சந்தியும் சந்திப்பதமும் அவை தம்மிலே தழைக்கும்
பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலு கிற்பீர்
வந்தியும் வந்திப்பவரை வணங்கும் வகை அறிவீர்
சிந்தியும் தென் குருகூர் தொழுது ஆட் செய்யும் தேவரையே
நாத முனிக்கு அன்று நாலாயிரமும் உணர்த்தி
போதம் அருள் குருகூர் வித்தகனார் -கோதில்
திருவாய் மொழி வாசக மாலைத் தேனைத்
தரவே எனக்கு அருள் செய்தார் –
———-
வைகல் பூங்கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்!
செய் கொள் செந்நெல் உயர் திரு வண்வண்டூ ருறையும்
கை கொள் சக்கரத் தென் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே.–6-1-1-
வைகல் பூங்கழிவாயில்
இப்படிச் சரண் புக்க இடத்திலும் வந்து முகம் காட்டாமையாலே
திரு வண் வண்டூரில் ஸம்ருத்தியிலே அகப்பட்டு நம்மை மறந்தான் அத்தனை –
ஆர்த்த ரக்ஷணத்திலே தீஷித்து இருக்குமவன்
ஆகையால் நம் ஆர்த்தியை அறிவிக்க வரும்
ஆன பின்பு அங்கே என் தசையை அறிவியுங்கோள் என்று தூது விட்டார் –
———-
காதல் மென் பெடையோடு உடன் மேயுங் கரு நாராய்!
வேத வேள்வி ஒலி முழங்கும் தண் திரு வண் வண்டூர்
நாதன் ஞாலமெல்லாம் உண்ட நம் பெருமானைக் கண்டு
பாதம் கை தொழுது பணியீர் அடியேன் திறமே.–6-1-2-
உயர்வற என்கிற பாட்டை -காதல் மென் பெடையோடு -என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
உயர்வற -மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும்
தம்பதிகளுக்குள் காதல்கள் ஏற்றமும் குறைச்சலுமாய்த்து இருப்பது
உயர்நாகம் யுடையவன் அவன் இடத்தில் காமம் அளவிறந்து இருக்கும் இறே
அப்படியே
காதல் மென் பெடையோடு உடன் மேயுங் கரு நாராய்!
ஆர்த்த ரக்ஷணத்திலே தீஷித்தவனுக்கு என் ஆர்த்தியை அறிவிக்க வரும்
அருவி என்று ஒரு நாரையை இரக்கிறாள்
காதல் மென் பெடையோடு
முன்பு போக விட்டவர்கள் கொண்டு வருகிறார்கள் என்று ஆறி இருக்கலாம் விஷயம் அன்றே
அங்கனே யாம் அன்று முன்பு பண்ணின ப்ரபத்தியே அமையும்
உடன் மேயும்
ஊர்த்வம் மாஸான் ந ஜீவிஷ்யே -என்றிலன்
ந ஜீவேயம் க்ஷணம் அபி -என்பாரும் உண்டாகாதே
ஸர்வஞ்ஞரோடு கலவாது ஒழி யும் படியான பாக்யத்தைப் பண்ணுவதே நீங்கள்
பின்பு கூடுகை தவிராதாகில் பிரிந்தால் என் செய்ய வேணும் என்று இருப்பார்கள் இறே அவர்கள்
அத்தனை காரியப்பாடு இல்லை இறே இவற்றுக்கு
மென்பெடையோடு
கலக்கவும் பொறாத மார்த்வத்தை யுடைத்தாய் இருக்கை
உடன் மேயும் கரும் நாராய்
பிரிவில் தரியாதாய்க் கூடாது திரியும் அத்தனை
உயர்நலம் யுடையவன் எவன் அவன் –
இதம் மேத்யம் இதம் ஸ்வாது-இது சுத்தம் இது இனிமை – என்கிறபடியே காணும் இவை திரிகிறது
பேடையின் நினைவு அறிந்து புஜிப்பிக்கும் சேவலும் உண்டாகாதே
தன் ஆர்த்த த்வனி செவிப்பட்டால் அவற்றுக்கு மிடற்றுக்குக் கீழே இழியாது என்று இருக்கிறாள்
கரு நாராய்
பிரியாதாருக்கு உடம்பு வேளாதே -மிகவும் நிறவாதோ
தன் உடம்பு விவர்ணமான படியைக் காட்டுகிறாள் –
அவன் பிரிவுக்கு ஹேது ஏது என்ன -மயர்வற மதி நலம் அருளி -தத் வியதிரிக்தங்களிலே நெஞ்சு செல்லாதே
பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே காதலை விளைவித்தவன் அகன்றான் –
நான் விஸ்லேஷ அசஹை யானேன் -என்ன
இப்படி யுன்னை விட்டு எங்கே போனான் என்ன
அவன் போய் இருந்த இடம் சொல்லுகிறாள்
வேத வேள்வி ஒலி முழங்கும் தண் திரு வண் வண்டூர்
நாதன்
வேத கோஷமும் -வைதிக கிரியா கோஷமும் கண்டு -தன் நாயகன் கால் தாழ்ந்து வாராது இருக்கிறது
உங்களுக்கு அறிவிக்கையை இறே வேண்டுவது
தான யஜ்ஞவிவாஹ ஸ்தலங்களிலே இறே -அது ஸா ங்கம் ஆகைக்கு எழுந்து அருளி இருப்பது
ஸமா ஜே ஜூ மஹத் ஸூச -தீர்க்க சத்ராதிகளிலே இருப்பவர் –
ந த்ரஷ்யாம புனர் ஜாது -அவரை அவ்வோர் இடங்களிலே காணலாம்
தார்மிகம் ராம மந்த்ரா -இத்யாதிப்படியே கண்டு கொள்வது
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன் அ வன் –திரு வண் வண்டூர் நாதன் –
ஸ்ரீ வைகுண்ட நாதனின் காட்டில் ஏற்றம் சொல்கிறது
இவ்விடம் எளியாரை வலியார் அடிக்க அயர்வறும் அமரர்கள் அதிபதியாய்க் கோயிலில் சாந்து பூசி இருக்கும்
அது ஓர் ஏற்றமோ அன்று இறே
ஞாலம் எல்லாம் உண்ட –
அந்த ஆபத் சகன் இறே
தளர்ந்தார் தாவளமான நம்பெருமானைக் கண்டு
துயர் அறு சுடர் அடி தொழுது எழுந்து
பாதங்கள் மேல் அணி பூந்தொழ
என்றும் பாதம் கை தொழுது பணிவீர்
ஹேய ப்ரதிபடமான சுடர் அடிகள் -ஆஸ்ரிதரைக் கண்டால் நிரவதிக தேஜோ மயமான
திருவடிகளைக் கைகளால் ஆரத் தொழுது எழு என் மனனே
தொழுதார்க்கு நிற்க ஒண்ணாது –தெண்டன் இடு –
உண்ணா நிற்க மிடற்றைப் பிடிப்பாரைப் போலே ஆகாமே திருவடிகளில் தெண்டம் ஸமர்ப்பியாய்
பாதம் கை தொழுது பணியீர் அடியேன் திறமே
கடகரை உபகரித்துச் சொல்ல வேணும் இறே
அடியேன்
உங்களைக் கொண்டு அழைப்பித்துக் கொள்ள இருக்கிற அவனுக்கு அன்று
அவனால் வந்த இழவு பரிகரிக்கிற உங்களுக்கு அடியேன்
நித்யம் -யதீய சரணவ் சரணம் மதீயம் –என்கிறபடியே
அடியேன் திறமே
என் திறம் சொல்லில் ஒரு மஹா பாரதத்துக்கு உண்டு
திரு உள்ளமான படி செய்யுங்கோள் என்கிறாள் –
—————–
மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்பு நான தஞ்சுவன்
மன்னுடை இலங்கை அரண்காய்ந்த மாயவனே!
உன்னுடைய சுண்டாயம் நானறிவன் இனியது கொண்டு செய்வதென்?
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ!–6-2-1-
மின்னிடை மடவாரில்
இவள் விட்ட ஆள் சென்று -அத்தலைப்பட்டு அறிவித்து -அவனும் வாரா நிற்க –
அவ்வளவு பற்றாதே துடித்து அலமர்க்க
அவன் வரவை நிச்சயித்து -கீழ்ப்பட்ட கிலேசத்தாலே -இனி அவன் வந்தாலும் அவனோடே ஸம்ஸ்லேஷிப்போம் அல்லோம் –
விஸ்லேஷித்து முடியும் அத்தனை -என்று முகம் மாறி வைத்து இருக்க
அவனும் தன் அழகையும் செல்லாமையும் காட்டி ஊடலைத் துறந்து அவர்களுடனே ஸம்ஸ்லேஷித்த படியை
அருளிச் செய்தார் –
——-
உகவையால் நெஞ்ச முள்ளுருகி உன் தாமரைத் தடம் கண் விழிகளின்
அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்;
தகவு செய்திலை; எங்கள் சிற்றிலும் யாமடு சிறு சோறும் கண்டு,நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.–6-2-9-
உயர்வற என்கிற பாட்டை -உகவையால் நெஞ்சம் உள்ளுருகி -என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
உயர்வற உகவையால் -மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும்
சாதன பலங்களாலே உயர்த்தி அற்று இருப்பர்கள்
உயர்நலம் உடையவன் இடத்தில் உகவை அளவிறந்த இருக்கும் –
அவர்கள் உகவை அல்பமாகையாலே துக்கமேயாய் இருக்கும்
உன்னிடத்தில் உகவை -அப்ராப்ய மனஸா ஸஹ -என்று அளவிட ஒண்ணாத ஸூகமேயாய் இருக்கும்
ஆகையாலே உகவையாலே நெஞ்சு உள்ளுருகுகிறது –
வாராய் உன் ப்ரவ்ருத்தி வியர்த்தம் காண்
பிரித்து நெஞ்சை புண் படுத்துகையால் வந்த உருகுதல் ஒழிய நீ பண்ண இறே பார்த்தது
அது செய்யப் போகாது என்ன
அது ஏது என்ன -உன் தாமரைத் தடம் கண் விழிகள் -மயர்வற மதி நலம் அருளி –
கருண அம்ருத வ்ருஷ்டிகளாலே பிறந்த பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே உகவையால்
நெஞ்சம் உள்ளுருகப் பண்ணி உன் அகவலைப்படுத்தாய்
தாமரை போல் பரிமளம் செவ்வி குளிர்த்திகளை யுடைத்தாய் போக்தாக்களால் உண்டு அறுக்க ஒண்ணாத
போக்யதா பிரகார்ஷத்தை யுடைய திருக்கண்கள் நோக்காகிற வலையுளே அகப்படுத்தி –
கண்ணியிலே அகப்பட்டாலே ஜ்வர ஸந்நி பதிதரைப் போலே பிதற்றும் அத்தனை இறே
இனி அகப்பட்ட பின் செய்வது என் என்ன
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து
தகவு செய்திலை -என்ன
தகாதது என் என்ன
அரதி கந்த ரஹிதராய் நித்ய ஆனந்த மக்நரான ஸூரி ஸேவ்யரான உன்னுடைய
துயர் அறு சுடர் அடியாய் இருக்கிற திருவடிகளாலே அழித்தாய்
துக்க கந்த ரஹிதமாய் போக்யமே தேஜஸ்ஸான திருவடிகளாலே அழித்தாய் என்ன
எத்தை அழித்தோம் என்ன
எங்கள் சிற்றிலும் யாமடு சிறு சோறும் கண்டு,நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.–
ஸங்கல்பத்தால் அழிக்கலாவது உன் சிற்றில் இறே
இவருடைய சிற்றில் ஸ்பர்சித்து அழிக்க வேண்டுமே
ஜகத் உபஸம்ஹாரம் பண்ணுவது ஸங்கல்பத்தாலே இறே
சேஷபூதனுக்குத் திருவடிகள் உத்தேச்யமானோ பாதி
பிரணயிகளுக்கும் திருவடிகள் உத்தேச்யமாயே இறே இருப்பது –
வெறும் சிற்றிலே என்று காணும் நீ அழித்தது -எங்கள் அகவாயையும் அழித்தாய் காண் –
காலாலே எங்கள் சிற்றிலை அழித்துக் கண்ணாலே எங்கள் அபி சந்தியைக் குலைத்தாய்
உன் ஸ்ருஷ்டியைப் போலே நெருப்பும் நீருமாய் அன்று காண் எங்கள் சிற்றில்
வண்டல் நுண் மணல் தெள்ளி யாம் வளைக்கையால் ஸ்ரமப்பட்டோம்
உபாதேய தமம் எங்கள் சிற்றில் -உன்னுடைய ஸ்ருஷ்ட்டி அனுபாதேயம்
யாமடு சிறு சோறும் கண்டு நீ அடுகிற சிறு சோறு நிர்மால்யத்தோபாதி புறம்புள்ளாருக்கு ஆகாது –
நீயே புஜிக்கும் அத்தனை
யாமடு சிறு சோறு மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக் கூடி இருந்து உண்ணும் சோறு
கண்டு,நின் முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.–
கண் படைத்த பிரயோஜனம் இவற்றைப் பார்த்து ப்ரீதி பிரேரிதனாய் -ப்ரஸன்ன ஆதித்ய வர்சசம் -என்கிற
முக ஒளி திகழும் முறுவல் மந்தஸ்மிதம் பண்ணி நின்றிலையே
அழித்தாய் என்று இன்னாப்பு இன்று உகந்து அணைந்து கொண்டு சொல்கிறாள் –
——–
நல் குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்
வெல் பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப்
பல் வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானைச்
செல்வம் மல்கு குடித் திரு விண்ணகர்க் கண்டேனே.–6-3-1-
நல் குரவில்
ப்ரணய ரோஷத்தால் கிட்டோம் என்று இருந்த தம்மைப் பொருந்தப் பண்ணின
வைசித்ரித்யத்தாலே
விருத்த விபூதி யுக்தனான படியை அநுஸந்தித்தார் –
——–
பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய்
கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர்
சிரங்களால் வணங்கும் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
வரங் கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே.–6-3-7-
உயர்வற என்கிற பாட்டை -பரஞ்சுடர் உடம்பு -என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
உயர்நலம் யுடையவன் எவன் அவன் -உயர்வற
பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய்
உயர்வற அழுக்குப் பதித்த உடம்பாய்
உயர்நலமாவது பரஞ்சுடர் உடம்பாய்
ஆக உயர்வற உயர் நலம் யுடையவன் என்றபடி
பரஞ்சுடர் உடம்பாவது
சுத்த ஸத்வமான அசாதாரண திவ்ய விக்ரஹத்தை யுடையவனாய்
தேஜஸாம் ராஸி மூர்ஜிதம்-என்றபடி
அழுக்குப் பதித்த உடம்பாய்
குணத்ரய வஸ்யமான ஜகத் சரீரனாய் நின்றபடி
நீர் இது அறிந்தபடி என் என்ன
மயர்வற மதிநலம் அருளினன் எவன் அவன் -அவித்யாதிகளை அறுத்து பக்தி ரூபா பன்ன ஞானத்தை
நிர்ஹேதுகமாக அருளியவன் தானே தன்னைக் காட்டக் கண்டேன்
எவன் அவன் அழுக்குப் படிந்த உடம்பிலே கரந்தும் -பரஞ்சுடர் உடம்பிலே தோன்றியும்
நின்றும்
இவற்றுக்கு அந்தர்யாத்மாவாய் புக்கு நின்றும்
இப்படி நிற்கச் செய்தே
யம் ஆத்ம ந வேத -என்று இவற்றுக்குத் தோற்றாதபடி நின்று இவற்றின் சத்தியை நோக்கியும் –
எவன் அவன் -காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து இருப்பாருக்குக் காணலாம் படி
ராம கிருஷ்ண அவதாரங்களைப் பண்ணியும் நூறாண்டு பதினோராயிரம் ஆண்டு நின்றும்
அவ்விடங்களில் கை தவங்கள் செய்தும்
க்ருத்ரிமத்தைப் பண்ணியும் -அதாவது
அவதரித்து நிற்கச் செய்தேயும் தன் படிகள் சிசுபாலாதிகளுக்குத் தோற்றாதபடி பண்ணியும்
ஆஸ்ரிதற்குத் தோற்றியும் -இப்படி இருக்குமவன் –
எவன் அவன் -அயர்வறும் அமரர்கள் அதிபதி -ராஜஸ தாமஸ ரஹிதரான நித்ய ஸூரிகளுக்கு
நிர்வாஹகனானவனை
விண்ணோர் சிரங்களால் வணங்கும்
ப்ரஹ்மாதிகள் தலை படைத்த பிரயோஜனம் பெற்றோமே என்று வணங்கும் படியும்
ஸுசீல்யாதிகளும் ஸுலப்யாதி குணங்களும் கண்டு அனுபவிக்க -அயர்வறும் பாமரர்களும் வணங்கும் படியும்
திரு விண்ணகரிலே வந்து நிற்கிற உபகாரகன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
பிரான்
உபயாந்தரங்களிலே புகல் அறுத்து -உபேயாந்தரங்களை விஸ்மரித்துத்
தானே உபாய உபேயமான ரக்ஷணங்களைப் ப்ரகாசியா நின்ற சுடர் அடி
வரங் கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே.–
தொழுது எழு என் மனனே
அநேகம் காலம் அஸேவ்யனாய்ப் போந்த நீ ஸேவ்யன் பக்கலிலே ஸேவியாய்
வரங் கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே.–
எத்தனையேனும் தண்ணியரும் வந்து கிட்டலாம் படி ஸ்ரேஷ்டமான திருவடிகள் அல்லது
யாவருக்கும் –
எத்தனையேனும் தண்ணியருக்கும்
ப்ரஹ்மாதிகள் ஸநகாதிகள் முமுஷுக்கள் முக்தர் நித்யர் முதலானோர்க்கும்
அதிலும் பக்தருக்கு முற்பாடானாய் வந்து புகுகைக்கு வலிய புகல் இல்லை
அவனை ஒழிந்த சரண்யர் அடங்கலும் இவனைக் கொண்டு ஸம்ஸாரத்திலே முழுக்குகிற பேர்
இவனைக் கொண்டு கரை ஏற்ற வல்ல வலிய புகல் -எவன் அவன் -திருவடிகள் அல்லது இல்லை
அடியே பிடித்து ஜீவிக்கில் ஜீவிக்கும் அத்தனை அல்லது யாகையாலே
சுடர் அடி தொழுது எழு என் மனனே என்கிறார் –
————-
குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் குன்றம் ஒன்று ஏந்தியதும்
உரவுநீர்ப் பொய்கை நாகங் காய்ந்ததும் உள்பட மற்றும் பல
அரவில் பள்ளிப் பிரான் தன் மாய வினைகளையே அலற்றி
இரவும் நன்பகலும் தவிர்கிலன் என்ன குறைவு எனக்கே.–6-4-1-
குரவை ஆய்ச்சியரில்
கிட்டி அனுபவிக்கப் பெற்றிலோம் என்கிற இழவு தீரக் கிருஷ்ண குண சேஷ்டிதங்களைக்
கிட்டித் தரித்து அனுபவிக்கப் பெற்றேன் என்று உகக்கிறார் –
——–
மண் மிசைப் பெரும்பாரம் நீங்க ஓர் பாரத மா பெரும் போர்
பண்ணி மாயங்கள் செய்து சேனையைப் பாழ்பட நூற் றிட்டுப் போய்
விண் மிசைத் தன தாமமே புக மேவிய சோதி தன் தாள்
நண்ணி நான் வணங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே-6-4-10-
உயர்வற என்கிற பாட்டை -மண் மிசைப் பெரும் பாரம் நீங்க -என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
உயர்வற -மனுஷ்ய ஆனந்தத்தில் -அஹங்கார மமகாரங்களாலும் -காம க்ரோதங்களாலும் மிகுந்த
பாரம் பொறாமல் பூமிப்பிராட்டி ஸர்வேஸ்வரனுக்கு விண்ணப்பம் செய்ய –
பூ பார நிவாரண அர்த்தமாக அவதரித்து மண் மிசைப் பெரும் பாரம் நீங்க
விஸ்வம் பரை-என்றும்
ஷமை-என்றும்
புரை -என்றும் பேரை யுடைத்தாய்
பரிக்கக் கடவளான பூமியாலும் பொறுக்க ஒண்ணாதபடி இறே துர்வர்க்கம் திரண்ட படி –
த்ரிபாத் விபூதியில் -யத்ர பூர்வே ஸாத்யா –என்கிற பூர்வ ஸாத்ய ஆராதனர் உண்டாய்
இருக்கச் செய்தேயும் பாரம் இல்லை இறே -அஹங்கார ஸ்பர்சம் யுடையார் இல்லாமையால்
தங்கள் பரத்தை அவன் பக்கலிலே வைத்து இருக்கும் அவர்களே இறே அவர்கள்
இப்படி உயர்வற உயர் நலம் யுடையவன் எவன் அவன் அவன்
ஆனந்தாதி கல்யாண குணங்களுக்கு அடியான அபராத ஸஹனானவன்
ஓர் பாரதமாய்ப் பெரும் போர் பண்ணி அத்விதீயமான மஹா பாரதமாகிற மஹா யுத்தத்திலே
அர்ஜுனன் பந்து வதம் ஆகாது என்று வில்லை விழ விட்டு சோகிக்க
அவன் சோகம் ஆகிற மயர்வு அற மதிநலம் அருளினன்
அதாவது -பகவத் கீதை -18 அத்தியாயத்தில் -தர்ம அதர்மங்களை அருளிச் செய்து –
சோக நிவ்ருத்தியைப் பண்ணி யுத்தத்தில் மூட்டி
மாயங்கள் செய்து –
பகலை இரவாக்குவது -ஆயுதம் எடேன் என்று -ஆயுதம் எடுப்பது –
எதிரியுடைய மர்மத்தைக் காட்டிக் கொடுப்பது -அவற்றைச் செய்து மயர்வற மதிநலம் அருளினன்
மாயங்கள் ஆவன -மாயா வயுநம் ஞானம் -பிறப்பித்த பின்பு –
சேனையைப் பாழ்பட நூற் றிட்டுப் போய்
சேனையை வெறும் தரையாம்படி மந்திரித்து முடித்திட்டுப் போய்
விண் மிசைத் தன தாமமே புக
அயர்வறும் அமரர்கள் எதிர் கொள்ள அந்தமில் பேர் இன்பத்து அடியாரோடு இருந்தது –
பிரதிகூலரை நிரஸித்ததற்கு மேலே அவர்கள் இருந்த இடத்திலே இராதே
பரமபதத்தே போய்ப் புகப்பெற்ற படியே என்று உகக்கிறார்
மேவிய சோதி தன் தாள் நண்ணி நான் வணங்கப் பெற்றேன்
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
கிருஷ்ணனுடைய துயர் அறு சுடர் அடி -ஆஸ்ரிதர் கார்யம் தலைக்கட்டுகையாலே
துயர் அற்று வீர ஸ்ரீ யாலே தேஜோ ரூபமாய் விளங்கா நின்ற திருவடிகள் –
அதுக்கு மேலே நித்யர் முக்தர் சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே -என்று
இருந்த இடத்திலே நண்ணி நான் வணங்கப் பெற்றேன்
எனக்கார் பிறர் நாயகரே-
க்ருத்வா பர அவதரணம் ப்ருதிவ்யாம் ப்ருது லோசன -மோஹயித்வா ஜகத் ஸர்வம் -என்கிறபடியே
பிரதிகூலரை அடங்கலும் உளவுகோலாலே விழ விட்டு
அனுகூலரை அடங்கலும் கண்ணாலே விழவிட்டுப் போனான்
கத ஸ்வ ஸ்தானம் உத்தமம்
நண்ணி நான் வணங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே
எனக்கு யார் தான் நிகர் என்கிறார் –
—————-
துவளில் மா மணி மாடமோங்கு தொலை வில்லி மங்கலம் தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர்! உமக்காசை இல்லை விடுமினோ;
தவள ஒண் சங்கு சக்கரமென்றும் தாமரைத் தடங்கண் என்றும்
குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க நின்று நின்று குமுறுமே.–6-5-1-
துவளில் மா மணியில்
பொய் நின்ற ஞானம் தொடங்கி இவ்வளவும் வர தமக்கு
பகவத் விஷயத்தில் உண்டான அதி ப்ராவண்யத்தைச் சொல்லுகிறதாகையாலே
தம் படியை அருளிச் செய்கிறார் –
—
பின்னை கொல்?நில மா மகள் கொல்? திருமகள் கொல்? பிறந்திட்டாள்
என்ன மாயங்கொலோ? இவள் நெடுமால் என்றே நின்று கூவுமால்
முன்னி வந்தவன் நின்றிருந் துறையும் தொலை வில்லி மங்கலம்
சென்னியால் வணங்கும் அவ்வூர்த் திருநாமம் கேட்பது சிந்தையே.–6-5-10-
உயர்வற என்கிற பாட்டை -பின்னை கொல் -என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
உயர்வு மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும்
பகவத் வ்யதிரிக்த காமங்களில் ப்ரேம பரவசராய் இந்த லீலா விபூதியில் உயர்வும் தாழ்வுமாய் அற்றுப் போக
இவளுக்கு உயர்நலம் உடையவன் எவன் அவன் அவனால் அல்லது செல்லாத ப்ராவண்ய அதிசயத்தைக் கண்டு
பிராட்டிமாரில் ஒருத்தியே என்று தோழி சங்கித்ததாகச் சொல்லுகிறது ஆகையால் தன் முகம் –
தம் படியை அருளிச் செய்கிறார்
உயர்நலம் உடையவன் எவன் அவன் -பின்னை கொல் இத்யாதி
உகார வாஸ்யை யான பிராட்டி -அவளுக்கு நிழல் போல்வரான மற்றப் பிராட்டிமாரும் –
இம்மூவரும் கூடி வந்து ஒருத்தியாக அவதரித்தார்களோ
ஞான ஆனந்த ஸ்வரூபனான ஸர்வேஸ்வரனுடைய போக மஹிஷியான நப்பின்னைப் பிராட்டி பிறந்திட்டாளோ
அன்றிக்கே எல்லாருக்கும் இவ்வேற்றத்தைக் கொடுக்கும் பிராட்டி தான் பிறந்திட்டாளோ
ஸர்வேஸ்வரனுடைய ஸம்பத் ஆனவளோ -அது விளையும் பூமியோ அதின் பல ரூபம் ஆனவளே பிறந்தாளோ
அப்படி அன்று இவள் படி -பிராட்டி மூவருக்கும் இவள் படி இல்லாமையாலே
அவர் அவர்களுக்கு உள்ள ஏற்றம் எல்லாம் இங்கே காணலாகையாலே அவர்கள் ஒப்பு அன்று
லோகம் எல்லாம் வாழுகைக்கு இவள் ஒருத்தியும் பிறந்திட்டாளோ என்றுமாம் –
விஷ்ணு நா சத்ருஸோ வீர்யே -என்றால் போலே –
உபமானம் அசேஷணாம் ஸாதூனாம் யஸ் ஸதா பவத் -என்கிறபடியே
இவரை எல்லாருக்கும் ஒப்பாகச் சொல்லலாம் இவருக்கு ஒப்பாவார் ஒருவரும் இல்லை காணும்
இதுக்கடி என் என்ன
மயர்வற மதிநலம் அருளினன் -என்ன மாயம் கொலோ
மாயா வவுனம் ஞானம்
மயர்வற -பகவத் விபூதியில் அவித்யாதிகளைப் போக்கி
மதி நலம் -பக்தி ரூபா பன்ன ஞானத்தைப் பிறப்பித்து அருளினால் கூடாதது இல்லை யாகாதே
என்ன மாயம் கொலோ
இது என்ன ஆச்சர்யம் தான்
எவன் அவன் -இவள் நெடுமால் என்றே நின்று கூவுமால்
தன் பிச்சைக் கால் கடைக் கொண்டு அவன் பிச்சைச் சொல்லிக் கூப்பிடா நின்றாள்
மால் என்று பெரியோன் -அதாவது அயர்வறும் அமரர்கள் அமரர்கள்
தெளிவுற்று வீவின்றி நிற்கும் அமரர்கள் அதிபதி யானவன்
நெடுமால் -பராத்பரன் -துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே -என்ன
அவனை நம்மால் கிட்ட விரகுண்டோ என்ன
முன்னி வந்தவன் நின்றிருந் துறையும் தொலை வில்லி மங்கலம்-
பராத்பரனானவன் நம்மைப் பெறுகைக்கு எளிதாகத் திருத் தொலை வில்லி மங்கலத்திலே
எழுந்து அருளி நிற்பதாகிய கிருஷி பண்ணினபடி
இப்படி அவன் முற்பாடானாய் வந்த உபகாரகத்துத் தோற்று
சென்னியால் வணங்கீத் துயர் அறு சுடர் அடி தொழுது எழு
ஹேய ப்ரத்ய நீகமான திருவடிகளைத் தொழுது
அவ்வூர்த் திருநாமம் கேட்பது சிந்தையே.–
திரு நாமம் கேழ்க்க செவி தாழ்க்க இதுவே இவளுக்கு மநோ ரதம்
இவள் அவ்வூர் என்கிறது
பெண் பிள்ளை சொன்னால் போலே இராமையாலே அவ்வூர் என்கிறாள்
ஸர்வ காரணங்களாலும் தொலை வில்லி மங்கலத்தை அனுபவிக்கிறாள்
—————–
மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு
நீலக் கருநிற மேக நியாயற்கு
கோலச் செந் தாமரைக் கண்ணற்கு என் கொங்கலர்
ஏலக் குழலி இழந்தது சங்கே.–6-6-1-
மாலுக்கு -பதிகத்தில்
வையத்திலேயே பாஹ்ய ஸம்ஸ்லேஷ அபேக்ஷை பிறந்து அது பெறாமையாலே அவசன்னராய்
ஏறாளும் இறையோனில் -உடமாயிவர் வேண்டா என்கிறவை எல்லாம்
தன்னடையே போகிறபடியை அருளிச் செய்கிறார் –
உயர்வற என்கிற பாட்டை -மாலுக்கு வையம் -என்கிற பாட்டை விவரிக்கிறது
உயர்வற மனுஷ்யம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவாக
அந்நிய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்தர்ய நிவ்ருத்தி பண்ணுகிறது
உயர் நலமுடையவன் -மாலுக்கு வையம் அளந்த மணாளன்
ஆனந்தாதி குண விசிஷ்டனாய் -ஸ்ருதி ப்ரதிபாத்யனான ஸர்வேஸ்வரனுக்கு
மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு
மால் என்று பெரியோன் என்றபடி
ஜெகதாகாரனானவன் ஜகத்துக்கு அந்நிய சேஷத்வத்தை ஒரு திருவடியாலே போக்கி –
ஸ்வ ஸ்வா தந்தர்யத்தை ஒரு திருவடிகளாலே போக்கினை படியைச் சொல்லுகிறது
வையம் அளந்த மணாளற்கு
பதிம் விஸ்வஸ்ய -என்றும்
கௌசல்யா லோக பர்த்தாரம் என்றும் சொல்லுவாருக்கு –
யுகாவாதாரை விடமாட்டாதவன் வ்யாமோஹம் -அழித்தாய் உன் திருவடியால் -உகந்த இவளை விடுமோ
இவளைத் தன் கால் கீழே இட்டுக் கொண்ட அச்செயலுக்குத் தோற்றுத் தன்னை எழுதிக் கொடுத்தாள்
இவள் ஒருத்தியுமே இறே
இவளுக்குப் ப்ரேமம் விளைந்தபடி என் என்னில்
மயர்வற மதிநலம் அருளினவன் எவன் அவன் -நீலக் கரு நிற மேக நியாயற்கு –
மயர்வற -தத் வ்யதிரிக்தங்களில் ஆசை அறுத்துத் தன் விஷயமான பக்தி ரூபா பன்ன ஞானத்தை அருளுகையாலே
அத்யந்தம் ப்ரேம பாரவஸ்யத்தாலே நெய்த்துக் கருத்த நிறத்தை யுடைய மேக ஸ்வ பாவற்கு
ப்ரயோஜன நிரபேஷமாகக் கொடுக்கையும்
கொடாத போது உடம்பு வெளுக்கையும்
வ்யாமோஹம் இன்றிக்கே ஒழிந்தாலும் விட ஒண்ணாத வடிவும் ஓவ்தார்யமும் இருக்கிற
இவ்வழகுக்குப் பிச்சேறின படி
அதன் மேலே -அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
கோலச் செந்தாமரைக் கண்ணன்
ஜிதந்தே புண்டரீகாக்ஷ -என்று
அஞ்ஞான கந்த ரஹிதரான நித்யரைக் தன் கண் அழகாலே தோற்பித்தால் போலே
தன் மேன்மையையும் கண் அழகையும் காட்டி யாயிற்று இவளை வசீகரித்தது
கோலச் செந் தாமரைக் கண்ணற்கு
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
என்று
என் ஏலக் குழலி இழந்தது சங்கே.–
தர்ச நீயமாய் வாத்சல்யத்தாலே விகாசாதிகளையும் உடைத்தான திருக்கண்களையும் யுடையவனுக்கு
தாமரைத் தடம் கண் விழிகளில் அகவலைப் படுத்தினவனுக்கு
என் ஏலக் குழலி
ஏலம் பரிமளிதமான திருவடிகளை சிரஸா வஹிக்கையாலும் -ஸர்வ கந்த -ஸர்வ ரஸ -என்கிறபடியே
என் கொங்கு ஏலக் குழலி -என்று நிரூபகமாய்த்து –
மது ஸ்யந்தியா நின்றுள்ள பூவை யுடைத்தாய் -நறு நாற்றத்தையும் யுடைத்தாய் இருக்கிற -இவள்
மயிர் முடி ஒன்றுக்கும் தோற்றுக் குமிழி நீர் உண்ணுமவன் கிடீர்
ஒன்றுக்கு ஒன்பது அபதானம் கிட்டி இவளை மயக்கிக் கலலாத வளையை அபஹரித்தான்
இழந்தது சங்கே.–
தனக்கு அடிமையாய்த் தொழுத கை வளையைக் கொள்வது தக்கதோ என்கிறாள் –
————
உண்ணுஞ் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையு மெல்லாம்
கண்ணன் எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி
மண்ணினுள் அவன் சீர் வளம் மிக்கவன் ஊர் வினவித்
திண்ணம் என் இளமான் புகுமுர் திருக் கோளூரே.–6-7-1-
உண்ணும் சோற்றில்
கீழில் திருவாய் மொழியிலே மோஹங்கதையான இவள் தசையைக் கண்ட திருத்தாயார்
இவள் வளையாதிகள் இழந்தபடியைச் சொல்லிக் கூப்பிட்டுத் தானும் மோஹிக்க
அவ்வளவில் பெண் பிள்ளை உணர்ந்து இங்குத்தைத் தரிப்பற்று அவன் எழுந்து அருளி இருந்த தேசமான
திருக்கோளூர் ஏறப் போனாள் என்று திருத்தாயார் சொல்லுகிற பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –
உயர்வற என்கிற பாட்டை உண்ணும் சோறு என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும்
அன்ன பானாதி முதலானவை தாரக போஷக போக்யங்களாய் இருக்கையாலே அல்ப அஸ்த்ரமாய் அற்றது –
உயர் நலம் யுடையவனே இவளுக்கு
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் இறே
தத் வ்யதிரிக்தங்கள் அறியாள்
கொள்ள மாளா இன்ப வெள்ளத்துக்கு மேல் யுண்டாய் இவள் அவ்வருகு
ஒரு தாரகாதிகள் உண்டாய்த் தேடப் போனாளோ
உயர் நலம் யுடையவன் எவன் அவனே
கண்ணன் எம் பெருமான் என்று என்றே கண்கள் நீர் மல்க
உயர் நலமான ஆனந்தாதி குண பரிபூர்ணனாய் ஸ்ருதி ப்ரஸித்தனானவன் யாவன் ஒருவன்
அவனே எம்பெருமான் ஆகிறான்
என்று இந்த ஸ்ம்ருதியே யாத்ரையாய் -அத்தாலே -ஆனந்த அஸ்ருவாய் -மல்க இருக்கிற இதுக்கு ஹேது –
அவன் மயர்வற மதி நலம் அருளினவன் –
எவன் தன்னுடைய ஞான பக்தி களே தாரகாதிகளாகப் போய்
மண்ணினுள் அவன் சீர் வளம் மிக்கவன் ஊர் வினவித்
லௌகிகரைப் போலே அன்ன பானாதிகளாலே தரித்து அங்கே புக்கு அவனாலே தரிக்கப் போனாளோ
அஹம் அன்னம் அஹம் அந்நாத -என்று இருப்பவருக்கும் அவ்வருகு போக வேணுமோ –
எல்லாம் கண்ணன் என்று இருக்கும் அவளுக்கு வேறு ஓன்று வேணுமோ
கணை நாணின் ஓவாத் தொழில் சார்ங்கன் தொல் சீரை நன்னெஞ்சே ஓவாத ஊணாக யுண்
என்றும் இறே இருப்பது
கண்கள் நீர்கள் மல்கும் கண்ணும் அவள் முக விகாஸமும் அன்றோ எனக்குத் தாரகம்
என் ஜீவனத்தையும் கொண்டு போனாளே
அழுநீர் துளும்ப அலமர்கின்றனவோ வாழியரோ என்று மங்களா ஸாஸனம் பண்ணுகை இறே ப்ராப்தம்
மண்ணினுள்
விண்ணில் உள்ள-அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் தன்னுடைய அம்ருத ஆனந்தத்தை
அசராமல் புஜிக்கிற நித்ய முக்தருக்கு ஸ்வாமி யானவன்
மண்ணுனுள் புகுமூர் திருக்கோளூரே
அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் -இவள் இடையாட்டமாக அவன் நினைத்து இருப்பது –
விண்ணுளாரில் சீரியளான இவளை லபிக்கைக்காக வந்து இருக்கிறவன்
மண்ணினுள் புகுமூர்த் திருக்கோளூரே
அவன் -சீர் வளமிக்கவனூர் வினவி – லௌகிகர் எல்லாரும் யாவதாயுஷம் தாரகாதிகள்
ஸம்பாதிக்குமா போலே இவளும் அவன் சீரே யாவதாத்மபாவியாக தாரகாதிகளாகவும்
நிரவதிக ஸம்பத்து வைத்த மா நிதியாகவும் அவன் ப்ரஸாதமே பேறாகவும் போனாள்
சோஸ்னுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபச்சிதா -என்று
அவனோடு அவன் குணங்களோடு வாசி யற ப்ராப்யம் ஆகிறவோபாதி அவன் விரும்பின தேசமும்
ப்ராப்ய அந்தர் கதம் இறே
அவன் சீர் யாவதாத்மபாவி தாரகாதிகளானால் போலே துயர் அறு சுடர் அடி தொழுது எழுகையும்
போஷகாதிகளும் பூஷணாதிகளும் ஆய்த்து
வளம் மிக்கவனூர்
பரமபதம் கலவிருக்கையோ பாதி உகந்த விஷயத்தைப் பெறும் இடம் இறே ஊராகிறது
அயர்வறும் அமரர்கள் இருந்த இடத்திலே சென்று அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழுகைக்கு என் மனனே
திண்ணம் என் இளமான் புகுமூர் திருக்கோளூரே –என்கிறாள் —
———–
பொன்னுல காளீரோ? புவனி முழு தாளீரோ?
நன்னலப் புள்ளினங்காள்! வினையாட்டியேன் நான் இரந்தேன்
முன்னுலகங்களெல்லாம் படைத்த முகில் வண்ணன் கண்ணன்
என்னலங் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே.-6-8-1-
பொன்னுலகு ஆளீரோ -வில்
திருக்கோளூர் ஏறப் போனவள் முடியப் போய்த் தலைக்கட்ட மாட்டாதே
நகர உபவனத்திலே விழுந்து கிடந்தது ஆர்த்தராய் ஏக ரஸம் பற்றாசாகத் தூது விடுகிறார்
—-
பாசற வெய்தி இன்னே வினையேன் எனை ஊழி நைவேன்?
ஆசறு தூவி வெள்ளைக் குருகே! அருள் செய்தொரு நாள்
மாசறு நீலச் சுடர் முடி வானவர் கோனைக் கண்டு
ஏசறும் நும்மை அல்லால் மறு நோக்கிலள் பேர்த்து மற்றே.–6-8-8-
உயர்வற என்கிற பாட்டை -பாசற -என்கிற பாட்டு விவரிக்கிறது-எங்கனே என்னில்
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் ஸம்ஸரித்துக் கர்ம பாசங்களாலே பத்தராய்
பசலும் குட்டிகளுமாகக் வாழா நிற்கச் செய்தே கர்மம் மாண்டு வாழ்வற்று நிற்கும்
உயர் நலம் உடையவன் என்று நித்ய ஆனந்த ஸ்வரூப னோடே நித்யர் முக்தர் களித்து ஆனந்தித்து இருக்க
அடியேன் ஒருவரோடும் கூட்டு அற்று இருப்பேனோ
பாசற எய்தி
என்னுடம்பில் பசுமை போய் வை வர்ணயம் மிகவும் பரந்தது
இன்னும் சில காலம் கழித்தால் அறிவிக்கிறோம் என்னும் அளவாய் இருந்ததோ என் தசை
இன்னே
என்னைக் கண்ட உங்களுக்குச் சொல்ல வேண்டா இறே
விஷயம் சாவதியாகில் இறே இது அளவுபட்டு இருப்பது –
இதுக்கு ஒரு பாசுரம் இட்டுச் சொல்லப் போகாது இறே -உடம்பைக் காட்டும் அத்தனை –
வினையேன் எனை யூழி நைவேன்
விஸ்லேஷமும் ஸம்ஸ்லேஷத்தோ பாதி யாகப் பெற்றிலேன்
அது காதா சித்கமாய் இது நித்தியமாய் இருக்கிற படி –
இதுக்கு ஹேது என் என்ன
நித்ய ஆனந்த ஸ்வரூபனாவான் யாவன் ஒருவன் -அவன் மயர்வற மதி நலம் அருளினன்
தன் நிர்ஹேதுக கிருபையாலே பக்தி ரூபா பன்ன ஞானத்தை இறே அருளினது –
அன்று முதல் எத்தனை யூழி நைவேன் -ஸைதில்யத்தோடே எத்தனை கல்பம் சென்றது
ஆசறு தூவி வெள்ளைக் குருகே
பழிப்பற்ற சிறகை யுடைத்தாய் பர துக்க அஸஹிஷ்ணு தைக்கு உறுப்பாய்
மநோ நைர்மல்யத்தை யுடைத்தாய் இருக்கிற படி
மதி நலம் அருளினவன் எவன் ஒருவனான கிருஷ்ணன் பிரிகைக்குப்
புறம்பு போல் உள்ளும் கரியான் ஆனால் போலே நீங்களும் கூட்டுகைக்கு உள்ளும் புறமும் நிர்மலமாய் இறுக்கியபடி
அவன் மதிநலம் அருளினது பிரிந்து துடிக்கைக்கு ஹேதுவானால் போலே யாகாதே
ஆசறு சோதி வெள்ளைக் குருகே அருள் செய்து ஒரு நாள்
ஒரு போது கிருபை பண்ணி அருளினிகோளே
ஆர்த்தியால் அலைகிற சமயத்திலே அஞ்சாதே என்று அருளப் பெற்றேன் என்ன
உமக்கு என் செய்ய வேணும் என்ன
அயர்வறும் அமரர்கள் அதிபதி -விஸ்லேஷ கந்த ரஹிதரான நித்ய ஸூரிகளுக்குப் போக்ய பூதனாய்
மாசறு நீலச் சுடர் முடி வானவர் கோன்
பழிப்பற்று நெய்த்து இருந்துள்ள மயிர் முடியை
அநந்த வைனதேயாதிகள் பேண இருக்கிறவனைக் கண்டு
துயர் அறு சுடர் ஆதி தொழுது எழுந்து இருந்து ஒரு விண்ணப்பம் செய்ய வேணும் என்ன
விண்ணப்பம் ஏது என்ன
ஏசறும்
ஒரு நீர்ச் சாவியிலே க்ருப அம்ருத வ்ருஷ்டியை வர்ஷியாதே கடலிலே வர்ஷிக்கிறாப் போலே
நித்ய விபூதியாரோ பெறுவது
லீலா விபூதியார் நிர்க்குணன் என்னாமே ப்ரஸாதத்தைப் பண்ண வேணும் என்றும்
நும்மை யல்லால் மறு நோக்கு இலள்
உம்மை ஒழிய வேறு குளிர்ந்த விழி இல்லை
விழிக்கும் கண்ணிலே நின் கண் மற்று அல்லால் வ்ருத்த கீர்த்தனத்துக்கு உம்மை ஒழிய
வேறு ஒருவரை யுடையள் அல்லள்
குண கீர்த்தனத்தால் தரிக்குமவள் அல்லள் -என் மனம் போலே இருக்கிற நீங்கள்
இவ்வளவும் அருளிச் செய்யுங்கோள் என்று குருகை இரக்கிறாள் –
————————-
நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடு வானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்
கூரார் ஆழி வெண் சங் கேந்திக் கொடியேன் பால்
வாராய்! ஒரு நாள் மண்ணும் விண்ணும் மகிழவே.–6-9-1-
நீராய் நிலனில்
தம் தசையைக் கண்டு தம் பரிசரத்தில் கால் எழுந்து போவார் இல்லை -என்று அறுதியிட்டு
ஈஸ்வரனுக்கு முகம் காட்டி அல்லது நித்ய விபூதியில் இருப்பு அரிதாம் படி
ஆர்த்தியாலே நிரம்பித்தது ஒரு கடல் கை எடுத்துக் கூப்பிடுமா போலே
பெரு மிடறு செய்து கூப்பிட்டார் –
———–
ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்
சாலப் பல நாள் உகந்தோ றுயிர்கள் காப்பானே!
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே
சாலப் பல நாள் அடியேன் இன்னும் தளர்வேனோ?–6-9-3-
உயர்வற என்கிற பாட்டை -ஞாலத்தூடே என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
ஆர்த்த ப்ரபன்னன் -நாராயண பதத்துக்கு ஸங்க்ரஹமான அகாரத்தாலே அர்த்த பஞ்சகத்தை விவரிக்கிறது
உயர்வற-ஞாலத்தூடே
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும்
அந்நிய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்தர்யத்தைப் போக்குகைக்காக
த்ரிவிக்ரம அபதானத்தாலே எல்லார் தலைகளிலும் திருவடியை வைத்து நடந்தால் போலே
என் முன்னேயும் நடக்க வேணும் என்ன
அது உமக்கு காட்டுவது ஒரு தேச விசேஷத்திலே கொண்டு போய்க் காட்டுவோம் என்ன
அது தன்னை இங்கேயோ காட்டித்து இல்லையோ என்கிறார் –
அது ஒரு நாள் காதாசித்கமாகச் செய்தோம் என்ன
உயர் நலம் உடையவனான நீ யுகம் தோறும் ராம கிருஷ்ணாதிகள் அவதாரங்களைப் பண்ணி ரஷிக்கை
உனக்கு ஸ்வ பாவமாய் இருக்க -நான் நோவு படக் கடவனோ என்கிறார் –
ஞாலத்தூடே நடந்து
ஸதா தர்சனம் பண்ணுவார் முன்னே நடக்கக் கடவ நடையைக் காதாசித்கமாக வந்தாலும்
பாராதார் முன்னே கிடீர் நடந்தது
அந்தகன் முன் நடக்குமா போலே
அக்ரத ப்ரயயவ் ராம -என்று நடந்தும்
நின்றும்
அவஷ்டப்ய ச திஷ்டந்தம் தததர்ச தனு ரூர்ஜ்ஜிதம் ராமம் ரா
மானுஜஞ்ச சைவ பர்த்துச் சைவானுஜம் சுபா -என்று
தாரை உகந்து சொன்னபடியே ஆகர்ஷமாய் நின்றபடி
கிடந்தும்
பாஹும் புஜங்க போகாபம் உபதாயாரி ஸூதன -என்று
கடலை அனுவர்த்திக் கிடக்கிற கிடை தானே இலங்கை குடி வாங்க வேண்டும் படி இருக்கை
இருந்தும்
உபவிஷ்டம் ஸ்வ லங்க்ருதம்
உடஜே ராமமாஸீ நம் -என்று சொல்லுகிறபடியே இருக்கை
நீர் அறிந்தபடி என் என்ன
நீர் மயர்வற மதிநலம் அருளுகையாலே அறிந்து கண்டேன்
சாலப் பல நாள்
உன்னுடைய ரக்ஷணம் அநாதி அன்றோ
யுகம் தோறும் -ஸம்பவாமி யுகே யுகே -என்னுமா போலே
உயிர்கள்
அயர்வறும் அமரர்களான திருவடி திருவனந்த ஆழ்வான் பிராட்டி -இவர்களுக்காக அன்று கிடீர்
ஸர்வாத்ம ஸம் ரக்ஷணம் பண்ணுவது அன்றோ யுன்னது
அமரர்கள் அதிபதி என்று ஸ்ருதி ப்ரசித்தனானவன் யாவன் ஒருவன் அவன் காப்பானே
இவர்களுக்கு அழித்துக் கொள்ளுகை பணியானால் போலே இறே அவனுக்கு நோக்குகை பணியானபடி
அகாரத்தில் அவ ரக்ஷணே -என்கிற தாதுவாலே ஸர்வ வித ரக்ஷகத்வம் சொல்லிற்று
நான் கை வாங்கினேன்
இனிக் காவல் சோர்வு படாதபடி வேணுமாகில் நோக்கிக் கொள்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் யாவன் ஒருவன்
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே
அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்தரானவர்கள் பரிசர்யை பண்ண இருக்கிற கோலத் திரு மா மகளோடு
உன்னைக் கூடி இருக்குமவர்கள் உன் துயர் அறு சுடர் அடி தொழ
அடியேனும் அப்படித் தொழுது எழாதே
தாயும் தம்மப்பனும் சேர இருக்கக் கிட்டப் பெறாதே ஸ்தநந்த்ய ப்ரஜை
நாக்கு ஒட்டிக் கிடந்தது கிடைக்குமா போலே இருக்கிறது காணும்
இருவருமான சேர்த்தியிலே அடிமை செய்ய இறே இவருக்குப் ப்ராப்யம்
சாலப் பல நாள் இன்னம் தளர்வேனோ
முன்பு அநாதி காலம் இழந்தால் இன்னும் இழக்க வேணுமோ
இன்னம்
மயர்வற மதிநலம் அருளின உனக்கு அடியேனான பின்பும் தளர்வேனோ
துயர் அறு சுடர் அடி தொழுது எழ என்ற அடியேனும்
என் மனனும் சாலப் பல நாள் அடியேன் இன்னம் தளர்வேனோ
இப்பாட்டில் அகார அர்த்தத்தை ஸ க்ரமமாக வ்யாக்யானம் பண்ணுகிறார் –
அவ ரக்ஷணே -இறே தாது
ரக்ஷிக்கும் இடத்தில் ஸர்வ பிரகாரமாக ரக்ஷிக்க வேணும்
அது தானும் ஸர்வ காலமும் ரக்ஷிக்க வேணும்
அப்படி ரக்ஷிக்கும் இடத்தில் ஸர்வ ரக்ஷகனாக வேணும்
இப்படி வரை அறாதே ரக்ஷிக்கும் இடத்தில்
ந கச்சன் ந அபராத்யதி -என்னும் அவளும்
என் அடியார் அது செய்யார் -என்னும் அவனும் கூடவாயிற்று
ஆகையால் இறே அகாரம் மிதுனத்துக்கு வாசகம் ஆகிறது –
உயர்வற ஞாலத்தூடே -இத்யாதியாலே
ஸர்வ பிரகார ரக்ஷகத்வம் சொல்லிற்று
உயர் நலமுடையவன் மயர்வற –சாலப் பல நாள் இத்யாதியாலே ஸர்வ கால ரக்ஷகத்வம் சொல்லிற்று
அயர்வறும் அமரர்கள் அதிபதி -கோலத் திரு மா மகளோடு உன்னை -என்கையாலே
ஸ்ரீ யபதியே ப்ராப்யம் என்கிறது
அகார விவரணமான திரு மந்த்ரார்த்தம் சொல்கிறது
உயர் நலமுடையவன் -கோலத்திருமா மகளோடு உன்னை -என்று ப்ரஹ்ம ஸ்வரூபம் சொல்லுகிறது
அடியேன் -என் மனனே -என்கையாலே ப்ரத்யகாத்ம ஸ்வரூபம் சொல்கிறது
அருளினன் -உயிர்கள் காப்பான் -என்கையாலே உபாய ஸ்வரூபம் சொல்கிறது
சுடர் அடி தொழ –உன்னைக்கூட -என்கையாலே பலம் சொல்லிற்று
மயர்வற –உன்னைக் கூடாதே தளர்வேனோ என்கையாலே விரோதி ஸ்வரூபம் சொல்லிற்று
ஆர்த்த ப்ரபந்ந அதிகாரி ஸ்வரூபம் சொல்லுகிறது
அகாரத்தை விவரிக்கிறது உயர்வற உயர் நலம் உடையவன் -என்கிற பாட்டு
உயர்வற உயர் நலத்தை விவரிக்கிறது ஞாலத்தூடே என்கிற பாட்டு
எங்கனே என்னில்
அகாரத்திலே நாராயண பதம் விவரணம் ஆகையாலே ஸர்வவித பந்துவாய் ரக்ஷிக்கும் என்கிறது
இந்த ஸர்வவித ரக்ஷகத்வத்தால் அவன் உயர்த்தி சொல்கிறது
உயர்வு என்றது மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும்
மனிதர்க்குத் தேவர் போல் தேவர்க்கும் தேவர் என்கிறது
ஒருவரைப் பார்க்க ஒருவர் உச்சாரயம் என்கிறது -அந்த அர்த்தனத்தை உட்க்கொண்டு
ஞாலத்தூடே நடந்த என்கிறது
நடந்த -ஓங்கி உலகு அளந்தபடி
உயர்வற என்றது அந்நிய சேஷத்வம் ஸ்வ ஸ்வா தந்தர்யம் தவிர்த்த படி
ஆகையாலே ஸர்வ சேஷியானவனே ரக்ஷகன் என்றபடி
உயர் நலம் -ஆனந்தம் -அகாரத்திலே ஸர்வ வித ரக்ஷகத்வம் அவ ரக்ஷணே -என்கிற தாதுவாலே –
ரக்ஷகத்வமே ஸ்வரூபம் என்கிறது -அதாவது
த்ரிவிக்ரம அபதானத்தாலே ஜெகதாகாரதையை நடத்திக்காட்டி ஞாலத்தில் உள்ளார் எல்லாம்
அன்ய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்தர்யங்கள் ஆகிற அஞ்ஞான அந்தகாரங்கள் -கட்க்கண்ணும் உட் கண்ணும் குருடாய்
அத்தை வெளிச் சிறப்பிக்கைக்காக உடையவன் ஆகையால் நடந்து நின்றும் –
நடந்த போது அவர்கள் எதிர் அம்பு கோர்த்தும்
நின்று சத்ரு நிரசனம் பண்ணி நின்ற போதும் ஸஜாதீய புத்தி பண்ணி அகன்றும்
எவன் அஞ்ஞரான சேதனர்களை அறிவில்லாமையைக் கண்டு கிடந்தும்
பாற் கடல் பள்ளி கொண்டு அருளும் இடத்து
நீள் நகர் நீள் எரி வைத்து அருளாய் என்று கூக்குரல் கேட்டு புறப்பட்டு அம்புக்கு இரையாக்கியும்
அவன் -அனந்த சாயியானவன் எழுந்து வந்து இருந்தும் நூறாண்டு பதினோராயிரம் ஆண்டு இருந்தும்
ஸர்வவித ரக்ஷணம் பண்ணிய இடத்து
வையத்து நின்னை வல்லவர் பழித்து இன் நடவாலே குருடு நீங்கிற்று இல்லை யாகையாலே
அகாரத்தாலே ஸர்வ அவஸ்தையிலும் ரக்ஷிக்கும் என்கிறது
ஆக அகார விவரணமான நாராயண பதத்தில் சொன்ன ஸர்வவித ரக்ஷகத்வத்தை
உயர்வற உயர்நலம் உடையவன் எவன் அவன் -இப்படி லீலா விபூதியை நடத்துகிற ஸ்வாமியானவன்
எனக்கு மயர்வற மதிநலம் அருளினன் என்பதையே சாலப்பல நாள் என்கிறது
அகாரத்தில் ஸர்வ கால ரக்ஷகத்வத்தைச் சொல்லுகிறது
சோம்பாது பல்லுருவை எல்லாம் படர்வித்த என்கிறபடியே அகாரத்தில் பிரதம சதுர்த்தியாலே
சேஷத்வ ஞானம் பிறந்தவன் மதிநலம் ஆகிற பக்தி ரூபா பன்ன ஞானம் –
அகாரத்தில் கல்யாண குணங்களைச் சொல்லுகையாலே சர்வ குணங்களுக்கும் கிருபை காரணமாய் அற்றது
அகாரம் ஸர்வ சப்தத்துக்கும் காரணம் ஆகையால் தயமானவாய் ஸ்ருஷ்டிக்கையாலே
ஸ்ருஷ்டிக்கும் தயையே ப்ரேரகம் -கிருபையே காரணமாயிற்று
எவன் அவன் யுகங்கள் தோறும் காப்பானே -என்று கிருபா பாத்திரமான ஜீவ கோடிகளை சொல்கிறது –
காப்பான் என்று எதிர் சூழல் புக்கு இத்யாதிப்படியே காத்து ரக்ஷிக்கும் என்கிறது
ஆக அகாரத்தில் சதுர்த்தியாலும் -மயர்வற மதிநலம் அருளுகையாலும் -உயிர்கள் காப்பான் என்கையாலும்
சேதனருக்கு உட் கண்ணும் குருடும் தீர்ந்து தன்னைக்கண்டு அனுபவிக்கும் படி ஞான சஷுஸ்ஸை யும் கொடுத்து அருளி
ப்ரபாகாந்தரங்களிலே போகாத படி காத்து அருளிய படி
அகாரத்தில் சொன்ன ரஷய வர்க்கத்தை எவன் என்கிறது -அநந்ய கதியான அதிகாரி அகார வாஸ்யன் –
ஆர்த்த ரக்ஷணத்திலே தீஷித்தான் அவன் யாவன் ஒருவன் அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி –
கடலில் அம்ருத தாஸிகள் அன்று
அமுதினில் வரும் பெண் அமுதுக்கு ஆராவமுதம் ஆனவனை அருந்தும் அமரர்கள்
கோலத் திரு மா மகளோடு உன்னை
ஆர்த்த ரக்ஷணத்திலே தீஷிதரான கோலம் -அகாரத்திலே லஷ்மீ ஸம்பந்தம் சொல்லுகையாலே
அகாரோ விஷ்ணு வாசக அர்த்தே லஷ்மீ வாசக -என்கையாலே உன்னைக் கூட என்கிறது
இனி வரும் ஆர்த்த ரக்ஷணத்திலே தீஷித்து -அத்தனையும் சரணாகதியிலே தீஷிப்பித்து
அத்தை பிராப்தி பர்யந்தமாக நடத்தி விரஜையிலே அவப்ருதம் ஆட்டி செய்த வேள்வியனைத்
திருவடிக்கீழ் குற்றேவல் செய்து இருக்கும் படி அருளினவன் யாவன் ஒருவன் அகார வாஸ்யனான
அயர்வறும் அமரர்கள் அதிபதி
அகாரத்தில் சொன்ன ஸர்வவித பல பிரதத்வம் சொல்கிறது -ஆர்த்தி ஹரத்வம் சொல்கிறது
நித்யர் முக்தர் பத்தர் முமுஷுக்கள் -அனைவருக்கும் ஸர்வவித பல பிரதானம் பண்ணி ஆர்த்தியைத் தீர்க்குமவன்
யாவன் ஒருவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
சுடர் அடி -ஆர்த்தி ஹரமாய் மநோ ஹரமாய் தேஜோ மயமான திருவடிகளை யுடைய உன்னைக் கூடாதே
கோலத்திருமா மகளோடு உன்னைக்கூடாதே
இச்சேர்த்தியிலே சேரப்பெறாதே -அகார விவரணமான ஸ்ரீ மன் நாராயணனைக் கூடாதே
துயர் அறு சுடர் அடி தொழாதே -துயர் துக்கம் பிரயாசம் -பிரயாசப்படாதே துயர் அறு
ஸூகரமான திருவடிகளை லபிக்கப் பெறாதே
சாலப்பல நாள்
கீழ் கழிந்த காலம் எல்லாம் போராமல் என் மனனே வாள்களாகி நாள்கள் செல்லக் கழிந்த காலம் போராதோ
அகார விவரணமான சரம சதுர்த்தியிலே சொன்ன சேஷ விருத்தியின் படியே தொழுது எழவன்றோ பிராப்தம்
அஞ்சலி பரமா முத்ரா என்று ஆர்த்த அதிகாரி லக்ஷணம் சொல்லா நிற்க
அது லபியாமல் அடியேன் இன்னம் தளர்வேனோ
அநாதி காலம் அஸேவ்ய சேவை பண்ணித் திரிந்தது போராதோ -இன்னம் தளர வேணுமோ
கர்த்ருத்வ போக்த்ருத்வ புத்தி பிறந்து அகன்று போகாமே துயர் அறு சுடர் அடி தொழுது
என் மனனே -என்று அருளிச் செய்து அருளினார் ஆயிற்று
உயர்வற என்றும் -ஞாலத்தூடே நடந்து உகந்து உயிர்கள் காப்பான் என்றும் -விரோதி ஸ்வரூபமும்
மது நலம் என்றும் உயிர்கள் காப்பான் என்றும் உபாய ஸ்வரூபமும்
அமரர்கள் அதிபதி -கோலத் திருமாமகளோடே உன்னை -என்று பர ஸ்வரூபமும்
தொழுது எழு என் மனனே -அடியேன் என்று ஸ்வ ஸ்வரூபமும்
உன்னைக் கூடாதே -தொழுது எழு -என்று ப்ராப்ய ஸ்வரூபமாக
அர்த்த பஞ்சகமும் சொல்லிற்று ஆய்த்து —
—————————–
உலகம் உண்ட பெரு வாயா! உலப்பில் கீர்த்தி அம்மானே!
நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி! நெடியாய்! அடியேன் ஆருயிரே!
திலதம் உலகுக்காய் நின்ற திரு வேங்கடத் தெம் பெருமானே!
குல தொல் அடியேன் உன பாதம் கூடுமாறு கூறாயே.–6-10-1-
உலகமுண்ட பெரு வாயனில்
இப்படிக் கூப்பிட்ட இடத்திலும் முகம் காட்டாமையாலே அநந்ய கதிகராய்க் கொண்டு
பெரிய பிராட்டியார் புருஷகாரமாகத்
திருவேங்கடமுடையான் திருவடிகளிலே சரணம் புகுகிறார் –
————-
அகல கில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல் ஓன்றில்லா அடியேன் உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே.–6-10-10-
உயர்வற என்கிற பாட்டை -அகலகில்லேன் -என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
உயர்வற -அகலகில்லேன் -கீழே தம்முடைய அபேக்ஷிதம் சடக்கென ஸித்திக்கைக்காக
பெரிய பிராட்டியாரைப் புருஷகாரமாகக் கொண்டு
திருவேங்கடமுடையான் திருவடிகளிலே சரணம் புகுகிறார்
ஆக ஒன்பது பட்டாலும் சரண்யன் ஸ்வரூபத்தைச் சொன்னார்
இதில் தம்முடைய ஸ்வரூபத்தைச் சொல்லி சரணம் புகுகிறார்
கீழே அடியேன் என்றும் அருவினையேன் என்றும் தன்னுடைய ஆகிஞ்சன்யத்தையும் சேஷத்வத்தையும்
அவனுடைய சரண்யத்வத்தையும் அதுக்கு உறுப்பாகச் சொல்லிக் கொடு போந்தார்
இங்கே அது சென்னையே பேற்றுக்கு உடலாகச் சொல்லி சரணம் புகுகிறார்
இப்பாட்டில் பதங்களை த்வயத்தில் பதங்களோடு ஓக்க யோஜித்துக் கொண்டு தலைக்கட்டக் கடவது
அதில் அர்த்த ப்ராப்தமான அஹம் அர்த்தத்தை இங்கு அடியேன் என்கிறது
இது பாட்டுப் பிரவேசம்
ஸ்ரீ உயர்வற அகலகில்லேன் -ஸ்ரீ மன் -மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவாக
ஒன்றுக்கு ஓன்று உயர்வும் தாழ்வுமாய் இருக்குமா போலே
உயர்வு என்று -உகார வாஸ்யையான பிராட்டிக்கு உயர்வும் தாழ்வுமாவது
அது அறுகை யாவது -உயர்வான மிதிலை குண்டின புரம் ஷீராப்தி அம்ருதம் தாமரைப்பூ இவைகள்
அதிசயமான பிறந்தகமாக இருக்க -அதில் ஸ்மரணையும் அற்று அவற்றை அகன்று விட்டு –
உயர் நலம் அகலகில்லேன் என்று இறையும் –
ஸ்ரீ -ஸ்ரீயதே -ஸ்ரேயதே -இதுக்கு அர்த்தம்
ஸ்ரீ யதே -தத் வ்யதிரிக்தங்களுக்கு ஸ்வாமிநி ஆகையாலே வந்த ஏற்றம் –
ஸ்ரயதே -என்கையாலே -சேஷியான ஸர்வேஸ்வரனுக்கு ஆஸ்ரிதையாய் சேஷமாய்
பரதந்த்ர ஏக பரையாகையாலே உயர்த்தி அற்ற படி –
உயர்நலம் என்கிறதும் அகலகில்லேன் என்கிறதும் ஸ்ரயதே என்கிறதும் –
பிறந்த அகங்களை விட்டுத் திரு மார்பை அகலகில்லேன் என்கிறாள் –
அகலகில்லேன் என்கிறவள் தான் யார் என்னில் –
நலமுடையவன் -ஸ்ரீ மன் -அலர்மேல் மங்கை உறை மார்பன் -என்று சொல்லப்பட்ட நலம்
அதாவது பூவில் மிருதுவும் மதுவும் மணமும் கிண் கிணி வாய்ச் செய்த பருவமும் செவ்வியும் கூட்டி
ஒரு பெண்ணாக வகுத்தால் போலே இருக்கிறவன் அகலகில்லேன் என்கிறாள்
ஸ்ரீ மன் நாராயணன் -நலமுடையவன் -மங்கை உறை மார்பன் -நித்ய அநபாயினி யான பிராட்டி
எனக்குத் தேனே பாலே கன்னலே அமுதே என்கிற போக்யதையைப் பற்றச் சொல்கிறாள்
ஸர்வ கந்தஸ் -ஸர்வ ரஸ -என்கிற போக்யதையைப் பற்ற அகலகில்லேன் அகலகில்லேன் -என்கிறாள்
தாமரைகளுக்குள்ளே ஸுகந்தியாதிகளின் அளவு இறே –
அவனது ஸர்வ காந்தத்துக்கும் ஸர்வ ரஸத்துக்கும் நேர் நிற்க வற்றோ –
ஆகையாலே -இறையும் அகலகில்லேன் -என்கிறாள் –
எவன் அவன் என்று திவ்யாத்ம ஸ்வரூபம் சொல்கிறது –
வ்யாபகமும் ஸ்ரீ யபதியாயே வியாபிப்பது
ஆகையாலே உயர்நலம் உடையவன் யாவன் ஒருவன் அவன் ஸ்ருதி ப்ரஸித்தனானவன் –
எனக்கு மயர்வற மதிநலம் அருளி -சரணவ் சரணம் ப்ரபத்யே -என்று பற்றும்படி
நிகரில் புகழாய் -என்கிற வாக்யங்களாலே
புருஷகார சாபேஷனான அதிகாரியைச் சொல்கிறது –
புருஷகார சாபேஷமும் அதிகாரி சாபேஷமும் ஆனவன் என்று சரண்யனைச் சொல்கிறது –
புருஷகாரமுமாய் ப்ரபாயையுமாய் இருக்கும் என்று பிராட்டியைச் சொல்கிறது –
சரணவ்-திருவடிகளை
சரணம் -உபாயமாக
ப்ரபத்யே -பற்றுகிறேன்
என்றது அதிகாரி ஸ்வரூபம்
மயர்வற மதிநலம் அருளினன் என்றது -பக்தி ரூபா பன்ன ஞானமுடைய அதிகாரி
நிகரில் புகழாய் யுலகம் மூன்று யுடையாய் என்னை ஆள்வானே – என்ற அதிகாரி –
நிகரில் புகழாய் -என்றது ஸாத்ய உபாயங்கள் -ஸித்த உபாய பூதனானவனுக்கு ஸஹாயமாக வேண்டா என்கிறது –
நிகரில் -தத் ஏக உபாயமானவனே -என்றபடி
இந்த புகழை யுடையவன் யாவன் ஒருவன் அவன் மயர்வற மதிநலம் அருளினான்
உபாயாந்தரங்களை ஸ வாசனமாக விடுவித்து -அவனே உபாய உபேயம் -என்கிற ஞான ப்ரேமங்களை நிர்ஹேதுகமாக அருளினவற்றை இறே
நிகரில் புகழாய் -என்றது -அதாவது
சரணவ் சரணம் என்கிற தத் ஏக உபாயத்வம்
நிகரில் புகழாவது -நித்ய விபூதியில் நித்ய முக்தருக்கும் அதிபதியாய் இருக்குமதும்
ஸ்வேத தீப வாசிகள் ஸேவிக்க இருக்குமதும்
அயோத்யா வாசிகளுக்கு அபி ராமனாய் வசிஷ்டாதிகள் நடுவே இருக்குமதும்
த்வாரகையிலே யாதவர்கள் ஸேவிக்க இருக்குமதும்
நிகரில் புகழ் அல்ல
அந்தர்யாமித்வமும் கண் கொண்டு காண ஒண்ணாது -பிரமாண ப்ரஸித்தி அத்தனை
அவை ஒன்றுக்கு ஓன்று அதிசயமாகையாலே நிகராக இருக்கும்
இவர் நிகரில் புகழாய் என்றது
காகமும் வானரமும் வேடுமானவர்களுக்கும் முகம் கொடுத்துக் கொண்டு நிற்கிற நிலை
அதிலும் அவஸ்துவான எனக்கும் நிர்ஹேதுகமான அருளினை அருளுக்கு ஸத்ருசம் உண்டோ என்கிறார்
காகமும் வானரமும் நித்ய ஸூரி கோடியிலே யாம்படி யன்றோ என் நிலை
அவற்றுக்கு முகம் கொடுத்தது புகழ்
எனக்கு அருளினது நிகரில் புகழ்
கிருபா குணத்துக்கு வாத்சல்யாதிகள் நேர் ஆக மாட்டாது
எங்கனே என்னில்
கிருபை தானே ஸர்வ குணங்களுக்கும் காரணமுமாய் ப்ரேரமுமாகையாலே அருளினன் என்கிறதையே நிகரில் புகழாய் என்கிறது
ஆக
கிருபா பிரேரிகை பிராட்டி
கிருபா ப்ரேர்யன் எம்பெருமான்
கிருபா பாத்ரம் அடியேன்
ஆகையால் பகவானுக்கு வாத்சல் யாதிகள் புகழ் அல்ல
கிருபையே அடியவருக்குப் புகல் ஆகையாலே
நிகரில் புகழாய் என்றது காருண்யா ரூபயா என்றதையே –
ப்ரபத்யே -எவன் அவன் -உலகம் மூன்று யுடையாய் -என்னை ஆள்வானே –
இப்படி இருக்கிறவன் யாவன் ஒருவன் அவன் கிருபையாலே
வாத்சல் யாதி குண ப்ரவாஹம் ப்ரவஹிகையாலே மூன்று உலகமும் நிறைந்தது
என் அளவும் பூரித்தது
லோக்யத இதி லோகே -என்றதில் தாமும் ஒருவனாய் இருக்க
என்னை ஆள்வானே -என்றது
த்ரிவித சேதனரையும் அதிகார அனுகுணமாக நியமித்து
இவரை கிருபா அனுகுணமாக நியமித்தது
அத்யந்தம் பாரதந்தர்ய பரா காஷ்டையான -பூசும் சாணத்தில் படியே
தனக்குப் போக்யமாகக் கொண்டு அருளுகிறபடி
பத்தர் -லீலைக்கும்
முக்தர் கிருபைக்கும்
நித்யர் கைங்கர்யத்துக்கும் ஆனால் போலே
இவர் போக்யதைக்கே வடிவானவர்
ஆகையால் தன் உகப்பில் வருவார் இவர் ஒருவரே ஆகையாலே
என்னை ஆள்வானே -என்று அவனுக்கு நிரூபகம் ஆய்த்து –
உத்தர வாக்கியம் -ஸ்ரீ மதே நாராயணாய நம –அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன் –
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திரு வேங்கடத்தானே
ஸ்ரீ மதே -பெரிய பிராட்டியாரோடே கூட இருந்தவனுக்கு – அயர்வற -அசர்வு அற்ற அமரர்கள் –
அம்ருத ஆனந்த மக்நரானவர்கள் பரிசர்யை பண்ண வீற்று இருக்கும்
ஒண் டொடியாள் திருமகளும் நீயும் நிலா நிற்ப
நிகரில் அமரர்
ப்ரஹ்மாதிகள் அமரத்துவம் கர்மம் அடியாக வாகையாலே நிகர் உண்டு
இவருக்கு பகவத் அனுபவத்தால் வந்த அமரத்துவம் ஆகையால் நிகர் அற்று இருக்கும் –
முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானை
கடலில் அம்ருத தாசிகள் அன்று
நிகரில் அமரராவார் -அமுத்தினால் வரும் பெண்ணமுத்துக்கும் ஆராவமுத தாஸிகளான அமரர்
முனி முக்தர்
கணங்கள் பத்தர்
உயர்வற மயர்வற அயர்வற துயரற -என்று நித்யர் முக்தர் பத்தர் ஈஸ்வரன் இவர்கள் அடைப்பிலே துயர் தீர்ந்தது
உபய விபூதி நாதனான தனக்குத் திரு வேங்கட முடையானான பின்பு எல்லார் கடன்களும் வெந்தாய்த்து
ஆகையால் ருணம் ப்ரவர்த்தம் இவ என்றவன் ஆகையால் திருவேங்கடத்தானே என்று நிரூபகமாய்த்து
திரு வென்றது சீரிய நிதியாயும் அஹம் அந்நமாயும் விரும்பும் திருவேங்கடத்தானை
உலக்கங்களுக்கு எல்லாம் ஓர் உயிர் ஆனவனே
ஸ்ரீ மதே நாராயணாயா -அயர்வறும் அமரர்கள் அதிபதி –
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானை
நம -துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
புகல் ஒன்றில்லா அடியேன் உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தானே
நம தொழுது எழு -உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே
ஆகிஞ்சன்யமும் அநந்ய கதித்வமும் உடைய சேஷ பூதன் துயர் அறு சுடர் அடி யான் அது அடைய
அசரண்ய சரண்யனான உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே
ப்ராப்யமும் அவன் ஆகையாலே மனனே தொழுது வர்த்தி என்கிறார்
————————————
ஆறாவது பத்து விவரணம் முற்றிற்று
———————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை திருவடிகளே சரணமஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply