சந்தியும் சந்திப்பதமும் அவை தம்மிலே தழைக்கும்
பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலு கிற்பீர்
வந்தியும் வந்திப்பவரை வணங்கும் வகை அறிவீர்
சிந்தியும் தென் குருகூர் தொழுது ஆட் செய்யும் தேவரையே
நாத முனிக்கு அன்று நாலாயிரமும் உணர்த்தி
போதம் அருள் குருகூர் வித்தகனார் -கோதில்
திருவாய் மொழி வாசக மாலைத் தேனைத்
தரவே எனக்கு அருள் செய்தார் –
———-
உண்ணி லாவிய ஐவராற் குமை தீற்றி என்னை உன் பாத பங்கயம்
நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணுகின்றாய்
எண்ணிலாப் பெரு மாயனே!இமையோர்கள் ஏத்தும் உலக மூன்றுடை
அண்ணலே! அமுதே! அப்பனே!என்னை ஆள்வானே!–7-1-1-
உண்ணிலாவியில்
இப்படி சரணம் புக்க இடத்திலும் இவர் கார்யம் செய்யாமையாலே மிகவும் அவசன்னராய்
விஷயங்களும் இந்திரியங்களும் நடையாடுகிற ஸம்ஸாரத்திலே என்னை வைத்த போதே
கைவிடப் பார்த்தானாக வேணும் -என்று நிச்சயித்து
அவன் குணங்களை சொல்லி என்னைக் கை விடாது ஒழிய வேணும் என்று கூப்பிட்டார் –
———
இன்னமு தெனத் தோன்றி ஓர் ஐவர் யாவரையும் மயக்க நீ வைத்த
முன்னம் மாயமெல்லாம் முழு வேர் அரிந்து என்னை யுன்
சின்னமும் திரு மூர்த்தியும் சிந்தித்தேத்திக் கை தொழவே அருள் எனக்கு
என்னம்மா! என்கண்ணா!இமையோர் தம் குலமுதலே!–7-1-8-
உயர்வற என்கிற பாட்டை -இன்னமுது எனத் தோன்றி -என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
உயர்வற -இன்னமுது எனத் தோன்றி -மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவாக
சப்தாதி விஷயங்களே போக்யமாகப் புத்தி பண்ணி
ஸ்ரோத்ராதிகளை விஷயங்களிலே மூட்ட புஜிக்கும்படி இருக்கிற இது தான்
தம் தாம் ஸூஹ்ருத்தத்தாலேயாய் உச்சாரயம் அற்றது
உயர்நலம் யுடையவனான நீ-நித்ய ஆனந்த யுக்தனாய் இருக்க –
எவன் அவன் -நைவேன் என்னை -இந்திரிய வஸ்யனான என்னை
இன்னமுது எனத் தோன்றிய
சப்தாதிகளே பரம போக்யமாம்படி ஸ்ம்ருதிக்கு விஷயமாய் அற்றது
அது தான் விபாகத்தில் பலிக்குமது முகப்பிலே யாகப் பெற்றேனாகில் கை விடலாம் கிடீர்
அக்ரே யத் அம்ருதம் இவ இறே
பரிணாமத்தில் விஷம் இறே
விபாகத்திலே பலிக்குமது முகப்பிலேயாகப் பெற்றேனாகில் கை விடலாம்
உபக்ரமத்தில் தோற்றிற்று ஆகில் மேல் விழாது ஒழியல் யாய்த்தே
பழியும் தர்ம ஹானியுமாய் மேல் நரகமானாலும் விடப் போகாது இருக்கை
ப்ரக்ருதி ப்ராக்ருதங்களுக்கு இங்கனே ஒரு தண்மை உண்டு
ஓர் ஐவர்
தனித்தனியே பிரபலமாய் அத்விதீயமான சப்தாதி விஷயங்கள் ஐந்தும்
யாவரையும் மயக்க
ஷூத்ரரான மனுஷ்யரோடு -அளவுடைய ப்ரஹ்மாதிகளோடு வாசியற
அறிவு கெடுக்கும்படிக்கு ஈடாக வாய்த்து அவை தான் இருப்பது
இவற்றின் அடைவு உமக்குத் தெரிந்தபடி என் என்ன -நீ மயர்வற மதி நலம் அருளுகையாலே
மயக்க நீ வைத்த
நீ அருளின பக்தி ரூபா பன்ன ஞானத்தால் அவை விஷமாகத் தோற்றிற்று
எவன் -யாவன் ஒருவன் -அவன் ஸ்ருதி ப்ரஸித்தனானவன்
மயர்வற -மயங்கப் பெறா நிற்கிற
முன்னம் மாயமெல்லாம் முழு வேர் அரிந்து
அநாதியான ஸம்ஸாரத்தை எல்லாம் ஊசி வேரோடே போம் படி ஸ வாஸனமாகப் போக்கி
என்னை
ஸம்ஸார பய பீதனான என்னை
செய்த அம்சமே திருப்தனாய் இருக்குமே அவன்
ஞான லாபம் பண்ணிக் கொடுத்தோமே என்று இறே அவன் இருக்கிறது –
அது போதாது இறே
ஸம்ஸாரத்தை ஸ வாசனமாகப் போக்க வேண்டி இருக்கும் இறே இவருக்கு
நீ அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் -உன் சின்னமும் திரு மூர்த்தியும் –
அயர்வறும் அமரர்கள் பிரகிருதி பரவசர் அல்லாதவர்கள்
பரமபதனைப் பரிசர்யை பண்ணி
தவள ஒண் சங்கு சக்கரம் என்றும் தாமரைத் தடம் கண் என்றும் சொல்லுகிற படியே
திவ்ய ஆயுதங்களையும் திவ்ய அவயவங்களையும் அவற்றுக்கு ஸத்ருசமான திருமேனியையும்
சிந்தித்து ஏத்திக் கை தொழவே அருள் எனக்கு
இவற்றை நெஞ்சாலே நினைத்தும் உள் அடங்காமல் வாய் விட்டு ஸ்தோத்ரம் பண்ணி
பின்னை திருவடிகளிலே விழும்படிக்கு ஈடாக அருள வேணும் –
வாயாலே ஓன்று சொல்லா நிற்க -நெஞ்சு வேறே ஒன்றை நினைத்தால் உனக்கு சேஷம் என்று
வேறே ஓர் இடத்திலே தொழில் செய்தல் அன்றிக்கே
மநோ வாக் காயங்கள் மூன்றும் உன் துயர் அறு சுடர் அடி தொழுது எழும் படி
ஹேய பிரதிபடமாய் நிரவதிக தேஜோ ரூபமான திருவடிகளிலே ப்ரவணமாம் படி பண்ணி யருள வேணும்
என்னம்மா
எனக்குத் தாய் போலே பரிவனனானவனே
என் கண்ணா
அந்தப் பரிவை அர்த்த க்ரியா கார்யம் ஆக்கினவனே
இமையோர் தம் குல முதலே
ஒரு நாடாக உன்னைக் கொடுத்து அனுபவிக்கும் படி இருக்கிறவன் அல்லையோ –
அநேகர் ஆசைப்பாடு ஒருவனுக்கு உண்டானால் கொடுக்கலாகாதோ
என் மனனே -என் அம்மா -என் கண்ணா -இமையோர் தம் குல முதலே
த்ரிவித கரணமும் உன் வச வர்த்தி அன்றோ
இத்தை அவன் மேல் வைத்திரு
என் அம்மா இத்யாதி
இம்மூன்றையும் உன் மேலே வைத்து அனுபவிக்கும் படி பண்ணி அருள வேணும் என்கிறார் –
——–—————
கங்குலும் பகலும் கண்துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்; ‘தாமரைக் கண்’ என்றே தளரும்;
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்; இரு நிலம் கைதுழா இருக்கும்;
செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்! இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1-
கங்குலும் பகலிலே
இவர் தசையை அனுசந்தித்த ஈஸ்வரன் -தான் நினைத்த கார்யம் தலைக்கட்டும் அளவும்
இவரைத் தரிப்பிக்கும் வழி ஏதோ என்று சிந்தியா நிற்க
அது பற்றாமை மோஹங்கதையாக -இவள் தசையைக் கண்ட திருத்தாயார் -இவளைப்
பெரிய பெருமாள் திருவடிகளிலே பொகட்டு -இவள் இடையாட்டம் பற்றி நீர் செய்ய நினைத்து இருக்கிறது என்
என்று கேழ்க்கிற பாசுரத்தாலே ஸ்வ தசையை அருளிச் செய்கிறார் –
உயர்வற என்கிற பாட்டைக் -கங்குலும் பகலும் -என்கிற பாட்டு விவரிக்கிறது எங்கனே என்னில்
ஸ்ரீ பர ப்ரஹ்ம ஆனந்தம் தொடங்கி மனுஷ்ய ஆனந்தங்களும் அஸ்திரமாய் அல்பமாய் அற்றது
அங்கன் அன்றிக்கே ஸ்ரீ யபதியான ஸர்வேஸ்வரன் ஆழ்வாருக்கு மயர்வற மதிநலம் அருளுகையாலே
பரபக்தி பர்யந்தமாகப் பிறந்தது
தர்சனம் பரபக்தி ஸ்யாத் பர ஞானந்து சங்கமம் -புனர் விஸ்லேஷ பீருத்வம் பரமா பக்தி ருச்யதே -என்கிறபடியே
பரபக்தியாலே தர்சனம் உண்டாய் -பர ஞானத்தாலே சங்கத்தை ஆசைப்பட்டு பாஹ்ய ஸம்ஸ்லேஷ அபேக்ஷை பிறந்து
அணைக்காகக் கையை நீட்ட ஞான சாஷாத்காரம் ஆகையாலே கைக்கு எட்டாமல் மோஹங்கதராக
பரிவரான பாகவதர்கள் பெரிய பெருமாள் ஸந்நிதியில் கொணர்ந்து விட்டு
இவர் தசையை அறிவிக்கிற பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
உயர்வற -கங்குலும் பகலும் -என்றபடி
உயர்வற -மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவாக –
திவா ராத்ர விபாகமாய் இருக்கையாலே -கங்குலும் பகலும் -என்கிறது –
அற என்றது -திவா ராத்ர விபாகம் அற கண் துயில் அறியாள் -என்கிறபடி
இத்தால் -லீலா விபூதியில் உள்ளார் ஊணும் உறக்கமுமாகக் களிக்க இவளுக்கு இது இல்லை என்றபடி –
உயர்வற என்று லீலா விபூதியைச் சொல்லிற்று
உயர் நலமுடையவன் என்று நித்ய விபூதி யோகம் சொல்லுகிறது
கங்குலும் பகலும் என்கிறது –
கங்குல் லீலா விபூதி -பகல் -நித்ய விபூதி
கண் துயில் அறியாள் -என்கையாலே
இவருக்கு உபய விபூதியும் ஒரு பகலாய் இருக்கிற படி –
காண்பதற்கு முன்பு உறக்கம் இல்லை
கண்டால் ஸதா பஸ்யந்தி யாகையாலே உறக்கம் இல்லை என்றபடி
எவன் அவன் என்று திவ்ய ஆத்ம ஸ்வரூபம் எப்போதும் பிரகாசிக்கிற படி
அதுக்கு மேலே மதிநலம் அருளுகையாலே பாஹ்ய ஸம்ஸ்லேஷம் கிடையாமல்
ஹர்ஷ சோகங்கள் இரண்டாலும் கண்கள் நீர் பெருகத் தொடங்கிற்று
இந்த மதி நலம் அருளினவனைக் காண ஆசைப்பட்டு -இந்த ஆர்த்தியே செப்பேடாக வரும் என்று பார்த்து
கண்ண நீர் மறையாமைக்காக கைகளால் இறையா நிற்கும்
ஊற்று மாறாமையாலே இறைக்கையே யாத்ரையாய் ஆய்த்து –
எவன் இந்த அதிகாரி -அவன் பிரதம பரிஸ் பந்தமே தொடங்கிக் காண வேணும் என்று ஆசைப்பட்டு –
கண்ண நீர் கைகளால் இறைத்து சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும்
சங்கு சக்கரங்கள் யுடையவன் எவன் அவன் என் ஆர்த்தி தீர்க்க வந்ததோ என்று
உபகார ஸ்ம்ருதியாலே கை கூப்பும்
மயர்வற்ற மதி நலத்தால் வந்த பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே வந்த வெளிச் சிறப்பாலே கை கூப்பும்
மனஸ்ஸுக்குத் திருவாழி யாழ்வான் அதிஷ்டான தேவதை யாகையாலே
ஆழ்வான் ப்ரகாஸமும் ஞானப் ப்ரகாசமுமாய் அதி ப்ரகாசமாய்த்து
பத்தாஞ்சலி புடா ஹ்ருஷ்டா என்று அஞ்சலி பண்ணிப் பார்த்துக் கொண்டு இரா நின்றாள் –
எவன் மயர்வு அற்றவன் -அவன் அருளின அந்த
தாமரைக் கண் என்றே தளரும்
ஆழ்வார்கள் அளவும் அலை எறிகிற கண்
ஆழ்வார்களை விடிலும் உம்மை விடேன் என்று நோக்கினான் –
தாமரைக் கண்களால் நோக்காய் -என்றபடியே அருளினன்
கண் என்றே தளரும்
அங்கனே வந்து தோன்றக் காணாமையாலே தளருமாய்த்து
அயர்வறும் அமரர்கள் அதிபதியான
உன்னை விட்டு எங்கனே தரிக்கேன் -என்னும்
அயர்வு -தரியாமை –
விஸ்லேஷியாமல் அனுபவிக்கிற நித்யரோபாதியும் போராதோ இவள் தரியாமை
எவன் -உன்னை விட்டு எங்கனே தரிக்கேன் -என்றவன் அவன் அதிபதியாய்
உபய விபூதி நிர்வாஹகனாய் இருக்க நான் இழந்து இருப்பதே என்கிறாள்
சுடர் அடி தொழுது எழ நினைத்து இது லபிக்குமோ லபியாதோ என்று அங்கலாய்ப்பாலே
இரு நிலம் கை துழாவி இருக்கும்
விபூதி த்வயமும் இவர் கைக்கு உள்ளே அடங்கி ஆராயும்படி ஆய்த்து
தரியாமையாலே தரை துழாவா நின்றாள் –
ஒரு பீங்கான் உள்பட்ட சந்தனம் பட்டது பூமியும் படா நின்றது –
துயர் அற்றும் இரு நிலம் கை தொழா நிற்கும்
செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய் இவள் திறத்து என் செய்கின்றாயே
துயர் அறு -ஆர்த்தியாகிற துயர் தீர்க்க வன்றோ திருவரங்கத்தே வந்து சாய்ந்து அருளிற்று
திருவரங்கத்தாய் யுன் சுடர் அடி -அத்யந்தம் ஸூ லபனான உன்னுடைய
ஹேய ப்ரத்ய நீகமான திருவடிகளைத் தொழுது எழு என் மனனே
எனக்கு பவ்யமான நெஞ்சே தொழுது எழு என்னா நின்றாள்
ஏக தேச வாசிகளாய் ஸாரூப்யம் பெற்று அவன் நீர்மையே தாரகமாய்
ஜலான் மத்ஸ்யா விவோத்ருதவ்-என்று இருக்கிறவர்களைப் போல் அன்றோ இவளும்
செங்கயல் -முஹூர்த்தம் அபி ஜீவாவா -என்னும் அளவல்லவே
ந ஜீவேயம் க்ஷணம் அபி -என்று இருக்கிற இவள் திறத்து என் செய்கின்றாயே
ஆர்த்த ரக்ஷணத்திலே தீஷித்து கோயிலிலே ஸாலா ப்ரவேஸம் (யாக சாலையில் போவது) பண்ணி
உன் சீலாதி குண விசிஷ்டரான சிரௌதிகளோடே சரணாகத ரக்ஷணம் பண்ண இருக்கிற உமக்கு
ஆர்த்தருமாய் சரணாகதருமான இவள் திறத்து என் செய்கின்றாய்
பரத்வமும் வ்யூஹமும் தேச விப்ரக்ருஷ்டம்
அவதாரங்கள் கால விப்ரக்ருஷ்டம்
ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வ அவஸ்தையிலும் பண்ணி அனுபவிக்கலாவது
கோயிலிலே அணித்தாய் வந்து இருக்கிற உன்னை விட்டு எங்கனே தரிப்பது
ஊணாலும் உறக்கத்தாலும் -சூது சதுரங்கத்தாலும் பொழுது போக்குமவளோ இவள்
உன்னடிமையாலேயே தரிக்கப் பார்க்கும் இவள் திறத்து என் செய்கின்றாய்
தொழுது எழும்படி பார்க்கிறாயா
கைவிடப் பார்க்கிறாயா என்கிறாள்
ஆர்த்தையான இவள் திறத்து என்று விரஹம் தின்ற உடம்பைக் காட்டுகிறாள்
நித்ய விபூதியை விட்டு ரக்ஷணத்திலே த்வரிதனாய் வந்து இருக்கிற உன் ஸ்வரூபம் எது -விளம்பம் எது –
விளம்பம் பொறாதாரொடு விளையாட்டு உண்டோ
என் செய்கின்றாயே
தொழுகை ஸ்வரூபம் என்று இருக்கிறாயோ
குற்றம் என்று கை விடுகிறாயோ -என்கிறாள் –
———————–
வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தித் தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்! என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்!
வெள்ளச் சுகமவன் வீற்றிருந்த வேத ஒலியும் விழாவொலியும்
பிள்ளைக் குழா விளையாட்டொலியும் அறாத்’திருப் பேரெயிற் சேர்வன் நானே- .–7-3-1-
வெள்ளைச் சுரி சங்கில்
இப்படி மோஹித்துக் கிடந்தவர் திரு நாம ப்ரசங்கத்தாலே மோஹம் தெளிந்து
தென் திருப்பேரையிலே எழுந்து அருளி இருக்கிற
மகர நெடும் குழைக்காதர் பக்கலிலே அபஹ்ருத சித்தரானபடியை அருளிச் செய்கிறார்
உயர்வற -என்கிற பாட்டை -வெள்ளைச் சுரி சங்கு -பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் தம் தாம் ப்ராப்ய பிராப்பகங்களுக்குத்
தகுதியான ப்ரமாணங்களைத் தம் தாம் நெஞ்சங்களிலே கொண்டு நடத்தா நிற்பார்கள்
அது தான் அல்ப அஸ்த்ரங்களாய் இருக்கையாலே உயர்வு அற்று இருக்கும்
உயர்நலம் உடையவன் எவன் அவன் வேத ப்ரதிபாத்யனாகையாலே அந்த வேதமானது
ஆனந்தாதி குணங்களை அளவிடுவோம் என்று பேசப்புக்கு
அப்ராப்ய மனஸா ஸஹ -என்று அளவிட மாட்டாமல் மீண்டது இறே
அப்படிப்பட்ட பரமமான ப்ரஹ்மம் எனக்கு மயர்வற மதிநலம் அருளிக் காட்டக் கண்டேன்
கண்டபடி என் என்னில்
வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தித் தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்!
நான் பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே கண்டால் போலே யார் காண வல்லார் என்ன
நீர் தான் கண்டபடி சொல்லீர் என்ன
வெள்ளைச் சுரிசங்கு
ஸூ த்த ஸத்வ மயமாய் -ப்ரணவ ஆகாரமாய் -திருமந்திர பூரிதமான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும்
மந்த்ரார்த்தை நடத்துகிற அருளார் திருச்சக்கரமும்
திருக்கையிலே பூ ஏந்தினால் போலே ஏந்திக் கொண்டு
தாமரைக்கண்ணன்
ஜிதந்தே புண்டரிகாஷன் -என்னும் அயர்வறும் அமரர்கள் அதிபதியானவன் –
அவர்களைக் கண் அழகாலே தோற்ப்பிக்குமா போலே என்னைத் தோற்ப்பித்து
என் நெஞ்சினூடே புள்ளைக் காடாகின்ற -அருளின பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே த்ரிபாத் விபூதியில் அடங்காமல்
வானவர் நாடு என்னுமா போலே நெஞ்சை நாடு என்னும்படி
மஹா நகரமாக்கி
புள்ளைக் காடாகின்ற
வேதமயமான பெரிய திருவடியை மேல் கொண்டு வேதாந்த வேத்யனானவன் தன்னையே என் நெஞ்சு
பிராமண புரஸ்சரமாக பின்செல்லும் படி கடாக்ஷித்து
புள்ளைக்காடாகின்ற வாற்றை -நெஞ்ச மா நகரிலே உலாவி அருளா நின்றான் –
ஆற்றைக் காணீர்
கண்கள் காதுகள் முதலான கரணங்கள் உஜ்ஜீவிக்கும்படி காண மாட்டீகோளோ என்ன
நீ கண்டபடி சொல்லிக் காண் -நீ தானே அனுபவியாதே என்ன –
என் சொல்லிச் சொல்லுகேன்
ஹம்ஸ சக்ரவாகங்கள் போலே ஆழ்வார்களும்
காடு படர அலர்ந்த தாமரை போலே இருக்கிற திவ்ய அவயவங்களும்
தடாகத்தில் நீரும் இலையும் போலே இருக்கிற திருமேனியும்
அத்தை மனத்துக்கு இனிய இருக்கிறதொரு மஹா மேரு தரித்தால் போலே இருக்கிற
பெரிய திருவடி யோடே கூட நித்ய முக்தர்கள் மங்களா ஸாஸனம் பண்ண இவர் திரு உள்ளத்திலே உலாவுகிற படி
இப்படி இறே அனுகூலரோடே பரிமாறும் படி
அன்னைமீர்காள்!
செந்தாமரைக் கண்ணன் துயர் அறு சுடர் அடி தொழுது எழுமினோ
அஞ்ஞான அந்தகாரம் நீங்க வேதாந்த வேத்யனைச் சுடர் அடி தொழுங்கோள் என்ன
எங்கே போய்த் தொழுவது என்ன
வெள்ளச் சுகமவன் வீற்றிருந்த வேத ஒலியும் விழாவொலியும் பிள்ளைக் குழா விளையாட்டொலியும்
அறாத்’திருப் பேரெயிற் சேர்வன் நானும் என் மனனும்
நீங்களும் என்னை நிஷேதியாதே கூடச் செல்லுங்கோள்
வெள்ளைச் சுகம்
பிரிவிலும் அரையாறு படாதபடி அவன் கலவியில் தேற்றிக் கொண்ட ஸூக அதிசயம் இருக்கும் படி
அவன் வீற்று இருந்த
நான் இட்ட கால் இட்ட கையாய் இருக்கிறது
அவ்விடம் வேத ஒலியும் விழா ஒலியாய் இருக்கிறது –
அவன் நெஞ்சு உகந்து தன் புணர்ப்பு சொல்லக் கேளா நின்றான்
விழா ஒலியும்
இவளைத் தோற்பித்த வெற்றி மாலை கேட்டு நெய் ஆடலா நின்றான்
நித்ய உத்சவம் நடக்கும்படி காணும் அவன் இருக்கிறது
நான் இருக்கும் இடம் இறே வெறும் வீச்சாகக் கடக்கிறது
பிள்ளைக் குழா விளையாட்டு ஒலியும் அறா
பருவம் நிரம்பாத பாலர்கள் எல்லாம் பகவத் அனுபவமே யாத்ரையாய் இருக்கிறது
பாலா அபி க்ரீடா மாநா க்ருஹ த்வாரேஷு ஸர்வஸ –இத்யாதிப்படியேயாய் இருக்கிற
திருப்பேரையிலே சேர்வன் -நானும் நெஞ்சும்
அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழுவோம்-நீங்களும் போருங்கோள் என்கிறாள் –
——————
ஆழி எழச் சங்கும் வில்லும் எழத் திசை
வாழி எழத் தண்டும் வாளும் எழ அண்டம்
மோழை எழ முடி பாதம் எழ அப்பன்
ஊழி எழ உலகங் கொண்ட வாறே.–7-4-1-
ஆழி எழ -வில்
ஸர்வேஸ்வரன் இவருக்கு உண்டான ஆற்றாமை தீர்க்கைக்காகத் தன்னுடைய விஜய பரம்பரையை
பத்தும் புத்தாக்க காட்டிக் கொடுக்கக் கண்டு
அவனுடைய விஜய பரம்பரையை அனுஷ்ட்டித்து ஹ்ருஷ்டராகிறார் –
உயர்வற என்கிற பாட்டை இது விவரிக்கிறது -எங்கனே என்னில்
உயர்வற -மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் அந்நிய சேஷத்வ
ஸ்வ ஸ்வா தந்தர்யங்களாலே உயர்வு அற்று இருந்தார்கள்
அவற்றை மாற்றாத திரு உள்ளம் பற்றி வாமன அவதாரம் பண்ணி அவற்றை அறும் படி பண்ணினான்
எங்கனே என்னில்
உயர்வற உயர்நலம் உடையவன் எவன் அவன் வாமனனாய் மாவலி பக்கலிலே சென்று மூவடி மண் இன்றே தா என்ன
உதக பூர்வகமாகக் கொடுக்க வாங்கின போது மூவடி மண் கொண்டு அளக்க த்ரிவிக்ரமனாய் கிளற
முன்னைய வண்ணமே கொண்டு அளவாய் என்று நமுசி பிரப்ருதிகள் வளர ஒட்டாமல் தகைந்து கொள்ள
அப்பொழுது -ஆழி எழ
தேவா ஸ்வ ஸ்தானம் ஆயந்தி நிஹதா தைத்ய தானவா ந பயம் வித்யதே கிஞ்சித் ஜிதம் பகவதா ஜகத்
என்கிறபடியே தனக்காக்கிக் கொண்ட செயல் இறே
ராவணாதிகளைப் போலே தலை அறதே குண லாபம் உண்டாகையாலே நின்ற நிலையில் தோற்ப்பித்துக் கொண்ட படி
நாயகனுக்கு அடியார் இறே வென்று கொடுப்பார்
நலமுடையவன் எவன் அவன் -ஆனந்தாதி குண பூர்த்தியாலே ஸ்ருதி ப்ரஸித்தன் ஆனவன்
என்னுடைய ஜகதாகாரதையைப் பாருங்கோள் என்று
மயர்வற மதிநலம் அருளித் தான் திரு உலகு அளக்கப் புக்கவாறே –
ஆழி எழச் சங்கும் எழ
ஸ்வாமியுடைய உத்யோகம் அறிந்து ஆயுதங்கள் முற்பட்ட படி
காட்டுக்கு முற்பட்ட இளைய பெருமாளைப் போலே யாய்த்து முற்பட்ட படி
த்ரும சீரைர் அலங்க்ருத -என்று முற்கோலினால் போலே யாய்த்து
தோற்றத்திலே அரசு போராயிற்று -ஹேதி ராஜன் இறே
ஆழி எழ
ஆயிரம் காதம் பறப்பதின் குட்டி ஐந்நூற்றுக் காதம் சிறகடிக் கொள்ளுமா போலே
உத்யோகத்திலே ஈஸ்வரனைப் பார்க்க விஞ்சின படி
சங்கும் வில்லும் எழ
மற்றை ஆழ்வார்களும் மற்றைக் கையிலே ஏறினார்கள்
இரை பெறாத இடத்தே இருந்து -சீறு பாறு -என்னக் கடவ வர்கள்
இரை யுள்ள இடத்திலே ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடார்கள் இறே
இடங்கை வலம்புரி நின்று ஆர்ப்பரிக்கா நின்று அடங்காரை ஒடுங்கு வித்த ஆழி
அரவணை மேல் தோன்றல் திசை அளப்ப பூவாரடி நிமிர்த்த போது
இவர்கள் இப்படி பொருத படி காண்கைக்கு
அவன் மயர்வற மதிநலம் அருளுகையாலே கண்டு
திசை வாழி எழ
ஜகதாகாரத்தைக் கண்டு இவ்வஸ்துவுக்கு என்ன தீங்கு வருகிறதோ என்றும்
திவ்ய ஆயுதங்களுக்கு என்ன தீங்கு வருகிறதோ என்றும்
பல்லாண்டு ஒலி எழா நிற்கும்
திசை வாழி எழ
திக்குகள் தோறும் அனுகூலருடைய வாழி வாழி என்ற மங்களா ஸாஸன த்வனி கிளர
ஏத்த ஏழு உலகும் கொண்ட கோலக் கூத்தன் இறே
தண்டும் வாளும் எழ
தூசித் தலையிலே -ஸ்ரீ கதை ஆழ்வானும் -ஸ்ரீ நந்தக ஆழ்வானும்
நாம் இருக்கத் திருவாழி ஆழ்வான் முதலானாரோ பொருவதுவும் வெற்றி கொள்வதுவும் – என்று
போர் புரப் பாய்த்துப் பொருகிற படி
நமுசி வந்து -என் இது மாயம் என் அப்பன் அறிந்திலன் முன்னிய வண்ணமே கொண்டு அளவாய் -என்ன
மன்னு நமுசியை வானில் சுழற்றி எறிந்தவன்
அன்று
பிறந்த அன்றே செய்த வியாபாரம் இறே
அண்டம் மோழை எழ
இந்திரனுக்காக த்ரை லோக்யம் அத்தனையும் அளக்க வேண்டிய வியாஜத்தாலே
அந்நிய சேஷத்வ நிவ்ருத்தி பண்ணிற்று
அவ்வளவில் நில்லாதே
அண்ட அவகாசம் உள்ள இடம் எங்கும் சென்று அளந்து -அண்ட கடாஹத்திலே திருவடிகள் சென்று
ஒண் மிதியும் புனலுருவி ஒருகால் நிற்ப -என்று
கீழில் அண்ட கடாஹத்தை யுருவிற்று ஒரு திருவடிகள்
அது பிளந்து ஆவரண ஜலம் மேலே எழ -ஆவரண ஜலத்துக்கு நடுவே
ஒரு கழக் கோடி மிதக்குமா போலே மிதக்கும் இறே அண்டம்
முடி பாதம் எழ
திரு அபிஷேகத்து அளவும் திருவடிகள் கிளர
அப்பன் ஊழி எழ
அயர்வறும் அமரர்களுக்கு அதிபதியானவன் ஜகதாகாரனாய் நின்ற நிலையை உபகரித்தவன்
அப்பன் -ஸ்வாமி யானவன்
ஜகதாகாரதையைக் கண்டு -இதுக்கு என் வருகிறதோ என்று அஞ்சின அச்சம் தீர்ந்து
முக்தரும் மங்களா ஸாஸனம் பண்ணித் துயர் அறு சுடர் அடி தொழுதார்கள்
துயர் அறுகை உபய விபூதிக்கும் ஈஸ்வரனுக்கு ஒக்கும் இறே
அப்பன் ஊழி எழ
அந்நிய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்தர்யங்களாய்ச் சென்ற காலம் போய்
பகவச் சேஷத்வ பாரதந்த்ய பரா காஷ்டையாலே நல்லடிக் காலம் ஆய்த்து
அப்பன் ஊழி எழ உலகம் கொண்டவாறே
மஹா உபகாரகனான ஸர்வேஸ்வரன் உலகு அளந்த பிரகாரத்திலே பொன்னடி
அந்நிய சேஷத்வமாகிற ஹேயப் ப்ரத்ய நீகமாய் அத்யுஜ்ஜ்வலமான திருவடிகளை
என் மனனே தொழுது ஏழு -என்கிறார் –
————-
கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ?
புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஒன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே.–7-5-1-
கற்பார் இராமனில்
இவ் விஜயத்துக்கு அடியாக அவன் விபவ குணங்களை அனுசந்தித்து ஹ்ருஷ்டராய்
படுக்கைக்கு கீழே நிதி கிடக்கப் புறங்கால் வீங்குவாரைப் போலே
இக்குணங்களும் நடையாடா நிற்க ஸம்ஸாரிகள் இழப்பதே என்று அவர்கள் இழவுக்கு வெறுத்தார்
உயர்வற என்கிற பாட்டை விவரிக்கிறது -எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் வேத சாஸ்த்ராதிகளாலே ப்ரதிபாதிக்கிறது
உபாய உபேயங்கள் பலவாய் இருக்கும்
அது தான் ஒன்றுக்கு ஓன்று உயர்வாயும் தாழ்வாயும் இருக்கையாலே ஏற்றம் அற்று இருக்கும் –
உயர்நலம் உடையவன் எவன் அவன் என்று சக்கரவர்த்தி திருமகனை இறே சொல்கிறது
கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ?
உயர்நலமான ஆனந்தாதி கல்யாண குணங்களை யுடைய இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ
நீர் எத்தாலே அறிந்து சொல்லுகிறீர் என்ன
ஸ்ருதி ப்ரஸித்தன் யாவன் ஒருவன் -அவன் மயர்வற மதிநலம் அருளின
அந்த பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே
பரத்வமே பிடித்து அவதாராதிகளை ஆராய்ந்து பார்த்த இடத்து இந் நேர் காணாமையாலே
பதர் கூட்டிக் கழிக்கவும் பற்றாது –
இவ்விஷயத்தைக் கழிந்த கற்கும் கல்வி எல்லாம்
தத் ஞானம் அஞ்ஞானம் அத் அன்யத் யுக்தம் -என்றும்
வித்ய அந்நிய சில்ப நைபுணம் -என்றார்கள் இறே
பகவத் லாபத்துக்கு உடலான ஞானமே ஞானம் ஆகிறது -அல்லாதது அஞ்ஞானம் ஆய்த்து
ஆகையால் கற்பார் -ஒருவன் ஒன்றைக் கற்பது அப்போதைக்கு இனிது என்றாதல் –
பின்பு நன்மையை விளைக்கும் என்றாதல் -என்றாய்த்து கற்பது
அவை இரண்டும் இவ்விஷயத்தில் ஒழிய இல்லை என்கை
இவருக்கு அதிசயம் ஏது என்ன
புற்பா முதலாப் புல்
பா என்று படர்த்தியாய் படருகிற புல் என்னுதல்
தூர்வாதி ஸ்தாவராந்தமாக என்றபடி
எறும்பாதி ஒன்று இன்றியே
ஜங்கமங்களிலே கடையான எறும்பு தொடக்கமாக
பிரம்மாவை எண்ணினால் அநந்தரம் நிற்கக் கடவது இறே பிபீலிகை
புற்பா முதலாக -என்று
இவற்றுக்கு ஒரு ப்ரதான்யம் சொல்லுகிறார் அல்லர்
ராம விஷயீ காரத்துக்கு முற்பட்டார் இவைகள் என்கிறார்
வெள்ளமானது தாழ்ந்த இடத்தே ஓடுமாப் போலே
ஸ்தாவரங்களிலே தண்ணியது புல்லு
ஜங்கமங்களிலே தண்ணியது எறும்பு
இவை இரண்டையும் ஓக்க எடுக்கையாலே -ஞான பலம் மோக்ஷம் -என்கிறவத்தைத் தவிர்க்கிறது
சைதன்யம் உண்டாகையும் இல்லையாகையும் அப்ரயோஜம் -நலமுடைய பெருமாள் கிருபைக்கு என்கிறது
இவற்றினுடைய கர்ம தாரதம்யங்கள் அப்ரயோஜம் என்கிறது
நிருபாதிக சேஷி பக்கல் அப்ரதிஷேதமே பேற்றுக்கு வேண்டுவது
அபி வ்ருஷா பரிம் லாநா
உபதப் தோத காநாத்ய -இத்யாதிப்படியே
ராம விரஹத்தாலே கொதித்தனவே
ஓன்று இன்றியே
தன் நிர்ஹேதுக கிருபையாலே
ஓன்று இன்றியே
பேற்றுக்கு ஈடாக இருபத்தொரு சாதனம் இன்றிக்கே இருக்கச் செய்தே -என்றபடி
தன் சிறுமையும் பேற்றின் பெருமையும் பார்த்தால் தன் பக்கல் ஒரு சாதனம் இன்றிக்கே இருக்கும் இறே
இனி அங்கீகார ஹேது அயோத்யா வாஸமே இறே
அயர்வறும் அமரர்கள் -அயராதே ஸர்வவித கைங்கர்யங்களும் பண்ண வீற்று இருந்து ஆளும் அவன்
அயோத்யா வாஸம் பண்ணுகையாலே
நற்பால் அயோத்தியில்-நல்ல இடத்தை யுடைத்தான திரு அயோத்தியிலே
இத்தால் நல மிகுதியே ராம பக்தியை விளைவிக்கை
தேசோயம் ஸர்வ காம துக் -என்னக் கடவது இறே
அயோத்தியில் வாழும்
வர்த்திக்கும் என்னாதே வாழும் என்றது -அத்தேச வாஸமே வாழ்வு -என்கைக்காகவே
வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள்
நல்லோர்கள் வாழும் நளிர் அரங்கம்
ப்ராப்ய தேசத்திலே வர்த்தகம் தானே ப்ராப்யம் -ப்ராபகன் அவன் ஆகையால்
நமக்கு கர்ம சம்பந்தத்தால் குறைந்து தோற்றுகிறது -தர்மி ஐக்யத்தாலே எங்கும் ஒத்து இருக்கும் இறே
ஆகையால் சுடர் அடி தொழுது எழும்படி
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே.–
நல்ல ஸ்வ பாவத்தை யுடைத்தாம் படி செலுத்தினான்
அதாவது
இவற்றினுடைய கர்ம தாரதம் யத்தாலே வரில் இறே அவ்வோர் அவ்வோர் அளவுகளுக்கு ஈடாக இருப்பது
அவனாலே வந்தது ஆகையால் எல்லாருக்கும் ஓக்க நன்மை விளைந்தது
மயாத்வம் சமனுஞ்ஞாதோ கச்ச லோகான் அநுத்தமான் என்று இங்கு உண்டான பற்று அற்று
ஒரு தேச விசேஷத்திலே சென்று அனுபவிக்கும் அனுபவத்தைக்
கொடுக்க வல்லவன் இங்கு தன்னை ஒழிய செல்லாமை விளைக்கை பணி யுடைத்து அன்று இறே
நற்பாலுக்கு உய்த்தனன்
நலமுடையவன் -நலம் அருளின நற்பாலுக்கு உய்த்தனன் –
ஸ்வ ஸ்வரூப பர ஸ்வரூப ஸ்வராட் பவதி என்கிற இடத்தில் உற்றபடி –
ராஜா ஒருவனுக்கு ஒரு நாடு கொடுத்தால் அவனுடையவர் ஸ்வ தீனமாய் அவன் ஆணையும் ஆஜ்ஜையுமாக
அவனுடைய ஸ்வா தந்தர்யத்தையே நடக்கும்படி பண்ணிக் கொடுக்குமா போலே
சம்சாரி சேதனனுக்குத் தலையான சதுர்முகனுக்கு கையடைப்பான நாட்டுக்குள்ளே அவன் ஸ்வா தந்தர்யத்தையும் தவிர்த்து
இவற்றினுடைய கர்ம பாரதந்தர்யத்தையும் தன் குணத்தால் பதம் செய்து
தன்னைப் பெற்ற போது ஜீவிக்கும்படியாய் பெறாத போது உறாவும்படியான தன்மையை உண்டாக்கினான்
ஆனபின்பு அவன் சுடர் அடி தொழுது எழு என் மனனே
வெறும் சிலவற்றைக் கற்பரோ
—————-
வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?
போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை
பேர்த்துப் பெருந்துன்பம் வேரற நீக்கித தன் தாளின் கீழ்ச்
சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்றே.–7-5-10-சேர்த்து-சேர்த்தி -பாட பேதம் –
உயர்வற -பாட்டை -இதுவும் விவரிக்கிறது -எங்கனே என்னில்
வைகுண்டேது பரே லோகே ஸ்ரியா சார்த்தஞ் ஜகத்பதி ஆஸ்தே விஷ்ணுர் அசிந்த்யாத்மா
பக்தைர் பாகவத ஸஹ -என்கிறபடியே
ஸ்ரீ யபதியாய் -அவாப்த ஸமஸ்த காமனாய் -ஸ்ரீ வைகுண்ட நிகேதனான ஸர்வேஸ்வரன்
திரு உள்ளத்தில் நினைந்த படி
ஜகத் ஸ்ருஷ்டி ஸம்ஹாராதிகளுக்கு ப்ரஹ்மாதிகளை அமைத்தோம்
வேத ஸாஸ்த்ர ப்ரவர்த்தனங்களுக்கு மன்வாதிகளையும் வியாச பராசர பாராசார்ய
போதா யநாதிகளையும் அமைத்தோம்
மோக்ஷ சாஸ்த்ரங்களுக்கும் வேதாந்தங்களுக்கும் தாத்பர்யங்களை அறிந்து அதில் சாரமான
மந்த்ர த்ரயத்தாலே சரணாகதி வழியை நடத்துகைக்காக
ஆழ்வார்களை அவதரிப்பித்து -அவர்களுக்கு மயர்வற மதிநலம் அருளி
அவர்கள் முகேந ஜகத்தைத் திருத்திக் கைக்கொண்ட படி சொல்கிறது
இதில் ஆழ்வார்களைக் கரண பூதராக யுடைய நம்மாழ்வார் திருவாய் மொழி முகத்தால்
சரணாகதியை அருளிச் செய்தார்
திருமாலால் அருளப்பட்ட சடகோபன் மயர்வற்று ஜகத்தைத் திருத்தப் பார்த்த இடத்து தம்மை முந்துறப் பார்த்தார்
தம்மைப் பார்க்கவே தம் திரு உள்ளம் -ஒண் டொடியாள் கேள்வன் ஒருவனையே நோக்கும்
உணர்வு உண்டாய்த் தமக்கு முந்துற்ற நெஞ்சாய் இருந்தது –
அத்தைக்குறித்து மேல் மேல் என உபதேசித்து ஈஸ்வரன் தமக்கு மயர்வற மதிநலம் அருளினால் போலே
தம் திரு உள்ளத்துக்குத் தாமே கரணி யாகையாலே கரணமான நெஞ்சைக் கொண்டாடுகிறார் –
எங்கனே என்னில் -உயர்வற -வார்த்தை அறிபவர் –
பஞ்சம வேதமான மஹா பாரதத்தில் உபநிஷத் பாகமான ஸ்ரீ கீதையில் 18 அத்தியாயத்திலும்
தத்வ விவேக முதலான ஸர்வ தர்மங்களும் -பாரதத்திலும் வ்யாஸாதிகள் சொன்ன ஸகல தர்மங்களும்
ஸ்ரீ கீதாச்சார்யன் அருளிச் செய்த சரம ஸ்லோகத்தில் -மாம் -என்று தன்னைத் தொட்டுக் காட்டின
மாம் ஏகம் என்கிற ஸ நாதன தர்மமானதும்
எல்லாவற்றையும் கூட வார்த்தை என்கிறது
ப்ரயோஜனவத்தானது இறே -மாம் ஏகம் -என்று பலவத்தானது இது இறே –
இத்தை இறே உயர்வற உயர்நலம் -என்கிற பாட்டு விவரிக்கிறது
உயர்வு -ஸர்வ தர்மான் -வார்த்தை அறிபவர் -என்றது
சாதனாந்தரங்களையும் வார்த்தை என்றது –
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் ப்ரபாகாந்தரங்களிலே ஒருவருக்கு ஒருவர்
உயர்வும் தாழ்வும் ஆகையால் உயர்த்தி அற்று இருப்பார் ஆகையால் உயர்வற என்கிறது
ஸர்வ தர்மான் என்று மோக்ஷ பல சாதனங்கள் எல்லாம் கூடாது தர்மம் என்றபடி
வார்த்தை என்றது தர்ம சப்தங்களை
பரித்யஜ்ய -உயர்வற வார்த்தை அறிபவர் -தர்மவத்தான வார்த்தை அறிபவர் –
த்யாஜ்ய உபா தேயமான வார்த்தை அறிபவர் என்கிறது
பாரத கீதைகளில் தர்ம சப்தமான வார்த்தைகள் பந்த மோக்ஷங்களுக்குப் பொதுவாய் இருக்கையாலே த்யாஜ்யம்
மாம் ஏகம் என்றது மோக்ஷத்துக்கே ஹேதுவாகையாலே உபா தேயம் என்கிறது
வார்த்தை அறிபவர் -இப்படி அறிபவர்
மாம் என்றது உயர்நலம் உடையவன் என்றபடி
மாயவன் என்றதும் மாம் ஏகம் என்றபடி மாயா வயுநம் ஞானம்
மாம் என்று சர்வஞ்ஞத்வ சர்வசக்தித்வ ஸுலப்யங்கள்
உயர்நலம் உடையவன் என்றது ஆனந்தாதி குணங்கள்
ஆக இவைகளால் ஸர்வ குண ஸம் பூர்ணன் என்றபடி
ஏகம் சரண் -யவன் அவன் –மாயவற்கு ஆள் -ஏகம் சரண் என்று
ஸஹ காரி நிரபேஷமான ஸ நாதந தர்மத்தைக் காட்டுகிறது –
எவன் அவன் -ஸ நாதன தர்மமான ஷாட் குண்ய விக்ரஹம் –
ஸ்வரூப ப்ரகாசகமான திவ்ய மங்கள விக்ரஹத்தைக் காட்டுகிறது
இப்படிப்பட்ட ஸுலப்யாதி குண விசிஷ்டனை மாயவன் என்கிறது
வ்ரஜ -மயர்வற -ஆளன்றி –
வ்ரஜ -ஸ்வீகரி -மயர்வற -ஸ்வீ கார வஸ்துவை விஸ்மரியாதே -ஆளன்றி -கூழுக்கு ஆள்படாதே
தேவதாந்தரம் சாதனாந்தரம் ப்ரயோஜனாந்தரங்கள் -ஆகிய கூழுகளுக்கு ஆள் படாதே
அஹம் த்வா -மயர்வற மதிநலம் அருளினன் -மாயவற்கு ஆளன்றி ஆவரோ –
அஹந்த்வா -ஸர்வஞ்ஞனாய் –ஸர்வ சக்தனான -நான்
அஞ்ஞனாய் அசக்தனான யுன்னை -மயர்வற மதி நலம் அருளி -சாதனாந்தர புத்தியைத் தவிர்த்து –
பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே ஸநாதன தர்மத்தை அடைவித்து
மாயவற்கு ஆளன்றி ஆவரோ -என்கிறபடியே நித்ய கிங்கர ஸ்வ பாவனாக்கினான்
நானே -ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி என்று அருளினவன் -எவன் அவன் –
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருக்குமவன் –
போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை பேர்த்துப் பெருந்துன்பம் வேரற நீக்கின படி
ஸர்வ பாபேப்யோ -என்றது
மோக்ஷயிஷ்யாமி -அயராமல் அடிமை செய்கிற நித்ய முக்தரிலும் அதிசயிதமான
போக்ய வஸ்துவாக உம்மைக் கொண்ட படி
உமக்கு ஜரா மரணாதிகள் ஆகிற பாபங்கள் ஸவாசனமாகப் போச்சுது
ஆத்மாபிராப்தியாகிற மஹா துக்கம் போச்சுது
மாஸூச -பயப்படாதே
ஸர்வ நியாந்தாவான நான் யுன்னை அனுக்ரஹித்தால் பாபங்கள் நிற்க வற்றோ
யிஷ்யாமி -ணிச்சாலே
நீயும் வேண்டா நானும் வேண்டா -உன்னுடைய ராஜ குல மஹாத்ம்யத்தாலே
அவை தன்னடையே விட்டுப் போம்
மாஸூச –சங்கையை விட்டு இரு
துயர் அறு சுடர் அடி தொழுத யுனக்கு சங்கை பயன்கள் யுண்டோ –
தன் தாளின் கீழ் சேர்த்தவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்று இரு
ஹேய ப்ரத்ய நீகமான திருவடிகளிலே சேர்த்து -உன்னைப் பெற்ற என் துக்கமும் தீர்ந்து
உனக்கு ரக்ஷையே செய்கிற இத்தை எண்ணி மனஸ்ஸூ நிர்மலமாய்
பத்தாஞ்சலி புடா ஹ்ருஷ்டா என்கிறபடியே
நிர்ப்பரோ நிர்ப்பரோஸ்மி என்று இரு என் மனனே -என்கிறார் –
————————–
பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ!
பாமரு மூவுலகும் அளந்த பற்ப பாதாவோ!
தாமரைக் கண்ணாவோ!தனியேன் தனி ஆளாவோ!
தாமரைக் கையாவோ! உன்னை என்று கொல் சேர்வதுவே?–7-6-1-
பாமரு மூவுலகில்
அவன் குணங்களையும் அழகையும் பெருமையையும் அனுசந்தித்து இப்போதே காண வேணும்
என்று பெரு மிடறு செய்து கூப்பிட்டார் –
உயர்வற என்கிற பாட்டை -பாமரு மூவுலகு -விவரிக்கிறது –எங்கனே என்னில்
உயர்வற -ப்ரஹ்ம ஆனந்தம் தொடங்கி மனுஷ்ய ஆனந்தத்து அளவும் தனித்தனியே
கார்யம் காரணங்களாய் இருப்பார்கள் ஆகையால் உயர்வறும்
உயர்வற உயர் நலமுடையவன் -பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபன்
ஆனந்தாதி கல்யாண குணங்களை யுடையவனாகையாலே இக்குணங்களுக்கு அடியான காரண குணனானவன் என்கிறது –
பாமரு மூவுலகம்
பா என்று பதார்த்த வாசகமாய் பா மருவி இருந்துள்ள -பதார்த்தங்களினுடைய நெருக்கத்தை யுடைத்தான
மூ விலகும் படைத்த பற்ப நாபன் -உயர்வற உயர்நலம் யுடையவன் –
ஆக ஜகத் காரண பூதனாய் ஆனந்தாதி கல்யாண குண உபேதனான ஸர்வேஸ்வரன்
எவன் அவன் ஸ்ருதி ப்ரஸித்தமான ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்கள் யுடையவன் –
மூ வுலகும் படைத்த பற்பநாபன்
கீழும் மேலும் நடுவுமான லோகங்களை மூவுலகு என்கிறது
இவற்றை யுண்டாக்கின ஜகத் காரணமான கமலத்தை நாபியிலே யுடையவனே
யுனக்கு என் காரணத்வம் தெரிந்தபடி என் என்ன
நீ மயர்வற மதிநலம் அருளுகையாலே அறிந்தேன்
பக்தி ரூபா பன்ன ஞானமான வெளிச் செறிப்பாலே அறிந்தேன்
மதிநலம் அருளின நீ பாமரு மூவுலகும் அளந்த பற்ப பாதனான நீ தாய் போலே இத்தை யுண்டாக்கி அதுக்கு முலை கொடுத்து வளர்க்குமா போலே
உன் தேனே மலரும் திருப்பாதத்தை அவர்கள் சிரஸ்ஸிலே வைத்தது –
மஹாபலி பக்கலிலே இரந்து பெற்றுத் திரு வுலகு அளக்கிற வ்யாஜத்தாலே ஜகதாகாரதையை எனக்கு காட்டித் தந்தவனே
தேவ திர்யக் மனுஷ்ய ஜங்கம ஸ்தாவரங்களுக்கு எல்லாம்
ஓர் தனி வித்தாய் -முதலில் சிதையாமையும் மூவர் தனி முதலான நீ
மாவலி வ்யாஜத்தாலே ஜகதாகாரதயைக் காட்டி
மூவுலகும் அளந்த பற்ப பாதாவோ
படிக்கு அளவாக நிமிர்த்த பாத பங்கயமே தலைக்கு அணியாய் -என்ற
ஆசையுடைய நான் இருக்க இச்சையும் இல்லாதார் தலையிலே திருவடிகளை வைப்பதே என்ன
அது செய்தமை யுண்டு -உமக்கு அபேக்ஷிதம் ஏது என்ன
மதிநலம் அருளின தாமரைக் கண்ணாவோ
புண்டரீகாக்ஷனான நீ -அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து திரு உலகு அளந்த வியாஜத்தாலே
அந்நிய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்தர்யங்களை மாற்றி யுன் கால் கீழ் இட்டுக் கொண்டிலையோ
அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்தரானவர்களுக்கு எதிர் விழி கொடுக்கும் கண்ணை யுடையவனே
நான் -தாமரைக் கண்ணாவோ தனியேன் தனி ஆளாவோ -என்று
முறையிட வேணுமோ
ஜகத் உத்பத்தியும் வளர்க்கையும் ஜீவனம் இடுகையும் உன் பக்கலிலேயாய் இருக்க
லோக மரியாதையும் வேண்டாவோ
எனக்கும் -அவலோகன தானேன பூயோ மாம் பாலய -என்னுமா போலே –
திருக்கண்களால் குளிர நோக்காய் என்று திருக்கண்களின் அழகை அனுசந்தித்தார் –
அக்கண் அழகையே ஜீவனமாய் இருக்கும் நித்ய ஸூரிகளின் திரளிலே இருக்கக் கண்டிலர்
அத்தாலே தனியேன் என்கிறார்
தனியேன் தனியாளாவோ
ஸ்த்ரீகளினுடைய நோக்கே தாரகமாய் இருக்குமவர்களுடைய திரளுக்கும் கூட்டு இன்றிக்கே
உபய விபூதியிலும் கூடாதே என்னை மூன்றாம் விபூதியாக்கி அருளுகிறவனே –
அன்றிக்கே -உன் கிருபையையே தாரகமாய் இருக்கிற என்னை –
உன் கிருபைக்கு வேறு விஷயம் என்னை ஒழிய உண்டோ
என்னை ஆளுகிற உன் கிருபையையே அன்றோ
இப்படி ஆளுகிறவன் யாவன் ஒருவன் அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
என் தனிமை யாகிற ஹேயத்தைத் தீர்த்து பரஞ்சோதி சுடர் அடியைத் தொழுது விழுந்து இருக்கிற என்னை
தாமரைக் கையாவோ
திருவடிகளிலே அநந்ய கதியாய் -அகிஞ்சனனாய் விழுந்து இருக்கிற என்னை
உன் தாமரைக் கண்ணாலே நோக்கி தாமரைக் கையாலே எடுத்து அணைக்க வேண்டாவோ –
அக்ரூரனை அணைத்திலையோ -அவ்வளவு போரேனோ
ஸோப்யேநம் –இத்யாதி -திருக்கையில் அடையாளம் அத்தனையும் இலைச்சினப் படியே அவன் உடம்பில்
காணலாம்படி அவனை ஸ்பர்சித்து அவன் அந்த ஸ்பர்சத்தாலே ஸ்தப்தனாய் நிற்க
கையைப் பிடித்து ஏறிட்டுப் பின்னை அணைக்கையாலே இருவருக்கும் ஒன்றாய்க் கண்டது அத்தனை
கரேண மிருதுநா தேவ பாபாந் நிர்மோசயன் ஹரி என்கிறபடியே
உன்னை என்று கொல் சேர்வதுவே
பூர்ணே சதுர் தசே வர்ஷே பஞ்சம்யாம்-என்று நாள் இட்டுக் கொடுக்கலாவது தம்பி யார்க்கோ
அசாதாரண அடியாரானால் இன்ன நாள் பெறக் கடவது என்று நாள் இட்டுக் கொடுக்கலாகாதோ
சேஷ பூதனாகில் சேஷி கொடுத்த நாள் பெறக் கடவன் என்று ஆறி இருக்க மாட்டு கிறிலேன்
தனியேன் உன்னை என்று கொல் சேர்வது என்பான் என்
நாராயணனை ஒழிந்து இருப்பது ஒரு நாளும் இல்லையே
இனிச் சேருகையாவது அடியார்கள் குழாங்களை யுடன் கூடுகை இறே
உன்னை என்னா நிற்கச் சேரும்படி என் என்ன
ஒண் டொடியாள் திரு மக்களும் நீயுமே நிலா நிற்பக் கண்டு வைக்கையாலே
உன்னைத் சேர்ந்து என் மனனும் நானும் தொழுது எழ வேணும் என்கிறார் –
———–———-
ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றங் கொலோ அறியேன்
ஆழியங் கண்ண பிரான் திருக்கண்கள் கொலோ அறியேன்
சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றுங் கண்டீர்
தோழியர் காள்!அன்னைமீர்!என் செய்கேன் துயராட்டியேனே.–7-7-1-
ஏழையர் ஆவியில்
இவ்வழகு மறக்க ஒண்ணாத படி மனஸ்ஸிலே உரு வெளிப்பாடாய் நலிய நோவு பட்டபடியை
அருளிச் செய்கிறார்
இது உயர்வற என்கிற பாட்டை விவரிக்கிறது -எங்கனே என்னில்
உயர்வற உயர் நலமுடையவன் ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றங் கொலோ அறியேன்
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் தம் தாம் அபிமத சாதனங்கள் பெறுகைக்கு
பகவத் சமாஸ்ரயணம் பண்ணினாள் பகவான் கடாக்ஷிப்பது கண்ணைச் செம்பளித்து யாய்த்து கடாக்ஷிப்பது
ஆகையாலே சாதன பலங்கள் அல்ப அஸ்திரமாய் இருக்கையாலே கடாக்ஷமும் அல்பமாய்த்து
ஆகையால் உயர்வு அற்று இருக்கும்
தமக்கு ஆகிஞ்சன்யமும் கண்டு தம்மிடத்தில் தயை மிக்கு இரண்டு திருக்கண் மலர்களும் விகஸிதமாய்
தயா விஷயம் கிடைக்கையாலே கிருபா ப்ரவாஹம் பெருகப் புக்கது
நீஞ்சியும் அனுபவிக்க மாட்டாமை படுகிற பாட்டை அன்பருக்கு பரிவருக்கும் சொல்லித் தரிக்கப் பார்க்கிறார்
நலமுடையவன் ஏழையர் ஆவி உண்ணும்
லீலா விபூதியில் உள்ளாரைக் கர்ம பலங்களைக் கொண்டு நலிகிறது
அதில் ஒன்றும் இல்லாத ஏழையாய் -பகவத் சேஷமாய் -பரதந்த்ர ஏக பரையாய் இருக்கையாலே நலியா நின்றது
இதர விஷய ப்ராவண்யரை நலியலாகாதோ –
தன்னிடத்தில் ப்ரேமத்தால் அபலையான என்னாவியை யுண்ணா நின்றது
ம்ருத்யு போலே பிராணனை வாங்கா நின்றது
பிரிந்து ஆற்றாமையை விளைத்தவனுக்கு அன்றியே -இது ஆகாது -என்று ஹிதம் சொல்லி மீட்கப் பார்க்கிற
தாய்மார் தோழிமாருக்கும் இன்றிக்கே அபலைகளையே முடிப்பன இரண்டு கூற்றமோ
தன் கண் அழகு தான் அறிந்திலனே -கண்ணாடிப் புறத்திலும் கண்டு அறியானோ -கண்டானாகில் வாரானோ –
ராம சரம் போலே ஒப்பனை அழியாதே முடிக்கிற படி
அறியேன்
அறியேன் என்பான் என் -அறிந்தது அன்றோ சொல்கிறாய் என்ன
உயர் நலம் என்று ஆனந்தாதிகளும் சவுந்தர்யாதிகளும் யுடைய புண்டரீகாக்ஷன் நிர்ஹேதுகமாக
மயர்வற மதிநலம் அருளினன்
எவன் அவன் -ஆழியங் கண்ண பிரான் திருக்கண்கள் கொலோ அறியேன்
மயர்வற -மாதரார் கயற்கண் என்னும் வலையை அறுத்து
காரத் தண் கமலக் கண் என்றும் நெடும் கயிறு பிடித்து என்னை ஈர்த்துக் கொண்டு விளையாடுகிற ஈசன்
பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரிணாம் -பரதந்த்ரையை அழியச் செய்கைக்குச் சொல்ல வேணுமோ
ஆழி யம் கண் -அம்ருதக்கடல் என் மேல் பொங்கி அலை எறிகிற படி
பிரான் -மதிநலமான பக்தி ரூபா பன்ன ஞானத்தை -அந்த அம்ருத சாகரத்தை அலை மேல் யலையாய்
வந்து என் நெஞ்சிலே தேக்குகிற மஹா உபகாரகன்
அம்ருதமானது ஜீவிக்கப் பண்ணுமோ முடிக்குமோ
எவன் அறியேன் -இதுக்கு முன்பு பிரிந்து அறியாமையாலே திருக்கண்கள் பாதகம் என்று வ்யுத்பத்தி இல்லை –
உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணன் என்று இரே கேட்டு இருப்பது
இது தான் எனக்கு கூற்றம் ஆக வேணுமோ
லோகத்துக்குத் தாரகமான கண் பாதகமாவதே
ஆனால் தப்பினால் என்ன
சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றுங் கண்டீர்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் எவன் அவன்
த்ரிபாத் விபூதியாக சூழ்ந்து இருந்து -ஜிதந்தே புண்டரீகாஷ என்று தோற்பிக்கும் கண்
அயர்வறும் அமரர்கள் -அக்கண் அழகுக்குத் தோற்று கடாக்ஷ அம்ருத பானத்தாலே நித்யரானவர்கள்
அவசமாய் நம இத்யேவ வாதிந -என்னும்படி தோற்பித்தவன்
சூழவும் இத்யாதி
மூல பலத்தின் அன்று பார்த்த பார்த்த இடம் எல்லாம் பெருமாளே யானால் போலே ராமசரத்துக்கு ராக்ஷசர்
தப்பினாலாயத்து இக்கண் அழகுக்கு அபலைகளாய் இருப்பார்க்குத் தப்பலாவது
ஸர்ப்ப யாகம் போலே அபலைகள் அடைய இக்கண் அழகுக்கு துவக்குண்டு திருவடிகளிலே விழும்படியாய் இருந்தது
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே என்னும்படியாய் இருக்கை
தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றும் கண்டீர்
ப்ரத்யக்ஷத்திலும் அத்தலையால் வரவு ஆனால் போலே உரு வெளிப்பாட்டிலும்
அத்தலையாலே வந்து தோன்றவாய்த்து தான் அறிகிறது –
துயர் அறு சுடர் அடி வந்து தோன்றும் கண்டீர்
தோழியர் காள்!அன்னைமீர்!
உங்களுக்கு அது தோற்றுகிறது இல்லையோ
சிலருக்குச் சொல்லி சிலருக்கு மறைக்கும் படி யன்று இவளுக்குப் பிறந்த தசா விசேஷம்
என் செய்கேன் துயராட்டியேனே.–
இத்தைத் தப்பப் பார்ப்பதோ
அனுபவிக்கப் பார்ப்பதோ
எத்தைச் செய்வேன் துயராட்டியேன்
ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபிபேத குதச்சன -என்று இருக்க வேண்டி இருக்க -அங்கன் அன்றிக்கே
அவசியம் அநுபோக்தவ்யம் -என்கிறபடியே
பழைய விஸ்லேஷமே ஸித்திக்கும் படியாயிற்று என்கிறாள் –
——–——–
மாயா! வாமனனே!மது சூதா! நீ அருளாய்
தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய்க் காலாய்த்
தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்
நீயாய் நீ நின்றவாறு இவை என்ன நியாயங்களே!–7-8-1-
மாயா வாமனனிலே
இப்படி உருவெளிப்பாட்டால் நோவு பட்ட இடத்தில் முடியாதபடியாகப் பண்ணின வைசித்ரியைக் கண்டு
அவனுடைய விசித்திர ஜகதாகாரதையை அருளிச் செய்கிறார் –
————
பாசங்கள் நீக்கி என்னை உனக்கே அறக் கொண்டிட்டு நீ
வாச மலர்த் தண் துழாய் முடி மாயவனே!அருளாய்
காயமும் சீவனுமாய்க் கழிவாய்ப் பிறப்பாய் பின்னும் நீ
மாயங்கள் செய்து வைத்தி;இவை என்ன மயக்குகளே.–7-8-5-
உயர்வற என்கிற பாட்டை இது விவரிக்கிறது -எங்கனே என்னில்
உயர்வற -பாசங்கள் நீக்கி –
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் நாநா விதமான கர்ம பாசங்களாலே
பந்தகங்களான அவர்களுடைய உயர்வும் தாழ்வுமாய் வருகிறவர்கள் புஜித்து அறும்
பாசங்கள் நீக்கி
பல செய்வினை வன் கயிற்றால் சூழ்த்துக் கொண்ட அவித்யாதிகளை நீக்கி
உயர்வற உயர்நலம் உடையவன் எவன் அவன் -உன் நலமான ஆனந்தாதி குணங்களாலே
அளவிட ஒண்ணாத உன் நலம் பாராதே
ஹேயமான என்னை யுனக்கே அறக்கொண்டிட்டு மயர்வற மதிநலம் அருளினவன் எவன் அவன்
எத்தைக்காட்டி என்னில் -அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் ஒருவன் அவன் –
வாச மலர்த் தண் துழாய் முடியைக் காட்டி வசீகரித்தான்
பாசங்கள் நீக்கி -மயர்வற மதிநலம் அருளி என்னை யுனக்கே அறக்கொண்டிட்ட மாயவன்
ஆதி ராஜஸ்ய ஸூசகமான மாலையையும் முடியையும் காட்டி யாய்த்து புறம்பு உண்டான பற்று அறுத்தது
துயர் அறு -தூக்கமே வடிவான -காயமும் ஜீவனுமாய் ஜென்ம ஜரா மரணாதிகள் ஆகிற துயர் அறுத்து
கழிவாய்ப் பிறப்பாய் -போவது வருவதாகிற ஜென்மத்தை சவாசனமாகப் போக்கி –
பின்னும் நீ உன் சுடர் அடி தொழது எழப் பண்ணி பின்னும் மாயங்கள் செய்து
ஹேயமான என் மனஸ்ஸை மயர்வற மதி நலம் அருளி சுடர் அடி தொழுது எழப் பண்ணி
இச் சரீரத்தில் தானே
மாயங்கள் செய்து வைத்தி இவை என்ன மயக்குகளே
நீ அங்கீ கரித்தாயோ என்று இருந்தேன்
இங்கே வைக்கையாலே கைவிடப் பார்த்தாயா என்று இரா நின்றேன்
என் பிரமம் தீர ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேணும்
உயர் நலம் யுடையனான நீ -மதி நலம் அருளி -பாசங்கள் நீக்கி -என்னை யுனக்கே அறக்கொண்டிட்டு
அயர்வறும் அமரர்கள் முன்பாக ததீய சேஷத்வ பர்யந்தமாக்கி அவர்களை முன்னிட்டுச்
சுடர் அடி தொழுது எழப் பண்ணி சரீரத்தில் இட்டு வைத்தாலாமோ
சுடர் அடி தொழுதார்களை துயர் இருக்கிறதோ -துயரில் மூட்டுவதோ –
மாயவன் அருளாய்
இந்த ஆச்சர்யத்தை ஆச்சர்ய யுக்தனான நீயே அருளிச் செய்ய வேணும் என்கிறார் –
—————
என்றைக்கும் என்னை உய்யக் கொண்டு போகிய
அன்றைக்கு அன்று என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை
இன் தமிழ் பாடிய ஈசனை ஆதியாய்
நின்ற என் சோதியை என் சொல்லி நிற்பனோ?–7-9-1-
என்றைக்கும் என்னை -யில்
உன்னால் அல்லது செல்லாத என்னை இஸ் ஸம்ஸாரத்திலே வைத்த போதே
இதுக்குப் பிரயோஜனம் என் என்று கேழ்க்க
எனக்கும் என்னுடையாருக்கும் அனுபவிக்கும் படிக்கு ஈடாக உம்மை வைத்துக் கொண்டு
திருவாய் மொழி பாடுவிக்க வைத்தோம் என்று சொல்ல
தனக்கு சில கவி பாடுவிக்க வேண்டினால் அதுக்கு ஈடான ஞான சக்த்யாதிகளை யுடையரான
முதல் ஆழ்வார்களைக் கொண்டு பாடுவியாதே
என்னைக் கொண்டு பாடுவிப்பதாகச் சொன்ன வார்த்தையின் நீர்மை இருந்தபடியே என்று
தம் பக்கல் அவன் பண்ணி அருளும் உபகாரத்துக்குப் பிரதி உபகாரம் காணாமல் தடுமாறினார்
ஸ்ரீ யபதியான ஸர்வேஸ்வரன் ஆர்த்த ரக்ஷணம் பண்ணி ரஷித்த படி இது
உயர்வற என்கிற பாட்டை இது விவரிக்கிறது -எங்கனே என்னில்
உயர்வற -என்றைக்கும் என்னை –
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்தளவும் என்றைக்கும் என்று
அநந்தமான காலம் தோறும் ஸர்வேஸ்வரன்
ஆள் பார்த்து உழி தருவான் -என்கிறபடியே ஆள் தேடிக் கிடையாமல் சிந்திக்கிற படி –
ப்ரஹ்மாதிகள் ஸ்ருஷ்ட்யாதி கார்யங்களிலே அமைந்தார்கள்
வ்யாஸாதிகள் புராணாதிகளிலே அமைந்தார்கள்
பத்தர் கர்ம அனுகுணமாக ஸ்வர்க்க நரகாதிகளுக்கு அமைந்தார்கள்
முமுஸுக்களில் சிலர் கைவல்ய மோக்ஷத்துக்கு அமைத்தார்கள் –
சிலர் பகவத் அனுபவத்துக்கு அமைந்தார்கள்
நித்யரும் முக்தரும் பகவத் ஆனந்தாவஹராய் ஸாம கானத்திலே அமைத்தார்கள்
இனித் திருவாய் மொழி முதலான செஞ்சொற் கவி பாடுவிக்கைக்கு ஆழ்வாரைத் தேடி எதிர் சூழல் புக்கு
எனத்தோர் பிறப்பும் எனக்கே அருள் செய்ய விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் திரு விக்ரமனையே –என்கிறபடியே
தேடிப் பார்த்த இடத்தில் -அசன்னேவ-என்று அஸத் கல்பனான என்னை -சந்தமேனம் ததோ விது -என்னும்படி
மயர்வற மதிநலம் அருளிக் கவி பாடுவித்துக் கொண்டான் என்கிறார்
உயர்வற என்றைக்கும் என்னை
உயர்வற கீழ்ச் சொன்னவர்கள் பதங்களிலே புகாதபடி ப்ருதக்காக்கி
உயர்நலம் யுடையவன் -என்றைக்கும் என்னை உய்யக் கொண்டு -எவன் அதிகாரி யானவன் -அவன் உய்யக் கொண்டவன் –
ஆ முதல்வன் இவன் என்று தேற்றி நான் உய்யும் படியும் தான் உளனாம்படி யுமாகத் தேற்றி
நான் உய்யும்படியும் தான் உளனாம்படியுமாகத் தேற்றித் திரு உள்ளம் பற்றி
மயர்வற போகிய அன்றைக்கன்று -காலம் தோறும் காலம் தோறும் மயர்வற -அஞ்ஞான அசக்திகள் அற
மதிநலம் அருளினன் எவன் அவன் என்னைத் தன்னாக்கி தன்னைப் போலே ஞான சக்திகள் யுண்டாம்படி பண்ணி
எவன் -மயர்வற்றவன் -அவன் மயர்வு அறுத்தவன்
என்னால் -தனக்குத் தக்கக் கவி பாடச் சக்தனான என்னால்
தன்னை -என்னை ஸ்வரூப ஞானத்திலே நிறுத்தி
தன்னை -அயர்வறும் அமரர்கள் அதிபதியான தன்னை -எவன் கவி பாடினவன் -அவன் -இன் தமிழ் பாடிய ஈசன் –
அயராமல் ஸாம கானம் பண்ணுமவர்கள் அபர்யாப்த்த அம்ருத தாஸிகள் போல் அன்றிக்கே அதிலும் இனிதான
பக்தாம்ருதம் விஸ்வ ஜன அநு மோதனம் ஸர்வார்த்தம் ஸ்ரீ சடகோபன் வாங்மயம்
ஸஹஸ்ர ஸாக உபநிஷத் ஸமா கமம் நமாம் யஹம் திராவிட வேத சாஹர-மான புகழ்
வண் தீம் கவி பாடின ஸ்வாமியை
எவன் -பாட்டு கற்கிறவர் -அவன் -ஆதியாய் நின்ற என் சோதியைத் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
என் சொல்லி நிற்பனோ
ப்ரஹ்மாதிகள் முதலானோர் கவிகள் அல்ல
தான் பாடின கீதை அல்ல
என்னைக் கொண்டு பாடுவித்த கவி உபய விபூதியிலும் அடங்காததாய் இருந்தது
என் சொல்லி நிற்பன்
இதுக்கு ஒரு உபகார ஸ்ம்ருதியும் காண்கிறிலேன் -என்கிறார் –
—-
வைகுந்த நாதன் என் வல்வினை மாய்ந்து அறச்
செய்குந்தன் தன்னை என்னாக்கி என்னால் தன்னை
வைகுந்தனாகப் புகழ் வண் தீங்கவி
செய்குந்தன் தன்னை எந்நாள் சிந்தித்து ஆர்வனோ?–7-9-7-
உயர்வற என்கிற பாட்டை இதுவும் விவரிக்கிறது -எங்கனே என்னில்
உயர்வற உயர்நலம் யுடையவன் எவன் அவன் -வைகுண்ட நாதன் என்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் ப்ரஹ்மாதிகள் முதலானோரைக் கொண்டு
வேதம் முதலானவற்றைப் பாடுவித்துக் கொண்ட இடத்தில்
இப்படி வாய்க்காதே ஐஹிக ஆமுஷ்மி காதிகளிலே மண்டி விழுந்தார்கள் ஆகையால் உயர்வற என்றது
உயர்நலம் உடையவன் எவன் அவன் -ஆனந்தாதி கல்யாண குண பரிபூர்ணன ஸர்வேஸ்வரன்
பரம உதாரமான இனிய கவியை என்னைக் கொண்டு பாடுவித்துக் கொண்ட
மஹா உபகாரத்துக்கு இவனைக் கால தத்வம் உள்ளதனையும் அனுபவியா நின்றாலும் ஆர்வேனோ என்கிறார்
உயர்வற உயர்நலம் யுடையவன் எவன் அவன் வைகுண்ட நாதன் எனக்குப் பரிகரித்தவன்
என்னோடு இணைய நின்றான் ஒருவனாய்த் தான் ஆறி இருக்கிறேனோ
அப்ராப்ய மனஸா ஸஹ -என்று வேதங்களாலும் அளவிட ஒண்ணாத பராத்பரனானவன் –
வைகுண்ட நாதன்
குந்தம் என்று தள்ளுகையாய் -வைகுந்தா என்று தள்ளா வான பதத்துக்கு நாதன் என்றபடி –
ஆக இத்தால் ஆனந்த ஸ்வரூபன் என்றபடி
இப்படி உபய விபூதி நாதனானவன் -வைகுண்ட நாதன் என் -என்று என்னைத் தனக்கு நாதனாக எண்ணினான்
ஒரு ஸம்ஸாரி சேதனனை மேல் விழுந்து உகவா நின்றால் நான் எங்கனே ஆறி இருப்பேன்
இப்படி அவன் உகக்கக் கூடுமோ என்னில்
லோக நாத புரா பூத்வா ஸூ க்ரீவம் நாதம் இச்சதி -என்ற அதுக்கும் அவ்வருகாய் இருந்தது இதுவும்
அவரை நாதனாக உடையாராகைக்கு யோக்யதை ஸம்பாதிக்கிற படியாய்த்து முன்பு லோக நாதரானது –
பெறுவார் பெறாது ஒழிவார் -இச்சியா நின்றார் -கிடையாதா அதில் தான் இறே இச்சை தான் செல்வது
சரா மோவா நரேந்திரஸ்ய ப்ரஸாதம் அபி காங்ஷதே -என்றால் போலே யாய்த்து
அவன் என்னை வேண்டி வந்து நின்றபடி –
வைகுண்ட நாதன் என் –
என்னை ஸ்வ தந்திரனாக்கித் தான் ஆஸ்ரித பரதந்த்ரனாய் இரா நின்றான் -இதுக்கு ஹேது
என் ஆகிஞ்சன்யமும் அநந்ய கதித்வமும் கண்டு இவனே வைகுண்ட நாதன் என் –
நமக்கும் நம்முடையாருக்கும் நாதன் என்று திரு உள்ளம் பற்றி இரா நின்றான்
வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் -என்று சமர்ப்பியா நின்றான்
அடியார் நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நுன்னிலை இடம் -என்று கொண்டாட நின்றான்
என்னை அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசா க்கித் தான் அவர் இளவரசு வைகுந்தக் குட்டனாய் இருந்தான்
மஹா ராஜர் தாம் நாதனான வாசி தோற்ற முதலைகளும் தாமுமாகப் பிராட்டியைத் தேடிக்கொண்டு –
ராவண வதம் பண்ணி மீண்டு எழுந்து அருளித் திரு அயோத்யையிலே திரு அபிஷேகம் பண்ணின
பின்பு இறே க்ருத்யக்ருத்ரானார் இறே
அப்படியே இவரும் அறிய ஒண்ணாத படி ஸம்ஸார காந்தராந்தத்திலே துர்க த்ரயமான மிஸ்ர ஸத்வம் ஆகிற
லங்கையில் புக்கு அஹங்காராதிகள் ஆகிற ராஷஸிகளால் நோவு பட
ஆச்சார்யனாகிற திருவடி திருமந்திரம் ஆகிற திருவாழி மோதிரம் கொடுத்துத் தெளிவிக்கத் தெளிந்து
தச இந்த்ரியாநநம் கோரம் எம்ங்கிற ராவணனாகிற இந்திரிய ஜயத்தைப் பண்ணி சரீரமாகிய லங்கையில் நின்றும்
ப்ரஹ்ம ரந்தரம் என்கிற தலைவாசல் திறந்து கொண்டு புறப்பட்டு அயோத்தியை அபராஜிதை என்று சொல்லப்படும்
ஏர்கொள் வைகுந்தம் ஆகிற காற்றிலே ப்ரைவசிப்பித்து வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் என்று
வீடு கொடுக்கும் படி அருளினான் ஆகையால் வைகுண்ட நாதன் என் -என்று இதுவும் ஒரு த்ருஷ்டாந்தம்
இப்படி நாதனாகப் பற்றினவன் -வல்வினை மாய்ந்தற –
வினை பின்பு செய்தது என் என்ன -வினை போக்யமாம் படி தான் மயர்வற மதிநலம் அருளினவன்
எவன் அவன் -வல்வினை மாய்ந்தற -வல்வினை -ஸர்வ சக்தனானாலும் போக்க ஒண்ணாத வழிய பாபங்கள்
மாய்ந்தற -போன இடம் தெரியாமல் போக –
எவன் அவன் பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே தன் வசமாக என்னை ஆக்கிக் கொண்டு
செய்குந்தன்
என் விரோதியைப் போக்கின சுத்தி யோகத்தை யுடையவன் யாவன் ஒருவன் அவன் அயர்வறும்
அமரர்கள் அதிபதி
எவன் அவன் -ஹேய ப்ரதிபடரான நித்யருக்கு நாதனானவன் என்னை நாதனாக்கி
நின் அடியாருக்கு என் செய்வன் என்றே இருத்தி -நின் அடியாருக்குத் தீர்த்த அசுரருக்குத் தீமைகள் செய்குந்தா -என்னக் கடவது இறே
ஆஸ்ரிதருடைய பாபங்களை அநாஸ்ரிதர் பக்கல் விடும்படியான சுத்தியை யுடையவன் என்கை
குந்தன் என்று திருநாமம் ஆகவுமாம் -முகுந்த குந்தர குந்த -என்றது
அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்னைத் தன்னாக்கி
வல்வினையே ஸ்வரூபமான என்னை -தன் சுத்தியை எனக்கு உண்டாக்கி ஞான சக்த்யாதிகளால்
தன்னோடே ஒக்கப் பண்ணி-என்னால் தன்னை இன் தமிழ் பாடிய ஈசனை
அஞ்ஞான அசக்திகள் இல்லாத நித்ய ஸூரி ஸேவ்யனானவன் வேதங்களும்
அப்ராப்ய மனஸா ஸஹ -என்று மீண்ட விஷயத்தை
என்னால் தன்னை இன் தமிழ் பாடிய ஈசனை -என்று வைகுந்தனானப் புகழ வண் தீம் கவி
நான் புகழ்ந்ததால் தான் ஸ்ரீ வைகுண்ட நாதனாய் ஸர்வ ஸ்வாமியாய் பரஞ்சோதி யாகா நின்றான்
பிதா புத்திரனுக்கு நீர் வார்த்துப் பசுவைக் கொடுத்துத் திரும்பவும் வாங்குமா போலே இதுவும் நித்ய விபூதி இறே
இவர் புகழ்ந்தவாறே நித்ய விபூதி யாயத்ததாக நினைத்து இருந்தான்
உயர்வற உயர்நலம் தொடங்கி இவ்வளவும் வர வரப் புகர் ஏறி வாரா நின்றது இறே
எங்கனே என்னில்
ஆத்ம வஸ்துவும் நித்யமாய் இருக்கச் செய்தே -அசன்னேவ-என்றும்
சந்தமேனம்-என்றும் சொல்லுகிறவோ பாதியாய்த்து இதுவும்
இவன் உளனாகத் தானும் உளனான படி
செய் குந்தம் தன்னை எந்நாள் சிந்தித்து ஆர்வேனோ
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே -என்று இவரைக் கொண்டு கவி பாடின பின்பு தான் துயர் அற்ற படி
இவர் துயர் அறத் துயர் அற்ற படி -சரீரத்துக்கு வந்த துயர் சரிரீ தானே அனுபவிப்பான்
வ்யஸநேஷு மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித போலே இறே படுவது
தத் வியதிரிக்த ப்ரேமம் இறே நோயாவது -அது தீருகை இறே நோய் தீருகை அப்போது இறே இவனும் துயர் அற்றது
செய்குந்தன் தன்னை எந்நாள் சிந்தித்து ஆர்வேனோ
அவன் பண்ணின உபகாரம் கனத்து இரா நின்றது
உபகார ஸ்ம்ருதிற்கு காலம் போருகிறது இல்லை
நான் என் செய்வேன் என்கிறார்
சரீர விஸ்லேஷத்தில் வாய் புகும் நீராகையாலே அனுசந்திக்க அவசரம் இல்லை
இங்கு இருந்த நாள் காலம் போருகிறது இல்லை
பண்ணின உபகாரமோ கனத்து இரா நின்றது
என் மனனே தொழுது எழு என்கிறார்
கரண பிரதானம் தொடங்கி இன்கவி சொல்ல வல்லேனாம் படி பண்ணின உபகாரத்துக்கு ப்ரத் யுபகாரம் உண்டோ
உன் ஸ்வரூப அனுரூபமான அஞ்சலியைப் பண்ணு என்கிறார் –
———-——–
இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும் இவ் வேழுலகை
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்
அன்புற் றமர்ந் துறைகின்ற அணி பொழில் சூழ் திரு வாறன்விளை
அன்புற் றமர்ந்து வலஞ்செய்து கைதொழும் நாள்களு மாகுங் கொலோ?–7-10-1-
இன்பம் பயக்க -லில்
இப்படி மஹா உபகாரகனான ஸர்வேஸ்வரனை திருவாறன் விளையிலே
பெரிய பிராட்டியாரும் தானுமாக எழுந்து அருளி இருக்கிற சேர்த்தியிலே கண்டு
அநுகூல வ்ருத்திகளைப் பண்ண என்று மநோ ரதித்தார்
உயர்வற என்கிற பாட்டை இது விவரிக்கிறது -எங்கனே என்னில்
எம்பெருமான் ஆழ்வாருக்கு மயர்வற மதிநலம் அருளித் திருவாய் மொழி ஓதுவித்து
அந்த அத்புதமான கானத்தை சர்வரும் கூடின ஸ்தலத்திலே இருந்து கேழ்க்கத் திரு உள்ளமாய்த்
தானும் பிராட்டியாருமாக இருந்து நித்யரும் முக்தரும் புத்தரும் முமுஷுக்களும் கூடத்
திருவாறன் விளையிலே எழுந்து அருளி இருந்து ஆழ்வாரை அருளப்பாடிட்டு
பாடச் சொல்லிக் கேட்டு ஆனந்திக்கிறபடி சொல்கிறது
உயர்வற உயர் நலம் இன்பம் பயக்க
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் அம்ருத சாஹரத்தில் திவலை போலே
இவர்கள் ஆனந்தம் தோன்றாது ஆய்த்து
ஸூர்ய ப்ரகாஸத்தில் மின்மினி போலே ப்ரகாஸம் அறும் படி பர ப்ரஹ்ம ஆனந்தம் நிரவதிக தேஜோ ரூபமாய் இருக்கும்
ஆகையால் அவர்களும் அவர்களை சொல்லும் கானமும் உயர்வு அற்று இருக்கும்
உயர் நலம் என்றும் -இன்பம் பயக்க எழில் மலர் மாதரும் என்றும் –
உயர் நலம் -உகார வாஸ்யையான பிராட்டியுடைய ஆனந்தமும் நலமுடையவன் என்று எம்பெருமானுடைய
ஆனந்தமுமாக இவருடைய ஆனந்தமும் ஸ்ருதி ப்ரஸித்தம் இறே
இப்படி ஆனந்தாதி குண பூர்த்தியை யுடையவன் யாவன் ஒருவன்
அவன் இன்பம் பயக்க எழில் மலர் மாதரும் தானும் இவ் வேழ் உலகை இன்பம் பயக்க இனிதுடன்
வீற்று இருந்த ஆள்கின்ற எங்கள் பிரான்
ஆழ்வாருக்கு மயர்வற மதிநலம் அருளித் திருவாய் மொழி ஓதுவித்து இருவரும் கூட இருந்து
இவரைப் பாடச் சொல்லிக் கேட்டு ஆனந்திக்கிற ஆனந்தம் திராவிட வேத சக்கரத்தின் திவலை
என்னும்படி கான அம்ருத சாகரம் கொந்தளிக்கிற படி –
எவன் மூ வுலகு இன்பம் பயக்கப் பாடுகிறவர்
அவன் கானம் கேட்க்கிறவர்
எவன் அவன் -வக்தாவான ஆழ்வாரும் ஸ்ரோதாவான ஸ்ரீ யபதியும் மயர்வற மதிநலம் பெற்று
ஏழு உலகும் இன்பம் பயக்க -திருவாய் மொழி கேட்டார்கள் -எல்லாம் இன்பம் பயக்க இருந்தார்கள் –
இனிதுடன் வீற்று இருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்
பக்தாம்ருதம் விஸ்வ ஜன அனு மோதனமான இன்பக்கவி பாடுவித்தோன்
இந்திரையோடு மதிநலமான பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே பகவத் கிருபா அம்ருத வ்ருஷ்டி மஹா பிரளயம்
உடைந்து பெருகுமா போலே ஸஹஸ்ர முகமாய் கங்காதி தரங்கங்கள் போலே
சரணாகதியும் ஆன்ற தமிழ் மறை ஆயிரமுமாய் ப்ரவஹியா நின்றது -அது பொங்கிப் பாட்டாய்த் தலைக்கட்டிற்று
இப்படி அருளினவன் யாவன் ஒருவன் அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி -நிர்ஹேதுகமாக அருளின பாட்டுக் கேட்டு
அன்புற்று அமர்ந்து உறைகின்ற அணி பொழில் சூழ் திருவாறன் விளையிலே
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே -என்னும் படி இனிதான படி –
திருவாறன் விளையும் தளிரும் முறியுமாகக் கொந்தளித்தது –
அபி வ்ருஷா பரிம் லாநா -இத்யாதிப்படியே யாய்த்து
எவன் -அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினவர்
அவன் -என்னால் தன்னைப் பாடிய ஈசன்
என்னோடே கூடத் தென்னா தெனா வென்று -ஆளத்தி வைக்கிறவன் யாவன் ஒருவன் -அவன் எங்கள் பிரான் –
திருவாறன் விளையிலே ஆழ்வார் திருவாய் மொழி பாடக் கேழ்க்கலாம் தேசம் என்று
அன்புற்று அமரர் வலம் செய்து –
அந்நித்ய விபூதியை மறந்து இங்கே அன்புற்று அமர்ந்து உறைகின்றான்
நித்யர் முக்தர்கள் சாமகானம் பண்ணத் தான் அவாக்ய அநாதர-என்று இருக்கிற ஸ்வாமி யானவன்
கேட்டு ஆரார் -என்கிறபடியே இனிது ஆராமையாய் -தானும் கூட ப்ரீதி பிரேரிதனாய்க் கொண்டு பாடத் தொடங்கினான்
அந்தாமத்து அன்பு செய்து -இத்யாதிப்படியே யுகந்து இரா நின்றான்
நீயும் அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
அன்புற்று அமர்ந்து வலம் செய்து கை தொழும் நாள்களும் ஆகும் கொலோ
திருவடிகளுக்குத் துயர் அறுகையாவது -நித்ய விபூதியில் நித்யர் முக்தர் பாடுகிற சாமகானம்
நித்ய விபூதி அளவிலே யாகையாலே ப்ரீதி பிறந்தது இல்லை –
ஆழ்வார் இன்பம் பயக்க எழில் மலர் மாதரும் தானும் இவ் வேழ் வுலகை இன்பம் பயக்கப் பாடின
திருவாய் மொழி கேட்டு ஆரார் வானவர்கள் -என்று உபய விபூதியும் தளிரும் முறியுமாகக் கொந்தளித்த படியும்
இந்த லீலா விபூதியில் உள்ளாரில் கடையரான தம்மைக் கொண்டு திருவாய் மொழி பாடுவித்து
அது பாடக் கேட்ட படியால் துயர் அற்று இன்பம் பயக்கப் பார்த்து இருந்தான் –
அப்போது ஆழ்வார் ஞான முத்திரையும் கையும் கான உச்சாரணமான திருப்பவளப் பூரிப்பும்
அர்த்த ஸ்ம்ருதியாலே பிறந்த முக விகாஸமும் ஆனந்த அஸ்ரூ பனிக்கிற திரு நயனங்களும்
கான ஆனந்த மக்நரான புளகித காத்ரமும் கண்டு உபய விபூதியும் ஈஸ்வரனும் பிராட்டியும் ஆனந்தாவஹர் ஆனார்கள்
அன்புற்று அமர்ந்து உறைகின்ற -நூராண்டு -பதினோராயிரம் ஆண்டு என்கிற அவதி அன்றிக்கே
நித்ய விபூதியும் அநித்யம் என்னும்படி அமைந்து உறைகின்ற
திருவாறன் விளை தீர்த்தனுக்கு உற்ற பின் துயர் அறு சுடர் அடி தொழுது
வலம் செய்து வர்த்திக்கப் பாராய் என்கிறார் –
———-——–——–————————————
ஏழாவது பத்து விவரணம் முற்றிற்று
———————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை திருவடிகளே சரணமஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply