் வாதிபீகரமாச்ரயே 1
வேதாந்தாசார்ய ஸத்சிஷ்யம் வரயோகிபதாசரிதம் |

வேதாந்த தேரிக கடாக்ஷவிவ்ருத்த போதம்
காந்தோபயந்த்ருயமிந: கருணைக பாத்ரம்|
வத்ஸாந்வய மநவத்ய குணைருபேதம்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம் 11
இவர் 74 சிம்மாசனாதிபதிகளில் ஒருவரான முடும்பை நம்பி வம்சத்தில் அவதரித்தார். கி.பி. 1361ம் வருஷம் ஆடி மாதம் பூச நட்சத்ரத்தில் காஞ்சீபுரத்தில் அவதரித்தார். இவர் கோத்ரம் ஸ்ரீவத்ஸம். இவருடைய பெயர் “ஹஸ்தகிரிநாதரண்ணா”. இவருடைய தகப்பனார்
அனந்தாசார்யர். தாயார் ஆண்டாள். இவர் வேதாந்த தேசிகனின் குமாரரான நயநவரதா சார்யரிடம் ஸ்ரீபாஷ்யம் பயின்றார்.
இவர் க்ருஹஸ்தாஸ்ரமம் ஸ்வீகரித்துக் கொண்டு பேரருளாளனுக்கு சாலைக் கிணற்றினின்றும் திரு மஞ்சன தீர்த்தம் கொணர்ந்து சமர்ப்பிக்கும் கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார்.
ப்ரதிவாதி பயங்கரர் என்ற திருநாமம் –நரஸிம்ம மிஸ்ரன் என்னும் மாயாவாதி ஒருவன்
இவருடைய குருவான நயநவரதாசார்யரை வாதப்போருக்கு அழைத்தான். அவர் இவரை தேர்ந்தெடுத்து வாதப் போருக்கு அனுப்பினார். நரசிம்ம மிஸ்ரனை இவர் வென்றார். இதைப் பாராட்டி இவருடைய குரு இவருக்கு “ப்ரதிவாதி பயங்கரர்” என்ற விருதை வழங்கி
கௌரவித்தார். மேலும் இவரை ஸ்ரீபாஷ்யத்தை இவ்வுலகில் விசேஷமாக ப்ரசாரம் செய்ய அறிவுறுத்தி விட்டு சில நாட்களில் திருநாட்டுக்கெழுந்தருளினார்.
குமாரர்கள் பிறந்தனர்
இவருக்கு ஸ்ரீனிவாஸாசார்யர், அநந்தாசார்யர், அழகிய மணவாளப் பெருமாள் என்று மூன்று குமாரர்கள் பிறந்தனர்.
அரசன் சிஷ்யரானான்
ஆந்த்ர தேசத்து அரசனான வீர நரஸிம்மராயன்” என்பவர் இவருடைய சிஷ்யனாகி பொன்களையும் பொருள்களையும் கொடுத்தான். இவர் அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை.
திருமலை வாசம்
இவர்திருமலைக்குச் சென்று அங்கு நாள்தோறும் திருவேங்கடமுடையானுக்கு ஆகாச கங்கையிலிருந்து திருமஞ்சன தீர்த்தம் கொண்டு வந்து ஏலாலவங்காதி ஸுகந்த த்ரவ்யங்களை சேர்ந்து சமர்ப்பிக்கும் கைங்கர்யத்தை செய்து வந்தார். இப்படிஇருக்கையில் ஒரு நாள் திருமஞ்சன தீர்த்தம் கொண்டு வந்த பிறகு, அதில் பரிமள த்ரவ்யங்கள் சேர்ப்பதற்கு முன்னர், பக்தர் ஒருவர் மணவாள மாமுநியின் பெருமைகளைப் பற்றிச்
சொல்லிக் கொண்டிருந்த பொழுது அதையே கேட்டுக் கொண்டிருந்து விட்டார். திருமஞ்சனத் தீர்த்தத்தில் பரிமள த்ரவ்யங்களை சேர்ப்பதற்கு தவறி விட்டார். அர்ச்சகர் பரிமள த்ரவ்யங்கள் இல்லாத தீர்த்தத்தை எடுத்து பெரு மாளுக்கு திருமஞ்சனம் செய்து விட்டார். இது தெரிந்து”அண்ணா” மிகுந்த வருத்தத்தில் இருந்தார். ஆனால் திருவேங்கடமுடையான் “இன்று திருமஞ்சன தீர்த்தம் மிகவும் ருசியுடனும் வாசனையுடனும் இருந்தது”’ என்று தெரிவித்தார். இதைக் கேட்ட அண்ணாவும் மற்றவர்களும் “மணவாள மாமுநியின் ப்ரபாவங்களை கேட்டபொழுது அந்த ப்ரபாவங்கள் திருமஞ்சன தீர்த்தத்தில்
கலந்தது தான் இதற்குகாரணம்” என்று தெரிந்து கொண்டனர். அது முதல் மாமுநியை ஸ்ரீரங்கம் சென்றுஸேவிக்கவேண்டும் என்று அண்ணாவுக்கு ஆவல் ஏற்பட்டது..
அண்ணாவின் சேவை அரங்கத்திற்கு தேவை
இதற்கிடையில் ஸ்ரீரங்கத்தில் மாயாவாதி ஒருவன் மாமுநியுடன் வாதப் போர் செய்ய விரும்பி அவருக்கு செய்தியனுப்பினான். மாமுநி தன்னுடைய சிஷ்யரான வேடலப்பை என்பவரைக் கொண்டு அவனை அடக்கினார். வேடலப்பை ஸ்ரீரங்கத்தில் வாசம் செய்யமுடி
யாமல் தன் சொந்த ஊருக்குதிரும்பி விட்டார். மாமுநிக்கு வேடலப்பை போன்ற தர்க்க சாஸ்திர வித்வான் தேவைப்பட்டார். இதற்கு எல்லாத் தகுதிகளையும் உடையவர் ‘ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா” தான் என்று தெரிந்து அவரை ஸ்ரீரங்கத்திற்கு வரவழைக்க மாமுநிகள் ஏற்பாடு செய்தார்.
ஸ்ரீரங்கத்தில் அண்ணா
அண்ணாவும் திருமலையிலிருந்து காஞ்சீபுரம் வந்து அங்கும் மாமுநிகளின் சிறப்பையும் விருப்பத்தையும்அறிந்து ஸ்ரீரங்கம் வந்தார். மாமுநிகளை ஆச்ரயித்து சிஷ்யரானார். ராமானுஜருக்கு கூரத்தாழ்வான் போலே மாமுநி க்கு “ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா” உசாத் துணையாக இருந்தார்.
வெங்கடேச சுப்ரபாதம்
பின்னர் மாமுநி திருமலைக்கு எழுந்தருளினார். “அண்ணாவும் உடன் சென்றார். மாமுநி “அண்ணா”வைக் கொண்டு திருவேங்கடவனுக்கு சுப்ரபாதம், ஸ்தோத்ரம், ப்ரபத்தி மங்களா சாஸநம் இவைகளை அருளிச் செய்யும்படி செய்து அவைகளை தினந்தோறும் காலையில் அனுஸத்திக்கும்படி ஏற்பாடு செய்தார். இந்த ஏற்பாடு இன்று வரை தொடர்ந்து வருகிறது.
ஸ்ரீபாஷ்ய சக்ரவர்த்தி
மாமுநிகள் ஸ்ரீரங்கம் திரும்பிய பிறகு அங்கே கந்தாடையண்ணன் முதலிய சிஷ்யர்களுக்கு ஸ்ரீபாஷ்ய காலக்ஷேபம் ஸாதிக்கும்படி செய்து “அண்ணாவை” ஸ்ரீபாஷ்ய சிம்மாசனத்தில் அபிஷேகம் செய்து “ஸ்ரீ பாஷ்யாசார்யர்” என்ற பட்டம் வழங்கினார்.
திருமலையில் ஒரு வாதப் போர்
வடநாட்டிலிருந்து வந்த ஒரு அத்வைதவாதி ஸ்ரீவைஷ்ணவர்களை வாதப் போருக்கு அழைத்த போது மாமுநி ‘அண்ணாவை” திருமலைக்கு அனுப்பினார். ”அண்ணா” அந்த அத்வைதவாதியை வாதத்தில் வென்று அவனைத் தன் சிஷ்யனாக ஆகச் செய்தார்.மாமுநி திருநாட்டுக்கெழுந்தருளியது மீண்டும் “அண்ணா” ஸ்ரீரங்கம் திரும்பியபின் சில
நாட்களில் மாமுநி திருநாட்டுக்கெழுந்தருளினார். மாமுநி யின் பிரிவைத் தாங்க முடியாமல் ஆறுதலுக்காக இவர் பல திவ்ய தேசங்களுக்கு எழுந்தருளினார். திருநாராயணபுரத்தில் உபய வேதாந்த ப்ரவசனம் செய்தார். பின்னர் காஞ்சீபுரம் எழுந்தருளி அங்கே சில ஆண்டுகள் வாழ்ந்து அங்கிருந்து ஸ்ரீரங்கம் சென்று அங்கு ப்ரதான தர்ஸந நிர்வாகராய் இருந்து காலக்ஷேபங்கள் ஸாதித்துக் கொண்டிருந்தார்.
மீண்டும் திருமலை வாசம்
“தெழிகுரல் அருவி திருவேங்கடத்தில் ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்யத்” திருவுள்ளம் பற்றி திருமலை சென்று “பரவஸ்து ஸ்ரீனிவாஸாசார்யர்” முதலான மகான்களுக்கு சாஸ்த்ரங்களை அதிகரித்துக் கொண்டிருந்தார்.
இயற்றிய நூல்கள்
ஸ்ரீபாஷ்யம், ஸ்ரீபாகவதம், சுபலோபநிஷத், அஷ்டஸ்லோகி, யதிராஜவிம்சதி ஆகிய க்ரந்தங்களுக்கு வ்யாக்யானமும், வரவரமுநி சதகம், வரவரமுநி சுப்ரபாதம், ராமானுஜ சுப்ரபாதம், ரங்கராஜ சுப்ரபாதம், 108திருப்பதி எம்பெருமான்கள் விஷயமாக சுப்ரபாதம்
ஸ்தோத்ரம், ப்ரபத்தி, மங்களம், ஸ்ரீக்ருஷ்ணமங்களம்,ப்ரபத்தி யோக காரிகை, ப்ராசார்ய சப்ததி ரத்ந மாலை,நித்யாராதன விதி, விஜயத்வஜம், ஜீயர் வாழித் திருநாமம், இருபது வார்த்தை, பெரிய ஜீயர் பாதாதி கேசாந்தமாலை, வ்ருத்தி ஸ்தவம் ஆகியவை இவர் இயற்றியநூல்கள்.
திருநாடு எழுந்தருளல்
இவர் 92 ஆண்டுகள்வாழ்ந்து கி.பி. 1453 பங்குனி சுக்ல நவமி புஷ்ய நக்ஷத்ரத்தில் திருநாடு அலங்கரித்தார்.
20வது நூற்றாண்டில் புகழுடன் விளங்கிய “ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசார்யர் ஸ்வாமிய இந்த வம்ஸத்தைச் சேர்ந்தவர்.

5. அஷ்டதிக்கஜம் – எறும்பியப்பா வைபவச் சுருக்கம்
தனியன்
துலா ரேவதி ஸம்பூதம் வரயோகிபதாசரிதம்
ஸர்வ வேதாந்த ஸம்பூர்ணம் அப்பாசார்ய மஹம்ஜே II
இவர் ஸ்ரீவத்ஸ் கோத்ரத்தில் முடும்பை நம்பி வம்சத்தில் ஐப்பசி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் சோளிங்கர் அருகில் சித்தூர் சாலையிலுள்ள எறும்பி என்னும் ஊரில் அவதரித்தார். இவருடைய தகப்பனார் பெயர் – பெரிய சரண்யாசார்யர். ஐயை என்றும் ஸ்ரீரங்கராஜர் என்றும் மேலும் இரண்டு திருநாமங்களும் உண்டு.
எறும்பியப்பாவிற்கு பெற்றோர் இட்ட திருநாமம் தேவராஜர்.

இவருடைய திருவாராதனப் பெருமாள் சக்ரவர்த்தித் திருமகன்.-மாமுநிகளின் பெருமைகளை இவர் தெரிந்திருந்த போதிலும் அவரை ஆச்ரயிக்க இவர் முதலில் விரும்ப
வில்லை. ஒரு சமயம் இவருடைய திருவாராதனப் பெருமாள் கோவிலாழ்வார் கதவு திறக்கப்பட முடியாமல் திருவாராதனம் செய்ய முடியாமல் போனது.
சக்ரவத்த்தித் திருமகன் இவர் கனவில் தோன்றி மணவாள மாமுநிகளை ஆச்ரயிக்கும்படி கட்டளை யிட்டார். கோவில் கந்தாடை அண்ணனும் இவரை மாமுநிகளை ஆச்ரயிக்கும்படி அறிவுறுத்தினார். அதனால் இவர்ஸ்ரீரங்கம் வந்து மாமுநிகளை ஆச்ரயித்தார்.
மணவாள மாமுநிகளிடம் ஈடுபாடு
மாமுநிகளிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டு அவர் விஷயமாக பூர்வதிநசரி, உத்தர திநசரி, ஸ்ரீபைலேசாஷ்டகம், வரவரமுநி சதகம் என்ற க்ரந்தங்கள் எழுதி யுள்ளார். மணவாள மாமுநிகள் அருளிச் செய்த உபதேசரத்ந மாலையின் கடைசியில் சொல்லப்படும் “மன்னுயிர்
காளிங்கே” என்னும் பாசுரம் இவர் இயற்றியது.-இவர் மேலும் 10 க்ரந்தங்களை இயற்றியுள்ளார்.

6. அஷ்டதிக்கஜம் – அப்பிள்ளார் வைபவச் சுருக்கம்
இவருடைய இயற்பெயர் ராமானுஜன்.-இவர் “சம்ப்ரதாய சந்த்ரிகை” என்னும் தமிழ்ப்
பாடல் தொகுப்பை இயற்றியுள்ளார். இது 11 பாசுரங்களைக் கொண்டது. இவை மணவாள மாமுநியைப் பற்றிய முக்கியச் செய்திகள் ஆண்டுகள் இவைகளைத் தெரிவிக்கிறது.
கோவில் கந்தாடையண்ணன் மணவாள மாமுநியை ஆச்ரயித்த பின்னர் அவருடைய பெருமைகளை தெரிந்து கொண்டு இவரும் மாமுநியை ஆச்ரயித்தார். “அந்திமோ பாய நிஷ்டை’யின் எல்லை நிலம் என்று சொல்லுமளவுக்கு மாமுநியிடம் பக்தி கொண்டு அவரையே இறைவனாகக் கருதி வாழ்ந்து வந்தார்.
இவருடைய மரபில் தோன்றியவர்கள் இன்றும் காட்டு மன்னார் கோவிலில் முதல் தீர்த்த மரியாதை களைப் பெற்றுக் கொண்டு ஸ்ரீமந்நாதமுனி சன்னிதியில் கைங்கர்யம் செய்து வருகிறார்கள்.
ஸ்ரீரங்கம் பல்லவராயன் மடத்திலுள்ள (மணவாளமாமுநி சந்நிதி) மாமுநிகள் விக்ரகம், மாமுநிகள் உபயோகித்த திருக்கைச் செம்பைக் கொண்டு உருக்கி, இவரால் செய்யப்பட்டு திருவாராதனம் செய்யப்பட்டுவந்தது.

7. அஷ்டதிக்கஜம் – அப்பிள்ளை வைபவச் சுருக்கம்
இவருடைய இயற்பெயர் ப்ரணதார்த்திஹரர்”.-இவர்கோவில் கந்தாடையண்ணன்மூலம் மணவாள மாமுநிகளின் பெருமைகளை அறிந்து அவரை ஆச்ரயித்தார்.-இவர் 5 திருவந்தாதிகளுக்கும் யதிராஜ விம்சதிக்கும் உரை எழுதியுள்ளார்.
பத்து ஆழ்வார்கள், ஆண்டாள், மதுரகவி ஆகியோருக்கு வாழித் திருநாமங்கள் எழுதியுள்ளார். மேலும் 3பாடல்கள் சேர்த்து மொத்தம் 15 பாடல்கள் எழுதியுள்ளார்.
மணவாள மாமுநிகள் பற்றிய “செய்ய தாமரைத்தாளிணை வாழியே” என்று தொடங்கும் வாழித் திருநாமம் இவரால் அருளிச் செய்யப்பட்டது என்று சிலர் கருத்து.

——————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading