ஸ்ரீ பூதத் ஆழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதி -81-90–பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

நீர் கண்டபடி சொல்லிக் காணீர்-என்ன-சொல்லுகிறார்

பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில்
மிகக் கண்டேன் மீண்டவனை மெய்யே -மிகக் கண்டேன்
ஊன் திகழும் நேமி யொளி திகழும் சேவடியான்
வான் திகழும் சோதி வடிவு -81-

பதவுரை

பகல் கண்டேன்–இராக்காலம் கலசாமல் ஒரே பகற் போதாய்ச் செல்லுகிற நல் விடிவைக் கண்டேன். (அதாவது என்ன வென்றால்)
நாரணனை கண்டேன்–ஸ்ரீமந் நாராயணனாகிற என்று மஸ்தமியாத ஆதித்யனைக் கண்டேன்,
மீண்டு–இன்னமும்,
கனவில்–மாநஸ ஸாக்ஷாத் காரத்திற் காட்டிலும்
மிக மெய்யே–மிகவும் ப்ரத்யக்ஷமாக
ஊன் திகழும் நேமி–திருமேனியில் விளங்குகின்ற திருவாழியை யுடையவனும்
ஒளி திகழும் சே அடியான்–பிரகாசம் மிக்க திருவடிகளை யுடையவனுமான அப் பெருமானுடைய
வான் திகழும்–பரம பதத்திலே விளங்குகின்ற
சோதி வடிவு–சோதி மயமான வடிவத்தை
மிக கண்டேன்-(இங்கே) நன்று ஸேவிக்கப் பெற்றேன்.

பகல் கண்டேன்
காள ராத்ரியாய் செல்லாதே விடியக் கண்டேன் –
வடுகர் வார்த்தை போலே தெரிகிறது இல்லை –
எங்களுக்கு தெரியும் படி சொல்லீர் என்ன –

நாரணனைக் கண்டேன் –
அஸ்தமிதியாத ஆதித்யனைக் கண்டேன்
கனவில் மிகக் கண்டேன் மீண்டவனை மெய்யே –
பிரத்ய பிஜ்ஞார்ஹமாக கண்டேன் –

மிகக் கண்டேன் ஊன் திகழும் நேமி யொளி திகழும் சேவடியான் வான் திகழும் சோதி வடிவு –
வடிவில் திகழா நின்ற திரு ஆழியையும்
ஒளி திகழா நின்றுள்ள திருவடிகளையும் உடையவனுடைய
பரம பதத்தில் திகழா நின்ற ஜோயோதிசை உடைத்தான
திருமேனியைக் கண்டேன்

மேகம் போலே திகழா நின்ற ஜ்யோதிசை உடைய வடிவு
என்னவுமாம் –

(ஸூ ப்ரபாதா ச மே நிசா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-17-2–
பீஷோ தேதி ஸூர்யா -தைத்ரியம் ஆனந்த வல்லி
அந்தப் ப்ரவிஷ்டஸ் ஸாஸ்தா ஐநா நாம் ஸர்வாத்ம -தைத்ரியம் -3-11-
ஸ்வப்ன தீ கம்யம் -மனு -12-122-
கண்டேன் திருமேனி யான் கனவில் ஆங்கு அவன் கைக்
கண்டேன் கனலும் சுடர் ஆழி -கண்டேன்
உறு நோய் வினை இரண்டும் ஓட்டுவித்துப பின்னும்
மறு நோய் செறுவான் வலி-67-

கண்டேன் திரு மேனி யான் கனவில் -67-கனவில் மீண்டு அவனை மிகக் கண்டேன் -இதில்
அங்கு அவன் கைக் கண்டேன் கனலும் சுடராழி -67-இதில் ஊன் திகழும் நேமி –
ஊன் -என்று அழகு என்றும் திருமேனியைச் சொல்லி அதில் திகழும் ஆழி
வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு —
அன்றிக்கே சத்ருக்களின் சரீரங்களில் விளையாடும் சுடர் ஆழி என்றுமாம்
வான் -பரமே வ்யோமன் -மேகம் போல் விளங்கா நிற்கும் நீல மேனி -முகில் வண்ணன் -)

————————————————————————–

கீழே நாரணனைக் கண்டேன் என்றார்–
இப்பொழுது லஷ்மி சநாதமாகக் கண்டேன் என்கிறார் –

(அபரிச்சேதய அழகு என்றும் -அவயவ பூதை என்றும் -புருஷகார பலம் என்றும் மூன்று நிர்வாகங்கள்)

வடிக்கோல வாள் நெடுங்கண் மா மலராள் செவ்விப்
படிக்கோலம் கண்டு அகலாள் பன்னாள்-அடிக்கோலி
ஞாலத்தாள் பின்னும் நலம் புரிந்தது என் கொலோ
கோலத்தால் இல்லை குறை–82-

பதவுரை

வடி கோலம்–வடிக் கட்டின அழகை யுடையவளும்
வாள் நெடுங்கண்–ஒளி பொருந்திய நீண்ட திருக்கண்களை யுடையவளும்
மாமலராள்–சிறந்த தாமரை மலரில் பிறந்தவளுமான பெரிய பிராட்டியார்
செவ்விப் படிகோலம்–இயல்பான தக்க சிறப்புற்ற (அவனது) திருமேனியின் அழகை கண்ணால் அநுபவித்து
பல் நாள் அகலாள்–க்ஷண காலமும் விட்டுப் பிரியாமல் எப்போதும் கூடியே யிருக்கின்றாள்
பின்னும்–எம்பெருமானுடைய அழகிலே பிராட்டி ஆழங்காற்பட்டு அழுந்துகிற படியைக் கண்டுவைத்தும்
ஞாலத்தாள்–பூமிப் பிராட்டியானவள்
அடிக் கோலி–பாரித்துக் கொண்டு
நலம் புரிந்தது என் கொலோ–அப் பெருமானிடத்தில் ஆசையைப் பெருக்கிக் கொண்டிருப்பது என்னோ
கோலத்தால் குறை இல்லை–(எத்தனை பேர்கள் அநுபவித்தாலும் ஏற்றி யிருக்கும் படியான அழகினால் குறை யில்லை யன்றோ.
அழகு அ ஆசைப்பட நேர்கின்றது (அளவற்றிருப்பதானல் பலரும் எம்பெருமானிடத்தில்)

படிக் கோலத்துக்கு ரூஷீ ஷமாய்க் (கோதாய் )கழித்தார் ஆரோ என்னில்
வடிக் கோல வாள் நெடுங்கண் மா மலராள்
ஓர் ஆளும் ஓர் நோக்கும் நேரான கண்ணை உடையாளாய்
சௌகுமார்யத்தை உடையாளான பெரிய பிராட்டியார்

(கோலம் அவனுக்கு கண் இவளுக்கு -அஸி தேஷிணீ அன்றோ
நாட்டில் அழகு கோது என்னலாம்படி அவன் அழகு
அதுவே கோது என்னலாம் படி இவள் அழகு)

செவ்விப் படிக் கோலம் கண்டு அகலாள் பன்னாள்-
செவ்வியை உடைத்தாய்
ஸ்வா பாவிகமான கோலத்தைக் கண்டு
காலம் எல்லாம் அகலாள்
ஒரு தேவையாலே அகலாது இருக்கிறாளோ என்னில் -அன்று –
வைத்த கண் வாங்க மாட்டாமையும்
கால் வாங்க மாட்டாமையும்

அடிக்கோலி ஞாலத்தாள் பின்னும் நலம் புரிந்தது என்கொலோ கோலத்தால் இல்லை குறை –
அகலப் பாரித்து ஸ்ரீ பூமிப் பிராட்டியார்(இலை அகலப்படுத்தி -ஏடு இல்லாமல் பெரிய நுனி இலைகள் வைத்து )
பெரிய பிராட்டியார் தண்ணீர் தண்ணீர் என்கிற
விஷயம் என்று அறிந்த பின்பும்
ஸ்நேகிக்கைக்கு அடி என் என்கிறது –
அவள் கண்ணுக்கு விஷயம் அவன் ஒருத்தனும் –
இவளுக்கு விசிஷ்டம் -(அத்திரு அவனைப்பற்றும் இத்திரு இருவரைப் பற்றும் )

இவளோடு கூடின அவன் விஷய பூயஸ்தையாலே
அடிக்கோலி -என்கிறது

(மிதுனமாகையால் விஷய பூயஸ்தம் -அப்ரமேயம் தத் தேஜஸ் யஸ்ய ஜனகாத்மஜா
நாராயணனை அனுபவிக்க ஏடு -மிதுனத்தை அனுபவிக்க இலை அகலப்படுத்த வேணுமே)

தன்னில் மிடுக்கானவன் அழுந்தப் புக்கால்
கரையிலே நிற்கிறவன் புகாதே போக வன்றோ அடுப்பது –
எல்லாரிலும் அளவுடைய பெரிய பிராட்டியார்
குமிழ் நீருண்ணும் விஷயம் ஆனால் இவள் அகலப் போகாதே
அகப்படுகைக்கு ஹேது என் என்னில் -ஹேது சொல்லுகிறது –

கோல இத்யாதி –
நின்றார் நின்ற நிலைகளிலே அகப்பட வேண்டும் அழகு
குறைவற்று இருக்கையாலே –
இதர விஷயங்கள் இருவருக்கும் அனுபவிக்கப் போராமையாலே சீறு பாறு -என்கிறது –

கிண்ணகத்தில் இழிவாரைப் போலே
எல்லாரும் திரள அனுபவிக்க வேண்டும் –
பரப்பு உண்டாகையாலே
இவ் விஷயத்தை அனுபவிப்பாருக்கு பிரியமே உள்ளது –

(அம்ருத சகார ஆனந்த நிமக்ந-அளப்பரிய ஆரமுதில் அந்தர் நிமக்ந-மாகும் படி பூர்த்தி உண்டே)

(வடிக்கோலம் -உலகின் அழகு கோது என்னலாம் படி அவன் அழகு -அதுவே கோது என்னலாம் படி அவளது அழகு -இப்படி வடித்து எடுத்த அழகு –
யுவா குமார
அரும்பினை அலரை
செவ்விப் படிக் கோலம்
பருவத்தை இயல்வாகக் கொண்ட வடிவு அழகு கோலம்
பருவத்தையும் இயல்வான வடிவு அழகையும் கண்டு
பருவத்தை யுடைய திருமேனியின் அழகைக் கண்டு -என்று மூன்றுமாம்
போகோ போத்காத கேளீ சுளகித பகவத் வைஸ்வ ரூப்ய அநு பாவா -ஸ்ரீ குணரத்ன கோசம் –
அப்ரமேயம் ஹி தத் தேஜஸ் யஸ்ய சா ஜனகாத்மஜா -ஆரண்ய -37-18–
தயா ஸ ராஹர்ஷி ஸூத அபி ராமயா உபே யிவான் உத்தம ராஜ கன்யா
அதீவ ராம ஸூ ஸூபே அதி காமயா விபுஸ் ஸ்ரீ யா விஷ்ணுர் இவாமரேஸ்வர -பால –77-36-
திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும் திகழ்கின்ற திருமாலார் –10-6-9-
வடிவார் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு –

உத்ப் புல்ல பங்கஜ தடாகம் இவ உபயாநி ஸ்ரீ ரெங்க ராஜம் இஹ தக்ஷிண சவ்ய ஸீம்நோ
லஷ்மீம் விஹார ரசிகாம் இவ ராஜ ஹம்ஸீம் ச்சாயாம் இவ அப்யுதயிநீம் அவநீம் ச தஸ்யா –ஸ்ரீ ரெங்கராஜா ஸ்தவம் -1-63-

இஹ –இந்த கர்ப்ப க்ருஹத்தில்
உபயாநி ஸ்ரீ ரெங்கராஜம்–ஸ்ரீ ரெங்க நாதனை ஆஸ்ரயிக்கக் கடவேன்-
இஹ தக்ஷிண சவ்ய ஸீம்நோ –வலவருகிலும் இடவருகிலும்
விஹார ரசிகாம் இவ ராஜ ஹம்ஸீம்-லஷ்மீம்–விளையாட வல்ல அன்னப் பேடை போன்றுள்ள திரு மகளையும்
ச்சாயாம் இவ அப்யுதயிநீம் அவநீம் ச தஸ்யா –அவளுடைய மேன்மேலும் வளர்த்தியை யுடைத்தான நிழல் போன்ற ஸ்ரீ பூமிப் பிராட்டியையும் அடையக் கடவேன் –

போக்யா வாமபி நாந்தரீயகதயா புஷ்ப அங்கராகைஸ் ஸமம்
நிர்வ்ருத்த ப்ரணய அதிவாஹந விதௌ நீதா: பரீவாஹதாம்
தேவி த்வாம் அநு நீளயாஸஹ மஹீ தேவ்ய: ஸஹஸ்ரம் ததா
யாபி: த்வம் ஸ்தந பாஹு த்ருஷ்டி பிரிவ ஸ்வாபி: ப்ரியம் ச்லாகஸே.–ஸ்ரீ குணரத்ன கோசம் -26-

தேவீ! ஸ்ரீரங்கநாயகீ! மனம் ஒருமித்த தம்பதிகளின் இனிமையை சாந்து, சந்தனம், மலர்கள் ஆகியவை அதிகரிக்கும் அன்றோ?
அது போல நீயும் நம்பெருமாளும் இணைந்துள்ளபோது, உங்கள் இன்பத்தை மேலும் அதிகரிக்கும்படியாக
நீளாதேவியும், பூதேவியும் மற்றும் ஆயிரக்கணக்கான தேவிகளும் உள்ளனர்.
ஒரு குளத்தில் நிரம்பியுள்ள நீரை வெளியேற்றினால் அன்றோ குளம் பெருமையும் பயனும் பெற்று நிற்கும்.
இதுபோல இவர்கள் அனைவரும் உங்கள் இருவரின் காதலைத் தங்கள் வழியாக அனைவருக்கும் வெளிப்படுத்துகின்றனர்.
இப்படியாக உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் மற்ற தேவியருடன் உள்ளபோதும் நீ மகிழ்ந்தே உள்ளாய்.
அவர்கள் உனது நாயகனை அணைத்துக் கொள்ளும்போது, உனது உடல் உறுப்புகளாக மாறியே
இவர்கள் அணைத்துக் கொள்கின்றனர் என்று நீ நினைக்கிறாய் அல்லவோ?
அவர்கள் உனது கைகள் போன்றும், ஸ்தனங்கள் போன்றும், கண்கள் போன்றும் விளங்க –
இப்படியாக நீ உனது ப்ரியமான நம்பெருமாளை மகிழ்விக்கிறாயா?)

————————————————————————–

முன்பு (74-பாசுரத்தில்-)சர்வ விசாஜீதிய வஸ்துவை பேசுகையாலே–என்னோடு ஒப்பார் உண்டோ பெரிய தமிழன்
பெரிய நல்லேன் என்று சொன்னார் –
இப்போது அவ்வஸ்து தன்னை லஷ்மீ சநாதமாக-அனுசந்திகையாலே அங்குத்தைக்கு
விசத்ருசமாக சொன்னேன் -என்கிறார்

குறையாக வெம் சொற்கள் கூறினேன் கூறி
மறை யாங்கு என உரைத்த மாலை -இறையேனும்
ஈயுங்கொல் என்றே இருந்தேன் எனைப் பகலும்
மாயன் கண் சென்ற வரம் -83-

பதவுரை

மறை–வேதங்களும்
ஆங்கு என உரைத்த மாலை–ப்ரத்யக்ஷித்துச் சொல்ல மாட்டாமல் பரோக்ஷமாகவே சொன்ன எம்பெருமான (அல்பஜ்ஞனான நான்)

ந இதி ந இதி என்றே வேதம் சொல்லும் அஸ்தி என்பதே அஸ்தமிக்காமல் -இது இல்லை இது இல்லை என்றே வேதம் சொல்லும்
மாயன் கண் சென்ற வரம்–அப்பெருமானிடத்தில் தங்கியிருக்கின்ற அநுக்ரஹமானது.
இறையேனும்–ஸ்வல்பமான பலனையாகிலும்
குறை ஆக–குறையுண்டாம்படி
வெம் சொற்கள்–செவிசுடும்படியான சொற்களால்
கூறினேன்–பேசினேன்
கூறி–அப்படி பேசினது மல்லாமல்
ஈயும் கொல் என்றே–(நமக்குக்) கொடுக்குமோ என்று (பலனையும் எதிர்பார்த்துக் கொண்டு)
எனைப் பகலும்–வெகுகாலமாக
இருந்தேன்–இருக்கின்றேன்.

ஆங்கென உரைத்த
எல்லாரும் அது அது என வேதத்தால் உரைக்கப்பட்டவன் என்னுதல்
அது என்று போகிறது ஒழிய
இதம் இத்தம் என்று-பரிச்சேதித்து சொல்லப் படாதவன் என்னுதல்-

குறையாக வெம் சொற்கள் கூறினேன் கூறி மறை யாங்கு என உரைத்த மாலை –
1-அபரிபூர்ண மாம்படியாகவும்
2-திரு உள்ளம் நோம் படியாகவும் வார்த்தை சொன்னேன்

வாக் விவ்ரு தாச்ச வேதா -என்று
சொல்லப் படுகிற சர்வாதிகனை
வேதம் -ஈத்ருசம் இதம் -என்று
சொல்லப் போகாதவனை -என்றுமாம் –

இறையேனும் ஈயுங்கொல் என்றே இருந்தேன் எனைப் பகலும் மாயன் கண் சென்ற வரம் 
விசத்ருசமாக சொன்ன அளவேயோ –

ஓன்று சொன்னேனாய்
அதுக்கு பிரத்யுபகாரமும் வேணும் என்று இருந்தேன்-

(பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர்–திருவாய் -1-5-11-
இன் கவி பாடும் பரம கவிகள் –7-9-6-
அங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து அன்பு கூரும் அடியவர் -பெரிய திருமொழி -2-10-4-
யதோ வாஸோ நிவர்த்தந்தே -தத் விஷ்ணோ பரமம் பதம் -யஸ்யா மதம் தஸ்ய மதம் –
வாக் விவ்ருதாஸ் ச வேதா –
பாடவும் செய்து-இளைய என் புன் கவிதைக்கு – பிரதியுதவியையும் எதிர்பார்த்து – பரிசும் வேண்டி இருந்தேனே -மூர்க்கனேன் மூர்க்கனேனே –
ப்ரயோஜனாந்தரங்களை எதிர்பார்த்தார் அல்ல -அனுதபிக்கவும் குறையில்லை –
மாயோன் கண் சென்ற வரம் -மாயோனான அவன் இடத்திலே பொருந்தி இருக்கும் சிறந்த அருள் என்றும்
வரம் -வார்த்தை என்றும் -சிறந்த வார்த்தைச் சிறிதேனும் நமக்கு அருள்வானோ என்று எதிர்பார்த்து இருக்கிறேன் என்றுமாம் -)

————————————————————————–

வரம் கருதி தன்னை வணங்காத வன்மை
உரம் கருது மூர்க்கத்தவனை -நரம் கலந்த
சிங்கமாய்க் கீண்ட திருவன் அடி இணையே
அங்கண் மா ஞாலத்து அமுது–84-

பதவுரை

வரம் கருதி–(தேவர்களிடத்துப் பெற்ற) வரத்தை மதித்து
தன்னை வணங்காத–(ஸர்வேஸ்வரனான) தன்னை வணங்காதிருந்தவனும்
வன்மை உரம் கருதி–(தன்னுடைய) மன வலிமையையும் நினைத்து
மூர்க்க தவனை–மூர்க்கத் தனம் கொண்டிருந்தவனுமான இரணியனை-

மூர்க்கத்தவனை-மூகத்தவனை -அஹங்காரம் -பிடிவாதம் கொண்டவனை
நரம் கலந்த சிங்கம் ஆய்கீண்ட–நரசிங்க வுருக் கொண்டு பிளந்தொழிந்த
திருவன்–அழகனுடைய
அடி இணையே-உபய பாதமே
அம் கண் மா ஞாலத்து–அழகிய இடமுடைத்தான இம் மா நிலத்தில்
அமுது–(போக்யமான) அம்ருதமாகும்.

தேவதைகள் பக்கலிலே வரம் பெற்றவனாய்
தேவதைகளுக்கும் அடியாய் இருந்துள்ள உன்னை வணங்காத
துர் அபிமானத்தை உடையனான ஹிரண்யனை
இதுக்கு முன்புள்ளதால் ஒன்றாலும் படாப்பேன் என்று
வேண்டிக் கொள்ள
முன்பு இல்லாத நரம் கலந்த சிங்கமாய்
அவனைக் கீண்ட ஸ்ரீ மான் உடைய
சரண்யத்வமே ஒரு தேசத்தில் தேடித் போக வேண்டாத
அமிர்தம்

திருவன் -என்றது
அழகியான் தானே அரி வுருவன் தானே –
நார சிம்ஹ வபுஸ் ஸ்ரீ மான் -என்னும் வடிவு-

(த்விதா பஜ்யேயம் அப் யேவம் ந நமேயம் து கஸ்ய சித் -யுத்த -36-11-
ம்ருகோ ந பீம -ருக் -1-21-154-
நார ஸிம்ஹ வபுஸ் ஸ்ரீ மான்
அழகியான் தானே அரி யுருவன் தானே -நான்முகன் -22-
குறையாக வெஞ்சொற்கள் சொன்னேனே என்று கை வங்காத் தொடங்கின என்னை கவி பாட வைத்ததே இந்த ஆரா அமுதனுடைய அழகே என்கிறார் – )

————————————————————————–

அமுதென்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்
அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் -அமுதன்ன
சொன் மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட
நன் மாலை ஏத்தி நவின்று –85-

பதவுரை

அமுது என்றும்–அமிருதம் போன்றவனென்றும்
தேன் என்றும்–தேன் போன்றவனென்றும்
ஆழியான் என்றும்–திருவாழியை யுடையவனென்றும்
அன்று அமுது கொண்டு உகந்தான் என்றும்–முற்காலத்தில் (கடல் கடைந்து) அமுதமெடுத்தளித்து மகிழ்ந்தவனென்றும்-அமுதினில் வரும் பெண்ணமுது கொண்டான் என்றுமாம்
சொல்லப் பட்ட–சொல்லப் பட்டிருக்கின்ற
நல் மாலை–விலக்ஷணனான எம்பெருமானை
அமுது அன்ன சொல் மாலை–அம்ருதம் போன்ற இப் பாசுரங்களினால்
ஏத்தி  நவின்று தொழுதேன்–பலகாலும் துதித்துச் சொல்லி வணங்கினேன்.

ஏத்தி நவின்று என்பதை அமுது தேன் ஆழியான் -அமுது கொண்டு உகந்தான் என்றும் ஒவ்வொன்றிலும் சேர்த்துக் கொள்ள வேண்டும்

அமுதென்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்
அமுது என்று பர்யாய சப்தம் போலே
காணும் ஆழியான் என்கை

அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் –
தன்னை வேண்டாதே
உப்புச் சாறு வேண்டுமவர்களுக்கு
அது கொடுக்குமவன்

அமுதன்ன சொன்மாலை எத்தித் தொழுதேன்
அவனையும்
தேவர்கள் அமுதத்தையும் ஒழிய
இவருடைய அமிர்தம்
அவனைப் பேசும் சொல்லும் –
சொலப்பட்ட
யஸ்மின் ந ச்ருத்ரிம கிராம் கதி ரேக கண்டா – என்று
பிரமாணங்களாலே சொல்லப்பட்ட –

நன் மாலை ஏத்தி நவின்று –
அமுதான சொன் மாலை ஏத்தித் தொழுதேன்-

(அமுது அவனைச் சொல்லி –
அமுது கொண்டு உகந்தான் என்று அவளை சொல்லி
அமுது அன்ன சொன்மாலை மிதுனம் பற்றிய இவர் பிரபந்தம் –
இப்படி மூன்று அமுதன்கள் இதில் உண்டே)

(ஸர்வ ரஸ
ப்ரயோஜனாந்தர பரர்களும் தம்மை இதற்க்காகவாவது ஆஸ்ரயிக்கிறார்களே என்று உகக்குமவன் அன்றோ
உதாரா ஸர்வ ஏவைதே -ஸ்ரீ கீதை -7-18-
விண்ணவர் அமுதுண அமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே -பெரிய திருமொழி -6-1-2-
குறையாக வெஞ்சொற்கள் கூறினேன் -என்றவாறே
இப்பொழுது-ரஸோ வை ஸ-என்றும் ஸர்வ ரஸ என்றும் -சொல்லப்படும் அவ்விஷயத்தின் இனிமையை அனுசந்தித்த உடன்
அமுதன்ன சொன் மாலை என்கிறார்
விஷ்ணோ பதே பரமே மத்வ உத்ஸ-ருக் -1-21-124-
த்ருத சங்கு சக்ர
சங்க சக்ர கதா தர
யஸ்மின் அக்ருத்ரிம கிராம் கதிரேக ஏக கண்டா -பிரமம் பிரமாதம் விப்ரலிப்ஸை போன்ற தோஷங்கள் அற்ற ப்ரமாணங்களால்
ஸாஸ்த்ரங்களால் ஒரு மிடறாகக் கோஷிக்கப் படும் திருமால் அன்றோ – )

————————————————————————–

அவன் தானே காட்டக் கண்ட என்னோடு ஒப்பார்களோ-
சாதன அனுஷ்டானம் பண்ணிக் காண்கிறவர்கள் -என்கிறார் –

நவின்றுரைத்த நாவலர்கள் நாண் மலர் கொண்டு ஆங்கே
பயின்றதனால் பெற்ற பயன் என் கொல் -பயின்றார் தம்
மெய்த் தவத்தால் காண்பரிய மேக மணி வண்ணனை யான்
எத் தவத்தால் காண்பன் கொல் இன்று –86-

பதவுரை

நவின்று உரைத்த–சாதன புத்தியால்  (அவனது திரு நாமங்களைப்) பலகாலுஞ் சொல்லுகின்ற
நாவலர்கள்–கவிகள்-சொல் ஏறு உழவர்கள்
நாள் மலர் கொண்டு–அப்போதலர்ந்த புஷ்பங்களைக் கொண்டு
ஆங்கே பயின்று–அந்த ஸர்வேஸ்வரனிடத்தில் நெருங்கி யாஸ்ரயித்து
அதனால் பெற்ற பயன் என் கொல்–அதனால் (அவர்கள்) பெற்ற பிரயோஜநம் என்னோ
(எம்பெருமான் தானே நிர்ஹேதுகமாக அநுக்ரஹித்தாலன்றி, இவர்களுடைய ஸ்வ ப்ரயத்நத்தால் என்ன பேறு பெற முடியும் என்கை.)
பயின்றார் தம்–நெருங்கி ஸாதநா நுஷ்டாநம் பண்ணுமவர்களுடைய
மெய் தவத்தால்–சரீரம் நொந்து செய்கிற தபஸ்ஸினால்
காண்பு அரிய–காண முடியாதவனும்
மேகம் மணி வண்ணனை–மேகத்தையும் நீல மணியையும் போன்ற நிறத்தை யுடையனுமான எம்பெருமானை
யான்–அடியேன்
இன்று–இப்போது
எத் தவத்தால் கொல் காண்பன்–எந்தத் தபஸ்ஸினால் காணப் பெற்றேன்?
(அவனே காட்டிக் கொடுக்கக் கண்டேனே யொழிய, ஒரு தவஞ்செய்து கண்டவனல்லேனென்கை

அவனே தவம் செய்து என்னை அடைய இருக்க நான் செய்ய வேண்டுமோ )

நவின்று இத்யாதி –
நாவலர்களானவர்கள் செவ்விப் பூவைக் கொண்டு
சாதரமாக உரைப்பர்கள்

(நா வாகிற அலத்தை -ஹலத்தை -யுடைய சொல் ஏறு உழவர்)

பயின்ற இத்யாதி –
பெற்றால் தான் சாதன அனுஷ்டானம் பண்ணிப் பெற்ற பேறு என்

பயின்றார் இத்யாதி –
ஆஸ்ரயித்தர்களுடைய உடம்பு நோவப் பண்ணின
தபஸ்ஸாலே காண வரிய
ஸ்ரமஹரமான வடிவை உடையவனை
இன்று என்ன தபஸ் பண்ணிக் கண்டேன் –
அவன் காட்டக் கண்டேன் இத்தனை இறே –

யாவர் நிகர் அகல் வானத்தே
யாவர் நிகர் அகல் வானத்தே –

வானைக் கோனை கவி சொல்ல வல்லேற்கு இனி மாறு உண்டே-

தே நைவ பல ப்ராப்ய பலம் அபி தேநைவ நாராயண -ப்ராப்யமும் பிராப்பகமும் அவனே -மாதா பிதா சரணம் ஸூஹ்ருத கதி நாராயணனே

(நா வலர் -நா வன்மை யுடையவர் என்றும்
நா வாகிற அலத்தை -ஹலத்தை -யுடைய சொல் ஏறு உழவர்
மெய்த் தவம் -மெய் சரீரம் -சரீரத்தை வருத்திச் செய்யும் சாதன அனுஷ்டானம் –
யான் இன்று எத் தவத்தால் காண்பன் கொல்-தானே தன்னைக் காட்டி அருளினான் என்கிறார்
யாவர் நிகர் அகல் வானத்தே -4-5-8-
வானைக் கோனை கவி சொல்ல வல்லேற்க்கு இனி மாறுண்டே -4-5-9-என்பது போலே
அவனைக் கொண்டே அவனைக் கண்ட தனது ஒப்பற்ற பெருமையை உணர்த்துகிறார் இதில் -)

————————————————————————–

சாதனா அனுஷ்டானமும்–யோக்யதையும் இன்றி இருக்க-கண்டிலேனோ என்கிறார்

இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அளந்த திருவடியை -அன்று
கருக் கோட்டியுள் கிடந்தது கை தொழுதேன் கண்டேன்
திருக் கோட்டி எந்தை திறம் -87-

பதவுரை

அன்று கரு கோட்டியுன் கிடந்து–முன்பு கர்ப்ப ஸ்தானத்துக்குள்ளே கிடந்து-பூவும் பிரகிருதி பதார்த்தம் தானே
திருக் கோட்டி எந்தை திறம்–திருக் கோட்டியூர்ப் பெருமானுடைய தன்மைகளை-ஸ்வரூப ரூப குண விபவங்களை
கண்டேன்–கண்டு அநுபவிக்கப் பெற்றேன்
கை தொழுதேன்–அனுபவத்துக்குப் போக்கு வீடாக கை தொழவும் பெற்றேன், (ஆன பின்பு)
இரு நிலத்தை–விசாலமான இந் நிலத்தை
ஆங்கு சென்று அளந்த திரு அடியை–அங்கங்கே தானே வியாபித்து முழுதும் அளந்து கொண்ட திருவடியை
இன்றா அறிகின்றேன் அல்லேன்–இன்றைக்குத் தான் அறிந்து கொண்டே னென்பதில்லை. (கர்ப்ப வாஸமே தொடங்கி அறிவேன்)

கீழ் பாசுரத்தில் அவனே காட்டக் கண்டதுக்கு இதுவே திருஷ்டாந்தம்

இன்றாக அறிகிறேனோ
அவன் அளக்கிற இடத்தில் பூமி சென்றதோ
பூமி கிடந்த இடம் எல்லாம் சென்று
அளந்தான் இத்தனை அன்றோ –
என் ஸ்வாமி இடையாட்டம்
கர்ப்ப ஸ்தானத்திலே கிடக்கச் செய்தே கண்டேன்-(அறியாக் காலத்துள்ளே -முயல யோக்யதையே இல்லாத காலத்திலேயே )

ஸுலப்ய காஷ்டை -உலகளந்த காலத்துக்குப் பின்னானாரும் வணங்கும் ஜோதி அன்றோ-

கை தொழுவதற்காகப் பெற்ற பலன் இல்லையே -அதுவும் இவனே செய்வித்தான் அன்றோ

(கண்டாயே நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்று ஓர்
எண் தானும் இன்றியே வந்து இயலுமாறு
உண்டானை உலகேழும் ஓர் மூவடி
கொண்டானைக் கண்டு கொண்டானை நீயுமே –திருவாய் -1-10-5-
அறியாக் காலத்துள்ளே -2-3-8-
ஸூ குமார தநுர் கர்ப்பே -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-10-
இவர் அயோனிஜர் என்று ப்ரஸித்தம் இறே -குருக்கத்தி மலரே இவருக்கு கர்ப்ப ஸ்தானம் –
அயோநிஜரான முதல் ஆழ்வாரும்
அன்று கருவரங்கத்துள் கிடந்து கை தொழுதேன் கண்டேன் திருவரங்க மேயான் திசை -6- பாசுரத்தை அடி ஒற்றியே இப்பாசுரமும் –
ஜாயமானம் ஹி புருஷம் யம் பஸ்யேன் மது ஸூதன
ஸாத்விகஸ் ஸ து விஜ்ஜேய ச வை மோஷார்த்த சிந்தக -சாந்தி பர்வம் -358-73-

பரமபத நாதனோ என்னைக் கடாக்ஷித்தது
நீர்மைக்கு எல்லை நீளமான திருக்கோட்டியூரான் அன்றோ எனக்கு ஜாயமான கடாக்ஷத்தை அருளினான்
அதனாலேயே இன்று அளவும் அவனை மறவாமல் இருக்கும் படியும் அருளினான் )

————————————————————————–

அவன் தானே விஷயீ கரித்தார்க்கு அவனைக் கிடைக்கும்-இத்தனை அல்லது
வேறு சிலருக்கு கிடையாது -என்கிறது(ஞானீ ஆத்மைவ மே மதம் பிரிய தமனை அவனே வரிப்பானே )

திறம்பிற்று இனி அறிந்தேன் தென்னரங்கத்து எந்தை
திறம்பா வழி சென்றார்க்கு அல்லால் -திறம்பாச்
செடி நரகை நீக்கித் தான் செல்வதன் முன் வானோர்
கடி நகர வாசற் கதவு–88-

பதவுரை

தென் அரங்கத்து எந்தை–தென்னரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கு மெம்பெருமானுடைய-ஸ்வாமி ஆகிற
திறம்பா வழி–அவ்யஹித உபாயமான -பிசகாத மார்க்கத்திலே (அவனே உபாயோபேயம் என்னும் நெறியிலே)
சென்றார்க்கு அல்லால்–நிற்பவர்களுக்குத் தவிர (மற்றை யோர்க்கு)
தாம்–தாமாகவே
திறம்பா செடி நரகை நீக்கி–அறுக்க முடியாத புதர் போன்ற ஸம்ஸார பந்தங்களை அறுத்துக் கொண்டு
செல்வதன் முன்–போவதற்குள்ளே
வானோர்–நித்ய ஸூரிகளுடையதும்
கடி–அரணை யுடையதானதுமான
நகரம்–வைகுந்தமா நகரத்தினுடைய
வாசல் கதவு–வாசற் கதவானது
திறம் பிற்று–மூடிக் கொண்டதாகும்
இனி அறிந்தேன்–(இதை) இப்போது அறிந்து கொண்டேன்

திறம்பிற்று -புக ஒண்ணாதபடி சாத்திக் கொண்டது

தென்னரங்கம் இத்யாதி
மாம் ஏகம்-என்று அருளிச் செய்தபடியே
அவனையே உபாயமாக பற்றினவர்களுக்கு –
மாம் ஏகம் -என்றதிலும் சௌலப்ய காஷ்டையைச் சொல்லுகிறது –

(கொண்டல் வண்ணன் கோவலனாய் -இத்யாதி அவனே இங்கு பின்னானார் வணங்கும் ஜோதி அன்றோ இவன்
ஸம்ஸாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரேன் என்று கிடக்குமவன் அன்றோ )

திறம்பா இத்யாதி –
தானே நூறு பண்ணப் பண்ணின சம்சாரத்தை
நீக்கிச் செல்லுமவர்களுக்கு
நித்ய ஸூரிகள் உடைய அரணை உடைத்தாய் இருந்துள்ள
கலங்கா பெரு நகரத்தில் கதவு திறம்பிற்று
என்னும் இடம் அறிந்தேன் –
தானே சம்சாரத்தை நீக்க இவனுக்கு காலம் போராது
பாபம் பண்ணின காலம் அநாதி ஆகையாலே
திறம்பிற்று இனி அறிந்தேன் -என்று அந்வயம்-

(நடந்தே தீரும் என்பதால் திறம்பிற்று இறந்த கால பத பிரயோகம்)

(மாம் ஏகம் என்ற கண்ணனைக் காட்டிலும் விஞ்சி நிற்கும் ஸுசீல்யன்
சரணம் நாராயணம்
நாராயணன் பாராயணம்
உபாய உபேயத்வே ததிஹ தவ தத்த்வம் நது குணவ் -ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -2-87-
அயோத்யா -அபராஜிதா -வானோர் நகர் -மரீசீநாம் பதம் -நித்ய ஸூ ரிகள் இட்ட வழக்காய் அன்றோ வைத்து அருளுகிறான்
அவனையே உபாயமாகக் கொண்டு அவனை அடைந்து அனுபவிக்கலாம் என்கிறார் ஆயிற்று – )

————————————————————————-

கதவிக் கதஞ்சிறந்த கஞ்சனை முன் காய்ந்து
அதவிப் போர் யானை ஒசித்துப -பதவியாய்
பாணியால் நீரேற்றுப் பண்டு ஒரு நாள் மாவலியை
மாணியாய் கொண்டிலையே மண்–89-கதஞ்சிறந்து -பாட பேதம் 

பதவுரை

முன்–முற் காலத்தில்
கதம் சிறந்த–கோபம் மிகுந்த
கஞ்சனை–கம்ஸனை
கதவி காய்ந்து–கோபித்து முடித்து
போர் யானை–போர் செய்வதாக எதிர்த்து வந்த குவலயாபீடமென்னும் யானையை
ஒசித்து–கொம்பு முறித்து
அதவி–கொன்று,
பண்டு ஒரு கால்–முன்னொரு காலத்தில்
பதவியாய்–நீர்மையை யுடையனாயக் கொண்டு-பதவி -நீர்மை என்றும் -வழி என்றும்
மாணி ஆய்–பிரமசாரியாகி
மாவலியை–மஹாபலி யினிடத்திலே
பாணியால்–கையினாலே
நீர் ஏற்று–தானம் வாங்கி
மண் கொண்டிலையே–பூமியைப் பெற்றாயல்லையோ?

கதஞ்சிறந்த கஞ்சனை
நெஞ்சில் அகற்றுதல் ஞானம்
சீற்றத்தை உடையனாய் இருந்துள்ள கம்சனை

கதவி முன் காய்ந்து –
சீறி முற் காய்ந்து
தலை மயிரைப் பற்றி முன்னே பிடித்து என்னவுமாம்

அதவிப் போர் யானை ஒசித்து
யானையை வ்யாபரியாத
படிக்கு ஈடாக அடர்த்து கொம்பை ஒசித்து

பதவியாய் மூலை யடி அன்றிக்கே
நீர்மையை உடையவனாய்
கம்சனைக் கொன்றாற் போலே
வழி கொடு வழியே என்றுமாம்

பாணியால் நீரேற்று-குடங்கையால் நீரேற்று-

பண்டு ஒரு நாள் மாவலியை -மாணியாய் கொண்டிலையே மண்
ஐஸ்வர்யம் தோற்றக் கொண்டாயோ-அர்த்தித்வம் தோற்ற
மாணியாய் அன்றோ கொண்டது-

(சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு
ஆதி யஞ்சோதி யுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த வேத முதல்வன் -3-5-5-
ஈஸ்வரன் அவதரித்துப் பண்ணின ஆனைத் தொழில்கள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமை
ஆறா மதயானை அடர்த்தவன் தன்னை -9-4-11-
குல நல் யானை மருப்பு ஓசித்தாய் –4-3-1-
பாணியால் நீர் ஏற்று
அலம் புரிந்த நெடும் தடக்கை -அலம் அலம் போதும் போதும் என்னும்படி கொடுத்து நீண்ட திருக்கையால் நீர் ஏற்று
கிருஷ்ணா ஜினேந ஸம் வ்ருண்வன் வதூம் வக்ஷஸ் ஸ்தலா லயாம்
ஆஸ்ரிதர்களுடைய தடைகளைப் போக்கி நீ செய்து அருளிய கார்யங்கள் லோக ப்ரஸித்தம் அன்றோ
உன்னாலும் மறைக்கப் போகாதே என்கிறார் – )

———————————————————————

கம்சனைக் கொன்றோம்–யானையைக் கொன்றோம்-பூமியை அளந்தோம்
என்று நம்முடைய செயல்களைச் சொல்லும் அத்தனையோ –
உமக்கு பெற வேண்டுமது சொல்லீரோ என்ன-சொல்கிறார் –

மண்ணுலகம் ஆளேனே வானவர்க்கும் வானவனாய்
விண்ணுலகம் தன்னகத்து மேவேனே -நண்ணித்
திருமாலை செங்கண் நெடியானை எங்கள்
பெருமானைக் கை தொழுத பின்-90-

பதவுரை

திருமாலை–பிராட்டியின் இடத்தில் வியாமோஹமுடவனும்
செம் கண்–செந்தாமரை போன்ற திருக்கண்களை யுடையவனும்
நெடியானை–ஸர்வேஸ்வரனுமான
எங்கள் பெருமானை–எம்பெருமானை
நண்ணி–கிட்டி
கை தொழுத பின்–அஞ்ஜலி பண்ணி ஆஸ்ரயித்த பின்பு
மண் உலகம் ஆளேளே–இவ் விபூதியை நானிட்ட வழக்காக நிர்வஹிக்க மாட்டேனோ?
வானவர்க்கும் வானவன் ஆய்–தேவாதி தேவனாய்க் கொண்டு
விண் உலகம் தன் அகத்து–நித்ய விபூதியிலே
மேவேனே–நித்யாநந்த மநுபவிக்க மாட்டேனோ?

(திருமால் -மிதுனம் இல்லாமல் இழக்கிறேனோ
செம் கண் வாத்சல்யாதிகள் இல்லாமல் இழக்கிறேனோ
நெடியானை -புருஷோத்தமத்வம் இல்லாமல் இழக்கிறேனோ
எங்கள் பெருமானை -ஸ்வாமி இழக்கிறேனோ
நண்ணி -கிட்டாமல் இழக்கிறேனோ
கை தொழுத பின்–அஞ்ஜலி பண்ணி ஆஸ்ரயிக்காமல் இழக்கிறேனோ

அவனைப் பெற்றால் பொன்னுலகம் ஆளீரோ புவனா எல்லாம் ஆளீரோ என்று கொடுக்க வல்லவன் ஆவேனே )

மண்ணுலகம் ஆளேனே
ஓரடி வர நின்ற பூமியை ஆளுகை
எனக்கு ஒரு பணியோ –

வானவர்க்கும் வானவனாய் விண்ணுலகம் தன்னகத்து மேவேனே
நித்ய ஸூரிகளுக்கு அவ்வருகாய்
பரம பதத்தில் இருக்கை
எனக்கு ஒரு பணி உண்டோ –

நண்ணித் திருமாலை செங்கண் நெடியானை எங்கள் பெருமானைக் கை தொழுத பின்
ஸ்ரீ ய பதியாய்
சமாஸ்ரயணீயனான
எங்களுக்கு ஸ்வாமி யானவனைக் கிட்டிக்
கை தொழுத பின்
போக மோஷங்களில் எனக்கு ஒரு குறை உண்டோ –

(தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ –தஸ்ய உதிதி நாம
கோவிந்த்தேதி யதா க்ரந்தத் க்ருஷ்ணா மாம் தூர நம்
ருணம் ப்ரவ்ருத்தமிவ மே ஹ்ருதயான் நாபஸர்ப்பதி

த்வதங்க்ரிம் உத்திஶ்ய கதா’பி கேநசித்
யதா ததா வா’பி ஸக்ருத்க்ருதோ’ஞ்ஜலி |
ததைவ முஷ்ணாத்யஶுபாந்யஶேஷத:
ஶுபாநி புஷ்ணாதி நஜாது ஹீயதே ||-ஸ்தோத்ர ரத்னம் -28-

காயிக சரணாகதியைக் குறிக்கும் ஒரு அஞ்சலியை யார் எச் சமயத்தில் எவ்வாறு செய்தாலும்,
அது எல்லாப் பாபங்களையும் அடியோடு உடனே போக்கி விடும்; மங்களங்களை வளர்க்கும்;
அந்த மங்களங்கள் அழியாமல் இருக்கும்.

அர்த்த தஸ் ச மயா ப்ராப்தா தேவ ராஜ்யா தயோ குணா
ஹத ஸத்ரும் விஜயினம் ராமம் பஸ்யாமி ஸூஸ் திதம் –யுத்த -116-24-

அடங்கெழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன்
அடங்கெழில் அஃதென்று அடங்குக உள்ளே -1-2-7-
அவனுடைய சம்பத்து என்னும் அனுசந்தானத்தால் லீலா விபூதியும் உத்தேஸ்யமாகுமே -)

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading