Archive for the ‘இரண்டாம் திருவந்தாதி’ Category

இரண்டாம் திருவந்தாதி -பாசுரங்கள் -61-80-திவ்யார்த்த தீபிகை சாரம்–

October 3, 2014

கீழ்ப்பாட்டில் புகழ்ந்து பேசப்பட்ட ஆச்ரித பாரதந்திரிய குணத்தை (அல்லது, அவதார விக்ரஹ வைலக்ஷணயத்தை)
உலகளந்த சரிதை முகத்தால் அநுபவிக்கிறாரிதில்.

நின்றதோர் பாதம் நிலம் புதைப்ப நீண்ட தோள்
சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் -அன்று
கரு மாணியாய் இரந்த கள்வனை உன்னைப்
பிரமாணித்தார் பெற்ற பேறு —61-

பதவுரை

அன்று கருமாணி ஆய்–முன்பொரு காலத்திலே கரியகோலப் பிரமசாரியாய்ச் சென்று
இரந்த–(மாவலி பக்கல் மூவடி மண்) யாசித்த
கள்வனே–க்ருத்ரிமனான பெருமானே!
நின்றது ஓர் பாதம்–(பூமியை அளப்பதாக நின்ற ஒரு திருவடியானது
நிலம்–பூ மண்டலத்தை
புதைப்ப–ஆக்ரமித்துக் கொள்ள (அதன் பிறகு)
நீண்ட தோள்–விம்ம வளர்ந்த திருத்தோளானது
திசை எல்லாம் சென்று–திக்குக்களெல்லாவற்றிலும் வியாபித்து
அளந்தது என்பர்–(மேலுலகத்தை) அளந்துகொண்ட தென்று (பெரியோர் செல்லுகின்றனர்) (இப்படி நீ காரியஞ் செய்தவிது)
உன்னை பிரமாணிக்கார் பெற்ற பேறு–உன்னை நம்பினவர்கள் எல்லாரும் பெற்ற புருஷார்த்தமாகும்

மாவிலியிடத்தில் உதகதாநம் பெறும்போது சிறிய இரண்டு திருவடிகளோடே நீ நின்றுகொண்டிருந்தாயே,
அத் திருவடிகளுள் ஒரு திருவடியானது விம்ம வளர்ந்து பூமிப் பரப்பு முழுவதையும் ஆக்கிரமித்து விட்டது.
மேலுலகங்களை ஆக்கிரமிப்பதற்காக இரண்டாவது திருவடியை உயரத்தூக்க நினைத்திருக்கையிலே
திசைகள் தோறும் விம்மவளர்ந்த திருத்தோள்களை மேலூலகப் பரப்பு முழுவதையும்
ஆக்ரமித்துவிட்டன என்று சமத்காரமாகச் சொல்லுகிறார்.

இப்படி மாவலியை வஞ்சித்து உலகமளந்தவிது ஆச்ரிதனான இந்திரனுக்காகச்செய்து செயலென்று
ஸாமாந்யமாகச் சிலர் நினைக்கக் கூடுமாயினும் அவ்விந்திரனொருவனுக்காக மாத்திரம் செய்த காரியமன்று இது,
“அப்பெருமானையே நாம் விச்வஸித்திருந்தால் நமக்காகவும் இப்படி தன்னை அழியமாறியும் காரியஞ் செய்தருள்வன்“ என்று
ஒவ்வொருவரும் நம்பியிருப்பதற்குடலாக எல்லார்க்குமாகச் செய்த காரியமேயாம் இது – என்கிறார் பின்னடிகளில்.

வியாக்கியான ஸ்ரீஸூக்தி வருமாறு – “உன்னைப் பேணாதே உன்னுடைய விபூதியை அவன் (மாவலி) தன்னதென்ன,
அவன் பக்கலிலே இரந்தாயாய் வஞ்சித்தாயாய்ச் செய்த்து இந்த்ரனொருத்தனுக்குச் செய்த்தேயோ?
‘ஆச்ரித் விஷயத்தில் தன்னை அழிய மாறி, வஞ்சிக்கும் – தூதுபோம் ஸாரதத்யம்பண்ணும் –
எல்லாம் செய்து ரக்ஷிக்கும்‘ என்று உன்னை ப்ரமாணித்தவர்கள்
மார்விலே கைவைத்துறங்கும்படி பண்ணினாயத்தனையன்றோ என்பதாம்.

————————————————————————-

இப்படி ஆச்ரித பரதந்த்ரனானவனே என் பிரதிபந்தங்களைப் போக்கி அபேக்ஷிதங்களையும் தந்தருள்வனென்று
அவனைப் பற்றினேனென்கிறார்.

பேறு ஓன்று முன்னறியேன் பெற்றறியேன் பேதமையால்
மாறென்று சொல்லி வணங்கினேன் -ஏறின்
பெருத்த எருத்தம் கோடோசிய பெண் நசையின் பின் போய்
எருத்து இறுத்த நல் ஆயர் ஏறு–62-

பதவுரை

பெண் நசையின் பின் போய்–நப்பின்னைப் பிராட்டி விஷயத்திலுண்டான ஆசைக்கு வசப்பட்டு,
ஏறின்–விருஷபங்களினுடைய
பெருத்த எருத்தம்–பெருத்த முசுப்புகளும்
கோடு–கொம்புகளும்
ஓசிய–முறியும்படியாக
எருத்து–(அந்த ரிஷபங்களின்) கழுத்தை
இறுத்த–முறித்த
நல் ஆயர் ஏறு–விலக்ஷணனான கோபால கிருஷ்ணன்
மாறு–(நமது பாபங்களுக்கெல்லாம்) சத்துருவானவன்.
என்று சொல்லி–என்றெண்ணி
வணங்கினேன்–அவனை ஆச்ரயித்தேன்
முன்–இதற்கு முன்பு
பேறு ஒன்றும் அறியேன்–இப்படிப்பட்ட புருஷார்த்தத்தைச் சிறிதும் அறியாதவனாயிருந்தேன்
பேதைமையால்–அப்படி அறியாதிருந்ததனால்
பெற்று அறியேன்–அதனைப் பொறாதும் இழந்தொழிந்தேன்.

நப்பின்னைப் பிராட்டியை மணம் புரிவதற்கு இடையூறாயிருந்த ஏழ் விடைகளையுமு வென்றடர்ந்து
அவளை மணந்து கொண்ட பெருமான் அவ்விதமாகவே நம்மோடு சேர்வதற்கும்
பிரதிபந்தகமாயுள்ள பாவங்களைத் தொலைத்து நம்மையும் மணந்தருள்வனென்று கருதி அவன் திருவடிகளில் தலைசாய்த்தேன்.
அநாதிகாலம் அவிவேகியாய் இழந்தொழிந்த நான் இன்று இப்போது பெற்றேன் என்றாராயிற்று.

————————————————————————–

கீழ்ப்பாட்டில் எம்பெருமானை ஆச்ரயித்தேனென்று அருளிச் செய்தவர்
‘அவ் வெம்பெருமானே எல்லார்க்கும் ஆச்ரயணீயன்‘ என்று தெரிவிக்க வேண்டி அவனுடைய மேன்மையைத்
தெரிவித்தற் பொருட்டு அரனுடைய சாபத்தைத் தீர்த்தருளின கதையை எடுத்துரைக்கிறாரிதில்.

ஏறு எழும் வென்று அடர்த வெந்தை எரி உருவத்து
ஏறேறி பட்ட விடு சாபம் -பாறேறி
யுண்ட தலை வாய் நிறையக் கோட்டங்கை யொண் குருதி
கண்ட பொருள் சொல்லில் கதை–63-

பதவுரை

ஏறு ஏழும்–ரிஷபங்களேழையும்
வென்று–ஜயித்து
அடர்த்த–தொலைத்த
எந்தை–ஸ்வாமியான கண்ணபிரான்
எரி உருவத்து ஏறு ஏறிபட்ட–நெருப்புப் போன்ற உருவத்தை யுடையவனும் வ்ருஷப வாஹநனுமான ருத்ரன் அநுபவித்த
வீடு சாபம்–எல்லாரும் கைவிடும் படியான சாபத்தை (ப்போக்குதற்காக)
பாறு ஏறி உண்ட தலைவாய் நிறைய–பருந்துக்கள் ஏறியிருந்து உண்ணுதற்குரிய கபாலம் வாய் நிரம்பும்படியாக
கோடு–குவிந்த
அம் கை–அழகிய திருக்கையாலே
கீறியெடுத்து அளித்த்–ஒண் குருதி
அழகிய ரத்தத்தாலே–கண்ட பொருள்
அக்கபாலம் கையினின்று கழன்று விழக் கண்ட விஷயத்தை
சொல்லில்–சொல்லத் தொடங்கினால்
கதை–பெரியதொரு பாரத கதையாக முடியும்.

முன்னொரு காலத்தில் பரமசிவன் தன்னைப் போலவே பிரமனும் ஐந்து தலையுடையனாயிருப்பது
பலரும் பார்த்து மயங்குதற்கு இடமாயிருக்கின்றதென்று கருதி அவனத சிரயொன்றைக் கிள்ளியெடுத்துவிட,
அக்கபாலம் அப்படியெ சிவன் கையில் ஒட்டிக்கொள்ளுதலும் அவன் ‘இதற்கு என்செய்வது!‘ என்று
கவலைப்பட தேவர்களும் முனிவர்களும், ‘இப்பாவந்தொலைய பிச்சையெடுக்கவேண்டும் என்றைக்கு கபாலம் நிறையுமோ,
அன்றைக்கே இது கையைவிட்டு அகலும், என்று உரைக்க, சிவபிரான் பல காலம் பல தலங்களிலுஞ் சென்று
பிச்சை யேற்றுக் கொண்டே வருந்தித் திரிந்தும் அக்கபாலம் நிறையப்பெறாமையால் நீங்காமற்போகவே,
பின்பு ஒரு நாள் பதரிகாச்ரமத்தையடைந்து அங்கு எழுந்தருளியுள்ள நாராயணமூர்த்தியை வணங்கி இரந்தபோது
அப்பெருமான் ‘அக்ஷயம்‘ என்று பிக்ஷையிட, உடனே அது நிறைந்து கையைவிட்டு அகன்றது என்ற வரலாறு இங்கு அறியத்தக்கது.

சிவனுடைய நிறம் செந்தீநிறமாதலால் “எரியருவந்து“ எனப்பட்டது. விடுசாபம் – வினைத்தொகை,
“கபாலீ த்வம் பலிஷ்யஸி“ என்று பிரமானால் பிரயோகிக்கப்பட்ட சாபம் என்றாவது,
‘இந்த சாபத்தைத்தீர்க்க என்னாலாகாது, என்று ஒவ்வொருவராலும் கைவிடப்பட்ட சாபம் என்றாவது பொருள் கொள்க.
சாபம் – சாபத்திற்காக, சாபம் நீங்குவதற்காக என்றபடி
பாறு பிணந்தின்னிப்பறவை பாறேறியுண்டதலை – மாம்ஸ விருப்பத்தினால் முண்டத்தைப் பருந்து முதலிய பறவைகள்
உண்பது வழக்கமாதலால் அவ் வழக்கம் பற்றிய விசேஷணம் இது.
“தொடரெடுத்தமால்யானை“ என்றது போல.

ஒண்குருதி – அவதாரத்தின் மெய்ப்பாட்டாலே அப்ராக்ருதமான திருமேனியில் நின்றுமுண்டான ரக்தமாகையாலே
‘ஒண் குருதி‘ என்று சிறப்பித்துக் கூறப்பட்ட தென்க.
சொல்லில் கதை – “பன்னியுரைக்குங்காற் பாரதமாம்.

————————————————————————–

இந்த லீலாவிபூதியில் இருந்து கொண்டு, உன்னுடைய குண சேஷ்டிதம் முதலியவற்றைப் பிரதிபாதிக்கின்ற
இதிஹாஸ புராண முகமாக உனது திருநாம ஸங்கீர்த்தனமாகிற பாக்கியம் எனக்கு வாய்ந்தாலும்,
நித்ய விபூதியில் வந்து சேர்ந்து “ஹாவு ஹாவு, அஹமந்த மஹமந்த அஹமந்நாதோ ஹமந்நாதோஹ மந்தாத“ என்று
வாய் விட்டுப் பேசியநுபவிக்கும் படியான பூர்ணாநுபவத்தை எனக்குத் தந்தருளவேணுமென்கிறார்.

கதையின் பெரும் பொருளும் கண்ணா நின் பேரே
இதையம் இருந்தவையே ஏத்தில்-கதையும்
திருமொழி யாய் நின்ற திருமாலே உன்னைப்
பரு மொழியால் காணப் பணி–64-

பதவுரை

கண்ணா–கண்ணபிரானே!
கதையும்–இதிஹாஸ புராணங்களும்
பெரு பொருளும்–அவற்றின் சிறந்த அர்த்தங்களும்
இதயம்–அவற்றின் தாற்பரியமும்
இருந்த வையே–உள்ளது உள்ளபடியே
ஏலத்தில்–அறிந்து துதித்தால்
நின் பேரே–(அவையெல்லாம்) உன்னுடைய திருநாமங்களேயாம்
கதையின் திருமொழி ஆய்நின்ற திருமாலே–இதிஹாஸ புராணங்களின் ஸ்ரீஸூக்தி வடிவமாக நிற்கிற திருமானே!
உன்னை–உன்னை
பருமொழியால் காண–பரிபூர்ண சப்தங்களாலே கண்டு அது பவிக்கும்படி
பணி–திரு வுள்ளம் பற்ற வேணும்

கதை என்ற ஸாமாந்யசப்தம் இங்கு பகவத்கதையான இதிஹாஸபுராணங்களென்று விசேஷப் பொருள் பெற்று நிற்கும்.
ஸ்ரீராமாயணம் ஸ்ரீமஹாபாரதம் முதலான இதிஹாஸங்களையும், வைஷ்ணவம், பாத்மம் முதலான
புராணங்களையும் மூலம்மாத்திரமே அநுஸந்தித்தாலும், அவற்றின் அர்த்தங்களை அநுஸந்தித்தாலும்,
அவற்றின் உட்கருத்தைக் கண்டறிந்து அநுஸந்தித்தாலும் எல்லாம் உன்னுடைய
திருநாமங்களேயாயிருக்கு மென்பதில் ஸந்தேஹமில்லை, ஏனென்றால்,
கதையின் திருமொழியாய் நின்றதிருமாலே! – அந்த இதிஹாஸ புராணங்களின் அக்ஷரங்களாக அமைந்துள்ளவன்
நீயே யாதலால் அவற்றைச் சொல்லுவதும் அவற்றின் அர்த்தங்களையும் தாத்பர்யங்களையும் அநுஸந்திப்பதும்
உன்னுடைய திருநாம ஸங்கீர்த்தநமாகக் குறையில்லை யென்றவாறு.

ஆனால் இவ்வளவிலே நான் திருப்திபெறக் கூடவில்லை, பரமபதத்திலே முக்தர்களும் நித்யர்களும் பெருமிடறுசெய்து
சொல்லுகிற சப்தராசிகளுண்டே ‘ஹாவுஹாவுஹாவு‘ முதலியன – அவற்றைக்கொண்டு
உன்னை நான் அநுபவிக்கும் படி அருள்புரியவேணுமென்கிறது ஈற்றடி

இதயம் – ‘ஹ்ருதயம்‘ என்ற வடசொல்விகாரம் “கதையும் திருமொழியாய் நின்ற“ என்ற சிலருடைய பாடமும் இருக்கலாம்,
கதையும் – சொல்லப்படுகிற என்கை, அவரவர்கள் சொல்லுகிற திவ்ய ஸூக்தி ஸ்வரூபமாக நிற்பவனே! என்றபடி.

————————————————————————–

இதுவரையில் தாம்பெற்ற லாபத்தை முன்னடிகளிற் பேசி,
இனிப் பெற விரும்பும் லாபத்தைப் பின்னடிகளிற் பேசுகிறார்.

பணிந்தேன் திரு மேனி பைங்கமலம் கையால்
அணிந்தேன் உன் சேவடி மேல் அன்பாய்த் துணிந்தேன்
புரிந்து ஏத்தி யுன்னைப் புகலிடம் பார்த்து ஆங்கே
இருந்து ஏத்தி வாழும் இது–65-

பதவுரை

திருமெனி–உனது திருமேனியை
பணிந்தேன்–ஸேவித்தேன்
உன் சே அடி மேல்–உனது செவ்விய திருவடிகளின் மேல்
பை கமலம்–அழகிய தாமரை மலர்களை
அன்பு ஆய்–அன்பு கொண்டு
கையால் அணிந்தேன்–கையால் ஸமர்ப்பித்தேன்
உன்னை–உன்னை
புரிந்து ஏத்தி–விரும்பித் துதித்து
புகல் இடம் பார்த்து–பரமபதத்திலிருக்குமிருப்பை நோக்கி
ஆங்கே இருந்து ஏத்திவாழும் இது துணிந்தேன்–அவ்விடத்திலேயே இருந்துகொண்டு மங்களாசாஸநம் பண்ணி
வாழும் வாழ்ச்சியே உரிய தென்று அத்ய வஸாயங்கொண்டேன்.

திருமேனி பணிந்தேன் – உன்னுடைய திவ்யமங்கள விக்ரஹத்தை ஸேவித்து அதிலே ஆழங்காற்பட்டு
வேரற்ற மரம் போலே விழுந்தேன் என்றபடி.
அன்பாய் உன் சேவடிமேல் கையால் பைங்கமலமணிந்தேன் – அடிமை செய்யாவிடில் தரிக்க மாட்டாத ப்ரேமத்தை
யுடையேனாய்க்கொண்டு உன்னுடைய திருவடிகளின்மேல் அழகிய தாமரைப்பூ முதலிய நன்மலர்களை,
கைபடைத்த ப்ரயோஜ்னம் பெறுமாறு ஸமர்ப்பிக்கப் பெற்றேன்.

இப்படிச் சொன்ன ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் ‘இவ்விபூதியில் உமக்கு இவ்வளவு அநுபவம் வாய்த்ததாகில்
இனி ஒரு குறையுமில்லையே, இங்கேயே இருந்துகொண்டு இப்படியே போது போக்கலாமன்றோ என்றாருளிச்செய்ய
அதற்கு உத்தரமாகப் பின்னடிகளில் கூறுகின்றார் –
இவ்விபூதியில் கிடைக்கிற அநுபவம் நிலைத்திருக்கமாட்டாதே, ஆற்றங்கரைவாழ் மரம்போல் அஞ்சவேண்டிய விபூதியாயிற்றே இது,
ஆகையால், முடிவாகப்போய்ச் சேரவேண்டுமிடமான பரமபதிற் போய்ச்சேர்ந்து அங்கேயிருந்துகொண்டு
“பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்தேத்துவர் பல்லாண்டே“ என்று சொல்லப்படுகிற மங்களாசாஸநத்தைச்
செய்துகொண்டு வாழும்வகையொன்றை உரியதென்று துணிந்திருக்கின்றேன் என்றாராயிற்று.

புகலிடம் – நாம்போய்ப் புகவேண்டுமிடம் என்று காரணத்தினாலாவது அவதாரஸமாப்தியான பின்பு
எம்பெருமான் போய்ப்புகுமிடம் என்ற காரணத்தினாலாவது பரமபதத்தைச் சொல்லுகிறது.

————————————————————————–

இந்த ஸம்ஸாரத்தின் கொடுமையைத் தம் திருவுள்ளத்திற்கு உரைக்க எடுத்தெடுத்துக் காட்டுகிறார்.
நன்னெஞ்சே! இப்பிறவியாவது இதுகண்டாய் – பிறப்பதும் இறப்பதுமாக நடந்து செல்லுகிற
இந்த ஸம்ஸாரத்தின் நிலைமையை நெஞ்சே! தெரிந்து கொண்டிருக்கிறாயா? என்கை.

இது கண்டாய் நல் நெஞ்சே இப்பிறவி யாவது
இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது -இது கண்டாய்
நாரணன் பேரோதி நரகத்தருகு அணையாக்
காரணமும் வல்லையேல் காண்–66-

பதவுரை

நல் நெஞ்சே–நல்ல மனமே!
இப் பிறவி ஆவது இது கண்டாய்–இந்த ஸம்ஸாரத்தின் கொடுமை இப்படிப் பட்டது காண்.
நாம் உற்றது எல்லாம் இது கண்டாய்–(இந்த ஸம்ஸாரத்தில்) நாம் அநுபவித்த துக்கங்களெல்லாம் இப்படிப்பட்டவை காண்
நாரணன்–ஸ்ரீமந் நாராயணனுடைய
பேர்–திருநாமங்களை
ஓதி–ஸங்கீர்த்தனம் பண்ணி
நரகத்து–ஸம்ஸாரமாகிற நரகத்தினுடைய
அருகு–ஸமீபத்திலும்
அணையா காரணமும்–நாம் நிற்கலாகாது என்று வெறுப்பதற்குக் காரணமும்
இது கண்டாய்– இந்த ஸம்ஸாரத்தின் தோஷமேகாண்;
(இப்படி ஒவ்வொன்றையும் நான் எடுத்து உரைக்க வேண்டாதபடி)
வல்லை ஏல்–நீயே தெரிந்து கொள்ளக் கடவையாகில்
காண்–எல்லாம் தெரிந்து கொள்.

நாம் உற்றதெல்லாம் இதுகண்டாய் – இதுவரையில் நாம் ஸுகதுக்கங்களை மாறி மாறி அநுபவித்து
வருகிறோமே, அதற்குகாரணம் அந்த ஸம்ஸாரமேகிடாய் என்கை.

நாரணன் பேரோதி நரகத்தருகளையாக் காரணமும் இது கண்டாய் – நித்யவிபூதியில் ஒரு முலையிலிருந்துகொண்டு
ஸ்ரீமந்நாராயணனுடைய திருநாமங்களை ஸங்கீர்த்தநம் பண்ணிக்கொண்டு நரக ப்ரணமான இந்நிலத்தின் அருகிலும்
அஞகாதிருக்கவேணுமென்று இவ்விருள் தருமா ஞாலத்தில் நாம். வெறுப்புக் கொண்டிருப்பதற்குக் காரணமும்
இந்த ஸம்ஸாரத்தின் தோஷங்களேயாம் – என்கை.
(இவ்விபூதியின் தோஷங்களைக் கொண்டு இதை நரசு மென்றே ஞானிகள் சொல்லுவர்கள்)

கல்லையேல் காண் – உலகத்தில் மறைபொருளாக இருக்குமவற்றை ஒருவர் எடுத்துக்காட்டவேணுமே யன்றி,
கண்ணெதிரே நன்கு புலப்படும் விஷயங்களை எடுத்துக்காட்டவேண்டுடிய அவசியமில்லை,
இந்த ஸம்ஸாரத்தில் தோஷம் மறைவானதல்ல, நீயே பிரத்யக்ஷமாகக் காணலாம்,
பாபத்தாலே கண் குருடானால் ஸம்ஸார தோக்ஷம் தெரியமாட்டாலும் அப்படியன்றயே,
நீ காணவில்லையேல் நீயே நன்கு கண்டுகொள் என்றவாறு.

இப்பாட்டின் கருத்தை மற்றும் பலவகையாகப் பன்னி யுரைக்கலாம்.

————————————————————————–

கீழ்ப் பாட்டில் ஆழவார் தம் திருவுள்ளத்திற்கு ஸம்ஸார தோஷங்களை எடுத்துரைக்கக் கண்ட எம்பெருமான்
“எம்மாவீட்டுத்திறமும் செப்பம்“ என்றும்,
“இச்சுவைதவிர யான்போய் இந்திரலோகமாளும் அச்சுவை பெறினும் வேணடேன் அரங்கமாநகருளானே!“ என்றும்.
“என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே“ என்றும்
வைகுண்டவாஸேபி நமேபிலாஷ“ என்றும் ஞானிகள் பேசா நிற்க.
இவர் இந்நிலத்தை இப்படி இகழ்கிறாரே, நம்முடைய அநுபவம் இவர்க்கு இங்கு நன்கு வாய்த்ததாகில்
இவர் இந்நிலத்தை இகழ்ந்து பரமபதத்தை ஒரு பொருளாக விரும்பமாட்டார் – என்றெண்ணி,
தன்னுடைய திவ்ய மங்கள விக்ரஹ ஸேவையை விலக்ஷணமாகப் பண்ணிக் கொடுக்க
ஸேவித்து ஆநந்தம் பொலியப் பேசும் பாசுரம் இது.

கண்டேன் திருமேனி யான் கனவில் ஆங்கு அவன் கைக்
கண்டேன் கனலும் சுடர் ஆழி -கண்டேன்
உறு நோய் வினை இரண்டும் ஓட்டுவித்துப பின்னும்
மறு நோய் செறுவான் வலி-67-

பதவுரை

யான்–அடியேன்
கனவில்–ஸ்வப்நம் போன்ற ஸ்வாநுபவத்திலே
திருமேனி–திவ்ய மங்கள விக்ரஹத்தை
கண்டேன்–ஸேவிக்கப் பெற்றேன்
ஆங்கு–அப்போது
அவன் கை–அவனது திருக்கையிலே
கனலும் சுடர் ஆழி கண்டேன்–ஜ்வலிக்கிற சுடர்மயமான திருவாழியைக் கண்டேன்
உறு நோய் வினை இரண்டும்–மிக்க நோய்களுக்குக் காரணமான புண்ய பாபங்களென்கிற இரண்டு கருமங்களையும்
ஒட்டுவித்து–தொலைத்திட்டு
பின்னும்–பின்னையும்
மறு நோய் செறுவான்–மறுகிளை கிளர்ந்து வரக்கூறிய வாஸநா ருசிகளையும் தொலைத்தருளுமாவனான எம்பெருமானுடைய
வலி–மிடுக்கையும்
கண்டேன்–காணப் பெற்றேன்.

ப்ரதயக்ஷ ஸமாநாகாரமான மாநஸ ஸாக்ஷாத்காரத்தைக் கனவு என்கிறது.
“திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழுமருக்கனணி நிறமுங்கண்டேன் –
செருக்கிளரும், பொன்னாழி கண்டேன் புரிசங்கங் கைக்கண்டேன். என்னாழிவண்ணன் பாலின்று“ என்ற
பேயார் பாசுரத்தின் பொருளை முன்னிரண்ட்டிகளில் அடக்கிப் பேசின போலே –

உறுநோய் வினையிரண்டு மோட்டுவித்துப் பின்னும் மறுநோய் செறுவான் வலி கண்டேன் – இப்படி மாநஸ ஸாக்ஷாத்காரம்
பெற்ற மாத்திரத்திலே தம்முடைய இருவகைக் கருமங்களும் தொலைந்து ருசி வாஸநைகளும் அகன்றொழிந்தனவாகத்
தாம் இறுதியிட்டபடியை இதனால் வெளியிடுகிறார். முமுக்ஷுக்களுக்குப் பாபம்போலலே புண்யமும் பிரதிபந்தம் மாதலால்
‘வினையிரண்டு மோட்டுவித்து எனறார். பாவம் நரகத்திலே கொண்டுதள்ளும், புண்யம் சுவர்க்கத்திலே கொண்டு தள்ளும்‘
ஆகவே இருவினைகளும் ஒழிய வேண்டும். “ததா வித்வாந் புண்யபாபே விதூய நிரஞ்ஜந பரமம் ஜாம்யம் உனபதி“ என்று
சுருதியும் புண்யபாபங்கள் தொலைந்த பின்பே பரம ஸாம்யபத்தி விளைவதாகச் சொல்லிற்று.

அரிசியில் உமிகழிந்தாலும் தவிடானபாகம் ஒட்டிக் கொண்டிருப்பது போல் ஆத்மாவில் புண்யபாபங்கள் கழிந்தாலும்
சில நாள் வரையில் அவற்றில் நடைதொடர்ந்து வருமாதலால் அதுவும் கழியவேண்டியது முக்கியம்,
அதனையுங் கழித்துத் தந்தமை சொல்லுகிறது ‘பின்னும் மறுநோய் செறுவான்‘ என்று.

செறுவான் என்பதை வினையாலனையும் பெயராகக் கொள்ளாமல் வான் விகுதிப்பெற்ற
வினையெச்சமாகக் கொண்டு உரைப்பதும் ஒக்கும்,
வாஸநையையும் போக்குகைக்குத் தக்க வலிவு பெற்றேன் என்றவாறு.

————————————————————————–

பிரயோஜநாந்தரத்தை விரும்புமவர்களானாலும் தன்னை வந்து ஆஸ்ரயித்தால் அவர்களது விருப்பத்தைப்
படாதன பட்டும் தலைக்கட்டி யருளமவன் எம்பெருமான் என்கிறது இப்பாட்டு.

வலி மிக்க வாள் எயிற்று வாள் அவுணர் மாள
வலிமிக்க வாள் வரை மத்தாக -வலி மிக்க
வாணாகம் சுற்றி மறுகக் கடல் கடைந்தான்
கோணாகம் கொம்பு ஒசித்த கோ–68-

பதவுரை

வலிமிக்க–மஹாபலசாலிகளாய்
வாள் எயிறு–வாள்போன்ற கோரப்பற்களை யுடையராய்
வாள்–வாட்படையை யுடையரான
அவுணர்–ஆஸுர ப்ரக்ருதிகள்
மாள–முடிந்து போவதற்காக
வலி மிக்க வாள்வரை மத்து ஆக–மிக்க வலிவுள்ளதாய் ஒளியை யுடைத்தான மந்தர மலையை மத்தாகக் கொண்ட
வலி மிக்க வாள் நாகம்–அதிகமான சக்தியையும் ஒளியையுமுடைய வாஸுகி நாகத்தை
சுற்றி–கடை கயிறாகச் சுற்றி
கடல் மறுக கடைந்தான்–கடல் குழம்பும்படி கடைந்தருளினவன் (எவனென்றால்)
கோள் நாகம்–மிடுக்கை யுடைய குவலயாபீடமென்னும் மதயானையினது
கொம்பு–கொம்புகளை
ஒசித்த–முறித்தொழித்த
கோ–ஸ்வாமியாவன்

முன்னொருகாலத்தில், இவ்வண்ட கோளத்திற்கு அப்புறத்திலுள்ள விஷ்ணுலோகத்திற், சென்று திருமகளைப் புகழ்ந்துபாடி
அவளால் ஒரு பூமாலை ப்ரஸாதிக்கப் பெற்ற ஒரு வித்யாதரமகள், மகிழ்ச்சியோடு அம் மாலையைத் தன் கையில்
தரித்துக் கொண்டு பிரமலோக வழியாய் மீண்டு வருகையில் “துர்வாஸமஹாகமுநி எதிர்ப்பட்டு அவளை வணங்கித் துதிக்க,
அவ்விஞ்சைமங்கை அம்மாலையை அம்முனிவனுக்கு அளித்திட்டாள், அதன் பெருமையையுணர்ந்து அதனைச் சிரமேற்கொண்ட
அம்முனிவன் ஆநந்தத்தோடு தேவலோகத்திற்கு வந்து, அப்பொழுது அங்கு வெகு உல்லாஸமாக ஜராவதாயானையின்மேற்
பவனி வந்துகொண்டிருந்த இந்திரனைக்கண்டு அவனுக்கு அம்மாலையைக் கைநீட்டிக் கொடுக்க,
அவன் அதனை மாவட்டியினால் வாங்கி அந்தயானையின் பிடரியின்மேல் வைத்தவளவில், அம்மதயானை
அதனைத் துதிக்கையாற் பிடித்திழுத்துக் கீழெறிந்து காலால் மிதித்துத் துவைத்தது,
அதுகண்டு முநிவரன் கடுங்கோபங்கொண்டு இந்திரனை நோக்கி ‘இவ்வாறு செல்வச் செருக்குற்ற உன்னுடைய
ஐச்வரியங்களெல்லாம் கடலில் ஒளிந்துவிடக் கடவன‘ நின்று சபிக்க, உடனே தேவர்களின் செல்வம் யாவும் ஒழிந்தன.
ஒழியவே, அசுரர்வந்து பொருது அமர்ரை வென்றனர். பின்பு இந்திரன் தேவர்களோடு திருமாலைச் செனறு சரணமடைந்து
அப் பிரான் அபயமளித்துக் கட்டளையிட்டபடி அசுரர்களையுந் துணைக்கொண்டு மந்தரமலையை மத்தாக நாட்டி
வாஸுகியென்னும் மஹா நாகத்தைக் கடைகயிறாகப் பூட்டிப் பாற்கடலைக் கடையலாயினர்.
அப்பொழுது மத்தாகிய மந்தரகிரிகடலினுள்ளே அழுந்திவிட தேவர்களின் வேண்டுகோளினால் திருமால்
பெரியதோர் ஆமைவடிவமெடுத்து அம்மலையின் கீழே சென்று அதனைத் தனது முதுகின்மீது கொண்டு தாங்கி
அம்மலை கடலில் அழுந்திவிடாமல் கடைதற்கு உபயோகமாம்படி அதற்கு ஆதாரமாக எழுந்தருளி யிருந்தனன்.
இப்படி ஸ்ரீமந்நாராயணன் அக்கடலினிடையே மஹாகூர்ம்மாய் மந்தர பரவதத்திற்கு ஆதாரமாய் எழுந்தருளியிருக்க,
வாஸுகியின் வாலைப் பிடித்துக்கொண்ட தேவர்களும் தலையைப் பிடித்துக்கொண்ட அசுரர்களும் ஆகிய இருதிறந்தாரும்
அதனை வலியப்பிடித்து இழுத்துக் கடையவல்ல வலிமையில்லாதவராய் நிற்க, அது நோக்கி அத்திருமால தான்
ஒரு திருமேனியைக் தரித்துத் தேவர்கள் பக்கத்திலேயும் வேறொரு திருமேனியைத் தரித்து அசுரர்கள் பக்கத்திலேயும் நின்று
வாஸுகியின் வாலையும் தலையையும் பிடித்து வளமும் இடமுமாக இழுத்துக்கடைந்தனன் – என்பது கடல்கடைந்த வரலாறு.

(அப்பால் அந்த ஸ்ரீமஹாவிஷ்ணு தத்வந்தரி யென்னும் தேவரூபத்தைத் தரித்து அம்ருத பூர்ணமான கமண்டலத்தைக்
கையிலெடுத்துக் கொண்டு அந்த க்ஷீரஸமுத்ரத்திலிருந்து தோன்றினன்.
அப்பொழுது அசுரர்கள் தந்வந்தரியின் கையிலிருந்த அம்ருத“ கலசத்தை பலாத்காரமாகப் பிடுங்கிக் கொள்ள
அந்த எம்பெருமான் ஜகத் மோஹநமான ஒரு பெண்வடிவத்தைத் தரித்து அசுரர்களை மயக்கி வஞ்சித்து
அமுதத்தை கைக்கொண்டு அமரர்களுடைய கோஷ்டிக்கு மாத்திரம் ப்ரஸாதித்தனன் என்பது அறியத்தக்கது.

கோணாகங் சொம்பொசித்த வரலாறு – கம்ஸன் தன்னைக் கொலைப்பிறந்த தேவகீ புத்திரன் யசோதையினிடம்
ஒளிந்து வளர்தல் முதலிய வரலாறுகளை நாரதமுனிவர் சொல்லக்கேட்டு அதிக கோபங்கொண்டு
எவ்வகையினாலாவது கண்ணனை கொல்ல நிச்சயித்து, லில்விழாவெண்கிற வியாஜம் வைத்துக்
கண்ணப்பிரானையும் பலராமனையும் அழைத்துவரும்படி அக்ரூரனை நியமிக்க, அக்ரூரனுடய பிரார்த்தனைக்கிணங்கக்
கண்ணபிரான் நம்பி மூத்தபிரானுடைன் புறப்பட்டு கம்ஸனைரண்மனையை நோக்கி செல்லுகையில்,
அவ்வரண்மனை வாயில் வழியில் தம்மைக் கொல்லும்படி அவனால் ஏவி நிறுத்தப்பட்டிருந்த குவலயாபீடமென்னும் மதபானை சீறிவா.
அவ்யாதவவீரர்அதனை யெதிர்த்து அகன் தந்தங்களிரண்டையும் சேற்றிலிருந்து கொடியை யெடுப்பதுபோல
எளிதிற் பறித்து அவற்றையே ஆயுதமாகக் கொண்டு அடித்து அவ்யானையையும் யானைப் பாகனையுமு உயிர
தொலைத்து விட்டு உள்ளே புகுந்தனர் – என்பதாம்.

நாகம் – வடசொல்.

————————————————————————–

கோவாகி மாநிலம் காத்து நம் கண் முகப்பே
மாவேகிச செல்கின்ற மன்னவரும் -பூ மேவும்
செங்கமல நாபியான் சேவடிக்கே ஏழ பிறப்பும்
தண் கமலம் ஏய்ந்தார் தமர் –69-

பதவுரை

கோ ஆகி–ராஜாதி ராஜர்களாய்
மா நிலம் காத்து–பரந்த பூமண்டலத்தை அரசாட்சி புரிந்து
நம் கண் முகப்பே–நம் கண்ணெதிரே
மா ஏகி செல்கின்ற–குதிரை யேறித் திரிகின்ற
மன்னவரும்–அரசர்களும்,
செம் கமலப்பூ மேவும்–செந்தாமரை மலர் பொருந்தி யிருக்கப் பெற்ற
நாபியான்–திரு நாபியை யுடைய பெருமானுடைய
சே அடிக்கே–திருவடிகளுக்கு
ஏழ் பிறப்பும்–பலபல ஜன்மங்களிலே
தண் கமலம்–அழகிய தாமரைப் பூக்களை
ஏய்ந்தார்–ஸமர்ப்பித்தவர்களான
தமர்–பக்தர்களாவர்

ஸ்வர்க்க லோகத்திலுள்ள தேவர்கள் எம்பெருமானைப்பற்றி தங்கள் பிரயோஜனம் பெற்றமை சொன்னார் கீழ்ப்பாட்டில்,
அவர்கள் மாத்திரமேயன்று பூலோகத்திலுள்ள அரசர்களும் எம்பெருமானை ஆராதித்தே மேன்மை
பெற்றுப் பொலிகின்றன ரென்கிறா ரிப்பாட்டில்.

சக்ரவர்த்திகளென்று பட்டப் பெயர்பெற்று இந்நிலம் முழுவதையும் அரசாண்டுகொண்டு குதிரையேறிப் பவனி வருகின்ற
பிரபுக்களும் தாமே பிரபுக்களாய் விடவில்லை. பத்மநாபனான எம்பெருமானுடைய திருவடிகளில் பல பிறவிகளில்
தொண்டு செய்து அப்பெருமானுடைய அநுக்ரஹத்தினால் பிரபுக்களாயின் என்றாராயிற்று.

“பூமேவுஞ் செங்கபலதாபியான்“ என்றதை உள்ளபடியே அந்வயித்து போகயதை, மேவும் – பொருந்தி யிருக்கப் பெற்ற
செங்கமலம் – செந்தாமரைப்பூவை, நாபியான் – திருநாபியிலுடையவன் என்றுரைக்கவுமாம்.

ஈற்றடியில் ‘ஏய்ந்தார்தமர்“ என்றதற்கு ‘ஏய்ந்தாருடைய பக்தர்களாய்க் கொண்டு‘ என்று பொருள்கூறி
பகவத் பக்தர்களுக்குத் தொண்டுசெய்தே பிரபுக்களாயினர் என்று உரைத்தலுமாம்.

————————————————————————–

எம்பெருமான் திருவுற்ற முவந்து எழுந்தருளியிருக்குமிடங்களிற் சிலவற்றை யெடுத்துக் கூறுகின்றாரிதில்.

தமருள்ளும் தஞ்சை தலை யரங்கம் தண் கால்
தமருள்ளும் தண் பொருப்பு வேலை -தமருள்ளும்
மா மல்லை கோவல் மதிள் குடந்தை என்பரே
ஏவல்ல வெந்தைக்கு இடம் –70-

பதவுரை

தமர் உள்ளம்–பக்தர்களுடைய ஹ்ருதயம்
தஞ்சை–தஞ்சை மா மணிக் கோயில்
தலை அரங்கம்–சிறந்ததான திருவரங்கம்
தண் கால்–திருத் தண் கால்
தமர் உள்ளும்–பக்தர்கள் தியானிக்கிற
தண் பொருப்பு–அழகிய திருமலை
வேலை–திருப்பாற்கடல்
தமர் உள்ளம்–பக்தர்கள் சிந்திக்கிற
மா மல்லை–திருக்கடன்மல்லை
கோவல்–திருக்கோவலூர்
மதிள் குடந்தை–திருமதிள்களோடு கூடிய திருக்குடந்தை (ஆகிய இத்தலங்களெல்லாம்)
ஏவல்ல எந்தைக்கு இடம் என்பர்–எதிரிகளை முடிக்க வல்லவனான எம்பெருமானுக்கு இருப்பிட மென்பர்.

அன்பருடைய நெஞ்சகம். தஞ்சைமாமணிக்கோயில், திருப்பதிகளெல்லாவற்றினும் தலையான திருவரங்கம்,
திருத்தண்கால், திருமலை, திருப்பாற்கடல், திருக்கடன்மல்லை, திருக்கோவலூர், திருக்குடந்தை –
என்னு மிவ்விடங்களை இங்கெடுத்தது மற்றுமுள்ள திருப்பதிகட்கும் உபலக்ஷணமென்க
அன்பருடைய நெஞ்சகமே மிகவும் ஆதரணீயமா யிருத்தலால் ‘தமருள்ளம்‘ என்று முற்படக் கூறப்பட்டது.

ஏவல்ல – ஏ-அம்பு, பாகவத விரோதிகளின் மீது அம்புகளைச் செலுத்த வல்ல ஸ்வாமி என்கை.

————————————————————————–

உலகளந்தருளின காலத்தில் திருவாழி திருச்சங்குகளோடு நித்யஸூரிகளுக்கு நேர்ந்த ஸம்ப்ரமத்தைப் பேசுகிறாரிதில்.

இடங்கை வலம்புரி நின்றார்ப்ப எரி கான்று
அடங்கார் ஒடுங்குவித்த தாழி-விடம்காலும்
தீவாய் அரவணை மேல் தோன்றல் திசை யளப்பான்
பூவாரடி நிமிர்த்த போது–71-

பதவுரை

விடம் காலும்–விஷத்தைக் கக்குகின்ற
தீ வாய்–பயங்கரமான வாயையுடைய
அரவு–திருவனத்தாழ்வானாகிய
அணை மேல்–சயனத்தின் மீது (பள்ளி கொண்டிருக்கின்ற)
தோன்றல்–ஸர்வேச்வரன்
வலம்புரி–சங்கானது
இடங்கை–இடத் திருக்கையில்
நின்று–இருந்து கொண்டு
ஆர்ப்ப–முழங்க
ஆழி–திருவாழியானது
திசை–எல்லாவிடங்களையும்
அளப்பான்–அளந்து கொள்வதற்காக
பூ ஆர் அடி–பூப்போன்ற திருவடியை
நிமிர்த்த போது–உயரத்தூக்கியருளின காலத்து
எரி கான்று–நெருப்பை உமிழா நின்று கொண்டு
அடங்கார்–எதிரிகளாய் நின்ற நமுசி முதலானவர்களை
ஒடுங்குவித்து–வாய் மாளப் பண்ணிற்று

எம்பெருமான் மாண்குறள் படியே கொடுப்பதாக இசைந்து தாரை வார்க்கத் தொடங்கும்போது அஸுரகுருவான சுக்கிரன் தடைச் செய்யவும்,
பிறகு முவடிமண்ணை எம்பெருமான் அளந்து கொள்ளத் தொடங்கும்போது
“என்னிதுமாயம்! என்னப்பனறிந்திலன், முன்னைய வண்ணமே கொண்டளவாய்“ என்று நமுசி வந்து தடை செய்யவும் நேர்ந்து,
இவ்விரோதிகளெல்லாம் தொலைந்து எம்பெருமான் வெற்றிபெற்று உலகங்களை அளக்கப்பெற்ற ஸ்ந்தோஷ மிகுதியினால்
திருச்சங்காழ்வான் இடத்திருக்கையிலிருந்துகொண்டு பகைவர் அஞ்சி நடுங்கும்படி பெருமுழக்கஞ் செய்தான்.
திருவாழியாழ்வான் வலத்திருக்கையிலிருந்துகொண்டு சத்துருக்கள் மண்ணுண்ணும்படி பெருஞ்சுடர் விட்டு ஜ்வலித்தான்.

மெத்தென்ற பஞ்சசயனம்போன்ற சேஷசயனத்தின் மீது இனிதாகத் திருக்கண் வளர்ந்தருள வேண்டிய பெருமான்
ஆச்ரிதார்த்தமாகக் காடு மோடையுமளக்க நேர்ந்ததே! என்னும் வயிற்றெரிச்சல் ஆழ்வார்க்கு உள்ளமை பின்னடிகளிற் போதரும்.

விடங்காலுந்தீவாயரவு – அறிவில் தலைகின்ற நித்யஸூரிகளுக்கும் எம்பெருமானிடத்துப் பரிவு மிகுதியினால்
அஸ்தாநத்தில் பயசங்கை உண்டாவதுண்டு, நித்யர்களும் முக்தர்களும் திரண்டு ‘ஹாவு ஹாவு ஹாவு‘ என்று
ஸாமகோஷம் செய்யாநின்றாலும் அதனை ஸாமகோஷமென்று தெவித்து கொள்ளாமல்
‘அஸுர ராக்ஷஸர்கள் இவ்விபூதியிலும் வந்து ஆரவாரஞ் செய்கின்றனர்‘ என்று பிரமித்துத் திருவனந்தாழ்வான்
விஷத்தைக் கக்குகின்றன்னென்கை. “ஆங்கு ஆரவாரமது கேட்டு அழலுமிழும் பூங்காரரவு“ என்றார் திருமழிசைப் பிரானும்.

————————————————————————–

போதறிந்து வானரங்கள் பூஞ்சுனை புக்கு ஆங்கு அலர்ந்த
போதரிந்து கொண்டேத்தும் போது உள்ளம் -போது
மணி வேங்கடவன் மலரடிக்கே செல்ல
அணி வேங்கடவன் பேராய்ந்து-72-

பதவுரை

வானரங்கள்–குரங்குகளானவை
போது அறிந்து–விடியற்கால முணர்ந்து (எழுந்து போய்)
பூ சுனை புக்கு–புஷ்பித்த நீர் நிலைகளிலே புகுந்து (நீராடி)
ஏத்தும்–தோத்திரஞ் செய்யா நின்றன
உள்ளம்–மனமே!
போது–(நீயும் அப்படி செய்ய) வா
அணி வேங்கடவன்–அழகிய திருமலையிலுள்ள பெருமானுடைய
பேர்–திருநாமங்களை
ஆங்கு அலர்ந்த–அப்போதே மலர்ந்த
போது–புஷ்பங்களை
அரிந்து கொண்டு–பறித்துக் கொண்டு வந்து ஸமர்ப்பித்து
ஆய்ந்து–அநுஸந்தித்துக் கொண்டு
வேங்கடன் மலர் அடிக்கே செல்ல–அத்திருவேங்கட முடையானுடைய திருவடி தாமரைகட்கே சென்று சேரும்படியாக
போதும்–புஷ்பங்களையும்
அணி–ஸமர்ப்பிக்கக் கடவர்

திருமலையில் திர்ய ஐந்துக்களான வானரங்களும் எம்பெருமானுக்குப் பணிவிடை செய்யும்படியை எடுத்துக்காட்டி
நெஞ்சே! நீயும் அப்படி செய்ய வேணுமென்கிறார் பஞ்ச பஞ்ச உஷகாலத்திலே ரிஷிகள் நீயும் துயில்
எழுமாப் போலே குரங்குகளும் எழுந்து பூத்த கனைகளிலேசென்று ஸ்நாநம் பண்ணி அங்குள்ள
செவ்விப் பூக்களைப் பறித்துக் கொண்டு போய் ஜாதிக்கு ஏற்றவாறு ஏதேனுமொன்றைச் சொல்லித் துதிசெய்து
பணியா நிற்கும் நெஞ்சே! நீயும் அப்படி செய்யப்புறப்படு திருவேங்கட முடையானுடைய சீலம் முதலிய குணங்களும்
வாசகமான திருநாமங்களை அநுஸந்தித்துக் கொண்டு நன்மலர்களை நாம் கொணர்ந்து அவனது திருவடித் தாமரைகளிர் சாத்துவாயாக.

இப்பாட்டில் போது என்ற சொல் நான்கிடத்தில் வந்துள்ளதும் முதுலிலுள்ளதற்குக் காலமென்று பொருள்,
இரண்டாவதாகவும் நான்கால் முள்ளதற்கு புஷ்பமென்று பொருள்,
மூன்றாவது வினைமுற்றாய் புறப்படு என்னும் பொருளது.

மூன்றாமடியின் முதற்சீர் மோனை யின் பத்திரகிணங்க ‘மணி‘ என்றிருக்க தகுமாதலால்
“மணி வேங்கடவன்“ என்றல் சிறக்கும் நான்காம்படியின் முதலினும் அணி என்பதை வினைமுற்றாகக் கொள்ளலாம்.

————————————————————————–

எம்பெருமான் ஸ்ரீகஜேந்திராழ்வான் திறத்தில் வெளியிட்டருளின அநுக்ரஹத்தை நோக்கின பின்பு,
நாமும் அந்த கஜேந்திரனைப்போலே அடிமை செய்வோமாயின் அப்படிப்பட்ட பகவதநுகரஹத்திற்கு நாமும்
பாத்திரமாகலாமன்றோ என்று கொண்டு எப்பொதும் புஷ்பங்களை எம்பெருமான் திருவடிகளில் ஸமர்ப்பிப்பதும்
அவனுடைய ஸஹஸ்ர பேரைச் சொல்லிக் அதுநுஸந்திப்பது மாயன்றே என்று
தம்முடைய போது போக்கைச் சொல்லிக் கொண்டாராயிற்று.

ஆய்ந்து உரைப்பன் ஆயிரம் பேர் ஆதி நடு அந்திவாய்
வாய்ந்த மலர் தூவி வைகலும் -ஏய்ந்த
பிறை கோட்டுச் செங்கண் கரி விடுத்த பெம்மான்
இறைக்கு ஆட்பட துணிந்த யான் –73-

பதவுரை

பிறை ஏய்ந்த கோடு–சந்திரகலை போன்ற தந்தத்தையும்
செம் கண்–சிவந்த கண்களையுமுடைய
கரி–கஜேந்திராழ்வானை
விடுத்த–முதலை வாயில் நினறு விடுவித்தருளின
பெம்மான்–ஸர்வேச்வரனான
இறைக்கு–ஸ்ரீமந் நாராயணனுக்கு
ஆள்பட–அடிமை செய்ய
துணிந்த யான்–உறுதிகொண்ட யான்
ஆதி நடு அந்திவாய் கைகலும்–காலை பகல் மாலை முதலிய எல்லா காலங்கள் எல்லா காலங்களிலும்
வாய்ந்த மலர்–கிடைத்த புஷ்பங்களை
ஆயிரம் பேர்–ஸஹஸ்ர பேரைகளை
உய்ந்து உரைப்பான்–ஆராய்ந்து

“ஆதி நடு அந்திவாய்“ என்று மூன்று காலங்களை யெடுத்துரைத்தது எல்லாக் காலங்களிலு மென்றபடி.

ஆயந்து உரைத்தலாவது – அர்த்தாநுஸந்தாநத்துடன் சொல்லுகை, “வாய்ந்தமலர் தூவி“ என்றதனால் –
எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்க வேணுமாகில் இன்ன புஷ்பந்தான் ஸமர்ப்பிக்கவேணு மென்று
சிரமப்பட்டுத் தேடவேண்டிய நிர்ப்பந்தமில்லை, எந்தப்புஷ்பம் கையில் கிடைக்கிறதோ அதுவே போதுமானது
இது எம்பெருமானுக்கு என்றும் பிரதிபத்தி யொன்றே வேண்டுவது என்பது வெளியாம்.

ஏய்ந்த பிறைக்கோடு – யானையின் தந்தத்திற்குப் பிறையை உவமை கூறுதல்
“கானக்களியானை தன் கொம்பிழந்து நிற்குங் கோவர்த்தனமென்னுங் கொற்றக்குடையே“ என்ற
பெரியாழ்வாரது வரணனையிலுங் காணத்தக்கது.

செங்கண்கரி – யானையின் கண்ணுக்குச் செம்மைநிறம் இயற்கையன்று, முதலையின் மீது கோபத்தினால் வந்தேறியானதென்க.
“கரிவிடுத்த பெம்மான்“ என்றவிதனை கஜேந்திரமோக்ஷபரமாக உரைத்தலின்றியே கம்ஸனுடைய யானை யான
குவலயாபீடத்தின் நிரஸநத்தைக் கூறுவதாக உரைத்தலுமொக்கும், கரிகுவலயாபீட யானையை, விடுத்த – தொலைத்த.

————————————————————————–

விஷயாந்தரங்களிலே மண்டி உண்டியே உடையே உகந்தோடும் இம்மண்டலத்தார் நடுவே தாம் அப்படியிராமல்
எம்பெருமானுக்கே தொண்டுசெய்து திரியும்படியான பாக்கியம் பெற்றமை நினைக்குங்கால்,
இவ்விருள்தருமா ஞாலத்திலும் நமக்கு இப்படிப்பட்ட நற்காலக்ஷேபம் வாய்த்ததே! என்கிற ஸந்தோஷ மிகுதியினால்
‘இல்லையெனக்கெதி ரில்லையெனக்கெதி ரில்லையெனக்கெதிரே‘ என்றாற்போன்ற வாசகங்கள்
பரவசமாகவே வெளிவருவதுண்டு, இவ்வநுஸந்தாநம் ஹேயமான அஹங்காரத்தின் பாற்படாது,
உத்தேச்யமான அஹங்காரமேயாம். அஃது இப்பாட்டில் விளங்கா நிற்கும்.

யானே தவம் செய்தேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
யானே தவம் உடையேன் எம்பெருமான் -யானே
இரும் தமிழ் நன்மாலை இணை யடிக்கே சொன்னேன்
பெரும் தமிழன் அல்லேன் பெரிது-74-

பதவுரை

எம்பெருமான்–ஸர்வ ஸ்வாமிந்!
ஏழ் பிறப்பும்–எல்லா ஜன்மங்களிலும்
எப்பொழுதும்–எல்லா அவஸ்தைகளிலும்
தவம் செய்தேன்–தவம் புரிந்தவன்
யானே–நானே
தவம் உடையேன் யானே–அந்தத் தபஸ்ஸின் பலனைப் பெற்றவனும் யானே
இரும் தமிழ் நல்மாலை–சிறந்த தமிழ்ப் பாஷையினாலாகிய நல்ல சொல்மாலைகளை
இணை அடிக்கே–(உனது) உபய பாதங்களிலே
சொன்னேன்–விஜ்ஞாபித்தவனாய்
பெரும் தமிழன்–பெரிய தமிழ்க் கலையில் வல்லவனாய்
பெரிது–மிகவும்
நல்லேன்–உனக்கு நல்லவனாயிருப்பவன்
யானே–அடியேனே

காயிலே தின்றும் கானிலுறைந்தும் தீயிடை நின்றும் பூவலம் வந்தும் திரிகின்ற சிலர், தங்களையே மஹா தபஸ்விகளாக
நினைத்துக் கொள்ளுகின்றனர். உண்மையில், எம்பெருமானை இடைவிடாது சிந்தித்தும் இப்படிப்பட்ட
இனிய தமிழ்ப்பாசுரங்களைப் பாடியும் அநுபவிக்கின்ற தானே தவஞ்செய்தவனாவேன்,
தவத்தின் பலனைப் பெற்றவனும் நானேயாவேன் – என்கிறார்.

முதலடியில் “யானை தவஞ்செய்தேன்“ என்றார்! தாம் முயற்சிகொண்டு ஒரு தபஸ்ஸு பண்ணினதாகத்
தமக்குத் தெரியாமையாலும் தபஸ்ஸின் பலன்மாத்திரம் தம்மிடத்திலுண்டாயிருக்கக் காண்கையாலும்
‘யானே தவமுடையேன்‘ என்றார். இங்ஙனே தாம் சொல்லிக்கொள்வதற்குக் காரணம் இன்னதென்பதை விளக்குவன பின்னடிகள்.
என்னுடைய வாக்கு பகவத்விஷயத்தில் உபயோகப்படப் பெற்றதனால் நானே தவஞ்செய்தேன், நானே தவமுடையென் என்கை.
மற்றுள்ள ஆழ்வார்களும் இருந்தமிழ் நன்மாலை இணையடிக்கே சொன்ன பெருந்தமிழர்களாயிருந்தாலும்
தம்முடைய அடங்காப் பெருமகிழ்ச்சியினால்
“யானே இருந்தமிழ்நனமாலை யிணையடிக்கே சொன்னேன் பெருந்தமிழன் நல்லேன் பெரிது“ என்று
சொல்லிக் கொள்ளக் குறையில்லையென்க.

————————————————————————–

கீழ்ப்பாட்டில் ‘பெருந்தமிழன் நல்லேன் பெரிது‘ என்று போரப் பொலியச் சொல்லிக் கொண்ட ஆழ்வாரை நோக்கி
எம்பெருமான் ‘நீர் நல்ல பெருந்தமிழர் என்பதை நாடுநகரமும் நன்கறி ஒருகவி சொல்லும், பார்ப்போம்‘ என்ன,
அப்போ தருளிச்செய்த கவியாம் இது.

பெருகு மத வேழம் மாப்பிடிக்கு முன்னின்று
இரு கண் இள மூங்கில் வாங்கி -அருகிருந்த
தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர்
வான் கலந்த வண்ணன் வரை-75-

பதவுரை

பெருகும்–பெருகுகின்ற
மதம்–மத நீரை யுடைத்தான
வேழம்–யானையானது
மா பிடிக்கு முன் நின்று–(தனது) சிறந்த பேடையின் முன்னே நின்று
இரு கண் இள மூங்கில் வாங்கி–இரண்டு கணுக்களை யுடைத்தாய் இளையதான மூங்கில் குருத்தைப்பிடுங்கி
அருகு இருந்த தேன் கலந்து–(அந்த மூங்கிற் குருத்தை) ஸமீபத்திலுள்ள தேனிலே தோய்த்து
நீட்டும்–(பேடைக்குக்) கொடுப்பதாகக் கையை நீட்டப் பெற்ற
திருவேங்கடம் கண்டீர்–திருமலையன்றோ
வான் கலந்த வண்ணன் வரை–மேகத்தோடொத்த நிறத்தனான பெருமானுடைய (வாஸஸ்தான மான) பர்வதம்.

வடதிருவேங்கடமாமலையை வருணிக்கிறார். மதம்பிடித்து மனம் போனபடி திரிந்துகொண்டிருந்த
ஒரு யானையானது தன்பேடையைக் கண்டது, அதனைமீறி அப்பாற்செல்லமாட்டாமல்
அதற்கு இனிய உணவுகொடுத்து அதனை த்ருப்தி செய்விக்க விரும்பி மூங்கில்குருத்தைப் பிடுங்கித்
தேனிலே தோய்த்து அப்பேடையின் வாயிலே பிழிகின்றதாம்,
இப்படிப்பட்ட நிகழ்ச்சிக்கு இடமான திருமலையானது நீலமேகநிறத்தனான எம்பெருமான் உவந்து எழுந்தருளி
யிருக்குமிடம் என்றாராயிற்று. எம்பெருமான் பிராட்டியை உவப்பிக்கும்படியைக் கூறுதல் இதற்கு உள்ளுறை பொருள்.

பெரிய திருமொழியில் “வரைசெய்யாகளி றிளவெதில் வளர்முறை யளைமிகு தேன்தோய்த்தும்,
பிரசவசயீதன் இளம்பிடிக்கருள்செயும் பிரதிசென்றடைநெஞசே என்ற (1-2-5) என்ற பாசுரமும் இப்பொருள் கொண்டதே.

————————————————————————–

எம்பெருமானைத் திருவடிதொழுவதற்காக அவன் ஸந்நிதிக்கு நாம் பிடைகொள்ளும்போது
அரசனையும் கடவுளையும் ஆசார்யனையும் வெறுங்கையனாக அணுகலாகாது என்ற விதியை அடியொற்றியும்
நமது காதலுக்கு இணங்கவும் அப்பெருமானுக்கு உரிய பொருள்களைக் கையிற்கொண்டு செல்லவேணுமென்கிறார்.

வரைச் சந்தன குழம்பும் வான் கலனும் பட்டும்
விரைப் பொலிந்த வெண் மல்லிகையும் -நிறைத்துக் கொண்டு
ஆதிக்கண் நின்ற வறிவன் அடி இணையே
ஓதிப் பணிவது உறும் —76-

பதவுரை

வரை சந்தனம் குழம்பும்–(மலய) பர்வதத்தினின்று முண்டான சந்தனத்தின் குழம்பையும்
வான் கலனும்–சிறந்த ஆபரணங்களையும்
பட்டும்–பட்டுப் பீதாம்பரங்களையும்
விரை பொலிந்த–பரிமளம் விஞ்சி யிருக்கப் பெற்ற
வெண் மல்லிகையும்–வெளுத்த மல்லிகை மலர்களையும்
நிறைத்துக் கொண்டு–சேரித்துக்கொண்டு
ஆதிக்கண் நின்ற அறிவன்–ஸகல ஜகத் காரண பூதனாய் ஸர்வஜ்ஞனான பெருமானுடைய
அடி இணையே–உபய பாதங்களையே
ஓதி–வாயாரத் துதித்து
பணிவது–தலையார வணங்குவது
உறும்–ஸ்வரூபத்துக்குச் சேரும்.

சிறந்த சந்தனம், திவ்யமான ஆபரணம், உயர்ந்த பீதாம்பரம், நறுமணமிக்க நன்மல்லிகைமலர் ஆகிய
இவற்றைக் கையிற்கொண்டு சென்று எம்பெருமானது திருவடிகளைத்துதித்து வணங்குதல் நன்று.

இப்பாசுரத்திற்கு ஓரடைவிலே அழகிய மணவாளச்சீயர் ரஸோக்தியாக ஏற்பட்டு உபந்யஸித்த ஒரு பொருளும் குறிக்கொள்ளத்தக்கதே,
அதாவது –வரைச்சந்தனக்குழம்பு முதலியவற்றை எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்கும்பொருட்டு கையிற்கொண்டு ஸந்திக்குச்
செல்லவேணுமென்பதே இப்பாசுரத்தின் பொருளாயினும் வேறுவகையான பொருளும் தொனிக்கின்றது.
அன்பர்கள் பகவத் ஸந்நிதியிலே அருளிச் செயல் ஸேவிக்கப் போகும்போது அழுக்குடம்போடும் கந்தைத்துணியோடும்
சிக்கு நாற்றத்தலையோடும் போகுகையின்றியே,
“மெய்யிட நல்லதோர் சாந்தமும்“ என்கிறபடியே அழகாக உடம்பிற் சந்தனம் பூசிக்கொண்டும்,
“கழுத்துக்குப்பூணொடு காதுக்குக் குண்டலமும்“ என்கிறபடியே திவ்ய வஸ்த்ர முடுத்துக்கொண்டும்,
“தொடுத்த நுழாய்மலர் குடிக்களைந்தன சூடுமித்தொண்டர்களோம்“ என்கிறபடியே நல்ல புஷ்பங்களைச் சூடிக்கொண்டும்
சென்று ஓதிப்பணிவது உறும் –அருளிச்செயல் ஓதுவது நன்று –என்றாம்.
பண்டைகாலத்தில் பட்டர் இயல் கோஷ்டிக்கு எழுந்தருளும்போது இவ்வகை அலங்காரங்களுடனெ எழுந்தருள்வரென்பது ப்ரஸித்தம்.

————————————————————————–

உறும் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் நல் பாதம்
உறும் கண்டாய் ஒண் கமலம் தன்னால் -உறும் கண்டாய்
ஏத்திப் பணிந்தவன் பேர் ஈர் ஐஞஜூறு எப்பொழுதும்
சாத்தி உரைத்தல் தவம்-77-

பதவுரை

நல் நெஞ்சே–நல்ல மனமே!
உத்தமன்–புருஷோத்தமனுடைய
நல் பாதம்–சிறந்த திருவடிகள்
உறும் கண்டாய்–நமக்கு ப்ராப்த மானவை காண்க (அப்படிப்பட்ட திருவடிகளை)
ஓண் கமலம் தன்னால்–அழகிய தாமரை மலர்களினால் (ஆராதிப்பதானது)
உறும் கண்டாய்–நமக்கு உரியது காண்
சாத்தி–(அத் தாமரை மலர்களை) ஸமர்ப்பித்து
ஏத்தி–துதித்து
பணிந்து–நமஸ்கரித்து
அவன் பேர் ஈர் ஐந்நூறு–அவனது ஸஹஸ்ர நாமங்களையும்
எப்பொழுதும்–அநவரதமும் ஸங்கீர்த்தனம் பண்ணுகையாகிற
தவம்–தபஸ்ஸானது
உறும் கண்டாய்–உரியது காண்.

நான் சொல்வதைக் கேட்டு அதன்படியே நடக்கும் நன்னெஞ்சமே! உனக்கு ஹிதமானவற்றைச் சொல்லுகின்றேன், கேளாய்,
யோக்யர் அயோக்யர் என்று வாசிபாராதே எல்லாரையும் ஆட்படுத்திக்கொள்ளுகையாகிற சிறந்த குணம் வாய்ந்த
புருஷோத்தமனுடைய திருவடிகளே நமக்கு ப்ராப்தமென்று கொள், அன்னவனது அத்திருவடிகளைத் தாமரைமலர்
முதலிய நன்மலர்களால் ஆராதிப்பது ஸ்வரூபப்ராப்தம் என்று கொள்,
அவனையே வாயாரத் துதித்துத் தலையார வணங்கிப் பேராயிரமும் ஓதுவதே நமக்குத் தவம் என்று கொள் – என்றாராயிற்று.

————————————————————————-

தவம் செய்து நான்முகனே பெற்றான் தரணி
நிவர்ந்து அளப்ப நீட்டிய பொற்  பாதம் -சிவந்த தன்
கை யனைத்தும் ஆரக் கழுவினான் கங்கை நீர்
பெய்தனைத்துப பேர் மொழிந்து பின்-78-

பதவுரை

தரணி–பூமியை
அளப்ப நிவர்ந்து–தாவி யளப்பதாகத் தொடங்கின த்ரிவிக்ரமாவதார காலத்தலே
நீட்டிய–பரப்பின
பொன் பாதம்–அழகிய திருவடியை
கங்கை நீர் பெய்து–கங்க தீர்த்தமாகப் பெருகின கமண்டல தீர்த்தத்தைப் பணி மாறி
அனைத்து பேர் மொழிந்து–(பரமனுடைய) எல்லாத் திருநாமங்களையும் வாயாரச் சொல்லி
பின்–பிறகு
தன் சிவந்த கை அனைத்தும் ஆர–தனது அழகிய கைகளெல்லாம் ஸபலமாகும்படி
கழுவினான்–திருவடி விளக்கியவனான
நான் முகனே–பிரமனொருவனெ
தவம் செய்து பெற்றான்–தவப் பயன் பெற்றவனாயினான்.

எம்பெருமான் உலகளந்தருளின காலத்தல் ஸ்ரீபாத தீர்த்தங்கொண்ட நான்முகனொருவனே பெருந்தவத்தோனென்கிறார்.
“குறைகொண்டு நான்முகன் குண்டிகை நீர்பெய்து, மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்திக் –
கறைகொண்ட, கண்டத்தான் செனனிமேலேறக் கழுவினான், அண்டத்தான் சேவடியையாங்கு“ என்ற திருமழிசைப்பிரான் பாசுரங்காண்க.

கங்கை நீர்பெய்து –நான்முகன் தனது கமண்டலதர்த்தைத்தைக் கொண்டு திருமாலின் திருவடியை விளக்கினதாக
ப்ரமாணங்கள் சொல்லாநிற்க. இவர் ‘கங்கை நீர் பெய்து‘ என்கிறாரே, இது பொருந்துமோ? என்னவேண்டா,
பிரமன் திருவடி விளக்கின கமண்டலத்தீர்த்தமே அடுத்த க்ஷணத்தில் கங்காதீர்த்தமாக ப்ரவஹிக்கப் பெற்றதனால்
அதனையுட்கொண்டே “கங்கைநீர் பெய்து“ என்றருளிச் செய்யப்பட்டுள்ளது – என்றுணர்க.
ஆகவே இங்குக் கங்கைநீர் என்றது – கங்கைநீர் ஆவத்ற்கு உறுப்பான கமண்டல தீர்த்தத்தைச் சொன்னபடி தரணி – வடசொல்.

————————————————————————–

பின்னின்று தாய் இரப்பக் கேளான் பெரும் பணைத் தோள்
முன்னின்று தான் இரப்பாள் மொய்ம்மலராள் -சொல் நின்ற
தோள் நலந்தான் நேரில்லாத் தோன்றல் அவன் அளந்த
நீள் நிலம் தான் அனைத்துக்கும் நேர்-79-

பதவுரை

தாய்–மாதாவான கௌஸல்யை
பின் நின்று–பின் தொடர்ந்து
இரப்ப–(என்னை விட்டு நீ காட்டுக்குப் போகலாகாது) என்று பிரார்த்திக்கவும்
கேளான்–அதனை ஏற்றுக் கொள்ளளாதவனாயும்
பெரு பணை தோள்–சிறந்த முங்கில் போன் திருத் தோள்களை யுடையளாய்
சொல் நின்ற-தந்தையின் நியமனமாகிய சொல் ஒன்றிலேயே தீவ்ரமாக நின்ற
தோள் நலத்தான்–புஜ பலத்தை யுடையனும்
நேர் இல்லா தோன்றல்–ஒப்பற்ற ஸ்வாமியுமான இராமபிரானுடைய
மொய் மலராள் தான்–அழகிய தாமரைப்பூவில் பிறந்தவளான பிராட்டியின் அம்சமான ஸீதையானவள்
முன் நின்று–முன்னை நின்று
இரப்பாள்–(இந்த ஸுகுமாரமான திருமேனியைக் கொண்டு காட்டுக்குப் போவது வேண்டா என்று) பிரார்த்தித்த வளவிலும்
அத்தனைக்கும்–(காட்டின் கொடுமையைப் பாராமல் தைரியமாகக் காட்டுக்கு எழுந்தருளின்) அப்படிப்பட்ட செயலுக்கு
அவன் அளந்த நீள் நீலம் தான் நேர்–அப்பெருமான் மிகப்பெரிய இவ்வுலகத்தை அளந்த செயல் ஒன்றே ஒத்தது.

ஸ்ரீராமாவதாரத்தில், இராமபிரான் தந்தையின் நியமநங்கொண்டு காட்டுக்குப் புறப்படுகையில்
தாயாகிய கௌஸல்யையும் தேவியான பிராட்டியும் வேண்டச்செய்தேயும் அவ்வேண்டுகொளைச் சிறிதுங் காதிற்கொள்ளாமல்
‘தந்தை சொல் தவறலாகாது‘ என்பதுபற்றியும், ‘துஷ்டர்களைத் தண்டித்து சிஷ்டர்களை வாழ்விப்பதற்குப் பாங்காக
நமக்கு வாய்த்த வநவாஸத்தை இழக்கலாகாது‘ என்பதுபற்றியும் ஒன்றையும் சிந்தியாது காட்டுக் கெழுந்தருளின
பெருங்குணத்திற்கு ஒப்பாகச் சொல்லக்கூடிய விஷயம் வேறொன்றுமில்லை, சொல்லில்,
அப்பெருமான் வஸிஷ்டசண்டாள விபாகம் பாராமல் எல்லார் தலையிலும் திருவடியை வைக்கத் தாவி
யன்றுலகளந்த சரிதமொன்றே ஒப்பாகச் சொல்லத்தகும், இராமனுடைய பெருங்குணத்திற்குத் திரிவிக்ரமனுடைய
பெருங்குணமே ஒப்பாகப் பொருந்தவற்று – என்கிறார்.
இதனால், ‘சந்திரன் சந்திரனைப்போலே அழகியான், கடல் கடல்போலே பெரிது என்னுமாபோலே எம்பெருமானுடைய
குணத்திற்கு அவனுடைய குணத்தையே ஒப்புச் சொல்லவேணு மத்தனையல்லது,
வேறொருவருடைய குணமும் பகவத்குணத்திற்கு ஈடாக மாட்டாது – என்று காட்டியவாறு.

“அத்தனைக்கும் அவனளந்த நீணிலந்தான் நேர்“ என்றதற்கு – இராமபிரானுடைய குணம் எப்படிப்பட்ட தென்றால்,
“பெரிது பெரிது புவனம் பெரிது“ என்கிறாப்போலே இவ்வுலகம் எவ்வளவு பெரியதோ அவ்வளவு பெரிது
என்னலாமத்தனை யொழிய, மற்றைப் படியாக அவன் குணத்தை வகையிட்டுச் சொல்ல முடியாது என்றுங் கருத்தாகலாம்.

சொல்நின்ற – ஸ்ரீராமாயண ப்ரதிபாத்யமாய் நின்ற என்றுமாம்.
மூன்றாமடியில். “தோள் நலத்தான்“ என்பதே ப்ராசீந பாடம், “தோள் நலந்தான்“ என்ற பாடத்திலும் பொருள் பொருந்தும்,
தோள – திருந்தோள்களுடையனான இராமபிரானுடைய நலந்தானத்தனைக்கும் – மஹாகுணத்துக் கெல்லாம் என்க.

————————————————————————–

நேர்ந்தேன் அடிமை நினைந்தேன் அது ஒண் கமலம்
ஆர்ந்தேன் உன் சேவடி மேல் அன்பாய் -ஆர்ந்த
அடிக்கோலம் கண்டவர்க்கு என் கொலோ முன்னைப்
படிக்கோலம் கண்ட பகல் -80-

பதவுரை

அடிமை நேர்ந்தேன்–உனது திருவடிகளில் கைங்கரியம் பண்ண நேர் பட்டேன்
ஒரு கண் மலம் அது நினைந்தேன்–அழகிய தாமரைப் பூப்போன்ற அத்திருவடிகளைச் சந்தித்தேன்
உன் சே அடிமேல்–உனது அத்திருவடிகள் விஷயத்திலே
அன்பு ஆய் ஆர்ந்தேன்–அன்பே வடிவெடுத்தவனாகப் பொருந்தினேன்
ஆர்ந்த–பரிபூர்ணமான
அடி கோலம்–திருவடிகளினழகை
கண்டவர்க்கு– ஸேவிக்கப்பெற்றவர்கட்கு
படி கோலம் கண்ட முன்னைப் பகல் என்கொல்–திருமேனியின் அழகை ஸேவிக்கப்பெற்ற முற்காலம் சிறந்த தாகுமோ?
(திருமேனி ஸேவையிற் காட்டிலும் திருவடி ஸேவையேயன்றோ மிகச் சிறந்தது)

எம்பெருமானுடைய திருவடிகளிலே தமக்கு அளவுகடந்த அன்பு அமைந்திருக்கும்படியை முன்னடிகளில் வெளியிட்டார்.
அதற்குமேல் ‘எம்பெருமானுடைய‘ திருமேனியெல்லாம் உத்தேச்யமன்றோ திருவடியை மாத்திரமே பேசுகின்றீரே,
மற்ற அவயங்கள் உத்தேச்யமல்லவோ உமக்கு?‘ என்று ஒரு கேள்வி. பிறந்தாகக்கொண்டு, திருவடியின் அழகுக்கு முன்னே
திருமேனியின் அழகு ஒரு பொருளாய்த் தோற்றுமோ? என்கிறார் பின்னடிகளில்.

ஒண்கமலம் அது நினைந்தேன் – ‘கமலம்போன்ற திருவடி‘ என்று சொல்லவேண்டும் இடத்து,
கமலம் என்றே சொன்னது – ரூபகாதிசயோக்தி யலங்காரமென்க.

உன் சேவடிமேல் அன்பாய் ஆர்ந்தேன் – அன்பு என்று ஒரு வஸ்துவும் அதனையுடைய நான் என்று ஒரு வஸ்துவும் ஆக இரண்டு
வஸ்துக்களின்றியே அன்புதானே நானாக வடிவெடுத்ததென்னப் பொருந்திவிட்டேன் என்கை.

ஆர்ந்த அடிக்கோலம் கண்டவர்க்கு முன்னடிப்படிககோலகண்ட பகல் என்கொல்? – உலகளந்தகாலத்தில், கீழுலகத்திலுள்ளவர்கட்கும்
மேலுலகத்திலுள்ளவர்கட்கும் திருவடிஸேவை கிடைத்தது, நடு உலகத்திலுள்ளவர்கட்குத் திருமேனிஸேவை கிடைத்து,
திருமேனியை ஸேவிக்கப் பெற்றவர்களிற் காட்டிலும் திருவடிகளை ஸேவிக்கப் பெற்றவர்களின் பாக்கியமே
சிறந்த பாக்கியமாதலால் திரு மேனியிற் காட்டிலும் திருவடியே பரம உத்தேச்யமாம் என்பது இப்பாட்டின் ஸாரமான கருத்து.

“அடிக்கோலம் கண்டவர்க்கு“ என்றதை – தன்மையில் வந்த படர்க்கையாகக் கொண்டு, இன்று திருவடிகளை ஸேவிக்கப்பெற்ற
வெனக்கு இதற்குமுன் திருமேனியை ஸேவிக்கப்பெற்ற காலம் என்னாவது?
அக் காலத்தை விட இக்காலம் எனக்கு சிறந்தது – என்பதாகவும் உரைக்கலாம்.

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

இரண்டாம் திருவந்தாதி -பாசுரங்கள் -41-60-திவ்யார்த்த தீபிகை சாரம்–

October 3, 2014

முன்னடிகட்குப் பலவகையாகப் பொருள்கொள்ள இடமுண்டு.
கீழ்ப்பாட்டில் காம புருஷார்த்தத்தை நிந்தித்தார்: விஷய போகங்கள் கர்ம புருஷார்த்தத்தைச் சேர்ந்தவையாதலால்
அவற்றை ஹேயமென்பது காம புருஷார்த்தத்தை ஹேயமென்ற வாறாம். இப்பாட்டில் அர்த்த புருஷார்த்தத்தை நிந்திக்கிறார்.
விசேஷமாகப் பொருள்களை ஸம்பாதித்து அவற்றால் யஜ்ஞாயாகங்களைப் பண்ணி அவற்றின் பலனாக
ஸ்வர்க்கலோகத்தை யடைந்து ஸுகிப்பது – என்றொரு வழியுண்டே; அவ்வழியையும் மேற்கொள்ளவேண்டா வென்கிறது.

பொருளால் அமர் உலகம் புக்கி இயலல் ஆகாது
அருளால் அறம் அருளும் அன்றே -அருளாலே
மா மறையோர்க்கு ஈந்த மணி வண்ணன் பாதமே
நீ மறவேல் நெஞ்சே நினை—–41–

பதவுரை

அமருலகம்–சுவர்க்க லோகத்தை
பொருளால்–‘இதுவும் ஒரு புருஷார்த்தம்’ என்கிற எண்ணத்துடன்
புக்கு இயலல் ஆகாது–போய்ச் சேர முயல்வது தகாது;
அருளான்–பரம தயாளுவான எம் பெருமான்
அறம்–புண்யத்தின் பயனான சுவர்க்க லோகத்தை
அருளும் அன்றே–தன் க்ருபையாலே கிடைக்கச் செய்வனாம்;
அருளாலே–கிருபையினாலே
மா மறை யோர்க்கு–மஹர்ஷிகளுக்கு
ஈந்த–முக்தி யளித்த
மணி வண்ணன் பாதமே-நீலமணி நிறத்தவனான எம்பெருமானது திருவடிகளையே
நெஞ்சே நீ மறவேல்–நெஞ்சே! நீ மறவாதே
நினை–தியானித்துக் கொண்டிரு.

பொருளால் அமருலகம் புக்கியலாகாது = அர்த்த புருஷார்த்த மென்கிற திரவியங்களைக் கொண்டு ஸ்வர்க்கலோகத்தைப்
பெறுவோமென்று அதற்கு முயற்சி செய்யலாகாது என்றபடி.
அன்றியே, பொருளால் = இது நமக்குப் புருஷார்த்தம் என்னும் புத்தியோடே, ஸ்வர்க்கலோக ப்ராப்தியை விரும்பி
அதற்காக நீங்கள் எம் பெருமானையே அடிபணிந்தால் அவன் கருத்தறிந்து காரியஞ்செய்யுமவனாகையால்
‘நம்மை அடுத்திருக்கு மிவர்களுக்கு ஸ்வர்க்கத்தில் நசையாகில் அதையும் அநுபவித்துத் தீரட்டும்’ என்று கிருபை பண்ணியருள்வன்;
அதற்காக நீங்கள் தனிப்பட ஒரு ப்ரயாஸங்கொள்ள வேண்டா; எது வேணுமானாலும் மணிவண்ணன் பாதமே நினைக்கத்தகும் – என்கிறார்.

“நெஞ்சே!- நீ மறவேல்” என்று தம்முடைய திருவுள்ளத்தை நோக்கிச் சொல்லுவதாயிருந்தாலும்
இதை அந்யாப தேசமாகக் கொள்ளவேணும்;
பிறரைக் குறித்துச் சொல்ல வேண்டுவதையும் தம்மை நோக்கிச் சொல்லிக்கொள்வதுண்டு:
திருவாய்மொழியில் (8- 3 -2) “சரணமாகிய நான்முறை நூல்களுஞ் சாராதே, மரணந்தோற்றம் வான்பிணி
மூப்பொன்றி வைமாய்த்தோம்” என்றவிடங்காண்க.
இங்கு, முன்னிலையாகச் சொல்ல வேண்டியதைத் தன்மையாகச் சொல்லியிருத்தல் உணர்க.

அமருலகம் – ‘அமரருலகம்’ என்பதன் விகாரம். ‘அறம்’ என்பது தர்மத்துக்குப் பேராயினும் தர்மத்தினால் ஸாத்யமான
புண்யலோகத்தைச் சொல்லுகிறது. இங்கு அருளும் = செய்யுமென்முற்று.

மூன்றாமடியில் “மாமறையோர்க்கு” என்றும் “மாமறையோற்கு” என்றும் பாடபேதமுண்டு;
முந்தின பாடத்தில் பன்மை; பிந்தின பாடத்தில் ஒருமை, பன்மையாகில் தண்காரண்ய வாஸிகளான முனிகளைச் சொல்லுகிறது;
சுகர், வாமதேவர் முதலிய ரிஷிகளைச் சொல்லவுமாம்; ஒருமையாகில், மார்க்கண்டேயனைச் சொல்லுகிறதாம்.
முத்தி யளிக்கவல்ல முகுந்தன் பாதமே பற்றினால் முதலில் ஸ்வர்க்கத்தையும் பெறலாம்;
காலக் கிரமத்தில் முத்தியையும் பெற்று வாழலாம் என்பதும் இதில் தொனிக்கும்.

முதலடியில் ‘அமருலகம்’ என்றதும் இரண்டாமடியில் ‘அறம்’ என்றதும் மோஷலோகத்தையே சொல்லுவதாகவும் ஒரு யோஜநையுண்டு.
அப்போது, ‘பொருளால்’ என்றது – ஸாதநாநுஷ்டதத்தினால் என்றபடி;
ஆக, மோக்ஷத்துக்காக ஒரு ஸாதநாநுஷ்டாநம் பண்ணவேணுமென்பதில்லை;
பரம தயாளுவான எம்பெருமான் அதை நிர்ஹேதுக கிருபையினாலே தந்தருள்வன்;
அப்படியே பல வைதிகர்களுக்கு அவன் அருளியிருக்கிறான்; இப்படியாகில் எல்லார்க்கும் மோக்ஷமளிக்க வேண்டிவருமே யென்னில்,
இந்த ஸர்வமுக்தி ப்ரஸங்கம் வாராமைக்காக அந்த மணிவண்ணனது திருவடிகளைச் சிந்தித்தல் வேண்டும் – என்பதாகக் கருத்துக் கொள்ளலாம்.

————————————————————————–

ஸம்ஸார போகங்களைத் துறந்து அவனை அநுஸந்திக்குமவர்களே பிறவிகளை அடியறுக்க வல்லவரென்கிறார்.

நினைப்பன் திருமாலை நீண்ட தோள் காண
நினைப்பார் பிறப்பொன்றும் நேரார் -மனைப்பால்
பிறந்தார் பிறந்து எய்தும் பேரின்பம் எல்லாம்
துறந்தார் தொழுதாரத் தோள்–42–

பதவுரை

திருமாலை–லக்ஷ்மீநாதனான எம்பெருமானை
நீண்ட தோள் காண நினைப்பான்–(அவனது) சிறந்த திருத்தோள் களைக் கண்டு அநுபவிப்பதற்காக நினைக்கின்றேன்.
நினைப்பார்–இப்படி நினைப்பவர்கள்
ஒன்று பிறப்பும் நேரார்–ஒருவகை யோனிப் பிறப்பையும் அடைய மாட்டார்கள்
அத்தோள்–அந்தத் திருத்தோள்களை
தொழுதார்–தொழுமவர்கள்
மனைப்பால் பிறந்தார் பிறந்து எய்தும் பேர் இன்பம் எல்லாம துறந்தார்–ஸம்ஸாரத்தில் பிறந்தவர்கள் ஜன்ம மெடுத்ததனால்
அடையக்கூடிய சிற்றின்பங்களை யெல்லாம் வெறுப்பவராவர்.

திருமாலை நீண்ட தோள் காண நினைப்பன் – ஐச்வரிய மளிக்க வேணுமென்றும் ஸந்தான மளிக்க வேணுமென்றும்
பல பல கோரிக்கைகளை முன்னிட்டு எம்பெருமானைப் பலர் அடிபணிவ ராகிலும்
நான் அப்படி ஒரு கோரிக்கையும் கருதினவனல்லேன்,
“தோள் கண்டார் தோளே கண்டார்“ என்னும் படியான அவனது தோளழகை ஸேவிக்கப்பெற வேணுமென்பது தவிர
வேறோராசையும் எனக்கில்லை என்றவாறு,
இப்படி எம்பெருமானுடைய திவ்யாவயவத்தை ஸ்லயம் போக்யமாக நினைப்பவர்கள்
“பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா வொழுக்கு மழுக்குடம்பு மிந்நின்ற நீர்மை இனியாமுறாமை“ என்று
ஆழ்வார் பிரார்த்தித்த பிறப்பின்மையைப் பெற்று நித்ய முக்தராய் வாழ்ந்திடுவர்.

இனிமேல் பிறக்கமாட்டார்களென்பதுந்தவிர, இப்பிறவியிலும் ஸம்ஸாரிகள் உகக்கிற சிற்றின்பங்களை உகவாதே
அவற்றைக் காறியுமிழ்ந்து கைவிடும்படியான விரக்தியும் பெறுவார்கள்
அவனது திருத்தோள்களை ஸேவிக்குமவர்கள் – என்கிறார் பின்னடிகளில்.

பின்னடிகளை இரண்டு வகையாக யோஜிக்கலாம். அத்தோள் தொழுதார் (எவரோ அவரே) மனைப்பால் பிறந்தார்
பிறந்தெய்தும் பேரின்பமெல்லாம் துறந்தாராவர், மனைப்பால் பிறந்தார் பிறந்தெய்தும் பேரின்பமெல்லாம் துறந்தார்
எவரோ அவரே அத்தோள் தொழுதாராவர் – என்று. சிற்றின்பங்களை வெறுத்தவர்களே எம்பெருமானுடைய
வடிவழகில் ஈடுபட்டவராவர், எம்பெருமானுடைய வடிவழகில் ஈடுபட்டவர்களே சிற்றின்பங்களை வெறுக்க வல்லவராவர் – என்றவாறு.

மனைப்பால் – பால –ஏழனுருபு. சிற்றின்பத்தைப் பேரின்பம் என்றுசொல்லாற் சொன்னது எதிர்மறை யிலக்கணையாம்,
ஸம்ஸாரிகளுடைய நினைவாலே பேரின்ப மென்கிறது.

எம்பெருமானார் ஒரு நாள் உச்சிப் போதில் திருக் காவிரியிலே மாத்யாஹ்நிகம் அநுஷ்டித்துக் கொண்டிருக்கையில்
ஒருகாமுகன் தன்னுடைய மனைவியை அழைத்துக் கொண்டு அக்கரையில் நின்றும் ஆற்றிலே வரும்போது
வெய்யிலின் கடுமையினால் அவளுக்கு வாட்டம் வாராமைக்காக அவன் அவளுக்கு நடைபாவாடை போட்டுக்கொண்டும்
குடைபிடித்துக் கொண்டும் மற்றும் பல உபசாரங்கள் செய்து கொண்டும் மிக்க ஆதரந்தோற்ற அழைத்துக் கொண்டு
வருவதை எம்பெருமானார் கண்டு ‘அப்படி! இவ்வளவு உபசாரங்கள் பண்ணுகிறாயே, என்ன விசேஷம்?‘ என்று கேட்டருள,
இவளுடைய கண்ணழகிலே நான் மிகவும் ஈடுபட்டிருப்பேன், அதற்கொரு குறைபாடு நேராமைக்காக
உபசாரங்களைப் பண்ணி வருகிறேன். என்று அவன் விடையளிக்க, அதை எம்பெருமானார் கேட்டு
‘இதனிலும் விஞ்சிய அழகுவாய்ந்த கண்களை நீ கண்டதில்லையோ?‘ என்ன,
‘எங்குங் கண்டதில்லை‘ என்று அவன் சொல்ல,
‘அப்படிப்பட்ட கண்களைக்காட்டினால் என்ன செய்வாய?‘ என்று உடையவர் கேட்க,
‘இங்ஙனே ஸகல உபசாரங்களும் அங்கே பண்ணக்கடவேன்‘ என்று விடையளிக்க,
அப்போதே நம்பெருமாள் ஸ்ந்நிதியி னுள்ளே அழைத்துக்கொண் டெழுந்தருளி
“அரங்கத்தமலன் முகத்துக் கரியவாகிப்புடை பேதைமை செய்தனவே“ என்னப்பட்ட திருக்கண்களை ஸேவிக்கப் பண்ணினவாறே
அத் தம்பதிகளிருவரும் அத்திருக்கண்களுக்கு அற்றுத் தீர்ந்தனர் என்றொரு இதிஹாஸம் ப்ரஸித்தம்
இதனை இப்பாட்டின் பின்னடிகளுக்குப் பொருத்தமாக அநுஸந்திப்பது.

————————————————————————–

எம்பெருமானுடைய திருத்தோள்களைத் தொழுவதைப் புருஷார்த்தமாகக் கீழ்ப்பாட்டி லருளிச்செய்தார், ‘
அவனுடைய திருத்தோள்களைத் தொழவேணுமென்னும் நிர்ப்பந்தம் எனக்கில்லை,
அவனுடைய திருவடிகளைத் தொழுமவர் எவரோ அவருடைய திருவடிகளைத் தொழுவதே எனக்குப் புருஷார்த்தம் என்கிறார்.
இப்பாட்டில் எம்பெருமானிடத்து அன்பு செய்வதிற்காட்டிலும பாகவதர்களிடத்து அன்பு செய்வதே
சிறந்த தென்னும் நூற் கொள்கை இதில் தழுவப்பட்டதென்க.

“ஸித்தர் பவதிவா நேதி ஸம்சயோ ச்யுதஸேவிநாம் நஸம் கியோ ஸ்தி தத்பக்தபரிசர்யாதாத்மநாம்“
எம்பெருமானை அடிபணிந்தவர்களுக்குப் பேறு தப்பாமல் கிடைக்குமென்று துணிந்து சொல்லமுடியாது, ஸந்தேஹமுண்டு.
பாகவதர்களை அடிபணிந்தவர்களுக்கு அப்படிப்பட்ட ஸந்தேஹத்திற்கிடமில்லை. பேறு கை புகுந்தே தீரும்“ என்று
சாஸ்த்ரங்களிற் சொல்லியிருப்பது

தோள் இரண்டும் எட்டு ஏழும் மூன்றும் முடி அனைத்தும்
தாள் இரண்டும் வீழச் சரம் துணிந்தான் -தாள் இரண்டும்
ஆர் தொழுவார் பாதம் அவை தொழுவது அன்றே என்
சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு —43-

பதவுரை

தோள் இரண்டு எட்டு ஏழும் மூன்றும்–இருபது தோள்களும்
வீழ–முடியும்படி
சரம் துரந்தான்–அம்புகளைச் செலுத்தின பெருமானுடைய
தாள் இரண்டும்–இரண்டு திருவடிகளையும்
தொழுவார் ஆர்–தொழுகிறவர்கள் எவரோ (அவர்களது)
முடி அனைத்தும்–(பத்தாகிய) எல்லாத் தலைகளும்
தாள் இரண்டும்–இரண்டு கால்களும்
பாதம் அவை–திருவடிகளை
தொழுவது அன்றே–ஸேவிப்பதன்றோ
என் சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு–எனது அழகிய தோள்கள் (எனக்குச்) செய்யும் உபகாரமாம்.

தோள் இரண்டு எட்டு ஏழும் மூன்றும் வீழ–இருபது தோள்களும் முடியும்படி
ஆக இப்படி சித்திரவதம் செய்தமையைத் தெரிவிக்கிறபடி.

என்சீர்கெழுதோள் செய்யுஞ் சிறப்பு – உலகத்தில் எல்லா மனிதர்களுக்கும் பொருளைக் கவர்தல், நல்லாரைக் கொல்லுதல்
முதலிய தொழில்களைச் செய்து கொள்வர் எனது கைகள் அப்படிப்பட்ட தொழில்களில் எனக்கு உதவிபுரிய வேண்டா,
பாகவதர்களைத் தொழுவதற்கு உறுப்பாகுமேல் இதுவே எனக்குச் செய்த மஹோபகாரமென்கிறார்.

————————————————————————–

சிறந்தார்க்கு எழு துணையாம் செங்கண் மால் நாமம்
மறந்தாரை மானிடமா வையேன் –அறம் தாங்கும்
மாதவனே என்னும் மனம் படைத்தது மற்றவன் பேர்
ஓதுவதே நாவினால் உள்ளு ——-44–

பதவுரை

சிறந்தார்க்கு–ஸ்ரீவைஷ்ணவோத்தமர்களுக்கு
எழுதுணை ஆம்–உஜ்ஜீவந ஹேதுவான துணையாகின்ற
நாமம்–திருநாமத்தை
மறந்தாரை–மறப்பவர்களை
மானிடம் ஆ–மநுஷ்ய யோனியிற் பிறந்தவர்களாக
வையேன்–என்னெஞ்சில் கொள்ள மாட்டேன்
அறம் தாங்கும் மாதவனே என்னும் மனம் படைத்து–“தர்ம ஸ்தாபநம் பண்ண வல்ல திருமாலே!“ என்று கூவியழைக்கும்படி யான அத்யவஸாயங்கொண்டு
செம் கண்மால்–செந்தாமரைக் கண்ணனான பெருமானுடைய
மற்று–மேலும்
அவன் பேர்–அவனது திருநாமத்தை
நாவினால் ஓதுவதே–நாவினால் சொல்லுவதையே
உள்ளு–(ப்ராப்தமென்று) அநுஸந்தித்திரு. (நெஞ்சமே! என்று விளி வருவித்துக் கொள்க)

‘சிறந்தார்‘ என்றது – பகவத்கீதையில் “ஜ்ஞாநீத்வாத்மைவ மே மதம் – ஞானியானவ் எனக்கே உயிராயிருப்பன்” என்று
கீதாசார்யனான தானே அருளிச்செய்யும்படி அவனுடைய உகப்புக்கு இலக்கான மாஞானிகளை.
அப்படிப்பட்டவர்கள் உஜ்ஜீவிப்பதற்கு உரிய துணையான எம்பெருமானுடைய திருநாமத்தை
ஸர்வகாலமும் ஸ்மரிக்கவேண்டியது கடமையாயிருக்க, எவர்கள் மறந்திருக்கின்றார்களோ, அவர்களை
மநுஷ்யகோடியில் இட்டு எண்ணமாட்டேன் – என்கிறார் முன்னடிகளில்
“ஆன்விடையேழன்ற டர்த்தாற்கு ஆளானாரல்லாதார், மானிடவரல்லரென்று என் மனத்தே வைத்தேனே“ என்றார் திருமங்கை யாழ்வாரும்.

தாம் இருக்க வேண்டும்படியைத் தம்முடைய நெஞ்சுக்கு உரைக்கிறார் பின்னடிகளில்.
“நெஞ்சே“ என்னும் விளி வருவித்துக்கொள்வது. நெஞ்சே! தர்ம ஸம்ஸ்தாபநம் பண்ணுவதற்காக அவதரிக்கிறேன் என்று
தானே சொல்லிக் கொண்டபடி வேண்டியபோது திருவவதரித்துக் தருமநெறியைத் தாங்குகின்ற மாதவனே! என்று சொல்லி
எம்பெருமானுடைய தன்மைகளையே அநுஸந்திக்கும்படியான உறுதிக்கொண்டு
அவனது திருநாமங்களை ஓதுவதே உரியதென்று கொண்டிரு – என்று உபதேசித்தாராயிற்று.

————————————————————————–

பாகவதர்களின் பெருமையைப் பேசுகிறார். ஸகல வேதங்களினாலும் பரம்பொருளாகப் பிரதிபாதிக்கப்பட்டவனும்,
அந்த மேன்மை விளங்குமாறு திருமலையில் வந்து நித்ய ஸ்ந்நிதி பண்ணியிருப்பவனும்,
அங்கே நித்யஸூரிகளும் வந்து அடிபணிய நிற்பவனுமான எம்பெருமானுடைய திருவடிகளிற் பழகுகின்ற
பாகவதர்கள் செல்வம் படைத்தாலும் ‘நாம் செல்வம் படைக்கப் பெற்றோம், நம்மோடு ஒத்தாரும் மிக்காருமில்லை‘ என்று
செருக்குக் கொள்ளமாட்டார்கள்,
இருந்த செல்வம் அழிந்து போனாலும் ‘ஐயோ! ஏழைமை வந்து விட்டதே!‘ என்று சிறிதும் தளர்ச்சியடையமாட்டார்கள்
“களிப்புங் கவர்வுமற்று“ என்ற பாசுரத்திற் சொன்னபடி லாபநஷ்டங்களில் ஒருபடிப்பட்ட சிந்தை நிலைமையை யுடையராயிருப்பர்
“முனியார் துயரங்கள் முந்திலும், இன்பங்கள் மொய்த்திடினுங் கனியார் மனம்… எங்களிராமாநுசனை வந்தெய்தினர்“ என்ற
ஸ்ரீ ராமாநுஜபக்தர்களைப் போன்றிருப்பர்களாம் பகவத் பக்தர்களும்.

உளது என்று இறுமாவார் உண்டு இல்லை என்று
தளர்தலதனருகும் சாரார் -அளவரிய
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பயின்று —45-

பதவுரை

அளவு அரிய வேதத்தான்–அளவிட முடியாதபடி அந்நதமாயுள்ள வேதங்களினால் பிரதிபாதிக்கப்படுபவனும்
வேங்கடத் தான்–திருமலையிலே வந்து நிற்பவனும்
பயின்று–பழகி (இருக்குமவர்கள்)
உளது என்று இறுமாவார்–தமக்குச் செல்வமுள்ள தென்று செருக்குக் கொள்ள மாட்டார்கள்
உண்டு இல்லை என்று–(செல்வம்) நேற்று இருந்து இன்று அழிந்த போயிற்றென்று
விண்ணோர் முடிதோயும் பாதத்தான்–நித்ய ஸூரிகளின் முடிகள் பணியப் பெற்ற திருவடிகளை யுடையனுமான எம்பெருமானுடைய
பாதம்–திருவடிகளிலே
தளர்தல் அதன் அருகும் சாரார்–தளர்ச்சி யடையும் ஸ்வபாவத்தின் கிட்டவும் செல்ல மாட்டார்கள்.

உண்டில்லை யென்று – செல்வம் அடியோடு இல்லாதவர்களுக்கு அவ்வளவாகத் தளர்ச்சி இராது,
சிலநாள் இருந்து கழிந்தவர்களுக்கு அளவற்ற தளர்ச்சி உண்டாக ப்ரஸக்தியுண்டே அப்படிப்பட்ட நிலைமையிலும்
தளரமாட்டார்கள் என்கைக்காக “உண்டில்லை யென்று“ என்றார்.
‘நேற்று உண்டாயிருந்தது, இன்று இல்லையா யொழிந்தது‘ என்று தளரமாட்டார்கள் என்கை.

அளவரிய வேதத்தான் – வேதங்களுக்கு அளவில்லை யென்பது வேதத்திலேயே விளங்கக் காட்டப்பட்டுள்ளது.
க்ருஷ்ண யஜுர் வேதத்தின் ப்ராஹமணத்தில் ஒரு பகுதியான ‘கடாகம்‘ என்னும் சாகையில்
முதல் ப்ரச்நத்தில் பதினோராவது அநுவாகத்தில் ஓர் உபாக்கியானம் ஓதப்பட்டிருக்கின்றது, அதாவது –
முன்பொரு கால் ‘பரத்வாஜர்‘ என்னும் மஹர்ஷியானவர் ஸகலவேதங்களையும் ஓதி முடிக்க வேணுமென்ற முயற்சிகொண்டு
அதற்குரிய ஆயுஸ்ஸைப் பெறுவதற்காக இந்திரனைக் குறித்து உபாஸநைசெய்து அவனை ப்ரஸந்நனாக்கி
அவனுடைய அநுக்ரஹத்தால் ஒரு புருஷாயுஸ்ஸுக்கு நூறாண்டு விழுக்காடு முந்நூறாண்டுகொண்ட மூன்று ஆயுஸ்ஸுக்களை
வரம்பெற்று அந்த வாழ்நாளில் குருகுலவாஸஞ் செய்து வேதமோதிவந்தார். முந்நூறாண்டும் முடிந்து ஜீர்ண சரீரராய்
கிழத்தனமடைந்து சரமகாலமணுகிப் படுத்திருக்கும் அம்முனிவரை இந்திரன் வந்துகிட்டி
‘ஓ பரத்வாஜ் முனிவரே! மீண்டும் ஒரு நூறாண்டுகொண்ட ஆயுளை உமக்கு நான் கொடுப்பேனாகில் அந்த வாழ்நாளை நீர்
எவ்விதமாகக் கழிக்க உத்தேசிக்கிறீர்? அந்த ஆயுஸ்ஸில் நீர் ஸாதிக்கவிரும்பும் புருஷார்த்தம் யாது? என்று கேட்க,
முனிவர் ‘வேறு நான் என்ன செய்யப் போகிறேன்? அந்த ஆயுஸ்ஸிலும் வேதாத்யயநமே செய்யக்கடவேன் என்றார்.
அதைக் கேட்ட இந்தரன் ‘ஓ‘ இவர் இதுவரை கழிந்த மூன்று ஆயுஸ்ஸில் மூன்று வேதங்களையும் பூர்த்தியாக ஓதிவிட்டதாகவும்
இன்னமும் ஒரு வேதம் குறைபட்டிருப்பதாகவும், அதையும் இந்த நான்காவது ஆயுஸ்ஸில் ஓதிவிட்டால் சதுர்வேதீ என்று
விருது பெற்றுவிடலாமென்றும் இவர் ஆசைப்படுகிறார் போலும், இவருடைய ப்ரமத்தை நீக்குவோம்‘ என்றெண்ணி,
ருக்வேதம், யஜுர் வேதம், ஸாமவேதம் என்ற மூன்று வேதங்களையும் தம்முடைய யோக ஸாமர்த்தியத்தினால் மூன்று மலைகளாக்கி
இதற்கு முன் அம்முனிவர் கண்டறியாத மலைவடிவமான அந்த வேதங்களை அவருக்குக் காட்டினான்.
பிறகு அவற்றுள் ஒவ்வொரு மலையினின்றும் ஒவ்வொரு முஷ்டியால் தூள்களையெடுத்து அங்ஙனம் மூன்று முஷ்டிகளெடுத்துக் காட்டி
‘ஓ முனிவரே! இம்மூன்று மலைகளும் வேதங்களை அதில் ஒவ்வொரு துகளும் ஒவ்வொரு வேதமாதலால்
வேதங்களுக்கு எல்லையே கிடையாது‘ என்றான் இவ் வார்த்தையைக் கேட்ட முனிவர்
‘இப்படியாகில் இன்றளவும் நாம் செய்த வேதாத்யயநம் எவ்வளவாயிருக்கும்‘ எனச் சிந்தை கொண்டபடியேக் குறிப்பாலறிந்த இந்திரன்
‘முன்வரே! இம்மூன்று முஷ்டிகளில் அடங்கியுள்ள வேதராசிமைத்தான் நீர் இதுவரை முந்நூறாண்டுகளாக் குருகுல வாஸஞ்செய்து ஓதினிர்,
இதோ மலைமலையாகக் கிடக்கும் வேதங்கள் உம்மால் ஓதப்படவில்லை‘ என்றானாம்.

————————————————————————–

பாகவதர்கள் லாப நஷ்டங்களில் உகப்பும் வெறுப்புங் கொள்ளாதிருக்கும்படி எம்பெருமான் பல திவ்யதேசங்களில்
ஸந்நிதி பண்ணி க்ருஷி பண்ணினானாகையாலே அப்படிப்பட்ட திவ்ய தேசங்களில் சிலவற்றைப் பேசி அநுபவிக்கிறார்.
திருவரங்கம் பெரிய கோவில், திருக்கோட்டியூர், திருவேங்கடம் திருநீர்மலை என்னுமித் திருப்பதிகளிலே
எம்பெருமான் நெடுங்காலமாக வாழ்கின்றானென்கிறார்.

பயின்றது அரங்கம் திருக்கோட்டி பன்னாள்
பயின்றதுவும் வேங்கடமே பன்னாள் -பயின்ற
தணி திகழும் சோலை யணி நீர் மலையே
மணி திகழும் வண் தடக்கை மால் —46-

பதவுரை

மணி திகழும்–நீல மணிபோல் விளங்குமவனும்
வண் தடக்கை–உதாரமாய் நீண்ட திருக்கைகளை உடையனுமான
மால்–எம்பெருமான்
பயின்றது–நித்ய வாஸம் செய்தருளுமிடம்
அரங்கம் திருக்கோட்டி–திருவரங்கமும் திருக்கோட்டியூருமாம்
பல் நாள்–அநாதி காலம்
பயின்றதுவும்-நித்ய வாஸம் செய்யுமிடமும்
வேங்கடமே–திருமலையாம் (பல்நாள் பயின்றதுவும்)
அணி திகழும் சோலை–அழகு விளங்குகின்ற சோலைகளை யுடைத்தாய்
அணி–இந் நிலவுலகுக்கு அலங்காரமான
நீர்மலை–திருநீர்மலையாம்.

ஆச்ரிதர்கள் திருந்துவதற்காக எம்பெருமான் உகந்து வர்த்திக்கும் திருப்பதிகள் இங்ஙனே பல்லாயிரமுள்ளன,
அவற்றுக்கு ஓர் வரையறையில்லை – என்றவாறு.

“அணிதிகழுஞ் சோலை“ என்றதை நீர்மலைக்கு விசேஷணமாக்காமல்
தனி விசேஷயமாகக் கொண்டு திருமாலிருஞ்சோலை யென்றுரைத்தலு மொக்கும்.

————————————————————————–

மாலை யரி உருவன் பாத மலர் அணிந்து
காலை தொழுது எழுமின் கைகோலி-ஞாலம்
அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த அண்ணலை மற்று அல்லால்
உளம் கிடந்த வாற்றால் உணர்ந்து ———47-

பதவுரை

ஞாலம்–பூமி முழுவதையும்
அளந்து–ஒரு கால் அளந்தும்
இடந்து–மற்றொருகால் (வராஹமாகி) இடந்தும்
உண்டு–(பிரளயத்தில்) திருவயிற்றினுள் வைத்தும்
உமிழ்ந்த–பிறகு வெளிப்படுத்தியும்
இப்படி யெல்லாம் (ரக்ஷணத் தொழில்) செய்த
அண்ணலை–ஸர்வ ஸ்வாமியான எம்பெருமானை
மற்று அல்லால்–கீழ்ச்சொன்ன வகையான ரக்ஷணத் தொழில்கள் தவிரவும்
உளம் கிடந்த ஆற்றல்–(அன்பருடைய நெஞ்சை உருக்கிக்கொண்டு அவர்களுடைய) நெஞ்சிலே கிடக்கும் விதங்களோடுகூட
உணர்ந்து–அநுஸந்தித்து, (முன்பொருகால் ப்ரஹ்லாதனுக்கருள் செய்வதற்காக)
மாலை–மாலைப் பொழுதிலே
அரி உருவன்–நரசிங்க மூர்த்தியாய்த் தோன்றின அப்பெருமானுடைய
பாதம்–திருவடிகளை
மலர்–புஷ்பங்களாலே
அணிந்து–அலங்கரித்து
காலை–சிற்றஞ சிறுகாலையில்
கைகோலி தொழுது–கைகூப்பிவணங்கி
எழுமின்–உஜ்ஜீவியுங்கள்

கீழ்ப்பாட்டிற் கூறியபடியே பல திருப்பதிகளில் கோயில் கொண்டெழுந்தருளி யிருக்குமவனுடைய திருவடிகளிலே
புஷ்பார்ச்சனை பண்ணி “சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன் பொற்றாமரையடியே போற்றும்“ என்கிற
படியிலும் ஒவ்வொரு விபவாவதாரத் திருமேனியோடே ஸேவை ஸாதித்தருளுகின்ற னாகையால் உபலக்ஷணமாக
ஒரு திருமேனியை யெடுத்துக் கூறுகின்றார்
‘அரியுருவன்‘ என்று. எம்பெருமானை ஆராதிக்கும்போது ‘இது நமக்கு ஸ்வரூப ப்ராப்தம்‘ என்றே
ஆராதிக்க வேண்டுமாயினும் குணைர்தாஸ்ய முபாகத“ என்கிறபடியே திருக்குணங்களுக்குத் தோற்று அடிமை செய்யும்
முறைமையும் ஒன்றுண்டாகையாலே அத்திருக்குணங்களுக்கு ப்ரகாசமாக அப்பெருமான் செய்தருளின
பெரு நன்றிகளைப் பாராட்டிக் கொண்டே அடி பணிய வேணுமென்கைக்காக ஞாலமளந்திடந் துண்டுமிழ்ந்த அண்ணலை‘ என்கிறார்.
மாவலியைச் செருக்கடக்கி மண்ணளந்த மஹாகுணத்தையும் ஹிரண்யாக்ஷனைக் கொன்று பூமியைமீட்டுக் கொணர்ந்த
மஹோபகாரத்தையும் பிரளயங்கொள்ளாதபடி உலகங்களைத் திருவயிற்றிலே அடக்கிக் காத்தருளின
பெரு நன்றியையும், பிறகு வெளிப்படுத்தின குணத்தையுமு வாய்வெருவிக்கொண்டு தொழுதெழுங்கள் என்றவாறு.

இப்படி நாட்டுக்குப் பொதுவாகச் செய்த உபகாரங்கள் மாத்திரமன்றியே –
“மருவித்தொழும் மனமேதந்தாய்“ –
“என்னைத் தீமனங்கெடுத்தாய்“ என்றிப்படி பெரியார் மனமுருகி அநுஸந்திக்கும் ஐகாந்திகமான
உபகாரங்களும் பலவுண்டாகையால் அப்படிப்பட்ட மஹோபகாரங்களையுங்கூட அநுஸந்திக்கவேணு மென்கிறது ஈற்றடி.
“எத்திறம்! உரலினோ மணைந்திருந் தேங்கிய வெளிவே!“ என்றும்
“பிறந்தவாறும் வளர்ந்தவாறும்!“ என்றும் மிக ஈடுபட்டு அநுஸந்திக்கும் குண சேஷ்டிதங்களும் ஈற்றடிக்குப் பொருளாம்.

————————————————————————–

கீழ்ப் பாட்டில் “உளங்கிடந்த வாற்றாலுணர்ந்து“ என்றதை விவரிப்பது போலும் இப்பாட்டு.
‘அன்பர் மறக்க முடியாதபடி அவர்களுடைய நெஞ்சைக் கொள்ளை கொண்டிருக்கு முபகாரம் நான் என்ன செய்திருக்கிறேன்?‘
என்று எம்பெருமான் கேட்பதாகக் கொண்டு, பிரானே! நீ செய்தருளின மஹோபகாரங்கள் சொல்லாற் கூறும் பரமோ?
கண்ணில்லாதவர்களுக்குக் கண் கொடுத்தாற்போலே வேதங்களையெல்லாம் வெளியிட்டருளினாய்.
அந்த வேதங்களின் அரும்பெரும் பொருள்களை விவரிப்பனவாய் வேதோபப்ரும்ஹணமென்று பேர்பெற்றனவான்
ஸ்ம்ருதீதிஹாஸ புராணதிகளையும் முனிவர்களைக் கொண்டு பிரவசதும் செய்தருளினாய்,
ஆச்ரீதர்களுடைய குற்றங்களையும் நற்றமாக உபபாதிக்கவல்ல பெரிய பிராட்டியான ஒரு நொடிப்பொழுதும் விட்டுப் பிரியாதிருக்கின்றாய்,
திருமலை முதலிய திருப்பதிகளிலே படுகாடு கிடக்கின்றாய்,
இப்படியாக நீ செய்தருளும் பெருநன்றிகளுக்கு எல்லையுண்டோ, என்றாராயிற்று.

உணர்ந்தாய் மறை நான்கும் ஓதினாய் நீதி
மணந்தாய் மலர்மகள் தோள் மாலே -மணந்தாய் போய்
வேயிரும் சாரல் வியலிரு ஞாலம் சூழ்
மா யிரும் சோலை மலை——48-

பதவுரை

மாலே–ஸர்வேச்வரனே!
மறை நான்கும்–நான்கு வேதங்களையும்
உணர்ந்தாய்–(பிரளயந்தோறும்) ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருந்து பிறகு வெளியிடுகின்றாய்
நீதி–அந்த வேதங்களின் பொருளை விவரிக்க வல்ல ஸ்ம்ருதி முதலிய உபப்ரும்ஹண நூல்களையும்
ஓதினாய்–(மநு முதலிய மஹர்ஷிகள் முகமாக) அருளிச் செய்கின்றாய்
மலர் மகள்–பூவிற்பிறந்த பெரிய பிராட்டியாருடைய
தோள்–திருத் தோளோடே
மணந்தாய்–கூடி வாழ்கின்றாய்
வேய் இரும் சாரல்–மூங்கில்கள் நிறைந்த தாழ்வரையை யுடையதும்
இரு ஞாலம் சூழ்–பரந்த இப் பூமியிலுள்ளவர்களால் பிரதக்ஷிணஞ் செய்யப்படுவதுமான
மாயிருஞ் சோல மலை போய்–திருமாலிருஞ் சோலை மலையிலே வந்து
மணந்தாய்–திருவுள்ளமுவந்து வாழ்கின்றாய்

உணர்ந்தாய் மறைநான்கும் – வேதங்கள் எம்பெருமானால் ஸ்ருஷ்டிக்கப்பட்டனவென்று சிலர் மயங்கிக்கிடப்பதுண்டு,
ஸ்ருஷ்டியின் தொடக்கத்தில் எம்பெருமான் நான்முகனுக்கு வேதோபதேசம் செய்வதாகச் சொல்லப்படுகிறதே,
ஸ்ருஷ்டிக்கு முன்பு வேதம் இருக்கமுடியாதே, ஆதலால் ஈச்வரனால்தான் வேதம் செய்யப்பட்டிருக்கவேணும் என்று
சில வைதிகர்களுங்கூட மயங்குவதுண்டு. உண்மை யாதெனில்,
வேதத்துக்கு நாம் எப்படி கர்த்தாக்களல்லவோ அப்படியே எம்பெருமானும் கர்த்தாவல்லன், உலகத்தின் ஸ்ருஷ்டியானது
ஒன்றன்பின் ஒன்றாக ஆநாதிகாலமாய் நடந்து வருகிறது. ஒவ்வொரு கல்பத்தின் ஆரம்பத்திலும்
ஈச்வரன் நான்முகனுக்கு வேதத்தை உபதேசிக்கிறான், ஆனால் முன்கல்பத்தில் வேதம் எவ்விதமான ஆநுபூர்வியோடு இருந்த்தோ,
அவ்விதமேயான ஆநுபூர்வியுடையதாகவே மறுகல்பத்தின் ஆரம்பத்திலும் உபதேசிக்கிறான்.
பூர்வபூர்வ அநுபூர்விகளே அப்படியே எம்பெருமான் திருவுள்ளத்தில் ஸ்மரித்துக்கொண்டிருந்து எவ்விதமான மாறுதலும் செய்யாமல்
இப்படியே அநாதிகாலமாக உபதேசித்து வருகிறான்.
இவ்வர்த்தம் விளங்கவே இங்கு ஆழ்வார் “மறை நான்கும் உர்ந்தாய்“ என்கிறார்.
ஸ்ரீரங்கராஜஸ்தவ உத்தரசதகத்தில் “ஸம்ஸ்காரம் ப்ரதிஸ்ஞ்சரேஷு நிததத் – வேதா. ப்ரமாணம் தக“ என்ற
ச்லோகத்தில் இவ்விஷயம் ஸாரமாக அருளிச் செய்யப்பட்டுள்ளது.

“மாயிருஞ் சோலைமலை“ என்றது
திருமாலிருஞ்சோலைமலையை என்றாவது திருவேங்கடமலையை என்றாவது கொள்ளலாம்.

————————————————————————–

நெஞ்சே! எம்பெருமான் செய்தருளின மஹோபகாரங்களை எடுத்துரைக்கக் கேட்டாயன்றோ,
இப்படிப்பட்ட மஹோபகாரங்களை அநுஸந்தித்தால் நாம் வாயடைத்துக் கிடக்கக் கூடுமோ?
உலகங்களெல்லாம் அதிரும்படி அப்பெருமான் திருநாமங்களைச் சொல்லிக் கதறவேண்டாவோ,
மிகபெரியோனான் அவனை மிக நீசரான நாம் எப்படி வாய்கொண்டு பேசலாம் என்று நீ அஞ்சியிருக்கிறாய் போலும்,
அச்சத்தை ஒழித்திட்டு உரக்கக் கூப்பிட்டழை என்கிறார்.

மலை ஏழும் மா நிலங்கள் ஏழும் அதிர
குலை சூழ் குரை கடல்கள் ஏழும் -முலை சூழ்ந்த
நஞ்சுரத்த பெண்ணை நவின்று உண்ட நாவன் என்று
அஞ்சாதே என்நெஞ்சே அழை—49-

பதவுரை

என் நெஞ்சே–எனது மனமே!
மலை ஏழும்–ஸப்த குல பர்வதங்களும்
மா நிலங்கள் ஏழும்–ஸப்த த்வீபங்களும்
குலை சூழ் குரை கடல்கள் ஏழும்–கரையாலே சூழப்பட்டு ஒலி செய்கிற ஸப்த ஸாகரங்களும்
அதிர–அதிரும்படியாக
நாவன் என்று-திருப்பவளத்தை யுடையவளே!“ என்று சொல்லி
முலை சூழ்ந்த நஞ்சு உரத்து பெண்ணை–“முலையில் வியாபித்த விஷத்தாலுண்டான கொடுமையை யுடைய (பூதனை யென்னும்) பேய் மகளை
நவின்று–(முலையுண்ணும்போது) இடையிடையே மழலைச் சொற்கள் சொல்லிக் கொண்டே
உணட–உண்டுமுடித்த
அஞ்சாது–கூசாமல்
அழை–வாய் விட்டுக் கூப்பிடு-

‘மலையேழும் மாநிலங்களேழும் குலைசூழ் குலைகடல்களேழும் அதிர‘ என்ற விது
‘அழை‘ என்ற வினைமுற்றிலே அந்வயிக்கும். “விண்ணெல்லாங் கேட்க அழுதிட்டாய்“ என்றாற்போலே
ஸப்த லோகமுங்கேட்கக் கூப்பிடவேணுமென்கிறார். நாடு நகரமும் நன்கறிய பகவத் கீர்த்தநம் பண்ணவேணுமென்கை.

மலையேழும் – ஸப்தகுல பர்வதங்களாவன – “இமயம், மந்தரம், கைலை, வடவிந்தம், நிடதம், ஏமகூடம், நீலகிரியெனக்,
குலவரையேழுங் கூறுமென்ப“ என்று திவாகரத்திற் சொல்லப்பட்டவை.

மாநிலங்களேழும் – ஸப்தத்வீபங்களைச் சொல்லுகிறது அவையாவன –
“நாவலந்தீவே இறலித்தீவே, குசையின்தீவே கிரவுஞ்சத்தீவே, சான்மலித்தீவே தெங்கின்தீவே, புட்கரத்தீவே யெனத்தீவேழே.“ எனப்பட்டவை.

குரைகடல்களேழும் – “உவரோடு கரும்பு மது நெய் தயிர் பால் புனல் மா கடலேழென வகுத்தனர் புலவர்.“

நவின்றுண்ட நாவன் – சிறுபிள்ளைகள் தாயினிடத்து முலையுண்ணும்போது ஸந்தோஷமிகுதியினால் இடையிடையே
குதலைச் சொற்களைச் சொல்லிக்கொண்டு முலையுண்பதுபோல், கண்ணபிரானும் பூதனையை மெய்த்தாயாகவே பாவித்து
மகிழ்ச்சியுடன் முலையுண்பதாகக் காட்டிக்கொள்ள மழலைச் சொற்களைச் சொன்னமையை
‘நவின்று‘ என்றதனால் வெளியிடுகிறார். நாவன் – அண்மைவிளி, நாவனே என்கை.

————————————————————————–

கீழ்ப் பாட்டில் “முலைசூழ்ந்த நஞ்சுரத்துப் பெண்ணை நவின்றுண்டநாவன்“ என்று திருவாய்ப்பாடியில் நடந்த
பேய்ச்சி முலைசுவைத்த கதையைப் பேசினபடியால் இப்பாட்டில் “ஆங்கு அவர்கள்“ என்றதற்கு
அத் திருவாய்ப்பாடியிலுள்ள ஆய்ச்சிகள் என்று பொருளாகக் குறையில்லை பிரகரண பலத்தினாலென்க-

அழைப்பன் திருமாலை ஆங்கு அவர்கள் சொன்ன
பிழைப்பில் பெரும் பெயரே பேசி -இழைப்பரிய
வாயவனே யாதவனே என்றவனை யார்முகப்பும்
மாயவனே என்று மதித்து —50-

பதவுரை

இழைப்பு அரிய–ஆராய்வதற்கு அருமையான ஸ்வரூப ஸ்வபாவங்களையுடைய
ஆயவனே என்றும்–கோபால க்ருஷ்ணனே!என்றும்
மாயவனே என்றும்–(குண சேஷ்டிதங்களினால்) ஆச்சரிய பூதனே என்றும்!
மதித்து–அநுஸந்தித்துக் கொண்டு
ஆங்கு அவர்கள் சொன்ன–அத் திருவாய்ப் பாடியிலுள்ளவர்கள் சொல்லி யழைத்த யது குலத்தில்
யாதவனே என்றும்–(வஸுதேவர் மகனாய்த்) தோன்றினவனே என்றும்!
பிழைப்பு இல்பெரு பெயரே பேசி–குற்றமற்ற சிறந்த திருநாமங்களையே பேசி
யார் முகப்பும்–எல்லாரெதிலும்
திருமாலை அவனை–திருமாலாகிய அப்பெருமானை
அழைப்பன்–கூப்பிடா நின்றேன்.

ஆங்கவர்கள் சொன்ன பிழைப்பில் பெரும் பெயர்களாவன –
கற்றினம் மேய்த்தவன். வெண்ணெய்த்திருடன், தாம்பாலாப்புண்டவன்,
உரலிடைக்கட்டுண்டவன் என்றிவைபோன்ற திருநாங்களாம்.
இவை பெரும்பெயர்களாகுமோ, சிறுபெயர்களன்றோ இவை என்று சிலர் நினைப்பர்.
அவதாரத்தில் எளிமைக் குணத்தைக் காட்டி நிறும்பெற நினைத்த கண்ணபிரானது திருவுள்ளத்தால்
நாராயணாதி நாமங்களே சிறுபேர் என்றும் கோவிந்த, நவநீதசோராதி நாமங்களே பெரும்பேரென்றும். நிச்சயிக்கத்தகும்.
திருப்பாவையில் ஆய்ச்சிகள் கண்ணபிரானை நோக்கி அடிக்கடி ‘நாராயணன்‘ என்று சிறு பேரையிட்டுச் சொன்னதற்கு
அநுதபித்து உன்றன்னைச் சிறுபே ரழைத்தனவுஞ் சிறியருளாதே“ என்று பொறுப்பித்துக்கொண்டது காண்க.
அவன் திருவுள்ளமுகக்குந் திருநாமமேயன்றோ பெரும்பேர் ஆவது!
“திவத்திலும் பசுநிரை மேய்ப்பு உவத்தி செங்கனிவா யெங்களாயர் தேவே“ என்னப்படுகின்ற எம்பெருமான்
திருவுள்ளமுகக்குந் திருநாமம் நாராயணாதி நாமங்களாக எப்படியாகும்? கோவிந்த கோபாலாதி நாமங்களேயாகுமென்க.

பிழைப்பு இல் பெரும் பெரே – ‘பிழைப்பு‘ என்பதற்கு ‘ஜீவித்தல்‘ என்றும் பொருள் கொள்ளலாம்,
விட்டு உயிர்தரிக்க முடியாத பெரும்பெயர் என்றவாறு.
“ஒருத்திமகனாய்ப் பிறந்து ஓரிரவிலொருத்தி மகனாய் ஒளித்துவளர“ என்கிறபடியே
யதுகுலத்திற் பிறந்து இடைக்குலத்தில் வளர்ந்ததற்கேற்ப “யாதவனே! ஆயவனே! என்றது.

————————————————————————–

இப்பாட்டில் ‘நெஞ்சே!‘ என்று நெஞ்சை மாத்திரம் விளிப்பதாயிருந்தாலும். நெஞ்சுக்கு அடுத்ததான வாக்கையும்,
வாக்குக்கு அடுதத்தான உடலையும் விளிப்பதாகவுங் கொள்ளவேணும்
“யத் மநஸா த்யாயதி தத் வரிசா வததி தத் கர்மணா கரோதி“ என்று வேதமுரைத்த கட்டளையிலே
மன மொழி மெய்களுக்கு ஒரு சேர்த்தியுண்டு. அம்மூன்று கரணங்களுக்கும் காரியம் விதிக் கிறாரிப்பாட்டில்.

மதிக்கண்டாய் நெஞ்சே மணி வண்ணன் பாதம்
மதிக்கண்டாய் மற்றவன் பேர் தன்னை -மதிக்கண்டாய்
பேராழி நின்று பெயர்ந்து கடல் கடைந்த
நீராழி வண்ணன் நிறம்———51–

பதவுரை

நெஞ்சே–மனமே!
மணி வண்ணன் பாதம்–நீல மணி வண்ணனான எம்பெருமானது திருவடிகளே
மதி கண்டாய்–அநுஸந்திக்கக்கடவாய்
பேர் ஆழி நின்று பெயர்ந்து–பெரிய திருப் பாற் கடலில் நின்றும் துயில் விட்டெழுந்து
கடல் கடைந்த–தேவர்களுக்கு அமுதங்கொடுக்க அக் கடலைக் கடைந்த
மதிக் கண்டாய்–சிந்திக்கக் கடவாய்
மற்று–இன்னமும்
அவன் பேர் தன்னை–அப்பெருமானது திருநாமங்களை
நீராழி வண்ணன் நிறம்–கடல் வண்ணனான அப்பெருமானுடைய திருமேனி நிறத்தை
மதிக் கண்டாய்–நினைக்கக் கடவாய்-

‘மதிக்கண்டாய்‘ என்பதே மூன்றிடத்தும் க்ரியாபதமாயினும் இடத்துக்குத் தக்கபடி பொருள் வாசி கொள்ள வேணும்
மனமே! நீராழிவண்ணனது திருமேனி நிறத்தையே நீ சிந்திக்கக்கடவாய்
வாக்கே! மணிவண்ணன் திருநாமங்களையே நீ சொல்லிக் கொண்டிருக்கக் கடவாய்,
தலையே! மணி வண்ணன் திருவடிகளையே நீ அணிந்து கொண்டிருக்கக் கடவாய் என்று இங்ஙனே யோஜிப்பது அழகியதாம்.

பேராழிநின்று பெயர்ந்து கடல்கடைந்த
“அறிதுயி லலைகடல் நடுவே ஆயிரஞ்சுடர்வாய் அரவணைத்துயின்றான்“ என்கிறப்படியே
திருப்பாற்கடலில் சேஷசயனத்தின் மீது திருக்கண்வளர்ந்தருளுமழகைக்கண்டு
“ஏரார்கோலநதிகழக கிடந்தாய் கண்டேனெம்மானே! “என்றும்.
“அம்மாமலர்க்கண் வளாகின்றானே என்னான செய்கேனே“ என்றும் ஈடுபட்டு
மங்களாசாஸ்நம் பண்ணவேண்டியிருக்க அது செய்யாது.
“பேணலமில்லாவரக்கர் முந்நீர பெரும்பதிவாய் நீண்கர் நிளொரிவைத்தருளா யென்று,
நின்னை விண்ணோர் தாள் நிலைத்தோய்ந்து தொழுவர் நிர்மூர்த்தி பலகூற்றிலொன்று காணுலுமாங்கொலென்றே?“ என்று
நம்மாழ்வார் வயிறுபிடித்துப் பேசினபடியே
தேவதைகள் சென்று பெருமானே! எழுந்திருந்து உடம்புநோவாக் காரியஞ்செய்து எங்கட்கு ஆகவேண்டியதைத்
தலைக்கட்டிக்கொடு என்று பிரார்த்திப்பவர்களேயன்றி
ஸ்வப்ரயோஜநத்தோடுகூட எம்பெருமான் திருமேனியிலும் சிறிது கண் வைப்பவர்களேயல்லர்,
அமுதமளிக்கக் கடல்கடைந் தருளுங்காலத்தில் ‘உப்புச்சாறு எப்போது கிளரப்போகிறது!‘ என்று
தேவதைகள் கண்ணைக் கவிந்துகொண்டு அதைக் கண்டு கொண்டிருந்தார்களே யன்றி,
தோளுந் தோள்மாலையுமாக எம்பெருமான் கடல் கடைந்தருளுமழகைச் சற்றேனும் உற்று நோக்கினவர்களல்லர்
அக்குறைதீர அப்போதைய அழகை நெஞ்சே! இன்று நீ சிந்தியாய் என்கிறார்.

————————————————————————–

கொடியவர்களிடத்தும் ஈரநெஞ்சுடையனாயிருக்கை யென்னுங்குணம் ஆந்ருசம்ஸ்யம்‘ எனப்படும்,
அதாவது ஒருவர்க்குத் தீங்கு செய்யாமை. இக்குணம் எம்பெருமானிடத்தில் அமைந்திருக்கும்படியை
ஒரு த்ருஷ்டாந்த முகத்தாற் கூறுகின்றாரிதில்.

நிறம் கரியன் செய்ய நெடு மலராள் மார்வன்
அறம் பெரியனார் அது அறிவார் -மறம் புரிந்த
வாள் அரக்கன் போல்வானை வானவர் கோன் தானத்து
நீள் இருக்கைக்கு உய்த்தான் நெறி —52–

பதவுரை

நிறம் கரியன்–(காளமேகம் போல்) கருநிறமுள்ளவனும்
செய்ய நெடு மலராள் மார்வன்–சிவந்த நிறத்தையுடையளாய்ப் பெரிய தாமரைப்பூவை யிருப்பிடமாக வுடையளான
பெரிய பிராட்டியாரைத் திருமார்விலே யுடையனுமான எம்பெருமான்
அறம் பெரியன்–அருளில் பெருத்தவன்
மறம் புரிந்த வாள்–பகை பாராட்டின
அரக்கன் போல்வானை–வாட்கையனான இராவணன் போன்ற மஹாபலியை
(இராவனைப் போலவே தலையறுக்க வேண்டியிருந்தும் அது செய்யாமல்)
வானவர் கோன் தானத்து–தேவேந்திரனுடைய லோகமான ஸ்வர்க்கம்போலே விலக்ஷணமான பாதாள லோகத்தில்
நீள் இருக்கைக்கு–நீண்டகாலம் வாழும்படியாக
உய்த்தான்–செலுத்தின அப்பெருமானுடைய
நெறி அது–அவ் வருள் வகையை
ஆர் அறிவார்–யார் தெரிந்து கொள்ளவல்லர்?

காளமேகத்திருவுருவனாயும். அகலகில்லே னிறையுமென் றலர்மேல் மங்கையுரை மார்பனாயுமிருக்கிற ஸர்வேச்வரன்.
அறம் பெரியன் –‘ஆந்ருசம்ஸ்யம்‘ (தயை) என்னுங் குணம் பெரிது முடையான். இஃது எங்ஙனே தெரிகின்ற தென்னில்,
கேண்மின், எம்பெருமான் ஸர்வபூதஸு ஹ்ருத்தாகையாலே அவனுக்கு நேரே ஒருவனும் பகைவனல்லன்,
ஆச்ரிதர்களுக்கு எவன் விரோதியோ, அவனையே எம்பெருமான் தனக்கு விரோதியாகக் கருதுவன்.
கண்ணபிரானாய்த் தூதுபோமிடத்துத் துரியோதனை நோக்கிச் சொல்லும்போது எனது உயிர்நிலையான பாண்டவர்களுக்கு நீ
விரோதியாகையாலே எனக்கு நீ விரோதியாகின்றாய், என்றருளிச் செய்துள்ளது குறிக்கொள்ளத்தக்கது.
ஆகவே, ஆச்ரிதனான அம்முகத்தாலே எம்பெருமானுக்கும் விரோதியாயினன்.
இப்படிப்பட்ட மாவலியை இராவணனைப்போலவே தலையறுத்து ஒழிக்கவேண்டியது ப்ராப்தமாயிருந்தும்
ஔதார்யமென்னும் ஒரு குணத்தைக் கைக்கொண்டிருந்தானென்று இதனை ஒரு வியாஜமாக்கி அவனைத் தலைதுணித்திடாது
நெடுங்காலம் பாதாளத்தில் குடிசெய்து வாழுமாறு விட்டருளின பெருங்குணத்தை நோக்குங்கால்
ஸ்ரீமந்நாராயணனில் விஞ்சின தயாளு இல்லை‘ என்பது விளங்குமே என்கிறார்.

“வானவர்கோன் தானத்து“ – வானவர்கோன் தானமென்று ஸ்வர்க்கலோகத்திற்குப் பெயராயினும்,
அதுபோல் விலக்ஷணமான பாதாளலோகமென்பது இவ்விடத்திற்குப் பொருள்.

————————————————————————–

திருவேங்கடமலையை ஒரு சமத்காரம் பொலிய வருணிக்கிறார்.

நெறியார் குழல் கற்றை முன்னின்று பின் தாழ்ந்து
அறியாது இளங்கரி என்று எண்ணிப் -பிரியாது
பூங்கொடிக்கள் வைக்கும் பொரு புனல் குன்று என்னும்
வேங்கடமே யாம் விரும்பும் வெற்பு –53–

பதவுரை

நெறியார்–திருமலை வழியிலேயே ஊன்றியிருப்பவர்களுடைய
சூழல் கற்றை முன் நின்று பின் தாழ்ந்து அறியாது–கேச பாச மானது முன்னே முளைத்துப் பின்னே
தொங்கிக் கொண்டிருக்கவும் இது மநுஷ்ய வ்யக்தியென்று தெரிந்து கொள்ளாமல்
இள கிரி என்று எண்ணி–இது ஒரு சிறுமலை யென்று எண்ணிக் கொண்டு
பூங்கொடிகள்–பூங்கொடிகளானவை
பிரியாது–அவ்விடம் விட்டு நீங்காமல்
வைகும்–நித்யவாஸம் பண்ணப் பெற்றதாய்
பொரு புனல் குன்று என்னும்–அலை யெறிகின்ற ஜலஸம்ருத்தியை யுடைத்தான திருமலையென்று ப்ரஸித்தமான
வேங்கடமே–திருவேங்கடமே
யாம் விரும்பும்–நாம் ஆசைப்படவுரிய
வெற்பு–திருமலையாகும்.

திருமலை யாத்திரையாக வருகின்ற மஹான்கள் பலர்
‘வெறியார்தண்சோலைத் திருவேங்கடமலைமேல், நெறியாய் கிடக்கும் நிலையுடையேனாவேனே” என்று
ஸ்ரீ குலசேகரப் பெருமாள் விரும்பினபடியே திருமலையேறும் வழியிலே மிக்க ஆதரம் வைத்து,
திருமலைமேற்சென்று வாழ்வதிற்காட்டிலும் திருமலைவழியிற் கிடப்பதையே பரம உத்தேச்யமாகக்கொண்டு
அவ்வழியிலே வீற்றிருந்து எம்பெருமானைச் சிந்தை செய்கின்றனர்.
அப்போது, மூச்சுவிடுதல் உடம்பு அசைத்தல் முதலியன ஒன்றுஞ் செய்யாதே வால்மீகி முதலிய மஹர்ஷிகளைப்போலே
யோக நிலையில் ஆழ்ந்து கிடக்கின்றனர். அன்னவர்களது கூந்தல் ‘கற்றையானது முன்னின்று பின் தாழ்ந்திருப்பதைக் கண்ட
பூங்கொடிகளானவை சில மனிதர்கள் வீற்றிருக்கின்றார்கள்‘ என்றும் ‘அவர்களுடைய சூழல்கற்றை தாழ்ந்திருக்கின்றது‘ என்றும்
தெரிந்து கொள்ளாமல் வான்மீகிமுனிவர் மீது புற்று மூடினாற்போலே
இந்த பக்தர்களின் மேலும் பூங்கொடிகள் படர்ந்திருப்பது அற்புதமானவொரு காட்சியாயமைந்தது.
இப்படிப் பட்ட காட்சிக்கு இடமான திருமலையே நாம் விரும்பத்தக்க மலையாம் என்றாராயிற்று
கிரி – வடசொல்.

————————————————————————–

எம்பெருமான் திருவுள்ளமுவந்து வாழுந் திருப்பதிகளில் எவர் விருப்பம் பண்ணுக்கின்றனரோ,
அவர்களுடைய நெஞ்சிலே எம்பெருமான் உவந்து வந்து எழுந்தருளியிருப்பனன்றோ,
அப்படியே திருமலை முதலிய திருப்பதிகளில் ஆதரம் விஞ்சப்பெற்ற இவ்வாழ்வாருடைய திருவுள்ளத்தில்
எம்பெருமான் வந்து சேர்ந்து “தென்னனுயர் பொருப்புந் தெய்வவடமலையும்“ என்னப்படுகிற
திருமாலிருஞ சோலைமலை திருவேங்கட மலைகளில் தான் பண்ணிப்போந்த விருப்பத்தை
இவர் தம்முடைய திருவுள்ளத்திலே செய்து போருகிறபடியே ஒரு சமத்காரமாக வெளியிடுகிறார்.

வெற்பு என்று இரும் சோலை வேங்கடம் என்று இவ்விரண்டும்
நிற்பென்று நீ மதிக்கும் நீர்மை போல் -நிற்பென்று
உளம் கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன் வெள்ளத்து
இளம் கோயில் கை விடேல் என்று –54-

பதவுரை

வெற்பு என்ற–(தெற்கு) திருமலை யென்னப்படுகிற
இருஞ்சோலை–திருமாலிருஞ் சோலை யென்ன
வேங்கடம்–திருவேங்கடமென்ன
என்ன இவ் இரண்டும்–ஆகிய இத் திருமலைகளிரண்டும்
நிற்பு என்று–நாம் உகந்து வாழுமிடமென்று
நீ மதிக்கும் நீர்மை போல்–நீ திருவுள்ளம் பற்றி யிருக்குந் தன்மையை உடைத்தாயிருப்பது போலவே
உளம் கோயில்–(என்னுடைய) ஹ்ருதயமாகிற கோயிலும்
நிற்பு என்று–நீ உகந்து வாழுமிடமென்று
உள்ளம் வைத்து–பிரதிபத்தி பண்ணி
வெள்ளத்து இள கோவில்–திருப்பாற்கடலாகிற பாலாலயத்தை
கைவிடேல் என்று–கைவிட வேண்டா என்ற
உள்ளினேன்–பிரார்த்திக்கின்றேன்.

ஸ்ரீவசநபூஷணத்தில் –“கல்லுங்கனைகடலு மென்கிறபடியே இது ஸித்தித்தால் அவற்றில் ஆதரம் மட்டமாயிருக்கும்.
இளங்கோயில் கைவிடேல் என்று இவன் பிரார்த்திக்க வேண்டும்படியாயிருக்கும்“
என்றருளிச் செய்தது இப்பாசுரத்தை உட்கொண்டதேயாம்.

திருமாலிருஞ் சோலைமலையென்றும் திருவேங்கடமலை யென்றுஞ் சொல்லப்படுகிறது இரண்டு திருமலைகளில்
நீ எவ்வளவு மகிழ்ச்சியுடன் வாழ்கின்றாயோ அவ்வளவு மகிழ்ச்சியோடே என்னுடைய ஹ்ருதபமாகிற கோயிலிலும் வாழ்கின்றாய்
என்று கண்டறிந்த அடியென் “வெள்ளத் திளங்கோயில் கைவிடேல்“ என்று பிரார்த்திக்கின்றேனென்கிறார்.
இதன் கருத்துயாதெனில் –
திருப்பாற்கடலானது எல்லா அவதாரங்களுக்கும் மூலக்கிழங்கு எனப்படும்
“ஏஷ நாராயண ஸ்ரீமாந் க்ஷீரார்ணவநிகேதந நாகபர்யங்க முதஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் –
திருப்பாற்கடல் நாதனான ஸ்ரீமந்நாராயணன் சேஷசயனத்தை விட்டிட்டு வடமதுரையில் வந்து பிறந்தான்“ என்றாற்போலே
ராமக்ருஷ்ணாதி விபவாவதாரங்களும் மற்றும் அர்ச்சசாவதாரங்களுமெல்லாம் திருப்பாற்கடல் மூலமாகவே
நிகழ்வதாகக் கொள்ளுங்கொள்கை வைதிகர்களுக்கு உள்ளது.
இக்காரணம்பற்றித் திருப்பாற்கடல் இளங்கோவில்“ எனப்படும்.
(அதாவது – பாலாலயம் என்றபடி, இக்காலத்தும் திருகோயில்களில் எம்பெருமான் திருமேனியை ஜீர்ணோத்தாரணம் செய்ய
நேரும்போது பாலாலயப்ரதிஷ்டை செய்வது வழக்கமாயிருப்பது காண்க. வேறொரு பெருங்கோயிலிற் சென்று சேர்வதற்கு
உறுப்பாக (பூர்வமாக) சிறுகக் கொள்ளுங் கோயிலை பாலாலய மென்கிறது)
திருமலை முதலிய திவ்யதேசங்களும் அன்பருடைய ஹ்ருதயமுமாகிற பெருங்கோயில்களிற்சென்று சேர்ந்து வாழ்வதற்குப்
பூர்வாங்கமாகவே எம்பெருமான் திருப்பாற்கடலில் வாழ்வதாக ஆழ்வார்கள் அநுஸந்திப்பர்களாதலால்
இந்த அநுஸந்தானத்திற்கு இணங்க. திருப்பாற்கடலை இளங்கோயில் (பாலாலயம்) ஆகச் சொல்லுதல் பொருத்தமுடைத்தே
பெருங் கோயிலிற்சென்று சேர்ந்த பின்பு இளங்கோயிலில் ஆதரம் இருக்க ப்ரஸக்தியில்லாமையாலே எம்பெருமானுக்கும்
தமது திருள்ளமாகிற பெருங்கோயிலில் வாழ்ச்சி அமைந்தபின்பு இளங்கோயிலாகிய திருப்பாற்கடலில் ஆதரம்
குறைந்துவிடுமென்றறிந்த ஆழ்வார். ‘பிரானே! அவ்விளங்கோயிலில் நீ ஆதரத்தைக் குறைத்துக் கொள்ளலாகாது.
என்னுள்ளத்தில் வந்து சேர்வதற்கு அவ்விடம் பூர்வாங்கமாயிருததனால் அதுதன்னில் அடியேன் நன்றி பாராட்டக் கடவனாதலால்
அந்த நன்றியறிவின் காரியமாகப் பிரார்த்திக்கின்றேன் – அவ்விடத்தை நீ ஒரு நாளும் கைவிடலாகாது‘ என்று – என்கிறார்.

இதனால் “பனிக்கடலிற் பள்ளிகோளைப் பழகவிட்டு ஓடிவந்தென் மனக்கடலில் வாழவல்ல மாயமணாள நம்பீ!“ என்னுமாபோலே
திருப்பாற்கடைலையும் உபேக்ஷித்துவிட்டுத் தம் ஹ்ருதயத்திலே வந்து சேரும்படியான வ்யாமோஹம் எம்பெருமானுக்கு
விளைந்தமை வெளியிடப்பட்டதாயிற்று. ப்ரஸக்தியுள்ளதற்கே ப்ரதிஷேதங்கூடும்“ என்பது சாஸ்த்ரஜ்ஞர் வார்த்தையாகையால், ‘
வெள்ளத்திளங் கோயில் கைவிடேல்‘ என்று ஆழ்வார் பிரதிஷேதிக்கும் போது
எம்பெருமான் திருப்பாற்கடலைக் கைவிடத் தொடங்கினான் என்பது அவசியம் விளங்குகின்றமையால்
இப்படி திருப்பாற்கடலையும் கைவிடும்படியான விபாமோஹம் அவனுக்கு உண்டாயிற்றென்பதைத் தெரிவிப்பதே
இப்பாசுரத்தின் பரமதாற்பரியமாகுமென்க.

————————————————————————–

பிரானே! இவ்விருள் தருமா ஞாலத்தில் உன்னை நினைப்பதென்பது எளிதில் கைகூடாத காரியம்,
ஆனாலும் “எதிர்சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பு மெனக்கே யருள்கள் செய்ய,
விதிசூழ்ந்ததா லெனக்கேலம்மான் திரிவிக்கிரமனையே“ என்றாற்போலே எப்படியாவது என்னை
அகப்படுத்திக் கொள்ள வேணுமென்று நீ நெடு நாளாகவே க்ருஷி பண்ணிப் போகையாலே உன்னுடைய நினைவு
என்மேல் இடையறாது இருப்பதனாலே என்னுடைய நினைவும் உன்மேல் நிரந்தரமாக இருக்கின்றது.
ஆனால் இவ்வளவோடு நான் திருப்தியடைபவ வல்லேன்.
“அந்தமில் பேரின்பத்து அடியரோருந்தமை“ என்னப்படுகிற இன்பக் கடலையும் அவாஹிக்கப் பெறவேணுமென்று
ஆவல் கொண்டிருக்கும்படியேனை அந்த இன்பக் கடலிலும் அழுந்தச் செய்தருளாய் – என்கிறார்.

என்றும் மறந்து அறியேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
நின்று நினைப்பு ஒழியா நீர்மையால் -வென்றி
அடல் ஆழி கொண்ட வறிவனே இன்பக்
கடலாழி நீ யருளிக் காண்–55-

பதவுரை

வென்றி–ஜய சீலமாய்
அடல்–தீக்ஷணமான
ஆழி–சக்கரத்தை
அறிவனே–ஸர்வஜ்ஞனான பெருமானே!
ஏழ் பிறப்பும்–இப்படியிருக்கிற நீ எல்லா ஜன்மங்களிலும்
எப்பொழுதும்–எல்லா அவஸ்தைகளிலும்
நின்று நினைப்பு ஒழியா நீர்மையால்–ஒரு படிப்பட நின்று என்னைப் பற்றின நினைவு தப்பாமலிருந்ததனால்
என்றும் மறந்தறியேன்–உன்னை ஒருநாளும் மறப் பனல்லேன்
இன்பம் கடல் ஆழி–ஆநந்த ஸாகரத்தையும்
அருளிக் காண்–எனக்கு அருள வேணும்.

“இன்பக்கடல்“ என்னுமளவே போதுமாயிருக்க “கடலாழி“ என்றது அப்பரமாநந்தத்தின் அளவில்லாமையை நன்கு காட்டுதற்கென்க.
“இன்பம் ஆழிகடல்“ என்று இயைத்து, இன்பமாகிற ஆழ்கடல் என்று முரைக்கலாம் உன்னையே எப்போதும்
சிந்தித்துக் கொண்டிருக்கு மடியேனை உன் திருவடிகளிற் சேர்த்துக் கொள்ளவேணு மென்றதாயிற்று இப்பாட்டால்.

“நின்று நினைப்பொழியா நீர்மையால்“ என்றது –எம்பெருமான் இவ்வாழ்வார்தம்மையே நினைத்துக் கொண்டிருக்கிற
படியைக் கூறுவதாக உரைக்கப்பட்டது. இனி இவ்வாழ்வார் எம்பெருமானையே நினைத்துக் கொண்டிருப்பதைக்
கூறுவதாகவே உரைக்கவுமாம். எல்லாப் பிறவிகளிலும் அடியேன் உன்னையே நினைத்துக் கொண்டிருக்கும்படியான
தன்மை எனக்கு வாய்ந்திருப்பதனால் உன்னை யொருகாலும் மறந்தறியேன் என்றவாறு.

வென்றியடலாழிகொண்ட அறிவனே! – நீ ஸர்வ சக்தனாயும் ஸர்வஜ்ஞனாயுமிருக்கையாலே என் காரியத்தைச் செய்து
தலைக்கட்டுகை உனக்கு அரிதன்றேன் என்று குறிப்பிடுகிறார்போலும்.
“வென்றியிடலாழிகொண்ட“ என்றது – ஸர்வ சக்தி யுக்தனென்றபடி
அருளிக்காண் அருள்செய் என்கை.

————————————————————————–

கீழ்ப்பாட்டில் “இன்பக்கடலாழி நீயருளிக்காண்“ என்று பிரார்த்தித்தார்,
எல்லாப்பாட்டிலும் பாரதந்திரியமே வடிவாயிருக்குமவர் “எம்பெருமான் திருவுள்ளமானபடி செய்கிறான்“ என்று
ஆறியிருக்க வேணுமே யன்றி இன்னது நீ செய்ய வேணுமென்று அவனை நிர்ப்பந்திப்பது தகுதியோ என்று
ஒரு சங்கை பிறக்குமாதலால் அந்த சங்கைக்குப் பரிஹாரமாக இப்பாசுர மருளிச்செய்கிறாரென்க.

காணக் கழி காதல் கை மிக்குக் காட்டினால்
நாணப் படும் என்றால் நாணுமே –பேணிக்
கருமாலைப் பொன் மேனி காட்டா முன் காட்டும்
திருமாலை நாங்கள் திரு —56-

பதவுரை

திருமாலை காண கழி காதல்–எம்பெருமானை ஸேவிக்க வேணுமென்று மிகுந்த விருப்பம்
கை மிக்கு காட்டினால் நாணப்பம என்றால்–மேன்மேலும் அதிகரித்தால் அடங்கியிருக்க வேணுமென்றால் அடங்கி யிருக்க முடியுமோ?
கருமாலை–கரிய திருமாலாகிய அப்பெருமானை
பொன் மேனி காட்டா முன்–அவனது அழகிய திருமேனி தானே காட்டிக் கொடுப்பதற்கு முன்னே
நாங்கள் திரு–நமக்குப் புருஷகார பூதையான் பிராட்டி
பேணி–விரும்பி
காட்டும்–காட்டிக் கொடுப்பன்

அவனைப் பரிபூர்ணமாக ஸாக்ஷாத்கரித்து அநுபவிக்க வேணுமென்னுங்காதல் கிளராதிருக்குமாயின்
நம்முடைய பாரதந்திரியம் ஜீவிக்கும் அக்காதல் அளவற விஞ்சிவிட்டால் ஸ்வரூபத்தை நோக்கி
அடங்கியிருக்கவேணுமென்றால் யாரால் அடங்கியிருக்க முடியும்?
ஸ்வரூவுணர்ச்சியினால் எவர் பதறாது அடங்கியிருக்கின்றனரோ, அவர்க்குக் காதல் உண்டாக வில்லையென்று
கொள்ளவேணுமேயன்றி காதலுள்ளவர்கள் ஸ்வரூபவுணர்ச்சியினால் அடங்கியிருக்கிறார்களென்பது
ஒருநாளுமில்லை. – என்பது முன்னடிகளின் கருத்து.

காதலின் கனத்தால் நீர் பதறினாலும் அப்பெருமான் தானாகவே நிர்ஹேதுகமாக அருள்செய்து தனது திருமேனியைக்
காட்டிக் கொடுத்தாலன்றோ நீர்கண்டு அநுபவிக்கலாம், உம்முடைய பதற்றத்தினால் என்ன ஆகும்?
வனத் திடரை ஏரியாம் வண்ணமியற்றுமிதுவல்லால், மாரியார்பெய்கிற்பார் மற்று“ என்று நீர் தாமே சொல்லிவைத்திருக்கிறீரே‘
என்று சிலர் சொல்ல, எம்பெருமான் தனது திருமேனியைத் தானே காட்டிக்கொடாவிடினும்.
ஸகல லோகமர்தாவாயிருக்கிற முறைமையினாலும், நிக்ரஹம் கலசாது அநுக்ரஹமே வடிவாயிக்குந் தன்மையினாலும்.
அபராதங்களைப் பார்த்துச் சீறியிருக்கு மெம்பெருமானுடைய திருவுள்ளத்தையும் திருத்திச் சேதநர்களை அங்கீகரிப்பிக்கும்
புருஷகார பூதையான பிராட்டியானவள் தானே அவனைக் காட்டித் தருவள், அதிலொருகுறையில்லை – என்கிறார் பின்னடிகளில்

“காணக்கழிகாதல்“ என்றவிடத்து ‘கழி‘ என்பதை உரிச்சொல்லாகக் கொண்டால் அதிகமா காதல் என்று பொருள்படும்.
அன்றி, ‘கழிகாதல்‘ என்று வினைத்தொகையாகக் கொண்டால் ‘கண்டே கழியக்கடவதான காதல்‘ என்று பொருள்படும்.
“கண்ணாரக்கண்டு கழிவதோர் காதலுற்றார்க்கும்“ என்றது காண்க.

நாணுதல் – அடங்குதல், கருமால் பொன்மேனியை, அக்கருமால் காட்டாமுன் நங்கள் திரு காட்டும்.

————————————————————————–

திருமங்கை நின்றருளும் தெய்வம் நா வாழ்த்தும்
கருமம் கடைப்படிமின் கண்டீர் -உரிமையால்
ஏத்தினோம் பாதம் இரும் தடக்கை எந்தை பேர்
நாற்றிசையும் கேட்டீரே நாம்–57-

பதவுரை

திரு மங்கை–பெரிய பிராட்டியார்
நின்றருளும் தெய்வம்–நித்யவாஸஞ் செய்யப் பெற்ற எம்பெருமானை
நா வாழ்த்தும் கருமம்–நாவினாலே வாழத்துகையாகிற காரியத்தை
பாதம்–திருவடிகளையும்
பேர்–திருநாமங்களையும்
உரிமையால்–ஸ்வரூப ப்ராப்தியாலே
ஏத்தினோம்–போற்றுமவர்களாயிராநின்றோம்
கடைப்பிடி மின் கண்டீர்–உறுதியாகப் பற்றுங்கள்
நாம்–நாமோவென்றால்
இரும் தடக்கை எந்தை–மிக நீண்ட திருக்கைகளை யுடையனான எம்பெருமானுடைய (இவ்விஷயத்தை)
நால் திசையும்–நான்கு திசைகளிலுமுள்ளீர்!
கேட்டீரே–கேட்டீர்களோ?

எந்த தெய்வத்தை ஸ்ரீமஹாலக்ஷமி விரும்புகின்றாளோ அதுவே பரதத்துவம் என்பது வேதாந்த ஸிந்தாந்தம்,
ஸ்ரீகுணரத்நகோசத்திலே பட்டர் “வேதாந்தாஸ் தத்வசிந்தாம் முரபிதுரஸி யத்பாதசிஹ்நைஸ் தரந்தி“
(அதாவது, இன்னது பரதத்துவம் என்று நிஷ்கர்ஷிக்கமாட்டாமல் கவலை கொண்டிருந்த வேதாந்தங்கள்
ஸ்ரீமந்நாராயணனுடைய திருமார்பில் பிராட்டியின் அடிச்சுவடுகண்டு இவனே பரதத்துவமென்று நிர்ணயித்துக் கவலை தீர்ந்தன“)
என்றருளிச் செய்த்துங்காண்க. ஆகப் பிராட்டி ஸம்பந்தத்தாலே மேன்மை பெற்ற தைவம் யாதொன்றுண்டு –
ஸ்ரீமந்நாரயணன், அவனை நாவினால் வாழ்த்துந் தொழிலையே உறுதியாகக் கைப்பற்றுங்கோளென்கிறார் முன்னடிகளில்.

பிறர்க்கு உபதேசிப்பவர் தாம்முந்துற அநுஷ்டித்துக் காட்டவேணுமே, ஆதலால் ஸ்வாநுஷ்டானத்தை வெளியிடுகிறார் பின்னடிகளில்

உரிமையால் –சேஷ சேஷித்வமாகிற ஸம்பந்த முறைமை கொண்டு என்றபடி.
நாற்றிசையுங் கேட்டீரே – இதனை எல்லாருமறியவேணுமென்றவாறு.

————————————————————————-

நாம் பெற்ற நன்மையையும் நா மங்கை நன்னெஞ்சத்து
ஓம்பி இருந்து எம்மை ஓதுவித்து -வேம்பின்
பொருள் நீர்மை யாயினும் பொன்னாழி பாடென்று
அருள் நீர்மை தந்த வருள்–58-

பதவுரை

வேம்பு பொருளின் நீர்மை ஆயினும்–(எம்பெருமானைப் பாடுவதானது) வேம்பு என்னும்
வஸ்துவின் ஸ்வபாவம் போலே கைப்பதாகத் தோன்றினாலும்
பொன் ஆழி–அழகிய திருவாழியை (கையுந்திருவாழியுமான சோத்தி யழகை)
பாடு என்று–பாடக் கடவாய் என்று
நா மங்கை–ஸரஸ்வதியானவள்
நெஞ்சத்து–(நமது) நல்ல நெஞ்சிலே
ஒம்பி இருந்து–ஆதரித்து இருந்து
எம்மை–நீர்மைக் கொண்டு
ஓது வித்து–பகவத் விஷயத்தைப் பாடச் செய்ததனால்
நாம் பெற்று நன்மையும்–தாம் அடைந்த ஸுஹ்ருதமும் (எதனாலே வந்ததென்னில்)
அருள் நீர்மை தந்த அருள்–அருளையே இயல்வாகவுடைய ஸர்வேச்வரன் அருளிய க்ருபையினாலே வந்தது.

“எனக்குத் தேனே பாலே நன்னலேயமுதே திருமாலிருஞ்சோலைக் கோனோகி“ என்று மஹான்களுக்கு
எம்பெருமான் பரம போக்யனாயிருப்பனாயினும் அரஸகனான பாவியேனுக்கு வேம்பாயிப்பன்,
ஆயினும் “இந்த பகவத் விஷயத்தை நீ பாடக்கடவை“ என்று எம்பெருமான் தானாகவே திருவருள் கூர்ந்து நியமித்ததன்
பலனாகவே ஸரஸ்வதியானவள் நம்முடைய ஹருதயத்திலே வீற்றியிருந்து சப்தாரிகளைத் தொடுக்கச் செய்தாளென்கிறார்.

நாமங்கை – நாவில் வாழும் பெண், ஸரஸ்வதி,
பொன்னாழிபாடு –பொன்னாழியைப்பாடு எனினும், பொன்னாழியையுடைய எம்பெருமானைப்பாடு எனினும் ஒக்கும்.

———-

எம்பெருமானுடைய நிர்ஹேதுக விஷயீகாரத்தையே பேசுகிறார் –

அருள் புரிந்த சிந்தை அடியார் மேல் வைத்து
பொருள் தெரிந்து காண்குற்ற வப்போது –இருள் திரிந்து
நோக்கினேன் நோக்கி நினைந்தேன் தொண் கமலம்
ஓக்கினேன் என்னையும் அங்கு ஓர்ந்து–59-

பதவுரை

அருள் புரிந்த சிந்தை–அருளோடு கூடின திருவுள்ளத்தை
அடியார் மேல் வைத்து–அடியவராகிய எங்கள் மேலே வைத்து
பொருள் தெரிந்து–அபதார்த்தமாகத் திருவுள்ளம் பற்றி
காண்குற்ற அப்போது–கடாக்ஷித்தருளுகிற காலத்திலே
இருள் இரிந்து–அஜ்ஞான விருள் நீங்கப் பெற்று
நோக்கினேன்–ஸ்வரூபத்தை ஆராய்ந்தேன்
நோக்கி–அப்படி ஆராய்ந்து
ஒண் கமலம் அது–அழகிய தாமரை மலர்களை என்னலாம் படியுள்ள அத்திருவடிகளை
நினைந்தேன்–(ப்ராப்யமாக அநுஸ்ந்தித்தேன்
ஓர்ந்து–(இத்திருவடிகள் தவிர நமக்கு வேறு புகலில்லை யென்று நிரூபித்து
என்னையும்–ஆத்மாவையும்
அங்கு–அத் திருவடிகளிலே
ஒக்கினேன்–ஸமர்ப்பித்தேன்.

தாய் தந்தையர்க்கு மக்களிடத்தில் இயற்கையாக வாத்ஸல்யமிருப்பது போல எம்பெருமானும் அடியவராகிய நம்மிடத்து
ஸஹஜமான வாத்ஸல்யத்தை நிலை நிறுத்தி அபதார்த்தமாய்க் கிடந்த நம்மைப் பதார்த்தமாக்கிக் கடாக்ஷித்தருளின படியாலே.
எம்பெருமானுக்கும் நமக்குமுள்ள அநாதி ஸம்பந்தத்தை அறிய வொட்டாமல் தடையாய்க் கிடந்த அஜ்ஞான விருள் தொலையப் பெற்று
ஸ்வரூப ஜ்ஞாநம் பெற்று அவனுடைய திருவடித் தாமரைகளை அநுஸந்திக்கப் பெற்றேன்,
அத் திருவடிகளிலேயே ஆத்ம ஸமர்ப்பணமும் பண்ணப் பெற்றேன் என்றாராயிற்று.

“அடியார்மேல் வைத்து“ என்று படர்க்கையாயிருந்தாலும் தன்மையில் நோக்கென்று கொள்க‘
அடியேன்மேல் வைத்து‘ என்பதே கருத்தாகும்.
“பொருள் தெரிந்து“ – “பொருளல்லாத வென்னைப் பொருளாக்கி யடிமைகொண்டாய் என்றவாறு.
இனி, “பொருள் தெரிந்து“ என்பதற்கு –
அர்த்த பஞ்சகத்தை நாங்கள் தெரிந்துகொள்ளுமாறு என்றும் பொருள் கொள்ளலாம்.
நம்மால் அடையத்தக்க எம்பெருமானுடைய ஸ்வரூபம் எம்பெருமானை அடையுமவனான சேதநனுடைய ஸ்வரூபம்,
அடைவதற்கான உபாயம், அடைந்து பெறும்பேறு அப்பேற்றை அடையவொட்டாமல் நடைசெய்கிற விரோதிகளின் தன்மை –
ஆகிய இவை ஐந்தும் அர்த்தபஞ்சகமெனப்படும்.
இவற்றை நாங்கள் தெரிந்து கொள்ளும்படி கடாக்ஷித்தருளினமையாலே அகவிருள் நீங்கி அடியவரானோம் என்கை.

இரண்டாமடியின் தனிச்சீர் “இருள் திரிந்து“ என்று ஓதப்பட்டு வருமாயினும் இருளிரிந்து என்ற பாடமே புராதமும் சிறந்ததுமாம்.
ஒண் கமலம் – ஒண் கமலம் போன்ற திருவடி என்றபடி, முற்றுவமை.

————————————————————————–

கீழ்பாட்டிற் கூறியபடி எம்பெருமான் தன் பெருமையைப் பாராமல் எளிமையையே பிரகாசப்படுத்தித்
தம்மை விஷயீகரித்த நீர்மையை அநுஸந்திக்கையாலே, எம்பெருமானுக்கு ஸ்வாதத்திரியமே வடிவு என்று
நினைத்திருக்கும் நினைவு தவிர்ந்து அவனுக்கு ஆச்ரித பாரதந்திரியமே வடிவு என்று
அனைவரும் நினைக்க வேணு மென்கிறாரிதில்.

ஓர் உருவன் அல்லை ஒளி உருவம் நின் உருவம்
ஈர் உருவன் என்பர் இரு நிலத்தோர் -ஓர் உருவம்
ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர் கண்டீர்
நீதியால் மண் காப்பார் நின்று–60-

பதவுரை

ஓர் உருவம் அல்லை–(எம்பெருமானே) பரத்வமே வடியாக இருப்பவனன்று நீ,
ஒளி உருவம்–ஆச்ரித பரதந்த்ரமாய்க் கொண்டு ஒளி பெற்றிருக்கிற ஸ்வரூபம
நின் உருவம்–உனது வடியாம் (இப்படி ஆச்ரித பாரதந்திரியமே வடியாவிருக்கிற உன்னை)
இரு நிலத்தோர்–இப் பெரிய பூமண்டலத்திலுள்ளவர்கள்
ஈர் உருவன் என்பர்–பரத்வமாகிற பெரிய வடிவை யுடையனாகச் சொல்லு கின்றனர்
ஓர் உருவம்–ஆச்ரித பாரதந்திரிய மாகிய ஒரு வடிவே
ஆதி ஆம் வண்ணம்–எல்லார்க்கும் உஜ்ஜீவந ஹேதுவாயிருக்கு மென்பதை
அறிந்தாரவர் கண்டீர்–தெரிந்து கொள்ளுமவர்களே
நீதியால்–நியாயப்படி
நின்று–நிலைத்து நின்று
மண் காப்பார்–உலகத்தை ரக்ஷிக்க வல்லவராவர்.

இப்பாட்டு எம்பெருமானை நோக்கிக் கூறுவதாம். விளி வருவித்துக் கொள்க
நீ ஒருருவனல்லை – உனக்குப் பரத்வமே வடிவு என்று சாஸ்த்ரங்களைக்கொண்டு பலர் பேசுவர், அஃது அப்படியன்று.
பரத்வத்தையே நீ வடிவாக வுடையை யல்லை யென்றபடி. இதில் ஓருரு என்றது பரத்வமாகிற வடிவைக் கருதினபடி
எனக்குப் பரத்வம் வடிவன்றாகில், பின்னை எது வடிவு என்கிறாயோ?
ஒளியுருவம் நின்னுருவம் –இருட்டறையில் விளக்குப்போலே இவ்விருள் தருமா ஞாலத்தில் ஒளிபெற்று விளங்குமதான
உனது ஸௌப்ய குணமே உனக்கு வடிவாயிருக்கும். நீ ஸ்வதந்திரனன்று, ஆச்ரிதபரதந்திரன் என்கை.

ஆழ்வீர் எனக்கு ஆச்ரித பாரதந்திரியமே ஸ்வருபமென்று நீர் சொல்லுகின்றீரே,
இது நீரொருவர்மாத்திரம் சொல்லுகிறவார்த்தையா? மற்றுள்ளாரெல்லாரும் இப்படியே கருதியிருக்கின்றார்களா?
என்று எம்பெருமான் கேட்டருள,
அதற்கு உத்தரமுரைக்கின்றார் ஈருருவனென்ப ரிருநிலத்தோர் என்று,

உன்னுடைய ஸௌப்யகுணம் என்மேல் ஏறிப் பாய்ந்தபடியாலே இவ்வுண்மையை நானொருவன் தெரிந்து
சொல்லுகிறேனத்தனை இக்குணத்தைக் கனவிலுங் கண்டறியாத உலகத்தவர்கள்
உன்னைப் பரத்வமே வடிவாக வுடையனாகத்தான் சொல்லுகின்றனர் என்கை.
இதில் ஈருருவன் என்றவிடத்து ஈர் என்றது ‘இரண்டு‘ என்னும் பொருளில் வந்த்தன்று,
‘பெருமை‘ என்னும் பொருளில் வந்தது. பரத்வமாகிற பெரிய வடிவுள்ளவனாக இவ்வுலகத்தவர் உன்னைச் சொல்லுகின்றனர் என்கை.

ஸௌலப்ய குணத்திலீடுபடாத உலகத்தவர்கள் கிரஸித்திருக்கிறபடி யல்லாமல் அக்குணத்தை அநுபவித்த
தாம் அறிந்திருக்கிறபடியே ‘எம்பெருமானுக்கு ஆச்ரிதரிட் வழக்காயிருக்குந் தன்மையே நிலைநின்ற வடிவு‘ என்று
எவர் தெரிந்து கொள்வரோ அவர்களே இவ்வுலகில் மேம்பட்டிருப்பர் என்கிறார் பின்னடிகளில்.

இப்பாட்டுக்கு மற்றொருவதையாகவும் பொருள் கொள்ளலாம் –
ஒருருவனல்ல – “உயிரளிப்பான் எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தா யிமையோர் தலைவா!“ என்கிறபடியே
அடியவர்களைக் காத்தருள்வதற்காக நீ பலபல யோதிகளில் திருவவதரித்தாயாதலால் பரவாஸுதேவனாயிருக்கையாகிற
ஒரு உருவத்தையே நீ உடைமையல்லை
ஒளியுருவம் நின்னுருவம் – மீனாகவும், ஆமையாகவும் பன்றியாகவும் பலவுருக்கள் நீ கொண்டாலும்
அவை அழுக்குடம்பு அல்ல, நீ பிறக்கு முருவங்களும் சுத்த ஸத்வமயமாய்க் கொண்டு நிரவதிகதே ஜோரூபமாகவே யிருக்கும்.
ஈருருவனென்ப நிருநிலத்தோர் – ஆக விப்படி அஸாதாரண விக்ரஹம், அவதார விக்ரஹம் என்று இருபடிப்பட்ட
திருமேனியையுடையனாக உன்னை இவ்வுலகத்தவர் தெரிந்து கொண்டிருக்கின்றனர்.
ஆயினும் அஸாதாரண விக்ரஹத்திற் காட்டிலும் அவதார விக்ரஹமே ஸகல லோக உஜ்ஜீவந ஹேது என்று
அறிந்து கொள்வதே சிறப்பு என்கிறார் பின்னடிகளில்.

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

இரண்டாம் திருவந்தாதி -பாசுரங்கள் -21-40–திவ்யார்த்த தீபிகை சாரம்–

October 3, 2014

முதல் திருவந்தாதியில் “நாவாயிலுண்டே நமோநாராணாயவென்று ஓவாதுரைக்கு முரையுண்டே,
மூவாத மாக்கதிக்கண் செல்லும் வகையுண்டே என்னொருவர் தீக்கதிக்கண் செல்லுந்திறம்”(9”) என்ற
பாசுரத்தின் கருத்தைப் பெரும்பாலும் தழுவியதாமிப்பாசுரம்.

தாமுளரே தம் உள்ளம் உள் உளதே தாமரையின்
பூ உளதே ஏத்தும் பொழுது உண்டே -வாமன்
திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே
அரு நரகம் சேர்வது அரிது—————–21-

பதவுரை

தாம் உளரே–(எம்பெruருமானைப் பணிவதற்குப் பாங்கான கரண களேபரங்களை யுடைய)
சேதநர் தாங்கள் ஏற்கனவே இருக்கின்றார்களே;
தம் உள்ளம் உள்உளதே–(எம்பெருமானைச் சிந்திப்பதற்கான) தங்களுடைய (மனமும் வெளியே போய்த் தேட வேண்டாதபடி)
தமக்குள்ளே யிருக்கின்றதே.
தாமரையின் பூ உளதே–(எம்பெருமான் திருவடிகளில் சாத்தந்தக்க) தாமரைப்பூ (குளங்கள் தோறும்) நிறைந்து கிடக்கின்றதே;
ஏத்தும் பொழுது உண்டே–அவனை வாய் விட்டுப் புகழ்வதற்கு ஏற்ற காலம் ஏராளமாக வுள்ளதே;
வாமன்–(தன் உடைமையைப் பெறுகைக்குத் தான் யாசகனாகச் சென்ற சீலமுள்ள) வாமந மூர்த்தியான ஸர்வேச்வரனுடைய
திரு மருவு தாள்–அழகிய திருவடிகளை
மருவு–பணிவதற்குப் பொருத்தமான
சென்னியரே–தலையை யுடையவர்களாக இருக்கின்றார்களே;
(இப்படி ஒன்றாலும் குறையின்றியே யிருக்கவும் இவ்வுலகத்தவர்கள்)
செவ்வே–நேராக
அரு நரகம்–கொடிய நரகத்தை
சேர்வது–அடைவதானது
அரிது–ஆச்சரியப்படத்தக்க அருமையான செயலாயிருக்கின்றது.

எம்பெருமானை ஏத்துவதற்கு ஏற்ற ஸாமகரிகள் குறைவற்றிருக்கச் செய்தேயும் இவ்வுலகத்தவர் விலக்கடி தேடிக்கொண்டு
நரகத்திற்சென்று சேருகின்றார்களே! இஃது என்னோ! என்று வயிறெரிகிறார்.
“ஜிஹவே! கீர்த்தய கேசவம் முரரிபும்” என்ற முகுந்தமாலை ச்லோகத்திற் சொல்லுகிறபடியே எம்பெருமானைப் பணிவதற்கு
ஏற்ற கரசரணாதி அவயங்களோடு கூடியிருக்கின்றார்களே;
இனி புதிதாகத் தங்களைத் தாம் ஸ்ருஷ்டிபண்ணிக் கொள்ள வேண்டியதில்லையே;
எல்லாவற்றிறுக்கும் மூல காரணமான நெஞ்தானும் வெளியிற் சென்று தேடவேண்டாதபடி உள்ளே அமைந்து கிடக்கின்றதே;
அர்ச்சிப்பதற்கு உரிய தாமரை மலர்கள் தடாகங்கள்தோறும் மலிந்து கிடக்கின்றனவே;
‘போதுபோகவில்லை; போதுபோகவில்லையே’ என்று பாழும் ஸம்ஸாரிகள் தவிக்க வேண்டும்படி பொழுதும் ஏராளமாகவுண்டே
பகவானைத் துதிப்பதற்கு; தலைபடைத்த ப்ரயோஜனம் பெற அவனை வணங்கலாமே; இப்படி ஒன்றாலொன்று குறையின்றியிருக்க,
இவர்கள் நித்ய ஸம்ஸாரிகளாகவேயிருக்க வழிதேடுவது என்ன கேடுகாலமோ வென்றவாறு,
“நாராயணேதி சப்தோஸ்தி வாகஸ்தி வசவர்த்தி நீ- ததாபி நரகே கோரே பதந்தீதி கிமத்புதம்” என்ற
புராண ச்லோகமும் இப்பாட்டுக்கு ஒரு புடை சார்பாக அநுஸந்திக்கத்தகும்.

————————————————————————–

அரியது எளிதாகும் ஆற்றலால் மாற்றி
பெருக முயல்வாரைப் பெற்றால் -கரியதோர்
வெண் கோட்டு மால் யானை வென்றி முடித்தது அன்றே
தண் கோட்டு மா மலரால் தாழ்ந்து——22-

பதவுரை

(சேதநனுக்கு வேண்டிய ஸகல காரியங்களையும் தானே செய்வதாக என்று கொண்டு)
பெருக முயல்வாரை–மிகவும் உத்ஸாஹங் கொண்டிருக்கின்ற மஹாபுருஷனான எம்பெருமானை
பெற்றால்–கிடைக்கப் பெற்றால்
அரியது–செய்வதற்கு அருமையான செயலும்
எளிது ஆகும்–லகுவாய்விடும்; (இப்படியாக எங்கே கண்டோமென்னில்)
வெண்கோடு–வெண்ணிறமான தந்தங்களையுடைய
மால்–பெரிய
கரியது ஓர் யானை–கருநிறமுள்ள கஜேந்திராழ்வான்
தண்–குளிர்ந்த
கோடு–பொய்கைக் கரையிலே
மா–சிறந்த
மலரால்–தாமரைப் பூக்களைக் கொண்டு
(மடுவின் கரையிலெழுந்தருளின எம்பெருமான் திருவடிகளிலே)
தாழ்ந்து–வணங்கி யடிமை செய்ததனால்
வென்று முடித்தன்றே–விரோதியை ஜயித்துத் தன் அபீஷ்டத்தை நிறைவேற்றிக் கொண்டதன்றோ.
ஆற்றலால்–தன்னுடைய சக்தியினால்
மாற்றி–சேதநன் செய்யும் முயற்சி ஒன்றும் வேண்டாவென்று விலக்கி

எம்பெருமான் ஸர்வசக்தனென்பதை யறிந்து கொண்டு, அப்படி ஸர்வசக்தனான அவனே நம்முடைய பாரங்களைத்
தன் தலைமீது ஏற்றுக்கொண்டு நமக்காகவேண்டிய ஸகலகாரியங்களையுஞ் செய்து தலைக்கட்டத்தானே
உத்ஸாஹங் கொண்டிருக்கிறானென்பதையறிந்து அவனுடைய ப்ரவ்ருத்திக்கு விலக்கான நம்முடைய ப்ரவ்ருத்தியை
நிறுத்திக்கொள்வோமாயின் நமக்குப் பெறமுடியாத தொன்றுமில்லை, எல்லாம் எளிதேயாம்;
இதற்கு உதாஹரணமுங் காண்மின்; முதலையின் வாயிலகப்பட்ட கஜேந்திராழ்வான் தனது சக்தியைக்கொண்டு
அவ்வாபத்தைப் போக்கிக்கொள்ள நினைத்துத் தானாக முயற்சிசெய்து கொண்டிருந்தவரையில் துன்பம் நீங்கப்பெற்றதில்லை;
‘தன்னாலானமட்டும் ஒரு கை பார்க்கட்டும்’ என்று எம்பெருமான் விலகியே நின்றான்;
இனி நம்மாலாகாதென்று துணிந்து ஸ்வப்ரவ்ருத்தியைவிட்டு ‘ஆதிமூலமே!’ என்றழைத்த பின் தன்காரியமாகக் கொண்ட
எம்பெருமான் அரைகுலையத் தலை குலைய மடுவின் கரையிலே ஓடிவந்து வினைதீர்த்தொழித்தானன்றோ.

ஆற்றலால் மாற்றிறப் பெருக முயல்வாரைப் பெற்றால் அரியது எளிதாகும் –
ஆற்றலாவது சக்தி; எம்பெருமானுடைய சக்தியைச் சொன்னபடி,
மாற்றி – சேதகனுடைய ப்ரவ்ருத்திகளை விலக்கி என்றபடி.
சேதநன் தன்னுடைய முயற்சியை நீக்கிக்கொண்டு எம்பெருமானுடைய சக்தியே ஓங்கும்படி நின்றால்
அரிய காரியமும் எளிதாக முடியுமென்பது தேர்ந்த கருத்து.

ஈற்றடியிலுள்ள ‘கோடு’ என்னுஞ் சொல் நீர்க்கரையென்னும் பொருளது.
“தண் தோட்டு மாமலரால்” என்றும் பாடமுண்டாம்; தோடு – அகவிதழ்; மலர்க்கு விசேஷணம்.

————————————————————————–

எம்பெருமான் தன்னை ஆச்ரயிப்பவர்களின் இடையூறுகளைத் தொலைத்து அவரவர் மேன்மேலும் விரும்புகின்ற
இஷ்டங்களையுந் தந்தருள்வனென்கிறது.

தாழ்ந்து வரம் கொண்டு தக்க வகைகளால்
வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும் -தாழ்ந்த
விளங்கனிக்கு கன்று எறிந்து வேற்றுருவாய் ஞாலம்
அளந்தடிக்கீழ் கொண்ட வவன்—-23-

பதவுரை

தாழ்ந்த–(பழத்தின் கனத்தினால் கிளைகள்) தாழ்ந்து கிடந்த
விளா–விளா மரத்தினுடைய
கனிக்கு–பழங்களை உதிர்ப்பதற்காக
கன்று–கன்றை (எறி கோலாகக் கொண்டு) வீசி யெறிந்தவனாயும்
வேறு உரு ஆய்–(திருமாலான தன்னுடைய வடிவத்தை விட்டு யாசகனான வாமன மூர்த்தி வடிவமாய்
ஞாலம்–பூமியை
அளந்து–அளந்து
கொண்ட–அடங்கும்படி கொண்டவனாயுமுள்ள
அவன்–அந்த எம்பெருமான்
தாழ்ந்து–தனது திருவடிகளிலே வணங்கி
வரம் கொண்டு–(எங்கள் இஷ்டத்தை நீயே பூர்த்தி செய்து தரவேணுமென்று சொல்லித் தனது) திருவருளைப் பெற்று
தக்க வகைகளால்–(தங்கள் தங்கள் நிலைமைக்கு) ஏற்ற வண்ணமாக
வாழ்ந்து–ஐச்வரியத்தையோ கைவல்யத்தையோ பகவத் ப்ராப்தியையோ பெற்று
கழிவாரை–மேன்மேலும் ஸுகத்தை மிகுத்துக் கொள்ள வேணுமென்றிருக்கிற அந்தந்த அதிகாரிகளை
வாழ்விக்கும்–வாழ்விப்பான்.

பின்னடிகளில் கபித்தாஸுர வத்ஸாஸுரர்களைக் கொன்றழித்ததையும் மாவலியின் கொழுப்பையடக்கியதையும் பேசினதன் கருத்தாவது –
துரஹங்சாரியான மாவலியின் கையில் அகப்பட்டக் கிடந்த பூமியைத் தன் திருவடிகளிலே கொண்டு வாழ்வித்தவன்,
வணங்கினவர்களின் விரோதிகள் கபித்தாஸுரனும் வத்ஸாஸரனும் பட்டபாடுபாடும்படி போக்கிக் கர்ப்பனென்பதாம்.

வேற்றுருவாய் -திருமகள் கொழுநனாயிருக்கும் உருவத்தை விட்டு யாசக ப்ரஹ்மசாரியின் உருவத்தை யேறிட்டுக்கொண்டு என்றபடி.
அன்றி, இரக்கும் போது சிறியகாலைக்காட்டி, அளக்கும்போது பெரியகாலைக் கொண்டு என்றுமாம்.

————————————————————————–

எம்பெருமான் தன்னை வணங்கினவர்களை வாழ்விப்பனென்று கீழ்ப்பாசுரத்திலருளிச் செய்த ஆழ்வார்.
அடியே பிடித்து சேதநனுடைய ஸத்தையை நோக்கிக் கொண்டு போருகிற எம்பெருமானுக்கு
இஃது ஓரேற்றமே வென்கிறார் போலு மிப்பாட்டால்.

அவன் கண்டாய் நன் நெஞ்சே யார் அருளும்கேடும்
அவன் கண்டாய் ஐம் புலனாய் நின்றான் -அவன் கண்டாய்
காற்றுத் தீ நீர் வான் கருவரை மண் காரோதச்
சீற்றத் தீ யாவானும் சென்று —24-

பதவுரை

நல்நெஞ்சே–நல்ல மனமே!
ஆர் அருளும்–பரி பூர்ண க்ருபையாலே உண்டாகக் கூடிய மோக்ஷமும்
கேடும்-நிக்ரஹத்தால் வரக் கூடியதான ஸம்ஸாரமும்
(ஆகிய இரண்டுக்கும் நிர்வாஹகன்
அவன் கண்டாய்–அந்த எம்பெருமானே யாவன்;
ஐம்புலன்–பஞ்சேந்திரிய வடிவமான சரீரத்திற்கு உத்பாதகங்களான
காற்று தீ நீர் வான் மண் ஆய் நின்றான் அவன் கண்டாய் –பஞ்ச பூதங்களாய் நிற்பவனும் அந்த எம்பெருமானே யாவன்;
கரு வரை–கறுத்த மலைகளும்
(அவன் கண்டாய்)–அவனேயாம்;
சென்று–(இந்தப் பிரபஞ்சத்தை யழிக்கத் திருவுள்ளம்) ப்ரஸரித்து
கார் ஓதம் சீற்றம் தீ ஆவானும்–கறுத்த கடலைச் சீறிச் சுடவல்ல படபாக்நி யாகுமவனும்
அவன் கண்டாய்–அந்த எம்பெருமானேயாம்.

ஆரளுங் கேடும் அவன் கண்டாய் இந்த ஸம்ஸாரத்தை ப்ரவர்த்திப்பித்தவன் எம்பெருமானே யாதலால்
சேதன வர்க்கங்களைக் காக்க வேண்டியதும் அவனுக்குப் பாரமாயிற்று;
ஆகவே, கண்ணபிரானே கரணகளேபரங்களைக் கொடுத்து ஸம்ஸாரத்தில் ப்ரவர்த்திப்பித்த
அவதாரிகளைத் தன்னுடைய மாயையான ஸம்ஸாரத்தில் நின்றும் மீளச் செய்வானாம் என்றவாறு-
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே” என்று சோதி வாய்திறந்து பணித்ததும் உணர்க.

————————————————————————–

“ஈச்வரன் அவதரித்துப் பண்ணின ஆனைத்தொழில்களெல்லாம் பாகவதாபசாரம் பொறாமையென்று ஜீயரருளிச்செய்வர்”
என்பது ஸ்ரீவசநபூஷணம் அதாவது – ஸங்கல்பமாத்திரத்தாலே எல்லாவற்றையும் நிர்வஹிக்கவல்ல ஸர்வசக்தியான ஸர்வேச்வரன்
தன்னை யழியமாறி மநுஷ்யர்களைப்போன்று அவதரித்துக் கைதொடனாய்நின்று செய்த ராவணாதிநிரஸநரூபமான
அதிமாநுஷருத்யங்களெல்லாம் மஹர்ஷிகள் முதலான பாகவதர்திறத்தில் அவ்வவர் பண்ணின அபசாரம் ஸஹியாமையாலே
என்று நஞ்சீயரருளிச் செய்வராம்
திருவாழி யாழ்வானைக் கூட ஏவாமல் ஸங்கல்பமாத்திரத்தாலே காரியஞ் செய்யவல்லமை எம்பெருமானுக்கிருந்தாலும்
ஆச்ரிதர்களுக்காகத் தான் உடம்பு நோவக் காரியஞ் செய்தாலன்றித் தனக்கு த்ருப்தி பிறவாதாகையால்
தானே நேரில்வந்து தோன்றிக் கைதொட்டுக் காரியஞ்செய்கின்றானாம்.

சென்றதிலங்கை மேல் செவ்வே தன் சீற்றத்தால்
கொன்றது ராவணனை கூறுங்கால் -நின்றதுவும்
வேயோங்கு தண் சாரல் வேங்கடமே விண்ணவர் தம்
வாயோங்கு தொல் புகழான் வந்து—-25—

பதவுரை

விண்ணவர் தம் வாய்–தேவர்களின் வாயினால்
ஓங்கு தொல் புகழான்–உயர்வாகக் கூறப்படுகின்ற பழமையான புகழை யுடைய எம்பெருமான்
செவ்வே–நேராக
சென்றது–சீறிச் சென்றது
இலங்கை மேல்–லங்காபுரியின் மேலாகும்;
தன் சீற்றத்தால்–தனக்கு வந்தேறியான கோபத்தால்
கொன்றது–ஸம்ஹரித்தது
இராவணனை–ராவணனையாம்;
கூறுங்கால்–சொல்லுமிடத்து
வந்து நின்றதுவும்–(சேதநர் எக்காலத்தும் உஜ்ஜீவிக்கவேணுமென்று கருதி) வந்து
வேய் ஓங்கு தண் சாரல் வேங்கடமே–மூங்கில்கள் ஓங்கி வளர்ந்துள்ள குளிர்ந்த சாரலையுடைய திருவேங்கடமலையேயாம்.

படாதபாடுகள் பட்டு இலங்கையை நோக்கிச் செல்லாமலே “பஸ்மீபவது ராவண:” என்றாற்போன்ற வொரு
ஸங்கல்பமாத் கிடத்தாலே இராவணனை நீறாக்கி யொழித்திருக்கலாமே;
அப்படியிருக்கவும், வந்து பிறந்து இலங்கையை நோக்கிப் படைதிரட்டிச் சென்றதும்
இராவணனைப் போர்க்களத்திலே கொன்றதும் என்னோ?

இராவணன் முதலிய துஷ்டர்களை ஸங்கல்பமாத்திரத்தாலே நிக்ரஹித்து விடக்கூடுமாயினும்,
“பரித்ராணாய ஸாதூநாம்” என்று சொல்லப்பட்ட ஸாதுபரித்ராணம் (சிஷ்டர்களை வாழ்விப்பது) ஸங்கல்பத்தால் தலைக்கட்டாது;
திவ்யமங்கள விக்ரஹத்தினழகைக் கண்ணாரக் காண வேணுமென்றும் அனைத்துக்கொள்ள வேணுமென்றும்
அன்பர்கொள்ளும் ஆவலை நேரில் வந்தவதரித்தே தீர்க்கவேணுமேயன்றி ஸங்கல்பத்தால் தீர்க்கப்போகாதாகையாலே
“பரித்ராணாய ஸாதூநாம் விநாசாய ச துஷ்க்ருதாம் – தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகேயுகே” என்று
சொல்லப்பட்ட அவதார ப்ரயோஜநங்கள மூன்றனுள் முக்கியமாக ஸாதுபரித்ராண மொன்றுக்காகவே
விபவாவதாரங்களும் அர்ச்சாவதாரங்களும் செய்தருள்கிறானென்பதை வெளியிடுதலே இப்பாட்டின் பரம தாத்பர்யமாம்.

விண்ணவர்தம் வாயோங்கு தொல்புகழான் – ராவண ஸம்ஹாரம் முடிந்த பின் பிரமன் முதலிய தேவர்கள் வந்து
தோத்திரஞ்செய்ததைக் கூறிற்றாகவுங் கொள்ளலாம்.

————————————————————————–

கீழ்ப்பாட்டில், “நின்றதுவும் வேயோங்கு தண்சாரல் வேங்கடேமே” என்று திருமலையின் ப்ரஸ்தாவம் வந்ததனால்
அத்திருமலையிலேயே இவ்வாழ்வார்க்கு இன்னமும் திருவுள்ளம் அவகாஹித்து அதன் வைலக்ஷண்யத்தை யருளிச் செய்கிறார்.

வந்தித்து அவனை வழி நின்ற ஐம்பூதம்
ஐந்தும் அகத்தடக்கி ஆர்வமாய் -உந்திப்
படி யமரர் வேலையான் பண்டு அமரர்க்கு ஈந்த
படி யமரர் வாழும் பதி—-26–

பதவுரை

படி அமரர்–நிலத் தேவரான பிராமணர்கள்
வாழும்–நித்யவாஸம் பண்ணுகிற
பதி–திருப்பதியாகிய திருமலை யென்பது,
வழி நின்ற–(எம்பெருமானை ஆச்ரயிப்பதற்குத் தடங்கலாய்) குறுக்கே நிற்பனவான
ஐம்பூதம் ஐந்தும்–பஞ்ச பூதங்களையும் பஞ்சேந்திரியங்களையும்
அகத்து அடக்கி–வெளியிற் போக வொண்ணாதபடி நியமித்து
அவனை–அவ் வெம்பெருமானை
வந்தித்து–வணங்கி
ஆர்வம் செய்–பக்தி யுடையவர்களாய்
உந்தி–ஒருவரை யொருவர் தள்ளிக் கொண்டு மேல் விழுந்து
படி–வந்து படிகின்ற
அமரர்–தேவர்களுக்காக
வேலையான்–திருப்பாற்கடலிலுள்ள பெருமான்
பண்டு அமரர்க்கு ஈந்த–முன்னைத் தேவர்களான நிர்ய ஸுரிகட்கும் (அநுபாவ்யமாகக்) கொடுத்த தலமாகும்.

இரண்டரை யடிகளால் க்ஷீராப்தி நாதனை வருணித்தாராயிற்று. தேவர்கள் ஜிதேந்திரியர்களாய்க் கொண்டு
நான் முன்னே நான் முன்னே யென்று ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு வந்து படியுமிடமான திருபபாற்கடலிலே
பள்ளிகொள்ளும் பெருமான், இந்நிலவுலகத்தில் ஸ்ரீவைஷ்ணவர்கள் அநுபவித்து வாழுமிடமான திருவேங்கடமலையை
நித்யஸூரிகளுக்குத் தந்தான் – என்ற விதன கருத்து யாதெனில்;
“தண்ணருவி வேங்கடமே வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு” என்று திருமழிசைப்பிரானும் ,.
“மந்திபாய் வடவேங்கடமாமலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான்” என்று திருப்பாணாழ்வாரும் அருளிச் செய்தபடியே
இத்திருமலை இவ்விபூதியிலுள்ளார்க்கு மாத்திரமேயல்லாமல் அவ்விபூதியிலுள்ள நித்யஸுரிகளுக்கும் எட்டிப் பிடித்தாற்போல்
வந்து பணியுமாறு அமைக்கப்பட்ட திருப்பதியாமென்பதே. “
சுமந்து மாமலர் நீர்சுடர் தூபங்கொண்டு, அமர்ந்து வானவர் வானவர்கோனொடும்,
நமன்றெழுந் திருவேங்கடம்” என்ற திருவாய்மொழியுங் காண்க.

வந்தித்து – வடமொழித்தாது வடியாகப் பிறந்த வினையெச்சம்.
உந்தி – வினையெச்சம்; ‘உந்து’ என்பது வினைப்பகுதி.
மூன்றாமடியில், படியமரர் – வினைத்தொகை.
வேலை – கடற்கரையை யுணர்த்தும் வடசொல்லாகிய ‘வேலா’ என்பது ஐயீறாகி இலக்கணையால் கடலையுணர்த்திற்று.
ஈந்த – ‘ஈந்தது’ என்பதன் விகாரம். படியமரர் வாழும் = படி – பூமி; வானுலகத்தில் தேவர்கள் விளங்குவது போல
இருள்தருமா ஞாலமான இந்தப்பூமியில் விளங்குபவர்; எனவே, அந்தணர்களையும் ஸ்ரீவைஷ்ணவர்களையும் சொல்லிற்றாம்.

————————————————————————–

பதி யமைந்து நாடிப் பருத்து எழுந்த சிந்தை
மதி உரிஞ்சி வான் முகடு நோக்கி -கதி மிகுத்தங்கு
கோல் தேடி யோடும் கொழுந்ததே போன்றதே
மால் தேடி ஓடும் மனம்——27-

பதவுரை

பதி–திருமலைத் திருப்பதியிலே
அமைந்து–வேரூன்றி நின்று
நாடி–எங்கே யென்று தேடிக் கொண்டு
பருத்து எழுந்த சிந்தை
மிகவும் வளர்ந்து மேற்கிளர்ந்த மனோ ரதத்தை யுடையதாய்
மதி உரிஞ்சி–சந்திர பதத்தையும் உராய்ந்து கொண்டு
வான் முகடு நோக்கி–(அப்பால்) அண்ட முகட்டையும் பார்த்து விட்டு
(அங்கும் நில்லாமல்)
மால் தேடி–பரமபத நாதனைத் தேடிக் கொண்டு
கதி மிகுத்து ஓடும்–விரைவு மிகுந்து செல்லுகின்ற
மனம்–என்னெஞ்சமானது
அம் கோல் தேடி ஓடும்–அழகிய கொள் கொம்பைத் தேடிக் கொண்டு பரந்து செல்லுகின்ற
கொழுந்து அது போன்றது–கொடியை ஒத்திரா நின்றது.

கீழிரண்டு பாசுரங்களில் எம்பெருமானுடைய திருமலையிலிருப்பை அநுஸந்தித்த ஆழ்வார்
இவ்விடத்தில் தாம் தம்முடைய ஆசைதீர அப்பெருமானோடு பரிமாற வேணுமென்று பாரித்தார்;
அர்ச்சாவதாரமாகையாலே அப்படிப்பட்ட பரிமாற்றம் ஒன்றும் பெற்றிலர்;
விபவாவதாரங்கள் காலாதீதமாய்ப் போகையாலே இனி பரமபதநாதனோயேயாகிலும் கலந்து பரிமாறப் பெறலாமோ
என்று பார்த்துத் தம் திருவுள்ளம் பரமபதத்தளவும் பதறிச் செல்லும்படியைப் பேசுகிறாரிப் பாசுரத்தில்.

முதலடியில் முடிவிலுள்ள ‘சிந்தை’ என்னுஞ்சொல் எழுவாய் போலத் தோற்றுமாயினும் அஃது எழுவாய் அன்று;
பாட்டின் முடிவிலுள்ள மனமே எழுவாய்; சிந்தை அதற்கு விசேஷணமாய் அந்வயிக்கும்
எனது மனமானது திருவேங்கட மலையிலே சென்று சேர்ந்து தன் ஆவல் தோற்றும்படி எங்கே யெங்கே யென்று திருமாலைத் தேடி
அங்குத் தன் நினைவு தலைக் கட்டப் பெறாமையாலே மிகவும் வளர்ந்து மேற்கிளர்ந்த மனோ ரகத்தை யுடையதாகி
மேலே மேலே சென்று திருநாட்டுத் தலைவனைத் தேடியோடா நின்றது;
இஃது, அழகிய கொள் கொம்பைத் தேடிக் கொண்டு பரந்து செல்கின்ற கொடியைப் போன்றுள்ளது – என்றாராயிற்று.

————————————————————————–

கீழ்ப்பாட்டில் “கோல் தேடியோடுங் கொழுந்ததே போன்றதே மால் தேடியோடும் மனம்” என்னும்படியாக
ஆசை கரைபுரண்டு செல்லப்பெற்ற மதமுடைய திருவுள்ளத்திலே திருவேங்கடமுடையான் அழகிய மணவாளன்
திருப்பாற்கடல் நாதன் பரமபதநாதன் ஆகிய எம்பெருமான்க ளெல்லாரும் வந்து குடிகொண்டபடியைக் கூறுகின்றாரிதில்.

மனத்துள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும்
நினைப்பரிய நீள் அரங்கதுள்ளான்-எனைப்பலரும்
தேவாதி தேவன் எனப்படுவான் முன்னொரு நாள்
மாவாய் பிளந்த மகன் —-28-

பதவுரை

எனை பலரும்–கணக்கில்லாத வைதிக புருஷர் யாவராலும்
தேவாதி தேவன் எனப்படுவான்–தேவர்கட்கும் தேவவென்று ப்ரஸித்தமாகச் சொல்லப்படா நிற்பவனும்
மா கடலான்–பரந்த திருப்பாற் கடலிலே பள்ளி கொண்டிருப்பவனும்
முன் ஒரு நாள்–முன்பொரு காலத்தில்
(ஸ்ரீகிருஷ்ணனா யவதரித்தபோது)
மா வாய் பிளந்த–குதிரை யுருக் கொண்டு வந்த கேசியின் வாயைக் கீண்ட
மகன்–சிறு பிள்ளை யானவனும்
மற்றும்–பின்னும்
நினைப்பு அரிய நீள் அரங்கத்து உள்ளான்–நினைப்பதற்கும் அருமையான யோக்யதை மிக்கிருந்துள்ள கோயிலிலே பள்ளி கொள்பவனுமாகி
வேங்கடத்தான்–திருமலையிலே (ஸர்வ ஸுலபனாய்க் கொண்டு) எழுந்தருளி நிற்பவன்
(இப்போது)
மனத்து உள்ளாள்–என் மநஸ்ஸிலே நித்ய வாஸம் பண்ணா நின்றான்.

தேவாதிதேவனான பரமபத நிலயன் ஜகத்ரக்ஷணார்த்தமாக முதலில் திருப்பாற்கடலில் வந்து தங்கிப் பின்பு
ஸ்ரீக்ருஷ்ணனாயவதரித்து ‘இப்படி நாம் வருவதும்போவதுமாக இராமல் ஸ்திர ப்ரதிஷ்டையாக இருந்து
ஸம்ஸாரிகளைக் காக்க வேணும்’ என்று திருவுள்ளம் பற்றிக் கோயில் திருமலை முதலிய திருப்பதிகளிலே
யெழுந்தருளியிருந்து இப்போது என்னெஞ்சிலே வந்து கிடக்கிறானென்கிறார்.

இப்பாட்டில் ‘மனத்துள்ளான்’ என்பது முதலிலேயிருந்தாலும் அர்த்தஸ்வாரஸ்யம் நோக்கி அது முடிவு சொல்லாகக் கொள்ளப்படும்.

தேவாதி தேவன் – வடசொல் தொடர்.

மாவாய்ப்பிளந்த வரலாறு – கண்ணபிரானைக் கொல்லும்படி கம்ஸனாலேவப்பட்டிருந்த அஸுரர்களில் ஒருவனான
கேசியென்பவன் குதிரையினுருவங் கொண்டு ஆயர்கள் அஞ்சி நடுங்கும்படி களைத்துத் துரத்திக்கொண்டு
கண்ணன் மேற்பாய்ந்துவர, அப்பெருமான் தன் திருக்கையை நன்றாகப்பெருக்கி நீட்டி அதன் வாயிற்கொடுத்துத் தாக்கிப்
பற்களையுதிர்த்து உதட்டைப்பிளந்து அதனுடம்பையும் இருபிளவாக வகிர்ந்து தள்ளினன் என்பதாம்.

————————————————————————–

கிருஷ்ணாவதாரம் நினைவுக்கு வந்துவிட்டால் ஆழ்வார்கள் விரைவில் ஓயமாட்டார்களே!
கீழ்ப்பாட்டில் “முன்னொருநாள் மாவாய்பிளந்த மகன்” என்று கிருஷ்ணாவதாரம் ப்ரஸக்தமானபடியால்
அது தன்னிலேயே திருவுள்ளம் அவகாஹித்து அநுபவித்து இப்பாசுரம் பேசுகிறார்.

மகனாக கொண்டு எடுத்தாள் மாண்பாய கொங்கை
அகனார உண்பன் என்று உண்டு -மகனைத் தாய்
தேறாத வண்ணம் திருத்தினாய் தென்னிலங்கை
நீறாக வெய்தழித்தாய் நீ——-29-

பதவுரை

தென் இலங்கை–அழகிய லங்காபுரி
நீறு ஆக–நீறாகி யொழியும்படி
எய்து–அம்புகளைச் செலுத்தி
அழித்தாய்–முடித்தவனே!
நீ-:மகன் ஆக கொண்டு எடுத்தாள்
உன்னைப் புத்திர பாவனை செய்து (பரிவுகாட்டி முலை கொடுக்க) எடுத்துக்கொண்ட பூதனையினுடைய
மாண்பு ஆய கொங்கை–அழகான முலையை
அகன் ஆர உண்பன் என்று உண்டு–வயிறார உண்ணக் கடவேனென்று சொல்லி (பாலோடு அவளுயிரையும்) குடித்து
மகனை–புத்ரனான உன் விஷயத்திலே
தாய்–உனது தாயாகிய யசோதை
தேறாத வண்ணம்–நம்பிக்கை யற்றிருக்கும்படி
திருத்தினாய்–செய்துவிட்டாய்.

விஷந்தடவின முலையைக் கொடுத்து உன்னைக் கொல்லவந்த பேய்ச்சியானவள் மெய்யே தாய் போன்று பரிவு காட்டி
உன்னை வாரியெடுத்தணைத்து முலைகொடுத்தாள்; நீயும் மெய்யே குழந்தையாகவே பாவனைகாட்டி ,
பாலின் கனத்தாலே விம்மி விளங்குகின்ற அம்முலையைச் சுவைத்துண்பவன் போல அவளுயிரையே உறிஞ்சியுண்டாய்;
அது முதலாக உனது மெய்த்தாயான யசோதைப்பிராட்டிக்கு உன்னிடத்தில் நம்பிக்கையுண்டாக இடமில்லாமலே போயிற்று;
‘இவனை நாம் சிறு குழந்தையென்று நம்பவே கூடாது’ என்று எப்போதும் துணுக்குத்துணுக்கென்று அவள்
அஞ்சியிருக்கும் வண்ணமே செய்துவிட்டாய் என்றாராயிற்று.

அகன் – அகம்; மகரனசுரப்போலி.

“தேன்னிலங்கை நீறாக எய்தழித்தாய்” என்ற விளியின் கருத்தாவது – க்ருஷ்ணாவதாரத்தில் மாத்திரமே இப்படி
நம்பிக்கையற்று அஞ்சியிருக்க வேணுமேயொழிய ராமாவதாரத்தில் இப்படிப்பட்ட அச்சத்திற்கு அவகாசமில்லை;
பருவம் முற்றினபின்பே ராவண ஸம்ஹாரம் முதலிய அரிய பெரிய செயல்களைச் செய்தாயாகையாலே – என்பதாம்.

தென்னிலங்கை – தென் திசையிலுள்ள இலங்கை என்றுமாம். தென் – அழகுக்கும் பெயர்.

————————————————————————–

எம்பெருமானுடைய சில திவ்ய சேஷ்டிதங்களை நினைந்து வாயாரப் பேசி யேத்துகிறார்.
திரிவிக்கிரமனாகி உலகளந்தாய்; மஹாவராஹமாகி உலகிடந்தாய்; வங்கக்கடல் கடைந்தாய்;
அக்கடலிலே அணைகட்டினாய் என்று மஹர்ஷிகள் கூறுகின்றார்களென்கிறார்.

நீ அன்று உலகளந்தாய் நீண்ட திருமாலே
நீ அன்று உலகு இடந்தாய் என்பரால் -நீ யன்று
காரோத முன் கடைந்து பின் அடைத்தாய் மா கடலை
பேரோத மேனிப் பிரான்—30-

பதவுரை

பேர் ஓதம் மேனி பிரான்–பெரிய கடல் போன்ற திருமேனியை யுடைய பெருமானே!
நீண்ட திருமாலே–எண்ணுதற்கு அரிய பெருமை படைத்த திருமாலே
நீ–இப்படிப்பட்ட நீ
அன்று–முன்பொருகால்
உலகு–உலகங்களை
அளந்தாய்–(திரிவிக்கிரமனாகி) அளந்து கொண்டாய் (என்றும்)
நீ–நீ
அன்று–மற்றுமொரு காலத்தில்
உலகு–பூமியை
இடந்தாய்–(மஹாவராஹமாகி) அண்டபித்தியில் நின்றும் ஒட்டு விடுவித்துக் கொணர்ந்தாய் (என்றும்)
நீ அன்று-;
கார் ஓதம் முன் கடைந்து-கரிய கடலை முன்னே கடைந்தா யென்றும்
மா கடலை–(அந்தப் பெரிய கடல் தன்னையே)
பின்–பிறகு (ராமவதாரத்திலே)
அடைத்தாய்–அணை கட்டித் தூர்த்தாயென்றும்
என்பர்–(மஹர்ஷிகள்) சொல்லுகின்றனர்.

காரோதம் கடைந்த வரலாறு : – முன்னொருகாலத்தில், இவ்வண்டகோளத்திற்கு அப்புறத்திலுள்ள விஷ்ணுலோகத்துக்குச்
சென்று திருமகளைப் புகழ்ந்து பாடி அவளால் ஒரு பூமாலை ப்ரஸாதிக்கப்பெற்ற ஒரு வித்யாதரமகள்,
மகிழ்ச்சியோடு அம்மாலையைத் தன் கைவீணையில் தரித்துக்கொண்டு பிரமலோக வழியாய் மீண்டு வருகையில்
தூர்வாஸ மஹாமுநி எதிர்ப்பட்டு அவளை வணங்கித் துதிக்க; அவ்விஞ்சை மங்கை அம்மாலையை அம்முனிவனுக்கு அளித்திட்டாள்.
அதன் பெருமையையுணர்ந்து அதனைச் சிரமேற்கொண்ட அம் முனிவன் ஆநந்தத்தோடு தேவலோகத்திற்கு வந்து,
அப்பொழுது அங்கு வெகு உல்லாஸமாக ஐராவத யானையின் மேற் பவனி வந்து கொண்டிருந்த இந்திரனைக் கண்டு
அவனுக்கு அம்மாலையைக் கை நீட்டிக் கொடுக்க, அவன் அதனை மாவட்டியினால் வாங்கி
அந்த யானையின் பிடரியின் மேல் வைத்தவளவில் அம்மதயானை அதனைத் துதிக்கையாற் பிடித்திழுத்துக் கீழெறிந்து
காலால் மிதித்துத் துவைத்தது; அது கண்டு முநிவரன் கடுங்கோபங்கொண்டு இந்திரனை நோக்கி
‘இவ்வாறு செல்வச் செருக்குற்ற உன்னுடைய ஐச்வரியங்களெல்லாம் கடலில் ஒளிந்து விடக்கடவன’ என்று சபிக்க,
உடனே தேவர்களின் செல்வம் யாவும் ஒழிந்தன; ஒழியவே அசுரர் வந்து பொருது அமரரை வென்றனர்.
பின்பு இந்திரன் தேவர்களோடு திருமாலைச் சரணமடைந்து அப்பிரான் அபயமளித்துக் கட்டளையிட்டபடி
அசுரர்களையுந் துணைகொண்டு மந்தரமலையை மத்தாக நாட்டி வாஸுகி யெனனும் மஹாநாகத்தைக் கடைகயிறாகப்பூட்டிப்
பாற்கடலைக் கடையலாயினர். அப்பொழுது மத்தாகிய மந்தரகிரி கடலினுள்ளே அழுந்திவிட, தேவர்களின் வேண்டுகோளினால்
திருமால் பெரியதோர் ஆமைவடிவமெடுத்து அம்மலையின் கீழேசென்று அதனைத் தனது முதுகின் மீது கொண்டு தாங்கி
அம்மலை கடலில் அழுந்திவிடாமல் கடைதற்கு உபயோகமாம்படி அதற்கு ஆதாரமாக எழுந்தருளியிருந்தனன்.
இப்படி ஸ்ரீமந்நாராயணன் அக்கடலினிடையே மஹா கூர்மமாய் மந்தரபர்வதத்திற்கு ஆதாரமாய் எழுந்தருளியிருக்க,
வாஸுகியின் வாலைப்பிடித்துக் கொண்ட தேவர்களும் தலையைப்பிடித்துக் கொண்ட அசுரர்களும் ஆகிய இரு திறத்தாரும்
அதனை வலியப்பிடித்து இழுத்துக் கடையவல்ல வலிமையில்லாதவராய் நிற்க, அது நோக்கி அத்திருமால் தான்
ஒரு திருமேனியைத் தரித்துத் தேவர்கள் பக்கத்திலேயும் நின்று வாஸுகியின் வாலையும் தலையையும் பிடித்து
வலமும் இடமுமாக இழுத்துக் கடைந்தனன் என்பதாம்.

கடலடைத்த வரலாறு :- விபீஷணாழ்வான் இராமபிரான் பக்கல் வந்து சேர்ந்து உய்ந்தபின் பெருமாளைப் பார்த்து
‘ஸ்வாமிந்! இந்த நம்முடைய ஸேனைகள் கடலைக்கடந்து அப்பாற் செல்லவேண்டுமாதலால்
அதற்காகக் கடலரசனை நீர் சரணம் புகவேணும்’ என்ன; இராமபிரான் “கடலைக்கடக்க உபாயம் சொல்ல வேண்டும்” என்று
கடலரசனாகிய வருணனைப் பிரார்த்தித்துத் தர்ப்பசயனத்திலே படுத்து மூன்று நாளளவும் ப்ராயோபவேசமாகக் கிடக்க,
ஸமுத்ரராஜன் அப்பெருமானது மஹிமையைக் கருதாமல் உபேக்ஷையாயிருந்துவிடவே ஸ்ரீராமன் அது கண்டு கோபங்கொண்டு
‘அனைவரும் நடந்தேசெல்லும்படி கடலை வற்றச் செய்வேன்’ என்று ஆக்நேயாஸத்ரத்தைத் தொடுக்கத் தொடங்கியவளவிலே
வருணன் அஞ்சி நடுங்கி ஓடிவந்து இராமபிரானைச் சரணமடைந்து கடல் வடிவமான தன்மேல் அணைகட்டுதற்கு உடன்பட்டு
நளன் கையினால் நீரில் போகட்ட கற்களும் மிதக்குமென்று அவனுக்கு அவன் தகப்பனார் வரமளித்திருக்கிறாராகையால்
அவனைக் கொண்டு ஸேது கட்டவேணுமென்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டான். இராகவனும் அப்படியே
மற்ற வானரங்கள் சுற்றுமுள்ள மலைகளைப் பிடுங்கிக் கொண்டுவந்து நளன் கையில் கொடுக்கச் செய்து
நளன் கையினால் அம்மலைகளை நீரில் போகடுவித்து ஸேது கட்டுவித்தான்.
அவ்வழியாய் வானரப்படைகளோடு இராமபிரான் இலங்கை சேர்ந்து அந்நகரையும் இராவணனுள்ளிட்ட
அரக்கர் குலத்தையும் நீறுபடுத்தின வரலாறு ப்ரஸித்தம்.

“பேராத மேனிப்பிரான் – காரோத முன்கடைந்து” என்ற சொல்லாற்றலால், கடல் கடைகிறபோது
ஒரு கடலை மற்றொரு கடல் நின்று கடைந்தாற் போலே யிருந்ததென்பது தொனிக்கும்.
‘என்பர்’ என்பது “அளந்தாய்” இடந்தாய், அடைத்தாய்” என்ற மூன்றிடத்தும் அந்வயிக்கும்.

முதலடியில், ‘நீண்ட, என்றது – திரிவிக்கிரமனாய் நீண்ட என்றபடியுமாம்.

————————————————————————–

ஆபத் பந்துவான பகவானுடைய திருவடிகளில் செண்பக மல்லிகையோடு செங்கழுநீரிருவாட்சி
முதலிய புஷ்பங்களைப் பணிமாறித் தொழுமவர்கள்
அப்ராக்ருதமான அப்பரமனது திருமேனியை ஸேவித்து நித்யாநந்தம் அநுபவிக்கப் பெறுவர்களென்கிறார்.

பிரான் என்று நாளும் பெரும் புலரி என்றும்
குரா நற் செழும் போது கொண்டு -வராகத்
தணி யுருவன் பாதம் பணியுமவர் கண்டீர்
மணி யுருவம் காண்பார் மகிழ்ந்து—31–

பதவுரை

பிரான் என்றும்–‘மஹோபகாரங்கள் பண்ணினவனே!’
பெரு புலரி என்றும்–‘இன்றே நல் விடிவு’ என்றும் (கொண்டாடிக் கொண்டு)
நாளும்–நாள்தோறும்
நல்குரா–நல்ல மணம் மிக்க
செழு–அழகிய
போது கொண்டு–புஷ்பங்களைக் கொண்டு,
வராகத்து அணி உருவன் பாதம்–அழகிய வரா ஹவுருக் கொண்ட பெருமானுடைய திருவடிகளை
பணியுமவர் கண்டீர்–வணங்குபவர்களே
மணி உருவம்–(அப்பெருமானுடைய) திவ்ய மங்கள விக்ரஹத்தை
மகிழ்ந்து காண்பர்–ஸேவித்து ஆநந்திக்கப் பெறுவர்கள்.

(பிரானென்னும் பெரும்புலரியென்றும் பணியுமவர் கண்டீர்.)
ஸ்ரீவசநபூஷணத்திலே – “அஜ்ஞரான மநுஷ்யர்கள் வாளா தந்தானென்றிருப்பர்கள்;
ஜ்ஞாநவான்கள் ‘இன்றென்னைப் பொருளாக்கித் தன்னையென்னுள்வைத்தான் – எந்நன்றி செய்தேனோ என்னெஞ்சில் திகழ்வதுவே –
நடுவே வந்து உய்யக்கொள்கின்ற நாதன் – அறிய தனவறிவித்த அத்தா நீ செய்தன அடியேனறியேனே –
பொருளல்லாத வென்னைப் பொருளாக்கி அடிமைகொண்டாய் –
என்னைத் தீமனங்கெடுத்தாய் – மருவித்தொழும் மனமே தந்தாய்’ என்று ஈடுபடா நிற்பார்கள்”
என்றருளிசி செய்தவை இங்கு அநுஸந்திக்கத்தக்கன.

பிரானே! என்றும் பெரும்புலரி என்றும் சொல்லிக் கொண்டு எம்பெருமான் பாதம்பணிய வேணுமென்கிறாரிவ்வாழ்வார்.
‘இன்றளவும் மாறிமாறிப் பலபிறப்பும் பிறந்து விஷயாந்தரங்களிலே ஆழ்ந்து உண்டியே உடையே உகந்தோடித்
திரிந்தவென்னை இன்று உன் திருவடிகளிலே கொண்டு கூட்டினையே!, இதனிலும் மிக்க வுபகாரமுண்டோ?, என்று
பெருநன்றி பாராட்டவேணுமென்பது “பிரானென்றும்” என்பதன் கருத்து. (பிரான் – உபகாரசன்; இங்கே இது ஸம்போதநம்.)

பெரும்புலரி என்றும் =“பழுதே போயின” என்கிறபடியே பாழாய்க் கழிந்த பல நாள்களுக்குள்ளே பகவத் விஷயத்திலிழியும்படி
விடிந்த இந்நாளே நல்ல நாள்! என்று நாளைக் கொண்டாட வேணுமென்கிறது.
கம்ஸன் தனது வேலைக்காரனான அக்ரூரனை யழைத்து ‘நீ போய்க் கண்ணபிரானை யழைத்து வா’ என்று
கட்டளையிட்டனுப்ப அவனும் புறப்பட்டு வரும்போது ,.
“அத்ய மேஸ பலம் ஜந்ம ஸுப்ரபாதாச் மே நிசா – யதுந்நித்ராப்ஜபத்ராக்ஷம் விஷ்ணோ! த்ரக்ஷ்யாம்யஹம் முகம்.”
கம்ஸன் சோறுண்டு வளர்ந்த வெனக்கும் இன்று எம் பெருமான் திருமுகத்திலே விழிக்கப்பெறும் பாக்கியம் நேர்கின்றமையாலே
இன்றே என் பிறவி பயன்பெற்றது; இன்றே நல்விடிவு என்று கனிந்து கூறினது போலவும்,
“மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்” என்று ஆய்ச்சிகள் நாளைக் கொண்டாடினது போலவும்.

குராநற் செழும்போது = ‘குரா’ என்று பரிமளத்திற்கும் ஒரு புஷ்ப விசேஷத்திற்கும் பெயர்.
இங்கே அவ்விரண்டு பொருளுங்கொள்வர்,
காண்பர் மகிழ்ந்து = கண்டு மகிழ்வர் என்றவாறு.

————————————————————————–

தம்முடைய ‘மனமொழிமெய்கள் மூன்றும் பகவத் விஷயத்திலேயே ஊன்றினபடியைப் பேசுகிறார்’.

மகிழ்ந்தது சிந்தை திருமாலே மற்றும்
மகிழ்ந்தது உன் பாதமே போற்றி -மகிழ்ந்தது
அழலாழி சங்கமவை பாடியாடும்
தொழிலாகும் சூழ்ந்து துணிந்து—-32–

பதவுரை

திருமாலே!–லக்ஷ்மீபதியே!
சிந்தை–என் நெஞ்சமானது
மகிழ்ந்தது–(உன்னைச் சிந்தித்து அதனாலே) ஆநந்த முற்றது;
மற்றும்–நெஞ்சுக்கு அடுத்ததான வாக்கும்
உன் பாதமே போற்றி–உன் திருவடிகளையே துதித்து
மகிழ்ந்தது–ஆநந்திக்கப் பெற்றது;
ஆகம்–என்னுடைய தேஹமானது
அழல்–எதிரிகளின் மீது நெருப்பை உமிழ்கின்ற
ஆழி–திருவாழியையும்
சங்கம்–ஸ்ரீபாஞ்ச ஜந்யத்தையும்
அவை–மற்றுமுள்ள திவ்யா யுதங்களையும்
பாடி ஆடும்–கொண்டாடிப்பாடிய ஆடுகையாகிற
தொழில்–வியாபாரத்திலே
சூழ்ந்து–பொருந்தி
துணிந்து–இதுவே நமக்குக் காரியமென்று துணிவு கொண்டு
மகிழ்ந்தது–களிக்கப் பெற்றது.

திருமாலே! சிந்தை மகிழ்ந்தது = நாட்டாருடைய மனம் விஷயாந்தரங்களிலே ஊன்றி அதனால் ஆநந்தமடையும்;
என்னுடைய சிந்தை அப்படியன்றியே அவற்றைக் காறியுமிழ்ந்து, நீயும் பிராட்டியுமாகச் சேர்ந்திருக்கும்
சேர்த்தியைச் சிந்தித்த மாத்திரத்தில் மகிழ்ச்சியடையா நின்றது.

மற்றும் உன் பாதமே போற்றி மகிழ்ந்தது = மனம் நினைத்ததை வாய் சொல்லக்கடவ தாகையாலே
மனத்துக்கு அடுத்ததான வாக்கை ‘மற்றும்’ என்கிறது.
நாட்டாருடைய வாக்கு விஷயாந்தரங்களை வருணித்து அதனாலே களிப்புறும்;
என்னுடைய வாக்கு அப்படியன்றியே உனது திருவடிகட்கு வாழ்த்துக்கூறி மகிழ்வுறுகின்றது.
இனி, பின்னடிகளால் சரீரத்தின் தொழிலுறுதியைக் கூறுகின்றார்.
திருவாழி திருச்சங்கு முதலிய திவ்யாயுதங்களோடே நீ சேர்ந்து விளங்குகின்ற அழகை வருணித்து வாய் பாட,
அப்பாடலுக்குத் தகுதியாக ஆடுவதையே என்னுடைய சரீரம் தொழிலாகக் கொண்டுள்ளது என்றாராயிற்று.

————————————————————————–

“யத் ஹி மநஸா த்யாயதி தத் வாசா வததி தத் கர்மணா கரோதி” என்று வேதத்திற் சொல்லுகிறபடியே
முதலில் சிந்தை சிந்திப்பது பிறகு வாய் சொல்லுவது, அதன்பிறகு உடல் செய்வது என்றிப்படி
மனமொழி மெய்களின் செயல்முறைமை ஏற்பட்டிருக்கும் விதமாகத் தமக்கு அந்த மூன்று கரணங்களும்
பகவத் விஷயத்தில் அவகாஹித்தபடியைக் கீழ்ப்பாசுரத்திற் பேசினர்;
இந்த முறைமையின்படியே ஒழுகாது, வாக்குக்கு முன்னே சரீரம் முந்துகிறபடியை இப்பாசுரத்தில் மொழிகின்றார்.
‘நான் முன்னே நான் முன்னே’ என்று தம்முடைய இந்திரியங்கள் பகவத் விஷயாநுபவத்துக்கு முற்படும்படியைத் தெரிவித்தவாறு.
கீழ்ப்பாட்டில் மனமொழி மெய்களை வரிசையாகச் சொல்லி,
இப்பாட்டில் ‘சிந்தை, அங்கம், வாய், என்று மாறுபடக் கூறியிருத்தல் காண்க.

துணிந்தது சிந்தை துழாய் அலங்கல் அங்க
மணிந்தவன் பேருள்ளத்துப் பலகால் -பணிந்ததுவும்
வேய் பிறங்கு சாரல் விரல் வேங்கடவனையே
வாய் திறங்கள் சொல்லும் வகை——-33–

பதவுரை

சிந்தை–என் மனமானது
துழாய் அலங்கல் அணிந்தவன் பேர்–திருத்துழாய் மாலையை அணிந்துள்ள பெருமானுடைய திருநாமங்களை
பல்கால்–பலமுறை
உள்ளத்து–நினைப்பதில்
துணிந்தது–த்ருடமாக அத்யவஸாயங் கொண்டது;
அங்கமும் (பல்கால்)–எனது உடலும் எப்போதும்
பணிந்தது–வணங்குவதாயிரா நின்றது;
வாயும்–என் வாக்கும்
வேய் பிறங்குசாரல்–மூங்கில் மிக்கிருக்குந் தாழ்வாரையையுடைய
விறல் வேங்கடவனை–திருமலையிலெழுந்தருளியிருக்கிற மிடுக்குடைய பெருமானது
திறங்களே-தன்மைகளையே
(பல்கால்)-எப்போதும்–
சொல்லும் வகை–சொல்லுகிற விதத்திலே
(துணிந்தது)–துணிவு கொண்டதாயிற்று.

“வேய் பிறங்கு சாரல்” என்ற விசேஷணம் ‘வேங்கடவனை என்பதில் ஏக தேசமான வேங்கடத்தில் அந்வயிக்கும்;
‘விறல்’ என்ற விசேஷணம் வேங்கடவனுக்கு அந்வயிக்கும். விறல் – பெருமை, வலி, வீரம், வெற்றி.

திறம் – குணம், சாமர்த்தியம், தன்மை, மேன்மை முதலியன.
திருவேங்கடமுடையானுடைய ஸ்வரூபகுண விபூதிகளைச் சொல்லிக் கொண்டிருப்பதிலே வாய்துணிவு கொண்டதென்கை.

————————————————————————–

கீழருளிச் செய்தபடி தம்முடைய மதோவாக்காயங்கள் எம்பெருமான் பக்கலிலேயே ஊனமுற்றதற்குக் காரணம் –
அந்த எம்பெருமான் மஹாபலியிடத்தினின்று பூமியை மீட்டு இந்திரனுக்குத் தருவதென்கிற வியாஜத்தால்
எல்லார் தலையிலும் திருவடியை வைத்து வாழ்வித்தது போல,
தம் தலைமேலும் திருவடிகளை வைத்து விசேஷகடாக்ஷஞ் செய்தருளினதேயாமென்பது இப்பாட்டில் தோன்றும்.

வகையால் அவனி இரந்து அளந்தாய் பாதம்
புகையால் நறு மலரால் முன்னே -மிக வாய்ந்த
அன்பாக்கி ஏத்தி அடிமைப் பட்டேன் உனக்கு
என் பாக்கியத்தால் இனி—–34–

பதவுரை

முன்னே–முற்காலத்திலே
வகையால்–உபாயத்தினால்
அவனி–பூமியை
இரத்து–(மாவலிபக்கல்) யாசித்து
அளந்தாய்–அளந்து கொண்ட வுன்னுடைய
பாதம் புகையால்–திருவடிகளை தூபங்கொண்டும்
நறுமலரால்–நல்ல பரிமளமுள்ள புஷ்பங்களைக்கொண்டும்
மிக வாய்ந்த அன்பு ஆக்கி–மிகுதியாக (நன்றாக)ப் பொருந்தின ப்ரீதியுடனே
ஏத்தி–துதித்து
இனி–மேலுள்ள காலமெல்லாம்
என் பாக்கியத்தால்–நீ என்மேல் பண்ணின விசேஷ கடாக்ஷமாகிற பாக்யத்தாலே
உனக்கு அடிமைப்பட்டேன்–உனக்குத் தொண்டனாய் விட்டேன்.

வகையால் – தந்திரத்தாலே யென்றபடி; இராவணன் போலவே மாவலியும் தேவர்களுக்குத் தீங்கிழைத்தவனாதலால்
ராவணனைக் கொன்றொழித்தது போலவே இவனையுங் கொல்ல வேண்டியிருந்தும்,
இவன் உதாரகுணமொன்றை மேற்கொண்டிருந்ததனால் இவனைக் கொல்லவேண்டாவென்று கொண்டு
மூவடியிரந்து பெறுகிற இச்செயலிலேயே பூமியை இந்திரனுக்குச் சேர்ப்பித்தலும் மாவலியை அடக்குதலுமாகிற இரண்டும்
எளிதிற் கைகூடுமென்று நினைத்துச் செய்த தந்திரம் அறிக.

இனி, வகையால் என்பதற்கு வடிவழகு, மழலைச்சொல், மனத்தைக் கவரவல்ல செயல் முதலிய வகைகளாலே என்றுரைக்கவுமாம்.

அவநி – வடசொல்.

என் பாக்கியத்தால் = நான் செய்த பாக்கியத்தால் என்று பொருளன்று எனக்கு நேர்ந்த பாக்கியத்தால் என்கை
எம்பெருமானார் காலத்திலே திருவரங்கம் பெரிய கோயிலில் ஒருநாள் நம் பெருமாள் புறப்பாட்டை எதிர்பார்த்துக் கொண்டு
பெரிய திருமண்டபத்துக்குக் கீழாக மஹாஜ்ஞாதாக்களான முதலிகளெல்லாரும் திரளவிருந்தவளவிலே ஒரு ஸ்ரீ வைஷ்ணவர்
“நாம் அநாதிகாலமாக ஆர்வீட்டு வாசலிலே எவனுடைய புறப்பாட்டை எதிர்பார்த்துக்கொண்டு கிடந்தோமோ தெரியாது,
இன்று ப்ராப்த சேஷியான பெருமாளுடைய புறப்பாடு பார்த்து வந்திருக்க என்ன பாக்கியம் பண்ணினோமோ!’ என்ன,
அந்த ப்ரஸங்கத்திலே நித்ய ஸம்ஸாரியாய்ப் போந்தவனுக்கு ஒருநாள் பகவத் விஷயத்திலே ருசிபிறப்பதற்குக் காரணமென்ன?’
என்று விசாரிக்கச்செய்தே ‘யாத்ருச்சிகஸுக்ருதம்’ என்று சிலரும் ‘அஜ்ஞாதஸுக்ருதம்’ என்று சிலருமாய் இப்படி வார்த்தைகள் உண்டாக,
அவ்வளவில் அங்கிருந்த கிடாம்பிப்பெருமாள் ‘நமக்கு பகவத் விஷயம் போலே ஸுக்ருததேவர் என்றும் ஒருவர் ஆச்ரயணீயருண்டோ?’ என்ன
அதற்குப் பிள்ளை திருநறையூரரையர் ‘ஸுக்ருத மென்று சொல்லுகிறதும் வேறொன்றையன்று. பகவத் விஷயத்தையே காண்’ என்றாராம்.

ஸ்ருஷ்டி அவதாரம் முதலியவற்றாலே எம்பெருமான் பண்ணின க்ருஷியின் பயனாகவே ஒரு நாளடைவில் நமக்கு
பகவத் விஷயத்தில் ருசி பிறக்கிறபடியாலே அந்த பகவத் கடாக்ஷந்தன்னையே பாக்கியமென்கிறது.
இவ்வர்த்தத்தையே ஸ்ரீமத்வேதாந்த தேசிகனும் ரஹஸ்யத்ரயஸாரத்திலே
“உபாய: ஸ்வப்ராப்தேருபநிஷததீத: ஸ பகவாந், ப்ரஸத்த்யை தஸ்யோக்தே ப்ரபதந நிதித்யாஸநகதீ ததாரோஹ:
பும்ஸாம் ஸுக்ருத பரிபாகேந மஹதா. நிதாநம் தத்ராபி ஸ்வயமகில நிர்மாணநிபுண:” என்று தெளிவருளிச் செய்தார்.

“எதிர் சூழல்புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய விதி சூழ்ந்ததா லெனக்கேலம்மான் திரிவிக்கிரமனையே” என்று –
எம்பெருமான் ஸர்வலோக வ்யாபியானது தம்மைக் கைப்பற்றிக் கொள்வதற்காகவேயென்று நம்மாழ்வார் அநுஸந்தித்தது போல
இவ்வாழ்வாரும் அநுஸந்திக்கின்றமை முதலடியிலே நன்கு விளங்கும்.

————————————————————————–

“உண்ணுஞ்சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையுமெல்வாங் கண்ணன்” என்கிறபடியே
பரம போக்யனான நீயிருக்கையில்’ நாட்டிலுள்ளவர் உன்னையே நாரக போஷக போக்யங்களாகப் பற்றாமல்
சப்தாதிவிஷயங்களை விரும்பித் திரிகின்றார்களே! என்று உலகத்தார் செயலை வெறுத்து
உன்னைப் பற்றுவதே எல்லார்க்கும் தஞ்சமென்று கூறுகிறார்.

இனிது என்பர் காமம் அதனிலு மாற்ற
இனிது என்பர் தண்ணீரும் எந்தாய் -இனிது என்று
காம நீர் வேளாது நின் பெருமை வேட்பரேல்
சேம நீர் ஆகும் சிறிது—–35–

பதவுரை

எந்தாய்–என் ஸ்வாமி யானவனே!
(பாமரர்கள்)
காமம்–ஹேயமான சப்தாதி விஷயங்களை
இனிது என்பர்–போக்யமாகக் கொள்பர்;
(விரக்தர்களுங்கூட)
தண்ணீர் அதனிலும் ஆற்றவும் இனிது என்பர்–அந்த சப்தாதி விஷயங்களிற் காட்டிலும் தண்ணீர் மிகவும் போக்யமென்பர்கள்;
காமம் நீர்–(கீழ்ச் சொல்லப்பட்ட) காமத்தையும் தண்ணீரையும்
இனிது என்று வேளாது–போக்யமாகக் கொண்டு அவற்றிலே ஆசை கொள்ளாமல்
நின் பெருமை சிறிது வேட்பர் ஏல்–உன்னுடைய போக்யதையே கொஞ்சமேனும் விரும்பி மேல் விழுவார்களாயின் (அது)
சேமம் நீர் ஆகும்–(எல்லா நிலைமையிலும்) ரக்ஷகமான தன்மையை யுடையதாகும்

‘காமம்’ என்பது ஆசைக்குப் பேராயினும் ஆசைபடுவதற்கு உரிய விஷயாந்தரங்களையும் சொல்லக் கடவது:
கூத்துப் பார்ப்பது, பாட்டுக்கேட்பது, பூச்சூடுவது சாந்து பூசுவது, மாதர்களை யணைவது முதலியவை விஷயாந்தரங்க ளெனப்படும்.
இவையே போக்யமென்று ஒழிவர் பலர்; மற்றும் பலர் விஷயாந்தர விரக்தர்களென்று பெயர் சுமந்தும்
சோற்றையுந் தண்ணீரையும் விட்டிருக்கமாட்டாமல் அவற்றை போக்யமாகக் கொள்வர்.
அநந்ய போக்யத்வத்தை ஸ்வரூபமாக வுடைய அதிகாரிகள் முதலடியிற் சொன்ன விஷயாந்தரங்களையும்
இரண்டாமடியிற் சொன்ன தண்ணீர் முதலியவற்றையும் போக்யமாகக் கொள்ளாது
“எனக்குத் தேனே பாலே கன்னலே யமுதே” என்று பரமபோக்யனாகச் சொல்லப்படுகிற உன்னையே
விரும்பப்பெறில் இவ்விருப்பமே அவர்கட்குச் செமமாகும் என்றாராயிற்று.

இரண்டாமடியிற் ‘தண்ணீர்’ என்றதும் மூன்றாமடியில் ‘நீர்’ என்றதும் – சோறு, வெற்றிலை முதலியவற்றுக்கும் உபலக்ஷணமென்க.
“வாஸூதேவஸ்ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்லப.” என்று பகவத் கீதையிலே துர்பலனாகச் சொல்லப்பட்டுள்ள
மஹாத்மாவாக இருக்குமவர்கட்கே குறைவற்ற சேமமுண்டாகுமென்றதாயிற்று.

சேமநீர் = ‘க்ஷேமம்’ என்னும் வடசொல் சேமமெனத் திரிந்தது.
நீர் – நீர்மையையுடையது; நீர்மையாவது தன்மை.

————————————————————————–

சிறியார் பெருமை சிறிதின் கண் எய்தும்
அறியாரும் தாம் அறியார் ஆவர் -அறியாமை
மண் கொண்டு மண் உண்டு மண் உமிழ்ந்த மாயன் என்று
எண் கொண்டு எண் நெஞ்சே இரு–36–

பதவுரை

சிறியார்–(இயற்கையான மேன்மை சிறிதுமில்லாமல்) அற்பரான ஸம்ஸாரிகளுடைய
பெருமை–(நானே ஈச்வரன் என்று அஹங்கரிப்பதால் வருகிற) மேன்மையானது
சிறிதின் கண் எய்தும்–(தமக்குப் பழமையாயுள்ள) தாழ்விலேயே கொண்டு சேர்ப்பிக்கும்;
அறியாரும்–அவிவேகிகளும்
(தங்களை ஸர்வஜ்ஞராக நினைத்திருந்தார்களாகிலும்)
தாம் அறியார் ஆவர்–(நன்மை தீமைகளைத்) தாங்கள் அறியாதவர்களாகவே ஒழிந்திடுவர்;
என் நெஞ்சே–என் மனமே!.
அறியாமை–பிறர் அறியாதபடி
மண் கொண்டு–(மாவலியிடத்தில்) பூமியைப் பெற்றவனாயும்
மண் உண்டு–இந்தப் பூமியை (ப்ரளயத்திலே)திருவயிற்றில் வைத்தவனாயும்
மண் உமிழ்ந்த–(பிறகு) அந்தப்பூமியை வெளிப்படுத்தினவனாயுமிருக்கிற
மாயன் என்று–ஆச்சர்யகரனான எம் பெருமான் என்று
எண் கொண்டு–இடைவிடாது கருதி
இரு–(அவனைப்பற்றின நமக்கு ஒரு குறை இல்லையென்று) நிர்ப்பரனாக இருப்பாயாக.

சிறியார் பெருமை சிறிதின்கண் எய்தும் = உலகத்தில், இயற்கையாகச் சிறிதேனும் மேன்மையுடையவர்களாயிருந்தால் அவர்கள அதிகப்படியாக மேன்மையை ஏறிட்டுக்கொண்டாலும் ஒருவாறு ஏற்கும்; சிறிதும் மேன்மையற்றவர்கள் ‘நாமே பெரியோம்; நம்மிற் பெரியாரில்லை’ என்று மார்பு நெறித்தால் அந்த அஹங்காரமானது அவர்களுடைய சிறுமையை நன்கு ஸ்தாபித்துவிடும். ஆகையாலே அற்ப தேவைகளான பிரமன் முதலியோரைப் பெருந்தலைமை யுடையவராக மதிப்பது நம்மைத் தாழ்ந்த நிலைமையிற் சேர்ப்பிக்கு மென்றவாறுமாம். எய்தும் – எய்துவிக்கும்; பிறவினையில் வந்த தன்வினை. இவ்வாறு வருவதனை வடநூலார் ‘அந்தர்ப்பாவிதணிச்’ என்பர்.

அறியாரும் தாமறியாராவார் = ஒன்றுந் தெரியாத மூடர்கள் எல்லாமறிந்தவர்கள் போலப் பாவித்திருந்தார்களாகிலும், அப்படிப்பட்டவர்கள் நன்மைகளைத் தாங்களுமறியார்கள்; பிறர் போதித்தாலும் கேட்டு உணரமாட்டார்கள்; ஆகவிப்படி சிறியாரும் அறியாரும் மலிந்து கிடக்கிற இந்நிலத்திலே, நெஞ்சே! நீ அவர்களின் வகுப்பில் சேராமல் பகவத் விஷயத்தையே சிந்தித்திரு – என்கிறார் பின்னடிகளால்.

அறியாமை = எதிர்மறை வினையெச்சம்.
‘திருமால்தான் இப்படி வாமந வேஷங்கொண்டு யாசகனாய் வந்தா’ னென்று பிறர் அறியாத வண்ணம் என்றபடி.

————————————————————————–

கீழ்ப்பாட்டிலருளிச் செய்தபடி எம்பெருமானிடத்து அந்வயிப்பதற்குப் பாங்கல்லாத பிறவிகள் வீண் என்கிறார்.
எம்பெருமான் ஆத்மாக்களுக்குப் பல ஜன்மங்களை யுண்டாக்குவது ஒரு ஜன்மததிலில்லாவிட்டாலும்
ஒரு ஜன்மத்திலாவது இவை நம்மை ஆச்ரயித்து ஈடேறவேணுமென்னும் விருப்பத்தினாலேயே
இந்த விருப்பம் நிறைவேறாவிடில் ஆத்மாக்களுக்கு நேர்கின்ற பிறவிகளெல்லாம் வியர்த்தமே யென்க.

இரும் தண் கமலத்து இரு மலரின் உள்ளே
திருந்து திசை மகனைத் தந்தாய் -பொருந்திய நின்
பாதங்கள் ஏத்திப் பணியாவேல் பல் பிறப்பும்
ஏதங்கள் எல்லாம் எமக்கு—-37-

பதவுரை

இரு–பெரிய
தண்–குளிர்ந்த
கமலத்து–திருநாபிக் கமலத்தின்
இரு மலரின் உள்ளே–பெருமை பொருந்திய பூவில்
திருந்து–ஸமர்த்தனான
திசைமுகனை–நான்முகக் கடவுளை
தந்தாய்–படைத்தருளின பெருமானே!
பொருந்திய–ஸர்வ லோக சரண்யனாகி எல்லாரோடும் பொருந்தி யிருக்கிற
நின்–உன்னுடைய
பாதங்கள்–திருவடிகளை
ஏத்தி–வாயாரத் துதித்து
பணியா ஏல்–வணங்கித் தொழுவதிற்கு உறுப்பாகா விட்டால்
எமக்கு–எங்கட்டு
பல் பிறப்பும் எல்லாம்–பலவகையாகப் பிறக்கின்ற பிறவிகளெல்லாம்
ஏதங்கள்–பயனற்றவையே யாம்

பின்னடிகளுக்கு வேறு வகையாகவுங் கருத்துரைக்கலாம்; எனக்கு நேர்ந்த பல பிறவிகளும் உன் நினைவின்படி
உன்னை ஆச்ரயிப்பதற்கு உறுப்பாகவேணும். அங்ஙனம் ஆகாவிடில், உலகத்திலே பிறக்கின்ற உயிர்களின்
துயரமெல்லாம் என்னொருவனுக்கு உண்டாகும் – என்று இக்கருத்தில், ஏதங்கள் – துக்கங்கள் என்கை.

முன்னடிகளில், ‘ நான்முகனை உந்திக்கமலத்தில் தோற்றுவித்தவனே!’ என விளித்தது –
முமுக்ஷûக்கள் சரணம் பற்றுதற்கு உரியவனே! என்றபடி; இப்பொருள் எங்ஙனே கிடைக்குமெனில்;
“யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்… முமுக்ஷûர்வை சரணமஹம் ப்ரபத்யே”
(முதலில் பிரமனைப் படைப்பவன்யாவனோ அப்பெருமானை முமுக்ஷுவாகிய நான் சரணம் புகுகின்றேன்)
என்பதாக உபநிஷத்தில் ஓதியிருப்பதுகொண்டு இப்பொருள் கிடைக்குமென்பது பெரியவாச்சான்பிள்ளை திருவுள்ளம்.

திருத்து திசைமுகன் = ஸ்ருஷ்டி செய்யவேண்டும் விதத்தை ஒருமுறை சொல்லிக்கொடுத்துவிட்டால்
அதில் அடிக்கடி ஸந்தேகங் கொண்டிராமல் புத்தி சாதுர்யத்தாலே முற்றும் நிர்வஹிக்கவல்ல நான்முகன்.

————————————————————————–

உலகத்தில் தனவான்களென்று பேர் படைத்துள்ள பலர் ‘நமக்கு ஏராளமான செல்வமிருக்கும்போது என்ன குறை-
இதுவே நமக்கு ஆபத்பந்து’ என்றெண்ணி எம்பெருமானை நெஞ்சிலும் நினையாதே பணத்தையே தொட்டுத் தொட்டுப்
பார்த்துக் கொண்டு காலங்கழிப்பதுண்டே; அன்னவர்களுடைய நெஞ்சிலே உறுத்தும்படி இப்பாசுர மருளிச்செய்கிறார்.
‘ஒரு நாயகமாய் ஓட வுலகுடனாண்டவர், கருநாய் கவர்ந்த காலர் சிதைகியபானையர் பெருநாடுகாண
இம்மையிதே பிச்சைதாங் கொள்வர்” என்று தொடங்கிப் பல பாசுரங்களிலே நம்மாழ்வாரருளிச் செய்த
செல்வ நிலையாமையை இவர் ஓரடியால் சுருங்க வருளிச் செய்தனரென்க.

எமக்கு என்று இரு நிதியம் ஏமாந்து இராதே
தமக்கென்றும் சார்வம் அறிந்து -நமக்கென்றும்
மாதவனே என்னும் மனம் படைத்தது மற்றவன் பேர்
ஓதுவதே நாவினால் ஓத்து—38-

பதவுரை

இரு நிதியம்–(இப்பொருளை எப்போது நாம் கொள்ளையடிக்கப் போகிறோம்’ என்று
அயலார் எதிர்பார்த்திருப்பதற்குக் காரணமான) பெருஞ்செல்வத்தை
எமக்கு என்று–தங்களுடையதாக நினைத்து
ஏமாந்து இராதே–மனச் செருக்குக் கொண்டிராமல்
தமக்கு என்றும் சார்வம் அறிந்து–தங்களுக்கு எப்போதும் ரக்ஷகமாயிருக்கக் கூடிய உபாயத்தை யறிந்து
நமக்கு என்றும் மாதவனே என்னும் மனம் படைத்து–‘நமக்கு எக்காலத்திலும் எம்பெருமானே சரணம்’ என்று
துணிந்திருக்கும் நெஞ்சையுடையராய்
மற்று–அதற்குப் பின்பு
அவன் பேர்–அத்திருமாலினது திருநாமங்களை
ஓதுவதே–ஸங்கீர்த்தநம் பண்ணுவதே
நாவினால் ஒத்து–நாவுக்கு ஓதுவதற்கு உரிய விஷயம்.

இடத்தைவிட்டுச் செல்வதையே இயல்வாகவுடையதாதல் பற்றியே ஸம்பத்துக்குச் செல்வமென்று பெயரிடப்பட்டதாதலால்
இப்படி நிலையற்றதான செல்வத்தை நம்பிச் செருக்குக் கொண்டிராதே ‘எப்போதும் ஸ்திரமாயிருக்கக்கூடிய பற்றுக்கோடு எது?’
என்று ஆராய்ந்து பார்த்து ‘திருமகள் கொழுநனான எம்பெருமானே நமக்கு என்றும் சார்வம்’ என்கிற
தெளிவுபெற்று அவனுடைய திருநாமங்களை ஓதுவதே உறும் – என்றாராயிற்று.

நிதியம் = ‘நிதி’ என்னுஞ் சொல் ‘அம்’ சாரியை பெற்று வந்துள்ளது.
இரு நிதி – பெருத்தநிதி. ஏமாத்தல் – களித்தல். சார்வம் – ‘சார்வு’ என்னுஞ் சொல் ‘அம்’ சாரியை பெற்றது.

————————————————————————–

ஸகல வேத வேதாந்த விழுப்பொருளை உங்கட்குச் சுருக்கமாகச் சொல்லுகின்றேன் கேளுங்கள்;
சக்தி யுண்டாகில் வேதங்களை அதிகரித்து அவற்றின் மூலமாக ஸ்ரீமந்நாராயணனது திருநாமங்களை ஸங்கீர்த்தனம் பண்ணுங்கள்
“வேதாக்ஷராணி யாவந்தி படிதாநி த்விஜாதிபி: தாவந்தி ஹரிநாமாநி கீர்த்திதாநி ந ஸம்சய:”
(அதாவது – அந்தணர்களால் வேதத்தின் எத்தனை அக்ஷரங்கள் ஓதப்படுகின்றனவோ அத்தனையும்
பகவந் நாமங்களே ஓதப்பட்டனவவ் என்றாற்போலே வேதாக்ஷரங்களைக் கொண்டே ஹரிநாம ஸங்கீர்த்தநம் பண்ணுங்கள் என்றவாறு)
அதில் சக்தியும் அதிகாரமுமில்லா தவர்களா யிருப்பின் ‘கேசவா!, கோவிந்தா!, மாதவா!, மதுஸூதநா!’
என்றாவது சொல்லிக் கொண்டிருங்கள். எவ்வகையினாலாவது எம்பெருமானது திருநாமங்களை
ஸங்கீர்த்தநம் பண்ணவேணுமென்பதே ஸகல்வேத தாத்பர்யமாகும்.

ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே உத்தமன் பேர்
ஏத்தும் திறம் அறிமின் ஏழைகாள் -ஒத்ததனை
வல்லீரேல் நன்றதனை மாட்டீரேல் மாதவன் பேர்
சொல்லுவதே ஒத்தின் சுருக்கு —39–

பதவுரை

ஏழைகாள்–‘கண்ட கண்ட தேவதைகளின் கால்களிலெல்லாம் விழுகிற அறிவு கேடர்களே!,
ஓத்து அதனை–வேதமோதுவதாகிற காரியத்தை(ச் செய்ய)
வல்லீர் ஏல்–ஸமர்த்தர்களா யிருப்பீர்களாகில்
நன்று–அப்படியே வேதமோதுவது நல்லது;
அதனை மாட்டீர் ஏல்–அது செய்ய சக்தி யற்றவர்களாகில்
மாதவன் பேர்–திருமாலின் திருநாமங்களை
சொல்லுவதே–உச்சரிப்பதே
ஓத்தின் சுருக்கு–ஸகல வேதங்களின் ஸாரமாகும்;
ஓத்தின் பொருள் முடிவும் இத்தனையே–வேதத்தினுடைய அர்த்தங்களில் நிஷ்கர்ஷிக்கப்படடதும் இவ்வளவே; (ஆகையாலே)
உத்தமன்–புருஷோத்தமனான எம்பெருமானுடைய
பேர்–திருநாமங்களைக் கொண்டு
ஏத்தும் திறம்–(அவனைத்) துதிக்கும் வகையை
அறிமின்–தெரிந்து கொள்ளுங்கள்.

“த்யாயந் க்ருதே யஜந் யஜ்ஞை: த்ரேதாயாம் த்வாபரே ர்ச்சயந் யதர்ப்நோதி ததாப்நோதி கலௌ ஸங்கீர்த்ய கேசவம்”
கிருதயுகத்தில் தியானஞ் செய்வதாலும் த்ரேதாயுகத்தில் வேள்விகள் செய்வதாலும்,
த்வாபரயுகத்தில் அர்ச்சிப்பதாலும் எவ்விதமான பேற்றைப் பெறுகிறானோ, அவ்விதமான பேற்றை கலியுகத்தில்
திருநாம ஸங்கீர்த்நத்தினால் பெறுகிறான் என்று சாஸ்த்ரங்களிற் சொல்லப்பட்டுள்ளது காண்க:
இதுபற்றியே “ஓத்தின் பொருள்முடிவு மித்தனையே” என்றும்
“மாதவன் பேர் சொல்லுவதே ஓத்தின்சுருக்கு” என்றும் இதிற் சொல்லப்பட்டது.

வேதத்தில், இந்திரன் சந்திரன் வருணன் என்றிப்படி பலப்பல நாமங்கள் வந்தாலும் அந்தந்த தேவதைகளுக்கு
அந்தர்யாமியான ஸ்ரீமந்நாராயணன் வரையிற் சென்று அர்த்தஜ்ஞாந முண்டாக வேணுமென்பது வேதாந்திகளின் கொள்கை.
ஆகவே “வேதை: ச ஸர்வைரஹமேவ வேத்ய:” ஸகல வேதங்களாலும் அறியப்படுபவன் நானே” என்று
அப்பெருமானே சோதி வாய்திறந்து அருளிச் செய்திருப்பதற் கிணங்க வேதங்களிலுள்ள ஸகல தேவதா நாமங்களையும்
பகவத்பரமாக நிர்வஹித்து அநுஸந்திப்பதே வேததாத்பர்ய ஸாரமாகும்.
இதற்கு சாஸ்த்ரஜ்ஞாநம் விசேஷமாக வேண்டியிருப்பதால் அவ்வளவுக்கு அதிகாரிகளல்லாதவர்கள் திருமகள்நாதனை
ஸ்பஷ்டமாகத் தெரிவிக்கிற ‘மாதவன்’ முதலிய திருநாமங்களைக் கொண்டே ஏத்தலாம் என்பதும் இப்பாசரத்தின் கருத்தாகும்.

————————————————————————–

சிற்றின்பங்களில் ஆழ்ந்து திரிகின்ற விஷயப்ரவணர்களை விளித்து ‘நீங்கள் இப்படி விஷய போகங்ள் செய்வதனால்
சிறிதும் பலனில்லை; லக்ஷ்மீநாதனான எம்பெருமானுடைய திருவடிகளையே சிந்தித்திருங்கள்;
ஆனால் நீங்கள் என்ன நினைக்கலாமென்றால்,எம்பெருமானைச் சிந்திப்பதற்கு இப்போது என்ன அவஸரம்?
போகப்போகப் பார்த்துக்கொள்வோம் என்று நினைத்திருக்கலாம்; இவ்வழுக்குடம்பின் தன்மை உங்களுக்குத் தெரியாதோ?
கோழையானது சரீரமெங்கும் சூழ்ந்து கொண்டு உடம்பைச் சுருங்கடித்து ஒன்றைச் சிந்திக்கவும் ஒன்றைச் சொல்லவும்
முடியாதபடி திடீரென்று பண்ணிவிடும்;
“ப்ராணப்ரயாணஸமயே கபவாதபித்தை: கண்டாவரோதநவிதௌ ஸ்மரணம் குதஸ்தே” = உயிர்போகுங்காலத்தில் கபம், வாயு, பித்தம்
முதலியவற்றால் கழுத்து அடைபட்டுவிட்டால் உன்னைச் சிந்திக்கமுடியுமோ?” (முகுந்தமாலை) என்று
ஞானிகளும் சொல்லிவைத்திருக்கிறார்கள்: நமக்கு இன்னமும் நீண்ட ஆயுள் இருக்கின்றதென்று நம்பியிருக்க இடமுண்டோ? இல்லை;
ஆதலால் சிலேஷ்மம் வந்து கட்டி வருத்துவதற்கு முன்னமே திருமகள் கொழுநனுடைய திருப்பாதங்களைச் சிந்தித்து வாழுங்கள்.
நீங்கள் பற்றியிருக்கிற விஷயபோகங்கள் எப்படிப்பட்டவை யென்றால், பகவத் விஷயஜ்ஞாநம் சிறிது இருந்தாலும் அதனை உருமாய்க்குமவை;
ஆகவே அப்படிப்பட்ட விஷயபோகங்களால் உங்களுக்கு அநர்த்தமே பலிக்குமே யன்றி வேறொரு நன்மையும் நேரிடாது என்று உபதேசித்தாராயிற்று.

சுருக்காக வாங்கிச் சுலாவி நின்று ஐயார்
நெருக்கா முன் நீர் நினைமின் கண்டீர் -திருப் பொலிந்த
ஆகத்தான் பாதம் அறிந்தும் அறியாத
போகத்தால் இல்லை பொருள்—-40–

பதவுரை

ஐயார்–கோழையானது
சுருக்காக வாங்கி–சரீரத்தைச் சுருங்க வலித்து
சுலாவி நின்று–உடம்பு முழுவதும் சூழ்ந்து கொண்டு நின்று
நெருக்காமுன்–(உயிர் போகும்போது கழுத்தளவிலே வந்து கூடி) நெருக்குவதற்கு முன்பே,
திரு பொலிந்த ஆகத்தான் பாதம்–பிராட்டியாலேர விளங்குகின்ற திருமார்பையுடைய பெருமானுடைய திருவடிகளை
நீர் நினைமின்–நீங்கள் சிந்தியுங்கோள்:
அறிந்தும்–பகவத் விஷயத்தை அறிந்தவர்களாயிருந்தும்
அறியாத–அறியாதவர்களாகவே உங்களைச் செய்யவல்ல
போகத்தால்–சப்தாதி விஷயங்களால்
பொருள் இல்லை–ஒரு ப்ரயோஜனமுமில்லை.

ஐயார் = ‘ஐ’ என்று கோழைக்குப் பெயர்; ‘ஆர்’ விகுதி – இழிவு சிறப்பு. கலாவுதல் -சூழ்ந்து கொள்ளுதல்.

அறிந்துமறியாத போகத்தால் = விவேகிகளையும் அவிவேகிகளாகச் செய்யவல்ல விஷயபோகம் என்கை.
அன்றியே; ‘விஷயபோகம் பொல்லாதது’ என்று தெரிந்துகொண்டாலும் அந்த அறிவின் பலனாக அதை விட்டுத் தொலைக்கணுமே;
அப்படி விடமுடியாத போகம் – என்றும்பொருள் கூறுவர்.
இப்பொருளில், ‘அறியாத’ என்றது – அறிவின் காரியமான விடுகையைப் பெறமாட்டாத என்றபடி.
மஹாகவிகளின் பிரயோகங்களில், சொல்மிகச் சுருங்கிப் பொருள் மிக விரிந்திருக்குமே.

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

இரண்டாம் திருவந்தாதி -பாசுரங்கள் -1-20–திவ்யார்த்த தீபிகை சாரம்–

October 2, 2014

ஸ்ரீ யபதியை
சாஷாத் கரிக்க ஆசை -பரமபக்தி -கூடினால் சுகம் பிரிந்தால் துக்கம் -என்றுமாம்
சாஷாத்கரித்தல் -பர ஜ்ஞானம் -பூர்ண சாஷாத்காரம்
இடையறாது அனுபவிக்க ஆசை -பரம பக்தி -அனுபவம் பெறா விடில் நீரை விட்டு பிரிந்த மீன் போலே மூச்சு அடங்கும் படி இருக்கை
தர்சனம் பரபக்திஸ் ஸ்யாத் பரஜ்ஞானம் து சங்கமம்
புநர் விஸ்லேஷ பீருத்வம் பரமா பக்தி ருச்யதே
பொய்கை ஆழ்வாருக்கு பரபக்தி விஞ்சி இருக்கும் என்றும்
பூதத்தாழ்வாருக்கு பரஜ் ஞானம் விஞ்சி இருக்கும் என்றும்
பேயாழ்வாருக்கு பரம பக்தி விஞ்சி -இருக்கும் என்பர் பூர்வர்
மூன்றும் முக்தியிலே விளையக் கூடியதாயினும்
ஆழ்வார்களுக்கு மயர்வற மதி நலம் அருளப் பெற்றதால் இங்கே இருக்கும் பொழுதே உண்டானதாக இருக்கும்-

பொய்கை ஆழ்வார் முதல் திருவந்தாதியில்
ஸ்ரீ மன்நாராயணன் உடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை
நிர்ஹேதுகமான எம்பெருமான் திரு வருளாலே தோன்றின
பரபக்தி தசையை அடைந்துள்ள ஜ்ஞான விசேஷத்தாலே
சாஷாத் கரித்து அனுபவித்து
அத்திருமாலுக்கு சேஷமான விபூதியை ஸ்வ தந்த்ரம் என்றும்
அந்ய சேஷம் என்றும் பிரமிக்கிற அஜ்ஞ்ஞான இருள் நீங்கும்படி
பூமி முதலிய பதார்த்தங்களை தகளி முதலியன வாகவும் உருவகப் படுத்தி காட்டி
உபய விபூதி உக்தனான எம்பெருமானே சேஷி என்றும்
அவனுக்கு சேஷமாய் இருப்பதே ஆத்ம ஸ்வரூபம் என்றும்
அவன் திருவடிகளில் செய்யும் கைங்கர்யமே புருஷார்த்தம் என்றும்
அதனை கைபடுத்துத்தித் தரும் உபாயமும் அவன் திருவடிகளே என்றும்
நிஷ்கர்ஷித்து பேசினார் –

இத்திருவந்தாதியிலே பூதத் ஆழ்வார்
கீழே பொய்கை ஆழ்வார் உடன் கூட இருந்து எம்பெருமான் உடைய குணங்களை அனுபவித்ததனால்
அவனது அருளாலே வந்த பரபக்தியானது பரஜ்ஞான தசையை அடையும் படி பரிபக்குவமாக வளர
பரஜ்ஞான தசையை அடைந்த அந்த பிரேம விசேஷத்தாலே
எம்பெருமான் உடைய தன்மைகள் முழுவதையும்
சாஷாத் கரித்து அனுபவித்தார்
தம்முடைய அந்த அனுபவத்தை நாட்டில் உள்ளாறும் அறிந்து அனுசந்தித்து வாழுமாறு
இப்பிரபந்த ரூபமாக வெளியீட்டு அருளுகிறார்-

————————————————————————–

கடல் மல்லைக் காவலனே பூத வேந்தே
காசினி மேல் ஐப்பசி யில் அவிட்ட நாள் வந்து
இடர் கடியும் தண் கோவலிடைக் கழிச் சென்று
இணையில்லா மூவரும் இசைந்தே நிற்க
நடுவில் மிவ்வொருவரும் அன்று அறியா வண்ணம்
நள்ளிருளில் மால் நெருக்குகந்த ஞானச்
சுடர் விளக்கேற்றிய வன்பே தகளியான
தொடை நூறும் எனக்கு அருள் செய்துலங்க நீயே -பிரபந்த சாரம்

————————————————————————–

திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த தனியன்

என் பிறவி தீர இறைஞ்சினேன் இன்னமுதா
அன்பே தகளி யளித்தானை -நன் புகழ் சேர்
சீதத்தார் முத்துக்கள் சேரும் கடல் மல்லைப்
பூதத்தார் பொன்னம் கழல்

தொண்டர்க்கு அமுது உண்ண சொல்மாலைகள் சொன்னேன்
அமுதன்ன சொல்மாலை ஏத்தி தொழுதேன் -இரண்டாம் -85-
தல சயனத் தாரையும் பூதத் தாழ்வாரையும் தன்னிடத்தே கொண்டு இருப்பதே கடல் மல்லைக்கு புகழாகும்
முத்துக்கள் -பன்மைக்கு மூன்று வகை முத்து
கடலில் தோன்றும் முத்து
வானவரால் வணங்கப்படும் முத்து -பெரிய திருமொழி -7-8-8-
இவ் விபூதியில் இருந்து கொண்டே கரை கடந்த முக்தர் போன்ற பூதத் தாழ்வார் ஆகிற முத்து
பூதம் -சத்தை பெற்றவர் -எம்பெருமான் திருக் கல்யாண குணங்களை அனுபவித்தே சத்தை பெற்றவர்
கடல் வண்ணன் பூதம் -திருவாய் மொழி -5-2-1
————————————————————————–

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடு திரியா -நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்தேன் நான்-1-

பதவுரை

ஞானம் தமிழ் புரிந்த நான்–பகவத் விஷய ஜ்ஞானத்தைத் தருமதாய் த்ராவிட பாஷா ரூபமான
திருவந்தாதிப் பிரபந்தத்தை (உலகத்தார்க்கு) விரும்பி வெளியிட்ட அடியேன்.
அன்பே தகளி ஆ–(பரபக்தியின் ஆரம்ப தசையான) ஸ்நேஹம் தகளியாகவும்
ஆர்வமே நெய் ஆக–(அந்த ஸ்நேஹம் மூலமாகப் பிறந்த) அபிநிவேசம் நெய்யாகவும்
இன்பு உருகு சிந்தை இடுதிரி ஆ–(பகவத் விஷயத்தின்) இனிமையாலே நீர்ப்பண்டமாக உருகுகின்ற
மனமானது (விளக்குக்கு) இடப்படுகிற திரியாகவுங்கொண்டு
நன்பு உருக–ஆத்மாவும் உருகப்பெற்று
நாரணற்கு–ஸ்ரீமந் நாராயணனுக்கு
ஞானம் சுடர் விளக்கு ஏற்றினேன்–பரஜ்ஞானமாகிற பிரகாசமான தீபத்தை ஏற்றினேன்.

தகளியாவது – நெய்க்கும் திரிக்கும் ஆதாரமாயிருக்கிற அகல், (தாளி என்று உலக வழக்கு.)
அன்பைத் தகளியாகவும் ஆர்வத்தை நெய்யாவும் இன்புருகு சிந்தையைத் திரியாகவுங்கொண்டு
எம்பெருமானுக்கு ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேனென்கிறார்.
அன்பு ஆர்வம் இன்பு என்றவையெல்லாம் பகவத் விஷயத்தில் தமக்குண்டான அநுராக விசேஷங்களேயாம்.
அநுராகத்தில் கணுக்கணுவான அவஸ்தாபேதங்கள் உண்டாகையால் அவற்றைத் திருவுள்ளம் பற்றி
அன்பு என்றும் ஆர்வம் என்றும் இன்பு என்றும் சப்தபேதங்களையிட்டுச் சொன்னபடி.
ஆகவே, எம்பெருமானது திருவருளால் தமக்கு அப்பெருமான் விஷயமாகத் தோன்றியுள்ள ப்ரீதியின் நிலைமைகளைத்
தகளியும் நெய்யும் திரியுமாக உருவகப்படுத்தி, ஸர்வசேஷியான நாராயணனுக்குப் பரஜ்ஞானமாகிற சுடர் விளக்கையேற்றி
அடிமைசெய்யப் பெற்றேனென்று மகிழ்ந்து கூறினாராயிற்று.

எம் பெருமானிடத்தில் எனக்கு அனுராகமானது கணுக்கணுவாக ஏறி வளர்த்துச் செல்லப் பெற்றதனால்
அவ்வநுராகம் உள்ளடங்காமல் இத்தமிழ்ப் பாசுரங்களை வெளியிடத் தொடங்குகின்றேனென்பது பரமதாற்பரியம்.

உலகத்தில் ஒரு விளக்கு ஏற்றவேணுமானால் தகளியும் நெய்யும் திரியும் இன்றியமையாதனவாம்;
இவ்வாழ்வார் ஏற்றுகிற ஞானவிளக்கானது லோகவிலக்ஷணமானதால் லோகவிக்ஷணமான
தகளியையும் நெய்யையும் திரியையுங் கொண்டு ஜ்வலிக்கின்றது போலும்.
பகவத் விஷய அநுராகத்தின் வெவ்வேறு நிலைமைகளே இவையாயின.
உலகில் பதார்த்தங்கள் பிரகாசிப்பதற்காக விளக்கேற்றுவர்;
இவரும் ஸ்வஸ்வரூப பரஸ்வரூபங்கள் பிரகாசிப்பதற்காக விளக்கேற்றினர்.

“நன்புருகி” என்றவிடத்து, நன்பு என்று ஆத்மாவைச் சொல்லுகிறது.
ஜ்ஞாநாநந்தங்களை யுடையதாகையாலும் எம்பெருமானுக்கு அநந்யார்ஹ சேஷபூர்தமாகையாலும்
ஆத்மா நல்ல வஸ்து என்ற காரணத்தினால் நன்பென்று இவர் ஆத்மாவுக்குப் பெயரிட்டனர் போலும்.
நன்பு என்பது குணப்பெயராயினும் “தத்குணஸாரத்வாத் து தத்வ்யபதேச: ப்ராஜ்ஞவத்” (ப்ரஹ்மஸூத்ரம்.) என்ற
ஸ்ரீபாஷ்ய ப்ரக்ரியையாலே ஆத்மவாசகமாகக் குறையில்லையென்க. தமிழர் பண்பாகுபெயர் என்பர்.
நாரணன் – நாராயணன் என்பதன் சிதைவு.

இவ்வாழ்வார் ஞானத்தமிழ்புரியத் தொடங்கும்போதே ‘ஞானத் தமிழ் புரிந்த’ என்று இறந்தகாலத்தாற் கூறினது.
தம்மைக் கொண்டு கவிபாடுவிக்க விரும்பிய எம்பெருமான் ஸத்யஸங்கல்பனாகையாலும்,
எம்பெருமானது திருக்குணங்களைப் பற்றிப் பாசுரங்கள் பேசித் தலைக்கட்டியே தீரும்படியான தம் உறுதியினாலம்
இப்பிரபந்தத்தைத் தலைக்கட்டியாய் விட்டதாக நினைத்தென்க.
இதனைத் தமிழர், தெளிவினால் எதிர்காலம் இறந்தகாலமாகச் சொல்லப்பட்ட காலவழுவமைதி என்பர்.

————————————————————————–

நான் இப்பிரபந்த முகத்தால் பகவந்நாமங்களை அநுஸந்தித்து அவனதருளால் நித்யஸூரிகள் பெறும் பேற்றைப்
பெறப்போகிறேனென்பதைப் பொதுப்படையான சொல்லாலே வெளியிடுகிறார்.
பகவந் நாமங்களை நன்றாக அறிந்து அன்புடன் யாவர் சொல்லுகின்றனரோ, அன்னவர்களை
அநந்த கருட விஷ்வக்ஸேநாதிகளான நித்யஸூரிகளோடொப்பப் பணி கொள்ளுதலன்றோ
எம்பெருமானுடைய தொழில் என்கிறார்.

ஞானத்தால் நன்கு உணர்ந்து நாரணன் தன் நாமங்கள்
தானத்தால் மற்றவன் பேர் சாற்றினால் வானத்
தணியமரர் ஆக்குவிக்கும் அஃது அன்றே நங்கள்
பணியமரர் கோமான் பரிசு-2-

பதவுரை

நாரணன் தன்–ஸ்ரீமந் நாராயணனுடைய
நாமங்கள்–(திருமேனி முதலியவற்றிற்கு வாசகமான) திருநாமங்களையும்
மற்று–மற்றும்
அவன் பேர்–அப்பெருமானுடைய (விபூதி விஸ்தாரங்களுக்கு வாசகமான) திருநாமங்களையும்
ஞானத்தால்–(ப்ரேமரூபமான) ஜ்ஞானத்தாலே
நன்கு உணர்ந்து–உள்ளபடியறிந்து
தானத்தால்–(ப்ரேமத்தின் முடிவெல்லையான) ஸ்தானத்திலே நின்று
சாற்றினால்–அநுஸந்தித்தால்,
நங்கள் பணி அமரர் கோமான் பரிசு–நமக்கு பந்துக்களையும் எப்போதும் கைங்கர்ய பரர்களாயுமுள்ள
நித்யஸூரிகளுக்குத் தலைவனான எம்பெருமானுடைய தன்மையாவது,
வானத்து அணி அமரர் ஆக்குவிக்கும் அ”து அன்றே–பரமபதத்திற்கு அலங்காரமான நித்யஸூரிகளாக (நம்மை)ச் செய்துவைக்கு மதுவேயாம்.

எம்பெருமானுக்குப் பல்லாயிரத் திருநாமங்களுண்டு;
அவற்றில், திருமேனி முதலியவற்றுக்கு வாசகமான திருநாமங்கள் என்று ஒரு வகுப்பும்,
விபூதிவிஸ்தாரங்களுக்கு வாசகமான திருநாமங்கள் என்று மற்றொரு வகுப்பும் கொள்ளத் தக்கன.
ஸ்ரீவத்ஸவக்ஷா; புண்ட·காக்ஷ:, பீதாம்பர:, சார்ங்கீ, சக்ரபாணி: இத்யாதி திருநாமங்கள் முந்தின வகுப்பைச் சேர்ந்தவை;
லோகாத்யக்ஷ:, ஸுராத்யக்ஷ:, ஜகத்பதி; இத்யாதி திருநாமங்கள் பிந்தினவகுப்பைச் சேர்ந்தவை.
ஆக இவ்விரு வகுப்புகளையுந் திருவுள்ளம்பற்றி, முதலடியில் “நாரணன்றன் நாமங்கள்” என்றும்,
இரண்டாமடியில் “மற்றவன் பேர்” என்றும் அருளிச் செய்யப்பட்டுள்ளது.
அன்றியே,
நாரணனுடைய நாமங்களை நன்றாகவுணர்ந்து அவனுடைய அந்தப் பெயர்களை அன்பு முற்றி வாய்விட்டுச் சொன்னால் – என்று
பொருள் கொள்ளவுங் கூடும்; அப்போது, கீழ்விவரித்தபடி வகுப்புபேதங் கொள்ளவேண்டா.

தானத்தால் – ‘ஸ்தாநம்’ என்னும் வடசொல் தானமெனத் திரிந்தது. எல்லை நிலத்தைச் சொன்னபடி.
அன்பினுடைய எல்லை நிலத்திலே நின்று என்க. சாற்றுதல் – சொல்லுதல்.
ஈற்றடியில், நாங்கள் என்பதும் பணி என்பதும் தனித்தனியே அமரரிடத்து அந்வயிப்பன,
பணியமரர் – எப்போதும் பணிவதையே இயல்வாகவுடைய அமரர்.
பரிசு – வெகுமதியுமாம்; நித்யஸூரி ஸாம்யத்தை வெகுமதியாக அளிப்பன் என்றவாறு.

————————————————————————–

ஸமயத்தில் ஆச்ரிதர்களுக்கு வந்து உதவுகைக்காகத் திருப்பாற்கடலிலே வந்து திருக்கண் வளர்ந்தருளும்
திருக்குணத்தி லீடுபட்டு அப்பெருமானது திருவடிகளிலே நல்ல மலர்களைக் கொண்டு ஸமர்ப்பித்து
ஆராதிக்குமவர்கள் பரஞ்சோதியான பரமபதத்திலே சென்று புகப்பெறுவர்;
இந்திரன் முதலிய தேவர்களும் அப்பரமபதத்தை இன்னமும் காதால் கேட்டுக் கொண்டிருக்கிறார்களே யொழிய
கண்ணால் கண்டு சேரப் பெற்றார்களில்லை;
அப்படி தேவர்கட்கும் அரிதான பரமபதத்தை அநந்ய ப்ரயோஜநரான பக்தர்கள் அடையப்பெறுவர் என்கிறார்.

பரிசு நறு மலரால் பாற்கடலான் பாதம்
புரிவார் புகப்பெறுவர் போலாம் -புரிவார்கள்
தொல்லமரர் கேள்வித் துலங்கொளி சேர் தோற்றத்து
நல்லமரர் கோமான் நகர் -3-

பதவுரை

பால் கடலான் பாதம்–க்ஷீராப்தி நாதனுடைய திருவடிகளை
பரிசு நறுமலரால்–செவ்விகுன்றாத பரிமளம் மிக்க புஷ்பங்களைக் கொண்டு
புரிவார்–விரும்பித் தொழுமவர்கள்,
புரிவார்கள் தொல் அமரர்–ஸாதநாநுஷ்டாந பரர்களான (இந்திரன் முதலிய) பழைய தேவர்களுக்கும்
கேள்வி–(கண்ணால் காண முடியாமல்) காதால் மாத்திரம் கேட்டுக் கொண்டிருக்கக் கூடியதும்
துலங்கு ஒளி சேர் தோற்றத்து–மிக விளங்குகின்ற ஒளி பொருந்தித் தோன்றுதலையுடையதுமான
நல் அமரர் கோமான் நகர்–நித்யஸூரி நாதனுடைய திவ்யநகரமான பரமபதத்தை
புகப்பெறுவர் போலாம்–அடையப் பெறுவர்கள்

“புகப்பெறுவர்போலாம்” என்றவிடத்து ‘போல்’ என்பது ஒப்பில் போலியாய் வந்தது
வடமொழியில். “கிமில் ஹி மதுராணாம்” இத்யாதி ஸ்தலங்களில் இவ சப்தம்போலே வாக்யாலங்காரமென்க.

புரிவார்கள் தொல்லமரர் கேள்வி – புரிவார்களான தொல்லமரருண்டு. முழுகுவது மூக்கைப் பிடிப்பது ஜபிப்பது முதலிய
ஸாதநாநுஷ்டங்களைச்செய்பவரான தேவர்கள்;
அவர்களுடைய செவிப்புலனுக்கு மாத்திரம் இலக்கானதேயன்றி, கட்புலனுக்கு இலக்கானதன்று பரமபதம்.
ஆழ்வானருளிய ஸ்ரீவைகுண்ட ஸ்தலத்தில்
“யத் ப்ரஹம் ருத்ர புருஹூதமுகைர் துராபம் நித்யம் நிவ்ருத்தி நரதைஸ் ஸநகாதி பிர்வா” என்றதும்,
பிள்ளைப் பெருமாளையங்காரருளிய திருவேங்கடமாலையில் “கேட்டமரர் வேட்டுத் தளர்வாகுமந்தரத்தான்” என்றதும் காண்க.

சாஸ்த்ரங்களில் பரமபதத்தைப் பற்றிச் சொல்லுமிடத்து “அத்யர்க்காநல தீப்தம் தத் ஸ்தாநம் விஷ்ணோர்மஹாத்மந:”
(ஸூர்யன் அக்நிமுதலிய சுடர்ப் பொருள்களிற் காட்டிலும் மிக விஞ்சி விளங்குவது) என்று
சொல்லப்பட்டிருத்தலால் ‘துலங்கொளி சேர் தோற்றத்து’ என்றார்.

————————————————————————–

இப்பாசுரம் பெரும்பாலும் ரூபகாதிசயோக்தியலங்காரம் கொண்டுள்ளது. அதாவது –
விஷயங்களை மறைத்தும் ரூபகமாக்கியும் பேசுகிறது.
திருமா மகள் பொகுநனான எம்பெருமானை என்னுடைய நெஞ்சிலே எழுந்தருளப்பண்ணி
உயர்ந்த பக்திப் பெருங்காதலைக் காட்டினேன் என்று சொல்ல நினைத்த விஷயத்தை ஒரு சமத்காரமாகச் சொல்லுகிறார்.

நகர் இழைத்து நித்திலத்து நாள் மலர் கொண்டு ஆங்கே
திகழும் மணி வயிரஞ் சேர்த்து -நிகரில்லாப்
பைங்கமல மேந்திப் பணிந்தேன் பனி மலராள்
அங்கம் வலம் கொண்டான் அடி-4-

பதவுரை

நகர் இழைத்து–என்னுடைய நெஞ்சை எம்பெருமான் வாழக்கூடிய திருமண்டபமாக அமைத்து
நித்திலத்து நாள் மலர் கொண்டு–(அதிலே) ஸ்நேஹமாகிற முத்தை செவ்வி குன்றாத புறவிதழாக அமைத்து
திகழும் மணி வயிரம் சேர்த்து–ஸங்கம காமம் என்கிற நல்ல மாணிக்கத்தையும் வயிரத்தையும் அல்லியும் தாதுமாக வைத்து
நிகர் இல்லா–ஒப்பில்லாத
பைங் கமலம் ஏந்தி–பக்தியாகிற அழகிய தாமரைப் பூவைத் தரித்துக் கொண்டு
பனி மலராள் அங்கம் வலம் கொண்டான்–குளிர்ந்த தாமரைப் பூவிற் பிறந்த பிராட்டியை வலமார்பினில் வைத்துக்கொண்டிருக்கும் பெருமானுடைய
அடி–திருவடிகளை
பணிந்தேன்–வணங்கினேன்.

நகரிழைத்து – ராஜாக்கள் வஸிக்குமிடம் நகரமெனப்படும்: தேவாதி தேவனான எம்பெருமான் உவந்து வஸிக்குமிடம்
பக்தர்களுடைய ஹ்ருதயமேயாகையாலும் இவ்வாழ்வார் தாமும் பக்தசிரோமணியாகையாலும்
இவர் தம்முடைய திருவுள்ளத்திலேயே உவந்து வஸிப்பதென்பது திண்ணம்;
ஆகவே ‘நகரிழைத்து’ என்றது – என்னுடைய நெஞ்சை அவனுக்கு ‘உறைவிடமாக்கி’ என்றபடி.

அரசர்களை ஆந்தப்படுத்த விரும்புமவர்கள் தாமரை முதலிய நல்ல புஷ்பங்களைக்கொண்டு பணிவதுபோல,
தாமும் எம்பெருமானை நல்லதொரு புஷ்பமிட்டுப் பணிந்தமை சொல்லுகிறார்மேலே.
நிகரில்லாப் பைங்கமலமேந்திப் பணிந்தேன் என்று.
சாஸ்த்ரங்களில் (அஹிம்ஸை, இந்த்ரிய நிக்ரஹம், ஸர்வபூததயை, பொறுமை, ஞானம், தபஸ், த்யாநம், ஸத்யம்
என்னுமிவை யெட்டும் எம்பெருமானுக்கு ப்ரீதிகரமான எட்டுவகைப் புஷ்பங்கள்) என்று சொல்லியிருப்பதுபோல,
இங்கு இவ்வாழ்வார் பகவத் விஷய பகதியை நிகரில்லாத தாமரைப்பூவாகக் கருதுகின்றனர்.

தாமரைப்பூவென்றால் அதற்குப் புறவிதழ் அகவிதழ் முதலானவை இருக்குமே;
அவற்றின் ஸ்தானங்களிலே ஸ்நேஹம் ஸங்கம் காமம் என்கிற பக்தியின் பருவ விசேஷங்களையிட்டுப் பேச நினைத்து,
அவற்றையும் நேரே சொல்லாமல் முத்தும் மணியும் வயிரமுமாக உருவகப்படுத்திப் பேசுகின்றார்.
“நிகரில்லாப் பைங்கமல” மென்றது பொற்கமலத்தையாகையால் அதற்கிணங்க முத்தையும் மணியையும் வயிரத்தையும் சொல்ல வேண்டிற்று.

முதலடியில், மலர் என்றது மலரிதழைச் சொன்னபடி: ஆகுபெயர்.
புறவிதழின் ஸ்தானத்திலே முத்தாகச் சொல்லப்பட்ட ஸ்நேஹமும்,
அகவிதழின் ஸ்தானத்திலே மாணிக்கமாகச் சொல்லப்பட்ட ஸங்கமும்,
தாதின் ஸ்தானத்திலே வயிரமாகச் சொல்லப்பட்ட காமமும் கமலமென்னப்பட்ட பக்தியின் அவஸ்தாபேதங்களென்க.

நித்திலம் – வடமொழியில், ‘நிஸ்தலம்’ என்கிற சொல் முத்து என்னும் பொருளதாகக் கவிகளால் பிரயோகிக்கப்படுகிறது.
அதிவித்ருமமஸ்த நிஸ்தலாளீருசம்” என்று வரதராஜஸ்தவத்திலே கூரத்தாழ்வானும் பிரயோகித்தருளினர்.
அந்த நிஸ்தலமென்னும் வடசொல்லே தமிழில் நித்திலமென்ற திரிந்து கிடப்பதாகக் கொள்க.
இது தனியே ஒரு தமிழ்ச்சொல் என்பர் சிலர்.

————————————————————————–

எம்பெருமான் மாணுருவாய்ச்சென்று மாவலியிடத்தில் மூவடி நிலம் வேண்டினதன் கருத்து எதுவாயிருந்ததென்னில்,
மூன்று அடிகளாலே மூன்று லோகங்களையும் அளந்து ஆக்ரமித்துக் கொள்ள வேணுமென்பதே முதலில் அபிப்பிராயமாக இருதது;
பிறகு அளக்கிற ஸமயத்தில் கீழுலகங்களை ஓரடியாலும், மேலுலகங்களை மற்றோரடியாலும் அளந்துகொள்ளுகையாலே
மூன்றாவது அடி இரந்து பெற்றது வீணாய்விடும்போலிருந்தது;
அது வீணாகாமைக்காக மாவலியைக் கேட்க, அவனும் தனது தலையையே அதற்கு இடமாகக் காட்ட
அதன்மேல் மூன்றாமடியை வைத்து அவனைப் பாதாளத்திலே கொண்டு தள்ளினனாக
இவ்வாழ்வாருடைய அநுஸந்தான முள்ளதாகக் கொள்க.

அடி மூன்றால் இவ்வுலகம் அன்று அளந்தாய் போலும்
அடி மூன்று இரந்து அவனி கொண்டாய் -படி நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் அறிந்து–5–

பதவுரை

படிநின்ற–பூமியிலே அவதரித்து நின்ற
நீர் ஓதம் மேனி நெடுமாலே–கடல்வண்ணனான ஸர்வேச்வரனே!,
அன்று இ உலகம்–முன்பொரு காலத்தில் இவ்வுலகத்தை
அடிமூன்றில் அளந்தாய் போலும்–மூவடியாலே அளந்து கொள்பவன் போல
அடிமூன்று அவனி–மூவடி நிலத்தை
இரந்து கொண்டாய்–(மாவலியிடத்தில்) யாசித்துப் பெற்றாய்;
நின் அடியை–இப்படிப்பட்ட உனது திருவடிகளை
அறிந்து–நன்றாகத் தெரிந்து கொண்டு
ஓதவல்லார் ஆர்–பேசவல்லவர்கள் யாவருளர்? (யாவருமில்லை)

இந்தலோகம் அந்தரிக்ஷலோகம் ஸ்வர்க்கலோகம் என்னும் மூவுலகங்களையும் மூன்றடிகளாலே நீ
அளப்பதாயிருந்தால் மூவடி நிலம் நீ யாசித்துப் பெறலாம். காரியத்தில் அப்படி இல்லையே.
மூவடி நிலம் யாசித்துப்பெற்று அந்த மூவடிகளாலே மூவுலகங்களை நீ அளந்தாயோ? அஃது இல்லையே!
யாசிக்கிறபோது இருந்த எண்ணம் வேறாகவும் அளக்கிறபோது உண்டான எண்ணம் வேறாகவும் ஆயிற்றே! இது என்ன? என்றபடி.

உண்மையில், மூன்றடி யாசிக்கிறபோதே ‘இரண்டடிகளாலே கீழ்மேலுலகங்களை யளந்துகொண்டு
மூன்றாமடிக்காக மாவலியைச் சிறையில் வைக்கவேணும்’ என்னும் அபிப்பிராயம் எம்பெருமானுக்கு
இருந்திருக்கச் செய்தேயும் இவ்வாழ்வார் அபிப்ராயபேதம் தோற்ற அருளிச்செய்தது ஒரு சமத்காரமுமாகும்.

அவநி – வடசொல்; பூமி. படிநின்ற – ‘படி’ என்று உபமானத்துக்கும் வாசகமுண்டு; ஒப்பாகநின்ற கடல் என்னலாம்.

மூன்றாமடியில் “நின்படியை” என்ற பாடமும் பொருந்தும்.

————————————————————————–

பகவத் விஷயமானது அப்பொழுதைக்கப்பொழுது ஆராவமுதமான விலக்ஷண விஷயமென்பதையும்,
சப்தாதிவிஷயங்கள் இகழத்தக்கவையென்பதையும் நன்றாகத் தெரிந்துகொண்டு,
செவி வாய் கண் மூக்கு உடலென்னும் ஐம்புலன்களையும் வெளிவிஷயங்களில் ஓடவொட்டாமல்
உள்விஷயமாகிய பகவத் விஷயத்திலேயே உபயோகப்படுத்தி,
“செண்பக மல்லிகையோடு செங்கழுநீரிருவாட்சி எண்பகர் பூவும் கொணர்ந்தேன்” என்றாற்போலே
எம்பெருமானுககு உரிய நல்ல புஷ்பங்களைச் சேகரித்துக்கொண்டு ருஜுவான பக்தியையுடையராகய்
அப்பரமனுடைய திருநாமங்களையே எப்போதும் அநுஸந்திக்கும்படியான பாக்கியம் எவர்களுக்குள்ளதோ,
அவர்கள் அப்பெருமானுடைய திருவடிகளைக் கண்டநுபவிக்கப்பெற்றவர்கள் என்றாராயிற்று.
இத்தால், கீழ்ப்பாசுரத்தில் “நின்னடியை யாரோதவல்லா ரறிந்து” என்றது –
இப்படி செய்யமாட்டாத தாந்தோன்றிகளைப் பற்றின வார்த்தை யென்பது விளங்கிற்றாம்.

அறிந்து ஐந்தும் உள்ளடிக்கி யாய் மலர் கொண்டு ஆர்வம்
செறிந்த மனத்தராய் செவ்வே -அறிந்தவன் தன்
பேரோதி ஏத்தும் பெரும் தவத்தோர் காண்பரே
காரோத வண்ணன் கழல்-6-

பதவுரை

அறிந்து–(எம்பெருமானுடைய வைலக்ஷண் யத்தையும் விஷயங்களின் கெடுதல்களையும் நன்றாக) அறிந்துகொண்டு
பஞ்சேந்திரியங்களையும்–பஞ்சேந்திரியங்களையும்
உள் அடக்கி–(பட்டிமேயவொண்ணாதபடி தடுத்து) பகவத் விஷயத்திலே ஊன்றும்படி நியமித்து
ஆய்மலர் கொண்டு–(பகவானுக்கு ஏற்கும்படி) ஆராய்ந்த புஷ்பங்களை ஸம்பாதித்துக்கொண்டு
ஆர்வம் செறிந்த மனத்தர் ஆய்–பக்திமிகுந்த மனத்தையுடையராகி
செவ்வே அறிந்து–(எம்பெருமானுக்கும் தமக்குமுள்ள முறைமையை) நன்றாக அறிந்து
அவன்தன்பேர்–அப்பெருமானது திருநாமங்களை
ஓதி–இடைவிடாமற் சொல்லிக்கொண்டு
ஏத்தும்–துதிக்கின்ற
பெரும் தவத்தோர்–மஹாபாக்யசாலிகள்
கார்ஓதம் வண்ணன் கழல்–கருங்கடல் வண்ணனான அப்பெருமானுடைய திருவடிகளை
காண்பர்–கண்டு அநுபவிக்கப்பெறுவார்கள்.

தவம் – வாக்கியம்.

————————————————————————–

உலகளந்த பெருமானுடைய திருவடிகளையே உகந்து ஆச்ரயித்திருக்கும்படி தமது திருவுள்ளத்திற்கு உரைக்கிறார்.

கழல் எடுத்து வாய் மடித்துக் கண் சுழன்று மாற்றார்
அழல் எடுத்த சிந்தையராய் அஞ்ச -தழல் எடுத்த
போராழி ஏந்தினான் பொன் மலர்ச் சேவடியே
ஓராழி நெஞ்சே உகந்து-7-

பதவுரை

ஆழிநெஞ்சே–ஆழ்ந்த மனமே!
முன்பு த்ரிவிக்ரமாவதாரம் செய்தருளின போது)
கழல் எடுத்து–திருவடிகளை உயரத் தூக்கினவனாயும்,
மாற்றார்–எதிரிட்ட நமுசி முதலானவர்கள்
அழல் எடுத்த சிந்தையர் ஆய் அஞ்ச–பயாக்னி கொளுந்தின நெஞ்சை யுடையவர்களாய் நடுங்கும்படியாக
வாய் மடித்து–உதட்டை மடித்துக் கடித்துக்கொண்டு
கண் சுழன்று–(பார்க்கிற பார்வையிலேயே அவ்வெதிரிகள் சுருண்டு விழும்படி) கண்கள் வட்டமிட
தழல் எடுத்த போர் ஆழி–நெருப்பையுமிழ்கிற போர் செய்யவல்ல திருவாழியாழ்வானை
ஏந்தினான்–தரித்தவனாயுமிருக்கிற எம்பெருமானுடைய,
பொன்மலர் சே அடியே–அழகிய மலர்போன்ற திருவடிகளையே,
உகந்து ஓர்–விரும்பி அநுஸந்திப்பாயாக.

மாவலியினிடத்தினின்றும் தானம் வாங்கியவுடனே ஸ்ரீவிஷ்ணு திரிவிக்கிரமனாய் மூவடி மண்ணை அளக்கப்புக,
அதைக்கண்ட மஹாபலிபுத்திரனான நமுதியென்பவன் ஓடிவந்து ‘இது என்ன?’ என்று வளருகிற திருவடியைத்தகைய,
ஸ்ரீவிஷ்ணு ஏன் தகைகிறாய்? நான் தானம் வாங்கியதை அளந்துகொள்ள வேண்டாவோ?’ என்ன,
‘நீ செய்கிறது கபடமன்றோ?’ என்று நமுசிசொல்ல;
ஸ்ரீவிஷ்ணு ‘உன்னுடைய தகப்பன் யாசக பிரமசாரியாய் வந்த எனக்குத் தானம் பண்ணினது பொய்யோ?’ என்ன,
நமுசி ‘என்னுடைய பிதா உன்னுடைய மோசந்தெரியாமல் உன் வஞ்சனத்தில் அகப்பட்டுக்கொண்டான்’ என்ன,
ஸ்ரீவிஷ்ணு ‘நான் செய்வதை வஞ்சகமென்று எதனாற் சொல்லுகிறாய்?’ என்ன,
நமுசி ‘நீ செய்வது வஞ்சனமன்றாகில், நீ முன்னே கேட்ட போதிருந்த வடிவத்தைக் கொண்டு அளந்து கொண்டுபோ’ என்ன,
ஸ்ரீவிஷ்ணு ‘இது விகாரப்படுந்தன்மையுள்ள (எப்போதும் ஒரு தன்மையாயிராத) சரரமாயிற்றே,
முன்னைய வடிவத்தைக் கொண்டு எப்படியளக்க முடியும்?’ என்ன,
இப்படி ஸமாதானஞ் சொல்லவுங்கேளாமல் தான் பிடித்த திருவடியின் பிடியை விடாமல் உறுதியாயிருந்த நமுசியை
வளர்ந்த திருவடியினால் ஆகாயத்திலே கொண்டுபோய்ச் சுழன்றுவிழும்படி செய்தானெம்பெருமான் – என்கிற வரலாற்றைப் பெரியாழ்வார்
‘என்னிது மாயம் என்னப்பனறிந்திலன், முன்னையவண்ணமே கொண்டளவாயென்ன
மன்னு நமுசியை வானிற்சுழற்றிய, மின்னுமுடியனே!” (1-8-8) என்ற பாசுரத்தில் அநுஸந்தித்தருளினர்;
அதனை இப்பாட்டில் சுருங்க அநுஸந்தித்திருக்கிறாரிவர்,
மாற்றார் என்று மாவலியின் மகனான நமுசி முதலிய விரோதிகளைச் சொல்லுகிறது.
அவர்கள் கண்சுழன்று அழலெடுத்த சிந்தையராய் அஞ்சும்படி வாய்மடித்தான் எம்பெருமானென்க.

“தழலெடுத்த போராழியேந்தினான்” – சக்கரத்தாழ்வானைக் கொண்டு காரியங் கொண்டதும் த்ரிவிக்ரமாவதாரத்திலுண்டு.
மாவலியானவன் வாமநனுடைய வடிவழகாலும் மழலைச் சொல்லாலும் மனமகிழ்ந்து இவன் விரும்பியதைக் கொடுப்பதாக
இருக்கும்போது அவனது குருவான சுக்கிராசாரியன் அப்பிரானது வடிவையும் வந்த விதத்தையும் பேச்சையும் ஊன்றிப்பார்த்து
‘இவன் ஸர்வேச்வரன், தேவகாரியஞ் செய்யும்பொருட்டு உன் ஸம்பத்துக்களை யெல்லாம் பறித்துக்கொண்டுபோக வந்தான்’
ஆகையால் நீ இவனுக்குத் தானம் பண்ணுவது தகுதியன்று; என்று தானஞ்செய்வதைத் தடுக்க,
அவன் கேளாமல் தாரைவார்த்துத் தத்தஞ்செய்யப்புக, ஜலபாத்திரத்தின் துவாரத்திலே அந்த சுக்கிராசாரியன் புகுந்து கொண்டு
ஜலத்தை விழவொட்டாமல் தடுக்க, ஸ்ரீவிஷ்ணு, த்வாரத்தைச் சோதிப்பவன்போலே தன்னுடைய திருக்கையிலணிந்த
தர்ப்பபவித்ரத்தின் நுனியால் அவன் கண்ணைக் குத்திக் கலக்க, அவன் கண்ணையிழந்தவனாய் அங்கிருந்து வெளிப்பட,
பின்பு மாவலியிடத்தில் நீரேற்றனன் என்கிற வரலாறு ப்ரஸித்தமானதே;
இதனைப் பெரியாழ்வார் அநுஸந்திக்கும்போது
சுக்கிரன் கண்ணைத் துரும்பால்கிளறிய சக்கரக்கையன்” என்றதனால்,
“கருதுமிடம் பொருது கைந்நின்ற சக்கரத்தான்” என்கிறபடியே, திருமால் விரும்பினவடிவங்கொண்டு செல்லுந்
தன்மையையுடைய திருச்சக்கரமே பவித்திர வடிவாய் நின்று சுக்கிரன் கண்ணைக் கலக்கினதாக
ஆசார்யர்கள் வியாக்கியானித் தருள்வதாலும்,
அதை யநுஸரித்து ஸ்ரீகூரநாராயண ஜீயர் தாமும் ஸுதர்சநசதகத்திலே
“க்ருதயந நயவ்யாஹதிர்ப் பார்க்கவஸ்ய… சக்ரத்நாரா -” (சுக்கிரனுடைய கண்ணைக்கெடுத்த சக்கரம்) என்று
அருளிச்செய்துள்ளதனாலும் இப்பாசுரத்தில் த்ரிவிக்ரமாவதார கதாநுஸந்தாநத்தில் ‘தழலெடுத்த போராழியேந்தினான்’ என்றது ஒக்கும்.

வாய்மடித்து – கோபத்தின் மிகுதியினால் ‘நாக்கை மடித்துப் பற்களைக் கடித்துக்கொண்டிருத்தல் இயல்வு
‘கண்சுழன்று’ என்றது எம்பெருமானுடைய கோபத்தினாலாகிய கண்சுழற்சியைச் சொன்னதாகவுமாம்,
நமுசியின் பயத்தினாலாகிய கண்சுழற்சியைச் சொன்னதாகவுமாம்.

மூன்றாமடியில் “சேவடியை” என்பதும் பாடம். ஈற்றடியில், ஓர் – வினைமுற்று தியானம் பண்ணு என்றபடி.

————————————————————————–

பேய்ச்சியின் முலைப்பாலை அமுதமாகவுண்ட கதையை அநுஸந்தித்து ஈடுபடுகிறார்.

உகந்து உன்னை வாங்கி ஒளி நிறம் கொள் கொங்கை
அகம் குளிர உண் என்று அளாவி உகந்து
முலை  யுண்பாய் போலே முனிந்து உண்டாய் நீயும்
அலை பண்பா லானமையால் அன்று—8-

பதவுரை

(பூதனையானவள்)
உகந்து–யசோதைப் பிராட்டியைப் போல அன்புடையவளாக அபிநயஞ்செய்து
உன்னை வாங்கி–(நீ தூங்கும்போது வந்து) உன்னைத்தூக்கியெடுத்து
ஒளிநிறம் கொள் கொங்கை–(பால் விம்மியிருத்தலால்) ஒளிவிட்டு அழகுபெற்றுள்ள (தனது) ஸ்தனத்தை
அகம் குளிர உண் என்றான்–(‘குழந்தாய்!) மனமகிழ்ந்து உண்ணு’ என்று சொல்லிவாயிலே வைத்தாள்.
ஆனமையால்–ஆகையினாலே,
அன்று–அவள் முலைதந்த; அக்காலத்தில்
நீயும்–சிறு குழந்தையான நீயும்
அலை பண்பால்–அலையெறிகிற (அதிகமான) உன் ஸௌலப்ய குணத்தினாலே
முலை உண்பாய் போலே–மெய்யே ஸ்தன்யபானஞ்செய்பவனைப் போலே
உகந்து–(பெறாப்பேறு பெற்றாற் போலே) மகிழ்ந்துகொண்டு
முனிந்து–(மனத்தில்) சீற்றங் கொண்டு
ஆவி–(அந்தப் பூதனையின்) உயிரை
உண்டாய்–உறிஞ்சி உட்கொண்டாய்.

கண்ணபிரானைப் பெற்ற தாயான தேவகியினது உடன்பிறந்தவனாய் அக்கண்ணபிரானுக்கு மாமனாகிய கம்ஸன்,
தன்னைக் கொல்லப்பிறந்த தேவகீபுத்திரன் ஒளித்து வளர்தலையறிந்து, அக்குழந்தையை நாடியுணர்ந்து கொல்லும்பொருட்டுப்
பல அசுரர்களை ஏவ, அவர்களில் ஒருத்தியான பூதனையென்னும் ராக்ஷஸி நல்ல பெண்ணுருவத்தோடு
இரவிலே திருவாய்பாடிக்கு வந்து அங்குத் தூங்கிக்கொண்டிருந்த க்ருஷ்ண சிசுவையெடுத்துத்
தனது நஞ்சு தீற்றிய முலையைக் கொடுத்துக் கொல்ல முயல, பகவானான குழந்தை அவ்வரக்கியின் தனங்களைக் கைகளால்
இறுகப் பிடித்துப் பாலுண்கிற பாவனையிலே அவளுயிரையும் உறிஞ்சி அவளைப் பேரிரைச்சலிட்டுக் கதறி
உடம்பு நரம்புகளின் கட்டெல்லாம் நீங்கி விழுந்து இறக்கும்படி செய்தானென்பது கதை.

வந்த பேய்ச்சி யசோதையான பாவனையோடு வந்தாவாகையாலே அவளுடைய பரிவு போன்ற பரிவை
ஏறிட்டுக்கொண்டது பற்றி ‘உகந்து’ எனப்பட்டது.
“ஒரு முலையை வாய்மடுத்து ஒரு முலையை நெருடிக்கொண்டு, இரு முலையும் முறை முறையா ஏங்கியேங்கி யிருந்துணாயே”
என்னும்படியாகப் பால் விம்மியிருந்ததனால் ‘ஒளிநிறங் கொள்கொங்கை’ எனப்பட்டது.
“நந்தன் பெறப்பெற்ற நம்பீ! நானுகந்துண்ணுமமுதே! எந்தை பெருமானே! உண்ணாய் என்னம்மம் சேமமுண்ணாயே” ‘.
“உருகியென் கொங்கையின் தீம்பால் ஓட்டந்து பாய்ந்திடுகின்ற மருவிக்குடங்காலிருந்து வாய்முலையுண்ண நீவாராய்’ என்று
யசோதை ஆவலோடு சொல்லுமா போலே பூதனையும் சொன்னமை தோற்ற
‘அகங்குளிரவுண்ணென்றாள்’ எனப்பட்டது.
அவள் தாயான பாவனையிலே எவ்வளவு அன்பு அபிநயித்தாளோ, அவ்வளவு அன்பை இவனும் மகனான பாவனையிலே
அபிநயித்தமை தோற்ற “உகந்து முலையுண்பாய்போலே” எனப்பட்டது.
ஈற்றடியிலுள்ள “ஆனமையால்” என்பதை இரண்டாமடியிற் கூட்டிக்கொள்க.

அலைபண்பால் = இதன் அருமையான பொருள் குறிக்கொள்ளத்தக்கது.
பண்பாவது குணம்; அலையெறிகின்ற குணம் என்றது – அளவுகடந்த குணம் என்றபடி.
“மித்ரபாவேநி ஸம்ப்ராப்தம் நி த்யஜேயம் கதஞ்சந்” (மெய்யான அன்போடு வராவிட்டாலும் மித்திரன் என்கிற
பாவனை கொண்டுவந்தாலும் அன்னவனையும் நான் எவ்விதத்திலும் விடமாட்டேன்) என்று உறுதியாகச் சொல்லியுள்ள
எம்பெருமான் ப்ரீதிபாவனையோடு வந்த பேய்ச்சியைக் கொன்றது ஏனென்றால் அவளைக்கொன்று உலகுக்கு ஓருயிரான
தன்னைக் காப்பாற்றிக் கொள்வதானது உலகமுழுமைக்கும் உயிரளித்ததாக ஆகிறபடியால்,
இந்த மஹாகுணத்தை வெளியிடவேண்டிய அவளைக் கொன்றானென்க.

———————————————–

இத்தால் – யசோதைப் பிராட்டிக்குக் கண்ணபிரானிடத்துள்ள அன்பு அளவற்றதென்று வியந்து கூறினாராயிற்று.

அன்றது கண்டு அஞ்சாத ஆய்ச்சி உனக்கு இரங்கி
நின்று முலை தந்த இந்நீர்மைக்கு -அன்று
வரன் முறையால் நீ  யளந்த மா கடல் ஞாலம்
பெரு முறையால் எய்துமோ பேர்த்து—9-

பதவுரை

அன்று–(பூதனை பிணமாக விழும்படி நீ முலையுண்டு அவளுயிரை முடித்த) அக்காலத்தில்
அதுகண்டு–முலை கொடுத்த அவள் செத்துக்கிடந்த அச் செய்தியைக் கண்ணாலே பார்த்தும்
அஞ்சாத–‘முலை கொடுக்கிற நாமும் ஒருகால் செத்துப் போவோமோ!’ என்று பயப்படாத
ஆய்ச்சி–யசோதைப் பிராட்டியானவள்
நன்று–தரித்து நன்று
அந்தப் பூதனையின் (விஷத்திற்கு மாற்றாக)–
உனக்கு இரங்கி முலை தந்த–உன்னிடத்துப் பரிவு கொண்டு முலை கொடுத்த
இ நீர்மைக்கு–இந்தப் பெருங் குணத்திற்கு,
அன்று நீ வரன்முறையால் அளந்த மா கடல் சூழ் ஞாலம்–முன்பு நீ சிறந்த உறவினாலே அளந்து கொண்ட கடல் சூழ்ந்த இவ்வுலகமானது
பெருமுறையால் எய்துமோ–இன்னது பெரியதென்று பார்க்கும் முறையில் ஒப்பாகப் பொருந்துமோ?

முலை கொடுக்கவந்த பேய்ச்சியானவள் பிணமாய் விழுந்துகிடந்தபடியைப் பார்த்த யசோதை
‘இதென்ன உத்பாதம்!’ என்றுவெருண்டோட வேணுமேயல்லது, அணுகிவந்து முலைகொடுத்திருக்ககூடாது;
“பேய்ச்சி முலையுண்ட பின்னையிப்பிள்ளையைப் பேசுவ தஞ்சுவனே” என்று அஞ்சிக் காதவழியோட வேண்டியிருக்கவும்.
“பேய்ச்சி பாலுண்ட பெருமானைப் பேர்ந்தெடுத்து ஆய்ச்சி முலைகொடுத்தாளஞ்சாதே” என்னும்படி அச்சமின்றி அணுகிவந்து
உன்னை எடுத்தணைத்து முலைகொடுத்த பெருங்குணத்தை நோக்குங்கால்,
முன்பு நீ உலகளந்த அரிய பெரிய காரியத்திற்காட்டிலும் இக்காரியமே மிகப்பெரிதென்று சொல்லலாம்படி யிருக்கின்றதென்கிறார்.
இத்தால் – யசோதைப் பிராட்டிக்குக் கண்ணபிரானிடத்துள்ள அன்பு அளவற்றதென்று வியந்து கூறினாராயிற்று.

வரன்முறையால் நீ அளந்த = ‘வரம்‘ என்னும் வடசொல் (மகர னகரப் போலியினால்) ‘வரன்‘ என்று கிடக்கிறது.
‘சிறந்ததான‘ என்றுபொருள். சிறந்த முறையானது ஸ்வஸ்வாமிபாவ ஸம்பந்தம்.
உலக முழுவதும் தன்னுடைய ஸொத்தாயும் தான் அதற்கும் ஸ்வாமியாயு மிருக்கையாகிற சிறந்த ஸம்பந்த
மிருக்கையாலேயன்றோ தன்னை யழியமாறியும் அளந்துகொள்ள நேர்ந்தது.

அளந்தமாகடல் ஞாலம் – முலைதந்த இந்நீர்மைக்குப் பெருமுறையால் எய்துமோ? = நீ மாகடல் சூழ் ஞாலத்தையளந்த
மஹாகுணமானது யசோதை அஞ்சாமல் முலைதந்த மஹா குணத்திற்கு ஈடாகமாட்டாது என்றவாறு
அதாவது யசோதை முலைதந்த நீர்மையை ஒரு தட்டிலும் நீயளந்த மாகடல் சூழ் ஞாலத்தை ஒரு தட்டிலும் வைத்துப்பார்த்தால்
“த்ரைலோக்யராஜ்யம் ஸகலம் ஸீதாயா முப்நுயாத் கலாம்” (மூவுலகுங்கூடியும் ஸீதைக்கு ஓரளவும் ஈடாகாது)
என்றாற்போலே அஜகஜாந்தரமாயிருக்குமென்பதாகக் கொள்ளலாம்.

பெருமுறையால் எய்துமோ பேர்த்து = பெருமுறையாவது – இது பெரிதா? அது பெரிதா? என்று ஆராயும் வகை;
அப்படி ஆராயுமிடத்து ஒப்பாகுமோ? என்கை.
“பேர்த்து” என்பதற்குப் பொருள் விசாரிக்க வேண்டா; வார்த்தைப்பாடு என்று கொள்ளலாம்.

————————————————————————–

முதலாழ்வார்களுகுப் பெரும்பாலும் எம்பெருமானுடைய விபவாவதாரங்களுள் க்ருஷ்ணாவதாமும் த்ரிவிக்ரமாவதாரமும்,
அர்ச்சாவதாரங்களுள் திருவேங்கடமலையும் அடிக்கடி வாய்வெருவும்படியா யிருக்குமென்பது குறிக்கொள்ளத்தக்கது.

பேர்த்தனை மா சகடம் பிள்ளையாய் மண்ணிரந்து
காத்தனை பல்லுயிரும் காவலனே -ஏத்திய
நா வுடையேன் பூ வுடையேன் நின்னுள்ளி நின்றமையால்
கா அடியேன் பட்ட கடை———-10-

பதவுரை

காவலனே–ஸர்வ ரக்ஷகனே!,
பிள்ளைஆய்–சிறு குழந்தையாயிருந்து
மா சகடம்–(அஸுராவேசமுள்ள) பெரிய வொரு வண்டியை
பர்த்தனை–கட்டழியும்படி உதைத்துத் தள்ளினாய்;
மண்–பூமியை
இரந்து–(மஹாபலியினிடத்தில்) யாசித்துப் பெற்று
(திருவடியாலே குளிரத்தடவி)
பல் உயிரும்–எல்லா ஆத்மாக்களையும்
காத்தனை–ரக்ஷித்தருளினாய்;
நின்–(இப்படி ரக்ஷகனான) உன்னை
உள்ளி நின்றமையால்–(ஆச்ரயிக்கத் தக்கவனாக) மனப்பூர்வமாக எண்ணியிருப்பதனால்
ஏத்திய நா உடையேன்–உன்னைத் துதிப்பதையே ஸ்வபாவமாகவுள்ள நாக்கை யுடையவனாயிருக்கிறேன்;
பூ உடையேன்–(அர்ச்சிப்பதற்கு உரிய) புஷ்பங்களையுமுடையவனாயிருக்கிறேன்;
(ஆனபின்பு)
அடியேன்–உனக்கு அடியவனாயிருக்கும் பெரும் பதவியைப் பெற்றிருக்கிற நான்
பட்ட–வெகுகாலமாக அடைந்துள்ள
கடை–தாழ்வுகளை
கா–போக்கி யருள வேணும்.

பிள்ளையாய் மாசகடம் பேர்த்தனை = ஸ்ரீகிருஷ்ணனாக அவதரித்த தான் நந்தகோபர் திருமாளிகையிலே
ஒரு வண்டியின் கீழ்ப்புறத்திலே தொட்டிலிலிட்டுக் கண்வளர்த்தப்பெற்று (யசோதையும் யமுனை நீராடப்போய்) இருந்தகாலத்து,
கம்ஸனாலேவப்பட்ட அஸுரனொருவன் அச்சகடத்தில் வந்து ஆவேசித்துத் தன்மேல் விழுந்து தன்னைக் கொல்ல முயன்றதை யறிந்த
பகவானான தான் பாலுக்கு அழுகிற பாவனையில் தன் சிறிய திருவடிகளை மேலே தூக்கியுதைத்து
அச்சகடத்தைச் சிந்நபிந்தமாக்கின வரலாறு அறிக.

பிரானே! யசோதைப்பிராட்டியைப் போல உன்னிடத்து எனக்கு அதிகமான ப்ரேமம் இல்லாவிட்டாலும்
‘ஆச்ரயிக்கத்தக்கவன் நீதான்’ என்கிற எண்ணத்தைப் பெற்று உன்னை ஆச்ரயிப்பதற்கு உரிய ஸாமக்ரிகளைப்
பரிபூர்ணமாகக் கொண்டிருக்கிற நான் இனி உன்னருளுக்கு இலக்காகக் கூடியவன்;
இதுவரையில் எனக்கு நேர்ந்திருந்த தேவதாந்தரபஜனம், உபாயாந்தரப்பற்று, ப்ரயோஜநாந்தர விருப்பம் முதலிய
பொல்லாங்குகளைத் தவிர்த்து இனி யென்னைக் காத்தருளவேணும் என்றாராயிற்று.

பேர்த்தனை, காத்தனை – முன்னிலையொருமை இறந்தகால வினைமுற்றுக்கள்.
‘ஏத்திய’ என்னும் இறந்தகாலப் பெயரெச்சம் காலமுணர்த்தாது தன்மையுணர்த்திற்று. கா – வினைமுற்று.

————————————————————————-

பெரும்பாலும் இவ்வுலகத்தவர்கள் தேவதாந்தர பஜனஞ்செய்து சுவையற்ற அற்ப பலன்களைப் பெற்று
அநர்த்தப்படுகின்றனரேயன்றி உன்னையுணர்ந்து ஆச்ரயித்து உஜ்ஜீவிப்பவர் யாருமில்லையே! என்று வருந்திப் பேசுகிறார்.

கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும்
இடை நின்ற வின்பத்தராவர் -புடை நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் அவர்———11-

பதவுரை

(பாழும் ஸம்ஸாரிகளானவர்கள்)
அமரக் கடை நின்று–தேவதாந்தரங்களின் வாசல்களைப் பற்றி நின்று
நாளும் கழல் தொழுது00நெடுங்காலம் வரையில் (அவர்களுடைய) காலில் விழுந்து
(பரமாநந்தம் பெற மாட்டாமல்)
இடைநின்ற இன்பத்தர் ஆவர்–நடுவே கிடக்கிற (சுவர்க்கம் முதலிய) சுகத்தைப் பெற்றொழிவர்கள்;
புடைநின்ற நீர் ஓதம் மேனி நெடுமாலே–(இவ்வுலகைச்) சூழ்ந்து கிடக்கிற கடல் போன்ற திருமேனியையுடைய ஸர்வேச்வரனே!,
நின் அடியை–உனது திருவடிகளை
ஓதவல்லாரவர் ஆர்–அநுஸந்திக்கவல்லார் ஆரேனு முண்டோ? (யாருமில்லையே!)

கடைநின்றமரர் கழல்தொழுது = அமரர் கடைநின்று கழல் தொழுது என்க.
கடையாவது மனைவாசல்; தேவதாந்தரங்களின் மனைவாசலிலே நின்று என்றது – அவர்களை ஆராதித்தமை கூறியவாறு.
இனி, தொகுத்தல் விகாரமாகக்கொண்டு, “கடைநின்ற + அமரர்” என்று பிரித்து,
‘தாழ்ந்த தெய்வங்களின் காலிலே விழுந்து’ என்பதாகவும் பொருள்கொள்ளலாம்.
இடைநின்ற வின்பத்தராவர் – எம்பெருமானைப் பணிந்தவர்க்குக் கிடைக்கக் கூடிய பரமபதாநுபவமொன்றே உத்தமமாகையாலும்,
அதற்குக் கீழ்ப்பட்ட ஸ்வர்க்காநுபவம் முதலிய பலன்களெல்லாம் இடைக்கட்டாதலாலும்;
தேவதாந்தர பஜனம் பண்ணுவார்க்கு அப்படிப்பட்ட ஹூத்ரபலன்களே கிடைக்குமாதலாலும் “இடைநின்ற இன்பத்தராவர்” என்னப்பட்டது.
இன்பமென்றதும் ப்ரமித்தவர்களின் கருத்தாலேயாம். ‘ஆவர்’ என்பதற்கு எழுவாய் வருவித்துக் கொள்க.

————————————————————————–

கீழ்ப்பாட்டில், தேவதாந்தரபஜம் பண்ணுமவர்கள் அநர்த்தப்பட்டுப் போவதை யருளிச் செய்தார்;
‘ஆனால் அந்த தேவதைகளை ஆச்ரயிக்கலாகாதோ? இந்த்ர சந்த்ர ருத்ராதிகளும் மேம்பட்ட தேவதைகளாகத்
தானே சாஸ்த்ரங்களிற் சொல்லப்பட்டிருக்கின்றனர்’ என்று நினைப்பார்க்கு உத்தரமாக இப்பாட்டருளிச் செய்கிறார்.

எம்பெருமானொருவனையே தொழுது உஜ்ஜீவிப்பதில் நம்மோடு அந்த தேவதாந்தரங்களோடு ஒரு வாசியில்லையான
பின்பு தேவாதி தேவனான ஸ்ரீமந் நாராயணனைத் தொழுவதே அனைவர்க்கும் கடமையாமென்பது இதனாலுணர்த்தப்பட்டதாம்.

அவர் இவர் என்று இல்லை அரவணையான் பாதம்
எவர் வணங்கி ஏத்தாதார் எண்ணில்-பவரும்
செழும் கதிரோன் ஒண் மலரோன் கண்ணுதலோன் என்றே
தொழும் தகையார் நாளும் தொடர்ந்து———12-

பதவுரை

எண்ணில்–(எம்பெருமானை ஆச்ரயித்து ஸ்வரூப ஸித்தி பெறுகிறவர்கள் ஆரார்?’ என்று) ஆராயுமளவில்
அவர் இவர் என்று இல்லை–இன்னார் தாம் ஆச்ரயிப்பவர்கள், இன்னார் ஆச்ரயிக்காதவர்களென்ற ஒருவாசி யில்லை;
அரவு அணையான் பாதம்–சேஷசாயியான அப்பெருமானுடைய திருவடிகளை
வணங்கி–தொழுது
ஏத்தாதார்–துதியாதவர்கள்
எவர்–யாவர்? (ஒருவருமிலர்)
பவரும் செழுகதிரோன்–பரவின அழகிய ஆயிரங் கிரணங்களை யுடையவனான ஸூரியனும்
ஒள் மலரோன்–அழகிய (திருநாபிக் கமல) மலரை இருப்பிடமாக வுடைய பிரமனும்
கண் நுதலோன்–நெற்றிக் கண்ணனான ருத்ரனும்
(ஆகிய, நாட்டிலுள்ளவர்களால் ஆச்ரயிக்கப்படுகிறவர்களென்று பிரசித்தரான இவர்கள்)
நாளும்–நாள்தோறும்
தொடர்ந்து தொழும் தகையார் அன்றே–அப்பெருமானெழுந்தருளியிருக்கின்ற இடத்தைத் தேடி ஆச்ரயிக்கும் ஸ்வபாவமுள்ளவர்களன்றோ?

கீழ்ப்பாட்டில் “நெடுமாலே! நின்னடியையாரோதவல்லார்?” என்றுசொல்லி வைத்து இப்பாட்டில்
“அரவணையான் பாதம் எவர் வணங்கி யேத்தாதார்?” என்றது முரண்படுமன்றோவென்று சங்கிக்க வேண்டா;
எம்பெருமான் திருவடியைத் தொழுது துதித்தலைக் கடமையாகவுடையராகாதவர்கள் யாவர்? என்பதே இப்பாட்டின் நோக்கமாகும்.
ஆகவே, எல்லாரும் எம்பெருமானைத் தொழுதேத்தக் கடமைப்பட்டவர்களென்று ஸ்வரூப யோக்யதையை
உணர்த்துமிப்பாசுரமும் இந்த ஸ்வரூபத்தைப் பரிபாலனம் பண்ணுவாரில்லையே யென்றுரைத்த கீழ்ப்பாசுரமும் முரண்படா.
இப்பாட்டின் பின்னடிகளில், ஸூரியன் பிரமன் சிவன் முதலானவர்களும் நாடோறும் தொடர்ந்து தொழுவதாகச்
சொல்லியிருந்தாலும், இவ்வுலகத்தவர்கள் பெரும்பாலோர் தொழாது கெட்டுப்போகின்றனரேயென்னும்
வருத்தம் ஆழ்வார்க்குப் பெரிதுமுண்டு.

————————————————————————–

கீழ்ப்பாட்டில் “பருவஞ்செழுங்கதிரோ னொண்மலரோன் கண்ணுதலோனன்றே தொழுந் தகையார் நாளுந்தொடர்ந்து”
என்றருளிச் செய்ததில் அப்படிப்பட்ட உயர்ந்தவர்களான தேவர்கள் தாம் எம்பெருமானை ஆச்ரயிப்பதற்கு உரியவரேயன்றி
நம்போன்ற எளியவர் அப்பரமனை அடையுந்தரத்தினரன்று போலும் என்பதாக ஒரு சங்கை பிறக்கக்கூடுமாதலால்
எம்பெருமானை ஆச்ரயிக்கும் விஷயத்தில் சிறியார் பெரியாரென்னும் வாசியில்லை;
பிறப்பு முதலியவற்றால் தாழ்ந்தவர்களும் கூசாதே ஆச்ரயிக்கலாமென்னும் விஷயத்தை நிலைநாட்டுவதற்காக
ஸ்ரீகஜேந்திராழ்வானது செய்தியை அருளிச்செய்கிறாரிதில்-

தொடரெடுத்த மால் யானை சூழ் கயம் புக்கு அஞ்சி
படரெடுத்த பைங்கமலம் கொண்டு -அன்று இடர் அடுக்க
ஆழியான் பாதம் பணிந்து அன்றே வானவர் கோன்
பாழி தான் எய்திற்றுப பண்டு—–13-

பதவுரை

தொடர் எடுத்த மால் யானை–காற்சங்கிலியை முறித்துக் கையிற்கொண்டு பதறியோடுந் தன்மையதான மதயானையானது
சூழ் கயம் புக்கு–(கரைகாண வொண்ணாதபடி) விசாலமாயிருந்த பொய்கையிலே இழிந்து
படர் எடுதுத பை கமலம் கொண்டு–மலர்ந்து ஓங்கியிருக்கிற அழகிய தாமரைப் பூவை (எம்பெருமானுக்கு ஸமர்ப்பிப்பதற்காக)க் கையிற் கொண்டு
அன்று இடர் அடுக்க–அந்த நிலைமையிலே (முதலையின் வாயிலகப்பட்டு விடுவித்துக் கொள்ள முடியாத) பெருந்துன்பமுண்டாக
அஞ்சி–(செவ்வி யழிவதற்கு முன்னே இந்த மலர்களை எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்க முடியாமற் போய் விடுமோவென்று) மனம் பதறி,
ஆழியான் பாதம்–(முதலையைத் துணிக்குங் கருவியான) திருவாழியைக் கையிலேந்தின எம்பெருமானுடைய திருவடிகளை (தியானித்து) வணங்கியதனாலன்றோ
தான்–அந்த கஜேந்திரம்
பண்டு–முற்காலத்தில்
வானவர் கோன்பாழி–தேவாதி தேவனுடைய இருப்பிடமான பரமபதத்தை
எய்திற்று–அடைந்தது.

மஹாவிஷ்ணு பக்தனான இந்த்ரத்யும்நனென்னும் அரசன் வழக்கப்படி ஒருநாள் விஷ்ணுபூஜை செய்து கொண்டிருந்தபோது
அகஸ்த்ய மஹாமுனிவன் அவனிடம் எழுந்தருள, அப்பொழுது அவ்வரசன் தன் கருத்து முழுவதையும் திருமாலைப் பூஜிப்பதில்
செலுத்தியிருந்ததனால் அம்முனிவனது வருகையை அறியாதவனாய் அவனுக்கு உபசாரமொன்றுஞ் செய்யாதிருக்க,
அம்முனிவன் இப்படி அரசன் நம்மை அலக்ஷியஞ் செய்தானென்று மாறாகக் கருதிக் கோபித்து ,
‘யானைபோலச் செறுக்குற்றிருந்ததனால் யானையாகக் கடவை’ என்று சபிக்க,
அங்ஙனமே அவன் ஒரு காட்டில் யானையாகத் தோன்றினனாயினும் முன்செய்த விஷ்ணுபக்தியின் மஹிமையினால்
அப்பொழுதும் விடாமல் நாள்தோறும் ஆயிரந்தாமரை மலர்களைக் கொண்டு திருமாலை அர்ச்சித்துப் பூஜித்துவருகையில்,
ஒருநாள் பெரியதொரு தாமரைத் தடாதகத்தில் அர்ச்சனைக்காகப் பூப்பறிப்பதற்குப்போய் இறங்கிற்று;
முன்பொருகால் தேவலனென்னும் முனிவன் ஒரு நீர்நிலையில் நின்று தவஞ்செய்து கொண்டிருந்த போது
அவனது காலைப்பற்றியிழுத்து அனாதற் கோபங்கொண்ட அவனது சாபத்தாற் பெரிய முதலையாய்க் கிடந்த
ஹூஹூவென்னுங் கந்தர்வன் அவ்யானையின் காலைக்கௌவிக்கொள்ள, அதனை விடுவித்துக் கொள்ள முடியாமல்
கஜேந்திராழ்வான் ‘ஆதிமூலமே!’ என்று கூவியழைக்க, உடனே திருமால் கருடாரூடனாய் அப்பொய்கைக் கரையிலே
அரைகுலையத் தலைகுலைய விரைந்தெழுந்தருளித்தனது திருவாழியைப் பிரயோகித்து முதலையைத் துணித்து
யானையை அதன் வாயினின்று விடுவித்து இறுதியில் அதற்கு முக்தியை அருளினன் என்ற வரலாறு உணர்க.

“தொடரெடுத்த” என்று யானைக்கு இட்ட விசேஷணம் சாதியியல்வைக் குறிப்பதாம்.
காலிலிட்ட விலங்கை முறித்துக் கையிலே கொண்டு யதேச்சையாகத் திரியுந்தன்மை
யானைச்சாதிக்கு இயற்கை யென்க.

எம்பெருமானை ஆச்ரயிப்பதற்கு இன்னார் ஆவார், இன்னார் ஆகார் என்கிற நியதியில்லாமை
இப்பாட்டால் வெளியிடப்பட்டதாயிற்று.

————————————————————————–

சிறியார் பெரியாரென்னும் வாசியின்றி யாவராலும் எம்பெருமான் ஆச்ரயிக்கத் தக்கவனென்று
கீழ்ப்பாசுரங்களால் ஸ்தாபிக்கப்பட்டதான பின்பு, ஸம்ஸாரிகளைக் ஸ்தோத்ரஞ்செய்துகொண்டு
அதனால் இந்தப் பிரபஞ்சத்திலேயே உழன்றுகொண்டு தடுமாறாமல் அப்பெருமானைப் பணிந்து
அவனது திருநாமங்களைச் சொல்லி அவ்வழியால் நீங்கள் மாத்திரம் ஈடேறுவதோடு நில்லாமல்
உங்களுடைய ஸஞ்சாரத்தாலே நாடு முழுதும் பரிசுத்தமாகும்படி செய்யுங்கோளென்று நாட்டாரை விளித்து உபதேசிக்கின்றாரிதில்,
எண்ட பொருளையுங்கொண்டு வயிற்றை நிரப்புவதற்காகப் பழிபாவங்களைச் செய்து வாழ்கின்ற ஸம்ஸாரிகளைத்
துதிப்பவர் விவேகிகளல்லர், பேதையர்களே யாவர் என்பது விளங்கப் ‘பேதைகாள்!’ என விளக்கின்றனர்.

பண்டிப்பெரும் பதியை யாக்கி பழி பாவம்
கொண்டிங்கு வாழ்வாரைக் கூறாதே எண்டிசையும்
பேர்த்த கர நான்குடையான் பேரோதிப் பேதைகாள்
தீர்த்த கரராமின் திரிந்து—14-

பதவுரை

பேதைகாள்–அவிவேகிகளே!,
பண்டியை–வயிற்றை
பெரு பதி ஆக்கி–பெரிய ஊர் போலக் கண்டதையுங் கொண்டு நிரம்பச் செய்து வளர்த்து
பழி பாவம் கொண்டு–தெரியாமல் விளையுங் குற்றங்களையும் தெரிந்து செய்யுங் குற்றங்களையும் மேன்மேலும் வளர்த்துக் கொண்டு
இங்கு–இவ்வுலகில்
வாழ்வாரை–வாழ்கின்ற ஸம்ஸாரிகளை
கூறாதே–புகழ்ந்து பேசுகை தவிர்ந்து,
எண் திசையும் பேர்த்த கரம் நான்கு உடையான்–(உலகளந்த காலத்தில்) எட்டுத் திக்குக்களையும் பேர்த்துப்போடும்படி
விம்மி வளர்ந்த நான்கு திருத்தோள்களையுடையனான பெருமானுடைய
பேர்–திருநாமங்களை
ஓதி–இடைவிடாது சொல்லிக் கொண்டு
திரிந்து–திவ்ய தேசங்கள் தோறும் ஸஞ்சரித்து
தீர்த்தகரர் ஆமின்–(உங்கள் ஸஞ்சாரத்தாலே நாடு முழுவதும்) பரிசுத்தமாம்படி செய்ய வல்லவராக ஆகுங்கோள்.

“பெரும்பகுதியை” என்ற விடத்துள்ள இரண்டாம் வேற்றுமையுருபைப் பிரித்து ‘பண்டி’ என்பதோடு கூட்டியுரைக்கப்பட்டது.
பண்டியென்று வயிற்றுக்குப் பெயர். அதனைப் பெரும்பதியாக்குவதாவது வளர்ப்பதாம்; கண்டதையும் தின்று தின்று
ஏற்றச்சால்போலே வயிற்றை வைத்துக் கொண்டிருக்குமவர்களை நச்சிக் கவிபாடிக் காசுபெற்று வயிறுவளர்க்குந் தொழிலை
விட்டுத்தொலையுங்கோளென்று முன்னடிகளாற் கூறினாராயிற்று.
“பண்டு இப்பெரும்பதியை ஆக்கி” என்று பிரித்து பண்டு – அநாதிகாலமாக,
இப்பெரும்பதியை – இந்த ஸம்ஸாரத்தை, ஆக்கி – வளர்த்துக்கொண்டு என்றுரைக்கவுமாம்.

பழிபாவங்கொண்டு – கவனிப்பு இல்லாமையினால் அபுத்திபூர்வமாகச் செய்ய நேரும் பாவங்கள் பழியென்றும்,
வேணுமென்றே செய்யுந் தீங்குகள் பாவமென்றும் கொள்க.
வயிற்றை நிரப்பவேண்டுவோர்க்கு இவையித்தனையும் செய்யவேண்டியவையாமன்றோ.
இங்கு வாழ்வாரை = இந்தப் பிரபஞ்ச சுகத்தையே வாழ்வாக நினைத்திருப்பவர்களை என்றபடி.
கூறாதேயென்னுமளவால் பரித்யஜிக்க வேண்டுமதைச்சொல்லிப் பின்னடிகளாலே பரிக்ரஹிக்க வேண்டுமதைப் போதிக்கின்றார்.
உலகளந்த பெருமானுடைய திருநாமங்களை யநுஸந்தித்துக் கொண்டு
“கண்டியூரரங்கம் மெய்யம் கச்சிபேர் மல்லையென்று, மண்டினாருய்யலல்லால் மற்றையார்க் குய்யலாமே” என்றபடி
திருப்பதிகள் தோறும் நடந்தால்;
“தில்லைநகர்த் திருச்சித்ரகூடந்தன்னுள், தலை வணக்கிக் கைகூப்பி ஏத்தவல்லார் திரிதலால் தவமுடைத்துத் தரணிதானே” என்று குலசேகராழ்வாரும் 3
“நாதனை நரசிங்கனை நவின்றேத்துவார்களுழக்கிய பாததூளி படுதலால் இவ்வுலகம் பாக்கியம் செய்ததே என்று பெரியாழ்வாரும்
அருளிச்செய்தபடியே உலகமெல்லாம் பவித்திரமாய்விடும் என்றவாறு.
தீர்த்தகரர் – வடசொல்.

————————————————————————–

எம்பெருமானுகந்தருளின திருப்பதிகள் தோறும் திரியுங்கோளென்று ஸம்ஸாரிகளை நோக்கிக் கீழ்ப்பாட்டில் உபதேசித்தார்;
உண்டியே உடையே உகந்தோடித் திரியுமிம்மண்டலத்திலே இவருபதேசத்தை ஆதரிப்பார் ஆர்?
அவரவர் களிஷ்டப்படி தங்களுடம்பைப் பேணிப் பேய்களாய்த் திரிய,
‘ஐயோ! இப்பாவிகளுக்காக எம்பெருமான் கிருஷ்ணனாய்ப் பிறப்பதும் இராமனாய்ப் பிறப்பதுமாய்க் கொண்டு
படாத அலைச்சல்கள் பட்டுப் பரிதபியா நிற்க இவர்கள் இப்படி உண்டு உடுத்துத் திரிகின்றார்களே!’ என வருந்தின ஆழ்வார்,
அப் பெருமான் ராமக்ருஷ்ணாவதாரங்களிலே அதிஸுகுமாரமான திருமேனியோடே பட்ட மிறுக்குக்களை நினைந்துருகிப் பேசுகின்றார்.

திரிந்தது வெஞ்சமத்துத் தேர் கடவி அன்று
பிரிந்தது சீதையை மான் பின் போய்-புரிந்ததுவும்
கண் பள்ளி கொள்ள அழகியதே நாகத்தின்
தண் பள்ளி கொள்வான் தனக்கு—-15-

பதவுரை

வெம் சமத்து–கொடிய (பாரத) யுத்தத்திலே
தேர் கடவி–(பார்த்த ஸாரதியாகித்) தேரை நடத்திக் கொண்டு
திரிந்ததும்–அலைந்ததும்,
அன்று–இராமனாகத் திருவவதரித்த காலத்து
மான்பின் போய்–மாரிசனாகிற மாயமானின் பின்னே சென்று
சீதையை பிரிந்ததும்–பிராட்டியைப் பிரிந்து அலைச்சற்பட்டதும்,
கண்–தரையிலே
பள்ளி கொள்ள–படுத்துக் கொள்ளும்படி
புரிந்ததுவும்–ஆசை கொண்டதும்
(ஆகிய இச்செயல்கள் யாவும்)
நாகத்தின் தண் பள்ளி கொள்வான் தனக்கு–திருவனந்தாழ்வான் மேலே குளிரப் பள்ளி கொண்டிருக்க வேண்டிய பெருமானுக்கு
அழகியதே–ஏற்றவையோ?

கண்ணபிரானாய்த் திருவவதரித்துப் பாரதப் போரிலே பார்த்த ஸாரதியாயிருந்து எதிரிகள் விடுகிற அம்புகள் தன்மேலே
படும்படி திருமேனிக்குக் கவசமும் தரியாதே கிடந்து அர்ஜுநன் சொன்னவிடத்திலே தேரை நடத்திக்கொண்டு
பட்டபாடுகளை முதலடியிலே பேசினர்.

இராமனாய்த் திருவவதரித்துப் பித்ருவாக்யபரபாலந வியாஜத்தாலே காட்டுக்கெழுந்தருளி மாயமான் பிரிக்கப் பிராட்டியைப் பிரிந்து
பட்ட வருத்தங்களை இரண்டாமடியிற் பேசினர். ஆகிய இவ்வலைச்சல்கள்பட நேர்ந்த அவதாரங்கள் ஸம்ஸாரிகளைத் திருத்திப்
பணி கொள்வதற்காகச் செய்தவையாதலால் இவ்வலைச்சல்களும் ஸம்ஸாரிகளுக்காகப் பட்டவையென்று திருவுள்ளம் பற்றுதல் பொருந்தும்.
நாகத்தின் தண்பள்ளி கொள்வான் தனக்கு அழகியதே = இவ்வலைச்சல்கள் எங்கே? அவனுடைய ஸுகுமாரமான திருமேனி எங்கே?
மிடறு மெழுமெழுத்தோட வெண்ணெய் விழுங்கவேண்டியவன் வெம்பரல்களைக் கடித்தாற்போலே,
மெத்தென்ற சேஷ சயனத்திலே திருக்கண் வளர்ந்தருள வேண்டியவன் இவ்வலைச்சல்கள் படத் தகுமோ என்றவாறு.

அழகியதேயென்றது விபரீத லக்ஷணையினால் மிகவும் தகாதவையாக இருந்தனவென்ற பொருளைத்தரும்.
“அழகியவே” என்றும் பாடமுண்டு; அழகிய = அன்சாரியை பெறாத பலவின்பால் முற்று.

மூன்றாமடியில், இடப்பொருளதான கண் என்னுஞ் சொல் இங்கு தரை யென்ற பொருளைத் தந்தது.

————————————————————————–

கீழ்ப்பாட்டிற் கூறியபடியே எம்பெருமான் எப்படியாவது நம்மைப் பெறவேணுமென்றே பற்பல அவதாரங்களெடுத்துப்
படாதன படுகிறபடியால் நம்மைத் திருத்திப் பணிகொள்ளுதல் அப்பெருமானுக்கே கடமையாயிருக்கும்;
நாம் யாதொரு ஸாதாநாநுஷ்டாநமும் செய்யவேண்டா; ஆனாலும் நம்மை மண்ணும் மரமும் கல்லும் கரியும்போலே
அசேதநப்பொருளாகப் படைக்காமல் சேதநப்பொருளாகப் படைத்துள்ளதனால் நாம் அறிவுபெற்றுள்ள
வாசிக்காகச் செய்யத்தக்க தொன்றுண்டு, அதாவது அவனைப் பெறவேணுமென்னும் ருசி மாத்திரம் நமக்கு இருக்கத் தகும்.
மற்றபடி பேற்றுக்கு உபாயமாக நாம் முயற்சி செய்ய வேண்டுவதொன்றுமில்லை என்கிற
ஸகல சாஸ்த்ரஸாரப் பொருளை வெளியிடுவதாம் இப்பாசுரம்.

தனக்கு அடிமைப் பட்டது தான் அறியான் ஏலும்
மனத்தடைய வைப்பதாம் மாலை -வனதிடரை
ஏரியாம் வண்ணம் இயற்றும் இது வல்லால்
மாரி யார் பெய்கிற்பார் மற்று—–16-

பதவுரை

தனக்கு–சேதநனாகிய தனக்கு
அடிமை–சேஷத்வமென்பது
பட்டது–அமைந்திருக்கின்ற தென்பதை
தான் அறியான் ஏலும்–தான்தெரிந்து கொள்ள அசக்தனாயிருதாலும்
(எம்பெருமான் தானாகவே)
மனத்து–மனத்திலே
அடைய–வந்து சேர்ந்த வளவில்
மாலை–அப்பெருமானை
வைப்பது–இடங்கொடுத்து வைத்துக்கொள்வது தகும்;
(இவனுக்கு இவ்வளவு ருசிமாத்திரம் உண்டானால் விரோதியைப் போக்கித் தன்னைத் தானே
தந்தருள்வன் எம்பெருமான்; அது எங்ஙனே யென்னில்;)
வனம் திடரை–காடெழுந்து கிடக்கிற மேட்டு நிலத்தை
ஏரி ஆம் வண்ணம் இயற்றும் இது அல்லால்–(பெய்யும் மழைநீர் அப்பால் போகாமல் தடையின்றி வந்து புகும்படி)
ஏரியாகக் குழி வெட்டுதல் செய்யக்கூடுமேயன்றி
மற்று-பின்னும்
மாரி–மழையை
பெய்கிற்பார்–பெய்யும்படி செய்விக்க வல்லவர்கள்
யார்–யாவருளர்? (மழை பெய்ய வேண்டுவது பகவத்ஸங்கள் பத்தாலன்றோ?.)

இதில் முன்னடிகளுக்குப் பலவகையாகப் பொருள்கொள்ள இடமுண்டு. நம்மனத்தில் எம்பெருமான் வந்து தங்கும்படி
விலக்காமையுடன் இருக்க வேண்டுவதே நாம் செய்யக்கூடிய செயல்;
அங்கே வந்து இடைவிடாது தங்கும்படி அப்பெருமானைச் செய்விப்பதென்பதே நமக்கு இயலாது.;
ஆதலால், நமக்கு ஸ்வரூபஜ்ஞாநமும் முற்றமுதிர உண்டாகாவிடினும், விலக்காமை என்கிற இவ்வளவு மாத்திரம்
நம்மிடத்து உண்டானால் எம்பெருமான் அதனையே பற்றுக்கோடாகக் கொண்டு
நம்முடைய விரோதிகளைப் போக்கித் தன்னைத் தந்தருள்வன் – என்பதாகக்கொள்ளலாம்.

அன்றியே;
அவ்வெம்பெருமான் சேஷி, தான் சேஷன் என்றறிகின்ற விவேகமில்லாதவனாகவே இச்சேதநன் இருந்தாலும்,
இவனுக்கு அப்பெருமானிடத்து ருசியில்லாமலிருந்தாலும், (பெரியோன் எந்த எந்தச் செயலைச் செய்கிறானோ
அந்தச் செயலையே மற்றுள்ள ஸாமாந்ய ஜநங்களும் செய்கிறார்கள்) என்றதற்கேற்ப,
பெரியோர் செய்யும் முறையைமையைக் கண்டாகிலும் ஸர்வேச்வரனை ஹ்ருதயத்திலே கொண்டு இச்சேதநன் தியானிக்கக் கடவன்;
இவ்வளவே கொண்டு எம்பெருமான் விரோதிகளைத் தொலைத்து ஸ்வப்ராப்தியையும் செய்து தருவன் – என்பதாகவுங் கொள்வர்.
மற்றும் பலவகைகளுங் காண்க.

பின்னடிகளில் அருளிச் செய்யப்பட்டுள்ள த்ருஷ்டாந்த வாக்கியார்த்தத்தின் ஸ்வாரஸ்யத்தை உணர்ந்த கொண்டு
அதற்கிணங்க முன்னடிகளின் ஆழ்ந்த கருத்தை அறிந்துகொள்க.
காடெழுந்து மேடாயிருந்த நிலத்தைச் சீர்திருத்தி ஏரியாக வெட்டுகின்றோமாயின் இக்காரியம் மழைபெய்வதற்கு ஸாதநமாக மாட்டாது;
நாம் ஏரி வெட்டுகிறோமென்பது கொண்டே பர்ஜந்யதேவன் மழை பெய்து விடுவனோ?
மழை பெய்வதென்பது பகவத் ஸங்கல்பாதீநமாகையால். அப்படிப்பட்ட மழைக்கு ஏரிவெட்டுதல் உபாயமாகமாட்டாது.
இஃது உலகறிந்த விஷயம். ஏரி வெட்டுதல் மழைபெய்வதற்கு உபாயமன்றாகில் வீணாக ஏரி வெட்டுவானேன்? என்று நினைக்கலாகாது;
எப்போதாவது பகவத் ஸங்கல்பத்தாலே மழை பெய்யுமாகில் அந்த மழை நீரை வனத்திடர் தாங்கிக் கொள்ளமாட்டாது;
நாம் அந்த வனத்திடரைச் சீர்திருத்தி ஏரியாக அமைத்து வைப்போமாயின், மழை பெய்யும்போது வரும் தண்ணீர்
அதிலே தங்குவதற்குப் பாங்காகும். ஆகவே மழைநீர் பழுதுபடாமைக்காக ஏரி வெட்டுதலேயன்றி
மழையைப் பெய்வித்தற்காகவன்று என்பது விளங்கும். இவ்வாறே,
நாம் சேதநராகப் பிறந்துள்ள வாசிக்காக நம்முடைய நிலைமைய சீர்ப்படுத்திக் கொள்வதானது பகவத்ப்ராப்திக்கு ஸாதநமாகமாட்டாது;
ஒருகால் பகவான் நம்மை திருவுள்ளம் பற்ற வருவானாயின் அவனுடைய விஷயீகாரம் நம்மிடத்தில் நன்கு தங்குவதற்குப் பாங்காகும்.
நம்மை நாம் சீர்திருத்தி வைத்துக் கொள்ளுதல்.

திருத்தமுறாத சேதநரை வனத்திடரின் ஸ்தாநத்திலே கொள்க; அத்வேஷாதிகளாலே தம்நெஞ்சைத் திருத்திக் கொள்வதானது
ஏரியாம் வண்ண மியற்றுகையாம்; பகவத்ப்ராப்தி கைபுகுதல் மாரிபெய்கையாம்.
ஆகவே நாம் செய்யும் ஸுக்ருதங்களெல்லாம் நிர்ஹேதுகமாகவுண்டாகிற பகவத் விஷயீகாரத்தைத் தாங்கிக் கொள்வதற்கு
மாத்திரம் உறுப்பாகுமேயொழிய, பகவத் விஷயீகாரத்தை நிர்ப்பந்தப்படுத்தி யுண்டாக்குவதற்கு உறுப்பாக மாட்டாதென்று
சேதநக்ருத்யங்களின் அநுபாயத்வம் ஸ்தாபிக்கப்பட்டதாயிற்று இப்பாட்டில்.

சேதநக்ருத்யமொன்றும் உபாயமன்றாகில், சேதநன் மனம் போனபடியே செய்து திரியலாமன்றோ என்று
சிலர் சங்கிப்பதற்கும் இடமில்லாமை காட்டப்பட்டது இதில்.
சாஸ்த்ரங்களுரைத்த நல்வழியில் நாம் இருந்துகொண்டு கர்த்தவ்யங்களை உபாயத்வ புத்தியின்றியே அநுஷ்டிக்க வேண்டியது ஆவச்யகமே;
ஆனால் நாம் நல்ல காரியங்களைச் செய்திருக்கிறோமாகையால் நமக்கு பகவத் விஷயீகாரம் விளைந்தே தீருமென்று
அதற்கு இதை ஸாதநமாக ப்ரதிபத்திபண்ணியிருக்க ப்ராப்தியில்லை.
“எந்நன்றி செய்தேனோ என்னெஞ்சில் திகழ்வதுவே” என்றே மஹான்கள்
அநுஸந்திப்பர்களாதலால் நிர்ஹேதுக க்ருபையினாலேயே எம்பெருமான் நம்மை விஷயீகரிக்கிறானென்று,
நாம் செய்துபோகும் நன்மைகள் ஒன்றுக்கு உபாயமாகையின்றியே ஸ்வயம் ப்ரயோஜந ரூபங்களென்றும் அறுதியிட்டிருக்க வேணும்.

ப்ரபத்தியை உபாயமாகச் சில ஸம்ப்ரதாயஸ்தர்கள் கொள்வது பிசகோ? எனின்; அன்று.
இவ்விடத்திலே ஸாரமாகச் சொல்லுயோம் கேண்மின்; –
கடலிலே வலைவீசி மீன் பிடித்து ஜீவிப்பானொரு செம்படவன் ஒருநாள் மீன்களிடையே விலையுயர்ந்த ரத்னமொன்று கிடைக்கப் பெற்றான்;
அதனுடைய மதிப்பை அவன் அறியமாட்டாதவனாதலால்.
மாமதியம் திளைக்குங் கொடி மாளிகை சூழ் தெருவில் செழுமுத்து வெண்ணெய்கெனச் சென்று முன்னில்
வளைக்கை நுளைப்பாவையர் மாறுமா போலே, அந்த ரத்னத்தைக் கொண்டுபோய் ஒரு வியாபாரியிடத்திலே
மிகக்குறைந்த விலை கூறி விற்றுவிட்டான். அந்த வியாபாரி, தான் ரத்னத்தின் மதிப்பு நன்குணர்ந்தவனாகையாலும்
(வியாபாரமே ஜீவிகையாகவுடையனாகையாலும் அவன் அதைக்கொண்டு போய் ஒரு மஹாராஜனிடத்திலே கிரமமாக
அதற்குள்ள விலைகூறி உயர்ந்த விலைக்கு விற்றுவிட்டான்.
பிறகு அந்த மஹாராஜன் அந்த ரத்நத்தைத் தான் விற்பனை செய்ய நினையாதே. அதனைப் பெரியதொரு ஹாரத்திலே
இணைத்து ஸ்வயம் போக்யமாக அமைத்துக் கொண்டான். ஆக இச் செய்தியில் ஒரு ரத்னத்துக்கே மூன்று தன்மைகள் உண்டாயின;

அற்ப விலைக்கு மாறுதல், உள்ள விலைக்கு மாறுதல், விலைக்கு ஆட்படாமல் ஸ்வயம் போக்யமாகக் கொள்ளப்படுதல்
என மூன்று வகைகள் ஒன்றுக்கே அதிகாரி பேதத்தால் கூடினாற்போலே,
நாம் செய்யும் ஸுக்ருதங்களுக்கும் இங்ஙனே மூன்று தன்மைகள் கூடும்; ரத்னத்தின் மதிப்பை அறியமாட்டாது
அதனை அற்பவிலைக்கு விற்ற செம்படவன் போல ப்ரபத்தியின் சீர்மையை அறியமாட்டாத சிற்றறிவாளர் (அதமாதிகாரிகள்)
ப்ரபத்தியைக் கொண்டு ஐச்வர்யகைவல்யாதி க்ஷûத்ர பலன்களைக் கொள்வர்.
ரத்னத்தைக் குறைந்த விலைக்குக் கொடாதே தகுந்த விலைக்குக் கொடுக்கும் வியாபாரியைப் போன்ற மத்யம அதிகாரிகள்
பரபத்தியை மோக்ஷஸாதநமாக அபிமானித்து க்ஷுத்ர பலன்களைக் கொள்ளாதே மோக்ஷபலனைக் கொள்வர்.
ரத்னத்தை ஒன்றுக்கும் ஸாதநமாக்காதே ஸ்வயம் போக்யமாகக் கொள்ளும் மஹாராஜனைப் போன்ற உத்தமாதிகாரிகள்
ப்ரபத்தியை ஒன்றுக்கும் ஸாதநமாகக் கோலாதே ஸ்வயம் புருஷார்த்தமாகக் கொண்டு வர்த்திப்பர்கள்.
மஹாராஜனுடைய நிலைமையை விரும்பாதே வியாபாரியின் நிலைமையை விரும்பி ப்ரபத்தியை ஸாதநமாகக் கொள்வார் அங்ஙனமே கொள்க.

“ரத்நம் தீவிரஹஸ்தலப்தமதமும் மூல்யம் ஸ்மாஸாதயேத் தத்ரத்நம் வணிஜோ வசம்வதமத ப்ராப்நோதி மூல்யம்
பஹு ஏத்யேதத் யதி ஸார்வபௌ மவசதாம். ப்ராப்ய ஸ்வயம் போக்யதாம் நித்யம் பூஷணதாமுபைதி,
ததயம்ந்யாய: ப்ரபத்தாவபி என்று ஸம்ப்ரதாய ஸித்தாஞ்சனத்திலே சொன்னேம்.

தோட்டம் சமைத்து மாம்பழம் பயிர் செய்வார்களில் அப்பழங்களை அரைகுறை விலைக்கும் அளவான விலைக்கும் விற்பாருமுண்டு;
விற்காதே ஸ்வபோகத்துக் குறுப்பாகக் கொள்ளுவாருமுண்டு.
ஒரு மாம்பழந்தானே ஒருவனுக்கு உபாயமாயும் ஒருத்தனுக்கு உபேயமாயும் ஆகாநின்றது.
உபாயமாகக் கொள்ளுமவனுடைய தாழ்வும் உயேமாகக் கொள்ளுமவனுடைய உயர்வும் உலகறிந்ததே.
அது போலே, நம்முடைய நற்கிரிசைகட்கு உபாயத் தன்மையும் உபேயத் தன்மையும் உண்டாயிருக்கச் செய்தே
உபேயத் தன்மையையே பாராட்டி உத்தமாதிகாரி கோஷ்டியில் புகாதே உபாயத் தன்மையைப்பாராட்டி
அதம கோஷ்டியில் புக நினைப்பாரை நாமேன் விலக்குவோம்?

இப்பாட்டில், முன்னடிகட்கும் பின்னடிகட்கும் ஸங்கதி எங்ஙனேயென்னில்; சேதநன் ஸ்வஸ்ரூப பரஸ்வரூபங்களை
நன்கு தெரிந்துகொண்டு தானே நல்ல முயற்சிகளைச் செய்து அவை ஸாதநமாக எம்பெருமானைப்
பெற வேண்டுமென்று சொல்ல வேண்டியிருக்க அப்படி சொல்லாமல், தனக்கு ஸ்வரூபமளவில் அதனை விலக்காதவளவே
அமையுமென்று முன்னடிகளிற் சொல்லப்பட்டதே, இது பொருந்துமோ?
ஸாதநாநுஷ்டாநமில்லாமல் ஸாத்யம் கைபுகுமோ? என்று சங்கை உண்டாக,
த்ருஷ்டாந்த முகத்தாலே அந்த சங்கைக்குப் பரிஹாரங்கள்.
இப்பாசுரத்தின் அழகிய ஆழ்பொருள்களை இன்னமும் விரித்துரைக்க வேண்டியிருந்தும் விரிவுக்கு அஞ்சி நிற்கின்றோம்.

————————————————————————–

கீழ்ப்பாட்டிற் கூறியபடி உபாயோபேயங்களிரண்டும் தானேயாயிருக்கிற எம்பெருமானே. ஆச்ரயணீயன்;
அவனைத் தவிர்த்து மற்றையோரை ஆச்ரயித்தால் நம்மை அடிமைகொள்ள வல்ல சக்தி அவர்களுக்கில்லாமையாலும்,
ஆச்ரயணீயரென்று ஸாமாந்யர் பிரமிக்கக்கூடிய சில்லரைத் தெய்வங்களும் ஸ்ரீமந் நாராயணனை அடிபணிந்தே
தம்தம் குறைகளைத் தீர்த்துக்கொள்ளக் காண்கையாலும் அப்பரமபுருஷனே ஆச்ரயிக்கவுரியன் என்றாராயிற்று.

மற்று ஆர் இயலாவார் வானவர் கோன் மா மலரோன்
சுற்றும் வணங்கும் தொழிலானை -ஒற்றைப்
பிறை யிருந்த செஞ்சடையான் பின் சென்று மாலைக்
குறை யிரந்து தான் முடித்தான் கொண்டு—–17-

பதவுரை

வானவர் கோன்–தேவர்கட்குத் தலைவனான இந்திரனும்
மா மலரோன்–(எம்பெருமானது) சிறந்த (திருநாபிக் கமலத்தை இருப்பிடமாகவுடைய பிரமனும்
சுற்றும் வணங்கும் தொழிலானை–பக்கங்களிற் சூழ்ந்துகொண்டு ஆச்ரயிப்பதற்கேற்ற சேஷ்டிதங்களை யுடையனான
மாலை–எம்பெருமானை
ஒற்றை பிறை இருந்த செம்சடையான்–ஓருகலாமாத்திரமான சந்திரனைத் தரித்த சிவந்த சடையையுடைய ருத்ரன்
பின் சென்று–அநுவர்த்தித்து
இரந்து-(பல்லைக் காட்டி) யாசித்து
குறை–தனது குறையை
தான் முடித்து கொண்டான்–தான் நிறைவேற்றிக் கொண்டான்;
(ஆனபின்பு)
இயல் ஆவார்–ஆச்ரயிக்கலாம்படி தகுதியுடையவர்
மற்று ஆர்-அந்த ஸர்வேச்வரனைத் தவிர வேறு யாவர்?

முப்பத்து முக்கோடி தேவர்கட்குத் தலைவனான இந்திரனும், திருமாலினது திருநாபிக் கமலத்தை வாழிடமாகவுமுடைய பிரமனும்
நேராக நின்று கிட்டமாட்டாமையாலே சுற்றுப் பக்கங்களில் நின்றாகிலும் தம்முடைய அபிமாநம் நீங்கி எம்பெருமானை
ஆச்ரயிக்கும்படியைக் கூறுவன முன்னடிகள்.
பக்கங்களிலே நிற்கவாவது தைரியமுண்டாயிற்று இந்திரற்கும் பிரமற்கும் அவ்வளவும் தைரியமில்லாத சிவபிரான்
பின்புறத்திலே சென்று நின்றுகொண்டு யாசித்துத் தன் குறையை (ப்ரஹ்ம ஹத்யாசாப் நிவ்ருத்தி
முதலியவற்றை)த் தீர்த்துக்கொள்ளும்படியைக் கூறுவன பின்னடிகள்.

தக்ஷமுனிவனது சாபத்தால் க்ஷயமடைபவனாய்க் கலை குறைந்துவந்து சரணமடைந்த சந்திரனை,
சிவபிரான் முடியின் மீது கொண்டு வரமளித்துப் பாதுகாத்ததனால் ஒற்றைப் பிறையணிந்த செஞ்சடையான் எனப்பட்டான்.

————————————————————————–

ஸ்ரீமந் நாராயணனே ஸர்வஸமாகரயணீயனென்று கீழ்ப்பாட்டிற் கூறியதை நிலைகாட்டுதற்காக
அப்பெருமான் தன்னை அழியு மாறியும் ஜகத் ரக்ஷணம் பண்ணுகிறபடியைப் பாருங்களென்கிறாரிதில்

கொண்டது உலகம் குறள் உருவாய் கோளரியாய்
ஒண் திறலோன் மார்வத்து உகிர் வைத்தது -உண்டதுவும்
தான் கடந்த ஏழ் உலகே தாமரைக் கண் மால் ஒரு நாள்
வான் கடந்தான் செய்த வழக்கு——-18-

பதவுரை

குறள்உரு ஆய்–வாமநரூபியாய் மாவலியிடஞ் சென்று யாசித்து
உலகம–பூமி முதலிய லோகங்களை
கொண்டத–ஆக்ரமித்துக் கொண்டதும்,
கோள் அரி ஆய்–மிடுக்கையுடைய நரசிங்கமாகி
ஒண்திறலோன் மார்வத்து–மஹா பலசாலியான இரணியனுடைய மார்பிலே
உகிர் வைத்தது–தனது நகங்களை யழுத்திக் கீண்டொழித்ததும்
ஒருநாள்–ஒருகாலத்திலே
தான் கடந்த–தான் அளந்து கொண்ட
ஏழ் உலகே–எல்லா வுலகங்களையும்
உண்டதுவும்–(பிரளயங் கொள்ளாதபடி) திருவயிற்றிலே வைத்துக் கொண்டதும்
(ஆகிய இச்செயல்கள்)
வான் கடந்தான்–ஆகாசத்தை யளவிட்டாலும் அளவிட வொண்ணாத படியுள்ள பெருமையை யுடையவனும்
தாமரை கண்–செந்தாமரைக் கண்ணனுமாகிய
மால்–எம்பெருமான்
செய்த–செய்தருளின
வழக்கு–நியாயமான செயல்களாம்

உலகத்தில் குள்ளனைக் கண்டால் கண்டவர்களும் ஏசிப் பேசுவது வழக்கம்; அப்படிப்பட்ட குள்ள வடிவைக் கொண்டான்
இந்திரன் குறையைத் தீர்ப்பதற்காக அன்றியும் உடல் ஒருபடியும் முகம் ஒருபடியுமாக வடிவெடுப்பதும் பரிஹாஸாஸ்பதம்;
அப்படிப்பட்ட வடிவையும் கொண்டான் மூவுலகங்களின் துயர் தொலைக்க.
அன்றியும் தன் காலிலேபட்ட வஸ்து அசுத்தமென்று அதை எவனும் உட்கொள்ளமாட்டான்;
எம்பெருமானோ வென்னில், த்ரிவிக்ரமாவதாரத்தில் தன்னடிக் கீழ்ப்பட்ட உலகங்களையே
(மற்றொரு கால் பிரளயங் கொள்ளாதபடி) உட்கொண்டான்.
ஆகவே இவ்வளவுஞ் செய்தது தன்னுடைமையைத் தான் நெருக்கிக் கொள்வதற்காகவே யாதலால்
இவனே ஸர்வ ஸ்வாமியென்பது திண்ணமன்றோ.

“வான்கடந்தான் செய்தவழக்கு” என்ற ஈற்றடிக்கு இருவகையாகக் கருத்தாகலாம்;
தன்னுடைய ரக்ஷகத்வத்தை நிலைநாட்டிக் கொள்ள வேண்டிச்செய்த காரியங்களாகையாலே இவையெல்லாம்
நியாயமான காரியங்கள் என்பதாகவொரு கருத்து; இனி, வழக்கு என்றது எதிர்மறை இலக்கணையால் வழக்கல்ல என்றபடியாய்,
சிறிய வடிவைக் காட்டிப் பெரிய வடிவாலே உலகங்களை அளந்து கொள்வதும்,
உலகத்தில் எங்கும் என்றுங் கண்டறியாதவொரு விஜாதீயமான வடிவத்தையெடுத்து இரணியனைப் பிளந்தொழிப்பதும்;
தன் காலில்பட்டு அசுத்தமான வுலகத்தைத்தானே உட்கொள்ளுதலும் நியாயமல்லவே! என்றவாறாம்.
ப்ரேமத்தின் “கனத்தாலே” பக்தர்கள் இப்படி பரிஹாஸமுறையிலே பேசுவதும் பொருந்தும்.

வான் கடந்தான் = வானத்தை அளவிடிலும் அளவிட வொன்ணாத பெருமையை யுடையவனென்றும்
ஸ்வர்க்கத்தை யளந்தவனென்றும் பொருளாகலாம்.

————————————————————————–

வழக்கன்று கண்டாய் வலி சகடம் செற்றாய்
வழக்கு என்று நீ மதிக்க வேண்டா -குழக்கு அன்று
தீ விளவின் காய்க்கு எறிந்த தீமை திரு மாலே
பார் விளங்கச் செய்தாய் பழி—-19-

பதவுரை

திருமாலே! ; நீ;
(கிருஷ்ணசிசுவாயிருந்த போது)
வலி சகடம்-வலிதான சகடத்தை
செற்றாய்–உதைத்து முறித்துத் தள்ளினாய்;
வழக்கு அன்று கண்டாய்–இது உனக்குத் தகுதியன்று காண்;
வழக்கு என்று நீ மதிக்க வேண்டா–இது நமக்குத் தகுந்ததேயென்று நினைக்கலாகாது;
(இப்படிப்பட்ட ஸாஹஸச் செயல் செய்ததோடு நில்லாமல்)
குழ கன்று–(அஸுரனான) இளங்கன்றை
தீ விளவின் காய்க்கு எறிந்த–தீய விளங்காயை உகுக்கும் பொருட்டு வீசிப்போட்ட
தீமை–இந்தத் தீம்பான செயல்
பார் விளங்க–பூமியிலே பிரகாசிக்கும்படி
பழி செய்தாய்–தவறு செய்தாய்

நந்தகோபார் திருமாளிகையிலே ஒரு வண்டியின் கீழ்ப்புறத்திலே ஒரு தொட்டிலில் தான் கண்வளரும்போது
கம்ஸனாலேவப்பட்ட அஸுரனொருவன் அந்த வண்டியில் ஆவேசித்துத் தன்மேல் விழுந்து தன்னைக் கொல்ல முயன்ற போது
அதனையறிந்த தான் பாலுக்கு அழுகிற பாவனையிலே தான் சிறிய திருவடிகளை மேலேதூக்கி யுதைத்து
அச்சகடத்தை யொழித்தருளினது தன்னைத்தான் காப்பாற்றிக்கொடுத்து உலகத்தை வாழ்விக்கச் செய்த செயலாகிலும்,
ஸுகுமாரமான கைபடைத்த பிராட்டிமார்களும் தொட்டுப் பிடிக்கப் கூசும்படி அத்தனை ஸுகுமாரகவுள்ள திருவடியைக் கொண்டு
ஒரு முரட்டு வண்டியை உதைத்த விது மிகவும் தகுதியற்ற காரியமென்று தோற்றுவது மங்களாசாஸநபரர்களுக்கு ஸஹஜமாதலால்
‘வலிசகடம் செற்றது வழக்கன்று’ என்கிறார் முன்னடிகளில்.

கம்ஸனாலேவப்பட்ட அஸுரர்களில் ஒருவன் விளாமரத்தின் வடிவமாய், கண்ணன் தன்கீழ் வரும்போது மேல்விழுந்து
கொல்லுவதாக எண்ணி வந்து நிற்க அதனையறிந்த கண்ணபிரான், அவ்வாறே தன்னை முட்டிக்கொல்லும் பொருட்டுக்
கன்றின் வடிவங்கொண்டு வந்த மற்றோரஸுரனைப் பின்னிரண்டு கால்களையும் பிடித்து எடுத்துச் சுழற்றி
அவ்விளாமரத்தின்மேல் எறிய, கபித்தாஸுரனும் வத்ஸாஸுரனுமான இருவரும் சிதைந்து தமது அசுர வடிவத்துடனே
விழுந்து இறந்தனர் என்ற வரலாறு பின்னடிகளில் அறியத்தக்கது.
கடினப் பிரகிருதியான அஸுரனை அதிஸுகுமாரமான திருக்கையாலேபிடித்துச் சுழற்றியெறிந்த போது
அத்திருக்கைகள் எவ்வளவு öநாந்திருக்குமோ! என்று கொண்ட வயிற்றெரிச்சலால் வழக்கென்று நீ மதிக்கவேண்டா, என்றும்
‘பார்விளங்கத் தீமை செய்தாய்’ என்றும் பழி செய்தாய்’ என்றும் பேசினர்.

————————————————————————–

பழி பாவம் கை யகற்றிப் பல் காலும் நின்னை
வழி வாழ்வார் வாழ்வராம் மாதோ -வழுவின்றி
நாரணன் தன் நாமங்கள் நன்குணர்ந்து நன்கேத்தும்
காரணங்கள் தாமுடையார் தாம்—20-

பதவுரை

பழி–அபகீர்த்தியையும்
பாவம்–பாவங்களையும்
கை அகற்றி–நீக்கி
பல்காலும்–எப்போதும்
நின்னை–உன்னை
வழி வாழ்வார்–வழிப்பட்டு ஆச்ரயிக்குமவர்களும்
நாரணன் தன்–நாராயணனான வுன்னுடைய
நாமங்கள்–திருநாமங்களை
நன்கு உணர்ந்து–நன்றாக அறிந்து
வழு இன்றி–இடைவீடின்றி
நன்கு ஏத்தும் காரணங்கள் உடையார் தாம்–அழகாகத் துதிப்பதற்கேற்ற உபகரணங்களை யுடையவர்களும்
(ஆகிய இவ்விருகை யதிகாரிகளும்)
வாழ்னராம்–மகிழ்ந்து வாழப் பெறுவர்கள்.
(மாதோ- அசை).

இப்பாட்டுக்கு இரண்டு வகையான நிர்வாஹங்களுண்டு :
உபாயாந்தர நிஷ்டர்களெனப்படுகிற உபாஸகர்களை முன்னடிகளிலும்,
அநந்யோபாயரான ப்ரபந்தர்களைப் பின்னடிகளிலுங்குறிப்பதாகக்கொண்டு,
இவ்விருவகையதிகாரிகளும் எம்பெருமானையே உபேயமாகப் பெறுபவராதலால் வாழ்ச்சி பெற்றவராவர் என்பதாக ஒரு நிர்வாஹம்.

அன்றியே;
வழுவின்றி நாரணன்றன் நாமங்கள் நன்குணர்ந்து நன்கேத்துங் காரணங்கள் தாமுடையராகிப்
பழிபாவங் கையகற்றிப் பல்காலும் நின்னை வழிவாழ்வார் வாழ்வராம் – என்று ஒரே வாக்கியார்த்தமாக அந்வயித்து
ஒருவகை யதிகாரிகளைப் பற்றியே இப்பாசுரம் கூறுவதாக நிர்வஹிப்பதும் ஒரு புடையுண்டு.

தாங்கள் அறியாதிருக்கப் பிறர் ஏறிடும் அபகீர்த்தி பழியெனப்படும்;
தாங்களே புத்தியறிந்து செய்யும் பரஹிம்ஸை முதலியவை பாவமெனப்படும்;
இவ்விரண்டுக்கும் தங்களிடத்தில் அவகாசம் கொடாமல் : எப்போதும் பகவந்நாமங்களையே அநுஸந்தித்து
ஏத்திக் கொண்டிருக்கும்படியான ருசி விச்வாஸங்களையுடையவர்கள் வாழ்வார் என்றதாயிற்று.

மாதோ – அசை, இடைச்சொல்லுமாம். ஈற்றடியின் முதற்பதம் மோனையின் பத்திற்கிணங்க
‘தாரணங்கள்’ என்றிருக்கலா மென்றுகொண்ட பெரியவாச்சான் பிள்ளை அப்படியும் ஒரு பாடமருளிச் செய்கிறார்.
“தாரணங்கள் தாமுடையாரென்ற போது த்ருதியுடையாரென்றபடி.” என்பது வியாக்கியானம்.
‘தாரணம்’ என்ற வடசொல் திரிந்ததென்க. மனவுறுதியைச் சொன்னபடி
இனி ‘தாரணம்’ என்னும் வடசொல்லே வந்ததாகக் கொண்டால் உஜ்ஜீவநோபாயம் என்பது பொருளாம்.

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ முதல் ஆழ்வார்கள் -வைபவம் -ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தி -அடி ஒற்றி -ஸ்ரீ P .B A-ஸ்வாமிகள் .-

January 16, 2014

ஸ்ரீ பெரிய திரு மொழி திருக் கோவலூர் பதிகம் -நான்காவது பாசுரம் –
ஆங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து
அன்பு கூரும் அடியவர்கட்கு
ஆராவமுதம் ஆனான் தன்னை –

ஆசார்ய ஹிருதயம்-
மூன்றாம் பிரகரணம் -சூர்ணிகை -155–
பூண்ட நாள் சீர்க் கடலை யுட் கொண்டு
திருமேனி நன்னிறம் ஒத்து
உயிர் அளிப்பான் தீர்த்த காரராய் எங்கும் திரிந்து
ஜ்ஞானஹரத்தைப் பூரித்து தீங்கு இன்றி வாழ நிதி சொரிந்து
கொடுத்தது நினையாதே லஜ்ஜித்து
வெளுத்து ஒளித்துக் கண்டு உகந்து
பர சம்ருத்தியே பேறான
அன்பு கூரும் அடியவர்
உறையிலிடாதவர்
புயற்கை அருள்மாரி
குணம் திகழ் கொண்டல்
போல்வாரை மேகம் என்னும்–

மணவாள மா முனிகள் வியாக்யானம் –
ஆங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து ஆங்கு கூரும் அடியவரான
முதல் ஆழ்வார்கள் –
அப்படிப் பட்ட அடியவர்கட்கு அமுதமாய் இருந்தவன் திருக் கோவலூர் எம்பெருமான்
அடியவர் –
அன்பு கூரும் அடியவர் –
ஆங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து ஆங்கு கூரும் அடியவர்-
என்று வகுத்துக் கொண்டு
அடியவர் -என்றது பேய் ஆழ்வாரை –
இவர் -திருக்கண்டேன் –இன்றே கண்டேன் -திருவடி ஒன்றே உத்தேச்யம் என்று உபகிரமித்து
பைம்பொன் முடியான் அடி இணைக்கே பூரித்து என் நெஞ்சே புரி-என்றும்
முயன்று தொழு நெஞ்சே தண் அலங்கல் மாலையான் தாள் -என்றும் –
கரியான் கழலே தெருள் தன் மேல் கண்டாய் தெளி -என்றும்
வாழும் வகை அறிந்தேன் –எங்கள் பெருமான் அடி சேரப் பெற்று -என்றும்
மத்யத்தில் -40-60-பாசுரங்களில் பேசி அருளி –
குட்டத்துக் கோள் முதலை துஞ்சக் குறித்து எறிந்த சக்கரத்தான் தாள் முதலே நங்கட்கு சார்வு -என்று
அவசானத்திலும் தாளையே பேசித் தலைக் கட்டினார்
ஆக இப்படி அடியையே சிக்கெனப் பிடித்து -பேய் ஆழ்வார் அடியார் -ஆகிறார் –

அன்பு கூரும் அடியவர் -அன்பு மிகுந்த அடியவர் -பூதத் ஆழ்வார்
அன்பே தகளியா -தொடங்கி
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன் அளவன்றால் யானுடைய அன்பு -என்று
தம் அன்பு மிகுதியை வாய் விட்டு உரைத்தவர் –

இனி
அரும்பிக் கண்ணீர் சோறும் அடியவர் – பொய்கை ஆழ்வார்
பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன் –
இப்படிப் பட்ட மூன்று அடிவர்கட்கும் ஆரா வமுதம் ஆனான் -திருக் கோவலூர் ஆயன்–

ஸ்ரீ தேசிகனும்
காஸார பூர்வே கவி முகய விமர்த்த ஜன்மா பண்ணா தடேஷூ
ஸூ பகஸ்ய ரசோ பஹூஸதே –
அமுதம் -என்ற ஆழ்வார் சொல்லை இங்கே கரும்பு -என்கிறார் -பரம போக்யதை –
குழாவரி வண்டு இசைபாடும் பாடல் கேட்டு தீம் கரும்பு கண் வளரும் கழனி சூழ்ந்த -என்கிற பாசுரம் பற்றியே தேசிகன் ஸ்ரீ ஸூக்தி

திருமங்கை ஆழ்வார்
அடியவன்
அடியவர்
அடியவர்கள்
என்று முப்புரி யூட்டினமை-காண்க-
ஸ்பஷ்டமாக அருளாமல் -ரசம் மிக்கு -அனுபவிக்க-

ஆளவந்தார் -மாதா பிதா யுவதயா-நம் ஆழ்வார் திரு நாமம் சொல்ல வில்லை –
வகுளாபிராமம் -விசேஷண சுவாரஸ்யம் –

விந்தை மேய கற்புடை மடக்கன்னி
பல்லவன் -வில்லவன் -வயிரமேகன் -செங்கணான் கோச் சோழன் -வாய் விட்டு
திருமங்கை ஆழ்வார் பேசினது அந்த வ்யக்திகள் திறத்தில் விசேஷ பிரதிபத்தி இல்லாமை பற்றியே –

எம்பெருமானார் -ஆமுதல்வன் -ஆளவந்தார் -கடாஷித்து அருள
அவர் அருளிய தனியன் –
யத்பதாம் போருஹத்யான வித்வச்த அசேஷ கல்மஷ
வஸ்துதாம் உபயாதோஹம்யாமுநேயம் நமாமி தம் –
பதாம் போருஹ -ஐந்து எழுத்துகளால் -தம்முடைய பஞ்ச ஆச்சார்யர்களையும் —
பதாம் போருஹ -பராங்குச தாசர் பெரிய நம்பியை இப்படி அருளுகிறார் என்பர்-

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பூதத் ஆழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதி -91-100–பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

September 20, 2013

நான்கு பாசுரங்கள் பர உபதேசம் -இதில் அநிஷ்ட நிவ்ருத்திக்கும் அடுத்ததில் இஷ்ட ப்ராப்திக்கும் உபதேசம்

இவை இரண்டும் ஆஸ்திக புத்தி உள்ளவர்
அடுத்ததில் நாஸ்திகர் சாரு வாகர் -லோகாயுதம் -உபதேசம்
அடுத்ததில் தம்மை ஒத்த முமுஷுக்களுக்கு உபதேசம்

அடுத்த ஆறும் தான் பெற்ற பேற்றைச் சொல்லி நிகமிக்கிறார்

———–

அர்த்தஸ் சமய ப்ராப்தா -என்கிறபடியே-ஒன்றிலே எல்லாம் உண்டான விஷயம் –
பிரகிருதி வச்யரான பின்பு நரகம் ஒருவனைத் தப்பாது -அவ் விஷயத்தை வணங்கப் பாருங்கோள்-

பின்னால் அரு நரகம் சேராமல் பேதுறுவீர்
முன்னால் வணங்க முயல்மினோ -பன்னூல்
அளந்தான் இக்கார் கடல் சூழ் ஞாலத்தை எல்லாம்
அளந்தான் அவன் சேவடி –91-

பதவுரை

பின்னால்–சரீரம் விழுந்த பின்பு
அரு நகரம்–கடினமான நரகத்தை
சேராமல்–அடையாமலிருக்கும் படிக்கு
பேதுறுவீர்–மனங்கலங்கியிருக்கும் மனிசர்களே!-இதனால் ஆஸ்திக புத்தி உள்ளவர்களே என்றவாறு
பல் நூல்–பலவகைப்பட்ட சாஸ்த்ரங்களினால்
அளந்தானை–நிச்சயிக்கப்படுபவனும்-வேதைக சமைதி கம்யன் அன்றோ –
கார் கடல்சூழ் ஞாலத்தை எல்லாம் அளந்தானவன்–கரிய கடல் சூழப்பட்ட பூமியையெல்லாம்
அளந்து கொண்டவனுமான எம்பெருமானுடைய
சே அடி–செவ்விய திருவடிகளை
முன்னால்–இப்போதே
வணங்க–வணங்குமாறு
முயல்மின்–முயற்சி செய்யுங்கள்.-உலகம் அளந்த பொன்னடியே அடைந்து உய்மின் என்றவாறு

பன்னூல் அளந்தானை –
எல்லா பிரமாணங்களாலும் ஜிஞ்ஞா சிக்கப் பட்டவனை

(அறிய ஆசை கொண்டு -அளவிட முடியாதவன் என்று அளந்து முடித்தன -யதோ வாசோ நிவர்த்தந்தே –

பரத்வம் சொல்லி -ஆஸ்ரித கார்ய ஆபாத கல்யாண குண விசிஷ்டன் என்றதாயிற்று )

இக்கார் கடல் சூழ் ஞாலத்தை எல்லாம் அளந்தான் அவன் சேவடி –
வேதைக சமைதி கம்யமாய்
அரிதாய் இருக்குமோ வென்னில் –
வரையாதே எல்லார் தலையிலும் அடியை வைத்த
சுலபனுடைய திருவடிகளை

(இத்தால் ஸுலப்ய ஸுசீல்யம் -ஆஸ்ரித ஸுகர்ய ஆபாத குண விசிஷ்டன் என்றதாயிற்று )

பின்னால் அரு நரகம் சேராமல் பேதுறுவீர் முன்னால் வணங்க முயல்மினோ –
முன்னடி தோற்றாதே பாபத்தைப் பண்ணி
பின்னை அனுதாபம் பிறந்து
பேதுற்று இருக்கிற நீங்கள்
சரீர சமனந்தரம் வடிம்பிட்டு நிற்கிறது
பின்னைச் செய்கிறோம் என்று ஆறி இருக்க ஒண்ணாது –
முற்பட வணங்கி( ஆத்ம உஜ்ஜீவனத்துக்கு -இத்தால் பக்தியையும் ப்ரபத்தியையும் சொன்னவாறு )
பின்னை தேக யாத்ரை பண்ணப் பாருங்கோள்-

(பரம காருணிகர் ஆகையாலே ஸம்ஸாரிகள் இழந்து போகலாகாது என்று நான்கு பாட்டால அவர்களுக்கு உபதேசிக்கிறார்
அளந்தான் –யதோ வாஸோ நிவர்த்தந்தே -ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்களால் ஒரு மிடறாக அளத்ததற்கு அரியவன் என்று அளக்கப்பட்டவன்
யஸ்யா மதம் தஸ்ய மதம்
வேதா ஹமேதம் புருஷம் மஹாந்தம்
ச பூமிம் விஸ்வதோ வ்ருத்வா
இவனை வணங்குவதே தக்கது என்று உபதேசிக்கிறார் இதில் -)

————————————————————————–

சேவடி வணங்கி அநிஷ்ட நிவ்ருத்தி கீழ்
இதில் திரு நாமம் ஏத்தி இஷ்ட பிராப்தி பெற உபதேசம்

அநிஷ்ட நிவ்ருத்திக்கும் -இஷ்ட ப்ராப்திக்கும் இது தானே –ரக்ஷணத்துக்கும்- இதற்காகவே கொடி கட்டி சேவை சாதிக்கிறான்

திரு நாம சங்கீர்த்தனம் -உபாயமாக சொல்லி ப்ரயோஜனாந்தரங்களைப் பெற சாமான்ய ஆஸ்ரிதர்களைக் கூட்டி மேலே உயர்த்தி
மேல் 94- பாசுரத்தில் தம்மைப் போன்றவர்களுக்கு உபதேசம்

அடியால் முன் கஞ்சனைச் செற்று அமரர் ஏத்தும்
படியான் கொடி மேல் புள் கொண்டான் நெடியான் தன்
நாமமே ஏத்துமின்கள் ஏத்தினால் தாம் வேண்டும்
காமமே காட்டும் கடிது–92-

பதவுரை

முன்–முன்னே
அடியால்–திருவடியினால்
கஞசனே–கம்ஸனை
செற்று–உதைத்துக் கொன்றதனாலே
அமரர் ஏத்தும் படியான்–தேவர்கள் துதிக்கும் படியாக வுள்ளவனும்
கொடி மேல் புள் கொண்டான்–த்வஜத்திலே கருட பக்ஷியையுடைய வனுமான
நெடியான் தன்–ஸர்வேஸ்வரனுடைய
நாமமே–திருநாமங்களையே கொண்டு
ஏத்துமின்கள்–ஸ்தோத்ரம் பண்ணுங்கள்
ஏத்தினால்–அப்படி ஸ்தோத்ரம் பண்ணினால்
தாம் வேண்டும் காமம்–தாங்கள் அபேக்ஷிக்கும் புருஷார்த்தத்தை
கடிது–விரைவாக
காட்டும்–(அத் திருநாமம்) பெறுவிக்கும்

அடியால் முன் கஞ்சனைச் செற்று
கம்சன் ஈஸ்வரனை வஞ்சிக்க நினைத்ததை
அவனுக்கு முன்னே கோலித்
திருவடிகளாலே மார்பிலே ஏறி முடித்தவன் –

அமரர் ஏத்தும் படியான் –
குடி இருப்பு பெற்றோம் என்று
ப்ரஹ்மாதிகள் ஏத்தும் ஸ்வபாவத்தை உடையவன் –

கொடி மேல் புள் கொண்டான் –
ரஷணத்துக்கு கொடி கட்டி இருக்கிறவன்

நெடியான் தன் நாமமே ஏத்துமின்கள் –
ஒரு நாள் ஒரு திரு நாமம் சொன்னவனை
ஒரு நாளும் மறவாதவனுடைய
திரு நாமங்களை ஏத்துங்கோள் –

ஏத்தினால் தாம் வேண்டும் காமமே காட்டும்
1-பிரதிபந்தகம் போக்குகை-
2-ஐஸ்வர்யம் -3-ஆத்ம லாபம்- 4-தன்னைத் தருகை- எல்லாம் கிடைக்கும்-

(ஸகல பல ப்ரதோ விஷ்ணு அன்றோ)

கடிது —
தேவதாந்தர பஜனம் போலே-பலத்துக்கு விளம்பம் இல்லை-அது கூடா முன்னம்-

(படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய் -திருவாய் -9-2-2-
அநிஷ்ட நிவ்ருத்தியையும் இஷ்ட ப்ராப்தியையும் அளித்து ரக்ஷிப்பவன் இவனே என்று
ஸூ பர்ணோ அஸி கருத்மான் -வேதாத்மா விஹகேஸ்வரனை கொடி கட்டிக் கொண்டு இருப்பவன்
சேவல் அம் கொடியோய்
செவ்வாய் உவணத்து உயர் கொடியோனே
புள்ளின் நிவந்து ஓங்கி உயர் கொடிச் சேவலோய்
அவிழ் துழாய் மலர் தரு செல்வத்துப் புள் மிசைக் கொடியோனும்
என்று பரிபாடல் கோஷிக்குமே
ஆசிய ஜா நந்தோ நாம சித்த விவக்தந
த்ருவாஸோ அஸ்ய கீரயோ ஜனாஸ
ஐஹ லௌகிகம் ஐஸ்வர்யம் ஸ்வர்க்காத்யம் பார லௌகிகம்
கைவல்யம் பகவந்தம் ச மந்த்ரோயம் சாதயிஷ்யதி
ப்ரயோஜனாந்தர பரர்களும் இவனையே ஸ்துதிக்க வேண்டும் என்கிறார் ஆயிற்று–)

————————————————————————

கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று இருக்கிறோம் நீங்கள் நம்பினாலும் இல்லா விட்டாலும்
உண்மை நிலை -நரகமும் போவீர்கள் -அங்கு யமபடர் நலிவர்கள் என்ன
எங்களுக்கோ -பிரதிபந்தகங்கள் மிக்கு உள்ளனவே என்ன
அவற்றைப் போக்க பரிகரம் உள்ளவன் –
முன்னமே சிறு பாலகனாய் இருக்கச் செய்தே பூதனா தொடக்கமாக கேசி பர்யந்தமாக
ஸமஸ்த விரோதிகளை போக்கி அருளினவன் அன்றோ
அவனை ஏத்துங்கோள் -என்று உபதேசிக்கிறார் இதில்


ஆஸ்ரயிக்கைக்கு ஒரு உபாயம் சொல்லுகிறது-

கடிது கொடு நரகம் பிற்காலும் செய்கை
கொடிது என்றது கூடா முன்னம் -வடி சங்கம்
கொண்டானைக் கூந்தல் வாய் கீண்டானைக் கொங்கை நஞ்சு
உண்டானை ஏத்துமினோ உற்று–93-

பதவுரை

கொடு நரகம்-க்ரூரமான நரகமானது
கடிது–கண் கொண்டு காணவொண்ணாதபடி கோரமாயிருக்கும்
பிற்காலும்–அதற்குமேலும்
செய்கை–(அங்கு யம படர்கள் செய்யும் யாதனைச்) செயல்கள்
கொடிது–பொறுக்க முடியாதனவாயிருக்கும்,
என்று–என்று தெரிந்து கொண்டு
அது கூடா முன்னம்–அந்த நரக வேதனை நேராதபடி
வடி சங்கம் கொண்டானை–கூர்மையான த்வநியை யுடைய சங்கைத் திருக் கையிலே உடையவனும்
கூந்தல் வாய் கீண்டானை–கேசியின் வாயைக் கீண்டொழித் தவனும்
கொங்கை நஞ்சு உண்டானை–(பேய்ச்சின்) மூலையில் தடவி யிருந்த விஷத்தை உண்டவனுமான எம்பெருமானை
உற்று–பொருந்தி
ஏத்துமின்–ஸ்தோத்திரம் பண்ணுங்கள்

கூந்தல் -கேசியினுடைய

கடிது இத்யாதி
நரக தர்சனமோ கடிது
பின்பு அங்குச் செயல்களோ கொடிது –
ருதிரவாறுகளிலே புகடுகை
வாள் போன்று இருந்துள்ள கோரைகளிலே ஏறிடுகை
xஇவற்றை அனுசந்தித்து

என்றது கூடா முன்னம்
அவை கிட்டுவதுக்கு முன்னே

வடி சங்கம் கொண்டானை
கூரிய ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை
கையிலே ஆயுதமாக கொண்டவனை

கூந்தல் வாய் கீண்டானை
கேசியின் வாயைக் கிழித்தவனை

கொங்கை நஞ்சு உண்டானை
பூதனையை முடிதவனை

ஏத்துமினோ உற்று –
நரகம் கொடிது என்று அனுசந்திக்க
விரோதி நிரசன சீலனானவனைக் கிட்டி ஏத்தலாம்-

(தென்னவன் தமர் செப்பம் இலாதார் சேவதக்குவார்(சே தாக்குவார் -காளைக்கு காயடிப்பார் ) போலப் புகுந்து பின்னும்
வன் கயிற்றால் பிணித்து எற்றிப் பின் முன்னாக இழுப்பதன் முன்னம் -பெரியாழ்வார் -4-5-7-
நமன் தமர் செய்யும் வேதனைக்கு ஒடுங்கி நடுங்கினேன் -பெரிய திருமொழி -1-6-3-
நமன் தமர் பற்றி எற்றி வைத்து எரி எழுகின்ற செம்பினால் இயன்ற பாவையைப் பாவீ தழுவு என மொழிவதற்கு அங்கி -1-6-4-
ச கோஷா தார்த்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயாணி வ்யதாரயத்
வரி வளையால் குறைவில்லாப் பெரு முழக்கால் அடங்காரை எரி அழலம் புக ஊதி இரு நிலம் முன் துயர் தவிர்த்த –விரி புகழான் -திருவாய் -4-8-8-
கூந்தல் -கேசி
கூந்தல் எரி சினம் கொன்றாய் –பரிபாடல்
மேவார் விடுத்தந்த கூந்தற் குதிரையை வாய் படுத்திட்டு -கலித்தொகை
கூந்தன் மா கொன்று குடமாடிக் கோவலனாய் -முத்தொள்ளாயிரம்
இப்படி விரோதிகளை நிரஸனம் பண்ணி அருளியது போல் உங்கள் நரக பயத்தையும் போக்க வல்லவன் அவன் ஒருவனே என்கிறார்
நாஸ்திகர்கள் பகவத் சமாஸ்ரயணம் பண்ணுவதற்கு உபாயம் நரக பயத்தை அனுசந்திக்கை என்றபடி -)

————————————————————————–

தம் போல்வார் -அர்ச்சாவதாரங்களில் மண்டி இருப்பதற்குத் தக்க
திருப்பாடகம் ஸ்வயம் பிரயோஜனமாக ஏத்தி இருப்பவர்கள் அன்றோ
பாடு பெருமை -அகம் -பெருமை தோற்ற வீற்று இருப்பவன் –
இவர் படியைக் காட்டி முமுஷுக்களுக்கு உபதேசம்

என்னுடைய நெஞ்சு ஏத்துகிறாற் போலே-நீங்களும் ஏத்துங்கோள் என்கிறார் –
தான் நமஸ்கரித்துக் காட்டி பிரஜையை நமஸ்கரிப்பாரைப் போலே

உற்று வணங்கித் தொழுமின் உலகு ஏழும்
முற்றும் விழுங்கும் முகில் வண்ணன் -பற்றிப்
பொருந்தா தான் மார்பிடந்து பூம் பாடகத்துள்
இருந்தானை ஏத்தும் என் நெஞ்சு–94-

பதவுரை

உலகு எழும் முற்றும் விழுங்கும்–உலகங்களை யெல்லாம் (பிரளயங்கொள்ளாதபடி) அமுது செய்தவனும்
முகில் வண்ணன்–மேகம் போன்ற வடிவை யுடையவனும்
பொருந்தா தான்–(ப்ரஹ்லாதனுக்கு) சத்ருவான் இரணியனுடைய
மார்பு–மார்வை
பற்றி–பிடித்து
இடந்து–கிழித்தவனும்
பூ பாடகத்துள் இருந்தானை–அழகிய திருப் பாடகமென்னுந் திருப்பதியில் வீற்றிருப்பவனுமான எம்பெருமானை
என் நெஞ்சு–என் மனமானது
ஏத்தும்–துதிக்கும் (நீங்களும் இப்படியே)
உற்று வணங்கி தொழுமின்–பொருந்தி வணங்கி ஆஸ்ரயியுங்கோள்.

உற்று வணங்கித் தொழுமின் –
கிட்டி அபிமான சூன்யராய் தொழுங்கோள்

(வணங்கி தொழுது -அஹங்காரம் தொலைவது வணக்கம் -தொழுவது அஞ்சலி )

உலகு ஏழும் முற்றும் விழுங்கும் முகில் வண்ணன்    
லோகம் ஒன்றும் பிரி கதிர் படாதபடி
தன் வயிற்றிலே வைத்து ரஷித்து
பிரஜை பால் குடித்தால் தாய் உடம்பு நிறம் பெறுமா போலே
ஸ்ரமஹரமான வடிவை உடையவனாய்

பற்றிப் பொருந்தாதான் மார்பிடந்து  –
(திருத்தவே முடியாத )பொருந்தாத ஹிரண்யன் மார்பை பற்றி இடந்து

பூம் பாடகத்துள் இருந்தானை ஏத்தும் என் நெஞ்சு –
பின்னும் ஆஸ்ரித விரோதிகளைப் போக்க வேணும் என்று
திருப் பாடகத்திலே எழுந்தருளி இருக்கிறவனை
ஏத்தா நின்றது என் நெஞ்சு-

(தான் நமஸ்கரித்துக் காட்டிக் குழந்தைகளை பழக்கி வைக்கும் தாய் போல் முமுஷுக்களாய் இருப்பவருக்கு நமஸ்கரித்துக் காட்டி அருளுகிறார் –
வள வேழ் உலகில் போல் அகலாமல் தொழுமின்
ஒரு பொருள் புறப்பாடு இன்றி திரு வயிற்றில் வைத்து ரஷித்த சர்வாதிகன் இவனே
உளம் தொட்டு –பெரியாழ்வார் -1-6-9- அவனுக்கும் நெஞ்சில் ஈரப்பசை உண்டோ என்று தேடுமவன் –
பாடகம் –பாடு அகம் -பெருமை தோற்ற வீற்று இருக்கும் திவ்ய தேசம்
பூம் பாடகம் -இனிமை
உலகு ஏழும் முற்றும் விழுங்கும் முகில் வண்ணன் -ஸர்வ ரக்ஷகத்வம்
பொருந்தாதான் மார்பு இடந்து -ஸ்வா பாவிக -ஆஸ்ரித விரோதி நிரசன சீலன் )

————————————————————————-

என் நெஞ்சமேயான் என் சென்னியான் தானவனை
வன்னெஞ்சம் கீண்ட மணி வண்ணன் -முன்னம் சேய்
ஊழியான் ஊழி பெயர்த்தான் உலகு ஏத்தும்
ஆழியான் அத்தி ஊரான் -95-

பதவுரை

தானவனை–இரணியனாகிற அகரனுடைய
வல் நெஞ்சம்-வலிய மார்வை
கீண்ட–கிழித்தொழித்தவனும்
மணி வண்ணன்–நீல மணி போன்ற நிறத்தை யுடையவனும்
முன்னம் செய் ஊழியான்–நெடுங்காலமாக வுள்ளவனும்-கால உபலஷிதமான சகல -சேதன அசேதனங்களை ஸூஷ்ம மாகக் கொண்டவன்
ஊழி பெயர்த்தான்–காலம் முதலிய ஸகல வஸ்துக்களையும் உண்டாக்கினவனும்
உலகு ஏத்தும் ஆழியான்–உலகத்தவரால் துதிக்கப் பட்டவனாய்க் கொண்டு திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பவனும்
அத்தியூரான்–ஹஸ்தி கிரியில் எழுந்தருளி யிருப்பவனுமான எம்பெருமான்
என் நெஞசம் மேயான்–என்னுடைய நெஞ்சிலே பொருந்தி யிரா நின்றான்-பூதத்தாழ்வார் இன்றும் இவ்வாறே சேவை காஞ்சியில்
என் சென்னியான்–என்னுடைய தலையிலே உள்ளான்.

முன்னம் சேய் ஊழியான்
ஊழி பெயர்த்தான்
உலகு ஏத்தும் ஆழியான்
தானவனை வன்னெஞ்சம் கீண்ட மணி வண்ணன்
அத்தி ஊரான்
என் நெஞ்சமேயான் –
என் சென்னியான் -என்று அந்வய க்ரமம்

சேய்-அழகிய

ஹிரண்யனுடைய -ஈஸ்வரோஹம் –
என்ற திண்ணிய நெஞ்சைக் கீண்டு
சிறுக்கன் விரோதி போயிற்று என்று
புகர்த்த வடிவை உடையவன் –

முன்னம் இத்யாதி –
தன்னாலே ஸ்ருஷ்டமான ஜகத்திலே உள்ளான் –

ஊழி இத்யாதி –
காலோபலஷித சகல பதார்த்தங்களையும்
உண்டாக்கினவன் -(அப்பிள்ளை ஸ்ருஷ்டியும் சம்ஹாரத்தையும் சொல்லிற்று என்பர் )
எல்லாரும் ஏத்தும்படி திருப் பாற் கடலிலே
கண் வளர்ந்து அருளுகிறவன் -(அநிருத்த வ்யூஹ நாராயணன் )
திரு அத்தியூரில் வசிக்கிறவன் –

என் நெஞ்சின் உள்ளான் –
தலை மேல் தாளிணைகள் நிலை பேரான்
என் நெஞ்சத்து(10-6-திருவட்டாறு எம்பெருமான் ) -என்கிறபடியே-

(ஸ்வஸ்தி ஹஸ்தி கிரி மஸ்த சேகர சந்த நோது மயி சந்ததம் ஹரி
நிஸ் சமாப்யதிக மப்ய தத்த யம் தேவம் ஓவ்பநிஷதீ ஸரஸ்வதீ–ஸ்ரீ வரத ராஜ ஸ்தவம்1–

ஓவ்பநிஷதீ ஸரஸ்வதீ–ஒவ்பநிஷத்துக்களின் வாக்கானது
யம் தேவம் -யாவன் ஒரு எம்பெருமானை
நிஸ் சம அப்யதிகம் அப்ய தத்த -ஓத்தாரும் மிக்காணும் இல்லாதவனாக ஓதிற்றோ
ஹஸ்தி கிரி மஸ்த சேகர-ஸ்ரீ ஹஸ்திகிரி சிகரத்தின் ஆபரணமாய் உள்ள
ஸ ஹரி -அந்த ப்ரணதார்த்தி ஹர ஸ்ரீ வரதன்
மயி-அடியேன் மீது
சந்ததம்-எப்போதும்
ஸ்வஸ்தி சந்த நோது -நன்மையை நிரம்பச் செய்ய வேணும்)

(சதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத்
ஏகோ ஹவை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா ந ஈஸாந
பஹுஸ்யாம் ப்ரஜாயேயத்
த்ரி பாதூர்த்வ உதைத் புருஷ பாதோஸ் யேஹாபவாத் புந
ததோ விஷ்வங் வயக்ராமத் சாஸநா நஸேந அபி
ந ச ராக்ஷஸ சேஷ்டித
அனந்தன் பாலும் கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து என்
மனந்தனுள்ளே வந்து வைகி வாழ செய்தாய் எம்பிரான்
நினைந்து என்னுள்ளே நின்று நெக்கு கண்கள் அசும்பு ஒழுக
நினைந்து இருந்தே சிரமம் தீர்த்தேன் நேமி நெடியவனே – 5-4 -8-

பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என்
மனக்கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ
தனிக்கடலே தனிச் சுடரே தனி உலகே என்று என்று
உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினையே -5- 4-9 –

தட வரை வாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடும் கொடி போலே
சுடர் ஒளியாய் நெஞ்சின் உள்ளே தோன்றும் என் சோதி நம்பீ
வட தடமும் வைகுந்தமும் மதிள் த்வராவதியும்
இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே -5 -4-10 –

கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும்
புல்லென்று ஒழிந்தன கொல் ஏ பாவம் வெல்ல
நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான்
அடியேனது உள்ளத் தகம்–-பெரிய திருவந்தாதி -68-

தலை மேலே தாளிணைகள் –நிலை பேரான் என் நெஞ்சத்து -திருவாய் -10-6-6-
இவையும் அவையும் -திருவாய் -1-9- சாத்மிக்க சாத்மிக்க போகத்தை அளிப்பவன் கிருஷி பண்ணி பரம புருஷார்த்தம் பெறப் பெற்றானே
இத்தகைய பராத் பரன் மிகத் தாழ்ந்த என் பக்கலிலே காட்டி அருளும் அபிநிவேச அதிசயம் இருந்த படி என் என்று விஸ்மிதர் ஆகிறார் -)

ஆழ்வார் திருவடி என்று அனுசந்திக்கவே நம்முள்ளும் இருப்பதை உணர்வோம் -அவன் வியாப்தி எங்கும் உண்டே –

அத்தை நாம் உணர்ந்து ஆஸ்ரயிக்கவே நமக்கும் பேறு ஸித்தம் என்று

————————————————————————–

(பிள்ளை யூர்வான் அத்தி யூரான் -கருட வாஹனம் பிரசித்தம் -பரத்வ ஸுலப்ய ஆகிய )இரண்டாலும் -கருட வாகனத்வம் -சேஷ சாயித்வம் -சர்வேஸ்வரன் என்றபடி –

அத்தி யூரான் புள்ளை யூர்வான் அணி மணியின்
துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் -முத்தீ
மறையாவான் மா கடல் நஞ்சுண்டான் தனக்கும்
இறையாவான் எங்கள் பிரான் –96-

பதவுரை

புள்ளை ஊர்வான்–பெரிய திருவடியை வாஹனமாகக் கொண்டு நடந்து மவனும்
அணி மணியின் துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான்–அழகிய மாணிக்கங்களோடு கூடினவனாய்
படப் பொறிகளை யுடையனான ஆதிசேஷன் மேல் பள்ளி கொள்பவனும்
முத்தீ ஆவான்–மூன்று அக்நிகளாலே ஆராதிக்கப்படுகிறவனும்
மறை ஆவான்–வேதங்களால் பிரதிபாதிக்கப்படுகிறவனும்
மா கடல் நஞ்சு உண்டான் தனக்கும் இறை ஆவான்–பெரிய கடலில் நின்று உண்டான விஷத்தை
உட்கொண்டவனான ருத்ரனுக்கும் ஸ்வாமியாயிருப்பவனுமான
எங்கள் பிரான்–எம்பெருமான்
அத்தியூரான்–ஸ்ரீஹஸ்திகிரியிலே எழுந்தருளி யிருக்கிறான்.

(எங்கள் பிரான் ஆகைக்காக அவன் சாதிக்கும் பட்டியல்
மா கடல் நஞ்சு உண்டான் தனக்கும் இறை ஆவான்– தேவாதி தேவன் ஆனவன்
முத்தீ மறையாவான் -வேதைக சமைதி காம்யன் ஆனான்
அணி மணியின் துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் -வ்யூஹ வாஸூ தேவன் ஆனான்
புள்ளை யூர்வான் -கருட வாஹனானான்
அத்தி யூரான் -திவ்ய தேசங்கள் தோறும் சேவை சாதிக்கிறான்
தத் -அவ்வளவு பெரியவன்
த்வம் -இவ்வளவு எளியன்
அஸி -ஆகிறான்
ஸ்ரீ ரெங்க நாதன் மம நாதன்
அரங்கமாளி என்னை ஆளி
ஆஸி)

முத்தீ மறையாவான் –மூன்று அக்னி யையும் சொல்லப்படா நின்ற
வேதத்தாலே சமாராத்ரயதயா பிரதிபாதிகப் பட்டவன்

முத்தி மறையாவான் -என்று பாடமாகில்
மோஷ ப்ரதிபாதக வேதத்தாலே பிரதிபாத்யன் என்றபடி –

மா கடல் இத்யாதி
அபிமானியான ருத்ரனுக்கும் ஈஸ்வரன் ஆனவன்
எங்கள் பிரான் ஆகைக்காக திரு அத்தியூரில் நின்றான்-

(முத்தீ மறை -கர்ம காண்டம் சர்வ கர்ம ஆராதணீயன் –
வேதாந்தம் -முத்தி மறை -மோக்ஷ பிரதன் வேதாந்த சித்தம் அன்றோ
ஆக இரண்டையும் சொன்னவாறு -இரண்டும் சேர்ந்தே வேதங்கள்)

(கால் இல்லா யானை மேல் பறந்து காட்டி விரோதிகளை நிரசித்த ஐதிக்யம் –
ஏகாம்பரர் கோயிலில் முன்பே -இன்றும் யானை வாகன ஏசல் கண்டு அருளுகிறார்
யானை வாஹனத்துக்கு கால் இல்லை இங்கு )

(ஆதி ராஜ்யம் அதிகம் புவநாநாம் ஈஸதே பிஸூ நயன் கில மௌளி -ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் -25-
ஓடும் புள்ளேறி -திருவாய் -1-8-1-
நாகத்தின் மேல் துயில்வான் -அமி தவ்ஜா பர்யங்க தஸ்மிந் ப்ரஹ்ம ஆஸ்தே –கௌஷீதகி
முத்தீ மறை யாவான் -என்று முத்தி மறையாவான் என்றும் –
வேதத்து மறை நீ -பரிபாடல்
கேஸீ விஷஸ்ய பாத்ரேண யத் ருத்ரேண அபிபத் ஸஹ -ருக் மண்டலம் -இவன் உள்ளே இருந்ததாலே நீல கண்டன் ஆலஹால விஷம் உண்ண முடிந்தது -பாத்திரம் போல் அன்றோ ருத்ரனும் –
எங்கள் பிரான் அத்தியூரான் -எங்கள் என்று -கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு ஏழு பிறப்பும் -2-7-1- -சம்பந்த சம்பந்திகளையும் கூட்டிச் சொல்கிறார்
அனைவரையும் உபகரித்து அருளவே ஸ்ரீ ஹஸ்தகிரியில் நித்ய வாஸம் செய்து அருளுகிறார் என்கிறார் – )

————————————————————————–

(எங்கள் பிரான் ஆவதற்காகவே -நின்ற திருக்கோலம் –
பரத்வமும் சயன திருக்கோலம் -ஆஸ்ரித பாரதந்தர்யம் ஸுலப்ய சவுந்தர்யங்களையும் காட்டி
சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரேன் என்று உள்ளான்

அங்கு நின்று எழுதி வாங்கிக் கொண்டு அத்தை திடப்படுத்த இங்கே சயனம் என்றுமாம் )

எங்கள் பெருமான் இமையோர் தலைமகன் நீ
செங்கண் நெடுமால் திரு மார்பா -பொங்கு
பட மூக்கின் ஆயிர வாய்ப் பாம்பணை மேல் சேர்ந்தாய்
குட மூக்கில் கோயிலாகக் கொண்டு–97-

பதவுரை

செம் கண் நெடுமால்–சிவந்த திருக் கண்களை யுடைய ஸர்வேச்வரனே!
திரு மார்பா-பிராட்டியைத் திரு மார்பிலுடையவனே!
இமையோர் தலை மகன் நீ–நித்ய ஸூரிகளுக்குத் தலைவனான நீ
எங்கள் பெருமான்–எங்களுக்கு ரக்ஷகனாய்க் கொண்டு
குடமூக்கு இல்–கும்பகோண க்ஷேத்ரத்தை-இல்லமாகக் கொண்டு
கோயில் ஆ கொண்டு–கோயிலாகத் திருவுள்ளம் பற்றி
பொங்கு படம் மூக்கின்–விகஸித்த படங்களையும் மூக்கையுமுடையவனும்
ஆயிரம் வாய்–ஆயிரம் வாயையுடையவனுமான
பாம்பு–ஆதி சேஷனாகிற
அணை மேல்–படுக்கையின் மீது
சேர்ந்தாய்–பள்ளி கொண்டருளினாய்.

எங்களுக்கு ஸ்வாமியான-
சௌலப்யத்துக்கு மேலே-
நித்ய ஸூரி போக்யனாய்-
ஸ்ருதி பிரசித்தமான கண்ணை உடையவனாய்-
ஸ்ரீ ய பதியானவனே-
விஸ்த்ருதமான படங்களையும்
மூக்கையும் உடையனான
திரு வநந்த ஆழ்வான் மேல் கண் வளர்ந்தாய்
திருக் குடந்தையைக் கோயிலாகக் கொண்டு
பாம்பணை மேல் சேர்ந்தாய்
என்று அந்வயம்-

(திருமார்பா-பரத்வ ஸுலப்யங்களுக்கு நிதானம் -புருஷகாரம் நமக்கு உபாய உபேயங்களுக்கு -நித்ய முக்தர்களுக்கு கைங்கர்ய விருத்திக்கே)

(நீ ஒவ்வொன்றிலும் சேர்த்து வியாக்யானம்
எங்கள் பெருமான்நீ
இமையோர் தலைமகன் நீ
செங்கண் நெடுமால் நீ
திரு மார்பா நீ –
பொங்கு பட மூக்கின் ஆயிர வாய்ப் பாம்பணை மேல் சேர்ந்தாய் நீ
குட மூக்கில் கோயிலாகக் கொண்டாய் நீ

(எங்கள் பிரான் ஆவதற்காகவே திருவத்தியூரில் நின்றதோடு நில்லாமல்
சம்சாரத்தை கிழங்கு எடுத்தால் அல்லது எழுந்து இருக்க மாட்டேன் என்பவன் போல்
திருக்குடந்தை போன்ற திவ்ய தேசங்களிலும் படுக்கையை விரித்துப் பள்ளி கொண்டும் அருளுகிறார் அன்றோ
திரு மார்பா -வேதாந்தாஸ் தத்வ சிந்தாம் முரபிதுரஸி யத் பாத சிஹ்நைஸ் தரந்தி -ஸ்ரீ குணரத்ன கோசம் -44-
ஹ்ரீஸ் ஸ தே லஷ்மீஸ் ச பத்ன்யவ்
தத் விஷ்ணோ பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய
தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ)

————–

(அர்ச்சை நிலைகளால் அடிமை கொண்டது கீழ் இரண்டு பாசுரங்களில்
விபவ சேஷ்டிதங்களைக் காட்டி அடிமை கொண்டான் என்கிறார் இதில்)

கொண்டு வளர்க்கக் குழவியாய் தான் வளர்ந்தது
உண்டது உலகு ஏழும் உள் ஒடுங்கக் கொண்டு
குடமாடிக் கோவலனாய் மேவி என்நெஞ்சம்
இடமாகக் கொண்டவிறை-98-

பதவுரை

கோவலன் ஆய்–இடையனாய் வந்து பிறந்து
குடம் கொண்டு ஆடி–குடங்களைக் கையிலே கொண்டு கூத்தாடி (அதனாலுண்டான ஆயாஸம் தீர)
என் நெஞசம் மேவி–என்னுடைய ஹ்ருதயத்திலே பொருந்தி
இடம் ஆக கொண்ட இறை–(எனது நெஞ்சையெ) நித்ய வாஸ ஸ்த்தாநமாகக் கொண்ட ஸ்வாமி
கொண்டு வளர்க்க–சிலர் கையிலெடுத்துச் சீராட்டி வளர்க்க வேண்டும்படியான
குழவி ஆய்–சிறு குழந்தையாய்
தான் வளர்ந்தது–தான் வளர்ந்த அப்படிப்பட்ட மிகச் சிறிய பருவத்திலே
உலகு ஏழும்–ஸப்த லோகங்களும்
உள் ஓடுங்க–தன்னுள்ளே ஒடுங்கும்படி
உண்டது!–உட் கொண்டது (என்ன ஆச்சரியம்)

கொண்டு வளர்க்கக் குழவியாய் தான் வளர்ந்தது-உண்டது உலகு ஏழும் உள் ஒடுங்கக் கொண்டு
எடுத்து வளர்க்க வேண்டும்படி
குழவியாய் தான் வளர்ந்தது
ஸ்த் நந்தய அவஸ்தையிலே
வயிற்றிலே வைத்தது அடங்க உலகு ஏழும் –
தனக்கு ரஷகர் வேண்டி இருக்கிற அவஸ்தையிலே
லோகத்துக்கு ரஷகன் ஆனான் –

குடமாடிக் கோவலனாய் மேவி என் நெஞ்சம் இடமாகக் கொண்டவிறை –
இடையனாய்
ஜாதிக்கு உசிதமான கூத்தை யாடி
என் நெஞ்சிலே பொருந்தி
இரங்கப் பண்ணி
என் நெஞ்சைக் கோயிலாகக் கொண்ட
ஈஸ்வரன் உண்டது உலகு ஏழும் உள் ஒடுங்க-

(ந அஹம் தேவோ ந கந்தர்வோ ந யஷோ ந ச ராக்ஷஸ
அஹம் வோ பாந்தவ ஜாத நைதச் சிந்த யமிதோன்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-13-
பாலனாய் ஏழு உலகுண்டு பரிவின்றி ஆலிலை அன்னவசம் செய்யும் அண்ணலார் -திருவாய் -4-2-1-
அடியார்ந்த வையமுண்டு ஆலிலை அன்னவசம் செய்யும் படி யாதுமில் குழவி -8-7-10-
பாலன் றனதுருவாய் யேழுலகுண்டு ஆலிலையின்
மேலன்று நீ வளர்ந்த மெய்யன்பர் ஆலன்று
வேலைநீ ருள்ளதோ விண்ணதோ மண்ணதோ
சோலை சூழ் குன்றெடுத்தாய் சொல்லு —முதல் திருவந்தாதி –69-)


(ப்ரயோஜனாந்தர பரர்களுக்கும் கார்யம் செய்து -இவற்றை பெற்று பின் ஒரு காலமாவது
அநந்ய ப்ரயோஜனர் ஆவார் என்னும் நப்பாசையில் அன்றோ செய்து அருளுகிறார் )

இறை எம்பெருமான் அருள் என்று இமையோர்
முறை நின்று மொய் மலர்கள் தூவ -அறை கழல
சேவடியான் செங்கண் நெடியான் குறளுருவாய்
மாவலியை மண் கொண்டான் மால் –99-

பதவுரை

இமையோர்–(பிரமன் முதலான) தேவர்கள்
எம்பெருமான்–‘எம்பெருமானே!‘ (எங்கள் விஷயத்தில்)
இறை–கொஞ்சம்
அருள் என்று–கிருபை பண்ண வேணும் என்று சொல்லி
முறை நின்று–சேஷத்வ ஞானத்தால் -அடிமைக்கு ஏற்ப நின்று
மொய் மலர்கள்–அழகிய புஷ்பங்களை
தூவ–பணிமாறும் படியாக,-(வாசிகம் -காயிகம் இரண்டாலும் )
அறை கழல சே அடியான்–ஒலிக்கின்ற வீரக் கழலை யுடைய திருவடிகளை யுடையவனும்
செம் கண்–செந்தாமரைக் கண்ணனும்
நெடியான்–எல்லாரிலும் மேம்பட்டவனுமான
மால்–திருமால்
குறள் உரு ஆய்–(மாவலி பக்கல்) வாமந ரூபியான் வந்து தோன்றி
மா வடிவின்–பெரிய வடிவினாலே
மண் கொண்டான்–பூமியை அளந்து கொண்டான்.

மா வடிவில் என்றும் –மா வலியை என்றும்-பாட பேதம்

இறை எம்பெருமான் அருள் என்று இமையோர் முறை நின்று மொய் மலர்கள் தூவ –
அஸ்மத் ஸ்வாமியான ஈஸ்வரனே
அருள் என்று ஓன்று கெட்ட வன்றாகப்
பாடி காப்பாரை வளைப்பாரைப் போலே
ஈஸ்வரோஹம் -என்று ஊதின காளங்களைப் பொகட்டு
தேவர்கள் புஷ்பம் தூவி ஆஸ்ரயிக்க

அறை கழல சேவடியான் –
த்வனியா நின்ற வீரக் கழலை உடைய
சிவந்த திருவடிகளை உடையவன் –
எல்லா ஆபரணங்களுக்கும் உப லஷணம்-

செங்கண் நெடியான் குறளுருவாய் –
சர்வேஸ்வரன் குறளுருவாய்ச் சென்று –

மாவலியை மண் கொண்டான் மால் –
ஆஸ்ரித அர்த்தமாக
சுருக்கின வடிவை உடையவனாய்
மகாபலி பக்கலிலே மண் கொண்ட
வ்யாமுக்தன்-(இந்திரன் இடம் மால் -மகாபலி இடமும் மால் நம் அனைவர் இடமும் மால் -எங்கும் மால் )

(இதனால் தான் அடுத்த பாசுரத்தில் -என் தன் அளவன்றால் யானுடைய வன்பு –அவன் அன்பால் இவர் அன்பு பெருக்கெடுக்குமே –
வ்யாமோஹம் -தப்புக்களைப் பார்க்காமல் ஓத்தே இல்லாத அதிகாரிகள் கொண்ட காதல்)

(அகில ஜகத் ஸ்வாமிந் -அஸ்மத் ஸ்வாமின்
கள்வா எம்மையும் ஏழு உலகும் நின் உள்ளே தோற்றிய இறைவா–வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர் –திருவாய் -2-2-10-
ஈஸ்வரோஹம் –
தமீஸ்வராணாம் பரமம் மஹேஸ்வரம் தம் தேவதா நாம்
பரமஞ்ச தைவதம் -ஸ்வேதாஸ்வர –
மா வலியை மண் கொண்டான் மால் என்று கொண்டு தாழ விட்டு வாத்சல்யம் காட்டி அருளினான் என்று ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையும்
மா வடிவில் மண் கொண்டான் என்று கொண்டு மிகப் பெரிய வடிவைக் கொண்டு உலகு அனைத்தையும் தீண்டினான் என்பர் ஸ்ரீ அப்பிள்ளை
சுருக்குவாரை இன்றியே சுருங்கினாய் சுருங்கியும் பெருக்குவாரை இன்றியே பெரும்மம் எய்து பெற்றியோய் -திருச்சந்த -109-)

————————

(சுருக்குவாரை இன்றி சுருக்கினாயே –
ஓங்கி உலகு அளந்தவன் போல் மிகப் பெரியதான அன்பை
வாமன் போல் சுருக்கி அருள வேணும் என்கிறார்)

மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு
மேலா வியன் துழாய்க் கண்ணியனே -மேலாய்
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே என் தன்
அளவன்றால் யானுடைய வன்பு –100-

பதவுரை

மாலே–(அடியாரிடத்தில்) வியாமோஹ முள்ளவனே!
நெடியோனே–ஸர்வ ஸ்மாத் பரனே!
கண்ணனே–ஸ்ரீக்ருஷ்ணனே!
விண்ணவர்க்கு மேலா–நித்ய ஸூரிகளுக்குத் தலைவனே!
வியன் துழாய் கண்ணியனே–அழகிய திருத்துழாய் மாலையை அணிந்துள்ளவனே!
மேலால்–முன்னொரு காலத்தில்
விளவின்காய்–விளங்காயை
கன்றினால்–ஒரு கன்றைக் கொண்டு
வீழ்த்தவனே–உதிர்த்துத் தள்ளினவனே!,
யான் உடை– (உன்னிடத்தில்) அடியேன் வைத்திருக்கிற
அன்பு–அன்பானது
என் தன் அளவு அன்று–என்னளவில் அடங்கி நிற்பதன்று.

மாலே
சர்வாதிகனே

நெடியானே
அபரிச்சேத்யனானவனே

விண்ணவர்க்கு மேலா வியன் துழாய்க் கண்ணியனே-
நித்ய ஸூரிகளுக்கு அவ்வருகாய்
ஐஸ்வர்ய ஸூ சகமான திருத் துழாய் மாலையை
உடையையாய்

மேலாய் விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே
பண்டு கன்றாலே விளங்காயை வீழ விட்டவனே

கண்ணனே

என்தன் அளவன்றால் யானுடைய வன்பு –
என் ஆஸ்ரயத்தின் அளவன்று
உன் பக்கல் ஸ்நேஹம்
இத்தை யகஞ்சுரிப் படுத்த வேணும்

(விபுவான ஆத்மாவின் தர்ம பூத ஞானத்தையும் விஞ்சிற்று)

(பிரார்த்தனை அவ்யக்தம் -பிரார்த்தனா கர்ப்ப பிரபத்தி
தேவரீர் அடியேனுக்கு உபாயமாக இருக்க வேண்டும் -திருமந்திரம் ஓம் நமோ நாராயணுக்காக -மட்டுமே உள்ளது
பிரார்த்தனாய சதுர்த்தி போல் இங்கும்)

ஆல்-ஆச்சர்யம் –

(கொள் கொம்பு மூடப் படர்ந்தது போலே என்னுடைய அன்பானது என் ஸ்வரூபத்தையும் விஞ்சி பெருகி
தளர்ச்சியை யுண்டாக்கி உன்னை அனுபவிக்க ஒட்டாமல் தடுக்கிறதே
அவ் வன்பை அடியேன் பொறுக்கும் அளவு சுருக்கி அருள வேண்டும் -என்கிறார் –
அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே -10-10-10-
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு -1-8-3-
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே கண்ணனே -என்றும் அந்வயம் கொள்ளலாம்
தம்மை விஷயீ கரித்து அருளிய நீர்மைக்கு ஆறு விளிகள்-ஆறும் பரத்வமாகவும் ஸுலப்யமாகவும் கொண்டு வியாக்யானம் –
மாலே -நெடியோனே -கண்ணனே -விண்ணோர்க்கு மேலா – வியன் துழாய் கண்ணியனே -மேலால் விளவின் காய் குன்றினால் வீழ்த்தவனே -என்தன் அளவன்றால் யானுடைய வன்பு -என்பதை ஒவ்வொன்றிலும் சேர்க்க வேண்டும்

இமையோர் தமக்கும் நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே -திரு விருத்தம் -98-
ரக்ஷணத்துக்கு அசாதாரண தனி மாலை சாத்திக் கொண்டு இருப்பானே
காலாழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -பெரிய திருவந்தாதி -34-
சித்தமும் செவ்வை நில்லாது–பத்திமைக்கு அன்பு யுடையனாவதே பணியாய் எந்தாய் -திருக்குறும் தாண்டகம் -10-

ஆக அன்பே தகளியாக -என்று தொடங்கி
மேன் மேலாகப் பெருகி வந்த அன்பை அளவுபடுத்தித் தந்து
அனுபவிப்பிக்க அருள வேண்டும் என்ற பிரார்த்தனை யுடன் தலைக் கட்டி அருளுகிறார் -)

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பூதத் ஆழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதி -81-90–பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

September 19, 2013

நீர் கண்டபடி சொல்லிக் காணீர்-என்ன-சொல்லுகிறார்

பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில்
மிகக் கண்டேன் மீண்டவனை மெய்யே -மிகக் கண்டேன்
ஊன் திகழும் நேமி யொளி திகழும் சேவடியான்
வான் திகழும் சோதி வடிவு -81-

பதவுரை

பகல் கண்டேன்–இராக்காலம் கலசாமல் ஒரே பகற் போதாய்ச் செல்லுகிற நல் விடிவைக் கண்டேன். (அதாவது என்ன வென்றால்)
நாரணனை கண்டேன்–ஸ்ரீமந் நாராயணனாகிற என்று மஸ்தமியாத ஆதித்யனைக் கண்டேன்,
மீண்டு–இன்னமும்,
கனவில்–மாநஸ ஸாக்ஷாத் காரத்திற் காட்டிலும்
மிக மெய்யே–மிகவும் ப்ரத்யக்ஷமாக
ஊன் திகழும் நேமி–திருமேனியில் விளங்குகின்ற திருவாழியை யுடையவனும்
ஒளி திகழும் சே அடியான்–பிரகாசம் மிக்க திருவடிகளை யுடையவனுமான அப் பெருமானுடைய
வான் திகழும்–பரம பதத்திலே விளங்குகின்ற
சோதி வடிவு–சோதி மயமான வடிவத்தை
மிக கண்டேன்-(இங்கே) நன்று ஸேவிக்கப் பெற்றேன்.

பகல் கண்டேன்
காள ராத்ரியாய் செல்லாதே விடியக் கண்டேன் –
வடுகர் வார்த்தை போலே தெரிகிறது இல்லை –
எங்களுக்கு தெரியும் படி சொல்லீர் என்ன –

நாரணனைக் கண்டேன் –
அஸ்தமிதியாத ஆதித்யனைக் கண்டேன்
கனவில் மிகக் கண்டேன் மீண்டவனை மெய்யே –
பிரத்ய பிஜ்ஞார்ஹமாக கண்டேன் –

மிகக் கண்டேன் ஊன் திகழும் நேமி யொளி திகழும் சேவடியான் வான் திகழும் சோதி வடிவு –
வடிவில் திகழா நின்ற திரு ஆழியையும்
ஒளி திகழா நின்றுள்ள திருவடிகளையும் உடையவனுடைய
பரம பதத்தில் திகழா நின்ற ஜோயோதிசை உடைத்தான
திருமேனியைக் கண்டேன்

மேகம் போலே திகழா நின்ற ஜ்யோதிசை உடைய வடிவு
என்னவுமாம் –

(ஸூ ப்ரபாதா ச மே நிசா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-17-2–
பீஷோ தேதி ஸூர்யா -தைத்ரியம் ஆனந்த வல்லி
அந்தப் ப்ரவிஷ்டஸ் ஸாஸ்தா ஐநா நாம் ஸர்வாத்ம -தைத்ரியம் -3-11-
ஸ்வப்ன தீ கம்யம் -மனு -12-122-
கண்டேன் திருமேனி யான் கனவில் ஆங்கு அவன் கைக்
கண்டேன் கனலும் சுடர் ஆழி -கண்டேன்
உறு நோய் வினை இரண்டும் ஓட்டுவித்துப பின்னும்
மறு நோய் செறுவான் வலி-67-

கண்டேன் திரு மேனி யான் கனவில் -67-கனவில் மீண்டு அவனை மிகக் கண்டேன் -இதில்
அங்கு அவன் கைக் கண்டேன் கனலும் சுடராழி -67-இதில் ஊன் திகழும் நேமி –
ஊன் -என்று அழகு என்றும் திருமேனியைச் சொல்லி அதில் திகழும் ஆழி
வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு —
அன்றிக்கே சத்ருக்களின் சரீரங்களில் விளையாடும் சுடர் ஆழி என்றுமாம்
வான் -பரமே வ்யோமன் -மேகம் போல் விளங்கா நிற்கும் நீல மேனி -முகில் வண்ணன் -)

————————————————————————–

கீழே நாரணனைக் கண்டேன் என்றார்–
இப்பொழுது லஷ்மி சநாதமாகக் கண்டேன் என்கிறார் –

(அபரிச்சேதய அழகு என்றும் -அவயவ பூதை என்றும் -புருஷகார பலம் என்றும் மூன்று நிர்வாகங்கள்)

வடிக்கோல வாள் நெடுங்கண் மா மலராள் செவ்விப்
படிக்கோலம் கண்டு அகலாள் பன்னாள்-அடிக்கோலி
ஞாலத்தாள் பின்னும் நலம் புரிந்தது என் கொலோ
கோலத்தால் இல்லை குறை–82-

பதவுரை

வடி கோலம்–வடிக் கட்டின அழகை யுடையவளும்
வாள் நெடுங்கண்–ஒளி பொருந்திய நீண்ட திருக்கண்களை யுடையவளும்
மாமலராள்–சிறந்த தாமரை மலரில் பிறந்தவளுமான பெரிய பிராட்டியார்
செவ்விப் படிகோலம்–இயல்பான தக்க சிறப்புற்ற (அவனது) திருமேனியின் அழகை கண்ணால் அநுபவித்து
பல் நாள் அகலாள்–க்ஷண காலமும் விட்டுப் பிரியாமல் எப்போதும் கூடியே யிருக்கின்றாள்
பின்னும்–எம்பெருமானுடைய அழகிலே பிராட்டி ஆழங்காற்பட்டு அழுந்துகிற படியைக் கண்டுவைத்தும்
ஞாலத்தாள்–பூமிப் பிராட்டியானவள்
அடிக் கோலி–பாரித்துக் கொண்டு
நலம் புரிந்தது என் கொலோ–அப் பெருமானிடத்தில் ஆசையைப் பெருக்கிக் கொண்டிருப்பது என்னோ
கோலத்தால் குறை இல்லை–(எத்தனை பேர்கள் அநுபவித்தாலும் ஏற்றி யிருக்கும் படியான அழகினால் குறை யில்லை யன்றோ.
அழகு அ ஆசைப்பட நேர்கின்றது (அளவற்றிருப்பதானல் பலரும் எம்பெருமானிடத்தில்)

படிக் கோலத்துக்கு ரூஷீ ஷமாய்க் (கோதாய் )கழித்தார் ஆரோ என்னில்
வடிக் கோல வாள் நெடுங்கண் மா மலராள்
ஓர் ஆளும் ஓர் நோக்கும் நேரான கண்ணை உடையாளாய்
சௌகுமார்யத்தை உடையாளான பெரிய பிராட்டியார்

(கோலம் அவனுக்கு கண் இவளுக்கு -அஸி தேஷிணீ அன்றோ
நாட்டில் அழகு கோது என்னலாம்படி அவன் அழகு
அதுவே கோது என்னலாம் படி இவள் அழகு)

செவ்விப் படிக் கோலம் கண்டு அகலாள் பன்னாள்-
செவ்வியை உடைத்தாய்
ஸ்வா பாவிகமான கோலத்தைக் கண்டு
காலம் எல்லாம் அகலாள்
ஒரு தேவையாலே அகலாது இருக்கிறாளோ என்னில் -அன்று –
வைத்த கண் வாங்க மாட்டாமையும்
கால் வாங்க மாட்டாமையும்

அடிக்கோலி ஞாலத்தாள் பின்னும் நலம் புரிந்தது என்கொலோ கோலத்தால் இல்லை குறை –
அகலப் பாரித்து ஸ்ரீ பூமிப் பிராட்டியார்(இலை அகலப்படுத்தி -ஏடு இல்லாமல் பெரிய நுனி இலைகள் வைத்து )
பெரிய பிராட்டியார் தண்ணீர் தண்ணீர் என்கிற
விஷயம் என்று அறிந்த பின்பும்
ஸ்நேகிக்கைக்கு அடி என் என்கிறது –
அவள் கண்ணுக்கு விஷயம் அவன் ஒருத்தனும் –
இவளுக்கு விசிஷ்டம் -(அத்திரு அவனைப்பற்றும் இத்திரு இருவரைப் பற்றும் )

இவளோடு கூடின அவன் விஷய பூயஸ்தையாலே
அடிக்கோலி -என்கிறது

(மிதுனமாகையால் விஷய பூயஸ்தம் -அப்ரமேயம் தத் தேஜஸ் யஸ்ய ஜனகாத்மஜா
நாராயணனை அனுபவிக்க ஏடு -மிதுனத்தை அனுபவிக்க இலை அகலப்படுத்த வேணுமே)

தன்னில் மிடுக்கானவன் அழுந்தப் புக்கால்
கரையிலே நிற்கிறவன் புகாதே போக வன்றோ அடுப்பது –
எல்லாரிலும் அளவுடைய பெரிய பிராட்டியார்
குமிழ் நீருண்ணும் விஷயம் ஆனால் இவள் அகலப் போகாதே
அகப்படுகைக்கு ஹேது என் என்னில் -ஹேது சொல்லுகிறது –

கோல இத்யாதி –
நின்றார் நின்ற நிலைகளிலே அகப்பட வேண்டும் அழகு
குறைவற்று இருக்கையாலே –
இதர விஷயங்கள் இருவருக்கும் அனுபவிக்கப் போராமையாலே சீறு பாறு -என்கிறது –

கிண்ணகத்தில் இழிவாரைப் போலே
எல்லாரும் திரள அனுபவிக்க வேண்டும் –
பரப்பு உண்டாகையாலே
இவ் விஷயத்தை அனுபவிப்பாருக்கு பிரியமே உள்ளது –

(அம்ருத சகார ஆனந்த நிமக்ந-அளப்பரிய ஆரமுதில் அந்தர் நிமக்ந-மாகும் படி பூர்த்தி உண்டே)

(வடிக்கோலம் -உலகின் அழகு கோது என்னலாம் படி அவன் அழகு -அதுவே கோது என்னலாம் படி அவளது அழகு -இப்படி வடித்து எடுத்த அழகு –
யுவா குமார
அரும்பினை அலரை
செவ்விப் படிக் கோலம்
பருவத்தை இயல்வாகக் கொண்ட வடிவு அழகு கோலம்
பருவத்தையும் இயல்வான வடிவு அழகையும் கண்டு
பருவத்தை யுடைய திருமேனியின் அழகைக் கண்டு -என்று மூன்றுமாம்
போகோ போத்காத கேளீ சுளகித பகவத் வைஸ்வ ரூப்ய அநு பாவா -ஸ்ரீ குணரத்ன கோசம் –
அப்ரமேயம் ஹி தத் தேஜஸ் யஸ்ய சா ஜனகாத்மஜா -ஆரண்ய -37-18–
தயா ஸ ராஹர்ஷி ஸூத அபி ராமயா உபே யிவான் உத்தம ராஜ கன்யா
அதீவ ராம ஸூ ஸூபே அதி காமயா விபுஸ் ஸ்ரீ யா விஷ்ணுர் இவாமரேஸ்வர -பால –77-36-
திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும் திகழ்கின்ற திருமாலார் –10-6-9-
வடிவார் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு –

உத்ப் புல்ல பங்கஜ தடாகம் இவ உபயாநி ஸ்ரீ ரெங்க ராஜம் இஹ தக்ஷிண சவ்ய ஸீம்நோ
லஷ்மீம் விஹார ரசிகாம் இவ ராஜ ஹம்ஸீம் ச்சாயாம் இவ அப்யுதயிநீம் அவநீம் ச தஸ்யா –ஸ்ரீ ரெங்கராஜா ஸ்தவம் -1-63-

இஹ –இந்த கர்ப்ப க்ருஹத்தில்
உபயாநி ஸ்ரீ ரெங்கராஜம்–ஸ்ரீ ரெங்க நாதனை ஆஸ்ரயிக்கக் கடவேன்-
இஹ தக்ஷிண சவ்ய ஸீம்நோ –வலவருகிலும் இடவருகிலும்
விஹார ரசிகாம் இவ ராஜ ஹம்ஸீம்-லஷ்மீம்–விளையாட வல்ல அன்னப் பேடை போன்றுள்ள திரு மகளையும்
ச்சாயாம் இவ அப்யுதயிநீம் அவநீம் ச தஸ்யா –அவளுடைய மேன்மேலும் வளர்த்தியை யுடைத்தான நிழல் போன்ற ஸ்ரீ பூமிப் பிராட்டியையும் அடையக் கடவேன் –

போக்யா வாமபி நாந்தரீயகதயா புஷ்ப அங்கராகைஸ் ஸமம்
நிர்வ்ருத்த ப்ரணய அதிவாஹந விதௌ நீதா: பரீவாஹதாம்
தேவி த்வாம் அநு நீளயாஸஹ மஹீ தேவ்ய: ஸஹஸ்ரம் ததா
யாபி: த்வம் ஸ்தந பாஹு த்ருஷ்டி பிரிவ ஸ்வாபி: ப்ரியம் ச்லாகஸே.–ஸ்ரீ குணரத்ன கோசம் -26-

தேவீ! ஸ்ரீரங்கநாயகீ! மனம் ஒருமித்த தம்பதிகளின் இனிமையை சாந்து, சந்தனம், மலர்கள் ஆகியவை அதிகரிக்கும் அன்றோ?
அது போல நீயும் நம்பெருமாளும் இணைந்துள்ளபோது, உங்கள் இன்பத்தை மேலும் அதிகரிக்கும்படியாக
நீளாதேவியும், பூதேவியும் மற்றும் ஆயிரக்கணக்கான தேவிகளும் உள்ளனர்.
ஒரு குளத்தில் நிரம்பியுள்ள நீரை வெளியேற்றினால் அன்றோ குளம் பெருமையும் பயனும் பெற்று நிற்கும்.
இதுபோல இவர்கள் அனைவரும் உங்கள் இருவரின் காதலைத் தங்கள் வழியாக அனைவருக்கும் வெளிப்படுத்துகின்றனர்.
இப்படியாக உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் மற்ற தேவியருடன் உள்ளபோதும் நீ மகிழ்ந்தே உள்ளாய்.
அவர்கள் உனது நாயகனை அணைத்துக் கொள்ளும்போது, உனது உடல் உறுப்புகளாக மாறியே
இவர்கள் அணைத்துக் கொள்கின்றனர் என்று நீ நினைக்கிறாய் அல்லவோ?
அவர்கள் உனது கைகள் போன்றும், ஸ்தனங்கள் போன்றும், கண்கள் போன்றும் விளங்க –
இப்படியாக நீ உனது ப்ரியமான நம்பெருமாளை மகிழ்விக்கிறாயா?)

————————————————————————–

முன்பு (74-பாசுரத்தில்-)சர்வ விசாஜீதிய வஸ்துவை பேசுகையாலே–என்னோடு ஒப்பார் உண்டோ பெரிய தமிழன்
பெரிய நல்லேன் என்று சொன்னார் –
இப்போது அவ்வஸ்து தன்னை லஷ்மீ சநாதமாக-அனுசந்திகையாலே அங்குத்தைக்கு
விசத்ருசமாக சொன்னேன் -என்கிறார்

குறையாக வெம் சொற்கள் கூறினேன் கூறி
மறை யாங்கு என உரைத்த மாலை -இறையேனும்
ஈயுங்கொல் என்றே இருந்தேன் எனைப் பகலும்
மாயன் கண் சென்ற வரம் -83-

பதவுரை

மறை–வேதங்களும்
ஆங்கு என உரைத்த மாலை–ப்ரத்யக்ஷித்துச் சொல்ல மாட்டாமல் பரோக்ஷமாகவே சொன்ன எம்பெருமான (அல்பஜ்ஞனான நான்)

ந இதி ந இதி என்றே வேதம் சொல்லும் அஸ்தி என்பதே அஸ்தமிக்காமல் -இது இல்லை இது இல்லை என்றே வேதம் சொல்லும்
மாயன் கண் சென்ற வரம்–அப்பெருமானிடத்தில் தங்கியிருக்கின்ற அநுக்ரஹமானது.
இறையேனும்–ஸ்வல்பமான பலனையாகிலும்
குறை ஆக–குறையுண்டாம்படி
வெம் சொற்கள்–செவிசுடும்படியான சொற்களால்
கூறினேன்–பேசினேன்
கூறி–அப்படி பேசினது மல்லாமல்
ஈயும் கொல் என்றே–(நமக்குக்) கொடுக்குமோ என்று (பலனையும் எதிர்பார்த்துக் கொண்டு)
எனைப் பகலும்–வெகுகாலமாக
இருந்தேன்–இருக்கின்றேன்.

ஆங்கென உரைத்த
எல்லாரும் அது அது என வேதத்தால் உரைக்கப்பட்டவன் என்னுதல்
அது என்று போகிறது ஒழிய
இதம் இத்தம் என்று-பரிச்சேதித்து சொல்லப் படாதவன் என்னுதல்-

குறையாக வெம் சொற்கள் கூறினேன் கூறி மறை யாங்கு என உரைத்த மாலை –
1-அபரிபூர்ண மாம்படியாகவும்
2-திரு உள்ளம் நோம் படியாகவும் வார்த்தை சொன்னேன்

வாக் விவ்ரு தாச்ச வேதா -என்று
சொல்லப் படுகிற சர்வாதிகனை
வேதம் -ஈத்ருசம் இதம் -என்று
சொல்லப் போகாதவனை -என்றுமாம் –

இறையேனும் ஈயுங்கொல் என்றே இருந்தேன் எனைப் பகலும் மாயன் கண் சென்ற வரம் 
விசத்ருசமாக சொன்ன அளவேயோ –

ஓன்று சொன்னேனாய்
அதுக்கு பிரத்யுபகாரமும் வேணும் என்று இருந்தேன்-

(பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர்–திருவாய் -1-5-11-
இன் கவி பாடும் பரம கவிகள் –7-9-6-
அங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து அன்பு கூரும் அடியவர் -பெரிய திருமொழி -2-10-4-
யதோ வாஸோ நிவர்த்தந்தே -தத் விஷ்ணோ பரமம் பதம் -யஸ்யா மதம் தஸ்ய மதம் –
வாக் விவ்ருதாஸ் ச வேதா –
பாடவும் செய்து-இளைய என் புன் கவிதைக்கு – பிரதியுதவியையும் எதிர்பார்த்து – பரிசும் வேண்டி இருந்தேனே -மூர்க்கனேன் மூர்க்கனேனே –
ப்ரயோஜனாந்தரங்களை எதிர்பார்த்தார் அல்ல -அனுதபிக்கவும் குறையில்லை –
மாயோன் கண் சென்ற வரம் -மாயோனான அவன் இடத்திலே பொருந்தி இருக்கும் சிறந்த அருள் என்றும்
வரம் -வார்த்தை என்றும் -சிறந்த வார்த்தைச் சிறிதேனும் நமக்கு அருள்வானோ என்று எதிர்பார்த்து இருக்கிறேன் என்றுமாம் -)

————————————————————————–

வரம் கருதி தன்னை வணங்காத வன்மை
உரம் கருது மூர்க்கத்தவனை -நரம் கலந்த
சிங்கமாய்க் கீண்ட திருவன் அடி இணையே
அங்கண் மா ஞாலத்து அமுது–84-

பதவுரை

வரம் கருதி–(தேவர்களிடத்துப் பெற்ற) வரத்தை மதித்து
தன்னை வணங்காத–(ஸர்வேஸ்வரனான) தன்னை வணங்காதிருந்தவனும்
வன்மை உரம் கருதி–(தன்னுடைய) மன வலிமையையும் நினைத்து
மூர்க்க தவனை–மூர்க்கத் தனம் கொண்டிருந்தவனுமான இரணியனை-

மூர்க்கத்தவனை-மூகத்தவனை -அஹங்காரம் -பிடிவாதம் கொண்டவனை
நரம் கலந்த சிங்கம் ஆய்கீண்ட–நரசிங்க வுருக் கொண்டு பிளந்தொழிந்த
திருவன்–அழகனுடைய
அடி இணையே-உபய பாதமே
அம் கண் மா ஞாலத்து–அழகிய இடமுடைத்தான இம் மா நிலத்தில்
அமுது–(போக்யமான) அம்ருதமாகும்.

தேவதைகள் பக்கலிலே வரம் பெற்றவனாய்
தேவதைகளுக்கும் அடியாய் இருந்துள்ள உன்னை வணங்காத
துர் அபிமானத்தை உடையனான ஹிரண்யனை
இதுக்கு முன்புள்ளதால் ஒன்றாலும் படாப்பேன் என்று
வேண்டிக் கொள்ள
முன்பு இல்லாத நரம் கலந்த சிங்கமாய்
அவனைக் கீண்ட ஸ்ரீ மான் உடைய
சரண்யத்வமே ஒரு தேசத்தில் தேடித் போக வேண்டாத
அமிர்தம்

திருவன் -என்றது
அழகியான் தானே அரி வுருவன் தானே –
நார சிம்ஹ வபுஸ் ஸ்ரீ மான் -என்னும் வடிவு-

(த்விதா பஜ்யேயம் அப் யேவம் ந நமேயம் து கஸ்ய சித் -யுத்த -36-11-
ம்ருகோ ந பீம -ருக் -1-21-154-
நார ஸிம்ஹ வபுஸ் ஸ்ரீ மான்
அழகியான் தானே அரி யுருவன் தானே -நான்முகன் -22-
குறையாக வெஞ்சொற்கள் சொன்னேனே என்று கை வங்காத் தொடங்கின என்னை கவி பாட வைத்ததே இந்த ஆரா அமுதனுடைய அழகே என்கிறார் – )

————————————————————————–

அமுதென்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்
அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் -அமுதன்ன
சொன் மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட
நன் மாலை ஏத்தி நவின்று –85-

பதவுரை

அமுது என்றும்–அமிருதம் போன்றவனென்றும்
தேன் என்றும்–தேன் போன்றவனென்றும்
ஆழியான் என்றும்–திருவாழியை யுடையவனென்றும்
அன்று அமுது கொண்டு உகந்தான் என்றும்–முற்காலத்தில் (கடல் கடைந்து) அமுதமெடுத்தளித்து மகிழ்ந்தவனென்றும்-அமுதினில் வரும் பெண்ணமுது கொண்டான் என்றுமாம்
சொல்லப் பட்ட–சொல்லப் பட்டிருக்கின்ற
நல் மாலை–விலக்ஷணனான எம்பெருமானை
அமுது அன்ன சொல் மாலை–அம்ருதம் போன்ற இப் பாசுரங்களினால்
ஏத்தி  நவின்று தொழுதேன்–பலகாலும் துதித்துச் சொல்லி வணங்கினேன்.

ஏத்தி நவின்று என்பதை அமுது தேன் ஆழியான் -அமுது கொண்டு உகந்தான் என்றும் ஒவ்வொன்றிலும் சேர்த்துக் கொள்ள வேண்டும்

அமுதென்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்
அமுது என்று பர்யாய சப்தம் போலே
காணும் ஆழியான் என்கை

அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் –
தன்னை வேண்டாதே
உப்புச் சாறு வேண்டுமவர்களுக்கு
அது கொடுக்குமவன்

அமுதன்ன சொன்மாலை எத்தித் தொழுதேன்
அவனையும்
தேவர்கள் அமுதத்தையும் ஒழிய
இவருடைய அமிர்தம்
அவனைப் பேசும் சொல்லும் –
சொலப்பட்ட
யஸ்மின் ந ச்ருத்ரிம கிராம் கதி ரேக கண்டா – என்று
பிரமாணங்களாலே சொல்லப்பட்ட –

நன் மாலை ஏத்தி நவின்று –
அமுதான சொன் மாலை ஏத்தித் தொழுதேன்-

(அமுது அவனைச் சொல்லி –
அமுது கொண்டு உகந்தான் என்று அவளை சொல்லி
அமுது அன்ன சொன்மாலை மிதுனம் பற்றிய இவர் பிரபந்தம் –
இப்படி மூன்று அமுதன்கள் இதில் உண்டே)

(ஸர்வ ரஸ
ப்ரயோஜனாந்தர பரர்களும் தம்மை இதற்க்காகவாவது ஆஸ்ரயிக்கிறார்களே என்று உகக்குமவன் அன்றோ
உதாரா ஸர்வ ஏவைதே -ஸ்ரீ கீதை -7-18-
விண்ணவர் அமுதுண அமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே -பெரிய திருமொழி -6-1-2-
குறையாக வெஞ்சொற்கள் கூறினேன் -என்றவாறே
இப்பொழுது-ரஸோ வை ஸ-என்றும் ஸர்வ ரஸ என்றும் -சொல்லப்படும் அவ்விஷயத்தின் இனிமையை அனுசந்தித்த உடன்
அமுதன்ன சொன் மாலை என்கிறார்
விஷ்ணோ பதே பரமே மத்வ உத்ஸ-ருக் -1-21-124-
த்ருத சங்கு சக்ர
சங்க சக்ர கதா தர
யஸ்மின் அக்ருத்ரிம கிராம் கதிரேக ஏக கண்டா -பிரமம் பிரமாதம் விப்ரலிப்ஸை போன்ற தோஷங்கள் அற்ற ப்ரமாணங்களால்
ஸாஸ்த்ரங்களால் ஒரு மிடறாகக் கோஷிக்கப் படும் திருமால் அன்றோ – )

————————————————————————–

அவன் தானே காட்டக் கண்ட என்னோடு ஒப்பார்களோ-
சாதன அனுஷ்டானம் பண்ணிக் காண்கிறவர்கள் -என்கிறார் –

நவின்றுரைத்த நாவலர்கள் நாண் மலர் கொண்டு ஆங்கே
பயின்றதனால் பெற்ற பயன் என் கொல் -பயின்றார் தம்
மெய்த் தவத்தால் காண்பரிய மேக மணி வண்ணனை யான்
எத் தவத்தால் காண்பன் கொல் இன்று –86-

பதவுரை

நவின்று உரைத்த–சாதன புத்தியால்  (அவனது திரு நாமங்களைப்) பலகாலுஞ் சொல்லுகின்ற
நாவலர்கள்–கவிகள்-சொல் ஏறு உழவர்கள்
நாள் மலர் கொண்டு–அப்போதலர்ந்த புஷ்பங்களைக் கொண்டு
ஆங்கே பயின்று–அந்த ஸர்வேஸ்வரனிடத்தில் நெருங்கி யாஸ்ரயித்து
அதனால் பெற்ற பயன் என் கொல்–அதனால் (அவர்கள்) பெற்ற பிரயோஜநம் என்னோ
(எம்பெருமான் தானே நிர்ஹேதுகமாக அநுக்ரஹித்தாலன்றி, இவர்களுடைய ஸ்வ ப்ரயத்நத்தால் என்ன பேறு பெற முடியும் என்கை.)
பயின்றார் தம்–நெருங்கி ஸாதநா நுஷ்டாநம் பண்ணுமவர்களுடைய
மெய் தவத்தால்–சரீரம் நொந்து செய்கிற தபஸ்ஸினால்
காண்பு அரிய–காண முடியாதவனும்
மேகம் மணி வண்ணனை–மேகத்தையும் நீல மணியையும் போன்ற நிறத்தை யுடையனுமான எம்பெருமானை
யான்–அடியேன்
இன்று–இப்போது
எத் தவத்தால் கொல் காண்பன்–எந்தத் தபஸ்ஸினால் காணப் பெற்றேன்?
(அவனே காட்டிக் கொடுக்கக் கண்டேனே யொழிய, ஒரு தவஞ்செய்து கண்டவனல்லேனென்கை

அவனே தவம் செய்து என்னை அடைய இருக்க நான் செய்ய வேண்டுமோ )

நவின்று இத்யாதி –
நாவலர்களானவர்கள் செவ்விப் பூவைக் கொண்டு
சாதரமாக உரைப்பர்கள்

(நா வாகிற அலத்தை -ஹலத்தை -யுடைய சொல் ஏறு உழவர்)

பயின்ற இத்யாதி –
பெற்றால் தான் சாதன அனுஷ்டானம் பண்ணிப் பெற்ற பேறு என்

பயின்றார் இத்யாதி –
ஆஸ்ரயித்தர்களுடைய உடம்பு நோவப் பண்ணின
தபஸ்ஸாலே காண வரிய
ஸ்ரமஹரமான வடிவை உடையவனை
இன்று என்ன தபஸ் பண்ணிக் கண்டேன் –
அவன் காட்டக் கண்டேன் இத்தனை இறே –

யாவர் நிகர் அகல் வானத்தே
யாவர் நிகர் அகல் வானத்தே –

வானைக் கோனை கவி சொல்ல வல்லேற்கு இனி மாறு உண்டே-

தே நைவ பல ப்ராப்ய பலம் அபி தேநைவ நாராயண -ப்ராப்யமும் பிராப்பகமும் அவனே -மாதா பிதா சரணம் ஸூஹ்ருத கதி நாராயணனே

(நா வலர் -நா வன்மை யுடையவர் என்றும்
நா வாகிற அலத்தை -ஹலத்தை -யுடைய சொல் ஏறு உழவர்
மெய்த் தவம் -மெய் சரீரம் -சரீரத்தை வருத்திச் செய்யும் சாதன அனுஷ்டானம் –
யான் இன்று எத் தவத்தால் காண்பன் கொல்-தானே தன்னைக் காட்டி அருளினான் என்கிறார்
யாவர் நிகர் அகல் வானத்தே -4-5-8-
வானைக் கோனை கவி சொல்ல வல்லேற்க்கு இனி மாறுண்டே -4-5-9-என்பது போலே
அவனைக் கொண்டே அவனைக் கண்ட தனது ஒப்பற்ற பெருமையை உணர்த்துகிறார் இதில் -)

————————————————————————–

சாதனா அனுஷ்டானமும்–யோக்யதையும் இன்றி இருக்க-கண்டிலேனோ என்கிறார்

இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அளந்த திருவடியை -அன்று
கருக் கோட்டியுள் கிடந்தது கை தொழுதேன் கண்டேன்
திருக் கோட்டி எந்தை திறம் -87-

பதவுரை

அன்று கரு கோட்டியுன் கிடந்து–முன்பு கர்ப்ப ஸ்தானத்துக்குள்ளே கிடந்து-பூவும் பிரகிருதி பதார்த்தம் தானே
திருக் கோட்டி எந்தை திறம்–திருக் கோட்டியூர்ப் பெருமானுடைய தன்மைகளை-ஸ்வரூப ரூப குண விபவங்களை
கண்டேன்–கண்டு அநுபவிக்கப் பெற்றேன்
கை தொழுதேன்–அனுபவத்துக்குப் போக்கு வீடாக கை தொழவும் பெற்றேன், (ஆன பின்பு)
இரு நிலத்தை–விசாலமான இந் நிலத்தை
ஆங்கு சென்று அளந்த திரு அடியை–அங்கங்கே தானே வியாபித்து முழுதும் அளந்து கொண்ட திருவடியை
இன்றா அறிகின்றேன் அல்லேன்–இன்றைக்குத் தான் அறிந்து கொண்டே னென்பதில்லை. (கர்ப்ப வாஸமே தொடங்கி அறிவேன்)

கீழ் பாசுரத்தில் அவனே காட்டக் கண்டதுக்கு இதுவே திருஷ்டாந்தம்

இன்றாக அறிகிறேனோ
அவன் அளக்கிற இடத்தில் பூமி சென்றதோ
பூமி கிடந்த இடம் எல்லாம் சென்று
அளந்தான் இத்தனை அன்றோ –
என் ஸ்வாமி இடையாட்டம்
கர்ப்ப ஸ்தானத்திலே கிடக்கச் செய்தே கண்டேன்-(அறியாக் காலத்துள்ளே -முயல யோக்யதையே இல்லாத காலத்திலேயே )

ஸுலப்ய காஷ்டை -உலகளந்த காலத்துக்குப் பின்னானாரும் வணங்கும் ஜோதி அன்றோ-

கை தொழுவதற்காகப் பெற்ற பலன் இல்லையே -அதுவும் இவனே செய்வித்தான் அன்றோ

(கண்டாயே நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்று ஓர்
எண் தானும் இன்றியே வந்து இயலுமாறு
உண்டானை உலகேழும் ஓர் மூவடி
கொண்டானைக் கண்டு கொண்டானை நீயுமே –திருவாய் -1-10-5-
அறியாக் காலத்துள்ளே -2-3-8-
ஸூ குமார தநுர் கர்ப்பே -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-10-
இவர் அயோனிஜர் என்று ப்ரஸித்தம் இறே -குருக்கத்தி மலரே இவருக்கு கர்ப்ப ஸ்தானம் –
அயோநிஜரான முதல் ஆழ்வாரும்
அன்று கருவரங்கத்துள் கிடந்து கை தொழுதேன் கண்டேன் திருவரங்க மேயான் திசை -6- பாசுரத்தை அடி ஒற்றியே இப்பாசுரமும் –
ஜாயமானம் ஹி புருஷம் யம் பஸ்யேன் மது ஸூதன
ஸாத்விகஸ் ஸ து விஜ்ஜேய ச வை மோஷார்த்த சிந்தக -சாந்தி பர்வம் -358-73-

பரமபத நாதனோ என்னைக் கடாக்ஷித்தது
நீர்மைக்கு எல்லை நீளமான திருக்கோட்டியூரான் அன்றோ எனக்கு ஜாயமான கடாக்ஷத்தை அருளினான்
அதனாலேயே இன்று அளவும் அவனை மறவாமல் இருக்கும் படியும் அருளினான் )

————————————————————————–

அவன் தானே விஷயீ கரித்தார்க்கு அவனைக் கிடைக்கும்-இத்தனை அல்லது
வேறு சிலருக்கு கிடையாது -என்கிறது(ஞானீ ஆத்மைவ மே மதம் பிரிய தமனை அவனே வரிப்பானே )

திறம்பிற்று இனி அறிந்தேன் தென்னரங்கத்து எந்தை
திறம்பா வழி சென்றார்க்கு அல்லால் -திறம்பாச்
செடி நரகை நீக்கித் தான் செல்வதன் முன் வானோர்
கடி நகர வாசற் கதவு–88-

பதவுரை

தென் அரங்கத்து எந்தை–தென்னரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கு மெம்பெருமானுடைய-ஸ்வாமி ஆகிற
திறம்பா வழி–அவ்யஹித உபாயமான -பிசகாத மார்க்கத்திலே (அவனே உபாயோபேயம் என்னும் நெறியிலே)
சென்றார்க்கு அல்லால்–நிற்பவர்களுக்குத் தவிர (மற்றை யோர்க்கு)
தாம்–தாமாகவே
திறம்பா செடி நரகை நீக்கி–அறுக்க முடியாத புதர் போன்ற ஸம்ஸார பந்தங்களை அறுத்துக் கொண்டு
செல்வதன் முன்–போவதற்குள்ளே
வானோர்–நித்ய ஸூரிகளுடையதும்
கடி–அரணை யுடையதானதுமான
நகரம்–வைகுந்தமா நகரத்தினுடைய
வாசல் கதவு–வாசற் கதவானது
திறம் பிற்று–மூடிக் கொண்டதாகும்
இனி அறிந்தேன்–(இதை) இப்போது அறிந்து கொண்டேன்

திறம்பிற்று -புக ஒண்ணாதபடி சாத்திக் கொண்டது

தென்னரங்கம் இத்யாதி
மாம் ஏகம்-என்று அருளிச் செய்தபடியே
அவனையே உபாயமாக பற்றினவர்களுக்கு –
மாம் ஏகம் -என்றதிலும் சௌலப்ய காஷ்டையைச் சொல்லுகிறது –

(கொண்டல் வண்ணன் கோவலனாய் -இத்யாதி அவனே இங்கு பின்னானார் வணங்கும் ஜோதி அன்றோ இவன்
ஸம்ஸாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரேன் என்று கிடக்குமவன் அன்றோ )

திறம்பா இத்யாதி –
தானே நூறு பண்ணப் பண்ணின சம்சாரத்தை
நீக்கிச் செல்லுமவர்களுக்கு
நித்ய ஸூரிகள் உடைய அரணை உடைத்தாய் இருந்துள்ள
கலங்கா பெரு நகரத்தில் கதவு திறம்பிற்று
என்னும் இடம் அறிந்தேன் –
தானே சம்சாரத்தை நீக்க இவனுக்கு காலம் போராது
பாபம் பண்ணின காலம் அநாதி ஆகையாலே
திறம்பிற்று இனி அறிந்தேன் -என்று அந்வயம்-

(நடந்தே தீரும் என்பதால் திறம்பிற்று இறந்த கால பத பிரயோகம்)

(மாம் ஏகம் என்ற கண்ணனைக் காட்டிலும் விஞ்சி நிற்கும் ஸுசீல்யன்
சரணம் நாராயணம்
நாராயணன் பாராயணம்
உபாய உபேயத்வே ததிஹ தவ தத்த்வம் நது குணவ் -ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -2-87-
அயோத்யா -அபராஜிதா -வானோர் நகர் -மரீசீநாம் பதம் -நித்ய ஸூ ரிகள் இட்ட வழக்காய் அன்றோ வைத்து அருளுகிறான்
அவனையே உபாயமாகக் கொண்டு அவனை அடைந்து அனுபவிக்கலாம் என்கிறார் ஆயிற்று – )

————————————————————————-

கதவிக் கதஞ்சிறந்த கஞ்சனை முன் காய்ந்து
அதவிப் போர் யானை ஒசித்துப -பதவியாய்
பாணியால் நீரேற்றுப் பண்டு ஒரு நாள் மாவலியை
மாணியாய் கொண்டிலையே மண்–89-கதஞ்சிறந்து -பாட பேதம் 

பதவுரை

முன்–முற் காலத்தில்
கதம் சிறந்த–கோபம் மிகுந்த
கஞ்சனை–கம்ஸனை
கதவி காய்ந்து–கோபித்து முடித்து
போர் யானை–போர் செய்வதாக எதிர்த்து வந்த குவலயாபீடமென்னும் யானையை
ஒசித்து–கொம்பு முறித்து
அதவி–கொன்று,
பண்டு ஒரு கால்–முன்னொரு காலத்தில்
பதவியாய்–நீர்மையை யுடையனாயக் கொண்டு-பதவி -நீர்மை என்றும் -வழி என்றும்
மாணி ஆய்–பிரமசாரியாகி
மாவலியை–மஹாபலி யினிடத்திலே
பாணியால்–கையினாலே
நீர் ஏற்று–தானம் வாங்கி
மண் கொண்டிலையே–பூமியைப் பெற்றாயல்லையோ?

கதஞ்சிறந்த கஞ்சனை
நெஞ்சில் அகற்றுதல் ஞானம்
சீற்றத்தை உடையனாய் இருந்துள்ள கம்சனை

கதவி முன் காய்ந்து –
சீறி முற் காய்ந்து
தலை மயிரைப் பற்றி முன்னே பிடித்து என்னவுமாம்

அதவிப் போர் யானை ஒசித்து
யானையை வ்யாபரியாத
படிக்கு ஈடாக அடர்த்து கொம்பை ஒசித்து

பதவியாய் மூலை யடி அன்றிக்கே
நீர்மையை உடையவனாய்
கம்சனைக் கொன்றாற் போலே
வழி கொடு வழியே என்றுமாம்

பாணியால் நீரேற்று-குடங்கையால் நீரேற்று-

பண்டு ஒரு நாள் மாவலியை -மாணியாய் கொண்டிலையே மண்
ஐஸ்வர்யம் தோற்றக் கொண்டாயோ-அர்த்தித்வம் தோற்ற
மாணியாய் அன்றோ கொண்டது-

(சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு
ஆதி யஞ்சோதி யுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த வேத முதல்வன் -3-5-5-
ஈஸ்வரன் அவதரித்துப் பண்ணின ஆனைத் தொழில்கள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமை
ஆறா மதயானை அடர்த்தவன் தன்னை -9-4-11-
குல நல் யானை மருப்பு ஓசித்தாய் –4-3-1-
பாணியால் நீர் ஏற்று
அலம் புரிந்த நெடும் தடக்கை -அலம் அலம் போதும் போதும் என்னும்படி கொடுத்து நீண்ட திருக்கையால் நீர் ஏற்று
கிருஷ்ணா ஜினேந ஸம் வ்ருண்வன் வதூம் வக்ஷஸ் ஸ்தலா லயாம்
ஆஸ்ரிதர்களுடைய தடைகளைப் போக்கி நீ செய்து அருளிய கார்யங்கள் லோக ப்ரஸித்தம் அன்றோ
உன்னாலும் மறைக்கப் போகாதே என்கிறார் – )

———————————————————————

கம்சனைக் கொன்றோம்–யானையைக் கொன்றோம்-பூமியை அளந்தோம்
என்று நம்முடைய செயல்களைச் சொல்லும் அத்தனையோ –
உமக்கு பெற வேண்டுமது சொல்லீரோ என்ன-சொல்கிறார் –

மண்ணுலகம் ஆளேனே வானவர்க்கும் வானவனாய்
விண்ணுலகம் தன்னகத்து மேவேனே -நண்ணித்
திருமாலை செங்கண் நெடியானை எங்கள்
பெருமானைக் கை தொழுத பின்-90-

பதவுரை

திருமாலை–பிராட்டியின் இடத்தில் வியாமோஹமுடவனும்
செம் கண்–செந்தாமரை போன்ற திருக்கண்களை யுடையவனும்
நெடியானை–ஸர்வேஸ்வரனுமான
எங்கள் பெருமானை–எம்பெருமானை
நண்ணி–கிட்டி
கை தொழுத பின்–அஞ்ஜலி பண்ணி ஆஸ்ரயித்த பின்பு
மண் உலகம் ஆளேளே–இவ் விபூதியை நானிட்ட வழக்காக நிர்வஹிக்க மாட்டேனோ?
வானவர்க்கும் வானவன் ஆய்–தேவாதி தேவனாய்க் கொண்டு
விண் உலகம் தன் அகத்து–நித்ய விபூதியிலே
மேவேனே–நித்யாநந்த மநுபவிக்க மாட்டேனோ?

(திருமால் -மிதுனம் இல்லாமல் இழக்கிறேனோ
செம் கண் வாத்சல்யாதிகள் இல்லாமல் இழக்கிறேனோ
நெடியானை -புருஷோத்தமத்வம் இல்லாமல் இழக்கிறேனோ
எங்கள் பெருமானை -ஸ்வாமி இழக்கிறேனோ
நண்ணி -கிட்டாமல் இழக்கிறேனோ
கை தொழுத பின்–அஞ்ஜலி பண்ணி ஆஸ்ரயிக்காமல் இழக்கிறேனோ

அவனைப் பெற்றால் பொன்னுலகம் ஆளீரோ புவனா எல்லாம் ஆளீரோ என்று கொடுக்க வல்லவன் ஆவேனே )

மண்ணுலகம் ஆளேனே
ஓரடி வர நின்ற பூமியை ஆளுகை
எனக்கு ஒரு பணியோ –

வானவர்க்கும் வானவனாய் விண்ணுலகம் தன்னகத்து மேவேனே
நித்ய ஸூரிகளுக்கு அவ்வருகாய்
பரம பதத்தில் இருக்கை
எனக்கு ஒரு பணி உண்டோ –

நண்ணித் திருமாலை செங்கண் நெடியானை எங்கள் பெருமானைக் கை தொழுத பின்
ஸ்ரீ ய பதியாய்
சமாஸ்ரயணீயனான
எங்களுக்கு ஸ்வாமி யானவனைக் கிட்டிக்
கை தொழுத பின்
போக மோஷங்களில் எனக்கு ஒரு குறை உண்டோ –

(தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ –தஸ்ய உதிதி நாம
கோவிந்த்தேதி யதா க்ரந்தத் க்ருஷ்ணா மாம் தூர நம்
ருணம் ப்ரவ்ருத்தமிவ மே ஹ்ருதயான் நாபஸர்ப்பதி

த்வதங்க்ரிம் உத்திஶ்ய கதா’பி கேநசித்
யதா ததா வா’பி ஸக்ருத்க்ருதோ’ஞ்ஜலி |
ததைவ முஷ்ணாத்யஶுபாந்யஶேஷத:
ஶுபாநி புஷ்ணாதி நஜாது ஹீயதே ||-ஸ்தோத்ர ரத்னம் -28-

காயிக சரணாகதியைக் குறிக்கும் ஒரு அஞ்சலியை யார் எச் சமயத்தில் எவ்வாறு செய்தாலும்,
அது எல்லாப் பாபங்களையும் அடியோடு உடனே போக்கி விடும்; மங்களங்களை வளர்க்கும்;
அந்த மங்களங்கள் அழியாமல் இருக்கும்.

அர்த்த தஸ் ச மயா ப்ராப்தா தேவ ராஜ்யா தயோ குணா
ஹத ஸத்ரும் விஜயினம் ராமம் பஸ்யாமி ஸூஸ் திதம் –யுத்த -116-24-

அடங்கெழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன்
அடங்கெழில் அஃதென்று அடங்குக உள்ளே -1-2-7-
அவனுடைய சம்பத்து என்னும் அனுசந்தானத்தால் லீலா விபூதியும் உத்தேஸ்யமாகுமே -)

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பூதத் ஆழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதி -71-80–பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

September 19, 2013

கீழ் இவன் உகந்த படி சொல்லிற்று-இவனை உகக்கும் நித்ய ஸூரிகள் படி சொல்லுகிறது 

இடங்கை வலம்புரி நின்றார்ப்ப எரி கான்று
அடங்கார் ஒடுங்குவித்த தாழி-விடம்காலும்
தீவாய் அரவணை மேல் தோன்றல் திசை யளப்பான்
பூவாரடி நிமிர்த்த போது–71-

பதவுரை

விடம் காலும்–விஷத்தைக் கக்குகின்ற-காலுதல் உமிழ்தல்
தீ வாய்–பயங்கரமான வாயை யுடைய
அரவு–திருவனந்தாழ்வானாகிய
அணை மேல்–சயனத்தின் மீது (பள்ளி கொண்டிருக்கின்ற)
தோன்றல்–ஸர்வேஸ்வரன்
வலம் புரி–சங்கானது
இடங்கை–இடத் திருக்கையில்
நின்று–இருந்து கொண்டு
ஆர்ப்ப–முழங்க
ஆழி–திருவாழியானது
திசை–எல்லாவிடங்களையும்
அளப்பான்–அளந்து கொள்வதற்காக
பூ ஆர் அடி–பூப்போன்ற திருவடியை
நிமிர்த்த போது–உயரத்தூக்கியருளின காலத்து
எரி கான்று–நெருப்பை உமிழா நின்று கொண்டு
அடங்கார்–எதிரிகளாய் நின்ற நமுசி முதலானவர்களை
ஒடுங்குவித்து–வாய் மாளப் பண்ணிற்று

இடங்கை வலம்புரி நின்றார்ப்ப-
திரு உலகளந்த விஜயத்தை அனுசநித்து
ஹர்ஷத்துக்கு போக்கு விட்டு
ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் ஆர்க்க

(ஆழி எழ சங்கும் வில்லும் எழ திசை
வாழி எழ தண்டும் வாளும் எழ அண்டம்
மோளை எழ முடி பாதம் எழ அப்பன்
ஊழி எழ உலகம் கொண்டவாறே –7-4-1)(

எரி கான்று அடங்கார் ஒடுங்குவித்த தாழி-
ஆர்க்கைக்கு அவசரம் (நேரம்)இன்றிக்கே
அக்நியை உமிழா நின்று கொண்டு
நமுசிப் பிரக்ருதிகளை வாய் வாய் என்று
ஒடுங்குவித்தது திரு வாழி

விடம்காலும் தீவாய் அரவணை மேல் தோன்றல் திசை யளப்பான் பூவாரடி நிமிர்த்த போது-
கிடந்த இடத்தே கிடந்து
விஷத்தை உமிழா நின்ற
திரு அநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளும்
சௌகுமார்யத்தை உடையனான ஈஸ்வரன்
பூமியை அளக்கைக்கு புஷ்பஹாச ஸூகுமாரமான
திருவடிகளை நிமிர்த்த போது
இப்படி ஆனது என்கிறது –

(இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி
இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த
அரவரச பெரும் சோதி அனந்தன் என்னும்
அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி
திரு அரங்க பெரு நகருள் தெண்ணீர் பொன்னி
திரைக் கையால் அடி வருட பள்ளி கொள்ளும்
கருமணியை கோமளத்தை கண்டு கொண்டு என்
கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாளே–ஸ்ரீ பெருமாள் திருமொழி -1-1-)

(பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கொலியும்–தலைப் பெய்வது எஞ்ஞான்று கொலோ -நாச்சியார் -9-9- என்ற ஒலியைக் கேட்டு
ஜிதம் பகவதா ஜகத் -என்று மகிழ்ந்து பறை சாற்றி
ஸ கோஷோ தார்த்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயாநி வ்யதாரயத் -1-19- என்றால் போல்
என் இது மாயம் என் அப்பன் அறிந்திலன் முன்னைய வண்ணமே கொண்டு அளவாய் -பெரியாழ்வார் -1-8-8-என்ற நமுசி பிரக்ருதிகள்
அழியும்படி நிலை நின்று பாஞ்சஜன்யம் முழங்கிற்றே
அங்கு ஆரவாரம் அது கேட்டு அழல் உமிழும் பூங்கார் அரவணை -அஸ்தான பயஸங்கை பண்ணும் திரு அனந்தாழ்வான்
வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து அதன் மேல் கள்ள நித்திரை கொள்கின்ற -பெரியாழ்வார் -5-1-7-என்கிறபடி
புஷ்ப்ப ஹாஸ -சஹஸ்ர நாமம் -922-ஸூ குமாரமான அவனுக்கு என் வருகிறதோ என்று நித்ய ஸூரிகள் படும் பாடு அன்றோ
தத் விஷ்ணோ பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய -விப்ராஸோ விபன்யவோ ஜாக்ருவாம்ச சமிந்ததே-ருக் அஷ்டகம் -1-2-7-
அடி நிமிர்த்த போது இடங்கை வலம் புரி நின்று ஆர்ப்ப
ஆழி எரி கான்று அடங்கார் ஒடுங்குவித்தது -என்று அந்வயம் -)

————————————————————————–

திருமலையில் திர்யக்குகள் ஆஸ்ரயிக்கும் படி சொல்லுகிறது-

(அறிந்து-மாநஸம் –புக்கு-காயிகம் -ஏத்தும்-வாசிகம்
வாயினால் பாடி -மனத்தினால் சிந்தித்து -பூக்களை சமர்ப்பித்து ஆஸ்ரயிக்கும்)

போதறிந்து வானரங்கள் பூஞ்சுனை புக்கு ஆங்கு அலர்ந்த
போதரிந்து கொண்டேத்தும் போது உள்ளம் -போது
மணி வேங்கடவன் மலரடிக்கே செல்ல
அணி வேங்கடவன் பேராய்ந்து-72-

பதவுரை

வானரங்கள்–குரங்குகளானவை
போது அறிந்து–விடியற்கால முணர்ந்து (எழுந்து போய்)
பூ சுனை புக்கு–புஷ்பித்த நீர் நிலைகளிலே புகுந்து (நீராடி)
ஏத்தும்–தோத்திரஞ் செய்யா நின்றன
உள்ளம்–மனமே!
போது–(நீயும் அப்படி செய்ய) வா
அணி வேங்கடவன்–உலகுக்கு ஆபரணம் போன்ற அழகிய திருமலையிலுள்ள பெருமானுடைய
பேர்–திரு நாமங்களை
ஆங்கு அலர்ந்த–அப்போதே மலர்ந்த-அவ்விடத்தே என்றுமாம்
போது–புஷ்பங்களை
அரிந்து கொண்டு–பறித்துக் கொண்டு வந்து ஸமர்ப்பித்து
ஆய்ந்து–அநுஸந்தித்துக் கொண்டு
வேங்கடன் மலர் அடிக்கே செல்ல–அத்திருவேங்கட முடையானுடைய திருவடி தாமரைகட்கே சென்று சேரும்படியாக
போதும்–புஷ்பங்களையும்
அணி–ஸமர்ப்பிக்கக் கடவர்

போதறிந்து-
ப்ரஹ்மே முஹூர்த்தே உத்தாய -என்று
சத்வோத்தர காலம் அறிந்து

வானரங்கள் பூஞ்சுனை புக்கு ஆங்கு அலர்ந்த போதரிந்து கொண்டேத்தும்-
குரங்குகள் பூஞ்சுனையிலே புக்கு
அதில் செவ்விப் பூவை அரிந்து கொண்டு
ஏத்தா நின்றது

போது உள்ளம்-
ஹிருதயமே போரு –

அணி வேங்கடவன் பேராய்ந்து வேங்கடவன் மலரடிக்கே செல்ல போது மணி –
சம்சாரத்துக்கு ஆபரணமான
திருவேங்கடமுடையான் உடைய திரு நாமத்தைச் சொல்லி
அவன் திருவடிகளிலே புஷ்பத்தையும் அணி –
மணி வேங்கடவன் என்று சொல்லி

அணி என்று
கிரியை ஆகவுமாம்-(போதும் அணி புஷ்ப்பம் சமர்ப்பிப்பாய் )

(ப்ராஹ்மே முஹூர்த்தே சோத்தாய சிந்தயே தாத்மநோ ஹிதம்
ஹரிர் ஹரிர் ஹரிர் இதி வ்யாஹரேத் வைஷ்ணவா புமான்
வெள்ளத்தரவில் துயில் அமர்ந்த வித்தினை
உள்ளத்துக்கு கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேர் அரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்து –
திவ்ய தேச ப்ரபாவத்தாலே இங்கு திர்யக்குகளும் காலத்தை அறிந்து பகவத் கைங்கர்யம் செய்கின்றன –

வைப்பன் மணி விளக்காம் மா மதியை மாலுக்கு என்று
எப்பொழுதும் கை நீட்டும் யானையை -எப்பாடும்
வேடு வளைக்கக் குறவர் வில் எடுக்கும் வேங்கடமே
நாடு வளைத்தாடுது மேல் நன்று –நான்முகன் -46-

அறிந்து என்று இவற்றின் மநோ வ்ருத்தியைச் சொல்லி மேலே காயிக வாசிக கைங்கர்யங்களைச் சொல்லுகிறார் –
ஏத்தும் பக்திக்குப் போக்கு வீடாக தனது ஜாதிக்கு உரிய ஏதேனும் ஒரு சப்தத்தை எழுப்பி ஸ்துதிக்கும்
மந்தி பாய் வட வேங்கடமா மலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான் -என்றபடி
நித்யர்களின் ஸாம கானத்தையும்
குரங்குகளின் கூக்குரலையும்
அவற்றில் உள்ள அன்பு அபிநிவேசம் ஒன்றையே பார்த்து வாசியற ஏற்றுக் கொள்பவன் அன்றோ –
மணி வேங்கடவன் என்றுமாம் -நீல மணி போல் கண்டார் களைப்பை ஆற்றும் திருவேங்கட முடையான் அன்றோ -)

————————————————————————

துணிந்த யான்-ஒழி வில் காலம் -வழுவிலா அடிமை செய்யப் பிரார்த்தனை இதில்

துணிந்த-மாநஸம் –தூவி-காயிகம் -உரைப்பன்-வாசிகம்

ஆய்ந்து உரைப்பன் ஆயிரம் பேர் ஆதி நடு அந்திவாய்
வாய்ந்த மலர் தூவி வைகலும் -ஏய்ந்த
பிறை கோட்டுச் செங்கண் கரி விடுத்த பெம்மான்
இறைக்கு ஆட்பட துணிந்த யான் –73-

பதவுரை

பிறை ஏய்ந்த கோடு–சந்திர கலை போன்ற தந்தத்தையும்
செம் கண்–சிவந்த கண்களையுமுடைய
கரி–கஜேந்திராழ்வானை
விடுத்த–முதலை வாயில் நினறு விடுவித்தருளின-குவலயா பீடத்தை முடித்த என்றுமாம்
பெம்மான்–ஸர்வேஸ்வரனான
இறைக்கு–ஸ்ரீமந் நாராயணனுக்கு
ஆள்பட–அடிமை செய்ய
துணிந்த யான்–உறுதி கொண்ட யான்
ஆதி நடு அந்தி வாய் கைகலும்–காலை பகல் மாலை முதலிய எல்லா காலங்கள் எல்லா காலங்களிலும்
வாய்ந்த மலர்–கிடைத்த புஷ்பங்களை
ஆயிரம் பேர்–ஸஹஸ்ர பேரைகளை
ஆய்ந்து உரைப்பான்–ஆராய்ந்து

ஆயிரம் பேர் ஆதி நடு அந்திவாய்
எல்லா திருநாமங்களையும் ஆய்ந்து-ஆராய்ந்து- உரைப்பன் –
எல்லா அவஸ்தைகளிலும் –

வாய்ந்த மலர் தூவி-
கைக்கு எட்டின புஷ்பத்தைக் கொண்டு
வேண்டியபடியே பொகட்டு

வைகலும் –
காலம் எல்லாம்

ஏய்ந்த பிறை கோட்டுச் செங்கண் கரி விடுத்த பெம்மான்
பிறை போலே ஏந்திய கொம்பை உடைத்தாய்
தர்ச நீயமான கண்ணை உடைத்தான
குவலயாபீடத்தை முடித்த
என்னுடைய ஸ்வாமிக்கு

இறைக்கு ஆட்பட துணிந்த யான் -ஆய்ந்து உரைப்பன் –
அவன் பிரதிபந்தகம் போக்க
நான் அடிமை செய்தேன் என்கிறார்-

(ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திரு வேங்கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே -போல் நித்ய கைங்கர்ய பிரார்த்தனை இதில்
பேரும் ஓர் ஆயிரம் பிற பலவுடைய எம்பெருமான் -ஆயிரம் பேர் என்றது மற்ற அனைத்துக்கும் உப லக்ஷணம் –
கழிவதோர் காதல் உற்றாருக்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே -திரு விருத்தம் -97-
வைகல் இரவும் பகலும் என்றும் எல்லாக் காலத்தையும் –
ஆதி நாடி அந்தி -எல்லாக் காலத்தையும் என்றும் -எல்லா நிலைகளையும் என்றுமாம்
ஆஸீநா வா சயாநா வா திஷ்டந்தோ யத்ர குத்ர வா
நமோ நாராயணாயேதி மந்த்ர ஏக சரணா வயம்

ஸாங்கேதயம் பாரிஹாஸ்யம் வா ஸ்தோபம் ஹேளநமேவ வா
வைகுண்ட நாம க்ரஹண சேஷாக ஹரம் விது
திரு நாமம் சொல்ல கால தேச அவஸ்தை பிரகார அதிகாரி நியமம் இல்லையே -விஷய நியமமே உள்ளது
அத்யந்த பக்தி யுக்தஸ்ய ந சாஸ்திரம் நைவ ச க்ரம
மதுவார் தண்ணம் துழாயான் முது வேத முதல்வனுக்கு எதுவெது என் பணி என்னாது அதுவே ஆட் செய்யுமீடே –1-6-2- என்றபடி துணிவும் கைங்கர்யமே யாகும் –
கைங்கர்ய விரோதிகளை அழித்து அருளி என்னை எழுதிக் கொண்டவன் -என்கிறார் )

————————————————————————–

யானே தவம் செய்தேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
யானே தவம் உடையேன் எம்பெருமான் -யானே
இரும் தமிழ் நன்மாலை இணை யடிக்கே சொன்னேன்
பெரும் தமிழன் அல்லேன் பெரிது-74-

பதவுரை

எம்பெருமான்–ஸர்வ ஸ்வாமிந்!
ஏழ் பிறப்பும்–எல்லா ஜன்மங்களிலும்
எப்பொழுதும்–எல்லா அவஸ்தைகளிலும்
தவம் செய்தேன்–தவம் புரிந்தவன்
யானே–நானே
தவம் உடையேன் யானே–அந்தத் தபஸ்ஸின் பலனைப் பெற்றவனும் யானே
இரும் தமிழ் நல் மாலை–சிறந்த தமிழ்ப் பாஷையினாலாகிய நல்ல சொல் மாலைகளை
இணை அடிக்கே–(உனது) உபய பாதங்களிலே
சொன்னேன்–விஜ்ஞாபித்தவனாய்
பெரும் தமிழன்–பெரிய தமிழ்க் கலையில் வல்லவனாய்
பெரிது–மிகவும்
நல்லேன்–உனக்கு நல்லவனாயிருப்பவன்
யானே–அடியேனே

ப்ராப்த விஷயம் -இல்லை எனக்கு எதிர் இல்லை -அஹங்காரம் இதில் உத்தேச்யமே-கேட்டு ஆரார் வானவர் செவிக்கு இனிய செஞ்சொல்லே

யானே தவம் செய்தேன்
நானே தபஸ் பண்ணினவன் ஆகிறேன்

யானே தவம் உடையேன் எம்பெருமான்-
தபஸின் உடைய பலமுடையேனும் நானே
தபஸும் தபஸின் உடைய பலமும் உடையவன் நானே
என்கிறது எத்தாலே என்னில்

யானே இரும் தமிழ் நன்மாலை இணை யடிக்கே சொன்னேன் –
விலஷணம் ஆகிற தமிழ் ஆகிற மாலையை
சேர்ந்த திருவடிகளிலே சொன்னேன் –
ஆகையால் –
பெரும் தமிழன்
பெரிய தமிழன் –

பெரிது நல்லேன்-
மிகவும் நல்லேன்-

(வீற்று இருந்து ஏழு உலகம் -திருவாய் -4-5- இப்பாசுர விவரணமாய் இருக்கும்
இங்கு தவமாவது
ஜன்மாந்தர ஸஹஸ்ரேஷு தபோ ஞான சமாதிபி
நராணாம் ஷீண பாபாநாம் கிருஷ்ணே பக்தி ப்ரஜாயதே –
விதி சூழ்ந்ததால் -திருவாய் -2-7-6-
சொல் மாலைகள் நன்று சூட்டும் விதி எய்தினம் -4-5-7- என்று பகவத் கிருபையையே அருளிச் செய்கிறார் என்றுமாம்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய -செஞ்சொல்லே– 10-6-11-
விதி ப்ரயுக்தாம் பூஜாம் ச க்ருஹ்ணாதி சிரஸா ஸ்வயம்
சொல் மாலைகள் ஏற்ற நோற்றேர்க்கு -4-5-1-
ஏதத் ஸாம காயன் ஆஸ்தே -என்று அங்குள்ளாரைப் போல் அன்றிக்கே
இங்கேயே இவ்வுடம்புடனே இப்பொழுதே
யாவர் நிகர் அகல் வானத்தே -4-5-8-
இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிரே –
பகவத் பாகவத சம்பந்தத்தால் வந்த அபிமானம் உத்தேச்யமே )

(மன்னிய பேரிருள் மாண்ட பின் கோவலுள் மா மலராள்
தன்னோடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன்
பொன்னடி போற்றும் இராமானுசற்கு அன்பு பூண்டவர் தாள்
சென்னியில் சூடும் திரு உடையார் என்றும் சீரியரே – ஸ்ரீ ராமாநுசன் நூற்றந்தாதி -10-)

————————————————————————–

பெரிய தமிழன் -மிகவும் நல்லேன் -என்று சொன்னீர்
ஒரு கவி சொல்லிக் காணும் என்ன-சொல்லுகிறார்

(ஸ்ரீ ராமானுஜர் சிஷ்யர்களுக்கு த்வய மஹா மந்த்ரம் -அருகில் உள்ள திருமந்திரம் சரம ஸ்லோகார்த்தங்கள் கலந்து
அருளிச் செய்ததாக ஸ்ரீ அனந்தாழ்வான் அருளிச் செய்வார்-ஸாரமானவற்றை நமக்கு-நாம் அநாதரித்து இருந்தாலும் -காரேய் கருணையால் அருளியவர் அன்றோ )

(கரை செய் மாக்கடல் கிடந்தவன் கனை கழல் அமரர்கள் தொழுது ஏத்த
அரை செய் மேகலை யலர் மகள் அவளோடும் அமர்ந்த நல்லிமயத்து
வரை செய் மாக்களிர் இள வெதிர் வளர்முளை அளை மிகு தேன் தோய்த்து
பிரச வாரி தன்னிளம் பிடிக்கருள் செய்யும் பிரிதி சென்று அடை நெஞ்சே -பெரிய திருமொழி –1-2-5-இப் பாசுரம் அடியாகவே அருளிச் செய்கிறார்)

பெருகு மத வேழம் மாப்பிடிக்கு முன்னின்று
இரு கண் இள மூங்கில் வாங்கி -அருகிருந்த
தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர்
வான் கலந்த வண்ணன் வரை-75-

பதவுரை

பெருகும்–பெருகுகின்ற
மதம்–மத நீரை யுடைத்தான
வேழம்–யானையானது
மா பிடிக்கு முன் நின்று–(தனது) சிறந்த பேடையின் முன்னே நின்று
இரு கண் இள மூங்கில் வாங்கி–இரண்டு கணுக்களை யுடைத்தாய் இளையதான மூங்கில் குருத்தைப் பிடுங்கி
அருகு இருந்த தேன் கலந்து–(அந்த மூங்கிற் குருத்தை) ஸமீபத்திலுள்ள தேனிலே தோய்த்து
நீட்டும்–(பேடைக்குக்) கொடுப்பதாகக் கையை நீட்டப் பெற்ற
திருவேங்கடம் கண்டீர்–திருமலை யன்றோ
வான் கலந்த வண்ணன் வரை–மேகத்தோடொத்த நிறத்தனான பெருமானுடைய (வாஸஸ்தானமான) பர்வதம்.

பெருகு மத வேழம்-
மதித்து சமைந்ததாகில் சிறிது அறிவு உண்டாம் –
மதம் பெருகா நின்று அறிவு கெட்ட சமயத்தில்

(திருமலைக்கு மேல் திருமலை -திருமலையில் கறு மலை போல்)

மாப் பிடிக்கு –
இப்படி அறிவு கெட்டத்தை
த்யான யுக்தரைப் போலே
தன் புருவம் நெறித்த இடத்தில் கார்யம் கொள்ள வற்றாகை

முன்னின்று –
அந்தேவாசிகளைப் போலே
பிடியினுடைய ஸ்வபாவத்தை அறிந்து
கண் வட்டத்திலே நின்று

இரு கண் இள மூங்கில்
இரண்டு கணு வளையச் செய்தே
பருவத்துக்கு உள்ள முற்றனவற்று இருக்கை

வாங்கி —
மூங்கிலினுடைய மென்மையும் களிற்றுன் உடைய
சாவதானத்தையும் சொல்லுகிறது(பறித்து என்று இல்லாமல் வாங்கி -ஜாக்கிரதையாக )

அருகிருந்த தேன் –
திரு மஞ்சனத்துக்கு சம்பாரித்து இருக்குமா போலே
குறைவற்று இருக்கிறபடி –

தேன் -கலந்து-
த்ரவ த்ரவ்யங்கள் இரண்டும் கலந்தாற் போலே இருக்கை(கடின த்ரவ்யம் போல் மூங்கில் இல்லாமல் த்ரவ்யமாக இளம் மூங்கில் )

நீட்டும் –
இதுக்கு கொடுக்கையே புருஷார்தமாய்
இருக்கிறபடியும்
அது அநாதரிக்கிறபடியும்(பங்குனி உத்தர திரு நாள் பிரணய ரோஷம் போல் )

திருவேங்கடம் கண்டீர் வான் கலந்த வண்ணன் வரை
வான் கலந்த என்கிறது உபமான உபமேயங்கள்
ஸூ சத்ருசமாய் இருக்கிறபடி –

(இப் பாசுரத்தின் சிறப்பை நோக்கி நாலு கவிப் பெருமாள்
வரை செய் மாக்களிறு இளவெதிர் வளர் முளை அளை மிகு தேன் தோய்த்துப் பிரச வாரி தன் இளம் பிடிக்கு அருள் செய்யும் -1-2-5- என்று விரித்து அருள் செய்கிறார் –
யானையே திருமலை தொடரிலே ஒரு கரு மலை போலே உள்ளது –
இளவெதிர் -இளையதான மூங்கில் -முளைத்த போதே அண்ட புத்தியில் சென்று தட்டும் படி -வளர்ந்து இருக்குமாயிற்று –
சர்க்கோ பசர்க்க ஸ்திதீ ஸ்வர்க்கம் துர்க்கதி மாப வர்க்கிக பதம் ஸர்வம் ச குர்வன் ஹரி
யஸ்யா வீஷ்யா முகம் தத் இங்கித பராதீநோ விதத்தே அகிலம் -ஸ்ரீ ஸ்தவம்
அவளுக்கு அவன் வசப்பட்டே அனைத்தும் செய்வது போல் -யானையும் பிடியின் நியமனம் எதிர்பார்த்தே இருக்கும்
நீட்டும் -பிரணய ரோஷத்தால்
அழகியார் இவ்வுலகம் மூன்றுக்கும் தேவிமை தகுவார் பலர் உளர் கழகம் ஏறேல் நம்பீ -6-2-6-என்பது போல் அநாதரித்து நிற்க
புரிந்து மத வேழம் மாப்பிடியோடு ஊடித் திரிந்து சினத்தால் பொருது –
விரிந்த சீர் வெண் கோட்டு முத்து உதிர்க்கும் வேங்கடமே -மூன்றாம் திரு -45-என்று
ஊடல் முற்றிய நிலையை அருளிச் செய்தார்
இவ் வாழ்வார் இங்கு அது நீங்கிய நிலையை அருளிச் செய்கிறார் –
தன் இளம் பிடிக்கு அருள் செய்யும் -1-2–என்றார் திருமங்கை மன்னனும்
தேன் கலந்த மூங்கிலைப் பிடியின் வாயிலே பிழியுமாம் –
பருக்கை -சக்கை -தட்டுமாகில் மிடற்றுக்குக் கீழே இழிச்ச மாட்டாதாயிற்று
அதுக்கு அடி இளம் பிடியாகை
தேனில் ரஸம் பெறுகைக்காக அதிலே தோய்த்துப் பின்னை அதில் கந்தல் யுண்டு -கோது -அது தட்டாதபடி பிழியும்
அதில் யுண்டான பருக்கையும் கூடப் பொறாத படியாய் யாயிற்று இதனுடைய ப்ரக்ருதி மார்த்வம் இருக்கிற படி –
திர்யக்குகளுக்கும் தம்முடைய ரஷ்யத்தினுடைய ரக்ஷணமே யாத்ரையாய் இருக்குமாயிற்று –
வான் கலந்த என்கையாலே மேகமாகிற உபமானமும் மேக வண்ணனாய உபமேயமும் மிக்கு ஒத்து இருப்பதை உணர்த்துகிறார்
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு -திருவாய் -1-8-3- என்று
உபய விபூதியில் உள்ளோரை எல்லாம் ரக்ஷிக்குமவனைப் போலவே
திர்யக்குகளுக்கும் ரஷ்யத்தின் ரக்ஷணமே யாத்ரையாய் இருக்குமாயிற்று –
பெரிய பிராட்டியாரும் தானுமாய் ஸம்ஸ்லேஷித்து இன்புற்று இருக்குமவன் அந்த சம்ஸ்லேஷத்துக்கு பின்பு
மதுபான கோஷ்டியாய் செல்லுமத்துக்கு இது உப லக்ஷணம் – )

இன் கவி பாடும் பரம கவிகளால் தன் கவி தான் தன்னைப் பாடுவியாது இன்று நன்கு வந்து என்னுடன் ஆக்கி என்னால் தன்னை வன் கவி பாடும் என் வைகுந்த நாதனே.–7-9-6-

ஸ்ரீ ஈடு

பெருகு மத வேழம் – ஆற்றுப் பெருக்குப்போலே பெருகா நின்றுள்ள மதத்தையுடைய யானையானது, மாப்பிடிக்கு முன் நின்று – மதித்து முன்னடி தோற்றாதே வருகிற இதனையும் தனக்குக் கையாள் ஆக்கிக்கொள்ளவற்றாய் ஆயிற்று இதனுடைய சீர்மை இருக்கிறபடி.

‘நான் இங்குத்தைக்குச் செய்ய வேண்டுவது என்?’ என்று ஏவிற்றுச் செய்கைக்குக் காலத்தை எதிர் நோக்கி நிற்கின்றதாதலின், ‘முன்னின்று’ என்கிறது.

இரு கண் இள மூங்கில் வாங்கி – இரண்டு கண்ணேறி அதற்குத் தக்க முற்றனவும் இன்றிக்கே இருக்கிற மூங்கிற்குருத்தை வாங்கி; என்றது, தான் மதித்து முன்னடி தோற்றாதே திரியச்செய்தேயும் பிடியின் பக்கல் உண்டான அன்பின் மிகுதியாலே குறிக்கோளோடே ஆதாரத்தோடு வாங்குதலைத் தெரிவித்தபடி.

அருகு இருந்த தேன் கலந்து – திருமஞ்சனத்துக்கு உபகரணங்கள் சமைந்திருக்குமாறு போலே, அருகே மலை முழைஞ்சுகளிலே நிரம்பியிருக்கிற தேன்களிலே வாங்கித் தோய்த்து. மூங்கிற்குருத்தையும் நீர்ப்பண்டத்தைப்போன்றதாக அருளிச் செய்கிறார்.

நீட்டும் – இதுதான் இரந்து கொடாநிற்க, அதனை, அது ‘உனக்கு வேண்டுவார்க்குக் கொடாய்’ என்று நிற்குமாயிற்று.

மா பிடி -சிலாக்கியதை —பிடிங்கி -என்னால் -வாங்கி -ஜாக்ரதை ஆதரம் உடன் – த்வயார்த்தம் -ராமானுஜர் சிஷ்யர்களுக்கு -திரு மந்த்ரம் சரம ஸ்லோகார்த்தம் கலந்து அருளுவார் –

வான் கலந்த வண்ணன் வரை – மூங்கிற்குருத்தும் தேனும் கலந்தாற்போலே ஆயிற்று, மேகமும் அவன் திருநிறமும் கலந்திருக்கும்படி.

————————————————————————–

இப்படி சந்நிஹிதன் ஆனவனை–ஆஸ்ரயிக்கை உறும் என்கிறது

(கீழே வாசா கைங்கர்யம் சொல்லி இதில் காயிக கைங்கர்யம்
ஆத்ம ஸ்வரூப அனுரூபம் த்ரிவித கரணங்களால் கைங்கர்யம் அன்றோ)

வரைச் சந்தன குழம்பும் வான் கலனும் பட்டும்
விரைப் பொலிந்த வெண் மல்லிகையும் -நிறைத்துக் கொண்டு
ஆதிக்கண் நின்ற வறிவன் அடி இணையே
ஓதிப் பணிவது உறும் —76-

பதவுரை

வரை சந்தனம் குழம்பும்–(மலய) பர்வதத்தினின்று முண்டான சந்தனத்தின் குழம்பையும்
வான் கலனும்–சிறந்த ஆபரணங்களையும்
பட்டும்–பட்டுப் பீதாம்பரங்களையும்
விரை பொலிந்த–பரிமளம் விஞ்சி யிருக்கப் பெற்ற
வெண் மல்லிகையும்–வெளுத்த மல்லிகை மலர்களையும்
நிறைத்துக் கொண்டு–சேகரித்துக் கொண்டு
ஆதிக் கண் நின்ற அறிவன்–ஸகல ஜகத் காரண பூதனாய் ஸர்வஜ்ஞனான பெருமானுடைய
அடி இணையே–உபய பாதங்களையே
ஓதி–வாயாரத் துதித்து
பணிவது–தலையார வணங்குவது
உறும்–ஸ்வரூபத்துக்குச் சேரும்.

வரைச் சந்தன குழம்பும்
சந்தன கிரியிலே உண்டான
சந்தனக் குழம்பும்
வான் கலனும்
தேசமான அணிகலனும்
பட்டும்
விரைப் பொலிந்த வெண் மல்லிகையும்
பரிமளம் மிக்கு தர்சநீயமான மல்லிகையும்

நிறைத்துக் கொண்டு ஆதிக்கண் நின்ற வறிவன் அடி இணையே ஓதிப் பணிவது உறும்
இது எல்லாத்துக்கும் காரணமாய் நின்று
இத்தனையும் செய்தான் ஆகில்
இதற்கு மேல் செய்வது என் என்னும்
ஞானத்தை உடைய சர்வேஸ்வரன் உடைய
திருவடிகளையே ஏத்திப் பணிவது உறும் –

(ஸூ கந்த மேதத் ராஜர்ஹம் ருசிரம் ருசிராநநே
ஆவயோர் காத்ர ஸத்ருசம் தீயதாம் அநு லேபநம்
எத்தை இட்டாலும் நற் சாந்தாகவே கொள்ளுமவனானாலும் அவனது ஸுகுமார்ய திருமேனிக்கு ஸத்ருசமாக இடுகையை இவன் ஸ்வரூபத்துக்குத் தக்கது –
பூவை வீயா நீர் தூவிப் போதால் வணங்கேனேலும் நின் பூவை வீயாம் மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே -4-3-1- என்றபடி
அவனையே உபாய உபேயமாகக் கொள்ளும் நெஞ்சே நற் சாந்து ஆகும்
தேசமான அணிகலனும் என் கை கூப்புச் செயகையே –மாடி ஏற்காதவர் கை கூப்புச் செய்கையே அவனுக்கு அணி கலனாகும்
படிச்சோதி ஆடையொடும் பல் கலனாய் நின் பைம்பொன் கடிச்சோதி கலந்ததுவோ -3-1-1- என்றபடி
திருவரையே பூத்தால் போல் உள்ள திரு பீதாம்பரமும்
புனையும் கண்ணி என்னுடை வாசகம் செய் மாலையே வான் பட்டாடையும் அஃதே -4-3-2-என்றும்
கண்ணி எனது உயிர் காதல் கனகச் சோதி முடி முதலா எண்ணில் பல் கலன்களும் ஏலும் ஆடையும் அஃதே என்றும் அருளிச் செய்த படியே
பூ மாலையே -உயிர் என்றும்
வான் கலன் -காதல் என்றும்
பட்டு -நற் பா மாலை
நெஞ்சையே பூசும் சாந்து என்னலாம் படி ஆக்கிக் கொண்டு அருளுபவன் அன்றோ
ஆதிக்கண் நின்ற
ந ப்ரஹ்மா நேஸாந நே மே த்யா வா ப்ருத்வீ ந நக்ஷத்ராணீ
ஏகோ ஹவை நாராயண ஆஸீத்
காரணம் து த்யேய
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் –முமுஷுர்வை சரணம் அஹம் ப்ரபத்யே
ஸஹஸ்ராம் ஸூ -நமது லவ லேச நன்மையை பத்து நூறு ஆயிரமாக்கி கணக்கிட்டு நினைத்து இருக்கும் ஸர்வஞ்ஞன்
ஓதி வாய் படைத்த பயன்
பணிந்து தலை படைத்த பயனாக வணங்கி –
உறும் -இதுவே இவ் வாத்மாவுக்கு தக்கது -)

————————————————————————–

உறும் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் நல் பாதம்
உறும் கண்டாய் ஒண் கமலம் தன்னால் -உறும் கண்டாய்
ஏத்திப் பணிந்தவன் பேர் ஈர் ஐந்நூறு எப்பொழுதும்
சாத்தி உரைத்தல் தவம்-77-

பதவுரை

நல் நெஞ்சே–நல்ல மனமே!
உத்தமன்–புருஷோத்தமனுடைய
நல் பாதம்–சிறந்த திருவடிகள்
உறும் கண்டாய்–நமக்கு ப்ராப்த மானவை காண்க (அப்படிப்பட்ட திருவடிகளை)
ஓண் கமலம் தன்னால்–அழகிய தாமரை மலர்களினால் (ஆராதிப்பதானது)
உறும் கண்டாய்–நமக்கு உரியது காண்
சாத்தி–(அத் தாமரை மலர்களை) ஸமர்ப்பித்து
ஏத்தி–துதித்து
பணிந்து–நமஸ்கரித்து
அவன் பேர் ஈர் ஐந்நூறு–அவனது ஸஹஸ்ர நாமங்களையும்
எப்பொழுதும்–அநவரதமும் ஸங்கீர்த்தனம் பண்ணுகை யாகிற
தவம்–தபஸ்ஸானது
உறும் கண்டாய்–உரியது காண்.

(உறும் கண்டாய் -வாசிக காயிக மானஸ மூன்றுக்கும் மூன்று தடவை அருளிச் செய்கிறார்)

சூத்திர பதார்தங்களினுடைய
காலைப் பற்றிக் கொண்டு திரிந்த உனக்கு
ஸூ ஹ்ருத்தானவனுடைய திருவடிகளைப் பற்றுகை உறும் –

(நல் நெஞ்சே விபரீத லக்ஷனையாக இங்கு வியாக்யானம் –
அப்பிள்ளை முந்துற்ற நெஞ்சே என்று கொண்டாடுகிறார் என்கிறார்)

(திண் கழல் சேரே -அவனும் அவளும் கை விட்டாலும் ஆழ்வாராதிகள் ஆச்சார்யர்கள்
நீ என்னை கை விட்டாலும் நான் உன்னை விடேன் என்று
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொண்டு அருளுவார்கள் அன்றோ)

அப்ராக்ருத புஷ்பம் தேடித் போக வேண்டா
ஆஸ்ரயணீய வஸ்து தன்னிலும்
ஆஸ்ரயணயம் தானே உறும்-

(ராஜ வித்யா ராஜ குஹ்யம் பவித்ரம் இதம் உத்தமம்
ப்ரத்யக்ஷ அவாகமம் தர்ம்யம் ஸூஸூகம் கர்த்தும் அவ்யயம் –9-2-

இந்த பக்தி யோகம் வித்யைகளுக்குள் சிறந்ததாய் ரஹஸ்யங்களுக்குள் சிறந்ததாய் –
பாபங்களைப் போக்கடிப்பவற்றுள் உயர்ந்ததாய் -என்னை -நேரில் காட்டுவதாய்
என்னை அடைவிக்கும் சாதனமாயும் இருப்பதாய் -அனுஷ்டிப்பதற்கு மிகவும் இனியதாய் –
பலத்தைக் கொடுத்த பின்பும் அழியாததாய் இருப்பது –)

(அனுபவ வேளையில் காட்டிலும் ஆஸ்ரயண வேளையில் பிறக்கும் இன்பமே போதுமானது –
நன்னெஞ்சே
முந்துற்ற நெஞ்சே
என்னை நெகிழ்க்கிலும் என்னுடைய நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி -1-7-8 என்றும்
விபரீத லக்ஷனையாகவுமாம்
உத்தமன் நற் பாதம்
அனைவரையும் திருத்தி உஜ்ஜீவிக்க வல்லவன்
பல பல நாழஞ்சொல்லி கேட்பார் செவி சுடும் கீழ்மை வசவுகளே வைத சிசுபாலனுக்கும் அந்திம காலத்தில்
அலவலைமை தவிர்த்த அழகன் -பெரியாழ்வார் -4-3-5-
திருவடி தாட் பால் அடைந்த -7-5-3-
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே -1-2-10-
பிராட்டியும் அவனும் விடிலும் திருவடிகள் விடாமல் திண் கழலாய் இருக்கும் அன்றோ
நின்னில் சிறந்த நின் தாளிணை அவை -பரிபாடல் -3-
ஸூ ஸூகம் கர்த்தும் -அனுஷ்ட்டிக்கும் போதே இனிதாய் இருக்குமே )

————————————————————————–

ஆஸ்ரயணீய வஸ்து கை புகுந்த பின்பு(ஸத்ய லோகத்துக்கு வந்து அன்றோ தன்னைக் காட்டிக் கொடுத்தான் )
(த்ரிவித கரணங்களால் ஆஸ்ரயித்து )ஆஸ்ரயித்த பிரம்மாவை ஒப்பார் உண்டோ என்கிறது –

தவம் செய்து நான்முகனே பெற்றான் தரணி
நிவர்ந்து அளப்ப நீட்டிய பொற்  பாதம் -சிவந்த தன்
கை யனைத்தும் ஆரக் கழுவினான் கங்கை நீர்
பெய்தனைத்துப பேர் மொழிந்து பின்-78-

பதவுரை

தரணி–பூமியை
அளப்ப நிவர்ந்து–தாவி யளப்பதாகத் தொடங்கின த்ரிவிக்ரமாவதார காலத்தலே
நீட்டிய–பரப்பின
பொன் பாதம்–அழகிய திருவடியை
கங்கை நீர் பெய்து–கங்கா தீர்த்தமாகப் பெருகின கமண்டல தீர்த்தத்தைப் பணி மாறி
அனைத்து பேர் மொழிந்து–(பரமனுடைய) எல்லாத் திரு நாமங்களையும் வாயாரச் சொல்லி
பின்–பிறகு
தன் சிவந்த கை அனைத்தும் ஆர–தனது அழகிய கைகளெல்லாம் ஸபலமாகும்படி
கழுவினான்–திருவடி விளக்கியவனான
நான் முகனே–பிரமனொருவனே
தவம் செய்து பெற்றான்–தவப் பயன் பெற்றவனாயினான்.(மஹா கல்பம் முடிவில் மோக்ஷம் பெற்றான் என்றபடி )

(அர்ச்சிராதி மார்க்கம் போனவர் திரும்ப மாட்டார்கள்
திரும்பாத மோக்ஷம் பெற்றவர்கள் எல்லாருமே அர்ச்சிராதி மார்க்கத்தில் போனவர்கள் என்று இருக்க வேண்டாமே
நான்முகன் ஸத்ய லோகத்தில் இருந்தே போகலாமே)

தபஸ் பண்ணினானும்
பலம் பெற்றானும் ப்ரஹ்மாவே
அன்யார்தமாக பிரவர்த்திகச் செய்தே
பலம் பெற்றான் என்கிறது
அநேக கை படைத்தால் உள்ள
லாபம் பெற்றான்

க்ருஹீத்வா தர்மபா நீயம் -என்று
திருவடி விளக்க அபேஷிதமானவாறே
தர்ம ஜலமானத்தைக் கையிலே கொண்டு
அனைத்து திரு நாமங்களைச் சொல்லி
பின்னை திருவடி விளக்கினான்-

(உலகு அளந்த போது இந்திரன் பெற்றது கோதான த்ரை லோக்ய ராஜ்ஜியம்
பிரமன் திருவடிகளைக் காணப் பெற்றான்
இப்படித் தவம் செய்தார் யாரும் இல்லையே -இப்படிப் பயன் பெற்றாரும் இல்லையே –
பொற் பாதத்தைப் பெற்ற பின் காயிக வாசிக கைங்கர்யங்களையும் செய்யப் பெற்றானே
த்ரவீ பூதஸ் ததா தர்மோ ஹரி பக்த்யா மஹா முநே
க்ருஹீத்வா தர்ம பாநீயம் பதம் நாதஸ்ய துஷ்டயே
ஷாளிதம் பரயா பக்த்யா பாத்ய அர்க்யாதி பிரர்ச்சிதம்
ததமபு பதிதம் த்ருஷ்ட்வா ததார சிரஸா ஹர
பாவநார்த்தம் ஜடா மத்யே யோக்யோஸ் மீத்ய வதாரணாத்
வர்ஷா யுதான் யத பஹுன் ந முமோச ததா ஹர –ஈஸ்வர ஸம்ஹிதை
வணக்குடை தவநெறி -திருவாய் -1-3-சேதனன் ஸ்வயம் ப்ரயோஜனமாகச் செய்தாலும்
சர்வேஸ்வரன் அத்தையே தவமாகக் கொண்டு பயன் அளித்து அருள்கிறான் -என்கிறார் ஆழ்வார் )

————————————————————————–

திரு உலகு அளந்து அருளின நீர்மை–ஸ்ரீ ராமாவதாரத்தில் குணங்களுக்கு நேர் என்கிறது –

(மென்மையான திருவடிகளுக்கும் -சேஷ்டிதங்களுக்கும் ஸாம்யம்
அவதாரிகை சங்கதி சொல்வதில் நோக்கம் -ஆகவே முதலில் திரு உலகு அளந்ததைச் சொல்லி பின்பு ராமாவதாரம்

திரிவிக்ரமன் விட வாமனன் என்று சொன்னால் தானே மென்மைக்கு ஒப்பாகும்
அதிதி -இந்திரன் -போல் கௌசல்யை பெருமாளைப் பெற்று -ஸந்தோஷம் -உபேந்த்ரன் சொல்ல முடியாமல் வஜ்ர பாணி இருப்பதால்
வஜ்ர லாஞ்சனம் உண்டே -சொல்லலாமே –
அங்கும் பெருமாளுக்கும் வாமனனுக்கும் ஸாம்யம் சொல்லிற்றே )

பின்னின்று தாய் இரப்பக் கேளான் பெரும் பணைத் தோள்
முன்னின்று தான் இரப்பாள் மொய்ம்மலராள் -சொல் நின்ற
தோள் நலந்தான் நேரில்லாத் தோன்றல் அவன் அளந்த
நீள் நிலம் தான் அனைத்துக்கும் நேர்-79-

பதவுரை

தாய்–மாதாவான கௌஸல்யை
பின் நின்று–பின் தொடர்ந்து
இரப்ப–(என்னை விட்டு நீ காட்டுக்குப் போகலாகாது) என்று பிரார்த்திக்கவும்
கேளான்–அதனை ஏற்றுக் கொள்ளளாதவனாயும்
பெரு பணை தோள்–சிறந்த முங்கில் போன்ற திருத் தோள்களை யுடையளாய்
சொல் நின்ற-தந்தையின் நியமனமாகிய சொல் ஒன்றிலேயே தீவ்ரமாக நின்ற
தோள் நலத்தான்–புஜ பலத்தை யுடையனும்
நேர் இல்லா தோன்றல்–ஒப்பற்ற ஸ்வாமியுமான இராம பிரானுடைய
மொய் மலராள் தான்–பத்மாலய-அழகிய தாமரைப்பூவில் பிறந்தவளான பிராட்டியின் அம்சமான ஸீதையானவள்
முன் நின்று–முன்னை நின்று
இரப்பாள்–(இந்த ஸுகுமாரமான திருமேனியைக் கொண்டு காட்டுக்குப் போவது வேண்டா என்று) பிரார்த்தித்த வளவிலும்
அத்தனைக்கும்–(காட்டின் கொடுமையைப் பாராமல் தைரியமாகக் காட்டுக்கு எழுந்தருளின்) அப்படிப்பட்ட செயலுக்கு
அவன் அளந்த நீள் நீலம் தான் நேர்–அப் பெருமான் மிகப் பெரிய இவ்வுலகத்தை அளந்த செயல் ஒன்றே ஒத்தது.

பின்னின்று தாய் இரப்பக் கேளான்
ஸ்ரீ கௌசல்யை
நான் ஏக புத்ரை
உம்மைப் பிரிந்து நான் ஜீவியேன்
நீர் காட்டுக்குப் போக வேண்டா
என்று சொன்னால் கேளான் –

பெரும் பணைத் தோள் முன்னின்று தான் இரப்பாள் மொய்ம் மலராள்
அக்ரதஸ்த்தேக மிஷ்யாமி -என்று
பிரார்திப்பாள் பெரிய பிராட்டியார்

சொல் நின்ற தோள் நலந்தான் நேரில்லாத் தோன்றல்
ஸ்ரீ ராமாயணத்தில் சொல்லப் படா நின்ற
தோள் வலியை உடையனான பிள்ளையுடைய
குணங்களுக்கு

அவன் அளந்த நீள் நிலம் தான் அனைத்துக்கும் நேர் –
அன்று அளந்தத அத்தனையும்
அக் குணத்துக்கு நேர்-

(சாமான்ய தர்மம்-குரு -பிதா -ராஜா -வ்ருத்தம் -நான்குக்கும் பிரதிசம்பந்தி –
விசேஷ தர்மம்-அபய பிரதானம் –
சாஷாத் தர்மம் -தானேயாக
இப்படி மூன்றுமாக அன்றோ பெருமாள்)

(தோளும் தாளும் -ராமனுக்கு தோள் -வலிமையால் ராவண நிரஸனம் -வாமனன் திரு விக்ரமன் தாள் வலிமையால் நமுசி ப்ரக்ருதிகள் நிரஸனம்
தர்ம ரக்ஷணம் -சாது ரக்ஷணம் -இரண்டிலும்)

(த்வயி ஸந்நிஹிதே அப்யேவம் அஹமாஸம் நிராக்ருதா
கிம் புந ப்ரோஷிதே தாத த்ருவம் மரணமேவ மே -அயோத்யா -20-41-
யதைவ தே புத்ர பிதா ததா அஹம் குருஸ் ஸ்வ தர்மேண ஸூ ஹ்ருத் தயா ச
ந த்வா நுஜாநாமி ந மாம் விஹாய ஸூ துக்கிதாம் அர்ஹஸி கந்து மேவம் -அயோத்யா -21-52-
குருஸ் ச ராஜா ச பிதா ச வ்ருத்த க்ரோதாத் ப்ரஹர்ஷாத் யதி வா அபி காமாத்
யத் வ்யாதி சேத் கார்யம வேஷ்ய தர்மம் கஸ்தம் ந குர்யாத ந்ருசம்ஸ வ்ருத்தி
ஸ வை ந சக்னோமி பிதுர் ப்ரதிஞ்ஞாம் இமாமகர்த்தும் சகலாம் யதாவத்
ச ஹ்யா வயோஸ் தாத குருர் நியோகே தேவ்யாஸ் ச பர்த்தா ச கதி ச தர்ம -அயோத்யா -21- 59-60-
கௌசல்யா தேவி வார்த்தைக்கும் பதில் அளித்து அருளி தர்மத்தை நிலை நாட்டி அருளினார் அன்றோ பெருமாள் –

பின்பு பிராட்டி
பாதா ருந்துத மேவ பங்கஜ ரஜ -தாமரைப் பொடியும் உறுத்தும் மென்மை யுடையவள்
யதி த்வம் பிரஸ்திதா துர்க்கம் வன மத்யைவ ராகவ
அக்ர தஸ்தே கமிஷ்யாமி ம்ருத் நதீ குச கண்டகான் -அயோத்யா -27-6- என்று பிரார்த்திக்க
தர்மத்தோடே ஒத்து இருக்கையாலே அன்றோ பெருமாள் அதற்கு இணங்கினார்
மன்னும் வள நாடு கை விட்டுக் காட்டை உகந்த சக்ரவர்த்தி திருமகன் செயல்கள் வாமணனுடைய செயல்களுக்கு ஒப்பாகுமே
ஸ்ரீ பெருமாளுடைய தர்ம ரக்ஷண உறுதிக்கு ஸ்ரீ வாமனனுடைய ஆஸ்ரித ரக்ஷண உறுதி ஒத்து இருக்கும் என்று கருத்து -)

————————————————————————–

(தனக்கும் பிறருக்கும் ஒப்புமை
தன்னையும் தன்னையும் கால வேற்றுமையால் ஒப்பு
திருவடி வெளிக் காட்டியதுக்கும் ஆபரணங்களால் மறைக்கப் பட்டதுக்கும் ஒப்பு
இப்படி மூன்று அர்த்தங்கள்
படி கோலம் -இயற்கையான அலங்காரம்)

நேர்ந்தேன் அடிமை நினைந்தேன் அது ஒண் கமலம்
ஆர்ந்தேன் உன் சேவடி மேல் அன்பாய் -ஆர்ந்த
அடிக்கோலம் கண்டவர்க்கு என் கொலோ முன்னைப்
படிக்கோலம் கண்ட பகல் -80-

பதவுரை

அடிமை நேர்ந்தேன்–உனது திருவடிகளில் கைங்கரியம் பண்ண நேர் பட்டேன்
ஒரு கண் மலம் அது நினைந்தேன்–அழகிய தாமரைப் பூப் போன்ற அத் திருவடிகளைச் சிந்தித்தேன்
உன் சே அடிமேல்–உனது அத் திருவடிகள் விஷயத்திலே
அன்பு ஆய் ஆர்ந்தேன்–அன்பே வடிவெடுத்தவனாகப் பொருந்தினேன்
ஆர்ந்த–பரிபூர்ணமான
அடி கோலம்–திருவடிகளினழகை
கண்டவர்க்கு– ஸேவிக்கப் பெற்றவர்கட்கு
படி கோலம் கண்ட முன்னைப் பகல் என் கொல்–திருமேனியின் அழகை ஸேவிக்கப் பெற்ற முற்காலம் சிறந்த தாகுமோ?
(திருமேனி ஸேவையிற் காட்டிலும் திருவடி ஸேவையே யன்றோ மிகச் சிறந்தது)

நேர்ந்தேன் அடிமை –
ஸ்வரூப அனுரூபமான கைங்கர்யத்தைக் கிட்டினேன் –

நினைந்தேன் அது ஒண் கமலம் –
ஸ்ப்ருஹணீயகமான திருவடிகளை நினைந்தேன்

ஆர்ந்தேன் உன் சேவடி மேல் அன்பாய் –
உன்னுடைய சிவந்த திருவடிகளிலே
ஸ்நேஹத்தை உடையனாய் பரி பூர்ணன் ஆனேன் –

(நினைந்தேன் முதலில் சொல்லி -அது -என்று சொல்லும் படி -ஒண் கமலம் –மறைத்து சொன்னால் தானே ஆர்வம் தூண்டப்பண்ணும் –
பின்பு சேவடி மேல் அன்பாய் என்கிறார்
அன்போடு நினைத்தேன் அல்ல
க்ரம பிராப்தி -நிர்ஹேதுக கடாக்ஷம்
நினைத்ததால் அன்பு பெருகிற்று)

ஆர்ந்த அடிக் கோலம் கண்டவர்க்கு என் கொலோ முன்னைப் படிக் கோலம் கண்ட பகல் –
திரு உலகு அளந்த திருவடிகளை கண்ட எங்களுக்கு
முன் ஸ்வா பாவிகமான ஒப்பனைகளை கண்ட காலம்
என்னாவது -நாங்கள் கண்டபடிக்கு ஒக்குமோ அது –

(ஆர்ந்தேன் -பூர்ணம் என்றும் பொருந்தினேன் என்றும்)

(குட்ட நாட்டுத் திருப்புலியூர் நின்ற மாயப் பிரான் திருவருளாம் இவள் நேர்பட்டதே -அன்றி மற்றோர் உபாயம் என் -8-9-10-
மூ வுலகுக்கும் நாயகன் தன்னடிமை நேர்பட்ட –8-9-11-
ஆபரணஸ்ய ஆபரணம்
ஆபரணத்துக்கும் அழகு கொடுக்கும் பெருமாள்
ஸர்வ பூஷண பூஷார்ஹா -)

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பூதத் ஆழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதி -61-70–பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

September 19, 2013

நின்றதோர் பாதம் வடிவேயோ-அவனுடைய சேஷ்டிதமும் ஆஸ்ரித பரதந்த்ரம் என்கிறது 

(ஸ்வரூபமும் ரூபமும் ஆஸ்ரித பாரதந்த்ரம் என்றார் கீழ்
இதில் சேஷ்டிதங்களும் அடியார்களுக்காகவே என்கிறார்)

நின்றதோர் பாதம் நிலம் புதைப்ப நீண்ட தோள்
சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் -அன்று
கரு மாணியாய் இரந்த கள்வனை உன்னைப்
பிரமாணித்தார் பெற்ற பேறு —61-

பதவுரை

அன்று கருமாணி ஆய்–முன்பொரு காலத்திலே கரிய கோலப் பிரமசாரியாய்ச் சென்று
இரந்த–(மாவலி பக்கல் மூவடி மண்) யாசித்த
கள்வனே–க்ருத்ரிமனான பெருமானே!
நின்றது ஓர் பாதம்–(பூமியை அளப்பதாக நின்ற ஒரு திருவடியானது
நிலம்–பூ மண்டலத்தை
புதைப்ப–ஆக்ரமித்துக் கொள்ள (அதன் பிறகு)
நீண்ட தோள்–விம்ம வளர்ந்த திருத் தோளானது
திசை எல்லாம் சென்று–திக்குக்களெல்லாவற்றிலும் வியாபித்து
அளந்தது என்பர்–(மேலுலகத்தை) அளந்துகொண்ட தென்று (பெரியோர் செல்லுகின்றனர்) (இப்படி நீ காரியஞ் செய்தவிது)
உன்னை பிரமாணிக்கார் பெற்ற பேறு–உன்னை நம்பினவர்கள் எல்லாரும் பெற்ற புருஷார்த்தமாகும்

நின்றதோர் பாதம் நிலம் புதைப்ப –
இரந்து நின்ற நிலையிலே பூமி எல்லாம்
ஓர் அடியாலே மறைக்கும் படிக்கு ஈடாக

நீண்ட தோள் சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் –
கையிலே நீர் விழுந்தவாறே
அலாப்ய லாபம் போலே
வளர்ந்த தோளானது
திக்குகள் எல்லாம் சென்று அளந்தது என்பர்

அன்று கரு மாணியாய் இரந்த கள்வனை உன்னைப் பிரமாணித்தார் பெற்ற பேறு –
உன்னைப் பேணாதே
உன்னுடைய விபூதியை எவன் தன்னது என்ன
அவன் பக்கலிலே இரந்தாயாய் -வஞ்சித்தாயாய் -செய்தது
இந்த்ரன் ஒருத்தனுக்கு செய்ததேயோ –

ஆஸ்ரித விஷயத்தில் தன்னை அழிய மாறி வஞ்சிக்கும்
தூது போம்
சாரத்தியம் பண்ணும்
எல்லாம் செய்து ரஷிக்கும் என்று
உன்னை பிரமாணித்தவர்கள் மார்விலே கை வைத்து
உறங்கும்படி பண்ணினாய் அத்தனை அன்றோ –

(கரே நிபதிதே தோயே வாமனோ பூத் அவாமன -கையிலே மாவலியின் தான நீர் விழுந்த உடனே வாமனன் நெடியோன் ஆனான் –
அடியாருக்காகவே தனது ஸ்வரூபத்தையும் தாழ்த்திக் கொண்டு யாசிப்பதையும் -வஞ்சிப்பதையும்
தூது போவதையும் தேர் ஓட்டுவதையும் மற்றும் பல இழி தொழில்களையும் செய்து அவர்களை ரக்ஷிப்பவன்
என்று மார்பிலே கை வைத்து உறங்கலாம் படி பெற்ற பயன் அன்றோ –
அனைவருக்கும் வைத்த தண்ணீர்ப் பந்தல் அன்றோ இந்தச் செயல் என்கிறார் -)

————————————————————————–

நப்பின்னை பிராட்டிக்கு பிரதிபந்தகமான–எருதுகளைப் போக்கி-அவளைத் தனக்காக்கிக்
கொள்ளுகையாலே-நம்முடைய பிரதிபந்தகங்களையும் போக்கும் என்கிறது –

பேறு ஓன்று முன்னறியேன் பெற்றறியேன் பேதமையால்
மாறென்று சொல்லி வணங்கினேன் -ஏறின்
பெருத்த எருத்தம் கோடோசிய பெண் நசையின் பின் போய்
எருத்து இறுத்த நல் ஆயர் ஏறு–62-

பதவுரை

பெண் நசையின் பின் போய்–நப்பின்னைப் பிராட்டி விஷயத்திலுண்டான ஆசைக்கு வசப்பட்டு,
ஏறின்–விருஷபங்களினுடைய
பெருத்த எருத்தம்–பெருத்த முசுப்புகளும்
கோடு–கொம்புகளும்
ஓசிய–முறியும்படியாக
எருத்து–(அந்த ரிஷபங்களின்) கழுத்தை
இறுத்த–முறித்த
நல் ஆயர் ஏறு–விலக்ஷணனான கோபால கிருஷ்ணன்
மாறு–(நமது பாபங்களுக்கெல்லாம்) சத்துருவானவன்.
என்று சொல்லி–என்றெண்ணி
வணங்கினேன்–அவனை ஆஸ்ரயித்தேன்
முன்–இதற்கு முன்பு
பேறு ஒன்றும் அறியேன்–இப்படிப்பட்ட புருஷார்த்தத்தைச் சிறிதும் அறியாதவனாயிருந்தேன்
பேதைமையால்–அப்படி அறியாதிருந்ததனால்
பெற்று அறியேன்–அதனைப் பொறாதும் இழந்தொழிந்தேன்.

எருத்தம்  = ககுத்து / மாறு  = சத்ரு

பேறு ஓன்று முன்னறியேன் பெற்றறியேன் பேதமையால்
பேறு ஓன்று உண்டாக முன்பு அறியேன்
அறியாமையே அன்று
பெற்றும் அறியேன் –
பெறாமைக்கு அடி அறிவு கேடு –

ஏறின் பெருத்த எருத்தம் கோடோசிய பெண் நசையின் பின் போய் எருத்து இறுத்த நல் ஆயர் ஏறு-
எருத்தினுடைய பெருத்தக் கழுத்தும் கொம்புகளும்
ஒசியும்படிக்கு ஈடாக நப்பின்னைப் பிராட்டியை
பெறலாம் என்கிற நசையாலே எருத்து இறுத்த

நல் ஆயர் ஏறு
நம் பிரதி பஷத்துக்கும்
மாறு என்று சொல்லி வணங்கினேன் –

(ஸஹஜ ஸ்த்ரீகள் நாம் யாவரும் -அவன் ஒருவனே புருஷோத்தமன்)

(ஞானான் மோக்ஷ அஞ்ஞானாத் ஸம்ஸார —
குண மயீ மம மாயா துரத்யயா -மாமேவ யே ப்ரபத்யந்தே மாயா மேதாம் தரந்திதே -கீதை -7-14-
கச்ச த்வமே நம் சரணம் -என்று உபதேசிக்க
நமஸ் சக்ருர் ஜனார்த்தனம் -என்பதால் வணக்கமே சரணாகதி யாகுமே –
நமக்கு பிரபலமான புருஷகார பலம் -நப்பின்னை -உண்டாய் இருக்க நம் பாபங்களைக் கண்டு சீறி இவனால் உதற முடியாதே
நின் அன்பின் வழி நின்று -பெரியாழ்வார் -3-10-7-ப்ரேம பரதந்த்ரன் அன்றோ )
————————————————————————–

அபிமானியான ருத்ரனுடைய சாபத்தை-போக்குகையாலும்
அவனே ஆஸ்ரயணீயன் என்கிறது

ஏறு எழும் வென்று அடர்த்த வெந்தை எரி உருவத்து
ஏறேறி பட்ட விடு சாபம் -பாறேறி
யுண்ட தலை வாய் நிறையக் கோட்டங்கை யொண் குருதி
கண்ட பொருள் சொல்லில் கதை–63-

பதவுரை

ஏறு ஏழும்–ரிஷபங்களேழையும்
வென்று–ஜயித்து
அடர்த்த–தொலைத்த
எந்தை–ஸ்வாமியான கண்ணபிரான்
எரி உருவத்து ஏறு ஏறிபட்ட–நெருப்புப் போன்ற உருவத்தை யுடையவனும் வ்ருஷப வாஹநனுமான ருத்ரன் அநுபவித்த
விடு சாபம்–எல்லாரும் கை விடும் படியான சாபத்தை (ப்போக்குதற்காக)
பாறு ஏறி உண்ட தலை வாய் நிறைய–பருந்துக்கள் ஏறியிருந்து உண்ணுதற்குரிய கபாலம் வாய் நிரம்பும்படியாக
கோடு–குவிந்த
அம் கை–அழகிய திருக்கையாலே கீறி யெடுத்து அளித்த–

ஒண் குருதி அழகிய ரத்தத்தாலே–

கண்ட பொருள்-அக்கபாலம் கையினின்று கழன்று விழக் கண்ட விஷயத்தை
சொல்லில்–சொல்லத் தொடங்கினால்
கதை–பெரியதொரு பாரத கதையாக முடியும்.

பாறு என்று பறைவையாய் பஷி என்றபடி –

அபிமானியான ருத்ரனுடைய சாபத்தை
போக்குகையாலும்
அவனே ஆஸ்ரயணீயன் என்கிறது

ஏறு ஏழையும் வென்ற ஸ்வாமி
எரியினுடைய உருவை உடையனாய்
ருஷபத்தை ஏறின ருத்ரனை ப்ரஹ்மா
கபாலீ த்வம் பவிஷ்யஸி -என்று இட்ட சாபத்தை
ஒட்டின அழகிய கை –

கழுகும் பருந்தும் ஏறி உண்ணா நின்ற தலையை உடைய
வாய் நிறையும்படிக்கு ஈடாக
அழகிய குருதியைக் கண்ட அர்த்தத்தைச் சொல்லில்
அது ஒரு மகா பாரதம்

ஏழு எருத்தை அடர்த்த விடத்தில்
அத்தால் ஒரு தோஷம் இன்றிக்கே இருக்க
ஒரு தலையை அறுத்ததுக்காக
பாதகியானவனுடைய சாபத்தை போக்கினவனோ ஈஸ்வரன்
பாதகி யானவனோ –
தலை அறுப்புண்டு சோக்யன் ஆனவனோ-
பார்த்துக் கொள்ளும் இத்தனை

(ஓன்று மா கடல் உருவம் ஓன்று செந்தீ -திரு நெடும் தாண்டகம் -2-
தழல் நிற வண்ணன் குழல் நிற வண்ண -பெரிய திரு -6-1-2-
உருவம் கார் உருவம் எரி -முதல் திரு -5-
வேறு இசைந்த செக்கர் மேனி நீறணிந்த புன் சடைக்
கீறு திங்கள் வைத்தவன் கை வைத்தவன் கபால மிசை
ஊறு செங்குருதியால் நிறைத்த காரணம் தன்னை
ஏறு சென்று அடர்த்த வீச பேசு கூசம் இன்றியே –திருச்சந்த விருத்தம் -42-
கபாலீத்வம் பவிஷ்யஸி -மாத்ஸ்ய புராணம் -சாபத்தால் பீடிக்கப்பட்டு கையும் மண்டை ஓடுமாயத் திரிந்து யாசித்து
வெண் தலைப் புலன் கலங்க உண்ட பாதகத்தன் வன் துயர் -திருச்சந்த -113-
ஸ்புடிதம் பஹுதா யாதம் -மாத்ஸ்ய புராணம் –
ஊறு செங்குருதி-என்றும்
அலங்கல் மார்பில் வாச நீர் -திருச்சந்த -113–
தலை அறுப்புண்டவனும்
தலை அறுத்து சாபம் பெற்றவனும் பரம் பொருள் அல்லரே
அந்த சாபத்தைப் போக்கி அருளினவனே பரம் பொருள்
மாத்ஸ்ய புராணம் -182-அத்யாயம் இந்த வ்ருத்தாந்தம் விவரிக்குமே-
தேவீம் ப்ரதி ருத்ர
தத க்ரோத பரீதேந ஸம் ரக்த நயநேந ச
வாம அங்குஷ்ட நகாக்ரேண சின்னம் தஸ்ய ஸிரோ மயா
ப்ரஹ்மா
யஸ்மாதநபரா தஸ்ய சிரஸ் சின்னம் த்வயா மம
தஸ்மாச் சாப ஸமா விஷ்ட கபாலீத்வம் பவிஷ்யஸி
ருத்ர
ப்ரஹ்ம ஹாஸ் அஸகுலிதோ பூத்வா சரன் தீர்த்தாநி பூதலே
ததோ அஹம் கதவான் தேவி ஹிமவந்தம் சிலோச்சயம்

தத்ர நாராயணஸ ஸ்ரீ மான் மயா பிஷாம் பிரயாசித
ததஸ்தேந ஸ்வகம் பார்ஸ்வம் நகாக்ரேண விதாரிதம்

மஹதீ ஸ்ரவதீ தாரா தஸ்ய ரக்தஸ்ய நிஸ் ஸ்ருதா

விஷ்ணு ப்ரஸாதாத் ஸூ ஸ்ரோணி கபாலம் தத் ஸஹஸ்ரதா
ஸ்புடிதம் பஹுதா யாதம் ஸ்வப்ந லப்தம் தனம் யதா –இவை அங்குள்ள சாரமான ஸ்லோகங்கள்)

———————————————————————

இதிஹாஸ புராணங்கள் உடைய ஹிருதயம் இருந்தபடி-அறிந்து சொன்னவற்றில்
நிர்ணீ தமான வர்த்தம்-ஆஸ்ரித பவ்யனானவனுடைய-திரு நாமத்தை சொல்லுகை -என்கிறது-

(கதை -என்றதும் இதிஹாஸ புராண பெரும் பொருளான  தாத்பர்யமான திரு நாம சங்கீர்த்தனம் பற்றி அருளிச் செய்கிறார்-கலவ் கேஸவ கீர்த்தனம் –
அருகில் சேவிக்க முடியாதவன் திரு நாமங்கள் மூலம் அனுபவித்து மகிழ்வான் அன்றோ-இதற்கும் அவன் திரு உள்ளம் பற்ற வேண்டுமே )

கதையின் பெரும் பொருளும் கண்ணா நின் பேரே
இதையம் இருந்தவையே ஏத்தில்-கதையும்
திருமொழி யாய் நின்ற திருமாலே உன்னைப்
பரு மொழியால் காணப் பணி–64-

பதவுரை

கண்ணா–கண்ண பிரானே!
கதையும்–இதிஹாஸ புராணங்களும்
பெரும் பொருளும்–அவற்றின் சிறந்த அர்த்தங்களும்
இதயம்–அவற்றின் தாற்பரியமும்
இருந்த வையே–உள்ளது உள்ளபடியே
ஏத்தில்–அறிந்து துதித்தால்
நின் பேரே–(அவை யெல்லாம்) உன்னுடைய திரு நாமங்களேயாம்
கதையின் திருமொழி ஆய்நின்ற திருமாலே–இதிஹாஸ புராணங்களின் ஸ்ரீஸூக்தி வடிவமாக நிற்கிற திருமானே!
உன்னை–உன்னை
பருமொழியால் காண–பரிபூர்ண சப்தங்களாலே கண்டு அது பவிக்கும்படி
பணி–திரு வுள்ளம் பற்ற வேணும்-

இதிஹாஸ புராணங்களிலே பிரதிபாதிக்கப் பட்ட
ஸ்ரீ ய பதியாய் இருந்துள்ள
உன்னை குறையற்ற சொல்லாலே ஏத்தி
அனுபவிக்கும்படி அருளிச் செய் –

அநவாப்தியான (நிறைவேறாத )சொல் அன்றிக்கே
உன்னைக் கண்டு ஹிருஷ்டனாய் ஏத்தப் பணி-

(கோது கழித்து -கங்கா காங்கேய –எச்சில் வாய் -அசாரம்-சாரம் -சார தரம்-சார தமம்–
தேவதாந்த்ர -உபாயாந்தர -உபயாந்தர -பிரபத்தி மஹா விஸ்வாஸம்-குலையுமே -திரு நாம சங்கீர்த்தனம் தான் தாத்பர்யம்)

(ஸர்வே வேதா கிருஷ்ண
வேதைஸ் ச ஸர்வைர் அஹமேவ வேத்ய -15-15-
ஸத்யம் சத்யம் புநஸ் ஸத்யம் உத்த்ருத்ய புஜ முச்யுதே -வேதாஸ் ஸாஸ்த்ரம் பரம் நாஸ்தி –
த்வம் ஆஸீர் மாத ஸ்ரீ கமி துரித மித்தந்தவ விபவ தத் அந்தர் பாவாத் த்வாம் ந ப்ருத கபி தத்தே ஸ்ருதிரபி –ஸ்ரீ குணரத்ன கோசம் -28-
காணப் பணி
இது போல் ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் கேட்டால் போதாது
தத் விஷ்ணோ பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய -என்று அங்கு கண்டு அனுபவித்து
ஹாவு ஹாவு ஹாவு அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத காம் அந்நாத -என்னவும் பண்ணி அருள வேணும் –
இப்பேற்றை நிர்ஹேதுக கிருபையால் பண்ணி அருள வேணும் என்கிறார் )

————————————————————————–

(இங்கேயே இருந்து திவ்ய தேச கைங்கர்யம் என்றும்
அங்கு சென்றும் இதே போல் கைங்கர்யம் தொடர வேண்டும் என்றும்
இரண்டு நிர்வாகங்கள்
மாம் நமஸ்க்ரு பணிந்தேன் )

பணிந்தேன் திரு மேனி பைங்கமலம் கையால்
அணிந்தேன் உன் சேவடி மேல் அன்பாய்த் துணிந்தேன்
புரிந்து ஏத்தி யுன்னைப் புகலிடம் பார்த்து ஆங்கே
இருந்து ஏத்தி வாழும் இது–65-

பதவுரை

திரு மேனி–உனது திருமேனியை
பணிந்தேன்–ஸேவித்தேன்-கண்டு பணிந்தேன் -கண்டேன் என்று சொல்ல மாட்டாரே -அஹங்கார கர்ப்பமாக இருக்குமே
உன் சே அடி மேல்–உனது செவ்விய திருவடிகளின் மேல்
பை கமலம்–அழகிய தாமரை மலர்களை
அன்பு ஆய்–அன்பு கொண்டு
கையால் அணிந்தேன்–கையால் ஸமர்ப்பித்தேன்
உன்னை–உன்னை
புரிந்து ஏத்தி–விரும்பித் துதித்து
புகல் இடம் பார்த்து–பரமபதத்திலிருக்குமிருப்பை நோக்கி-இங்கு புறப்பாடு முடிந்து திருக் கோயிலுக்குள்ளே புகும் இடம்  பார்த்து என்றுமாம்
ஆங்கே இருந்து ஏத்தி வாழும் இது துணிந்தேன்–அவ்விடத்திலேயே இருந்து கொண்டு மங்களாசாஸநம் பண்ணி
வாழும் வாழ்ச்சியே உரிய தென்று அத்ய வஸாயங்கொண்டேன்.

பணிந்தேன் திரு மேனி –
கண்டேன் என்னும் சொல்லை
சேஷபூதர் ஆகையாலே
பணிந்தேன் -என்று சொல்லுகிறார்

பைங்கமலம் கையால் அணிந்தேன் உன் சேவடி மேல் அன்பாய்த் துணிந்தேன் –
உன் திருவடிகளிலே ஸ்நேகத்தை
உடையேனாய்
அழகிய பூவை அணிந்தேன் –

புரிந்து ஏத்தி யுன்னைப் புகலிடம் பார்த்து ஆங்கே-இருந்து ஏத்தி வாழும் இது துணிந்தேன்-
உன்னை சேவித்து இருந்து- பார்த்து- ஏத்தி
பரம பதத்தில் இருக்கும் படியைப் பார்த்து
ஆங்கே இருந்து யேத்துகை தானே
வாழ்வாக இருக்கிற இத்தை
அத்யவசித்தேன்

பெருமாள் புக்கு அருளினால்
பின்னும் முன்னும் நின்று வைத்த
அனைத்தையும்
பின்பும் பிறகுவாளியையும்
கண்டு யேத்துகையில் துணிந்தேன்

(வா போகு வா -சக்ரவர்த்தி பெருமாள் இடம் -இவர் நம்பெருமாள் இடம்)

புரிகை
சுற்றும் பார்க்கை-

(த்விதா பஜ்யேய மப் யேவம் ந நமேயம் து கஸ்ய சித்
ஏஷ மே ஸஹஜோ தோஷ ஸ்வ பாவோ துரதிக்ரம -யுத்த –36-11-என்று
வணக்கம் அற்று இருந்த என்னை திருமேனியைக் காட்டி ஐயப்பாடு அறுத்து மேலும் ஆதாரம் பெறுக வைத்தாய்
அகிஞ்சித் கரஸ்ய சேஷத்வ அநு பபத்தி
ஸ்வயம் ப்ரயோஜனமாகவே சாத்தினேன்
கஜ ஸிம்ஹ கதீ வீரவ் ஸார்த்தூலவ் ருஷபோபமவ் -நடை அழகு
பூர்வாங்கா ததிகா பராங்க கலஹம் -முன்னிலும் பின்பு அழகிய பெருமாள்-

இங்கே இருந்து அர்ச்சா ஸ்தலங்களில் பல்லாண்டு பாடி வாழ வேண்டும் பட்டர் நிர்வாகம்

வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே -10-10-9-
ந ச புந ராவர்த்ததே
புணை கொடுக்கிலும் போக ஒட்டார் -பெரியாழ்வார் -4-5-2-
தத் விப்ராஸோ விபன்யவோ ஜாக்ருவாம்ஸ சமிந்ததே
சூழ்ந்து இருந்து ஏத்துவார் பல்லாண்டே
அங்கு புக்கு பல்லாண்டு ஏத்தி வாழ வேணும் -என்பதே திருமலை நம்பி நிர்வாஹம் -)

————————————————————————–

பிராப்திக்கும்–பிரதிபந்தக நிவ்ருதிக்கும்–அடி -சம்சார தோஷ தர்சனம் பண்ணுகை-
ஏத்துகையில் துணிகை அன்று –

(ருசி பிறந்தமை கீழ் அருளிச் செய்து
ஸாம்ஸாரிக தண்மை -தோஷ தர்சனம் -பண்ணி அருசியும் வளர வேண்டுமே)

இது கண்டாய் நல் நெஞ்சே இப்பிறவி யாவது
இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது -இது கண்டாய்
நாரணன் பேரோதி நரகத்தருகு அணையாக்
காரணமும் வல்லையேல் காண்–66-

பதவுரை

நல் நெஞ்சே–நல்ல மனமே!
இப் பிறவி ஆவது இது கண்டாய்–இந்த ஸம்ஸாரத்தின் கொடுமை இப்படிப் பட்டது காண்.
நாம் உற்றது எல்லாம் இது கண்டாய்–(இந்த ஸம்ஸாரத்தில்) நாம் அநுபவித்த துக்கங்களெல்லாம் இப்படிப்பட்டவை காண்
நாரணன்–ஸ்ரீமந் நாராயணனுடைய
பேர்–திரு நாமங்களை
ஓதி–ஸங்கீர்த்தனம் பண்ணி
நரகத்து–ஸம்ஸாரமாகிற நரகத்தினுடைய
அருகு–ஸமீபத்திலும்
அணையா காரணமும்–நாம் நிற்கலாகாது என்று வெறுப்பதற்குக் காரணமும்
இது கண்டாய்– இந்த ஸம்ஸாரத்தின் தோஷமே காண்;
(இப்படி ஒவ்வொன்றையும் நான் எடுத்து உரைக்க வேண்டாதபடி)
வல்லை ஏல்–நீயே தெரிந்து கொள்ளக் கடவையாகில்
காண்–எல்லாம் தெரிந்து கொள்.

(நல் நெஞ்சே கீழே சொல்லி -வல்லையேல் -இங்கு ஸம்ஸாரத்தின் தண்மை உன்னையும் படுத்தும் அன்றோ)

நல் நெஞ்சே இப்பிறவியாவது இது கண்டாய் –
பாபத்தாலே நன்று என்று இருந்தது அன்று -பகவத் பிரசாதத்தாலே பொல்லாது என்று
தோற்றின இது கண்டாய் –
சம்சாரமாவது –

இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது
அங்குத்தைக்கு ( ஸ்ரீ கௌஸ்துப மணி போல் ) அசாதாரணமாய் இருக்கச் செய்தே
நாம் அனுபவித்தது எல்லாம் கண்டாய் இறே-
இதுக்கு ஒரு பிரமாணம் வேண்டாம் இறே –

இது கண்டாய் -இத்யாதி –
வகுத்தவனுடைய திரு நாமத்தைச் சொல்லி
நரக சமீபத்தில் செல்லாமைக்கு காரணம்
இதினுடைய தோஷ தர்சனமே –

வல்லையேல் காண் –
அனுபவித்து இருக்கச் செய்தே விடப் போகாது ஒழிகிறது பாபம்-
இல்லையேல் இதினுடைய தோஷ தர்சனத்தைப் பண்ணு-

(மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷாய
பந்தாயா விஷயா சங்கி
முக்த்யை நிர் விஷயம் மன -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-28-)

————————————————————————–

(நம் பெருமையைப் பாராமல் ஸம்ஸார தண்மையையே பார்க்க வேணும் என்று இவர் உபதேசிக்க
பதறி -தோஷமே கண்ணில் படாமல் நம் சொத்தை
பரம விமல திருமேனி -ஆழ்வாரது –
வேறே ஒன்றைக் காண முடியாமல் மானஸ அனுபவம் -கனவில் போல் –
கண்டேன் இங்கேயே –
பின்பு திருக்கண்டேன் அடுத்த ஆழ்வார்
பொன்னாழி கை கண்டேன் அவர்
இவரும் கனலும் சுடர் ஆழி -கண்டேன்)

கண்டேன் திருமேனி யான் கனவில் ஆங்கு அவன் கைக்
கண்டேன் கனலும் சுடர் ஆழி -கண்டேன்
உறு நோய் வினை இரண்டும் ஓட்டுவித்துப பின்னும்
மறு நோய் செறுவான் வலி-67-

பதவுரை

யான்–அடியேன்
கனவில்–ஸ்வப்நம் போன்ற ஸ்வாநுபவத்திலே
திருமேனி–திவ்ய மங்கள விக்ரஹத்தை
கண்டேன்–ஸேவிக்கப் பெற்றேன்
ஆங்கு–அப்போது
அவன் கை–அவனது திருக் கையிலே
கனலும் சுடர் ஆழி கண்டேன்–ஜ்வலிக்கிற சுடர் மயமான திருவாழியைக் கண்டேன்
உறு நோய் வினை இரண்டும்–வந்தேறியாய் இருக்கச் செய்தேயும் ஒன்றி -அனுபவித்தே அற வேண்டிய -மிக்க நோய்களுக்குக் காரணமான புண்ய பாபங்களென்கிற இரண்டு கருமங்களையும்
ஒட்டுவித்து–தொலைத்திட்டு
பின்னும்–பின்னையும்
மறு நோய் செறுவான்–மறுகிளை கிளர்ந்து வரக் கூடிய வாஸநா ருசிகளையும் தொலைத்தருளுமாவனான எம்பெருமானுடைய
வலி–மிடுக்கையும்
கண்டேன்–காணப் பெற்றேன்.

கண்டேன் இத்யாதி
ஆத்மாவுக்கு நித்ய தர்மமான ஞானம்
பிரத்யஷிக்கைக்கு ஆனைத் தாளான (கவாஸ்கம் -வாசலான )மனஸ்ஸாலே
புறப்பட்டு
பாஹ்ய இந்த்ரியங்களாலே காண்கை அன்றிக்கே
ஸ்வப்னதீ கம்யம் -என்கிறபடியே
மனஸ்ஸாலே காண்கை கனவிலே காண்கை யாவது

ஆங்கு இத்யாதி
அபாதிதமாகக் –கண்டேன்

கண்டேன் இத்யாதி
அனுபவிக்கக் கடவதான புண்ய பாபங்களைப் போக்கி
பின்பு வாசனையும் போக்குமவனுடைய
மிடுக்கைக் கண்டேன்

வாசனையைப் போக்குகைக்கு வலி கண்டேன் என்றுமாம்-

(ருக்மாபம் ஸ்வப்ன தீ கம்யம் -மநு ஸ்ம்ருதி -12-122-மானஸ ஸாஷாத் காரம்
ஸூ பாஸ் ரயமான திவ்ய மங்கள விக்ரஹத்தைக் காட்டி அருளி வாஸனா ருசியையும் போக்கி அருளி யவனுடைய பலத்தைக் கண்டேன்
தானி ஸர்வாணி ஸம் யம்ய யுக்த ஆஸீத மத் பர -என்று இவ் வர்த்தம் கீதையில் காட்டப்பட்டுள்ளது அன்றோ)

————————————————————————–

இவனைக் கொண்டு வாசனையைப் போக்குவிக்கை அன்றிக்கே
உப்புச் சாறு கொள்ளுமவர்களைச் சொல்லுகிறது-

வலி மிக்க வாள் எயிற்று வாள் அவுணர் மாள
வலிமிக்க வாள் வரை மத்தாக -வலி மிக்க
வாணாகம் சுற்றி மறுகக் கடல் கடைந்தான்
கோணாகம் கொம்பு ஒசித்த கோ–68-

பதவுரை

வலி மிக்க–மஹா பலசாலிகளாய்
வாள் எயிற்று–வாள் போன்ற கோரப் பற்களை யுடையராய்
வாள்–வாட் படையை யுடையரான
அவுணர்–ஆஸுர ப்ரக்ருதிகள்
மாள–முடிந்து போவதற்காக
வலி மிக்க வாள் வரை மத்து ஆக–மிக்க வலிவுள்ளதாய் ஒளியை யுடைத்தான மந்தர மலையை மத்தாகக் கொண்ட
வலி மிக்க வாள் நாகம்–அதிகமான சக்தியையும் ஒளியையுமுடைய வாஸுகி நாகத்தை
சுற்றி–கடை கயிறாகச் சுற்றி
கடல் மறுக கடைந்தான்–கடல் குழம்பும்படி கடைந்தருளினவன் (எவனென்றால்)
கோள் நாகம்–மிடுக்கை யுடைய குவலயாபீடமென்னும் மத யானையினது
கொம்பு–கொம்புகளை
ஒசித்த–முறித்தொழித்த
கோ–ஸ்வாமியாவன்

வலி மிக்க வாள் எயிற்று வாள் அவுணர் மாள-
மிடுக்கை உடையராய
சாயுதரான அசுரர் முடிய

வலி மிக்க வாள் வரை மத்தாக –
கடையப் புக்கால் பிதிர்ந்து போகாதபடி
மிடுக்கை உண்டாக்கி
மந்தரத்தை மத்தாகக் கொண்டு

வலி மிக்க வாணாகம் சுற்றி
நாற்கால் கடைந்தவாறே
அற்றுப் போகாதபடி வாசுகிக்கு மிடுக்கைக் கொடுத்து

மறுகக் கடல் கடைந்தான்–
கீழ் மண் கொண்டு மேல் மண் எறியும்படி
கடலைக் கடைந்தான்

கோணாகம் கொம்பு ஒசித்த கோ –
நம்மை முடிக்க வந்த குவலயா பீடத்தை கொன்று
நாட்டுக்கு ஒரு சேஷியைத் தந்தான்-

(ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான் -பெரிய திரு -5-7-4-
இப் பாசுரத்தால் தமது விரோதிகளை போக்கித் தம்மை தோற்பித்துக் கொண்டான் சர்வேஸ்வரன் என்கிறார்)

————————————————————————–

கோவாகி மாநிலம் காத்து நம் கண் முகப்பே
மாவேகிச செல்கின்ற மன்னவரும் -பூ மேவும்
செங்கமல நாபியான் சேவடிக்கே ஏழ பிறப்பும்
தண் கமலம் ஏய்ந்தார் தமர் –69-

பதவுரை

கோ ஆகி–ராஜாதி ராஜர்களாய்
மா நிலம் காத்து–பரந்த பூமண்டலத்தை அரசாட்சி புரிந்து
நம் கண் முகப்பே–நம் கண்ணெதிரே
மா ஏகி செல்கின்ற–குதிரை யேறித் திரிகின்ற
மன்னவரும்–அரசர்களும்,
செம் கமலப்பூ மேவும்–செந்தாமரை மலர் பொருந்தி யிருக்கப் பெற்ற
நாபியான்–திரு நாபியை யுடைய பெருமானுடைய
சே அடிக்கே–திருவடிகளுக்கு
ஏழ் பிறப்பும்–பல பல ஜன்மங்களிலே
தண் கமலம்–அழகிய தாமரைப் பூக்களை
ஏய்ந்தார்–ஸமர்ப்பித்தவர்களான
தமர்–பக்தர்களாவர்

தேவர்களை ஒழிய சிலர்
வாழாதே இருக்கச் செய்தே
சிலர் வாழ்ந்தாராய் இருக்கிற ராஜாக்களும்
அழகிய தாமரைப் பூவை திரு நாபியில்
உடையவனானவனுடைய திருவடிகளிலே
குளிர்ந்த தாமரைப் பூவை அணிந்த -(அணிவித்த -)தமர்கள் இறே
ராஜாக்களாக திரிகிறவர்கள் –

(முதலாம் திருவுருவம் மூன்று என்பர் ஒன்றே
முதலாகும் மூன்றுக்கும் என்பர் முதல்வா
நிகரிலகு காருருவா நின்னகத்தன்றே
புகரிலகு தாமரையின் பூ –-பெரிய திருவந்தாதி -72-

ஏய்ந்தார் தமர் -இவனை ஆஸ்ரயித்தவர்களே சக்கரவர்த்திகள் ஆவார் என்றும்
ஏய்ந்தாருடைய தமர் என்று இவரை ஆஸ்ரயித்த ப்ரஹ்மாதிகளை ஆஸ்ரயித்தவர்களும் சக்கரவர்த்திகள் ஆவார் என்றும் கொள்ளலாம் -)

————————————————————————–

தனக்கு நல்லவர்களுக்கு-அவன் சந்நிதி பண்ணும் இடங்கள் சொல்லுகிறது –

(ஆழ்வார் திரு உள்ளத்துக்கு எட்டு திவ்ய தேச வாசமும் ஒவ்வாது -எட்டைச் சொன்னது அனைத்துக்கும் உப லக்ஷணம்
பக்தானாம் -அடியார் உள்ளமே -அவனுக்கு பரம புருஷார்த்தம்

சோழ நாட்டு இரண்டும் -தலை அடை மொழி -தொண்டை நாட்டு -தண் கால் –
தமர் உள்ளும் -திருவேங்கட யாத்திரை மநோ ரதம் -தண் பொருப்பு
வேலை -திருப்பாற்கடல்
தமர் உள்ளும் புண்டரீகர் போல்வார் சிந்திக்கும் திருக்கடல் மல்லை
திருக்கோவில் -இவர்கள் மூவரும்
மதிள் திருக்குடந்தை -இங்கு தானே சாரங்க பாணி -ஸூ ரஷிதம் -திராவிட ஆம்னாய பெருமாள் அன்றோ)

தமருள்ளும் தஞ்சை தலை யரங்கம் தண் கால்
தமருள்ளும் தண் பொருப்பு வேலை -தமருள்ளும்
மா மல்லை கோவல் மதிள் குடந்தை என்பரே
ஏவல்ல வெந்தைக்கு இடம் –70-

பதவுரை

தமர் உள்ளம்–பக்தர்களுடைய ஹ்ருதயம்
தஞ்சை–தஞ்சை மா மணிக் கோயில்
தலை அரங்கம்–சிறந்ததான திருவரங்கம்
தண் கால்–திருத் தண் கால்
தமர் உள்ளும்–பக்தர்கள் தியானிக்கிற
தண் பொருப்பு–அழகிய திருமலை
வேலை–திருப் பாற் கடல்
தமர் உள்ளம்–பக்தர்கள் சிந்திக்கிற
மா மல்லை–திருக் கடன்மல்லை
கோவல்–திருக் கோவலூர்
மதிள் குடந்தை–திரு மதிள்களோடு கூடிய திருக்குடந்தை (ஆகிய இத்தலங்களெல்லாம்)
ஏவல்ல எந்தைக்கு இடம் என்பர்–எதிரிகளை முடிக்க வல்லவனான எம்பெருமானுக்கு இருப்பிட மென்பர்.

தமருள்ளும் –
அவற்றில் முற்பட்டது
ஆஸ்ரிதர் உடைய ஹிருதயம்

(இதிஹாச புராணம் -அத்தாலே அது முற்பட்டது -அச்சு எழுத்து குறைவான புராணம் முதலில் சொல்லாமல்
அப்யஹிதம் பொருள் உயர்ந்த ஒன்றை முதலில் சொல்ல வேண்டும்
அதே போல் இங்கும் -அர்த்த கௌரவத்தாலே
வந்தே கோவிந்த தாதவ் -பட்டர் எம்பாரைச் சொல்லி பின்பே கூரத்தாழ்வானை அருளிச் செய்தது போல் இங்கும்
தமர் உள்ளமே அவனுக்கு பரம புருஷார்த்தம்)

தஞ்சை
தஞ்சை மா மணிக் கோயில்

தலை யரங்கம்
திருப்பதிகளில் பிரதானமான கோயில்

தண் கால்
திருத் தண் கால்

தமருள்ளும் தண் பொருப்பு
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு சர்வஸ்வமான திருமலை

வேலை
திருப் பாற் கடல்

தமருள்ளும் மா மல்லை கோவல்
மூன்று ஆழ்வார்களையும் நெருக்கின இடம்

மதிள் குடந்தை
திரு மழிசைப் பிரான் உகந்த இடம்

என்பரே ஏவல்ல வெந்தைக்கு இடம் —
சக்கரவர்த்தி திருமகனுக்கு
இடம் என்று சொல்லுவார்கள்

ஏ வல்ல
எய்ய வல்ல-

(தமர் உள்ளம் -அப்யர் ஹிதம் பூர்வம் -சிறந்த ஒன்றை முதலில் சொல்வதே நியாயம் –
ஹ்ருதயம் தத் விஜா நீயாத் விஸ்வஸ்ய ஆயதனம் மஹத் -என்றும்
நெஞ்சமே நீள் நகர் -திருவாய் -3-8-2-என்கிறபடியே
பெரும் கோயிலை முதலில் சொல்லி
வெள்ளத்து இளம் கோயில் -இரண்டாம் திரு -54-என்றபடியே -ஆராமம் சூழ்ந்த அரங்கம் போன்ற திவ்ய தேசங்களாக இளம் கோயில்கள் எல்லாம்
பிரதிபக்ஷத்தை எய்த்து விழ விட வல்ல தசரதாத்மஜனுக்கு வாசஸ்தானம் என்பர் அறிவுடையோர் என்கிறார்
ஏ வல்ல எந்தை -எய்தற்கு வல்லனான என் ஸ்வாமி என்றபடி -)

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பூதத் ஆழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதி -51-60–பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

September 17, 2013

மதிக் கண்டாய் நெஞ்சே மணி வண்ணன் பாதம்
மதிக் கண்டாய் மற்றவன் பேர் தன்னை -மதிக் கண்டாய்
பேராழி நின்று பெயர்ந்து கடல் கடைந்த
நீராழி வண்ணன் நிறம்–51

பதவுரை

நெஞ்சே–மனமே!
மணி வண்ணன் பாதம்–நீல மணி வண்ணனான எம்பெருமானது திருவடிகளை
மதி கண்டாய்–அநுஸந்திக்கக் கடவாய்-லாவண்யம் ஸூவுந்தர்யங்களை சொன்னவாறு –
பேர் ஆழி நின்று பெயர்ந்து–பெரிய திருப் பாற் கடலில் நின்றும் துயில் விட்டெழுந்து
கடல் கடைந்த–தேவர்களுக்கு அமுதங்கொடுக்க அக் கடலைக் கடைந்த
மதிக் கண்டாய்–சிந்திக்கக் கடவாய்
மற்று–இன்னமும்
அவன் பேர் தன்னை–அப்பெருமானது திருநாமங்களை
நீராழி வண்ணன் நிறம்–கடல் வண்ணனான அப்பெருமானுடைய திருமேனி நிறத்தை
மதிக் கண்டாய்–நினைக்கக் கடவாய்-

ஸ்ரமஹரமான வடிவை உடையவனுடைய திருவடிகளை
நெஞ்சே மதிக் கண்டாய்
அவனுக்கு வாசகமான திரு நாமத்தை மதிக் கண்டாய்
கண் வளருகைக்கு போரும்படி
பெரிதான திருப் பாற் கடலிலே நின்றும் பேர்ந்து
பின்னை அத்தை கடைவதும் செய்து
நீரை உடைத்தான
கடல் போலே இருக்கிறவனுடைய
திரு நிறத்தை அனுசந்தி-

(கண்டாய் -ஒவ்வொன்றையும் நன்றாக அனுபவித்து அனுசந்திக்க -சாத் மிக்க சாத் மிக்க-மீண்டும் மீண்டும் அருளிச் செய்கிறார் -)

(தாளும் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பி -விஸ்தாரமான திருமேனியோடே கண் வளரலாம் படியான பெரிய திருப்பாற் கடல்
கடல் கடையும் போதைக்கு ஒரு வெண் கடலை ஒரு கரும் கடல் கடைந்தால் போல் ரமணீயமாய்
கடல் போன்ற திரு நிறமுடையவனது அழகை பொறுக்கப் பொறுக்க அனுபவிக்கப் பாராய் என்கிறார் –

—————

(அகல்விக்கத் தானும் கில்லான் -ஆழ்வாரை விட அவர் திரு உள்ளம் ஸ்ரேஷ்டம்
அத்தை யுடையவர் ஆகையால் ஆழ்வாருக்கும் ஸ்ரேஷ்டம்
மிதுன -சேர்த்தி –அவளாலேயே தர்மம் சாஸ்தாபனம் -இங்கே தர்மம்-ஆன்ரு சம்சயம் கிருபை –
கிருபையையும் அழகையம் -அளவிட்டு அறிய யாவராலும் முடியாதே-தானும் தன் தன்மை அரியான்)

நிறம் கரியன் செய்ய நெடு மலராள் மார்வன்
அறம் பெரியனார் அது அறிவார் -மறம் புரிந்த
வாள் அரக்கன் போல்வானை வானவர் கோன் தானத்து
நீள் இருக்கைக்கு உய்த்தான் நெறி —52–

பதவுரை

நிறம் கரியன்–(காள மேகம் போல்) கருநிறமுள்ளவனும்
செய்ய நெடு மலராள் மார்வன்–சிவந்த நிறத்தை யுடையளாய்ப் பெரிய தாமரைப் பூவை யிருப்பிடமாக வுடையளான
பெரிய பிராட்டியாரைத் திரு மார்விலே யுடையனுமான எம்பெருமான்
அறம் பெரியன்–அருளில் பெருத்தவன்

ந்ருஸம் -கருணை இல்லாதவன் -ஆளவந்தார் நைச்யம் பாவித்து அருளிச் செய்துள்ளார் அன்றோ
ஆன்ரு சம்சயம் -தர்மம் -கருணை அதிசயம் –
மறம் புரிந்த வாள்–பகை பாராட்டின
அரக்கன் போல்வானை–வாட் கையனான இராவணன் போன்ற மஹா பலியை
(இராவனைப் போலவே தலை யறுக்க வேண்டியிருந்தும் அது செய்யாமல்)
வானவர் கோன் தானத்து–தேவேந்திரனுடைய லோகமான ஸ்வர்க்கம் போலே விலக்ஷணமான பாதாள லோகத்தில்
நீள் இருக்கைக்கு–நீண்ட காலம் வாழும் படியாக
உய்த்தான்–செலுத்தின அப் பெருமானுடைய
நெறி அது–அவ் வருள் வகையை
ஆர் அறிவார்–யார் தெரிந்து கொள்ள வல்லர்?-

(இந்திர லோகம் போல் பயப்பட வேண்டாத படி நீள் இருக்கையான பாதாள லோகம் என்றுமாம்)

ஸ்ரமஹரமான வடிவை உடையவனாய்
நீல மேகத்திலே மின்னற் போலே
பிராட்டியை திரு மார்பிலே உடையவனாய்
அவளோட்டை கலவியாலே
ஆன்ரு சம்சய பிரதானனான் ஆன படியை யார் அறிவார்

(சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே

யார் அறிவார் -என்பதை ஒவ்வொன்றிலும் சேர்த்து அந்வயம்-அவனது கருணையின் பெருமை யார் அறியார்
அவளால் தான் இது என்பதை என்பதை யார் அறிவார்
மிதுனத்தில் அழகை யார் அறிவார் )

ராவணனோ பாதியும் வதத்துக்கு யோக்யனாய் இருக்கச் செய்தேயும்
இவன் பக்கலிலே ஔதார்ய குணம் கிடந்தது என்று
மன்வந்தரம் பூர்ண மபேத சத்ரு -என்னும்படியே
மேல் இந்திர பதம் செலுத்துவதாக வைத்தவனுடைய
ஆன்ரு சம்சயத்தை யார் அறிவார்-

(மிதுனச் சேர்த்தி அழகு –
நீல தோயத மத்யஸ்தா வித்யுல்லேகேவ பாஸ்வரா
நீலமுண்ட மின்னன்ன மேனிப் பெருமான் -திரு விருத்தம் -29-
தயா ஸ ராஜ ரிஷி ஸூத அபி ராமயா ஸமேயிவான் உத்தம ராஜ கன்யா
அதீவ ராம ஸூ ஸூபே அதி காமயா விபுஸ் ஸ்ரீ யா விஷ்ணுர் இவாம் அரேஸ்வர -பால -77-80-
ஆன்ரு சம்ஸயம் பரோ தர்ம -ஸூ ந்தர -38-41-
அவள் சம்பந்த்தாலேயே பேர் அருளாளன் ஆகிறான் –
த்வத்த ஏவ மயா ஸ்ருத -ஸூந்தர -38-41- அவளுக்கும் அவன் உபதேசித்து அருளுவான்

அருளின் பெருமைக்கு உதாஹரணம் மேல் –

சுரி குழல் கனிவாய்த் திரு வினைப் பிரித்த கொடுமையில் கடுவிசை அரக்கன் -பெரிய திருமொழி -5-7-7-
கோபம் ஆஹாரயத் தீவ்ரம் -ஆரண்ய -24-34-
கோபஸ்ய வஸமே யிவான் -யுத்த -59-136-

யத்ராம்பு விந்யஸ்ய பலீர் மநோ ஜ்ஞாந் அவாப போகான் வஸூதா தலஸ்த
ததா மரத்வம் த்ரித ஸாதி பத்யம் மந்வந்தரம் பூர்ணம பேத ஸத்ரு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-7-30-
தான நீர் வார்த்ததாலேயே இவ் வுலக போகங்களை அடைத்து மேலே ஒரு மன்வந்தர காலம் எதிரிகளே அற்றவனாய் மூ வுலகையும் ஆளும் தேவேந்திர பதவியும் பெற்றானே
நெறி என்று ஸ்வர்க்கம் போல் சிறந்த பாதாள உலகையும் அருளையும் காட்டும் )

————————————————————————–

(கா மறு சீர் அவுணன் -அசுரர்களில் தாழ்ந்த நமக்காக அன்றோ திருவேங்கடத்தில் நித்ய வாஸம் செய்து அருளிகிறான்

நெறியார்-கோயில் காப்பான் வாசல் காப்பான் போல் -இதுவே நிரூபகம் இவர்களுக்கு -எம்பெருமான் பொன் மலையில் ஏதேனும் ஆவேனே போல் பாகவத உத்தமர்கள் வழியிலேயே ஊன்றி இருப்பார்களே )

நெறியார் குழல் கற்றை முன்னின்று பின் தாழ்ந்து
அறியாது இளங்கரி என்று எண்ணிப் -பிரியாது
பூங்கொடிகள் வைகும் பொரு புனல் குன்று என்னும்
வேங்கடமே யாம் விரும்பும் வெற்பு –53–

பதவுரை

நெறியார்–திருமலை வழியிலேயே ஊன்றியிருப்பவர்களுடைய
சூழல் கற்றை முன் நின்று பின் தாழ்ந்து அறியாது–கேச பாச மானது முன்னே முளைத்துப் பின்னே
தொங்கிக் கொண்டிருக்கவும் இது மநுஷ்ய வ்யக்தி யென்று தெரிந்து கொள்ளாமல்
இள கிரி என்று எண்ணி–இது ஒரு சிறு மலை யென்று எண்ணிக் கொண்டு
பூங்கொடிகள்–பூங்கொடிகளானவை
பிரியாது–அவ்விடம் விட்டு நீங்காமல்
வைகும்–நித்ய வாஸம் பண்ணப் பெற்றதாய்
பொரு புனல் குன்று என்னும்–அலை யெறிகின்ற ஜல ஸம்ருத்தியை யுடைத்தான திருமலை யென்று ப்ரஸித்தமான
வேங்கடமே–திருவேங்கடமே
யாம் விரும்பும்–நாம் ஆசைப்பட வுரிய
வெற்பு–திருமலை யாகும்.

ஆஸ்ரயித்தவர்கள் உடைய
முன்னின்று பின் தாழ்ந்த குழல் கற்றையை அறியாதே
ஒரு சிறுமலை என்று எண்ணி
மூச்சு விடுதல்
உடம்பாடுதல்
செய்யாமையாலே
இன்ன மலை என்று அறியாமையாலே
பூக்களை உடைத்தான கொடிகள் தங்குகிற
பொரா நின்ற புனலை உடைத்தாய் இருந்துள்ள மலை
என்கிற திருவேங்கடமே நாம் ஆசைப்படும் மலை
ஸ்தாவர பிரதிஷ்டராய் இருந்து த்யாநிக்கிறவர்கள் –

(வெறியார் தண் சோலைத் திருவேங்கட மலை மேல் நெறியாய்க் கிடக்கும் நிலை யுடையேனாவேனே -பெருமாள் -4-8-
இதுவே உத்தேச்யம் என்று நெறியைக் கொண்டே இவர்கள் நிரூபகம் -)

————————————————————————–

இவன் திருமலையை விரும்பிப் புக்கவாறே-அவன் இவருடைய ஹிருதயத்தை விரும்ப
பிரானே -அவற்றை கை விடாத ஒண்ணாதே என்கிறார்

(திருக் கடித்தானமும் என்னுடைச் சிந்தையும் –ஏறி வந்த ஏணி போல் -க்ருத்தஞ்ஞா கந்தம்)

வெற்பு என்று இரும் சோலை வேங்கடம் என்று இவ்விரண்டும்
நிற்பென்று நீ மதிக்கும் நீர்மை போல் -நிற்பென்று
உளம் கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன் வெள்ளத்து
இளம் கோயில் கை விடேல் என்று –54

பதவுரை

வெற்பு என்ற–(தெற்கு) திருமலை யென்னப்படுகிற
இருஞ்சோலை–திருமாலிருஞ் சோலை யென்ன
வேங்கடம்–திருவேங்கடமென்ன
என்ன இவ் இரண்டும்–ஆகிய இத் திருமலைகளிரண்டும்
நிற்பு என்று–நாம் உகந்து வாழுமிடமென்று
நீ மதிக்கும் நீர்மை போல்–நீ திருவுள்ளம் பற்றி யிருக்குந் தன்மையை உடைத்தாயிருப்பது போலவே
உளம் கோயில்–(என்னுடைய) ஹ்ருதயமாகிற கோயிலும்
நிற்பு என்று–நீ உகந்து வாழுமிடமென்று
உள்ளம் வைத்து–பிரதிபத்தி பண்ணி
வெள்ளத்து இளம் கோவில்–திருப் பாற்கடலாகிற பாலாலயத்தை
கை விடேல் என்று–கைவிட வேண்டா என்ற
உள்ளினேன்–பிரார்த்திக்கின்றேன்.

(உள்ளினேன்-உள்ளம் வைத்ததாய் என்பதை நான் நினைத்தேன் என்றும்
கை விடேல் என்றும் உள்ளினேன்)

வெற்பு என்று சொல்லப் படா நின்ற
தெற்கு திருமலை பெரிய திருமலை இவை போலே
என்னுடைய ஹிருதயத்தையும் உன்னுடைய கோயிலாக நினைத்தாய் என்று அறிந்து
நான் கிருதக்னனாக ஒண்ணாது என்று
ஹிருதயத்திலே புகுருகைக்கு
பாலாலயமாகக் கொண்ட
திருப் பாற் கடலை கை விடாதே கொள் என்று
இரக்கிறேன்-

(மதுர கவி ஆழ்வார் கரிய கோலத் திருக் கோயில் காண்பது ஆழ்வார் திரு உள்ளம் உகப்புக்காக
ஆழ்வார் திரு உள்ளம் உகப்பதால் பெருமாளையும் இவற்றைக் கைவிடக் கூடாது என்கிறார்
மதுரகவி நிஷ்டையை அவனும் உகப்பானே)

(திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே–10-7-8-

தலை மேல் புனைந்தேன் சரணங்கள் ஆலின்
இலைமேல் துயின்றான் இமையோர் வணங்க
மலைமேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை
நிலை பேர்க்கல் ஆகாமை நிச்சித்து இருந்தேனே–10-4-4-

கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும்
புல்லென்று ஒழிந்தன கொல் ஏ பாவம் வெல்ல
நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான்
அடியேனது உள்ளத் தகம்–-பெரிய திருவந்தாதி –68-

நாகத்தணைக் குடந்தை வெக்கா திரு எவ்வுள்
நாகத்தணை யரங்கம் பேரன்பில் –நாகத்
தணைப் பாற் கடல் கிடக்கும் ஆதி நெடுமால்
அணைப்பார் கருத்தானாவான்–நான்முகன் திரு -36-

பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என்
மனக்கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ
தனிக்கடலே தனிச் சுடரே தனி உலகே என்று என்று
உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினையே –பெரியாழ்வார் –5- 4-9 –

ஹ்ருதயம் தத் விஜா நீயாத் விஸ்வஸ்ய ஆயதனம் மஹத் –

திருமாலிரும் சோலை மலையே–என்கிறபடியே -உகந்து அருளினை நிலங்கள் எல்லாவற்றிலும் பண்ணும் விருப்பத்தை இவனுடைய சரீர ஏக தேசத்திலே பண்ணும் –ஸ்ரீ வசன பூஷணம் –ஸ்ரீ வசன பூஷணம் -சூர்ணிகை -170-

அங்குத்தை வாசம் சாதனம் –இங்குத்தை வாசம் சாத்யம் –சூர்ணிகை-171-

கல்லும் கனை கடலும் –பெரிய திருவந்தாதி – 68-என்கிறபடியே-இது சித்தித்தால் –அவற்றில் ஆதாரம் மட்டமாய் இருக்கும் –சூரணை -174-

இளம் கோவில் கை விடேல் –இரண்டாம் திருவந்தாதி -54-என்று இவன் பிரார்த்திக்க வேண்டும் படியாய் இருக்கும் –சூரணை -173-

ப்ராப்ய ப்ரீதி விஷயத் வத்தாலும்–க்ருதஞ்சதையாலும்–பின்பு அவை அபிமதங்களாய் இருக்கும் —சூரணை -174-

சாத்ய ஹ்ருதிஸ்னாயும்-சாதனம் ஒருக்கடுக்கும்
க்ருதஜ்ஞதா கந்தம்-தாயப் பதியிலே–ஸ்ரீ ஆச்சார்ய ஹ்ருதயம் சூரணை -176-)

————————————————————————–

உன்னை நினைக்கை அரிதான சம்சாரத்திலே-உன்னை நினைக்கும் படி பண்ணினாய் 
இனி பிராப்தி அளவும் பண்ணாயோ என்கிறார் –

(ஞானம் -மதி நலம் அருளினாய் -ஞப்த்தி பல முக்தி தலை சேர வேண்டாமோ -அதுக்குப் பலமாக பரம புருஷார்த்தமும் அருள வேண்டாமோ
இன்பக் கடலாழி நீ யருளிக் காண்–உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் -நம்மாழ்வார் இந்த பாசுரம் அடியாகவே அருளிச் செய்கிறார்
ஏழு பிறப்பும் -அதிலும் எப்பொழுதும் -எல்லா நிலைகளிலும் ஸ்திரமாக -நின்று அருளிய படியால்
என்றும் மறந்து அறியேன் –இந்த அவஸ்தை உண்டாக்கி கூப்பிட வைத்து அருளினாய்)

என்றும் மறந்து அறியேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
நின்று நினைப்பு ஒழியா நீர்மையால் -வென்றி
அடல் ஆழி கொண்ட வறிவனே இன்பக்
கடலாழி நீ யருளிக் காண்–55-

பதவுரை

வென்றி–ஜய சீலமாய்
அடல்–தீக்ஷணமான
ஆழி–சக்கரத்தை
அறிவனே–ஸர்வஜ்ஞனான பெருமானே!
ஏழ் பிறப்பும்–இப்படியிருக்கிற நீ எல்லா ஜன்மங்களிலும்
எப்பொழுதும்–எல்லா அவஸ்தைகளிலும்
நின்று நினைப்பு ஒழியா நீர்மையால்–ஒரு படிப்பட நின்று என்னைப் பற்றின நினைவு தப்பாமலிருந்ததனால்
என்றும் மறந்தறியேன்–உன்னை ஒருநாளும் மறப் பனல்லேன்
இன்பம் கடல் ஆழி–ஆநந்த ஸாகரத்தையும்
அருளிக் காண்–எனக்கு அருள வேணும்.

என்றும் மறந்து அறியேன்
ஒரு நாளும் உன்னை மறந்து அறியேன் –
ஸ்ரவண மனன நிதித்யாசன அநந்தரம்
பிறக்கும் உபாசன த்ருவாநு ஸ்ம்ருதிகளாலேயோ
நீர் மறவாது ஒழிந்தது என்னில் –

ஏழ் பிறப்பும் எப்பொழுதும் நின்று நினைப்பு ஒழியா நீர்மையால்
எதிர் சூழல் புக்கு எனத்தோர் பிறப்பும் -என்னும்படி
எல்லா ஜன்மங்களிலும்
எல்லாக் காலத்திலும்

நீ நின்று
உன்னுடைய நினைவு மாறாத ஸ்வபாவத்தாலே
ஒரு நாளும் மறந்து அறியேன்

(பிராட்டி சொல்ல ஸ்ரோத்வயா கேட்டுக்கொண்டு
மனனம் பண்ணி
யாதானும் பற்றி நீங்கும் விரதம் கொண்ட தப்பி ஒடம்ப பார்க்க
நிதித்யாசித்வய
ஏழு பிறப்பும் நினைத்தீர்
எப்பொழுதும் நினைத்தீர்
நிலை நின்று நினைத்தீர்
ஆக ஆத்மா கேட்டு மனனம் பண்ணி நிதித்யாஸவ்ய-பண்ணும் க்ருத்யம் நீயே ஏறிட்டுக் கொண்டாயே)

வென்றி அடல் ஆழி கொண்ட வறிவனே –
நான் செய்த அம்சம் செய்தோம் இறே
எல்லாம் செய்ய வேணும் என்று நிர்பந்திக்கக் கடவதோ -என்ன –
உன் பக்கல் ஒரு ஞான சக்திகளுக்கு
வைகல்யம் காண்கிறிலேன்

ஆன பின்பு
இன்பக் கடலாழி நீ யருளிக் காண் –
ஏஷ ஹ்யேவா நந்தயாதி -என்னும்படியே
உன்னுடைய ஆனந்த சமுத்ரத்தையும்
நீ எனக்கு அருளாய்-

(எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய -திருவாய் -2-7-6-என்கிறபடியே
எல்லாக் காலத்திலும் என்னைப் பற்றிய நிலையான நினைவு தன்மை உனக்கு இருக்கையாலே
நான் இப்பிறவியிலே உன்னை என்றும் அறியாத பெருமை பெற்றேன் –
என்னை நியமிக்க வல்ல உன்னாலே பெற்ற பேறு அன்றோ இது –
ஏழு பிறப்பு என்றது எக் காலத்தையும்
எப்பொழுதும் -எல்லா அவஸ்தைகளிலும் நிலைகளிலும் என்றவாறு
என்றும் மறந்து அறியேன் -என்னும்படியான ஞானத்தை விளைத்த நீயே அதன் பலனாக மோக்ஷத்தையும் தந்து அருள வேணும் –
உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் -என்னுமா போலே –
இன்பக் கடல் ஆழி -பேர் இன்பம் -ஏஷ ஹ்யேவ ஆனந்தயாதி-தைத்ரியம் -7-1- இவனே ஆனந்தம் அடைவிக்கிறான்)

(மயர்வற மதி நலம் அருளி -தத் பலமான -அனுபவ ஜனித ப்ரீதி காரிய கைங்கர்யம் எம்மா வீட்டில் நிஷ்கர்ஷித்து
அத்தையும் நீயே-பிரபல பிரதிபந்தகங்களை அனாயாசன போக்குகைக்கு பரிகரம்
யுத்த உன்முகனான திரு வாழி யை எப்போதும் கையில் கொண்டு இருப்பவனாய்
அஞ்ஞான சக்திகளுக்கு கோலாகலமான -அஹம் அஸ்ய அபராத்தானாம் ஆலயம்
உன்னாலேயே உன்னைப் பெற வேண்டும்
அறிவு ஒன்றும் இல்லாத எங்களை குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா
இந்த உண்மையை பத்தும் பத்துமாக அறிந்து இருக்கும் ஸர்வஞ்ஞனே –
எல்லா ஜென்மங்களிலும் எல்லா அவஸ்தைகளிலும் நிலை நின்று நினைக்கும் கர்த்தவ்யம் ஏறிட்டுக் கொண்ட பின்பு
அதன் பலனாக அந்தமில் பேர் இன்பத்து அடியார் உடன் இருந்து -கைங்கர்யம் கொண்டு அருள வேண்டும் என்கிறார்)

————————————————————————-

நீர் சேஷ பூதர் ஆனால் உம்முடைய ஸ்வரூப அனுரூபமாய் இருக்க வேண்டாவோ –
சேஷியை இப்படி நியமிக்கக் கடவதோ -என்னில்-
அது விதேயமான போது இறே-
ஆசை மிக்கால் செய்யல் ஆவது உண்டோ என்கிறார் –

காணக் கழி காதல் கை மிக்குக் காட்டினால்
நாணப் படும் என்றால் நாணுமே –பேணிக்
கருமாலைப் பொன் மேனி காட்டா முன் காட்டும்
திருமாலை நாங்கள் திரு —56-

திருமாலை காண கழி காதல்–எம்பெருமானை ஸேவிக்க வேணுமென்று மிகுந்த விருப்பம்
கை மிக்கு காட்டினால் நாணப் படும் என்றால்–மேன்மேலும் அதிகரித்தால் அடங்கியிருக்க வேணுமென்றால் அடங்கி யிருக்க முடியுமோ?
கருமாலை–கரிய திருமாலாகிய அப்பெருமானை
பொன் மேனி காட்டா முன்–அவனது அழகிய திருமேனி தானே காட்டிக் கொடுப்பதற்கு முன்னே-குணம் ஸ்வரூபம் காண முடியாதே -திருமேனி மூலமாகவே அறியலாம்
நாங்கள் திரு–நமக்குப் புருஷகார பூதையான் பிராட்டி
பேணி–விரும்பி
காட்டும்–காட்டிக் கொடுப்பள்-உக்கமும் தட்டொளியும் உன் மணாளனையும் தந்து -பிரார்த்திக்கும் படி உண்டே

திருமாலை காணக் கழி காதல் கை மிக்குக் காட்டினால்-நாணப் படும் என்றால் நாணுமே-
சர்வேஸ்வரனை காண மிகா நின்ற காதல் விஞ்சிக் காட்டினால்
நீ சேஷி நான் சேஷபூதன் என்னும் முறையிலே
நிற்கப் போமோ –
கண்டால் அல்லது கழியாதே காதல் என்றுமாம் –
ஸாபராதன் என்று மீளவும் போகாது

கருமாலை பொன் மேனியாக காட்டுவதருக்கு  முன் காட்டும் திருமாலை நாங்கள் திரு –
எங்களுடைய புருஷகாரமாக பிராட்டி முன்னே காட்டா நின்றால்
ந கச்சின் ந அபராத்யதி -என்று
எங்கள் உடைய குற்றம் அவள்
பார்க்க ஒட்டாமையாலும்
முறையில் நிற்க ஒண்ணாது-

(திருமேனி உபாயம் -உபாய பாவத்தை அவன் காட்டும் முன்பு பிராட்டி புருஷகாரம் பண்ண வேண்டுமே
திருமேனி உபாயம் என்பதுக்கு சிந்தயந்தி உதாஹரணம் -மானஸ ப்ரத்யக்ஷம் ஒன்றாலே பேறு பெற்றாள்
மாலாகாரர் -திரு மேனி காட்ட வந்தாயே -ஸூவுந்தர்ய ஸுசீல்ய குண ஆவிஷ்காரத்தால் அக்ரூர மாலாகார்களை பரம பாகவதர்களாக ஆக்கி அருளினாய் -கீதா பாஷ்யம் -)

(கழிய மிக்கதோர் காதல் காதலள்-திருவாய் -5-5-10-பேர் அமர் காதல் -பின் நின்ற காதல் -கழிய மிக்கதொரு காதல் -மூன்று திருவாய் மொழிகளில்
கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் -திரு விருத்தம் – 97-காலம் கழிய கழிய காதல் மிக்கும் என்றும் -கண்டால் தான் கழியும் காதல் என்றுமாம்
புருஷகார பூதையான தாயாரும் அங்கே இருக்க -தத் தஸ்ய ஸத்ருசம் பவேத் -ஸூ ந்தர -39-30-என்று ஆறி இருக்க ஒண்ணாத தசை
சிந்த யந்தீ ஜகத் ஸூதிம் பர ப்ரஹ்ம ஸ்வரூபிணம்
நிருச்ச் வாஸ தயா முக்திம் கதான்யா கோப கன்யகா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-22-
ப்ரஸாத பரமவ் நாதவ் மம கேஹம் உபாகதவ்
தன்யோஹம் அர்ச்சியிஷ்யாமீ த்யாஹ மால்ய உப ஜீவந -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-19-21-
ஸுந்தர்ய ஸுசீல்யாதி குண ஆவிஷ் காரேண அக்ரூர மாலாகாராதீந் பரம பாகவதான் க்ருத்வா -ஸ்ரீ கீதா பாஷ்ய ப்ரவேஸம்
கிம் ஏதத் நிர்த்தோஷ க இஹ ஜகதி –ஸ்ரீ குணரத்ன கோசம் -உசித உபாயங்களால் அவன் கோபத்தை ஆற்றுவாள்
தேந மைத்ரீ பவது -ஸூ ந்தர -21-21- அருள் உபதேசத்தாலும் அருள் நோக்காலும் இவனைத் திருத்துவாள்
அவனை அழகாலே திருத்துவாள் -இவனை அருளாலே திருத்துவாள்
இவளை உபாயமாகக் கொண்டால் உபாய நைரபேஷ்யத்துக்குக் குறை வருமே
லஷ்மீ புருஷகாரத்வே நிர் திஷ்டா பரமர் ஷிபி
மமாபி ச மதம் ஹ்யேதத் நான்யதா லக்ஷணம் பவேத் -ஸ்ரீ பாஞ்சராத்ர ஸாஸ்த்ரம்
ந கச்சின் ந அபராத்யதி -யுத்த -146-44-சேரவிடும் புருஷகார பூதையும் அங்கமு இருக்க ஆறி இருக்க ஒட்டுமோ -)

————————————————————————–

திருமங்கை நின்றருளும் தெய்வம் நா வாழ்த்தும்
கருமம் கடைப்படிமின் கண்டீர் -உரிமையால்
ஏத்தினோம் பாதம் இரும் தடக்கை எந்தை பேர்
நாற்றிசையும் கேட்டீரே நாம்–57-

பதவுரை

திரு மங்கை–பெரிய பிராட்டியார்
நின்றருளும் தெய்வம்–நித்யவாஸஞ் செய்யப் பெற்ற எம்பெருமானை
நா வாழ்த்தும் கருமம்–நாவினாலே வாழத்துகையாகிற காரியத்தை
பாதம்–திருவடிகளையும்
பேர்–திருநாமங்களையும்
உரிமையால்–ஸ்வரூப ப்ராப்தியாலே
ஏத்தினோம்–போற்றுமவர்களாயிரா நின்றோம்
கடைப்பிடி மின் கண்டீர்–உறுதியாகப் பற்றுங்கள்
நாம்–நாமோ வென்றால்
இரும் தடக்கை எந்தை–மிக நீண்ட திருக்கைகளை யுடையனான எம்பெருமானுடைய (இவ் விஷயத்தை)
நால் திசையும்–நான்கு திசைகளிலுமுள்ளீர்!
கேட்டீரே–கேட்டீர்களோ?

திருமங்கை நின்றருளும் தெய்வம் நா வாழ்த்தும் கருமம் கடைப்படிமின்
பெரிய பிராட்டியார் நித்ய கடாஷம் பண்ணா நின்ற தெய்வத்தை
நா வாழ்த்துகை ஆகிய
கருமத்தை கை விடாதே

இரும் தடக்கை எந்தை பேர் நாற்றிசையும் கேட்டீரே –
பெரிய தோளை உடையனான
என் ஸ்வாமி உடைய பேர் அன்றோ
எல்லா திக்குகளிலும் உள்ளது
அது கேட்டிலி கோளோ
கண்டீர் –

நாம் உரிமையால் ஏத்தினோம் பாதம்
நாங்கள் அவனுடைய பேரையும்
திருவடிகளையும்
சேஷ பூதர் என்னும் பிராப்தியாலே ஏத்தினோம்-

(ஸ்ரீர் இத்யேவ ச நாம தே பகவதி ப்ரூம கதம் த்வாம் வயம் -ஸ்ரீ சதுஸ்லோகி -1-
விஷ்ணோர் ஸ்ரீ -ஸ்ரீ விஷ்ணு புராணம்
உன் திரு -திருவாய் -10-10-2-
ஸ்வத ஸ்ரீ ஸ்தவம் விஷ்ணோ ஸ்வமஸி தத ஏவைஷ பகவான்
த்வதாயத் யர்த்தி த்வேப் யபவத் அபராதீன விபவ
ஸ்வயா தீப்த்யா ரத்னம் பவ மஹார்க்கம் ந வி குணம்
ந குண்ட ஸ்வா தந்தர்யம் பவதி ச ந சான்யா ஹித குணம் –ஸ்ரீ குணரத்ன கோசம்
ரத்ன பிரபா புஷ்ப பரிமள நியாயத்தாலே பர ப்ரஹ்மத்துவத்துக்குக் குறையில்லையே –
யுவதிஸ் ச குமாரிணி -யுவஸ்ய குமார –
அபாங்கா பூயாம் ஸோ யது பரி பரம் ப்ரஹ்ம தத பூத் —ஆழ்வான் அவளது பூர்ண கடாக்ஷத்தாலே பரம் பொருளானதே
வேதாந்தாஸ் தத்வ சிந்தாம் முரபிதுரஸி யத் பாத சிஹ்னைஸ் தரந்தி -பட்டர்
அகலகில்லேன் இறையும் -6-10-10-)

————————————————————————–

நீர் இப்படி யேத்துகைக்கு அடி என் என்னில்–(உனது அருளாலேயே )சரஸ்வதி என் ஹிருதயத்தில் இருந்து
என்னை ஓதி வைத்தது என்கிறார் –

நாம் பெற்ற நன்மையையும் நா மங்கை நன்னெஞ்சத்து
ஓம்பி இருந்து எம்மை ஓதுவித்து -வேம்பின்
பொருள் நீர்மை யாயினும் பொன்னாழி பாடென்று
அருள் நீர்மை தந்த வருள்–58

பதவுரை

வேம்பு பொருளின் நீர்மை ஆயினும்–(எம்பெருமானைப் பாடுவதானது) வேம்பு என்னும்
வஸ்துவின் ஸ்வபாவம் போலே கைப்பதாகத் தோன்றினாலும்
பொன் ஆழி–அழகிய திருவாழியை (கையுந்திருவாழியுமான சோத்தி யழகை)
பாடு என்று–பாடக் கடவாய் என்று
நா மங்கை–ஸரஸ்வதி யானவள்
நெஞ்சத்து–(நமது) நல்ல நெஞ்சிலே
ஒம்பி இருந்து–ஆதரித்து இருந்து-நீர்மைக் கொண்டு
எம்மை–
ஓது வித்து–பகவத் விஷயத்தைப் பாடச் செய்ததனால்
நாம் பெற்று நன்மையும்–தாம் அடைந்த ஸுஹ்ருதமும் (எதனாலே வந்ததென்னில்)
அருள் நீர்மை தந்த அருள்–அருளையே இயல்வாக வுடைய ஸர்வேஸ்வரன் அருளிய க்ருபையினாலே வந்தது.

நாம் பெற்ற நன்மையையும் நா மங்கை நன்னெஞ்சத்து ஓம்பி இருந்து எம்மை ஓதுவித்து 
எங்களுக்கு இந்த நன்மை உண்டாயிற்று
நா மங்கை யானவள் ஹிருதயத்தில் இருந்து
நம்மை ஓம்பி ஒதுவித்ததாலே -ஓம்பி -வளர்ந்து கிளர்ந்து
ராஜ புத்ராதிகள்
ராஜ வைபவம் அறியாது இருக்கச் செய்தே
அத்தை சொல்ல அறியாமையாலே
விரசமானாலும் சரசாமாகத் தங்கள்
ஸ்வரூபத்துக்கு கற்பிக்கும் தாச வ்ருத்தைகளைப் போலே
அவள் ஹிருதயத்திலே இருந்து ஒதுவிக்கைக்கு அடி சொல்லுகிறது

வேம்பின் பொருள் நீர்மை யாயினும் பொன்னாழி பாடென்று அருள் நீர்மை தந்த வருள் –
இனிய விது வேம்பு போலே கையா நின்றதே ஆகிலும்
பாடு என்று அருளி அல்லது நிற்கப் போகாதே
அவனுடைய நீர்மையாலே தந்த அருள் –
தந்த பிரசாதம் சரஸ்வதி ஒதுவிக்கைக்கு அடி-

(லோகே வநஸ் பதி ப்ருஹஸ் பதி தார தம்யம் யஸ்யா
கடாக்ஷ பரிணாம முதா ஹரந்தி ஸா பாரதீ பகவதீ -ஸ்ரீ ஸ்தவம்
கருக்கோட்டியுள் கிடந்து கை தொழுதேன் கண்டேன் திருக்கோட்டி எந்தை திறம் -87-
ஸர்வ ரஸ -ஸர்வ கந்த
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஓத்தே -திருவாய் -2-3-1-
வேம்பின் –பாடு என்று ஓதுவித்து -என்று அந்வயம் -ஸ்ரீ அப்பிள்ளை
வேம்பின் –பாடு என்று அருள் நீர்மை தந்த அருள் -என்று அந்வயம் –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை )

————————————————————————–

அருள் புரிந்த சிந்தை அடியார் மேல் வைத்து
பொருள் தெரிந்து காண்குற்ற வப்போது –இருள் திரிந்து
நோக்கினேன் நோக்கி நினைந்தேன் தொண் கமலம்
ஓக்கினேன் என்னையும் அங்கு ஓர்ந்து–59-

பதவுரை

அருள் புரிந்த சிந்தை–அருளோடு கூடின திருவுள்ளத்தை
அடியார் மேல் வைத்து–அடியவராகிய எங்கள் மேலே வைத்து
பொருள் தெரிந்து–அபதார்த்தமாகத் திருவுள்ளம் பற்றி
காண்குற்ற அப்போது–கடாக்ஷித்தருளுகிற காலத்திலே-பொருள் அல்லாத -நம்மை பொருளாக ஆக்கி -கடாக்ஷத்தாலே பொருள் ஆவோம்
இருள் திரிந்து–அஜ்ஞான விருள் நீங்கப் பெற்று
நோக்கினேன்–ஸ்வரூபத்தை ஆராய்ந்தேன்
நோக்கி–அப்படி ஆராய்ந்து
ஒண் கமலம் அது–அழகிய தாமரை மலர்களை என்னலாம் படி யுள்ள அத் திருவடிகளை
நினைந்தேன்–(ப்ராப்யமாக அநுஸ்ந்தித்தேன்
ஓர்ந்து–(இத் திருவடிகள் தவிர நமக்கு வேறு புகலில்லை யென்று நிரூபித்து
என்னையும்–ஆத்மாவையும்
அங்கு–அத் திருவடிகளிலே
ஒக்கினேன்–ஸமர்ப்பித்தேன்.-பிராபகமும் இதுவே

காண்குற்ற = கடாஷித்து அருளுகிற  –

(சேஷத்வ ஞானம் உள்ள )அடியோமான எங்கள் மேல்
அருள் புரிந்த சிந்தையை வைத்து

(அருள் புரிந்த சிந்தை அனைவர் இடமும் இருந்தாலும் அது கார்யகரமாவது நாம் சேஷபூதன் என்று இசைந்தாலே தானே)

அத்தாலே
நாங்கள் பதார்த்தங்களை அறிந்து காண உற்ற போது
நீ சேஷி நான் சேஷ பூதன் என்கிற ஞானத்துக்கு விரோதியான
அஞ்ஞானத்தைப் போக்கி
உணர்ந்து
உன்னுடைய கமலம் போன்ற திருவடிகளை
நினைத்தேன்
ஆராய்ந்து பார்த்து
பரதந்த்ரமாய் இருக்கையாலே
என்னை உன் திருவடிகளிலே சமர்ப்பித்தேன்

(அர்த்த பஞ்சக ஞானம் வந்தபின்பு என்று கீழே
பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி என்பது கீழே)

அருள் புரிந்த உன் திரு உள்ளத்தை
எங்கள் மேல் வைத்து
எங்களை ஒரு பதார்த்தமாக புத்தி பண்ணின போது -என்றுமாம்-

(பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய் -திருவாய் -5-7-3-
அசன்னேவ-இத்யாதி
யம் பஸ்யேந் மது ஸூதந –
பொருள் தெரிந்து -அர்த்த பஞ்சக ஞானம் பெற்று
ஸ்வத்மம் ஆத்மநீ ஸஞ்ஜாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம்
ஆத்ம தாஸ்யம் ஹரே ஸ்வாம்யாம் ஹரி
நிக்ஷேபாபர பர்யாய ந்யாஸ –
த்வமே உபாய பூதோ மே பவதி ப்ரார்த்தநா மதி ஸரணாகதி
இத்தால் கருணையாலேயே தூண்டப்பட்ட திரு உள்ளத்தை யுடைய அவன்
ஒரு கைம்முதலும் எதிர்பாராமல் இவரைக் கடாஷித்த படியையும்
அக் கடாக்ஷத்தாலேயே -அவன் ஸ்வரூபம் -ப்ராப்யம் -ப்ராபகம் -ஆகியவற்றை உணர்ந்த படியையும் –
அவனை அடையைப் பதற்றமும்
அவனே உபாயம் என்ற துணிவும்
உண்டான படியை அருளிச் செய்தார் ஆயிற்று )

————————————————————————–


எளிவரும் இயல்வினன் என்று சொல்லும் ஆழ்வார்களே மண் காப்பார் ஆவார்
அத்விதீயம் பரத்வம் ஒன்றை மட்டும் சொல்வார் அல்லர் -என்கிறார்

ஓர் உருவன் அல்லை ஒளி உருவம் நின் உருவம்
ஈர் உருவன் என்பர் இரு நிலத்தோர் -ஓர் உருவம்
ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர் கண்டீர்
நீதியால் மண் காப்பார் நின்று–60-

பதவுரை

ஓர் உருவம் அல்லை–(எம்பெருமானே) பரத்வமே வடியாக இருப்பவனன்று நீ,
ஒளி உருவம்–ஆஸ்ரித பரதந்த்ரமாய்க் கொண்டு ஒளி பெற்றிருக்கிற ஸ்வரூபம
நின் உருவம்–உனது வடியாம் (இப்படி ஆச்ரித பாரதந்திரியமே வடியாவிருக்கிற உன்னை)
இரு நிலத்தோர்–இப் பெரிய பூமண்டலத்திலுள்ளவர்கள்
ஈர் உருவன் என்பர்–பரத்வமாகிற பெரிய வடிவை யுடையனாகச் சொல்லு கின்றனர்
ஓர் உருவம்–ஆஸ்ரித பாரதந்திரிய மாகிய ஒரு வடிவே
ஆதி ஆம் வண்ணம்–எல்லார்க்கும் உஜ்ஜீவந ஹேதுவாயிருக்கு மென்பதை
அறிந்தாரவர் கண்டீர்–தெரிந்து கொள்ளுமவர்களே
நீதியால்–நியாயப்படி
நின்று–நிலைத்து நின்று
மண் காப்பார்–உலகத்தை ரக்ஷிக்க வல்லவராவர்.

ஓர் உருவன் அல்லை
நித்யோ நித்யானாம் என்றபடி
சர்வ விசஜாதீயம் என்கிறது அன்று உனக்கு வடிவு

(என்நின்ற யோனியுமாய் பிறந்தாய் அன்றோ -ஆத்மாநாம் மானுஷம் மன்யே –
அஹம் வோ பாந்தவ ஜாத என்னுமவன் அன்றோ நீ )

ஒளி உருவம் நின் உருவம் –
பக்தாநாம் த்வம் பிரகாசசே –
என்கிறது உனக்கு ஸ்வரூபம் -ஸ்வபாவம்

இரு நிலத்தோர் ஈர் உருவன் என்பர்
அறியாதார் பெரிய ஈஸ்வரன் என்பர்கள்

ஓர் உருவம் ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர் கண்டீர் நீதியால் மண் காப்பார் நின்று
(ஓர் -ஒப்பற்றது ஆஸ்ரித பாரதந்த்ரத்தால் அத்விதீயம் )எல்லார்க்கும் சத்தை அவனே என்று அறிந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள்
பூமியை முறை குலையாமல் காப்பார்
தீர்த்தகரராமின் திரிந்து -என்னும்படியே-

(நிரங்குச ஸ்வா தந்தர்யம் அவனுக்கு ஸ்வரூபம் அன்று ஆஸ்ரித பரதந்த்ரமே நிலை நின்ற ஸ்வரூபம் -என்கிறார் –
நித்யோ நித்யா நாம் சேதனஸ் சேதநா நாம் ஏகோ பஹு நாம் யோ விததாதி காமான் -கட -2-5-13-
ந தே ரூபம் ந ச ஆகாரோ ந ஆயுதாநி ந ச ஆஸ்பதம்
ததாபி புருஷாகாரோ பக்தாநாம் த்வாம் ப்ரகாஸ ஸே -ஜிதந்தே
கிருபை தலை எடுக்கும் பொழுது ஸ்வாதந்தர்யம் தலை சாய்ந்து எப்போதும் உள்ள ஆஸ்ரித பாரதந்தர்யமே நிலை நிற்குமே
அன்யாதீ நத்வம் தவ கில ஜகுர் வைதிக கிர
பரா தீநம் த்வாம் து ப்ரணத பரதந்த்ரம் மநு மஹே -வரத ஸ்தவம் -20-
உன்னது என்னதாவியும் என்னது உன்னதாவியும் -திருவாய் -4-3-8-
சேதனன் தன்னை சர்வேஸ்வரனுக்கு ஆக்க நினைக்கும் போது கர்மம் தடுக்கலாம்
இவன் அவன் இட்ட வழக்காகும் போது தடை ஒன்றுமே இல்லையே -ஆள வந்தார்
வையம் மன்னி வீற்று இருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே –திருவாய் -4-3-11-
தீர்த்த கரராமின் திரிந்து -இரண்டாந் திரு -14-
அர்ச்சாவதார பர்யந்தமான அவனது க்ருஷீ பலனே தம்மை பகவத் பிரவணர் ஆக்கி அருளிற்று என்கிறார்
அஜாய மானோ பஹுதா விஜாயதே
பிதா புத்ரேண பித்ரு மான்யோ நியோ நவ்
சதைக ரூப ரூபாய
ச உ ஸ்ரேயான் பவதி ஜாயமாந-
தத் ஈஷத பஹுஸ் யாம்
கிருஷ்ண ஏவ ஹி லோகா நாம் உத்பத்திர் அபி சாப்யய
ஜகத் காரணமாய் இருக்கிற பிரகாரத்தை அறிந்தவர்கள் எப்போதுமே ஜகத்தை ரக்ஷிக்குமவர்கள் என்றபடி -)

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.