ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –
ஸ்ரீ எம்பெருமானாருடைய ஔதார்யத்தாலே தாம் லபித்தவற்றை யனுசந்தித்து க்ருத்தார்த்தர் ஆனார் கீழ் ..
இன்னமும் அந்த ஔதார்யத்தாலே தமக்கு அவர் செய்ததொரு மகோ உபகாரத்தை யனுசந்தித்து வித்தராகிறார் .-
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–
கீழ் பாட்டிலே
ஸ்ரீ எம்பெருமானார் தம்முடைய ஔதார்யத்தாலே இவருடைய அபிமதத்தை கொடுத்து அருள –
இவர் தாம் அவர் தம்மாலே லபித்த புருஷார்த்தங்களை அனுசந்தித்து க்ருதார்தரானார் –
இதிலே –
ஸ்ரீ எம்பெருமானார் தம்முடைய ஔதார்ய அதிசயத்தாலே அதி ஹேயங்களான வேத பாஹ்யர் உடைய
சமயங்களைப் பற்றி நின்று கலஹிக்குமவர்களை நிரசித்தார் என்றும் –
அத்யந்த பரிசுத்தமான வேத மார்க்கத்தை பூமியிலே எங்கும் ஒக்க நடத்தி அருளினார் என்றும் -அனுசந்திதுக் கொண்டு
ப்ரீதி பிரகர்ஷத்தாலே ஸ்தோத்ரம் பண்ணா நின்று உள்ள பெரியோர்களுடன் கலந்து -பரிமாறும்படி
அடியேனை வைத்து அருளினார் என்று அனுசந்தித்து வித்தர் ஆகிறார் –
ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-
ஸ்ரீ எம்பெருமானாருடைய வள்ளன்மையால் தாம் பெற்ற பேறுகளை கூறினார் கீழே .
அவ்வள்ளன்மை மிக்கு மேலும் அவர் தமக்கு செய்து அருளிய பேருதவியை நினைவு கூர்ந்து-அதனிலே ஈடுபடுகிறார் .
கைத்தனன் தீய சமயக் கலகரைக் காசினிக்கே
உய்த்தனன் தூய மறை நெறி தன்னை என்றுன்னி வுள்ளம்
நெய்த்த வன் போடிருந்தேத்தும் நிறை புகழோருடனே
வைத்தனன் என்னை இராமானுசன் மிக்க வண்மை செய்தே -72- –
பத உரை
இராமானுசன் -ஸ்ரீ எம்பெருமானார்
மிக்க -மிகுந்த
வண்மை -வள்ளல் தன்மையை
செய்து -பண்ணி
தீய சமயக் கலகரை -கெட்ட மதங்களைப் பற்றி நின்று கலக்கம் செய்பவர்களை
கைத்தனன் -கடிந்து அருளினார்
காசினிக்கே -பூமியில்
தூய மறை தன்னை -பரி சுத்தமான வேதம் வகுத்த வழியை
உய்த்தனன்-நடத்தி யருளினார் .
என்று உன்னி -என்று நினைத்து
உள்ளம் நெய்த்து -நெஞ்சு நெகிழ்ந்து
அன்போடு இருந்து -அந்த நெஞ்சு நெகிழ்வோடு இருந்து
ஏத்தும் -துதிக்கும்
நிறை புகழோர் உடனே -நிறைந்த குணம் உள்ளவர்களோடு கூட
என்னை வைத்தனன் -என்னை சேர்த்து வைத்து அருளினார் .
வியாக்யானம் –
ஸ்ரீ எம்பெருமானார் நிரதிசய ஔதாரத்தைப் பண்ணி -வேத பாஹ்யங்களாகிய ஹேயங்களான
சமயங்களைப் பற்றி நின்று கலக்கம் செய்கிறவர்களை -நிரசித்து அருளினார் .
பரிசுத்தமான வேத மார்க்கத்தை பூமியிலே நடத்தி அருளினார் . என்று அனுசந்தித்து ஹ்ருதயம் ஸ்நிக்தமாய்-
அந்த ஸ்நேகத்தொடே இருந்து ஸ்தோத்ரம் பண்ணா நின்றுள்ள பரிபூர்ண குணரோடே-இவனும் ஒருவன் என்று பரிகணிக்கும்படி
என்னை வைத்து அருளினார் .
இப்படி செய்து அருளுவதே -என்று கருத்து .
அதவா –
நிறை புகழோர் உடனே வைத்தான் – என்றது
அசத்துக்கள் நடுவே வர்த்திதுப் போந்த வென்னை-அடியோரோடு இருந்தமை -திருவாய் மொழி -10 1-11 –
என்கிறபடியே ஸ்ரீ வைஷ்ணவர்கள் நடுவே வர்த்திக்கும் படி மண்ணினார் –என்னவுமாம்
கைதல்-கடிதல்
உய்த்தல்-நடத்தல்
அவ்வன்போடென்கிற விடத்தில் -வகர ஒற்று குறைந்து கிடக்கிறது
அன்றிக்கே
நெய்த்த அன்பென்று -ஒரு பதமாக யோஜிக்க்கவுமாம்
அன்பு நெய்த்து இருக்கை யாவது -சுஷ்க சிநேகமாய் இருக்கை அன்றிக்கே கயலுண்டு இருக்கை
உள்ளம் நெய்த்த வன்பென்றது-உள்ளத்தில் நெய்த்த வன்பென்றபடி.-
சாது சமாஹம் -நழுவ முடியாமல் திருத்துவார்களே -அடியார்க்கு ஆட்படுத்திய விமலன் போலே -நிலை நிற்குமே –
கீழே வண்மை –இதில் மிக்க வண்மை -உற்றதும் உன் அடியார்க்கு அடிமை- உன் அடியார்க்கு ஆட் படுத்தினாய்-
ஐந்தாவது பெருமை தனியாக அருளிகிறார் இந்த பாசுரத்தில்–
காசினி வேந்தே —பூ பாலன் –வேத மார்க்க பிரதிஷ்டானம் -காசினிக்கே உய்த்தனன் தூய மறை தன்னை –
வதான்யக -வரதன் -தேவ பெருமாள் அருளால் வந்த மிக்க வண்மை –கொடுக்க கொடுக்க கூடும் வண்மை இது –
துர்வாசர் சாபம் கொடுக்க கொடுக்க தபஸ் வளரும் –
ஸூ ஸ்ரேயான் பவதி பிறக்க பிறக்க பல் ஒளி மிக்கு அவனுக்கு போலே –
இராமானுசன் –
வசீவதான்ய -என்றால் போலே இவ்வளவும் ஔதார்ய குணத்தை இட்டு பிரதிபாதிக்கப்பட்ட ஸ்ரீ எம்பெருமானார் –
மிக்க வண்மை செய்து –
கொள்ளக் குறைவற்று இலங்கி கொழுந்து-விட்டோங்கிய வுன் வள்ளல் தனத்தினால் -என்கிறபடியே
கொடுக்க கொடுக்க ஒரு குறைகளும் இன்றிக்கே –
சாணை பிடித்த மாணிக்கம் போல் மிகவும் பிரகாசிக்கிற ஔதார்ய குணத்தாலே லோகத்தை எல்லாம்
உத்தரிக்க வேணும் என்று திரு உள்ளம் பற்றி –
கைத்தனன் தீய சமய கலகரை –
வேத பாஹ்யங்கள் ஆகையாலே-அதி ஹேயங்களான பௌத்த ஜைன மாயாவாதிகளுடைய
குத்ர்ஷ்டி சமயங்களிலே நிஷ்ணாதராய்க் கொண்டு
ஜகத்து ஷணிகம் என்றும் –
தத்வம் ஞானம் மாத்ரம் என்றும் –
பிரபஞ்சம் மிதியை என்றும் –
ப்ரஹ்மம் சின்மாத்ரம் என்றும் –
பேதத்தை நிரசித்தும் –
வாக்கு மாத்ரத்திலே வேதத்தை அங்கீகரித்து வைத்து –
அதிலே குத்ர்ஷ்டி கல்ப நன்களைப் பண்ணியும்
அவசானத்திலே வேதத்தை மித்யா கோடியிலே யாக்கியும் –
இப்படி துஸ் தர்க்கங்களை சொல்லியும் கலஹிக்குமவர்களை நிரசித்து அருளினார் –
கைத்தல் -கடிதல் –
இவர்களுடைய பிரசங்கங்கள் எல்லாம் கலஹங்கள் விளைவிக்குமது ஒழிய
வித்வத் சம்மதங்களான பிரசங்கங்கள் அன்று காணும் –
திரு நாராயண புரத்து அருகில் பௌத்தரையும் –
திருமலையில் சைவரையும் –
சரஸ்வதி பீடத்தில் மாயாவாதிகளையும் -நிரசித்தபடி சர்வலோக பிரசித்தம் இறே –
காதா தாதா கதாநாம்-என்னக் கடவது இறே –
கைத்தனன் —கலகரை –
தூய மறை நெறிக்கு முரண்பட்ட போய் நெறிகளை கூருமவைகள் ஆதலின் -புறச் சமயங்கள்-தீய சமயங்கள் ஆயின –
அத்தகைய சமயங்களைப் பற்றி நின்று மெய் நெறி கூறும்-மறையினை புவியில் பரவ வொட்டாது கலகம்
செய்யுமவர்களை கடிந்து களைகின்றார் ஸ்ரீ எம்பெருமானார் -என்க
காசினிக்கே உய்த்தனன் தூய மறை தன்னை –
காசினிக்கே –
அவிவேக கநாந்த திந்முகே பஹூதா -இத்யாதியாலும் –
சம்சார மருகாந்தாரே -இத்யாதியாலும்
சொல்லப்படுகிற இருள் தரும் மா ஞாலத்திலே இருந்து
சம்சரித்து கொண்டு நஷ்டப் பிராயராய் போந்த சேதனரை உத்தரிப்பிக்கைக்காகவே –
காசினி-பூமி -பூமியில் உள்ள சேதனரை -என்றபடி –
இவர்களுடைய துக்க பரம்பரைகளைக் கண்டு பொறுக்க மாட்டாத பரம கிருபா பூர்வாக ஔதார்யத்தாலே –
தூய மறைநெறி தன்னை –
ப்ரம ப்ரமாத விப்ரலம்பாதிகளும் புருஷ சேமுஷீ தோஷ மாலின்யமும் – ஸ்வ ப்ராமாணயத்தில்
இதர அபேஷையும் இன்றி இருந்தது ஆகையாலே –
சுடர் மிகு சுருதி -என்னும்படி அத்யந்த பரிசுத்தமான வேதத்தினுடைய மார்க்கத்தை –
ஸ்ருதி ஸ்மரதிர் மமைவாஜ்ஞா-என்கிறபடியே பகவத் ஆஜ்ஞா ரூபங்களானபரம விதிக்க தர்மங்களை என்றபடி –
மறை என்ற நிரூப பதத்தாலே
பூர்வோத்தரங்களும் -உத் தர பாகங்களும் -த்ரமிட உபநிஷத்தும் சூசிப்பிக்க படுகின்றன –
ஆக ஸ்ருதி ஸ்மரதி சோதிதங்களான சாமான்ய விசேஷ தர்மங்களையும் –
சகல வேதங்களினுடைய சாரதம அர்த்தமான சரணாகதி தர்மத்தையும் –உய்த்தனன் –நடப்பித்தார் –
காசினிக்கே —தூய மறை நெறி தன்னை
காசினிக்கே -பூமியின் கண் -உருபு மயக்கம்
உலகு எங்கும் வேத மார்க்க பிரதிஷ்டாப நாசார்யரானார் -என்றபடி .
தூய மறை
மறைக்கு தூய்மையாவது -ப்ரமம் முதலியவற்றுக்கு இடமாகாது இருத்தலும் –
தான் கூருமவற்றுக்கு வேறு ஆதாரம் தேட வேண்டாதபடி தானாகவே பிரமாணமாய் இருத்தலும் -என்க
இனி தூய்மையை நெறிக்கு -அடை யாக்கலுமாம் ..
அவப்பொருள் கூறும் குத்ருஷ்டிகள் கற்ப்பித்த தீய நெறிகளை தூறு மண்டும் படி செய்து –
பண்டைய தூய நெறியை உய்த்தனன் -என்றபடி .
உய்த்தல் –
நடத்துதல் –
நெறி -மார்க்கம் -என்று உன்னி –
இவை இரண்டையும் செய்தார் என்று த்ரட அத்யாவச்ய பூர்வகமாக அனுசந்தித்து –
உள்ளம் நெய்த்த அன்போடு –
திரு உள்ளம் ஸ்நிக்தமாய் அந்த ஸ்நேஹத்தோடே –
அவ்வன்பு -என்று சொல்ல வேண்டி இருக்க வகர ஒற்று குறைந்து அவன்பு -என்று கிடக்கிறது –
அன்றிக்கே –
நெய்த்தவன்பென்றது –
உள்ளத்தில் நெய்த்தவன்பென்றபடி-இருந்தேத்தும் –
இப்படிப்பட்ட சிநேகத்தோடு இருந்து கொண்டு -அந்த ஸ்நேஹமானது சந்துஷணம் பண்ணவே –
பாஷண்ட த்ரூமஷண்ட தாவதஹன-இத்யாதிப் படியே அவரை ஸ்தோத்ரம் பண்ணா நின்றுள்ள –
நிறை புகழாருடனே-
பரி பூர்ண குணர் உடன் —
அடியார் குழாம் களை உடன் கூடுவது என்று கொலோ – என்று பிரார்த்திக்க வேண்டாதபடி – இங்கே தானே –
வைத்தனன் என்னை -என்னை சேர்த்து அருளினார் –
வாசா யதீந்திர மனச வபுஷாச ச யுஷ்மத் பாதாராவிந்த யுகளம் பஜதாம் குருணாம்–
கூராதிநாத குருகேச-முகாத்யபும் சாம் பாதாநுசிந்தன பரஸ் சத்தம் பவேயம் -என்றும் –
த்வத் தாஸ தாஸ கண நா சரமா வதவ்யஸ்-தத்தாசதைக ரசதா விரதா மமாஸ்து -என்றும்
இத்தை இறே ஜீயரும் பிராரத்து அருளினார் –
என்று உன்னி –வைத்தனன் என்னை –
ஸ்ரீ எம்பெருமானார் புற நெறிகளை கட்டு மறை நெறி நடத்துகின்ற துறையிலே
அவரது நுண்ணறிவு -கருணை வண்மை என்னும் குணங்களிலே தோற்று – நெஞ்சு நெகிழ்ந்து –
அந்த அன்போடு இருந்து தோற்ற துறைக்கு அவ்வன்பினால் துதி பாடுகின்றனர் மறையோராகிய நிறை புகழோர் -என்க .
நெய்த்த அன்போடு-என்பதை
நெய்த்து அ அன்போடு -என்று பிரித்து அ அன்போடு -என்னும் இடத்தில்
சுட்டுக்கு மேல் வகர உடம்படு மெய்க்கு முன்னர் வகர ஒற்று கேட்டது -என்று அறிக .
அவ்வன்பு -என்று இருத்தல் வேண்டும்
இனி சுட்டாக கொள்ளாமல் நெய்த்த அன்போடு -என்று பிரித்தலுமாம்-
அன்பு நெய்த்து இருந்ததாவது –
வறண்டு போகாது என்றும் புதுமை பெற்று இருத்தல் .
உள்ளம் நெய்த்த அன்போடு -என்பதற்கு -உள்ளத்தில் நெய்த்த அன்போடு என்று பொருள் கொள்க .
இருந்து ஏத்துதல்-இடைவிடாமல் துதித்து கொண்டு இருத்தல்
நிறை புகழோர் -குணம் நிரம்பினவர்
புகழ்-குணம்
புகழோர் உடனே வைத்தல்-
குணம் நிரம்பினவர் கூட்டத்திலே என்னையும் குணம் நிரம்பினவன் ஒருவன் என்று ஒக்க எண்ணலாம் படி சேர வைத்தல் .
இனி தீய குணம் உடையோரிடை இது காறும் கூடி இருந்த என்னை அடியாரோடு இருந்தமை -என்றபடி
நிறை புகழோர் ஆன ஸ்ரீ வைஷ்ணவர்கள் நடுவே இருக்கும்படி பண்ணினார் -என்னவுமாம் .
மிக்க வண்மை செய்து வைத்தனன் என்று இயைக்க .
கீழ்ப் பாசுரத்தில் கூறப்பட்ட பேறுகள் அனைத்துக்கும்
நிறை புகழோர் உடனே வைத்தல் அடித்தளமாய் முக்கியமாதல் பற்றி இதனைத் தனிந்து நினைவு கூர்ந்து
மிக்க வண்மையினால் இங்கன் உபகரித்து அருளுவதே ! என்று ஈடுபடுகிறார் –
ஸ்ரீ ஆழ்வாருக்கு சரம பர்வம் அமுதனாருக்கு பிரதம பர்வம்
சரம பர்வமாக ஸ்ரீ ஆழ்வான் அடி பற்றினார்-ஸ்ரீ அமுதனார்
ஸ்ரீ மதுர கவி சொல் படியே நிலையாக பெற்றோம்-
பெரியோர்கள் நடுவில் நிறுத்தின மிக்க வள்ளல் தன்மை போற்றுகிறார்-
மிக்க சீர்த் தொண்டர் -போலே இங்கும் -மிக்க வண்மை செய்தே -72- –
மிக்க சீலம் அல்லால் -2-
அவன் பெரும் கீர்த்தி மொழிந்திடவே -6-
சீலம் கொள் நாத முனியை நெஞ்சால் வாரிப் பருகும் இராமானுசன் என் தன் மா நிதியே -20-
பெருமேன்மைக்கு இழுக்கு இது என்று தள்ளுற்று இரங்கும் இராமானுச என் தனி நெஞ்சமே -27-
தன் ஈறில் பெரும் புகழே தெருளும் தெருள் தந்து இராமானுசன் செய்யும் சேமங்களே -37-
தீதில் இராமானுசன் தொல் அருள் சுரந்தே -42-
எண்ணரும் சீர் நல்லார் பரவும் இராமானுசன் -44-
எம் இராமானுசன் மெய்ம் மதிக் கடலே -58-
இராமானுசன் மிக்க நான்மறையின் சுடர் ஒளியால் அவ்விருளைத் துரந்திலனேல்-59-
இராமானுசன் மிக்க பண்டிதனே -63-
உன் பெரும் கருணை தன்னை -70-
இராமானுசன் மிக்க புண்ணியனே -91-
செம்மை நூல் புலவர்க்க்கு எண்ணரும் கீர்த்தி இராமானுச -92-
பொங்கிய கீர்த்தி இராமானுசன் அடிப் பூ மன்னவே–108-
————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-