சந்தியும் சந்திப்பதமும் அவை தம்மிலே தழைக்கும்
பந்தியும் பல் அலங்காரப் பொருளும் பயிலு கிற்பீர்
வந்தியும் வந்திப்பவரை வணங்கும் வகை அறிவீர்
சிந்தியும் தென் குருகூர் தொழுது ஆட் செய்யும் தேவரையே
நாத முனிக்கு அன்று நாலாயிரமும் உணர்த்தி
போதம் அருள் குருகூர் வித்தகனார் -கோதில்
திருவாய் மொழி வாசக மாலைத் தேனைத்
தரவே எனக்கு அருள் செய்தார் –
———-
கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே! என்றென்று
பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி
மெய்யே பெற்றொழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பார் ஆர்?
ஐயோ! கண்ண பிரான்! அறையோ! இனிப் போனாலே.–5-1-1-
கையார் சக்கரத்தில்
ஸம்ஸாரிகளிலே அந்நிய தமனான என்னை அவர்களையும் திருத்த வல்லேனாம்படி
நிர்ஹேதுகமாக விஷயீ கரிப்பதே என்று அவர் தம் பக்கலிலே பண்ணின உபகாரத்தை
அனுசந்தித்து இனியர் ஆகிறார் –
உயர்வற என்கிற பாட்டை -கையார் சக்கரம் -என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் தேவதாந்தரங்களைப் புகழா நிற்க –
அவை அற்று
உயர்நலம் உடையவனைக்
கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே! என்று
உயர்நலம் யுடையவனுடைய ஞான ஆனந்தங்களோ பாதி
அவன் சின்னமும் திரு மூர்த்தியும் சிந்தித்து ஏற்றினவன் அல்லேன்
உயர்நலம் உடையவன் யாவன் ஒருவன் -அவன் மயர்வற மதி நலம் அருளினன்
பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி
மெய்யே பெற்றொழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பார் ஆர்?
அஹ்ருதயமான சொன்ன வசனத்தை ஸஹ்ருதயமாகச் சொன்னோமாகக் கொண்டு
மயர்வு -அஹ்ருதயம்
புத்தி பூர்வகமாகச் சொன்னேன் அல்லேன்
மதி நலமான பக்தி ரூபா பன்ன ஞானத்தை -அத்தாலே பிறந்த வ்யாமோஹம்
இதர விஷய விரக்தியைப் பிறப்பித்தது
பகவத் விஷயத்தில் ப்ரேமம் விளையும்படி -நிர்ஹேதுகமாக -விளையும் படி அருளினான் -எவன் அவன் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி -எவன் அவன் -அவனாலே பெற்று ஒழிந்தேன்
அஞ்ஞான கந்த ரஹிதரான நித்ய ஸூரி ஸேவ்யன் முன்னே
அஞ்ஞான கார்யமான -பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி
கைம்மை -மெய் கலவாத சுத்தப் பொய்
இத்தால் -பிறரைப் பகட்டுகிற பொய் அன்று -ஸர்வஞ்ஞனையும் பகட்டுகிற பொய் இறே சொல்லிற்று –
மயர்வற மதிநலம் அருளின கிருபை பெருகி -அஹ்ருதயமான யுக்தியை ஸஹ்ருதயமாக்கி
என் பக்கலிலே கிருபையை வர்ஷித்தான்
மயர்வற மதி நலம் பெறுகையாலே சப்தாதிகளைப் புறம் என்று பூர்வ விருத்தத்தைப் பார்த்துச் சொன்ன படி –
பரிபூர்ண விஷயத்துக்குத் தக்கதாகத் தமக்குப் போராமையாலே பொய் என்கிறார்
பரமபதத்துக்குப் போனாலும் இப்பேற்றை அசை இட்டு இருக்கும் அத்தனை
இனி இதில் காட்டில் ஏற்றம் செய்வது இல்லை என்ன
இதுக்கு ஹேது வில்லை என்னா நின்றீர்
பேறோ தான் கனத்து இரா நின்றது -இதுக்கு அடி என் என்ன
விதி வாய்க்கின்று
பகவத் கிருபை கரை புரளப் பெருகி துயர் அறு சுடர் அடி தொழுது எழப் பண்ணா நின்றால்
நம்மால் செய்யலாவது உண்டோ –
துயர் அறு சுடர் அடி -பொய் சேர் -என்கிற துக்க கந்த ரஹிதமாய் -மெய்யான பரஞ்சோதி யானவன் –
தன் திருவடி தொழுது எழும்படி பரமமான கிருபை பெருகப் புக்கால் -அத்தைத் தகைவார் உண்டோ –
விதி வாய்க்கின்று காப்பார் யார்
வாய்க்கின்ற கிருபை மஹா ப்ரவாஹமாகப் பெருக்கு எடுத்த படி
விதி என்கிறார் பகவத் கிருபையை -விதியைத் தப்ப ஒண்ணாமையாலே –
வாய்க்கின்ற கிருபை பெருகி அடியேனை இழுக்கக் காப்பார் யார் –
என் மனனே -ஸ்வ தந்த்ரன் கிருபை காப்பார் யார்
ஏன் காக்க ஒண்ணாதோ என்ன
காப்பார் யார் என்றீரே -எதிர் சூழல் புகுத்தி திரிந்த இடத்தினும் தப்பின நீர் தான் காக்க மாட்டீரோ
நாம் தாம் ஸ்வ தந்திரம் அல்லோமோ -நம் கிருபையைத் தகைய சக்தி இல்லையோ
நம் மார்பில் இருக்கிறவன் இதைக் குறைக்கில் என்ன
ஐயோ! கண்ண பிரான்! அறையோ! இனிப் போனாலே.–
கிருபா ஜநகை யாகையாலும்
கிருபா பரதந்த்ரனான உன்னாலும்
கிருபா பரவசனான என்னாலும் –காக்க முடியாது
இந்த கிருபா ப்ரவாஹத்தை -பல போக்தாவான என்னாலும் -பல ப்ரதனான உன்னாலும் –
பல வர்த்திகையான அவளாலும் தகைய ஒண்ணாது
தகைத்து தான் பார்க்கலாகாதோ என்கிறார்
மித்ர பாவேந என்கிற உனக்கு அஞ்ஞானம் -இவன் தோஷத்திலே விஸ்ம்ருதியும்
ஸர்வ சக்திக்கு இவனை விடும் இடத்தில் அசக்தியும் யுடைய கண்ணபிரானைத்
தொழுது எழு என் மனனே —
ஐயோ! கண்ண பிரான்! அறையோ! இனிப் போனாலே.–என்று
ஹர்ஷத்தாலே உபகார சீலனைப் பார்த்து விண்ணப்பம் செய்து
தன் திரு உள்ளத்தைக் குறித்து உபகார ஸ்ம்ருதியாலே தொழுது எழு என்று உபதேசிக்கிறார் –
———-
பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை
கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்.–5-2-1-
பொலிக பொலிக வில்
ஒன்றும் தேவு -கேட்டுத் திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு மங்களா ஸாஸனம் பண்ணியும்
திருந்தாரைத் திருத்தியும் சொல்கிறார்
ஒன்றும் தேவிலே தான் திருத்திய ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யைக் காண்கைக்காக
நித்ய ஸூரிகள் இங்கே வர
அவர்களையும் வ்யூஹ விபவ ஸ்தானீயரையும் கண்டு மங்களா ஸாஸனம் பண்ணுகிறார்
—
திரியும் கலியுகம் நீங்கித் தேவர்கள் தாமும் புகுந்து
பெரிய கிதயுகம் பற்றிப் பேரின்ப வெள்ளம் பெருகக்
கரிய முகில் வண்ணன் எம்மான் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
இரியப் புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே.–5-2-3-
உயர்வற என்கிற பாட்டை -திரியும் கலியுகம் என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்தளவும் தேவதாந்தரத்தாலே வந்த உயர்த்தி அற்று
கலி தோஷத்தாலே தேவதாந்தரம் பண்ணித் திரிகிற உயர்த்தி அற்று
உயர்நலம் யுடையவன் எவன் அவன் -மயர்வற மதிநலம் அருளி ஆழ்வாரைக் கொண்டு
ஜகத்தைத் திருத்த
திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களைக் காண
தேவர்கள் தாமும் புகுந்து பெரிய கிதயுகம் பற்றிப் பேரின்ப வெள்ளம் பெருகக்
உயர்நலம் யுடைய ஞான ஆனந்த ஸ்வரூபனாய் ஞான குணகனாய் வேதைக சமைதி கம்யனாலே
மயர்வற மதிநலம் அருள வந்த பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே பர உபதேசம் பண்ண –
அத்தாலே திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களும் ஆழ்வாருமான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யைக் காண
வந்து புகுந்து அவர்களோடே கலந்து ஆதி கிருதயுகம் போலே பர ப்ரஹ்ம ஆனந்தம் பெருகும்படியாக
யாவன் ஒருவன் அருளினான் அவன் பொருட்டு அவர்களுக்கு
பொலிக பொலிக என்று மங்களா ஸாஸனம் பண்ணி உகக்கிறார்
அயர்வறும் அமரர்கள் அதிபதி அவனோடும் கூடி
கரிய முகில் வண்ணன் எம்மான் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
இரியப்
அஸ்ப்ருஷ்ட கந்தரான நித்யரான வைகுந்தன் பூதங்களும்
தடம் கடல் பள்ளிப் பெருமாள் தன்னுடைப் பூதங்களும்
மாதவன் பூதங்களும்
கடல் வண்ணன் பூதங்களான நேமிப்பிரான் தமர் போந்தார்
இரியப் புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே.–
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
ஸர்வ துக்க கந்த ரஹிதமாய் தேஜோ ரூபமான பகவானுடைய திருவடிகளான
சடகோபனை சிரஸா வஹித்து
அந்த சடகோபன் திரு நாமமே உனக்கு தாஸ்ய நாமமாக வஹித்து இருக்கிற
ஸ்ரீ வைஷ்ணவர்கள் சுடர் அடி தொழுது எழு
அந்தப் ப்ரீதிக்குப் போக்கு விட்டுப் பாடி ப்ரேம பாரவஸ்யம் இருந்த இடத்தே இருக்க
ஒட்டாமல் ஆடி எங்கும் இடம் கொண்டனவே
என் மனமே தொழுது எழு வர்த்தி
இஸ் ஸம்ருத்திக்கு மங்களா ஸாஸனம் பண்ணி சூழ்ந்து இருந்து ஏத்தப் பார் –
—————–
மாசறு சோதி என் செய்ய வாய் மணிக் குன்றத்தை
ஆசறு சீலனை ஆதி மூர்த்தியை நாடியே
பாசற வெய்தி அறிவிழந்து எனை நாளையம்
ஏசறும் ஊரவர் கவ்வை தோழி! என்செய்யுமே?–5-3-1-
மாசறு சோதியில்
நண்ணாதார் முறுவலிப்ப -லிலே -ஸம்ஸாரிகள் படுகிற கிலேசத்தை அனுசந்தித்து
அதுக்குப் பரிகாரமாக பகவத் பாகவத ஞானத்தை உபதேசித்துத் திருத்தி
அதுக்கு உபகார ஸ்ம்ருதி பண்ணி
அநந்தரம் திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு மங்களா ஸாஸனம் பண்ணி
இப்படி ஸம்ஸாரிகள் பேறு தலைக்கட்டின வாறே
ஏறாளும் இறையோனில் இழவு தலையெடுத்து
வழி அல்லா வழியில் மடலூர்ந்தாகிலும் கிட்டும் அத்தனை என்று கலங்கின படியைப் பேசினார்
கீழே பாகவத ஸம்ருத்திக்கு மங்களா ஸாஸனம் பண்ணினார்
மலியும் சுடர் ஒளி மூர்த்தியை -என்று வடிவு அழகையும் குணங்களையும் யுடையவனை
பாஹ்ய சம்ஸ்லேஷ அபேக்ஷை பிறந்து கையை நீட்டாக கைக்கு எட்டாமையாலே கலங்கி
மடல் எடுக்கையில் உபமிக்கிறார் –
இந்த உத்யோகத்தைக் கண்டா தோழியானவள் வந்து
தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்று இருக்கக் கடவ உனக்கு சத்ருசம் அன்று
ஆஸ்ரித ரக்ஷணத்திலே தீஷிதனாய் இருக்கிற உன் நாயகனுக்கும் சத்ருசம் அன்று
நம் குடிக்கும் சேராது
மாசாய் விளையும் காண் -என்று
மடல் எடுக்கையை நிஷேதிக்கறதாய் இருக்கிறது
இத்தைத் தோழி சொல்ல அவளைப்பார்த்து நாயகி சொல்கிறாள்
உயர்வற என்கிற பாட்டை மாசறு சோதி விவரிக்கிறது
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் சாதனாந்தரங்களால் வந்த
தேவாதி சரீரங்கள் புண்ய ஷயம் ஆனவுடனே உயர்வு அறும்
உயர்நலம் உடையவன் எவன் அவன் மாசறு சோதியாய் ஞான ஆனந்த ஸ்வரூபனாய் வேதாந்த வேத்யனாய் சவுந்தர்யாதி குண சேஷ்டிதங்கள் எல்லாம் மாசு அற்றதாக இருக்கும் –
ஹேய பிரதிபடமானவன் –
என் செய்ய வாய் மணிக் குன்றத்தை
சிவந்த வாயோடே கூட அசலமானதொரு நீலகிரி போன்ற வடிவை யுடையவன் –
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் -மாசறு சீலனான ஆதி மூர்த்தியானவன் –
மயர்வற மதி நலம் அருளுகையாலே வந்த பக்தி ரூபா பன்ன ஞானத்தால் பிறந்த ஆசையாலே
ஆசறு சீலனை ஆதி மூர்த்தியை நாடியே பாசற வெய்தி
என்னே வினையேன் எனை யூழி நைவேன்
அவன் நான் மடல் எடுக்க உத்யோகிக்க உத்யோகிக்க ஆக்கம் முற்றி
அவனுடைய வை லக்ஷண்யம் ப்ரகாசிக்கிறபடியாலே
எனக்கு அது தானே ஹேதுவாக அறிவு கலங்கி வருகிறபடியும் பாராய்
அவ்வளவு ஹேய ப்ரத்ய நீகன் காண் –
நான் மடல் எடாது இருக்கை அவ்வடிவுக்கு ஹேயம் காண்
அவ்வடிவை உக்காந்தார்க்குக் கொடான் என்னும் பழியையத் துடைக்கக் காண்
நான் பார்க்கிறது –
பக்தானாம் என்கிற வடிவைத் தனக்கு என்று இருக்கை மாசு இறே -என்ன
ஊரார் பழி சொல்லி ஏசுகை எல்லாருக்கும் குடிப்பழி யன்றோ என்று
மடல் எடாமல் தோழி நிஷேதிக்க
நான் அயர்வறும் அமரர்கள் அதிபதியான அந்த மாசறு சோதியிலே மாலாய் ஆசைப்பட்டு
துயர் அறு சுடர் அடி தொழுது எழுந்து
ஆதி மூர்த்தியை நாடியே என் மனமும் நானும்
பாசற வெய்தி அறிவிழந்தோம்
ஏசறும் ஊரவர் கவ்வை தோழி என் செய்யுமே
ஊரவர் கவ்வை எரு விட்டு -இத்யாதிப்படியே
எனக்கு அது தான் அன்றோ மடல் எடுக்கைக்கு ஹேது என்கிறாள் –
—————-
ஊரெல்லாம் துஞ்சி உல கெல்லாம் நள்ளிருளாய்
நீரெல்லாம் தேறி ஓர் நீளிரவாய் நீண்டதால்
பாரெல்லாம் உண்ட நம் பாம்பணையான் வாரானால்
ஆர்?எல்லே! வல் வினையேன் ஆவி காப்பார் இனியே.–5-4-1-
ஊரெல்லாம் துஞ்சி யில் —
பாரித்த படியே மடலூர ஒண்ணாத படி அஸ்தமித்தவாறே உசாத்துணையும் இன்றிக்கே
ராத்ரியில் விசனம் அனுபவித்தார் –
—-
வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண் துளியாய்
அஞ்சுடர வெய்யோன் அணி நெடுந்தேர் தோன்றாதால்
செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால்
நெஞ்சிடர் தீர்ப்பாரினி யார்? நின்று ருகுகின்றேனே.–5-4-9–
உயர்வற என்கிற பாட்டை -வெஞ்சுடரில் தானடுமால்-என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவாக –
திவா ராத்ரி விபாகம் அற ஊணும் உறக்கமுமாய் இருக்க
எனக்கு ஒருத்திக்குமே விடியாத இருளாயிற்றே
அது தானும் ஊழியாய்
வீங்கிருளின் நுண் துளியாய்
விரஹ அக்னியால் தஹிக்கிறது
அதனாலே இருளும் குளிர்ந்த பனியும் தஹியா நின்றது
லௌகிகர்க்கு திவா ராத்ரி விபாகமாய் காலம் கழிந்து உயர்வு அற்றது
எனக்கு உயர் நலம் யுடையவனைப் பற்றி இருக்கையாலே
இருளும் மோஹ அந்தகாரம் நெடுகா நின்றது –
உயர் நலமுடையவன் எவன் அவன் -அவன் ஞான ஆனந்த ஏக ஸ்வரூபன் ஆனவன் –
எனக்கு மயர்வற மதிநலம் அருளினவற்றால் வந்த பரபக்தி ரூபா பன்ன ஞானத்தாலே
யதா ஸூர்யஸ் ததா ஞானம் ஸந்த்ரோதய சமம் -என்று சொல்லுகிறபடியே
அஞ்சுடர வெய்யோன் அணி நெடுந்தேர் தோன்றாதால்
தன்னுடைய தோற்றரவிலே துக்க நிவ்ருத்தி உண்டாம்படியான
அழகிய சுடரை யுடைய ஆதித்யனும் வருகிறிலன்
பிரளயத்தை நீஞ்சுவாரைப் போலே ராத்ரியையும் இருளையும் நீஞ்சிக்
கரை காணாமல் படுகிற படி
ஆதித்ய உதயத்துக்கு அருணோதயம் போலே அயர்வரும் அமரர்கள் அதிபதி
மோஹ அந்தகார ரஹிதமான நித்ய ஸூரிகளுக்கும் நித்ய ஸூர்யனாய்
ஹேய ப்ரதிபடனானவன் எவன் அவன் ஸூர்ய மண்டல வர்த்தியான
செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால்
கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அஷிணீ -என்கிறபடியே
ஆதித்ய மண்டலத்தில் எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ யப்பதியும் வருகிறிலன்
சிவந்த புகரை யுடைய தாமரை போன்ற கண்களை யுடைய ஸ்ரீ மானும் வருகிறிலன்
ஆதித்யன் வருகிறிலன் –ஆதித்யன் வந்தாலும் இருள் வர சம்பாவனை உண்டு இறே –
அஸ்தமிதியாத ஆதித்யனும் வருகிறிலன்
ஸூர்ய பிரகாசம் ப்ராதேசிகமாய் இருக்கும்
அயர்வறும் அமரர்கள் அதிபதியான நித்ய ஸூரி சேவிதமான ஸூர்யன்
உபய விபூதிக்கும் ப்ரகாசத்தைப் பண்ணுகிற ஆதித்யன் இறே
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -என்னக் கடவது இறே
ஸ்ரீ மானான நாராயணன் சுடர் அடி -துயர் அறு சுடர் அடி தொழுது எழாமல் இருந்த என் மனனே –
நெஞ்சிடர் தீர்ப்பாரினி யார்? நின்று ருகுகின்றேனே.–
ஆந்தரமான மநோ துக்க அந்தகாரத்தைப் போக்குவார் யார்
பாஹ்ய அந்தகாரம் போக்கும் ஆதித்யனும் வருகிறிலன்
ஆந்தரமான துக்க அந்தகாரம் வைரம் பற்றின இருள் இறே
அத்தைப் போக்கும் போது நிலவனுமாய் அந்தரங்கமானவனே வேணும்
ஞானமாகி ஞாயிறாகி -என்னக் கடவது இறே
நின்று உருகுகின்றேனே –
விலக்ஷண விஷயம் உருக்க உருகுகிறது
தர்மி லோபம் பிறக்கவும் ஒட்டாது இறே
இன்னமும் ஒருக்கால் காணலாமோ என்கிற ஆசையாலே இழவு ஜீவிக்க ஒட்டாது என்கிறார் –
——–
எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர்!
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
சங்கி னோடும் நேமி யோடும் தாமரைக் கண்களோடும்
செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என் நெஞ்சமே.–5-5-1-
எங்கனேயோ வில் –
இங்கன் அதி மாத்ர ப்ராவண்யம் ஆகாது என்று நிஷேதிக்கிற தாய்மாரைக் குறித்து
உங்கள் ஹித வசனம் கேட்க ஒண்ணாத படி பண்ணா நின்றது -நம்பியுடைய வடிவு அழகு என்று
பண்டு அனுபவித்த நம்பியுடைய அழகு மறக்க ஒண்ணாத படி நெஞ்சிலே கிடைக்கையாலும்
இப்போது அனுபவிக்கப் பெறாமையாலும் -ப்ரீதி அப்ரீதி சமமாகச் செல்கிறது
—
கழிய மிக்கதோர் காதலள் இவள் என்று அன்னை காணக் கொடாள்
வழுவில் கீர்த்தித் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
குழுமித் தேவர் குழாங்கள் கைத் தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே
எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே.–5-5-10-
உயர்வற என்கிற பாட்டை கழிய மிக்கதோர் -என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்தளவாக
காதல் அளவு பட்டு இருக்கும் இறே
அங்கன் அன்றிக்கே
உயர் நலம் யுடையவன் இடத்தில் காமம் பகவத் ஆனந்தாதிகளிலும்
கழிய மிக்கதோர் காதல் -இதர விஸஜாதீயமான காதல்
அன்றிக்கே
நாள் கழிய கழியப் பெருகி வருகிற காதல்
சோ கச்ச கில காலேந கச்ச தாஹ்யப கச்சதி மம சா பஸ்யத காந்தாம் அஹன்யஹநி வர்த்ததே
நாட்டார் அபிமத விஷயத்தைப் பிரிந்த நாள் ஒரு படியும் பின்பு ஒரு படியாய் மறந்து போகா நிற்பர்கள்
அங்கன் இன்றிக்கே -நாள் செல்ல செல்ல சோகம் பெருகி வாரா நின்றது –
அன்னை காணக் கொடாள்
இவள் ஒரு விஷயத்திலே காதல் பண்ணக் கண்டேனாக வல்லேனோ என்று
இருக்கிறவளும் காண ஒட்டு கிறிலள்
ஆனால் இப்போது இங்கன் படுகிறது என் என்னில்
தர்மி லோபம் வரும்படி பிரவணையாக ஒட்டார்களே
ஆச்சர்யம் உண்டாய் மேல் நடக்க வேணும் என்று இருப்பார்களே –
காண்கை யாவது அனுசந்திக்கை
நெஞ்சு என்னும் உள் கண் -என்னக் கடவது இறே
நெஞ்சையும் கூட வாய் கட்டா நின்றாள் என்ன
உனக்கு இக்காதல் விளைந்தபடி என் என்ன
மயர்வற மதி நலம் அருளினன்
உங்கள் இடத்தில் ஆசையான மயர்வை அறுத்து
ஆனந்தாதி குண விசிஷ்டனைப் பற்றின காதல் மிக்கது
உயர்வற உயர் நலம் யுடையவன் எவன் அவன் -மதிநலம் அருளினவன் எவன் அவன் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
வழுவில் கீர்த்தித் திருக் குறுங்குடி நம்பியை
மதிநலமான பக்தி ரூபா பன்ன ஞானம் அருளப் பெற்ற நான் கண்ட பின்
வழுவில் கீர்த்தி -குறைவற்ற கீர்த்தி
அக்கீர்த்திக்கும் அவனுக்கும் பிரிய ஸ்திதி இல்லாதால் போலே
அவனை ஒழிய ஸ்திதி இல்லாத நான் கண்ட பின்
அயர்வறும் அமரர்கள் அதிபதியை
குழுமித் தேவர் குழாங்கள் கைத் தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே
அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்தராய் அபர்யாப்த்த அம்ருத தாஸிகளான
குழுமித் தேவர்கள் கூட்டம் கூட்டமாய் திரள் திரள அவர்கள்
கிண்ணகத்தில் இழிவாரைப் போலே கை கோர்த்துக் கொண்டு சவுந்தர்ய அம்ருத சாகரத்தில் இழிவார்கள்
அவயவ சோபை -ஆயுத சோபை -ஆபரண சோபை -ஸ்வரூப ரூப குண விபூதிகள் ஆகிற சுழிகளிலே
அமிழ்ந்து நீந்தி நீந்தி சேஷ வ்ருத்திகளைப் பண்ண இருக்கிறவன்
திருக்குறுங்குடியிலே ஸகல குண ஸம்பூர்ணனாய் வந்து நின்ற நம்பியை அபூரணனான நான் கண்டபின் –
துயர் அறு சுடர் அடி தொழுது எழுகை
தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே எழுவதோர் உரு
ஹேய பிரதிபடமாய் நிரவதிக தேஜோ ரூபமான திருவடிகளிலே கைகள் ஆரத் தொழுது எழு என் மனனே என்று
என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே.–
நித்ய ஸூரிகள் நடுவே தோன்றுமா போலே என் நெஞ்சுக்குள்ளே பிரகாசியா நின்றது
ஆர்க்கும் அறிவு அரிதே
எனக்கு மறக்க ஒண்ணாதாப் போலே ஆயிற்று –
ஸ்வ யத்னத்தாலே அறிவாருக்கு அறிய ஒண்ணாது இருக்கிற படி என்கிறார்
————–
கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்
கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலத் தீசன் வந்து ஏறக் கொலோ?
கடல் ஞாலத் தீர்க்கிவை என் சொல்லுகேன்?
கடல் ஞாலத்து என்மகள் கற்கின்றவே.–5-6-1-
கடல் ஞாலத்தில்
அப்ரீதி அம்சமே தலையெடுத்து ஆற்றாமையால் அணுகரித்துத் தயாரிக்கிறார் –
——–
கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
வாய்ந்த வழுதி வளநாடன் மன்னு
குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து
ஆய்ந்த தமிழ்மாலை ஆயிரத்துள்
இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில்
ஏந்து பெருஞ் செல்வத்தராய்த் திருமால்
அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே.–5-6-11-
உயர்வற என்கிற பாட்டை கூந்தல் மலர் மங்கைக்கும் -என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்மானந்தத்து அளவும் ஸ்வர்க்காதி லோகங்கள் -உத்க்ருஷ்டமான ரத்நாதிகள் –
ரஸவத் பதார்த்தங்கள் -வேத சாஸ்த்ராதிகள் -பிரம ருத்ராதிகளான தேவர்கள்
ஸ்ருஷ்ட்டி ஸ்திதி ஸம்ஹாராதிகள் எல்லாம் நானே செய்தேனே என்று தன்னை
ஜகத் காரணனான ஸர்வேஸ்வரனாக அநு கரித்து இருக்கக் கண்ட
திருத்தாயாய் வினவ வந்தாருக்குச் சொல்கிறாள்
உயர்வற உயர்நலம் யுடையவன் எவன் அவன்
கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்-குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
கூந்தல் மலர் மங்கைக்கும் –சர்வேஸ்வரனுடைய ஐஸ்வர்யத்துக்கு ஹேது பூதையாய் இருக்கும் -பெரிய பிராட்டியார்
மண் மடந்தைக்கும்-அதுக்கு விளை பூமியாய் இருக்கும் ஸ்ரீ பூமிப் பிராட்டியார்
குல ஆயர் கொழுந்துக்கும் -அதனுடைய பல ரூபையாய் இருக்கும் நப்பின்னை பிராட்டியார்
கேள்வன் தன்னை–ஆக உகார வாஸ்யைகளான இவர்களை யுடையன் என்கிறது –
இவர்களுக்குப் பதியாய் உள்ளவனை
இத்தால் ஓர் அவதாரம் மாத்ரம் அன்றிக்கே
உபய விபூதி நாதனான பூர்ண விஷயத்திலே அநு கரிக்கிறாள் என்று தோற்றி இருக்கும் படி –
இதற்கு ஹேது
உயர்வற உயர்நலம் யுடையவன் யாவன் ஒருவன் அவன் மயர்வற மதிநலம் அருளினவன் ஆகையால்
வாய்ந்த வழுதி வளநாடன்
மயர்வற -அவித்யாதிகள் வாஸனையோடே அற்று
மதிநலமான பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே அனுகரித்துத் தரிக்கப் பார்த்துக் கிட்டின படி
அதாவது
பாவநா ப்ரகர் ஷத்தாலே ஸாஷாத் கரிக்கை
மன்னு குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்த
அமரர்கள் அதிபதி துயர் அறு சுடர் அடி தொழுது
நித்ய ஸூரி நிர்வாஹகனானவன் வரையாதே ஸர்வ ஸமாஸ்ரயணீயமான திருவடிகளை ஆஸ்ரயித்து
இருக்கும் அடியாரைப் பூசிக்க நோற்றார்களே
இந்த லோகத்திலே எல்லாரும் கொண்டாடும்படி ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யை யுடையராய்
ஸ்ரீ மத் புத்ரர்களை ஆராதிக்கப் பெறுவார்கள்
ஆழ்வார் பகவத் பாகவதர்களை ஆராதித்த படி இவர் அனுகாரத்தாலே ஸ்ரீ யபதிக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும்
பிரியமாகத் தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல்மாலைகள் சொன்னபடி
இது கற்றவர்களுக்கும் பகவத் பாகவதருக்கு பிரியமான வ்ருத்தி பண்ணி இருக்கப் பெற்றவர்கள்
இப்பத்தைக் கற்றவர்கள்
சுடர் அடி தொழுது எழு என் மனனே -என்று இருக்கப் பெறுவார்கள் –
இப்படி அனுகரித்து அனுபவிக்கிறார்
கர க்ருதம் அபராதம் ஷந்தும் அர்ஹந்தி சந்த –
————
நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும் இனி உன்னை விட்டொன்று
ஆற்ற கிற்கின்றிலேன் அரவின் அணை அம்மானே!
சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கலநகர்
வீற்றிருந்த எந்தாய்! உனக்கு மிகை அல்லேன் அங்கே.—5-7-1-
நோற்ற நோன்பிலே
இப்படி அனுகரித்த அளவிலும் வந்து முகம் காட்டாமையாலே
தானே உபாய அனுஷ்டானம் பண்ணி வருகிறாள் என்று இருந்தவனாக வேணும் என்று நினைத்து
தம்முடைய உபாய சூன்யதையேச் சொல்லி
வான மா மலை திருவடிகளில் வேர் அற்ற மரம் போலே புகல் அற்று விழுந்து சரணம் புக்கார் –
—
ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே! கண்ணா! என்றும் எனை ஆளுடை
வான நாயகனே! மணி மாணிக்கச் சுடரே!
தேனமாம் பொழில் தண் சிரீவர மங்கலத்தவர் கை தொழ உறை
வான மா மலையே! அடியேன் தொழ வந்தருளே.–5-7-6-
உயர்வற என்கிற பாட்டை -ஏனமாய் நிலம் கீண்ட-என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும்
ஸாஸ்த்ர பலம் ப்ரயோத்த்ரி -என்று தம் தாம் உபாய அனுஷ்டானத்தாலே பலம் பெறா நிற்க
உமக்கு இப்படி உபாயம் உண்டோ என்ன
உன்னுடைய உயர் நலத்துக்குத் தக்க உபாயம் உண்டோ -என்கிறார்
உயர் நலம் யுடையவன் யாவன் ஒருவன் அவனே எனக்கு உபாய உபேயங்கள் இரண்டும் என்கிறார்
நோற்ற நோன்பிலேன் -என்று உபாய சூன்யத்தை அருளிச் செய்து
இங்கே கைங்கர்யத்தை அபேக்ஷிக்கிறார் –
ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே! கண்ணா! என்றும் எனை ஆளுடை
ஆபன்னரானார் -அறிவிக்கையும் மிகையாம் படி அன்றோ உன் படி இருப்பது
ரக்ஷணம் ஒரு தலையானால் உன்னைப் பேணாதவன் அன்றோ –
ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே! கண்ணா!
மஹா வராஹமாய் -பிரளயம் கொண்ட பூமியை எடுத்தாய்
கிருஷ்ணனாய் வந்து அவதரித்து
ஸம்ஸார பிரளயம் கொண்ட என்னை எடுத்து
மயர்வற மதிநலம் அருளி
பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே உன் படியை அறிவித்து
பிரளயம் கதையான பூமிக்கு உதவியது
தமக்கு உபகரித்ததாய் இருக்கிற படி
என் அப்பனே கண்ணா
என்னுடைய ரக்ஷணத்துக்கு ஏதேனும் முகம் பண்ண வேணுமோ
என்னுடைய ரக்ஷணத்துக்கு ஒரு கோலம் கொள்ள வேணுமோ
கண்ணன் கோள் இழை வாள் குணம் இறே இவருக்கு ரக்ஷகம்
என்றும் என்னை ஆளுடை வான நாயகனே
மயர்வற மதிநலம் அருளினவன் யவன் அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
தனக்கு ஈடானரோடு இருக்கும் போது இவர் இடையாட்டமாய்த்து ஆராய்ந்து போருவது
இவர் சத்தத்தையே தொடங்கி கைக்கொண்டு நோக்கிக் கொண்டாய்த்து போருவது
மணி மாணிக்கச் சுடரே
இவர் உளரான பின்பு ஓர் ஏற்றம் பண்ணிக் கொடுக்கை அன்றிக்கே
அடியே பிடித்து நோக்கிக் கொண்டு போந்து
மயர்வற மதி நலம் அருளி
இச்சை பிறந்தவாறே -அவ்வளவிலே -அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன்
நித்ய ஸூரிகளுக்கு விடும் படியையும் இவருக்கு விட்டான்
மணி மாணிக்கச் சுடரே
ரத்ன ஸ்ரேஷ்டம் என்னுதல்
மணியினுடையவும் மாணிக்கத்தினுடையவும் தேஜஸ்ஸை யுடைத்தாய் இருக்கை என்றுமாம் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
தேனமாம் பொழில் தண் சிரீவர மங்கலத்தவர் கை தொழ
தேனை யுடைத்தான -மாம் பொழிலை யுடைத்தாய் -ஸ்ரம ஹரமான ஸ்ரீ வர மங்கலத்தில் உள்ளார்
அடிமை செய்ய வீற்று இருக்கிற
ஸ்வரூப அனுரூபமான கைங்கர்யத்தைச் செய்ய எழுந்து அருளி இருக்கிற வான மா மலையே
உன் துயர் அறு சுடர் அடி தொழுது எழ -வான மா மலை யத்ருப்த அம்ருத ரூபரான நித்ய ஸூரிகளை
அடிமை கொண்டு இருக்கிற வேண்டப்பட்டு போலே காணும் இங்குள்ளார் அடிமை செய்ய இருக்கிற இருப்பும்
வான மா மலையே உன் துயர் அறு சுடர் அடி அடியேன் தொழுது எழும்படி வந்து அருளே
விஸ்லேஷ கந்த ரஹிதமாய் -ஸம்ச்லேஷ வர்த்தகமாய் நிரவதிக தேஜஸ்ஸை யுடைய திருவடிகளிலே
சேஷபூதனான நான் அடிமை செய்து வாழும்படிக்கு ஈடாக என் முன்னே நாலடி நடந்து வர வேணும்
அடிமை செய்கையாவது
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி -என்னுமா போலே
அந்நடை அழகு கண்டு மங்களா ஸாஸனம் பண்ணுகை
வந்து அருளே
என் கண் வட்டத்திலே உலாவி நின்று அடிமை கொள்ள வேணும் என்கிறார் –
———-
ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்கு கின்ற நெடுமாலே!
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே–5-8-1-
ஆராவமுதில்
அங்கு சரணம் புக்க இடத்திலும் தம் அபேக்ஷிதம் பெறாமையாலே திருக்குடந்தை அளவும் வந்து –
ஆராவமுத ஆழ்வார் திருவடிகளிலே விழுந்து கூப்பிட்ட இடத்திலும்
இவரைக் குளிரக் கடாக்ஷித்தல் வினவுதல் செய்யக் காணாமையாலே
இன்னும் எத்தனை திருவாசல் தட்டித் திரியக் கடவேன் என்று அவாப்தியோடே தலைக்கட்டினார்
உயர்வற என்கிற பாட்டை ஆராவமுது விவரிக்கிறது
எங்கனே என்னில்
உயர்நலமுடையவன் எவன் அவன்
ஸ்ரீ யபதியாய் -அவாப்த ஸமஸ்த காமனாய் -ஞான ஆனந்த ஏக ஸ்வரூபனான ஸர்வேஸ்வரன்
செத்தனர் இடத்திலே ஒரு கிருபை ஜனித்துத் திரு உள்ளம் பற்றுகிறபடி
நாம் அம்ருத ஸ்வரூபனாய் இருக்க -சேதனரும் அம்ருத ஸப்த வாஸ்யராய் இருக்க –
அம்ருதந்திவி -என்று நித்ய விபூதியும் அம்ருதம் என்ற பேராய் இருக்க
நாம் அம்ருத ப்ரதானாராய் இருக்கிற இருப்பை நித்ய முக்தர்கள் அனுபவித்து அம்ருத மக்நராய் இருக்க
லீலா விபூதியார் இழக்க ஒண்ணாது என்று -அவர்களைத் திருத்திக் கரை மரம் சேர்த்து
அவர்களும் அவர்யாப்த அம்ருதத்தைப் புஜிக்கத் தக்கதாக ஒருவரை உண்டாக்குவோம் என்று பார்த்து
ஆழ்வார் இடத்திலே திரு உள்ளம் பற்றி அவருக்கு மயர்வற மதிநலம் அருளி
ஆழ்வாரும் மயர்வற மதி நலம் அருளப் பெற்று அபர்யாப்த்த அம்ருதத்தை அனுபவித்து –
அனுபவ கர்ப்ப உபதேசம் பண்ணுகிறார்
உயர்வற உயர் நலம் என்பது –ஆராவமுதே -என்றபடி
உயர்வு -மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தம் அளவாக
ஒருவர் ஆனந்தம் ஒருவருக்கு இன்றிக்கே இருக்கும் –
அதுவும் அல்பம் ஆய்த்து -ஆகையாலே பர ப்ரஹ்ம ஆனந்தத்தை ஆராவமுது என்கிறது –
எவன் அவன் ஆராவமுதே -என்கிறவன் -உன் அழகாலே என்னை உருக்குகிற உன்னைக் கண் வளரக் கண்டேன்
குளிர நோக்குதல் -அணைத்து அருளுதல் -செய்யக் காண்கிறிலேன் -என்கிறார்
ஆராவமுதே
அனுபவியா நின்றாலும் க்ரம பிராப்தி பற்றாத விஷயத்தைப் பிரிந்தார் எங்கனே ஆறி இருக்கும் படி
முற்பட தர்சனமாய்
அநந்தரத்திலே அணுகிப்
பின்னை ஸ்பர்சமாய் –இப்படி இறே அனுபவ பிரகாரங்கள் –
அத்தனை க்ரமம் பார்த்து இருக்க ஒண்ணாத படியாய் இருக்கை
நலமுடையவன் என்று -ஆனந்த குண நிரூபகம் -ஆராவமுதே என்று நிரூபகம்
உயர் நலம் என்றும் அபர்யாப்த்த அம்ருதம் என்றபடி
எவன் அவன் -ஆராவமுது
கடலில் உப்புச்சாறு குடிப்பார்க்குத் தேவ யோனியிலே பிறக்க வேணும் -ப்ரஹ்ம சர்யம் அனுஷ்ட்டிக்க வேணும் –
இத்தனையும் பட்டால் ஸக்ருத் ஸேவையாய் இருக்கும்
இது அங்கன் அன்றிக்கே ஸர்வாதிகாரமாய் -ஸதா ஸேவ்யமுமாய் –
ப்ரஹ்மசர்யாதி வைகல்யம் உண்டானவையும் தானே பரிக்ரஹிக்கக் கடவதாய் இருக்கும்
அடியேன் எவன் அவன் -சுருதி பிரசித்தமான திவ்யாத்ம ஸ்வரூபனாய்
அபார்யாப்த்த ஆனந்த ஸ்வரூபவனானவனுக்கு -அடியேன் -சேஷபூதன் –
சேஷத்வ அம்ருத வாஸ்யனான அடியேன் –
ஆராவமுதே -என்று சம்போதிக்கையாலே அம்ருத ஆனந்த ஸ்வரூபனான சேஷி யானவன்
இவனை மேல் மேல் என பர்யாப்தி பிறவாத படி திருஷ்ணையை விளைவிக்கிற படி –
அபர்யாப்த்த அம்ருதம் என்றால் பரியாப்தி பிறவாது இறே தனக்கும் தன் தன்மை அறிவரியான் இறே
ஆராவமுதே -இத்திருவாய் மொழியிலே இவருக்கு உண்டான ஆற்றாமைக்கு எல்லாம் பீஜம் இப்பதமாய்த்து
அடியேன் -மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஸ்வரூபத்தால் சொல்லுகிறார் அல்லர்
போக்யதைக்குத் தோற்றுப் புல் கவ்விக் சொல்கிறார்
பரவாநஸ்மி -என்கிறவர்
குணைர் தாஸ்யம் உபாகத -என்றாப் போலே
உடலும் நின்பால் அன்பாய
சேஷத்வம் ஆத்மாவுக்கு ஸ்வரூபமானால் தேகம் அதற்கு விரோதியாய் நிற்கும் நிலை குலைந்து
அஹம் என்று இருக்கக் கடவ இவர் தாம் அடியேன் என்றது விஷயத்தினுடைய போக்யதா அதிசயம் இறே
அப்படியே சரீரமும் விஷயாதீனமாக அழிந்த படி
உடலும் -என்கிற அபி சப்தத்தாலே அடியேன் சேதனன் ஆகையாலும்
மயர்வற மதிநலம் அருளுகையாலும் அருளின பக்தியாலும் –
பக்தி ரூபா பன்ன ஞானமானது -பெருகுமால் வேட்க்கையாலும் -உருக அடுக்கும்
உடலும் -அசேதனமான சரீரமும் உருகின படி
அப்படி அருளினவன் யவன் ஆராவமுதான நின்பால் அன்பாயே
அன்பு தான் வடிவு கொண்டால் போலே யாய்த்து
சேஷத்வ ஆகாரனான ஆத்மாவைத் தன் வழியே இழுக்கை தவிர்ந்து அதன் வழியே தான் ஒழுகா நின்றது
ஆக
ஞான மயமான ஆத்மாவாதல்
அதற்குத் தோள் தீண்டியான ஞான பிரசர த்வாரமான மனஸ்ஸாதல் அன்றிக்கே
அவற்றுக்கு அவ்வருகான த்வங்மாம்ஸமேதோஸ்தி மயமான சரீரமும் அழியும்படி யாய்த்து –
நின் பால் அன்பாயே
சேதன அசேதன விபாகம் அற உருக்க வல்ல உன் பக்கலிலே அன்புக்கு ஆஸ்ரயமாகிறது தவிர்ந்து
அன்பு தானே ஒரு வடிவு கொண்டால் போலே இரா நின்றது வஸ்து வை லக்ஷண்யத்தாலே ஆராமை மிக்க படி
சந்த்ரகாந்தம் உருகிற்று என்றால் அங்கு சைதன்யம் இல்லை இறே
அப்படியே மதி நலம் அருளின நின்பால் அன்பாய
அன்பு தான் நீராய் அலைந்து ஸமுத்ர தரங்கம் போலே அலை எறியா நிற்கச் செய்தே
ஆரா உடல் அன்பாய் -அன்பு நீராய் -நீர் தான் பொங்கி அலை எறியா நின்றது -மதி நலம் பெருகுகிறபடி
ஸ்ரவண மனனாதிகளாலே வருகிறது அன்றே -விஷயம் அழிக்க அழிகிறது அத்தனை
அனுபவ பரிவாக ரூபமான தசா விசேஷங்கள் மேல் மேல் எனக் கிளர்ந்து வாரா நின்றது –
அருளின பக்தி ரூபா பன்ன ஞானத்தினுடைய பரிவாஹம் இருக்கிற படி
ஆரா -கரைய -நீர் தன் பக்கலிலே அகப்பட்டதைக் கரைத்து தான் கரையாது இருக்கு மாய்த்து
இது அங்கன் அன்றிக்கே நீர் தானாயத்துக் கரைகிறது -அன்பு நீரானால் நீர் தான் கரையத் தட்டில்லை இறே
இத்தலை அளவு இது ஆனால் அத்தலை செய்கிறது என் என்னில்
உருக்குகின்ற
கீழ் உருக்கின கிரமம் சொல்லிற்று
மேல் உருக்குகிறது சொல்லுக்கு அடங்காது இறே
ஆகையால் உருக்குகின்ற -என்றது
அழிக்கைக்கு அடி இட்டது அத்தனை யாய்த்து
அழிப்பாளானவன் ஆபரணாதிகள் என்று பாராதே உருக்கி அழிக்குமா போலே காணும் அவன் தனக்கு
தேசமான அணிகலனும் என் கை கூப்பிச் செய்கை -என்கிறது இறே
ஆழ்வாருக்கு உள்ள உடலை உருக்கி அழிக்கும் அத்தனையோ என்னில்
நெடுமாலே
இவரது மால்
அவனது நெடுமால்
எதிர்த்தலையில் அழிவு கண்ட பின்பு இறே இத்தலையில் அழிவு
அவனுடைய வ்யாமோஹம் பார்க்கும் போது இவரது ஒன்றும் போராத படியாய் இருக்கும்
இவருக்கு ஸாத் மிக்க ஸாத் மிக்கப் பிறந்த அவஸ்தா விசேஷம்
அவன் அயர்வற அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து
ஆறும் இல்லாதவன் ஒருவனைப் பெற்றால் போலே ஆழ்வார் அவனுக்கு ஆராவமுதமான படி
ஆழ்வாருக்கு நாக்குக்கு மாதரம் ரசித்தது
மதிநலம் பெற்ற இவர் அவனுக்கு ஸர்வ வித போக்யமுமான படி
நெடு மாலுக்குப்
பூசும் சாந்து
புனையும் கண்ணி
வாசகம் செய் மாலை
வான் பட்டாடை
தேசமான அணிகலன்
உருவும் ஆர் உயிரும் உடனே உண்டான்
தான் என்னை முற்றப் பருகினான்
என்கிற அஹம் அன்னம் முதலிய போக்யங்கள் எல்லாம் ஆகையாலே அனுபவங்களை
வாசா சொல்லி முடியாதாகையாலே
நெடுமால் -என்னும் அத்தனை இறே
அநந்தன் பாலும் கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து என் மனம் தன்னிலே வந்து வைகி வாழச் செய்த எம்பிரான் என்கிறார்
மால் -என்று பெரியோன் என்றபடி
இப்படி இருக்கிறவன் யாவன் ஒருவன்
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே–
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே என்கிறார்
மால் என்று உபய விபூதி நாதத்வம் சொல்கிறது
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு நிர்வாஹகனானவன் மனிசர்க்குத் தேவர் போலே தேவருக்கும் தேவனாய் -அயர்வறும் அமரர்கள் அதிபதி –
அயர்வு -திருப்தி
திருப்தி பிறவாமல் அபர்யாப்தி அம்ருதத்தைப் பானம் பண்ணி அதிசயிதரான நித்யர் முக்தருக்கு அதிபதியானவன்
ஆழ்வாரை அனுபவித்து ஆராமையாலே அத்யந்தம் வ்யாமோஹமாய் கிடக்கிற வ்யாமோஹம் தெளியும் படி
சீரார் செந்நெல் கவரி வீசும்
மிக்க கனத்தை யுடைத்தான செந்நெல் கதிர்களானவை விடாய்த்துக் கண் வளர்ந்து அருளுகிற
அழகைக் கண்டு பரிசர்யை பண்ணுவாரைப் போலே அமையா நிற்கும்
செந்நெலுக்கு சீர்மை யாவது
ஆராவமுதாழ்வாருக்கு அமுது படியாகிற சீர்மை ஆகவுமாம்
அப்போது அஹம் அன்னம் என்கிற சீர்மை
கவரி வீசும்
நித்யரும் முக்தரும் பரிசர்யை பண்ணுமா போலே செந்நெலானது சிசிர உபசாரம் பண்ணுகிற படி
அகால பலிநோ வ்ருஷா என்னுமா போலே
அறுத்து நட வேண்டாம் போலே காணும்
கருத்து அறிந்து அடிமை செய்வாரைப் போலே -சேஷ வஸ்துவின் வியாபாரம் அடைய
சேஷி தனக்கு அடிமையாய் நினைத்து இருக்கிற படி –
அமரர்கள் செழு நீரான நாங்கள் பரிசர்யை பண்ண அதிபதியாய்த் திருக்குடந்தையிலே
கண் வளர்ந்து அருளுகிற ஸுகுமார்யத்துக்குப் போரும் படி ஜல ஸம்ருத்தியை யுடைத்தான
திருக்குடந்தையிலே
ஏரார் கோலம் -அழகு சமைந்த ஒப்பனை நிறம் பெறும்படி கண் வளர்ந்து அருளினாய்
நித்ய விபூதியில் இருப்பு -அந்தப்புரத்தில் இருப்பு போலே -திரு மந்திரத்தில் படி
திருக்குடந்தையில் வாசஸ்தானம் த்வயத்தில் படி
திருமந்திரத்தில் உபாய உபேயங்கள் பிரகாசிப்பது இங்கே இறே
திருவடி பார்ஸ்வத்திலே ஒரு பிராட்டி புருஷகார பூதையாய்க் கொண்டு
சரணவ் சரணம் என்று திருவடிகளையே உபாயமாகப் பற்றுவிக்கிறாள்
திருமுடி பார்ஸ்வத்திலே ஒரு பிராட்டி இருந்து -இச் சேர்த்தியிலே அடிமை செய் –
என்று அடிமை கொள்கிறாள்
முக்த ப்ராப்ய போகமாம் திருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே திரு மார்பிலே நாச்சியாரோடே கூட
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேனே
பிரம ருத்ராதிகள் சூழ்ந்து சேவிக்கக் கண் வளருகிறவன் எவன் இப்படி ஸாஷாத் கரித்தவன்
அவன் எம்மான்
இப்படி ப்ராப்யமும் ப்ராபகமும் தானே யானவன்
ஏரார் கோலம்
அபர்யாப்த்த அம்ருதமான கோலம்
ஆஸ்ரிதன் எழுந்து இருந்து பேசு என்ன -எழுந்து இருக்க –
அந்த உத்யோகத்துக்கு வாழி செய்த உத்யோகத்தில் அமைந்த கோலம் –
மாம் ஏகம் -என்றும்
சரணம் வ்ரஜ என்றும்
அருளிச் செய்த வாக்யத்தைத் தலைக்கட்டி
ஸத்ய ப்ரதிஜ்ஜன் ஆகைக்காக
அந்தத் திருத்தேரோடே வந்து சாய்ந்து அருளின கோலமாகையாலே
மந்த்ர த்ரயமும் ப்ரகாசிக்கிற கோலம் –
ஸ மயா போதித ஸ்ரீ மான்
கிடந்த கிடைக்கு ஆலத்தி வழிக்க வேண்டி இருக்கை
கிடந்தாய் கண்டேன்
துயர் அறு சுடர் அடி தொழுது எழப் பண்ண வேண்டும்
கண்டேன் அம்மானே
கிடை அழகைக் கண்டேன் -நினைத்த பரிமாற்றம் பெற்றிலேன் –
எழுந்து இருத்தல் இருத்தல் உலாவுதல் என் செய்தாய் என்னுதல்
அணைத்தல் செய்யப் பெறுகிறிலேன்
எம்மானே
இதுவும் நமது என்று இராது ஒழியப் பெற்றேன் ஆகில் ஆறி இருக்கலாயிற்றே
ஆழ்வார் ஆற்றாமை யாகிற ஆழ் கடலிலே மூழ்கி -முக்கவர் முத்துக்கடலிலே மூழ்கி
முத்து வருமா போலே
வ்யாமோஹத்தின் ஸாகரத்திலே
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் -என்கிறார்
என் மனனே -என்று பெருக்காற்றில் இழிவர் துணைத்தேட்டமாம் போலே நெஞ்சையும்
கூட்டிக் கொண்டு இழிகிறார்
எம்மானே என்று ஸம்போதித்து உன் வடிவோடே ஓக்க ப்ராப்தியை இட்டு
என்னை நலிய வேணுமோ என்கிறார்
எம்மானே சுடர் அடி தொழுது எழு என் மனனே
ஆழ்வாரை லபிக்கையாலே வந்த ப்ரீதியாலே துயர் அறு சுடர் அடி யாயிற்று
என் மனனே
அபர்யாப்த்த அம்ருத பானத்தாலே களித்து ஆனந்தியாதே சேஷ வ்ருத்தியான
அஞ்சலியைப் பண்ணி வர்த்தி
என் வ்யாமோஹமும் உன் வ்யாமோஹமும் அவன் வ்யாமோஹத்தில் குளப்படி யாயிற்று
அத்தைக்கண்டு இறுமாதே தொழுது வர்த்தி என்கிறார்
அபசாரான் இமான் ஸர்வான் க்ஷமஸ்வ புருஷோத்தம –
———
மானேய் நோக்கு நல்லீர்! வைகலும் வினையேன் மெலிய
வானார் வண் கமுகும் மது மல்லிகை கமழும்
தேனார் சோலைகள் சூழ் திரு வல்லவாழ் உறையும்
கோனாரை அடியேன் அடி கூடுவது என்று கொலோ?–5-9-1-
மானேய் நோக்கில்
திருவல்ல வாழி லே -தம் அபேக்ஷிதம் கிடைக்கும் என்று புறப்பட்டுப் போய்
அங்குத்தை போக்யதையிலே நலிவு பட்டு
முடியவும் போகவும் மாட்டாதே புறச்சோலையிலே விழுந்து கிடந்தது கூப்பிட்டார் –
——
தொல்லருள் நல் வினையால் சொலக் கூடுங்கொல்? தோழிமீர்காள்?
தொல்லருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திரு நகரம்
நல்லருள் ஆயிரவர் நலனேந்தும் திருவல்லவாழ்
நல்லருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே.–5-9-10-
உயர்வற உயர்நலம் யுடையவன் எவன் அவனுடைய
தொல்லருள் நல் வினையால் சொலக் கூடுங்கொல்? தோழிமீர்காள்?
உயர்வற மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும் அவரவர் அபீஷ்டங்களை
தயமானமனா -என்கிறபடியே
பகவத் கிருபையாலே லபிக்கச் செய்தேயும் காம்ய பலங்கள் ஆகையால்
உயர்வும் தாழ்வுமாய் அறுகை யாலே த்யாஜ்யங்கள்
உயர் நலமுடையவன் நம்மிடத்தில் பண்ணின தொல் அருள் –
என்றுளன் ஈசன் உயிரும் அன்றே யுண்டு கரண ப்ரதானம் பண்ணின ஸ்வ பாவிகமான அருளாலே
கழல் வளை பூரிப்ப யாம்
நல் வினையால்
அதாவது -அவனைக் காணப் பெற்று அப் ப்ரீதியாலே சொல்லக் கூட வற்றோ –
அன்றிக்கே
ஸ்வா பாவிக கிருபையாகிற ஸூஹ்ருதத்தாலே அவனைக் கண்டு திரு நாமங்களை
சொல்ல வற்றோ என்னுதல்
நா நீர் அற்று இருக்கையாலே ஆராவமுது ஊறும் இறே
அவன் மயர்வற மதிநலம் அருளின தொல் அருளாலே
நா வரண்ட பாபம் போய் -நா நீர் உண்டாய் திரு நாமங்களை சொல்லலாமோ என்று
அம்மங்கி அம்மாள் வாக்யார்த்தமாக அருளிச் செய்வர்
இப்படி அருள் அகல இராதே -அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன் –
தொல்லருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திரு நகரம்
தன்னுடைய கண்ணழிவு அற்ற கிருபையை ஸம்ஸாரத்தில் உள்ளாரும் நித்ய விபூதியில் உள்ளாரும்
தொழ நின்ற மஹா நகரம்
அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்தரான நித்ய ஸூரிகளும் நித்ய ஸம்ஸாரிகளும் கூடத் தொழும்படி
ஸர்வ ஸ்மாத் பரனான ஸர்வேஸ்வரன் வந்து நித்ய வாஸம் பண்ணுகிற தேசம்
நல்லருள் ஆயிரவர்
எம்பெருமானிலும் பிரஜை ரக்ஷணத்தில் அனுக்ரஹ சீலராய் இருக்கிறவர்கள்
நலனேந்தும் திருவல்லவாழ்
அவனுடைய உயர் நலமான கல்யாண குணங்களை உயரா நின்ற நலம் என்று கொண்டாடி
வர்த்திக்கும் ஊர் என்னுதல் ஆகையாலே
நல்லருள் நம் பெருமான் நாராயணன்
துயர் அறு சுடர் அடி தொழுது
நாமங்களே.–
திரு நாம உச்சாரணம் பண்ணித் தொழுது ஸ்துதித்து என் மனனே எழு
நல்லருளை யுடையவனாய் -நமக்கு ஸ்வாமியானவன் -நாராயணன் –
நல்லருள் ஆகிறது வாத்சல்யாதிகள்
நாராயண சப்தார்த்தம் அருளிச் செய்து பின்னை சப்தத்தை அருளிச் செய்கிறார்
நாராயணன் –
ஹேய ப்ரதிபடமான திருவடிகளை -துயர் அறு சுடர் அடி யாகையாலே அவித்யாதிகள் அற்றது
தேஜோ மயமான திருவடிகளைத் தொழுது எழு என் மனனே
திரு நாம உச்சாரணத்தைப் பண்ணி வர்த்தி
நாராயண ஸப்தம் தர்மி நிர்தேசம்
இஸ் ஸ்வபாவங்களாலே நிரூபித வஸ்துவுக்கு உண்டான குணங்களுக்கு வாசகம்
அல்லாத திரு நாமங்களாகை
என் மனஸ்ஸூக்கு ஒத்த தோழிமீர் திரு நாம உச்சாரணம்
பண்ண வல்லோமோ என்கிறார் –
————–
பிறந்த வாறும் வளர்ந்த வாறும் பெரிய பாரதம் கை செய்து ஐவர்க்குத்
திறங்கள் காட்டி யிட்டுச் செய்து போன மாயங்களும்
நிறந்த னூடு புக்கென தாவியை நின்று நின்று ருக்கி உண்கின்ற இச்
சிறந்த வான் சுடரே! உனை என்று கொல் சேர்வதுவே?–5-10-1-
பிறந்தவாற்றில்
நாமங்களை சொல்லித் தரிக்க பார்த்த இடத்தில்
அது ஸைதில்யத்தை விளைக்க
தரித்து நின்று திருநாம உச்சாரணம் பண்ண வல்லேனாம் படி அருள வேணும்
என்று சரணம் புக்கார் –
—-
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும்
ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையுமொர் பத்தும் வல்லார்
மாக வைகுந்தத்து மகிழ் வெய்துவர் வைகலுமே.–5-10-11-
உயர்வற என்கிற பாட்டை -நாகணை மிசை நம்பிரான் -என்கிற பாட்டு விவரிக்கிறது
எங்கனே என்னில்
நாகணை மிசை நம்பிரான் -உயர்வற உயர் நலம் என்கிறவன் யாவன் ஒருவன்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி ப்ரஹ்ம ஆனந்தத்து அளவும்
உபாய உபேயங்களில் தாரதம்யம் உண்டாகையாலே உயர்வு அற்று இருக்கும் –
உயர் நலம் யுடையவன் எவன் அவன் அவனே தனக்கு உபாயம் உபேயம் என்கிறார் –
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்றும்
திருவனந்த ஆழ்வானைப் படுக்கையாக யுடைய சர்வேஸ்வரனுடைய ஆனந்தாதி கல்யாண குண
பரிபூர்ணனான அநந்த ஸாயித்த்வம் சர்வாதிக வஸ்துவுக்கு லக்ஷணம் ஆகையாலே
அவனே சரண்யன் என்கிறது
நமக்கும்
திருவனந்த ஆழ்வானுடையபுருஷகாரம் சொல்கிறது
இவனுடைய உபாய பாவத்தில் புருஷகாரமாக வல்லார் அவள் பரிகரத்தில் உள்ளார் ஆகை இறே
படுக்கை கிடப்பது அந்தப்புரத்தில் இறே
நம்பிரான் -மயர்வற மதி நலம் அருளுகையாலே நம் பிரான் -நமக்கு உபகாரகன் –
ஆஸ்ரித விஷயத்தில் உபகார சீலனானவன்
மதி நலம் அருளினவன் எவன் அவன்
சரணே சரண் நமக்கு என்று
அவதாரணத்தாலே உபாய நைர பேஷ்யம் சொல்லுகிறது –
சாம்சாரிக ஸ்வ பாவங்கள் மேலிட்டு விபரீதமே பலியா நின்றாலும்
அப்படியே அடிக்கழிவு சொல்லுவார் ஒருவர் அல்லரோ இவர்
இது ஒழிய வேறே ஒன்றில் கால் தொழாது ஒழிகை மஹா விச்வாஸம் ஆகிறது
இத்தால் ஏக -பதார்த்தம் சொல்லிற்று
பக்தி ரூபா பன்ன ஞானத்தாலே
நாள் தொறும் ஏக சிந்தையனாய்
மதி நலத்தால் வந்த த்ருட அத்யவசாயம் -புறம்பு உண்டான சிந்தனை போய்
இவ் விஷயத்தில் ஏக ஆகார மநோ ரதம் யுடையராய்
அர்த்தஅர்ஜனம் பண்ணப் போவார் ஒரு சிராயை விஸ்வஸித்து நாலாண்டு பத்தாண்டு
கடலிலே இழியா நின்றார்கள் இறே
இப் பேற்றின் சீர்மையைப் பார்த்தால் இவ்வளவாகிலும் வேண்டாவோ
இவ் விஷயத்தில் சம்சார ஸ்வ பாவத்தால் வ்யஸன பரம்பரைகள் வந்தாலும்
வியவசாயம் குலையாமே போருமது இறே ஸ்வரூபம் ஆவது
எவன் -குருகூர் சடகோபன் மாறன்
அது எல்லாத்துக்கும் அடியான பிறப்பு இருக்கிற படி
அவன் -அயர்வறும் அமரர்கள் அதிபதி -உபாயாந்தரம் அறியாத நித்ய ஸூரிகளுக்குத்
தானே ஸர்வவித போக்யமானவன் விஷயமாக
நூற்ற அந்தாதி
தாம் உளராகைக்காகச் சொன்ன அந்தாதி
ஆயிரத்துள் இவையுமொர் பத்தும் வல்லார் மாக வைகுந்தத்து .
மஹா ஆகாசம் என்று பேரை யுடைய ஸ்ரீ வைகுண்டத்திலே
வைகலும் மகிழ்வு எய்துவரே
அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார கந்த ரஹிதரான நித்ய ஸூரி ஸேவ்யனானவன்
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே
வைகலும் மகிழ்வு எய்துவரே
ஹேய ப்ரதிபடமான -நிர வதிக தேஜோ ரூபமாய் -ப்ராப்ய ப்ராபகமான திருவடிகளைக்
கால தத்வம் உள்ளதனையும் நித்ய அனுபவம் பண்ணி யாவதாத்மபாவி வாழலாம் என் மனமே தொழுது எழு
அனுசந்தானத்துக்கு விச்சேதம் வராத படி பண்ணி அருள வேண்டும் என்று
பிரார்த்திக்க வேண்டும்படியான சம்சாரத்தை விட்டு
பகவத் அனுபவத்துக்கு விச்சேதம் ஒரு நாளும் இல்லாத பரம பதத்திலே புக்கு அனுபவிக்கப் பெறுவர்
மா என்று மஹத்தை
கம் என்று ஆகாசம்
ஆக மாக வைகுந்தத்து மகிழ்வு எய்துவர் வைகலுமே –
———–
ஐந்தாம் பத்து விவரணம் முற்றிற்று
———————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருக்கோனேரி தாஸ்யை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply