Archive for the ‘மூன்றாம் திரு அந்தாதி’ Category

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -44-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 10, 2014

அவதாரிகை –

நெஞ்சே
உபய விபூதி யுக்தனான சர்வேஸ்வரன்
திருவடிகளை ஆச்ரயிக்கப் பார்
என்கிறார் –

———————————————————————————

உலகமும் உலகிறந்த ஊழியும் ஒண் கேழ்
அலர் கதிரும் செந்தீயும் ஆவான் -பல கதிர்கள்
பாரித்த பைம் பொன் முடியான் அடி இணைக்கே
பூரித்து என்னெஞ்சே புரி —-44—

பதவுரை

என் நெஞ்சே–எனது மனமே!
உலகமும்–உலகங்களும்
ஊழியும்–ஸம்ஹார காலமும்
ஆழியும்–கடல்களும்
ஒண் கேழ் அவர் கதிரும்–அழகிய நிறத்தையும் பரம்பின கிரணங்களை யுமுடைய சந்திர ஸூர்யர்களும்
செம் தீயும்–சிவந்த நிறத்தை யுடைத்தான் அக்நியும்
ஆவான்–ஆகிய இப் பொருள்களெல்லாம் தனக்கு ப்ரகாரமாம்படி நிற்பவனும்,
பல கதிர்கள் பாரித்த–பல கிரணங்களைப் புறப்பட விடுகின்ற
பை பொன் முடியான்–அழகிய பொன் முடியை யுடையவனுமான எம்பெருமானுடைய
அடி இணைக்கே–உபய பாதங்களுக்கே
பூரித்து புரி–பரிபூரணமாக விருப்பங்கொள்ளு.

————————————————————————————

வியாக்யானம் –

உலகமும் –
லோகங்களும் –

உலகிறந்த ஊழியும் –
காலாவஷேஷித காலமும்
சமுத்ரமும் –

ஒண் கேழ் அலர் கதிரும் –
அழகிதாக அலரா நின்றுள்ள ஒளியை யுடைத்தான
சந்திர சூர்யர்களும்
அழகிய நிறத்தை  யுடையராய்க் கொண்டு
விக்ருதராகா நின்றுள்ள சந்த்ராதித்யர்களும் -என்றுமாம் –

செந்தீயும் ஆவான் –
சிவந்த நிறத்தை உடைத்தான அக்னியும்
இவை எல்லாமுமாவான்
தனக்கு பிரகாரமாக யுடையவன்
இத்தால் ஜகதா காரத்தைச் சொல்லுகிறது –

பல கதிர்கள் பாரித்த பைம் பொன் முடியான் –
பரம பதத்திலே எழுந்து அருளி
இருக்கும் படியைச் சொல்லுகிறது

திவி சூர்ய சஹரஸ்ய பவேத் யிகபதுத்தா -கீதை -11-12-என்கிறபடியே
நூறாயிரம் ஆதித்யர்கள் உடைய ஒளியை யுடைத்தாய்
அநேகம் கிரணங்களைப் புறப்பட விடா நின்றுள்ள
ஸ்ப்ருஹநீயமான திரு வபிஷேகத்தை யுடையவனுடைய –

பைம் பொன் முடி
திவி சூர்ய-என்றதுவும் போந்து இருந்தது இல்லை –

அடி இணைக்கே –
அவனுடைய ஒன்றுக்கு ஓன்று ஒப்பான
திருவடிகளிலே –

பூரித்து என்னெஞ்சே புரி –
ஆனைக் கழுத்தில் இருப்பாரைப் போலே பூரணமாய்
ஹ்ருஷ்டமாய்க் கொண்டு
என் நெஞ்சே ஆஸ்ரயி
என்கிறார் –

பூரித்து –
அநாதி காலம் மறந்து இருந்த இளைப்பு எல்லாம் தீர –

பைம் பொன் முடி –
திரு வபிஷேகம் தானே திருவடிகளிலே விழ விட்டுக் கொள்ளும்
நம் கார்யத்துக்கு கடவானவன் என்று கொண்டு
க்ருதக்ருத்யரைப் போலே இரு
என்கிறார் –

—————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -43-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 10, 2014

அவதாரிகை –

ஆஸ்ரிதரான ஸ்ரீ பிரஹலாத ஆழ்வான்  ஒருவனையும்
நோக்கின அளவேயோ
ஆபத்து கரை புரண்டால் எல்லாரையும் தன் பக்கலிலே வைத்து நோக்குவான் ஒருவன் கிடீர்
என்கிறார் –
அவன் சங்கல்பத்திலே யன்றோ லோகம் கிடக்கிறது
என்கிறார் –

————————————————————————————-

சின மா மத களிற்றின் திண் மருப்பைச் சாய்த்து
புனமேய பூமி யதனைத் -தனமாகப்
பேரகலத்துள்  ஒடுக்கும் பேரார மார்வனார்
ஓரகலத்துள்ள உலகு —–43-

பதவுரை

சினம் மா மதம்–கோபத்தையும் மிகுந்த மதத்தையுமுடைய
களிற்றின்–(குவலயாபீட மென்கிற) யானையினுடைய
திண் மருப்பை–திடமான தந்தத்தை
சாய்த்து–முறித்துத் தள்ளினவனும்
புனம் மேய–நல்ல நிலங்களோடு கூடின
பூமி அதனை–பூமியை
தனம் ஆக–நிதியாக நினைத்துக் கொண்டு
பேர் அகலத்துள் ஒடுக்கும்–சிறிய திருவயிற்றினுள் அடக்கிக் காத்தவனும்
பேர் ஆரம் மார்வனார்–சிறந்த ஹாரஙகள் பூண்ட திரு மார்பை யுடையனுமான எம்பெருமானுடைய
ஓர் அகலத்து–ஸங்கல்பரூபமான ஜ்ஞானத்தின்
உலகு உள்ளது–உலகமெல்லாம் உள்ளது.

—————————————————————————————-

வியாக்யானம் –

சின மா மத களிற்றின் திண் மருப்பைச் சாய்த்து –
சினத்தையும் உடைத்தாய்
பெரிய வடிவையும் உடைத்தாய்
மத முதிதமாய்க் கொண்டு
முன்னடி தோற்றாதே வருகிற
குவலயா பீடத்தின் உடைய திண்ணியதான கொம்புகளை முறித்து
அநாயாசேன பறித்து –

புனமேய பூமி யதனைத் –
சேதனர்க்கு நல்ல போகங்களை விளைப்பித்துக் கொள்ளுகைக்கு ஈடான
பிரதேசங்களோடு கூடின பூமியை –

தனமாகப் –
வஸ்துவாக ஆதரித்துக் கொண்டு –

பூமியதனைத் தனமாக –
காடும் ஓடையும் கிடீர்
இவன் நிதி போலே நோக்கிற்று –

பேரகலத்துள்  ஒடுக்கும் –
இஜ் ஜகத் அடங்கப் புக்காலும்
இடம் விஞ்சி இருக்கிற திரு வயிற்றிலே வைத்து நோக்கும்
ஸ்வ பாவனாய்-

பேரார மார்வனார் –
இது செய்யும் இடத்து
ஒப்பனை குறி அழியாமல் செய்ய வல்லனானவன்
இது போலே குணமும் அழகியதாகை என்றும்
தன்னுடைமை யானது ரஷிக்கப்பட்டது என்ற
ஹர்ஷத்தாலே ஒருபடி ஆபரணம் பூண்டால் போலே இருக்கிறபடி –

ஓரகலத்து உள்ளது உலகு –
அத்விதீயமாய்
அபரிச்சேத்யமான
சங்கல்பத்து உள்ளது ஜகத்து –

அன்றிக்கே –
ஓரப்பட்டு இருப்பதான
அனுசந்திக்கப் பட்டு இருப்பதான
சங்கல்பரூப ஜ்ஞானத்து -என்னவுமாம் –

சங்கல்ப்பத்தாலே ரஷிக்க வல்லனாய் இருக்கச் செய்தே
கை தொட்டு செய்கிறது
ஆஸ்ரித வாத்சல்யம்  –

———————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -42-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 10, 2014

அவதாரிகை –

ஒரு நாடாகத் தன் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்டு
நோக்கினான் என்கிற
பிரசங்கத்தாலே
ஒரூருக்காக வந்த விரோதங்களைப் போக்கி
அங்கு உள்ளாரை நோக்கின படி சொல்லுகிறார் –

———————————————————————–

கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி
மாவலனாய்க் கீண்ட மணி வண்ணன் -மேவி
அரியுருவமாகி இரணியனதாகம்
தெரியுகிரால் கீண்டான் சினம் —-42–

பதவுரை

கோவலன் ஆய்–இடையனாய்ப் பிறந்து
ஆநிரைகள்–பசுக் கூட்டங்களை
மேய்த்து–புல்லுந் தண்ணீருமுள்ள விடங்களிலே கொண்டு சென்று) மேய்த்தவனாயும்
குழல் ஊதி–புல்லாங்குழலை ஊதினவனாயும்
மா–குதிரை வடிவு கொண்டு நலிய வந்த கேசி யென்னுமசுரனை
வலன் ஆய் கீண்ட–ஸமர்த்தனாய்க் கொண்டு கிழித்தவனாயும்
மணி வண்ணன்–நீலமணி போன்ற வடிவை யுடையனாயும்
மேவி அரி உருவம் ஆகி–பொருத்தமான நரசிங்க வடிவங்கொண்டு
இரணியனது ஆகம்–இரணியாஸுரனுடைய முரட்டுடலை
உகிரால்–நகங்களினால்
கீண்டான்–கிழிந்தவனாயுமுள்ள பெருமானுடைய
சினம்–சீற்றத்தை
தெரி–(நெஞ்சமே!) தெரித்து கொள்.

——————————————————————————-

வியாக்யானம் –

கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி –
பசு மேய்க்கைக்கு ஈடான யோக்யதை யுண்டாம்படி
இடையனாய்ப் பிறந்து
குழலூதிப் பின்பு
பசுக்களை மேய்த்தான் ஆய்த்து-

பிராமணன் ஒத்துச் சொல்லப் பெறுமா போலே
இடைச் சாதிக்கு உசிதமான பசுக்களையும் மேய்த்துக் குழலையுமூதி
ஆபி ஜாத்யம் –

மாவலனாய்க் கீண்ட –
அப் பருவம் நிரம்பாதே இருக்க
கேசி யுடைய வாயைக் கிழித்த படி –
தான் பிற்காலியாதே-சமர்த்தனாய்க் கொண்டு
நேர் நின்று கேசி வாயைக் கிழித்துப் பொகட்டு-

மாவலனாய்க் கீண்ட –
சௌகுமார்யம் கண்டு
மாட்டான் என்று இருந்தான் –

மணி வண்ணன் –
விரோதியைப் போக்குகையாலே
ஸ்ரமஹரமான வடிவை யுடையனாய்க் கொண்டு
நின்றவன் –
அப்போதை அழகு –

மேவி அரியுருவமாகி –
நரசிம்ஹ வேஷத்தோடு பொருந்தி
ஆவது நரத்வ சிம்ஹத்வம் ஆகிற இரண்டு வடிவு கொண்டால்
பொருந்தாதே இருக்குமோ என்னில்
ஒரு வடிவு போலே பொருந்தின படி
சேர்ப்பாலும் கண்ட சர்க்கரையும் போலே சேர்ந்த படி –

அன்றிக்கே –
இரணியனதாகம் மேவி
இரணியனைக் கிட்டி -என்னவுமாம் –

இரணியனதாகம் தெரியுகிரால் கீண்டான் சினம் –
முருட்டு ஹிரண்யன் உடைய உடலை உகிராலே
கீண்டு பொகட்டவன்-

சினம் தெரி –
அவனுடைய கோபத்தை அனுசந்தித்து
அருள் அன்று நமக்கு உத்தேஸ்யம்
ஆஸ்ரித விரோதிகள் பக்கல் அவனுக்கு உண்டான சினம் உத்தேஸ்யம் –
அச்சினத்தை அனுசந்தி –

அன்றிக்கே –
தெரி உகிர் என்றதாய்
விசதமான உகிர் -என்றதாகவுமாம் –

———————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -41-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 10, 2014

அவதாரிகை –

திரு வுலகு அளந்து அருளின இடம்
ப்ராப்தமாய்த் திரியட்டும்
அவ்விடம் தன்னிலே அந்த
அபதானத்தைப் பேசி
அனுபவிக்கிறார் –

———————————————————————————

மன்னு மணி முடி நீண்டு அண்டம் போய் எண்டிசையும்
துன்னு பொழில் அனைத்தும் சூழ் கழலே -மின்னை
உடையாகக் கொண்டு அன்று உலகு அளந்தான்   குன்றம்
குடையாக ஆ காத்த கோ ———41-

பதவுரை

குன்றம் குடை ஆக–கோவர்த்தன மலையைக் குடையாகக் கொண்டு
ஆ காத்த கோ–பசுக்களைக் காப்பாற்றின ஸ்வாமியானவன்,
அன்று–முன்பொரு காலத்தில்,
மன்னு மணி முடி–பொருந்தின ரத்னங்களை யுடைய கிரீடம்!
நீண்டு–ஓங்கி வளர்ந்து
அண்டம் போய்–அண்ட பித்தையைச் சென்று கிட்ட,
எண் திசையும்–எட்டு திக்குக்களையும்
துன்னு பொழில் அனைத்தும்–(பிராணிகள்) நெருங்கிக் கிடக்கிற பூமண்டலம் முழுவதையும்
சூழ்–வியாபித்த
கழலே–திருவடியினாலேயே
மின்னை உடை ஆக கொண்டு உலகு அளந்தான்–மின்னலைப் பீதாம்பரமாக அணிந்துக்கொண்டு உலகங்களை யளந்தான்.

————————————————————————————-

வியாக்யானம் –

மன்னு மணி முடி நீண்டு அண்டம் போய்-
அழகிய ரத்னங்களாலே சமயப் பட்டு இருப்பதாய்
அங்குத்தைக்குத் தகுதியான
திரு வபிஷேகமானது
அண்ட பித்தி அளவும் சென்று கிட்டி –

எண்டிசையும் துன்னு பொழில் அனைத்தும் சூழ் கழலே –
எட்டுத் திக்கும்
அங்கு உண்டான த்வீபங்களும்
பரப்பின திருவடிகளே யாம்படி வியாபித்து –

அண்டம் போய்-எண்டிசையும் துன்னு பொழில் அனைத்தும் சூழ் கழலே –
அண்டத்தையும்
எட்டுத் திக்குகளையும்
ஆதி ராஜ்ய ஸூசகமான திரு வபிஷேகம் வ்யாபிக்கவும் –

துன்னு பொழில் அனைத்தும் சூழ் கழலே –
சேதனராலே செறியப் பட்ட பூமி அடங்கலும்
திருவடிகளே யாகவும் –

துன்னு பொழில் –
ஜந்து ஜால நிபடமான பூமி என்றபடி –

மின்னை உடையாகக் கொண்டு –
மேக பதத்துக்கும் அவ்வருகே போக வளர்கையாலே
அவ் விடத்தில் உண்டான
மின்னைப் பீதாம்பரமாகக் கொண்டு –

அன்று உலகு அளந்தான்-
மகாபலி தத்தம் கொடுத்த அன்று ஜகத்தை அடங்க அளந்து கொண்டவன் –

குன்றம் குடையாக ஆ காத்த கோ —–
மலையைக் குடையாகத் தரித்துக் கொண்டு நின்று
பசுக்களை நோக்கின நிர்வாஹகன் –

ஒருக்கால் திருவடிகளை யிட்டு ஜகத்தை மறைத்தான் –
ஒருக்கால் மலையை இட்டுத் தன்னை மறைத்தான் –
பிறந்தவன்றே செய்த காரியமும்
ஏழு பிராயத்தே செய்த காரியமும்
லோகத்தையும்
ஒரு ஊரையும்
நோக்கின படி –

——————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -40-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 10, 2014

அவதாரிகை –

இப்படி சர்வாதிகனான சர்வேஸ்வரன்
என் பக்கலிலே வந்து புகுந்த பின்பு
நெஞ்சே
இனி நமக்கு ஒரு குறைகளும் இல்லை கிடாய்
என்கிறார் –

—————————————————————————–

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கருவி வேங்கடத்தான்
மண்  ஒடுங்கத் தான் அளந்த மன் ——-40-

பதவுரை

நல் நெஞ்சே–எனக்குப் பாங்கான மனமே!
விண் ஒடுங்க–மேலுலகங்களெல்லாம் ஒரு முலையில் ஒதங்கும்படி
கோடு–சிகரங்கள்
உயரும்–உயர்ந்தோங்கி யிருக்கப் பெற்றதும்
வீங்கு அருவி–நிறைந்த அருவிகளை யுடையதுமான
வேங்கடத்தான்–திருமலையில் எழுந்தருளி யிருப்பவனும்
மண்–பூமிப் பரப்பெல்லாம்
ஒடுங்க–(திருவடியின் ஒரு பாகத்திலே) ஒருங்கிப் போம்படி
தான் அளந்த–தான் அளந்து கொண்டவனுமான
மன்–ஸ்வாமி யானவன்
உளன் கண்டாய்–(நம்மை ரக்ஷிப்பதனாலே) ஸத்தை பெற்றிருப்பவன் காண்,
உத்தமன்–புருஷோத்தமனான அப்பெருமான்
என்றும் உளன் கண்டாய்–எக் காலத்திலும் (நம்மை ரக்ஷிப்பதிலே தீக்ஷை கொண்டு) இருக்கிறான் காண்,
உள்ளுவார் உள்ளத்து–ஆஸ்திகர்களுடைய மனத்திலே
உளன் கண்டாய்–நித்ய வாஸம் பண்ணுமவன் காண்–

———————————————————————————

வியாக்யானம் –

உளன் கண்டாய் –
பண்டு உளன் அன்றிக்கே
இன்று உளன் ஆனான் என்கிறார் -தம்மைப் பெற்றவாறே –

அசந்நேவ ஸ பவதி -யாய் இருந்தான் –
நாம் நமக்கு இல்லை என்று அஞ்ச வேண்டாம்
அவன் நமக்கு உண்டு கிடாய் -என்கிறார்

நாம் நம்முடைய விநாசத்தைச் சூழ்த்துக் கொள்ளுகைக்கு உளோம்  ஆனாப் போலே யாய்த்து –
அவன் நம்மை உஜ்ஜீவிப்பிக்கைக்கு உளன் ஆனபடி –
அவனுடைய ஜீவனம் நம்முடைய சத்தா ஹேது

இச்சாத ஏவ தவ விஸ்வ பதார்த்த சத்தா -ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -36-
நம்மை உள்ளவர்களாக ஆக்கிக் கொண்டு தான் உளனாக இருக்கின்றான் –

நன்னெஞ்சே-
எம்பெருமான் நம்முடைய சத்தா ஹேது -என்று சொல்லுகைக்கு பாங்கான நெஞ்சே –
அவனுடைய உண்மையைப் பலமாக்கு –

நன்னெஞ்சே –
அத்வேஷம் உண்டான பின்பு இறே-அவன் உண்டாய்த்து –
அத்வேஷமும் உண்டாய் நீயும் உளாயானாய்-
இப்போது இறே சந்தமேனம் ஆய்த்தது  –

உத்தமன்-
நம் பேறு தன் பேறாகக் கொண்டு உளன் கிடாய் –
நம்முடைய ரஷணம் பிரயோஜனமாய்க் கிடாய் அவன் இருப்பது –
அல்லாதார்க்கு அழியச் செய்து கொள்ளுகை ஸ்வ பாவம் ஆனால் போலே
அவனுக்கு ஆக்கிக் கொள்ளுகை ஸ்வ பாவம்   –

என்றும் உளன் கண்டாய் –
நாம் வேண்டாத காலமும்
நம்மை வேண்டி இருக்குமவன் –
சத்தா ஹேது அவன் என்று நினைத்து இரா அன்றும் –

உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்-
செய்ய வேண்டுவது இவ்வளவே கிடாய் –
ஓர் அனுசந்தானமே கிடாய் வேண்டுவது –
புகுரப் புக்கால் விலக்காதார் ஹிருதயத்திலே உளன் –
அன்றிக்கே
அறிந்த அம்சம் அமையும் -என்னுமாம் –

விண் ஒடுங்கக் கோடு உயரும் –
உத்தமன் என்றும் உளன் கண்டாய் -என்கிறத்தை யுபபாதிக்கிறது –

விண் ஒடுங்கக் கோடு உயரும் –
ஆகாசமானது சுருங்கும் படி ஓங்கா நின்றுள்ள
சிகரங்களை யுடைத்தாய் –
உபரிதன லோகங்களும் சில எல்லைகளும்  உண்டு என்று இராதே
இவை வேண்டா வென்று கொண்டு –
ஆகாசாதி லோகங்கள் எல்லாம் ஒடுங்கும் படி –
அன்றியே
த்ரிபாத் விபூதி சங்குசிதமாம்படி-என்றுமாம் –

வீங்கருவி வேங்கடத்தான்-
மிக்க ஜலத்தை உடைத்தாய் உள்ள திரு மலையை
இருப்பிடமாக உடையனானவன் –

மண்  ஒடுங்கத் தான் அளந்த மன் —-
பூமிப் பரப்பு அடங்கலும்
திருவடிகளுக்கு உள்ளே அடங்கும்படி
தான் அளந்து கொண்ட ராஜா –

மண் ஒடுங்க –
திருவடிகளிலே பூமி ஒடுங்க
பரப்பின  திருவடிகளே தோற்றி
பூமி தோற்றாதபடி யளந்து கொண்டான் –

மன் –
ஈரரசு தவிர்த்த படி –

மன்-
உடையவன் –

இந்த்ரன் இழந்தது பெறுகையாலும்
மகாபலியைப் பறித்து வாங்குகையாலும்
இவனே உடையவன் -என்று தோற்றா நின்றது   –

தன்னுடைய சத்தா ஜ்ஞானம் இவனுக்கு பயத்தோடு வ்யாப்தம்
அவனுடைய சத்தா ஜ்ஞானம் இவனுக்கு அபயத்தோடே வ்யாப்தம்
சாஹம் கேசக்ரஹம் ப்ராப்தா த்வயி ஜீவத்யபி பிரபோ
எனக்கு ஒருவரும் இல்லை
நீயும் இல்லை
உன் சத்தைக்கும் என் பரிபவத்துக்கும் என்ன சேர்த்தி உண்டு –

பிரபோ –
என்னையும் என் பர்த்தாக்களையும் போலே
கழுத்துக் கட்டியாய்
ஒட்டை ஓடத்தோடு ஒழுகல் ஓடமாய் இருந்தாய் ஆகில்
எனக்கு கண்ண நீர் பாயுமோ –

ந தே ரூபம் –பக்தா நாம் -ஜிதந்தே
என்ற அவன்
உதவா விடில் அன்றோ வெருப்பாவது-

———————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -39-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 10, 2014

அவதாரிகை –

இப்படி ஜகதாகாரனான சர்வேஸ்வரன்
திரு மலையிலே புகுந்து
சந்நிஹிதனாய்ப் பின்பு
என் ஹிருதயத்தை விட்டுப் போகிறிலன்
என்கிறார் –

————————————————————————————-

இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்
மறையாய்  மறைப் பொருளாய் வானாய்-பிறை வாய்ந்த
வெள்ளத்தருவி விளங்கொலி  நீர் வேங்கடத்தான்
உள்ளத்தின் உள்ளே  உளன் —–39-

பதவுரை

இறை ஆய்–ஸர்வஸ்வாமியாய்
நிலன் ஆகி–பூமிக்கு அந்தர்யாமியாய்
எண் திசையும் தான் ஆய்–எட்டு திக்குக்களிலுமுண்டான ஸகல வஸ்துக்களையும் தனக்கு ப்ரகாரமாகவுடையனாய்
மறை ஆய்–வேதங்களுக்கு ப்ரவர்த்தகனாய்
மறைபொருள் ஆய்–அந்த வேதங்களின் பொருளாயிருப்பவனாய்
வான் ஆய்–நித்ய விபூதி நிர்வாஹகனாய்
பிறை வாய்ந்த–சந்திர பதத்தைக் கிட்டியிருப்பதும்
வெள்ளம் அருவி–மிக்க ஜலத்தை யுடைய அருவிகளினுடைய
விளங்கு ஒலி–விளங்குகின்ற கோஷத்தை யுடைத்தான்
நீர்–நீரை யுடையதுமான
வேங்கடத்தான்–திருவேங்கட மாலையில் வாழ்பவனான எம்பெருமான்
உள்ளத்தின் உள்ளே உளன்–என்னெஞ்சினுள்ளே இருக்கின்றான்

————————————————————————————–

வியாக்யானம் –

இறையாய் –
உபய விபூதி யுக்தனான
சர்வேஸ்வரனாய்-

நிலனாகி –
பூமி யடங்கத் தானாய் –

எண்டிசையும் தானாய்-
எட்டு திக்குகளும்
திக்குகளில் உண்டான சேதனவர்க்கம் அடங்கத்
தான் இட்ட வழக்காய்-

மறையாய்  –
தன்னை உள்ளபடி பிரதிபாதியா நின்ற வேதங்களாய் –

மறைப் பொருளாய்-
அப்படிப் பட்ட வேதாந்த ரகஸ்யமாய்
வேத பிரதிபாத்யன் -என்னுதல்-

வானாய்-
பரமாகாச சப்த வச்யமான
பரமபதத்தையும் பிரகாரமாக உடையனாய்

இப்படியாய்க் கொண்டு
அழியாதவனாவான்
இறை -என்னுதல் –

பிறை வாய்ந்த-
சந்திர பதத் தளவும் கிட்டி இருப்பதாய் –

வெள்ளத்தருவி –
வெள்ளத்தை யுடைத்தான அருவி –
மிக்க ஜலத்தை யுடைத்தான அருவியையும் உடைத்தாய் –

விளங்கொலி  -நீர் வேங்கடத்தான்
விளக்கத்தையும்
த்வநியையும்
உடைத்தான அருவி
இப்படிப் பட்ட ஜல சம்ருத்தியை உடைத்தான
திருமலையை வாசச் ஸ்தானமாக உடையவன் –

உள்ளத்தின் உள்ளே  உளன் —
திருமலையில் நின்று
என்னுடைய ஹிருதயத்தில் புகுர
அவசர ப்ரதீஷனாய்க் கொண்டு
வந்து புகுந்தான் –

அங்குத்தை இருப்பானது என் பக்கலிலே வருகைக்குக் காலம்
பார்த்து இருந்தான் என்று தோற்றி இரா நின்றது –

உள்ளத்தின் உள்ளே  உளன் —
திவ்யஜ்ஞான உபபன்நாஸ் தே ராமம் த்ருஷ்ட்வா மகார்ஷய -ஆரண்யம் -1-10-
அதீந்த்ரிய வஸ்து
கண்ணுக்கு விஷயமான படி –

—————————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -38-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 10, 2014

அவதாரிகை –

இப்படி என்னை வந்து விரும்பினவன் தான்
சால எளியான் ஒருவனோ
சர்வேஸ்வரன் கிடீர்
என்கிறார் –

——————————————————————————-

தானே தனக்குமவன் தன்னுருவே எவ்வுருவும்
தானே தவவுருவும் தாரகையும் –தானே
எரி சுடரும் மால் வரையும் எண் திசையும் அண்டத்து
இரு சுடருமாய விறை –38-

பதவுரை

எவ் உருவும்–எல்லாப் பொருள்களும்
தன் உருவே–அவன் தனக்கு சரீரமாகவேயிருக்கும்,
தவம் உருவும்–தபஸ்ஸு பண்ணிப் புண்ய சரீரமுடையராயிருக்கிற பிரமன் முதலானவர்களும்
தாரகையும்–நக்ஷத்ரங்களும்
தானே–அவன் தன் வடிவாகவே யிருக்கும்,
எரி சுடரும்–ஜ்வலிக்கின்ற அக்நியும்
மால் வரையும்–பெரிய குல பர்வதங்களும்
எண் திசையும்–எட்டு திக்குகளும்
அண்டத்து–மேலுலகிலுள்ள
இரு சுடரும்–சந்த்ர ஸூர்யர்களும்
தானே ஆய இறை–தனக்கு ப்ரகாரமாயிருக்கப் பெற்ற எம்பெருமான்
தனக்கு தானே உவமன்–(ஒப்பற்றனாகையாலே) தனக்குத் தானே உபமானமாயிருப்பவன்.

———————————————————————————–

வியாக்யானம் –

தானே தனக்குமவன் –
தனக்குத் தானே உபமான ரஹீதன்-
தனக்கு ஒப்பாகச் சொல்லலாவானும் தானே  –
புறம்பு இல்லை
ஒப்புச் சொல்லில் தன்னையே சொல்லும் இத்தனை –
இன்னும் ஓர் ஈஸ்வரன் உண்டாகில் இறே ஒப்புச் சொல்லலாவது –

தன்னுருவே எவ்வுருவும் –
உபமான ராஹித்யத்துவக்கு அடி
சகல பதார்த்தங்களும் தனக்குப் பிரகாரமாய்த்
தான் ப்ரகாரியாய்
தனக்கு ஒரு ப்ரகார்யந்தரம் இன்றிக்கே இருக்கை -என்கிறது
சகல ஜந்துக்களும் தனக்கு சரீரம் என்றபடி-

தானே தவ வுருவம் –
தபஸ்ஸூ பண்ணி
புண்ய சரீரமான அதிகாரி புருஷர்களும்
அவனுக்கு பிரகாரம் –

தாரகையும் -தானே –
நஷத்ரங்களும் அவனுக்குப் பிரகாரம் –

தானே எரி சுடரும் –
அக்னியும் –

மால்வரையும் –
குல பர்வதங்களும் –

எண்டிசையும் –
எட்டு திக்குகளும் –

அண்டத்து –
பஞ்ச பூதங்களால் ஆரப்தமான அண்டமும் –

இரு சுடருமாய –
அண்டாந்தர வர்த்திகளான
சந்திர சூரியாதிகளும் ஆகிற
இருவகைப் பட்ட  தேஜ பதார்த்தங்களும் எல்லாம் தான் இட்ட வழக்கு-

இறை –
இவை எல்லாமாய் நின்ற
சர்வேஸ்வரன்
தானே தனக்குமவன் –

——————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -37-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 10, 2014

அவதாரிகை –

இப்படிப் பட்டவன் திருவடிகளிலே
நான் ஒரு வழியாலே அடிமை புக்கேன்
இங்கனே இருந்துள்ள நான்
அவனை ஸ்ப்ருஹணீயனாக புத்தி பண்ணுகை அன்றிக்கே
அவன் தானே என்னை
ஸ்ப்ருஹணீயனாக   புத்தி பண்ணா நின்றான்
என்கிறார் –

————————————————————————————-

அவர்க்கு அடிமை பட்டேன் அகத்தான் புறத்தான்
உவர்க்கும் கருங்கடல் நீருள்ளான் -துவர்க்கும்
பவளவாய்ப் பூ மகளும் பன் மணிப் பூணாரம்
திகழும் திரு மார்வன் தான் ——37–

பதவுரை

உவர்க்கும் கரு கடல் நீர் உள்ளான்–உப்புக் கரிக்கின்ற கரிய கடல்நீரிலுமுள்ளவனாய்
துவர்க்கும் பவளம் வாய் பூ மகளும்–சிவந்த பவளம் போன்ற வாயை யுடையளான பிராட்டியும்
பல் மணி பூண்–பலவகையான ரத்னங்களழுத்தின திருவாபரணங்களும்
ஆரம்–ஹாரங்களும்
திகழும்–விளங்கப்பெற்ற
திருமார்வன் தான்–திருமார்பை யுடையனான எம்பிரான்
அகத்தான் புறத்தான்–உள்ளிலும் வெளியிலும் வாசியறக் கலந்திருக்கின்றான்.
அவற்கு–அப்படிப்பட்ட பெருமானுக்கு
அடிமை பட்டேன்–ஆட்பட்டவனானேன்.

—————————————————————————————–

வியாக்யானம் –

அவர்க்கு அடிமை பட்டேன் –
அவன் திருவடிகளிலே அடிமை புக்கேன்
அஹ்ருதயமாக அடிமை புக்கேன் என்றேன் இத்தனை-என்றுமாம் –

அகத்தான் புறத்தான் –
அவன் பின்னை என் செய்தான் என்னில்
அடிமையிலே அந்வயித்த மாத்ரத்திலே
உள்ளும் புறமும் ஒக்கக்
கை விட மாட்டாதே
சௌபரியைப் போலே பல வடிவு கொண்டு
பூஜியா நின்றான்
விட சக்தன் ஆகிறிலன்-

உவர்க்கும் கருங்கடல் நீருள்ளான் –
பூமியை வளைந்த இந்த உப்புக் கடலிலேயும் கண் வளர்ந்து அருளுவதாக சொல்லா நிற்பார்கள்
கடலுக்குச் சிறப்பான இடம் எங்கும் கண் வளர்ந்து அருளுவதாகச் சொல்லா நிற்பார்கள்
திருப் பாற் கடலைக் கடையச் செய்தே இறே
அல்லாத கடல்களுக்கும் இட்டுச் சொல்லுகிறது –

பூமியைச் சூழ்ந்த லவணோத்தரமாய்
கருத்து இருக்கிற கடலிலே
நீரிலே   கண் வளர்ந்து அருளுமவன் –
நீலக் கடலுள் நெடுங்காலம் கண் வளர்ந்தான் -பெரியாழ்வார் -2-6-6-என்னக் கடவது இறே

திருப் பாற் கடலை வாசஸ் ஸ்தானமாக யுடையவன் -என்றுமாம் –

துவர்க்கும் பவளவாய்ப் பூ மகளும் –
சிறந்த பவளம் போலே இருந்துள்ள
பவளம் போலே இருந்துள்ள அதரத்தை யுடைய
பெரிய பிராட்டியாரையும்

இத்தால்
அகத்தான் புறத்தான் ஆகைக்கு அடி
அவள் முறுவல் பெறுகைக்கு -என்றவாறு –

பன் மணிப் பூணாரம் திகழும் திரு மார்வன் தான் –
நவ ரத்னன்களை உடைத்தான ஆபரணங்களையும்
திரு வாரத்தையும் உடைத்தாய்க் கொண்டு
விளங்கா நின்றுள்ள திரு மார்வை உடையனானவன் –
பன் மணிப் பூணாரம் -என்று ஒரு சொல் ஆகவுமாம்-

அகத்தான் புறத்தான் –
பெரிய பிராட்டியாருக்கு ஸ்ப்ருஹணீயமான மார்வை உடையவன் கிடீர்
பெறாததும் பெற்றானாய் இருக்கிறான் –

அப்படிப் பட்ட ஒப்பனையையும்
குறைவற்ற மேன்மையையும்
பிராட்டி உடைய விருப்பத்தையும்
உடையனானவன் கிடீர்
இப்போது என்னை வந்து விரும்பினான் –

ஒருவனுடைய அபி நிவேசம் இருக்கும் படி என்
என்று ஈடுபட்டுப் பேசுகிறார் –

——————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -36-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 10, 2014

அவதாரிகை –

யாம் தொழுதும் என்றாரே –
மநோ ரதித்த படியே
அனுபவிக்கிறார் –

——————————————————————————

கையனலாழி கார்க் கடல் வாய் வெண் சங்கம்
வெய்ய கதை சார்ங்கம்  வெஞ்சுடர்வாள்  -செய்ய
படை பரவை பாழிபனி நீருலகம்
அடி யளந்த மாயரவர்க்கு —–36–

பதவுரை

பனி நீர் உலகம்–குளிர்ந்த நீரையுடைய கடல்சூழ்ந்த உலகங்களை
அடி–தனது திருவடியினாலே
அளந்த–அளந்துகொண்ட
மாயர் அவர்க்கு–ஆச்சரியச் செய்கையை யுடையரான அப்பெருமாளுக்கு
கனல் ஆழி–தீஷ்ணமான சக்கரமும்
கார் கடல் வாய் வெண் சங்கம்–கருங்கடலில் தோன்றின வெளுத்த சங்கும்
வெய்ய–வெவ்விதான
கதை–கதையும்
சார்ங்கம்–சார்ங்கமும்
வெம் சுடர்வாள்–வெவ்விய சுடரையுடைய நந்தகவாளும் ஆகிய
செய்ய படை–அழகிய இவ்வாயுதங்கள்
கைய–திருக்கையிலுள்ள,
பரவை–கடலானது
பாழி–படுக்கையாயிருக்கின்றது.

——————————————————————————–

வியாக்யானம் –

கையனலாழி –
பிரதிபஷத்தின் மேலே
கனலா நின்றுள்ள அக்னியை உமிழா நின்றுள்ள
திரு வாழி-

கார்க் கடல் வாய் வெண் சங்கம் –
மேகத்தின் உடைய முழக்கத்தை யுடைத்தாய்
கடலைப் பிறப்பாக யுடைத்தாய்
வெளுத்த நிறத்தை யுடைய
ஸ்ரீ பாஞ்ச ஜன்யம்

அன்றிக்கே
கார் போலேயும்
கடல் போலேயும்
சப்திக்கும் த்வனியை உடைய சங்கம் -என்றுமாம் –

அன்றிக்கே
கருத்த நிறத்தை யுடைத்தான கடலைப் பிறப்பிடமாக உடையவன் -என்றுமாம் –

வெய்யகதை -சார்ங்கம்  வெஞ்சுடர்வாள்
வெவ்விதான   கதை
வெவ்விதான ஸ்ரீ சார்ங்கம் –
வெவ்விதான சுடரை உடைய வாள்
இவை ஆகிற –

செய்ய படை-
செய்ய படை என்கிறது
ஆஸ்ரித விரோதி நிரசனத்துக்கு விதேயமாய் இருக்கை-
ஆபரணமான போது புகரைச் சொல்லுகிறது  –
அப்போது அவனுக்கு என் புகுகிருறதோ என்று அஞ்ச வேண்டா
அவை தனக்கு -திசை வாழி எழ -என்று மங்களா சாசனம் பண்ண அமையும்
சுடர் ஆழியும் அப் பாஞ்ச சன்னியமும் -என்னக் கடவது இறே –

கைய –
கையிலே யுள்ள –

பரவை பாழி-
திருப் பாற் கடல் படுக்கை –

பனி நீருலகம் அடியளந்த மாயரவர்க்கு  –
குளிர்ந்த திரையை உடைத்தான
கடல் சூழ்ந்த பூமியைத்
திருவடிகளாலே அளந்து கொண்ட
ஆச்சர்ய பூதன் ஆனவனுக்கு
அழகிய திவ்யாயுதங்கள் இவை
படுக்கை அது –

——————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -35-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

July 10, 2014

அவதாரிகை –

நெஞ்சமே காண் என்று உபதேசித்தாரே கீழே –
அதடியாக மற்றைக் கரணங்கள்-இவர்   தம்மை ப்ரேரிக்கத் தொடங்கிற்றன-
மனஸ் சஹ காரத்தோடேயாய் இருக்கும் இறே  -அல்லாத இந்த்ரியங்களுக்கும் அனுபவம் –
இந்த்ரியங்கள் தான் முற்பட்டு
இவர் மூட்டும் அளவாய்த்து –

————————————————————————————-

கண் காண் என விரும்பும் கண்கள் கதிரிலகு
பூண்டார கலத்தான் பொன் மேனி -பாண் கண்
தொழில் பாடி வண்டறையும் தொங்கலான செம்பொற்
கழல் பாடி யாம் தொழுதும் கை ——35–

பதவுரை

கண்கள்–என்னுடைய கண்களானவை
கதிர் இலகு–ஒளிவிளங்கா நின்றுள்ள
பூண்–திவ்ய ஆபரணங்களையும்
தார்–மாலையையும்
அகலத்தான்–திருமார்விலே உடையனான எம்பெருமானுடைய
பொன்மேணி–அழகிய திருமேனியை
கண் காண் என விரும்பும்–காணவேணுங் காணவேணுமென்று ஆசைப்படாநின்றன.
வண்டு–வண்டுகளானவை
பாடி–இசைப்பாடிக்கொண்டு
அறையும்–ஒலிசெய்யப்பெற்ற
தொங்கலான்–மாலையை யுடையனான அப்பெருமானுடைய
தொழில்–சேஷ்டிதங்களை
பாண் கண் பாடி–ராகத்திலே அமைத்துப்பாடி
யாம்–நாம்
கை–கைகளினாலே
செம் பொன் கழல் தொழுதும்–சிவந்த பொன்போல் சிறந்த (அவனுடைய) திருவடிகளை வணங்குவோம்

—————————————————————————————-

வியாக்யானம் –

காண் காண் என விரும்பும் கண்கள் கதிரிலகு-பூண்டார கலத்தான் பொன் மேனி –
கதிரிலகு-பூண்டார கலத்தான் பொன் மேனி -காண் காண் என விரும்பும் கண்கள்
இவ் வடிவு காண் என்று உபதேசிக்கும் படியாய் இருந்ததோ –

கதிரிலகு பூண் –
புகர் மிக்கு இருந்துள்ள ஆபரணம் -என்னுதல்-
ஒளி விடா நின்றுள்ள  ஆபரணம் -என்னுதல் –

தார் அகலத்தான்
தார் உண்டு -மாலை
அத்தையும் உடைத்தான
அகன்ற மார்பையும் உடையவனானவனுடைய –

பொன் மேனி –
ஸ்ப்ருஹணீயமான திரு மேனியை –

இத்தால்
இவ் இந்த்ரியங்களின் குற்றம் அல்ல -என்றபடி –
காண வேணும் காண வேணும் என்று விரும்பி நின்றன கண்கள்
ஷாம காலத்தில் பசல்கள் சோறு சோறு -என்னுமா போலே –

பாண் கண் தொழில் பாடி –
பாணிலே பாட்டிலே
அவனுடைய அபதானங்களைப் பாடி -என்னுதல் –
பாண் கட்டொழில்-என்று அவனுடைய அபதானங்களைப் பாடி -என்னுதல் –
அன்றிக்கே
பாணர் உடைய தொழிலிலே -அவர்களுடைய ரீதியிலே -பாடி என்னுதல்
அன்றிக்கே
பாண்கள் தொழில்  உண்டாகப் பாடி -என்னவுமாம் –

வண்டறையும் தொங்கலான –
வண்டுகள ஆனவை சப்தியா நின்றுள்ள வளையத்தை உடையனாய் உள்ளவன்
மாலையை உடையவன் -என்னவுமாம்
இத்தால் வண்டுகள் மீட்கில் இ றே
என் இந்த்ரியங்களை மீட்கலாவது -என்றபடி –

செம்பொற் கழல் பாடி யாம் தொழுதும் கை –
நமக்கு இவற்றின் கீழ் குடி இருப்பு அரிதான பின்பு
இனி நாமும் அவனுடைய ஸ்லாக்யமான திருவடிகளை
வாயாரப்   பாடி
கையாலே தொழுவோம் –

——————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –