Archive for the ‘தத்வ த்ரயம்’ Category

தத்வ த்ரயம் – அசித் பிரகரணம்-சூர்ணிகை –77-86-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —

August 1, 2014

சூர்ணிகை -77-

அவதாரிகை –
தத்வ த்ரயத்தில்
தத்வ த்ரயமாவது சித்தும் அசித்தும் ஈஸ்வரனும் -என்று உபதேசித்த க்ரமத்தில்
பிரதமம் சித் சப்த வாச்யனான ஆத்மாவினுடைய
ஸ்வரூப ஸ்வ பாவ விசேஷங்களை ஸ்புடமாக அருளிச் செய்தார் கீழ்

அநந்தரம்
அசித் வஸ்துவினுடைய ஸ்வரூப ஸ்வபாவ விசேஷங்களை அதி ஸ்புடமாக
அருளிச் செய்கிறார் —

அதில் பிரதமத்தில்
அசித் லஷணத்தை அருளிச் செய்கிறார் –

அசித்து
ஞான சூன்யமாய்
விகாராஸ்பதமாய்
இருக்கும் –

அதாவது –
அசித்தாகிறது -சைதன்ய அநாதாரமான வஸ்து இறே-
அது தன்னை அருளிச் செய்கிறார் -ஞான சூன்யமாய் -என்று –

அத்தைப் பற்றி இறே
ஸ்ருதி போக்ய சப்தத்தாலே அசித்தைச் சொல்லிற்று

விகாராஸ்பதம் ஆகையாவது –
விகாரத்துக்கு இருப்பிடமாய் இருக்கை
விகாரமாவது -அவஸ்த்தாந்தராபத்தி
அதாவது சித் ஸ்வரூபம் போலே சதைக ரூபமாய் இராது ஒழிகை-

————————————————————————————-

சூர்ணிகை -78-

இப்படி இதனுடைய லஷணத்தை அருளிச் செய்த
அநந்தரம் ‘
இவ் வசித்து தத்வம் தான்
சத்வ ஏகாதாரமாயும்
சத்வாதி குண த்ரய யாதாராமாயும்
சத்வாதி குண சூன்யமாயும்
மூன்று வகைப் பட்டு இருக்கும்படியை அருளிச் செய்கிறார் –

இது
சுத்த சத்வம்
என்றும்
மிஸ்ர சத்வம்
என்றும்
சத்வாதி சூன்யம்
என்றும்
த்ரிவிதமாய் இருக்கும் –

———————————————————-

சூர்ணிகை -79-

உத்தேசித்த க்ரமத்திலே அசித் தத்வத்தின்
ஸ்வரூப ஸ்வபாவ விசேஷங்களை பிரதிபாதிப்பதாக நினைத்து
பிரதமம் -சுத்த சத்வத்தின் படியை அருளிச் செய்கிறார் –

இதில் சுத்த சத்வமானது
ரஜஸ் தமஸ் ஸூக்கள் கலசாதே
கேவல சத்வமாய்
நித்தியமாய்
ஜ்ஞான ஆனந்த ஜனகமாய்
கர்மத்தால் அன்றிக்கே
கேவல பகவத் இச்சையாலே
விமான கோபுர மண்டப ப்ராஸாசாதி ரூபேண
பரிணமிக்கக் கடவதாய்
நிரவதிக தேஜோ ரூபமாய்
நித்ய முக்தராலும் ஈஸ்வரனாலும்
பரிச்சேதிக்க அரிதாய்
அதி அத்புதமாய்
இருப்பதொன்று –

அதாவது
சுத்த சத்வம் என்று
குணாந்தரம் கலசாத சத்வ குணத்தை யுடையது என்ற படி –
அத்தை அருளிச் செய்கிறார் –
ரஜஸ் தமஸ் ஸூக்கள் கலசாதே -கேவல சத்வமாய் -என்று

ஷயந் தமஸ்ய ராஜஸ பராகே -(ராஷசம் கலந்த இந்த லோகங்களைக் காட்டிலும் மேலே உள்ள பரமபதம் )என்றும்
தம ஸஸ்து பாரே (புருஷ ஸூக்தம் -தமோ குணம் நிறைந்த லோகத்துக்கு அப்பால் )என்றும்
பஞ்ச சக்தி மயே திவ்யே ஸூத்த ஸத்வே ஸூ காகாரே -(தை -2-11-)
(ஐந்து சக்திகளை தனக்கு இயல்பாகக் கொண்டதும் -ஸூகத்துக்கே இருப்பிடமாகவும் தெய்வீகமாகவும் –
ஸூத்த ஸத்வமாயும் உள்ளதுமாகிய பரமபதம் ) என்றும்
ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் இப்படி சொல்லா நின்றது இறே-

நித்தியமாய் -அதாவது
அநாதி நிதநமாய் இருக்கை-

தத ஷரே பரமே வயோமந் (தை -2-12-அந்த வஸ்துவானது அழிவற்ற பரம பதத்தில் உள்ளது ) என்றும் –

காலாதீதம் அநாத்யந்தம் அப்ராக்ருதம் அசஞ்சலம் ப்ராப்யம் அர்ச்சி பதாத் சத்பிர் மயி சம்ந்யஸ் தமா நசை –
(எந்த ஒரு பரமபதமானது அனைத்துக் காலங்களுக்கும் அப்பால் பட்டதும் –
தொடக்கம் மற்றும் முடிவு அற்றதாகவும் -என்னிடம் அசையாத மனதைச் செலுத்தியவர்களாய்
அர்ச்சிராதி மார்க்கமாக அடையப்படுவதாகவும் உள்ளதோ )-என்றும்

யத் தத் புராண மாகாசம் சர்வஸ்மாத் பரமம் த்ருவம் யத் பதம் ப்ராப்ய தத்வஜ்ஞ்ஞா முஸ்யந்தே சர்வ கில்பிஷை –
(எந்த ஒரு பரம பதமானது மிகவும் புராணமாகவும் -பரமாகாசம் என்று கூறப்படுவதாகவும் –
அனைத்தைக் காட்டிலும் உயர்ந்ததாகவும் நித்யமாகவும் உள்ளதோ
எத்தனை அடைந்த தத்வ ஞானிகள் தங்கள் பாபங்கள் அனைத்தையும் விடுகிறார்களோ )என்றும்

இதனுடைய நித்யத்வம் ஸ்ருதி ஸ்ம்ருதிகளிலே சொல்லப் பட்டது –

ஜ்ஞான ஆனந்த ஜனகமாய் –
சுத்த சத்வம் ஆகையாலே ஜ்ஞான ஆனந்த ஜனகமாய் இருக்கும் இறே
சத்வம் -ஜ்ஞான ஸூகாவஹமாய் இறே இருப்பது
ஆகை இறே சுத்த சத்வே -என்ற அனந்தரத்திலே-ஸூகாகரே -என்றது

கர்மத்தால் அன்றிக்கே கேவல பகவத் இச்சையாலே
விமான கோபுர மண்டப பராசாசாதி ரூபேண பரிணமிக்கக் கடவதாய் –
அதாவது —
சேதனன் கர்ம அனுகுணமாக இச்சிக்க
அந்த இச்சா குணமாக பகவத் சங்கல்பத்தாலே
சதுர விம்சதி தத்வமாய்க் கொண்டு பரிணமித்து
சேதனர்க்கு போக்ய போக உபகரண போக ஸ்தானங்கள் ஆகிற பிரகிருதி தத்வம் போல் அன்றிக்கே
ஸ்வ போகார்த்தமாக உண்டான பகவத் இச்சையாலே
விமான கோபுராதி ரூபேண பரிணமியா நிற்கும் -என்கை-

தேவா நாம் பூரயோத்யா தஸ்யாம் ஹிரண்மய கோச யோ வை காம ப்ரஹ்மணோ வேத அம்ருதே நாவ்ருதாம் புரீம் –
(தேவர்களுடைய அந்த நகரமானது அயோத்யை என்னும் பெயர் கொண்டதாக உள்ளது –
அங்கே ஸ்வர்ண மயமாக உள்ள நிதி உள்ளது -எந்த ஒருவன் ப்ரஹ்மத்தின் அமிர்தத்தால் சூழப்பட்ட
அந்த நகரத்தை அறிகிறானோ ) என்றும்

அபராஜிதா பூர் ப்ரஹ்மணா (அந்த நகரமானது யாராலும் வெல்லப்பட இயலாதது ) என்றும்

ப்ரஜாபதேஸ் சபாம் வேஸ்ம ப்ரபத்யே (சாந்தோக்யம் -8-14-1-அந்த உபாசகன் சபையில் உள்ளே புகுகிறான் ) என்றும்

ஸ்ருதியிலும் சங்ரஹேண நித்ய விபூதியில் யுண்டான
திவ்ய நகர திவ்ய ஆயத நாதிகள் சொல்லப் பட்டது –

இது தன்னை ஸ்ரீ பாஷ்யகாரர் ஸ்ரீ வைகுண்ட கத்யத்திலே
திவ்யாவரண சத சஹஸ்ராவ்ருதே திவ்ய கல்பக தரூப சோபிதே திவ்ய உத்யான
சத சஹஸ்ர கோடி பிராவ்ருதே அதி ப்ரமாணே திவ்ய ஆயதனே கஸ்மிம் ச்சித் விசித்ர
திவ்ய ரத்னமய திவ்ய ஆஸ்தான மண்டபே –
(திவ்யமான நூறாயிரம் மதிள்களாலே சூழப்பட்டும் -திவ்யமான கற்பக மரம் கொண்டும் –
திவ்யமான நூறாயிரம் கோடி நந்தவனங்கள் உள்ளதாகவும் அளவிடப்பட இயலாதபடியும் -உள்ள திவ்யமான இடத்தில்
விசித்திரமான திவ்ய இரத்தின மயமான உள்ள திரு மா மணி மண்டபத்தில் )என்று
தொடங்கி விஸ்தரேண் அருளிச் செய்தார் இறே-

நிரவதிக தேஜோ ரூபமாய் –
அதாவது –
அக்னி ஆதித்யாதி தேஜ பதார்த்தங்களையும்
கதயோத் கல்பமாக்கும் படி அளவிறந்த தேஜஸே வடிவாய் இருக்கை –

ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ர தாரகம் நேமா வித்யுதோ பாந்தி குதயோம் அக்நி -(கட உபநிஷத் )
(ப்ரஹ்மத்திடம் ஆதித்யன் பிரகாசிப்பது இல்லை -சந்திரனும் தாரகைகளும் பிரகாசிப்பது இல்லை
மின்னலும் அக்னியும் பிரகாசிப்பது இல்லை )என்னக் கடவது இறே

அத்யர்காநல தீப்தம் தத் ஸ்தாநம் விஷ்ணோர் மகாத்மன ஸ்வயைவ ப்ரபயா ராஜந்
துஷ் ப்ரேஷம் தேவ தாந வை(மஹா பாரதம் )
(ஸூர்யன் சந்திரன் மற்றும் அக்னி ஆகியவற்றைக் காட்டிலும் கோடி ஆதித்யனைப் போன்று
ஒளியுடன் கூடிய மஹா விஷ்ணுவின் பரமபதம் எனக் கொண்டாடப்படும் இடமானது
தனது தேஜஸ்ஸால் தேவர்கள் மற்றும் அஸூரர்களால் காணப்பட இயலாதபடி உள்ளது )

சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதி -என்றும்
சுழி பட்டோடும் சுடர் சோதி வெள்ளம்-என்றும்
விளங்கும் சுடர்ச் சோதி -என்றும்
ஆழ்வாரும் இதனுடைய நிரவதிக தேஜோ ரூபத்தை பல இடங்களிலும் அருளிச் செய்தார் இறே-

நித்ய முக்தராலும் ஈஸ்வரனாலும் பரிச்சேதிக்க அரிதாய் –
அதாவது –
இதனுடைய பரிமாணாதிகள் ஒருவராலும் அளவிட ஒண்ணாத படி இருக்கும் ஆயிற்று

தேஷாமபி இயத் பரிமாணம் இயத் ஐஸ்வர்யம் ஈத்ருச ஸ்வ பாவமிதி பரிச்சேத்தும் அயோக்ய
(நித்ய ஸூரிகளாலும் கூட இத்தகைய அளவு கொண்டது இத்தகைய ஐஸ்வர்யம் கொண்டது
இப்படிப்பட்ட இயல்பு கொண்டது என உரைக்க இயலாது -)-என்று
நித்யரால் பரிச்சேதிக்க ஒண்ணாத படி ஸ்ரீ வைகுண்ட கத்யத்திலே ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்த இது
முக்தருக்கும் ஒக்கும் இறே

ஈஸ்வர ஞானந்தோ பாதி இவர்களுடைய ஞானத்துக்கும்
சர்வ தர்சித்வம் யுண்டாகையாலே
அவனால் பரிச்சேதிக்கலாம் ஆகில் இவர்களாலும் பரிச்சேதிக்கலாம் இறே
ஆகையால் அவனுக்கும் அரிது என்கை –

ஆனால் இவர்களுடைய சர்வஞ்ஞதைக்கு கொத்தை வாராதோ என்னில் வாராது
சர்வஞ்ஞதை யாவது சர்வத்தையும் உள்ளபடி அறிகை இறே
பரிச்சேத்யமாகில் பரிச்சேதித்து அறிகையும்
அபரிச்சேத்யமாகில் அப்படி அறிகையும் இறே உள்ளது
சீமை இல்லாத ஒன்றுக்கு சீமை அறியாமை சர்வஞ்ஞதைக்கு அனுகுணம் என்னும் இடம்

தேவி த்வத் மஹிம் அவதிர் ந ஹரிணா ந அபி த்வயா ஜ்ஞாயதே
யத் யபி ஏவம் அத அபி ந ஏவ யுவயோ சர்வஜ்ஞதா ஹீயதே
யத் ந அஸ்தி ஏவ தத் அஜ்ஞாதம் அனு குணாம் சர்வஞ்ஞதா விதுர்
வயோம அம் போஜம் இதந்தயா கில விதன் ப்ராந்த அயம் இதி யுச்யதே -என்று ஸ்ரீ ஸ்தவத்திலே (8)
(ஹே ஸ்ரீ ரெங்க நாச்சியாரே -உன்னுடைய மேன்மையின் எல்லையானது ஸ்ரீ ரெங்க நாதனாலும் அறியப் படுவது இல்லை
உன்னாலும் உனது மேன்மையானது எத்தன்மையது என்று அறியப்படுவது இல்லை
இப்படி இருந்தாலும் நீங்கள் இருவரும் அனைத்தையும் அறியும் தன்மையில் எந்தவிதமான குறையும் இல்லாமல் உள்ளீர்கள்
இதன் காரணம் எந்த ஒரு பொருளானது இல்லவே இல்லை என்பதை உணர்ந்து
அதனை அறிந்து கொள்ள முயலாமல் இருப்பதையே அனைத்தும் அறிந்த தன்மையாகச் சான்றோர்கள் அறிகிறார்கள்
முயல் கொம்பு ஆகாயத் தாமரை ஆகியவற்றை உள்ளதாக அறிபவன் பைத்தியக்காரன்
என்றே உலகத்தினரால் கூறப்படுகிறான் ) என்று ஆழ்வானும் அருளிச் செய்தார் –

இங்கன் அன்றாகில்
தனக்கும் தன தன்மை அறிவரியான் (திருவாய்-8-4-6 )-என்கிற இதுவும்
சர்வஞ்ஞதையோடு விரோதிக்கும் ஆகையால்
நித்ய முக்த ஈஸ்வரகளால் அபரிச்சேத்யம் என்கிற இதில் குறை இல்லை
இத்தால் இதனுடைய வைபவம் சொன்னபடி

அதி அத்புதமாய் இருப்பதொன்று –
அதி அத்புதமாவது –
அநு ஷணம் அபூர்வ ஆச்சர்யா வஹத்வம்
அநந்த ஆச்சர்ய அநந்த மஹா விபவ ( கத்யத்தில் எல்லையற்ற வியப்பும் பெருமையும் கொண்ட)
என்றார் இறே ஸ்ரீ பாஷ்ய காரர்

ஆக
சுத்த சத்வமாவது இப்படி இருப்பது ஓன்று என்றது ஆயிற்று –

————————————————————

சூர்ணிகை -80-

இத்தை சிலர்
ஜடம் என்றார்கள்
சிலர்
அஜடம் என்றார்கள் –

அதாவது
சுத்த சத்வம் தன்னை
இந்த தர்சனஸ்தர் தங்களிலே
சிலர் ஜடம் என்றார்கள்

அங்கன் அன்றிக்கே
சிலர் அஜடம் என்று சொன்னார்கள் என்கை

இஹ ஜடா மாதிமாம் கேசி தாஹூ-(தத்வ முக்த கலாபத்திலே )
(முதலாவதாக ஸூத்த ஸத்வத்தை ஜடம் என்று சிலர் கூறுகிறார்கள் )என்று இறே
அபி உக்தரும் (ஸ்ரீ வேதாந்த தேசிகரும் )சொல்லிற்று-

——————————————————–

சூர்ணிகை -81-

ஜடம் ஆகையாவது ஸ்வயம் பிரகாசம் இன்றிக்கே இருக்கை
அஜடமாகை யாவது ஸ்வயம் பிரகாசமாய் இருக்கை –
அத்தை அருளிச் செய்கிறார் –

அஜடமான போது
நித்யருக்கும்
முக்தருக்கும்
ஈஸ்வரனுக்கும்
ஜ்ஞானத்தை ஒழியவும்
தோற்றும் –

அதாவது –
அஜடம் ஆனபோது என்றது -ஜடம் என்றும் ஒரு பஷம் சொல்லுகையாலே
அப்படி அன்றிக்கே
இப்படியான போது -என்றபடி –
அந்த பஷத்தை விட்டு இத்தை உபபாதிக்கையாலே
இவர் தமக்கு இதுவே திரு உள்ளம் என்று தோற்றா நின்றது இறே
ஜ்ஞானத்தை ஒழியவும் தோற்றும்-என்றது
ஜ்ஞானத்தாலே தன்னை அறிய வேண்டாதபடி தானே பிரகாசிக்கும் என்றபடி –

———————————————————-

சூர்ணிகை -82-

இப்படி ஸ்வயம் பிரகாசமாய் இருக்குமாகில்
சம்சாரிகளுக்கு ஜ்ஞான வேத்யம் ஆகவேன்டாதே
தானே தோற்ற வேண்டாவோ -என்கிற சங்கையில் அருளிச் செய்கிறார் –

சம்சாரிகளுக்குத்
தோற்றாது –

அதாவது
இது தான் அபி உக்தராலே விஸ்தரேண பிரதிபாதிக்கப் பட்டது-
எங்கனே என்னில்

த்ரிவித அசேதனங்கள் -என்று எடுத்து
அவற்றில் பிரக்ருதியும் காலமும் ஜடங்கள்
சுத்த சத்வமான த்ரவத்தையும் ஜடம் என்று சிலர் சொல்லுவார்கள்

ஜடத்வமாவது ஸ்வயம் பிரகாசம் அன்றிக்கே இருக்கை
பகவத் சாஸ்த்ராதி பராமர்சம் பண்ணினவர்கள் (பாஞ்சராத்ராதி ஆகமங்களை ஆராய்ந்து கற்றவர்கள் )
ஜ்ஞானாத் மகத்வம் சாஸ்திர சித்தம் ஆகையாலே
சுத்த சத்வ த்ரவ்யத்தை ஸ்வயம் பிரகாசம் என்பார்கள் –

இப்படி ஸ்வயம் பிரகாசம் ஆகில் சம்சாரிகளுக்கு சாஸ்திர வேத்யமாக வேண்டாதே
தானே தோற்ற வேண்டாவோ -என்னில் –
சர்வாத்மாக்களுடையவும் ஸ்வரூபமும் தர்ம பூத ஞானமும்
ஸ்வயம் பிரகாசமாய் இருக்க
ஸ்வரூபம் தனக்கே ஸ்வயம் பிரகாசமாய்
வேறே எல்லாருக்கும் ஞானாந்தர வேத்யமானாப் போலேயும்
தர்ம பூத ஞானமும் ஸ்வ ஆஸ்ரயதுக்கே ஸ்வயம் பிரகாசமாய்
இதரருக்கு ஸ்வயம் பிரகாசம் அல்லாதாப் போலேயும்
இதுவும் நியத விஷயமாக ஸ்வயம் பிரகாசமானால் விரோதம் இல்லை –

யோ வேத்தி யுகபத் சர்வம் பிரத்யஷேண சதா ஸ்வத
தம் பிரணம்ய ஹரிம் சாஸ்திரம் ந்யாய தத்வம் ப்ரசஷமஹே (நியாய தத்வ மங்கள ஸ்லோகம் )
(எந்த ஒரு சர்வேஸ்வரனை அனைத்தையும் ஒரே நேரத்தில் தனது ஸ்வ பாவம் காரணமாக அறிகிறானோ
அப்படிப்பட்ட ஹரியை வணங்கிவிட்டு இந்த நியாய தத்வ சாஸ்திரத்தைக் கூறுகிறோம் )-என்கிறபடியே
தர்ம பூத ஞானத்தாலே சர்வத்தையும் சாஷாத் கரித்து கொண்டு இருக்கிற ஈஸ்வரனுக்கு
சுத்த சத்வ த்ரவ்யம் ஸ்வயம் பிரகாசமாய் இருக்கிறபடி எங்கனே -என்னில்

இவனுடைய தர்ம பூத ஞானம் திவ்ய ஆத்ம ஸ்வரூபம் முதலாக சர்வத்தையும் விஷயீ கரியா நிற்க
திவ்யாத்ம ஸ்வரூபம் ஸ்வயம் பிரகாசமாய் இருக்கிறாப் போலேயும்
இதுவும் ஸ்வயம் பிரகாசமாய் இருக்கலாம்
இப்படி நித்யருக்கும் துல்யம்

விஷய பிரகாச காலத்திலே தர்ம பூத ஞானம் ஸ்வ ஆஸ்ரயத்துக்கே ஸ்வயம் பிரகாசமாக ஆனால் போலே
முக்தாக்களுக்கும் அவ்வவஸ்தையிலே இது ஸ்வயம் பிரகாசம் ஆனால் விரோதம் இல்லை –

தர்ம பூத ஞானத்தின் யுடைய ஸ்வயம் பிரகாசன சக்தியானது
விஷய பிரகாசம் இல்லாத காலத்திலே கர்ம விசேஷங்களாலே பிரதிபத்தை ஆனால் போலே
சுத்த சத்வத்தினுடைய ஸ்வாத்ம பிரகாசன சக்தியும் பத்த தசையில் பிரதிபததை யாகையாலே
சுத்த சத்வம் பத்தருக்கு பிரகாசியாது ஒழிகிறது-

தியஸ் ஸ்வயம் பிரகாசத்வம் முக்தௌ ஸ்வா பாவிகம் யதா
பத்தே கதாசித் சம் ருத்தம் ததா அத்ராபி நியம்யதே –
(மோக்ஷ காலத்தில் தானாக வெளிப்படும் தர்மபூத ஞானமானது சம்சார காலத்தில் சில நேரங்களில் தடைப்பட்டு உள்ளது
இதே போன்றே சுத்த ஸத்வ விஷயத்திலே கொள்ள வேண்டும்)
இவ்வளவு அவஸ் தாந்தரா பத்தி விகாரி த்ரவ்யதுக்கு விருத்தம் அன்று
ஆகையாலே பிரமாண ப்ரதி பந்நார்த் த்துக்கு யுக்தி விரோதம் சொல்ல வழி இல்லை -என்று
இப்படி ரஹஸ்ய த்ரய சாரத்திலே பிரதிபாதிக்கையாலே –

————————————————————————————–

சூர்ணிகை -83-

கீழே ஆத்மாவும் அஜடமாய்
ஞானமும் அஜடமாய் இருக்கச் செய்தே
அந்யோந்யம் பின்னம் என்னுமத்தை தர்சிப்பித்தால் போலே
சுத்த சத்வமும் அஜடமாய் இருக்கச் செய்தே
இவை இரண்டிலும் பின்னமாய் இருக்கப் படியை
தர்சிப்பிக்கைக்காக
தஜ் ஜிஜ்ஞ்ஞா ஸூபிரசனத்தை அனுவதிக்கிறார் –

ஆத்மாவிலும்
ஜ்ஞானத்திலும்
பின்னமான படி
என் -என்னில்

—————————————

சூர்ணிகை -84-

அநேக ஹேதுக்களால் அது தன்னை தர்சிப்பிக்கிறார் –

நான் என்று தோற்றாமையாலும்
சரீரங்களாய் பரிணமிக்கையாலும்
விஷயங்களை ஒழியவும் தானே தோற்றுகையாலும்
ஸப்த ஸ்பர்சாதிகள் யுண்டாகையாலும்
பின்னமாகக் கடவது –

அதாவது
ஆத்ம வஸ்து பிரத்யக் ஆகையாலே
அஹம் என்று பிரகாசியா நிற்கும் –

இது பராக் ஆகையாலே இதம் என்று இறே பிரகாசிப்பது
இத்தால் ஆத்மாவில் பின்னம் என்றபடி-

சரீராதிகளாய் பரிணமிக்கையாலே ஆத்மாவிலும் ஞானத்திலும் இரண்டிலும் பின்னம் என்றபடி
ஏக ரூபன் ஆகையாலே ஆத்மாவுக்கு பரிணாமம் இல்லை இறே
ஞானத்துக்கு பரிமாணம் யுண்டாகையாலும் சரீராதிகளாய் பரிணமிதியாது இறே
விஷய நிரபேஷமாக பிரகாசிக்கையாலும் சப்த ஸ்பர்சாதிகளுக்கு ஆஸ்ரயம் ஆகையாலும்
விஷய சந்நிதியில் ஒழிய பிரகாசிப்பிததும் செய்யாதே
சப்தாதி ஆஸ்ரயமும் இன்றிக்கே
தத் க்ராஹமாய் இருக்கிற ஜ்ஞானத்தில் பின்னம் -என்றபடி –

———————————————————————–

சூர்ணிகை -85-

ஆக இப்படி சுத்த சத்வத்தின் யுடைய பிரகாரத்தை அருளிச் செய்தாராய் நின்றார் கீழ்
அநந்தரம் ‘
மிஸ்ர சத்வ பிரகாரத்தை அருளிச் செய்வதாக –தொடங்குகிறார் –

மிஸ்ர சத்வமாவது
சத்வ ரஜஸ் தமஸ் ஸூ க்கள் மூன்றோடும் கூடி
பத்த சேதனருடைய
ஜ்ஞான ஆனந்தங்களுக்கு திரோதாயகமாய்
விபரீத ஜ்ஞான ஜநகமாய்
நித்தியமாய்
ஈஸ்வரனுக்கு க்ரீடா பரிகரமாய்
பர தேச பேதத்தாலும்
கால பேதத்தாலும்
சத்ருசமாயும்
விஸ்த்ருசமாயும்
இருக்கும் விகாரங்களை யுண்டாக்கக் கடவதாய்
பிரகிருதி அவித்யை மாயை என்கிற
பேர்களை யுடைத்தாய் இருக்கும்
அசித் விசேஷம் –

அதாவது –
மிஸ்ர சத்வமாவது -சத்வ ரஜஸ் தமஸ் ஸூ க்கள் மூன்றோடும் கூடி –
ரஜஸ் தமஸ் ஸூ க்களோடு கூடின சத்வ குணத்தை யுடைத்தானது –

திரிகுணம் தஜ் ஜகத் யோ நிரநாதி ப்ரபவாப் யயம் (ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-23-)
மூன்று குணங்களுடன் கூடிய ப்ரக்ருதியானது இந்த ஜகத்தின் பிறப்பிடமாக அநாதியாக உள்ளது -)-என்றும்

திரிகுணம் கர்மிணாம் ஷேத்ரம் ப்ரக்ருதே ரூபமுச்யதே (பரம ஸம்ஹிதை )
(மூன்று குணங்களுடன் கூடிய இந்த சரீரமானது கர்மங்கள் அனைத்தையும் அனுபவிக்க வல்ல
ரூபமாக உள்ளது என ப்ரக்ருதியானது கூட்டப்படுகிறது )-என்றும்

சத்வம் ரஜஸ் தம இதி குணா பரக்ருதி சம்பவா (ஸ்ரீ கீதா -14-5 )
*ஸத்வம் ரஜஸ் தமஸ் என்பதாக உள்ள பிரக்ருதியில் உண்டான மூன்று குணங்களும் )-என்னக் கடவது இறே-

பத்த சேதனருடைய ஜ்ஞான ஆனந்தங்களுக்கு திரோதாயகமாய் –
குண த்ரயாத்மகமாய் இருக்கையாலே
ரஜஸ் தம அம்சத்தாலே ஜ்ஞாநாதிகளுக்கு திரோதானத்தைப் பண்ணும் என்கை-

சேதனருடைய ஞானானந்தங்களுக்கு த்ரோதாயகம் என்று சாமானாயேன சொல்லாதே
பக்த சேதனருடைய -என்று விசேஷிக்கையாலே
கர்ம சம்ஸ்ருஷ்டரான சேதனருடைய ஞானாதிகளுக்கே அது திரோதாயகம் -என்றபடி

அல்லது ஐச்கிகமாக ப்ராக்ருத சரீரம் பரிக்ரஹம் பண்ணுகிற நித்ய முக்தருடைய
ஜ்ஞாநாதிகளுக்கும் இது சங்கோசத்தைப் பண்ண வேண்டி வரும் இறே –

ஆகையாலே –
அசஹ்ருத சஹஜ தாஸ்ய ச ஸூரய ச ஸ்ரஸ்ச பந்தா விமல சரம தேஹா இதி
அமீ ரங்க தாமே மஹித மனுஜ திர்யக் ஸ்தாவரத்வா ஸ்ரயந்தே (ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -1-33 )
கைங்கர்ய ஸ்ரீயை இயற்கையாக யுடைய நித்ய ஸூரிகள் -சம்சார பந்தத்தில் இருந்து விடுபட்ட முக்த ஜீவன்கள்
மற்றும் அடுத்த பிறவிகள் இனி இல்லை என்பது போன்ற முமுஷுக்கள் ஆகிய அனைவரும்
மனிதப்பிறவி பசு முதலான பிறவி ஸ்தாவரங்களான பிறவி முதலானவற்றை ஏற்று ) -என்கிறபடியே
நித்ய முக்தரும் இங்கே வந்து பராக்ருத தேஹங்களைப் பரிகிரஹித்து
சேஷிக்கு அதிசயத்தைப் பண்ணும் அளவில் அவர்களுக்கு இது சங்கோசத்தைப் பண்ணாமையாலே
பத்த சேதனருடைய ஜ்ஞானாதிகளுக்கே இது திரோதயம் என்னும் இடம் சித்தம் –

அநீசயா சோசதி முஹ்யமான (முண்ட -3-1-2-ப்ரக்ருதியால் மறைக்கப்பட்டு )-என்றும்

அநாதி மாயயா ஸூப்த (மாண்டூக்யம் -எல்லை யற்ற காலமாகத் தொடரும் மாயையால் மயக்கம் கொண்டு )-என்றும்

பகவந் மாயா திரோஹித ஸ்வ பிரகாச (கத்யம் -பகவானுடைய மாயையால் மறைக்கப்பட்ட ஸ்வரூபம் கொண்டவனாக )-என்னக் கடவது இறே-

விபரீத ஜ்ஞான ஜநகமாய்-
அதாவது –
அதஸ்மின் தத் புத்தி
அநாத்மாவான தேஹத்தில் ஆத்ம புத்தியும்
அஸ்வதநதரமான ஆத்ம வஸ்துவில் ஸ்வ தந்திர புத்தியும்
அந்ய சேஷமானவது தன்னில் அந்ய சேஷத்வ புத்தியும்
அநீஸ்வரானவர்கள் பக்கலில் ஈஸ்வர புத்தியும்
அபுருஷார்த்தமான ஐஸ்வர்யாதிகளிலே புருஷார்த்தவ புத்தியும்
அனுபாயங்கள் ஆனவற்றில் உபாயத்வ புத்தியும்
தொடக்கமானவை –

யதா ஜ்ஞானத்தை மறைக்கும் அளவு அன்றிக்கே
இப்படி இருந்துள்ள விபரீத ஜ்ஞானங்களையும்
பத்த சேதனருக்கு யுண்டாக்கா நிற்கும் ஆயிற்று –

பகவத் ஸ்வரூப திரோதா நகரீம் விபரீத ஜ்ஞான ஜகநீம் (கத்யம் -)
(பகவானுடைய ஸ்வரூபத்தை மறைப்பதாகவும்
விபரீத ஞானத்தைப் பிறக்கச் செய்வதாகவும் உள்ள பிரகிருதி )-என்று இது தன்னை
ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்தார் இறே –

நித்தியமாய் –
அதாவது –
உத்பத்தி விநாச ரஹிதமாய் இருக்கை

அஜாம் ஏகாம் (பிறப்பு ஏற்றதும் ஒன்றாக உள்ளதுமான பிரகிருதி ) -என்றும்

கௌர நாத் யந்தவதீ சா ஜநித்ரீ பூத பாவிநீ
(ப்ரக்ருதி தொடக்கம் முடிவு அற்றது -கண்களுக்குத் தென்படாதவற்றையும் தென்படுவதையும் உண்டாக்குகிறது )-என்றும்

அசேதனா பரார்ததா ச நித்யா சதத விக்ரியா (பரம சம்ஹிதை )
அழிவற்றதும் மற்றவர் களுக்காகவே உள்ளதும் நித்யமானதும் மாற்றம் யுடையதாயும் ) -என்றும்

விகார ஜநநீம் அஜ்ஞ்ஞாம் அஷ்ட ரூபாம் அஜாம் த்ருவாம்
(மாற்றத்துக்கு இடமாகாவு எட்டு உருவம் கொண்டதாகவும் பிறப்பு அற்றதாகவும் ஞானம் அற்றதாகவும் உறுதியானதாகவும் )-என்றும்
சொல்லக் கடவது இறே –

ஈஸ்வரனுக்கு க்ரீடா பரிகரமாய் –
அதாவது –
சர்வேஸ்வரனுடைய ஜகத் ஸ்ருஷ்ட்யாதி லீலைக்கு உபகரணமாய் இருக்கை –

க்ரீடதோ பாலகஸ்யேவ சேஷ்டாம் தஸ்ய நிசாமய (ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-12-18-)
(விளையாடி மகிழும் பாலர்கள் போன்று மஹா விஷ்ணுவின் லீலைகளைக் காண்பாய் )-என்றும்

அப்ரமேயோ நியோஜ் யச்ச யத்ர கர்ம காமோ வசீ மோததே பகவான் பூதைர் பால கிரீடந கைரிவ-(ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-12-20)
அளவிட இயலாதவனும் அனைத்து விதமான இன்பங்களை அடையப் பெற்றவனும் -அனைவரையும் வசப்படுத்துபவனும் –
ஆகிய பகவான் இவை அனைத்தையும் சிறுவர்கள் உபயோகிக்கும் விளையாட்டுக் கருவிகள் போலே பயன்படுத்துகிறான் -)என்றும்

த்வம் ந்யஞ்சத் ப்ருதஞ்சத்பி காம ஸூத்ரோ பபாதிதை ஹரே விஹரசி க்ரீடா கந்துகை ரிவ ஜந்துபி (ஸ்ரீ விஷ்ணு தர்மம் )
(தாழ்ந்தும் உயர்ந்தும் காணப்படுவதன் வினைகள் என்ற கயிறு கொண்டு கட்டப்பட்ட இந்த மனிதர்களைப்
பந்தாகக் கொண்டு நீ விளையாடுகிறாய் )-என்றும்

சொல்லப் படுகிற சர்வேஸ்வரனுடைய லீலைக்கு
குண த்ரையாத்மகமான பிரகிருதி இறே பிரதான உபகரணம்

சிதா சிதா ச ரக்தா ச சர்வ காம துகா விபோ
(வெண்மையும் கறுமையும் சிவந்தும் உள்ள பிரக்ருதியானது பகவானுக்கு இன்பம் அளிப்பதாக உள்ளது )-என்னக் கடவது இறே –

தைவி ஹயேஷா குணமயீ-(ஸ்ரீ கீதை -7-14–எனது இந்த மூன்று குணங்கள் ) என்று தானே அருளிச் செய்தான் இறே –

பிர தேச பேதத்தாலும் கால பேதத்தாலும் சத்ருசமாயும்
விஸ்த்ருசமாயும் இருக்கும் விகாரங்களை யுண்டாக்கக் கடவதாய் –
பிரதேச பேதமாவது-
குண வைஷம்யம் இல்லாத பிரதேசமும்
குண வைஷம்யம் உள்ள பிரதேசமும்
இது தனக்கு குண வைஷம்யம் உள்ளது கார்ய உந்முகமான ஸ்தலத்திலே இறே
அல்லாத இடம் எல்லாம் குண சாம்யா பன்னமாய் இருக்கும் அத்தனை –

அதில் குண வைஷம்யம் இல்லாத இடம் சத்ருச விகாரமாய் இருக்கும்
வைஷம்யம் உள்ள இடம் விஸ்த்ருச விகாரமாய் இருக்கும் –

சத்ருச விகாரமாவது
நாம ரூப விபாக அதேசா நர்ஹமாய் இருக்கும் ஸூஷ்ம விகாரம்

விசத்ருச விகாரமாவது
நாம ரூப விபாக நிர்தேச யோக்யமாய் இருக்கும் ஸ்தூல விகாரம்

குண சாம்ய மநுத்ரிக்த மந் யூநம் (கண்ணுக்குப் புலப்படாத அவ்யக்த நிலையில் குணங்கள்
சமமாகவும் அதிகமாகவோ குறைவாகவோ இன்றியும் உள்ளன )-என்கையாலே
அவ்யக்த அவஸ்தையில் உள்ள விகாரம் எல்லாம் சத்ருசமாய் இருக்கும்
மஹதாதி விஸ்த்ருத விகாரமாய் இருக்கும் –

இனி கால பேதமாவது
சம்ஹார காலமும் -சிருஷ்டி காலமும்

சம்ஹார காலத்திலே
இது அவிபக்த தமஸாய்க் கிடைக்கையாலே
ஒரு இடத்திலும் குண வைஷம்யம் இல்லாமையாலே
எங்கும் ஒக்க சத்ருச விகாரமாய் இருக்கும்

சிருஷ்டி காலத்திலே
பகவத் அதிஷ்டான விசேஷத்தாலே விபக்தமாய்
கார்ய உன்முகமாய்
குண வைஷம்யம் பிறந்தவாறே விஸ்த்ருத விகாரத்தை யுடைத்தாய் இருக்கும்

சதத விகாரஸ் பதமாய் இருக்கையாலே அதுக்கு சத்தா பிரயுக்தம் இறே விகாரம்
அதினுடைய சௌஷ்ம்யா அசௌஷ்ம்ய நிபந்தனமான விபாக நிர்த்தேசம் இறே
அல்லது நிர் விகாரமாய் இருப்பதோர் அவஸ்தையும் இல்லை இறே-

பிரகிருதி அவித்யை மாயை என்கிற பேர்களை யுடைத்தாய் இருக்கும் அசித் விசேஷம் –

மிஸ்ர சத்வமாவது இப்படி இருப்பதோர்
அசித் விசேஷம் என்று
வாக்ய அந்வயம்-

——————————————————-

சூர்ணிகை -86-

பிரகிருதி யாதி நாம பேதங்கள் இதனுடைய ஸ்வ பாவங்களைப் பற்றி
வந்தது என்கிறார் –

பிரகிருதி -என்கிறது
விகாரங்களைப் பிறப்பிக்கையாலே-
அவித்யை -என்கிறது
ஜ்ஞான விரோதி ஆகையாலே –
மாயை -என்கிறது –
விசித்திர சிருஷ்டியைப் பண்ணுகையாலே

அதாவது
மூல பிரக்ருதிர்விக்ருதி (மூல ப்ரக்ருதியானது ஜகத் யுண்டாகக் காரணமாக இருக்கிறது )-இத்யாதிகளிலே
பிரகிருதி -சப்தம் காரண வாசியாகச் சொல்லப் பட்டது இறே
இது தான் உபாதான காரணத்துக்கே வாசகம் -ஆகை இறே

ப்ரஹ்மத்தின் உடைய ஜகத் உபாதனத்வத்தை சொல்லுகிற ஸூத்திர காரர் (1-4-23 )
பிரக்ருதிச் ச பிரதிஞ்ஞா த்ருஷ்டாந்த அனுப ரோதாத்
(ப்ரஹ்மமே உபாதான காரணம் என்றால் மட்டுமே உறுதிபட உரைக்கும்
வாக்கியங்களும் உதாரணங்களும் முரண்படாமல் இருக்கும் ) என்று
பிரகிருதி சப்தத்தாலே சொல்லிற்று

ஆகையால் இத்தை பிரகிருதி என்கிறது –
மஹதாதி விகாரங்களை தன பக்கலில் நின்றும் ஜனிப்பிக்கையாலே –

அவித்யா சப்தம்
வித்யாபாவத்துக்கும் வித்யேதரத்துக்கும் வித்யா விரோதிக்கும்
வாசகமாய் இருந்ததே ஆகிலும்
விஷய அனுகுணமாக இறே ப்ரயோகம் இருப்பது
ஆகையாலே இத்தை அவித்யை என்கிறது ஞான விரோதி ஆகையாலே –
ஞாநானந்தங்களுக்கு திரோதாயகமாய் -என்று
இதனுடைய ஞான விரோதித்வம் தானே கீழே (சூர்ணிகை -85)சொல்லப் பட்டது

அஸூர ராஷசாதி கிரியைகளை ஆச்சர்ய கரத்வத்தை பற்ற மாயா சப்தத்தால் சொல்லுகிறாப் போலே
இத்தையும் மாயை -என்கிறது விசித்திர சிருஷ்டியைப் பண்ணுகையாலே
அதாவது
ஓன்று போல் அன்றிக்கே விஸ்மய நீயங்களான கார்யங்களை ஜநிப்பிக்கை –

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

தத்வ த்ரயம் – சித் பிரகரணம்-சூர்ணிகை -61-76–ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —

August 1, 2014

சூர்ணிகை -61-

அவதாரிகை –

கீழே ஆத்ம ஸ்வரூப வைலஷ்ண்யத்தை விஸ்தரேண அருளிச் செய்தார் –
அதில்
அசித் விலஷணத்வம்
அஜடத்வம்
ஆனந்த ரூபத்வம்
அவ் யக்தத்வம்
அசிந்த்யத்வம்
நிர் வவயத்வம்
நிர் விகாரத்வம்
ஞான ஆஸ்ரயத்வம்-
ஆகிற இவை ஜீவ ஈஸ்வர சாதாரணம்-

நியாமயத்வாதிகள் மூன்றும் சித் அசித் சாதாரணம் –

நித்யத்வம் தத்வ த்ரய சாதாரணம் –

அணுத்வமும் அசித் பரமாணு ஜீவ சாதாரண்யம் –

இவை இத்தனையும் சேரக் கூடி ஆத்ம ஸ்வரூபத்துக்கு
அசித் ஈஸ்வர வ்யாவ்ருதியை சித்திப்பைக்கையாலே
இவற்றை லஷணம் என்னக் குறை இல்லை – –

அப்படி அன்றிக்கே –
ஸூக்ரஹமமாக
ஒரு லஷணம் அருளிச் செய்கிறார் –

இப்போது
இவர்களுக்கு லஷணம்
சேஷத்வத்தோடே கூடின
ஜ்ஞாத்ருத்வம் –

இவர்கள் -என்கிறது த்ரிவித சேதனரையும்-
லஷணம் என்பது அசாதாரண தர்மம் இறே

ஆகையால்
சேஷத்வம் மாத்ரத்தைச் சொல்லில் அசித் வ்யாவ்ருத்தி சித்தியாமையாலும்
ஜ்ஞாத்ருத்வ மாத்ரத்தை சொல்லில் ஈஸ்வர வ்யாவ்ருத்தி சித்தியாமையாலும்
சேஷத்வே சதி ஜ்ஞாத்ருத்வமே லஷணம் என்கிறார் —

——————————————-

சூர்ணிகை -62-

இப்படி ஜ்ஞாதாவான ஆத்மாவினுடைய
ஜ்ஞானத்துக்கும்
ஸ்வரூபத்துக்கும்
யுண்டான
சாதர்ம்ய வைதர்ம்யங்களை அருளிச் செய்கிறார் மேல் –

இவர்கள் யுடைய
ஜ்ஞானம் தான்
ஸ்வரூபம் போலே
நித்ய த்ரவ்யமாய்
அஜடமாய்
ஆனந்த ரூபமாய்
இருக்கும் –

இத்தால்
நித்யத்வ
த்ரவ்யத்வ
அஜடத்வ
ஆனந்த ரூபத்வங்கள்
ஸ்வரூபத்தோபாதி ஜ்ஞானத்துக்கும் யுண்டு என்றபடி

————————————————————-

சூர்ணிகை -63-

அவதாரிகை-

நித்யத்வாதிகளை உபபாதித்து வைதர்ம்யத்தை சொல்லும் அளவில்
அநேக கிரந்த வ்யவஹிதமாம் என்று நினைத்து
சாதர்ம்யம் சொன்ன அனந்தரம்
வைதர்ம்யத்தையும் சொல்லுவதாக
தஜ் ஜிஜ்ஞாஸூ பிரஸ்னத்தை உத்ஷேபிக்கிறார் –

ஆனால்
ஜ்ஞானத்துக்கும்
ஸ்வரூபத்துக்கும்
வாசி என்
என்னில்-

—————————————————–

சூர்ணிகை -64-

வைதர்ம்யம் தன்னை அருளிச் செய்கிறார் –

ஸ்வரூபம்
தர்மியாய்
சங்கோச விகாசங்களுக்கு அயோக்யமாய்
தன்னை ஒழிந்த வற்றை பிரகாசிப்பியாமலே
தனக்குத் தானே பிரகாசிக்கக் கடவதாய்
அணுவாய்
இருக்கும்

ஜ்ஞானம் தர்மியாய்
சங்கோச விகாசங்களுக்கு யோக்யமாய்
தன்னை ஒழிந்தவற்றை பிரகாசிக்கக் கடவதாய்
தனக்குத் தானே பிரகாசியாதே
ஆத்மாவுக்கு பிரகாசிக்கக் கடவதாய்-
விபுவாய்
இருக்கும்

அதாவது
தர்மித்வம்
சங்கோச விகாச அயோக்யத்வம்
ஸ்வ வ்யதிரிக்தார்த்த அபிரகாசத்வம்
ஸ்வஸ்மை ஸ்வயம் பிரகாசத்வம்
அணுத்வம்
இவை ஸ்வரூபத்துக்கு விசேஷம்

தர்மத்வம்
சங்கோச விகாச யோக்யத்வம்
ஸ்வ வ்யதிரிக்தார்த்த பிரகாசத்வம்
ஸ்வஸ்மை ஸ்வயம் பிரகாச ரஹித்தத்வம்
ஸ்வாஸ்ரயஸ்ய ஸ்வயம் பிரகாசத்வம்
விபுத்வம்
இவை ஜ்ஞானதுக்கு விசேஷம் என்றபடி –

விபுவாய் இருக்கும் என்று
ஜ்ஞானத்தின் உடைய ஸ்வாபாவிக வேஷத்தை
அருளிச் செய்தார் இத்தனை இறே –

—————————————————–

சூர்ணிகை –65-

அவதாரிகை –
சகல சேதனருடைய ஜ்ஞானமும் இப்படி இராது ஒழிவான் என்
என்கிற சங்கையிலே
சங்கோச அசங்கோச நிபந்தனமான தாரதம்யத்தை அருளிச் செய்கிறார் –

அதில் சிலருடைய ஜ்ஞானம்
எப்போதும் விபுவாய் இருக்கும்
சிலருடைய ஜ்ஞானம் எப்போதும்
அவிபுவாய் இருக்கும்
சிலருடைய ஜ்ஞானம்
ஒருக்கால் விபுவாய்
ஒருக்கால் அவிபுவாய்
இருக்கும் –

அதாவது
அயர்வறும் அமரர்கள் (திருவாய் -1-1-1-)-என்கிறபடியே பகவத் ஜ்ஞானதுக்கு ஒரு நாளும்
சங்கோசம் இன்றிக்கே
தத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை சதா அனுபவம் பண்ணுகிற
நித்ய ஸூரிகளினுடைய ஜ்ஞானம் எப்போதும் விபுவாய் இருக்கும்

பொய் நின்ற ஜ்ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பாய் (திருவிருத்தம்-1 )இருக்கிற
பத்தர்கள் யுடைய ஜ்ஞானம் கர்ம அனுகுணமாக
சங்கோச விகாசங்களோடு கூடிக் கொண்டு எப்போதும் அவிபுவாய் இருக்கும் –

கரை கண்டோர் (திருவாய் -8-3-10 )-என்கிறபடியே பகவத் பிரசாதத்தாலே சம்சார சாகரத்தைக் கடந்து
அக்கரைப்பட்ட முக்தருடைய ஜ்ஞானம்
பூர்வ அவஸ்தையிலே அவிபுவாய்
உத்தர அவஸ்தையிலே-சர்வம் ஹ பஸ்ய பஸ்யதி (சாந்தோக் -7-26-2-எப்போதும் பார்த்தபடியே இருப்பர் )-என்கிறபடியே
விபுவாய் இருக்கும் என்கை —

————————————————————-

சூர்ணிகை -66

இனி மேல் ஜ்ஞானதுக்கு சொன்ன நித்யத்வாதிகளை
உபபாதிக்கிறார் –
அதில் பிரதமத்திலே
எனக்கு இப்போது ஜ்ஞானம் பிறந்தது
எனக்கு இப்போது ஜ்ஞானம் நசித்தது
என்று உத்பத்தி விநாசவத்தாகச் சொல்லப் படுகிற
ஜ்ஞானத்துக்குன் நித்யத்வம் கூடும்படி எங்கனே என்கிற
சங்கையை பரிஹரிக்கைக்காக
தஜ் ஜிஜ்ஞாஸூ பிரஸ்னத்தை அனுவதிக்கிறார் –

ஜ்ஞானம் நித்யமாகில்
எனக்கு ஜ்ஞானம் பிறந்தது
நசித்தது
என்கிறபடி என்
என்னில்-

—————————————————————

சூர்ணிகை -67-

அதுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார்

இந்த்ரியத் த்வாரா
பிரசரித்து
விஷயங்களைக் கிரஹிப்பது மீளுவது ஆகையாலே
அப்படிச் சொல்லக்
குறை இல்லை –

அதாவது
சர்வம் ஹ பஸ்ய பஸ்யதி (சாந்தோ -7-26-2- அனைத்தையும் காண்பவன் முக்தன் அனைத்தையும் காண்கிறான் )-என்றும்
ச ஸ நந்த்யாய கல்ப்பதே (ஸ்வே 5-9-அவன் எப்போதும் உள்ளவன் என்றாகிறான் )-என்றும்
முக்த தசையில் சர்வ விஷயமாகச் சொல்லுகையாலே
சர்வத்தையும் சாஷாத் கரிக்கைக்கு யோக்யமாய் இருக்கச் செய்தேயும்

ய யா ஷேத்திரஜ்ஞ சக்தி ச வேஷ்டிதா ந்ரூப சர்வகா (ஸ்ரீ விஷ்ணு -6-7-62 )
(அவித்யை என்ற சக்தியால் சூழ்ந்து ஜீவாத்மா சம்சார துன்பங்களை அடைந்தபடி உள்ளது )-என்கிறபடியே
கர்மத்தாலே சங்குசிதமாய்

தயா திரோஹித் வாத் ச சக்தி ஷேத்ரஜ்ஞ சம்ஜ்ஞிதா சர்வ பூதேஷு பூபால தார தம்யேன வர்த்ததே
அப்ராணி மத்ஸூ ஸ்வல்ப ஸா ஸ்தாவரேஷூ ததோதிகா (ஸ்ரீ விஷ்ணு -6-7-63)
அவித்யை கர்மம் -இவற்றால் மறைக்கப்பட்டதாலேயே ஜீவாத்மா ஸ்தாவர –மனுஷ்ய போன்ற
ஏற்றத் தாழ்வுகள் உள்ள சரீரத்தை எடுத்துக் கொண்டு
பிராணன் இல்லாத சரீரத்தில் அல்பமாகவே இந்த சக்தி உள்ளது )-என்கிறபடியே
கர்ம அனுகுணமாக தாரதம்யத்தை யுடைத்தாய்க் கொண்டு

இந்த்ரியாணாம் ஹி சர்வேஷாம் யத்யேகஸா ஷரத் இந்த்ரியம் தேநாஸ்ய
ஷரதி பிரஜ்ஞ்ஞா த்ருதே பாதாதி வோதகம் (மனு -2-99-)
ஒரு குடத்தில் உள்ள நீர் சிறிய துளை வழியே வெளியேறுவது போல்
மனிதனின் ஞானமும் வெளியே செல்கிறது -)-என்கிறபடியே
இந்த்ரிய த்வாரா புறப்பட்டு விஷயங்களை க்ரஹிப்பது மீளுவது ஆகையாலே

தாத்ருசமான விகாசத்தாலும் சங்கோசத்தாலும் வந்த
பிரகாச அப்ரகாசங்களைக் கொண்டு
பிறந்தது நசித்தது என்னக் குறை இல்லை -என்கை –

—————————————————————————————-

சூர்ணிகை -68

அவதாரிகை –

இப்படி இந்த்ரிய த்வாரா பிரசரிக்கிற ஜ்ஞானம் ஏகமாய் இருக்கச் செய்தே
விஷய க்ரஹண வேளையிலே பிரகாசிக்கும் போது
தர்சன ஸ்ரவணாதி சமஜ்ஞ்ஞா பேதத்தை யுடைத்தாய்க் கொண்டு
அநேகத்வேன பிரகாசிக்கிற படி எங்கனே -என்கிற சங்கையிலே அருளிச் செய்கிறார் –

இது தான்
ஏகமாய் இருக்கச் செய்தே
நாநாவாய்த் தோற்றுகிறது
ப்ரசரண பேதத்தாலே –

அதாவது
ஏகமுகமாக ப்ரசரிக்கை அன்றிக்கே
சஷூஸ் ஸ்ரோத்ரா தய அநேக இந்த்ரிய த்வார பிரசரித்து
ரூப சப்த தயா அநேக விஷயங்களை கிரஹிக்கிற விதுக்கு
தர்சன ஸ்ரவணாதி சமஜ்ஞ்ஞா பேதேன தோற்றுகிற நாநாத்வம் பிரசரன பேத நிபந்தனம் என்கை –

இத்தால்–நித்தியமான ஜ்ஞானத்துக்கு உத்பத்தி விநாச வ்யவஹார ஹேது
இன்னது என்று சொன்ன அனந்தரத்திலே
ப்ராசாங்கிகமாக அதனுடைய நாநாத்வேன ப்ரசரன ஹேதுவும் சொல்லப் பட்டது ஆயிற்று –

ஆத்மாவினுடைய தர்ம பூத ஜ்ஞான நித்யத்வம்
ந ஹி விஜ்ஞ்ஞாதா விஜ்ஞ்ஞாதோ விபரிலோபோ வித்யதே
ந ஹி த்ருஷ்டோ விபரிலோபோ வித்யதே (ப்ரு -4-3-30- )
(அறிபவனுடைய அறிவுக்கு அழிவு உள்ளதை இது வரை அறிந்தது இல்லை )-என்றும்

ஜ்ஞானம் வைராக்கியம் ஐஸ்வர்யம் தாமசச மனுஜேஸ்வர
ஆத்மனோ ப்ரஹ்ம பூதஸ்ய நித்யமேத த் சதுஷ்டயம் யதோ தபான கரணாத் க்ரியதே ந ஜலாம் பரமம் சதேவ நீயதே
வ்யக்தி மசதஸ் சம்பவ குத ததா ஹேய குணத்வ மசா தவபோதா தயோ குணா
பிரகாசயந்தே ந ஜனயந்தே நித்யா ஏவாத் மநோ ஹி தே-(ப்ரு -4-3-40 )
(ஞானம் வைராக்யம் ஐஸ்வர்யம் மற்றும் தர்மம் என்று உள்ளதான ப்ரஹ்மத்துடன் ஒப்புமை அடைந்த முக்தனுக்கு
எவ்விதம் இந்த நான்கும் நித்தியமாக உள்ளது
இது எப்படி என்றால் கிணறு வெட்டுவதால் நீரானது உத்பத்தி ஆகாமல் எவ்வாறு தானாகவே வெளிப்படுகிறது
போல் தாழ்ந்த குணங்கள் அனைத்தும் விலகுவதால் ஞானம் வெளிப்படுகிறது
இத்தகைய ஞானம் போன்றவை ஆத்மாவுக்கு நித்யமே ஆகும் )

என்று
ஸ்ருதி ஸ்ம்ருதி யாதிகளில் சொல்லப் பட்டது இறே – –

—————————————————

சூர்ணிகை -69-

இப்படி இருந்துள்ள ஞான நித்யத்வத்தை
அருளிச் செய்தாராய் நின்றார் கீழ்

இனி இதனுடைய த்ரவ்யத்தை உபபாதிப்பதாக
தஜ் ஜிஜ்ஞாஸூ பிரஸ்னத்தை அனுவதிக்கிறார் –

த்ரவ்யமான
படி என்
என்னில் –

————————————————-

சூர்ணிகை -70-

தத் ஹேதுக்களை அருளிச் செய்து த்ரவ்யத்தை
சாதிக்கிறார் –

க்ரியா குணங்களுக்கு
ஆஸ்ரயமாய்
அஜடமாய்
இருக்கையாலே
த்ரவ்யமாகக்
கடவது –

அதாவது
கிரியை ஆவது -சங்கோச விகாசங்கள்
குணமாவது -சம்யோக வியோகங்கள்
அஜடத்வம் ஆவது -ஸ்வயம் பிரகாசத்வம்

க்ரியாஸ்ர்யம் த்ரவ்யம் குணாஸ்ரையோ த்ரவ்யம் (ஒரு செயல் புரிவதற்கு ஏற்ற இடமாக இருத்தல்
குணத்துக்கு இருப்பிடமாக இருத்தல் தானே த்ரவ்யமாக உள்ளத்தின் லக்ஷணம் )-என்று
த்ரவ்ய லஷணம் சொல்லப் படுகையாலே
கிரியாஸ்ர்யத்வமும் குணாஸ்ரயத்வமும் ஓர் ஒன்றே த்ரவ்யத்வ சாதகம்

இவற்றோடு அஜடத்வத்தையும் சொல்லுகையாலே
அதுவும் த்ரவ்யத்வ சாதகம் என்று இவருக்கு கருத்து
எங்கனே என்னில்

ஜட வஸ்துக்களிலே த்ரவ்யாத்ரவ்யங்கள் இரண்டும் உண்டு –
அஜட வஸ்துக்களிலே அத்ர்வ்யமாய் இருப்பது ஓன்று இல்லை இறே

ஆகையால்
ஜ்ஞானம் த்ரவ்யம் அஜடதவாத் யதஜடம் தத் த்ரவ்யம் யாத ஆதமாதி (ஞானம் த்ரவ்யமாகும் –
அது அஜடமாக உள்ளதால் -எது அஜடமோ அது த்ரவ்யம் ஆகும் ஆத்மா போன்று )-என்று
அஜடத்வம் தன்னைக் கொண்டு த்ரவ்யத்வம் சாதிக்கலாம் இறே

ஆகை இறே-
இது தான் அஜடமுமாய் சங்கோச விகாசங்களுக்கும்
சமயோக வியோகாதிகளுக்கும் ஆஸ்ரயமுமாய் இருக்கையாலே த்ரவ்யம் என்று
தத்வ சேகரத்திலும் இவர் அருளிச் செய்தது –

இப்படி த்ரவ்யமாய் இருக்குமாகில் இதுக்கு ஆத்ம குணத்வம் கூடும்படி என் -என்னில்
நித்ய தத் ஆஸ்ரயத்வத்தாலே கூடும்
ஆஸ்ரயா தனயதோ வ்ருத்தே ராஸ்ரயயேண சமந்வயாத் த்ரவ்யத்வம்
ச குணத்வம் ச ஜ்ஞான ஸ்யைவ உப பத்தயதே -(சித்தி த்ரயத்தில் )
(தனக்கு இருப்பிடமான ஆத்மாவுடன் சேர்ந்து உள்ளதாலும் -தனியாக வெளிப்படுவதாலும்
ஞானத்துக்கு குணமாக உள்ள தன்மை மற்றும் த்ரவ்யமுமாக உள்ள தன்மை ஆகியவை உள்ளன )என்று இறே
ஆளவந்தார் அருளிச் செய்தது

ஆஸ்ரயா தந்யதோ வ்ருதித்வம் க்ரியாசரயத்வம் சொன்ன போதே சொல்லிற்று ஆயிற்று
(ஆத்மாவைக் காட்டிலும் வேறே இடத்திலே உள்ள இருப்பு என்பது
செயல் புரிவதற்கு இடமாக உள்ள தன்மையைக் கூறிய போதே கூறப்பட்டதாகிறது )

இது தான் ஜ்ஞானதுக்கே அன்று இறே
தீபாதி தேஜ பதார்த்த பிரபைகளுக்கும் ஒக்கும் இறே
ஆகையால் த்ரவ்யத்வ குணத்வங்கள் இரண்டும் ஜ்ஞானதுக்கு உபபன்னம் –

———————————————————————————-

சூர்ணிகை -71-

கீழே ஜ்ஞானதுக்கு தாம் அருளிச் செய்த அஜடத்வ
விஷயமான ஜிஜ்ஞாஸூ பிரசனத்தை
அனுவதிக்கிறார் –

அஜடம் ஆகில்
ஸூ ஷுப்தி
மூர்ச்சாதிகளில்
தோற்ற வேண்டாவோ
என்னில்

அதாவது
ஞானம் ஸ்வயம் பிரகாசமாய் இருக்குமாகில்
எப்போதும் பிரகாசிக்க வேண்டாவோ
ஸூ ஷூப்தையா அவஸ்தைகளில் பிரகாசியாது ஒழிவான் என் -என்கை

————————————————–

சூர்ணிகை -72-

அதுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார் –

ப்ர ஸ்ரணம்
இல்லாமையாலே
தோற்றாது –

அதாவது
ஜ்ஞானம் ஸ்வ ஆஸ்ரயதுக்கு ஸ்வயம் ஏவ பிரகாசிப்பது தான்
விஷய கிரஹண வேளையிலே இறே
ஸூஷூப்த்யாதி அவஸ்தைகளில் தமோ குணத் யபிபவத்தாலே
சங்குசிதமாய்
திரோஹிதங்களான மணி பிரகாசாதிகளைப் போலே
ப்ர சரணம் இல்லாமையாலே பிரகாசியாது என்கை –

——————————————————-

சூர்ணிகை –73-

இனி மேல் இதனுடைய ஆனந்த ரூபத்தை
உபபாதிக்கிறார் –

ஆனந்த ரூபம்
ஆகையாவது
ஜ்ஞானம் பிரகாசிக்கும் போது
அனுகூலமாய் இருக்கை –

அதாவது
ஞானம் பிரகாசிக்கும் போது ஆவது –
ஸ்வ ஆஸ்ரயதுக்கு விஷயங்களை தர்சிப்பிக்கும் போது –
அப்போது இறே இது தான் பிரகாசிப்பது –

அவ் வஸ்தையிலே அனுகூலமாய் இருக்கை யாவது
அவ்வோ விஷயங்கள் எல்லாம் அனுகூலமாய்த் தோற்றுகையாலே
அவற்றை விஷயீ கரித்த இந்த ஞானம்
ஸ்வ ஆச்ரயத்துக்கு ஸூக ரூபமாய் இருக்கை –

—————————————————————-

சூர்ணிகை -74-

ஆனால் விஷ சஸ்ராதிகளை தர்சிக்கும் போது
அவற்றை விஷயீகரித்த ஞானம் பிரதிகூலமாய் இருப்பான் என் -என்கிற சங்கையை
உட்கொண்டு அருளிச் செய்கிறார் –

விஷ சஸ்ராதிகளை
காட்டும் போது
பிரதிகூல்யமாய் இருக்கைக்கு அடி
தேஹாத்மா ப்ரமாதிகள்-

அதாவது
அவற்றைத் தர்சிப்பிக்கும் போது அவற்றை விஷயீ கரித்த ஞானம்
துக்க ரூபமாய் இருக்கைக்கு காரணம்
அவற்றில் பாதகத்வ புத்திக்கு மூலமான
தேஹாத்மா ப்ரமமும்
கர்மமும்
ஈஸ்வராத்மகத்வ ஜ்ஞான ராஹித்யவமும்-

——————————————————-

சூர்ணிகை -75-

இவை தனக்கு ஸ்வா பாவிக வேஷம் ஏது
என்கிற சங்கையிலே அருளிச் செய்கிறார் –

ஈஸ்வராத்மகம்
ஆகையாலே
எல்லா பதார்த்தங்களுக்கும்
ஆனுகூல்யமே ஸ்வ பாவம்
ப்ராதிகூல்யம் வந்தேறி –

அதாவது
ஜகத் சர்வம் சரீரம் தே (யுத்த -120-126-இந்த ஜகத் முழுவதும் உன் சரீரம் )-என்றும்
தானி சர்வாணி தத் வபு (ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-86–இவை அனைத்தும் அவனுடைய சரீரம் )-என்றும்
தத் ஸர்வம் வை ஹரேஸ் தனு -(ஸ்ரீ விஷ்ணு -1-22-78-அனைத்தும் ஸ்ரீ ஹரியின் சரீரம் ) -என்றும்
சகல பதார்த்தங்களும் பகவத் சரீரம் என்று சாஸ்த்ரங்களிலே சொல்லப் படா நின்றது இறே –

அப்படி பகவதாத்மகமாக காணும் போது சகலமும்
அனுகூலமாய்க் கொண்டு தோற்றுகையாலே
எல்லா பதார்த்தங்களுக்கும் ஆனுகூல்யமே ஸ்வ பாவம்

இவற்றில் தோற்றுகிற பிராதிகூல்யம்
தேஹாத்மா பிரமாதி மூலம் ஆகையாலே
வந்தேறி -என்கை-

——————————————————-

சூர்ணிகை -76-

அவதாரிகை –
இப்படி ஈஸ்வராத்மகம் ஆகையாலே சகல பதார்த்தங்களுக்கும்
ஆனுகூல்யமே ஸ்வ பாவம் என்பான் என்
சந்தன குஸூமாதிகளில் உண்டான ஆனுகூல்யம் ஸ்வா பாவிகம் அன்றோ
என்கிற சங்கையின் மேலே அருளிச் செய்கிறார் –

மற்றைய அனுகூல்யம்
ஸ்வா பாவிகம் ஆகில்
ஒருவனுக்கு ஒருக் கால் ஓர் இடத்திலே
அனுகூலங்களான சந்தன குசஸூமாதிகள்
தேசாந்தரே
காலாந்தரே
இவன் தனக்கும்
அத் தேசத்திலே அக் காலத்திலே
வேறே ஒருவனுக்கும்
பிரதிகூலங்களாகக் கூடாது

மற்றைய அனுகூல்யம் -என்கிறது
தாம் அருளிச் செய்த
பகவதாத்மகத்தாலே வந்து ஆனுகூல்யத்தை ஒழிய
சந்தன குஸூமாதி பதார்த்தங்களில் தோற்றுகிற ஆனுகூல்யத்தை

அது அவற்றுக்கு ஸ்வா பாவிகம் ஆகில்
போக்தவாய் இருப்பவனுக்கு ஒரு காலத்திலே ஒரு தேசத்திலே
அனுகூலங்களாக இருந்தவை
காலாந்த்ரத்திலே ஆதல் தேசாந்தரத்திலே ஆதல்
இவன் தனக்கே பிராதிகூல்யங்கள் ஆவது
இவனுக்கு அனுகூல்யங்களாய் இருக்கிற தேச காலங்கள் தன்னிலே வேறே ஒருவனுக்கு
பிரதிகூலங்கள் ஆவதாகை கூடாது
இப்படி பிரதிகூலங்களாக தோற்றக் காணா நின்றோம் இறே

ஆகையால் பகவதாத்மகத்வ நிபந்தனமான ஆனுகூல்யமே ஸ்வா பாவிகம்
மற்றவை அனுகூல்யம் ஸ்வா பாவிகம் அன்று என்கை-

வசதே வேக மேவ துக்காய ஸூகாயோமஷ மாகாயா ச கோபாய ச யதச தஸ்மாத் வஸ்து
வஸ்தவா தமகமகுத
ததேவ ப்ரீத்யே பூத்வா புநர் துக்காயா ஜாயதே
ததேவ கோபாய யத் பிரசாதாய ச ஜாயதே
தஸ்மாத் துக்காத் மகம் நாஸ்தி ந ச கிஞ்சித் ஸூகாத்மகம் (ஸ்ரீ விஷ்ணு -2-6-46/47 )
(ஒரு பொருளே ஒரு நேரத்தில் இன்பமாகவும் மற்ற ஒரு நேரத்தில் துக்கத்தை அளிப்பதாகவும் உள்ளது
எது கோபத்தைத் தூண்டியது அதுவே அமைதியை அளிப்பதாகவும் மாறுகிறது
ஆகவே இயல்பாகவே துக்கமானது என்றும் இன்பமானது என்றும் ஏதும் இல்லை ) -என்று
இவ் வாதம் வியாச பகவானாலே விசதமாகச் சொல்லப் பட்டது இறே

இத்தால் சொல்லிற்று ஆய்த்து என் என்னில்
விஷ சஸ்த்ராதிகள் பிரதிகூலங்களாயும்
சந்தன குஸூமாதிகள் அனுகூலங்களாயும் தோற்றுகிறது
தேஹாத்மா பிரமாதிகளாலே ஈஸ்வராத் மகமாகையாலே
எல்லா பதார்த்தங்களுக்கும் ஆனுகூல்யமே ஸ்வ பாவம் ஆகையாலே
அவ் வாகாரத்தாலே காணும் போது
சர்வ விஷய பிரகாசன தசையிலும் ஆனந்த ரூபமாய் இருக்கும் என்றது ஆய்த்து –

ஆக
கீழ் செய்தது ஆயிற்று
சித் என்கிறது ஆத்மாவை -என்று
முதலிலே சித் சப்த வாச்யமான ஆத்மாவை உத்தேசித்து

அநந்தரம்
தேஹாதி விலஷணமாய் -என்று தொடங்கி
சேஷமாய் இருக்கும் -என்னும் அளவாக
உக்த லஷணத்தை பரீஷித்து

அநந்தரம்
ஏவம் பூதமான ஆத்மா ஸ்வரூபம் பத்த முக்த நித்ய ரூபேண
த்ரி பரிகாரமாய் இருக்கிற படியையும்

பக்தாத்மாக்களுக்கு அவித்யாதிகள் யுண்டாகைக்கு ஹேதுவையும்
தந் நிவ்ருத்தி க்ரமத்தையும்
த்ரிவித வர்க்கமும் தனித்தனியே அனந்தமாய் இருக்கும் படியையும் சொல்லி –

அந்த ஜீவா நந்த்ய பிரதி படமான ஏக ஆத்ம வாதத்தை யுக்தி சாஸ்த்ரங்களாலே நிரசித்து
ஆத்மா பேதத்தை சாதித்து

முன்பு விஸ்தரேண சொன்ன படி அன்றிக்கே ஸூக்ரமமாக
த்ரிவித ஆத்மாக்களுக்கும் யுண்டான
லஷணத்தை தர்சிப்பித்து

அநந்தரம்
ஜ்ஞானத்துக்கும் ஸ்வரூபத்துக்கும் யுண்டான சாதர்ம்ய வைதர்ம்யங்களை சொல்லி
ஜ்ஞான விபுத்வ பிரசங்கத்திலே த்ரிவித சேதனருடைய ஞானத்துக்கும் யுண்டான விசேஷத்தை சொல்லி

முன்பு ஞானத்துக்கு சொன்ன
நித்யத்வ
த்ரவ்யத்வ
அஜடத்த்வ
ஆனந்த
ரூபத்வங்களை
அடைவே உபபாதித்து

இப்படி சித் தத்தவத்தின் யுடைய வேஷத்தை அருளிச் செய்து
தலைக் கட்டினார் –

சித் பிரகரணம் முற்றிற்று

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

தத்வ த்ரயம் – சித் பிரகரணம்-சூர்ணிகை -42-60 –ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —

July 31, 2014

சூர்ணிகை -42-

அவதாரிகை –

இனி ஏவம் பூதமான ஆத்மா ஸ்வரூபம் அநாதயசித சம்பந்த
தத் வியோக
தத் அன்வயங்களாலே
பத்த
முக்த
நித்ய
ரூபேண த்ரி பிரகாரமாய் இருக்கும் படியை
அருளிச் செய்கிறார் –

ஆத்ம ஸ்வரூபம் தான்
பக்த
முக்த
நித்ய
ரூபேண
மூன்றுபடிப் பட்டு இருக்கும் –

———————————————

சூர்ணிகை -43-

இதில் பத்தர் என்கிறது ஆரை என்னும் ஆகாங்ஷையிலே
அருளிச் செய்கிறார்

பத்தர் என்கிறது
சம்சாரிகளை –

அதாவது பக்தர்கள் ஆகிறார்கள்
தில தைல வத் தாரு வஹ்நி வத் துர் விவேச குண த்ரயாத்மக அநாதி
பகவந் மாயா திரோஹித ஸ்வ ஸ்வரூபராய் அநாதி அவித்யா சஞ்சித அநந்த
புண்ய பாப ரூப கர்ம வேஷ்டிதராய்
தத் கர்ம அனுகுண விவித விசித்திர தேவாதி ரூப தேக விசேஷ ப்ரவிஷ்டராய்
அவ்வோ தேகங்களில் அஹம் புத்தியைப் பண்ணியும்
தேக அனுபந்திகளில் மமதா புத்தியையும் பண்ணி
துர்வாசனா ருசி விவசராய் ஸ்வ ஸ்வ கர்ம அனுகுண
ஸூக துக்க பரம்பரைகளை
அனுபவிக்குமவர்கள் –

———————————————————————————-

சூர்ணிகை -44-

இனி முக்தர் என்கிறது ஆரை என்னும் ஆகாங்ஷையிலே
அருளிச் செய்கிறார் –

முக்தர்
என்கிறது
சம்சார சம்பந்தம்
அற்றவர்களை –

அவர்கள் ஆகிறார்கள் –
அநாதி கர்ம -ப்ரவாஹ பிரயுக்தமான சம்சார சம்பந்தம் நடவா நிற்கச் செய்தே
மோஷ ருசிக்கு பிரதிபந்தகமான கர்ம விசேஷம் அனுபவத்தாலே ஆதல்
சாமான்யேன அனுஷ்டிக்கும் பிராயச் சித்த கர்மங்களாலே யாதல்
அநபி சம்ஹித பலமாய அதியுத் கடமான ப்ரமாதிக புண்யங்களாலே ஆதல் –
ஷயித்து-அது அடியாக –

ஜாயமான தசையில் பகவத் கடாஷத்தால் யுண்டான
சத்வோத் ரேகத்தாலே மோஷ ருசி பிறந்து
சத் குரு சமாஸ்ரயண சம் பிராப்த வேதாந்த வேத்ய
பர ப்ரஹ்ம ஞானராய்
தத் பிராப்தி ரூப மோஷ சித்யர்த்தமாக
ஸ்வ வர்ண ஸ்வ ஆஸ்ரம உசிதமான கர்மங்களை பல சங்க கர்த்ருத்வ
த்யாக பூர்வகமாக அனுஷ்டித்து

தர்மேண பாப மப நுததி -(தைத் –2-6-தர்மங்களால் பாபத்தை விலக்குகிறான் )என்றும்
கஷாயே கர்ம அபி பக்வே ததோ ஜ்ஞானம் ப்ரவர்ததே
(புண்யங்களால் ஞான உதய பிரதிபந்த வினைகள் கழிந்து ஞானம் பிறக்கிறது )-என்றும்
சொல்லிற்றே

அந்த சத் கர்ம அனுஷ்டானத்தாலே ஜ்ஞான உத்பத்தி விரோதி
ப்ராசீன கர்மம் ஷயித்த வாறே அந்தக்கரணம் நிர்மலமாய்
பகவத் ஏக அவலமபியான சமயக் ஞானம் உதித்து
அநந்தரம் –

ஜன்மாந்தர சஹஸ்ரேஷூ தபோ ஞான சமாதபி நராணாம்
ஷீண பாப நாம் கிருஷ்ண பக்தி பிரஜாயதே -என்கிறபடியே

இப்படி பஹூதர ஜன்ம சாத்தியமான கர்ம ஞானங்களால் பிறந்த
தைல தாராவத் அவிச்சின்ன ஸ்ம்ருதி சந்தான ரூப பக்தி மூலமாக வரும்
பகவத் பிரசாதத்தாலே ஆதல் –
அன்றிக்கே
தன்னுடைய நிர்ஹேதுக சௌஹாரத்த விசேஷத்தாலே
யாத்ருச்சிகாதி ஸூஹ்ருத
பரம்பரைகளை கல்பித்து அது அடியாக விசேஷ கடாஷத்தை பண்ணி

அநந்தரம்
அத்வேஷத்தை ஜனிப்பித்து
ஆபிமுக்யத்தை யுண்டாக்கி
சாத்விக சம்பாஷணத்தை விளைத்து

அவ் வழியாலே
சதாச்சார்யா சமாஸ்ரயணத்திலே மூட்டி
தத் உபதேச முகேன தத்வ ஞானத்தை பிறப்பித்தல்
தன்னுடைய விசேஷ கடாஷம் தன்னாலே தத்வ ஞானத்தை பிறப்பித்தல் செய்து
மகா விஸ்வாச பூர்வகமாக தன் திருவடிகளை உபாயம் என்று நிற்கும்படி பண்ணும்
பகவத் ஆகஸ்மிக கிருபையாலே உபாயாந்தர விஷயத்தில் பிறந்த
துஷ்கரத்வாதி புத்தி மூலமாக வரும் ப்ரபதன மூலமான
பகவத் பிரசாதத்தாலே யாதல் சம்சாரிக்க சகல திருத்தங்களும் கழிந்து
ஆவிர் பூத ஸ்வரூபராய்
பகவத் அனுபவ கைங்கர்ய ஏக போகரானவர்கள் –

அவிசேஷண-முக்தர் -என்கிறது
சம்சார சம்பந்தம் அற்றவர்களை -என்கையாலே
பகவத் அனுபவத்தில் ருசி இன்றிக்கே
தத் சமாஸ்ரயணத்தைப் பண்ணி
சம்சார நிவ்ருதியை யுண்டாக்கிக் கொண்டு
தேச விசேஷத்திலே போய் ஸ்வ ஸ்வரூப அனுபவம் பண்ணி இருக்கும்
கேவலரையும் சொல்லிற்று ஆயிற்று –

—————————————————————————

சூர்ணிகை -45-

இனி நித்யர் என்கிறது ஆரை என்னும் ஆகாங்ஷையிலே
அருளிச் செய்கிறார் –

நித்யர் என்கிறது
ஒருநாளும் சம்சரியாத
சேஷ
சேஷசநாதிகளை –

இத்தால் முக்தரை வ்யாவர்த்திக்கிறது –
நிவ்ருத்த சம்சாரர் இறே அவர்கள் –
இவர்கள் அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தர் இறே

அஹ்ருத சஹஜ தாஸ்யாஸ் ஸூராயஸ் சரஸ்த பந்தா (ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -2-32 )(
அபகரிக்கப் படாமல் உள்ள இயல்பான கைங்கர்யம் பெற்ற நித்யர்கள் )என்றார் இறே பட்டர் –
நித்யோ நித்யா நாம (கட -5-13- நித்யர்களில் நித்யமானவனும் )-என்றும்
ஜ்ஞாஜஜௌ த்வாவஜா வீச நீ சௌ (ஸ்வே -1-9-)
(பிறப்பற்ற இரண்டில் ஓன்று அறிந்ததும் ஓன்று அறியாததும் –
ஓன்று வலிமை உடையதும் ஓன்று வலிமை அற்றதும்)-என்றும் சொல்லுகிறபடியே
ஆத்ம ஸ்வரூபம் நித்தியமாய் இருக்கச் செய்தே

அசந்நேவ-(தை -2-6-1-இல்லாதவர்கள் ஆகிறார்கள்)என்பது
சந்தமேனம் (தை -2-6-1-இருப்பவர்கள் ஆகிறார்கள் )-என்பது ஆகிறது
பகவத் விஷய ஞான ராஹித்ய சாஹித்யங்களாலே இறே

ஆகையால் இவர்களை நித்யர் என்கிறதும்
பகவத் ஞானத்துக்கு ஒரு நாளும் சங்கோசம் இல்லாமையாலே என்று கொள்ள வேணும்

இந்த வைபவத்தைப் பற்றி இறே
யத்ர பூர்வே சாத்யாஸ் சந்தி தேவா (எந்த பரமபதத்தில் பகவத் அனுபவத்தில் முதன்மையாக நித்யர்கள் உள்ளனரோ)-என்றும்
யத்ர ருஷய பிரதமஜா யே புராணா (எந்த பரமபதத்தில் அனைத்தையும் நேரே காணக் கூடிய நித்யர்கள் முன்பே உள்ளனரோ )-என்றும்
ஸ்ருதி இவர்களை ஸ்லாகிக்கிறது

ஸ்ரீ பாஷ்ய காரரும் இவர்கள் யுடைய வைபவத்தை
ஸ்வ சந்தா அனுவர்த்தி (பகவானுடைய இச்சையை பின்பற்றியே உள்ள )இத்யாதியாலே
ஸ்ரீ கத்யத்திலே பரக்க அருளிச் செய்தார்

ஆகையால் -ஒரு நாளும் சம்சரியாதே -என்ற போதே -இவர்களுடைய
வைபவம் எல்லாம் சொல்லிற்று ஆயிற்று

அசேஷ சேஷ வ்ருத்தியிலும் அந் விதனாய்
கைங்கர்ய பரர்க்கு எல்லாம் படிமாவாய் இருக்கையாலே
திரு வநந்த வாழ்வானை சேஷன் என்கிறது –

நிவாச சய்யா ஆசனம் பாதுகாம் சுகோபதாந வர்ஷ ஆதப வாராணாதிபி
சரீர பேதைஸ் ச தவ சேஷதாம் கதைர் யசோசிதம சேஷ இதீரிதே ஜனை (ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -40-)-என்று இறே
ஸ்ரீ ஆளவந்தாரும் அருளிச் செய்தது –

மற்றுள்ள ததீயரைப் போலே அநியமமாய் இராதே சர்வேஸ்வரன் அமுத செய்த சேஷம் ஒழிய
அமுது செய்யாத நியமத்தைப் பற்ற சேஷாசனர் என்று
சேனை முதலியாரை நிரூபிக்கிறது
த்வதீய புக்தோ ஜஜித சேஷ போஜினா-(ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -42 ) என்றார் இறே ஆளவந்தாரும்
வநாத்ரி நாதஸ்ய ஸூ ஸூந்தரஸ்ய வை ப்ர புக்த சிஷ்டாச் யத ஸைந்ய ஸத்பதி (ஸ்ரீ ஸூந்தர பஹு ஸ்தவம் 74) –
என்று ஆழ்வானும் அருளிச் செய்தார் –

ஆதி -சப்தத்தாலே
சேஷ சேஷாசன கருட ப்ரமுக நாநாவித அநந்த பரிஜன பரிஜாரிக பரிசரித சரண யுகள -என்கிறபடியே
பகவத் கைங்கர்ய ஏக போகராய் இருந்துள்ள வைனதேய பிரமுகரான நித்ய சித்தரை எல்லாம் சொல்லுகிறது –

—————————————————————————————————-

சூர்ணிகை -46-

அவதாரிகை –
பூர்வோகதமான ஸ்வரூப வைலஷ்ண்யத்தை யுடைய ஆத்மாவுக்கு
அவித்யாதி தோஷ சம்பந்தம் வந்தபடி என்-
என்கிற சங்கையில்
சத்ருஷ்டாந்தமாக தத் ஹேதுவை அருளிச் செய்கிறார் –

ஜலத்துக்கு அக்னி சம்ம்ஸ்ருஷ்ட
ஸ்தாலீ சம்சர்க்கத்தாலே
ஔஷண்ய
சப்தாதிகள்
யுண்டாகிறாப் போலே

ஆத்மாவுக்கும் அசித் சம்பந்தத்தாலே
அவித்யா
கர்ம
வாசனா
ருசிகள்
உண்டாகிறன-

அதாவது
ஸ்வ பாவாத ஏவ நிர்விகாரமாய் சீதளமாய் இருக்கிற ஜலத்துக்கு
அக்னியோடு சம்ஸ்ருஷ்டியான ஸ்தாலியோட்டை சம்சர்க்கத்தாலே
ஔ ஷண்ய சப்தோத்ரேக ரூபங்களான விகாரங்கள் யுண்டாகிறாப் போலே

ஸ்வத ஞான ஆனந்த அமல ஸ்வரூபனான ஆத்மாவுக்கும்
குண த்ரய ஆஸ்ரய அசித் சம்பந்தத்தாலே
அவித்யா கர்மா வாசனா ருசிகள் உண்டாகிறன என்கை-

இவருடைய திருத் தம்பியாரும் ஆச்சார்ய ஹிருதயத்திலே(10)
அவித்யா காரணம் அநாதி அசித் சம்பந்தம் -என்று அருளிச் செய்தார் இறே

இப்படி ஸ்ரீ விஷ்ணு புராணத்திலே (6-7-22)
நிர்வாணமய ஏவாயமாத்மா ஞான மயோமல துக்காஞ்ஞா நாமலா
தர்மா பிரக்ருதேஸ் தே ந சாத்மந ஜலஸ்ய ச அக்னி
சம்ஸ்ருஷ்ட ஸ்தாலீ சங்காத ததாபி ஹி சப்தோத்ரேகாதிகான்
தர்மான் தத் கரோதி யதா முனே ததாத்மா ப்ரக்ருதௌ
சங்காத அஹம் மாநாதி தூஷித
பஜதே ப்ராக்ருதான் தர்மா நன்ய ஸ்தேப்யோபி சோவ்யய–என்று சொல்லப் பட்டது –

1-அவித்யை யாவது -அஞ்ஞானம்
அது தான் ஜ்ஞான ஜ்ஞான அநுதய -அந்யதா ஞான –விபரீத ஞான
ரூபேண அநேக விதமாய் இருக்கும்

2-கர்மமாவது கரண த்ரய க்ருதமாய் புண்ய பாபாத்மகமான க்ரியா விசேஷம்
அதில் புண்யம் ஐஹிக ஆமுஷ்மிக நானா வித போக சாதன தயா பஹூ விதமாய் இருக்கும்
பாபமும் அக்ருத்ய கரண கிருத்திய அகரண பகவத் அபசார பாகவத் அபசாரா அசஹ்யா அபசார ரூபேண அநேகவிதமாய் இருக்கும்

3-வாசனை ஆவது முன்பு செய்து போந்த வற்றில் மீளவும் மூளுகைக்கு உறுப்பான சம்ஸ்காரம்
இது தான் ஹேது பூதத்தாலே பஹூ விதமாய் இருக்கும்

4-ருசியாவது ரசாந்தரத்தாலும் மீட்க ஒண்ணாத படி ஒன்றிலே செல்லுகிற விருப்பம்
இதுவும் விஷய பேதத்தாலே பஹூ விதமாய் இருக்கும்

அவித்யா கர்மா வாசனா ருசிகள் உண்டாயிற்றன -என்னாமல்-
உண்டாகிறன -என்கையாலே
இவற்றின் உடைய ப்ரவாஹ ரூபத்வம் சொல்லப் பட்டது-

————————————————————————————————

சூர்ணிகை -47

இப்படி ஆத்மாவுக்கு வந்தேறியான அவித்யாதிகள் தான்
எவ் வவஸ்தையில் கழிவது
என்னும் ஆகாங்ஷையிலே அருளிச் செய்கிறார் –

அசித்து கழிந்த வாறே
அவித்யாதிகள்
கழியும்
என்பார்கள் –

அதாவது
காரண நிவ்ருதயயா கார்ய நிவ்ருத்தி யாகையாலே
அசித் சம்பந்தம் நிபந்தனமாக வந்த இவையும்
தத் சம்பந்தம் கழிந்தவாறே கழியும் என்று தத்வ வித்துக்கள் சொல்லுவார்கள் -என்றபடி

என்பார்கள் -என்ற இத்தை பர மதமாக்கி
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்களுக்கு பகவத் பிரசாத விசேஷத்தாலே
அசித்து கழியும் முன்னே அவித்யாதிகள் கழியக் காண்கையாலே
அந்த நியமம் இல்லை என்று இவருக்கு கருத்து என்று சொல்லுவாரும் உண்டு

அது முக்கியம் அன்று
அவர்கள் திரு மேனியோடு இருக்கச் செய்தே பரம பக்தி பர்யந்தமாகப் பிறந்ததே யாகிலும்
வினைப் படலம் விள்ள விழித்து உன்னை மெய் உற்றால் உள்ள உலகளவும்
யானும் உளன் ஆவான் என் கொலோ (பெரிய திருவந்தாதி 76)-என்கையாலே
சர்வம் ஹ பஸ்ய பஸ்யதி (சாந்தோக்யம் -ப்ரஹ்மத்தைக் கண்டவன் அனைத்தையும் கண்டவன் ஆகிறான் )
என்கிற முக்த அவஸ்தையில் வைசத்யம்
அசித்து கழிவதற்கு முன்பு இல்லாமையாலே –

ஆக
கீழ்ச் செய்தது ஆயிற்று
ஆத்ம ஸ்வரூபம் பத்த முக்த நித்ய ரூபேண
மூன்று படிப் பட்டு இருக்கும் என்றும்
அதில் பக்த சேதனருக்கு அவித்யா உத்பத்தி மூலமும்
தந் நிவ்ருத்தி கரமும்
சொல்லி நின்றது –

——————————————————————————————

சூர்ணிகை -48-

இப்படி உக்தமான த்ரிவித ஆத்மா வர்க்கமும்
இத்தனை சேதனர் என்று சங்கயேயமாய் இருக்குமோ
என்கிற சங்கையிலே அருளிச் செய்கிறார் –

இம் மூன்றும்
தனித் தனியே
அனந்தமாய்
இருக்கும் –

அதாவது
வர்க்ய த்ரயமுமாக அநந்தம் என்று தோற்றும் என்று நினைத்து
தனித் தனியே என்று விசேஷிக்கிறார் –

அனந்தமாய் இருக்கும் என்றது
அசங்கயேயமாய் இருக்கும் என்றபடி –

—————————————————-

சூர்ணிகை -49-

உக்தமான ஜீவ அனந்யத்துக்கு விரோதியான
ஐக ஆத்ம்ய வாதத்தை நிராகரிக்கிறார் மேல் –

சிலர்
ஆத்மா பேதம் இல்லை
ஏக ஆத்மாவே உள்ளது
என்றார்கள் –

சிலர் என்று அநாதரோ கதியாலே அருளிச் செய்கிறார்
இப்படி சொல்லுமவர்கள் தாங்கள் ஆரோ என்னில்
ஜீவ அத்வைத பிரதிபாதிக சாஸ்த்ரத்தில் குத்ருஷ்டிகள்

அதாவது
ப்ரஹ்ம அத்வைதம் என்றும்
ஜீவ அத்வைதம் என்றும்
சாஸ்திர பிரதிபாத்யமான அத்வைதம் த்விவிதமாய் இருக்கும்

அதில் ப்ரஹ்ம அத்வைதம் ஆவது
பிரகார்ய அத்வைதம்
ஜீவ அத்வைமாவது
பிரகார அத்வைதம்

இதுக்கு நியாமகம் ஏது என்னில்
ப்ரஹ்ம ப்ரகரணங்களில் —
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம -(சாந்தோக்யம் -3-14-1-இவை அனைத்தும் ப்ரஹ்மம் )
ஐத தாத்ம்யம் இதம் சர்வம் -(சாந்தோக்யம் -6-8-7-அனைத்தும் ப்ரஹ்மத்தை ஆத்மாவாகக் கொண்டது )
புருஷ ஏவேதம் சர்வம் (ஸ்வே -3-15-இந்தப் புருஷனே இவை அனைத்தும் )-என்று
சாமாநாதி கரண்யத்தாலே ப்ரஹ்மாத்வைதத்தை பிரதிபாதிக்கையாலும் –

சாமாநாதி கரண்யம் பிரகார பேத விசிஷ்ட பிரகாரயேகத்வ பரமாகையாலும் –

ஏகஸ் சன் பஹூதா விசார (பரமாத்மா ஒன்றாக இருந்தபடி பலவற்றையும் வியாபிக்கிறான் )-என்று
பிரகார பஹூத்வம் கண்டோக்த மாகையாலும்

ஐக்ய விதிக்கு சேஷமான –
தேக நா நாஸ்தி (ப்ரஹ்மாவை விடுத்து ஏதும் இல்லை )–இத்யாதி
பேத நிஷேதம் விஹித ஐக்ய விரோதி பேத விஷயமாகையாலும்

பிரகாரி பஹூத்வ நிஷேத பரமாகையாலும்

ந தத் சமச் சாப்யதி கச்ச த்ருஸ்யதே (ப்ரஹ்மதுக்கு நிகரானதும் மேலானதும் காணப்படுவது இல்லை )-என்று
ப்ரஹ்ம துல்ய பிரகாராந்தர நிஷேத
கண்டோக்தியாலும் பிரகார அத்வைதமே ப்ரஹ்ம அத்வைதம்-

ஜீவ பஹூத்வம் ஸ்ருதி சித்தமாகையாலும்
அல்லாத போது பக்த முக்த வ்யவஸ்த அனுபபத்தியாலும்
உபதேச அனுபபத்தியாலும்
ஸூகாதி வ்யவஸ்த அனுபபத்தியாலும்

புமாந் ந தேவோ ந நரோ ந பசுர் ந ச பாதப சதுர்விதோ விபே தோயம் மித்தயா ஜ்ஞான நிபந்தன
தேவாதி பேத அபத் வஸ்தே (ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-13-98 )
(ஜீவாத்மா தேவனும் அல்லன் -மனிதனும் அல்லன் -ஸ்தாவரம் அல்லன் -விலங்கு அல்லன் என்று
கூறப்பட்ட நான்கு விதமான வேறுபாடுகள் தவறான ஞானத்தால் ஏற்படுகிறது
தேவன் முதலான வேறுபாடுகள் நீங்கும் போது மெய்யான ஞானம் ஏற்படுகிறது )-இத்யாதி களிலே
தேவாதி சரீர பேத விசேஷ நிஷேதம் கண்டோக்தமாகையாலும்
முக்தாத்மாக்களுக்கு சாம்யத்தை ஸ்ருதி சொல்லுகையாலும் ஜீவ அத்வைதம் பிரகார அத்வைதமே

இது தான் ஸ்ருத பிரகாசிகையிலே
ஆதிபரத -சதுஸ்லோகீ வியாக்யான உபக்ரமத்திலே
ப்ரஹ்ம அத்வைதம் ஜீவாத வைதஞ்சேத்ய அத்வைதம் த்விவிதம் சாஸ்திர பிரதிபாத்யம் -என்று தொடங்கி
ஸ்ரீ வேத வியாச பட்டராலே விஸ்தரேண பிரதிபாதிக்கப் பட்டது –

இப்படி சாஸ்த்ரத்தில் சொல்லப் படுகிற ஜீவ அத்வைதத்துக்கு ஹிருதயம் அறியாதே
ஆத்ம பேதம் இல்லை -ஏகாத்மாவே உள்ளது என்று
சில குத்ருஷ்டிகள் சொன்னார்கள் -என்கை-

——————————————————————————–

சூர்ணிகை -50-

அது அயுக்தம் என்னும் இடம் சாதிக்கிறார் –
அந்த பஷத்தில்
ஒருவன்
ஸூகிக்கிற காலத்தில்
வேறே ஒருவன்
துக்கிக்க கூடாது –

அதாவது
அப்படி ஆத்ம பேதம் இல்லாத பஷத்தில்
அஹம் ஸூகி -என்று ஒருவன் ஸூகோத்தரனாய் இருக்கிற காலத்தில்
அஹம் துக்கீ -என்று ஒருவன் துக்கோதரனாய் இருக்கிற
இந்த ஸூக துக்க வியவஸ்தை கூடாது என்கை

ஸூக துக்கங்கள் இரண்டும் ஏக ஆஸ்ரய கதமாகில்
உபய பிரதி சந்தானமும் ஒருவனுக்கே யுண்டாக வேணும் இறே
ஆகையால் ஸூக துக்கங்கள் நியதங்கள் ஆகையாலே
ஆத்மா பேதம் யுண்டாக வேணும் என்று கருத்து-

—————————————————————

சூர்ணிகை -51-

அந்த ஸூக துக்க வியவஸ்தைக்கு ஹேது
தேக பேதம் என்கிறவர்கள் உக்தியை அனுவதிக்கிறார்

அது
தேக பேதத்தாலே
என்னில்

————–

சூர்ணிகை -52-

அதுக்கு அனுபபத்தி சொல்லுகிறார் –

சௌபரி சரீரத்திலும்
அது
காண
வேணும் –

அதாவது
தேஹ பேதம் ஸூக துக்க நியமத்துக்கு ஹேது என்றாகில்
ஜன்மாந்தர அனுபவத்தை இந்த ஜன்மத்திலே ஸ்மரிக்க வேண்டாவோ -என்னில்

ஸ்மரியாது ஒழிகிறது சம்ஸ்காரத்தின் யுடைய அனுதபவத்தாலே ஆதல்
நாசத்தாலே ஆதல்
சரீராந்தரத்தில் ஸூக துக்க ச்ம்ரிதாதிகள் இன்றிக்கே ஒழிகிறதும்
இரண்டில் ஒன்றாலே என்னில்
ஒரு சரீரம் தன்னிலும் ஸ்ம்ருதி கூடாது ஒழிய வேணும்

ஆகையால்
ஸூக துக்க நியமத்துக்கு
ஹேது தேக பேதம் என்ன ஒண்ணாது-

———————————————————–

சூர்ணிகை -53-

இப்படி ஸூக துக்க வ்யவஸ்த அனுபபத்தியே என்று
ஏகாத்மா என்னும் பஷத்தில்
பக்த முக்தா வ்யவஸ்தா அனுபபத்தியும்
சிஷ்யாச்சார்யா வ்யவஸ்தா அனுபபத்தியும்
யுண்டு என்கிறார் மேல்

ஒருவன் சம்சரிக்கையும்
ஒருவன் முக்தனாகையும்
ஒருவன் சிஷ்யனாகையும்
ஒருவன் ஆச்சார்யனாகையும்
கூடாது

அதாவது -ஏகாத்மா வாகில் –
அநேக ஜன்மம் ஸஹஸ்ர ஸீம் சம்சார பதவீம் வ்ரஜந் மோஹ சரமம்
ப்ரயா தோ சௌ வாசநா ரேணு குண்டித (ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-19 )
(பல ஆயிரக் கணக்கான பிறவிகளில் சம்சாரத்தில் உழன்றபடி
மயக்க வாசனைகளால் உண்டாகும் துன்பத்தை அடைகிறான் )-என்கிறபடியே
ஒருவன் சம்சரிக்கையும்

சுகோ முக்கோ வாமதேவோ முக்த (சுகர் முக்தரானார் வாமதேவர் முக்தரானார் )–என்கிறபடியே
ஒருவன் முக்தனாகையும்

தத் விஞ்ஞாநார்த்தம் ச குருமே வாபி கச்சேத் சமித் பாணி ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம்
தஸ்மை ச விதவான் உபசந்நாய சம்யக் பிரசாந்த சித்தாய சமாந் விதாய
யே நாஷரம் புருஷம் வேத சத்யம் ப்ரோவாச தாம் தத்வதோ ப்ரஹ்ம வித்யாம் (முண் -1-2-12.13)
(இத்தகைய ப்ரஹ்ம ஞானத்தை அடையும் பொருட்டு வேதங்களை அத்யயனம் செய்த அவன் –
அவன் கையில் ஸமித் போன்றவற்றை எடுத்தவனாக வேத அத்யயனம் செய்தவரும்
ப்ரஹ்மத்தைக் குறித்து நன்கு அறிந்தவரும் ஆகிய ஆச்சார்யனை அடைய வேணும் தன்னிடம் வந்தவனும் –
தன்னிடம் வணக்கம் நிறைந்தவனும் தனது மனத்தை வசப்படுத்தினவனும் ஆகிய அந்த சிஷ்யனுக்கு
ஆச்சார்யன் செய்ய வேண்டியது என்ன என்னில் -தான் எந்த ஒரு வித்யை மூலமாக
ஸ்வரூபம் மற்றும் குணங்களால் மாறுபாடு இல்லாத பரமபுருஷனை அறிகின்றாரோ
அத்தகைய ப்ரஹ்ம வித்யையை அந்தச் சிஷ்யனுக்கு நேர்மையாக உபதேசிக்க வேண்டும் ) -என்கிறபடியே
ஒருவன் சிஷ்யனை வந்து உபசத்தி பண்ண
ஒருவன் ஆச்சார்யனாய் இருந்து அவனுக்கு உபதேசிக்கையும் கூடாது என்கை-

————————————————————————

சூர்ணிகை -54-

இன்னமும் ஒரு அனுப பத்தி சொல்லுகிறார் –

விஷம
சிருஷ்டியும்
கூடாது –

அதாவது ஏகாத்மா வாகில்
தேவ திர்யகாதி ரூபேண சில ஸூகோத்தரமாகவும்
சில துக்க கோத்தரமாகவும்
இப்படி லோகத்தில் பதார்த்தங்களை விஷமமாக சர்வேஸ்வரன் சிருஷ்டிக்க கூடாது என்கை

ஜீவ பேதமும்
கர்ம தாரதர்யமும் இறே
விஷம சிருஷ்டிக்கு ஹேது-

———————————————————————————————–

சூர்ணிகை -55-

இப்படி யுக்தியாலே அநேக விரோதங்களை தர்சிப்பித்தார் கீழ்
இவ்வளவே அன்று –
இப் பஷத்துக்கு ஸ்ருதி விரோதமும் யுண்டு -என்கிறார் –

ஆத்ம பேதம்
சொல்லுகிற
ஸ்ருதியோடும்
விரோதிக்கும் –

அதாவது -ஏகாத்மா என்கிற பஷம்
நித்யோ நித்யாநாம் சேதனச் சேதனாநாம் ஏகோ பஹூநாம் யோ விததாதி காமாந் (கட -5-13 )
(நித்யர்களில் நித்யமானவனும் சேதனர்களில் சேதனனும் ஆகிய அவன்
அனைவருடைய விருப்பத்தையும் நிறைவேற்றுகிறேன் ) -என்று
ஆத்ம பேதத்தை சொல்லுகிற ஸ்ருதிக்கும் சேராது -என்றபடி –

———————————————————————

சூர்ணிகை -56-

இந்த ஸ்ருதி ஆத்மா பேதத்தை சொல்லுகிறது என்னில்
போக்தா போக்கியம் (அனுபவிக்கும் சேதனம் அனுபவிக்கப்படும் அசேதனம் )-என்றும்
ப்ருதக் ஆத்மாநம் (ஸ்வே –1-6–ஆத்மாவையும் அவனை நியமிப்பவனாயும் தனித் தனியாக ) –என்றும்
ஜஞாஜ்ஜௌ த்வவாஜௌ (ஸ்வே -1-9-பிறப்பற்ற அந்த இருவரில் ஒருவன் அறிந்தவன் ஒருவன் அறியாதவன் )-என்றும்
அந் யோந்தர ஆத்மா விஞ்ஞானமய (மநோ மயனைக் காட்டிலும் வேறான ஞான மயனாக உள்ளவனும்
உள்ளே காணப் படுபவனும் ஆகிய ஆத்மா வேறாக உள்ளான் )-என்றும்
ஜீவ ஏகத்வ ப்ரதிகாதிகைகளான அநேக ஸ்ருதிகளோடும்
விரோதிக்கும் ஆகையால்
இது ஔபாதிக பேதத்தை சொல்லுகிறது என்று இறே அவர்கள் சொல்லுவது
அத்தை நிஷேதிக்கிறார்

ஸ்ருதி
ஔபாதிக பேதத்தை
சொல்லுகிறது
என்ன
ஒண்ணாது –

ஔபாதிக பேதமாவது
தேவ மனுஷ்யாதி பேதமும்
காம க்ரோதாதி பேதமும்

———————————————————-

சூர்ணிகை -57-

ஔபாதிக பேதம் என்ன ஒண்ணாமைக்கு
ஹேதுவை அருளிச் செய்கிறார் –

மோஷ
தசையிலும்
பேதம்
யுண்டாகையாலே –

அதாவது
சதா பஸ்யந்தி-(ப்ர-5-10 )
நித்ய ஸூரிகள் எப்போதும் அந்த விஷ்ணுவுடைய உயர்ந்த இடத்தைப் பார்த்த படியே உள்ளனர் )என்றும்
மம சாதரம்யம் ஆகதா -(கீதை -14-2-எனது ஸ்வரூபத்தை அடைந்தவர்கள் ) என்றும்
முக்தாநாம் பரமா கதி (முக்தர்கள் உயர்ந்த கதியை அடைகிறார்கள் )என்றும்
சாயுஜ்யம் பிரதிபந்நாயே(ஸாயுஜ்யம் அடைகிறார்கள் ) -என்றும்
யஸ்மின் பதே விரா ஜந்தே முகதாஸ் சம்சார பந்தனை
(எந்த இடத்தை அடைவதால் முக்தர்கள் சம்சாரத்தில் இருந்து விடுபடுகிறார்களோ )-என்றும்

மோஷ தசையில் ஆத்ம பேதத்தை ஸ்ருதிகள் சொல்லுகையாலே
அப்படி சொல்ல ஒண்ணாது என்கை

மோஷ தசையாவது
சர்வோபாதி விநிர்முக்த தசை இறே

அந்த தசையிலும் ஆத்ம பேதம் ஸ்ருதி சித்தம் ஆகையாலே
நித்யோ நித்யா நாம் -என்கிற ஸ்ருதியும்
ஆத்ம பேதத்தை சொல்லுகிறது என்றது ஆயிற்று –

———————————————————————————————-

சூர்ணிகை -58–

அவதாரிகை –

ஆனால் ஆத்ம பேத பிரதிபதிக்கு ஹேதுவாய்
ஔபாதிகமாய் இருந்துள்ள
தேவ மனுஷ்யாதி பேதமும்
காம க்ரோதாதி பேதமும் கழிந்து
ஆத்மாக்களுடைய ஸ்வரூபம் அத்யந்தம் சமமாய்
ஒரு பிரகாரத்தாலும் பேத கதனத்துக்கு யோக்யதை இல்லாதபடி இறே மோஷ தசை இருப்பது —

அவ் விடத்தில் ஆத்ம பேதம் சித்திக்கிற படி எங்கனே
என்கிற வாதி பிரஸ்னத்தை அனுவதிக்கிறார்

அப்போது தேவ மனுஷ்யாதி
பேதமும்
காம க்ரோதாதி
பேதமும்
கழிந்து
ஆத்மாக்கள்,ஸ்வரூபம்
அத்யந்தம் சமமாய்
ஒரு படியாலும் பேதம் சொல்ல
ஒண்ணாத படி
இருந்ததே யாகிலும்
திருஷ்டாந்த முகேன பேதத்தை
சாதிக்கிறார்

———-

சூர்ணிகை -59-

பரிமாணமும் எடையும்
ஆகாரமும் ஒத்து இருக்கிற
பொற்குடங்கள்
ரத்னங்கள்
வ்ரீஹ்கள்
தொடக்கமான வற்றுக்கு
பேதம் உண்டாகிறாப் போலே
ஸ்வரூப பேதமும்
சித்தம் –

அதாவது
அளவும் தூக்கமும் வடிவும் ஒத்து இருக்கிற
பொற்குடங்கள் ரத்னங்கள் வ்ரீஹகள் முதலான பதார்த்தங்களுக்கு
பேதகமாய் இருப்பதொரு லஷணம் இல்லை யாகிலும்
அதிலே நாநாத்வம் காண்கிறாப் போலே
ஒருபடியாலும் பேதம் சொல்ல ஒண்ணாதபடி
ஏக ஆகாரமான முக்த ஆத்மாக்களுக்கும்
ஸ்வரூப பேதம் சித்திக்கும் என்றபடி —

———————————————————-

சூர்ணிகை -60-

கீழ்ச் சொன்னவற்றை எல்லாம் அனுபாஷித்துக் கொண்டு
நிகமிக்கிறார்

ஆகையால்
ஆத்ம பேதம்
கொள்ள வேணும் –

ஆக
கீழ் செய்தது ஆயிற்று –
சிலர் ஆத்ம பேதம் இல்லை
ஏகாத்மாவே உள்ளது என்றார்கள் -என்று(49) தொடங்கி
இவ்வளவாக முன்பு தாம் அருளிச் செய்த
ஜீவ அனந்த்ய பிரதிபடமான ஏகாத்ம வாதத்தை உத்ஷேபித்து
யுக்தியாலும்
சாஸ்த்ரத்தாலும்
பஹூ முகமாக அத்தை தூஷித்து
ஆத்ம பேதத்தை சாதித்தார் ஆயிற்று –

————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

தத்வ த்ரயம் -சித் பிரகரணம்-சூர்ணிகை -31-41- –ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —

July 31, 2014

இப்படி ஆத்மாவுக்கு ஸ்வா பாவிகமாய் இருந்துள்ள கர்த்ருத்வத்தை இல்லை என்று
ப்ரக்ருதிக்கே கர்த்ருத்வத்தைக் கொள்ளுகிற சாங்க்யரை நிராகரிக்கிறார் —
சிலர் என்று தொடங்கி –

சூர்ணிகை -31

சிலர்
குணங்களுக்கே கர்த்ருத்வம் உள்ளது
ஆத்மாவுக்கு இல்லை
என்றார்கள் –

சிலர் என்று
அவர்கள் பக்கல்
தமக்கு உண்டான
அநாதரம் தோற்ற அருளிச் செய்கிறார் –

குணங்கள் என்றும் பிரகிருதி என்றும் பேதம் இல்லை இறே இவர்களுக்கு
ஆகையால் பிரக்ருதிக்கே என்கிற
ஸ்தானத்திலே
குணங்களுக்கே -என்கிறார் –

மூல பிரகிருதிர் நாம ஸூக துக்க மோஹாத் மகாநி லாகவ பிரகாச சலந
உபஷ்டம்பன கௌரவா வரண கார்யாணி அத்யந்த அதீந்த்ரியாணி
கார்யைக நிரூபண விவேகாநி அந்யூந அநதிரேகாணி சமுதாமுபேதானி
சத்வ ரஜஸ் தமாம்ஸி த்ரவ்யாணி -என்று இறே அவர்களுடைய சித்தாந்தம் –
ஆகையால் பிரக்ருதிக்கே கர்த்ருத்வம் உள்ளது ஆத்மாவுக்கு இல்லை என்றபடி –

(ஸ்ரீ பாஷ்யம் -2-2-1-மூலப்ரக்ருதி என்பது சத்வம் ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய மூன்று த்ரவ்யங்களைக் கொண்டதாகும்
இவை மூன்றும் சரி சமமான தசையில் -ஒன்றை ஓன்று விஞ்சாத விதத்தில் உள்ளன
இவற்றின் இயல்பான தன்மைகள் முறையே ஸூகம் துக்கம் மற்றும் மயக்கம் -மோஹம் என்பதாகும்
சத்வம் அதிகமாகும் போது ஸூ கம் ஏற்படும் -சரீரம் எடை குறைவாகத் தோன்றும் –
இந்திரியங்களும் நன்கு இயங்கும் இத்தையே லகவ ப்ரகாசங்கள் என்பர்
ரஜஸ் அதிகமாகும் போது துக்கம் ஏற்படும் -அசைவு மற்றும் இந்திரியங்கள் செயல் ஆற்றுவதும் நிகழும்
சலனம் -சஞ்சலமான இயல்பு கொண்டபடியும்
உஷ் டம்பநம் -யாரையேனும் வாக்குவாதத்துக்கு இழுத்தபடியே இருப்பர்
தமஸ் அதிகமாகும் போது மயக்கம் ஏற்படும் -சரீரம் பளுவாக உணரப்படும் -இந்திரியங்கள் மறைக்கப்படும் -கௌரவம் ஆவரணம்
இப்படிப்பட்ட குணங்களானவை இந்த்ரியங்களால் உணர இயலாதபடி உள்ளதாகும்
அவற்றின் கார்யத்தைக் கொண்டே உணர வல்லதாக -அல்லது நிரூபிக்கும்படியாக இருக்கும்
சத்வம் ரஜஸ் தமஸ் ஆகிய மூன்றையும் சம நிலையில் கொண்டதான மூலப்ரக்ருதியானது அசேதனமாக உள்ள போதிலும்
எண்ணற்ற சேதனர்களுடைய இன்பத்துக்கும் மோக்ஷத்துக்கும் உதவுவதாக உள்ளது -)

அதாவது
கடவல்லியிலே-ந ஜாயதே மரியதே (கட -2-18-பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை )-இத்யாதியாலே
ஆத்மாவுக்கு ஜனன மரணாதிகளான பிரகிருதி தர்மங்களை எல்லாம் பிரதி சேஷித்து-

ஹந்தா சேந் மந்யதே ஹந்தும் ஹதச் சேன் மந்யதே ஹதம்
உபௌ தௌ ந விஜாநீதோ நாயம் ஹந்தி ந ஹந்யதே (கட –2-19-)
(கொல்பவன் நான் இவனைக் கொல்கிறேன் – என்று எண்ணினாலும்
கொல்லப்படுபவன் -நான் கொல்லப்பட்டேன் -என்று எண்ணினாலும்
இருவரும் உண்மையை அறியவில்லை -காரணம் –
அவன் கொல்வதும் இல்லை -இவன் கொல்லப்படுபவனும் இல்லை -)-என்று
ஹநநாதி க்ரியைகளிலே கர்த்ருத்வத்தையும் நிஷேதிக்கையாலும்

ஸ்ரீ கீதையில் சர்வேஸ்வரன் தானே
நாந்யம் குணேப்யே கர்த் தாரம் யதா த்ரஷ்ட அநு பஸ்யதி -(ஸ்ரீ கீதை –14-49-)
(குணங்களைக் காட்டிலும் வேறு கர்த்தா இல்லை என்று எப்போது காண்கிறானோ )என்றும்

கார்ய காரண கர்த்ருத்வே ஹேது பிரகிருதி ருஸ்யதே
புருஷஸ் ஸூக துக்காநாம் போக்த்ருத்வே ஹேது ருஸ்யதே – (ஸ்ரீ கீதை -3-20-)
(சரீரத்தின் இந்திரியங்கள் செயல் ஆற்றுவதில் ப்ரக்ருதியே காரணம் என்றும்
ஸூக துக்க அனுபவங்களில் புருஷனே காரணம் என்றும் கூறப்படுகின்றன -)என்றும் சொல்லுகையாலும்

இப்படி அத்யாத்ம சாஸ்த்ரங்களிலே
ஆத்மாவுக்கு அகர்த்ருத்வத்தையும்
குணங்களுக்கே கர்த்ருத்வத்தையும் சொல்லுகையாலே
கர்த்ருத்வம் உள்ளது பிரக்ருதிக்கே
ஆத்மாவுக்கு கர்த்ருத்வம் இல்லை
போக்த்ருத்வம் மாத்ரமே உள்ளது என்று ஆய்த்து அவர்கள் சொல்லுவது –

————————————————————————————————–

சூர்ணிகை -32-

அத்தை நிராகரிக்கிறார் –

அப்போது இவனுக்கு
சாஸ்திர வஸ்யதையும்
போக்த்ருத்வமும்
குலையும்

அதாவது
பிரக்ருதிக்கே கர்த்ருத்வமாய்
ஆத்மாவுக்கு கர்த்ருத்வம் இல்லையான போது
இவனுக்கு விதி நிஷேத ரூபமான சாஸ்த்ரத்துக்கு
தான் அதிகாரியாய்க் கொண்டு
அதன் வசத்திலே நடக்க வேண்டுகையும்
விஹித நிஷித்த கரண ப்ரயுக்த ஸூக துக்க ரூப பல போக்த்ருத்வம்
சேராது -என்கை-

சேதனன் கர்த்தா வாகாத போது சாஸ்தரத்துக்கு வையர்த்த்யம் பிரசங்கிக்கும்
சாஸ்திர பலம் ப்ரயோக்தரி(பூர்வ மீமாம்சையில் -கர்த்தாவானால் ஸாஸ்த்ரம் பயன் அளிப்பவன ஆகும் )
கர்த்தா சாஸ்தரார்த்தத்வாத்(2-2-33-சாஸ்திரம் பயன் உள்ளது என்றாக வேணும் என்றால் ஜீவாத்மா கர்த்தா வாகிறான் )-
என்னக் கடவது இறே –

இனித் தான்
ஸ்வர்க்க காமோ யஜத-(ஸ்வர்க்கத்தை விரும்புமவன் யஜ்ஜம் பண்ணக் கடவன் )
முமுஷூர் பரஹ்மோபாசீத் (மோக்ஷத்தை விரும்புமவன் ப்ரஹ்மத்தை உபாசிப்பானாக )-என்று
ஸ்வர்க்க மோஷாதி பல போக்தாவை இறே கர்த்தாவாக
சாஸ்திரம் நியோக்கிகிறதும் –
ஆகையால் பல போக்தாவே கர்த்தாவாகவும் வேணும் இறே

அசேதனதுக்கு கர்த்ருத்வம் ஆகில் சேதனனைக் குறித்து விதிக்கவும் கூடாது
சாசானாஸ் சாஸ்திரம் (ஸாஸ்த்ரங்கள் சாசனங்கள் ஆகும் )-என்னக் கடவது இறே
சாசனமாவது பிரவர்த்தகம்
சாஸ்தரத்துக்கு பிரவர்த் கத்வம் போத ஜனந த்வாரத்தாலே
அசேதனமான ப்ரதானத்துக்கு போதத்தை விளக்கப் போகாது இறே

ஆகையால் சாஸ்திரம் அர்த்தவத்தாம் போது
போக்தாவான சேதனனுக்கே கர்த்ருத்வம் ஆக வேணும்
இது எல்லாவற்றையும் திரு உள்ளம் பற்றி இறே
அப்போது இவனுக்கு சாஸ்திர வஸ்யதையும் போக்த்ருத்வமும் குலையும் என்று அருளிச் செய்தது –

————————————————————————————————

சூர்ணிகை -33-

ஆனால் கர்த்ருத்வம் எல்லாம் இவனுக்கு ஸ்வரூப பிரயுக்தம் ஆமோ என்கிற
சங்கையிலே அருளிச் செய்கிறார் –

சாம்சாரிக
பிரவ்ருதிகளில்
கர்த்ருதம்
ஸ்வரூப
பிரயுக்தம்
அன்று –

அதாவது
சம்சாரிக பிரவ்ருதிகளான
ஸ்திரீ அன்ன பாநாதி போகங்களை
உத்தேசித்துப் பண்ணும் ஸ்வ வியாபாரங்கள் –
அவற்றில்
கர்த்ருத்வம் ஔபாதிகம் ஆகையால்
ஸ்வரூப பிரயுக்தம் அன்று -என்கை –

————————————————————————————————-

சூர்ணிகை -34

ஆனால் அது தான் இவனுக்கு வந்தபடி என் -என்கிற சங்கையிலே
அருளிச் செய்கிறார் –

குண சம்சர்க்க
க்ருதம்

அதாவது
குணங்கள் ஆகிறன -சத்வம் ரஜஸ் தமஸ் ஸூக்கள்
அவற்றின் யுடைய சம்சர்க்கத்தாலே யுண்டானது -என்றபடி

பிரக்ருதே க்ரிய மாநாணி குணை கர்மாணி சர்வச
அஹங்கார விமூடாத்மா கர்தாஹமிதி மந்யதே -(ஸ்ரீ கீதை -3-27-அனைத்த்து செயல்களும் அனைத்து விதங்களிலும்
பிரகிருதியின் குணங்களால் செயல்படுகின்றன
ஆனால் அஹங்காரத்தால் மூடப்பட்ட அறிவு கொண்ட ஒருவன் –
நான் கர்த்தா ஆவேன் -என்று எண்ணுகிறான் )என்னக் கடவது இறே
இது எல்லாம்
கர்தா சாஸ்த்ராத்த வர்த்த வாத் (2-3-33-ஸாஸ்த்ரம் பயன் உள்ளது என்றாய் வேண்டும் என்றால் )-என்கிற ஸூத்ரத்திலே
பூர்வ பஷ ஸித்தாந்த ரூபேண ஸ்ரீ பாஷ்யகாரர் தாமே விஸ்தரேண அருளிச் செய்தார்-

———————————————————————————————–

சூர்ணிகை -35

இப்படி சாங்க்ய பஷத்தை நிராகரித்து
ஆத்மாவுக்கே கர்த்ருத்வத்தை சாதித்தார் கீழ் –
இந்த கர்த்ருத்வம் தான் ஸ்வ யத்தமோ
பரா யத்தமோ -என்கிற சங்கையிலே அருளிச் செய்கிறார் –

கர்த்ருத்வம்
தான்
ஈஸ்வர
அதீநம்

அதாவது
இந்த ஆத்மாவினுடைய கர்த்ருத்வம் தான்
ஸ்வாதீனம் அன்றிக்கே ஈஸ்வர அதீநமாய் இருக்கும் -என்றபடி –

பராத்து தச் ச்ருதே (2-3-40-ஜீவாத்மாவுடைய கர்த்ருத்வம் பரமாத்மாவால் உண்டாகிறது -ஸ்ருதி கூறுவதால் – )-என்று
வேதாந்த ஸூத்ரத்திலே ஆத்மாவினுடைய கர்த்ருத்வம் பரா யத்தம் என்று
சித்தமாகச் சொல்லப் பட்டது இறே

சாஸ்த்ர அர்த்தவத் வாத்துக்காக கர்த்ருத்வம் ஆத்ம தர்மம் என்று கொள்ள வேணும்
அந்த கர்த்தாவுக்கு தர்மமான ஜ்ஞான இச்சா பிரயத்தனங்கள்
பகவத் அதீனங்களாய் இருக்கையாலும்
அந்த ஜ்ஞானாதிகள் பகவத் அனுமதி ஒழிய க்ரியா ஹேது வாக மாட்டாமையாலும்
இவனுடைய கர்த்ருத்வம் ஈஸ்வர அதீநம் -என்கிறது –

இவனுடைய புத்தி மூலமான பிரயத்தனத்தை அபேஷித்து ஈஸ்வரன் அனுமதி தானம் பண்ணுகையாலே
அந்த கிரியா நிபந்தமான புண்ய பாபங்களும் சேதனனுக்கே ஆகிறது என்று
விவரணத்திலே ஆச்சான் பிள்ளையும்

இப்படி கர்த்ருத்வம் பரமாத்மா யத்தமானாலும்
விதி நிஷேத வாக்யங்களுக்கும் வையர்த்யம் வாராது –
க்ருத ப்ரயத்நா பேஷஸ்து விஹித ப்ரதி ஷித்தா வையர்த்தி யாதிப்ய -என்று
பரிஹரிக்கப் படுகையாலே –

அதாவது
விஹித ப்ரதி ஷித்தங்களுக்கு வையர்த்தி யாதிகள் வாராமைக்காக
இச் சேதனன் பண்ணின பிரதம பிரயத்தனத்தை அபேஷித்துக் கொண்டு
ஈஸ்வரன் பிரவர்த்திப்பிக்கும் -என்றபடி –

எங்கனே என்னில்
எல்லா சேதனருக்கும் ஞாத்ருத்வம் ஸ்வ பாவம் ஆகையாலே
சாமாந்யேந பிரவ்ருத்தி நிவ்ருத்தி யோக்யத்வம் யுண்டாயே இருக்கும்
இப்படியான ஸ்வரூபத்தை நிர்வகிக்கைக்காக ஈஸ்வரன் அந்தராத்மாவாகக் கொண்டு நில்லா நிற்கும்
அவனாலே யுண்டாக்கப் பட்ட ஸ்வரூப சக்தியை யுடையனான சேதனன்
அவ்வோ பதார்த்தங்களில் உத்பன்ன ஞான சிகீர்ஷா பிரத்யனனாய்க் கொண்டு வர்த்தியா நிற்கும்

அவ்விடத்திலே மத்யஸ்தன் ஆகையாலே உதாசனரைப் போலே இருக்கிற
பரமாத்மாவானவன் அந்த சேதனர் யுடைய பூர்வ வாசன அனுரூபமான
விதி நிஷதே பிரவ்ருதியிலே
அனுமதியையும்
அநாதரத்தையும் யுடையவனாய் கொண்டு
விஹிதங்களிலே அனுக்ரஹத்தையும்
நிஷித்தங்களிலே நிக்ரஹத்தையும் பண்ணா நிற்பானாய்

அனுக்ரஹாத்மகமான புண்யதுக்கு பலமான ஸூகத்தையும்
நிக்ரஹாத்மகமான பாபத்துக்கு பலமான துக்கத்தையும்
அவ்வவோ சேதனருக்கு கொடா நிற்கும்

இது தன்னை அபி யுக்தரும் சொன்னார் –
ஆதா வீஸ்வர தத் தயைவ புருஷஸ் ஸ்வா தந்த்ரிய சக்தயா
ஸ்வயம் தத் தத் ஞான சிகீர்ஷண பிரத்யத்நாந் யுத்பாதயந் வர்த்ததே தத்ர உபேஷ்ய
தத் அனுமத்ய விததத் தந் நிக்ரஹ அனுக்ரஹவ் தத் தத் கர்ம பலம்
ப்ரயச்சதி ததஸ் சர்வஸ்ய புமஸோ ஹரி (ஸ்ரீ நடாதூர் அம்மாள் ஸ்ரீ தத்வ சாரத்தில் -46)
(ஆத்மாவுக்கு வழங்கப்படுவதான முதல் அனுமதி என்ற ஸூவதந்த்ரமாகிய சக்தி காரணமாக
ஆத்மாவானவன் தானாகவே அந்த அந்த விஷயங்களில் செயல் ஆற்றுவதற்கான ஆசை மற்றும் முயற்சிகளை ஏற்படுத்துகிறான்
அவற்றில் செய்யக் கூடாதவற்றில் உதா சீனமும் -செய்யக்கூடியவற்றில் அனுமதியும் அளித்தபடி உள்ள ஈஸ்வரன்
அதற்குத் தண்டனை அளித்தல் மற்றும் அனுக்ரஹம் புரிதல் ஆகியவற்றைச் செய்கிறான்
இதன் மூலம் அனைவருடைய கர்மபலனை ஸ்ரீ ஹரி அளித்தபடி உள்ளான் -)-என்று அடியிலே

சர்வ நியந்தாவாய்
சர்வ அந்தராத்மாவான
சர்வேஸ்வரன்
தனக்கு யுண்டாக்கிக் கொடுத்த ஞானத்வ ரூபமான ஸ்வா தந்த்ரிய சக்தியாலே
இப் புருஷன் தானே அவ்வோ விஷயங்களிலே ஜ்ஞான சிகிருஷா பிரயத்தனங்களை
யுண்டாக்கிக் கொண்டு வர்த்தியா நிற்கும் –

அவ்விடத்திலே
அசாஸ்த்ரீயங்களிலே உபேஷித்தும்
சாஸ்த்ரீயங்களிலே அனுமதி பண்ணியும்
அவ்வோ விஷயங்களிலே நிக்ரஹ அனுக்ரஹங்களை பண்ணா நின்று கொண்டு
அவ்வோ கர்ம பலத்தையும் சர்வேஸ்வரன் கொடா நிற்கும் என்னா நின்றார்கள் –

இப்படி சர்வ பிரவ்ருதிகளிலும் சேதனனுடைய பிரதம பிரத்யனத்தை
அபேஷித்துக் கொண்டு பரமாத்மா ப்ரவர்த்திப்பியா நிற்கும் என்றது ஆயத்து
என்று ஸ்ரீ தீப பிரகாசத்திலே ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயரும் அருளிச் செய்த அர்த்தங்கள்
இவ்விடத்திலே அனுசந்தேயங்கள் –

ஆனால்
ஏஷ ஹ்யேவசாது கர்ம காரயதி தம யமேப்யோ லோகேப்ய
உநநிநீஷதி ஏஷ ஏவா சாது கர்ம காரயதி தம் யமதோ நிநீஷதி –
(ஸ்ரீ கௌஷீ தகீ உபநிஷத்தில் -எந்த ஒரு ஆத்மாவை இந்த லோகத்தில் இருந்து உயர்த்த
சர்வேஸ்வரன் எண்ணுகிறானோ -அந்த ஆத்மாவையே நல்ல செயல்கள் புரியும்படி செய்கிறான் –
எந்த ஆத்மாவை நரகத்தில் ஆழ்த்த எண்ணுகிறானோ
அந்த ஆத்மாவை தீய செயல்கள் செய்யும் படியாகத் தூண்டுகிறான் – )-என்று
உநநிநீஷையாலும் அதோ நிநீஷையாலும் சர்வேஸ்வரன் தானே
சாத்வ சாது கர்மங்களை பண்ணுவியா நிற்கும் என்னும் இது சேரும்படி என் என்னில்

இது சர்வ சாதாரணம் அன்று
யாவன் ஒருவன் பகவத் விஷயத்தில் அதி மாத்ரமான ஆனுகூல்யத்திலே
வ்யவஸ்தனாய்க் கொண்டு பிரவர்தியா நிற்கும்
அவனை அனுக்ரஹியா நின்று கொண்டு பகவான் தானே ஸ்வ பிராப்த உபாயங்களாய்
அதி கல்யாணங்களான கர்மங்களிலே ருசியை ஜனிப்பிக்கும் –

யாவன் ஒருவன் அதி மாத்ர பிராதி கூல்யத்தில் வ்யவஸ்திதனாய்க் கொண்டு பிரவர்தியா நிற்கும்
அவனை ஸ்வ பிராப்தி விரோதிகளாய் அதோ கதி சாதனங்களான கர்மங்களிலே சங்கிப்பிக்கும் என்று
இந்த ஸ்ருதி வாக்யங்களுக்கு அர்த்தம் ஆகையாலே

இது தன்னை சர்வேஸ்வரன் தானே அருளிச் செய்தான் இறே
அஹம் சர்வஸ்ய பிரபவோ மத்த்ஸ் சர்வம் ப்ரவர்த்ததே
இதி மத்வா பஜந்தே மாம் புதபா வச மந்விதா–(ஸ்ரீ கீதை -10-8-)
(நானே அனைத்தும் தோன்றுவதற்கான காரணம் ஆவேன் -அனைத்தும் என்னால் செய்யப்படுகிறது –
என்று அறிந்து கொள்ளும் அறிஞர்களாகிய பக்தர்கள் என்னை இடைவிடாது உபாசிக்கிறார்கள் )என்று தொடங்கி

தேஷாம் சத்த யுக்தா நாம் பஜதாம் ப்ரீதி பூர்வகம் ததாமி
புத்தி யோகம் தம் யேன மாம் உபயாந்தி
தே தேஷாம் ஏவ அனுகம் பார்த்தம் அஹம் அஜ்ஞானம் ஜம் தமஸ்
நாசயாம் யாத்ம பாவஸ்த்தோ ஜ்ஞான தீபேன பாஸ்வதா -(ஸ்ரீ கீதை -10-10 /10-11)
(எப்போதும் என்னுடன் சேர்ந்து இருக்க வேண்டும் என்னும் ஆசை கொண்டவர்களாக
என்னை மிகுந்த அன்புடன் உபாசிப்பவர்களுக்கு என்னை அடைவதற்கான
புத்தி யோகத்தை நானே அளிக்கிறேன்
அப்படிப்பட்டவர்களை அனுக்ரஹிக்கும் விதமாக நான் அவர்களுடைய உள்ளத்திலே நிலைத்து நின்று
அறியாமையால் ஏற்படும் இருளை என்னைக் குறித்த ஞானம் என்ற ஒளியால் அழிக்கிறேன் )என்றும் –

அசத்யம் அப்ரதிஷ்டம் தே ஜகதா ஹூர நீஸ்வரம் (ஸ்ரீ கீதை -16-8-)
அவர்கள் இந்த உலகம் ஸத்யம் அற்றது பரமாத்மாவை ஆதாரமாகக் கொண்டது அல்ல
என்னால் நியமிக்கப்படுவது அல்ல என்று கூறுகிறார்கள் ) -என்று தொடங்கி

மாமாத்ம பர தேஹேஷூ ப்ரதவிஷந் தோப்ய ஸூ யகா (ஸ்ரீ 16-18-_
(தங்கள் உடலிலும் மற்றவர்கள் உடலிலும் அந்தர்யாமியாக உள்ளை என்னை வெறுத்து
என்னைக் குறித்து பொறாமை அடைகிறார்கள் )என்னும் அது அளவாக
அவர்கள் யுடைய பிராதி கூல்ய அதிசயத்தை சொல்லி

தாநஹம் த்விஷத க்ரூராந் சம்சாரேஷூ நாரத மாந் ஷிபாம் யஜஸ் ரம
ஸூபாநா ஸூரீஷ் வேவ யோநிஷூ (ஸ்ரீ கீதை -16-19-)
(இப்படியாக யார் என்னை வெறுக்கிறார்களோ -பாபம் செய்கிறார்களோ -கொடியவர்களோ -அப்படிப் பட்டவர்களை
நான் இந்த ஸம்ஸார சுழற்சியிலே தொடர்ந்து உழலும்படியாக அசூரப் பிறவிகளிலே தள்ளுகிறேன் )-
என்றும் அருளிச் செய்கையாலே

ஆகையால்
அநுமந்த் த்ருத்வமே சர்வ சாதாரணம்
பிரயோஜகத்வம் விசேஷ விஷயம் என்று கொள்ள வேணும்

க்ருத பிரயத்நா பேஷூஸ்து -என்கிற ஸூத்ரத்திலே
இது எல்லாம் ஸ்ரீ பாஷ்யகாரர் தாமே அருளிச் செய்தார் இறே
(ஸ்ரீ ப்ரஹ்ம -3-2-40-பூர்வம் து பாதராயண ஹேது வ்யபதேசாத்–
பலனை அளிப்பதால் முந்தையதே என்று பாதராயணர் கூறுகிறார் – )

இவை எல்லாவற்றையும் திரு உள்ளம் பற்றி இறே
கர்த்ருத்வம் தான் ஈஸ்வர அதீநம் -என்று அருளிச் செய்தது –

ஆக
கீழ் செய்தது ஆயிற்று
ஞான ஆஸ்ரயம் ஆகையாவது -ஞானத்துக்கு இருப்பிடமாய் இருக்கை-என்று
பிரதமத்திலே ஆத்மாவினுடைய ஜ்ஞாத்ருத்வத்தைச் சொல்லி
ஜ்ஞானம் மாதரம் என்பாரை நிராகரித்துக் கொண்டு

ஜ்ஞாத்ருவ கதன அநந்தரம்
கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் சொல்ல வேண்டுகையாலே
அவை இரண்டும் ஜ்ஞாத்ருத்வ பலத்தாலே தன்னடையே வரும் என்னும் இடத்தை தர்சிப்பித்து
குணங்களுக்கே கர்த்ருத்வம் உள்ளது ஆத்மாவுக்கு இல்லை என்பாரை நிராகரித்துக் கொண்டு
ஆத்மாவினுடைய கர்த்ருத்வத்தை ஸ்தாபித்து

அந்த கர்த்ருத்வத்தில் ஸ்வரூப பிரயுக்தம் இல்லாத அம்சத்தையும்
அது தான் இவனுக்கு வருகைக்கு அடியையும் சொல்லி
இப்படி ஆத்மாவுக்கு யுண்டான கர்த்ருத்வம் தான்
சர்வ அவஸ்தையிலும் ஈஸ்வர அதீநமாய் இருக்கும் என்று
நிகமித்தார் ஆயிற்று

இது எல்லாம் ஆத்மாவினுடைய ஞான ஆஸ்ரயம் அடியாக வந்தது இறே-

———————————————————————————-

சூர்ணிகை -36-

அவதாரிகை –
இப்படி ஆத்மா ஞான ஆஸ்ரயமாக இருக்குமாகில்
யோ விஞ்ஞானே திஷ்ட்டன -(ப்ரு -3-7-22-விஞ்ஞானத்தில் உறைபவன் யாரோ )
விஞ்ஞான மய-(தைத் -2-4-1-ஞான மயமாக உள்ளவனும் )
விஞ்ஞானம் யஜ்ஞம் தனுதே-(தை -2-5-ஞானம் யஜ்ஜத்தை இயற்றுகிறது )
ஞான ஸ்வரூபம் அத்யந்த நிர்மலம் பரமார்த்தத -(ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-6-)
(ஞான மயம் ஆனவனும் -அனைத்து குணங்களும் நீங்கப் பெற்றவனும் -இதனால் தூய்மையாக உள்ளவனும் )
ஞான ஸ்வரூபம் அகிலம் ஜகத் ஏத புத்தய-(ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-4-40-இந்த உலகம் ஞான ஸ்வரூபமாகவே உள்ளது )
விஞ்ஞானம் பரமார்த்ததோ ஹி த்வைதிநோ அதத்ய தர்சிந -(ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-14-31 )
(ஞான மயமான ப்ரஹ்மத்தை இவ்விதம் அறிவதே உண்மையானது –
இரண்டு என்று எண்ணியபடி உள்ளவர்கள் உண்மை அறியாதவர் ஆவர் ) -என்றும்
சாஸ்த்ரங்களில் இவனை ஞானம் என்று
சொல்லுவான் என் என்கிற
ஜிஜ்ஞாஸூ பிரஸ்னத்தை அனுவதிக்கிறார்

ஞான
ஆஸ்ரயமாகில்
சாஸ்த்ரங்களில் இவனை
ஞானவான் என்று
சொல்லுவான்
என் என்னில்

———————————————————-

சூர்ணிகை -37

இப்படி சாஸ்திரங்கள் சொல்லுகைக்கு மூலம்
இன்னது
என்கிறார் –

ஜ்ஞானத்தை ஒழியவும்
தன்னை அறிகையாலும்
ஜ்ஞானம்
சார பூத குணமாய்
நிரூபக தர்மமே
இருக்கையாலும் -சொல்லிற்று

அதாவது
ஞானம் ஸ்வ ஆஸ்ரயதுக்கு ஸ்வயம் பிரகாசகமாய் இருக்குமோபாதி
ஞான நிரபேஷமாகத் தனக்குத் தானே பிரகாசிக்கையாலும்
ஞானம் இவனுக்கு சார பூத குணம் ஆகையாலே
ஸ்வரூப அனுபநதித்வேன
ஸ்வரூப நிரூபக தர்மம் ஆகையாலும்
சொல்லிற்று என்கை –

இது தான்
தத் குண சாரத் வாத் து தத் வ்யபதேச ப்ராஜ்ஞத்வத் (2-3-29-)
(ஞானம் என்ற குணத்தை இன்றியமையாத -சாரமாகக் கொண்டுள்ளதால்
ஜீவ பர ஆத்மாவானது ஞானம் என்று கூறப்படுகிறது ) -என்றும்

யாவதாத்ம பாவித வாச்ச ந தோஷஸ் தத் தர்சநாத் (2-3-30-)
ஆத்மா உள்ளவரை ஞானம் தொடர்வதாலும் ஆத்மாவை ஞானம் என்று கூறுவதில் தவறு இல்லை )-என்றும்
ஸூத்ர த்வத்தாலும் சொல்லப் பட்டது –

ஞான மாத்ர வ்யபேதேசஸ்து ஜ்ஞானஸ்ய பிரதாந குணத்வாத்
ஸ்வரூப அனுபந்த்தித் வேந ஸ்வரூப நிரூபக குணத்வாத்
ஆத்ம ஸ்வரூபஸ்ய ஞானவத் ஸ்வ பிரகாசத்வாவோப பத்யதே (ஆத்மாவானது ஞானமே ஆகும் என்று உரைக்கும்
கருத்தானது ஞானம் முதன்மையான குணமாக உள்ளதாலும் ஆத்மாவை நிரூபிக்கின்ற குணமாக உள்ளதாலும்
ஆத்ம ஸ்வரூபம் போலே தானே பிரகாசிக்கப்பதாலும் ஆகும் )-என்று இறே
ஸ்ரீ வேதாந்த தீபத்திலும் ஸ்ரீ பாஷ்ய காரர் அருளிச் செய்தது –

————————————————————————————-

சூர்ணிகை -38-

நியாம்ய மாகை ஆவது
ஈஸ்வர புத்திய
அதீனமாக
எல்லா வியாபாரங்களும்
யுண்டாம்படி
இருக்கை —

அதாவது
ய ஆத்மநி திஷ்ட்டந் ஆத்மநோ அந்தர யம் ஆத்மா ந வேத யஸ்ய ஆத்மா சரீரம்
ய ஆத்மாநம் அந்தர ய ஆத்மாநம் அந்தர யமயதி சதே ஆத்மா அந்தர்யாமி அம்ருத (ப்ரு -3-7-22-)
யார் ஆத்மாவில் உள்ளானோ -யார் ஆத்மாவில் புகுந்து உள்ளானோ -யார் இவ்விதம் உள்ளதை ஆத்மா அறியாதோ –
யாருக்கு ஆத்மா சரீரமோ -யார் ஆத்மாவினுள் புகுந்து நியமிக்கிறானோ அவனே உன் ஆத்மா –
உனக்கு அந்தர்யாமியாக உள்ள அவன் அழிவற்றவன் )-இத்யாதிகளில்
சொல்லுகிறபடியே அந்தராத்மாதயா நின்று நியமிக்கை-

ஈஸ்வரனுக்கு சர்வ காலீனம் ஆகையாலே
இவ்வாத்மா வஸ்து அவனுக்கு நியாமகை யாவது
சரீரத்தின் யுடைய சகல பிரவ்ருதிகளும் சரீரியினுடைய புத்தி அதீனமாக உண்டாமா போலே
சரீர பூதமான இவ் வாத்ம வஸ்துவினுடைய சகல வியாபாரங்களும்
சரீரியான பரமாத்வானுடைய புத்யா அதீநம் படி யுண்டாய் இருக்கை என்றபடி-

இப்படி
தச் சரீர தயா தத் அதீன சகல பிரவர்திகன் ஆனாலும்
அசேதனமான சரீரம் போலே
தானாக ஒரு பிரவ்ருத்தி பண்ண மாட்டாத படி இருக்கை அன்றிக்கே
ஜ்ஞாத்ருத்வ கர்த்ருத்வ போக்த்ருத்வங்களை
ஸ்வா பாவிக தர்மங்களாக யுடையவன் ஆகையாலே
ஜ்ஞான சிகிரிஷா பிரயத்ன பூர்வக பிரவ்ருதி ஷமனாய் இருக்கையாலும்
சகல பிரவ்ருதிகளும் இவனுடைய பிரதம பிரயத்னத்தை அபேஷித்துக் கொண்டு
ஈஸ்வரன் அனுமதி தானம் பண்ணுகையாலும்
விதி நிஷேத சாஸ்திர வையர்தயம் இல்லை-

இவனுடைய பிரவ்ருத்தி மூலமாக ஈஸ்வரன் பண்ணும்
நிக்ரஹ அனுக்ரஹங்களுக்கும்
தத் அனுகுணமான
பல பிரதானத்துக்கும் விரோதம் இல்லை என்னும் இடம் கீழே சொல்லப் பட்டது –

—————————————————————————————

சூர்ணிகை -39-

தார்யம் ஆகையாவது
அவனுடைய
ஸ்வரூப
சங்கல்பங்களை
ஒழிந்த போது
தன் சத்தை இல்லையாம்படி
இருக்கை –

அதாவது
ஏஷ சேதுர் விதரண -(ப்ரு –4-4-22-சம்சாரத்தைக் கடக்க உதவும் பாலம் இவனே என்றும் )
ஏதத் சர்வம் ப்ரஜ்ஞ்ஞாதே பிரதிஷ்ட்டிதம் (இந்த அனைத்தும் உயர்ந்த அந்த ஆத்மாவிடமே நிலை பெற்று நிற்கின்றன )
ஏவ மேவ சாஸ்மிந் நாத்மநி சர்வாணி பூதானி சர்வ ஏவாத்மா நஸ் சமர்பிதா –
(இந்த அனைத்தும் அந்த உயர்ந்த ஆத்மாவிடமே நன்கு காக்கப்பட்டு நிற்கின்றன )
ஏதஸ்ய வா அஷரஸ்ய பிரசாசநே கார்கி ஸூர்ய சந்திர மசௌ வித்ருதௌ திஷ்டத (ப்ரு -3-8-9-)
கார்க்கி இந்த அக்ஷரத்தின் கட்டளையாலே ஸூர்யனும் சந்திரனும் நிலைக்கிறார்கள்)-இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
ஈஸ்வரன் சகல சேதன அசேதனங்களையும் பற்றி நியமேன தாரகன் ஆகையாலே

இவ் வாத்ம வஸ்து தாரயமாகை யாவது
தனக்கு நியமேன தாரகமாய்க் கொண்டு
தன் சத்தா ஹேதுவாய் இருக்கிற
அவனுடைய திவ்யாத்மா ஸ்வரூபத்தையும்
இந்த ஸ்வரூப ஆஸ்ரித தத்வத்துக்கும் சதா அனுவர்த்தி ரூபையான ஸ்திதிக்கும்
ஹேதுவாய் இருந்துள்ள அவனுடைய நித்ய இச்சா கார்ய
சங்கல்பத்தையும் ஒழிந்த போது
தன் சத்தா ஹாநி பிறக்கும்படி இருக்கை
என்றபடி-

இப்படி
தார்யா வஸ்துக்களை ஸ்வரூப சங்கல்பங்கள் இரண்டாலும் தரிக்கும் என்னும் இடமும்
அபியுக்தராலே விஸ்தரேண பிரதிபாதிக்கப் பட்டது -எங்கனே என்னில்

ஈஸ்வரன் தன் ஸ்வரூப நிரூபக தர்மங்களுக்கும்
நிரூபித்த ஸ்வரூப விசேஷிதங்களான குணங்களுக்கும் போலே
ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த த்ரவ்யங்களுக்கும் அவயவ ஹிதமாக ஸ்வரூபேண ஆதாரமாய் இருக்கும்
அவ்வவோ த்ரவ்யங்களை ஆஸரித்து இருக்கும் குணாதிகளுக்கு அவ்வவோ த்ரவ்ய த்வாரா ஆதாரமாய் இருக்கும்
ஜீவர்களாலே தரிகாப் படும் சரீரங்களுக்கு ஜீவ த்வாரா ஆதாரமாய் இருக்கும் என்று
சிலர் சொல்லுவார்கள்
ஜீவனை த்வாரமாகக் கொண்டு ஸ்வரூபத்தாலும் ஆதாரமாம் என்று சில ஆச்சார்யர்கள் சொல்லுவார்கள்
இப்படி சர்வமும் ஆஸ்ரயதைப் பற்ற
அப்ருதக் சித்த விசேஷணம் ஆகையாலே
இவற்றின் சத்தாதிகள் ஆஸ்ரய சத்தா தீனங்கள்-

சர்வ வஸ்துக்களின் யுடையவும் சத்தை சங்கல்ப அதீநம் ஆகையாவது
அநிதயங்கள் அநித இச்சையாலே உத்பந்நங்களாயும்
நிதயங்கள் நித்யா இச்சா சித்தங்களாயும்-இருக்கை
இவ் வர்த்தத்தை ( ஸ்ரீ வைகுண்ட ஸ்தவத்தில் )
இச்சாத ஏவ தவ விசவ பதார்த்தத சத்தா -என்கிற ஸ்லோகத்தாலே அபியுக்தர் விவேகித்தார்-

இத்தாலே
சர்வத்தினுடைய சத்தா அனுவர்த்தி ரூபையான ஸ்திதியும்
ஈஸ்வர இச்சாதீன படியாலே
சர்வமும் ஈஸ்வர சங்கல்ப ஆஸ்ரிதம் என்று சொல்கிறது

குரு த்ரவ்யங்கள் சங்கல்பத்தாலே த்ருதங்கள் என்று சாஸ்திரங்கள் சொல்லுமது
த்யௌஸ் ஸ ஸந்த்ரார்க்க நஷத்ராகம் திசோ பூர் மஹோததி வாஸூ தேவஸ்ய வீர்யேண விக்ருதாநி மஹாத்மாந –
(சந்திரன் ஸூர்யன் நக்ஷத்ரங்கள் ஆகியவற்றுடன் கூடிய ஆகாயம் திசைகள் பூமி சமுத்திரங்கள் போன்ற பலவும்
வாஸூ தேவனுடைய வீர்யத்தாலே நிலையாக உள்ளன என்று மஹாத்மாக்கள் கூறுகிறார்கள் )-என்கிறபடியே
ஒரோ தேச விசேஷங்களில் விழாதபடி நிறுத்துகைப் பற்ற

இப்படி இச்சாதீன சத்தா ஸ்திதி பிரவ்ருதிகளான வஸ்துகளுக்கு
பரமாத்மா ஸ்வரூபம் என் செய்கிறது -என்னில்

பரமாத்வானுடைய இச்சை இவ் வஸ்துக்களை பரமாத்வாவின் ஸ்வரூப ஆஸ்ரிதங்களாக வகுத்து வைக்கும்
இப்படி சர்வ வஸ்துவையும் ஈஸ்வர ஸ்வரூப அதீனமாய்
ஈஸ்வர இச்சா அதீநமுமாய்
லோகத்திலும் சரீரம் சரீரியினுடைய ஸ்வரூப ஆஸ்ரயமாய் சங்கல்ப ஆஸ்ரயமாய் இருக்கக் காணா நின்றோம்

இவன் இருந்த காலம் இருந்து
இவன் விட்ட போது ஒழிகையாலே
ஸ்வரூப ஆஸ்ரிதம்
இவ் வாத்ம சங்கல்பம் இல்லாத
ஸூஷூப்த்யாதி அவஸ்தைகளில் தெளிவது

ஜாக்ராதி தசைகளிலே சங்கல்பத்தாலே விழாதபடி தாங்கும் போது
சங்கல்பாஸ்ரிதம் என்னக் கடவது
என்று இப்படி ஸ்ரீ மத் ரகஸ்ய த்ரய சாரத்திலே பிரதிபாதிக்கையாலே-

———————————————————————————————-

சூர்ணிகை -40-

சேஷமாகை யாவது
சந்தன
குஸூம
தாம்பூலாதிகளைப் போலே
அவனுக்கு
இஷ்ட விநியோக
அர்ஹமாய் இருக்கை-

அதாவது –
சந்தன குஸூமாதி பதார்த்தங்கள் -தனக்கு என இருப்பதோர் ஆகாரம் இன்றிக்கே
பூசுமவனுக்கும்
சூடுமவனுக்கும்
உறுப்பாக
விநியோகம் கொள்ளுமவனுக்குத் தானும் விநியோகம் கொண்டு
தான் உகந்த விஷயங்களுக்கும் கொடுக்கலாம்படி
இஷ்ட விநியோக
அர்ஹமாய் இருக்குமா போலே –

சேதன வஸ்துவாய் இருக்க
ஸ்வ பிரயோஜன கந்தம் இன்றிக்கே
தன்னுடைய ஸ்வரூப ஸ்வ பாவ வைலஷண்யம் எல்லா வற்றாலும்
சேஷிக்கு அதிசய கரமாய்
விநியோக தசையில் அவனுக்கு தானும் விநியோகம் கொண்டு
அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -என்கிறபடியே
தான் உகந்தவர்களுக்கு எல்லாம் உறுபபாகலாம் படி
வேண்டிய விநியோகத்துக்கு யோக்யமாய் இருக்கை -என்றபடி –

சித் த்ரவ்யத்துக்கு அசித் த்ரவ்யங்களை திருஷ்டாந்தமாகச் சொல்லிற்று
பாரதந்த்ர்ய அதிசயம் சொல்லுகைக்காக இறே
ஆத்மா ஸ்வரூபம் யாதாத்மயம் இது வாகையாலே இறே
பிராப்ய நிஷ்கர்ஷம் பண்ணுகிற தசையில்
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே (2-9-4)-என்று ஆழ்வார் அருளிச் செய்தது –

பரகத அதிசய ஆதான இச்சயா உபாதேய த்வமேவ யஸ்ய ஸ்வரூபம் ச சேஷ பர சேஷீ –
(பிறருக்கு சந்தோஷத்தை உண்டு பண்ண வேண்டும் என்ற எண்ணம் எவைகளுக்குத் தன்மையோ
அவைகள் அனைத்தும் சேஷன் -அடிமை -மகிழ்வை அடைபவன் சேஷீ -அடிமைச் செயலை ஏற்பவன் -)என்று
சேஷி சேஷத்வ லஷணம்
ஸ்ரீ பாஷ்யகாரராலே அருளிச் செய்யப் பட்டது –

இந்த லஷண வாக்யார்த்தத்தை அனுசரித்துக் கொண்டு
இச்சயா யது பாதேயம் யஸ்ய அதிசய சித்தயே உபய அனுபயைகைக ஜூஷாதௌ சேஷ சேஷி நௌ-
(எந்த ஒரு தலைவனுக்காக -எந்த ஒரு பொருள் -இருவரை அடைதல் அல்லது ஒருவரை மட்டும் அடைதல்
என உள்ளதோ -அதாவது தலைவனுடைய விருப்பத்துக்கு ஏற்ப -அவர்கள் அடிமை மற்றும் எஜமானன் ஆவார்கள் )என்று
சேஷ சேஷித்வ லஷணத்தை
அபியுக்தர் ஆனவர்களும் சொல்லி வைத்தார்கள்-

யதேஷ்ட விநியோக அர்ஹம் சேஷ சப்தேந கத்த்யதே ஈஸ்வரேண ஜகத் சர்வம்
யதேஷ்டம் விநியுஜ்யதே -(ஒருவன் விருப்பத்திற்கு ஏற்ப பயன் கொள்ளத் தகுதியாக உள்ள
நிலையே அடிமை என்று கூறப்படுகிறது –ஸர்வேஸ்வரனால் அனைத்து லோகங்களும் தனது விருப்பப்படி
உபயோகப் படுத்தப் படுகிறது )-என்று சொல்லுகையாலே
சேஷத்வம் ஆவது இஷ்ட விநியோக அர்ஹத்வம்-எனபது சாஸ்திர சித்தம் –

இப்படி ஈஸ்வர விஷயத்தில் ஆத்மாவுக்கு யுண்டான சேஷத்வம் தான்
யஸ் யாஸ்யாமி ந தமந்தரேமி-(யஜுர் -யாருக்கு நான் அடிமையாக உள்ளேனோ அவனை நான் மீற மாட்டேன் )என்றும்

பரவா நஸ்மி காகுத்ஸ்த்த த்வயி வர்ஷ சதம் ஸ்திதே-(ஆரண்ய -15-6-)
காகுத்ஸத்த வம்சத்தில் வந்தவனே -பல வருஷங்கள் நீ உள்ளவரை நான் உனக்கு வசப்பட்டு நிற்பேன் )என்றும்

தாஸ பூதாஸ் ஸ்வதஸ் சர்வே ஹ்யாத்மாந பரமாத்மந நாந்யதா லஷணம்
தேஷாம் பந்தே மோஷ ததைவ ச -(அனைத்து ஆத்மாக்களுக்கும் ஸர்வேஸ்வரனுக்கு இயல்பாகவே அடிமையானவர்கள்
இந்த லோகத்திலும் மோக்ஷ நிலையிலும் அவர்களுக்கு ஸ்வ தந்திரம் என்னும் இலக்கணம் இல்லை )என்றும்

ஸ்வோஜ் ஜீவ நேச்சா யதி தே ஸ்வ சத்தாயாம் ஸ்ப்ருஹா யதி ஆத்ம தாஸ்யம் ஹரேஸ்
ஸ்வாம்யம் ஸ்வ பாவஞ்ச சதா ஸ்மர (ஸ்ரீ விஷ்ணு தத்வம் )
(உனக்கு கரை ஏறுவதற்கான விருப்பம் இருந்தால் -அல்லது அழியாமல் இருக்க வேண்டும் என்னும் எண்ணம் இருந்தால்
இயல்பாகவே உள்ள ஆத்மாவின் தன்மையையும் ஸ்ரீ ஹரியான ஈஸ்வரனுடைய எஜமானனாக உள்ள தன்மையையும்
எப்போதும் சிந்தித்தபடியே இருப்பாயாக )-என்றும்

ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் சொல்லப் படா நின்றது-

—————————————————————————————-

சூர்ணிகை -41-

அவதாரிகை –

ஒருவனுக்கு க்ருஹ ஷேத்ராதிகளும் சேஷமாய்
ஸ்வ சரீரமும் சேஷமாய் இருக்கச் செய்தே
க்ருஹ ஷேத்ராதிகள் ப்ருதக் சித்த்யாதிகளுக்கு அர்ஹமாய்
சரீரம் அவற்றுக்கு அனர்ஹமாய் இருக்கக் காண்கையாலே
இவ் வாத்ம வஸ்து ஈஸ்வரனுக்கு சேஷமாம் இடத்தில்
இருக்கும்படி எங்கனே என்கிற சங்கையிலே
அருளிச் செய்கிறார் –

இதுதான் –
க்ருஹ ஷேத்திர
புத்ர களத்ராதிகளைப் போலே
ப்ருதக் சித்யாதிகளுக்கு
யோக்யமாம் படி இருக்கை
அன்றிக்கே
சரீரம் போலே
அவற்றுக்கு
அயோக்யமாய் இருக்கை –

இது தான் என்கிறது –
இப்படி ஈஸ்வர சேஷமாகச் சொல்லப் பட்ட ஆத்ம வஸ்து தான் -என்றபடி –

க்ருஹ ஷேத்திர புத்ர களத்ராதிகளைப் போலே -என்கிற இடத்தில்
ஆதி சப்தத்தாலே
தன தான்ய ஆராம தாஸ தாசி வர்கங்களைச் சொல்லுகிறது –

ப்ருதக் சித்யாதிகளுக்கு யோக்யமாம் படி இருக்கை அன்றிக்கே -என்கிற இடத்தில்
ப்ருதக் சித்தி யாவது
சஹோபலம்ப நியமம் இன்றிக்கே சேஷியானவனை ஒழியவும் தான் சித்திக்கை

ஆதி சப்தத்தாலே அநேக சாதாரணத்வத்தைச் சொல்லுகிறது

கிருஹ ஷேத்திர தாஸ தாசே பரப்ருதிகள் பித்ரு புத்ர ஜ்யேஷ்ட கநிஷ்டாதிகளுக்கு சாதாரண சேஷமாய் இருக்கும்

களத்ரமும்-சோம ப்ரதமோ விவிதே கந தர்வோ விவித உத்தர த்ருதீ யோக் நிஷ்டே பதிஸ் துரீயஸ்தே மனுஷ்யஜா
(சந்திரன் முதல் பர்த்தா -கந்தர்வன் அடுத்த பர்த்தா -அக்னி மூன்றாவது பர்த்தா -மனுஷ்யன் நான்காவது பர்த்தாவாக அறிவாய் )-என்று
பாணி க்ரஹண அனந்தரம் ஸோமாதிகளுக்கு சேஷமாகச் சொல்லுகையாலே
அநேக சாதாரணமாய் இருக்கும்

இப்படி அன்றிக்கே
சரீரம் போலே அவற்றுக்கு அயோக்யமாய் இருக்கை -யாவது
அப்ருதுக் சித்தமாய் அநந்ய சாதாரணமான சரீரம் போலே
ப்ருதுக் ஸித்யாதிகள் ஆனவற்றுக்கு தான் அநர்ஹமாய் இருக்கை

ப்ருதுக் ஸிதிதி களுக்கு -என்று பாடம் ஆகில்
ஆதி சப்தத்தால்
ப்ருதக் உப லப்தியைச் சொல்லுகிறது

அப்போதைக்கு இது தான் க்ருஹ ஷேத்திர புத்ர மித்ர களத்ராதிகளைப் போலே
பிரிந்து நிற்கைக்கும்
பிரிந்து தோற்றுகைக்கும்
அர்ஹமாம்படி இருக்கை அன்றிக்கே
சரீரம் போலே தத் உபய அநர்ஹமாய் இருக்கும் என்று பொருளாகக் கடவது –

அயமே வாத்ம சரீர பாவ
ப்ருதக் சித்த்ய அநர்ஹ ஆதார தேய பாவ
நியந்த்ரு நியாம்ய பாவ
சேஷ சேஷி பாவச் ச -(ஸ்ரீ வேதாந்த ஸங்க்ரஹத்தில் -)
ஆத்மா மற்றும் சரீரம் இரண்டுக்கும் இடையே உள்ள சம்பந்தம் இதுவே ஆகும்
தனித்தனியே இருக்க இயலாத இவை இரண்டுக்கும் இடையே
ஆதாரம் -ஆதேயம் நியந்தரு-நியாம்யம் சேஷி சேஷ என்னும் சம்பந்தங்கள் உள்ளன )என்றும்

யஸ்ய சேதனஸ்ய யத் த்ரவ்யம் சர்வாத்மநா
ஸ்வார்த்தே நியந்தும்
தாரயிதும் ச சகயம்
தத் சேஷைதைக ஸ்வரூபம் ச தத் தஸ்ய சரீரம் (ஸ்ரீ வேதாந்த ஸங்க்ரஹத்தில் -)
(எந்த ஓன்று தாங்கப்படுவதாகவும் -நியமிக்கப்படுவதாகவும் சேஷனாகவும் உள்ளதோ
அது தன்னைத் தாங்கும் ஆத்மாவை விட்டு அகன்று தனியாக நிற்க இயலாத பிரகாரமாக உள்ளது
இதுவே சரீரத்தின் லக்ஷணம் )-என்றும்

ஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹத்திலும் ஸ்ரீ பாஷ்யத்திலும்
ஆத்மா சரீர பாவ லஷணமாக ஸ்ரீ பாஷ்ய காரர் அருளிச் செய்த
நியந்த்ரு நியாமக பாவம்
ஆதார ஆதேய பாவம்
சேஷ சேஷி பாவம்
ஆகிற மூன்றும் இவ்விடத்திலே சொல்லப் படுகையாலே

யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய அஷரம் சரீரம் -என்று இத்யாதி
ஸ்ருதி சித்தமான
ஆத்மாவினுடைய பரமாத்மா சரீரத்வம் அர்த்ததா சித்தமாயிற்று –

ஆக
கீழே
ஆத்மா ஸ்வரூபத்தின் உடைய சோதனம் பண்ணப் பட்டது-

——————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

தத்வ த்ரயம் – சித் பிரகரணம்-சூர்ணிகை 8-30– –ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —

July 30, 2014

சூர்ணிகை -8

அஜடமாகை யாவது
ஞானத்தை ஒழியவும்
தானே தோற்றுகை –

அஜடத்வம் ஆவது –
அநந்ய அதீன பிரகாசத்வம் -ஸ்வயம் பிரகாசத்வம் -என்றபடி
ஸ்வயம் பிரகாசத்வம் ஆகையாவது -வாகிறவோபாதி
தீபம் தீபாந்தர நிரபேஷமாக ஸ்வ வ்யவஹாரத்துக்கு ஹேது
பிரகாசாந்தார நிரபேஷமாக ஸ்வ வ்யவஹாரத்துக்கு ஹேதுவாகை –
அத்தை அருளிச் செய்கிறார் –
ஞானத்தை ஒழியவும்
தானே தோற்றுகை -என்று

ஹிருதய நதர் ஜ்யோதி புருஷ (ப்ரு –6-3-7-ஹ்ருதயத்தில் பிரகாசித்த படியே உள்ள ஆத்மா )-என்றும்
அதராயம புருஷச ஸ்வ யமஜயோதிர் பவதி (ப்ரு -6-3-9-இங்கு ஆத்மா தானாகவே வெளிப்படுகிறான் )-என்றும்
விஞ்ஞானகன (ப்ரு-4-4-12 -ஞானமே வடிவாக உள்ளான் )-என்றும்
ஆத்மா ஜஞான மய- (ஸ்ரீ விஷ்ணு புரணம்-6-7-32- -ஆத்மா ஞான மயமாகவே உள்ளான் )-என்றும்
தச்ச ஞான மயம் வயாபிஸ்வ சமவேதய மநூபமம (ஸ்ரீ விஷ்ணு புரணம்-1-22-42- அந்த ஆத்மா ஞான மயமாகவே உள்ளான் –
எங்கும் நிறைந்து -தானே தன்னை அறிகிறான் -தனக்கு ஒப்புமை இல்லாதவன் )-என்றும்
ஆத்மா சமவேதயம் தத ஜ்ஞானம் (ஆத்மாவைக் குறித்து தானாகவே அறியப் படுகிறது )-என்றும்
சொல்லக் கடவது இறே-

——————————————————-

சூர்ணிகை -9

ஆனந்த ரூபமாகை யாவது
ஸூ கரூபமாய் இருக்கை –

ஆனந்த ரூபமத்வம் ஆவது –ஸ்வ ஏவ இஷ்டத்வம்
அதாவது
ஸ்வ பாவமே அனுகூலமாய் இருக்கை –

அனுகூலம் ஸூகம் துக்கம் பிரதிகூலமிதி சத்தே
ஸ்வாத்மா ஸ்வஸ்ய அனுகூலோ ஹீதயா தம சாஷிக ஏவ ச -(ஸூகம் என்பது ஏற்புடையது –
துக்கம் என்பது ஏற்புடையது அல்ல -தனது ஆத்மா ஏற்புடையவனே யாவான்
அவன் தனக்குத் தானே சாக்ஷியாக உள்ளான் )என்கிறபடியே
தனக்குத் தானே ஸூகமாய் இருக்கை –

————————————————————-

சூர்ணிகை -10-

அவதாரிகை –

இப்படி ஆத்மஸ்வரூபம் ஸூக ரூபமாய் இருக்கும் என்னுமிதில்
ஸூப்த பிரபுத்த பிரத்யபிஞ்ஞையை பிரமாணமாக
அரளிச் செய்கிறார் –

உணர்ந்தவன்
ஸூகமாக உறங்கினேன்
என்கையாலே
ஸூக ரூபமாகக்
கடவது –

ஸூகமாக உறங்கினேன் என்கிற பிரத்யபிஞ்ஞை தானே இதில் பிரமாணம்
என்று இறே தத்வ சேகரத்திலும் இவர் அருளிச் செய்தது –

ஸூ ஷுப்தி தசையில் பராக் அர்த்தம் அனுபவம் இல்லாமையாலும்
பிரத்யகாததச புராணம் யுண்டாகையாலும்
ஸூ பதோதத்தினாலே பராம்ருஷடமான ஸூகம் ஸ்வரூப ஸூகம் ஆகவேணும் இறே –

இப்போது ஸூகம் பிறக்கும் படி உறங்கினேன் என்று அன்றோ
ஸூகமாக உறங்கினேன் என்கிற இதுக்கு பொருள் என்ன ஒண்ணாது –
பிரதிபத்தி சரீரம் அப்படி அன்றிக்கே
இனிதாகப் பாடினேன் -என்கிறாப் போலே இருக்கையாலே

இது தன்னை பாஷ்யத்தில்
ஏவம் ஹி ஸூப்தோததி தஸ்யை பராமர்ச ஸூகம் அஹம் அஸ் வாப்ஸம் இதி
அநேன ப்ரத்ய வமர்சனேனே ததாநீம் ஸூகம் பவதி ததா ததாநீம் அஸ்வாப்யம்
இத்யேஷா பிரதிபத்தி இதி அதத் ரூபத்வாத் பிரதிபத்தே –(உறக்கத்தில் இருந்து எழுகின்ற எந்த ஒருவனும் –
அஹம் -நான் -என்பதில் இருந்து விலகி உள்ளதும் மற்ற அனைத்துக்கும் எதிர்த் தட்டாக உள்ளதும் ஆகிய
ஞானம் ஆகிய நான் அஞ்ஞானத்துக்கு ஸாக்ஷியாக இருந்தேன் என்று கூறுவது இல்லை
மாறாக நான் ஸூகமாகவே உறங்கினேன் என்று அல்லவோ உறக்கத்தில் இருந்து எழுந்த
ஒருவனின் நினைவுகள் உள்ளன -) என்று ஸ்ரீ பாஷ்யகாரரும் அருளிச் செய்தார் –

ஸ்வரூபம் அனுகூலம் அன்றாகில் ப்ரேமாஸ் பதத்வம் கூடாது
(ஆத்ம ஸ்வரூபம் ஏற்புடையது அன்றாகில் அதில் நமக்குத் பற்றுதல் ஏற்படவும் செய்யாதே )

ஆச்சர்ய வத் பஸ்யதி கச்சி நேநம்-(ஸ்ரீ கீதை 2-29-உயர்ந்தவன் மட்டுமே இந்த ஆத்மாவை வியப்புடன் காண்கிறான் )
இத்யாதிகளாலும் இவ்வர்த்தம் சித்தம் –

ஆர்த்ரம் ஜலதி (பிரகாசித்த படி உள்ளது )-என்றும்
நிர்வாண மய ஏவாய மாத்மா (ஆனந்த மயமானவன் )-என்றும்
ஜ்ஞாநாநாந்த மயஸ் த்வாத்மா (ஞானம் மற்றும் ஆனந்தத்தையே ரூபமாக யுடையவன் )-என்றும்
ஜ்ஞாந ஆனந்த ஏக லஷணம்-இத்யாதி
ஸ்ருதி ஸ்ம்ருதிகளாலும் ஆத்மாவினுடைய ஆனந்த ரூபத்வம் ஸூஸ்பஷ்டம் –

ஆக
கீழே
ப்ரக்ருதே பரத்வம் சொல்லுகையாலே
தேஹாத்ம வாதம் நிரஸ்தம் ஆய்த்து –

அஜடத்வ
ஆனந்த ரூபங்களைச் சொல்லுகையாலே
ஜடாத்ம வாதம் நிரஸ்தம் ஆய்த்து –

————————————————————

சூர்ணிகை -11

நித்யமாகை யாவது
எப்போதும் யுண்டாகை –

நித்யமாவது சர்வ கால வர்த்தித்வம்

—————————————————————

சூர்ணிகை -12-

அவதாரிகை –
ஏதத் விரோதி சங்கையை
அனுவதித்துப்
பரிஹரிக்கிறார் –

எப்போதும் யுண்டாகில்
ஜன்ம
மரணங்கள்
யுண்டாகிற படி என் என்னில்
ஜன்மமாவது தேக சம்பந்தம்
மரணமாவது தேக வியோகம் –

அதாவது
ஆத்மா சர்வ கால வர்த்தியாய் இருக்குமாகில்
பிரஜாபதி பிரஜா அஸ்ருஜத-(நான்முகன் உயிர்களைப் படைத்தான் )என்றும்
சந்மூலாஸ் சோம்யேமாஸ் சர்வா பிரஜா (அனைத்துமே ஸத் என்னும் ப்ரஹ்மத்தையே காரணமாக கொண்டவை ஆகும் )-என்றும்
யதோவா இமானி பூதானி ஜாயந்தே (அனைத்தும் எதனிடம் இருந்து உத்பத்தி ஆனதோ )-என்றும்
யத பிர ஸூதா ஜகத பிரஸூதி தோயேன ஜீவாந் வ்யசசர்ஜ பூம்யாம் (ப்ரக்ருதியானது எந்த ப்ரஹ்மத்தின் இடம் தோன்றியதோ
அத்தகைய ப்ரஹ்மா நீர் முதலானவற்றுடன் ஆத்மாவையும் படைத்தது )-இத்யாதி
ஸ்ருதி வாக்யங்களால் ஆத்மாவுக்குச் சொல்லப் படுகிற
ஜனன மரணங்கள் யுண்டாகிற படி என் என்னில்

அவற்றில் சொல்லுகிற ஜன்மம் ஆவது தேக சம்பந்தம்
மரணம் ஆவாது தேக வியோகம் -என்கை –

நித்யன் ஆகில் சிருஷ்டிக்கு முன்பு ஏக தவாவதாரணம் கூடாது என்னில்
ஏக தவமாவது
நாம ரூப விபாக பாவம் ஆகையாலே கூடும்

சம்ஹார தசையில் ஆத்மா இல்லையாகில் ஈஸ்வரனுக்கு உபாதானத்வம் கூடாது
அக்ருதா அப்யாக்ம க்ருத விப்ர நாசங்களும் வரும்-
ஆகையாலே ஆத்மா நித்யத்வம் கொள்ள வேணும்

ந ஜாயதே ம்ரியதே வா விபச்சித் (கட -2-18-அவன் பிறப்பதும் இல்லை இறப்பதும் இல்லை ) -என்றும்
ஜ்ஞா ஜஜௌ த்வா அஜவ் வீச நீசௌ-(ஸ்வ –1-19-அறிந்தவன் அறியாதவன் என்று
இரண்டு பிறப்பட்டவர்கள் ஈசன் அநீசன் என்று கூறப்படுகிறார்கள் )என்றும்
நித்யோ நித்யானாம் (ஸ்வே -6-13- நித்யர்களுக்குள் நித்தியமாக உள்ளவன் )-என்றும்
ப்ரக்ருதிம் புருஷம் சைவ வித்ய நாதீ உபாவபி -(ஸ்ரீ கீதை -13-19- ப்ரக்ருதி புருஷன் என்ற ஜீவாத்மா இரண்டும்
எப்போதும் சேர்ந்தே எல்லை அற்ற காலமாக உள்ளன )-என்றும்
‘ந ஜாயதே ம்ரியதேவா கதாசிந் நாயம் பூத்வா பவிதா வா ந பூய
அஜோ நித்யச் சாஸ்வதோயம் புராணோ ந ஹன்யதே ஹன்யமானே சரீரே–ஸ்ரீ கீதை -2-20 -(ஆத்மா பிறப்பதும் இல்லை –
இறப்பதும் இல்லை -முன்பு உண்டாகி பின்பு இல்லாததும் இல்லை –
ஆத்மா பிறப்பற்றவன் -நித்யமானவன் -அனைத்துக் காலங்களிலும் உள்ளவன் -பழமையானவன்
சரீரம் கொல்லப் பட்டாலும் ஆத்மா கொல்லப் படாதவன் -என்றும்
ஆத்மா நித்யத்வ பிரதி பாதகங்களான
ஸ்ருதி ஸ்ம்ருதிகள் அநேகங்கள் இறே-

——————————————————————–

சூர்ணிகை -13-

அவதாரிகை –
அசித் விலஷணமாய்-அஜடமாய் -ஆனந்த ரூபமாய் –
நித்தியமாய் இருந்தாலும்
விபுவாய் இருக்கலாம் இறே
ஏவம் பூதமான ஆத்மா ஸ்வரூபம் அணு என்று அறியும் படி
எங்கனே என்று ஜிஜ்ஞஸூ பிரஸ்நத்தை அனுவதிக்கிறார்

அணுவான
படி
என்
என்னில் –

—————————————————————–

சூர்ணிகை -14-

அவதாரிகை –

அதுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார்

ஹிருதயப் பிரதேசத்தில் நின்றும்
உத்க்ரமித்துப் போவது
வருவதாம் என்று
சாஸ்திரம் சொல்லுகையாலே
ஆத்மா
அணுவாகக்
கடவது –

அதாவது
ஹ்ருதிஹ் யேவாய மாத்மா (ப்ர-3-6-இதயத்தில் ஆத்மா உள்ளது )-என்று ஹிருதய ஸ்திதியையும்

தேன ப்ரத்யோ தே நைஷ ஆத்மா நிஷ்க்ராமதி சஷூ ஷோவா
மூர்த் நோவா அந்யேப்யோவா சரீரே தேசேப்ய (ப்ருஹ் –4-4-2-இறக்கும் போது இதயத்தில் உள் பகுதியில் உண்டாகும்
ஒளியின் உதவியுடன் இந்த ஆத்மா கண் மூலமாகவோ தலை வழியாகவோ
அல்லது சரீரத்தின் மற்ற பகுதிகளின் வழியாகவோ வெளியே கிளம்புகிறான் )-என்று உத்க்ரமணததையும்

யேவை கேசாச்மால் லோகாத் ப்ரயந்தி சந்தர மசமேவ தே சர்வே கச்சந்தி (கௌஷீ –1-2-இங்கு இருந்து புறப்படும்
அனைத்து ஆத்மாக்களும் சந்த்ர மண்டலத்தையே அடைகின்றன )-என்று கமநத்தையும்

தஸ்மால் லோகாத் புனரேத் யஸ்மை லோகாயஸ் (ப்ரு -4-4-6- அந்த லோகத்தில் இருந்து
கர்மம் இயற்றுவதற்காக மீண்டும் வருகிறான் )-என்று ஆகமனத்தையும்

நிர்தோஷ பிரமாணமான வேதாந்த சாஸ்திரம் சொல்லுகையாலே
அணுவாகக் கடவது -என்கை

விபுவாகில் இவை ஒன்றும் கூடாது இறே

சூத்ரகாரரும் ஆத்மவினுடைய அணுத்வம் சாதிக்கிற அளவில்
உத்க்ராந்தி கத்யாகதீ நாம் (2-3-20-சரீரத்தில் இருந்து வெளிக் கிளம்புதல் -நகர்தல் -மீண்டும் திரும்புதல்
ஆகியவை கூறப்படுவதால் விபு அல்லன் ) -என்று
இவற்றாலே இறே முந்துற சாதித்தது

ஏஷ அணுராத்மா சேதஸா வேதிதவ்ய (முண் -3-1-9-அத்தகைய அணு அளவுள்ள ஜீவாத்மா )-என்றும்

வாலாக்ர சத பாகஸ்ய சத்தா கல்பி தஸ்ய ச பாகோ ஜீவஸ்ச விஜ்ஞ்ஞேய-(ஸ்வே -5-9-நெல் நுனியின் நூறில் ஒரு பங்கை
எடுத்து அதனை நூறு பாகமாக வெட்டினால் அதில் ஒரு பாகமே ஜீவனுடைய அளவு என்று அறிய வேண்டும் )- என்றும்

ஆராக்ர மாத்ரோ ஹ்யவரோபி திருஷ்ட (ஸ்வே –5-8-சாட்டை நுனியில் உள்ள முள் போன்று நுண்ணியவன் )-என்றும்

ஸ்வரூப அணு மாதரம் ஸ்யாத் ஜ்ஞானானந்தைக லஷணம்-
த்ரசரேணு பிரமாணாஸ்தே ரஸ்மி கோடி விபூஷிதா (அணு அளவே உள்ளது -ஞான மயமானது –
மூன்று அணுக்கள் சேர்ந்த அளவுள்ள துகளாக நின்று கோடிக்கணக்கான ஒலியுடன் பிரகாசிக்கிறது )-இத்யாதி

ஸ்ருதி ஸ்ம்ருதிகளாலும்
ஆத்மாவினுடைய அணுத்வம் சம் ப்ரதிபன்னம் –

——————————————————————–

சூர்ணிகை -15

இப்படி இருக்குமாகில் -சர்வ சரீர அவயாபியான ஸூக துக்க அனுபவம்
எங்கனே என்கிற சங்கையை
அனுவதிக்கிறார் –

அணுவாய்
ஹ்ருதயத்து அளவில் நிற்குமாகில்
ஸூக துக்கங்களை
புஜிக்கிற படி என் என்னில் –

அதாவது
அணு பரிமாணமாய ஹிருதய பிரதேச மாத்ரத்திலே நின்று விடுமாகில்
பாதே மே வேதனா சிரசி மே வேதனா பாதே மே ஸூகம் சிரசி மே ஸூகம் (எனது கால்கள் வலிக்கிறது –
எனது தலை வலிக்கிறது -எனது கால்கள் ஸூகமாக உள்ளன -எனது தலை ஸூகமாக உள்ளது )-என்று
ஆபாதசூடம் சரீரம் எங்கும் ஒக்க
ஸூக துக்கங்களை புஜிக்கிற படி
எங்கனே என்னில் -என்கை —

————————————————————————————-

சூர்ணிகை -16-

அதுக்கு உத்தாம் அருளிச் செய்கிறார் –

மணி த்யுமணி தீபாதிகள்
ஓர் இடத்திலே இருக்க
பிரபை எங்கும் ஒக்க
வ்யாபிக்கையாலே
அவற்றைப் பூஜிக்கத்
தட்டில்லை –

அதாவது
மணி த்யுமணி தீபாதிகள் ஆகிற ப்ரபாவாத் பதார்த்தங்கள்
ஏக தேசஸ்தங்களாய் இருக்கச் செய்தேயும்
தத் பிரபை சுற்று எங்கும் வ்யாபிக்கிறாப் போலே

ஆத்மா ஹிருதய பிரதேசத்திலே இருக்கச் செய்தேயும்
தத் தர்மமான ஜ்ஞானம் எங்கும் ஒக்க வ்யாபிக்கையாலே
சரீரம் எங்கும் ஒக்க ஸூக துக்கங்களை
புஜிக்கைக்கு ஒரு பிரதி ஹதி இல்லை -என்கை

இது தான்
குணாத் வா லோக வத் (2-3-26)
(கிரணங்கள் போன்று தனது குணத்தால் பரவுகின்றான் )-என்கிற ஸூத்ர அர்த்தம் –

வாசப்தோ மதாப்தர வ்யாவ்ருத் த்யர்த்த தத ஆத்மா
ஸ்வ குணேன ஜ்ஞாநேன சகல தேகம் வியாப்ய அவஸ்திதம்
ஆலோகவத் யதா மணி த்யுமணி ப்ரப்ருதீ நாம ஏக தேச வர்த்தி நாம் ஆலோக
அநேக தேச வ்யாபீ த்ருச்யதே தத் வத் ஹிருதயஸ் தஸ்யாத்
மநோ ஜ்ஞானம் சகல தேஹம் வ்யாப்ய வர்த்ததே
ஜ்ஞாது ப்ரபா ஸ்தாநீ யஸ்ய ஜ்ஞானஸ்ய ஸ்வாஸ்ரயாத் அந்யத்ர வ்ருத்திர்
மணி ப்ரபாவத் உப பத்யத இதி பிரதம ஸூத்ரே ஸ்தாபிதம் -என்று இறே இதுக்கு ஸ்ரீ பாஷ்யம்

(ஸூத் ரத்தில் உள்ள -வா -மற்றக் கருத்துக்களைத் தள்ளுகிறது
ஆத்மாவானது தன்னுடைய தர்ம பூத ஞானத்தால் அனைத்து சரீரங்களிலும் பரவி நிற்கும்
ஸகல தேஹம் என்றது ஸகல சரீரங்கள் என்றும் சரீரத்தில் ஸகல இடங்களிலும் என்றும் பொருள்
ஆகவே -ஆலோகவத் -ஒளியைப் போன்று ஆகும்
இரத்தினம் ஸூர்யன் போன்றவை ஓர் இடத்தில் மட்டும் உள்ள போதிலும் அவற்றின் பிரகாசம் எங்கும் பரவி இருப்பதைக் காணலாம்
இதே போல் இதயத்தில் மட்டுமே ஆத்மா உள்ள போதிலும் அதன் ஞானம் சரீரம் முழுவதும் பரவி நிற்கிறது –
ஒளியுடன் கூடிய இரத்தினத்தின் ஒளி போன்று அறிபவனாக உள்ள ஆத்மாவின் ஞானம் என்பது
தன்னுடைய இருப்பிடம் ஆதாரமான ஆத்மாவையும் கடந்து பிரகாசிக்கும் என்பதை முதல் ஸூத்ரத்திலேயே கூறினோம் – )

இப்படி ஜ்ஞான வ்யாப்தியாலே சர்வத்தையும் புஜிக்கும் என்னும் இடம்
ப்ருக தாரண்யத்திலே சொல்லப் பட்டது –

பிரஜ்ஞயா வாசம் சமாருஹ்ய வாசா சர்வாணி நாமாந் யாப்நோதி
பிரஜ்ஞ யாக்ராணம் சமாருஹ்ய க்ராணேந ஸர்வாந் கந்தா நாப்நோதி
பிரஜ்ஞயா சஷூஸ் சமாருஹ்ய சஷூஷா சர்வாணி ரூபாண் ஆப்நோதி
பிரஜ்ஞயா ஸ்ரோத்ரம் சமாருஹ்ய ஸ்ரோதரேண சர்வாஜ் ஞா சப்தாந் ஆப்நோதி
பிரஜ்ஞயா ஜிஹ்வாம் சமாருஹ்ய ஜிஹ்வயா சர்வாந் ரஸாநா ஆப்நோதி
பிரஜ்ஞயா ஹஸ்தௌ சமாருஹ்ய ஹஸ்தாப்யாம் சர்வாணி கர்மாண்யாப் நோதி
பிரஜ்ஞயா சரீரம் சமாருஹ்ய சரீரேண ஸூக துக்கே ஆப் நோதி
பிரஜ்ஞயா உபஸ்தம் சமாருஹ்ய உபஸ்தே நாநா நதம் ரதிம ப்ரஜாம் சாப் நோதி
பிரஜ்ஞயா பாதௌ சமாருஹ்ய பாதாபயாம் சர்வா கதீர் ஆப்நோதி
பிரஜ்ஞயா தியம் சமாருஹ்ய தியா விஞ்ஞா தவ்யம் காமமாப் நோதி –
என்று இப்படி சொல்லுகையாலே –

(கௌஷீ தகீ –ஞானம் மூலம் வாக்கை அடைந்து அனைத்துப் பெயர்களுடன் சம்பந்தம் அடைகிறான்
ஞானம் மூலம் மூக்கை அடைந்து அனைத்து மணங்களையும் அனுபவிக்கிறான்
ஞானம் மூலம் செவியை அடைந்து அனைத்து ஆசைகளையும் கேட்க்கிறான்
ஞானம் மூலம் நாக்கை அடைந்து அனைத்து சுவைகளையும் உணர்கிறான்
ஞானத்தால் கைகளை அடைந்து அனைத்து செயல்களையும் செய்கிறான்
ஞானத்தால் அனைத்து சரீரங்களையும் அடைந்து-சரீரத்தில் எங்கும் செண்டு – இன்ப துன்பங்களை அனுபவிக்கிறான்
ஞானத்தால் ஆண் குறியை அடைந்து மக்களைப் பெறுகிறான்
ஞானத்தால் கால்களை அடைந்து வேண்டிய இடங்களுக்குச் சொல்லுகிறான்
ஞானத்தால் புத்தியை அடைந்து தனது விருப்பங்களை அடைகிறான் -என்றும் உண்டே -)

————————————————————————————————

சூர்ணிகை -17-

ஏக சரீர மாத்ரத்துக்கு இப்படி கொண்டாலும்
ஒருவன் ஏக காலத்திலே அநேக சரீரங்களை
பரிக்ரஹிக்கிறது ஸ்வரூப வ்யாப்தியாலே யாக
வேண்டாவோ -என்கிற
சங்கையிலே அருளிச் செய்கிறார் –

ஒருவன் ஏக காலத்திலே
அநேக தேஹங்களைப்
பரிக்ரஹிக்கிறதும்
ஜ்ஞான வ்யாப்தியாலே –

ஒருவனுக்கே அநேக தேக பரிக்ரஹம் கால பேதத்தாலே
சம்பவிக்கும் இறே-
அத்தை வ்யாவர்த்திக்கைக்காக
ஏக காலத்திலே -என்கிறது-

ஏக காலே அநேக தேக பரிக்ரஹம்
சௌபரி பரப்ருதிகள் பக்கலிலே
சம் பிரதி பன்னம் இறே –

——————————————————

சூர்ணிகை -18-

அவ்யக்தம் ஆகையாவது
கட படாதிகளை
க்ரஹிக்கிற சஷூராதிகளாலே
தோற்றாது இருக்கை –

சேத நாதி யோக்யானி கடபடா தீனி வஸ்தூனி யை ப்ரமாணைர் வ்யஜ் யந்தே
தைரயமாத்மா ந வ்யஜ்யதே இத் அவ்யக்த -(ஸ்ரீ கீதா பாஷ்யம் –2-25-அழிந்து போதல் போன்றவை
முதலானவைகளுக்கு ஏற்றதாக உள்ள குடம் துணி எந்தக் கண் முதலான இந்த்ரியங்களால் அறியப் படுகின்றனவோ
அந்த இந்த்ரியங்களால் ஆத்மா காணப்படடமல் உள்ளதால் அது அவ்யக்தம் எனப் படுகிறது )-என்று இறே
ஸ்ரீ பாஷ்யகாரரும் அருளிச் செய்தது
அப்படியே இவரும் அருளிச் செய்கிறார்

இங்கன் அன்றிக்கே
ஒரு பிரமாணத்தாலும் தோற்றாது இருக்கை என்னில்
துச்சத்வம் வரும் இறே

ஆகையாலே
மானஸ ஜ்ஞானம் கம்யம் இத்தனை யல்லது
ஐந்த்ரிய ஜ்ஞான கம்யம் அன்று என்கை

அவ்யக்த சப்தார்த்தம்
சென்று சென்று பரம் பரமாய் -என்று தொடங்கி
ஆத்ம ஸ்வரூப வைலஷண்யத்தை அருளிச் செய்கிற ஆழ்வாரும்
ஞானம் கடந்ததே -என்று
ஐந்திரிய ஞான அகோசரத்வத்தை இறே அருளிச் செய்தது-

—————————————————————————————–

சூர்ணிகை -19-

அசிந்த்யமாகை யாவது
அசித்தோடு சஜாதீயம் என்று
நினைக்க ஒண்ணாது
இருக்கை –

அதாவது
யத சேத் யாதி விசஜாதீயஸ் தத ஏவ சர்வ வஸ்து விசஜாதீ யத் வேன
தத் தத் ஸ்வ பாவ உக்த தயா சிந்த யிதிம் அபி நார்ஹ (2-25-எந்த ஒரு காரணத்தால் வெட்டுவதற்கு
ஏற்றதாக உள்ள வாள் போன்றவற்றைக் காட்டிலும் வேறுபட்டதாக உள்ளதோ அந்தக் காரணத்தால்
ஆத்மாவானது மற்ற பொருள்களை போன்று தன்மை கொண்டது அல்ல –
ஆகவே அந்தப் பொருள்களுடைய இயல்பான தன்மையுடன் ஆத்மா சேர்ந்து உள்ளதாக எண்ண இயலாது )-என்று இறே
இதுக்கும் ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்தது
ஆகையாலே இவரும் இப்படி அருளிச் செய்கிறார் –

இங்கன் அன்றிக்கே
அச்சிந்த்யத்வம் ஆவது
ஒருபடியாலும் சிந்திக்கைக்கு யோக்யம் அன்றிக்கே இருக்கை என்னில் –
ஆத்மா ஸ்வரூப விஷயமான ஸ்ரவண மனனாதிகளுக்கு வையர்த்த்யம் ப்ரசங்கிக்கும் இறே
ஆகையால் அசித் சஜாதீய புத்த்ய அநர்ஹத்வமே அசிந்த்ய சப்தார்த்தமாகக் கடவது –

ஆக
அவ்யக்தோயம சிந்தயோயம் (2-25)-என்று
ஸ்ரீ கீதா உபநிஷத் ஆச்சார்யன் அருளிச் செய்தபடியே –
இவரும்
ஆத்மா ஸ்வரூப வைலஷண்யம் ப்ரகடநார்த்தமாக இவ்விடத்திலே அருளிச் செய்தது –

—————————————————————————

சூர்ணிகை -20-

நிர்வவவமாகை யாவது
அவயவ சமுதாயம் அன்றிக்கே
இருக்கை –

அதாவது –
விஞ்ஞான மய-(தை -4-1-ஞான மயமாகவே உள்ளான் )என்றும்
விஞ்ஞான கன-(ப்ரு –4-4-12-ஞானமே ரூபமாக உள்ளான் )என்றும் சொல்லுகிறபடியே
ஞான ஏகாகாரம் ஆகையாலே அசித் வஸ்துகளைப் போலே
அவயவ சங்காதாத் மகம் அன்றிக்கே இருக்கை –

—————————————————————————-

சூர்ணிகை -21-

நிர்விகாரம் ஆகையாவது
அசித்துப் போல விகரிக்கை அன்றிக்கே
ஒருபடிப் பட்டு இருக்கை–

அதாவது –
அம்ருதாஷர மஹர-(ஸ்வே –1-10- மரணம் அற்றவன் அழிவு அற்றவன் -மாற்றம் அற்றவன் )-என்றும்
ஆத்மா சுத்தோ ஷர -(ஸ்ரீ வராஹ புராணம் -2-13-17-ஆத்மா தூய்மை யானவன் -மாற்றம் அற்றவன் -)-என்றும்
அஷர சப்த வாஸ்யமான வஸ்துவாகையாலே
ஷண ஷரண ஸ்வ பாவம் ஆகையாலே
ஷர சப்த வாஸ்யமான அசித்துப் போலே விகரிக்கை அன்றிக்கே
சதைக ரூபமாய் இருக்கை

ஆகை இறே-
அவிகார்யோயம் (2-25-ஆத்மா மாறுபாடு அடையாதவன் )-என்று
ஸ்ரீ கீதோ உபநிஷத் ஆச்சார்யன் அருளிச் செய்தது –

——————————————————————————-

சூர்ணிகை -22-

அவதாரிகை –
ஏவம் பரகாரமாகையாலே ச்சேத் யாதி
விசஜாதீயமாய் இருக்கும்
என்கிறார் மேல் –

இப்படி இருக்கையாலே
சஸ்த்ரம்
அக்னி
ஜலம்
வாதம்
ஆதபம்
தொடக்க மானவற்றால்

சேதித்தல்
தஹித்தல்
நனைத்தல்
சோஷிப்பித்தல்
செய்கைக்கு
அயோக்யமாய் இருக்கும் –

இப்படி
அவ்யக்த்வாதிகள் நாலையும் அநு பாஷிக்கிறது ஆதல்
நிர்விகாரத் மாத்ரத்தை யாதல்

அதாவது
சஸ்த்ர அக்னி யாதிகளை ஸ்தேதந தஹநாதிகளை பண்ணும் போது
தத் வஸ்துக்களில் வியாபித்து செய்ய வேண்டுகையாலும்
ஆத்மா சர்வ அசித் தத்வ வியாபகன் ஆகையாலே
அவற்றில் காட்டில் அத்யந்த சூஷ்ம பூதன் ஆகையாலும்
வ்யாப்யமாய் ஸ்தூலமாய் இருக்கிற இவை
வியாபகமாய் சூஷ்மமான ஆத்ம வஸ்துவை
வியாபித்து விகரிப்பிக்க மாட்டாமையாலும்
சஸ்த்ர அக்னி ஜல வாதா தபாதிகளால் வரும்
ஸ்தேதன தஹன க்லேதன சோஷணங்களுக்கு
அநந்ஹமாய் இருக்கும் என்கை –

நைநம் சிந்தந்தி சஸ்த்ராணி நைநம் தஹதி பாவக
ந சைநம் க்லே தயந்த்யாபோ ந சோஷயதி மாருத-(ஸ்ரீ கீதையில் –2-23-இந்த ஆத்மாவை
ஆயுதங்கள் வெட்டுவது இல்லை -அக்னி எரிப்பது இல்லை -தண்ணீர் நனைத்து இல்லை –
காற்று உலர வைப்பது இல்லை )-என்றும்
அச்சேத்ய அயமதஹய அயம் அக்லே தய அசோஷ்ய ஏவ ச
நித்ய சர்வ கத ஸ்தாணு அசலோயம் ஸநாதன (ஸ்ரீ கீதையில் -2-24-இந்த ஆத்மா வெட்டப்பட இயலாதவன் –
எரிக்கப்பட்ட இயலாதவன் -நனைக்கப்பட இயலாதவன் -உலர்த்தப்பட்ட இயலாதவன் –
நித்யமானவன்-எங்கும் நிறைந்து உள்ளவன் -நிலையாக உள்ளவன் -ஸாஸ்வதமாக உள்ளவன் )-என்றும்
அருளிச் செய்தான் இறே –

————————————————————————————————

சூர்ணிகை -23-

அவதாரிகை –

இப்படி நிர் விகாரமான ஆத்ம வஸ்துவுக்கு
பரிணாமித்வம் கொள்ளுகிற
ஆர்ஹத மதம் அயுக்தம் என்னும் இடத்தை
தர்சிப்பிக்கிறார் மேல் –

ஆர்ஹதர்
ஆத்மாவை
தேக பரிமாணன்
என்றார்கள் –

ஆர்ஹதர் ஆகிறார் –
ஜைனர் அவர்கள் -பாதமே வேதனா (எனது கால்கள் வேதனை அளிக்கிறது )-இத்யாதி
ப்ரகாரேண ஆபாத சூடம் தேஹத்தில் யுண்டான துக்கா யனுபவம்
ஆத்மா தேக பரிணாமம் அல்லாத போது கூடாது ஆகையால்
ஆத்மா ஸ்வ கர்ம அனுகுணமாக பரிக்ரஹிக்கும்
கஜ பீபிலாதி சரீரங்களுக்கு அனுகூலமாக பரிணமித்து
தத் தத் ஏக பரிமாணனாய் இருக்கும் என்று இறே சொல்லுவது –
அத்தை அருளிச் செய்கிறார் –
தேக பரிமாணன் -என்றார்கள் -என்று-

——————————————————————————

சூர்ணிகை -24-

அவதாரிகை –

அத்தை நிராகரிக்கிறார் –

அது
ஸ்ருதி விருத்தம் –

இவ்விடத்தில் இவர்க்கு விவஷிதையான ஸ்ருதி ஏது என்னில்
அம்ருத அஷர மஹர (ஆத்மா மரணம் அற்றவன் மாறுபாடு அற்றவன் )-என்று
ஆத்மாவினுடைய நிர் விகாரத்வ பிரதிபாதிகையான ஸ்ருதி யாக வேணும் –

தேக பரிமாணன் என்கிற பஷம்
ஆத்மா நிர்விகாரன் என்கிற ஸ்ருதியாலே பாதிதம் -என்று
இவர் தாமே தத்வ சேகரத்திலே அருளிச் செய்கையாலே –

ஏஷ அணுர் ஆத்மா (இந்த ஆத்மா அணு அளவே உள்ளான் )–
வாலாக்ர சத பாகஸ்ய(நெல்லின் நுனியை நூறு பாகமாக வெட்டினால் வரும் ஒரு பாகத்தின் அளவு கொண்டவன் ) -இத்யாதி
ஸ்ருதிகளும் தேக பரிமாண பஷத்துக்கு பாதிகைகள் ஆகையாலே
அவற்றையும் இவ் விடத்திலே சொல்லுவாரும் உண்டு –

—————————————————————————————————–

சூர்ணிகை -25-

அவதாரிகை –

ஏதத் விஷயமாக தூஷணாந்தரமும்
அருளிச் செய்கிறார் –

அநேக தேகங்களை
பரிக்ரஹிக்கிற
யோகிகள்
ஸ்வரூபத்துக்கு
சைதில்யமும் வரும் –

அதாவது
தேக பரிமாணம் -என்னும் பஷத்தில்
சம் சித்த யோகராய்
சௌபரியைப் போலே ஏக காலத்திலே அநேக தேகங்களை பரிகிரஹிக்கும் அவர்களுக்கு
தங்களுடைய ஸ்வரூபத்தை அநேகமாக சினனமாக்கிக் கொண்டு
அவ்வவ தேகங்களை பரிக்ரஹிக்க வேண்டி வரும் என்கை –

பரகாய பிரவேச முகேன அநேக சரீரங்களை பரிக்ரஹிக்கிற யோகிகள் ஸ்வரூபத்துக்கு
ஸ்தூலமான சரீரத்தை விட்டு ஸூஷ்மமான சரீரத்தை பரிக்ரஹிக்கும் அளவில்
இதுக்கு எல்லாம் அது அவகாசம் போராமையாலே சைதில்யம் வரும் என்னவுமாம் –

ஏவஞ்சாத்மா கார்த்ஸ்ந்யம் (2-2-32-ஆத்மாவிற்கு நிறைவின்மை ஏற்படுவதால் )-என்கிற ஸூத்ரத்திலே சொல்லுகிறபடியே
அல்ப மகத் பரிமாணங்களான கஜ பீபிலிகாதி சரீரங்களை
ஸ்வ கர்ம அனுகுணமாக
பரிஹரிக்கும் அவர்களுக்கு
கஜ சரீரத்தை விட்டு பிபீலிகா சரீரத்தை பரிஹரிக்கும் அளவில்
கஜ சரீர சம பரிமாணமாய் இருக்கும் அந்த ஸ்வரூபத்துக்கு
பிபீலிகா சரீரம் அவகாசம் போராமையாலே
சைதில்யம் வரும் என்று
இங்கனே இவ் வாக்யத்துக்கு யோஜித்தாலோ என்னில்
யோகிகள் ஸ்வரூபதுக்கு என்கையாலே
அது இவ் விடத்தில் இவருக்கு விவஷிதம் அன்று-

——————————————————————–

சூர்ணிகை -26-

ஞான ஆஸ்ரயம் ஆகையாவது
ஞானத்துக்கு
இருப்பிடமாய்
இருக்கை –

ஞானமாவது
ஸ்வ சத்தா மாத்ரத்தாலே ஸ்வ ஆஸ்ரயத்தைப் பற்றி
ஸ்வ பர வ்யவஹாரத்துக்கு உடலாய் இருப்பதொரு
ஆத்ம தர்மம்

இதுக்கு ஆத்மா ஆஸ்ரயம் ஆகையாவது
தீப பிரபைகள் இரண்டும் தேஜோ த்ரவ்யமாய் இருக்கச் செய்தே
தீபம் பிரபைக்கு ஆஸ்ரயமாய் இருக்குமா போலே

தானும் ஜ்ஞான ஸ்வரூபனாய் இருக்கச் செய்தே
ஸ்வ தர்மமான ஜ்ஞானத்துக்கு தன்னை ஒழிய
ப்ருதக் ஸ்திதி யுப லம்பங்கள் இல்லாதபடி தான் ஆதாரமாய் இருக்கை

அத யோ வேதேதம் ஜிக்ராணீதி ச ஆத்மா -(சாந்தோக்யம் -8-12-4- யார் ஒருவன் யான் இதை முகர்கிறேன் –
என்று உணர்கிறானோ அவனே ஆத்மா )

மனசை வைதாந் காமாந் பஸ்யந் ரமதே-(சாந்தோ -8-12-5-மனம் கொண்டு அவன் அனைத்து விருப்பங்களையும் )

ந பஸ்யோ ம்ருத்யும் பஸ்யதி -(சாந்தோ –7-26-2-ப்ரஹ்மத்தைக் கண்டவன் ம்ருத்யு எனப்படும் அவித்யையை அடைவது இல்லை )

விஜ்ஞா தார மரே கேந விஜாநீயாத-(ப்ரு -2-4-44-எதன் உதவியால் ஒருவன் அறிபவனை அறிகிறான் )

ஜாநாந் யே வாயம் புருஷ-(சாந்தோ -7-26-2-இந்தப் புருஷன் நிச்சயமாக அறிகிறான் )

ஏஷ ஹி த்ரஷ்டா ஸ்ப்ரஷிடா ஸ்ரோதா ரசயிதா க்ராதா மந்தா போக்தா கர்த்தா விஜ்ஞானாத்மா புருஷ-(ப்ர–4-9-அந்தப் புருஷனே
காண்பவன் கேட்ப்பவன் சுவைப்பவன் முகர்பவன் சிந்திப்பவன் அறிபவன் செய்பவன் -ஞான மயமாக உள்ளவன் ஆவான் )

ஏவமே வாஸ்ய பரி த்ரஷ்டு (ப்ர–6-5–இப்படியாகப் பார்ப்பவனுக்கே சொந்தமாக உள்ளவையும் )-

இத்யாதி ஸ்ருதிகளாலே ஜ்ஞாத்ருத்வம் சித்தம்-

———————————————————————————————

சூர்ணிகை -27-

ஏவம் பூதமான ஆத்மாவினுடைய ஜ்ஞாத்ருத்வத்தை
இசையாதே
ஜ்ஞானம் மாத்ரம் என்று சொல்லுகிற
பௌத்தாதிகள் யுடைய மதத்தை
நிராகரிக்கைக்காக தத் தத் பஷத்தை அனுவதிக்கிறார் –

ஆத்மா
ஜ்ஞானத்துக்கு
இருப்பிடம் அன்றிக்கே
ஜ்ஞானம் மாதரம்
ஆகில் –

———————————————————————–

சூர்ணிகை -28-

அஹம் இதம் ஜாநாமி-என்கிற
பிரத்யஷத்தாலே
அத்தை நிராகரிக்கிறார் –

நான் அறிவு என்று
சொல்ல வேணும்
நான் அறியா நின்றேன்
என்னக் கூடாது –

அதாவது –
ஆத்மாவுக்கு ஞான ஆஸ்ரயம் அன்றிக்கே
கேவலம் ஜ்ஞானமாய் இருக்கும் அளவே உள்ளதாகில்
நான் அறிவு -என்று தன்னை ஞான மாத்ரமாக சொல்லுகை ஒழிய
நான் இத்தை அறியா நின்றேன் -என்று தன்னை ஞாதாவாகச் சொல்லக் கூடாது -என்கை –

இவ் வாதத்தை நான் அறியா நின்றேன் என்கையாலே
விஷய க்ராஹியானதொரு ஜ்ஞானத்துக்கு தான் ஆஸ்ரயம் என்னும் இடம் தோற்றா நின்றது இறே
இப்படி ஆத்மாவினுடைய ஞாத்ருத்வம் ப்ரத்யஷ சித்தம் ஆகையாலே அபாதிதம் என்று கருத்து –

இதம் அபிவேத்மி இதி ஆத்ம வித்த்யோர் விபேதே ஸ்புரதி யதி தத் ஐக்யம் பாஹ்யம் அபி ஏகம் அஸ்து -(ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -2-10-
நான் இதனை அறிந்து கொள்கிறேன் -என்ற சிந்தனையின் மூலமே ஆத்மாவுக்கும் ஞானத்துக்கும் உள்ள வேற்றுமை தெளிவாகிறது
இவை இரண்டும் ஒன்றே என வாதம் செய்யும் போது இவை இரண்டின் மூலம் அறியப்படும் விஷயம் மட்டும் ஏன் விலக்கப்பட வேண்டும்
மூன்றும் ஒன்றே எனக் கூற வேண்டியது தானே – ) –என்று பட்டரும்
இப்படி இறே பௌதம மத நிரா கரணம் பண்ணுகிற இடத்தில் அருளிச் செய்தது —

———————————————————————————————————–

சூர்ணிகை -29-

அவதாரிகை –
ஜ்ஞாத்ருத்வ கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் மூன்றும் சொல்ல வேண்டி இருக்க
ஜ்ஞான ஆஸ்ரயமாய் -என்று
ஜ்ஞாத்ருத்வ மாத்ரத்தைச் சொல்லி
மற்றவை இங்கு சொல்லாது ஒழிவான் ஏன்
என்கிற சங்கையிலே அருளிச் செய்கிறார் –

ஜ்ஞாதா என்ற போதே
கர்த்தா
போக்தா
என்னுமிடம்
சொல்லிற்று ஆய்த்து-

———————————————————————-

சூர்ணிகை -30-

அவதாரிகை –

இப்படி பிரதிஞ்ஞா மாத்ரத்திலே போராது
என்று அதுக்கு ஹேதுவை அருளிச்
செய்கிறார் –

கர்த்ருத்வ
போக்த்ருத்வங்கள்
ஜ்ஞான அவஸ்தா விசேஷங்கள்
ஆகையாலே

ஹேய உபாதேய ஜ்ஞான மூலம் ஜ்ஞாத்ருத்வம் ஆத்மன
தத் தத் ப்ரஹாணோ பாதான சிகீர்ஷா கர்த்ரு தாஸ்ரய (ஆத்மாவின் ஞானத்துடன் கூடிய தன்மை என்பது
நன்மை மற்றும் தீமை இவற்றை அறிவதற்கு ஆதாரமாக உள்ளது –
அவற்றை விடுதல் மற்றும் கைக் கொள்ளுதல் ஆகியவற்றுக்கு ஏற்படும் ஆசை என்பதே
செயல் ஆற்றக் காரணம் ஆகிறது – )-என்கிறபடியே
ஆத்மாவினுடைய ஜ்ஞாத்ருத்வம் ஹேய உபாதேய பிரதிபத்திக்கு ஹேதுவாய் இருக்கும்

அவ்வோ ஹேயங்களை விடுகையிலும்
உபாதேயங்களைப் பற்றுகையிலும் உண்டான சிகீஷா கர்த்ருத்வம் அடியாக இருக்கும்
கர்த்தாவுக்கு இறே சிகீர்ஷை யுள்ளது
அந்த சிகீர்ஷை தான் ஜ்ஞான அவஸ்தா விசேஷம் இறே

அத்தோடு கர்த்ருத்வதுக்கு உண்டான பிரதயாசத்தியைக் கடாஷித்து
கர்த்ருத்வத்தை ஜ்ஞான அவஸ்தா விசேஷம் என்று உபசரித்து அருளிச் செய்கிறார்

அல்லது
கர்த்ருத்வம் ஆவது க்ரியாஸ்ரத்வம் ஆகையாலே அத்தை
ஜ்ஞான அவஸ்தா விசேஷம் என்று முக்கியமாக சொல்லப் போகாது இறே

கிரியை யாவது –
ஜ்ஞானாதி இச்சதி ப்ரயததே கரோதி (அறிகிறான் விரும்புகிறான் முயல்கிறான் செய்கிறான் )-என்று
ஜ்ஞான சிகீர்ஷா ப்ர யத்ந அநந்தர பாவியான ப்ரவ்ருத்தி யாகையாலும்
தத் ஆஸ்ரயம் கர்த்ருத்வம் ஆகையாலும்
அத்தை ஜ்ஞான அவஸ்தா விசேஷம் என்று உபசார பிரயோகம் என்றே கொள்ள வேணும்

இனி போக்த்ருத்வம் ஆவது போகாஸ்ரயத்வம்
போகமாவது ஸூக துக்க ரூபமான அனுபவ ஜ்ஞானம்
அது ஜ்ஞான அவஸ்த விசேஷம் இறே
தத் ஆஸ்ரயத்வத்தை ஜ்ஞான அவஸ்தா விசேஷம் என்று
சொல்லுகையாலே இதுவும் ஔபசாரிகம்

இப்படி ஜ்ஞாத்ருத்வதுக்கும் இவற்றுக்கும் உண்டான
ப்ரத்யா சத்தி அதிசயத்தாலே
தத் ஐக்ய கதனம் பண்ணலாம் படி இருக்கையாலே
ஜ்ஞாத்ருத்வம் சொன்ன போதே
கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் சொல்லிற்று ஆய்த்து என்ன தட்டில்லை இறே –

————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

தத்வ த்ரயம் -அவதாரிகை/ சித் பிரகரணம்-சூர்ணிகை -1-7— –ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —

July 29, 2014

ஸ்ரீ சைல தயா பாத்ரம் தீ பக்த்யாதி குணார்ணவம்
யதீந்திர பிரணவம் வந்தே ரம்யஜா மாதரம் முனிம்-

லோகச்சார்யா குரவே கிருஷ்ண பாதச்ய ஸூநவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நாம –

வாழி யுலகாரியன் வாழியவன் மன்னு குலம்
வாழி முடும்பை என்னு மா நகரம் -வாழி
மனம் சூழ்ந்த பேரின்ப மல்கு நல்லார்
இனம் சூழ்ந்து இருக்கும் இருப்பு

——————————————————–

அவதாரிகை —

அநாதி மாயயா ஸூக்த -(மாண்டூக்ய உபநிஷத் -எல்லையற்ற காலமாகத் தொடர்ந்து வரும் மாயை என்பதால் பிரகிருதியின் தொடர்பு காரணமாக ஜீவாத்மா உறங்கிய நிலையிலே உள்ளான்)என்கிறபடியே – அநாதி அசித் சம்பந்த நிபந்தனமாக அஞ்ஞான அந்தகாரத்தாலே அபி பூதராய் –

ஆத்ம ஸ்வரூபம்
பிரக்ருதே பரமாய் –
ஞானானந்த மயமாய் –
பகவத் அனன்யார்ஹ சேஷமாய் -இருக்கும் படியை அறியப் பெறாதே –

தேவோஹம் மனுஷ்யோஹம் (நான் தேவன் நான் மனிதன்)-என்று ஜடமான தேஹத்திலே அஹம் புத்தியைப் பண்ணியும்
தேஹாதிரிக ஆத்ம ஞானம் பிறந்ததாகில் –
ஈஸ்வரோஹம் அஹம் போகி-ஸ்ரீ கீதை –16-14- -(நானே ஈஸ்வரன் நானே இன்பத்தில் உள்ளவன்)என்று ஸ்வ தந்திர புத்தியைப் பண்ணியும்
சேஷத்வ ஞானம் யுண்டாய்த்தாகில் அப்ராப்த விஷயங்களில் அத்தை விநியோகித்தும்

(அஸௌ மயா ஹத ஸத்ருர் ஹநிஷ்யே ச அபராநபி–
ஈஸ்வரோஹம் அஹம் போகீ ஸித்த அஹம் பலவாந் ஸுகீ--৷৷16.14৷৷-பலம் மிக்க என்னால் இந்த என் எதிரி கொல்லப்பட்டான் -மேலும் பல எதிரிகளையும் சூரனாய் வீரனான நான் கொல்வேன்-நானே என் திறமையால் அனைவரையும் நியமிப்பவன் –நானே என் திறமையால் போகங்களை அனுபவிப்பவன் – நானே சித்திகளைப் பெற்றவன் –நானே இயற்கையாகவே பலமுடையவன் – நானே சுகமுடையவன் –அநிஷ்ட நிவ்ருத்தியும் என்னாலே -என்னாலே சத்ருக்கள் மாண்டனர் -நான் தான் ஈஸ்வரன் -நானே அனுபவிக்கிறேன்-ஸ்வர்க்காதிகளை நானே அடைவேன் -பலமும் என்னாலே சுகம் என்னாலே –)

இப்படி
யோன்யதா சாந்த மாதமான அந்யதா பிரதிபத்யதே கிம் தேன ந க்ருதம பாபம சோரேணா த்மாபஹாரிணா -மஹா பாரதம் -(உத்யோக பர்வம் -41-34-பகவானுக்கு மட்டுமே உடைமையானது என்றுள்ள இந்த ஆத்மாவானது தனக்கே உரியது என்றும் எண்ணியபடி -அனைத்துப் பாபங்களுக்கு காரணமாக உள்ள ஆத்மாவைக் களவு செய்தல் என்பதைச் செய்கிறார்கள் -அற்பமானதும் நிலையற்றதும் தோஷங்களுடன் கூடியதாக புலன் விஷயங்களில் ஈடுபட்டு நிற்கிறார்கள் -)என்கிறபடியே
ஆத்ம ஸ்வரூபத்தில் அந்யதா பிரதிபத்தி ரூபமாய்

அகில பாப மூலமான
ஆத்மாபஹாரத்தைப் பண்ணி
அல்ப அஸ்த்ரத்வாதி தோஷ துஷ்டமான
சப்தாதி போகைகத தத் பரராய்
விசித்ரா தேக சம்பதீஸ்வராய நிவேதிதும் பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மன் ஹஸ்த பாதாதி சமயுதா-ஸ்ரீ விஷ்ணு தத்வம் -(ஸர்வேஸ்வரனுக்கு அனைத்து கைங்கர்யங்களையும் செய்வதற்காகவே கைகால்களுடன் கூடியதான இந்த விசித்திரமான சரீரம் நமக்கு முன்பே நான்முகனால் தரப்பட்டது -)என்கிறபடியே
கரண களேபர விதுரமாய்
போக மோஷ சூன்யமாய்
அசித விசேஷிதமாய்க் கிடக்கிற தசையிலே –

பரம தயாளுவான சர்வேஸ்வரன்
ஸ்வ சரண கமல சமாஸ்ரயண உபகரணமாக கொடுத்த சரீரத்தைக் கொண்டு
தத் சமாஸ்ரயணத்தைப் பண்ணி உஜ்ஜீவிக்கலாய் இருக்க

அத்தைச் செய்யாதே –
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன் -என்கிறபடியே
அதன் வழியே போய்

ஆறு நீஞ்சக் கொடுத்த தெப்பத்தைக் கொண்டு அக்கரை ஏறலாய் இருக்க
நீர் வாக்காலே ஒழிகிக் கடலிலே புகுவாரைப் போலே
சம்சார நிஸ்தரணத்துக்கு உடலானவற்றையும்
சம்சரணத்துக்கு உடலாக்கி

அநாதி அவித்யா சஞ்சித அநந்த புண்ய பாப ரூப கர்ம அனுகுணமாக
மாறி மாறி பல பிறப்பும் பிறந்து
பிறந்த ஜன்மம் தோறும் துரந்த-(துர அந்த -அந்தமில்லாத ) தாபத் த்ரய தவாநல தஹ்யமானராய்
இப்படி அநாதிகாலம் போரா நிற்கச் செய்தேயும்

அதீத அநாகதம் அறியாமையாலே
அதிலே ஒரு கிலேசம் இன்றிக்கே
கர்ப்ப
ஜன்ய
பால்ய
யௌவன
வார்த்தக
மரண
நரக ரூப
அவஸ்த சப்தகத்தை பிராபித்து
துக்க பரம்பரைகளை அனுபவித்து

இப்படி அநந்த கிலேச பாஜனமான சம்சார சாகரத்திலே அழுத்திக் கிடந்தது அலைகிற
சேதனருடைய அனர்த்த விசேஷத்தை அனுசந்தித்து
இவர்கள் யுடைய உஜ்ஜீவனத்துக்கு கிருஷி பண்ணிக் கொண்டு போருகிற
சர்வபூத ஸூஹ்ருதான சர்வேஸ்வரன்

ஏவம் சம்ஸ்ருதி சகர்ஸ்தே ப்ராமயமாணே ஸ்வ கர்மபீ ஜீவே
துக்க ஆகுலே விஷ்ணோ க்ருபா காப் யுபஜாயகே –(அஹிர் புத்ன்ய ஸம்ஹிதை -14-இப்படியாக ஸம்ஸாரம் என்ற சக்கரத்தில் இருந்தபடி தங்களுடைய ஆழ்ந்து வினைகளால் சுழன்றபடி துன்பத்தில் கலங்கி நிற்கும் ஜீவாத்மா குறித்து மஹா விஷ்ணுவுக்குக் கருணை ஏற்படுகிறது)(காபி உபயாஜயகே – -காபி சபரி / காபி குகன் போலே )-என்கிறபடியே
தன்னுடைய திரு உள்ளத்தில் பிறந்த அபார காருண்யத்தாலே –

ஜாயமானம் ஹி புருஷம் யம் பஸ்யேன் மது ஸூதன சாத்விகஸ் ச து விஜஞ்ஞேயஸ் ச வை மோஷார்த்த சிந்தக -(மோக்ஷ பர்வம் -யார் ஒருவன் பிறக்கும் போதே அவனை மது ஸூதநன் பார்க்கிறானோ அவன் ஸத்வ குணங்கள் நிறைந்து மோக்ஷம் குறித்து சிந்திக்கிறான்)என்கிறபடியே
ஜாயமான காலத்தில் பண்ணின விசேஷ கடாஷத்தாலே
நிரஸ்த ரஜஸ் தமஸ் சகனாய்
பிரவ்ருத்த சத்வ குணகனாய்
முமுஷூவான சேதனனுக்கு
தத்வ ஜ்ஞானம் பிறந்தால் அல்லது மோஷ சித்தி இல்லாமையாலே
தத்வ ஞான சம்பாத்யமாம் அளவில் அது
சாஸ்திர ஜன்யமாதல்
உபதேச கம்யம் ஆதல் -வேண்டுகையாலும் –

சாஸ்திர ஜன்யமாம் அளவில்
சாஸ்திர ஞானம் பஹூ க்லேசம -என்கிறபடியே
பஹூ கிலேச சாத்தியம் ஆகையாலே
துஸ் சாதமாகையாலும்

வருந்தி சாதிக்கப் பார்த்தாலும்
அநந்த பாரம் பஹூ வேதி தவ்யம் அல்பஸ் ச காலோ பஹவஸ் ச விக்னா -(ஸாஸ்த்ரங்கள் எல்லை யற்றவை -அறிய வேண்டிய விஷயங்களும் எல்லை யற்றவை -ஆனால் காலமோ மிக குறுகியதாய் உள்ளது -தடைகளோ பல உள்ளன)என்கிறபடியே
சேதனர்-மந்த மதிகளுமாய்
மந்த ஆயுஸ்ஸூக்களுமாய்

அதுக்கு மேலே
விக்னங்களும் அனந்தங்களாய் இருக்கையாலே
எல்லாருக்கும் ஒக்க சித்திக்கை அரிதாய் இருக்கையாலும்

இனித் தான்
சாஸ்திர அப்யாசத்துக்கு அனதிகாரிகளான ஸ்த்ரி சூத்ராதிகளுக்கு
முமுஷூத்வம் யுண்டானாலும் நிஷ் பிரயோஜனமாம் படி இருக்கையாலும்
உபதேச கம்யமாம் அளவில் யுக்த தோஷம் ஒன்றும் இல்லாமையாலும்
இந்த விசேஷத்தை திரு உள்ளம் பற்றி

சகல சாஸ்திர நிபுணராய்
சகல சேதன உஜ்ஜீவன காமராய்
பரம காருணிகரான-
பிள்ளை லோகாச்சார்யார்

ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாச புராணங்களிலே
துரவகாஹமாம் படி பரக்கச் சொல்லப் படுகிற
சித் அசித் ஈஸ்வர
தத்வங்களின் யுடைய
ஸ்வரூப ஸ்வ பாவ விசேஷங்களை
அகில சேதனர்க்கும்
ஸூ க்ரஹமாகவும்
ஸூ வ்யகதமாகவும்
இப்பிரபந்த முகேன அருளிச் செய்கிறார் –

நடுவில் திரு வீதிப் பிள்ளை பட்டர்
ஆச்சான் பிள்ளை
முதலான பூர்வாச்சார்யர்கள் யுடைய பிரபந்த நிர்மாணத்துக்கும் கருத்து இதுவே இறே

நிர் அஹங்காரராய்
பர சம்ருத்தி -ஏக – பிரியராய்
க்யாதி லாபாதி நிரபேஷராய்
இருக்கிறவர்கள் பலரும் பிரபந்தம் இட வேண்டுவான் என்-

ஒருவரிட்ட பிரபந்தத்தை மற்றும் உள்ளவர்கள் பரிபாலனம் பண்ண அமையாதோ -என்னில்
ஆழ்வார்கள் பலரும் ஏக கண்டராய் அருளிச் செய்கையாலே
அர்த்தத்துக்கு ஆப்ததை- சித்தித்தாப் போலே

ஆச்சார்யர்கள் பலரும் ஏக கண்டமாக அருளிச் செய்த அர்த்தம் என்று
மந்தமதிகளும் விஸ்வசிக்கைக்காக –

இன்னமும் ஓர் ஒன்றில் அவிசிதமான அர்த்த விசேஷங்கள்
ஓர் ஒன்றிலே விசதமாய் இருக்கும் –

அதுக்கடி
ஸூக்தி விசேஷங்களும்
சங்கோச விஸ்தரங்களும் –
இது ஏக கர்த்ருகங்களான பிரபந்த விசேஷங்களுக்கும் ஒக்கும் –

———————————————————————-

சித் பிரகரணம் –

சூர்ணிகை -1-
முமுஷூவான சேதனனுக்கு
மோஷம் யுண்டாம் போது
தத்வ த்ரய ஞானம் யுண்டாக வேணும் –

முமுஷூ வாகிறான் மோஷம் இச்சை யுடையவன்
சம்சார விமோசனத்தில் இச்சை யுடையவன் -என்றபடி

முமுஷூ வானவன் என்கையாலே
சம்சார நிவ்ருத்தியிலே ஒருவனுக்கு இச்சை யுண்டாகையில் உள்ள அருமை தோற்றுகிறது-

இந்த இச்சை பிறவாமை இறே அநாதி காலம் சம்சரித்தது
உஜ்ஜிஜீவயிஷூவான சர்வேஸ்வரனும் இந்த இச்சை பிறக்கும் அளவு இறே பார்த்து இருக்கிறது –
சம்சாரத்தைப் பூண் கட்டிக் கொள்ள இச்சிக்க கடவ ஆத்மாவுக்கு
தந் நின்வ்ருத்தியில்
இச்சை பிறக்கை துர்லபம் இறே

இப்போது இவர் சேதனன் -என்றது ச அபிப்ராயம்
அதாவது
சைதன்ய பிரயோஜனம் யுண்டாகத் தொடங்குகிறதும் இப்போது என்கை –

அநாதி காலம் வ்யர்த்தமே பிறத்தது இத்தனை இறே சைதன்யம் –
அதாவது உஜ்ஜீவனதுக்கு உறுப்பாகாமை

இனித் தான் சம்சார நிவ்ருதியை இச்சிக்கிறது
நிரதிசய ஆதிசய ஆஹ்லாத ஸூக பாவைக லஷணையான பகவத் பிராப்திக்கு உறுப்பாக இறே
தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் அது இறே -உணர்வு ஆவது

ஆத்ம பிராப்திக்கு உறுப்பாக சம்சார நிவ்ருத்தியை இச்சித்தாலும்
விபரீத ஞான கார்யமாம் இத்தனை

ஆகையால் பகவத் பிராப்திக்கு விரோதியான
சம்சாரத்தின் உடைய விமோசனத்தில் இச்சை யுடையனான அதிகாரிக்கு
அப்படி இருந்துள்ள மோஷம் ஆகிற புருஷார்த்தம் சித்திக்கும் போது
தத்வ த்ரய ஞானம் யுண்டாக வேணும் -என்கை –

தத்வ ஞான உத்பத்திக்கு முன்னே முமுஷை ஜனிக்க கூடுமோ என்னில்
பரீஷ்ய லோகாந்-– (முண்டக-1-2-12-புண்ணியம் போன்ற வினைகளால் கிட்டப்படும் உலகம்)- –
ஜாயமான -இத்யாதி -சுருதி ஸ்ம்ருதிகளில் சொல்லுகிற பிரகிரியையாலே கூடும் –

உண்டாக வேணும் –என்ற
அவச்ய அபேஷித்வம் தோற்ற அருளிச் செய்கையாலே
தத்வ ஞானான் மோஷ லாபம் -என்கிற இது
சகல சித்தாந்த சாதாரணம் இறே
மோஷத்திலும் தத்வத்திலும் இறே விப்ரபத்தி உள்ளது –

ஆனால் ஜ்ஞானான் மோஷம் -என்கிற நியமம் கொள்ளும் போது –
பசுர் மனுஷ்ய பஷி வா யே ச வைஷ்ணவ சம்ஸ்ரயா தேனைவ தே பிரயாச்யந்தி தத் விஷ்ணோ பரமம் பதம்(பசு மனிதன் பக்ஷி போன்றவைகளாக உள்ளபோதிலும் அவை ஒரு வைஷ்ணவனை அடைந்தால் அந்தத் தொடர்பு காரணமாகவே அவை விஷ்ணுவின் உயர்ந்த இடத்தில் அடைகின்றன) –என்றும்
யம் யம் ஸ்ப்ருசதி பாணிப்யாம் யம் யம் பச்யதி சஷூஷா ஸ்தாவராண் யபி முச்யந்தே கிம் புநர் பாந்தவா ஜநா--(ஒரு வைஷ்ணவன் எவற்றைத் தன் கைகளைக் கொண்டு தொடுகிறானோ -எவற்றைத் தன் கண்களாலே காண்கிறானோ அவைகளை ஸ்தாவரங்களாக இருந்தாலும் மோக்ஷம் அடைகின்றன -)என்றும்
ஞான யோக்யதை இல்லாத திர்யக் ஸ்தாவரங்களுக்கும்
வைஷ்ணவ சம்பந்தத்தாலே மோஷ சித்தியைச் சொல்லுகிற வசனங்களுக்கு வையர்த்த்யம் வாராதோ -என்னில் -வாராது
அவற்றுக்கு முமுஷுத்வம் தானும் இல்லை இறே –

இங்கு முமுஷுவான சேதனனுக்கு இறே
மோஷ சித்திக்கு தத்வ த்ரய ஞானம் யுண்டாக வேணும் என்கிறது –

அங்குத் தானும்
முமுஷ்த்வமும் –
தத்வ ஞானமும் -இவற்றின் -பககல் இன்றிக்கே இருக்கச் செய்தேயும்
இவை இரண்டாலும் பூர்ணனாய் இருப்பான் ஒரு வைஷ்ணவன் யுடைய அபிமானம் இறே
கார்யகரமாகச் சொல்லுகிறது –

ஆகையால் அபிமானி யானவனுடைய ஜ்ஞான விசேஷத்தை கடாஷித்து இறே
அபிமான அந்தர் பூதமான இவற்றுக்கும் ஈஸ்வரன் கார்யம் செய்கையாலே –
தத்வ ஞானம் மோஷம் என்கிற இது
அவ்விடத்திலும் சத்வாரகமாக சித்திக்கும் –

தத்வ ஞானம் என்னாதே
தத்வ த்ரய ஞானம் என்கையாலே
தத்தவங்களை அதிகமாகவும் ந்யூநகமாகவும் கொள்ளுகிற
பாஹ்ய குத்ருஷ்டி மதங்கள் அர்த்தாத் பிரதிஷிப்தங்கள்-

இவர் தாம் தத்வ த்ரயம் என்று நிர்ணயிக்கைக்கு பிரமாணம் என் -என்னில்
நிர்தோஷ பிரமாணமான வேதாந்தம்
போக்தா போக்யம் ப்ரேரிதா ச மத்வா (ஸ்வே -1-12-அனுபவிக்கும் சேதனன் -அனுபவிக்கப்படும் வஸ்து இதனை அனுபவிக்கும்படிச் செய்யும் ஸர்வேஸ்வரன்)-என்று
போக்த்ரு சப்தத்தாலும்
போக்ய சப்தத்தாலும்
ப்ரேரிதா சப்தத்தாலும்
சித் அசித் ஈஸ்வர தத்வங்கள் மூன்றையும் இறே சொல்லுகிறது –
ஆகையால் வேதாந்த பிரதிபாத்யம் தத்வ த்ரயமுமே என்று நிச்சயித்து
மோஷம் யுண்டாம் போது தத்வ த்ரய ஞானமும் யுண்டாக வேணும் -என்கிறார் –

ஆனால் -தமேவம் வித்வாந் அம்ருத இஹ பவதி நாந்ய பந்த்தா அயநாய வித்யதே –(ஸர்வேஸ்வரனை அறிந்து கொண்டவன் இந்த உலகிலேயே முக்தன் ஆகிறான்) -என்று
வேதாந்தங்களில் பகவத் தத்வ ஞானம் ஒன்றுமே மோஷ சாதனம் என்னா நிற்க
தத்வ இதர–தத்வாந்தர- பரிஜ்ஞானத்தையும் இவர் மோஷ சாதனமாக அருளிச் செய்வான் என் -என்னில்

பகவத் தத்வத்தை அறியும் போது
சகல சேதன அசேதன விலஷணமாகவும்
இவற்றுக்குக் காரணமாகவும்
வியாபகமாகவும்
தாரகமாகவும்
நியாமாகவும்
சேஷியாகவும்
அறிய வேண்டுகையாலும்

தத்வாந்தரங்களை அறியாத போது இப்படி அறிய விரகு இல்லாமையாலும்
தத்வ த்ரய ஞானம் யுண்டாக வேணும் -என்னக் குறை இல்லை –

போக்தா போக்யம் ப்ரேரிதாரம் ச மத்வா (ஸ்வே -1-12-அனுபவிக்கும் சேதனன் -அனுபவிக்கப்படும் வஸ்து இதனை அனுபவிக்கும்படிச் செய்யும் ஸர்வேஸ்வரன் ஆகியவற்றை எண்ணியபடி)-என்றும்
ப்ருதகாத்மாநம் ப்ரேரிதாரம் ச மத்வா -ஜூஷ்டஸ் ததஸ் தேந அம்ருத்தவ மேதி (ஜீவாத்மா மற்றுமோர் பரமாத்மா ஆகிய இருவரும் வெவ்வேறு என்றும் தெளிந்து -அத்தகைய ஞானம் பெற்ற ஒருவனைக் குறித்து பரமாத்மா மகிழ்வதன் விளைவாக அவனாலே அன்புடன் ஏற்கப்படும் ஒருவன் மோக்ஷம் பெறுகிறான்)-என்கிற
ஸ்ருதிகளுக்கும் ஹிருதயம் இது இறே
இங்கன் அன்றாகில் தமேவம் வித்வான் -இத்யாதி ஸ்ருதியோடு
இதுக்கு விரோதம் வரும்
ஆகையால் இந்த சுருதி சாயையாலே இவரும் அருளிச் செய்தார் ஆகையாலே
வேதாந்த விரோதி பிரசங்கமே இல்லை –

—————————————————————

சூர்ணிகை -2-

அவதாரிகை –
தத்வ த்ரயம் தான் ஏது என்னும்
ஆகாங்ஷையிலே அருளிச் செய்கிறார் –

தத்வ த்ரயமாவது
சித்தும்
அசித்தும்
ஈஸ்வரனும்

சித்தாவது -சைதன்ய ஆதாரமான வஸ்து
அசித்தாவது சைதன்ய அநாதாரமான வஸ்து
ஈஸ்வரன் ஆகிறான் யோக வைஷிகாதி தந்தரத்தில் உள்ளார் சொல்லுகிற கணக்கிலே
ஒரு புருஷ விசேஷம் அன்றிக்கே
வேதாந்திகள் சொல்லுகிற
சிதசித் நியந்தா -(சித் மற்றும் அசித்தை நியமிப்பவன் ஆகிறான்)
ஷரம் பிரதானம் அம்ருத அஷரம் ஹர ஷராத்மாநா விசதே தேவ ஏக -(ஸ்வே -1-10-பிரதானம் என்பதை ஷரம் அழியக் கூடியது எனப்படும் -இதை தமது இன்பத்திற்க்காகக் கொள்பவன் அக்ஷரம் -ஜீவாத்மா -அழிவற்றவன் ஆவான் -ஒரே தேவனே இந்த இரண்டையும் நியமித்தபடி உள்ளான்)
பிரதான ஷேத்ரஜ்ஞ பதிர் குணேச (ஸ்வே -1-16-பிரதானத்திற்கும் ஷேத்ரஞ்ஞனுக்கும் -ஜீவாத்மாவுக்கும் அவனே தலைவன் -அவனே குணங்களை நியமிப்பவன் ஆவான்)-என்னக் கடவது இறே-

——————————————————–

சூர்ணிகை -3-

அவதாரிகை –

உபதேச ( உத்தேச்ய)-கிரமத்திலே
தத்வ த்ரயத்தின் யுடையவும்
ஸ்வரூப ஸ்வபாவ விசேஷங்களை உபபாதிப்பதாக
திரு உள்ளம் பற்றி
பிரதமம் சித் தத்தவத்தை உபபாதிக்க உபரமிக்கிறார் –

சித் என்கிறது
ஆத்மாவை –

நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டரும்
ஆச்சான் பிள்ளையும்
முதலான ஆச்சார்யர்கள் தத்வ த்ரயம் அருளிச் செய்கிற இடத்தில்
அசித் உபக்ரமமாக அருளிச் செய்தார்கள்
இவர் சித் உபக்ரமமாக அருளிச் செய்தார்

இதற்க்கு கருத்து
அசித் தத்வம் ஹேயதயா ஜ்ஞாதவ்யம் ஆகையாலும்
ஈஸ்வர தத்வம் உபாதேயதயா ஜ்ஞாதவ்யன் ஆகையாலும்
இப்படி இரண்டு தத்வத்தையும் அறிகைக்கு அதிகாரியான சேதனனுடைய ஸ்வரூபம் தன்னை
முதலிலே அறிந்து கொள்ள வேணும் இறே என்று –

அவர்கள் தான் அப்படி அருளிச் செய்வான் என் என்னில்
ஆத்மாவினுடைய ப்ரக்ருதே பரத்வஜ்ஞ்ஞாநம் பிரகிருதியை அறியாத போதே கூடாமையாலே
முந்துற ப்ரக்ருத தத்வத்தை அறிந்து
அநந்தரம்
தத் வ்யதிரிக்தனாய்
தத் அந்தர்வர்த்தியான ஆத்மாவை அறிந்து
அநந்தரம்
ஆத்மாவுக்கு அந்தர்யாமியாய்
சரீரத்துக்கு ஆத்மாவைப் போலே
உபயத்துக்கும் அபிமானியாய் இருக்கிற பரமாத்வாவினுடைய ஸ்வரூபத்தை அறிகை
புத்த்யா ஆரோஹகரம் ஆகையாலே அருளிச் செய்தார்கள் –

அசித் உபக்ரமாக சொல்லுகிற இது
அன்ன மயம் தொடக்கி
ஆனந்த மயம் அளவும் ஆரோஹித் த ஸ்ருதி மரியாதையைச் சேரும்

சித் உபக்ரமாக சொல்லுகிற இது
போக்தா போக்கியம் ப்ரேரிதாரம் -இத்யாதி ஸ்ருதிக்குச் சேரும்
ஆகையால் இரண்டு க்ரமமும் வேதாந்த சித்தம் –

சித் அசித் ஈஸ்வர தத் ஸ்வ பாவ -என்று ஆளவந்தாரும்
அசேஷ சிச் அசித் வஸ்து சேஷிணே-என்று ஸ்ரீ பாஷ்யகாரரும்
அருளிச் செய்த வசனங்கள் உபய கோடியிலும் சேரும்
எங்கனே என்னில்
சித் உபக்கிரம யோஜனைக்கு தானே ஸ்வ ரசமாய் இருந்தது இறே

அசித் உபக்கிரம யோஜனையில் வந்தால் க்ரம விஷயா அன்று அவர்கள் அப்படி அருளிச் செய்தது –
சமஸ்த பதமாக அருளிச் செய்கையாலே சமாசத்தில் அப்யர்ஹிதமாதல்
அல்ப அஸ்தரமாதல் முற்படக் கடவது (சிறந்த பொருளைக் முதலிலும் அல்லது குறைந்து எழுத்துக்கள் கொண்டதை முதலிலும்)என்கிற நியாயத்தைப் பற்ற
அல்ப அஸ்தரமான சித் சப்தம் முன்னாக அருளிச் செய்தார்கள் இத்தனை

அபயர்ஹிதனான ஈஸ்வரன் தன்னை முதலில் எடாதே
சித் சப்தத்தாலே சேதனனைச் சொல்லிற்று
அல்ப அஸ்தரம் பூர்வம் -என்கிற அனுசாசன பலத்தாலே

இப்படி இரண்டு க்ரமமும் -வேத வைதிக -பரிக்ருஹீதம் ஆகையாலே
இரண்டும் முக்யம் என்று கொள்ளக் குறை இல்லை-

சித் சப்தம் -ப்ரேஷோ பலப்திச் சித் சம்வித பிரதிபத் ஜ்ஞப்தி சேதனா -(ப்ரேஷா உபலப்தி சித் சம்வித் பிரதிபத்தி ஜ்ஞப்தி சேதந ஆகிய சொற்கள் அனைத்தும் புத்தியைக் குறிக்கின்றன)என்று ஞான வாசி சப்தங்களோடு சஹ படிதம் ஆகையாலும்
ஜ்ஞான ஆஸ்ரய வஸ்துவில் இதுக்கு பிரசித்தி ப்ராசுர்யம் இல்லாமையாலும்
ஷர ஆத்மநா வீசதே தேவ ஏக -(ஸ்வே -1-10-அழியாமல் மரணம் அடையாமல் உள்ளது ஷரம் -ஜீவாத்மா -ஒருவனாகிய தேவனே அழியக்கூடியதான பிரதானத்தையும் ஆத்மாவையும் ஆள்கிறான்)
ய ஆத்மாநம் அந்தரோ யமயதி யமாத்மா ந வேத யஸ் யாத்மா சரீரம் -(யார் ஆத்மாவின் உள்ளில் உளானோ -யார் இவ்விதம் உள்ளதை ஆத்மா அறியாதோ)
ஆத்மா ஜ்ஞான மய அமல-(ஆத்மா ஞான மயமாகவும் தூய்மை யாகவும் உள்ளான்)என்று
இப்படி ஸ்ருதி ஸ்ம்ருதிகளிலே பல இடங்களிலும் சொல்லுகையாலே
ஆத்ம சப்தத்துக்கு ஜீவ விஷயத்தில் பிரசித்தி ப்ராசுர்யம் யுண்டாகையாலும்
சித் -என்கிறது
ஆத்மாவை -என்று ஸ்புடமாக அருளிச் செய்கிறார்-

—————————————————————————-

சூர்ணிகை -4-

அவதாரிகை –
இனி இந்த ஆத்மாவினுடைய ஸ்வரூபம்
இருக்கும் படி எங்கனே -என்கிற சங்கையிலே
ஆத்மா ஸ்வரூப லஷணத்தை அருளிச் செய்கிறார் –

ஆத்ம ஸ்வரூபம்
சென்று சென்று பரம் பரமாய் -என்கிறபடியே
1-தேக
இந்த்ரிய
மன
பிராண
புத்தி
விலஷணமாய்
2-அஜடமாய்
3-ஆனந்த ரூபமாய்
4-நித்யமாய்
5-அணுவாய்
6-அவ்யக்தமாய்
7-அசிந்த்யமாய்
8-நிரவயவமாய்
9-நிர்விகாரமாய்
10-ஜ்ஞாநாஸ்ரயமாய்
11-ஈஸ்வரனுக்கு ந்யாம்யமாய்
12-தார்யமாய்
13-சேஷமாய்
இருக்கும்-

ஸ்ருதி ஸ்ம்ருதியாதிகளிலே ஒன்றைச் சொல்லலாய் இருக்க
இப்பொழுது ஆழ்வார் அருளிச் செய்த சந்தையை எடுத்தது –
(நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு அதன் நுண் நேர்மை அது இது என்று
ஒன்றும் ஒருவர்க்கு உணரலாகாது உணர்ந்தும் மேலும் காண்பு அரிது
சென்று சென்று பரம்பரம் ஆய் யாதும் இன்றித் தேய்ந்து அற்று
நன்று தீது என்று அறிவு அரிதாய் நன்றாய் ஞானம் கடந்ததே–8-8-5-)
தத்வ பிரதிபாதகங்களான ஸ்ருதியாதிகளில் காட்டில்
தத்வ தர்சிகளில் பிரதானரான ஆழ்வாருடைய வசனமே
தத்வ நிர்ணயத்துக்கு முக்ய பிரமாணம் என்று தோற்றுகைக்காக –
விதயஶ்ச வைதிகா த்வதீய கம்பீர மநோநுஸாரிண:—20-என்று இறே
பரமாச்சார்யர் அருளிச் செய்தது –

(த்வதாஶ்ரிதாநாம் ஜகதுத்பவ ஸ்திதி
ப்ரணாஶ ஸம்ஸார விமோசநாதய: |
பவந்தி லீலா விதயஶ்ச வைதிகா:
த்வதீய கம்பீர மநோநுஸாரிண: ||(ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் —20)

ப்ரஹ்மா முதலான உன் அடியார்களுக்கு இவ்வுலகைப் படைப்பது, காப்பது, அழிப்பது
மற்றும் இந்த ஸம்ஸாரத்தை கடக்க உதவுவதுஆகியவை எளிய விளையாட்டாக இருக்கும்;
வேதத்தின் விதிகளும் கூட உன்னுடைய அடியார்களின் ஆழமான நெஞ்சங்களையே தொடரும்.)

ஸ்வரூபம் ஆவது -ஸ்வம்மான ரூபம் -அதாவது -அசாதாரண ஆகாரம்
சென்று சென்று பரம் பரமாய் -என்றது
போய்ப் போய்ப் ஒன்றுக்கு ஓன்று மேலாய் இருக்கிற
அன்னமய
பிராணமய
மநோ மயங்களுக்கு
அவ்வருகாய் என்ற படி –

தேக இந்த்ரிய மநோ பிராண புத்தி விலஷணமாய்-என்கிற இடத்தில்
புத்தி சப்தத்தால்
மஹத் அனுக்ருஹீதமான அந்த கரணத்தைச் சொல்லுகிறதோ
ஜ்ஞானத்தை சொல்லுகிறதோ -என்னில்
இவருக்கு இங்கு விவஷிதம் ஞானம் ஆக வேண்டும்

தத்வ சேகரத்தில்
தேஹாதி வைலஷண்யம் அருளிச் செய்கிற இடத்தில்
அப்படி அருளிச் செய்கையாலே –

தேஹேந்தரிய மன பிராண தீப்யோந்ய (ஆத்ம ஸித்தி )-என்று இறே ஆளவந்தாரும் அருளிச் செய்தது-

———————————————————————————————

சூர்ணிகை -5

அவதாரிகை –

உத்தேசம் –
லஷணம் –
பரீஷை -என்று மூன்று வகைப் பட்டு இறே தத்வ நிர்ணயகரம் இருப்பது –

அதில் –
சித்தும் அசித்தும் ஈஸ்வரனும் -என்று தத்வ த்ரயத்தையும் உத்தேசித்து

உத்தேச க்ரமத்திலே
அவற்றினுடைய ஸ்வரூப சோதனம் பண்ணுவதாக நினைத்து
பிரதமத்திலே
சித் சப்தோதிஷ்டனான ஆத்மாவினுடைய ஸ்வரூப சோதனம் பண்ணுவதாக உபக்ரமித்து
தேக இந்த்ரிய மநோ பிராண புத்தி விலஷணமாய் -என்று தொடங்கி
சேஷமாய் இருக்கும் -என்னும் அளவாக
ஸ்வரூப லஷணத்தை அருளிச் செய்தார் –

அத்தைப் பரீஷிக்கிறார் மேல் –
அதில் பிரதமத்தில்
ஆத்ம ஸ்வரூபத்தின் யுடைய
தேஹாதி வைலஷனண்யத்தை சோதிப்பதாக
தஜ் ஜிஜா ஸூகளுடைய -ப்ரஸ்னத்தை-கேள்வியை
அநு பாஷிக்கிறார் –

ஆத்ம ஸ்வரூபம்
தேஹாதி விலஷணம்
ஆனபடி
என்
என்னில்-

இது தன்னை தத்வ சேகரத்தில்
இவர் தாமே விஸ்தரேண அருளிச் செய்கிறார் –

தேஹம் அநேக அவயவ சங்காதாத்மகம் என்னும் இடம் சித்தம் –
அதில் எல்லா அவயவங்களுக்கும் சைதன்யம் யுண்டாகில்
அநேக சேதனோ பலபதி பிரசங்கிக்கும்

அவயவங்களுக்கு அந்யோந்யம் அவிவாத நியமும்
அவற்றில் மமதா புத்தியும்
மமதா வ்யவஹாரமும் கூடாது

ஓர் அவயவத்துக்கே சைதன்யம் கொள்ளில்
அது விச்சின்னம் ஆனால் அவயவ அநந்தரம் அது அனுபவித்ததை ஸ்மரிக்கக் கூடாது
பின்பு அஹம் புத்தி வியவஹாரங்களும்
மமதா புத்தி வ்யவஹாரங்களும் தவிர வேணும் –
சர்வ சர்வ வ்யாபீயான ஸூக துக்க அனுபவமும் கூடாது-

அவயவ சங்காத் மகம் அன்று சரீரம்
அவயவி அதிலே சைதன்யம் என்னவும் ஒண்ணாது –
உப லம்ப அனுபத்திகள் இல்லாமையாலே அவயவ ஸ்வீகாரம் அனுபபன்னம் ஆகையாலே-

கிஞ்ச பால தேஹோஹம் மந்த ஞான யுவதே தேஹோஹம் பஹூ ஞான மம சரீரம் -என்று
சரீரம் அஹம் அர்த்தங்களில் பிறக்கும் பேத பிரதிபத்தியும்
பேத வ்யவஹாரமும் கூடாது –

மமாயமாத்மா -என்கிற இடத்தில் போலே அமுக்கியம் என்ன ஒண்ணாது –
முக்யே பாதம் இல்லாமையாலே –

அன்றிக்கே
அஹம் புத்திக்கு சரீரம் விஷயம் என்று கொண்டாலும்
ஸ்ருதியாலும்
ஸ்ருத்யர்த்தாபத்திகளாலும்
தேஹாதி ரிக்தனாய்
தேஹாந்தர பரிக்ரஹ யோக்யனான ஆத்மா சித்தன் –

பாஹ்ய இந்த்ரியங்களும் ஆத்மாவாக மாட்டாது -ஒருவனே சர்வ இந்த்ரியங்களையும் அறிகையாலே
இப்படிக் கொள்ளாத போது –
யாவன் ஒருவனான நான் இவ்வர்த்தத்தைக் கண்டேன் –
அந்த நானே ஸ்பர்சியா நின்றேன் -என்கிற பிரதி சந்தானமும் கூடாது –

சஷூஷே ஆத்மாவாகில் அந்தன் ரூபத்தை ஸ்மரியாது ஒழிய வேணும்

ஸ்ரோத்ரமே ஆத்மாவாகில் பதிரன் சப்தத்தை ஸ்மரியாது ஒழிய வேணும்

இப்படி மற்றை இந்த்ரியங்களிலும் கண்டு கொள்வது –

(இதுவரை சாருவாக மத கண்டனம்
மேலே சங்கர மத கண்டனம் )

அந்த கரணமும் ஆத்மா வாக மாட்டாது
ஸ்மார்த்தாவினுடைய ஸ்மராணாதி கார்யங்களுக்கு கரணமாக கல்பிதம் ஆகையாலே
இது தானே ஸ்மரிக்கிறது என்ன ஒண்ணாது
ஸ்மரணத்துக்கு கரணம் இல்லாமையாலே

கரணமும் இது தானே என்ன ஒண்ணாது –விருத்தம் ஆகையாலே
வேறே ஓன்று கரணம் என்னில் அது பாஹ்ய கரணமாகில்
அது இல்லாதவனுக்கு ஸ்மர்த்தி கூடாது
ஆந்தர கரணமாகில் ஆத்மாவுக்கு மனஸ் என்று பேரிட்டதாய் விடும்
ஆந்தர கரணம் அநபேஷிதம் ஆகில் இந்திரியார்த்தத சம்பந்தம் யுண்டான போது எல்லாம் ஜ்ஞானம் பிறக்க வேணும்
ஆகையால் மனசும் ஆத்மாவாக மாட்டாது

பிராணங்களும் ஆத்மா வாக மாட்டாது
சங்காத ரூபங்கள் ஆகையாலே தேஹம் ஆத்மா என்கிற பஷத்துக்கு
சொன்ன தூஷணங்கள் இங்கும் துல்யம்-

(மேலே பௌத்த மத கண்டனம் )

ஜ்ஞானமும் ஆத்மா வாக மாட்டாது
எனக்கு ஜ்ஞானம் பிறந்தது நசித்தது என்று ஷணிகமுமாய்
ஆத்ம தர்மமுமாய் தோற்றுகையாலே
ஸ்திரமாய் இருப்பான் ஒரு ஆத்மா உண்டு என்னும் இடம்
நேற்றுக் கண்ட நானே இன்றும் காணா நின்றேன் -என்கிற
பிரத்யபிஜ்ஞையாலே சித்தம் -என்று
இப்படி விஸ்தரேண அருளிச் செய்தார் இறே-

——————————————————————————

சூர்ணிகை -6-

அவதாரிகை –

இப்படித் தனித் தனியே எடுத்துக் கழிக்கும் அளவில் கிரந்த விஸ்தாரமாம் என்று
மந்த மதிகளுக்கும் பிரதிபத்தி யோக்யமாம் படி
தேஹாதிகளை சமுச்சித்யோ பாதானம் பண்ணி –
அவற்றில் காட்டில் ஆத்மாவுக்கு யுண்டான வைலஷண்யத்தை
சில உக்தி விசேஷங்களாலே ஸூக்ரஹமாக
அருளிச் செய்கிறார் –

தேஹாதிகள் -என்னுடைய தேஹாதிகள் -என்று-ஆத்மாவில் வேறுபட்டு தோற்றுகையாலும்
இதம் -என்று தோற்றுகையாலும்—ஆத்மா -நான் என்று தோற்றுகையாலும்
இவை ஒருகால் தோற்றி ஒரு கால் தோற்றாமையாலும்–ஆத்மா எப்பொழுதும் தோற்றுகையாலும்
இவை பலவாகையாலும்-ஆத்மா ஒருவன் ஆகையாலும்
ஆத்மா இவற்றில் விலஷணன் என்று-கொள்ள வேணும்

தேஹாதிகள் -என்னுடைய தேஹாதிகள்-என்று  ஆத்மாவில் வேறுபட்டு தோற்றுகையாலும்
இதம் -என்று தோற்றுகையாலும் –
அதாவது
தேகாதிகள் ஆனவை என்னுடைய தேஹம் என்னுடைய இந்த்ரியம்
என்னுடைய மனசு என்னுடைய பிராணன் என்னுடைய புத்தி என்று
மமதா புத்திக்கும்
மமதா வ்யவஹாரத்துக்கும் விஷயமாய்க் கொண்டு
அஹமர்த்த பூதனான ஆத்மாவுக்கு அந்யமாய்த் தோற்றுகையாலும்
அப்படியே
இது தேஹம் இது இந்த்ரியம் -என்று இதம் புத்தி வ்யவஹார விஷயமாய்க் கொண்டு
அஹமர்த்த வ்யதிரிகதமாய்த் தோற்றுகையாலும்
அங்கன் அன்றிக்கே
ஆத்மா அஹம் அர்த்த பூதனாய்க் கொண்டு தோற்றுகையாலும் -என்றபடி –

இவை ஒருகால் தோற்றி ஒரு கால் தோற்றாமையாலும்
ஆத்மா எப்பொழுதும் தோற்றுகையாலும் –
இவை என்று தேக இந்த்ரியாதிகளை பராமர்சிக்கிறது
தேஹம் ஒரு கால் தோற்றி ஒரு கால் தோற்றாமை யாவது
ஜாக்ரத் தசையில் ஸ்தூலோஹம் க்ருசோஹம் இத்யாதிகளாலே
அஹம் புத்த்யா வ்யவஹார விஷயமாகக் கொண்டு
ஆத்மத்வேன தோற்றி இருந்ததே யாகிலும்
ஸூ ஷுப்தி தசையில் அப்படி தோற்றாது இருக்கை –

ஆத்மா எப்போது தோற்றுகையாவது
உறங்குவதற்கு முன்பு இவை எல்லாம் அறிந்து இருந்த நான்
உறங்குகிற போது என் உடம்பு உட்பட அறிந்திலேன் என்று
பிரத்யபிஜ்ஞ்ஞை பண்ணுகையாலே
உபய அவஸ்தையிலும் தேஹாத் யந்யனாய் இருப்பான் ஒரு ஆத்மா யுண்டு என்று தோற்றுகை –

அதவா
ஜனன மரண பாக்த்வத்தாலே தேஹம் ஒரு கால் தோற்றி ஒரு கால் தோற்றாமையாலும்
நான் ஜன்மாந்தரத்தில் பண்ணின வதினுடைய பலம் இது -என்கிற
லோக வ்யவஹாரத்தாலே
ஆத்மா ஜனன மரணாதி ரஹிதனாய்க் கொண்டு எப்போதும் தோற்றுகையாலே என்னவுமாம் –

அப்படியே
சஷூ ராதி ரூபேண தோற்றி இருக்கிற இந்த்ரியங்கள்
அந்த பதிராதி -குருடன் செவிடு – அவஸ்தைகளில் தோற்றாமையாலும் –
சங்கல்பாதி ஹேதுத் வேன தோற்றி இருக்கிற மனஸ்
ஒரு கால விசேஷங்களிலே மூடமாய்க் கொண்டு ஒன்றும் தோற்றாமையாலும்-
உச்வாச நிச்வாதிகளாலே தோற்றி இருக்கிற பிராணங்கள் ஒரோ மோஹ தசைகளிலே
நெற்றியைக் கொத்திப் பார்க்க வேண்டும்படி தோற்றாமையாலும் –
விஷய க்ரஹண வேளையில் பிரகாசிக்கிற ஞானம் விஷய கிரஹண் அபாவ தசையில் தோற்றாமையாலும்

இப்படி அன்றிக்கே
நான் கண்ணும் செவியும் முன்பு விளங்கி இருந்தேன்
இப்போதும் அந்தனும் பத்திரனும் ஆனேன்
முன்பு என்னுடைய மனஸ் விசதமாய் இருக்கும் இப்போது ஒன்றும் தெரிகிறது இல்லை
நான் அப்போது நிஷ் பிராணனாய்க் கிடந்தேன் -இப்போது ச பிராணன் ஆனேன்
எனக்கு அப்போது ஞானம் யுண்டாய் இருந்தது -இப்போது நசித்தது -என்று
இவை தோற்றின போதொடு தோன்றாத போதொடு வாசி அற
ஆத்மா எப்போதும் தோற்றுகையாலும்

இவை பலவாகையாலும் ஆத்மா ஒருவன் ஆகையாலும்
மீண்டும் இவை என்று தேஹாதிகளைப் பரமாசிக்கிறது –
தேஹத்துக்கு பன்மை அநேக அவயவ சங்காததம் ஆகையாலே
இந்திரங்களுக்கு பன்மை சஷூர் ஸ்ரோத்ராதி வ்யக்தி பேதத்தாலே
மனசுக்கு பன்மை மநோ புத்தி சித்த அஹங்கார ரூபமான பேதத்தாலே
பிராணனுக்குப் பன்மை பிராணாபாநாதி பேதத்தாலே
புத்திக்கு பன்மை கடஜ்ஞ்ஞான படஜ்ஞ்ஞாநாதி பேதத்தாலே
இப்படி
தேகாதிகள் ஓர் ஒன்றே பலவாகையாலும் –

இங்கன் அன்றிக்கே –
அஹம் புத்தி வ்யாவஹாராஹனான ஆத்மா ஒருவன் ஆகையாலும்

ஆத்மா இவற்றில் விலஷணன் என்று கொள்ள வேணும்
அதாவது
இப்படி தேஹாதி பிரகாரத்தையும் ஆத்மாவினுடைய பிரகாரத்தையும் நிரூபித்தால்
ஆத்மா தேகாதிகள் ஆனவற்றில் வேறு பட்டு இருப்பான் ஒருவன் என்று
அவஸ்யம் அங்கீ கரிக்க வேணும் -என்கை-

————————————————————————————————

சூர்ணிகை -7

அவதாரிகை –

இப்படி உக்தியாலே சாதிதமான அர்த்தத்தை
சாஸ்திர பலத்தாலே த்ருடீகரிக்கிறார்

இந்த உக்திகளுக்கு
கண் அழிவு யுண்டே யாகிலும்
சாஸ்திர பலத்தாலே
ஆத்மா -தேஹாதி விலஷணனாகக்
கடவன்

கண் அழிவு யுண்டே யாகிலும் -என்கையாலே
சர்வதா இதுக்கு கண் அழிவு சொல்ல ஒருவருக்கும் போகாது
அது தான் யுண்டாய்தாகிலும்
இவ்வாத்மா -ஸ்ருதி ஸ்ம்ருத்யாதி சகல சாஸ்திர சித்தம் ஆகையாலே
சாஸ்திர பலம் தானே இவ்வாதத்தை சாதிக்கும் என்று கருத்து –

பஞ்ச விம்சோயம் புருஷ –
பஞ்ச விம்ச ஆத்மா பவதி –
பூதாதி கவர்க்கேண சவர்க்கேண இந்திரியாணி ச
டவர்ர்ரக்கேண தவர்க்கேண ஞான கநாததயச ததா
மநா பகாரேணை வோகதம பகாரேண தவஹங்கருதி
பகாரேண பகாரேண மகான பரக்ருதி ருசயதே
ஆத்மா து ச மகாரேண பஞ்ச விம்சதி பரகீர்த்திதா

(பஞ்ச விம்சோயம் புருஷ –புருஷன் 25 வது தத்வம் ஆகிறான்
பஞ்ச விம்ச ஆத்மா பவதி –ஆத்மா 25 வது தத்வம் ஆகிறான்
பூதாதி கவர்க்கேண -க வரிசையால் உள்ள எழுத்துக்களால் பஞ்ச பூதங்களும்
சவர்க்கேண இந்திரியாணி ச-ச வரிசையில் உள்ள எழுத்துக்களால் கர்ம இந்திரியங்களும்
டவர்க்கேண தவர்க்கேண ஞான கநாததயச -ட வரிசை எழுத்துக்களால் ஞான இந்திரியங்களும்
ததா மநா பகாரேணை வோக்தம் -அப்படியே ப என்பதால் மனசும்
பகாரேண தவஹங்கருதி பகாரேண பகாரேண மகான பரக்ருதி ருசயதே-மீதம் உள்ள ப வரிசை எழுத்துக்களால் அகங்காரமும் மஹத் தத்துவமும் ப்ரக்ருதியும் கூறப்பட்டன
ஆத்மா து ச மகாரேண பஞ்ச விம்சதி பரகீர்த்திதா– ம என்பதால் 25 வது தத்துவமான ஆத்மா கூறப்பட்டான் -என்றும் )

ய பர ப்ரக்ருதோ ப்ரோக்த புருஷ பஞ்ச விம்சக
ச ஏவ சர்வ பூதாத்மா நர இதயபி தீயதே-
ஆத்மா சுத்த தோஷரச் சாந்தோ நிர்க்குண ப்ரக்ருதோ பரா-
ப்ரவிருததயபச யௌ ந சத ஏக சயாகி லஜத துஷூ பிண்ட
ப்ருதக் யத பும்சத சிர பாணாயாதி லஷண
தத அஹமி குத்ரைதாம் சம்ஜ்ஞாம் ராஜந் கரோம் யஹம் -ஜடபரதர் ரகுகுணன் சம்வாதம்

(ய பர ப்ரக்ருதோ ப்ரோக்த புருஷ பஞ்ச விம்சக ச ஏவ சர்வ பூதாத்மா நர இதயபி தீயதே–25 வது தத்துவமாக எந்தப் புருஷன் கூறப்பட்டானோ அவனே அனைத்து பூதங்களிலும் ஆத்மா எனப்படுகிறான் -என்றும்
ஆத்மா சுத்த தோஷரச் சாந்தோ நிர்க்குண ப்ரக்ருதோ பரா–ஆத்மா தூய்மையானவன்-அழிவற்றவன் -சாந்தமானவன் – மூன்று குணங்கள் அற்றவன் -சரீரத்தைக் காட்டிலும் வேறானவன் –
ப்ரவிருத்தய பச யௌந சத ஏகஸ் யாகில ஜந் துஷூ -அவனுக்கு வளர்த்தல் தேய்தல் இல்லை
பிண்ட ப்ருதக் யத பும்ஸச் சிரஸ் பாண்யாதி லஷண தத அஹமிதி குத்ரைதாம் ராஜந் கரோம்யஹம் —எந்த ஒரு
காரணத்தால் தலை கை கால் போன்ற உறுப்புக்கள் கொண்ட சரீரமானது ஆத்மாவைக் காட்டிலும் வேறானதாக உள்ளதோ
அந்தக் காரணத்தால் ஆத்மா என்று இதன் பெயரை எங்கு கூறுவேன் என்றும்
கிம் தவ மேதச் சிர கிம நு உர சதவ ததோ தரம கிமு பாதாதி கம தவமவை
தவைதத் கிம மஹீ பதே சமசதா வயவேபயச தவம ப்ருதக் பூப வ்யவஸ்தித
கோஹமிதயவ நிபுணோபூதவா சிந்தய பார்த்திவ–நீ இந்தத் தலையா அல்லது தலை உன்னுடையதா
நீ இந்த வயிறா அல்லது வயிறு உன்னுடையதா
நீ இந்தக் கால் ஒன்றவையா அல்லது இவை உன்னுடையதா –
நீ அனைத்தைக் காட்டிலும் வேறாக உள்ளாய் -நீ அனைத்தையும் அறிந்தவன் அன்றோ
அப்படி எனில் இவற்றில் நீ யார் என்று சிந்திப்பாய் -)

பஞ்சபூதாத் மகே தேஹே தேஹீ மோஹ தமோ வ்ருத
அஹம் மமை ததித் யுச்சை குருதே குமதிர் மதிம்
ஆகாசவாயு வக்நி ஜல ப்ருதிவீப்ய ப்ருதக் ஸ்திதே
அநாத் மந் யாத்ம விஞ்ஞானம் ந கரோதி களேபரே-என்று

(தூய்மையான ஜீவாத்மா -தீய புத்தி காரணமாக இருளால் சூழப் பட்டவனாக-
ஐந்து பூதங்களுடைய மாறுபாடாக உள்ள இந்தச் சரீரத்தில் நான் என்னுடையது என்று அகப்படுகிறான்
பஞ்ச பூதங்களைக் காட்டிலும் வேறாக ஆத்மா உள்ள போது
யார் இந்தச் சரீரத்தை ஆத்மா என எண்ணுவான் )

இப்படி ஸ்ருதி ஸ்ம்ருதியாதி சகல சாஸ்திர பிரதிபன்னமான
ஆத்மாவினுடைய தேஹாதி விலஷணத்வம் –
துர பன்னவம் என்று நினைத்து இறே
சாஸ்திர பலத்தாலே ஆத்மா தேஹாதி
விலஷணனாக கடவன் என்று ஸூ நிச்சயமாக அருளிச் செய்தது –

———————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

தத்வ த்ரயம்-ஈஸ்வர – பிரகரணம் – ஸ்ரீ வேங்கட கிருஷ்ணன் சுவாமிகள் –

December 10, 2013

சூர்ணிகை -141 (1 )-
ஈஸ்வரன்
அகில ஹேய பிரத்யநீக
அனந்த ஜ்ஞாநானந்தைக-ஸ்வரூப னாய்-
ஜ்ஞான சக்த்யாதி கல்யாண குணகண பூஷிதனாய் –
சகல ஜகத் சரக்க ஸ்திதி சம்ஹார கர்த்தாவாய் –
ஆர்த்தோ ஜிஞஞா ஸூரர்த்தாத்தீ ஜ்ஞாநீ -என்கிற சதுர்வித புருஷர்களுக்கும் ஆஸ்ரய ணீ யனாய்
தர்மார்த்த காம மோஷாக்ய சதுர்வித பல ப்ரதனாய்-
விலஷண விக்ரஹ யுக்தனாய் –
லஷ்மீ பூமி நீளா  நாயகனாய்
இருக்கும் –

உபய நியந்தா ஈஸ்வரன் -பிரகரணம் –
ஈசாதே தேவக ஏக –
ஈஸ்வரன் என்றே வஸ்துவை நிர்ணயித்து
அசாதாராண ஸ்வரூபம்
நித்யமாக இயற்கையாக நியமிக்கும் தன்மை ஈஸ்வரன்
குணாதிகளுக்கும் ஆதார பூதன்
அகில ஹேய பிரத்ய நீக்க -எதிர் தட்டு
அனந்த ஞான ஆனந்த ஸ்வரூபன்
அருளிச் செயலில் உள்ளவற்றை திரட்டி தொகுத்து காட்டி அருளுகிறார்-

அபரிச்சேதம்-வஸ்து கால தேச -த்ரிவிதமும்
சத்யம் ஞான ஆனந்தம் ப்ரஹ்ம
ஆனந்தமே வடிவு எடுத்த ப்ரஹ்ம
கல்யாண காண ஏக தானத்வம் தன்னடியே சித்திக்கும்
சேதன இதர தன்னடையே
ஆதி -சப்தத்தால் எம்பெருமானார் அருளிச் செய்தவை
கல்யாணம் -ஆஸ்ரிதர் போக்யமம்
கணம் -சமூக வாசி
பூஷிதம் -அலங்க்ர்தமாய் இருக்கும்
திவ்ய ஆபரணம் போலே குணங்கள் திவ்ய ஆத்மா ஸ்வரூபத்துக்கு –
சர்வஞ்க்ன சர்வ வித்
குணயோக பிரமாணம்
ஜகம் -கார்ய வஸ்து
சர்க்கம் சிருஷ்டி அத்வாரக சத்வாரக
சமஷ்டி வியக்தி சிருஷ்டி
ஸ்திதி பாஹ்ய அந்தர
சம்காரம் சத்வாரக அத்வாரக இரண்டு படிப் பட்டு இருக்கும்
சகல ஜகத் சர்க்காதிகள் பிரமாணம் உண்டே
ஆர்த்தோ -சதுர்வித புருஷர்களால் பற்றப் படுபவன்
ஆர்த்தன் அர்த்தார்த்தன்
இரண்டு ஐஸ்வர் யாதிகள் –
கீதா பாஷ்யம் எம்பெருமானார் காட்டிய பிரமாணங்கள் இங்கே காட்டி அருளி –
ஞானமே ஸ்வரூபம் ஞ்ஞிஞாசு
பகவத் செஷைக பகவந்தம் ஏவ பரம பிராப்யம் –
சதுர்விதா பஜந்தா மாம் -கீதை
சர்வ சமாஸ்ரயநீயத்வம் அருளிச் செய்தார்
சதுர்வித பல பிரதனாய்
தர்மம் இஷ்டா பூர்தம்
இஷ்டம்
பூர்தம் ஹோமம்
அர்த்தம்
காமம் ஐ கிகம் பரலோக
அர்த்தம் சாதனதையா சுயமாயும்
காமம் புருஷம் ஏவம் புருஷார்தமாய் இருக்கும்
சகல பல பிரதாணன்
பிரமாணம்
விக்ரகம் -ஸ்வரூபம் விட வை லஷண்யம் பிரசித்தம்
திவ்ய ரூபா கத்யம் -அருளிச் செய்தார் எம்பெருமானார்
கீழே பாஷ்யகாரர் என்றார் வேதார்தம் காட்டும் பொழுது –
பற்றுக் கோல்
கோல மலர்ப்பாவை உனக்கு ஏற்கும்
பூமி நீளா தேவி அநு ரூபநாயகன் –
ஸ்ம்ருதிகள் –
ஸ்ரீ வல்லப -ஏவம் பூத பூமி நீளா நாயக
கட்டில் எரித்த நிலா வாகாதே -அனுபவிக்க கடவர் பிராட்டிமார் உண்டே-

சூர்ணிகை -142 (2 )
அகில ஹேய ப்ரத்ய நீகனாகை யாவது –
தமஸ் ஸூ க்கு தேஜஸ் ஸூ போலேயும்
சர்ப்பத்துக்கு கருடனைப் போலேயும்
விகாராதி தோஷங்களுக்கு பிரதிபடமாய்
இருக்கை-

விஸ்தரென அருளுகிறார்
அகில ஹேய பிரத்ய நீகன்
எதிர் தட்டை
த்ரிவித சேதன தோஷமும் இல்லையே
பக்தன் -சம்சாரம்
நித்யர் நியமிக்கப் படுக்கை தோஷம்
விகாராதி தோஷம் -அஞ்ஞான சேறு தோய்த்து கழித்த முக்தர்
நித்யர் -ஸ்வரூபத்தால் அணு தான்
ஸ்வாபவம் பாரதந்த்ர்யம்
தோஷமோ என்னில்
ச்வதந்த்ரனுக்கு அது தோஷம் புருஷனுக்கு ஸ்தானம் போலே
பிரதி படன் -மலம் ஸ்வரூபம் உபாதி இல்லை
ஆத்மாவுக்கு கர்ம சம்பந்தம் உபாதி நிபந்தனம் மல சம்பந்தம் உண்டே –
சமஸ்த ஹேய ரஹிதம் ஸ்ரீ விஷ்ணு புராணம் –
அடியவர்கள் தாழ்வைப் போக்கும் -யோஜனையும் உண்டே
இத்தை
கத்ய த்ரயம் நஞ்சீயர் வியாக்யானம் -இப்பொழுது
ஆச்சான் பிள்ளை வியாக்யானம் -இப்பொழுது கிடைக்க வில்லை-

சூர்ணிகை -143 (3)
அநந்தன்-ஆகையாவது
நித்யனாய்
சேதன அசெதனங்களுக்கு வ்யாபகனாய்
அந்தர்யாமியாய்
இருக்கை

அநந்தன் –
தேச கால வஸ்து -அபரிசேத்வம்-
த்ரிவித பரிச்சேத ரஹிதம்
விபு என்பதால் தேச பரிச்சேதம்
நித்யம்ம் கால பரிச்சேதம்
அந்தர்யாமி -வஸ்து பரிச்செத்யம்

அந்தர் பிரதிஷ்டா
யஸ்ய ஆத்மா சரீரம் பிரத்வி சரீரம் -பிரமாணங்கள் காட்டி அருளி

சூர்ணிகை -144 (4 )
அந்தர்யாமி யானால்
தோஷங்கள் வாராதோ வென்னில்

சூர்ணிகை -145 (5 )-
சரீரகதங்களான-பால்யாதிகள்
ஜீவாத்மாவுக்கு வாராதாப் போலே
த்ரிவித சேதன அசேதன தோஷமும்
ஈஸ்வரனுக்கு வாராது –

பால்யாதி தோஷங்கள் ஆத்மாவுக்கு இல்லையே
நிர்வகித்து கொண்டு இருந்தாலும்
அந்தர்வர்த்தியான ஜீவாத்மாவுக்கு வாராதது போலே
ஈஸ்வரனுக்கு
ஆவி சேர் –அவனைக் கூடல் அவனையும் கூடலாமே

பிரவேச ஹேது காரணம்
சத்தைக்கு இவன் பிரவேசிக்கிறான்
ஆத்மா கர்மம் அடியாக பிரவேசிக்கிறான்
அனுக்ரககம் அடியாக ஈஸ்வரன் பிரவேசிக்கிறான்

ஒரே மரம் இரண்டு பறவை
அனன்ச்னன் சாப்பிடாமல் அபக்த பாபமா
விஷ்ணவே சர்வ ஜிஜ்னணவே

சூர்ணிகை -146 (6 )-
ஜ்ஞான ஆனநதைக
ஸ்வ ரூபன் ஆகையாவது
ஆனந்த ரூப ஜ்ஞானனாய்
இருக்கை –

சூர்ணிகை -147 (7 )-
அதாவது கட்டடங்க
அனுகூலமாய்
பிரகாசமுமாய்
இருக்கை –

ஆனந்தரூபமான ஞானம்
அனுகூல
பிள்ளை லோகாச்சார்யர் கத்ய த்ரயம் வியாக்யானம் அருளிச் செய்கிறார் -அதுவும் கிடைக்க வில்லை –
மணவாள மா முனி காலத்தில் இவை இருந்து இருக்கின்றன
கட்டடங்க முழுவதும் அனுகூலமாய் பிரகாசமாய்
ஸ்வரூபத்தில் பிரதி க்கூலமோ அபிரகாசமோ இல்லை ‘
ஏக சப்தார்தம்
ஆக்லாதகரத்வம்
சுயம் பிரகாசத்வம் உண்டே

அடுத்து குணங்களை விவரிக்கிறார்

சூர்ணிகை -148 (8 )-
இவனுடைய ஜ்ஞான சக்த்யாதி கல்யாண குணங்கள்
நித்யங்களாய்
நிஸ் ஸீ மங்களாய்
நிஸ் சங்க்யங்களாய்
நிரூபாதிகங்களாய்
நிர்த்தோஷங்களாய்
சமாநாதிக ரஹீதங்க ளாய்
இருக்கும்

ஞான ஆதி பல ஐஸ்வர்யா போன்றவை
யாவதாத்மபாவியாய் இருக்கும்
காம -கல்யாண குணங்கள் விரும்பப் படுபவை என்பதால் காம சுருதி
ஈறில வண் புகழ் நாரணன்
ஆனந்த குணம் எல்லை காண
உபரி உபரி -ஆளவந்தார் –
உயர்வற உயர்நலம்
எண்ணிறந்த குணங்கள் உண்டே
ரத்னம் உள்ள சமுத்ரம் போலே அனந்த -ரத்னாகாரம் சமுத்ரம்
எண்ணில் தொல் புகழ் ஆழ்வார் –
நிருபாதிகம் -ஈஸ்வர சங்கல்பம் அபெஷித்து இருக்கும் சேதன குணங்கள் போலே அன்றி
ஸ்வா பாவிக –
அநவதிகா அதிசய -நித்யர் வ்யாவர்த்தி -நித்ய இச்சையால் நித்யருக்கும்
ஞான பல கிரியை நியமனம் சொல்லும் சுருதி ஸ்ருத பிரகாசர்
நிர்தொஷம் -ஹேய குணம் இன்றி
அபதய பாப்மா-இத்யாதி –
ஆஸ்ரயம் ஹேய பிரத்ய நீகம்
பிரமாண அதிக -ஒப்பும் மிக்கும் இன்றி
சமாத்யதிக தரித்திர வஸ்து

சூர்ணிகை -149 (9 )-
இவற்றில்
வாத்சல்யாதிகளுக்கு -விஷயம் -அனுகூலர்
சௌர்யாதிகளுக்கு விஷயம் பிரதிகூலர்-
இவற்றுக்கு காரணமான ஜ்ஞான சக்த்யாதிகளுக்கு எல்லாரும் விஷயம் –

மூன்று வகைப் பட்டு இருக்கும்
அனைவருக்கும் -ஞான பல
அனுகூலருக்கு -சௌசீல்யாதி-அடியவர்கள் இடம்
பிரதிகூலருக்கு -சூர்யா வீர்ய பராக்கிரமம் அடியவர் விரோதிகளுக்கு
மமபிராணாதி பாண்டவர் -என்றான் இ றே

வாத்சல்யாதி -ஞான பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ் சக்தி ஊற்று வாய் -காரணம்
ஞாமம் -தோஷம் அறிந்து வாத்சல்யம்
சக்தி பராக்கிரமம்
வஸ்து உத்கர்ஷ ஆபாதாக ஷாட்குன்யாதி குணா பாகம் ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தது
திவ்ய ஆத்ம குணங்கள் -ஞான சக்தி

ஞானம் உள்ளபடி அறிந்து இருக்கை
சக்தி அகடிகடனா சாமர்த்தியம்
பலம் -சரமம் இன்றி சங்கல்பத்தால்ம் அவலீளையால்
சமஸ்த வஸ்து தாரண சாமர்த்தியம்
ஐஸ்வர்யம் சமஸ்த வஸ்து நியமன சாமர்த்தியம்
ச்வாதந்த்ர்யம் -கர்த்ருத்வம் செய்ய வேண்டுமே அது உள்ளவன் –
வீர்யம்
ஜகத் உபாதாநமாக இருந்தும் ஸ்வரூபம் விகாரம் இன்று இருக்கை
தேஜஸ் -சஹா காரி நைரபேஷ்யம் -பராதிபவன சாமர்த்தியம் –
எல்லோரும் விஷயம் ஆகும்
அனுகூல ரஷனம் பிரதி கூல நிரசனம் -இவை ஆறும் வேண்டுமே

சூர்ணிகை -150 (10 )-
ஜ்ஞானம் -அஜ்ஞ்ஞர்க்கு
சக்தி -அசக்தர்க்கு
ஷமை-சாபராதர்க்கு –
கிருபை -துக்கிகளுக்கு
வாத்சல்யம் -சதோஷர்க்கு
சீலம் -மந்தர்க்கு
ஆர்ஜவம் -குடிலர்க்கு
சௌ ஹார்த்தம் -துஷ்ட ஹ்ருதயர்க்கு
மார்த்வம் -விஸ்லேஷ பீருக்களுக்கு
சௌ லப்யம் -காண ஆசைப் பட்டவர்களுக்கு
இப்படி எங்கும் கண்டு கொள்வது –

ஞானம் -ஹிதம் அஹிதம் அறியாதவருக்கு
சக்தி -இஷ்ட அநிஷ்ட பிராப்தி பரிகாரங்களுக்கு சக்தி இல்லாதவர்
ஷமை -அனுசந்தித்தாருக்கு அபராதம் செய்தோம் –
கிருபை -பர துக்க அசஹிஷ்ணுத்வம்
ஆவாரார் துணை –
வாத்சல்யம் -தோஷம் போக்யமாக கொள்ளும்
சீலம் -மந்தர்க்கு -தண்மையை அனுசந்திப்பார்க்கு
அர்ஜவம் -நேர்மை
கோணல் புத்தி உள்ளவன் இடமும்
சௌஹார்த்தம்-துஷ்ட ஹிருதயரார் அனுசந்திப்பார்க்கு
மார்த்தவம் ஸ்வரூப விக்ரகம் இரண்டுக்கும்
விஸ்லேஷ பயம் கொண்டார்க்கு மார்தவம்
சௌலப்யம் காண ஆசைப் பட்டவருக்கு
குணங்கள் விஷய பிரத்ய நீவ்கத்வம் காட்டி அருளுகிறார்

சூர்ணிகை -151 (11 )-

இப்படி ஈஸ்வரன் கான குணங்களோடு கூடி இருக்கையாலே
பிறர் நோவு கண்டால் -ஐயோ -என்று இரங்கி
அவர்களுக்கு எப்போதும் ஒக்க நன்மையைச் சிந்தித்து
தனக்கேயாய் இருத்தல்
தனக்கும் பிறர்க்கும் பொதுவாய் இருத்தல் செய்யாதே
நிலா தென்றல் சந்தானம் தண்ணீர் போலே -பிரர்க்கெயாய்
தன்னை ஆஸ்ரயித்தவர்கள் பக்கல் ஜ்ஞான ஜன்ம வருத்தங்களால் உண்டான நிகர்ஷம் பாராதே
தாங்களும் பிறரும் தஞ்சம் இல்லாத பொது தான் தஞ்சமாய் –
சாந்தீபனி புத்ரனையும்
வைதிகன் புத்ரர்களையும்
மீட்டுக் கொண்டு வந்தால் போலே அரியன செய்தும்
அவர்கள் அபேஷிதங்களைத் தலைக் கட்டியும்
அவர்களுக்கு த்ருவபதம் போலே பண்டு இல்லாதவற்றையும் உண்டாக்கியும்
தம் தாம் ஸ்வம் தாம் தாம் விநியோகம் கொண்டால் போலே இருக்கத்
தன்னையும் தன்னுடைமையையும் வழங்கி
அவர்கள் கார்யம் தலைக் கட்டினால் தான் க்ருதக்ருத்யனாய்
தான் செய்த நன்மைகள் ஒன்றையும் நினையாதே
அவர்கள் செய்த ஸூ க்ருத லவத்தையே நினைத்து
அநாதி காலம் வாசிதங்களான ரசங்களை மறக்கும்படி எல்லா தசையிலும் இனியனாய்
பார்யா புத்ரர்கள் குற்றங்களைக் காணாக் கண் இட்டு இருக்கும் புருஷனைப் போலே
அவர்கள் குற்றங்களைத் திரு உள்ளத்தால் நினையாதே
குற்றங்களைப் பெரிய பிராட்டியார் காட்டினாலும்
அவளோடு மறுதலித்து திண்ணியனாய் நின்று ரஷித்து
காமிநியுடைய அழுக்கு உகக்கும் காமுகனைப் போலே
அவர்கள் தோஷங்களைப் போக்யமாய்க் கொண்டு
அவர்கள் பக்கல் கரண த்ரயத்தாலும் செவ்வியனாய்
பிரிந்தால் -அவர்கள் வ்யசனம் குளப்படி என்னும்படி
தான் ஈடுபட்டு -அவர்களுக்குப் பாங்காகத் தன்னைத் தாழ விட்டு
அவர்களுக்குக் கட்டவும் அடிக்க்கவுமாம்படி எளியனாய்
அன்று ஈன்ற கன்றுக்குத் தாய் இரங்கி
முன்னனைக் கன்றையும் புல்லிட வந்தவர்களையும்
கொம்பிலும் குளம்பிலும் ஏற்குமா போலே
பெரிய பிராட்டியாரையும் ஸூ ரிகளையும் விட்டு
ச்நேஹித்துக் கொண்டு போரும்

இந்த குணங்களை அழகாக காட்டி அருளுகிறார் அடுத்த சூர்ணையில்-
கல்யாண குணங்கள் உடன் கூடி உள்ள –
குணங்கள் ஸ்வா பாகிகம்
ஐயோ -கிருபையால் இரங்கி -பர துக்க அசஹிஷ்ணுத்வம்
நன்மை சிந்தித்து சௌஹார்தம்
சிருஷ்டி பிரளயம் -அறிந்தும் அறியாத காலத்திலும்
ஆஸ்ரித சர்வ மங்களம் சிந்தித்து
ஆஸ்ரித பரதந்த்ரன் -பிறர்க்கு என்றே – பக்த பாரதந்த்ர்யம்
ஜன்ம ஞான விருத்தம் பாராமல் -சமோஹம் சர்வ பூதேஷு
ஏழை எதலன் –
தான் தஞ்சமாய் -அசரண்யா சரண்யத்வ காரணம்
சத்யா காமத்வம் அறியான செய்து தலைக் கட்டி
சாந்தீபன் -12 வயசு காலத்தையும் கழித்து கொண்டு வந்து கொடுத்து -அதே வயசில் -அதே உடையுடன்
வைதிக புத்ரர்களையும் மீட்டி –
காதல் மக்கள் கானால் -நாய்ச்சிமார் அழைப்பிக்க
தப்பின பிள்ளைகளை உடல் உடன் கொடுத்து
அவ்வவ ரூபங்கள் உடன் கொடுத்து
சத்யா காமத்வம்
சகல அபெஷிதங்களையும் -நடுவில் திரு வீதிப் பிள்ளை -பட்டர் -இது கிடைக்க வில்லை
சத்யா சங்கல்பம் -துருவனுக்கு தனியாக ஸ்தானம் பண்டு இல்லாத வற்றையும் உண்டாக்கி
அபூர்வ போகங்கள் சிருஷ்டிக்க வல்ல சாமர்த்தியம்
தன்னையும் தன் உடைமையும் வழங்கும் ஔதார்யம்
நதே ரூபம் -பக்தாநாம் தும் பிரசாத்தே
கார்யம் தலைக் கட்டினால் தான் கிருதகிருத்யனாய் -கிருதித்வ கார்யம் –
அபிஷிக்த லன்காயாம் –கிருதக் கிருத்திய ததா ராம –
பேறு தன்னதாக இருக்கும் ஸ்வா பம்
தான் செய்த நன்மைகள் ஒன்றையும் நினைக்காமல்
உன் அடியார்க்கு என் செய்வேன் என்றே இருத்தி
சூக்ருத லேசம் -சரணம் -சொன்னால்
த்ரௌபதி ரிணம் பிரவர்த்தி கோவிந்தா உக்தி ஒன்றையே நினைத்து
இனியனாய் -மாதுர்ய -பிராக்ருத விஷய ராசங்கள் விச்மரிக்கும் படி சர்வப ராசா
நிரதிசய போக்கினாய்
புருஷோத்தமன் -பார்யா பிள்ளைகள் அனைவரும் தப்பை காணா கண் இட்டு – -கண்டாலும் கண்டது போலே இல்லாமல்
கண்டுக்காமல் இருப்பான் –
தொடர் செய்யும் பல்லாயிரம் பிழைகள் –பார்த்து இருந்தும் காணும் கண் இல்லாதவன் இறை -ஞான சாரம்
திரு உள்ளத்தால் நினைக்காமல் சதுரன்
திண்ணியன் தைர்யம் -பிராட்டி -சொன்னாலும் -சேதனர்
என் அடியார் அது செய்யார் – ஸ்த்ரிதவம் பாவம்
அழுக்கை உடம்பும் காமுகன் போலே
ஆர்ஜவம் -நீர் ஏறாத மேட்டில் விரகால் ஏற்றுவாரைப் போலே
-ரிஜு புத்திதயா ராம –சூர்பணகை இடம் கூட பெருமாள் –
ஸ்ரீ ராமாயணம் சொன்னார் –
மார்த்வம் மென்மை -ஷணம் அபி -தாம் கிலேசப் படுவது ஆஸ்ரிதர் விரகம்
தாழ விட்டு
ஏழை -என்னாது இரங்கி –குகன் தான் ஏழை என்னாது வியாக்யானம் அருமை
எண்ணம் அவன் மனத்தில் உதிக்காமல் இருக்கும் படி தன்னை தாழ விட்டான்
ஷீலா குணம் –
கட்டவும் அடிக்கவும் படி -சௌலப்யம்
நவநீத –
எளிவரும் இயல்வினன் –
வாத்சல்யம் -கன்றுக்கு இரங்கி –
பெரிய பிராட்டியாரையும் நித்திரையும் தள்ளி விட்டு
மாடு விடாதே என் மனனே
பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றனன்
அவர்கள் இடம் பற்றி இன்றி என்னிடம் முற்றவும்
கல்யாண குணா விசிஷ்டன் என்றதை இது வரை
விஸ்தரென உபபாதித்து அருளினார் –

சூர்ணிகை -152 (12 )-

இவனே சகல ஜகத்துக்கும்
காரண பூதன்

காரண பூதன்
உண்டாக்கி –
இவன் -குண விசிஷ்டன் –
இவனே -அவதாரனத்வம் அன்யயோ விவச்செதம்

த்ரிவித காரணம்
தானே படைத்து –தானே ஆள்வானே
சதைவெ –
ஏகம் மேவ -அக்ரே
சத் -ப்ரஹ்ம -ஆத்மா சப்த வாச்யன் -நாராயணனே –
சதைவெ ப்ரஹ்ம ஏவ ஆத்மா ஏவ
நாராயண ஆஸீத்
அவன் தான் சத் ப்ரஹ்ம ஆத்மா
இவனே -காட்டி அருளி –
சமஷ்டி வ்யஷ்டி இரண்டுக்கும் ரூப காரண பூதன்
உத்தர மீமாம்சை
சமன்வயா-இவனே ஜகத் காரணம்
அவிரோத -வேறு யாரும் இல்லை காட்டி அருளி –
சாதனா -இவனே சாதனம்
பல -இவனே பலம்
நான்கு அத்யாயம்
அதாதோ ப்ரஹ்ம ஞிஞ்ஞாசா
ப்ரஹ்ம விசாரம் -ஜென்மாதி அஸ்யாதி-

சூர்ணிகை -153 (13 )
சிலர் பரமாணுவைக்
காரணம் என்கிறார்கள்

இல்லை என்பதை மேலே சொல்கிறார்
குட்டி ஸ்ரீ பாஷ்யம் இது
god paarticle
பரமாணுக்களே காரணம்
புத்தர் ஜைனணன் வைசெஷிகன்
அனுமானம் -ஒன்றையே ஒத்துக் கொண்டு
நான்கு பூதம்
ஏக பொஇஒதம்
பரஸ்பர பேதம் உண்டு
சிலர் என்று சமுச்சயம்
மகி பூமி மலை பரமாணு
பிரமாணம் இல்லையே

சூர்ணிகை -154 ( 14 )
பரமாணுவில் பிரமாணம் இல்லாமையாலும்
சுருதி விரோதத்தாலும்
அது சேராது

அனுமானம் -ஆகமம் அனுகூலமான இருந்தால் கொள்ளலாம்
சாஸ்த்ரதுக்கு தகுந்த அனுமானம் கொள்ளலாம்

சூர்ணிகை -155 (15 )-
காபிலர் பிரதானம் காரணம்
என்றார்கள்

மண் குடம் மண் போலே
பிரகிருதி காரணம் என்பர்
தாதி பால் ஆவது போலே
ஜலம் -விசித்திர -தேங்காய் -சூத கபித -தித்திப்பு பரிமாணம் தானே அடையும்
சர்வ அவஸ்தை குணம் -பிரகிருதி

சூர்ணிகை -156 (16 )-
பிரதானம் அசேதனம் ஆகையாலும்
ஈஸ்வரன் அதிஷ்டியாத போது
பரிணமிக்க மாட்டாமையாலும்
சிருஷ்டி சம்ஹார விவஸ்தை கூடாமையாலும்
அதுவும் சேராது –

விசித்திர ஜகத் காரணம்
பிரதானம் சைதன்யம் இல்லை
ஈஸ்வரன் அதிஷ்டானம் செய்தே
சர்வ காலமும் சிருஷ்டியாகவே இருக்கும்
சம்ஹாரம் உண்டே
கால பேதம்
பிரதானம் சேராது
பரமாணுவும் சேராது

சூர்ணிகை -157 (17 )-
சேதனனும்  காரணம் ஆக மாட்டான்

பாசுபதம் –
ருத்ரன்
ஷேத்ரஞ்ஞன் தான்
காரணம் ஆக சக்தன் அல்லன்
கர்ம பரதந்த்ரன்
துக்கி
அதனால்
சந்கிசிதிக்க ஞான சக்தி
ஜகத் வியாபாரம் செய்ய முடியாதே
அபக்த பாப்மா அகரமா வைஷ்யன்
நிரதிசய ஆனந்த மயன்
தலை அறுப்பாரும்

தலை அறுப்பு உண்டாரும் ஆக முடியாதே-

வேத அபஹார –குரு பாதிக

சூர்ணிகை -158 (18 )-
கர்ம பரதந்த்ரனுமாய்
துக்கியுமாய்
இருக்கையாலே

சூர்ணிகை -159 (19 )-
ஆகையால் ஈஸ்வரன் தானே
ஜகத்துக்கு காரணம்

சூர்ணிகை -160 (20 )-
இவன் காரணம் ஆகிறது
அவித்யா கர்ம பரநியோகாதிகளால் அன்றிக்கே
ஸ்வ இச்சையாலே

நாராயணனே காரணம்
கர்மத்தால் தகப்பன் பிள்ளை
பர நியமத்தால் செய்வார்கள்
இவன் சுய இச்சையால் செய்கிறான்
அவித்யா கர்ம நிபந்தனம் இல்லை
சாஸ்திர அவஸ்தை
மிருகங்கள் சுகத்தால் பண்ணும்
ப்ரஹ்மா பரநியமனம் – -நாட்டைப் படை என்ற
காட்டிய வழியில் சென்று செய்கிறார்கள் –
ஆதி -சப்தம்
அவரஜநீயம் ராகம் -ஆசை
நடுவில் திரு வீதிப் பிள்ளை பட்டர் அருளிச் செய்தார்

சூர்ணிகை -161 (21 )-
ஸ்வ சங்கல்பத்தாலே செய்கையாலே
இது தான் வருத்தம் அற்று
இருக்கும்

இச்சையால் செய்து அருளுகிறான்
நியாமகர் யாரும் இன்றி
சங்கல்பத்தால் செய்து அருளிகிறான் –
அசித் அவிசேஷிதான் –பட்டர் அருளிச் செய்த பிரமாணம்
ஆயாச ரூபம் இல்லை
இது தான் வருத்தம் அற்று இருக்கும்
மானச கார்யம் தானே
அனாயாசேன
பகுசயாம் பிரஜா ஏவ
மனம் செய் ஞானம்

சூர்ணிகை -162 (22 )-
இதுக்கு பிரயோஜனம் கேவல லீலை

என்ன பிரயோஜனம்
கேவல -லீலையால் செய்து அருளுகிறான் – –
இன்புறும் இவ் விளையாட்டு உடையான் –

சிருஷ்டிக்கு பிரயோஜனம்
சிருஷ்டி ரூப வியாபாரத்துக்கு பிரயோஜனம்
லோகவஸ்து லீலா கைவல்யம் -ஸ்ரீ பாஷ்யம்
மா முனிகள் -தாத்மிக ரசம் அப்பொழுது வருகிறது ரசம்
காலாந்தர பலம் கணித்து செய்வது இல்லை
சிருஷ்டி தான் லீலை
தொட்ட தொட்ட இடங்கள் எல்லாம்
தாதாத்மிக ரசம்
ராஜாக்கள் விளையாட்டு போலேயும் தூயதாம்
பிள்ளைகள் மணல் வீடு கட்டி விளையாடுவது போலே
நளிர் மா மலர் உந்தி வீட்டைப் பண்ணி விளையாடும்
சென்று சென்றாகிலும் –ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான்
சோம்பாது படைத்து
விசித்ரா தேக சம்பந்து
மாயவன் தன்னை வணங்க வைத்த காரணங்கள்
சேதனர் உஜ்ஜீவிக்க படைத்தான் -என்றதோடு இது விரோதியாதோ -லீலா வியாபாரம் சொல்லலாமா
இவரே சம்சயம் காட்டி -வாராது
உபய பிரயோஜனம் உண்டாய் இருக்கச் செய்தேயும்
லீவ்லையாகவே முடிவதால்
நினைத்தபடி செய்ய வல்லவன்
சகலரையும் முக்தன் ஆக்க வல்லவன்
கர்மத்தை காட்டி வ்யாஜ்யமாக
சாஸ்திர மரியாதையிலோ வர -லீலா ரச இச்சையால்
லீலா விபூதி
லீலையே பிரயோஜனம்
கிருபாவான் -கொத்தை வருமோ –
இன்புறும் இவ்விளையாட்டு உடையான் ஈட்டில்காட்டி அருளி –
கரண களேபரங்கள் வசத்துக்கு போக
நாம் எதற்கு படைத்தோம் இவை என்ன செய்கின்றன
என்று அவன் நினைப்பே லீலை

சூர்ணிகை -163 (23 )-
ஆனால் சம்ஹாரத்தில்
லீலை குலையாதோ -என்னில்

சூர்ணிகை -164 (24 )-
சம்ஹாரம் தானும்
லீலை யாகையாலே குலையாது

சம்ஹாரமும் லீலை யாகுமோ –
சிருஷ்டி ரூப வியாபாரத்துக்கு பிரயோஜனம்
லீலை -அந்த காலத்தில்
லீலை வியாபாரம் தொழில் ஆக கொண்டவனுக்கு பிழைப்பு ஆகும்
விளையாட்டு முடிந்த பின்பு இன்பம் இல்லையே
சம்ஹாரமும் லீலை
கொட்டகை இட்டு விளையாடும் பாலர்கள் அழிப்பதும் விளையாட்டு தானே
அகில புவன ஜன்ம –லீலே

சங்கல்க்பம் -அநாயாசேன செய்து அருளுவான்

சூர்ணிகை -165 (25 )-
இவன் தானே ஜகத்தை
பரிணமிக்கை யாலே
உபாதானமுமாய்
இருக்கும் –

நிமித்த காரணம் மட்டும் இல்லை
இவனே பரினமிக்கையால் உபாதானமாயும் இருக்கும்
மண் குடம் ஆவது போலே
தண்டம் சக்கராதி சக்காரி
சங்கல்பம் சக்காரி அறிவோம்
உபாதான கார்யம் அறிவதுகஷ்டம் –
நிமித்தம் -கர்த்ரு வஸ்து -உபாதானமான வஸ்து கார்ய ரூபன மாற்றும்
உபாதானம் கார்ய ரூபேண விகரிக்கும் வஸ்து
சக்காரி உபகரணம்
கடபடாதிகள் -குலாலம் -குயவன் –குவிந்தன் சேணியன் -நெசவாளி கை கோளன்-நிமித்தம்
மிருத் தந்துவாதிகள் உபாதானம்
தண்ட சக்கரம் சக்காரி
பகுச்யாம் – சங்கல்ப் ரூபம் -நிமித்த
ஞானம் சக்தி -சக்காரி
உபாதானம் -சேதன அசேதனங்கள் விரிந்து
சரீரமாய் பிரகாரமாய் விரிகிறது
ச்தூலோஹம்
நான் ஒல்லியாய் இருக்கிறேன் -சரீரம் தான்
ஆத்மா சரீரம் பாவத்தால் நான் ஒல்லியாய் இருக்கிறேவ்ன் சொல்வது போலே
ஜகத் தான் சூஷ்ம நிலை யில் இருந்து ஸ்தூல நிலை போவதால்
சிலந்தி பூச்சை -வலை கட்டி அழிப்பது போலே உபநிஷத்
தன்னுள்ளே -திரித்து எழும் அடங்குகின்ற தன்மை நின்னுள்ளே பிறந்து -ஆழ்வார் காட்டி அருளி –
அலை -சமுத்ரம் -சமுத்திரத்தின் அவயவம் அலை
நின்னுள்ளே அடங்கி நின்ற நீர்மை
பட்டர் மயில் தோகை-த்ரஐஷ்டாந்தம் காட்டி
பெண் மயில் மகிழ ஆண் மயில் தோகை விரித்து ஆடி-சுருக்குவது போலே –
ப்ரஹ்மம்-அவயவம் சேதன அசேதனம் சரீரம் ஏக தேசம் -விஸ்தரித்து –
ஆண் மயில் -பெண் மயில் சந்தோசம்
பிராட்டி மகிழ்ச்சிக்காகா -சிருஷ்டியில் அன்வயம் இல்லை –
ஜகத் வியாபாரப் வர்ஜம்
இருவருக்கும் ரசம் உண்டே –
அப்ருதக் சித்த விசெஷணம்
உபாதான காரணமும் இவனே

சூர்ணிகை -166 (26 )
ஆனால் நிர்விகாரன் என்னும்படி
என் என்னில்

சூர்ணிகை -167 (27 )-
ஸ்வரூபத்துக்கு விகாரம்
இல்லாமையாலே

பிரக்ர்துக்ஜஞ் சூத்ரம் –
பிரதிஞ்ஞை -ஏக விஞ்ஞானம் -ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறியலாம்
உத்தாலகர் ஸ்வேதா கேது குறித்து
ஏக வஸ்து சூஷ்ம சித் அசித் ப்ரஹ்மம்
ஏவக மேவ அத்வதீயம்
சயெவ ஸ்ருஞ்ஜ்ய
பிரமாணங்கள் ஸ்பஷ்டமாக காட்டி
தானே -இப்படி -ஆகில்
நிர்விகாரம் ஆனபடி எங்கனே என்னில்
ஸ்வரூபத்துக்கு விகாரம் இல்லை
சரீரத்துக்கு தான் விகாரம்

சூர்ணிகை -168 (28 )
ஆனால் பரிணாமம் உண்டாம்படி
என் என்னில்

சூர்ணிகை -169 (29 )-
விசிஷ்ட விசெஷன
சத்வாரகமாக

தானே -விசெஷ்யம் -உள்ளே உள்ள ஸ்வரூபம் விகாரம் இல்லை
விகாரம் இல்லை என்றால்
பரிணாமம் இவனுக்கு உண்டானது எங்கனே
விசிஷ்ட -சத்வாகாரத்தால்

சூர்ணிகை -170 (30 )-
ஒரு சிலந்திக்கு உண்டான
ஸ்வ பாவம் சர்வ சக்திக்குக் கூடாது
ஒழியாது இ றே

விசிஷ்ட விசேஷண ந சத்வாகரம்
தண்ட குண்டலாதிகள் போலே இன்றி – –
அப்ருதக் சித்த விசெஷணம் விட்டு பிரிக்க முடியாதே –
ப்ருதக் சித்தம் அநர்கம்
இவன் பிரிந்தால் சத்தை இல்லையே
தண்ட குண்டலாதிகளில் வ்யாவர்திக்கும்
ஸ்வ சரீர பூதம் -இவன் உபாதான காரணம்
சிலந்திக்கு உண்டான விகாரம்
சர்வ சக்தனுக்கு முடியாதா

நூலுக்கு தான் உபாதானம் சிலந்திக்கு
ஊர்ண நாபி -ஸ்ருஜதே முண்டக உபநிஷத்
ஸ்ரீ விஷ்ணு புராணம்
பிள்ளை பெருமாள் ஐயங்கார் –
கம்பர்
சக்காரி காரனத்வம் சொல்லாது ஒழிந்தது
சக்தி சொல்லி விட்டதால்
தனியாக சொல்ல வேண்டாம்
ஈச்வரனே த்ரிவித காரணம்

சூர்ணிகை -171 (31 )-
ஈஸ்வரன் ஸ்ருஷ்டிக்கை யாவது
அசித்தைப் பரிணமிப்பிக்கையும்
சேதனனுக்கு சரீர இந்த்ரியங்களைக் கொடுத்து
ஜ்ஞான விகாசத்தைப் பண்ணுகையும்

நித்ய தத்வம் இவன் என்ன ச்ருஷ்டீக்கை யாவது என்ன
அசித்-சூஷ்ம ரூபம் எப்பொழுதும் -மறைந்த ஞான விகாசம் செய்வது
சரீர இந்த்ரியங்களை கொடுத்து —
பறந்து உள்ள மண்ணை சேர்த்து வைத்து குடம் ஆக்குவது போல
ஏகி பவதி
தமஸ் -அசித் போல இருக்க
சங்கல்பித்து
பிரித்து
அஷரம்
அவ்யக்தா
சமஸ்டி வியஷ்டி ஆக்கி
பிரளத்ய சீமை -கரண களேபரம் விதுரனாய்
போக மோஷ சூன்யனாய் –
போக ஸ்தானம் சரீரம்
போக உபகரணம் இந்த்ரியங்கள்
ஞான விகாசம்
ஜாதி ஏக வசனம் சேதனர்

discovery -இருப்பதை
invention -இல்லாத பொருளை கண்டு பிடிப்பது
நம் சித்தாந்தம் எல்லாமே discovery தான்
மூல வஸ்து சிருஷ்டிக்க முடியாதே
வேற நிலை8க்கு மாற்றுவது தான் சிருஷ்டி

சூர்ணிகை -172 (32 )-
ஸ்திதிப் பிக்கையாவது
ஸ்ருஷ்டமான வஸ்துக்களிலே
பயிருக்கு நீர் நிலை போலே
அனுகூலமாக பிரவேசித்து நின்று
சர்வ ரஷைகளையும்
பண்ணுகை-

ஸ்திதிப்பிக்கை யாவது
கர்த்ருகதம் இல்லை
இருக்கும்படி இவன் தான் பண்ண வேண்டும்
பயிருக்கு நீர் போலே
உள்ளே
ததேவ அனுப்ராவச்யது
சர்வ ரஷை
அனுகூலதையா பிரவேசம் -அநு பிரவேசம்

சூர்ணிகை -173 (33 )-
சம்ஹரிக்கை யாவது
ஆவி நீதனான புத்ரனைப் பிதா விலங்கிட்டு
வைக்குமா போலே -விஷயாந்தரந்களிலே
கை வளருகிற கரணங்களைக் குலைத்திட்டு வைக்கை –

சம்ஹாரமும் நன்மை
விலங்கு இட்டு வைப்பது போலே
துஷ்ட பிள்ளையை -காப்பாற்ற –
கரண களேபரம் விபரீத பிரவ்ருத்தி செய்ய முடியாமல்
ஈச்வராய நிவெததம்
வழி படாமல்
சாக்ச்த்ரம் -விதி நிஷேதம் –
இஷ்டப்படி செய்யும் புத்ரனை ஹித பரர பிதா
ஒடுக்கி இட்டு வைக்கை தான் சம்ஹாரம்

சீறி அருளாதே
பாபங்கள் கூடு பூரிக்க விடாமல்

சூர்ணிகை -174 (34 )-
இம் மூன்றும் தனித் தனியே
நாலு பிரகாரமாய்
இருக்கும்

சூர்ணிகை -175 (35 )-
சிருஷ்டியில் ப்ரஹ்மாவுக்கும்
பிரஜாபதிகளுக்கும்
காலத்துக்கும்
சகல ஜந்துக்களுக்கும்
அந்தர்யாமியாய்
ரஜோ குணத்தோடு கூடி சிருஷ்டிக்கும்

சூர்ணிகை -176 (36 )
ஸ்திதியில் விஷ்ண்வாதி ரூபேண அவதரித்து
மந்வாதி முகேன சாஸ்த்ரங்களை
ப்ரவர்த்திப்பித்து நல் வழி காட்டி
காலத்துக்கும் சகல பூதங்களுக்கும் அந்தர்யாமியாய்
சத்வ குணத்தோடு கூடி ஸ்திதிப்பிக்கும்

நான்கு விதம்
சிருஷ்டி
ஸ்திதி
சம்ஹாரம்
ஒவ் ஒன்றும்
பிரஹ்மா பிரஜாபதி காலம் ஜந்துக்கள் நான்கிலும் அந்தராத்மா
பிரவ்ருத்தி ஹேதுவான ரஜோ குணம் கொண்டு சிருஷ்டி –
சத்வ்ப குணம் கொண்டு ரஷணம்
விஷ்ணு -ரூபம்
மனு ஆதி தர்ம சாஸ்திரம்
காலம்
சகல பூதங்களுக்கும் அந்தராத்மா
மத்யே விரிஞ்சி கேசம் விஷ்ணு
ஏன் நின்ற யோனியுமாய் போயறந்து
தத் பேஷஷம் -மனு சொன்னது பராசர வால்மீகி ஸ்ம்ருதி இதிஹாச புராணம்
நல்ல வழி காட்டி
பிரவ்ருத்திகள் தன்னதாம் படி ஸ்திதிப்பிக்கும்

சூர்ணிகை -177 (37 )-
சம்ஹாரத்தில் ருத்ரனுக்கும்
அக்நி அந்தகாதிகளுக்கும்
காலத்துக்கும் சகல பூதங்களுக்கும்
அந்தர்யாமியாய்
தமோ குணத்தோடு கூடி சம்ஹரிக்கும்

ருத்ரன்
அக்னி அந்தகன் -அவாந்தர –
காலம்
சகல பூதம் அந்தர்யாமியாக இருந்து சம்ஹாரம்
பூனை எலி -பூச்சி ஒன்றுக்கு ஓன்று சம்ஹாரம்
திமிலிங்கம்
திமி -சின்ன மீன் கிலது
திமிங்கிலம் -தீம் கில கிலது அத்தை சாப்பிடும்
ஒன்றுக்கு ஓன்று நாசகம் ஆகும்
கண் பாராமல் செய்ய -தமோ குணா விசிஷ்டன்

சூர்ணிகை -178 (38 )-
சிலரை ஸூ கிகளாகவும்
சிலரை துக்கிகளாகவும்
ஸ்ருஷ்டித்தால் ஈஸ்வரனுக்கு வைஷம்ய
நைரக்ருண்யங்கள் வாராதோ
என்னில்

விஷ்ணு தானே -ஸ்வென ரூபேண
பிரம்மா ருத்ரன் அந்தர்யாமி
விஷம சிருஷ்டி
சுகம் துக்கி வைஷம்யம் பஷ பாதமா
நைக்ர்ண்யம் உண்டா
பரம தயாளன்
சர்வ சமம்

சூர்ணிகை -179 (39 )-
கர்மம் அடியாக செய்கையாலும்
மண் தின்ற பிரஜையை நாக்கிலே குறியிட்டு
அஞ்சப் பண்ணும் மாதாவைப் போலே
ஹிதபரனாய் செய்கையாலும்
வாராது –

கர்மம் அடியாக ஸ்ருஷ்டிக்கிறான்
பூர்வ ஜன்ம கர்மம் –
மண் தின்ன பிரஜைக்கு -நாக்கிலே சூடு இட்டு -அஞ்சப் பண்ணும் ஹித பரை
நாக்கிலே குறி இடுதல்-
மேலே மேலே துக்க ஹேது கர்மம் செய்ய அஞ்சும் படி
வைஷம்ய நைகர்ந்ய ந சாபேஷ்த்வாத்
பிரசக்தி
ப்ரஹ்ம சூத்ரம்

சூர்ணிகை -180 (40 )-
இவன் தான் முந்நீர் ஞாலம் படைத்த என் முகில் வண்ணன் –
என்கிற படியே
ஸ விக்ரஹனாய்க் கொண்டு
ஸ்ருஷ்டியாதிகளைப் பண்ணும்

ச விக்ரஹனாய் கொண்டு சிருஷ்டி செய்து அருளுகிறான்
ஆர்த்தன் -நால்வரும் பற்றும்
சதுர்வித பல பரதன் –
காரணம் து தேய்தா
காரணத்வம் சொன்ன போதே இவை அமையும் -உக்தம்
அர்த்தாத் வரும்
விவரித்து சொல்ல ஒன்றும் இல்லை இவை
விக்ரக யோகம் சொல்லி
முந்நீர் ஞாலம் படசித்த என் முகில் வண்ணனே
எனக்காக செய்கிறான்
ஆற்று நீர் ஊற்று நீர் வேற்று நீர்
முகில் வண்ணன் ஔதார்யம் வ்யாக்யாதா காட்டி –
இங்கே பிள்ளை லோகாச்சார்யர் நிறம் உடையவனாக கொண்டு
வண்ணம் -நிறம் விக்ரகபரம் -இங்கனே ஒரு யோசனை உண்டு -மா முனிகள் காட்டி அருளி –
குணபரமாயும் விக்ரகபரமாயும் கொள்ள வேண்டும்
விக்ரகம் வை லஷண்யம் விஸ்தாரமாக அருளிச் செய்கிறார் –

சூர்ணிகை -181 (41 )-
விக்ரஹம் தான்
ஸ்வரூப ரூபா குணங்களில் காட்டில்
அத்யந்த அபிமதமாய்
ஸ்வ அனுரூபமாய்
நித்தியமாய்
ஏகரூபமாய்
ஸூ த்த சத்வாத்மகமாய்
சேதன தேகம் போலே ஜ்ஞான மயமான ஸ்வரூபத்தை
மறைக்கை யன்றிக்கே
மாணிக்கச் செப்பிலே பொன்னை இட்டு வைத்தாப் போலே இருக்க
பொன்னுருவமான திவ்ய ஆத்ம ஸ்வரூபத்துக்கு பிரகாசகமாய்
நிரவதிக தேஜோ ரூபமாய்
சௌ குமார்யாதி கல்யாண குணகண நிதியாய்
யோகித்யேயமாய்
சகல ஜன மோகனமாய்
சமஸ்த போக வைராக்ய ஜனகமாய்
நித்ய முக்த அனுபாவ்யமாய்
வாசத்தடம் போலே சகல தாப ஹரமாய்
அநந்த அவதார கந்தமாய்
சர்வ ரஷகமாய்
சர்வாபாஸ்ரயமாய்
அஸ்த்ர பூஷன பூஷிதமாய்
இருக்கும்

அத்யந்த அபிமதம் ஆவது –
திரு மேனி சேவிக்க ஆசை
ஸ்வரூபம் குணம் -ஆனந்தமே வடிவை எடுத்தும் ஆனந்தம் உண்டு பண்ணும் குணங்களைக் காட்டிலும்
இச்சா க்ரூஹீத அபிமத
அனுரூபமாய் இருக்கை –
ஆத்மாவின் தன்மைக்கு சேராமல் நமது சரீரம் இருக்க –
திவ்ய மங்கள விக்ரஹம் அப்படி இல்லை –
அபிமதமும் அனுரூபமாயும் -இருக்கும் –
நித்யம் -அநாதி -ஸ்வரூப குணங்கள் போலே
லோகத்தில் அவயவி அநித்தியம்
பிரவாகத்தோ நித்யம் -நமது ஆத்மா
கர சரணாதி நித்யம்
ஏக ரூபம் -வ்ருத்தி ஷயம் இன்றி இருக்கை -திவ்ய மங்கள விக்ரகம் சதைக ரூப ரூபாய
சுத்த சத்வ -அப்ராக்ருத -மயமான
சேதன சேதம் ஆத்மாவின் ஸ்வரூபம் மறைக்கும்
இதுவோ காட்டிக் கொடுக்கும்
மாணிக்கச் செப்பில் இட்ட பொன்னைப் போலே
புறம்பே நிழல் இடும்படி தோற்றுவிக்கும் போலே –
என்னும் பொன் உருவாய்
பொன் உரு திவ்ய ஆத்மா ஸ்வரூபம் ச்ப்ரு ஹநீயதை யாய் இருக்கும்-
தேஜோ ரூபமாய் –
நித்ய முக்தர் -பஞ்ச உபநிஷத் மயம்
ஏக ஜாதி
ஆதித்ய சரீரம் உள்ள தேஜோ பிரகாசம் பூலே
சூர்யன் மின் மினி போலே -எம்பெருமான் திரு மேனி முன்னே
தங்கம் பித்தளை –
இவை சாவதிக தேஜஸ் போலே நிரவதிகமாய் இருக்கும்
சௌகுமார்யம் சௌந்த்ர்யம் லாவண்யம் -சமுதாய அவயவ சோபை –யவனம்
அநந்த குணா நிதி திவ்ய ரூபம் கதய த்ரயம்
த்யான விஷயம் சுபாஸ்ரயம்-
சகல ஜன மோகனம் பிச்சேற்று –
ஞானம் உள்ளவாரையும் -பும்ஸாம் திருஷ்டி சித்த அபாஹரிம்
கண்டவர் தம் மனம் வழங்கும்
சர்வ சத்வ மனோகரம் ராமன் -குரங்கும் ஈடுபடும்படி
தண்ட காரனியா வாசி
பும்ஸாம் திருஷ்டி அபஹாரினாம் பிடுங்கி கொள்வான்
மனம் வழங்கும் ரிஷிக்கு மேலே ஆழ்வார்
ஆசை விளைவிக்கும் –
பேர் இன்பம் துரந்தார் தோள்
மால் பால் மனம் சுளிப்ப மங்கையர் தோல் கை விட்டு
வாசத்தடம் -போல்
தாமரை பூத்து பரிமளம் அலரா நிற்கும்
செக்கமலத்து அலர் போலும் –அக்கமலத்து இலை போலும் திருமேனி
தூய –சாயல் சாமத் திரு மேனி
தாமரை நீள் வாசத் தடம் வாசனை உள்ள
சம்சாரிக்க தாப த்ரயம் -போக்கு

வாசனை உள்ள தடாகம்
விரக தாபம் போக்கும் ஆழ்வார் போல்வாருக்கு
அநந்த அவதார மூலம்
அசையாத மானத்த பகுதாய
எண்ணிக்கை இல்லாத
அப்ராக்ருத திவ்ய சமஸ்தானம் இதர சஜாதீயனாய் ஆக்கி கொண்டு
தீபாதி -விளக்கில் கொளுத்தின தீ வட்டி போலே
அதிஷ்டாய சம்பவாமி
ஆதி அம சோதி உருவை அங்கு வைத்த படியே இங்கு பிறந்து
சர்வருக்கும் ரஷகர்
நால்வகை புருஷார்த்தம்
அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி
திவ்ய மங்கள விக்ரகம் கூடி அருளி
அஸ்த்ர பூஷாணாதி
திவ்ய ஆயுதங்கள் ஆபரணங்கள் கொண்டு சேவை சாதித்து அருளி
ஸ்ரீ வஸ்த -ஸ்ரீ விஷ்ணு புராணம் பிரமாணம் -காட்டி அருளி

சூர்ணிகை -182 (42 )-
ஈஸ்வர ஸ்வரூபம் தான்
பரத்வம் வ்யூஹம் விபவம் அந்தர்யாமித்வம் அர்ச்சாவதாரம்
என்று அஞ்சு பிரகாரத்தொடே கூடி இருக்கும்

ஐந்து படி -நிலை பட்டு இருக்கும்

லஷ்மி பூமி நீளா -நாயகன் உபபாதிக்க வேண்டாமே
பரத்வத்தில் அர்த்தா உக்தம்
தனித்து உபபாதிக்க வேண்டாமே
ஸ்வரூபம் –
இவர் தாமே சந்க்ரகமாக இரண்டு பிரபந்தம் அருளி
திரு மேனியும் ஐந்து படி இருக்கும்
ஈஸ்வர ஸ்வரூபம் பத்னி பரிஜன படியாய் இருக்கும்
ஸ்வரூபம் ஐந்து படி யாய் இருக்கும்
திரு மேனியும் ஐந்து படியாய் இருக்கும்
விக்ரகத்தோடு கூடிய ஸ்வரூபம்
விஷ்வக் சேன சம்ஹிதை பிரமாணம் காட்டி அருளி –

சூர்ணிகை -183 (43 )-
அவற்றில் பரத்வம் ஆவது
அகால கால்யமான நலம் அந்தம் இல்லாதோர் நாட்டிலே
நித்ய முக்தர்க்கு போக்யனாய்க் கொண்டு
எழுந்து அருளி இருக்கும் இருப்பு

காலத்துக்கு ஆணை செல்லாத
நலம் -ஆனந்தம்
எல்லை இல்லாத நாடு -நலம் அந்தம் இல்லாதோர் நாடு ஸ்ரீ வைகுண்டம்
பரத்வம்
அயர்வறும் அமரர்கள் அதிபதி
அநந்த கருட விஷ்வக் சேனர் போல்வாருக்கும்
முக்தர்களுக்கும்
நிவ்ருத்த சம்சாரிகளோ
அனுபவ விஷய பூதன்
பஸ்யந்தி சதா தேவம்

சூர்ணிகை -184 (44 )-
வ்யூஹம் ஆவது
சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரார்த்த மாகவும்
சம்சாரி சம்ரஷணார்த்த மாகவும்
உபாசக அனுக்ரகஹார்த்த மாகவும்
சங்கர்ஷண பிரத்யும்ன அநிருத்த ரூபேண
நிற்கும் நிலை –

வ்யூஹம்
லீலா விபூதி விநியோகம்
சிருஷ்டி
ஸ்திதி
சம்காரம்
அனுக்ரகம் பண்ண உடல்
இன்னதாலே இன்னது செய்யும் மேலே சொல்லி அருளி
சங்கர்ஷணன்
அனிருத்னன்
பிரத்யும்னன்

வாசுதேவரையும் கூட்டி நான்கு

சூர்ணிகை -185 (45 )
பரத்வத்தில் ஜ்ஞானாதிகள் ஆறும்
பூரணமாய் இருக்கும்
வ்யூஹத்தில் இவ்விரண்டு குணம்
பிரகடமாய் இருக்கும்

பரத்வம் -ஞானாதிகள் ஆறும் பூர்வம்
ஞானம் பலம்
ஐஸ்வர்யம் சக்தி
வீர்யம் தேஜஸ்
குணாநாம் த்ரி விதமாய் -அதிகரித்த கார்யத்துக்கு அனுரூபமாய்

சூர்ணிகை -186 (46 )-
அதில் சங்கர்ஷணர் ஜ்ஞான பலன்கள் இரண்டோடும் கூடி
ஜீவா தத்தவத்தை அதிஷ்டித்து
அத்தை பிரக்ருதியில் நின்றும் விவேகித்து
பிரத்யும்னா வஸ்தையையும் பஜித்து
சாஸ்திர ப்ரவர்த்த நத்தையும்
ஜகத் சம்ஹாரத்தையும்
பண்ணக் கடவராய் இருப்பர்-

சங்கர்ஷணர் –
ஞானம் பலம் -கார்ய அனுகுணமாக இவை கூடி –
ஜீவா தத்தவத்தை -நாம ரூபம் -விவேகித்து
சிருஷ்டி

சூர்ணிகை -187 (47 )-
பிரத்யும்னர் ஐஸ்வர்ய வீர்யங்கள் இரண்டோடும் கூடி
மனஸ் தத்வத்தை அதிஷ்டித்து
தர்ம உபதேசத்தையும்
மனு சதுஷ்டயம் தொடக்கமான
ஸூ த்த வர்க்க சிருஷ்டியையும்
பண்ணக் கடவராய் இருப்பர் –

பிரத்யும்னன் ரூபம் அடைந்து
ஐஸ்வர்யம் வீர்யம்
மனஸ் தத்வம் அதிஷ்டித்து
மிதுனமாய் இருக்கிற -ஆண் பெண் –
கர்மம் அனுஷ்டித்து –
சுத்த வர்க்க சிருஷ்டி

சூர்ணிகை -188 (48 )-
அநிருத்தர் சக்தி தேஜஸ் ஸூ க்கள் இரண்டோடும் கூடி
ரஷணத்துக்கும் தத்வ ஜ்ஞான பிரதானத்துக்கும்
கால சிருஷ்டிக்கும்
மிஸ்ர சிருஷ்டிக்கும்
கடவராய் இருப்பர் –

அனுருத்ரர்
சக்தி தேஜஸ்
கால சிருஷ்டி
தமஸ் -சம்சாரிகளை சிருஷ்டித்து –
கர்ம பலம் –
மிஸ்ர வர்க்கம் சிருஷ்டி

அண்டம்
வ்யஷ்டி -சத்வாகரமாக
சுத்த மிஸ்ர வர்க்க சிருஷ்டியும்
ப்ரஹ்மா-இவர்கள் தூண்ட செய்து அருளுகிறான்
சேனை முதலியார் கேட்க எல்லாம் நானே செய்கிறேன் -அருளிச் செய்தான் –

சூர்ணிகை -189 (49 )-
விபவம் அனநதமாய்
கௌண முக்ய பேதத்தாலே
பேதித்து இருக்கும்

கௌண அவதாரம் -ஆவேச அவதாரம்
ஸ்வரூப ஆவேசம் -பரசுராமர் சேதனர் சரீரங்கள்
சக்தி ஆவேசம் -சக்தி மாத்ரத்தால் -வியாசர் -அந்த கார்யம் -விதி சிவாதி -சிருஷ்டி சம்கார காலத்தில்
செய்ய ஆவேசிப்பது –
முக்கிய -ஸ்ரேஷ்டம்
என் நின்ற யோனியுமாய்
இரண்டு வகையாக
விபரம் -இதர சஜாதீயம்

சூர்ணிகை -190 (50 )-
மனுஷ்யத்வம் திர்யக்த்வம் ஸ்தாவரத்வம் போலே
கௌணதவமும் -இச்சையாலே வந்தது
ஸ்வ ரூ பேண அன்று

இச்சையால் இது போதும் என்றே வந்தான்
மனுஷ்ய ஸ்தாவரம் போலே
சங்கல்ப்பத்தால்
குட்டையான மரம்
முக்கிய அவதாரம் -அவன் திவ்ய சமஸ்தானமே
ராமபிரான் –
ஆவேசம் -வாசி அறிந்து

சூர்ணிகை -191 (51 )-
அதில் அப்ராக்ருத விக்ரஹங்களுமாய்
அஜஹத் ஸ்வ பாவ விபவங்க ளுமாய்
தீ பாதுத் பன்ன ப்ரதீபம் போலே இருக்கக் கடவதான
முக்ய ப்ராதுர் பாவங்கள் எல்லாம்
முமுஷூக்களுக்கு உபாசயங்களாய் இருக்கும்

வராக அவதாரம் -திருக் கோயில்கள் உண்டே
பரசுராமர் உபாசகம் இல்லை திருக் கோயில் இல்லை
அப்ராக்ருத
அஜக்ஸ் ச்வாபம்
தீபாதி உத்பன்ன பிரதீபம் போலே
முமுஷூக்களுக்கு உபாசகம்

சூர்ணிகை -192 (52 )
விதி சிவ பாவக வியாச ஜாமதக்னி அர்ஜுன வித்தேசாதிகள் ஆகிற
கௌண ப்ராதுர் பாவங்கள் எல்லாம்
அஹங்கார யுகத ஜீவர்களை அதிஷ்டித்து நிற்கையாலே
முமுஷூக்களுக்கு அனுபாச்யங்கள்-

கௌவண அவதாரம் -அம்சம் –
சேதனன் அஹங்கார உகத ஜீவன்
விதி சிவாஅக்னி -பாவகர் –சக்தி ஆவேசம்
வியாசர் ஜமதக்னி-புத்திரன் பரசுராமன் கார்த்த வீர்ய அர்ஜுனன் -வித்தேஷ் குபேரன் -போல –
அர்ஜுனனும் இப்படி என்பாரும் உண்டே
ஆதி ககுஸ்து முமுஷ்குந்த போல்வார்
அதிஷ்டித்து அந்த கார்யத்துக்கு மட்டும்
சரீரத்தில் இருந்து அந்த கார்யம் முடிந்து விலகி
புத்தர் -மா உருவில் கள்ள வேடம் -ஸ்வேன ரூபனே
கல்ப பேதம் -அத்தையும் கொள்ளலாம்
விபவங்கள் எண்ணிக்கை இல்லை
முக்கிய அவதார விசேஷம்

சூர்ணிகை -193-(53 )
நித்யோதித சாந்தோதிதாதி பேதமும்
ஜாக்ரத் சம்ஜ்ஞாதி யான சாதுராத்ம்யமும்
கேசவாதி மூர்த்யந்தரமும்
ஷட்த்ரிம்சத் பேத பின்னமான பத்ம நாபாதி விபவமும்
உபேந்திர த்ரிவிக்ரம தாதி பக்த -ஹயக்ரீவ
நர நாராயண -ஹரி
கிருஷ்ண மத்ஸ்ய கூர்ம வராஹாத் யாவதார
விசேஷங்களும்
அவற்றின் உடைய பூஜை ஆயுத வர்ண க்ருத்ய ஸ்தானாதி பேதங்களும்
துரவதரங்க ளுமாய் -குஹ்ய யதமங்க ளுமாய்
இருக்கையால் சொல்லுகிறோம் அல்லோம்

இன்னும் சொல்ல வேண்டியவை பல உண்டே
கிரந்தம் விஸ்தாரம் ஆகுமே –
பர வாசுதேவர் –
வியூக வாசுதேவர் -குணங்களில் பேதம் இல்லையே
நான்கும் மூன்றும் –
ஜாக்ரதை சோபான அவஸ்தை
கேசவாதி -மூர்த்தி
லலாடாதி –
ஓர் ஒன்றிலும் மூன்று மூர்த்திகள் -உத்பன்னமாய் வியூக சதுஷ்டயம் –

பத்மநாபாதி -36 அவதாரங்கள் என்பர்
39 அஹிர் புத்யை சம்கிதை சொல்லி இருக்க –
கபில தத்தாத்ர்யா பரசுராம ஆவேசதிகள் கழித்து 36 –
உபேந்திர
-த்ரிவிக்ரம-எல்லை நடந்து

-ததி பக்த-அமிர்தம்
ஹயக்ரீவ -வேத
நர நாராயணம்
ஹரி
கிருஷ்ணன்
மந்தர ஆதரத்வம்
பூமி உத்தாரணம்
மத்ஸ்ய
நரசிம்க
புஜ வர்ண ஆயுத -பேதங்கள்
சத்தான பேதங்கள் அயோதியை
பூஷண வஸ்த்ராதி பேதங்கள்
சொன்னாலும் புத்தி பண்ண அரிதாம்
அவதார ரகசியம்
ஹேது -இச்சை காரணம் –

சூர்ணிகை -194 (54 )-
அவதாரங்களுக்கு ஹேது இச்சை

முமுஷூக்களுக்கு உபாசனம் யோக்யதை இல்லை
கூடல் அழகர் சந்நிதி 30 வருஷம் முன்பி நவ கரகம் பிரதிஷ்டை
இச்சையால் அவதரிக்கிறான்
பல பிறவி
மாயாப்பிறவி
பஹுநீ
ஏன் நின்ற யோனியுமாய்
சம்பவாமி ஆத்மா மாயையா -இச்சை
அத்வைதி -மாயை தப்பான
மாயா -ஞான வாசி சப்தம்
வித்யாரான்யர் -தேவ மாயை தேவ ஞானம் -அத்வைதிகளும் ஒத்துக் கொண்ட அர்த்தம்
அஜோபிசன் சம்பவாமி
பிறவாதவன் பிறக்கிறான்
இச்சா கிருஹீத அபிமத தேவ
இச்சையால் அவதரிக்கிறான்

சூர்ணிகை -195 (55 )
பலம் சாது பரித்ராணாதி த்ரயம்

பலம் -சாதுநாம் பரித்ரானம்
துஷ்கிருத் விநாசனம்
தர்மம் நிலை நாட்டுதல்
தன் பக்கல் பிரேம உக்தர் –
அனுபவம் ஒழிய ஷணம் காலமும் செல்லாத
காண ஆசைப் பட்டும் இருக்கும் சாதுக்களுக்கு
தன்னுடைய ரூபம் காட்டி அருளி –
செஷ்டித தானம்
அவலோக தானம்
விரஹம் தாங்காத –
வார்த்தை கேட்க ஆசை
காண வாராய் –
சங்கல்பத்தால் செய்ய முடியாதே
விரோதிகளை அழிப்பது மட்டும் போறாதே
திராணம் இல்லை பரி உப சர்க்கம்
தர்மம் -ஆராதனம் தானே தர்மம்
கீதா பாஷ்யம் -வைஷ்ணவ அக்ரேசர்-வாசுதேவம் சர்வம்
கால் ஆளும் நெஞ்சு அழியும் -உடம்பு எல்லாம் கண்ணா நீர் சோர
ஆராத்ய ஸ்வரூப தர்சம் காட்டி அருளி –
யுகம் யுகம் தோறும் அவதரித்து –
அவாப்த சமஸ்த காமன் -ததாபி -யோனிகளில் அவதரித்து –
இதுவே பலம் –
சாது பவித்ரானம் முக்கியம் -பிரயோஜஜம்
விநாசாய ச -அபிராதன சகார்ரார்தம்

சூர்ணிகை -196 (56 )
பல பிரமாணங்களிலும்
ப்ருகு சாபாதிகளாலே பிறந்தான் என்கையாலே
அவதாரங்களுக்கு ஹேது கர்மமாக வேண்டாவோ என்னில்

கர்மம் அடியாக இல்லை
பிருகு சாபம் என்பர் –
பதி விரதா – பிரமாணம் -உத்தர ஸ்ரீ ராமாயணம் –
பார்யை விட்டு பிரிவான் சாபம்
இருந்தாலும்
சாபம் வியாஜ்யம் அவதாரம் இச்சை பிரதான ஹேது
சாபம் பொய்யாக்காமல் இச்சையால் அவதரிக்கிறான்

சூர்ணிகை -197 (57)
அவை தன்னிலே சாபம் வ்யாஜம்
அவதாரம் -ஐ ச்சிகம் என்று
பரிஹரித்தது

ருத்ரன் -வரம் கேட்ட வ்ருத்தாந்தம்
ருக்மிணி தேவி உடன் சென்று பிள்ளை வரம்
கள்வா -தாஸ்மான் கேசவ நாமம் -நீ கேட்கிறாயே
ஹிரண்யகசிபு கொல்ல-ப்ரஹ்ம வரத்துக்கு உட்பட்டு கார்யம் செய்து அருளி –

சூர்ணிகை -198 ( 58)-
அந்தர்யாமித்வம் ஆவது
அந்த ப்ரவிச்ய நியந்தாவாய்
இருக்கை

சூர்ணிகை -199 (59 )-
ஸ்வர்க்க நரக பிரவேசாதி
சர்வ அவஸ்தை களிலும் சகல சேதனர்க்கும் துணையாய்
அவர்களை விடாதே நிலைக்கு மேலே ஸூ பாஸ்ரயமான
திரு மேனியோடு கூடிக் கொண்டு
அவர்களுக்கு த்யேயன் ஆகைக்கும்
பந்து பூதனாய்க் கொண்டு
ஹ்ருதய கமலத்திலே எழுந்து அருளி இருக்கும் இருப்பு

அந்தர்யாமி -அந்த பிரவிஷ்டா ஜனானாம்
சகல பிரவ்ருதிகளுக்கும் நியந்தா
தனது ஸ்வரூபத்தாலும்
ச விக்ரகனாயும் கொண்டு வ்யாபிக்கிறான் –
ஸ்வரூபம் விக்ரக வ்யாப்தி இரண்டும் உண்டு

ஸ்வர்க்கம் நரகம் போனாலும் அந்தர்யாமி யாக வருகிறான்
இரா மேடம் ஊட்டுவாரைப் போல உள்ளே பதி கடந்து
ஊட்டும் இடம் அந்தர்யாமி
கட்டை விரல் -ஜோதி ரூபமாய் நீல தொயத்தை விழுங்கிய மின்னல் போலே
த்யானம் ருசி பிறந்த போதே த்யானம் செய்ய
நாராயணம் பிரயுக்தமான குடல் துவக்கு பந்துத்வம் உண்டே
விக்ரகம் ஐந்து படிப் பட்டு இருக்கும்
அந்தர்யாமித்வமும் உண்டு

சூர்ணிகை -200 (60 )-
அர்ச்சாவதாரம் ஆவது
தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் -என்கிறபடியே
சேதனர்க்கு அபிமதமான த்ரவ்யத்திலே விபவ விசேஷங்கள் போல் அன்றிக்கே
தேச கால அதிகாரி நியமம் இல்லாதபடி
சந்நிதி பண்ணி
அபராதங்களைக் காணாக் கண் இட்டு
அர்ச்சக பரதந்த்ரமான சமஸ்த வியாபாரங்களையும் உடையனாய்க் கொண்டு
கோயில்களிலும்
கிருஹங்களிலும்
எழுந்து அருளி இருக்கும் நிலை

கோயில்களிலும் கிருகங்களில்
தமர் உகந்தது -யாதொன்றை திரு மேனியாக கோலியதையே வடிவாகக் கொண்டு

ஆஸ்ரிதர் அபிமதம் ஸ்வர்ணம் -தங்கம் ரஜதம் வெள்ளி கல் ஏதேனும்
அயோதியை -1100
மதுரை
தேச கால நியமனம் இன்றி
அர்ச்சகன் அபேஷா காலம் படி
அர்ச்சகர் பராதீனன்
சர்வ சாஹிஷ்ணு
அபராதங்களை காணாக் கண் இட்டு –
ஸ்நானம் –
அசனம் -உண்பது
அர்ச்சகர் நியமனம் படி –
பூஜை அறை -பிறை -எதுவோ –
அடியவர் காட்டும் இடம்
அடியவர் வேர்த்த பொழுது தான் குளித்து
சமஸ்த வியாபாரங்களும் அர்ச்சகர் பராதீனம்

சூர்ணிகை -201 (61 )-
ருசி ஜனகத்வமும்
ஸூ பாஸ்ரயத்வமும்
அனுபாவ்யத்வமும்
எல்லாம் அர்ச்சாவதாரத்திலே பரிபூரணம் –

ருசியை உண்டாக்கி -சாச்த்ரன்களால் திருத்த முடியாமல்
பிள்ளை உறங்கா வள்ளி தாசர்
விமுகரை – போதரே என்று சொல்லி
ருசி பிறந்த அநந்தரம்
சுபமாய் ஆஸ்ரயமாய் சுபாஸ்ரயம் -இனிமை
தன்னையே உபாயமாக சுவீகரிக்கும் அளவில் -அடுத்த நிலை
குணாகுணம் நிரூபணம் பண்ணாமல்
உபேயமாகவும் அவனே
அமுதனைக் கண்ட கண்கள் மற்று ஒன்றை காணாவே அனுபாவ்யமாய்
விஷ்ணு தர்மம் சௌவன பகவான் பிரமாணம்

சூர்ணிகை 202 (62 )
ஸ்வ ஸ்வாமி பாவத்தை மாறாடிக் கொண்டு
அஜ்ஞரைப் போலேயும்
அசக்தரைப் போலேயும்
அஸ்வ தந்த்ரனைப் போலேயும்
இருக்கச் செய்தேயும்
அபார காருண்ய பரவசனாய்க் கொண்டு
சர்வ அபெஷிதங்களையும் கொடுத்து அருளும்

ஸ்வ ஸ்வாமி பாவம் மாறாடிக் கொண்டு
அஞ்ஞரை போலே
அசக்தன் போலே
அசுதந்த்ரன் போலே
அபார கருணை பரவசனாய்
உடைமைகள் ஒக்க சகபடிக்கும் படி
இச்சையால் செய்து கொள்கிறான்
சர்வஞ்ஞன் சர்வசக்தன் சமஸ்த சக்தி சர்வ வேத -தன்னை
பரதந்த்ரனாய் அமைத்து கொண்டு
தன் கார்யம் பிறர் கார்யம் அறியாதபடி
விமுகரையும் -கரை புரண்டு செல்லும் கருணையால் மோஷ பர்யந்தம்
நேத்ர புத்திர விதரணம் -கண் பிள்ளை கொடுத்து
கூரத் ஆழ்வான் லஜ்ஜித்து எம்பெருமானார் ஆஞ்ஞையால் கேட்டாரே
ஹரித வாரணர் -கண் -தானம் -திருக் கச்சி நம்பி தாத்தாஎன்பர் -கண் கொடுத்தவன் அல்லையோ நீ – சுந்தரபாகூ ச்த்வத்தில் அருளி
என்னுடைய பெருமாள் -உடைமை போலே
மமத்வ புத்தி –
ஜகன்னாதன் ஜனார்த்தனன் –
இச்சையா மகா தேஜா -பக்த வத்சலன்
ஸ்நானம் பானம் யாத்ரை பக்தர் ஆதீனம்
சொல்ல சக்தி இல்லா பூரணன் அர்ச்சை தானே
ஏவஞ்ச பஞ்ச பிரகார -பூர்வம் பூர்வம் விட உத்தரம் உயர்ந்தது
சௌலப்யத்தால் ஸ்ரேஷ்டனாக இருப்பான்
கால தேசம் நியமனம் இன்றி
மந்திர பிம்பம் கிருபை மிக்கு இருக்கும்

ஸ்வரூப
குணம்
செஷ்டிதம்
விக்ரக வைஷன்யத்யம்
ஸ்ரீ பூமி நீளா சமேத -ஈஸ்வர பிரகரணம் நியமிக்கிறார் –

ஈஸ்வர பிரகரணம் முற்றிற்று

————————————————————————————————————————————————————–

பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

தத்வ த்ரயம்-அசித் – பிரகரணம் – ஸ்ரீ வேங்கட கிருஷ்ணன் சுவாமிகள் –

December 10, 2013

சூர்ணிகை -77-(1)
அசித்து ஜ்ஞான ஸூன்யமாய்
விகாராஸ்பதமாய்
இருக்கும்

சுடர் தைலம் ஷணம் இருக்கும் போலே பௌத்தர் ஷனிக வாதம்
யூகம் அனுமானம் தான் பிரமாணம்
நாம் சொல்வது வேதாந்த சித்தம்
பிரமாணங்கள் காட்ட வேண்டுமே
அதி ஸ்புடமாக விளக்கமாக அருளிச் செய்கிறார்
அசித் ஞான சூன்யம்
சித் ஞான மயம்
விகாரம் அடைந்து கொண்டே இருக்கும் அசித்
சரீரம் –
ஆத்மா நிர்விகாரம்
சைதன்ய அநாதாராம வஸ்து அசித் –
சுருதி -போகய சப்தத்தால் -அனுபவிக்க படும் வஸ்து
அவஸ்தாந்தர-அவஸ்தை -நிலை -மாறி கொண்டே இருக்கும்
மண் வாயும் வயிறும் குடம் உடைந்து ஓடு துண்டு துகள் -அவஸ்தான்தரம்
சதைக ரூபமாக இராது –

சூர்ணிகை -78-(2)
இது ஸூ த்த சத்வம் என்றும்
மிஸ்ர தத்வம் என்றும்
சத்வ ஸூன்யம் என்றும்
த்ரிவிதம்

ஸ்வாதீப த்ரிவித சேதன அசேதன
மூன்று வகை –
சத்வம் ரஜஸ் தமஸ் மூன்றும் கலந்த மிஸ்ர
மூன்றும் இல்லாத சத்வ சூன்யம்
சத்வம் மட்டுமே சுத்த சூன்யம்
பரம பதம் மண்டபம் பிரகாரம் கோபுரம் -சுத்த சத்வம் -நித்ய விபூதியில் மட்டும் தான் இருக்கும்
ஞானம் பிரசுரிக்க தடுக்காது
காலம் -சத்வ சூன்யம்
மூன்று குணங்களும் இல்லையே

சூர்ணிகை -79-(3)
இதில் ஸூ த்த சத்வம் ஆவது
ரஜஸ் தமஸ் ஷூக்கள்
கலசாதே கேவல சத்வமாய்
நித்தியமாய்
ஜ்ஞானானந்த ஜனகமாய்
கர்மத்தால் அன்றிக்கே கேவல பகவத் இச்சையாலே
விமான கோபுர மண்டப பிரசாதாதி ரூபேண
பரிணமிக்க கடவதே
நிரவதிக தேஜோ ரூபமாய்
நித்ய முக்தராலும்
ஈஸ்வரனாலும்
பரிச்செதிக்க அரிதாய்
அத்யத்புதமாய் இருப்பதொன்று

பரம பதத்தில் மரம் -கேவல பகவன் இச்சையால்
மட்டும் -கேவலம் -மட்டம் தப்பான அர்த்தம்
விமான கோபுர மண்டப பிரசாத மாளிகைகள்
தேஜோ ரூபமாய்
நித்யராலும் பரிச்சேதிக்க முடியாததாய் –
அப்படிப் பட்ட பெருமை அதி அத்புதமாய் இருக்குமே
இங்கே பாப யோனி ஸ்தாவரங்கள்-
ரஜஸ் பாராரே தமஸ்தச்த பரஸ்தாத் -அப்பால் பட்டது -சுருதி
பஞ்ச சக்தி மே திவே தைத்ரம்
நித்யம்-காலாதிதம் அநாத்யந்தம் அபிராக்ருதம் சுருதி ஸ்ம்ருதி சொல்லு
ஞான ஆனந்த ஜனகமாய் இருக்கும் –
இது துக்காயதனாய் ஞான திரோதகமாய் இருக்கும்
கேவல பகவத் இச்சையால் -கர்ம அனுபவத்தால் இல்லை –
ஸ்வ போகார்த்தமாக -அவன் திரு உள்ளம் படி –
இங்கே கர்ம அனுகுணமாக ஈச்வரன்ஸ்ருஷ்டி
யோவைதாம் ப்ரஹ்மனொ வேத
திவ்ய நகர திவ்ய ஆயதனாதிகள்
வைகுண்ட கத்யம் எம்பெருமானார்
திவ்ய ஆவரண சதம் -மதிள்கள்-சதா சகஸ்ரம்
ஆயிரக் கணக்கான கல்பக தரு
விசித்திர திவ்ய ரத்ன மயம் ஆஸ்தான மண்டபம்
கிரீடா சைலம் -விளையாட்டு மலை அங்கேயும் உண்டாம்
ஆராமங்கள் உண்டே –
விஸ்தரென அருளிச் செய்கிறார் எம்பெருமானார்
ஸ்ருதி ஸ்ம்ருதி சித்தம் – இவை எல்லாம் –

அக்னி ஆதித்யாதி தேஜோ பதார்த்தங்களும் மின் மினி போலே
இவை தேஜோ மயமாய் இருக்கும்
ந சந்திர தாரகம் சூர்யன் தலை எடுக்க முடியாது மின்னல்
குதோயம் அக்னி
சஷுசால் பார்க்க முடியாதே –
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் ஜோதி
பரிமாணம் அளவீடுகள்
பரிணாமம் -வேற
பரிச்சேத்யம் அயோக்கியம்
பாஷ்யகாரர் -என்ற பெயரால் மா முனிகள் இங்கே அருளி
எம்பெருமானார் –
வேதாந்த விஷயம் என்பதால் –
பாஷ்யகாரர் இது கொண்டு சூத்திர வாக்யங்கள் ஒருங்க விடுவார்
உடையவர்
எம்பெருமானார்
பல பெயர்கள் ஈட்டில் உண்டே
தேசாம் அபி -பரிச்சேதம் அயோக்ய நித்யராலும் பரிமாணம் அளவிட முடியாதே
சர்வ தர்சித்த ஞானம் உள்ள நித்யர் முக்தர் ஈஸ்வரனாலும் பரிச்சேதிக்க முடிமால்
அவனுக்கும் அரிது –
சர்வஞ்ஞத்வம்- குணத்துக்கு கொத்தை வாராதா –
சர்வத்தையும் உள்ளபடி அறிக்கை தான் சர்வஞ்ஞத்வம்
அபரிச்சேத்யம் என்று அறிவது தான்
சீமை இல்லாத ஒன்றுக்கு எல்லை இல்லாதது என்று அறிவதே சரஞ்ஞத்வம் –
சமுத்ரம் தண்ணீர்
நூற்று கால் மண்டபம் -கதை செலவு
200 /1000/யார் கெட்டிக்காரன் –
தொங்க விட்டும் சங்கிலி பகுதிக்கே காணாதே
அல்ப ஞானம் கொடு
அளவிட்டு அறிய முடியாதே
மதிப்பே இல்லை என்று அறிவதே
நீல நாயகம் -விலை மதிப்பு அற்றது ledger beyond estimation
ஸ்ரீ ஸ்தவம்
தேவி தும் -மகிமை தேவரீரோ பார்த்தா ஹரிநா
ந ஞாயதே
யத்யபி எவம் அதாபி சர்வஞ்ஞத்வம் குறை இல்லை
எதி நாஸ்தஎவ இல்லை என்று உணர்வது
ஆகாச தாமரை அறிவேன் சொல்பவன் முட்டாள் தான்
பெருமைக்கு எல்லை இல்லை என்று அறிவதே
சுத்த சத்வம் பரிமாணம் அறிவுக்கு அப்பால்
தனக்கும் தன அறிவரியான் போலே
அபரிச்சேத்யம் -நித்ய முக்த ஈஸ்வர் -அவர்களால்
அத்யத்பிதம் அப்பொழுது அப்பொழுது ஆரா அமுதம் போலே

சூர்ணிகை -80 (4)
இத்தை சிலர் ஜடம் என்றார்கள்
சிலர் அஜடம் என்றார்கள்

சுயம் பிரகாசம்
அஜடம் –
இந்த தர்சனத்தில் சிலர் ஜடம் அஜடம் என்பர்
தத்வ முக்த கலாபகம் தேசிகன் -அஜடம் காட்டி –
ஜடம் -சுயம் பிரகாசம் அன்றிக்கே இருக்கை

சூர்ணிகை -81 (5)
அஜடமான போது
நித்யர்க்கும் முக்தர்க்கும்
ஈஸ்வரனுக்கும்
ஜ்ஞானத்தை ஒழியவும் தோற்றும்

இவர் தமக்கு -அஜடம் எனபது
ஜடம் இல்லை என்பர்
வேதாந்த தேசிகனும் இதே அபிப்ராயம்
வடகலை தென்கலை -வித்யாசம் மா முனிகள் அப்புறம்
அபிப்ராய பேதங்கள் -intelectual debate
200/300 வருஷம் சமாசாரம்
1350 முன்பு பேதம் இல்லை ஸ்வாமி நிர்ணயம்
புத்தூர் காஞ்சி ஸ்வாமி இப்படி அருளி உள்ளார்
ஆத்மா இருப்பதை -கண்ணால் பார்க்கா விடிலும் அறிகிறோம்
தானே காட்டும் சுத்த சத்வம்
ஞாவேத்யம் -இந்த்ரியங்கள் மூலம் சுயம் பிரகாசம்
சம்சாரிகளுக்கு தெரிய வில்லையே
தானே தோற்ற வில்லை

சூர்ணிகை -82- (6)
சம்சாரிகளுக்கு தோற்றாது

அபி யுகதர் -சப்தம்
திரு நாமம் சொல்லாமல் –
அண்ணன்காச்சார்
கௌரவத்தால் –
வேதாந்த தேசிகன் -தானே பெரியவாச்சான் பிள்ளை
குலம் தரும் ரகஸ்த்ய த்ரய சாரம் சொல்வார்
அது போலே மா முனிகள் தேசிகனை சொல்லி அருளுகிறார் -கௌரவ வார்த்தை தான்
வாசி தூண்டும் சொல்ல தப்பாக அர்த்தம் சொல்வார்கள் –

சூர்ணிகை -83-(7)
ஆத்மாவிலும்
ஜ்ஞானத்திலும்
பின்னமானபடி ஏன் என்னில்

சூர்ணிகை -84 (8)
நான் என்று தோற்றாமையாலும்
சரீரங்களாய் பரிணமிக்கையாலும்
விஷயங்களை ஒழியவும்
தானே தோற்றுகையாலும்
சப்த ஸ்பர்சாதிகள் உண்டாகையாலும்
பின்னமாகக் கடவது

தர்ம பூத ஞானம் மூலம் அறிந்தால் சுயம் பிரகாசம் இல்லை
யோ வேத்தி யுவத சர்வம் -சர்வத்தையும் அறியும் ஈஸ்வரன்
தனக்கு தானே தோன்றுவது தான் சுயம் பிரகாசம்
நாத முனிகள்
மங்கள ஸ்லோகம் தர்ம பூத ஞானம் ஞானம் பலம்
அத்தை சுயம் பிரகாசம் எப்படி சொல்லலாம்
திவ்ய ஆத்ம ஸ்வரூபம் சுயம் பிரகாசம் போலே இவையும்
அடிப்படி நெருப்பு சுடும்
தண்ணீர் ஜில் இருக்கு போலே
அது அப்படிதான் இது இப்படி தான்
அதனால் விரோதம் இல்லை என்கிறார் –
நித்யர் முக்தர் ஈஸ்வரர் அறிவார்
பக்த தசையில் -கர்ம பந்தனம் சரீரம் தடுக்குமே
அசித் விகாரி
சுத்த சத்வம் மாறுபாடு
இங்கே பிரகாசிக்காமல்
அங்கெ பிரகாசிக்க
இதுதான் மாறுபாடு -இவ்வளவு அவஸ்தா பேதம்
ரகஸ்ய த்ரயம் அபி யுக்தரும் காட்டி அருளி –
தேசிகன் -ஸ்ரீ ஸூ கதி காட்டி அருளி
மா முனிகள் தேசிகன் மேலே கொண்ட மதிப்பு தோற்ற
வேதாந்த தேசிகன் பிள்ளை லோகாச்சார்யர் ஸ்ரீ ஸூ கதிக்கு வியாக்யானம்

அன்யோன்யம் பின்னம் என்று தர்சித்தால் போலே
நான் என்று தோற்றாமல் -அஹம் -பிரத்யக் உள்ளே நேராக
பராக்கு அறிவோம் பிரத்யக் எதிர்மறை
இது பராக் என்பதால் இதம் என்று
நான் -இதம் -என்னை காட்டில் வேறுபாடு உண்டே –
சரீராதிகள் பரினமிக்கையாலே
ஏக ரூபம் -ஆத்மாவுக்கு பரிமாணம் இல்லை
ஆத்மா தர்ம பூத ஞானம்
சுத்த சத்வம்
வெவேற மூன்றும்-
நான் இல்லை இது -அதனால் வேறு பாடு
அசித் சரீரமாக மாறும்
இல்லாத பூனையை இருட்டில் தேடும் குருட்டு பையன்
விஷயங்களை ஒழியவும் தானே தோற்றும்
பரம பதத்தில் தான் இருக்கும் சுத்த சத்வம்-

சுத்த சத்வம்
பஞ்ச பூதங்கள் பரம பதத்தில் இல்லையே –
ரஜஸ் தமஸ் கலக்க வில்லையே
பஞ்ச உபநிஷமயமான திவ்ய சரீரம் அங்கெ உண்டே –
எம்பெருமானை அடைய -தடுக்க -பிரகிருதி
அறிய ஒட்டாமல் தடுக்கும்
அங்கு -எம்பெருமானை கிட்டுவதற்கு பரிகரம்
உப நிஷி யதி- உபநிஷத் –
பரமேஷ்டி
புமான்
விஸ்வக
நிவ்ருதக
சர்வக
இங்கு போலே அங்கு ஐந்து
தத்வ விவேகம்
பிரமாணங்கள் பல காட்டி அருளி அங்கு
சமஸ்க்ருதம் -கிரந்தம் -பிரமாணங்கள் காட்ட
பரமேஷ்டி -சப்தம் -ஆகாசம் போலே
பிருஷம் -ஸ்பர்சம் -வாயு போலே
சப்தம் ஸ்பர்சம் ரூபம் ரசம் கந்தம்
அங்கும் உண்டு

விஸ்வ ரூபம்
நிவ்ருத்த ரசம்
சர்வ கந்தம்
இங்கே உள்ள வஸ்து அங்கும் உண்டு பேரே மாற்று
விரஜா நதி நீர் உண்டே
இந்த நீருக்கும் அந்த நீருக்கும் வாசிஉண்டே
சுத்த சத்வம்

—————————————————————————————————————————–

சூர்ணிகை -85 ( 9)-
மிஸ்ர சத்வம் ஆவது
சத்வ ரஜஸ் தமஸ் ஸூக்கள்
மூன்றோடும் கூடி
பத்த சேதனர் உடைய ஜ்ஞான ஆனநதகளுக்கு
திரோதாயகமாய் –
விபரீத ஜ்ஞான ஜனகமாய்
நித்தியமாய்
ஈஸ்வரனுக்கு க்ரீடாபரிகரமாய்
பிரதேச பேதத்தாலும் சத்ருசமாயும் விசத்ருசமாயும்
இருக்கும் விகாரங்களை யுண்டாக்கக் கடவதாய்
பிரகிருதி அவித்யை மாயை -என்கிற பெயர்களை
உடைத்தாய் இருக்கும் அசித் விசேஷம்

மிஸ்ர சத்வம் -மூன்று பெயர்
பிரகிருதி
அவித்யை
மாயை
குணமாய் மம மாயா துரத்தயா –
திரிகுணம் தத் ஜகத் யோனி –
திரோதாயகமாய்- மறைத்து -ரஜஸ் தமஸ்
ஞானம் பிரபை போலே தானே
பக்த செதனர்களுக்கு -கர்ம சம்பந்தம் உள்ளவர்களுக்கு
நித்யர் முக்தர் களுக்கு கிடையாதே
இச்சையால் வரும் நித்யர் ஞானம் சங்கோசம் ஆகாதே இது –
எம்பெருமானார் ஆதி சேஷன் அவதாரம்
யாதவ பிரகாசர் திருத்தி
லோகம் அறிய தானே கற்றார் -லோக விவகாரம் –
ஆண்டாள் எம்பெருமானார் மணவாள மா முனிகள் போல்வார்
கூரத் ஆழ்வான்-நர நாராயணன் போல்வார் –
அனந்தாழ்வான் ஆதி சேஷன் என்பார் –
ஸ்தோத்ரம் போலேயும் சொல்வார்கள் –
பட்டர் -மரம் செடி கொடி-சேவித்து -அனுமதி வாங்கி உள்ளே
அஹ்ருத சஹஜ தாஸ்யம் அபகரிக்கப் படாமல்
ஸ்ரசதபந்த முக்தர் -பந்தம் விட்டவர்கள்
விமல சரம தேகம் முமுஷூ -சரம தேகம் கொண்டாடப்படுமே
ரெங்க தாம மகித -மநுஜ திரியக் ஸ்தாவர -ஸ்ரேஎந்தே ஆஸ்ரியக்கிரார்கள் –
இச்சை யுடன் வருகிறார்கள் -சேஷிக்கு அதிசயம் பண்ணி
சங்கோசம் பண்ணாது
அதனால் பக்தருக்கு மட்டும் சங்கோசம்
ஆழ்வார் நித்ய சூரிகள் -இல்லை
மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர்கள்
இவர்களை போன்றவர்களை திருத்த என்பதால் –
ஞானம் சங்கோசம் இல்லை என்றால் மயர்வற மதிநலம் அருள வேண்டாமே
ஓடித் திரியும்யோகிகள் -முதல் ஆழ்வார்கள்
மாறி மாறி பல பிறப்பும்பிறந்து – நித்ய சம்சாரியாய் தோள் மாறி –
விசேஷ கடாஷம் பண்ணி அருளினான்
ஆறாயிரப்படி –
பெரியாழ்வார் கருடன்
திரு மழிசை -சக்கரம்
ஆச்சார்யா ஹ்ருதயம் -சங்கிக்கலாம் படி -பெருமை பார்க்கும் பொழுது –
வேண்டிய வேதங்கள் ஓடி விரைந்து கிளி அறுத்தார்
வேதாத்மா விகேச்வர
பர சமய நிரசனம் சக்கரத் ஆழ்வார் அம்சம் சொல்ல லாமே
மறைக்க பிரமாணம்
மேலே
விபரீத ஞானம் ஜனகம்
அது இல்லாததில் அது என்ற நினைவு
நாசம் -விஷம் -அதுவே உத்தேச்யம் கைக் கொள்ளும் படி
தேகத்தில் ஆத்மா புத்தி
ஸ்வதந்திர
தேவதாந்திர
தன மகிழ்ச்சிக்கு
ஐஸ்வர்யங்கள் புருஷார்த்தம் போன்றவை
உபாயாந்தரங்கள் தொடக்கமானவை
அல்வழக்கு -விபரீத ஞானம்
நித்யம் –
அஜாம் ஏகாம் -பிறக்காதது -பிரமாணம் காட்டி –
க்ரீடா -லீலா பரிகரம் -உபகரணமாய் இருக்கும்
பந்து போலே -விளையாட்டுக்கு
நூல் -வெள்ளை கருப்பு சிகப்பு நூல் –
சத்வம் தமஸ் ரஜஸ் –
தைவி மயி தானே அருளிச் செய்தான்
கேவல லீலை
பிரதேச பேதம் -குணம்
நாம ரூபா –
ஸ்தூல சூஷ்ம விகாரம்
கால பேதம் –
நாடி -பார்த்து மூன்று நாடி –
கபம் வாதம் பித்தம் -எது துடிக்கும் கண்டு பிடித்து
தாது சாம்யம் -வராக சரம ஸ்லோகம்
மூன்றும் சமமாக இருக்க வேண்டும்
பிரளயம் -மூன்றும் சமமாய் இருக்கும்
சூஷ்ம விகாரம்
சிருஷ்டியில் மாறும்
கால பேதம் சம்ஹார சிருஷ்டி காலம்
நிர்விகார அவஸ்தை இல்லை

சூர்ணிகை -86 (10 )
பிரகிருதி என்கிறது
விகாரங்களைப் பிறப்பிக்கையாலே
அவித்யை என்கிறது
ஜ்ஞான விரோதியாகையாலே
மாயை என்கிறது
விசித்திர சிருஷ்டியைப் பண்ணுகையாலே –

பெயர் காரணம் சொல்கிறார்
பிரகிருதி காரணம் வாசகம்
பிரகிருதி -மகதாதி விகாரங்களை ஜனிப்பிக்கும் –
அவித்யை -வித்யா அபாவம் –வித்யை இதரது -கர்மம் -ஞானத்துக்கு வேறுபட்டது கீதா பாஷ்யம் -வித்யா விரோதிக்கும்

மாயை -விசித்திர சிருஷ்டி ஆச்சர்யம்
விச்மீயமான கார்யம் –
மணல் துகள் -ஒவ் ஒன்றும் ஒரு விதம்
ஒவ் ஒரு வஸ்துவும் வேவேறே
பனி கட்டியிலும் ஒவ் ஒன்றும் ஒவ் ஒரு மாதிரி
கை ரேகை -மாறுமே –

சூர்ணிகை -87 (11 )-
இது தான்
பொங்கைம் புலனும்
பொறி யைந்தும்
கருமேந்த்ரியம் ஐம்பூதம்
இங்கு இவ் உயிரேய் பிரகிருதி
மானாங்கார மனங்கள் -என்கிறபடியே
இருபத்து நாலு தத்துவமாய் இருக்கும்

சப்தாதிகள் பொங்குவதால் வேகம் -ஐந்து புலன்கள் -தன்மாத்ரைகள்
பொறி ஐந்து -ஞாநேந்த்ரியம்
கர்மேந்த்ரியம் –
ஐம்பூதம் ககனாதிகள்
ஆத்மாவுடன் ஒட்டு கொண்டு ஏய்ந்து
மகான்
அஹங்காரம்
மனஸ்
24 –
தன்மாதராதிகள் -அருளிச் செய்யாதே அவஸ்தா பேதம் –
சப்தாதிகள் –

க்ரமம் சொல்ல வில்லை இதில்

சூர்ணிகை -88 (12 )
இதில் பிரதம தத்வம்
பிரகிருதி

புலன் பொறி கர்மேந்த்ரம் ஐம்பூதம் –
க்ரமம்
முதலில் பிரகிருதி

பிரதானம் அவயகதம்
பிரதான உபகரணம்
அவயகதம் -வ்யக்தம் ஸ்பஷ்டமாக தெளிவாக அறியாத முடியாத

சூர்ணிகை -89 (13 )-
இது அவிபக்த தமஸ் என்றும்
விபக்த தமஸ் என்றும்
அஷரம் என்றும்
சில அவஸ்தை களை உடைத்தாய்
இருக்கும்

அவ்யக்த நிலை குலைந்து
அஷர
அதுவும் குலைந்து
அபி பக்த தமஸ் -நிலை பிரளயம்
தமஸ் கலந்து
சிருஷ்டி
அவன் பக்கல் விபக்தமாய்
விபக்த தமஸ் -ஆரம்பத்தில் –
அஷரம் -நிலை –
அசித் -புருஷ சமஷ்டி பிறக்கும் -நிலை கொஞ்சம் தெரிந்த நிலை
சுபாலோக உபநிஷத் பிரமாணம்
மொட்டு மலர் -புஷ்பத்தின் நிலை
ஒரே தத்வம் –
சங்கோச தசை விரிந்த தசை

சூர்ணிகை -90 (14 )
இதில் நின்றும்
குணா வைஷம்யத்தாலே
மஹதாதி விகாரங்கள்
பிறக்கும்

இதில் நின்றும்
மஹான் பிறக்கும்
குணா விஷமமான நிலை
ஓன்று போலே இன்றி

சூர்ணிகை 91 (15 )
குணங்கள் ஆக்கின
சத்வ ரஜஸ் தமஸ் ஸூ க்கள்

சூர்ணிகை -92 (16 )-
இவை ப்ரக்ருதிக்கு
ஸ்வரூப அனுபந்திகளான
ஸ்வ பாவங்களாய்
பிரகிருதி அவஸ்தையில்
அநுத் பூதங்களாய்
விகார தசையில் உத் பூதங்களாய்
இருக்கும்

ஸ்வரூபம் சேர்ந்து சூஷ்மம்
உத்பூதம் தெளிவாக தெரியும்

வந்து சேர்ந்தவை இல்லை
பிரிக்க முடியாத குணங்கள் பிரகிருதி இடம் –

சுக துக்க –
த்ரவ்யம் -ஸ்வரூபம் என்பர்
சாங்க்ய மதம் நிரச்தம்
ச்வாபவம் குணம் ஆக கொள்ள வேண்டும்
சாங்க்ய மதஸ்தர் -குணங்களே மூலப் பிரகிருதி என்பர்

ஸ்ரீ பாஷ்யம் பிரமாணம்
விகார தசையில் -கார்ய மூலம் அறியலாம் –
மூன்றும் சமமாக இருந்தால் தெரியாதே
கார்யம் வைத்தே காரணம் யூக்கிக்க வேண்டும்
அனுபூதமாக இருக்கும்
எதில் இருந்து எது உண்டாக்கும்

சூர்ணிகை -93 (17 )
சத்வம்
ஜ்ஞான சுகங்களையும்
உபய சங்கத்தையும்
பிறப்பிக்கும்

ஞானம் சுகம் உண்டாக்கும் சத்வம்
நிர்மலத்வாத்
கீதை பிரமாணம்

சூர்ணிகை -94-(18 )
ரஜஸ் ஸூ
ராக
த்ருஷ்ணா
சங்கங்களையும்
கர்ம சங்கத்தையும்
பிறப்பிக்கும்

ராகம் ஆசை
கீதை பிரமாணம்
ஈர்ப்பு
திருஷ்ணை சப்தாதி ஆசை
சங்கம் -புத்திர
கர்ம
ராகம்
த்ருஷ்ண
சங்கம்
கர்மம் -கிரியை ஆசை
ராஜச குணம் இவற்றை உண்டாக்கும்

சூர்ணிகை -95 (19 )
தமஸ் ஸூ
விபரீத ஜ்ஞானத்தையும்
அநவதா நத்தையும்
ஆலஸ்யத்தையும்
நித்ரையும்
பிறப்பிக்கும்

ஆலச்யம் சோம்பேறி தனம் உண்டாக்கும்
விபரீத ஞானம் உள்ளபடி அறியாமல்
குறிக்கோள் இன்றி கவனம் இன்றி செய்தல்
நித்தரை
இந்த்ரியங்கள் வேலை செய்யாதே
மனஸ் கூட rest

சூர்ணிகை -96 (20 )
இவை ஸமங்களான போது
விகாரங்கள் ஸமங்க ளுமாய்
அஸ்பஷ்டங்களுமாய் இருக்கும்
விஷமங்கள் ஆனபோது
விகாரங்கள் விஷமங்க ளுமாய்
ஸ்பஷ்டங்களுமாய் இருக்கும் –

சமங்களாக இருக்கும் பொழுது தெரியாதே
சாம்யாபன்னங்களாக
நாம ரூபம் இன்றி
விஷமங்கள் ஆனா பொழுது அறியும் படி இருக்கும்

பிரதேச பேதம்
கால பேதம்
காரணம்

சூர்ணிகை -97 (21 )
விஷம விகாரங்களில்
பிரதம விகாரம் மஹான்

மஹான் –
அவ்யக்தத்தில் நின்றும் -மஹத் உண்டாகும்

சூர்ணிகை -98 (22 )-
இது
சாத்விகம்
ராஜசம்
தாமசம்
என்று த்ரிவிதமாய்
அத்யவசாய ஜநகமாய்
இருக்கும்

பிரகாச பிரவ்ருத்தி
குணங்கள் -வாசி
புத்தி லஷணம்-
சாத்விக புத்தி
ராஜசம்
தாமசம்
உண்டாகும்
பந்த மோஷம் -ஹேது
அத்யவசாயம் உண்டாகும்
நல்லது கேட்டது அறிந்து –
த்யாஜ்யம் உபாதேயம்
தப்பாக அறிந்தால் ராஜச புத்தி
அதர்மம் தர்மம் விபரீத தாமச புத்தி

சூர்ணிகை -99 (23 )
இதில் நின்றும்
வைகாரிகம்
தைஜசம்
பூதாதி
என்று த்ரிவிதமான
அஹங்காரம் பிறக்கும்

அஹங்காரம் -அடுத்து
மூன்று வகை -யாக இருக்கும்
வைகாரிகம் -சாத்விகத்தால்
தைஜசம் -ராஜசத்தால்
பூதாதி -தாமசத்தால் –
அபிமான ஹேதுவாக இருக்கும்
அதுவே தேஹம்

சூர்ணிகை -100 (24 )-
அஹங்காரம்
அபிமான ஹேதுவாய்
இருக்கும்

சூர்ணிகை -101 (25 )-
இதில் வைகாரிகத்தில் நின்றும்
ஸ்ரோத்ரா-தவக் -சஷூர் -ஜிஹ்வாக்ரணங்கள் என்கிற ஜ்ஞான இந்த்ரியங்கள் ஐந்தும்
வாக் பாணி பாத பாயு உபச்த்தங்கள் என்கிற கர்மேந்த்ரியங்கள் ஐந்தும்
மனஸ் ஆகிற
பதினோரு இந்த்ரியங்களும் பிறக்கும்

சாத்விகம் -வைகாரிகம் –
11 இந்த்ரியங்கள் பிறக்கும்

சூர்ணிகை -102-(26 )
பூதாதியில் நின்றும்
சப்த தன்மாத்ரை பிறக்கும்
இதில் நின்றும் ஆகாசமும் ஸ்பர்ச தன்மாத்ரையும் பிறக்கும்
இதில் நின்றும் வாயுவும் ரூப தன்மாத்ரையும் பிறக்கும்
இதில் நின்றும் தேஜச்சும் ரச தன்மாத்ரையும் பிறக்கும்
இதில் நின்றும் அப்பும் கந்த தன்மாத்ரையும் பிறக்கும்
இதில் நின்றும் பிரத்வி பிறக்கும்

வ்யஷ்டி சிருஷ்டி -இந்த்ரியங்கள் சூஷ்ம அவஸ்தை 6 தான்
ஞான இந்த்ரியங்கள் தன மாதரை இல்லை என்பர்
ஸ்தூல அவஸ்தையில் வரும் என்பர்
வாய் நுகரும் சக்தி
சமஷ்டி விஷயம்

தாமசம் -சப்த தன்மாத்ரை -ஆகாசம் -ஸ்பர்ச தன்மாத்ரை -வாயு -ரூபா தனமாதர் –தேஜஸ் –ரச தன்மாத்ரை -அப்பு கந்தம் -பிரத்வி பிறக்கும்–
பூதம் முற்பட சொல்லி
தன்மாத்ரை -உத்பத்தி க்ரமம் –

சூர்ணிகை -103 (27 )
ஸ்பர்ச தன்மாத்ரை தொடக்கமான
நாலு தன்மாத்ரைகளும் கார்யமாய்
வாயு தொடக்கமான நாலு பூதங்களும் காரணமாய் இருக்கும்
என்றும் சொல்வார்கள்

ஸ்ரீ விஷ்ணு புராணம் சித்தம்

ஆச்சான் பிள்ளை தத்வ த்ரயம் விவரணம்
தத்வ நிரூபணம் ஜீயர் அருளிச் செய்து
பெரியவாச்சான் பிள்ளை தத்வ த்ரய சங்கரகம்இங்கனே அருளிச் செய்தார்
ஆச்சான் பிள்ளை வேற
பெரியவாச்சான் பிள்ளை வேற
இது தான் பிரமாணம் -காஞ்சி சுவாமிகள் காட்டி அருளி -பரந்த ரகசியம் ஆச்சான் பிள்ளை -அருளி
க்ரமம்
ஒன்றில் இரண்டும் –

சூர்ணிகை 104 (28 )
தன மாத்ரைகள் ஆவன
பூதங்களின் உடைய
சூஷ்ம அவஸ்தைகள்

பூதங்களின் சூஷ்ம அவஸ்தைகள்
சப்தம் மட்டுமே
சாந்தத்வம் கோரத்வம் மூடத்வம் -போலே இன்றி
பூமி ஜலம் அனுகூலம்
கலப்பதால் எல்லாம் எல்லா பூதங்களில் இருக்கும்
அவிசெஷங்கள்-தன்மாத்ரை

சூர்ணிகை -105 (29 )
மற்றை இரண்டு அஹங்காரமும்
ஸ்வ கார்யங்களைப்
பிறப்பிக்கும் போது
ராஜச அஹங்காரம்
சஹ காரியாய் இருக்கும்

சஹ காரியாக
இந்த்ரிய ஹேது தத்வ
ராஜசம் தூண்டி விடும்

சூர்ணிகை 106 (30 )
சாத்விக அஹங்காரம் சப்த தன்மாத்ராதி பஞ்சகத்தையும்
அடைவே சஹாகாரியாக கொண்டு
ஸ்ரோத்ராதி ஜ்ஞான இந்த்ரியங்கள் ஐந்தையும் சிருஷ்டிக்கும்
தத் சஹ்க்ருதமாய்க் கொண்டு
வாகாதி கர்மேந்த்ரியங்கள் ஐந்தையும் சிருஷ்டிக்கும்
இவற்றை ஒழியத் தானே மனசை சிருஷ்டிக்கும் என்று
சொல்லுவார்கள்

ஸ்ரீ விஷ்ணு புராணம் -எங்கள் ஆழ்வான் வியாக்யானத்தில் தெரிவிக்கிறார்

11 இந்த்ரியங்கள் -சாத்விக அஹங்காரம் காரணம்

சூர்ணிகை 107 (31 )
சிலர் இந்த்ரியங்களிலே
சிலவற்றை பூத கார்யம் என்றார்கள்

நையாதிகள்
பூதம் -இந்த்ரியங்கள் -குணம்
அனுமானத்தால் அர்த்தம்
பஞ்ச பூதங்கள் கார்யம் இந்த்ரியங்கள் என்பர்

சூர்ணிகை -108- (32 )
அது சாஸ்திர விருத்தம்

சூர்ணிகை -109-(33 )
பூதங்கள் ஆப்யாயகங்கள் -இத்தனை

மோஷ சாஸ்த்ரத்தில் -பிரமாணம் காட்டி அருளி –
பூத குணங்கள் –
ஆப்யாயகம் -போஷிக்கும் உண்டாக்கும் எனபது இல்லை
காரணங்கள் இல்லை

நிமித்த காரணம் உபாதான காரணம் இந்த்ரியங்கள் என்பர் குத்ருஷ்டிகள்
பிள்ளை எங்கள் ஆழ்வான் -எடுத்து கழித்தார்
பூதங்கள் காரணம் இல்லை

சாத்விக அஹங்காரம் காரயமாகவே இந்த்ரியங்களை சொல்லி புராணங்களும் சொல்லி
பூதங்கள் ஆப்யாதிகள் நிர்வாஹம்
ஸ்ருத பிரகாசர் -ஆப்யாககங்கள் போஷிக்கும் வளர்க்கும் காட்டி
காரணங்கள் இல்லை

சூர்ணிகை -110 (34)-
இவை கூடினால் அல்லது கார்ய கரம் அல்லாமையாலே
மண்ணையும் மணலையும் நீரையும் சேர்த்து
ஒரு த்ரவ்யம் ஆக்க்கிச் சுவர் இடுவாரைப் போலே
ஈஸ்வரன் இவற்றை எல்லாம் தன்னிலே சேர்த்தி ஓர் அண்டம் ஆக்கி
அதுக்குள்ளே சதுர முகனை
சிருஷ்டித்து அருளும் –

அண்டங்கள் ஆக்கி சதுர முகனை சிருஷ்டித்து –
பஞ்சீகரணம் செய்து அருளி –
கூடினால் அல்லது -செய்ய முடியாதே
அன்யோன்யம் சேர்த்து –
மஹதாதி பதார்த்தங்களை சேர்த்து –
அப்புக்களில் நின்றும் அண்டம் மனு ஸ்ம்ருதி -உப லஷணம் நீரை சொன்னது –
பக்தாத்மா சமஷ்டி பூதன் -பிரமன்
நாட்டை படைத்து அயன் முதலான
சமஷ்டி தான் செய்து இவன் மூலம் வியஷ்டி சிருஷ்டி

சூர்ணிகை -111 (35 )-
அண்டத்தையும் அண்ட காரணங்களையும்
தானே யுண்டாக்கும்
அண்டத்துக்கு உட்பட்ட வஸ்துக்களை
சேதனர்க்கு அந்தர்யாமியாய்
நின்று உண்டாக்கும்

அந்தர்யாமித்வம்

சங்கல்ப ஞானாதிகளை ஜனிப்பித்து கொண்டு –
ஸ்ரீ -கீதை ஸ்ரீ விஷ்ணு புராணம் பிரமாணம்

சூர்ணிகை 112 (36 )-
அண்டங்கள் தான் அநேகங்களாய்
பதினாலு லோகங்களோடே கூடி
ஒன்றுக்கு ஓன்று பதிற்று மடங்கான
ஏழு ஆவரணங்களாலும் சூழப் பட்டு
ஈஸ்வரனுக்கு க்ரீடாகந்துக ஸத்தா நீயங்களாய்
ஜலபுத்புதம் போலே ஏக காலத்திலே
ஸ்ருஷ்டங்களாய் இருக்கும்

அண்டங்கள் அநேகங்கள்
14 லோகங்கள் ஓர் அண்டத்தில்
7ஆவரணங்கள்
பூமி ஜலம் -2 பங்கு பூமி -2 ஜாலம் -4 பங்கு –சப்த குல பர்வதம்
சமஷ்டி சிருஷ்டி –
மலை ஏழு கடல் ஏழு உலகு ஏழு
விளையாட்டு பந்து போலே
நீர் குமிழி போலே வந்தும் அழிந்தும்
சஹாஸ்ராணி கோடி கோடி –
கீழில்
16 யோஜனை
தைத்ய தானவ பன்னக கருடன்
சுக்லாம் கிருஷ்ணன் –
அபலம் -.பாதாளம் ஏழு லோகங்கள்
சப்த தீப -பூ லோகம்
கந்தர்வாதி புவர்
ஆதித்யன் -துருவ கருக நஷாத்ரா சவர்க்க லோகம்
மக லோகம் –
16 கோடி மைல் சனகாதிகள் ஜனார் லோகம்
பிரஜாபதிகள் தபோ லோகம்
சத்யா லோகம் –
சூர்யன் மேல் 25 கோடி யோஜனை கீழ் 25 கோடி யோஜனை
10 பங்கு ஜலம் சூழ்ந்து
சத கோடி விஸ்தாரம்
வாயு ஆகாசம் 10 மடங்கு ஏத்தி கொண்டே போக
அபரிமதம் -10 மடங்கு -1000 10 உண்டாமாம் போலே
க்ரீடா பரிகரம் லீலா உபகரணங்கள் இவை –
க்ரமத்தில் உண்டாக்காமல்
நீர் குமிழி போலே ஏக காலத்தில் உண்டாக்கி

சூர்ணிகை -113 (37)
பூதங்களில் ஆகாசம் அவகாச ஹேது
வாயு வஹநாதி ஹேது
தேஜஸ் ஸூ பசநாதி ஹேது
ஜலம் சேசன பிண்டீ கரணாதி ஹேது
ப்ருத்வி தாரணாதி ஹேது -என்பர்கள்

பூதங்கள் ஹேது
ஆகாசம் இடம்
வாயு சுமந்து
நெருப்பு தளிகை பண்ண
நீர் கரைக்க
பிர்த்வி தரித்து நிற்க

பிரமாணங்கள் –
பாகம் பண்ணுவது அக்னி
நீர் -நனைக்க
பிண்டீகரணம் திரட்டி வைக்கை
ஆதி -சப்தம் –
இவ் ஒன்றே பிரதானம்

சூர்ணிகை -114 (38 )-
ஸ்ரோத்ராதி ஜ்ஞாநேந்த்ரியங்கள் ஐந்துக்கும்
அடைவே சப்தாதிகள் ஐந்தையும் க்ரஹிக்கை தொழில்
வாகாதி கர்மேந்த்ரியங்கள் ஐந்துக்கும்
விசர்க்க சில்பகத் யுக்திகள் தொழில்
மனஸ் ஸூ இவை இத்தனைக்கும் பொது

தன்மாத்ரைகள் –
காத்து கேட்டு கண் பார்த்து நாக்கு சுவைத்து
கர்ம இந்த்ரியங்கள்
மனஸ் பொதுவான தொழில்

வாகாதி கர்மேந்த்ரியங்கள்
விசர்க்க –
விக்ரமாக அருளிச் செய்தது வாசக ச்வாரச்யதைக்காக

மனஸ் பொதுவான
மனஸ் ஆகாரம் வேண்டுமே கர்ம ஞான இந்த்ரியங்களுக்கு

சூர்ணிகை -115 (39 )
ஆகாசாதி பூதங்களுக்கு
அடைவே சப்தாதிகள்
குணங்களாய் இருக்கும்

சூர்ணிகை -116 (40 )-
குண விநிமயம்
பஞ்சீகரணத்தாலே

ஆகாச குணம் சப்தம் —
பஞ்சீ கரணம் குணம் கலப்பு –
விநிமயம் ஒன்றைக் கொடுத்து ஒன்றை வாங்கி
குணங்களுக்கு தனி கலப்பு இல்லை

சூர்ணிகை -117 (41 )
ஆகாசம் கறுத்துத் தோற்றுகிறதும்
அத்தாலே

இரண்டு கூறாக்கி
ஒரு பாதி நான்காக பிரித்து கலந்து –
பஞ்சீ கரணம் –
சர்வமும் சர்வ பூதங்களில்
ஆகாசாதி பூத பேதம் குறை இல்லை கலந்த பின்பும்
பிரதானம் குணம் உண்டே –
ஆகாசம் கறுத்து இருப்பதும் பஞ்சீ காரணத்தாலே
சப்தம் மட்டுமே குணம் ஆக இருந்தாலும்
ஸ்ரீ பாஷ்யத்திலும்
சுக்லம் கிரிஷ்ணம்
சாந்தோக்யம் த்ரிவக்ரணம் மூன்று
தேஜோ உபபன்னம் மூன்றும்
ஆகாசம் வாயு சொல்ல வில்லை
தேஜோ உபபன்ன -பஞ்சீ கரணம் உப லஷணம்

சூர்ணிகை -118 (42 )-
முன்புத்தை தன்மாத்ரைகளோடே கூடிக் கொண்டு
உத்தரோத்தர தன்மாத்ரைகள்
ஸ்வ விசேஷங்களைப் பிறப்பிக்கை யாலே
குணாதிக்யம் உண்டாயிற்று
என்றும் சொல்லுவர்கள் –

ஆகாச்ம் -வாயு
சப்தம் ஆகாச குணம்
ஸ்பர்சம் குணம் வாயு
வாயு -ஸ்பர்சம் சப்தம் இரண்டும் உண்டாகும்
அக்னி ரூபம்
அத்துடன் ச[அரசம் சப்தமும்
நீர் -ரசம் -முன் சொன்ன அசப்த ரூபம் ஸ்பர்சம்
பிர்த்விக்கு ஐந்தும் உண்டாகுமே
பூநிலாய ஐந்துமாய் –ஒன்றுமாகி -ஆழ்வார் அருளி
குனாதிக்யம் உண்டானது

குண விநிமயம்

சூர்ணிகை -119 (43 )-
சத்வ சூன்யம் ஆவது
காலம்-

இனி சத்வ சூன்ய அசித் -காலம்
குணத் த்ரய சூன்யம் –

சூர்ணிகை -120 (44 )-
இது பிரகிருதி ப்ராக்ருதங்களின் உடைய
பரிணாமங்களுக்கு ஹேதுவாய்
கலா காஷ்டாதி ரூபேண பரிணமிக்கக் கடவதாய்
நித்தியமாய்
ஈஸ்வரனுக்கு க்ரீடா பரிகரமாய் சரீர பூதமாய்
இருக்கும்

பரிணாமம் மாறுபாடு அடைய காலம்
கலா
காஷ்டா
முகூர்த்தம்
நாள்
வாரம்
மாசம்
அயனம்
வருஷம்
சரீர பூதம் க்ரீடா பரிகரம்
பலன் கொடுக்க காலம் பார்த்து அருளுகிறான்
ஜகத் சிருஷ்டி காலம் வரும் அளவும் பார்த்து
ப்ரஹ்மா காலம் –2000 சதுர யுகம் i நாள்
100 வருஷம் இப்படி
பார்த்த பின்பு மகா பிரளயம்
அதே அளவு காலம் ஸ்ருஷ்டிக்காமல் இருக்க
கால பிரதானமாக நிர்வகித்து அருளுகிறான் –
ஆகமம் பிரத்யஷத்தால் சித்தம் –
30 கலை 1 முகூர்த்தம்
நிமிஷம் 15 கொண்டது காஷ்டை
30 காஷ்டை கலை
முகூர்த்தம் -அயனம் சம்வச்த்ரம்
தேவ சம்வச்த்ரம்
12000 தேவ சம்ச்த்ரம் 1 சதுர யுகம்
பூர்வ சந்தி அபார சந்தி
கிருத 4000/கலி 100
71 சதுர யுகம் 1 மன்மந்தரம்
நடுவில் திரு விதிப் பிள்ளை பட்டர் அருளி
நித்யம் -ஆதி அந்தம் ரஹிதம்
லீலா உபகரணம்
சக காரித்வேன
கால நியமம் தானே சங்கல்பித்து
சிருஷ்டி விஷயக்
இப்படிகளால் கிரீடா பரிகரம்
லீலா விபூதியில் விநியோகம்

நியமனம் தரிக்க -காலமும் சரீரம் போலே இருக்கும்
ஈஸ்வரனுக்கு சரீரமாக இருந்து சக காரியமாய் இருக்கும்
ஈச்வரனே காரணம் என்ன குறை இல்லையே

ஆக அசித் த்ரயத்தையும் அருளிச் செய்து அருளினார்
காலம் விநியோகம் உபயோகம் சொன்னார் கீழ்
மற்ற இரண்டுக்கும் விநியோகம் பிரயோஜனம் அருளிச் செய்கிறார் மேல்-

சூர்ணிகை -121- (45 )
மற்றை இரண்டு அசித்தும்
ஈஸ்வரனுக்கும் ஆத்மாவுக்கும்
போகய போக உபகரண
போக ஸ்தானங்களாய்
இருக்கும் –

சுத்த சத்வமும்
மிஸ்ர சத்வமும்
ஈஸ்வரனுக்கும்
ஆத்மாவுக்கும் -ஜாதி ஏக வசனம் –
போக்யமாயும்
போக உபகரணமாயும்
போக ஸ்தானங்க ளாயும் இருக்கும்
பஞ்ச உபநிஷத்
திவ்ய மாலாதிகள் -உபகரணங்கள்
அப்ராக்ருத ரத்ன மயமான மண்டபங்கள் –

சூர்ணிகை -122 (46 )-
போக்யங்கள் ஆகிறன விஷயங்கள்
போக உபகரணங்கள் ஆகிறன
சஷூராதி கரணங்கள்
போக ஸ்த்தானங்கள் ஆகிறன
சதுர தச புவநமும்
சமஸ்த தேஹமும்

லீலா விபூதியில்
களேபரம் போக ஸ்தானம்
சப்தாதி போக்கியம்
இந்த்ரியங்கள் போக உபகரணங்கள்
போகம் -சுக துக்க அனுபவம் –
சரீரம் -மனுஷ்யன் -மிருகம் -போகம் மாறுமே –
என்னவாக அபிமாநிகிறார்களோ-அப்படியே –
ஈஸ்வரனுக்கும் லீலா விபூதியில்
வியூகம் திருப்பாற்கடல்
திவ்ய தேசங்கள் இங்கே

சூர்ணிகை -123 (47 )-
இதில் முற்பட அச்சித்துக்
கீழ் எல்லை யுண்டாய்
சுற்றும் மேலும் எல்லை இன்றிக்கே இருக்கும்
நடுவில் அசித்துக்கு சுற்றும் கீழும் எல்லை இன்றிக்கே
மேல் எல்லை யுண்டாய் இருக்கும் –
காலம் எங்கும் ஒக்க உண்டாய்
இருக்கும்

பரிமாணங்கள் அருளிச் செய்கிறார் அடுத்து
சுத்த சத்வதுக்கு -கீழ் எல்லை உண்டு
லீலா விபூதி -எல்லை இல்லாமல் -இருக்கும்
கீழும் எல்லை இல்லை
மேல் பக்கம் எல்லை -உண்டு

காலம் எங்கும் ஒக்க இருக்கும் –

சூர்ணிகை -124 (48 )
காலம் தான் பரம பதத்தில் நித்யம்
இங்கு அநித்யம் என்றும்
சொல்லுவார்கள்

சூர்ணிகை -125 (49 )
சிலர் காலத்தை
இல்லை என்றார்கள்

பேதம் சொல்லுவார் உள்ளார்
பரம பதத்தில் நித்யம்
இங்கே அநித்தியம்
கால திருஷ்டி அனுருத்தன் உண்டாக்குகிறான் -என்பதால் அநித்தியம்
நிமிஷம் -பரினமிப்பதே-
பிரகிருதி நித்யம் பரினப்பிது போலே நிமிஷாதி
உத்பத்தி -கலா காஷ்டை பரமபதத்தில் இல்லை
சதா பச்யந்தி சூறையா -நிமிஷம் இல்லை
ருது இரவு பகல் இல்லை அதனால் நித்யம் அங்கெ
ஏக ரூபம் –
ஆதித்ய கதி –
பிரவாகம் போலே காலம் நித்யம்
நித்யம் இங்கும் தத்வ த்ரய விவரணம் ஆச்சான் பிள்ளை அருளி –
பரிமாணம் வைத்து காலம் அநித்தியம் என்பார்
பௌத்தாதிகள் காலமே இல்லை
பிரத்யஷம் ஆகமம் மூலம் இல்லை அறிகிறோம்

சூர்ணிகை -126 (50 )-
பிரத்யஷத்தாலும்
ஆகமத்தாலும்
சித்திக்கையாலே அது சொல்ல ஒண்ணாது –

அத்யயன காலம்
சுப கார்யம் ஜோயதிஷம் சாஸ்திரம்
வசந்த காலம் புஷ்பம் பூத்து குலுங்கும்
காலம் அபாவம் சொல்ல ஒண்ணாது

சூர்ணிகை -127 (51 )
பலரும் திக்கு என்று
தனியே ஒரு த்ரவ்யம் உண்டு
என்றார்கள்

திக்குகள் தத்வம் இல்லை -நம் சம்ப்ரதாயம்
வைசேஷிக -சொல்லுவார்கள்
ஆகாசம் அந்தர்பூதம்
திக்கு -இடம் வைத்து சோழ முடியாதே
நாலு பேர் நாலு திக்கும் இருந்தும்
நாலு திக்காகாக காட்டும்
த்ரவ்யம் –
ஆதித்யன் உதிக்கும் கிழக்கு
மகா மேரு –
நாலு பார்சவத்தில் -உள்ளாருக்கு மாறுமே
தனக்கு என்று த்ரவ்ய அவஸ்தை இல்லையே திக்குக்கு

சூர்ணிகை -128 (52 )
பல ஹேதுக்களாலும்
ஆகாசாதி களிலே அந்தரப் பூதம் ஆகையாலே
அதுவும் சேராது

சூர்ணிகை -129 (53 )
சிலர் ஆவரணாபாவம்
ஆகாசம் என்றார்கள்

சூர்ணிகை -130 (54 )
பாவ ரூபேண தோற்றுகையாலே
அதுவும் சேராது

ஆகாசம் என்ற தத்வமே இல்லை
நாலு இல்லாத இடமே ஆகாசம் என்பர்
அபாவ ஆவரணம்
ஸ்தூல பதார்த்தங்களே என்பர்
ந ச பிரித்வ்யாதி -ஸ்ரீ பாஷ்யகாரரும் காட்டி
அதர இடம் காட்டி -பாவ ரூபம் -ஆக காட்டப்படும் –
ஆகாசெசத-சூத்ரம் -உண்டே –

சூர்ணிகை -131 (55 )
வேறு சிலர் இது தன்னை
நித்யம்
நிரவயவம்
விபு
அப்ரத்யஷம்
என்றார்கள் –

பஞ்ச பூதங்களும் அழியும்
நித்யம் இல்லை
ஆகாசாத் வாயு
அஹன்காராதிகள் இல்லாமையாலும்
நித்யம் நிரவதிகம் சேராது
கண்ணுக்கு விஷயம் பஞ்சீ கரணத்தால்
கறுத்து தொடருகிறது அத்தாலே
பிரத்யஷம் ஆகுமே

சூர்ணிகை -132 (56 )
பூதாதியிலே பிறக்கை யாலும்
அஹங்கா ராதிகள் இல்லாமையாலும்
கண்ணுக்கு விஷயம் ஆகையாலும்
அவை நாளும் சேராது

சூர்ணிகை -133(57 )-
த்வக் இந்த்ரியத்தாலே தோற்றுகையாலே
வாயு அப்ரத்யஷம் என்கிற
அதுவும் சேராது

வாயு -பிரத்யஷம்
சங்கீதம் பிரத்யஷம் காத்தாலே கேட்கப்படுவதால்
ஞானேந்திர்யம் ஏதேனும் ஒன்றாலும் அறிந்தாலும் பிரத்யஷம்

சூர்ணிகை -134 (58 )-
தேஜஸ் ஸூ பௌ மாதி பெதத்தாலே
பஹூ விதம்

சூர்ணிகை -135 (59 )
அதில் ஆதித்யாதி தேஜஸ் ஸூ
ஸ்திரம்
தீபாதி தேஜஸ் ஸூ அஸ்த்ரம்

சூர்ணிகை -136 (60 )-
தேஜஸ் ஸூ க்கு நிறம் சிவப்பு
ஸ்பர்சம் ஔஷ்ண்யம்

சூர்ணிகை -137 (61 )
ஜலத்துக்கு நிறம் வெளுப்பு
ஸ்பர்சம் சைத்யம்
ரசம் மாதுர்யம்

சூர்ணிகை -138 (62 )-
பூமிக்கு நிறமும் ரசமும்
பஹூ விதம்

சூர்ணிகை -139 (63 )-
ஸ்பர்சம் இதுக்கும் வாய்வுக்கும்
அனுஷ்ணா ஸீ தம்

சூர்ணிகை -140 (64 )-
இப்படி அசித்து
மூன்று வகைப் பட்டு
இருக்கும்

—————————————————————————————————————————————————

பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

தத்வ த்ரயம்-சித் பிரகரணம் – ஸ்ரீ வேங்கட கிருஷ்ணன் சுவாமிகள்

November 27, 2013

ஸ்ரீ பாஷ்யம் -சுருக்கம் இது என்பர்
இதை வாசித்து ஸ்ரீ பாஷ்யம் புகுந்தால் நன்றாக புரியும் –
அருளிச் செயல்கள் -உபநிஷத்தின் சாரம்
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்கள்
ஸ்வரூப ரூப குணா விபூதி ஆழ்ந்து
அனுபவம் வழிந்து-
தத்வங்கள் அறிகிறோம்
சிதறி கிடைத்ததை சேகரித்து வைத்து
பரம கருணை மிக்க பூர்வர்கள் -இவற்றை கிரந்தம் ஆக்கி
சித்தி த்ரயம் ஆளவந்தார் -மூலம்
ஸ்ரீ பாஷ்யம் இத்தை மூலமாக கொண்டே
சம்கித – ஆத்மா -ஈஸ்வர -சித்தி மூன்றும்
பூர்த்தியாக கிடைக்க வில்லை
சமஸ்க்ருதம் வேற
பிள்ளை லோகாச்சார்யர் தமிழில் –
ரகஸ்ய த்ரயம் -பல படிகள் –
தத்வ த்ரயம் -ஒரே கிரந்தம் இது தான்
அஷ்ட பஞ்சகம் கொஞ்சம் உண்டு
தத்வ த்ரயம் விளக்க ஒரே கிரந்தம் அருளிச் செய்து உள்ளார்
சமஸ்க்ருதம் தத்வ விவேகம் -கிடைக்காமல் இருக்க –
சமீபத்தில் அச்சு போடப்பட்டது –

அநாதி மாயை -பிரகிருதி சம்பந்தத்தால் உறங்குகிற நாம்
அஞ்ஞானம் சூழ்ந்து
அசித் சம்பந்தம் நிபந்தனமாக
அயம் பிண்டத்துக்கு அக்னி சம்பந்தத்தால் -இரும்பு துண்டு நெருப்பு துண்டு ஆம் போலே
அபிபூதராய் மேலிட்டு
ஆத்மா ஸ்வரூபம் அறியாமல்
பிரகிருதி விட வேறு பட்டது –
ஞான ஆனந்த
பகவான் அனன்யார்ஹ ஸ்ர்ஷம்
அறிய பெறாமல்
தேகத்தில் அஹம் புத்தி பண்ணி –
இப்பொழுது நான் மனிச சரீரம் உடையவங்கர்மத்தால்
தேஹோஹம் மனுஷ்யோஹம்
ஆத்மா ஞானம் பிறந்ததாகில்
ஈச்வரோஹம் அஹம் போகி
ஸ்வ தந்திர புத்தி பண்ணி -அடுத்த விபரீதம்
சேஷத்வ ஞானம் உண்டாய்த்தாகில்
அப்ராப்த விஷயங்களில் விநியோகித்து
கா புருஷர்கள் சப்தாதி விஷயங்களுக்கு சேஷம் ஆக்கி
அந்யதா பிரதிபத்தி பண்ணி –
கிம் பாப்பம் -செய்யப் படாத பாபம் எது
திருட்டு -பகவான் வஸ்துவை தன்னதாக நினைப்பது
அந்யதா பிரதி பத்தி -வேறு ஒன்றாக நினைத்து
அகில பாப மூலமான ஆத்மா அபகாரத்தை பண்ணி
அல்ப அஸ்த்ர தோஷம் உள்ள சப்தாதி போகங்களில் தத் பரராய்
கை கால்கள் ஈச்வரதீயே நிவேதிதம்
கைங்கர்யத்துக்கு என்று எண்ணாமல்
கரண களேபரங்கள் இல்லாமல் -அசித் போலே சூஷ்ம ஸ்வரூபத்தில்
போக மோஷ சூன்யமாய்
களேபரம் -சரீரம்
ஆசைப் பட்டு போய் சேர வேண்டும் என்று சேர வில்லையே
போகம் இல்லையே
ஞானம் இருந்தால் தான் போகம்
மோசமும் இல்லையே
கர்மங்களும் ஒட்டிக் கொண்டு இருக்குமே சூஷ்ம தசையிலும்
இத்தை அனுசந்தித்தே சிருஷ்டி அடுத்து –
அசித் அவிசேஷமாய்-வேறு படுத்தி பார்க்க முடியாமல் ஜடம் போலே இருக்க
பரம தயாளு -இறகு இல்லா பஷி போலே இருக்க
ஸ்வ சரண கமல சமாஸ்ரயணம் உபகரணமாக
சமாஸ்ரயணம் -சமயத்து ஆஸ்ராயணம் நன்றாக அடைத்தல்
ஆசார்யனை சேரும் கார்யம் தான் சமாஸ்ரயணம்

பஞ்ச சம்ஸ்காரம் சமாஸ்ரயணம் தப்பாக நினைப்பார்
ஆச்சார் செய்தார் -சமாஸ்ரயணம் செய்தார் வார்த்தை தப்பு
நன்கு அடைதல் அர்த்தம்
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழன்று
ஆறு நீந்த கொடுத்த தெப்பம் கொடுக்க
படகு சரீரம் துடுப்பு இந்தரியம்
நீர் வாக்காலே கடலில் புகுவாரைப் போலே
சம்சாரம் தாண்ட கொடுத்த உபகரணம் கொண்டு சம்சாரம் முழுக்க
அநாதி அவித்யா -சேர்ந்து கூடு தானே கட்டிக் கொண்டு
அனந்த புண்ய பாப கர்மம்
அனுகுணமாக
மாறி மாறி பல பிறவிகள்
பிறந்த ஜன்மம் தோறும்
தாப த்ரயம் தக அனல -தக்தம் எரிக்கப் பட்டு
ஆத்யாத்மிகம்
ஆதி பௌதிகம்
ஆதி தைவிகம் –
போரச் செய்தேயும்
நடந்த நடக்க போவதையும் அறியாமல்
துக்கமும் படாமல்
அவஸ்தா -சப்தகம்
கர்ப்பம் ஜன்மம் பால்யம் யௌனம் மூப்பு மரணம் நரகம்
துக்க பரம்பரை
அனந்த கிலேச பாஜனம்-கொள்கலம்
அனர்த்த விசேஷத்தை அனுசந்தித்து
உஜ்ஜீவனதுக்கு கிருஷி பண்ண
துக்க சக்கரம் -விஷ்ணு கிருபை
க அபி ஒரு விதமான
நிர்ஹெதுக கிருபை உபஜாயதே
ஜாயமான காலத்தில் பண்ணின விசேஷ கடாஷத்தால்
சகா ஏவ சாத்விக
நிரஸ்த ரஜோ தம குணம்
சத்வ குணம் மிக்கு
தத்வ ஞானம் புத்தி போக சாத்விக குணம் தலை எடுக்க வேண்டும்
கருவிலே திரு இலாது காலத்தை கழிக்கின்றீரே –
சாஸ்திரம் -ஞானம் பகு கிலேசம்
அநேகம் துச் சாத்தியம்
வருந்தி அறிய பார்த்தாலும்
காலம் குறைவு இடைஞ்சல் அறிய வேண்டியது பல
குறைந்த புத்தி ஆயுசு தடை
சித்திக்க அரியது ஆகையால்
ஸ்திரீ சூத்ராதி போல்வார் அநாதிகாரிகள்

உபதேசிப்பார் -உக்த தோஷம் இன்றி
சகல சாஸ்திர நிபுணராய்
சகல சேதன உஜ்ஜீவன காமராய்
பரம காருணிகர்
சம்பந்தம் உள்ளார் அனைவருக்கும் மோஷம் -மரத்துக்கும்
தத்வங்கள்
சுருதி ஸ்ம்ருதி இதிகாசம் புராணங்கள்
சொல்லியவற்றை திரட்டி
ஸ்வரூபம் ஸ்பாபம் -இரண்டையும் தத்வ த்ரயங்களுக்கும்
ஸ்பஷ்டமாக சுக்ருதமாக அருளிச் செய்கிறார் –
என்னவாக நினைப்பானோ -பசு புல்லை தேட்டம் போலே
உத்தேச்யம் -அனுத்யெசம்
ராஜ குமாரன் -ஓநாய் கதை
பரதந்த்ரன் அறிந்து -ஈஸ்வரன் உத்தேச்யம் அசித் த்யாஜ்யம் அறிந்து
பூரணமாக மூன்றையும் அறிய வேண்டுமே
பிரபந்த முகேன அருளிச் செய்கிறார்
நடுவில் திரு வீதிப்பிள்ளை- பட்டர் -வம்சத்தில் உள்ள ஆச்சார்யர்
நாயனார் ஆச்சான் பிள்ளை -குமாரர் -என்பர் இல்லை -பெரியவாச்சான் பிள்ளை தானே என்பார் –
பிரபந்தங்களுக்கும் இதுவே கருத்து
ஒருவர் இட்ட பிரபந்தம் -மற்றவர் கிரந்தம் பரிபாலனம் செய்தால் போறாதோ என்ன
கியாதி லாபம் இன்றி -அஹங்காரம் இல்லாமல் மற்றவரை உஜ்ஜீவிக்க –
ஏக கண்டராய் அருளிச் செய்து
ஆழ்வார்கள் போலே
ஆப்ததை பிறக்க
மந்த மதிகளும் விச்வசிக்க
ஓர் ஒன்றில் அவிசெதமாக உள்ளவை இன்னும் ஒன்றில் விஸ்தாரம் ஆக அருளி
ஒரே ஆச்சார்யர் வெவ்வேறு
பெரிய படி சிறிய படி போலே இவரே அருளி இருப்பதாக உண்டே
அவை கிடைக்க வில்லை –
சூத்ரம்

ஆக அருளிச் செய்து அருளுகிறார்
சித் பிரகரணம்
தன்னை அறிந்து முதலில்
பின்பு வேறே அறிய

சூரணை-1-
முமுஷுவான சேதனனுக்கு
மோஷம் உண்டாம் பொது
தத்வ த்ரய ஞானம் உண்டாக வேணும் –

மோஷம் இச்சை உடையவன் முமுஷூ
யாரேனும் இருப்பார்கள் ஆகில் -அருமை சம்சார நிவ்ருத்தியில்
இச்சை பிறவாமல் அநாதி காலம் பிறவியில்
உஜ்ஜீவனம் செய்விக்க உஜ்ஜீவயதி -நினைவு கொண்ட சர்வேச்வரனும்
இச்சை பிறக்கும் அளவும் பார்த்து
இச்சை அதிகாரம்
இறக்கம் உபாயம் இனிமை உபயம் நஞ்சீயர்
சம்சாரத்தில் பூண் கட்டிக் கிடக்க இச்சை கொண்ட ஆத்மாவுக்கு
அத்தை நிவ்ருத்தி செய்ய இச்சை பிறப்பது துர்லபம் இ றே

சேதனன் -சாபிப்ராயம்
சைதன்யம் பிரயோஜனம் இப்பொழுது தான்
மோஷம் இச்சை படும் பொழுது தான்
உஜ்ஜீவனதுக்கு உறுப்பான ஞானம்
மற்றவை செருப்பு குத்த
சம்சார நிவ்ருதியை இச்சிக்கிறது
நிரதிசய -நிரஸ்த அதிசய -பகவத் பிராப்தி
உணர்வு தாமரையால் கேள்வன் ஒருவனையே நோக்குவது
விபரீதம் ஆத்மா பிராப்தி கைவல்யம்
அதுவும் மோஷம் தானே
இங்கே அவனை சொல்ல வில்லை
பகவத் பிராப்தி காமன் -சேதனன்
மோஷம் புருஷார்தமிச்சித்தால்
தத்வ ஞானம் -முதலிலா இச்சை முதலிலா
ஞானம் அடைந்து மோஷமா
தத்வ ஞானம் உண்டாக இச்சையா
முண்டக உபநிஷத் –
அடி பட அடிபட விடுபட தோன்றுமே
துக்கம் மிக்கு –
கர்மத்தால் நிர்வேதம் அடைந்து -மிகுதியால் விடுபட எண்ணம்
அதுவே முமுஷை இச்சை
ஜாயமான கடாஷத்தால் உண்டாகலாம்
ஞானம் அப்புறமுண்டாகலாம்
உண்டாக வேணும் –
ஞானத்தால் மோஷம் -சகல சித்தாந்த சாரம்
அத்வைதி கூட தத்வ ஞானத்தால் மோஷம்
எது மோஷம் எது தத்வம் வேறுபாடு உண்டே
ஞானான் மோஷம் நியமம் –
ஞானம் அருகதி இல்லா பசு பஷி -வைஷ்ணவர் சம்பந்தத்தால் தத் விஷ்ணு பரமம் பதம் –
பசு பசிக்கு எப்படி ஞானம் உண்டாகும்
பாகவத வைபவம்
கையால் தொட்டு கண்ணால் பார்த்து ஸ்தாவரங்களும்
பெற்றி போக
பந்துக்கள் சம்பந்திகள் பெறுவது சொல்லவும் வேண்டுமோ
பிரமாணம் -இரண்டும் காட்டி –
பிள்ளை லோகாச்சார்யர் மரம் தொட்டு மோஷம் கொடுத்து அருளினாரே –
முமுஷுவான சேதனனுக்கு வேண்டும் -என்கிறார் இங்கு
அசேதனம் –
அவன் கிருபையால்
வைஷ்ணவன் தத்வ த்ரய ஞானத்தால் அங்கும் மோஷம்
அபிமானி -தத்வ த்ரய ஞானம் -அவனுக்கு கொடுக்கும் பொழுது
அந்தர்ப்போதமான இவனுக்கும்
கண்டா காரணன் தம்பி பெற்றானே
ததி பாண்டன் அபிமானம் ஒதுங்கிய பாண்டதுக்கும் உண்டே
சத்வாரமாக
தத்வ ஞானம்
த்ரயம் ஞானம்
பாஹ்ய குத்ருஷ்டிகள் நிரசிக்கிறார்
ஓன்று தப்பு
மூன்றுக்கு மேல் சொல்வாரும் உண்டே
த்ரயம் சொல்வதற்கு பிரமாணம்
வேதாந்தம் நிர் தோஷம்
போக்தா போக்கியம் பிரேரித சப்தம்
நியமிக்கிரவன் ஈஸ்வரன்
வேதாந்த பிரதி பாத்யமும் இதுவே
பகவத் தத்வ ஞானமே மோஷம்
தம் ஏவம் வித்வான் அமிர்த இக பவதி ந அந்யககா பந்தக
உள்ளபடி அறிபவன் மோஷம் அடைகிறான் சொல்கிறதே
த்ரயம் எதற்கு -சங்கை வருமே –
பகவத் தத்வம் அறியும் பொழுது
சேதன அசேதனம் வேறு பட்டவன்
பிரகாரமான வஸ்துக்களை அறிந்து
எப்படி காரணம்
வியாபகன்
தாரகன்
நியாமி
சேஷி
அறிய வேண்டும்
தத்வ த்ரய ஞானம் உண்டாக வேணுமே –
ஸ்ருதிக்கும் இதுவே கருத்து
போக்தா போக்கியம் பிரேரிதா-மூன்றையும் அறிய வேண்டும்
சுருதி சாயையால் இப்படி அருளிச் செய்தார்

சூர்ணிகை -2
தத்வ த்ரயமாவது
சித்தும்
அசித்தும்
ஈஸ்வரனும்
ஞானத்துக்கு ஆதாரமான வஸ்து சித்
யோகம் வைசேஷிக மதம் -ஈஸ்வரனை கேவல புருஷன் சாங்க்ய -சாஷி புருஷன் இல்லை
வேதாந்திகள் சித் அசித் நியந்தா
சாரம் பிரதானம் நாசிக்க கூடியது
அமிர்தம் அஷரம் ஈசாதே நியமிக்கிறவன்
ஷேத்ரஞ்ஞன் பிரதானம் பத்தி -யஜமானன்
ஞானாந்த மயமாய் சித்

சூர்ணிகை -3
சித் என்கிறது ஆத்மாவை –

உத்தேச கிரமத்தில் –
சித் முதலில் சொல்லி -உபபாதிக்கிறார் –
அசித் உபக்ரமாக நடுவில் திரு வீதிப் பிள்ளை ஆச்சான் பிள்ளை
அசித் தாழ்ந்தது
ஈஸ்வரன் கொள்ளத் தக்கது
தன்னை அறிந்து பின்பு –
அவர்கள் அப்படி அருளிச் செய்வது
பிரகிருதி காட்டிலும் வேறுபட்டது
முன்புறம் அறிந்து வேறு பட்டு அந்தர்ப்பூதமான ஆத்மா
அறிந்து
உபயத்துக்கும்
புத்தி ஆரோக கிரமத்தில்
அன்ன மாயம் -பிராண –ஆனந்தமயம் போலே -அசித் சித் ஈஸ்வரன் போலே
போக்தா முதலில்
போக்கியம் அசித்
பிரேரிதா ஈஸ்வரன்
இரண்டும் வேதாந்த சித்தம்
ஆளவந்தார் சித் அசித் ஈஸ்வர தத் ஸ்வாபவ –
ஸ்ரீ பாஷ்யகாரர் அசேஷ சித் அசித் வஸ்து சேஷினே
உபய கோடியிலும் சேரும்
சமஸ்த பதமாக -அருளிச் செய்யும் பொழுது
குறைந்த எழுத்து உள்ளதை முதலில் சொல்லி
அல்ப அஸ்தரம் முதலில்
ராம லஷ்மண
சித் தத்வம் முதலில்
சித்தி த்ரயம் –
ஞானமே வடிவு கொண்ட ஆத்மா –
ஆத்மா ஞான மயம் அமலம் –
சராத்மா ஈசதே -ஆத்மா பரமாத்மாவை குறிக்காதே-
ஜீவாத்மாவைத் தான் சொல்லும் ஆத்மா என்றாலே -சித் -ஆத்மாவைக் குறிக்கும்

சூர்ணிகை -4-
ஆத்ம ஸ்வரூபம்
சென்று சென்று பரம் பரமாய் -என்கிறபடியே
தேக இந்த்ரிய மன பிராண புத்தி விளஷனமாய்
அஜடமாய்
ஆனந்த ரூபமாய்
நித்தியமாய்
அணுவாய்
அவ்யக்தமாய்
அசிந்த்யமாய்
நிரவயவமாய்
நிர் விகாரமாய்
ஞானாஸ்ரயமாய்
ஈஸ்வரனுக்கு நியாம்யமாய்
தார்யமாய்
சேஷமாய் இருக்கும் –
ஸ்வரூபம் விளக்குகிறார் –

கண்கள் சிவந்து -சென்று சென்று பரம் பரமாய்
அன்னம் -மயம்-
தேகம் இந்திரியம் மனம் பிராணன் புத்தி விலஷணமாய்
அச்சித்க்கு மாறுபட்டு
அவயகதம் கண்ணால் பார்க்க முடியாதே
ஈஸ்வரனுக்கு நியாம்யம் தார்யம் சேஷம் -பொது சித்துக்கும் அச்சித்திக்கும்
ஸ்ருதி ஸ்ம்ருதி -பிரமாணம்
விட
தத்வ தர்சி வசனம் ஆழ்வார் ஸ்ரீ ஸூ க்திக்கு ஏற்றம்
தத்வம் வேதம்
தத்வ நிர்ணயத்துக்கு முக்கிய பிரமாணம்
ஆளவந்தார்
விதயச்ய வைதிக துவ்திய கம்பீர அனுசாரின
சொல்லும் உளறலும் ஸ்ருதியாம்
ஸ்வரூபம் ஸ்வம்மான ரூபம் -அசாதாராண ஆகாரம்
லஷணம்-அதி வியாப்தி இல்லாமல்
கோத்வம்-கொம்பு உள்ளது மாடு ஆடு மான் கூட கொம்பு உண்டு அதி வியாப்தி உண்டே
பிடரி மயிர் உள்ளது அசம்பவம்
சிகப்பாக மாடு -அவ்யாப்தி -எல்லா மாட்டையும் குறிக்காது
கழுத்தில் ஆடு சதை கோ லஷணம் அதுக்கே உரிய ஆகாரம் –
அன்ன பிராண மனோ மயம் அவ்வருகாய் உள்ளது
ஆளவந்தார் -சித்தி த்ரயம் -ஆத்மா சித்தி ஈஸ்வர சித்தி
சம்வித் சித்தி தர்ம பூத ஞானம் –
அசித் இதில் அந்தர்பூதம் -ஆகும்
தேக இந்த்ரிய மன பிராண புத்தி -மகான் அகங்காரம் சொல்லுகிறதா
மகத்த அனுக்ரீகனமான அந்தக்கரணம் மனச்
இங்கு விவஷிதம் ஞானம்
தத்வ சேகரம் -கிரந்தம் -புத்தி -ஞானம் சொல்லி
தீப்யோ-ஆளவந்தார் ஞானத்தை குறித்தால் போலே –
உத்தேசம் லஷணம் பரிஷை -தத்வம் அறிய மூன்றும் நிலை உண்டே –
சித்தும் அசித்தும் ஈஸ்வரனும் -உத்தேச்யம்
இங்கே லஷணம் சொல்லி
மேலே பரிஷை அருளுகிறார் –

சூர்ணிகை -5
ஆத்ம ஸ்வரூபம்
தேகாதி விலஷணமான படி என் என்னில்,

தத்வ சேகரம் விச்தரென அருளிச் செய்கிறார் –

தேகம் அநேக அவயவ சன்காசம்
அவயவங்கள் -அன்யோன்ய
நான் என்னுடைய மமதா புத்தி
ஓர் அவயவம் சைதன்யம் கொள்ளில் –
விச்சின்னம் ஆனால் -நினைவில் கொள்ள முடியாதே
சர்வ சரீர வியாபி யான சுக துக்கம் கூடாதே
காலில் முள்ளில் குத்தி வலிக்கிறதே
சைதன்யம் அவயவங்களில் இல்லை அறிகிறோம்
என்னுடைய -சரீரம் நான் வேற சரீரம் வேற
என்னுடைய ஆத்மா -அமுக்கியம் பிரயோகம்

என்னுடைய சரீரம் –
அஹம் புத்தி –
இப்படி விஸ்தரென அருளிச் செய்தார் இ றே
சரீரம் –
லௌகிகர் ஆத்மா சாந்தி அடையட்டும் சொல்கிறார்கள்
இனிமேல் ஆவது ஆத்மா சாந்தி அடையட்டும்
தேகம் வேற ஆத்மா ஒத்து கொண்டே பேசுகிறார்கள் –
உயிர் எழுத்து
மெய் எழுத்து -மெய் சரீரம் தனி பிரயோகம் இல்லை
உயிர் மெய் எழுத்து
விசிஷ்டாத்வைதம் இதில் உண்டே
சந்தஸ் -இத்தனை எழுத்து கணக்கு மெய் எழுத்து கணக்கில் சேராதே
பிராணன் உடன் உள்ள சரீரம் உபயோகம் உண்டு
உயிர் எழுத்துக்கும் உயிர் மெய் எழுத்துக்கும் உபயோகம் உண்டு
இக்கு சொல்கிறோம் -சப்த பிரயோகமும் இல்லை மெய் எழுத்துக்களுக்கும்
சத்து பொய் விட்டார் செத்து பொய் விட்டார்
சத்தான ஆத்மா வெளி ஏறி விட்டார்
பாஹ்ய இந்த்ரியங்கள் ஆத்மா ஆக மாட்டாதே
பார்க்க தொட வெவேற இந்த்ரியங்கள்
சஷுஸ் ஆத்மா என்றால் கண் இல்லாதவன் உயிர் உள்ளவன் ஆக மாட்டனே
மனஸ் -ஆத்மா ஆக மாட்டாதே
தானே ஸ்மரிக்காதே-
மனஸ் கர்ணம் -பாஹ்ய இந்த்ரியம் தானே
பிராணன் -சங்காதம் வாயு -ஆத்மா ஆகாதே
ஞானம் -எனக்கு என்று ஞானம் பிறந்து
ஆத்மா ஆக மாட்டாது
ஆத்மா நித்யம்
நேற்று இருந்த ஞானம் இன்று இல்லை

புத்தி சப்தம் -ஞானம் குறிக்கும்
மந்த மதிகளுக்கும் புரியும்படி
சில உக்தி விசெஷங்களால் விவரிக்கிறார்

சூர்ணிகை -6
தேகாதிகள் என்னுடைய தேகாதிகள் என்று
ஆத்மாவில் வேறுபட்டுத் தோற்றுகையாலும்
இதம் என்று தோற்றுகையாலும்
ஆத்மா நான் என்று தோற்றுகையாலும்
இவை ஒரு கால் தோற்றி ஒரு கால் தோற்றாமையாலும்
ஆத்மா எப்போதும் தோற்றுகையாலும்
இவை பல வகையாலும்
ஆத்மா ஒருவன் ஆகையாலும்
ஆத்மா இவற்றில் விலஷணம் என்று கொள்ள வேணும்-

என்னுடைய -மமதா புத்திக்கு
இதம் புத்தி –
அஹம் -நான்
என்னுடையது இது வேறு பட்டது
இவை -தேகம் இந்த்ரியங்கள்
ஒரு கால் தோற்றி ஒரு கால் தொடராமல்
தூங்கும் பொழுது உடம்பே அறியாமல்
உறங்கும் பொழுது உடம்பு கூட அறியாமல் அறிந்திலேன் என்பதால் ஆத்மா உண்டு
அதவா –
ஜன்ம மரண
தேகம் ஒரு கால் தோற்றி ஒரு கால் தோற்றாதே
ஜன்மாந்தர கர்மம் பலன் சொல்கிறார்கள் –
ஆத்மா தொடர்ச்சியாக இருக்க சரீரம் மாறி வருமே
உச்வாச நிசவாச பிராணன் -நெற்றி கொத்தி பார்க்க வேண்டி
ஞானம் -புத்தி -நினைவு மாறலாமே
அபோது ஞானம் இருந்தது நசித்தது
நான் நான் -எப்போதும் தோற்றி -ஒருவன் ஆகையால்
இவை
தேகம் -அநேக அவயவ சன்காசம்
இந்த்ரியங்கள் பல
மனஸ் -பன்மை -மனஸ் புத்தி சித்தம் அஹங்காரம்
பிராணன் -பிராண உதான இத்யாதி
ஞானமும் பல
தன்மை ஆராய்ந்தால் ஆத்மா வேறு பாடு அங்கீகரிக்க வேண்டும்
உக்தியாலே நிரூபிக்கிறார்

சாஸ்திரம் மூலம் மேலே நிரூபிக்கிறார்
உக்தியில் குறை வரலாம்

சூர்ணிகை -7
இந்த யுக்திகளுக்கு கண் அழிவு உண்டே யாகிலும்
சாஸ்திர பலத்தாலே ஆத்மா தேகாதி
விலஷணனாககடவன்-

சாஸ்திரம் ஸ்பஷ்டமாக சொல்லி
உக்திகள் கண் அழிவு உண்டே ஆகிலும்
கண் அழிவு சொல்ல ஒருவராலும் போகாது -அருமை என்கிறார்
சாஸ்திர பலத்தால் இவற்றை சாதிக்கும்
25 தத்வம்
பூதாணிகவர்கேனே –
இந்த்ரியங்கள் சவர்கேனே -வாக்கு கர்மேந்த்ரியங்கள்
தன்மாத்ரங்கள் ஞானேந்த்ரியங்கள் டவர்கென தவர்கென
அஹம் பகார்கென
மகாரேன ஆத்மா பஞ்ச விம்சதி –

சூர்ணிகை -8
அஜடம் ஆகையாவது
ஜ்ஞானத்தை ஒழியவும் தானே தோற்றுகை

அஜடம் –
அனந்யாதீன பிரகாசத்வம்
சுயம் பிரகாசம்
தீபம் -எரிவதை பார்க்க வேறு ஓன்று வேண்டாம்
தன்னையும் பிறவற்றையும் காட்டிக் கொடுக்கும் தீபம்
ஆத்மாவும் அப்படி
தனக்கு தானே பிரகாசித்துக் கொண்டு
மற்றவற்றையும் காட்டிக் கொடுக்கும்
சுயம் ஜோதி
ஆத்மா ஞானமயம்
பிரமாணங்கள் பல உண்டே

தேகம் அழுக்கு அறிய விளக்கு வேண்டும்
ஆத்மா தான் செய்த குற்றம் தானே அறிவானே
இருட்டு உள்ளில் இருந்தால் நாமே இருக்கிறோம் அறிவோம்
தேகம் ஜடம் -சுயம் பிரகாசத்வம் இல்லை
ஆனந்த ரூபம்

சூர்ணிகை -9

ஆனந்த ரூபம் ஆகையாவது
சுக ரூபமாய் இருக்கை-

தனக்கு தானே சுக ரூபமாய் இருக்கும்
அனுகூலம் சுகம்
பிரதி கூலம் துக்கம் –

சூர்ணிகை -10-
உணர்ந்தவன்
சுகமாக உறங்கினேன் என்கையாலே
சுக ரூபமாகக் கடவது

உறங்கும் பொழுது இந்த்ரியங்கள் உறங்கினாலும்
ஆழ்ந்த தூக்கம் -பராக்கு அனுபவம் இல்லை
பிரத்யக் உள்ளில் உள்ள ஆத்மா நினைவு மட்டும் உண்டு
சுகம் ஸ்வரூப சுகமாக வேண்டும் அன்றோ
ஸ்ரீ பாஷ்யம் -இத்தை காட்டி
சுகித்வம் ஞாத்ருத்வம் காட்டும் –
ஸ்வரூபம் அனுரூபம் அன்றாகில் இப்படி அனுகூலம் சுகம் தோற்றாதே –
ஞான ஆனந்த மயம் ஸ்ருதி ஸ்ம்ருதி பிரமாணங்கள் உண்டே
ஜடா ஆத்மவாதம் நிரச்தம் ஆயிற்று

சூர்ணிகை -11
நித்யம் ஆகையாவது
எப்போதும் உண்டாகை –
சங்கை தீர்க்கிறார் இதற்கு

சூர்ணிகை -12-
எப்போதும் உண்டாகில்
ஜன்ம மரணங்கள் உண்டாகிறபடி என் -என்னில் –
ஜன்மம் ஆவது தேக சம்பந்தம்
மரணமாவது -தேக வியோகம்
சிருஷ்டி சம்காரம்
சேதனன் அசேதனம் சேர்வது தானே சிருஷ்டி
ஏகமேவ அத்வதீயம் -ஒருவனே இருந்தான் -சொல்லி இருக்கே
ஏக தத்வம் எப்படி வரும்
நாம ரூபா விபாக அபாவம் ஆகையாலே -இவற்றுக்கு
சூஷ்ம அவஸ்தை அடைந்து –
ஈஸ்வரனுக்கு பிரகாரம் இவை
உபாதான காரணம் எப்படி ஈஸ்வரனுக்கு சொல்ல முடியும்
ந ஜாயதே மிருதயே ஸ்ரீ கீதை
நித்யோநித்யானாம்
அநாதி
நாயம் பூத்வா
அஜோ நித்ய
அநேக ஸ்ம்ருதி ஸ்ருதிகள் உண்டே –
படைத்தல் சூஷ்ம ரூபம் ஸ்தூல ரூபம்
நாம ரூபம் கொடுத்து –

விபுவாக இருக்குமோ என்றால் –
சூர்ணிகை -13-
அணுவான படி என் -என்னில்

சூர்ணிகை -14

ஹிருதய பிரதேசத்தில் நின்றும்
உத்க்ரமித்துப்
போவது வருவதாம் என்று சாஸ்திரம் சொல்லுகையாலே
ஆத்மா அணுவாகக் கடவது –
விபு -வியாபித்து இருக்க போவது வருவுது கூடாதே
ஆகாசம் எங்கும் உண்டே –இடை வெளி –காற்று -வீசலாம்
சூத்திர காரர் -ஆத்மா அணுத்வம் சாதிக்கும் இடத்தில் –
உக்ராந்தி -கத்யாகதினாம் -அருளி
நெல்லில் வால் சத பாகம் -ஏக பாகம் -சத பாகம் -ஏகோ பாகம் ஜீவன் -உபநிஷத்
ரேணு -பிரசரேனு
சர்வ சரீர வியாபியான சுக துக்கம் எங்கனே என்னில் –

சூர்ணிகை -15-
அணுவாய் ஹிருதயத்தளவில்
நிற்குமாகில்
சரீரம் எங்கும் ஒக்க
சுக துக்கங்களை
புஜிக்கிற படி என் என்னில் –
பாதம் முள் குத்தி -ஜில் இருக்க -ஆபாத சூடம் சுகம் துக்கம்

சூர்ணிகை -16-
மணி த்யுமணி தீபாதிகள்
ஓர் இடத்தில் இருக்க
பிரபை எங்கும் ஒக்க
வியாபிக்கையாலே
அவற்றை புஜிக்க தட்டு இல்லை –

த்யுமணி சூர்யன் நஷத்ரங்கள்
தர்ம பூத ஞானம் எங்கும் ஒக்க வியாபிக்குமே
ஆலோகவத் -ஸ்ரீ பாஷ்யம்
ஆலோகவது ஏத குணீன ஞாநானே வியாபிக்குமே
சகல தேகமும்
பிரயஞ்ஞா ஆனந்தம் -சர்வா கதி ஆப்நோதி
பிரஹதாரண்யம் உபநிஷத்
இந்த்ரியங்கள் மூலம் அனுபவிக்கிறான் –

ஸ்வரூப வியாப்தியா
சௌபரி 50 சரீரம் வ்யாப்தி உண்டே

சூர்ணிகை -17-
ஒருவன் ஏக காலத்திலேயே அநேக
தேகங்களைப்
பரிக்ஹிக்கறதும்
ஞான வியாப்தியாலே –
கால பேதத்தால் அநேக சரீரம் உண்டே
அத்தை வ்யாவரிக்க ஏக காலத்தில் உண்டே
சௌபரி
புண்ய பலன் படி தர்ம பூத ஞானம் மலரும்
ஒரே ஆத்மா -50 சரீரத்தில் இருந்தாலும் –
ஞான வியாப்தியால்

சூர்ணிகை -18-
அவ்யக்தம் ஆகையாவது
கட படாதிகளை க்ரஹிக்கிர
சஷூராதிகளால்
தோற்றாது இருக்கை-

ஸு ஞானம் –ஞான த்ரயம் உபாதேயம்
த்யாஜ்யம் அசித்
பிராபக பிராப்ய ஞானம் ஈஸ்வரன் –
வ்யக்தம் ஸ்பஷ்டம்
இந்த்ரியங்களுக்கு புலன் ஆகாததால் அவ்யக்தம்
அணு ஸ்வரூபம் என்பதால்
கட படாதிகள்-வஸ்து -பிரமாணங்களால் -அறிகிறோம்
படம் வஸ்த்ரம்
இத்தை அறிய முடியாது பாஷ்யகாரர் அருளியது போலே
துச்சத்வம் -வஸ்து இல்லை எனபது இல்லை
மானஸ காம்யம் உணரலாம் –
தேனின் சுவை உணர -எழுதி காட்ட முடியாதே
ஆத்மா -மானஸ ஞான கம்யம் தானே
ஆழ்வார் -சென்று சென்று பரம் பரமாய்
நன்றாக ஞானம் கடந்ததே -அருளிச் செய்தார் இ றே-

சூர்ணிகை -19-
‘அசிந்த்யம் ஆகையாவது
அசித்தோடு சஜாதீயம் என்று
நினைக்க ஒண்ணாது இருக்கை –

அசிந்த்யம்
அசித் உடன் சஜாதீயம் என்று காட்ட முடியாதே
பாஷ்யகாரர் -நினைக்கவே முடியாதே
துச்சத்வம்
ககனாரவிந்தம் போல் ஆகுமா
மானஸ ஞானத்தால் கம்யம் இதற்கும்
சர்வ வஸ்து விஜாதீய
எரிக்கவோ நனைக்கவோ வெட்டவோ முடியாதே கீதை
ஸ்வாபவம் மூலம் வேறு பட்டு இருக்கும்
ஒரு படியாலும் நினைக்க முடியாதா
சரவணம் மனனம் நிதித்யாசம் -செய்ய சாஸ்திரம் விதிக்க
அசித் போலே இல்லை என்பதை தான் தவிர்க்கிறார்
அவ்யக்தொயம் அசிந்த்யோகம் கீதாச்சார்யன் அருளி

சூர்ணிகை -20-
நிரவயவம் ஆகையாவது
அவயவ சமுதாயம் இன்றிக்கே இருக்கை –

அவயவங்கள் சமுதாயம் அன்றிக்கே இருக்காய்
சரீரம் போலே இல்லை
ஞான ஏக ஆகாரம்
ஞானமே வடிவு எடுத்தது

சூர்ணிகை -21-
நிர்விகாரம் ஆகையாவது
அசித்துப் போலே
விகரிக்கை யன்றிக்கே
ஒருபடிப் பட்டு இருக்கை –

அசித் போலே மாறாமல்
அமிர்தாச்ச்சரம்
அஷர சப்த -நாசம் இல்லாதது ஆத்மா
அசித் அழிவது சூஷ்ம ரூபம் அடையும்
பானை துண்டு துகள் போடி ஆகும் -இது தான் அழிவு
அதுவும் நித்ய தத்வம்
ஷணம் ஷணம் மாறி வரும் அசித் -ரூபம் அழியும்
ஆத்மா சதா ஏக ரூபமாய் இருக்கும்
த்வைதி ஆத்மா சரீரம் அளவு விகாரம் ஆகும் என்பர்

சூர்ணிகை -22-
இப்படி இருக்கையாலே
சஸ்த்ரம் அக்னி ஜலம் வாதம் ஆதபம்
தொடக்க மானவற்றால்
சேதித்தல் தஹித்தல் நனைத்தல் சோஷிப்பித்தல்
செய்கைக்கு அயோக்யமாய் இருக்கும்

வெட்டவோ
வெட்டுகிற வஸ்துவை விட சிறியதாக இருக்க வேண்டும்
ஆத்மா அணு
தண்ணீரால் நனைக்க முடியாதே
அக்னி தகிக்க முடியாதே
வாதம் காற்று உலர்த்த முடியாது
ஆதபம் சூர்யன் சுட்டு எரிக்க முடியாதே
வஸ்துவில் பரவி தானே முடியும்
இது சூஷ்மம் என்பதால்
நைனம் சிந்தயந்தி -ந சோஷயதி அகிலேத்ய நித்ய -சநாதன -அருளிச் செய்தான் கீதாச்சார்யன்

சூர்ணிகை -23
ஆர்ஹதர்
ஆத்மாவை
தேக பரிமாணம் என்றார்கள்-

ஆர்ஹதர் -ஜைனர்
ஆத்மாவை தேக பரிமாணம் என்றார்கள்
பாதம் வேதனை -ஆபாத சூடம் -என்பதால் –
கர்ம அனுகூலமான யானை எறும்பு
சுருதி விருத்தம்
அவன் சுருதி ஒத்து கொள்ள வில்லை
அமிர்தாஷரம் -நிர் விகாரம்
தேக பரிமாணம் கூடாதே
ஏஷாவ் அணு ஆத்மா
வாலா சத
சௌபரி-அநேக சரீர பரிகிரகம் -சின்னம் ஆக்கிக் கொண்டு
சரீரம் பரிகிரக்க வேண்டி இருக்குமே –
சரீரம் விட்டு வேறு சரீரம் போவது -கூடாதே
பர காய பிரவேசம் –
கார்ச்னியம் சூஷ்மம் கிரிசம் ப்ரஹ்ம சூத்ரம்
கர்ம அனுகுணமாக கஜ பிபிலிக சரீரம் கொள்ளும் பொழுது
அவகாசம் போகாதே –
இந்த அர்த்தம் சொல்ல வில்லை –
அணு அளவு தான் சித்தாந்தம்

சூர்ணிகை -24-
அது ஸ்ருதி விருத்தம்

சூர்ணிகை -25
அநேக தேகங்களைப்
பரிக்கிரஹிக்கிற யோகிகள்
ஸ்வரூபத்துக்கு
சைதில்யம் வரும்

சூர்ணிகை -26
ஞான ஆஸ்ரயம் ஆகையாவது
ஜ்ஞானத்துக்கு இருப்பிடமாய்
இருக்காய்

சூர்ணிகை -27-
ஆத்மா ஜ்ஞானத்துக்கு இருப்பிடம் இன்றிக்கே
ஜ்ஞானம் மாதரம் ஆகில்

சூர்ணிகை -28-
நான் அறிவு -என்று சொல்ல வேணும்
நான் அறியா நின்றேன் -என்னக் கூடாது

சூர்ணிகை -29-
ஜ்ஞாதா என்ற போதே
கர்த்தா போக்தா என்னும் இடம் சொல்லிற்று ஆயிற்று –

சூர்ணிகை -30-
கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள்
ஜ்ஞான அவஸ்தா
விசேஷங்கள் ஆகையாலே

சூர்ணிகை -31-
சிலர் குணங்களுக்கே கர்த்ருத்வம் உள்ளது
ஆத்மாவுக்கு இல்லை என்றார்கள் –

சூர்ணிகை -32-
அப்போது இவனுக்கு
சாஸ்திர வச்யதையும்
போக்ருத்வமும் குலையும் –

சூர்ணிகை -33
சம்சாரிக்க பிரவ்ருத்திகளில்
கர்த்ருத்வம்
ஸ்வரூப பிரயுக்தம் அன்று –

சூர்ணிகை -34-

குண சம்சர்க்க க்ருதம்

தர்ம பூத ஞானம்
ஞானம் -ஆத்மா தர்மம் –
ஸு பர விவகாரம் அறிய இந்த குணம் -ஞானம்
ஆத்மா ஆஸ்ரயம் ஆகையாவது
தீப பிரபைகள் -விளக்கு தேஜஸ் இரண்டும் தேஜோ த்ரவ்யங்கள்
பிரித்து காட்ட முடியாதே
தீபம் பிரபைக்கு ஆஸ்ரயம் போலே
இருப்பிடம்
ஜீவாத்மா தானும் ஞான ஸ்வரூபமாய் இருக்கச் செய்தே
ஞான ஸ்வரூபன் -ஞான தர்மம் ஆஸ்ரயம்
பஸ்யதி உணர்கிறான்
தன்னையும் பிறரையும் வேறு படுத்த
முகர்கிறான் -முறைப்படும் வஸ்து வேற தான் வேற
போக்தா கர்த்தா விஞ்ஞான ஆத்மா புருஷ
ஞாத்ருத்வம்
இந்த்ரியங்கள் மனசால்
ஞான ஸ்வரூபன் ஞாத்ருத்வம் குணமும் உண்டே
பௌத்தாதிகள் ஞானம் மாத்ரம்
பிரசன்னா பௌத்தார் அத்வைதி
நான் அறிவு -சொல்ல வேண்டுமே
உக்தி வாதத்தாலும் அருளிச் செய்து காட்டுகிறார்
அறியப் பட்டது நான் வேற அறிவு வேற
அறிபவனாக சொல்வதால்
விஷய கிரஹி ஞானத்துக்கு தான் ஆஸ்ரயம்
பிரத்யஷ சித்தம் இது –
இதம் அஹம் அபி வேத்யாமி –பட்டர் பௌத்தமதம்நிரசித்து

ஞாதா
சொன்னால் கர்த்தா -போக்த்ருத்வம் வருமே
மூன்றும் சொல்ல வேண்டி இருக்க
ஞாத்ருத்வம் மட்டும் சொல்லி
தன்னடையே கிடைக்கும்
ஞான அவஸ்தா விசேஷங்கள் கர்த்ருத்வம் போக்த்ருத்வம் –
ஹேய உபாயதய ஞான மூலம் -ஹேது வாக இருக்கும்

ஹெயம்
உபாதேயம்
விடவும் பற்றவும்
அறிந்து கர்த்தும் இச்சா
கர்த்ருத்வம் -ஞான அவஸ்தா நிலை –
அடுத்த ஷணம் -உபசாரத்தால் அடுத்த நிலை என்கிறார்
அமுக்கியம்
செயல் செய்கை ஞாத்ருத்வம் அருகில் இருப்பதால்
அறிந்து
ஆசைப் பட்டு
பிரயத்னம்
செய்கிறான் –
உபசார பிரயோகம்
அவன் இடம் சொன்னால் என் இடம் சொன்னது மாதிரி
ஞானம் அவஸ்தா விசேஷம் கர்த்ருத்வம் இப்படி
வேவேறே ஆக இருந்தாலும் உபசார வார்த்தையாக சொன்னார்
போக்த்ருத்வம் -போக ஆஸ்ரயத்வம்
ப்ரஹ்ம சப்தம் சுக நாரத
வால்மீகி பகவான்
உபசார வார்த்தை
லவ லேசம் இருப்பதால்
போகம் -சுக துக்கம் -அனுபவிக்கும் ஞானம்
பிரயாசத்தி நெருக்கம் இருப்பதால்
ஞாத்ருத்வம் சொன்ன போதே கர்த்ருத்வம் போக்த்ருத்வம் வரும்
இல்லை என்று பிரக்ருதிக்கே சொல்வார் சாங்கயர்
சிலர் குணங்களுக்கு பிரக்ருதிகளுக்கு என்பர்
பிரகிருதி குணம் வேவேறே இல்லை இவர்களுக்கு –

நஜாதயதே ஜன்ம மரண -கடக வல்லி
காரண கார்ய
புருஷா சுக துக்கம்
கர்த்ருத்வம் ஆத்மாவுக்கு இல்லை
பிரக்ருதிக்கே
பூர்வ பஷம்
குணங்களால்
சேதனன் கர்த்தா இல்லாத பொது
சாஸ்திரம் கட்டளை
செய் செய்யாதே சொல்ல
கர்த்தா -சாஸ்த்ரா அர்த்தவதாத் -ப்ரஹ்ம சூத்ரம்
அசேதனம் குணங்களுக்கு உபதேசிக்க முடியாதே
இதம் குறு-
சாஸ்திர பலன் பிரயோகத்தா
சவர்க்க காமோ யஜாதா
ஜியோதிஷ்ட ஹோமம்
நியமனம் ஜீவாத்மாவை குறித்து
முமுஷூ ப்ரஹ்மொ உபாசிக்கட்டும் -இங்கும்
பல போக்தாவே கர்த்தா ஆகவேணும்
சாசனம் பிரவர்த்தனம்
சாஸ்திரம் -அறிவு உறுத்தி
அசேதனதுக்கு அறிவு கொடுக்க முடியாதே
சாஸ்திர வச்தையும் போக்யத்வமும் குலையும்

குணங்களே செய்ய வில்லை
குணங்கள் சேர்க்கையால்
அம்பு கொல்லுமா
அம்பை எய்தவன் கொன்றான்
அம்பை எய்தவன் கொன்றான்
குணமே செய்தது தப்பு
குணத்துடன் கூடிய ஜீவாத்மா செய்தான்
சம்சாரம் இயற்க்கை இல்லை வந்தேறி
குண வஸ்தையால் வந்தது
ஸ்வரூப பிரயுத்தம்என்றால் -நித்யம் ஆக இருக்குமே
ஔ பாதிகம் காரணத்தால் வந்தது –
சம்சர்க்கம் -தொடர்பால் வந்தது –
ஸ்ரீ பாஷ்யம்
தைவி ஏஷா குண மயி
முக்குண மாயையால் சம்சார பிரவ்ருத்தி ஏற்படுகிறது
சாங்க்யா புத்தி நிரசித்து –

சூர்ணிகை -35
கர்த்ருத்வம்
தான் ஈஸ்வர
அதீனம்

ஞானம் ஏற்பட்டு அப்புறம்
இச்சை பிறந்து அப்புறம்
பிரயத்னம் செய்து -மானச உக்தி -போல்வன -அப்புறம்
பிரவ்ருத்தி
இவை ஒவ் ஒன்றும் ஈஸ்வரன் அனுமதியால் தானே நடக்கும் என்பதால்

ப்ரஹ்ம சூத்ரம் -இத்தை ஒரு அதிகரணம் இரண்டு சூத்ரங்களால் அருளிச் செய்கிறார் –
பகவத் அனுமதி ஒழிய கிரியா ஹேது வாக மாட்டாதே –
கிரியா நிபந்தனமான புண்ய பாபம் ஆத்மாவுக்கே
புத்தி மூலமான -அனுமதி தானம் பண்ணுகையாலே –

தப்பு செய்தவன் பலன் அனுபவிக்க வேண்டும்
ஆட்டி வைக்கிறவனைத் தானே கேட்க வேண்டும்
செய் செய்யாதே -விதிக்கிறது சேதனனுக்கு
பரார்த்தம் ஆனால் இவனை பார்த்து சொல்வது எதற்கு
[பொம்மலாட்டம் -பொம்மை பார்த்து -பொம்மை ஆட்டுவிப்பவன் பார்த்து
பரார்த்தம்-
எந்த்ரங்களில் ஏத்தி வைத்து சுற்றுகிறேன்-கீதை
பகவான் தன் இச்சையால் ஸ்வா தந்த்ர்யம் கொடுக்கிறான்
ஈஸ்வரன் கொடுத்ததால் அவன் அதீனம்
கீழ் அதிகாரிகளுக்கு ஸ்வா தந்த்ர்யம் கொடுக்கும் மேல் அதிகாரி போலே
ப்ரஹ்ம சூத்ரம் இத்தை விவரிக்கும் அதிகரணம்
தத்வ சாரம் நடாதூர் அம்மாள் இதை விவரித்து அருளி
அவன் கொடுத்த ஸ்வா தந்த்ர்யம் –
கரண களேபரங்கள் கொடுத்து
ஞானம் அவன் அனுமதி
செய்யும் கார்யத்துக்கு ஸ்வா தந்த்ர்யம் அருளி
செய்தவன் நான் என்பதால் பலன் நாம் தானே அனுபவிக்க வேண்டும் –
வைசம்யம் நைகர்ன்யம் இல்லையே

சாஷி யாக பார்த்து இருக்கிறான்
சிருஷ்டிக்கு பிரயோஜனம் வேண்டுமே
உயர்ந்த அர்த்தம்
புத்தி மூலமான பிரயத்னம் அபெஷித்து -ஆச்சான் பிள்ளை
ப்ரஹ்ம சூத்ரம்
பராயத்தாகரணம் ‘கிருத்திய பிரயத்தன அபெஷா –
தத்வ த்ரயம்விவரணம் ஆச்சான்பிள்ளை அருளிச் செய்து
வாதி கேசரி ஜீயர் காட்டி அருளி
தீப பிரகாசத்தில் ஜீயரும் அருளிச் செய்து
தத்வ தீபம்
தத்வ தீப பிரகாசம் -அவரே அருளி
விதி நிஷேதங்கள் வாக்கியம், வியர்த்தமாக போகாதே
சேதனன் பண்ணின பிரதம பிரயத்னம் எதிர் பார்த்து
ஞாத்ருத்வம் அனைவருக்கும் ஸ்வா பம்
பிரவ்ருத்தி நிவ்ருத்தி இருக்கும்
அந்தர்யாத்மாவாக உடன் மிசை உயிர் என இருந்து –
ஸ்வரூபத்தை நிர்வஹிக்க அவன் உள்ளே புகுந்து
உத்பன்ன ஞான -சிகிரீஷா செய்ய எண்ணம் பிரயத்னம்
மத்யஸ்தன் உதாசீனனாக இருக்க
பூர்வ வாசனா அநு ரூபமான -கார்யம் அனுமதி கொடுக்க
அது மட்டும் அநாதி
அதையும் தடுக்க ஸ்வா தந்த்ர்யம் உண்டே
அநாதாரம் காட்டி
விகிதமான -செய்ய -அனுமதி
அசத் கார்யம் அநாதாரவு காட்டி -இது தன்னை
அபி யுக்தரும் நடதூர் அம்மாள் சொன்னார்
ஈஸ்வரனால் கொடுக்கப் பட்ட ஸ்வா தந்த்ர்யம்
தாத்ரா உபெஷ்ய
ததோ அனுமதி
அனுமதி -உபெஷை
நல்ல கார்யம் அனுமதி தீய கார்யம் உபெஷித
கொஞ்சம் வாசி இரண்டு நிர்வாகம்
சர்வ நியந்தா சர்வ அந்தராத்மா
சாஸ்திர சம்மதம் அனுமதி பண்ணியும் -செய்ய கூடாததை செய்யும் பொழுது மத்யச்தராய்
பிரயத்தனம் அபெஷித்து பலன் கொடுக்கிறான்
நல்ல தீய கர்மம் அவனே பண்ண வைக்கிறான் உபநிஷத் வாக்யங்கள் உள்ளனவே
இதற்க்கு சமாதானம் பின்னர் பார்ப்போம்

தத்வ தீபம்
தத்வ தீப பிரகாசம்
பராயாதா அதிகரணம்
தத்வ சாரம் ஸ்லோகம் நடாதூர் அம்மாள் –
ஈஸ்வரன் ஆதீனம்
ஜீவாத்மாவுக்கு என்ன யோக்யதை
ஈஸ்வரன் சாஷி -சாங்க்ய மதம் –
சர்வாதிகத்வம் பதிம் வித்வச்ய -உண்டே –
அனுமதி அந்தராத்மா புல்லும் கூட அசையாதே
கர்மாக்கள் காரணம்
இரண்டும் உண்டே
ஆஷேபம் வர ஸ்ரீ பாஷ்யம் –
பராயத்தா அதிகரணம்
இரண்டு சூத்தரம்
இதம் ஜீவத்ச்ய கர்த்ருத்வம் –கிம் பிராப்தம்
சவா தந்த்ர்யம் எப்படி வந்தது
சுயதம் பூர்வ பாஷம்
பரமாத்மா கர்த்ருத்வம்
விதி நிஷேத சாஸ்திரம்ஆனர்த்யக்க்யம்
செய் செய்யாதே சொல்லுமே
கட்டளை இடுவதால் –
கர்த்தா -சுதந்தரமாக இருப்பவன் தான் கர்த்தா
கார்யம் செய்பவன் கர்த்தா
கை புள் கொடுத்து காருண்யா கர்த்தா பெயர்
சுதந்திர கர்த்தா இல்லை அவன்
தன்னுடைய புத்தியால் பிரவ்ருத்தி நிவ்ருத்தி
ச்வாதந்த்ரத்தால் வந்தது
பரார்த்து -து சப்தம் -பஷம் வ்யாவர்த்திக்கிறார்
ஏவ போலே
பரமாத்மா ஏவ காரணம் -இவன் கர்த்ருத்வம்
அது தான் நிச்சயம் -து
கர்த்ருத்வமோ என்றால் பரார்த்து-ஸ்ருதியில் இருப்பதால்
சாஸ்திரம் பிரதம பிரமாணம்
வேத நூல் ஓதுவது உண்மை அன்று இல்லை
அந்தர்பிரவிஷ்டா -சாஸ்தா -சர்வ ஜனானாம் சர்வாத்மா
நியமிக்கிறான் -அந்தர் ஆத்மாவாக நியமிக்கிறான்
யஸ்ய ஆத்மா சரீரம் -அந்தராக -அமிர்த
ஸ்ம்ருதி சர்வச்ய அஹம் ஹிருதய சந்நிவிஷ்ட
ஞானம் நினைவு மறுப்பு என்னால் -கீதை
ஈஸ்வர சர்வ பூதானாம் -நியமனம் -ஈஸ் -ச்வாபாவிகம் சாமர்த்தியம்
நமக்கு பரார்த்தம் ஈசிக்கும் சக்தி
இந்திர ஆரூடான -போலே சுற்றி விடுகிறான் –
அடுத்த சூத்ரம்
விதி நிஷேத ஆனார்திகம்
கிருத பிரயத்ன அபெஷக து -விஹித பிரதிசித்தம் -விதி நிஷேத
வாக்கியம் வையர்ததாய்
ஆதிப்யா –
சர்வாசூ கிரியாசூ
புருஷ கிருத்யணம்
பிரயத்னம் செயலை எதிர் பார்த்து அனுமதி கொடுக்கிறான்
பரமாத்மா அனுமதி இல்லை என்றால் கார்யம் செய்ய முடியாது
எல்லா கார்யங்களுக்கும் அனுமதி செய்கிறான்
நல்லதோ தீயதோ
அனுமதி -அனுக்ரக நிக்ரகம் –
ப்ஷபாதம் சொல்லாமல் இருக்க
திருஷ்டாந்தம் –
சொத்து -இருவருக்கும் -பொது
ஒருவன் வீணாக்கி பணம் காலி
யார் காரணம் – கை எழுது போட்டவன் அனுமதி
செலவு செய்தவன் தானே காரணம் –
தப்பு செய்தவனை தடுக்க வில்லை
கருணை இல்லாதவன் இல்லை
சாஸ்திரங்கள் கொடுத்து
வாசனையால் இவன் விழுந்தான் –
துர் விநியோகம் செய்தால் எத்தையோ செய்து போ என்று இருக்கும் தகப்பன் போலே
சாங்க்ய சமய -நிரசனம் –

பரம அனுகூல்யமான ஒருவனுக்கு
தானே நல்ல கர்மங்களுக்கு ருசி காட்டி
நல்லது செய்து கிட்டே வரும் படி
பிரதி கூலம் செய்பவனுக்கு -கேட்ட புத்தி கொடுத்து கீழே தள்ளுகிறான்
இது பொதுவான செயல் இல்லை
ப்ரீதி உடன் பஜிக்கிரவர்களுக்கு புத்தி யோகம் கொடுக்கிறேன்
மமாத்மா -விஷத க்ரூரான் -அசூபாம் ஆசூர யோநிஷூ
பிரதம பிரவ்ருத்தி ச்வாதந்த்ர்யம் –
வேதாந்த சாரம்
ஜீவாகா சுயேச்சையா -பிரவ்ருத்தி நிவ்ருத்தி ஹேது பூதம்
பிரதம பிரவருத்தி ஹேதும் பிரயத்னம் –
சிருஷ்டி ஆதி இல்லை
ஷணம் ஷணம் பிரதம பிரவ்ருத்தி உண்டே அத்தை தான் பிரதம பிரவ்ருத்தி
தத்வ சாரம் நடாதூர் அம்மாள் காட்டி அருளி
அனுமதி கொடுக்கிறான்
குரு தர -தார்வாதி தரணம் அப்ள -பிரபலன் சகாயம்
விதி நிஷாத யோக்யதா பவதி
பிரபலன் –
தேரை இழுக்க -எல்லாரும் விதி நிஷேத யோக்யதா பவதி
அது போலே ஈஸ்வரன் ஜீவாத்மா –
விதி நிஷேத யோக்யதை –
வேதார்த்த தீபத்திலும் இத்தை அருளி
நிகராக அனுக்ரக
அந்தர்பிரவிஷ்ட சாஸ்தா
பரமாத்வ ஆயத்த மேன கர்த்தவ்யம் –
வேதாந்த சாரம் விசேஷமாக காட்டி அருளி
ரசனாதி அதிகரணம்
பாப புண்யம் எப்படி வரலாம்
சகா பகவான் -அணுகுண லீலா பிரவ்ருத்தி
ஏதானி சமீச்சாணி அசமீச்சாணி
செய்ய கூடியது கூடாது சொல்லி
உபாதானி தேகம் இந்த்ரியங்கள் கொடுத்து
சாமானமாக பொதுவாக கொடுத்து
கட்டளைகளும் சாஸ்த்ரங்களில் கொடுத்து
உள்ளுக்கும் இருந்து சக்தியும் கொடுத்து
அனுமன்தரம்
கர்மாணி –
ததாகிக்க சக்தய -அவன் இடத்தில் பெறப் பட்ட சக்தி
அவனாலே கொடுத்த கரண களேபரங்கள்
அவனை ஆதாரமாக கொண்டு
தாங்களே கர்மங்களில் இரங்கி
சாசனம் அனுவர்தனம் -நல்ல கார்யம்
சாஸ்திர அனுவர்தனம் -தீய கார்யம்
தயாகி
பர துக்க அசஹிஷ்ணுத்வம் -உண்டே –
அனுமந்தா -அனுமதி
உதாசீனா ஆஸ்தே பின்பு
பண்ணி முடிந்த பின்பு பலம் அருளுகிறான்
வேதார்த்த சங்கரகம் –
இதே விஷயம் –
நியாம்ச -அந்தர்யாமி -விதி நிஷேத சாஸ்திரம் -அதிகாரி இல்லாமல் போகுமே
பிரேரக பரமாத்மா தூண்டுகிறான்
அப்படியானால் –
சாது அசாத்து கர்மம் கார்யத்வாத்
நைர்கிரிண்யம் வைஷம்யம் வருமே
பஷ பாதம் -கருணை இல்லாமல் இருக்குமோ
பூர்வபஷம்
சர்வேஷா -பிரவ்ருத்தி சக்தி யோக்யதை
சித் சக்தி யோகம்
சாமானஎன பொதுவாக சம்ஹிதாயா
நிர்வகிக்க ஆதாரம் பூத்வா அந்தர பிரவேசித்து
நியமன் கொடுத்து
செஷித்வென -யஜமானன்
ஜீவச்ய -எத ஆகித சக்தி
பிரவ்ருத்தி நிவ்ருத்தி தாங்களே செய்ய -அவன் கொடுத்த சக்தி கொண்டு
உதாசீன ஆஸ்தே -in different
சர்வம் உபபன்னம்
சாது கர்மம் விவச்தித்த விஷயம் ந சர்வ சாதாரண்யம்
அனுகூலர் விஷயத்தில்
ப்ரீதி கொண்டு அனுகூல பிரவ்ருத்தி செய்வாரை மேலே மேலே கூட்டிப் போகிறான்
பிரதி கூலியா பிரவ்ருத்தி போவானை க்ரூர புத்தி கொடுத்து
ததாமி புத்தி யோகம்
அஹம் -ஆசூர யோநிஷூ
இரண்டும் காட்டி அருளுகிறார் –
ஈஸ்வரன் கிருபாளு -இருந்தால் கஷ்டம் எதற்கு
கர்மம் தான் காரணம்
ஈஸ்வரன் காரணம் இல்லை
லீலா ரசம் –
நல்லது தீயது காட்டி
கட்டளையில் போவது ரசிக்கும்
புன் முறுவல் இன்புறும் இவ்விளையாட்டு உடையவன்
ஸ்வா தந்த்ர்யம் கொடுத்து –
தீயதில் புத்தி போக காரணம்
வாசனா பலன்
மம மாயா துரத்தையா
குணங்கள்
பூர்வ ஜன்மங்களில் –
நடு நடு வாசனையில் மீள வழி காட்டி அருளி –
பசியன் -அன்னம் வைத்து -சாப்பிட ருசி வரும்
விஷம் கலந்து அறிந்தவன் உண்ணுவானா
கெட்ட கார்யம் செய்தால் – நரகம் வரும் சொல்லி
மீளாதது யார் தப்பு –
குழியில் விழ -வெட்டி வைத்து -சுற்றி போ சொல்லி -இருந்தாலும் மீறி
போனவன் தானே விழுந்து -யார் காரணம்
சாஸ்திரம்
சாத்விகர் உபதேசம்
திருத்தும் ச்வாதந்த்ர்யம் கொடுத்து
வாசனையில் மீள வழி கொடுத்தான்
அனுகூலம் ஆக இருந்தால் கூட்டிப் போவான்
நல்லவர் -கஷ்டப் படுகிறார்கள் –
மாலை நண்ணி பிரவேசம் நம்பிள்ளை
ஏற்கனவே பிராரப்தம் -கர்மா நிறுத்த முடியாதே
ஈஸ்வரன் கூட நிறுத்த வில்லை
அதை கூட சுகம் என்று நினைக்க வேண்டும்
அதுவும் கர்மம் கழிய கிருபை அடியாக வந்தது –

தசரதர் சாபம்
யானை தீர்த்தம்
ரிஷி சாபம்
புத்திர சோகத்தால் சாவாய்
பரம சந்தோசம்
புத்ரனே இல்லையே
அந்த சோகம்
ரிஷி சாபம்
தசரதன் வரமாக கொண்டாரே
பெருமாளே புத்ரனாக வரப் பெற்றானே
உத்தேச்யமா அனுதஎசமா நாம் அறியோ
துக்கம் கழிந்தால் தான் மோஷம்
பிராரப்தம் போக்கி மரணமானால் வைகுந்தம் கொடுக்கும்

தத்வ சாரம்
தத்வ தீப பிரகாசம்
ஈஸ்வரனால் கொடுக்கப் பட்ட
புருஷ ஏவ பிரதான
அனுமத்யே –
உபெஷயெ
வாதி கேசரி ஜீயர்
சாஸ்த்ரங்களில் அனுமதி பண்ணியும்
தீய கார்யங்களில் செல்லும் போது உதாசீனன்
அசாச்த்ரங்களில் உபெஷித்தும்
அனுக்ரகம் நிக்ரகம்
துஷ் கரமான நிவர்தன -அனுமது செய்தால் குற்றம் ஆகாதோ –
சகா குணா ந தோஷ
சாஸ்திரம் தோஷம் இல்லாதவன்
குணதா லோகன்
ராஜா தப்பு செய்தவனை தண்டித்தால் குற்றம் இல்லை
தண்டிக்காமல் இருந்தால் குற்றம் உண்டே
பிராட்டி புருஷகாரத்தால் சாது கர்மம் தூண்டி
அதி மாத்திர ஆனுகூல்யத்தில்-உள்ளவரை
கல்யாண கர்மங்களில் ருசியை பிறப்பித்து encouragement punishmant பொது இல்லையே
அஹம் சர்வச்ய =தஷாம் ததாமி புத்தி யோகம்
அசக்தம் அப்ரதிஷ்டிம் -ஆசூர யோநிஷூ
ஷிபாமி -என்றும் அருளிச் செய்கையாலே
அனுமன்த்ரத்வமே -அவன் கொடுத்த ஞானம் கரணம் பொது
கார்யம் -பலன் கொடுக்க பிரயோஜத்வம்
ஈஸ்வர ஆதீனம்
ஆக –
ஞானஸ்ரயம்
ஞாத்ருத்வம் சொல்லி
கர்த்ருத்வம் போக்த்ருத்வம்
தர்சிப்பித்து
குணங்களுக்கு சொல்வாரை நிரசித்து
கர்த்ருத்வம் வருகிற படி சொல்லி
ஈஸ்வர ஆதீனம் -காட்டி –
ஞானஸ்ரயம் சொல்லி அருளி

சூர்ணிகை -36
ஜ்ஞானஸ்ரயம் ஆகில்
சாஸ்த்ரங்களில் இவனை
ஜ்ஞானம் என்று சொல்லுவான்
என் என்னில்

இவனே ஞானமயம் -ஆஸ்ரயம் எப்படி
குணங்களுக்கு இருப்பிடமா குணமா போலே
விஞ்ஞான மயன்
அத்யந்த நிர்மலம்
விஞ்ஞான த்ருஷ்டன்
ஞான ஸ்வரூபம் காட்ட பல பிரமாணங்கள் உண்டே –

சூர்ணிகை -37-
ஜ்ஞானத்தை ஒழியவும்
தன்னை அறிக்கையாலும்
ஜ்ஞானம் சார பூத குணமாய்
நிரூபக தர்மமே
இருக்கையாலும் சொல்லிற்று

தானே அறிக்கை
சொப்பணம்
நான் நான் தோற்றி
சார பூத குணம் -ஸ்வரூப நிரூபக தர்மம்
ப்ருஹத்வ குணா யோகி ப்ரஹ்ம சப்தம்
பொறாமையே
உடம்பு எல்லாம் மூளை
அதிக விஷயம் உள்ளவனை அத்தாலே சொல்வதால்
தர்ம பூத ஞானம் சாரம்
தத் குண சாரத்வாத்
ஞானம் யாவதாத்மபாவி பிரியாமல்
ஞானச்ய பிரதான குணம்
வேதாந்த தீபம் இப்படியும் அருளிச் செய்து

சூர்ணிகை -38
நியாயம் ஆகையாவது
ஈஸ்வர புத்திய அதீனமாக
எல்லா வியாபாரங்களும்
உண்டாம்படி இருக்கை

அடுத்து நியாம்யம்
அந்தர்யாத்மாவா இருந்து
சரீரம் பிரவ்ருத்தி நிவ்ருத்தி ஆத்மா ஆதீனம்
ஆத்மா சகல வியாபாரங்களும் ஈஸ்வரன் புத்தி ஆதீனம்
தத் சரீரதையா
அசேதனமான சரீரம் போலே இல்லையே ஆத்மா
ஜீவாத்மா ஞாத்ருத்வம் கர்த்ருத்வம் போக்த்ருத்வம் உண்டே
அனுமதி பண்ணி ஸ்வா தந்த்ர்யம் கொடுத்தருளி-

கிருத பிரத்யன அபேஷிதம்
கார்யம் செய்வதில் இல்லை -அழகிய சிங்கர் காட்டி அருளி இருக்கிறார் –
துஷ் பிரவ்ருத்தி போவதில் ஈஸ்வரன் உதாசீனனாய் இருப்பான்
சர்வ முக்தி பிரசங்கம் கூடாதே
குழந்தை கொஞ்சும் பொழுது –
பொம்மை வைத்து விளையாடும் இன்பம் வராதே –
தாங்களே இஷ்டப் பட்டு வந்தால் தானே இவனுக்கு ஆனந்தம் –
இதனால் தானே சூஷ்ம நிலை மாற்றி ஸ்தூலம் ஆக்கி
தன் இடம் வர கரண களேபரங்கள் சாஸ்திரங்கள் கொடுத்து அருளினான் –
அத -சப்தம் ஆனந்தம் -கர்ம யோகம் -பாப ஷயம் ஏற்பட்டு
பிரபத்தி -த்வம் ஏவ -அவனுக்கு அர்பணித்து
சர்வ தர்மான் பரித்யஜ்ய
தலையில் பொறுப்பை கொடுப்பது
ஈஸ்வரன் கொடுத்த ஸ்வா தந்த்ர்யம் திருப்பி கொடுப்பது தான் –
இது தான் பிரபத்தி
நாம் செய்தால் கோணல் மாணல் ஆகுமே –

சூர்ணிகை -38
நியாம்யம் ஆகையாவது
ஈஸ்வர புத்த்யதீனமாக
எல்லா வியாபாரங்களும் உண்டாம்படி இருக்கை –

சூர்ணிகை -39-
தார்யம் ஆகையாவது –
அவனுடைய ஸ்வரூப சங்கல்பங்களை ஒழிந்த போது
தன் சத்தை இல்லாம்படி இருக்கை –

நித்ய இச்சையால் ஆத்மாவும் நித்யம் ஆகிறது
நித்ய சூரிகளும் அவன் நித்ய இச்சையால்
எல்லாம் அவன் சங்கல்ப ஆதீனம் தானே
நியமேன தாரகம்
தரிக்கிறான்
சத்தா ஹேதுவாக அவன் ஸ்வரூபம்
நித்யா இச்சை
திவ்ய ஆத்மா ஸ்வரூபம் -பரமாத்மா
ஆத்மா இல்லை என்றால் சரீரம் இல்லை
எம்பெருமான் திவ்ய மங்கள விக்ரகம் உள்ளே ஆத்மா உண்டே
ஜீவாத்மா போலே இல்லையே
திவ்ய ஆத்மா ஸ்வரூபம்
அவனுக்குள்ளும் உள்ளே ஆத்மா என்றால் சித்தாந்தம் போகுமே
அந்த ஆத்மாவாகும் தன்மைக்கு திவ்ய ஆத்மா ஸ்வரூபம் –
தார்யம் தரிக்கப் படுமவை-
ஆதார ஆதேயே பாவம் –
உடன் மிசை உயிர் என கரந்து எங்கும் பரந்துளன் –
திவ்ய ஆத்மா ஸ்வரூபம் ஒழிந்த போது சத்தா ஹேது இல்லை
இச்சையால் போவது இல்லை வெளியில்
ஸ்வரூப ஆஸ்ரிததுக்கு சத்தை தொடர சங்கல்ப்பிக்கிறான்
நித்ய இச்சா -நினைவு
உள்ளே இருந்து இருப்பும் நித்யம் என்று இச்சையும் செய்கிறான்
ஸ்வரூபத்தாலும் சங்கல்பத்தாலும் தரிக்கிறான்
அபியுக்தர் -கூரத் ஆழ்வான்
ஈஸ்வரன் –
கல்யாண குணங்கள்
ஸ்வரூப நிரூபக தர்மம் -தனிப்பட்ட அடையாளம் –
நிரூபித்த ஸ்வரூப விசெஷணங்கள்-
கருப்பாக இருப்பாரே இன்னார்
அவரைப் பற்றி உபகாரம் செய்பவர் சொல்வது போலே –
பிராட்டி -ஸ்வரூப நிரூபக தர்மம்
அஞ்சிறைய மடவாரை -வியாக்யானம்
எல்லாரும் அவனைப் போலே இருக்க -தன்னை ஒக்க அருள் செய்வான்

ஞான பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ் -ஸ்வரூப நிரூபக தர்மம் -பகவான் –
வாத்சல்யம் முதலியன -நிரூபித்த ஸ்வரூப விசெஷணங்கள்
குணங்களையும் தரிக்கிறான்
இவற்றுக்கு ஆதாரம் போலே
மற்ற அனைத்துக்கும் ஆதாரம்
நாராயணன் -நாரங்களுக்கு அயனம்
ஆஸ்ரயித்து உள்ளவை –
அவனை தவிர -அவன் திவ்ய ஆத்மா ஸ்வரூபம் தவிர மற்றவை தவிர
நேராகா ஆதாரம்
ஜீவத்வாரா சரீரத்துக்கு -தனியாகவே ஆதாரம்
அவ்யவிகிதமாக -நீராகவே ஆதாரமாக இருக்குமே
குணங்களுக்கு த்ரவ்யங்கள் மூலம்
ஜீவத்வாரா என்பர் சிலர்
அப்ருதக் சித்த விசெஷணம்
சங்கல்ப ஆதீனம் -நித்ய இச்சை
அசேதனம் இப்படி சங்கல்பம் செய்ததால்
ரகஸ்ய த்ரய சாரம் தேசிகனும் அருளிச் செய்கிறார்
சூர்யன் -விழாமல் நிற்க அவனே காரணம்
இச்சை ஸ்வரூப ஆஸ்ரயங்களாக இருக்கும் படி –
சரீர ஆத்மா பாவம்
சுஷூக்த நிலையிலும் தெளிவது
சங்கல்பம் இல்லை படுக்கையில் தூங்கும் பொழுது கீழே விழுகிறான்
சங்கல்பம் இல்லை தாங்க வேண்டும் என்று
ஜாக்ரத தசையில் விழாதபடி தாங்கிக் கொள்கிறான்

சூர்ணிகை -40-
சேஷம் ஆகையாவது
சந்தன குஸூம தாம்பூலாதி களைப் போலே
அவனுக்கு இஷ்ட விநியோக அர்ஹ்யமாய் இருக்கை –

சந்தன -வேணும் பொழுது உபயோகம் படுவது
தனக்கு இல்லை
விநியோகம் கொண்டு
கிரய விக்ரயம்-
இஷ்ட விநியோக அர்க்க்யம்
அடியார்க்கு ஆட்படுத்துவான்
ஸ்வரூப ச்வாபம் எல்லா வற்றாலும்
சேஷிக்கு அதிசயகரம்
அவன் ஆனந்தம் முக்கியம்
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே
வேண்டின விநியோக யோக்யதையாய் இருக்கை
பரகத
அதிசய
ஆதான
இச்சையா
உபாதேயத்வம்
யஸ்ய ஸ்வரூபம் ததா சேஷ
சேஷ சேஷித்வம் லஷணம் ஸ்ரீ பாஷ்ய காரர் அருளிச் செய்து –
கைங்கர்யம் பண்ணி ஆனந்தப் படுத்துவதால் ஆனந்தம்
சேஷத்வம் -இஹ்ட விநியோக அர்ஹத்வம்
பாரதந்த்ர்யம்
பந்தம் மோஷம் இரண்டிலும் இதுவே லஷணம்
ஆத்மா தாஸ்யம் ஹரேக ஸ்வாம்யம்-
க்ருஹ சரீரம் -இரண்டும் சேஷம்
தனியாக இல்லாமல்

சூர்ணிகை -41-
இது தான் க்ருஹ ஷேத்திர புத்திர களத்ராதி களைப் போலே
ப்ருதக் ஸ்திதி யாதிகளுக்கு
யோக்யமாம் படி இருக்கை அன்றிக்கே
சரீரம் போலே அவற்றுக்கு அயோக்யமாய் இருக்கை

இவன் உடன் கூடியே இருக்கும்
எம்பெருமானுக்கு சரீரம் ஆத்மா
விட்டு நொடி பொழுதும் பிரியாமல் இருப்பான்
களத்ரம் -மனைவி
பிருதுக் ஸ்திதி ஆதி -பிரவ்ருத்தி நிவ்ருத்தி எல்லா வற்றுக்கும்
ஆதி -சப்தம்
சகோபலம்ப நியமன் இன்றிக்கே
ஆதி -அநேக சாதாரண்யா
புத்திரன் -பலருக்கும் சேஷமாய் இருக்கலாம் -மாதா பித்ரு -போல்வாருக்கு
களத்ரம் -சோமன் -சந்தரன்
கந்தர்வன் இரண்டாம்
அக்னி
பார்த்தா நாலாவது
அநந்ய அப்ருதக் ஸ்தித்தமாய் இருக்கும் -அவன் ஒருவனுக்கே பிரிக்க முடியாமல்
பிருதுக் சித்தி-ஸ்திதி இரண்டும்
பிரிந்து நிற்காது
அயமேவ ஆத்மா சித்தி
சேஷி சேஷ பாவம்
பிருதக் சித்தி
நியந்த்ரு
யஸ்ய செதநச்ய யஸ்ய த்ரவ்யம் –
எல்லா வகையாலும் நியமித்து தரித்து அடிமைப் பட்டு இருப்பதே சரீரம்
வேதார்த்த சந்க்ரகம் ஸ்ரீ பாஷ்யம் அருளிச் செய்தார்
யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய அஷய சரீரம்

சூர்ணிகை -42-
ஆத்ம ஸ்வரூபம் தான்
பக்த முக்த நித்ய ரூபேண
மூன்று படிப் பட்டு இருக்கும்

இது வரை முதலில் சொன்ன சூர்ணிகை விளக்கி
அநாதி அசித் சம்பந்தம்
வியோக
அனந்வயம்
மூன்று பிரகரணம்
பக்தர் -சம்சாரிகளை

சூர்ணிகை -43-
பத்தர் என்கிறது
சம்சாரிகளை

அநாதி அவித்யாதி
கத்ய த்ரவ்யம் ஸ்ரீ ஸூ க்தி
தில தைலவதி
தாறு வன்னி
குணத்ரய ஆத்மாக அடங்கி
பகவன் மாயா
துர் விவேசம் -திரோகிதம் -மறைக்கப் பட்டு
கர்மங்களால்
விசித்திர தேவாதி சரீரம்
தேவ மனுஷ்ய திர்யக் ஸ்தாவர
அஹம் புத்தி பண்ணி
துர் வாசன ருசி
ஸ்வ ஸ்வ கர்மம் சேர சுக துக்கம் அனுபவிக்கும் சம்சாரிகள்

சூர்ணிகை -44-
முக்தர் என்கிறது
சம்சார சம்பந்தம் அற்றவர்களை –

மோஷ ருசிக்கு
கர்மம் தேய்ந்து
அனுபவத்தாலே கழிந்து
பிராய சசித கர்மங்கள் மூலமாகவும்
அனபித்த சம்ஹித -பிராமாதிகமாக
யாத்ருச்சிகம்
பிரசாங்கிதம்
அனுசங்காதிதம்
பாகவதர் ஒதுங்க நிழல் கொடுத்தாய்
சித்து
ஜாயமான கால கடாஷம்
சத் குரு சமாஸ்ரயணம்
ஸ்வ வர்ண ஆஸ்ரம கர்மங்கள்
பல சங்க கர்த்ருத்யம் த்யாகம் உடன் கர்மம் செய்து
போக்கி கொண்டு
ஞானம் பிறந்து
மனஸ் நிர்மலம் ஆகி
முமுஷு ஆகி
பகுதர ஜன்ம சாத்தியம் –தைல தாராவது அவிச்சின்ன ஸ்ம்ருதி -பக்தி -உபாசனம் மோஷம் –
அன்றிக்கே –
நிர்ஹெதுக சௌஹார்த்த
அத்வேஷம் ஜனிப்பித்து ஆபிமுக்கியம்
ஆச்சார்யர் மூலம்
தத்வ ஞானம் பிறப்பித்து
அன்றிக்கே
ஆழ்வார்கள் போல்வாருக்கு
விசேஷ கடாஷத்தால் மதி நலம் அருளி
மகா விசுவாசம் பூர்வகமாக
அகஸ்மாத்தாக ஆகச்மாகிகம் கிருபை
வேறு விஷயம் விளம்பிதம் கஷ்டம் ஸ்வரூப விருத்தம் வேற
பிரபத்தி செய்து
பக்தி
பிரபத்தி
நிர்ஹெதுக கடாஷம்
ம்மொன்று வலியாலும்
ஆவிர்பூத ஸ்வரூபம்
பகவத் அனுபவ கைங்கர்யமே யாத்ரை
அவிசெஷனே முக்தர்
கைவல்யார்த்திகளும் முக்தர் -ஆகுமா –
பகவத் அனுபவத்தில் ருசி இன்றி
ஸ்வ ஸ்வரூப அனுபவம் செய்து கொண்டு கேவலர்

சூர்ணிகை -45-
நித்யர் என்கிறது
ஒரு நாளும் சம்சாரம் அறியாத
சேஷ -சேஷா சநாதிகளை

சேஷாசனர்
அமுது செய்த மிச்சல் கொள்வார் விஷ்வக் சேனர்
மோர் முன்னால் ஐயர்
நித்யர் -அச்ப்ருஷ்ட சம்சார கந்தர்
தொடப்படாத
செடி கொடிகள் சஹாச தாஸ்யர்-பட்டர்
அசந்மேவ
சந்தேமேவம்
பகவத் விஷய ஞானம் இல்லாதவன் ஆசாத்
ஆத்மா என்றுமே சாது
நித்யர் -பகவத் ஞானம் ஒரு நாளும் குறை இன்றி
முமுஷு முக்தர் பக்தர் நித்யர் தான்
இருந்தாலும்
பகவத் ஞானம் நித்யமாக இவர்களுக்கு தானே உண்டே
இந்த வைபவம்
சுருதி ஸ்லாக்கியம்
பூர்வே
பிரதம ஜாதே
ஸ்வ சந்தானுவர்த்தி ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி
அவன் திரு உள்ளம் படி எல்லாம் எப்பொழுதும்
அசேஷ சேஷ விருத்தியும்
படிமா -உதாரணம்
கைங்கர்யத்துக்கு உபமானம்
திரு அநந்த ஆழ்வான் சேஷன்
சென்றால் குடையாம் னிவாசா -உபாதானம்-புல்கும் அணையாம் – மேல்கட்டி தலையாணி –
சேஷாசனர்
சர்வேஸ்வரன் அமுது செய்த ஒன்றையே அமுது செய்யும் பெருமை
ஆதி –
கருட பிரமுக நாநாவித கத்ய த்ரயம்
ஆழி திவ்ய ஆயுதங்கள் பலவும்

சூர்ணிகை -46-
ஜலத்துக்கு அக்னி சம்ஸ்ருஷ்ட
ஸ்தாலீ சம்ஸ்ரக்கத்தாலே
ஔஷ்ண்ய சப்தாதிகள் உண்டாகிறாப் போலே
ஆத்மாவுக்கு அசித் சம்பந்தத்தாலே
அவித்யா கர்ம வாசனா ருசிகள் உண்டாகின்றன

அவித்யாதி தோஷம் வந்த படி என் திருஷ்டாந்தம் காட்டி அருளிச் செய்கிறார்-

ஜலம்-பாத்ரம் சம்பந்தம்
தண்ணீர் சீதளம் ஸ்வாபம்
அக்னி பாத்ரம் சுட
அதுவும் சுடுமா போலே
அங்கி உடன் சம்ஸ்ருஷ்டி யான ஸ்தாலீ பாத்ரம்
கொதிக்கும் பொழுது சப்தமும் உண்டாகும்
சப்தம் குணம் ஆகாசத்துக்கு
அதுவும் வருமே
அது போலே அசித் சம்சர்க்கம் -குணத்ரயாஸ்ர்ய
அவித்யா திகள் உண்டாகின்றன –
அவித்யா காரணம் அநாதி அசித் சம்பந்தம் ஆசார்ய ஹிருதயம்
அநாதி அயன சம்பந்தம் மோஷம் போக
ஸ்ரீ விஷ்ணு புராணம் ஞான மாயம் அமல
நிர்வாணமாய ஏவ
துக்கம் அஞ்ஞானம் மலம் -பிரக்ருதியால்
ஜலச்தய அக்னி -இதே பிரமாணம்
அன்யகா விளஷனம்
அவித்யா -அஞ்ஞானம் -அநேக விதம் –
மயர்வற மதி நலம் அருளிபோக்கி
ஞான அனுதய -அன்யதாஞ்ஞானம் -குணம் மாறாடி -விபரீத ஞானம் -வஸ்து மாறாடி –
தேகாத்மா அபிமானம் விபரீத ஞானம்
இதரர் பரதந்த்ரன் ச்வதந்த்ரன் பிரமித்தால்  அன்யதா ஞானம்

விச்மிருதி மறுப்பு இப்படி அநேக விதம்
கர்மா -மனம் மெய் வாக்கு மூலம் செய்யும் புண்ணிய பாபம்
இந்த லோக அனுபவம் எயஹிகம்
ஆமுஷ்கிகம் ஸ்வர்க்காதி நாநாவித போகம் அனுபவிக்க
பாபம் அகிருத்ய காரண
கிருத்திய அகர்ணம்
-பகவத் பாகவத அசஹ்யா அபச்சாரம் -அவனாலும் பொறுக்க முடியாமல் நிர் நிபந்தனமாக –
வாசனை -தொடர்ச்சி
முன்பு செய்து – -போன்ற வற்றில் மீளவும் மூழ்வது
வாசனை யுடன் விட வேண்டும் -சம்சாரம் –
ஹேது பேதத்தால் பகு விதம்
ருசி -ரசாந்தரம் விஷய பேதத்தால் பகுவிதமாக இருக்கும்
வேறு ரசத்தால் மீட்க ஒண்ணாத படி
விஷய பேதத்தால் பகு விதம்
உண்டாக்கின -உண்டாயிற்றன சொல்ல வில்லை
பிரவாக ரூபம் மேலே மேலே நித்யம்
எப்பொழுது கழியும் அசித் கழிந்த வாறே
சரீரம் போனதும் -என்பார்கள்

சூர்ணிகை -47
அசித்துக் கழிந்தவாறே
அவித்யாதிகள் கழியும்
என்பார்கள்

அடிப்படை காரணம் போனால் கார்யம் இருக்காதே –
தத்வ வித்துக்கள் சொல்வர் -ஞானிகள்
என்பார்கள் -பரமதம் ஆக்கி
இவர் அபிப்ராயம் இல்லை
பகவத் பிரசாதத்தால் -இவை கழியும் முன்பே போகுமே
போன பின்பும் சம்சாரத்தில் இருந்து
பிரகிருதி சம்பந்தம் உண்டே
மங்க ஒட்டு உன் மா மாயை சொல்வாரே
அசித் கழிந்தால் தான் போகும் சொல்ல வேண்டாம்
முக்கியம் இல்லை
உள்ள உலகு அளவு -நானும் உலனாவேன் என்பார்களோ
முக்தர் ஞானத்தால் வியாப்தி உண்டே
முக்தாவஸ்யம்-முக்தா அவஸ்தை வரும் ஞானம் அசித் கழிந்த பின்பு –
ப்ரஹ்ம தர்சி சமஸ்த பதார்த்தங்களையும் பார்க்கிறான்
ஞான வியாப்தி இல்லையே
அசித் சம்சர்க்கம் கழிந்த பின்பு தான் வரும் –
என்பார்கள் -என்பதால் வியாக்யானம் -இப்படி

சூர்ணிகை -48-
இம் மூன்றும் தனித்தனியே
அனந்தமாய் இருக்கும்

பக்த சேதனர் விஷயம் சொல்லி நின்றார் –
த்ரிவித-கணக்கு உண்டா
33 முக்கோடி தேவர் கணக்கு உண்டே
33 தேவதைகள்
எண்பர் பதினொருவர் ஈர் அறுவர் ஓர் இருவர் –
அஷ்ட /ருத்ரர் அதித்யர் -அஸ்வினி தேவர் 33 -வண்ண
ஒவ் ஒருவருக்கும் ஒரு கோடி தேவர்
இம் மூன்றும் தனித் தனியே அனந்தமாய் இருக்கும்
வர்க்க த்ரயம் அநந்தம் மட்டும் இல்லை

சூர்ணிகை -49-
சிலர் ஆத்மா பேதம் இல்லை
ஏகாத்மாவே யுள்ளது
என்றார்கள் –

குத்ருஷ்டிகள்
பிரகாரி அத்வைதம்
பிரகார அத்வைதம்
வேதாந்தம் -உண்டு
குத்ருஷ்டியாக சங்கரர் அருளி
அவன் ஒருவன் தானே –
எம்பெருமானார் -ப்ரஹ்மத்துக்கு இரண்டாவது இல்லை
ஆளவந்தார் -சக்கரவர்த்தி ஒருவனே தான்
புத்திரன் பார்யை இருந்தால் தான் சக்கரவர்த்தி
இவனை போலே இரண்டாவது இல்லை
பிரகாரி அத்வைதம் இது

ப்ரஹ்ம அத்வைதம்
ஜீவா அத்வைதம்
பிரகார அத்வைதம்
பிரகாரம் இல்லாமல் வேறு இல்லையே
சர்வம் கலு இதம் ப்ரஹ்ம எல்லாம் பிரமத்துக்கு உடையவன
ராஜ புருஷ போலே
எல்லாம் அவனை ஆத்மாவாக
பிரகார பகுத்வம்
நாநா ந அஸ்தி
ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயன்
வேதாந்த வாக்கியம் ஸ்பஷ்டம்
ஜீவா பகுத்வம்
சுகாதி பேதம்
பிரகார அத்வைதமே சொல்லிற்று
பரமாத்மா எண்ணிக்கையில் ஓன்று
இங்கு ஜாதி வர்க்கம் போலே பிரகார ஜீவா அத்வைதம்
quality யாலே ஓன்று ஜீவா அத்வைதம்
ஒரே விதமானவை
மனுஷ்ய தேவ திர்யக் ஸ்தாவர
ஒன்றேயாக இருந்தால் பக்த முக்தர் நித்யர் இருக்க முடியாதே
உபதேச -ஆச்சார்யர் சிஷ்யர்
சுகம் துக்கம் வாசி வேறே உண்டே
ந தேவ ந நர –விலகினால் ஸ்வரூப ஆவிர்பாவம் ஏற்படும்
கர்மத்தால் வரும்
சாஸ்திரம் இப்படி சொல்வதை அறியாமல்
ஏக ஆத்மா குத்ருஷ்டிகள் சொல்வார்
அது அயுக்தம் என்கிறார்

சூர்ணிகை -50-
அந்த பஷத்தில் ஒருவன் சுகிக்கிற காலத்திலேயே
வேறு ஒருவன் துக்கிக்கக் கூடாது-

சுக துக்கம் நியதங்கள்
ஆத்மா பேதம் உண்டாக வேண்டும்

சூர்ணிகை -51-
அது தேக பேதத்தாலே என்னில்-

சூர்ணிகை -52-
சௌபரி சரீரத்திலும்
அது காண வேணும்

சூர்ணிகை -53-
ஒருவன் சம்சரிக்கையும்
ஒருவன் முக்தனாகையும்
ஒருவன் சிஷ்யனாகையும்
ஒருவன் ஆச்சார்யன் ஆகியும்
கூடாது

சரீரம் பல
ஜன்மாந்தர ஸ்ம்ருதி இல்லை
சம்சாரத்தால்
ஒரு சரீரம்
சுக துக்கம் பேதம் தேக பேதத்தால் இல்லை
ஏகாத்மா வாதம் இல்லை

சூர்ணிகை -54-
விஷம சிருஷ்டியும் கூடாது-

ஆச்சர்ய சிஷ்யன்
சம்சரிக்கையும் முக்தன் ஆகையும்
சுகர் வாம தேவர் போனார்
சமித் பாணி ப்ரஹ்ம நிஷ்டை
ஒரே ஆத்மா இருக்க முடியாதே
கீதை கண்ணன் அர்ஜுனன் உபதேசம்
அத்வைத ஞானம் இருந்து உபதேசித்தானா
பொய்யான ஆத்மாவுக்கு உபதேசமா –
உபதேசமும் நித்யம்
ஆசார்யனும் நித்யம்
சிஷ்யனும் நித்யம்
விஷமம் -சமம் இல்லைத்த சிருஷ்டி கூடாதே
தேக மனுஷ்ய பதார்த்தங்கள் -சிருஷ்டி கூடாதே
ஜீவா பேதமும் கர்ம தாரதம்யமே
சிருஷ்டிக்கு மூலம்

சூர்ணிகை -55
ஆத்மா பேதம் சொல்லுகிற
ஸ்ருதியோடும்
விரோதிக்கும்

சூர்ணிகை -56-
ஸ்ருதி ஔ பாதிக
பெதத்தைச் சொல்லுகிறது
என்ன ஒண்ணாது

சூர்ணிகை -57-
மோஷ தசையிலும் பேதம் உண்டாகையாலே

உக்தி சொல்லி
மேலே சுருதி வேத வாக்யமும் உண்டே
அமுக்ய பிரமாணம் எண்பர் அத்வைதிகள்
நித்யோ நித்யானாம்
போக்தா போகயா ப்ரேரிதா
உபாதி அவித்யா மூலம் பேதம் தெரிகிறது எண்பர்
சுருதி ஔ பாதிக்க பேதம்
மோஷ தசையிலும் பேதம் உண்டே
சதா பச்யந்தி
முக்தானாம் பரமா கதி
ஆத்மா பேதம் மோஷ தசையிலும் முக்தர்கள் பன்மை சொல்லி

சூர்ணிகை -58-
அப்போது தேவ மனுஷ்யாதி பேதமும்
காம க்ரோதாதி பேதமும் கழிந்து
ஆத்மாக்கள் ஸ்வரூபம் அத்யந்தம் சமமாய்
ஒருபடியாலும் பேதம் சொல்ல ஒண்ணாதபடி இருந்ததே யாகிலும்

சூர்ணிகை -59-
பரிமாணமும்
எடையும்
ஆகாரமும் ஒத்து இருக்கிற
பொற்குடங்கள் ரத்னங்கள் வ்ரீஹிகள்
தொடக்கமான வற்றிற்கு பேதம் உண்டாகிறாப் போலே
ஸ்வரூப பேதமும் சித்தம் –

சூர்ணிகை -60-
ஆகையால் ஆத்மபேதம் கொள்ள வேணும்

உபாதி கழிந்த பின்பும் பேதம் சொல்லிற்றே
கர்மம் தாரதம்யம்
மோஷம் சென்றதும் கர்மம் கழிந்த பின்பும் பேதம் எதனால்
ஆத்மா ஸ்வரூபம் சமம் ஆனா பின்பும் ஆத்மா பேதம் எப்படி
எப்படி பல ஆத்மாக்கள்
திருஷ்டாந்தம்
பொற் குடங்கள் ரத்னங்கள்
பரிமாணம் அளவு
எடை
ஆகாரம் shape
ஒத்து இருந்தாலும்
ஒரே மாதிரியான குடங்கள் ஒன்றே இல்லை –
வைரக் குவியல் போலே
ஒரே -தன்மை இட்டு
தனி தனி வாசி
தான்ய குவியல் -ஒரே ரகம் –
கப்பல் -பாக்கு -திரு மங்கை ஆழ்வார்
பாதி உண்டு மீது பாதி கொடுத்து அப்புறம் வாங்கி கொள்கிறேன்
அதே பாதி வேண்டும்
எழுதி கொடு –
கப்பலில் பாதி பாக்கு திருமங்கை ஆழ்வாருக்கு
ஒன்றில் பாதியா கப்பலில் பாதி பாக்கு கொடுத்து வைத்தாரே
அர்த்தம் வேற வேற தான்
ஒரே தன்மை உடைய நிலை
ஆகையால் ஆத்மா பேதம் கொள்ள வேண்டும்
இவ்வளவாக
ஜீவா அநந்தம் எதிர் தட்டானா ஏக ஆத்மவாதம்
உக்தி சுருதியால் சாதித்தார்

ஜீவா ஈஸ்வர -நிர்விகாரம் போல்வன –
நியாமித்வதி மூன்றும் தார்யம் சேஷம் சித்துக்கும் அச்சித்துக்கும் உண்டே
லஷணம்-
அணுத்வமும்-
பரமாணு அச்சித்துக்கும் உண்டு
ஒன்றாக சேர்த்து சொன்னால் ஆத்மாவுக்கும்
அசித் ஈஸ்வர
நிர்விகாரத்வம் நியாமத்வம் ஜீவாத்மாவுக்கு
லஷணம் என்ன குறை இல்லை
நல்ல லஷணம் -சேஷத்வதுடன் கூடிய ஞாத்ருத்வம்
அச்சிதுக்கு ஞாத்ருத்வம் இல்லையே
ஈஸ்வரனுக்கு சேஷத்வம் இல்லை-

சூர்ணிகை -61
இப்போது இவர்களுக்கு
லஷணம் செஷத்வத்தொடே கூடின
ஜ்ஞாத்ருத்வம்-

ஞாத்ருத்வதொடு கூடிய சேஷத்வமா
செஷத்வதுடன் கூடிய ஞாத்ருத்வமா
எது முக்கியம்
ஆழ்வார் -அடியேன் உள்ளான் -என்றபடி கண்டாயே
திரு கோஷ்டியூர் நம்பி அருளி –
தேக விசிஷ்டமான ஆத்மா -அடியேன் செய்யும் விண்ணப்பம்
இங்கு மட்டும் தான் -அடியேன் உள்ளான் உடல் உள்ளான்
அதனால் வெறும் ஆத்மாவை அடியேன் சப்தத்தால் காட்டி அருளி –
அறிவுல்லான் உடல் உள்ளான் சொல்ல வில்லை
சேஷத்வம் தான் முதல் லஷணம்
எம்பெருமானார் –
ஞாத ஏவ அதிகரணம்
அறிவுடையவனே ஸ்ரீ பாஷ்யம்
ப்ரஹ்ம சூத்ரம் ஞாதா கர்த்தா போக்தா சொல்லும் பிரகரணம்
சூத்ரகாறார் காட்டாததை சொல்ல கூடாது
சதுர்விதா ஞாதீ பாரத ரிஷப கீதா பாஷ்யம்
ஞானி ஞானம் உடையவன் மட்டும் சொல்லாமல்
கீழே வெவேற பிரயோஜனம் மூவர் சொல்லி
ஞானி வாசு தேவ சர்வம் இதி
செஷதைக ரச ஆத்மா ஸ்வரூபம் -ஒன்றே ஆத்மா ஸ்வரூபம் என்று அறிந்தவன் என்பதையே உணர்ந்தவன்
கிம் ஞானம்
பிரகரணம் சேர அங்கே அருளிச் செய்கிறார்

லஷணம் அசாதாராண தர்மம் –
சேஷத்வம் -மாத்ரம் அசித் வியாவர்த்தி
ஞாத்ருத்வம் மாத்ரம் ஈஸ்வரன் வியாவர்த்தி

சூர்ணிகை -62
இவர்களுடைய ஜ்ஞானம் தான்
ஸ்வரூபம் போலே
நித்ய த்ரவ்யமாய்
அஜடமாய்
ஆனந்த ரூபமாய் இருக்கும்

தர்ம பூத ஞானம்
சரீர சரீரி பாவம்
நமது சம்ப்ரதாயம் முக்கிய இரண்டு கருத்துகள் –
ஞானம் ஸ்வரூபமாகவும் குணமாகவும் இருக்கும்
குணி குணா ஞானம்
ஞானமே ஸ்வரூபமான உள்ள ஆத்மாவுக்கு தர்மம் ஆக இருக்கிற ஞானம்
தரமிக் ஞானம் ஸ்வரூப ஞானம்
தர்ம பூத ஞானம்
இரண்டுக்கும் ஒற்றுமை வேற்றுமை சொல்கிறார் மேல்
ஸ்வரூப ஞானம் சுருங்காது விரியாது
தர்ம பூத ஞானம் ஸ்வரூபம் போலே
நித்யம்
அஜடமம் பிரகாசிக்குமே
ஆனந்த ரூபமாய்
சூர்ணிகை 4 சொன்னது போலே
நித்யம் -த்ரவ்யம் வஸ்து

 

சூர்ணிகை -63-
ஆனால் ஜ்ஞானத்துக்கும்
ஸ்வரூபத்துக்கும்
வாசி ஏன் என்னில்

சூர்ணிகை -64-
ஸ்வரூபம்
தர்மியாய்
சங்கோச விகாசங்களுக்கு அயோக்யமாய்
தன்னை ஒழிந்த வற்றை பிரகாசிப்பியாமலே
தனக்குத் தான் பிரகாசிக்கக் கடவதே
அணுவாய் இருக்கும்
ஜ்ஞானம் தர்மமே சங்கோச விகாசங்களுக்கு
யோக்யமாய்
தன்னை ஒழிந்த வற்றை பிரகாசிப்பிக்க கடவதாய்
தனக்குத் தான் பிரகாசியாதே
ஆத்மாவுக்கு பிரகாசிக்கக் கடவதாய்
விபுவாய் இருக்கும்-

த்வைதம்-எல்லா -564 சூத்ரம் எல்லாம் சித்தாந்தம் என்பர்
நாம் பூர்வ பஷம் சூத்ரங்களும் உண்டு
தத்வம் அஸி ச்வதேகேது
அதத்வம் அஸி -பிரிப்பார் த்வைதிகள்

தர்மி வஸ்து
ஸ்வரூபம் சுருக்கம் விரிவு இல்லை
மாறுவது அழியும் ஆகாரம் மாறுவதே அழிவு –
தரமி யாகிய ஞானம் சுருங்காது விரியாது
தனக்குத் தான் பிரகாசிக்கும்
தன்னை ஒளிந்தவற்றை தெரிவிக்காது
அணுவாய் இருக்கும் –
விளக்கு போலே இல்லை
மற்ற வஸ்து காட்டட தர்ம பூத ஞானம்
தர்ம பூத ஞானம் சுருங்கும் விரியும் -கர்மம் காரணம் –
விபுவாய் பரவி இருக்கும்
ஞானம் ஸ்வாபாவிகம் தன்மை -விபு வாக இருக்கும்
சகல சேதனர் ஞானம் ஓன்று போலே இல்லையே
வாசி உள்ளதே
அதற்குக் காரணம்

சூர்ணிகை -65
அதில் சிலர் உடைய ஜ்ஞானம்
எப்பொழுதும் விபுவாய் இருக்கும்
சிலர் உடைய ஜ்ஞானம் எப்போதும் அவிபுவாய் இருக்கும்

சிலருடைய ஞானம் ஒரு கால் அவிபுவாய் ஒரு கால் விபுவாய் இருக்கும்
நித்யர் –
சம்சாரிகள்
முக்தர்
மூவருக்கும் இப்படி இருக்குமே

சதா அனுபவம் -நித்யர்
பொய் நின்ற ஞானம் கர்ம அனுகுணமாக
கரை கண்டோர் -அக்கரைப் பட்ட முக்தர் ஞானம்
அவிபுவாய் பூர்வ தசை
அப்புறம் சர்வம் பச்யதா- விபுவாய் இருக்கும்
நன்றாக மலர்ந்து இருக்கும்

ஆழ்வார் ஆச்சார்யர்
திரு நஷத்ரம் கொண்டாடுகிறோம்
உதார பரசாரர் வால்மீகி வியாசர் -விக்ரகம் இல்லையே
சு பிரத்யனம்
ஆழ்வார் பகவத் பிரசாத லாபத ஞானம்
ரிஷிகள் பக்தி யோக நிஷ்டர்
ஆழ்வார் ஆச்சார்யர்கள் பிரபத்தி நிஷ்டர்
பிராரப்த கர்ம அவசானம் கழிய பல சரீரங்கள் வேண்டுமே
பிரபானனுக்கு சரரீம் முடிந்து
சஞ்சிதம் ஆகாமி பிராரப்தம் எல்லாம் தொலைத்து
பிரபத்தி -பண்ணின உடன் மோஷம் என்றால் யார் பற்றுவார்கள்
பரம பதம் வாசல்
மாலை நண்ணி பிரவேசம் அருளி இருக்கிறார் நஞ்சீயர்
திருமேனி கழிந்த அடுத்த ஞானம் மோஷம்
அப்புறம் விபுவாகும்
திரு மேனி ஆவிர்பவிக்க முடியும்
ஞானத்வாரா எல்லா விக்ரகத்திலும் ஆவிர்பவிக்க முடியும்
ஹனுமார் சந்நிதி
சிரஞ்சீவி
விபுவான ஞானம் இருக்க பிரசக்தி இல்லை என்பர் சிலர்

எம்பெருமான் சங்கல்பித்தால் ஞானம் இங்கேயே அருளலாமே
பரமைகாந்திகள் -தனியாக சேவிக்காமல்
சக்கரவர்த்தி திருமகன் உடனே சேர்ந்து சேவிப்பார்கள் திருவடியை –
ஞானத்துக்கு உள்ள நித்யத்வாதிகளை
உபபாதிக்கிறார்

 

சூர்ணிகை -66-
ஜ்ஞானம் நித்யம் ஆகில்
எனக்கு ஜ்ஞானம் பிறந்தது -நசித்தது
என்கிறபடி என்னில்

சூர்ணிகை -67
இந்த்ரிய த்வாராப்ரசரித்து விஷயங்களை
கிரஹிப்பது-மீளுவதாகையாலே
அப்படி சொல்லக் குறை இல்லை –

ஞானம் நித்யம்
இந்த்ரிய த்வாரா –
ஷேத்ரஞ்ஞன் -கர்மத்தால் சங்குசிதமாய்
சர்வ பூதேஷு தாரதம்யதுடன் வசிக்கும்
தேவர் ஞானம் மிக்கு
மனுஷ்யர்
ஜங்கமம்
ஸ்தாவரம்
நாய்க்கு உள்ள அறிவு பூனைக்கு இல்லை
நரி தந்த்ரம் செய்யும் சொல்வார்
மோப்ப சக்தி நாய்க்கு குறிப்பிட ஜாதி வர்ணம்
புண்ய பாப கர்மங்களுக்கு அநு ரூபமாக
செடி கொடியிலும் ஆத்மா உண்டு
உணர்ச்சி வெளிப்படுத்தும் தொட்டால் சுருங்கி
மரங்கள் பேசிக்கொள்ளுமாம்
மரம் சிகிச்சை செய்யுமாம்
வேர் மூலம் உதவுமாம்
அப்ராமானி வஸ்து சொல்ப ஸ்தாவரங்களில் குறைந்து
ஸ்ரீ விஷ்ணுபுராணம் பிரமாணம்
இந்த்ரிய த்வாரா -புறப்பட்டு மீளுவதாலும்
விஷயங்களை –
துருத்தி வாய் மூலம் ஜலம் வருவது போலே –
ஞானம் ஏகம்
விஷயம் மூலம் பார்த்து கேட்டு இந்த்ரிய விஷய ரூபம் மாறும்
மின்சாரம் ஓன்று
விசிறி விளக்கு போலே
தர்ம பூத ஞானம் ஒரே வஸ்து
நாநாவாய் தோற்றும் பிரவச முக்கும்
ரூபம் சப்தாதி –
பிரசர பேத நிபந்தனம்
உத்பத்தி விநாச-ஹேது போலே நாநாவித ஹேதுவும் சொல்லிற்று

சூர்ணிகை -68-
இது தான் ஏக ரூபமாய் இருக்கச் செய்தே
நாநாவாய்த் தொடருகிறது
ப்ரசரன பேதத்தாலே-

நித்யம்
புதிதாக உண்டாவது இல்லை
மாணிக்கம் ஒளி போலே

கிணறு வெட்ட நீர் உண்டு பண்ணுவது இல்லை
ஹெயம் குணம் போக்கடிக்க
அறிவு குணம் பிரகாசிக்கின்றன
சாணைக் கல்லில் தீட்ட பிரகாசம் வருமே
உள்ளே உள்ளதை வெளிக் கொண்டு வருகிறார்கள்

ஞானம் வைராக்கியம் ஐஸ்வர்யம் நித்யம்

சூர்ணிகை -69-
த்ரவ்யம் ஆனபடி என் -என்னில்

சூர்ணிகை -70-
கிரியா குணங்களுக்கு ஆஸ்ரயமாய்
அஜடமாய்
ஆனந்த ரூபமாய்
இருக்கையாலே
த்ரவ்யமாகக் கடவது

த்ரவ்யம் -வஸ்து
கிரியைக்கு ஆஸ்ரயம்
குணவத்வமும் கிரியாவத்வமும் உண்டே
கிரியை சங்கோச விகாசங்கள்
அடைகிறது மறைகிறது
அஜடத்வம் சுயம் பிரகாசகம்
த்ரவ்யத்வம் அஜடத்வம் குணம் கிரியா மூன்றும் சொல்லி
ஜடம் -த்ரவ்யம் அத்ரவ்யம் இரண்டும் உண்டே
ஒரு த்ரவ்யம் வேறு ஒன்றுக்கு குணம் ஆகாதே
குணத்தை கொண்டதே தரவ்யம்
தர்ம பூத ஞானம் த்ரவ்யம்
ஜீவாத்மாவுக்கு குணத்வம் கூடுமா -என்னில்
attribuute object வெவேற தானே
நித்ய தத் ஆஸ்ரயத்வத்தாலேகூடும்-
தண்டி புருஷ குண்டலங்கள் புருஷன்
மூன்றும் த்ரவ்யம்
இரண்டு விசெஷணங்கள் தனி த்ரவ்யம் வேறே
எப்பொழுதும் கூடியே இருப்பதால் குணமாக சொல்லலாம்
ஆஸ்ரயதோடு வேறு பட்டதால் த்ரவ்யத்வம்
ஆஸ்ரயம் கூட கூடியே இருப்பதால் குணம்
இரண்டும் உண்டே –

சூர்ணிகை -71-
அஜடமாகில் ஸூ ஷுப்தி
மூர்ச்சாதிகளில் தோற்ற வேண்டாவோ -என்னில்

ஆழ நிலை தூக்கம்
மூர்ச்சை
பிரகாசிக்க வில்லையே
பிரசரணம் இல்லையே மின்சாரம் இருந்தும் bulb fuse போனால் எரியாதே
தமோ குணா அபிபவத்தால் -தூக்கம் அழுந்த சங்குசிதமாக
சேற்றில் விழுந்த மாணிக்கம் போலே

சூர்ணிகை -72-
பிரசரணம் இல்லாமையாலே தோற்றாது

சூர்ணிகை -73-
ஆனந்த ரூபம் ஆகையாவது
ஜ்ஞானம் பிரகாசிக்கும் போது
அனுகூலமாய் இருக்கை-

சூர்ணிகை -74-
விஷ சஸ்த்ராதிகளைக்
காட்டும் போது
பிரதிகூலமாய் இருக்கைக்கு அடி
தேஹாத்மா பிரமாதிகள்

சூர்ணிகை -75-
ஈஸ்வராத்மகம் ஆகையாலே
எல்லா பதார்த்தங்களுக்கும்
ஆனுகூல்யமெ ஸ்வபாவம்
பிராதி கூலிம் வந்தேறி

சூர்ணிகை -76
மற்றை ஆனுகூல்யம் ஸ்வா பாகிகம் ஆகில்
ஒருவனுக்கு ஒரு கால் ஓர் இடத்தில் ஆன கூல்யங்கலான
சந்தன குஸூ மாதிகள்
தேசாந்தரே
காலாந்த்ரே
இவன் தனக்கும்
அத தேசத்திலே அக் காலத்திலேயே வேறே ஒருவனுக்கும்
பிரதி கூலங்களாகக் கூடாது

ஆனந்த ரூபம் மேல் சொல்கிறார்
தர்ம பூத ஞானம் அனுகூலமாக இருப்பதால்
தேஹாத்மா பரமம் கர்மமும்
விஷமும் அனுகூலம்
மனுஷ்ய சரீரம் பிரதிகூல்யம்
பாம்புக்கு அனுகூல்யம்
இந்த சரீரரதுக்கு விபரீதம்
பிரகலாதன் -எல்லாம் பகவானால் வியாபிக்க
ஈச்வராத்மகம் என்றால் எல்லாம் அனுகூல்யம் தானே
அந்தராத்மாவாக இருக்கிறான் ஞானம் இல்லாமல் பிரதி கூல்யமாக தொடருமே
வெய்யில் வெந்நீர் வெறுப்பு
குளிர் காலத்தில் அதுவே உகப்பு ஆகுமே
சகல பதார்த்தங்களும் அவன் சரீரம்
தோற்றுகிற பிராதிகூல்யம் தேகாத்மா பிரமம்
religeous integration நாம் அறிந்து

muslim christian விரோதிகள் இல்லை
சர்வ சமய சாஹித்வம்
சந்தன குசூமாதிகள் -புஷ்பங்கள் போலே
நெருப்பு இல்லையே
ஆனுகூல்யம் ஸ்வாபம் இல்லை
குளிர் காலத்தில் ஜுரம் உடன் உள்ளவன் சந்தானம் பிராதி கூல்யம் ஆகுமே

ஸ்ரீ விஷ்ணு புராணம்
வஸ்து ஏகமேவ சுக துக்கம்
கோபம்
ப்ரீதி
பால் ஜுரத்த்தில் கசக்கும்
பிரசாதம்
கோபாயா
பால் என்றும் ஒரே மாதிரி – நம் ஸ்வாபம் மாற
துக்காத்மகம் வச்துவுக்கோ சுகமாத்கம் வச்துவுக்கோ இல்லை
ஈச்வராத்மகம் தான் இல்லை
கோலி விளையாட்டு குழந்தைக்கு இனிக்கும் வயசான பின்பு இல்லையே
சர்வ விஷய பிரகாச தசையிலும்
ஆனந்த ரூபமாய் இருக்கும்
ஆக –
சித் ஆத்மா
தேகாதி விளஷனம்
ஸ்வரூபம் விஸ்தரென சொல்லி
அழகு அழகாக காட்டி
மூன்று பிரகாரம்
அவித்யாதி காரணம்
நிவ்ருத்தி கிரமம்
ஆனந்தமாக இருக்கும்
ஏகாத்மா வாதம் நிரசித்து
ஆத்மா பேதம் சாதித்து
லஷணம் காட்டி சுருக்கமாக
ஞானம் ஸ்வரூபம் ஒற்றுமை வேற்றுமை சொல்லி
ஞானம் விபு
த்ரிவித ஆத்மாவுக்கு இருப்பதை காட்டி
அடைவே உபபாதித்து
சித் வேஷம் காட்டி அருளினார்
சித் பிரகரணம் சமாப்தம் –

—————————————————————————————————————————————————————

பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்