Archive for the ‘திரு வேங்கடம் உடையான்’ Category

ஸ்ரீ அரவின் அணையான் தான் ஸ்ரீ திருவேங்கடத்தான் என்று ஸ்ரீ ஆழ்வார்கள் அனுபவித்த படி –

April 19, 2022

ஸ்ரீ திருவோணத் திரு விழாவில் அந்தியம் போதில் அரியுருவாகி அரியை அழித்தவனை–தர்மி ஐக்கியம்

திருவோணத் திருவிழவில் –
விசேஷித்து திரு நஷத்ரம் சொல்லாத இடத்துக்கு எல்லாம் இதுவே திரு நஷத்ரமாக கடவது –
திருவோணம் என்கிறது ஜன்ம நஷத்ரம் என்னில் -உகவாதார் அறிந்து அபிசரிப்பர்கள் என்று
அஞ்சி -திருவோணம் என்கிற திரு நாளிலே என்று மறைத்து சொல்லுகிறார்

——–

திருவோணத் திரு விழவில் படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே –தர்மி ஐக்கியம்

திருவோணத் திரு விழவில் –
ஏவின கார்யத்தை குறை யறச் செய்த அளவிலும் பர்யாப்தி பிறவாமையாலே
திருவவதரித்து அருளின திருவோணம் ஆகிற மங்கள திவசத்திலே என்ன தீங்கு
வருகிறதோ என்று மங்களா சாசனம் பண்ணி வர்த்திக்குமவர்கள்
படுத்த இத்யாதி –
அதிலும் பர்யாப்தி பிறவாமையாலே
திரு வநந்தாழ்வான் மேலே சாய்ந்த போதை அழகுக்கு கண் எச்சில் வாராமைக்கு
மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் -படுக்கப்பட்டு ஸ்வ சம்ச்லேஷத்தாலே விகசிதமாக
நின்றுள்ள பணைத்தை உடையனாய் -மென்மை -குளிர்த்தி -நாற்றம் என்கிறவற்றை
பிரக்ர்தியாக உடைய திரு வநந்தாழ்வான் ஆகிற படுக்கையிலே கண் வளர்ந்து அருளுகிற
அழகுக்கு மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் -ஸ்வதஸ் சர்வஞ்ஞனையும் மயங்கப்
பண்ணும் படுக்கை -அவன் ஸ்வ ஸ்பர்சத்தாலே விக்ர்தனாகப் பண்ணும்
இவனுடைய வடிவும் -அவனுடைய வடிவும் -கிடந்ததோர் கிடக்கை -என்கிறபடியே
பரிச்சேதிக்க ஒண்ணாத அழகு இ றே கண் வளர்ந்து அருளுகிற போதை அழகு –
ஒரு வெள்ளி மலையிலே காள மேகம் சாய்ந்தால் போலே கண் வளர்ந்து அருளுகிற போதை-பரபாக ரசத்தை அனுசந்தித்தால் மங்களா சாசனம் ஒழியச் செல்லுமோ என்கிறார்கள்

————

நாகத்தின் அணையானை நன்னுதலாள் நயந்து உரை செய்
மேகத்தை வேங்கடக் கோன் விடு தூதில் விண்ணப்பம்
போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை தமிழ்
ஆகத்து வைத்துரைப்பார் அவர் அடியார் ஆகுவரே–நாச்சியார் –8-10-

நாகத்தின் அணையானை நன்னுதலாள்
நீங்கள் செய்து அறிவிக்கும் அத்தனையே வேண்டுவது –
அத் தலையில் ஒரு குறையும் இல்லை
நம் வரவுக்கு உறுப்பாக படுக்கை படுத்து சாய்ந்து கிடந்தான்-வேங்கடக் கோன் என்கையாலே

நன்னுதலாள்
அப் படுக்கையிலே துகைத்து ஏறத் தகும் அவயவ சோபை உடையவள்

நயந்து உரை செய்-
ஆசைப் பட்டுச் சொன்ன விண்ணப்பம்

மேகத்தை வேங்கடக் கோன் விடு தூதில் விண்ணப்பம்
ராமாவதாரத்தில் ஐந்தர வியாகரண பண்டிதனைத் தூதாக விட்டது
இங்கே திருமலையிலே மேகங்களை தூதாக விடா நின்றாள்
இதுவே வாசி
அங்கு நின்று வந்தாரையே விடுகை இரண்டு இடத்திலும் ஒக்கும்
அவ் வதாரத்தில் பிற்  பாடர்க்கு இழக்க வேண்டாத படி -திருமலையிலே வந்து தூது விடுவார் ஆரோ என்று
அவசரம் பார்த்து இரா நின்றான் யாய்த்து –

———–

செழும் கொழும் பெரும் பனி பொழிந்திட வுயர்ந்த வேய்
விழுந்து உலர்ந்து எழுந்து விண் புடைக்கும் வேம்கடத்துள் நின்று
எழுந்து இருந்து தேன் பொருந்து பூம் பொழில் தழைக் கொழும்
செழும் தடம் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே –-திருச்சந்தவிருத்தம் –60-

——-

அமலனாதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீண் மதிள் அரங்கத்தம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே ——அமலனாதிபிரான்–1-

மந்தி பாய் வட வேங்கட மாமலை வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்
அந்தி போல் நிறத்தாடையும் அதன் மேல் அயனைப் படைத்த தோர் எழில்
உந்தி மேலதன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே––அமலனாதிபிரான்–3

பைத்த பாம்பணையான் திருவேம்கடம் -திருவாய் மொழி -3-3-10-

உலகம் அளந்த பொன்னடியே அடைந்து –திரு வரங்கத்து அம்மானே -5-8-9-

உலகம் அளந்து –அரங்கத்தம்மான் -என்கிறார் –

அன்று ஞாலம் அளந்த பிரான் சென்று சேர் திருவேங்கடம் –திருவேங்கடமுடையான் திருவடிகளை அடைய பாரிக்கும் ஸூரிகளும்
எந்நாளே நாம் மண் அளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கு-என்று பிரார்த்திக்க –
தாள் பரப்பி மண் தாவிய ஈசன் -பூமியை அடைய தன் திருவடிகளால் ஆக்கிரமித்து
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் -என்று தனது திருக்கையாலே
உலகம் அளந்த பொன்னடியைக் காட்டி -தானோங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடம் –
அவன் தானும் இங்கே கண் வளர்ந்து அருளும் பெரிய பெருமாள் -நீள் மதிள் அரங்கம்
என்று திருப் பாண் ஆழ்வார் அருளிச் செய்ததை கேட்டு திரு மங்கை ஆழ்வார் திரு மதிள் செய்து அருளியது –

திருப் பாண் ஆழ்வார் பாசுரம் ஒட்டியே துளங்கு பாசுரத்தில் திரு வேங்கடமுடையான் சரித்ரத்தை கூறி
உலகம் அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் அணி பொழில் திரு வரங்கத்து அம்மானே -என்று
திருவரங்கன் திருவடிகளை சரணாக பற்றுகிறார் -இருவரும் கார்த்திகை மாதத்தில் அவதரித்த சேர்த்தியும் உண்டு இறே –
திரு நஷத்ரங்களும் அடுத்து அடுத்து நஷத்ரங்கள் இறே-

கட்டு எழில் சோலை நல் வேங்கட வாணனை -கட்டு எழில் தென் குருகூர் சடகோபன் சொல்
கட்டு எழில் ஆயிரம் -என்றும் -முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரம் -என்றும் –
இறே நம் ஆழ்வாரும் அருளிச் செய்கிறார் –

திரு வேங்கடத்து என்னானை –உளனாகவே என்னாவில் இன் கவி யான் ஒருவருக்கும் கொடுக்கிலேன் -என்றார் ஆழ்வார் –

வான் திகழும் சோலை மதிள் அரங்கர் வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும்
ஈன்ற முதல் தாய் சடகோபன் -என்றார் ஸ்ரீ பராசர பட்டர் –

பள்ளியாவது பாற் கடல் அரங்கம் இரங்க வன் பேய் முலை
பிள்ளையாய் உயிர் உண்ட வெந்தை பிரானவன் பெருகுமிடம்
வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் என்று எண்ணி நாள் தொறும்
தெள்ளியார் வணங்கும் மலைத் திரு வேம்கடம் அடை நெஞ்சே –1-8-2-

பள்ளியாவது பாற்கடல் அரங்கம் –நாடொறும் தெள்ளியார் வணங்கும் மலைத் திருவேங்கடம் அடை நெஞ்சமே -1-8-2-

எண் திசைகளும் ஏழு உலகமும் வாங்கிப் பொன் வயிற்றில் பெய்து
பண்டு ஓர் ஆலிலைப் பள்ளி கொண்டவன் பான் மதிக்கிடர் தீர்த்தவன்
ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன் ஒள் எயிற்றொடு
திண் திறல் அரியாய் அவன் திருவேம்கடம் அடை நெஞ்சே–1-8-6-

ஆல மா மரத்தினிலை மேலொரு பாலகனாய்
ஞால மேழுமுண்டா னரங்கத் தரவினணையான்
கோல மா மணி யாரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோ ரெழில்
நீல மேனி ஐயோ நிறை கொண்ட தென் நெஞ்சினையே —–9-

நீரார் கடலும் நிலனும் முழுதுண்டு
ஏரால மிளந்தளிர் மேல் துயில் எந்தாய்
சீரார் திருவேங்கட மா மலை மேய
ஆராவமுதே அடியேற்கு அருளாயே–1-10-3-

உண்டாய் உறி மேல் நறு நெய்யமுதாக
கொண்டாய் குறளாய் நிலமீரடியாலே
விண டோய் சிகரத் திருவேங்கடம் மேய
அண்டா வடியேனுக்கு அருள் புரியாயே-1-10-4-

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானு
அண்டர் கோன் அணி யரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே —10–

மேயான் வேங்கடம் காயா மலர் வண்ணன்
பேயார் முலை உண்ட வாயான் மாதவனே–10-5-6-

மன்னா இம் மனிசப் பிறவியை நீக்கி
தன்னாக்கித் தன்னினருள் செய்யும் தன்னை
மின்னார் முகில்சேர் திருவேங்கடம் மேய
என்னானை என்னப்பன் என் நெஞ்சில் உளானே–1-10-6-

சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ!
என் நாவில் இன் கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்
தென்னா தெனா என்று வண்டு முரல் திரு வேங்கடத்து
என் ஆனை என் அப்பன், எம் பெருமான் உளனாகவே–3-9-1-

திருவேங்கடவன் வடவானை -திருவரங்கன் குடபாலானை -இருவரும் ஒருவரே –

திருவுடையாள் மணவாளா திருவரங்கத்தே கிடந்தாய் -2-7-2-

நிச்சலும் தீமைகள் செய்வாய் நீள் திருவேங்கத்து எந்தாய் -2-7-3-

குலமுடைக் கோவிந்தா கோவிந்தா -இவனே திருவேங்கடத்தான் -என்று அழைத்தக்கால்
நலமுடை நாரணன் -இவனே ஜகந்நாதன் -பெரிய பெருமாளானார்-நம்மன்னை நரகம் புகாள்-4-6-5-

அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பன் அன்றோ திருவேங்கடமுடையான் –
திருவாளர் திருப்பதியே திருவரங்கம் – 4-8-10-

சென்னியோங்கு தண் திருவேங்கடமுடையாய் உலகு தன்னை வாழ நின்ற நம்பீ தாமோதரா சதிரா -5–4–1-
கொண்டல் வண்ணன் கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை
அண்டர் கோன் அணி யரங்கன் என் அமுது அன்றோ – அமலனாதி -10-

நல் வேங்கடத்துள் நின்ற அழகப்பிரானார் -11-8-
நாகணை மிசை நம்பரர் செல்வர் பெரியர்-11-10-

விரையார் பொழில் வேங்கடவன் -நிமலன் நின்மலன் -நீதி வானவன் -நீள் மதிள் அரங்கத்தம்மான் -அமலனாதி -1-

மந்தி பாய் வட வேங்கட மா மாமலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்-அமலனாதி –3-

பள்ளியாவது பாற்கடல் அரங்கம் –நாடொறும் தெள்ளியார் வணங்கும் மலைத் திருவேங்கடம் அடை நெஞ்சமே –பெரிய திருமொழி -1-8-2 —

வெருவாதாள் வாய் வெருவி வேங்கடமே வேங்கடமே என்கின்றாளால்
மருவாள் என் குடங்கால் வாள் நெடுங்கண் துயில் மறந்தாள் வண்டார் கொண்டல்
உருவாளன் வானவர் தம் உயிராளன் ஒலி திரை நீர்ப் பௌவம் கொண்ட
திருவாளன் என் மகளைச் செய்தனகள் எங்கனம் நான் சிந்திக்கேனே–5-5-1-

வந்தானோ திருவரங்கன் வாரானோ என்று என்றே வளையும் சோரும்-9-
சேலுகளும் வயல்புடை சூழ் திருவரங்கத்தம்மானைச் சிந்தை செய்த -10-

சிந்தனையைத் தவநெறியைத் திருமாலைப் பிரியாது
வந்து எனது மனத்து இருந்த வடமலையை வரி வண்டார்
கொந்து அணைந்த பொழில் கோவல் உலகு அளப்பான் அடி நிமிர்த்த
வந்தணனை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே-5-6-7-

துளங்கு நீண்முடி யரசர் தம் குரிசில் தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு
உளம் கொள் அன்பினோடு இன்னருள் சுரந்து அங்கோடு நாழிகை ஏழுடன் இருப்ப
வளம் கொள் மந்திரம் மற்று அவற்கு அருளிச்செய்தவாறு அடியேன் அறிந்து
உலகம் அளந்த பொன்னடியே யடைந்து உய்ந்தேன் அணி பொழில் திருவரங்கத்தம்மானே -5-8-9-

வம்பார் புனல் காவிரி அரங்கமாளி என்னாளி விண்ணாளி–தாமரைக் கண்ணனுக்கு அன்றி
என் மனம் தாழ்ந்து நில்லாதே -7-3-4-
உம்பர்க்கு அணியாய் நின்ற வேங்கடத்து அரியை –தீம் கரும்பினை தேனை
நன் பாலினை அன்றி என் மனம் சிந்தை செய்யாதே -5-

அருவி சோர் வேங்கடம் நீர்மலை என்று வாய்
வெருவினாள் மெய்யம் வினவி இருக்கின்றாள்
பெருகு சீர்க் கண்ண புரம் என்று பேசினாள்
உருகினாள் உள் மெலிந்தாள் இது என் கொலோ -8-2-3-

புனை வளர் பூம் பொழிலார் பொன்னி சூழ் அரங்க நகரில் முனிவனை–
கனை கழல் காணும் கொலோ கயல் கண் எம் காரிகையே -9-9-2-
பொழில் வேங்கட வேதியனை நணுகும் கொல் என் நன்னுதலே -9-9-9-

கண்ணன் மனத்துள்ளே நிற்கவும் கை வளைகள்
என்னோ கழன்ற விவை யென்ன மாயங்கள்
பெண்ணானோம் பெண்மையோம் நிற்க வவன் மேய
அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே–11-3-7-

—————————–

இம்மையை மறுமை தன்னை எமக்கு வீடாகி நின்ற மெய்ம்மையை விரிந்த சோலை
வியன் திருவரங்கம் மேய செம்மையைக் கருமை தன்னைத்
திருமலை ஒருவனையானை தன்மையை நினைவார் என் தன் தலை மிசை மன்னுவாரே–திருக் குறும் தாண்டகம் -7-

உலகம் ஏத்தும் தென்னானாய் வடவானாய் குடபாலனாய் குண பாலமதயானாய்–திரு நெடும் தாண்டகம் -9-

கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும்
கடி பொழில் சூழ் கணபுரத்து என் கனியே என்றும்
மன்ற மரக் கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும்
வட திருவேங்கடம் மேய மைந்தா என்றும்
வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே என்றும்
விரி பொழில் சூழ் திரு நறையூர் நின்றாய் என்றும்
துன்று குழல் கரு நிறத்து என் துணையே என்றும்
துணை முலை மேல் துளி சோரச் சோர்கின்றாளே–16-

உலகமுண்ட பெருவாயா–திருவேங்கடத்தானே –உலகுண்ட பெருவாயர் இங்கே வந்து
என் பொரு கயல் கண்ணீர் அரும்பப் புலவி தந்து புனல் அரங்கமூர் என்று போயினாரே-24-

—————————————————-

கயலோ நும் கண்கள் என்று களிறு வினவி நிற்றீர்
அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை கடல் கவர்ந்த
புயலோடு உலாம் கொண்டல் வண்ணன் புன வேங்கடதெம்மாடும்
பயலோ இலீர் கொல்லை காக்கின்ற நாளும் பல பலவே–15-

—————–

என் அமுதம் கார்முகில் போலும் வேங்கட நல் வெற்பன் விசும்போர் பிரான் எந்தை தாமோதரன் -திருவாய்மொழி -2-7-11-

—————————————————-

வேங்கடமும் விண்ணகரும் வெக்காவும் அக்காத
பூங்கிடங்கின் நீள் கோவல் பொன்னகரும் நான்கிடத்தும்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே
என்றால் கெடுமா மிடர் –-ஸ்ரீ பொய்கை ஆழ்வார்–77-

உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் –ஸ்ரீ பொய்கை ஆழ்வார்–99-

மனத்துள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும்
நினைப்பரிய நீள் அரங்கதுள்ளான்-எனைப்பலரும்
தேவாதி தேவன் எனப்படுவான் முன்னொரு நாள்
மாவாய் பிளந்த மகன் ——இரண்டாம் திருவந்தாதி——-28-

பயின்றது அரங்கம் திருக்கோட்டி பன்னாள்
பயின்றதுவும் வேங்கடமே பன்னாள் -பயின்ற
தணி திகழும் சோலை யணி நீர் மலையே
மணி திகழும் வண் தடக்கை மால் —இரண்டாம் திருவந்தாதி–46-

சிறந்த வென் சிந்தையும் செங்கண் அரவும்
நிறைந்த சீர் நீள் கச்சி யுள்ளும் உறைந்ததுவும்
வேங்கடமும் வெக்காவும் வேளுக்கைப் பாடியுமே
தாங்கடவார் தண் துழாயார் ——மூன்றாம் திருவந்தாதி–26–

கொண்டு அங்கு உறைவாற்குக் கோயில் போல் -வண்டு
வளம் கிளரும் நீள் சோலை வண் பூங்கடிகை
இளங்குமரன் தன் விண்ணகர் —–61-

விண்ணகரம் வெக்கா விரிதிரை நீர் வேங்கடம்
மண்ணகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த
தென் குடந்தை தேனார் திருவரங்கம் தென் கோட்டி
தன் குடங்கை நீரேற்றான் தாழ்வு ——62-

————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவேங்கட திருமலை வைபவம் —

March 11, 2022

திருமாலையே பாடிய ஆழ்வார்கள் பதினொருவரில் தொண்டரடிப் பொடியாழ்வார் தவிர பத்து ஆழ்வார்கள் பாடிய
திவ்யதேசம் திருவேங்கடம் எனப்பெறும் திருப்பதி திருமலைக் கோயிலாகும்.
திவ்ய பிரபந்த பாசுரங்களின் எண்ணிக்கையில் முதல் இடத்தைத் திருவரங்கமும் ( 274 பாசுரங்கள்)
இரண்டாம் இடத்தை (203) பெற்ற திவ்ய தேசம் திருவேங்கடமலையும் ஆகும்.

பெரியாழ்வார் ஏழும், ஆண்டாள் பதினாறும், குலசேகர ஆழ்வார் பதினொன்றும், திருமழிசையாழ்வார் பதினைந்தும்,
திருப்பாணாழ்வார் இரண்டும், திருமங்கை ஆழ்வார் அறுபத்து இரண்டும்,
பொய்கை ஆழ்வார் பத்தும், பூதத்தாழ்வார் ஒன்பதும், பேயாழ்வார் பத்தொன்பதும், நம்மாழ்வார் ஐம்பத்து இரண்டும் என
இருநூற்று மூன்று பாசுரப்பதிகங்கள் திருவேங்கட மாமலை உறை வேங்கடநாதனைப் புகழ்ந்துரைக்கின்றன.

பாம்பணையின் மேல் பள்ளி கொண்ட கோலத்தில் திருமால் திகழும் திருக்கோயிலாக திருவெஃகா எனப்பெறும்
காஞ்சிபுர நகரத்துக் கோயிலை பெரும் பாணாற்றுப் படையும், பரிபாடல் மதுரைக்கு அருகில் உள்ள
திருமாலிருஞ் சோலையில் நின்ற வண்ணம் திகழும் நெடியோனின் கோலத்தை விவரிக்கின்றன.

சிலப்பதிகாரம் எனும் அருந்தமிழ் நூலில் இளங்கோவடிகள் காடுகாண் காதையில் பாம்புப்படுக்கையில் பள்ளி கொண்டவாறு
திருமால் திகழும் இடமாகக் காவிரி நடுவண் உள்ள திருவரங்கத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அதே நூலில் கடலாடுகாதையில் வேங்கடமலை பற்றி கூறும் அடிகளார் வேன்றி காதையில் தமிழ் நாட்டு எல்லைகளைக்
குறிக்குமிடத்து வேங்கடமலையையும் குமரிக்கடலையும் பின்வருமாறு சுட்டியுள்ளார்.
‘‘நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்’’ என்பது அவர் வாக்கு.

இங்கு நெடியோன் என்பது திருவேங்கடவனையும், தொடியோள் என்பது கன்னியாகுமரி பகவதியையும் சுட்டுவதாகும்.
எனவே நெடியோனாகிய திருமாலுக்கு வேங்கடமலையில் கோயில் திகழ்ந்து என்பது சிலப்பதிகாரத்தின் கூற்றாகும்.
கடந்த 150 ஆண்டுகளாகத் தமிழ் நாட்டில் பல சமயச் சார்புடையவர்களால் இருவேறு கருத்துக்கள் தொடர்ந்து கூறப்பெற்று வந்துள்ளன.

திருமலைத்திருப்பதி கோயில் கருவறையில் நின்ற கோலத்தில் திகழும் மூலஸ்தானத்து திருமேனி கொற்றவையாகிய
தேவியின் திருவடிவம் என்று ஒரு சாரரும், இல்லை அத்திருமேனி குறிஞ்சிக் கடவுளாகிய முருகப் பெருமானின் திருவடிவமே
என்று தொடர்ந்து பேசியும், எழுதியும் வருகின்றனர்.

இவர்களின் மாறுபட்ட கருத்துக்களுக்கெல்லாம் உரிய பதிலாக கி.பி. 3-4 ஆம் நூற்றாண்டிலேயே இளங்கோ அடிகள்
தம் சிலப்பதிகாரக் காப்பியத்தின் காடுகாண் காதையில் பாடலடிகள் வாயிலாகக் கூறியுள்ளார்.

‘‘வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும் ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி
இருமருங்கு ஓங்கிய இடை நிலைத்தானத்து மின்னுக்கொடி உடுத்து விளங்குவில் பூண்டு நல்நிறமேகம் நின்றது போலப்
பகை அணங்கு ஆழியும் பால் வெண் சங்கமும் தகை பெறு தாமரைக் கையில் ஏந்தி நளங்கிளர் ஆரம் மார்பில் பூண்டு
பொலம்பூ வாடையில் பொலிந்து தோன்றிய செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்’’என்பதே
அவர் விவரிக்கும் திருவேங்கடவனின் திருக்கோலமாகும்.

பண்டு இளங்கோ அடிகள் காலத்தில் திருப்பதி திருமலைமேல் இருந்த திருக்கோயிலின் மூலஸ்தானத்தில்
திருமால் வில்லினைத் தரித்தவாறு மேகம் போன்ற கறுப்பு வண்ணத்தில் பகைவரை அழிக்கக் கூடிய சக்கரத்தையும்,
பால் போன்ற அவருடைய திருக்கைகளில் இடமும் வலமும் ஏந்தியவாறு அழகுடைய மணி ஆரத்தை மார்பிலே தரித்தும்
பொன்னாலாகிய பூ ஆடையைப் பூண்டும் சிவந்த தாமரை போன்ற திருக்கண்களுடன் நின்ற கோலத்தில் காட்சி நல்குகிறார் என்று கூறியுள்ளார்.

சிலப்பதிகாரமே திருப்பதி திருமலைத்தெய்வம் நின்ற கோலத்திருமால் தான் என்று சான்று பகரும்போது,
தேவியின் வடிவம் என்றும், முருகன் வடிவம் என்றும் கூறுவது தேவையற்ற சர்ச்சைகளாகும்.

தமிழ் நாட்டுப் பண்பாட்டுக் கூறுகளை தெளிவுற விளக்கமாக எடுத்துரைக்கும் நூலான அகநானூற்றின் 213 ஆம் பாடல்,
‘‘வினை நவில் யானை விறற் போர்த்தொண்டையர் இனமழை தவிழும் ஏற்றரு நெடுங்கோட்டு ஓங்கு வெள் அருவி வேங்கடம்’’எனக்கூறி
திருவேங்கடமலை தொண்டைமான் மன்னர்களுக்கு உரிய மலை என்பதைத் தெளிவாகப் பதிவு செய்துள்ளது.

குறுந்தொகையின் 260 ஆம் பாடலும் தொண்டைமான் மன்னர்களின் மலையே வேங்கடம் என உரைக்கின்றது.
வேங்கட கோட்டத்து மன்னன் புல்லி என்பானின் வேங்கடமலையின் சிறப்புக்களை அகநானூற்றின் எட்டுப் பாடல்கள், தெளிவுற உரைக்கின்றன.
அப்பெருமகன் களவர் குலத்தோன்றல் என்பதையும், தொண்டைமான் எனப்பட்டம் புனைந்த அவன் மரபினரே பிற்காலத்தில்
காஞ்சியைத் தலை நகராகக் கொண்டு ஆட்சிபுரிந்தனர் என்பதையும் சங்கத்தமிழ் நூல்கள் எடுத்துரைக்கின்றன.

10ஆம் நூற்றாண்டில் கி.பி, 952ல் பராந்தகச் சோழனின் ஆட்சியில் தொண்டை மண்டலம் வியத்தகு முறையில் வளர்ந்ததால்,
நிறைய பொன்னாபரணங்களை அளித்தான். சைவர்களும், வைஷ்ணவர்களும் திருமாலின் திருவடியைப் போற்றினர்.

பெரும்பான்மையான தஞ்சைச் சோழர்கள் சைவர்களாக இருந்தாலும் திருமலைக்குச் சொத்துக்களை அளித்தபடி இருந்தனர்.
11 ஆம் நூற்றாண்டில், தென்பகுதியில் சோழர்களின் ஆட்சிக் காலம் பொற்காலமாகத் திகழ்ந்தமையால் பெற்ற
ராஜராஜ சோழனின் காணிக்கைகளோடு சோழ அரசி ‘அம்மார்’ என்ற மாதரசி 57 கழஞ்சுப் பொன்னை திருமலை ஆலயத்திற்கு அளித்தாள்.

கி.பி. 1016ல் சோழப் பேரரசில் வாழ்ந்தத பிராமணர் ஒருவர் 26 கழஞ்சு பொன் அளித்தார் என்ற செய்தி கூறப்பட்டுள்ளது.
13 ஆம் நூற்றாண்டில் யாதவ, சாளுவ, காகதீய, ஹொய்சாள மன்னர்கள் இத்திருக்கோயிலைப் போற்றி நிலங்களும் பொருட்களும் கொடுத்தனர்.
கி.பி. 1130ல் ஸ்ரீ ராமனுஜர் திருப்பதி ஆலயத்தின் நிர்வாகம், வழிபாடு முதலியவற்றைச் சீர்படுத்தி ‘ஜீயர் களை’ நியமித்து
ஆலயத்தின் நிர்வாகத்தை அவர்களிடம் ஒப்படைத்தார்.

1356ல் விஜய நகர மன்னரான சாளுவமங்கதேவர் ஆட்சிக் காலத்தில் திரும்பவும் திருக்கோயிலுக்குப் பொன் வேய்தல் திருப்பணி நிகழ்ந்தது.
விஜயநகர சாம்ராஜ்யத்திற்கு திருமலைத் தெய்வம் குலதெய்வமானபடியால் பொருள் வளம் பெருகத் தொடங்கிற்று.
இரண்டாம் ‘ஹரிஹரர்’ 1404ல் ஸ்ரீ வேங்கடேஸ்வராய நமஹ என்ற மந்திரத்தினைப் பதிக்கச் செய்த நாணயத்தினை வெளியிட்டார்.

—————-

அஞ்சனாத்ரி த்ரேதா யுகத்தில் –
வால்மீகி ராமாயணம் திருவேங்கடம் குறிப்பு உண்டே

————

செக்கர் மா -திருவாசிரியம் போல்

———-

கம்பர் -கம்பத்தில் இருந்து வந்த நரஸிம்ஹர் பெயர்
ஆச்சார்யர்கள் -ஸ்ரீ வைஷ்ணவர்
தொங்கல் பாசுரம் -கம்பர் -மூன்று
திருவெழு கூற்று இருக்கை -சிறிய திருமடல் -பெரிய திருமடல்
சடகோபர் அந்தாதி சாதித்து

திரு மறையோர் வாழும் திருவேங்கடம் -கம்பர்
அநந்தாழ்வான் இருந்தமையைக் காட்டி
ஆக இவர் பராசர பட்டர் சிஷ்யர்
புலியும் யானையும் சேர்ந்து வாழும் திருமலை
புகு மதத்தால் -தேன் விண்ட மலரால் வாழ்த்தும் திருவேங்கடம்
வேங்கை -முயல் என்று சந்திரன் மேல் -மதியின் ஒண் முயலைப் பாய்ந்து -ஆழ்வார் பாசுரம் போல் கம்பர்
மோக்ஷம் அடைவார் திருமலையில் தேடாதீர் -சுக்ரீவன்
கிட்டே கூடப் போகாதீர் –
திருமலை -சர்வாதிகாரம்
திருவேங்கமுடையான் -அதிகிருதா அதிகாரம்
அவனை விட பெருமை என்பதால் -திரு மலையையே பாடினார் கம்பர்
மலையே திரு உடம்பு -ஆழ்வார்
மலை ஒன்றுமே தொழ வினைகள் போமே
ஆச்சார்யர் கோஷ்ட்டியில் கேட்ட அர்த்தங்கள் கம்பர் அருளிச் செய்கிறார்

—————-

ஆராத்தி ஏழை செல்வம்
காணே -உள் கண் கட் கண் -ஞானம்
விகடே-தாப த்ரயம் போக்க திரு மலைக்கு வா
தடங்கல் -திருமலைக்கு வந்தால் திருப்பம் உண்டாகும்
க்ரீம் கச்ச
ஸ்ரீ பீடஸ்ய
ஸ்ரீ நிவாஸன் -மஹா லஷ்மிக்கு பீடம் இவன்
அகலகில்லேன் இறையும்
சத்வம் நிறைந்த அடியார்களுடன் நாடி வா
உரியவனாய் ஆவாய்
பரன் சென்று சேர் மலை ஒன்றையுமே தொழ வினைகள் அனைத்துமே போகுமே
வேதத்தால் மங்களா ஸாஸனம்
பஞ்சாயுதம்
ஐந்து மொன்றும் அஷ்ட குண சாம்யம்
ஐம்பூதங்கள் சரீரம் பிறப்பு அடைய மாட்டான்

————–

சமயம் கடந்த, தமிழ்ச் செல்வரான இளங்கோவடிகள்! (3rd CE)
வேங்கடம் என்னும் மலையையும் பாடுகிறார்

= சமயம் கடந்து, தமிழைத் தமிழாய் அணுகி!
= துதிப் பாட்டாய் இல்லாது, இயற்கையும் தமிழுமாய்!
= வேங்கட மலை மேல் நிற்பது யார்? அதையும் சொல்லிடறாரு இளங்கோவடிகள்!

சிலப்பதிகாரம் காட்டும் – வேங்கட மலையில் இருப்பது யார்?

வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை-
விரி கதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி,
இரு மருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து,
மின்னுக் கோடி உடுத்து, விளங்கு வில் பூண்டு,
நல் நிற மேகம் நின்றது போல

பகை அணங்கு ஆழியும், பால் வெண் சங்கமும்,
தகை பெறு தாமரைக் கையின் ஏந்தி,
நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு,
பொலம் பூ ஆடையின் பொலிந்து தோன்றிய
செங் கண் நெடியோன் நின்ற வண்ணமும்!

நூல்: சிலப்பதிகாரம் – மதுரைக் காண்டம் – காடு காண் காதை (lines 41-51)
கவிஞர்: இளங்கோ அடிகள்

வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை

நீர் பெருகி அருவிகள் பாயும் வேங்கட மலை!
அந்த ஓங்கிய மலை உச்சியிலே மலைப் பாதையில் நடந்து செல்லும் போது,
ஆங்காங்கே சில்லென்று சிற்றருவிகள்!

விரி கதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி,
இரு மருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து

கதிரவனும் திங்களும் மாறி மாறிக் காயும் மலை உச்சி!
ஆங்கே, இரண்டு பக்கத்து மலைக்கும் இடையே…

மின்னுக் கோடி உடுத்து, விளங்கு வில் பூண்டு,
நல் நிற மேகம் நின்றது போல

கோடி = புதுத் துணி
பூவுக்கே வழியில்லாமல் இருந்த இறைவனுக்கு, வைரக் கிரீடம்-தங்கத் தட்டு போன்ற Capitalistic வித்தைகள்;
ஆனா, ஆழ்வார்களின் வேங்கடவன் Business வேங்கடவன் அல்லன்; குறையொன்றுமில்லாக் குன்றத்து விளக்கன்;

கோடி = திருமணக் கூறைப் பட்டு; அதை உடுத்தி,
தோளிலே வில்லேந்தி…
நல்ல கருப்பான மேகம்..
மழை பொழியத் தயாராய் நிற்பது போல், மலை மேல்

பகை அணங்கு ஆழியும், பால் வெண் சங்கமும்,
தகை பெறு தாமரைக் கையின் ஏந்தி

* பகை அஞ்சும் ஆழி = (சக்கரம்)
* பால் வண்ணச் = (சங்கு)
தன் தாமரைக் கையிலே ஏந்தி = யாரு சங்கு-சக்கரம் ஏந்தி இருப்பா?
அவனே அவன்! = வேங்கட மலை மேல் நிற்பவன்!

நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு,
பொலம் பூ ஆடையின் பொலிந்து தோன்றிய

அழகான ஆரம் – அதை மார்பிலே பூண்டு..
பொற்பூ ஆடையில், பொலியத் தோன்றும்
(இன்னிக்கும் பூ-ஆடை = பூலங்கி சேவை உண்டு; ஒவ்வொரு வியாழக் கிழமையும் “பூலங்கி தரிசனமுலு“;
பூவால் நெய்த ஆடை = பொலம் பூ ஆடையில் பொலியத் தோன்றிய -ன்னு அன்றே காட்டும் இளங்கோ)

செங் கண் நெடியோன் நின்ற வண்ணமும்!

செங் கண், நெடியோன்! = சங்கத் தமிழ்க் கடவுள்! முல்லை நிலத் தொன்மம்;
திருமால் என்னும் அவன் = அவனே, வேங்கட மலையில் நின்ற வண்ணமே!

ஒரு பக்கம் கதிரவன் – மறு பக்கம் நிலவு! நடுவால கருமேகமாம்
அதே போல்…
ஒரு பக்கம் ஆழி(சக்கரம்) – மறு பக்கம் வெண் சங்கு! நடுவால கருத்த மாயோன்
உவமை காட்டும் இளங்கோ அடிகளின் தமிழ்ச் சுவை, சொல் அடர்த்திச் சுவை!

——–

இளங்கோ மட்டுமல்லாது, முற்பட்ட எட்டுத் தொகையிலும்.. “வேங்கட மலை மேல் திருமால்”!

பருவம் வாய்த்தலின் இருவிசும்பு அணிந்த,
இருவேறு மண்டிலத்து இலக்கம் போல,
நேமியும் வளையும் ஏந்திய கையாற்,
கருவி மின்ன விரி இலங்கும் பொலம்பூண்,
அருவி உருவின் ஆரமொடு அணிந்த, நின் திருவரை அகலம்!

வேங்கடத்தின் மேல் நிற்பது = நேமியும் வளையும்-சக்கரமும் சங்கும்..
ஏந்திய கையான் என்றே காட்டும் தமிழ்த் தகைமை!

மாயோன் என்ற முல்லை நில நடுகல்…
பிற் சங்க காலத்தில் “பெருந்தெய்வம்” ஆகி விட்டாலும்…,

அந்த ஆயர்க் குடி வழக்கங்களே இன்னிக்கும் கைக்கொள்ளும் தொன்மம்!
அந்தணர்களுக்கு முதல் தரிசனம் இல்லை;
இன்றளவும்… ஆயர்-கோனாரே, கதவம் திறப்பித்து, முதல் காட்சி காணும் முன்னுரிமை!

வேங்கடேஸ்வரன், பாலாஜி போன்ற வடமொழிப் பெயர்களால், இன்று சூழ்ந்து நின்று Capital Clout ஆக்கி விட்டாலும்…
திருவேங்கடமுடையான், திருமலை-அப்பன், முல்லையின் மாயோன்,
மலை குனிய நின்றான், மாயோன் மேயக் காடுறைக் கடவுள்… என்பதே சங்கத் தமிழும்,
ஆழ்வார்களும், “ஆசையால் பராவி” அழைத்த தமிழ்த் திருப்பெயர்கள்!

* சமயம் சாராச் செந்தமிழ்ச் செல்வர் இளங்கோ காட்டும்… வேங்கடவன் – இவனே!
* எட்டுத் தொகைச் சங்கத் தமிழும் காட்டும்… வேங்கடவன் – இவனே!
* இவனே – அவன் எவனே

———–

திருமகளை திருமார்பில் தரித்த திருமால் உறையும் பதி என்பதால், இதற்கு ‘திருப்பதி’ என்ற பெயர் வந்தது.

கிருஷ்ண அவதாரத்தில், பகவான் தன்னுடைய திருக்கரங்களால் கோவர்த்தன மலையைத் தாங்கினார்.
தன்னை ஏந்திய கிருஷ்ணனை, தான் தாங்க வேண்டும் என விரும்பியதாம் கோவர்த்தன மலை.
அதன்படி இந்த கலியுகத்தில் திருப்பதி ஏழுமலையானை திருவேங்கட மலையாய் இருந்து தாங்கி நிற்பதாக புராணங்கள் சொல்கின்றன.
வேங்கடாத்ரி,
சேஷாத்ரி,
வேதாத்ரி,
கருடாத்ரி,
விருஷபாத்ரி,
அஞ்சனாத்ரி,
ஆனந்தாத்ரி எனும் ஏழு சிகரங்களுடன் வேங்கடமுடையானைத் தாங்கி நிற்கிறது, வேங்கட மலை.

வேங்கட மலை:
வேம் என்றால் பாவம், ‘கட’ என்றால் ‘நாசமடைதல்’.
பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இதற்கு ‘வேங்கட மலை’ என்று பெயர்.
இம்மலையில் வெங்கடாசலபதியாக (ஸ்ரீனிவாசன்) மகாவிஷ்ணு காட்சி தருகிறார்.

சேஷ மலை:
பெருமாளின் அவதாரத்திற்காக ஆதிசேஷன் மலையாக வந்தார்.
இது ஆதிசேஷன் பெயரால் ‘சேஷமலை’ என்று அழைக்கப்படுகிறது.

வேதமலை
வேதங்கள் இங்கு மலை வடிவில் தங்கி எம்பெருமானை பூஜித்தன. எனவே இது ‘வேத மலை’ எனப்பட்டது.

கருட மலை:
இங்கு சுவாமியை வணங்க வந்த கருடாழ்வார் வைகுண்டத்திலிருந்து ஏழுமலையை எடுத்து வந்தார்.
அதனால் இது ‘கருட மலை’ எனப் பெயர் பெற்றது.

விருஷப மலை:
விருஷபன் என்ற அசுரன், இங்கு சுவாமியை வணங்கி மோட்சம் பெற்றான்.
அவனது பெயரில் இது ‘விருஷப மலை’ எனப் பெயர் பெற்றது.

அஞ்சன மலை:
ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனை. தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஆதிவராகரை வேண்டி தவமிருந்தாள்.
அதன் பயனாக ஆஞ்சநேயரைப் பெற்றாள். இவளது பெயரில் ஏற்பட்ட மலை ‘அஞ்சன மலை’ எனப்படுகிறது.

ஆனந்த மலை:
ஆதிசேஷன், வாயு பகவானுக்கிடையே போட்டி ஏற்பட்டபோது, மகாவிஷ்ணு நடுவராக இருந்தார்.
இருவரும் பலத்தில் சமமானவர்கள் என்று தீர்ப்பளித்தார். இதனால் வாயுவும் ஆதிசேஷனும் ஆனந்தம் அடைந்தனர்.
இதன் காரணமாக இது ‘ஆனந்த மலை’ என்று பெயர் பெற்றது.

ஒருமுறை பூமாதேவியைப் பாயாகச் சுருட்டி பாதாளத்தில் அடைத்து வைத்தான் இரண்யாட்சன் என்னும் அசுரன்.
திருமால் பூமாதேவியைக் காக்கும் பொருட்டு வராகமாக அவதரித்தார்.
பின்பு இரண்யாட்சனுடன் போரிட்டு அவனைக் கொன்று பூமாதேவியை மீட்டார்.
பூமித்தாயை தன் மடியில் தாங்கி வராக மூர்த்தியாய் தேவர்களுக்கு காட்சிக்கொடுத்தார்.
அப்போது பிரம்மதேவன் திருமாலை வேண்டி, ‘வராக மூர்த்தியாகியத் தாங்கள், கலியுக மக்களைக் காக்கும் பொருட்டு
திருவேங்கடத்தின் சேஷாத்ரி சிகரத்தில் எழுந்தருளவேண்டும்’ என்றார்.
அதன்படி வராகமூர்த்தி திருமலை எனும் திருவேங்கடத்தில் எழுந்தருளினார்.

திருவேங்கடம் என்பதற்கு இருவகை பொருளுண்டு.
ஒன்று தன்னை அண்டியவர்களுடைய பாவங்களை எரித்துவிடுதல்
மற்றொன்று தன்னை அண்டியவர்களுக்கு அழிவில்லாத ஐஸ்வரியங்களைத் தருதல் .
சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இத்தலத்தை திருவேங்கடம் என்றே குறிக்கின்றன.
திருமலையை மேல்திருப்பதி என்றும் அழைக்கிறார்கள்.
திருமகளை திருமார்பில் தரித்த திருமால் உறையும் பதி என்பதால், இதற்கு ‘திருப்பதி’ என்ற பெயர் வந்தது.

————–

இளங்கோ -சேர மன்னனின் தம்பி இளவல் என்பர்
கோவலன் -கோபாலன் என்பதின் மருவு
இளங்கோ வுடன் எவ்வாறு நடந்தனையோ
ஜைனர் வைஷ்ணவர் சம்பந்தம் உண்டே
புத்தர் சைவர் சம்பந்தமும் உண்டே
ஜைனர் வழிபாட்டில் ஆச்சார்ய சம்பாவனை ராமானுஜருக்கு உண்டாம்
ஜைனர்கள் வழிபாட்டு ஸ்தலங்களில் கீழ் உள்ள ஸ்லோகம் கல்வெட்டுக்களில் உண்டே

பாஷண்ட ஸாகர மஹா படபா முகாக்நி
ஸ்ரீ ரங்க ராஜ சரணாம் புஜ மூல தாஸ
ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயீ
ராமா நுஜோ விஜயதே யதிராஜ ராஜ—-ஐந்தாம் ஸ்லோகம்–

படபா என்பது ஒரு பெண் குதிரையின் பெயராகும்.
அது கடலுக்கு அடியில் தனது முகத்தில் எப்போதும் நெருப்புடன் உள்ளதாகும்.
ப்ரளய காலத்தின் போது கடலிலிருந்து வெளி வந்து உலகை அழிக்கும் என்பது புராணங்கள் கூறுவதாகும்.

பாஷண்டர்கள் என்ற கடலுக்கு இப்படிப்பட்ட படபா அக்னி போன்று எம்பெருமானார் உள்ளார்.

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைத் தனது தலையில் வைத்தபடி நின்று நீச மதங்களை அழித்தார்.

ஸ்ரீமந் நாராயணன் அமர்ந்துள்ள பரமபதம் செல்லும் வழியைக் காட்டினார்.

இப்படிப்பட்ட எம்பெருமானாருக்குப் பல்லாண்டு, யதிகளின் தலைவருக்குப் பல்லாண்டு.

1-பாஷண்ட ஸாகர மஹா படபாமுகாக்நி –
பாஷண்டர்களாகிற கடலின்
கொந்தளிப்பை யடக்கும்
விஷயத்தில்

2-பாடபாக்நி போன்றவரும் –
அவர்களுடைய பொங்குதலை அடக்கி ஒழித்தவர்
படபா –என்று பெண் குதிரைக்கு பெயர்
கடலின் இடையிலே ஒரு பெண் குதிரை இருப்பதையும்
அதன் முகத்திலே நெருப்பு ஒரு காலும் அவியாது இருப்பதையும்
மழை நீர் முதலியவற்றால் கடல் பொங்காத படி
அதிகமாய் வரும் நீரை அது உறிஞ்சி நிற்பதாகவும்
அதுவே பிரளய காலத்துக் கடலில் நின்றும் வெளிப்பட்டு
உலகங்களை எரித்து அளிப்பதாகவும்
புராணங்கள் கூறும் –

3-ஸ்ரீ ரங்க ராஜ சரணாம் புஜ மூல தாஸ –
ஸ்ரீ ரங்க நாதனுடைய
திருவடித் தாமரைகளிலே
பரம பக்தி யுக்தரும் –

4-ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயீ-
ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ள
திரு மா மணி மண்டபத்தைச் சேரும்
வழியைத் தந்து அருள்பவரும் –

5-ராமா நுஜோ விஜயதே யதிராஜ ராஜ –
யதிகளுள் மிகச் சிறந்தவருமான
எம்பெருமானார்
சர்வ உத்கர்ஷ சாலியாக விளங்கா நின்றார்

தென்னரங்கன் கழல் சென்னி வைத்து
நீசச் சமயங்களை நீக்கி
அடியார்க்கு உஜ்ஜீவன உபாயம் காட்டி
அருளா நின்ற எம்பெருமானார்
சகல வைபவங்களும் பொலிய வாழ்ந்து அருளா நின்றார் என்றது ஆயிற்று –

—————

கோவில் வரலாறு : தொண்டைமான் எனும் தொண்டை மண்டலத்தை ஆண்டு வந்த மன்னன் ஒருவன்
முதன் முதலாக கோவில், பிரகாரம் கட்டி தினசரி வழிபாட்டிற்கு வழிசெய்தான் எனக் கூறப்படுகிறது.
அவனைத் தொடர்ந்து பல சோழ மன்னர்கள் பல சேவைகளை செய்துள்ளனர்.
ஆனால் இன்றுள்ள வளங்களில் பெரும்பாலானவை விஜயநகர பேரரசுக் காலத்தில் வந்தவை.
கிருஷ்ணதேவராயர் இக்கோவிலுக்கு பலவசதிகளை செய்து கொடுத்து எக்கச்சக்கமான தங்க வைர ஆபரணங்களையும் பரிசளித்தார்.

1843லிருந்து 1933 வரை ஆங்கிலேய ஆட்சி நடந்துக் கொண்டிருந்த சமயத்தில் கோவில் நிர்வாகம்
ஹதிராம்ஜி மடத்தை சேர்ந்த சேவா தாஸ்ஜியிடம் இருந்தது.
1932-ல் மதராஸ் அரசு பொறுப்பேற்றதுடன் தனி தேவஸ்தானம் அமைத்து பொறுப்பை அதன் வசமளித்தது.
1933-ல் திருப்பதி திருமலை தேவஸ்தானம் உதயமானது.

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அலர் மேல் மங்கா சமேத ஸ்ரீ திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ சிறுமணவூர் முனிசாமி முதலியார் இயற்றிய ஸ்ரீ திருப்பதி ஏழுமலை வெண்பா–

January 7, 2022

ஸ்ரீ திருப்பதி ஏழுமலை வெண்பா என்னும் இந்நூல் சிறுமணவூர் முனிசாமி முதலியாரால் இயற்றப்பட்டு,
சென்னை சூளையில் இருந்த அவரது சிவகாமி விலாச அச்சுக்கூடத்தில் 1908ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது.

இந் நூலின் முகப்பில் கீழ்க் கண்ட இரு கட்டளைக் கலித்துறை பாடல்கள் பதிப்பிக்கப்பட்டுள்ளன.
இப் பாடல்கள் எந்நூலைச் சார்ந்தது என்பது தெரியவில்லை.

கட்டளைக் கலித்துறை

சங்குண்டு சக்கரத் தானுண்டு பாதத் தாமரை முன்
தங்கென்று காட்டுந் தடங்கையுண் டன்புந் தயவுமுண்டு
இங்கென்று மங்கென்று முழலாமல் வேங்கடத் தையன்முன்னே
பங்குண் டெனக்கண்டு பணிவார்க் கெலாமுண்டு பாக்கியமே.

பூவிற் றிருத்துளாய் தீர்த்தமுண் டள்ளிப் புசிப்பதற்கு
நாவிற் றுதிக்க அஷ்டாட் சரமுண்டு நனவெழுந்தால்
சேவிற்க திருமலை மேலே நாராயணன் சேவையுண்டு
கோவிந்த நாமந் துணையுண்டு நெஞ்சே நமக்கே துங்குறைவிலையே.

இந்நூலில் காப்புப் பாடலாக ஒரு வெண்பா பாடலும்,
நூலைச் சார்ந்த பாடல்களாக 111 பாடல்களும் அமைந்துள்ளன.
நூலின் முதல் 68 பாடல்கள் ‘யேழு மலையே’ என முடிந்துள்ளன.

நேரிசை வெண்பா

பொருப்பா மனேகமலை பூமியெலாத் தோற்றிடினுந்
திருப்பதியைப் போலாமோ தேடுங்கால் – விருப்பமுடன்
புண்ணியத்தைச் செய்திருந்தாற் போய் மனமே நீ தொழுது
பண்ணவினை போக்கி கொளப் பார்.

நூல்

பூவிற் பெரியமலை பொன்னுலகோர் தேடுமலை
பாவிற் கிளகிப் பழுக்குமலை – மேவிய சீர்
நீதித் தழைக்குமலை நிலவுலக மத்தனைக்கும்
ஆதிமலை யேழு மலையே. 1

திருமா துலாவுமலை தேவர்குழாஞ் சூழுமலை
பெருமான் கிருபைப் பெருக்குமலை – தருமஞ்
செழிக்குமலை யன்பர் செய்தவினை யெல்லா
மொழிக்குமலை யேழு மலையே. 2

சொல்லற் கரியமலை சுரர்முனிவர் தேவர்முதற்
பல்லுயிர்க ளெல்லாம் பணியுமலை – எல்லை
யெங்கும்பிர காசமலை யெல்லாஞ்செய் வானோர்கள்
தங்குமலை யேழு மலையே. 3

பூத்தமலர் வாசம் பொருந்துமலை வானோர்கள்
காத்திருந்து நித்தங் கருதுமலை – கீர்த்தி
பரந்தமலை யன்பர் பழவினையைப் போக்கச்
சிறந்தமலை யேழு மலையே. 4

தொண்ட ரகத்திற் றுளுக்குமலை தூய்மையிலா
வண்டர்க் கிடுக்கண் வளர்க்குமலை – பண்டாம்
யுகந்தோ ரிருந்தமலை யூழ்வினையை மாற்றத்
தகுந்தமலை யேழு மலையே. 5

கோகனக மாது குலாவுமலை கோடியிலா
ஆகமங்க ளெல்லா மளக்குமலை – யோக
சித்த ரிருக்குமலை செல்வமலை சித்தஜனை
பெற்றமலை யேழு மலையே. 6

உள்ள வுலகெல்லா மோரடியாக் கண்டமலை
வெள்ளை மனத்தில் விளக்குமலை – கள்ளமிலா
ஞானமலை மோனமலை ஞானத் தபோதனருக்
கானமலை யேழு மலையே. 7

காண்டற் கரியமலை கௌரவரார் காய்ந்த
பாண்டவருக் கெல்லாம் பலித்தமலை – நீண்ட
உலகை யளந்தமலை யூடுருவி யெங்கு
மிலகுமலை யேழு மலையே. 8

செல்வ மளிக்குமலை சேணுலகங் காட்டுமலை
நல்லவருக் கெல்லாமே நல்குமலை – பொல்லா
மூர்க்கர் செருக்கை முறிக்குமலை யபயங்
கார்க்குமலை யேழு மலையே. 9

இட்டார்க் கிரங்குமலை யேதேது கேட்டாலுங்
கிட்டே நெருக்குங் கிருபைமலை – துட்டர்
குலத்தைப் பிரிந்தமலை கோவிந்தா வென்பாரைக்
கலந்தமலை யேழு மலையே. 10

வாழைக் கமுகு வளர்ந்தமலை ஞானக்
கோழைப் படாமுனிவர் கூடுமலை – ஊழை
யதற்றுமலை யன்ப ரகத்துமலை சர்வ
சுதத்துமலை யேழு மலையே. 11

பூவனங்க ளெங்கும் பூர்க்குமலை பூமலிந்த
காவனங்கள் சுற்றுங் கனிந்தமலை – தாவி
யருவி கலந்தமலை யன்பரகத்தறிவி
லிருந்தமலை யேழு மலையே. 12

குன்ற மெடுத்தமலை கோதண்டந் தாங்குமலை
அன்றரக்கர் கூட்ட மழித்தமலை – நின்று
வணங்குவார் தன்குலத்தை வாழ்த்துமலை மேலோர்க்
கிணங்குமலை யேழு மலையே, 13

கஞ்சமலர் வாவிமலை காரிருண்ட சோலைமலை
கொஞ்சுங் கிளிமயிலுங் கூவுமலை – மிஞ்சும்
கீதவொலி நாதங் கேட்குமலை சர்வஜெக
நாதமலை யேழு மலையே. 14

தப்பை முழங்குமலை தாதர்குழாஞ் சூழுமலை
யெப்போதுங் கற்பூர மேந்துமலை – கப்பணங்கள்
சரஞ்சரமாய் வந்து செலுத்துமலை மாந்தர்
நிறைந்தமலை யேழு மலையே. 15

இரும்பென்ன நெஞ்ச மிளகாத வஞ்சகரைக்
கரும்பாய் நசுக்கிக் கசக்குமலை – பெரும்பால்
அன்பாகக் கோயிலைவிட் டகலா மலையார்க்கு
மின்பமலை யேழு மலையே. 16

துளசி மணக்குமலை தூய்மனத்தா ரேறுமலை
களஞ்சியத்தி லேநிதியங் கட்டுமலை – யுளந்தான்
நொந்தார் முகத்தை நோக்குமலை செல்வந்
தந்தமலை யேழு மலையே. 17

கோவிந்தா வென்றபெருங் கோட்டம் ஜொலிக்குமலை
தாவிப் பணிந்தடியார் தங்குமலை – மேவி
என்னேரஞ் சூடமிலகுமலை யேனையோர்க்
கன்னைமலை யேழு மலையே. 18

கோபந் தணிந்து குளிர்ந்தமலை சர்வ
சாபவினை யாவுஞ் சதைக்குமலை – பாப
மெல்லா மகற்றுமலை யெல்லாச் சுகமளிக்க
வல்லமலை யேழு மலையே. 19

குங்குமமுங் களபக் குழம்பும் மிகத்திமிர்ந்த
மங்கையர்கள் வாசம் மணக்குமலை – யெங்கும்
கேசவா மாதவா கோவிந்தா வென்றிறைஞ்சி
பேசுமலை யேழு மலையே. 20

நாற்றிசையி லுள்ளோரும் நாடித் தினந்தொடர்ந்து
போற்றிப் பொருள்பணிதி போடுமலை கீர்த்தி
சிறந்தமலை தொண்டர்களாற் செய்தபிழை யெல்லா
மறந்தமலை யேழு மலையே. 21

எட்டெழுத்தா யஞ்செழுத்தா யிருமூன்று ஆறெழுத்தாய்
துட்டர் வணங்குபல தோற்றமுமாய் – மட்டில்
ஏகப் பொருளா யெழுந்தமலை யட்டாங்க
யோகமலை யேழு மலையே. 22

காலைக் கதிரோனுங் கங்குலிலே சந்திரனும்
வேலைக் குளித்துவலஞ் செய்யுமலை – மேலாம்
உம்பர் முனிவோ ருயர்மா தவத்தரெலாம்
நம்புமலை யேழு மலையே. 23

அன்பர்களை வாவென் றழைக்குமலை யன்புடையா
ரின்புற்ற தெல்லா மீயுமலை – துன்பந்
துடைக்குமலை வானோர் துதிக்குமலை வேதியனைப்
படைக்குமலை யேழு மலையே. 24

நித்த மொருக்கால் நினைப்பார் நினைப்பிலெழும்
சித்தியென்ப தெல்லாஞ் செறிக்குமலை – அத்தி
மூலமென்ற போதே முளைத்தமலை மூர்க்கர்குல
காலமலை யேழு மலையே. 25

கூறுமொழிக் கெல்லாங் கோவிந்தா வென்றிறைஞ்சிப்
பேரைக் குறித்தெவரும் பேசுமலை – சீருடைய
அன்ன முகந்தோனும் ஆடுமயிற் சேவகனும்
மன்னுமலை யேழு மலையே. 26

புவிராஜர் முப்போதும் போற்றுமலை பொய்யறியா
தவராஜ ரெப்போதுந் தங்குமலை – கவிராஜர்
பாடுமலை பாட்டில் பதித்தவர மெல்லாங்
கூடுமலை யேழு மலையே. 27

திக்குவே றில்லையெனத் திருவடியிற் சார்ந்தாரை
யக்கரையாய் வாவென் றழைக்குமலை – மிக்க
கருணை மலிந்தமலை கருதும்போ தேயுதவுந்
தருணமலை யேழு மலையே. 28

ஊழ்வினையோ ரானாலு மோடிப் பணிந்தக்காற்
றாழ்வெல்லாம் நீக்கித் தணிக்குமலை – வாழ்வென்ற
அகத்துச் சுகபோக மியாவுங் கொடுக்குமதி
மகத்துமலை யேழு மலையே. 29

மாடேறும் பிஞ்ஞகனும் மயிலேறும் பெருமாளும்
ஏடேறும் வாணிக் கினியானும் – வீடேறு
முத்தரொடு சித்தர்களும் மூவிரண்டு லோகமெலாம்
நத்துமலை யேழு மலையே. 30

ஜெனகாதி மாமுனிவோர் சேருமலை வானுலகத்
தினமாதி யெல்லா மிருக்குமலை – மனுநீதி
யோங்குமலை யுள்ளன்பா லோங்குமடி யார்குடும்பந்
தாங்குமலை யேழு மலையே. 31

பொன்மகளை மார்பினிடம் பூண்டமலை யன்பர்கடம்
மின்பப் படிக்கெல்லா மீயுமலை – தொன்மறையும்
சொல்லுமலை வேதச் சோதிமலை யாயிரத்தெட்
டெல்லைமலை யேழு மலையே. 32

சீதமலர் நாற்றஞ் செழித்தமலை யன்பருக்குப்
பாதமலர் வீடாய்ப் பலித்தமலை – மாதவர்கள்
சூழ்ந்தமலை மீனினமுஞ் சூரியனுஞ் சந்திரனுந்
தாழ்ந்தமலை யேழு மலையே. 33

பூமகளுஞ் சண்முகத்தைப் பூத்தவளும் வேதனுடை
நாமகளுஞ் சூழ்ந்து நயந்தமலை – தாமமணி
இந்திரனோ டட்டத் திசையாரும் வந்துதொழ
முந்துமலை யேழு மலையே. 34

செம்மான் றருமகளைச் சேர்ந்தசிவ சண்முகனுக்
கம்மானாய்த் தோன்றியவா னந்தமலை – பெம்மான்
மோகப் பசுங்கொடிக்கு மூத்தமலை யட்டசுக
போகமலை யேழு மலையே. 35

அஞ்ஞான மாமிருளை யகலத் துரத்திபர
மெஞ்ஞான வீட்டின்ப மீயுமலை – எஞ்ஞான்றும்
பன்னுமடி யார்மிடியைப் பற்றறவே நீக்குபசும்
பொன்னுமலை யேழு மலையே. 36

தொல்லைப் பிறவிதுயர் தூற்றுமலை துரியநிலத்
தெல்லைச் சுகமடியார்க் கீயுமலை – பல்லுயிருங்
கார்க்குமலை பக்திநெறி காப்பார் மனம்போலப்
பார்க்குமலை யேழு மலையே. 37

ஆறாத புண்புரைக ளாற்றுமருந் தானமலை
தீராத் துயரனைத்துந் தீர்க்குமலை – மாறாத
பொன்னுலக வாழ்விற் பொருத்துமலை பொன்னுலகோர்
பன்னுமலை யேழு மலையே. 38

ஈரமிலா நெஞ்சத்தாற் கிடுக்கண் ணியற்றுமலை
ஓரஞ்சொல் வார்குடும்ப மொழிக்குமலை – ஆரமலர்
சாற்றித் தொழுவார் சஞ்சலங்க ளப்போதே
மாற்றுமலை யேழு மலையே. 39

அறமென்ப தில்லா வழுக்கடைந்த கள்வர்கடம்
முறமெல்லாம் போக்கி யொடுக்குமலை – மறவாமல்
சிந்திப்பார் நோக்கமெலாஞ் சீரோங்கச் செய்யுமதி
விந்தைமலை யேழு மலையே. 40

பார்மீது வாழ்ந்துபிறர் பசியறியார் செல்வாக்கை
நீர்மே லெழுத்ததுபோல் நீற்றுமலை – யார்மீதும்
நீங்காக் கருணைமலை நீடுலக மண்டாண்ட
விந்தைமலை யேழு மலையே. 41

அண்டமெலா முந்தியிலே ஆவென்று காட்டுமலை
பண்டையுக மெத்தனையோ பார்த்தமலை – தொண்டர்
உள்ளமெனுங் கோயிலின்கண் ணோங்குமலை வைகுண்ட
வள்ளல்மலை யேழு மலையே. 42

மெய்த்தவஞ்சேர் ஞானியெலா மேவுமலை மெய்யுடனே
கைத்தவங்க ளில்லாரைக் கடியுமலை – எத்தலமும்
கொண்டாடிப் போற்றுமலை கோவிந்தா வென்றேத்து
மண்டர்மலை யேழு மலையே. 43

ஆதிசிவ னால்வரம்பெற் றகிலம் மிகநெரித்த
காதகரை யெல்லாங் கண்டித்தமலை – சோதனையில்
பத்தருக்கு முன்னிருந்து பாதுகாத் தாண்டபர
முத்திமலை யேழு மலையே. 44

அடியேன் றுயர்படுமா வாபத்துக் காலமெலாங்
கொடியபிணி நீக்கிக் கொடுத்தமலை – படியிலிப்போ
கொத்தடிமை கொண்டென் குடும்பத்தைக் கார்க்கமனம்
வைத்தமலை யேழு மலையே. 45

வேண்டித் தொழவறியா விளையாட்டுக் காலமெல்லாம்
ஆண்டதுணைத் தாதா வானமலை – தூண்டும்
குருவாகி யென்னறிவிற் குடியாகி நல்லறிவைத்
தருகுமலை யேழு மலையே. 46

மிடியைத் துலைத்துநிதி மென்மே லளித்தடியார்க்
கடிமைப் புரியவருள் செய்தமலை – கொடிய
ஊழ்வினையால் வந்தபிணி யொட்டுத் துடைத்தென்னை
வாழ்த்துமலை யேழு மலையே. 47

தஞ்சந் தஞ்சமெனத் தாள்பூட்டி வந்தவரை
யஞ்சலஞ்ச லென்றா தரிக்குமலை – கொஞ்ச
நேரத்தி லேமனனோய் நீக்கியே காத்தருளும்
பாரமலை யேழு மலையே. 48

அரிவோம் நமோநா ராயணா வென்பாருக்
குரியவர மெல்லாங் கொழிக்குமலை – பிரியமுடன்
யென்றுமஷ்ட லட்சுமியு மீஸ்வரியுஞ் சரஸ்வதியும்
நின்றமலை யேழு மலையே. 49

என்னா லுரைப்பதினி யென்னறிவே னுள்ளதெலா
முன்னா லறியா தொன்றுளதோ – பன்னாளும்
காத்ததுபோ லின்னுமெனைக் காத்தருள வென்கனவிற்
பூர்த்தமலை யேழு மலையே. 50

மாசி யிறங்குமலை மழைக்கால்க ளோடுமலை
தேசிகனார் மகிமை தெரியுமலை – வாசமலர்
மணக்குமலை யுண்டிதுகை மலைமலையாய் வந்தாலுங்
கணக்குமலை யேழு மலையே. 51

சொன்னத் துகையிலொரு செம்பு குறைந்தாலுங்
கன்னத்தி லேயடித்து கட்டவைக்கும் – அன்னவரை
திருப்ப நடத்துமலை தஞ்சமென்ற பேர்மேல்
விருப்பமலை யேழு மலையே. 52

கட்டுந் துகையிலொரு காசு குறைந்தாலும்
வட்டியுட னேதிரும்ப வாங்குமலை – எட்டுத்
திசையாரை யெல்லாந் திரளா யழைக்குமதி
வசியமலை யேழு மலையே. 53

பொன்வயிர பூஷணத்தைப் போடுவதாய் மலைக்குவந்த
பின்னால் துகைகொடுத்த பேய்மனதை – முன்னால்
உழைத்தபிணி யெல்லா முண்டாக்கி யட்சணமே
யழைத்தமலை யேழு மலையே. 54

மன்னரொடு மந்திரிமார் மகத்தாதி யானாலுஞ்
சொன்னபடி வாங்குஞ் சூட்சமலை – எந்நேரம்
தங்கங் குவியுமலை தஞ்சமென்றார் மேலாசை
பொங்குமலை யேழு மலையே. 55

நாமந் துலங்குமலை நாற்றிசையுங் கோவிந்த
நேமம் பெரியோர் நிறைந்தமலை – க்ஷேமம்
ஈயுமலை யடியா ரிடுக்கமெலாந் தீரவருட்
செய்யுமலை யேழு மலையே. 56

சங்கீத மேளஞ் சதாகோட்டஞ் செய்யுமலை
யெங்குங்கோ விந்தமய மெய்துமலை – மங்கையர்கள்
திரளா யுலாவுமலை தெய்வ மகத்துவமே
நிறைந்தமலை யேழு மலையே. 57

வடக்குமலை யென்று வழங்குமலை தென்கீழ்க்
குடதிசையோ ரெல்லாருங் கூடுமலை – யடக்கமதில்
இருந்தாரை யெல்லா மிழுக்குமலை நோய்க்கு
மருந்துமலை யேழு மலையே. 58

நிஜமா யிராப்போலே நெடுங்கதிரைத் தான் மறைத்து
விஜயனுக்கு வெற்றி விளைத்தமலை – புஜபலத்தை
நம்பி யெளியோர்மேல் நாப்புழுக்குந் துட்டருக்கு
வம்புமலை யேழு மலையே. 59

முத்திக்கு வித்தாய் முளைத்தமலை மூவுலகும்
பத்திபுரி வோர்க்குப் பலிக்குமலை – சித்தியெலாம்
மெய்யாய் விளங்குமலை மெய்யறியாப் பொய்யருக்கு
பொய்யுமலை யேழு மலையே. 60

எட்டெழுத்தாய் லோகமெலா மெங்கும் நிறைந்தமலை
துட்டருக்குத் தோற்றாத் தூரமலை – இட்டமுள
அன்ப ருளத்தி லமர்ந்தமலை யன்புடையார்க்
கின்பமலை யேழு மலையே. 61

அவ்வவ் வுலகோ ராசாரம் போல் குறிப்பு
வெவ்வே றுருவாய் விரிந்தமலை – எவ்வுயிரும்
தானாய் விளங்குமலை தாய்க்கும் பெரியதா
யானமலை யேழு மலையே. 62

வேலை வளைந்தமலை விரிகதிரும் சந்திரனைச்
சோலையிலே காட்டுஞ் சொகுசுமலை – ஆலிலைமேல்
சற்றே துயின்றளவில் சர்வவுல கத்தனையும்
பெற்றமலை யேழு மலையே. 63

மீனினங்க ளாமிருபத் தேழும் நவக்கிரகந்
தானுங் குலவித் தழுவுமலை – வானுலகிற்
றேடரிய தேவர்களும் தெய்வசபை மாதர்விளை
யாடுமலை யேழு மலையே. 64

தெய்வ மிருக்குமலை தெய்வீக மோங்குமலை
மெய்தவஞ்சேர் புங்கவர்கண் மேவுமலை – கைதவத்தை
பூண்டார்கள் சூழுமலை பூதலத்தி லேழைகுடி
யாண்டமலை யேழு மலையே. 65

எழுநிலமு மேழு மலையாய் வளர்ந்தமலை
பழுதருபொன் னாடாய்ப் படர்ந்தமலை – தழும்பேற
துதித்தார் மனத்தகத்திற் றேற்றுமலை யான்றோர்
மதித்தமலை யேழு மலையே. 66

வேதக் கொடிமுடியாய் விளங்குமலை வேதத்தின்
பாதமுத லுலகாய்ப் படர்ந்தமலை – சீதமலர்
பூணுமலை யன்பர்கள்செய் பூசைப் பலனளவே
காணுமலை யேழு மலையே. 67

பச்சைமலை பச்சைப் பவளமலை பல்லுலகும்
மொய்ச்சமலை லக்ஷ்மீ மோகமலை – யச்சமெலாம்
தீர்க்குமலை தீவினையைத் தினகரனார் முன்பனிபோல்
பேர்க்குமலை யேழு மலையே. 68

நீங்கா வுடற்பிணியை நீக்கவழி காணாமல்
வேங்கடவா யுன்னடியை வேண்டினேன் – பாங்குபெற
முற்போ தெனைக்காத்த முறைபோல் மனமிரங்கித்
தற்போதும் நீகருணை தா. 69

நாசியின் மேல் வந்தபிணி நாசப் படுத்தியுனைப்
பேசுமடி யார்புகழைப் பேசவருள் – தேசிகனே
என்போல மானிடர்முன் னேகமன மஞ்சுகிறே
னுன்பாதம் நம்பியு மீதுண்டோ. 70

பண்டிதரார்க் கற்றதெலாம்பார்த்துப் பார்த்தென்பிணியை
கண்டிக்க வாகாமல் கைவிட்டார் – எண்டிசையும்
தாவித் தொழும்பெரிய தாதாவே நீயிரங்கிப்
பாவியெனை யாதரிக்கப் பார். 71

முக்காலு முன்னடியை மெய்யாக நம்பினவ
னெக்கால முமறக்கே னுண்மையிது – தற்காலம்
அஞ்சும் படிக்கென்னை யாட்டுகிற வூழ்வினையைத்
துஞ்சும் படிச்செய் துணை. 72

ஊழ்வினையைத் தாங்காம லுள்ளுருகி நோவதிலும்
பாழ்கிணற்றில் வீழ்ந்தாலும் பண்பென்றே – தாழ்வடைந்த
என்முகத்தைப் பாராம லெங்ஙனமோ நீயிருந்தா
லுன்னைவிடப் பின்னா ருரை. 73

எள்ளுக்கு ளெண்ணையைப்போ லெங்கும் நிறைந்துளதாய்
தெள்ளுமறை யெல்லாந் திடமுரைக்க – உள்ளமதில்
என்னேர முன்றா ளிறைஞ்சுமெனைக் காராட்டாற்
பின்னாரோ தெய்வமினிப் பேசு. 74

காணுமிட மெல்லாமுன் காப்பென்றே பிரகலாதன்
தூணு மிடத்துந் துதிக்குங்கால் – ஆணவஞ்சேர்
இரணியனைத் தீர்த்ததுபோ லென்பிணியை மாற்றிதரத்
தருணமிது தற்காத் தருள். 75

பழையவடி யாரிருந்த பக்திவயி ராக்கியம்போல்
தொழவறியா வேழைமுறை தள்ளாதே – நிழலறியா
புழுப்போல் துடித்துனது பொன்னடிக்குத் தஞ்சமென்றே
னழுக்கறவே செய்வா யருள். 76

உள்ளமுட னேயெனது வூழ்வினையும் நீயறிவாய்
கள்ளனே யானாலுங் கடனுனக்கே – எள்ளளவு
உன்கருணை யென்மே லுதிக்குமே யாமாகில்
பொன்னாகு மென்னுடைய பொந்தி. 77

வயர்நிறைந்தாற் பானை வாய்மூடா னென்றசரீர்
தயவற் றளித்த தழகாமோ – நயமலிந்த
குணமுடையா தொண்டர் குலமுழுதுங் காக்கும்
மனமுடையாய் கேளென் மனு. 78

மனுவென்ப தென்னுடைய மாபிணியைத் தீர்த்துத்
தினமுன் றிருவடியைத் தொழுதேத்த – அனவரதம்
புத்தி யெனக்களிப்பாய் புகழ்மலிந்த வேங்கடவா
மற்றதைவேண் டாதென் மதி. 79

அன்ன மளித்தா யகமளித்தா யாடைபணி
பொன்னும் புகழு மிகவளித்தாய் – என்னுடம்பில்
பிணியளித்தால் – மற்றதெலாம் பாவிப்ப தெங்கேநீ
துணையிருந்து என்னேய் துலை. 80

செல்வ மகளைத் திருமார்பி லேதரித்து
வல்ல புகழ்படைத்த வேங்கடவா – தொல்லையினால்
நொந்துவந்து உன்னடியை நோக்கிச் சரணமென்றால்
எந்தவினை நிற்கும் எதிர். 81

புண்ணும் புரையுடனே பேய்பிடித்த நெஞ்சுக்கு
கண்ணுந் திரையாமா கலியுகத்தி – லென்பிழைப்பு
சொன்னால் நகையாகும் சுவாமிதிரு வேங்கடவா
என்னென் றுரைப்பே னிது. 82

தொண்டை முதுகு துடைநாசி மேல்விரணங்
கொண்டு மெலியுங் குறையெதுவோ – கண்டறிந்து
காத்தருள வேணுமையா கடவுளே – வேங்கடவா
யார்க்குரைப்பேன் சொல்வா யறி. 83

அரியுஞ் சிவனு மகிலபுவ னம்படைக்கும்
பெரியவிதி யும்முருகப் பெம்மானும் – பிரிவாகும்
அறுசமய தேவதையு மாயிரத்தெட் டண்டமெலாம்
நிறைந்ததுநீ தானே ஹரி. 84

பொய்வழியாற் சேகரித்த பொருளின்வினி யோகமெலாம்
மெய்வழியிற் சேர்க்காமல் மெய்குலைந்தேன் – உய்யும்வழி
காட்டிக் கொடுப்பதுஉன் கடமைதிரு வேங்கடவா
நாட்டினில் வேறேது நதி. 85

உன்னைப் பணிந்தார்க்கு வூழேது தாழ்வேது
பின்னை கிரகப் பிரட்டேது – பன்னலமும்
கூடுமென்றே கீதையெலாங் கூவுதலால் வேங்கடவா
தேடினே னென்மதியைத் தேற்று. 86

கள்ளக் கலிமதியால் காலமெலாம் நாயடியேன்
உள்ளத்தை யுன்பா லொடுக்காமற் – பள்ளத்தில்
வீழ்ந்தகஜம் போலே விம்முகிறேன் வேங்கடவா
தாழ்வகல நீகருணை தா. 87

ஆசைப் பெருக்கா லறிவுகெட்டு நின்புகழைப்
பேசாத தாலல்லோ பாழானேன் – தேசத்தார்
முன்செல்ல வென்றால் மெலியுதையோ வேங்கடவா
என்செய்வே னென்னோ யெடு. 88

உலகபோ கத்திற் குரித்தான காலமதில்
தலைவிதிதா நிப்படியுந் தானுண்டோ – நிலமனைத்தும்
பாதத்தி னாலளந்த பாரமலை வேங்கடவா
சோதித்து நீதா சுகம். 89

பாழும் பிரமனவன் படித்தபடிப் பென்னாவோ
ஊழை யொருக்காலே யூட்டுவனா – ஆழிதுயில்
கொண்டப்போ துந்திவழி கோகனத்தில் வந்தவனை
தண்டித் தெனைக்காத் தருள். 90

உன்மகிமை கேட்க வுளநடுங்கு தாகையினால்
யின்னுமுனை மறக்க வெண்ணுவனோ – மன்னர்முதல்
அஞ்சிப் பணியுமெந்த னாண்டவனே வேங்கடவா
கொஞ்சங் கருணை கொடு. 91

பூவி லயனைப் பெற்றெடுத்த தாதாநீ
பாவியென் றென்னைப்பா ராட்டாதே – தேவியொடு
சொற்பனத்தில் வந்த சொந்தம்போற் சோதித்து
அற்பவினை தீர்த்தா தரி. 92

என்கொடுமை யத்தனையு மெழுதப் பொழுதுண்டோ
உன்னடிமை யென்றே யுரைப்பதலால் – பின்னொன்றும்
பேசவறி யேனுலகிற் பெரியமலை வேங்கடவா
தாசரைப்போ லென்னையுமே தற்கார். 93

தற்கார்க்க வேணுமென்று தஞ்ச மபயமென்று
முக்கால் வலமாகி முன்னின்றேன் – மிக்காக
என்னபிழை செய்தாலு மெல்லாம் பொறுத்தருளி
ஜென்மவினை தீரவருட் செய். 94

ஆணதிலும் பெண்ணதிலு மடியேனைப் போல்கொடியோர்
காணவரி தென்றேநீ கண்டாலும் – வீணாக
தள்ளாதே யென்னபயந் தங்கமலை வேங்கடவா
கொள்ளாதே யென்மீது கோபம். 95

உந்தனுக்குக் கோப முண்டானா லுன்னெதிரே
வந்து தணிக்கவழி யார்க்காகும் – சந்ததமும்
சேய்பிழைக ளெத்தனைதான் செய்தாலு மீன்றெடுத்த
தாய்பொறுக்க வல்லோ தகும். 96

இத்தனைநாள் நினைக்கவிலை யென்றெண்ணி யுன்மனதில்
வைத்து வருமம் வளர்த்தாதே – மெத்தவுநான்
நொந்தேன் மெலிந்தே னோக்கிவந்தேன் கோவிந்தா
சந்ததமு முன்றாள் சரண். 97

கோவிந்த நாமம் கோருமடி யாருக்குப்
பாவந் துலையும் பதங்கிடைக்கும் – ஆவலெலாம்
கைக்கூடும் பிணியகலும் காளையிளந் தேகம்போல்
மெய்க்கூடும் மெய்யா மிது. 98

அலமேலு மங்கைக்கு ஆசைமண வாளா
உலகமிரண் டேழுக்கு மொருதகப்பா – நிலமதனில்
என்குறைக ளெல்லா மிணையடியி லொப்புவித்தேன்
பன்னலமுங் கூடவருட் பண். 99

குற்றங் குறைபலவாக் கோடிபிழை செய்தாலும்
முற்றும் பொறுத்து முகங்கொடுத்து – சற்றேநீ
கருணை பொழிந்தென் கருமப் பிணிநீக்கி
பொருளும் புகழும் பொழி. 100

ஆண்டுக் கொருக்கா லடியேன் திருமலையை
வேண்டித் தொழவரமும் வேண்டுமெனக் – காண்டவனே
செய்தொழிலும் சீவனமும் சீராய் செழித்துதினம்
கைதவமு மோங்கிவரக் கார். 101

துளபமணி மார்பா துவாரகையில் வாழ்முகுந்தா
களபமுலை யலர்மேற் கண்ணாளா – வளமலிந்த
வடக்குமலை கோவிந்தா வடிமைநெடு நாட்பட்ட
யிடுக்கமெடுத் தே யெரி. 102

வாத வலியும் வளர்மெகப் புண்புரையும்
சீத விரணத்தின் சங்கடமும் – ஆதவனை
கண்டபனி போலே கடிகையிலே மாற்றியுந்தன்
தொண்டாந் தொழிலெனக்குத் தா. 103

வைப்பா சூனியமா வல்லதுமுன் னூழ்வினையா
இப்பிறப்பி லேதேனுஞ் செய்தேனா – எப்போதான்
துலையுமிது வேங்கடவா தூரரியக் கூடலையே
யலையுகின்ற வேழைநெஞ்சை யாற்று. 104

பெற்ற அப்பா பெரியப்பா என்விதிக்கு
மற்றாரைப் போயடுத்து மல்லிடுவேன் – கற்றதெல்லாம்
சொல்லி யபயமிட்டுச் சூழ்ந்தேனே யுன்மனது
கல்லா யிருந்தாலுங் கரை. 105

உண்டு உடுத்தி யுலகத்தாற் போற்சுகத்தை
கண்டு களிக்காமற் காலமெலாம் – பண்டைவினை
பட்டு மெலியவா பெற்றெடுத்தாய் வேங்கடவா
கெட்டதெலாம் போதுமினிக் கார். 106

முன்னால் முறைபேசி முகமறைந்த தட்சணமே
பின்னால் கெடுநினைக்கும் பேயர்களை – யுன்னுடைய
சக்கரத்தி னாற்சிதைத்து சத்துருவைப் பாழாக்கி
துக்கமறச் செய்வாய் துணை. 107

வஞ்ச நெஞ்சத் தீயரெலாம் வந்துவந்து என்பிழைப்பை
கொஞ்சமுள வறிந்து கொண்டவுடன் – அஞ்சாமல்
மோசக் கருத்தால் முறைபிறழும் பாவிகளை
நாசப் படுத்தமுயல் நாதா. 108

தேடவைத்தாய் நின்னடியைத் தேடுந் திறமைதந்து
பாடவைத்தா யுள்ளந் தனிற்பதிந்து – ஆடலெலாம்
தீரவைத்தாய் பிணிமுதலாய் தீர்த்து சகலசுகம்
சேரவைத்தா யுன்றன் செயல். 109

ஆத்திரத்தி னாலே யடியே னுரைத்ததெலாம்
தோத்திரமாய்க் கொண்டு துணைபுரிந்து – பாத்திரமாய்
என்பிணியெல் லாங்களைந்து ஏழைகுடி காப்பாற்ற
லுன்கடமை யீதொன்றே யுண்மை. 110

அறிவில்லாச் சேயுரைத்த ஆசைவெண்பா நூற்றிபத்தும்
பொருளல்ல வானாலும் பூண்டருளித் – தெருளுடைய
முத்த ருரைத்தபழ மெய்த்துதிபோ லாதரித்து
பத்தியெனக் குதயம் பண். 111

ஏழுமலை வெண்பா முற்றுப்பெற்றது

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ வேங்கடேச ஸூப்ரபாதம்–ஸ்ரீ வேங்கடேச ஸ்தோத்திரம் -ஸ்ரீ வேங்கடேச பிரபத்தி -ஸ்ரீ வேங்கடேச மங்களம் —

January 2, 2022

ஸ்ரீ வேங்கடேச ஸூப்ரபாதம் எனும் திருப்பள்ளியெழுச்சி,
ஸ்வாமி ஸ்ரீ இராமானுசரின் மறு அவதாரம் என்று வைணவர்களால் போற்றப்படுகின்ற ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஆணைப்படி
ஸ்ரீ திருமலையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ திருவேங்கடமுடையான் மீது வடமொழியில் ஸ்ரீ காஞ்சிபுரத்தைச் சேர்ந்த
ஸ்ரீ ஹஸ்தி கிரி அண்ணா -ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணன் ஸ்வாமியால் இயற்றப்பட்டது.

ஸ்ரீ வேங்கடேச ஸூப்ரபாதம் (29 பாடல்கள்),
ஸ்ரீ வேங்கடேச ஸ்தோத்திரம் (11 பாடல்கள்),
ஸ்ரீ வேங்கடேச பிரபத்தி (16 பாடல்கள்),
ஸ்ரீ வேங்கடேச மங்களம் (14 பாடல்கள்) ஆகிய
நான்கு பகுதிகளை உள்ளடக்கியதே “ஸ்ரீ வேங்கடேச ஸூப்ரபாதம்” ஆகும்.

கௌசல்யா ஸூ ப்ரஜா ராம பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர்ஸார் தூல கர்த்தவ்யம் தைவமாநஹிகம்–1-

உத்திஷ்ட உத்திஷ்ட கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜ
உத்திஷ்ட கமலா காந்த தரை லோக்யம் மங்களம் குரு –2-

மாதஸ் ஸூதாபல லதே மஹ நீய சீல வஷோ விஹார ரஸிகே ந்ருஹரேரஜஸ்ரம்
ஷீராம் புராஸி தநயே ஸ்ரித கல்ப வல்லி ஸ்ரீ மன் ந்ருஸிம்ஹ தயிதே தவ ஸூ ப்ரபாதம்–3-

தவ ஸுப்ரபா4தமரவிந்த3 லோசநே
ப4வது ப்ரஸந்நமுக2 சந்த்3ரமண்ட3லே |
விதி4 ஶஂகரேந்த்3ர வநிதாபி4ரர்சிதே
வ்ருஶ ஶைலநாத2 த3யிதே த3யாநிதே4 ‖ 4 ‖

அத்ர்யாதி3 ஸப்த ருஷயஸ்ஸமுபாஸ்ய ஸந்த்4யாம்
ஆகாஶ ஸிந்து4 கமலாநி மநோஹராணி |
ஆதா3ய பாத3யுக3 மர்சயிதும் ப்ரபந்நாஃ
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 5 ‖

பஂசாநநாப்3ஜ ப4வ ஷண்முக2 வாஸவாத்3யாஃ
த்ரைவிக்ரமாதி3 சரிதம் விபு3தா4ஃ ஸ்துவந்தி |
பா4ஷாபதிஃ பட2தி வாஸர ஶுத்3தி4 மாராத்
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 6 ‖

ஈஶத்-ப்ரபு2ல்ல ஸரஸீருஹ நாரிகேல்த3
பூக3த்3ருமாதி3 ஸுமநோஹர பாலிகாநாம் |
ஆவாதி மந்த3மநிலஃ ஸஹதி3வ்ய க3ந்தை4ஃ
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 7 ‖

உந்மீல்யநேத்ர யுக3முத்தம பஂஜரஸ்தா2ஃ
பாத்ராவஸிஷ்ட கத3லீ ப2ல பாயஸாநி |
பு4க்த்வாஃ ஸலீல மத2கேல்தி3 ஶுகாஃ பட2ந்தி
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 8 ‖

தந்த்ரீ ப்ரகர்ஷ மது4ர ஸ்வநயா விபஂச்யா
கா3யத்யநந்த சரிதம் தவ நாரதோ3பி |
பா4ஷா ஸமக்3ர மஸத்-க்ருதசாரு ரம்யம்
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 9 ‖

ப்4ருங்கா3வல்தீ3 ச மகரந்த3 ரஸாநு வித்3த4
ஜு2ஂகாரகீ3த நிநதை3ஃ ஸஹஸேவநாய |
நிர்யாத்யுபாந்த ஸரஸீ கமலோத3ரேப்4யஃ
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 1௦ ‖

யோஷாக3ணேந வரத3த்4நி விமத்2யமாநே
க்4ஷாலயேஷு த3தி4மந்த2ந தீவ்ரக்4ஷாஃ |
ரோஷாத்கலிம் வித3த4தே ககுப4ஶ்ச கும்பா4ஃ
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 11 ‖

பத்3மேஶமித்ர ஶதபத்ர க3தால்தி3வர்கா3ஃ
ஹர்தும் ஶ்ரியம் குவலயஸ்ய நிஜாங்க3லக்ஷ்ம்யாஃ |
பே4ரீ நிநாத3மிவ பி4ப்4ரதி தீவ்ரநாத3ம்
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 12 ‖

ஶ்ரீமந்நபீ4ஷ்ட வரதா3கி2ல லோக ப3ந்தோ4
ஶ்ரீ ஶ்ரீநிவாஸ ஜக3தே3க த3யைக ஸிந்தோ4 |
ஶ்ரீ தே3வதா க்3ருஹ பு4ஜாந்தர தி3வ்யமூர்தே
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 13 ‖

ஶ்ரீ ஸ்வாமி புஷ்கரிணிகாப்லவ நிர்மலாங்கா3ஃ
ஶ்ரேயார்தி2நோ ஹரவிரிஂசி ஸநந்த3நாத்3யாஃ |
த்3வாரே வஸந்தி வரநேத்ர ஹதோத்த மாங்கா3ஃ
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 14 ‖

ஶ்ரீ ஶேஷஶைல க3ருடா3சல வேஂகடாத்3ரி
நாராயணாத்3ரி வ்ருஷபா4த்3ரி வ்ருஷாத்3ரி முக்2யாம் |
ஆக்2யாம் த்வதீ3ய வஸதே ரநிஶம் வத3ந்தி
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 15 ‖

ஸேவாபராஃ ஶிவ ஸுரேஶ க்ருஶாநுத4ர்ம
ரக்ஷோம்பு3நாத2 பவமாந த4நாதி4 நாதா2ஃ |
ப3த்3தா4ஂஜலி ப்ரவிலஸந்நிஜ ஶீர்ஷதே3ஶாஃ
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 16 ‖

தா4டீஷு தே விஹக3ராஜ ம்ருகா3தி4ராஜ
நாகா3தி4ராஜ கஜ3ராஜ ஹயாதி4ராஜாஃ |
ஸ்வஸ்வாதி4கார மஹிமாதி4க மர்த2யந்தே
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 17 ‖

ஸூர்யேந்து3 பௌ4ம பு3த4வாக்பதி காவ்யஶௌரி
ஸ்வர்பா4நுகேது தி3விஶத்-பரிஶத்-ப்ரதா4நாஃ |
த்வத்3தா3ஸதா3ஸ சரமாவதி4 தா3ஸதா3ஸாஃ
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 18 ‖

தத்-பாத3தூ4ல்தி3 ப4ரித ஸ்பு2ரிதோத்தமாங்கா3ஃ
ஸ்வர்கா3பவர்க3 நிரபேக்ஷ நிஜாந்தரங்கா3ஃ |
கல்பாக3மா கலநயாகுலதாம் லப4ந்தே
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 19 ‖

த்வத்3கோ3புராக்3ர ஶிக2ராணி நிரீக்ஷமாணாஃ
ஸ்வர்கா3பவர்க3 பத3வீம் பரமாம் ஶ்ரயந்தஃ |
மர்த்யா மநுஷ்ய பு4வநே மதிமாஶ்ரயந்தே
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 2௦ ‖

ஶ்ரீ பூ4மிநாயக த3யாதி3 கு3ணாம்ருதாப்3தே3
தே3வாதி3தே3வ ஜக3தே3க ஶரண்யமூர்தே |
ஶ்ரீமந்நநந்த க3ருடா3தி3பி4 ரர்சிதாங்கே4
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 21 ‖

ஶ்ரீ பத்3மநாப4 புருஷோத்தம வாஸுதே3வ
வைகுண்ட2 மாத4வ ஜநார்த4ந சக்ரபாணே |
ஶ்ரீ வத்ஸ சிஹ்ந ஶரணாக3த பாரிஜாத
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 22 ‖

கந்த3ர்ப த3ர்ப ஹர ஸுந்த3ர தி3வ்ய மூர்தே
காந்தா குசாம்பு3ருஹ குட்மல லோலத்3ருஷ்டே |
கல்யாண நிர்மல கு3ணாகர தி3வ்யகீர்தே
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 23 ‖

மீநாக்ருதே கமட2கோல ந்ருஸிம்ஹ வர்ணிந்
ஸ்வாமிந் பரஶ்வத2 தபோத4ந ராமசந்த்3ர |
ஶேஷாம்ஶராம யது3நந்த3ந கல்கிரூப
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 24 ‖

ஏலாலவங்க3 க்4நஸார ஸுக3ந்தி4 தீர்த2ம்
தி3வ்யம் வியத்ஸரிது ஹேமக்4டேஷு பூர்ணம் |
த்4ருத்வாத்3ய வைதி3க ஶிகா2மணயஃ ப்ரஹ்ருஷ்டாஃ
திஷ்ட2ந்தி வேஂகடபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 25 ‖

பா4ஸ்வாநுதே3தி விகசாநி ஸரோருஹாணி
ஸம்பூரயந்தி நிநதை3ஃ ககுபோ4 விஹங்கா3ஃ |
ஶ்ரீவைஷ்ணவாஃ ஸதத மர்தி2த மங்க3ல்தா3ஸ்தே
தா4மாஶ்ரயந்தி தவ வேஂகட ஸுப்ரபா4தம் ‖ 26 ‖

ப்3ரஹ்மாத3யா ஸ்ஸுரவரா ஸ்ஸமஹர்ஷயஸ்தே
ஸந்தஸ்ஸநந்த3ந முகா2ஸ்த்வத2 யோகி3வர்யாஃ |
தா4மாந்திகே தவ ஹி மங்க3ல்த3 வஸ்து ஹஸ்தாஃ
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 27 ‖

லக்ஶ்மீநிவாஸ நிரவத்3ய கு3ணைக ஸிந்தோ4
ஸம்ஸாரஸாக3ர ஸமுத்தரணைக ஸேதோ |
வேதா3ந்த வேத்3ய நிஜவைப4வ ப4க்த போ4க்3ய
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 28 ‖

இத்த2ம் வ்ருஷாசலபதேரிஹ ஸுப்ரபா4தம்
யே மாநவாஃ ப்ரதிதி3நம் படி2தும் ப்ரவ்ருத்தாஃ |
தேஷாம் ப்ரபா4த ஸமயே ஸ்ம்ருதிரங்க3பா4ஜாம்
ப்ரஜ்ஞாம் பரார்த2 ஸுலபா4ம் பரமாம் ப்ரஸூதே ‖ 29 ‖

———-

வந்துதித்தாய் ராமா நீ கோசலை தன் திருமகனாய்
சிந்து மொழிச் சிறுகாலை திசையெங்கும் புலர்கிறது
மந்திரங்கள் வாய்மொழிந்து வந்தனைகள் புரிந்தருளச்
செந்திருக்கண் அருள்பொழிய வேங்கடவா எழுந்தருள்வாய்–1-

எழுந்தருள்வாய் வெண்கருடக் கொடியுடையாய் எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் திருக்கமலை விழைமார்பா எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் மூவுலகும் காத்தருள எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் கோவிந்தா வேங்கடவா எழுந்தருள்வாய்–2-

போர்புரிந்து மதுகைடைர் தமையழித்தான் உளத்தொளியே
பாரனைத்தும் காத்தளிக்கும் பேரழகின் அருள் உருவே
பாரகத்தார் விழைந்தேத்தும் சீர்சீலப் பெருந்தாயே
கார்வண்ண வேங்கடத்தான் திருத்தேவ எழுந்தருள்வாய்–3-

திங்கள் மொழி திருமுகத்தில் பொங்கும் அருள் புரிபவளே
இந்துகலை வாணியுடன் இந்திராணி அம்பிகையாம்
மங்கையர்கள் தொழுதேத்தும் மாண்புடைய தனித்தலைவி
செங்கமல வேங்கடத்தான் திருத்தேவ எழுந்தருள்வாய்–4-

தொலைவிடத்தும் பலவிடத்தும் கழன்று திரி ஏழ்முனிவர்
சலித்தறியாத் தவமியற்றிச் சந்தியா வந்தனம் முடித்து
நிலைபெறு றின் புகழ் சொல்லி நின்பாதம் சேவித்து
மலையடைந்து காத்துளர் காண் வேங்கடவா எழுந்தருள்வாய்–5-

ஆங்கந்த பிரம்மாவும் அறுமுகனும் தேவர்களும்
ஓங்கி உலகங்களந்த உயர் கதைள் பாடுகின்றார்
ஈங்கிந்த வியாழமுனி பஞ்சாங்கம் ஓதுகின்றார்
தீங்கவிகள் செவிமடுக்க வேங்கடவா எழுந்தருள்வாய்–6-

நன் கமுகு தென்னைகளில் பாளை மணம் மிகுந்தனவால்
பல் வண்ண மொட்டுகள் தாம் பனித்தேனோடு அலர்ந்தனவால்
புல்லரிக்கும் மெல்லீரப் பூந்தென்றல் தவழ்கிறதால்
எல்லாமும் அணிந்தருள வேங்கடவா எழுந்தருள்வாய்–7-

நின் திருப்பேர் பல கேட்டு நின்னடியார் மெய்மறக்க
நின் கோயில் பைங்கிளிகள் தீங்கனியாம் அமுதருந்தி
நின் திருப்பேர் ஆயிரத்தால் நெடும் புகழை விளக்கிடுமாய்
நின் செவியால் கேட்டருள வேங்கடவா எழுந்தருள்வாய்–8-

எவ்விடத்தும் நிலையாக நின்றறியா நாரதரும்
இவ்விடத்து உம் பெருமைகள் தாம் ஈர்ப்பதனால் நிலைகொண்டார்
செவ்விய தன் வீணையில் உன் திருச் சரிதை மீட்டுகின்றார்.
அவ்விசையை கேட்டருள வேங்கடவா எழுந்தருள்வாய்-9-

வெண்கமல ஒண்மலர்கள் விளைத்த மது மிக அருந்தி
கண் மயங்கி மலர் முகட்டுள் காலைவரை சிறைகிடந்த
வண்டினங்கள் ரீங்கரித்தே வந்தனவா நினைத் தொழவே
தண்ணருளால் சேவைதர வேங்கடவா எழுந்தருள்வாய்–10-

தனதனங்கள் நிமர்ந்த செயற் கைவளைகள் ஒலியெழுப்ப
மன மகிழந்து தயிர்கடையும் மத்தொலியும் திசை ஒலியும்
சிறந்தனபோல் எதிர் ஒலிக்க நெடுந்துதிகள் முழங்கிடுமால்
நினைத்துவிதாம் கேட்டிலையோ வேங்கடவா எழுந்தருள்வாய்–11

பெருமாள் நின் திருநிறத்தை பெற்றுளதாய் குவளை சொலும்
கருங்குவளைக் காட்டிடையே களித்துலவும் வண்டுகள் தாம்
பெருமாள் நின் திருநிறத்தை பெற்றுளம் யாம் பெரிதெனுமே
வருதரும் பேர் பகை தவிர்க்க வேங்கடவா எழுந்தருள்வாய்–12-

வேண்டுபவர் வேண்டுவன விழைந்தருளும் பெருவரதா
மாண்புடையாள் மலரமர்ந்தாள் மகிழ்ந்துறையும் திருமார்பா
ஈண்டுலகம் அனைத்தினொடும் இயைந்தமைந்த உறவுளயோய்
காண்பரிய கருணையனே வேங்கடவா எழுந்தருள்வாய்–13-

மின் தவழும் சடையானும் பிரம்மாவும் சனந்தனரும்
இன்றுனது கோனேரி திருத்தீர்த்தம் தலை மூழ்கி
நின்னருளைப் பெற விழைந்தே நெடுவாயில் நிலைநின்றார்
நின்றவர்க்கும் அருள் பொழிய வேங்கடவா எழுந்தருள்வாய்–14-

திருமலையாய் சேடத்தாய் கருடத்தாய் வேங்கடத்தாய்
திரு நாராயண மலையாய் விருடபத்தாய் இருடத்தாய்
பெருமானே எனப்புகழ்ந்து தேவரெலாம் திரண்டனர் காண்
திரண்டுளரைப் புரந்தருள வேங்கடவா எழுந்தருள்வாய்–15-

அருளிடு நின் செயல் முடிப்பான் அட்டதிக்கு பாலர்களாம்
பெருநெறிய அரன் இந்திரன் அக்னியான் பேரியமன்
வருணனொடு நைருதியான் வாயுவோடு குபேரனும்
நின் திருவடிக்கு காத்துளரால் வேங்கடவா எழுதருள்வாய்–16-

திருமலைவாழ் பெருமானே திருஉலாவுக்கு எழுகையில் நின்
கருட நடை சிம்ம நடை நாக நடை முதலாய
திருநடைகள் சிறப்பும் (உ)ணர்ந்து திருத்தமுறக் கற்பதற்கு
கருட சிம்ம நாகருளார் வேங்கடவா எழுந்தருள்வாய்–17-

சூரியனார் சந்திரனார் செவ்வாயாம் புதன் வியாழன்
சீர்மிகுந்த சுக்கிரனார் சனி ராகு கேது இவர்கள்
ஆர்வமுடன் நின் தொண்டர்க்கு அடித்தொண்டு புரிந்துனது
பேரருளைப் பெற நின்றார் வேங்கடவா எழுந்தருள்வாய்–18-

நின் முக்தி விழையால் நின்னையொன்றே மிகவிழைந்து
நின் பாத தூளிகளைத் தம் தலையில் தான் தரித்தோம்
சென்றிடுவாய் கலிமுடிந்தால் இங்கிருந்தும் பரமபதம்
என்பதற்கே அஞ்சினர்காண் வேங்கடவா எழுந்தருள்வாய்–19-

எண்ணரிய தவமியற்றிய இன்சொர்க்கம் முக்தி பெறும்
புண்ணியர்கள் செல்வழி நின்புகழ்க் கோயில் கலசங்கள்
கண்டனரே நின் கோயில் காட்சிக்கே பிறப்பெடுப்பார்
புண்ணியனே அவர்க்கருள வேங்கடவா எழுந்தருள்வாய்–20-

மண்மகளின் திருக்கேள்வா மாக்கருணை குணக் கடலே
திண்புயத்துக் கருடனுடன் நாகனுமே சரண்புகுந்தார்
எண்ணரிய தேவர்களில் ஈடு இணையில் பெருந்தேவா
மண்ணுலகோர் தனிப் புகலே வேங்கடவா எழுந்தருள்வாய்–21-

பத்மநாபா புருடோத்தமா வாசுதேவா வைகுண்டா
சத்தியனே மாதவனே ஜனார்தனனே சக்ரபாணி
வத்சலனே பாரிஜாதப் பெருமலர் போல் அருள்பவனே
உத்தமனே நித்தியனே வேங்கடவா எழுந்தருள்வாய்–22-

திருமகள் தன் திருஅணைப்பில் திருத்துயில் கொள் திருஅழகா
திருவிழியால் பெரு உலகில் அருள் பொழியும் பெருவரதா
திருவுடையாய் தீக்குணத்தாய் திருத்தூயாய் திருப்புகழாய்
பெருவயிரத் திருமுடியாய் வேங்கடவா எழுந்தருள்வாய்–23-

24. மச்சநாதா கூர்மநாதா வராகநாதா நரசிம்ஹா
நச்சி வந்த வாமனனே பரசுராமா ரகுராமா
மெச்சு புகழ் பலராமா திருக்கண்ணா கல்கியனே
இச்சகத்து வைகுந்தா வேங்கடவா எழுந்தருள்வாய்–24-

ஏல முது நடு லவங்க கணசார மணங்கமழும்
சீலமிகு தெய்வீகத் திருதீர்த்தம் தலை சுமந்து
ஞாலமுய்ய வேதமொழி நவற்றுணர்ந்த வேதியர்கள்
கோலமிகு கோயிலுற்றார் வேங்கடவா எழுந்தருள்வாய்–25-

அருணனுந்தான் வந்துதித்தான் அலர்ந்தனவால் தாமரைகள்
பெருவியப்பால் புள்ளினங்கள் பெயர்ந்தெழுந்து சிலம்பினகாண்
திருமார்பா வைணவர்கள் மங்களங்கள் நிற மொழிந்தார்
அருள் திருவே அருள்விருந்தே வேங்கடவா எழுந்தருள்வாய்–26-

நாமகள்தன் நாயகனும் தேவர்களும் மங்களமாம்
காமரியைக் கண்ணாடித் தாமரைகள் சாமரங்கள்
பூமருது பொன் விளக்குப் புகழ்க் கொடிகள் ஏந்தினர்காண்
தே மருவு மலர் மார்பா வேங்கடவா எழுந்தருள்வாய்–27-

திருமார்பா பெருங்குணங்கள் சிறந்தோங்கப் பொலிபவனே
பெரும்பிறவிக் கருங்கடலின் கரைபுனர்க்கும் சேர்க்கும் இணையே
ஒரு வேதத்து உட் பொருளே மயர்வு அறியா மதி நலத்தார்
திருத் தீர்ப்புக்கு உரியவனே வேங்கடவா எழுந்தருள்வாய்–28-

விழித்து எழுந்தக் காலையில் இத்திருப்பள்ளியெழுச்சிதனை
விழைந்துணர்ந்து படிப்பவரை கேட்பவரை நினைப்பவரை
வழுத்துகின்றார் எவரவர்க்கு வரங்களொடு முக்தி தர
எழுந்தருள்வாய் எழுந்தருள்வாய் வேங்கடவா எழுந்தருள்வாய்–29-

———-

கௌசல்யா ஸூ ப்ரஜா ராம பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர்ஸார் தூல கர்த்தவ்யம் தைவமாநஹிகம்–1-

வந்துதித்தாய் ராமா நீ கோசலை தன் திருமகனாய்
சிந்து மொழிச் சிறுகாலை திசையெங்கும் புலர்கிறது
மந்திரங்கள் வாய்மொழிந்து வந்தனைகள் புரிந்தருளச்
செந்திருக்கண் அருள்பொழிய வேங்கடவா எழுந்தருள்வாய்–1-

உத்திஷ்ட உத்திஷ்ட கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜ
உத்திஷ்ட கமலா காந்த தரை லோக்யம் மங்களம் குரு –2-

எழுந்தருள்வாய் வெண்கருடக் கொடியுடையாய் எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் திருக்கமலை விழைமார்பா எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் மூவுலகும் காத்தருள எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் கோவிந்தா வேங்கடவா எழுந்தருள்வாய்–2-

மாதஸ் ஸூதாபல லதே மஹ நீய சீல வஷோ விஹார ரஸிகே ந்ருஹரேரஜஸ்ரம்
ஷீராம் புராஸி தநயே ஸ்ரித கல்ப வல்லி ஸ்ரீ மன் ந்ருஸிம்ஹ தயிதே தவ ஸூ ப்ரபாதம்–3-

போர்புரிந்து மதுகைடைர் தமையழித்தான் உளத்தொளியே
பாரனைத்தும் காத்தளிக்கும் பேரழகின் அருள் உருவே
பாரகத்தார் விழைந்தேத்தும் சீர்சீலப் பெருந்தாயே
கார்வண்ண வேங்கடத்தான் திருத்தேவ எழுந்தருள்வாய்–3-

தவ ஸுப்ரபா4தமரவிந்த3 லோசநே
ப4வது ப்ரஸந்நமுக2 சந்த்3ரமண்ட3லே |
விதி4 ஶஂகரேந்த்3ர வநிதாபி4ரர்சிதே
வ்ருஶ ஶைலநாத2 த3யிதே த3யாநிதே4 ‖ 4 ‖

திங்கள் மொழி திருமுகத்தில் பொங்கும் அருள் புரிபவளே
இந்துகலை வாணியுடன் இந்திராணி அம்பிகையாம்
மங்கையர்கள் தொழுதேத்தும் மாண்புடைய தனித்தலைவி
செங்கமல வேங்கடத்தான் திருத்தேவ எழுந்தருள்வாய்–4-

அத்ர்யாதி3 ஸப்த ருஷயஸ்ஸமுபாஸ்ய ஸந்த்4யாம்
ஆகாஶ ஸிந்து4 கமலாநி மநோஹராணி |
ஆதா3ய பாத3யுக3 மர்சயிதும் ப்ரபந்நாஃ
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 5 ‖

தொலைவிடத்தும் பலவிடத்தும் கழன்று திரி ஏழ்முனிவர்
சலித்தறியாத் தவமியற்றிச் சந்தியா வந்தனம் முடித்து
நிலைபெறு றின் புகழ் சொல்லி நின்பாதம் சேவித்து
மலையடைந்து காத்துளர் காண் வேங்கடவா எழுந்தருள்வாய்–5-

பஂசாநநாப்3ஜ ப4வ ஷண்முக2 வாஸவாத்3யாஃ
த்ரைவிக்ரமாதி3 சரிதம் விபு3தா4ஃ ஸ்துவந்தி |
பா4ஷாபதிஃ பட2தி வாஸர ஶுத்3தி4 மாராத்
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 6 ‖

ஆங்கந்த பிரம்மாவும் அறுமுகனும் தேவர்களும்
ஓங்கி உலகங்களந்த உயர் கதைள் பாடுகின்றார்
ஈங்கிந்த வியாழமுனி பஞ்சாங்கம் ஓதுகின்றார்
தீங்கவிகள் செவிமடுக்க வேங்கடவா எழுந்தருள்வாய்–6-

ஈஶத்-ப்ரபு2ல்ல ஸரஸீருஹ நாரிகேல்த3
பூக3த்3ருமாதி3 ஸுமநோஹர பாலிகாநாம் |
ஆவாதி மந்த3மநிலஃ ஸஹதி3வ்ய க3ந்தை4ஃ
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 7 ‖

நன் கமுகு தென்னைகளில் பாளை மணம் மிகுந்தனவால்
பல் வண்ண மொட்டுகள் தாம் பனித்தேனோடு அலர்ந்தனவால்
புல்லரிக்கும் மெல்லீரப் பூந்தென்றல் தவழ்கிறதால்
எல்லாமும் அணிந்தருள வேங்கடவா எழுந்தருள்வாய்–7-

உந்மீல்யநேத்ர யுக3முத்தம பஂஜரஸ்தா2ஃ
பாத்ராவஸிஷ்ட கத3லீ ப2ல பாயஸாநி |
பு4க்த்வாஃ ஸலீல மத2கேல்தி3 ஶுகாஃ பட2ந்தி
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 8 ‖

நின் திருப்பேர் பல கேட்டு நின்னடியார் மெய்மறக்க
நின் கோயில் பைங்கிளிகள் தீங்கனியாம் அமுதருந்தி
நின் திருப்பேர் ஆயிரத்தால் நெடும் புகழை விளக்கிடுமாய்
நின் செவியால் கேட்டருள வேங்கடவா எழுந்தருள்வாய்–8-

தந்த்ரீ ப்ரகர்ஷ மது4ர ஸ்வநயா விபஂச்யா
கா3யத்யநந்த சரிதம் தவ நாரதோ3பி |
பா4ஷா ஸமக்3ர மஸத்-க்ருதசாரு ரம்யம்
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 9 ‖

எவ்விடத்தும் நிலையாக நின்றறியா நாரதரும்
இவ்விடத்து உம் பெருமைகள் தாம் ஈர்ப்பதனால் நிலைகொண்டார்
செவ்விய தன் வீணையில் உன் திருச் சரிதை மீட்டுகின்றார்.
அவ்விசையை கேட்டருள வேங்கடவா எழுந்தருள்வாய்-9-

ப்4ருங்கா3வல்தீ3 ச மகரந்த3 ரஸாநு வித்3த4
ஜு2ஂகாரகீ3த நிநதை3ஃ ஸஹஸேவநாய |
நிர்யாத்யுபாந்த ஸரஸீ கமலோத3ரேப்4யஃ
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 1௦ ‖

வெண்கமல ஒண்மலர்கள் விளைத்த மது மிக அருந்தி
கண் மயங்கி மலர் முகட்டுள் காலைவரை சிறைகிடந்த
வண்டினங்கள் ரீங்கரித்தே வந்தனவா நினைத் தொழவே
தண்ணருளால் சேவைதர வேங்கடவா எழுந்தருள்வாய்–10-

யோஷாக3ணேந வரத3த்4நி விமத்2யமாநே
க்4ஷாலயேஷு த3தி4மந்த2ந தீவ்ரக்4ஷாஃ |
ரோஷாத்கலிம் வித3த4தே ககுப4ஶ்ச கும்பா4ஃ
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 11 ‖

தனதனங்கள் நிமர்ந்த செயற் கைவளைகள் ஒலியெழுப்ப
மன மகிழந்து தயிர்கடையும் மத்தொலியும் திசை ஒலியும்
சிறந்தனபோல் எதிர் ஒலிக்க நெடுந்துதிகள் முழங்கிடுமால்
நினைத்துவிதாம் கேட்டிலையோ வேங்கடவா எழுந்தருள்வாய்–11

பத்3மேஶமித்ர ஶதபத்ர க3தால்தி3வர்கா3ஃ
ஹர்தும் ஶ்ரியம் குவலயஸ்ய நிஜாங்க3லக்ஷ்ம்யாஃ |
பே4ரீ நிநாத3மிவ பி4ப்4ரதி தீவ்ரநாத3ம்
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 12 ‖

பெருமாள் நின் திருநிறத்தை பெற்றுளதாய் குவளை சொலும்
கருங்குவளைக் காட்டிடையே களித்துலவும் வண்டுகள் தாம்
பெருமாள் நின் திருநிறத்தை பெற்றுளம் யாம் பெரிதெனுமே
வருதரும் பேர் பகை தவிர்க்க வேங்கடவா எழுந்தருள்வாய்–12-

ஶ்ரீமந்நபீ4ஷ்ட வரதா3கி2ல லோக ப3ந்தோ4
ஶ்ரீ ஶ்ரீநிவாஸ ஜக3தே3க த3யைக ஸிந்தோ4 |
ஶ்ரீ தே3வதா க்3ருஹ பு4ஜாந்தர தி3வ்யமூர்தே
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 13 ‖

வேண்டுபவர் வேண்டுவன விழைந்தருளும் பெருவரதா
மாண்புடையாள் மலரமர்ந்தாள் மகிழ்ந்துறையும் திருமார்பா
ஈண்டுலகம் அனைத்தினொடும் இயைந்தமைந்த உறவுளயோய்
காண்பரிய கருணையனே வேங்கடவா எழுந்தருள்வாய்–13-

ஶ்ரீ ஸ்வாமி புஷ்கரிணிகாப்லவ நிர்மலாங்கா3ஃ
ஶ்ரேயார்தி2நோ ஹரவிரிஂசி ஸநந்த3நாத்3யாஃ |
த்3வாரே வஸந்தி வரநேத்ர ஹதோத்த மாங்கா3ஃ
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 14 ‖

மின் தவழும் சடையானும் பிரம்மாவும் சனந்தனரும்
இன்றுனது கோனேரி திருத்தீர்த்தம் தலை மூழ்கி
நின்னருளைப் பெற விழைந்தே நெடுவாயில் நிலைநின்றார்
நின்றவர்க்கும் அருள் பொழிய வேங்கடவா எழுந்தருள்வாய்–14-

ஶ்ரீ ஶேஷஶைல க3ருடா3சல வேஂகடாத்3ரி
நாராயணாத்3ரி வ்ருஷபா4த்3ரி வ்ருஷாத்3ரி முக்2யாம் |
ஆக்2யாம் த்வதீ3ய வஸதே ரநிஶம் வத3ந்தி
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 15 ‖

திருமலையாய் சேடத்தாய் கருடத்தாய் வேங்கடத்தாய்
திரு நாராயண மலையாய் விருடபத்தாய் இருடத்தாய்
பெருமானே எனப்புகழ்ந்து தேவரெலாம் திரண்டனர் காண்
திரண்டுளரைப் புரந்தருள வேங்கடவா எழுந்தருள்வாய்–15-

ஸேவாபராஃ ஶிவ ஸுரேஶ க்ருஶாநுத4ர்ம
ரக்ஷோம்பு3நாத2 பவமாந த4நாதி4 நாதா2ஃ |
ப3த்3தா4ஂஜலி ப்ரவிலஸந்நிஜ ஶீர்ஷதே3ஶாஃ
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 16 ‖

அருளிடு நின் செயல் முடிப்பான் அட்டதிக்கு பாலர்களாம்
பெருநெறிய அரன் இந்திரன் அக்னியான் பேரியமன்
வருணனொடு நைருதியான் வாயுவோடு குபேரனும்
நின் திருவடிக்கு காத்துளரால் வேங்கடவா எழுதருள்வாய்–16-

தா4டீஷு தே விஹக3ராஜ ம்ருகா3தி4ராஜ
நாகா3தி4ராஜ கஜ3ராஜ ஹயாதி4ராஜாஃ |
ஸ்வஸ்வாதி4கார மஹிமாதி4க மர்த2யந்தே
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 17 ‖

திருமலைவாழ் பெருமானே திருஉலாவுக்கு எழுகையில் நின்
கருட நடை சிம்ம நடை நாக நடை முதலாய
திருநடைகள் சிறப்பும் (உ)ணர்ந்து திருத்தமுறக் கற்பதற்கு
கருட சிம்ம நாகருளார் வேங்கடவா எழுந்தருள்வாய்–17-

ஸூர்யேந்து3 பௌ4ம பு3த4வாக்பதி காவ்யஶௌரி
ஸ்வர்பா4நுகேது தி3விஶத்-பரிஶத்-ப்ரதா4நாஃ |
த்வத்3தா3ஸதா3ஸ சரமாவதி4 தா3ஸதா3ஸாஃ
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 18 ‖

சூரியனார் சந்திரனார் செவ்வாயாம் புதன் வியாழன்
சீர்மிகுந்த சுக்கிரனார் சனி ராகு கேது இவர்கள்
ஆர்வமுடன் நின் தொண்டர்க்கு அடித்தொண்டு புரிந்துனது
பேரருளைப் பெற நின்றார் வேங்கடவா எழுந்தருள்வாய்–18-

தத்-பாத3தூ4ல்தி3 ப4ரித ஸ்பு2ரிதோத்தமாங்கா3ஃ
ஸ்வர்கா3பவர்க3 நிரபேக்ஷ நிஜாந்தரங்கா3ஃ |
கல்பாக3மா கலநயாகுலதாம் லப4ந்தே
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 19 ‖

நின் முக்தி விழையால் நின்னையொன்றே மிகவிழைந்து
நின் பாத தூளிகளைத் தம் தலையில் தான் தரித்தோம்
சென்றிடுவாய் கலிமுடிந்தால் இங்கிருந்தும் பரமபதம்
என்பதற்கே அஞ்சினர்காண் வேங்கடவா எழுந்தருள்வாய்–19-

த்வத்3கோ3புராக்3ர ஶிக2ராணி நிரீக்ஷமாணாஃ
ஸ்வர்கா3பவர்க3 பத3வீம் பரமாம் ஶ்ரயந்தஃ |
மர்த்யா மநுஷ்ய பு4வநே மதிமாஶ்ரயந்தே
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 2௦ ‖

எண்ணரிய தவமியற்றிய இன்சொர்க்கம் முக்தி பெறும்
புண்ணியர்கள் செல்வழி நின்புகழ்க் கோயில் கலசங்கள்
கண்டனரே நின் கோயில் காட்சிக்கே பிறப்பெடுப்பார்
புண்ணியனே அவர்க்கருள வேங்கடவா எழுந்தருள்வாய்–20-

ஶ்ரீ பூ4மிநாயக த3யாதி3 கு3ணாம்ருதாப்3தே3
தே3வாதி3தே3வ ஜக3தே3க ஶரண்யமூர்தே |
ஶ்ரீமந்நநந்த க3ருடா3தி3பி4 ரர்சிதாங்கே4
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 21 ‖

மண்மகளின் திருக்கேள்வா மாக்கருணை குணக் கடலே
திண்புயத்துக் கருடனுடன் நாகனுமே சரண்புகுந்தார்
எண்ணரிய தேவர்களில் ஈடு இணையில் பெருந்தேவா
மண்ணுலகோர் தனிப் புகலே வேங்கடவா எழுந்தருள்வாய்–21-

ஶ்ரீ பத்3மநாப4 புருஷோத்தம வாஸுதே3வ
வைகுண்ட2 மாத4வ ஜநார்த4ந சக்ரபாணே |
ஶ்ரீ வத்ஸ சிஹ்ந ஶரணாக3த பாரிஜாத
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 22 ‖

பத்மநாபா புருடோத்தமா வாசுதேவா வைகுண்டா
சத்தியனே மாதவனே ஜனார்தனனே சக்ரபாணி
வத்சலனே பாரிஜாதப் பெருமலர் போல் அருள்பவனே
உத்தமனே நித்தியனே வேங்கடவா எழுந்தருள்வாய்–22-

கந்த3ர்ப த3ர்ப ஹர ஸுந்த3ர தி3வ்ய மூர்தே
காந்தா குசாம்பு3ருஹ குட்மல லோலத்3ருஷ்டே |
கல்யாண நிர்மல கு3ணாகர தி3வ்யகீர்தே
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 23 ‖

திருமகள் தன் திருஅணைப்பில் திருத்துயில் கொள் திருஅழகா
திருவிழியால் பெரு உலகில் அருள் பொழியும் பெருவரதா
திருவுடையாய் தீக்குணத்தாய் திருத்தூயாய் திருப்புகழாய்
பெருவயிரத் திருமுடியாய் வேங்கடவா எழுந்தருள்வாய்–23-

மீநாக்ருதே கமட2கோல ந்ருஸிம்ஹ வர்ணிந்
ஸ்வாமிந் பரஶ்வத2 தபோத4ந ராமசந்த்3ர |
ஶேஷாம்ஶராம யது3நந்த3ந கல்கிரூப
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 24 ‖

மச்சநாதா கூர்மநாதா வராகநாதா நரசிம்ஹா
நச்சி வந்த வாமனனே பரசுராமா ரகுராமா
மெச்சு புகழ் பலராமா திருக்கண்ணா கல்கியனே
இச்சகத்து வைகுந்தா வேங்கடவா எழுந்தருள்வாய்–

ஏலாலவங்க3 க்4நஸார ஸுக3ந்தி4 தீர்த2ம்
தி3வ்யம் வியத்ஸரிது ஹேமக்4டேஷு பூர்ணம் |
த்4ருத்வாத்3ய வைதி3க ஶிகா2மணயஃ ப்ரஹ்ருஷ்டாஃ
திஷ்ட2ந்தி வேஂகடபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 25 ‖

ஏல முது நடு லவங்க கணசார மணங்கமழும்
சீலமிகு தெய்வீகத் திருதீர்த்தம் தலை சுமந்து
ஞாலமுய்ய வேதமொழி நவற்றுணர்ந்த வேதியர்கள்
கோலமிகு கோயிலுற்றார் வேங்கடவா எழுந்தருள்வாய்–25-

பா4ஸ்வாநுதே3தி விகசாநி ஸரோருஹாணி
ஸம்பூரயந்தி நிநதை3ஃ ககுபோ4 விஹங்கா3ஃ |
ஶ்ரீவைஷ்ணவாஃ ஸதத மர்தி2த மங்க3ல்தா3ஸ்தே
தா4மாஶ்ரயந்தி தவ வேஂகட ஸுப்ரபா4தம் ‖ 26 ‖

அருணனுந்தான் வந்துதித்தான் அலர்ந்தனவால் தாமரைகள்
பெருவியப்பால் புள்ளினங்கள் பெயர்ந்தெழுந்து சிலம்பினகாண்
திருமார்பா வைணவர்கள் மங்களங்கள் நிற மொழிந்தார்
அருள் திருவே அருள்விருந்தே வேங்கடவா எழுந்தருள்வாய்–26-

ப்3ரஹ்மாத3யா ஸ்ஸுரவரா ஸ்ஸமஹர்ஷயஸ்தே
ஸந்தஸ்ஸநந்த3ந முகா2ஸ்த்வத2 யோகி3வர்யாஃ |
தா4மாந்திகே தவ ஹி மங்க3ல்த3 வஸ்து ஹஸ்தாஃ
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 27 ‖

நாமகள்தன் நாயகனும் தேவர்களும் மங்களமாம்
காமரியைக் கண்ணாடித் தாமரைகள் சாமரங்கள்
பூமருது பொன் விளக்குப் புகழ்க் கொடிகள் ஏந்தினர்காண்
தே மருவு மலர் மார்பா வேங்கடவா எழுந்தருள்வாய்–27-

லக்ஶ்மீநிவாஸ நிரவத்3ய கு3ணைக ஸிந்தோ4
ஸம்ஸாரஸாக3ர ஸமுத்தரணைக ஸேதோ |
வேதா3ந்த வேத்3ய நிஜவைப4வ ப4க்த போ4க்3ய
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 28 ‖

திருமார்பா பெருங்குணங்கள் சிறந்தோங்கப் பொலிபவனே
பெரும்பிறவிக் கருங்கடலின் கரைபுனர்க்கும் சேர்க்கும் இணையே
ஒரு வேதத்து உட் பொருளே மயர்வு அறியா மதி நலத்தார்
திருத் தீர்ப்புக்கு உரியவனே வேங்கடவா எழுந்தருள்வாய்–28-

இத்தம் வ்ருஷாசலபதேரிஹ ஸுப்ரபா4தம்
யே மாநவாஃ ப்ரதிதி3நம் படி2தும் ப்ரவ்ருத்தாஃ |
தேஷாம் ப்ரபா4த ஸமயே ஸ்ம்ருதிரங்க3பா4ஜாம்
ப்ரஜ்ஞாம் பரார்த2 ஸுலபா4ம் பரமாம் ப்ரஸூதே ‖ 29 ‖

விழித்து எழுந்தக் காலையில் இத்திருப்பள்ளியெழுச்சிதனை
விழைந்துணர்ந்து படிப்பவரை கேட்பவரை நினைப்பவரை
வழுத்துகின்றார் எவரவர்க்கு வரங்களொடு முக்தி தர
எழுந்தருள்வாய் எழுந்தருள்வாய் வேங்கடவா எழுந்தருள்வாய்–29-

——–

ஶ்ரீ வேங்கடேஶ்வர ஸ்தோத்ரம்

கமலா குச சூசுக குங்குமதோ
நியதாருணிதாதுலநீலதநோ ।
கமலாயதலோசந லோகபதே
விஜயீப⁴வ வேங்கடஶைலபதே ॥ 1 ॥

ஸசதுர்முக²ஷண்முக²பஞ்சமுக²
ப்ரமுகா²கி²லதை³வதமௌளிமணே ।
ஶரணாக³தவத்ஸல ஸாரநிதே⁴
பரிபாலய மாம் வ்ருஷஶைலபதே ॥ 2 ॥

அதிவேலதயா தவ து³ர்விஷஹை-
ரநுவேலக்ருதைரபராத⁴ஶதை꞉ ।
ப⁴ரிதம் த்வரிதம் வ்ருஷஶைலபதே
பரயா க்ருபயா பரிபாஹி ஹரே ॥ 3 ॥

அதி⁴வேங்கடஶைலமுதா³ரமதே-
-ர்ஜநதாபி⁴மதாதி⁴கதா³நரதாத் ।
பரதே³வதயா க³தி³தாந்நிக³மை꞉
கமலாத³யிதாந்ந பரம் கலயே ॥ 4 ॥

கலவேணுரவாவஶகோ³பவதூ⁴-
-ஶதகோடிவ்ருதாத்ஸ்மரகோடிஸமாத் ।
ப்ரதிவல்லவிகாபி⁴மதாத்ஸுக²தா³த்
வஸுதே³வஸுதாந்ந பரம் கலயே ॥ 5 ॥

அபி⁴ராமகு³ணாகர தா³ஶரதே²
ஜக³தே³கத⁴நுர்த⁴ர தீ⁴ரமதே ।
ரகு⁴நாயக ராம ரமேஶ விபோ⁴
வரதோ³ ப⁴வ தே³வ த³யாஜலதே⁴ ॥ 6 ॥

அவநீதநயா கமநீயகரம்
ரஜநீகரசாருமுகா²ம்பு³ருஹம் ।
ரஜநீசரராஜதமோமிஹிரம்
மஹநீயமஹம் ரகு⁴ராமமயே ॥ 7 ॥

ஸுமுக²ம் ஸுஹ்ருத³ம் ஸுலப⁴ம் ஸுக²த³ம்
ஸ்வநுஜம் ச ஸுகாயமமோக⁴ஶரம் ।
அபஹாய ரகூ⁴த்³வஹமந்யமஹம்
ந கத²ஞ்சந கஞ்சந ஜாது ப⁴ஜே ॥ 8 ॥

விநா வேங்கடேஶம் ந நாதோ² ந நாத²꞉
ஸதா³ வேங்கடேஶம் ஸ்மராமி ஸ்மராமி ।
ஹரே வேங்கடேஶ ப்ரஸீத³ ப்ரஸீத³
ப்ரியம் வேங்கடேஶ ப்ரயச்ச² ப்ரயச்ச² ॥ 9 ॥

அஹம் தூ³ரதஸ்தே பதா³ம்போ⁴ஜயுக்³ம-
-ப்ரணாமேச்ச²யா(ஆ)க³த்ய ஸேவாம் கரோமி ।
ஸக்ருத்ஸேவயா நித்யஸேவாப²லம் த்வம்
ப்ரயச்ச² ப்ரயச்ச² ப்ரபோ⁴ வேங்கடேஶ ॥ 10 ॥

அஜ்ஞாநிநா மயா தோ³ஷாநஶேஷாந்விஹிதாந் ஹரே ।
க்ஷமஸ்வ த்வம் க்ஷமஸ்வ த்வம் ஶேஷஶைலஶிகா²மணே ॥ 11 ॥

இதி ஶ்ரீவேங்கடேஶ ஸ்தோத்ரம் ।

———-

ஸ்ரீ வேங்கடேஶ்வர ப்ரபத்தி

ஈஶாநாம் ஜக³தோ(அ)ஸ்ய வேங்கடபதேர்விஷ்ணோ꞉ பராம் ப்ரேயஸீம்
தத்³வக்ஷ꞉ஸ்த²லநித்யவாஸரஸிகாம் தத்க்ஷாந்திஸம்வர்தி⁴நீம் ।
பத்³மாலங்க்ருதபாணிபல்லவயுகா³ம் பத்³மாஸநஸ்தா²ம் ஶ்ரியம்
வாத்ஸல்யாதி³கு³ணோஜ்ஜ்வலாம் ப⁴க³வதீம் வந்தே³ ஜக³ந்மாதரம் ॥ 1 ॥

ஶ்ரீமந் க்ருபாஜலநிதே⁴ க்ருதஸர்வலோக
ஸர்வஜ்ஞ ஶக்த நதவத்ஸல ஸர்வஶேஷிந் ।
ஸ்வாமிந் ஸுஶீல ஸுலபா⁴ஶ்ரிதபாரிஜாத
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 2 ॥

ஆநூபுரார்பிதஸுஜாதஸுக³ந்தி⁴புஷ்ப-
-ஸௌரப்⁴யஸௌரப⁴கரௌ ஸமஸந்நிவேஶௌ ।
ஸௌம்யௌ ஸதா³நுப⁴வநே(அ)பி நவாநுபா⁴வ்யௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 3 ॥

ஸத்³யோவிகாஸிஸமுதி³த்வரஸாந்த்³ரராக³-
-ஸௌரப்⁴யநிர்ப⁴ரஸரோருஹஸாம்யவார்தாம் ।
ஸம்யக்ஷு ஸாஹஸபதே³ஷு விளேக²யந்தௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 4 ॥

ரேகா²மயத்⁴வஜஸுதா⁴கலஶாதபத்ர-
வஜ்ராங்குஶாம்பு³ருஹகல்பகஶங்க²சக்ரை꞉ ।
ப⁴வ்யைரளங்க்ருததலௌ பரதத்த்வசிஹ்நை꞉
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 5 ॥

தாம்ரோத³ரத்³யுதிபராஜிதபத்³மராகௌ³
பா³ஹ்யைர்மஹோபி⁴ரபி⁴பூ⁴தமஹேந்த்³ரநீலௌ ।
உத்³யந்நகா²ம்ஶுபி⁴ருத³ஸ்தஶஶாங்கபா⁴ஸௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 6 ॥

ஸப்ரேமபீ⁴தி கமலாகரபல்லவாப்⁴யாம்
ஸம்வாஹநே(அ)பி ஸபதி³ க்லமமாத³தா⁴நௌ ।
காந்தாவவாங்மநஸகோ³சரஸௌகுமார்யௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 7 ॥

லக்ஷ்மீமஹீதத³நுரூபநிஜாநுபா⁴வ-
நீலாதி³தி³வ்யமஹிஷீகரபல்லவாநாம் ।
ஆருண்யஸங்க்ரமணத꞉ கில ஸாந்த்³ரராகௌ³
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 8 ॥

நித்யாந்நமத்³விதி⁴ஶிவாதி³கிரீடகோடி-
ப்ரத்யுப்ததீ³ப்தநவரத்நமஹ꞉ப்ரரோஹை꞉ ।
நீராஜநாவிதி⁴முதா³ரமுபாத³தா⁴நௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 9 ॥

விஷ்ணோ꞉ பதே³ பரம இத்யுதி³த ப்ரஶம்ஸௌ
யௌ மத்⁴வ உத்ஸ இதி போ⁴க்³யதயா(அ)ப்யுபாத்தௌ ।
பூ⁴யஸ்ததே²தி தவ பாணிதலப்ரதி³ஷ்டௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 10 ॥

பார்தா²ய தத்ஸத்³ருஶஸாரதி²நா த்வயைவ
யௌ த³ர்ஶிதௌ ஸ்வசரணௌ ஶரணம் வ்ரஜேதி ।
பூ⁴யோ(அ)பி மஹ்யமிஹ தௌ கரத³ர்ஶிதௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 11 ॥

மந்மூர்த்⁴நி காளியப²ணே விகடாடவீஷு
ஶ்ரீவேங்கடாத்³ரிஶிக²ரே ஶிரஸி ஶ்ருதீநாம் ।
சித்தே(அ)ப்யநந்யமநஸாம் ஸமமாஹிதௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 12 ॥

அம்லாநஹ்ருஷ்யத³வநீதலகீர்ணபுஷ்பௌ
ஶ்ரீவேங்கடாத்³ரிஶிக²ராப⁴ரணாயமாநௌ ।
ஆநந்தி³தாகி²லமநோநயநௌ தவைதௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 13 ॥

ப்ராய꞉ ப்ரபந்நஜநதாப்ரத²மாவகா³ஹ்யௌ
மாது꞉ ஸ்தநாவிவ ஶிஶோரம்ருதாயமாநௌ ।
ப்ராப்தௌ பரஸ்பரதுலாமதுலாந்தரௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 14 ॥

ஸத்த்வோத்தரை꞉ ஸததஸேவ்யபதா³ம்பு³ஜேந
ஸம்ஸாரதாரகத³யார்த்³ரத்³ருக³ஞ்சலேந ।
ஸௌம்யோபயந்த்ருமுநிநா மம த³ர்ஶிதௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 15 ॥

ஸத்வோத்தரைஸ் ஸதத ஸேவ்ய பதாம்புஜேந
ஸம்ஸார தாரக தயார்த்ர த்ருகஞ்சலேந
ஸௌம்யோபயந்த்ரு முநிநா மம தர்ஷிதௌ தே
ஸ்ரீவேங்கடேச சரணௌ சரணம் ப்ரபத்யே–(ஸ்லோகம் 15)

தனது அளவிலாக் கருணையினால் மணவாள மாமுனிகள் காட்டி அருளிய ஸ்ரீ வேங்கடேசனின்
பாதாரவிந்தத்தில் நான் சரணம் அடைகிறேன்.
பரம சாத்விகர்கள் தமது தூய ஹ்ருதயத்தினால் மாமுனிகளை வணங்குகின்றனர்.
அப்படிப்பட்ட மாமுனிகள் எம்பெருமானுடைய இந்தத் திருப்பாதங்கள் தான் சம்சாரத்திலிருந்து
நம்மை உயர்த்தி பரமபதத்தில் வைக்கும் எனக் காட்டியருளினார்.

ஶ்ரீஶ ஶ்ரியா க⁴டிகயா த்வது³பாயபா⁴வே
ப்ராப்யே த்வயி ஸ்வயமுபேயதயா ஸ்பு²ரந்த்யா ।
நித்யாஶ்ரிதாய நிரவத்³யகு³ணாய துப்⁴யம்
ஸ்யாம் கிங்கரோ வ்ருஷகி³ரீஶ ந ஜாது மஹ்யம் ॥ 16 ॥

இதி ஶ்ரீ வேங்கடேஶ்வர ப்ரபத்தி ||

——–

ஸ்ரீ வேங்கடேச மங்களம் :

ஸ்ரீய காந்தாய கல்யாண நிதயே நிதயேர்தி நாம்
ஸ்ரீ வேங்கட நிவாஸாய ஸ்ரீ நிவாஸாய மங்களம் –1-

லஷ்மீ ஸ விப்ரமாலோக ஸூப்ரூ விப்ரம சஷுஷே
சஷுஷே ஸர்வ லோகாநாம் வேங்கடேசாய மங்களம் –2-

ஸ்ரீ வெங்கடாத்ரி ஸ்ருங்காக்க்ர மங்களா பரணங்கரயே
மங்களாநாம் நிவாஸாய வேங்கடேசாய மங்களம் –3-

ஸர்வா வயவ ஸுந்தர்ய ஸம்பதா ஸர்வ சேத ஸாம்
ஸதா ஸம்மோஹ நாயாஸ்து வேங்கடேசாய மங்களம் –4-

நித்யா நிரவத்யாய ஸத்யா நந்த சிதாத்மநே
ஸர்வ அந்தராத்மநே ஸ்ரீ மத் வேங்கடேசாய மங்களம் –5-

ஸ்வதஸ் ஸர்வ விதே ஸர்வ ஸக்தயே ஸர்வ சேஷிணே
ஸூலபாய ஸூஸீலாய வேங்கடேசாய மங்களம் –6-

பரஸ்மை ப்ரஹ்மணே பூர்ண காமாய பரமாத்மநே
ப்ரயுஜ்ஜே பரதத்வாய வேங்கடேசாய மங்களம் –7-

ஆகால தத்வம் ஆஸ்ராந்தம் ஆத்மநாம் அநு பஸ்யதாம்
அத்ருப் யம் ருத ரூபாய வேங்கடேசாய மங்களம் –8-

ப்ராயஸ் ஸ்வ சரணவ் பும்ஸாம் சரண்யத்வேந பாணிநா
க்ருபயா திசதே ஸ்ரீ மத் வேங்கடேசாய மங்களம் –9-

தயாம்ருத தரங்கிண்யாஸ் தரங்கை ரிவ ஸீதலை
அபாங்கை சிஞ்சதே விஸ்வம் வேங்கடேசாய மங்களம் –10-

ஸ்ரக் பூஷாம் பரஹேதீ நாம் ஸூ ஷமாவஹ மூர்த்தயே
ஸர்வார்த்தி சமநா யாஸ்து வேங்கடேசாய மங்களம் –11-

ஸ்ரீ வைகுண்ட விரக்தாய ஸ்வாமி புஷ்கரணீ தடே
ரமயா ரம மாணாய வேங்கடேசாய மங்களம் –12-

ஸ்ரீ மத் ஸூந்தர ஜாமாத்ரு முநி மாநஸ வாஸி நே
ஸர்வ லோக நிவாஸாய ஸ்ரீ நிவாஸாய மங்களம் –13-

எல்லா மங்களங்களும் சர்வ வ்யாபகனான திருவேங்கடமுடையானிடம் மேம்படட்டும்,
அப்படிப்பட்ட அவன் திருமார்பில் ஸ்ரீமஹா லக்ஷ்மி குடி கொண்டிருப்பாள்,
மேலும் அவனே என்றென்றும் மணவாள மாமுனிகளின் ஹ்ருதயத்தில் தங்கி யிருக்கிறான்.

மங்களா ஸாஸன பரைர் மதாசார்ய புரோகமை
ஸர்வைஸ் ச பூர்வைர் ஆச்சார்யை ஸத் க்ருதா யாஸ்து மங்களம் –14

புண்யம் ஸ்லோகம் யஜமாநாய க்ருண்வதீ –

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஶ்ரீ வேங்கடேஶ்வர அஷ்டோத்ரம் –ஶ்ரீ வேங்கடேஶ த்³வாத³ஶ நாம ஸ்தோத்ரம் –ஸ்ரீ வேங்கடேச மங்களாஷ்டகம்–ஸ்ரீ ஹநுமத் த்வாதச நாம ஸ்தோத்ரம்–

January 1, 2022

ஸ்ரீனிவாச காயத்ரி மந்திரம்

ஓம் நிரஞ்ஜநாய வித்மஹே!! நிராபாஸாய தீமஹி!! தந்நோ ஸ்ரீநிவாஸஹ் : ப்ரசோதயாத்!

———

ஶ்ரீ வேங்கடேஶ்வர அஷ்டோத்ரம்

ஓம் ஶ்ரீ வேஂகடேஶாய நமஃ
ஓம் ஶ்ரீநிவாஸாய நமஃ
ஓம் லக்ஷ்மிபதயே நமஃ
ஓம் அநாநுயாய நமஃ
ஓம் அம்ருதாம்ஶநே நமஃ
ஓம் மாத4வாய நமஃ
ஓம் க்ருஷ்ணாய நமஃ
ஓம் ஶ்ரீஹரயே நமஃ
ஓம் ஜ்ஞாநபஂஜராய நமஃ || 9 ||

ஓம் ஶ்ரீவத்ஸ வக்ஷஸே நமஃ
ஓம் ஜக3த்3வந்த்3யாய நமஃ
ஓம் கோ3விந்தா3ய நமஃ
ஓம் ஶாஶ்வதாய நமஃ
ஓம் ப்ரப4வே நமஃ
ஓம் ஶேஶாத்3ரிநிலாயாய நமஃ
ஓம் தே3வாய நமஃ
ஓம் கேஶவாய நமஃ
ஓம் மது4ஸூத3நாய நமஃ || 18 ||

ஓம் அம்ருதாய நமஃ
ஓம் விஷ்ணவே நமஃ
ஓம் அச்யுதாய நமஃ
ஓம் பத்3மிநீப்ரியாய நமஃ
ஓம் ஸர்வேஶாய நமஃ
ஓம் கோ3பாலாய நமஃ
ஓம் புருஷோத்தமாய நமஃ
ஓம் கோ3பீஶ்வராய நமஃ
ஓம் பரஂஜ்யோதிஷே நமஃ || 27 ||

ஓம் வ்தெகுண்ட2 பதயே நமஃ
ஓம் அவ்யயாய நமஃ
ஓம் ஸுதா4தநவே நமஃ
ஓம் யாத3 வேந்த்3ராய நமஃ
ஓம் நித்ய யௌவநரூபவதே நமஃ
ஓம் நிரஂஜநாய நமஃ
ஓம் விராபா4ஸாய நமஃ
ஓம் நித்ய த்ருப்த்தாய நமஃ
ஓம் த4ராபதயே நமஃ || 36 ||

ஓம் ஸுரபதயே நமஃ
ஓம் நிர்மலாய நமஃ
ஓம் தே3வபூஜிதாய நமஃ
ஓம் சதுர்பு4ஜாய நமஃ
ஓம் சக்ரத4ராய நமஃ
ஓம் சதுர்வேதா3த்மகாய நமஃ
ஓம் த்ரிதா4ம்நே நமஃ
ஓம் த்ரிகு3ணாஶ்ரயாய நமஃ
ஓம் நிர்விகல்பாய நமஃ || 45 ||

ஓம் நிஷ்களஂகாய நமஃ
ஓம் நிராந்தகாய நமஃ
ஓம் ஆர்தலோகாப4யப்ரதா3ய நமஃ
ஓம் நிருப்ரத3வாய நமஃ
ஓம் நிர்கு3ணாய நமஃ
ஓம் க3தா3த4ராய நமஃ
ஓம் ஶார்ஞ்ஙபாணயே நமஃ
ஓம் நந்த3கிநீ நமஃ
ஓம் ஶங்க3தா3ரகாய நமஃ || 54 ||

ஓம் அநேகமூர்தயே நமஃ
ஓம் அவ்யக்தாய நமஃ
ஓம் கடிஹஸ்தாய நமஃ
ஓம் வரப்ரதா3ய நமஃ
ஓம் அநேகாத்மநே நமஃ
ஓம் தீ3நப3ந்த4வே நமஃ
ஓம் ஜக3த்3வ்யாபிநே நமஃ
ஓம் ஆகாஶராஜவரதா3ய நமஃ
ஓம் யோகி3ஹ்ருத்பத்3ஶமந்தி3ராய நமஃ || 63 ||

ஓம் தா3மோத3ராய நமஃ
ஓம் ஜக3த்பாலாய நமஃ
ஓம் பாபக்4நாய நமஃ
ஓம் ப4க்தவத்ஸலாய நமஃ
ஓம் த்ரிவிக்ரமாய நமஃ
ஓம் ஶிம்ஶுமாராய நமஃ
ஓம் ஜடாமகுட ஶோபி4தாய நமஃ
ஓம் ஶங்க3 மத்3யோல்ல ஸந்மஂஜு கிஂகிண்யாட்4ய நமஃ
ஓம் காருண்ட3காய நமஃ || 72 ||

ஓம் நீலமோக4ஶ்யாம தநவே நமஃ
ஓம் பி3ல்வபத்த்ரார்சந ப்ரியாய நமஃ
ஓம் ஜக3த்கர்த்ரே நமஃ
ஓம் ஜக3த்ஸாக்ஷிணே நமஃ
ஓம் ஜக3த்பதயே நமஃ
ஓம் சிந்திதார்த4 ப்ரதா3யகாய நமஃ
ஓம் ஜிஷ்ணவே நமஃ
ஓம் தா3ஶார்ஹாய நமஃ
ஓம் த3ஶரூபவதே நமஃ || 81 ||

ஓம் தே3வகீ நந்த3நாய நமஃ
ஓம் ஶௌரயே நமஃ
ஓம் ஹயரீவாய நமஃ
ஓம் ஜநார்த4நாய நமஃ
ஓம் கந்யாஶ்ரணதாரேஜ்யாய நமஃ
ஓம் பீதாம்ப3ரத4ராய நமஃ
ஓம் அநகா4ய நமஃ
ஓம் வநமாலிநே நமஃ
ஓம் பத்3மநாபா4ய நமஃ || 90 ||

ஓம் ம்ருக3யாஸக்த மாநஸாய நமஃ
ஓம் அஶ்வரூடா4ய நமஃ
ஓம் க2ட்3க3தா4ரிணே நமஃ
ஓம் த4நார்ஜந ஸமுத்ஸுகாய நமஃ
ஓம் க4நதாரல ஸந்மத்4யகஸ்தூரீ திலகோஜ்ஜ்வலாய நமஃ
ஓம் ஸச்சிதாநந்த3ரூபாய நமஃ
ஓம் ஜக3ந்மங்கள3 தா3யகாய நமஃ
ஓம் யஜ்ஞபோ4க்ரே நமஃ
ஓம் சிந்மயாய நமஃ || 99 ||

ஓம் பரமேஶ்வராய நமஃ
ஓம் பரமார்த4ப்ரதா3யகாய நமஃ
ஓம் ஶாந்தாய நமஃ
ஓம் ஶ்ரீமதே நமஃ
ஓம் தோ3ர்த3ண்ட3 விக்ரமாய நமஃ
ஓம் பரப்3ரஹ்மணே நமஃ
ஓம் ஶ்ரீவிப4வே நமஃ
ஓம் ஜக3தீ3ஶ்வராய நமஃ
ஓம் ஆலிவேலு மங்கா3 ஸஹித வேஂகடேஶ்வராய நமஃ || 108 ||

இட் ஶ்ரீ வேங்கடேஶ்வர அஷ்டோத்ரம் ||

————–

ஶ்ரீ வேங்கடேஶ த்³வாத³ஶ நாம ஸ்தோத்ரம்

அஸ்ய ஶ்ரீ வேங்கடேஶ த்³வாத³ஶநாம ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய
ப்³ரஹ்மா ருஷி꞉
அநுஷ்டுப் ச²ந்த³꞉
ஶ்ரீ வேங்கடேஶ்வரோ தே³வதா இஷ்டார்தே² விநியோக³꞉ ।

நாராயணோ ஜக³ந்நாதோ² வாரிஜாஸநவந்தி³த꞉ ।
ஸ்வாமிபுஷ்கரிணீவாஸீ ஶங்க²சக்ரக³தா³த⁴ர꞉ ॥ 1 ॥

பீதாம்ப³ரத⁴ரோ தே³வோ க³ருடா³ஸநஶோபி⁴த꞉ ।
கந்த³ர்பகோடிலாவண்ய꞉ கமலாயதலோசந꞉ ॥ 2 ॥

இந்தி³ராபதிகோ³விந்த³꞉ சந்த்³ரஸூர்யப்ரபா⁴கர꞉ ।
விஶ்வாத்மா விஶ்வலோகேஶோ ஜய ஶ்ரீவேங்கடேஶ்வர꞉ ॥ 3 ॥

ஏதத்³த்³வாத³ஶநாமாநி த்ரிஸந்த்⁴யம் ய꞉ படே²ந்நர꞉ ।
தா³ரித்³ர்யது³꞉க²நிர்முக்தோ த⁴நதா⁴ந்யஸம்ருத்³தி⁴மாந் ॥ 4 ॥

ஜநவஶ்யம் ராஜவஶ்யம் ஸர்வகாமார்த²ஸித்³தி⁴த³ம் ।
தி³வ்யதேஜ꞉ ஸமாப்நோதி தீ³ர்க⁴மாயுஶ்ச விந்த³தி ॥ 5 ॥

க்³ரஹரோகா³தி³நாஶம் ச காமிதார்த²ப²லப்ரத³ம் ।
இஹ ஜந்மநி ஸௌக்²யம் ச விஷ்ணுஸாயுஜ்யமாப்நுயாத் ॥ 6 ॥

இதி ப்³ரஹ்மாண்ட³புராணே ப்³ரஹ்மநாரத³ஸம்வாதே³ ஶ்ரீ வேங்கடேஶத்³வாத³ஶநாமஸ்தோத்ரம் ।

1-நாராயணோ
2-ஜக³ந்நாதோ²
3-வாரிஜாஸநவந்தி³த꞉ ।
4-ஸ்வாமி புஷ்கரிணீ வாஸீ
5-ஶங்க²சக்ரக³தா³த⁴ர꞉பீதாம்ப³ரத⁴ரோ தே³வோ
6-க³ருடா³ஸநஶோபி⁴த꞉ ।
7-கந்த³ர்ப கோடி லாவண்ய꞉
8-கமலாயதலோசந꞉ ॥ 2 ॥
9–இந்தி³ராபதிகோ³விந்த³꞉
10-சந்த்³ரஸூர்யப்ரபா⁴கர꞉ ।
11-விஶ்வாத்மா
12-விஶ்வலோகேஶோ
ஜய ஶ்ரீவேங்கடேஶ்வர꞉

———————

ஸ்ரீ வேங்கடேச மங்களாஷ்டகம்

திருமலையில் உறையும் எம்பெருமான் தன்னை நாடி வருவோருக்கு எல்லா மங்களங்களையும்
இனிதே வழங்கி ரட்சிக்கும் வரப்பிரசாதி.
ஸ்ரீ வேங்கடேச மங்களாஷ்டகத்தை எப்போது வேண்டுமானாலும் பாராயணம் செய்து நலம் பெறலாம்.

இது சர்வ மங்களங்களை அருள்வதோடு, சகல துக்கங்களையும் போக்கும் வல்லமை படைத்தது.

ஸ்ரீக்ஷோண்யோ ரமணீ யுகம் ஸுரமணி புத்ரோபி வாணீ பதி:
பௌத்ரச் சந்த்ர சிரோமணி: பணிபதி: சய்யா ஸுரா: ஸேவகா:
தார்க்ஷ்யோ யஸ்யரதோ மஹச்ச பவனம் ப்ரஹ்மாண்டமாத்ய: புமான்
ஸ்ரீமத் வேங்கட பூதரேந்த்ரரமண: குர்யாத்தரிர் மங்களம்.

ஸ்ரீதேவி-பூதேவி ஆகிய இரு அழகிய மனைவியரைக் கொண்ட பெருமாளே,
சரஸ்வதியின் நாயகனான பிரம்மதேவனைப் புத்திரனாக அடைந்தவரே,
சந்திரனை தலையில் சூடிய ருத்ரனைப் பேரனாகப் பெற்றவரே,
ஆதிசேஷனே படுக்கையாக, தேவர்களே வேலைக்காரர்களாகப் பணிபுரிய,
கருடனை வாகனமாகக் கொண்டவரே,
இந்த அண்ட சராசரத்தையே வீடாகக் கொண்டிருப்பவரே,
ஆதி புருஷனே, வேங்கடாசலபதியான ஹரியே, எனக்கு மங்களம் அருள்வீராக.

———

யத் தேஜோரவிகோடி கோடி கிராணான் திக்க்ருத்ய ஜேஜீயதே
யஸ்ய ஸ்ரீவதனாம் புஜஸ்யஸுஷமா ராகேந்து கோடீரபி:
ஸௌந்தர்யம் ச மனோ பவானபி பஹூன் காந்திச்ச காதம்பினீம்
ஸ்ரீமத் வேங்கட பூதரேந்த்ர ரமண: குர்யாத்தரிர் மங்களம்.

கோடி கோடி சூரியர்களின் பேரொளியையும் விஞ்சிய தேஜஸ் கொண்ட பெருமாளே,
கோடி கோடி சந்திரன்களின் பிரகாசத்தையும் மங்கச் செய்யும் ஒளிவீசும் திருமுகம் கொண்டவரே,
கோடி கோடி மன்மதர்களின் பேரழகையும் குன்றச் செய்யும் எழில் மிகுந்தவரே,
மேகக் கூட்டங்களையும் மீறி நிர்மலமாய் விளங்கும் பரந்த ஆகாயத்தையும் விட பிரமாண்டமானவரே,
வேங்கடாசலபதியான ஹரியே, எனக்கு மங்களம் அருள்வீராக.

———

நானா ரத்ன கிரீட குண்டல முகைர் பூஷா கணைர் பூஷித:
ஸ்ரீமத் கௌஸ்து பரத்ன பவ்ய ஹ்ருதய: ஸ்ரீவத்ஸ ஸல்லாஞ்சன:
வித்யுத் வர்ண ஸுவர்ண வஸ்த்ர ருசிரோ ய: சங்க சக்ராதிபி:
ஸ்ரீமத் வேங்கட பூதேந்த்ர ரமண: குர்யாத்தரிர் மங்களம்.

பலவித ரத்னங்களால் தயாரிக்கப்பட்ட கிரீடம், குண்டலம் முதலான ஆபரணங்களுடன் கம்பீரமாக
அலங்கரிக்கப்பட்டிருக்கும் பெருமாளே,
கௌஸ்துப ரத்தினம் எனப்படும் விலை மதிப்பில்லா ரத்தின ஆபரணத்தை மார்பில் அணிந்து
பேரெழில் பரமனாகக் காட்சியளிப்பவரே,
ஸ்ரீவத்ஸம் என்னும் மச்சத்தால் மிகைப்பட்ட அழகுடன் திகழ்பவரே,
கொடி மின்னலோ என்று வியக்க வைக்கும் வண்ணம் பிரகாசம் மிகுந்த தங்கப் பட்டாடை யில் ஜொலிப்பவரே,
சங்கு சக்கரம் முதலிய ஆயுதங்களைத் தரித்து வீரப் பேரழகுடன் ஒளிர்பவரே,
வேங்கடாசலபதியான ஹரியே, எனக்கு மங்களம் அருள்வீராக.

————-

யத் பாலேம் ருக்னாபி சாரு திலகோ நேத்ரேப்ஜ த்ராயதே
கஸ்தூரீ கண ஸார கேஸரமிலச் ஸ்ரீகந்த ஸாரோத்ரவை:
கந்தைர் லிப்த தனு: ஸுகந்த ஸுமனோ மாலாதரோய: ப்ரபு:
ஸ்ரீமத் வேங்கட பூதரேந்த்ரரமண:குர்யாத்தரிர் மங்களம்.

கஸ்தூரி திலகத்தினை நெற்றியில் அணிந்து அதனால் பிரகாசமாகத் துலங்கும் பெருமாளே,
தாமரை இதழ்களோ கண்கள் என்று வியக்க வைக்கும் மென்மையான பார்வை கொண்டவரே,
கஸ்தூரி, பச்சை கற்பூரம், குங்குமப்பூ கலந்த மிகுந்த நறுமணமிக்க சந்தனம் பூசப்பட்ட
சுகந்த சரீரத்தைக் கொண்டவரே,
நல்ல வாசனையுள்ள மலர் மாலைகளைத் தரித்து அம்மலர்களுக்கே பெருமை தேடித் தரும் பிரபுவே,
வேங்கடாசலபதியான ஹரியே, எனக்கு மங்களம் அருள்வீராக.

———–

ஏதத் திவ்ய பதம்மமாஸ்திபுவி தத் ஸம்பச்யதே த்யாதராத்
பக்த்தேப்யஸ் ஸ்வ கரேண தர்சயதி யத் த்ருஷ்ட்யாதி ஸௌக்யம் கத:
ஏதத் பக்திமதாமியானபி பவாம்போதிர்ன தீதிஸ்ப்ருசன்
ஸ்ரீமத் வேங்கட பூதரேந்த்ரரமண:குர்யாத்தரிர் மங்களம்.

பூமி மீது பதிந்திருக்கும் தங்களது திருவடிகளைப் பார்க்குமாறு, தங்களது திருக்கரத்தால் சுட்டிக் காட்டும் பெருமாளே,
அந்தத் திருவடிகளை சரணடை யும் பக்தர்களுக்கு பரம சௌக்கியத்தையும், பேரானந்தத்தையும் அருளும் பெருமாளே,
அந்த பாத சரண நிழலையே அடைக்கலமாகக் கொண்ட பக்தர்களுக்கு அவர்களுடைய சம்சார சாகர மானது,
முழங்காலளவில் ஓடும் ஒரு நதி போல தான் என்பதையும் இந்த சமிக்ஞை மூலம் விளக்கும் பரம்பொருளே,
வேங்கடாசலபதியான ஹரியே, எனக்கு மங்களம் அருள்வீராக.

————-

ய: ஸ்வாமீ ஸரஸஸ்தடே விஹரதோ ஸ்ரீஸ்வாமி நாம்ன: ஸதா
ஸௌவர்ணாலய மண்டிதோ விதி முகைர் பர்ஹிர்முகை: ஸேவித:
ய: சத்ரூன் ஹனயன்னி ஜானவதி சஸ்ரீபூவராஹாத்மக:
ஸ்ரீமத் வேங்கட பூதரேந்த்ரரமண:குர்யாத்தரிர் மங்களம்.

ஸ்வாமி புஷ்கரிணி என்னும் குளக்கரையில் நிரந்தரமாக வாசம் செய்யும் பெருமாளே,
பிரம்மா முதலான தேவர்களால் சேவிக்கப்படும், தங்க மயமான அலங்காரம் கொண்ட கோயிலைக் கொண்டவரே,
சத்ருக்களை அடியோடு நாசம் செய்து, தன்னைச் சார்ந்தவர்களை எந்தத் துன்பமும் அணுகாதபடி காக்கும் பரந்தாமா,
யக்ஞவராஹ மூர்த்தியாக விளங்கும் பெருமாளே, வேங்கடாசலபதியான ஹரியே, எனக்கு மங்களம் அருள்வீராக.

————–

யோ ப்ரஹ்மாதி ஸுரான் முனீச்ச மனுஜான் ப்ரஹ்மோதஸவாயாகதான்
த்ருஷ்ட்வா ஹ்ருஷ்ட மனாபபூவ பஹுசஸ்தைரர்சிதஸ் ஸம்ஸ்துத:
தேப்யோ ய: ப்ரதத த்வரான் பஹுவிதான் லக்ஷ்மீ நிவாஸோ விபு:
ஸ்ரீமத் வேங்கட பூதரேந்த்ரரமண: குர்யாத்தரிர் மங்களம்.

பிரம்மோற்சவத்திற்காக வந்திருக்கும் பிரம்மன் முதலான தேவர்களையும், மஹரிஷிகளையும்,
மனிதர்களையும் கண்டு மிகப் பேரானந்தம் கொள்ளும் பெருமாளே,
அவர்களது அர்ச்சனை யாலும், துதியாலும் மிகுந்த சந்தோஷம் அடையும் பெருமாளே,
அவர்கள் அனைவருக்கும் அவர்கள் வேண்டும் வரங்களை எல்லாம் அருளி
அவர்களை மகிழ்விக்கும் பெருமாளே, வேங்கடாசலபதியான ஹரியே, எனக்கு மங்களம் அருள்வீராக.

————

யோ தேவோ புவிவர்த்ததே கலியுகே வைகுண்டலோகஸ்திதோ
பக்தானாம் பரிபாலனாய ஸததம் காருண்யவாராம் நிதி:
ஸ்ரீசேஷாக்யமஹீத்ரமஸ்தகமணிர் பக்தைக சிந்தாமணி:
ஸ்ரீமத்வேங்கட பூதரேந்த்ரரமண: குர்யாத்தரிர் மங்களம்.

இந்தக் கலியுகத்தில் பக்தர்களைக் காப்பதற்காக வைகுண்டத்திலிருந்து இறங்கி வந்திருக்கும் பெருமாளே,
பக்தர்கள் அனைவருக்கும் கருணைக் கடலாகத் திகழ்பவரே,
ஸ்ரீசேஷம் என்னும் மலையின் சிகரத்தில் மணி போலப் பிரகாசிக்கும் பேரொளியே,
பக்தர்களுக்கு சிந்தாமணி போல் விளங்கும் ஒளி வழிகாட்டியே, வேங்கடாசலபதியான ஹரியே,
எனக்கு மங்களம் அருள்வீராக.

——–

சேஷாத்ரி ப்ரபு மங்களாஷ்டகமிதம் துஷ்டேன யஸ்யேசிது:
ப்ரீத்யர்த்தம் ரசிதும் சமேச சரண த்வந்த்வைகநிஷ்டாவதா
வைவாஹ்யாதி ஸுபக்ரியாஸுபடிதம் யை: ஸாதுதேஷாமபி
ஸ்ரீமத் வேங்கட பூதரேந்த்ரரமண: குர்யாத்தரிர் மங்களம்.

இது சேஷாத்ரிநாதனுடைய மங்களாஷ்டகம்.
பகவான் ஸ்ரீநிவாஸனுடைய சரண கமலங்களை சரணடைந்து அவற்றின் மீதே மிகுந்த பற்றும்,
சந்தோஷமும் கொண்ட ஸ்ரீவாதிராஜயதியால், ஸ்ரீநிவாஸனை குதூகலப்படுத்த இயற்றப்பட்டது.

திருமணம் முதலான மங்கள விசேஷ நிகழ்ச்சிகளில் இந்த மங்களாஷ்டகம் படிக்கப்பட்டால்,
அதைப் படிப்பவருக்கும், கேட்பவர் அனைவருக்கும் வேங்கடாசலபதியான ஹரி,
எல்லா மங்களங் களையும் குறைவின்றி அருள்வார்.

———-

ஸ்ரீ ஹநுமத் த்வாதச நாம ஸ்தோத்ரம்

ஹநுமான் அஞ்ஜநாஸூநு: வாயுபுத்ரோ மஹாப3ல: |
ராமேஷ்ட: பா2ல்கு3ந-ஸக2: பிங்கா3க்ஷோsமிதவிக்ரம: ||
உத3தி4க்ரமண: சைவ ஸீதாசோக விநாஶசன: |
லக்ஷ்மண: ப்ராணததா தஶக்3ரீவஸ்ய த3ர்பஹா ||

ஏவம் த்வாஶ நாமாநி ராமதூதஸ்ய: படேத் |
ஸ்வாபகாலே ப்ரபோ3தே4ச நிர்ப4யோ விஜயீ பவேத்

1-ஹநுமான்
2-அஞ்ஜநா ஸூநு:
3-வாயு புத்ரோ
4-மஹாப3ல: |
5-ராமேஷ்ட:
6-பா2ல்கு3ந-ஸக2:
7-பிங்கா3க்ஷோs
8-மிதவிக்ரம: ||
9-உத3தி4க்ரமண: சைவ
10-ஸீதாசோக விநாஶசன: |
11-லக்ஷ்மண: ப்ராணததா
12-தஶக்3ரீவஸ்ய த3ர்பஹா ||

—–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

பழைய சங்க நூல்களில் காட்டும் – ஸ்ரீ திரு வேங்கட மலை-

November 22, 2020

வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை-
விரி கதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி,
இரு மருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து,
மின்னுக் கோடி உடுத்து, விளங்கு வில் பூண்டு,
நல் நிற மேகம் நின்றது போல
பகை அணங்கு ஆழியும், பால் வெண் சங்கமும்,
தகை பெறு தாமரைக் கையின் ஏந்தி,
நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு,
பொலம் பூ ஆடையின் பொலிந்து தோன்றிய
செங் கண் நெடியோன் நின்ற வண்ணமும்!–மதுரைக் காண்டம் – காடு காண் காதை (lines 41-51)

———

வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும் ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை
நீர் பெருகி அருவிகள் பாயும் வேங்கட மலை! அந்த ஓங்கிய மலை உச்சியிலே…

விரி கதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி, இரு மருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து
கதிரவனும் திங்களும் மாறி மாறிக் காயும் மலை உச்சி!-ஆங்கே, இரண்டு பக்கத்து மலைக்கும் இடையே…

மின்னுக் கோடி உடுத்து, விளங்கு வில் பூண்டு, நல் நிற மேகம் நின்றது போல
கோடி = புதுத் துணி
குறையொன்றுமில்லாக் குன்றத்து விளக்கன்;
கோடி = திருமணக் கூறைப் பட்டு; அதை உடுத்தி, தோளிலே வில்லேந்தி–
நல்ல கருப்பான மேகம்00மழை பொழியத் தயாராய் நிற்பது போல், மலை மேல் நிற்கிறான் –

பகை அணங்கு ஆழியும், பால் வெண் சங்கமும்,தகை பெறு தாமரைக் கையின் ஏந்தி

பகை அஞ்சும் ஆழி = (சக்கரம்)
பால் வண்ணச் = (சங்கு)
தன் தாமரைக் கையிலே ஏந்தி
அவனே அவன்! = வேங்கட மலை மேல் நிற்பவன்!

நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு பொலம் பூ ஆடையின் பொலிந்து தோன்றிய

அழகான ஆரம் – அதை மார்பிலே பூண்டு..
பொற்பூ ஆடையில், பொலியத் தோன்றும்
பூலங்கி சேவை உண்டு; ஒவ்வொரு வியாழக் கிழமையும் “பூலங்கி தரிசனமுலு“;
பூவால் நெய்த ஆடை = பொலம் பூ ஆடையில் பொலியத் தோன்றிய அன்றே காட்டும் இளங்கோ
பூலங்கி சேவை எவ்வளவு தொன்மையானது என்று இந்தப் பாடலின் மூலம் தெரிகிறது.

செங் கண் நெடியோன் நின்ற வண்ணமும்!

செங் கண், நெடியோன்! திருமால் என்னும் அவன் = அவனே, வேங்கட மலையில் நின்ற வண்ணமே!

ஒரு பக்கம் கதிரவன் – மறு பக்கம் நிலவு! நடுவிலே கரு மேகமாம்
அதே போல்…
ஒரு பக்கம் ஆழி(சக்கரம்) – மறு பக்கம் வெண் சங்கு! நடுவிலே கருத்த மாயோன்
உவமை காட்டும் இளங்கோ அடிகளின் தமிழ்ச் சுவை, சொல் அடர்த்திச் சுவை!

————

இளங்கோ மட்டுமல்லாது, முற்பட்ட எட்டுத் தொகையிலும்.. “வேங்கட மலை மேல் திருமால்”!

பருவம் வாய்த்தலின் இரு விசும்பு அணிந்த,
இரு வேறு மண்டிலத்து இலக்கம் போல,
நேமியும் வளையும் ஏந்திய கையாற்,
கருவி மின்ன விரி இலங்கும் பொலம் பூண்,
அருவி உருவின் ஆரமொடு அணிந்த, நின் திருவரை அகலம்!

வேங்கடத்தின் மேல் நிற்பது = நேமியும் வளையும்/ சக்கரமும் சங்கும்..
ஏந்திய கையான் என்றே காட்டும் தமிழ்த் தகைமை!

——————-

ஈன்று நாள் உலந்த மென்னடை மடப்பிடி,
கன்று பசி களைஇய, பைங்கண் யானை
முற்றா மூங்கில் முளைதருபு, ஊட்டும்
வென் வேல் திரையன் வேங்கட நெடு வரை–அகநானூறு 85 ஆம் பாடல்

வேங்கட நாட்டை ஆண்ட திரையன், வெற்றி தரும் வேலை உடைய மன்னன்!
அவன் காட்டில், முற்றாத மூங்கிலை/ பிஞ்சு மூங்கிலை, பசிக்கு ஊட்டி மகிழும் யானைகள்.. இதுவே பாடல்!
இப் பாட்டில் முருகனும் இல்லை! வேங்கடத்து இறைவனும் இல்லை!–

—————

வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத்
தமிழ் கூறும் நல் உலகத்து
வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச்

செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலம் தொகுத்தோனே போக்கு அறு பனுவல்
நிலம் தரு திருவின் பாண்டியன் அவையத்து
அறம் கரை நாவின் நான்மறை முற்றிய
அதங்கோட்டு ஆசாற்கு அரில் தபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி
மல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப்
பல் புகழ் நிறுத்த படிமையோனே.—தொல்காப்பியரின் தொல்காப்பியம்-பனம்பாரனார் இயற்றியது

வடவேங்கடம் தென்குமரி அவ்இடை என்பது = வடக்கின்கண் வேங்கட மலையும் தெற்கின்கண் குமரி மலையுமாகிய
அவ் இரண்டனையும் எல்லையாக உடைய நிலத்து வழங்குகின்ற என்றவாறு:

தமிழ் கூறும் நல்லுலகத்து என்பது = தமிழ்மொழியைக் கூறும் நல்லாசிரியரது என்றவாறு:

வழக்கும் செய்யுளும் அ இரு முதலின் என்பது = வழக்கும் செய்யுளும் ஆகிய அவ்இரண்டு இடத்துள்ள என்றவாறு:

எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி என்பது = எழுத்தையும் சொல்லையும் பொருளையும் ஆராய்ந்து என்றவாறு:

செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு என்பது = செந்தமிழ் இலக்கணம் முற்றும் நிரம்பிய தலைச்சங்கத்து வீற்றிருந்த புலவரொடு பயின்று என்றவாறு:

முந்து நூல் கண்டு என்பது = அகத்தியன் முதலாய முந்து நூல்களை ஐயமும் மருட்கையும் அற அவர்பால் கற்றுணர்ந்து என்றவாறு:

முறைப்பட எண்ணி என்பது = கற்று உணர்ந்தன முந்து நூலின்கண் முறை இன்றி விரவிக் கிடத்தலான் அவை முறையொடு பொருந்தி நிற்குமாறு கருதி என்றவாறு:

புலம் தொகுத்தோன் என்பது = முந்து நூலின்கண் உள்ள அவ்இலக்கணங்களைத் தன் நூலுள்ளே தொகுத்துக் கூறினான் என்றவாறு;

(அவன் யாவனோ எனின்) போக்கு அறு பனுவல் நிலம் தரு திருவின் பாண்டியன் அவையத்து என்பது = குற்றமற்ற நூலாராய்ச்சியினை
உடைய மாற்றாரது நிலத்தைத் தன்னை அடுத்தார்க்கு நல்கும் திருவினை உடைய பாண்டியன் மாகீர்த்தி என்பானது அவையின் கண்ணே என்றவாறு:

அறம் கரை நாவின் நான்மறை முற்றிய அதங்கோட்டு ஆசாற்கு என்பது = அறமே கூறும் நாவினகத்து நான்மறையும் முற்றப் பயின்ற
அதங்கோடு என்னும் ஊரின் ஆசிரியனுக்கு என்றவாறு:

அரில்தபத் தெரிந்து மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி என்பது = நூற்குச் சொல்லப்பட்ட குற்றங்கள் அற விளங்கி ஒன்றனுள்
பிறிதொன்று கலவாத மரபினையுடைய தனதுநூல் முறையைக் காட்டி என்றவாறு:

மல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த தன்பெயர் தொல்காப்பியன் எனத் தோற்றி என்பது = அந்நூற் பெயரானே கடல் சூழ்ந்த
நில உலகத்தின்கண் ஐந்திர வியாகரண நிறைய உணர்ந்த தன்பெயரைத் தொல்காப்பியன் என்று தோன்றச் செய்து என்றவாறு:

பல்புகழ் நிறுத்த படிமையோன் என்பது = பல் புகழையும் ஆயாமை நிறுத்திய தவ ஒழுக்கத்தை உடையோன் என்றவாறு:
தொகுத்தோனே படிமையோனே என்பவற்று ஏகாரம் அசைநிலை என்பது.

திருவேங்கடத்தினை முதன்முதலில் குறிப்பிடுகின்ற சான்று தொல்காப்பியத்தில் காணப்படும்
பனம்பரனாரின் சிறப்புப்பாயிரச் செய்தியே ஆகும். இப்பாயிரம்,
‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்து’எனக் குறிப்பிடுகிறது.
இதில் குறிக்கப்படும் வேங்கடம் என்பது வேங்கடமலை என்னும் மலை குறித்த பதிவு மட்டும்தானா? என்ற ஐயம் எழுவது இயல்பானதே ஆகும்.
இத்தகைய ஐயத்திற்குப் புறநானூற்றுப் பாடல் ஒன்று தெளிவான விளக்கம் தருகின்றது.
புறநானூற்றின் 381 வது பாடலில் அரிய குறிப்பு ஒன்று காணப்படுகிறது.

இப்பாடலைப் பாடிய புலவர் கரும்பனூர்கிழான் என்பவனின் கொடைத் தன்மையைக் குறிப்பிடுகின்றார்.
இத்தகைய வள்ளலானவன் ஆற்றுத்துறை அம்பி போன்றவன். அதாவது ஆற்றில் செல்லும் ஓடமானது மக்களைக் கரையில் கொண்டு சேர்க்கும்.
இது ‘ஆற்றுத்துறை அம்பி’ என்று குறிக்கப்படும். ஆனால், கரும்பனூரனோ ‘அறத்துறை அம்பி’ எனப்படுவான்.
நாடிச் சென்றோருக்கு வாரி வழங்கும் வள்ளல்தன்மை கொண்டவன் என்பதால் இவன் ‘அறத்துறை அம்பி’ எனப்பட்டான்.
இவன் நாடானது வேங்கட நாட்டின் கரும்பனூர் என்பதாகும் எனக் குறிப்பிடுகின்றார்.
இதன் மூலமாக வேங்கட மலையினைச் சுற்றி வேங்கடநாடு என்னும் பகுதி இருந்தது என்பதும் பெறப்படுகிறது.

இதனை,
“சிறு நனி, ஒரு வழிப் படர்க என்றோனே எந்தை,
ஒலி வெள்அருவி வேங்கட நாடன்,
உறுவரும் சிறுவரும் ஊழ் மாறு உய்க்கும்
அறத்துறை அம்பியின் மான மறப்பு இன்று,
இருங் கோள் ஈராப் பூட்கை,
கரும்பனூரன் காதல் மகனே”–(புறம் 381 ) என்பதால் அறியலாம்.

சங்க இலக்கியங்களின் பல பாடல்களில் இவ்வேங்கட மலையினைப் பற்றிய குறிப்புகள் பல்வேறு இடங்களில் காணப்படுகின்றன.
அகநானூற்றின் இருபத்தேழாவது பாடல் மதுரைக் கணக்காயனார் என்னும் புலவரால் பாடப்பட்டதாகும்.
இப்பாடலானது வடதிசைக்கண் வேங்கடமலைப் பக்கத்திலுள்ள அரசர் திறையாகக் கொடுத்த வெண்மையான தந்தங்களை
உடைய யானைகளைப் பெற்ற போரில் வல்ல பாண்டியர்கள் அறநெறி தவறாது கொற்கையைப் பாதுகாக்கின்றனர் என்ற செய்தியைத் தருகின்றது.

இதன் மூலம் வேங்கடம் என்னும் பகுதியானது பாண்டியரின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது என்பதும்
அம்மலையில் யானைகள் நிறைந்து காணப்பட்டன என்ற செய்தியும் தெரியவருகின்றது. இத்தகைய செய்தியை,
“வடவயின் வேங்கடம் பயந்த வெண்கோட் டியானை
மறப்போர்ப் பாண்டியர் அறத்திற் காக்குங்
கொற்கையம் பெருந்துறை” (அகம் – 27 ) என்ற பாடல் அடிகள் எடுத்துரைக்கின்றன.

அகநானூற்றின் அறுபத்தொன்றாம் பாடல் வேங்கடமலையினை ‘புல்லி’ என்னும் அரசன் ஆண்டான் என்னும் செய்தியைத் தருகின்றது.
மேலும் இப்பாடல் புல்லி மிகச் சிறப்புடன் ஆண்ட தன்மையையும் மழவர்களின் நாட்டினை இவ்வரசன் வென்ற சிறப்பினையும் வெளிப்படுத்துகின்றது.
மேலும் இப்பாடல் வேங்கட மலையானது தினந்தோறும் விழாக்களால் சிறப்புற்று விளங்கியது என்ற குறிப்பினையும் தருகின்றது.
இதன் மூலம் திருவேங்கடம் இன்று மட்டுமல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயும் விழாக்களால் சிறந்திருந்தது என்பதனை அறிய முடிகிறது.

“கழல் புனை திருந்தடிக் கள்வர் கோமான்
மழபுலம் வணக்கிய மாவண் புல்லி
விழவுடை விழுச்சீர் வேங்கடம் பெறினும்
பழகுவ ராதலோ அரிதே”(அகம் – 61 )

அகநானூற்றின் எண்பத்து மூன்று மற்றும் இருநூற்று ஒன்பதாம் பாடல் போன்றனவும் வேங்கட மலை வேடர் குலத் தலைவனான
புல்லி என்பவனால் ஆளப்பெற்றது என்ற செய்தியையே தந்து நிற்கின்றன..இதனை,

“கல்லா இளையர் பெருமகன் புல்லி
வியன்றலை நன்னாட்டு வேங்கடங் கழியினும் ( அகம் – 83 )
மாஅல் யானை மறப் போர்ப் புல்லி
காம்புடை நெடு வரை வேங்கடத்து உம்பர்;” ( அகம் -209 ) – என்ற அடிகளால் அறியலாம்.
மேலும் மேற்கண்ட அடிகள் வேங்கட மலையில் மூங்கில்கள் நிறைந்து காணப்பட்டன என்ற செய்தியையும் தருகின்றன.
அகநானூற்றின் நூற்று நாற்பத்து ஒன்றாவது பாடல் வேங்கடமலை பற்றிய கூடுதல் தகவல்களைத் தருகின்றது.
வேங்கட மலையில் உள்ள நரந்தம் என்னும் மரங்களானவை உடலில் பல புள்ளிகளை உடைய புலியின் நிறத்தினைப் பொருந்திய பூக்களை உதிர்த்தன.

அம்மரங்களின் பெரிய கிளைகளில் குரங்கினங்கள் விளையாடி மகிழ்ந்தன. வேங்கட மலையானது தேன்நிறைந்த
பல மலைச் சிகரங்களைத் தன்னுட் கொண்டதாய் அமைந்திருந்தது.

அதனைக் கடந்தே சங்கத் தமிழர் பொருள் தேடிச் சென்றனர் என்பதே அத்தகவல்கள் ஆகும்.
மேலும் இப்பாடலில் தமிழர்களின் கார்த்திகை விளக்கீடு பற்றிய குறிப்பும் காணப்படுகிறது.
“புலிக்கேழ் உற்ற பூவிடைப் பெருஞ்சினை
நரந்த நறும்பூ நாண்மலர் உதிரக்
கலைபாய்ந்து உகளுங் கல்சேர் வேங்கைத்
தேங்கமழ் நெடுவரைப் பிறங்கிய
வேங்கட வைப்பிற் சுரன்இறந் தோரே”.(அகம்141 )

அகநானூற்றின் இருநூற்றுப் பதினொன்றாம் பாடலில் வேங்கடமலை பற்றிய மேலும் சில குறிப்புகள் காணப்படுகின்றன.
வேங்கட மலையில் வெண் கடம்ப மரங்கள் மிகுந்து காணப்பட்டன. அம்மரங்களில் திண்மையான தந்தங்களை உடைய
யானைகள் தம் தினவு தீர்வதற்காக உரசும்.அப்பொழுது மரத்தில் இருந்து பூக்கள் உதிரும்.
இப்பூக்கள் பனிக்கட்டிகள் உதிர்வது போல் காணப்படும்.அவ்வாறு உதிர்ந்த பூக்கள் உழவர்கள் பாறைகளில்
உலர வைக்கும் வெந்நெல் விதைபோல உலர்ந்து கிடக்கும் என்பன போன்ற செய்திகளை,

“ வாலிய சுதைவிரிந் தன்ன பல்பூ மராஅம்
பறைகண் டன்ன பாவடி நோன்தாள்
திண்ணிலை மருப்பின் வயக்களிறு
உரிஞ்தொறும்
தண்மழை ஆலியில் தாஅய் உழவர்
வெண்ணெல் வித்தின் அறைமிசை உணங்கும்
பனிபடு சோலை வேங்கடத் தும்பர்
மொழிபெயர் தேஎத்த ராயினும் நல்குவர்” (அகம் 211 )

அகநானூற்றின் இருநூற்று அறுபத்து ஐந்தாம் பாடல் வேங்கட மலை குறித்தபிறிதோர் செய்தியைப் பதிவு செய்கின்றது.
வேங்கட மலையில் வாழும் கையில் வில்லினை ஏந்திய வேடர்கள் மலையின் உச்சியில் ஒரு காளையைக் கண்டு அதனைக் கொன்றனர்.
அதன் மாமிசத் துண்டுகளை நெருப்பில் சுட்டு உண்டனர். அவர்கள் உண்கின்ற காட்சியானது பேய்கள் உண்பது போல் காணப்பட்டது.

அதனை உண்டதும் அதனால் உண்டாகிய தாகத்தினைப் போக்க கள்ளினை அருந்தினர்.
அவர்கள் புலால் நாற்றம் வீசும் தம் கைகளையும் வாயினையும் கழுவவில்லை. இத்தகைய காட்சியினை உடையது வேங்கடமலை.
அங்கு யானைகள் மிகுதியாகக் காணப்படும். மறவர் வாழும் குடியிருப்புகளும் மிகுதியாக உண்டு என்று குறிப்பிடுகின்றது.

“இன்சிலை எழிலேறு கெண்டிப் புரைய
நிணம்பொதி விழுத்தடி நெருப்பின் வைத்தெடுத்து
அணங்கரு மரபிற் பேஎய் போல
விளரூன் தின்ற வேட்கை நீங்கத்
துகளற விளைந்த தோப்பி பருகிக்
குலாஅ வல்வில் கொடுநோக்கு ஆடவர்
புலாஅற் கையர் பூசா வாயர்
ஒராஅ உருட்டுங் குடுமிக் குராலொடு
மராஅஞ் சீறூர் மருங்கில் தூங்கும்
செந்நுதல் யானை வேங்கடந் தழீஇ
வெம்முனை அருஞ்சுரம் இறந்தோர்
நம்மினும் வலிதாத் தூக்கிய பொருளே”( அகம்- 265 )

புறநானூற்றின் 385 ஆவது பாடலைப் பாடிய கல்லாடனார் என்னும் புலவர் அம்பர்கிழான் அருவந்தை என்பவனை வாழ்த்தும் பொழுது
வேங்கட மலையின் மழைவளத்தினை உவமைப்படுத்துகின்றார். பொழுதானது புலர்ந்தது. பறவை இனங்கள் பாடின.
புலவர் தடாரிப் பறையை வேறொருவன் வாயிலில் முழக்கிக்கொண்டிருந்தார். அதனைக் கேட்ட ஒருவன் அப்புலவர் பால்
இரக்கம் கொண்டு அவரது வறுமை நீங்குவதற்காக, அழுக்கால் நீலநிறம் பட்டுக் கிழிந்திருந்த அவர்களின் ஆடையை நீக்கிவிட்டு
வெண்ணிறப் புத்தாடை அணிவித்தான்.

இத்தகைய வள்ளல்தன்மை கொண்டவனின் ஊர் காவிரி பாய்ந்து நெல் விளையும் அம்பர் என்பதாகும். அருவந்தை அவன் பெயராகும்.
இத்தகைய சிறப்புடைய அருவந்தை, புல்லி அரசன் ஆளும் வேங்கட மலையில் பொழியும் மழைத்துளியின் எண்ணிக்கையை விட
அதிக நாள் வாழவேண்டும் என்று வாழ்த்துகின்றார். இதன் மூலம் வேங்கட மலையின் மழைவளம் வெளிப்பட்டு நிற்கின்றது.
இதனை,
‘‘வாழியர்; புல்லிய வேங்கட விறல்வரைப் பட்ட ஓங்கல் வானத்து உறையினும் பலவே”(புறம் 385 )என்பதனால் அறியலாம்.

புறநானூற்றின் 389 ஆவது பாடல் வேங்கடத்தினை ஆண்ட ஆதனுங்கன் என்னும் மன்னனைப் பற்றிக் குறிப்பிடுகின்றது.
நுங்கு விளையும் காலத்தில், வேம்பு காய்க்கும் காலத்தில், குளம் நீர் குறைந்து களிமண் ஆகும் காலத்தில் நிலம் வறண்டுபோகும்.
அந்தக் காலத்தில் சிறுபிள்ளை போன்ற பொருநனாகிய புலவன் என்னை நினைப்பானோ! மாட்டானோ! என்று நினைத்துப் பார்த்து
முதியன் ஆதனுங்கன் முன்கூட்டியே மிகுந்த பொருள்களை வழங்கினான். ஒரு நாளில் சென்றடையும் வழித்தூரத்தில் அவன் இருப்பிடம் இல்லை.

சென்றால் காணமுடியாதவனும் அல்லன். பெண்யானை வருந்தும்படி அதன் கன்றுகளைப் பிடித்துவந்து ஊர் மன்றத்தில் கட்டும்
குன்றுகள் நிறைந்த அருவிகள் பாயும் ஊர்களைக் கொண்ட வேங்கட நாட்டு மன்னன் ஆதனுங்கன். அவன் புகழ் பெற்ற நெடுந்தகை.
முதியன் ஆதனுங்கன் என்பது அவன் பெயராகும். மன்னனே! நீயும் உன் முன்னோனாகிய ஆதனுங்கன் போல
எனக்குப் பெருமை மிக்க பொருள்களை வழங்கவேண்டும். என வேண்டி நிற்கின்றார் புலவர்.

புலவரின் இத்தகைய கூற்றிற்கு,
“புன்தலை மடப்பிடி இனையக், கன்றுதந்து,
குன்றக நல்லூர் மன்றத்துப் பிணிக்கும்,
கல்லிழி அருவி வேங்கடங் கிழவோன்,
செல்வுழி எழாஅ நல்லேர் முதியன்”(புறம் -389 ) என்ற பாடல் அடிகள் சான்றாகும்.

புறநானூற்றின் 391 ஆவது பாடல் ஒரு அரிய செய்தியைப் பதிவு செய்கின்றது. இப்பாடலைப் பாடிய புலவரான கல்லாடனார்
வேங்கடமலையில் மேகங்கள் குளிர்ச்சி பொருந்தி மழைத்துளிகளைப் பெய்து குளிர்விக்கும்.
அங்கு வாழும் மக்கள் அரிசிச் சோற்றோடு இறைச்சித் துண்டங்களை வெட்டிப் போட்டு மகிழ்வோடு உண்பர்.
அத்தகைய சிறப்புடைய வேங்கட மலையானது வறட்சியுற்றது. எனவே நான் என் சுற்றத்தோடு உன்னைத் தேடி வந்து
இங்கிருக்கும் நிலையினை உடையவன் ஆனேன் என்று மன்னன் பொறையாற்றுக்கிழானைப் பாடினார்.

இதனை,
“வேங்கட வரைப்பின் வடபுலம் பசித்தென,
ஈங்குவந்து இறுத்தஎன் இரும்பேர் ஒக்கல்” (புறம் -391) என்ற பாடல் அடிகளால் அறியமுடிகிறது.

நச்சினார்க்கினியர் என்னும் உரையாசிரியர் வேங்கடத்தினைக் குறிக்கும் இடத்து
‘நிலம் கடந்த நெடுமுடி அண்ணலாகிய திருமால் உறையும் மலை’ என்பதாகத்தான் குறிப்புத் தருகின்றார்.
பாரதம் பாடிய பெருந்தேவனார் திருவேங்கடத்தைப் பாடியிருக்கிறார். இவர் பாரதத்தை வெண்பாச் செய்யுட்களாகப் பாடியுள்ளார்.
இவர் இதில் திருமலை, திருமாலிருஞ்சோலை, திருவரங்கம், காஞ்சி போன்ற தலங்களையும் பாடியுள்ளார்.
மேற்படி தலங்களின் பெயர்களைச் சொன்னவர்க்குத் துயர் உண்டோ, துயரில்லை என்னும் பொருள் அமையும்படிப் பாடியுள்ளார்.

இத்தகைய சிறப்புமிக்க பாடல்,
“தேனோங்கு நீழற் திருவேங்கடமென்றும்
வானோங்கு சோலை மலையென்றும் தானோங்கு
தென்னரங்க மென்றுந் திருவத்தியூர் என்றுஞ்
சொன்னார்க்கு உண்டோ துயர்” என்பதாகும்.

‘சிந்துபூமகிழ் திருவேங்கடம்’ என நம்மாழ்வார் இதனைக் குறிப்பிடுகின்றார். திருமாலின் நின்ற கோலமும் கிடந்த
கோலமும் கூடச் சிலப்பதிகாரத்தில் காட்டப்படுகின்றன. சிலம்பின் காடுகாண் காதையில் மாமறையாளன் என்பவன்
தன் கண்கள் திருமாலின் நின்ற கோலத்தினையும் கிடந்த கோலத்தினையும் காட்டுக! என்று
உள்ளத்தினைக் கலக்கியமையால் காண வந்தேன் என்று குறிப்பிடுகின்றான்.

இதனை,
“திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்
வீங்குநீ ரருவி வேங்கடமென்னும்
ஒங்குயர் மலையத்து உச்சி மீமிசை
செங்கணெடியோன் நின்ற வண்ணமும்
என்கண் காட்டென் றென்னுளங் கவற்ற
வந்தேன் குடமலை மாங்காட்டுள்ளேன்.” (சிலம்பு ) என்பதனால் அறியலாம்.
திருவேங்கடம் தமிழ்நாட்டின் எல்லைக்கு உட்பட்டே இருந்தது என்பதனை
“நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும் தமிழ்வரம் பறுத்த தண்புனல் நன்னாட்டு”.( சிலம்பு ) என்பதனால் தெளிவாகத் தெரியவருகின்றது.

பரிபாடல் என்னும் பழந்தமிழ் இலக்கியம் திருமாலின் வராக அவதாரம் பற்றிக் குறிப்பிடுகிறது.
இதனை,

“உரு அறிவாரா ஒன்றன் ஊழியும் :
உந்து வளி கிளர்ந்த ஊழுள் ஊழியும்:
வெந்தீச் சுடரிய ஊழியும்: பனியொடு
தண்பெயல் தலைஇய ஊழியும்: அவையிற்று
உள்முறை வௌ;ளம் மூழ்கி ஆர்தருபு,
மீண்டும் பீடு உயர்பு ஈண்டி”( பரிபாடல் ) என்ற அடிகளால் அறியலாம்..

திருமால் இத்தகைய வராக அவதாரம் எடுத்துப் பூமியை மீட்ட பிறகு சிறிது காலம் திருமலையில் உள்ள
பொய்கைக் கரையில் வசித்தார் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. இத்தகைய சிறப்புடைய வேங்கட மலையில்
மதங்கொண்ட ஆண்யானை ஒன்று செழித்து வளர்ந்தோங்கியுள்ள மூங்கில் கழைகளை கடிக்கின்றது.
அதைத் தனது துதிக்கையில் வைத்து அருகில் ஓடிக்கொண்டிருக்கும் தேன்போன்று இனிக்கும் தன்மையுடைய
ஓடையில் நனைத்து அதனைக் கலக்குகிறது.

*அவ்வாறு நன்றாகக் கலக்கி தனக்கு முன்னே நின்றுகொண்டிருக்கும் பெண் யானைக்கு ஊட்டுகிறது. இவ்வாறு
விலங்குகளிடத்தும் அன்பின் பிணைப்பினை உருவாக்கும் வேங்கடத்தின் சிறப்பினை,

“பெருகு மதவேழம் மாப்பிடிக்கு முன்னின்று
இருகணிழ மூங்கில் வாங்கி – அருகிருந்த
தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர்
வான்கலந்த வண்ணன் வரை”00எனக் குறிப்பார் பூதத்தாழ்வார்.

விலங்குகளிடத்தும் அன்பினை உருவாக்கும் வேங்கடத்தில் உறையும் மாலவன் மக்களிடத்து கருணை கொண்டு
வரம் அருளும் வள்ளல்தன்மை உடையவர் ஆவார்.
அத்தகைய மாலவனின் மலர்ப்பாதம் போற்றி வரம்பிலா அருள் பெற்று உய்வோமாக!!

————-

ஏழுமலையான் குடிகொண்டுள்ள திருப்பதி கோயில், கடல் மட்டத்திலிருந்து 2,799 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
திருமலை நகரம் மட்டும் 26.75 கி.மீ பரப்பளவை கொண்டதாகும்.
சுயம்புவாக உருவான ஏழுமலையானுக்கு முதன்முதலில் தொண்டமான் சக்கரவர்த்தி தற்போதைய இடத்தில்
ஆனந்த நிலையம் எனப்படும் கற்ப கோயிலை நிறுவியுள்ளார். இவர் ஆகாச ராஜனின் சகோதரர் ஆவார்.
ஆகாச ராஜனின் மகள்தான் பத்மாவதி தாயார் என புராணங்கள் கூறுகின்றன.

கடந்த 1944-ம் ஆண்டு வரை, அலிபிரி, ஸ்ரீவாரி மெட்டு, மாமண்டூரில் உள்ள அன்னமய்யா பாதை உட்பட 4 வழிகள்
மூலம் பக்தர்கள் திருமலைக்கு சென்றனர். இந்த வழிகளில் கொடிய மிருங்கள், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களை
தாண்டி நடந்து சென்று ஏழுமலையானை தரிசித்தனர்.

1944-ல் திருப்பதி அலிபிரி மலையடிவாரத்தில் இருந்து திருமலைக்கு சாலை அமைக்கப்பட்டது.
அதன் பிறகு கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது.
இப்போது தினமும் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் பக்தர்கள் வரை ஏழுமலையானை தரிசிக்கின்றனர்.
பிரம்மோற்சவ காலத்தில் இது மேலும் அதிகரிக்கிறது.

——————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பத்மாவதித் தாயார் சமேத ஸ்ரீ நிவாசன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காள மேகம் -உத்சவங்கள் -பிரசாதிகளும்–ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் —

November 6, 2020

ஸ்ரீ கோயில் திருமலை பெருமாள் கோயில் திரு நாராயண புரம்
சரம ஸ்லோகார்த்தம் நாட்டியமாடிக் காட்டி அருளும்
பக்தாநாம் –பிரசாதிகளும் –

மூலவர் -சிலா திருமேனி
புராதனம் -ஸ்ரீ வைகுண்ட விரகித்தாயா
மூன்று ஸ்ரீ நிவாஸர் -போக ஸ்ரீ நிவாஸர் -சயனத்துக்கும் மூலவர் போலவே இவர்
கொலு ஸ்ரீ நிவாஸர் ராஜ தர்பார்
உக்ர ஸ்ரீ நிவாஸர் -சூர்ய உதயம் முன்பு வெளியில் சில நாள் புறப்பாடு
உத்சவர் -மலையப்ப ஸ்வாமி -வந்து சேவை சாதிப்பவர்
சக்கரத்தாழ்வார் -தீர்த்தவாரி கண்டு அருளுகிறார்
கண்ணன்-நாட்டிய கண்ணன் ருக்மிணி தேவி உடன் சேர்ந்து சேவை இங்கு கர்ப்ப க்ருஹத்தில்
ராமர் -லஷ்மணன் சீதை

தொண்டை மான் சக்ரவர்த்தி
ஒன்பது ஆழ்வார்கள்
பெரிய திருமலை நம்பி
ராமானுஜர்
அனந்தாழ்வான்
பெரிய கேள்வி அப்பன் ராமானுஜ ஜீயர்
சிறிய கேள்வி அப்பன் ராமானுஜ ஜீயர்

தனிமை விரும்பி தவத் திருக் கோலம்
திருமலை ஒழுகு
15000 பேர் இன்று கைங்கர்யம்
திருவடி முத்ரை மோதிரம் பெரிய ஜீயர் இடம்
ராமானுஜர் முத்ர மோதிரம் சின்ன ஜீயர் இடம்
1939-41- பாடசாலையில் படித்து -வியாழன் சாயங்காலம் -சென்று வெள்ளிக்கிழமை திரும்புவார்களாம்
புஷ்ப மண்டபம்

ஸூ ப்ரபாத சேவை முதலில் -ஹஸ்திகிரி அண்ணா -பிரதிவாதி பயங்கர
பங்காரு வாசி -ஸ்வர்ண கதவு சாத்தி வெளியில் அனைவரும்
அர்ச்சகர் -பரிசாரகர் -ஏகாங்கிகள் உள்ளே
அன்ன மாச்சார்யார் கீர்த்தனை
போக ஸ்ரீ நிவாஸர் -உள்ளே -சயன மண்டபம்
கதவு திறந்து ஹாரத்தி
வெண்ணெய் பால் சக்கரை -அமுது செய்கிறார்
மைசூர் மஹாராஜர் சமர்ப்பிக்க இவை
விஸ்வரூப சேவை
பிரஹ்மா ஆராதனா தீர்த்த பிரசாதம்
சந்தனம் தீர்த்தம் இரவில் எடுத்து வைத்து இருப்பார்
வானவர் வானவர் கோன் உடன் –
சுத்தி பண்ணி
மாலை -தோ மாலை பொழுது களைந்து
ஏகாந்த சேவைக்கு முன்பும் களைந்து
பூலை பாவி -பூ கிணறு புஷ்ப்பம்
பங்காரு பாவி -தீர்த்தம் எடுக்க கிணறு
பாபநாசம் ஆகாச கங்கை -பெரிய திருமலை வம்ச இன்றும் இந்த கைங்கர்யம்

தோ மாலை சேவை அடுத்து -தோள் மாலை தொடுக்கப்பட்ட மாலை -தொங்கும் மாலை –
புஷ்ப மண்டபம் -குறும்பு அறுத்த நம்பி –
சிந்து பூ மகிழும் திருவேங்கடம் –
சுமந்து மா மலர் பொட்டு -பெரிய ஜீயர் எழுந்து அருளப் பண்ணி
சுருக்கமான திருமஞ்சனம் -பேரர்களுக்கு -பூ புனை கண்ணி புனிதன் –

போக ஸ்ரீனிவாசர் திருவடிக்கும் சாளக்ராமங்களுக்கும் திருமஞ்சனம்
சேவா காலம் -ஜீயர் தொடங்கி -வெண்ணெய் அளைந்த —
திரு வால வட்டம் ஜீயர் -குளிர் அருவி வேங்கடம் –
இரண்டு சரம் திருவடிக்கு
திரு மார்பு நாச்சியாருக்கு
போக கொலு ஸ்ரீநிவாசன்
கண்ட சரம்
மூன்று தொங்கு மாலைகள்
சங்கு சக்கரம் -வைரம் இருந்தால் மாலை இல்லை
சிகா வளி -மாலை
சூர்யா கடாரி மாலை
சாளக்ராம மாலை

கொலு தர்பார் சேவை அடுத்து
வெள்ளி நாற்காலி -கொடை -முன்னாள் வரவு -படிப்பார்கள் –
அகிலாண்ட கோடி ஸ்வாமி -அனைவரும் கணக்கு -எத்தனை ஜீவாத்மாக்கள் பக்தர்
பஞ்சாங்க ஸ்ரவணம் -இன்று நாளை மீண்டும் இன்று
குடை ஆதிசேஷன் -திருமலையே ஆதி சேஷன் -சென்றால் இத்யாதி –
அநத்யன காலம் -எம்பெருமானார் தர்சனம் பாசுரம் -உபதேச ரத்ன மாலையில் இருந்து

சஹஸ்ர நாம அர்ச்சனை -வெங்கடேஸ்வர -வெள்ளிக்கிழமை மட்டும் அஷ்டோத்திரம்

பிரசாதம் -எள்ளுப்பொடி வெள்ளம் கொலு
முதல் மணி -5-மணி
இரண்டாம் மணி -சனி ஞாயிறு 10-மற்ற நாள் 7 மணிக்கே
மூன்றாம் மணி -மாலை
கங்காளம் பச்சேர் -எத்தனை சேர் பொங்கல் பத்து சேர் சேர்ந்து
கடுகு இல்லாமல் வெண்ணெய் பிரசாதம் -மாத்ரை பிரசாதம் –
குலசேகர படிக்கு முன் -பலி சுத்த அன்னம் -ராமானுஜர் -இந்த வெண்ணெய்
வெளியில் 12கங்காளம்
லட்டு –51- படி கணக்கு -பொட்டு
வடை -51-
ஏகாதசி மட்டும் கதம்பமும் மாத்திரை பிரசாதம் இல்லை
அதுக்கு பதில் தோசை அமுது செய்வர்

ராமானுஜர் -கண்டு அருள பண்ணின பின்பு சாத்து முறை ஜீயர்
இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் -விட்டு உள்ளம் புகுந்து -ஆச்சார்யர்களும் இவர் இடம்
திருப்பள்ளி திருப்பாவை தோ மாலை
சாத்து முறை -கோவிந்தா -ஆண்டாள் மூன்று தடவை –
நித்ய ஹாரத்தி -ரூப்யா ஹாரத்தி
மடத்தவர் ரூபாய் சமர்ப்பிப்பார்களாம்
சர்வ தர்சனம் பின்பு

இரண்டாம் மணி
அஷ்டோத்தர அர்ச்சனை நடந்து
திதியோதனம் சீரா ஒரு கங்காளம்
1100 சேர் அன்னக்கூட உத்சவம் திருப்பாவாடை உத்சவம் வியாழக்கிழமை –
முடிந்த பின் நேத்ர சேவை -திருமஞ்சனம் அடுத்த நாள் வரை –
பூலங்கி சேவை வியாழக்கிழமை மாலை தோமாலை சேவைக்கு பின்பு
சேவா காலம் -பெருமாள் திரு மொழி
ஸ்ரீ நிவாஸ கத்யம் வியாழக் கிழமை காலையில்
ஆதி வாரம் ஞாயிறு -பிண்டி -நேராக கருடனுக்கு வெல்லப்பாகு மிளகு பயத்தம் பயிறு அம்ருத கலசம்
நிஜ பாத சேவை –
திருமண் காப்பு சமர்ப்பணம் -நாச்சியார் திருமொழி சேவை காலம் -ராமானுஜர் ஏற்பாடு –
வக்ஷஸ்தல நாச்சியார் திருமஞ்சனம்
வெண்ணெய் -ஸ்வர்ண ஹாரத்தி
தோ மாலை வெள்ளிக்கிழமை மட்டும் இரண்டாவது -சிறிய திரு மடல்
ஞாயிற்று கிழமை ஆஞ்சநேயர் திரு மஞ்சனம்
பெரிய ஜீயர் மடம் அருகில்
வரதன் திருமஞ்சனம் செவ்வாய்
வியாழன் வராஹ
வெள்ளி -இரண்டு மடப்பள்ளி -வகுள மாலிகா -பிரசாதம் -பஷணம் மடப்பள்ளி அருகிலும் திருமஞ்சனம்
சனி யோக நரசிம்மர்
சம்பங்கி பிரகாரம் -கல்யாண உத்சவம் உத்சவர்

—————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ அருளிச் செயல்களில் -ஸ்ரீ கோவிந்தனும் -ஸ்ரீ கோவர்த்தன உத்தரணமும்–ஸ்ரீ உலகு அளந்த உத்தமனும் –

September 7, 2020

ஸ்ரீ கோவிந்தன்
கவாம் ரஷித்த
கோ பூமி ஸ்ரீ வராகன்
கோ ஸ்துதி ஏற்றுக் கொண்டு
கோ வேதம் -அவற்றால் அறியப்படுபவன்
கோ அசையும் அசையா சராசரங்கள் தனது வசம்
ஸ்ரீ மத்ஸ்ய -பூமி -வேதம் ரஷித்தவன்
ஸ்ரீ கூர்ம -மலை பூமி கோ
ஸ்ரீ வராஹ -பூமி இடந்து
ஸ்ரீ நரஸிம்ஹ =பிரகலாதன் ஸ்துதி
ஸ்ரீ வாமனன் பூமி அளந்து
ஸ்ரீ பரசுராமன் பூமியில் உள்ள தீயர்களை அழித்து
ஸ்ரீ ராமன் பூமி ஆண்டு
ஸ்ரீ பலராமன் வளைத்து திருத்தி -யமுனை தீரம்
ஸ்ரீ கண்ணன்
ஸ்ரீ கல்கி கோ பூமி தர்மம் காத்து
தச அவதாரங்களும் பொருந்தும்

————–

மலையை எடுத்து மகிழ்ந்து கன் மாரி காத்துப் பசு நிரை மேய்த்தாய்
சிலை ஓன்று இறுத்தாய் திரிவிக்ரமா திரு ஆயர்பாடிப் பிரானே-பெரியாழ்வார் -2-3-7-

மேவி அன்று ஆநிரை காத்தவன், உலகம் எல்லாம்
தாவிய அம்மானை எங்கு இனித் தலைப் பெய்வனே?-திருவாய் -–3-2-9-

குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்
சென்று சேர் திரு வேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே–3-3-8–

உண்ண வானவர் கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும்
வண்ண மால் வரையை எடுத்து மழை காத்ததும்
மண்ணை முன் படைத் துண்டுமிழ்ந்து கடந்திடந்து மணந்த மாயங்கள்
எண்ணுந் தோறு மென்னெஞ்சு எரி வாய் மெழு கொக்கும் நின்றே–5-10-5-

மின்னை உடையாகக் கொண்டு அன்று உலகு அளந்தான் குன்றம் குடையாக ஆ காத்த கோ ——ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி—41-

நீ யன்றே நீரேற்று உலகம் அடி அளந்தாய் நீ யன்றே நின்று நிரை மேய்த்தாய்-48-

இரண்டே யடியால் தாயவன் ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று நம்மிறையே –ஸ்ரீ திரு விருத்தம் – -61 –

ஆவினை மேய்க்கும் வல்லாயனை அன்றுலகீரடியால்
தாவின வேற்றை எம்மானை எஞ்ஜான்று தலைப் பெய்வனே – – 89-

சுருந்குறி வெண்ணெய் தொடு வுண்ட கள்வனை வையமுற்றும்
ஒருங்குற வுண்ட பெரு வயிற்றாளனை மாவலி மாட்டு
இருங்குறளாகி இசையவோர் மூவடி வேண்டிச் சென்ற
பெரும்கிறி யானை யல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே – – -91-

மாண் பாவித்து அந்நான்று மண்ணிரந்தான் மாயவள் நஞ்சு
ஊண் பாவித்துண்டானதோ ருருவம் காண்பான்-பெரிய திருவந்தாதி–52-

மீன் என்னும் கம்பில் வெறி என்னும் வெள்ளி வேய்
வான் என்னும் கேடிலா வான்குடைக்கு தானோர்
மணிக் காம்பு போல் நிமிர்ந்து மண்ணளந்தான் நாங்கள்
பிணிக்காம் பெரு மருந்து பின் –62-

என்றும் ஒரு நாள் ஒழியாமை யான் இரந்தால்
ஒன்றும் இரங்கார் உருக்காட்டார் -குன்று
குடையாக ஆ காத்த கோவலனார் நெஞ்சே
புடை தான் பெரிதே புவி –-74-

உள்ள உலகளவும் யானும் உளனாவன் என் கொலோ உலகளந்த மூர்த்தி உரை –76-

மறப்பெல்லாம் ஏதமே என்றல்லால் எண்ணுவனே மண்ணளந்தான்
பாதமே ஏத்தாப் பகல்–80-

மூவடி நானிலம் வேண்டி முப்புரி நூலோடு மானுரியிலங்கு மார்வினன் இரு பிறப் பொரு மாணாகி
ஒரு முறை ஈரடி மூவுலகு அளந்தனை–திருவெழு கூற்றிருக்கை-

ஆரால் இவ்வையம் அடியளப்புண்டது காண் –ஆரால் இலங்கை பொடி பொடியா வீழ்ந்தது –
மற்று ஆராலே கல்மாரி காத்தது தான்-ஆழி நீர் ஆரால் கடைந்திடப் பட்டது -அவன் காண்மின்
ஊராநிரை மேய்த்து உலகம் எல்லாம் உண்டும் உமிழ்ந்தும் ஆராத தன்மையனாய்-சிறிய திருமடல்-

————————————-

குன்றம் எடுத்து ஆநிரை காத்தவன் தன்னை
மன்றில் புகழ் மங்கை மன் கலி கன்றி சொல்
ஓன்று நின்ற ஒன்பதும் வல்லவர் தம் மேல்
ஒன்றும் வினையாயின சார கில்லவே-பெரிய திருமொழி -11-8-10-

குன்றம் எடுத்த பிரான் அடி யாரொடும்
ஒன்றி நின்ற சடகோபன் உரை செயல்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே–-திருவாய் –7-4-11-

—————–

மத்த மா மலை தாங்கிய மைந்தனை உத்தானம் செய்து உகந்தனர் ஆயரே–-பெரியாழ்வார் -1-1-8-

என் மகன் கோவிந்தன் கூத்தினை இள மா மதி
நின் முகம் கண் உளவாகில் இனி இங்கே நோக்கிப் போ -1-4-1-

ஒரு வேழத்தின் கரும் கன்று போல் தெள் புழுதி யாடி திருவிக்ரமன் -1-7-9-

குட்டன் வந்து என்னைப் புறம் புல்குவான் கோவிந்தன் வந்து என்னைப் புறம் புல்குவான் -1-9-1-

வண்டுலாம் பூம் குழலினார் உன் வாய் அமுதம் உண்ண வேண்டி
கொண்டு போவான் வந்து நின்றார் கோவிந்தா முலை உணாயே -2-2 7-

காது தாழப் பெருக்கி குண நன்றுடையர் இக் கோபால பிள்ளைகள் கோவிந்தா நீ சொல்லுக் கொள்ளாய்-2-3-4-

மலையை எடுத்து மகிழ்ந்து கன் மாரி காத்துப் பசு நிரை மேய்த்தாய்
சிலை ஓன்று இறுத்தாய் திரிவிக்ரமா திரு ஆயர்பாடிப் பிரானே-2-3-7-

கோவிந்தன் தன் குழல் வாராய் அக்காக்காய் -2 5-6 –

கோதுகுலமுடை குட்டனேயோ குன்று எடுத்தாய் குடமாடு கூத்தா
வேதப் பொருளே என் வேம்கடவா வித்தகனே இங்கே போதராயே – 2-9 -6- –

பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம் பட்டர்பிரான் விட்டு சித்தன் பாடல்
கொண்டு இவை பாடிக் குனிக்க வல்லார் கோவிந்தன் தன் அடியார்களாகி
எண் திசைக்கும் விளக்காகி நிற்பார் இணை அடி என் தலை மேலனவே 2-9 11-

தான் எறிந்திட்ட தடம் பெரும் தோளினால் வானவர் கோன் விட வந்த மழை தடுத்து
ஆநிரை காத்தானால் இன்று முற்றும்-2-10-4-

மாவலி வேள்வியின் மாண் உருவாய் சென்று மூவடி தா என்று இரந்த இம்மண்ணினை
ஓரடி இட்டு இரண்டாம் அடி தன்னிலே தாவடி இட்டானால் இன்று முற்றும்
தரணி அளந்தானால் இன்று முற்றும் 2-10-7-

கேட்டு அறியாதன கேட்கின்றேன் கேசவா கோவலர் இந்திரற்கு
காட்டிய சோறும் கறியும் தயிரும் கலந்து உடன் உண்டாய் போலும்–3-3-8-

யசோதை நல் ஆய்ச்சி தன் புத்திரன் கோவிந்தனை கற்றினம் மேய்த்து வரக் கண்டு உகந்தவள்–3-3-10-

எக்கம் மத்தளி தாழ் பீலிக் குழல்களும் கீதமும் ஆகி எங்கும் கோவிந்தன் வருகிற கூட்டம் கண்டு
மழை கொலோ வருகிறது என்று சொல்லி–3-4-1-

குன்று எடுத்து ஆ நிரை காத்த பிரான் கோவலனாய் குழலூதி ஊதிக்
கன்றுகள் மேய்த்துத் தன் தோழரோடு கலந்து உடன் வருவானை தெருவில் கண்டு–3-4-4-

ஆயர்பாடியிலே வீதி யூடே
கண்ணன் காலிப் பின்னே எழுந்து அருள கண்டு இள ஆய்க் கன்னிமார் காமுற்ற–3-4-10-

அட்டுக் குவி சோற்றுப் பருப்பதமும் தயிர் வாவியும் நெய் அளரும் அடங்கப்
பொட்ட துற்று மாரிப் பகை புணர்த்த பொரு மா கடல் வண்ணன் பொறுத்த மலை–3-5-1-
மழை வந்து ஏழு நாள் பெய்து மாத்தடைப்ப மது சூதன் எடுத்து மறித்த மலை-3-5-2-
ஆழிக்கை எந்தை எடுத்த மலை–3-5-3-
அமரர் பிரான் கொண்டு நின்ற மலை-3-5-4-
ஏனத்து உருவாகிய ஈசன் எந்தை இடவன் எழ வாங்கி எடுத்த மலை-3-5-5-
செப்பாடு உடைய திருமால் அவன் தன் செம்தாமரைக் கை விரல் ஐந்தினையும்
கப்பாக மடுத்து மணி நெடும் தோள்காம்பாகக் கொடுத்து கவித்த மலை
எப்பாடும் பரந்து இழி தெள்ளருவி இலங்கு மணி முத்து வடம் பிறழ
குப்பாயம் என நின்று காட்சி தரும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே – 3-5 6-
படங்கள் பலவும் உடை பாம்பரையன் படர் பூமியை தாங்கி கிடப்பவன் போல்
தடம் கை விரல் ஐந்து மலர வைத்து தாமோதரன் தாங்கு தடவரை தான்-3-5-7-
நாராயணன் முன் முகம் காத்த மலை–கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே – 3-5-8-
தாமோதரன் தாங்கு தடவரை தான்—கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே – 3-5-9-
கொடி ஏறு செம்தாமரை கை விரல்கள் கோலமும் அழிந்தில வாடிற்று இல வடிவேறு திரு உகிர் நொந்தும்
இல மணிவண்ணன் மலையும் —கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே – 3-5-10-

இட அணரை இடத்தோளோடு சாய்த்து இரு கை கூட புருவம் நெரிந்து ஏறக்
குட வயிறு பட வாய் கடை கூட கோவிந்தன் குழல் கொடூதின போது–3-6-2-
வானிளவரசு வைகுந்த குட்டன் வாசுதேவன் மதுரை மன்னன் நந்தர்
கோனிளவரசு கோவலர் குட்டன் கோவிந்தன் குழல் கொடூதின போது-3-6-3-
சிறு விரல்கள் தடவி பரிமாற செம்கண் கோட செய்ய வாய் கொப்பளிக்க
குறு வெயர்ப்புருவம் கூடலிப்ப கோவிந்தன் குழல் கொடூதின போது -3-6-8-
குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சி கோவிந்தனுடைய கோமள வாயில்
குழல் முழஞ்சுகளினூடு குமிழ்த்துக் கொழித்து எழுந்த அமுதப் புனல் தன்னை-3-6-11-

கோவிந்தனோடு இவளை சங்கை ஆகி என் உள்ளம் நாள் தோறும் தட்டுளுப்பா கின்றதே – 3-7 3- –

ஒண் நிறத் தாமரை செம்கண் உலகு அளந்தான் என் மகளைப்
பண்ணறையாப் பணி கொண்டு பரிசற வாண்டிடும் கொலோ -3-8 9-

ஆனாயர் கூடி அமைத்த விழவை அமரர்தம்
கோனார்க்கு ஒழிய கோவர்த்தனத்துச் செய்தான் மலை–4-2-4-

கோவலர் கோவிந்தனை குற மாதர்கள் பண் குறிஞ்சி
பா வொலி பாடி நடம் பயில் மால் இரும் சோலை அதுவே – 4-3-4-

திருக் கோட்டியூர் குளிர்ந்து உறைகின்ற கோவிந்தன் குணம் பாடுவார் உள்ள நாட்டினில்
விளைந்த தானியமும் இராக்கதர் மீது கொள்ள கிலார்களே -4-4-8 –
குயில் இனம் கோவிந்தன் குணம் பாடு சீர்
செம்பொனார் மதிள் சூழ் செழும் கழனி வுடைத் திரு கோட்டியூர்-4-4-9-

கௌதத்துவம் உடைக் கோவிந்தனோடு
கூடி யாடிய உள்ளத்தர் ஆனால் குறிப்பிடம் கடந்து உய்யலுமாமே-4-5-8 —

குலமுடைக் கோவிந்தா கோவிந்தா என்று அழைத்தக்கால்
நலமுடை நாரணன் தம் அன்னை நரகம் புகாள் -4 6-5 –

உரம் பெற்ற மலர்க் கமலம் உலகு அளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட-4-9-8-

குன்று எடுத்து ஆநிரை காத்த ஆயா கோநிரை மேய்த்தவனே எம்மானே
அன்று முதல் இன்று அறுதியா ஆதியம் சோதி மறந்து அறியேன்–4-10-9-

வண்ண மால் வரையே குடையாக மாரி காத்தவனே மதுசூதா
கண்ணனே கரி கோள் விடுத்தானே காரணா களிறட்ட பிரானே–5-1-8-

வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தன் மனத்தே
கோயில் கொண்ட கோவலனைக் கொழும் குளிர் முகில் வண்ணனை
ஆயர் ஏற்றை அமரர் கோவை அந்தணர் தம் அமுதத்தினை
சாயை போலே பாட வல்லார் தாமும் அணுக்கர்களே -5 4-11 –

—————

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி –3-
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகு அளந்த உம்பர் கோமானே –17-
குன்று குடையா எடுத்தாய் குணம் போற்றி -24-
கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா – 27-
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா –28-
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா –29-

—————

கொத்தலர் பூங்கணை தொடுத்துக் கொண்டு கோவிந்தன் என்பதோர் பேரெழுதி
வித்தகன் வேங்கட வாணன் என்னும் விளக்கினில் புக வென்னை விதிக்கிற்றியே–நாச்சியார் திரு மொழி-1-3-

சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்கக் கடவையோ கோவிந்தா
முற்ற மண்ணிடம் தாவி விண்ணுற நீண்டு அளந்து கொண்டாய்–2-9-

கொண்ட கோலக் குறள் உருவாய்ச் சென்று பண்டு மா வலி தன் -பெரு வேள்வியில்
அண்டமும் நிலனும் அடி யொன்றினால் கொண்டவன் வரில் கூடிடு கூடலே–4-9-

அன்று உலகம் அளந்தானை யுகந்து அடிமைக் கண் அவன் வலி செய்ய–5-10-
விண்ணுற நீண்டடி தாவிய மைந்தனை வேல் கண் மடந்தை விரும்பி–5-11-

குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி
அளியத்த மேகங்காள் ஆவி காத்து இருப்பேனே—-8-3-

குடமாடு கூத்தன் கோவிந்தன் கோமிறை செய்து எம்மை
யுடைமாடு கொண்டான் உங்களுக்கு இனி ஓன்று போதுமே–10-7-

பொல்லாக் குறள் உருவாய் பொற் கையால் நீர் ஏற்று
எல்லா வுலகும் அளந்து கொண்ட வெம்பெருமான்–11-5-

மாணியுருவாய் யுலகளந்த மாயனைக் காணில் தலை மறியும்
ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில் ஆய்ப்பாடிக்கே என்னை யுய்த்திடுமின்–12-2-

கொங்கைத் தலமிவை நோக்கிக் காணீர் கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா–12-4-

கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும்
ஊட்டுக் கொடாது செறுப்பனாகில் உலகளந்தான் என்று உயரக் கூவும்-12-9-

கொள்ளை கொள்ளிக் குறும்பனை கோவர்த்த நனைக் கண்டக்கால்
கொள்ளும் பயன் ஓன்று இல்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில் எறிந்து என்னழலைத் தீர்வேனே–13-8-

கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தற்கோர் குற்றேவல்
இம்மைப் பிறவி செய்யாதே யினிப் போய் செய்யும் தவம் தான் என்-13-9-

அனுங்க வென்னைப் பிரிவு செய்து ஆயர்பாடி கவர்ந்துண்ணும்
குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த்தனனைக் கண்டீரே–14-2-

———————

மாவினை வாய் பிளந்து உகந்த மாலை வேலை வண்ணனை என் கண்ணனை வன் குன்றம் ஏந்தி
ஆவினை அன்று உய்ய கொண்ட ஆயர் ஏற்றை அமரர்கள் தம் தலைவனை–பெருமாள் திருமொழி-1-4-

குழகனே !என் தன் கோமள பிள்ளாய் கோவிந்தா !–7-7-

குன்றினால் குடை கவித்ததும் கோல குரவை கோத்ததும் குடமாட்டும்
கன்றினால் விள வெறிந்ததும் காலால் காளியன் தலை மிதித்ததும் முதலா–7-9-

—————

வெற்பெடுத்து மாரி காத்த மேக வண்ணன் அல்லையே -ஸ்ரீ திருச்சந்த விருத்தம்–39-

அன்று பாரளந்த பாத போதை யொன்றி வானின் மேல்
சென்று சென்று தேவராய் இருக்கிலாத வண்ணமே –66-

மண்ணை உண்டு உமிழ்ந்து பின்னிரந்து கொண்டு அளந்த மண்
கண்ணுள் அல்லது இல்லை என்று வென்ற காலமாயினாய்–105-

சுருக்குவாரை இன்றியே சுருக்கினாய் சுருங்கியும்
பெருக்குவாரை இன்றியே பெருக்கமெய்து பெற்றியோய்–109-

————

தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்ட எந்தாய் –திருமாலை -35-

———–

உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து அண்டமுற நிவந்த நீண் முடியன்–அமலன் –2-

————–

காளையாகி கன்று மேய்த்து குன்று எடுத்து அன்று நின்றான்
பாளை பாயும் தண் தடம் சூழ் வதரி வணங்குதுமே—-பெரிய திருமொழி-1-3-4-

கடுத்தார்த்து எழுந்த பெரு மழையைக் கல் ஓன்று ஏந்தி இன நிரைக் காத்
தடுத்தான் தடம் சூழ்ந்து அழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே–1-5-5-

குறளாய்ச் சென்று மா வலியை ஏயான் இரப்ப மூவடி மண்ணின்றேதா வென்று உலகு ஏழும்
தாயான் காயா மலர் வண்ணன் சாளக்கிராமம் அடை நெஞ்சே —1-5-6-

கன்றி மாரி பொழிந்திடக் கடிதாநிரைக் கிடர் நீக்குவான்
சென்று குன்றம் எடுத்தவன் திருவேம்கடம் அடை நெஞ்சே —-1-8-3-

இந்திரனுக்கென்று ஆயர்கள் எடுத்த எழில் விழவில் பழ நடை செய்
மந்திர விதியில் பூசனை பெறாது மழை பொழிந்திடத் தளர்ந்து ஆயர்
எந்தமோடின்வானிரை தளராமல் எம்பெருமான் அருள் என்ன
அந்தமில் வரையால் மழை தடுத்தானைத் திருவல்லிக் கேணிக் கண்டேனே —2-3-4-

நீண்டான் குறளாகி நிமிர்ந்தவனுக்கிடம் மா மலையாவது நீர் மலையே–2-4-2-

தொண்டாயார் தாம் பரவும் அடியினானைப் படி கடந்த தாளாளற்கு ஆளாய் உய்தல் விண்டானை -2-5-9-

வளம்படு முந்நீர் வையம் முன்னளந்த மால் என்னும் மாலின மொழி யாள்
இளம்படி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-2-

இவர் கொல் தெரிக்க மாட்டேன் வந்து குறள் உருவாய் நிமிர்ந்து மா வலி வேள்வியில் மண் அளந்த
அந்தணர் போன்று இவர் யார் கொல் என்ன அட்ட புயகரத்தேன் என்றாரே-2-8-2-

மஞ்சுயர் மா மணிக் குன்றம் ஏந்தி மா மழை காத்து -2-8-4-

இலகிய நீள் முடி மாவலி தன் பெரு வேள்வியில் மாண் உருவாய் முன நாள்
சலமொடு மா நிலம் கொண்டவனுக்கு இடந்தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி-2-9-7-

ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகலிடம் அளந்து-3-1-5-

அடல் மழைக்கு நிரை கலங்கிட வரை குடை எடுத்தவன் நிலவிய இடம்–3-1-8-

அருமா நிலம் அன்று அளப்பான் குறளாய் அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த
பெருமான் திரு நாமம் பிதற்றி நுந்தம் பிறவித் துயர் நீங்குதும் என்னகிற்பீர்-3-2-4-

மழை மா முதுகுன்று எடுத்து ஆயர் தங்கள்
கோவாய் நிரை மேய்த்து உலகுண்ட மாயன் குரை மா கழல் கூடும் குறிப்புடையீர்-3-2-8-

ஆயர் ஆநிரைக்கு அன்று இடர் தீர்ப்பான் கூடிய மா மழை காத்த கூத்தன் என வருகின்றான்
சேடுயர் பூம் பொழில் தில்லைச் சித்திரகூடத்து உள்ளானே–3-3-1-

மழை காப்பான் உய்யப் பரு வரை தாங்கி ஆநிரை காத்தான் என்று ஏத்தி
வையத் தெவரும் வணங்க அணங்கு எழு மா மலை போலே
தெய்வப் புள் ஏறி வருவான் சித்திர கூடத்துள்ளானே–3-3-6-

ஒ மண்ணளந்த தாளாளா ! தண் குடந்தை நகராளா ! வரை எடுத்த
தோளாளா ! என் தனக்கு ஓர் துணையா ளானாகாயே !–3-6-5-

கண்டவர் தம் மனம் மகிழ மாவலி தான வேள்விக் களவின் மிகு சிறு குறளாய் மூவடி என்று இரந்திட்டு
அண்டமும் இவ்வலை கடலும் அவனிகளும் எல்லாம் அளந்த பிரான் அமரும் இடம்–3-10-5-

காமரு சீர் முகில் வண்ணன் காலிகள் முன் காப்பான்
குன்றதனால் மழை தடுத்துக் குடமாடு கூத்தன்–3-10-8-

அண்டரானவர் வானவர் கோனுக்கு என்று அமைத்த சோறது எல்லாம்
உண்டு கோனிரை மேய்த்தவை காத்தவன் உகந்து இனிது உறை கோயில்-4-2-3-

அங்கையால் அடி மூன்று நீர் ஏற்று அயன் அலர் கொடு தொழுது ஏத்த
கங்கை போதரக் கால் நிமிர்த்து அருளிய கண்ணன் வந்து உறை கோயில்-4-2-6-

வசையறு குறளாய் மாவலி வேள்வியில் மண் அளவிட்டவன் தன்னை
அசைவறும் அமரர் அடி இணை வணங்க வலைகடல் துயின்ற வம்மானை-4-3-4-

பொங்கு இலங்கு புரி நூலும் தோலும் தாழப் பொல்லாத குறள் உருவாய் பொருந்தா வாணன்
மங்கலம் சேர் மறை வேள்வி யதனுள் புக்கு மண்ணகலம் குறை இரந்த மைந்தன் கண்டீர்-4-4-7-

மண் இடந்து ஏனமாகி மாவலி வலி தொலைப்பான்
விண்ணவர் வேண்டச் சென்று வேள்வியில் குறை இரந்தாய்–4-6-2-

குன்றால் குளிர் மாரி தடுத்து உகந்தானே
நன்றாய பெரும் புகழ் வேதியர் நாங்கூர்
சென்றார் வணங்கும் திரு வெள்ளக் குளத்துள்
நின்றாய் நெடியாய் அடியேன் இடர் நீக்கே –4-7-3-

பேசுகின்றது இதுவே வையம் ஈரடியால் அளந்த
மூசி வண்டு முரலும் கண்ணி முடியீர் உம்மைக் காணும்
ஆசை என்னும் கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம் அயலாரும்
ஏசுகின்ற்றது இதுவே காணும் இந்தளூரீரே-4-9-3-

பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்துப் பெரு நிலம் அளந்தவன் கோயில்-4-10-1-

ஒள்ளிய கருமம் செய்வன் என்று உணர்ந்த மாவலி வேள்வியில் புக்குத்
தெள்ளிய குறளாய் மூவடி கொண்டு திக்குற வளர்ந்தவன் கோயில்-4-10-7-

அனைத்து உலகும் உடையான் என்னை யாளுடையான்
குறிய மாண் உருவாகிய கூத்தன் மன்னி யமரும் இடம்–5-1-1-

கள்ளக் குறளாய் மாவலியை வஞ்சித்து உலகம் கைப்படுத்துப்
பொள்ளைக் கரத்த போதகத்தின் துன்பம் தவிர்ந்த புனிதன் இடம்-5-1-2-

வெற்பால் மாரி பழுதாக்கி விறல் வாள் அரக்கர் தலைவன் தன்
வற்பார் திரள் தோள் ஐ நான்கும் துணித்த வல்வில் ராமனிடம்–5-1-4-

குடையா விலங்கல் கொண்டு ஏந்தி மாரி பழுதா நிரை காத்து–5-1-7-

கூறு ஏர் உருவில் குறளாய் நில நீர் ஏற்றான் எந்தை பெருமானூர் -5-2-4-

ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகலிடம் முழுதினையும்
பாங்கினில் கொண்ட பரம நின் பணிந்து எழுவன் எனக்கு அருள் புரியே–5-3-9-

பண்டு இவ்வையம் அளப்பான் சென்று மாவலி கையில் நீர்
கொண்ட வாழித் தடக் கை குறளன் இடம் என்பாரால்–5-4-3-

ஏனாகி உலகிடந்து அன்று இரு நிலமும் பெரு விசும்பும் தானாய பெருமானை–5-6-3-

பெருநிலம் இடை நீட்டிப் பண்டு ஒரு நாள்
யளந்தவனை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே –5-6-4-

அன்று உலகம் மூன்றினையும் அளந்து–6-6-5-

மான் கொண்ட தோல் மார்வில் மாணியாய் மாவலி மண்
தான் கொண்டு தாளால் அளந்த பெருமானைத்
தேன் கொண்ட சாரல் திரு வேங்கடத்தானை
நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே -6-8-1-

மன்றாடக் குடமாடி வரை எடுத்து மழை தடுத்த
குன்றாறும் திரள் தோளன் குறை கழலே அடை நெஞ்சே–6-9-4-

தாடாளன் இடந்தான் வையம் கேழல் ஆகி யுலகை ஈரடியால்
நடந்தான் உடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே –6-10-2-

குடையா வரையால் நிரை முன் காத்த பெருமான் மருவாத
விடை தான் ஏழும் வென்றான் கோவல் நின்றான்–6-10-5-

குன்று குடையா எடுத்த வடிகள் உடைய திரு நாமம்
நன்று காண்மின் தொண்டீர் சொன்மின் நமோ நாராயணமே –6-10-7-

கடுங்கால் மாரி கல்லே பொழிய அல்லே எமக்கு என்று
படுங்கால் நீயே சரண் என்று ஆயர் அஞ்ச அஞ்சா முன்
நெடுங்கால் குன்றம் குடை ஓன்று ஏந்தி நிரையைச் சிரமத்தால்
நடுங்கா வண்ணம் காத்தான் நாமம் நமோ நாராயணமே –6-10-8-

குன்றால் மாரி தடுத்தவனைக் குல வேழம் அன்று
பொன்றாமை அதனுக்கு அருள் செய்த போர் ஏற்றை–7-6-4-

பண்டானுய்ய வோர் மால்வரை ஏந்தும் பண்பாளா பரனே பவித்திரனே-7-7-5-

வானவர் தம் துயர் தீர வந்து தோன்றி மாண் உருவாய் மூவடி மாவலியை வேண்டித்
தானமர வேழலகு மளந்த வென்றித் தணி முதல் சக்கரப் படை என் தலைவன் காண்மின்–7-8-6-

குன்றால் மாரி பழுதாக்கிக் கொடியேர் இடையாள் பொருட்டாக
வன் தாள் விடை ஏழு அன்று அடர்த்த வானோர் பெருமான் மா மாயன்–8-6-9-

மாணாகி வையம் அளந்ததுவும் வாளவுணன்
பூணாகம் கீண்டதுவும் ஈண்டு நினைந்து இருந்தேன்-8-10-8-

மன்னவன் பெரிய வேள்வியில் குறளாய் மூவடி நீரொடும் கொண்டு
பின்னும் ஏழு உலகம் ஈரடியாகப் பெரும் திசை யடங்கிட நிமிர்ந்தோன்-9-1-5-

முன்னம் குறளுருவாய் மூவடி மண் கொண்டளந்த
மன்னன் சரிதைக்கே மாலகிப் பொன் பயந்தேன்-9-4-2-

நீணிலா வெண் குடை வாணனார் வேள்வியில் மண்ணிரந்த
மாணியார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே —9-7-3-

பிணி வளராக்கை நீங்க நின்று ஏத்தப் பெரு நிலம் அருளில் முன்னருளி
அணி வளர் குறளாய் அகலிடம் முழுதும் அளந்த வெம்மடிகள் தம் கோயில்-9-8-3-

தேவர்கள் நாயகனைத் திரு மால் இருஞ்சோலை நின்ற
கோவலர் கோவிந்தனைக் கொடியேரிடை கூடுங்கொலோ–9-9-1-

தானவன் வேள்வி தன்னில் தனியே குறளாய் நிமிர்ந்து
வானகமும் மண்ணகமும் அளந்த திரி விக்கிரமன்–9-9-5-

ஆநிரைக்கு அழிவன்று மா மழை
நின்று காத்து உகந்தான் நில மா மகட்கு இனியான்-9-10-7-

திருமால் விரி நீருலகை வளர்ந்திட்ட தொல் சீர் விறல் மா வலியை மண் கொள்ள வஞ்சித் தொரு மாண் குறளாய்
அளந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே -10-6-4-

நீண்டான் குறளாய் நெடு வானளவும் அடியார் படும் ஆழ் துயராய வெல்லாம்
தீண்டாமை நினைந்து இமையோர் அளவும் செல வைத்த பிரான்–10-6-5-

கூவாய் பூங்குயிலே குளிர் மாரி தடுத்துகந்த
மாவாய் கீண்ட மணி வண்ணனை வரக் கூவாய் பூங்குயிலே -10-10-3-

கொட்டாய் பல்லிக் குட்டி குடமாடி உலகளந்த
மட்டார் பூங்குழல் மாதவனை வரக் கொட்டாய் பல்லிக் குட்டி—10-10-4-

குன்றம் ஓன்று எடுத்து ஏந்தி மா மழை அன்று காத்த அம்மான்–11-1-1-

குன்றம் எடுத்து மழை தடுத்து இளையரோடும்
மன்றில் குரவை பிணைந்த மால் என்னை மால் செய்தான்–11-2-1-

வெந்திறல் வாணன் வேள்வியிடம் எய்தி அங்கோர் குறளாகி மெய்ம்மை உணர
செந்தொழில் வேத நாவின் முனியாகி வையம் அடி மூன்று இரந்து பெறினும்
மந்தர மீது போகி மதி நின்று இறைஞ்ச மலரோன் வணங்க வளர் சேர்
அந்தரம் ஏழினூடு செல வுய்த்த பாதமது நம்மை யாளும் அரசே –11-4-5-

கண்டார் இரங்கக் கழியக் குறள் உருவாய்
வண்டாரான் வேள்வியில் மண்ணிரந்தான் காணேடீ
வண்டாரான் வேள்வியில் மண்ணிரந்தான் ஆகிலும்
விண்டு ஏழ் உலகுக்கும் மிக்கான் காண் சாழலே —11-5-9-

கள்ளத்தால் மாவலியை மூவடி மண் கொண்டு அளந்தான்
வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பரால் காணேடீ
வெள்ளத்தான் வேங்கடத்தான் ஏலும் கலி கன்றி
உள்ளத்தின் உள்ளே யுளன் கண்டாய் சாழலே –11-5-10-

நீள் வான் குறளுருவாய் நின்றிரந்து மாவலி மண்
தாளால் அளவிட்ட தக்கணைக்கு மிக்கானை
தோளாத மா மணியைத் தொண்டர்க்கு இனியானை
கேளாச் செவிகள் செவியல்ல கேட்டாமே –11-7-2-

குன்றம் எடுத்து ஆநிரை காத்தவன் தன்னை
மன்றில் புகழ் மங்கை மன் கலி கன்றி சொல்
ஓன்று நின்ற ஒன்பதும் வல்லவர் தம் மேல்
ஒன்றும் வினையாயின சார கில்லவே-11-8-10-

—————

மூவரின் முதல்வனாய யொருவனை உலகம் கொண்ட
கோவினைக் குடந்தை மேய குரு மணித் திரளை–திருக் குறும் தாண்டகம் –6-

தெள்ளியீர் தேவர்க்கு எல்லாம் தேவராய் உலகம் கொண்ட
ஒள்ளயீர் உம்மையல்லால் எழுமையும் துணை யிலோமே–9-

மாயமான் மாயச் செற்று மருது இற நடந்து வையம்
தாய மா பரவை பொங்கத் தடவரை திரித்து வானோர்க்கு ஈயுமால் எம்பிரானார்க்கு–16-

———-

ஒண் மிதியில் புனலுருவி ஒருகால் நிற்ப
ஒரு காலும் காமருசீர் அவுணன் உள்ளத்து
எண் மதியும் கடந்து அண்ட மீது போகி
இரு விசும்பினூடு போய் எழுந்து மேலைத்
தண் மதியும் கதிரவனும் தவிர்ந்து ஓடித்
தாரகையின் புறம் தடவி அப்பால் மிக்கு
மண் முழுதும் அகப்படுத்து நின்ற வெந்தை
மலர் புரையும் திருவடியே வணங்கினேனே–திரு நெடும் தாண்டகம்–5–

கல்லெடுத்து கன்மாரி காத்தாய் என்னும்–15-

பாராளன் பாரிடந்து பாரையுண்டு பாருமிழ்ந்து பாரளந்து பாரை யாண்ட பேராளன்–20-

சென்றுலகம் மூன்றினையும் திரிந்து–28-

குன்றெடுத்த தோளினானை விரிதிரைநீர் விண்ணகரம் மருவி நாளும்
நின்றானைத் தண் குடந்தை கிடந்த மாலை நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே –29-

————–

மானேய் நோக்கி மடவாளை மார்பிற் கொண்டாய் மாதவா!
கூனே சிதைய உண்டை வில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா!-1-5-5-

வெற்பை ஒன்று எடுத்து, ஒற்கம் இன்றியே
நிற்கும் அம்மான் சீர், கற்பன் வைகலே.–1-8-4-

பொரு மா நீள் படை ஆழி சங்கத்தொடு
திரு மா நீள் கழல் ஏழுலகும் தொழ
ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக்
கருமாணிக்கம் என் கண்ணுள தாகுமே–1-10-1-

உலகு ஏழும் ஓர் மூவடி கொண்டானைக் கண்டு கொண்டனை நீயுமே–1-10-5-

மாவாய் பிளந்து மருதிடை போய் மண் அளந்த
மூவா முதல்வா! இனி எம்மைச் சோரேலே–2-1-10-

ஏத்த ஏழு உலகும் கொண்ட கோலக் கூத்தனை –2-2-11-

வாட்டம் இல் புகழ் வாமனனை இசை
கூட்டி, வண் சடகோபன் சொல் அமை
பாட்டு ஓர் ஆயிரத்து இப்பத்தால் அடி
சூட்ட லாகும் அம் தாமமே–2-4-11

தீது அவம் கெடுக்கும் அமுதம்; செந்தாமரைக் கண் குன்றம்;
கோது அவம் இல் என் கன்னற் கட்டி எம்மான் என் கோவிந்தனே–2-7-3-

கோவிந்தன் குடக்கூத்தன் கோவலன் என்று என்றே குனித்துத்
தேவும் தன்னையும் பாடி ஆடத் திருத்தி –2-7-4-

எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய
விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் திரி விக்கிரமனையே–2-7-6-

திரிவிக்கிரமன் செந்தாமரைக் கண் எம்மான் என் செங்கனி வாய்
உருவில் பொலிந்த வெள்ளைப் பளிங்கு நிறத்தனன் என்று என்று உள்ளிப்
பரவிப் பணிந்து பல் ஊழி ஊழி நின் பாத பங்கயமே
மருவித்தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே!–2-7-7-

வாமனன்,என் மரகத வண்ணன், தாமரைக் கண்ணினன்,
காமனைப் பயந்தாய்! என்று என்று உன் கழல் பாடியே பணிந்து-2-7-8-

தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம்
சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயன் பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே –2-8-6-

கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ்ப் புக்கு
இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும்–2-8-7-

வன் மா வையம் அளந்த எம் வாமனா!நின்
பன் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான்,-3-2-2-

மேவி அன்று ஆநிரை காத்தவன், உலகம் எல்லாம்
தாவிய அம்மானை எங்கு இனித் தலைப் பெய்வனே?–3-2-9-

குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்
சென்று சேர் திரு வேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே–3-3-8–

தாள் பரப்பி மண் தாவிய ஈசனை நீள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல்–3-3-11-

மலையை எடுத்துக் கல் மாரி காத்துப் பசு நிரை தன்னைத்
தொலைவு தவிர்த்த பிரானைச் சொல்லிச் சொல்லி நின்று எப்போதும்–3-5-3-

ஞாலம் கொள்வான் குறளாகிய வஞ்சனே! என்னும் எப்போதும் என் வாசகமே–3-8-2-

மண் கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்து செல் பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி –3-8-5-

கொள்வன் நான், மாவலி! மூவடி தா’என்ற கள்வனே! -3-8-9-

குரை கழல்கள் நீட்டி மண் கொண்ட கோல வாமனா!
குரை கழல் கை கூப்புவார்கள் கூட நின்ற மாயனே!–4-3-7-

மண்ணை இருந்து துழாவி,‘வாமனன் மண் இது’ என்னும்;
விண்ணைத் தொழுது, அவன் மேவு வைகுந்தம்’ என்று கை காட்டும்;-4-4-1-

கோமள வான் கன்றைப் புல்கிக் கோவிந்தன் மேய்த்தன வென்னும் –4-4-5-

கூத்தர் குடம் எடுத்து ஆடில்,‘கோவிந்தனாம்’எனா ஓடும்;-4-4-6-

உருவுடை வண்ணங்கள் காணில்,‘உலகு அளந்தான்’என்று துள்ளும்;-4-4-8-

குன்றம் ஒன்றால் மழை காத்த பிரானைச் சொன் மாலைகள்
நன்று சூட்டும் விதி எய்தினம் என்ன குறை நமக்கே?–4-5-7-

உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் தன்னை
வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே–4-5-10-

கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோது இல தந்திடும் என்
வள்ளலேயோ! வையம் கொண்ட வாமனாவோ!’ என்று என்று
நள் இராவும் நன் பகலும் நான் இருந்து, ஓலம் இட்டால்
கள்ள மாயா! உன்னை என் கண் காண வந்து ஈயாயே–4-7-2-

குறிய மாண் உருவாகி, கொடுங்கோளால் நிலங் கொண்ட
கிறி அம்மான் கவராத கிளர் ஒளியால் குறை யிலமே–4-8-6-

பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கிக்
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளிய கில்லீர்–4-10-3-

செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு திருக் குருகூர தனுள்
குறிய மாண் உரு வாகிய நீள் குடக் கூத்தனுக்கு ஆட் செய்வதே–4-10-10-

சேண் சினை ஓங்கு மரச் செழுங் கானல் திரு வல்ல வாழ்
மாண் குறள் கோலப் பிரான் மலர்த் தாமரைப் பாதங்களே–5-9-6-

உண்ண வானவர் கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும்
வண்ண மால் வரையை எடுத்து மழை காத்ததும்
மண்ணை முன் படைத் துண்டுமிழ்ந்து கடந்திடந்து மணந்த மாயங்கள்
எண்ணுந் தோறு மென்னெஞ்சு எரி வாய் மெழு கொக்கும் நின்றே–5-10-5-

அடியை மூன்றை இரந்த வாறும் அங்கே நின் றாழ் கடலும் மண்ணும் விண்ணும்
முடிய ஈரடியால் முடித்துக் கொண்ட முக்கியமும்-5-10-9-

வன் சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங் கூற்றமுமாய்த்
தன் சரண் நிழற் கீழ் உலகம் வைத்தும் வையாதும்
தென் சரண் திசைக்குத் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
என் சரண் என் கண்ணன் என்னை ஆளுடை என்னப்பனே–6-3-8-

காண்மின்கள் உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்த தாளிணையன்–6-3-11-

குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் குன்றம் ஒன்று ஏந்தியதும்–6-4-1-

அகல் கொள் வைய மளந்த மாயன் என்னப்பன் தன் மாயங்களே-6-4-6-

மாணியாய் நிலம் கொண்ட மாயன் என்னப்பன் தன் மாயங்களே
காணும் நெஞ்சுடையேன் எனக்கினி என்ன கலக்க முண்டே?–6-4-8-

திசை ஞாலம் தாவி அளந்ததும் நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடுங் கண் நீர் மல்க நிற்குமே–6-5-3-

மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு
நீலக் கரு நிற மேக நியாயற்கு
கோலச் செந் தாமரைக் கண்ணற்கு என் கொங்கலர்
ஏலக் குழலி இழந்தது சங்கே–6-6-1-

மாடுடை வையம் அளந்த மணாளற்கு–6-6-4-

மாண்பமை கோலத்து எம் மாயக் குறளற்கு-6-6-9-

மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் வலங்காட்டி
மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மானே
நண்ணி உனை நான் கண்டு உகந்து கூத்தாட
நண்ணி ஒருநாள் ஞாலத் தூடே நடவாயே–6-9-2-

ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்
சாலப் பல நாள் உகந்தோறு உயிர்கள் காப்பானே!-6-9-3-

பாயோர் அடி வைத்து அதன் கீழ்ப் பரவை நிலமெல்லாம்
தாயோர் அடியால் எல்லா உலகும் தடவந்த மாயோன்!-6-9-6-

தாவி வையம் கொண்ட தடந்தாமரை கட்கே
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ–6-9-9-

எந்நாளே நாம் மண்ணளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கென்று
எந்நாளும் நின் றிமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இன மினமாய்
மெய்ந் நா மனத்தால் வழிபாடு செய்யும் திரு வேங்கடத்தானே!
மெய்ந் நாள் எய்தி எந்நாள் உன்னடிகள் அடியேன் மேவுவதே?–6-10-6-

ஆதி ஆகி அகல் இடம் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்திட்ட
சோதி நீள் முடியாய் தொண்டனேன் மது சூதனனே –7-1-3-

ஓர் குன்றம் வைத்த எந்தாய்! கொடியேன் பருகு இன் னமுதோ!–7-1-7-

‘கொழுந்து வானவர்கட்கு!’ என்னும்’குன்றேந்திக் கோ நிரை காத்தவன்!’ என்னும்;-7-2-8-

ஆழி எழச் சங்கும் வில்லும் எழத் திசை
வாழி எழத் தண்டும் வாளும் எழ அண்டம்
மோழை எழ முடி பாதம் எழ அப்பன்
ஊழி எழ உலகங் கொண்டவாறே–7-4-1-

மேய் நிரை கீழ் புக மா புரளச் சுனை
வாய் நிறை நீர் பிளிறிச் சொரிய இன
ஆ நிரை பாடி அங்கே ஒடுங்க அப்பன்
தீ் மழை காத்துக் குன்றம் எடுத்தானே–7-4-10-

குன்றம் எடுத்த பிரான் அடி யாரொடும்
ஒன்றி நின்ற சடகோபன் உரை செயல்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே–7-4-11-

பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ!
பாமரு மூவுலகும் அளந்த பற்ப பாதாவோ!–7-6-1-

குன்று எடுத்து ஆநிரை மேய்த்து அவை காத்த எம் கூத்தாவோ!–7-6-2-

காத்த எங் கூத்தாவோ! மலை ஏந்திக் கன் மாரி தன்னைப் பூத் தண் துழாய் முடி யாய்–7-6-3-

குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும்
ஒன்றும் அறிகின்றிலேன் அன்னைமீர்!எனக்கு உய்விடமே–7-7-5-

மாயா! வாமனனே!மது சூதா! நீ அருளாய்–7-8-1-

ஆகுங்கொல் ஐயம் ஒன்று இன்றி அகலிடம் முற்றவும் ஈரடியே
ஆகும் பரிசு நிமிர்ந்த திருக் குறளப்பன் அமர்ந்து உறையும்
மாகந் திகழ் கொடி மாடங்கள் நீடு மதிள் திரு வாறன் விளை
மா கந்த நீர் கொண்டு தூவி வலஞ்செய்து கை தொழக் கூடுங்கொலோ?–7-10-2-

கூடுங்கொல்? வைகலும் கோவிந்தனை மது சூதனைக் கோளரியை
ஆடு பறவை மிசைக் கண்டு கை தொழுது அன்றி யவன் உறையும்
பாடும் பெரும் புகழ் நான்மறை வேள்வியைந்து ஆறங்கம் பன்னினர் வாழ்
நீடு பொழில் திரு வாறன் விளை தொழ வாய்க்குங்கொல் நிச்சலுமே?–7-10-3-

ஆருயிரேயோ ! அகலிட முழுதும் படைத் திடந் துண்டுமிழ்ந் தளந்த பேருயிரேயோ !–8-1-5-

மாயம் தன்னால் மாண் குறள் கோல வடிவு காட்டி மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த
சேண் சுடர்த் தோள்கள் பல தழைத்த தேவ பிராற்கு–8-2-9-

அடியார் அல்லல் தவிர்த்த வசவோ அன்றேலிப்
படி தான் நீண்டு தாவிய வசவோ பணியாயே–8-3-5-

என்றே என்னை உன் ஏரார் கோலத் திருந்து அடிக் கீழ்
நின்றே ஆட் செய்ய நீ கொண்டருள நினைப்பது தான்
குன்றேழ் பாரேழ் சூழ் கடல் ஞாலம் முழு வேழும்
நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திருமாலே—8-3-8-

பெரிய மூ வுலகும் நிறையப் பேரு ருவமாய் நிமிர்ந்த
குறிய மாண் எம்மான் குரை கடல் கடைந்த கோல மாணிக்கம் என்னம்மான்-8-4-4-

உன் வையம் தாய மலரடிக் கீழ் முந்தி வந்து யான் நிற்ப முகப்பே கூவிப் பணி கொள்ளாய்-8-5-7-

கொண்மின் இடர் கெட உள்ளத்துக் கோவிந்தன்
மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை
மண்ணவர் தாம் தொழ வானவர் தாம் வந்து
நண்ணு திருக் கடித் தான நகரே–8-6-7-

அற்புதன் நாரணன் அரி வாமனன் நிற்பது மேவி யிருப்பது என் னெஞ்சகம்-8-6-10-

பொருத்தமுடை வாமனன் தான் புகுந்து என்தன்
கருத்தை யுற வீற்றிருந்தான் கண்டு கொண்டே–8-7-1-

உறுமோ பாவியேனுக்கு இவ் வுலக மூன்றுமுடன் நிறைய
சிறு மா மேனி நிமிர்ந்த எம் செந்தாமரைக் கண் திருக் குறளன்
நறு மா விரை நாள் மலரடிக் கீழ் புகுதல் அன்றி அவன் அடியார்
சிறு மா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரியவே–8-10-3-

நீ யொரு நாள் படிக் களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக் கணியாய்-9-2-2-

அவனே யகல் ஞாலம் படைத்திடந்தான் அவனே அஃதுண்டு மிழ்ந்தான் அளந்தான்-9-3-2-

மழைக்கு அன்று குன்றம் எடுத்து ஆநிரை காத்தாய்
பிழைக்கின்றது அருள் என்று பேதுறுவனே–9-4-3–

குன்றாமல் உலகம் அளந்த அடியானை அடைந்து அடியேன் உய்ந்தவாறே–9-4-10-

வித்தகன் கோவிந்தன் மெய்யன் அல்லன் ஒருவர்க்கும்
அத்தனை ஆம் இனி என் உயிர் அவன் கையதே–9-5-2-

கோவாகிய மாவலியை நிலம் கொண்டாய் தேவா சுரம் செற்றவனே திருமாலே–9-8-7-

அகலிடம் படைத்து இடந்து உண்டு உழிந்து அளந்து எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன்–9-9-2-

தொண்டீர் வம்மின் நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன்
அண்ட மூ வுலகளந்தவன் அணி திரு மோகூர்–10-1-5-

குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே–10-2-6-

துடைத்த கோவிந்தனாரே உலகு உயிர் தேவு மற்றும்
படைத்த வெம் பரம மூர்த்தி பாம்பணைப் பள்ளி கொண்டான்-10-2-7-

தொழுத்தையோம் தனிமையும் துணை புரிந்தார்
துயரமும் நினைகிலை கோவிந்தா நின்
தொழுத்தனில் பசுக்களையே விரும்பி
துறந்து எம்மை இட்டு அவை மேய்க்கப் போதி-10-3-4-

குரை கழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடி கொண்டான்-10-6-7-

என் கொல் அம்மான் திருவருள்கள் உலகும் உயிரும் தானேயாய்
நன்கு என் உடலம் கை விடான் ஞாலத்தூடே நடந்து உழக்கி
தென்கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமால் இரும் சோலை
நங்கள் குன்றம் கை விடான் நண்ணா அசுரர் நலியவே–10-7-4-

தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை
பொழிவனர்பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே
எழுமின் என்று இருமருங்கு இசைந்தனர் முனிவர்கள்
வழி இது வைகுந்தர்க்கு -என்று வந்து எதிரே–10-9-3-

குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று
முடி யுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள-10-9-8-

————–

பாரளவும் ஓரடி வைத்து ஓரடியும் பாருடுத்த நீரளவும் செல்ல நிமிர்ந்ததே -ஸ்ரீ முதல் திருவந்தாதி -3-

சேவடியை நீட்டித் திசை நடுங்க விண் துளங்க மாவடிவின் நீ யளந்த மண் —9-

வாய் அவனை அல்லது வாழ்த்தாது கை யுலகம் தாயவனை அல்லது தாந்தொழா–11-
தொழாதார் தலையிலும் இருந்து தொழு வித்துக் கொள்ளும் திருவடிகள் –

உலகளந்த மூர்த்தி யுருவே முதல் –14-

அடியும் படிகடப்பத் தோள் திசை மேல் செல்ல முடியும் விசும்பும் அளந்தது என்பர் -17-

மருதிடை போய் மண்ணளந்த மால் –18-

பெற்றார் தளை கழலப் பேர்ந்தோர் குறளுருவாய்ச் செற்றார் படி கடந்த செங்கண் மால் நற்றா
மரை மலர்ச் சேவடியை வானவர் கை கூப்பி நிரை மலர் கொண்டேத்துவரால் நின்று-20–

நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால் சென்று திசை யளந்த செங்கண் மாற்கு–21-

மலையால் குடை கவித்து-27-

தரணி தனதாகத் தானே— நீ மண்ணிரந்து கொண்ட வகை –36-

எடுத்தது குன்றம்–39-

பெரியனாய் மாற்றாது வீற்றிருந்த மாவலி பால் வண் கை நீர் ஏற்றானைக் காண்பது எளிது ——50-

வேலை நீருள்ளதோ விண்ணதோ மண்ணதோ சோலை சூழ் குன்றெடுத்தாய் சொல்லு —–69-

பழுதொன்றும் வாராத வண்ணமே விண் கொடுக்கும் மண்ணளந்த சீரான் திருவேங்கடம் –76-

நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே என்றால் கெடுமா மிடர் –77-

கொண்டானை அல்லால் கொடுத்தாரை யார் பழிப்பார் மண்டா வென விரந்து மாவலியை ஒண்டாரை
நீரங்கை தோய நிமிர்ந்திலையே நீள் விசும்பில் ஆரங்கை தோய வடுத்து –79-

வரை குடை தோள் காம்பாக ஆநிரை காத்து–83-

பிரானுன் பெருமை பிறர் ஆர் அறிவார் உரா யுலகளந்த நான்று வராகத்
தெயிற்று அளவு போதாவா றென்கொலோ எந்தை அடிக்களவு போந்த படி –84-

நீயும் திருமகளும் நின்றாயால் குன்றேடுத்துப் பாயும் பனி மறுத்த பண்பாளா –86-

நின்றுலகம் தாய நெடுமாலும்–98-

ஓரடியும் சாடுதைத்த வொண் மலர்ச் சேவடியும்
ஈரடியும் காணலாம் என்நெஞ்சே ஓரடியில்
தாயவனைக் கேசவனைத் தண் துழாய் மாலை சேர்
மாயவனையே மனத்து வை -100-

————–

அடி மூன்றால் இவ்வுலகம் அன்று அளந்தாய் போலும்
அடி மூன்று இரந்து அவனி கொண்டாய் -படி நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் அறிந்து–ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி-5-

அன்றது கண்டு அஞ்சாத ஆய்ச்சி உனக்கு இரங்கி
நின்று முலை தந்த இந்நீர்மைக்கு -அன்று
வரன் முறையால் நீ யளந்த மா கடல் ஞாலம்
பெரு முறையால் எய்துமோ பேர்த்து—9-

மண்ணிரந்து காத்தனை பல்லுயிரும் காவலனே -10-

கொண்டது உலகம் குறள் உருவாய் கோளரியாய்
ஒண் திறலோன் மார்வத்து உகிர் வைத்தது -உண்டதுவும்
தான் கடந்த ஏழ் உலகே தாமரைக் கண் மால் ஒரு நாள்
வான் கடந்தான் செய்த வழக்கு–18-

தாழ்ந்த விளங்கனிக்கு கன்று எறிந்து வேற்றுருவாய் ஞாலம்
அளந்தடிக்கீழ் கொண்ட வவன்–23-

மண் கொண்டு மண் உண்டு மண் உமிழ்ந்த மாயன் என்று
எண் கொண்டு எண் நெஞ்சே இரு–36-

ஞாலம் அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த அண்ணலை மற்று அல்லால்
உளம் கிடந்த வாற்றால் உணர்ந்து ———47-

நின்றதோர் பாதம் நிலம் புதைப்ப நீண்ட தோள்
சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் -அன்று
கரு மாணியாய் இரந்த கள்வனை உன்னைப்
பிரமாணித்தார் பெற்ற பேறு —61-

இடங்கை வலம்புரி நின்றார்ப்ப எரி கான்று
அடங்கார் ஒடுங்குவித்த தாழி-விடம் காலும்
தீவாய் அரவணை மேல் தோன்றல் திசை யளப்பான்
பூவாரடி நிமிர்த்த போது–71-

இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அளந்த திருவடியை -அன்று
கருக் கோட்டியுள் கிடந்தது கை தொழுதேன் கண்டேன்
திருக் கோட்டி எந்தை திறம் -87-

நீரேற்றுப பண்டு ஒரு நாள் மாவலியை மாணியாய் கொண்டிலையே மண்–89-

பின்னால் அரு நரகம் சேராமல் பேதுறுவீர்
முன்னால் வணங்க முயல்மினோ -பன்னூல்
அளந்தான் இக்கார் கடல் சூழ் ஞாலத்தை எல்லாம்
அளந்தான் அவன் சேவடி –91-

கொண்டு வளர்க்கக் குழவியாய் தான் வளர்ந்தது உண்டது உலகு ஏழும் உள் ஒடுங்க-98-

அறை கழல சேவடியான் செங்கண் நெடியான் குறளுருவாய் மாவலியை மண் கொண்டான் மால் –99-

————

மருந்தும் பொருளும் அமுதமும் தானே
திருந்திய செங்கண் மால் ஆங்கே பொருந்தியும்
நின்று உலகம் உண்டும் உமிழ்ந்தும் நீரேற்று மூவடியால்
அன்று உலகம் தாயோன் அடி ——ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி–4—

அடி வண்ணம் தாமரை அன்றுலகம் தாயோன் படி வண்ணம் பார்க்கடல் நீர் வண்ணன்–5-

அழகன்றே ஆழியாற்கு ஆழி நீர் வண்ணம்
அழகன்றே அண்டம் கடத்தல் அழகன்றே
அங்கை நீர் ஏற்றாற்கு அலர்மேலோன் கால் கழுவ
கங்கை நீர் கான்ற கழல் —–6-

கண்ணும் கமலம் கமலமே கைத்தலமும் மண்ணளந்த பாதமும் மற்றவையே–9-

படிவட்டத் தாமரை பண்டுலகம் நீரேற்று
அடிவட்டத்தால் அளப்ப நீண்ட -முடிவட்டம்
ஆகாயமூடறுத்து அண்டம் போய் நீண்டதே
மாகாயமாய் நின்ற மாற்கு ——–13-

வாய் மொழிந்து வாமனனாய் மாவலி பால்
மூவடி மண் நீ யளந்து கொண்ட நெடுமாலே -தாவிய நின்
எஞ்சா இணை யடிக்கே ஏழ் பிறப்பும் ஆளாகி
அஞ்சாது இருக்க வருள் ———-18-

முன்னுலகம் உண்டு உமிழ்ந்தாய்க்கு அவ்வுலகம் ஈரடியால் பின்னளந்து கோடல் பெரிதொன்றே–20-

விரும்பி விண் மண்ணளந்த அஞ்சிறைய வண்டார்
சுரும்புதுளையில் சென்றூத -அரும்பும்
புனந்துழாய் மாலையான் பொன்னங்கழற்கே
மனந்துழாய் மாலாய் வரும் ——-23-

அன்றிவ்வுலகம் அளந்த அசைவே கொல்–34-

கையனலாழி கார்க் கடல் வாய் வெண் சங்கம்
வெய்ய கதை சார்ங்கம் வெஞ் சுடர் வாள் -செய்ய
படை பரவை பாழி பனி நீருலகம்
அடியளந்த மாயரவர்க்கு —–36–

மின்னை உடையாகக் கொண்டு அன்று உலகு அளந்தான் குன்றம் குடையாக ஆ காத்த கோ ———41-

நின்ற பெருமானே நீரேற்று உலகெல்லாம் சென்ற பெருமானே செங்கண்ணா–47-

நீ யன்றே நீரேற்று உலகம் அடி அளந்தாய் நீ யன்றே நின்று நிரை மேய்த்தாய்–48-

அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான் அவனே அணி மருதம் சாய்த்தான்-51-

சென்று குறளுருவாய் முன்னிலம் கைக் கொண்டான் முயன்று ——-52-

தென் குடந்தை தேனார் திருவரங்கம் தென் கோட்டி தன் குடங்கை நீரேற்றான் தாழ்வு ——62-

இனியவன் கள்ளத்தால் மண் கொண்டு விண் கடந்த பைங்கழலான்
உள்ளத்தின் உள்ளே உளன் ———83-

சிலம்புஞ் செறி கழலும் சென்றிசைப்ப விண்ணார்
அலம்பிய சேவடி போய் அண்டம் -புலம்பிய தோள்
எண்டிசையும் சூழ இடம் போதாது என் கொலோ
வண்டுழாய் மாலளந்த மண் ————90-

————

குறை கொண்டு நான்முகன் குண்டிகை நீர் பெய்து
மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி -கறை கொண்ட
கண்டத்தான் சென்னி மேல் ஏறக் கழுவினான்
அண்டத்தான் சேவடியை ஆங்கு–நான்முகன் திருவந்தாதி -9-

பல தேவர் ஏத்தப் படி கடந்தான் பாதம் மலர் ஏற இட்டு இறைஞ்சி வாழ்த்த -வலர் ஆகில்-15-

ஞாலம் அளந்தானை ஆழிக் கிடந்தானை ஆல் மேல் வளர்ந்தானைத தான் வணங்குமாறு -17-

தாளால் உலகம் அளந்த அசைவே கொல்-35-

———

உலகு அளந்த மால் பால் துழாய் க்கு மனம் உடையார்க்கு -ஸ்ரீ திரு விருத்தம்-35-

குடமாடி யிம் மண்ணும் விண்ணும் குலுங்க வுலகளந்த
நடமாடிய பிரான் உரு ஒத்தன நீலங்களே -38-

மென் கால் கமலத் தடம் போல் பொலிந்தன மண்ணும் விண்ணும்
என் கால்க்கு அளவின்மை காண்மின் என்பான் ஒருத்து வான் நிமிர்ந்த-42-

கழல் தலம் ஒன்றே நில முழு தாயிற்று ஒரு கழல் போய்
நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது நீண்ட வண்டத்து–58-

இரண்டே யடியால் தாயவன் ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று நம்மிறையே – -61 –

இருக்கார் மொழியால் நெறி இழுக்காமை உலகளந்த
திருத் தாளிணை நிலத் தேவர் வணங்குவர் -64-

அசுரைச் செற்ற மாவியம்புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர்
தூவியம் பேடை யன்னாள் கண்களாய துணை மலரே – – 67-

பொரு கடல் சூழ் நிலந்தாவிய வெம்பெருமான்-68-

புவனி எல்லாம் நீரேற்று அளந்த நெடிய பிரான் அருளாவிடுமே-69-

மால் வரையைக் கிளர்ந்து மறிதரக் கீண்டு எடுத்தான்-74-

ஞாலம் விழுங்கும் நாதனை ஞாலந்தத்தும் பாதனைப் பாற்கடல் பாம்பணை மேல்
பள்ளி கொண்டு அருளும் சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே – – -79 –

பாரளந்த பேரரசே எம் விசும்பரசே எம்மை நீத்து வஞ்சித்த
ஓரரசே அருளாய் இருளாய் வந்து உறுகின்றதே – -80 –

உலகு அளந்த மாணிக்கமே என் மரகதமே மற்று ஒப்பாரை இல்லா
ஆணிப் பொன்னே அடியேன் அடி யாவி யடைக்கலமே – – -85-

ஆவினை மேய்க்கும் வல்லாயனை அன்றுலகீரடியால்
தாவின வேற்றை எம்மானை எஞ்ஜான்று தலைப் பெய்வனே – – 89-

சுருந்குறி வெண்ணெய் தொடு வுண்ட கள்வனை வையமுற்றும்
ஒருங்குற வுண்ட பெரு வயிற்றாளனை மாவலி மாட்டு
இருங்குறளாகி இசையவோர் மூவடி வேண்டிச் சென்ற
பெரும்கிறி யானை யல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே – – -91-

———–

சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர் தெய்வ குழாங்கள் கை தொழ கிடந்த
தாமரை வுந்தி தனி பெரு நாயக மூ வுலகு அளந்த சேவடியோயே -ஸ்ரீ திருவாசிரியம் ––1–

மா முதல் அடி போது ஓன்று கவிழ்த்து அலர்த்தி மண் முழுதும் அகப்படுத்து ஒண் சுடர் அடி போது
ஓன்று விண் செலீ இ நான் முகப் புத்தேள் நாடு வியந்து உவப்ப வானவர் முறை முறை வழி பட -5-

————-

பண்புடையீர் பாரளந்தீர் பாவியேம் கண் காண்பரிய
நுண்புடையீர் நும்மை நுமக்கு -ஸ்ரீ பெரிய திருவந்தாதி –8-

சீரால் பிறந்து சிறப்பால் வளராது பேர் வாமன் ஆக்காக்கால் பேராளா-16-

மாணி யுருவாகிக் கொண்டுலகம் நீரேற்ற சீரான் திருவாகம் தீண்டிற்றுச் சென்று–20-

அடியால் படிகடந்த முத்தோ -அது அன்றேல்
முடியால் விசும்பு அளந்த முத்தோ -நெடியாய்
நெறி கழல் கோள் தாள் நிமிர்த்திச் சென்று உலகம் எல்லாம்
அறிகிலமால் நீ யளந்த யன்று —27-

பாருண்டான் பாருமிழ்ந்தான் பாரிடந்தான் பாரளந்தான் பாரிடம் முன் படைத்தான் என்பரால்-42-

மாண் பாவித்து அந்நான்று மண்ணிரந்தான் மாயவள் நஞ்சு
ஊண் பாவித்துண்டானதோ ருருவம் காண்பான்–52-

இறை முறையான் சேவடி மேல் மண்ணளந்த வந்நாள்
மறை முறையால் வானாடர் கூடி –முறை முறையின்
தாது இலகு பூத் தெளித்தால் ஒவ்வாதே தாழ் விசும்பின்
மீதிலகித் தான் கிடக்கும் மீன்–61-

மீன் என்னும் கம்பில் வெறி என்னும் வெள்ளி வேய்
வான் என்னும் கேடிலா வான்குடைக்கு தானோர்
மணிக் காம்பு போல் நிமிர்ந்து மண்ணளந்தான் நாங்கள்
பிணிக்காம் பெரு மருந்து பின் –62-

———–

ஆரால் இவ்வையம் அடியளப்புண்டது காண் –ஆரால் இலங்கை பொடி பொடியா வீழ்ந்தது –
மற்று ஆராலே கல்மாரி காத்தது தான்-ஆழி நீர் ஆரால் கடைந்திடப் பட்டது -அவன் காண்மின்
ஊராநிரை மேய்த்து உலகம் எல்லாம் உண்டும் உமிழ்ந்தும் ஆராத தன்மையனாய்-சிறிய திருமடல்-

பேர் வாமனாகிய காலத்து மூவடி மண் தாராய் எனக்கு என்று வேண்டிச் சலத்தினால்
நீர் ஏற்று உலகு எல்லாம் நின்று அளந்தான் மாவலியை ஆராத போரில் அசுரர்களும் தானுமாய்
காரார் வரை நட்டு நாகம் கயிறாக பேராமல் தாங்கிக் கடைந்தான்-

————

தன்னை முன நாள் அளவிட்ட தாமரை போல்
மன்னிய சேவடியை வானியங்கு தாரகை மீன்—ஸ்ரீ பெரிய திருமடல்——-5-

மற்றன்றியும்
தன்னுருவ மாரும் அறியாமல் தான் அங்கோர் ——–107
மன்னும் குறளுருவின் மாணியாய் மாவலி தன்
பொன்னியலும் வேள்விக் கண் புக்கிருந்து போர் வேந்தர் —–108
மன்னை மனம் கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி
என்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூவடி மண் ——–109
மன்னா தருக என்று வாய் திறப்ப மற்றவனும்
என்னால் தரப்பட்ட தென்றலுமே அத்துணைக் கண் ——–110
மின்னார் மணி முடி போய் விண் தடவ மேலேடுத்த
பொன்னார் கனை கழற்கால் ஏழ் உலகும் போய்க் கடந்தங்கு —–111
ஒன்னா வசுரர் துளங்கச் செல நீட்டி
மன்னிவ் வகலிடத்தை மாவலியை வஞ்சித்துத் ———112
தன்னுலக மாக்குவித்த தாளானை –

—————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருவேங்கடத்தானும்-ஸ்ரீ கண்ணபிரான்/ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் / ஸ்ரீ உலகு அளந்த உத்தமன் / ஸ்ரீ வராஹன் /ஸ்ரீ நரஸிம்ஹன் /ஸ்ரீ ஆலிலை பாலகன் – – -அருளிச் செயல்கள் ஸ்ரீ ஸூ க்திகள்–

January 27, 2018

ஸ்ரீ திரு மலை மேல்-அருளிச் செயல்களில் 206 பாசுரங்கள்–

ஸ்ரீ பொய்கையார் -10..
ஸ்ரீ பூதத்தார் -. 11..
ஸ்ரீ பேயார்- 19..
ஸ்ரீ திருமழிசைப் பிரான் 16–
ஸ்ரீ நம்மாழ்வார் -48 –
ஸ்ரீ பெரியாழ்வார் -7–
ஸ்ரீ ஆண்டாள் -16—
ஸ்ரீ குலசேகரப் பெருமாள் – 11–
ஸ்ரீ திருப்பாணாழ்வார் 2–
ஸ்ரீ திருமங்கையாழ்வார் -66 –

76- 106-ஸ்ரீ ராமானுச நூற்று அந்தாதி –ஸ்ரீ அமுதனார் சாவித்திரி காயத்ரி  மந்த்ரம் போல் இவை

ஆக மொத்தம் -206 பாசுரங்கள் –

—————————————-

ஸ்ரீ கண்ணபிரான் இவன் – பாசுரங்களின் தொகுப்பு –

ஸ்ரீ பொய்கையார்–
வெண் சங்கம் ஊதிய வாய் மால் உகந்த ஊர்–37-/
எடுத்தது குன்றம் கடந்தது கஞ்சனை முன் அஞ்ச  கிடந்ததுவும் நீரோத மா  கடலே நின்றதுவும் வேம்கடமே-39-

ஸ்ரீ பேய் ஆழ்வார்-
வேம்கடமும் பாம்பும் பனி விசும்பும் நூல் கடலும் நுண் னுலா  தாமரை மேல் பால் பட்டு
இருந்தார் மனமும்  இடமாக கொண்டான் குந்து ஒசித்த கோபாலகன்–32-
வேம்கடமே மேல் நாள் விளம் கனிக்கு கன்று எறிந்தான் வெற்பு  –68-
வேம்கடமே மேல் நாள் குழ கன்று கொண்டு எறிந்தான் குன்று–71-
வேம்கடத்து மன்னும் –குடம் நயந்த  கூத்தனாய் நின்றான் குரை கழலே கூறுவதே  நாத் தன்னால் உள்ள நலம்–73
வேம்கடமே மேல் ஒரு நாள் தீம் குழல் வாய் வைத்தான் சிலம்பு–89-

ஸ்ரீ திரு மழிசைப் பிரான் —
வேம்கடமே தானவரை வீழ தன் ஆழி படை தொட்டு வானவரை காப்பான் மலை–நான்முகன்–48-

ஸ்ரீ நம் ஆழ்வார்-
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு தண்ணார் வேம்கட விண்ணோர் வெற்பனே 1-8-3-
தலை பெய் காலம் நமன் தமர் பாசம் விட்டால் அலை பூண் உண்ணும் அவ் அல்லல் எல்ல்லாம் அகல
கலை பல் ஞானத்து என் கண்ணனை கண்டு கொண்டு நிலை பெற்றேன் என் நெஞ்சம் பெற்றது நீடு உயிரே 3-2-10
குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவன் அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்
சென்று சேர் திரு வேம்கட மா மலை ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே–3-3-8-
ஓயும் மூப்பு பிறப்பு இறப்பு பிணி வீயுமாறு செய்வான் திரு வேம்கடத்து
ஆயன் நாள் மலராம் அடி  தாமரை வாய் உள்ளும் மனத்து உள்ளும் வைப்பார்கட்கே 3-3-9-
புணரா நின்ற மரம் எழ அன்று எய்த ஒரு வில் வலவாவோ புணரேய்  நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வாவோ
திணரார்  மேகம் என களிறு சேரும் திருவேம்கடத்தானே திணரார் சார்ங்கம் உன பாதம் சேர்வது அடியேன் என்னாளே 6-10-5-

ஸ்ரீ பெரியாழ்வார்-
ஒ குன்று எடுத்தாய் ! குடமாடு கூத்தா ! வேத பொருளே ! என் வேம்கடவா ! வித்தகனே ! இங்கே போதராயே  2-9-6-
கடியார் பொழில் அணி வேம்கடவா ! கரும் போர் ஏறே ! நீ உகக்கும் குடையும் செருப்பும் குழலும் தருவிக்க கொல்லாதே போனாய் மாலே !
கடிய வெம் கான் இடை கன்றின் பின் போன சிறு குட்ட செம் கமலா அடியும் வெதும்பி உன் கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீ எம்பிரான்! 3-3-4-
சென்னி யோங்கு தண் திரு வேம்கடம் உடையாய்! உலகு தன்னை வாழ நின்ற நம்பி !தாமோதரா !சதிரா !– 5-4-1–

ஸ்ரீ ஆண்டாள்-
கோவிந்தன் என்பதோர் பேர் எழுதி வித்தகன் வேங்கட வாணன் என்னும் விளக்கினால் புகை வென்னை விதிக்கிற்றியே -1–3-
காட்டில் வேங்கடம் கண்ணபுர நகர் வாட்டமின்றி மகிழ்ந்துறை வாமனன் –4–2
குளிர் அருவி வேம்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி அளி யத்த மேகங்காள்! ஆவி காத்து இருப்பேனே 8-3-

ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார்-
புள்ளினை  வாய் பிளந்த புராணர் தம் இடம் பொங்கு நீர் செம் கயல் திளைக்கும் சுனை திரு வேம்கடம் அடை நெஞ்சமே–1-8-1
பேய் முலை பிள்ளையாய் உயிர் உண்ட எந்தை பிரான் அவன் பெருகும் இடம் வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன்
என்று எண்ணி நாள் தொறும் தெள்ளியார் வணங்கும் மலை திரு வேம்கடம் அடை நெஞ்சமே –1-8-2-
நின்ற மா மருது இற்று வீழ நடந்த நின்மலன் நேமியான் என்றும் வானவர் கை தொழும் இணை தாமரை அடி எம்பிரான்
கன்றி மாரி பொழிந்திட கடிதா நிரைக்கு இடர் நீக்குவான் சென்று குன்றம் எடுத்தவன் திரு வேம்கடம் அடை நெஞ்சமே-1-8-3-
உண்டாய் உறி மேல் நறு நெய் அமுதாக கொண்டாய் குறளாய் நிலம் ஈர் அடியாலே
விண் தோய் சிகரத் திருவேம்கடம் மேய அண்டா அடியேனுக்கு அருள் புரியாயே –1-10-4-
மானேய்  மட நோக்கி திறத்து எதிர் வந்த ஆன் எழ விடை செற்ற அணி வரைத் தோளா
தேனே! திரு வேம்கட மா மலை மேய கோனே! என் மனம் குடி கொண்டு இருந்தாயே 1-10-7-
வேம்கட மா மலை மேய ஆயன் அடி அல்லது மற்று அறியேனே 1-10-8-
அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டானை மின் திகழ் குடுமி வேம்கட மலை மேல்
மேவிய வேத நல் விளக்கை–4-3-8-
வாம் பரி யுக மன்னர் தம் உயர் செக ஐவர்கட்க்கு   அரசு அளித்த காம்பினார் திரு வேம்கட பொருப்ப! –5-3-4-
வேம்கடத்து அரியை பரி கீறியை வெண்ணெய் வுண்டு உரலின் இடை ஆப்புண்ட
தீம் கரும்பினை தேனை நன் பாலினை அன்றி என் மனம் சிந்தை செய்யாதே 7-3-5-
மன்றில் மலிந்து கூத்து வந்தாடி மால் விடை எழும் அடர்த்து ஆயர் அன்று நடுங்க ஆனிரை காத்த ஆண்மை கொலோ?அறியேன் நான்
நின்ற பிரானே! நீள் கடல் வண்ணா நீ இவள் தன்னை நின் கோயில் முன்றில் எழுந்த முருங்கையில் தேனா   முன் கை வளை கவர்ந்தாயே 10-9-2-
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும்   கடி பொழில் சூழ் கண புரத்து  என் கனியே என்றும்  
மன்றமர கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும் வட திரு வேம்கடம் மேய மைந்தா என்றும்
வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே என்றும்– துணை முலை மேல் துளி சோர சோர் கின்றாளே–திரு நெடும் தாண்டகத்தில்-16

———————————-

ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் இவன் – பாசுரங்களின் தொகுப்பு –

ஸ்ரீ பொய்கையார்-
வேம்கடமே மேல் ஒரு நாள் மான் மாய வெய்தான் வரை—82-

ஸ்ரீ பூதத் ஆழ்வார்-
சென்றது இலங்கை மேல் செவ்வி தான் சீற்றத்தால் கொன்றது ராவணனை கூறும் கால் நின்றதுவும் வேய் ஓங்கு தண் சாரல் வேம்கடமே–25

ஸ்ரீ திரு மழிசைப் பிரான் —
உடைந்த வாலி தன் தனக்கு உதவ வந்து ராமனாய் மிடைந்த வேழ்  மரங்களும் அடங்க வெய்து வேம்கடம்-திருச்சந்த -81–

ஸ்ரீ நம் ஆழ்வார்-
எந்தாய் தண்  திரு வேம்கடத்துள் நின்றாய் இலங்கை செற்றாய் மரா மரம் பைம் தாள் எழ உருவ ஒரு வாளி கோத்த வில்லா
கொந்தார் தண் அம் துழா யினாய்  அமுதே உன்னை என் உள்ளே குழைத்த எம் மைந்தா வானேறே இனி எங்கு போகின்றதே 2-6-9-
ஆவா  என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாழ் நாள் மேல் தீ வாய் வாளி மழை பொழிந்த சிலையா திரு மா மகள் கேள்வா
தேவா சுரர்கள் முனிக் கணங்கள் விரும்பும் திரு வேம்கடத்தானே பூவார் கழல்கள் அரு வினையேன் பொருந்துமாறு புணராயே–6-10-4-
புணரா நின்ற மரம் எழ அன்று எய்த ஒரு வில் வலவாவோ புணரேய்  நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வாவோ
திணரார்  மேகம் என களிறு சேரும் திருவேம்கடத்தானே திணரார் சார்ங்கம் உன பாதம் சேர்வது அடியேன் என்னாளே 6-10-5-

ஸ்ரீ பெரியாழ்வார்-
தென் இலங்கை மன்னன் சிரம் தோள் துணி செய்து மின் இலங்கு பூண் விபீடண நம்பிக்கு
என் இலங்கு நாமத் தளவும் அரசென்ற மின் அலங்காறர்க்கு ஓர் கோல் கொண்டு வா
வேம்கட வாணர்க்கு ஓர் கோல் கொண்டு வா — 2-6-9-

ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார்-
கண்ணார் கடல் சூழ் இலங்கைக்கு இறைவன் தன் திண்ணாகம் பிளக்க சரம் செல உய்த்தாய்!
விண்ணோர் தொழும் வேம்கட மா மலை மேய அண்ணா! அடியேன் இடரை களையாயே  1-10-1-
இலங்கைப் பதிக்கு அன்று இறையாய அரக்கர் குலம் கெட்டு அவர் மாளக் கொடி புள் திரித்தாய்!
விலங்கல் குடுமித் திரு வேம்கடம் மேய அலங்கல் துலாபா முடியாய்! அருளாயே 1-10-2-
வேம்கடத்து அறவன் ஆயற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே 2-1-2-
வேம்கடம் மேவி நின்று அருள் அம் கண் ஆயற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே 2-1-5-
வேம்கடமலை கோவில் மேவிய ஆயர் நாயகற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே  2-1-8-
வேம்கடத்து ஆடு கூத்தனுக்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே 2-1-9-

———————————

ஸ்ரீ உலகு அளந்த உத்தமனே இவன் -பாசுரங்களின் தொகுப்பு

ஸ்ரீ பொய்கையார்-
வழி நின்று நின்னை தொழுவார் வழுவா மொழி நின்ற மூர்தியரே யாவர் பழுது ஒன்றும்
வாராத வண்ணம் விண் கொடுக்கும் மண்ணளந்த சீரான் திரு வேங்கடமே–76-

ஸ்ரீ பூதத் ஆழ்வார்-
வேம்கடத்தான் மா கடலான் மற்றும் நினைப்பரிய நீள் அரங்கத்துள்ளான் எனை பலரும்
தேவாதி தேவன் எனப் படுவான் முன் ஒரு நாள் மாவாய் பிளந்த மகன்-28-

ஸ்ரீ பேய் ஆழ்வார்-
உளன் கண்டாய் நல் நெஞ்சே! உத்தமன் என்றும் உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
விண்ணோடு ஓங்கக் கொடு உயரும் வீம் கருவி வேம்கடத்தான் மண்ணோடு ஓங்க தான் அளந்தமன்-40–

ஸ்ரீ நம் ஆழ்வார்
குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவன் அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்
சென்று சேர் திரு வேம்கட மா மலை ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே–3-3-8-
தாள் பரப்பி மண் தாவிய ஈசனை நீள் பொழில் குருகூர்  சடகோபன் சொல்
கேழில் ஆயிரத்து இப் பத்தும் வல்லவர் வாழ்வார் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே 3-3-11
என்னாளே நாம் மண் அளந்த இணை தாமரைகள் காண்பதற்கு என்று எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனம் இனமாய்
மெய் நா மனத்தால் வழிபாடு செய்யும் திருவேம்கடத்தானே மெய் நான் எய்தி என்னாள் உன் அடிக் கண் அடியேன் மேவுவதே 6-10-6

ஸ்ரீ பெரியாழ்வார்
என் இது மாயம் என் அப்பன் அறிந்திலன் முன்னைய வண்ணமே கொண்டு அளவாய் என்ன
மன்னு நமுசியை வானில் சுழற்றிய மின்னு முடியானே ! அச்சோ அச்சோ! வேம்கட வாணனே அச்சோ அச்சோ  ! 1-8-9-

ஸ்ரீ ஆண்டாள்-
மாவலியை நிலம் கொண்டான் வேம்கடத்தே நிரந்து ஏறி பொழி வீர்காள் உலன்குண்ட விளம் கனி போல் உள் மெலிய 
புகுந்து என்னை நலம் கொண்ட நாரணற்கு என் நடலை நோய் செப்புமினே 8-6

ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார்-
வண் கையான் அவுணர்க்கு நாயகன் வேள்வியில் சென்று மாணியாய் மண் கையால் இரந்தான் மராமரம் ஏழும் எய்த வலத்தினான்
எண் கையான் இமயத்து உள்ளான் இரும் சோலை மேவிய எம்பிரான் திண் கைம்மா துயர் தீர்த்தவன் திரு வேம்கடம் அடை நெஞ்சமே – 1-8-5-
குறளாய் நிலம் ஈர் அடியாலே விண் தோய் சிகரத் திருவேம்கடம் மேய அண்டா அடியேனுக்கு அருள் புரியாயே –1-10-4-
வேம்கடம் மேவி மாண் குறளான அந்தணர்க்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே—2-1-1-
வட மலையை வரி வண்டார் கொந்து அணைந்த பொழில் கோவல் உலகு அளப்பான் அடி நிமிர்ந்த
அந்தணனை யான் கண்டது அணி நீர் தென் அரங்கத்தே 5-6-7-
மான் கொண்ட தோல் மார்வின் மாணியாய் மாவலி மண் தாள் கொண்டு தாளால் அளந்த பெருமானை
தேன் கொண்ட சாரல் திரு வேம்கடத்தானை நான் சென்று நாடி நறை யூரில் கண்டேனே 6-8-1-

————————————————–

இவனே ஸ்ரீ வராஹன் –

ஸ்ரீ பேய் ஆழ்வார்-
வேம்கடமே மேல் ஒரு நாள் மண் கோட்டு கொண்டான் மலை–45-

ஸ்ரீ திரு மழிசைப் பிரான் –
குன்றில் நின்று வான் இருந்து நீள் கடல் கிடந்து மண் ஓன்று சென்று அது  ஒன்றை உண்டு அது ஓன்று இடந்து பன்றியாய்–திருச்சந்த -48-

———————————–

இவனே ஸ்ரீ நரஸிம்ஹன்-

ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார்-
வண் கையான் அவுணர்க்கு நாயகன் வேள்வியில் சென்று மாணியாய் மண் கையால் இரந்தான் மராமரம் ஏழும் எய்த வலத்தினான்
எண் கையான் இமயத்து உள்ளான் இரும் சோலை மேவிய எம்பிரான் திண் கைம்மா துயர் தீர்த்தவன் திரு வேம்கடம் அடை நெஞ்சமே – 1-8-5-
தூணாய் அதனூடு அரியாய் வந்து தோன்றி பேணா அவுணன் உடலம் பிளந்திட்டாய்!
சேணார் திரு வேம்கட மா மலை மேய கோணா கணையாய்! குறிக் கொள் எனை நீயே–1-10-5-
வேம்கடத்து அரியை பரி கீறியை வெண்ணெய் வுண்டு உரலின் இடை ஆப்புண்ட
தீம் கரும்பினை தேனை நன் பாலினை அன்றி என் மனம் சிந்தை செய்யாதே 7-3-5-

———————————

இவனே ஸ்ரீ ஆலிலை பாலகன் –

ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார்-
எண் திசைகளும் எழ உலகமும் வாங்கி பொன் வயிற்றில் பெய்து பண்டு ஓர் ஆல் இல்லை பள்ளி கொண்டவன் பால் மதிக்கு இடர் தீர்த்தவன்
ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன் ஒள எயற்றோடு திண் திறல் அரியாயவன் திரு வேம்கடம் அடை நெஞ்சமே -1-8-6
நீரார் கடலும் நிலனும் முழுது உண்டு ஏராலம் இளம் தளிர் மேல் துயில் எந்தாய்!
சீரார் திரு வேம்கட மா மலை மேய ஆரா அமுதே!அடியேற்கு அருளாயே 1-10-3-

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை – 2-1-வானவர் தங்கள் சிந்தை போல என்னெஞ்சமே யினிதுவந்து-

March 15, 2015

அவதாரிகை –
பகவத் விஷயத்தை அனுபவித்துக் கொண்டு போகச் செய்தே ஆனந்தம் தலை மண்டிக் கொண்டு
இப்படிப்பட்ட அனுபவம் எல்லாருக்கும் இல்லையே இருக்க –
நமக்கு மாதரம் கிடைக்க வேண்டிய காரணம் யாது -என்று ஆராய்ந்து –
மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷயோ-என்றபடி
பேற்றுக்கும் இழவுக்கும் நெஞ்சு தான் முதலடி என்று துணிந்து
இப்படிப் பட்ட நெஞ்சானது தீய விஷயங்களில் செல்லாது
ஸ்வரூப ப்ராப்தமான பகவத் விஷயத்தில் சென்று சேர்ந்ததே என்று உவந்து
அந்த நெஞ்சைக் கொண்டாடுதல் நம் ஆழ்வார்கட்கு உள்ளது ஓன்று –

நம் ஆழ்வாரும் திருவாய் மொழியிலே –
நெஞ்சமே நல்லை நல்லை -உன்னைப் பெற்றால் என் செய்யோம் -இனி என்ன குறைவினம் -என்றும்
ஊனில் வாழ் உயிரே-நல்லை போ உன்னைப் பெற்று -வானுளார் பெருமான் மதிசூதன் என்னம்மான்
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம் தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே –
என்று அடிக்கடி நெஞ்சைக் கொண்டாடுவர் –
அப்படியே இவ்வாழ்வார் தாமும் இத் திரு மொழியில் ஒவ்வொரு பாட்டிலும் தமது திரு உள்ளத்தை விளித்து
திருவேங்கடமுடையானுக்கு அடிமைத் தொழில் பூண்டாயே-என்று சொல்லி உகக்கிறார்-

நாயேன் வந்தடைந்தேன் நல்கி யாள் என்னைக் கொண்டருளே -என்றும்
இனி நான் உன்னை என்றும் விடேனே -என்றும் பகவத் விஷயத்தில் நான் ஈடுப்படும்படியாக
அவன் திறத்து அடிமைத் தொழில் பூண்டது நீ  அன்றோ நெஞ்சமே -என்று
ஒருகால் சொன்னது போல் ஒன்பதின் கால் சொல்லி நெஞ்சைப் புகழ்கின்றார் –
தம்மில் காட்டில் நெஞ்சை வேறுபடுத்திச் சொல்லுவது கவி மரபு -நெஞ்சைத் தூது விடுவதாகவும் சொல்லுவார்கள் இறே
நல்ல விஷயங்களைச் சொல்லிக் கொண்டு போது போக்குவதற்கு இவ்விருள் தரும் மா ஞாலத்தில் வேறு யாரும் உடன்படாமல்
உண்டியே உடையே உகந்து ஓடுகிறவர்களாய்  இருப்பதால் உசாத் துணையாவது நெஞ்சைத் தவிர
வேறு இல்லாமையாலே அந்த நெஞ்சை நோக்கித் தானே வார்த்தை சொல்ல வேண்டும்
யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் -என்று நம் ஆழ்வாரும் அருளிச் செய்தார்
ஆகையாலே நெஞ்சை விளித்து வார்த்தை சொல்லுவது எனபது பக்தர்களுக்கு ஒரு நல் போது போக்காக அமைந்ததாம்
நெஞ்சு பிரிந்து போயிற்றதாகச் சொல்லுவதும் இப்படியே
ஆக -இத் திருமொழியால் தமது நெஞ்சைப் புகழ்ந்து பேசும் முகத்தால் திரு வேங்கடமுடையானை அனுபவித்து இனியராகிறார் –

————————————————

வானவர் தங்கள் சிந்தை போல என்னெஞ்சமே யினிதுவந்து மாதவ
மானவர் தங்கள் சிந்தை அமர்ந்து உறைகின்ற வெந்தை
கான வரிடு கார்கில் புகை ஓங்கு வேங்கடம் மேவி மாண் குற
ளான வந்தணற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-1-

என் நெஞ்சமே -நீ வானவர் தங்கள் சிந்தை போலே திரு வேங்கடமுடையானுக்கு இன்று
அடிமைத் தொழில் பூண்டாயே-என்று உகந்து பேசுகிறார் –
இவ் விருள் தரும் மா ஞாலத்திலே பிறந்த என்னுடைய நெஞ்சாக நீ இருந்தும் இந்த மண்ணோருடைய நெஞ்சு
எப்படி துர் விஷயங்களையே சிந்தை செய்கிறதோ –
அப்படி நீ விஷயாந்தரங்களைச் சிந்தியாமல் ஒரு நாளும் சம்சார நாற்றமே கண்டு அறியாத நித்ய ஸூரிகளின் நெஞ்சு போலே
திரு வேங்கடமுடையான் திறத்திலே அடிமைத் தொழில் ஏற்றுக் கொண்டாயே –
உன்னுடைய பாக்யமே பாக்கியம் -என்றவாறு –

அந்த திருவேங்கடமுடையான் எப்படிப் பட்டவன் என்னில்-
மாதவமானவர் தங்கள் சிந்தை அமர்ந்து உறைகின்ற வெந்தை-மிக்க அதிர்ஷ்ட சாலிகளான
மனிசர் யுண்டு -பொய்கையார் -பூதத்தார் -பேயார்-புகழ் மழிசை ஐயன் -அருள் மாறன்-சேரலர் கோன் -துய்ய பட்டநாதன் –
அன்பர் தாள் தூளி- நற் பாணன் –
அவர்கள் திரு உள்ளத்திலே பரம போக்யமாய்ப் பொருந்தி இருந்து நித்ய வாசம் பண்ணுமவன் –
அநந்ய பிரயோஜனரான பக்தர்களுடைய நெஞ்சை விட்டு பிரியமாட்டாத பெருமாள் -என்கை-

இன்னமும் எப்படிப் பட்டவன் என் என்னில் –
கான வரிடு கார்கில் புகை ஓங்கு வேங்கடம் மேவி -திருமலையில் உள்ள
வேடர் குறவர் முதலானோர் தாங்கள் சமையல் செய்து கொள்வதற்கு அகில் மரங்களை வெட்டி இட்டுத் தீயை யுண்டாக்குவார்கள் –
அதன் புகையானது திருமலை எங்கும் பரவி கம கம என்று பரிமளித்துக் கொண்டு இருக்கும்
அப்படிப்பட்ட ஸூகந்தமான திருமலையிலே எழுந்து அருளி இருப்பவன் –
கானவர் இடு  காரகில் -என்ற இடத்து –
அதி பரி சயாத வஞ்ஜா சந்தத கம நாத நாதரோ பவதி -மலயே பில்ல புரந்த்ரீ சந்தன தருகாஷ்ட மிந்தனம் குருதே -என்ற
பண்டித ராஜனுடைய ஸூபாஷிதம் ஸ்மரிக்கத் தகும்
அதிக பரிசயம் செய்தால் அவமானம் யுண்டாகும் -அடிக்கடி வீட்டுக்குச் சென்றால் அலஷியம் யுண்டாகும் –
பொதிக மலையில் குறத்திகள் சந்தனக் கட்டைகளை சமையலுக்கு விறகாக உபயோகப் படுத்த காண்கிறோம் இறே
கானவரட்கு கார் அகில் எளிய சரக்காய் இருப்பதால் அவர்கள் அவற்றை இட்டுச் சமைப்பார்கள் –
அவர்கள் ஸ்வ அர்த்தமாக செய்து கொண்ட அக்காரியமும் பரார்த்தமாகித்
திருமலையிலே பரிமளிதமாகி செய்கின்றது என்கிறார் ஆயிற்று
நாற்றத் துழாய் முடி நாராயணனுக்கும் நறு நாற்றமூட்டுகிற படி-

மேவி -இது வினை எச்சம் அன்று -மேவியவன் என்னும் பொருள்தான பெயர்ச் சொல் –
இ -பெயர் விகுதி -நாடோடி -பிறை சூடி -குதிரை யோட்டி போலே –
மாண் குறளான அந்தணர்க்கு -தன்னுடையதான பூமியைப் பெறுதற்கு தான் யாசகனாய் வந்து நின்ற பெருமானுடைய குறை தீர –
நெஞ்சமே நீ அவனுடைய வஸ்துவாக அமையப் பெற்றாயே
வாமன பிராமணனாக வந்ததால் அந்தணர்க்கு-எனப்பட்டது
அன்றியே -அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான் -திருக் குறள் -30-
அழகிய தண்மை யுடையவன் -மகா தர்மிஷ்டன் –
முதல் அடியில் இனிது  வந்து  -இனிது உவந்து -என்றும் பிரிக்கலாம் –
வானவர்கள் தம் சிந்தையில் உறைவது போலே மாதவமானார் தங்களுடைய சிந்தையிலும்
அமர்ந்து உறைகின்றான் -என்றும் பொருள் சொல்லலாம் ஆயினும் –
என் நெஞ்சே நீ வானவர் தங்கள் சிந்தை போலே திரு வேங்கடமுடையானுக்கு அடிமைத் தொழில் பூண்டாயே -என்று
அன்வயித்து பொருள் கொள்ளுதல் சிறக்கும் –
இனிது உவந்து -என்பதை இரண்டாம்   அடியிலோ  ஈற்று அடியிலோ  அன்வயித்து கொள்ளலாம் –

மாதவமானவர் தங்கள் சிந்தை யிலே இனிது  வந்து  அமர்ந்து உறைகின்ற வெந்தை-என்றும்
இனிது வந்து அடிமைத் தொழில் பூண்டாயே -என்றும் அன்வயிக்கலாம்
மானவர் -மனுஷ்யர்
மாண் குறளாய-பாடம் எதுகைக்குச் சேராது -பிராசீன பாடமும் அன்று  –

————————————————————-

உறவு சுற்றம் என்று ஓன்று இலா ஒருவன் உகந்தவர் தம்மை
மண் மிசைப் பிறவியே கெடுப்பான் அது கண்டு என்நெஞ்சம் என்பாய்
குறவர் மாதர்களோடு வண்டு குறிஞ்சி மருள் இசை பாடும் வேங்கடத்து
அறவனாயாக்ற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-2-

நெஞ்கமே -திருமலை அப்பனுடைய திருக் குணங்களின் வாசி அறிந்து நீ அவன் திரத்திலே அடிமைத் தொழில் பூண்டாயே –
நாம் பந்துக்கள் என்றும் தாயாதிகள் என்றும் சில ஆபாச பந்துக்களைக் கற்பித்துக் கொண்டு அவர்களுக்கு நன்மை செய்வதும்
சிலர் சத்ருக்கள் என்று கொண்டு அவர்கட்கு தீமை செய்வதுமாக இருக்கின்றோமே –
இப்படி அல்ல எம்பெருமானுடைய ஸ்வ பாவம் –
அவன் எப்படிப் பட்டவன் என்றால் -உறவு சுற்றம் என்று ஓன்று இலா ஒருவன் –
ஸூஹ்ருதம் சர்வ பூதா நாம் –தேவா நாம் தான வாநஞ்ச சாமான்ய மதி தைவதம் -என்று
எல்லார் திறத்திலும் வாசி அற்ற அன்புடையவனாகச் சொல்லப் படுபவன் –
இன்னமும் எப்படிப் பட்டவன் -என்றால்  -உகந்தவர் தம்மை மண் மிசைப் பிறவியே கெடுப்பான் -தன்னை யார் உகக்கின்றார்களோ
அவர்களை சம்சாரத்தில் நின்றும் களைந்து எடுத்து நித்ய ஸூரிகள் உடைய திரளிலே நிறுத்துமவன்-
அது கண்டு அடிமைத் தொழில் பூண்டாயே -என்று அன்வயம்
இப்படிப் பட்ட எம்பெருமானுடைய ஸ்வ பாவத்தைக் கண்டறிந்து –
அவனுக்கு அடிமை செய்கையே புருஷார்த்தம் -என்று கொண்டாயே -என்கை –

உகந்தவர் தம்மை -என்கிறதுக்கு -தன்னிடத்தில் எவர் ப்ரீதி பண்ணுகிறார்களோ அவர்களை -என்றும் –
எம்பெருமான் தான் எவர்கள்  இடத்தில் ப்ரீதி வைக்கிறானோ அவர்களை -என்றும் கொள்ளலாம் –
அவனுக்கு பஷபாதித்வம் வந்திடும் என்று நினைக்க வேண்டா
ப்ரியதம ஏவஹி வரணீயோ பவதி -என்று ஸ்ரீ பாஷ்யத்தில் அருளிச் செய்தபடி -தன் பக்கல் அன்பு  செய்வாரையே தான் உகப்பான் –
என்னுடைய நெஞ்சம் என்று கௌரவ வார்த்தை
குறத்திகளும் வண்டுகளும் குறிஞ்சி முதலிய பண்களை பாடும் திருமலை
குறிஞ்சி என்றும் மருள் என்றும் பண்களின் பெயர்
அன்றிக்கே மருள் -அடை மொழியாக்கி -மதி மயக்கம் பண்ணும் குறிஞ்சி என்ற பண் என்னவுமாம்-

அறவன் –
தண்ணீர் பந்தலை வைத்து நம் அடிமை பெறுகைக்கு
தம்மை நமக்குத் தந்து கொடு நிற்கிற பரம தார்மிகன் -பெரிய வாச்சான் பிள்ளை –

———————————————————

இண்டை யாயின கொண்டு தொண்டர்கள் ஏத்துவார் உறவோடும் வானிடைக்
கொண்டு போயிடவும் அது கண்டு என்னெஞ்சம் என்பாய்
வண்டு வாழ் வட வேங்கடமலை கோயில் கொண்டு அதனோடும் மீமிசை
அண்டம் ஆண்டு இருப்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-3-

எண் திசையும் உள்ள பூக்கொண்டு ஏந்தி உகந்து உகந்து தொண்டரோங்கள் பாடியாட -என்றபடி
அப்படிப் பட்ட தொண்டர்களையும் அவர்கள் சம்பந்தம் உடையார்களையும் பரம பதத்தில் கொண்டு சேர்கிற
மகா குணம் கண்டு அடிமை பூண்டாய்-

இண்டை கொண்டு -என்னாமல்-இண்டை யாயின கொண்டு -என்றது
சுத்த பாவத்துடன் கொள்ளும் ஏதாவது புஷ்பம் என்றபடி
செண்பக மல்லிகை யோடு செங்கழுநீர் இருவாட்சி என்பன வேண்டாம் –
பூ மாலை என்று பேர் பெற்றவற்றைக்  கொண்டு -பெரிய வாச்சான் பிள்ளை
பரிவதில் ஈசனைப் பாடி விரிவது மேவலுறுவீர் பிரிவகை இன்றி  நன்னீர் தூய  புரிவதுவும் புகை பூவே  -திருவாய் -1-6-1-
அகில் புகையோ கருமுகைப்  பூ  வேண்டாம் -ஏதேனும் ஒரு புகையும் ஏதேனும் ஒரு பூவும் அமையும்
செதுகை இட்டு புகைக்கலாம் -கண்டகாலிப் பூவும் சூட்டலாம்  -பட்டர்

ந கண்டகாரிகா புஷ்பம் தேவாய வி நிவேதயேத்-
கையில் முள் பாயுமே என்பதால் சாஸ்திரம் -தயையால் -நிஷேதித்தது  –
அத்யந்த பக்தி யுக்தாநாம் ந சாஸ்திரம் நைவ ச க்ரமம்-பக்தி எல்லை கடந்தால் நூல் வரம்பில்லை –

ஜீவித காலத்திலும் பின்பும் சம்பந்தி சம்பந்திகளுக்கும் புருஷார்த்த சித்தி யுண்டு
வண்டுகள் வாழும் சோலை வாய்ப்பு கொண்ட திரு வேங்கட மலையையும் பரமபதத்தையும் ஆண்டு வரும்
உபய விபூதி நிர்வாஹகனுக்கு அடிமைத் தொழில் பூண்டாய்

———————————————————

பாவியாது செய்தாய் என்னெஞ்சமே பண்டு தொண்டு செய்தாரை மண் மிசை
மேவி யாட் கொண்டு போய் விசும்பேற வைக்கும் எந்தை
கோவி நாயகன் கொண்ட லுந்துயர் வேங்கட மலை யாண்டு வானவர்
ஆவியாய் இருப்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-4-

பாவியாது -அலை பாயாமல் திண்ணிய அத்யவசாயம் கொண்டாய் -பாவிதல் -ஆராய்தல் –
திருவவதரித்து இங்கே அடிமை கொண்டு -அவ்வளவில் திருப்தி பெறாமல் -பரம பதத்தில் கொண்டு போய் அருளி
மேலும் கைங்கர்யம் கொள்பவன் -கோபால கிருஷ்ணன்
கோவி நாயகன் -கோபிகளுக்கு நாதன்
அவனே திருவேங்கடமுடையான் –
கொண்டல் உந்து உயர் வேங்கட மலை -மேகங்களை சென்று தள்ளும்படி அவ்வளவும் வளர்ந்த சிகரங்களை யுடைய திருவேங்கடம் –
வானவர் ஆவியாய் இருப்பார் -வானவர் -ஞானி என்று கொண்டு -ஜ்ஞாநீத்வாத் மைவ மே மதம் -என்றவாறே –

—————————————————————–

பொங்கு போதியும் பிண்டியும் உடைப் புத்தர் நோன்பியர் பள்ளியுள் ளுறை
தங்கள் தேவரும் தாங்களுமேயாக என்னெஞ்சம் என்பாய்
எங்கும் வானவர் தானவர் நிறைந்து ஏத்தும் வேங்கடம் மேவி நின்றருள்
அங்கணாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-5-

போதி -அரச மரம் -புத்தர்கள் தேவதை இருப்பிடம் -கிளையும் கப்புமாக வளர்ந்ததால் பொங்கு போதி
பிண்டி -அசோக மரம் -ஜைனர்கள் தேவதை இருப்பிடம் -நோன்பியர் -அமணர்
வானவர் தானவர் நிறைந்து ஏத்தும் -தானவர் அசுரர்கள் என்றும் ஸ்தானவர்-இவ்விலகத்தார் என்றும்
அங்கண்-புண்டரீகாஷன் என்றபடி –

——————————————————–

துவரி யாடையர் மட்டையர் சமண் தொண்டர்கள் நந்தி யுண்டு பின்னரும்
தமரும் தாங்களுமே தடிக்க என்னெஞ்சம் என்பாய்
கவரி மாக் கணம் சேரும் வேங்கடம் கோயில் கொண்ட கண்ணார் விசும்பிடை
அமர நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-6-

துவரியாடை -காஷாயம்
மட்டையர் -மொட்டைத் தலையர் -தலையில் பூச்சி வந்து ஜீவா ஹிம்சை யாகக் கூடாது என்பதால்
மேல் விழுந்து சோறுகளை தின்று பெரும் கூட்டமாக இருந்து -உண்டியே உகந்து ஊன் மல்கி மோடு பருத்து
இப்படி இன்றி திருவேங்கடமுடையானுக்கு அடிமை பூண்டு வாழப் பெற்றாயே-

கண்ணார் விசும்பிடை அமரர் -விசாலமான பரம பதத்தில் நித்ய சூரிகளுக்கு தலைவன்
கவரி மான்கள் கூட்டமாகச் சேர்ந்து இருக்கிற திருமலை-வேங்கடம் கோயில் கொண்ட அமரர் நாயகனுக்கு அடிமை பூண்டாயே-

————————————————————–

தருக்கினால் சமண் செய்து சோறு தண் தயிரினால் திரளை மிடற்றிடை
நெருக்குவாரலக்கண் அது கண்டு என்னெஞ்சம் என்பாய்
மருட்கள் வண்டுகள் பாடும் வேங்கடம் கோயில் கொண்டதனோடும் வானிடை
அருக்கன் மேவி நிற்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-7-

தருக்கு -யுக்திவாதம் -சாஸ்த்ரங்களுக்கு இணங்காத உக்தி வாதங்களால் மத ஸ்தாபனம்  செய்வர்
தருக்கினால் சமண்  செய்பவர்
பெரும் சோறு உண்ணுவர் -வேகு சோறு உண்ணுவர்
அலக்கண் -துன்பம்
வானிடை அருக்கன் மேவி நிற்பார்க்கு -வைதிகர்கள் வணங்கும்படி சூர்ய மண்டலத்தில் எழுந்து அருளி இருப்பவன் –
த்யேயஸ் சதா சவித்ரு மண்டல மத்ய வர்த்தீ -முப்போதும் அனுசந்திக்கிறோம் இறே-

———————————————————

சேயன் அணியன் சிறியன் பெரியன் என்பதும் சிலர் பேசக் கேட்டிருந்தே
என்னெஞ்சம் என்பாய் எனக்கு ஓன்று சொல்லாதே
வேய்கள் நின்று வெண் முத்தமே சொரி வேங்கட மலை கோயில் மேவிய
ஆயர் நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே–2-1-8-

சேயன் அணியன் சிறியன் பெரியன் -சம்சாரிகள் வார்த்தை
பர வாசுதேவன் -எட்டா நிலத்தில் இருப்பவன் -தூரஸ்தன் -என்றும்
அர்ச்சாவதாரன் சமீபம் -அலஷ்யம் தோற்ற பேசுவர்
ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணாதி அவதார சௌலப்யம் அறியாமல்
வியூஹ அந்தர்யாமியும் நெஞ்சுக்கு எட்டாதவன் -எப்படி உபாசிப்பது
என்று எல்லாம் பேசுவர்
இப்படி அவன் குணங்களை எல்லாம் இகழ்ந்து பேசுவர்
மத யானை கும்ப ஸ்தலத்திலும் மூங்கில்களிலும் முத்துக்கள் உண்டாகுமே -வேய்கள் நின்று வெண்  முத்தமே சொரி வேங்கடம்
வெண் தரளங்கள் வேய் விண்டுதிர் வேங்கட மா மலை என்றார் கீழ் திரு மொழியிலும்
அந்த முத்துக்கள் ஒளி வழி காட்ட அப்பன் இங்கே வந்து புகுந்தான்
ஆயர் நாயகன் -கிருஷ்ணனே திருவேங்கடமுடையான் –

——————————————————

கூடி யாடி யுரைத்ததே யுரைத்தாய் என்னெஞ்சம் என்பாய் துணிந்து கேள்
பாடி யாடிப் பலரும் பணிந்து ஏத்திக் காணகிலா
ஆடு தாமரை யோனும் ஈசனும் அமரர் கோனும் நின்றேதும் வேங்கடத்து
ஆடு கூத்தனுக்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே—2-1-9-

கூடியாடி உரைத்ததையே யுரைத்தாய் -தனது நெஞ்சின் பூர்வ அவஸ்தையை சொன்னபடி –
நேற்று வரை எப்படிபோது போக்கித் திரிந்தாய்  இன்று எப்படி ஆனாய் -ஆச்சர்யம் தோன்ற அருளிச் செய்கிறார் –

பக்திக்கு போக்கு வீடாக பாடியும் ஆடியும் -பலரும் பணிந்து ஏத்தி அவ்வளவிலும் காண முடியாதவனை –
பிரமன் சிவன் இந்த்ரன் போன்றார் மேவித் தொழும் திருவேங்கடமுடையான் திறத்திலே அடிமை பூண்டாயே-

காணகிலா -காணகிலார் -பாட பேதம்
காணகிலா -திருவேங்கடமுடையானுக்கும் -ப்ரஹ்மாதிகளுக்கும் விசேஷணம்
ஆடு தாமரையோன் -வெற்றியை யுடைய ப்ரஹ்மன்-உலகைப் படைக்க வல்ல சமர்த்தன் –
வேங்கடத்து ஆடு கூத்தனுக்கு -ஸ்ரீ கிருஷ்ணனாய் திரு வவதரித்து ஆடின விடாய் தீர  திருமலையில் வந்து நிற்பவன்
பண்டு ஆடின சுவடு இந்த நிலைமையிலும் தோற்றா நிற்கும்
மன்றமர கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும் -வட திருவேங்கடம் மேய மைந்தா என்றும் -அனுசந்தான சேர்த்தி அழகு திரு நெடும் தாண்டகம் –

———————————————————————–

மின்னு மா முகில் மேவு தண் திரு வேங்கட மலை கோயில் மேவிய
அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை
கன்னி மா மதிள் மங்கையர் கலி கன்றி  இன் தமிழால் உரைத்த இம்
மன்னு பாடல் வல்லார்க்கு இடமாகும் வானுலகே—2-1-10-

மின்னு மா முகில் மேவு
பெருமாளும் பிராட்டியும் கூடி வாழும் வாழ்ச்சியை சூசிப்பிக்கிறது
மதுகைடபர்களை அழித்து அன்னமாய் -ஹம்ச ரூபியாய் -ப்ரஹ்மனுக்கு உபதேசித்து அருளினவனான
திரு வேங்கடமுடையான் விஷயமான
இப்பத்தையும் ஓத வல்லார் பரமபதத்தை இருப்பிடமாக கொள்ளப் பெறுவார்கள் –
கன்னி -அழிவு இல்லாமை

————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .