சூர்ணிகை -77-
அவதாரிகை –
தத்வ த்ரயத்தில்
தத்வ த்ரயமாவது சித்தும் அசித்தும் ஈஸ்வரனும் -என்று உபதேசித்த க்ரமத்தில்
பிரதமம் சித் சப்த வாச்யனான ஆத்மாவினுடைய
ஸ்வரூப ஸ்வ பாவ விசேஷங்களை ஸ்புடமாக அருளிச் செய்தார் கீழ்
அநந்தரம்
அசித் வஸ்துவினுடைய ஸ்வரூப ஸ்வபாவ விசேஷங்களை அதி ஸ்புடமாக
அருளிச் செய்கிறார் —
அதில் பிரதமத்தில்
அசித் லஷணத்தை அருளிச் செய்கிறார் –
அசித்து
ஞான சூன்யமாய்
விகாராஸ்பதமாய்
இருக்கும் –
அதாவது –
அசித்தாகிறது -சைதன்ய அநாதாரமான வஸ்து இறே-
அது தன்னை அருளிச் செய்கிறார் -ஞான சூன்யமாய் -என்று –
அத்தைப் பற்றி இறே
ஸ்ருதி போக்ய சப்தத்தாலே அசித்தைச் சொல்லிற்று
விகாராஸ்பதம் ஆகையாவது –
விகாரத்துக்கு இருப்பிடமாய் இருக்கை
விகாரமாவது -அவஸ்த்தாந்தராபத்தி
அதாவது சித் ஸ்வரூபம் போலே சதைக ரூபமாய் இராது ஒழிகை-
————————————————————————————-
சூர்ணிகை -78-
இப்படி இதனுடைய லஷணத்தை அருளிச் செய்த
அநந்தரம் ‘
இவ் வசித்து தத்வம் தான்
சத்வ ஏகாதாரமாயும்
சத்வாதி குண த்ரய யாதாராமாயும்
சத்வாதி குண சூன்யமாயும்
மூன்று வகைப் பட்டு இருக்கும்படியை அருளிச் செய்கிறார் –
இது
சுத்த சத்வம்
என்றும்
மிஸ்ர சத்வம்
என்றும்
சத்வாதி சூன்யம்
என்றும்
த்ரிவிதமாய் இருக்கும் –
———————————————————-
சூர்ணிகை -79-
உத்தேசித்த க்ரமத்திலே அசித் தத்வத்தின்
ஸ்வரூப ஸ்வபாவ விசேஷங்களை பிரதிபாதிப்பதாக நினைத்து
பிரதமம் -சுத்த சத்வத்தின் படியை அருளிச் செய்கிறார் –
இதில் சுத்த சத்வமானது
ரஜஸ் தமஸ் ஸூக்கள் கலசாதே
கேவல சத்வமாய்
நித்தியமாய்
ஜ்ஞான ஆனந்த ஜனகமாய்
கர்மத்தால் அன்றிக்கே
கேவல பகவத் இச்சையாலே
விமான கோபுர மண்டப ப்ராஸாசாதி ரூபேண
பரிணமிக்கக் கடவதாய்
நிரவதிக தேஜோ ரூபமாய்
நித்ய முக்தராலும் ஈஸ்வரனாலும்
பரிச்சேதிக்க அரிதாய்
அதி அத்புதமாய்
இருப்பதொன்று –
அதாவது
சுத்த சத்வம் என்று
குணாந்தரம் கலசாத சத்வ குணத்தை யுடையது என்ற படி –
அத்தை அருளிச் செய்கிறார் –
ரஜஸ் தமஸ் ஸூக்கள் கலசாதே -கேவல சத்வமாய் -என்று
ஷயந் தமஸ்ய ராஜஸ பராகே -(ராஷசம் கலந்த இந்த லோகங்களைக் காட்டிலும் மேலே உள்ள பரமபதம் )என்றும்
தம ஸஸ்து பாரே (புருஷ ஸூக்தம் -தமோ குணம் நிறைந்த லோகத்துக்கு அப்பால் )என்றும்
பஞ்ச சக்தி மயே திவ்யே ஸூத்த ஸத்வே ஸூ காகாரே -(தை -2-11-)
(ஐந்து சக்திகளை தனக்கு இயல்பாகக் கொண்டதும் -ஸூகத்துக்கே இருப்பிடமாகவும் தெய்வீகமாகவும் –
ஸூத்த ஸத்வமாயும் உள்ளதுமாகிய பரமபதம் ) என்றும்
ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் இப்படி சொல்லா நின்றது இறே-
நித்தியமாய் -அதாவது
அநாதி நிதநமாய் இருக்கை-
தத ஷரே பரமே வயோமந் (தை -2-12-அந்த வஸ்துவானது அழிவற்ற பரம பதத்தில் உள்ளது ) என்றும் –
காலாதீதம் அநாத்யந்தம் அப்ராக்ருதம் அசஞ்சலம் ப்ராப்யம் அர்ச்சி பதாத் சத்பிர் மயி சம்ந்யஸ் தமா நசை –
(எந்த ஒரு பரமபதமானது அனைத்துக் காலங்களுக்கும் அப்பால் பட்டதும் –
தொடக்கம் மற்றும் முடிவு அற்றதாகவும் -என்னிடம் அசையாத மனதைச் செலுத்தியவர்களாய்
அர்ச்சிராதி மார்க்கமாக அடையப்படுவதாகவும் உள்ளதோ )-என்றும்
யத் தத் புராண மாகாசம் சர்வஸ்மாத் பரமம் த்ருவம் யத் பதம் ப்ராப்ய தத்வஜ்ஞ்ஞா முஸ்யந்தே சர்வ கில்பிஷை –
(எந்த ஒரு பரம பதமானது மிகவும் புராணமாகவும் -பரமாகாசம் என்று கூறப்படுவதாகவும் –
அனைத்தைக் காட்டிலும் உயர்ந்ததாகவும் நித்யமாகவும் உள்ளதோ
எத்தனை அடைந்த தத்வ ஞானிகள் தங்கள் பாபங்கள் அனைத்தையும் விடுகிறார்களோ )என்றும்
இதனுடைய நித்யத்வம் ஸ்ருதி ஸ்ம்ருதிகளிலே சொல்லப் பட்டது –
ஜ்ஞான ஆனந்த ஜனகமாய் –
சுத்த சத்வம் ஆகையாலே ஜ்ஞான ஆனந்த ஜனகமாய் இருக்கும் இறே
சத்வம் -ஜ்ஞான ஸூகாவஹமாய் இறே இருப்பது
ஆகை இறே சுத்த சத்வே -என்ற அனந்தரத்திலே-ஸூகாகரே -என்றது
கர்மத்தால் அன்றிக்கே கேவல பகவத் இச்சையாலே
விமான கோபுர மண்டப பராசாசாதி ரூபேண பரிணமிக்கக் கடவதாய் –
அதாவது —
சேதனன் கர்ம அனுகுணமாக இச்சிக்க
அந்த இச்சா குணமாக பகவத் சங்கல்பத்தாலே
சதுர விம்சதி தத்வமாய்க் கொண்டு பரிணமித்து
சேதனர்க்கு போக்ய போக உபகரண போக ஸ்தானங்கள் ஆகிற பிரகிருதி தத்வம் போல் அன்றிக்கே
ஸ்வ போகார்த்தமாக உண்டான பகவத் இச்சையாலே
விமான கோபுராதி ரூபேண பரிணமியா நிற்கும் -என்கை-
தேவா நாம் பூரயோத்யா தஸ்யாம் ஹிரண்மய கோச யோ வை காம ப்ரஹ்மணோ வேத அம்ருதே நாவ்ருதாம் புரீம் –
(தேவர்களுடைய அந்த நகரமானது அயோத்யை என்னும் பெயர் கொண்டதாக உள்ளது –
அங்கே ஸ்வர்ண மயமாக உள்ள நிதி உள்ளது -எந்த ஒருவன் ப்ரஹ்மத்தின் அமிர்தத்தால் சூழப்பட்ட
அந்த நகரத்தை அறிகிறானோ ) என்றும்
அபராஜிதா பூர் ப்ரஹ்மணா (அந்த நகரமானது யாராலும் வெல்லப்பட இயலாதது ) என்றும்
ப்ரஜாபதேஸ் சபாம் வேஸ்ம ப்ரபத்யே (சாந்தோக்யம் -8-14-1-அந்த உபாசகன் சபையில் உள்ளே புகுகிறான் ) என்றும்
ஸ்ருதியிலும் சங்ரஹேண நித்ய விபூதியில் யுண்டான
திவ்ய நகர திவ்ய ஆயத நாதிகள் சொல்லப் பட்டது –
இது தன்னை ஸ்ரீ பாஷ்யகாரர் ஸ்ரீ வைகுண்ட கத்யத்திலே
திவ்யாவரண சத சஹஸ்ராவ்ருதே திவ்ய கல்பக தரூப சோபிதே திவ்ய உத்யான
சத சஹஸ்ர கோடி பிராவ்ருதே அதி ப்ரமாணே திவ்ய ஆயதனே கஸ்மிம் ச்சித் விசித்ர
திவ்ய ரத்னமய திவ்ய ஆஸ்தான மண்டபே –
(திவ்யமான நூறாயிரம் மதிள்களாலே சூழப்பட்டும் -திவ்யமான கற்பக மரம் கொண்டும் –
திவ்யமான நூறாயிரம் கோடி நந்தவனங்கள் உள்ளதாகவும் அளவிடப்பட இயலாதபடியும் -உள்ள திவ்யமான இடத்தில்
விசித்திரமான திவ்ய இரத்தின மயமான உள்ள திரு மா மணி மண்டபத்தில் )என்று
தொடங்கி விஸ்தரேண் அருளிச் செய்தார் இறே-
நிரவதிக தேஜோ ரூபமாய் –
அதாவது –
அக்னி ஆதித்யாதி தேஜ பதார்த்தங்களையும்
கதயோத் கல்பமாக்கும் படி அளவிறந்த தேஜஸே வடிவாய் இருக்கை –
ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ர தாரகம் நேமா வித்யுதோ பாந்தி குதயோம் அக்நி -(கட உபநிஷத் )
(ப்ரஹ்மத்திடம் ஆதித்யன் பிரகாசிப்பது இல்லை -சந்திரனும் தாரகைகளும் பிரகாசிப்பது இல்லை
மின்னலும் அக்னியும் பிரகாசிப்பது இல்லை )என்னக் கடவது இறே
அத்யர்காநல தீப்தம் தத் ஸ்தாநம் விஷ்ணோர் மகாத்மன ஸ்வயைவ ப்ரபயா ராஜந்
துஷ் ப்ரேஷம் தேவ தாந வை(மஹா பாரதம் )
(ஸூர்யன் சந்திரன் மற்றும் அக்னி ஆகியவற்றைக் காட்டிலும் கோடி ஆதித்யனைப் போன்று
ஒளியுடன் கூடிய மஹா விஷ்ணுவின் பரமபதம் எனக் கொண்டாடப்படும் இடமானது
தனது தேஜஸ்ஸால் தேவர்கள் மற்றும் அஸூரர்களால் காணப்பட இயலாதபடி உள்ளது )
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதி -என்றும்
சுழி பட்டோடும் சுடர் சோதி வெள்ளம்-என்றும்
விளங்கும் சுடர்ச் சோதி -என்றும்
ஆழ்வாரும் இதனுடைய நிரவதிக தேஜோ ரூபத்தை பல இடங்களிலும் அருளிச் செய்தார் இறே-
நித்ய முக்தராலும் ஈஸ்வரனாலும் பரிச்சேதிக்க அரிதாய் –
அதாவது –
இதனுடைய பரிமாணாதிகள் ஒருவராலும் அளவிட ஒண்ணாத படி இருக்கும் ஆயிற்று
தேஷாமபி இயத் பரிமாணம் இயத் ஐஸ்வர்யம் ஈத்ருச ஸ்வ பாவமிதி பரிச்சேத்தும் அயோக்ய
(நித்ய ஸூரிகளாலும் கூட இத்தகைய அளவு கொண்டது இத்தகைய ஐஸ்வர்யம் கொண்டது
இப்படிப்பட்ட இயல்பு கொண்டது என உரைக்க இயலாது -)-என்று
நித்யரால் பரிச்சேதிக்க ஒண்ணாத படி ஸ்ரீ வைகுண்ட கத்யத்திலே ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்த இது
முக்தருக்கும் ஒக்கும் இறே
ஈஸ்வர ஞானந்தோ பாதி இவர்களுடைய ஞானத்துக்கும்
சர்வ தர்சித்வம் யுண்டாகையாலே
அவனால் பரிச்சேதிக்கலாம் ஆகில் இவர்களாலும் பரிச்சேதிக்கலாம் இறே
ஆகையால் அவனுக்கும் அரிது என்கை –
ஆனால் இவர்களுடைய சர்வஞ்ஞதைக்கு கொத்தை வாராதோ என்னில் வாராது
சர்வஞ்ஞதை யாவது சர்வத்தையும் உள்ளபடி அறிகை இறே
பரிச்சேத்யமாகில் பரிச்சேதித்து அறிகையும்
அபரிச்சேத்யமாகில் அப்படி அறிகையும் இறே உள்ளது
சீமை இல்லாத ஒன்றுக்கு சீமை அறியாமை சர்வஞ்ஞதைக்கு அனுகுணம் என்னும் இடம்
தேவி த்வத் மஹிம் அவதிர் ந ஹரிணா ந அபி த்வயா ஜ்ஞாயதே
யத் யபி ஏவம் அத அபி ந ஏவ யுவயோ சர்வஜ்ஞதா ஹீயதே
யத் ந அஸ்தி ஏவ தத் அஜ்ஞாதம் அனு குணாம் சர்வஞ்ஞதா விதுர்
வயோம அம் போஜம் இதந்தயா கில விதன் ப்ராந்த அயம் இதி யுச்யதே -என்று ஸ்ரீ ஸ்தவத்திலே (8)
(ஹே ஸ்ரீ ரெங்க நாச்சியாரே -உன்னுடைய மேன்மையின் எல்லையானது ஸ்ரீ ரெங்க நாதனாலும் அறியப் படுவது இல்லை
உன்னாலும் உனது மேன்மையானது எத்தன்மையது என்று அறியப்படுவது இல்லை
இப்படி இருந்தாலும் நீங்கள் இருவரும் அனைத்தையும் அறியும் தன்மையில் எந்தவிதமான குறையும் இல்லாமல் உள்ளீர்கள்
இதன் காரணம் எந்த ஒரு பொருளானது இல்லவே இல்லை என்பதை உணர்ந்து
அதனை அறிந்து கொள்ள முயலாமல் இருப்பதையே அனைத்தும் அறிந்த தன்மையாகச் சான்றோர்கள் அறிகிறார்கள்
முயல் கொம்பு ஆகாயத் தாமரை ஆகியவற்றை உள்ளதாக அறிபவன் பைத்தியக்காரன்
என்றே உலகத்தினரால் கூறப்படுகிறான் ) என்று ஆழ்வானும் அருளிச் செய்தார் –
இங்கன் அன்றாகில்
தனக்கும் தன தன்மை அறிவரியான் (திருவாய்-8-4-6 )-என்கிற இதுவும்
சர்வஞ்ஞதையோடு விரோதிக்கும் ஆகையால்
நித்ய முக்த ஈஸ்வரகளால் அபரிச்சேத்யம் என்கிற இதில் குறை இல்லை
இத்தால் இதனுடைய வைபவம் சொன்னபடி
அதி அத்புதமாய் இருப்பதொன்று –
அதி அத்புதமாவது –
அநு ஷணம் அபூர்வ ஆச்சர்யா வஹத்வம்
அநந்த ஆச்சர்ய அநந்த மஹா விபவ ( கத்யத்தில் எல்லையற்ற வியப்பும் பெருமையும் கொண்ட)
என்றார் இறே ஸ்ரீ பாஷ்ய காரர்
ஆக
சுத்த சத்வமாவது இப்படி இருப்பது ஓன்று என்றது ஆயிற்று –
————————————————————
சூர்ணிகை -80-
இத்தை சிலர்
ஜடம் என்றார்கள்
சிலர்
அஜடம் என்றார்கள் –
அதாவது
சுத்த சத்வம் தன்னை
இந்த தர்சனஸ்தர் தங்களிலே
சிலர் ஜடம் என்றார்கள்
அங்கன் அன்றிக்கே
சிலர் அஜடம் என்று சொன்னார்கள் என்கை
இஹ ஜடா மாதிமாம் கேசி தாஹூ-(தத்வ முக்த கலாபத்திலே )
(முதலாவதாக ஸூத்த ஸத்வத்தை ஜடம் என்று சிலர் கூறுகிறார்கள் )என்று இறே
அபி உக்தரும் (ஸ்ரீ வேதாந்த தேசிகரும் )சொல்லிற்று-
——————————————————–
சூர்ணிகை -81-
ஜடம் ஆகையாவது ஸ்வயம் பிரகாசம் இன்றிக்கே இருக்கை
அஜடமாகை யாவது ஸ்வயம் பிரகாசமாய் இருக்கை –
அத்தை அருளிச் செய்கிறார் –
அஜடமான போது
நித்யருக்கும்
முக்தருக்கும்
ஈஸ்வரனுக்கும்
ஜ்ஞானத்தை ஒழியவும்
தோற்றும் –
அதாவது –
அஜடம் ஆனபோது என்றது -ஜடம் என்றும் ஒரு பஷம் சொல்லுகையாலே
அப்படி அன்றிக்கே
இப்படியான போது -என்றபடி –
அந்த பஷத்தை விட்டு இத்தை உபபாதிக்கையாலே
இவர் தமக்கு இதுவே திரு உள்ளம் என்று தோற்றா நின்றது இறே
ஜ்ஞானத்தை ஒழியவும் தோற்றும்-என்றது
ஜ்ஞானத்தாலே தன்னை அறிய வேண்டாதபடி தானே பிரகாசிக்கும் என்றபடி –
———————————————————-
சூர்ணிகை -82-
இப்படி ஸ்வயம் பிரகாசமாய் இருக்குமாகில்
சம்சாரிகளுக்கு ஜ்ஞான வேத்யம் ஆகவேன்டாதே
தானே தோற்ற வேண்டாவோ -என்கிற சங்கையில் அருளிச் செய்கிறார் –
சம்சாரிகளுக்குத்
தோற்றாது –
அதாவது
இது தான் அபி உக்தராலே விஸ்தரேண பிரதிபாதிக்கப் பட்டது-
எங்கனே என்னில்
த்ரிவித அசேதனங்கள் -என்று எடுத்து
அவற்றில் பிரக்ருதியும் காலமும் ஜடங்கள்
சுத்த சத்வமான த்ரவத்தையும் ஜடம் என்று சிலர் சொல்லுவார்கள்
ஜடத்வமாவது ஸ்வயம் பிரகாசம் அன்றிக்கே இருக்கை
பகவத் சாஸ்த்ராதி பராமர்சம் பண்ணினவர்கள் (பாஞ்சராத்ராதி ஆகமங்களை ஆராய்ந்து கற்றவர்கள் )
ஜ்ஞானாத் மகத்வம் சாஸ்திர சித்தம் ஆகையாலே
சுத்த சத்வ த்ரவ்யத்தை ஸ்வயம் பிரகாசம் என்பார்கள் –
இப்படி ஸ்வயம் பிரகாசம் ஆகில் சம்சாரிகளுக்கு சாஸ்திர வேத்யமாக வேண்டாதே
தானே தோற்ற வேண்டாவோ -என்னில் –
சர்வாத்மாக்களுடையவும் ஸ்வரூபமும் தர்ம பூத ஞானமும்
ஸ்வயம் பிரகாசமாய் இருக்க
ஸ்வரூபம் தனக்கே ஸ்வயம் பிரகாசமாய்
வேறே எல்லாருக்கும் ஞானாந்தர வேத்யமானாப் போலேயும்
தர்ம பூத ஞானமும் ஸ்வ ஆஸ்ரயதுக்கே ஸ்வயம் பிரகாசமாய்
இதரருக்கு ஸ்வயம் பிரகாசம் அல்லாதாப் போலேயும்
இதுவும் நியத விஷயமாக ஸ்வயம் பிரகாசமானால் விரோதம் இல்லை –
யோ வேத்தி யுகபத் சர்வம் பிரத்யஷேண சதா ஸ்வத
தம் பிரணம்ய ஹரிம் சாஸ்திரம் ந்யாய தத்வம் ப்ரசஷமஹே (நியாய தத்வ மங்கள ஸ்லோகம் )
(எந்த ஒரு சர்வேஸ்வரனை அனைத்தையும் ஒரே நேரத்தில் தனது ஸ்வ பாவம் காரணமாக அறிகிறானோ
அப்படிப்பட்ட ஹரியை வணங்கிவிட்டு இந்த நியாய தத்வ சாஸ்திரத்தைக் கூறுகிறோம் )-என்கிறபடியே
தர்ம பூத ஞானத்தாலே சர்வத்தையும் சாஷாத் கரித்து கொண்டு இருக்கிற ஈஸ்வரனுக்கு
சுத்த சத்வ த்ரவ்யம் ஸ்வயம் பிரகாசமாய் இருக்கிறபடி எங்கனே -என்னில்
இவனுடைய தர்ம பூத ஞானம் திவ்ய ஆத்ம ஸ்வரூபம் முதலாக சர்வத்தையும் விஷயீ கரியா நிற்க
திவ்யாத்ம ஸ்வரூபம் ஸ்வயம் பிரகாசமாய் இருக்கிறாப் போலேயும்
இதுவும் ஸ்வயம் பிரகாசமாய் இருக்கலாம்
இப்படி நித்யருக்கும் துல்யம்
விஷய பிரகாச காலத்திலே தர்ம பூத ஞானம் ஸ்வ ஆஸ்ரயத்துக்கே ஸ்வயம் பிரகாசமாக ஆனால் போலே
முக்தாக்களுக்கும் அவ்வவஸ்தையிலே இது ஸ்வயம் பிரகாசம் ஆனால் விரோதம் இல்லை –
தர்ம பூத ஞானத்தின் யுடைய ஸ்வயம் பிரகாசன சக்தியானது
விஷய பிரகாசம் இல்லாத காலத்திலே கர்ம விசேஷங்களாலே பிரதிபத்தை ஆனால் போலே
சுத்த சத்வத்தினுடைய ஸ்வாத்ம பிரகாசன சக்தியும் பத்த தசையில் பிரதிபததை யாகையாலே
சுத்த சத்வம் பத்தருக்கு பிரகாசியாது ஒழிகிறது-
தியஸ் ஸ்வயம் பிரகாசத்வம் முக்தௌ ஸ்வா பாவிகம் யதா
பத்தே கதாசித் சம் ருத்தம் ததா அத்ராபி நியம்யதே –
(மோக்ஷ காலத்தில் தானாக வெளிப்படும் தர்மபூத ஞானமானது சம்சார காலத்தில் சில நேரங்களில் தடைப்பட்டு உள்ளது
இதே போன்றே சுத்த ஸத்வ விஷயத்திலே கொள்ள வேண்டும்)
இவ்வளவு அவஸ் தாந்தரா பத்தி விகாரி த்ரவ்யதுக்கு விருத்தம் அன்று
ஆகையாலே பிரமாண ப்ரதி பந்நார்த் த்துக்கு யுக்தி விரோதம் சொல்ல வழி இல்லை -என்று
இப்படி ரஹஸ்ய த்ரய சாரத்திலே பிரதிபாதிக்கையாலே –
————————————————————————————–
சூர்ணிகை -83-
கீழே ஆத்மாவும் அஜடமாய்
ஞானமும் அஜடமாய் இருக்கச் செய்தே
அந்யோந்யம் பின்னம் என்னுமத்தை தர்சிப்பித்தால் போலே
சுத்த சத்வமும் அஜடமாய் இருக்கச் செய்தே
இவை இரண்டிலும் பின்னமாய் இருக்கப் படியை
தர்சிப்பிக்கைக்காக
தஜ் ஜிஜ்ஞ்ஞா ஸூபிரசனத்தை அனுவதிக்கிறார் –
ஆத்மாவிலும்
ஜ்ஞானத்திலும்
பின்னமான படி
என் -என்னில்
—————————————
சூர்ணிகை -84-
அநேக ஹேதுக்களால் அது தன்னை தர்சிப்பிக்கிறார் –
நான் என்று தோற்றாமையாலும்
சரீரங்களாய் பரிணமிக்கையாலும்
விஷயங்களை ஒழியவும் தானே தோற்றுகையாலும்
ஸப்த ஸ்பர்சாதிகள் யுண்டாகையாலும்
பின்னமாகக் கடவது –
அதாவது
ஆத்ம வஸ்து பிரத்யக் ஆகையாலே
அஹம் என்று பிரகாசியா நிற்கும் –
இது பராக் ஆகையாலே இதம் என்று இறே பிரகாசிப்பது
இத்தால் ஆத்மாவில் பின்னம் என்றபடி-
சரீராதிகளாய் பரிணமிக்கையாலே ஆத்மாவிலும் ஞானத்திலும் இரண்டிலும் பின்னம் என்றபடி
ஏக ரூபன் ஆகையாலே ஆத்மாவுக்கு பரிணாமம் இல்லை இறே
ஞானத்துக்கு பரிமாணம் யுண்டாகையாலும் சரீராதிகளாய் பரிணமிதியாது இறே
விஷய நிரபேஷமாக பிரகாசிக்கையாலும் சப்த ஸ்பர்சாதிகளுக்கு ஆஸ்ரயம் ஆகையாலும்
விஷய சந்நிதியில் ஒழிய பிரகாசிப்பிததும் செய்யாதே
சப்தாதி ஆஸ்ரயமும் இன்றிக்கே
தத் க்ராஹமாய் இருக்கிற ஜ்ஞானத்தில் பின்னம் -என்றபடி –
———————————————————————–
சூர்ணிகை -85-
ஆக இப்படி சுத்த சத்வத்தின் யுடைய பிரகாரத்தை அருளிச் செய்தாராய் நின்றார் கீழ்
அநந்தரம் ‘
மிஸ்ர சத்வ பிரகாரத்தை அருளிச் செய்வதாக –தொடங்குகிறார் –
மிஸ்ர சத்வமாவது
சத்வ ரஜஸ் தமஸ் ஸூ க்கள் மூன்றோடும் கூடி
பத்த சேதனருடைய
ஜ்ஞான ஆனந்தங்களுக்கு திரோதாயகமாய்
விபரீத ஜ்ஞான ஜநகமாய்
நித்தியமாய்
ஈஸ்வரனுக்கு க்ரீடா பரிகரமாய்
பர தேச பேதத்தாலும்
கால பேதத்தாலும்
சத்ருசமாயும்
விஸ்த்ருசமாயும்
இருக்கும் விகாரங்களை யுண்டாக்கக் கடவதாய்
பிரகிருதி அவித்யை மாயை என்கிற
பேர்களை யுடைத்தாய் இருக்கும்
அசித் விசேஷம் –
அதாவது –
மிஸ்ர சத்வமாவது -சத்வ ரஜஸ் தமஸ் ஸூ க்கள் மூன்றோடும் கூடி –
ரஜஸ் தமஸ் ஸூ க்களோடு கூடின சத்வ குணத்தை யுடைத்தானது –
திரிகுணம் தஜ் ஜகத் யோ நிரநாதி ப்ரபவாப் யயம் (ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-23-)
மூன்று குணங்களுடன் கூடிய ப்ரக்ருதியானது இந்த ஜகத்தின் பிறப்பிடமாக அநாதியாக உள்ளது -)-என்றும்
திரிகுணம் கர்மிணாம் ஷேத்ரம் ப்ரக்ருதே ரூபமுச்யதே (பரம ஸம்ஹிதை )
(மூன்று குணங்களுடன் கூடிய இந்த சரீரமானது கர்மங்கள் அனைத்தையும் அனுபவிக்க வல்ல
ரூபமாக உள்ளது என ப்ரக்ருதியானது கூட்டப்படுகிறது )-என்றும்
சத்வம் ரஜஸ் தம இதி குணா பரக்ருதி சம்பவா (ஸ்ரீ கீதா -14-5 )
*ஸத்வம் ரஜஸ் தமஸ் என்பதாக உள்ள பிரக்ருதியில் உண்டான மூன்று குணங்களும் )-என்னக் கடவது இறே-
பத்த சேதனருடைய ஜ்ஞான ஆனந்தங்களுக்கு திரோதாயகமாய் –
குண த்ரயாத்மகமாய் இருக்கையாலே
ரஜஸ் தம அம்சத்தாலே ஜ்ஞாநாதிகளுக்கு திரோதானத்தைப் பண்ணும் என்கை-
சேதனருடைய ஞானானந்தங்களுக்கு த்ரோதாயகம் என்று சாமானாயேன சொல்லாதே
பக்த சேதனருடைய -என்று விசேஷிக்கையாலே
கர்ம சம்ஸ்ருஷ்டரான சேதனருடைய ஞானாதிகளுக்கே அது திரோதாயகம் -என்றபடி
அல்லது ஐச்கிகமாக ப்ராக்ருத சரீரம் பரிக்ரஹம் பண்ணுகிற நித்ய முக்தருடைய
ஜ்ஞாநாதிகளுக்கும் இது சங்கோசத்தைப் பண்ண வேண்டி வரும் இறே –
ஆகையாலே –
அசஹ்ருத சஹஜ தாஸ்ய ச ஸூரய ச ஸ்ரஸ்ச பந்தா விமல சரம தேஹா இதி
அமீ ரங்க தாமே மஹித மனுஜ திர்யக் ஸ்தாவரத்வா ஸ்ரயந்தே (ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -1-33 )
கைங்கர்ய ஸ்ரீயை இயற்கையாக யுடைய நித்ய ஸூரிகள் -சம்சார பந்தத்தில் இருந்து விடுபட்ட முக்த ஜீவன்கள்
மற்றும் அடுத்த பிறவிகள் இனி இல்லை என்பது போன்ற முமுஷுக்கள் ஆகிய அனைவரும்
மனிதப்பிறவி பசு முதலான பிறவி ஸ்தாவரங்களான பிறவி முதலானவற்றை ஏற்று ) -என்கிறபடியே
நித்ய முக்தரும் இங்கே வந்து பராக்ருத தேஹங்களைப் பரிகிரஹித்து
சேஷிக்கு அதிசயத்தைப் பண்ணும் அளவில் அவர்களுக்கு இது சங்கோசத்தைப் பண்ணாமையாலே
பத்த சேதனருடைய ஜ்ஞானாதிகளுக்கே இது திரோதயம் என்னும் இடம் சித்தம் –
அநீசயா சோசதி முஹ்யமான (முண்ட -3-1-2-ப்ரக்ருதியால் மறைக்கப்பட்டு )-என்றும்
அநாதி மாயயா ஸூப்த (மாண்டூக்யம் -எல்லை யற்ற காலமாகத் தொடரும் மாயையால் மயக்கம் கொண்டு )-என்றும்
பகவந் மாயா திரோஹித ஸ்வ பிரகாச (கத்யம் -பகவானுடைய மாயையால் மறைக்கப்பட்ட ஸ்வரூபம் கொண்டவனாக )-என்னக் கடவது இறே-
விபரீத ஜ்ஞான ஜநகமாய்-
அதாவது –
அதஸ்மின் தத் புத்தி
அநாத்மாவான தேஹத்தில் ஆத்ம புத்தியும்
அஸ்வதநதரமான ஆத்ம வஸ்துவில் ஸ்வ தந்திர புத்தியும்
அந்ய சேஷமானவது தன்னில் அந்ய சேஷத்வ புத்தியும்
அநீஸ்வரானவர்கள் பக்கலில் ஈஸ்வர புத்தியும்
அபுருஷார்த்தமான ஐஸ்வர்யாதிகளிலே புருஷார்த்தவ புத்தியும்
அனுபாயங்கள் ஆனவற்றில் உபாயத்வ புத்தியும்
தொடக்கமானவை –
யதா ஜ்ஞானத்தை மறைக்கும் அளவு அன்றிக்கே
இப்படி இருந்துள்ள விபரீத ஜ்ஞானங்களையும்
பத்த சேதனருக்கு யுண்டாக்கா நிற்கும் ஆயிற்று –
பகவத் ஸ்வரூப திரோதா நகரீம் விபரீத ஜ்ஞான ஜகநீம் (கத்யம் -)
(பகவானுடைய ஸ்வரூபத்தை மறைப்பதாகவும்
விபரீத ஞானத்தைப் பிறக்கச் செய்வதாகவும் உள்ள பிரகிருதி )-என்று இது தன்னை
ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்தார் இறே –
நித்தியமாய் –
அதாவது –
உத்பத்தி விநாச ரஹிதமாய் இருக்கை
அஜாம் ஏகாம் (பிறப்பு ஏற்றதும் ஒன்றாக உள்ளதுமான பிரகிருதி ) -என்றும்
கௌர நாத் யந்தவதீ சா ஜநித்ரீ பூத பாவிநீ
(ப்ரக்ருதி தொடக்கம் முடிவு அற்றது -கண்களுக்குத் தென்படாதவற்றையும் தென்படுவதையும் உண்டாக்குகிறது )-என்றும்
அசேதனா பரார்ததா ச நித்யா சதத விக்ரியா (பரம சம்ஹிதை )
அழிவற்றதும் மற்றவர் களுக்காகவே உள்ளதும் நித்யமானதும் மாற்றம் யுடையதாயும் ) -என்றும்
விகார ஜநநீம் அஜ்ஞ்ஞாம் அஷ்ட ரூபாம் அஜாம் த்ருவாம்
(மாற்றத்துக்கு இடமாகாவு எட்டு உருவம் கொண்டதாகவும் பிறப்பு அற்றதாகவும் ஞானம் அற்றதாகவும் உறுதியானதாகவும் )-என்றும்
சொல்லக் கடவது இறே –
ஈஸ்வரனுக்கு க்ரீடா பரிகரமாய் –
அதாவது –
சர்வேஸ்வரனுடைய ஜகத் ஸ்ருஷ்ட்யாதி லீலைக்கு உபகரணமாய் இருக்கை –
க்ரீடதோ பாலகஸ்யேவ சேஷ்டாம் தஸ்ய நிசாமய (ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-12-18-)
(விளையாடி மகிழும் பாலர்கள் போன்று மஹா விஷ்ணுவின் லீலைகளைக் காண்பாய் )-என்றும்
அப்ரமேயோ நியோஜ் யச்ச யத்ர கர்ம காமோ வசீ மோததே பகவான் பூதைர் பால கிரீடந கைரிவ-(ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-12-20)
அளவிட இயலாதவனும் அனைத்து விதமான இன்பங்களை அடையப் பெற்றவனும் -அனைவரையும் வசப்படுத்துபவனும் –
ஆகிய பகவான் இவை அனைத்தையும் சிறுவர்கள் உபயோகிக்கும் விளையாட்டுக் கருவிகள் போலே பயன்படுத்துகிறான் -)என்றும்
த்வம் ந்யஞ்சத் ப்ருதஞ்சத்பி காம ஸூத்ரோ பபாதிதை ஹரே விஹரசி க்ரீடா கந்துகை ரிவ ஜந்துபி (ஸ்ரீ விஷ்ணு தர்மம் )
(தாழ்ந்தும் உயர்ந்தும் காணப்படுவதன் வினைகள் என்ற கயிறு கொண்டு கட்டப்பட்ட இந்த மனிதர்களைப்
பந்தாகக் கொண்டு நீ விளையாடுகிறாய் )-என்றும்
சொல்லப் படுகிற சர்வேஸ்வரனுடைய லீலைக்கு
குண த்ரையாத்மகமான பிரகிருதி இறே பிரதான உபகரணம்
சிதா சிதா ச ரக்தா ச சர்வ காம துகா விபோ
(வெண்மையும் கறுமையும் சிவந்தும் உள்ள பிரக்ருதியானது பகவானுக்கு இன்பம் அளிப்பதாக உள்ளது )-என்னக் கடவது இறே –
தைவி ஹயேஷா குணமயீ-(ஸ்ரீ கீதை -7-14–எனது இந்த மூன்று குணங்கள் ) என்று தானே அருளிச் செய்தான் இறே –
பிர தேச பேதத்தாலும் கால பேதத்தாலும் சத்ருசமாயும்
விஸ்த்ருசமாயும் இருக்கும் விகாரங்களை யுண்டாக்கக் கடவதாய் –
பிரதேச பேதமாவது-
குண வைஷம்யம் இல்லாத பிரதேசமும்
குண வைஷம்யம் உள்ள பிரதேசமும்
இது தனக்கு குண வைஷம்யம் உள்ளது கார்ய உந்முகமான ஸ்தலத்திலே இறே
அல்லாத இடம் எல்லாம் குண சாம்யா பன்னமாய் இருக்கும் அத்தனை –
அதில் குண வைஷம்யம் இல்லாத இடம் சத்ருச விகாரமாய் இருக்கும்
வைஷம்யம் உள்ள இடம் விஸ்த்ருச விகாரமாய் இருக்கும் –
சத்ருச விகாரமாவது
நாம ரூப விபாக அதேசா நர்ஹமாய் இருக்கும் ஸூஷ்ம விகாரம்
விசத்ருச விகாரமாவது
நாம ரூப விபாக நிர்தேச யோக்யமாய் இருக்கும் ஸ்தூல விகாரம்
குண சாம்ய மநுத்ரிக்த மந் யூநம் (கண்ணுக்குப் புலப்படாத அவ்யக்த நிலையில் குணங்கள்
சமமாகவும் அதிகமாகவோ குறைவாகவோ இன்றியும் உள்ளன )-என்கையாலே
அவ்யக்த அவஸ்தையில் உள்ள விகாரம் எல்லாம் சத்ருசமாய் இருக்கும்
மஹதாதி விஸ்த்ருத விகாரமாய் இருக்கும் –
இனி கால பேதமாவது
சம்ஹார காலமும் -சிருஷ்டி காலமும்
சம்ஹார காலத்திலே
இது அவிபக்த தமஸாய்க் கிடைக்கையாலே
ஒரு இடத்திலும் குண வைஷம்யம் இல்லாமையாலே
எங்கும் ஒக்க சத்ருச விகாரமாய் இருக்கும்
சிருஷ்டி காலத்திலே
பகவத் அதிஷ்டான விசேஷத்தாலே விபக்தமாய்
கார்ய உன்முகமாய்
குண வைஷம்யம் பிறந்தவாறே விஸ்த்ருத விகாரத்தை யுடைத்தாய் இருக்கும்
சதத விகாரஸ் பதமாய் இருக்கையாலே அதுக்கு சத்தா பிரயுக்தம் இறே விகாரம்
அதினுடைய சௌஷ்ம்யா அசௌஷ்ம்ய நிபந்தனமான விபாக நிர்த்தேசம் இறே
அல்லது நிர் விகாரமாய் இருப்பதோர் அவஸ்தையும் இல்லை இறே-
பிரகிருதி அவித்யை மாயை என்கிற பேர்களை யுடைத்தாய் இருக்கும் அசித் விசேஷம் –
மிஸ்ர சத்வமாவது இப்படி இருப்பதோர்
அசித் விசேஷம் என்று
வாக்ய அந்வயம்-
——————————————————-
சூர்ணிகை -86-
பிரகிருதி யாதி நாம பேதங்கள் இதனுடைய ஸ்வ பாவங்களைப் பற்றி
வந்தது என்கிறார் –
பிரகிருதி -என்கிறது
விகாரங்களைப் பிறப்பிக்கையாலே-
அவித்யை -என்கிறது
ஜ்ஞான விரோதி ஆகையாலே –
மாயை -என்கிறது –
விசித்திர சிருஷ்டியைப் பண்ணுகையாலே
அதாவது
மூல பிரக்ருதிர்விக்ருதி (மூல ப்ரக்ருதியானது ஜகத் யுண்டாகக் காரணமாக இருக்கிறது )-இத்யாதிகளிலே
பிரகிருதி -சப்தம் காரண வாசியாகச் சொல்லப் பட்டது இறே
இது தான் உபாதான காரணத்துக்கே வாசகம் -ஆகை இறே
ப்ரஹ்மத்தின் உடைய ஜகத் உபாதனத்வத்தை சொல்லுகிற ஸூத்திர காரர் (1-4-23 )
பிரக்ருதிச் ச பிரதிஞ்ஞா த்ருஷ்டாந்த அனுப ரோதாத்
(ப்ரஹ்மமே உபாதான காரணம் என்றால் மட்டுமே உறுதிபட உரைக்கும்
வாக்கியங்களும் உதாரணங்களும் முரண்படாமல் இருக்கும் ) என்று
பிரகிருதி சப்தத்தாலே சொல்லிற்று
ஆகையால் இத்தை பிரகிருதி என்கிறது –
மஹதாதி விகாரங்களை தன பக்கலில் நின்றும் ஜனிப்பிக்கையாலே –
அவித்யா சப்தம்
வித்யாபாவத்துக்கும் வித்யேதரத்துக்கும் வித்யா விரோதிக்கும்
வாசகமாய் இருந்ததே ஆகிலும்
விஷய அனுகுணமாக இறே ப்ரயோகம் இருப்பது
ஆகையாலே இத்தை அவித்யை என்கிறது ஞான விரோதி ஆகையாலே –
ஞாநானந்தங்களுக்கு திரோதாயகமாய் -என்று
இதனுடைய ஞான விரோதித்வம் தானே கீழே (சூர்ணிகை -85)சொல்லப் பட்டது
அஸூர ராஷசாதி கிரியைகளை ஆச்சர்ய கரத்வத்தை பற்ற மாயா சப்தத்தால் சொல்லுகிறாப் போலே
இத்தையும் மாயை -என்கிறது விசித்திர சிருஷ்டியைப் பண்ணுகையாலே
அதாவது
ஓன்று போல் அன்றிக்கே விஸ்மய நீயங்களான கார்யங்களை ஜநிப்பிக்கை –
————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply