Archive for the ‘ஸ்ரீ நம் ஆழ்வார்’ Category

ஸ்ரீ திருவாய்மொழி வாசகமாலை — ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை–ஏழாவது பத்து விவரணம்- –

February 11, 2022

சந்தியும் சந்திப்பதமும் அவை தம்மிலே தழைக்கும்
பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலு கிற்பீர்
வந்தியும் வந்திப்பவரை வணங்கும் வகை அறிவீர்
சிந்தியும் தென் குருகூர் தொழுது ஆட் செய்யும் தேவரையே

நாத முனிக்கு அன்று நாலாயிரமும் உணர்த்தி
போதம் அருள் குருகூர் வித்தகனார் -கோதில்
திருவாய் மொழி வாசக மாலைத் தேனைத்
தரவே எனக்கு அருள் செய்தார் –

———-

உண்ணி லாவிய ஐவராற் குமை தீற்றி என்னை உன் பாத பங்கயம்
நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணுகின்றாய்
எண்ணிலாப் பெரு மாயனே!இமையோர்கள் ஏத்தும் உலக மூன்றுடை
அண்ணலே! அமுதே! அப்பனே!என்னை ஆள்வானே!–7-1-1-

உண்ணிலாவியில்
இப்படி சரணம் புக்க இடத்திலும் இவர் கார்யம் செய்யாமையாலே மிகவும் அவசன்னராய்
விஷயங்களும் இந்திரியங்களும் நடையாடுகிற ஸம்ஸாரத்திலே என்னை வைத்த போதே
கைவிடப் பார்த்தானாக வேணும் -என்று நிச்சயித்து
அவன் குணங்களை சொல்லி என்னைக் கை விடாது ஒழிய வேணும் என்று கூப்பிட்டார் –

———

இன்னமு தெனத் தோன்றி ஓர் ஐவர் யாவரையும் மயக்க நீ வைத்த
முன்னம் மாயமெல்லாம் முழு வேர் அரிந்து என்னை யுன்
சின்னமும் திரு மூர்த்தியும் சிந்தித்தேத்திக் கை தொழவே அருள் எனக்கு
என்னம்மா! என்கண்ணா!இமையோர் தம் குலமுதலே!–7-1-8-

உயர்வற என்கிற பாட்டை -இன்னமுது எனத் தோன்றி -என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
உயர்வற -இன்னமுது எனத் தோன்றி -மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவாக
சப்தாதி விஷயங்களே போக்யமாகப் புத்தி பண்ணி
ஸ்ரோத்ராதிகளை விஷயங்களிலே மூட்ட புஜிக்கும்படி இருக்கிற இது தான்
தம் தாம் ஸூஹ்ருத்தத்தாலேயாய் உச்சாரயம் அற்றது

உயர்நலம் யுடையவனான நீ-நித்ய ஆனந்த யுக்தனாய் இருக்க –
எவன் அவன் -நைவேன் என்னை -இந்திரிய வஸ்யனான என்னை

இன்னமுது எனத் தோன்றிய
சப்தாதிகளே பரம போக்யமாம்படி ஸ்ம்ருதிக்கு விஷயமாய் அற்றது

அது தான் விபாகத்தில் பலிக்குமது முகப்பிலே யாகப் பெற்றேனாகில் கை விடலாம் கிடீர்
அக்ரே யத் அம்ருதம் இவ இறே
பரிணாமத்தில் விஷம் இறே
விபாகத்திலே பலிக்குமது முகப்பிலேயாகப் பெற்றேனாகில் கை விடலாம்

உபக்ரமத்தில் தோற்றிற்று ஆகில் மேல் விழாது ஒழியல் யாய்த்தே
பழியும் தர்ம ஹானியுமாய் மேல் நரகமானாலும் விடப் போகாது இருக்கை
ப்ரக்ருதி ப்ராக்ருதங்களுக்கு இங்கனே ஒரு தண்மை உண்டு

ஓர் ஐவர்
தனித்தனியே பிரபலமாய் அத்விதீயமான சப்தாதி விஷயங்கள் ஐந்தும்

யாவரையும் மயக்க
ஷூத்ரரான மனுஷ்யரோடு -அளவுடைய ப்ரஹ்மாதிகளோடு வாசியற
அறிவு கெடுக்கும்படிக்கு ஈடாக வாய்த்து அவை தான் இருப்பது

இவற்றின் அடைவு உமக்குத் தெரிந்தபடி என் என்ன -நீ மயர்வற மதி நலம் அருளுகையாலே
மயக்க நீ வைத்த
நீ அருளின பக்தி ரூபா பன்ன ஞானத்தால் அவை விஷமாகத் தோற்றிற்று

எவன் -யாவன் ஒருவன் -அவன் ஸ்ருதி ப்ரஸித்தனானவன்
மயர்வற -மயங்கப் பெறா நிற்கிற
முன்னம் மாயமெல்லாம் முழு வேர் அரிந்து
அநாதியான ஸம்ஸாரத்தை எல்லாம் ஊசி வேரோடே போம் படி ஸ வாஸனமாகப் போக்கி

என்னை
ஸம்ஸார பய பீதனான என்னை
செய்த அம்சமே திருப்தனாய் இருக்குமே அவன்
ஞான லாபம் பண்ணிக் கொடுத்தோமே என்று இறே அவன் இருக்கிறது –
அது போதாது இறே
ஸம்ஸாரத்தை ஸ வாசனமாகப் போக்க வேண்டி இருக்கும் இறே இவருக்கு

நீ அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் -உன் சின்னமும் திரு மூர்த்தியும் –
அயர்வறும் அமரர்கள் பிரகிருதி பரவசர் அல்லாதவர்கள்
பரமபதனைப் பரிசர்யை பண்ணி
தவள ஒண் சங்கு சக்கரம் என்றும் தாமரைத் தடம் கண் என்றும் சொல்லுகிற படியே
திவ்ய ஆயுதங்களையும் திவ்ய அவயவங்களையும் அவற்றுக்கு ஸத்ருசமான திருமேனியையும்

சிந்தித்து ஏத்திக் கை தொழவே அருள் எனக்கு
இவற்றை நெஞ்சாலே நினைத்தும் உள் அடங்காமல் வாய் விட்டு ஸ்தோத்ரம் பண்ணி
பின்னை திருவடிகளிலே விழும்படிக்கு ஈடாக அருள வேணும் –
வாயாலே ஓன்று சொல்லா நிற்க -நெஞ்சு வேறே ஒன்றை நினைத்தால் உனக்கு சேஷம் என்று
வேறே ஓர் இடத்திலே தொழில் செய்தல் அன்றிக்கே
மநோ வாக் காயங்கள் மூன்றும் உன் துயர் அறு சுடர் அடி தொழுது எழும் படி
ஹேய பிரதிபடமாய் நிரவதிக தேஜோ ரூபமான திருவடிகளிலே ப்ரவணமாம் படி பண்ணி யருள வேணும்

என்னம்மா
எனக்குத் தாய் போலே பரிவனனானவனே

என் கண்ணா
அந்தப் பரிவை அர்த்த க்ரியா கார்யம் ஆக்கினவனே

இமையோர் தம் குல முதலே
ஒரு நாடாக உன்னைக் கொடுத்து அனுபவிக்கும் படி இருக்கிறவன் அல்லையோ –
அநேகர் ஆசைப்பாடு ஒருவனுக்கு உண்டானால் கொடுக்கலாகாதோ

என் மனனே -என் அம்மா -என் கண்ணா -இமையோர் தம் குல முதலே
த்ரிவித கரணமும் உன் வச வர்த்தி அன்றோ
இத்தை அவன் மேல் வைத்திரு

என் அம்மா இத்யாதி
இம்மூன்றையும் உன் மேலே வைத்து அனுபவிக்கும் படி பண்ணி அருள வேணும் என்கிறார் –

——–—————

கங்குலும் பகலும் கண்துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்; ‘தாமரைக் கண்’ என்றே தளரும்;
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்; இரு நிலம் கைதுழா இருக்கும்;
செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்! இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1-

கங்குலும் பகலிலே
இவர் தசையை அனுசந்தித்த ஈஸ்வரன் -தான் நினைத்த கார்யம் தலைக்கட்டும் அளவும்
இவரைத் தரிப்பிக்கும் வழி ஏதோ என்று சிந்தியா நிற்க
அது பற்றாமை மோஹங்கதையாக -இவள் தசையைக் கண்ட திருத்தாயார் -இவளைப்
பெரிய பெருமாள் திருவடிகளிலே பொகட்டு -இவள் இடையாட்டம் பற்றி நீர் செய்ய நினைத்து இருக்கிறது என்
என்று கேழ்க்கிற பாசுரத்தாலே ஸ்வ தசையை அருளிச் செய்கிறார் –

உயர்வற என்கிற பாட்டைக் -கங்குலும் பகலும் -என்கிற பாட்டு விவரிக்கிறது எங்கனே என்னில்
ஸ்ரீ பர ப்ரஹ்ம ஆனந்தம் தொடங்கி மனுஷ்ய ஆனந்தங்களும் அஸ்திரமாய் அல்பமாய் அற்றது
அங்கன் அன்றிக்கே ஸ்ரீ யபதியான ஸர்வேஸ்வரன் ஆழ்வாருக்கு மயர்வற மதிநலம் அருளுகையாலே
பரபக்தி பர்யந்தமாகப் பிறந்தது

தர்சனம் பரபக்தி ஸ்யாத் பர ஞானந்து சங்கமம் -புனர் விஸ்லேஷ பீருத்வம் பரமா பக்தி ருச்யதே -என்கிறபடியே
பரபக்தியாலே தர்சனம் உண்டாய் -பர ஞானத்தாலே சங்கத்தை ஆசைப்பட்டு பாஹ்ய ஸம்ஸ்லேஷ அபேக்ஷை பிறந்து
அணைக்காகக் கையை நீட்ட ஞான சாஷாத்காரம் ஆகையாலே கைக்கு எட்டாமல் மோஹங்கதராக
பரிவரான பாகவதர்கள் பெரிய பெருமாள் ஸந்நிதியில் கொணர்ந்து விட்டு
இவர் தசையை அறிவிக்கிற பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

உயர்வற -கங்குலும் பகலும் -என்றபடி
உயர்வற -மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவாக –
திவா ராத்ர விபாகமாய் இருக்கையாலே -கங்குலும் பகலும் -என்கிறது –
அற என்றது -திவா ராத்ர விபாகம் அற கண் துயில் அறியாள் -என்கிறபடி

இத்தால் -லீலா விபூதியில் உள்ளார் ஊணும் உறக்கமுமாகக் களிக்க இவளுக்கு இது இல்லை என்றபடி –
உயர்வற என்று லீலா விபூதியைச் சொல்லிற்று
உயர் நலமுடையவன் என்று நித்ய விபூதி யோகம் சொல்லுகிறது
கங்குலும் பகலும் என்கிறது –
கங்குல் லீலா விபூதி -பகல் -நித்ய விபூதி

கண் துயில் அறியாள் -என்கையாலே
இவருக்கு உபய விபூதியும் ஒரு பகலாய் இருக்கிற படி –
காண்பதற்கு முன்பு உறக்கம் இல்லை
கண்டால் ஸதா பஸ்யந்தி யாகையாலே உறக்கம் இல்லை என்றபடி

எவன் அவன் என்று திவ்ய ஆத்ம ஸ்வரூபம் எப்போதும் பிரகாசிக்கிற படி
அதுக்கு மேலே மதிநலம் அருளுகையாலே பாஹ்ய ஸம்ஸ்லேஷம் கிடையாமல்
ஹர்ஷ சோகங்கள் இரண்டாலும் கண்கள் நீர் பெருகத் தொடங்கிற்று
இந்த மதி நலம் அருளினவனைக் காண ஆசைப்பட்டு -இந்த ஆர்த்தியே செப்பேடாக வரும் என்று பார்த்து
கண்ண நீர் மறையாமைக்காக கைகளால் இறையா நிற்கும்
ஊற்று மாறாமையாலே இறைக்கையே யாத்ரையாய் ஆய்த்து –

எவன் இந்த அதிகாரி -அவன் பிரதம பரிஸ் பந்தமே தொடங்கிக் காண வேணும் என்று ஆசைப்பட்டு –
கண்ண நீர் கைகளால் இறைத்து சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும்
சங்கு சக்கரங்கள் யுடையவன் எவன் அவன் என் ஆர்த்தி தீர்க்க வந்ததோ என்று
உபகார ஸ்ம்ருதியாலே கை கூப்பும்

மயர்வற்ற மதி நலத்தால் வந்த பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே வந்த வெளிச் சிறப்பாலே கை கூப்பும்
மனஸ்ஸுக்குத் திருவாழி யாழ்வான் அதிஷ்டான தேவதை யாகையாலே
ஆழ்வான் ப்ரகாஸமும் ஞானப் ப்ரகாசமுமாய் அதி ப்ரகாசமாய்த்து
பத்தாஞ்சலி புடா ஹ்ருஷ்டா என்று அஞ்சலி பண்ணிப் பார்த்துக் கொண்டு இரா நின்றாள் –

எவன் மயர்வு அற்றவன் -அவன் அருளின அந்த
தாமரைக் கண் என்றே தளரும்
ஆழ்வார்கள் அளவும் அலை எறிகிற கண்
ஆழ்வார்களை விடிலும் உம்மை விடேன் என்று நோக்கினான் –

தாமரைக் கண்களால் நோக்காய் -என்றபடியே அருளினன்

கண் என்றே தளரும்
அங்கனே வந்து தோன்றக் காணாமையாலே தளருமாய்த்து

அயர்வறும் அமரர்கள் அதிபதியான
உன்னை விட்டு எங்கனே தரிக்கேன் -என்னும்
அயர்வு -தரியாமை –
விஸ்லேஷியாமல் அனுபவிக்கிற நித்யரோபாதியும் போராதோ இவள் தரியாமை
எவன் -உன்னை விட்டு எங்கனே தரிக்கேன் -என்றவன் அவன் அதிபதியாய்
உபய விபூதி நிர்வாஹகனாய் இருக்க நான் இழந்து இருப்பதே என்கிறாள்

சுடர் அடி தொழுது எழ நினைத்து இது லபிக்குமோ லபியாதோ என்று அங்கலாய்ப்பாலே
இரு நிலம் கை துழாவி இருக்கும்
விபூதி த்வயமும் இவர் கைக்கு உள்ளே அடங்கி ஆராயும்படி ஆய்த்து

தரியாமையாலே தரை துழாவா நின்றாள் –
ஒரு பீங்கான் உள்பட்ட சந்தனம் பட்டது பூமியும் படா நின்றது –
துயர் அற்றும் இரு நிலம் கை தொழா நிற்கும்

செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய் இவள் திறத்து என் செய்கின்றாயே
துயர் அறு -ஆர்த்தியாகிற துயர் தீர்க்க வன்றோ திருவரங்கத்தே வந்து சாய்ந்து அருளிற்று
திருவரங்கத்தாய் யுன் சுடர் அடி -அத்யந்தம் ஸூ லபனான உன்னுடைய
ஹேய ப்ரத்ய நீகமான திருவடிகளைத் தொழுது எழு என் மனனே
எனக்கு பவ்யமான நெஞ்சே தொழுது எழு என்னா நின்றாள்

ஏக தேச வாசிகளாய் ஸாரூப்யம் பெற்று அவன் நீர்மையே தாரகமாய்
ஜலான் மத்ஸ்யா விவோத்ருதவ்-என்று இருக்கிறவர்களைப் போல் அன்றோ இவளும்
செங்கயல் -முஹூர்த்தம் அபி ஜீவாவா -என்னும் அளவல்லவே
ந ஜீவேயம் க்ஷணம் அபி -என்று இருக்கிற இவள் திறத்து என் செய்கின்றாயே

ஆர்த்த ரக்ஷணத்திலே தீஷித்து கோயிலிலே ஸாலா ப்ரவேஸம் (யாக சாலையில் போவது) பண்ணி
உன் சீலாதி குண விசிஷ்டரான சிரௌதிகளோடே சரணாகத ரக்ஷணம் பண்ண இருக்கிற உமக்கு
ஆர்த்தருமாய் சரணாகதருமான இவள் திறத்து என் செய்கின்றாய்

பரத்வமும் வ்யூஹமும் தேச விப்ரக்ருஷ்டம்
அவதாரங்கள் கால விப்ரக்ருஷ்டம்
ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வ அவஸ்தையிலும் பண்ணி அனுபவிக்கலாவது
கோயிலிலே அணித்தாய் வந்து இருக்கிற உன்னை விட்டு எங்கனே தரிப்பது

ஊணாலும் உறக்கத்தாலும் -சூது சதுரங்கத்தாலும் பொழுது போக்குமவளோ இவள்
உன்னடிமையாலேயே தரிக்கப் பார்க்கும் இவள் திறத்து என் செய்கின்றாய்
தொழுது எழும்படி பார்க்கிறாயா
கைவிடப் பார்க்கிறாயா என்கிறாள்

ஆர்த்தையான இவள் திறத்து என்று விரஹம் தின்ற உடம்பைக் காட்டுகிறாள்
நித்ய விபூதியை விட்டு ரக்ஷணத்திலே த்வரிதனாய் வந்து இருக்கிற உன் ஸ்வரூபம் எது -விளம்பம் எது –
விளம்பம் பொறாதாரொடு விளையாட்டு உண்டோ

என் செய்கின்றாயே
தொழுகை ஸ்வரூபம் என்று இருக்கிறாயோ
குற்றம் என்று கை விடுகிறாயோ -என்கிறாள் –

———————–

வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தித் தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்! என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்!
வெள்ளச் சுகமவன் வீற்றிருந்த வேத ஒலியும் விழாவொலியும்
பிள்ளைக் குழா விளையாட்டொலியும் அறாத்’திருப் பேரெயிற் சேர்வன் நானே- .–7-3-1-

வெள்ளைச் சுரி சங்கில்
இப்படி மோஹித்துக் கிடந்தவர் திரு நாம ப்ரசங்கத்தாலே மோஹம் தெளிந்து
தென் திருப்பேரையிலே எழுந்து அருளி இருக்கிற
மகர நெடும் குழைக்காதர் பக்கலிலே அபஹ்ருத சித்தரானபடியை அருளிச் செய்கிறார்

உயர்வற -என்கிற பாட்டை -வெள்ளைச் சுரி சங்கு -பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் தம் தாம் ப்ராப்ய பிராப்பகங்களுக்குத்
தகுதியான ப்ரமாணங்களைத் தம் தாம் நெஞ்சங்களிலே கொண்டு நடத்தா நிற்பார்கள்
அது தான் அல்ப அஸ்த்ரங்களாய் இருக்கையாலே உயர்வு அற்று இருக்கும்

உயர்நலம் உடையவன் எவன் அவன் வேத ப்ரதிபாத்யனாகையாலே அந்த வேதமானது
ஆனந்தாதி குணங்களை அளவிடுவோம் என்று பேசப்புக்கு
அப்ராப்ய மனஸா ஸஹ -என்று அளவிட மாட்டாமல் மீண்டது இறே

அப்படிப்பட்ட பரமமான ப்ரஹ்மம் எனக்கு மயர்வற மதிநலம் அருளிக் காட்டக் கண்டேன்
கண்டபடி என் என்னில்
வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தித் தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்!
நான் பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே கண்டால் போலே யார் காண வல்லார் என்ன
நீர் தான் கண்டபடி சொல்லீர் என்ன

வெள்ளைச் சுரிசங்கு
ஸூ த்த ஸத்வ மயமாய் -ப்ரணவ ஆகாரமாய் -திருமந்திர பூரிதமான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும்
மந்த்ரார்த்தை நடத்துகிற அருளார் திருச்சக்கரமும்
திருக்கையிலே பூ ஏந்தினால் போலே ஏந்திக் கொண்டு

தாமரைக்கண்ணன்
ஜிதந்தே புண்டரிகாஷன் -என்னும் அயர்வறும் அமரர்கள் அதிபதியானவன் –
அவர்களைக் கண் அழகாலே தோற்ப்பிக்குமா போலே என்னைத் தோற்ப்பித்து

என் நெஞ்சினூடே புள்ளைக் காடாகின்ற -அருளின பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே த்ரிபாத் விபூதியில் அடங்காமல்
வானவர் நாடு என்னுமா போலே நெஞ்சை நாடு என்னும்படி
மஹா நகரமாக்கி

புள்ளைக் காடாகின்ற
வேதமயமான பெரிய திருவடியை மேல் கொண்டு வேதாந்த வேத்யனானவன் தன்னையே என் நெஞ்சு
பிராமண புரஸ்சரமாக பின்செல்லும் படி கடாக்ஷித்து
புள்ளைக்காடாகின்ற வாற்றை -நெஞ்ச மா நகரிலே உலாவி அருளா நின்றான் –

ஆற்றைக் காணீர்
கண்கள் காதுகள் முதலான கரணங்கள் உஜ்ஜீவிக்கும்படி காண மாட்டீகோளோ என்ன

நீ கண்டபடி சொல்லிக் காண் -நீ தானே அனுபவியாதே என்ன –

என் சொல்லிச் சொல்லுகேன்
ஹம்ஸ சக்ரவாகங்கள் போலே ஆழ்வார்களும்
காடு படர அலர்ந்த தாமரை போலே இருக்கிற திவ்ய அவயவங்களும்
தடாகத்தில் நீரும் இலையும் போலே இருக்கிற திருமேனியும்
அத்தை மனத்துக்கு இனிய இருக்கிறதொரு மஹா மேரு தரித்தால் போலே இருக்கிற
பெரிய திருவடி யோடே கூட நித்ய முக்தர்கள் மங்களா ஸாஸனம் பண்ண இவர் திரு உள்ளத்திலே உலாவுகிற படி
இப்படி இறே அனுகூலரோடே பரிமாறும் படி

அன்னைமீர்காள்!
செந்தாமரைக் கண்ணன் துயர் அறு சுடர் அடி தொழுது எழுமினோ
அஞ்ஞான அந்தகாரம் நீங்க வேதாந்த வேத்யனைச் சுடர் அடி தொழுங்கோள் என்ன

எங்கே போய்த் தொழுவது என்ன

வெள்ளச் சுகமவன் வீற்றிருந்த வேத ஒலியும் விழாவொலியும் பிள்ளைக் குழா விளையாட்டொலியும்
அறாத்’திருப் பேரெயிற் சேர்வன் நானும் என் மனனும்
நீங்களும் என்னை நிஷேதியாதே கூடச் செல்லுங்கோள்

வெள்ளைச் சுகம்
பிரிவிலும் அரையாறு படாதபடி அவன் கலவியில் தேற்றிக் கொண்ட ஸூக அதிசயம் இருக்கும் படி

அவன் வீற்று இருந்த
நான் இட்ட கால் இட்ட கையாய் இருக்கிறது
அவ்விடம் வேத ஒலியும் விழா ஒலியாய் இருக்கிறது –
அவன் நெஞ்சு உகந்து தன் புணர்ப்பு சொல்லக் கேளா நின்றான்

விழா ஒலியும்
இவளைத் தோற்பித்த வெற்றி மாலை கேட்டு நெய் ஆடலா நின்றான்
நித்ய உத்சவம் நடக்கும்படி காணும் அவன் இருக்கிறது
நான் இருக்கும் இடம் இறே வெறும் வீச்சாகக் கடக்கிறது

பிள்ளைக் குழா விளையாட்டு ஒலியும் அறா
பருவம் நிரம்பாத பாலர்கள் எல்லாம் பகவத் அனுபவமே யாத்ரையாய் இருக்கிறது
பாலா அபி க்ரீடா மாநா க்ருஹ த்வாரேஷு ஸர்வஸ –இத்யாதிப்படியேயாய் இருக்கிற
திருப்பேரையிலே சேர்வன் -நானும் நெஞ்சும்

அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழுவோம்-நீங்களும் போருங்கோள் என்கிறாள் –

——————

ஆழி எழச் சங்கும் வில்லும் எழத் திசை
வாழி எழத் தண்டும் வாளும் எழ அண்டம்
மோழை எழ முடி பாதம் எழ அப்பன்
ஊழி எழ உலகங் கொண்ட வாறே.–7-4-1-

ஆழி எழ -வில்
ஸர்வேஸ்வரன் இவருக்கு உண்டான ஆற்றாமை தீர்க்கைக்காகத் தன்னுடைய விஜய பரம்பரையை
பத்தும் புத்தாக்க காட்டிக் கொடுக்கக் கண்டு
அவனுடைய விஜய பரம்பரையை அனுஷ்ட்டித்து ஹ்ருஷ்டராகிறார் –

உயர்வற என்கிற பாட்டை இது விவரிக்கிறது -எங்கனே என்னில்
உயர்வற -மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் அந்நிய சேஷத்வ
ஸ்வ ஸ்வா தந்தர்யங்களாலே உயர்வு அற்று இருந்தார்கள்
அவற்றை மாற்றாத திரு உள்ளம் பற்றி வாமன அவதாரம் பண்ணி அவற்றை அறும் படி பண்ணினான்
எங்கனே என்னில்
உயர்வற உயர்நலம் உடையவன் எவன் அவன் வாமனனாய் மாவலி பக்கலிலே சென்று மூவடி மண் இன்றே தா என்ன
உதக பூர்வகமாகக் கொடுக்க வாங்கின போது மூவடி மண் கொண்டு அளக்க த்ரிவிக்ரமனாய் கிளற
முன்னைய வண்ணமே கொண்டு அளவாய் என்று நமுசி பிரப்ருதிகள் வளர ஒட்டாமல் தகைந்து கொள்ள

அப்பொழுது -ஆழி எழ
தேவா ஸ்வ ஸ்தானம் ஆயந்தி நிஹதா தைத்ய தானவா ந பயம் வித்யதே கிஞ்சித் ஜிதம் பகவதா ஜகத்
என்கிறபடியே தனக்காக்கிக் கொண்ட செயல் இறே
ராவணாதிகளைப் போலே தலை அறதே குண லாபம் உண்டாகையாலே நின்ற நிலையில் தோற்ப்பித்துக் கொண்ட படி
நாயகனுக்கு அடியார் இறே வென்று கொடுப்பார்

நலமுடையவன் எவன் அவன் -ஆனந்தாதி குண பூர்த்தியாலே ஸ்ருதி ப்ரஸித்தன் ஆனவன்
என்னுடைய ஜகதாகாரதையைப் பாருங்கோள் என்று
மயர்வற மதிநலம் அருளித் தான் திரு உலகு அளக்கப் புக்கவாறே –

ஆழி எழச் சங்கும் எழ
ஸ்வாமியுடைய உத்யோகம் அறிந்து ஆயுதங்கள் முற்பட்ட படி
காட்டுக்கு முற்பட்ட இளைய பெருமாளைப் போலே யாய்த்து முற்பட்ட படி
த்ரும சீரைர் அலங்க்ருத -என்று முற்கோலினால் போலே யாய்த்து
தோற்றத்திலே அரசு போராயிற்று -ஹேதி ராஜன் இறே

ஆழி எழ
ஆயிரம் காதம் பறப்பதின் குட்டி ஐந்நூற்றுக் காதம் சிறகடிக் கொள்ளுமா போலே
உத்யோகத்திலே ஈஸ்வரனைப் பார்க்க விஞ்சின படி

சங்கும் வில்லும் எழ
மற்றை ஆழ்வார்களும் மற்றைக் கையிலே ஏறினார்கள்
இரை பெறாத இடத்தே இருந்து -சீறு பாறு -என்னக் கடவ வர்கள்
இரை யுள்ள இடத்திலே ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடார்கள் இறே

இடங்கை வலம்புரி நின்று ஆர்ப்பரிக்கா நின்று அடங்காரை ஒடுங்கு வித்த ஆழி
அரவணை மேல் தோன்றல் திசை அளப்ப பூவாரடி நிமிர்த்த போது
இவர்கள் இப்படி பொருத படி காண்கைக்கு
அவன் மயர்வற மதிநலம் அருளுகையாலே கண்டு

திசை வாழி எழ
ஜகதாகாரத்தைக் கண்டு இவ்வஸ்துவுக்கு என்ன தீங்கு வருகிறதோ என்றும்
திவ்ய ஆயுதங்களுக்கு என்ன தீங்கு வருகிறதோ என்றும்
பல்லாண்டு ஒலி எழா நிற்கும்

திசை வாழி எழ
திக்குகள் தோறும் அனுகூலருடைய வாழி வாழி என்ற மங்களா ஸாஸன த்வனி கிளர
ஏத்த ஏழு உலகும் கொண்ட கோலக் கூத்தன் இறே

தண்டும் வாளும் எழ
தூசித் தலையிலே -ஸ்ரீ கதை ஆழ்வானும் -ஸ்ரீ நந்தக ஆழ்வானும்
நாம் இருக்கத் திருவாழி ஆழ்வான் முதலானாரோ பொருவதுவும் வெற்றி கொள்வதுவும் – என்று
போர் புரப் பாய்த்துப் பொருகிற படி

நமுசி வந்து -என் இது மாயம் என் அப்பன் அறிந்திலன் முன்னிய வண்ணமே கொண்டு அளவாய் -என்ன
மன்னு நமுசியை வானில் சுழற்றி எறிந்தவன்

அன்று
பிறந்த அன்றே செய்த வியாபாரம் இறே

அண்டம் மோழை எழ
இந்திரனுக்காக த்ரை லோக்யம் அத்தனையும் அளக்க வேண்டிய வியாஜத்தாலே
அந்நிய சேஷத்வ நிவ்ருத்தி பண்ணிற்று
அவ்வளவில் நில்லாதே
அண்ட அவகாசம் உள்ள இடம் எங்கும் சென்று அளந்து -அண்ட கடாஹத்திலே திருவடிகள் சென்று
ஒண் மிதியும் புனலுருவி ஒருகால் நிற்ப -என்று
கீழில் அண்ட கடாஹத்தை யுருவிற்று ஒரு திருவடிகள்
அது பிளந்து ஆவரண ஜலம் மேலே எழ -ஆவரண ஜலத்துக்கு நடுவே
ஒரு கழக் கோடி மிதக்குமா போலே மிதக்கும் இறே அண்டம்

முடி பாதம் எழ
திரு அபிஷேகத்து அளவும் திருவடிகள் கிளர
அப்பன் ஊழி எழ
அயர்வறும் அமரர்களுக்கு அதிபதியானவன் ஜகதாகாரனாய் நின்ற நிலையை உபகரித்தவன்
அப்பன் -ஸ்வாமி யானவன்

ஜகதாகாரதையைக் கண்டு -இதுக்கு என் வருகிறதோ என்று அஞ்சின அச்சம் தீர்ந்து
முக்தரும் மங்களா ஸாஸனம் பண்ணித் துயர் அறு சுடர் அடி தொழுதார்கள்
துயர் அறுகை உபய விபூதிக்கும் ஈஸ்வரனுக்கு ஒக்கும் இறே

அப்பன் ஊழி எழ
அந்நிய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்தர்யங்களாய்ச் சென்ற காலம் போய்
பகவச் சேஷத்வ பாரதந்த்ய பரா காஷ்டையாலே நல்லடிக் காலம் ஆய்த்து

அப்பன் ஊழி எழ உலகம் கொண்டவாறே
மஹா உபகாரகனான ஸர்வேஸ்வரன் உலகு அளந்த பிரகாரத்திலே பொன்னடி
அந்நிய சேஷத்வமாகிற ஹேயப் ப்ரத்ய நீகமாய் அத்யுஜ்ஜ்வலமான திருவடிகளை
என் மனனே தொழுது ஏழு -என்கிறார் –

————-

கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ?
புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஒன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே.–7-5-1-

கற்பார் இராமனில்
இவ் விஜயத்துக்கு அடியாக அவன் விபவ குணங்களை அனுசந்தித்து ஹ்ருஷ்டராய்
படுக்கைக்கு கீழே நிதி கிடக்கப் புறங்கால் வீங்குவாரைப் போலே
இக்குணங்களும் நடையாடா நிற்க ஸம்ஸாரிகள் இழப்பதே என்று அவர்கள் இழவுக்கு வெறுத்தார்

உயர்வற என்கிற பாட்டை விவரிக்கிறது -எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் வேத சாஸ்த்ராதிகளாலே ப்ரதிபாதிக்கிறது
உபாய உபேயங்கள் பலவாய் இருக்கும்
அது தான் ஒன்றுக்கு ஓன்று உயர்வாயும் தாழ்வாயும் இருக்கையாலே ஏற்றம் அற்று இருக்கும் –

உயர்நலம் உடையவன் எவன் அவன் என்று சக்கரவர்த்தி திருமகனை இறே சொல்கிறது
கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ?
உயர்நலமான ஆனந்தாதி கல்யாண குணங்களை யுடைய இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ

நீர் எத்தாலே அறிந்து சொல்லுகிறீர் என்ன
ஸ்ருதி ப்ரஸித்தன் யாவன் ஒருவன் -அவன் மயர்வற மதிநலம் அருளின
அந்த பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே
பரத்வமே பிடித்து அவதாராதிகளை ஆராய்ந்து பார்த்த இடத்து இந் நேர் காணாமையாலே
பதர் கூட்டிக் கழிக்கவும் பற்றாது –

இவ்விஷயத்தைக் கழிந்த கற்கும் கல்வி எல்லாம்
தத் ஞானம் அஞ்ஞானம் அத் அன்யத் யுக்தம் -என்றும்
வித்ய அந்நிய சில்ப நைபுணம் -என்றார்கள் இறே
பகவத் லாபத்துக்கு உடலான ஞானமே ஞானம் ஆகிறது -அல்லாதது அஞ்ஞானம் ஆய்த்து

ஆகையால் கற்பார் -ஒருவன் ஒன்றைக் கற்பது அப்போதைக்கு இனிது என்றாதல் –
பின்பு நன்மையை விளைக்கும் என்றாதல் -என்றாய்த்து கற்பது
அவை இரண்டும் இவ்விஷயத்தில் ஒழிய இல்லை என்கை

இவருக்கு அதிசயம் ஏது என்ன
புற்பா முதலாப் புல்
பா என்று படர்த்தியாய் படருகிற புல் என்னுதல்
தூர்வாதி ஸ்தாவராந்தமாக என்றபடி

எறும்பாதி ஒன்று இன்றியே
ஜங்கமங்களிலே கடையான எறும்பு தொடக்கமாக
பிரம்மாவை எண்ணினால் அநந்தரம் நிற்கக் கடவது இறே பிபீலிகை

புற்பா முதலாக -என்று
இவற்றுக்கு ஒரு ப்ரதான்யம் சொல்லுகிறார் அல்லர்
ராம விஷயீ காரத்துக்கு முற்பட்டார் இவைகள் என்கிறார்
வெள்ளமானது தாழ்ந்த இடத்தே ஓடுமாப் போலே

ஸ்தாவரங்களிலே தண்ணியது புல்லு
ஜங்கமங்களிலே தண்ணியது எறும்பு
இவை இரண்டையும் ஓக்க எடுக்கையாலே -ஞான பலம் மோக்ஷம் -என்கிறவத்தைத் தவிர்க்கிறது
சைதன்யம் உண்டாகையும் இல்லையாகையும் அப்ரயோஜம் -நலமுடைய பெருமாள் கிருபைக்கு என்கிறது
இவற்றினுடைய கர்ம தாரதம்யங்கள் அப்ரயோஜம் என்கிறது

நிருபாதிக சேஷி பக்கல் அப்ரதிஷேதமே பேற்றுக்கு வேண்டுவது
அபி வ்ருஷா பரிம் லாநா
உபதப் தோத காநாத்ய -இத்யாதிப்படியே
ராம விரஹத்தாலே கொதித்தனவே

ஓன்று இன்றியே
தன் நிர்ஹேதுக கிருபையாலே

ஓன்று இன்றியே
பேற்றுக்கு ஈடாக இருபத்தொரு சாதனம் இன்றிக்கே இருக்கச் செய்தே -என்றபடி
தன் சிறுமையும் பேற்றின் பெருமையும் பார்த்தால் தன் பக்கல் ஒரு சாதனம் இன்றிக்கே இருக்கும் இறே
இனி அங்கீகார ஹேது அயோத்யா வாஸமே இறே

அயர்வறும் அமரர்கள் -அயராதே ஸர்வவித கைங்கர்யங்களும் பண்ண வீற்று இருந்து ஆளும் அவன்
அயோத்யா வாஸம் பண்ணுகையாலே
நற்பால் அயோத்தியில்-நல்ல இடத்தை யுடைத்தான திரு அயோத்தியிலே
இத்தால் நல மிகுதியே ராம பக்தியை விளைவிக்கை
தேசோயம் ஸர்வ காம துக் -என்னக் கடவது இறே

அயோத்தியில் வாழும்
வர்த்திக்கும் என்னாதே வாழும் என்றது -அத்தேச வாஸமே வாழ்வு -என்கைக்காகவே

வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள்
நல்லோர்கள் வாழும் நளிர் அரங்கம்
ப்ராப்ய தேசத்திலே வர்த்தகம் தானே ப்ராப்யம் -ப்ராபகன் அவன் ஆகையால்
நமக்கு கர்ம சம்பந்தத்தால் குறைந்து தோற்றுகிறது -தர்மி ஐக்யத்தாலே எங்கும் ஒத்து இருக்கும் இறே

ஆகையால் சுடர் அடி தொழுது எழும்படி
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே.–
நல்ல ஸ்வ பாவத்தை யுடைத்தாம் படி செலுத்தினான்
அதாவது
இவற்றினுடைய கர்ம தாரதம் யத்தாலே வரில் இறே அவ்வோர் அவ்வோர் அளவுகளுக்கு ஈடாக இருப்பது
அவனாலே வந்தது ஆகையால் எல்லாருக்கும் ஓக்க நன்மை விளைந்தது

மயாத்வம் சமனுஞ்ஞாதோ கச்ச லோகான் அநுத்தமான் என்று இங்கு உண்டான பற்று அற்று
ஒரு தேச விசேஷத்திலே சென்று அனுபவிக்கும் அனுபவத்தைக்
கொடுக்க வல்லவன் இங்கு தன்னை ஒழிய செல்லாமை விளைக்கை பணி யுடைத்து அன்று இறே

நற்பாலுக்கு உய்த்தனன்
நலமுடையவன் -நலம் அருளின நற்பாலுக்கு உய்த்தனன் –
ஸ்வ ஸ்வரூப பர ஸ்வரூப ஸ்வராட் பவதி என்கிற இடத்தில் உற்றபடி –

ராஜா ஒருவனுக்கு ஒரு நாடு கொடுத்தால் அவனுடையவர் ஸ்வ தீனமாய் அவன் ஆணையும் ஆஜ்ஜையுமாக
அவனுடைய ஸ்வா தந்தர்யத்தையே நடக்கும்படி பண்ணிக் கொடுக்குமா போலே
சம்சாரி சேதனனுக்குத் தலையான சதுர்முகனுக்கு கையடைப்பான நாட்டுக்குள்ளே அவன் ஸ்வா தந்தர்யத்தையும் தவிர்த்து
இவற்றினுடைய கர்ம பாரதந்தர்யத்தையும் தன் குணத்தால் பதம் செய்து
தன்னைப் பெற்ற போது ஜீவிக்கும்படியாய் பெறாத போது உறாவும்படியான தன்மையை உண்டாக்கினான்

ஆனபின்பு அவன் சுடர் அடி தொழுது எழு என் மனனே
வெறும் சிலவற்றைக் கற்பரோ

—————-

வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?
போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை
பேர்த்துப் பெருந்துன்பம் வேரற நீக்கித தன் தாளின் கீழ்ச்
சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்றே.–7-5-10-சேர்த்து-சேர்த்தி -பாட பேதம் –

உயர்வற -பாட்டை -இதுவும் விவரிக்கிறது -எங்கனே என்னில்
வைகுண்டேது பரே லோகே ஸ்ரியா சார்த்தஞ் ஜகத்பதி ஆஸ்தே விஷ்ணுர் அசிந்த்யாத்மா
பக்தைர் பாகவத ஸஹ -என்கிறபடியே
ஸ்ரீ யபதியாய் -அவாப்த ஸமஸ்த காமனாய் -ஸ்ரீ வைகுண்ட நிகேதனான ஸர்வேஸ்வரன்
திரு உள்ளத்தில் நினைந்த படி

ஜகத் ஸ்ருஷ்டி ஸம்ஹாராதிகளுக்கு ப்ரஹ்மாதிகளை அமைத்தோம்
வேத ஸாஸ்த்ர ப்ரவர்த்தனங்களுக்கு மன்வாதிகளையும் வியாச பராசர பாராசார்ய
போதா யநாதிகளையும் அமைத்தோம்

மோக்ஷ சாஸ்த்ரங்களுக்கும் வேதாந்தங்களுக்கும் தாத்பர்யங்களை அறிந்து அதில் சாரமான
மந்த்ர த்ரயத்தாலே சரணாகதி வழியை நடத்துகைக்காக
ஆழ்வார்களை அவதரிப்பித்து -அவர்களுக்கு மயர்வற மதிநலம் அருளி
அவர்கள் முகேந ஜகத்தைத் திருத்திக் கைக்கொண்ட படி சொல்கிறது

இதில் ஆழ்வார்களைக் கரண பூதராக யுடைய நம்மாழ்வார் திருவாய் மொழி முகத்தால்
சரணாகதியை அருளிச் செய்தார்
திருமாலால் அருளப்பட்ட சடகோபன் மயர்வற்று ஜகத்தைத் திருத்தப் பார்த்த இடத்து தம்மை முந்துறப் பார்த்தார்
தம்மைப் பார்க்கவே தம் திரு உள்ளம் -ஒண் டொடியாள் கேள்வன் ஒருவனையே நோக்கும்
உணர்வு உண்டாய்த் தமக்கு முந்துற்ற நெஞ்சாய் இருந்தது –

அத்தைக்குறித்து மேல் மேல் என உபதேசித்து ஈஸ்வரன் தமக்கு மயர்வற மதிநலம் அருளினால் போலே
தம் திரு உள்ளத்துக்குத் தாமே கரணி யாகையாலே கரணமான நெஞ்சைக் கொண்டாடுகிறார் –

எங்கனே என்னில் -உயர்வற -வார்த்தை அறிபவர் –
பஞ்சம வேதமான மஹா பாரதத்தில் உபநிஷத் பாகமான ஸ்ரீ கீதையில் 18 அத்தியாயத்திலும்
தத்வ விவேக முதலான ஸர்வ தர்மங்களும் -பாரதத்திலும் வ்யாஸாதிகள் சொன்ன ஸகல தர்மங்களும்
ஸ்ரீ கீதாச்சார்யன் அருளிச் செய்த சரம ஸ்லோகத்தில் -மாம் -என்று தன்னைத் தொட்டுக் காட்டின
மாம் ஏகம் என்கிற ஸ நாதன தர்மமானதும்
எல்லாவற்றையும் கூட வார்த்தை என்கிறது

ப்ரயோஜனவத்தானது இறே -மாம் ஏகம் -என்று பலவத்தானது இது இறே –
இத்தை இறே உயர்வற உயர்நலம் -என்கிற பாட்டு விவரிக்கிறது

உயர்வு -ஸர்வ தர்மான் -வார்த்தை அறிபவர் -என்றது
சாதனாந்தரங்களையும் வார்த்தை என்றது –
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் ப்ரபாகாந்தரங்களிலே ஒருவருக்கு ஒருவர்
உயர்வும் தாழ்வும் ஆகையால் உயர்த்தி அற்று இருப்பார் ஆகையால் உயர்வற என்கிறது

ஸர்வ தர்மான் என்று மோக்ஷ பல சாதனங்கள் எல்லாம் கூடாது தர்மம் என்றபடி
வார்த்தை என்றது தர்ம சப்தங்களை
பரித்யஜ்ய -உயர்வற வார்த்தை அறிபவர் -தர்மவத்தான வார்த்தை அறிபவர் –
த்யாஜ்ய உபா தேயமான வார்த்தை அறிபவர் என்கிறது

பாரத கீதைகளில் தர்ம சப்தமான வார்த்தைகள் பந்த மோக்ஷங்களுக்குப் பொதுவாய் இருக்கையாலே த்யாஜ்யம்
மாம் ஏகம் என்றது மோக்ஷத்துக்கே ஹேதுவாகையாலே உபா தேயம் என்கிறது
வார்த்தை அறிபவர் -இப்படி அறிபவர்

மாம் என்றது உயர்நலம் உடையவன் என்றபடி
மாயவன் என்றதும் மாம் ஏகம் என்றபடி மாயா வயுநம் ஞானம்
மாம் என்று சர்வஞ்ஞத்வ சர்வசக்தித்வ ஸுலப்யங்கள்
உயர்நலம் உடையவன் என்றது ஆனந்தாதி குணங்கள்
ஆக இவைகளால் ஸர்வ குண ஸம் பூர்ணன் என்றபடி

ஏகம் சரண் -யவன் அவன் –மாயவற்கு ஆள் -ஏகம் சரண் என்று
ஸஹ காரி நிரபேஷமான ஸ நாதந தர்மத்தைக் காட்டுகிறது –
எவன் அவன் -ஸ நாதன தர்மமான ஷாட் குண்ய விக்ரஹம் –
ஸ்வரூப ப்ரகாசகமான திவ்ய மங்கள விக்ரஹத்தைக் காட்டுகிறது
இப்படிப்பட்ட ஸுலப்யாதி குண விசிஷ்டனை மாயவன் என்கிறது

வ்ரஜ -மயர்வற -ஆளன்றி –
வ்ரஜ -ஸ்வீகரி -மயர்வற -ஸ்வீ கார வஸ்துவை விஸ்மரியாதே -ஆளன்றி -கூழுக்கு ஆள்படாதே
தேவதாந்தரம் சாதனாந்தரம் ப்ரயோஜனாந்தரங்கள் -ஆகிய கூழுகளுக்கு ஆள் படாதே

அஹம் த்வா -மயர்வற மதிநலம் அருளினன் -மாயவற்கு ஆளன்றி ஆவரோ –
அஹந்த்வா -ஸர்வஞ்ஞனாய் –ஸர்வ சக்தனான -நான்
அஞ்ஞனாய் அசக்தனான யுன்னை -மயர்வற மதி நலம் அருளி -சாதனாந்தர புத்தியைத் தவிர்த்து –
பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே ஸநாதன தர்மத்தை அடைவித்து
மாயவற்கு ஆளன்றி ஆவரோ -என்கிறபடியே நித்ய கிங்கர ஸ்வ பாவனாக்கினான்

நானே -ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி என்று அருளினவன் -எவன் அவன் –
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருக்குமவன் –

போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை பேர்த்துப் பெருந்துன்பம் வேரற நீக்கின படி
ஸர்வ பாபேப்யோ -என்றது
மோக்ஷயிஷ்யாமி -அயராமல் அடிமை செய்கிற நித்ய முக்தரிலும் அதிசயிதமான
போக்ய வஸ்துவாக உம்மைக் கொண்ட படி
உமக்கு ஜரா மரணாதிகள் ஆகிற பாபங்கள் ஸவாசனமாகப் போச்சுது
ஆத்மாபிராப்தியாகிற மஹா துக்கம் போச்சுது
மாஸூச -பயப்படாதே
ஸர்வ நியாந்தாவான நான் யுன்னை அனுக்ரஹித்தால் பாபங்கள் நிற்க வற்றோ

யிஷ்யாமி -ணிச்சாலே
நீயும் வேண்டா நானும் வேண்டா -உன்னுடைய ராஜ குல மஹாத்ம்யத்தாலே
அவை தன்னடையே விட்டுப் போம்
மாஸூச –சங்கையை விட்டு இரு

துயர் அறு சுடர் அடி தொழுத யுனக்கு சங்கை பயன்கள் யுண்டோ –
தன் தாளின் கீழ் சேர்த்தவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்று இரு
ஹேய ப்ரத்ய நீகமான திருவடிகளிலே சேர்த்து -உன்னைப் பெற்ற என் துக்கமும் தீர்ந்து
உனக்கு ரக்ஷையே செய்கிற இத்தை எண்ணி மனஸ்ஸூ நிர்மலமாய்
பத்தாஞ்சலி புடா ஹ்ருஷ்டா என்கிறபடியே
நிர்ப்பரோ நிர்ப்பரோஸ்மி என்று இரு என் மனனே -என்கிறார் –

————————–

பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ!
பாமரு மூவுலகும் அளந்த பற்ப பாதாவோ!
தாமரைக் கண்ணாவோ!தனியேன் தனி ஆளாவோ!
தாமரைக் கையாவோ! உன்னை என்று கொல் சேர்வதுவே?–7-6-1-

பாமரு மூவுலகில்
அவன் குணங்களையும் அழகையும் பெருமையையும் அனுசந்தித்து இப்போதே காண வேணும்
என்று பெரு மிடறு செய்து கூப்பிட்டார் –
உயர்வற என்கிற பாட்டை -பாமரு மூவுலகு -விவரிக்கிறது –எங்கனே என்னில்
உயர்வற -ப்ரஹ்ம ஆனந்தம் தொடங்கி மனுஷ்ய ஆனந்தத்து அளவும் தனித்தனியே
கார்யம் காரணங்களாய் இருப்பார்கள் ஆகையால் உயர்வறும்

உயர்வற உயர் நலமுடையவன் -பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபன்
ஆனந்தாதி கல்யாண குணங்களை யுடையவனாகையாலே இக்குணங்களுக்கு அடியான காரண குணனானவன் என்கிறது –
பாமரு மூவுலகம்
பா என்று பதார்த்த வாசகமாய் பா மருவி இருந்துள்ள -பதார்த்தங்களினுடைய நெருக்கத்தை யுடைத்தான
மூ விலகும் படைத்த பற்ப நாபன் -உயர்வற உயர்நலம் யுடையவன் –

ஆக ஜகத் காரண பூதனாய் ஆனந்தாதி கல்யாண குண உபேதனான ஸர்வேஸ்வரன்
எவன் அவன் ஸ்ருதி ப்ரஸித்தமான ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்கள் யுடையவன் –

மூ வுலகும் படைத்த பற்பநாபன்
கீழும் மேலும் நடுவுமான லோகங்களை மூவுலகு என்கிறது
இவற்றை யுண்டாக்கின ஜகத் காரணமான கமலத்தை நாபியிலே யுடையவனே
யுனக்கு என் காரணத்வம் தெரிந்தபடி என் என்ன
நீ மயர்வற மதிநலம் அருளுகையாலே அறிந்தேன்
பக்தி ரூபா பன்ன ஞானமான வெளிச் செறிப்பாலே அறிந்தேன்

மதிநலம் அருளின நீ பாமரு மூவுலகும் அளந்த பற்ப பாதனான நீ தாய் போலே இத்தை யுண்டாக்கி அதுக்கு முலை கொடுத்து வளர்க்குமா போலே
உன் தேனே மலரும் திருப்பாதத்தை அவர்கள் சிரஸ்ஸிலே வைத்தது –
மஹாபலி பக்கலிலே இரந்து பெற்றுத் திரு வுலகு அளக்கிற வ்யாஜத்தாலே ஜகதாகாரதையை எனக்கு காட்டித் தந்தவனே

தேவ திர்யக் மனுஷ்ய ஜங்கம ஸ்தாவரங்களுக்கு எல்லாம்
ஓர் தனி வித்தாய் -முதலில் சிதையாமையும் மூவர் தனி முதலான நீ
மாவலி வ்யாஜத்தாலே ஜகதாகாரதயைக் காட்டி
மூவுலகும் அளந்த பற்ப பாதாவோ

படிக்கு அளவாக நிமிர்த்த பாத பங்கயமே தலைக்கு அணியாய் -என்ற
ஆசையுடைய நான் இருக்க இச்சையும் இல்லாதார் தலையிலே திருவடிகளை வைப்பதே என்ன

அது செய்தமை யுண்டு -உமக்கு அபேக்ஷிதம் ஏது என்ன

மதிநலம் அருளின தாமரைக் கண்ணாவோ
புண்டரீகாக்ஷனான நீ -அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து திரு உலகு அளந்த வியாஜத்தாலே
அந்நிய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்தர்யங்களை மாற்றி யுன் கால் கீழ் இட்டுக் கொண்டிலையோ

அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்தரானவர்களுக்கு எதிர் விழி கொடுக்கும் கண்ணை யுடையவனே
நான் -தாமரைக் கண்ணாவோ தனியேன் தனி ஆளாவோ -என்று
முறையிட வேணுமோ
ஜகத் உத்பத்தியும் வளர்க்கையும் ஜீவனம் இடுகையும் உன் பக்கலிலேயாய் இருக்க
லோக மரியாதையும் வேண்டாவோ

எனக்கும் -அவலோகன தானேன பூயோ மாம் பாலய -என்னுமா போலே –
திருக்கண்களால் குளிர நோக்காய் என்று திருக்கண்களின் அழகை அனுசந்தித்தார் –

அக்கண் அழகையே ஜீவனமாய் இருக்கும் நித்ய ஸூரிகளின் திரளிலே இருக்கக் கண்டிலர்
அத்தாலே தனியேன் என்கிறார்

தனியேன் தனியாளாவோ
ஸ்த்ரீகளினுடைய நோக்கே தாரகமாய் இருக்குமவர்களுடைய திரளுக்கும் கூட்டு இன்றிக்கே
உபய விபூதியிலும் கூடாதே என்னை மூன்றாம் விபூதியாக்கி அருளுகிறவனே –

அன்றிக்கே -உன் கிருபையையே தாரகமாய் இருக்கிற என்னை –
உன் கிருபைக்கு வேறு விஷயம் என்னை ஒழிய உண்டோ
என்னை ஆளுகிற உன் கிருபையையே அன்றோ

இப்படி ஆளுகிறவன் யாவன் ஒருவன் அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
என் தனிமை யாகிற ஹேயத்தைத் தீர்த்து பரஞ்சோதி சுடர் அடியைத் தொழுது விழுந்து இருக்கிற என்னை

தாமரைக் கையாவோ
திருவடிகளிலே அநந்ய கதியாய் -அகிஞ்சனனாய் விழுந்து இருக்கிற என்னை
உன் தாமரைக் கண்ணாலே நோக்கி தாமரைக் கையாலே எடுத்து அணைக்க வேண்டாவோ –

அக்ரூரனை அணைத்திலையோ -அவ்வளவு போரேனோ
ஸோப்யேநம் –இத்யாதி -திருக்கையில் அடையாளம் அத்தனையும் இலைச்சினப் படியே அவன் உடம்பில்
காணலாம்படி அவனை ஸ்பர்சித்து அவன் அந்த ஸ்பர்சத்தாலே ஸ்தப்தனாய் நிற்க
கையைப் பிடித்து ஏறிட்டுப் பின்னை அணைக்கையாலே இருவருக்கும் ஒன்றாய்க் கண்டது அத்தனை

கரேண மிருதுநா தேவ பாபாந் நிர்மோசயன் ஹரி என்கிறபடியே
உன்னை என்று கொல் சேர்வதுவே
பூர்ணே சதுர் தசே வர்ஷே பஞ்சம்யாம்-என்று நாள் இட்டுக் கொடுக்கலாவது தம்பி யார்க்கோ
அசாதாரண அடியாரானால் இன்ன நாள் பெறக் கடவது என்று நாள் இட்டுக் கொடுக்கலாகாதோ

சேஷ பூதனாகில் சேஷி கொடுத்த நாள் பெறக் கடவன் என்று ஆறி இருக்க மாட்டு கிறிலேன்
தனியேன் உன்னை என்று கொல் சேர்வது என்பான் என்
நாராயணனை ஒழிந்து இருப்பது ஒரு நாளும் இல்லையே
இனிச் சேருகையாவது அடியார்கள் குழாங்களை யுடன் கூடுகை இறே

உன்னை என்னா நிற்கச் சேரும்படி என் என்ன
ஒண் டொடியாள் திரு மக்களும் நீயுமே நிலா நிற்பக் கண்டு வைக்கையாலே
உன்னைத் சேர்ந்து என் மனனும் நானும் தொழுது எழ வேணும் என்கிறார் –

———–———-

ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றங் கொலோ அறியேன்
ஆழியங் கண்ண பிரான் திருக்கண்கள் கொலோ அறியேன்
சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றுங் கண்டீர்
தோழியர் காள்!அன்னைமீர்!என் செய்கேன் துயராட்டியேனே.–7-7-1-

ஏழையர் ஆவியில்
இவ்வழகு மறக்க ஒண்ணாத படி மனஸ்ஸிலே உரு வெளிப்பாடாய் நலிய நோவு பட்டபடியை
அருளிச் செய்கிறார்
இது உயர்வற என்கிற பாட்டை விவரிக்கிறது -எங்கனே என்னில்

உயர்வற உயர் நலமுடையவன் ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றங் கொலோ அறியேன்
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் தம் தாம் அபிமத சாதனங்கள் பெறுகைக்கு
பகவத் சமாஸ்ரயணம் பண்ணினாள் பகவான் கடாக்ஷிப்பது கண்ணைச் செம்பளித்து யாய்த்து கடாக்ஷிப்பது

ஆகையாலே சாதன பலங்கள் அல்ப அஸ்திரமாய் இருக்கையாலே கடாக்ஷமும் அல்பமாய்த்து
ஆகையால் உயர்வு அற்று இருக்கும்
தமக்கு ஆகிஞ்சன்யமும் கண்டு தம்மிடத்தில் தயை மிக்கு இரண்டு திருக்கண் மலர்களும் விகஸிதமாய்
தயா விஷயம் கிடைக்கையாலே கிருபா ப்ரவாஹம் பெருகப் புக்கது
நீஞ்சியும் அனுபவிக்க மாட்டாமை படுகிற பாட்டை அன்பருக்கு பரிவருக்கும் சொல்லித் தரிக்கப் பார்க்கிறார்

நலமுடையவன் ஏழையர் ஆவி உண்ணும்
லீலா விபூதியில் உள்ளாரைக் கர்ம பலங்களைக் கொண்டு நலிகிறது
அதில் ஒன்றும் இல்லாத ஏழையாய் -பகவத் சேஷமாய் -பரதந்த்ர ஏக பரையாய் இருக்கையாலே நலியா நின்றது

இதர விஷய ப்ராவண்யரை நலியலாகாதோ –
தன்னிடத்தில் ப்ரேமத்தால் அபலையான என்னாவியை யுண்ணா நின்றது
ம்ருத்யு போலே பிராணனை வாங்கா நின்றது

பிரிந்து ஆற்றாமையை விளைத்தவனுக்கு அன்றியே -இது ஆகாது -என்று ஹிதம் சொல்லி மீட்கப் பார்க்கிற
தாய்மார் தோழிமாருக்கும் இன்றிக்கே அபலைகளையே முடிப்பன இரண்டு கூற்றமோ

தன் கண் அழகு தான் அறிந்திலனே -கண்ணாடிப் புறத்திலும் கண்டு அறியானோ -கண்டானாகில் வாரானோ –
ராம சரம் போலே ஒப்பனை அழியாதே முடிக்கிற படி

அறியேன்
அறியேன் என்பான் என் -அறிந்தது அன்றோ சொல்கிறாய் என்ன
உயர் நலம் என்று ஆனந்தாதிகளும் சவுந்தர்யாதிகளும் யுடைய புண்டரீகாக்ஷன் நிர்ஹேதுகமாக
மயர்வற மதிநலம் அருளினன்

எவன் அவன் -ஆழியங் கண்ண பிரான் திருக்கண்கள் கொலோ அறியேன்
மயர்வற -மாதரார் கயற்கண் என்னும் வலையை அறுத்து
காரத் தண் கமலக் கண் என்றும் நெடும் கயிறு பிடித்து என்னை ஈர்த்துக் கொண்டு விளையாடுகிற ஈசன்
பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரிணாம் -பரதந்த்ரையை அழியச் செய்கைக்குச் சொல்ல வேணுமோ

ஆழி யம் கண் -அம்ருதக்கடல் என் மேல் பொங்கி அலை எறிகிற படி
பிரான் -மதிநலமான பக்தி ரூபா பன்ன ஞானத்தை -அந்த அம்ருத சாகரத்தை அலை மேல் யலையாய்
வந்து என் நெஞ்சிலே தேக்குகிற மஹா உபகாரகன்
அம்ருதமானது ஜீவிக்கப் பண்ணுமோ முடிக்குமோ

எவன் அறியேன் -இதுக்கு முன்பு பிரிந்து அறியாமையாலே திருக்கண்கள் பாதகம் என்று வ்யுத்பத்தி இல்லை –
உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணன் என்று இரே கேட்டு இருப்பது
இது தான் எனக்கு கூற்றம் ஆக வேணுமோ
லோகத்துக்குத் தாரகமான கண் பாதகமாவதே

ஆனால் தப்பினால் என்ன
சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றுங் கண்டீர்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் எவன் அவன்
த்ரிபாத் விபூதியாக சூழ்ந்து இருந்து -ஜிதந்தே புண்டரீகாஷ என்று தோற்பிக்கும் கண்

அயர்வறும் அமரர்கள் -அக்கண் அழகுக்குத் தோற்று கடாக்ஷ அம்ருத பானத்தாலே நித்யரானவர்கள்
அவசமாய் நம இத்யேவ வாதிந -என்னும்படி தோற்பித்தவன்

சூழவும் இத்யாதி
மூல பலத்தின் அன்று பார்த்த பார்த்த இடம் எல்லாம் பெருமாளே யானால் போலே ராமசரத்துக்கு ராக்ஷசர்
தப்பினாலாயத்து இக்கண் அழகுக்கு அபலைகளாய் இருப்பார்க்குத் தப்பலாவது

ஸர்ப்ப யாகம் போலே அபலைகள் அடைய இக்கண் அழகுக்கு துவக்குண்டு திருவடிகளிலே விழும்படியாய் இருந்தது
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே என்னும்படியாய் இருக்கை

தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றும் கண்டீர்
ப்ரத்யக்ஷத்திலும் அத்தலையால் வரவு ஆனால் போலே உரு வெளிப்பாட்டிலும்
அத்தலையாலே வந்து தோன்றவாய்த்து தான் அறிகிறது –

துயர் அறு சுடர் அடி வந்து தோன்றும் கண்டீர்
தோழியர் காள்!அன்னைமீர்!
உங்களுக்கு அது தோற்றுகிறது இல்லையோ
சிலருக்குச் சொல்லி சிலருக்கு மறைக்கும் படி யன்று இவளுக்குப் பிறந்த தசா விசேஷம்

என் செய்கேன் துயராட்டியேனே.–
இத்தைத் தப்பப் பார்ப்பதோ
அனுபவிக்கப் பார்ப்பதோ
எத்தைச் செய்வேன் துயராட்டியேன்

ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபிபேத குதச்சன -என்று இருக்க வேண்டி இருக்க -அங்கன் அன்றிக்கே
அவசியம் அநுபோக்தவ்யம் -என்கிறபடியே
பழைய விஸ்லேஷமே ஸித்திக்கும் படியாயிற்று என்கிறாள் –

——–——–

மாயா! வாமனனே!மது சூதா! நீ அருளாய்
தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய்க் காலாய்த்
தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்
நீயாய் நீ நின்றவாறு இவை என்ன நியாயங்களே!–7-8-1-

மாயா வாமனனிலே
இப்படி உருவெளிப்பாட்டால் நோவு பட்ட இடத்தில் முடியாதபடியாகப் பண்ணின வைசித்ரியைக் கண்டு
அவனுடைய விசித்திர ஜகதாகாரதையை அருளிச் செய்கிறார் –

————

பாசங்கள் நீக்கி என்னை உனக்கே அறக் கொண்டிட்டு நீ
வாச மலர்த் தண் துழாய் முடி மாயவனே!அருளாய்
காயமும் சீவனுமாய்க் கழிவாய்ப் பிறப்பாய் பின்னும் நீ
மாயங்கள் செய்து வைத்தி;இவை என்ன மயக்குகளே.–7-8-5-

உயர்வற என்கிற பாட்டை இது விவரிக்கிறது -எங்கனே என்னில்
உயர்வற -பாசங்கள் நீக்கி –
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் நாநா விதமான கர்ம பாசங்களாலே
பந்தகங்களான அவர்களுடைய உயர்வும் தாழ்வுமாய் வருகிறவர்கள் புஜித்து அறும்
பாசங்கள் நீக்கி
பல செய்வினை வன் கயிற்றால் சூழ்த்துக் கொண்ட அவித்யாதிகளை நீக்கி

உயர்வற உயர்நலம் உடையவன் எவன் அவன் -உன் நலமான ஆனந்தாதி குணங்களாலே
அளவிட ஒண்ணாத உன் நலம் பாராதே
ஹேயமான என்னை யுனக்கே அறக்கொண்டிட்டு மயர்வற மதிநலம் அருளினவன் எவன் அவன்

எத்தைக்காட்டி என்னில் -அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் ஒருவன் அவன் –
வாச மலர்த் தண் துழாய் முடியைக் காட்டி வசீகரித்தான்

பாசங்கள் நீக்கி -மயர்வற மதிநலம் அருளி என்னை யுனக்கே அறக்கொண்டிட்ட மாயவன்
ஆதி ராஜஸ்ய ஸூசகமான மாலையையும் முடியையும் காட்டி யாய்த்து புறம்பு உண்டான பற்று அறுத்தது

துயர் அறு -தூக்கமே வடிவான -காயமும் ஜீவனுமாய் ஜென்ம ஜரா மரணாதிகள் ஆகிற துயர் அறுத்து

கழிவாய்ப் பிறப்பாய் -போவது வருவதாகிற ஜென்மத்தை சவாசனமாகப் போக்கி –

பின்னும் நீ உன் சுடர் அடி தொழது எழப் பண்ணி பின்னும் மாயங்கள் செய்து
ஹேயமான என் மனஸ்ஸை மயர்வற மதி நலம் அருளி சுடர் அடி தொழுது எழப் பண்ணி
இச் சரீரத்தில் தானே

மாயங்கள் செய்து வைத்தி இவை என்ன மயக்குகளே
நீ அங்கீ கரித்தாயோ என்று இருந்தேன்
இங்கே வைக்கையாலே கைவிடப் பார்த்தாயா என்று இரா நின்றேன்
என் பிரமம் தீர ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேணும்

உயர் நலம் யுடையனான நீ -மதி நலம் அருளி -பாசங்கள் நீக்கி -என்னை யுனக்கே அறக்கொண்டிட்டு
அயர்வறும் அமரர்கள் முன்பாக ததீய சேஷத்வ பர்யந்தமாக்கி அவர்களை முன்னிட்டுச்
சுடர் அடி தொழுது எழப் பண்ணி சரீரத்தில் இட்டு வைத்தாலாமோ

சுடர் அடி தொழுதார்களை துயர் இருக்கிறதோ -துயரில் மூட்டுவதோ –
மாயவன் அருளாய்
இந்த ஆச்சர்யத்தை ஆச்சர்ய யுக்தனான நீயே அருளிச் செய்ய வேணும் என்கிறார் –

—————

என்றைக்கும் என்னை உய்யக் கொண்டு போகிய
அன்றைக்கு அன்று என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை
இன் தமிழ் பாடிய ஈசனை ஆதியாய்
நின்ற என் சோதியை என் சொல்லி நிற்பனோ?–7-9-1-

என்றைக்கும் என்னை -யில்
உன்னால் அல்லது செல்லாத என்னை இஸ் ஸம்ஸாரத்திலே வைத்த போதே
இதுக்குப் பிரயோஜனம் என் என்று கேழ்க்க
எனக்கும் என்னுடையாருக்கும் அனுபவிக்கும் படிக்கு ஈடாக உம்மை வைத்துக் கொண்டு
திருவாய் மொழி பாடுவிக்க வைத்தோம் என்று சொல்ல
தனக்கு சில கவி பாடுவிக்க வேண்டினால் அதுக்கு ஈடான ஞான சக்த்யாதிகளை யுடையரான
முதல் ஆழ்வார்களைக் கொண்டு பாடுவியாதே
என்னைக் கொண்டு பாடுவிப்பதாகச் சொன்ன வார்த்தையின் நீர்மை இருந்தபடியே என்று
தம் பக்கல் அவன் பண்ணி அருளும் உபகாரத்துக்குப் பிரதி உபகாரம் காணாமல் தடுமாறினார்
ஸ்ரீ யபதியான ஸர்வேஸ்வரன் ஆர்த்த ரக்ஷணம் பண்ணி ரஷித்த படி இது

உயர்வற என்கிற பாட்டை இது விவரிக்கிறது -எங்கனே என்னில்
உயர்வற -என்றைக்கும் என்னை –
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்தளவும் என்றைக்கும் என்று
அநந்தமான காலம் தோறும் ஸர்வேஸ்வரன்
ஆள் பார்த்து உழி தருவான் -என்கிறபடியே ஆள் தேடிக் கிடையாமல் சிந்திக்கிற படி –
ப்ரஹ்மாதிகள் ஸ்ருஷ்ட்யாதி கார்யங்களிலே அமைந்தார்கள்
வ்யாஸாதிகள் புராணாதிகளிலே அமைந்தார்கள்
பத்தர் கர்ம அனுகுணமாக ஸ்வர்க்க நரகாதிகளுக்கு அமைந்தார்கள்
முமுஸுக்களில் சிலர் கைவல்ய மோக்ஷத்துக்கு அமைத்தார்கள் –
சிலர் பகவத் அனுபவத்துக்கு அமைந்தார்கள்
நித்யரும் முக்தரும் பகவத் ஆனந்தாவஹராய் ஸாம கானத்திலே அமைத்தார்கள்

இனித் திருவாய் மொழி முதலான செஞ்சொற் கவி பாடுவிக்கைக்கு ஆழ்வாரைத் தேடி எதிர் சூழல் புக்கு
எனத்தோர் பிறப்பும் எனக்கே அருள் செய்ய விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் திரு விக்ரமனையே –என்கிறபடியே
தேடிப் பார்த்த இடத்தில் -அசன்னேவ-என்று அஸத் கல்பனான என்னை -சந்தமேனம் ததோ விது -என்னும்படி
மயர்வற மதிநலம் அருளிக் கவி பாடுவித்துக் கொண்டான் என்கிறார்

உயர்வற என்றைக்கும் என்னை
உயர்வற கீழ்ச் சொன்னவர்கள் பதங்களிலே புகாதபடி ப்ருதக்காக்கி
உயர்நலம் யுடையவன் -என்றைக்கும் என்னை உய்யக் கொண்டு -எவன் அதிகாரி யானவன் -அவன் உய்யக் கொண்டவன் –
ஆ முதல்வன் இவன் என்று தேற்றி நான் உய்யும் படியும் தான் உளனாம்படி யுமாகத் தேற்றி
நான் உய்யும்படியும் தான் உளனாம்படியுமாகத் தேற்றித் திரு உள்ளம் பற்றி

மயர்வற போகிய அன்றைக்கன்று -காலம் தோறும் காலம் தோறும் மயர்வற -அஞ்ஞான அசக்திகள் அற
மதிநலம் அருளினன் எவன் அவன் என்னைத் தன்னாக்கி தன்னைப் போலே ஞான சக்திகள் யுண்டாம்படி பண்ணி

எவன் -மயர்வற்றவன் -அவன் மயர்வு அறுத்தவன்
என்னால் -தனக்குத் தக்கக் கவி பாடச் சக்தனான என்னால்
தன்னை -என்னை ஸ்வரூப ஞானத்திலே நிறுத்தி
தன்னை -அயர்வறும் அமரர்கள் அதிபதியான தன்னை -எவன் கவி பாடினவன் -அவன் -இன் தமிழ் பாடிய ஈசன் –
அயராமல் ஸாம கானம் பண்ணுமவர்கள் அபர்யாப்த்த அம்ருத தாஸிகள் போல் அன்றிக்கே அதிலும் இனிதான
பக்தாம்ருதம் விஸ்வ ஜன அநு மோதனம் ஸர்வார்த்தம் ஸ்ரீ சடகோபன் வாங்மயம்
ஸஹஸ்ர ஸாக உபநிஷத் ஸமா கமம் நமாம் யஹம் திராவிட வேத சாஹர-மான புகழ்
வண் தீம் கவி பாடின ஸ்வாமியை

எவன் -பாட்டு கற்கிறவர் -அவன் -ஆதியாய் நின்ற என் சோதியைத் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே

என் சொல்லி நிற்பனோ
ப்ரஹ்மாதிகள் முதலானோர் கவிகள் அல்ல
தான் பாடின கீதை அல்ல
என்னைக் கொண்டு பாடுவித்த கவி உபய விபூதியிலும் அடங்காததாய் இருந்தது
என் சொல்லி நிற்பன்
இதுக்கு ஒரு உபகார ஸ்ம்ருதியும் காண்கிறிலேன் -என்கிறார் –

—-

வைகுந்த நாதன் என் வல்வினை மாய்ந்து அறச்
செய்குந்தன் தன்னை என்னாக்கி என்னால் தன்னை
வைகுந்தனாகப் புகழ் வண் தீங்கவி
செய்குந்தன் தன்னை எந்நாள் சிந்தித்து ஆர்வனோ?–7-9-7-

உயர்வற என்கிற பாட்டை இதுவும் விவரிக்கிறது -எங்கனே என்னில்
உயர்வற உயர்நலம் யுடையவன் எவன் அவன் -வைகுண்ட நாதன் என்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் ப்ரஹ்மாதிகள் முதலானோரைக் கொண்டு
வேதம் முதலானவற்றைப் பாடுவித்துக் கொண்ட இடத்தில்
இப்படி வாய்க்காதே ஐஹிக ஆமுஷ்மி காதிகளிலே மண்டி விழுந்தார்கள் ஆகையால் உயர்வற என்றது

உயர்நலம் உடையவன் எவன் அவன் -ஆனந்தாதி கல்யாண குண பரிபூர்ணன ஸர்வேஸ்வரன்
பரம உதாரமான இனிய கவியை என்னைக் கொண்டு பாடுவித்துக் கொண்ட
மஹா உபகாரத்துக்கு இவனைக் கால தத்வம் உள்ளதனையும் அனுபவியா நின்றாலும் ஆர்வேனோ என்கிறார்

உயர்வற உயர்நலம் யுடையவன் எவன் அவன் வைகுண்ட நாதன் எனக்குப் பரிகரித்தவன்
என்னோடு இணைய நின்றான் ஒருவனாய்த் தான் ஆறி இருக்கிறேனோ
அப்ராப்ய மனஸா ஸஹ -என்று வேதங்களாலும் அளவிட ஒண்ணாத பராத்பரனானவன் –
வைகுண்ட நாதன்
குந்தம் என்று தள்ளுகையாய் -வைகுந்தா என்று தள்ளா வான பதத்துக்கு நாதன் என்றபடி –
ஆக இத்தால் ஆனந்த ஸ்வரூபன் என்றபடி

இப்படி உபய விபூதி நாதனானவன் -வைகுண்ட நாதன் என் -என்று என்னைத் தனக்கு நாதனாக எண்ணினான்
ஒரு ஸம்ஸாரி சேதனனை மேல் விழுந்து உகவா நின்றால் நான் எங்கனே ஆறி இருப்பேன்

இப்படி அவன் உகக்கக் கூடுமோ என்னில்
லோக நாத புரா பூத்வா ஸூ க்ரீவம் நாதம் இச்சதி -என்ற அதுக்கும் அவ்வருகாய் இருந்தது இதுவும்
அவரை நாதனாக உடையாராகைக்கு யோக்யதை ஸம்பாதிக்கிற படியாய்த்து முன்பு லோக நாதரானது –
பெறுவார் பெறாது ஒழிவார் -இச்சியா நின்றார் -கிடையாதா அதில் தான் இறே இச்சை தான் செல்வது
சரா மோவா நரேந்திரஸ்ய ப்ரஸாதம் அபி காங்ஷதே -என்றால் போலே யாய்த்து
அவன் என்னை வேண்டி வந்து நின்றபடி –

வைகுண்ட நாதன் என் –
என்னை ஸ்வ தந்திரனாக்கித் தான் ஆஸ்ரித பரதந்த்ரனாய் இரா நின்றான் -இதுக்கு ஹேது
என் ஆகிஞ்சன்யமும் அநந்ய கதித்வமும் கண்டு இவனே வைகுண்ட நாதன் என் –
நமக்கும் நம்முடையாருக்கும் நாதன் என்று திரு உள்ளம் பற்றி இரா நின்றான்
வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் -என்று சமர்ப்பியா நின்றான்
அடியார் நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நுன்னிலை இடம் -என்று கொண்டாட நின்றான்
என்னை அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசா க்கித் தான் அவர் இளவரசு வைகுந்தக் குட்டனாய் இருந்தான்

மஹா ராஜர் தாம் நாதனான வாசி தோற்ற முதலைகளும் தாமுமாகப் பிராட்டியைத் தேடிக்கொண்டு –
ராவண வதம் பண்ணி மீண்டு எழுந்து அருளித் திரு அயோத்யையிலே திரு அபிஷேகம் பண்ணின
பின்பு இறே க்ருத்யக்ருத்ரானார் இறே

அப்படியே இவரும் அறிய ஒண்ணாத படி ஸம்ஸார காந்தராந்தத்திலே துர்க த்ரயமான மிஸ்ர ஸத்வம் ஆகிற
லங்கையில் புக்கு அஹங்காராதிகள் ஆகிற ராஷஸிகளால் நோவு பட
ஆச்சார்யனாகிற திருவடி திருமந்திரம் ஆகிற திருவாழி மோதிரம் கொடுத்துத் தெளிவிக்கத் தெளிந்து
தச இந்த்ரியாநநம் கோரம் எம்ங்கிற ராவணனாகிற இந்திரிய ஜயத்தைப் பண்ணி சரீரமாகிய லங்கையில் நின்றும்
ப்ரஹ்ம ரந்தரம் என்கிற தலைவாசல் திறந்து கொண்டு புறப்பட்டு அயோத்தியை அபராஜிதை என்று சொல்லப்படும்
ஏர்கொள் வைகுந்தம் ஆகிற காற்றிலே ப்ரைவசிப்பித்து வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் என்று
வீடு கொடுக்கும் படி அருளினான் ஆகையால் வைகுண்ட நாதன் என் -என்று இதுவும் ஒரு த்ருஷ்டாந்தம்

இப்படி நாதனாகப் பற்றினவன் -வல்வினை மாய்ந்தற –
வினை பின்பு செய்தது என் என்ன -வினை போக்யமாம் படி தான் மயர்வற மதிநலம் அருளினவன்
எவன் அவன் -வல்வினை மாய்ந்தற -வல்வினை -ஸர்வ சக்தனானாலும் போக்க ஒண்ணாத வழிய பாபங்கள்
மாய்ந்தற -போன இடம் தெரியாமல் போக –
எவன் அவன் பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே தன் வசமாக என்னை ஆக்கிக் கொண்டு
செய்குந்தன்
என் விரோதியைப் போக்கின சுத்தி யோகத்தை யுடையவன் யாவன் ஒருவன் அவன் அயர்வறும்
அமரர்கள் அதிபதி

எவன் அவன் -ஹேய ப்ரதிபடரான நித்யருக்கு நாதனானவன் என்னை நாதனாக்கி
நின் அடியாருக்கு என் செய்வன் என்றே இருத்தி -நின் அடியாருக்குத் தீர்த்த அசுரருக்குத் தீமைகள் செய்குந்தா -என்னக் கடவது இறே
ஆஸ்ரிதருடைய பாபங்களை அநாஸ்ரிதர் பக்கல் விடும்படியான சுத்தியை யுடையவன் என்கை
குந்தன் என்று திருநாமம் ஆகவுமாம் -முகுந்த குந்தர குந்த -என்றது

அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்னைத் தன்னாக்கி
வல்வினையே ஸ்வரூபமான என்னை -தன் சுத்தியை எனக்கு உண்டாக்கி ஞான சக்த்யாதிகளால்
தன்னோடே ஒக்கப் பண்ணி-என்னால் தன்னை இன் தமிழ் பாடிய ஈசனை

அஞ்ஞான அசக்திகள் இல்லாத நித்ய ஸூரி ஸேவ்யனானவன் வேதங்களும்
அப்ராப்ய மனஸா ஸஹ -என்று மீண்ட விஷயத்தை
என்னால் தன்னை இன் தமிழ் பாடிய ஈசனை -என்று வைகுந்தனானப் புகழ வண் தீம் கவி
நான் புகழ்ந்ததால் தான் ஸ்ரீ வைகுண்ட நாதனாய் ஸர்வ ஸ்வாமியாய் பரஞ்சோதி யாகா நின்றான்

பிதா புத்திரனுக்கு நீர் வார்த்துப் பசுவைக் கொடுத்துத் திரும்பவும் வாங்குமா போலே இதுவும் நித்ய விபூதி இறே
இவர் புகழ்ந்தவாறே நித்ய விபூதி யாயத்ததாக நினைத்து இருந்தான்

உயர்வற உயர்நலம் தொடங்கி இவ்வளவும் வர வரப் புகர் ஏறி வாரா நின்றது இறே
எங்கனே என்னில்
ஆத்ம வஸ்துவும் நித்யமாய் இருக்கச் செய்தே -அசன்னேவ-என்றும்
சந்தமேனம்-என்றும் சொல்லுகிறவோ பாதியாய்த்து இதுவும்
இவன் உளனாகத் தானும் உளனான படி

செய் குந்தம் தன்னை எந்நாள் சிந்தித்து ஆர்வேனோ
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே -என்று இவரைக் கொண்டு கவி பாடின பின்பு தான் துயர் அற்ற படி
இவர் துயர் அறத் துயர் அற்ற படி -சரீரத்துக்கு வந்த துயர் சரிரீ தானே அனுபவிப்பான்
வ்யஸநேஷு மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித போலே இறே படுவது
தத் வியதிரிக்த ப்ரேமம் இறே நோயாவது -அது தீருகை இறே நோய் தீருகை அப்போது இறே இவனும் துயர் அற்றது

செய்குந்தன் தன்னை எந்நாள் சிந்தித்து ஆர்வேனோ
அவன் பண்ணின உபகாரம் கனத்து இரா நின்றது
உபகார ஸ்ம்ருதிற்கு காலம் போருகிறது இல்லை
நான் என் செய்வேன் என்கிறார்

சரீர விஸ்லேஷத்தில் வாய் புகும் நீராகையாலே அனுசந்திக்க அவசரம் இல்லை
இங்கு இருந்த நாள் காலம் போருகிறது இல்லை
பண்ணின உபகாரமோ கனத்து இரா நின்றது
என் மனனே தொழுது எழு என்கிறார்

கரண பிரதானம் தொடங்கி இன்கவி சொல்ல வல்லேனாம் படி பண்ணின உபகாரத்துக்கு ப்ரத் யுபகாரம் உண்டோ
உன் ஸ்வரூப அனுரூபமான அஞ்சலியைப் பண்ணு என்கிறார் –

———-——–

இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும் இவ் வேழுலகை
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்
அன்புற் றமர்ந் துறைகின்ற அணி பொழில் சூழ் திரு வாறன்விளை
அன்புற் றமர்ந்து வலஞ்செய்து கைதொழும் நாள்களு மாகுங் கொலோ?–7-10-1-

இன்பம் பயக்க -லில்
இப்படி மஹா உபகாரகனான ஸர்வேஸ்வரனை திருவாறன் விளையிலே
பெரிய பிராட்டியாரும் தானுமாக எழுந்து அருளி இருக்கிற சேர்த்தியிலே கண்டு
அநுகூல வ்ருத்திகளைப் பண்ண என்று மநோ ரதித்தார்

உயர்வற என்கிற பாட்டை இது விவரிக்கிறது -எங்கனே என்னில்
எம்பெருமான் ஆழ்வாருக்கு மயர்வற மதிநலம் அருளித் திருவாய் மொழி ஓதுவித்து
அந்த அத்புதமான கானத்தை சர்வரும் கூடின ஸ்தலத்திலே இருந்து கேழ்க்கத் திரு உள்ளமாய்த்
தானும் பிராட்டியாருமாக இருந்து நித்யரும் முக்தரும் புத்தரும் முமுஷுக்களும் கூடத்
திருவாறன் விளையிலே எழுந்து அருளி இருந்து ஆழ்வாரை அருளப்பாடிட்டு
பாடச் சொல்லிக் கேட்டு ஆனந்திக்கிறபடி சொல்கிறது

உயர்வற உயர் நலம் இன்பம் பயக்க
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் அம்ருத சாஹரத்தில் திவலை போலே
இவர்கள் ஆனந்தம் தோன்றாது ஆய்த்து
ஸூர்ய ப்ரகாஸத்தில் மின்மினி போலே ப்ரகாஸம் அறும் படி பர ப்ரஹ்ம ஆனந்தம் நிரவதிக தேஜோ ரூபமாய் இருக்கும்
ஆகையால் அவர்களும் அவர்களை சொல்லும் கானமும் உயர்வு அற்று இருக்கும்

உயர் நலம் என்றும் -இன்பம் பயக்க எழில் மலர் மாதரும் என்றும் –
உயர் நலம் -உகார வாஸ்யையான பிராட்டியுடைய ஆனந்தமும் நலமுடையவன் என்று எம்பெருமானுடைய
ஆனந்தமுமாக இவருடைய ஆனந்தமும் ஸ்ருதி ப்ரஸித்தம் இறே

இப்படி ஆனந்தாதி குண பூர்த்தியை யுடையவன் யாவன் ஒருவன்
அவன் இன்பம் பயக்க எழில் மலர் மாதரும் தானும் இவ் வேழ் உலகை இன்பம் பயக்க இனிதுடன்
வீற்று இருந்த ஆள்கின்ற எங்கள் பிரான்

ஆழ்வாருக்கு மயர்வற மதிநலம் அருளித் திருவாய் மொழி ஓதுவித்து இருவரும் கூட இருந்து
இவரைப் பாடச் சொல்லிக் கேட்டு ஆனந்திக்கிற ஆனந்தம் திராவிட வேத சக்கரத்தின் திவலை
என்னும்படி கான அம்ருத சாகரம் கொந்தளிக்கிற படி –

எவன் மூ வுலகு இன்பம் பயக்கப் பாடுகிறவர்
அவன் கானம் கேட்க்கிறவர்
எவன் அவன் -வக்தாவான ஆழ்வாரும் ஸ்ரோதாவான ஸ்ரீ யபதியும் மயர்வற மதிநலம் பெற்று
ஏழு உலகும் இன்பம் பயக்க -திருவாய் மொழி கேட்டார்கள் -எல்லாம் இன்பம் பயக்க இருந்தார்கள் –

இனிதுடன் வீற்று இருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்
பக்தாம்ருதம் விஸ்வ ஜன அனு மோதனமான இன்பக்கவி பாடுவித்தோன்
இந்திரையோடு மதிநலமான பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே பகவத் கிருபா அம்ருத வ்ருஷ்டி மஹா பிரளயம்
உடைந்து பெருகுமா போலே ஸஹஸ்ர முகமாய் கங்காதி தரங்கங்கள் போலே
சரணாகதியும் ஆன்ற தமிழ் மறை ஆயிரமுமாய் ப்ரவஹியா நின்றது -அது பொங்கிப் பாட்டாய்த் தலைக்கட்டிற்று

இப்படி அருளினவன் யாவன் ஒருவன் அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி -நிர்ஹேதுகமாக அருளின பாட்டுக் கேட்டு
அன்புற்று அமர்ந்து உறைகின்ற அணி பொழில் சூழ் திருவாறன் விளையிலே
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே -என்னும் படி இனிதான படி –
திருவாறன் விளையும் தளிரும் முறியுமாகக் கொந்தளித்தது –
அபி வ்ருஷா பரிம் லாநா -இத்யாதிப்படியே யாய்த்து

எவன் -அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினவர்
அவன் -என்னால் தன்னைப் பாடிய ஈசன்
என்னோடே கூடத் தென்னா தெனா வென்று -ஆளத்தி வைக்கிறவன் யாவன் ஒருவன் -அவன் எங்கள் பிரான் –
திருவாறன் விளையிலே ஆழ்வார் திருவாய் மொழி பாடக் கேழ்க்கலாம் தேசம் என்று
அன்புற்று அமரர் வலம் செய்து –
அந்நித்ய விபூதியை மறந்து இங்கே அன்புற்று அமர்ந்து உறைகின்றான்
நித்யர் முக்தர்கள் சாமகானம் பண்ணத் தான் அவாக்ய அநாதர-என்று இருக்கிற ஸ்வாமி யானவன்
கேட்டு ஆரார் -என்கிறபடியே இனிது ஆராமையாய் -தானும் கூட ப்ரீதி பிரேரிதனாய்க் கொண்டு பாடத் தொடங்கினான்
அந்தாமத்து அன்பு செய்து -இத்யாதிப்படியே யுகந்து இரா நின்றான்

நீயும் அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
அன்புற்று அமர்ந்து வலம் செய்து கை தொழும் நாள்களும் ஆகும் கொலோ
திருவடிகளுக்குத் துயர் அறுகையாவது -நித்ய விபூதியில் நித்யர் முக்தர் பாடுகிற சாமகானம்
நித்ய விபூதி அளவிலே யாகையாலே ப்ரீதி பிறந்தது இல்லை –
ஆழ்வார் இன்பம் பயக்க எழில் மலர் மாதரும் தானும் இவ் வேழ் வுலகை இன்பம் பயக்கப் பாடின
திருவாய் மொழி கேட்டு ஆரார் வானவர்கள் -என்று உபய விபூதியும் தளிரும் முறியுமாகக் கொந்தளித்த படியும்
இந்த லீலா விபூதியில் உள்ளாரில் கடையரான தம்மைக் கொண்டு திருவாய் மொழி பாடுவித்து
அது பாடக் கேட்ட படியால் துயர் அற்று இன்பம் பயக்கப் பார்த்து இருந்தான் –

அப்போது ஆழ்வார் ஞான முத்திரையும் கையும் கான உச்சாரணமான திருப்பவளப் பூரிப்பும்
அர்த்த ஸ்ம்ருதியாலே பிறந்த முக விகாஸமும் ஆனந்த அஸ்ரூ பனிக்கிற திரு நயனங்களும்
கான ஆனந்த மக்நரான புளகித காத்ரமும் கண்டு உபய விபூதியும் ஈஸ்வரனும் பிராட்டியும் ஆனந்தாவஹர் ஆனார்கள்

அன்புற்று அமர்ந்து உறைகின்ற -நூராண்டு -பதினோராயிரம் ஆண்டு என்கிற அவதி அன்றிக்கே
நித்ய விபூதியும் அநித்யம் என்னும்படி அமைந்து உறைகின்ற
திருவாறன் விளை தீர்த்தனுக்கு உற்ற பின் துயர் அறு சுடர் அடி தொழுது
வலம் செய்து வர்த்திக்கப் பாராய் என்கிறார் –

———-——–——–————————————

ஏழாவது பத்து விவரணம் முற்றிற்று

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை திருவடிகளே சரணமஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய்மொழி வாசகமாலை — ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை–ஆறாவது பத்து விவரணம்- –

February 9, 2022

சந்தியும் சந்திப்பதமும் அவை தம்மிலே தழைக்கும்
பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலு கிற்பீர்
வந்தியும் வந்திப்பவரை வணங்கும் வகை அறிவீர்
சிந்தியும் தென் குருகூர் தொழுது ஆட் செய்யும் தேவரையே

நாத முனிக்கு அன்று நாலாயிரமும் உணர்த்தி
போதம் அருள் குருகூர் வித்தகனார் -கோதில்
திருவாய் மொழி வாசக மாலைத் தேனைத்
தரவே எனக்கு அருள் செய்தார் –

———-

வைகல் பூங்கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்!
செய் கொள் செந்நெல் உயர் திரு வண்வண்டூ ருறையும்
கை கொள் சக்கரத் தென் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே.–6-1-1-

வைகல் பூங்கழிவாயில்
இப்படிச் சரண் புக்க இடத்திலும் வந்து முகம் காட்டாமையாலே
திரு வண் வண்டூரில் ஸம்ருத்தியிலே அகப்பட்டு நம்மை மறந்தான் அத்தனை –
ஆர்த்த ரக்ஷணத்திலே தீஷித்து இருக்குமவன்
ஆகையால் நம் ஆர்த்தியை அறிவிக்க வரும்
ஆன பின்பு அங்கே என் தசையை அறிவியுங்கோள் என்று தூது விட்டார் –

———-

காதல் மென் பெடையோடு உடன் மேயுங் கரு நாராய்!
வேத வேள்வி ஒலி முழங்கும் தண் திரு வண் வண்டூர்
நாதன் ஞாலமெல்லாம் உண்ட நம் பெருமானைக் கண்டு
பாதம் கை தொழுது பணியீர் அடியேன் திறமே.–6-1-2-

உயர்வற என்கிற பாட்டை -காதல் மென் பெடையோடு -என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
உயர்வற -மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும்
தம்பதிகளுக்குள் காதல்கள் ஏற்றமும் குறைச்சலுமாய்த்து இருப்பது
உயர்நாகம் யுடையவன் அவன் இடத்தில் காமம் அளவிறந்து இருக்கும் இறே

அப்படியே
காதல் மென் பெடையோடு உடன் மேயுங் கரு நாராய்!
ஆர்த்த ரக்ஷணத்திலே தீஷித்தவனுக்கு என் ஆர்த்தியை அறிவிக்க வரும்
அருவி என்று ஒரு நாரையை இரக்கிறாள்

காதல் மென் பெடையோடு
முன்பு போக விட்டவர்கள் கொண்டு வருகிறார்கள் என்று ஆறி இருக்கலாம் விஷயம் அன்றே
அங்கனே யாம் அன்று முன்பு பண்ணின ப்ரபத்தியே அமையும்

உடன் மேயும்
ஊர்த்வம் மாஸான் ந ஜீவிஷ்யே -என்றிலன்
ந ஜீவேயம் க்ஷணம் அபி -என்பாரும் உண்டாகாதே
ஸர்வஞ்ஞரோடு கலவாது ஒழி யும் படியான பாக்யத்தைப் பண்ணுவதே நீங்கள்

பின்பு கூடுகை தவிராதாகில் பிரிந்தால் என் செய்ய வேணும் என்று இருப்பார்கள் இறே அவர்கள்
அத்தனை காரியப்பாடு இல்லை இறே இவற்றுக்கு

மென்பெடையோடு
கலக்கவும் பொறாத மார்த்வத்தை யுடைத்தாய் இருக்கை

உடன் மேயும் கரும் நாராய்
பிரிவில் தரியாதாய்க் கூடாது திரியும் அத்தனை
உயர்நலம் யுடையவன் எவன் அவன் –
இதம் மேத்யம் இதம் ஸ்வாது-இது சுத்தம் இது இனிமை – என்கிறபடியே காணும் இவை திரிகிறது

பேடையின் நினைவு அறிந்து புஜிப்பிக்கும் சேவலும் உண்டாகாதே
தன் ஆர்த்த த்வனி செவிப்பட்டால் அவற்றுக்கு மிடற்றுக்குக் கீழே இழியாது என்று இருக்கிறாள்

கரு நாராய்
பிரியாதாருக்கு உடம்பு வேளாதே -மிகவும் நிறவாதோ
தன் உடம்பு விவர்ணமான படியைக் காட்டுகிறாள் –

அவன் பிரிவுக்கு ஹேது ஏது என்ன -மயர்வற மதி நலம் அருளி -தத் வியதிரிக்தங்களிலே நெஞ்சு செல்லாதே
பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே காதலை விளைவித்தவன் அகன்றான் –
நான் விஸ்லேஷ அசஹை யானேன் -என்ன

இப்படி யுன்னை விட்டு எங்கே போனான் என்ன
அவன் போய் இருந்த இடம் சொல்லுகிறாள்
வேத வேள்வி ஒலி முழங்கும் தண் திரு வண் வண்டூர்
நாதன்
வேத கோஷமும் -வைதிக கிரியா கோஷமும் கண்டு -தன் நாயகன் கால் தாழ்ந்து வாராது இருக்கிறது
உங்களுக்கு அறிவிக்கையை இறே வேண்டுவது

தான யஜ்ஞவிவாஹ ஸ்தலங்களிலே இறே -அது ஸா ங்கம் ஆகைக்கு எழுந்து அருளி இருப்பது
ஸமா ஜே ஜூ மஹத் ஸூச -தீர்க்க சத்ராதிகளிலே இருப்பவர் –

ந த்ரஷ்யாம புனர் ஜாது -அவரை அவ்வோர் இடங்களிலே காணலாம்
தார்மிகம் ராம மந்த்ரா -இத்யாதிப்படியே கண்டு கொள்வது

அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன் அ வன் –திரு வண் வண்டூர் நாதன் –
ஸ்ரீ வைகுண்ட நாதனின் காட்டில் ஏற்றம் சொல்கிறது
இவ்விடம் எளியாரை வலியார் அடிக்க அயர்வறும் அமரர்கள் அதிபதியாய்க் கோயிலில் சாந்து பூசி இருக்கும்
அது ஓர் ஏற்றமோ அன்று இறே

ஞாலம் எல்லாம் உண்ட –
அந்த ஆபத் சகன் இறே
தளர்ந்தார் தாவளமான நம்பெருமானைக் கண்டு
துயர் அறு சுடர் அடி தொழுது எழுந்து
பாதங்கள் மேல் அணி பூந்தொழ
என்றும் பாதம் கை தொழுது பணிவீர்

ஹேய ப்ரதிபடமான சுடர் அடிகள் -ஆஸ்ரிதரைக் கண்டால் நிரவதிக தேஜோ மயமான
திருவடிகளைக் கைகளால் ஆரத் தொழுது எழு என் மனனே

தொழுதார்க்கு நிற்க ஒண்ணாது –தெண்டன் இடு –
உண்ணா நிற்க மிடற்றைப் பிடிப்பாரைப் போலே ஆகாமே திருவடிகளில் தெண்டம் ஸமர்ப்பியாய்

பாதம் கை தொழுது பணியீர் அடியேன் திறமே
கடகரை உபகரித்துச் சொல்ல வேணும் இறே

அடியேன்
உங்களைக் கொண்டு அழைப்பித்துக் கொள்ள இருக்கிற அவனுக்கு அன்று
அவனால் வந்த இழவு பரிகரிக்கிற உங்களுக்கு அடியேன்
நித்யம் -யதீய சரணவ் சரணம் மதீயம் –என்கிறபடியே

அடியேன் திறமே
என் திறம் சொல்லில் ஒரு மஹா பாரதத்துக்கு உண்டு
திரு உள்ளமான படி செய்யுங்கோள் என்கிறாள் –

—————–

மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்பு நான தஞ்சுவன்
மன்னுடை இலங்கை அரண்காய்ந்த மாயவனே!
உன்னுடைய சுண்டாயம் நானறிவன் இனியது கொண்டு செய்வதென்?
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ!–6-2-1-

மின்னிடை மடவாரில்
இவள் விட்ட ஆள் சென்று -அத்தலைப்பட்டு அறிவித்து -அவனும் வாரா நிற்க –
அவ்வளவு பற்றாதே துடித்து அலமர்க்க
அவன் வரவை நிச்சயித்து -கீழ்ப்பட்ட கிலேசத்தாலே -இனி அவன் வந்தாலும் அவனோடே ஸம்ஸ்லேஷிப்போம் அல்லோம் –
விஸ்லேஷித்து முடியும் அத்தனை -என்று முகம் மாறி வைத்து இருக்க
அவனும் தன் அழகையும் செல்லாமையும் காட்டி ஊடலைத் துறந்து அவர்களுடனே ஸம்ஸ்லேஷித்த படியை
அருளிச் செய்தார் –

——-

உகவையால் நெஞ்ச முள்ளுருகி உன் தாமரைத் தடம் கண் விழிகளின்
அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்;
தகவு செய்திலை; எங்கள் சிற்றிலும் யாமடு சிறு சோறும் கண்டு,நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.–6-2-9-

உயர்வற என்கிற பாட்டை -உகவையால் நெஞ்சம் உள்ளுருகி -என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
உயர்வற உகவையால் -மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும்
சாதன பலங்களாலே உயர்த்தி அற்று இருப்பர்கள்

உயர்நலம் உடையவன் இடத்தில் உகவை அளவிறந்த இருக்கும் –
அவர்கள் உகவை அல்பமாகையாலே துக்கமேயாய் இருக்கும்
உன்னிடத்தில் உகவை -அப்ராப்ய மனஸா ஸஹ -என்று அளவிட ஒண்ணாத ஸூகமேயாய் இருக்கும்
ஆகையாலே உகவையாலே நெஞ்சு உள்ளுருகுகிறது –

வாராய் உன் ப்ரவ்ருத்தி வியர்த்தம் காண்
பிரித்து நெஞ்சை புண் படுத்துகையால் வந்த உருகுதல் ஒழிய நீ பண்ண இறே பார்த்தது
அது செய்யப் போகாது என்ன

அது ஏது என்ன -உன் தாமரைத் தடம் கண் விழிகள் -மயர்வற மதி நலம் அருளி –
கருண அம்ருத வ்ருஷ்டிகளாலே பிறந்த பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே உகவையால்
நெஞ்சம் உள்ளுருகப் பண்ணி உன் அகவலைப்படுத்தாய்

தாமரை போல் பரிமளம் செவ்வி குளிர்த்திகளை யுடைத்தாய் போக்தாக்களால் உண்டு அறுக்க ஒண்ணாத
போக்யதா பிரகார்ஷத்தை யுடைய திருக்கண்கள் நோக்காகிற வலையுளே அகப்படுத்தி –
கண்ணியிலே அகப்பட்டாலே ஜ்வர ஸந்நி பதிதரைப் போலே பிதற்றும் அத்தனை இறே

இனி அகப்பட்ட பின் செய்வது என் என்ன
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து
தகவு செய்திலை -என்ன

தகாதது என் என்ன

அரதி கந்த ரஹிதராய் நித்ய ஆனந்த மக்நரான ஸூரி ஸேவ்யரான உன்னுடைய
துயர் அறு சுடர் அடியாய் இருக்கிற திருவடிகளாலே அழித்தாய்
துக்க கந்த ரஹிதமாய் போக்யமே தேஜஸ்ஸான திருவடிகளாலே அழித்தாய் என்ன

எத்தை அழித்தோம் என்ன
எங்கள் சிற்றிலும் யாமடு சிறு சோறும் கண்டு,நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.–
ஸங்கல்பத்தால் அழிக்கலாவது உன் சிற்றில் இறே
இவருடைய சிற்றில் ஸ்பர்சித்து அழிக்க வேண்டுமே

ஜகத் உபஸம்ஹாரம் பண்ணுவது ஸங்கல்பத்தாலே இறே
சேஷபூதனுக்குத் திருவடிகள் உத்தேச்யமானோ பாதி
பிரணயிகளுக்கும் திருவடிகள் உத்தேச்யமாயே இறே இருப்பது –

வெறும் சிற்றிலே என்று காணும் நீ அழித்தது -எங்கள் அகவாயையும் அழித்தாய் காண் –
காலாலே எங்கள் சிற்றிலை அழித்துக் கண்ணாலே எங்கள் அபி சந்தியைக் குலைத்தாய்

உன் ஸ்ருஷ்டியைப் போலே நெருப்பும் நீருமாய் அன்று காண் எங்கள் சிற்றில்
வண்டல் நுண் மணல் தெள்ளி யாம் வளைக்கையால் ஸ்ரமப்பட்டோம்
உபாதேய தமம் எங்கள் சிற்றில் -உன்னுடைய ஸ்ருஷ்ட்டி அனுபாதேயம்

யாமடு சிறு சோறும் கண்டு நீ அடுகிற சிறு சோறு நிர்மால்யத்தோபாதி புறம்புள்ளாருக்கு ஆகாது –
நீயே புஜிக்கும் அத்தனை
யாமடு சிறு சோறு மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக் கூடி இருந்து உண்ணும் சோறு

கண்டு,நின் முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.–
கண் படைத்த பிரயோஜனம் இவற்றைப் பார்த்து ப்ரீதி பிரேரிதனாய் -ப்ரஸன்ன ஆதித்ய வர்சசம் -என்கிற
முக ஒளி திகழும் முறுவல் மந்தஸ்மிதம் பண்ணி நின்றிலையே

அழித்தாய் என்று இன்னாப்பு இன்று உகந்து அணைந்து கொண்டு சொல்கிறாள் –

——–

நல் குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்
வெல் பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப்
பல் வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானைச்
செல்வம் மல்கு குடித் திரு விண்ணகர்க் கண்டேனே.–6-3-1-

நல் குரவில்
ப்ரணய ரோஷத்தால் கிட்டோம் என்று இருந்த தம்மைப் பொருந்தப் பண்ணின
வைசித்ரித்யத்தாலே
விருத்த விபூதி யுக்தனான படியை அநுஸந்தித்தார் –

——–

பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய்
கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர்
சிரங்களால் வணங்கும் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
வரங் கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே.–6-3-7-

உயர்வற என்கிற பாட்டை -பரஞ்சுடர் உடம்பு -என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்

உயர்நலம் யுடையவன் எவன் அவன் -உயர்வற
பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய்
உயர்வற அழுக்குப் பதித்த உடம்பாய்
உயர்நலமாவது பரஞ்சுடர் உடம்பாய்
ஆக உயர்வற உயர் நலம் யுடையவன் என்றபடி

பரஞ்சுடர் உடம்பாவது
சுத்த ஸத்வமான அசாதாரண திவ்ய விக்ரஹத்தை யுடையவனாய்
தேஜஸாம் ராஸி மூர்ஜிதம்-என்றபடி

அழுக்குப் பதித்த உடம்பாய்
குணத்ரய வஸ்யமான ஜகத் சரீரனாய் நின்றபடி

நீர் இது அறிந்தபடி என் என்ன
மயர்வற மதிநலம் அருளினன் எவன் அவன் -அவித்யாதிகளை அறுத்து பக்தி ரூபா பன்ன ஞானத்தை
நிர்ஹேதுகமாக அருளியவன் தானே தன்னைக் காட்டக் கண்டேன்

எவன் அவன் அழுக்குப் படிந்த உடம்பிலே கரந்தும் -பரஞ்சுடர் உடம்பிலே தோன்றியும்
நின்றும்
இவற்றுக்கு அந்தர்யாத்மாவாய் புக்கு நின்றும்
இப்படி நிற்கச் செய்தே
யம் ஆத்ம ந வேத -என்று இவற்றுக்குத் தோற்றாதபடி நின்று இவற்றின் சத்தியை நோக்கியும் –

எவன் அவன் -காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து இருப்பாருக்குக் காணலாம் படி
ராம கிருஷ்ண அவதாரங்களைப் பண்ணியும் நூறாண்டு பதினோராயிரம் ஆண்டு நின்றும்

அவ்விடங்களில் கை தவங்கள் செய்தும்
க்ருத்ரிமத்தைப் பண்ணியும் -அதாவது
அவதரித்து நிற்கச் செய்தேயும் தன் படிகள் சிசுபாலாதிகளுக்குத் தோற்றாதபடி பண்ணியும்
ஆஸ்ரிதற்குத் தோற்றியும் -இப்படி இருக்குமவன் –

எவன் அவன் -அயர்வறும் அமரர்கள் அதிபதி -ராஜஸ தாமஸ ரஹிதரான நித்ய ஸூரிகளுக்கு
நிர்வாஹகனானவனை

விண்ணோர் சிரங்களால் வணங்கும்
ப்ரஹ்மாதிகள் தலை படைத்த பிரயோஜனம் பெற்றோமே என்று வணங்கும் படியும்

ஸுசீல்யாதிகளும் ஸுலப்யாதி குணங்களும் கண்டு அனுபவிக்க -அயர்வறும் பாமரர்களும் வணங்கும் படியும்
திரு விண்ணகரிலே வந்து நிற்கிற உபகாரகன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே

பிரான்
உபயாந்தரங்களிலே புகல் அறுத்து -உபேயாந்தரங்களை விஸ்மரித்துத்
தானே உபாய உபேயமான ரக்ஷணங்களைப் ப்ரகாசியா நின்ற சுடர் அடி

வரங் கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே.–
தொழுது எழு என் மனனே
அநேகம் காலம் அஸேவ்யனாய்ப் போந்த நீ ஸேவ்யன் பக்கலிலே ஸேவியாய்

வரங் கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே.–
எத்தனையேனும் தண்ணியரும் வந்து கிட்டலாம் படி ஸ்ரேஷ்டமான திருவடிகள் அல்லது

யாவருக்கும் –
எத்தனையேனும் தண்ணியருக்கும்
ப்ரஹ்மாதிகள் ஸநகாதிகள் முமுஷுக்கள் முக்தர் நித்யர் முதலானோர்க்கும்
அதிலும் பக்தருக்கு முற்பாடானாய் வந்து புகுகைக்கு வலிய புகல் இல்லை
அவனை ஒழிந்த சரண்யர் அடங்கலும் இவனைக் கொண்டு ஸம்ஸாரத்திலே முழுக்குகிற பேர்

இவனைக் கொண்டு கரை ஏற்ற வல்ல வலிய புகல் -எவன் அவன் -திருவடிகள் அல்லது இல்லை
அடியே பிடித்து ஜீவிக்கில் ஜீவிக்கும் அத்தனை அல்லது யாகையாலே
சுடர் அடி தொழுது எழு என் மனனே என்கிறார் –

————-

குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் குன்றம் ஒன்று ஏந்தியதும்
உரவுநீர்ப் பொய்கை நாகங் காய்ந்ததும் உள்பட மற்றும் பல
அரவில் பள்ளிப் பிரான் தன் மாய வினைகளையே அலற்றி
இரவும் நன்பகலும் தவிர்கிலன் என்ன குறைவு எனக்கே.–6-4-1-

குரவை ஆய்ச்சியரில்
கிட்டி அனுபவிக்கப் பெற்றிலோம் என்கிற இழவு தீரக் கிருஷ்ண குண சேஷ்டிதங்களைக்
கிட்டித் தரித்து அனுபவிக்கப் பெற்றேன் என்று உகக்கிறார் –

——–

மண் மிசைப் பெரும்பாரம் நீங்க ஓர் பாரத மா பெரும் போர்
பண்ணி மாயங்கள் செய்து சேனையைப் பாழ்பட நூற் றிட்டுப் போய்
விண் மிசைத் தன தாமமே புக மேவிய சோதி தன் தாள்
நண்ணி நான் வணங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே-6-4-10-

உயர்வற என்கிற பாட்டை -மண் மிசைப் பெரும் பாரம் நீங்க -என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
உயர்வற -மனுஷ்ய ஆனந்தத்தில் -அஹங்கார மமகாரங்களாலும் -காம க்ரோதங்களாலும் மிகுந்த
பாரம் பொறாமல் பூமிப்பிராட்டி ஸர்வேஸ்வரனுக்கு விண்ணப்பம் செய்ய –
பூ பார நிவாரண அர்த்தமாக அவதரித்து மண் மிசைப் பெரும் பாரம் நீங்க
விஸ்வம் பரை-என்றும்
ஷமை-என்றும்
புரை -என்றும் பேரை யுடைத்தாய்
பரிக்கக் கடவளான பூமியாலும் பொறுக்க ஒண்ணாதபடி இறே துர்வர்க்கம் திரண்ட படி –

த்ரிபாத் விபூதியில் -யத்ர பூர்வே ஸாத்யா –என்கிற பூர்வ ஸாத்ய ஆராதனர் உண்டாய்
இருக்கச் செய்தேயும் பாரம் இல்லை இறே -அஹங்கார ஸ்பர்சம் யுடையார் இல்லாமையால்
தங்கள் பரத்தை அவன் பக்கலிலே வைத்து இருக்கும் அவர்களே இறே அவர்கள்
இப்படி உயர்வற உயர் நலம் யுடையவன் எவன் அவன் அவன்
ஆனந்தாதி கல்யாண குணங்களுக்கு அடியான அபராத ஸஹனானவன்

ஓர் பாரதமாய்ப் பெரும் போர் பண்ணி அத்விதீயமான மஹா பாரதமாகிற மஹா யுத்தத்திலே
அர்ஜுனன் பந்து வதம் ஆகாது என்று வில்லை விழ விட்டு சோகிக்க
அவன் சோகம் ஆகிற மயர்வு அற மதிநலம் அருளினன்
அதாவது -பகவத் கீதை -18 அத்தியாயத்தில் -தர்ம அதர்மங்களை அருளிச் செய்து –
சோக நிவ்ருத்தியைப் பண்ணி யுத்தத்தில் மூட்டி

மாயங்கள் செய்து –
பகலை இரவாக்குவது -ஆயுதம் எடேன் என்று -ஆயுதம் எடுப்பது –
எதிரியுடைய மர்மத்தைக் காட்டிக் கொடுப்பது -அவற்றைச் செய்து மயர்வற மதிநலம் அருளினன்

மாயங்கள் ஆவன -மாயா வயுநம் ஞானம் -பிறப்பித்த பின்பு –

சேனையைப் பாழ்பட நூற் றிட்டுப் போய்
சேனையை வெறும் தரையாம்படி மந்திரித்து முடித்திட்டுப் போய்

விண் மிசைத் தன தாமமே புக
அயர்வறும் அமரர்கள் எதிர் கொள்ள அந்தமில் பேர் இன்பத்து அடியாரோடு இருந்தது –
பிரதிகூலரை நிரஸித்ததற்கு மேலே அவர்கள் இருந்த இடத்திலே இராதே
பரமபதத்தே போய்ப் புகப்பெற்ற படியே என்று உகக்கிறார்

மேவிய சோதி தன் தாள் நண்ணி நான் வணங்கப் பெற்றேன்
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
கிருஷ்ணனுடைய துயர் அறு சுடர் அடி -ஆஸ்ரிதர் கார்யம் தலைக்கட்டுகையாலே
துயர் அற்று வீர ஸ்ரீ யாலே தேஜோ ரூபமாய் விளங்கா நின்ற திருவடிகள் –

அதுக்கு மேலே நித்யர் முக்தர் சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே -என்று
இருந்த இடத்திலே நண்ணி நான் வணங்கப் பெற்றேன்

எனக்கார் பிறர் நாயகரே-
க்ருத்வா பர அவதரணம் ப்ருதிவ்யாம் ப்ருது லோசன -மோஹயித்வா ஜகத் ஸர்வம் -என்கிறபடியே
பிரதிகூலரை அடங்கலும் உளவுகோலாலே விழ விட்டு
அனுகூலரை அடங்கலும் கண்ணாலே விழவிட்டுப் போனான்

கத ஸ்வ ஸ்தானம் உத்தமம்
நண்ணி நான் வணங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே
எனக்கு யார் தான் நிகர் என்கிறார் –

—————-

துவளில் மா மணி மாடமோங்கு தொலை வில்லி மங்கலம் தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர்! உமக்காசை இல்லை விடுமினோ;
தவள ஒண் சங்கு சக்கரமென்றும் தாமரைத் தடங்கண் என்றும்
குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க நின்று நின்று குமுறுமே.–6-5-1-

துவளில் மா மணியில்
பொய் நின்ற ஞானம் தொடங்கி இவ்வளவும் வர தமக்கு
பகவத் விஷயத்தில் உண்டான அதி ப்ராவண்யத்தைச் சொல்லுகிறதாகையாலே
தம் படியை அருளிச் செய்கிறார் –

பின்னை கொல்?நில மா மகள் கொல்? திருமகள் கொல்? பிறந்திட்டாள்
என்ன மாயங்கொலோ? இவள் நெடுமால் என்றே நின்று கூவுமால்
முன்னி வந்தவன் நின்றிருந் துறையும் தொலை வில்லி மங்கலம்
சென்னியால் வணங்கும் அவ்வூர்த் திருநாமம் கேட்பது சிந்தையே.–6-5-10-

உயர்வற என்கிற பாட்டை -பின்னை கொல் -என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
உயர்வு மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும்
பகவத் வ்யதிரிக்த காமங்களில் ப்ரேம பரவசராய் இந்த லீலா விபூதியில் உயர்வும் தாழ்வுமாய் அற்றுப் போக
இவளுக்கு உயர்நலம் உடையவன் எவன் அவன் அவனால் அல்லது செல்லாத ப்ராவண்ய அதிசயத்தைக் கண்டு
பிராட்டிமாரில் ஒருத்தியே என்று தோழி சங்கித்ததாகச் சொல்லுகிறது ஆகையால் தன் முகம் –
தம் படியை அருளிச் செய்கிறார்

உயர்நலம் உடையவன் எவன் அவன் -பின்னை கொல் இத்யாதி
உகார வாஸ்யை யான பிராட்டி -அவளுக்கு நிழல் போல்வரான மற்றப் பிராட்டிமாரும் –
இம்மூவரும் கூடி வந்து ஒருத்தியாக அவதரித்தார்களோ
ஞான ஆனந்த ஸ்வரூபனான ஸர்வேஸ்வரனுடைய போக மஹிஷியான நப்பின்னைப் பிராட்டி பிறந்திட்டாளோ
அன்றிக்கே எல்லாருக்கும் இவ்வேற்றத்தைக் கொடுக்கும் பிராட்டி தான் பிறந்திட்டாளோ
ஸர்வேஸ்வரனுடைய ஸம்பத் ஆனவளோ -அது விளையும் பூமியோ அதின் பல ரூபம் ஆனவளே பிறந்தாளோ
அப்படி அன்று இவள் படி -பிராட்டி மூவருக்கும் இவள் படி இல்லாமையாலே
அவர் அவர்களுக்கு உள்ள ஏற்றம் எல்லாம் இங்கே காணலாகையாலே அவர்கள் ஒப்பு அன்று
லோகம் எல்லாம் வாழுகைக்கு இவள் ஒருத்தியும் பிறந்திட்டாளோ என்றுமாம் –

விஷ்ணு நா சத்ருஸோ வீர்யே -என்றால் போலே –
உபமானம் அசேஷணாம் ஸாதூனாம் யஸ் ஸதா பவத் -என்கிறபடியே
இவரை எல்லாருக்கும் ஒப்பாகச் சொல்லலாம் இவருக்கு ஒப்பாவார் ஒருவரும் இல்லை காணும்
இதுக்கடி என் என்ன
மயர்வற மதிநலம் அருளினன் -என்ன மாயம் கொலோ
மாயா வவுனம் ஞானம்
மயர்வற -பகவத் விபூதியில் அவித்யாதிகளைப் போக்கி
மதி நலம் -பக்தி ரூபா பன்ன ஞானத்தைப் பிறப்பித்து அருளினால் கூடாதது இல்லை யாகாதே

என்ன மாயம் கொலோ
இது என்ன ஆச்சர்யம் தான்
எவன் அவன் -இவள் நெடுமால் என்றே நின்று கூவுமால்
தன் பிச்சைக் கால் கடைக் கொண்டு அவன் பிச்சைச் சொல்லிக் கூப்பிடா நின்றாள்
மால் என்று பெரியோன் -அதாவது அயர்வறும் அமரர்கள் அமரர்கள்
தெளிவுற்று வீவின்றி நிற்கும் அமரர்கள் அதிபதி யானவன்
நெடுமால் -பராத்பரன் -துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே -என்ன

அவனை நம்மால் கிட்ட விரகுண்டோ என்ன
முன்னி வந்தவன் நின்றிருந் துறையும் தொலை வில்லி மங்கலம்-
பராத்பரனானவன் நம்மைப் பெறுகைக்கு எளிதாகத் திருத் தொலை வில்லி மங்கலத்திலே
எழுந்து அருளி நிற்பதாகிய கிருஷி பண்ணினபடி

இப்படி அவன் முற்பாடானாய் வந்த உபகாரகத்துத் தோற்று
சென்னியால் வணங்கீத் துயர் அறு சுடர் அடி தொழுது எழு
ஹேய ப்ரத்ய நீகமான திருவடிகளைத் தொழுது

அவ்வூர்த் திருநாமம் கேட்பது சிந்தையே.–
திரு நாமம் கேழ்க்க செவி தாழ்க்க இதுவே இவளுக்கு மநோ ரதம்

இவள் அவ்வூர் என்கிறது
பெண் பிள்ளை சொன்னால் போலே இராமையாலே அவ்வூர் என்கிறாள்
ஸர்வ காரணங்களாலும் தொலை வில்லி மங்கலத்தை அனுபவிக்கிறாள்

—————–

மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு
நீலக் கருநிற மேக நியாயற்கு
கோலச் செந் தாமரைக் கண்ணற்கு என் கொங்கலர்
ஏலக் குழலி இழந்தது சங்கே.–6-6-1-

மாலுக்கு -பதிகத்தில்
வையத்திலேயே பாஹ்ய ஸம்ஸ்லேஷ அபேக்ஷை பிறந்து அது பெறாமையாலே அவசன்னராய்
ஏறாளும் இறையோனில் -உடமாயிவர் வேண்டா என்கிறவை எல்லாம்
தன்னடையே போகிறபடியை அருளிச் செய்கிறார் –

உயர்வற என்கிற பாட்டை -மாலுக்கு வையம் -என்கிற பாட்டை விவரிக்கிறது
உயர்வற மனுஷ்யம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவாக
அந்நிய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்தர்ய நிவ்ருத்தி பண்ணுகிறது
உயர் நலமுடையவன் -மாலுக்கு வையம் அளந்த மணாளன்
ஆனந்தாதி குண விசிஷ்டனாய் -ஸ்ருதி ப்ரதிபாத்யனான ஸர்வேஸ்வரனுக்கு

மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு
மால் என்று பெரியோன் என்றபடி
ஜெகதாகாரனானவன் ஜகத்துக்கு அந்நிய சேஷத்வத்தை ஒரு திருவடியாலே போக்கி –
ஸ்வ ஸ்வா தந்தர்யத்தை ஒரு திருவடிகளாலே போக்கினை படியைச் சொல்லுகிறது

வையம் அளந்த மணாளற்கு
பதிம் விஸ்வஸ்ய -என்றும்
கௌசல்யா லோக பர்த்தாரம் என்றும் சொல்லுவாருக்கு –

யுகாவாதாரை விடமாட்டாதவன் வ்யாமோஹம் -அழித்தாய் உன் திருவடியால் -உகந்த இவளை விடுமோ
இவளைத் தன் கால் கீழே இட்டுக் கொண்ட அச்செயலுக்குத் தோற்றுத் தன்னை எழுதிக் கொடுத்தாள்
இவள் ஒருத்தியுமே இறே
இவளுக்குப் ப்ரேமம் விளைந்தபடி என் என்னில்

மயர்வற மதிநலம் அருளினவன் எவன் அவன் -நீலக் கரு நிற மேக நியாயற்கு –
மயர்வற -தத் வ்யதிரிக்தங்களில் ஆசை அறுத்துத் தன் விஷயமான பக்தி ரூபா பன்ன ஞானத்தை அருளுகையாலே
அத்யந்தம் ப்ரேம பாரவஸ்யத்தாலே நெய்த்துக் கருத்த நிறத்தை யுடைய மேக ஸ்வ பாவற்கு

ப்ரயோஜன நிரபேஷமாகக் கொடுக்கையும்
கொடாத போது உடம்பு வெளுக்கையும்
வ்யாமோஹம் இன்றிக்கே ஒழிந்தாலும் விட ஒண்ணாத வடிவும் ஓவ்தார்யமும் இருக்கிற
இவ்வழகுக்குப் பிச்சேறின படி

அதன் மேலே -அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
கோலச் செந்தாமரைக் கண்ணன்
ஜிதந்தே புண்டரீகாக்ஷ -என்று
அஞ்ஞான கந்த ரஹிதரான நித்யரைக் தன் கண் அழகாலே தோற்பித்தால் போலே
தன் மேன்மையையும் கண் அழகையும் காட்டி யாயிற்று இவளை வசீகரித்தது

கோலச் செந் தாமரைக் கண்ணற்கு
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
என்று
என் ஏலக் குழலி இழந்தது சங்கே.–
தர்ச நீயமாய் வாத்சல்யத்தாலே விகாசாதிகளையும் உடைத்தான திருக்கண்களையும் யுடையவனுக்கு
தாமரைத் தடம் கண் விழிகளில் அகவலைப் படுத்தினவனுக்கு

என் ஏலக் குழலி
ஏலம் பரிமளிதமான திருவடிகளை சிரஸா வஹிக்கையாலும் -ஸர்வ கந்த -ஸர்வ ரஸ -என்கிறபடியே
என் கொங்கு ஏலக் குழலி -என்று நிரூபகமாய்த்து –

மது ஸ்யந்தியா நின்றுள்ள பூவை யுடைத்தாய் -நறு நாற்றத்தையும் யுடைத்தாய் இருக்கிற -இவள்
மயிர் முடி ஒன்றுக்கும் தோற்றுக் குமிழி நீர் உண்ணுமவன் கிடீர்
ஒன்றுக்கு ஒன்பது அபதானம் கிட்டி இவளை மயக்கிக் கலலாத வளையை அபஹரித்தான்

இழந்தது சங்கே.–
தனக்கு அடிமையாய்த் தொழுத கை வளையைக் கொள்வது தக்கதோ என்கிறாள் –

————

உண்ணுஞ் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையு மெல்லாம்
கண்ணன் எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி
மண்ணினுள் அவன் சீர் வளம் மிக்கவன் ஊர் வினவித்
திண்ணம் என் இளமான் புகுமுர் திருக் கோளூரே.–6-7-1-

உண்ணும் சோற்றில்
கீழில் திருவாய் மொழியிலே மோஹங்கதையான இவள் தசையைக் கண்ட திருத்தாயார்
இவள் வளையாதிகள் இழந்தபடியைச் சொல்லிக் கூப்பிட்டுத் தானும் மோஹிக்க
அவ்வளவில் பெண் பிள்ளை உணர்ந்து இங்குத்தைத் தரிப்பற்று அவன் எழுந்து அருளி இருந்த தேசமான
திருக்கோளூர் ஏறப் போனாள் என்று திருத்தாயார் சொல்லுகிற பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

உயர்வற என்கிற பாட்டை உண்ணும் சோறு என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும்
அன்ன பானாதி முதலானவை தாரக போஷக போக்யங்களாய் இருக்கையாலே அல்ப அஸ்த்ரமாய் அற்றது –

உயர் நலம் யுடையவனே இவளுக்கு
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் இறே
தத் வ்யதிரிக்தங்கள் அறியாள்

கொள்ள மாளா இன்ப வெள்ளத்துக்கு மேல் யுண்டாய் இவள் அவ்வருகு
ஒரு தாரகாதிகள் உண்டாய்த் தேடப் போனாளோ

உயர் நலம் யுடையவன் எவன் அவனே
கண்ணன் எம் பெருமான் என்று என்றே கண்கள் நீர் மல்க
உயர் நலமான ஆனந்தாதி குண பரிபூர்ணனாய் ஸ்ருதி ப்ரஸித்தனானவன் யாவன் ஒருவன்
அவனே எம்பெருமான் ஆகிறான்
என்று இந்த ஸ்ம்ருதியே யாத்ரையாய் -அத்தாலே -ஆனந்த அஸ்ருவாய் -மல்க இருக்கிற இதுக்கு ஹேது –
அவன் மயர்வற மதி நலம் அருளினவன் –

எவன் தன்னுடைய ஞான பக்தி களே தாரகாதிகளாகப் போய்
மண்ணினுள் அவன் சீர் வளம் மிக்கவன் ஊர் வினவித்
லௌகிகரைப் போலே அன்ன பானாதிகளாலே தரித்து அங்கே புக்கு அவனாலே தரிக்கப் போனாளோ
அஹம் அன்னம் அஹம் அந்நாத -என்று இருப்பவருக்கும் அவ்வருகு போக வேணுமோ –

எல்லாம் கண்ணன் என்று இருக்கும் அவளுக்கு வேறு ஓன்று வேணுமோ
கணை நாணின் ஓவாத் தொழில் சார்ங்கன் தொல் சீரை நன்னெஞ்சே ஓவாத ஊணாக யுண்
என்றும் இறே இருப்பது

கண்கள் நீர்கள் மல்கும் கண்ணும் அவள் முக விகாஸமும் அன்றோ எனக்குத் தாரகம்
என் ஜீவனத்தையும் கொண்டு போனாளே
அழுநீர் துளும்ப அலமர்கின்றனவோ வாழியரோ என்று மங்களா ஸாஸனம் பண்ணுகை இறே ப்ராப்தம்

மண்ணினுள்
விண்ணில் உள்ள-அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் தன்னுடைய அம்ருத ஆனந்தத்தை
அசராமல் புஜிக்கிற நித்ய முக்தருக்கு ஸ்வாமி யானவன்
மண்ணுனுள் புகுமூர் திருக்கோளூரே

அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் -இவள் இடையாட்டமாக அவன் நினைத்து இருப்பது –
விண்ணுளாரில் சீரியளான இவளை லபிக்கைக்காக வந்து இருக்கிறவன்
மண்ணினுள் புகுமூர்த் திருக்கோளூரே

அவன் -சீர் வளமிக்கவனூர் வினவி – லௌகிகர் எல்லாரும் யாவதாயுஷம் தாரகாதிகள்
ஸம்பாதிக்குமா போலே இவளும் அவன் சீரே யாவதாத்மபாவியாக தாரகாதிகளாகவும்
நிரவதிக ஸம்பத்து வைத்த மா நிதியாகவும் அவன் ப்ரஸாதமே பேறாகவும் போனாள்

சோஸ்னுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபச்சிதா -என்று
அவனோடு அவன் குணங்களோடு வாசி யற ப்ராப்யம் ஆகிறவோபாதி அவன் விரும்பின தேசமும்
ப்ராப்ய அந்தர் கதம் இறே

அவன் சீர் யாவதாத்மபாவி தாரகாதிகளானால் போலே துயர் அறு சுடர் அடி தொழுது எழுகையும்
போஷகாதிகளும் பூஷணாதிகளும் ஆய்த்து

வளம் மிக்கவனூர்
பரமபதம் கலவிருக்கையோ பாதி உகந்த விஷயத்தைப் பெறும் இடம் இறே ஊராகிறது

அயர்வறும் அமரர்கள் இருந்த இடத்திலே சென்று அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழுகைக்கு என் மனனே
திண்ணம் என் இளமான் புகுமூர் திருக்கோளூரே –என்கிறாள் —

———–

பொன்னுல காளீரோ? புவனி முழு தாளீரோ?
நன்னலப் புள்ளினங்காள்! வினையாட்டியேன் நான் இரந்தேன்
முன்னுலகங்களெல்லாம் படைத்த முகில் வண்ணன் கண்ணன்
என்னலங் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே.-6-8-1-

பொன்னுலகு ஆளீரோ -வில்
திருக்கோளூர் ஏறப் போனவள் முடியப் போய்த் தலைக்கட்ட மாட்டாதே
நகர உபவனத்திலே விழுந்து கிடந்தது ஆர்த்தராய் ஏக ரஸம் பற்றாசாகத் தூது விடுகிறார்

—-

பாசற வெய்தி இன்னே வினையேன் எனை ஊழி நைவேன்?
ஆசறு தூவி வெள்ளைக் குருகே! அருள் செய்தொரு நாள்
மாசறு நீலச் சுடர் முடி வானவர் கோனைக் கண்டு
ஏசறும் நும்மை அல்லால் மறு நோக்கிலள் பேர்த்து மற்றே.–6-8-8-

உயர்வற என்கிற பாட்டை -பாசற -என்கிற பாட்டு விவரிக்கிறது-எங்கனே என்னில்

உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் ஸம்ஸரித்துக் கர்ம பாசங்களாலே பத்தராய்
பசலும் குட்டிகளுமாகக் வாழா நிற்கச் செய்தே கர்மம் மாண்டு வாழ்வற்று நிற்கும்

உயர் நலம் உடையவன் என்று நித்ய ஆனந்த ஸ்வரூப னோடே நித்யர் முக்தர் களித்து ஆனந்தித்து இருக்க
அடியேன் ஒருவரோடும் கூட்டு அற்று இருப்பேனோ

பாசற எய்தி
என்னுடம்பில் பசுமை போய் வை வர்ணயம் மிகவும் பரந்தது
இன்னும் சில காலம் கழித்தால் அறிவிக்கிறோம் என்னும் அளவாய் இருந்ததோ என் தசை

இன்னே
என்னைக் கண்ட உங்களுக்குச் சொல்ல வேண்டா இறே
விஷயம் சாவதியாகில் இறே இது அளவுபட்டு இருப்பது –
இதுக்கு ஒரு பாசுரம் இட்டுச் சொல்லப் போகாது இறே -உடம்பைக் காட்டும் அத்தனை –

வினையேன் எனை யூழி நைவேன்
விஸ்லேஷமும் ஸம்ஸ்லேஷத்தோ பாதி யாகப் பெற்றிலேன்
அது காதா சித்கமாய் இது நித்தியமாய் இருக்கிற படி –

இதுக்கு ஹேது என் என்ன
நித்ய ஆனந்த ஸ்வரூபனாவான் யாவன் ஒருவன் -அவன் மயர்வற மதி நலம் அருளினன்
தன் நிர்ஹேதுக கிருபையாலே பக்தி ரூபா பன்ன ஞானத்தை இறே அருளினது –

அன்று முதல் எத்தனை யூழி நைவேன் -ஸைதில்யத்தோடே எத்தனை கல்பம் சென்றது

ஆசறு தூவி வெள்ளைக் குருகே
பழிப்பற்ற சிறகை யுடைத்தாய் பர துக்க அஸஹிஷ்ணு தைக்கு உறுப்பாய்
மநோ நைர்மல்யத்தை யுடைத்தாய் இருக்கிற படி

மதி நலம் அருளினவன் எவன் ஒருவனான கிருஷ்ணன் பிரிகைக்குப்
புறம்பு போல் உள்ளும் கரியான் ஆனால் போலே நீங்களும் கூட்டுகைக்கு உள்ளும் புறமும் நிர்மலமாய் இறுக்கியபடி

அவன் மதிநலம் அருளினது பிரிந்து துடிக்கைக்கு ஹேதுவானால் போலே யாகாதே
ஆசறு சோதி வெள்ளைக் குருகே அருள் செய்து ஒரு நாள்
ஒரு போது கிருபை பண்ணி அருளினிகோளே

ஆர்த்தியால் அலைகிற சமயத்திலே அஞ்சாதே என்று அருளப் பெற்றேன் என்ன

உமக்கு என் செய்ய வேணும் என்ன

அயர்வறும் அமரர்கள் அதிபதி -விஸ்லேஷ கந்த ரஹிதரான நித்ய ஸூரிகளுக்குப் போக்ய பூதனாய்
மாசறு நீலச் சுடர் முடி வானவர் கோன்
பழிப்பற்று நெய்த்து இருந்துள்ள மயிர் முடியை
அநந்த வைனதேயாதிகள் பேண இருக்கிறவனைக் கண்டு
துயர் அறு சுடர் ஆதி தொழுது எழுந்து இருந்து ஒரு விண்ணப்பம் செய்ய வேணும் என்ன

விண்ணப்பம் ஏது என்ன

ஏசறும்
ஒரு நீர்ச் சாவியிலே க்ருப அம்ருத வ்ருஷ்டியை வர்ஷியாதே கடலிலே வர்ஷிக்கிறாப் போலே
நித்ய விபூதியாரோ பெறுவது
லீலா விபூதியார் நிர்க்குணன் என்னாமே ப்ரஸாதத்தைப் பண்ண வேணும் என்றும்

நும்மை யல்லால் மறு நோக்கு இலள்
உம்மை ஒழிய வேறு குளிர்ந்த விழி இல்லை
விழிக்கும் கண்ணிலே நின் கண் மற்று அல்லால் வ்ருத்த கீர்த்தனத்துக்கு உம்மை ஒழிய
வேறு ஒருவரை யுடையள் அல்லள்

குண கீர்த்தனத்தால் தரிக்குமவள் அல்லள் -என் மனம் போலே இருக்கிற நீங்கள்
இவ்வளவும் அருளிச் செய்யுங்கோள் என்று குருகை இரக்கிறாள் –

————————-

நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடு வானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்
கூரார் ஆழி வெண் சங் கேந்திக் கொடியேன் பால்
வாராய்! ஒரு நாள் மண்ணும் விண்ணும் மகிழவே.–6-9-1-

நீராய் நிலனில்
தம் தசையைக் கண்டு தம் பரிசரத்தில் கால் எழுந்து போவார் இல்லை -என்று அறுதியிட்டு
ஈஸ்வரனுக்கு முகம் காட்டி அல்லது நித்ய விபூதியில் இருப்பு அரிதாம் படி
ஆர்த்தியாலே நிரம்பித்தது ஒரு கடல் கை எடுத்துக் கூப்பிடுமா போலே
பெரு மிடறு செய்து கூப்பிட்டார் –

———–

ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்
சாலப் பல நாள் உகந்தோ றுயிர்கள் காப்பானே!
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே
சாலப் பல நாள் அடியேன் இன்னும் தளர்வேனோ?–6-9-3-

உயர்வற என்கிற பாட்டை -ஞாலத்தூடே என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
ஆர்த்த ப்ரபன்னன் -நாராயண பதத்துக்கு ஸங்க்ரஹமான அகாரத்தாலே அர்த்த பஞ்சகத்தை விவரிக்கிறது

உயர்வற-ஞாலத்தூடே
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும்
அந்நிய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்தர்யத்தைப் போக்குகைக்காக
த்ரிவிக்ரம அபதானத்தாலே எல்லார் தலைகளிலும் திருவடியை வைத்து நடந்தால் போலே
என் முன்னேயும் நடக்க வேணும் என்ன

அது உமக்கு காட்டுவது ஒரு தேச விசேஷத்திலே கொண்டு போய்க் காட்டுவோம் என்ன
அது தன்னை இங்கேயோ காட்டித்து இல்லையோ என்கிறார் –

அது ஒரு நாள் காதாசித்கமாகச் செய்தோம் என்ன

உயர் நலம் உடையவனான நீ யுகம் தோறும் ராம கிருஷ்ணாதிகள் அவதாரங்களைப் பண்ணி ரஷிக்கை
உனக்கு ஸ்வ பாவமாய் இருக்க -நான் நோவு படக் கடவனோ என்கிறார் –

ஞாலத்தூடே நடந்து
ஸதா தர்சனம் பண்ணுவார் முன்னே நடக்கக் கடவ நடையைக் காதாசித்கமாக வந்தாலும்
பாராதார் முன்னே கிடீர் நடந்தது
அந்தகன் முன் நடக்குமா போலே
அக்ரத ப்ரயயவ் ராம -என்று நடந்தும்

நின்றும்
அவஷ்டப்ய ச திஷ்டந்தம் தததர்ச தனு ரூர்ஜ்ஜிதம் ராமம் ரா
மானுஜஞ்ச சைவ பர்த்துச் சைவானுஜம் சுபா -என்று
தாரை உகந்து சொன்னபடியே ஆகர்ஷமாய் நின்றபடி

கிடந்தும்
பாஹும் புஜங்க போகாபம் உபதாயாரி ஸூதன -என்று
கடலை அனுவர்த்திக் கிடக்கிற கிடை தானே இலங்கை குடி வாங்க வேண்டும் படி இருக்கை

இருந்தும்
உபவிஷ்டம் ஸ்வ லங்க்ருதம்
உடஜே ராமமாஸீ நம் -என்று சொல்லுகிறபடியே இருக்கை

நீர் அறிந்தபடி என் என்ன
நீர் மயர்வற மதிநலம் அருளுகையாலே அறிந்து கண்டேன்

சாலப் பல நாள்
உன்னுடைய ரக்ஷணம் அநாதி அன்றோ
யுகம் தோறும் -ஸம்பவாமி யுகே யுகே -என்னுமா போலே

உயிர்கள்
அயர்வறும் அமரர்களான திருவடி திருவனந்த ஆழ்வான் பிராட்டி -இவர்களுக்காக அன்று கிடீர்
ஸர்வாத்ம ஸம் ரக்ஷணம் பண்ணுவது அன்றோ யுன்னது
அமரர்கள் அதிபதி என்று ஸ்ருதி ப்ரசித்தனானவன் யாவன் ஒருவன் அவன் காப்பானே
இவர்களுக்கு அழித்துக் கொள்ளுகை பணியானால் போலே இறே அவனுக்கு நோக்குகை பணியானபடி

அகாரத்தில் அவ ரக்ஷணே -என்கிற தாதுவாலே ஸர்வ வித ரக்ஷகத்வம் சொல்லிற்று
நான் கை வாங்கினேன்
இனிக் காவல் சோர்வு படாதபடி வேணுமாகில் நோக்கிக் கொள்

அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் யாவன் ஒருவன்
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே
அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்தரானவர்கள் பரிசர்யை பண்ண இருக்கிற கோலத் திரு மா மகளோடு
உன்னைக் கூடி இருக்குமவர்கள் உன் துயர் அறு சுடர் அடி தொழ
அடியேனும் அப்படித் தொழுது எழாதே

தாயும் தம்மப்பனும் சேர இருக்கக் கிட்டப் பெறாதே ஸ்தநந்த்ய ப்ரஜை
நாக்கு ஒட்டிக் கிடந்தது கிடைக்குமா போலே இருக்கிறது காணும்
இருவருமான சேர்த்தியிலே அடிமை செய்ய இறே இவருக்குப் ப்ராப்யம்

சாலப் பல நாள் இன்னம் தளர்வேனோ
முன்பு அநாதி காலம் இழந்தால் இன்னும் இழக்க வேணுமோ

இன்னம்
மயர்வற மதிநலம் அருளின உனக்கு அடியேனான பின்பும் தளர்வேனோ

துயர் அறு சுடர் அடி தொழுது எழ என்ற அடியேனும்
என் மனனும் சாலப் பல நாள் அடியேன் இன்னம் தளர்வேனோ

இப்பாட்டில் அகார அர்த்தத்தை ஸ க்ரமமாக வ்யாக்யானம் பண்ணுகிறார் –
அவ ரக்ஷணே -இறே தாது
ரக்ஷிக்கும் இடத்தில் ஸர்வ பிரகாரமாக ரக்ஷிக்க வேணும்
அது தானும் ஸர்வ காலமும் ரக்ஷிக்க வேணும்
அப்படி ரக்ஷிக்கும் இடத்தில் ஸர்வ ரக்ஷகனாக வேணும்

இப்படி வரை அறாதே ரக்ஷிக்கும் இடத்தில்
ந கச்சன் ந அபராத்யதி -என்னும் அவளும்
என் அடியார் அது செய்யார் -என்னும் அவனும் கூடவாயிற்று
ஆகையால் இறே அகாரம் மிதுனத்துக்கு வாசகம் ஆகிறது –

உயர்வற ஞாலத்தூடே -இத்யாதியாலே
ஸர்வ பிரகார ரக்ஷகத்வம் சொல்லிற்று
உயர் நலமுடையவன் மயர்வற –சாலப் பல நாள் இத்யாதியாலே ஸர்வ கால ரக்ஷகத்வம் சொல்லிற்று
அயர்வறும் அமரர்கள் அதிபதி -கோலத் திரு மா மகளோடு உன்னை -என்கையாலே
ஸ்ரீ யபதியே ப்ராப்யம் என்கிறது
அகார விவரணமான திரு மந்த்ரார்த்தம் சொல்கிறது

உயர் நலமுடையவன் -கோலத்திருமா மகளோடு உன்னை -என்று ப்ரஹ்ம ஸ்வரூபம் சொல்லுகிறது
அடியேன் -என் மனனே -என்கையாலே ப்ரத்யகாத்ம ஸ்வரூபம் சொல்கிறது
அருளினன் -உயிர்கள் காப்பான் -என்கையாலே உபாய ஸ்வரூபம் சொல்கிறது
சுடர் அடி தொழ –உன்னைக்கூட -என்கையாலே பலம் சொல்லிற்று
மயர்வற –உன்னைக் கூடாதே தளர்வேனோ என்கையாலே விரோதி ஸ்வரூபம் சொல்லிற்று

ஆர்த்த ப்ரபந்ந அதிகாரி ஸ்வரூபம் சொல்லுகிறது
அகாரத்தை விவரிக்கிறது உயர்வற உயர் நலம் உடையவன் -என்கிற பாட்டு

உயர்வற உயர் நலத்தை விவரிக்கிறது ஞாலத்தூடே என்கிற பாட்டு
எங்கனே என்னில்
அகாரத்திலே நாராயண பதம் விவரணம் ஆகையாலே ஸர்வவித பந்துவாய் ரக்ஷிக்கும் என்கிறது
இந்த ஸர்வவித ரக்ஷகத்வத்தால் அவன் உயர்த்தி சொல்கிறது

உயர்வு என்றது மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும்
மனிதர்க்குத் தேவர் போல் தேவர்க்கும் தேவர் என்கிறது
ஒருவரைப் பார்க்க ஒருவர் உச்சாரயம் என்கிறது -அந்த அர்த்தனத்தை உட்க்கொண்டு
ஞாலத்தூடே நடந்த என்கிறது

நடந்த -ஓங்கி உலகு அளந்தபடி
உயர்வற என்றது அந்நிய சேஷத்வம் ஸ்வ ஸ்வா தந்தர்யம் தவிர்த்த படி
ஆகையாலே ஸர்வ சேஷியானவனே ரக்ஷகன் என்றபடி

உயர் நலம் -ஆனந்தம் -அகாரத்திலே ஸர்வ வித ரக்ஷகத்வம் அவ ரக்ஷணே -என்கிற தாதுவாலே –
ரக்ஷகத்வமே ஸ்வரூபம் என்கிறது -அதாவது
த்ரிவிக்ரம அபதானத்தாலே ஜெகதாகாரதையை நடத்திக்காட்டி ஞாலத்தில் உள்ளார் எல்லாம்
அன்ய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்தர்யங்கள் ஆகிற அஞ்ஞான அந்தகாரங்கள் -கட்க்கண்ணும் உட் கண்ணும் குருடாய்
அத்தை வெளிச் சிறப்பிக்கைக்காக உடையவன் ஆகையால் நடந்து நின்றும் –
நடந்த போது அவர்கள் எதிர் அம்பு கோர்த்தும்
நின்று சத்ரு நிரசனம் பண்ணி நின்ற போதும் ஸஜாதீய புத்தி பண்ணி அகன்றும்

எவன் அஞ்ஞரான சேதனர்களை அறிவில்லாமையைக் கண்டு கிடந்தும்
பாற் கடல் பள்ளி கொண்டு அருளும் இடத்து
நீள் நகர் நீள் எரி வைத்து அருளாய் என்று கூக்குரல் கேட்டு புறப்பட்டு அம்புக்கு இரையாக்கியும்
அவன் -அனந்த சாயியானவன் எழுந்து வந்து இருந்தும் நூறாண்டு பதினோராயிரம் ஆண்டு இருந்தும்
ஸர்வவித ரக்ஷணம் பண்ணிய இடத்து
வையத்து நின்னை வல்லவர் பழித்து இன் நடவாலே குருடு நீங்கிற்று இல்லை யாகையாலே
அகாரத்தாலே ஸர்வ அவஸ்தையிலும் ரக்ஷிக்கும் என்கிறது

ஆக அகார விவரணமான நாராயண பதத்தில் சொன்ன ஸர்வவித ரக்ஷகத்வத்தை
உயர்வற உயர்நலம் உடையவன் எவன் அவன் -இப்படி லீலா விபூதியை நடத்துகிற ஸ்வாமியானவன்
எனக்கு மயர்வற மதிநலம் அருளினன் என்பதையே சாலப்பல நாள் என்கிறது
அகாரத்தில் ஸர்வ கால ரக்ஷகத்வத்தைச் சொல்லுகிறது

சோம்பாது பல்லுருவை எல்லாம் படர்வித்த என்கிறபடியே அகாரத்தில் பிரதம சதுர்த்தியாலே
சேஷத்வ ஞானம் பிறந்தவன் மதிநலம் ஆகிற பக்தி ரூபா பன்ன ஞானம் –
அகாரத்தில் கல்யாண குணங்களைச் சொல்லுகையாலே சர்வ குணங்களுக்கும் கிருபை காரணமாய் அற்றது

அகாரம் ஸர்வ சப்தத்துக்கும் காரணம் ஆகையால் தயமானவாய் ஸ்ருஷ்டிக்கையாலே
ஸ்ருஷ்டிக்கும் தயையே ப்ரேரகம் -கிருபையே காரணமாயிற்று

எவன் அவன் யுகங்கள் தோறும் காப்பானே -என்று கிருபா பாத்திரமான ஜீவ கோடிகளை சொல்கிறது –
காப்பான் என்று எதிர் சூழல் புக்கு இத்யாதிப்படியே காத்து ரக்ஷிக்கும் என்கிறது

ஆக அகாரத்தில் சதுர்த்தியாலும் -மயர்வற மதிநலம் அருளுகையாலும் -உயிர்கள் காப்பான் என்கையாலும்
சேதனருக்கு உட் கண்ணும் குருடும் தீர்ந்து தன்னைக்கண்டு அனுபவிக்கும் படி ஞான சஷுஸ்ஸை யும் கொடுத்து அருளி
ப்ரபாகாந்தரங்களிலே போகாத படி காத்து அருளிய படி
அகாரத்தில் சொன்ன ரஷய வர்க்கத்தை எவன் என்கிறது -அநந்ய கதியான அதிகாரி அகார வாஸ்யன் –
ஆர்த்த ரக்ஷணத்திலே தீஷித்தான் அவன் யாவன் ஒருவன் அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி –
கடலில் அம்ருத தாஸிகள் அன்று
அமுதினில் வரும் பெண் அமுதுக்கு ஆராவமுதம் ஆனவனை அருந்தும் அமரர்கள்

கோலத் திரு மா மகளோடு உன்னை
ஆர்த்த ரக்ஷணத்திலே தீஷிதரான கோலம் -அகாரத்திலே லஷ்மீ ஸம்பந்தம் சொல்லுகையாலே
அகாரோ விஷ்ணு வாசக அர்த்தே லஷ்மீ வாசக -என்கையாலே உன்னைக் கூட என்கிறது

இனி வரும் ஆர்த்த ரக்ஷணத்திலே தீஷித்து -அத்தனையும் சரணாகதியிலே தீஷிப்பித்து
அத்தை பிராப்தி பர்யந்தமாக நடத்தி விரஜையிலே அவப்ருதம் ஆட்டி செய்த வேள்வியனைத்
திருவடிக்கீழ் குற்றேவல் செய்து இருக்கும் படி அருளினவன் யாவன் ஒருவன் அகார வாஸ்யனான
அயர்வறும் அமரர்கள் அதிபதி
அகாரத்தில் சொன்ன ஸர்வவித பல பிரதத்வம் சொல்கிறது -ஆர்த்தி ஹரத்வம் சொல்கிறது
நித்யர் முக்தர் பத்தர் முமுஷுக்கள் -அனைவருக்கும் ஸர்வவித பல பிரதானம் பண்ணி ஆர்த்தியைத் தீர்க்குமவன்
யாவன் ஒருவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
சுடர் அடி -ஆர்த்தி ஹரமாய் மநோ ஹரமாய் தேஜோ மயமான திருவடிகளை யுடைய உன்னைக் கூடாதே

கோலத்திருமா மகளோடு உன்னைக்கூடாதே
இச்சேர்த்தியிலே சேரப்பெறாதே -அகார விவரணமான ஸ்ரீ மன் நாராயணனைக் கூடாதே
துயர் அறு சுடர் அடி தொழாதே -துயர் துக்கம் பிரயாசம் -பிரயாசப்படாதே துயர் அறு
ஸூகரமான திருவடிகளை லபிக்கப் பெறாதே

சாலப்பல நாள்
கீழ் கழிந்த காலம் எல்லாம் போராமல் என் மனனே வாள்களாகி நாள்கள் செல்லக் கழிந்த காலம் போராதோ
அகார விவரணமான சரம சதுர்த்தியிலே சொன்ன சேஷ விருத்தியின் படியே தொழுது எழவன்றோ பிராப்தம்
அஞ்சலி பரமா முத்ரா என்று ஆர்த்த அதிகாரி லக்ஷணம் சொல்லா நிற்க
அது லபியாமல் அடியேன் இன்னம் தளர்வேனோ

அநாதி காலம் அஸேவ்ய சேவை பண்ணித் திரிந்தது போராதோ -இன்னம் தளர வேணுமோ
கர்த்ருத்வ போக்த்ருத்வ புத்தி பிறந்து அகன்று போகாமே துயர் அறு சுடர் அடி தொழுது
என் மனனே -என்று அருளிச் செய்து அருளினார் ஆயிற்று

உயர்வற என்றும் -ஞாலத்தூடே நடந்து உகந்து உயிர்கள் காப்பான் என்றும் -விரோதி ஸ்வரூபமும்
மது நலம் என்றும் உயிர்கள் காப்பான் என்றும் உபாய ஸ்வரூபமும்
அமரர்கள் அதிபதி -கோலத் திருமாமகளோடே உன்னை -என்று பர ஸ்வரூபமும்
தொழுது எழு என் மனனே -அடியேன் என்று ஸ்வ ஸ்வரூபமும்
உன்னைக் கூடாதே -தொழுது எழு -என்று ப்ராப்ய ஸ்வரூபமாக
அர்த்த பஞ்சகமும் சொல்லிற்று ஆய்த்து —

—————————–

உலகம் உண்ட பெரு வாயா! உலப்பில் கீர்த்தி அம்மானே!
நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி! நெடியாய்! அடியேன் ஆருயிரே!
திலதம் உலகுக்காய் நின்ற திரு வேங்கடத் தெம் பெருமானே!
குல தொல் அடியேன் உன பாதம் கூடுமாறு கூறாயே.–6-10-1-

உலகமுண்ட பெரு வாயனில்
இப்படிக் கூப்பிட்ட இடத்திலும் முகம் காட்டாமையாலே அநந்ய கதிகராய்க் கொண்டு
பெரிய பிராட்டியார் புருஷகாரமாகத்
திருவேங்கடமுடையான் திருவடிகளிலே சரணம் புகுகிறார் –

————-

அகல கில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல் ஓன்றில்லா அடியேன் உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே.–6-10-10-

உயர்வற என்கிற பாட்டை -அகலகில்லேன் -என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
உயர்வற -அகலகில்லேன் -கீழே தம்முடைய அபேக்ஷிதம் சடக்கென ஸித்திக்கைக்காக
பெரிய பிராட்டியாரைப் புருஷகாரமாகக் கொண்டு
திருவேங்கடமுடையான் திருவடிகளிலே சரணம் புகுகிறார்

ஆக ஒன்பது பட்டாலும் சரண்யன் ஸ்வரூபத்தைச் சொன்னார்
இதில் தம்முடைய ஸ்வரூபத்தைச் சொல்லி சரணம் புகுகிறார்

கீழே அடியேன் என்றும் அருவினையேன் என்றும் தன்னுடைய ஆகிஞ்சன்யத்தையும் சேஷத்வத்தையும்
அவனுடைய சரண்யத்வத்தையும் அதுக்கு உறுப்பாகச் சொல்லிக் கொடு போந்தார்
இங்கே அது சென்னையே பேற்றுக்கு உடலாகச் சொல்லி சரணம் புகுகிறார்

இப்பாட்டில் பதங்களை த்வயத்தில் பதங்களோடு ஓக்க யோஜித்துக் கொண்டு தலைக்கட்டக் கடவது

அதில் அர்த்த ப்ராப்தமான அஹம் அர்த்தத்தை இங்கு அடியேன் என்கிறது
இது பாட்டுப் பிரவேசம்

ஸ்ரீ உயர்வற அகலகில்லேன் -ஸ்ரீ மன் -மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவாக
ஒன்றுக்கு ஓன்று உயர்வும் தாழ்வுமாய் இருக்குமா போலே
உயர்வு என்று -உகார வாஸ்யையான பிராட்டிக்கு உயர்வும் தாழ்வுமாவது
அது அறுகை யாவது -உயர்வான மிதிலை குண்டின புரம் ஷீராப்தி அம்ருதம் தாமரைப்பூ இவைகள்
அதிசயமான பிறந்தகமாக இருக்க -அதில் ஸ்மரணையும் அற்று அவற்றை அகன்று விட்டு –
உயர் நலம் அகலகில்லேன் என்று இறையும் –

ஸ்ரீ -ஸ்ரீயதே -ஸ்ரேயதே -இதுக்கு அர்த்தம்
ஸ்ரீ யதே -தத் வ்யதிரிக்தங்களுக்கு ஸ்வாமிநி ஆகையாலே வந்த ஏற்றம் –
ஸ்ரயதே -என்கையாலே -சேஷியான ஸர்வேஸ்வரனுக்கு ஆஸ்ரிதையாய் சேஷமாய்
பரதந்த்ர ஏக பரையாகையாலே உயர்த்தி அற்ற படி –

உயர்நலம் என்கிறதும் அகலகில்லேன் என்கிறதும் ஸ்ரயதே என்கிறதும் –
பிறந்த அகங்களை விட்டுத் திரு மார்பை அகலகில்லேன் என்கிறாள் –

அகலகில்லேன் என்கிறவள் தான் யார் என்னில் –
நலமுடையவன் -ஸ்ரீ மன் -அலர்மேல் மங்கை உறை மார்பன் -என்று சொல்லப்பட்ட நலம்
அதாவது பூவில் மிருதுவும் மதுவும் மணமும் கிண் கிணி வாய்ச் செய்த பருவமும் செவ்வியும் கூட்டி
ஒரு பெண்ணாக வகுத்தால் போலே இருக்கிறவன் அகலகில்லேன் என்கிறாள்

ஸ்ரீ மன் நாராயணன் -நலமுடையவன் -மங்கை உறை மார்பன் -நித்ய அநபாயினி யான பிராட்டி
எனக்குத் தேனே பாலே கன்னலே அமுதே என்கிற போக்யதையைப் பற்றச் சொல்கிறாள்

ஸர்வ கந்தஸ் -ஸர்வ ரஸ -என்கிற போக்யதையைப் பற்ற அகலகில்லேன் அகலகில்லேன் -என்கிறாள்

தாமரைகளுக்குள்ளே ஸுகந்தியாதிகளின் அளவு இறே –
அவனது ஸர்வ காந்தத்துக்கும் ஸர்வ ரஸத்துக்கும் நேர் நிற்க வற்றோ –
ஆகையாலே -இறையும் அகலகில்லேன் -என்கிறாள் –

எவன் அவன் என்று திவ்யாத்ம ஸ்வரூபம் சொல்கிறது –
வ்யாபகமும் ஸ்ரீ யபதியாயே வியாபிப்பது

ஆகையாலே உயர்நலம் உடையவன் யாவன் ஒருவன் அவன் ஸ்ருதி ப்ரஸித்தனானவன் –
எனக்கு மயர்வற மதிநலம் அருளி -சரணவ் சரணம் ப்ரபத்யே -என்று பற்றும்படி

நிகரில் புகழாய் -என்கிற வாக்யங்களாலே
புருஷகார சாபேஷனான அதிகாரியைச் சொல்கிறது –
புருஷகார சாபேஷமும் அதிகாரி சாபேஷமும் ஆனவன் என்று சரண்யனைச் சொல்கிறது –

புருஷகாரமுமாய் ப்ரபாயையுமாய் இருக்கும் என்று பிராட்டியைச் சொல்கிறது –
சரணவ்-திருவடிகளை
சரணம் -உபாயமாக
ப்ரபத்யே -பற்றுகிறேன்
என்றது அதிகாரி ஸ்வரூபம்

மயர்வற மதிநலம் அருளினன் என்றது -பக்தி ரூபா பன்ன ஞானமுடைய அதிகாரி

நிகரில் புகழாய் யுலகம் மூன்று யுடையாய் என்னை ஆள்வானே – என்ற அதிகாரி –

நிகரில் புகழாய் -என்றது ஸாத்ய உபாயங்கள் -ஸித்த உபாய பூதனானவனுக்கு ஸஹாயமாக வேண்டா என்கிறது –

நிகரில் -தத் ஏக உபாயமானவனே -என்றபடி
இந்த புகழை யுடையவன் யாவன் ஒருவன் அவன் மயர்வற மதிநலம் அருளினான்

உபாயாந்தரங்களை ஸ வாசனமாக விடுவித்து -அவனே உபாய உபேயம் -என்கிற ஞான ப்ரேமங்களை நிர்ஹேதுகமாக அருளினவற்றை இறே
நிகரில் புகழாய் -என்றது -அதாவது
சரணவ் சரணம் என்கிற தத் ஏக உபாயத்வம்

நிகரில் புகழாவது -நித்ய விபூதியில் நித்ய முக்தருக்கும் அதிபதியாய் இருக்குமதும்
ஸ்வேத தீப வாசிகள் ஸேவிக்க இருக்குமதும்
அயோத்யா வாசிகளுக்கு அபி ராமனாய் வசிஷ்டாதிகள் நடுவே இருக்குமதும்
த்வாரகையிலே யாதவர்கள் ஸேவிக்க இருக்குமதும்
நிகரில் புகழ் அல்ல

அந்தர்யாமித்வமும் கண் கொண்டு காண ஒண்ணாது -பிரமாண ப்ரஸித்தி அத்தனை
அவை ஒன்றுக்கு ஓன்று அதிசயமாகையாலே நிகராக இருக்கும்

இவர் நிகரில் புகழாய் என்றது
காகமும் வானரமும் வேடுமானவர்களுக்கும் முகம் கொடுத்துக் கொண்டு நிற்கிற நிலை

அதிலும் அவஸ்துவான எனக்கும் நிர்ஹேதுகமான அருளினை அருளுக்கு ஸத்ருசம் உண்டோ என்கிறார்
காகமும் வானரமும் நித்ய ஸூரி கோடியிலே யாம்படி யன்றோ என் நிலை
அவற்றுக்கு முகம் கொடுத்தது புகழ்
எனக்கு அருளினது நிகரில் புகழ்

கிருபா குணத்துக்கு வாத்சல்யாதிகள் நேர் ஆக மாட்டாது
எங்கனே என்னில்
கிருபை தானே ஸர்வ குணங்களுக்கும் காரணமுமாய் ப்ரேரமுமாகையாலே அருளினன் என்கிறதையே நிகரில் புகழாய் என்கிறது

ஆக
கிருபா பிரேரிகை பிராட்டி
கிருபா ப்ரேர்யன் எம்பெருமான்
கிருபா பாத்ரம் அடியேன்
ஆகையால் பகவானுக்கு வாத்சல் யாதிகள் புகழ் அல்ல
கிருபையே அடியவருக்குப் புகல் ஆகையாலே
நிகரில் புகழாய் என்றது காருண்யா ரூபயா என்றதையே –

ப்ரபத்யே -எவன் அவன் -உலகம் மூன்று யுடையாய் -என்னை ஆள்வானே –
இப்படி இருக்கிறவன் யாவன் ஒருவன் அவன் கிருபையாலே
வாத்சல் யாதி குண ப்ரவாஹம் ப்ரவஹிகையாலே மூன்று உலகமும் நிறைந்தது
என் அளவும் பூரித்தது

லோக்யத இதி லோகே -என்றதில் தாமும் ஒருவனாய் இருக்க
என்னை ஆள்வானே -என்றது
த்ரிவித சேதனரையும் அதிகார அனுகுணமாக நியமித்து
இவரை கிருபா அனுகுணமாக நியமித்தது
அத்யந்தம் பாரதந்தர்ய பரா காஷ்டையான -பூசும் சாணத்தில் படியே
தனக்குப் போக்யமாகக் கொண்டு அருளுகிறபடி

பத்தர் -லீலைக்கும்
முக்தர் கிருபைக்கும்
நித்யர் கைங்கர்யத்துக்கும் ஆனால் போலே
இவர் போக்யதைக்கே வடிவானவர்
ஆகையால் தன் உகப்பில் வருவார் இவர் ஒருவரே ஆகையாலே
என்னை ஆள்வானே -என்று அவனுக்கு நிரூபகம் ஆய்த்து –

உத்தர வாக்கியம் -ஸ்ரீ மதே நாராயணாய நம –அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன் –
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திரு வேங்கடத்தானே

ஸ்ரீ மதே -பெரிய பிராட்டியாரோடே கூட இருந்தவனுக்கு – அயர்வற -அசர்வு அற்ற அமரர்கள் –
அம்ருத ஆனந்த மக்நரானவர்கள் பரிசர்யை பண்ண வீற்று இருக்கும்
ஒண் டொடியாள் திருமகளும் நீயும் நிலா நிற்ப

நிகரில் அமரர்
ப்ரஹ்மாதிகள் அமரத்துவம் கர்மம் அடியாக வாகையாலே நிகர் உண்டு
இவருக்கு பகவத் அனுபவத்தால் வந்த அமரத்துவம் ஆகையால் நிகர் அற்று இருக்கும் –

முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானை
கடலில் அம்ருத தாசிகள் அன்று
நிகரில் அமரராவார் -அமுத்தினால் வரும் பெண்ணமுத்துக்கும் ஆராவமுத தாஸிகளான அமரர்

முனி முக்தர்
கணங்கள் பத்தர்
உயர்வற மயர்வற அயர்வற துயரற -என்று நித்யர் முக்தர் பத்தர் ஈஸ்வரன் இவர்கள் அடைப்பிலே துயர் தீர்ந்தது
உபய விபூதி நாதனான தனக்குத் திரு வேங்கட முடையானான பின்பு எல்லார் கடன்களும் வெந்தாய்த்து

ஆகையால் ருணம் ப்ரவர்த்தம் இவ என்றவன் ஆகையால் திருவேங்கடத்தானே என்று நிரூபகமாய்த்து

திரு வென்றது சீரிய நிதியாயும் அஹம் அந்நமாயும் விரும்பும் திருவேங்கடத்தானை
உலக்கங்களுக்கு எல்லாம் ஓர் உயிர் ஆனவனே

ஸ்ரீ மதே நாராயணாயா -அயர்வறும் அமரர்கள் அதிபதி –
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானை

நம -துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
புகல் ஒன்றில்லா அடியேன் உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தானே

நம தொழுது எழு -உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே
ஆகிஞ்சன்யமும் அநந்ய கதித்வமும் உடைய சேஷ பூதன் துயர் அறு சுடர் அடி யான் அது அடைய
அசரண்ய சரண்யனான உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே
ப்ராப்யமும் அவன் ஆகையாலே மனனே தொழுது வர்த்தி என்கிறார்

————————————

ஆறாவது பத்து விவரணம் முற்றிற்று

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை திருவடிகளே சரணமஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய்மொழி வாசகமாலை — ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை–ஐந்தாம் பத்து விவரணம்-

February 7, 2022

சந்தியும் சந்திப்பதமும் அவை தம்மிலே தழைக்கும்
பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலு கிற்பீர்
வந்தியும் வந்திப்பவரை வணங்கும் வகை அறிவீர்
சிந்தியும் தென் குருகூர் தொழுது ஆட் செய்யும் தேவரையே

நாத முனிக்கு அன்று நாலாயிரமும் உணர்த்தி
போதம் அருள் குருகூர் வித்தகனார் -கோதில்
திருவாய் மொழி வாசக மாலைத் தேனைத்
தரவே எனக்கு அருள் செய்தார் –

———-

கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே! என்றென்று
பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி
மெய்யே பெற்றொழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பார் ஆர்?
ஐயோ! கண்ண பிரான்! அறையோ! இனிப் போனாலே.–5-1-1-

கையார் சக்கரத்தில்
ஸம்ஸாரிகளிலே அந்நிய தமனான என்னை அவர்களையும் திருத்த வல்லேனாம்படி
நிர்ஹேதுகமாக விஷயீ கரிப்பதே என்று அவர் தம் பக்கலிலே பண்ணின உபகாரத்தை
அனுசந்தித்து இனியர் ஆகிறார் –

உயர்வற என்கிற பாட்டை -கையார் சக்கரம் -என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் தேவதாந்தரங்களைப் புகழா நிற்க –
அவை அற்று
உயர்நலம் உடையவனைக்
கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே! என்று
உயர்நலம் யுடையவனுடைய ஞான ஆனந்தங்களோ பாதி
அவன் சின்னமும் திரு மூர்த்தியும் சிந்தித்து ஏற்றினவன் அல்லேன்

உயர்நலம் உடையவன் யாவன் ஒருவன் -அவன் மயர்வற மதி நலம் அருளினன்

பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி
மெய்யே பெற்றொழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பார் ஆர்?
அஹ்ருதயமான சொன்ன வசனத்தை ஸஹ்ருதயமாகச் சொன்னோமாகக் கொண்டு
மயர்வு -அஹ்ருதயம்
புத்தி பூர்வகமாகச் சொன்னேன் அல்லேன்

மதி நலமான பக்தி ரூபா பன்ன ஞானத்தை -அத்தாலே பிறந்த வ்யாமோஹம்
இதர விஷய விரக்தியைப் பிறப்பித்தது
பகவத் விஷயத்தில் ப்ரேமம் விளையும்படி -நிர்ஹேதுகமாக -விளையும் படி அருளினான் -எவன் அவன் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி -எவன் அவன் -அவனாலே பெற்று ஒழிந்தேன்

அஞ்ஞான கந்த ரஹிதரான நித்ய ஸூரி ஸேவ்யன் முன்னே
அஞ்ஞான கார்யமான -பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி
கைம்மை -மெய் கலவாத சுத்தப் பொய்
இத்தால் -பிறரைப் பகட்டுகிற பொய் அன்று -ஸர்வஞ்ஞனையும் பகட்டுகிற பொய் இறே சொல்லிற்று –

மயர்வற மதிநலம் அருளின கிருபை பெருகி -அஹ்ருதயமான யுக்தியை ஸஹ்ருதயமாக்கி
என் பக்கலிலே கிருபையை வர்ஷித்தான்
மயர்வற மதி நலம் பெறுகையாலே சப்தாதிகளைப் புறம் என்று பூர்வ விருத்தத்தைப் பார்த்துச் சொன்ன படி –

பரிபூர்ண விஷயத்துக்குத் தக்கதாகத் தமக்குப் போராமையாலே பொய் என்கிறார்
பரமபதத்துக்குப் போனாலும் இப்பேற்றை அசை இட்டு இருக்கும் அத்தனை

இனி இதில் காட்டில் ஏற்றம் செய்வது இல்லை என்ன
இதுக்கு ஹேது வில்லை என்னா நின்றீர்
பேறோ தான் கனத்து இரா நின்றது -இதுக்கு அடி என் என்ன

விதி வாய்க்கின்று
பகவத் கிருபை கரை புரளப் பெருகி துயர் அறு சுடர் அடி தொழுது எழப் பண்ணா நின்றால்
நம்மால் செய்யலாவது உண்டோ –

துயர் அறு சுடர் அடி -பொய் சேர் -என்கிற துக்க கந்த ரஹிதமாய் -மெய்யான பரஞ்சோதி யானவன் –
தன் திருவடி தொழுது எழும்படி பரமமான கிருபை பெருகப் புக்கால் -அத்தைத் தகைவார் உண்டோ –

விதி வாய்க்கின்று காப்பார் யார்
வாய்க்கின்ற கிருபை மஹா ப்ரவாஹமாகப் பெருக்கு எடுத்த படி
விதி என்கிறார் பகவத் கிருபையை -விதியைத் தப்ப ஒண்ணாமையாலே –
வாய்க்கின்ற கிருபை பெருகி அடியேனை இழுக்கக் காப்பார் யார் –
என் மனனே -ஸ்வ தந்த்ரன் கிருபை காப்பார் யார்

ஏன் காக்க ஒண்ணாதோ என்ன
காப்பார் யார் என்றீரே -எதிர் சூழல் புகுத்தி திரிந்த இடத்தினும் தப்பின நீர் தான் காக்க மாட்டீரோ
நாம் தாம் ஸ்வ தந்திரம் அல்லோமோ -நம் கிருபையைத் தகைய சக்தி இல்லையோ
நம் மார்பில் இருக்கிறவன் இதைக் குறைக்கில் என்ன

ஐயோ! கண்ண பிரான்! அறையோ! இனிப் போனாலே.–
கிருபா ஜநகை யாகையாலும்
கிருபா பரதந்த்ரனான உன்னாலும்
கிருபா பரவசனான என்னாலும் –காக்க முடியாது

இந்த கிருபா ப்ரவாஹத்தை -பல போக்தாவான என்னாலும் -பல ப்ரதனான உன்னாலும் –
பல வர்த்திகையான அவளாலும் தகைய ஒண்ணாது
தகைத்து தான் பார்க்கலாகாதோ என்கிறார்

மித்ர பாவேந என்கிற உனக்கு அஞ்ஞானம் -இவன் தோஷத்திலே விஸ்ம்ருதியும்
ஸர்வ சக்திக்கு இவனை விடும் இடத்தில் அசக்தியும் யுடைய கண்ணபிரானைத்
தொழுது எழு என் மனனே —

ஐயோ! கண்ண பிரான்! அறையோ! இனிப் போனாலே.–என்று
ஹர்ஷத்தாலே உபகார சீலனைப் பார்த்து விண்ணப்பம் செய்து
தன் திரு உள்ளத்தைக் குறித்து உபகார ஸ்ம்ருதியாலே தொழுது எழு என்று உபதேசிக்கிறார் –

———-

பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை
கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்.–5-2-1-

பொலிக பொலிக வில்
ஒன்றும் தேவு -கேட்டுத் திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு மங்களா ஸாஸனம் பண்ணியும்
திருந்தாரைத் திருத்தியும் சொல்கிறார்

ஒன்றும் தேவிலே தான் திருத்திய ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யைக் காண்கைக்காக
நித்ய ஸூரிகள் இங்கே வர
அவர்களையும் வ்யூஹ விபவ ஸ்தானீயரையும் கண்டு மங்களா ஸாஸனம் பண்ணுகிறார்

திரியும் கலியுகம் நீங்கித் தேவர்கள் தாமும் புகுந்து
பெரிய கிதயுகம் பற்றிப் பேரின்ப வெள்ளம் பெருகக்
கரிய முகில் வண்ணன் எம்மான் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
இரியப் புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே.–5-2-3-

உயர்வற என்கிற பாட்டை -திரியும் கலியுகம் என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்தளவும் தேவதாந்தரத்தாலே வந்த உயர்த்தி அற்று
கலி தோஷத்தாலே தேவதாந்தரம் பண்ணித் திரிகிற உயர்த்தி அற்று

உயர்நலம் யுடையவன் எவன் அவன் -மயர்வற மதிநலம் அருளி ஆழ்வாரைக் கொண்டு
ஜகத்தைத் திருத்த
திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களைக் காண
தேவர்கள் தாமும் புகுந்து பெரிய கிதயுகம் பற்றிப் பேரின்ப வெள்ளம் பெருகக்

உயர்நலம் யுடைய ஞான ஆனந்த ஸ்வரூபனாய் ஞான குணகனாய் வேதைக சமைதி கம்யனாலே
மயர்வற மதிநலம் அருள வந்த பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே பர உபதேசம் பண்ண –

அத்தாலே திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களும் ஆழ்வாருமான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யைக் காண
வந்து புகுந்து அவர்களோடே கலந்து ஆதி கிருதயுகம் போலே பர ப்ரஹ்ம ஆனந்தம் பெருகும்படியாக
யாவன் ஒருவன் அருளினான் அவன் பொருட்டு அவர்களுக்கு
பொலிக பொலிக என்று மங்களா ஸாஸனம் பண்ணி உகக்கிறார்

அயர்வறும் அமரர்கள் அதிபதி அவனோடும் கூடி
கரிய முகில் வண்ணன் எம்மான் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
இரியப்
அஸ்ப்ருஷ்ட கந்தரான நித்யரான வைகுந்தன் பூதங்களும்
தடம் கடல் பள்ளிப் பெருமாள் தன்னுடைப் பூதங்களும்
மாதவன் பூதங்களும்
கடல் வண்ணன் பூதங்களான நேமிப்பிரான் தமர் போந்தார்

இரியப் புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே.–
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
ஸர்வ துக்க கந்த ரஹிதமாய் தேஜோ ரூபமான பகவானுடைய திருவடிகளான
சடகோபனை சிரஸா வஹித்து
அந்த சடகோபன் திரு நாமமே உனக்கு தாஸ்ய நாமமாக வஹித்து இருக்கிற
ஸ்ரீ வைஷ்ணவர்கள் சுடர் அடி தொழுது எழு

அந்தப் ப்ரீதிக்குப் போக்கு விட்டுப் பாடி ப்ரேம பாரவஸ்யம் இருந்த இடத்தே இருக்க
ஒட்டாமல் ஆடி எங்கும் இடம் கொண்டனவே

என் மனமே தொழுது எழு வர்த்தி
இஸ் ஸம்ருத்திக்கு மங்களா ஸாஸனம் பண்ணி சூழ்ந்து இருந்து ஏத்தப் பார் –

—————–

மாசறு சோதி என் செய்ய வாய் மணிக் குன்றத்தை
ஆசறு சீலனை ஆதி மூர்த்தியை நாடியே
பாசற வெய்தி அறிவிழந்து எனை நாளையம்
ஏசறும் ஊரவர் கவ்வை தோழி! என்செய்யுமே?–5-3-1-

மாசறு சோதியில்
நண்ணாதார் முறுவலிப்ப -லிலே -ஸம்ஸாரிகள் படுகிற கிலேசத்தை அனுசந்தித்து
அதுக்குப் பரிகாரமாக பகவத் பாகவத ஞானத்தை உபதேசித்துத் திருத்தி
அதுக்கு உபகார ஸ்ம்ருதி பண்ணி
அநந்தரம் திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு மங்களா ஸாஸனம் பண்ணி
இப்படி ஸம்ஸாரிகள் பேறு தலைக்கட்டின வாறே
ஏறாளும் இறையோனில் இழவு தலையெடுத்து
வழி அல்லா வழியில் மடலூர்ந்தாகிலும் கிட்டும் அத்தனை என்று கலங்கின படியைப் பேசினார்

கீழே பாகவத ஸம்ருத்திக்கு மங்களா ஸாஸனம் பண்ணினார்
மலியும் சுடர் ஒளி மூர்த்தியை -என்று வடிவு அழகையும் குணங்களையும் யுடையவனை
பாஹ்ய சம்ஸ்லேஷ அபேக்ஷை பிறந்து கையை நீட்டாக கைக்கு எட்டாமையாலே கலங்கி
மடல் எடுக்கையில் உபமிக்கிறார் –

இந்த உத்யோகத்தைக் கண்டா தோழியானவள் வந்து
தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்று இருக்கக் கடவ உனக்கு சத்ருசம் அன்று
ஆஸ்ரித ரக்ஷணத்திலே தீஷிதனாய் இருக்கிற உன் நாயகனுக்கும் சத்ருசம் அன்று
நம் குடிக்கும் சேராது
மாசாய் விளையும் காண் -என்று
மடல் எடுக்கையை நிஷேதிக்கறதாய் இருக்கிறது

இத்தைத் தோழி சொல்ல அவளைப்பார்த்து நாயகி சொல்கிறாள்

உயர்வற என்கிற பாட்டை மாசறு சோதி விவரிக்கிறது
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் சாதனாந்தரங்களால் வந்த
தேவாதி சரீரங்கள் புண்ய ஷயம் ஆனவுடனே உயர்வு அறும்

உயர்நலம் உடையவன் எவன் அவன் மாசறு சோதியாய் ஞான ஆனந்த ஸ்வரூபனாய் வேதாந்த வேத்யனாய் சவுந்தர்யாதி குண சேஷ்டிதங்கள் எல்லாம் மாசு அற்றதாக இருக்கும் –

ஹேய பிரதிபடமானவன் –
என் செய்ய வாய் மணிக் குன்றத்தை
சிவந்த வாயோடே கூட அசலமானதொரு நீலகிரி போன்ற வடிவை யுடையவன் –

அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் -மாசறு சீலனான ஆதி மூர்த்தியானவன் –
மயர்வற மதி நலம் அருளுகையாலே வந்த பக்தி ரூபா பன்ன ஞானத்தால் பிறந்த ஆசையாலே
ஆசறு சீலனை ஆதி மூர்த்தியை நாடியே பாசற வெய்தி
என்னே வினையேன் எனை யூழி நைவேன்

அவன் நான் மடல் எடுக்க உத்யோகிக்க உத்யோகிக்க ஆக்கம் முற்றி
அவனுடைய வை லக்ஷண்யம் ப்ரகாசிக்கிறபடியாலே
எனக்கு அது தானே ஹேதுவாக அறிவு கலங்கி வருகிறபடியும் பாராய்

அவ்வளவு ஹேய ப்ரத்ய நீகன் காண் –
நான் மடல் எடாது இருக்கை அவ்வடிவுக்கு ஹேயம் காண்
அவ்வடிவை உக்காந்தார்க்குக் கொடான் என்னும் பழியையத் துடைக்கக் காண்
நான் பார்க்கிறது –

பக்தானாம் என்கிற வடிவைத் தனக்கு என்று இருக்கை மாசு இறே -என்ன
ஊரார் பழி சொல்லி ஏசுகை எல்லாருக்கும் குடிப்பழி யன்றோ என்று
மடல் எடாமல் தோழி நிஷேதிக்க

நான் அயர்வறும் அமரர்கள் அதிபதியான அந்த மாசறு சோதியிலே மாலாய் ஆசைப்பட்டு
துயர் அறு சுடர் அடி தொழுது எழுந்து
ஆதி மூர்த்தியை நாடியே என் மனமும் நானும்
பாசற வெய்தி அறிவிழந்தோம்

ஏசறும் ஊரவர் கவ்வை தோழி என் செய்யுமே
ஊரவர் கவ்வை எரு விட்டு -இத்யாதிப்படியே
எனக்கு அது தான் அன்றோ மடல் எடுக்கைக்கு ஹேது என்கிறாள் –

—————-

ஊரெல்லாம் துஞ்சி உல கெல்லாம் நள்ளிருளாய்
நீரெல்லாம் தேறி ஓர் நீளிரவாய் நீண்டதால்
பாரெல்லாம் உண்ட நம் பாம்பணையான் வாரானால்
ஆர்?எல்லே! வல் வினையேன் ஆவி காப்பார் இனியே.–5-4-1-

ஊரெல்லாம் துஞ்சி யில் —
பாரித்த படியே மடலூர ஒண்ணாத படி அஸ்தமித்தவாறே உசாத்துணையும் இன்றிக்கே
ராத்ரியில் விசனம் அனுபவித்தார் –

—-

வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண் துளியாய்
அஞ்சுடர வெய்யோன் அணி நெடுந்தேர் தோன்றாதால்
செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால்
நெஞ்சிடர் தீர்ப்பாரினி யார்? நின்று ருகுகின்றேனே.–5-4-9–

உயர்வற என்கிற பாட்டை -வெஞ்சுடரில் தானடுமால்-என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவாக –
திவா ராத்ரி விபாகம் அற ஊணும் உறக்கமுமாய் இருக்க
எனக்கு ஒருத்திக்குமே விடியாத இருளாயிற்றே

அது தானும் ஊழியாய்
வீங்கிருளின் நுண் துளியாய்
விரஹ அக்னியால் தஹிக்கிறது
அதனாலே இருளும் குளிர்ந்த பனியும் தஹியா நின்றது

லௌகிகர்க்கு திவா ராத்ரி விபாகமாய் காலம் கழிந்து உயர்வு அற்றது
எனக்கு உயர் நலம் யுடையவனைப் பற்றி இருக்கையாலே
இருளும் மோஹ அந்தகாரம் நெடுகா நின்றது –

உயர் நலமுடையவன் எவன் அவன் -அவன் ஞான ஆனந்த ஏக ஸ்வரூபன் ஆனவன் –
எனக்கு மயர்வற மதிநலம் அருளினவற்றால் வந்த பரபக்தி ரூபா பன்ன ஞானத்தாலே
யதா ஸூர்யஸ் ததா ஞானம் ஸந்த்ரோதய சமம் -என்று சொல்லுகிறபடியே

அஞ்சுடர வெய்யோன் அணி நெடுந்தேர் தோன்றாதால்
தன்னுடைய தோற்றரவிலே துக்க நிவ்ருத்தி உண்டாம்படியான
அழகிய சுடரை யுடைய ஆதித்யனும் வருகிறிலன்

பிரளயத்தை நீஞ்சுவாரைப் போலே ராத்ரியையும் இருளையும் நீஞ்சிக்
கரை காணாமல் படுகிற படி

ஆதித்ய உதயத்துக்கு அருணோதயம் போலே அயர்வரும் அமரர்கள் அதிபதி
மோஹ அந்தகார ரஹிதமான நித்ய ஸூரிகளுக்கும் நித்ய ஸூர்யனாய்
ஹேய ப்ரதிபடனானவன் எவன் அவன் ஸூர்ய மண்டல வர்த்தியான
செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால்
கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அஷிணீ -என்கிறபடியே
ஆதித்ய மண்டலத்தில் எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ யப்பதியும் வருகிறிலன்

சிவந்த புகரை யுடைய தாமரை போன்ற கண்களை யுடைய ஸ்ரீ மானும் வருகிறிலன்

ஆதித்யன் வருகிறிலன் –ஆதித்யன் வந்தாலும் இருள் வர சம்பாவனை உண்டு இறே –
அஸ்தமிதியாத ஆதித்யனும் வருகிறிலன்
ஸூர்ய பிரகாசம் ப்ராதேசிகமாய் இருக்கும்
அயர்வறும் அமரர்கள் அதிபதியான நித்ய ஸூரி சேவிதமான ஸூர்யன்
உபய விபூதிக்கும் ப்ரகாசத்தைப் பண்ணுகிற ஆதித்யன் இறே
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -என்னக் கடவது இறே

ஸ்ரீ மானான நாராயணன் சுடர் அடி -துயர் அறு சுடர் அடி தொழுது எழாமல் இருந்த என் மனனே –
நெஞ்சிடர் தீர்ப்பாரினி யார்? நின்று ருகுகின்றேனே.–
ஆந்தரமான மநோ துக்க அந்தகாரத்தைப் போக்குவார் யார்
பாஹ்ய அந்தகாரம் போக்கும் ஆதித்யனும் வருகிறிலன்

ஆந்தரமான துக்க அந்தகாரம் வைரம் பற்றின இருள் இறே
அத்தைப் போக்கும் போது நிலவனுமாய் அந்தரங்கமானவனே வேணும்
ஞானமாகி ஞாயிறாகி -என்னக் கடவது இறே

நின்று உருகுகின்றேனே –
விலக்ஷண விஷயம் உருக்க உருகுகிறது
தர்மி லோபம் பிறக்கவும் ஒட்டாது இறே
இன்னமும் ஒருக்கால் காணலாமோ என்கிற ஆசையாலே இழவு ஜீவிக்க ஒட்டாது என்கிறார் –

——–

எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர்!
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
சங்கி னோடும் நேமி யோடும் தாமரைக் கண்களோடும்
செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என் நெஞ்சமே.–5-5-1-

எங்கனேயோ வில் –
இங்கன் அதி மாத்ர ப்ராவண்யம் ஆகாது என்று நிஷேதிக்கிற தாய்மாரைக் குறித்து
உங்கள் ஹித வசனம் கேட்க ஒண்ணாத படி பண்ணா நின்றது -நம்பியுடைய வடிவு அழகு என்று
பண்டு அனுபவித்த நம்பியுடைய அழகு மறக்க ஒண்ணாத படி நெஞ்சிலே கிடைக்கையாலும்
இப்போது அனுபவிக்கப் பெறாமையாலும் -ப்ரீதி அப்ரீதி சமமாகச் செல்கிறது

கழிய மிக்கதோர் காதலள் இவள் என்று அன்னை காணக் கொடாள்
வழுவில் கீர்த்தித் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
குழுமித் தேவர் குழாங்கள் கைத் தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே
எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே.–5-5-10-

உயர்வற என்கிற பாட்டை கழிய மிக்கதோர் -என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்தளவாக
காதல் அளவு பட்டு இருக்கும் இறே
அங்கன் அன்றிக்கே
உயர் நலம் யுடையவன் இடத்தில் காமம் பகவத் ஆனந்தாதிகளிலும்
கழிய மிக்கதோர் காதல் -இதர விஸஜாதீயமான காதல்

அன்றிக்கே
நாள் கழிய கழியப் பெருகி வருகிற காதல்

சோ கச்ச கில காலேந கச்ச தாஹ்யப கச்சதி மம சா பஸ்யத காந்தாம் அஹன்யஹநி வர்த்ததே

நாட்டார் அபிமத விஷயத்தைப் பிரிந்த நாள் ஒரு படியும் பின்பு ஒரு படியாய் மறந்து போகா நிற்பர்கள்
அங்கன் இன்றிக்கே -நாள் செல்ல செல்ல சோகம் பெருகி வாரா நின்றது –
அன்னை காணக் கொடாள்
இவள் ஒரு விஷயத்திலே காதல் பண்ணக் கண்டேனாக வல்லேனோ என்று
இருக்கிறவளும் காண ஒட்டு கிறிலள்

ஆனால் இப்போது இங்கன் படுகிறது என் என்னில்
தர்மி லோபம் வரும்படி பிரவணையாக ஒட்டார்களே
ஆச்சர்யம் உண்டாய் மேல் நடக்க வேணும் என்று இருப்பார்களே –
காண்கை யாவது அனுசந்திக்கை
நெஞ்சு என்னும் உள் கண் -என்னக் கடவது இறே
நெஞ்சையும் கூட வாய் கட்டா நின்றாள் என்ன

உனக்கு இக்காதல் விளைந்தபடி என் என்ன
மயர்வற மதி நலம் அருளினன்
உங்கள் இடத்தில் ஆசையான மயர்வை அறுத்து
ஆனந்தாதி குண விசிஷ்டனைப் பற்றின காதல் மிக்கது

உயர்வற உயர் நலம் யுடையவன் எவன் அவன் -மதிநலம் அருளினவன் எவன் அவன் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
வழுவில் கீர்த்தித் திருக் குறுங்குடி நம்பியை
மதிநலமான பக்தி ரூபா பன்ன ஞானம் அருளப் பெற்ற நான் கண்ட பின்

வழுவில் கீர்த்தி -குறைவற்ற கீர்த்தி
அக்கீர்த்திக்கும் அவனுக்கும் பிரிய ஸ்திதி இல்லாதால் போலே
அவனை ஒழிய ஸ்திதி இல்லாத நான் கண்ட பின்

அயர்வறும் அமரர்கள் அதிபதியை
குழுமித் தேவர் குழாங்கள் கைத் தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே
அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்தராய் அபர்யாப்த்த அம்ருத தாஸிகளான
குழுமித் தேவர்கள் கூட்டம் கூட்டமாய் திரள் திரள அவர்கள்
கிண்ணகத்தில் இழிவாரைப் போலே கை கோர்த்துக் கொண்டு சவுந்தர்ய அம்ருத சாகரத்தில் இழிவார்கள்

அவயவ சோபை -ஆயுத சோபை -ஆபரண சோபை -ஸ்வரூப ரூப குண விபூதிகள் ஆகிற சுழிகளிலே
அமிழ்ந்து நீந்தி நீந்தி சேஷ வ்ருத்திகளைப் பண்ண இருக்கிறவன்
திருக்குறுங்குடியிலே ஸகல குண ஸம்பூர்ணனாய் வந்து நின்ற நம்பியை அபூரணனான நான் கண்டபின் –

துயர் அறு சுடர் அடி தொழுது எழுகை
தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே எழுவதோர் உரு
ஹேய பிரதிபடமாய் நிரவதிக தேஜோ ரூபமான திருவடிகளிலே கைகள் ஆரத் தொழுது எழு என் மனனே என்று
என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே.–
நித்ய ஸூரிகள் நடுவே தோன்றுமா போலே என் நெஞ்சுக்குள்ளே பிரகாசியா நின்றது

ஆர்க்கும் அறிவு அரிதே
எனக்கு மறக்க ஒண்ணாதாப் போலே ஆயிற்று –
ஸ்வ யத்னத்தாலே அறிவாருக்கு அறிய ஒண்ணாது இருக்கிற படி என்கிறார்

————–

கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்
கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலத் தீசன் வந்து ஏறக் கொலோ?
கடல் ஞாலத் தீர்க்கிவை என் சொல்லுகேன்?
கடல் ஞாலத்து என்மகள் கற்கின்றவே.–5-6-1-

கடல் ஞாலத்தில்
அப்ரீதி அம்சமே தலையெடுத்து ஆற்றாமையால் அணுகரித்துத் தயாரிக்கிறார் –

——–

கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
வாய்ந்த வழுதி வளநாடன் மன்னு
குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து
ஆய்ந்த தமிழ்மாலை ஆயிரத்துள்
இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில்
ஏந்து பெருஞ் செல்வத்தராய்த் திருமால்
அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே.–5-6-11-

உயர்வற என்கிற பாட்டை கூந்தல் மலர் மங்கைக்கும் -என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்மானந்தத்து அளவும் ஸ்வர்க்காதி லோகங்கள் -உத்க்ருஷ்டமான ரத்நாதிகள் –
ரஸவத் பதார்த்தங்கள் -வேத சாஸ்த்ராதிகள் -பிரம ருத்ராதிகளான தேவர்கள்
ஸ்ருஷ்ட்டி ஸ்திதி ஸம்ஹாராதிகள் எல்லாம் நானே செய்தேனே என்று தன்னை
ஜகத் காரணனான ஸர்வேஸ்வரனாக அநு கரித்து இருக்கக் கண்ட
திருத்தாயாய் வினவ வந்தாருக்குச் சொல்கிறாள்

உயர்வற உயர்நலம் யுடையவன் எவன் அவன்
கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்-குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
கூந்தல் மலர் மங்கைக்கும் –சர்வேஸ்வரனுடைய ஐஸ்வர்யத்துக்கு ஹேது பூதையாய் இருக்கும் -பெரிய பிராட்டியார்
மண் மடந்தைக்கும்-அதுக்கு விளை பூமியாய் இருக்கும் ஸ்ரீ பூமிப் பிராட்டியார்
குல ஆயர் கொழுந்துக்கும் -அதனுடைய பல ரூபையாய் இருக்கும் நப்பின்னை பிராட்டியார்
கேள்வன் தன்னை–ஆக உகார வாஸ்யைகளான இவர்களை யுடையன் என்கிறது –
இவர்களுக்குப் பதியாய் உள்ளவனை

இத்தால் ஓர் அவதாரம் மாத்ரம் அன்றிக்கே
உபய விபூதி நாதனான பூர்ண விஷயத்திலே அநு கரிக்கிறாள் என்று தோற்றி இருக்கும் படி –

இதற்கு ஹேது
உயர்வற உயர்நலம் யுடையவன் யாவன் ஒருவன் அவன் மயர்வற மதிநலம் அருளினவன் ஆகையால்
வாய்ந்த வழுதி வளநாடன்
மயர்வற -அவித்யாதிகள் வாஸனையோடே அற்று
மதிநலமான பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே அனுகரித்துத் தரிக்கப் பார்த்துக் கிட்டின படி
அதாவது
பாவநா ப்ரகர் ஷத்தாலே ஸாஷாத் கரிக்கை

மன்னு குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்த
அமரர்கள் அதிபதி துயர் அறு சுடர் அடி தொழுது
நித்ய ஸூரி நிர்வாஹகனானவன் வரையாதே ஸர்வ ஸமாஸ்ரயணீயமான திருவடிகளை ஆஸ்ரயித்து
இருக்கும் அடியாரைப் பூசிக்க நோற்றார்களே

இந்த லோகத்திலே எல்லாரும் கொண்டாடும்படி ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யை யுடையராய்
ஸ்ரீ மத் புத்ரர்களை ஆராதிக்கப் பெறுவார்கள்

ஆழ்வார் பகவத் பாகவதர்களை ஆராதித்த படி இவர் அனுகாரத்தாலே ஸ்ரீ யபதிக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும்
பிரியமாகத் தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல்மாலைகள் சொன்னபடி
இது கற்றவர்களுக்கும் பகவத் பாகவதருக்கு பிரியமான வ்ருத்தி பண்ணி இருக்கப் பெற்றவர்கள்

இப்பத்தைக் கற்றவர்கள்
சுடர் அடி தொழுது எழு என் மனனே -என்று இருக்கப் பெறுவார்கள் –
இப்படி அனுகரித்து அனுபவிக்கிறார்

கர க்ருதம் அபராதம் ஷந்தும் அர்ஹந்தி சந்த –

————

நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும் இனி உன்னை விட்டொன்று
ஆற்ற கிற்கின்றிலேன் அரவின் அணை அம்மானே!
சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கலநகர்
வீற்றிருந்த எந்தாய்! உனக்கு மிகை அல்லேன் அங்கே.—5-7-1-

நோற்ற நோன்பிலே
இப்படி அனுகரித்த அளவிலும் வந்து முகம் காட்டாமையாலே
தானே உபாய அனுஷ்டானம் பண்ணி வருகிறாள் என்று இருந்தவனாக வேணும் என்று நினைத்து
தம்முடைய உபாய சூன்யதையேச் சொல்லி
வான மா மலை திருவடிகளில் வேர் அற்ற மரம் போலே புகல் அற்று விழுந்து சரணம் புக்கார் –

ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே! கண்ணா! என்றும் எனை ஆளுடை
வான நாயகனே! மணி மாணிக்கச் சுடரே!
தேனமாம் பொழில் தண் சிரீவர மங்கலத்தவர் கை தொழ உறை
வான மா மலையே! அடியேன் தொழ வந்தருளே.–5-7-6-

உயர்வற என்கிற பாட்டை -ஏனமாய் நிலம் கீண்ட-என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும்
ஸாஸ்த்ர பலம் ப்ரயோத்த்ரி -என்று தம் தாம் உபாய அனுஷ்டானத்தாலே பலம் பெறா நிற்க
உமக்கு இப்படி உபாயம் உண்டோ என்ன

உன்னுடைய உயர் நலத்துக்குத் தக்க உபாயம் உண்டோ -என்கிறார்
உயர் நலம் யுடையவன் யாவன் ஒருவன் அவனே எனக்கு உபாய உபேயங்கள் இரண்டும் என்கிறார்
நோற்ற நோன்பிலேன் -என்று உபாய சூன்யத்தை அருளிச் செய்து
இங்கே கைங்கர்யத்தை அபேக்ஷிக்கிறார் –

ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே! கண்ணா! என்றும் எனை ஆளுடை
ஆபன்னரானார் -அறிவிக்கையும் மிகையாம் படி அன்றோ உன் படி இருப்பது
ரக்ஷணம் ஒரு தலையானால் உன்னைப் பேணாதவன் அன்றோ –

ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே! கண்ணா!
மஹா வராஹமாய் -பிரளயம் கொண்ட பூமியை எடுத்தாய்
கிருஷ்ணனாய் வந்து அவதரித்து
ஸம்ஸார பிரளயம் கொண்ட என்னை எடுத்து
மயர்வற மதிநலம் அருளி
பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே உன் படியை அறிவித்து

பிரளயம் கதையான பூமிக்கு உதவியது
தமக்கு உபகரித்ததாய் இருக்கிற படி

என் அப்பனே கண்ணா
என்னுடைய ரக்ஷணத்துக்கு ஏதேனும் முகம் பண்ண வேணுமோ
என்னுடைய ரக்ஷணத்துக்கு ஒரு கோலம் கொள்ள வேணுமோ
கண்ணன் கோள் இழை வாள் குணம் இறே இவருக்கு ரக்ஷகம்

என்றும் என்னை ஆளுடை வான நாயகனே
மயர்வற மதிநலம் அருளினவன் யவன் அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
தனக்கு ஈடானரோடு இருக்கும் போது இவர் இடையாட்டமாய்த்து ஆராய்ந்து போருவது

இவர் சத்தத்தையே தொடங்கி கைக்கொண்டு நோக்கிக் கொண்டாய்த்து போருவது

மணி மாணிக்கச் சுடரே
இவர் உளரான பின்பு ஓர் ஏற்றம் பண்ணிக் கொடுக்கை அன்றிக்கே
அடியே பிடித்து நோக்கிக் கொண்டு போந்து
மயர்வற மதி நலம் அருளி
இச்சை பிறந்தவாறே -அவ்வளவிலே -அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன்
நித்ய ஸூரிகளுக்கு விடும் படியையும் இவருக்கு விட்டான்

மணி மாணிக்கச் சுடரே
ரத்ன ஸ்ரேஷ்டம் என்னுதல்
மணியினுடையவும் மாணிக்கத்தினுடையவும் தேஜஸ்ஸை யுடைத்தாய் இருக்கை என்றுமாம் –

அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
தேனமாம் பொழில் தண் சிரீவர மங்கலத்தவர் கை தொழ
தேனை யுடைத்தான -மாம் பொழிலை யுடைத்தாய் -ஸ்ரம ஹரமான ஸ்ரீ வர மங்கலத்தில் உள்ளார்

அடிமை செய்ய வீற்று இருக்கிற
ஸ்வரூப அனுரூபமான கைங்கர்யத்தைச் செய்ய எழுந்து அருளி இருக்கிற வான மா மலையே
உன் துயர் அறு சுடர் அடி தொழுது எழ -வான மா மலை யத்ருப்த அம்ருத ரூபரான நித்ய ஸூரிகளை
அடிமை கொண்டு இருக்கிற வேண்டப்பட்டு போலே காணும் இங்குள்ளார் அடிமை செய்ய இருக்கிற இருப்பும்

வான மா மலையே உன் துயர் அறு சுடர் அடி அடியேன் தொழுது எழும்படி வந்து அருளே

விஸ்லேஷ கந்த ரஹிதமாய் -ஸம்ச்லேஷ வர்த்தகமாய் நிரவதிக தேஜஸ்ஸை யுடைய திருவடிகளிலே
சேஷபூதனான நான் அடிமை செய்து வாழும்படிக்கு ஈடாக என் முன்னே நாலடி நடந்து வர வேணும்

அடிமை செய்கையாவது
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி -என்னுமா போலே
அந்நடை அழகு கண்டு மங்களா ஸாஸனம் பண்ணுகை

வந்து அருளே
என் கண் வட்டத்திலே உலாவி நின்று அடிமை கொள்ள வேணும் என்கிறார் –

———-

ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்கு கின்ற நெடுமாலே!
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே–5-8-1-

ஆராவமுதில்
அங்கு சரணம் புக்க இடத்திலும் தம் அபேக்ஷிதம் பெறாமையாலே திருக்குடந்தை அளவும் வந்து –
ஆராவமுத ஆழ்வார் திருவடிகளிலே விழுந்து கூப்பிட்ட இடத்திலும்
இவரைக் குளிரக் கடாக்ஷித்தல் வினவுதல் செய்யக் காணாமையாலே
இன்னும் எத்தனை திருவாசல் தட்டித் திரியக் கடவேன் என்று அவாப்தியோடே தலைக்கட்டினார்

உயர்வற என்கிற பாட்டை ஆராவமுது விவரிக்கிறது
எங்கனே என்னில்
உயர்நலமுடையவன் எவன் அவன்
ஸ்ரீ யபதியாய் -அவாப்த ஸமஸ்த காமனாய் -ஞான ஆனந்த ஏக ஸ்வரூபனான ஸர்வேஸ்வரன்
செத்தனர் இடத்திலே ஒரு கிருபை ஜனித்துத் திரு உள்ளம் பற்றுகிறபடி

நாம் அம்ருத ஸ்வரூபனாய் இருக்க -சேதனரும் அம்ருத ஸப்த வாஸ்யராய் இருக்க –
அம்ருதந்திவி -என்று நித்ய விபூதியும் அம்ருதம் என்ற பேராய் இருக்க
நாம் அம்ருத ப்ரதானாராய் இருக்கிற இருப்பை நித்ய முக்தர்கள் அனுபவித்து அம்ருத மக்நராய் இருக்க

லீலா விபூதியார் இழக்க ஒண்ணாது என்று -அவர்களைத் திருத்திக் கரை மரம் சேர்த்து
அவர்களும் அவர்யாப்த அம்ருதத்தைப் புஜிக்கத் தக்கதாக ஒருவரை உண்டாக்குவோம் என்று பார்த்து
ஆழ்வார் இடத்திலே திரு உள்ளம் பற்றி அவருக்கு மயர்வற மதிநலம் அருளி
ஆழ்வாரும் மயர்வற மதி நலம் அருளப் பெற்று அபர்யாப்த்த அம்ருதத்தை அனுபவித்து –
அனுபவ கர்ப்ப உபதேசம் பண்ணுகிறார்

உயர்வற உயர் நலம் என்பது –ஆராவமுதே -என்றபடி
உயர்வு -மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தம் அளவாக
ஒருவர் ஆனந்தம் ஒருவருக்கு இன்றிக்கே இருக்கும் –
அதுவும் அல்பம் ஆய்த்து -ஆகையாலே பர ப்ரஹ்ம ஆனந்தத்தை ஆராவமுது என்கிறது –

எவன் அவன் ஆராவமுதே -என்கிறவன் -உன் அழகாலே என்னை உருக்குகிற உன்னைக் கண் வளரக் கண்டேன்
குளிர நோக்குதல் -அணைத்து அருளுதல் -செய்யக் காண்கிறிலேன் -என்கிறார்

ஆராவமுதே
அனுபவியா நின்றாலும் க்ரம பிராப்தி பற்றாத விஷயத்தைப் பிரிந்தார் எங்கனே ஆறி இருக்கும் படி
முற்பட தர்சனமாய்
அநந்தரத்திலே அணுகிப்
பின்னை ஸ்பர்சமாய் –இப்படி இறே அனுபவ பிரகாரங்கள் –
அத்தனை க்ரமம் பார்த்து இருக்க ஒண்ணாத படியாய் இருக்கை

நலமுடையவன் என்று -ஆனந்த குண நிரூபகம் -ஆராவமுதே என்று நிரூபகம்
உயர் நலம் என்றும் அபர்யாப்த்த அம்ருதம் என்றபடி

எவன் அவன் -ஆராவமுது
கடலில் உப்புச்சாறு குடிப்பார்க்குத் தேவ யோனியிலே பிறக்க வேணும் -ப்ரஹ்ம சர்யம் அனுஷ்ட்டிக்க வேணும் –
இத்தனையும் பட்டால் ஸக்ருத் ஸேவையாய் இருக்கும்

இது அங்கன் அன்றிக்கே ஸர்வாதிகாரமாய் -ஸதா ஸேவ்யமுமாய் –
ப்ரஹ்மசர்யாதி வைகல்யம் உண்டானவையும் தானே பரிக்ரஹிக்கக் கடவதாய் இருக்கும்

அடியேன் எவன் அவன் -சுருதி பிரசித்தமான திவ்யாத்ம ஸ்வரூபனாய்
அபார்யாப்த்த ஆனந்த ஸ்வரூபவனானவனுக்கு -அடியேன் -சேஷபூதன் –
சேஷத்வ அம்ருத வாஸ்யனான அடியேன் –

ஆராவமுதே -என்று சம்போதிக்கையாலே அம்ருத ஆனந்த ஸ்வரூபனான சேஷி யானவன்
இவனை மேல் மேல் என பர்யாப்தி பிறவாத படி திருஷ்ணையை விளைவிக்கிற படி –
அபர்யாப்த்த அம்ருதம் என்றால் பரியாப்தி பிறவாது இறே தனக்கும் தன் தன்மை அறிவரியான் இறே

ஆராவமுதே -இத்திருவாய் மொழியிலே இவருக்கு உண்டான ஆற்றாமைக்கு எல்லாம் பீஜம் இப்பதமாய்த்து

அடியேன் -மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஸ்வரூபத்தால் சொல்லுகிறார் அல்லர்
போக்யதைக்குத் தோற்றுப் புல் கவ்விக் சொல்கிறார்
பரவாநஸ்மி -என்கிறவர்
குணைர் தாஸ்யம் உபாகத -என்றாப் போலே

உடலும் நின்பால் அன்பாய
சேஷத்வம் ஆத்மாவுக்கு ஸ்வரூபமானால் தேகம் அதற்கு விரோதியாய் நிற்கும் நிலை குலைந்து
அஹம் என்று இருக்கக் கடவ இவர் தாம் அடியேன் என்றது விஷயத்தினுடைய போக்யதா அதிசயம் இறே

அப்படியே சரீரமும் விஷயாதீனமாக அழிந்த படி
உடலும் -என்கிற அபி சப்தத்தாலே அடியேன் சேதனன் ஆகையாலும்
மயர்வற மதிநலம் அருளுகையாலும் அருளின பக்தியாலும் –
பக்தி ரூபா பன்ன ஞானமானது -பெருகுமால் வேட்க்கையாலும் -உருக அடுக்கும்
உடலும் -அசேதனமான சரீரமும் உருகின படி

அப்படி அருளினவன் யவன் ஆராவமுதான நின்பால் அன்பாயே
அன்பு தான் வடிவு கொண்டால் போலே யாய்த்து
சேஷத்வ ஆகாரனான ஆத்மாவைத் தன் வழியே இழுக்கை தவிர்ந்து அதன் வழியே தான் ஒழுகா நின்றது

ஆக
ஞான மயமான ஆத்மாவாதல்
அதற்குத் தோள் தீண்டியான ஞான பிரசர த்வாரமான மனஸ்ஸாதல் அன்றிக்கே
அவற்றுக்கு அவ்வருகான த்வங்மாம்ஸமேதோஸ்தி மயமான சரீரமும் அழியும்படி யாய்த்து –

நின் பால் அன்பாயே
சேதன அசேதன விபாகம் அற உருக்க வல்ல உன் பக்கலிலே அன்புக்கு ஆஸ்ரயமாகிறது தவிர்ந்து
அன்பு தானே ஒரு வடிவு கொண்டால் போலே இரா நின்றது வஸ்து வை லக்ஷண்யத்தாலே ஆராமை மிக்க படி
சந்த்ரகாந்தம் உருகிற்று என்றால் அங்கு சைதன்யம் இல்லை இறே

அப்படியே மதி நலம் அருளின நின்பால் அன்பாய
அன்பு தான் நீராய் அலைந்து ஸமுத்ர தரங்கம் போலே அலை எறியா நிற்கச் செய்தே
ஆரா உடல் அன்பாய் -அன்பு நீராய் -நீர் தான் பொங்கி அலை எறியா நின்றது -மதி நலம் பெருகுகிறபடி

ஸ்ரவண மனனாதிகளாலே வருகிறது அன்றே -விஷயம் அழிக்க அழிகிறது அத்தனை
அனுபவ பரிவாக ரூபமான தசா விசேஷங்கள் மேல் மேல் எனக் கிளர்ந்து வாரா நின்றது –
அருளின பக்தி ரூபா பன்ன ஞானத்தினுடைய பரிவாஹம் இருக்கிற படி

ஆரா -கரைய -நீர் தன் பக்கலிலே அகப்பட்டதைக் கரைத்து தான் கரையாது இருக்கு மாய்த்து
இது அங்கன் அன்றிக்கே நீர் தானாயத்துக் கரைகிறது -அன்பு நீரானால் நீர் தான் கரையத் தட்டில்லை இறே

இத்தலை அளவு இது ஆனால் அத்தலை செய்கிறது என் என்னில்
உருக்குகின்ற
கீழ் உருக்கின கிரமம் சொல்லிற்று
மேல் உருக்குகிறது சொல்லுக்கு அடங்காது இறே
ஆகையால் உருக்குகின்ற -என்றது

அழிக்கைக்கு அடி இட்டது அத்தனை யாய்த்து
அழிப்பாளானவன் ஆபரணாதிகள் என்று பாராதே உருக்கி அழிக்குமா போலே காணும் அவன் தனக்கு
தேசமான அணிகலனும் என் கை கூப்பிச் செய்கை -என்கிறது இறே

ஆழ்வாருக்கு உள்ள உடலை உருக்கி அழிக்கும் அத்தனையோ என்னில்
நெடுமாலே
இவரது மால்
அவனது நெடுமால்
எதிர்த்தலையில் அழிவு கண்ட பின்பு இறே இத்தலையில் அழிவு

அவனுடைய வ்யாமோஹம் பார்க்கும் போது இவரது ஒன்றும் போராத படியாய் இருக்கும்
இவருக்கு ஸாத் மிக்க ஸாத் மிக்கப் பிறந்த அவஸ்தா விசேஷம்

அவன் அயர்வற அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து
ஆறும் இல்லாதவன் ஒருவனைப் பெற்றால் போலே ஆழ்வார் அவனுக்கு ஆராவமுதமான படி

ஆழ்வாருக்கு நாக்குக்கு மாதரம் ரசித்தது
மதிநலம் பெற்ற இவர் அவனுக்கு ஸர்வ வித போக்யமுமான படி
நெடு மாலுக்குப்
பூசும் சாந்து
புனையும் கண்ணி
வாசகம் செய் மாலை
வான் பட்டாடை
தேசமான அணிகலன்
உருவும் ஆர் உயிரும் உடனே உண்டான்
தான் என்னை முற்றப் பருகினான்
என்கிற அஹம் அன்னம் முதலிய போக்யங்கள் எல்லாம் ஆகையாலே அனுபவங்களை
வாசா சொல்லி முடியாதாகையாலே
நெடுமால் -என்னும் அத்தனை இறே

அநந்தன் பாலும் கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து என் மனம் தன்னிலே வந்து வைகி வாழச் செய்த எம்பிரான் என்கிறார்
மால் -என்று பெரியோன் என்றபடி

இப்படி இருக்கிறவன் யாவன் ஒருவன்
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே–
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே என்கிறார்
மால் என்று உபய விபூதி நாதத்வம் சொல்கிறது
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு நிர்வாஹகனானவன் மனிசர்க்குத் தேவர் போலே தேவருக்கும் தேவனாய் -அயர்வறும் அமரர்கள் அதிபதி –
அயர்வு -திருப்தி
திருப்தி பிறவாமல் அபர்யாப்தி அம்ருதத்தைப் பானம் பண்ணி அதிசயிதரான நித்யர் முக்தருக்கு அதிபதியானவன்
ஆழ்வாரை அனுபவித்து ஆராமையாலே அத்யந்தம் வ்யாமோஹமாய் கிடக்கிற வ்யாமோஹம் தெளியும் படி

சீரார் செந்நெல் கவரி வீசும்
மிக்க கனத்தை யுடைத்தான செந்நெல் கதிர்களானவை விடாய்த்துக் கண் வளர்ந்து அருளுகிற
அழகைக் கண்டு பரிசர்யை பண்ணுவாரைப் போலே அமையா நிற்கும்

செந்நெலுக்கு சீர்மை யாவது
ஆராவமுதாழ்வாருக்கு அமுது படியாகிற சீர்மை ஆகவுமாம்
அப்போது அஹம் அன்னம் என்கிற சீர்மை

கவரி வீசும்
நித்யரும் முக்தரும் பரிசர்யை பண்ணுமா போலே செந்நெலானது சிசிர உபசாரம் பண்ணுகிற படி
அகால பலிநோ வ்ருஷா என்னுமா போலே
அறுத்து நட வேண்டாம் போலே காணும்

கருத்து அறிந்து அடிமை செய்வாரைப் போலே -சேஷ வஸ்துவின் வியாபாரம் அடைய
சேஷி தனக்கு அடிமையாய் நினைத்து இருக்கிற படி –

அமரர்கள் செழு நீரான நாங்கள் பரிசர்யை பண்ண அதிபதியாய்த் திருக்குடந்தையிலே
கண் வளர்ந்து அருளுகிற ஸுகுமார்யத்துக்குப் போரும் படி ஜல ஸம்ருத்தியை யுடைத்தான
திருக்குடந்தையிலே

ஏரார் கோலம் -அழகு சமைந்த ஒப்பனை நிறம் பெறும்படி கண் வளர்ந்து அருளினாய்

நித்ய விபூதியில் இருப்பு -அந்தப்புரத்தில் இருப்பு போலே -திரு மந்திரத்தில் படி
திருக்குடந்தையில் வாசஸ்தானம் த்வயத்தில் படி

திருமந்திரத்தில் உபாய உபேயங்கள் பிரகாசிப்பது இங்கே இறே
திருவடி பார்ஸ்வத்திலே ஒரு பிராட்டி புருஷகார பூதையாய்க் கொண்டு
சரணவ் சரணம் என்று திருவடிகளையே உபாயமாகப் பற்றுவிக்கிறாள்
திருமுடி பார்ஸ்வத்திலே ஒரு பிராட்டி இருந்து -இச் சேர்த்தியிலே அடிமை செய் –
என்று அடிமை கொள்கிறாள்

முக்த ப்ராப்ய போகமாம் திருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே திரு மார்பிலே நாச்சியாரோடே கூட
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேனே
பிரம ருத்ராதிகள் சூழ்ந்து சேவிக்கக் கண் வளருகிறவன் எவன் இப்படி ஸாஷாத் கரித்தவன்
அவன் எம்மான்
இப்படி ப்ராப்யமும் ப்ராபகமும் தானே யானவன்

ஏரார் கோலம்
அபர்யாப்த்த அம்ருதமான கோலம்
ஆஸ்ரிதன் எழுந்து இருந்து பேசு என்ன -எழுந்து இருக்க –
அந்த உத்யோகத்துக்கு வாழி செய்த உத்யோகத்தில் அமைந்த கோலம் –

மாம் ஏகம் -என்றும்
சரணம் வ்ரஜ என்றும்
அருளிச் செய்த வாக்யத்தைத் தலைக்கட்டி
ஸத்ய ப்ரதிஜ்ஜன் ஆகைக்காக
அந்தத் திருத்தேரோடே வந்து சாய்ந்து அருளின கோலமாகையாலே
மந்த்ர த்ரயமும் ப்ரகாசிக்கிற கோலம் –

ஸ மயா போதித ஸ்ரீ மான்
கிடந்த கிடைக்கு ஆலத்தி வழிக்க வேண்டி இருக்கை
கிடந்தாய் கண்டேன்
துயர் அறு சுடர் அடி தொழுது எழப் பண்ண வேண்டும்

கண்டேன் அம்மானே
கிடை அழகைக் கண்டேன் -நினைத்த பரிமாற்றம் பெற்றிலேன் –
எழுந்து இருத்தல் இருத்தல் உலாவுதல் என் செய்தாய் என்னுதல்
அணைத்தல் செய்யப் பெறுகிறிலேன்

எம்மானே
இதுவும் நமது என்று இராது ஒழியப் பெற்றேன் ஆகில் ஆறி இருக்கலாயிற்றே
ஆழ்வார் ஆற்றாமை யாகிற ஆழ் கடலிலே மூழ்கி -முக்கவர் முத்துக்கடலிலே மூழ்கி
முத்து வருமா போலே
வ்யாமோஹத்தின் ஸாகரத்திலே
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் -என்கிறார்

என் மனனே -என்று பெருக்காற்றில் இழிவர் துணைத்தேட்டமாம் போலே நெஞ்சையும்
கூட்டிக் கொண்டு இழிகிறார்

எம்மானே என்று ஸம்போதித்து உன் வடிவோடே ஓக்க ப்ராப்தியை இட்டு
என்னை நலிய வேணுமோ என்கிறார்

எம்மானே சுடர் அடி தொழுது எழு என் மனனே
ஆழ்வாரை லபிக்கையாலே வந்த ப்ரீதியாலே துயர் அறு சுடர் அடி யாயிற்று

என் மனனே
அபர்யாப்த்த அம்ருத பானத்தாலே களித்து ஆனந்தியாதே சேஷ வ்ருத்தியான
அஞ்சலியைப் பண்ணி வர்த்தி
என் வ்யாமோஹமும் உன் வ்யாமோஹமும் அவன் வ்யாமோஹத்தில் குளப்படி யாயிற்று
அத்தைக்கண்டு இறுமாதே தொழுது வர்த்தி என்கிறார்

அபசாரான் இமான் ஸர்வான் க்ஷமஸ்வ புருஷோத்தம –

———

மானேய் நோக்கு நல்லீர்! வைகலும் வினையேன் மெலிய
வானார் வண் கமுகும் மது மல்லிகை கமழும்
தேனார் சோலைகள் சூழ் திரு வல்லவாழ் உறையும்
கோனாரை அடியேன் அடி கூடுவது என்று கொலோ?–5-9-1-

மானேய் நோக்கில்
திருவல்ல வாழி லே -தம் அபேக்ஷிதம் கிடைக்கும் என்று புறப்பட்டுப் போய்
அங்குத்தை போக்யதையிலே நலிவு பட்டு
முடியவும் போகவும் மாட்டாதே புறச்சோலையிலே விழுந்து கிடந்தது கூப்பிட்டார் –

——

தொல்லருள் நல் வினையால் சொலக் கூடுங்கொல்? தோழிமீர்காள்?
தொல்லருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திரு நகரம்
நல்லருள் ஆயிரவர் நலனேந்தும் திருவல்லவாழ்
நல்லருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே.–5-9-10-

உயர்வற உயர்நலம் யுடையவன் எவன் அவனுடைய
தொல்லருள் நல் வினையால் சொலக் கூடுங்கொல்? தோழிமீர்காள்?

உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் அவரவர் அபீஷ்டங்களை
தயமானமனா -என்கிறபடியே
பகவத் கிருபையாலே லபிக்கச் செய்தேயும் காம்ய பலங்கள் ஆகையால்
உயர்வும் தாழ்வுமாய் அறுகை யாலே த்யாஜ்யங்கள்

உயர் நலமுடையவன் நம்மிடத்தில் பண்ணின தொல் அருள் –
என்றுளன் ஈசன் உயிரும் அன்றே யுண்டு கரண ப்ரதானம் பண்ணின ஸ்வ பாவிகமான அருளாலே
கழல் வளை பூரிப்ப யாம்

நல் வினையால்
அதாவது -அவனைக் காணப் பெற்று அப் ப்ரீதியாலே சொல்லக் கூட வற்றோ –
அன்றிக்கே
ஸ்வா பாவிக கிருபையாகிற ஸூஹ்ருதத்தாலே அவனைக் கண்டு திரு நாமங்களை
சொல்ல வற்றோ என்னுதல்

நா நீர் அற்று இருக்கையாலே ஆராவமுது ஊறும் இறே
அவன் மயர்வற மதிநலம் அருளின தொல் அருளாலே
நா வரண்ட பாபம் போய் -நா நீர் உண்டாய் திரு நாமங்களை சொல்லலாமோ என்று
அம்மங்கி அம்மாள் வாக்யார்த்தமாக அருளிச் செய்வர்

இப்படி அருள் அகல இராதே -அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன் –
தொல்லருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திரு நகரம்
தன்னுடைய கண்ணழிவு அற்ற கிருபையை ஸம்ஸாரத்தில் உள்ளாரும் நித்ய விபூதியில் உள்ளாரும்
தொழ நின்ற மஹா நகரம்
அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்தரான நித்ய ஸூரிகளும் நித்ய ஸம்ஸாரிகளும் கூடத் தொழும்படி
ஸர்வ ஸ்மாத் பரனான ஸர்வேஸ்வரன் வந்து நித்ய வாஸம் பண்ணுகிற தேசம்

நல்லருள் ஆயிரவர்
எம்பெருமானிலும் பிரஜை ரக்ஷணத்தில் அனுக்ரஹ சீலராய் இருக்கிறவர்கள்

நலனேந்தும் திருவல்லவாழ்
அவனுடைய உயர் நலமான கல்யாண குணங்களை உயரா நின்ற நலம் என்று கொண்டாடி
வர்த்திக்கும் ஊர் என்னுதல் ஆகையாலே

நல்லருள் நம் பெருமான் நாராயணன்
துயர் அறு சுடர் அடி தொழுது

நாமங்களே.–
திரு நாம உச்சாரணம் பண்ணித் தொழுது ஸ்துதித்து என் மனனே எழு

நல்லருளை யுடையவனாய் -நமக்கு ஸ்வாமியானவன் -நாராயணன் –
நல்லருள் ஆகிறது வாத்சல்யாதிகள்

நாராயண சப்தார்த்தம் அருளிச் செய்து பின்னை சப்தத்தை அருளிச் செய்கிறார்
நாராயணன் –
ஹேய ப்ரதிபடமான திருவடிகளை -துயர் அறு சுடர் அடி யாகையாலே அவித்யாதிகள் அற்றது
தேஜோ மயமான திருவடிகளைத் தொழுது எழு என் மனனே
திரு நாம உச்சாரணத்தைப் பண்ணி வர்த்தி

நாராயண ஸப்தம் தர்மி நிர்தேசம்
இஸ் ஸ்வபாவங்களாலே நிரூபித வஸ்துவுக்கு உண்டான குணங்களுக்கு வாசகம்
அல்லாத திரு நாமங்களாகை

என் மனஸ்ஸூக்கு ஒத்த தோழிமீர் திரு நாம உச்சாரணம்
பண்ண வல்லோமோ என்கிறார் –

————–

பிறந்த வாறும் வளர்ந்த வாறும் பெரிய பாரதம் கை செய்து ஐவர்க்குத்
திறங்கள் காட்டி யிட்டுச் செய்து போன மாயங்களும்
நிறந்த னூடு புக்கென தாவியை நின்று நின்று ருக்கி உண்கின்ற இச்
சிறந்த வான் சுடரே! உனை என்று கொல் சேர்வதுவே?–5-10-1-

பிறந்தவாற்றில்
நாமங்களை சொல்லித் தரிக்க பார்த்த இடத்தில்
அது ஸைதில்யத்தை விளைக்க
தரித்து நின்று திருநாம உச்சாரணம் பண்ண வல்லேனாம் படி அருள வேணும்
என்று சரணம் புக்கார் –

—-

நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும்
ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையுமொர் பத்தும் வல்லார்
மாக வைகுந்தத்து மகிழ் வெய்துவர் வைகலுமே.–5-10-11-

உயர்வற என்கிற பாட்டை -நாகணை மிசை நம்பிரான் -என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
நாகணை மிசை நம்பிரான் -உயர்வற உயர் நலம் என்கிறவன் யாவன் ஒருவன்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும்
உபாய உபேயங்களில் தாரதம்யம் உண்டாகையாலே உயர்வு அற்று இருக்கும் –
உயர் நலம் யுடையவன் எவன் அவன் அவனே தனக்கு உபாயம் உபேயம் என்கிறார் –

நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்றும்
திருவனந்த ஆழ்வானைப் படுக்கையாக யுடைய சர்வேஸ்வரனுடைய ஆனந்தாதி கல்யாண குண
பரிபூர்ணனான அநந்த ஸாயித்த்வம் சர்வாதிக வஸ்துவுக்கு லக்ஷணம் ஆகையாலே
அவனே சரண்யன் என்கிறது

நமக்கும்
திருவனந்த ஆழ்வானுடையபுருஷகாரம் சொல்கிறது

இவனுடைய உபாய பாவத்தில் புருஷகாரமாக வல்லார் அவள் பரிகரத்தில் உள்ளார் ஆகை இறே
படுக்கை கிடப்பது அந்தப்புரத்தில் இறே

நம்பிரான் -மயர்வற மதி நலம் அருளுகையாலே நம் பிரான் -நமக்கு உபகாரகன் –
ஆஸ்ரித விஷயத்தில் உபகார சீலனானவன்

மதி நலம் அருளினவன் எவன் அவன்
சரணே சரண் நமக்கு என்று
அவதாரணத்தாலே உபாய நைர பேஷ்யம் சொல்லுகிறது –

சாம்சாரிக ஸ்வ பாவங்கள் மேலிட்டு விபரீதமே பலியா நின்றாலும்
அப்படியே அடிக்கழிவு சொல்லுவார் ஒருவர் அல்லரோ இவர்
இது ஒழிய வேறே ஒன்றில் கால் தொழாது ஒழிகை மஹா விச்வாஸம் ஆகிறது
இத்தால் ஏக -பதார்த்தம் சொல்லிற்று

பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே
நாள் தொறும் ஏக சிந்தையனாய்
மதி நலத்தால் வந்த த்ருட அத்யவசாயம் -புறம்பு உண்டான சிந்தனை போய்
இவ் விஷயத்தில் ஏக ஆகார மநோ ரதம் யுடையராய்

அர்த்தஅர்ஜனம் பண்ணப் போவார் ஒரு சிராயை விஸ்வஸித்து நாலாண்டு பத்தாண்டு
கடலிலே இழியா நின்றார்கள் இறே
இப் பேற்றின் சீர்மையைப் பார்த்தால் இவ்வளவாகிலும் வேண்டாவோ
இவ் விஷயத்தில் சம்சார ஸ்வ பாவத்தால் வ்யஸன பரம்பரைகள் வந்தாலும்
வியவசாயம் குலையாமே போருமது இறே ஸ்வரூபம் ஆவது

எவன் -குருகூர் சடகோபன் மாறன்
அது எல்லாத்துக்கும் அடியான பிறப்பு இருக்கிற படி

அவன் -அயர்வறும் அமரர்கள் அதிபதி -உபாயாந்தரம் அறியாத நித்ய ஸூரிகளுக்குத்
தானே ஸர்வவித போக்யமானவன் விஷயமாக

நூற்ற அந்தாதி
தாம் உளராகைக்காகச் சொன்ன அந்தாதி

ஆயிரத்துள் இவையுமொர் பத்தும் வல்லார் மாக வைகுந்தத்து .
மஹா ஆகாசம் என்று பேரை யுடைய ஸ்ரீ வைகுண்டத்திலே

வைகலும் மகிழ்வு எய்துவரே
அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்த ரஹிதரான நித்ய ஸூரி ஸேவ்யனானவன்
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே

வைகலும் மகிழ்வு எய்துவரே
ஹேய ப்ரதிபடமான -நிர வதிக தேஜோ ரூபமாய் -ப்ராப்ய ப்ராபகமான திருவடிகளைக்
கால தத்வம் உள்ளதனையும் நித்ய அனுபவம் பண்ணி யாவதாத்மபாவி வாழலாம் என் மனமே தொழுது எழு

அனுசந்தானத்துக்கு விச்சேதம் வராத படி பண்ணி அருள வேண்டும் என்று
பிரார்த்திக்க வேண்டும்படியான சம்சாரத்தை விட்டு
பகவத் அனுபவத்துக்கு விச்சேதம் ஒரு நாளும் இல்லாத பரம பதத்திலே புக்கு அனுபவிக்கப் பெறுவர்

மா என்று மஹத்தை
கம் என்று ஆகாசம்
ஆக மாக வைகுந்தத்து மகிழ்வு எய்துவர் வைகலுமே –

———–

ஐந்தாம் பத்து விவரணம் முற்றிற்று

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய்மொழி வாசகமாலை — ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை–நான்காம் பத்து விவரணம்-

February 5, 2022

சந்தியும் சந்திப்பதமும் அவை தம்மிலே தழைக்கும்
பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலு கிற்பீர்
வந்தியும் வந்திப்பவரை வணங்கும் வகை அறிவீர்
சிந்தியும் தென் குருகூர் தொழுது ஆட் செய்யும் தேவரையே

நாத முனிக்கு அன்று நாலாயிரமும் உணர்த்தி
போதம் அருள் குருகூர் வித்தகனார் -கோதில்
திருவாய் மொழி வாசக மாலைத் தேனைத்
தரவே எனக்கு அருள் செய்தார் –

———-

ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ.–4-1-1-

ஒரு நாயகத்தின்
பின்னும் தன் செல்லாமையாலே -அல்ப அஸ்திரத்வாதி தோஷ துஷ்டமான
ஐஸ்வர்ய கைவல்யங்களைப் பற்றி நிற்கிற ஸம்ஸாரிகளைப் பார்த்து –
அவற்றை விட்டு
ஸ்ரீ யபதியைப் பற்றுகையே நிரவதிக ஸூக ரூப புருஷார்த்தம்
என்று உபதேசிக்கிறார் –

குறுக மிக உணர்வத்தொடு நோக்கி எல்லாம் விட்ட
இறுகல் இறப்பெனும் ஞானிக்கும் அப்பயன் இல்லையேல்,
சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம்; பின்னும் வீடு இல்லை,
மறுகல் இல் ஈசனைப் பற்றி விடாவிடில், வீடு அஃதே.–4-1-10-

உயர்வற என்கிற பாட்டை குறுக மிக -என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தம் அளவும் ஐஸ்வர்ய கைவல்யங்களைச் சொல்கிறது –

உயர்வற -குறுக மிக
ஐஸ்வர்யாதிகள் நிலை நில்லாது என்ன
லீலா விபூதியில் ஐஸ்வர்யம் நிலையில்லை யாகிறது
அவை போல் அன்றிக்கே ஆத்ம லாபம் நிலை நின்ற புருஷார்த்தம் அன்றோ என்னில்
கீழ்ச் சொன்னவற்றைக் குறித்து ஒரு நன்மை யுண்டே யாகிலும்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்துக்கு ஏற்றம் உண்டாம் போலே
பகவத் ஆனந்தத்தைப் பற்ற ஆத்ம அனுபவம் தண்ணிது –ஆனபின்பு அவனைப் பற்றப் பாருங்கோள்

உயர் நலம் யுடையவன் எவன் அவன்
கல்யாண குணங்களால் பூர்ணனான -ஸ்ருதி ப்ரஸித்தனானவன் -அவனைப்பற்றி
குறுக மிக உணர்வத்தொடு நோக்கி-

முதலிலே ப்ரத்ய அஹ்ருத இந்த்ரயினுக்கே இறே -ஆத்ம ப்ராப்தியில் அதிகாரம் உள்ளது

பாஹ்ய விஷயங்களிலே தூரப் போய் க்ரஹிக்கும் மனஸ்ஸை ப்ரத்யக் விஷயமாக்கி
அதாவது
கண்ணை இட்டுக் கண்ணைப் பார்ப்பது போலே இருப்பது ஓன்று இறே
ஆகையால் குறுக -என்றது –

இந்த இந்திரிய நிக்ரஹம் ஸர்வேஸ்வரன் மயர்வற மதிநலம் அருளுகையாலே வந்தது –
பாஹ்யங்களிலே போன மயர்வை அறுத்துத் தர
ஸ்வ ஸ்வரூப விஷயத்திலே யாம்படி மதிநலம் அருளினவன் யாவன் ஒருவன் அவன் பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே
மிக யுணர்வத்தோடு நோக்கி
சிரகாலம் பாஹ்ய விஷயத்திலே பண்ணிப்போந்த வாஸனை யடைய ஆத்மாவிலே யாம்படி பண்ணி விசதமாக அனுசந்தித்து
எல்லாம் விட்டு
ஸ்ரீயப்பதி தோளும் தோள் மாலையுமாய் -கருட வாஹனனுமாய் வந்து நிற்க
அந்த போக்யதையைப் பாராதே சுத்தி யோகத்தையே பார்த்தது –

அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன்
அயர்வற்ற நித்ய ஸூரி ஸேவ்யனாய் ஸ்ரீ யபதியான அவனுடைய துயர் அறு சுடர் அடி தொழுது எழப் பாராதே
இறுகல் இறப்பெனும் ஞானிக்கும்
அணுவான ஆத்ம அனுபவத்தை மோக்ஷம் என்று சொல்லுகிற ஆத்ம ஞானிக்கும்

அப்பயன் இல்லையேல்,
பகவத் அனுபவம் ஆகிற மோக்ஷ ஸூகம் இல்லை என்கிறார் இவர்
அவ்வருகு உண்டான போக்யம் கண்டவர் ஆகையாலே அத்தை ஸங்கோசம் என்கிறார்

பகவத் உபாஸனத்துக்காகச் சுடர் அடி தொழுது ஆத்ம பிராப்தி பெற வேண்டுவ
சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம்; பின்னும் வீடு இல்லை,
அவித்யாதிகளானவை வாஸனையாலே வருமாகில் பின்னும் வீடு இல்லை

மறுகல் இல் ஈசனைப் பற்றி விடாவிடில், வீடு அஃதே
ஸர்வ வாஸனையாலே பற்றாமல் ஸூத்தி யோகத்தையே பார்த்துப் பற்றி விடாமல் இருக்கில் அது ஸித்திக்கும்
விடில் அது ஸித்தியாது

வீடு அஃதே
ஸர்வ பாப விமோசகனானவனைப் பற்றி விடா விடில் -கீழ்ச் சொன்ன இந்திரிய ஜயம் முதலாக
பகவத் உபாஸநத்தைப் பண்ணி கர்ம ஷயம் பிறப்பித்து ஆத்மாவை லபிக்கப் பார்க்கும் அவனுக்கு
அந்திம ஸ்ம்ருதி பண்ணி சரீரத்தை விடப் பார்ப்பானாகில் -அந்த மோக்ஷம் இல்லை –

அஃதே
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ-என்றும்
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என்னும் நான் சொல்கிற அதுவே புருஷார்த்தம் –

ஆகையாலே -தொழுது எழு என் மனனே -என்று
தன் திரு உள்ளத்துக்கு உபதேசித்துத் தன் திரு உள்ளம் போல்வாருக்கும் உபதேசித்து
உபதேஸ கர்ப்ப அனுபவம் பண்ணுகிறார் –

———–

பாலன் ஆய், ஏழ் உலகு உண்டு, பரிவு இன்றி
ஆலிலை அன்ன வசம் செயும் அண்ணலார்
தாளிணை மேல் அணி தண் அம் துழாய் என்றே
மாலுமால் வல் வினையேன் மட வல்லியே.–4-2-1-

பாலன் ஆய், ஏழ் உலகில்
மூன்று களையும் பறித்துச் ஸங்காயம் வாரின பயிர் -ஸதசாகமாகப் பணைத்த விளையுமாய் போலே
அபிநிவேசம் ஸதசாகமாய் விளைந்து
தேச கால விப்ரக்ருஷ்டமான பதார்த்தங்களையும் தத் தத் தேச கால விசிஷ்டமாகப் பெற்று
அனுபவிக்க வேணும் என்று விடாய்த்தார் –

பாவியல் வேத நன் மாலை பல கொண்டு,
தேவர்கள் மா முனிவர் இறைஞ்ச நின்ற
சேவடி மேல் அணி செம் பொன் துழாய் என்றே
கூவுமால் கோள்வினை யாட்டியேன் கோதையே.–4-2-3-

உயர்வற என்கிற பாட்டை -பாவியல் வேத -என்கிற பாட்டு விவரிக்கிறது -எங்கனே என்னில்
உயர்வற ப்ரஹ்ம ஆனந்தம் தொடங்கி -மனுஷ்ய ஆனந்தம் அளவாக
காலோசிதமான பதார்த்தங்களை தத் தத் தேச காலங்களிலே அனுபவிப்பார் அனுபவிக்கப் பெறாதே
வந்த இழவாலே ஸூகம் அற்றார்கள் –தத் வ்யதிரிக்தங்கள் ஆகையாலே

இவர் அங்கன் அன்றிக்கே பகவத் ப்ரேமத்தாலே பூத காலத்தில் உள்ளதும் பவிஷ்யத் காலத்தில் உள்ளதும் –
வர்த்தமான காலத்தில் போலே
உயர்நலம் உடையவன் எவன் அவன் –திருவடிகளிலே அத்திருத் துழாய் பெற ஆசைப்படுகிறார் –

உயர் நலம் யுடையவனைப்
பாவியல் வேத நன் மாலை பல கொண்டு,
ஒரு ஊருக்காக உதவினதுவே அன்றிக்கே ஒரு நாட்டுக்காக உதவினவன் பக்கல்
உள்ளது பெறத் தட்டு என் என்னா நின்றாள் என்கிறாள்

பாவியல் வேதம்
பாவாலே இயற்றப்பட்ட வேதம் –சந்தஸ்ஸுக்களால் சொல்லப்பட்ட வேதம்
அனுஷ்டுப் த்ரிஷ்டுப் ப்ருஹதீ சந்தஸ் -என்றும் சொல்லப்பட்டவைகளை யுடைத்தான வேதம்
சொல்லிற்று என் என்னில்

உயர்வற உயர்நலம் உடையவன் என்றும் அவன் ஆனந்தாதி குணங்களை சொல்லப் புக்கு எவன் அவன் என்று
அப்ராப்ய மனஸா ஸஹ -என்று அளவிட முடியாமல் மீண்ட இத்தை
பாவியல் வேத நன் மாலை பல கொண்டு,
அதன் நன்றான மாலைகளைக் கொண்டு -ஸ்ரீ புருஷ ஸூக்தாதிகளைக் கொண்டு

ஸர்வே வேதா யத்பதம் ஆமநந்தி வேதைஸ் ச ஸர்வைர் அஹம் ஏவ வேத்ய -என்கிறபடியே
அல்லாத இடங்களுக்குப் பிரதிபாத்யன் அவனே யாகிலும்
ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்களுக்கு வாசகமானவற்றைக் கொண்டு

மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்கள் ஆகையால் –
அவர் அருளின பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே வேதாந்த வேத்யனை சாஷாத்கரித்து
அயர்வறும் அமரர்கள் அதிபதி
அஞ்ஞான கந்த ரஹிதரான நித்ய ஸூரி சேவ்யனானவனை

தேவர்கள் மா முனிவர் இறைஞ்ச நின்ற
தேவர்களும்
ஸ்லாக்யமான ஸநகாதிகளும் -என்றுமாம்

சேவடி மேல் அணி
துயர் அறு சுடர் அடி -ஆஸ்ரிதருடைய கிட்டப் பெறாத இலவு தீர்த்த சுடர் அடியான

சேவடி மேல் அணி செம் பொன் துழாய் என்றே கூவுமால் கோள்வினை யாட்டியேன் கோதையே
சேவடி -சுடர் அடி
சங்கைஸ் ஸூராணாம் -என்கிறபடி ஸ்தோத்ரம் பண்ணி ஆஸ்ரயிக்கத் திரு உலகு அளந்து நின்ற
சேவடி மா முதல் அடிப் போது ஓன்று கவிழ்த்து அலர்த்தி -என்கிறபடி
தலையிலே பூப் போலே வந்து இருக்கிற போது -மேலே பார்த்தவாறே
அனுபாவ்யமாய் இருந்த சிவப்பை யுடைத்தாய் இருக்கை
அடியிலே ராகம் இறே இப்படி ஆக்கிற்று இவளை –

அன்றியே
செவ்விய அடி -செவ்வையான அடி -ஆஸ்ரிதருக்கு செவ்வையாயே இருக்கும்
அநாஸ்ரிதருக்கு குடிலமாய் இருக்கும்

செவ்வடி மேல் அணி செம் பொன் துழாய் என்றே கூவுமால்
ஸ்ப்ருஹணீயமான திருத்துழாய் என்றே கூவும்

சொல்லி மாலேறும் கோள்வினை யாட்டியேன் கோதையே.
முடித்து அல்லது விடாதே பாபத்தைப் பண்ணின நான்
என்னுடைய கோதை
தன் மாலையையும் மயிர் முடியையும் கண்டார் படுமத்தைத் தான் படுவதே –

——————-

கோவை வாயாள் பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய்! மதிள் இலங்கைக்
கோவை வீயச் சிலை குனித்தாய்! குல நல் யானை மருப்பு ஒசித்தாய்!
பூவை வீயா நீர்தூவிப் போதால் வணங்கேனேலும், நின்
பூவை வீயாம் மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே.–4-3-1-

கோவை வாயாளில்
இவர் ஆசைப்பட்ட படியே எல்லாம் பெற்றாராம் படி
தன் ப்ரணயித்வ குணங்களைக் காட்டிக் கொடுக்கக் கண்டு ஹ்ருஷ்டரானார் —

——-

உரைக்க வல்லன் அல்லேன்; உன் உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின்
கரைக்கண் என்று செல்வன் நான்? காதல் மையல் ஏறினேன்;
புரைப்பு இலாத பரம்பரனே பொய்யிலாத பரஞ்சுடரே!
இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த, யானும் ஏத்தினேன்.–4-3-9-

உயர்வற என்கிற பாட்டை -உரைக்க வல்லேன் அல்லேன் – என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் ஒருவருக்கு ஒருவர் புகழ் உண்டாய் இருக்கும்
அதுவும் அல்ப அஸ்திரமாய் உயர்வற்றதாய் இருக்கும்
இந்த உயர்வற உயர்நலம் உடையவன் எவன் ஒருவன் அவன் ஆனந்தாதி குணங்களுக்கு
அவதி இல்லாமையால் உரைக்க வல்லேன் அல்லேன் –

வேதங்களும் அப்ராப்ய மனஸா ஸஹ -என்று மீண்ட விஷயத்தை
உன் ஆனந்தாதி குணங்கள் எல்லாம் கூடினாலும்
உன் ப்ரணயித்வ ப்ரகர்ஷம் என்னுடைய பேச்சுக்கு நிலம் அல்ல என்கிறார்

இந்த ப்ரணயித்வ குணங்களை யுடையவன் யாவன் ஒருவன் –
அவனை உரைக்க வல்லேன் அல்லேன் –
உனக்கு என்னுடைய மநோ வாக் காயங்கள் முதலானவற்றை
அங்க ராகங்கள் முதலான போக வஸ்துவாகக் கொண்ட போக்ய பூதனான நீ
உன்னுடைய ப்ரணயித்வ குணத்தை அனுசந்தித்து அனுபவித்துக்
குமிழி நீர் உண்டு போம் அத்தனை போக்கி பேசித் தலைக்கட்ட மாட்டு கிறிலேன்

எல்லாம் பேச ஒண்ணாதாகில் பேசலாம் அம்சம் பேசினாலோ என்னில்
நீ மயர்வற மதிநலம் அருளின பக்தி ரூபா பன்ன ஞானத்தால் வந்த பலம் கொண்டு பேசப்புக்கால்
உன் உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின்
கரைக்கண் என்று செல்வன் நான்?
உன்னுடைய முடிவில்லாத பிரணயித்வத்தால் வந்த கீர்த்தி சாகரத்தினுடைய
கரையில் தான் என்னால் சொல்லப் போமோ

இப்படிக் கரை அருகிலும் செல்ல அறிய விஷயத்தை நீர் பேசுவதாக உத்யோகிப்பான் என் என்ன

நீ அருளினை பக்தி ரூபா பன்ன ஞானத்தினாலே
காதல் மையல் ஏறினேன்;
என் ப்ரேமத்தாலே மிக்க கலக்கத்தை உடையேன் ஆனேன்
பிச்சு ஏறினாரை
நீ இப்படிச் செய்வான் என் என்னக் கடவதோ -என்ன

இவ்விஷயத்தில் நீர் பிரமிப்பான என்
பிரமிப்பாருக்கு ஓர் ஆலம்பனம் வேண்டாவோ என்ன

அயர்வறும் அமரர்களான நித்ய ஸூரிகள் பித்தேறி ஏத்தக் கண்டேன் –
அத்தாலே செய்தேன் என்கிறார்

அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்த நித்யரோடு -நித்ய ஸம்ஸாரியான இவரோடு -அவன் தன்னோடு
வாசி அற்று இறே ப்ரணயித்வ குணம் -இவ்விஷயத்தில் ப்ரணயித்வ பிரபாவம் இருப்பது
ஸர்வஞ்ஞனாய் ஸர்வ ஸக்தியாய் தான் அறியப் புக்காலும்
தனக்கும் தன் தன்மை அறிவு அரியனாய் இறே இருப்பது
தன்னை அறியப்புக்க வேதங்கள் படும் அத்தனை தானும் படுவது

புரைப்பு இலாத பரம்பரனே பொய்யிலாத பரஞ்சுடரே!
நீ ஸர்வ சமாதி பரனாய் இருப்பில் புரை இல்லாதாப் போலே
என்னோட்டை கலவியால் வந்த வடிவில் பிறந்த புகரிலும் புரை அன்றிக்கே இருக்கிறவனே

அன்றிக்கே
நிரவதிகமான ப்ரணயித்வ குண ஸத்பாவத்தில் கண் அழிவு இல்லாதாப் போலே
என்னோட்டைக் கலவியிலும் பொய் அன்றிக்கே
அத்தாலே வந்த புகர் வடிவிலே தோன்ற இருக்கிறவனே என்னுதல்

இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த, யானும் ஏத்தினேன்.
பரமபக்தி யுக்தரானவர்கள் துயர் அறு சுடர் அடி தொழுது
எழுந்து
கடல் கிளர்ந்தால் போலே இரைத்துக் கொண்டு ஏத்தக் காண்கையாலே
அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் எவன் அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
என்று யானும் ஏத்தினேன் அல்லது நான் சக்தனாய் ஏத்தினேனோ
ஹேய ப்ரதிபடமான திருவடிகளும் -பிராட்டியும் -நீயும் விடிலும்
திருவடிகளை விடாத திண் கழலைப் பேசித் தலைக்கட்டப் போமோ என்கிறார் –

——————–

மண்ணை இருந்து துழாவி, ‘வாமனன் மண் இது’ என்னும்;
விண்ணைத் தொழுது, அவன் மேவு வைகுந்தம்’ என்று கை காட்டும்;
கண்ணை உண்ணீர் மல்க நின்று, ‘கடல்வண்ணன்’ என்னும்;அன்னே!என்
பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு என் செய்கேன், பெய் வளையீரே!–4-4-1-

மண்ணை இருந்து துழாவி யில்
கீழ்ப் பிறந்த ப்ரணயித்வ குண அனுபவம் சாத்மிக்கைக்காக எம்பெருமான் பேர நிற்க அவனோடே
ஸத்ருச பதார்த்தங்களையும்
சம்பந்தி பதார்த்தங்களையும்
அவனாகவே பிரமித்து நோவு பட்டார்

உயர்வற என்கிற பாட்டை -மண்ணை இருந்து துழாவி-விவரிக்கிறது -எங்கனே என்னில்
ஆழ்வார் தம்முடைய உபாய அத்யாவசாய ஞானத்தில் நின்று தம்முடைய திரு உள்ளத்தைப் பார்க்கும் போது
அது மயர்வற மதிநலம் அருளப் பெற்று –
அத்தாலே பகவான் இடத்திலே த்வரை விஞ்சிச் செல்கிற ப்ரேம தசையைப் பார்த்து
இது அத்புத கார்யங்களாய் இருந்தது இது ஏது என்று கேழ்க்கிற அவர்களுக்கு
அதுக்கு உத்தரமாக மானஸ த்வரை செல்லுமத்தை -வினவி வந்தவர்களுக்கு
உபாய அத்யவசாய தசையில் நின்று ஆழ்வார் அருளிச் செய்கிறார் –

உயர்வற -மண்ணையிருந்து துழாவி –
மண்ணுக்கு உயர்வாவது
தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ஜங்கமாதிகளாலே நிறைந்து பஞ்சா சத்கோடி விஸ்தீர்ணமான
பூமியாகையாலே உயர்வு என்கிறது

இருந்து துழாவி
பகவத் வ்யதிரிக்தங்களைக் காரணமாகவும் காரியமாகவும் சொல்லா நின்றார்கள்
இத்தை அறிவோம் என்று ஆராய்ந்து பார்க்க அவை அஸ்திரமாக இருக்கையாலே உயர்வற என்கிறார் –

அவை எல்லாம் இவர் கைக்குள்ளே அடங்கி ஸர்வ கதத்வத்தை கரதல அமலமாகக் கண்டார்
துழாவிப் பார்த்தார்-
அதுக்கு அப்பாலும் உயர் நலம் போகையாலே வந்த பரம ஆனந்தத்தைப் பார்த்து
உயர்நலம் உடையவன் எவன் அவன் வாமனன் என்கிறார்

கீழ்ச் சொன்ன ஜகத்து அந்நிய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்தர்யங்களாய் இருந்தது தவிரும்படி
வாமனனாய் மஹா பலி பக்கலிலே அர்த்தியாய்ச் சென்று தன்னதாக்கின
வாமனன் மண் இது என்னும்

நலமுடையவன் யாவன் ஒருவன் அவன் வாமனன் மண் இது என்னும் –
த்ரி விக்ரம ரூபத்தாலே ஜகதாகாரனாய் நின்றபடி
வாமனன் மண் இது என்னும்

அடியிலே பிறந்தவனுடைய கந்தவதீ பிருத்வீ இறே
பத்ப்யாம் பூமி யாகையாலே ஸர்வ கந்தமும் தோற்றின படி –

யவன் இது என்னும்
மஞ்சா க்ரோசந்தி போலே பூமியில் உள்ளாரைச் சொல்கிறது –

அவன் -இப்படிப்பட்ட பூமியை யுடையவன் –காரண பூதனான தன் ஜகதா காரதையைக் காட்டி
ஒரு திருவடிகள் அந்நிய சேஷத்வ நிவ்ருத்தியைப் பண்ண
மற்றத் திருவடிகள் ஸ்வ ஸ்வா தந்தர்யத்தைத் தவிர்த்து ஸர்வ சேஷியாய் நின்ற நிலையைக் காட்டினான் ஆயிற்று –

இவருக்கு இந்த ப்ரேமத்துக்கு அடி என் என்ன –
மயர்வற மதி நலம் அருளின வத்தாலே வந்த ஞானத்தாலே அறிந்த படி

கண்ணை உண்ணீர் மல்க நின்று, ‘
அவர தேவதா பிரதிபத்தியை நீக்கி -பராத்பரனைக் காணும் படி
திவ்யம் ததாமி தே சஷுஸ் -என்றும்
தக்க ஞானக் கண்கள் என்றும் –
சொல்லுகிற ஞானச் சஷுஸ்ஸூ க்களைக் கொடுத்தபடி
அருளின பக்தியாலே ஆனந்தாவஹமாய் ஆனந்த அஸ்ரு குடி கொண்ட படி –

எவன் -இப்படி அருளப் பட்ட சடகோபன் -ஸ ஹேதுகமாகில் தாழ்வு படும்
நிர்ஹேதுகமாகையாலே நிரவதிகமாய்ப் பொங்கி வருகிறபடியாலே
அருளப்பட்ட சடகோபன் என்கிறது –

அவன்
கடல் வண்ணன்’
ஜகதாகாரனைப் போலே ஸகல வஸ்துவையும் தன்னுள்ளே கொண்டு நோக்குகிற படி

என்னும்;
இது என்ன ஆச்சர்யம்
ஜகதா காரதையை கரதல அமலகமாகக் கண்டும்
அதற்கும் மேலே அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன்
விண் உண்டு -பரமபதம் -அதற்குப் போலியான ஆகாசத்தைக் காட்டி

அவன் மேவும் வைகுந்தம் என்னா நின்றாள்
அயர்வறும் அமரர்கள் சந்த அணுவிருத்தி பண்ண -அவர்கள் நடுவே
வீற்று இருந்து ஏழு உலகும் தனிக்கோல் செலுத்துமவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
அவன் மேவு வைகுந்தமான விண்ணைத் தொழுது துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே –

எனதுள் ஞானம் ஆகிற
பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு என் செய்கேன், பெய் வளையீரே!
பெரு மையல் -பகவத் ஆனந்தத்தில் புக்கு அழிந்த மையல் –
இத்தை விளைவிக்கிற வேதாந்த வேத்யனுக்கு என் செய்கேன்
இது ஸ்வ யத்ன ஸாத்யம் அல்லவே

பெய் வளையீரே
நீங்கள் ஸ்வரூபம் குலையாது இருக்க
இவள் தொழுது எழு என்னவும் தெரியாதே பித்தேறி பிரமிப்பதே
இது என்ன ஆச்சர்யம் என்கிறாள் —

————-

வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல, வீவு இல் சீர்
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம்மா பிளந்தான்றனைப்
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது,சொல் மாலைகள்
ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே?–4-5-1-

வீற்றிருந்து ஏழுலகில்
கீழ் இவருக்குப் போலி கண்டு பிரமித்த விடாய் எல்லாம் தீர்க்கும்படி
நித்ய விபூதி யுடையனாய் இருக்கிற தன் படிகள் ஒன்றும் குறையாதபடி கொடு வந்து
காட்டிக் கொடுத்துக் கண்டீரே நாம் இருக்கிற படி
இந்த ஐஸ்வர்யம் எல்லாம் ஒன்றாய்த் தலைக்கட்டித்து
நீர் உம்முடைய வாக்காலே ஒரு சொல்லு சொன்னால் காணும் என்று இவர் கைத்தாளத்தைக் கொடுக்க
அவ்விருப்புக்கு மங்களா ஸாசானம் பண்ணி அருளினார் –

ஸ்ரீ யபதியாய் அவாப்த ஸமஸ்த காமனாய் உபய விபூதி யுக்தனான ஸர்வேஸ்வரன்
கீழே போலி கண்டு பிரமித்த இழவு எல்லாம் போம்படி
நித்ய விபூதியையும் லீலா விபூதியையும் உடையவனான படியைக் காட்டிக் கொடுத்துக்
கண்டீரே – நாம் இருக்கும் இருப்பு -இந்த ஐஸ்வர்யம் எல்லாம் ஒன்றாய்த் தலைக்கட்டித்தாம் –
நீர் உம்முடைய வாக்காலே ஒரு சொல்லு சொன்னால் காணும் என்று
இவர் கையில் தாளத்தைக் கொடுக்க அவ்விருப்புக்கு மங்களா ஸாஸனம் பண்ணுகிறார் –

உயர்வற என்கிற பாட்டை -வீற்றிருந்து -என்கிற பாட்டு -விவரிக்கிறது –
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் உயர்வும் தாழ்வுமாய்
வருகையாலே உயர்வற என்கிறது
லீலா விபூதியை வீற்றிருந்து ஏழுலகும் -என்றபடி

உயர் நலம் என்றது -நித்ய விபூதியை யுடையவன் என்று -உபய விபூதி யுக்தன் என்றபடி –
எவன் அவன் -ஸ்ருதி ப்ரஸித்தனானவன்
தனிக்கோல் செல்ல, வீவு இல் சீர்
ஸ்வ வ்யதிரிக்த ஸமஸ்த வஸ்துக்களும் தனக்கு சேஷமாய்த் தான் சேஷியாகையாலே
வந்த வ்யாவ்ருத்தி தோற்ற நியாந்தாவான சீர் தோற்ற வீற்று இருக்கை

இங்கன் அன்றாகில் பரஸ்பர வ்யாவ்ருத்தி எல்லாருக்கும் உண்டு இறே
ஸகல ஆத்மாக்களுக்கும் ஞான ஏக ஆகார தயா ஸாம்யம் யுண்டாய் இருக்கச் செய்தேயும்
விபுத்வ சேஷித்வ நியந்த்ருத்வங்கள் ஆகிற இவை அவ்வாஸ்ரயம் ஒன்றிலுமே கிடக்கும் அத்தனை இறே

இப்படி ஸர்வ கதனாய் வியாபித்து நிற்குமது நியமன அர்த்தமாகவே இறே
இப்படி நீர் அறிந்தபடி எத்தாலே என்ன
தன் நலமுடைய ஆனந்தத்தால் மயர்வற மதிநலம் அருளினான் -அத்தாலே அறிந்தேன்

எவன் அவன் -ஆற்றல் மிக்கு ஆளும் அம்மான் –
ஆற்றல் -என் மயர்வு -அக மமதையால் வந்த மயர்வு அற
ஆற்றல் பொறுமை -லோகத்தாரோடே என் ஆஜ்ஜா அதி லங்கனமான அபராதத்தைப் பொறுத்து
அற -ஆற்றல் மிக்கு ஆளும்
தஹ -பச -என்னாமல் பொறுத்து –

ஏழுலகும் தனிக்கோல் செல்ல, வீவு இல் சீர் ஆற்றல் மிக்கு ஆளும் அம்மான்
யாவன் ஒருவன் -அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து ஆளும்
சுற்றுப் பயணம் வந்து ஜகன் நிர்வஹனம் பண்ணுகை அன்றிக்கே
நித்ய விபூதியில் இருந்த இருப்பிலே லோகங்கள் அடைய தன் செங்கோல் செல்லும்படி ஆளும்

மதி நலம் அருளினன் என்று
தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ஜங்கமாதிகளுக்கு அனுரூபமான
பக்தி ரூபா பன்ன ஞானத்தைத் தன் நிர்ஹேதுக கிருபையாலே அருளினான் –

அம்மான்
அயர்வறும் அமரர்கள் அதிபதியான ஸ்வாமி -அவன்
இந்திரியாணி ஹயானி என்கிற தேஜிக் குதிரை போலே ஓடுகிற மனஸ்ஸை யுடையவனை
அவன் -வெம்மா வாய் கீண்ட செம்மா கண்ணன்
இருடீகேசன் ஆகையாலே நியமித்தான்
இந்த க்ருதஜ்ஜை தோற்றப் போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது
அயர்வின்றிக்கே அபர்யாப்த்த அம்ருத ஆனந்த மக்நரானராய் ஆனந்திக்க
அத்தாலே அவன் ஆனந்திக்க -அது கண்டு இவர்கள் ஆனந்திக்க –
இப்படி அநந்யோன்யம் ஆனந்திக்கிற படியைக் கண்டு இவர் ஆனந்திக்கிற
இவர் ஆனந்தம் உபய விபூதியிலும் மிக்கது –

இப்படி -ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே-
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
துயர் -துக்கம் -அதாவது -ப்ரயாஸம் –
பிரயாசமான சாதனாந்தரங்களால் வந்த துயர் அன்றிக்கே நிர்ஹேதுகமாக அளவிறந்த சுடர் அடி தொழு

ஹேய ப்ரத்ய நீகமாய் நிரவதிக தேஜோ ரூபமான சுடர் அடிகளைப்
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது சொல் மாலைகள் ஏற்ற நோற்றேர்க்கு இனி என்ன குறை எழுமையுமே –
திருக்குழலிலே ஏறும்படியாக -க்ருண்ணாதி சிரஸா ஸ்வயம் –என்கிறபடியே
நோற்றேற்கு இவர் இப்போது நோற்றது
மண்ணை இருந்து துழாவியிலே –ஆர்த்தியை ஜநிப்பித்த -கிருபையை இனி என்ன குறை எழுமையுமே –
நித்ய விபூதியில் அனுபவத்தை இங்கே லபித்தால் எனக்கு குறை உண்டோ
விண்ணுளாரிலும் சீரியரே
எனக்கு ஆர் நிகர் அகல் வானத்தே -என்று
பகவத் அனுபவத்தாலே நித்ய ஆனந்த மக்நனான எனக்கு ஒரு குறை உண்டோ என்கிறார் –

—————

தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்!
ஓர்ப்பால் இவ் வொண்ணுதல் உற்ற நல் நோய் இது தேறினோம்;
போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாயப்போர்த்
தேர்ப் பாகனார்க்கு இவள் சிந்தை துழாஅய்த் திசைக்கின்றதே.–4-6-1-

தீர்ப்பாரை யாம் இனியில்
கீழ்ப் பிறந்தது மானஸ அனுசந்தான மாத்ரமாய் -பாஹ்ய சம்ஸ்லேஷ யோக்யம் இல்லாமையாலே –
மோஹித்து அந்யாபதேசமாய்ப் பேசினார்

தீர்ப்பாரை யாம் இனியில்
மோஹித்தவருக்குப் பரிஹாரமாக தேவதாந்த்ர்யாமி பரமாக ஆஸ்வசிப்பிக்கலாமோ
என்று பரிவர் பார்க்க-அவர்களைக் குறித்து
அன்பர் விலக்கின பாசுரத்தை அந்யாபதேசத்தாலே அருளிச் செய்கிறார் –

——–

உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள், அவனை அல்லால்;
நும் இச்சை சொல்லி,நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்!
மன்னப் படுமறை வாணனை வண் துவராபதி
மன்னனை ஏத்துமின்! ஏத்துதலும்,தொழுது ஆடுமே.–4-6-10-

உயர்வற என்கிற பாட்டை -உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள்,-என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் அவர் உயர்வற உன்னித்து
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் உற்று உற்றுப் பார்க்க
ஒன்றுக்கு ஓன்று தொழுவாரும் தொழுவித்துக் கொள்வாருமாய் அற்றது –

உயர்வற உயர் நலம் உடையவன் யவன் அவன் -வண் துவராபதி மன்னன் -அவனை அன்றி
உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள், அவனை அல்லால்;
உயர்நலமான பர ப்ரஹ்ம ஆனந்தத்தை யுடையவன் எவன் அவன் -அவன்
மன்னப் படுமறை வாணனை வண் துவராபதி
மன்னன்
ஸ்ருதி ப்ரஸித்தனாய் ஸூ லபனானவனை ஒழிய மற்ற ஒரு தேவதையைத் தொழும் அவளோ இவள்

எனக்கு அவன் அடியிலே மயர்வற மதிநலம் அருளிற்றிலன் ஆகில் அன்றோ தேவதாந்த்ர பஜநம் பண்ணுவது
பக்தி ரூபா பன்ன ஞானம் பெற்றவர் இதர தேவதையும் உண்டு என்று அறிவரோ

நும் இச்சை சொல்லி,நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்!
மயர்வற மதிநலம் பெற்று இருக்கிற எனக்குத் தோற்றினார் தோற்றின படி சொல்லி
அணங்கு ஆடுகைக்குப் பிரயோஜனம் என்ன –

எவன் இந்த மதிநலம் பெற்றாராய் இருக்கிறவர் அவன் நிர்ஹேதுகமாக அருளினன்
அவன் யாவன் ஒருவன் -அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி –
மன்னப்படு மறை வாணன்
அஞ்ஞான அந்தகார ரஹிதரான நித்ய முக்தராலே ஸேவ்யராய்
அபவ் ருஷேயமான வேத ப்ரதிபாத்யனானவன் எவன் அவன் வண் துவராபதி மன்னன்

துயர் அறு சுடர் அடி தொழுது ஏத்துமின்!ஏத்துதலும்,தொழுது ஆடுமே.
தொழுது எழு என்று அன்பார் பரிவரைக் குறித்து வெறி விலக்கின பாசுரத்தைத்
தோழி தாயாரை வெறி விலக்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

—————-

சீலம் இல்லாச் சிறியே னேலும், செய்வினையோ பெரிதால்;
ஞாலம் உண்டாய்! ஞான மூர்த்தி! நாராயணா! என்று என்று
காலந் தோறும் யான் இருந்து, கைதலை பூசலிட்டால்,
கோல மேனி காண வாராய்; கூவியும் கொள்ளாயே.–4-7-1-

சீலம் இல்லாச் சிறிய–னில்
வண் துவாராபதி மன்னன் என்கிற திரு நாம ப்ரசங்கத்தாலே மோஹம் தெளிந்து
அது தான் பேற்றுக்கு உடல் அல்லாமையாலே கூப்பிடுகிறார் –

அறிந்து அறிந்து, தேறித் தேறி,யான் எனது ஆவியுள்ளே
நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து,
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் ;
நறுந் துழாயின் கண்ணி அம்மா! நான் உனைக் கண்டு கொண்டே.–4-7-7-

உயர்வற என்கிற பாட்டை –அறிந்து அறிந்து-என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவாக பராத்பரன் ஆர் என்று பார்த்து
உயர்நலம் உடையவனே பராத்பரன் என்று
அறிந்து அறிந்து, தேறித் தேறித் தெளிந்து

பரத்வம்
பஜநீயத்வம்
ஸுலப்யம்
அபராத ஸஹத்வம்
தொடக்கமாக அறிந்து அறிந்து, தேறித் தேறி

ஓரொரு குணங்களை அனுபவிக்க மாட்டாமை -மோஹமும் தெளிவுமாய் என்னுதல்

யவன்- யான் அவன் -எனது ஆவியுள்ளே-எனது ஆவியாவியும் நீ என்று சொல்லப் பட்டவன்

எவன் அவன் மயர்வற மதிநலம் அருளினவன்
நிறைந்த ஞான மூர்த்தி யானவன் –
அஞ்ஞான அந்தகாரத்தைப் போக்கி ஞானப் பிரகாசத்தைப் பண்ணித் தந்தவன் –

எவன் -நின்மலமாக வைத்தவன் -நின்மலமானவன் -அவன் நிர்ஹேதுகமாக அருளினவன் –
நிர்மலமாக வைத்து -அயர்வறுகை -நிர்மலமாகை –

அயர்வில்லாத அமரர்கள் அதிபதி
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்த்தவன் எவன் அவன்
ஒழிந்தேன் என்னும்படி ஜனன மரணாதிகளை ஒழித்தவன்
நறுந் துழாயின் கண்ணி அம்மான்
துயர் அறு சுடர் அடி தொழுது -ஹேய ப்ரத்ய நீகமாய் நிரவதிக தேஜோ மயமான திருவடிகளைத் தொழுது –

நறுந் துழாயின் கண்ணி
பரிமள ப்ரசுரமான திருத்துழாய் மாலையாலே அலங்க்ருதமான ஸ்வாமியைக் கண்டு கொண்டு
ஞான சாஷாத்காரமாகக் கண்டு கொண்டு
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் ;
சுடர் அடி தொழுது எழு என் மனனே -என்கிறார் –

—————

ஏறு ஆளும் இறையோனும், திசை முகனும், திருமகளும்,
கூறு ஆளும் தனி உடம்பன், குலம் குல மா அசுரர்களை
நீறு ஆகும் படியாக நிருமித்து, படை தொட்ட
மாறாளன் கவராத மணிமாமை குறை இலமே.–4-8-1-

ஏறு ஆளும் இறையோனில்
இப்படிக் கூப்பிட்ட இடத்தில் வந்து முகம் காட்டாமையாலே
அவனுக்கு உறுப்பு அல்லாத ஆத்மாத் மீயங்களில் நசையற்றபடியைச் சொன்னார்

——

மணி மாமை குறையில்லா மலர் மாதர் உறை மார்பன்
அணி மானத் தடைவரைத் தோள் அடல் ஆழித் தடக்கையன்
பணி மானம் பிழையாமே அடியேனைப் பணிகொண்ட
மணி மாயன் கவராத மட நெஞ்சால் குறை இலமே.–4-8-2-

உயர்வற என்கிற பாட்டை மணி மாமை குறையில்லா-என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவாக தம் தாம் கரணங்களும் தாங்களுமாக
இதர விஷயத்தில் சப்தாதி போக்யங்களைப் புஜிக்க
இவர் அங்கன் அன்றிக்கே பகவானுக்கு உறுப்பு அல்லாத ஆத்மாத்மீயங்களை விடுகிறார்

உயர்வற உயர் நல –மணி மாமை குறையில்லா மலர் மாதர்-
உயர் நலம் என்று
உகார வாஸ்யையான பிராட்டிக்கு உயர்வு அறுகை யாவது
ஈஸ்வரீம் ஸர்வ பூதாநாம் -என்கிற உயர்த்தி அற -என்றது –

விஷ்ணு பத்னியாகையாலே அவனுக்கு சேஷ பூதையாய் தாழ்ந்து இருக்கும்
ஆகையால் உயர்வற உயர் நலம் என்றது –
ஆகையாலே பிராட்டிக்கும் சேஷித்வமும் சேஷத்வமும் ஸ்வ பாவமாகையாலே சொல்லிற்று –

ஆக தத் வ்யதிரிக்தங்களுக்கு ஸ்வாமிநியாய் அவனுக்கு ஸ்வம்மாய் இருக்கையாலே
ஸ்ரீயதே ஸ்ரயதே என்றது –

உயர்நலம் யுடையவன் எவன் அவன் –
மணி மாமை குறையில்லா மலர் மாதர் உறை மார்பன்
பூவில் காட்டில் ரமணீயதையும் -நிறமும் -குளிர்ச்சியும் -மேன்மையும் -மணமும் -மதுவும் -ஸுகுமார்யமுமாக
எல்லாவற்றையும் கட்டி ஒரு பெண்ணாக வகுத்தால் போலே இருக்கிற உயர்நலத்தை யுடையவன்
உறை மார்பன் -அவள் அகலகில்லேன் -என்று நித்ய வாஸம் பண்ணுகிற மார்பை யுடையவன்

எவன் அவன் -ஸ்ரீ யபதியானவன் -எனக்கு மயர்வற மதிநலம் அருளினன் -எவன் அவன்
அணி மானத் தடைவரைத் தோள் அடல் ஆழித் தடக்கையன்
மயர்வற
சாதனாந்தர -ப்ரயோஜனாந்தரமாகிற மயர்வு அன்றிக்கே
மதிநலம் என்றது பக்தி ரூபா பன்ன ஞானத்தால் தானே உபாயம் உபேயம் என்னும்படி மதி நலத்தை அருளின
அணி மானத் தடைவரைத் தோள்
அணி -அலங்காரம்
மானம் -அளவில்லாமை
அலங்காரத்தாலும் அழகாலும் அளவில்லை என்றபடி –

அடல் ஆழித் தடக்கையன்
அடலாழி -அவித்யாதிகளான கர்மங்களையும்
பாஹ்ய விரோதிகளையும் நிரஸித்து
அலம் புரிந்த நெடும் தடக்கையாகையாலே போரும் போரும் எனக்கொடுத்த ஞான பக்தி முதலா மோக்ஷம்
அதன் பலமான கைங்கர்ய சாம்ராஜ்யத்தையும் தருகிற அடலாழித் தடக்கையன்
இப்படி நிர்ஹேதுகமாக அருளினவன் யாவன் ஒருவன் அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி
அயராதே -சோம்பாதே
நித்ய அம்ருத தாஸிகளானவருக்கு ஸ்வாமி யானவன் –

பணி மானம் பிழையாமே அடியேனைப் பணிகொண்ட
பணி என்றது கைங்கர்யம்
மானம் -அளவு
அதில் ஓர் அளவும் குறையாதே அஹம் ஸர்வம் கரிஷ்யாமி என்கிறபடியே
அடியேனைப் பணி கொண்ட
கிரியதாம் இதி மாம் வத -என்று இளைய பெருமாளை அடிமை கொண்டால் போலே
இருவரும் கூட இருந்து காணும் அடிமை கொண்டது –

இப்படி அடிமை கொண்டவன் எவன் அவன் -மணி மாயன் -துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
மணி மாயன்
நீல ரத்னம் போன்ற வடிவு அழகைக் காட்டி
துக்க கந்த ரஹிதமான நிரவதிக தேஜோ ரூபமான திருவடிகளைத் தொழப் பண்ணி
ஸ்வ யத்னத்தால் வரும் ப்ரயாஸம் அன்றிக்கே பரஞ்சோதியான பாத பங்கயங்களைத் தொழுது எழு
என் மனனே -எனக்கு பவ்யமான நெஞ்சே

அன்றிக்கே
மணி மாயன் கவராத மட நெஞ்சால் குறை இலமே.–
ரமணீயமான விக்ரஹத்தையும்
ஆச்சர்யமான குண சேஷ்டிதங்களையும் யுடையவன்
விரும்பாத பவ்யமான நெஞ்சாலே எனக்கு என்ன பிரயோஜனம் உண்டு

பிராட்டியும் பெருமாளுமான சேர்த்தியிலே தொழுது எழும்படி அருளினானாகில்
என் மனனே -என் மட நெஞ்சமே -என்று உன்னாலே என்ன பிரயோஜனம் உண்டு
அவனுக்கு வேண்டாத என் நெஞ்சமும் எனக்கு வேண்டா என்கிறார் –

——————-

நண்ணாதார் முறுவலிப்ப, நல்லுற்றார் கரைந்துஏங்க,
எண்ணாராத் துயர்விளைக்கும் இவைஎன்ன உலகியற்கை?
கண்ணாளா! கடல்கடைந்தாய்! உனகழற்கே வரும்பரிசு,
தண்ணாவாது அடியேனைப் பணிகண்டாய் சாமாறே.–4-9-1-

நண்ணாதார் முறுவலிப்ப, -லில்
இப்படி உடம்பு வேண்டா உயிர் வேண்டா என்ற இடத்திலும் போதாமையால் முடிகைக்கும்
உன் தரவு வேண்டி இருந்தது -முடித்துத் தர வேண்டும் என்று இவர் அபேக்ஷிக்க
ஸம்ஸாரிகளில் தமக்கு உண்டான வ்யாவ்ருத்தியையும்
நித்ய விபூதியில் பெரிய பிராட்டியாரும் தானுமாக இருக்கிற இருப்பையும் காட்டிக் கொடுக்கக் கண்டு
தரித்த படியை அருளிச் செய்கிறார் –

கூட்டுதி நின் குரை கழல்கள்; இமையோரும் தொழா வகை செய்து,
ஆட்டுதி நீ; அரவணையாய்! அடியேனும் அஃது அறிவன்;
வேட்கை எலாம் விடுத்து எனை உன் திருவடியே சுமந்து உழலக்
கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே.–4-9-9-

உயர்வற -என்கிற பாட்டை -கூட்டுதி நின் குரை கழல்கள்-என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்தளவும் -அவர்கள் தாரதம்யம் பாராதே
நீ யுகந்தாரைத் திருவடிகளிலே சேர்த்துக் கொள்ளுதீ
பிரமாதிகளே ஆகிலும் நீ நினையாதார் உன்னை வந்து கிட்டப்படாதே பண்ணி அலைப்பு தீ
ஆகையால் உயர்வு அற்றார்கள்

உயர்நலம் உடையவன் எவன் அவன் -ஞான ஆனந்த ஏக ஸ்வரூபனாய் -வேதைக ஸமதி கம்யனான நீ

ஆட்டுதீ -மயர்வு
ஆட்டுகை -உன் லீலைக்கு விஷயம் ஆக்குகை
மதி நலம் பெற்ற அடியேனும் அது அறிவேன்
சேஷசாயியான உன் படியை சேஷ பூதனான நான் நாராயணன் -என்கிற வத்தை அறிவேன் –

நீர் அறிந்தபடி என் என்ன
நீ தந்த பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே –அயர்வறும் அமரர்கள் அதிபதியான நீ –
ஷீராப்தியிலே சேஷசாயியாகக் கண் வளர்ந்து அருளும் படியை அடியேன் அஃது அறிவேன்

என் வேட்கை எலாம் விடுத்து
என்னையும் ஏக மனசரான இவருடைய சம்சார அனுசந்தானத்தாலே வந்த விசனம் எல்லாம் தீர்க்கும்படி
திரு நாட்டில் இருந்த இருப்பைக் காட்டி அருளக் கண்டு
அனுபவிக்கப் பெற்று ஒழிந்தவையாம் அத்தனை அன்றோ வேண்டுவது ஆசைப்படுகைக்கு

உன் விபூதியில் நான் எனக்கு என்னாதது உண்டோ
நீ மயர்வற மதி நலம் அருளுவதற்கு முன்பு யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்திலையோ

அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன் சுடர் அடியான உன் திருவடியே சுமந்து உழலக்
துயர் அறு -பாஹ்ய விஷய ப்ராவண்யம் அற
சுடர் அடி -பரமமான சுடர் அடி தொழுது எழு

உன் திருவடியே சுமந்து உழலக்
இதர விஷயங்களிலே நசை அற்று -நிரந்தரம் உன் பக்கலிலேயாய் –
உன் திருவடிகளையே சிரஸா வஹித்து அதுவே யாத்ரையாய்ச செல்லும்படிக்காகக்
கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே

துயர் அறு சுடர் அடி –கூட்டரிய துயர் அற்று -திருவடியைக் கூட்டினை நான் கண்டேனே
என் மனமே நீயும் தொழுது எழு

யாவர் சிலருக்கும் தம் தம்மால் சேர்த்துக் கொள்ள அரிய திருவடிகளை நான் சேரும் படி பண்ணினான்
இது தான் கேட்டார் வாய் கேட்டுச் சொல்லுகிறேன் அல்லேன்
சுடர் அடி தொழுது வர்த்தி என்கிறார் –

———–

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணி மாடம் நீடு திருக் குருகூரதனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே!–4-10-1-

ஒன்றும் தேவில்
எம்பெருமான் தன்னாலும் திருத்த ஒண்ணாது என்று கை விட்ட ஸம்ஸாரத்தை
பகவத் பரத்வ ஞானத்தை உபதேசித்துத் திருத்தின படியை அருளிச் செய்தார்

கீழ் நண்ணாதார் முறுவலிப்பலிலே சம்சாரிகள் படுகிற கிலேசம் பொறுக்க மாட்டாமையாலே
அவர்களைத் திருத்துவதாக நினைத்து
நீங்கள் தேவதாந்த்ர பஜனத்தாலே ஸம்ஸரிக்கிறி கோளே இத்தனை –
பராத்பரனான ஸர்வேஸ்வரனை ஆஸ்ரயித்து ஸம்ஸார பந்தத்தை அறுக்கப் பாருங்கோள் -என்று
பர உபதேச ப்ரவ்ருத்தர் ஆகிறார் –

—-

நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்
வீடில் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில்,
மாட மாளிகை சூழ்ந் தழகாய திருக் குருகூர தனைப்
பாடி ஆடிப் பரவச் சென்மின்கள், பல்லுலகீர்!பரந்தே.–4-10-2-

உயர்வற என்கிற பாட்டை -நாடி நீர் வணங்கும் தெய்வமும் -என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தம் அளவாக உயர்வாக தேவதாந்தர்யத்தை ஆஸ்ரயிப்பாரும் நீங்கள் ஆஸ்ரயணீயருமாய் இறே இருப்பது
ஆகையால் உயர்வும் தாழ்வுமாய் இறே லீலா விபூதி இருப்பது இருப்பது –

உயர்நலம் யுடையவன் எவன் ஒருவன் -அவன்
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
ஆஸ்ரயிக்கிற உங்களோடு
ஆஸ்ரயணீயரான அவர்களோடு வாசி யற
மற்றும் யாதும் இல்லா அன்று, நான்முகன் தன்னொடு
தேவர் முதலானவை உண்டாக்கினான்
நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்
யாவன் ஒருவன் அவன் மதிநலம் அருளினன்

எவன் அவன் தேவதாந்த்ர போஜனம் ஆகிற மயர்வை அறுத்து அவர்கள் பக்கலிலே
பரத்வ சங்கையையும் அறுத்தான்
அவனே பராத்பரன் -என்கிற மதி நலத்தை அருளினான்

எவன் அவன் -வீடில் சீர்ப் புகழ் ஆதிப்பிரான்-அவன்
நீங்கள் ஸேவை புரிகிற தேவதைகள் ஐஸ்வர்யத்துக்கு அடியான கர்மம் நசிக்க நசிக்கும்

வீடில் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் -அயர்வறும் அமரர்கள் அதிபதி
நித்தியமான கல்யாண குண பூர்ணனான -காரணமான -புருஷோத்தமனான -உபகாரகன் –
காரணந்து த்யேய
த்யேயா நாராயணஸ் ஸதா
என்று அனுபவிக்கிற நித்யருக்கு ஸேவ்யனானவன் நம் எல்லாருக்கும்
மோக்ஷ பிரதானம் பண்ணுகைக்காக த்வரிதனாய் வந்து திருக்குருகூரிலே
அவன் மேவி உறை கோயில்,
இங்கே யாய்த்து திரு உள்ளம் பொருந்திற்று

நித்ய விபூதி இங்கேயாய் -மஹா நகரமும் -மாட மாளிகைகளுமாய் அற்றது
தஸ்மின் யதந்தஸ் தத் உபாஸி தவ்யம் -என்கிறபடியே
அவனோபாதி அவன் குண விபூதிகளும் உபாஸ்யம் என்னும் இடம் சொல்கிறது

புகழ் -எல்லாரையும் ரக்ஷித்து மோக்ஷம் கொடுக்க வந்த புகழ்

ஸுலப்யமான -வீடில் சீர்ப் புகழ்-யுடையவன் -ஆஸ்ரயணீயன் நித்ய வாஸம் பண்ணுகிற
திருக் குருகூர தனைப் பாடி ஆடிப் பரவச் சென்மின்கள், பல்லுலகீர்!பரந்தே

துயர் அறு சுடர் அடி தொழுது எழுந்து ஆடிப்பாடிப் பல்லுலகீர்! பரவிச் சென்மின்கள்
துயர் இளைப்பு -அறு -அன்றிக்கே -சுடர் அடி -மோக்ஷ ஆனந்த ப்ரதமான தேஜஸ்ஸை யுடைய
திருவடிகளைத் தொழுது எழு என் மனனே என்றும்
லௌகீகர்க்குமாகப் பர உபதேசம் பண்ணுகிறார் –

———–

நான்காம் பத்து விவரணம் முற்றிற்று

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய்மொழி வாசகமாலை — ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை–மூன்றாம் பத்து விவரணம்-

February 4, 2022

சந்தியும் சந்திப்பதமும் அவை தம்மிலே தழைக்கும்
பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலு கிற்பீர்
வந்தியும் வந்திப்பவரை வணங்கும் வகை அறிவீர்
சிந்தியும் தென் குருகூர் தொழுது ஆட் செய்யும் தேவரையே

நாத முனிக்கு அன்று நாலாயிரமும் உணர்த்தி
போதம் அருள் குருகூர் வித்தகனார் -கோதில்
திருவாய் மொழி வாசக மாலைத் தேனைத்
தரவே எனக்கு அருள் செய்தார் –

———-

முடிச் சோதி யாயுனது முகச் சோதி மலர்ந்ததுவோ
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் யலர்ந்ததுவோ
படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் நின் பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ திருமாலே கட்டுரையே –3-1-1-

முடிச் சோதியிலே
அத்தேகத்தோடே சம்பந்தித்து நின்று அழகரோடே போக்யதையை அனுபவித்தார்

கீழே
பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல் மருளில் வண் குருகூர் வண் சடகோபன் -என்று
அவன் கல்யாண குண விஷயமாக அஞ்ஞானம் இல்லை என்கிறார் –
அந்த குணாதிக்ய விஷயத்திலே அஞ்ஞானம் அனுவர்த்திக்கிற படி சொல்லுகிறார் இதில் –

—-

மாசூணாச் சுடருடம்பாய் மலராது குவியாது
மாசூணா ஞானமாய் முழுதுமாய் முழுதியன்றாய்
மாசூணா வான் கோலத்தமரர் கோன் வழிப்பட்டால்
மாசூணா வுனபாதம் மலர்ச்சோதி மழுங்காதே–3-1-8-

உயர்வற என்கிற பாட்டை -மாசூணாச் சுடருடம்பா-என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்

உயர்வற உயர்நலம் உடையவன் எவன் அவன்
மாசூணாச் சுடருடம்பாய் மலராது குவியாது
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் ஹேய சரீரங்களாலே
எடுத்த தேவாதிகளாகப் பிரித்தால்
அது மிஸ்ர சத்வம் ஆகையால் மாசாயே இருக்கும்

இது அங்கன் அன்றிக்கே
ஸ்வரூப ரூப குணங்களாலும்
ஹேய ப்ரத்யநீக ஸூத்த ஸத்வமாய் -நிரவதிக தேஜோ ரூபமான திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையையாய்
யுவா குமாரா
அரும்பினை அலரை –என்கிறபடியே
ஏக காலத்திலேயே இரண்டு அவஸ்தையையும் சொல்லலாய் இருக்குமவன் யாவன் ஒருவன்
அவன் மயர்வற மதிநலம் அருளினான்

மாசூணா ஞானமாய்
ஸாஸ்த்ர ஜன்ய ஞானங்களுக்கும் -ஸ்வ யத்ன சா பேஷமான மாசு உண்டு
அந்த மயர்வற பக்தி ரூபா பன்ன ஞானத்தை நிர்ஹேதுகமாக அருளுகையாலே
மாசூணா ஞானமாயிற்று –

ஸ ஹேதுகமாக அருளுமாகில் ஞானத்துக்கு மாசு இறே
ஆகையால் உபயருடைய ஞானத்துக்கும் மாசு அற்றது
ஸம்ஸாரிகளைப் போலே ஸ்வரூப அந்யதா பாவம் இல்லை

அவன் திருமேனிக்கும்
ஞானத்துக்கும்
மாசு இல்லாமையைச் சொல்லிற்று

முழுதுமாய் முழுதியன்றாய்
அனுக்தமான குணங்களை யுடையனாய்
வரம்பு இன்றி முழுதியன்றாய்

இப்படி எல்லாவற்றையும் நிர்வஹிக்கிறவன் எவன் அவன்
அமரர்கள் அதிபதி
ப்ரஹ்மாதிகளைப் போலே ஸ்வா தந்தர்யம் இல்லாத நித்ய ஸூ ரிகள் ஸேவ்யனானவனை

மாசூணா வான் கோலத்தமரர் கோன் வழிப்பட்டால்
கேவலம் ப்ரஹ்ம பாவனை யாகிற கோலத்தமரர் கோனை உண்டாக்கினாலும்
அவனும் மாசூணாமல் ஏத்தினால் அவத்யமாம் அத்தனை அல்லது
உன்னுடைய உயர் நலத்தைக் கரை காண வல்லனோ –

உன் துயர் அறு சுடர் அடி
மாசூணா வுனபாதம் மலர்ச்சோதி மழுங்காதே–
ஹேய ப்ரதிபடமாய் பரஞ்சோதியான யுன் பாதம் விகஸிதமான தேஜஸ்ஸூ மழுங்காதோ
அப்ராப்யா மனஸா ஸஹ -என்று வேதமே மீண்ட விஷயத்தை
இவன் ஏத்தின அளவாய் மட்டுப்பட்டதாம் இறே

ஆகையால் அவன் நிரவதிகமான பரஞ்சோதியை நம்மாலே ஏத்தலாய் இருந்ததோ
என்று கை வாங்காதே
என் மனமே
வல்லதோர் வண்ணம் சொன்னால்
அதுவே உனக்காம் வண்ணம் என்று தொழுது
த்ரிவித கரணங்களாலும் வந்த சம்சயம் அற்று வர்த்தித்து வாழ்வாய் என்கிறார் –

——–

முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்
வெந்நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன் –3-2-1-

முன்னீர் ஞாலத்தில்
அழகருடைய போக்யதையை அனுபவிக்கப் புக்க இடத்திலே பரிச்சேதித்து அனுபவிக்க ஒண்ணாமையாலே
கலங்கி
விஷய துர்பலத்தாலே வந்தது என்று அறியாதே
தம் கரண சங்கோசத்தினால் வந்தது என்று அனுசந்தித்து
அதுக்கு அடியான
ஸம்ஸார ஸம்பந்தத்தை அறுத்துத் தந்து அருள வேணும் என்று கூப்பிட்டார் –

——

கிற்பன் கில்லேன் என்றிலன் முன நாளால்
அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன்
பற்பல்லாயிரம் உயிர் செய்த பரமா நின்
நற் பொற் சோதித் தாள் நணுகுவது எஞ்ஞான்றே –3-2-6-

உயர்வற என்கிற பாட்டை -கிற்பன் கில்லேன்-என்கிற பாட்டை விவரிக்கிறது
எங்கனே என்னில்

உயர்வற -கிற்பன் கில்லேன்-
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் ப்ராப்ய ப்ராபகங்கள் எல்லாம்
அநித்யம் என்று விட்டு இதர விஷயங்களில் ஸாதனம் மஹா ஆயாஸம் –
பலமும் அல்ப அஸ்த்ரங்களாய் இருக்கும் –

இது பகவத் விஷயத்தில் வந்தால் -இச்சைக்கு மேற்பட்டது ஓர் ஆயாஸம் அன்றிக்கே
பேற்றில் வந்தால் உயர் நலம் உடையவன் யாவன் ஒருவன்
அவனதாய் புனரா வ்ருத்தி இல்லாத விலக்ஷண மோக்ஷமாய் இருக்கும்

அதுக்கு ஈடாக ஒன்றைச் செய்ய வல்லீரோ என்ன
அது செய்கிறோம் என்று இலம்

அல்ப அஸ்திரமான இதர விஷயத்தைத் தவிர வல்லீரோ என்ன
அதுவும் தவிர்க்கிறேன் என்று இலம்

கிற்பன் கில்லேன்-என்கிறவன் எவன்
முன நாளால் அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தவன்

இப்படி விஹிதத்தைச் செய்யாமையும்
அவிஹிதத்தைச் செய்கையும் என்று தொடங்கி
என்றவன் கேழ்க்க

முன நாளால்
கால தத்வம் உள்ளதனையும் இதுவே அன்றோ எனக்கு யாத்திரை

புறம்பே நம்மை ஒழியவும் துவக்க வற்றதாகவும் உண்டோ என்ன
அல்ப சாரங்கள் அவை
உன் பக்கல் வராதபடி தகைய வேண்டுவது உண்டு
அவற்றின் பக்கல் உள்ளது முள்ளிப் பூ ரஸம் போலே அற்பமாய்
பல பல விஷயங்கள் தோறும் கால் தாழ்ந்து ஸர்வ சக்தியான தேவரை அகன்று ஒழிந்தேன்

இப்படி நீர் கை கழிந்ததாகில் நம்மைச் செய்யச் சொல்வது என் என்ன
அயர்வறும் அமரர்கள் அதிபதியான நீ மயர்வற மதி நலம் அருளினபின்பு
தத் வியதிரிக்த போகங்கள் எல்லாம் அல்ப அஸ்த்ரங்களாய்த் தோற்றிற்று

அபர்யாப்த்த அம்ருதாசிகளான -நித்ய ஸூ ரிகள் ஸேவ்யனான நீ
பற்பல்லாயிரம் உயிர் செய்த பரமா
உயிர் செய்கையாவது
சேதனருக்கு கரண களேபரங்களைக் கொடுத்து
ஸ்திதி கமன சயனாதிகளுக்கு யோக்யமாம் படி பதார்த்தங்களை யுண்டாக்குகை

இத்தைச் செய்தான் யாவன் ஒருவன்
அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழும்படி
நின் நற் பொற் சோதித் தாள் நணுகுவது எஞ்ஞான்றே
உபய விபூதி நாதனான உன்னுடைய
ஹேய பிரதிபடமாய்
அனவதிக தேஜோ ரூபமாய்
அத்யந்தம் ஸ்ப்ருஹணீயமான
திருவடிகளை நானும் என் மனமும் இசைந்து வந்து பற்றித் தொழுது வர்த்திப்பது என்று கொலோ
இதுக்கு ஒரு குணாதிக்யம் உண்டாக்கி உன்னைக் கிட்டுக்கைக்கு அவதி நாள் இட்டுத் தர வேணும் என்கிறார் –

————

ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–3-3-1-

ஒழிவு இல் காலத்தில்
நீர் கரண சங்கோசத்தை அனுசந்தித்து ஈடுபட வேண்டா
இது விஷய ஸ்வ பாவம் காணும்
நித்ய ஸூரிகளும் நம்மை அனுபவிக்கப் புக்கால் இப்படியே காணும் படுவது –

ஆனபின்பு இவ்வுடம்போடே உம்மை அடிமை கொள்ளுகைக்கு திருமலையில் வந்து நின்றோமே
என்று அங்கே நிற்கிற நிலையைக் காட்டிக் கொடுக்கக் கண்டு
அங்கே அடிமை செய்யப் பாரித்தார்

உயர்வற என்கிற பாட்டை -ஒழிவு இல் காலம் -என்கிற பாட்டு விவரிக்கிறது எங்கனே என்னில் –

திருமந்திரத்தில் சரம சதுர்த்தியில் சொன்ன புருஷார்த்தத்தை
திருவாய் மொழியிலே முதல் பாட்டாலே விவரிக்கிறார்
அந்த அர்த்தத்தை ஒழிவில் காலம் என்கிற பாட்டாலே விவரிக்கிறார்
எங்கனே என்னில்

உயர்வற -ஒழி வில்
உயர்வானது மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவாக
கலா காஷ்டாதி ரூபமாக அநேக கல்ப அவசானமான பூத பவிஷ்யத் வர்த்தமான
காலங்கள் எல்லாம் என்றபடி

உயர்வற ஒழிவில் காலம்
ஒருவரைப் பார்க்க ஒருவர் உயர்வதும் தாழ்வதுமாகையாலே காலமும் அதுக்கு அனுரூபமாய்
கலா காஷ்டாதிகளுமாய் உயர்வது மாறுவதுமாய்

காலமும் அற -இல் -என்கிறது
இல்லாமையைச் சொல்கிறது

உயர் நலம் -ஒழிவில் காலம்
அகால கால்யமான -நலம் அந்தம் இல்லதோர் நாடாய் –
அயர்வறும் அமரர்கள் அதிபதியினுடைய பரம ஆனந்தத்தைச் சொல்கிறது

உடையவன்
உபய விபூதியை யுடையனாய் யாவன் ஒருவன் அவன்
உடனாய்
உபய விபூதி நாதனை உடனாய் மன்னி
யவன் அவன்
திவ்யாத்ம ஸ்வரூப ப்ரகாசகமான
கல்யாண குண விசிஷ்டமான
திவ்ய மங்கள விக்ரஹத்தோடே கூடி இருக்கிற
ஸ்வாமியோடே கூட
தேவத்வே தேவ தேஹேயம் மனுஷ்யத்வே ச மானுஷீ -என்கிற
பிராட்டியைப் போலே உடனாய் மன்னி

காலம் எல்லாம் -என்று
சர்வ காலமும் என்றது

மன்னி -என்றது
ஸர்வ அவஸ்தையிலும் என்றபடி

விண் மீது இருப்பாய் -இத்யாதிப்படியே
பரத்வாதிகள் ஐந்திலும் தொடர்ந்து அடிமை செய்ய வேண்டும் –

அவன் ப்ராப்ய அதிகாரி
அவன் ப்ராப்யமான திரு வேங்கடமுடையான் –

மற்றும் இப்படி நீர் அறிந்தபடி என் என்னில்
மயர்வற வழு விலா அடிமை
ப்ராப்யத்தில் மதி மயங்காமல் -ஒன்றும் நழுவாமல்
அற -இல்லா
ப்ராப்யாந்தரத்தில் ருசி இல்லாமல் அறுத்து மதி நலம் அருளினான் –

அடிமை செய்கைக்கு உறுப்பாக -ஞான சக்தி ப்ரேமங்களாய்க் கொண்டு
ஸர்வ வித கைங்கர்யங்களும் செய்யும் படிக்கு அருளினான்

அடிமை செய்யும் வேண்டும் நாமே
யவன் -கிருபா பாத்ர பூதனான நாம்
அவன் அருளினவன்

ஆர்ஜித்து வந்தது அன்று
அர்த்தித்து வந்தது அன்று
ஆகிஞ்சன்யமும் அநந்ய கதித்வமுமே பற்றாசாக அருளின பக்தியை யுடையவன் –

அவன் கிருபா ப்ரவாஹமுடையவனான அயர்வறும் அமரர்கள் அதிபதி
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து எழில் கொள் சோதி

அயர் -அசர்வு
அசராமல் ப்ராப்ய அனுபவம் பண்ணுமவர்கள்
தெழி குரல் அருவி
நாரங்களாய் நித்ய ஸூரிகள் அடிமை செய்கிறபடி
அருவிகள் ப்ரீதி பிரேரிதராய்க் கொண்டு வாசா கைங்கர்யமான ஸாம கானமான
செஞ்சொல் கவி பாட வாருங்கோள் என்று அழைப்பாரைப் போலே
தெழி குரல் அருவி சோரா நின்றது

தெள்ளருவி கொழிக்கும் திரு வேங்கட மா மலை இறே
அதிபதி -எழில் கொள் சோதி
காலோசிதமாக அடிமை கொள்ளுமவன் எவன் அவன்
அஹம் ஸர்வம் கரிஷ்யாமி -என்று பாரித்தவனை
க்ரியதாம் இதி மாம் வத -என்று ஏவிக் கொள்ளுமவன்

திருவேங்கடத்து எழில் கொள் சோதி -துயர் அறு சுடர் அடி
இப்படிப்பட்ட அதிகாரிக்குத் துயராவது
ருண த்ரயமும் -தேவ ரிஷி பித்ரு கடன்கள் –
அபசார த்ரயமும் -பகவத் பாகவத் அஸஹ்ய அபசாரங்கள்
வேங்கடங்கள் என்கையாலே
மெய்ம்மேல் வினை முற்றவும் வேம்

வேங்கடத்து எழில் கொள் சோதி சுடர் அடி தொழுது எழு
வானார் சோதி
நீராழிச் சோதி
தம் தாமமே மேவிய சோதி
ஞானச் சுடர் விளக்கு -என்கிற ஜோதிகளில் வ்யாவ்ருத்தி

வானார் சோதி -பகல் விளக்குப் பட்டு இருக்கும்
நீராழிச் சோதி -நீர் பட்ட விளக்காய் இருக்கும்
நீராழிச் சோதி தம் தாமமே மேவிய சோதி -அணையும் விளக்காய் இருக்கும்
ஞானச் சுடர் விளக்கு -குடத்தில் இட்ட விளக்காய் இருக்கும்
வேங்கடத்து எழில் கொள் சோதி -குன்றில் இட்ட விளக்காய் இருக்கும்

எந்தை தந்தை தந்தைக்கே
இப்படிப்பட்ட ஸ்வாமி யானவன்
சுடர் அடி தொழுது எழு என் மனனே
எந்தை தந்தை தந்தைக்கே
வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம் என்று மனஸ்ஸை ஸம்போதிக்கிறார்

நான் கரணியும்
நீ காரணமும்
ஆனால்போலே
நமக்கு அவன்
ஸ்வாமியுமாய் -ஸர்வ வித பந்துவுமானவன்
அவனுக்கு வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம் என்று
ப்ராப்யத்தைத் அர்த்தித்துப் பெறுகிறார் –

———-

புகழும் நல் ஒருவன் என்கோ! பொரு இல் சீர்ப் பூமி என்கோ!
திகழும் தண் பரவை என்கோ தீ என்கோ! வாயு என்கோ!
நிகழும் ஆகாசம் என்கோ! நீள் சுடர் இரண்டும் என்கோ!
இகழ்வு இல் இவ் வனைத்தும் என்கோ! கண்ணனைக் கூவு மாறே.—————–3-4-1—

புகழும் நல் ஒருவனில்
இவர் பாரிப்புக்கு ஈடாகத்
தன்னையும்
தன் விபூதியையும்
தன் ஸர்வாத்ம பாவத்தையும் காட்டிக் கொடுக்கக்
கண்டு ஹ்ருஷ்டராய் பாரித்த படியே வாசகமாக அடிமை செய்து தலைக்கட்டினார்

யாவையும் எவரும் தானாய் அவர் அவர் சமயந் தோறும்
தோய்வு இலன்; புலன் ஐந்துக்கும் சொலப்படான்; உணர்வின் மூர்த்தி;
ஆவி சேர் உயிரின் உள்ளால் ஆதும் ஓர் பற்று இலாத
பாவனை அதனைக் கூடில், அவனையும் கூட லாமே.–3-4-10-

உயர்வற -என்கிற பாட்டை -யாவையும் எவரும் தானாய்-என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்

உயர்வற யாவையும் எவரும் -என்று
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும்
பூதங்கள் பவ் கிதங்கள் -ஸ்லாக்யமான ரத்நாதிகள் -ரஸவத் பதார்த்தங்கள் -கானாதிகள்
பகவத் ஸ்வரூப குணங்களாய் உள்ள யாவை -யவரும் -தானாய் நிற்கையாலே
ஒன்றுக்கு ஓன்று உயர்வும் தாழ்வுமாய் இருக்கையாலே

உயர்வற உயர்நலம் உடையவன் எவன் அவன்
சேதன அசேதனங்களில் வியாபித்து நீ நின்றால்
தத் கத தோஷைர் அஸம்ஸ்ப்ருஷ்டனாய் இருக்கும்
சேதன அசேதனங்கள் அடங்க தானே என்ற சொல்லுக்குள்ளேயாய்
பிரகாரப் பிரகாரியாய் இருக்கும் அத்தனை –

சேதனருடைய ஸூ கித்வ துக்கித்வங்கள்
அசேதனங்களுடைய பரிணாமாதிகள் தட்டாது இருக்கிற படி

அவர் அவர் சமயந் தோறும் தோய்வு இலன்;
சேதன அசேதனங்களை தானே என்னும் சொல்லுக்குள் அடங்கும்படி அவற்றோடு கலந்து நீ நிற்கச் செய்தேயும்
அவற்றினுடைய தோஷங்கள் தன் பக்கலில் தட்டாத படி நிற்கும் –

சேதனனுக்கு அசித் கதமான பரிணாமாதிகள் இல்லையே யாகிலும் அந்த அசித் சம்சாரக்கத்தாலே
ஸூக துக்கங்கள் உண்டாகா நின்றது இறே
அப்படியே இவனுக்கும் தட்டாது என்னத் தட்டாது -ப்ரவேஸ அனுகுணத்தாலே

இப்படி என் கொண்டு அறிந்தீர் என்ன
விபூதிமானாய் இருக்கிறவன் யாவன் ஒருவன் மயர்வற மதிநலம் அருளுகையாலே அறிந்தேன்
பகவத் நிர்ஹேதுக கிருபையால் பிரகாசித்தது

தோய்வு இலன்; புலன் ஐந்துக்கும் சொலப்படான்;
இந்த்ரியங்களாலும் அறியப் போகாதவன்

யாவன் ஒருவன் -அவன் அமரர்கள் அதிபதி
சற்றும் விஸ்ம்ருதி அற்று அனுபவிக்கிற நித்ய முக்தருக்கும்
உணர்வின் மூர்த்தி;
ஞான ஆனந்தங்களாலே ப்ரகாசமான திவ்ய மங்கள விக்ரஹத்தையும்
திவ்யாத்ம ஸ்வரூபத்தையும் யுடையவன்

யவன் அவன் -ஆவி சேர் உயிரின் உள்ளான் -யாதுமோர் பற்று இல்லாதான்
ஆவி யுண்டு
பிராண ஆஸ்ரயமான சரீரம் -அத்தோடு சேர்ந்த உயிர் உண்டு -ஆத்மா
அதுக்கு அசித் ஸம்பந்தத்தாலே பால்யாதிகள் உண்டாகிறது போல்
பரமாத்மாவுக்கு தத்கத தோஷங்கள் தட்டாவோ என்னில்
ஆதும் ஓர் பற்று இலாத பாவனை அதனைக் கூடில்,
அவன் பக்கல் பக்தி உண்டாகில்
அவனையும் கூட லாமே.–என் மனனே -தொழுது எழு
என்று நெஞ்சுக்கும் நெஞ்சு போல்வாருக்கும் உபதேசித்து
உபதேச கர்ப்ப அனுபவம் பண்ணுகிறார் –

———-

மொய்ம்மாம் பூம்பொழிற் பொய்கை முதலைச் சிறைப்பட்டு நின்ற
கைம்மாவுக்கு அருள் செய்த கார்முகில் போல்வண்ணன் கண்ணன்
எம்மானைச் சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும் துள்ளாதார்
தம்மால் கருமம் என்? சொல்லீர், தண் கடல் வட்டத்து உள்ளீரே!–3-5-1-

மொய்ம்மாம் பூம்பொழிற் பொய்கையில்
அவனுடைய சவுந்தர்யாதிகளில் ஈடுபட்டு இருக்குமவர்களைக் கொண்டாடியும்
அது இல்லாதாரை நிந்தித்து
முகமை தலை மத்திடை இட்டுச் சொல்லுகிறார் –

கருமமும் கரும பலனும் ஆகிய காரணன் தன்னைத்
திரு மணி வண்ணனைச் செங்கண் மாலினைத் தேவ பிரானை
ஒருமை மனத்தினுள் வைத்து உள்ளம் குழைந்து எழுந்து ஆடிப்
பெருமையும் நாணும் தவிர்ந்து பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே.–3-5-10-

உயர்வற என்கிற பாட்டை கருமமும் கரும பலனும்-என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்

உயர்வற -கருமமும் கரும பலனும் ஆகிறது
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவாக
கர்ம ஞானங்களாலும் -தத் சாதன பலன்களாலும் உயர்வும் தாழ்வும் ஆயிற்று –

அதில் விஞ்சின கைவல்யமாகிற படு குழியிலே விழாமல் ரக்ஷிக்கிறவன் யவன் அவன்
கருமமும் கரும பலனும் ஆகிய காரண மாணவன் எவன் ஒருவன்
அவன் மயர்வற மதி நலம் அருளினான்

மயர்வாவது
அவித்யாதிகளால் வரும் காம்ய பலன்களைப் போக்கித் தன்னையே ப்ராப்ய பிராபகங்களாக அறியும் படி
பக்தி ரூபா பன்ன ஞானத்தைத் தன் நிர்ஹேதுக கிருபையாலே அருளினவன் யாவன் ஒருவன்
அவன் கருமமும் கரும பலனாக காரணனும்
அனுஷ்டாதாகவும் நியாமகனும் பல ப்ரதனும் அவன்

ஆகையாலே
திரு மணி வண்ணனைச் செங்கண் மாலினைத் தேவ பிரானை
இப்படி உபாசகருக்கு பல ப்ரதானவன்
ஸ்ரீ யபதியாய்
காந்தி மிக்கு இருந்துள்ள நீல ரத்னம் போன்ற திரு மேனியையும்
அகவாயில் வாத்சல்யம் தோன்றும் திருக்கண்கள்
கருணை அம்ருதம் பொழிகிற செங்கண் மாலினை

தேவர்களுக்கு உபகாரகனான -அயர்வறும் அமரர்கள் அதிபதியை –
அநிமிஷரான நித்யருக்கு அதிபதி யானவனை

ஒருமை மனத்தினுள் வைத்து
நித்ய ஸூரிகளைப் போலே என்னையும் மனனும் இவனும் ஸதா அனுபவம் பண்ணும்படி
அனுபவிப்பித்து எனக்கும் உபகாரகன் ஆனவனை

ஒருமை மனத்தினுள் வைத்து துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
உள்ளம் குழைந்து எழுந்து ஆடிப் பெருமையும் நாணும் தவிர்ந்து பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே.–
ஹேயபிரதிபடமான சுடர் அடியைத் தொழுது
ஒரு பிரயோஜனத்துக்காக இன்றிக்கே
நெஞ்சிலே ஒருமிக்க வைத்து
அத்தாலே சிதிலமாய்
இருந்த இடத்திலே இருக்க ஒட்டாமையாலே ஆடிப்
பெருமையையும் லஜ்ஜையையும் விட்டு அடைவு கெட ஏத்துங்கோள்
அதுவே உங்களுக்குத் புருஷார்த்தம் என்று நெஞ்சுக்கும் நெஞ்சு போல்வாருக்கும்
உபதேசித்து அனுபவிக்கிறார் –

———

செய்ய தாமரைக் கண்ணனாய் உலகு ஏழும் உண்ட அவன் கண்டீர்
வையம் வானம் மனிசர் தெய்வம் மற்று மற்றும் மற்றும் முற்றுமாய்
செய்ய சூழ் சுடர் ஞானமாய் வெளிப் பட்டு இவை படைத்தான் பின்னும்
மொய்கொள் சோதியோடு ஆயினான் ஒரு மூவர் ஆகிய மூர்த்தியே.–3-6-1-

செய்ய தாமரைக்கண்ணனில்
பகவத் குண ஞானம் இல்லாமையாலே ஈஸ்வரனுடைய விஷயீ காரத்துக்கு உறுப்பாகி
அர்ச்சாவதார பர்யந்தமான ஸுலப்ய காஷ்டையை ஸம்சாரிகளுக்கு உபதேஸிக்கிறார் –

——

தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு தானுமாய் அவை அல்லனாய்
எஞ்சல் இல் அமரர் குல முதல் மூவர் தம்முளும் ஆதியை
அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள் அவன் இவன் என்று கூழேன்மின்;
நெஞ்சினால் நினைப்பான் எவன்?அவன் ஆகும் நீள்கடல் வண்ணனே.–3-6-9-

உயர்வற என்கிற பாட்டை -தஞ்சமாகிய -என்கிற பாட்டு விவரிக்கிறது -எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் தேவதாந்த்ர பஜனத்தால் உயர்வு அற்றார்கள்

உயர்வற உயர் நலம் உடையவன்
தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு தானுமாய்
அங்கன் அன்றிக்கே
உயர்வற உயர் நலம் உடையவன் என்று
விண் மீது இத்யாதிப்படியே பரத்வமே பிடித்து அவதாரத்து குணத்து அளவும் உபதேசித்தார்
அத்தாலே உயர்வு அற்றார்கள்

பரத்வம் வாஸா மகோசரமாய் எட்டா நிலமாய் இருந்தது
அவதாரத்துக்குப் பிற்பாடாரானோம்
நாங்கள் எங்கே யாரை ஆஸ்ரயிப்போம் என்ன

நீங்கள் உகந்தபடியே உகந்தவற்றைத் திருமேனியாகக் கொண்டு இருக்க
நீங்களும் அவற்றை திவ்ய ஸம்ஸ்தாபனாக விரும்பி ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்

உயர்வற உயர் நலமுடையவன் -தஞ்சமாகிய தந்தை தாய் இத்யாதி
லோகத்திலே ஒருவரை ஒருவர் தாய் தகப்பனாகக் கொண்டு
உயர்வும் தாழ்வுமாய் இருக்குமா போலே அன்று இறே
உயர்வற உயர் நலமுடையவன் தஞ்சமாகிய தந்தை தாயோடு தானும் ஆனான் –

அவர்கள் இவனுக்கு ஓர் இடர்கள் வந்தால் விட்டுப் போவார்கள்
இவர்களோடு உண்டான பந்தம் தான் கர்மம் அடியாக வந்ததாகையாலே கர்மம் க்ஷயிக்க க்ஷயிக்கும்

இங்கன் அன்றிக்கே பூதாநாம் யோவ்யய பிதா -சத்தா யோகீ -ஸகல பதார்த்தங்களும் பிதாவாய் இருக்கும்

யவன் அவன் தானு மாய்
மாதா பிதாக்கள் பொகட்டுப் போனாலும் நாம் ஜீவிக்க வேணும் என்று இறே
தனக்கு நன்மை பார்ப்பது

அவை அல்லனுமாய்
கீழ்ச் சொன்னவர்கள் அல்லனுமாய்
த்வமேவ மாதா ச பிதா த்வமேவ பந்துச்ச குருஸ் த்வமேவ -என்கிறபடியே
ஸர்வ வித பந்து மாத்ரம் அன்றிக்கே
ஞான ப்ரதனனான ஆச்சார்யனாய் மயர்வற மதி நலம் அருளினான் –

சரீரமேவ மாதா பிதரவ் ஜநயத-என்கிறவர்கள் அல்லர்

ஸஹி வித்யாதஸ் தஞ்ஜநயதி– ஸ்ரேஷ்டம் ஜன்ம –என்கிறபடியே
பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே ஸர்வ பந்துவும் தானே -என்கிற மதிநலம் அருளினான் –

எவன் அவன் -அடர்வரும் அமரர்கள் அதிபதி -எஞ்சல் இல் அமரர் குல முதல்-
இப்படி இருக்கிறவன் யார் என்னில்
நித்ய ஸூரிகளுக்கு உஜ்ஜீவன ஹேது வானவன்
எஞ்சல் -சுருக்கம் -அயர்வும் அப்படியே
இரண்டாலும் பகவத் அனுபவத்தில் ஸங்கோசம் இல்லாத அமரர் குலம் உண்டு -நித்ய ஸூரிகள் திரள்

அதற்கு நிர்வாஹகன் யாவன் ஒருவன் அவன் -மூவர் தம் உள்ளும் ஆதியை
த்யேய வஸ்துவை -காரணந்து த்யேய -இறே

அன்றியே
ப்ரஹ்ம ருத் ராதிகளுக்கு நிர்வாஹகன் ஆனவனை

அன்றியே
மூவர் தம் உள்ளும் ஆதியை-என்று
அநந்த கருட விஷ்வக் சேனர்கள் -முதலானவர்களுக்கு
த்யேயா நாராயணஸ் ஸதா -என்று அவர்கள் தியானத்துக்கு ஆதியான காரணனை

ஆக
ஸர்வ காரணன் என்றபடி

அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள் அவன் இவன் என்று கூழேன்மின்;
கீழ்ச் சொன்னவை எல்லாம் அச்சத்துக்கு உடல் இறே

ஜகத் காரண பூதனாய்
நித்ய முக்த அனுபாவ்யனாய்
ப்ரம்ம ருத்ராதிகளுக்கு நியாந்தாவானவன்
விபூதி த்வயத்தில் உள்ளார் எல்லாருக்கும் ஓக்க ஸர்வ பந்துவானவனை
நம்மாலே கிட்டப் போமோ -என்று இங்கனே
அஞ்சி நீர் உலகத்தில் உள்ளீர்கள்
லௌகிகரான நீங்கள்
அஞ்சி அவன் இவன் என்று கூழேன்மின்;

அவன் ஆகிறான்
தேச கால வஸ்துக்களால் அபரிச்சின்னனாய்
உயர்வற உயர்நலம் உடையவனாய்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் –

தேவதாந்த்ர பிரதிபத்தி யாகிற மயர்வற மதி நலம் அருளி
பரத்வாதிகளிலே அருமையை நினைத்து அஞ்சின அச்சம் தீர நாம் உகந்ததொரு
த்ரவ்யத்தைத் திருமேனியாகக் கொண்டு
இவன் என்று
ஸுலப்யம் தோற்ற நம் புத்தி அதீனமாய் இருப்பான் ஒருவன் ஆனபின்பு
அவன் அபரிச்சின்னன்
இவன் பரிச்சின்னன் -என்றும்
இங்கனே சம்சயியாதே மாந்தராகாதே கொள்ளுங்கோள்

நீள்கடல் வண்ணனே.
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
பராத்பரனே -அர்ச்சாவதார ஸூ லபனாய் இருக்க சம்சயித்துப் பயப்பட வேண்டா

சுடர் அடி -பரஞ்சோதி நீ பரமாய் -என்று குண பூர்த்தி உள்ளது –
அர்ச்சாவதாரத்திலே ஆகையாலே
அவன் இவன் என்று கூழேன்மின்;
அர்ச்சாவதாரத்தினுடைய திருவடிகளை ஆஸ்ரயியுங்கோள் –

பரத்வாதிகளைப் போலே கிட்ட அரிதே என்கிற ஹேயமும் இல்லை
அர்ச்சாவதார ஸர்வ ஸூலபமுமாய் -ஸர்வ ஸமாஸ்ரயணீயுமாய் -இருக்கிற
திருவடிகளை ஆஸ்ரயியுங்கோள்

இவ்விடத்தை நித்ய விபூதியிலும் அதிசயமாகக் கொண்டு இருக்கிறவன்
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே -என்று தன் நெஞ்சுக்கும் நெஞ்சு போல்வாருக்கும்
உபதேசித்து உபதேச கர்ப்ப அனுபவம் பண்ணுகிறார் –

———-

பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனைப்
பயில இனிய நம் பாற்கடற் சேர்ந்த பரமனைப்
பயிலும் திருவுடையார் எவரேலும் அவர்கண்டீர்
பயிலும் பிறப்பிடை தோறு எம்மைஆளும் பரமரே.–3-7-1-

பயிலும் சுடர் ஒளியில்
இப்படி உபதேசிக்கச் செய்தேயும் நெஞ்சு நெகிழ்ச்சி அன்றிக்கே இருந்த
ஸம்ஸாரிகளைக் கண்டு நோவு பட
நீர் ஏன் இவற்றில் நோவு படுகிறீர் -திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களைப் பாரீர் -என்று
காட்டிக் கொடுக்கக் கண்டு ப்ரீதராய்
அவர்கள் எனக்கு நாதர்
அவர்களுடைய சேஷத்வத்தினுடைய எல்லை நிலமாக வேணும் என்கிறார் –

சன்ம சன்மாந்தரம் காத்து அடியார்களைக் கொண்டு போய்த்
தன்மை பெறுத்தித் தன் தாளிணைக் கீழ்க் கொள்ளும் அப்பனைத்
தொன்மை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர்
நன்மை பெறுத்து எம்மை நாள் உய்யக் கொள்கின்ற நம்பரே.–3-7-7-

உயர்வற என்கிற பாட்டை -சன்ம சன்மாந்தரம் காத்து-என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் ஜன்ம ஜன்மாந்தரமாவது –
பஞ்சாக்கினி வித்யையில் -சொல்லுகிறபடி ஜீவனானவன் மேகத்திலே புக்கு
வர்ஷ ரூபத்தாலே பூ கதமாய் வ்ரீஹியிலே புக்கு அன்ன ரூபத்தாலே புருஷன் பக்கலிலே புக்கு
பின்பு பஞ்சமியான ஆஹுதியிலே புக்க பின்பு இறே கர்ப்பமாவது –

இப்படி வருகிற ஜென்ம பரம்பரைகள் ஆகிற உயர்வற்று வேர் அறுத்து
வர்த்தமான ஜன்மத்திலே யாக்கி
காத்து
பின்பு ஒரு தேகத்திலே புகாதபடி பண்ணி
உயர்நலம் உடையவன் எவன் அவன்
அடியார்களைக் கொண்டு போய்
ஆனந்தாதி கல்யாண குண பூர்ண னானவன் தன்னிடத்திலே ஸர்வ பர
ந்யாஸம் பண்ணி இருக்கிற அடியார்களை

நலமுடையவன் யாவன் ஒருவன் -அவன் மயர்வற மதி நலம் அருளி
பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே பாரதந்தர்ய ஸ்வரூபரான அடியார்களை

மதிநலம் அருளினவன் யவன் அவன் வேதைக சமதி கம்யனாகையாலே நிர்ஹேதுகமான
அனுக்ரஹத்தாலே கொண்டு போய்
மரண சமயத்து அளவும் பார்த்திருந்து பக்தியும் அந்திம ஸ்ம்ருதியும் தேவையாக்காதே
அஹம் ஸ்மாரமி என்று தான் நினைத்து இருந்தபடியே
ப்ரம்மந்த்ரம் வழி தெரியாதே இருக்கிற இவனுக்கு சதாதிகையான நாடியாலே
ஹார்த்த அநுக்ரூஹித -என்கிறபடியே தான் கூடக்கொண்டு புறப்பட்டு
இவனுக்கு இளைப்புத்தீர பரம ப்ரவேசத்தைப் பண்ணுவித்து
மேல் வழி போகைக்கும் தரிப்பு உண்டாகும் படி பண்ணி

உயிர் கொண்டு உடல் ஒழிய -இத்யாதிப்படியே
கர்ம சம்பந்தம் அறச் செய்தேயும் வித்யா மஹாத்ம்யத்தாலே விரஜை அளவும்
ஸூஷ்ம சரீரம் நிற்கும்படி பண்ணி

அர்ச்சிராதி கணங்களோடே ஓக்க ஆள் இட்டு இராதே -நயாமி -என்கிறபடியே
மாதவன் தன் துணையா நடந்தான் -என்கிறபடியே
வழியில் உள்ளார் சிரஸா வஹித்துக் கொண்டு பரமபதத்திலே கொண்டு போய்
அயர்வறும் அமரர்கள் உடன் கூட்டின அதிபதி யானவன்
தன்மை பெறுத்தி
ஸ்வேந ரூபேண அபி நிஷ் பத்யதே -என்கிறபடியே
ஸ்வ ஸ்வரூப ப்ராப்தியைப் பண்ணிக் கொடுக்க –

அயர்வற்ற நித்யரைப் போலே யன்றிக்கே பின்னையும் அதிசயிதமான பாத உபதானமாகத்
தன் தாளிணைக் கீழ் கொண்டு
துயர் அறு சுடர் அடி தொழுது எழப் பண்ணி
இவன் துயரான சரீர சம்பந்தம் அற்ற அளவிலே துயர் அற்ற அடியாயிற்று –

இது தான் இவனுக்கு உபகரித்தானாக அன்றிக்கே
தன் பேறாக -நினைத்து இருக்கும் மஹா உபகாரகனை
ஸா யுஜ்யம் ப்ரதி பன்னாய -என்கிறபடியே
தன்மை பெறுத்திய அப்பனை
இப்படிச் செய்த உபகாரகனைத் தொன்மை பிதற்ற வல்லார்
ஸ்வா பாவிகமான ஒவ்தார்ய குணத்திலே ஈடுபட்டு அக்ரமமாகப் புகழுமவர்களை

பிதற்றுமவர் கண்டீர் –பயிலும் திருவுடையார்–நன்மை பெறுத்து எம்மை நாள் உய்யக் கொள்கின்ற நம்பரே.
பகவத் சேஷத்வ பர்யந்தமான பகவத் சேஷத்வ சம்பந்தத்தை யுண்டாக்கி —
நமக்கு அவன் திருவடிகளிலே கைங்கர்யத்தை யாவதாத்ம பாவி நடத்தக்கடவ விஸ்வசனீயன்
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
ததீய சேஷத்வ பிரதிபத்தி உடையதாய்க் கொண்டு வர்த்தி என்கிறார் –

——————–

முடியானேஎ! மூவுலகும் தொழுது ஏத்தும்சீர்
அடியானேஎ! ஆழ்கடலைக் கடைந்தாய்! புள்ளூர்
கொடியானேஎ! கொண்டல்வண்ணா! அண்டத்து உம்பரில்
நெடியானேஎ! என்று கிடக்கும் என் நெஞ்சமே.–3-8-1-

முடியானே யில்
தேர் கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொலோ கண்கள் -என்று
இவர் ஆசைப்பட்ட படியே கிடையாமையாலும்
ஸ்மாரக ஸந்நிதியாலும் ஆற்றாமை மீதூர்ந்து
தாமும் தம்முடைய கரண க்ராமங்களும் பெரு விடாய்ப்பட்டு அவற்றின் உடனே கூப்பிடுகிறார் –

வாசகமே ஏத்த அருள் செயும் வானவர் தம்
நாயகனே! நாள் இளந் திங்களைக் கோள் விடுத்து
வேய் அகம் பால் வெண்ணெய் தொடு வுண்ட ஆன்
ஆயர் தாயவனே! என்று தடவும் என் கைகளே.–3-8-3—

உயர்வற என்கிற பாட்டை -வாசகமே ஏத்த -என்கிற பாட்டு விவரிக்கிறது எங்கனே என்னில்
முடியானேயில்
தேர் கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் -என்று விடாய்த்த இவருக்கு
நிழலும் அடிதாறுமான ஸ்ரீ வைஷ்ணவர்களைக் காட்டிக் கொடுக்கக் கொண்டு அனுபவித்து
அவர்கள் எனக்கு நாதர் என்று திருவடிகளிலே -விழுந்தார்

பாகவத விஷயம் பகவத் விஷயத்திலே மூட்டிற்று
அத்தாலே அபி நிவேசம் தலையெடுத்துக் கரை புரண்டு
என்று கொல் கண்கள் காண்பது என்னும் அளவு அன்றிக்கே
மற்ற இந்திரியங்களும் விடாய்த்து
ஒன்றின் விருத்தியை ஓன்று ஆசைப்பட்டு
எல்லா இந்திரியங்களின் விருத்தியைத் தாம் ஆசைப்பட்டுத் தன் கரணங்களும் தாமுமாகக் கூப்பிடுகிறார் –

உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவாக
அவரவர் கரணங்கள் அந்நியமாய்ப் போகையாலே உயர்வு அற்றார்கள்

உயர்வற உயர் நலம் உடையவன் -வாசகமே ஏற்ற அருள் செய்யும்
ஞான ஆனந்த ஏக ஸ்வரூபனானவன் யாவன் ஒருவன் -மயர்வற மதி நலம் அருளினவத்தால்
வாசகமே ஏத்த அருள் செய்தார் –
பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே
மன பூர்வோ வாக் உத்தர -என்கிறபடியே
மனஸ்ஸூ அனுபவிக்க -அந்த அனுபவத்தை வாக்கு ஸ்துதித்து அனுபவிக்கையும்
மனத்தைப் போலே ஸ்மரிக்கவும் வாய் வந்தால் போலே ஸ்துதிக்கவும்
தத் தத் விரோதியான ஆலிங்கனம் பண்ணும் படியும் ஆசைப்பட்டு
இவ்வாசகமே ஏத்திப் போவதோ — நானும் ஒருக்கால் ஸ்மரித்து ஏத்தல் ஆகாதோ -என்னா நின்றது
விபந் யவ -என்று
நித்ய ஸூரிகள் ஏத்த இருக்கிற வுனக்கு நானும் ஒருக்கால் ஏத்தினால் ஆகாதோ –

அயர்வறும் அமரர்கள் -நம இத்யேவ வாதிந -நமஸ் ஸப்தம் ப்ரயுஞ்ஐதே -என்பாராய்
ஆக -அயர்வற்ற
வானவர் தம் நாயகனே –
ஸ்வாமியான நீ என்னையும் வாசகமே ஏத்தப் பண்ணினால் ஆகாதோ என்று
கை -தன் விருத்தியையும் செய்ய ஆசைப்பட்டு வாக்கு விருத்தியையும் ஆசைப்படா நின்றது

நாள் இளந் திங்களைக் கோள்விடுத்து வேய் அகம் பால் வெண்ணெய் தொடு வுண்ட
ஆன் ஆயர் தாயவனே!என்று தடவும் என் கைகளே
வேயகம் -மூங்கில் அகம்
படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்கு இருட்டு அரை ஆகையாலே
பசு வெண்ணெய் களவு காணப்புக்கு தடவிக்கொண்டு வரா நிற்கச் செய்தே
கையிலே உரி தாக்கினவாறே ஸ்மிதம் பண்ணினான்
அதுவே கை விளக்காக அரை இருட்டும் தன் உடம்பு இருளும் குழல் இருளும் நீங்கிற்று –

அப்போது ஆழ்வார் தம் அபேக்ஷிதம் பெறுகைக்காக அவன் பின்னோடே நுழைந்து சென்று
அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் துயர் அறு சுடர் அடி தொழுது
வாசகமே ஏத்த அருள் செய்யும் வானவர் தம் நாயகனே -என்று தடவும் என் கைகள்
என்று தடவிப் பிடித்துக் கொண்டு அர்த்திக்கிறார்

எம் மநோ வாக் காயங்கள் உனக்கு ஏதேனும் பச்சை இட்டது உண்டோ -இல்லையே
மநோ விருத்தியான நினைவும்
வாக்கின் விருத்தியான ஸ்துதியும்
கையின் விருத்தியான ஆலிங்கனமும்
உண்டாக வேணும் என்று தடவா நின்றது

ஆனாயர் தாயவனே
ஆனாயருக்குத் தாய் போலே பரிவனான வனே என்று தடவும் என் கைகளே

அயர்வறும் அமரர்கள் அதிபதியை
அப்ராப்ய மனஸா சஹ -என்று வேதத்தாலே எட்டாதவனை
படலை படைத்து உள்ளே புக்குக் கொண்டியிலே பிடிக்கக் காணும் தேடுகிறது

நவநீத சவுர்ய விருத்தாந்தத்தை அனுசந்தித்தவாறே அத்தாலே வந்த ப்ரேமத்தாலே
இரண்டு கைகளுக்கு கண் தோற்றுகிறது இல்லை இறே
கைகள் ஆரத் தொழுது என்றதை மறந்தார்
ஆன் ஆயர் தாயவனே! என்று தடவும் என் கைகளே-என்று ஈடுபடுகிறார் –

—————————

சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ!
என் நாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்
தென்னா தெனா என்று வண்டு முரல் திரு வேங்கடத்து
என் ஆனை என் அப்பன், எம்பெருமான் உளனாகவே.–3-9-1-

சொன்னால் விரோதத்திலே
ஊனில் வாழ் உயிரிலே அனுபவித்ததற்குத் துணைத் தேட்டமான வோபாதி
இழவுக்கும் துணை யார் யுண்டோ என்று பார்த்த இடத்தே
அவர்கள் புறம்பே அந்நிய பரராய் இருக்க
அவர்களை அதிலே நின்று மீட்கலாமோ என்று பார்த்து உபதேசித்த இடத்து
அவர்கள் அதில் நின்றும் மீளாமையாலே அவர்களை போல் அன்றிக்கே
நான் அநந்யார்ஹ கரணன் ஆகப்பெற்றேன் என்று உகந்தார் –

——

வாய் கொண்டு மானிடம் பாடவந்த கவியேன் அல்லேன்;
ஆய் கொண்ட சீர் வள்ளல் ஆழிப் பிரான் எனக்கே உளன்;
சாய் கொண்ட இம்மையும் சாதித்து, வானவர் நாட்டையும்
நீ கண்டு கொள் என்று வீடும் தரும் நின்று நின்றே.–3-9-9-

உயர்வற என்கிற பாட்டை -வாய் கொண்டு மானிடம் பாட வந்த -என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும்
உயர்வும் தாழ்வுமாய் இருக்கிறவர்களை
வாய் கொண்டு மானிடம் பாடவந்த கவியேன் அல்லேன்;

விசித்ரா தேக சம்பத்தி ஈஸ்வராய நிவேதிதம் என்று இருக்கிற
கரணங்களைக் கொண்டு பாட வல்லேனோ
அதில் ப்ரதானமான மநோ வாக் காயங்களைக் கொண்டு ஷூத்ரரைக்
கவி பாடுகைக்குப் பிறந்தவன் அல்லேன் –

ஸ்ருஷ்டத்வம் வனவாஸாய -என்றால் போலெ இறே என் வாயும் பிறந்தபடி –
நான் பிறரைக் கவி பாடினால் என்னை அவன் ஸ்ருஷ்டித்ததற்கு பிரயோஜனம்
அவன் பெற்றானாம் படி எங்கனே
உயர் நலம் உடையவன் யாவன் ஒருவன் அவன் பராத்பரன் –
அவனைப் பாட வந்த கவி என்கிறார் –

மயர்வற மதிநலம் அருளினவன் எவன் அவன்
ஆய் கொண்ட சீர் வள்ளல்
நீர் அவனைக்கவி பாடக் கடவோம் என்று இருந்தாலும்
வேதங்களும் யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று மீளுகிற விஷயத்தைக்
கவி பாடப் போமோ உம்மால் என்ன

மயர்வற மதிநலம் அருளினன்
ஆய் கொண்ட சீர் வள்ளல் ஆழிப் பிரான் எனக்கே உளன்;
எவன் அவன்
பக்தானாம் என்கிறபடியே தன்னை எனக்காக்கி வைத்தால் எனக்கு கவி பாடக் குறை யுண்டோ
மயர்வாகிற மதி மயக்கத்தை அறுத்து மதி நலம் அருளினன்
பக்தி ரூபா பன்ன ஞானத்தைத் தன் நிர்ஹேதுகமான கிருபையால் அருளின
ஆய் கொண்ட சீர் வள்ளல்
ஹேய ப்ரதிபடமான கல்யாண குணங்களை யுடையவன் யாவன் ஒருவன்

அவன் வள்ளல் தனமாவது ஒவ் கார்யம் -யவன் -ஆழி
அத்யந்தம் சேஷ பூதனானவன் -அவன் பிரான் – சேஷியான உபகாரகன் –

எனக்கே யுளன்
என் பக்கலிலே விசேஷ கடாக்ஷம் பண்ணினவன்
கையும் திருவாழியுமான சேர்த்தி அழகைக் காட்டிக் கவிக்கு விஷயமாக்கிப் பாடுவித்துக் கொண்டபடி

யவன் அவன் -சாய் கொண்ட இம்மையும் சாதித்து –
இம்மையிலேயே மோக்ஷ ஸூகத்தையும் தந்து
சாய் -சாயல் -அதாவது பரமானந்தமான உயர் நலம்
அந்த பரமானந்த ஸூகத்தை இம்மையிலேயே சாதித்து

அதிலும் இது அத்யந்த ஸூகமாம் படி அருளி
தானே உபாய உபேயமாம் படி
யாவதாத்ம பாவியாய் தன்னையே அனுபவிக்கும் படி பண்ணி

அயர்வரும் அமரர்கள் அதிபதி யாவன் ஒருவன் -அவன்
வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் என்று
அயர்வில்லாமல் ஆராவமுத தர்ஸிகள் தனக்கும் அபர்யாப்த்த அம்ருதம் ஆனவன்
வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் என்று கொடுக்கும் படி
வான் இளவரசு வைகுந்தக்குட்டன் வாஸூ தேவன் ஆகையாலே

அதிலே தம்மோடு இருப்பாம் அத்தனை
அத்தேசம் நித்ய ஸூரிகளதாய் இருக்கும்
பவத் விஷய வாஸிந என்றதும் அவன் தன் பக்கலிலேயதாய் இருக்கிறது
யவன் முமுஷுவானவன் -அவன் -வீடு தருமவன்

வீடும் தரும் -என்று அபி ஸப்தத்தாலே
இம்மையில் சாய் கொண்ட ஸாம்ய போகமும்
வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் என்று வீடும் தரும் –

க்ருதன் தச குணம் மயா -என்று பெருமாள் மீண்டு எழுந்து அருளின போது
ஸ்ரீ பரதாழ்வான் பண்டாரத்தை வளர்த்து பதின்மடங்காக காட்டி ஒப்பினால் போலே இவனும்
பூர்வே ஸாத்யாளோடு இவர் தம்மோடும் வாசி இல்லை காணும் இவனுக்கு

அன்று ஈன்ற கன்றின் மேல் தாய் இரங்குமா போலே
த்வயி கிஞ்சித் ஸமா பன்னே கிம் கார்யம் சீதயா மம என்றபடியே
நீயும் அத்தைக் கண்டு கொண்டு
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
துயர் அறு சுடர் அடி -ஹேய ப்ரத்ய நீகம் -என்றபடி
இவனைப் பரிசுத்தனாக்கித் தான் சுத்தமான படி

வீடும் தரும் நின்று நின்று
இப்படிக் கொடுத்து இருக்கச் செய்தேயும்
ஒன்றுமே கொடுத்திலேனாகக் கடன் பட்டவன் போலே இரா நின்றான்

அன்றிக்கே
நின்று நின்றே தரும்
அதாவது
முதல் தன்னிலே ஐஹிகத்திலே அனுபவிப்பித்துப்
பின்பு ஒரு தேச விசேஷத்திலே ஏறக் கொண்டு போய் வைத்துப்
பின் கைங்கர்ய ஸூகத்தைக் கொடுக்கும் –
ஆக
சாத் மிக்க சாத் மிக்கத் தரும் –தொழுது எழு என் மனனே

ஆக
அந்நிய ஸ்தோத்ரத்தையும்
அஸேவ்ய சேவையையும் விட்டு
ப்ராப்த விஷயத்தைத் தொழுது ஆடிப்பாடி வர்த்தி என்று
தன் திரு உள்ளத்தோடு லௌகிகரோடு வாசி யற உபதேசித்து
உபதேச கர்ப்ப அனுபவம் பண்ணுகிறார் ஆயிற்று –

———-

சன்மம் பலபல செய்து வெளிப்பட்டுச் சங்கொடு சக்கரம் வில்
ஒண்மை யுடைய உலக்கை ஒள் வாள் தண்டு கொண்டு புள் ஊர்ந்து உலகில்
வன்மை உடைய அரக்கர் அசுரரை மாளப் படை பொருத
நன்மை உடையவன் சீர் பரவப் பெற்ற நான் ஓர் குறைவு இலனே.–3-10-1-

சன்மம் பல பல வில்
இதர ஸ்தோத்ரத்துக்கு அநர்ஹ கரணனான மாத்ரமேயோ
பகவத் ஸ்தோத்ரத்துக்கு அர்ஹ கரணனாகவும் பெற்றேன் என்று உகக்கிறார் –

இடர் இன்றியே ஒருநாள் ஒரு போழ்தில் எல்லா உலகும் கழியப்
படர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏறத் திண் தேர் கடவிச்
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை
உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி ஒன்றும் துயர் இலனே.–3-10-5-

உயர்வற –இடர் இன்றியே
விபூதியில் ஈஸ்வரன் ஆஸ்ரிதருடைய அபீஷ்ட பிரதானத்தின் ஒரு வகையை அருளிச் செய்கிறார்
அவை எவை என்னில்
வைதிக புத்ர ஆ நயனத்தை அனுசந்தித்து இவனைப் பற்றின எனக்கு ஒரு துக்கம் உண்டோ –
இல்லை என்கிறார் –

உயர்வற என்கிற பாட்டை -இடர் இன்றியே -என்கிற பாட்டு விவரிக்கிறது எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தம் அளவாக
உயர்வு -வருத்தம் –
எல்லாருக்கும் வருத்தம் உண்டாய் உயர வேணும் –
அற
உயர்வு இன்றியே -ப்ரயாஸம் இன்றியே
இடர் இன்றியே -இடர் -துக்கம்
ப்ரயாஸம் இன்றியே உயர் நலம் உடையவன் -உயரா நிற்கிற நலம் யுடையவன் –

கிருஷ்ணனானவான் -ஒரு நாள் ஒரு பொழுதில் -ஏகாஹம் -என்கிற க்ரதுவில் தீஷித்து இருக்கும் போது
ப்ராதஸ் ஸ்வனம் தலைக்கட்டி மாத்யந்தின ஸ்வனத்துக்கு
தக்ஷிண சமயத்தில் ஒரு வைதிகர் வந்து ஸ்துதித்து –
நாலாம் புத்ரன் இது -முன்பு மூன்று புத்ரனை இழந்தேன் –
நாலாம் புத்ரனை யாகிலும் ரக்ஷித்துத் தர வேணும் என்ன

மேலே ஓலைச் சுவடி முறிந்து போனதால் எழுத்துக்கள் தெரியவில்லையாம்

எவன் அவன்
எல்லா உலகும் கழியப் படர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏற
எல்லா உலகும் கழிய
மனுஷ்ய லோகம் தொடங்கி ப்ரஹ்ம லோகம் கடந்த அப்பாலே தேரை நடத்தி
எனக்கு மயர்வற மதிநலம் அருளினவன்

அவர்களுக்கும் மயர்வற மதி நலம் அருளின கிருஷ்ணனும் -படர்ப் புகழ் பார்த்தனும் வைதிகனும்
உடன் ஏறினவர்களுக்கு
மயர்வற
அவர்கள் துக்கம் தீர

திண் தேர் கடவி
மதி நலமான -ஞான பக்தியை -அருளிச் செய்து கொண்டு –
யஸ்ய மந்த்ரீ ச கோப்தா ச ஸூஹ்ருத் சைவ ஜனார்த்தன
என்று கீதா உபநிஷத் வாக்கியங்களையும்
மாம் ஏகம் -என்கிற வாக்கியங்களையும்
உசாவிக்கொண்டு
திண் தேர் கடவி–
எவன் அவன் வைதிகனுக்குப் பிரியம் தரும் அவன் -அயர்வறும் அமரர்கள் அதிபதி –

எவன் அவன் -கிருஷ்ணனாய் அவதரித்து –
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில்
புகும் போது படர்ப் புகழ் பார்த்தனுக்கு அபகீர்த்தி வாராமல்
தமஸ் அளவிலே அவர்களை நிறுத்தி ஸகல ஸாஸ்த்ர வித்தமனான வைதிகன்
புத்ரார்த்தியாய் வந்தவனுக்கு புத்ர லாபம் உண்டாம்படிக்கும்
கலக்க ஏழ் கடல் ஏழ்-இத்யாதிப்படியே சமபூமியிலே நடக்குமா போல் நடத்தி
காரணமான மூல ப்ரக்ருதியில் செல்லாமல் அவ்வளவும் அவர் காரியமாக தேரோடே அவர்களை நிறுத்தி
தேருக்கும் இவர்களுக்கும் திண்மையைக் கொடுத்து நிறுத்தி –

சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில்
நிரவதிக தேஜோ ரூபமாய் நின்ற -நித்தியமாய் –
தேஜோ ரூபமாய் நின்ற தன்னுடைச் ஜோதி -தனக்கு அசாதாரணமான ஜோதி

அத்யர்க்க அநல தீப்தன் தத் தானம் விஷ்ணோர் மஹாத் மன -என்று
ஆயிரம் கோடி ஸூர்ய அக்னிகளுடைய தேஜஸ்ஸை ஓட வைத்த தொரு தேஜஸ்ஸாக
வகுத்தால் போலே இருக்கையாலே இவர்களுக்கு கண் கொண்டு காண ஒண்ணாது
ஆகையாலே தமஸ்ஸிலே நிறுத்தி -தன்னுடைச் சோதி ஆகையாலே தானே போய்ப் புக்கான்
வைதிகம் பிள்ளைகளை உடலோடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி
தொழுது எழு என் மனனே

உடலோடும் கொணர்ந்து கொடுத்தபடி யாவது
நாச்சியார் கிருஷ்ண அவதாரம் சேவிக்க வேண்டி பிறக்கப் பிறக்கக் கொண்டு போனார்கள்
அந்தப்படியே கொணர்ந்து கொடுத்தவன்

துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
துயர் அறுகை யாவது
வைதிகன் துக்கம் தீரத் தன் திருவடிகள் துயரம் தீர்ந்து சுடர் ஒளியாயிற்று

வைதிகனுக்குப் புத்ர சோகம்
அர்ஜுனனுக்கு அபவாதம்
நீக்க சாமர்த்தியம் எல்லாம் தானாயிற்று
உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி ஒன்றும் துயர் இலனே
இப்படிப்போன பிள்ளைகளை மீட்டுக் கொடுத்த கிருஷ்ணன் திருவடிகளை பற்றின
எனக்கு துயரம் உண்டோ என்று இனியராகிறார் –

———–

மூன்றாம் பத்து விவரணம் முற்றிற்று

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய்மொழி வாசகமாலை — ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை–இரண்டாம் பத்து விவரணம்-

February 3, 2022

சந்தியும் சந்திப்பதமும் அவை தம்மிலே தழைக்கும்
பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலு கிற்பீர்
வந்தியும் வந்திப்பவரை வணங்கும் வகை அறிவீர்
சிந்தியும் தென் குருகூர் தொழுது ஆட் செய்யும் தேவரையே

நாத முனிக்கு அன்று நாலாயிரமும் உணர்த்தி
போதம் அருள் குருகூர் வித்தகனார் -கோதில்
திருவாய் மொழி வாசக மாலைத் தேனைத்
தரவே எனக்கு அருள் செய்தார் –

———-

வாயும் திரையுகளும் கானல் மடநாராய்
ஆயும் அமருலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
நோயும் பயலைமையும் மீதூர எம்மே போல்
நீயும் திருமாலால் நெஞ்சம் கோட்பட்டாயே –2-1-1-

வாயும் திரையுகளில் –
விலக்ஷணம் ஆகையாலே கலங்கி ஒரு பிராட்டி தசையைப் ப்ராப்தராய் –
கண்ணால் கண்ட பதார்த்தங்கள் எல்லாம் பகவத் அலாபத்தாலே நோவு படுகின்றனவாகக் கொண்டு
அவற்றுக்குமாக நோவு படுகிற பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

கீழில் திருவாய் மொழியிலே
மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர் அணியை -என்று
ஸுலப்யமும் -மேன்மையும்-வடிவு அழகும் -ஆகிற ஆகார த்ரயமும்
மேல் விழுகைக்கு உடலாகயாலே இவ்விஷயத்தை இப்போதே அனுபவிக்க வேணும் என்று
பாஹ்ய ஸம்ஸ்லேஷ அபேக்ஷை பண்ண —

அனுபவம் பெறாமையாலே பிறந்த அவஸா அதிசயத்தாலே ஒரு பிராட்டி தசையைப் ப்ராப்தராய் –
ஆற்றாமை கை கொடுக்கத் தன் லீல உத்யானத்திலே சென்று இருந்து
அங்கே வர்த்திக்கிற பதார்த்தங்களைக் கண்டு
அவை எல்லாம் தன்னைப் போலவே நோவு படுகின்றனவாகக் கொண்டு
தான் அவற்றுக்குமாக நோவு பட

அப்போது ஸர்வ ஸக்தனானவன்
இவர் அவஸாதம் எல்லாம் தீர வந்து ஸம்ஸ்லேஷித்த எம்பெருமானைக் குறித்து
இனி ஒரு நாளும் என்னைக் கை விடாது ஒழிய வேணும் என்கிறார் –

———-

வேவாரா வேட்கை நோய் மெல்லாவி யுள்ளுலர்த்த
ஓவாது இராப்பகல் உன் பாலே வீழ்த்து ஒழிந்தாய்
மாவாய் பிளந்த மருதிடை போய் மண் அளந்த
மூவா முதல்வா இனி எம்மைச் சோரேலே –2-1-10-

உயர்வற -என்கிற பாட்டை -வேவாரா வேட்கை நோய்-என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்

உயர்வற -வேவாரா -மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி -ப்ரஹ்மானந்தது அளவும் -லீலா விபூதியாய் -அதில் வர்த்திக்கிற பத்தரைச் சொல்கிறது –
அவர்கள் அர்த்த காமங்களிலே ஈடுபடா நிற்கையாலே ஸம்ஸார மக்நர் ஆனார்கள்

உயர் நலம் என்று
நித்ய விபூதியையாய் -அதில் வர்த்திக்கிற நித்யரைச் சொல்கிறது –
அவர்கள் ஸம்ஸ்லேஷ ஏக போகராகையாலே நித்ய ஆனந்த மக்நர் ஆனார்கள் –

இவர்
அங்கன் அன்றிக்கே –
வேவாரா வேட்கை நோய் மெல்லாவி யுள்ளுலர்த்த-
தாம் இரண்டு கோடியிலும் கூட்டு அற்று
பகவத் காமமானது அதாஹ்யமான ஆத்மாவைக் குருத்து வற்றாம்படி வேவா நின்றது –
லௌகிக அக்னிக்கு தஹிக்கக் கூடாத ஆத்மாவை ப்ரேமம் ஆகிற அக்னி தஹிப்பது ஆவியை இறே

இது எங்கனே அறிந்தீர் என்ன
மயர்வற மதி நலம் அருளுகையாலே அறிந்தேன் என்ன

அறிந்த படி என் என்ன –

மயர்வற மதி நலம் அருளின யுன்னிடத்தில் பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே

முன்பு சொன்ன ஸம்ஸாரிகள் உண்டு உடுத்து திவா ராத்ர விபாகம் பாராமல் திரிய
நித்யரும் முக்தரும் பகவத் அனுபவமே யாத்ரியாய் இருக்க
உபய விபூதியில் உள்ளார் படி அன்றிக்கே
வேவாரா வேட்க்கை நோயாலே
ஓவாது இராப்பகல் உன் பாலே வீழ்த்து ஒழிந்தேன்

மெல்லாவியை –அல்பப்ப்ராணனை –வேவாரா வேட்கை நோய் மெல்லாவி யுள்ளுலர்த்த
கூடோக்நிர் இவ பாதபம் -உள்ளேயே குமுறுகிற நெருப்பு மரத்தை எரிக்குமா போலே
உள்ளே பிடித்துப் புறம்பே வேவா நின்றது –

ஓவாது இராப்பகல் உன் பாலே வீழ்த்து ஒழிந்தாய்
அகப்பட்டாருக்கு மீள ஒண்ணாத உன் பக்கலிலே விழ விட்டுக் கொண்டாய் –
இப்படி யாக்கின நீ ஒருவரும் இல்லாதான் ஒருவனோ –

உயர் நலம் உடையவனாய் அயர்வறும் அமரர்கள் அதிபதியானவன்
மாவாய் பிளந்த மருதிடை போய் மண் அளந்த மூவா முதல்வா
சற்றும் அயர்வில்லாமல் ஆனந்த அம்ருத பானம் பண்ணும் நித்ய முக்தர் அனுபாவ்யமான நீ
கிருஷ்ணனாய் வந்து அவதரித்து கேசியை ஸம்ஹரித்து
யாமளார்ஜுனங்கள் நடுவே தவழ்ந்து போய்
மகா பலி அபஹரித்துக் கொண்ட பூமியை எல்லை நடந்து மீட்டுக் கொண்டு –

இப்படி உபகாரங்களைப் பண்ணினவான உன்னுடைய
துயர் அறு சுடர் அடி தொழுது எழப் பண்ணின
மூவா முதல்வா இனி எம்மைச் சோரேலே
இத்தனைக்கும் காரணனான நீ
சுடர் அடி தொழுது எழப் பண்ணின நீ
சோர விடாதே கொள்

கீழ் ஒன்பது பாட்டிலும்
நீயும் திருமாலால் நெஞ்சம் கோள் பட்டாயே என்று சம துக்கிகளைக் கட்டிக் கொண்டு அழக் கண்ட திருமால்
சகிக்க மாட்டாமல் வந்து அரதி யாற்றி சாந்தவதானம் பண்ணி

மூவா முதல்வா இனி எம்மைச் சோரேலே
சோம்பாது இப்பல்லுருவை எல்லாம் படர்வித்த எந்தாய்
புத்வா காலமதீதஞ்ச முமோஹ பரமா துர -பகவானைக் கண்டு அவனுக்கு அடிமை செய்யாமையாலே
ஏராளமான காலம் கடந்து விட்டது -அது தெரிந்தவாறே வருத்தம் தாங்காமல் மூர்ச்சை அடைந்தார் -என்க –
சீதா பிராட்டி பிரிவால் பெருமாள் மோஹித்தத்தை சொல்லும் ஸ்லோகம்
இதே போல் முன்புள்ள காலம் இழந்தாலும் மேல் உள்ள காலம் கை விடாதே கொள்
சுடர் அடி தொழுது எழு என் மனனே -நீயும் மூவா முதல்வனைச் சோரேல் -கிடாய் என்கிறார் –

——–

திண்ணன் வீடு முதல் முழுதுமாய்
எண்ணின் மீதியன் எம்பெருமான்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம்
கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே –2-2-1-

திண்ணன் வீட்டில்
பிரிந்தாரைக் கண்ணாஞ்சுழலை இடப்பண்ணுமோ பாதி
கூடினாலும் மறக்கும் படி பண்ணும் என்கிறார்

உயர்வற உயர்நலம் என்கிற பாட்டைத் திண்ணன் வீடு விவரிக்கிறது
எங்கனே என்னில்

உயர்வற -கீழில் திருவாய் மொழியிலே இவருக்குப் பிறந்த ஆற்றாமை பேச்சுக்கு நிலம் அன்று இறே

கடல் வெதும்பினால் விளாவ நீர் இல்லை -என்னுமா போலே ஆற்றாமையோடே முடியப் புக்கவாறே
அநந்தரம்
அவன் வந்து முகம் காட்டினவாறே ஆற்றாமை புக்க இடம் கண்டிலர் –

இதுக்கு அடி என் என்று ஆராயப் பார்த்தவாறே
இதர விஷயங்களினுடைய லாப அலாபத்து அளவல்லாத விஷய வை லக்ஷண்யமாய் இருந்தது –

இதுக்கு அடி என் என்று பார்த்தார்
ஸமஸ்த கல்யாண குணாத் மகனாகையாய் இருந்தது –

இது தனக்கு அடி என் என்று பார்த்தவாறே -ஸர்வேஸ்வரன் ஆகையாலே இருந்தது –

உயர்வற உயர் நலம் உடையவன் என்றால் அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இறே தோன்றுவது
இப்படி அறியும்படி மயர்வற மதி நலம் அருளினன் என்றது –

ஆக இங்கனே ப்ராசங்கிகமாக ப்ரஸ்துதமான ஸர்வேஸ்வரத்வத்தை அனுசந்தித்து அத்தை அருளிச் செய்கிறார் –

கீழே மூவா முதல்வா -என்று
காரணத்வம் ப்ரஸ்துதமானவாறே
அந்தக் காரணத்தை உபபாதிக்கிறார் என்று பிள்ளான் பணிப்பர் –

உயர்வற உயர் நலம் யுடையவன் யவன் அவன் என்று சொல்லிற்று இல்லையோ
ஸர்வேஸ்வரத்வம் என்னில் ஒரு கால் சொன்னோம் என்று கை வாங்கி இருக்க வல்லவர் அல்லர் இறே

ஒரு கால் சொல்லிற்று என்று கை வாங்கலாம் விஷயம் அன்று இது
இனித்தான் பகவத் விஷயத்தில் புனருக்தி தோஷாயவாகாது
ஒரு குணத்தையே எல்லாக் காலத்திலும் அனுபவிக்க வல்லார் இவர்

மயர்வற மதிநலம் அருளுகையாலே ஒரு குணம் தன்னையே இதுக்கு முன் அனுபவித்தது என்று தோற்றாத படி
க்ஷணம் தோறும் புதுமை பிறப்பித்து அபர்யாப்த்த அம்ருதம் -ஆராவமுதம் -ஆனவன் -இவனே இறே
பயிலா நிற்கச் செய்தே இறே -பண்டு இவரைக் கண்டு அறிவது எவ்வூரில் என்பது –

ஆகையாலே -உயர் நலம் உடையவனே காரணம் என்று -ஸ்ருதிப் பிரசித்தன் –
ப்ரமாதிகளைக் காரணம் என்கிறவர்களைக் குறித்து வெந்நரகில் விழாதே கிடி கோள்
பெற்ற தாய் இருக்க மணை வெந்நீராடாதே கிடி கோள்

உயர் நலம் யுடையவன் எவன் அவன் -திண்ணன் வீடு முதல் முழுதுமாய்
ஆனந்தாதி கல்யாண குணங்களிலே வைத்துக் கொண்டு ஒவ் தார்ய குணம் சொல்கிறார்

திண்ணன் வீடு
திருத்தமான வீடு -என்று ஆவிர்ப்பவாதிகளான கர்ம நிபந்தனமாக வரும் அழிவு இல்லை என்கை
இத்தால்
திண்ணம் என்று நித்ய விபூதி தொடக்கமான எல்லா விபூதியையும் யுடையவன் அவன் யவன் அவன்
மோக்ஷப் ப்ரப்ருத்-அசேஷ -புருஷார்த்த பிரதனனாவான் ஆகையாலே மயர்வற மதிநலம் அருளினன்

பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே அறியலாம் என்று பார்த்தாலும்
எண்ணின் மீதியன் எம்பெருமான்
அப்ராப்ய மனஸா ஸஹ -என்று
எண்ணுக்கும் எல்லை கடந்து இருக்கும் என்கை

ஓரோர் குணங்கள் வகையற எண்ணிறந்து இருக்கும் –
ஆக
அஸங்கயேயமான கல்யாண குணங்களை யுடைய எம்பெருமான் தன் குண விபூதிகளைக் காட்டி என்னை எழுதிக் கொண்டவன்
யாவன் ஒருவன் அவன் அமரர்கள் அதிபதி

மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம் கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே
அயர்வறும் அமரர்கள் -சற்றும் அயர்வு அல்லாமல் கைங்கர்யமே தாரகமான நித்ய முகத்திற்கு
அனுபாவ்யமானவன் யாவன் ஒருவன் அவன்
மண்ணும்
லீலா விபூதியில் பூமி அந்தரிக்ஷ முதலான லோகங்கள் எல்லாம் ஒருக்காலே அமுது செய்த
என் கிருஷ்ணனை அல்லது இல்லை –

எல்லா வகைகளாலும் நிர்வாஹகன் அவன் ஒழிய வேறு நிர்வாஹகர் யாரும் இல்லாத தான் யாவன் ஒருவன்
அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே -என்று தன் திரு உள்ளத்தைக் குறித்தும்
தம் நெஞ்சு போல்வாருக்கும் –
நம் கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே -ஆகையால்
ஹேய ப்ரத்ய நீகமான -வீடு முதலான ஸகல பல தோஹி விஷ்ணு -என்று
ஸர்வ பல ப்ரதமான தேஜஸ்ஸை யுடைய திருவடிகளைத் தொழுது
தாப த்ரயங்களும் மாறும் படி
பத்தாஞ்சலி புடா ஹ்ருஷ்டா என்கிறபடியே
தொழுது வர்த்தியுங்கோள் என்று
உபதேஸ கர்ப்ப அனுபவம் பண்ணுகிறார் –

———

ஊனில் வாழ் உயிரே! நல்லை, போ! உன்னைப் பெற்று
வானுளார் பெருமான் மதுசூதன் என் அம்மான்
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்தொழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே–2-3-1–

ஊனில் வாழ் உயிரிலே
ஆர்த்தி தீர வந்து ஸம்ஸ்லேஷித்த ஸம்ஸ்லேஷம் உள்ளளவு பட்டிராமையாலே
இப்பேற்றுக்கு உஸாத் துணை யாவார் யார் என்று பார்த்த இடத்தில்
ஸம்ஸாரிகளில் இல்லாமையாலே
அவன் தன்னோடே ஓக்க ப்ராப்யமருமாய்
அவனை நித்ய அனுபவம் பண்ணா நிற்பாருமாய்
பகவத் அனுபவத்துக்குத் தேசிகருமாய் இருக்கிற
நித்ய ஸூரிகள் திரளிலே போய்ப்புக்கு
போதயந்த பரஸ்பரம் பண்ணி அனுபவிக்கப் பெறுவது எப்போதோ என்று
அநா வாப்தியோடே தலைக்கட்டினார்

வாயும் திரை யுகளில் -ஸம்ஸ்லேஷித்த ஸம்ஸ்லேஷத்தைச் சொல்லுகிற இத்திருவாய் மொழி
நடுவு ப்ராசங்கிகமாக பரஸ்துததாம் அத்தனை

ஆற்றாமைக்கு அறிவு நடையாடாத திர்யக்குகளானவற்றை
நீயும் நான் பட்டது பட்டாயோ என்று அவற்றைக் கட்டிக் கொண்டு அழுதார் அங்கு

இங்கு பகவத் ஸம்ஸ்லேஷத்தால் வந்த ப்ரீதிக்கு அறிவு நை சர்க்கிகமான-இயற்கையாகவே உள்ள –
நித்ய ஸூரிகளை உஸாத் துணையாகத் தேடுகிறார்

———-

இனியார் ஞானங்களால் எடுக்கல் எழாத எந்தாய்!
கனிவார் வீட்டின்பமே! என் கடற்படா அமுதே!
தனியேன் வாழ் முதலே!! பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய்
நுனியார் கோட்டில் வைத்தாய்! நுன பாதம் சேர்ந்தேனே–2-3-5-

உயர்வற பாட்டை -இனியார் ஞானங்களால்-பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
உயர்வற -இனியார் ஞானங்களால்-
ப்ரஹ்மானந்தம் தொடங்கி மனுஷ்யானந்தம் அளவும்
யார் ஞானங்களால் எடுக்கல் எழாத எந்தாய்!
எத்தனையேனும் அதிசயித ஞானர் ஆனவர்களுடைய-ஞான விசேஷங்களாலும்
ஸ்வ யத்னத்தால் எடுப்பாருக்கும் அன்று
பேர்க்கப் போகாதே இருக்கிற என்னாயன் எவன் ஒருவன் அவன் மதி நலம் அருளினன்

கனிவார் வீட்டின்பம்
அஞ்ஞான கந்த ரஹிதமான பக்தி ரூபா பன்ன ஞானருடைய ஹ்ருதயங்களிலே வஸியா நிற்கிற

கடற்படா அமுதே!
அபர்யாப்த்த அம்ருதம் ஆனவனே
அன்றியே
அவர்கள் இருப்பிடங்களில் வந்து அவர்களுக்குப் போக்யமானவனே

இப்படி போக்யமானவன் யாவன் ஒருவன் அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன் அவன்
தனியேன் வாழ் முதலே
அசர்வு இல்லாத நித்யருக்கு போக்யனானவன்
அமரர்க்கு இன்பத்தை விளைக்குமவன்
அல்லாதாருக்கு அறிய ஒண்ணாதவன்
இவ்விரண்டு கோடியிலும் எண்ண ஒண்ணாது இருக்கிற எனக்கு அயத்ன ஸித்தமான போக்யனானவனே

தனியேன் வாழ் முதலே!
அயர்வறும் அமரர்கள் அதிபதியான நீ -தனியேன் வாழ் முதலாய் -மயர்வை அறுத்து –
மதி நலத்தை அருளின பின்பு
உபய விபூதியிலும் கூட்டு அற்றுத் தனியேனாய் நான் இருக்கக் கைமுதல் ஆனவனே

எனக்குப் பிரதான ஸூஹ்ருதம் ஆனவனே
ஏகாஷி ஏக கர்ணிகள் நடுவே இருப்பதற்கு அஸஹ்யமான படி இருக்கிற
எனக்கு வாழ் முதலானவனே

இப்படி ச நாதன தர்ம – அயர்வரும் அமரர்கள் அதிபதி
உபாய உபேயமும் தானே யாய் –
பகவத் அனந்தைக பரருக்கும் நித்ய முக்தருக்கும் போக்யனான

பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய் நுனியார் கோட்டில் வைத்தாய்
நீ தான் தனிமையில் வந்து உதவிற்று இல்லையோ
வராஹ ரூபியாய் பிரளயங்கதமான புவனங்கள் ஏழையும் எடுத்து –

நுனியார் கோட்டில் வைத்தாய்
கூர்மை மிக்க கோட்டு இடையிலே வைத்து ரக்ஷித்தாய்
இத்தால் ரஷ்ய வர்க்கத்தின் அளவு அல்லாத ரக்ஷகனுடைய பாரிப்பு சொல்லுகிறது –

இப்படி தனிமையிலே உதவி ரக்ஷிக்குமவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு
ஹேய பிரதிபடமாய் தேஜோ ரூபமான திருவடிகளான யுன் பாதம் சேர்ந்தேனே -என் மனனே

இமையோர் தலைவா இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்னும்படி
நீ அறிவு தந்த போதே உன் திருப்பாதம் சேர்ந்தேனே யன்றோ
அடியார்கள் குழாங்களுடன் இனி சுடர் அடி தொழுது உஜ்ஜீவிக்கும்
அத்தனை அன்றோ என்று உகக்கிறார்

———–

ஆடியாடி யகம் கரைந்து இசை
பாடிப்பாடி கண்ணீர் மல்கி எங்கும்
நாடி நாடி நரசிங்கா வென்று
வாடிவாடும் இவ்வாணுதலே –2-4-1-

ஆடியாடியில் ததீய ஸம்ஸ்லேஷத்தை ஆசைப்பட்டுப் பெறாமையாலே வந்த இழவாலே
பெற்ற ஸம்ஸ்லேஷமும் இழந்து அடியே பிடித்துக் கூப்பிட்டார்

கீழில் திருவாய் மொழியிலே
பருகிக் களித்தேனே என்று ஹ்ருஷ்டராய் -அது தன்னை
பாகவதர்களோடே உசாவித் தரிக்க வேணும் என்று பார்த்து
அதற்கு இவ்விபூதியில் ஆள் இல்லாமையாலே நித்ய ஸூரிகள் திரளிலே போய்ப் புக்கு
போதயந்த பரஸ்பரம் பண்ணி -அனுபவிக்கக் கோலி நினைத்த போதே அத்திரளிலே புகப் பெறாமையாலே
மிகவும் அவசன்னராய் தம்முடைய தசையை ஸ்வ கீயரான ஸ்ரீ வைஷ்ணவர்கள்
எம்பெருமானுக்கு அறிவிக்கிற படியை அந்யாபதேசத்தாலே பேசுகிறார் –

வாட்டமில் புகழ் வாமனனை இசை
கூட்டி வண் சடகோபன் சொல் அமை
பாட்டோராயிரத்து இப்பத்தால் அடி
சூட்டலாகுமே அந்தாமமே –2-4-11-

உயர்வற என்கிற பாட்டை -வாட்டமில் புகழ் -என்கிற பாட்டு விவரிக்கிறது -எங்கனே என்னில் –
உயர்வற -வாட்டமில் -மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்மானந்தம் அளவாக
ஸ்வ ஸ்வாமி சம்பந்தத்து அளவாக வருகிற உயர்த்தி அற்ற வாட்டமில் புகழ் வாமனன் –

உயர்நலம் உடையவனுக்கு வாட்டமாவது
இந்த விபூதி அந்நிய சேஷத்வ -ஸ்வ ஸ்வா தந்தர்யங்களாலே விஞ்சி
ஈஸ்வரோஹம் என்று இருக்கையாலே ஈஸ்வரத்தினுடைய வாட்டமாம்

சேஷித்வமும் ஸ்வா தந்தர்யமும் வாட்டம் உண்டாய் வருகையாலே -அது வாராமைக்காக
தன்னுடைமை பெறுகைக்கு தான் இரப்பாளானாய் மகா பலி பக்கலிலே மண்ணை இரந்தவாறே
அது பெற்ற பின்பு வாட்டமில் புகழ் வாமனன் என்கிறது அல்ல

என் ஆர்த்தியில் ஓதுத்திலன் ஆகில் அவன் புகழுக்கு வாட்டம் வரும் என்று
இவ்வளவிலே வந்து முகம் காட்டுகையாலே வாட்டமில் புகழ் வாமனன் என்கிறார்

ஒன்றிலே ஓன்று கண் நழுவாமல் வந்து இரந்து அளந்து கொண்டவன் என்கிறார் –
நீர் இது அறிந்தபடி என் என்ன
அவன் மதிநலம் அருளப் பெற்றவத்தால் வந்த பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே அறிந்தேன்

இசை கூட்டி வண் சடகோபன் சொல்
இசை கூட்டி –
ஸாம ரஸ உத் கானமானது -சடகோப வாங் மயம் என்று -ஸஹஸ்ர ஸாக உபநிஷத் -ஸமா கமமான
ஈர் ஐந்தினுடைய
இசை கூட்டி வண் சடகோபன் சொல் -என்று
லோகங்கள் எல்லாம் பிரசித்தமாம் படி மதி நலம் அருளினவன் யாவன் ஒருவன்
அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி
அஞ்ஞான அந்தகார ரஹிதரான நித்யரானவர்கள்
ஏதத் ஸாம காயானாஸ்தே -என்று சாமத்தின் இசை கூட்டி ஸஹஸ்ர சாகையை
அமை பாட்டோராயிரத்து இப்பத்து –
அமைந்த படி

மானஸ அனுபவ மாத்திரம் அன்றிக்கே
வாசகமாகி
நாட்டை வாழ்வித்த ஒவ்தார்யம் இது

அமை பாட்டோராயிரத்து இப்பத்தும்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் அடி சூட்ட ஸாம கணத்தில் இசை சற்று நாவறுதல் அற
ரஸ அனுபவத்தில் வந்த நித்ய முக்தருக்கு உத் கீதார்த்த ரச ஞானம் உடையவனான அவன்
துயர் அறு சுடர் அடி தொழுது

அமை பாட்டோராயிரத்து இப்பத்தால் அடி
சூட்டலாகுமே அந்தாமமே
ஹேய ப்ரத்ய நீகமாய் -ஸர்வ ஸமாஸ்ரயணீயமுமான திருவடிகளிலே
சாமசாகர்த்த மான ரசங்களாலே அமையப்பட்ட ஆயிரம் பாட்டுக்களிலும் வைத்துக் கொண்டு
இப்பத்துப் பாட்டையும் அதிகரிக்க வல்லார்க்கு
இச்செவ்வி மாலையைக் கொண்டு அவன் திருவடிகளிலே நித்ய கைங்கர்யம்
பண்ணப் பெறுவர் -என் மனனே

அடி சூட்டலாகுமே அந்தாமமே
வாசக மாலையை அடி சூட்டலாகுமே அந்தாமமே
பித்ரு தனம் புத்திரனுக்கு அனுபாவ்யமாம் போலே அனுபாவ்யமாம்
ஆழ்வார் கிலேசம் வேண்டா -அவர் பேறே இறே கற்றாருக்கும் பேறு
அடியார்கள் குழாங்களை உடன் கூடி அங்கு
அடியவரோடு இருந்து அனுபவிக்கப் பெறுவர் என்கிறார் –

———–

அந்தாமத் தன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு
அந்தாம வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரமுள
செந்தாமரைத் தடங்கண் செங்கனி வாய் செங்கமலம்
செந்தாமரை யடிக்கள் செம் பொன் திருவுடம்பே –2-5-1-

ஆடியாடியிலே ததீய ஸம்ஸ்லேஷத்தை ஆசைப்பட்டுப் பெறாமையாலே வந்த இழவாலே
பெற்ற ஸம்ஸ்லேஷமும் இழந்து அடியே பிடித்துக் கூப்பிடுகிறார் –

கீழ் ஆடியாடியிலே ஆழ்வாருக்குப் பிறந்த வியசனம் எல்லாம் மாறும் படியாக
அதந்த்ரித சமூபதி ப்ரஹித ஹஸ்தம் —
ஆர்த்த ரக்ஷணத்துக்காக பகவான் த்வரை யுடன் எழுந்து அருளும் பொழுது சேனை முதலியார்
தாங்கும் நிமித்தமாக காண்பிக்கப்பட்ட கையைக் கவனிக்காமல் -பெரிய த்வரையுடன் –
ஆயுத ஆபரணங்களை அக்ரமமாக -அரை குலைய தலை குலையத் தரித்துக் கொண்டு வந்து
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு வந்து உதவினால் போலே

இவரும் வலம் கொள் புள்ளுயர்த்தாய் -என்று கூப்பிடட ஆர்த்த நாதம் செவிப்பட்டு
அழகியதாக ஜகன் நிர்வஹிணம் பண்ணினோம் என்று பிற்பாட்டுக்கு லஜ்ஜித்து
தன்னுடைய ஸ்வரூப ரூப குண சேஷ்டிதங்களுக்கு ஒப்பவைகளான ஆயுத ஆபரணங்கள் சேர்ந்த சேர்த்தியோடே
வந்து ஸம்ஸ்லேஷிக்கக் கண்டு ஹ்ருஷ்டராய் பெற்ற பேற்றை உகந்து அனுபவிக்கிறார் –

சொல்லீர் என் அம்மானை என்னாவி யாவி தனை
எல்லையில் சீர் என் கருமாணிக்கச் சுடரை
நல்ல வமுதம் பெறர்க்கு அரிய வீடுமாய்
அல்லி மலர் விரையொத்தான் ஆண் அல்லன் பெண் அல்லன் –-2-5-9-

உயர்வற என்கிற பாட்டை -சொல்லீர் என் அம்மானை-என்கிற இப்பாட்டு விவரிக்கிறது –
எங்கனே என்னில்

மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்மானந்தம் அளவும் அவரவர்கள் பிரயாசத்தாலே ஆர்ஜிக்கிற
போக்யதா அனுபவங்களை எல்லாம் அல்பமாய் அஸ்திரமாய் அற்றது
ஆகையால் உயர்வற என்கிறது

இத்தை நீங்கள் அறிந்து கொண்டு
உயர் நலம் யுடையவன் என்னோடே வந்து -அந்தாமத்து அன்பு செய்து –
தனக்கு போக்ய போக உபகரண போக ஸ்தானங்கள் எல்லாம் என் அவயவங்களிலே யாம்படி கொண்டு அருளி
உயர்வற உயர் நலம் உடையவனாய் விளங்குகிற படியை

சொல்லீர் என் அம்மானை-
ஷூத்ர விஷயங்களை அனுபவித்து -அதுக்குப் பாசுரம் இட்டுக் கவி சொல்லி
இருக்கிற நீங்கள் சொல்ல வல்லீர்களோ

எல்லையில் சீர் என் கருமாணிக்கச் சுடரை–என் அம்மானை–
தன் குண சேஷ்டிதங்களாலே எனக்கு மயர்வற மதி நலம் அருளி
அந்த பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே என்னை சேஷத்வ முறையிலே நிறுத்தினவன் –

மயர்வற
அஞ்ஞான கந்த ரஹிதமான ஞான பக்திகளாலே ஆத்ம பரமாத்ம விவேக ஞானத்தை யுண்டாக்குகையாலே
என்னாவி யாவி தனை
என் ஆத்மாவுக்கு அந்தராத்மா வானவனை –

மதி நலம் அருளினன் என்று
கிருபா குண விசிஷ்டமான குணங்கள் கல்யாண குணைக தானமாகையாலேயும்
சவுந்தர்யாதி குண விசிஷ்டமான திவ்ய மங்கள விக்ரஹமும் புதுக்கணித்து தேஜோ மயமாயிற்று

யவன் அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி
அயர்வில்லாத நித்ய முக்தருக்குப் போக்ய பூதனானவன் யாவன் ஒருவன்
எல்லையில் சீர் என் கருமாணிக்கச் சுடரை
என்னோடே கலந்த பின் புகர் பெற்றானாய் இருக்கிற படி

நல்ல வமுதம்
அப்ராக்ருத போக்யங்களில் தலையான அம்ருதம் -அபர்யாப்த அம்ருதம் -ஆரா வமுதம்

பெறர்க்கு அரிய வீடுமாய்
ஒருவராலும் ஸ்வ யத்னத்தாலே பிராபிக்க ஒண்ணாத மோக்ஷ புருஷார்த்தமும் ஆனவன் யாவன் ஒருவன்
அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
இதர விஷயங்களில் போக ருசி அற்று –

நிரவதிக தேஜோ ரூபமான
அல்லிமலர் விரையொத்த
திருவடிகளை யுடையவன்

ஆண் அல்லன்
இதர புருஷ ஸஜாதீயன் அல்லன்

பெண் அல்லனே
அதுவும் அப்படியே யாகையாலே
உபய விஷய ஸஜாதீயன் அல்லன் என்றபடி

அவன் திருவடிகளைத் தொழுது உஜ்ஜீவி என்று திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –

———-

வைகுந்தா மணி வண்ணனே என் பொல்லாத் திருக் குறளா என்னுள் மன்னி
வைகல் வைகல் தோறும் அமுதாய வானேறே
செய்குந்தா வரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள்
செய்குந்தா உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கனவே –2-6-1-

அந்தாமத்து அன்பில் –
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொல் என்ற இவர் ஆசைப்பட்ட படியே வந்து கலந்தான் என்கிறார்
ஆடியாடியில்
ஆர்த்தி தீர வந்து ஸம்ஸ்லேஷித்த படி சொல்லித்து அந்தாமத்து அன்பு
அந்த ஸம்ஸ்லேஷத்தால் பிறந்த ப்ரீதி அவனது என்னும் இடம் சொல்லுகிறது
வைகுந்தா மணி வண்ணனில் –

சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள்
ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற் பின்
மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்காய் துளக்கற்ற அமுதமாய் எங்கும்
பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே –2-6-2-

உயர்வற -என்கிற பாட்டைச் -சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படா-என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
உயர்வற
மனுஷ்யானந்தம் தொடங்கி ப்ரஹ்மானந்தத்து அளவும் அல்பமான
காம்ய ரசங்களைப் புசித்து உயர்வு ஏற்றார்கள்

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
ஸர்வ ரஸ -என்கிறவன்
ஸர்வ ரசிகத்வமும் ஆழ்வாரோடே அனுபவிக்கைக்கு -இவ்விடத்தில் ஸர்வ ரக்ஷகத்வமும் செய்து இருந்தால்
இவரோடு ஐக ரஸ்யம் ஸித்தியாதே என்று அவற்றை எல்லாம் ஸ்வ ரஷிதமாக வைத்து
பின்னை அனுபவிப்போம் என்று பார்த்து
சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள் ஒக்கவே விழுங்கி
ஆழ்வார் திரு உள்ளத்திலே
சிக்கெனைப் புகுந்தான் –

ஜகத் ரக்ஷணத்துக்கு வேண்டுமாவை எல்லாம் தன்னுள்ளே யாக்கி அநந்ய பரனாய் அனுபவித்துப் போக மாட்டாதே இருந்தான்

இவர் திரு உள்ளத்திலே இருந்து செய்தது என் என்னில்
இப்படிவரும் ஜகத்துக்கு ஸர்வ ரக்ஷகத்வங்களும் இவர் இடத்திலே யாக வேணும் என்று
இவருக்கு மயர்வற மதி நலம் அருளினன்

பின் மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்காய்
மயர்வற இவருக்கு அந்யதா ஞான விபரீத ஞானங்கள் ஆகிற இருளைப் போக்குகைக்கு பக்தி ரூபா பன்ன மாகிற
மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்கை
நந்தா விளக்காகப் பிரகாசிப்பித்து -அத்தாலே தானும் விகஸித ஸகஜ ஸர்வஞ்ஞனாய்
விஜ்வரனுமாயிற்று
விக்ரஹமும் புகர் பெற்றது இப்போது ஆயிற்று –

ஆழ்வாரை அனுபவித்து -இப்படி விளங்கினவன் -யாவன் ஒருவன் -அவன் -அயர்வறும் அமரர்கள் அதிபதி –
அஞ்ஞானம் அசக்திகள் இல்லாத அமரர்கள் -அநந்த வைனதே யாதி ப்ரப்ருதிகள் –
த்ரிபாத் விபூதியும் அடங்காதவர்கள் பரிசர்யை பண்ண இருக்கும் ஸ்வாமி யானவன் –

துளக்கற்ற அமுதமாய்
அபர்யாய அம்ருதமாய்
ஆடியாடியில் பட்ட கிலேசம் தீர்ந்தான் தானாய் இரா நின்றான் –

இனி இவர் வள வேழுலகு தலையெடுத்து இவர் நம்மை விடில் செய்வது என்
என்று உள் நடுக்கம் தீர்ந்தது இப்போது ஆயிற்று –

துளக்கற்ற அமுதமாய்
அவன் இவரை அபர்யாப்த அம்ருதமாய் -பிரமுமோதஹ -என்கிறபடியே
அவன் தம்மை விரும்பி போக்யமாக நினைத்து இருக்கிற இருப்பு தமக்கு போக்யமாய் இருக்கிற படி –

இப்படி போக்ய பூதனானவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
துயர் -துளக்கம்
அற -அற்ற
அமுதமான சுடர் அடிகளைத் தொழுது உத்ஸாஹி –

அவன் நம்மைப் பார்த்தவருக்கு
எங்கும் பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே
எங்கும் பக்க நோக்கு அறியான்
அயர்வறும் அமரர்கள் -அநிமிஷராய் அபர்யாப்த அம்ருதம் அல்லது அனுபவியாதர்களையும் நோக்கு அறியான் –

ஆழ்வார் பக்கல் ப்ராவண்யத்தைத் தவிர்க்கலாமோ பார்ப்போம் என்று
நாச்சிமார் திரு முலைத் தடத்தாலே நெருக்கி அணைத்தாலும்
அவர்கள் பக்கல் கண் வைக்க மாட்டிற்று இலன்

என் பைந்தாமரைக் கண்ணன்
என் பக்கல் ப்ரீதியாலே விகசிதமான திருக்கண்களை யுடையவன்
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே என்கிறார் –

———-

அவதாரிகை

வைகுந்தா மணி வண்ணனில்
தன்னை இவர் பிரியில் செய்வது என் என்று அதி சங்கை பண்ண
பிடித்தேன் கொள் சிக்கெனவே -என்றும்
மாஸூச -என்றும்
சங்கையைத் தீர்த்து அவனை உளன் ஆக்கினார்

இவர் ஆடியாடியில் பட்ட கிலேசம் தீர
கேசவன் தமரில் –
இவ்வாழ்வார் உடன் கலைக்கையால் வந்த ப்ரீதி தான் இவர் ஒருவர் அளவிலும் இன்றிக்கே
இவரோடு ஸம்பந்த சம்பந்திகள் அளவும் வெள்ளம் இட்டுப் பெருகிறபடியை அருளிச் செய்கிறார் –

வந்து கலந்தபடி சொல்லி
அந்தாமத்து அன்பிலே
அக்கலவியால் பிறந்த ப்ரீதி அவனது என்னும் இடம் சொல்லுகிறது -வைகுந்தா மணி வண்ணனிலே
அந்தப் ப்ரீதி தான் இவர் ஒருவர் அளவிலும் அன்றிக்கே இவர் ஸம்பந்த சம்பந்திகள் அளவிலும்
வெள்ளம் இட்டுப் பெருகுகிற படி சொல்லுகிறது -கேசவன் தமரிலே -என்று கண்டு கொள்வது –

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்
மாசரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா
ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே–2-7-1-

உயர்வற என்கிற பாட்டைக் -கேசவன் தமர் -என்கிற பாட்டு -விவரிக்கிறது –
எங்கனே என்னில்
உயர்வற
மனுஷ்யானந்தம் தொடங்கி ப்ரஹ்மானந்தத்து அளவும் ஆழ்வார் உபதேசத்தால்
அந்நிய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்தர்யத்தாலே வந்த உயர்த்தி அற்று
சம்பந்த ஞானம் பிறந்து
கேசவன் தமர் ஆனார்கள் –

ஈஸ்வரனும் உயர்வற உயர் நலம் உடையவன் ஆனான்
தத கேசவ நாமா வான் என்கிறபடியே ஸர்வ நிர்வாஹகனான நிலையிலே தோற்று இருக்குமவர்கள் -என்னுதல்

ஸர்வேஸ்வரன் உடையார் என்றாயிற்று ஆழ்வார் இவர்களை விரும்புவது

எமர் என்று -ஆழ்வார் சம்பந்தம் கொண்டாயிற்று அவன் இவர்களை விரும்புவது

இத்தாலே ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் அபிமானமே வேண்டுவது அவன் விஷயீ கரிக்கைக்கு என்றபடி –

கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும் -கேசவன் தமர் -ஆனார்கள்
இப்படி அவர் திருத்துகைக்கு அடி என் என்னில்
கேசவ கிலேச நாசநன் -என்கிறவன் யாவன் ஒருவன் -அவன் மயர்வற மதி நலம் அருளுகையாலே
முன்னை வினை
பின்னை வினை
ப்ராரப்தங்கள்
தாப த்ரயங்களும் எல்லாம் நசித்தது
பக்தி ரூபா பன்ன ஞானம் பிறந்து பர உபதேசம் பண்ணித் நிறுத்தின படி

குலம் தாரயதே தாத ஸப்த ஸப்த ச ஸப்த ச -என்கிறபடியே
இப்படிச் சொன்னவன் யாவன் ஒருவன் அவன் பிரஸாதத்தாலே லோகமானது திருந்தப் பெற்றது

மா சதிர்
பகவத் கிருபை -மகத்தான சதிர்
கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்
மாசரிது பெற்றுக் கேசவன் தமர் ஆனார்கள் –

மா சதிர்
இந்த சதிர் தம்மளவு அன்றிக்கே
தம்மோடு ஸம்பந்த சம்பந்திகள் அளவும் வெள்ளம் இட்டுப் பெருகிற படி
மயர்வற மதி நலம் அருளுகையாலே -மா சதிர் இது பெற்று

தன் தலையாலே வந்ததாகில் இறே -ஸா வதி யாவது

இது பெற்று -ஞான பக்திகளைப் பெற்று

எவன் அவன் மேல் மேல் என இவர்களை சிரஸா வஹிக்கிற படி
நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா
ஸ்ரீ வைஷ்ணவ சம்பத்து வாய்க்கிற படி

எழு படி கால் என்ற அளவில்லை
தொட்டாரைத் தொட்டு இருபத்தொரு படி கால்
இன்னும் நம் அளவும் வருகிற படி

இப்படி உம் மக்களுக்கு அருளினவன் ஆர் என்ன
அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி
ததீய சேஷத்வத்தில் அளவில்லாத வைகுந்தத்து அமரரும் முனிவரும்
மங்களா ஸாஸனம் பண்ண இருக்குமவன்

ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன்
இப்படி விஷயீ கரித்ததற்கு ஹேது
ஸ்வாமி யாகையாலே -வடிவு அழகாலும் கண் அழகாலும் – என்னை அநந்யார்ஹன் ஆக்கினவன் –

அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன்
விண்ணோர் நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே
மா சதிர் பெற்றுத்
துயர் அடி தொழுது எழு என் மனனே

நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா
நித்ய ஸூரி ஸேவ்யனானவன் -நமக்கு ஸ்வாமியான உபகாரகன் ஆனவன் –
ஸர்வ சமாஸ்ரயணீயன் ஆனவன் திருவடிகளைத் தொழுது
நித்ய அஞ்சலி புடா ஹ்ருஷ்டா -என்கிறபடியே
கேசவன் தமரோடே வர்த்தி என்கிறார் –

———-

அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம்
புணர்வது இருவரவர் முதலும் தானே
இணைவனாம் எப்பொருட்கும் வீடு முதலாம்
புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே –2-8-1-

அணைவது அரவணையில்
அவனுடைய முக்த மோக்ஷ ப்ரதத்வத்தை அருளிச் செய்கிறார்

அணைவது அரவணையில்
நம்மோடே ஸம்பந்தமே ஹேதுவாக அவன் விஷயீ கரிப்பதான பின்பு
சம்சாரிகளுக்கு நம்மோடே ஒரு சம்பந்தம் உண்டாக்கி
அவன் கிருபைக்கு விஷயம் ஆக்குவோம் என்று பார்த்து
அவர்களுக்கு மோக்ஷ பிரதத்வத்தை அருளிச் செய்கிறார் –

உயர்வற என்கிற பாட்டை
அணைவது அரவணை-விவரிக்கிறது -அது எங்கனே என்னில் –
உயர்வற
மனஷ்யாநந்தம் தொடங்கி ப்ரஹ்மானந்தம் அளவாக
ஐஹிக ஆமுஷ்மிக போகமே உத்தேச்யம் என்று புஜிக்கிறவர்கள் ஆகையாலே உயர்வு அற்றார்கள்

உயர் நலம் என்று பர ப்ரஹ்மானந்தம் உடையவன் எவன் அவன் மோக்ஷ பிரதன் ஆனவன்

அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம் புணர்வது
முக்த ப்ராப்ய போகம் தான் இருக்கிற படி
பர்யங்க வித்யையில் சொல்லுகிறபடியே ஸர்வேஸ்வரனும் பிராட்டிமாரும் கூடி இருந்து
திருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே எழுந்து அருளி இருக்க இச் சேதனன் முக்தனாய்ச் சென்று கிட்டினால்
ஈஸ்வரன் கோசி என்றால்
அஹம் ப்ரஹ்மாஸ்மி– நான் ராஜ புத்ரன் -ப்ரஹ்ம பிரகார பூதன் -என்னக் கடவன்

ஆகில் இங்கனே போராய் என்று அவன் அங்கீ காரம் பெற்று
மாதா பிதாக்கள் இருந்த படுக்கையிலே பிரஜை சென்று ஏறுமா போலே
பாதே நான்ய ஆரோஹதி -என்று ஏறக் கடவன் என்கிறது –

அணைவது
தாபத்ரயங்கள் எல்லாம் ஆறும்படி அணைவது
புணர்வது-என்கிறது மூவருக்கும் ஒக்கும் படி பரிமாறினது

ஆக
சர்வேஸ்வரனும் பிராட்டியுமாக திருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே ஏறி இருக்க
இவனும் அனுமதியால் ஏற
அணைத்து மடியில் வைத்து உகந்து
கிரியதாம் இதி மாம் வத -என்று ஏவிக்கொள்ள அடிமை செய்கை முக்த ப்ராப்ய போகம் ஆகிறது

இவருக்கு இப் ப்ராப்யத்துக்கு சாதகம் ஏது என்ன
மயர்வற மதி நலம் அருளினன்
இவருடைய துர்க்கதி கண்டு -தன் நிர்ஹேதுக கிருபையாலே
பக்தி ரூபா பன்ன ஞானத்தைக் கொடுத்தது இதற்கு ஹேது

இப்படிப்பட்டவன் எவன் அவன்
இருவரவர் முதலும் தானே
ப்ரமாதிகளுக்கு காரணமாய் இருக்க
ஸ ப்ரம்மா ஸ சிவஸ் ஸேந்த்ர -என்கிற பிரஸித்தியாலே சொல்லுகிறார்
இவ்விபூதி கார்ய காரண ரூபத்தாலே சம்பந்தம் சொல்லிற்று
அவ்விபூதி போக பூமியாய் நித்தியமாய் இருக்கும் என்று சொல்லிற்று
இப்படி உபய விபூதிக்கும் நாயகனானவன் யாவன் ஒருவன் அவன் அமரர்கள் அதிபதி

ப்ரம்ம ருத்ராதிகளைப் போலே ஸம்ஸார பந்தகம் அல்லாமையாலே
அம்ருத ஸப்த வாசிகளாய் -அம்ருதம் திவி -வாசிகளாய் -அபர்யாப்த அம்ருத போகிகளாய்
இருக்கிற நித்ய ஸூ ரிகளாலே ஸேவ்யமானவன் மோக்ஷ பிரதன்

ப்ரம்ம ருத்ராதிகளுக்குக் காரணபூதனாய் நிர்வஹிக்கிறான் யாவன் ஒருவன் அவன்
எப்பொருட்கும்-இணைவனாம்
தேவாதி பதார்த்தங்கள் தோறும் ஸஜாதீயனாய் வந்து அவதரிக்கும்
எந்நின்ற யோனியுமாய் பிறக்கும்

இப்படி
ப்ரம்ம ருத்ராதிகள் நடுவே விஷ்ணு நாமாவாயும் உபேந்த்ரனாயும்
சக்கரவர்த்தி திருமகனாயும் வஸூ தேவ புத்ரனாயும்
மஹா வராஹமாயும் குப்ஜா மரமாயும்
தாம் பிறக்கிறது எதுக்காக என்னில்
உயிர் அளிப்பான்
வீடு முதலாம்
மோக்ஷ பிரதனாகைக்காகவே அன்றோ

பஷி பிசாசம் முதலானோருக்கும் மோக்ஷம் கொடுத்து ரஷிக்கைக்காக -என்ன
ஆனால் எல்லாரும் முக்தராக வேண்டாவோ பின்னை என்ன –

துயர் அறு சுடர் அடி தொழுது
பிறவிக்கடல் நீந்துவார்க்குப் புணைவன்
தேவதாந்த்ர பஜனாதிகளான துயர் அற்று மோக்ஷ ப்ரதனான ஸர்வ ஸ்மாத் பரனானவன் திருவடிகளை
என் மனனே
உனக்கு மயர்வற மதி நலம் அருளி மோக்ஷத்தையும் தன் நிர்ஹேதுக கிருபையால் தந்த உபகாரகனைத் தொழுது
ஸம்ஸாரம் ஆகிற பெரும் கடலை -அது யாராலும் கடக்கப் போகாதே –
பிரபலமான நீயே கடத்தித் தர வேணும் என்று பர ந்யாஸம் பண்ணி இருப்பார்க்கு
ப்ரதிபூவாய் நின்று கடத்திக் கொடுக்கும்

புணைவன்
புணையாம் அவன்
ஸர்வ பர நிர்வாஹகன் -ஆனவன்
என் மனனே தொழு

ஸம்ஸார சாகரம் கோரம் அநந்த கிலேச பாஜநம்
த்வாம் ஏவ சரணம் ப்ராப்ய நிஸ் தரந்தி மநீஷண
விஷ்ணு போதாஸ்ர யந்மே மன –என்னக் கடவது இறே
அக்கரையும் இக்கரையும் ஒன்றாய் நின்று கடத்தும் ஓடம் இறே –

———

எம்மா வீட்டுத் திறமும் செப்பம் நின்
செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லைக்
கைம்மா துன்பம் கடிந்த பிரானே
அம்மா வடியேன் வேண்டுவது ஈதே –2-9-1-

எம்மா வீட்டில்
ஸர்வேஸ்வரன் இவனுக்கு மோக்ஷம் கொடுப்பானாகப் பாரிக்கிற படியைக் கண்டு
அங்கே போகவுமாம் -இங்கே இருக்கவுமாம்
ஏதேனுமாக எனக்காக இருக்கும் இருப்புத் தவிர்த்து உனக்கே உறுப்பாம் படி
அதுவே எனக்கு வடிவாம்படி தந்து அருள வேணும் என்று ஸ்வ ப்ராப்யத்தை நிஷ் கர்ஷித்தார்

கீழே அணைவது அரவணையிலே
வீடு முதலாம் என்று தானும் அனுசந்தித்து
நலம் அந்தமில்லதோர் நாடு புகுவீர் -என்று பிறருக்கும் உபதேசிக்கக் கண்டு
ஸர்வேஸ்வரனும் இவருக்கும் இவர் பரிகரங்களுக்கும் மோக்ஷம் கொடுப்பதாகப் பாரிப்பதைக் கண்டு
தேவரீர் எனக்கு மோக்ஷம் தரப் பார்த்ததாகில் இங்கனே தரப் பார்ப்பது –

அதாகிறது
உனக்கு மோக்ஷம் கொள் என்று எனக்காகத் தருகை அன்றிக்கே
நமக்காகக் கொள் என்று -தேவரீர்க்கே ஆம்படி
ஸ்ரக் சந்த நாதிகளாக தேவர் கொள்ளும்படியாகத் தர வேணும் என்று
தான் நினைத்து இருந்தபடியைப் பிரார்திக்கிறார் –

உயர்வற என்கிற பாட்டை -எம்மா வீடு விவரிக்கிறது -எங்கனே என்னில்

உயர்வற உயர் நலம் எம்மா வீடு
ஐஹிக ஆமுஷ்மிகாதிகள் அன்று
உயர் நலமான வீடு கொள்ளும் என்றான் ஈஸ்வரன்
வேண்டா என்றார்
மா வீடு -வி லக்ஷணமான மோக்ஷம் கிடீர் -என்றான்
அதுவும் வேண்டா -என்கிறார்
எம்மா வீடு கிடீர் -ஐஸ்வர்ய கைவல்யாதிகள் -என்று இருக்க வேண்டா –
பரம புருஷார்த்த லக்ஷண மோக்ஷம் என்றான் –
அதுவும் வேண்டா என்றார்
இவைகள் எல்லாம் எம்மா வீட்டுத் திறங்கள்

செப்பம் -செப்போம்
எவ் வகையாலும் உயர்நலம் உண்டே யாகிலும் எனக்கு வேண்டா

செப்போம் -செல்லோம் —
நீயும் ப்ரசங்கிக்க வேண்டாம்
நானும் நிஷேதிக்க வேண்டா

எம்மா வீட்டுத் திறமாவது
ஸா லோக்ய ஸா ரூப்ய ஸா மீப்ய ஸா யுஜ்யம் என்ற இவைகள்

உமக்கு இப்படி அறியும்படி உபதேசித்தார் யார் என்ன
உயர் நலம் உடையவன் எவன் அவன் -எனக்கு மதிநலம் அருளினன் –
எனக்கு -என்கிற
மயர்வு அறுத்து
அத்யந்தம் பரதந்த்ரனாம் படி அருளினன்

ஆகில் உமக்கு வேண்டுவது என் என்ன
நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து
அகவாய் சிவந்து புறவாய் கறுத்து
மஹத்தாய்
மணத்து மலர்ந்த திருவடித் தாமரைகளை அடியேன் தலையிலே வைக்க வேணும் –
நீ நிர்ஹேதுகமாக அருளின பக்தியைப் பெறுகையாலே இதுவே அமையும் –

எவன் அவன் -அயர்வறும் அமரர்கள் அதிபதி –
நிமிஷமும் விஸ்லேஷிக்கப் பொறாத நித்யருக்கு நிர்வாஹகனானவன்
துயர் அறு சுடர் அடியான பாத பற்பை
ஆகிஞ்சன்யமும் அநந்ய கதித்வமும் உள்ளவனான என் சிரஸ்ஸையே அலங்கரிக்கையை

ஒல்லை
இந்த அர்த்தித்தவம் இப்போதே செய்து அருள வேணும் –

நாம் இப்படி சீக்கிரமாக யாருக்குச் செய்தோம் என்ன
கைம்மா துன்பம் கடிந்த பிரானே
அயர்வறும் அமரர்கள் அதிபதியான நீ
அதந்த்ரித சமூபதி ப்ரஹித ஹஸ்தம் -என்று
பதறிக் கொண்டு வந்து தோன்றி யானையின் துயரம் தீர்த்தவன்
செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லை யிலே அருள வேணும்

கொக்குவாயும் பிடி கண்ணியும் இட்டால் போலே
கழற்றாமல் ஆதரிக்க வேணும் –

அம்மா வடியேன் வேண்டுவது ஈதே
ஸ்வாமியான உன் துயர் அறு சுடர் அடி
துக்க அந்தகாரமான காள ராத்ரிக்கு அவிவேக கந அந்த திங் முகத்திலே
பிரளய காலத்திலே ஸூர்யனைப் போலே என் ஹ்ருதயத்திலே உதித்தும்
போக்கும் திருவடிகளைத் தொழுது எழு என்று
அனுபவ கர்ப்ப உபதேசம் பண்ணுகிறார் –

——–

கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்
வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்
வளர் இளம் பொழில் சூழ் மாலிரும் சோலை
தளர்விலராகில் சார்வது சதிரே –-2-10-1-

கிளர் ஒளி இளமையில்
எம்மா வீட்டில் நிஷ் கர்ஷித்த ப்ராப்யம் பெறுகைக்குத் திருமலையை ஆஸ்ரயித்தார்

—–

சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது
அதிர்குரல் சங்கத்து அழகர் தம் கோயில்
மதி தவழ் குடுமி மாலிரும் சோலை
பதியது வேத்தி எழுவது பயனே –-2-10-2-

உயர்வற என்கிற பாட்டைச் -சதிரிள மடவார்-என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
உயர்வற -சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது-
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் சதிராவது –
ப்ரம்ம பாவன நிஷ்டரையும் தங்கள் வசம் ஆக்குகை

பருவத்தால் வந்த இளைமையாலும் மோஹிப்பிக்கை –
பவ்யர்களாய் இருந்து வஸீ கரிக்கிற சதிராகையாலே உயர்வற என்கிறது –

மடவார்கள் தாழ்ச்சியை மதியாதே
அவர்கள் தங்கள் ஆகிஞ்சன்யம் தோன்ற வணங்கி ஒடுங்கி யாயிற்று வஸீ கரிப்பது
அவர்கள் பக்கல் மனஸ்ஸை வைக்காதே –
இது நெடு நாளவற்று உயர்த்தி கொளே இனி யமையும்

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
சவுந்தர்ய சீலாதி குணங்களை யுடையவனானவன் பக்கலிலே மனஸ்ஸை
வைமின் என்ன

அவன் உங்களுக்கும் மயர்வற மதிநலம் அருளுகைக்காகாவே திருமலையிலே
வந்து நிற்கிறவன் –

அதிர்குரல் சங்கத்து அழகர்
மயர்வு பிறப்பிக்கும்
மடவார் தாழ்ச்சியை மதியாதே என்றும்
மதியிலே நலமான ஞான பக்தி வைராக்யம் பிறக்கும் படி
அதிர்குரல் சங்கத்து அழகர்
ஊதுகிற குழல் போலே சங்கம் முழங்குகிற படி –

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
அயர்வரும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
அதிர்குரல் சங்கத்து அழகர்

சவுந்தர்யாதிகளிலே கண் வைக்காதே -அடிமை செய்து இருக்கும் படிக்கு –
நித்யர்
முக்தர்
முமுஷுக்கள்
பத்தர்
கர்ம பாவநா நிஷ்டர்
ப்ரஹ்ம பாவநா நிஷ்டர்
ஐஸ்வர்யார்த்திகள்
கைவல்யார்த்திகள்
எல்லாரும் அவரவர் பேறு பெறுகைக்காக –

மதி தவழ் குடுமி மாலிரும் சோலை பதியது வேத்தி எழுவது பயனே
துயர் அறு சுடர் அடி தொழுது எழுவது பயனே
சந்திரன் தவழும்படி ஓங்கின கொடி முடியை யுடைய
மாலிருஞ்சோலை மலையை
பருத்து உயர்ந்த சோலையை யுடைய மலையையே

பதியதி ஏத்தி
அழகர் நித்ய வாஸம் செய்கிற பதியான கோயிலிலே
நலம் திகழ் நாரணன் துயர் அறு சுடர் அடி
ஸர்வ ஸமாஸ்ரயணீயமான திருவடிகளைத் தொழுது

என் மனனே
எழுவது பயனே -என்று
தம் நெஞ்சுக்கும் நெஞ்சு போல்வாருக்கும் உபதேசித்து
உபதேச கர்ப்ப அனுபவம் பண்ணுகிறார் –

———–

இரண்டாம் பத்து விவரணம் முற்றிற்று

———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய்மொழி வாசகமாலை — ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை–முதல் பத்து விவரணம்–

February 1, 2022

ஸ்ரீ திருவாய்மொழி வாசகமாலை நூலை இயற்றியவர் ஒரு வைணவப் பெண்மணி.
இவரது பெயர் ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை. காலம் 13 ஆம் நூற்றாண்டு.
ஸ்ரீ திருவாய்மொழிப் பாடல்கள் சிலவற்றிற்கு எழுதப்பட்டுள்ள விவரண சதகம்.

பொதுவாகச் சைவ, வைணவ மரபுகளில் சமய ஆசாரியருடைய நூல்களே செல்வாக்குப் பெறுவது வழக்கம்.
அல்லாதார் நூல்கள் மக்களிடம் அவ்வளவாகப் பரவுவது இல்லை. அவ்வாறு பரவாமல் போன நூல்களில் இதுவும் ஒன்று.

நம்மாழ்வார் திருவாய்மொழி 1102 பாடல்களைக் கொண்டது. அதில் 164 பாடல்கள் தெரிந்தெடுக்கப்பட்டு
அவற்றிற்கான விரிவுரை கூறுவது இந்த நூல்.
திருவாய்மொழியில் 10 அல்லது 11 பாடல்களைக் கொண்ட பகுதி ஒரு பதிகம். 10 பதிகங்களைக் கொண்டது ஒரு பத்து.
இவ்வாறு 10 பத்துக்கள் சேர்ந்ததே திருவாய்மொழி.
இவ்வாறு அமைந்துள்ள திருவாய்மொழி நூலிலிருந்து ஒவ்வொரு பதிகத்திலிருந்தும் முதல்-பாடல் அல்லது முதல்-இரண்டு-பாடல்
விரிவுரைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு எடுத்துக்கொள்ளப்பட்ட பாடல்களே 146.
இந்தப் பாடல்களுக்கு விவரண சதகம் பாடும்போது அந்தந்த பதிகத்தில் அடங்கியுள்ள பாடல்கள்
அனைத்துக்குமான தொகுப்புப் பொருளையும் இந்த நூல் குறிப்பிட்டு மணிப்பிரவாள நடையில் கூறுகிறது.

———-

பூழியர் கோன் தென்னாடு முத்துடைத்து -பாண்டிய நாட்டின் ஒரு பகுதி -வழுதி நாடு -தலைநகர் -திருக்குருகூர்
கோவிந்தன் தனக்கே குடி அடியாரான வேளாள குல மன்னர் -திருவழுதி வள நாடர்
இவர் திருக்குமாரர் -அறம் தாங்கியார் -செந்நெறிச் செல்வர்
இவர் திருக்குமாரர் சக்ரபாணியார்
இவர் திருக்குமாரர் -அச்சுதர்
இவருக்கு செந்தாமரைக் கண்ணர் என்றும் பொற் காரியர்
இருவரும் திருக்குமாரர்கள்
பொற் காரியாரது திருக்குமாரர் காரியார்
இவரே நம்மாழ்வாரைத் தோற்றுவித்து உலகை உய்வித்த புண்ணிய புருஷர் –

திரு வண் பரிசாரம் திருப்பதியில் -திருவாழ் மார்பணிந் செல்வப்புதல்வியார் -உடைய நங்கையார் -ஆழ்வாரது திருத்தாயார்

திருக்குறுங்குடி நம்பி நாமே உங்களுக்கு புதல்வராவோம் என்று அருளிச் செய்து ஆழ்வார் திரு அவதாரம்

ஆதி சேஷன் முன்னமே திருப்புளிய மரமாக திரு அவதரித்தார்
கலியுகம் –43 நாள் -வைகாசி -விசாகம் -இவர் திரு அவதாரம் -சேனை முதலியார் அம்சம் –
உலகு இயல்புக்கு மாறாக இருக்க மாறன் என்று திரு நாமம் சாத்தினார்கள்

மதுரகவி ஆழ்வார் -செத்தத்தின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடைக்கும் -கேள்வி
அத்தைத் தின்று அங்கே கிடைக்கும் -பதில்

அசேதனத்தில் ஆத்மா புகுந்து மாறி மாறி பிறவி சூழலில் உழன்று இருக்கும் என்றும்
அஞ்ஞானத்தில் உழன்று தேகம் போன்ற ஆத்மாவுக்கு கொஞ்சம் ஞானம் ஆச்சார்யர் மூலம் பெற
இதுக்கும் -அத்தைத் தின்று அங்கேயே கிடக்கும்

திவ்ய தேச எம்பெருமான்கள் தங்கள் பரிவாரங்களுடன் திருப்புளிய மரத்தில் காட்சி கொடுத்து பாடல்கள் பெற்று மகிழ்ந்தனர் –

———

அர்த்தபஞ்சகம் -ஒவ்வொன்றுக்கும் இரண்டு பதிகங்கள் திருவாய் மொழி என்றும் உண்டே

ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் -முதல் இரண்டு பத்துக்கள்
உணர் முழு நலம் -முழு உணர் முழு நலம் -ஞான ஆனந்த ஸ்வரூபம்
ப்ராப்துஸ் ச ப்ரத்யகாத்மந -அடுத்த இரண்டு பத்தும் –
ப்ராப்த் யுபாயம் -அடுத்த இரண்டு பத்தும்
பிராப்தி விரோதி அடுத்த இரண்டு பத்தும்
பலம் ப்ராப்தோ -கடைசி இரண்டு பத்தும் –

த்வயார்த்தமே திருவாய் மொழி -தீர்க்க சரணாகதி -சார ஸங்க்ரஹம்

தோன்றா உபநிஷத் பொருள் தோன்றலுற்றார் தமக்கும் சான்றாம் இவை –

ஆயிர மா மறைக்கும் அலங்காரம் யாரும் தமிழுக்குப்
பாயிரம் நாற் கவிக்குப் படிச் சந்தம் பனுவற்க்கு எல்லாம்
தாய் இரு நால் திசைக்கும் தனித்தீபம் தண்ணம் குருகூர்ச்
சேய் இரு மா மரபும் செவ்வியான் செய்த செய்யுட்களே

ஆரா வமுதம் கவி யாயிரம்
என்று எல்லாம் கம்ப நாட்டாழ்வார் சடகோபர் அந்தாதி

—————

தேசிகரும் –
தமிழ் வாதம் அறிந்த பகவர்களே
செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித் தெளியாத மறை நிலங்கள் தெளிக்கின்றோமே
சந்தமிகு தமிழ் மறையோன் தூப்புல் தோன்றும் வேதாந்த குரு
ஸூர்யனால் மலரப் பெற்ற தாமரைக்காடுகள் -அவன் திருக்கண்கள் -ரகுவீர கத்யத்தில் -ஆழ்வார் பாசுரங்கள் கொண்டே –
புண்டரீகத்து அங்கேழ் வனமோர் அனைய கண்ணான் -23–திரு விருத்தப் பாசுரம்

முதல் -23-பாசுரங்கள் கொண்டே ஸ்ரீ பாஷ்யார்த்தம் –

——-

வேதம் தமிழ் செய்த மாறன் –

ஸ்வரூப பரமான அருளிச் செயல்கள்

உயர்வற உயர் நலம் உடையவன் -1-1-1–ஸ ஏகோ ப்ரஹ்மண ஆனந்த ஆனந்தோ ப்ரஹ்ம -தைத்ரியம்
இனன் உணர் முழு நலம் -1-1-2-விஞ்ஞானம் ஆனந்தம் ப்ரஹ்ம -ப்ருஹதாரண்யம்
மிகுநர் இலனே -1-1-2- ந தத் ஸமஸ் ச அப்யதிகஸ் ச த்ருஸ்யதே -ஸ்வேதா
பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை -3-7-1-நாராயண பரஞ்சோதி -தைத்ரியம்
பரஞ்சோதீ –3-1-2-பரம் ஜோதி ரூப ஸம்பத்ய –சாந்தோக்யம்

பங்கயக்கண்ணனை -3-7-1-யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ -சாந்தோக்யம்
செம் பொன் திரு உடம்பே -2-5-1-ஆ ப்ராணதாத் ஸர்வ ஏவ ஸூ வர்ண -சாந்தோக்யம்
எண்ணின் மீதியன் எம்பெருமான் –2-2-1-அப்ராப்ய மனஸா ஸஹ -தைத்ரியம்
சொல் அளவன்று -8-2-6- யதோ வாஸோ நிவர்த்தந்தே
இமையோர் தமக்கும் எல்லையிலாதன கூழ்ப்புச் செய்யும் -8-2-6-யஸ்யா மதம் தஸ்ய மதம் மதம் யஸ்ய ந வேத
ஸ அவிஞ்ஞாதம் விஜா நதாம் விஞ்ஞாதம் அவிஜா நதாம் -கேனோ
என் வல் வினை மாய்ந்தறச் செய்குந்தன் –7-9-7-ஸர்வே பாப்மாந பர தூயந்தே -சாந்தோக்யம்
கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ -7-5-1- யத்ர நாந்யத் பஸ்யதி நாந்யத் ஸ்ருணோதி நாந்யத் விஜாநாதி ச பூமா -சாந்தோக்யம்

காரண பரமான அருளிச் செயல்கள்

முதல் தனி வித்தேயோ -10-10-8–ஏகோ ஹவை நாராயண ஆஸீத் -மஹா உபநிஷத்
தானோர் உருவே தனி வித்தாய் –1-5-4-ப்ரஹ்ம வா இதம் ஏக மேவ அக்ர ஆஸீத் -ப்ருஹதாரண்யம்
மூவாத் தனி முதலாய் –2-8-5—ஆத்மா வா இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ -ப்ருஹதாரண்யம்
நினைத்த எல்லாப் பொருள்களுக்கும் வித்தாய் –1-5-2–ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ -சாந்தோக்யம் –

ஸ்ருஷ்டி வாக்யங்கள்

பாமரு மூ வுலகும் படைத்த –7-6-1- தத் ஈஷத லோகாந்நு ஸ்ருஜா இதி –சாந்தோக்யம்
தானே உலகு எல்லாம் தானே படைத்து –10-5-3-இதம் ஸர்வம் ஸ்ருஜத -தைத்ரியம்
எல்லா உலகும் உயிரும் தானேயாய் –10-7-2-ஸத் ச த்யச்சா பவத் -தைத்ரியம்
யாவையும் எவையும் தானாய் –3-4-10-ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம -சாந்தோக்யம் –

காரண கார்ய நிபந்தன சாமாநாதி கரண்யம்

பெரிய அப்பனைப் பிரமன் அப்பனை உருத்திரன் அப்பனை –8-1-11-நாராயணாத் பிரம்மா ஜாயதே நாராயணாத் ருத்ரோ ஜாயதே

ஆத்ம சரீரபாவ நிபந்த சாமா நாதி கரண்யம்

ஓர் உயிரேயோ உலகங்கட்க்கு எல்லாம் –8-1-5—அந்தர்யாமி ப்ராஹ்மணம் ப்ருஹதாரண்யம்
கரந்த சில் இடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும் கரந்து எங்கும் பரந்துளன் —1-1-10-யச்ச கிஞ்சித் ஜகத் யஸ்மிந்
த்ருஸ்யதே ஸ்ரூயதே பிவா அந்தர் பஹிஸ் ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித –தைத்ரியம் –
தானேயாகி நிறைந்து –10-7-2–தேநேதம் பூர்ணம் புருஷேண ஸர்வம் -தைத்ரியம்
முதலில் சிதையாமே –1-5-2-பூர்ணம் ஏவா வஸிஷ்யதே –ஸ்வேதாஸ்வரம்
பெரிய நீர் படைத்து அங்கு உறைந்து –8-1-5–ஆபோ வா இதம் அக்ரே சலிலம் ஆஸீத் தஸ்மிந் ப்ரஜாபதிர் வாயுர் பூத்வா சரத் –தைத்ரியம்

ஏனமாய் நிலம் கீண்ட –5-7-6-தாம் வராஹோ பூத்வா ஹரத்
வன் மா வையம் அளந்த எம் வாமனா –3-3-2-விசக்ரமே ப்ருதிவீ மேஷ ஏதாம் -புருஷ ஸூக்தம்
எல்லையில் சீர் -2-5-9-விபூதீ நாம் நாஸ்த்யந்தோ விஸ்தரஸ் யமே -கீதை
தானே யாள்வானே –10-5-3-அந்த ப்ரவிஷ்டா ஸாஸ்தா ஜநா நாம் ஸர்வாத்ம -தைத்ரியம்
அயனாம் சிவநாம திருமாலால் -8-8-11
அரியை அயனை அரனை அலற்றி -10-10-11-

அவனே அவனும் அவனும் அவனும் -9-3-2—ச ப்ரம்மா ச சிவ சேந்த்ர -தைத்ரியம்
கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் –5-6-1—தத் ஹைதத் பஸ்யன் ருஷி வாமதேவ பிரதிபேதே அஹம் மனுரபவம் ஸூர்யச்ச
தன்மை பெறுத்தி -3-7-7–ஸ்வேந ரூபேணே அபி நிஷ்பத்யதே -சாந்தோக்யம் –
நல்ல வமுதம் –2-5-9-இதம் அம்ருதம் -ப்ருஹதாரண்யம்
இல்லத்தாரும் புறத்தாரும் மொய்த்து –8-8-8—ஞாதய பர்யுபாஸதே ஜாநா ஸிமாம் ஜாநாஸி மாமிதி –சாந்தோக்யம்

இனிப்பிறவி யான் வேண்டேன் –10-6-1—லிந்து மாபிகாம் –சாந்தோக்யம்
மாக வைகுந்தத்து மகிழ்வு எய்துவர் வைகலுமே –5-10-11- தத் விஷ்ணோ பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய-தைத்ரியம் –
மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவாவோ –8-1-5–தமீஸ்வரணாம் பரமம் மஹேஸ்வரம்
ஆர் உயிரேயோ –8-1-5–பிராணஸ்ய ப்ராணா –கேந உபநிஷத்
கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும் –9-1-1–ததேதத் ப்ரேயஸ் புத்ராத் பிரேயோ மித்ராத் ப்ரேயோ வித்தாத் –ப்ருஹதாரண்யம்
நல்ல பதத்தால் மனை வாழ்வார் கொண்ட பெண்டிர் மக்களே –8-10-11-நாஸ்யா ப்ரஹ்ம வித் குலே பவதி -முண்டகம் –

சந்தங்கள் ஆயிரத்து –10-9-11-தத் சந்தஸாம் சந்தஸ்த்வம் ப்ரஹ்மவை சந்தாம்ஸி -தைத்ரியம்
பொறி யுணர்வு அவை இலன் –1-1-2-யத் தத் அத்ரேச்யம் அக்ராஹ்யம் –முண்டகம்
யாவையும் யவரும் தானாய் அவரவர் சமயம் தோறும் தோய்விலன் –3-4-10-ஏகஸ் ததா ஸர்வ பூத அந்தராத்மா ந லிப்யதே லோக துக்கேந பாஹ்ய -கட
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர் –4-1-1–ஸ்வோபாவா மர்த்யஸ்ய யதந்த கைதத் –கட
தோற்றங்கள் ஆயிரத்துள் –6-8-11–வாசா விரூப நித்யயா -தைத்ரியம்

நாரணற்கு ஆள் அன்றி ஆவரோ –7-5-2-ப்ரஹ்ம தம் பராதாத் –ப்ருஹதாரண்யம்
இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி –10-7-5–ஏதஸ் யை வைதாநி ஸர்வாணி நிச்வஸிதாநி –ப்ருஹதாரண்யம் –
பல பிறப்பாய் –1-3-2—பஹுதா விஜாயதே -புருஷ ஸூக்தம்
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் -6-7-1–வாஸூ தேவம் ஸர்வம் இதி –கீதை –

————–

உயர்வற உயர் நலம் யுடையவன் எவன் அவன் –

நிர்ஹேதுகமாக ஸ்வரூப ரூப குணங்களையும் நித்ய ஸூரிகள் அதிபதியாயும்-நிர்வாஹகானாயும் –
இருக்கும் இருப்பையும் காட்டிக் கொடுக்க –
ப்ரத்யக்ஷமாக அனுபவித்த ஆழ்வார் -அனுபவ ஜெனித ப்ரீதி உந்த -இன்ப வெள்ளத்தை
வாயினால் பாடி அல்லது தரிக்க மாட்டாமல் பேசுகிறார் –

உயர்வு அற -வருத்தம் இல்லாமல்
மற்றவர்கள் உயர்வு அறும் படி -இல்லாமல் போகும்படி –
ஸூர்யன் ப்ரகாஸத்தால் நக்ஷத்திரங்கள் இருந்தும் இல்லாதவை போல் இருக்குமா போல் –

உயர் –
அளவிடமுடியாத -எல்லை காண முடியாமல் உயர்ந்து கொண்டே இருக்குமே
தொல்லை யஞ்சோதி நினைக்குங்கால் என் சொல் அளவு அன்று -இமையோர் தமக்கும் எல்லையிலாதன கூழ்ப்புச் செய்யும் –
நலம் -ஆனந்த குணம் -எண்ணற்ற கல்யாண குணங்கள் –
ஸமஸ்த சேதன அசேதன விஸிஷ்ட விபூதிகள் -மூன்று அர்த்தங்களும் உண்டு –

யவன் -அவன் என்பதால்
இந்த கல்யாண குணங்கள் அவனை அடைந்து நிறம் பெறுகின்றன

ச ஏகோ ப்ரஹ்மண ஆனந்தோ -(தைத்ரியம் )
ந தத் சமஸ் சாப்யதிகஸ் ச த்ருஸ்யதே -(ஸ்வேதாஸ்வரம் )
நிரஸ்த அதிசய ஆஹ்லாத ஸூக பாவ ஏக லக்ஷணா (ஸ்ரீ விஷ்ணு புராணம் )

கோந் வஸ்மின் ஸாம் பிரதம் லோகே குணவான் (ஸ்ரீ மத் ராமாயணம் )
குணவான் என்றதே இங்கு நலமுடையவன்

த மேவம் குண ஸம் பன்ன மகா மயதமேதி நீ
பஹவோ ந்ருப கல்யாண குணா புத்ரஸ்ய சந்திதே
அஹம் அஸ்ய அவரோ ப்ராதா குணைர் தாஸ்யம் உபாகத (ஸ்ரீ மத் ராமாயணம் )

கேவல அனுபவ ஆனந்த ஸ்வரூப பரம ஸ்வராட் (ஸ்ரீ மத் பாகவதம் )

ப்ரூதே காதா ஸஹஸ்ரம் முர மதந குணஸ் தோம கர்ப்பம் முனீந்திர -தேசிகன்

மனுஷ்ய- -கந்தர்வ -சிரலோக பித்ருக்கள் -ஆஜானஜ தேவர் -கர்மதேவர் -தேவர் –
இந்திரன் -ப்ருஹஸ்பதி -பிரஜாபதி -ப்ரஹ்மானந்தம் -சொல்லி
மீண்டும் கீழே வந்து -இப்படி பல மடங்குகள்

உபர் யுபர் யப்ஜபுவோபி பூரு ஷாந் பிரகல்ப்ய தேயே சதம் இத் யனு க்ரமாத் க்ரஸ்த்வ
தேகைக குணாவ தீப்ஸயா ஸதாஸ்திதா நோத்யமதோதி சேரதே

யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ

சுடரடி -திவ்ய மங்கள விக்ரஹம் உப லக்ஷணம்
சுடர் ஒளி மூர்த்தியை
மாசூணாச் சுடர் உடம்பாய்

அர்த்த பஞ்சகமும் இதில் உண்டே
உயர்வற உயர் நலம் உடையவன் -அயர்வறும் அமரர்கள் அதிபதி -பர ஸ்வரூபம்
என் மனனே -அதிகாரி ஸ்வரூபம்
மயர்வு -விரோதி ஸ்வரூபம்
அருளினன் -உபாய ஸ்வரூபம்
தொழுது எழு -ப்ராப்ய ஸ்வரூபம்
உபதேச கர்ப்ப அனுபவம் -அனுபவ கர்ப்ப உபதேசம் –

——–

எம்பெருமானார் -அடுத்தபடி
சந்திரிகிரி ஐயன்
ஸ்ரீ மன் நாராயண ஐயர்
திருக்கோஷ்டியூர் ஜீயர்
என்று மூவரையும் குறிப்பிட்டு பின்பு
வடக்குத் திருவீதிப்பிள்ளை பற்றியும் – குறிப்பிடுகிறார்

எனவே
இப்பிரபந்த கர்த்தா -பெண்பிள்ளை -ஸ்ரீ வடக்குத் திரு வீதிப்பிள்ளை ஸ்வாமிகளுடைய சிஷ்யை-
ஸர்வஜித் வருஷம் இவர் திரு அவதாரம்
அதுக்கு அடுத்த ஆங்கீ ரஸ வருஷம் இவரது
கலி யுகாதி -சக வருஷங்கள் எண் குறிப்பிட வில்லை
ஆங்கீர வருஷம் -மார்கழி -26-தேதி இப்பிரபந்தம் வெளியிட்டதாகக் குறிப்பிடுகிறார் –

நிர்ப்பரோ நிர்பயோஸ்மி -ந்யாஸ விம்சதி கடைசி ஸ்லோகத்தை இவர் காட்டி உள்ளதால்
தேசிகருக்குப் பிற்பாடாராக இருக்க வேண்டும் –
ஸ்ரீ மா முனிகள் திரு நாமம் இந்த நூலில் இல்லை
ஆகவே அவருக்கு முன் திரு அவதரித்தவராக இருக்க வேண்டும்
ஆகவே 1270-1370-காலத்துக்குள் இவர் அவதாரம்

ஈட்டில் உள்ள ஸ்ரீ ஸூக்திகளையே கொண்டு வந்துள்ளது இப்பிரபந்தம் –
இவ் வுரை நூறு பாட்டுக்களுக்கே உள்ளது
தஞ்சை ஸரஸ்வதி மஹாலில் உள்ள ஒரே சுவடு -ஆசிரியர் தமது கையாலேயே எழுதப்பட்டது –

ஸரஸ்வதி மஹால் ஓலைச்சுவடிகள் 700 வருஷங்கள் பழைமை என்பதால்
இது இவரே எழுதின ஓலைச் சுவடியாக இருக்க முடியாது –

இணைவனாம் எப்பொருட்க்கும் -என்கிறபடி -முதல் பாசுரம் மற்ற எல்லா பாசுரங்களுடன் இணைக்கப் பட்டு
அவற்றுடன் பொருள் ஒன்றி இருப்பதை நன்கு விளக்குகிறது இந்நூல்
வருந்தி நான் வாசகமாலை கொண்டு -என்ற ஆழ்வார் அருளிச் செயலுக்கு ஏற்ப
திருவாய் மொழிச் செய்யுள்களையே வசன நடையில் தொகுத்தால் போலே அமைந்துள்ள இந்நூலுக்கு
திருவாய் மொழி வாசக மாலை என்று பெயர் இடப்பட்டுள்ளது –

உயர்வற உயர் நலம் உடையவன் கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் -என்று சேர்த்து
உயர்வற -உயர்த்தி அற்ற லீலா விபூதியை -ஈர் ஏழு லோகங்களை –
உயர் நலம் உடையவன் -அவ்வெம்பெருமான் இருப்பிடமாகிய நித்ய விபூதியைச் சொல்லும்
கங்குல் -இரவு -பகல் -இருள் தரும் மா ஞாலம் -நித்ய விபூதி -பகல் -இவற்றை உடையவன் உயர் நலம் உடையவன் –
தத் விஷ்ணோ பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய
இப்படி ஸ்வா பதேச அர்த்தங்களையே இவ்வாறு இணைத்து அருளிச் செய்கிறார் –

இதே போல் ஆழி எழ பாதிக்கத்துக்கு உயர்வற உயர் நலம் உடையவனே வாமனன் என்று
கொண்டு பொருத்திப் பொருள் விளக்குகிறார் –

சந்தியும் சந்திப்பதமும் அவை தம்மிலே தழைக்கும்
பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலு கிற்பீர்
வந்தியும் வந்திப்பவரை வணங்கும் வகை அறிவீர்
சிந்தியும் தென் குருகூர் தொழுது ஆட் செய்யும் தேவரையே

நாத முனிக்கு அன்று நாலாயிரமும் உணர்த்தி
போதம் அருள் குருகூர் வித்தகனார் -கோதில்
திருவாய் மொழி வாசக மாலைத் தேனைத்
தரவே எனக்கு அருள் செய்தார் –

———

இந்த ஏட்டில் மூன்று சித்ரங்கள் வரையப்பட்டுள்ளன
தமிழ் மறை தந்து அருளிய -ஆராவமுதாழ்வார் -பாம்பணையில் பள்ளி கொண்டு அருள
நடுவில் பராங்குச நாயகி -ஞான முத்ரையுடனும்
வலப்புறம் கண்ணன் யசோதா பிராட்டியால் உரலினோடு இணைத்துக் கட்டப்பட்டு -இரண்டு மருத மரங்களும்
இவ்வாறு ஒலை யிலே சித்திரம் வரைவதும் சகஜம் போல் அன்று இருந்தது போலும்

——–

அவதாரிகை
ஸ்ரீயப்பதியான ஸர்வேஸ்வரன்
இவ்விருள் தரும் மா ஞாலத்திலே ஓடி ஓடிப் பல பிறவிகளிலும் தோன்றித் தோன்றி
எல்லையற்ற துன்பங்களை அனுபவித்துத் தன் உண்மையான ஸ்வரூபத்தை மறந்து தவிக்கும்
எண்ணற்ற ஜீவாத்மாக்களை உய்வித்து நற்கதியை அடைவிப்பதற்காகத் தோற்றுவித்த
தத்துவ உபதேச திவ்ய பிரந்தங்களுக்குள்
திருவாய் மொழி எனப்படும் செஞ்சொல் கவிகள் ஆயிரமும் ஒன்றாகும் –

இது மதிநலம் அருளப்பெற்ற -உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம் பெருமான்
என்று இருந்த நம்மாழ்வாரால் அருளிச் செய்யப்பட அந்தாதித் தொடையில் அமைந்த சரம பிரபந்தம்

ஆழ்வார் அவனுடைய ஸ்வரூப ரூப குண சேஷ்டித விபூதியை யாதாத்ம்யமாக காட்டப்பட்டு அறிந்து
அருளிச் செய்த -பொய்யில் பாடல்கள் -தேனினும் இனிய தமிழ் பாசுரங்கள்
ஆழ்வாரை வியாஜமாக எம்பெருமானே -தானே தன்னைப் பாடிய வாய் முதல் அப்பன் –

இவற்றில் நூறு பாடல்களுக்கே இந்த உரை -விவரண சதகம் என்று தாமே திருநாமம் சூட்டி அருளுகிறார்
இதில் முதல் 13 ஏடுகளும் -15-16- ஏடுகளும் லுப்தம்
இப்பொழுது கிடைத்த ஏடுகளில் 1-6 -தொடங்கி உள்ளது –

————-

பரிவதில் யீசனைப் பாடி விரிவதில் மேவலுறுவீர்
பிரிவகை யின்றி நன்னீர் தூய்ப் புரிவதுவும் புகைப் பூவே –1-6-1-

தத் ஆஸ்ரயணீயன் யார் என்ன -மயர்வற மதிநலம் அருளினன்
அத்தாலே
தேவதாந்தர பஜனம் அற்று
அருளின பக்தியால்
ஸூகரமாக
பகவத் சமாஸ்ரயணம் பண்ணப் பெற்றேன்

நீங்களும்
விரிவது மேவலுறுவீர்
அயர்வரும் அமரர்கள் அதிபதியானவனை ஆஸ்ரயித்து
விஸ்த்ருதராக-விரிந்த -மழுங்காத ஞானம் உடையராய் – வேண்டி இருப்பீர்

பிரிவகை யின்றி நன்னீர் தூவி
சற்றும் அசராமல் ஆஸ்ரயிக்கிற
நித்யருக்கு அதிபதியாய்
நியாந்தா வானவனைத் துயர் அறு சுடர் அடி தொழுது

பிரிவகை யின்றி -அயோக்யன் என்று அகலாதே
நன்னீர் தூய்ப் -ஏலாதி ஸம்ஸ்காரங்கள் வேண்டா
துயர் அறு சுடர் அடிகள் ஆகையாலே
புரிவதுவும் புகைப் பூவே -ஏதேனும் புகையும் பூவும் அமையும்
கள்ளார் துழாயும் -இத்யாதி

சுடர் அடி தொழுது எழு என் மனனே
இப்படி
ஸூலபமுமாய் –
ஸூ கரமான திருவடிகளைத் தொழுது வர்த்தி -என்கிறார் –

———–

பிறவித் துயர் அற ஞானத்துள் நின்ற -துறவிச் சுடர் விளக்கம் தலைப் பெய்வார்
அறவனை ஆழிப் படை அந்தணனை மறவியை இன்றி மனத்து வைப்பாரே –1-7-1-

பிறவித் துயரில்
கீழ்ச் சொன்ன ஆஸ்ரயணீயம் தான் போக ரூபமாய் இருக்கும் என்கிறார் –
இப்படி போக்யனானவனை விட்டுப் ப்ரயோஜனாந்தரத்தைக் கொண்டு அகலுவதே -என்று
கேவலரை நிந்திக்கிறார்

உயர்வற என்கிற பாட்டைப் பிறவித் துயர் என்கிற பாட்டு விவரிக்கிறது –
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும்
காம்ய பலன்களையும்
அதுக்கும் அவ்வருகான கைவல்யத்தையும் பெறுவதே என்று கேவலரை நிந்திக்கிறார் –

உயர்வு அற
பிறவித துயர் அற
ஸ்வர்க்காதிகளில் கைவல்யத்தில் உயர்த்தி யுண்டோ என்ன
அவற்றுக்கு ஒரு வகையாலும் உயர்வு இல்லை என்கிறது -பரமானந்தத்தைப் பற்றச் சொல்கிறது –

அற ஞானத்துள் நின்ற
உயர் நலம் உடையவன் எவன் அவன்
ஞான ஆனந்தாதி ஸ்வரூபம் ஆனவன்
மயர்வற மதிநலம் அருளினன்
பரமானந்த ஸ்வரூபத்தைப் பற்றி
ஜரா மரண மோஷாயா -என்றதை அறிந்து
ஆத்ம அனுபவ ஞானத்தில் ஞானம் முற்றி இருக்கை –
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனை நோக்குகிற மதி நலம் அருள பெற்று அவனாலே

துறவிச் சுடர் விளக்கம் தலைப் பெய்வார்
பிரகிருதி விநிர் முக்தமான ஆத்ம ஸ்வரூபத்தைப் பிராபிக்க வேண்டி இருப்பார்

அறவனை
அயர்வறும் அமரர்கள் அதிபதி யாவன் ஒருவன்
அவன் ஆழிப்படை அந்தணனை
அசர்வற்று
அபர்யாப்த்த அம்ருத ஆனந்த மக்நரான நித்ய ஸூரி சேவ்யனை அகன்று
ஆத்ம அனுபவத்திலே மூளத் தேடுவதே
ஏதேனும் ஒன்றைத் தேடிப் பெறும் போது அவனை ஆஸ்ரயித்துப் பெற வேண்டும்படி இருக்கிற
இது -என்ன தார்மிகனோ -என்கிறார் –

ஆழிப் படை அந்தணனை
துயர் அறு சுடர் அடி தொழுது எழு
ஆத்ம அனுபவ விரோதியைப் போக்கிக் கொள்வதே -சுத்தி குண விசிஷ்டன் என்றதாயிற்று
அவர்கள் பற்றுற்றும் என் மனனே
சுடர் அடி தொழுது எழப் பெற்றோமே

ஆழிப் படை அந்தணனை மறவியை இன்றி மனத்து வைப்பாரே –
அந்திம ஸ்ம்ருதி இல்லையாகில் பழைய ஸம்ஸாரமே ஸித்திக்கும் என்கிறார் –

———–

இவையும் அவையும் உவவையும் இவரும் அவரும் உவரும்
எவையும் எவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என்னமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே –1-9-1-

அருகலிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன்
கருகிய நீல நன்மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன்
பொருசிறைப் புள்ளுவந்தேறும் பூ மகளார் தனிக் கேள்வன்
ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே –1-9-3-

அருகலிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன்
பூர்ணனுமாய் இருக்கிறவன் -யாவன் ஒருவன் –அயர்வறும் அமரர்கள் அதிபதி –
அமரர்கள் ஆதி முதல்வனானவன் –
அக்குணங்களை நித்ய ஸூரிகள் அனுபவிப்பிக்க –அவர்கள் தம் அதீனமாம் படி இருக்கிறவன் –

மயர்வற மதிநலம் அருளினன்
அஞ்ஞான கந்த ரஹிதமான -பக்தி ரூபா பன்ன ஞானத்தை
தன் நிர்ஹேதுக கடாக்ஷத்தினாலேயே பூரித்தவன் யாவன் ஒருவன்
தன்னோடு ஏக ரஸம் அனுபவிக்கும் படி பக்தி ரூபா பன்ன ஞானத்தை அருளினவன் –

கருகிய நீல நன்மேனி வண்ணன்
தம்மோடு உண்டான அவயவ அனுபவம் பண்ணினவற்றால் வந்த திருமேனியில் புகர்
கருத்து நெய்த்துப் பேசுகைக்க விஷயமாம் படி யாயிற்று –

செந்தாமரைக் கண்ணன்
அகவாயில் குணங்களுக்குப் பிரகாசகமான திருக்கண்களை யுடையவன்
எனக்கு மயர்வான அவித்யாதிகளைப் போக்கி
ஞான பக்தியாதிகளாலே தன்னோடு ஐக ரஸ்யம் பிறந்து அனுபவிக்கும் படி
பண்ணினவற்றால் வந்த என்னவா
தன்னதாம் படி
திருமேனியும் திருக்கண்களும் செவ்வி பெற்று விகஸிதமாய் யுகக்கிறவன்
யாவன் ஒருவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி
சற்றும் அசராதே ஏக ரஸ அனுபவ மக்நரானவர்களும் ரசிக்கிற ஸ்வாமி யானவன் –

பொருசிறைப் புள்ளுவந்தேறும் பூ மகளார் தனிக் கேள்வன்
ஸர்வேஸ்வரன் பெரிய திருவடியை மேற் கொள்ளுவதாகக் கடாக்ஷித்தால்
அவனுடைய அங்கீ காரம் பெற்றால்
அந்த ஹர்ஷத்தால் பெருக்காறு சுழித்தால் போல்
தன்னில் தான் பொரா நின்றுள்ள சிறகை யுடையவனாய்க் கொண்டு யாயிற்று த் தோற்றுவது –

இன்னம் -அவனை மேற்கொள்ளப் பெற்றோம் இறே -என்று திரு உள்ளத்திலே ப்ரீதியோடே யாயிற்று மேற் கொள்ளுவது –

பூ மகளார் தனிக்கேள்வன்
புஷ்பத்தில் பரிமளம் வடிவு கொண்டால் போலே இருப்பவளாய்
போக்யதை ஏக வேஷையான பெரிய பிராட்டியாருக்கு வல்லபன் என்றால்
இரண்டாம் விரலுக்கு ஆள் இல்லாதவனாய் யாவன் ஒருவன் இருக்கிறான்
அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே

அவன் பண்ணின மஹா உபகாரம் மட்டில்லை என்ன
அது ஏது என்ன
ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன்
திருவனந்த ஆழ்வானுக்குப் படுக்கையால் வந்த முறை
திருவடிக்கு வாகனமான முறை
பிராட்டிமாருக்கு மஹிஷியான முறை
ஸ்ரீ சேனாதிபதி ஆழ்வானுக்கு செங்கோல் செலுத்தின முறை
இப்படித் தனித்தனியே முக்தர் நித்யருக்கு முறை முறையால் வரும் கைங்கர்யங்கள் எல்லாம்
அவர் அவர்களோடே பரிமாறும் பரிமாற்றம் எல்லாம் இவருக்கு ஒரு வழியால் வந்தது அன்றிக்கே
சர்வ வித ரஸத்தையும் தந்து விடுகிறிலன்
என் அளவில் நித்ய முக்தர்கள் எல்லார் அளவிலும் பண்ணும் ஆதரத்தை
என் பக்கலிலே பண்ணா நின்றான் –

ஒழிவிலன் என்னோடு உடனே
இவன் ஒரு விபூதிமான் -அந்ய பரன் என்று தோற்ற இருக்கிறான் –
நித்ய விபூதியில் கேள்வியும் இங்கேயே இருந்து கேட்க்கும் அத்தனை

தண் தாமம் செய்தது என்று நித்ய விபூதியில் பண்ணும் ஆதரத்தைப் பண்ணினார் என்றார்
கீழில் திருவாய் மொழியில்
இதில் அவ்விபூதியில் உள்ளார் உடன் பரிமாறும் படியை என் ஒருவன் இடம் பரிமாறா நின்றான் என்கிறார் –

பூசும் சாந்திலே -இவர் அவயவங்களை சந்தன புஷ்ப்பமாகக் கொண்டான்
இதில் போக வஸ்துக்களாயும் போக ஸ்தானங்களாயும் கொண்டான்

ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே
நீயும் ஓர் அனுபவம் குறையாமல் துயர் அறு சுடர் அடி தொழுது அனுபவித்து எழு
என் மனனே -என்கிறார் உபகார ஸ்ம்ருதியாலே –

—————

பொருமா நீள் படை ஆழி சங்கத்தொடு
திருமா நீள் கழல் ஏழ் உலகும் தொழ
ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக்
கரு மாணிக்கம் என் கண் உளதாகுமே –1-10-1-

பொருமா நீள் படையில்
இப்படிப்பட்ட பேற்றுக்கு இத்தலையில் ஒன்றும் செய்ய வேண்டாத படி
ப்ராதிகூல்ய நிவ்ருத்தி தொடக்கமாக -பரமபக்தி பர்யந்தமாகத் தானே பிறப்பித்து
நித்ய ஸூரிகள் பேற்றையும் தந்தான் என்கிறார் –

கீழில் திருமொழியில் பிறந்த ஸர்வாங்க ஸம்ஸ்லேஷத்தை அநுஸந்தித்து உச்சி யுள்ளே நிற்கும் என்று இறே கீழ் நின்றது
பேற்றில் இனி இதுக்கு அவ்வருகே ஏற்றமாகச் செய்து கொடுக்களாவது இல்லை என்று நிர் வ்ருத்தராகிறார் என்று முன்புள்ள முதலிகள் நிர்வஹிக்கும் படி –
நிர் வ்ருத்தி என்று ஸூ கமாக ஸூ கிக்கிறார் என்றபடி

கீழே பிறந்த ஸர்வாங்க ஸம்ஸ்லேஷத்தை அனுசந்தித்துச் சொல்லுவது ஓர் ஏற்றம் உண்டு
உச்சியுள்ளே நிற்கும் என்று இறே -கீழ் இதுக்கும் மேல் ஏற்றமாக –பண்ணிக் கொடுக்கிறான் என்று பட்டர் அருளிச் செய்தார்

நீர் தாம் இங்கனே கிடந்தது படுகிறது என்
மறந்து பிழைக்கலாகாதோ என்ன
எத்தைச் சொல்லி மறப்பேன் என்கிறார் –

———–

நம்பியைத் தென் குறுங்குடி நின்ற அச்
செம்பொனே திகழும் திரு மூர்த்தியை
உம்பர் வானவர் ஆதி யஞ்சோதியை
எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ –1-10-9–

உயர்வற -என்கிற பாட்டை இப்பாட்டு விவரிக்கிறது எங்கனே என்னில்
உயர்வற என்று
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்மானந்தம் அளவாக லீலா விபூதி யோகம் சொல்லுகிறது
உயர் நலம் உடையவன் என்று
நித்ய விபூதி யோகம் சொல்லுகிறது
யவன் அவன் என்று –
உபய விபூதியிலும் அதிசயிதமான த்ருதீய விபூதிக்கும் நிர்வாஹகனான நம்பியை
பூர்ணமானவனை
நம்பியைத் தென் குறுங்குடி நின்ற அச் செம்பொனே திகழும் திரு மூர்த்தி-என்கிறது –

இப்படிப் பரிபூர்ணமானவன் எனக்கு மயர்வற மதி நலம் அருளித் தன் ஸ்லாக்யமான
பரத்வாதிகளில் காட்டில்
அர்ச்சக பராதீனமான திவ்ய மங்கள விக்ரஹத்தைக் காட்டிப் பரத்வாதிகளிலே
மனஸூ போகிற மயக்கத்தை அறுத்து

அர்ச்சாவதாரத்திலும் திருக்குறுங்குடி நம்பியை ஒழியப் போகாமல்
மனன் அக மலம் அறும் படி பண்ணி
இப்படி மயர்வற மதிநலம் அருளினவன் யாவன் ஒருவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் -என்றும்

உம்பர் வானவர் ஆதி யஞ்சோதியை
இப்படி நித்ய ஸூரி ஸேவ்யனாய்
ஆதி காரணமான பரஞ்சோதியை மறப்பது என்
அஞ்ஞான கந்த ரஹிதரான மேலாத் தேவர்களுக்கும் நிலத் தேவர்களுக்கும்
காரணமானவனை மறக்க விரகு உண்டோ –
இப்படி உபகாரகனானவனை மறக்க விரகு உண்டோ –

துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
மறக்க ஒட்டாத் திருவடிகள்
உன் மறப்பாகிற துயர் அறுக்கும்
அஞ்ஞான அந்தகாரம் நீக்கி -ஞானப் ப்ரகாஸம் ஆகிற பரஞ்ஜோதிஸ்ஸூ
உனக்கு விளக்காகக் காட்டும் திருவடிகளைத் தொழுது எழப் பண்ணின
எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ

அபூர்ணன் என்று மறக்கவோ
அஸந்நிஹிதன் என்று மறக்கவோ
வடிவு அழகு இல்லை என்று மறக்கவோ
மேன்மை இல்லை என்று மறக்கவோ
எனக்கு உபகாரன் அல்லன் என்று மறக்கவோ
எத்தைச் சொல்லி மறப்பேன் -என்கிறார் –

முதல் பத்து விவரணம் முற்றிற்று –

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திரு விருத்தம் – -பாசுரங்கள் -2-10–ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் -வியாக்யானம் –

January 30, 2022

அவதாரிகை –

விலக்ஷண விக்ரஹ யுக்தனாய் –
ஸூலபனாய் –
ஸூரி போக்யனான ஈஸ்வரன் –
திருவடிகளில் இவருக்குப் பிறந்த
ப்ராவண்ய அதிசயத்தாலே வந்த கண் கலகத்தைக் கண்டு
விஸ்மிதரான ஸூஹ்ருத்துக்கள் பாசுரத்தை

ஈஸ்வரனான நாயகனைப் பிரிந்து ஆற்றாளான தலைவியினுடைய
வேறுபாட்டைக் கண்டு
வியந்த தோழி வார்த்தைகளால் அருளிச் செய்கிறார்

இப் பாட்டு கீழ் பாட்டில்
பிறந்தாய் என்றும்
இமையோர் தலைவா என்றும்
சொன்ன பதங்களின் அர்த்தங்களை பிரகாசிக்கிறது –

செழு நீர்த் தடத்துக் கயல் மிளிர்ந்தால் ஒப்ப சேயரிக் கண்
அழுநீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ
முழுநீர் முகில் வண்ணன் கண்ணன் விண்ணாட்டவர் மூதுவராம்
தொழுநீர் இணையடிக்கே அன்பு சூட்டிய சூழ் குழற்கே —-2-

பாசுரம் -2- செழு நீர்த் தடத்துக் கயல் -தலைவியின் வேறுபாடு கண்ட தோழி வியந்து உரைத்தல் -கோவை வாயாள் -4-3-

பதவுரை

முழு நீர் முகில் வண்ணன் கண்ணன்–நிறைந்த நீரை யுடைய காளமேகம் போன்ற நிறத்தை யுடைவனான எம்பெருமானுடைய
மூதுவர் ஆம் விண்நாட்டவர் தொழுநீர் இணை அடிக்கே–யாவர்க்கும் முற்பட்டவரான பரமபதத்து
நித்யஸூரிகள் வணங்குந் தன்மையையுடைய திருவடியிணைகளில்
அன்பு சூட்டிய–தனது அன்பைச் செலுத்தின
சூழ் குழற்கு–அடர்ந்த கூந்தலையுடைய பெண்மகளுக்கு.
செழுநீர் தடத்து–மிக்க நீரையுடைய ஒரு தடாகத்தில்
கயல்–கயல் மீன்
மிளிர்ந்தால் ஒப்ப–பிறழ்ந்தாற் போல
சே அரி கண்–சிவந்த ரேகைளையுடைய கண்கள்
அழுநீர் துளும்ப–(நாயகனுடைய பிரிவை ஆற்றாமையால்) புலம்பின நீர் ததும்ப
அலமருகின்றன–தடுமாறுகின்றன;
வாழி–இந்த அன்பு நிலை என்றைக்கும் நிலைத்து நிற்கவேறும், (அரோ அசை.)

முழுநீர் முகில் வண்ணன்
கடலைக் கழுத்து அளவாகப் பருகின காளமேகம் போன்ற நிறத்தை யுடையவன்

கண்ணன்
அம் முகில் போலே ஆகாச வர்த்தியாய்
எட்டாதே இருக்கை இன்றிக்கே
பூமியிலே கால் தாழ்ந்து ஸூலபனானவனுடைய

மூதுவராம் விண்ணாட்டவர் தொழுநீர் இணையடிக்கே
பூர்வே என்றும்
ப்ரதம ஜா என்றும்
சொல்லுகிறபடி முற்பாடராய்
பரமபதத்துக்கு நிலத்து ஆளிகளான அநந்த கருட விஷ்வக் ஸேனாதிகளான நித்ய ஸூரிகள்
நித்ய அஞ்சலி புடா ஹ்ருஷ்டா நம இத்யேவ வாதிந -என்கிறபடியே
நிரந்தர கைங்கர்யம் பண்ணும் படியான ஸ்வ பாவத்தை யுடைய
பரஸ்பர ஸத்ருசமான திருவடிகளிலே –

அன்பு சூட்டிய சூழ் குழற்கே —
தன்னுடைய ப்ராவண்யத்தை சூட்டின செறிந்த குழலை உடையவளுக்கு

செழு நீர்த் தடத்துக் கயல் மிளிர்ந்தால் ஒப்ப
அழகிய நீரை யுடைத்தான தடாகத்தில் கயலானது இடம் வலம் கொண்டால் போல

சேயரிக் கண் அழுநீர் துளும்ப அலமருகின்றன
சிவந்த அரியை யுடைத்தான கண்கள் ப்ரேமத்தால் அழுத நீர் துளும்ப
ஆற்றாமையால் நின்ற இடத்திலே நில்லாமல் அலமருகின்றன

வாழியரோ
இது தான் தனக்கு தர்ச நீயமாகையாலே
நாயகனும் கண்டு வாழ வேணும் என்று
தோழி மங்களா ஸாஸனம் பண்ணுகிறாள்
அன்றியே
இந்தப் ப்ரேமம் உள்ளதனையும் நடக்க வேணும் என்று அநுசாஸித்தாள் ஆகவுமாம் –

இத்தால்
தடத்து மிளிர்ந்த கயலை நீர் துளும்பின கண்ணுக்கு ஒப்புமை சொல்லுகையாலே
அந் நீரோடு கண்ணுக்கு உண்டான சேர்த்தி தோற்றுதலால் ஞானத்தினுடைய ஊற்றுமை சொல்லிற்று

(மீன் வாசஸ்தானம் செழும் நீர் தடாகம் ஆதாரம்
இவர் ஞானத்துக்கு அடி மயர்வற மதிநலம் அருளின-அவனே ஹேது ஆதாரம் )

சேயரிக் கண் என்று ராகோத்தரமாகச் சொல்லுகையாலே
அந்த ஞானம் பக்தி ரூபா பன்ன ஞானமே தோற்றுகிறது

அழு நீர் துளும்ப அமலருகின்றன -என்கையாலே
அபிநிவேசம் மிகுந்தமை தோற்றுகிறது
(அன்பு ஆர்வம் அபிநிவேசம் -அன்பே தகளி -ஆர்வமே நெய் )

முழு நீர் முகில் வண்ணன் என்று
ப்ரேம விஷயம் பூர்ணமாய் –
தர்ச நீயமாய்
உத்துங்கமாய் இருக்கும் என்றதாயிற்று

கண்ணன் என்று
இவ் விஷயம் இவருக்குக் கை புகுந்தமை தோற்றுகிறது

விண்ணாட்டவர் தொழு நீர் இணை அடிக்கே -என்கையாலே
விலக்ஷண போக்யம் என்னும் இடம் தோற்றிற்று

இணை அடிக்கே அன்பு சூட்டிய -என்கையாலே
அந்த மேகம் இவர் பக்கலிலே கால் விழுந்தமை சொல்லிற்று

அன்பு சூட்டிய என்கையாலே
இத் தலையிலே அன்பு அவன் திருவடிகளுக்கு அலங்காரம் என்று தோற்றிற்று

இணை அடிக்கே அன்பு சூட்டிய சூழ் குழற்கு -என்கையாலே
கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன கழலே (திருவாய் -4-3-6 )என்கிறபடியே
அவன் திருவடிகள் இவர் திருமுடிக்கு அலங்காரம் என்னும் இடம் தோற்றுகிறது

வாழியரோ -என்கையாலே
இப்பிரேமம் ஈஸ்வரனுக்கும் ஆசாஸ்யமாய் இருக்கும் என்னும் இடம் தோற்றிற்று –
(அவாப்த ஸமஸ்த காமன் ஆசைப்படுவதும் நமது பக்தி ஒன்றையே தானே )

இது தோழி வார்த்தை யாகையாலே
இயற்கையிலே புணர்ந்த தலைமகன் பிரிவிலாதல்
அன்றியே தோழியில் கூட்டத்துப் புணர்ந்த தலைமகன் பிரிவிலாதல்
பிரிவாற்றாத தலைவி வேறுபாடு கண்ட தோழி உட் கொண்டு (அனுமானித்து )வியந்து உரைத்தது –

——-

தாத்பர்யம்

சர்வேஸ்வரனுடைய நித்ய விபூதி ஐஸ்வர்யத்தை அனுபவித்து
ஆழ்வார்
அப்போதே அங்கு அடைந்து அனுபவிக்க
கிட்டாமையாலே
அத்யந்தம் ஆர்த்தராய்

தனது ஸ்வ பாவம் மறந்து
தன்னைப் பிராட்டியாகப் பாவித்துக் கொண்டு இருக்க
அங்குள்ள பாகவதர்கள் -இவரை சில பாசுரங்களாலே ஆஸ்வசிப்பிக்க
அப்படி வந்தவர்களே தோழிகள்
அவர்கள் சொல்லும் பாசுரம் -நாயகன் உடன் ஸம்ஸ்லேஷித்து பிரிந்து விரஹ வேதனையில் இருக்கும் தம்மை ஆஸ்வசிப்பிக்க
ஆர்த்தி உடன் தவிக்க -ஆச்சார்யர் நம்மை -சேர்ப்பிப்பார்களே
சீதாப் பிராட்டி திருவடி ஸ்ரீ ராமாயணம் சொல்ல சுற்றி சுற்றிப் பார்த்தால் போல் இவள் கண்கள்

நீர் கொண்ட மேகம் போல் அதி ஸூந்தரமான சர்வேஸ்வரனுடைய வடிவு அழகை ஸ்ரீ வைகுண்டத்தில் நித்ய ஸூரிகள்
எல்லாரும் ஆஸ்ரயித்து அனுபவிக்கிறாப் போலே
இவள் தானும் அனுபவிக்க ஆசைப்பட்டு அது கிடைக்கப் பெறாமல் வியசனமுற்று
தன்னுடைய மத்ஸ்யம் போன்ற கண்களில் நின்றும்
கண்ணீரை தாரை தாரையாகப் பெருகிக் கொண்டு
தன்னுடைய நாயகன் எந்தத் திக்கில் நின்றும் வருவானோ என்று நாலு பக்கங்களிலும் கண்களைச் சுழற்றி
விழித்துப் பார்த்துக் கொண்டு இருக்க
பூர்ண தடாகத்தில் துள்ளுகிற இரண்டு மத்ஸ்யம் போன்ற இவளது கண்கள் அழகை அனுபவிக்க இப்பொழுது
இவளது கணவனுக்கு பிராப்தி இல்லையே
இனி சீக்கிரத்தில் இவள் நாயகனுடன் சேர்ந்து இவ் வவஸ்த்தையைத் தவிர்ந்து ஸூகிக்கக் கடவள்

——–————

அவதாரிகை –

இப்படி பார்ஸ் வஸ்த்ரான ஸூஹ்ருத்துக்களும் கண்டு விஸ்மிதாராம் படி ப்ரேம பரவசரானவர்
இந்தப் பாரவஸ்யத்துக்கு மூலமான பகவத் விஷயத்திலே ப்ராமண புரஸ்சரமாக
(பிரமாணம் வேதம் -பிரமேயம் காட்டும் புள் -வேத மயன் )
நெஞ்சு சென்ற பிரகாரத்தை
பிரிந்து போன தலைமகன் பின் சென்ற நெஞ்சை நோக்கித்
தலைவி உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

குழற் கோவலர் மடப்பாவையும் மண் மகளும் திருவும்
நிழற் போல்வனர் கண்டு நிற்கும் கொல் மீளும் கொல் தண்ணம் துழாய்
அழற்போல் அடும் சக்கரத் தண்ணல் விண்ணோர் தொழக் கடவும்
தழற் போல் சினத்த அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே—3-

பாசுரம் -3-குழல் கோவலர் மடப்பாவையும் -பிரிவாற்றாத தலைவி நெஞ்சு அழிந்து உரைத்தல் -வெள்ளைச் சுரி சங்கு -7-3-

பதவுரை

தண் அம் துழாய்–குளிர்ந்த அழகிய திருத் துழாயை யுடையவனும்
அழல் போல் அடும் சக்ரத்து–(அஸுர ராக்ஷஸர்களை) நெருப்புப் போல் அழிக்கின்ற திருவாழியை யுடையனுமான
அண்ணல்–எம்பெருமான்
விண்ணோர் தொழ கடவும்–மேலுலகத்தவர் வணங்கும்படி ஏறி நடத்துகிற
தழல் போல் சினத்த–பி ள்ளின் பின் போன
(பகைவர் நிறத்தில்) நெருப்புப் போன்ற கடுங்கோபத்தையுடைய அக்கருடாழ்வானது பின்னே சென்ன
தனி நெஞ்சம்–(எனது) தனிப்பட்ட மனமானது
குழல்கோவலர்–புல்லாங்குழலை யுடையரான இடையரது
மடம் பாவையும்–குணவதியான மகளாகிய நப்பின்னைப் பிராட்டியும்
மண் மகளும்–பூமிப்பிராட்டியும்
திருவும்–பெரிய பிராட்டியும்
நிழல் போல்வனர்–(எம்பெருமானுக்கு) நிழல் போலேயிருக்க அவர்களை
கண்டு நிற்கொல்-பார்த்துக் கொண்டு (அவ்விடத்தை விடாதே) நிற்குமோ?
மீளும் கொல்–திரும்பி வருமோ?

குழற் கோவலர் மடப்பாவையும் மண் மகளும் திருவும் நிழற் போல்வனர் கண்டு
குழலை நிரூபகமாக உடையவராகையாலே
அக் குழல் ஓசையாலே அறிவில்லாத பசுக்களையும் வசீகரிக்க வல்லவரான
கோப குலத்திலே பிறக்கையாலே
தன் மொழி அழகாலே வசீகரிக்க வல்லவளுமாய்
மடப்பம் முதலான நாரீ குணங்களை உடையவளுமான நப்பின்னைப் பிராட்டியும்

கந்தவதியான பிருத்விக்கு அபிமாநிநி யாகையாலே
மணத்தை வடிவாக யுடையளான ஸ்ரீ பூமிப் பிராட்டியும்

தவ ஸ்ரியா –ஸ்தோத்ர ரத்னம் –38–என்று
ஸர்வ ப்ரகார ஸம்பத் ரூபையாய் இருக்கிற பெரிய பிராட்டியாரும்

சாயை போலே அனுவர்த்திக்கிற படியைக் கண்டு

நிற்கும் கொல் மீளும் கொல்
இவர்கள் அப்ருதக் ஸ்திதைகள் ஆனால் போலே
நமக்கு அபிமானியான நாயகிக்கும் செறியக் குறை இல்லையே -என்று நிற்குமோ
இவர்களும் அனுவர்த்திக்கும்படியான அவனைக் கிட்டல் அரிது என்று மீளுமோ

தண்ணம் துழாய் அழற்போல் அடும் சக்கரத் தண்ணல்
குளிர்ந்து அழகியதான திருத் துழாயையும்
ஆஸ்ரித விரோதிகளை அக்னி போலே பஸ்ம ஸாத்தாக்கும் திருவாழியையும் யுடையவனாகையாலே
ஸ்வாமி யானவன்

விண்ணோர் தொழக் கடவும் தழற் போல் சினத்த அப்புள்ளின் பின் போன
ப்ரஹ்ம ருத்ராதிகள் சேஷத்வ ப்ரகாசிகையான வ்ருத்தியைப் பண்ண
ஆஸ்ரித ஸம் ரக்ஷணார்த்தமாக
அதி த்வரையுடன் நடத்தப்படுவானாய்

பரிகர பூதனான ஆழ்வானிலும்
பரிகரவானான ஈஸ்வரனிலும்
விரோதி விஷயத்தில் சீற்றம் கால அக்நி போலே இருக்கும் படியான
மஹா ப்ரபாவனாய் இருந்துள்ள
பெரிய திருவடியின் பின்னே எனக்கு முந்துற்றுப் போன

தனி நெஞ்சமே
பின்னையும் விட்டு
அங்கும் முகம் பெறாமல் தனிப்பட்ட நெஞ்சம்
ஸ்வ தந்திரமான நெஞ்சம் என்றுமாம்

முகம் பெறும் அளவும் நிற்குமோ
மீண்டு போருமோ என்றுமாம்

குழல் என்று
இவள் தன் மயிர் முடி ஆகவுமாம் –

இத்தால்
இவ்வாழ்வார் தம் திரு உள்ளம்
வேத மயனான புள்ளின் பின் போனமை சொல்லுகையாலே
பிராமண அநு சாரித்த்வம் சொல்லிற்று

அப்புள் -என்கையாலே
ப்ரமாணத்தினுடைய உத்கர்ஷம் சொல்லிற்று

தழல் போல் சினத்த அப்புள் -என்று விரோதி நிரஸனம் சொல்லுகையாலே
ப்ரமாணத்தினுடைய பாஹ்ய குத்ருஷ்டி நிரசன ஸாமர்த்யம் சொல்லிற்று

கடவும் என்கையாலே
காருணிகோ உததாதி (ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -2-1 )என்கிறபடி
பிராமண ப்ரவ்ருத்தி ஈஸ்வர அதீனம் என்னும் இடம் சொல்லிற்று

விண்ணோர் தொழ -என்கையாலே
விஷ்ணு பக்தி பரரான தேவர்களை ஸர்வேஸ்வர ப்ரவர்த்தித ப்ரமாணமானது
ஸ்வரூபத்தில் நிறுத்தும் என்னும் இடம் சொல்லிற்று

தண்ணம் துழாய் அழற் போல் அடும் சக்கரத் தண்ணல் –என்கையாலே
1-போக்யத்வமும்
2-அநிஷ்ட நிவர்த்தகத்வமும்
3-ஸ்வாமித்வமும்
ஆகிற ஸ்வ பாவ த்ரயமும்
பிராமண சார ப்ரதிபாத்யம் என்று தோற்றிற்று

நிழற் போல்வனர்-என்கையாலே
ஸ்ரீ பூமி நீளை கள் மூவருக்கும் தத் சேஷத்வம் ஸ்வ பாவிகம் என்னும் இடம் சொல்லிற்று

நப்பின்னைப் பிராட்டி முதலாகச் சொல்லுகையாலே
1-நீர்மை முன்னாக
2-அழகாலே ஈடுபட்டு
3-மேன்மை ஈறாக
நெஞ்சு அவகாஹித்த படி சொல்லிற்று

கண்டு நிற்கும் கொல் மீளும் கொல்-என்கையாலே
இப்படி மஹிஷீ
பூஷண
பரிஜ நாதி விசிஷ்டமான விஷயத்தை அவகாஹித்த நெஞ்சு
வ்யவஸ்திதமாய் நிரந்தர அனுபவம் பண்ணுமோ-
விஸ்லேஷிக்குமோ -என்று சொல்லிற்று ஆயிற்று –

இப் பாட்டு
தலைவன் பிரிவாற்றாத தலைவி நெஞ்சு அழித்து உரைத்தது

தழற் போல் சினத்த அப்புள்-என்று
தன்னுடன் கூடி இருக்கிற நாயகனை
போகாசக்தனான ராஜ புத்ரனை வ்ருத்த மந்திரி நியமித்து எடுத்துக் கொண்டு போமா போலே
தன்னைச் சிவந்து பார்த்துக் கொண்டு போனமை தோற்றுகிறது –

அப் புள்ளின் பின் போன-என்று
நெஞ்சு பின் தொடரச் செய்தேயும் அவன் சினம் பொறுக்க மாட்டாமல்
முகம் திரிந்து சொல்லுகிறாள் –

———

தாத்பர்யம்

இப் பாசுரத்தில் சர்வேஸ்வரனை முன்பு ஆழ்வார் மாநசமாக அனுபவித்ததால்
திரு உள்ளம் ஸர்வேஸ்வரன் இடம் ப்ராவண்யம் ஆனதை தானே சொல்கிறாள் தோழியிடம்
ஓ தோழி நாயகனைப் பிரிந்த இந்த தசையில் அவன் சாத்திக் களைந்த குளிர்ந்த அழகிய திருத்துழாயும்
அவன் திருக்கையிலே ஆபரணமாக ஸ்ரீ ஸுதர்சன ஆழ்வாரும் -அனுகூலருக்கு ஆயுதம் இல்லை
என் மேல் தீ வீசி -என்னை மிகவும் உபத்திரியா நின்றன
இவ் வஸ்தையிலும் கூட சர்வேஸ்வரன் திருத்துழாய் அணிந்து -திருக்கையும் திருவாழியுமான
சேர்த்தி உடன் சேவை சாதிக்காமல்
நித்ய ஸூரிகள் தன்னை ஆஸ்ரயிப்பித்துக் கொண்டு -விண்ணோர் தொழக் கடவ -(இது தான் அவனுக்கு வேறே முக்கிய வேலை போல் )
தன்னிடத்தில் பரிவால் இலை அசைந்தாலும் விரோதிகளோ என்று -அஸ்தானே பயசங்கை -பண்ணி –
பயந்து சீறி அருளும் திருவடியை வாஹனமாகக் கொண்டு
நடத்தி அருளும் போது என் நெஞ்சு என்னையும் விட்டு விட்டு அந்த திருவடி பின்னே தனியாக போனதே —
(கருடவாஹனான அவன் பின்னே போனது என்னாமல் அப்புள்ளின் பின் போனதே என்பதால்
ததீய சேஷத்வம் அறிந்து சென்றமை தோற்றுமே )
அங்கு போன பின்பு நிறைந்த மயிர் முடி யுடைய நப்பின்னைப் பிராட்டியும் -ஸ்ரீ பூமிப் பிராட்டியும் பெரிய பிராட்டியாரும்
இவர்கள் ஸர்வேஸ்வரனை அனுவர்த்தித்து ஆஸ்ரிதர் குற்றங்களை பொறுப்பிக்க-
தலையெடுக்கும் ஸுலப்யம் கண்டு அங்கே நிற்குமா –
அல்லது ஸ்ரீ பூமி நீலா தேவிமார் ஸேவ்யனான அவன் மேன்மையைக் கண்டு அங்கு தரித்து நிற்க மாட்டாமல்
திரும்ப வருமோ சொல் -தோழி என்று கீழே விளித்து இங்கு சொல் என்று நிகமிக்கிறாள் –

———

ப்ராப்ய விஷயத்திலே பிராமண அதீனமாக நெஞ்சு பற்றி
அத்தால்
ப்ராப்தி த்வரா அதிசயத்தாலே
ப்ராப்ய லாபத்து அளவும் பதார்த்தாந்தர ஸந்நிதியும்
அஸஹ்யம் என்னும் இடத்தை
வாடைக்கு ஆற்றாளாய்த்
தலைமகள் வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –

தனி நெஞ்சம் முன்னவர் புள்ளே கவர்ந்தது தண்ணம் துழாய்க்கு
இனி நெஞ்சம் இங்குக் கவர்வது யாமிலம் நீ நடுவே
முனி வஞ்சப் பேய்ச்சி முலை சுவைத்தான் முடி சூடு துழாய்ப்
பனி நஞ்ச மாருதமே எம்மதாவி பனிப்பியல்வே —-4-

பாசுரம் -4-தனி நெஞ்சம் முன் அவர் -தலைவனைப் பிரிந்த தலைவி வாடைக்கு ஆற்றாது வருந்தி கூறல் –ஓடும் புள்ளேறி -1-8-

பதவுரை

தனி நெஞ்சம்–(என்னோடு) உறவற்று நீங்கிய (என்) மனம் முழுவதையும்
முன்–முன்னமே
அவர் புள்ளே–அப்பெருமானுடைய கருடப் பறவையே
கவர்ந்தது–(பிறர்க்கு மிச்சமில்லாதபடி) கவர்ந்து கொண்டு போயிற்று.
(ஆதலால்,)
தண் அம் துழாய்க்கு–(அப்பெருமானுடைய) குளிர்ந்த அழகிய திருக் குழாய்க்கு
கவர்வது–கவர்ந்து கொண்டு போவதற்கு உரியதான
நெஞ்சம்–வேறொரு நெஞ்சை
இனி இங்கு யாம் இலம்–இனி இவ்விடத்தில் யாம் உடையோ மல்லோர்,
(அப்படியிருக்க.)
முனி–கோவிக்குத் தன்மையுள்ள
வஞ்சம் பேய்ச்சி–வஞ்சனையையுடைய பேய் மகளான பூதனையினுடைய
முலை–(விஷந்தடவின) முலையை
சுவைத்தான்–(பசையற) உருசி பார்த்து உண்ட கண்ணபிரானுடைய
முடிசூடும் துழாய்–திருமுடியில் சூடப்பட்ட திருத்துழாயினது
பனி நஞ்சம் மருதமே–குளிச்சியை யுடைய விஷம் போன்ற காற்றே!
நீ நடுவே–நீ இடையிலே (புகுந்து)
எம்மது ஆவி பனிப்பு–(ஏற்கனவே நோவு பட்டிருக்கிற) எம்முடைய உயிரை மேலும் நடுங்கச் செய்வது
இயல்பே–(உனக்குத் தக்க) இயற்கையோ? (தகாது.)

தனி நெஞ்சம்
என்னோடு உறவற்று நீங்கிய நெஞ்சத்தை

முன்னவர் புள்ளே கவர்ந்தது
முன்பு அவரோட்டை சம்பந்தத்தால் உண்டான
ராஜ குலத்தாலே
பெரிய திருவடியே அபஹரித்தான்

நெஞ்சம் புள்ளே கவர்ந்தது
பருந்து இறாஞ்சிக் கொண்டது

தண்ணம் துழாய்க்கு இனி நெஞ்சம் இங்குக் கவர்வது யாமிலம்
குளிர்ந்து அழகிய திருத் துழாய்க்கு இனி இங்குக் கவருகைக்கு நாம் நெஞ்சுடையோம் அல்லோம்

நெஞ்சு இரண்டு உடையார்க்கு இறே இழக்க வேண்டுவது
பிரிந்தாரை ஈடுபடுத்துகைக்கு அவனோடு சம்பந்தமுடையாரில்
திர்யக் ஸ்தாவர விபாகம் இல்லையாய் இருந்தது இறே –

நீ நடுவே
(அலைந்து வீசுவதே ஸ்வ பாவமான காற்றே )
அத் தலையில் சம்பந்தம் அடியாக எனக்கும் அவற்றுக்கும் பாத்ய பாதக பாவம் நடக்க ப்ராப்தம்
நீ ஏதுறவாக நலிகிறாய் என்று கருத்து
(பிடித்தாரைப் பிடித்தார் அன்றோ நான் என்னுமாம் காற்று )

முனி வஞ்சப் பேய்ச்சி முலை சுவைத்தான் முடி சூடு துழாய்ப் பனி நஞ்ச மாருதமே
முனிந்து வஞ்சகத்தை உடையளான பேய் மகளுடைய முலையைப் பசையறச் சுவைத்த
(விஷம் கலந்து ரஸ்யம் சுவை -பராசரர் விஷ்ணு புராணத்தில் )
கிருஷ்ணனுடைய திரு அபிஷேகத்திலே சாத்தின திருத்துழாயின் குளிர்ந்த
மது பலத்தாலே நஞ்சூட்டியது போல் இருக்கிற காற்றே
அத்தலையிலே சம்பந்தம் தோற்றத் திருத்துழாயின் குளிர்த்தியையும்
கூட்டிக் கொண்டு வந்தாயோ

முனி வஞ்சப் பேய் முலை சுவைத்தான்
வெறுத்து வஞ்சித்தாரை நலிகை அன்றிக்கே
உகந்து செவ்வை யுடையாரையும் நலிவான் ஒருவன் இறே
(ஆழ்வார் -உகந்து -செவ்வாய் நேர்மை அன்றோ )

பேயினார் ஆர் உயிர் உண்டிடும் பிள்ளை நம் பெண் உயிர்க்கு இரங்குமோ (பெரிய திருமொழி -8-5-3 ) என்று
பேய் என்று பாராதே பெண்ணாக அமையும் இறே பிணம் ஆக்குகைக்கு

அவள் பாடு முலை நலம் கொண்டு காணும் முடியச் செய்தது

முனி நஞ்சப் பேய்ச்சி -என்றும் பாட பேதம்

பனி நஞ்ச மாருதமே
திருத் துழாயிலே பனி நீரிலே தோய்ந்து நைந்த காற்றே என்றுமாம்

எம்ம தாவி பனிப்பியல்வே
தருகைக்கு நெஞ்சு இல்லாத எங்களுடைய பிராணனை நடுங்கப் பண்ணுகை ப்ராப்தமோ
அவர் பாடும் போகை அஞ்சுமவை இறே –
(இயல்பு அல்ல ஈற்று ஏகாரம் )

இத்தால்
இவர் திரு உள்ளத்துக்குத் தனிமை யாவது
மதாந்தரங்களை அவலம்பியாமல் ஸ்வரூபேண அவஸ்திதமாகை
(சாக்கியம் கற்றோம் சமணம் கற்றோம் போல்வர் அல்லரே இவர் )

முன் என்றது
பிரதமத்திலே சித்தாந்த அவகாஹி யாகை

அவர் புள்ளே என்றது
வேதைஸ் ச சர்வைர் அஹமேவ வேத்ய –15-15-என்று
ப்ரமேயத்தோடு ப்ரமாணத்துக்கு உண்டான அவிநா பாவம்
(பிரியாமை -அப்ருதக் ஸித்தம் -அவரே வேதம் -அவர் வேதமே )

புள் -என்றது
ப்ருஹத் ரதந்தரே பஷவ் -யஜுர் -4-1-42-என்று முதலாக
ஸூ பர்ணோஸி கருத்மான் -யஜுர் 4-1-42- என்று
(இரண்டு சாமம் இரண்டு இறகுகள் )
வேதத்தினுடைய கருடாத்மகதை-
புள்ளே என்று உபபத்தி வேண்டாத நைர பேஷ்யம்

(உப மானம் உபமேயம் இரண்டும் சொல்ல வேண்டாமே
தாவி தடம் கொண்ட தாமரையே -முற்று உவமை போல்
வேதமே பெரிய திருவடி வடிவம் )

கவர்ந்தது என்று
வலிய மீட்க ஒண்ணாத படி நெஞ்சு வசீக்ருதமாகை

தண்ணம் துழாய்க்கு இனி நெஞ்சம் இங்குக் கவர்வது யாமிலம் -என்று
இப்படி ஸ்ருதி பிராமண வஸீக்ருதமான நெஞ்சில்
அர்த்த ஸாமர்த்ய ரூபமான போக்யாதிகளாலே
கர்த்தவ்ய அம்சம் இல்லை என்று கருத்து

(அங்கியே கைப்பட்டதால் அங்கங்கள் வேண்டாமே
மேலே அறிந்து கொள்ள வேண்டிய அம்சம் இல்லையே தவிர
ராமாயனாதிகள் த்வரையை மூட்டி வளர்க்க வேண்டுமே )

இனி கவர்வது யாமிலம் -என்று
ப்ரதமத்திலே சரம ஞானம் பிறந்தவர்களுக்குப் பின்பு
ஞாதவ்ய அம்சம் இல்லை என்று கருத்து

நீ நடுவே என்று
ஞாதவ்ய அம்சம் இல்லையே யாகிலும் ஸ்மாரகம் த்வரா ஜனகம் என்றதாயிற்று –

முனி வஞ்சகம் என்று தொடங்கி விரோதி நிரசன சீலனானவனுடைய
சேஷித்வ போக்யத்வ ஸூசகமான திருத்துழாயின் சைத்யத்தோடே
ஸம் ஸர்க்கத்தை யுடைத்தான மாருதம் என்கையாலே
ரக்ஷகத்வ
சேஷித்வ
போக்யத்வங்கள் இவர்க்குக் காற்று வளத்தில் தோற்றின படி

(பிறக்கும் போதே சட கோபித்து முனிந்து –
காற்றிலே அனைத்தையும் அறிந்தவர் அன்றோ
முடி -சேஷித்வம்
முலை சுவைத்தான் முடி -ரக்ஷகத்வம்
திருத்துழாய் போக்யத்வம் )

முனிந்து வஞ்சனை யுடையளான பேய்ச்சி முலையைச் சுவைத்தான் -என்கையாலே
அநர்த்த காரிணியாய் இருக்கச் செய்தே
ஸ்வ போக்ய புத்தி ஜனனியான ப்ரக்ருதியைப்
பசை அறுக்கும் என்னும் இடம் தோற்றிற்று

முடி சூடு துழாய் என்கையாலே
சேஷித்வமானது போக்யத்வ விசிஷ்டம் என்னும் இடம் தோற்றிற்று

பனி நஞ்சம் என்று திருத்துழாயின் குளிர்த்தியிலே நைந்தது என்ற பொருளாய்
தத் ஸம் சர்க்கம் ஆரேனையுமாகிலும் நைவிக்கும் என்றதாகவுமாம் –

மாருதமே எம்மதாவி பனிப்பியல்வே-என்கையாலே
ஸ்மாரகமாய் த்வரையை ஜெனிப்பித்தாலும்
ப்ராப்தி தத் அதீனம் ஆகையாலே
அத்தலையில் த்வரையே வேண்டும் என்று கருத்து –

(பேற்றுக்கு உபாயம் அவன் நினைவே -உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -)

———

தாத்பர்யம்

இப்பாசுரத்தில் சர்வேஸ்வரனை ஆழ்வார் முன்பு மாநசமாக அனுபவித்ததால்
அவனோடே சம்பந்தித்த பதார்த்தங்கள் இப்போது ஆழ்வாருக்கு ஸ்ம்ருதி விஷயமாக
அலாபத்தால் பாதகமான படியை
நாயகனைப் பிரிந்த நாயகியை வாடைக் காற்றுக்கு ஆற்றாதவளாய் சொல்லும் பாசுரத்தால்
அருளிச் செய்கிறார்

விஷத்தை கொண்டு வீசுவது போல் எனக்கு அத்யந்த பாதகமாய் குளிர்ந்து வீசுகிற ஓ மாருதமே
சர்வேஸ்வரன் பெரிய திருவடியை நடத்திக்கொண்டு வர சேவித்து
எனக்கு இருந்த ஒரு மனஸும் முன்பே போனது
இனி மேல் பட கொண்டு அவன் சாத்திக் களைந்த திருத்துழாய்க்கு கொண்டு போகைக்கு வேறே
என்னிடம் வேறே மனஸ் ஸூ இல்லை
இப்படி மனசைப் பறி கொடுத்து அவஸ்தை படும் சமயத்தில் நீயும் வந்து
தன்னை முடிக்க நினைத்து சீறிக்கொண்டு கபடத்தால் -தாய் வேஷம் கொண்டு வந்த பூதனையை-
நமக்கு உபகரிக்கைக்காக முடித்த சர்வேஸ்வரன் திருமுடியில் சாத்தின பரிமளம் கொண்டு
நலிய வந்த உனக்கு இது தர்மம் அன்று காண்
தத்துவம் அன்று தகவும் அன்று
ஆகையால் நீ என்னை பாதியாது ஒழிய வேணும் -என்கிறாள் –

————-

அவதாரிகை
இப்படி ப்ராப்ய த்வரையை யுடைய இவருக்கு
ஸ்மாரகமான லௌகிக பதார்த்த ஸந்நிதியும்
சைத்தில்ய ஜனகமானபடி
பார்ஸ்வஸ்தரான ஸூஹ்ருத்துகளுக்கு ப்ரஸித்தமான பிரகாரத்தை
வாடைக்கு ஈடுபட்டு மாமை இழந்த தலை மகளைக் கண்டு
தோழி இரங்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

பனிப்பியல்வாக உடைய தண் வாடை இக்காலம் இவ் ஊர்ப்
பனிப்பியல்வெல்லாம் தவிர்ந்து எரி வீசும் அம்தண் அம் துழாய்
பனிப்புயல் சோரும் தடங்கண்ணி மாமைத் திறத்துக் கொலாம்
பனிப்புயல் வண்ணன் செங்கோல் ஒருநான்று தடாவியதே —-5-

பாசுரம் -5-பனிப்பு இயல்வாக உடைய -வாடைக்கு வருந்தி மாமை இழந்த தலை மகளைக் கண்டு தோழி இரங்குதல் –மாயா வாமனனே -7-8-

பதவுரை

பனிப்பு இயல்பு ஆக உடைய–குளிரச் செய்வதையே இயற்கை தொழிலாக வுடைய
தண் வாடை–குளிர்ந்த காற்றானது
இக்காலம்–இப்போது மாத்திரம்
இவ் ஊர்–இவ்விடத்தில் மாத்திரம்
பனிப்பு இயல்பு எல்லாம் தவிர்த்து–குளிரச் செய்வதாகிய (தன்னுடைய) இயற்கையை முழுதும் விட்டு
அம் தண்ணம் துழாய்–அழகிய குளிர்ந்த (அவனது, திருத்துழாயின் விஷயமாக
(ஆசைப்பட்டு)
பனி புயல் சோரும்–மழை துளித்தலை யுடைய மேகம் போல நீர் சொரிகிற
எரி வீசும்–வெப்பத்தை வீசுகின்றது;
(இவ்விதமாக)
பனி புயல் வண்ணன்–குளிர்ந்த காளமேகம் போன்ற தன்மையையுடைய எம்பெருமானது
செங்கோல்–(என்றும் மாறாத) கட்டளை
ஒரு நான்று தடாவியது–இவ்வொரு காலத்தில் கோணலாய்ப் போனது,
தட கண்ணி–பெரிய கண்களையுடைய இவளது
மாமை திறத்து கொல்லும்–மேனி நிறத்தை யழிப்பதற்கோ போலும்

பனிப்பியல்வாக உடைய தண் வாடை
குளிரப் பண்ணுகையே நடப்பாக உடைத்தாகையாலே
குளிர்த்தியே குணமாக யுடைய வாடை

இக் காலம் இவ் ஊர்
இக் காலத்திலும் இவ் வூரிலும்
காலாந்தரத்திலும் இல்லை
தேசாந்தரத்திலும் இல்லை
முற் காலம் தானும் காணாமையாலே இக்காலம் என்கிறாள்

இவளுக்கு என்னாதே
இவ்வூருக்கு என்றது
இவள் ஆற்றாமையைக் கண்ட ஊரார் தங்களுக்கும் வாடை தபிக்கையாலே

பனிப்பியல்வெல்லாம் தவிர்ந்து
பனிப்பிக்கிற இயல்பை ஏக தேசமும் சேஷியாத படி விட்டு

எரி வீசும்
வாயோர் அக்னி (தைத்ரியம் -1-2-5 ) என்று
தன் கார்யமான அக்னியின் குணத்தைப் பஜியா நின்றது

வீசும்
ஒளிக்க வேண்டாத படி போன இடம் எல்லாம் தூவா நின்றது

அம் தண் அம் துழாய்
அழகிய குளிர்ந்த திருத்துழாய் இடத்து (அதன் பொருட்டு )
இந்த நெருப்பை ஆற்றலாவது
அவன் வளையத்து வைத்த குளிர்ந்த திருத்துழாயின் நிழலில் என்கை –
(இந்த இடம் ஒன்றே வாடைக் காட்டால் தபிக்க ஒண்ணாத ஸ்தலம் ஆயிற்று )

பனிப் புயல் சோரும் தடங்கண்ணி
துளிக்கிற புயல் போலே நீர் சொரிகிற பெரிய கண்ணை உடையவள்
ஒதுங்க நிழல் இல்லாமையாலே
உருகி விழும்படியான கண் கலக்கத்தை உடையவள்
(ஸ்வரூப ஞானத்தை விரக அக்னி உருக்கிற்றே )

மாமைத் திறத்துக் கொலாம்
இவள் நிறம் இடையாட்டத்துக்கு ஆக வேணும் இறே
நெஞ்சு பெரிய திருவடி கொண்டு போனானாகில்
நிறத்தைத் தான் அழிப்பதாக
வாடையை வேறுபடுத்தி வரக் காட்டினான் ஆகக் கூடும்

பனிப் புயல் வண்ணன்
குளிர்ந்த வர்ஷுக வலாஹகம் போலே இருக்கிற வடிவை யுடையவன்
ஸ்ரமஹரமுமாய் உபகாரகமுமான மேக ஸ்வபாவன் என்னவுமாம்

செங்கோல்
வடிவு போலே ஸ்வபாவ பேதம் பிறவாத ஆஜ்ஜை

ஒரு நான்று தடாவியதே
ஒரு கால விசேஷத்திலே செவ்வை குலைந்து வளைந்தது

பூதம் பூதாந்தர குணத்தை பஜிக்கை யாகிற இது
ஈஸ்வர ஆஜ்ஜைக்கு செவ்வைக் கேடு என்று நினைக்கிறாள்
செவ்வையே ஸ்வ பாவமான இது
இவள் நிறத்துக்காக ஒரு கால விசேஷத்திலே குலைந்தது என்கை –

இத்தால்
பனிப்பியல்வாக உடைய தண் வாடை -என்கையாலே
தன் ஸ்வரூபத்துக்கு ஈடாக லோகத்துக்கு கார்யகரமாயிற்று என்றதாயிற்று

இக் காலம் இவ் ஊர்ப் பனிப்பியல்வெல்லாம் தவிர்ந்து எரி வீசும் -என்கையாலே
பிராப்தி த்வரை பிறந்த இன்று ஸ்மாரகமாய்க் கொண்டு
அலாப நிபந்தன பரிதாபத்தை
இவரோடு
இவரைப் பற்றினாரோடு வாசி அற விளைக்கையாலே
ஸ்வ பாவ பேதம் பிறந்ததாக நினைக்கை

எரி வீசும் -என்கையாலே
லௌகிக பதார்த்த ஸந்நிதி ஹுதவஹ ஜ்வாலா பஞ்ஜராந்த்ர வ்யவஸ்தித்தி போலே இருக்கை
(நெருப்புக் கூண்டு தேவலை போல் இருக்குமே
பகவத் சிந்தை இல்லாதவர் கூட்டம் மிகவும் த்யாஜ்யம் )

அம் தண் அம் துழாய் பனிப்புயல் சோரும் தடங்கண்ணி -என்கையாலே
போக்ய விஷய வை லக்ஷண்யம் சைத்தில்ய ஜனகமாம் படி சொல்லிற்று

பனிப் புயல் சோரும் தடங்கண்ணி -என்கையாலே
மதி எல்லாம் உள் கலங்கி (திருவாய் 1-4-3 )-என்கிறபடி
நேர் அறிவு கலங்கின படி

மாமைத் திறத்துக் கொலாம்-என்கையாலே
ஸ்வ அசாதாரண ஆகாரத்தையும் சிதிலமாக்கக் கூடுமாய் இருந்ததே இறே என்றபடி

பனிப்புயல் வண்ணன் செங்கோல் ஒருநான்று தடாவியதே-என்கையாலே
ஆர்த்தி அதிசயத்தாலே அப்ரகம்ப்யாமான சங்கல்பத்துக்கும்
ஆர்ஜவ சைத்தில்யத்தைப் சங்கிப்பிக்கும் என்கை –

பதார்த்தா ந்தரத்துக்கு ஸ்வபாவ பேத சங்கையைப் பிறப்பித்தவோ பாதி
அசாதாரண ரூபத்துக்கு சைத்தில்ய சங்கையைப் பிறப்பிக்கும் இறே
ஆர்த்தியினுடைய அதிசயம் –

தாத்பர்யம்
இப் பாசுரத்தில் ஆழ்வார்
இவ் விபூதியில் உள்ள மாருதம் முதலான பதார்த்தங்கள் –
சர்வேஸ்வரனால் ஸ்ருஷ்டிக்கப்பட்டவையே இவை என்றும் –
அவனுக்கே சேஷ பூதம் என்றும் அனுசந்தித்து அவ்வழியாக-ததீயத்வ ஆகாரம் என்று அறிந்து –
சர்வேஸ்வரன் ஸ்ம்ருதி விஷயமாக
பிராப்தி த்வரையால் அலாபத்தால் விஷண்ணராய் இருக்க

அப்பொழுது பக்கத்தில் உள்ள பாகவதர்கள் சொல்லும் பாசுரத்தை
ஒரு விரஹிணி மந்த மாருதத்தால் பாதிக்கப் பட்டுக் கிடக்க அவள் நிலையை
தோழி உரைக்கும் பாசுரத்தால் அருளிச் செய்கிறார்

அருகே உள்ளார் இப் பெண் நாயகனான சர்வேஸ்வரன் சூடிய திருத் துழாயில் ஆசைப்பட்டு –
பெற வேண்டும் -என்று எண்ணி -கிடைக்காமையால் பெரு மழை போல்
தன்னுடைய விசாலமான நேத்ரங்களிலே தாரை தாரையாக கண்ணீர் பெருக்க
ரக்ஷகனான சர்வேஸ்வரன்
தனது ஸ்வரூபம் மாறாடிக் கொண்டு -கருணை ரக்ஷகத்வம் இல்லாமல் ஆகவே
தொண்டனான வாயுவும் இவளது சவுந்தர்யம் அழிக்கக் கோலி –
தனது குளிர்ந்த -சீத ஸ்வபாவம் மாறாடிக் கொண்டு உஷ்ண ஸ்வபாவம் அடைந்து -நெருப்பாய்
இப்பொழுது இவ்வூரில் இவள் மேல் அழல் வீசத் தொடங்கிற்று
வாயுவுக்கு வெப்பமும் குளிரும் இருக்கக் கூடாது என்ற சர்வேஸ்வரன் ஆஜ்ஜை கூட
இப்போது இவருக்காக பங்கமாயிற்றே -என்று இன்னாப்பு –

———————–

அவதாரிகை
இப்படி இவருக்கு ப்ரஸித்தமாம் படி முன்பு பிறந்த பகவத் ப்ராவண்யத்தைக் கண்ட
அன்புடையரான பாகவதர் உகந்து சொன்ன பாசுரத்தை
தலைமகள் எழில் கொண்டு வியந்த தலைமகன் பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

தடாவிய வம்பும் முரிந்த சிலைகளும் போக விட்டு
கடாயின கொண்டொல்கும் வல்லி ஈதேனும் அசுரர் மங்கக்
கடாவிய வேகப் பறவையின் பாகன் மதன செங்கோல்
நடாவிய கூற்றம் கண்டீர் உயிர் காமின்கள் ஞாலத்துள்ளே–6-

பாசுரம் -6-தடாவிய அம்பும் முறிந்த சிலைகளும் -தலைவியின் அழகை
தலைவன் வியந்து பேசுதல் –உண்ணும் சோறு -6-7-

பதவுரை

இது–இவ்வடிவானது
தடாவிய–வளைந்த
அம்பும்–பாணங்களையும்
முரிந்த–ஒடிந்த
சிலைகளும்–விற்களையும்
போக விட்டு–கொள்ளாமல் ஒழித்து
கடாயின கொண்டு–உபயோகிக்கத் தக்க அம்புகளையும் விற்களையும் ஏந்தி துவண்டு நடக்கிற
வல்லி எனும்–ஒரு பூங்கொடி போன்ற பெண் வடிவமாயிருந்தாயினும்
அசுரர் மங்க–அஸுரர்கள் அழியும்படி
கடாவிய–ஏறி நடத்தப்படுகின்ற
வேகம்–விரைவையுடைய
பறவை–பக்ஷிராஜனாகிய வாஹனத்துக்கு
இன் பாகன்–இனிய பாகனாகிய எம்பெருமானது (ஸம்பந்தம் பெற்ற)
மதனன்–மன்மதனுடைய
செங்கோல்–ஆளுகையை
நடாவிய–நடத்துகிற
கூற்றம்–யமனாயிருக்கும்;
ஞாலத் துள்ளே–இந்நில வுலகத்திலே
கண்டீர்–(இவ்வழகிய வடிவத்தைப்) பார்த்தவர்களே!
உயிர் காமின்கள்–(உங்களது) உயிரைக் காத்துக் கொள்ளுங்கள்

தடாவிய வம்பும் முரிந்த சிலைகளும் போக விட்டு
வளைந்த அம்பையும்
முரி போன சிலைகளையும் தவிர்ந்து

கடாயின கொண்டொல்கும்
தக்க அம்பும் சிலைகளும் கொண்டு ஸஞ்சரிக்கும்

வல்லி ஈதேனும்
இது ஒரு கொடி என்று சொல்லும்படி
ஸ்த்ரீ ரூபமாக இருந்ததே யாகிலும்
காமன் அம்பும் சிலையும் வளைந்து முரிந்து இருக்கும் என்று நினைத்து
அத்தைக் கழித்துத்
தன் கண்ணும் புருவமுமே தகுதியான அம்பும் சிலையுமாகக் கொண்டு உலாவும் என்று கருத்து –

அம்பும் -என்றது
ஜாதி ஏக வசனம்

சிலைகள் என்று
முரிய முரிய பொகட்டு எடுத்தாலும் பசையில்லை என்றபடி

இவ்வாறு தக்கன கொண்டு உலாவுதலால்
அசுரர் மங்கக் கடாவிய வேகப் பறவையின் பாகன்
அசுரர் மங்கும்படி நடத்தப்பட்ட வேகத்தை யுடைய பெரிய திருவடிக்கு இனிய பாகனானவனுடைய
பறைவையினுடைய பாகன் என்னவுமாம்

பொரு சிறைப்புள் உகந்து ஏறி –சேஷிக்கும் சேஷபூதனுக்கும் -இருவருக்கும் இனிமை உண்டே

மதன செங்கோல் நடாவிய கூற்றம்
மதனன் ஆஜ்ஜையை நடத்துவதால் எதிர்ப்பட்டாரை அழியச் செய்வதொரு மிருத்யுவாய் இருக்கும்

கண்டீர் உயிர் காமின்கள்
கண்டவர்கள் ப்ராணனைத் தன் வசம் ஆக்குகையாலே
உங்கள் உயிரைக் காத்துக் கொள்ளுங்கோள்

ஞாலத்துள்ளே–
இந்த லோகத்திலே அந்த மிருத்யுவைத் தப்பினாலும் இந்த மிருத்யுவைத் தப்ப ஒண்ணாது –

இத்தால்
ஆழ்வாருடைய ஞானாதி வை லக்ஷண்யம் கண்ட அன்புடைய பாகவதர்
வல்லி யீதேனும்-என்று
உபக்ந அபேஷமான கொடி போல் பாரதந்தர்யம் பிரகாசித்து இருக்கிலும்

தடாவிய வம்பும் முரிந்த சிலைகளும் போக விட்டு
அம்பு என்று
லஷ்ய பேதி யாகையாலே
விஷய க்ராஹி ஞானத்தைக் காட்டுகிறது

சிலை என்று
ப்ரேரகமாகையாலே
க்ரஹண ஸாதனங்களைக் காட்டுகிறது –

இந்த ஞானத்துக்குத் தடாவுதலாவது
அஞ்ஞானம் மத் அந்யத் யுக்தம் -(ஸ்ரீ விஷ்ணு புராணம்-6-5-87 )என்கிறபடியே
அப்ராப்த விஷய அவகாஹநம்

சிலைக்கு முரிவாவது
தத் தத் ஞான ஸாதனங்கள் ப்ரபல ப்ரமாணங்களாலே பக்நமாகை

(ப்ரத்யக்ஷம் அனுமானம் இவற்றால் பக்நமாகாமல்
ஸாஸ்த்ர ஞானம் கொண்டே -ஸாஸ்த்ர ஜன்ய ஞானம் உடையவர்
மதி நலம் அருளப்பெற்றவர் )

ஏவம் பூத ஞான தத் ஸாதனங்களை விட்டு
கடாயின -கொண்டொல்கும்
அநுரூப ஞான தத் ஸாதனங்களைக் கொண்டு வர்த்திக்கும்

அதாவது
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு (முதல் -67 )என்றும்
உளன் சுடர் மிகு ஸ்ருதியுள் (திருவாய் -1-1-7 )என்றும் இருக்கை –

இப்படி விலக்ஷண ஞானத்தை யுடைய வ்யக்தி யாதலால்
அசுரர் மங்கக் கடாவிய வேகப் பறவையின் பாகன்
ஆஸூர ப்ரக்ருதிகளான பாஹ்ய குத்ருஷ்டிகள் மங்கும் படி ப்ரவர்த்திக்கப் பட்ட
நித்யத்வ
அபவ்ருஷேயத்வ
ரூபமான பக்ஷ த்வய அவலம்பனத்தாலே
அப்ரதிஹத ப்ராமாண்ய கதியான
ஸ்ருதி மயமான பெரிய திருவடிக்கு
ஸ்வ ரஸ நாயகனான ஸர்வேஸ்வரன் விஷயத்திலே
மதன செங்கோல் நடாவிய
நிரந்தர காமுகதையை நிர்வஹிப்பதான

கூற்றம்
பூர்வ அவஸ்தையை அழித்து விடுகையாலே
ஸம்ஸாரம் மிருத்யுவாய் இருக்கும்

கண்டீர் உயிர் காமின்கள்
கண்டவர்களுக்குத் தம்முயிர் தமக்கு உரித்தாகாமையாலே காத்துக் கொள்ளுங்கோள்

இவ்விடத்தில் உயிர் காத்தலாவது
தமக்கு உரித்தாக்குகை யாதலால் கண்டவர்களில் ஸ்வ தந்த்ரர் ஆவார் இல்லை என்று கருத்து
ஸ்வா தந்தர்யம் இறே ஸம்ஸார மூலம்

ஞாலத்துள்ளே–
ஞாலத்துள்ளே ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே (திருவாய் -6-7-2 )
ஆக்கும் விஷயம் ஆகையாலே தப்ப அரிது என்றதாயிற்று

பறவையின் பாகன் ஞாலத்துள்ளே மதன செங்கோல் நடாவிய கூற்றம் –
என்று அந்வயிக்கவுமாம் –

———

தாத்பர்யம்

இப் பாசுரத்தில் ஆழ்வார்
பகவத் ப்ராவண்யத்தால் -யோக நிலையில் -நேத்ரங்களை மூடிக்கொண்டு -தத் ஏக த்யான பரராய் இருக்க
அப்போது தம்மைக் கண்ட பாகவதர்கள் சொன்ன பாசுரத்தை
நாயகியின் கடாக்ஷத்தில் ஆழ்ந்த மூழ்கிய நாயகன் பாசுரத்தால் அருளிச் செய்கிறார்
இந்த நாயகி எப்போதும் வளைந்து இருக்கும் தனுஸூ போல் தன்னுடைய வட்டமான புருவங்களை நெரித்து
மேல் விழுந்து பாணம் போலே அதி சூஷ்மமான விசாலமான கண்களைத் திறந்து
பார்க்கத் தகுந்த விஷயம் ஒருவரும் இல்லை
அவனுக்கு ஆழ்வார் ஒருவர் கிடைத்தார் -எங்கும் பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணன் –
இவருக்கு 16 வருஷங்கள் கழித்து தானே மதுரகவி ஆழ்வார் கிட்டினார்
பார்வையை வெளியிடாமல் தன்னிடம் அடக்கிக் கொண்டு
கொடி போல் அதி துர்பலையாய் இருந்தாலும்
உபாயமாக அனுஷ்ட்டிக்க பலம் இல்லையே இவளுக்கு
ஆனால் கூற்றம் -தீமைகளைப் போக்க வல்லவள்
சத்ருக்களை மாளும் படி அதி வேகம் உடைய பெரிய திருவடியை வாஹனமாக யுடைய சர்வேஸ்வரனுக்கு
புத்திரனான மன்மதனுடைய ஆஜ்ஜையை
அப்ரதிஹதமாய் நடத்தக்கடவ மிருத்யுவாக எண்ணுங்கோள்
பூ லோகத்தில் நீங்கள் சில காலம் பிழைத்து
உங்கள் பிராணனை இவள் கையில் அகப்படாத படி காத்துக் கொள்ளுங்கோள்

——

அவதாரிகை

ஏவம் வித ப்ராவண்ய அநு ரூபமான போக ஸித்திக்கு ப்ராப்த காலமாய் இருக்க
(கீழ் ஆறாம் பாட்டில் விளக்கிய அவள் ப்ராவண்யம்
அதுக்கு ஏற்ற காலமும் வர )
விளம்பிக்கையாலே கண் கலங்கின ஆழ்வாரை
ஆற்றி உரைக்கிற ஸூஹ்ருத்துக்கள் பாசுரத்தை
கார் காலத்துத் தலைவன் வரவு காணாது கண் கலங்கின தலைவியைக்
கால மயக்காலே ஆற்றின தோழி பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

ஞாலம் பனிப்பச் செறித்து நன்னீரிட்டுக் கால் சிதைந்து
நீல வல்லேறு பொரா நின்ற வானமிது திருமால்
கோலம் சுமந்து பிரிந்தார் கொடுமை குழறு தண் பூம்
காலம் கொலோ வறியேன் வினையாட்டியேன் காண்கின்றவே –7-

பாசுரம் -7-ஞாலம் பனிப்பச் செறித்து -கால மயக்கு –இன்னுயிர்ச் சேவல் -9-5–

பதவுரை

ஞாலம் பனிப்ப–உலகம் நடுங்கும்படி
செறித்து-தம்மில் தாம் நெருங்கி
நல் நீர் இட்டு–(தம் உடம்பின்) நீரை நன்றாக வெளிச் சிந்தி
கால் சிதைந்து–கால்களால் தரையைக் கீறிக் கொண்டு
நீலம் வல் ஏறு–கரிய வலிய எருதுகள்
பொரா நின்ற–போர் செய்யப் பெற்ற
வானம் இது–ஆகாசமாகும் இது;
திருமால்–எம்பெருமானுடைய
கோலம் சுமந்து–வடிவத்தை யுடையதாய்
பிரிந்தார் கொடுமை குழறு–பிரிந்து போன நாயகனது கொடுந்தன்மையைக் கூறுகிற
தண் பூ காலம் கொல் ஓ–குளிர்ந்த அழகிய கார் காலத்தானோ?
வினையாட்டியேன்–தீவினையுடைய நான்
காண்கின்ற–காண்கின்றவற்றை
அறியேன்–இன்னதென்று அறிகிற வில்லை.

ஞாலம் பனிப்பச் செறித்து
லோகம் எல்லாம் நடுங்கும்படி தன்னில் தான் நெருங்கி

நன்னீரிட்டு
ஸ்வ கதமான ஜலத்தை இட்டு

பனிப்ப நன்னீர் இட்டு -என்று
நனையும்படி நன்றாக நீர் இட்டு என்றுமாம் –

கால் சிதைந்து-
மேகத்துக்கு வர்ஷ தாரை முரிந்து விழுகை
ஏற்றுக்குச் சினத்தாலே காலைச் சிதைக்கை –

நீல வல்லேறு
நீல நிறத்தை யுடைய ஏறு என்று
மேகத்தை மயக்கி உரைக்கிறாள் –

பொரா நின்ற வானமிது
இந்த ஆகாசத்திலே பொருகிறன அத்தனை

கால் சிதைந்து பொரா நின்ற -என்று
மேகமானது காற்றின் சிதைவாலே மேகம் எதிர் எதிரே பொருகிறது என்றுமாம்

அன்றியே
திருமால் கோலம் சுமந்து
விளங்கின மின்னாலும்
ஸ்யாமளமான நிறத்தாலும்
ஸ்ரீ மானுடைய கோலத்தைத் தரித்து

பிரிந்தார் கொடுமை குழறு
இக்காலத்தில் பிரிந்து போய் வராத தலைவருடைய கொடுமையைத்
தன் அநஷரமான முழக்கத்தாலே சொல்லுவதான

தண் பூம் காலம் கொலோ
குளிர்ந்து
அழகிய
கார் காலம் தானோ

வறியேன் வினையாட்டியேன் காண்கின்றவே-
உன்னை இப்படிக் காண வைத்த பாபத்தை யுடைய நான்
காணா நின்றன ஏது என்று அறிகின்றிலேன்
தெரிந்து அறிய மாட்டு கிறிலேன் –

இத்தால்
இவ்வாழ்வாருடைய அனுபவ யோக்ய காலத்தில்
விளம்ப அஷமத்வத்தாலே
அவி விவேக கன அநந்த திங் முகமாய்
பஹுதா சந்தத துக்க வர்ஷியான பவ துர் தினத்திலே (ஸ்தோத்ர ரத்னம் -49 )
அகப்பட்டோம் என்று ஸாம்ஸாரிக கோலா ஹலத்தாலே
இவருக்குப் பிறந்த கண் கலக்கத்தைக் கண்ட
ஸூஹ்ருத்துகள் (நல்லார் நாவில் குருகூர் ஸாத்விகர் )

ஞாலம் பனிப்பச் செறித்து
லோகம் நடுங்கும்படி பரஸ்பர ஸ்பர்தாளுக்களாய் நெருங்கி

நன்னீரிட்டுக் கால் சிதைந்து
நல்ல நீர்மையை இட்டு வைத்து
நிலை குலைந்து
(நீர்மை ஸுலப்ய குணம் விட்டு )

நீல வல்லேறு
நைல்யத்தாலே தமஸ் பிராஸுர்யத்தையும்
ஏறு என்று
செறுக்கு சொல்லுகையாலே
ரஜஸ் பிராஸுர்யத்தையும்
உடைய வலியரான துர்மான ப்ரசுர புருஷரானவர்கள்

பொரா நின்ற
ஒருவருக்கு ஒருவர் மேலிட்டு நடத்துகிற

வானமிது -என்கையாலே
இத் தோஷம் ப்ரஹ்ம பவனம் அறுதியாக நடக்கும் என்றபடி –

இத்தால்
ஸம்ஸாரிகள் கோலாஹலத்துக்குக் கண் கலங்க வேணுமோ
பாடாந்தரம் -நீர் கலங்க வேணுமோ என்று கருத்து –

அன்றியே
அனுபவ அலாப தசையிலே
திருமால் கோலம் சுமந்து பிரிந்தார் கொடுமை குழறு தண் பூம் காலம் கொலோ வறியேன் வினையாட்டியேன் காண்கின்றவே
ரஜஸ் தமஸ் ப்ரஸுரரான புருஷர்கள்
ஸ்ரீ யபதியைப் பாவித்துத்
தங்கள் ஸாந்நித்யத்தாலே
பிரிந்தாருடைய கொடுமையை ஸூசிப்பிக்கிற ஆகாரத்தாலே
இவ்வவஸ்தை அஸஹ்யமாகவும் கூடும் இறே என்று
கோடி த்வய தர்சனத்தாலே ஸம்ஸயித்து ஆற்றாமையை மட்டம் செய்வித்தார் ஆயிற்று

(ரஜஸ் தமஸ் ப்ரக்ருதிகள் தங்களுக்குள்ளே பொருது என்றும்
உம்மிடம் கலந்து என்றும்
கோடி த்வயம் )

இங்கு வினையாட்டியேன் என்றது
பாரதந்தர்யத்தாலே
ஸ்மாரகமான லௌகிக கோலாஹலத்தைத் தவிர்த்தல்
அவிளம்பேந போக ஸித்தியைப் பிறப்பித்தல்
செய்ய மாட்டாத பாபத்தை யுடையேன் என்றபடி –

—–

தாத் பர்யம்
இப்பாசுரத்தில் ஆழ்வார் தமக்குப் பகவத் ப்ராவண்யம் மிக்கு பகவத் அனுபவம் பிராப்தி உண்டாக –
அது பெறாமல் கலங்கி இருக்க அவரை
ஆஸ்வாசப்படுத்த பாகவதர்கள் பாசுரத்தை
தோழியின் பாசுரத்தால் –
குறித்த காலத்தில் நாயகன் வாராமல் தளர்ந்த நாயகியை ஆஸ்வாசிப்படுத்திய பாசுரத்தால் அருளிச் செய்கிறார்

ஓ தோழி வர்ஷா காலத்தால் வருவதாகச் சொல்லிப் போந்தான்
மேகங்கள் சுற்றிச் சூழ்ந்து நெருங்கி குளிர வர்ஷிக்கத் தொடங்கிற்று
ஆறுகளும் குளங்களும் பெருகத் தொடங்கிற்று –
ஏக்க தசை -பர பக்தி தசை மாறி ஆர்த்தி அதிகார பூர்த்தி அடைந்த பின்பு -நாயகி சொல்ல –
தனது தசையைச் சொல்ல
இப்போதும் வரவில்லை
தோழி மாற்றக் கருதி
இது வர்ஷா காலம் அன்று
மேகமே இல்லை
‘இரண்டு எருதுகள் பூமியில் இடம் இல்லாமல் ஆகாசத்தில்
அந்யதா கரிக்கிறாள்
நம்மிடம் விஸ்வசிக்க மாட்டாள் என்று
ஸ்ரீ யபதியினுடைய வேஷம் கொண்ட மேகம் ஆகவுமாகலாம் என்கிறாள்
இது கர்ஜிப்பதை பார்த்தால்
நான் வந்த காலத்திலும் உன்னை விட்டுப்பிரிந்து நாயகன் வரவில்லை என்று
துக்கம் விசாரிக்க வந்தது போல் புலம்பு கிறது
உன்னுடைய அவஸ்தையைக் காண நேர்ந்தது நான் பண்ணிய பாபமே என்கிறாள்

————-

அவதாரிகை

இப்படி பகவத் அலாப தசையிலே ஆஸ்வாஸ கரரான அன்புடைய பாகவதர்
பகவத் பரராய்க் கொண்டு
திருமலை தொடக்கமான உகந்து அருளின தேசங்களிலே போகைக்கு ஒருபடிப்பட்டமை
அறிந்து அருளின இவர் –
அவர்கள் பிரிவாற்றாமையாலே அவர்களை நோக்கி அருளிச் செய்த பாசுரத்தைத்
தலைமகன் பொருள் வயிற் பிரிவு அறிந்து உரைத்த
தலைமகள் வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –

இது தலைமகன் பொருள் வயிற் பிரிவு அறிந்த தோழி
தலைவன் தன்னை நோக்கி உரைத்ததாகவுமாம்

பிரியலுற்ற அன்பரை நோக்கி
இவ்வாழ்வார் பிரகிருதி அறிந்த ஸூஹ்ருத்துகள் வார்த்தை யாகவுமாம் –

காண்கின்றனகளும் கேட்கின்றகளும் காணில் இந்நாள்
பாண் குன்ற நாடர் பயில்கின்றன இதெல்லாம் அறிந்தோம்
மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேங்கடத்தும்பர் நம்பும்
சேண் குன்றம் சென்று பொருள் படைப்பான் கற்ற திண்ணனவே —8–

பாசுரம் -8-காண்கின்றனகளும் கேட்கின்றனகளும் -தலைவன் பொருள் வயிற் பிரிதல் குறிப்பால்
அறிந்த தலைவி தோழிக்கு கூறல் –கையார் சக்கரம் -5-1-

பதவுரை

குன்றம் நாடர்–மலைகளை யுடைத்தான நாட்டுக்குத் தலைவரான நாயகர்
இ நாள்–இன்றை தினத்தில்
பயில்கின்றன–பலவாறாக நடத்துகின்றவையான
காண்கின்றனகளும்–காணப்படுகிற செய்கைகளும்
கேட்கின்றனகளும்–கேட்கப்படுகின்ற சொற்களும்
காணில்–ஆராய்ந்து பார்க்குமிடத்து
பாண்–வெளியுபசார மாத்திரமாம்;
இது எல்லாம்–இந்த மிக்க உபசாரமெல்லாம்
மாண் குன்றம் ஏந்தி–மாட்சிமை தங்கிய கோவர்த்ததன கிரியை நினைப்பின்றி யெடுத்த கண்ணபிரானது
தண் மாமலை வேங்கடத்து–குளிர்ந்த சிறந்த திருவேங்கடமலையின்
உம்பர் நம்பும்–மேலுலகத்தாரால் விரும்பப்படுகிற உயர்ந்த சிகரத்தை
சென்று–போய் அடைந்து
பொருள் படைப்பான்–(அங்கும்) பொருளீட்டும் பொருட்டு
கற்ற–(புதிதாக) அப்யஸித்த
திண்ணளவு–வலிமையின் செயல் (என்று)
அறிந்தோம்–தெரிந்து கொண்டோம்.

காண்கின்றனகளும் கேட்கின்றகளும் காணில் இந்நாள்
பொருட்க்குப் பிரிவானாக ஒருப்பட்ட தலைமகன்
தலைவி தரிக்கைக்காக சில தாழ்வுகள் செய்யவும்
சில தாழ்வுகள் சொல்லவும் கண்டு
இதுக்கு முன்பு கண்டும் கேட்டும் அறியாதே
இப்போது காண்கின்றவையும் கேட்க்கின்றவையும் ஆராய்ந்து பார்க்கில்

பாண்
பாண்மையாய் இரா நின்றது

குன்ற நாடர்
மலையோடு கூடின நாட்டை யுடையாராகையாலே வன்னெஞ்சர் என்று கருத்து

பயில்கின்றன
பல படியும்
செய்வது
சொல்வது ஆகிறன

இதெல்லாம்
இந்த அதிசயித உபசாரங்கள் எல்லாம்

அறிந்தோம்
ஸா பிப்ராயம் என்று அறிந்தோம்

மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேங்கடத்து
கோ ரக்ஷணத்துக்கு உறுப்பாகையாலே மாட்சிமை யுடைத்தான கோ வர்த்தனமாகிற மலையை
அநாயாசேன ஏந்திய கிருஷ்ணனுடையதாய்
குளிர்த்தியை யுடைத்தாய்
பெரிய திருமலை என்று சொல்லப்படுவதான திரு வேங்கடத்திலே

மாட்சிமை -நன்மை

மாண் குன்றம் ஏந்தி -என்று
மாணுமாய்
குன்றம் ஏந்தியுமானவன் என்று
வாமன கிருஷ்ண அவதாரங்களைச் சொல்லிற்று ஆகவுமாம்

உம்பர் நம்பும் சேண் குன்றம் சென்று
மேலாத் தேவர் (திருவாய் -5-1-2 ) விரும்பும் உயர்ந்த சிகரத்தை சென்று கிட்டி

பொருள் படைப்பான் கற்ற திண்ணனவே
அழியாப் பொருள் படைக்கைக்கு அறுதியிட்ட சிக்கனவு -என்று அறிந்தோம் -என்று அந்வயம் –

இத்தால்
பகவத் அனுபவ பரராய்க் கொண்டு
ஆழ்வாரைப் பிரிந்து போகலுற்ற அன்பர்
இவர் அநுமதியோடே விடை கொள்ள வேணும் என்று நினைத்து இவர் அளவிலே
பஹு முகமாக அனுவ்ருத்தியைப் பண்ணி தாழ்ச்சி தோன்ற சில விண்ணப்பம் செய்ய
இவர்கள் பிரிவுக்கு அடியான இது பொறுத்து அருளாமையாலே
பாடுவார் கொண்டாட்டம் போலே பல படியும் தாழ்வு செய்வது சொல்லுவதாகிற இதுக்கு அபிப்ராயம் அறிந்தோம்

(அரையர் திருவேங்கடம் செல்ல ஆசை கொள்ள மந்தி பாய் வேங்கடம் பாசுரம் –
நின்றான் கிடந்தான் -அறிந்தேன் யாத்திரை போகவில்லை என்று சொல்ல வைத்தாரே நம்பெருமாள் )

குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவன் –அன்று ஞாலம் அளந்த பிரான் -சென்று சேர் திருவேங்கட மா மலையிலே (திருவாய் -3-3-8 )என்றும்
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் (திருவாய் -6-10-10-) என்றும்
உயர்ந்த சிகரத்தை சென்று கிட்டி
ஸ்ரீ நிதியாகிற மஹா நிதியைப் பெறுகைக்கு அறுதியிட்ட சிக்கனவே இறே என்று அருளிச் செய்தமை தோற்றிற்று –

இவ்விடத்தே
குன்ற நாடர் என்றது
வேங்கடத்தைப் பதியாக (நாச்சியார்-8-9 ) வாழ நினைத்தவர்கள் என்றபடி

(கிளைவித் தலைமகன் பாட்டுடைத் தலைமகனை நோக்கிச் செல்வதாக தலைவி சொன்னவாறு )

தாத்பர்யம்

இப்பாசுரத்தில் இந்நாள் வரை ஸஹவஸித்த பாகவதர்கள்
திருவேங்கடமலை யாத்திரை உத்தேச்யமாக
அத்தை ஆழ்வார் இடம் விண்ணப்பம் செய்ய
அவர்களது அபூர்வமான நைச்ய யுக்திகளையும் சாத்ருச சேஷ்ஷ்டிதங்களையும் கண்டு
இவர்கள் பிரிய நினைக்கிறார்கள் என்று அறிந்து அருளிச் செய்யும் பாசுரத்தை

நாயகன் பிரிய நினைக்கும் பொழுது செய்யும் செயல்களையும் சொற்களையும் நாயகயின் பாசுரத்தால் அருளிச் செய்கிறார்
உம்மிடத்தில் இப்பொழுது இவை போன்ற
உம்முடைய செயல்கள் சொற்களும் நிரூபிக்கில்
பிரிய நினைப்பது போல் அன்றோ இருந்தது
நித்ய ஸூரிகளும் விரும்பத்தக்க்க
ஸ்ரமஹரமாய் மநோ ஹரமாய்
முன்பு கோவர்த்தன ஏந்தி ரஷித்தவன்
இப்பொழுது சர்வ சுலபனாய்
அது ஊருக்காக இங்கு உலகுக்காக
அப்போது 125 வருஷங்கள்
இப்பொழுது நித்தியமாக
அங்கு சேவிக்கப் போக நினைத்தீர்கள்
அந்யாபதேசத்தில் -பேசும் பொழுது -அம் மலையைக் கிட்டித் தனம் ஆர்ஜனம் பண்ணிப்போக நினைத்தீர்கள்
உம்முடைய மநோ ரதம் நாம் ஸூ வியக்தமாக அறிந்தோம்
இவ்வாறு என்னை விட்டுப் பிரிந்து செல்வது உங்களுக்குத் தகாது காணும் என்று ஆழ்வார் அருளிச் செய்கிறார்

—————————–

அவதாரிகை

அன்புடையாரை அகல மாட்டாத இவருடைய ஸ்வரூப வை லக்ஷண்யத்தாலும்
ஞான வை லக்ஷண்யத்தாலும்
பிரிய மாட்டாமையால் அன்பர் சொன்ன பாசுரத்தை
பிரிவு அறிந்த தலைவி எழிலும் வேறுபாடும் கண்டு
பிரிய மாட்டாத தலைவனுடைய கோளான வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –

திண் பூஞ்சுடர் நுதி நேமி யஞ்செல்வர் விண்ணாடனைய
வண் பூ மணி வல்லி யாரே பிரிபவர் தாம் இவையோ
கண் பூங்கமலம் கருஞ்சுடராடி வெண் முத்தரும்பி
வண் பூங்குவளை மடமான் விழிக்கின்ற மாயிதழே–9-

பாசுரம் -9-திண் பூஞ் சுடர் நுதி நேமி -தலைவன் தலைவியின் நீங்கல் அருமை கூறுதல் -பொலிக பொலிக –5-2-

பதவுரை

திண்–வலிய
பூ–அழகிய
சுடர்–ஒளியுள்ள
நுதி–கூர்மையை யுடைத்தான
நேமி–திருவாழியை யுடைய
அம் செல்வர்–அழகிய எல்லா ஐசுவரியங்களையுமுடைய எம்பெருமானது
விண் நாடு அனைய–பரமபதத்தை யொத்த
வண் மணி பூ–அழகிய சிறந்த பூங்கொடி போன்றவளை
யாரே பிரிபவர் தாம் எவர்தாம் பிரிய வல்லவர்? (எவரும் பிரிய வல்லரல்லர்;)
(ஏனெனில்;)
இவையோ கண்–இவளது கண்கள் கண்களாக மாத்திரமிருக்கின்றனவோ?
பூ கமலம்–தாமரை மலர்களாய்
வண் பூ குவளை–அழகிய செங்கழு நீர் மலர்களுமாய்
மா இதழ்–பெரிய இதழ்களை யுடையவையாய்
கரு சுடர் ஆடி–கரிய (அஞ்சனத்தின்) ஒளியை அணிந்து
வெண் முத்து அரும்பி–(நம்மைப் பிரிதலாற்றுமையாலுண்டான கண்ணீராகிற) வெளுத்த முத்துக்கள் தோன்றப் பெற்று
மடமான் விழிக்கின்ற–மடத்தை யுடைய மான் போல நோக்குகின்றன.

திண் பூஞ்சுடர் நுதி நேமி யஞ்செல்வர்
திண்மையையும்
புகர் யுடைமையையும்
ஒளியையும்
‘கூர்மையையும்
உடைய திருவாழியோடே உண்டான சேர்த்தி அழகையும் உடையராய்
ஸ்ரியா ஸார்த்தம் -என்கிறபடியே
வைகுண்ட பர லோக -லிங்க புராண ஸ்லோகம்
பெரிய பிராட்டியாரோடே கூட எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ மானுடைய
(அந்தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் -அம்மானுக்கு–ஆழி இத்யாதி
அங்கும் உண்டே -தாமம் ஸ்ரீ வைகுண்டம் )

விண்ணாடனைய
பரமபதம் போலே
நிரதிசய ஆனந்தா வஹையான

வண் பூ மணி வல்லி
தர்ச நீயமான புஷ்போத் கமத்தை உடைத்தாய்
ஸ்லாக்யமான கொடி போன்றவளை
(பூ மலர்ந்த கொடி )

யாரே பிரிபவர் தாம்
தம்மைத் தாம் அறிவாரில் பிரிவார் உண்டோ

அது நிற்க
இவையோ கண்
கண்ணாய் இருக்கிறானோ

பூங்கமலம்
அழகிய கமலமானது

கருஞ்சுடராடி
அஞ்ஐனத்தின் ஒளியை அணிந்து

வெண் முத்தரும்பி
ஆற்றாமையால் உண்டான அஸ்ரு பிந்துக்கள் ஆகிற
வெளுத்த முத்தை அரும்பி

வண் பூங்குவளை
உதாரமாய்
அழகிதான
செங்கழு நீரினுடைய

மடமான் விழிக்கின்ற
மடப்பத்தை யுடைய
மானின் நோக்கை யுடைத்தாகா நின்ற

மாயிதழே–
பெரிய இதழை யுடைத்து என்னலான
இவை கண்ணாய் இருக்கின்றனவோ

இக் கொடிக்கு வண்ணம் சிறப்புடைய பூ என்னும் அத்தனை
ஆதலால் ஆரே பிரிபவர் என்று கருத்து
இது நீங்கல் அருமை கூறல்

கமலம் என்கையாலே அரி சிதறுதலும் (மெதுவாக மலரும் )
கருஞ்சுடர் என்கையாலே அஞ்சனம் அணிவும்
வெண் முத்து அரும்பி -என்கையாலே ஆற்றாமையும்
குவளையின் பெரிய இதழ் -என்கையாலே கடைச் சிவப்பும்
மான் விழிக்கின்ற -என்கையாலே செல்லாமை நோக்குதலும் தோற்றிற்று
குவளை -நெய்தல் என்னவுமாம்

இத்தால்
இவ்வாழ்வாரைப் பிரிய நினைத்த அன்பரான பாகவதர்
பரத்வ ப்ரகாசகமான திருவாழியோடு உண்டான சேர்த்தியாலே
தர்ச நீயனான ஸ்ரீ மானுடைய பரமபதம் போலே
ஆனந்தாவஹமாய்

உதாரமாய் –
போக்யமாய் –
அத் யுஜ்ஜ்வலமாய் –
உபக்ந அபேக்ஷமான கொடி போலே –
பாரதந்தர்ய ஏக நிரூபணீயமான ஸ்வரூபத்தை யுடைய இவரை
ஸ்வரூப ஞானம் பிறந்தாரில் விடுவார் யுண்டோ –

(வண் பூ மணி வல்லிப் பேச்சு வந்தேறி அல்ல -நாயனார்
வல்லி கொடி -தேக ஆத்ம குணங்கள் )

அது நிற்க
இவையே கண் என்கையாலே
நாட்டு ஒப்பான ஞானம் அன்று என்றபடி

பூங்கமலம் கருஞ்சுடராடி -என்கையாலே
ஞானத்துக்கு ஆகாரம் விஷயாதீனம் என்றிட்டு
பத்ம வர்ணனையும் அஞ்சநாபனையும் விஷயீ கரித்தமை தோற்றிற்று

(கண்ணுக்கு கூர்மை சேர்ப்பது மை -அஞ்சனம்
இவரது ஞானத்துக்கு விஷயம் மெய் நின்ற பகவத் ஞானம் -அந்த வடிவம்
ஸம்ஸார ஞானம் பொய் நின்ற ஞானம்
திருவையும் மாலையையும் க்ரஹித்தவள் -மெய்யான ஞானம்
பூம் கமலம் -அவள்
கரும் குவளை -அவன் )

வெண் முத்தரும்பி -என்கையாலே
சுத்த ஸ்வ பாவமான முக்தா ஹாரத்தை ஆவிஷ் கரித்தமை சொல்லிற்று

குவளை மாயிதழ் என்கையாலே
அநுராதகதை (சிகப்பு) தோற்றிற்று

(இவரது வெறும் வாக்ய ஜன்ய ஞானம் இல்லையே
பக்தி ரூபா பன்ன ஞானம் தானே
ராகம் கலந்த ஞானம் )

மான் விழிக்கின்ற என்கையாலே
விஸ்லேஷ அசஹதை தோற்றிற்று

ஏவம் விதமான ஞான வை லக்ஷண்யத்தாலும் இவரைப் பிரியப் போமோ
என்கிற பாசுரத்தை அருளிச் செய்தார் ஆயிற்று –

——-

தாத்பர்யம்

முன் பாசுரத்தில் ஆழ்வார் ஸூஹ்ருதரான பாகவதர்கள்
தம்மை விட்டுப் பிரிவதாக விசன்னராக இருக்க
அவர்களும் உம்முடைய வை லக்ஷண்யத்தைக் கண்டா நாங்கள் பிரிய மாட்டோம் என்று அருளிச் செய்த பாசுரத்தை
நாயகி யுடைய சவுந்தர்யத்தால் மக்னனான நாயகன் உரைத்த பாசுரமாக அருளிச் செய்கிறார்

சவுந்தர்யம்
லாவண்யம்
மார்த்தவம் –
சந்நிவேசம் -முதலான
இவற்றை நிரூபகமாக உள்ள அவயவங்கள் உடைய நாயகியை
ஸ்ரீ மானான திருமால் உள்ள ஸ்ரீ வைகுண்டம் சேர்ந்தவர்கள் அங்குள்ள தேஜோ மயமான
வலிய திருவாழி தொடக்கமான -ஆயுதம் ஆபரணம் இரண்டு ஆகாரமும் உண்டே –
போக்யத்தில் ஈடுபட்டு அத்தை விட்டுத் திரும்ப மாட்டாதாப் போலே

உன்னுடைய மாந்தளிர் போன்ற அதரத்தையும்
கமலம் போல் அதி ஸூந்தரமாய் கரு நெய்தலின் முத்துக்கள் சிதரிக்க கிடந்தால் போல் -சோக அஸ்ரு சொரிந்து
மான் போல் விழிக்கும் குவளை போன்ற கண்களை யுடைய
உன்னைக் கண்டார் பிரிவாரோ
ஆகையால் நான் உன்னை விட்டுப் பிரிய மாட்டோம்
பாகவத சம்ஸ்லேஷம் கிட்டிய பின்பு பகவத் ஸம்ச்லேஷம் தேடிப்போவாரோ என்றவாறு

—————

அவதாரிகை

இப்படிப் பிரிய மாட்டாத அன்பரான பாகவதர்
இவ்வாழ்வாருடைய அவயவ சோபையிலும்
அருளிச் செய்த வசன வ்யக்திகளிலும்
ஈடுபட்டுச் சொல்லுகிற வார்த்தையை
தோழியும் தலைமகளும் இருந்த கானல் புனத்து எதிர்ப்பட்ட தலைவன்
மதியுடன் படுத்தலுற்றுக்
குறை யற யுரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

மாயோன் வட திருவேங்கட நாட வல்லிக் கொடிகாள்
நோயோ யுரைக்கிலும் கேட்கின்றிலீர் உரையீர் நுமது
வாயோ அதுவன்றி வல்வினையேனும் கிளியும் எள்கும்
ஆயோ அடும் தொண்டையோ அறையோ விதறிவரிதே—10-

பாசுரம் -10-மாயோன் வட திருவேம்கட நாட -தலைவன் தோழியிடம் குறை கூறல் –
மதி உடன்படுதல் –நெடுமாற்கு அடிமை -8-10-–

பதவுரை

மாயோன்–ஆச்சரியமான குணசேஷ்டிதங்களை யுடையனான எம்பெருமானது
வடதிருவேங்கடம் நாட–வடதிருவேங்கட மலையை இடமாகவுடைய
வல்லி கொடிகாள்–பூங்கொடி போன்ற இளம் பெண்களே!
அது அன்றி–அதுவல்லாமல்
வல்லினையேனும் கிளியும் எள்கும்–கொடிய தீவினையையுடைய நானும் கிளியும் தளரும்படியான
ஆயோ–(உங்களது) ‘ஆயோ’ என்கிற சொல்லோ?
தொண்டையோ–கோவைக் கனி போற் சிவந்த உங்களது அதரமோ?
நோய் ஓ உரைக்கிலும் கேட்கின்றிலீர்–(என்னுடைய) காதல் நோயையோ (நீங்கள் தாமாக அறியா விட்டாலும்)
நான் சொன்னாலும் கேட்கிறீரில்லை;
உங்களுடைய வாயின் அழகோ?
அடும்–(என்னை) உயிர்க் கொலை செய்யா நிற்கும்;
இது அறிவு அரிது–இவற்றில் இன்னது என்னை வருத்து மென்பது அறிய அரிதா யிருக்கின்றது;
உரையீர்–நீங்கள் சொல்லுங்கள்;
(அறையோ–இது முறையிட்டுக் கூறும் வார்த்தை.)

மாயோன்
ஆச்சர்யமான குண சேஷ்டிதங்களை யுடைய
ஸர்வேஸ்வரனதான

வட திருவேங்கட நாட வல்லிக் கொடிகாள்
வட எல்லையான திருமலையை நாடாக யுடைய
வல்லி போன்று இருந்த பெண்காள்

இங்குக் கொடி என்று
கொடிச்சியாய்
குற மகள் ஆகவுமாம்

நோயோ யுரைக்கிலும் கேட்கின்றிலீர் உரையீர்
உங்கள் முன்னே நின்று ஈடுபட்ட என்னுடைய நோய் காணாத அளவன்றியே
சொல்லவும் கேட்க்கிறீலீர்
ஸ்வர அவஸாதமும் செவிப்படுகிறது இல்லை

ஓ என்று
ஈடு பாடு தோற்றுவித்த அசைச் சொல்
உங்கள் ஸந்நிதி எனக்கு ஈடுபாட்டை விளைத்த படி

நுமது வாயோ
உங்கள் விகசிதமான வாய் அழகோ

அதுவன்றி
அவ்வளவு இன்றியே

வல்வினையேனும் கிளியும் எள்கும் ஆயோ
கால் தாழ்ந்து நோவு படுகைக்கு ஈடான வலிய பாபத்தை யுடையேனான நானும்
உங்கள் புனத்திலே போகம் படிந்து உண்ணும் கிளியும்
சிதிலராம்படி
ஆய விடுகிற மிடற்று ஓசையோ

தொண்டையோ
அக்காலத்தில் தொண்டைப்பழம் போலே சிவந்த
அதர சோபையோ

அடும்
என்னை உயிர்க் கொலை செய்யா நிற்கும்

இது அறிவது அரிதே
இவற்றில் ஏதோ நலிகின்றது என்று அறிய அரிதாய் இரா நின்றது

உரையீர் அறை
நீங்கள் சொல்ல வல்லீராகில் சொல்லுங்கோள்
இவர்கள் வார்த்தை கேட்க்கையில் விருப்பத்தாலே கருத்து அறிவித்த
தலைமகன் மேலிட்டு உரைத்த பாசுரம்
குறை நயந்த தலைவன் கருத்து அறிவித்தல்

மாயோன் வட திருவேங்கட நாட
இத்தால்
பிரிய மாட்டாத அன்பர்கள்
மாயோன் இத்யாதியாலே
அபரிச்சின்ன போக்யதையாலே ஆச்சார்யாவஹனுடைய ஸர்வ உத்தரமான
திருமலையிலே நாட்டத்தை யுடைய -என்றபடி

வல்லிக் கொடிகாள்-என்று
பகவத் அனுபவ ரஸ அபேக்ஷமான பாரதந்தர்யத்தைச் சொல்லுகிறது
பன்மை -கௌரவத்தைக் காட்டுகிறது

ஆக
போக்ய பூதன் வர்த்திக்கிற போக ஸ்தானமான திருமலையிலே
மானஸ அனுபவம் நடந்து
அத்தாலே பாரவஸ்யம் பிறந்து இருக்கிற நீர் என்றதாயிற்று

நோயோ யுரைக்கிலும் கேட்கின்றிலீர் -என்று
உம்முடைய பக்கல் ப்ராவண்யத்தாலே எங்களுக்கு உண்டான ஈடுபாடு விண்ணப்பம் செய்தாலும்
அனுபவ பாரவஸ்யத்தாலே திரு உள்ளம் போற்றுகிறது இல்லை –

உரையீர்
இது அருளிச் செய்ய வேணும்

நுமது வாயோ
அனுபவ பரிவாஹ ரூபமான பிரபந்த நிர்மாண தசையில் முக விகாஸமோ

அதுவன்றி
அவ்வளவு அன்றியே

வல்வினையேனும்
உம்மைப் பிரிந்து போகாதபடி துவக்குவதான வலிய வினையை யுடைய நானும்

இவ்விடத்தில் வினை என்பது
பாவ பந்தத்தை

கிளியும் -என்று
பசுஞ்சாம நிறத்தாலும்
அவ்வதரத்தில் பழுப்பாலும்
வசன மாதுர்யத்தாலும்
போக்ய பூதனான ஈஸ்வரனை ஸூசிப்பிக்கிறது

எள்கும்-என்று
ஈசேஸிதவ்ய விபாகம் அற
இவர் பாசுரத்தில் ஈடுபட்டமை தோற்றிற்று

(தொண்டர்க்கு அமுது உண்ண அன்றோ சொன்னார்
அவனும் தென்னா தென்னா என்று ஈடுபடும் படி அன்றோ இவர் திவ்ய பிரபந்தங்கள் )

ஆயோ -என்று
வ்யவஹார ரூபமான ஸப்த வ்ருத்தியோ -என்றபடி

தொண்டையோ -என்று
தாத் காலிகமான அதர ஸ்புரணமோ -என்றபடி

அடும்-என்கையாலே
இவை தனித்தனியே சைதில்ய ஜனகம் என்றபடி

அறையோ விதறிவரிதே—என்கையாலே
வேறே ஆராலே இத்தை விவேகித்து அறியலாம் என்றபடி

உரையீர் -என்று
நீர் தாமே இத்தை நிஷ்கர்ஷித்து அருளிச் செய்ய வேண்டும் என்று அந்வயம் –

தாத்பர்யம்

இப் பாசுரத்தில் ஆழ்வாருடைய சவுந்தர்ய ஸுசீல் யாதி குணங்களில் ஈடுபட்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள் பாசுரத்தை
(நேராக -இல்லை மதுர கவி ஆழ்வார் போன்ற )தோழிகளுக்கு விண்ணப்பம் செய்வது
நாயகியின் பக்கல் வ்யாமுக்தனான நாயகன் வார்த்தை யாலே அருளிச் செய்கிறார்
ஓ ஸ்த்ரீ ரத்னமே
நான் இப்படி வேதனை படும் சமயத்தில் நீயே வந்து விசாரித்து ஆஸ்வாசப்படுத்தாமல்
அது தவிர்ந்ததுவும் அன்றி
நான் உன்னைக் கிட்டி அறிவித்த அளவும் காது கொடுத்துக் கேட்க்காமலும் உள்ளாயே
என்னுடைய பாதிப்பு எனக்கு அஸஹ்யமாய் இருக்கிறது
இதற்க்கு ஹேது ஆராய்ந்த அளவில்
உன்னுடைய அவயவ சவுந்தர்யமோ
கிளியும் தோற்று இரை எடுக்கவும் தவிர்க்கும் படி
குருவி ஓட்டும் ஆயோ என்னும் சொல்லோ
உனது அதரத்தின் தொண்டைப் பழம் போன்ற அழகோ
என்று அறிய வில்லையே
ஆகவே அறியாமை வெற்றி கொள்ளட்டும் என்கிறான்

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திரு விருத்தம் -தனியன்/பிரவேசம் -முதல் பாசுரம் –ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் -வியாக்யானம் –

January 28, 2022

ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் வைபவம்

ஸூந்தர ஜாமாத்ரு முநே ப்ரபத்யே சரணாம் புஜம்
ஸம்ஸார ஆர்ணவ ஸம் மக்ந ஐந்து சந்தார போதகம்

ஸம்ஸாரக் கடலில் அழுந்தி உள்ள ஜந்துக்களைத் தாண்டுவிக்கும் ஓடம் போன்றதான
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயரின் திருவடித் தாமரைகளை சரண் அடைகிறேன் –

————-

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளைக்கும் அவர் திருக்குமாரர் ஸ்ரீ நாயனார் ஆச்சான் பிள்ளைக்கும் சிஷ்யரான இவர்
தென் தேசத்தில் ப்ரஹ்ம தேசம் மன்னார் கோயிலில் -ஆனிமாதம் ஸ்வாதி நக்ஷத்திரத்தில் திரு அவதரித்தவர்
திருவாய் மொழிக்கு பன்னீராயிரப்படி அருளிச் செய்தவர்

அன்போடு அழகிய மணவாளச் சீயர்
பின்போரும் கற்று அறிந்து பேசுகைக்கா தம் பெரிய
போதமுடன் மாறன் மறையின் பொருள் உரைத்தது
ஏதமில் பன்னீராயிரம் –உபதேச ரத்னமாலை –45-

இவரைப் பெரியவாச்சான் பிள்ளை திருத்திப் பணி கொண்டு அருளிய விவரம் இவர் வைபவத்தில் காட்டப்பட்டுள்ளது

மன்னு மணவாள முனி செய்யுமவை தாமும் சில –(உபதேச 47)என்று மா முனிகள் அருளியபடி
திரு விருத்தம் ஸ்வாபதேச உரை முதலான மூவாயிரத்தில் சில பிரபந்தங்களுக்கு உரை
த்ராவிட உபநிஷத் சங்கதி -ஸம்ஸ்க்ருத பத்ய கிரந்தம்
தத்வ தீபம் -ஸம்ஸ்க்ருத கத்ய கிரந்தம்
அதுக்கு இவரே -தீப பிரகாசம் -மணிப்பிரவாள வியாக்யானம்
தீப ஸங்க்ரஹம்
தத்வ நிரூபணம்
ரஹஸ்யத்ரய காரிகா வளி
ஸ்ரீ பகவத் கீதை வெண்பா இவை போல்வன நமக்கு கிடைத்துள்ளன –
இவர் அருளிச் செய்துள்ள கீதைக்கு மணிப்பிரவாள வியாக்யானம் போல்வன இப்பொழுது லுப்தம்

திருமாலை ஆண்டான் திரு வம்சத்தவரான யாமுனாச்சார்யர் இவரது சிஷ்யர்
ப்ரமேய ரத்னம் போன்ற கிரந்தங்கள் சாதித்தவர்

பூர்வாஸ்ரமத்தில் -வரதராஜர் என்னும் திருநாமம் –
உத்தம ஆஸ்ரமத்தில் ஸூந்தர ஜாமாத்ரு முனி -அழகிய மணவாள ஜீயர் என்று திருநாமம் பெற்றார்
வாதிகளை ஜெயிக்கையால் வாதி கேஸரீ என்ற பட்டப்பெயர் பெற்றார் –

————————–

பிரவேசம்
ஸ்ரீ யபதியாய்
ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷண ஸ்வரூப ரூப குண விபூதியை யுடைய ஸர்வேஸ்வரன்
பதிம் விஸ்வஸ்ய-என்று விஸ்வத்துக்கும் பதி யாகையாலே
தன்னுடைய நாராயணத்வ ப்ரயுக்தமான
வியாப்ய வியாபக பாவம்
சரீர ஆத்ம பாவம்
சேஷ சேஷி பாவம்
நியாந்த்ரு நியாம்ய பாவம்
ஆதார ஆதேய பாவம்
முதலான அவிநா பூத சம்பந்தம் ஸகல ஆத்மாக்களோடும் ஒத்து இருக்க

(அப்ருதக் ஸித்த விசேஷணம் – பிரிவில்லாமல் –
அசேஷ சித் அசித் வஸ்து சேஷிந சேஷ ஸாயினே –
யஸ்ய சேதனஸ்ய யத் த்ரவ்யம் சர்வாத்மனா ஸ்வார்த்தே தாரயிதும் நியந்துஸ் ச ஸக்யஞ்ச தத் தஸ்ய சரீரம்
அவனாலே தாங்கப்பட்டு அவனுக்காகவே இருப்பதே சரீரம்
பரகத அதிசய ஆதேயன உபாயத்வமே -சேஷ சேஷி பாவம் -அவனுக்கே
பஸ்யமே லோக ஐஸ்வர்யம் -அனைத்தையும் நானே தாங்குகிறேன் -கீதை )

ஒரு விபூதியில் உள்ளார்
நிரந்தர அனுபவ ஜெனித நிரதிசய ஆனந்த திருப்தராயப் போருகிற படியையும்
ஒரு விபூதியில் உள்ளார் –
அநீசயா சோசதி முஹ்யமாந -ஸ்வேதாஸ்வரம் -4-7-என்று
அநாதி அஞ்ஞான அந்தகாரத்தாலே அபி பூதராய் –
அநாத்மந் யாத்ம புத்தியும் -(அஹங்காரம் -யானே -ஸ்வரூபம் மாறி )
அஸ்வே ஸ்வ புத்தியுமாகிற -(மமகாராம்–என் தனதே -என்னுடையது அல்லாதவற்றை என்னுடையது ஸ்வ பாவம் மாறி )
அந்யதா ஞான
விபரீத ஞானங்களாலே
ஆத்ம அநநு ரூபமான அர்வாசீந புருஷார்த்தங்களிலே அதி ப்ரவணராய்
(தாழ்ந்த விஷயாந்தரங்களில் ஐஸ்வர்யார்த்திகளாய் )
ஆத்ம அநு ரூபமான அதிசயித புருஷார்த்தத்தில் அத்யந்த விமுகராய்
கர்ப்ப நரகாதி ஸகல கிலேசங்களாலும் வ்யாகுலராய்ப் போருகிற படியையும் கண்டு

இவர்களுக்கு அவகாசம் பிறக்கைக்கு அடியான ஸ்வ அபிமுக்யத்தைப் பண்ணுவிக்கைக்கு உப கரணமான
கரண களேபரங்களையும் கொடுத்து
மாநம் ப்ரதீபம் இவ காருணிகோ ததாதி -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -உத்தர சதகம் –1-என்கிறபடியே

(ஹர்த்தும் தமஸ் சத் அஸதீ விவேக்தும் ஈச மாநம் ப்ரதீபம் இவ காருணிகா ததாதி
தேந அவ லோக்ய க்ருதிநஸ் பரி புஞ்ஜதே தம் தத்ர ஏவ கேபி சபலா ஸலபீ பவந்தி–ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -உத்தர சதகம் –1-1-

காருணிகா-தயாளுவான
ஈச மாநம்-சர்வ ஸ்வாமியான ஸ்ரீ பெரிய பெருமாள்
ஹர்த்தும் தமஸ்-அஞ்ஞான அந்தகாரத்தை போக்குவதற்கும்
சத் அஸதீ விவேக்தும்-நல்லதும் தீயதும் அறிகைக்கும்
ப்ரதீபம் இவ ததாதி-பெரு விளக்குப் போலே இருக்கிற பிரமாணத்தை பிரகாசிக்கிறார் –
தேந அவ லோக்ய க்ருதிநஸ் பரி புஞ்ஜதே–பாக்யாதிகர் அந்த ஈசனை அந்த பிரமாணத்தாலே நன்றாக அறிந்து
ததீய பர்யந்தமாக அனுபவிக்கின்றார்கள்
தம் தத்ர ஏவ கேபி சபலா ஸலபீ பவந்தி-சஞ்சல ஹ்ருதயராவார் அந்த பிராமண விஷயத்தில்
வீட்டில் பூச்சிகள் போலே விழுந்து நசிக்கிறார்கள் –)

(காருணிகனான சர்வேஸ்வரன் –
அறிவிலா மனிசர் உணர்வு என்னும் சுடர் விளக்கு ஏற்றி-
பிறங்கு இருள் நீங்கி
மேல் இருந்த நந்தா வேத விளக்கை கண்டு
நல்லதும் தீயதும்-விவேகிக்கைக்கு
மறையாய் விரிந்த துளக்கமில் விளக்கில் கொளுத்தின ப்ரதீபமான-கலைகளை
நீர்மையினால் அருள் செய்தான்––ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம்-சூர்ணிகை 1-)

அந்தகாரத்திலே திரிவாருக்கு அர்த்த பிரகாசம் பிறக்கைக்குக் கை விளக்கு கொடுத்தால் போலே
நிர்த் தோஷமான பிராமண ப்ரகாஸத்தையும் பண்ணுவிக்க

திமிர உபஹத த்ருஷ்டியானவனுக்கு தீபமும் ப்ரகாஸமும் அல்லாதாவோ பாதி
பகவத் பக்தியாகிற ஸித்தாஞ்சனத்தாலே ஆந்த்ர சஷுஸ்ஸான நெஞ்சின் குருடு தீராமையாலே
அதுவும் அகிஞ்சித் கரமாக

இதிஹாஸ புராணாப்யாம் வேதம் சமுப ப்ரும்ஹயேத்–(பார்ஹஸ் பத்ய ஸ்ம்ருதி ) என்று
வேத உப ப்ரும்ஹணமான ஸ்ம்ருதி இதிஹாஸ புராண ரூபங்களாய்
ஸ்வ யோக மஹிம சாஷாத் க்ருத பராவர தத்வ விபாகரான பரம ரிஷிகளாலே
ப்ரணீதங்களான பிரபந்தங்களை பிரவர்த்திப்பித்தும்
அதுவும் கார்ய கரம் அல்லாமையாலே

ஓலைப் புறத்துச் செல்லாத ராஜ்யத்தை எடுத்து விட்டுக் கொள்ளும் ராஜாக்களைப் போலே
தான் ராம கிருஷ்ண ரூபத்தாலே திரு அவதரித்தும்

ரூப ஓவ்தார்ய குணை பும்ஸாம் த்ருஷ்டி ஸித்த அபஹாரிணம் (அயோத்யா -3-26 ) என்று
ஸுந்தர்யாதி குண ஆவிஷ்காரேண
அக்ரூர மாலாகாராதிகான் பரம பாகவதான் க்ருத்வா -(கீதா பாஷ்யம் -அவதாரிகை )என்று சொல்லுகிறபடியே
ஸாஸ்த்ர சஸ்த்ரம் முனை மடிந்தால் எடுக்கும் -ப்ரஹ்மாஸ்திரமாகிற வடிவு அழகைப் பிரகாசிப்பித்தும்

உபதேஸ அநுஷ்டானாதி முகத்தால் தர்ம ஸம்ஸ்தாபநத்தைப் பண்ணியும்
வசீகரிக்கப் பார்த்த இடத்திலும்

அநாதி பாப வாஸநா தோஷ தூஷிதா சேஷ சேமுஷீகர் ஆகையாலே
பாஹ்ய குத்ருஷ்டி மத அவகாஹநம் பண்ணி
(புத்தோடு சமணம் எல்லாம் கலை அறக் கற்ற மாந்தர் காண்பாரோ கேட்பரோ )
வைதிக மார்க்க பராங் முகராகக் கண்டபடியாலே

இவர்களை வசீகரிக்கைக்கு உபாயம் ஏதோ என்று பார்த்து
(எம்பெருமானாராய் இருந்தால் அப்போதே ஒரு சிந்தை செய்து நாரணர்க்கு ஆளாக்கி அருளுவார் )
தீபகம் காட்டி மிருகம் பிடிப்பாரைப் போலே ஸஜாதீய புத்தி பண்ணலாம் படியான
ஆழ்வார்களைப் ப்ரவர்த்திப்பித்தான் –

இவர்கள் ஆகிறார் –
ரிஷிகளைப் போலே கர்மாதி ஸாத்ய ஞானர் அன்றியே –
பகவத் ப்ரஸாதத்தாலே
அயத்ன லப்த ஞான வைராக்ய பக்தி கராய்
வேத இதிஹாஸ புராணாதிகளைப் போலே அதி க்ருதாதிகாரம் இன்றியே
ஸர்வ அதிகாரமாய்
திராவிட ரூபமான பிரபந்த விசேஷங்களாலே
ஸகல வேத வேதாந்த ரஹஸ்ய அர்த்தத்தைப் பிரகாசிப்பிக்கையாலே
அத்யந்த விலக்ஷணராய் இருப்பார்கள் –

இவர்களிலும் வைத்துக் கொண்டு
நம்மாழ்வார் -அல்லாத ஆழ்வார்களைப் போலே லௌகிக ஞானம் நடையாடா நிற்க
பகவத் பிரஸாதத்தாலே -ஒரு கால விசேஷத்திலே தத்வ ஞானாதிகள் பிறந்து அனுபவிக்கை அன்றிக்கே
திருத்துழாய் பரிமளத்தோடே அங்குரிக்குமா போலே
ஸஹஜ ஞான பக்தியை உடையவராகையாலும்

மாதா பிதா –ஆத்யஸ்ந குல பதே –ஸ்தோத்ர ரத்னம் –5- என்று
இது தத்வ ஞான ப்ரவர்த்த நத்திலே பிரதம ஆச்சார்யராக விலக்ஷண பரிக்ருஹீதர் ஆகையால்
ஈஸ்வரன் தானே லோகத்தைத் திருத்துகைக்கு இவர் ஆவர் என்று அங்கீ கரித்து

என்னாலும் தன்னைச் சொல்லிய சூழல் திருமாலவன் கவி யாது கற்றேன் -திரு விருத்தம் -48- என்னும்படி
இவர் திரு உள்ளத்திலும் நாக்கிலும் நின்று இவர் தம்மைக் கொண்டு தாமே ப்ரவர்த்திப்பிக்கையாலும்
அத்யந்த வ்யாவ்ருத்தராய் இருப்பார் ஒருவர் –

(மெல்லியல் ஆக்கைக் கிரிமி குருவில் மிளிர் தந்தாங்கே
செல்லியசெல் கைத்துலகை என் காணும் என்னாலும் தன்னைச்
சொல்லிய சூழல் திருமாலவன் கவியாது கற்றேன்
பல்லியின் சொல்லும் சொல்லாக் கொள்வதோ வுண்டு பண்டு பண்டே-48 –என்றைக்கும் என்னை -7-9-)

ஏவம் வித வை லக்ஷண்யத்தை யுடைய இவருக்கு உத்தம வர்ணாதிகளிலே அன்றியே
துரீய வர்ணத்திலே அவதாரமான இது
பத்ப்யாம் சூத்ரோ அஜாயதே –புருஷ ஸூக்தம் –என்கிற மரியாதையாலே
(முகத்தில் இருந்து பிராமணன் -சதுர்த்த வர்ணன் திருவடியில் இருந்து )
வர்ண உத்கர்ஷம் அன்றியே சேஷத்வமே உத்தார ஹேது என்னும்
அர்த்த விசேஷத்தை ஸூசிப்பிக்கைக்காக –

ஹரி கீர்த்திம் விநைவாந்யத் -(மாத்ஸ்ய புராணம் யம வசனம் )-என்கிற நியாயத்தாலே
பகவத் விஷயமான பாஷைக்கு அபகர்ஷம் உண்டாகில் இறே
ந சூத்ரா பகவத் பக்தா -என்கிற நியாயத்தாலே
சேஷத்வ ஞான ஆஸ்ரயமான இவ்வர்ணத்துக்கு அப கர்ஷம் உள்ளது –

இப்படி வை லக்ஷண்யத்தை யுடையவரான இவ்வாழ்வார் பக்கலிலே
பிரபந்தங்கள் அவதீர்ணங்கள் ஆகிற இடத்து
ஈஸ்வரன் ஸ்வ ஸங்கல்பத்தாலே வாஸூ தேவாதி சதுர் வ்யூஹத்தைப் பண்ணினால் போலேயும்
வேதங்கள் ருகாதி பேதத்தாலே சதுர்த்தாக வ்யக்தமானால் போலேயும்
இவையும் திரு விருத்தம் திரு வாசிரியம் பெரிய திருவந்தாதி திருவாய் மொழி
என்று நாலு வகையாகப் பிரதிபாதிக்கப் பட்டன –

அவற்றில் பிரதம பாவியான இப்பிரபந்தத்திலே
அஞ்ஞான கர்ம தேஹாதி ரூபமான (பொய் நின்ற ஞானம் -பொல்லா ஒழுக்கு -அழுக்கு உடம்பு )
ஸம்ஸார ஸம்பந்த நிவ்ருத்தியை அபேக்ஷித்திக் கொண்டு
அனுபவ உபகரணமான ப்ராவண்ய அதிசயத்தாலே அனுபவ அபி நிவேசம் நடந்த படியையும்
அனுபவ அலாபத்தில் ஆர்த்தி அதிசயித்த பிரகாரத்தையும்
ஸ்மாரக பதார்த்தங்கள் ஆர்த்திக்கு அதிசய ஜனகங்களான பிரகாரத்தையும்

இவருடைய ப்ராவண்யாதி வை லக்ஷண்யத்தைக் கண்ட
ஸூஹ்ருத்துக்களும் -பரிவருமாய் உள்ளார்
தாங்கள் ஈடுபட்டும்
இவரை ஆஸ்வசிப்பித்தும்
போந்த பிரகாரத்தையும் –
ஆர்த்தி அதிசயம் கால விளம்பம் பொறுக்க மாட்டாத ஸைதில்யத்தை ஜநிப்பித்த பிரகாரத்தையும்
மறந்து பிழைக்க ஒண்ணாத படி ஞானம் சங்குசிதமாகாத பிரகாரத்தையும்
ப்ராப்ய ப்ராபகங்கள் –பகவத் சீல ஸுலப்யங்களே

(ஆஸ்ரய ஸுகர்ய குணமே ஸுசீல்யம் -இதுவே ப்ராப்யம்
அனுபவத்துக்கு ஸுகர்ய குணம் -ஸுலப்யம்-இதுவே ப்ராபகம்
அங்கும் சோஸ்னுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மண
பாலேய் போல் சீர் குணங்களில் அனுபவம்
ஆகவே இவையே ஆறும் பேறும் என்றபடி -)

என்று அறுதியிட்டு பிரகாரத்தையும் வெளியிடுகையாலே
ஈஸ்வரன் திரு உள்ளத்திலே படும்படி இவர் தம்முடைய வ்ருத்த கதனம் பண்ணினார் ஆயிற்று –
ஆகையால் இறே இப்பிரபந்தத்துக்கு திரு விருத்தம் என்று பேர் ஆயிற்று

அல்லது
தாழிசை-
துறை –
விருத்தம் என்று இனத்தின் வகையான
கலித் துறையை விருத்தம் என்னக் கூடாது –

(வெண்பா -கலிப்பா -ஆசிரியப்பா வஞ்சிப்பா -என்று இருக்க வேண்டுமே
வெண்பா தாழிசை -கலி தாழிசை -போல் இருக்க வேண்டும்
கலி விருத்தம் என்று சொல்லக் கூடாதே
நான்கு சீர் அடி நான்கு -எதுகை ஒத்து இருக்க வேண்டுமே )

இப் பிரபந்தத்திலே அத்யாத்ம ரூபமான இவ்வர்த்தங்களைப் பிரகாசிக்கிற இவர்
நாயக நாயிகா சங்கம ரூபமான காம ராக பிரகாரமாய் இருக்கிற
கிளவித் துறையைப் பேசுவான் என் என்னில்

காமமாவது –
இதர விஷயத்திலான போது அநர்த்தா வஹமாய் த்யாஜமாகக் கடவது
காமத் கோப்ய-(ஸ்ரீ மத் பாகவதம் -7-1-33)என்கிற கணக்கிலே
கண்ணனுக்கே காமமான போது புருஷார்த்த அந்வயியாய்க் கடவது –

(சேம நல் வீடும் பொருளும் தருமமும் சீரிய நற்
காமமும் என்றிவை நான்கென்பர் நான்கினும் கண்ணனுக்கே
யாமது காமம் அறம் பொருள் வீடி தற்கென்று உரைத்தான்
வாமனன் சீலன் இராமானுசன் இந்த மண் மிசையே -இராமானுஜ நூற்றந்தாதி-40 – )

ஆகையால் இந்த வகை தமிழ் மர்யாதையான ஸ்ருங்கார ப்ரகாசகமான பாசுரங்களாலே
இவ்வத்யாத்மத்தை அருளிச் செய்தது –
கட்டி பூசிக் கடு தீற்றுவாரைப் போலே விஷயசக்தரான ஸம்ஸாரிகள் நெஞ்சிலே படுகைக்காக –
(இந்திரியங்கள் எந்த மார்க்கங்களில் போகுமோ
அவற்றையே கண்ணன் இடம் வைக்க -அவற்றை மாற்றலாமே )

ஆனால் ஈஸ்வரனே தலைமகனாகப் பாடப் ப்ராப்தமாய் இருக்க -அவனைப் பாட்டுடைத் தலைவனாக்கி
ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கிளவித் தலைமகனாக வைத்துப் பாடின இடத்துக்குத் தாத்பர்யம் என் என்னில்
ஈஸ்வரன் போக்ய பூதனாமோ பாதி
அடியார் குழாங்களை –உடன் கூடுவது என்று கொலோ (2-3-10 )-என்றும்
பரி ஜனைஸ் தவ சங்க ஸீய -ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -77- என்றும்
தத் சம்பந்த முகத்தாலே ததீயாருக்கும் போக்யதை உண்டாகையாலே
அவர்கள் பக்கல் ப்ராவண்யத்தைப் பிரகாசிப்பிக்கிறது –

(கைங்கர்ய நித்ய நிரதைர் பவத் ஏக போகை
நித்யைர் அநு க்ஷண நவீந ரஸ ஆர்த்ர பாவை
நித்ய அபி வாஞ்சித பரஸ்பர நீச பாவைர்
மத்தை வதை பரி ஜனைஸ் தவ சங்க ஸீய–77-

கைங்கர்ய நித்ய நிரதைர்–ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி ஆட் செய்பவர்களாயும் –
பவத் ஏக போகை-அநந்ய போக்யத்வ ஸ்வரூபத்தில் தலை நின்றவர்களாயும்
நித்யைர்-நித்ய ஸித்தர்களாயும்
அநு க்ஷண நவீந ரஸ ஆர்த்ர பாவை-க்ஷணம் தோறும் புதிது புதிதாக விளைகின்ற
பகவத் அனுபவ ருசியினால் உருகின நெஞ்சை உடையராயும்
பரஸ்பர நீச பாவைர் -பாகவதர்களுக்குள் பரஸ்பரம் சேஷத்வத்தையே சதா விரும்புவர்களாயும் –
மத்தை வதை பரி ஜனைஸ் தவ சங்க ஸீய-அடியேனுக்குத் தெய்வமாகக் கொண்டாடாத தக்கவர்களாயும்
இருக்கிற தேவரீருடைய அடியார்களுடன் உடனே கூடி வாழக் கடவேன்)

இந்த நாயக நாயகிகளுடைய இயற்கைப் புணர்ச்சி முதலான சம்பந்தமானது ஸாஸ்த்ரீயமோ என்னில்
ஸாஸ்த்ரத்திலே
1-ப்ராஹ்மோ
2-தைவ
3-ப்ரஜாபத்ய
4-ஆர்ஷ
5-ஆஸூரோ
6-காந்தர்வோ
7-ராக்ஷஸ
8-பைஸாசா
இதி -என்று விவாஹம் எட்டு வைகையாக இருக்கும் என்றது

இது தான்
அறநிலை ஒப்பே பொருள் கோள் தெய்வம் யாழோர் கூட்டம்
அரும் பொருள் வினையே இராக்கதம் பேய் நிலை என்று கூறிய
மறையோர் மன்றல் எட்டிவை அவற்றுள் துறையமை நல் யாழ்ப்
புலமையோர் புணர்ப்பு பொருண்மை என்மனார் புலமையோரே -என்று அகத் தமிழிலும் சொல்லப்பட்டது –

1-அற நிலை
3-ஒப்பே
4-பொருள் கோள்
2-தெய்வம்
6-யாழோர் கூட்டம்
5-அரும் பொருள் வினையே
7-இராக்கதம்
8-பேய் நிலை

அதில்
ப்ராஹ்மம் ஆவது
அபி ரூபனாய் வ்ருத்த ஸம்பன்னனாய் இருக்கிறவனை அழைத்து ஸத் கரித்து
அலங்க்ருதையான கன்னிகையைக் கொடுத்தல்
இதுக்கு அற நிலை என்று பெயர் –

தைவமாவது
தேவ யஜன ரூபமான யாகத்திலே ஆர்த்விஜ்யம் பண்ணினவனை அழைத்துக் கன்னிகையைக் கொடுத்தல்
இதுக்கு தெய்வம் என்று பெயர்

ப்ரஜாபத்யமாவது
ஓக்க இவர்கள் இருவரும் ப்ரஜா உத்பாதநாதி ரூபமான தர்மங்களை அனுஷ்டிக்கக் கடவர்கள் என்று
வாக்காலே அறுதியிட்டுச் சொல்லி
அக்னி காரியத்தையும் தானே அனுஷ்ட்டித்துக் கன்னியை அலங்கரித்துக் கொடுத்தல்
இதுக்கு ஒப்பு என்று பெயர் –

ஆர்ஷமாவது
ஒன்றாதல் இரண்டாதல் கோ மிதுனத்தோடு கன்யகையை அலங்கரித்துக் கொடுத்தல்
இதுக்குப் பொருள் கோள் என்று பெயர் –

ஆஸூரமாவது
வரன் தானே கன்யகைக்கு ஆபரணம் பூட்டி சக்திக்கு ஈடாக பந்துக்களுக்கு
(தனம் )தானம் கொடுத்துக் கைப்பிடித்தல்
இதற்கு அரும் பொருள் வினை என்று பெயர் –

காந்தர்வமாவது
தனியிடத்து இருவருடையவும் காம மோஹத்தாலே கூடுகை
இதுக்கு யாழோர் கூட்டம் என்று பெயர்

ராக்ஷஸமாவது
பந்துக்களை அடர்த்துப் பெண்ணைக் கைப்பிடிக்கை
இதுக்கு இராக்கதம் என்று பெயர்

பைசாசமாவது
ஸூப்தை யாதல் – ப்ரமத்தை யாதல் -கன்யகையை ரஹஸ்யத்திலே கூடுகை
இதுக்கு பேய் நிலை என்று பெயர் –

இவை எட்டிலும் –
ப்ராஹ்மம் தைவம் ப்ரஜாபத்யம் ஆர்ஷம் என்கிற இவை நாலும்
அக்னி பூர்வகமாக ப்ராஹ்மணனுக்குக் கர்த்தவ்யம் ஆகையாலே ப்ரஸஸ்தங்கள்

அல்லாத நாலும்
ஐகன்யங்கள் (தாழ்ந்தவை)

இதில்
ப்ராஹ்ம விவாஹத்தில் பிறந்தவன் –
தச பூர்வான் தசா பரான் ஆத்மாநம் ச (போதாயன தர்மம் ) என்று
தன் வம்சத்தை இருபத்தொரு படி கால் சுத்தனாக்கும்

தைவ விவாஹத்தில் பிறந்தவன்
முன் ஏழும் பின் ஏழும் சுத்தனாக்கும்

ப்ரஜாபத்ய விவாஹத்தில் பிறந்தவன்
முன் ஆறும் பின் ஆறும் சுத்தனாக்கும்

ஆர்ஷ விவாஹத்தில் பிறந்தவன்
முன் மூன்றும் பின் மூன்றும் சுத்தனாக்கும்

ஆஸூராதிகளான நாலுக்கும் இவ்விசேஷம் இல்லையே யாகிலும்
விலக்ஷண புருஷ அனுஷ்டிதமாகில்
அதிசயித புருஷ உத்பாதகங்கள் என்று ஸாஸ்த்ரங்களிலே கண்டு கொள்ளப் படும்

இவ்
வெட்டிலும் வைத்துக் கொண்டு
காந்தர்வமானது ஸ்ருங்கார ரஸமுமாய் ஸ்திரீயினுடைய அநந்யார்ஹதா ரூபமான கற்புக்கும் முதலாகையாலே
அகத்தமிழ் மர்யாதைக்குப் பிரதானமாய்ப் போரும்

அன்பின் ஐந்திணைக் களவு எனப்படுவது அந்தணர் அரு மறை மன்ற வெட்டினுள்
கந்தருவ வழக்கம் என்மனார் புலவர் என்று அகத்தமிழிலும் -இறைவனார் அகப் பொருளில் சொல்லப்பட்டது –

இப்படி ஸாஸ்த்ரீயமாய்க் கற்புக்கும் உறுப்பான சம்பந்தமாகையாலே இந்தக் கிளவித்துறை
மர்யாதையாலே தம்முடைய அநந்யார்ஹதையைப் பிரகாசிப்பிக்கக் குறையில்லை

ஆத்ம ஸ்வரூபத்துக்கு ஸ்த்ரீத்வாதி பேதம் இன்றிக்கே இருக்க
நாயிகா ரூபத்தாலே ஸ்த்ரீத்வம் சொல்லுகைக்கு அடி என் என்னில்

ஸ்வரூபம் ஸர்வதா பரதந்த்ரமாகையாலும்
அநந்யார்ஹம் ஆகையாலும்
அநந்ய ரக்ஷகமாகையாலும்
அநந்ய போக்யமாகையாலும்
ஸ்த்ரீத்வ சாதரம்யம் உண்டாகையாலே சொல்லக் குறையில்லை

ச ஏவ வாஸூ தேவோ சவ் ஸாஷாத் புருஷ உச்யதே –
ஸ்த்ரீ ப்ராயம் இதரத் ஸர்வம் ஜகத் ப்ரஹ்ம புரஸ் ஸரம் (ஸ்ரீ விஷ்ணு தர்மம் ) என்று சொல்லக் கடவது இறே

ஸ்வாமித் வாத் மத்வ சேஷித்வ பும்ஸ்த்வாத்யாஸ் ஸ்வாமிநோ குணா
ஸ்வேப்யோ தாஸத்வ தேஹத்வ சேஷத்வ ஸ்த்ரீத்வ தாயிந –என்று
ஸ்வாமி குண அனுசந்தானத்தில் ஸ்வத்துக்குத் தத் ப்ரதி சம்பந்திக ஸ்வ பாவங்கள் தோற்றுகையாலே
ஈஸ்வரனுடைய புருஷோத்தமத்வ அனுசந்தானத்தில்
ஸ்வ ஸ்வரூபத்துக்கு ஸ்த்ரீத்வ அனுசந்தானம் அவர்ஜனீயம் என்றதாயிற்று –

இப்படி நாயக நாயிகா ஸம்பந்தம் ஸித்தமாய் இருந்துள்ள இடத்தில்
தாய் வார்த்தையான இடம் -ஞான தசையாதல் -பரிவர் வார்த்தை யாகக் கடவது
தலைமகள் -என்பது ப்ரேம தசையை
தோழி என்பது ஸூஹ்ருத்துக்களை
கிளவித் தலைமகன் என்பது அபிமத பாகவத விஷயத்தை
தூது என்பது -கடகமான ஆச்சார்ய விஷயத்தை
கண் அழகு என்பது ஞான வை லக்ஷண்யத்தை
முலை அழகு என்பது -பாரதந்தர்ய லக்ஷணமாய் போக உபகாரணமான பக்தி வை லக்ஷண்யத்தை
இடை அழகு என்பது -ஒன்றும் பொறாத வைராக்கியத்தை
நடை அழகு என்பது -அனுஷ்டானத்தை
வளை -என்பது அநந்யார்ஹதா சிஹ்னத்தை
இருள் என்பது அஞ்ஞானத்தை
வாடை அன்றில் தென்றல் முதலான பாதகங்கள் என்பது ஸ்மாரகத்வேந அஸஹ்யங்களான லௌகிக பதார்த்தங்களை
இரவு நெடுமை என்பது -விளம்ப அஷமத்வத்தை
பொழுதோடு புலம்பல் -மாலைக்கு ஆற்றாமை என்பது -போக யோக்ய கால ஸந்நிதியை
சந்த்ர உதயம் என்பது -அலாப தசையில் விவேகமும் பாதகமான படியை
இன்னமும் இப் பிரகாரங்களிலே வ்யங்யங்களும் (ஆழ் பொருள்களையும் உள்ளுறை பொருள்களையும் )
கண்டு கொள்ளப்படும் –

————-

இப் பாட்டு ப்ரபந்த தாத்பர்யத்தை ஸங்க்ரஹிக்கிறது
அதாவது
அவித்யா கர்ம தோஷாதிகள் விரோதி என்னும் இடமும்
(ஆதி வாசனா ருசி ஜென்மம் -ஸ்வரூப உபாய மோக்ஷ புருஷார்த்த விரோதிகள் )

இவை ஸ்வரூப ஞானம் பிறந்தவனுக்கு நிவர்த்த நீயம் என்னும் இடமும்

நிவர்த்தகனானவன் –
ஸர்வ ரக்ஷகனாய் –
அவதார ப்ரயுக்த ஸுலப்ய விசிஷ்டனான ஸர்வேஸ்வரன் என்னும் இடமும்
(சர்வேஸ்வரன் பரத்வம் -நாம் கிட்ட ஸுலப்யம் உயிர் அளிப்பான் என்நின்ற யோனியுமாய் பிறந்த விபவம் )

நிவ்ருத்த விரோதிகனுக்கு ப்ராப்யனானவன்
நித்ய ஸூரி ஸேவ்யனான சர்வாதிகன் என்னும் இடமும் அறுதியிட்டு –

இவ்வர்த்தத்தை புத்தி சாஷாத்கார ஸந்நிஹிதனான ஈஸ்வரனைப் பார்த்து
(புத்தி சாஷாத்கார–மானஸ ப்ரத்யக்ஷ சமானாதிகாரம்
உயிர் அளிப்பான் எந்நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா)
ஸங்க்ரஹேண விண்ணப்பம் செய்கிறார் –

பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
எந்நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
மெய்ந்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே –1–

பாசுரம் -1-பொய் நின்ற ஞானமும் -தாமான நிலையில் அருளியது -ஒழிவில் காலம் -3-3-

பதவுரை
உயிர் அளிப்பவன்–எல்லாப் பிராணிகளையும் ரக்ஷித்தருள்வதற்காக
நின்ற யோனியும் ஆய்–பலவகைப்பட்ட பிறப்புகளையுடையனால்
பிறந்தாய்–திருவவதரித்தவனே!
இமையோர் தலைவா–தேவர்களுக்குத் தலைவனே!
பொய் நின்ற ஞானமும்–பொய்ம்மை நிலைபெற்ற அறிவும்
பொல்லா ஒழுக்கமும்–தீய நடத்தையும்
அழுக்கு உடம்பும்–அசுத்தங்களோடு கூடின சரீரமும்
(ஆகிய இவற்றோடு கூடி)
இ நின்ற நீர்மை–இவ்வண்ணமான இயல்வை (பிறப்புத் துன்பத்தை)
இனி யாம் உறாமை இனிமேல் நாங்கள் அடையாதபடி
அடியேன் செய்யும் மெய் விண்ணப்பம்–(உனது) அடியனாகிய யான் சொல்லும் உண்மையான விஜ்ஞாபகத்தை
நின்று கேட்டருளாய்–நின்று நீ கேட்டருள வேணும்.-கேட்பதே அருள்

உரை

பொய் நின்ற ஞானமும்
உத்பத்தி விநாசாதி யோகத்தாலே அஸத்ய ஸப்த வாஸ்யமான
அசேதன விஷயத்தில் ஆத்ம ஞானமும்

பொல்லா ஒழுக்கும்
அந்த தேஹாத்ம அபிமானம் அடியான ஸாம்ஸாரிக துஷ்கர்ம ப்ரவ்ருத்தியும்

அழுக்கு உடம்பும்
இக் கர்மம் அடியாக வரக் கடவதான மாம்ஸா ஸ்ருகாதி மல ரூபமான தேஹ சம்பந்தமும்

(பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய்
கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர்
சிரங்களால் வணங்கும் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
வரங் கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே.–6-3-7-

நல்ல வலத்தால் நம்மைச் சேர்த்தோன் முன் நண்ணாரை
வெல்லும் விருத்த விபூதியன் என்று -எல்லை யறத்
தான் இருந்து வாழ்த்தும் தமிழ் மாறன் சொல் வல்லார்
வானவர்க்கு வாய்த்த குரவர் —ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–53-)

இந் நின்ற நீர்மை
இவற்றிலே நிலை நின்று போந்த வாஸனா ருசிகள் ஆகிற ஸ்வ பாவ விசேஷத்தை
(நின்ற நீர்மை விட்டுப் பிரியாத ஸ்வ பாவங்கள் )

இனி யாம் உறாமை
நிர்ஹேதுக கடாக்ஷ மூலமான ஞான லாபத்தை உடையரான பின்பு
முன் அங்கீ கார பலத்தை உடையரான நாங்கள் அணுகாத படி

உயிர் அளிப்பான் எந் நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய்
பிராணி பதார்த்தங்களினுடைய
அநிஷ்ட நிவ்ருத்தியையும் –
இஷ்ட ப்ராப்தியையும் -பண்ணிக் கொடுக்கைக்காக
ரூப ப்ரகார வ்யவஸ்திதங்களான ஸகல ஜாதிகளிலும்
அவதீர்ணன் ஆனவனே –

இமையோர் தலைவா
ஏவம் வித ஸுலப்ய விசிஷ்டனான உன்னை ஆஸ்ரயித்தாரை அனுபவிப்பிக்கைக்காக
ஸதா தர்சன பரரான அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவனே –
(தாங்களும் அனுபவித்தும் நாம் அங்கு போனாலும் வந்து எதிர் கொண்டு நம்மை அனுபவிப்பித்தும் )

அடியேன் செய்யும் மெய் விண்ணப்பம் நின்று கேட்டருளாய்–
உன் திருவடிகளிலே நிருபாதிக சேஷத்வத்தையே ஸ்வரூபமாக யுடைய நான் செய்கிற
மெய்யான விண்ணப்பத்தை
ஜகத் வியாபாரத்தில் பரபரப்பு அற்று நின்று கேட்டு அருள வேணும்

மெய்ந் நின்று கேட்டருளாய்–
அபேக்ஷிக்கும் படி நின்று கேட்டருளாய் என்றுமாம்
(சரீரத்தில் நின்று என்றுமாம் )

கேட்டு அருளாய்
என்று கேட்கை தானே அருள் என்று கருத்து –

(கேட்டு அருளி வேறே ஒன்றும் செய்ய வேண்டாம்
எழுந்து அருள வேண்டும் -என்று வந்ததே அருள் போல் –
கார்ப்பங்காடு ஸ்வாமிகள் –62- திரு நக்ஷத்ரம் -எழுந்து அருளி கடாக்ஷத்தாலே போதும்
உபன்யாசம் செய்ய வேண்டாம் என்பார்களாம் )

இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை அடியேன் செய்யும் மெய் விண்ணப்பம் என்று அந்வயம் —

யாம் உறாமை
என்று பன்மையாய் இருக்க

அடியேன்
என்று ஒருமையாலே
ஈஸ்வரனுக்கு விஞ்ஞாபிப்பார் தாம் ஒருவருமாய்
பல லாபம் சம்பந்தி சம்பந்தி பரம்பரைக்கும் ஒக்கும் என்று கருத்து –

(விண்ணப்பம் உடையவர் ஒருவரே -பலம் நமக்கு எல்லாருக்கும் உண்டே
இந்த வரங்கத்து இனிது இரு நீ என்ற அரங்கர்
எந்தை எதிராசர்க்கு ஈந்த வரம் -சிந்தை செய்யில்
நம்மதன்றோ நெஞ்சமே நற்றாதை சொம் புதல்வர்
தம்மதன்றோ தாய முறை தான் —ஸ்ரீ ஆர்த்தி பிரபந்தம்–60-)

இனி பிரபந்த சேஷமும்
இதில் சொன்ன அர்த்தங்களை விஸ்தரேண ப்ரதிபாதிக்கிறது –

செய்யும் விண்ணப்பம் -1- என்று தொடங்கி
விண்ணப்பம் செய்த –100-என்று தலைக் கட்டுகையாலே
ஸ்ருணு விஞ்ஞாபனம் -ஸ்தோத்ர ரத்னம் –50- என்று தொடங்கி
மது மதந விஞ்ஞாபனம் —57- என்ற கணக்கிலே
இப் பிரபந்தமாக இப் பாட்டில் சொன்ன அர்த்தமே ஒரு வார்த்தையாய் இருக்கிறது –

(ந ம்ருஷா பரமார்த்தமேவ மே
ஶ்ருணு விஜ்ஞாபநம் ஏகமக்ரத: |
யதி மே ந தயிஷ்யஸே ததோ
தயநீயஸ் தவ நாத துர்லப: ||ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் —50

ஸ்வாமி! முதலில் என்னுடைய ப்ரார்த்தனையைக் கேள்; இது பொய்யல்ல; இது உண்மையே;
உன்னுடைய கருணையை எனக்கு அளிக்காமல் என்னை இழந்து விட்டாய் என்றால்,
உன்னுடைய கருணையைப் பெற என்னைவிடத் தகுந்த எவரையும் நீ பெறமாட்டாய்.

ந தேஹம் ந ப்ராணாந்ந ச ஸுகம் அஶேஷாபிலஷிதம்
ந சாத்மாநம் நாந்யத் கிமபி தவ ஶேஷத்வ விபவாத் |
பஹிர்பூதம் நாத! க்ஷணமபி ஸஹே யாது ஶததா
விநாஶம் தத்ஸத்யம் மதுமதந! விஜ்ஞாபனம் இதம் ||ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் —57

ஸ்வாமியே! உன் விஷயமான கைங்கர்யச் செல்வத்துக்கு வெளிப்பட்டிருக்கும் என்னுடைய
தேஹம், ப்ராணன், எல்லோராலும் விரும்பப்படும் சுகங்கள், என்னுடைய ஆத்மா ஆகிய எதுவாக இருந்தாலும்
அவற்றை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது; இவை எல்லாம் ஒழியட்டும்.
மது என்னும் அரக்கனைக் கொன்ற என் ஸ்வாமியே! இது உண்மை; இதுவே என் ப்ரார்த்தனை.)

இப் பாட்டில்
விரோதி நிவ்ருத்தியையும்
அவதார ஸுலப்யத்தாலே -உபாய பாவத்தையும்
நித்ய ஸூரி ஸேவ்யமான -ப்ராப்யத்தையும்
அடியேன் -என்று ஸ்வரூபத்தையும்
மெய்ந்நின்று கேட்டு அருளாய் -என்று பல அபேக்ஷையும் பண்ணுகையாலே
அர்த்த பஞ்சகம் ஸூசிதமாயிற்று –

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பர கால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருவிருத்தம் — ஸ்ரீ ஸுதர்சன ராமானுஜ தாஸன்

January 15, 2022

ஸ்ரீப்பதியான ஸர்வேஶ்வரனாலே மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்கள் ஆழ்வார்கள்.
இவர்கள் அருளிச்செய்தவைகளே திவ்யப் ப்ரபந்தங்கள்.
* பிறந்திறந்து பேரிடர்ச் சுழி * என்று சொல்லப்படுவது ஸம்ஸார ஸாகரமாகும்.
* ஸம்ஸார ஸாகரம் கோரம் அநந்தக்லேஶ பாஜனம் * என்று சொல்லப்படுவது இந்த * இருள் தருமாஞாலம் * ஆகும்.
தாண்ட முடியாததாய், மிகுந்த துன்பங்களுக்குப் பிறப்பிடமாய் இருப்பது இந்தப் ப்ரக்ருதி ஸம்பந்தமாகும்.
அப்படிப்பட்ட ஸம்ஸார ஸாகரத்தினைக் கடப்பதற்குரிய அருமருந்தன்ன ஸ்ரீஸூக்திகளை அருளிச் செய்தவர்கள் ஆழ்வார்கள்.

ஸ்ரீ பெரிய பிராட்டியார் கேள்வனான ஸ்ரீமந் நாராயணன் அருளிய ஜ்ஞானத்தாலே இவர்கள்
* தொண்டர்க்கமுதுண்ணச் சொல்மாலைகள் * அருளியவர்கள்.
இது தன்னை * தத்வம் திவ்ய ப்ரபந்தானாம் ஸாரம் ஸம்ஸாரவைரிணாம் * (பூர்வ தினசர்யா – 27)
என்றருளினார் ஸ்வாமி ஸ்ரீ எறும்பியப்பா.
திவ்யப்ரபந்தங்கள் சரீர ஸம்பந்த ரூபமான ஸம்ஸாரத்தைப் போக்கடிப்பன என்கின்றது

* மாறன் விண்ணப்பம் செய்த சொல்லார் தொடையல் இந்நூறும் வல்லார் அழுந்தார்
பிறப்பாம் பொல்லாவருவினை மாய வன்சேற்றள்ளல் பொய்ந்நிலத்தே * (திருவிருத்தம்-100),

* செயிரில் சொல்லிசைமாலை ஆயிரத்துளிப்பத்தால் வயிரம் சேர் பிறப்பறுத்து வைகுந்தம் நண்ணுவரே * (திருவாய் 4-8-11)

* நோய்கள் அறுக்கும் மருந்தே *

* அணைவிக்கும் முடித்தே * முதலிய பாசுரங்களினால் விளங்கும்.

இப்படிப்பட்ட மிக்க க்ருபாளுக்களான ஆழ்வார்களில் தலைவர் நம்மாழ்வார்.
ஏனைய ஆழ்வார்கள் இவ்வாழ்வாரின் அவயவங்களாகவே போற்றப்படுகின்றனர்.
ஸம்ப்ரதாயத்தில் * ஆழ்வார் * என்றாலே நம்மாழ்வாரைத் தான் குறிக்கும்.
இவ்வாழ்வார் தாமும் நான்கு வேத ஸார ரூபமாக நான்கு திவ்யப்ரபந்தங்கள் அருளிச் செய்துள்ளார்.
இவற்றுள் ப்ரதம (முதல்) திவ்யப்ரபந்தம் திருவிருத்தமாகும்.
இது ருக்வேதஸாரமாய், 100 பாசுரங்கள் கொண்டதாய் இருக்கிறது.
இதில் ஸ்வாபதேச அர்த்தங்களும், அகப்பொருள்களும் நிறைந்து உள்ளன.

——

திருவிருத்ததிற்கு ஏற்பட்ட வ்யாக்யானங்கள்
நம்பிள்ளை அருளிய ஈடு வ்யாக்யானம்
பரம காருணிகரான பெரியவாச்சான் பிள்ளை அருளிய வ்யாக்யானம்
அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமி அருளிய ஸ்வாபதேச வ்யாக்யானம்
பெரிய பரகால ஜீயர் ஸ்வாமி அருளிய வ்யாக்யானம்
அப்பிள்ளை ஸ்வாமி ஸ்வாமி அருளிய அரும்பதம்

———–

இந்த திவ்யப்ரபந்தம் ஆழ்வார் பராங்குச நாயகியின் நிலையினை அடைந்து,
ஸர்வேஶ்வரனை நாயகனாகக் கொண்டு அருளப்பெற்றதாகும்.
ஜீவாத்மாக்களுடைய இயல்பான நிலைமை பெண்ணிலைமையே ஆகும்.
* கந்தல் கிழிந்தால் ஸர்வர்க்கும் நாரீணாமுத்தமையினுடைய அவஸ்தை வரக்கடவதாயிருக்கும் * என்கிறது
ஸ்ரீவசன பூஷண திவ்ய ஸ்ரீஸூக்தி.

இதில் நடந்த கதைகளைச் சொல்லுகிறபடியால் திருவிருத்தம் (ஆழ்வாருடைய விருத்தம்) என்று திருநாமம் ஆயிற்று.
ஆழ்வார் தமக்குத் தாமே * மணிவல்லி * என்று இந்த திவ்யப்ரபந்தத்தில் திருநாமம் சாற்றியுள்ளார்.
எனவே இத்திருநாமத்தை நமது ஆசார்யர்கள் மிகவும் ஆதரித்து வந்துள்ளனர்!
* அடியேன் செய்யும் விண்ணப்பம் * என்று தொடங்கி
* மாறன் விண்ணப்பம் செய்த * என்று முடிக்கையாலே,
திருவிருத்தம் முழுமையும் ஆழ்வாருடைய வ்ருத்தத்தினைத் தெரிவிப்பதாக அமைந்தது என்றபடி.

———

ஸ்வாபதேஶார்த்தங்கள்-

இத் திவ்ய ப்ரபந்தத்தில் ஸ்வாபதேஶார்த்தங்கள் நிறைந்துள்ளன.
எம்பெருமானே ரக்ஷிப்பன் என்கின்ற அத்யவஸாய ஜ்ஞாநத்தைத் தாய் என்றும்,
பாகவதர்களை ஸகிகளென்றும்,
கடகனான ஆசார்யனை (சேர்த்து வைப்பவரான ஆசார்யனை) தூதென்றும்,
ஜ்ஞாந வைலக்ஷண்யத்தைக் கண்ணழகென்றும்,
அஜ்ஞாநத்தை இருளென்றும்,
பாதக பதார்த்தங்களை வாடை, தென்றல், அன்றில் என்றும் ஸ்வாபதேஶார்த்தங்கள் அருளப்பட்டுள்ளன.

* மயில் பிறை வில் அம்பு முத்துப் பவளம் செப்பு மின் தேர் அன்னம் தெய்வ உரு விகாஸ சுத்தி தாந்தி
ஞான ஆனந்த அனுராக பக்த்ய அணுத்வ போக்யதா கதிகளை உடைய அக மேனியின் வகுப்பு * என்கிற
ஆசார்ய ஹ்ருதய சூர்ணிகையில் (137)
ஆழ்வார் ஸ்த்ரீ நிலைமை யெய்தி
ஸ்த்ரீகளின் அவயவங்களாகச் அருளுகின்றவைகளின் ஸ்வாபதேஶார்த்தம் அருளப்பட்டுள்ளது.

———

திருவிருத்தமும் – அகத் துறையும்

திருவிருத்தத்தின் முதல் பாசுரம் எம்பெருமானை நோக்கி விண்ணப்பம் செய்வதாகவும்,
இறுதிப் பாசுரம் பல ச்ருதியாகவும் அமைந்துள்ளது.
மற்றைய 98 பாசுரங்களும் அகப்பொருள் துறையில் அந்தாதித் தொடையில் அமைந்தவை.

“காமப் பகுதி கடவுளும் வரையார் ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர்” (தொல் -பொருள்-நூ.83)
நூற்பாவில் காமக் குறிப்பை வைத்து இலக்கியம் பாடுகின்ற பொழுது தேவரிடத்தும் மக்களிடத்தும் வரையார் என்று
உரையாசிரியர் விளக்கம் தருகின்றனர்.
எனவே கடவுளைத் தலைவனாகக் கொண்டு அகத்துறையில் பாசுரங்கள் பாடுவது தமிழர் மரபு என்பது தேறும்.
உதாரணமாக சில பாசுரங்களைப் பார்க்கலாம்.

ஏழாம் பாசுரம் காலமயக்கு துறையில் அமைந்ததாகும்.
மழைக்காலம் வந்தவுடன் தான் திரும்பிவிடுவதாக வாக்களித்த தலைவன், மழைக்காலம் வந்தும் திரும்பி வராததால்
கவலையுற்ற தலைவியைக் குறித்துத் தோழியானவள் அவளைத் தேற்றும் விதமாக
இது மழைக்காலமா – அல்லது இரண்டு நீல எருதுகள் வானில் சண்டையிடுகின்றன.
அவற்றின் திமிலிலிருந்து மதநீர் பெருகுகின்றனவா என்று தெரியவில்லை என்று கூறுவதாக அமைந்துள்ளது இப்பாசுரம்.

ஞாலம் பனிப்பச் செறுத்து நன்னீரிட்டுக்கால்சிதைந்து
நீலவல்லேறுபொராநின்றவானமிது, திருமால்
கோலஞ்சுமந்து பிரிந்தார்கொடுமை குழறுதண்பூங்
காலங்கொலோவறியேன், வினையாட்டியேன்காண்கின்றவே. (7)

கால மயக்குத் துறையிலே அமைந்த இன்னுமொரு பாசுரம் பதினெட்டாம் பாசுரமாகும்.

கடல்கொண்டெழுந்ததுவானம், அவ்வானத்தை யன்றிச்சென்று
கடல்கொண்டொழிந்தவதனாலிது, கண்ணன்மண்ணும்விண்ணுங்
கடல்கொண்டெழுந்தவக் காலங்கொலோ புயற்காலங்கொலோ
கடல்கொண்டகண்ணீர், அருவிசெய்யாநிற்குங்காரிகையே (18)

ஸமுத்ரத்தைத் தோற்பித்த கண்களில் இருந்து ஜலத்தைப் பெருக்கிக் கொண்டு நிற்கும் பெண்ணே!
ஆகாசமானது ஸமுத்ரத்தை விழுங்கி மேலே கிளம்பிற்று; ஸமுத்ரமானது அந்த ஆகாசத்தை கோபித்துக் கொண்டு,
பின் தொடர்ந்து சென்று, ஆகாசம் கொண்டுபோன ஜலத்தை வாங்கிக் கொண்டு –
அப்போது அதில் தங்கிப்போன ஜலத்தினால் இந்த மழைத்துளி விழுகிறது.
ஸ்ரீக்ருஷ்ணனுடைய பூலோகத்தையும் விண்ணுலகத்தையும் ஸமுத்ரம் கபளீகரித்து
வ்ருத்தியடைந்த ப்ரளயகாலந்தானோ?
மழைக்காலந்தானோ? நிச்சயிக்க மாட்டுகிறிலேன் – என்று
கால மயக்குத் துறையில் அமைந்துள்ளது இப்பாசுரம்.

இங்கு ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளை வ்யாக்யான ஸ்ரீஸூக்திகள் –
” திருமங்கையாழ்வார்க்குச் சரணம் புக வேண்டுமா போலே இவர்க்கும் பலகாலும் கால மயக்கு வேண்டியிருக்கிறபடி ”
(எப்படித் திருமங்கை ஆழ்வார் அடிக்கடி சரணாகதி செய்வாரோ
அது போல நம்மாழ்வார் அடிக்கடி காலமயக்கு அனுபவத்தில் ஈடுபடுவார்)

அகத்துறையில் வெறிவிலக்கு என்றால் தலைவிக்குக் காமத்தாலுண்டான நோயை
வேறு காரணத்தாலுண்டானதாகக் கொண்டு அந்நோயைத் தணிக்கவேண்டிச் செய்யும்
வெறியாட்டைத் தடுத்து நிற்றலைக் கூறுதல்.
இத்துறையில் அமைந்துள்ள பாசுரம் இருபதாம் பாசுரமாகும்

சின்மொழிநோயோ கழிபெருந்தெய்வம், இந்நோயினதென்
றின்மொழிகேட்கு மிளந்தெய்வமன்றிது, வேலநில்நீ
என்மொழிகேண்மி னென்னம்மனைமீருலகேழுமுண்டான்
சொன்மொழி, மாலையந்தண்ணத்துழாய்கொண்டுசூட்டுமினே (20)

தலைவியானவள் சோகித்துக் கிடக்கும் தசையினைக் கண்ட திருத்தாயார் முன்னே தேவதாந்த்ர ஸ்பர்சமுடையார்
புகுந்து நிற்க/சிலவற்றைச் செய்யத் தொடங்க;
தோழி தலைமகளது ப்ரபாவத்தினைத் தெரிந்தவளாகையாலே திருத்தாயாரை நோக்கி
இவளுக்கு நோய் தீர்க்கிறோம் என்று விநாசத்தை விளைக்க வேண்டா என்று
கூறுவதாக அமைந்துள்ளது இப்பாசுரமாகும்.

நலம் பாராட்டல் துறையில் அமைந்தது 55வது பாசுரம்.
தலைவன் தலைவியின் அழகைப் பாராட்டுவது அகப் பொருளில் நலம் பாராட்டல் என்பர்.
கொளு இதனை,அழிபடர் எவ்வம் கூர ஆயிழை
பழிதீர் நன்னலம் பாராட் டின்று என்று விளக்குகிறது.

இங்கு,
திருமாலை நாயகனாகப் பாவித்த ஆழ்வார்
நாயகியாகத் தம்மைப் பாவித்து நலம் பாராட்டுகிறார்.

வண்டுகளோ! வம்மின்! நீர்ப்பூ நிலப்பூ மரத்தில் ஒண்பூ
உண்டு களித்து உழல்வீர்க்கு ஒன்று உரைக்கியம்ஏனம் ஒன்றாய்
மண்துக ளாடிவை குந்தமன் னாள்குழல் வாய்விரைபோல்
விண்டு கள்வாரும் மலர் உளவோ நும்வியல் இடத்தே? (55)

——–

திருவிருத்தத்தில் ஆழ்வாரின் ப்ரபாவங்கள்

ஆழ்வாருடைய ப்ரபாவங்களைச் சொல்வதாக இத் திரு விருத்தத்தில் சில பாசுரங்கள் அமைந்துள்ளன.
எப்படித் திருவாய்மொழியில் * துவளில் மாமணிமாடமோங்கு * பதிகமோ அதே போன்றதாகும்.
சில பாசுரங்களைக் காணலாம்

ஈர்வனவேலுமஞ்சேலுமுயிர்மேன்மிளிர்ந்து, இவையோ
பேர்வனவோவல்லதெய்வநல்வேள்கணைப் பேரொளியே
சோர்வனநீலச்சுடர்விடுமேனியம்மான் விசும்பூர்
தேர்வன, தெய்வமந்நீரகண்ணோவிச்செழுங்கயலே (14)

இப்பாசுரத்தில் நாயகியின் (பராங்குச நாயகியின்) கண்ணழகில் ஈடுபட்ட நாயகன்,
அவற்றின் அழகைச் சொல்லிப் புகழ்வதாக அமைந்தது இப்பாசுரம்.
கண்ணழகு ஞானமாகச் சொல்லப்பட்டது காண்க.
ஆழ்வாருடைய ஜ்ஞாநத்தின் ஏற்றத்தைக் கண்டுரைத்த பாகவதர்கள் பாசுரத்தைச் சொல்லுவதாக அமைந்துள்ளது இப்பாசுரம்.
இந்த ஜ்ஞாநத்தின் தன்னேற்றம் எப்படிப்பட்டது எனில் நித்யஸூரிகளும் பரமபதநாதனின் அநுபவத்தினையும்
விட்டுவிட்டு ஆழ்வாரைத் தேடிக் கொண்டு வருவதாக அமைந்துள்ளது.

கயலோநுமகண்களென்றுகளிறுவினவிநிற்றீர்,
அயலோரறியிலுமீதென்னவார்த்தை, கடல்கவர்ந்த
புயலோடுலாங்கொண்டல்வண்ணன் புனவேங்கடத்தெம்மோடும்
பயலோவிலீர், கொல்லைகாக்கின்றநாளும் பலபலவே (15)

யானை (இங்குவரக் கண்டதுண்டோ? என்று) கேட்கத் தொடங்கி,
“உங்கள் கண்கள் கயல்மீன்களோ?”என்று (எங்கள் கண்களைக் கொண்டாடி) நின்றீர்;
அயலார் அறிந்தாலும் இது என்ன பொருந்தாத வார்த்தை;
கடல்நீரை முழுதும் கொள்ளை கொண்டதும் மழையோடு மந்தமாகச் சஞ்சரிப்பதுமான காளமேகம் போன்ற
திருநிறத்தையுடையனனான எம்பெருமானது (பல) கொல்லைகளையுடைய திருவேங்கட மலையிலே (நாங்கள்)
கொல்லை காத்து வருகிற மிகப்பல நாள்களிலொன்றிலும் எங்களோடு (நீர்) பாகமுடையீரல்லீர் – என்பது இப்பாசுரத்தின் அர்த்தம்.

இப்பாசுரத்திலும் ஆழ்வாருடைய பகவத் விஷயாவகாஹநத்தில் உண்டான வைலக்ஷண்யத்தினைக் கண்ட
பாகவதர்கள் இவருடைய ஜ்ஞாநாதி குணங்களிலீடுபட்டு இருப்பதாக இருப்பது இப்பாசுரமாகும்.

கொடுங்கால்சிலையர்நிரைகோளுழவர்கொலையில்வெய்ய
கடுங்காலிளைஞர்துடிபடுங்கவ்வைத்து அருவினையேன்
நெடுங்காலமும் கண்ணன் நீண்மலர்ப்பாதம்பரவிப்பெற்ற
தொடுங்காலொசியுமிடை இளமான்சென்றசூழ்கடமே (37)

இப்பாசுரத்தில், ஆழ்வார்க்குப் பிறந்த ஜ்ஞாந பக்தி வைராக்யங்களைக் கண்டு, இவர்க்கு
இந்த ஸம்ஸாரத்தில் இருப்பு மிகவும் கொடிதாயிருக்குமென திருத்தாயார் கருதுவதாக அமைந்தது இப்பாசுரம்.

உலாகின்ற கெண்டை ஒளியம்பு, எம்ஆவியை ஊடுருவக்
குலாகின்ற வெஞ்சிலை வாண்முகத்தீர் – குனிசங்கிடறிப்
புலாகின்ற வேலைப் புணரியம் பள்ளியம் மானடியார்
நிலாகின்ற வைகுந்தமோ, வையமோ? நும்நிலையிடமே. (75)

ஆழ்வாரினுடைய திருக்கண்களின் அழகைப் பேசுவதாக அமைந்தது இப்பாசுரம்.
* வெஞ்சிலை வாண் முகத்தீர்* – ஆழ்வாரது ஸ்வரூபத்தைக் கண்டு ஈடுபட்ட பாகவதர்கள் அவரை நோக்கி
‘நுமது இடம் அந்த நித்யவிபூதியோ? என்று வியந்துரைத்தலாம்.
பரந்த குளிர்ந்த நுண்ணிய விளக்கமுடைய உமது ஞானத்தை எமது நெஞ்சிலே பதியும்படி செலுத்தும்
முகமலர்ச்சியுடையவரே! என அழைத்தபடி.
எம்பெருமானுடைய நித்யமுக்தர் வஸிக்கும் நித்ய விபூதியோ இந்த லீலாவிபூதியோ உமது இருப்பிடம்?
ஆழ்வார், ஞானம் முதலியவற்றின் மஹிமையால் முக்தரென்று சொல்லும்படியும்,
அங்கு நின்று இங்கு வந்தவர் ஒருவர் என்று சொல்லும்படியும் உள்ள தன்மை இப்படி வினவுதற்குக் காரணம்.

———–

மேலும் இத்திவ்யப்ரபந்தத்தில் தத்வார்த்தங்கள் பொதிந்துள்ளன.
ஆழ்வார் தாமும் தொடங்கியருளும் பொழுதே
* பொய்நின்ற ஞானமும் பொல்லாவொழுக்கும் * என்று தான் தொடங்கியருளுகிறார்.
ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளை மிகவும் வியந்து கொண்டாடி இங்கு வ்யாக்யானமிட்டருளுகிறார்!
மஹாபாரதம் தொடங்கி க்ரந்தங்கள் விரிவாக இருந்தும் தெளிவாகச் சொல்ல இயலாத ஜீவாத்மாக்களின் நிலையை
ஆழ்வார் ஒரே சந்தையில் அருளிச்செய்கிறார் என்று.
* மஹாபாரதமெல்லாம், கூளமும் பலாப்பிசினும் போலே ப்ரக்ருதி புருஷ விவேகம் பண்ணமாட்டிற்றில்லை;
இவர் மயர்வறமதிநலம் அருளப் பெற்றவராகையாலே, மூன்று பதத்தாலே ப்ரக்ருதி புருஷ விவேகம் பண்ணியருளினார் *.

இன்னமும் முதல் பாசுரத்திலுள்ள அர்த்தங்களைச் சுருக்கி ஸ்வாமி அழகியமணவாளப்பெருமாள் நாயனார் தாமும்
* இமையோரதிபதி அடியேன்மனனே பொய்மயர்வு பிறந்தருளினன் விண்ணப்பம் தொழுதெழென்ற பஞ்சகத்தோடே,
அவித்யாதிஸ்வரூப ஸ்வாபாவ, ஆத்மேச்வரபந்த, ரக்ஷணக்ரம, குண, விக்ரஹ, விபூதியோக, ததீயாபிமாந,
உபதேசவிஷய, அந்யாபதேச ஹேத்வாதிகளும் ஸங்க்ருஹீதம் * (212) என்கிற சூர்ணிகையிலே ஆசார்ய ஹ்ருதயத்தில்
சுருக்கியருளினார்.

அதாவது (1) * இமையோர் தலைவா * என்று பரஸ்வரூபத்தினையும்,
(2) * அடியேன் செய்யும் * என்று ஸ்வஸ்வரூபத்தையும்,
(3) *பொய்ந்நின்ற ஜ்ஞாநமும் பொல்லாவொழுக்கும் அழுக்குடம்பும் * என்று விரோதி ஸ்வரூபத்தையும்,
(4) *என் நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் * என்று உபாய ஸ்வரூபத்தையும்
(5) * செய்யும் விண்ணப்பம் * என்கையாலே புருஷார்த்த ஸ்வரூபத்தையும்
ஆகிற அர்த்த பஞ்சகத்தையும் முதல் பாசுரத்திலேயே காட்டியருளியுள்ளார்.

(குறிப்பு – திருவிருத்த விஷயமான கட்டுரையாகையாலே திருவாய்மொழி எடுக்கப்படவில்லை.
மாமுனிகள் வ்யாக்யானத்திலே கண்டு கொள்வது)

திருவிருத்தமே, திருவாய்மொழியாக விரிந்துள்ளது என்பதினை ஸ்வாமி அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்
தம்முடைய ஆசார்ய ஹ்ருதயத்தில்
* ருக்கு ஸாமத்தாலே ஸரஸமாய் ஸ்தோபத்தாலே பரம்புமாபோலே
சொல்லார் தொடையல் இசை கூட்ட அமர்சுவை ஆயிரமாயிற்று * என்று காட்டியருளினார்.

கருவிருத்தக்குழி நீத்தபின் காமக்கடுங்குழிவீழ்ந்து,
ஒருவிருத்தம்புக்குழலுறுவீர், உயிரின்பொருட்கட்கு
ஒருவிருத்தம்புகுதாமல்குருகையர்கோனுரைத்த
திருவிருத்தத்து ஓரடிகற்றிரீர் திருநாட்டகத்தே

கர்ப்ப, ஜன்ம, பால்ய, யௌவன, ஜரா, மரண நரகங்களாகிற அவஸ்த்தைகளிலே சிக்கி ஸம்ஸாரத்திலே
உழல்கின்ற ஜீவர்களைப் பார்த்து, ஆழ்வார் அருளிச்செய்த திருவிருத்தத்தின் ஓரடி கற்கையே உங்களை
இந்த ஸம்ஸாரச் சுழலில் நின்றும் விடுபட ஹேதுவாக இருக்கும் – என்று
திருவிருதத்தின் பெருமையைப் பகர்வதாக அமைந்துள்ளது இத் தனியன்.

முடிவுரை

இவ்வாறு திருவிருத்தத்தின் உரைகளில் காட்டப்பட்ட சில பல விசேஷமான அர்த்தங்களை இங்கே அனுபவித்தோம்.

அடியேன் ஸ்ரீ ஸுதர்சன ராமானுஜ தாஸன்

————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஸுதர்சன ராமானுஜ தாஸன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.