மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -81-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

கீழே
சம்சாரிகளுக்கு இல்லாதது தமக்கு உண்டானவாறே
நெஞ்சு
பகவத் விஷயத்திலே ப்ரவணமாய்த்து என்று கொண்டாடினார் –
விஷயத்தைப் பார்த்தவாறே
முதலடி இட்டிலராய் இருந்தார் –

அவன்  துர்ஜ்ஞேயன் ஆகிலும் அவனை அனுசந்தி என்று
திரு உள்ளத்தைக் குறித்து
அருளிச் செய்து
இவனை இம்மமனஸ் அனுசந்தியா இருக்கைக்கு
ஹேது என்னோ -என்கிறார்

இத்தால்
தம் நெஞ்சு முயலுகிற முயற்சி போராதது என்னும்படி
தமக்கு அவ் விஷயத்தில் உண்டான
ப்ராவண்யம் இருந்தபடி சொல்லுகிறார் –

அவன் பெருமை பார்த்த போது
அறிவொன்றும் இல்லையாத் தோன்றும்
புறம்பே பார்த்த போது குவாலாய் இருக்கும் –

————————————————————————————–

நெஞ்சால் நினைப்பரியனேலும் நிலைப் பெற்றேன்
நெஞ்சமே பேசாய் நினைக்கும் கால் -நெஞ்சத்துப்
பேராது நிற்கும் பெருமானை என் கொலோ
ஓராது நிற்பது உணர்வு ——81-

பதவுரை

என் நெஞ்சமே–எனது மனமே!,
நெஞ்சால் நினைப்பு அரியன் எலும்–(எம்பெருமான்) நெஞ்சாலும் நினைக்க முடியாத பெருமை
வாய்ந்தவனே யாயினும் (அவனுடைய பெருமையை நினையாமல் ஸௌலப்யத்தையே நினைத்து)
நிலைப்பெற்று–காலூன்றி நின்று
பேசாய்–அவனைப் பேசப்பார்
நினைக்குங் கால்–நாம் ஒருகால் நினைத்தாலும்
நெஞ்சத்து–நெஞ்சு தன்னிலே
பேராது நிற்கும்-விட்டு நீங்காமல் நிலைத்து நிற்கின்ற
பெருமானை–எம்பெருமானை
உணர்வு–நமது நெஞ்சானது
ஓராது நிற்பது என்கொலோ–அநுஸந்தியாமல் வாளா விருப்பது ஏனோ?

————————————————————————————–

வியாக்யானம் –

நெஞ்சால் நினைப்பரியனேலும் –
நெஞ்சமே
உன்னாலே நினைக்கப் போகாதாகிலும் –
ஓர் உழக்கைக் கொண்டு கடலை யளக்கப் போகாது இறே –
அப்படியே
ஷூத்ரமான மனசைக் கொண்டு அபரிச்சேத்யனானவனை
பரிச்சேதிக்க ஒண்ணாது இறே  –
அப்படியே அரியனாய் இருந்தானே யாகிலும் –

நிலைப் பெற்றேன் நெஞ்சமே பேசாய் –
ஐஸ்வர்யம் கண்டு பிற்காலியாதே-அனுபவிப்பாய் –
கிண்ணகம் என்று கால் வாங்காதே
ஊன்றி யடி இட்டுத் தரித்து    நின்று
அவனைப் பேசப் பாராய்-

இவர் இங்கனே சொல்லச் செய்தேயும் சற்று மெத்தென்று இருந்தது –
என் தான் –
நீ அவனை மேல் விழுந்து ஆஸ்ரயியாதே
கை வாங்கி இருக்கைக்கு அடி ஏதோ வென்று
ஸ்வ கதமாக வருளிச் செய்கிறார் மேல் –

நினைக்கும் கால் -நெஞ்சத்துப் பேராது நிற்கும் பெருமானை –
இவன் ஒருக்கால் நினைத்துக் கை வாங்கினால்
பின்னை
அவன் நெஞ்சத்து பேராது நிற்குமவன் யாய்த்து
அஹம் ஸ்மராமி -என்கிறபடியே எப்போதும்
தான் நினைத்து நம் ஹிருதயத்தை
விடாதே இருக்கிற சர்வேஸ்வரனை
ஒருக்கால் நினைக்கில் –
நாக்குண்டா நா வெழா  வென்ற நெஞ்சை விட்டுப் போக வறியாதவன்-
கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில் எண்ணிலும் வரும் -திருவாய்மொழி -1-10-2-என்னும்படியே
நாம் ஒருக்கால் நினைத்தால்
ருணம் ப்ரவ்ருத்தம் -என்று ஒருக்காலும் மறவான் –

என் கொலோ ஓராது நிற்பது உணர்வு –
நிரந்தரம் நினைத்தாலும்
நினையாதாரையோ நினைப்பது –

உணர்வு  ஓராது இருப்பது என் கொலோ –
அறிவு நடையாடா நிற்கச் செய்தே
இவனை அனுசந்தியாது இருக்கைக்கு ஹேது ஏதோ –
இவனை இட்டு வேறே சில துரராத தேவதைகளை ஆஸ்ரயிக்க இருக்கிறதோ
அவனை நினையாதே மண்ணை முக்கப் பார்க்கிறதோ
அவனை நினையாதே தாம் உண்டாம் படி எங்கனே –
ஒண் டாமரையாள்  கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -முதல் திருவந்தாதி -67-
அவனை விட்டுத் த்யாஜ்யமான சப்தாதி விஷயங்களில் போகவோ –

————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading