ஸ்ரீ சைல தயா பாத்ரம் தீ பக்த்யாதி குணார்ணவம்
யதீந்திர பிரணவம் வந்தே ரம்யஜா மாதரம் முனிம்-
லோகச்சார்யா குரவே கிருஷ்ண பாதச்ய ஸூநவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நாம –
வாழி யுலகாரியன் வாழியவன் மன்னு குலம்
வாழி முடும்பை என்னு மா நகரம் -வாழி
மனம் சூழ்ந்த பேரின்ப மல்கு நல்லார்
இனம் சூழ்ந்து இருக்கும் இருப்பு
——————————————————–
அவதாரிகை —
அநாதி மாயயா ஸூக்த -(மாண்டூக்ய உபநிஷத் -எல்லையற்ற காலமாகத் தொடர்ந்து வரும் மாயை என்பதால் பிரகிருதியின் தொடர்பு காரணமாக ஜீவாத்மா உறங்கிய நிலையிலே உள்ளான்)என்கிறபடியே – அநாதி அசித் சம்பந்த நிபந்தனமாக அஞ்ஞான அந்தகாரத்தாலே அபி பூதராய் –
ஆத்ம ஸ்வரூபம்
பிரக்ருதே பரமாய் –
ஞானானந்த மயமாய் –
பகவத் அனன்யார்ஹ சேஷமாய் -இருக்கும் படியை அறியப் பெறாதே –
தேவோஹம் மனுஷ்யோஹம் (நான் தேவன் நான் மனிதன்)-என்று ஜடமான தேஹத்திலே அஹம் புத்தியைப் பண்ணியும்
தேஹாதிரிக ஆத்ம ஞானம் பிறந்ததாகில் –
ஈஸ்வரோஹம் அஹம் போகி-ஸ்ரீ கீதை –16-14- -(நானே ஈஸ்வரன் நானே இன்பத்தில் உள்ளவன்)என்று ஸ்வ தந்திர புத்தியைப் பண்ணியும்
சேஷத்வ ஞானம் யுண்டாய்த்தாகில் அப்ராப்த விஷயங்களில் அத்தை விநியோகித்தும்
(அஸௌ மயா ஹத ஸத்ருர் ஹநிஷ்யே ச அபராநபி–
ஈஸ்வரோஹம் அஹம் போகீ ஸித்த அஹம் பலவாந் ஸுகீ--৷৷16.14৷৷-பலம் மிக்க என்னால் இந்த என் எதிரி கொல்லப்பட்டான் -மேலும் பல எதிரிகளையும் சூரனாய் வீரனான நான் கொல்வேன்-நானே என் திறமையால் அனைவரையும் நியமிப்பவன் –நானே என் திறமையால் போகங்களை அனுபவிப்பவன் – நானே சித்திகளைப் பெற்றவன் –நானே இயற்கையாகவே பலமுடையவன் – நானே சுகமுடையவன் –அநிஷ்ட நிவ்ருத்தியும் என்னாலே -என்னாலே சத்ருக்கள் மாண்டனர் -நான் தான் ஈஸ்வரன் -நானே அனுபவிக்கிறேன்-ஸ்வர்க்காதிகளை நானே அடைவேன் -பலமும் என்னாலே சுகம் என்னாலே –)
இப்படி
யோன்யதா சாந்த மாதமான அந்யதா பிரதிபத்யதே கிம் தேன ந க்ருதம பாபம சோரேணா த்மாபஹாரிணா -மஹா பாரதம் -(உத்யோக பர்வம் -41-34-பகவானுக்கு மட்டுமே உடைமையானது என்றுள்ள இந்த ஆத்மாவானது தனக்கே உரியது என்றும் எண்ணியபடி -அனைத்துப் பாபங்களுக்கு காரணமாக உள்ள ஆத்மாவைக் களவு செய்தல் என்பதைச் செய்கிறார்கள் -அற்பமானதும் நிலையற்றதும் தோஷங்களுடன் கூடியதாக புலன் விஷயங்களில் ஈடுபட்டு நிற்கிறார்கள் -)என்கிறபடியே
ஆத்ம ஸ்வரூபத்தில் அந்யதா பிரதிபத்தி ரூபமாய்
அகில பாப மூலமான
ஆத்மாபஹாரத்தைப் பண்ணி
அல்ப அஸ்த்ரத்வாதி தோஷ துஷ்டமான
சப்தாதி போகைகத தத் பரராய்
விசித்ரா தேக சம்பதீஸ்வராய நிவேதிதும் பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மன் ஹஸ்த பாதாதி சமயுதா-ஸ்ரீ விஷ்ணு தத்வம் -(ஸர்வேஸ்வரனுக்கு அனைத்து கைங்கர்யங்களையும் செய்வதற்காகவே கைகால்களுடன் கூடியதான இந்த விசித்திரமான சரீரம் நமக்கு முன்பே நான்முகனால் தரப்பட்டது -)என்கிறபடியே
கரண களேபர விதுரமாய்
போக மோஷ சூன்யமாய்
அசித விசேஷிதமாய்க் கிடக்கிற தசையிலே –
பரம தயாளுவான சர்வேஸ்வரன்
ஸ்வ சரண கமல சமாஸ்ரயண உபகரணமாக கொடுத்த சரீரத்தைக் கொண்டு
தத் சமாஸ்ரயணத்தைப் பண்ணி உஜ்ஜீவிக்கலாய் இருக்க
அத்தைச் செய்யாதே –
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன் -என்கிறபடியே
அதன் வழியே போய்
ஆறு நீஞ்சக் கொடுத்த தெப்பத்தைக் கொண்டு அக்கரை ஏறலாய் இருக்க
நீர் வாக்காலே ஒழிகிக் கடலிலே புகுவாரைப் போலே
சம்சார நிஸ்தரணத்துக்கு உடலானவற்றையும்
சம்சரணத்துக்கு உடலாக்கி
அநாதி அவித்யா சஞ்சித அநந்த புண்ய பாப ரூப கர்ம அனுகுணமாக
மாறி மாறி பல பிறப்பும் பிறந்து
பிறந்த ஜன்மம் தோறும் துரந்த-(துர அந்த -அந்தமில்லாத ) தாபத் த்ரய தவாநல தஹ்யமானராய்
இப்படி அநாதிகாலம் போரா நிற்கச் செய்தேயும்
அதீத அநாகதம் அறியாமையாலே
அதிலே ஒரு கிலேசம் இன்றிக்கே
கர்ப்ப
ஜன்ய
பால்ய
யௌவன
வார்த்தக
மரண
நரக ரூப
அவஸ்த சப்தகத்தை பிராபித்து
துக்க பரம்பரைகளை அனுபவித்து
இப்படி அநந்த கிலேச பாஜனமான சம்சார சாகரத்திலே அழுத்திக் கிடந்தது அலைகிற
சேதனருடைய அனர்த்த விசேஷத்தை அனுசந்தித்து
இவர்கள் யுடைய உஜ்ஜீவனத்துக்கு கிருஷி பண்ணிக் கொண்டு போருகிற
சர்வபூத ஸூஹ்ருதான சர்வேஸ்வரன்
ஏவம் சம்ஸ்ருதி சகர்ஸ்தே ப்ராமயமாணே ஸ்வ கர்மபீ ஜீவே
துக்க ஆகுலே விஷ்ணோ க்ருபா காப் யுபஜாயகே –(அஹிர் புத்ன்ய ஸம்ஹிதை -14-இப்படியாக ஸம்ஸாரம் என்ற சக்கரத்தில் இருந்தபடி தங்களுடைய ஆழ்ந்து வினைகளால் சுழன்றபடி துன்பத்தில் கலங்கி நிற்கும் ஜீவாத்மா குறித்து மஹா விஷ்ணுவுக்குக் கருணை ஏற்படுகிறது)(காபி உபயாஜயகே – -காபி சபரி / காபி குகன் போலே )-என்கிறபடியே
தன்னுடைய திரு உள்ளத்தில் பிறந்த அபார காருண்யத்தாலே –
ஜாயமானம் ஹி புருஷம் யம் பஸ்யேன் மது ஸூதன சாத்விகஸ் ச து விஜஞ்ஞேயஸ் ச வை மோஷார்த்த சிந்தக -(மோக்ஷ பர்வம் -யார் ஒருவன் பிறக்கும் போதே அவனை மது ஸூதநன் பார்க்கிறானோ அவன் ஸத்வ குணங்கள் நிறைந்து மோக்ஷம் குறித்து சிந்திக்கிறான்)என்கிறபடியே
ஜாயமான காலத்தில் பண்ணின விசேஷ கடாஷத்தாலே
நிரஸ்த ரஜஸ் தமஸ் சகனாய்
பிரவ்ருத்த சத்வ குணகனாய்
முமுஷூவான சேதனனுக்கு
தத்வ ஜ்ஞானம் பிறந்தால் அல்லது மோஷ சித்தி இல்லாமையாலே
தத்வ ஞான சம்பாத்யமாம் அளவில் அது
சாஸ்திர ஜன்யமாதல்
உபதேச கம்யம் ஆதல் -வேண்டுகையாலும் –
சாஸ்திர ஜன்யமாம் அளவில்
சாஸ்திர ஞானம் பஹூ க்லேசம -என்கிறபடியே
பஹூ கிலேச சாத்தியம் ஆகையாலே
துஸ் சாதமாகையாலும்
வருந்தி சாதிக்கப் பார்த்தாலும்
அநந்த பாரம் பஹூ வேதி தவ்யம் அல்பஸ் ச காலோ பஹவஸ் ச விக்னா -(ஸாஸ்த்ரங்கள் எல்லை யற்றவை -அறிய வேண்டிய விஷயங்களும் எல்லை யற்றவை -ஆனால் காலமோ மிக குறுகியதாய் உள்ளது -தடைகளோ பல உள்ளன)என்கிறபடியே
சேதனர்-மந்த மதிகளுமாய்
மந்த ஆயுஸ்ஸூக்களுமாய்
அதுக்கு மேலே
விக்னங்களும் அனந்தங்களாய் இருக்கையாலே
எல்லாருக்கும் ஒக்க சித்திக்கை அரிதாய் இருக்கையாலும்
இனித் தான்
சாஸ்திர அப்யாசத்துக்கு அனதிகாரிகளான ஸ்த்ரி சூத்ராதிகளுக்கு
முமுஷூத்வம் யுண்டானாலும் நிஷ் பிரயோஜனமாம் படி இருக்கையாலும்
உபதேச கம்யமாம் அளவில் யுக்த தோஷம் ஒன்றும் இல்லாமையாலும்
இந்த விசேஷத்தை திரு உள்ளம் பற்றி
சகல சாஸ்திர நிபுணராய்
சகல சேதன உஜ்ஜீவன காமராய்
பரம காருணிகரான-
பிள்ளை லோகாச்சார்யார்
ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாச புராணங்களிலே
துரவகாஹமாம் படி பரக்கச் சொல்லப் படுகிற
சித் அசித் ஈஸ்வர
தத்வங்களின் யுடைய
ஸ்வரூப ஸ்வ பாவ விசேஷங்களை
அகில சேதனர்க்கும்
ஸூ க்ரஹமாகவும்
ஸூ வ்யகதமாகவும்
இப்பிரபந்த முகேன அருளிச் செய்கிறார் –
நடுவில் திரு வீதிப் பிள்ளை பட்டர்
ஆச்சான் பிள்ளை
முதலான பூர்வாச்சார்யர்கள் யுடைய பிரபந்த நிர்மாணத்துக்கும் கருத்து இதுவே இறே
நிர் அஹங்காரராய்
பர சம்ருத்தி -ஏக – பிரியராய்
க்யாதி லாபாதி நிரபேஷராய்
இருக்கிறவர்கள் பலரும் பிரபந்தம் இட வேண்டுவான் என்-
ஒருவரிட்ட பிரபந்தத்தை மற்றும் உள்ளவர்கள் பரிபாலனம் பண்ண அமையாதோ -என்னில்
ஆழ்வார்கள் பலரும் ஏக கண்டராய் அருளிச் செய்கையாலே
அர்த்தத்துக்கு ஆப்ததை- சித்தித்தாப் போலே
ஆச்சார்யர்கள் பலரும் ஏக கண்டமாக அருளிச் செய்த அர்த்தம் என்று
மந்தமதிகளும் விஸ்வசிக்கைக்காக –
இன்னமும் ஓர் ஒன்றில் அவிசிதமான அர்த்த விசேஷங்கள்
ஓர் ஒன்றிலே விசதமாய் இருக்கும் –
அதுக்கடி
ஸூக்தி விசேஷங்களும்
சங்கோச விஸ்தரங்களும் –
இது ஏக கர்த்ருகங்களான பிரபந்த விசேஷங்களுக்கும் ஒக்கும் –
———————————————————————-
சித் பிரகரணம் –
சூர்ணிகை -1-
முமுஷூவான சேதனனுக்கு
மோஷம் யுண்டாம் போது
தத்வ த்ரய ஞானம் யுண்டாக வேணும் –
முமுஷூ வாகிறான் மோஷம் இச்சை யுடையவன்
சம்சார விமோசனத்தில் இச்சை யுடையவன் -என்றபடி
முமுஷூ வானவன் என்கையாலே
சம்சார நிவ்ருத்தியிலே ஒருவனுக்கு இச்சை யுண்டாகையில் உள்ள அருமை தோற்றுகிறது-
இந்த இச்சை பிறவாமை இறே அநாதி காலம் சம்சரித்தது
உஜ்ஜிஜீவயிஷூவான சர்வேஸ்வரனும் இந்த இச்சை பிறக்கும் அளவு இறே பார்த்து இருக்கிறது –
சம்சாரத்தைப் பூண் கட்டிக் கொள்ள இச்சிக்க கடவ ஆத்மாவுக்கு
தந் நின்வ்ருத்தியில்
இச்சை பிறக்கை துர்லபம் இறே
இப்போது இவர் சேதனன் -என்றது ச அபிப்ராயம்
அதாவது
சைதன்ய பிரயோஜனம் யுண்டாகத் தொடங்குகிறதும் இப்போது என்கை –
அநாதி காலம் வ்யர்த்தமே பிறத்தது இத்தனை இறே சைதன்யம் –
அதாவது உஜ்ஜீவனதுக்கு உறுப்பாகாமை
இனித் தான் சம்சார நிவ்ருதியை இச்சிக்கிறது
நிரதிசய ஆதிசய ஆஹ்லாத ஸூக பாவைக லஷணையான பகவத் பிராப்திக்கு உறுப்பாக இறே
தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் அது இறே -உணர்வு ஆவது
ஆத்ம பிராப்திக்கு உறுப்பாக சம்சார நிவ்ருத்தியை இச்சித்தாலும்
விபரீத ஞான கார்யமாம் இத்தனை
ஆகையால் பகவத் பிராப்திக்கு விரோதியான
சம்சாரத்தின் உடைய விமோசனத்தில் இச்சை யுடையனான அதிகாரிக்கு
அப்படி இருந்துள்ள மோஷம் ஆகிற புருஷார்த்தம் சித்திக்கும் போது
தத்வ த்ரய ஞானம் யுண்டாக வேணும் -என்கை –
தத்வ ஞான உத்பத்திக்கு முன்னே முமுஷை ஜனிக்க கூடுமோ என்னில்
பரீஷ்ய லோகாந்-– (முண்டக-1-2-12-புண்ணியம் போன்ற வினைகளால் கிட்டப்படும் உலகம்)- –
ஜாயமான -இத்யாதி -சுருதி ஸ்ம்ருதிகளில் சொல்லுகிற பிரகிரியையாலே கூடும் –
உண்டாக வேணும் –என்ற
அவச்ய அபேஷித்வம் தோற்ற அருளிச் செய்கையாலே
தத்வ ஞானான் மோஷ லாபம் -என்கிற இது
சகல சித்தாந்த சாதாரணம் இறே
மோஷத்திலும் தத்வத்திலும் இறே விப்ரபத்தி உள்ளது –
ஆனால் ஜ்ஞானான் மோஷம் -என்கிற நியமம் கொள்ளும் போது –
பசுர் மனுஷ்ய பஷி வா யே ச வைஷ்ணவ சம்ஸ்ரயா தேனைவ தே பிரயாச்யந்தி தத் விஷ்ணோ பரமம் பதம்(பசு மனிதன் பக்ஷி போன்றவைகளாக உள்ளபோதிலும் அவை ஒரு வைஷ்ணவனை அடைந்தால் அந்தத் தொடர்பு காரணமாகவே அவை விஷ்ணுவின் உயர்ந்த இடத்தில் அடைகின்றன) –என்றும்
யம் யம் ஸ்ப்ருசதி பாணிப்யாம் யம் யம் பச்யதி சஷூஷா ஸ்தாவராண் யபி முச்யந்தே கிம் புநர் பாந்தவா ஜநா--(ஒரு வைஷ்ணவன் எவற்றைத் தன் கைகளைக் கொண்டு தொடுகிறானோ -எவற்றைத் தன் கண்களாலே காண்கிறானோ அவைகளை ஸ்தாவரங்களாக இருந்தாலும் மோக்ஷம் அடைகின்றன -)என்றும்
ஞான யோக்யதை இல்லாத திர்யக் ஸ்தாவரங்களுக்கும்
வைஷ்ணவ சம்பந்தத்தாலே மோஷ சித்தியைச் சொல்லுகிற வசனங்களுக்கு வையர்த்த்யம் வாராதோ -என்னில் -வாராது
அவற்றுக்கு முமுஷுத்வம் தானும் இல்லை இறே –
இங்கு முமுஷுவான சேதனனுக்கு இறே
மோஷ சித்திக்கு தத்வ த்ரய ஞானம் யுண்டாக வேணும் என்கிறது –
அங்குத் தானும்
முமுஷ்த்வமும் –
தத்வ ஞானமும் -இவற்றின் -பககல் இன்றிக்கே இருக்கச் செய்தேயும்
இவை இரண்டாலும் பூர்ணனாய் இருப்பான் ஒரு வைஷ்ணவன் யுடைய அபிமானம் இறே
கார்யகரமாகச் சொல்லுகிறது –
ஆகையால் அபிமானி யானவனுடைய ஜ்ஞான விசேஷத்தை கடாஷித்து இறே
அபிமான அந்தர் பூதமான இவற்றுக்கும் ஈஸ்வரன் கார்யம் செய்கையாலே –
தத்வ ஞானம் மோஷம் என்கிற இது
அவ்விடத்திலும் சத்வாரகமாக சித்திக்கும் –
தத்வ ஞானம் என்னாதே
தத்வ த்ரய ஞானம் என்கையாலே
தத்தவங்களை அதிகமாகவும் ந்யூநகமாகவும் கொள்ளுகிற
பாஹ்ய குத்ருஷ்டி மதங்கள் அர்த்தாத் பிரதிஷிப்தங்கள்-
இவர் தாம் தத்வ த்ரயம் என்று நிர்ணயிக்கைக்கு பிரமாணம் என் -என்னில்
நிர்தோஷ பிரமாணமான வேதாந்தம்
போக்தா போக்யம் ப்ரேரிதா ச மத்வா (ஸ்வே -1-12-அனுபவிக்கும் சேதனன் -அனுபவிக்கப்படும் வஸ்து இதனை அனுபவிக்கும்படிச் செய்யும் ஸர்வேஸ்வரன்)-என்று
போக்த்ரு சப்தத்தாலும்
போக்ய சப்தத்தாலும்
ப்ரேரிதா சப்தத்தாலும்
சித் அசித் ஈஸ்வர தத்வங்கள் மூன்றையும் இறே சொல்லுகிறது –
ஆகையால் வேதாந்த பிரதிபாத்யம் தத்வ த்ரயமுமே என்று நிச்சயித்து
மோஷம் யுண்டாம் போது தத்வ த்ரய ஞானமும் யுண்டாக வேணும் -என்கிறார் –
ஆனால் -தமேவம் வித்வாந் அம்ருத இஹ பவதி நாந்ய பந்த்தா அயநாய வித்யதே –(ஸர்வேஸ்வரனை அறிந்து கொண்டவன் இந்த உலகிலேயே முக்தன் ஆகிறான்) -என்று
வேதாந்தங்களில் பகவத் தத்வ ஞானம் ஒன்றுமே மோஷ சாதனம் என்னா நிற்க
தத்வ இதர–தத்வாந்தர- பரிஜ்ஞானத்தையும் இவர் மோஷ சாதனமாக அருளிச் செய்வான் என் -என்னில்
பகவத் தத்வத்தை அறியும் போது
சகல சேதன அசேதன விலஷணமாகவும்
இவற்றுக்குக் காரணமாகவும்
வியாபகமாகவும்
தாரகமாகவும்
நியாமாகவும்
சேஷியாகவும்
அறிய வேண்டுகையாலும்
தத்வாந்தரங்களை அறியாத போது இப்படி அறிய விரகு இல்லாமையாலும்
தத்வ த்ரய ஞானம் யுண்டாக வேணும் -என்னக் குறை இல்லை –
போக்தா போக்யம் ப்ரேரிதாரம் ச மத்வா (ஸ்வே -1-12-அனுபவிக்கும் சேதனன் -அனுபவிக்கப்படும் வஸ்து இதனை அனுபவிக்கும்படிச் செய்யும் ஸர்வேஸ்வரன் ஆகியவற்றை எண்ணியபடி)-என்றும்
ப்ருதகாத்மாநம் ப்ரேரிதாரம் ச மத்வா -ஜூஷ்டஸ் ததஸ் தேந அம்ருத்தவ மேதி (ஜீவாத்மா மற்றுமோர் பரமாத்மா ஆகிய இருவரும் வெவ்வேறு என்றும் தெளிந்து -அத்தகைய ஞானம் பெற்ற ஒருவனைக் குறித்து பரமாத்மா மகிழ்வதன் விளைவாக அவனாலே அன்புடன் ஏற்கப்படும் ஒருவன் மோக்ஷம் பெறுகிறான்)-என்கிற
ஸ்ருதிகளுக்கும் ஹிருதயம் இது இறே
இங்கன் அன்றாகில் தமேவம் வித்வான் -இத்யாதி ஸ்ருதியோடு
இதுக்கு விரோதம் வரும்
ஆகையால் இந்த சுருதி சாயையாலே இவரும் அருளிச் செய்தார் ஆகையாலே
வேதாந்த விரோதி பிரசங்கமே இல்லை –
—————————————————————
சூர்ணிகை -2-
அவதாரிகை –
தத்வ த்ரயம் தான் ஏது என்னும்
ஆகாங்ஷையிலே அருளிச் செய்கிறார் –
தத்வ த்ரயமாவது
சித்தும்
அசித்தும்
ஈஸ்வரனும்
சித்தாவது -சைதன்ய ஆதாரமான வஸ்து
அசித்தாவது சைதன்ய அநாதாரமான வஸ்து
ஈஸ்வரன் ஆகிறான் யோக வைஷிகாதி தந்தரத்தில் உள்ளார் சொல்லுகிற கணக்கிலே
ஒரு புருஷ விசேஷம் அன்றிக்கே
வேதாந்திகள் சொல்லுகிற
சிதசித் நியந்தா -(சித் மற்றும் அசித்தை நியமிப்பவன் ஆகிறான்)
ஷரம் பிரதானம் அம்ருத அஷரம் ஹர ஷராத்மாநா விசதே தேவ ஏக -(ஸ்வே -1-10-பிரதானம் என்பதை ஷரம் அழியக் கூடியது எனப்படும் -இதை தமது இன்பத்திற்க்காகக் கொள்பவன் அக்ஷரம் -ஜீவாத்மா -அழிவற்றவன் ஆவான் -ஒரே தேவனே இந்த இரண்டையும் நியமித்தபடி உள்ளான்)
பிரதான ஷேத்ரஜ்ஞ பதிர் குணேச (ஸ்வே -1-16-பிரதானத்திற்கும் ஷேத்ரஞ்ஞனுக்கும் -ஜீவாத்மாவுக்கும் அவனே தலைவன் -அவனே குணங்களை நியமிப்பவன் ஆவான்)-என்னக் கடவது இறே-
——————————————————–
சூர்ணிகை -3-
அவதாரிகை –
உபதேச ( உத்தேச்ய)-கிரமத்திலே
தத்வ த்ரயத்தின் யுடையவும்
ஸ்வரூப ஸ்வபாவ விசேஷங்களை உபபாதிப்பதாக
திரு உள்ளம் பற்றி
பிரதமம் சித் தத்தவத்தை உபபாதிக்க உபரமிக்கிறார் –
சித் என்கிறது
ஆத்மாவை –
நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டரும்
ஆச்சான் பிள்ளையும்
முதலான ஆச்சார்யர்கள் தத்வ த்ரயம் அருளிச் செய்கிற இடத்தில்
அசித் உபக்ரமமாக அருளிச் செய்தார்கள்
இவர் சித் உபக்ரமமாக அருளிச் செய்தார்
இதற்க்கு கருத்து
அசித் தத்வம் ஹேயதயா ஜ்ஞாதவ்யம் ஆகையாலும்
ஈஸ்வர தத்வம் உபாதேயதயா ஜ்ஞாதவ்யன் ஆகையாலும்
இப்படி இரண்டு தத்வத்தையும் அறிகைக்கு அதிகாரியான சேதனனுடைய ஸ்வரூபம் தன்னை
முதலிலே அறிந்து கொள்ள வேணும் இறே என்று –
அவர்கள் தான் அப்படி அருளிச் செய்வான் என் என்னில்
ஆத்மாவினுடைய ப்ரக்ருதே பரத்வஜ்ஞ்ஞாநம் பிரகிருதியை அறியாத போதே கூடாமையாலே
முந்துற ப்ரக்ருத தத்வத்தை அறிந்து
அநந்தரம்
தத் வ்யதிரிக்தனாய்
தத் அந்தர்வர்த்தியான ஆத்மாவை அறிந்து
அநந்தரம்
ஆத்மாவுக்கு அந்தர்யாமியாய்
சரீரத்துக்கு ஆத்மாவைப் போலே
உபயத்துக்கும் அபிமானியாய் இருக்கிற பரமாத்வாவினுடைய ஸ்வரூபத்தை அறிகை
புத்த்யா ஆரோஹகரம் ஆகையாலே அருளிச் செய்தார்கள் –
அசித் உபக்ரமாக சொல்லுகிற இது
அன்ன மயம் தொடக்கி
ஆனந்த மயம் அளவும் ஆரோஹித் த ஸ்ருதி மரியாதையைச் சேரும்
சித் உபக்ரமாக சொல்லுகிற இது
போக்தா போக்கியம் ப்ரேரிதாரம் -இத்யாதி ஸ்ருதிக்குச் சேரும்
ஆகையால் இரண்டு க்ரமமும் வேதாந்த சித்தம் –
சித் அசித் ஈஸ்வர தத் ஸ்வ பாவ -என்று ஆளவந்தாரும்
அசேஷ சிச் அசித் வஸ்து சேஷிணே-என்று ஸ்ரீ பாஷ்யகாரரும்
அருளிச் செய்த வசனங்கள் உபய கோடியிலும் சேரும்
எங்கனே என்னில்
சித் உபக்கிரம யோஜனைக்கு தானே ஸ்வ ரசமாய் இருந்தது இறே
அசித் உபக்கிரம யோஜனையில் வந்தால் க்ரம விஷயா அன்று அவர்கள் அப்படி அருளிச் செய்தது –
சமஸ்த பதமாக அருளிச் செய்கையாலே சமாசத்தில் அப்யர்ஹிதமாதல்
அல்ப அஸ்தரமாதல் முற்படக் கடவது (சிறந்த பொருளைக் முதலிலும் அல்லது குறைந்து எழுத்துக்கள் கொண்டதை முதலிலும்)என்கிற நியாயத்தைப் பற்ற
அல்ப அஸ்தரமான சித் சப்தம் முன்னாக அருளிச் செய்தார்கள் இத்தனை
அபயர்ஹிதனான ஈஸ்வரன் தன்னை முதலில் எடாதே
சித் சப்தத்தாலே சேதனனைச் சொல்லிற்று
அல்ப அஸ்தரம் பூர்வம் -என்கிற அனுசாசன பலத்தாலே
இப்படி இரண்டு க்ரமமும் -வேத வைதிக -பரிக்ருஹீதம் ஆகையாலே
இரண்டும் முக்யம் என்று கொள்ளக் குறை இல்லை-
சித் சப்தம் -ப்ரேஷோ பலப்திச் சித் சம்வித பிரதிபத் ஜ்ஞப்தி சேதனா -(ப்ரேஷா உபலப்தி சித் சம்வித் பிரதிபத்தி ஜ்ஞப்தி சேதந ஆகிய சொற்கள் அனைத்தும் புத்தியைக் குறிக்கின்றன)என்று ஞான வாசி சப்தங்களோடு சஹ படிதம் ஆகையாலும்
ஜ்ஞான ஆஸ்ரய வஸ்துவில் இதுக்கு பிரசித்தி ப்ராசுர்யம் இல்லாமையாலும்
ஷர ஆத்மநா வீசதே தேவ ஏக -(ஸ்வே -1-10-அழியாமல் மரணம் அடையாமல் உள்ளது ஷரம் -ஜீவாத்மா -ஒருவனாகிய தேவனே அழியக்கூடியதான பிரதானத்தையும் ஆத்மாவையும் ஆள்கிறான்)
ய ஆத்மாநம் அந்தரோ யமயதி யமாத்மா ந வேத யஸ் யாத்மா சரீரம் -(யார் ஆத்மாவின் உள்ளில் உளானோ -யார் இவ்விதம் உள்ளதை ஆத்மா அறியாதோ)
ஆத்மா ஜ்ஞான மய அமல-(ஆத்மா ஞான மயமாகவும் தூய்மை யாகவும் உள்ளான்)என்று
இப்படி ஸ்ருதி ஸ்ம்ருதிகளிலே பல இடங்களிலும் சொல்லுகையாலே
ஆத்ம சப்தத்துக்கு ஜீவ விஷயத்தில் பிரசித்தி ப்ராசுர்யம் யுண்டாகையாலும்
சித் -என்கிறது
ஆத்மாவை -என்று ஸ்புடமாக அருளிச் செய்கிறார்-
—————————————————————————-
சூர்ணிகை -4-
அவதாரிகை –
இனி இந்த ஆத்மாவினுடைய ஸ்வரூபம்
இருக்கும் படி எங்கனே -என்கிற சங்கையிலே
ஆத்மா ஸ்வரூப லஷணத்தை அருளிச் செய்கிறார் –
ஆத்ம ஸ்வரூபம்
சென்று சென்று பரம் பரமாய் -என்கிறபடியே
1-தேக
இந்த்ரிய
மன
பிராண
புத்தி
விலஷணமாய்
2-அஜடமாய்
3-ஆனந்த ரூபமாய்
4-நித்யமாய்
5-அணுவாய்
6-அவ்யக்தமாய்
7-அசிந்த்யமாய்
8-நிரவயவமாய்
9-நிர்விகாரமாய்
10-ஜ்ஞாநாஸ்ரயமாய்
11-ஈஸ்வரனுக்கு ந்யாம்யமாய்
12-தார்யமாய்
13-சேஷமாய்
இருக்கும்-
ஸ்ருதி ஸ்ம்ருதியாதிகளிலே ஒன்றைச் சொல்லலாய் இருக்க
இப்பொழுது ஆழ்வார் அருளிச் செய்த சந்தையை எடுத்தது –
(நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு அதன் நுண் நேர்மை அது இது என்று
ஒன்றும் ஒருவர்க்கு உணரலாகாது உணர்ந்தும் மேலும் காண்பு அரிது
சென்று சென்று பரம்பரம் ஆய் யாதும் இன்றித் தேய்ந்து அற்று
நன்று தீது என்று அறிவு அரிதாய் நன்றாய் ஞானம் கடந்ததே–8-8-5-)
தத்வ பிரதிபாதகங்களான ஸ்ருதியாதிகளில் காட்டில்
தத்வ தர்சிகளில் பிரதானரான ஆழ்வாருடைய வசனமே
தத்வ நிர்ணயத்துக்கு முக்ய பிரமாணம் என்று தோற்றுகைக்காக –
விதயஶ்ச வைதிகா த்வதீய கம்பீர மநோநுஸாரிண:—20-என்று இறே
பரமாச்சார்யர் அருளிச் செய்தது –
(த்வதாஶ்ரிதாநாம் ஜகதுத்பவ ஸ்திதி
ப்ரணாஶ ஸம்ஸார விமோசநாதய: |
பவந்தி லீலா விதயஶ்ச வைதிகா:
த்வதீய கம்பீர மநோநுஸாரிண: ||(ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் —20)
ப்ரஹ்மா முதலான உன் அடியார்களுக்கு இவ்வுலகைப் படைப்பது, காப்பது, அழிப்பது
மற்றும் இந்த ஸம்ஸாரத்தை கடக்க உதவுவதுஆகியவை எளிய விளையாட்டாக இருக்கும்;
வேதத்தின் விதிகளும் கூட உன்னுடைய அடியார்களின் ஆழமான நெஞ்சங்களையே தொடரும்.)
ஸ்வரூபம் ஆவது -ஸ்வம்மான ரூபம் -அதாவது -அசாதாரண ஆகாரம்
சென்று சென்று பரம் பரமாய் -என்றது
போய்ப் போய்ப் ஒன்றுக்கு ஓன்று மேலாய் இருக்கிற
அன்னமய
பிராணமய
மநோ மயங்களுக்கு
அவ்வருகாய் என்ற படி –
தேக இந்த்ரிய மநோ பிராண புத்தி விலஷணமாய்-என்கிற இடத்தில்
புத்தி சப்தத்தால்
மஹத் அனுக்ருஹீதமான அந்த கரணத்தைச் சொல்லுகிறதோ
ஜ்ஞானத்தை சொல்லுகிறதோ -என்னில்
இவருக்கு இங்கு விவஷிதம் ஞானம் ஆக வேண்டும்
தத்வ சேகரத்தில்
தேஹாதி வைலஷண்யம் அருளிச் செய்கிற இடத்தில்
அப்படி அருளிச் செய்கையாலே –
தேஹேந்தரிய மன பிராண தீப்யோந்ய (ஆத்ம ஸித்தி )-என்று இறே ஆளவந்தாரும் அருளிச் செய்தது-
———————————————————————————————
சூர்ணிகை -5
அவதாரிகை –
உத்தேசம் –
லஷணம் –
பரீஷை -என்று மூன்று வகைப் பட்டு இறே தத்வ நிர்ணயகரம் இருப்பது –
அதில் –
சித்தும் அசித்தும் ஈஸ்வரனும் -என்று தத்வ த்ரயத்தையும் உத்தேசித்து
உத்தேச க்ரமத்திலே
அவற்றினுடைய ஸ்வரூப சோதனம் பண்ணுவதாக நினைத்து
பிரதமத்திலே
சித் சப்தோதிஷ்டனான ஆத்மாவினுடைய ஸ்வரூப சோதனம் பண்ணுவதாக உபக்ரமித்து
தேக இந்த்ரிய மநோ பிராண புத்தி விலஷணமாய் -என்று தொடங்கி
சேஷமாய் இருக்கும் -என்னும் அளவாக
ஸ்வரூப லஷணத்தை அருளிச் செய்தார் –
அத்தைப் பரீஷிக்கிறார் மேல் –
அதில் பிரதமத்தில்
ஆத்ம ஸ்வரூபத்தின் யுடைய
தேஹாதி வைலஷனண்யத்தை சோதிப்பதாக
தஜ் ஜிஜா ஸூகளுடைய -ப்ரஸ்னத்தை-கேள்வியை
அநு பாஷிக்கிறார் –
ஆத்ம ஸ்வரூபம்
தேஹாதி விலஷணம்
ஆனபடி
என்
என்னில்-
இது தன்னை தத்வ சேகரத்தில்
இவர் தாமே விஸ்தரேண அருளிச் செய்கிறார் –
தேஹம் அநேக அவயவ சங்காதாத்மகம் என்னும் இடம் சித்தம் –
அதில் எல்லா அவயவங்களுக்கும் சைதன்யம் யுண்டாகில்
அநேக சேதனோ பலபதி பிரசங்கிக்கும்
அவயவங்களுக்கு அந்யோந்யம் அவிவாத நியமும்
அவற்றில் மமதா புத்தியும்
மமதா வ்யவஹாரமும் கூடாது
ஓர் அவயவத்துக்கே சைதன்யம் கொள்ளில்
அது விச்சின்னம் ஆனால் அவயவ அநந்தரம் அது அனுபவித்ததை ஸ்மரிக்கக் கூடாது
பின்பு அஹம் புத்தி வியவஹாரங்களும்
மமதா புத்தி வ்யவஹாரங்களும் தவிர வேணும் –
சர்வ சர்வ வ்யாபீயான ஸூக துக்க அனுபவமும் கூடாது-
அவயவ சங்காத் மகம் அன்று சரீரம்
அவயவி அதிலே சைதன்யம் என்னவும் ஒண்ணாது –
உப லம்ப அனுபத்திகள் இல்லாமையாலே அவயவ ஸ்வீகாரம் அனுபபன்னம் ஆகையாலே-
கிஞ்ச பால தேஹோஹம் மந்த ஞான யுவதே தேஹோஹம் பஹூ ஞான மம சரீரம் -என்று
சரீரம் அஹம் அர்த்தங்களில் பிறக்கும் பேத பிரதிபத்தியும்
பேத வ்யவஹாரமும் கூடாது –
மமாயமாத்மா -என்கிற இடத்தில் போலே அமுக்கியம் என்ன ஒண்ணாது –
முக்யே பாதம் இல்லாமையாலே –
அன்றிக்கே
அஹம் புத்திக்கு சரீரம் விஷயம் என்று கொண்டாலும்
ஸ்ருதியாலும்
ஸ்ருத்யர்த்தாபத்திகளாலும்
தேஹாதி ரிக்தனாய்
தேஹாந்தர பரிக்ரஹ யோக்யனான ஆத்மா சித்தன் –
பாஹ்ய இந்த்ரியங்களும் ஆத்மாவாக மாட்டாது -ஒருவனே சர்வ இந்த்ரியங்களையும் அறிகையாலே
இப்படிக் கொள்ளாத போது –
யாவன் ஒருவனான நான் இவ்வர்த்தத்தைக் கண்டேன் –
அந்த நானே ஸ்பர்சியா நின்றேன் -என்கிற பிரதி சந்தானமும் கூடாது –
சஷூஷே ஆத்மாவாகில் அந்தன் ரூபத்தை ஸ்மரியாது ஒழிய வேணும்
ஸ்ரோத்ரமே ஆத்மாவாகில் பதிரன் சப்தத்தை ஸ்மரியாது ஒழிய வேணும்
இப்படி மற்றை இந்த்ரியங்களிலும் கண்டு கொள்வது –
(இதுவரை சாருவாக மத கண்டனம்
மேலே சங்கர மத கண்டனம் )
அந்த கரணமும் ஆத்மா வாக மாட்டாது
ஸ்மார்த்தாவினுடைய ஸ்மராணாதி கார்யங்களுக்கு கரணமாக கல்பிதம் ஆகையாலே
இது தானே ஸ்மரிக்கிறது என்ன ஒண்ணாது
ஸ்மரணத்துக்கு கரணம் இல்லாமையாலே
கரணமும் இது தானே என்ன ஒண்ணாது –விருத்தம் ஆகையாலே
வேறே ஓன்று கரணம் என்னில் அது பாஹ்ய கரணமாகில்
அது இல்லாதவனுக்கு ஸ்மர்த்தி கூடாது
ஆந்தர கரணமாகில் ஆத்மாவுக்கு மனஸ் என்று பேரிட்டதாய் விடும்
ஆந்தர கரணம் அநபேஷிதம் ஆகில் இந்திரியார்த்தத சம்பந்தம் யுண்டான போது எல்லாம் ஜ்ஞானம் பிறக்க வேணும்
ஆகையால் மனசும் ஆத்மாவாக மாட்டாது
பிராணங்களும் ஆத்மா வாக மாட்டாது
சங்காத ரூபங்கள் ஆகையாலே தேஹம் ஆத்மா என்கிற பஷத்துக்கு
சொன்ன தூஷணங்கள் இங்கும் துல்யம்-
(மேலே பௌத்த மத கண்டனம் )
ஜ்ஞானமும் ஆத்மா வாக மாட்டாது
எனக்கு ஜ்ஞானம் பிறந்தது நசித்தது என்று ஷணிகமுமாய்
ஆத்ம தர்மமுமாய் தோற்றுகையாலே
ஸ்திரமாய் இருப்பான் ஒரு ஆத்மா உண்டு என்னும் இடம்
நேற்றுக் கண்ட நானே இன்றும் காணா நின்றேன் -என்கிற
பிரத்யபிஜ்ஞையாலே சித்தம் -என்று
இப்படி விஸ்தரேண அருளிச் செய்தார் இறே-
——————————————————————————
சூர்ணிகை -6-
அவதாரிகை –
இப்படித் தனித் தனியே எடுத்துக் கழிக்கும் அளவில் கிரந்த விஸ்தாரமாம் என்று
மந்த மதிகளுக்கும் பிரதிபத்தி யோக்யமாம் படி
தேஹாதிகளை சமுச்சித்யோ பாதானம் பண்ணி –
அவற்றில் காட்டில் ஆத்மாவுக்கு யுண்டான வைலஷண்யத்தை
சில உக்தி விசேஷங்களாலே ஸூக்ரஹமாக
அருளிச் செய்கிறார் –
தேஹாதிகள் -என்னுடைய தேஹாதிகள் -என்று-ஆத்மாவில் வேறுபட்டு தோற்றுகையாலும்
இதம் -என்று தோற்றுகையாலும்—ஆத்மா -நான் என்று தோற்றுகையாலும்
இவை ஒருகால் தோற்றி ஒரு கால் தோற்றாமையாலும்–ஆத்மா எப்பொழுதும் தோற்றுகையாலும்
இவை பலவாகையாலும்-ஆத்மா ஒருவன் ஆகையாலும்
ஆத்மா இவற்றில் விலஷணன் என்று-கொள்ள வேணும்
தேஹாதிகள் -என்னுடைய தேஹாதிகள்-என்று ஆத்மாவில் வேறுபட்டு தோற்றுகையாலும்
இதம் -என்று தோற்றுகையாலும் –
அதாவது
தேகாதிகள் ஆனவை என்னுடைய தேஹம் என்னுடைய இந்த்ரியம்
என்னுடைய மனசு என்னுடைய பிராணன் என்னுடைய புத்தி என்று
மமதா புத்திக்கும்
மமதா வ்யவஹாரத்துக்கும் விஷயமாய்க் கொண்டு
அஹமர்த்த பூதனான ஆத்மாவுக்கு அந்யமாய்த் தோற்றுகையாலும்
அப்படியே
இது தேஹம் இது இந்த்ரியம் -என்று இதம் புத்தி வ்யவஹார விஷயமாய்க் கொண்டு
அஹமர்த்த வ்யதிரிகதமாய்த் தோற்றுகையாலும்
அங்கன் அன்றிக்கே
ஆத்மா அஹம் அர்த்த பூதனாய்க் கொண்டு தோற்றுகையாலும் -என்றபடி –
இவை ஒருகால் தோற்றி ஒரு கால் தோற்றாமையாலும்
ஆத்மா எப்பொழுதும் தோற்றுகையாலும் –
இவை என்று தேக இந்த்ரியாதிகளை பராமர்சிக்கிறது
தேஹம் ஒரு கால் தோற்றி ஒரு கால் தோற்றாமை யாவது
ஜாக்ரத் தசையில் ஸ்தூலோஹம் க்ருசோஹம் இத்யாதிகளாலே
அஹம் புத்த்யா வ்யவஹார விஷயமாகக் கொண்டு
ஆத்மத்வேன தோற்றி இருந்ததே யாகிலும்
ஸூ ஷுப்தி தசையில் அப்படி தோற்றாது இருக்கை –
ஆத்மா எப்போது தோற்றுகையாவது
உறங்குவதற்கு முன்பு இவை எல்லாம் அறிந்து இருந்த நான்
உறங்குகிற போது என் உடம்பு உட்பட அறிந்திலேன் என்று
பிரத்யபிஜ்ஞ்ஞை பண்ணுகையாலே
உபய அவஸ்தையிலும் தேஹாத் யந்யனாய் இருப்பான் ஒரு ஆத்மா யுண்டு என்று தோற்றுகை –
அதவா
ஜனன மரண பாக்த்வத்தாலே தேஹம் ஒரு கால் தோற்றி ஒரு கால் தோற்றாமையாலும்
நான் ஜன்மாந்தரத்தில் பண்ணின வதினுடைய பலம் இது -என்கிற
லோக வ்யவஹாரத்தாலே
ஆத்மா ஜனன மரணாதி ரஹிதனாய்க் கொண்டு எப்போதும் தோற்றுகையாலே என்னவுமாம் –
அப்படியே
சஷூ ராதி ரூபேண தோற்றி இருக்கிற இந்த்ரியங்கள்
அந்த பதிராதி -குருடன் செவிடு – அவஸ்தைகளில் தோற்றாமையாலும் –
சங்கல்பாதி ஹேதுத் வேன தோற்றி இருக்கிற மனஸ்
ஒரு கால விசேஷங்களிலே மூடமாய்க் கொண்டு ஒன்றும் தோற்றாமையாலும்-
உச்வாச நிச்வாதிகளாலே தோற்றி இருக்கிற பிராணங்கள் ஒரோ மோஹ தசைகளிலே
நெற்றியைக் கொத்திப் பார்க்க வேண்டும்படி தோற்றாமையாலும் –
விஷய க்ரஹண வேளையில் பிரகாசிக்கிற ஞானம் விஷய கிரஹண் அபாவ தசையில் தோற்றாமையாலும்
இப்படி அன்றிக்கே
நான் கண்ணும் செவியும் முன்பு விளங்கி இருந்தேன்
இப்போதும் அந்தனும் பத்திரனும் ஆனேன்
முன்பு என்னுடைய மனஸ் விசதமாய் இருக்கும் இப்போது ஒன்றும் தெரிகிறது இல்லை
நான் அப்போது நிஷ் பிராணனாய்க் கிடந்தேன் -இப்போது ச பிராணன் ஆனேன்
எனக்கு அப்போது ஞானம் யுண்டாய் இருந்தது -இப்போது நசித்தது -என்று
இவை தோற்றின போதொடு தோன்றாத போதொடு வாசி அற
ஆத்மா எப்போதும் தோற்றுகையாலும்
இவை பலவாகையாலும் ஆத்மா ஒருவன் ஆகையாலும்
மீண்டும் இவை என்று தேஹாதிகளைப் பரமாசிக்கிறது –
தேஹத்துக்கு பன்மை அநேக அவயவ சங்காததம் ஆகையாலே
இந்திரங்களுக்கு பன்மை சஷூர் ஸ்ரோத்ராதி வ்யக்தி பேதத்தாலே
மனசுக்கு பன்மை மநோ புத்தி சித்த அஹங்கார ரூபமான பேதத்தாலே
பிராணனுக்குப் பன்மை பிராணாபாநாதி பேதத்தாலே
புத்திக்கு பன்மை கடஜ்ஞ்ஞான படஜ்ஞ்ஞாநாதி பேதத்தாலே
இப்படி
தேகாதிகள் ஓர் ஒன்றே பலவாகையாலும் –
இங்கன் அன்றிக்கே –
அஹம் புத்தி வ்யாவஹாராஹனான ஆத்மா ஒருவன் ஆகையாலும்
ஆத்மா இவற்றில் விலஷணன் என்று கொள்ள வேணும்
அதாவது
இப்படி தேஹாதி பிரகாரத்தையும் ஆத்மாவினுடைய பிரகாரத்தையும் நிரூபித்தால்
ஆத்மா தேகாதிகள் ஆனவற்றில் வேறு பட்டு இருப்பான் ஒருவன் என்று
அவஸ்யம் அங்கீ கரிக்க வேணும் -என்கை-
————————————————————————————————
சூர்ணிகை -7
அவதாரிகை –
இப்படி உக்தியாலே சாதிதமான அர்த்தத்தை
சாஸ்திர பலத்தாலே த்ருடீகரிக்கிறார்
இந்த உக்திகளுக்கு
கண் அழிவு யுண்டே யாகிலும்
சாஸ்திர பலத்தாலே
ஆத்மா -தேஹாதி விலஷணனாகக்
கடவன்
கண் அழிவு யுண்டே யாகிலும் -என்கையாலே
சர்வதா இதுக்கு கண் அழிவு சொல்ல ஒருவருக்கும் போகாது
அது தான் யுண்டாய்தாகிலும்
இவ்வாத்மா -ஸ்ருதி ஸ்ம்ருத்யாதி சகல சாஸ்திர சித்தம் ஆகையாலே
சாஸ்திர பலம் தானே இவ்வாதத்தை சாதிக்கும் என்று கருத்து –
பஞ்ச விம்சோயம் புருஷ –
பஞ்ச விம்ச ஆத்மா பவதி –
பூதாதி கவர்க்கேண சவர்க்கேண இந்திரியாணி ச
டவர்ர்ரக்கேண தவர்க்கேண ஞான கநாததயச ததா
மநா பகாரேணை வோகதம பகாரேண தவஹங்கருதி
பகாரேண பகாரேண மகான பரக்ருதி ருசயதே
ஆத்மா து ச மகாரேண பஞ்ச விம்சதி பரகீர்த்திதா
(பஞ்ச விம்சோயம் புருஷ –புருஷன் 25 வது தத்வம் ஆகிறான்
பஞ்ச விம்ச ஆத்மா பவதி –ஆத்மா 25 வது தத்வம் ஆகிறான்
பூதாதி கவர்க்கேண -க வரிசையால் உள்ள எழுத்துக்களால் பஞ்ச பூதங்களும்
சவர்க்கேண இந்திரியாணி ச-ச வரிசையில் உள்ள எழுத்துக்களால் கர்ம இந்திரியங்களும்
டவர்க்கேண தவர்க்கேண ஞான கநாததயச -ட வரிசை எழுத்துக்களால் ஞான இந்திரியங்களும்
ததா மநா பகாரேணை வோக்தம் -அப்படியே ப என்பதால் மனசும்
பகாரேண தவஹங்கருதி பகாரேண பகாரேண மகான பரக்ருதி ருசயதே-மீதம் உள்ள ப வரிசை எழுத்துக்களால் அகங்காரமும் மஹத் தத்துவமும் ப்ரக்ருதியும் கூறப்பட்டன
ஆத்மா து ச மகாரேண பஞ்ச விம்சதி பரகீர்த்திதா– ம என்பதால் 25 வது தத்துவமான ஆத்மா கூறப்பட்டான் -என்றும் )
ய பர ப்ரக்ருதோ ப்ரோக்த புருஷ பஞ்ச விம்சக
ச ஏவ சர்வ பூதாத்மா நர இதயபி தீயதே-
ஆத்மா சுத்த தோஷரச் சாந்தோ நிர்க்குண ப்ரக்ருதோ பரா-
ப்ரவிருததயபச யௌ ந சத ஏக சயாகி லஜத துஷூ பிண்ட
ப்ருதக் யத பும்சத சிர பாணாயாதி லஷண
தத அஹமி குத்ரைதாம் சம்ஜ்ஞாம் ராஜந் கரோம் யஹம் -ஜடபரதர் ரகுகுணன் சம்வாதம்
(ய பர ப்ரக்ருதோ ப்ரோக்த புருஷ பஞ்ச விம்சக ச ஏவ சர்வ பூதாத்மா நர இதயபி தீயதே–25 வது தத்துவமாக எந்தப் புருஷன் கூறப்பட்டானோ அவனே அனைத்து பூதங்களிலும் ஆத்மா எனப்படுகிறான் -என்றும்
ஆத்மா சுத்த தோஷரச் சாந்தோ நிர்க்குண ப்ரக்ருதோ பரா–ஆத்மா தூய்மையானவன்-அழிவற்றவன் -சாந்தமானவன் – மூன்று குணங்கள் அற்றவன் -சரீரத்தைக் காட்டிலும் வேறானவன் –
ப்ரவிருத்தய பச யௌந சத ஏகஸ் யாகில ஜந் துஷூ -அவனுக்கு வளர்த்தல் தேய்தல் இல்லை
பிண்ட ப்ருதக் யத பும்ஸச் சிரஸ் பாண்யாதி லஷண தத அஹமிதி குத்ரைதாம் ராஜந் கரோம்யஹம் —எந்த ஒரு
காரணத்தால் தலை கை கால் போன்ற உறுப்புக்கள் கொண்ட சரீரமானது ஆத்மாவைக் காட்டிலும் வேறானதாக உள்ளதோ
அந்தக் காரணத்தால் ஆத்மா என்று இதன் பெயரை எங்கு கூறுவேன் என்றும்
கிம் தவ மேதச் சிர கிம நு உர சதவ ததோ தரம கிமு பாதாதி கம தவமவை
தவைதத் கிம மஹீ பதே சமசதா வயவேபயச தவம ப்ருதக் பூப வ்யவஸ்தித
கோஹமிதயவ நிபுணோபூதவா சிந்தய பார்த்திவ–நீ இந்தத் தலையா அல்லது தலை உன்னுடையதா
நீ இந்த வயிறா அல்லது வயிறு உன்னுடையதா
நீ இந்தக் கால் ஒன்றவையா அல்லது இவை உன்னுடையதா –
நீ அனைத்தைக் காட்டிலும் வேறாக உள்ளாய் -நீ அனைத்தையும் அறிந்தவன் அன்றோ
அப்படி எனில் இவற்றில் நீ யார் என்று சிந்திப்பாய் -)
பஞ்சபூதாத் மகே தேஹே தேஹீ மோஹ தமோ வ்ருத
அஹம் மமை ததித் யுச்சை குருதே குமதிர் மதிம்
ஆகாசவாயு வக்நி ஜல ப்ருதிவீப்ய ப்ருதக் ஸ்திதே
அநாத் மந் யாத்ம விஞ்ஞானம் ந கரோதி களேபரே-என்று
(தூய்மையான ஜீவாத்மா -தீய புத்தி காரணமாக இருளால் சூழப் பட்டவனாக-
ஐந்து பூதங்களுடைய மாறுபாடாக உள்ள இந்தச் சரீரத்தில் நான் என்னுடையது என்று அகப்படுகிறான்
பஞ்ச பூதங்களைக் காட்டிலும் வேறாக ஆத்மா உள்ள போது
யார் இந்தச் சரீரத்தை ஆத்மா என எண்ணுவான் )
இப்படி ஸ்ருதி ஸ்ம்ருதியாதி சகல சாஸ்திர பிரதிபன்னமான
ஆத்மாவினுடைய தேஹாதி விலஷணத்வம் –
துர பன்னவம் என்று நினைத்து இறே
சாஸ்திர பலத்தாலே ஆத்மா தேஹாதி
விலஷணனாக கடவன் என்று ஸூ நிச்சயமாக அருளிச் செய்தது –
———————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply