ஸ்ரீ திரு மலை மேல்-அருளிச் செயல்களில் 206 பாசுரங்கள்–
ஸ்ரீ பொய்கையார் -10..
ஸ்ரீ பூதத்தார் -. 11..
ஸ்ரீ பேயார்- 19..
ஸ்ரீ திருமழிசைப் பிரான் 16–
ஸ்ரீ நம்மாழ்வார் -48 –
ஸ்ரீ பெரியாழ்வார் -7–
ஸ்ரீ ஆண்டாள் -16—
ஸ்ரீ குலசேகரப் பெருமாள் – 11–
ஸ்ரீ திருப்பாணாழ்வார் 2–
ஸ்ரீ திருமங்கையாழ்வார் -66 –
76- 106-ஸ்ரீ ராமானுச நூற்று அந்தாதி –ஸ்ரீ அமுதனார் சாவித்திரி காயத்ரி மந்த்ரம் போல் இவை
ஆக மொத்தம் -206 பாசுரங்கள் –
—————————————-
ஸ்ரீ கண்ணபிரான் இவன் – பாசுரங்களின் தொகுப்பு –
ஸ்ரீ பொய்கையார்–
வெண் சங்கம் ஊதிய வாய் மால் உகந்த ஊர்–37-/
எடுத்தது குன்றம் கடந்தது கஞ்சனை முன் அஞ்ச கிடந்ததுவும் நீரோத மா கடலே நின்றதுவும் வேம்கடமே-39-
ஸ்ரீ பேய் ஆழ்வார்-
வேம்கடமும் பாம்பும் பனி விசும்பும் நூல் கடலும் நுண் னுலா தாமரை மேல் பால் பட்டு
இருந்தார் மனமும் இடமாக கொண்டான் குந்து ஒசித்த கோபாலகன்–32-
வேம்கடமே மேல் நாள் விளம் கனிக்கு கன்று எறிந்தான் வெற்பு –68-
வேம்கடமே மேல் நாள் குழ கன்று கொண்டு எறிந்தான் குன்று–71-
வேம்கடத்து மன்னும் –குடம் நயந்த கூத்தனாய் நின்றான் குரை கழலே கூறுவதே நாத் தன்னால் உள்ள நலம்–73
வேம்கடமே மேல் ஒரு நாள் தீம் குழல் வாய் வைத்தான் சிலம்பு–89-
ஸ்ரீ திரு மழிசைப் பிரான் —
வேம்கடமே தானவரை வீழ தன் ஆழி படை தொட்டு வானவரை காப்பான் மலை–நான்முகன்–48-
ஸ்ரீ நம் ஆழ்வார்-
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு தண்ணார் வேம்கட விண்ணோர் வெற்பனே 1-8-3-
தலை பெய் காலம் நமன் தமர் பாசம் விட்டால் அலை பூண் உண்ணும் அவ் அல்லல் எல்ல்லாம் அகல
கலை பல் ஞானத்து என் கண்ணனை கண்டு கொண்டு நிலை பெற்றேன் என் நெஞ்சம் பெற்றது நீடு உயிரே 3-2-10
குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவன் அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்
சென்று சேர் திரு வேம்கட மா மலை ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே–3-3-8-
ஓயும் மூப்பு பிறப்பு இறப்பு பிணி வீயுமாறு செய்வான் திரு வேம்கடத்து
ஆயன் நாள் மலராம் அடி தாமரை வாய் உள்ளும் மனத்து உள்ளும் வைப்பார்கட்கே 3-3-9-
புணரா நின்ற மரம் எழ அன்று எய்த ஒரு வில் வலவாவோ புணரேய் நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வாவோ
திணரார் மேகம் என களிறு சேரும் திருவேம்கடத்தானே திணரார் சார்ங்கம் உன பாதம் சேர்வது அடியேன் என்னாளே 6-10-5-
ஸ்ரீ பெரியாழ்வார்-
ஒ குன்று எடுத்தாய் ! குடமாடு கூத்தா ! வேத பொருளே ! என் வேம்கடவா ! வித்தகனே ! இங்கே போதராயே 2-9-6-
கடியார் பொழில் அணி வேம்கடவா ! கரும் போர் ஏறே ! நீ உகக்கும் குடையும் செருப்பும் குழலும் தருவிக்க கொல்லாதே போனாய் மாலே !
கடிய வெம் கான் இடை கன்றின் பின் போன சிறு குட்ட செம் கமலா அடியும் வெதும்பி உன் கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீ எம்பிரான்! 3-3-4-
சென்னி யோங்கு தண் திரு வேம்கடம் உடையாய்! உலகு தன்னை வாழ நின்ற நம்பி !தாமோதரா !சதிரா !– 5-4-1–
ஸ்ரீ ஆண்டாள்-
கோவிந்தன் என்பதோர் பேர் எழுதி வித்தகன் வேங்கட வாணன் என்னும் விளக்கினால் புகை வென்னை விதிக்கிற்றியே -1–3-
காட்டில் வேங்கடம் கண்ணபுர நகர் வாட்டமின்றி மகிழ்ந்துறை வாமனன் –4–2
குளிர் அருவி வேம்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி அளி யத்த மேகங்காள்! ஆவி காத்து இருப்பேனே 8-3-
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார்-
புள்ளினை வாய் பிளந்த புராணர் தம் இடம் பொங்கு நீர் செம் கயல் திளைக்கும் சுனை திரு வேம்கடம் அடை நெஞ்சமே–1-8-1
பேய் முலை பிள்ளையாய் உயிர் உண்ட எந்தை பிரான் அவன் பெருகும் இடம் வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன்
என்று எண்ணி நாள் தொறும் தெள்ளியார் வணங்கும் மலை திரு வேம்கடம் அடை நெஞ்சமே –1-8-2-
நின்ற மா மருது இற்று வீழ நடந்த நின்மலன் நேமியான் என்றும் வானவர் கை தொழும் இணை தாமரை அடி எம்பிரான்
கன்றி மாரி பொழிந்திட கடிதா நிரைக்கு இடர் நீக்குவான் சென்று குன்றம் எடுத்தவன் திரு வேம்கடம் அடை நெஞ்சமே-1-8-3-
உண்டாய் உறி மேல் நறு நெய் அமுதாக கொண்டாய் குறளாய் நிலம் ஈர் அடியாலே
விண் தோய் சிகரத் திருவேம்கடம் மேய அண்டா அடியேனுக்கு அருள் புரியாயே –1-10-4-
மானேய் மட நோக்கி திறத்து எதிர் வந்த ஆன் எழ விடை செற்ற அணி வரைத் தோளா
தேனே! திரு வேம்கட மா மலை மேய கோனே! என் மனம் குடி கொண்டு இருந்தாயே 1-10-7-
வேம்கட மா மலை மேய ஆயன் அடி அல்லது மற்று அறியேனே 1-10-8-
அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டானை மின் திகழ் குடுமி வேம்கட மலை மேல்
மேவிய வேத நல் விளக்கை–4-3-8-
வாம் பரி யுக மன்னர் தம் உயர் செக ஐவர்கட்க்கு அரசு அளித்த காம்பினார் திரு வேம்கட பொருப்ப! –5-3-4-
வேம்கடத்து அரியை பரி கீறியை வெண்ணெய் வுண்டு உரலின் இடை ஆப்புண்ட
தீம் கரும்பினை தேனை நன் பாலினை அன்றி என் மனம் சிந்தை செய்யாதே 7-3-5-
மன்றில் மலிந்து கூத்து வந்தாடி மால் விடை எழும் அடர்த்து ஆயர் அன்று நடுங்க ஆனிரை காத்த ஆண்மை கொலோ?அறியேன் நான்
நின்ற பிரானே! நீள் கடல் வண்ணா நீ இவள் தன்னை நின் கோயில் முன்றில் எழுந்த முருங்கையில் தேனா முன் கை வளை கவர்ந்தாயே 10-9-2-
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும் கடி பொழில் சூழ் கண புரத்து என் கனியே என்றும்
மன்றமர கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும் வட திரு வேம்கடம் மேய மைந்தா என்றும்
வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே என்றும்– துணை முலை மேல் துளி சோர சோர் கின்றாளே–திரு நெடும் தாண்டகத்தில்-16
———————————-
ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் இவன் – பாசுரங்களின் தொகுப்பு –
ஸ்ரீ பொய்கையார்-
வேம்கடமே மேல் ஒரு நாள் மான் மாய வெய்தான் வரை—82-
ஸ்ரீ பூதத் ஆழ்வார்-
சென்றது இலங்கை மேல் செவ்வி தான் சீற்றத்தால் கொன்றது ராவணனை கூறும் கால் நின்றதுவும் வேய் ஓங்கு தண் சாரல் வேம்கடமே–25
ஸ்ரீ திரு மழிசைப் பிரான் —
உடைந்த வாலி தன் தனக்கு உதவ வந்து ராமனாய் மிடைந்த வேழ் மரங்களும் அடங்க வெய்து வேம்கடம்-திருச்சந்த -81–
ஸ்ரீ நம் ஆழ்வார்-
எந்தாய் தண் திரு வேம்கடத்துள் நின்றாய் இலங்கை செற்றாய் மரா மரம் பைம் தாள் எழ உருவ ஒரு வாளி கோத்த வில்லா
கொந்தார் தண் அம் துழா யினாய் அமுதே உன்னை என் உள்ளே குழைத்த எம் மைந்தா வானேறே இனி எங்கு போகின்றதே 2-6-9-
ஆவா என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாழ் நாள் மேல் தீ வாய் வாளி மழை பொழிந்த சிலையா திரு மா மகள் கேள்வா
தேவா சுரர்கள் முனிக் கணங்கள் விரும்பும் திரு வேம்கடத்தானே பூவார் கழல்கள் அரு வினையேன் பொருந்துமாறு புணராயே–6-10-4-
புணரா நின்ற மரம் எழ அன்று எய்த ஒரு வில் வலவாவோ புணரேய் நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வாவோ
திணரார் மேகம் என களிறு சேரும் திருவேம்கடத்தானே திணரார் சார்ங்கம் உன பாதம் சேர்வது அடியேன் என்னாளே 6-10-5-
ஸ்ரீ பெரியாழ்வார்-
தென் இலங்கை மன்னன் சிரம் தோள் துணி செய்து மின் இலங்கு பூண் விபீடண நம்பிக்கு
என் இலங்கு நாமத் தளவும் அரசென்ற மின் அலங்காறர்க்கு ஓர் கோல் கொண்டு வா
வேம்கட வாணர்க்கு ஓர் கோல் கொண்டு வா — 2-6-9-
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார்-
கண்ணார் கடல் சூழ் இலங்கைக்கு இறைவன் தன் திண்ணாகம் பிளக்க சரம் செல உய்த்தாய்!
விண்ணோர் தொழும் வேம்கட மா மலை மேய அண்ணா! அடியேன் இடரை களையாயே 1-10-1-
இலங்கைப் பதிக்கு அன்று இறையாய அரக்கர் குலம் கெட்டு அவர் மாளக் கொடி புள் திரித்தாய்!
விலங்கல் குடுமித் திரு வேம்கடம் மேய அலங்கல் துலாபா முடியாய்! அருளாயே 1-10-2-
வேம்கடத்து அறவன் ஆயற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே 2-1-2-
வேம்கடம் மேவி நின்று அருள் அம் கண் ஆயற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே 2-1-5-
வேம்கடமலை கோவில் மேவிய ஆயர் நாயகற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே 2-1-8-
வேம்கடத்து ஆடு கூத்தனுக்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே 2-1-9-
———————————
ஸ்ரீ உலகு அளந்த உத்தமனே இவன் -பாசுரங்களின் தொகுப்பு
ஸ்ரீ பொய்கையார்-
வழி நின்று நின்னை தொழுவார் வழுவா மொழி நின்ற மூர்தியரே யாவர் பழுது ஒன்றும்
வாராத வண்ணம் விண் கொடுக்கும் மண்ணளந்த சீரான் திரு வேங்கடமே–76-
ஸ்ரீ பூதத் ஆழ்வார்-
வேம்கடத்தான் மா கடலான் மற்றும் நினைப்பரிய நீள் அரங்கத்துள்ளான் எனை பலரும்
தேவாதி தேவன் எனப் படுவான் முன் ஒரு நாள் மாவாய் பிளந்த மகன்-28-
ஸ்ரீ பேய் ஆழ்வார்-
உளன் கண்டாய் நல் நெஞ்சே! உத்தமன் என்றும் உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
விண்ணோடு ஓங்கக் கொடு உயரும் வீம் கருவி வேம்கடத்தான் மண்ணோடு ஓங்க தான் அளந்தமன்-40–
ஸ்ரீ நம் ஆழ்வார்
குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவன் அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்
சென்று சேர் திரு வேம்கட மா மலை ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே–3-3-8-
தாள் பரப்பி மண் தாவிய ஈசனை நீள் பொழில் குருகூர் சடகோபன் சொல்
கேழில் ஆயிரத்து இப் பத்தும் வல்லவர் வாழ்வார் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே 3-3-11
என்னாளே நாம் மண் அளந்த இணை தாமரைகள் காண்பதற்கு என்று எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனம் இனமாய்
மெய் நா மனத்தால் வழிபாடு செய்யும் திருவேம்கடத்தானே மெய் நான் எய்தி என்னாள் உன் அடிக் கண் அடியேன் மேவுவதே 6-10-6
ஸ்ரீ பெரியாழ்வார்
என் இது மாயம் என் அப்பன் அறிந்திலன் முன்னைய வண்ணமே கொண்டு அளவாய் என்ன
மன்னு நமுசியை வானில் சுழற்றிய மின்னு முடியானே ! அச்சோ அச்சோ! வேம்கட வாணனே அச்சோ அச்சோ ! 1-8-9-
ஸ்ரீ ஆண்டாள்-
மாவலியை நிலம் கொண்டான் வேம்கடத்தே நிரந்து ஏறி பொழி வீர்காள் உலன்குண்ட விளம் கனி போல் உள் மெலிய
புகுந்து என்னை நலம் கொண்ட நாரணற்கு என் நடலை நோய் செப்புமினே 8-6
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார்-
வண் கையான் அவுணர்க்கு நாயகன் வேள்வியில் சென்று மாணியாய் மண் கையால் இரந்தான் மராமரம் ஏழும் எய்த வலத்தினான்
எண் கையான் இமயத்து உள்ளான் இரும் சோலை மேவிய எம்பிரான் திண் கைம்மா துயர் தீர்த்தவன் திரு வேம்கடம் அடை நெஞ்சமே – 1-8-5-
குறளாய் நிலம் ஈர் அடியாலே விண் தோய் சிகரத் திருவேம்கடம் மேய அண்டா அடியேனுக்கு அருள் புரியாயே –1-10-4-
வேம்கடம் மேவி மாண் குறளான அந்தணர்க்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே—2-1-1-
வட மலையை வரி வண்டார் கொந்து அணைந்த பொழில் கோவல் உலகு அளப்பான் அடி நிமிர்ந்த
அந்தணனை யான் கண்டது அணி நீர் தென் அரங்கத்தே 5-6-7-
மான் கொண்ட தோல் மார்வின் மாணியாய் மாவலி மண் தாள் கொண்டு தாளால் அளந்த பெருமானை
தேன் கொண்ட சாரல் திரு வேம்கடத்தானை நான் சென்று நாடி நறை யூரில் கண்டேனே 6-8-1-
————————————————–
இவனே ஸ்ரீ வராஹன் –
ஸ்ரீ பேய் ஆழ்வார்-
வேம்கடமே மேல் ஒரு நாள் மண் கோட்டு கொண்டான் மலை–45-
ஸ்ரீ திரு மழிசைப் பிரான் –
குன்றில் நின்று வான் இருந்து நீள் கடல் கிடந்து மண் ஓன்று சென்று அது ஒன்றை உண்டு அது ஓன்று இடந்து பன்றியாய்–திருச்சந்த -48-
———————————–
இவனே ஸ்ரீ நரஸிம்ஹன்-
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார்-
வண் கையான் அவுணர்க்கு நாயகன் வேள்வியில் சென்று மாணியாய் மண் கையால் இரந்தான் மராமரம் ஏழும் எய்த வலத்தினான்
எண் கையான் இமயத்து உள்ளான் இரும் சோலை மேவிய எம்பிரான் திண் கைம்மா துயர் தீர்த்தவன் திரு வேம்கடம் அடை நெஞ்சமே – 1-8-5-
தூணாய் அதனூடு அரியாய் வந்து தோன்றி பேணா அவுணன் உடலம் பிளந்திட்டாய்!
சேணார் திரு வேம்கட மா மலை மேய கோணா கணையாய்! குறிக் கொள் எனை நீயே–1-10-5-
வேம்கடத்து அரியை பரி கீறியை வெண்ணெய் வுண்டு உரலின் இடை ஆப்புண்ட
தீம் கரும்பினை தேனை நன் பாலினை அன்றி என் மனம் சிந்தை செய்யாதே 7-3-5-
———————————
இவனே ஸ்ரீ ஆலிலை பாலகன் –
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார்-
எண் திசைகளும் எழ உலகமும் வாங்கி பொன் வயிற்றில் பெய்து பண்டு ஓர் ஆல் இல்லை பள்ளி கொண்டவன் பால் மதிக்கு இடர் தீர்த்தவன்
ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன் ஒள எயற்றோடு திண் திறல் அரியாயவன் திரு வேம்கடம் அடை நெஞ்சமே -1-8-6
நீரார் கடலும் நிலனும் முழுது உண்டு ஏராலம் இளம் தளிர் மேல் துயில் எந்தாய்!
சீரார் திரு வேம்கட மா மலை மேய ஆரா அமுதே!அடியேற்கு அருளாயே 1-10-3-
———————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply