Archive for August, 2026

ஸ்ரீ திருமழிசை அண்ணாவப்பங்கார்

August 11, 2026

திருநக்ஷத்ரம் : ஆனி அவிட்டம்
அவதார ஸ்தலம் : திருமழிசை
ஆசார்யன் : திருதகப்பனார் நரஸிம்ஹாசார்யர்

மஹீஸார க்ஷேத்ரம் என ப்ரசித்தி பெற்ற திருமழிசையில் பிறந்த இவர்க்குத் திருத் தகப்பனார் வீர ராகவன் எனப் பெயரிட்டார். முதலியாண்டானின் வாதூல குலத்தில் திருவவதரித்தார். இவரது பக்தி ஸாரோதயம் எனும் தோத்திர நூலில் இவர் பிதாமகர் திருநாமம் ரகுவராசார்யர் என்று காண்கிறது. கி பி 1766ல் பிறந்த இவர் வாதூல வீர ராகவாசார்யர் என்றும் அழைக்கப்பட்டதாகக் காண்கிறது.

இளமையிலேயே மிக்க அறிவாளியாய் திகழ்ந்த இவர், 15 ப்ராயத்துக்குள் தம் யஜுஸ் சாகை முழுதும் கற்றார். அத்தோடே தர்க்கம், வியாகரணம், மீமாம்ஸை, சாங்க்யம், பதஞ்ஜலி யோகம் முதலியனவும், ஜ்யோதிஷம், ஸங்கீதம், பரத நாட்யம், போன்றனவும் கற்றுத் தேர்ச்சி பெற்றார். 20 பிராயம் முடியுமுன்பே ஸகல சாஸ்த்ர நிபுணர் ஆனார். திருத்தகப்பனாரிடம் ரஹஸ்ய கிரந்தங்கள் கற்று மிக்க இளமையிலேயே ஸம்ப்ரதாய ஸ்ரீகோசங்கள் எழுதலானார். வாதூல வரதாசார்யர் மற்றும் பல திவ்ய தேச யாத்ரைகள் செய்து பலரை வாதில் வென்ற ஸ்ரீரங்காசார்யர் இருவரிடமும் பயின்றார்.

இவரின் லிகித கைங்கர்யங்களில் தலையானது பிள்ளை லோகாசார்யர் அருளிச்செய்த ஸ்ரீவசன பூஷணத்துக்கு மாமுனிகள் அருளிச் செய்த வ்யாக்யானத்துக்கு விரிவான அரும்பத உரை அருளியது ஆகும். இவரின் மற்றொரு க்ரந்தமான பக்தி ஸாரோதயம் திருமழிசை ஆழ்வாரின் சரித்ரத்தை மிக அழகாகக் காட்டியுள்ளது.

51 ஆண்டுகளே எழுந்தருளியிருந்த இந்த ஸ்வாமி அச்சிறிய வயதுக்குள் பலரை வாதங்களில் வென்றார். ஈச்வர வருஷம் ஐப்பசி சுக்லபக்ஷ சதுர்த்தசியில் பரமபதித்தார்.

க்ரந்தங்கள்

இவர் தான் வாழ்ந்த குறுகிய காலத்துள் பல க்ரந்தங்கள் அருளியுள்ளார். அவற்றின் தொகுப்பு இங்கே:

  • ஸ்ரீ பக்தி ஸாரோதயம்
  • வேதவல்லி சதகம்
  • ஹேமலதாஷ்டகம்
  • அபீஷ்ட தண்டகம்
  • சுக சந்தேசம்
  • கமலா கல்யாண நாடகம்
  • மலயஜா பரிணய நாடிகா
  • ந்ருஸிம்ஹாஷ்டகம்
  • மாமுனிகள் ஸ்ரீவசன பூஷண வ்யாக்யான அரும்பதம்
  • திருச்சந்த விருத்த ப்ரதிபதம்
  • ஸ்ரீரங்கராஜ ஸ்தவ வ்யாக்யானம்
  • மஹாவீரசரித வ்யாக்யா
  • உத்தர ராம சரித வ்யாக்யா
  • சத ச்லோகீ வ்யாக்யா
  • ராமாநுஜாஷ்டக வ்யாக்யா
  • நக்ஷத்ர மாலிகா வ்யாக்யா
  • தேவராஜ குரு விரசித வரவரமுனி சதக வ்யாக்யா
  • துஷ்க்கர ச்லோக டிப்பணி
  • தினசர்யா
  • ஷண்மத தர்சனி
  • லக்ஷ்ம்யா உபாயத்வ நிராஸ:
  • லக்ஷ்மீ விபுத்வ நிராஸ:
  • ஸூக்தி ஸாதுத்வ மாய்யா
  • தத்வ ஸுதா
  • தத்வ ஸார வ்யாக்யா
  • ஸச்சரித்ர பரித்ராணம்
  • பழனடை விளக்கம்
  • த்ரிம்சத் பிரச்னோத்தரம்
  • லக்ஷ்மீ மங்கள தீபிகா
  • ராமானுஜ அதிமானுஷ வைபவ ஸ்தோத்ரம்
  • அநு பிரவேச ச்ருதி விவரணம்
  • ”சைலோக்னிச்ச” ச்லோக வ்யாக்யா
  • மஹீஸார விஷய சூர்ணிகா
  • “ஸ்வாந்தே மே மதனஸ்திதிம் பரிஹர” இத்யாதி ஸ்லோக வ்யாக்யானம்
  • ஸச்சர்யக்ஷகம்
  • ப்ராப்ய ப்ரபஞ்சந பஞ்ச விம்சதி:
  • ந்யாய மந்தரம்
  • தாத்பர்ய ஸச்ச்ரீகரம்
  • வசஸ் சுதா மீமாம்ஸா
  • வசஸ் சுதா பூர்வ பக்ஷ உத்தரம்
  • ப்ரஹ்மவத்வதங்கம்
  • லக்ஷ்மீ ஸ்தோத்ரம்
  • வரணபஞ்ச விம்சதி:

இவ்வாறு தமது அளப்பரிய ஞான வைபவத்தால் ஸம்ப்ரதாயப் பெரும்பணியாற்றிய அண்ணாவப்பங்கார் ஸ்வாமியின் வைபவம் சிறிதே அனுபவித்தோம். நாமும் இவரின் திருவடிகளில் பணிந்து, பகவத் விஷயத்தில் சிறிது ஞானத்தைப் ப்ரார்த்திப்போம்.

இவர் தனியன்:

ஸ்ரீமத் வாதுல நரஸிம்ஹ குரோஸ்தநூஜம்
ஸ்ரீமத் ததீய பதபங்கஜ ப்ருங்கராஜம் |
ஸ்ரீரங்கராஜ வரதார்ய க்ருபாத்த பாஷ்யம்
ஸேவே ஸதா ரகுவரார்யம் உதாரசர்யம் ||

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அமலனாதிபிரான் -அனுபவம்

August 11, 2026

வ்ருச்சிகே ரோஹிணீ ஜாதம்‌ ஸ்ரீபாணிம் நிசுளாபுரே
ஸ்ரீவத்ஸாம்சம்‌ காயகேந்தரம்‌ முனி வாஹனன் ஆஸ்ரயே
-திருப்பாணாழவார்‌ திருநக்ஷத்திரத் தனியன்‌

பெரியாழ்வார் அவதார ஈடுபாடு-(பெரியாழ்வார் திருமொழி)

அ. பாதக்கமலம் -(1.3.1)-திருப்பாணாழ்வார் அருளியதிருப்பாணாழ்வார் அர்ச்சாவதார
ஈடுபாடு (அமலனாதிபிரான்) திருக்கமலபாதம் (1)
ஆ. பீதகச்சிற்றாடையொடும்(1.8.3.)–அரைச்சிவந்தாடையின்மேல் – (2)
இ.அழகியஉந்தி-(1.3.8)-அயனைப்படைத்ததோர்எழில் உந்தி -(3)
ஈ. பழம்தாம்பால் ஆர்த்தஉதரம் (13.9)-திருவயிற்றுதர பந்தனம் (4)
உ. குருமாமணிப் பூண்குலாவித் திகழும் திருமார்பு (1.3.10)-திருவார மார்பு-(5)
ஊ. அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய கண்டம்-(1.3.13)-முற்றுமுண்ட கண்டம் – (6)
எ. நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய கைத்தலம் – (1.3.12)-கையினார் சுரிசங்கனலாழியர் – (7)
ஏ. செந்தொண்டைவாய்-(1314)-செய்ய வாய்(7)
ஐ.கண்களிருந்தவா – (1.3.16)-அப்பெரியவாய கண்கள் – (8)
ஒ. உருவுஉரியவொளிமணிவண்ணன் (1.3.17)-எழில் நீலமேனி -(9)-குழல்களிருந்தவா – (13.20)-துளப விரையார் கமழ் நீண்முடி- (7)

நாச்சியார் பெரிய பெருமாளுடன் “நமக்கு அந்தரங்கரான இப் பாண் பெருமாள் புறம்பே நிற்கலாமோ” என்று கூறுகிறார். இதில் ஆழ்வாரை ”பாண் பெருமாள்’ என்று பெயரிட்டு அழைப்பது காண முடிகிறது-எம் பெருமான் ஆணைப்படி லோகசாரங்க முனிவர் திருப்பாணாழ்வாரைத் தம்தோள்களின் மேல் ஏற்றிக் கொண்டு எம்பெருமான் சன்னதிக்கு வந்ததனால் இவருக்கு’முனி வாகனர்.’ என்ற பெயர் வழங்கலாயிற்று.”மேலும்,நம்மாழ்வார் தாம் அருளிய திருவாய்மொழியில் ”இசைகாரர்’ என்ற பெயரால் திருப்பாணாழ்வாரை நினைப்பதாகக் கூறுவர்.” பட்டர் தாம் அருளிய வடமொழி ஸ்லோகத்தில் ஆழ்வாரை “யோகி வாஹாந் என்றும் அழைக்கின்றார். இவ்வாறாக திருப்பாணாழ்வாருக்கு பாண் பெருமாள், முனி வாகனர், இசை காரர் யோகி வாஹான் என்று பலபடியான திருநாமங்கள் இருப்பதைக் காணமுடிகிறது.

அமலனாதிபிரான் முதல் மூன்று பாடல்களில் எல்லா வேதத்தின் சுருக்கமாய் மூன்று எழுத்துக்களை உள்ளடக்கியதான ‘ஓம்” என்கிற பிரணவத்தின் அகார,உகார, மகாரங்களாலே முதலீட்டு மூன்று பாட்டுக் களையுடைய அடியிலே அமைந்துள்ளது இப்பிரபந்தம் என்றும், ”ஓம்” என்ற பிரணவத்தைத் தெரிவிப்பதான வஸ்து எம்பெருமான் என்றும், பெரிய பெருமாளைப் பிரணவ வடிவமான விமானத்தின் நடுவில் திருவடி தொடங்கி திருமுடி வரையில் அனுபவித்த பிரபந்தம் என்கிற விருப்பத்தோடு ஆசாரிய உச்சாரண முறையில் கற்பார்கள் என்றும், அமலனாதிபிரானின் பெருமையைச் சீயர் கூறுவர்.’சீரிய நான்மறைச் செம்பொருள் செந்தமிழாலளித்த பாரியலும் புகழ்ப்பாண் பெருமாள்–திருவரங்கத்து அமுதனார்-மாமுனிகள் இதற்கு உரைய-எம்பெருமானின் இயல்பு, வடிவம், குணம் செல்வங்கள் (லீலா விபூதி, நித்ய விபூதி ) இவற்றை உள்ளபடியே தெரிவிப்பதால் வந்த சீர்மையை உடையது என்றும், ருக்,. யஜூர்,சாம, அதர்வண என்று நான்கு வகைப்பட்ட வேதத்தினுடைய இனிமையான பொருளை சொல்வது என்றும், இதனை அருளியவர் நடை விளங்கு தமிழ் மாலையாலே உதவி செய்தவராய் பூமியிலே நிலையாக நின்றுள்ள கீர்த்தியையுடைய திருப்பாணாழ்வார்

“அண்டர்கோன் அணியரங்கள் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே என்று அருளியபடியே ஆளவந்தார் வேறொரு விஷயம் அறியாதவராய் இருந்தார்; அவ்வாறே ஆளவந்தார் திரு மேனியிலே வாட்டம் கண்டு எழுந்தருளியிருக்கும் போது அவருடைய சீடர்கள் தங்களுக்குத் தஞ்சமாக இருப்பதின் பொருளைச் சொல்ல வேண்டும்படி வேண்டினர், அதற்கு ஆளவந்தார் “பெரிய பெருமாளின் திருவடிகளின் கீழே வீணையும் கையுமாய் சேவித்து இருக்கும் திருப்பாணாழ்வார் விக்ரஹத்தை பாதாதிகே சாந்தமாக ( பாதம் முதல் முடிவரையில்) சேவித்துக் கொண்டு போருங்கள்” என்று சொன்னார். மேலும், பெரிய பெருமாள் உயிர் நிலை அறிந்தவர் திருப்பாணாழ்வார்; திருப்பாணாழ்வார் உயிர் நிலை அறிந்தவர் திருவரங்கப் பெருமாள் அரையர் என்றும் அருளினார்.திருமந்திரத்தின் பொருளாக போக மண்டபமாகத் திருவரங்கம் திகழ்கிறது-இதனை வெளியிட்டவர் திருப்பாணாழ்வார்-கோயில் என்று சொல்லப்படும் திருவரங்கத்துக்கு முதன்மை வந்ததுக்குக் காரணம் அவ்வெம்பெருமான் திருப்பாணாழ்வாரோடு கலந்து பரிமாறுகையாலே என்பர்-பரமபதம், திருவேங்கடம், திருவரங்கம்ஆகிய இம்மூன்று திவ்விய தேசங்களையும் ஆழ்வார் இருந்த இடத்திலிருந்தே முதல் பாடலிலேயே மங்களாசாசனம் செய்தார் என்பது அறிய முடிகிறது.

‘சதுர மா‘ நாலாம் பாட்டின்‌ முகலெழுத்தான, :‘ என்பது முதலாவதான பிரமாண-பிரணவம் – சாரத்தையும்‌, இரண்டாவதான பிரமேய சாரத்தையும்‌-பாதுகை – சேர்கிறது

‘உயர்வற உயர் நலம் உடையவன்.”–”அமலன்” என்ற சொல்லாலே குறிப்பிடுகிறார்.அதாவது, குற்றங்களுக்கு எதிர்தட்டானவன் என்றும், தூய்மை யானவன் என்றும், தான் ஒருவன் தூயனாவது மட்டுமின்றித் தன்னோடு உறவுடையாரையும் தூய்மை யாக்க வல்ல திருவடியை யுடையவன்

யவன்” என்று திருவாய்மொழியில் குறிப்பிட்டதை, ஆழ்வார் ‘‘ஆதி” என்று குறிப்பிடுகிறார்; ‘யவன்” என்ற சொல் பிரசித்தியைக்காட்டுகிறது . அத்தகைய பிரசித்தியைத்தான் ”ஆதி” என்று குறிப்பிடுகின்றார் ஆழ்வார். இச் சொல்லுக்கு ‘உலகுக்கு காரணமாம் தன்மை” ( ஜகத் காரணத்வம்) என்றுஉரையிடுவர் பெரியவாச்சான் பிள்ளை-

மயர்வற மதி நலம் அருளினன்“-இது தன்னையே திருப்பாணாழ்வார் ” பிரான்” என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்.”பிரான்” என்பதினால் ஆழ்வார் தாழ்ச்சியைப் பாராதே எம்பெருமான் ஆழ்வாரைத் தனக்கு இலக்காக்கிக் கொண்ட உதவியாளனைச் சொன்னபடி.

”நீதி வானவன்“-வானவனுடைய நீதியாவது ஆண்டவன் – அடியவன் என்ற உறவாம் தன்மை (சேஷ சேஷித்துவங்கள்) முறை மாறாது இருத்தல்-அதாவது “சேஷித்வம்” என்பது தலைவனாம் தன்மை.-ஈச்வரன் நான்” என்று எதிரிட்டு இருக்கும் இடம் இந்த உலகம்:-நித்ய விபூதியான வானுலகில் கலக்குவாறுமில்லை. கலங்குவாறுமில்லை; இந்த பூமியில் கலக்குவாறுமுண்டு கலங்குவாறுமுண்டு என்றவாறு.

கொண்டல் வண்ணன்” என்ற சொல்லடிப் படையில் எம்பெருமான் மேகம் போல் வள்ளல்
தன்மை யுடையவன் என்பதை இவர் பக்கல் ஔதார்யம் இல்லை யென்று போகவோ?-‘வெண்ணெய் உண்ட வாயன்” என்ற சொல்லடிப் படையில் அடியார்களுடைய உடைமையான வெண்ணெயை விழுங்கியதனால் அந்தக் குணுங்கு நாற்றம் வாயிலே தோன்றும்படி இருப்பதினால் “வடிவில் பசை யில்லை யென்று போகவோ?“-கோவலனாய்” என்ற சொல்லடிப்படையில் இடையரோடு இடைச்சியரோடு வாசியற ஒரு நீராகக் கலந்ததனால் “செனசில்யம் இல்லை யென்று போகவோ?” என்றும்.”என்னுள்ளம் கவர்ந்தானை” என்ற சொல்லடிப்படையில் கோவலனாய் வெண்ணெய் உண்டாப் போலே கொண்டல் வண்ணனாய் ஆழ்வார் உள்ளத்தைக் கவர்ந்ததனால்”நெஞ்சுக்கு பிடித்திருந்த தில்லை யென்று போகவோ?”-“அண்டர் கோன்” என்ற சொல் அடிப்படையில் வேறு அண்டத்திலுள்ள ஆத்ம சமூகத்திற்குத் தலைவனாய் இருப்பதனால் “மேன்மை யில்லை யென்று போகவோ?”-” அணியரங்கன்” என்ற சொல்லடிப்படையில் கண்ணாலே காணலாம்படி சம்சாரத்துக்கு
ஆபரணமான திருவரங்கத்தில் எம்பெருமான் வந்து பள்ளி கொண்டதனால் சௌலப்பியம்
(எளிவந்த தன்மை) இல்லை யென்று போகவோ?
என் அமுதினை” என்ற சொல்லடிப்படையில்
அளப்பரிய ஆரமுதாய் இருப்பதனால் இனிமை (போக்யதை) இல்லையென்று போகவோ?”அமுதினைக் கண்ட கண்கள்” என்ற சொல்லடிப்படையில் திருவரங்கத்து இறைவனை முழுமையாக அனுபவித்த கண்கள் ஆதலால் “அனுபவத்தில் குறை யுண்டென்று போகவோ?”–நாயனார் அருளுவது சுவை மிக்கதாகும்.

செய்ய வாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே-“மற்ற அவயவங்களின் அழகில் முன்பே என் நெஞ்சு பறிகொடுத்த என்னை மற்ற அவயவங்களைக்காட்டிலும் தனது திருப்பவள செவ்வாயைக் காட்டி “கல்லை நீராக்கி, நீரையும்தானே கொண்டது என்றும் உகக்கின்றார். ஆழ்வார். இதையே ‘கல்லை நீராக்கி நீரைத் தானே கொண்டதனால் வந்த உகப்பு என்பர்.

வேதாந்த தேசிகர் தாம் அருளிய முனிவாகன போகத்தில் முதல் மூன்று பாடல்கள்
அகார, உகார, மகாரமாகிய ” ஓம் ” என்ற பிரணவத்தின் பொருள் என்பதையும், நான்காவது பாடல் ‘ நம:” என்பதின் பொருள் என்றும், ஐந்து ஆறாவது பாடல்கள் ” நாராயண ” என்ற சொல்லின் பொருள் என்றும், ஏழு எட்டு ஒன்பது பத்து ஆகிய நான்குபாடல்கள் “ஆய” என்பதின் பொருள் என்றும், இவற்றை அனைத்தையும் கூட்டி “ஓம் நமோ நாராயணாய” என்ற திருமந்திரத்தின் பொருளாக அமலனாதிபிரான் அமைந்துள்ளது
என்று விரிவாக உரை வழங்கியுள்ளார்.

பெரியவாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே ” என்னும் தொடருக்கு உரை
வழங்கிய ஆசாரியர்கள், முன்பாட்டான “கையினார் சுரிசங்கனலாழியர்” என்ற பாடலில் ”என்னைச் சிந்தை கவர்ந்ததுவே ” என்று அறிவு வளர்ச்சிக்கு இடமான வழியைக் கவர்ந்தபடியைச் சொல்லிற்று என்பர். அதாவது அறிவை அபகரித்தபடியைச் சொல்லுகிறது. “அறிவைக் கவர்தலாவது அழகிலே அலமருகை

ஆல மா மரத்தினிலை மேல்–ஆல மாமரத்திலே நெரித்தால் பால்பாயும்படி இருக்கின்ற இளந்தளிர்” என்று சொல்லி”மாமரம்” என்பதற்கு எதிர் மறையாய்ச் சிறிய மரம் என்று பொருள் உரைப்பர். “‘இலைமேல் என்பதனால் இந்த இலைக்குள்ளே அடங்கும்படியாய்த்து வடிவின் சிறுமை யிருப்பது”யசோதை பாலகன் முற்றினவன்” (மிகப்பெரியவன்) என்னும்படி “ஒப்பற்ற இளம் பாலகன் – முற்றினவன்” மிகப்பெரியவன். இங்கே எதிர்மறையாக யசோதையின் பால் வாய்ப் பிள்ளையான கிருஷ்ணனும் முரணித்திருக்கும்படி இவனுடைய இளமை (பால்யம்) செம்பால்பாயா நிற்கும்’ என்று எதிர்மறைப் பொருள் கூறிஉணர்த்துவார்.

உலகறிய மலிபுகழ்க்‌ கார்த்திகை மாதத்தில்‌ உரோகிணி நாளுறந்தை வளம்பதியில்‌ தோன்றித்‌
தலமள ந்த தென்னரங்கர்பால்‌ உலோக சாரங்கமா முனிதோள்‌ தனிலே வந்து
பலமறையின்‌ பொருளாற்‌ பாண் பெருமாளே நீ பாதாதி கேசமதாய்ப்‌ பாடித்‌ தந்த
சொல வமலனாதிபிரான்‌ பத்துப்பாட்டும்‌ சோராமலெனக்‌ கருள் செய்‌ துலங்க நீயே| |
(பிரபந்த ஸாரம் )

வணடின முரலுந்‌ தாமவன மணி மார்பன்றன்னைக்‌
கண்‌ டுள நிறையாநந்த நீரிரு கண்ணுங்‌ காட்ட
அண்டர்‌ நாயகனை வாழ்த்தி யவனருளமுதமாந்‌திப்‌
பண்டுபோம்‌ பொருள்‌ கிடைத்தபடியுள மகிழ்ந்தானன்றே,
மாடமாளிகையரங்க மறைவலாரிவனை வாழ்த்திக்‌
கோடுடைப்‌ பரனுக்‌ குற்ற குணங்களிலீடுபட்டுப்‌
பாடலிலுனக்கு நாமம்‌ பாண்‌ பெருமாள்‌ என்றரோத
வீடிலான்‌ வேதாந்தார்த்த மிசைத்தனன்‌ றமிழிலன்றே
(ஸ்ரீ சடகோப திவ்ய சரிதம் )

உம்பர்தொழும் மெய்ஞ்ஞானத்து உறையூரான் வாழியே
உரோகிணி நாள் கார்த்திகையில் உதித்தவள்ளல் வாழியே
வம்பவிழித்தார் முனிதோளில் வந்த பிரான்வாழியே
மலர்க் கண்ணை மற்றொன்றில் வையாதான் வாழியே
அம்புவியில் மதிலரங்கர் அகம் புகுந்தான் வாழியே
அமலனாதிபிரான் பத்தும் அருளினான்வாழியே
செம்பொன்னடி முடியளவும் சேவிப்போன் வாழியே
திருப்பாணன் பொற்பதங்கள் செகதலத்தில் வாழியே

எம்பெருமானுறையூராரேத்த வந்தோன் வாழியே
ஏற்ற கார்த்திகையில் உரோகிணி யுதித்தான் வாழியே
அம்புவியிலங்கருக் கண்டுகந்தான் வாழியே
அக மகிழ்ந்ததே அவர் புகழநின்று யர்ந்தோன் வாழியே

அம்புய நேர்தாண்முனிதோள் வைத்திட்டான் வாழியே
அமலனாதிபிரான் பத்து அருள் செய்தான் வாழியே
பைம்பொழில் சூழ் திருவரங்கந் திகழ்ந்தபிரான் வாழியே
பாண்பெருமாள் பங்கயத்தாள் பார்தனில் வாழியே

    —————————————————————————

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

    ஸ்ரீ பொன் பதர் கூடம்-அருள் மிகு சதுர் புஜ ஸ்ரீ கோதண்ட ராமர் திருக் கோயில்

    August 11, 2026

    மூலவர் : சதுர்புஜ கோதண்டராமர்
    தாயார் ; சீதா பிராட்டி
    தீர்த்தம் : தேவராஜ புஷ்கரிணி, சேஷ தீர்த்தம்
    புராண பெயர் : பொன்பதர்க்கூடம்
    ஊர் : பொன்பதர்க்கூடம்

    ஸ்தல வரலாறு:
    ஸ்ரீ ராமபிரானாக மனித வடிவில் அவதரித்த மகாவிஷ்ணு, எடுத்த அவதாரங்களில் குறிப்பிடத்தக்கது, ராம அவதாரம். இந்த அவதாரத்தின் போது தாய் கவுசல்யா, பக்தன் ஆஞ்சநேயர், இலங்கையில் சீதாதேவியின் மீது பரிவு காட்டிய திரிசடை, ராவணனின் மறைவிற்குப் பின்னர், அவனுடைய மனைவி மண்டோதரி ஆகிய நால்வருக்கும், நான்கு திருக்கரங்களுடன் சங்கு-சக்கரம் ஏந்தி மகாவிஷ்ணு திருக் கோலத்தில் காட்சி தந்து அருளினார். இந்த திருக் காட்சியைத் தானும் தரிசிக்க விரும்பிய தேவராஜ மகரிஷி, இத் தலத்தில் மகா விஷ்ணுவை நினைத்துத் தவமியற்றினார். தேவராஜ மகரிஷியின் பக்திக்கு மனமிரங்கிய மகாவிஷ்ணு சங்கு, சக்கரம், அபயம், ஹஸ்தம் என நான்கு திருக்கரங்களுடன் சதுர்புஜ கோதண்டராமராக காட்சி கொடுத்து அருளினார். தான் கண்ட இக்காட்சியை பக்தர்களும் கண்டு மகிழ வேண்டும் என்று மகரிஷி வேண்டிக்கொள்ள, மகாவிஷ்ணு இத்தலத்தில் சதுர்புஜ கோதண்டராமராக எழுந்தருளினார் என்று தல வரலாறு சொல்கிறது. பிற்காலத்தில் இங்கே கோவில் அமைக்கப்பட்டது. இந்த ஆலயம் சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
    ஒருசமயம், வைஷ்ணவ ஆசார்ய புருஷர்களில் ஒருவரான சுவாமி தேசிகர் இப்பகுதிக்கு யாத்திரையாக வந்த தருணத்தில் ஒரு கடலை வியாபாரி வீட்டின் திண்ணையில் அவருடைய அனுமதி பெற்று தான் பூஜைக்காக உடன் கொண்டு வந்திருந்த ஹயக்ரீவர் விக்கிரகத்துடன் தங்கினார். அன்றிரவு தன் நிலத்தை ஒரு குதிரை மேய்வதாக கடலை வியாபாரி கனவு கண்டார். மறுநாள் திண்ணையில் குதிரை முகம் மனித உடலுடன் கூடிய ஹயக்ரீவ விக்கிரகத்துடன் அமர்ந்திருந்த தேசிகரிடம் தன் கனவை சொல்லி வியந்தார் வியாபாரி. அவருக்கு ஹயக்ரீவர் அருள் பரிபூர்ணமாக கிடைத்து விட்டதாக கூறினார் தேசிகர். பிறகு தன் நிலத்திற்கு போய் பார்த்த போது குதிரை மேய்ந்ததாக கனவில் கண்ட தன் நிலத்தில் நெற் கதிர்கள் பொன் மணிகளாக விளைந்திருப்பதைக் கண்டு பிரமித்தார். அதிலிருந்து இத்தலம் “பொன் உதிர்ந்த களத்தூர்’ என்று அழைக்கப்பட்டு நாளடைவில் “பொன் விளைந்த களத்தூர்’ என்று மாறியது. இந்த பொன் நெல் மணிகளைத் தூற்றிய போது இவற்றின் பொன் பதர்கள் சுமார் 2 கி.மீ. தொலைவிலுள்ள இடத்தில் போய் விழுந்ததாம். அப்படி பதர் விழுந்த இடமே “பொன் பதர் கூடம்’ என்றாகியது. இங்கு தான் சதுர்புஜ ராமர் கோயில் உள்ளது.
    கோயில் சிறப்புகள்:
    தமிழ்நாட்டில் தொண்டை மண்டலம் பகுதியில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களாக பல திருக்கோயில்கள் விளங்கினாலும் அபிமான தலங்களாகவும் பல கோயில்கள் போற்றப்படுகின்றன. அவைகளில் ஒன்று தான் நான்கு திருக்கரங்களுடன் ஸ்ரீராமன் அருள்பாலிக்கும் பொன்பதர் கூடம்.
    பெரும்பாலான தலங்களில் அருளாட்சி செய்யும் கோதண்டராமர், கையில் வில்-அம்பு வைத்திருப்பார். ஆனால் இந்த ஆலயத்தில் உள்ள கோதண்டராமரின் கரங்களில் வில்- அம்பு இல்லை. அதற்கு பதிலாக சங்கு, சக்கரம் ஏந்தியும், அபயம், ஹஸ்தம் காட்டியும் சீதாதேவியுடன் திருமணக் கோலத்தில் அமர்ந்த நிலையில் காட்சி தருவது வேறு எங்கும் காணக் கிடைக்காத காட்சி என்கிறார்கள்.
    இங்கு சதுர்புஜ ராமர் சங்கு, சக்கரம், கோதண்டம் மற்றும் பாணம் இவைகளை தரித்துக் கொண்டு அருள் பாலித்து வருகிறார். உற்சவ மூர்த்தியும் அதே திருக் கோலத்துடன் ராம காவியத்தில் வர்ணிக்கப்பட்ட வண்ணம் இளைய பெருமாள், சீதாப்பிராட்டி மற்றும் அனுமன் இவர்களோடு சேவை தந்து தம்மை வழிபடுவோருக்கு அனைத்து வரங்களையும் அருளுகின்றார்.
    இத்தலத்து உற்சவமூர்த்தி அபூர்வமான அமைப்பில் அருள்பாலிக்கிறார். விரல், நகம் மற்றும் கைகளில் ரேகைகள் தெரியும்படியாக இந்த உற்சவர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
    மகாவிஷ்ணு கோலத்தில் ராமபிரான் காட்சி தந்த தலம் என்பதால், இத்தல உற்சவரின் திருமார்பில் மகாலட்சுமி அமைந்திருப்பது கூடுதல் விசேஷம்.
    சீதாதேவியைத் திருமணம் செய்யும் முன்னர் ராமபிரான் இடது கால் பெருவிரலால் வில்லின் ஒரு பகுதியை மிதித்து உடைத்தார் என்பதன் அடிப்படையில், இடதுகால் சற்று முன்னே அழுத்திய நிலையில் இந்த சிலை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய கோலத்தில் ராமபிரானை தரிசிப்பது அபூர்வம்.
    ஆஞ்சநேயர் பவ்யமாக அமர்ந்திருக்கும், உற்சவர் கோலத்தினையும் இங்கே காணலாம்.
    தர்மதிஷ்டர் என்னும் மகானுக்கு ஒரு சாபத்தால் சயன ரோகம் ஏற்பட்டது. நிவர்த்தி வேண்டி இத்தலத்தில் ராமபிரானை வழிபட்டார். சுவாமி, அவரது நோயைப் போக்கியருளினார். இந்நிகழ்வின் அடிப்படையில் தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு சுவாமிக்கு துளசி மாலை அணிவித்து, கல்கண்டு படைத்து வேண்டிக் கொள்கிறார்கள்.
    இங்கு இறைவன் புஷ்பக விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.
    லட்சுமி நாராயணர், விஷ்வக்சேனர், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர், தேசிகர் ஆகியோர் முன்மண்டபத்தில் அருள்பாலிக்கின்றனர்.
    இந்த ஆலயத்திற்குள், ‘சேஷதீர்த்தம்’ என்ற தீர்த்தக்குளம் உள்ளது. தேவராஜ புஷ்கரணி என்ற தீர்த்தம், ஆலயத்திற்கு வெளியே சற்று தொலைவில் இருக்கிறது.
    கோயிலில் தனிச்சன்னதியில் ஸ்ரீ தர்ப்பஸயன சேதுராமர். ஸயனக்கோலம். திருப்புல்லாணியில் சேவிக்கும் அதே திருக்கோலம். இராமருக்குப் பின்னால் லக்ஷ்மணரும், திருவடிக்கு அருகில் ஸமுத்ரராஜனும், ஆஞ்சநேயரும் நிற்கிறார்கள்.
    பொன் விளைந்த களத்தூரில் அருகருகே இரண்டு கோயில்கள் அமைந்திருக்கிறது. ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் மற்றும் ஸ்ரீகோதண்ட ராமர் திருக்கோயில்.
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் திருக்கோயில். மூலவர் வைகுண்டநாதர். உற்சவர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர். ஆனால் சிங்கமுகம் இல்லை. சாந்தமான ரூபத்தில் சேவை சாதிக்கிறார். இவர் மாமல்லபுரத்தில் இருந்தவராம்.
    ஸ்ரீ நரசிம்மரே விரும்பி வந்து குடிகொண்ட தலம்.
    அந்நிய படையெடுப்பின்போது ஸ்ரீ நரசிம்மரே அசரீரியாக, தன்னை மாமல்லபுரத்திலிருந்து எடுத்துச் செல்லும்படியும், கூடவே பறந்து வரும் கருடன் எங்கே தரை இறங்குகிறதோ, அங்கே தன்னைப் பிரதிஷ்டை செய்யும்படி அருளினாராம். மாமல்லபுரம் ஆலயங்கள் கடலில் மூழ்கிய நிலையில், ஒரு வயோதிகரின் கனவில் நரசிம்மர் தோன்றி சொன்னார் என்றும் சொல்வதுண்டு. தாயார் அஹோபிலவல்லித் தாயார். ராமர், ஹயக்ரீவர், ஆண்டாள், ஆழ்வார்களுக்கும் தனி சன்னதிகள் உள்ளன.
    திருவிழா:
    தைப்பொங்கல் தினத்தன்று இத்தல இறைவனுக்கு, விசேஷ திருமஞ்சனமும், பரிவேட்டை உற்சவமும் நடைபெறும். ராமநவமி, பங்குனி உத்திரம் அன்று திருக்கல்யாணம், திருவாதிரை ஸ்ரீஉடையவர் சாற்றுமுறை, ஸ்ரீராமர் கோடை உற்சவம், நவராத்திரி உற்சவம், அன்னக்கோடி உற்சவம், தனுர்மாத பூஜை, அனுமன் ஜெயந்தி முதலான உற்சவங்கள் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. தினமும் காலை, மாலை என இருகால பூஜைகள் நடைபெறுகின்றன
    திறக்கும் நேரம்:
    காலை 6 மணி முதல் 7 மணி வரை,
    மாலை 5 மணி முதல் 6 மணி வரை திறந்திருக்கும்
    முகவரி:
    அருள்மிகு சதுர்புஜ கோதண்டராமர் கோயில்
    பொன்பதர்கூடம் – 603 405.
    காஞ்சிபுரம் மாவட்டம்..
    போன்: +91- 44 – 2744 1227, 97890 49704
    அமைவிடம்:
    செங்கல்பட்டில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும், திருக்கழுக்குன்றத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும் பொன்பதர்கூடம் என்ற இத்தலம் உள்ளது. செங்கல்பட்டில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் தனியார் பேருந்து ஒன்று, பொன்பதர்கூடம் வழியாக இயக்கப்படுகிறது. தவிர செங்கல்பட்டு மற்றும் திருக்கழுக்குன்றத்தில் இருந்து ஷேர் ஆட்டோ வசதியும் இருக்கிறது.
    மாவட்டம் : காஞ்சிபுரம்

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

    ஸ்ரீ விஷ்ணு தர்மோத்தரத்தில் உள்ள ஸ்ரீமத்‌ அபாமார்ஜந ஸ்தோத்ரம்‌ –

    August 11, 2026

    பாராயணத்திற்குச்‌ சிறந்ததாக ““ஸ்ரீ அபாமார்ஜந ஸ்தோத்ரம்‌” பெரியோர்களால்‌ உகந்து ஏற்றுக் கொள்ளப் பட்டதாம்‌-பலவித ஜ்வரமும்‌ மற்றும்‌ வ்யாதிகளும்‌ துர் தைவ, க்ரஹ. | பீடைகளும்‌ தனித்தனியே பெயரிட்டுக்‌ கூறப்பட்டு, அதன்‌ நிவ்ருத்தி வேண்டிக் கொள்ளப்படுகிறது. ‘ஹிரண்யாக்ஷனைக்‌ | கொன்று பூமிப் பிராட்டியின்‌ துயர்‌ துடைத்த ஸ்ரீ மஹா வராஹரும்‌, தந்தையின்‌ உத்தரவால்‌ நலியும்‌ க்ருத்யையையும்‌ விஷத்தையும்‌ போக்கி ஸ்ரீ ப்ரஹ்லாதாழ்வானை ரக்ஷித்த ஸ்ரீ அழகிய சிங்கரும்‌, இந்த்ரனது செல்வத்தைக்‌ கவர்ந்த மாவலியை வஞ்சித்த ஸ்ரீ வாமநரும்‌, எங்கும்‌. பரந்த, திருமேனியுடன்‌ எல்லாரையும்‌ அணைத்துக்‌ கொண்ட ஸ்ரீ திரிவிக்கிர்மனும்‌, கஜேந்த்ராழ்வான்‌ முதலியவரை ரக்ஷித்த ஸ்ரீ ஸுதார்சநாழ்வானும்‌ நம்மைக்‌ கைவிடமாட்டார்கள்‌ என்றே பரம விச்வாஸத்துடன்‌ இந்த ஸ்ரீ அபாமார்ஐந ஸ்தோத்‌ரத்தைப்‌ பாராயணம்‌ செய்து ஸகல வித வ்யாதிகளும்‌ நீங்கப்‌ பெற்றும்‌, ஸகல க்ஷேமங்களும்‌ கூடப் பெற்றும்‌ நல் வாழ்வு வாழ வேண்டுமென்று ப்ரார்த்திக்கிறோம்‌

    ஸ்ரீ தால்ப்ய உவாச
    பகவந்‌ ப்ராணிநஸ்‌ ஸர்வே விஷ ரோகாத் யுபத்ரவை; |
    துஷ்ட க்ரஹாபி காதைச்‌’ ச ஸர்வ கால-முபத்ருதா –
    ஆபிசாரிக க்ருத்யாபி: ஸ்பர்ச ரோகைச்‌’ ச தாருணை: |
    ஸதா ஸம்பீட்யமாநாஸ்து திஷ்டந்தி முநி ஸத்தம —
    கேந கர்ம விபாகேந விஷ ரோகாத் யுபத்ரவா: |
    ந பவந்தி ந்ருணாம்‌ தந்மே யதாவத்‌ வக்து மர்ஹஸி –

    ஸ்ரீ புலஸ்ய உவாச
    வ்ரதோபவா ஸைர்யைர் விஷ்ணுர் நான்ய ஜென்மநி தோஷித: |
    தே நரா முநி சார்தூல விஷ ரோகாதி பாகிந
    ஆரோக்யம்‌ பரமாம்‌ ருத்திம்‌ மநஸா யத்‌ யதிச்சதி |
    தத் ததாப்நோத்ய ஸந்திக்தம்‌ பரத்ராச்யுத தோஷ க்ருத் –
    நாதீந்‌ ப்ராப்நோதி ந வ்யாதீந்‌ விஷ க்ரஹ நிபந்தநம்‌।
    க்ருத்யா ஸ்பர்ஸ பயம்‌ வாபி ததோஷிதே மது ஸூதநே —
    ஸர்வ து:க சமஸ்தஸ்ய ஸெளம்யாஸ்‌ தஸ்ய ஸதா க்ரஹா; |
    தேவாநாமபி துஷ்ட்யை ஸ யஸ்ய துஷ்டோ ஜநார்தந —
    யஸ் ஸமஸ்‌ ஸர்வ பூதேஷு யதாத்மநி ததா பரே |
    உபவாஸாதி தாநேந தோஷிதே மதுஸூதநே ॥
    தோஷகாஸ்‌ தஸ்ய ஜாயந்தே நரா: பூர்ண மநோ ரதா.।
    அரோகாஸ்‌ ஸுகிநோ போகாந்‌ போக்தாரோ முநி ஸத்தம ॥
    ந தேஷாம்‌ ச’த்ரவோ நைவ ஸ்பர்ஸ ரோகாதி பாகிந;। |
    க்ரஹ ரோகாதிகம்‌ வாபி பாப கார்யம்‌ ந ஜாயதே ||
    அவ்யாஹதாநி க்ருஷ்ணஸ்ய சக்ராதீந் யாயுதாநி ச |
    ரக்ஷந்தி ஸகலாபத்ப்ய, யேந விஷ்ணு ருபாஸித-

    ஸ்ரீ தால்ப்ய உவாச
    அநாராதித கோவிந்தா யே நரா து:க பாகிந:| தேஷாம்‌ து:காபி பூதாநாம்‌ யத்‌ கர்தவ்யம்‌ தயாளுபி –
    பச்‌’யத்பிஸ்‌ ஸர்வ பூதஸ்தம்‌ வாஸுதேவம்‌ மஹாமுநே ।
    ஸமத்ருஷ்டிபிரீ சே’சச’ம்‌ தந் மம ப்ரூஹ்ய சேஷத-

    ஸ்ரீ புலஸ்த்ய உவாச
    ஸ்ரோது காமோஸி வை தால்ப்ய ஸ்ருணுஷ்வ்‌ ஸுஸமாஹித: | அபமார்ஜநகம்‌ வக்ஷயே ந்யாஸ பூர்வ மிதம்‌ பரம் –

    ஓம்‌ நமோ பகவதே வாஸு தேவாய ஸர்வ க்லேசாப ஹந்த்ரே நம –

    அத ந்யாஸ :
    அஸ்ய ஸ்ரீமத்‌ அபாமார்ஜந ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய ஸ்ரீபுலஸ்த்யோ பகவாந்‌ ருஷி:-அநுஷ்டுப் சந்த;- ஸ்ரீவாராஹ நாரஸிம்ஹ வாமந விஷ்ணு ஸுதர்ச’நா தேவதா: ஹராமுகஸ்ய துரிதமிதி பீஜம்‌ | அச்யுதாநந்த கோவிந்தேதி சக்தி:| _ ஜ்வலத் பாவக லோச நேதி கலகம்‌ | வஜ்ராயுத நக ஸ்பர்‌சேதி கவசம்‌ | ஸ்ரீவாராஹ நாரஸிம்ஹ வாமந விஷ்ணு ஸுதர்சந ப்ரஸாத ஸித்யர்த்தே ஜபே விநியோக —

    வராஹாய அங்குஷ்டாப்யாம்‌ நம: | நாரஸிம்ஹாய தர்ஜநீப்யாம்‌ ஸ்வாஹா | வாமநாய மத்யமாபயாம்‌ வஷட்‌ | விஷ்ணவே அநாமிகாப்யாம்ஹும்‌ |ஸூதர்சநாய கநிஷ்டிகாப்யாம்‌ வெளஷட்‌ | பாஞ்சஜந்யாய கரதல கர ப்ருஷ்டாப்யாம்‌ பட்‌ நம, | இதி கர ந்யாஸ: ॥

    அத அங்க ந்யாஸ:

    வராஹ நரஸிம்ஹாய வாமநாய மஹாத்மநே | ஜ்ஞாநாய ஹ்ருதயாய நம: (மார்பில்‌)
    நம: கமல கிஞ்ஜல்க பீத நிர்மல வாஸஸே-— ஐஸ்வர்யாய சிரஸே ஸ்வாஹா (தலையில்‌)
    நம: புஷ்கர நேத்ராய கேச’வாயாதி சக்ரிணே, சக்த்யை சி’காயை வஷட்‌ (சிகையில்‌)
    தாமோதராய தேவாய அநந்தாய மஹாத்மநே , பலாய கவசாய ஹும்‌ (கவசம் போல்‌ இரு புறத்தில்‌)
    காச்‌’யபாயாதி ஹ்ரஸ்வாய ருக் யஜுஸ் ஸாம மூர்த்தயே தேஜஸே நேத்ராப்யாம்‌ வெளஷட்‌ (கண்களில்‌)
    ஓம் நம: பரமார்த்தாய. புருஷாய மஹாத்மநே ॥ வீர்யாய அஸ்த்ராய பட்‌ (இரு கையைத் தட்ட)
    ஓம்‌ பூர்‌ புவஸ் ஸூவரோம்‌ இதி திக்பந்த: | (எட்டு திக்கில்‌ வலமாகச்‌ சொடக்கவும் )

    த்யானம்
    அத த்யாநம்‌ ப்ரவக்ஷ்யாமி ஸர்வ பாப ப்ரணாச நம்‌|
    வராஹ ரூபிணம்‌ தேவம்‌ ஸம்ஸ்மரந்‌ அர்ச்சயேத்‌ ஜபேத்
    ஜலெளகதாம்‌ ந: ஸசராசரா தரா விஷாண கோட்யா கில விச்‌’வரூபிணா |
    ஸமுத் த்ருதா யேந வராஹ ரூபிணா ஸ மே ஸ்வயம்பூர்‌ பகவாந்‌ ப்ரஸீதது ॥

    சஞ்சத்‌ சந்த்ரார்க தம்ஷ்ட்ரம்‌ ஸ்புரதுரு ரதநம்‌ விதயுதுத்யோத ஜிஹ்வம்‌
    கர்ஜத்‌ பர்ஜந்ய நாதம்‌ ஸ்புரித ரவி ருசிம்‌ சஷுர ஷூத்ர ரெளத்ரம்‌ |
    த்ரஸ்தாசா’ ஹஸ்தியூதம்‌ ஜ்வலதநல ஸடா கேஸரோத் பாஸமாநம்‌
    ரஷோ ரக்தாபிஷிக்தம்‌ ப்ரஹரதி துரிதம்‌ த்யாயதாம்‌ நாரஸிம்ஹம்

    அதிவிபுல ஸுகாத்ரம்‌ ருக்ம பாத்ரஸ்த மந்நம்‌
    ஸலலித ததிகணடம்‌ பாணிநா தக்ஷிணே ந।
    கலச’ம்‌ அம்ருத பூர்ணம்‌ வாம ஹஸ்தே ததாநம்‌
    தரதி ஸகல து:கம்‌ வாமநம்‌ பாவயேத ய: —

    விஷ்ணும்‌ பாஸ்வத்‌ கிரீடாங்கத வலயகளா கலப ஹாரோஜ்‌ ஜ்வலாங்கம்‌
    ஸ்ரோணீ பூஷா ஸுவக்ஷோ மணி மகுட மஹா குணடலைர்‌ மண்டி தாங்கம்‌ | ஹஸ்தோதயத்‌-சங்க சக்ராம்புஜ கத மமலம்‌ பீத கெளசே’ய மாசா”
    வித்யோதத-பாஸ முத்யஜ்‌ திநகர ஸத்ருச’ம்‌ பத்ம ஸம்ஸ்தம்‌ நமாமி ॥

    கல்பாந்தார்க ப்ரகாசம்‌ த்ரி புவந- ‘ மகிலம்‌ தேஜஸா பூரயந்தம்‌
    ரக்தாக்ஷம்‌ பிங்ககேசம்‌ ரிபுகுலதமநம்‌ பீம-தம்ஷ்ட்ராட்ட ஹாஸம்‌ |
    சங்கம்‌ சக்ரம்‌ கதாப்ஐம்‌ ப்ருதுதர முஸலம்‌ சூல பாச’ங்குசாக்நீந்
    பிப்ராணம்‌ தோர்பிராத்யம்‌ மநஸி முரரிபும்‌ பாவயே சக்ர ஸம்ஜ்ஞம்‌ ||

    ஓம்‌ நம: பரமார்த்தாய புருஷாய மஹாத்மநே |
    அரூப பஹு ரூபாய வ்யாபிநே பரமாத்மநே

    நிஷ் கல்மஷாய சு’த்தாய த்யாந யோக ரதாய ச |
    நமஸ்க்ருத்ய ப்ரவஹ்யாமி யத்ர ஸித்யது மே வச –

    நாராயணாய ஸூத்தாய விச்வேசா யேஸ்வராய ச |
    அச்யுதாநந்த கோவிந்த பத்ம நாபாய ஸெளஹ்ருதே —

    ஹ்ருஷீகேசாய கூர்மாய மாதவா யாச்யுதாய ச |
    தாமோதராய தேவாய அநந்தாய மஹாத்மநே ॥

    ஐநார்தநாய க்ருஷ்ணாய உபேந்த்ர ஸ்ரீதராய்‌ ச |
    த்ரிவிக்ரமாய ராமாய வைகுண்டாய ஹராய ச |!
    பிரத்யும்நா யாநிருத்தாய புருஷோத்தம தே நம: |
    யோகீஸ்வராய குஹ்யாய கூடாய பரமாத்மநே ॥
    பச்த ப்ரியாய தேவாய விஷ்வக்ஸேநாய சார்ங்கிணே।
    அதோக்ஷஜாய தஷாய மத்ஸ்யாய மது ஹாரிணே–

    வராஹாய ந்ருஸிம்‌ஹாய வாமநாய மஹாத்மநே |
    வராஹேச’ ந்ருஸிம்ஹேச” வாமநேச: த்ரி விக்ரம-
    ஹயக்ரீவேச ஸர்வேச ஹ்ருஷீகேச ஹராசு:பம்‌ |
    அபராஜித சக்ராத்யை: சதுர்பி: பரமாத்புதை:
    அகண்டிதா நுபாவைஸ்த்வம்‌ ஸர்வ துஷ்ட ஹரோ பவ।
    ஹரா முகஸ்ய துரிதம் துஷ்க்ருதம் துருபோஷிதம்
    ம்ருத்யு பந்தார்த்திபயதம்‌ அரிஷ்டஸ்ய ச யத்பலம்‌ |
    பரமத்வாந ஸஹிதம்‌ ப்ரயுக்தம்‌ சாபிசாரிகம் –

    கர ஸ்பர்ச” மஹா ரோகாந்‌ ப்ரயுக்காந்‌ த்வரயா ஹர |
    ஓம்‌ நமோ வாஸுதேவாய நம: க்ருஷ்ணாய சார்ங்கிணே–
    நம: புஷ்கர நேத்ராய கேச’வாயாதி சக்ரிணே |
    நம: கமல கிஞ்ஜல்க பீத நிர்மல வாஸஸே ||
    மஹாஹவ ரிபுஸ்கந்த கருஷ்ட சக்ராய சக்ரிணே |
    தம்ஷ்ட்ராக்ரேண க்ஷிதி த்ருதே த்ரயீ மூர்த்தி மதே நம: ॥
    மஹா யஜ்ஞ வராஹாய சேஷ போகோப சாயிநே |
    தப்தஹாடக கேசாந்த ஜ்வலத்பாவக லோசந ॥

    வஜ்ராயுத நகஸ்பர்ச” திவ்ய ஸிம்ஹ நமோஸ்து தே |
    காச்‌’யபாயாதி ஹ்ரஸ்வாய ருக் யஜுஸ் ஸாம மூர்த்தயே
    துப்யம்‌ வாமந ரூபாய க்ரமதே காம்‌ நமோ நம; |
    வராஹா சேஷ துஷ்டாநி ஸர்வ பாப பலாநி வை ||
    மர்த மர்த மஹா தம்ஷ்ட்ர மர்த மர்த ச தத் பலம்‌ |
    நரஸிம்ஹ கராளாஸ்ய தந்த ப்ராந்தோஜ் ஜ்வலாநந —

    பஞ்ஜ்‌ பஞ்ஜ நிநாதேந துஷ்டாந்யஸ் யார்த்தி நாஸந |
    ருக் யஜுஸ் ஸாம ரூபாபிஃ வாக்பிர்‌ வாமந ரூப த்ருக்‌ |
    ப்ரசமம்‌ ஸர்வ துஷ்டாநாம்‌ நயத்வஸ்ய ஐநார்தந:।
    கெளபேரம்‌ தே முகம்‌ ராத்ரெள ரெளத்ரம்‌ . ்‌ ஸெளம்யம்‌ முகம்‌ திவா ॥ .
    ஜ்வராந்‌ ம்ருத்யு பயம்‌ கோரம்‌ விஷம்‌ நாச’யதே ஜ்வரம்‌ |
    த்ரிபாத் பஸ்ம ப்ரஹரண: த்ரிசிரா ரக்த லோசந: |
    ஸ மே ப்ரீதஸ்‌ ஸுகம்‌ தத்யாத்‌ ஸர்வாமய பதிர் ஜ்வர –

    ஆத்யந்தவந்த: கவய: புராணா; ஸந் மார்க வந்தோ ஹ்யநுசாஸிதார; |
    ஸர்வ ஜ்வராந்‌ க்நந்து மமா நிருத்த ப்ரத்யும்‌ந ஸங்கர்ஷண வாஸு தேவா. || ஐகாஹிகம்‌ த்வ்யாஹிகம்‌ ச ததா த்ரி திவஸ ஜ்வரம்‌ |
    சாதுர்த்திகம்‌ ததாத் யுக்ரம்‌ ததைவ ஸதத ஜ்வரம்‌ ||
    தோஷோத்தம்‌ ஸந்‌நிபா தோத்தம்‌ ததைவாகந்துகம்‌ ஜ்வரம்‌|
    சமம்‌ நயாசு கோவிந்த சிந்த்திச்‌ சிந்த்யஸ்ய வேதநாம் –

    நேத்ர்து;கம்‌ சி’ரோது;கம்‌ து;கம்‌ சோதர ஸம்பவம்‌ |
    அதிச்‌’வாஸ மநுச்ச்வாஸம்‌ பரிதாபம்‌ ஸவேபதும்‌ ||
    குதக்ராணாங்க்ரி ரோகாம்ச்‌’ ச குக்ஷி ரோகம்‌ ததா க்ஷயம்‌|
    காமாலாதீந்‌ ததா ரோகாந்‌ ப்ரமே ஹாம்ச்‌’ சாதி தாருணாந்‌ |
    பகந்தராதி ஸாராம்ச்‌’ச முக ரோகாம் ஸவல்குளிம்‌ |
    அச்‌’மரீ மூத்ர க்ருச்ச்ரம்‌ ச ரோகா நந்யாம்ச்‌’ ச தாருணாந்‌ |
    யே வாத ப்ரபவா ரோகா; யே ச பித்த ஸமுத்பவா; |
    கபோத் பவாச்‌’ச யே ரேகா; யே சாந்யே ஸாந்நி பாதிகா —

    ஆகந்துகாச்‌’ச யே ரோகா; லூதாதி ஸ்போடகாதய: |
    ஸர்வே தே ப்ரசமம்‌ யாந்து வாஸூ தேவாபமார்ஐநாத்‌ ||
    விலயம்‌ யாந்து தே ஸர்வே விஷ்ணோ ருச்சாரணேந ச |
    க்ஷயம்‌ கச்சநது சாசேஷா; சக்ரேணாபி ஹதா ஹரே: ॥
    அச்யுதாநந்த கோவிந்த விஷ்ணோ நாராயணாம்ருத |
    ரோகாந்‌ மே நாச’யாசேஷாந ஆசு: தந்வந்தரே ஹரே ॥
    ௮ச்யுதாநந்த கோவிந்த நாமோச்சாரண பேஷஜாத்‌ |
    நச்‌’யநதி ஸகலா ரோகா; ஸத்யம் ஸத்யம்‌ வதாமயஹம்

    ஸத்யம் ஸத்யம்‌ புநஸ் ஸத்யம்‌ உத்த்ருத்ய புஜமுச்யதே |
    வேதாச் சாஸ்த்ரம் பரம்‌ நாஸ்தி நதைவம்‌ கேசவாத் பரம்‌ ॥
    ஸ்தாவரம்‌ ஜங்கமம்‌ சாபி க்ருத்ரிமம்‌ சாபி யத்விஷம்‌ |
    தநதோத்பவம்‌ நகோத்பூதம்‌. ஆகாஸ ப்ரபவம்‌ விஷம்‌ |
    லூதாதிஸ் போடகம்‌ சைவ விஷமத் யந்த துஸ் ஸஹம்‌ |
    சமம்‌ நயது தத் ஸர்வம்‌ கீர்த்தி தோஸ்ய ஜநார்தந 😐
    க்ரஹாந்‌ ப்ரேத க்ரஹாந்‌ சைவ ததா வைநாயிக க்ரஹாந்‌ |
    வேதாளாம்ச்‌’ ச பிசாசாம்ச்‌’ ச கந்தர்வாந்‌ யஷ ராக்ஷஸாந் –
    சாகிநீபூத நாத்யாம்ச்‌’ ச ததா வைநாயிக க்ரஹாந்‌ |
    முக மண்டலிகாந்‌ க்ரூராந ரேவதீந் வ்ருத்த ரேவதீந்‌ ||
    வ்ருச்‌’சிகாக்யாந்‌ க்ரஹாந்‌ சோக்ராந்‌ ததா மாத்ரு கணாநபி |
    பாலஸ்ய விஷ்ணோச்‌’சரிதம்‌ ஹந்து பால க்ரஹாநி மாந ॥|
    வ்ருத்தாநாம்‌ யே க்ரஹா: கேசித்‌ யேச பால க்ரஹா: க்வசித்‌।
    நரஸிம்ஹஸ்ய: தே த்ருஷ்ட்யா தக்தா யே சாபி யெளவநே —

    ஸடா கராள வதநோ நரஸிம்ஹோ மஹா பல: | க்ரஹாந சேஷாந் நிச்‌சேஷாந கரோது ஜகதோ ஹித:
    நர ஸிம்ஹ மஹா ஸிம்ஹ ஜ்வாலா மாலோஜ் ஜ்வலாநந |
    க்ரஹாந சே’ஷாந்‌ ஸர்வேஷாம்‌ காதகாதாக நிலோசந
    யே ரோகா யே மஹோத்பாதா யத் விஷம்‌ யே மஹோரகா: |
    யாநி ச க்ரூர பூதாநி க்ரஹ பீடாச்‌’ ச தாருணா-

    சஸ்த்ரஷதே ச யே தோஷா: ஜ்வாலா கர்தமகாதய: |
    யாநி சாந்யாநி துஷ்டாநி ப்ராணி பீடா கராணி ச ॥
    தாநி ஸர்வாணி ஸர்வாத்மந்‌ பரமாத்மந்‌ ஜநார்தந |
    கிஞ்சித் ரூபம்‌ ஸமாஸ்தாய வாஸு தேவாஸ்ய நாசய ||
    க்ஷிப்த்வா ஸுதர்சநம்‌ சக்ரம்‌ ஜ்வாலா மாலாதி பூஷணம்‌ |
    ஸர்வ துஷ்டோபச’ மநம்‌ குரு தேவவராச்யுத ॥.
    ஸுதர்ச’ந மஹா சக்ர கோவிந்தஸ்ய கராயுத |
    தீஷ்ண பாவக ஸங்காச’ கோடி ஸூர்ய ஸமப்ரப |
    த்ரைலோக்ய கர்தா த்வம்‌ துஷ்ட த்ருப்த தாநவதாரண |
    தீஷ்ண தார மஹா வேக சிநதி சிந்தி மஹாஜ்வரம்‌ ॥

    சிந்தி பாதம்‌ ச லூதம் ச சிந்தி கோரம்‌ மஹத்பயம்‌ |
    க்ருமிம்‌ தாஹம்‌ ச சூலம்‌ ச விஷ ஜ்வாலாம்‌ ச கர்தமாந்‌ ||
    ஸர்வதுஷ்டாநி ரஷாம்ஸி க்ஷபயாரி விபீஷண |
    ப்ராச்யாம்‌ ப்ரதீச்யாம்‌ திசிச தக்ஷிணோத்தர யோஸ்ததா ॥
    ரக்ஷாம்‌ கரோது பகவாந்‌ பஹு ரூபீ ஜநார்தந: |
    பரமாத்மா யதா விஷ்ணு: வேதாந்தேஷ் வபிதீயதே ||
    தேந ஸத்யேந ஸகலம்‌ துஷ்டமஸ்ய ப்ரசாம்யது |:
    யதா விஷ்ணுர்‌ ஜகத் ஸர்வம்‌ ஸதேவாஸாுர மாநுஷம் —

    தேந ஸத்யேந ஸகலம்‌ துஷ்டமஸ்ய ப்ரசாம்யது |
    யதா விஷ்ணெள ஸ்ம்ருத ஸத்ய: ஸம்க்ஷயம்‌ யாந்தி த பாதகா: |.
    தேந ஸத்யேந ஸகலம்‌ துஷ்ட மஸ்ய ப்ரசாம்யது |
    யதா யஜஞோச்‌’வரோ விஷ்ணு: வேதாந்தேஷ் வபிதீயதே ॥
    தேந ஸத்யேந ஸகலம்‌ யந்மயோக்தம்‌ ததாஸ்து தத்‌ |
    சாந்திரஸ்து சிவம்‌ சாஸ்து ஹ்ருஷீகேச”ஸ்ய கீர்த்தநாத் –

    வாஸுதேவ சரீரோத்தை: குசை’ஸ் ஸம் மார்ஜிதம்‌ மயா |
    அபாமார்ஜது கோவிந்தோ நரோ நாராயணஸ்‌ ததா |
    மமாஸ்து ஸர்வ து:காநாம்‌ ப்ரசமோ யாசநாத்‌ ஹரே! |
    சாந்தாஸ் ஸமஸ்தா ரோகாஸ்தே க்ரஹாஸ்‌ ஸர்வ விஷாணி ச
    பூதாநி ச ப்ரசாம்யந்து ஸம்ஸ்ம்ருதே மதுஸூதநே |
    ஏதத்‌ ஸமஸ்த ரோகேஷு பூத க்ரஹ பயேஷு ச ॥
    அபாமார்ஜநகம்‌ சஸ்த்ரம்‌ விஷ்ணு நாமாபி மந்த்ரிதம் –

    ஏதே குசா விஷ்ணு ச:ரீர ஸம்பவா!:
    ஐநார்தநோ அஹம்‌ ஸ்வயமேவ சாகத: | ஹதம்‌ மயா துஷ்டமசேஷ மஸ்ய
    ஸ்வஸ்தோ பவத்வேஷ யதா வசோ ஹரே: |
    ‘சாந்திரஸ்து சிவம்‌ சாஸ்து ப்ரணச்‌:ய த்வ ஸுகம் சயத்‌ |
    ஸ்வாஸ் த்யமஸ்து சிவம்‌ சாஸ்து துஷ்டமல்ய ப்ரசாம்யது ||
    யதஸ்ய துரிதம்‌ கிஞ்சித்‌ தத் க்ஷிப்தம்‌ லவணார்ணவே |
    ஸ்வாஸ்த்ய மஸ்து சி’வம்‌ சாஸ்து ஹ்ருஷீ கேச’ஸ்ய கீர்த்தநாத் –

    ஏதத்‌ ரோகாதி பீடாஸு ஐந்தூநாம்‌ ஹித மிச்சதா |
    விஷ்ணு பக்தேந கர்தவ்யம்‌ அபாமார் ஜநகம்‌ பரம்‌ |
    அநேந ஸர்வ துஷ்டாநி ப்ரசமம்‌ யாந்த்ய ஸம்‌சய: |
    ஸர்வ பூத ஹிதார்த்தாய குர்யாத் தஸ்மாத்‌ ஸதைவ ஹி ||
    குர்யாத் தஸ்மாத்‌ ஸதைவ ஹ்யோம்‌ நம இதி |
    இதம்‌ ஸ்தோத்ரம்‌ பரம்‌ புண்யம்‌ ஸர்வ வ்யாதி விநாசநம்‌ |
    விநாசாய ச ரோகாணாம்‌ அப ம்ருத்யு ஐயாயச |
    இதம்‌ ஸ்தோத்ரம்‌ ஜபேத்‌ சாந்த: குசை’ஸ் ஸம்மார்ஜயேத்‌ சுசி; ||
    வ்யாத் யபஸ்மார குஷ்டாதி பிசா சோரக ராக்ஷஸா: |
    தஸ்ய பார்ச்‌வம்‌ ந கச்சந்தி ஸ்தோத்ர மேதத்து ய: படேத்‌।
    வாராஹம்‌ நார ஸிம்ஹம்‌ ச வாமநம்‌ விஷ்ணு மேவ ச |
    ஸ்மரந்‌ ஜபேதிதம்‌ ஸ்தோத்ரம்‌ ஸர்வ து:கோப சாந்தயே ॥

    இதி ஸ்ரீ விஷ்ணு தர்மோத்தர புராணே தால்ப்ய புலஸ்த்யஃ ஸம்வாதே அபாமார்ஜந ஸ்தோத்ரம்‌ ஸம்பூர்ணம் –

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

    ஸ்ரீ விஷ்ணு விஜய ஸ்தோத்திரம்-

    August 10, 2026

    தேவா ஊச:
    ததா: ஸ்ம விஷ்ணும்‌ ஐகதாதி பூதம்‌ ஸுரா ஸுரரேந்த்ரம்‌ ஜகதாம்‌ ப்ரபாலகம்‌ | யந்நாபி-பத்மாத்‌ கில பத்ம யோநி: பபூவ தம்‌ வை சரணம்‌ கதா: ஸ்ம: ॥–1-

    நமோ நமோ மத்ஸ்ய-வபுர்த்தராய நமோஸ்து தே கச்சப ரூப-தாரிணே |
    நம: ப்ரகுர்மச்‌’ ச ந்ருஸிம்ஹ ரூபிணே ததா புநர்‌ வாமந ரூபிணே நம; ||–2-

    நமோஸ்து தே க்ஷத்ர விநாச: நாய ராமாய ராமாய தசாஸ்ய நாசிநே |
    ப்ரலம்ப ஹந்த்ரே சிதிவாஸஸே நமோ நமோஸ்து புத்தாய ச தைத்ய மோஹிநே–3–

    ம்லேச்சாந்த காயாபி ச கல்கி நாம்நே நம: புந: க்ரோட வபுர்த்தராய |
    ஜகத்திதார்த்தம்‌ ச யுகே யுகே பவாந்‌ பிபர்த்தி ரூபம்‌ த்வ ஸுராபவாய ॥–4-

    நிஷூதி தோயம்‌ ஹ்யதுநா கில த்வயா தைத்யோ ஹிரண்யாக்ஷ இதி ப்ரகல்ப: |
    யச்‌ சேந்த்ர முக்யாந்‌ கில லோக பாலாந்‌ ஸம் ஹேலயா சைவ திரச்‌’சகார | –
    -5-

    ஸ வை த்வயா தேவ ஹிதார்த்த மேவ நிபாதிதோ தேவவர ப்ரஸீத |
    த்வமஸ்ய விஸ்வஸ்ய விஸர்க கர்த்தா ப்ராஹ்மேண ரூபேண ச தேவ தேவ ||-
    -6-

    பாதா த்வமேவாஸ்ய யுகே யுகே ச ரூபாணி தத்ஸே ஸு மநோ ஹராணி |
    த்வமேவ காலாக்நி ஹரச்‌ச பூத்வா விஸ்வம்‌ க்ஷயம்‌ நேஷ்யஸி சாந்த காலே-
    -7-

    அதோ பவாநேவச விஸ்வகாரணம்‌ ந தே பரம்‌ ஜீவ-மஜீவமேவ |
    யத்கிஞ்ச பூதம்‌ ச பவிஷ்ய ரூபம்‌ ப்ரவர்த்தமாநம்‌ ச தவைவ ரூபம்‌ ॥-8-

    ஸர்வம்‌ த்வமேவாஸி சராசராக்யம்‌ ந பாதி விஸ்வம்‌ த்வத்ருதே ச கிஞ்சித்‌ |
    அஸ்தீதி நாஸ்தீதி ச பேத-நிஷ்ட்டம்‌-த்வய்யேவ பாதம்‌ ஸதஸத்‌ ஸ்வரூபம்‌ ॥–9-

    ததோ பவந்தம்‌ கதமோபி தேவ ந ஜ்ஞாது மர்ஹ-த்யவிபக்வ-புத்தி: |
    ருதே பவத்‌-பாத-பராயணம்‌ ஜநம்‌ தே நாகதா; ஸ்ம: சரணம்‌ சரண்யம்‌ ॥–10-

    வ்யாஸ உவாச
    ததோ விஷ்ணு; ப்ரஸந்நாத்மர உவாச த்ரிதிவெளகல: | |
    துஷ்டோஸ்மி தேவா பத்ரம்‌ வோ யுஷ்மத்‌-ஸ்தோத்ரேண ஸாம்ப்ரதம் –11-

    பல ஸ்ருதி
    ய இதம்‌ ப்ரபடேத்‌ பக்த்யா விஜய ஸ்தோத்ர மாதராத்‌ ॥
    ந தஸ்ய துர்லபம்‌ தேவா; த்ரிஷு லோகேஷு கிஞ்சந —
    12-

    கவாம்‌ சத ஸஹஸ்ரஸ்ய ஸம்யக்‌ தத் தஸ்ய யத் பலம்‌ |
    தத் பலம்‌ ஸமவாப்நோதி கீர்த்தந-ஸ்ரவணாந்‌ நர: |॥ –
    -13-

    ஸர்வ காம ப்ரதம்‌ நித்யம்‌ தேவ தேவஸ்ய கீர்த்தநம்‌ |
    அத: பரம்‌ மஹா ஜ்ஞாநம்‌ ந பூதம்‌ ந பவிஷ்யதி–14–

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

    ஸ்ரீ மாங்கள்ய வ்ருத்தி ஸ்தவ ஸ்தோத்ரம் -ஸ்ரீ தால்ப்யர் ஸ்ரீ புலஸ்ய மஹ ரிஷி ஸம்வாதம்–ஸ்ரீ விஷ்ணு தர்மம்–

    August 10, 2026

    கார்யாரம்பேஷு ஸர்வேஷு து:ஸ்வப்நேஷு ச ஸத்தம |
    அமங்கள்யேஷு த்ருஷ்டேஷு யஜ் ஜப்தவ்யம்‌ ததுச்யதாம்‌ ॥
    யே நாரம்பாச்‌’ச ஸித்த்யந்தி து:ஸ்வப்நச்‌’சோப சாந்தயே |
    அமங்களாநாம்‌ த்ருஷ்டாநாம்‌ பரிஹாரச்‌’ச ஜாயதே ||-
    1-2-

    தால்ப்யர் கூறுகிறார்‌: ‘ ப்ரஹ்மத்தை உணர்ந்தவருள் பெரியோரே, கார்யங்களை ஆரம்பிக்கும்‌ போதும்‌, துஸ்வப்நமேோ அமங்களமோ நேரும் போதும்‌ எதனை ஜபிக்க வேண்டும்‌? அறிவுறை எங்கட்கு வழங்கப்பட வேண்டும்‌. துவங்கிய கார்யங்கள்‌ இனிது திறைவேறுவது எதனால்‌ 2? கெட்ட கனவு பலனற்றுப்‌ போவதும்‌ எதனால்‌ ? யாம்‌ காணும்‌ அசுபங்களுக்குப்‌ பரிஹாரம்‌ உண்டாவதும்‌ எதனால்‌ ?

    ஸ்ரீ புலஸ்த்ய:–

    ஜநார்தநம்‌ பூத பதிம்‌ ஜகத் குரும்‌ ஸ்மரந்‌ மநுஷ்யஸ்‌ ஸததம்‌ மஹாமுநே | துஷ்டாந் யசே’ஷாண் யபஹந்தி ஸாதயதி அசேஷா கார்யாணி ச யாந்ய பீப்ஸதி-3-

    புலஸ்தியர்‌ மொழிவது :- மா முனிவரே, பிறவியை நீக்க வல்லவரும்‌, உலகில்‌ உள்ள பொருள்‌ எல்லாவற்றிற்கும்‌ சொந்தக்‌காரரும்‌, உலகிலேயே மிக உயர்ந்தவருமான எம்பெருமானைத் தியானித்துக்‌ கொண்டிருக்கும்‌ மனிதன்‌ தீயனவெல்லாம்‌ போக்கிக்‌ கொண்டு, தான்‌ விரும்பும்‌ எல்லாச் செயல்களையும்‌ நற் பயனளிக்கும்‌ படி ஸாதித்துக்‌ கொள்ளுகிறான்

    ச்‌’ருணுஷ்வ சாந்யத்‌ கததோ மமாகிலம்‌ வதாமி யத்தே த்விஜ வர்ய மங்களம்‌ |
    ஸர்வார்த்த ஸித்திம்‌ ப்ரததாதி யத்‌ ஸதா நிஹந்த்யசே’ஷாணி ச பாதகாநி ॥|-4-

    அந்தணர்‌ பெருமானே, எது உமக்குச்‌ சுபமோ, எது வேண்டிய பலன் யாவும்‌ கைகூடும்படி செய்ய வல்லதோ, எது தீவினை யாவற்றையும்‌ ஒழிக்க வல்லதோ அத்தகைய ஸ்துதியை உமக்குக்‌ கூறுகிறேன்‌. அதை முழுவதும்‌ கேட்பீராக

    ப்ரதிஷ்டிதம்‌ யத்ர ஜகத்‌ சராசரம்‌ ஜகத் த்ரயே யோ ஜகதச்‌’ ச ஹேது: |
    ஜகத்‌ ச பாத்யத்தி ச யஸ்ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ||
    -5-

    மூவுலகிலும்‌ யார்‌ ஜங்கம ஸ்தாவர ரூபமான உலதற்குக்‌ காரணமானவரோ, யாரிடத்தில்‌ இது நிலைத்துக்‌ கீழே விழாது தாங்கப்பட்டு நிற்கிறதோ, இவ் வுலகை யார்‌ ரஷிக்கிறாரோ,.(ப்ரளய காலத்தில்‌) யார்‌ இதனை உணவைப் போல்‌ தம்முள்‌ ஒடுங்கும்‌ படி செய்கிறாரோ, ஸர்வ பாபங்களையும்‌ போக்கும்‌ அந்தத்‌ திருமால்‌ “எனக்கு மங்களங்கள்‌ பொங்கிப்‌ பெருக அருள்வாராக –

    வ்யோமாம்பு வாய்வக்நி மஹீஸ்வ ரூபை: விஸ்தாரவாந்‌ யோ அணுதரோ அணுபாவாத்‌ |
    அஸ்தூல ஸூக்ஷ்மஸ்‌ ஸததம்‌ பரேஸ்வரோ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: –6-

    வான்‌, வாயு, தீ, நீர்‌, பூமி எனும்‌ இவ்வுருவுகளால்‌ தம்மைப்‌ பெருக்கிக்‌ கொண்டவரும்‌, சிறிய பொருட்களிலும்‌ சிறியவரும்‌, சிறிது, பெரிதென்றளவுள்ள பொருட்களைக்‌ காட்டிலும்‌ முற்றிலும்‌ வேறான்‌ தன்மை யுள்ளவருமான ஹரி எக் காலத்திலும்‌ எனக்கு மங்களங்கள்‌ பெருக அருள்வாராக-

    யஸ்மாத்‌ பரஸ்மாத்‌ புருஷா தநந்தாத்‌ அநாதிமத்யா ததிகம்‌ ந கிஞ்சித்‌ |
    ஸ ஹேது ஹேது: பரமேஸ்வரேஸ்வரோ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ||–7-

    காலத்தாலும்‌, இடத்தாலும்‌, குணங்களாலும்‌ அளப்பரியதானவரும்‌, பிறப்பும்‌ இறுதியுமற்றவரும்‌, தம்மிலும்‌ உயர்ந்த ஒருவரைக்‌ கிடையாதவரும்‌, படைப்போரையும்கூட. படைப்பவராகவும்‌, தேவர்க்கும்‌ தேவனாகவும்‌ உள்ள ஹரி எனக்கு மங்களங்கள்‌ பெருக அருள்வாராக.

    ஹிரண்ய கர்ப்பாச்யுத ருத்ர ரூபீ ்‌ ஸ்ருஜத்யசே”ஷம்‌ பரிபாதி ஹந்தி |
    குணாக்ரணீர்‌ யோ பகவாந்‌ ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி; ||-8-

    நான்முகனுக்கு அந்‌தராத்மாவாயிருந்து உலகத்தைப்‌ படைத்‌தும்‌, தானே நேரில்‌ அச்சுதனாய்த்‌ தோன்றி அதை ரஷித்தும்‌, ருத்ரனுக்கு ஆத்மாவாய்‌ நின்று இதனை அழித்தும்‌ வருகிறவரும்‌, குணசாலிகளுள்‌ முதல்வரும்‌, நன் ஞானம்‌, படைக்கப்படும்‌ பொருளாக ஆகும்‌ ஆற்றல்‌, அனைத்தையும்‌ தாங்கும்‌ வலிமை, இதில்‌ ஆயாஸமின்மை, பிறரைத்‌ தம்‌ இஷ்டப்படி இயங்கும்படிச்‌ செய்யா வல்ல மிடுக்கு, ஸூர்ய வெளிச்சத்தில்‌ விளக்குப் போல்‌ . பிற பொருளை யில்லை யாக்கவல்ல பேரொளி இவை யாவும்‌ உடையவரும்‌, தோஷம்‌ சிறிதுமில்லாதவருமான ஹரி எனக்குச்‌ சுபங்களே பெருக அருள் பாலிப்பாராக

    பரஸ்‌ ஸுராணாம்‌ பரமோ அஸுராணாம்‌ பரோ யதீநாம்‌ பரமோ முநீநாம்‌ |
    பரஸ்‌ ஸமஸ்தஸ்ய ச யஸ்‌ ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ||
    -9-

    தேவர்க்கும்‌, : அஸுரர்க்கும்‌, துறவிகட்கும்‌, முனிவர்க்கும்‌, எல்லாவற்றிற்குமே மிகமிக உயர்ந்தவரான ஹரி எனக்கு மங்களங்‌கள்‌ பெருக அருள வேண்டும் –

    த்யாதோ முநீநா மபகல்மஷைர்‌ யோ ததாதி முக்திம்‌ பரமேஸ்வரேஸ்வர : |
    மநோபிராம: புருஷஸ்‌ ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ॥-10-

    எல்லாக் காலத்திலும்‌ தன்னையே நினைத்திருப்பவர்களின்‌, குற்று மற்ற உள்ளங்களால்‌ சிந்தனை செய்யப்பட்டு, அவர்க்கு முக்தி யளிப்‌ யவராயும்‌, மனதைக்‌ கவரும்‌ அழகுடையவராயும்‌ எல்லா பலனையும்‌ தர வல்லவராயும்‌ இருக்கும்‌ ஹரி எனக்கு மங்களங்கள்‌ வ்ருத்தி யாக அநுக்ரஹம்‌ செய்வாராக–

    ஸுரேந்த்ர-வைவஸ்வத-வித்தபாம்‌ புப ஸ்வரூப ரூபீ பரிபாதி யோ ஜகத்‌ |
    ஸ ஸூத்த ஸூத்த: பரமேஸ்வரேஸ்வர: மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ॥–11-

    தேவேந்த்ரன்‌, இயமன்‌, வருணன்‌, குபேரன்‌ என்பவரைத்‌ தம்‌ உடலாகக்‌ கொண்டு யார்‌ உலகைப்‌ பரிபாலிக்கிறாரோ, தூய பொருட்கும்‌ தூய்மை யளிக்கும்‌ அந்த ஹரி எனக்கு மங்களங்கள்‌ பெருக அருள்வாராக.

    யந்நாம-ஸங்கீர்த்தநதோ விமுச்யதே ஹி அநேக-ஜந்மார்ஜித-பாப ஸஞ்சயாத்‌ |
    பாபேந்தநாக்நிஸ்‌ ஸ ஸதைவ நிர்மலோ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ॥ -12-

    பல பல பிறவிகளில்‌ ஈட்டிய பாப மூட்டைகள்‌ எவருடைய திருநாம ஸங்கீர்த்‌தநத்தால்‌ தொலைகிறதோ, விறகை அழிக்கும்‌ தீ போலே பாபத்தை அழிக்க வல்லவரும் மாசற்றவருமான அந்த ஹரி எனக்கு மங்களங்கள்‌ எப்பொழுதும் பொங்கிப் பெருக அருள் செய்ய வேண்டும் –

    ஸ்ரீ வராஹாவதாரம்
    யேநோத்த்ருதேயம்‌ தரணீ ரஸாதலாத்‌ அசேஷ ஸ்ருஷ்டி ஸ்திதி காரணாதிகம்‌ |
    பிபர்த்தி விஸ்வம்‌ ஜகதஸ்‌ ஸ மூலம்‌ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ||–13-

    பாசி தூர்த்துக் கிடந்த பார்மகளைப்‌ பாதாளத்திலிருந்து யார்‌ தூக்கி எடுத்தாரோ, யார்‌ மற்றெல்லாரையும்‌ படைத்தளித்து அழிக்கவும்‌ செய்கிறாரோ, ஜகந்‌ மூலமான அந்த ஹரி எனக்கு மங்களங்கள்‌ பெருக அருள்வாராக-

    பாதேஷு வேதா ஜடரே சராசரம்‌ ரோமஸ்‌-வசேஷா முநயோ முகே மகா: | யஸ்யேஸ்வரேஸஸ்ய ஸ ஸர்வதா ப்ரபு மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ||–14-

    எந்த தேவ தேவனுடைய பாதங்களில்‌ வேதங்களும்‌, திருவயிற்‌றில்‌ அண்ட சராசரம்‌ முழுவதும்‌, உரோமங்களில்‌ முனிவர்கள் அனைவரும்‌, முகத்தில்‌ யாகங்களும்‌ இருக்கின்றனவோ அந்த ஆற்றல்‌ மிக்கானான ஹரி எனக்கு மங்களங்கள்‌ பெருக அநுக்ரஹம்‌ செய்ய வேண்டும்‌-

    ஸமஸ்த யஜ்ஞாங்க மயம்‌ வபு: ப்ரபோ:யஸ்யாங்க-மீசேஸ்வர-ஸம்ஸ்துதஸ்ய |
    வராஹ ரூபீ பகவாந்‌ ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: –15-

    ஸமஸ்த தேவர்களாலும்‌ ஸ்துதிக்கப்பட்ட எந்த ப்ரபுவின்‌ திரு அவயவங்கள்‌ யாக உபகரணங்களனைத்துமாய்‌ ஆகின்றனவோ, அந்தக்‌ கோல வராஹ வடிவம்‌ கொண்ட பக்வானான ஹரி எனக்கு மங்களங்கள்‌ பல்கிப்‌ பெருக அருள வேண்டும்‌-

    விக்ஷோப்ய ஸர்வோததி-தோய-ஸம்பவம்‌ ததார தாத்ரீம்‌ ஜகதச்‌ ச யோ புவம்‌ |
    யஜ்ஞோஸ்வரோ யஜ்ஞ புமாந்‌ ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: || –16-

    மாகடல்‌ நீரனைத்தையும்‌ கலக்கி ப்ராணிகளின்‌ இருப்பிடமான . வார் மடந்தையைப்‌ பேர்த்தெடுத்தவரும்‌ யாகங்களால்‌ பூஜிக்கப்படுபவரும்‌ யஜ்ஞ வராஹ மூர்த்தியுமான ஹரி எனக்கு மங்களங்கள்‌ பெருக அருள வேண்டும்‌-

    விந்யஸ்ய பாதெள ப்ருதிவீம்‌ ச பிப்ரத: | யஸ்யோபமாநம்‌ ந பபூவ ஸோச்யுதோ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ||–17-

    ஸமஸ்த ஜகதாதாரனான பரமனது திருப் பள்ளியான ஆதி சேஷன் மேல்‌ திருப் பாதங்களை ஊன்றிப்‌ பூமி தேவியைப்‌ பேர்த்‌தெடுத்த எந்‌த பகவானுக்கு உவமையே இல்லையோ அந்த பகவான்‌ எனக்கு மங்கள வ்ருத்தியைச்‌ செய்வாராக-

    ஸகர்கரம்‌ யஸ்ய ச ப்ரும்ஹிதம்‌ முஹா:ஸநந்தநாத்யைர்‌ ஜந லோக-ஸம்ச்‌’ரிதை: |
    ஸ்ருதம்‌ ஜயே த்யுக்தி பரைஸ்‌ ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய-விவ்ருத்தயே ஹரி; | –18-

    உறுமலுடன்‌ கூடிய எவரது ஐய கோஷத்தை ஐந லோகத்தில் இருந்த ஸநந்தநாதியர்‌ பல்லாண்டு பாடிய வண்ணமே கேட்டு மகிழ்ந்தனரோ அந்த ஹரி எனக்கு மங்களங்களைப்‌ பெருக்கி அருள்‌ செய்ய வேண்டும் –

    ஏகார்ணவாத்‌ யஸ்ய மஹீயஸோ மஹீம்‌ ஆதாய வேகேந கமுத்பதிஷ்யத: |
    நதம்‌ வபுர்‌ யோகிவரைஸ்‌ ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி; | .-19-

    மிகப் பெரிய நீர்ப் பரப்பிலிருந்து நிலமகளைப்‌ பெயர்ந்து எடுத்துக் விரைவாக விரைவாக மேலே பாய்ந்து வந்த எந்தக்‌ கோல வராஹ மூர்த்தியை ஸநகாதி யோகியர்‌ கண்டு வணங்கினரோ அந்த ஹரி எனக்கு மங்களங்களைப் பெருக்குவராக –

    ஹதோ ஹிரண்யாஷ மஹாஸூர: புரா புராண பும்ஸா பரமேண யேந |
    வராஹ ரூபஸ்‌ ஸ பதி: ப்ரஜாபதி:மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி; ||–20-

    மிகச் சிறந்த புராண புருஷரான யாரால்‌ ஹிரண்யாக்ஷனென்ற அஸுரன்‌ அழிக்கப் பட்டானோ, அந்த ஞானப் பிரான்‌ எனக்கு மங்களங்கள் பெருக அருள்‌ செய்ய வேண்டும் –

    ஸ்ரீ நரஸிம்ஹாவதாரம்
    தம்ஷ்ட்ரா-கராளம்‌ ஸுர பீதி நாச”கம்‌ க்ருதம்‌ வபுர்‌ திவ்ய-ந்ருஸிம்ஹ-ரூபிணா |
    த்ராதும்‌ ஜகத்‌ யேந ஸ ஸர்வதா ப்ரபு: மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ॥–21-

    தேவர்களின்‌ பயத்தை அகற்ற வல்லரும்‌ கோரைப் பற்களால்‌ அச்சுறுத்துவதுமான நரங் கலந்த சிங்க உருவை உலகைக்‌ காக்க வென்றே யார்‌ தரித்தாரோ அந்த ஹரி எனக்கு மங்களங்கள்‌ பெருக அருள்‌ செய்ய வேண்டும்‌-

    தைத்யேந்த்ர-வக்ஷஸ் ஸ்தல-தார-தாருணை: கரேருஹைர்‌ ய: க்ரகசாநுகாரிபி: |
    சிச்சேத லோகஸ்ய பயாநி ஸோ அச்யுதோ மமாஸ்து மாங்கள்ய-விவ்ருத்தயே ஹரி: ||–22-

    அவுணன்‌ மார்பைக்‌ கிழிக்க வல்லதும்‌ ரம்பம்‌ போன்றதுமான நகங்களால்‌ உலகின்‌ பயத்தைப்‌ போக்கிய ஹரி எனக்கு மங்களங்‌கள் பெருக அருள வேண்டும் –

    தந்தாந்த-தீப்தத்யுதி-நிர்மலாநி ய; சகார ஸர்வாணி திசாம்‌ முகாநி |
    நிநாத-வித்ராஸித-தாநவோ ஹ்யஸெள மமாஸ்து மாங்கள்ய-விவ்ருத்தயே ஹரி: |–23-

    பற்களின்‌ காந்தியால்‌ திசை முடிவிலும்‌ ஒளி பரப்புகிறவரும்‌ ஸிம்ஹ நாதத்தால்‌ அஸுரர்களை நடுக்கமுறச்‌ செய்பவருமான ஹரி எனக்கு மங்களங்கள்‌ பெருக அருள வேண்டும் –

    யந்நாம-ஸங்கீர்த்தநதோ மஹா பயாத்‌ விமோக்ஷ-மாப்நோதி ந ஸம்சயம்‌ நர; |
    ஸ ஸர்வ-லோகார்த்தி-ஹரோ ந்ரு கேஸரீ மமாஸ்து மாங்கள்ய-விவ்ருத்தயே ஹரி: ॥–24-

    தன்‌ நாமத்தைச்‌ சொல்பவனது பெரும்‌ பயத்தைப்‌ போக்கி அருள்பவரும்‌ உலகனைத்தின்‌ துயரைத்‌ துடைப்பவருமான சிங்கப்‌ பிரான்‌ எனக்கு மங்களங்களைப்‌ பெருக்குவாராக-

    ஸடா-கராள-ப்ரமணா நிலாஹதா: ஸ்புடந்தி யஸ்யாம்புதராஸ்‌ ஸமந்தத: |
    ஸ திவ்ய ஸிம்ஹ: ஸ்புரிதா-நலேக்ஷணோ மமாஸ்து மாங்கள்ய-விவ்ருத்தயே ஹரி:–25-

    அசையும்‌ பிடரி மயிர்களால்‌ மேகக்‌ கூட்டங்களை நாற் புறமும்‌ சிதறி விழும்படி செய்பவரும்‌ ஜ்வலிக்கும்‌ கனல்‌ போன்ற கண்களை வுடையவருமான சிங்கப்பிரான்‌ எனக்கு மங்களம்‌ பெருக அருள்வாராக.

    யதீஷண-ஜ்யோதிஷி ரஸ்மி-மண்டலம்‌ ப்ரலீந-மீஷந்‌ ந ரராஜ பாஸ்வத: |
    குத: ச சாங்கஸ்ய ஸ திவ்ய ரூப-த்ருக்‌ மமாஸ்து: மாங்கள்ய-விவ்ருத்தயே ஹரி: |–26-

    பகலவனது கதிர்க் கூட்டங்கள்‌ எவரது கண்ணொளியில்‌ மங்கிப்‌ போகிறதோ, சந்திரனைப் பற்றிப்‌ பேசவே வேண்டிய தில்லையோ, அந்த அழகிய சிங்க உருவம்‌ தரித்த ஹரி எனக்கு மங்களங்களைப்‌ பெருக்குவாராக-

    அசே’ஷ-தேவேச’-நரேஸ்வரேஸ்வரை: ஸதா ஸ்துதம்‌ யஸ் சரிதம்‌ மஹாத்புதம்‌ |
    ஸ ஸர்வ-லோகார்த்தி-ஹரோ மஹா ஹரி: மமாஸ்து மாங்கள்ய- -விவ்ருத்தயே ஹரி: ॥–27-

    எந்த சிங்கப் பிரானது மிக அத்புத சரிதையை ப்ரபுக்களும்‌ மேலாத்‌ தேவரும்‌ நிலத் தேவரும்‌ புகழ்ந்த வண்ண மிருக்கிறார்களோ உலகனைத்தின்‌ துயரையும்‌ பாபங்களையும்‌ போக்க வல்ல அந்த ஹரி: எனக்கு மங்களங்கள்‌ பெருக அருள்வாராக –

    த்ரவந்தி தைத்யா: ப்ரணமந்தி தேவதா: நச்‌யந்தி ரஷாம்ஸி அபயாந்தி சாரய; | யத் கீர்த்தநாத்‌ ஸோ அத்புத-ரூப கேஸரீ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ||–28-

    எவருடைய திரு நாமத்தைச்‌ சொன்ன மாத்திரத்தாலேயே அஸூரர்கள்‌ ஒடுகின்றனரோ, தேவர்கள்‌ வணங்குகின்றனரோ, அரக்கர்கள்‌ அழிந்து போவார்களோ, எதிரிகள்‌ திரும்பி ஓடுவார் களோ, அந்த அழகிய சிங்கர்‌ எனக்கு மங்களங்களைப்‌ பெருக்குவாராக-

    வாமனாவதாரம்‌
    ருக்பாவிதம்‌ யோ யஜுஷா ஹி ஸ்ரீமத்‌ ஸாம த்வநி-த்வஸ்த-ஸமஸ்த-பாதகம்‌ |
    சக்ரே ஜகத்‌ வாமநகஸ்‌ ஸ் ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய-விவ்ருத்தயே ஹரி –29-

    ருக் வேதத்தை உச்சரித்து உலகைத்‌ தூயதாக்கியும்‌, யஜுர்‌ வேதத்தால்‌ நிறம் பெறச் செய்தும்‌ ஸாம கானத்தால்‌ ஸமஸ்த பாதகத்தையும்‌ அழித்து முள்ள திருக் குறள்‌ உருவனான மாயன்‌ எனக்கு மங்களங்களைப்‌ பெருக்குவாராக-

    யத்பாத-விந்யாஸ-பவித்ரதாம்‌ மஹீ யயெள வியச்சர்க்‌-பஜுஷா-முதீரணாத்‌ |
    ஸ வாமநோ வாம சரீர-ரூப த்ருக்‌ மமாஸ்து மாங்கள்ய-விவ்ருத்தயே ஹரி: ॥–30-

    எவருடைய திருவடி படுதலால்‌ நிலப் பரப்பும்‌, ருக்‌ யஜுஸ்‌ மூதலிய வேதங்களைச்‌ சொல்வதால்‌ வானமும்‌ புனிதமாயினவோ அந்த வாமன மூர்த்தி எனக்கு மங்களங்களைப்‌ பெருக்குவாராக –

    யஸ்மிந்‌ ப்ரயாதே அஸூர-பூப்ருதோ அத்வராத்‌ நநாம கேதாத்‌ அவநிஸ்‌ ஸஸாகரா |
    ஸ வாமநஸ்‌ ஸர்வ-ஜகந் மயஸ்‌ ஸதா மமாஸ்து மாங்கள்ய-விவ்ருத்தயே ஹரி: ॥–31-

    அஸுர மன்னன்‌ மஹா பலியின்‌ அரண்மனையை நோக்கி எவர்‌ போன போது கடல்‌ சூழ்ந்த நில மங்கை வருந்தித் தலை குனிந்தாளோ உலகனைத்தையும்‌ தன்னுள்‌ ஒடுக்கிய அந்தத்‌ திருக் குறளப்பன்‌ எனக்கு மங்களங்கள்‌ பெருக அருள்வாராக–

    மஹாத்புதே தைத்ய பதேர்‌ மஹா த்வரே யஸ்மிந்‌ ப்ரவிஷ்டே ஷுபிதம்‌ மஹா ஸூரை: |
    ஸ வாமநோ அந்தஸ்‌ ஸ்தித ஸப்த லோக த்ருக்‌ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ॥–32-

    மிக ஆச்சர்யமான அஸூர மன்னனது யாக சாலையில்‌ எவர் ப்ரவேசித்ததும்‌ அஸுரரனைவரும்‌ குழப்ப மடைந்து போயினரோ, ஸப்த லோகத்தையும்‌ தன்‌ வயிற்றில்‌ வைத்துக் கொண்ட அந்த ஹரி எனக்கு மங்களங்கள்‌ பெருக அருள்வாராக–

    ஸங்கைஸ்‌ ஸுராணாம்‌ திவி பூதலஸ்திதை: ததா மநுஷ்யைர்‌ ககநே ச கேசரை: |
    ஸ்துத: க்ரமாத்‌ ய: ப்ரசசார ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ॥–33-

    ஸ்வர்க்கத்தில்‌ தேவர்களாலும்‌, தரையில்‌ மனிதர்களாலும்‌, வானில்‌ வானவர்களாலும்‌ முறையுடன்‌ ஸ்துதிக்கப்பட்டவாறு உலகளந்த ஹரி எனக்கு மங்கள வ்ருத்தியை செய்தருள வேண்டும் –

    க்ராந்த்வா தரித்ரீம்‌ ககநம்‌ ததா திவம்‌ மருத் பதேர்‌ ய: ப்ரததெள த்ரிவிஷ்டபம்‌ |
    ஸ தேவ தேவோ புவநேஸ்வரேஸ்வரோ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி; –34-

    நிலத்தையும்‌ வானத்தையும்‌ ஸ்வர்க்க உலகையும்‌ அளந்து கொண்டு இந்த்ரனுக்கு மூவுலகையும்‌ அளித்த ஜகந் நாதனான ஹரி எனக்கு மங்களங்களைப்‌ பெருக்கி யருள வேணும் –

    அநுக்ரஹம்‌ சாபி பலே-ரநுத்தமம்‌ சகார யச்சேந்த்ர-பதோபமம்‌ க்ஷணாத்‌ | ்‌
    ஸுராம்ச்‌’ச யஜ்ஞாம்ச”புஜஸ்‌ ஸ ஸர்வதா |மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ||–35-

    மஹாபலிக்கு இந்திர பதவியை யொத்த உயர்‌ பதவியையும்‌. வாசகத்தின்‌ ஹவிர்ப் பாகத்தைத்‌ தேவர்களுக்கும்‌ விரைவில்‌ அளித்த ஹரி எனக்கு மங்களங்களே பெருக அருள் பாலிப்பாராக —

    ஸ்ரீ மத்ஸ்யாவதாரம்‌
    ரஸாதலாத்‌ யேந புரா ஸமாஹ்ருதா: ஸமஸ்த வேதா ஜல சார ரூபிணா |
    ஸ கைடபாரிர்‌ மதுஹாம்புசாயீ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ||–36-

    மீனாக, மது கைடபர்களை அழித்து, பாதாளத்‌திலிருந்து வேதங்‌களை மீட்டுக்‌ கொணர்ந்த ஷீராப்தி நாதனான ஹரி என்‌ மங்கள்‌களைப்‌ பெருக்குவாராக–

    ஸ்ரீ பரசுராமாவதாரம்‌
    நி:ஷத்ரியாம்‌ யச்‌’ச சகார மேதிநீம்‌ அநேகசோ பாஹு வநம்‌ ததாச்சிநத்‌ |
    ய:கார்த்த வீர்யஸ்ய ஸ பார்க வோத்தமோ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி; || –37-

    கார்த்த வீர்யார்ஜுனனது ஆயிரம்‌ தோள்களைத்‌ துணித்து, பலகால்‌ அரசர்களை யழித்த பரசுராமராகிய ஹரி எனக்கு மங்களங்‌களைப்‌ பெருக்க வேணும்‌–

    ஸ்ரீ ராமாவதாரம்‌-
    நிஹத்ய யோ வாலிந-முக்ர-விக்ரமம்‌ நிபத்ய ஸேதும்‌ ஜலதெள தசா நநம்‌ |
    ஜகாந சாந்யாந்‌ ரஜநீ சரா நஸெள மமாஸ்து மாங்கள்ய விவருத்தயே ஹரி: ॥ –38-

    கொடிய வலிமை யுள்ள வாலியைக்‌ கொன்று, மா கடலில்‌ அணையைக்‌ கட்டி தசமுகனையும்‌ மற்றுமுள்ள அசுரர்களையும் அழித்த ஹரி எனக்கு மங்களங்களைப்‌ பெருக்குவாராக–

    ஸ்ரீ கிருஷ்ணாவதாரம்‌-
    சிக்ஷேப பால: சகடம்‌ பபஞ்ஜ யோ யமார்ஜுநம்‌ கம்ஸமரிம்‌ ஜகாந ௪ |
    மமர்த சாணூர முகாந்‌ ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ||–39-

    பால கிருஷ்ணனாய்ச்‌ சகடெறிந்தும்‌, மருத மரங்களை முறித்தும்‌ சாணூராதியரையும்‌, பகைமை கொண்ட கம்சனையும்‌ அழித்‌தும்‌ உகந்த ஹரி எனக்கு மங்களங்கள்‌ பெருக அருள் பாலீப்பாராக–

    ப்ராதஸ்‌ ஸஹஸ்ராம்சு” மரீசி-நிர்மலம்‌ கரேண பிப்ரத்‌-பகவாந்‌ ஸுதர்ச’நம்‌ |
    கெளமோதகீம்‌ சாபி கதா-மநந்தோ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: |-40-

    காலையில்‌ ஆயிரம்‌ கதிரவனது கதிர்க் கூட்டத்தைப்‌ போன்ற பேரொளி யுள்ள சக்கரத்தையும்‌ கெளமோதகி எனும்‌ கதையையும்‌ ஏந்திய பகவானான ஹரி எனக்கு மங்களங்கள்‌ பெருக அருள் பாலிப்‌ பாராக.-

    ஹிமேந்து-குந்த-ஸ்படிகாப-நிர்மலம்‌ முகா நிலா பூரிதம்‌ ஈஸ்வரேஸ்வர | மத்யாஹ்ந காலே அபி ஸ ச’ங்கமுத்வஹந்‌ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி: ॥–41-

    பனி நீர்‌, சந்த்ர மண்ட்லம்‌, குந்தப்பூ, ஸ்படிகமணி இவை போன்று வெண்ணிறமாயும்‌, திரு முகத்தால்‌ காற்று நிரப்பப் படுவதாயும்‌ உள்ள ஸ்ரீ பாஞ்ச ஜந்யத்தை நடுப் பகலில்‌ ஏத்தி யருளும்‌ ஹரி எனக்கு மங்களங்கள்‌ பெருக அருள்‌ செய்வாராக –

    ததா அபராஹ்ணே ப்ரவிகாஸி பங்கஜம்‌ வக்ஷஸ் ஸ்தலேந ஸ்ரிய முத்வஹந்‌ ஹரி: |
    விஸ்தாரி-பத்மாயத-பத்ர லோசநோ மமாஸ்து மாங்கள்ய-விவ்ருத்தயே –42-

    மலர்த்த தாமரையைக்‌ கையிலும்‌ திருமகளைத்‌ திரு மார்பிலும்‌ மாலையில்‌ ஏந்தி யருளும்‌ மலர்ந்த தாமரை யிதழை யொத்த கண்ணீனரான ஹரி எனக்கு மங்களங்கள்‌ பெருக அருள்‌ செய்வாராக –

    ஸர்வேஷு காலேஷு ஸமஸ்த தேசேஷு அசேஷ கார்யேஷு ததேஸ்வரேஸ்வர: |
    ஸர்வைஸ்‌ ஸ்வரூபைர்‌ பகவாநநாதிமாந்‌ மமாஸ்து மாங்கள்ய-விவ்ருத்தயே ஹரி: ॥ –43-

    எல்லாக்‌ காலத்திலும்‌, எல்லா இடங்களிலும்‌, எல்லாத்‌ தொழில்களிலும்‌, எல்லா வித உருவங்களுடன்‌ தோன்றி யருளும்‌ ஆதி யந்த மற்ற பகவானான ஹரி எனக்கு மங்களங்கள்‌ பெருக அநுக்ரஹம்‌ செய்வாராக –

    பல ஸ்ருதி
    ஏதத்‌ படந்‌ தால்ப்ய ஸமஸ்த பாபை; விமுச்யதே விஷ்ணு பரோ மநுஷ்ய: |
    ஸித்த்யந்தி கார்யாணி ததாஸ்ய ஸர்வாந்‌ அர்த்தா-நவாப்நோதி யதேச்சதே தாந்‌ ॥–44-

    தால்ப்ய முனிவரே, விஷ்ணுவே பர தேவதை யெனும்‌ உண்மை உணர்ந்த மனிதன்‌ இத்துதி நூலைப்‌ பாராயணம்‌ செய்து எல்லாப்‌ பாபங்களிலிருந்தும்‌ விடுபடுகிறான்‌. அவனுடைய கார்யங்கள்‌ யாவும்‌ நற் பயனை அளிக்கின்றன. விரும்பிய எல்லாப்‌ பொருளும்‌ அவனுக்‌குக்‌ கை கூடுகின்றன-

    துஸ் ஸ்வப்ந: ப்ரச’ம-முபைதி பட்ய மாநே ஸ்தோத்ரேஸ்மிந்‌ ஸ்ரவண விதெள ஸதோத்ய தஸ்ய!
    ப்ராரம்போ த்ருத முபயாதி ஸித்திமீச பாபாநி க்ஷபயதி சாஸ்ய தேவ தேவ: ||–45-

    இத்துதியை எப்பொழுதும்‌ படிப்பதைக்‌ கேட்பதென்னும் விரதம்‌ பூண்டவனது கெட்ட கனவுகள்‌ அடங்கிப்‌ பயனற்றுப்‌ போகும்‌, துவங்கிய தொழில்கள்‌ விரைவில்‌ நற்பயனளிக்கும்படி, நிறைவேறும்‌, தேவ தேவனாய இறைவன்‌ பாவங்களை யெல்லாம்‌ போக்கி விடுதிறான் –

    மாங்கள்யம்‌ பரமபதம்‌ ஸதார்த்த-ஸித்திம்‌ நிர்விக்நா-மதிகபலாம்‌ ஸ்ரியம்‌ ததாதி |
    கிம்‌ லோகே ததிஹ பரத்ர சாபி பும்ஸாம்‌ யத்‌ விஷ்ணு-ப்ரவணதியாம்‌ ந தால்ப்ய ஸாத்யம்‌ ॥–46-

    மங்களத்தையும்‌, நலமந்தமில்லதோர்‌ நாட்டையும்‌, விரும்பியது நன்கு விரைவில்‌ கை கூடுவதையும்‌, தடை யற்ற பெருஞ் செல்வத்தையும்‌ இறைவன்‌ அருள்வான்‌. தால்ப்ய முனிவரே, இம்மையிலும்‌ மறுமையிலும்‌ திருமாலடி யார்க்குக்‌ கிட்டாதது யாதுமில்லை —

    தேவேந்த்ரஸ்‌ த்ரிபுவந-மர்த்த-மேகபிங்க: ஸம் ஸித்திம்‌ த்ரி புவநகாம்‌ ச கார்த்த வீர்ய: |
    வைதேஹ: பரமபதம்‌ ப்ரஸாத்ய விஷ்ணும்‌ ஸம் ப்ராப்தஸ்‌ ஸகல-பல ப்ரதோ ஹி விஷ்ணு: ||–47-

    கார்த்த வீர்யார்ஜுனன்‌ மூவுலகிலும்‌ அதர்மத்தைத் தடுக்க வல்ல தர்ம சக்தியையும்‌, குபேரன்‌ பணத்தின்‌ அதிபனாகும்‌ பதவியையும்‌, இந்த்ரன்‌ மூவுலகில்‌ உள்ள இன்பத்தையும்‌, விதேஹ மன்‌னன்‌ பரம பதத்தையும்‌ திருமாலைப்‌ பூசித்தே பெற்றனர்‌. எல்லாப் பயன்களையும் அளிக்க வல்லவர்‌ திருமால் தானே –

    ஸர் வாரம் பேஷு தால்ப்யைதத்‌ துஸ் ஸ்வப்நேஷு ச பண்டித:
    ஜபே-தேகமநா விஷ்ணெள ததா மங்கள்ய-தர்சநே ॥-48-

    தால்ப்யரே, அறிவுள்ளவன்‌ எல்லாக்‌ கார்யங்களை ஆரம்பிக்‌கும் போதும்‌, கெட்ட கனவுகள்‌ தோன்றும் போதும்‌, அமங்களங்கள்‌ நேரும் போதும்‌, இறைவனான திருமாலிடம்‌ மாறாத பக்தியுடன்‌ இத்‌ ஸ்துதியை ஜபம்‌ செய்ய வேண்டும் –

    சமம்‌ ப்ரயாந்தி துஷ்டாநி க்ரஹபீடாச்‌’ச தாருணா: |
    கர்மாரம்பாச்‌’ ச ஸித்த்யந்தி புண்யமாப்நோதி சோத்தமம்‌ –49-

    அவனது தீமைகள்‌ யாவும்‌ அழிந்து போகின்றன. கொடிய கிரஹங்களின்‌ தீய பலன்களும்‌ மாறுகின்றன. தொழில்களும்‌ நற்‌ பயனளிக்கின்றன. தீய கனவும்‌ பயனற்றதாகிறது. நல் வினையின்‌ உயர்ந்த பயனையும்‌ பெறுகிறான் —

    ஹரிர்‌ ததாதி பத்ராணி மங்கள்ய ஸ்துதி ஸம்ஸ்துத;
    கரோ-த்யகில-ரூபைஸ்து ரக்ஷா-மக்ஷத-ச’க்தி ப்ருத்‌ ॥–50-

    மாங்கள்ய ஸ்தவத்தால்‌ ஸ்துதிக்கப் பெற்ற திருமால்‌ எல்லா மங்களங்சளையும்‌ நல்குகிறான்‌. எல்லா வித வடிவத்திலும்‌ தோன்றி குறைவற்ற ஆற்றல்‌ படைத்த அந்தப்‌ பரமன்‌, அடியார்க்கு நற் பாது காப்பையும்‌ அளிக்கிறான் –

    ஸ்ரீ விஷ்ணு தர்மோத்தரத்திலுள்ள மாங்கள்ய ஸ்தவம்‌ முற்றும்‌.

    ——————————————-

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

    ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌–16 –முக்தி பாதம்—(229 – 234 ) 27 –திவ்ய ப்ரபந்த, தாத்பர்ய ப,க,வத்‌-ப்ரஸாதாதி கரணம்‌ –(234)ஸ்ரீ மணவாள மா முனிகள் –

    August 10, 2026

    1) பூர்வ த்‌,விகம்‌ – ஸூரி வைபவம்‌ 1 முதல்‌ 186 வது ஸூத்ரம்‌ வரை (186)
    (2) உத்தர த்‌,விகம்‌ – ஸூரி ஸுக்த்தி வைபவம்‌– 187 முதல்‌ 234 முடிய (48)

    1) ப்ரத, மோத்‌, யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம்‌ 1-38 (38)
    (2) த்‌,விதீயோத்‌, யாய: – க்‌,ரந்த, கர்த்ரு வைப,வம்‌ 39 – 186 (148)
    (3) த்ருத்யோத்‌, யாயம் – க்‌,ரந்தாந்தர தார தம்ய வைப,வம்‌ 187-207 (21)
    (4) சதுர்த்தே ரத்‌, யாயம் -கிரந்த, ப்ரதிபாத்‌,ய க்ரம வைப,வம்‌ 208-234 (27)

    16 –முக்திபாதம்—229 – 234 – மொத்தம் –6 – ஸூரணைகள்–இதில் மூன்று அதிகரணங்கள்
    25–ஆர்த்த ப்ரபந்ந ஸூரி ஸரீர வியோகா பாவ காரணாதி கரணம்‌ –229—ஒரே ஸூரணை
    26– பர ப,க்த்யாதி, நிரூபண ஸ்தாநாதிகரணம்‌ 230 – –233—மொத்தம் –4–ஸூரணைகள்
    27 –திவ்ய ப்ரபந்த, தாத்பர்ய ப,க,வத்‌-ப்ரஸாதாதி கரணம்‌ –234 –ஒரே ஸூரணை-

    நூறே சொன்ன பத்து நூறு ஓர் ஆயிரம் என்றதும் சாபிப்ராயம் -என்றதில் – நூறே சொன்ன பத்து நூறு என்றதில் –கருத்தை பத்து நிகமநத்திலே விஸ்த்ரேண பிரதிபாதித்து – ப்ராசங்கிகமாக அருளிச் செய்ய வேண்டுமவையும் அருளிச் செய்தாராய் நின்றார் கீழ் –-இனி ஓர் ஆயிரம் ஒன்றதின் கருத்தை விசதமாக்கா நின்று கொண்டு –பிரபந்தத்தை நிகமித்து அருளுகிறார் —

    அவித்‌யா நிவர்த்தக ஜஞாந பூர்த்தி ப்ரத பகவத் ப்ரஸாதாத்‌ மோக்ஷ லாபம்‌ என்கை மயர்வற வீடுபெற்றவென்ற ப்ரபந்த ஏக அர்த்‌யம்‌.–சூரணை -234-

    அதாவது-சம்சார காரணமான அஞ்ஞானத்துக்கு நிவர்த்தகமான ஞான பூர்த்தியை உபகரித்த
    ஞானாதி குண பூர்ணனான பகவானுடைய நிர்ஹேதுகமான பிரசாதத்தாலே –-சம்சார நிவ்ருத்தி பூர்வக-பகவத் பிராப்தி ரூப மோஷத்தினுடைய – லாபம் என்று பிரதிபாதிக்கை –
    மயர்வற மதி நலம் அருளினன் -என்று தொடங்கி –அவா அற்று வீடு பெற்ற –என்று தலைக் கட்டின
    இப் பிரபந்தத்துக்கு ஒன்றான தாத்பர்யம் என்கை –இத்தால் ஞான பிரதான -பகவத் பிரசாதமே மோஷ பிரதமும் -என்னுமிது இப் பிரபந்தத்துக்கு தாத்பர்யமாய் இருப்பதோர் அர்த்தம் என்றது ஆய்த்து 

    ” மயர்வற மதிநலமருளினன்‌” திருவாய்மொழி 1-1-1 என்றும்‌ “அவா வற்று வீடு பெற்ற திருவாய்மொழி 10-10-11-என்றும் சொல்லுகையாலே ஸம்ஸார காரணமான அஜ்ஞாநத்தை நிவர்த்திப்பித்து ஜ்ஞாந பூர்த்தியை நிர்ஹேதுகமாக உபகரித்த ஜ்ஞாநாதி குண பூர்ணனான பகவானுடைய ப்ரஸாதம்‌ பரமபக்தி தஸையான பாகத்தையும்‌ விளைத்து ஸ்வரூபாநுரூபமான மோக்ஷத்தையும்‌ தரும்‌ என்கை- ஒன்றான ப்ரபந்த த்துக்குத்‌ தாத்பர்யமென்கிறார்‌. (மயர்வற வீடுபெற்ற என்ற பிரபந்த ஏக அர்த்‌யம்‌) அநிஷ்டமான அஜ்ஞாந நிவ்ருத்தி பூர்வகமாக இஷ்டமான மோக்ஷத்தை ப்ராபிக்கை என்று ஓரர்த்தம்‌

    உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
    மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
    அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
    துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே 
    –1-1-1-மயர்வற-மயர்வு -அஜ்ஞானம் -இத்தால் ஜ்ஞான உதய -அந்யதா ஜ்ஞான -விபரீத ஜ்ஞான ரூபமான அஜ்ஞானத்தைச் சொல்லுகிறது-அற -சவாசனமாகப் போகும்படி-மதி நலம்-மதி என்று ஜ்ஞானம்-நலம் -என்று பக்தி -பக்தி ரூபாபன்ன ஜ்ஞானம் என்றபடி
    அருளினன்-இத் தலையில் நன்மை தீமை பாராதே நிர்ஹேதுக கிருபையால் தந்து அருளினான்
    முலைக் கடுப்பாலே தரையிலே பீச்சுமா போலே –-எனக்குத் தந்து அருளினான் -என்னாது ஒழிந்தது -பகவத் விஷயீ காரத்துக்கு முன்பு தம்மை அசத் கல்பராக நினைத்து இருக்கையாலே-எவன்–-இப்படி உபகாரகனான ஸ்ருதி பிரசித்தி ஆனவன்

    அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
    அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
    அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
    அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11-அவனைப் பெற்று நிரஸ்தித ஸமஸ்த பிரதிபன்னராகையாலே நிர் துக்கரான ஆழ்வார்-அருளிச் செய்த-இவற்றை அறிந்தவர்கள் சம்சாரத்திலே பிறந்து வைத்தே நித்ய ஸூ ரிகளோடே ஒப்பர்கள் –பகவத் ந்யஸ்த பரராய் இருக்கும் அதிகாரிகளுக்கு போது போக்கு இப்பிரபந்தம் –தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலைகள் சொன்னேன் -என்றும் –கேட்டாரார் வானவர்கள் -என்றும் தானே அருளிச் செய்தார் இறே

    ஆக
    இப்பிரபந்தத்தால் –
    1-சர்வேஸ்வரன் தன் கிருபையாலே -அஞ்ஞான சேதனர்-தத்வஞ்ஞராய் -சார அசரா விவேகம் பண்ணுகைக்கு சாஸ்திர பிரதானம் பண்ணின படியையும்-
    2-அந்த சாஸ்திர முகேன தத்வ ஞானம் பிறக்கும் அளவில் உண்டான அருமையை நினைத்து –
    தாத்பர்யமான திரு மந்த்ரத்தை-தன் பரம கிருபையால் வெளி இட்ட படியையும் –
    3-அந்த சாஸ்திர தாத்பர்யங்களின் விஷய பேதாதிகளையும்-
    4-தத் உபய நிஷ்டரான அதிகாரிகளுடைய பிரகாரங்களும் –
    5-அந்த வியாஜத்தாலே பிரஸ்துதமான திருவாய் மொழியினுடைய வைபவத்தையும் –
    6-அதுக்கு வக்தாக்களான ஆழ்வார்களுடைய பிரபாவத்தையும் –
    7-அந்த பிரபாவத்துக்கு மூலமான பகவத் நிர்ஹேதுக கடாஷத்தையும் –
    8-அதடியாக இவர்க்கு உண்டான ஞான பக்திகளும் –
    9-அந்த ஞான பக்தி தசைகளில் இவர் பேசும் பேச்சுகளையும் –
    10-அந்த பக்தி தசையில் பகவத் பிரேம யுக்தர் எல்லோரோடும் இவர்க்கு உண்டான சாம்யத்தையும் –
    11-அந்த பக்தி தசையில் பேசும் அந்ய உபதேசங்களுக்கு ஸ்வாப தேசங்களையும் –
    12-அந்த பக்தி விஷயமான திவ்ய தேசங்களில் நிற்கிற ஈஸ்வரனுடைய குண விசேஷங்களையும் –
    13-அந்த குண விசிஷ்ட வஸ்துவில் உண்டான -அனுபவ ஜனித ப்ரீதி ப்ரேரிதமாய் கொண்டு இப்பிரபந்தங்கள் அவதரித்த படியும் –
    14-பிரதிபாத்யார்த்த சாம்யத்தாலே ஸ்ரீ கீதையோடு திருவாய்மொழிக்கு உண்டான சாம்யத்தையும் –
    15-தத் வ்யாவிருத்தியையும்
    16-இதில் இவர் உபதேசிக்கிற விஷய பேதத்தையும்
    17-அவ்வோ விஷயங்கள் தோறும் உபதேசிக்கிற அர்த்த விசேஷங்களையும் –
    18-அந்த வியாஜத்தாலே உபதேச விஷயமான சிஷ்ய லஷணதையும் –
    19-அந்த லஷணம் இல்லாதவருக்கும் இவர் உபதேசிகைக்கு ஹேதுக்களையும் –
    20-க்யாதி லாபாதி நிரபேஷராய் பகவத் கைங்கர்ய புத்த்ய உபதேசிக்கையாலே -உபதேசம் சபலமான படியையும் –
    21-உபதேசிக்கிற இப் பிரபந்தங்கள் தாம் ரகஸ்ய த்ரய அர்த்தம் என்னுமத்தையும் –
    22-அந்த ரகஸ்ய த்ரயத்திலும் பிரதிபாதிக்க படுகிற அர்த்த பஞ்சகமும் இப் பிரபந்தங்களிலே சங்கரக விபரண ரூபேண சொல்லப் படுகிற பிரகாரத்தையும் –
    23-பிரபந்த ஆரம்பங்களில் அபேஷிதமான மங்களா சரணங்கள் இப்பிரபந்தத்தில் உண்டான படியையும் –
    24-சாது பரித்ராணாதிகளிலே – ஜகத் ரஷண அர்த்தமான சர்வேஸ்வர அவதாரம் போலே இப் பிரபந்த அவதாரம் என்னுமத்தையும் –
    25-இதில் பத்து பத்தாலும் பிரதிபாதிக்கப் பட்ட ஈஸ்வரனுடைய பரத்வாதி குணங்களையும் –
    26-அக் குண விசிஷ்டனானவன் -இப் பத்து பத்தாலும் இவ் ஆழ்வாருக்கு தத்வ ஞானம் முதலாக ப்ராப்தி பர்யந்தமாக பிறப்பித்த தசா விசேஷங்களையும் –
    27-பத்து தோறும் இவர் தாம் பிறருக்கு உபதேசித்த பிரகாரங்களையும் –
    28-இவருக்கு பிரதமத்திலே ஆர்த்தி பிறந்திருக்கச் செய்தே -ஈஸ்வரன் இவரை வைக்கைக்கு பிரதான அப்ரதான ஹேதுக்களையும் –
    29-இவருக்கு பிறப்பித்த பரபக்தி பரஞான பரம பக்தி களாகிற தசா விசேஷ ஸ்தலங்களையும்
    30-அஞ்ஞான நிவர்த்தக ஞான பூர்த்தி ப்ரத பகவத் பிரசாதமே அநிஷ்டமான சம்சாரத்தை அறுத்து அபீஷ்டமான மோஷ லாபத்தை உண்டாக்கும் என்கை- இப்பிரபந்ததுக்கு ஒன்றான தாத்பர்யம் என்னும் அத்தையும்
    31-ஆஸ்திகராய் ஆழ்வார் அபிமானத்தில் ஒதுங்கி – அவருடைய திவ்ய ஸூக்திகளில் பிரவணராய்-அநந்ய பரராய் இருப்பார் -எல்லோரும் அனுசந்தித்து வாழும்படி அதி ஸ்புடமாக அருளிச் செய்து தலைக் கட்டினார் —

    ஆக, 1-ஸர்வேஸ்வரன்‌ அஜ்ஞரான சேதநர்க்‌குத் தன் கிருபையாலே புருஷாரத்த ஜஞாநம்‌ உண்டாகைக்கு ஸாஸ்த்ர பிரதானம் பண்ணினமையும்
    2-அந்த ஸாஸ்த்ரம்‌ கொண்டு புருஷார்த்த ஞானம் பிறக்கை அரிதென்று தாத்பர்யமான திருமந்த்ரத்தை வெளியிட்டமையும்
    3-அந்த ஸாஸ்த்ர தாத்பர்யங்களுக்கு விஷயபேதம்‌ தொடக்கமான ஷைம்யங்களையும்‌,
    4-உபயத்திலும்‌ நிஷ்டரான அதிகாரிகளுடைய பரகாரங்களையும்‌,
    5-அந்த வ்யாஜத்தாலே ப்ரஸக்தமான திருவாய்மொழியினுடைய வைபவத்தையும்‌,
    6-அதுக்கு வக்தாக்களான ஆழ்வார்களுடைய ப்ரபாவத்தையும்
    7-அந்த ப்ரபாவத்துக் கடியான பகவந் நிர்ஹேதுக கடாக்ஷத்தையும்‌,
    8-அந்த கடாக்ஷமடியாக இவர்க்குண்டான ஜ்ஞாந பக்திகளையும்‌,
    9-அந்த ஜ்ஞாந பக்தி தஸைகளில்‌ இவர பேசும்‌ பேச்சுக்களையும்‌,
    10-அந்த பக்தி தஸையில்‌ பகவத் ப்ரேம யுக்தர் எல்லாரோடும்‌ இவர்க்குண்டான ஸாம்யத்தையும்‌,
    11-அந்த பக்தி தஸையில்‌ பேசும் அந்யாபதேஸங்களுக்கு ஸ்வாபதேஸங்களையும்‌,
    12-அந்த பக்திக்கு விஷயமான திவ்ய தேஸங்களில்‌ நிற்கிற எம்பெருமான்களுடைய குணங்களையும்‌,
    13-அந்த குண விஸிஷ்ட வஸ்துவிலுண்டான அநுபவ ஜநித ப்ரீதி ப்ரேரிதமாய்க்‌ கொண்டு ப்ரபந்தங்கள்‌ அவதரித்தமையையும்‌,
    14-தத்வார்த்த,ப்ரதி பாதந பரமான திருவாய்மொழி ப்ரபந்தத்துக்கு ஸ்ரீகீதா ஸாம்ய முண்டான படியையும்‌,
    15-அந்த கீதையில்‌ காட்டில்‌ இதுக்குண்டான வ்யாவ்ருத்தியையும்‌,
    16-இதில்‌ இவர்‌ உபதேஸிக்கிற விஷய பேதத்தையும்‌,
    17-அவ்வோ விஷயங்கள்‌ தோறும்‌ உபதேஸிக்கிற அர்த்த விஸேஷங்களையும்‌,
    18-அந்த வ்யாஜத்தாலே உபதேஸ விஷயமான ஸிஷ்ய லக்ஷணத்தையும்‌,
    19-இந்த லக்ஷணமில்லாதார்க்கு உபதேஸிக்கைக் கடியான இவருடைய க்ருபையையும்‌,
    20-இப்படி இவர்‌ க்ருபையாலே உபதேஸிக்கையாலே அவவுபதேஸம்‌ பலித்தபடியையும்‌,
    21-உபதேஸிக்கிற இப் ப்ரபந்தங்கள் தான்‌ தத்வ ஹித புருஷார்த்த ப்ரதிபாதகமான ரஹஸ்ய த்ரயார்த்த மென்னு மிடத்தையும்‌,
    22-அந்த ரஹஸ்ய த்ரயத்திலும்‌ ப்ரதிபாதிக்கப்படுகிற அர்த்த பஞ்சகங்களும்‌ இந்த ப்ரபந்தங்களிலே ஸங்க்‌ரஹ விஸ்தர ரூபேண சொல்லப்படுகிற ப்ரகாரத்தையும்‌,
    23-ப்ரபந்த ஆரம்பங்களில்‌ உண்டான லக்ஷணங்களில்‌ ப்ரபந்தாதியிலுண்டாயிருக்கிற ப்ரகாரத்தையும்‌,
    24-ஸாது பரித்ராணாதிகளாலே ஜகத் ரக்ஷணார்த்தமான பகவதவதாரம்‌ போலே ஜகத் ரஷணார்த்தமாக இப்ப்ரபந்தம்‌ அவதரித்த தென்னுமிடத்தையும்‌, 25-திருவாய்மொழியில்‌ பத்துப் பத்தாலும்‌ ப்ரதிபாதிக்கப்பட்ட எம்பெருமானுடைய பரத்வாதி குணங்களையும்‌,
    25-அக் குண விஸிஷ்டனான ஸர்வேஸ்வரன்‌ அந்தப் பத்துப் பத்தாலுமிவ் வாழ்வார்க்கு தத்வ ஜ்ஞாநம்‌ முதலாக ப்ராப்தி பர்யந்தமாகப்‌ பிறப்பித்த தஸா விஸேஷங்களையும்‌,
    26-இவர் தாம்‌ பிறரைக்‌ குறித்து உபதேஸித்த ப்ரகாரங்களையும்‌,
    27-இவர்‌ ப்ரதமத்திலே ஆர்த்தி பிறந்திருக்கச் செய்தே ஈஸ்வரனிவரை வைக்கைக்கு ப்ரதாந அப்ரதாந ஹேதுக்களையும்‌,
    28-இவர்க்குப்‌ பிறந்த பரபக்தி பரஜ்ஞாந பரமபக்திகளாகிற தஸா விஸேஷங்களையும்‌,
    29-அஜ்ஞாந்‌ நிவ்ருத்தி பூர்வகமாக ஜ்ஞாந ப்ரதனான பகவானுடைய ப்ரஸாதமே மோக்ஷ ஹேது என்னுடத்தையும்‌,
    30-அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக இஷ்ட மோக் ஷப்ராபணமே பரபந்த தாத்பர்யமென்னுமத்தையும்‌
    அருளிச் செய்து தலைக் கட்டி யருளினார்

    நான்காம் பிரகரணம் முற்றிற்று-

    ஸ்ரீ ஆச்சார்ய ஹ்ருதய வியாக்யானம் முற்றிற்று –

    தந்து அருள வேணும் தவத்தோர் தவப் பயனாய் வந்த முடும்பை மணவாளா
    சிந்தையினால் நீ உரைத்த மாறன் நினைவின் பொருள் அனைத்து என் வாய் உரைத்து வாழும் வகை-

    ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி தாழ்வதுமில் குரவர் தாம் வாழி
    ஏழ்பாரும் உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி செய்ய மறை தன்னுடனே சேர்ந்து

    அடியார்கள் வாழ அரங்கன் நகர் வாழச் சடகோபன் தண் தமிழ் நூல் வாழக்
    கடல் சூழ்ந்த மண்ணுலகம் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
    ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌–16 –முக்தி பாதம்—(229 – 234 )-26– பர ப,க்த்யாதி, நிரூபண ஸ்தாநாதிகரணம்‌ (230 –233) ஸ்ரீ மணவாள மா முனிகள் –

    August 10, 2026

    1) பூர்வ த்‌,விகம்‌ – ஸூரி வைபவம்‌ 1 முதல்‌ 186 வது ஸூத்ரம்‌ வரை (186)
    (2) உத்தர த்‌,விகம்‌ – ஸூரி ஸுக்த்தி வைபவம்‌– 187 முதல்‌ 234 முடிய (48)

    1) ப்ரத, மோத்‌, யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம்‌ 1-38 (38)
    (2) த்‌,விதீயோத்‌, யாய: – க்‌,ரந்த, கர்த்ரு வைப,வம்‌ 39 – 186 (148)
    (3) த்ருத்யோத்‌, யாயம் – க்‌,ரந்தாந்தர தார தம்ய வைப,வம்‌ 187-207 (21)
    (4) சதுர்த்தே ரத்‌, யாயம் -கிரந்த, ப்ரதிபாத்‌,ய க்ரம வைப,வம்‌ 208-234 (27)

    16 –முக்திபாதம்—229 – 234 – மொத்தம் –6 – ஸூரணைகள்–இதில் மூன்று அதிகரணங்கள்
    25–ஆர்த்த ப்ரபந்ந ஸூரி ஸரீர வியோகா பாவ காரணாதி கரணம்‌ –229—ஒரே ஸூரணை
    26– பர ப,க்த்யாதி, நிரூபண ஸ்தாநாதிகரணம்‌ 230 – –233—மொத்தம் –4–ஸூரணைகள்
    27 –திவ்ய ப்ரபந்த, தாத்பர்ய ப,க,வத்‌-ப்ரஸாதாதி கரணம்‌ –234 –ஒரே ஸூரணை-

    அதில் இவ் ஆர்த்திக்கு அடியான –பர பக்தி -பர ஞான -பரம பக்திகளின் தசைகள்-எந்த திரு வாய் மொழிகள் என்னும் அபேஷையிலே அவற்றை அருளிச் செய்கிறார் மேல் மூன்று வாக்யத்தாலே –-அது தன்னில் பரபக்த்ய வஸ்தை இன்னது என்கிறார் இதில் –ஆர்த்திக்கடியான பரபக்தி பரஜ்ஞாந பரமபக்திகளினுடைய தஸைகள்‌ எந்தெந்த திருவாய்மொழிகள்‌ என்ன- அத்தை அருளிச் செய்கிறார்‌-

    கமலக்கண்ணனென்று தொடங்கிக்‌ கண்ணுள்‌ நின்றிறுதி கண்டேனென்ற பத்தும்‌ உட்கண்ணாலேயாய்‌, காண்பான வாவுதல்‌ அதிலிரட்டி யாகையாலே கண்டு களிப்ப வளவும்‌ பரஜ்ஞாந கர்ப்ப பரபக்தி.-சூரணை -230-

    அதாவது –கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான் -1-9-9–என்று புண்டரீகாஷனானவன் என் கண்ணுக்கு விஷயமானான் என்று தொடங்கி –கண்ணுள் நின்று அகலான்-10-8-8- -என்று என் கண் வட்டத்திலே நின்றும் கால் வாங்கு கிறிலன் என்னுமதளவாக –-என் கண்ணனை நான் கண்டேனே –2-8-10-கலைப் பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டு கொண்டு –3-2-10–நறும் துழாய் என் கண்ணி யம்மா நான் உன்னைக் கண்டு கொண்டே –4-7-7–கை தொழ இருந்தாயது நானும் கண்டேனே –-5-7-5–ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் அம்மானே –5–8-1-திரு விண்ணகர் கண்டேனே –6-3-1–தேவர்கட்க்கு எல்லாம் கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே –-9-4-8–கண்டேன் கமல மலர் பாதம் –10-4-9-
    என்று இப் பத்து சந்தையாலும் சொன்ன சாஷாத்காரம் –-நெஞ்சு என்னும் உட் கண் -பெரிய திருவந்தாதி -28-என்கிற ஆந்தர சஷுசான மனசாலே உண்டானதாய் –

    “கமலக்கண்ணன்‌ என்‌ கண்ணினுள்ளான்‌ காண்பன்‌” (திருவாய்மொழி 1-9-9) என்று புண்டரீகாக்ஷ்னானவன்‌ என்‌ கண்ணுக்கு விஷயமானான்‌; நானுமவனை ஸாக்ஷாத்கரியா நின்றேன்‌ என்று உபக்ரமித்து “கண்ணுள்‌ நின்றகலான்‌’ (திருவாய்மொழி 10-8-8) என்‌ கண் வட்டத்தை விட்டுப்‌ போகிறிலன்‌ என்றெதளவாக “என்‌ கண்ணனை நான்‌ கண்டேனே”, (திருவாய்மொழி 2-8-10) “கலைப்பல்‌ ஞானத்தென்‌ கண்ணனைக் கண்டு கொண்டு” (திருவாய்மொழி 3-2-10), “நறுந்துழாயின்கண்ணியம்மா நானுன்னைக்கண்டு கொண்டே” (திருவாய்மொழி 4-7-7), “கூட்டரிய திருவடிக்கள்‌ கூட்டினை நான்‌ கண்டேனே”, (திருவாய்மொழி 4-9-9) “கைதொழவிருந்தாயது நானுங்‌ கண்டேனே (திருவாய்மொழி 5-7-5), “ஏரார்‌ கோலந்திகழக்கிடந்தாய்‌ கண்டேனெம்மானே’ (திருவாய்மொழி 5-8-1), “திருவிண்ணகர்க்‌ கண்டேனே’ (திருவாய்மொழி 6-3-1), “தேவர்கட்கெல்லாம்‌ கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே” (திருவாய்மொழி 9-4-8) என்று இப் பத்து சந்தையாலும்‌ ஸாக்ஷாத்காரமாகச்‌ சொல்லுகிறவிது “நெஞ்சென்னும்‌ உட்கண்‌” (பெரிய திருவந்தாதி 28) என்கிற ஆந்தர சக்ஷுஸ்ஸான மாநஸ ஸாக்ஷாத்காரமாய்‌-

    கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான் காண்பன் அவன் கண்களாலே
    அமலங்களாக விழிக்கும் ஐம்புலனும் அவன் மூர்த்தி
    கமலத்தயன் நம்பி தன்னைக் கண்ணுத லானொடும் தோற்றி
    அமலத் தெய்வத்தோடு உலகமாக்கி என் நெற்றி உளானே –1-9-9—புண்டரீகாக்ஷனான சர்வேஸ்வரன் என் கண்ணுக்கு விஷயம் ஆனான் –-ந மாம்ஸ சஷூர் அபி வீக்ஷ தேதம் ந சஷூஷா பஸ்யதி-என்கிற மரியாதை குலைந்தது-காண்பன் –-நானும் அவனைக் காணா நின்றேன்-காண்பன் -என்கிற இடம் வர்த்தமானம்-நீர் காண வல்லீர் யாயிற்று -எத்தாலே என்னில்-அவன் கண்களாலே -அமலங்களாக விழிக்கும் – அவன் திருக் கண்களால் நிர் தோஷனாம் படியும் -காண வல்லேனாம் படியும் விசேஷ கடாக்ஷத்தைப் பண்ணினான்

    கண்ணுள் நின்று அகலான் கருத்தின் கண் பெரியன்
    எண்ணில் நுண் பொருள் ஏழிசையின் சுவை தானே
    வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப் பேரான்
    திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே –10-8-8–சதா தரிசனத்துக்கு வேறு தனக்கு ஒரு விபூதி யுண்டு என்று இருக்கிறிலன்-கருத்தின் கண் பெரியன்-நம் விஷயத்தில் அவன் பார்க்கிற பாரிப்பு நமக்கு மநோ ரத விஷயம் அன்று -நம்மைக் கொண்டு போகையிலே பாரித்து அர்ச்சிராதி கணங்களை அழைப்பது –தான் அவர்களுக்கு முற்பாடன் ஆவதாகா நின்றான் –

    சீர்மை கொள் வீடு ச்வர்க்க நரகு ஈறா
    ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும்
    வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற
    கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே –2-8-10-பரமபதத்தில் வர்ஷூ கலாவாஹம் போலே -ஸ்ரமஹரமான வடிவோடே அத்விதீயனாய் எழுந்து அருளி இருக்குமவன்
    கிருஷ்ணனாய் எனக்கு உபகரிக்கையாலே நான் அனுபவிக்கப் பெற்றேன் என்கிறார் –

    தலைப்பெய் காலம் நமன் தமர் பாசம் விட்டால்
    அலைப்பூண் உண்ணும் அவ் வல்லல் எல்லாம்
    அகலக் கலைப்பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டுகொண்டு
    நிலைப்பெற்று என்னெஞ்சம் பெற்றது நீடுஉயிரே.
    –3-2-10-பல கலைகளாலும் அறியப் படுபவன்
    வேதைஸ் ச சர்வர் அஹமேவ வேத்ய -என்று வேதைக சமதி கம்யனான கிருஷ்ணனைக் கண்டு கொண்டு நிலைப்பெற்று என்னெஞ்சம் – என் மனத்தினை நீ சிந்தாமல் செய்வாய் -என்று சிதிலமான நெஞ்சம் தான் தரித்தது-பெற்றது நீடுஉயிரே.–-உயிர் நீடு பெற்றது -எங்கு இனித் தலைப் பெய்வன்-என்று முடிய புக்க ஆத்ம வஸ்துவும் நித்யமாயிற்று-நித்ய வஸ்துவுக்கு நாசமாவது -தாஸ்ய அசித்தி
    தாஸ்யமே நிரூபகம் ஆனால் தத் அலாபத்தில் நிரூப்பியமும் இல்லையாம் இறே-ச்சேத்யாதி விஸஜாதீயம்-ஏன்னா பகவத் அலாபத்தில் அழியாது ஒழியுமோ –

    அறிந்து அறிந்து, தேறித் தேறி,யான் எனது ஆவியுள்ளே
    நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து,
    பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் ;
    நறுந்து ழாயின் கண்ணி அம்மா! நான் உனைக் கண்டு கொண்டே.–4-7-7-இவ்வளவு பெறுகைக்கு முதல் காட்சியைச் சொல்கிறார் -வைத்த வளையத்தை காட்டி யாற்று இவரை அநந்யார்ஹர் ஆக்கிற்று-நான் உனைக் கண்டு கொண்டே.–-பெற்ற அம்சத்தாலே திருப்தி பிறவாத நான் –-நிரதிசய போக்யனான உன்னைக் கண்டு கொண்டு -அறிந்து அறிந்து தேறி தேறி -என்று அந்வயம் –

    கூட்டுதி நின் குரை கழல்கள்; இமையோரும் தொழா வகைசெய்து,
    ஆட்டுதி நீ; அரவணையாய்! அடியேனும் அஃது அறிவன்;
    வேட்கை எலாம் விடுத்து எனை உன் திருவடியே சுமந்து உழலக்
    கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே
    .–4-9-9–ருசியுடைய என்னை உன் திருவடிகளிலே கைங்கர்யம் பண்ணி வர்த்திக்கும் படி-கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே.– அந்நிய சாத்தியமான திருவடிகளிலே கூட்டினாய் -கேட்டார் வாய் கேட்க்கை யன்றிக்கே நான் அனுபவிக்க பெற்றேன் ஆகையால் அறிந்தேன்

    எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு? எவ்வ தெவ்வத் துளாயுமாய் நின்று
    கை தவங்கள் செய்யும் கருமேனி அம்மானே!
    செய்த வேள்வியர் வையத் தேவர் அறாச் சிரீவர மங்கலநகர்
    கைதொழ இருந்தாய் அது நானும் கண்டேனே!
    –5-7-5—இவர்கள் நிரந்தரமாக வர்த்திக்கும் தேசம் -நகர் கை தொழுகை யாவது -மஞ்சா க்ரோஸந்தி போலே இவர்கள் அனுவர்த்த நமே தாரகமாய் இருந்தாய்
    அது நானும் கண்டேனே!–அநுபூத அம்சத்தை இல்லை என்கிறேன் அல்லேன்-அனுபாவ்ய அம்சம் யுண்டாகையாலே சொல்லுகிறேன் -அடிமை கொள்ளுகிற நீ சந்நிஹிதன் ஆனமை அறிந்தேன் -எனக்கு அத்தால் போராது -உன் திருவடிகளில் கைங்கர்யமே யாத்ரையாகப் பெற வேணும் என்று வாக்ய சேஷமாகத் தலைக் கட்டுகிறது-

    ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
    நீராய் அலைந்து கரைய உருக்கு கின்ற நெடுமாலே!
    சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
    ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே–
    5-8-1-அழகு மிக்க ஒப்பனை -இப் ஒப்பனை அழகு நிறம் பெறும்படி யாயிற்று கண் வளர்ந்து அருளிற்று -அல்லாதார்க்கு கிடந்த போது வைரூப்யம் உறைத்து இருக்கும் -இங்கு அழகு உறைத்து இருக்கும் -ச மயா போதித ஸ்ரீ மான் –-கிடந்தாய் கண்டேன் -கண் வளர்ந்து அருளுகிற படி கண்டேன் –உணர்ந்து குளிர நோக்குதல் -அணைத்தல் -இந்த சொல்லுச் சொல்லுதல் -செய்யப் பெற்றிலேன் -கண்ணாலே காணப் பெற்றேன் -நினைத்த பரிமாற்றம் பெற்றிலேன் -பரி மாற்றம் பெறா விட்டால் ஆறி இருக்கலாம் -பிராப்தி இல்லை யாகில் -வடிவு அழகோ பாதி சம்பந்தமும் நலியா நின்றதே –ஸ்தநந்த்ய பிரஜை தாய் அறிந்தால் முலை முலை என்னுமா போலே சம்பந்த ஞானம் அன்றோ கூப்பிடப் பண்ணுகிறது –

    நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்
    வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப்
    பல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானைச்
    செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே.–6-3-1-சர்வகதனானது தமக்காக என்று இருக்கிறார் –ஒருவனை பிடிக்க சுற்றி ஒரூரை வளைப்பாரை போலே -இப்படி சர்வகதனான பெருமையை உடையனாய் வைத்து -ப்ரணய ரோஷத்தாலே அகன்று -முடிய புக்க என்னை தாழ நின்று சேர்த்துக் கொண்ட உபகாரகனை என்றுமாம் –செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே.–-நிரவதிக சம்பத்தை உடைய தேசம் -பிரிந்து தூது விட வேண்டாதே-ப்ரணய ரோஷத்தாலே -கிட்ட ஓட்டோம் -என்று வியசனப் படாதே -நித்ய அனுபவம் பண்ணலாம் இடம் என்கை –லஷ்மனோ லஷ்மி சம்பன்னவ் -என்கிறபடியே இடைவிடாதே பகவத் அனுபவ ஸ்ரீ -இறே சம்பத்து ஆகிறது –-திருவிண்ணகர்க் கண்டேனே.-ஓர் இடத்திலே காண ஆசைப்பட்டு ஓர் இடத்தே காண்கை அன்றிக்கே தூது விட்ட அர்ச்சாவதாரத்திலே கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –

    உருவாகிய ஆறு சமயங்கட்கு எல்லாம்
    பொருவாகி நின்றான் அவன் எல்லாப் பொருட்கும்
    அருவாகிய வாதியைத் தேவர்கட்கு எல்லாம்
    கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே
    –9-4-8-ப்ரஹ்மாதிகளுக்கும் கூட காரண பூதனானவனை –கண்ணனைக் -காரியங்களில் ஒன்றுக்கு தான் காரணம் ஆனவனை-கண்டு கொண்டேனே–அவதாரத்துக்கு பிற்பாடராய் இருக்க கண்டு கொண்டேன் என்கிறார் இறே -ப்ரேமார்த்த சித்தருக்கு என்றும் காணலாம் -அவதார சம காலத்திலும் காண ஒண்ணாது சிசு பாலாதிகளுக்கு –பாஹ்ய சமயங்களால் அவிஸால்யனாய் -சர்வ அந்தராத்மாவாய்க் கொண்டு -சர்வ நியாந்தாவாய் -ப்ரஹ்மாதிகளுக்கும் உத்பாதகனாய் இருந்து வைத்து ஆஸ்ரிதற்கு ஸூலபனாய் இருக்கிறவனைக் காணப் பெற்றேன் -என்கிறார் –

    கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே
    விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்

    தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக
    பண்டே பரமன் பணித்த பணி வகையே–10-4-9–என்றும் கேட்டே போம் விஷயத்தை சாஷாத் கரிக்கப் பெற்றேன் —கமல மலர்ப்பாதம் –பிராப்தி ஒழியவே ஞான லாபமே அமையும் படியான போக்ய விஷயம் என்கிறது –-காண்டலுமே-விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்–கண்ட போதே வினை என்று பேர் பெற்றவை எல்லாம் விட்டுப் போய்த்து –சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்னுமவன் அடியாக வந்ததாகையாலே தட்டில்லை இறே

    கைய பொன்னாழி வெண் சங்கோடும் காண்பான் அவாவுவன் நான் –திருவிருத்தம் -84-
    அடியேன் காண்பான் அலற்றுவன் –1-5-7-
    உம்மைக் காணும் ஆசையுள் நைகின்றாள் –2-4-2-
    கூவுகின்றேன் காண்பான்-3-2-8-
    மெய் கொள்ளக் காண விரும்பும் என் கண்களே –3-8-4-
    கூவியும் காணப் பெறேன் உன் கோலமே –3-8-7-
    உன்னை எந்நாள் கண்டு கொள்வேனே –3-8-8-
    கோல மேனி காண வாராய் –4-7-1-
    தடவுகின்றேன் எங்குக் காண்பன் –4-7-9-
    பாவியேன் காண்கின்றிலேன் –4-7-10-
    உன்னைக் காண்பான் நான் அலப்பாய் –5-8-4-
    உலகம் பரவக் கிடந்தாய் காண வாராயே –5-8-9-
    என்று கொல் கண்கள் காண்பதுவே –5-9-5-
    விளங்க ஒருநாள் காண வாராய் –6-9-4-
    உன்னைக் காண்பான் வருந்தி எனை நாளும் –6-9-6-
    அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாய் –8-1-1-
    ஒருநாள் காண வாராய் –8-5-1-
    தொண்டனேன் உன் கழல் காண ஒருநாள் வந்து தோன்றாயே –8-5-6-
    உன்னை எங்கே காண்கேனே-8-5-10-
    உன்னைக் காணக் கருதும் என் கண்ணே –9-4-1-

    என்று பாஹ்ய சஷுசாலே அவனைக் காண ஆசைப் பட்டு கூப்பிட்ட சந்தைகள் –அதில் இரட்டி உண்டாகையாலே –-கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலான் -10-8-7–என்று திருமால் இரும் சோலை அளவாக ஆந்த்ர அனுபவம் செல்லா நிற்க – பெற்று அன்று தரியாத –பாஹ்ய அனுபவ அபேஷை -நடக்கையாலே – பர ஞானத்தை கர்ப்பித்து கொண்டு இருக்கிற பர பக்தி என்கை —

    கைய பொன்னாழி வெண்சங்கொடுங்‌ காண்பான்‌ அவாவுவன்‌ நான்‌ (திருவிருத்தம்‌ 84), “அடியேன்‌ காண்பானலற்றுவன்‌ ‘, (திருவாய்மொழி 1-5-7) “உம்மைக் காணு மாசையுள்‌ நைகின்றாள்‌” (திருவாய்மொழி 2 -4-2, “கூவுகின்றேன்‌ காண்பான்‌” (திருவாய்மொழி 3-2-8), “மெய் கொள்ளக் காண விரும்பும்‌ என் கண்களே’ (திருவாய்மொழி 3-8-4), “கூவியுங்காணப்‌ பெறேன்‌ உன கோலமே”, (திருவாய்மொழி 3-8-7) “உன்னை யெந்நாள்‌ கண்டு கொள்வனே’ (திருவாய்மொழி 3-8-8), “கோல மேனி காண வாராய்‌” (திருவாய்மொழி 4-7-1), “கூவுகின்றேன்‌ காண்பான்‌” (திருவாய்மொழி 3-2-8) “பாவியேன்‌ காண்கின்றிலேன்‌” (திருவாய்மொழி 4-7-10), “உன்னைக் காண்பான்‌ நானலப்பாய்‌” (திருவாய்மொழி 5-8-4), “ஒரு நாள்‌ காணவாராயே” (திருவாய்மொழி 8-5-1) “என்று கொல்‌ கண்கள்‌ காண்பதுவே” (திருவாய்மொழி 5-9-5), “விளங்க ஒருநாள்‌ காண வாராய்‌” (திருவாய்‌ மொழி 6-9-4), “உன்னைக் காண்பான்‌ வருந்தியெனை நாளும்‌” (திருவாய்‌ மொழி 6-9-6) “அலைகடல்‌ கடைந்தவப்பனே காணுமாறருளாய்‌” (திருவாய்மொழி 8-1-1), “தொண்டனேனுன்கழல்காணவொருநாள்வந்து தோன்றாயே” (திருவாய்மொழி 8-5-6), “உன்னையெங்கே காண்கேனோ’ (திருவாய்மொழி 8-5-10), “கனிவாய்‌ சிவப்ப நீ காணவாராயே” (திருவாய்மொழி 9-2-4), “உன்னைக்காணக்‌ கருதுமென்கண்ணே’ (திருவாய்மொழி 9-4-1) என்று அவனைக் காண வாசசைப்பட்டுக்‌ கூப்பிட்ட சந்தைகள்‌ அதிலிரட்டி யாகையாலே “கண்டு களிப்பக்‌ கண்ணுள்‌ நின்றகலான்‌’ (திருவாய்மொழி 10-8-7) என்று திருமாலிருஞ்சோலையளவும்‌ அநுபவம்‌ செல்லா நிற்கச்‌ செய்தே பெற்றல்லது தரியாதபடியான பாஹ்ய ஸம்ஸ்லேஷாபேஷை நடக்கையாலே பரஜ்ஞாநத்தை கர்ப்பித்துக் கொண்டு பரமபக்தி யாயிருக்கிறது –

    தையல் நல்லார்கள் குழாங்கள் குழிய குழு வினுள்ளும்
    ஐய நல்லார்கள் குழிய விழவினும் அங்கங்கெல்லாம்
    கைய பொன்னாழி வெண் சங்கோடும் காண்பானவாவுவன் நான்
    மைய வண்ணா மணியே முத்தமே என் தன் மாணிக்கமே 
    – -84-குழாங்கள் குழிய குழு-என்கையாலே அஸ் ஸமூஹம் தான் பலவாய்ச் சேர்ந்த சமுதாயத்தைச் சொல்லுகிறது-ஐய நல்லார்கள் குழிய விழவினும்-பூஜ்யரான விலக்ஷண புருஷர்கள் திரண்ட மஹா உத்ஸவத்திலும்–அங்கங்கெல்லாம்-அவ்வவ் விடங்கள் எல்லாவற்றிலும்–கைய பொன்னாழி வெண் சங்கோடும் காண்பானவாவுவன் நான்-போக்யத்வ ரக்ஷகத்வங்களுக்கு ஸூசகமாய் கற்பகக் கவடு விழுந்தால் போலே திருக்கைக்கு அலங்காரமாய் ஒவ்ஜ்வல்ய விசிஷ்டமான திருவாழியோடும் அத்யந்த பரி ஸூத்தமான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தோடும் கூடக் காண வேணும் என்று ஆசைப்படா நிற்பன்

    அடியேன் சிறிய ஞானத்தன் அறிதலார்க்கும் அரியானை
    கடி சேர் தண்ணம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை
    செடியார் ராக்கை யடியாரைச் சேர்த்தல் தீர்க்கும் திருமாலை
    அடியேன் காண்பான் அலற்றுவன் இதனின் மிக்கதோர் அயர்வுண்டே 
    –1-5-7-அடியேன் – ஸ்வாமிக்கு அதிசயத்தைப் பண்ணப் பார்த்தால் அன்றோ மாம்பழ யுண்ணி போலே பேரைச் சுமந்து காண வேணும் என்று கூப்பிடா நின்றேன் அவ்விஷயத்தைக் கிட்டி தூஷிக்கப் பாரா நின்றேன்

    வாணுதல் இம்மடவரல் உம்மைக்
    காணும் ஆசையுள் நைகின்றாள்
    விறல்
    வாணன் ஆயிரம் தோள் துணித்தீர் உம்மைக்
    காண நீர் இரக்கமிலீரே–2-4-2-பிரிந்தார்க்கு தரிக்க ஒண்ணாத உம்மை இவளை அறியாது ஒழிந்தால் உம்மை அறியாது ஒழிய வேணுமோ-உம்மை நீர் கண்ணாடிப் புறத்திலும் கண்டு அறியீரே-காணும் ஆசையுள் நைகின்றாள் – உம்மைக் கிட்டி அணைக்கவோ ஆசைப் பட்டது -ஒரு கால் காண வன்றோ
    நைகின்றாள் –-வாடுகை தான் தேட்டமாம் படி யாயிற்று

    மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்
    ஓவுதல் இன்றி யுன் கழல் வணங்கிற்றிலேன்
    பாவு தொல் சீர்க் கண்ணா வென் பரஞ்சுடரே
    கூவிகின்றேன் காண்பான் எங்கு எய்தக் கூவுவனே –3-2-8–சாதனா அனுஷ்டானம் பண்ணி பலம் தாழ்த்தாரைப் போலெ கூப்பிடா நின்றேன்-எங்கு எய்தக் கூவுவனே –-ஒரு ஷூத்ரன் கூப்பீடு எங்கே பலிக்க -சாபலம் இறே

    கைகளால் ஆரத் தொழுது தொழுது உன்னை வைகலும் மாத்திரைப் போதும் ஓர் வீடு இன்றிப்
    பைகொள் பாம்பு ஏறி உறை பரனே! உன்னை மெய்கொளக் காண விரும்பும் என் கண்களே.–3-8-4-உன்னை-இப்படி பிராப்தனும் போக்யமுமான உன்னை-மெய்கொளக் காண விரும்பும் என் கண்களே.–
    மானஸ அநு பவமாதரமாய் -பாஹ்ய சம்ச்லேஷத்துக்கு எட்டாது ஒழிகை அன்றிக்கே மெய்யாகக் காண வேணும் என்று விரும்பா நின்றன –

    ஆவியே! ஆரமுதே;என்னை ஆளுடைத் தூவி அம் புள்ளுடையாய்!சுடர் நேமியாய்!
    பாவியேன் நெஞ்சம் புலம்பப் பல காலும் கூவியும் காணப்பெறேன் உன கோலமே.–3-8-7-கூவியும் காணப்பெறேன் –-ஸ்வரூபம் பெற்றேன் அல்லேன்-அபிமதம் பெற்றேன் அல்லேன் என்கிறார்
    தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்று இருக்கப் பெற்றிலேன்-மடலூர்ந்தார் பெற்ற பேற்றை பெற்றேன் அல்லேன்-என் ஸ்வரூபத்தை நோக்கினேன் அல்லேன் -அவன் ஸ்வரூபத்தை நோக்கினேன் அல்லேன்
    உன்னுடைய நீர்மையும் அழித்தேன்-என்னுடைய சேஷத்வத்தையும் அழித்தேன் –-உன கோலமே-இரண்டு தலையையும் அழித்தே யாகிலும் பெற வேண்டும் விஷய வை லக்ஷண்யத்தை சொல்லுகிறது
    வ்யதிரேகத்தில் புறம்பே போது போக்குதல் கண் உறங்குதல் செய்யும் விஷயம் அன்று இறே –

    கோலமே! தாமரைக் கண்ணது ஓர் அஞ்சன நீலமே! நின்று எனது ஆவியை ஈர்கின்ற
    சீலமே! சென்று செல்லாதன முன் நிலாம் காலமே! உன்னை எந்நாள் கண்டு கொள்வனே?–3-8-8-உன்னை-சர்வ பிரகார வி லஷணனாய் கால த்ரயமும் நீ இட்ட வழக்கான உன்னை எந்நாள் கண்டு கொள்வனே?–நான் பெரும் நாள் இன்ன நாள் என்ன வேணும் –-பூர்ணே சதுர்தசே வர்ஷே என்று ஸ்ரீ பரத ஆழ்வானுக்குச் சொன்னால் போலே சொல்ல வேணும் என்கிறார் –

    சீலம் இல்லாச் சிறியே னேலும், செய்வினையோ பெரிதால்;
    ஞாலம் உண்டாய்! ஞான மூர்த்தி! நாராயணா! என்று என்று
    காலந் தோறும் யான் இருந்து, கைதலை பூசலிட்டால்,
    கோல மேனி காண வாராய்; கூவியும் கொள்ளாயே.–4-7-1-இப்படி விடாயைப் பிறப்பிக்கும் வடிவு -விடாய்த்தார்க்கு காட்ட அன்றோ வடிவு படைத்தது -பக்தா நாம் அன்றோ –காண-காண்கை இறே பிரயோஜனம் –சதா பஸ்யந்தி இறே-கருமுகை மாலை தேடுவார் சூட வன்றோ தேடுவது -சும்மாட்டைக் கொள்ள அன்றே-வாராய்;-இப்போதும் அவன் வரவால் பெறுகை முறை என்கை -வருகிறிலை
    கூவியும் கொள்ளாயே.-இஷ் ஷூ த்ர ஜந்துவின் பக்கலிலே நான் செல்லவோ என்று இருந்தாயாகில் என்னை அழைத்துக் கொள்ளலாம் –அதுவும் செய்கிறிலை-ஞாலம் உண்டாய் என்று தொடங்கி-காண வருகிறிலை -கூவியும் கொள்ளுகிறிலை -சீலமில்லா சிறியேனாலும் செய் வினையோ பெரிதால் -என்று அந்வயம்-

    இடகிலேன் ஒன்று; அட்டகில்லேன்; ஐம்புலன் வெல்லகிலேன்;
    கடவனாகிக் காலந்தோறும் பூப்பறித்து ஏத்தகிலேன்;
    மடவல் நெஞ்சம் காதல் கூர, வல்வினையேன் அயர்ப்பாய்த்
    தடவுகின்றேன்; எங்குக் காண்பன் சக்கரத்து அண்ணலையே?–4-7-9-அறிவு கேட்டை உடையேனாய் முன்னே வந்து நின்றாலும் காண முடியாத படி தடவா நின்றேன்-நத்வா பச்யாமி கௌசல்யே -என்கிறபடியே-எங்குக் காண்பன்-ஒரு கைம்முதல் இன்றிக்கே இருக்க கூப்பிடா நின்றேன் -எங்கே காணப் பெறுகிறேன்-சக்கரத்து அண்ணலையே?–-கையும் திரு வாழியுமான சேர்த்தியிலே யாயிற்று இவர் அகப்பட்டது-

    சக்கரத்து அண்ணலே! என்று தாழ்ந்து, கண்ணீர் ததும்ப,
    பக்கம் நோக்கி நின்று, அலந்தேன்; பாவியேன் காண்கின்றிலேன்;
    மிக்க ஞான மூர்த்தியாய வேத விளக்கினை என்
    தக்க ஞானக் கண்களாலே கண்டு தழுவுவனே
    .–4-7-10-வேதமாகிற விளக்கிலே காணப் படுமவனை
    என்-தக்க ஞானக் கண்களாலே கண்டு தழுவுவனே.–எனக்கு தக்காப் போலே ஒரு ஞான த்ருஷ்ட்டி யுண்டாய் அத்தாலே கண்டு அனுபவிப்பன்-காணப் பெறாமையாலே ப்ரேமம் கிலேச ஹேது வாகிறாப் போலே -நெஞ்சில் பிரகாசமும் கிலேச ஹேது வாகா நின்றது-மதி நலம் அருளினன் என்கிற ஞான பக்திகள்-இரண்டும் கழுத்துக்கு கட்டியாய் விட்டது

    செலக் காண்கிற்பார் காணு மளவும் செல்லும் கீர்த்தியாய்!
    உலப்பிலானே! எல்லா உலகு முடைய ஒருமூர்த்தி!
    நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்! உன்னைக் காண்பான் நான்
    அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே.
    –5-8-4-ஆஸ்ரித வத்சலனான உன்னை காண் கைக்காக -அத்தலை இத்தலையாய் நீ என்னை காண பட்ட அளவன்று-நான் உன்னை காண் கைக்கு பட்டது-அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே-அலமந்து -விஷயம் சந்நிஹிதமாய் இருக்கச் செய்தே-ஆகாசத்தை பார்க்கிறது -நினைத்த பரிமாற்றம் பெறாமையாலே ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு உதவ வந்து தோற்றினால் போலே -தம் தசையைப் பார்த்து தோற்றுகிறானோ என்று பார்த்து -என்னுடைய நிராலம்பநதையைப் பார்த்து என்னுமாம் ஆண்டான் வரக் காணா மையாலே ஸ்நே ஹிதிகள் செய்வதும் செய்யா நின்றேன் -க்ருபணர் செய்வதும் செய்யா நின்றேன் -சபலர் செய்வதும் செய்யா நின்றேன் -விரக்தர் செய்வதும் செய்யா நின்றேன் –

    இசைவித் தென்னை உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே!
    அசைவில் அமரர் தலைவர் தலைவா! ஆதிப் பெரு மூர்த்தி!
    திசைவில் வீசும் செழுமா மணிகள் சேரும் திருக்குடந்தை
    அசைவில் உலகம் பரவக் கிடந்தாய்! காண வாராயே
    .–5-8-9-வருத்தம் இன்றிக்கே லோகமானது ஆஸ்ரயிக்க என்னுதல் -நித்ய ஸூ ரிகள் நீர்மைக்குத் தோற்று ஏத்தும் படி என்னுதல் -இடம் வலம் கொண்ட போது எல்லாம் திருத்திரை எடுத்தால் போலே லோகம் அடங்க ஏத்தக் கிடந்தாய் என்னுதல் –
    கிடந்தாய்! காண வாராயே.–-கண் வளர்ந்து அருளுகிற அழகை அனுபவித்தால்-நடை அழகை அனுபவிக்க வேண்டாவோ -அதீந்திரியமான வடிவை கண்ணுக்கு இலக்காக்கின அருமை யுண்டோ நடக்கையில் –

    நன்னலத் தோழிமீர்காள்! நல்ல அந்தணர் வேள்விப் புகை
    மைந்நலங் கொண்டுயர் விண் மறைக்கும் தண் திருவல்ல வாழ்
    கன்னலங் கட்டி தன்னைக் கனியை இன்னமுதந் தன்னை
    என்னலங் கொள் சுடரை என்று கொல் கண்கள் காண்பதுவே
    .–5-9-5-கண்ட போதே நுகரலாம் படி இருக்கை -ரசத்துக்கு மேலே போன உயிரை மீட்க வற்றாய் இருக்கை -என்னை சர்வ ஸ்வபஹாரம் பண்ணி -அத்தாலே உஜ்ஜவலனாய் இருக்கிறவனை –என்னை எழுதிக் கொண்ட அழகை யுடையவனை என்றுமாம் –என்னலங் கொள் சுடரை என்று கொல் கண்கள் காண்பதுவே.–-நான் பட்டது பட -பிரஜை ஜீவிப்பது காண் என்பாரைப் போலே என் கண்களின் விடாய் தீருவது என்றோ என்கிறாள் -முடியானேயில் கரணங்கள் இ றே -காண விரும்பும் என் கண்களே என்று கண்களும் தாமும் தனித்தனியே விடாய்க்கும் படி இ றே இவருடைய விடாய்-என்னலம் கொள் சுடரை என் கண்களின் விடாய் கெட காணப் பெறுவது என்றோ –

    காண்ப தெஞ்ஞான்று கொலோ? வினையேன் கனிவாய் மடவீர்!
    பாண் குரல் வண்டினொடு பசுந் தென்றலுமாகி எங்கும்
    சேண் சினை ஓங்கு மரச் செழுங்கானல் திரு வல்லவாழ்
    மாண் குறள் கோலப் பிரான் மலர்த் தாமரைப் பாதங்களே.–5-9-6–பிறருக்கும் ஐயோ என்னும் திசையோ இது –கண்கள் செய்த படி செய்ய -நான் காணப் பெறுவது என்றோ என்கிறாள் –கன்று வேறு தாய் வேறாகும் விஷயம் இறே -பிரஜை பட்டது படுகிறது -நான் பசி தீரும் வழி என் -என்பாரைப் போலே
    வினையேன்- கண்கள் விடாய்க்கு அன்றிக்கே என் விடாய்க்கு அன்றிக்கே அலமாக்கும் படியான பாபத்தைப் பண்ணினேன் –

    தளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர் உடல்வேறாப்
    பிளந்து வீயத் திருக்கா லாண்ட பெருமானே!
    கிளர்ந்து பிரமன் சிவன்இந் திரன்விண் ணவர்சூழ
    விளங்க ஒருநாள் காண வாராய் விண்மீதே.–6-9-4-ஈஸ்வர அபிமானிகளான ப்ரஹ்மாதிகள் பெரிய கிளர்த்தியோடே ஜய ஸ் துதி களைப் பண்ணிக் கொண்டு சூழ்ந்து சேவிக்க-விளங்க ஒருநாள் காண வாராய் விண்மீதே.–ஆகாசம் அவகாசம்எ ல்லாம் அழகு வெள்ளம் இடும்படி என்னுதல் -ஆதித்ய சகாசத்தில் நக்ஷத்ராதிகள் போலே அவர்கள் ஒளி கீழ்ப் பட என்னுதல்-ஒரு நாள் -ஆனைக்கு வந்து தேப்பற்றினார் போலே ஒருநாள் வந்து அருள வேணும் –

    பாயோர் அடிவைத்து அதன்கீழ்ப் பரவை நிலமெல்லாம்
    தாயோர் அடியால் எல்லா உலகும் தடவந்த
    மாயோன்! உன்னைக் காண்பான் வருந்தி எனைநாளும்
    தீயோடு உடன்சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ?
    –6-9-6–என்னைக் கிட்டுக்கைக்கு வருந்தி திரிந்த உன்னைக் காண வேணும் என்று நான் வருந்தி -அத்தலை இத்தலையாய் –எனைநாளும்–அநேக காலமும் -ஒரு நாள் என்னாசையை ஆவிஷ்கரித்து விட்டேனோ-தீயோடு உடன்சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ?–அக்னி சகாசத்திலே மெழுகு போலே -தூர இருந்து அழியாது இருத்தல் -அக்னியில் புக்கு நசித்தல் -செய்யப் பெறாதே இருக்கை -நசையின் ஸ்வ பாவத்தாலும் -விஷய ஸ்வ பாவத்தாலும் ஸைதில்யாம் நித்தியமாய் இருக்கை -ஜீவிக்கவும் பெறாதே முடியவும் பெறாதே யாதநா சரீரம் போலே குளிர்ந்த வழி இல்லாத தேசத்தே எத்தனை நாள் தட்டித் திரியக் கட வேன்-

    தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார்
    மேவிய வுலகம் மூன்றவை யாட்சி வேண்டு வேண்டுருவம் நின்னுருவம்
    பாவியேன் தன்னை யடுகின்ற கமலக் கண்ணது ஓர் பவளவாய் மணியே
    ஆவியே அமுதே அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாயே–8-1-1-நிரதிசய போக்யனாய் இருந்த உன்னை அநாதரித்து புறம்பே ஓர் உப்புச்சாறு அமையும் என்று இருப்பார்க்கு உடம்பு நோவக் கடல் கடைந்து கொடுக்கும் உபகாரகனே-காணுமாறு அருளாயே–எனக்கு கடல் கடைய வேண்டா -வடிவைக் காட்ட அமையும் -இவருக்கு பிராப்யம் அம்ருதம் அன்று –காண்கை -உபாயமும் கடல் கடைகை அன்று –அருளே -ப்ராப்ய ப்ராபகம் இரண்டும் ஒன்றே என்று இருப்பார்க்கு கார்யம் செய்யலாகாது என்கை –

    காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கிக் கண்ண நீர் அலமர வினையேன்
    பேணுமாறு எல்லாம் பேணி நின் பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ
    காணுமாறு அருளாய் காகுத்தா !கண்ணா !தொண்டனேன் கற்பகக் கனியே !
    பேணுவாரமுதே !பெரிய தண் புனல் சூழ் பெரு நிலம் எடுத்த பேராளா !–8-1-2-அலை கடல் கடைந்த அப்பனே -காணுமாறு அருளாய் என்னைச் செய்தே காணப் பெறாதே இருக்க பின்னையும் காணுமாறு அருளாய் என்கிறார் இ றே -காண்கைக்கு ஒரு ப்ரவ்ருத்தி பண்ணுமவர் அல்லரே-வர்ஷ தாரையால் அல்லாது தரியாத சாதகம் போலே அருள் அல்லது அறியாதவர் ப்ரவர்த்திகைக்கு தாம் சக்தர் ஆனாலும் பிராப்தி இல்லை என்று இருக்குமவர் –-என்று என்றே -அநவரதம் இத்தையே சொல்லா நிற்பார் -ஒரு கால் சொன்னால் வர காணாது ஒழிந்தால் வேறு ஒரு புகில் யுண்டாகில் இ றே அத்தை பற்றலாவது –
    கலங்கிக்-இப்படி கூப்பிட்டு ஒரு படி செல்லா நின்ற வந்த தாருண த்வனி வழியே ஹ்ருதயத்தில் பிறந்த கலக்கம் ஒருகாலைக்கு ஒரு கால் ஏறி வரா நின்றது -ஜடிலம் சீர வசனம் – கண்ண நீர் அலமர – அகவாயில் கலக்கம் உள் அடங்காமை கண்ண நீராய் ப்ரவாஹியா நின்றது-வினையேன்-இதுக்கு முன்பு அவ்விஷயத்தை பற்றினார்க்கு கலக்கமும் கண்ண நீருள் இல்லை கிடீர் -ஆசா லேசமுடையார் கால்கடையிலே துவளக் கடவ தத்துவத்தை பெறுகைக்கு நான் இங்கனம் கூப்பிடும் படியான பாபத்தை பண்ணினேன்-

    மாயக் கூத்தா வாமனா வினையேன் கண்ணா கண் கை கால்
    தூய செய்ய மலர்களா சோதித் செவ்வாய் முகிழதா
    சாயல் சாமத் திருமேனி தண் பாசடையா தாமரை நீள்
    வாசத்தடம் போல் வருவானே ஒரு நாள் காண வாராயே-8-5-1-பரப்பு மாற தாமரை அலர்ந்து இருப்பதாய் ஏகார்ணவத்தை ஒரு தாமரை தடாகம் ஆக்கினால் போலே பரந்து இருப்பதாய் -அப்பரப்பு அடங்க பரிமளம் நிரம்பி இருபத்தொரு தடாகம் நடந்து வருமா போலே யாயிற்று -பரிமளம் முன்பே அலை எறிய வரும் போது இருப்பது -சர்வ கந்த என்ன கடவது இறே –வருவானே-வரும் ஸ்வ பாவனே-முன்பு தம் பக்கல் வரும்படியை யுபகார ஸ்ம்ருதியாலே சொல்லுகிறார்-ஒரு நாள்-ஒரு கால் நாக்கு நனைக்க என்பாரை போலே-காண -வந்தால் கொள்ளும் பிரயோஜனம் காணும் அதுவே -ஒரு தேச விசேஷத்திலும் சதா பஸ்யந்தி -தரிசனத்தை இ றே பிரயோஜனமாக சொல்லிற்று-வாராயே-ஆற்றாமை மிக்காலும்-தானே வந்து காட்ட காணும் அதுவே முறை –தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தனும் ஸ்வாம் –ஏஷ சர்வஸ்வ பூதஸ்து –என்ன கடவது இறே –

    காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து அடியேன்
    நாணி நன்னாட்டலமந்தால் இரங்கி யொருநாள் நீ யந்தோ
    காண வாராய்
    கரு நாயிறுதிக்கும் கருமா மாணிக்கம்
    நாள் நன்மலைபோல் சுடர்ச் சோதி முடிசேர் சென்னி யம்மானே–8-5-2–ஒருகால் அழைத்தது வரக் காணா விட்டால் -நம் ஆசையை ஆவிஷ்கரித்தோம்-வந்த போது வருகிறான் -என்று இருக்கிறார் அல்லர் -நிரந்தரமாக கூப்பிடா நிற்பர் –யந்தோ-உன் வை லக்ஷண்யம் அறியாது ஒழிந்தால் -என் ஆர்த்தியும் அறியாது ஒழிவதே-காண வாராய்-பிரயோஜனார்த்தியாய் அழைக்கிறேனோ –

    கொண்டல்வண்ணா குடக்கூத்தா வினையேன் கண்ணா கண்ணா -என்
    அண்ட வாணா வென்று என்னை ஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால்
    விண் தன்மேல் தான் மண் மேல்தான் விரி நீர்க் கடல் தான் மற்றுத் தான்
    தொண்டனேன் உன் கழல் காண ஒரு நாள் வந்து தோன்றாயே-8-5-6-தூணிலே வந்து தோற்றினால் போல் ஆதல் -ஆனைக்கு உதவ வந்து தோற்றினால் போலே யாதல் தோற்றவுமாம்-தொண்டனேன் -உன் திருவடிகளிலே கைங்கர்யத்தில் சபலனான நான்-உன் கழல் காண-எனக்கு ஜீவனமான திருவடிகளை காண-ஒரு நாள் வந்து தோன்றாயே—பல நாள் வேணும் என்று நிர்பந்திக்கிறேனோ என் சத்தையை நோக்குகைக்கு ஒரு நாள் வந்து தோற்றி அருள வேணும் –

    பிறந்த மாயா பாரதம் பொருத மாயா நீ யின்னே
    சிறந்த கால் தீ நீர் வான் மண் பிறவுமாய பெருமானே
    கறந்த பாலுள் நெய்யே போல் இவற்றுள் எங்கும் கண்டு கொள்
    இறந்து நின்ற பெருமாயா உன்னை எங்கே காண்கேனே-8-5-10-காலத்தாலும் ஆதஞ்சா நாதிகளாலும் தோற்றுகிற நெய் கறந்த காலத்தில் தோற்றாது இ றே -உன் பக்கல் ந்யஸ்த பரராகை யாகிற ஸம்ஸ்காரத்தால் அல்லது காண வரியை என்கை-உன்னை எங்கே காண்கேனே–பரமபதத்தில் காட்சிக்கு சரீர சம்பந்தம் அற வேணும் -அவதாரத்துக்கு பிற்பாடான ஆனேன் -அர்ச்சாவதாரம் நினைத்தபடி கிடையாது -அந்தர்யாமித்வம் கண்ணுக்கு விஷயம் அன்று -இனி எங்கே காணப் புகுகிறேன் –

    எங்கே காண்கேன் ஈன் துழாய் அம்மான் தன்னை யான் என்று என்று
    அங்கே தாழ்ந்த சொற்களால் அந்தண் குருகூர்ச் சடகோபன்
    செங்கேழ் சொன்ன வாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
    இங்கே காண விப் பிறப்பே மகிழ்வர் எல்லியும் காலையே-8-5-11–ஐஸ்வர்ய ஸூ சகமான திருத் துழாய் மாலையை யுடைய சர்வேஸ்வரனை கண்டு அல்லது தரிக்க மாட்டாத படி சபலனான நான் எங்கே காணக் கடவேன்-என்று என்று-நிரந்தரமாக சொல்லி -ஒரு கால் சொல்லி -ஆசையை ஆவிஷ்கரித்தோம் இறே -என்று ஆறி இருக்கிறார் அல்லரே -லாபத்தளவும் சொல்லும் அத்தனை இறே-இங்கே காண விப் பிறப்பே மகிழ்வர்-எல்லியும் காலையே-–இஹ லோகத்தில் இஜ்ஜன்மத்திலே திவா ராத்திரி விபாகம் இன்றிக்கே பகவத் அனுபவம் பண்ணி மகிழப் பெறுவர் –ஆளாக் கூப்பிட்டு அழைத்தக்கால் –என்று கூப்பிட வானத்து முகம் காட்டாததால் பிறந்த தன்னுடைய அவத்யத்தை-ஆழ்வார் ஆஸ்ரயித்தார் பக்கலிலே தீருமாயிற்று அவன் -பார்யையோடு வெறுப்புண்டால் அவள் பக்கல் முகம் பெறுகைக்கு பிரஜைகளை ஸ்லாகிப்பாரை போலே –

    புளிங்குடிக் கிடந்து வர குணமங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று
    தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே என்னை ஆள்வாய் எனக்கு அருளி
    நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்பப்
    பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வாராயே–9-2-4–தெளிந்த நீரை முகக்கையாலே தர்ச நீயமான மேகமானது பவளத்தைப் பூத்தால் போலே யாயிற்று திரு வதரத்தில் பழுப்பு இருப்பது –இவர் சமப்ரமத்தைக் கண்டு அவன் பண்ணும் ஸ்மிதம் இருக்கிற படி –நீ காண வாராயே–நான் காண நீ வர வேணும் -என் எதிரே உன் நடை அழகு காண வேணும் -அவன் கூத்து இருக்கிற படி -வல்லார் ஆடினால் போலே இறே நடை அழகு இருப்பது –

    பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வந்து நின் பல் நிலா முத்தம்
    தவழ் கதிர் முறுவல் செய்து நின் திருக் கண் தாமரை தயங்க நின்று அருளாய்
    பவள நன் படர்க் கீழ் சங்கு உறை பொருநல் தண் திருப் புளிங்குடி கிடந்தாய்
    கவள மாக் களிற்றின் இடர் கெடத் தடத்துக் காய்சினப் பறவை ஊர்ந்தானே–9-2-5-அவாக்ய அநாதரா என்கிறபடியே ஒன்றுக்கும் விக்ருதன் ஆகாத நீ -அனுகூல தர்சனத்தாலே அகவாயில் பந்தம் தோற்ற விக்ருதனாய் ஸ்மிதம் பண்ணி நிற்கும் படியைக் காண வேணும் –பல் நிலா முத்தம்-பல்லாகிற நிலாவை யுடைய திரு முத்து நிரையானது-தவழ் கதிர் முறுவல் செய்து-கதிர் தவழும் படி -கதிர் புறப்படும் படி -முறுவல் செய்து-நின் திருக் கண்தாமரை தயங்க நின்று அருளாய்-திருக் கண்கள் ஆகிற தாமரை விளங்க நாலடி வந்து -முடிய வர மாட்டாதே ஸ்தப்தனாய் நிற்கும் நிலையைக் காண வேணும் -கண்ணினுடைய ஸ்மிதம் இருக்கும் படி-

    மையார் கருங்கண்ணி கமல மலர்மேல்
    செய்யாள் திரு மார்வினில் சேர் திருமாலே
    வெய்யார் சுடர் ஆழி சுரி சங்கம் ஏந்தும்
    கையா உனைக் காணக் கருதும் என் கண்ணே–9-4-1-சங்க சக்ர கதா தர –ஸ்ரீ வத்ஸ வக்ஷ-என்கிற வடிவையுடைய உன்னை-காணக் கருதும் -காண ஆசைப்படா நின்றது -இவ்வஸ்துவைப் பார்த்தால் கண்டு கொண்டே இருக்கை இறே சத்ருசம் -நித்ய ஸூ ரிகளும் சதா தர்சனம் இறே பண்ணுவது –
    என் கண்ணே–சம்சாரிகளில் இவர்க்கு உள்ள வியாவ்ருத்தி போருமாயிற்று -இவரில் காட்டில் இவருடைய கண்ணுக்கு –

    கண்ணே உன்னைக் காணக் கருதி என்நெஞ்சம்
    எண்ணே நின்று இயம்பும் கொண்ட சிந்தையதாய்
    விண்ணோர் முனிவர்க்கு என்றும் காண்பு அரியாயை
    நண்ணாது ஒழியேன் என்று நான் அழைப்பேனே – -9-4-2—கண்ணே -எனக்கு த்ருஷ்ட்டி யானவனே –
    உன்னைக் காணக் கருதி -நிரதிசய போக்யனான உன்னைக் காண ஆசைப்பட்டு -காண்கைக்கு சாதனமான கண்ணும் காணப்படும் விஷயமும் அவனே -என்கிறார் –சஷூச் ச த்ரஷ்டவ்யஞ்ஜ நாராயணா -என்னக் கடவது இறே -அவன் தன்னாலே அவனைப் பெறும் அவர் இறே இவர் -ப்ராப்யத்தில் நியதி போலே இறே இவர்க்குப் ப்ராபகத்தில் நியதியும் –-என் நெஞ்சம்-இயற்றுவாய் எம்மோடு நீ கூடி -என்ன வேண்டும்படியான நெஞ்சம் –-எண்ணே — கொண்ட சிந்தையதாய்–எண் கொண்ட மநோ ரதத்தை யுடைத்தாய் -பஹு மநோ ரதங்களைப் பண்ணி -காண வேணும் -காணாதே பட்ட துக்கத்தை போக்க வேணும் -அடிமை செய்ய வேணும் -என்று –-நின்று இயம்பும்-நிரந்தரமாக கூப்பிடா நிற்கும் -வாக் விருத்தியும் தானே ஏறிட்டுக் கொள்ளா நிற்கும் –

    உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத்
    தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
    வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான்
    கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே
    -10-8-7-கண்டு களிப்ப –மெய் கொள்ளக் காண விரும்பும் என் கண்கள் என்று விடாய்த்த கண்கள் கண்டு களிக்கும் படியாக –-கண்ணுள் நின்று அகலானே--நான் போகச் சொல்லிலும் கண் வட்டத்திலும் நின்றும் போகிறிலன் -விஷய பிரவணரை போகச் சொன்னாலும் தூணைக் கட்டிக் கொண்டு போகாதாப் போலே -இப்படி அவனை அனுபவித்துக் களிக்கப் பெற்ற எனக்கு இனி மேல் ஒரு குறை யுண்டோ –

    கண்ணுள் நின்று அகலான் கருத்தின் கண் பெரியன்
    எண்ணில் நுண் பொருள் ஏழிசையின் சுவை தானே
    வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப் பேரான்
    திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே –10-8-8-சதா தரிசனத்துக்கு வேறு தனக்கு ஒரு விபூதி யுண்டு என்று இருக்கிறிலன்-கருத்தின் கண் பெரியன்-நம் விஷயத்தில் அவன் பார்க்கிற பாரிப்பு நமக்கு மநோ ரத விஷயம் அன்று -நம்மைக் கொண்டு போகையிலே பாரித்து அர்ச்சிராதி கணங்களை அழைப்பது –தான் அவர்களுக்கு முற்பாடன் ஆவதாகா நின்றான் –

    அநந்தரம் பரஞான அவஸ்தை ஆகிறது இன்னது என்கிறார்–

    இருந்தமை யென்றது பூர்ண பரஜ்ஞாநம்‌.–சூரணை -231-

    அதாவது–அந்தமில் பேர் இன்பத்து அடியாரோடு இருந்தமை -2-3-10–என்று – அடியார்கள் குழாங்களைக் கூடுவது என்று கொலோ -10-9-11–என்று ஆசைப் பட்ட படி – அர்ச்சிராதி கதியாலே -தேச விசேஷத்திலே -போய் -பகவத் ஸ்வரூபாதிகளை பரி பூர்ண அனுபவம் பண்ணுகிற நித்ய ஸூரிகளின் திரளிலே கூடி இருந்தாராக தரிசித்துப் பேசின – சூழ் விசும்பணி முகில் -10-9- -பூரணமான பர ஞானம் என்கை —

    சூழ்விசும்பணிமுகில்‌ தூரியம்‌ முழக்கி” (திருவாய்மொழி 10-9-1 என்று தொடங்கி “அந்தமில் பேரின்பத்தடியரோ டிருந்தமை” (திருவாய்மொழி 10-9-11) என்று அர்ச்சிராதி மார்கத்தையும்‌ மார்கஸ்த்தரான புருஷர்களுடைய ஸத்காரத்தையும் தேஸ விஸேஷ ப்ராப்தியையும்‌ பகவதநுபவத்தையும்‌ பகவத் ஸ்வரூப ரூப குண விபூ,திகளை ஸாக்ஷாத்கரித் தநுபவிக்கிற நித்ய ஸூரிகளோடு ஏக ரஸராய்க்‌ கொண்டிருந்த நுபவிக்கிற ப்ரகாரத்தையும்‌ யதாவாக ஸாக்ஷாத்கரிக்கையாலே சூழ்விசும்பணிமுகில்‌ பூர்ண பரஜ்ஞாநமாய்‌ இருக்கிறது –

    களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
    ஒளிக் கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ
    துளிக்கின்ற வான்நிலம் சுடர் ஆழி சங்கேந்தி
    அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே -2-3-10—அடியார்கள் குழாங்களையே –-இவன் தன்னையே அன்றிக்கே இவனுடைய ரக்ஷகத்வத்திலே தோற்று இருக்கும் ததீயர் திரள்களை –
    குழாங்களையே –-திரளாக வேணும் -அது தான் அநேகமாக வேணும்-இவ்விஷயத்துக்கு உசாத் துணையாம் போது அசங்க்யாதராக வேணும் என்று இருக்கிறார் –உடன் கூடுவது என்று கொலோ-நான் எனக்கு என்று அகன்று நிற்க வேண்டாதே-அத் திரளில் ஒரு நீராகக் கூடுவது என்றோ-வைஷ்ணவ ஸஹவாசம் இனிது என்று இருக்கச் செய்தேயும் அஹங்காரத்தால் செய்யப் போகாது ஒழிகிறது இறே

    சூழ் விசும்பணி முகில் -10-9-வேதாந்தங்களில் பிரசித்தமான அர்ச்சிராதி கதி மார்க்கத்தையும் -சரீர விஸ்லேஷ சமயத்தில் வரும் கிலேசம் எல்லாம் ஆறும் படி தானே வந்து முகம் காட்டும் படியையும் –
    மார்க்கஸ்தரான புருஷர்களுடைய ஸத்காரங்களையும் -அம்மாக்கத்தாலே போய்ப் புகக் கடவ பரம பதத்தையும்-நித்ய ஸூரிகள் வந்து ஆதரிக்கும் படியையும் -பிராட்டிமாரும் ஸ்ரீ வைகுண்ட நாதனும் எதிரே வந்து ஆதரிக்கும் படியையும் –நித்ய ஸூரிகள் சேவிக்க பிராட்டிமாரோடு வீற்று இருந்து அருளுகிற படியையும் -பரம ப்ராப்யரான நித்ய ஸூ ரிகள் நடுவே தாமே ஆனந்த நிர்ப்பரராய் இருக்கும் படியையும் காட்டி அருளக் கண்டு ப்ரீதராய் -அத்தை அந்யாபதேசத்தாலே பேசி அனுபவிக்கிறார்
    -தமக்கு அவன் பண்ணிக் கொடுத்த பேற்றை ஸ்ரீ வைஷ்ணவர்கள் எல்லாரும் பெற்றவராக பேசுகிற இது -அந்யாபதேசமாவது- அது தனக்கு பிரயோஜனம் -இங்குள்ளார் ஆழ்வார் பேறு நமக்குத் தப்பாது -என்று இருக்கைக்காக –

    சூழ்  விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
    ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின
    ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
    வாழ் புகழ் நாரணன் தாமரைக் கண்டு உகந்தே –10-9-1-திரு நாட்டுக்குப் போக உபக்ரமிக்கிற ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்ட ப்ரீதி அதிசயத்தாலே -ஸ்த்தாவர ஜங்கமங்களுக்குப் பிறந்த விக்ருதியை அருளிச் செய்கிறார்-

    நாரணன் தாமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில்
    பூரண பொற் குடம் பூரித்தது உயர் விண்ணில்
    நீரணி கடல்கள் நின்றார்த்தன நெடுவரைத்
    தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே–
    10-9-2-மேல் உண்டான லோகங்கள் பண்ணின ஸத்காரங்களை அருளிச் செய்கிறார் –

    தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை
    பொழிவனர்பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே
    எழுமின் என்று இருமருங்கு இசைத்தனர் முனிவர்கள்
    வழி இது வைகுந்தர்க்கு -என்று வந்து எதிரே
    –10-9-3-ஆதி வாஹிக லோகங்களில் உள்ளார் திரு நாட்டுக்கு நடக்கிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் எதிரே வந்து புஷ்ப வர்ஷாதிகளைப் பண்ணிக் கொண்டாடுகிற படியை அருளிச் செய்கிறார் –

    எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்
    கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்
    அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த
    மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே
    -10-9-4-மேலில் லோகங்களில் தேவாதிகள் ஸ்ரீ வைஷ்ணவர்கள் போகிற வழிகளில் தங்குகைக்கு பார்த்த பார்த்த இடம் எல்லாம் தோப்புக்கள் பண்ணியும் -வாத்யாதி கோஷங்களைப் பண்ணியும் -கொண்டாடுகிற படியை யருளிச் செய்கிறார் –

    மாதவன் தமர் என்று வாசலில் வானவர்
    போதுமின் எமது இடம் புகுதுக என்றலும்
    கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
    வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே
    –10-9-5-ஆதி வாஹிக கர்த்தாக்களான வருண இந்த்ராதிகளும் மற்றும் உள்ளாறும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குப் பண்ணும் ஸத்காரத்தை அருளிச் செய்கிறார் –

    வேள்வி உள் மடுத்தலும் விரை கமழ் நறும் புகை
    காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர்
    ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று
    வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே–
    10-9-6-ஸத்கார பூர்வகமாக தேவ ஸ்த்ரீகள் உகந்து ஸ்ரீ வசனங்களை ஆசீர் வசனங்களை பண்ணினார்கள் என்கிறார் –

    மடந்தையர்  வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
    தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடு கடல்
    கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி
    குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே–10-9-7-மருத் கணமும் வஸூ கணமும் தங்கள் எல்லைகளுக்கு அப்பாலும் செல்லலாம் இடம் எல்லாம் சென்று ஸ்ரீ வைஷ்ணவர்களை ஸ்தோத்ரம் பண்ணினார்கள் என்கிறார்-

    குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று
    முடி யுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள
    கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
    வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே–
    10-9-8-பிரகிருதி மண்டலத்துக்கு அவ்வருகாகத் திரு நாட்டிலே எல்லைக்கு புறம்பாக நித்ய ஸூரிகள் ஸ்ரீ வைஷ்ணவர்களை எதிர் கொள்ளுகிறபடியை யருளிச் செய்கிறார் –

    வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
    வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று
    வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
    வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே
    –10-9-9-ஸ்ரீ வைகுண்டத்தில் சென்று திரு வாசலிலே முதலிகளாலே சம்மதரானவாறே-அங்குத்தை நித்ய ஸூரிகள் சம்சாரிகள் ஆனவர்கள் ஸ்ரீ வைகுண்டத்தில் வருவதே -இது என்ன புண்ய பலம் -என்று விஸ்மயப் பட்டார்கள் என்கிறார்

    விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர்
    பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
    நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
    மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே
    –10-9-10-சம்சாரத்தில் நின்றும் ஸ்ரீ வைகுண்டத்தில் ஸ்ரீ வைஷ்ணவர்களை அங்குள்ள அயர்வறும் அமரர்கள் கொண்டாடும் படியை அருளிச் செய்கிறார் –

    வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
    அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
    கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
    சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–
    10-9-11-நிகமத்தில் இத்திருவாய் மொழி அப்யஸிக்க  வல்லார் வைகுந்தத்து முனிவரோடு ஒப்பர் -என்கிறார் 

    அநந்தரம் பரம பக்தத்யவஸ்தை இன்னது என்கிறார் —

    முடிந்த அவாவென்றது பரமபக்தி–சூரணை -232-

    அதாவது-அப்படி தர்சித்த அது தான் மானச அனுபவமாய் -பாஹ்ய அனுபவ யோக்யம் அல்லாமையாலே – பெரு விடாய் பிறந்து கூப்பிட்டுத் தரிக்க மாட்டாமல் – திரு வாணை இட்டுத் தடுத்து -பெறா ஆணை அல்லாமை சாதித்து -பேற்றோடு தலைக் கட்டின – முடிந்த அவாவில் அந்தாதி இப்பத்து–10-10-11 -என்கிற-முனியே நான் முகன் -பக்தியினுடைய சரம அவதியான பரம பக்தி என்கை —

    இப்படி ஸாக்ஷாத்கரித்த விது மாநஸாநுபவமாகையாலே யதா மநோரதாநுபவ ஸித்‌தியாகத்‌ திருவாணை யிட்டுத்‌ தடுத்துப்‌ பெருங் கூப்பீடாகக்‌ கூப்பிட்டுப்‌ பெற்றாலல்லது தரிக்க வொண்ணாத படியாய்‌ “முடிந்த அவாவில்‌ அந்தாதி இப்பத்து” (திருவாய்மொழி 10-10-11) என்கிற “முனியே நான்முகன்‌” (திருவாய்மொழி 10-10) பரமபக்தி தஸையாயிருக்கிறது –

    பசியாலும் தாஹத்தாலும் தளர்ந்து தாயையும் காணப் பெறாத ஸ்தநந்த்ய பிரஜை ஆர்த்தியின் மிகுதியால் கூப்பிடுமா போலே நிர்க்ருணரானாருடைய ஹ்ருதயங்களும் கூட இரங்கும் படி வளவேழ் உலகில் படியை யுடைய தாம் தம்முடைய ஆர்த்தியின் மிகுதியால் தம்முடைய ஸ்வரூபம் அனுசந்திக்கவும் ஷமர் இன்றிக்கே கலங்கி அவனுக்கு இட்ட அடி பேர ஒண்ணாத படி பெரிய பிராட்டியார் திருவாணை இட்டு காட்டுத் தீயில் அகப்பட்டாரைப் போலே போக்கடி அற்று மஹா கிலேசத்தோடே தூத ப்ரேஷண த்தால் பிற வாயிலிட்டு நீட்டு கையும் இன்றிக்கே – தம்மை ரக்ஷித்து அல்லது எம்பெருமானுக்கு திரு நாட்டிலும் கூட இருப்பு அரிதாம் படி பெரு மிடறு செய்து ஆர்த்த த்வனியோடு மிகவும் கூப்பிட்டு ––சாகாம்ருக ராவண சாயகார்த்தா ஜகமுச் சரண்யம் சரணம் ஸ்ம ராமம் -என்கிறபடியே தரிக்க மாட்டாமையாலே அவன் திருவடிகளிலே சரணம் புக – பரம தயாளுவான சர்வேஸ்வரன் இவற்றிலும் காட்டிலும் தான் நொந்து – பெரிய பிராட்டியாரோடே கூட பெரிய திருவடி மேலே இவர் அபேக்ஷித்தாலே போலே தானான படியே பரி பூர்ணனாக வந்து தோற்றி அருளி -இவருடைய பிரகிருதி சம்பந்தத்தை அறுத்து -இவருடைய விடாயும் தன்னுடைய விடாயும் தீரும் படி சம்ச்லேஷித்து தம்முடைய அபேக்ஷிதங்கள் எல்லாம் செய்து அருளினான் என்கிறார் –
    அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று இவர் ஆசைப் பட்ட படியே அத்திரளிலே புகப் பெற்று- என் அவா அறச் சூழ்ந்தாயே என்றும் – அவாவற்று வீடு பெற்ற என்றும் இவர் வாயாலே சொல்லும் படி இவர் விடாயும் தீர்ந்து இவருக்கும் அவ்வருகான தன் விடாயும் தீரும் படி சம்ச்லேஷித்து அருளினான் –என்கிறார் –

    அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
    அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
    அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
    அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே
    –10-10-11-பெற்று அல்லது தரிக்க ஒண்ணாத படியான பரம பக்தியால் பிறந்தது யாய்த்து -இத் திருவாய் மொழி -கீழ் அடைய பர பக்தி பிறந்து சொல்லிற்று யாயிற்று -பரம பக்தி பிறந்து சொல்லிற்று யாயிற்று இத் திருவாய் மொழி –அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–இவற்றை அறிந்தவர்கள் சம்சாரத்திலே பிறந்து வைத்தே நித்ய ஸூரிகளோடே ஒப்பர்கள் –1- முதல் திருவாயமொழியில் நாராயண சப் தார்தத்தை அனுசந்தித்து பிறருக்கு உபதேசிக்கும் இடத்தில் –வண் புகழ் நாரணன் -என்று பிரயோகித்து –அமைவுடை நாரணன் -என்றும் –செல்வ நாரணன் -என்றும் –நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன் -என்றும் –திரு நாரணன் -என்றும் –நாராயணன் நாங்கள் பிரான் -என்றும் -சொல்லிக் கொடு போந்து –திண்ணம் நாரணமே என்றும் –வாழ் புகழ் நாரணமே -என்றும் தலைக் கட்டுகையாலே –அவனுக்கு அசாதாரணமான திரு நாமம் இதுவே என்னும் இடம் தோற்றுகிறது--2-முதலிலே மலர் மகள் விரும்பும் -என்றும் திருவுடை அடிகள் என்றும் –கமல மலர் மேலே செய்யாள் -என்றும் –நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பன் -என்றும் -சொல்லிக் கொடு போந்து –திருவாணை நின்னாணை கண்டாய் –என்றும் கோலா மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -என்றும் தலைக் கட்டுகையாலே –ஸ்ரீ மானான நாராயணனே ப்ராப்யமும் ப்ராபகமும்-என்று இவருக்கு பக்ஷம் என்னும் இடம் தோற்றுகிறது -இவ்வர்த்தம் உபநிஷத் பிரசித்தம் -அநந்ய பாரமான நாராயண அநுவாகத்திலே-நாராயண சப் தத்தாலே சர்வாதிகனைச் சொல்லி –ஹ்ரீச்சதே லஷ்மீ ச்ச பத்நவ் -என்று உத்தர நாராயணத்திலே சொல்லிற்று –-3-முதலிலே மயர்வற மதிநலம் அருளினன் என்றும் –எனதாவி தந்து ஒழிந்தேன் இனி மீள்வது என்பது உண்டே -என்றும் சொல்லி –நாலு பிரயோகம் எடுத்து சரணம் புக்கு -தேவிமாராவாரிலே -தாள்களை எனக்கே தலைத் தலைச் சிறப்பத் தந்த -என்றும் சொல்லிக் கொடு போந்து –இன்று என்னைப் பொருளாக்கி தன்னை என்னுள் வைத்தான் அன்று என்னைப் புறம் போகப் புணர்ந்து என் செய்வான் -என்றும் தலைக் கட்டுகையாலே –அம் மிதுனத்தைப் பெறுகைக்கு சாதனமும் அவனுடைய நிர்ஹேதுக கிருபை என்னும் இடம் தோற்றிற்று--4-முதலிலே அயர்வறும் அமரர்கள் அதிபதி –என்று தொடங்கி –அடியார்கள் குழாங்களை— உடன் கூடுவது என்று கொலோ என்று பிரார்த்தித்து –பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு அடிமையில் ததீய சேஷத்வத்தை பரக்கத் சொல்லி -அடியாரோடு இருந்தமை என்று தலைக் கட்டுகையாலே பகவத் சேஷத்த்வத்தின் யுடைய எல்லை யாகிறது ததீய சேஷத்வம் என்னும் இடம் தோற்றிற்று –இவ்வர்த்தங்கள் இப்பிரபந்தத்துக்கு பிரதானம் -என்று கருத்து –-பகவத் ந்யஸ்த பரராய் இருக்கும் அதிகாரிகளுக்கு போது போக்கு இப்பிரபந்தம் –தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலைகள் சொன்னேன் -என்றும் –கேட்டாரார் வானவர்கள் -என்றும் தானே அருளிச் செய்தார் இறே 

    இந்த பரபக்தியாதிகளின் வேஷத்தை பகவத் வசனத்தாலே தர்சிப்பிக்கிறார்

    இவை ஜ்ஞாந -தர்ஸந – ப்ராப்தி அவஸ்த்தைகள்‌.–சூரணை-233-

    அதாவது-இந்த-பரபக்தி -பரஞான -பரம பக்தி தசைகள் –-பக்த்யா த்வய அந்ய யா சக்ய அஹமேவம் விதோர்ஜுனா ஜ்ஞாதும் த்ருஷ்டுஞ்ச தத்வேன ப்ரேவேஷ்டுஞ்ச பரந்தப – ஸ்ரீ கீதை-11-54-என்று
    அர்ஜுனனைக் குறித்து திருத் தேர் தட்டிலும் —-பரபக்தி பரஞான பாமபக்தி ஏக ஸ்வாபம் மாம் குருஷ்வ -ஸ்ரீ கத்ய த்ரயம் -என்று- பிரார்த்தித்த ஸ்ரீ பாஷ்யகாரரைக் குறித்து–மத் ஜ்ஞான தர்சன ப்ராப்திஷு நிச்சம்சயஸ் சுகமாஸ்வ -ஸ்ரீ கத்ய த்ரயம் -என்று சேர பாண்டியனிலும் அவன் அருளிச் செய்த ஞான தர்சன பிராப்த்ய அவஸ்தைகள் என்கை —இத்தால் –பகவத் சம்ஸ்லேஷ விஸ்லேஷ ஏக சுக துக்கராம் படியான பரபக்தி -ஞான அவஸ்தையாகவும் – பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை -விசித தமமாக சாஷாத்கரிக்கிற -பர ஞானம் -தர்சன அவஸ்தையாகவும் – அப்படி சாஷாத் கரித்த வஸ்துவை அப்போதே கிட்டி அனுபவிக்க பெறாவிடில் முடியும்படியான பரம பக்தி -ப்ராப்ய அவஸ்தையாகவும் -சொல்லப்படும் என்ற படி —

    “ஜ்ஞாதும்‌ த்‌,ரஷ்டுஞ்ச தத்வேந ப்ரவேஷ்டுஞ்ச பரந்தப” (கீதை 11-54) என்றிந்த பரபக்தி பரஜ்ஞாந பரம பக்திகளை ஜ்ஞாந தர்ஸந ப்ராப்தி அவஸ்தைகள்‌ என்கிறார்‌. எங்ஙனே என்னில்‌ பகவத்‌ ஸம்ஸ்லேஷ விஸ்லேஷைக ஸுகதுக்கராம்படியான ப்ரேம பூர்வகமான பரபக்தி ஜ்ஞாந தஸையாயும்‌, பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை ஸாக்ஷாத்கரிக்கிற பரஜ்ஞாநம்‌ தர்ஸந தஸையாயும்‌ ஸாக்ஷாத்கார ஸமநந்தரம்‌ அப்போதே அநுபவியா விடில்‌ முடியும்படியான பரமபக்தி ப்ராப்தி தஸையாயுமிருக்கிற அவஸ்தா விஸேஷம்‌ என்கிறார்

    பக்த்யா த்வநந்யயா ஸக்ய மஹமேவஂவிதோர்ஜுந.–
    ஜ்ஞாதும் த்ருஷ்டும் ச தத்த்வேந ப்ரவேஷ்டும் ச பரந்தப-–৷৷11.54৷৷எதிரிகளைத் தவிக்கச் செய்யும் அர்ஜுனா நீ என்னை எப்படிக் கண்டு இருக்கிறாயோ அவ்வண்ணம் உள்ளபடி நான் வேதங்களைக் கொண்டும் காண முடியாதவன் – தவத்தைக் கொண்டும் காண முடியாதவன் – தானத்தைக் கொண்டும் காண முடியாதவன் – யாகத்தைக் கொண்டும் காண முடியாதவன் – நான் ஸ்வயம் பிரயோஜன பக்தியாலேயே இவ்வண்ணமாக உள்ளபடி சாஸ்த்ரங்களால் அறிவதற்கும் காண்பதற்கும் அடைவதற்கும் கூடியவன்

    அதஸ் த்வம் தவ தத்த்வதோ மத் ஜ்ஞான தர்சன ப்ராப்திஷூ நிஸ் சம்சயஸ் ஸூக மாஸ்ஸ்வசூரணை -23-அதஸ் –ஆகையாலே–த்வம் – இப்படிப் பட்ட நம்முடைய மெய்ம்மைப் பெரு வார்த்தையைக் கேட்டு -என்னையே விஸ்வசித்து இருக்கிற நீர்–தவ தத்த்வதோ மத் ஜ்ஞான தர்சன ப்ராப்திஷூ –மத் -என் விஷயமாக-தவ-உமக்கு-தத்வத -மெய்யாக உண்டான-மெய்யே என்னுடைய ஜ்ஞான தர்சன ப்ராப்திகளிலேபக்த்யா தவ நன்யயா சக்ய அஹம் ஏவம் விதோர்ஜூன ஜ்ஞாதும் த்ரஷ்டும் ச தத்த்வேன ப்ரவேஷ்டும் ச பரந்தப-ஸ்ரீ கீதை -11-54- என்கிற ஜ்ஞான தர்சன ப்ராப்திகளிலே
    நிஸ் சம்சயஸ் ஸூக மாஸ் ஸ்வ-சம்சயம் இல்லாதவராய்க் கொண்டு சுகமே வர்த்தியும்-

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
    ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌–16 –முக்தி பாதம்—(229 – 234 ) 25–ஆர்த்த ப்ரபந்ந ஸூரி ஸரீர வியோகா பாவ காரணாதி கரணம்‌ –(229)ஸ்ரீ மணவாள மா முனிகள் –

    August 9, 2026

    1) பூர்வ த்‌,விகம்‌ – ஸூரி வைபவம்‌ 1 முதல்‌ 186 வது ஸூத்ரம்‌ வரை (186)
    (2) உத்தர த்‌,விகம்‌ – ஸூரி ஸுக்த்தி வைபவம்‌– 187 முதல்‌ 234 முடிய (48)

    1) ப்ரத, மோத்‌, யாயம் -ஸாஸ்த்ர தாத்பர்ய அதிகாரி வைபவம்‌ 1-38 (38)
    (2) த்‌,விதீயோத்‌, யாய: – க்‌,ரந்த, கர்த்ரு வைப,வம்‌ 39 – 186 (148)
    (3) த்ருத்யோத்‌, யாயம் – க்‌,ரந்தாந்தர தார தம்ய வைப,வம்‌ 187-207 (21)
    (4) சதுர்த்தே ரத்‌, யாயம் -கிரந்த, ப்ரதிபாத்‌,ய க்ரம வைப,வம்‌ 208-234 (27)

    16 –முக்திபாதம்—229 – 234 – மொத்தம் –6 – ஸூரணைகள்–இதில் மூன்று அதிகரணங்கள்
    25–ஆர்த்த ப்ரபந்ந ஸூரி ஸரீர வியோகா பாவ காரணாதி கரணம்‌ –229—ஒரே ஸூரணை
    26– பர ப,க்த்யாதி, நிரூபண ஸ்தாநாதிகரணம்‌ 230 – –233—மொத்தம் –4–ஸூரணைகள்
    27 –திவ்ய ப்ரபந்த, தாத்பர்ய ப,க,வத்‌-ப்ரஸாதாதி கரணம்‌ –234 –ஒரே ஸூரணை-

    இனிமேல் இவர் பிரதமத்தில் –இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று ஆர்த்தராய் சரணம் புக்க போதே விரோதி நிவ்ருத்த பூர்வகையான ஸ்வ பிராப்தியை பண்ணுவியாமல் இவ்வளவாக இவரை வைக்கைக்கு அடி எது என்னும் ஆ காங்க்ஷையிலே-வைக்கைக்கு ஹேது பல உண்டு என்னும் அத்தையும் -அவை எல்லா வற்றிலும் முக்ய ஹேது இன்னது என்னும் அத்தையும் அருளிச் செய்கிறார் –இனிமேலிவர்‌ ப்ரதமத்திலே ஆர்த்தராய்க்‌ கொண்டு ஸரணம்‌ புக்க போதே விரோதியை விடுவித்து பேற்றோடே தலைக் கட்டிக்‌ கொடாதே இவரை இவ்வளவாக வைக்கைக் கடியேதென்னில்‌ அதுக்கு நாலஞ்சு ஹேதுக்களை அருளிச் செய்து அவை எல்லாவற்றிலும்‌ இவர்க்குப்‌ பிறந்த பரமபக்தியை வெளியிடுகைக்காக வைத்தான்‌ என்கிறார்‌.

    உறாமையோடே உற்றேன்‌ ஆக்காது ஒழிந்தது, நாடு திருந்த நச்சுப்‌ பொய்கை ஆகாமைக்கு, ப்ரபந்தம்‌ தலைக் கட்ட, வேர்சூடுவார்‌ மண் பற்றுப் போலே என்னுமவற்றிலும்‌ இனி இனியென்று இருபதின் கால்‌ கூப்பிடும்‌ ஆர்த்தி அதிகார பூர்த்திக் கென்னுமது முக்‌யம்‌.–சூரணை-229 –-

    அதாவது – பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை –என்று அவித்யா கர்ம வாசன ருசி பிரகிருதி சம்பந்தங்கள் ஆகிற பிராப்தி பிரதிபந்தங்களை விடுவிக்க வேணும் என்று -ஆர்த்தராய் திரு அடிகளில் விழுந்து அபேஷித்த போதே அவற்றைப் போக்கி –உற்றேன் உகந்து பணி செய்து உன பாதம் பெற்றேன்-என்று திரு அடிகளைக் கிட்டி – ப்ரீதி பூர்வகமாக அடிமை செய்யப் பெற்றேன் என்னும்படி ஆக்காமல் -இவரை வைத்து –

    “பொய்ந் நின்ற ஞானமும்‌ பொல்லாவொழுக்கும்‌ அழுக்குடம்பபும்‌ (இன்னின்ற நீர்மை இனியாமுறாமை” (திருவிருத்தம்‌-1) என்று முதலிலே அவித்‌யா கர்ம வாஸநா ருசி ப்ரக்ருதி ஸம்பந்தங்‌களை விடுவிக்க வேணுமென்று ஆர்த்தராய்‌ ஸரணம் புக்க விவர்க்கு “உற்றேன்‌ உகந்து பணி செய்து உன பாதம் பெற்றேன் ஈதே இன்னம்‌ வேண்டுவதெந்தாய்‌” (திருவாய்மொழி 10-8-10)என்று திருவடிகளைக்‌ கட்டி ப்ரீதி பூர்வகமாக அடிமை செய்யப்‌ பெற்றேன்‌ என்று பேசும் படியாகத்‌ தலைக் கட்டிக்‌ கொடாதே இவரை இவ்வளவவும்‌ ஈஸ்வரன்‌ வைக்கைக்கு ஹேதுவென்னென்னில்‌,

    பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
    இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
    எந் நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
    மெய்ந் நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே 
    –1–அடியேன் செய்யும் விண்ணப்பமே –
    வாக்ய பேதம் பிறக்கிறதோ -என்று –நீர் ஆர் -என்றான்-அடியேன் -என்கிறார் இவருடைய நான் -இருக்கிறபடி  – (அடிச்சியோம் அடியேன் என்றே எப்பொழுதும் இவர் )நான் என்றாகில் இறே –
    சொன்ன வார்த்தை -என்பது அடியேன் -என்கையாலே – செய்யும் விண்ணப்பம் -என்கிறார்-அடியேன் உடைய விஞ்ஞாபனம்-இவருடைய உக்தியிலே இவருடைய மெய்ப்பாடு அறியலாம் என்று எம்பெருமான் கேட்டருள அடியேன் -என்று தம்முடைய ஸ்வரூபத்தை விண்ணப்பம் செய்கிறார்-செய்யும் –இவ் வபேஷைக்கு மேல் இல்லை –யாம் உறாமை-என்று பன்மையாய் இருக்க-அடியேன்-என்று ஒருமையாலே ஈஸ்வரனுக்கு விஞ்ஞாபிப்பார் தாம் ஒருவருமாய் பல லாபம் சம்பந்தி சம்பந்தி பரம்பரைக்கும் ஒக்கும் என்று கருத்து –இப் பாட்டில் விரோதி நிவ்ருத்தியையும் அவதார ஸுலப்யத்தாலே -உபாய பாவத்தையும் நித்ய ஸூரி ஸேவ்யமான -ப்ராப்யத்தையும் அடியேன் -என்று ஸ்வரூபத்தையும் மெய்ந்நின்று கேட்டு அருளாய் -என்று பல அபேக்ஷையும் பண்ணுகையாலே அர்த்த பஞ்சகம் ஸூசிதமாயிற்று –அர்த்த பஞ்சகம்-தத்வ த்ரயம் ரஹஸ்ய த்ரயம் அனைத்தும் இதிலே உண்டே

    உற்றேன் உகந்து பணி செய்ய உன பாதம்
    பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்

    கற்றார் மறை வாணர்கள் வாழ் திருப் பேராற்கு
    அற்றார் அடியார் தமக்கு அல்லால் நில்லாவே–10-8-10-கெடு மரக்கலம் கரை சேர்ந்தால் போலே கிட்டிக் கொடு நின்றேன் -ப்ரீதி ப்ரேரிதனாயக் கொண்டு -திருவாய் மொழி பாடி -உன் திருவடிகளை அனுபவிக்கப் பெற்றேன் – –சாதகமாய் மேல் -சாத்தியமாகச் சொல்லுகிறது அன்று -இரண்டும் ஏக காலத்திலே உள்ளதாகையாலே –ஈதே இன்னம் வேண்டுவது-இது தானே மாறி மாறி யாவதாத்ம பாவியாகச் செல்லுகை இ றே –புநரா வ்ருத்தி இன்றிக்கே ஒழிகை யாவது -மீளாது ஒழிகை -விதி போலே இருக்கிறதன்றே –-எந்தாய்--இவ்வனுபவம் ஸ்வரூப அனுரூபம் என்கிறது -இத்தலைக்கு சேஷத்வமும் தேவர்க்கு சேஷித்வமும் இறே ஸ்வரூபம்

    தன்னுடைய சிருஷ்டி அவதாராதிகளாலும் திருந்தாத ஜகத்து –இவருடைய உபதேசத்தால் –
    ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே -என்னும்படி திருந்துகைக்காகவும் —

    (நாடு இருந்த) அவன்‌ ஸ்ருஷ்ட் யவதாரங்களாலும்‌ திருத்த வொண்ணாத ஜகத்தை ஊரும் நாடு முலகமும்‌ தன்னைப் போல்‌” (திருவாய்மொழி 6-7-2) என்னும்படி திருத்துகைக்காகவும்‌,

    ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய
    பேரும் தார்களுமே பிதற்ற
    க் கற்பு வான் இடறி
    சேரும் நல் வளம் சேர் பழனத் திருக் கோளூர்க்கே
    போருங்கொல் உரையீர் கொடியேன் கொடி பூவைகளே –6-7-2–தான் இருந்த ஊரும்-அத்தோடு சேர்ந்த நாடும் -அத்தோடு சேர்ந்த லோகமும் -ராமாவதாரத்திலும் ஒரு ஊர் இ றே திருந்திற்று -இங்கு லோகே அவ தீர்ண பாமர்த்த சமக்ர பக்தி யோகாயா -என்கிறபடியே யாயிற்று திருத்துகை –அங்கே பரம சாம்யா பன்னரைத் தேடித் போகிறாள் ஆகில் தான் திருத்தினார் ஆகாதோ – அவனுடைய பேரும் தார்களுமே பிதற்றக் –அரவிந்த லோசனன் என்றும் –மட்டவிழ் தண்ணம் துழாய் -என்றும் விரை மட்டலர் தண் துழாய் -என்றும் சொல்லா நிற்கை -ப்ரீதி பிரேரிதராய் அக்ரமாகச் சொல்லுகை –ஜாமதகன் யஸ்ய ஜல்பத -என்கிற படியே -இப்படி லோகம் அடங்க அக்ரமமாக சொல்லும் படி பண்ணி –

    பிரபதன அநந்தரம் முக்தராம் படி பண்ணில் –பிரபத்தியை நச்சு பொய்கையோ பாதி நினைத்து
    பீதராய் -இழிவார் இல்லை என்று -அது அப்படி ஆகாமைக்காகவும் –

    (நச்சுப் பொய்கை யாகாமைக்கு) இவரபேஷித்த போதே) கார்யம்‌ செய்யில்‌ நச்சுப்‌ பொய்கை போலே பகவத்‌ விஷயத்தில்‌ இழிவாரில்லை என்றும்‌ 

    தானும் தன் விபூதியும் வாழும்படி இவரைக் கொண்டு கவி பாடுவிக்க தொடங்கின பிரபந்தம்
    பரிசமாப்தம் ஆகைக்காகவும் –

    (ப்ரபந்தம்‌ தலைக்‌ கட்ட) தன்னோடு பிறரோடு வாசியற எல்லார்க்கும்‌ போக்‌யமுமாய்‌ பாவநமுமாய்‌ இருக்கிற இப்ப்ரபந்தங்களை இவரைக்‌ கொண்டு தலைக் கட்டுவித்துக்‌ கொள்ளுகைக்கும்‌,

    வேர் சூடுமவர்கள் பரிமளத்திலே லோபத்தாலே மண் பற்று கழற்றாதாப் போலே – ஞானிகளை சரம சரீரதோடே வைத்து அனுபவிக்குமவன் ஆகையாலே – இவருடைய ஞான பிரேம பரிமளம் எல்லாம் தோற்றும்படி இருக்கிற விக்கிரகத்தில் -தனக்கு உண்டான விருப்பத்தாலேயும் என்று -சொல்லும் அவற்றில் காட்டிலும்-

    (வேர் சூடுவார்‌ மண் பற்றுப்‌ போலே) வேர்‌ சூடுவார்‌ அதில்‌ மண்பற்றுக்‌ கழற்றதாப் போலே, சரம ஸரீரமான இவருடைய விக்‌ரஹத்திலுண்டான வ்யாமோஹத்தாலே விட மாட்டாமை யாலும்‌ வைத்தான்‌ என்கிற இந்த ஹேதுக்களெல்லாவற்றிலும்‌

    1-இனி யாம் உறாமை -திருவிருத்தம் -1–என்று தொடங்கி –
    2-இனி இவளை காப்பவர் யார் –திருவிருத்தம் -13
    3-இனி உன் திரு அருளால் அன்றி காப்பு அரிதால்-திருவிருத்தம் -62-
    4-இனி அவர் கண் தாங்காது –திருவாய்-1-4-4-
    5-இனி உனது வாய் அலகில்–இன் அடிசில் வைப்பாரை நாடாயே –திருவாய்-1-4-8-

    (இனியினி யென்றிருபது கால்‌ கூப்பிடும்‌ ஆர்த்தி) அவித்‌யாதி துக்கம்‌ “இந்நின்ற நீர்மை இனியாமுறாமை” (திருவிருத்தம்‌ -1) என்று தொடங்கி “இனிநெஞ்சமிங்குக்‌ கவர்வது யாமிலம்‌” (திருவிருத்தம்‌ 4), “இனி வளை காப்பவரார்‌’ (திருவிருத்தம்‌ 13),“இனியுன் திருவருளாலன்றிக்‌ காப்பரிதால்‌” (திருவிருத்தம்‌ 62), “இனியவர் கண்‌தங்காது” (திருவாய்மொழி 1-4-4),“இனி யுனது வாயலகிலின்னடிசில்‌ வைப்பாரை நாடாயே” (திருவாய்மொழி 1-4-8), 

    பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
    இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
    எந் நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
    மெய்ந் நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே 
    –1–இனி –ஈஸ்வரனும் ஒரு முழம் கை தண்ணீரும் என்று இருந்த காலம் அன்றியே உன்னால் அல்லது செல்லாது என்று இருந்த பின்பு குறைவாளனாய் தேவரீர் திருவடிகளிலே வந்த பின்பு–நிர்ஹேதுக கடாக்ஷ மூலமான ஞான லாபத்தை உடையரான பின்பு-உன் அங்கீ கார பலத்தை உடையரான நாங்கள் அணுகாத படி

    தனி நெஞ்சம் முன்னவர் புள்ளே கவர்ந்தது தண்ணம் துழாய்க்கு
    இனி நெஞ்சம் இங்குக் கவர்வது யாமிலம் நீ நடுவே
    முனி வஞ்சப் பேய்ச்சி முலை சுவைத்தான் முடி சூடு துழாய்ப்
    பனி நஞ்ச மாருதமே எம்மதாவி பனிப்பியல்வே
      —-4—-அவனோடு ஸ்பர்சம் உண்டான திருத்துழாய்க்கு கவர்வதற்கு நெஞ்சு இங்கே இல்லையே–குளிர்ந்த திருத் துழாய்க்கு-இனி நெஞ்சம்–மரம் போலே திமிர்த்து இருந்தாலும் ஆவது உண்டோ-ஓரடி முற்பட பெற்றது இல்லை-ஒப்பூணாக உண்ணலாயிற்று-உங்கள் அபேஷிதம் இல்லை(ஸாயுஜ்யம் -ஸோ ஸ்னுதே -அங்கு குணம் அனுபவம் சேர்ந்து – அது போல் இங்கு இல்லையே )-இங்குக் –-விளக்கு ஏற்றிக் காட்டுகிறாள்-கவர்வது யாமிலம் – திருவடி பாடே போம் இத்தனை-பாவியேன் பல நெஞ்சு படைக்கப் பெற்றிலேன்-தண்ணம் துழாய்க்கு கவர்வதான நெஞ்சுக்கு யாம்  இனி இங்கே உடையோம் அல்லோம்–இப்படி ஸ்ருதி பிராமண வஸீக்ருதமான நெஞ்சில் அர்த்த ஸாமர்த்ய ரூபமான போக்யாதிகளாலே கர்த்தவ்ய அம்சம் இல்லை என்று கருத்து-அங்கியே கைப்பட்டதால் அங்கங்கள் வேண்டாமே-மேலே அறிந்து கொள்ள வேண்டிய அம்சம் இல்லையே தவிர ராமாயனாதிகள் த்வரையை மூட்டி வளர்க்க வேண்டுமே -இனி கவர்வது யாமிலம் –என்று ப்ரதமத்திலே சரம ஞானம் பிறந்தவர்களுக்குப் பின்பு ஞாதவ்ய அம்சம் இல்லை என்று கருத்து

    தனி வளர் செங்கோல் நடாவு தழல் வாயரசவிய
    பனிவளர் செங்கோல் இருள் வீற்று இருந்தது பார் முழுதும்
    துனி வளர் காதல் துழாயைத் துழாவு தண் வாடை தடிந்து
    இனி வளை காப்பவர் ஆர் எனை வூழிகள் ஈர்வனனே-13-ரக்ஷக ஸந்நிதி இன்றியே பாதக ஸந்நிதி யுண்டான பின்பு-கை கழலத் தேடுகிற வளையைக் காப்பவர் யார்-பர சம்பந்த ஸூசகமான என் கையில் ஆகாரத்தை இனிக் கழலாமல் நோக்குபவர் யார்-கையில் ஆகாரம் -அஞ்சலி -வளையல்கள் -சேஷத்வ பாரதந்த்ர ஸ்வரூபம் )

    இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது
    அறையோ என நின்றதிரும் கருங்கடல்  ஈங்கிவள் தன்
    நிறையோ வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்
    முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே
     – 62–வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்-பிரபல விரோதி யுண்டாய் ஸ்வ சக்தியும் இல்லாத பின்பு ப்ராப்தனான உன்னுடைய நிருபாதிகையான கிருபையால் அன்றி ரஷிக்கை சக்யம் அன்று-ரக்ஷகன் அநாதரித்தால் சத்ருக்கள் எதிர்ப்பட்டு நின்று ஒருபடிப்பட அறை கூவுவர்கள் இறே அவர்களை போலே இக்கடல் தன ஸ்வரூபத்தால் உம்மை ஸ்மரிப்பக்கவும் ஒருபடிப்பட நின்று அறை கூவுவுமாய்இவள் பக்நைர்யையாம் படி அதிரா நின்றது –இவ் வவஸ்தையில் இவள் நிறை அடக்கமானதது ஓ -என்னாலும் துர் பேத்யமே இனி அது அழித்து உன்னையே கூப்பிடுமதான பின்பு உன்னருளால் அன்றி இல்லையே அத்தால் அவ்வவஸ்தை யானானாள் முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே –

    என்நீர்மை கண்டிரங்கி -இது தகாதென்னாத
    என்நீல முகில் வண்ணர்க்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ
    நன்னீர்மை இனியவர் கண் தங்காது என்று ஒரு வாய்ச் சொல்
    நன்னீல மகன்றில்காள் நல்குதிரோ நல்கீரோ 
    –1-4-4-இனி-பாடு ஆற்றலாவது எல்லாம் ஆற்றினாள்-இனித் தாங்க மாட்டாது

    நீயலையே சிறு பூவாய் நெடுமாலார்க்கு என் தூதாய்
    நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்து ஒழிந்தாய்
    சாயலோடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனியுனது
    வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே
    –1-4-8-இனி உனக்கு செய்ய அடுப்பது -உன் பிரகிருதி அறிந்து வளர்ப்பாரைத் தேடுகை காண் சரம தசையில் தம்முடைய திரு ஆராதனப் பிள்ளையைப் பார்த்து –வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே– என்று அருளிச் செய்தார் பெரிய திருமலை நம்பி 

    6-இனி எம்மைச் சோரேலே –திருவாய்-2-1-10-
    7-எந்நாள் யான் உன்னை இனி வந்துகூடுவனே –திருவாய்-3-2-1-
    8-எங்கு இனி தலைப் பெய்வேனே –திருவாய்-3-2-9-
    9-இனி என் ஆரமுதே கூய் அருளாயே –திருவாய்-4-9-6-
    10-ஆவி காப்பார் இனி யார் –திருவாய்-5-4-2-

    இனி யெம்மைச்‌ சோரேலே” (திருவாய்மொழி-2-1-10), “எந்நாள்‌ யானுன்னை யினி வந்து கூடுவனே” (திருவாய்மொழி 3-2-1),“ஆவி காப்பாரினியார்‌” (திருவாய்மொழி 5-4-2),

    வேவாரா வேட்கை நோய் மெல்லாவி யுள்ளுலர்த்த
    ஓவாது இராப்பகல் உன் பாலே வீழ்த்து ஒழிந்தாய்
    மாவாய் பிளந்த மருதிடை போய் மண் அளந்த
    மூவா முதல்வா இனி எம்மைச் சோரேலே –2-1-10–இனி எம்மைச் சோரேலே –-இதுக்கு முன் நீ போய் நின்று பட்டது போறும்-இனி நீ என்னை விடாது ஒழிய வேணும் என்கிறார்

    முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே
    அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்
    வெந்நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து
    எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன்
    –3-2-1-இன்ன நாள் என்று ஓர் அவதி பெற்றார் ஆகிலும் அத்தை பற்றி கொண்டு இருப்பர்-யான் –உன்னை பெறுகைக்கு தந்த உபகரணத்தை அழித்துக் கொண்ட நான் –உன்னை-என் பேற்றுக்கு போக்கடி சொல்ல வேணும் -என்று வளைக்கலாம் படி இருக்கிற உன்னை-இனி வந்து கூடுவேன்-நீ தந்த கைம்முதலையும் அழித்துக் கொண்ட பின்பு கிட்டுகைக்குப் போக்கடி உண்டாகில் சொல்ல வேணும் -என்கிறார் –

    கூவிக் கூவிக் கொடு வினைத் தூற்றுள் நின்று
    பாவியேன் பல காலம் வழி திகைத்து அலமர்கின்றேன்
    மேவி அன்று ஆ நிரை காத்தவன் உலகம் எல்லாம்
    தாவிய வம்மானை எங்கினித் தலைப் பெய்வனே –
    3-2-9—உலகு எல்லாம் தாவிய -அது ஓரூர் அளவேயோ தப்பவுமாம்-எல்லார் தலையிலும் திருவடிகளாம் படி சர்வ லோகங்களையும் அளந்த அன்று எம்மூலையிலே கிடந்தேன்-வம்மானை எங்கினித் தலைப் பெய்வனே--எல்லாரையும் அடிமை கொண்டவனை-அந்த தூளி தானத்திலும் தப்பின நான் இனி எங்கே கிட்ட புகுகிறேன்-அவன் தான் வந்து அபகரித்த அன்று தப்பின நான் சாதன அனுஷ்டானம் பண்ணி எங்கே சென்று கிட்டப் புகுகிறேனோ -என்று நிராசர் ஆகிறார் –

    மறுக்கி வல் வலைப்படுத்திக் குமைத்திட்டுக் கொன்றுண்பர்;
    அறப் பொருளை அறிந்து ஓரார்; இவை என்ன உலகியற்கை!
    வெறித் துளவ முடியானே! வினையேனே உனக்கு அடிமை
    அறக் கொண்டாய் இனி என்னாரமுதே!கூய் அருளாயே.–4-9-6-உனக்கே சேஷமாக்கிக் கொண்ட பின்பு
    இனி என் என்றுமாம் -அப்போது உன்னைக் காட்டி சம்சாரிகள் நோவை மீட்க ஒன்னாதான பின்பு இவர்களுக்கு சோகித்து பிரயோஜனம் என் என்கை-என் ஆரமுதே -உன் போக்யதையை எனக்கு காட்டினவனே-நீ நிரதிசய போக்யனாய் இருக்க நான் இவர்கள் நடுவே இருக்கிற இத்தால் என்ன பிரயோஜனம் உண்டு -உன் திருவடிகளிலே அழைத்துக் கொண்டு அருள வேணும் –

    ஊரெல்லாம் துஞ்சி உலகெல்லாம் நள்ளிருளாய்
    நீரெல்லாம் தேறிஓர் நீளிரவாய் நீண்டதால்
    பாரெல்லாம் உண்டநம் பாம்பணையான் வாரானால்
    ஆர்?எல்லே! வல்வினையேன் ஆவிகாப்பார் இனியே.–5-4-1-விரஹத்துக்கு சளையாதே ஆவி -பிரிவே ஹேதுவாக நூறே பிராயம் என்னும் ஆவி-இனி –யார் -ஆபத்துக்களில் உதவிப் போருமவன் உதவாத பின்பு பாதகர் என்னை நோக்கவோ –

    ஆவி காப்பார் இனியார்? ஆழ்கடல் மண் விண் மூடி
    மா விகாரமாய் ஓர் வல்லிரவாய் நீண்டதால்
    காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால்
    பாவியேன் நெஞ்சமே! நீயும் பாங் கல்லையே.–5-4-2-உதவுமவன் உதவுகிறிலன் -நெஞ்சும் பாங்கு ஆகிறது இல்லை -இனி காப்பார் யார் –

    11-நெஞ்சிடர் தீர்ப்பார் இனி யார்-திருவாய்-5-4-9-
    12-இனி உன்னை விட்டு ஓன்றும் ஆற்ற கிற்கின்றிலேன் –திருவாய்-5-7-1-
    13-தரியேன் இனி –திருவாய்-5-8-7-
    14-இனி யாரைக் கொண்டு என் உசாகோ –திருவாய்-7-3-4-
    15-அத்தனை யாம் இனி என் உயிர் அவன் கையதே-9-5-2-

    நெஞ்சிடர்‌ தீர்ப்பாரினியார்‌‘(திருவாய்மொழி 5-4-9), “இனி யுன்னை விட்டொன்று மாற்ற கிற்கின்றிலேன்‌”(திருவாய்மொழி 5-7-1), “தரியேனி” (திருவாய்மொழி 5-8-7), “உழந்தினியாரைக்‌ கொண்டென்னுசாகோ” (திருவாய்மொழி 7-3-4), “அத்தனையா மினி யென்னுயிரவன்‌ கையதே” (திருவாய்மொழி 9-5-2),

    வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண் துளியாய்
    அஞ்சுடர வெய்யோன் அணி நெடுந்தேர் தோன்றாதால்
    செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால்
    நெஞ்சிடர் தீர்ப்பாரினி யார்? நின்று ருகுகின்றேனே.–5-4-9–இனி மநோ துக்கத்தை போக்குவார் யார் -ஆந்தரமான தமஸை போக்கும் போது அவனே வேண்டாவோ -பாஹ்ய தமஸை இ றே ஆதித்யன் போக்குவது –நின்று ருகுகின்றேனே.–-நெஞ்சிடர் தீர்ப்பாரினி யார்-விலக்ஷண விஷயத்தை பிரிந்தால் உள்ளதொன்று இது -உருகி தர்மி லாபமும் பிறவாதே -தரிக்கவும் பெறாதே யுருகா நிற்கும் அத்தனை –

    நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும் இனி உன்னை விட்டொன்று
    ஆற்ற கிற்கின்றிலேன்
    அரவின் அணை அம்மானே!
    சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கலநகர்
    வீற்றிருந்த எந்தாய்! உனக்கு மிகை அல்லேன் அங்கே.—5-7-1–இங்கனம் இருந்ததே யாகிலும் -சாதனா அனுஷ்டானத்தை பண்ணி பலம் தாழ்ந்தாரை போலே பதறா நின்றேன் -ஆற்றாமை அன்றோ பக்தி யாகிறது –பக்தி இல்லை என்பான் என் என்னில் -கர்ம ஞான ஸஹ க்ருதையாய் சாஸ்திர சித்தையான நூல் பிடித்த பக்தி இல்லை -அவனை ஒழிய செல்லாமை யுண்டு என்கிறார் –அத்தை தாம் சாதனமாக நினைத்து இரார் இறே-இனி -என் பக்கலில் முதல் உண்டான அன்று -அது தலைக் கட்டும் தனையும் ஆறி இருக்கலாம் -அது அன்றிக்கே நீயே உபாயமான பின்பு விளம்ப ஹேது யுண்டாய் ஆறி இருக்கிறேனோ-இனி உன் திருக் குணங்களில் அவகாஹித்த பின்பு ஒரு க்ஷணமும் ஆறி இருக்க ஷமன் ஆகிறிலன் -உன் பக்கல் உபாய பாவம் அசித்தமாய் ஆறி இருக்கிறேனோ -என் பக்கல் ஆகிஞ்சன்யம் அசித்தமாய் ஆறி இருக்கிறேனோ -என் சத்தைக்கு நான் ஹேது பூதனாம் அன்று உபாயத்திலும் எனக்கு அதிகாரம் உண்டு -ஸ்வ ரக்ஷணத்தில் பிராப்தி இல்லாத ஸ்வரூப ஞானமும் புருஷார்த்தத்தில் ருசியும் ஹிதாம்சத்திலே வேண்டுவது -ஆனபின்பு ஆறி இருக்க போமோ என்கை –

    அரியேறே! என்னம் பொற் சுடரே! செங்கட் கருமுகிலே!
    எரியேய் பவளக்குன்றே! நால்தோள் எந்தாய்! உனதருளே
    பிரியா அடிமை என்னைக் கொண்டாய்! குடந்தைத் திருமாலே!
    தரியேன் இனி உன் சரணம் தந்து என் சன்மம் களையா
    யே.–5-8-7—தரியேன் இனி
    மாதா பிதாக்கள் சந்நிஹிதரான பின்பு -மாதா பிதாக்கள் அசந்நிதியில் பசி பொறுக்கலாம்-சந்நிதி யுண்டானாலும் பசி பொறுக்கப் போகாது இறே -தறியாமை எவ்வளவு போரும் என்ன-உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே.--ஜென்ம சம்பந்தம் அற்று உன் திருவடிகளை பெறப் பற்றாது -முலையைக் கொடுத்து சிகித்சிப்பாரை போலே திருவடிகளைத் தந்து விரோதிகளை போக்க வேணும் –

    இழந்த எம்மாமைத் திறத்துப் போன என் நெஞ்சினாரு மங்கே ஒழிந்தார்
    உழந் தினி யாரைக் கொண் டென் உசாகோ! ஓதக் கடல் ஓலி போல எங்கும்
    எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
    முழங்கு சங்கக் கையன் மாயத்து ஆழ்ந்தேன் அன்னையர்காள்! என்னை என் முனிந்தே.–7-3-4-வருந்தி -இனி என் நெஞ்சை இழந்த பின்பு –வருந்தினால் தான் வார்த்தை கேட்ப்பார் உண்டோ -கேட்ப்பார் உண்டால் தான் என்ன வார்த்தை சொல்லுவது-

    16-நாரை குழாங்காள் பயின்று என் இனி –9-5-10-
    17-இனி இருந்து என் உயிர் காக்குமாறு என் –9-9-2-
    18-இனி நான் போகல் ஒட்டேன் –10-10-1-
    19-உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் –10-10-6-
    20-உன்னைப் பெற்று இனி போக்குவனோ -10-10-7-–என்று
    இப்படி இருபதின்கால் கூப்பிடும்படியான ஆர்த்தி பரம்பரையை விளைத்து – பரம பக்தி பர்யந்தமான அதிகார பூர்த்தியை உண்டாகுகைக்காக என்னும் அதுவே – பிரதானம் என்கை -ஆர்த்தி அதிகார பூர்த்திக்கு என்றது –ஆர்த்தியால் வரும் அதிகார பூர்த்திக்கு என்ற படி — பரம ஆர்த்தியாலே -இறே -பிரபத்தி அதிகாரம் பூரணமாவது – ஆகையாலே ஹேத்வந்தரங்கள் எல்லாம் அப்ரதானங்கள் – இவரை வைத்ததுக்கு பிரதான ஹேது இது என்றது ஆய்த்து –

    நாரைக் குழாங்கள்காள்‌ பயின்றென்னினி(திருவாய்மொழி 9-5-10),“இனியிருந்தென்னுயிர்‌ காக்குமாறென்‌” (திருவாய்மொழி-9-9-2), “இனிப் பிறவி யான் வேண்டேன்‌” (திருவாய்மொழி 10-6-1) “இனி நான்‌போகலொட்டேன்‌’ (திருவாய்மொழி 10-10-1), “முடிவிலீயோ” (திருவாய்மொழி
    -10-10-9), “சுடர்ஞான இன்பமேயோ” (திருவாய்மொழி 10-10-10) என்னுமளவாக
    இருபதின்கால்‌ கூப்பிடும்படியான ஆர்த்தி பரம்பரையை விளைத்து இவருடைய பரம பக்தி பர்யந்தமான அதிகார பூர்த்தியை ப்ரகாஸிப்பிக்கைக்காக வைத்தான்‌ என்கிற விதுவே தாத்பர்யமென்கிறார்

    இத்தனை வேண்டுவது அன்று அந்தோ அன்றில் பேடைகாள்
    எத்தனை நீரும் உன் சேவலும் கரைந்து ஏங்குதீர்
    வித்தகன் கோவிந்தன் மெய்யன் அல்லன் ஒருவர்க்கும்
    அத்தனை ஆம் இனி என் உயிர் அவன் கையதே–9-5-2-இனி அத்தனை யாகாதே என்கிறாள் –
    என் உயிர்-அவன் கையதே–என்னுடைய பிராணன் அவன் கைப் பட்டது -அவன் நினைவேயாய்த் தலைக் கட்டின பின்பு என்னுடைய பிராண ரக்ஷணத்துக்கு உங்கள் கால் பிடிக்க வேண்டா வாகாதே –

    எழ நண்ணி நாமும் நம் வான நாடனோடு ஒன்றினோம்
    பழன நல் நாரைக் குழாங்கள் காள் பயின்று என் இனி
    இழை நல்ல ஆக்கையும் பையவே புயக்கு அற்றது
    தழை நல்ல இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைக்கவே-9-5-10—நீர் நிலங்களிலே வர்த்திப்பதாய் -தொடங்கின கார்யம் முடிக்க வல்ல சாமர்த்தியத்தை யுடைத்தான நாரைக் குழாங்கள்-பயின்று என் இனி-திரண்டு பிரயோஜனம் என் -நான் அவன் கருத்தை பின் செல்ல நினையாத அன்று அன்றோ உங்கள் மந்திரத்துக்கு பிரயோஜனம் உள்ளது -முதலிகள் திரள் திரளாக இருந்து பெருமாளையும் பிராட்டியையும் சேர்க்கைக்கு விரகு பார்த்தால் போலே -இவை திரள் திரளாக இருந்து தன்னையும் அவனையும் பிரிக்கைக்கு விசாரிக்கிறன என்று இருக்கிறாள் -அவன் வேண்டுவரைச் சேர்க்கையும் வேண்டாதாரை முடிக்கையும் திர்யக்குகள் பணி என்று இருக்கும் இறே -ராமாவதார வாசனையால் –

    புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ புலம்புறு மணி தென்ற லாம்ப லாலோ
    பகலடு மாலை வண் சாந்த மாலோ பஞ்சமம் முல்லை தண் வாடை யாலோ
    அகலிடம் படைத்து இடந்து உண்டு உழிந்து அளந்து எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன்
    இகலிடத் தசுரர்கள் கூற்றம் வாரான் இனி இருந்து என்னுயிர் காக்குமாறு என்–9-9-2-வரையாதே ரக்ஷிக்குமவனாய் -ப்ராப்தனுமாய் -விரோதி நிரசன ஸ்வபாவனுமானவன் -வாராது இருக்க -ஸ்வ ரக்ஷணத்தில் பிராப்தி இல்லாத எனக்கு ஆறி இருக்கப் போமோ —இனி இருந்து –நமாம்சம் ராகவோ புங்க்தே நசாபி மது சேவதே வன்யம் ஸூ விஹிதம் நித்யம் பக்தமச் நாதி பஞ்சமம் -என்கிறபடியே அத்தலையிலே ஆற்றாமையும் –வாலி மாட்டான் படை கூடிற்று -என்றால் போலே ரக்ஷணத்தில் உத்யோகத்தையும் -சிலர் வந்து சொல்லக் கெட்டு தான் ஆறி இருக்கிறேனோ –இனி இருந்து-அவனுடைய சரக்கு என்று ஆந்தனையும் கை நோக்கிக் கொண்டு இருந்தேன் -இவற்றின் சந்நிதியில் -அவன் வாராது ஒழிந்த பின்பு முடியும் அத்தனை போக்கி இருக்க க்ஷமை அல்லேன்-என்னுயிர் காக்குமாறு என்–பிறர் உயிராகில் காக்கலாம் இறே -சம்ச்லேஷ அர்த்தமாக பாரித்து கொண்டு இருக்குமது ஒழிய பிராணனை நோக்கிக் கொண்டு இருக்கப் போமோ –

    அருள் பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
    அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
    இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
    மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1-நான் அவன் வழியே போகப் பார்த்தேன் -இங்கு உகந்து அருளின நிலங்களும் பாகவத ஸஹவாசமும் உண்டாய் இருக்க அவன் வழியே போக வேண்டுகிறது என் -என்ன -அஞ்ஞான அவஹமான ஸம்ஸாரமாகையாலே-ஞானாதிகனான ப்ரஹ்லாதனையும் எதிரிடப் பண்ணிற்று இறே –இனி–அவன் கருத்தை அறிந்த பின்பு –பிறவி யான் வேண்டேன்வானுயிர் இன்பம் எய்திலென் மற்றை நரகமே எய்திலென் -என்கிற அது நான் வேண்டேன் -இனி ஈஸ்வர அபிப்ராயத்தாலே இருக்கில் இருக்கும் அத்தனை —

    முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
    கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா
    தனியேன் ஆர் உயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
    இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–10-10-1-இனி–சம்சாரத்தின் தண்மையை அறிந்த அளவன்றிக்கே முக்த ப்ராப்த தேசத்தையும் சாஷாத் கரிப்பித்து -உன் சுவட்டை அறிவித்த பின்பு –-நான் போகல் ஒட்டேன் -நானே அறிவேன் -என்ற கை பறியாலே பறித்த அறிவு அன்றிக்கே நீயே காட்டக் காணப் பெற்ற நான் விஸ்லேஷிக்க ஓட்டேன் -இவருக்கு போக ஓட்டேன் -என்று சொல்லல் ஆகிறது -சர்வஞ்ஞன் அறியாத தமக்கு யுண்டான த்வரையாலேயும் -அபேக்ஷித்த அளவிலே கார்யம் செய்யப் பெறாதே பிற்பாட்டுக்கு -ஹ்ரீ ரேஷா ஹி மமாதுலா-என்று லஜ்ஜிக்குமவன் ஆகையாலும் இறே –ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–உன்னை அறிவதற்கு முன்பு த்யாஜ்யமான விஷயங்களைக் காட்டி அதுவும் அமையும் என்னப் பண்ணினாய் -உன்னை அறிந்த பின்பு குணங்களை ஆவிஷ் கரித்து அதுவும் அமையும் என்னப் பண்ணினாய் -இனி ஒரு குண ஆவிஷ் காரத்தாலே பெற்றேனாகப் பண்ணி என்னை வஞ்சியாதே கொள் —என்னையே -அங்கன் செய்ய வேண்டுகிறது என் என்ன –ஏஹி பஸ்ய சரீராணி -என்கிறபடியே விரஹம் தின்று சேஷித்த உடம்பைக் காட்டுகிறார் –

    எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை
    மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
    புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
    உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ–10-10-6—மனக்கு ஆராமை -மனஸ்ஸூக்கு ஆராமை –மனக்கு -மனஸ்ஸூக்கு —மன்னி உண்டிட்டாய் -விரும்பி நிரந்தரமாக புஜித்தாய்-இனி உண்டு ஒழியாய்-நீ தொடங்கின காரியத்தை நடுவே குறை கிடைக்க விடாதே விஷயீ கரித்தே விடாய் -நீ ஆரம்பித்த காரியத்தில் குறை கிடப்பது உண்டோ -நீ இவ்வளவு புகுர நிறுத்துகைக்கு நான் சஹகரித்தது உண்டோ மேல் நான் ஓன்று செய்கைக்கு

    கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
    நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
    கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
    நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –10-10-7-ஸ்ரீ பூமிப பிராட்டியை லபிக்கைக்கு பண்ணின வியாபாரத்தையும் -பிராட்டியை லபிக்கைக்கு பண்ணின வியாபாரத்தையும் -என்னைப் பெறுகைக்காகப் பண்ணி -என்னைக் கிட்டின பின்பு உன்னைப் போக விடுவேனோ –நீ கிருஷி பண்ண -பலத்தில் அந்வயித்த நான் -கைப்பட்ட சம்பத்தை விட ஷமனோ–

    பெற்று இனிப் போக்குவேனோ உன்னை என் தனிப் பேர் உயிரை
    உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய்
    முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு
    முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ-10-10-8–ஓர் அச்சில்லாக் காசாயப் போய்த்தாகில் போகிறது என்று இருக்கிறேனோ -ஸமஸ்த கல்யாண குணாத் மகனாய் எனக்கு சத்தா ஹேதுவான உன்னை பெற்று வைத்து நான் விடுவேனோ –சர்வஞ்ஞனாய் ஸ்வதந்திரனாய் இருக்கிறவனை விடுவேனோ என்கிறதுக்கு ஹேது -தன்னை ஒழிய ஜீவிக்க மாட்டாமை தோற்ற இருந்தால் அவன் கால் வாங்க மாட்டான் என்னுமத்தாலே –இத்தலையில் நத்யஜேயம் இருக்கிறபடி –

    முதல் தனி வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கெல்லாம்
    முதல் தனி யுன்னை யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்
    முதல் தனி அங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ் பாழாய்
    முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடுவிலீயோ–10-10-9-பிரகிருதி பிராக்ருதங்களுக்கு நியாமகமாய் -பிரதானமாய் -ஒப்பின்றிக்கே இவற்றை அடைய பத்துத் திக்கிலும் ஞானத்தால் வியாபித்து நித்தியமாய் இருந்துள்ள ஆத்மவஸ்துவுக்கு நிர்வாஹகன் ஆனவனே –-முதல் தனி எங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ் பாழாய்–முழு மூ உலகு ஆதிக்கெல்லாம்–முதல் தனி வித்தாய் –முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடுவிலீயாய் -இருக்கிற -முதல் தனி யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்–கார்ய காரண உபய அவஸ்தமான சித் அசித்துக்குகளுக்கு நிர்வாஹகனாய் இருக்கிற இருப்பைக் காட்டி அனுபவிப்பித்த இவ்வளவு போராது -அசாதாரண விக்ரஹ யுக்தனாய் ஒரு தேச விசேஷத்திலே இருக்கும் இருப்பை அனுபவிக்க வேணும் என்றதாய்த்து

    சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
    சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
    சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
    சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10-அவை இரண்டையும் வியாபித்து அவற்றுக்கு நிர்வாஹகமாய் சங்கல்ப ரூபமான ஞானத்தை யுடையவன் என்று சிங்கள ரூப ஞானத்தைச் சொல்லுதல் –சுடர் ஞான இன்பம் என்று பகவத் ஸ்வரூபத்தை சொல்லுதல் –

    ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
    ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
    ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

    ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர விளக்கங்கள்-மூன்றாம் அத்யாயம்-ஸாதந அத்யாயம் – மூன்றாம் பாதம் –குண உப சம்ஹார பாதம் ––ஸ்ரீ வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்-

    August 9, 2026

    அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
    விநித விவித பூத விராத ரக்ஷைக தீக்ஷே |(2)
    ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
    பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||-இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.

    பாராசர்ய வசஸ்ஸுதா₄ம் உபநிஷத் து₃க்₃தா₄ப்₃தி₄ மத்₄யோத்₃த்₄ருதாம்
    ஸம்ஸாராக்₃நி விதீ₃பந வ்யபக₃த ப்ராணாத்ம ஸஞ்ஜீவநீம் |
    பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் ப₃ஹுமதி வ்யாகா₄த தூ₃ரஸ்தி₂தாம்
    ஆநீதாம் து நிஜாக்ஷரை : ஸுமநஸ: பௌ₄மா: பிப₃ந்து அந்வஹம்
     ||இரண்டாவது மங்கள ஸ்லோஹம்-

    ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் |
    பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே ||

    யதீந்த்ர க்ருத பாஷ்யார்த்தா யத் வ்யாக்யாநேந   தர்சிதா:
    வரம் ஸுதர்சனார்யம் தம் வந்தே கூர குலாதிபம்-ஸ்ருத  ப்ரகாசிகா பட்டருடைய தனியன்:

    மூன்றாம் பாதம் –குண உப சம்ஹார பாதம் –உபாசனம் த்யானம் பக்தி போன்ற ப்ரஹ்ம வித்யைகளும்
    அவற்றின் ஒற்றுமை வேற்றுமைகளும் படிக்கப் படுகின்றன – இதில் 26 அதிகரணங்கள்/ 64 ஸூத்ரங்கள் உள்ளன –-இதுவரை பத்து பாதங்களால் மோக்ஷத்திற்கான தத்வ ஞானம் உறுதி செய்யப் பட்டது மேல் வரும் ஆறு பாதங்களாலே பர ப்ரஹ்ம பிராப்தி என்னும் பலத்துடன் அதுக்கு ஹேதுவான உபாஸனத்தையும் விளக்கப் பட இருக்கிறது-ப்ரஹ்ம உபாஸனத்தில் இச்சை பிறக்க ப்ரஹ்மமே பலம் தருவது என்பது வரை கூறப்பட்டது-இப்போது அந்த உபாசன விஷயத்தில் ஓர் இடத்தில் கூறப்பட்ட குண விசேஷங்களை மற்றோர் வித்யையிலும் அனுசந்தானம் செய்ய ஏற்றுக் கொள்வதாகிற குண உப ஸம்ஹாரத்தையும் கூறப்பட்ட குணங்களை அதே வித்யையில் மட்டும் அனுசந்தானம் செய்வது என்னும் விகல்பத்தையும் தீர்மானிக்க பேத அபேத சிந்தை செய்யப் படுகிறது-வித்யைகள் ஒன்றுக்கு ஓன்று வேறு படாதவைகள் என்றால் குணங்களை உப சம்ஹாரம் செய்யலாம் வித்யை களுக்குள் பேதம் உண்டு என்னில் விகல்பம் தான் என்று கருத்து-இந்த பேத அபேதங்கள் இப்பாதத்தில் ஒத்தவை அல்ல ஆயினும் அவை குண ஸம்ஹாரத்திற்கு நிமித்தங்களே-இந்தப் பாதத்தில் குண சம்ஹாரம் உண்டா இல்லையா என்பது விசாரிக்கப் படுவதால்இதற்கு குண சம்ஹார பாதம் என்ற பெயர் ஆயிற்று

    முதல் அதிகரணம் -சர்வ வேதாந்த ப்ரத்யய அதிகரணம்- 5 ஸூத்ரங்கள்–
    வைச்வாநர வித்யை-தஹர வித்யை போன்ற வேத சாகைகளில் ஓதப்படும்
    அனைத்தும் ஒன்றே என்று நிரூபிக்கப் படுகிறது –

    இரண்டாவது அதிகரணம் -அந்யதாத்வ அதிகரணம் -4 ஸூத்ரங்கள்–
    சாந்தோக்யம் மற்றும் ப்ருஹத் உபநிஷத்தில்,சொல்லும் உத்கீத வித்யைகள்
    வெவ்வேறு என்று நிரூபிக்கப் பட உள்ளது-

    மூன்றாவது அதிகரணம் -சர்வாபேத அதிகரணம் -1-ஸூத்ரம்-
    சாந்தோக்யம் கௌஷீதகீ உபநிஷத்துக்களில் கூறப்படும் பிராண வித்யை என்பது
    ஒன்றே என்று நிரூபிக்கப் படுகிறது –

    நான்காவது அதிகரணம் -ஆனந்தாத் யதிகரணம் 7 -ஸூத்ரங்கள்-
    ப்ரஹ்ம ஆனந்த மயம் -அவிகாராய -ஞான மயம் -அபரிச்சேத்யம்-அகில ஹேய ப்ரத்ய நீகத்வம் -ஆகிய
    ஐந்து குணங்களும் ப்ரஹ்ம வித்யையில் படிக்கப்பட வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது –

    ஐந்தாவது அதிகரணம் -கார்யாக்யா நாதிகரணம் –1-ஸூத்ரம்-
    ஆசமனம் செய்யும் நீர் பிராணனுக்கு வஸ்த்ரமாக உள்ளது என்று நிரூபிக்கப் படுகிறது –

    ஆறாவது அதிகரணம் -சமா நாதிகரணம் –1-ஸூத்ரம்–
    சுக்ல யஜூர் வேதம் -அக்னி ரஹச்யம்-ப்ருஹத் ஆரண்யகம் -இரண்டு உபநிஷத்களிலும் உள்ள
    சாண்டில்ய வித்யைக்குள் -ரூபத்தில் வேறுபாடு இல்லாததால் – இரண்டும் ஒன்றே என்று நிரூபிக்கப் படுகிறது-

    ஏழாவது அதிகரணம் -சம்பந்தாதி கரணம் –3 -ஸூத்ரங்கள்-
    ஆதித்யனை இருப்பிடமாகக் கொண்ட ப்ரஹ்மம்-அந்தராதித்ய வித்யை –
    கண்களை இருப்பிடமாகக் கொண்ட ப்ரஹ்மம் அஷி வித்யை என்பதும் கொள்ள வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது-

    எட்டாவது அதிகரணம் -சம்ப்ரு யதிகரணம் –1-ஸூத்ரம்-
    கட உபநிஷத்தில் உள்ள சம்ப்ருதி -அனைத்து வல்லமை உடன் இருத்தல் -த்யு வ்யாப்தி -தேவ லோகத்தில் பரவி இருத்தல் –
    ஆகியவை அனைத்து வித்யைகளிலும் உபாசிக்க வேண்டியவை அல்ல என்று நிரூபிக்கப் படுகிறது –

    ஒன்பதாவது அதிகரணம் -புருஷ வித்யாதிகரணம் –1-ஸூத்ரம்–
    சாந்தோக்யம் தைத்ரியம் இரண்டிலும் முழங்கப் படும் புருஷ வித்யைகளில் ரூபம் வேறுபடுவதால்
    அவை வெவ்வேறு வித்யைகள் என்று நிரூபிக்கப் படுகின்றன –

    பத்தாவது அதிகரணம் -வேதாத்யதிகரணம்—1-ஸூத்ரம் –
    தைத்ரிய சீஷா வல்லியில் உள்ள சில மந்த்ரங்கள் ப்ரஹ்ம வித்யைக்கு அங்கம் அல்ல என்று நிரூபிக்கப் படுகிறது

    அதிகரணம் -11- ஹான்நயதி கரணம் —1-ஸூத்ரம் –
    புண்ய பாப கர்மங்கள் மோஷம் பெறுபவனை விட்டு விலக்கி மற்றவர்களுடன் சேர்த்து விடுகின்றன -என்று
    அனைத்து வித்யைகளிலும் கொள்ள வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது-

    அதிகரணம் -12- சாம்பராய திகரணம்–5 -ஸூத்ரங்கள்- –
    உபாசகனின் கர்மம் முழுவதும் அவன் உடலை விட்டு கிளம்பும் காலத்தில் அழிந்து விடுகின்றன என்று நிரூபிக்கப் படுகிறது –

    அதிகரணம் -13–அநிய மாதிகரணம் —1-ஸூத்ரம்-
    அனைத்து வித்தைகளுக்கும் அர்ச்சிராதி மார்க்கம் பொது என்று நிரூபிக்கப் படுகிறது –

    அதிகரணம் -14-அஷரத்யதி கரணம் –2–ஸூத்ரங்கள்–
    ப்ரஹ்மத்தின் அகில ஹேய ப்ரத்ய நீகத்வம் போன்ற மேன்மைகள் அனைத்து வித்யைகளிலும் ஓதப்பட வேண்டும் நிரூபிக்கப் படுகிறது –

    அதிகரணம் -15-அந்தரத்வாதிகரணம் -3- ஸூத்ரங்கள்–
    ப்ருஹத் உபநிஷத்தில் இரண்டு வெவ்வேறு பகுதிகளில் ஓதப்படும் வித்யைகள் ஒன்றே என்று நிரூபிக்கப் படுகிறது –

    அதிகரணம் -16-காமாத்யதிகரணம் -3- ஸூத்ரங்கள்–
    சாந்தோக்யம் ப்ருஹத் இரண்டிலும் கூறப்படும் தஹர வித்யை ரூபம் ஒன்றாதலால் ஒன்றே என்று நிரூபிக்கப் படுகிறது

    அதிகரணம் -17- தந் நிர்த்தாரணா நியமாதி கரணம் –1-ஸூத்ரம்–
    சாந்தோக்யத்தில் உள்ள உத்கீத உபாசனங்கள் ப்ரஹ்ம வித்யைக்கு அங்கமாக உள்ள
    யாகங்களில் இருந்தாலும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் என்று நிரூபிக்கப் படுகிறது-

    அதிகரணம் -18-பிரதாணாதிகரணம்—1-ஸூத்ரம்–
    அபஹத பாப்மா போன்ற குணங்களை உபாசிக்கும் பொழுது தஹர ஆகாசம் என்னும் ப்ரஹ்மத்தின்
    ஸ்வரூபமும் உபாசிக்கப்பட வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது –

    அதிகரணம் -19-நாராயண அநுவாகம்
    ப்ரஹ்ம வித்யையின் மூலம் உபாசிக்கப்படும் பரம் பொருள் எந்த தேவதை என்று உணர்த்தவே என்று நிரூபிக்கப் படுகிறது –

    அதிகரணம் -20-பூர்வ விகல்பாதி கரணம் -7-ஸூத்ரங்கள் –
    அக்னி கிரியாமயமான யாக அங்கம் அல்ல -வித்யாமயமான யாக அங்கமே என்று நிரூபிக்கப் படுகிறது –

    அதிகரணம் -21-சரீரே பாவதி கரணம் -2-ஸூத்ரங்கள் –
    சாதன தசையில் அனைத்து வித்யைகளிலும்-தன்னைப் பாவங்கள் அற்றவன் முதலான ஸ்வரூபம் உள்ளதாகவே
    ஜீவன் உபாசித்துக் கொள்ள வேண்டும் என்று நிரூபிக்கப் படுகிறது-

    அதிகரணம் -22-அங்காவபத்தா திகரணம் -2-ஸூத்ரங்கள் –
    சாந்தோக்யத்தின் உத்கீத உபாசனைகள் அனைத்து சாகைகளிலும் தொடர்பு உடையவை ஆகும் என்று நிரூபிக்கப் படுகிறது –

    அதிகரணம் -23-பூமஜ்யாயஸ் த்வாதி கரணம் -1 ஸூத்ரம் –
    சாந்தோக்யத்தில் கூறப்பட்ட பூரணமான வைச்வாநர உபாசகமே சரியானது என்று நிரூபிக்கப் படுகிறது –

    அதிகரணம் -24-சப்தாதி பேதாதி கரணம்-1 ஸூத்ரம் –
    சத் வித்யை தஹர வித்யை போன்ற ப்ரஹ்ம
    வித்யைகள் ஒன்றுக்கு ஓன்று வேறுபட்டவை என்று நிரூபிக்கப் படுகிறது –

    அதிகரணம் -25-விகல்பாதிகரணம்-2-ஸூத்ரங்கள் – –
    ப்ரஹ்ம வித்யைகளில் ஏதேனும் ஒன்றைப் பற்றினாலும் பலன் கிட்டுமே –

    அதிகரணம் -26-யதாச்ரய பாவ அதிகரணம்–6 ஸூத்ரங்கள்-
    உத்கீத உபாசனம் அனைத்து யாகங்களிலும் அங்கம் அல்ல என்று சிலர் மீண்டும் ஆஷேபிக்க சமாதானம் கூறுகிறது-

    ————

    இனி, ஸாத₄ந அத்யாயம் என்ற இந்த மூன்றாவது அத்யாயத்தின் முக்கியமான விஷயத்தை விவரிக்கிறார். ஸாத₄நம் என்றால் மார்கம் -வழி என்று பொருள். மோக்ஷத்தை அடைவதற்கான வழியை ஆராயும் அத்யாயம் தான் ஸாத₄ந அத்யாயம்–உபநிஷத்துக்களில் மோக்ஷம் அடைய ஆசைப்படுபவன் பர ப்ரஹ்மமான ஶ்ரீமந் நாராயணனைத் த்யானம் செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. த்யானம் என்றால் பரமாத்மாவை இடை விடாமல் அன்போடு தொடர்ந்து நினைப்பது. இந்த த்யானம் தான் பக்தி மார்கம் என்றும் உபாஸனம் என்றும் வித்யை என்றும் கூறப்படுகிறது.-ப்ரஹ்மத்தை உபாஸனம் செய்ய பலவிதமான வித்யைகள் உபநிஷத்துக்களில் சொல்லப்பட்டுள்ளன. பரமாத்மாவுக்கு எண்ணிறந்த கல்யாண குணங்கள் உள்ளபடியால், அதில் ஒரு சில குணங்களோடு அவரைத் த்யானிப்பது ஒரு வித்யை , வேறு சில குணங்களோடு கூடியவராக த்யானிப்பது வேறொரு வித்யை ஆகும். சாண்டில்ய வித்யை , த₃ஹர வித்யை , ஸத்₃வித்யை , பூ₄ம வித்யை , அந்தராதி₃த்ய வித்யை முதலான 32 வித்யைகள் உபநிஷத்துகளில் கூறப்பட்டுள்ளன.

    இப்போது இந்த மூன்றாவது பாதத்திற்கு கு₃ண உப ஸம்ஹார பாதம் என்று பெயர். கு₃ணம் என்றால் பரமாத்மாவின் பண்புகள். உப ஸம்ஹாரம் என்றால், ஓரிடத்தில் சொல்லப்பட்ட விஷயத்தை மற்ற இடங்களில் சேர்த்துக் கொள்வது. இந்தப் பாதத்தில் செய்யப்படும் ஆராய்ச்சி யாதெனில் – உபநிஷத்துக்களில் ஓரிடத்தில் சொல்லப்பட்ட பரமாத்மாவின் குணங்களை அந்தப் பகுதியில் சொல்லப்பட்ட வித்யை யில் மட்டும்தான் சேர்த்துக் கொண்டு த்யானிக்க வேண்டுமா (விகல்பம்) ? அல்லது வேறு இடத்தில் சொல்லப்பட்ட வித்யையிலும் இவற்றை சேர்த்துக் கொண்டு த்யானிக்க வேண்டுமா (உப ஸம்ஹாரம்)?

    இதை முடிவு செய்ய,வேறொரு ஆராய்ச்சி தேவை – வெவ்வேறு உபநிஷத்களில் கூறப்பட்டுள்ள ப்ரஹ்ம வித்யைகள் ஒன்றா? வேறா? என்று. இரண்டு இடங்களில் சொல்லப்பட்ட வித்யைகள் ஒன்று தான் என்றால், உப ஸம்ஹாரம் செய்ய வேண்டும், அதாவது, ஓரிடத்தில் சொல்லப்பட்ட குணங்களை மற்றோர் இடத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அந்த வித்யைகள் வெவ்வேறானவை என்றால், விகல்பம் தான், அதாவது, அந்தந்த குணத்தை அங்கங்கு மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும்-எனவே குணங்களுக்கு உப ஸம்ஹாரமா விகல்பமா என்ற அறிவதற்காக வித்யைகள் ஒன்றா வேறா என்று ஆராயப்படுகிறது.

    பூர்வ மீமாம்ஸையில் கர்மங்களின் வேறுபாடு
    இந்த ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கு முன்னால், வேதத்தில் சொல்லப்பட்ட யாகம், ஹோமம், தானம் முதலான கர்மங்களைப் பற்றி ஆராய்வதற்காக மஹரிஷி ஜைமிநி எழுதிய பூர்வ மீமாம்ஸா அல்லது கர்ம மீமாம்ஸா என்று அழைக்கப்படும் ஸாஸ்த்ரத்திலிருந்து ஒரு சில கருத்துக்களை நாம் அறிந்து கொண்டால் மேலே செய்யப் போகும் ஆராய்ச்சிக்கு உதவும்.

    பூர்வ மீமாம்ஸையின் இரண்டாம் அத்யாயத்தில், (பேத அத்யாயம்)வேதத்தில் சொல்லப்பட்ட கர்மங்களின் (செயல்களின்) வேறுபாட்டை எப்படி அறிய வேண்டும் என்று ஆராய்கிறார் ஜைமிநி. அந்தக் கர்மத்தைக் காட்டிலும் இந்தக் கர்மம் வேறு என்று அறிய ஆறு ப்ரமாணங்கள் (கருவிகள்) உள்ளன என்று அவ் விடத்தில் நிரூபிக்கிறார்.
    1-சப்₃தா₃ந்தரம்
    – சப்தாந்தரம் என்றால் ’வேறு சொல்’. வெவ்வேறு வினைச் சொற்களால் குறிக்கப்படும்
    செயல்கள் வெவ்வேறு கர்மங்களாகத் தான் இருக்க வேண்டும். எடுத்துக் காட்டு – யாகம் செய், ஹோமம் செய், தானம் செய் என்ற கட்டளைகளில், யாகம் தானம் ஹோமம் என்ற வெவ்வேறு சொற்களால் சொல்லப் படுகிற படியால் அந்தக் கர்மங்கள் வெவ்வேறு தான். யாகமும் ஹோமமும் ஒன்றாகாது.

    2-அப்₄யாஸ: – அப்₄யாஸம் என்றால் திரும்பத் திரும்பச் சொல்லுதல். வேதத்துக்கு ஒரு பண்பு உள்ளது –
    ’ஒவ்வொரு வாக்கியமும் புதிதான அர்த்தங்களை மட்டுமே சொல்லும், முன்னமே அறியப்பட்ட அர்த்தங்களைச் சொல்லாது’ என்று. ஆகையால், வேதத்தில் எங்காவது ’யாகம் செய்’, ’யாகம் செய்’ என்று இரண்டு கட்டளைகள் காணப்பட்டால், அவை இரண்டும் ஒரே யாகத்தைச் செய்யச் சொல்கின்றன என்று கொள்ள முடியாது, இரண்டாவது வாக்கியம் வீணானபடியால். எனவே , இரண்டு வாக்கியங்களால் கட்டளையிடப்படும் யாகங்கள் இரண்டும் வெவ்வேறு என்றே கொள்ள வேண்டும்.

    3-ஸம்க்₂யா – ஸம்க்₂யா என்றால் எண்ணிக்கை . வேதத்தில் கர்மங்களைக் கட்டளை யிடும் போதே , அவற்றை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை யோடு சேர்த்துச் சொல்லி யிருந்தால், கண்டிப்பாக அவ் விடத்தில் கர்மங்களில் வேறுபாடு உள்ளது என்று தான் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டு – ’மூன்று ஹோமங்களைச் செய்’ என்ற வேதம் சொன்னால், அது வெவ்வேறு ஹோமங்கள் இங்கு சொல்லப் படுகின்றன என்று தான் ஏற்க வேண்டும்.

    4-ஸம்ஜ்ஞா – ஸம்ஜ்ஞா என்றால் பெயர். இரண்டு வெவ்வேறு பெயர்களால் குறிப்பிடப்படும் யாகங்கள்
    வெவ்வேறாகத் தான் இருக்க வேண்டும். பெயர் என்பது குறிப்பிடும் வசதிக்காகத் தான். எனவே ஒரு யாகத்துக்கு ஒரு பெயர் போதுமானது. எனவே வெவ்வேறு பெயர்களை உடைய யாகங்கள்
    வெவ்வேறாகத் தான் இருக்கும்.

    5- கு₃ண: – குணம் என்றால் பண்பு. சில பண்புகளோடு கூடிய ஒரு யாகத்தைச் சொல்லி விட்டு,அதற்குப் பிறகு முரண்பட்ட வேறொரு பண்போடு கூடிய யாகத்தை வேதம் கூறினால், அது கண்டிப்பாக
    வேறொரு யாகமாகத் தான் இருக்க வேண்டும். எடுத்துக் காட்டு – “பாலைக் கொண்டு ஹோமம் செய்” என்று ஒரு புதிதான ஹோமத்தைச் சொல்லி விட்டு, அதற்குப் பின் “தயிரைக் கொண்டு ஹோமம் செய்” என்று வேதம் கூறினால், இந்த இரண்டவது வாக்கியத்தில் சொல்லப்படும் ஹோமம் வேறொரு ஹோமமாகத் தான் இருக்க முடியும், முதல் ஹோமத்தில் பால் என்ற பொருள் முன்னமே சொல்லப் பட்டு விட்டபடியால்.(இந்த்ரனைக் குறித்து யாகம் செய் -ஸூர்யனைக் குறித்து யாகம் செய் என்னும் பொழுதும் வேறே வேறே யாகங்களையே குறிக்கும்)

    6- ப்ரகரணாந்தரம் ् – ப்ரகரணாந்தரம் என்றால் வேறு ப்ரகரணம். வேதத்தில் பல பகுதிகள் உள்ளன.ஒரே விஷயத்தைப் பற்றி (யாகமோ , ஹோமமோ , வேறொன்றோ ) பேசக் கூடிய வேதப் பகுதிக்குப் ப்ரகரணம் என்று பெயர். ஒரு ப்ரகரணத்தில் ஒரு யாகத்தைச் சொல்லி விட்டு, வேறொரு ப்ரகரணத்தில் அதே போல் தோற்றும் யாகத்தைச் சொல்லி யிருந்தாலும், அந்த யாகம் வேறொன்று என்று தான் கொள்ள வேண்டும், ப்ரகரணம் மாறிவிட்டபடியால்.(சைந்தவம் உப்புக்கும் குதிரைக்கும் பெயர் -இரண்டும் கடலில் இருந்து வந்ததால் -சாப்பிடும் பொழுது சொன்னால் உப்பையே குறிக்கும் -ராஜா வேட்டைக்குச் செல்லும் பொழுது அதே சொல்லுக்கு குதிரையைக் குறிக்கும்)

    இப்படி யாகம் முதலான கர்மங்களுக்குள் உள்ள வேறுபாட்டை அறிய ஜைமிநி கூறுய கருவிகளைக் கொண்டு உபநிஷத்துக்களில் உபாஸனங்களுக்குள் இருக்கும் வே றுபாட்டையும் அறியலாம். இது இந்த பாதத்தில் செய்யப்பட உள்ளது

    பூர்வ மீமாம்ஸையில் கர்மங்களின் ஐக்யம்
    இது வரை இரண்டு கர்மங்களுக்குள் உள்ள வேறுபாட்டை அறிவதற்கான வழிகளைப் பூர்வ மீமாம்ஸையில் சொன்னபடி பார்த்தோம். அதே பூர்வ மீமாம்ஸையில் எப்போது இரண்டு வித்யைகள் ஒன்று தான் (ஐக்யம்) என்று கொள்ள வேண்டும் என்பதையும் மஹரிஷி ஜைமிநி கூறுவதால், அதுவும் நமக்கு இப்போது தேவையானது.

    பூர்வ மீமாம்ஸையில் இரண்டாம் அத்யாயத்தின் நான்காவது பாதத்தில் இரண்டாவது அதிகரணம் சாகா₂ந்தராதி₄கரணம் (2-4-2-) என்றும், அதில் சொல்லப்பட்ட ந்யாயம் ஸர்வ சாகா₂ ப்ரத்ய்ய ந்யாயம் என்றும் கூறப்படுகிறது. அந்த அதிகரணத்தின் சுருக்கம் பின் வருமாறு –
    பூர்வபக்ஷம் – வேதங்களில் இரண்டு வெவ்வேறு சாகைகளில் சொல்லப்பட்ட கர்மங்கள் வெவ்வேறாகத் தான் இருக்க வண்டும், ஏனென்றால் அப்யாஸம் (திரும்பத் திரும்பச் சொல்லுதல்) என்ற ப்ரமாணம் உள்ளது. ஒரு சாகையில் சொல்லப்பட்ட அதே கர்மத்தை வேறொரு சாகையில் வேதம் கட்டளை யிட்டால், சொன்னதையே திரும்பச் சொல்வதாக ஆகுகையால் வேதத்துக்கு தோஷம் வரும். எனவே , இரண்டும் வெவ்வேறு தான்.(ரிக் வேதத்தில் 9 சாகைகள் -யஜுர் வேதத்தில் 15-20 சாகைகள் -சாமவேதத்தில் 1000 சாகைகள் உண்டு)

    ஸித்தாந்தம் – ஏகம் வா ् ஸம்யோக₃ ரூப சோத₃நா ஆக்₂யா அவிசேஷாத்-
    ஏகம் வா
    – இரண்டு சாகைகளிலும் சொல்லப்பட்ட கர்மம் ஒன்று தான்
    ஸம்யோக₃ -பயனும் ரூப வடிவமும்
    சோத₃நா -கட்டளை வாக்கியமும்
    ஆக்₂யா -பெயரும்
    அவிசேஷாத் -மாறாதபடியால்

    இரண்டு சாகைகளில் சொல்லப்பட்ட கர்மங்களுக்கும் பெயரும், பயனும், வடிவமும் (எந்த தேவதையைக் குறித்து எந்தப் பொருளைக் கொண்டு யாகம் செய்ய வேண்டும் என்பதும்), கட்டளை யிடும் வாக்கியமும் ஒன்றாக இருந்தால், அவ் விரண்டு கர்மங்களும் ஒன்று என்று தான் கொள்ள வேண்டும்

    அப்யாஸம் (திரும்பத் திரும்பச் சொல்லுதல்) என்ற தோஷமும் வராது. ஏனென்றால், ஒருவர் ஒரு விஷயத்தைத் திரும்பத் திரும்பச் சொல்வது தோஷமல்ல; ஒருவர் ஒரு விஷயத்தை ஒருவருக்கே திரும்பத் திரும்பச் சொல்வது தான் தோஷம். இங்கு இரண்டு சாகைகளையும் கற்கும் மக்கள் வெவ்வேறான படியால், அவரவர்க்கு அந்தந்த சாகையில் உள்ள ஒரு வாக்கியம் ஒரே முறை தான் இக் கர்மத்தை உபதேசிப்பதால், அப்யாஸமே இவ் விடத்தில் இல்லை . எனவே இந்தக் கர்மங்களில் வேறுபாடில்லை , இரண்டும் ஒரே கர்மம் என்று தான் கொள்ள வேண்டும்

    3-3-1-ஸர்வ வேதாந்த ப்ரத்யயாதி₄கரணம்-பல உபநிஷத்துக்களில் ஒரே கர்மம் -அதிகரணத்தின் பின்புலம் -ஸங்கதி –-ஓர் உபநிஷத்தில் ஒரு வித்யையில் சொல்லப்பட்ட பரமாத்மாவின் குணங்களை
    மற்றொரு உபநிஷத்தில் சொல்லப்பட்ட வித்யையில் சேர்த்துக் கொள்ளுதல் உப ஸம்ஹாரம் ஆகும். அந்தந்த இடத்தில் சொல்லப்பட்ட பரமாத்மாவின் குணங்களை அந்தந்த இடத்திலுள்ள வித்யையில் மட்டும் வைத்து த்யானித்தல் விகல்பம் ஆகும்.இவற்றில் எது சரி என்ற ஆராய்ச்சி இந்த பாதத்தில் முக்கியமானது. அதற்காக, இரண்டு உபநிஷத்துக்களில் சொல்லப்பட்ட வித்யைகள் வெவ்வேறா ? அல்லது ஒன்றா ? என்று ஆராய வேண்டும். இந்த முதல் அதிகரணத்தில் இதைத்தான் வ்யாஸர் ஓரிடத்தில் ஆராய்கிறார். ஒர் வித்யை என்றால் உப ஸம்ஹாரம் செய்ய வேண்டும், வெவ்வேறு என்றால் விகல்பம் ஏற்படும் என்று கருத்து

    ஸந்தேஹம் – சாந்தோக்யம் மற்றும் ப்ருஹதாரண்யக உபநிஷத்துக்களில் கூறப்பட்டுள்ள வைஶ்வாநர வித்யை போன்ற ப்ரஹ்ம வித்யைகள் ஒரே வித்யையா? அல்லது அவை வெவ்வேறு வித்யைகளா ?

    பூர்வ பக்ஷம் – பூர்வ மீமாம்ஸையில் கூறப்பட்டுள்ை நியாயங்களின் படி, அவை வெவ்வேறு வித்யைகள் தான்.முதலில், அப்₄யாஸம் அதாவது மீண்டும் மீண்டும் உபதேசிக்கப்படுவது இங்கு காணப்படுகிறது. வேதம் ஒரே செயலை இரண்டு முறை கட்டளை யிட முடியாது. எனவே இவை வெவ்வேறு வித்யைகள் தான்-மேலும், இந்த உபதேசங்கள் இரண்டும் வெவ்வேறு ப்ரகரணங்களில் கூறப்பட்டிருப்பதாலும், ப்ரகரணாந்தரம் என்ற ப்ரமாணத்தால் அவற்றை ஒரே வித்யை என்று கொள்ள
    முடியாது. ஆக, வெவ்வேறு உபநிஷத்துகளில் கூறப்படும் வித்யைகள் வெவ்வேறானவையே –

    பூர்வ மீமாம்ஸை சாஸ்த்ரத்தில் எற்கனவே ஆராயப்பட்ட இவ் விஷயத்தை இங்கு ப்ரஹ்ம ஸூத்ரங்களில் மறுபடியும் ஆரய்வதற்குக் காரணம் – இங்கு ஸந்தேகத்துக்கு அதிகப்படியான ஒரு காரணம் உள்ளது.-தேஷாமேவ ஏதாம் ப்₃ரஹ்ம வித்₃யாம் வதே₃த ஶிரோ வ்ரதம் விதி₄வத் யைஸ்து சீர்ணம்) என்று ஸ்ருதி கூறுகிறது. அதாவது, “விதிப்படி ஶிரோ வ்ரதம் என்ற வ்ரதத்தை அனுஷ்டித்தவர்களுக்கு மட்டுமே இந்தப் ப்ரஹ்ம வித்யையை உபதேசிக்க வேண்டும்” என்று கூறுகிறது.-இந்த ஶிரோ வ்ரதம் என்பது அதர்வண வேத சாகையைச் சேர்ந்தவர்களுக்கு விதிக்கப்பட்ட ஒரு விசேஷ விரதமாகும். எனவே , இந்த வித்யை அதர்வண வேத சாகயைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே உரியது என்று இந்த விதி காட்டுகிறது.-எல்லாச் சாகைகளிலும் கூறப் படும் வித்யை ஒன்றே என்று ஏற்றுக் கொண்டால், மற்ற வேத சாகைகளைச் சேர்ந்தவர்களும் இந்த ஶிரோ வ்ரதத்தை அனுஷ்டிக்க வேண்டிய நிலை ஏற்படும். அப்படியானால், இந்த விதி அதர்வண வேதத்தாருக்கு மட்டுமே என்று கூறியதற்குப் பொருள் இருக்காது. ஆகவே , இந்த வித்யைகள் ஒன்றல்ல; வெவ்வேறானவையே

    வெவ்வேறு உபநிஷத்துக்களிலும் ஒரே வித்யையே -ஸித்தாந்தம் – (1) ஸர்வ வேதா₃ந்த ப்ரத்யயம் சோத₃நாத்₃ யவிசேஷாத்
    ஸர்வ வேதா₃ந்த ப்ரத்யயம்
    — எல்லா வேதாந்தங்களிலும் அறியப்படும் (வித்யை ஒன்றே-ஏகமே );
    சோத₃நா — கட்டளை
    ஆதி — பெயர், வடிவு, பலன் ஆகியவற்றில்;
    அவிசேஷாத் — வேறுபாடு இல்லாததால்.

    பூர்வ மீமாம்ஸையில் கூறப்பட்ட ஸர்வ சாகா₂ ப்ரத்யய ந்யாயம் இங்கும் பொருந்துகிறது. எனவே , பல்வேறு உபநிஷத்துகளில் கூறப்படும் வைஶ்வாநர வித்யை போன்ற வித்யைகள், வெவ்வேறு வித்யைகள் அல்ல; ஒரே வித்யையின் பல்வேறு விளக்கங்களே .
    சோத₃நா (கட்டளை ): சாந்தோக்ய உபநிஷத்திலும், வாஜஸநேய சாகையிலும் (வைஶ்வாநரம் உபாஸ்தே ) அதாவது “வைஶ்வாநரனை உபாஸிக்க வேண்டும்” என்ற ஒரே கட்டளை கூறப்படுகிறது.
    ரூபம் (உபாஸனத்தின் வடிவு):-உபாஸனத்தின் என்பது த்யானம். அதில் வேறுபாடு என்பது த்யானிக்கப்படும் பொருளின் வேறுபாட்டால் மட்டும் தான் ஏற்படும். இந்த வித்யையிலோ இரண்டு உபநிஷத்துக்களிலும் உபாஸிக்கப்பட வேண்டியவர் உலகங்களை யெல்லாம் தனக்கு உடலாகக் கொண்ட ஒரே வைஶ்வாநர ப்ரஹ்மம் தான். எனவே , வித்யைகளின் வடிவமும் ஒன்றே .
    ஆக்₂யா (பெயர்): எல்லா இடங்களிலும் இந்த உபாஸனை வைஶ்வாநர வித்யை என்ற ஒரே பெயரால் அறியப்படுகிறது.
    ஸம்யோகம் (பலன்): எல்லா இடங்களிலும் இந்த வித்யையின் பலன் ப்ரஹ்ம ப்ராப்தி (ப்ரஹ்மத்தை அடைதல்) என்பதே .-
    ஆகவே , பல்வேறு வேத சாகைகளில் கூறப்பட்டாலும், “அந்த வைஸ்வாநர வித்யை தான் இதுவும்” என்கிற ப்ரத்யபி₄ஜ்ஞா என்னும் அறிவு ஏற்படுவதால் வைஶ்வாநர வித்யை ஒன்றே .-

    2-பே₄தா₃த் ந இதி சேத் ஏகஸ்யாமபி
    பேதா₃த்
    — (அப்₄யாஸம், ப்ரகரணாந்தரம் என்ற ப்ரமாணங்களால்) வித்யைகளில் வேறுபாடு இருப்பதால்;
    — (வித்யைகள்) ஒன்றல்ல;
    இதி சேத் — இவ்வாறு கூறினால்; ஏகஸ்யாமபி — ஒரே வித்யையானலும் (அவை இருக்கலாம்).

    பூர்வ பக்ஷியின் கேள்வி – திரும்பத் திரும்பச் சொல்வது வீணானபடியால் இவை யிரண்டும் ஒரே வித்யையாக இருக்க இயலாது

    ஸித்தாந்தியின் பதில் – இங்கு அப்₄யாஸம் (திரும்பத் திரும்பச் சொல்லுதல்) என்னும் தோஷமே இல்லை .

    சிரோ வ்ரதம் த்யானத்தின் அங்கமா? கல்வியின் அங்கமா?
    ஒரே நபருக்கே , ஒரே விஷயம் மீண்டும் மீண்டும் உபதேசிக்கப்பட்டால் மட்டுமே அது அப்₄யாஸம் ஆகும். அது போலவே , ஒரே நபருக்கே வெவ்வேறு ப்ரகரணங்களில் ஒரே மாதிரியான வித்யைகள் மீண்டும் கட்டளை யிடப்பட்டால் மட்டுமே , அதனால் புதிய வித்யை ஒன்று கூறப்படுகிறது என்று கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும்.-ஆனால், வெவ்வேறு சாகைகளை ஒருவரே அத்யயனம் செய்யப் போவதில்லை . எனவே சாந்தோக்யத்தில் உள்ள வாக்கியம் அந்த சாகையைப் படிப்பவர்களுக்கு வைஸ்வாநர வித்யையை உபதேசிக்கிறது, ப்ருஹதாரண்யகத்தில் உள்ள வாக்கியம் அந்த சாகையைப் படிப்பவர்களுக்கு வைஸ்வாநர வித்யையை உபதேசிக்கிறது. எனவே , அங்கு திரும்பத் திரும்பச் சொல்லுதல் என்ற தோஷமே இல்லை .-அதனால் இவை வெவ்வேறு வித்யைகள் என்று கொள்ள எந்தக் காரணமும் இல்லை

    3-ஸ்வாத்₄யாயஸ்ய ததா₂த்வே ஹி ஸமாசார அதி₄காராச் ச ஸவவச் ச தந் நியம:
    “ஶிரோ வ்ரதத்தை அனுஷ்டித்தவர்களுக்கே இந்த வித்யை உரியது” என்று ஒரு நியமத்தால் வித்யைகள் வேறுபடுகின்றன என்று கூறுவது பொருந்தாது. ஏனெனில், அந்த நியமம் வித்யைக்காக அல்ல; வேத அத்யயனத்திற்காகவே விதிக்கப்பட்டது.”
    ஹி— ஏனெனில்;
    ஸ்வாத்₄யாயஸ்ய — வேத அத்யயனத்திற்கே ;
    ததா₂த்ரே — சிரோ வ்ரதம் அங்கமாக இருப்பதற்காக (உபதேசம்); —
    மேலும்;
    ஸமாசார — ஸமாசார கிரந்தத்தில்; அதி₄காராத் —வேத வ்ரதம் என்று இது குறிப்பிடப்படுவதால்;
    ஸவவத் — ஸவ ஹோமங்களைப் போல; தந் நியம: — அந்த நியமம் பொருந்துகிறது-

    பூர்வ பக்ஷீ, “ஶிரோ வ்ரதத்தை அனுஷ்டித்தவர்களுக்கு மட்டுமே இந்தப் ப்ரஹ்ம வித்யையே உபதேசிக்க வேண்டும்” என்ற ஸ்ருதியைக் காட்டி, அதர்வண வேதத்தில் கூறப்படும் வித்யை மற்ற சாகைகளில் கூறப்படும் வித்யைகளிலிருந்து வேறுபட்டது என்று வாதிட்டார்.

    (அத்யயனம் -கற்பது-இது வேறு -இதற்க்கு மேல் -அனுஷ்டானம் நிலை வேறே)

    அது சரியல்ல. ஶிரோ வ்ரதம் என்பது வித்யையின் அங்கம் அல்ல; வேத அத்யயனத்தின் அங்கம். வேதத்தைப் படிப்பதற்குத் தேவையான ஸம்ஸ்காரத்தை அளிப்பதற்காகவே இந்த விரதம் விதிக்கப்பட்டுள்ளது. இதையே (நைதத் அசீர்ண வ்ரத: அதீ₄தே ) என்ற ஸ்ருதி, “இந்த விரதத்தை அனுஷ்டிக்காதவன் இதை அத்யயனம் செய்யக் கூடாது” என்று கூறுவதன் மூலம் தெளிவு படுத்துகிறது. மேலும், ஸமாசாரம் என்னும் கிரந்தத்திலும், (இத₃மபி வேத வ்ரதேந வ்யாக்₂யாதம்)
    என்ற விடத்தில் இந்த சிரோ வ்ரதம் வேத வ்ரதம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாலும், (உபாசன விரதம் அல்ல -வேத விரதம் என்றும் நிரதேசிப்பதால் )இந்த நியமம் வித்யைக்கானது அல்ல.-அத₂ர்வண வேதத்தில் சொல்லப்பட்ட ஸவ ஹோமங்கள் என்பவை எப்படி அந்த சாகைகளைப் படிப்பவர்களுக்கு மட்டுமானதோ அதே போல் இந்த சிரோ வ்ரதமும். ஆக, இது வித்யையின் பகுதி அல்ல. அதனால் இரண்டிடங்களும் ஒரே வித்யையே கூறப்படுகிறது

    வேதமே உப ஸம்ஹாரத்தைக் காட்டுகிறது
    4– த₃ர்ஸயதி ச –
    “மேலும் (ஸ்ருதி) காட்டுகிறது”
    இது வரை , யுக்தியின் மூலம் பல்வேறு வேத சாகைகளில் கூறப்படும் வித்யைகள் ஒன்றே என்று நிறுவப்பட்டது. இப்போது, அதையே ஸ்ருதி ப்ரமாணத்தாலும் ஸூத்ரகாரர் உறுதிப்படுத்துகிறார்.
    சாந்தோக்ய உபநிஷத்தில்,(தஸ்மிந் யத₃ந்த: தத் விஜிஞாஸி தவ்யம்) என்று “இதயத்துக்குள் இருக்கும்
    பரமாத்மாவுக்குள் உள்ளதை த்யானிக்க வேண்டும்” என்று கூறி, (கிம் தத₃த்ர வித்₃யதே யத₃ந்வேஷ்டவ்யம்), அதாவது “அந்தப் பரமாத்மாவுக்குள் உள்ளது எது?” என்று கேட்டுக் கொண்டு, எட்டு (அபஹத பாப்மாதி )கல்யாண குணங்களைச் சொல்கிறது.(இதுவே தஹர வித்யை )

    அதே போல், தைத்திரீய உபநிஷத்திலும், அதே வித்யையைக் குறிப்பிட்டு, “्(தஸ்மிந் தத₃ந்த: தது₃பாஸி தவ்யம்), அதாவது “பரமாத்மாவுக்குள் உள்ளதை உபாஸிக்க வேண்டும்” என்று மட்டும் கூறுகிறது. உள்ளே இருப்பது என்ன என்று ஆராயவே இல்லை . இதற்கு ஒரே கருத்து தான் இருக்க முடியும் – இதே வித்யை தான் சாந்தோக்யத்திலும் சொல்லப்பட்டுள்ள படியால், அங்கிருந்து உள்ளே இருப்பது என்ன என்று தெரிந்து கொள்ளலாம் என்று. ஆகவே , அந்த வித்யைகள் ஒன்றே

    5–உப ஸம்ஹார: அர்தா₂பே₄தா₃த் விதி₄சேஷவத் ஸமாநே ச
    ஸமாநே —
    (வித்யை ) ஒன்றாக இருக்கும் போது;
    — கண்டிப்பாக;
    உப ஸம்ஹார: — (குணங்களைச் ) சேர்த்துக் கொள்ள வேண்டும்;
    விதி₄சேஷவத் — அந்தந்த விதியின் அங்கங்களைப் போல;
    அர்தா₂பே₄தா₃த் — பயனில் வேறுபாடு இல்லாததால்;

    பல உபநிஷத்துகளில் கூறப்படும் உபாஸனை ஒன்றே என்று நிரூபிக்கப்பட்டதால், அந்த உபாஸனையில் கூறப்படும் கல்யாண குணங்களையும் ஒன்றிலிருந்து மற்றொன்றில் உப ஸம்ஹாரம் செய்ய வேண்டும்.-ஒரு உபநிஷத்தில் ஒரு வித்யையை விதித்து விட்டு, அங்கேயே சில குணங்களைச் சொன்னால், அந்த குணங்களை யெல்லாம் கண்டிப்பாக அந்த வித்யையில் த்யானிக்க வேண்டும் என்று ஏற்றுக் கொள்கிறோம், அந்த குணங்கள் அந்த விதிக்கு சேஷமாக (அங்கமாக -பகுதியாக -உதவுவதாக) இருப்பதால். இதைத் தான் வ்யாஸர் ’விதி₄சேஷம் போல்’ என்கிறார். அதே போல், வேறொரு உபநிஷத்தில் சொல்லப்பட்ட குணமும் இந்த உபாஸனத்துக்கு அதே போன்ற உதவியையே செய்கிற படியால், பயனில் எந்த வேறுபாடும் இல்லை . இதைத் தான் வ்யாஸர் ’அர்த்தத்தில் (பயனில்) வேறுபாடு இல்லாதபடியால்) என்கிறார்-

    ஆக, இரண்டு இடங்களிலும் சொல்லப்பட்ட வித்யைகள் ஒன்றானபடியால், இரண்டிடத்தில் சொல்லப்பட்ட குணங்களையும் சேர்த்துத்தான் அந்த வித்யையில் பரமாத்மாவைத் த்யானம் செய்ய வேண்டும் என்று நிச்சயமாயிற்று.

    3.3.2 அந்யதா₂த்வாதி₄கரணம்-உத்கீத வித்யைகள் வெவ்வெறு ஆனவை -அதிகரணத்தின் பின்புலம் -ஸங்கதி –பெயர், பயன், கட்டளை வாக்கியம் மற்றும் உபாஸனத்தின் வடிவம் ஒன்றாக
    இருந்தால் வெவ்வேறு உபநிஷத்துக்களில் சொல்லப்பட்ட வித்யைகளும் ஒன்றே என்றும், ஆகையால் இரண்டு இடங்களிலும் சொல்லப்பட்ட குணங்களை உபஸம்ஹாரம் செய்ய வேண்டும் (சேர்த்துக் கொண்டு உபாஸனம் செய்ய வேண்டும்) என்றும் முந்தைய அதிகரணத்தில் கூறப்பட்டது. இனி, அடுத்து வரும் சில அதிகரணங்களில், ஒரு சில வித்யைகளை எடுத்துக் கொண்டு, அவற்றுக்குப் பெயர், பயன், கட்டளை வாக்கியம் & வடிவம் ஒன்றாக உள்ளனவா அல்லது வெவ்வேறா என்று ஆராயப் படுகிறது, அவை ஒரே வித்யையா வெவ்வேறு வித்யைகளா என்று அறிவதற்காக.

    (திருஷ்ட்டி விதிகள்-இஹ லோக பயன்களுக்காக உபாசனம் -இவற்றுக்கு அங்கமாகவும் உத்கீத உபாசனம் உண்டு -அடுத்து –ப்ரஹ்ம உபாசனை-பரம புருஷார்த்த பலனுக்காக -இரண்டு விதங்கள் – உண்டு –இந்த அதிகரணத்தில் திருஷ்ட்டி விதியைப் பற்றி இரண்டு உபநிஷத்துக்களில் உள்ளவை பற்றிய ஆராய்ச்சி செய்யப்படுகிறது -உத்கீதம் -பாடல் வடிவுடன் சாம மந்த்ரம் பற்றிய வித்யை –)

    விஷய வாக்யம் – ப்ருஹதாரண்யக உபநிஷத்தின் 1ஆம் அத்யாயம் 3ஆம் ப்ராஹ்மணத்தில் “உத்₃கீ₃த₂ வித்₃யை” த்வயாஹ ப்ராஜாபத்யா தே₃வாஶ்சா ஸுராஶ்ச । தேஹ தே₃வா ஊசுர்ஹந்தா ஸுராந்யஜ்ஞ உத்கீ₃தே ₂நாத்யயாமேதி ॥-ப்ரஜாபதியின் படைப்புகளான தேவர்களும் அஸுரர்களும் இரு பிரிவினராக இருந்தனர். தேவர்கள் யாகத்தில் உத்கீ₃தத்தைப் பயன்படுத்தி அஸுரர்களை வெல்வோம் என்று கூறினர்.

    தேஹ வாசமூசுஸ் த்வம் ந உத்கா₃யேதி । தமபி₄த்₃ருத்ய பாப்மநா ஆவித்₄யந் ॥-அவர்கள் வாக்கு என்ற பேச்சுப் புலனை உத்கீ₃தம் பாடுமாறு கேட்டனர். ஆனால், அஸுரர்கள் வாக்கைத் தோஷத்தால் பாதித்தனர். இதே போல் சக்ஷுஸ் (கண்), ஸ்ரோத்ரம் (காது), மனது ஆகியவற்றையும் அஸுர்ர்கள் பாதித்தனர்.(இதனால் தான் கயிற்றைக் கண்டு பாம்பு என்று பிரமிக்கிறோம் -இதே போல் மனதிலும் ப்ரமம் ஏற்படுகிறது)

    அத₂ஹ இமம் ஆஸந்யம் ப்ராண மூசுஸ் த்வம் ந உத்கா₃யேதி । ஸ யாதா₂ஶ்மாந ம்ருத்வா லோஷ்டோ வித்₄வம் ஸேத ஏவம் ஹைவ வித்₄வம்ஸமாநா விஷ்வஞ்சோ விநேஶு: । ததோ தே₃வா அப₄வந் பராʼஸுரா: ॥-அடுத்து தேவர்கள் முக்ய ப்ராணனை (மூச்சுக் காற்றை) பாடும்படி வேண்டினார்கள். அஸுரர்கள் ப்ராணனைத் தாக்கினர்.ஆனால், கல்லில் மோதிய மண் கட்டி சிதறுவதைப் போல், அவர்களே அழிந்து சிதறினர். இதனால் தேவர்கள் வெற்றி பெற்றனர்; அஸுரர்கள் தோல்வி யடைந்தனர் –

    ப₄வத் யாத்மநா பரா அஸ்ய த்₃விஷந் ப்₄ராத்ருவ்யோ ய ஏவம் வேத₃ ॥-இவ்வாறு உத்கீதத்தை மூச்சுக் காற்றாக உபாஸிப்பவர் உயர்ந்தவராகிறார்; அவரது பகைவன் தோற்றுப் போகிறான்-

    சாந்தோக்ய உபநிஷத்தின் 1ஆம் அத்யாயம் 2 ஆம் கண்டத்தில் “உத்₃கீ₃த₂ வித்யை” –தே₃வாஸுரா ஹ வை யாத்ர ஸம்யேதிரே … தே₃வா உத்கீ₃த₂மாஜஹ்ரு: அநேந ஏநாந் அபி₄ப₄விஷ்யாம இதி ॥தேவர்களும் அஸுரர்களும் ஒருவரை யொருவர் எதிர்த்து போரிட்ட போது, தேவர்கள், உத்கீ₃தத்தைக் கொண்டு
    அஸுரர்களை வெல்வோம் என்று எண்ணினர்.

    முதலில் உத்கீதத்தை வாக் (பேச்சுப் புலன்), சக்ஷுஸ் (கண்), ஸ்ரோத்ரம் (காது), மனது ஆகியவையாக உபாஸனம் செய்தனர், ஆனால் அஸுரர்களை வெல்ல முடியவில்லை

    அத₂ஹ ய ஏவாயம் முக்₂ய: ப்ராணஸ்தமுத்கீ₃த₂ முபாஸாஞ்சக்ரிரே । தம் ஹாஸுரா ருத்வா வித₄வம் ஸு: யதா₂ அஶ்மாநமாக₂ணம் ருத்வா வித₄வம் ஸே தைவம் ॥--பின்னர் இந்த உத்கீ₃தத்தை முக்கிய ப்ராணனாக (மூச்சுக் காற்றாக) உபாஸித்தனர். அஸுரர்கள் அதைத் தாக்கிய போது,கல்லில் மோதிய மண் கட்டி சிதைவதைப் போல் அவர்களே அழிந்து போனார்கள்-

    யதா₂ அஶ்மாநம் ஆக₂ணம் ருத்வா வித்₄வம் ஸத ஏவம் ஹைவ ஸ வித்₄வம் ஸதே ய ஏவம்விதி₃ பாபம் காமயதே-இப்படி உத்கீதத்தைப் ப்ராணனாக உபாஸிப்பவனுடைய பகைவன் கல்லில் மோதிய மண் கட்டி போல் அழிகிறான்-

    ஸந்தேகம்ப்ருஹதாரண்யக உபநிஷத்திலும் சாந்தோக்ய உபநிஷத்திலும் கூறப்படுபவை இரண்டு வெவ்வேறு உத்கீ₃த₂ வித்யைகளா? அல்லது ஒன்றா

    பூர்வ பக்ஷியின் வாதம்–பூர்வ பக்ஷம் – இரண்டு இடங்களிலும் கூறப்படும் வித்யைகள் ஒன்றே . பெயர், பயன், கட்டளை , வடிவம் ஒன்றானதால்.-இரண்டு இடங்களிலும் பலன் ஒன்றே — சத்ருக்களை வெல்வது;-இரண்டு இடங்களிலும் ரூபமும் (வடிவமும்) ஒன்றே –உத்கீதத்தைப் ப்ராணனாக உபாஸனம் செய்வது தான்.-இரண்டு இடங்களிலும் சோத₃நா எனப்படும் கட்டளையும் ஒன்றே .-மேலும், இரண்டுமே உத்கீ₃த₂ வித்யை என்ற ஒரே பெயரால் அழைக்கப் படுவதால் ஆக்₂யையும் ஒன்றே

    1–அந்யதா ् ₂த்வம் ஶப்₃தா₃த் இதி சேத் ந அவிஸேஷாத்
    அந்யதா₂த்வம்
    –ரூபத்தில் வேறுபாடு உள்ளது
    சப்₃தா₃த் -சொற்களில் வேறுபாடு இருப்பதால்
    இதி சேத் ந – எனவே வித்யைகள் ஒன்றல்ல என்று கூறினால், அது சரியல்ல; அவிஸேஷாத் –-வேறுபாடு இல்லாததால்-

    ஆஷேபம் – ப்ருஹதா₃ரண்யகத்தில்-(தேப்₄ய ஏஷ ப்ராண உத₃கா₃யத்) என்று, உத்கீ₃தத்தைப் பாடுபவரைத் தான் ப்ராணனாக (மூச்சுக் காற்றாக) உபாஸிப்பது கூறப்பட்டுள்ளது.
    சாந்தோக்யத்தில் (ய ஏவாயம் முக்₂ய: ப்ராணஸ்த முத்கீ₃த₂ம் உபாஸாஞ் சக்ரிரே ) என்று, உத்கீ₃தத்தையே ப்ராணனாக உபாஸிப்பது கூறப்படுகிறது. எனவே , இரண்டிடங்களிலும் உபாஸனத்தின் ரூபம் வேறுபடுவதால், வித்யைகள் வெவ்வேறு.

    குடத்தையைப் பற்றிய ஞானமும் துணியைப் பற்றிய ஞானமும் வேறுபாடு – விஷயீகரிக்கும் பொருளின் வேறுபாட்டால் ஞானத்தில் வேறுபாடு போல் இங்கும் –

    பூர்வ பக்ஷியின் பதில் – வேறுபாடு இல்லை . ஓரிடத்தில் முன்புள்ள வாக்கியத்துக்கு ஏற்பத்தான் பின்புள்ள வாக்கியங்களுக்குப் பொருள் கூற வேண்டும். இங்கு ப்ருஹதாரண்யகத்திலும் தொடக்கத்தில் உத்கீ₃தத்தைக் கொண்டு சத்ருக்களை வெல்வது என்பதே கூறப்படுகிறது. ஆகையால், (தேப்₄ய ஏஷ ப்ராண உத₃கா₃யத்) என்று பின்பு வரும் வாக்கியத்தில் உத்கீதத்தைப் பாடுபவர் கூறப்பட்டிருந்தாலும், (உத்கீதத்தை மூச்சுக்காற்று பாடியது -ப்ரஹதாரண்யம் -தேவர்கள் பிராணனாக த்யானம் செய்தார்கள் -சாந்தோக்யம் -ஆகையால் வடிவத்தில் வேறுபாடு -சொல்லைக் கொண்டு அறிகிறோம்) அங்கும் உத்கீதத்தையே ப்ராணனாக த்யானிப்பது தான் சொல்லப்படுவதாகக் கொள்ள வேண்டும். உத்கீதத்தைப் பாடுபவர் எப்படி உத்கீதமாக இருக்க முடியும்? இருக்கலாம். சமைக்கப்படும் அரிசி மிக நன்றாக இருந்தால், “அரிசியே தன்னைச் சமைத்தது, நான் ஒன்றுமே செய்யவில்லை ” என்று கூறுவது போல், பாடப்படும் உத்கீதமே இங்கு பாடுபவறாகச் சொல்லப் படுவதில் தவறில்லை . எனவே இரண்டு உபநிஷத்துக்களிலும் வடிவம் ஒன்றே –(குடத்தையைப் பற்றிய ஞானமும் துணியைப் பற்றிய ஞானமும் வேறுபாடு – விஷயீகரிக்கும் பொருளின் வேறுபாட்டால் ஞானத்தில் வேறுபாடு போல் இங்கும் -)

    (அரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார் -ராமன் காட்டுக்குப் போனார் என்று உபக்ரமித்து தொடங்கி அவர் சூர்ப்பணகையின் காது மூக்கை அறுத்தார் என்றால் லஷ்மணனைக் கொண்டு அறுக்கப் பண்ணினார் என்றே கொள்ள வேண்டும் -பிரகரண பலத்தால்-இரண்டு இடங்களிலும் தொடக்கத்தில் உத்கீதத்தைக் கொண்டு அவர்களை வெல்வோம் என்றே உள்ளது -)

    வடிவத்தில் வேறுபாடு உள்ளது-ஸித்தாந்தம் – 2-ந வா ப்ரகரண பே₄தா₃த் பரோவரீயஸ்த்வாதி₃வத்
    ந வா
    -அவ்வாறல்ல;
    ப்ரகரண பே₄தா₃த் – தொடக்கம் வேறுபடுவதால் (வித்யையின் வடிவமும் வேறுபடுகிறது)
    பரோ வரீையாஸ்த்வாதி₃வத் -பரோ வரீயஸ்த்வம் முதலானவற்றை த்யானிக்கும் உபாஸநங்கள் போல்
    இங்கு ப்ரகரணம் என்றால் ப்ரக்ரமம், உபக்ரமம் அதாவது தொடக்கம் என்று பொருள். ப்ருஹதாரண்யகத்திலும்-சாந்தோக்யத்திலும் தொடக்கம் வேறுபடுவதால் வித்யைகளின் வடிவம் மாறுவதால் வித்யைகள் வெவ்வேறு தான்.

    சாந்தோக்யத்தில் (தஸ்யை வாக்ஷரஸ்யோப வ்யாக்₂யாநம் ப₄வதி) அதாவது “ஓம் என்ற அக்ஷரத்தைப் பற்றின கதை இது” என்று கூறி விட்டு, மேலே தேவர்கள் அஸுரர்களைத் தோற்கடித்தது கூறப்படுகிறது.-எனவே , பாடப்படும் உத்கீதத்தின் ஒரு பகுதியான ஓம் என்ற ப்ரணவத்தை மட்டும் ப்ராணனாக உபாஸிப்பது தான்- சாந்தோக்யகத்தில் விதிக்கப்படுகிறது. ஆனால் ப்ருஹதா₃ரண்யகத்தில், இதைப் போல் தொடக்கத்தில் எந்த வாக்கியமும் இல்லாததால்,முழு உத்கீ₃தத்தையும் பாடுபவராகிய உத்காதாவைப் ப்ராணனாக உபாஸிப்பது தான் கூறப்படுகிறது.
    எனவே, உபாஸிக்கப்படும் பொருளிலேயே வேறுபாடு இருப்பதால், இவை ஒரே வித்யை அல்ல.

    ப்ருஹதாரண்யகத்தில் உத்கீதத்தைப் பாடியவரைப் ப்ராணனாக த்யானிப்பது சொல்லப்படவில்லை , உத்கீதத்தையே ப்ராணனாக த்யானிப்பது தான் கூறப்படுகிறது, தொடக்கத்திலிருக்கும் வாக்கியத்தோடு முறண்பாடு ஏற்படாமல் இருப்பதற்காக – என்று பூர்வ பஷி கூறி யிருந்தார். இது தவறானது. தொடக்கத்தில் உள்ள “உத்கீதத்தைக் கொண்டு அஸுரர்கணை அழிக்க நினைத்தார்கள்” என்பதற்கும், இறுதியில் ’உத்கீதத்தைப் பாடுபவரைப் ப்ராணனாக நினைக்க வேண்டும்’ என்பதற்கும் முரண்பாடே இல்லை . பாடுபவர் இருந்தால் பாடப்பட்ட உத்கீதமும் இருக்குமே

    பரோவரீயஸ்த்வாதி₃வத் – ப்ரணவத்தை பரமாத்மாவாக உபாஸிக்கும் வித்யைகளில், ஓரிடத்தில் அவர் ஹிரண்மய புருஷர் (தங்கம் போன்ற திருமேனி உணடயவர்) என்றும் மற்றோர் இடத்தில் “பரோவரீயஸ்த்வம்” (உயர்ந்தவர்களை விடச் சிறந்தவர்) என்ற குணத்தோடு கூடியவர் என்றும் கூறப்படுகிறார். இங்கு உபாஸிக்கப்படும் பொருள் ஒன்றாக இருந்தாலும், குணங்களில் வேறுபாடு இருப்பதால் வித்யைகள் வேறுபட்டவையே . அப்படி யிருக்க, இங்கு உபாஸிக்கப்படும் பொருளிலேயே வேறுபாடு இருக்கும் போது, இரண்டு வித்யைகளும் ஒன்றாக இருக்க இயலாது.

    பெயர் ஒன்றானாலும் வித்யைகள் வேறாகலாம்
    3-ஸம்ஜ்ஞாதஶ் சேத் தது³க்தம், அஸ்தி து தத₃பி
    ஸம்ஜ்ஞாத:
    — பெயர் ஒன்றாக இருப்பதால்;
    தத் — வித்யைகள் ஒன்றே ;
    உக்தம் வசத் — என்று கூறப்படது என்றால்;
    தத் – அந்தப் பெயர் ஒற்றுமையும்;
    அபி –வித்யைகள் வேறுபட்டிருந்தாலும்; அஸ்தி து — இருக்கிறதன்றோ .

    ஒரே பெயர் இருப்பதால் மட்டுமே இரண்டு வித்யைகளும் ஒன்றே என்று முடிவு செய்ய முடியாது. உதாரணமாக, நித்ய அக்னிஹோத்ரம் மற்றும் குண்ட பாயின மயன அக்னி ஹோத்ரம் ஆகிய இரண்டிற்கும் “அக்னி ஹோத்ரம்” என்ற ஒரே பெயர் இருக்கிறது; ஆனால் அவை வெவ்வேறு கர்மங்கள். அதே போல்,சாந்தோக்ய உபநிஷத்தின் முதல் ப்ரபாடகத்தில் கூறப்படும் பல் வேறு வித்யைகளுக்கும் “உத்₃கீ₃த₂ வித்யை” என்ற ஒரே பெயர் பயன்படுத்தப்படுகிறது.

    பூர்வ பக்ஷியின் கேள்வி: சாந்தோக்ய உபநிஷத்தில் ப்ரணவத்தை மட்டும் பற்றின உபாஸனம் முந்தைய பகுதியோடு முடிந்து, இந்த உபாஸனம் முழு உத்கீதத்தைப் பற்றியதாக இருக்கலாமே ?

    ஸித்தாந்தியின் பதில் – 4-வ்யாப்தேஶ்ச ्ஸமஞ்ஜஸம் –“மேலும், தொடர்ந்து வரும் பகுதிகளிலும் இதே விதமாக இருப்பதால், இவ்வாறு கொள்வதே பொருத்தமானது.”
    சாந்தோக்ய உபநிஷத்தின் முதல் ப்ரபாடகத்தில் இப்போது ஆராயப்படும் வித்யைக்கு முன்னும் பின்னும் வரும் வித்யைகளில் எல்லாம் உத்கீ₃தத்தின் ஒரு பகுதியாகிய ப்ரணவமே உபாஸிக்கப்பட வேண்டியதாகக் கூறப்படுகிறது. எனவே, இந்த வித்யையிலும், உத்கீ₃தம் என்ற சொல் ப்ரணவத்தையே குறிக்கிறது என்று கொள்வதே பொருத்தமானது.

    உத்கீதம் முழுவதையும் குறிக்கும் ’உத்கீதம்’ என்ற சொல், அதன் ஒரு பகுதியான ப்ரணவத்தை மட்டும் எப்படிக் குறிக்க முடியும்? இது சாத்தியமே . ஒரு துணியின் ஒரு பகுதி எரிந்தாலும், “துணி எரிந்து விட்டது” என்று சொல்வது போல். எனவே , சாந்தோக்யத்தில் ப்ரணவம் மட்டும் ப்ராணனாக உபாஸிக்கப்பட வேண்டியதாகவும், ப்ருஹதா₃ரண்யகத்தில் முழு உத்கீ₃தத்தைப் பாடுபவர் ப்ராணனாக உபாஸிக்கப்பட வேண்டியதாகவும் கூறப்படுவதால், உபாஸனையின் வடிவத்தில் வேறுபாடு உள்ளது. ஆகையால், இவை இரண்டும் வெவ்வேறு வித்யைகள் என்பது நிரூபிக்கப்பட்டது.

    3-3-3-ஸர்வாபே₄தா₃தி₄கரணம்-மூன்று இடங்களிலும் ஒரே ப்ராண வித்யை -அதிகரணத்தின் பின்புலம் -ஸங்கதி –-முந்தைய அதிகரணத்தில் உத்கீதம் என்ற மந்த்ரப் பகுதியைப் ப்ராணனாகத் த்யானிக்கும் வித்யை ஆராயப்பட்டது. இப்போது, ப்ராணனையே நேரடியாக த்யானிக்கும் வித்யை ஆராயப்படுகிறது

    விஷய வாக்யம் – ப்ராண வித்யை சாந்தோக்ய உபநிஷத்தின் 5ஆம் அத்யாயத்தின் 1ஆம் கண்டத்திலும் ப்ருஹதாரண்யக உபநிஷத்தின் 6அம் அத்யாயத்தின் 1ஆம் ப்ராஹ்மணத்திலும் ஒரே மதிரி சொல்லப்பட்டுள்ளது.-முதலில் ப்ராணனைப் பற்றின வித்யையை உபதேசிக்கிறது –
    யோ ஹ வை ஜ்யேஷ்ட₂ம் ச ஸ்ரேஷ்ட₂ம் ச வேத₃ ஜ்யேஷ்ட₂: ச ஹ வை ஸ்ரேஷ்ட₂: ச ப₄வதி | ப்ராணோ வாவ ஜ்யேஷ்ட₂: ச ஸ்ரேஷ்ட₂: ச-
    “யார் ஜ்யேஷ்டமானதும் ஸ்ரேஷ்டமானதுமான பொருளை த்யானிக்கிறாரோ , அவர் ஜ்யேஷ்டராகவும் ஸ்ரேஷ்டராகவும் ஆகிறார்.-ப்ராணனே ஜ்யேஷ்டமானதும் ஸ்ரேஷ்டமானதும் ஆகும்”.
    ஜ்ரேஷ்டத்வம் என்றால் மூத்ததாய் தொன்மையானதாய் இருத்தல்.-ஸ்ரேஷ்டத்வம் என்றால் மிகச் சிறந்ததாய் இருத்தல்.

    அதற்குப் பிறகு நான்கு புலன்களுக்குள்ள சிறப்புகள் சொல்லப்படுகின்றன.
    வாக்
    (பேச்சுப் புலன்) – வஸிஷ்ட₂த்வம் (செல்வத்தைப் பெறச் செய்யும் நல்ல பேச்சுக்குக் காரணமாக இருத்தல்.
    சக்ஷு ஸ் (கண்) – ப்ரதிஷ்டா₂த்வம் (நிலையான இருப்புக்காக நிலத்தின் ஏற்றத் தாழ்வுகளைக் காண்பித்தல்.
    ஸ்ரோத்ரம் (காது) – ஸம்பத்த்வம் (செல்வத்திற்குக் காரணமான சாஸ்த்ர ஜ்ஞாநத்துக்குக் காரணமாய் இருத்தல்.
    மனஸ் (மனது) – ஆயதனத்வம் (மாலை , சந்தனம் முதலானவற்றால் ஏற்படும் அனுபவங்களுக்கு காரணமாக இருத்தல்.

    எல்லா இந்த்ரியங்களும் ப்ராணனைச் சார்ந்தே நிலைத்திருக்கின்றன; அவற்றின் ஒவ்வொரு செயல்பாடும் ப்ராணனைச் சார்ந்தே நடை பெறுகிறது. இதுவே ப்ராணனுடைய ஸ்ரேஷ்ட் ம் அதாவது உயர்ந்த தன்மை . இதைக் காட்ட ஒரு கதை சொல்லப்படுகிறது –

    அத₂ ஹ ப்ராணா அஹம் ஸ்ரேயஸி வ்யூதி₃ரே | அத₂ ஹ ப்ராண உச்சிக்ரமிஷந் இதராந் ப்ராணா: ஸமகி₂தத் । த்வம் ந: ஸ்ரேஷ்டோ ₂ʼஸி
    புலன்கள் மற்றும் ப்ராண வாயுவுக்குள் யார் சிறந்தவர் என்ற போட்டி ஏற்பட, ஒவ்வொருவராக உடலை விட்டு விலகிய போதும் மற்றவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை . ஆனால் ப்ராணன் விலக முற்பட்ட போது, எல்லாப் புலன்களும் செயலிழந்து போயின, உடலே நிலை குலைந்து போயிற்று. ஆகவே , எல்லாப் புலன்களும் கூடி, ப்ராணனே சிறந்தது என்று ஏற்றுக் கொண்டன

    விஷய வாக்யம்-இதற்குப் பிறகு வாக் முதலான இந்த்ரியங்களுடன் தொடர்பு படுத்திக் கூறப்பட்ட வஸிஷ்ட₂த்வம் முதலான குணங்கள், இப்போது ப்ராணனுடன் தொடர்புைடவையாகவும் கூறப்படுகின்றன-
    அத₂ ஹைநம் வாகு₃வாச யத₃ஹம் வஸிஷ்டோ₂ʼஸ்மி த்வம் தத்₃வஸிஷ்டோ ₂
    ʼஸீதி-

    “அப்போது வாக் ப்ராணனை நோக்கி, ‘நான் வஸிஷ்டத்வம் என்ற குணத்தோடு உள்ளதே உம்மை அண்டித் தான், எனவே வஸிஷ்டத்வம் என்ற பண்பு உனக்கும் உள்ளது” என்று கூறியது. இதே போல் கண், காது, மனது ஆகியவையும் கூறின.
    ஆக இந்த வித்யையில் ப்ராண னுக்கு முதலில் ஜ்யேஷ்டத்வம் ஸ்ரேஷ்டத்வம் என்று 2 குணங்கள் சொல்லப்பட்டன. அதற்குப் பின், வாக் முதலானவற்றுக்குச் சொல்லப்பட்ட வஸிஷ்டத்வம் முதலான 4 பண்புகள் கூட ப்ராணனுக்கும் உள்ளன என்றும் சொல்லப்பட்டது. ஆகவே , மொத்தம் 6 குணங்களோடு கூடிய ப்ராணனை உபாஸிப்பது இந்த வித்யை . பெயர், பயன், கட்டளை மற்றும் வடிவத்தில் வேறுபாடு இல்லாததால், இந்த ஒரே வித்யை சாந்தோக்யத்திலும் ப்ருஹதாரண்யகத்திலும் சொல்லப்பட்டுள்ளது என்பதில் எந்த ஸந்தேஹமும் இல்லை .

    ருக்₃வேதத்தைச் சேர்ந்த கௌஷீதகீ உபநிஷத்திலும் ஒரு ப்ராண வித்யை சொல்லப்பட்டுள்ளது. அதிலும், ஜ்யேஷ்டத்வம் மற்றும் ஸ்ரேஷ்டத்வம் என்று ப்ராணனுக்குள்ள இரண்டு பண்புகளைச் சொல்லி, பிறகு வாக் முதலான புலன்களுக்கு உள்ள வஸிஷ்டத்வம் முதலான 4 பண்புகளைச் சொல்லி, அதற்குப் பின் ப்ராணன்களுக்குள் வந்த போட்டியைச் சொல்வதன் மூலம் எல்லாப் புலன்களும் ப்ராணனை நம்பியே இயங்குகின்றன என்றும் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், சாந்தோக்யத்திலும் ப்ருஹதாரண்யகத்திலும் இருப்பது போல் இறுதியில் அந்தந்தப் புலன்கள் வஸிஷ்ட₂த்வம் முதலான தங்கள் தங்கள் குணங்களை ப்ராணனுக்கு இருப்பதாகச் சொன்ன பகுதி மட்டும் இந்த உபநிஷத்தில் இல்லை .

    ஸந்தேகம் கௌஷீதகீ உபநிஷத்தில் கூறப்படும் ப்ராண வித்யை , மற்ற இரண்டு உபநிஷத்துக்களிலும் சொல்லப்பட்ட ப்ராண வித்யையைக் காட்டிலும் வேறா? அல்லது ஒன்று தானா?

    பூர்வ பக்ஷம் – இந்த வித்யை வேறு தான், உபாஸனத்தின் ரூபம் (வடிவம்) மாறுபடுவதால். இரண்டு இடங்களிலும் ப்ராணனே உபாஸிக்கப்பட வேண்டியவராக இருந்தாலும், ஒரு இடத்தில் ஜ்யேஷ்டத்வம் ஸ்ரேஷ்டத்வம் வஸிஷ்டவ்யம் ப்ரதிஷ்டத்வம் ஸபத்த்வம் ஆயதனத்வம் என்ற 6 குணங்களோடு கூடியதாகப் ப்ராணனை உபாஸிக்க வேண்டும்; மற்றோர் இடத்தில் வெறும் ஜ்யேஷ்டத்வம் மற்றும் ஸ்ரேஷ்டத்வம் என்ற 2 குணங்கள் மட்டும் தான் சொல்லப்பட்டுள்ளன. எனவே , உபாஸனத்தின் வடிவம்
    மாறுவதால் இந்த ப்ராண வித்யை வேறாகத் தான் இருக்க வேண்டும்.

    வடிவத்தில் வேறுபாடு இல்லை என்பதே ஸித்தாந்தம் – 1-ஸர்வா பே₄தா₃த் அந்யத்ர இமே
    இமே
    — இந்த வஸிஷ்ட₂த்வம் முதலான குணங்கள்;
    அந்யத்ர — மற்ற இடத்தில், அதாவது கௌஷீதகீ ப்ராண வித்யையிலும் (உள்ளன);
    ஸர்வ அபே₄தாத்— முழு விளக்க முறையிலும் வேறுபாடு இல்லாததால்.

    சாந்தோக்யத்திலும் ப்ருஹதா₃ரண் கத்திலும், இந்த்ரியங்களுக்கும் ப்ராணனுக்கும் இடையே ஏற்பட்ட
    விவாதத்தை விவரித்து, இந்த்ரியங்கள் ப்ராணனைச் சார்ந்தே நிலைத்திருப்பதாலும், அவற்றின் செயல்கள் ப்ராணனைச் சார்ந்தே நடை பெறுவதாலும், ப்ராணனுடைய ஸ்ரேஷ்ட்யம் விளக்கப் படுகிறது. அதன் பின்னர் “நான் எந்தக் குணத்தைக் கொண்டிருக்கிறேனோ அந்த குணம் தங்களுக்கும் உள்ளது” என்று கூறி, வாக் முதலான இந்த்ரியங்களுக்கு உரிய வஸிஷ்ட₂த்வம் முதலான குணங்களும் ப்ராணனைச் சார்ந்தவையே என்று விளக்கப் படுகிறது.

    கௌஷீதகீ உபநிஷத்திலும் இதே முறையிலேயே முழு விஷயமும் விளக்கப் படுகிறது. ஆனால், வாக் முதலான இந்த்ரியங்கள் தங்களுக்குரிய வஸிஷ்டத்வம் முதலான குணங்கள் ப்ராணனைச் சார்ந்தவை என்று கூறும் அந்தப் பகுதி மட்டும் இல்லை . ஆனாலும், வஸிஷ்டத்வம் முதலானவை ப்ராணனுக்கு உள்ளன என்பதை இது இல்லா விட்டாலும் நாம் அறிய முடியும். ப்ராணன் உடலை விட்டும் புறப்படும் பொழுது மற்ற புலன்கள் எல்லாம் செயலிழந்தன என்று சொல்வதன் மூலமே , வாக் முதலானவற்றுக்கு உள்ள வஸிஷ்டத்வம் முதலான குணங்கள் ப்ராணனுக்கும் இருக்கின்றன என்பது தெரிந்து விடுகிறது. அதை அந்தப் புலன்கள் வந்து ப்ராணனிடம் சொன்னால் தான் நமக்குத் தெரியம் என்பதல்ல. அதனால் கௌஷீதகீ உபநிஷத்திலும் ஜ்யேஷ்டத்வம் ஸ்ரேஷ்டத்வம் வஸிஷ்டத்வம் ப்ரதிஷ்டாத்வம் ஸம்பத்த்வம் ஆயதனத்வம் என்ற 6 குணங்களோடு கூடியதாகத் தான் ப்ராணனைத் த்யானிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. எனவே , சாந்தோக்யத்திலும் ப்ருஹதா₃ரண் கத்திலும் சொன்ன ப்ராண வித்யைக்கும் கௌஷீதகீ உபநிஷத்தில் சொன்ன ப்ராண வித்யைக்கும் ரூபத்தில் (வடிவத்தில்) எந்த வேறு பாடும் இல்லை . எனவே , இவை எல்லாம் ஒரே வித்யை தான்.

    3-3-4-ஆநந்தா₃த்₃யதி₄கரணம்-ப்ரஹ்மத்தை அடையாளப் படுத்தும் பண்புகள் -அதிகரணத்தின் பின்புலம் -ஸங்கதி – முன் அதிகரணத்தில் ப்ராண வித்யையைப் பற்றி நிரூபிக்கப் பட்டது. அடுத்த
    அதிகரணத்திலும் ப்ராண வித்யையைப் பற்றிய மேலும் சில விஷயங்கள் பின்னர் ஆராயப்பட உள்ளன. இப்போது, இடையில் அதோடு தொடர்புடைய வேறொரு விஷயம் ஆராயப் படுகிறது.

    முன் அதிகரணத்தில் ப்ராணனுடைய வஸிஷ்ட₂த்வம் முதலான குணங்களை நினைவு கூறாமல், அவனுடைய ஸ்ரேஷ்டத்வத்தை (உயர்வை ) மட்டும் நினைவு கூறுவது பொருந்தாதபடியால், கௌஷீதகீ உபநிஷத்தில் அந்தக் குணங்களும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. அதே போல், எந்தக் குணங்களை நினைவு கூறாமல் ப்ரஹ்மத்தின் ஸ்வரூபத்தையே நினைவு கூற முடியாதோ , அந்தக் குணங்கள் எல்லா ப்ரஹ்ம வித்யைகளிலும் அவசியமாக நினைவு கூறப்பட வேண்டும் என்று இந்த அதிகரணத்தில் வ்யாஸர் நிரூபிக்கிறார்.

    (ஸ்வரூப நிரூபக தர்மங்கள் அடையாளம் காட்டும் சில -குணங்கள் –நிரூபித ஸ்வரூப விசேஷணங்களாக உள்ள சில குணங்கள் என்று இரண்டு வகைகள் உண்டே-எந்த வித்யையில் த்யானித்தாலும் ஸ்வரூப நிரூபக குணங்களை எல்லாம் சேர்த்தே த்யானிக்க வேண்டும் -என்று காட்டி அருளுகிறார் –ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -ஆநந்தோ ப்ரஹ்மம் அபஹத பப்மாத்வாதிகள் போன்றவை வித்யையில் சொல்லா விட்டாலும் இவற்றைச் சேர்த்தே த்யானிக்க வேண்டும் -)

    ஸந்தேஹம் ப்ரஹ்மத்தை அடையாளப்படுத்தும் குணங்கள் ப்ரஹ்மத்தைப் பற்றின எல்லா வித்யைகளிலும் உப ஸம்ஹாரம் செய்யப்பட வேண்டுமா ? அல்லது அவற்றை அந்தந்த ப்ரகரணங்களில் மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமா ?

    பூர்வ பக்ஷம் – ப்ரகரணத்தில் நேரடியாகக் கற்பிக்கப்படாத குணங்களை மற்ற ப்ரஹ்ம வித்யைகளில் உபஸம்ஹாரம் செய்வதற்கு எந்தப் ப்ரமாணமும் இல்லை . ஆகையால், அந்தந்த ப்ரகரணங்களில் வெளிப்படையாகக் கூறப்பட்டுள்ள குணங்களை மட்டுமே உப ஸம்ஹாரம் செய்ய வேண்டும்.

    ஸித்தாந்தம் – 1-ஆநந்தா₃த₃ய: ப்ரதா₄நஸ்ய – ’அபே₄தா₃த்’ என்று சேர்த்துக் கொள்ள வேண்டும்
    ஆநந்தா₃த₃ய: – ஆநந்தம் முதலான குணங்களை எல்லா ப்ரஹ்ம வித்யைகளிலும் சேர்த்துக் கொள்ள வேண்டும்
    ப்ரதா₄நஸ்ய (அபே ₄தா₃த் )– த்யானிக்கப்படும் ப்ரஹ்மம் எல்லா வித்யைகளிலும் ஒன்றானபடியால்

    எல்லா ப்ரஹ்ம வித்யைகளிலும் ஒரே ப்ரஹ்மம் தான் த்யானிக்கப்படுகிறார். ஆநந்தம் முதலான குணங்களை அவரை விட்டுப் பிரிக்க முடியாது. எனவே , அக் குணங்களையும் எல்லா வித்யைகளிலும் சேர்த்துக் கொண்டு தான் த்யானிக்க வேண்டும் என்கிறார் வ்யாஸர்.

    நேரடி குணங்களுக்கு மட்டுமே உப ஸம்ஹாரம்
    பூர்வ பக்ஷியின் கேள்வி
    – தைத்திரீய உபநிஷத்தில் ஓரிடத்தில் (ஆனந்த மய வித்யையில்) (தஸ்ய ப்ரியமேவ சிர: மோதோ ₃ த₃க்ஷிண : பக்ஷ: ப்ரமோத₃ உத்தர: பக்ஷ:) அதாவது “அவருக்கு ப்ரியம் தலையாகவும், மோதம் வலது பக்கமாகவும், ப்ரமோதம் இடது பக்கமாகவும், (கைகளாகவும்)ஆனந்தம் நடு உடலாகவும் உள்ளன” என்று கூறப்படுகிறது. ப்ரஹ்மத்திலிருந்து தனியாக இல்லாதபடியால் அவருடைய குணங்களையும் எல்லா வித்யைகளிலும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றால், ப்ரிய ஶிரஸ்த்வம் (ப்ரியம் என்பதைத் தலையாகக் கொண்டிருத்தல்) முதலானவைகளும் எல்லா வித்யைகளிலும் உபஸம்ஹாரம்
    செய்ய வேண்டி வருமே ?

    ஸித்தாந்தியின் பதில் – 2-ப்ரியசிரஸ்த்வாத்₃ யப்ராப்தி: உபசய அபசயௌ ஹி பே₄தே ₃
    ப்ரியசிரஸ்த்வாத்₃ யப்ராப்தி:
    – ப்ரியஶிரஸ்த்வம் முதலானவை மேற் வித்யைகளைச் சென்று அடைய மாட்டா
    பே₄தே ₃ – ப்ரஹ்மத்துக்கு அவயவங்கள் (பகுதிகள்) வேறுபட்டால்
    உபசய அபசயௌ ஹி– ப்ரஹ்மத்துக்கு ஸ்தூலமானது ஸூக்ஷ்மமானது என்பது போல் அளவுகள் வந்து விடும்-

    ப்ரியஶிரஸ்த்வம் முதலானவை நேரடியாக ப்ரஹ்மத்தின் குணங்கள் அல்ல. ப்ரஹ்மத்தை ஓர் உடலாகக்
    கற்பனை செய்து கூறப்பட்டவையே . அவை நேரடியாக ப்ரஹ்மத்தின் குணங்கள் என்று கொண்டால்,
    ப்ரஹ்மத்துக்குத் தலை , பக்கங்கள் என்று அங்கங்கள் உள்ளன என்றாகி விடும், அங்கங்களில் வேறுபாடு ஏற்பட்டவுடன் ப்ரஹ்மத்திலும் உபசயம்–அபசயம், அதாவது பெருத்தல்–சிறுத்தல் போன்ற மாற்றங்கள் ஏற்படும் என்ற தோஷம் வரும். அப்போது வேதம் ப்ரஹ்மத்தை “ஸத்யம்” (என்றும் மாறாமல் ஒரே போல் இருப்பது) என்றும், “அஸ்தூ₂லம் அநணு” (ஸ்தூலமுமல்ல, அணுவுமல்ல) என்றும் கூறியதோடு முரண்பாடு ஏற்படும். ஆகவே , ப்ரியஶிரஸ்த்வம் முதலானவை நேரடியாக ப்ரஹ்ம குணங்கள் அல்லாத படியால், ஆநந்தம் முதலானவை போல் அவற்றை மற்ற வித்யைகளில் உபஸம்ஹாரம் செய்யத் தேவை யில்லை

    (உடலைத் தேராகவும் ஐந்து குதிரைகள் கடிவாளம் போன்ற உருவகங்கள் போல் இங்கும் உருவகமே–இவை ப்ரஹ்மத்தின் பண்புகள் இல்லையே -ஆகையால் இந்த பண்புகளை எங்கும் சேர்த்துக் கொள்ள வேண்டாமே)

    அடையாளப்படுத்தும் குணங்களுக்கு மட்டுமே உப ஸம்ஹாரம்
    பூர்வ பக்ஷியின் கேள்வி:
    அப்படியானால், ப்ரஹ்மத்திலிருந்து தனியாக இல்லாததால், ஐஶ்வர்யம், காம்பீர்யம், ஔதார்யம் முதலான எண்ணற்ற கல்யாைண குணங்களையும் உபஸம்ஹாரம் செய்ய வேண்டியதாகிவிடுமே ? அவ்வாறு செய்தால்,எல்லா வித்யைகளிலும் எல்லாக் குணங்களும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்றதாகும். மேலும், அந்தக் குணங்கள் எண்ணற்றவையாக இருப்பதால், அவை அனைத்தையும் எல்லாவற்றோடும் சேர்த்து த்யானிப்பதே இயலாது.

    ஸித்தாந்தியின் பதில் – 3–இதரே து அர்த₂ஸாமாந்யாத்
    இதரே
    — மற்ற குணங்கள், அதாவது ஆனந்தம் முதலானவை (மட்டும் தான் உபஸம்ஹாரம் செய்யப்பட வேண்டியவை )
    அர்த ஸாமாந்யாத் — அர்த்தத்தோடு (த்யானிக்கப்படும் பொருளோடு) ஸாமாந்யம் (ஒற்றுமை ) இருப்பதால்.

    ஒரு குடத்தை வெவ்வேறு பண்புகளோடு கூடியதாக வெவ்வேறு த்யானங்கள் செய்தாலும் அவற்றில் எல்லாம் குடம் என்ற ஒரே பொருள் எப்படித் தொடர்ந்து வருகிறதோ , அதே போல் அந்தக் குடத்துக்கு அடையாளமாக இருக்கும் குடத் தன்மை (வாயும் வயிறுமான வடிவம் உடைமை-கடத்வம் ஜாதி ) என்ற பண்பும் தொடர்ந்து வருகிறது, குடத் தன்மையே அறியாமல் குடத்தை அறிய முடியாத படியால். அதே போல், ஸ்வரூப நிரூபக தர்மங்கள் எனப்படும் பண்புகள், அதாவது பரமாத்மாவை அறிவதற்கே இன்றியமை யாதவையாகவும் பரமாத்மாவை அடையாளப் படுத்துமவை யாகவும் இருக்கும் பண்புகள் எல்லா வித்யைகளிலும் தொடர்ந்தே தீரும், அவை இல்லாமல் ப்ரஹ்மத்தை நினைக்க முடியாததால்-அவை எவை எனில் – ஸத்யத்வம் (என்றும் மாறாமல் ஒரே போல் இருத்தல்), ஜ்ஞாநத்வம் (எப்போதும் எல்லை யற்ற ஜ்ஞாநத்தோடு இருத்தல்), அநந்தத்வம் (எல்லா விதத்திலும் அளவற்றவராய் இருத்தல்), ஆநந்தத்வம் (ஸுகமே வடிவானவராய் இருத்தல்) மற்றும் அமலத்வம் (தோஷங்களுக்கெல்லாம் எதிர்த் தட்டாய் இருத்தல்). இந்த ஐந்து பண்புகளை எல்லா ப்ரஹ்ம வித்யைகளிலும் கண்டிப்பாகச் சேர்த்துக் கொண்டே ஆக வேண்டும்.

    (அவிகாராய ஸுத்தாய நித்யாய பரமாத்மனே | ஸதைக ரூப ரூபாய விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே-
    அவிகாராய:
    எந்த மாற்றமும் இல்லாதவரே.
    ஸுத்தாய: தூய்மையானவரே.
    நித்யாய: என்றும் நிலைத்திருப்பவரே.
    பரமாத்மனே: மேலான ஆன்மாவாக இருப்பவரே.
    ஸதைக ரூப ரூபாய: எப்போதும் ஒரே தன்மையுடன் விளங்குபவரே.
    விஷ்ணவே: எங்கும் நிறைந்திருக்கும்
    விஷ்ணுவே.ஸர்வ ஜிஷ்ணவே: அனைவரையும் வெல்பவரே (அல்லது எங்கும் வெற்றி கொள்பவரே).

    ப்ரஹ்மம் அடையாளம் காணப்பட்ட பிறகு, அவரை விளக்கக் கூடிய காருண்யம் ஸௌசீல்யம் வாத்ஸல்யம் ஒவ்தார்யம் முதலான குணங்கள் நிரூபித ஸ்வரூப விசேஷணங்கள் என்று சொல்லப்படுகின்றன. அவை இல்லாமலும் ப்ரஹ்மத்தை நினைக்க முடியும் என்பதால் எல்லா வித்யைகளிலும் அவற்றை கட்டாயமாகச் சேர்க்க வேண்டியதில்லை .

    உருவகத்தின் பயன் என்ன?
    பூர்வ பக்ஷியின் கேள்வி – ப்ரியஶிரஸ்த்வம்
    முதலானவை ப்ரஹ்மத்தின் நேரடியான குணங்கள் அல்ல, ப்ரஹ்மத்தை உடலாக உருவகப் படுத்திக் கூறப் பட்டவை என்று சொல்லப்பட்டது. இவ்வாறு கற்பனை செய்வதற்குப் பயன் இல்லையே ? எப்போதும் உருவகத்திற்கு ஒரு பயன் வேண்டும். வேதத்திலேயே “(ஆத்மாநம் ரதி₂னம் வித்₃தி₄) என்று உடலைத் தேராகவும், ஆத்மாவைத் தேரில் பயணிப்பவராகவும், புலன்களைக் குதிரைகளாகவும், மனதைக் கடிவாளமாகவும் உருவகப்படுத்தி அதன் மூலம் புலனடக்கத்தை உபதேசிக்கிறது. அதுபோல் இங்கு பயன் ஏதும் இல்லையா?

    ஸித்தாந்தியின் பதில் – 4–ஆத்₄யாநாய ப்ரயோஜநா பா₄வாத்
    ப்ரயோஜநா பா₄வாத் –
    வேறு எந்தப் பயனும் இல்லாததால்
    ஆத்₄யாநாய – தியானத்திற்காகவே இந்த வடிவம் கூறப்பட்டுள்ளது.

    உபாஸநம் செய்ய வேண்டும் என்றால் முதலில் ஸாஸ்த்ரத்தின் மூலம் ப்ரஹ்மத்தை அறிய வேண்டும். இந்த ஆநந்த மய வித்யையில் ப்ரஹ்மம் எல்லை யற்ற ஆநந்தம் உடையவர் என்று சொல்லப்படுகிறது. அதைப் புரிய வைப்பதற்காகவே இவ் விடத்தில் உருவகம் பயன்படுகிறது. ப்ரியம், மோதம், ப்ரமோதம் போன்ற மிக உயர்ந்த ஆனந்த அனுபவங்களும் ப்ரஹ்மத்தின் ஆநந்தத்தின் ஒரு சிறிய அம்ஸமே என்பதன் மூலம் ப்ரஹ்மானந்தம் எல்லை யற்றது என்பதை நமக்குப் புரிய வைக்கிறது.

    (ஸ்தூலா நிந்ததி நியாயம் -அருந்ததி காட்ட மற்ற ஒன்றைக் காட்டி புரிய வைப்பது போல் –பிரியம் -பார்த்தும் அடையும் ஆனந்தம் -மோதம் என்னுடையது என்று அறிந்ததும் பெறும் ஆனந்தம் -பிரமோதம் அடைந்து இன்பம் அனுபவிப்பது போல் –இவ்வாறு அளவு பட்ட ஆனந்தங்களைச் சொல்லி -எல்லை யில்லா ஆனந்த மயனைப் புரிய வைக்கவே இந்த உருவகம்)

    5–ஆத்ம சப்₃தா₃த் ச — “மேலும், ‘ஆத்மா ’ என்ற சொல்லால் குறிப்பிடப் படுவதாலும்.”
    (அந்யோந்தர ஆத்மா ஆநந்த₃மய:) என்ற வாக்கியத்தில் ஆநந்த மயனான பரமாத்மாவை வேதம் ’ஆத்மா ’ என்ற சொல்லால் குறிக்கிறது. ஆத்மா என்றாலே அதற்கு எந்தப் பகுதிகளும் கிடையாது என்பது ப்ரஸித்தமானது. ஆகையால் தலை , பக்கங்கள் போன்ற அங்கங்களைக் கொண்டு கூறப்படுவது வெறும் உருவகம் தான்-என்று புரிந்து கொள்ள வேண்டும்.

    ஆத்மா என்றால் பரமாத்மா தானா?
    பூர்வ பக்ஷியின் கேள்வி
    – ஆனால், (அந்யோந்தர ஆத்மா ப்ராண மய🙂 போன்ற இடங்களில், ஆத்மா அல்லாத ப்ராண வாயு மனது முதலானவற்றையும் “ஆத்மா” என்ற சொல்லால் ஸ்ருதி குறிப்பிடுகிறது. அப்படி யிருக்க, இங்கு மட்டும் “ஆத்மா” என்ற சொல் ப்ரஹ்மத்தையே குறிக்கிறது என்று எவ்வாறு உறுதியாகக் கூற முடியும்?

    ஸித்தாந்தியின் பதில் – 6-ஆத்ம க்₃ருஹீதி: இதரவத் உத்தராத்
    “இங்கு ஆத்மா என்று பரமாத்மாவே குறிக்கப் படுகிறார்; மற்ற இடங்களில் போல்; பின்னர் வரும் வாக்கியத்தால்”

    உபநிஷத்தில் வேறொரு இடத்தில் (ஆத்மா வா இத₃மேக ஏவ அக்₃ர ஆஸீத்) அதாவது “ஸ்ருஷ்டிக்கு முன் (ப்ரளய காலத்தில்) ஆத்மா ஒருவரே இருந்தார்” என்று கூறும் இடத்தில், ஆத்மா என்ற சொல் பரமாத்மாவையே குறிக்கிறது.-ஏனெனில் அதன் பின்னர் (ஸ ஈக்ஷத லோகாந் நு ஸ்ருஜா) அதாவது “அவர் உலகங்களைப் படைக்க வேண்டும் என்று சிந்தித்தார்” என்ற வாக்கியம் உள்ளது. இப்படிப்பட்ட ஸங்கல்பம் அறிவுடையவரான பரமாத்மாவுக்கே பொருந்தும் என்பதால் இங்கு ஆத்மா எனப்படுபவர் பரமாத்மாவே என்று நிச்சயிக்கலாம்.

    அதே போல் இங்கும் ஆனந்த மயனைப் பற்றித் தொடர்ந்து வரும் வாக்கியத்தில் (ஸோ காமயத ப₃ஹுஸ்யாம் ப்ரஜாயேய) அதாவது “அந்த ஆத்மா நான் பலவாக ஆக வேண்டும் என்று விரும்பினார்” என்று கூறப்படுகிறது. அதனடிப்படையில் இங்கும் “ஆத்மா ” என்ற சொல்லாலும் பரமாத்மாவே குறிக்கப் படுகிறார் என்பது தெளிவாகிறது

    7–அந்வயாத் ् இதி சேத் ஸ்யாத் அவதா₄ரணாத்
    அந்வயாத்
    – முந்தைய பகுதிகளில் ஆத்மா என்ற சொல் மூச்சுக் காற்றோடும் தொடர்பு பட்டுள்ளதால் (நிச்சயிக்க முடியாது)
    இதி சேத் – என்று கூறினால்
    ஸ்யாத் – நிச்சயம் ஏற்படலாம்;
    அவதாரணாத் — முன் உள்ள இடங்களிலும் ஆத்மா எனப்படுபவர் பரமாத்மா என்று நிச்சயான படியால்

    இப் பகுதியின் தொடக்கத்தில் (தஸ்மாத்₃வா ஏதஸ்மாத் ஆத்மந ஆகாஸ : ஸம்பூ₄த:) அதாவது
    “இந்த ஆத்மாவிலிருந்தே ஆகாஸம் தோன்றியது” என்று கூறி, பரமாத்மாவையே உபநிஷத் குறிப்பிடுகிறது. அதன் பின்னர் உடல், பிராணன், மனது, ஜீவன் என்று ஒவ்வொன்றிலும் ’இவரே பரமாத்மா ’ என்ற எண்ணத்தை ஏற்படுத்தி, இறுதியில் ஆநந்த மயனே பரமாத்மா என்று முடிவு செய்கிறது. ஆகையால், முந்தைய பகுதிகளிலும் ஆத்மா என்ற சொல் பரமாத்மாவையே குறிக்கிறது.
    ஆக, ப்ரியசிரஸ்த்வம் என்பவை நேரடியாக ப்ரஹ்மத்தின் குணங்களல்லாததால் அவற்றை உப ஸம்ஹாரம் செய்யத் தேவை யில்லை –

    3-3-5-கார்யாக்₂யாநாதி₄கரணம் வேதம் அறியாததையே அறிவிக்கும் –அதிகரணத்தின் பின்புலம் –ஸங்கதி– இந்த அதிகரணத்துக்கு மூன்றாவது அதிகரணத்தோடு தான் தொடர்பு உள்ளது. அங்கும் ப்ராண வித்யை ஆராயப்பட்ட்து, இங்கும் அதே வித்யையின் வேறொரு அம்சம் ஆராயப்படுகிறது.-

    விஷய வாக்யம்- சாந்தோக்யத்திலும் ப்ருஹதா₃ரண்யகத்திலும், ஜ்யேஷ்டரும் ஸ்ரேஷ்டருமான ப்ராணனை உபாஸிக்க வேண்டும் என்று கூறிய பிறகு, நீர் ப்ராணனுடைய வாஸஸ் (வஸ்திரம்) என்று கூறப்படுகிறது.

    சாந்தோக்யத்தில்– (ஸ ஹோவாச – கிம் மே வாஸோ ப₄விஷ்யதீதி। ஆப இதி ஹோசு:। தஸ்மாத்₃வா ஏதத₃ஶிஷ்யந்த: புரஸ்தாச் சோபரிஷ்டாச்சாத்₃பி₄: பரித₃த₄தி। லம்பு₄கோ ஹ வாஸோ ப₄வதி। அநக்₃நோ ஹ ப₄வதி।) ப்ராணன், “எனக்கு என்ன வஸ்திரமாக இருக்கும்?” என்று கேட்டார். அதற்கு, “நீரே உனது வஸ்திரம்” என்று புலன்கள் கூறின. அதனால், உணவு உண்ணப் போகிறவர்கள் முன்னும் பின்னும் நீரால் சூழ்ந்து கொள்கிறார்கள். நீர் ப்ராணனுக்கு வஸ்திரமாகிறது; ஆகையால் அவர் நிர்வாணமாக இருப்பதில்லை –

    ப்ருஹதா₃ரண்யகத்தில் – (ஆபோ வாஸ இதி। தத்₃ வித்₃வாம்ஸ: ஸ்ரோத்ரியா அஶிஷ்யந்த ஆச்சாமந்தி, அஶித்வா ஆச்சாமந்தி। ஏதமேவ தத்₃ அந்நம் அநக்₃நம் குர் வந்தோ மந்யந்வத। தஸ்மாதேவம்வித்₃ அஶிஷ்யந் ஆச்சாமேத், அஶித்வா சாசாமேத்। ஏதமேவ தத₃ந்நம் அநக்₃நம் குருதே ।) நீரே ப்ராணனுக்கு வஸ்திரம். வேதத்தை அறிந்தவர்கள், உணவு உண்ணும் முன்பும் ஆசமனம் செய்கிறார்கள்; உணவு உண்ட பிறகும் ஆசமனம் செய்கிறார்கள். இதன் மூலம் தாங்கள் உண்ணும் உணவை வஸ்திரம் உடையதாகச் செய்கிறோம் என்று அவர்கள் கருதுகிறார்கள். ஆகையால், இவ்வாறு அறிந்தவன் உணவு உண்ணும் முன்பு ஆச்சமனம் செய்ய வேண்டும்; உணவு உண்ட பிறகும் ஆச்சமனம் செய்ய வேண்டும். இதன் மூலம் தான் உண்ட உணவை வஸ்திரம் உடையதாகச் செய்கிறான்

    ஸந்தேகம்- இங்கு ஆசமனம் செய்வது ப்ராண வித்யையின் ஓர் அங்கமாக விதிக்கப்படுகிறதா? அல்லது, “நீரே ப்ராணனுடைய வஸ்திரம்” என்று தியானிப்பது தான் இங்கு விதிக்கப் படுகிறதா?-

    அறியாததையே அறிவிக்கும் வேதம்–
    பூர்வ பக்ஷம்
    இங்கு ஆசமனம் தான் ப்ராண வித்யைக்கு அங்கமாக விதிக்கப்படுகிறது. 1–அஶிஷ்யந் ஆச்சாவமத், அஶித்வா சாசாமேத்) என்று ஆசமனம் செய்ய வேண்டும் என்ற விதி வெளிப்படையாக உள்ளது,
    2-ப்ராணனின் உடையாக நீரைத் த்யானிக்க வேண்டும் என்று எந்த விதி வாக்கியமும் இல்லை .
    3– (ஏதமேவ தத₃ந்நம் அநக்₃நம் குருதே ) என்று உணவு நிர்வாணமாக இல்லாததாகிறது என்று கூறப்படும் ஆசமனம் என்ற செயலைப் புகழ்வதற்காகவும் பொருந்தும்; அது அவசியமாக தியானத்தை விதிக்கிறது என்று கூற முடியாது.
    ஆகவே இதுவே சரியானது-

    ஸித்தாந்தம்– 1–கார்யாக்₂யாநாத் அபூர்வம் —“புதிதானது, புதியதை விதித்தால் மட்டுமே பயனுள்ளதால்”
    அபூர்வம் –முன்னால் அறியப்படாத (த்யானம் தான் இங்கு விதிக்கப்படுகிறது, முன்னமே அறியப்பட்ட ஆசமநம் அல்ல)
    கார்யாக்₂யாநாத்–கார்யம் என்றால் அப்ராப்தம் -அதாவது முன்னால் இல்லாதது. ஆக்₂யாநம் என்றால் கட்டளை இடுதல். ஆக, “ஏற்கனவே கிடைக்காத ஒன்றாகக் கூறுவதால்” என்று பொருள். அதாவது, ஏற்கனவே அறியப்பட்ட விஷயத்தை வேதம் மீண்டும் கூறுவதில் எந்தப் பயனும் இல்லை ; இங்கு ஏற்கனவே கிடைக்காத புதிய அர்த்தம் இருக்க வேண்டும். அந்தப் புதிய அர்த்தமே நீரைப் ப்ராணனுடைய வஸ்திரமாக நினைத்துக் கொள்வதாகும்.

    தொடக்கத்தில் “கிம் வம வாஸ:, ஆபோ வாஸ:” அதாவது “எனக்கு என்ன வஸ்திரம்? நீரே வஸ்திரம்” என்று கூறப்படுகிறது.
    முடிவிலும்– “அத்₃பி₄: பரித₃த₄தி” அதாவது “நீரால் சூழ்ந்து கொள்கிறார்கள்” என்றும், “ஏதமேவ தத₃ந்நம் அநக்₃நம் குருதே ” அதாவது இதன் மூலம் தான் உண்ட உணவை வஸ்திரம் உடையதாகச் செய்கிறான்” என்றும் கூறப்படுகிறது.
    ஆகையால், முதலையும் முடிவையும் பார்க்கும் போது, இந்தப் ப்ரகரணம் முழுவதும் நீரே ப்ராணனுடைய வஸ்திரமாக தியானிப்தையே நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது தெளிவாகிறது. எனவே , ஸ்ம்ருதியாலும் ஆசாரத்தாலும் ஏற்கனவே கிடைத்திருக்கும் ஆசமனத்தைக் குறித்து, ஆசமனத்திற்குப் பயன்படுத்தப்படும் நீரைப் ப்ராணனுடைய வஸ்திரமாக நினைவு கூர்வதே இங்கு புதிதாக விதிக்கப் படுகிறது

    மேலும், சாந்தோக்யத்தில் ஆசமனம் செய்வதற்கான விதி இல்லை . “தஸ்மாத்₃வா ஏதத₃ஶிஷ்யந்த: புரஸ்தாச்சோபரிஷ்டாச்சாத்₃பி₄: பரித₃த₄தி” என்று “நீரால் சுற்றிக் கொள்வது” மட்டுமே கூறப்படுகிறது. அந்த நீரால் சூழ்ந்து கொள்வதாவது, நீர் ப்ராணனுடைய வஸ்திரம் என்று த்யானிப்பதாலும் ஸாதிக்கப்படலாம்.
    ஆகவே , இங்கு ஆசமனம் விதிக்கப் படவில்லை , நீரைப் ப்ராணனின் உடையாகத் த்யானிப்பதே ப்ராண வித்யையின் அங்கமாகும்.

    3-3-6-ஸமாநாதி₄கரணம்-சாண்டில்ய வித்யைகள் இரண்டா? ஒன்றா? -அதிகரணத்தின் பின்புலம்-ஸங்கதி -முந்தைய அதிகரணத்தில், ப்ராண வித்யையின் ஒரு விஷயம் ஆராயப்பட்டது.
    அதற்கு முந்தைய (4ஆம்) அதிகரணத்தில், ப்ரஹ்மத்தின் ஸ்வரூபத்திலேயே அடங்கி, ப்ரஹ்மத்தின்
    அடையாளமாக இருக்கும் பண்புகளை எல்லா வித்யைகளிலும் உபஸம்ஹாரம் செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. அதோடு இந்த அதிகரணத்துக்கு ஸங்கதி உள்ளது, ஏனெனில் இப்போது, வசித்வம், ஈசித்வம் முதலான குணங்கள் ஸத்ய ஸங்கல்பத்வம் என்ற குணங்களுக்குள் அடங்கி யுள்ளதா என்பது ஆராயப் படுகிறது.

    விஷய வாக்யம் – ப்ருஹதாரண்யகத்தில் சாண்டில்ய வித்யை : (ஸத்யம் ப்ரஹ்மேத் யுபாஸீத, அத₂ க₂லு க்ரதுமயோ அயம் புருஷ:, ஸ ஆத்மாந முபாஸீத மநோ மயம் ப்ராண சரீரம் பா₄ரூபம் ஆகாசாத் மாநம்… ஸத்ய ஸங்கல்பம்)
    “ப்ரஹ்மமே ஸத்யம் (என்றும் எவ் விதத்திலும் மாறாதது) என்று உபாஸிக்க வேண்டும். அந்த பரமாத்மா
    மநோ மயன் (மனதால் மட்டுமே அறியப்படுபவர்), ப்ராண மயன் (ப்ராணனை ஸரீரமாகக் கொண்டவர்),
    ஒளி மயமானவர், ஆகாஸம் போல் எங்கும் நிறைந்தவர், ஸத்ய ஸங்கல்பத்வம் (நினை த்ததெல்லாம் உண்மையாக நடக்கும் வல்லமை ) உடையவர்.”

    அதே ப்ருஹதாரண்யகத்தில் மற்றோர் இடத்தில் கூறப்படும் சாண்டில்ய வித்யை :
    (மநோ மயம் அயம் புருஷோ பா₄: ஸத்ய:, ஸ ஏஷ ஸர்வஸ்ய வசீ ஸர்வஸ்யேசாந: ஸர்வஸ்யாதி₄பதி:, ஸர்வமித₃ம் ப்ரஶாஸ்தி)

    “இந்தப் புருஷன் மநோ மயமானவர்; ஒளி மயமானவர்; ஸத்யமானவர். அவர் அனைத்திற்கும் வசீ —
    அனைத்தையும் தம் வஸத்தில் வைத்திருப்பவர்; அனைத்திற்கும் ஈசானர் — அனைத்தையும் நியமிப்பவர்; அனைத்திற்கும் அதிபதி — அனைத்திற்கும் தலைவராக இருப்பவர். இங்கு உள்ள அனைத்தையும் அவர் ஆட்சி செய்கிறார்.”

    (இந்த சாண்டில்ய வித்யையைப் பற்றி- ஸர்வத்ர பிரசித்தி அதிகரணம் -1-2-1 கீழேயே பார்த்துள்ளோம்)

    ஸந்தேகம் – இந்த இரண்டு சாண்டில்ய வித்யைகளும் வெவ்வேறு வித்யைகளா? அல்லது ஒரே வித்யையா?

    ஸத்ய ஸங்கல்பத்வமும் அதில் அடங்கியவையும்
    பூர்வபக்ஷம்
    – பெயர், கட்டளை , பயன் ஆகியவை ஒன்றானாலும், உபாஸிக்கப்பட வேண்டிய பொருளின் குணங்களில் வேறுபாடு இருப்பதால், உபாஸனையில் வேறுபடுகிறது. ஒரு வித்யையில் ஸத்ய ஸங்கல்பத்வம் கூறப்பட்டுள்ளதாலும், மற்றொரு வித்யையில் வசித்வம் முதலான குணங்கள் கூறப்பட்டதாலும், இந்த இரண்டு வித்யைகளும் வெவ்வேறானவையே

    ஸித்தாந்தம் – 1- ஸமாநே ஏவம் ச அபே₄தா₃த்
    ஏவம்
    – ப்ருஹதாரண்யகத்தில் ஓரிடத்தில் கூறப்படுவது போலவே மற்றோர் இடத்திலும்
    ஸமாநே – மநோ மயத்வம் முதலான குணங்கள் ஒரே மாதிரியாக இருப்பதால்;
    – மேலும் ஸத்ய ஸங்கல்பத்வம் வசித்வம் ஈஸானத்வம் முதலான குணங்களுக்கு
    அபே₄தா₃த் – வேறுபாடு இல்லாததால் (இந்த இரண்டு வித்யைகளும் ஒன்று தான்).

    வசித்வம் என்பது ஸத்ய ஸங்கல்பத்வத்தின் விளைவாகவே ஏற்படுகிறது. ஒருவர் நினைத்தது தவறாமல் நிறை வேறுவது ஸத்ய ஸங்கல்பத்வம். அத்தகையவருக்கு, அனைத்தும் அவரது ஸங்கல்பத்தின்படி நடை பெறுவதால், அனைத்தும் அவரது வஸத்தில் இருக்கும். எனவே இது முற்றிலும் வேறுபட்ட குணம் அல்ல.

    அதே போல், “அதிபதி” என்ற சொல்லால் குறிப்பிடப்படும் ஸேஷித்வமும் ஸத்ய ஸங்கல்பத்வத்துக்கு உதவுவதே .-சுதந்திரமாகவோ வேறொருவருக்கு ஆட்பட்டோ இயங்கக் கூடிய ஒரு பொருளை ஒருவர் நியமிக்கும் போது, அதை நியமிப்பதில் ஏதேனும் தடையோ தோல்வியோ ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. பரமாத்மா தான் அனைத்துக்கும் ஸேஷி என்று சொல்வதன் மூலம் , இவர் ஒரு ஸங்கல்பம் செய்தால் அதன்படி தான் அனைத்தும் இயங்கும், இதில் எந்தத் தடையும் இல்லை என்று காட்டுவதன் மூலம் பகவானின் ஸத்ய ஸங்கல்பத்வம் காக்கப்படுகிறது.

    ஆக இவ்வாறு இரண்டவது இடத்தில் சொல்லப்பட்ட வசித்வம், ஈஸானத்வம், அதிபதித்வம் முதலான
    பண்புகள் எல்லாம் முதலிடத்தில் சொல்லப்பட்ட ஸத்ய ஸங்கல்பத்வம் என்ற குணத்துக்குள் அடங்குவதால் இந்த இரண்டு வித்யைகளிலும் வடிவத்தில் வேறுபாடே இல்லை , ஆகவே இவை இரண்டும் ஒரே வித்யை தான்.

    3-3-7-ஸம்ப₃ந்தா₄தி₄கரணம்-ப்ரஹ்மத்தின் இடம் மாறினால் வித்யை மாறுமா?–அதிகரணத்தின் பின்புலம் – ஸங்கதி – முந்தைய அதிகரணத்தில், மநோ மயத்வம் முதலான குணங்களைக் கொண்ட
    ஒரே ப்ரஹ்மமே இரண்டு இடங்களிலும் உபாஸிக்கப்படுவதால், இரண்டு இடங்களிலும் சொல்லப்படும் சாண்டில்ய வித்யைகள் ஒன்றே என்று நிரூபிக்கப்பட்டது.
    அதே போல், இங்கும் உபாஸிக்கப்படும் பொருள் ஒன்றாக இருப்பதால் வித்யையும் ஒன்றாக இருக்க வேண்டும் என்கிற பூர்வ பக்ஷத்தை ஆராய்வதற்காக இந்த அதிகரணம் வருகிறது.

    விஷய வாக்யம் – ப்ருஹதாரண்யக உபநிஷத்தின் 5ஆவது அத்யாயத்தின் 5ஆவது ப்ராஹ்மணத்தில் உள்ளது.
    தத்₃யத் தத் ஸத்யம் அஸௌ ஸ ஆதித்ய: । ஸ ஏஷ ஏதஸ்மிந் மண்ட₃லே புருஷோ யஶ் சாயம் த₃க்ஷிணோ அக்ஷந் –

    ஸத்யம் என்ற ப்ரஹ்மத்தை ஸூரிய மண்டலத்திற்குள் இருப்பவராகவும் வலது கண்ணுக்குள் இருக்கும் புருஷனாகவும் உபாஸிக்க வேண்டும்-

    ய ஏஷ ஏதஸ்மிந் மண்ட₃லே புருஷஸ் தஸ்ய பூர் இதி சிரோ பு₄வ இதி பா₃ஹூ: ஸ்வரிதி ப்ரதிஷ்டா₂ । தஸ்யோபநிஷத் அஹரிதி।ஹந்தி பாப்மாநம் ஜஹாதி ச ய ஏவம் வேத₃॥
    ஸூரிய மண்டலத்திற்குள் இருக்கும் அந்தப் புருஷனுக்கு “பூ:” என்பது தலை ; “பு₄வ:” என்பது இரு கைகள்; “ஸ்வ:” என்பது கால்கள். அவருடைய ரஹஸ்யப் பெயர் “அஹர் ” என்பதாகும். இவ்வாறு அவரை அறிபவன் பாபங்களை அழித்து, அவற்றிலிருந்து விடுபடுகிறான்-

    யோ அயம் த₃க்ஷிணே அக்ஷந் புருஷஸ் தஸ்ய பூர் இதி சிர: பு₄வ இதி பா³ஹூ ஸ்வரிதி ப்ரதிஷ்டா² த்₃வே ப்ரதிஷ்டே² த்₃வே ஏதே அக்ஷரே । தஸ்யோபநிஷத் அஹமிதி।ஹந்தி பாப்மாநம் ஜஹாதி ச ய ஏவம் வேத₃॥
    வலது கண்ணில் இருக்கும் அந்தப் புருஷனுக்கும் “பூ:” என்பது தலை ; “பு₄வ:” என்பது இரு கைகள்; “ஸ்வ:” என்பது கால்கள். அவருடைய ரஹஸ்யப் பெயர் “அஹம்” என்பதாகும். இவ்வாறு அவரை அறிபவன் பாபங்களை அழித்து, அவற்றிலிருந்து விடுபடுகிறான்.

    பூர்வ பக்ஷியின் வாதம்
    ஸந்தேகம்
    இந்த இரண்டு ரஹஸ்யப் பெயர்களும் அந்தந்த இடத்திற்கே உரியவையா? அல்லது பொதுவானவையா?-அதாவது, ஸூரிய மண்டலத்தில் உள்ள புருஷனுக்கு மட்டுமே “அஹர் ” என்ற பெயரும், வலது கண்ணில் உள்ள புருஷனுக்கு மட்டுமே “அஹம்” என்ற பெயரும் அந்தந்த உபாஸனை களிலேயே பயன்படுத்தப்பட வேண்டுமா?-அல்லது, இரண்டு இடங்களிலும் இரண்டு பெயர்களையும் எந்தக் கட்டுப்பாடுமின்றி பயன்படுத்தலாமா?

    இதை முடிவு செய்ய வேண்டும் என்றால் முதலில் ஸூர்யனுக்குள் பரமாத்மாவை த்யானிப்பதும் கண்ணுக்குள் பரமாத்மாவை த்யானிப்பதும் ஒரே வித்யையா? அல்லது வெவ்வேறு வித்யைகளா ? என்று முடிவு செய்ய வேண்டும்.-ஒரே வித்யை என்றால், எந்தப் பெயரையும் எந்த இடத்தில் பரமாத்மாவை உபாஸிக்கும் போதும் பயன்படுத்தலாம். வித்யைகள் வெவ் வேறானவை என்றால் அந்தந்த இடத்தில் மட்டும் தான் அந்தந்த பெயரைத் த்யானிக்கலாம்.

    பூர்வபக்ஷம் – 1-ஸம்பந்தா₃த் ஏவம் அந்யத்ராபி
    ஏவம்
    — முந்தைய அதிகரணத்தில் கூறப்பட்ட ந்யாயத்தின் படி
    அந்யத்ராபி — பரமாத்மா ஸூர்யனுக்குள் இருப்பதாக த்யானிப்பதைக் காட்டிலும் வேறான கண்ணுக்குள் இருப்பதாகச் செய்யும் த்யானத்திலும்
    ஸம்பந்தா₃த் — அதே பரமாத்மாவுக்கு உள்ள தொடர்பின் காரணமாக (இந்த வித்யைகள் ஒன்று தான்)

    இரண்டு இடங்களிலும், அதாவது ஸூரிய மண்டலத்திலும் வலது கண்ணிலும், உபாஸிக்கப்படுவது ஸத்யம் என்று கூறப்படுவதாயும் வ்யாஹ்ருதிகளை சரீரமாகக் கொண்டதாயும் உள்ள ஒரே ப்ரஹ்மம் தான். எனவே , உபாஸிக்கப்படும் பொருள் ஒன்றாக இருப்பதால், உபாஸனையின் வடிவத்திலும் வேறுபாடு இல்லை . அது போல, கட்டளை , பெயர், பலன்முதலான வற்றிலும் வேறுபாடு இல்லை . எனவே இந்த இரண்டு த்யானங்களும் ஒரே வித்யை தான்.
    மேலும், பெயர் என்பது ஒரு குறிப்பிட்ட வடிவத்தைக் கொண்ட பொருளைக் குறிக்கக் கூடியதே . அது அப் பொருள் இருக்கும் இடம் மாறுவதால் மாறுவதில்லையே . ஆகையால், “அஹர்” மற்றும் “அஹம்” என்ற இரண்டு ரஹஸ்யப் பெயர்களும் எந்தக் கட்டுப்பாடுமின்றி இரண்டு இடங்களிலும் பயன்படுத்தப்படலாம் என்று பூர்வ பக்ஷி கருதுகிறார்.

    வ்யாஸரின் பதில்–ஸித்தாந்தம் –2- ந् வா விசேஷாத்
    ந வா —
    அவ்வாறு அல்ல; (வித்யைகள் ஒன்றல்ல அதனால் பெயர்களை உபஸம்ஹாரம் செய்யக்கூடாது)
    விசேஷாத் — உபாஸிக்கப்படும் பொருளின் வடிவத்தில் உள்ள விசேஷத்தால் (சிறப்பால் /வேறுபாட்டால்)
    இங்கு உபாஸிக்கப்படும் ப்ரஹ்மம் ஒருவரே என்றாலும், அவர் ஸூர்ய மண்டலம் மற்றும் கண் என்ற இரண்டு வெவ்வேறு ஸ்தானங்களில் உபாஸிக்கப்படுகிறார். இந்த ஸ்தானம் என்பதும் உபாஸனையின் வடிவத்திற்குள் அடங்கியதே . எனவே , இருப்பிடத்தின் அடிப்படையுள் பெயர் மாறா விட்டாலும், உபாஸனையும் வடிவம் மாறியே தீரும். ஆகவே , இந்த இரண்டு வித்யைகளும் வேறுபட்டவையே . எனவே அஹர் : அஹம் என்ற பெயர்கள் அந்தந்த இடங்களிலேயே கட்டுப்பட்டு நிற்கின்றன

    3- த₃ர்ஶயதி ச — “மேலும், ஸ்ருதியே இதைக் காட்டுகிறது.”
    ஸ்ருதியே , கண்ணை ஆதாரமாகக் கொண்ட உபாஸனையில் கூறப்படும் குணங்களையும், ஸூரியனை ஆதாரமாகக் கொண்ட உபாஸனையில் கூறப்படும் குணங்களையும் ஒன்றிலிருந்து மற்றொன்றில் உபஸம்ஹாரம் செய்யக் கூடாது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

    வேதம் (தஸ்யை தஸ்ய ததே₃வ ரூபம் யத₃முஷ்ய ரூபம் யந் நாம தந் நாம)
    அதாவது “ஸூர்யனுக்குள் இருக்கும் பரமாத்மாவுக்குள்ள திருமேனி பெயர் ஆகியவற்றை கண்ணுக்குள் இருக்கும் பரமாத்மாவுக்கும் வைத்துக் கொள்ள வேண்டும்” என்று அதிதேசம் செய்யப்படுகிறது.-இந்த இரண்டு வித்யைகளும் ஒன்றாக இருந்தால், ஓரிடத்தில் சொல்லப்பட்ட பெயரும் திருமேனியும் தானாகவே மற்றோரிடத்தில் வந்து சேர்ந்திருக்கும், இப்படி வெளிப்படையாக வேதம் அதிதேசம் செய்யத் தேவையே இல்லை .-ஆகவே , இப்படி அதிதேசம் வேதத்தில் உள்ள படியால் இவை இரண்டும் வெவ்வேறு வித்யைகள் தான். எனவே , அந்தந்தப் பெயரை அந்தந்த இடத்தில் இருக்கும் பரமாத்மாவை த்யானிக்கும் போது மட்டும் தான் பயன்படுத்தலாமே தவிற மாற்றிப் பயன்படுத்த முடியாது என்று முடிவாகிறது

    ——————————————————————

    ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
    ஸ்ரீ உ வே வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
    ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-