Archive for July, 2026

ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌ – 5 –ஸூரி வைபவ பாதம்-6—ஸூரி ப்ராமாண்ய விஸேஷாதி கரணம்‌(ப்ரமாத்ரு வைபவம் ) -(75-93)ஸ்ரீ மணவாள மா முனிகள் -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் வியாக்யானங்கள்–

July 8, 2026

5 –ஸூரி வைபவ பாத, – 3 அதிகரணங்கள் இதில்-
5– க்‌ரந்த,-தத் கர்த்ரு வைப, வாதி, கரணம்‌ —39 – 74 –மொத்தம் 36 ஸூரணைகள்
6—ஸூரி ப்ராமாண்ய விஸேஷாதி கரணம்‌(ப்ரமாத்ரு வைபவம் ) 75 – 93 –மொத்தம் 19-ஸூரணைகள்
7-ப,க,வத் கடாக்ஷ விஸேஷாதி கரணம்‌ 94–96—மொத்தம் -3- ஸூரணைகள்

இது வரை ஸ்ரீ திருவாய் மொழி வைபவம் -மேலே 19 சூர்ணிகைகளால் ஸ்ரீ நம்மாழ்வார் வைபவம் மேலே –இப்படி பிரமாண பிரமேய வைபவத்தை பிரதிபாதித்த அநந்தரம் பிரமாத்ரு வைபவத்தை
விஸ்தரேண பிரதி பாதிக்கிறார் மேல் — அதில் பிரதமத்தில் பிரமாண பிரமேயங்கள் இப்படி விலஷணமாய் இருந்ததே ஆகிலும் , இப் பிரமாண வக்தா ஆனவர் சதுர்த்த வர்ணர் அன்றோ என்ன
பாகவத உத்தமரான இவருடைய ஜன்ம நிரூபண தோஷத்தை பிரமாண பிரமேயங்களில் த்ரவ்ய பாஷா நிரூபண தோஷம் கீழ் உக்தம் அன்றிக்கே இருக்கச் செய்தே அத்தை சித்தவத்கரித்து திருஷ்டாந்தமாக கொண்டு அருளிச் செய்கிறார்-ஆக, ப்ரமாண ப்ரமேயங்களை ஸஹ படித்து இந்த ப்ரஸங்கத்திலே இவற்றோடே சேர்த்து ப்ரமாத்ரு வைபவத்தை அருளிச் செய்கிறார்‌–மேலெல்லாம்‌ இதில்‌ ப்ரமாண ப்ரமேயங்களினுடைய எல்லையான அர்ச்சாவதாரத்தினுடையவும்‌, திருவாய்மொழியினுடையவும்‌ த்‌ரவ்ய பாஷா நிரூபணத்தோடொக்கு மென்று இவற்றை ஸித்‌தவத் கரித்து இவற்றோடொக்கும்‌ ப்ரமாதாக்களின்‌ ஜந்ம நிரூபணம்‌ என்கிறார்‌ –

வீட்டு இன்ப-இன்ப பாக்களில் த்ரவ்ய பாஷா நிரூபண சமம் இன்ப மாரியில் ஆராய்ச்சி –சூரணை-75-

அதாவது
கனிவார் வீட்டு இன்பமே என் கடல் படா அமுதே –திருவாய் -2-3-5-என்கிற படி பகவத் விஷயம் என்றால்
உளம் கனிந்து இருக்கும் அவர்கள் உடைய க்ருஹங்களிலே அவர்கள் உகந்த ஒரு த்ரவ்யத்தை திரு மேனியாக கொண்டு இருந்து இன்பத்தை விளைக்கிற த்ரவ்ய அர்ச்சாவதாரத்தில் , நிரூபணத்தோடும்-அம் தமிழ் இன்பப் பாவினை அவ்வட மொழியை -பெருமாள் -1-4- -என்கிற படியே திராவிட ரூபமாய்
பகவத் குண கண பிரதிபாதகதயா விசேஷஜ்ஞர்க்கு ஆனந்தவஹமாய் இருக்கிற திரு வாய் மொழியில் பாஷா நிரூபணத்தோடும் , துல்ய தோஷம்-அடியார்க்கு இன்ப மாரியில் -திருவாய் -4-5 -10-–என்கிற படி ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு திரு வாய் மொழி முகத்தாலே ஆனந்தத்தை வர்ஷிக்கும் மேகமான ஆழ்வார் பக்கல் உத்பத்தி நிரூபணம் என்கை-விஷ்ணோ அர்ச்சாவதாரேஷு லோஹபாவம் கரோதிய யோ குரவ் மானுஷம் பாவ முபவ் நரக பாதினவ்– ஸ்ரீ ப்ரஹ்மாண்ட புராணம் –
(எவன் ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரங்களில் தாம்பரம் போன்ற உலோகபுத்தியைச் செய்கிறானோ –
எவன் குருவிடத்தில் மனிதன் எண்ணத்தைச் செய்கிறானோ -அவ்விருவரும் நரகத்தில் விழுமவர்கள் )யோ விஷ்ணவ் பிரதிமாகரே லோஹபாவம் கரோதி வை குரவ்ச மானுஷம் பாவமுபவ் நரகபாதினவ்–(மானிடவன் என்றும் குருவை மலர்மகள் கோன் தானுகந்த கோலம் உலோகம் என்றும் ஈனமாதா எண்ணுகின்ற நீசர் இருவருமே எக்காலும் நண்ணிடுவர் கீழாம் நரகு –ஞானசார -32-) அர்ச்சாவதார உபாதான வைஷ்ணவ உத்பத்தி சிந்தனம் மாத்ரு யோனி பரீஷாயாஸ் துல்யமாகூர் மநீஷணா-ஹரிகீர்த்திம் வினைவ அந்யத் ப்ராஹ்மணேன நரோத்தம பாஷாகானம் ந காதவ்யம் தச்மாத்பாபம் த்வயா க்ருதம்–ஸ்ரீ மத்ஸ்ய புராணம் –கிமப்யத்ராபி ஜாயந்தே யோகிநஸ் சர்வ யோநிஷூ
பிரத்யஷி தாத்ம நாதானாம் நைஷாம் சிந்த்யம் குலாதிகம்
–ஸ்ரீ பவிஷ்யோத்தரம் –சூத்ரம் வா பகவத் பக்தம் நிஷாதம் ச்வபசம் தா வீஷதே ஜாதி சாமான்யாத் சா யாதி நரகம் நர – ஏவமாதி சாஸ்திர வசனங்களை ஹரூதிகரித்தி இறே இவர் இப்படி அருளிச் செய்தது .-அவஜானந்தி மாம் மூடா –ஸ்ரீ கீதை -9-11–என்கிற படி வாசி அறியாமல் ,அவஜ்ஜை பண்ணும் மூடர்க்கும் பஸ்யந்தி கேஸிதநிசம் த்வத் அநந்ய பாவா -ஸ்தோத்ர ரத்னம் -16-(ஒப்பார் மிக்கார் இலையாய தேவரீர் தன்மையை தேவரீரைத் தவிர வேறு பொருளில் எண்ணத்தைச் செலுத்தாத ஒரு சிலர் எப்பொழுதும் பார்க்கிறார்கள் ) -என்கிற படியே
வாசி அறிந்து ஆதரிக்கும் அநந்ய பாவர்க்கும் மூன்று இடமும் ஒக்கும் இறே-

““கனிவார்‌ வீட்டின்பமே”’ (திருவா. 2 – 3 – 5) என்கிறபடியே அவன்‌ என்றால்‌ உள் கனிந்திருக்கிற வர்களுடைய க்‌ருஹங்களிலே வந்து இன்பத்தை அளிக்கும்‌ அர்ச்சாவதாரத்தினுடையவும்‌, ““அந்தமிழினின்பப் பாவினை”” (பெருமா.திரு, 1 – 4) என்றும்‌ சொல்லுகிற ரஸாவஹமான திருவாய்மொழியினுடையவும்‌ த்‌ரவ்ய நிருபணத்தோடும்‌ பாஷா நிரூபணத்தோடும்‌ ஓக்கும்‌ என்றும்‌, ““அடியார்க்கின்பமாரி?? (திருவா. 4 – 5 – 10) என்கிறபடியே ஸ்ரீவைஷ்ணவர்களுக்குத்‌ திருவாய்மொழி முகத்தாலே ஆநந்தாவஹமான பகவத்‌ குணங்களை வர்ஷிக்கும்‌ மேகமான ஆழ்வாருடைய திருவவதாரத்தில்‌ ஆராய்ச்சியு மென்கிறார்‌. அர்ச்சாவதாரத்தில்‌ த்‌ரவ்ய நிரூபண நிஷேதம்‌ பஹு ப்ரமாண ஸித்‌தம்‌. அத்தோடே சேர்த்துச் சொல்லுகையாலே திருவாய் மொழியினுடைய பாஷா நிரூபணம்‌ பண்ணலாகாதென்னுமிடம்‌ ஸித்‌தமாய்த்து. ““ஹரிகீர்த்திம்‌ விநைவாந் யத்‌ ப்‌ராஹ்மணேந நரோத்தம । பாஷா காநம்‌ ந காதவ்யம்‌ தஸ்மாத்‌ பாபம்‌ த்வயா க்ருதம்‌” (லைங்கே, 2-, 3 – 44) என்றிறே மநுவும்‌ சொன்னது. அப்படியாகிறது – அர்ச்சாவதாரத்தில்‌ த்‌ரவ்ய நிரூபண நிஷேதத்துக்கு ப்ரமாணமென்‌ என்னில்‌; ““அர்ச்சாவதாரோபாதாநம்‌ வைஷ்ணவே ஜாதி சிந்ததம்‌ | மாத்ரு யோநி பரீக்ஷா யாஸ் துல்ய மாஹுர் மநீஷிண?” (பாஞ்ச.) என்றும்‌, “யோ விஷ்ணோ? ப்ரதிமாகாரே லோஹ பாவம்‌ கரோதி வை । யோ குரெள மாநுஷம்‌ பாவம்‌ உபவ் நரக பாதிநெள”” (பகவச் சாஸ்த்ரே) என்றும்‌ சொல்லக் கடவதிறே–

இனியார் ஞானங்களால் எடுக்கல் எழாத வெந்தாய்
கனிவார் வீட்டின்பமே என் கடல் படா வமுதே
தனியேன் வாழ் முதலே பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய்
நுனியார் கோட்டில் வைத்தாய் யுனபாதம் சேர்ந்தேனே –2-3-5—ஓர் அளவில்லை யாகிலும் பகவத் விஷயத்தில் பக்வமான ப்ரேமம் உடையவர் களுக்கு மோக்ஷ ஸூகமானவனே அவர்கள் இருந்த இடத்தே வந்து போக்யனானவனே –தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே -என்னக் கடவது இறே-நீ என்றால் உள் கனிந்து பக்குவமாய் இருக்குமவர்களுக்கு மோக்ஷ சுகம் ஆனவனே! அன்றி, ‘நீ என்றால் இனியராய் இருக்குமவர்கள் இருப்பிடத்திலே வந்து அவர்களுக்கு ஆனந்தத்தை விளைவிக்குமவனே!’ என்றுமாம்.  (வீடு -மோக்ஷமும் க்ருஹமும் – மோக்ஷ ஸூகத்தைக் கொடுப்பவன் – வீட்டிலேயே வந்து ஆனந்தத்தை விளைவிக்குமவன் –)

மாவினை வாய் பிளந்து உகந்த மாலை வேலை வண்ணனை என் கண்ணனை வன் குன்றம் ஏந்தி
ஆவினை அன்று உய்ய கொண்ட ஆயர் ஏற்றை அமரர்கள் தம் தலைவனை அம் தமிழ் இன்ப
பாவினை அவ் வடமொழியை
பற்றற்றார்கள் பயில் அரங்கத்து அரவு அணை பள்ளி கொள்ளும்
கோவினை நாவுற வழுத்தி என் தன் கைகள் கொய்ம் மலர் தூ என்று கொலோ கூப்பும் நாளே—-1-4-அம் தமிழ் இன்ப பாவினை – இருள் இரியச் சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி போலே இனியவனை-அவ் வட மொழியை -ஸ்ரீ மன் நாராயணனைப் போலே இனியவனை-

உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் றன்னை
வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.–4-5-10-ப்ராப்த விஷயத்தில் அடிமை செய்யப் பெற்ற இதுவேயோ-இது ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஆனந்தாவஹமும் ஆயிற்று–இன்ப மாரி- இன்பத்தை உண்டாக்கும் மேகம்-இது எனக்கு இருக்கிறபடி கண்டால் உகக்கிறவர்களுக்கு எங்கனே இருக்கிறதோ என்கை-தொண்டர்க்கு அமுது உண்ண சொல்மாலைகள் சொன்னேன் –

மானிடவர் என்றும் குருவை மலர்மகள் கோன்
தான் உகந்த கோலம் உலோகம் என்றும் -ஈனமதா
வெண்ணுகின்ற நீசர் இருவருமே எக்காலும்
நண்ணிடுவர் கீழா நரகு
–32-

இங்கன் இன்றிக்கே பேச்சிலும் ,இது சொன்னவர் பிறவியிலும் , தாழ்வு பார்த்து ,இப் பிரபந்தத்தை இகழும் அவர்களுக்கு , அநிஷ்ட பிரசஞ்சனம் பண்ணுகிறார் -பேசித்யாதி வாக்ய த்வயத்தாலே-ஆகிலும்‌ திராவிட பாஷையாயிரா றின்றதே, அது க்ராஹ்யமாம்படி எங்ஙனே என்னில்‌;

பேச்சு பார்க்கில் கள்ளப் பொய் நூல்களும் க்ராஹ்யங்கள்-பிறவி பார்க்கில் அஞ்சாம் ஒத்தும்nஅறு மூன்றும் கழிப்பனாம்-சூரணை -76-

அதாவது –
சமஸ்க்ருதமாகவும் ,த்ராவிடமாகவும் ,பகவத் பரமானது உபாதேயம் . அந்ய பரமானது த்யாஜ்யம் என்று கொள்ளாதே ,பாஷா மாத்ர அவதியாக , விதி நிஷேதங்களை அங்கீகரித்து திராவிட பாஷையாகையாலே இது த்யாஜ்யம் என்னப் பார்க்கில்–வெள்ளியார் பிண்டியார் போதியார் என்று இவர் ஓதுகின்ற கள்ள நூல் –பெரிய திருமொழி -9-7-9-என்றும்-பொய்நூலை மெய்நூல் என்று என்றும் ஓதி–பெரிய திருமொழி -2-5-2- -என்றும் சொல்லுகிறmபாஹ்ய சாஸ்த்ராதிகளும் ,சமஸ்க்ருத பாஷையான ஆகாரத்தாலே , உபாதேயம் ஆக வேணும் ..–பிறவி பார்க்கில்-அதாவது சதுர்த்த வர்ண உத்பவர் என்று வக்தாவன இவர் பிறவியைப் பார்த்து , இத்தை இகழம் அளவில் , அஞ்சாம் ஒத்தும் அறு மூன்றும் கழிப்பனாம்–அதாவது-மத்ஸ்ய கந்தா சுதனான வியாசன் சொன்ன பஞ்சம வேதமான மகா பாரதமும் கோப ஜன்மாவன கிருஷ்ணன் சொன்ன ஷட்க த்ரயாத்மகமான கீதோ உபநிஷத்தும் த்யாஜ்யமாக வேணும் என்கை ..-இத்தால் பாஷா மாத்ரத்தையும் ,வக்த்ரு ஜென்மத்தையும் பார்த்து
இகழும் அளவில் வரும் விரோதம் காட்டப் பட்டது-அதவா –-பாஷா வக்த்ரு ஜன்ம மாந்த்யங்கள் நிரூபிக்கலாகாது என்று ,கீழ் சொன்ன படி அன்றிக்கே , சம்ஸ்க்ருத பாஷையாய் உள்ளதும் ,ஜன்ம கெளரவம் உடையார் ,சொல்லும் அதுவே உபாதேயம் என்று கொள்ளுபவர்களுக்கு அநிஷ்ட பிரசன்ஜனம் பண்ணுகிறார் -வாக்ய த்வ்யத்தாலே ..-அதாவது – பகவத் பரத்வ அந்நிய பரத்வங்களை பரிக்ராக்ய பரித்யாஜ்வத்வங்களுக்கு ஹேது வாக்காதே – சமஸ்ருத பாஷை யானது உபாதேயம் என்று ,பேச்சின் உடைய கௌரவ மாத்ரத்தை பார்க்கில்-கள்ள நூல் -பொய் நூல்- என்று கழிக்கப் பட்ட பாஹ்ய சாஸ்த்ராதிகளும் பரி கிராஹ்யங்கள் ஆம்-யதாஜ்ஞானர் சொன்னது உபாதேயம் அயதாஜ்ஞானர் சொன்னது த்யாஜ்யம் என்று கொள்ளாதே-ஜன்ம கெளரவம் உடையார் சொன்னதே உபாதேயம்-
அல்லாதார் சொன்னது த்யாஜ்யம் என்று பிறவி மாத்ரத்தையே பார்க்கில் ,-மச்த்ய கந்தா சூதனான வியாசர் சொன்ன பஞ்சம வேதமும் ,கோபோ ஜன்மாவன கிருஷ்ணன் சொன்ன கீதோ உபநிஷத்தும் த்யாஜ்யமாக வேணும் என்கை —

(பேச்சுப் பார்க்கில்‌) பாஷா மாத்ரமே அங்கீகார-அநங்கீகார ஹேதுவாகில்‌, (கள்ளப்‌ பொய்ந் நூல்களும்‌ க்ராஹ்யங்கள்‌) ‘*வெள்ளியார் பிண்டியார்‌ போதியாரென்றிவர்‌ ஓதுகின்ற கள்ளநூல் தன்னையும்‌’” (திருமொழி 9 – 7- 9) என்றும்‌, “’பொய்ந்‌நூலை மெய்ந் நூல்‌’ (திருமொழி 3 – 5 – 2) என்றும்‌ சொல்லுகிற பாஹ்ய ஸாஸ்த்ரங்களும்‌ குத்‌ருஷ்டி ஸாஸ்த்ரங்களும்‌ அங்கீ கரிக்கப்படும்‌. அவற்றுக்கு அப்படி ஸிஷ்டாசார மில்லாமையாலும்‌, இத்தை ஸிஷ்டரானவர்கள்‌ பரிக்‌ரஹிக்கையாலும்‌ பாஷாவதி மாத்ரமே பரிக்‌,ராஹ்ய-அபரிக்‌ராஹ் யதா ஹேதுவாக ஒண்ணாது –ஆனாலும்‌ ப்ரபந்த கர்த்தா சதுர்த்த வர்ணாதிகாரி யாயிரா நின்றாரே? ப்ரபந்தமும்‌ ப்ரதிபாத்‌ய வஸ்துவும்‌ விலஷணமே யாகிலும்‌ கர்த்ரு மாந்த்‌யத்தாலே ப்ரபந்த மாந்த்யமும் பிறக்குமே என்ன (பிறவி பார்க்கில்‌ அஞ்சாமோத்தும்‌ அறு மூன்றும்‌ கழிப்பனாம்‌) என்கிறார்‌. (பிறவி பார்க்கில்‌) இதுக்கு வக்தாவான ஆழ்வாருடைய ஜந்மத்தை யிட்டுக்‌ கழிக்கப் பார்க்கில்‌, வலைச்சி வயிற்றிலே பிறந்த வ்யாஸன்‌ சொன்ன பஞ்சம வேதமான மஹா பாரதமும்‌, இடைச்சேரியிலே பிறந்த கருஷ்ணனருளிச் செய்த ஷ்ட்க த்ரயாத்மகமான ஸ்ரீகீதையும்‌ கழியுண்ணும் –

வெள்ளியார் பிண்டியார் போதியார் என்று இவர் ஓதுகின்ற
கள்ள நூல் தன்னையும் கருமம் அன்று என்று உய்யக் கருதினாயேல்

தெள்ளியார் கை தொழும் தேவனார் மா முநீரமுது தந்த
வள்ளலார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே –9-7-9-வெள்ளியார் பிண்டியார் போதியார் என்று இவர் ஓதுகின்ற – சுக்ரனைச் சொல்லுதல்-அன்றிக்கே வெள்ளி  மலையை வாசஸ் ஸ்தானமாக உடைய ருத்ரன் -என்ணுதல்- அசோகா  வருஷத்தின் கீழே இருக்கக் கடவ   ஆர்ஹதர்
அரசின் கீழே இருக்கக் கடவ பௌத்தர் என்று சொல்லப் படுகிற இவர்கள் கதறிக் கொண்டு திரிகிற –கள்ள நூல் தன்னையும்  கருமம் அன்று என்று உய்யக் கருதினாயேல் யதாஹி சோரஸ் சததாஹி புத்த -என்னக் கடவது இறே-(திருடர் போல் சர்வம் ஸூந்யம் -அவனது ஸமஸ்த திருட்டு ) இது நமக்கு கர்த்தவ்யம் அன்று என்று உஜ்ஜீவிக்க விரகு பார்த்தாயாகில்  –

பூண்ட வத்தம் பிறர்க்கடைந்து தொண்டு பட்டுப் பொய் நூலை மெய் நூல் என்று என்றும்  ஓதி
மாண்டு அவத்தம் போகாதே வம்மின்
எந்தை என் வணங்கப் படுவானை கணங்கள் ஏத்தும்
நீண்ட வத்தக் கருமுகிலை எம்மான் தன்னை நின்ற வூர் நித்திலத்தைத் தொத்தார் சோலை
காண்டவத்தைக் கன லெரி வாய்ப் பெய்வித்தானைக் கண்டது நான் கடல் மல்லைத் தல சயனத்தே —2-5-2-விப்ரலம்ப கரராயும் ப்ராந்தராயும் உள்ளவர்கள் தம்தாமுடைய புத்தியாலே வரைந்த சாஸ்த்ரங்களை
வைதிக சாஸ்திரம் போலே இருக்க ஆதரித்து அப்யசித்து பின்னை அவற்றின் உடைய ஸ்வரூபம் இருந்தபடியை ஆராய்ந்து மீளுகைக்கு அவகாசம் இல்லாதபடி முடிந்து-அவத்தம் போகாதே-
இஹ லோகம் பர லோகங்கள் இரண்டிலும் வ்யர்த்தமே போகாதே –வம்மின் – கெடுவிகாள்
கடுக வந்து நில்லுங்கோள் –

இவ் ஆழ்வாருடைய உத்பத்தியை வியாச கிருஷ்ண உத்பத்தி சமமாக அருளிச் செய்தார் கீழ்–
அவற்றில் இதுக்கு உண்டான வியாவிருத்தியை அருளிச் செய்கிறார் மேல்..ஆக, இதுக்குக்‌ கீழ்‌ கருஷ்ண த்‌வைபாயநனான வ்யாஸனோடும்‌, க்ருஷ்ணனேடும்‌ உண்டான ஜந்ம ஸாதர்ம்யம்‌ சொல்லி, “‘க்ருஷ்ண க்ருஷ்ண த்‌வைபாய நோத்பத்திகள்‌ போலன்றே’‘ என்று – இனி மேல்‌ வைதர்ம்யம்‌ சொல்லுகிறது, எங்ஙனே என்னில்‌;

கிருஷ்ண கிருஷ்ண த்வைபாயன உத்பத்திகள் போல் அன்றே கிருஷ்ண த்ருஷ்ணா தத்வ ஜன்மம்-சூரணை -77-

அதாவது
ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனான – ஸ்ரீ கிருஷ்ணன் உடையவும்-கன்யா சூதனனான வியாசனுடையவும்- உத்பத்தி போலே அன்றே-கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்றவராய்-திரு விருத்தம் -37- கிருஷ்ண த்ருஷ்ணா தத்வ மிவோதிதம்-ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் –பூர்வ -6-என்கிற படியே-கிருஷ்ண விஷய திருஷ்ணை தானே ஒரு வடிவு கொண்டால் போலே
இருக்கிற ஆழ்வாருடைய அவதாரம்
என்கை ..

இடைச்சி வயிற்றிலே பிறந்த க்ருஷ்ணனுடையவும்‌ வலைச்சி வயிற்றில்‌ பிறந்த கருஷ்ணாத்‌வைபாயநனுடையவும்‌ (உத்பத்தி போலன்றே, இவர்‌ திருவவதாரம்‌ இவ்வளவேயோ, இவ்வாழ்வாருடைய திருவவதாரத்தையும்‌ அவர்களுடைய ஜந்மத்தையும்‌ நிருபித்தால்‌ இத்தோடு அவை நேர் நில்லாது. ஆகையால்‌ இவர்க்கு அவர்கள்‌ ஸத்‌ருஸரல்லர்‌-

கொடும் காற் சிலையர் நிரை  கோள் உழவர்  கொலையில் வெய்ய
கடுங்கா விளைஞர் துடி படுங்கவ் வைத்து அருவினையேன்
நெடும்காலமும் கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்ற
தொடுங்கால்  ஓசியும்   இடை இள மான் சென்ற சூழ் கடமே 
–37- சக்ருதேவ பிரபன்னாய -யுத்த காண்டம் – 18-32 – சடக்கென்று –சக்ருத் பிரபத்தியும் பொறாததை கிடீர் நான் தீர்க்க காலம் உபாசித்தது –தேவகியாரைப் போலே அநந்த வ்ரதம் அனுஷ்டித்து கிடீர் –தன்னையும் அறியாதே தன்னை பெறப் பட்ட அருமையும் அறியாதே கிடீர் போயிற்று –மஹாதா தபஸா ராம மஹாதா சாபி கர்மணா –ஆரண்ய காண்டம் – 66-3 – நீண்ட காலம் உடலை வருத்தி –பல நியமங்களை கடப் பிடித்து – பல கர்மங்களை இயற்றி அல்லவோ-ராமனாகிய உன்னை பெற்றாள் -என்று ஸ்ரீ கௌசல்யார் சொல்லுமா போலே –நீண் மலர் பாதம் –ஆஸ்ரிதர் இருந்த இடத்தளவும் செல்ல தானே வளரும் படி ஸூலபமான திரு அடிகள்–அது தானும் தன் பேறாய் இருந்த படி–மலர்-செவ்வி –பரவிப் பெற்ற – ஸ்தோத்ர வாதங்களை பண்ணிப் பெற்ற –நிதி எடுத்தாற் போலே பெற்ற இவள்-

அது எங்கனம் என்னும் அபேஷையில் பல ஹேதுகளாலும் இவர் ஜன்ம வ்யாவிருத்தியை பிரகாசிப்பிகிறார் மேல் — அதில் பிரதமத்தில் அவர்களைப் பெற்றவர்கள், இவரைப் பெற்றவர்களுக்கு
சத்ருசரல்லாமையை இசைவிக்கிறார்-
இவர்களுடைய உத்பத்தி ப்ரகாரங்களையும்‌ ஸ்தலங்களையும்‌ விசாரித்தால்‌ அவையும்‌ வாசா மகோசரம்‌ என்கிறார்‌ மேல்‌-

பெற்றும் பேர் இழந்தும்-கன்னிகை யானவளும்-எல்லாம் பெற்றாளாயும் தத்துக் கொண்டாள் என்பர்
நின்றார் என்னுமவளும் நெடும் காலமும் நங்கைமீர் என்னும் இவளுக்கு நேர் அன்றே –சூரணை-78-
(பெற்றும் பேர் இழந்தவளும் -பாட பேதம் – நங்கைமீர் என்னும் அவளுக்கு-உடைய நங்கையாருக்கு -நம்மாழ்வாருடைய திருத் தாயாருக்கு –பெற்றும் பேர் இழந்தவளும் -தேவகி பிராட்டியார் -நேர் அன்று –
பெற்றும் கன்னிகையானவளும்-மத்ஸ கந்தி நேர் அன்று –என்னுமவளும் யசோதை பிராட்டியும் -நேர் அன்று )அதாவது-பெற்றும் – திருவின் வடிவு ஒக்கும் தேவகி பெற்ற -பெரியாழ்வார் -1-2-17-என்கிற படியே ஸ்ரீ கிருஷ்ணனைப் பிள்ளையாய் பெற்று இருக்கச் செய்தேயும் , அவனுடைய பால்ய ரசம் ஒன்றும் அனுபவிக்க பெறாமையால் , திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன்-பெருமாள் திருமொழி -7-5–என்று பேறு இழந்தவளான தேவகியும் ,–பெற்றும் –த்வீபே பதரிகாமிஸ்ரே பாதராயணம் அச்சுதம்
பராசராத் சத்யவதீ புத்ரம் லேபே பரந்தபம்
–பாரதம் —( இலந்தைக்காடு கலந்த காட்டில் சத்யவதி என்பவள் பராசரரிடம் இருந்து பகவனைத் தபிக்கச் செய்யும் விஷ்ணுவின் அம்சமான வியாச முனிவரைப் பிள்ளையாக அடைந்தாள் ) என்கிற படியே வியாசனைப் பிள்ளையாகப் பெற்று இருக்கச் செய்தேயும் ,அவனால் உள்ள ரசம் ஒன்றும் அனுபவிக்கப் பெறாதபடி –புன கன்யா பவிஷ்யதி —
(பரிதி தந்த மா நதி மருங்கு ஒரு பகல் பராசரன் மகப்பேறு
கருதி வந்து கண்டு என்னையும் எனது மெய்க் கமழ் புலவையும் மாற்றிச்
சுருதி வாய்மையின் யோசனை பரப்பு எழு சுகந்தமும் எனக்கு ஈந்து
வருதி நீ எனப் பனியினால் மறைத்து ஒரு வண் துறைக்குறை சேர்ந்தான்
முரண் நிறைந்த மெய்க் கேள்வியோன் அருளினால் முஞ்சியும் புரி நூலும்
இரணியம் செழும் கொழுந்து விட்டனவென இலங்கு வேணியும்
தரணி எங்கணும் வியாதன் என்று உரை கெழு தபோதன முனி அப்போதானும்
தரணியின் புறத்து அனல் என என் வயின வதரித்தனன் அம்மா
சென்னியால் என்னை வணங்கி யாதொரு பகல் சிந்தி நீ சிந்திக்கு
முன்னையான் அரு குறுவல் என்று உரை செய முனிமகன்
முனி மீளக் கன்னியாக என வித்துடன் கரந்தனன்
–வில்லிபாரதம் -சம்பவச் சருக்கம் 6-7-8 –)-என்று
பராசர வசனத்தாலே ,மீளவும் கன்னியான மச்த்ய கந்தையும் எல்லாம் பெற்றாளாயும் –
அதாவது –எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே–பெருமாள் திருமொழி -7-5 -என்னும் படி
கிருஷ்ணனுடைய பால சேஷ்டாதிகளை எல்லாம் அனுபவிக்கப் பெற்று இருக்கச் செய்தேயும் ,-
தத்து கொண்டாள் கொலோ ,தானே பெற்றாள் கொலோ–பெரியாழ்வார் -2 -1-7—என்றும் ,
இம்மாயம் வல்ல பிள்ளை நம்பி உன்னை என் மகனே என்பர் நின்றார்–பெரியாழ்வார் -3 –1 –3- -என்றும்
அவனுடைய அதிமாநுஷ சேஷ்டிதங்கள் அடியாக தானும் பிறரும் சங்கிக்கும் படியான மாத்ருவத்தை உடைய யசோதையும்நெடும் காலமும் நங்கைமீர் என்னுமிவளுக்கு நேர் அன்றே –அதாவது-நெடும் காலமும் கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்ற –திருவிருத்தம் –37-என்று சக்ருதாஸ்ர்யணம் அமைந்து இருக்க ,ஆதர அதிசயத்தாலே சிரகாலம் ஆஸ்ரித சுலபனான கிருஷ்ணன் திரு அடிகளை ஆஸ்ரயித்து இவளைப் பெற்றவளாகவும் ,-நங்கைமீர் நீரும் ஓர் பெண் பெற்று நல்கினீர்-திருவாய் -4-2–9 -என்று தொடங்கி பூரணைகளான நீங்களும் ஒரு பெண் பிள்ளை பெற்று வளர்திகோள் இறே
பகவலாஞ்ச நாதிகளை திவாராத்ர விபாகம் அற வாய் புலற்றா நின்று உள்ள சபலையான என் பெண் பிள்ளை படியை எங்கனே சொல்லுவேன் என்று வாசா மகோசரமான இவருடைய முக்த வசநாதிகளை அனுபவித் தாளாகவும் சொன்ன இவரைப் பெற்றவளுக்கு சத்ருசர் அன்றே என்கை .

தேவகி பெற்ற” (பெரியா. 1 – 8 – 17) என்கிறபடியே ஸ்ரீதேவகிப் பிராட்டி க்ருஷ்ணனைப்‌ பெற்று வைத்து, ”திருவிலேனொன்றும்‌ பெற்றிலேன்‌”’ (பெருமா.தி.7 – 5) என்கிறபடியே அவனுடைய பால்ய ரஸம்‌ அநுபவிக்கப்‌ பெற்றிலளிறே. வ்யாஸனைப் பெற்ற அநந்தரம்‌ “புந கந்யா பவிஷ்யதி?” (பார ) என்று ஸ்ரீபராஸர பகவான்‌ சொல்ல மீண்டும்‌ கந்யகையான மத்ஸ்யகந்தியும்‌ அவனுடைய பால்ய ரஸம்‌ அநுபவிக்கப்‌ பெற்றிலள்‌. (எல்லாம்‌ பெற்றாளாயும்‌) “எல்லாம்‌ தெய்வ நங்கை யசோதை பெற்றாளே’‘ (பெருமா.தி. 7 – 5) என்கிற யசோதையும்‌ க்ருஷ்ணனுடைய பால்ய சேஷ்டிதங்களெல்லாம்‌ அநுபவிக்கப்‌ பெற்றாளே யாகிலும்‌, “’தத்துக் கொண்டாள் கொலோ”’ (பெரியா.2 – 1 7) என்றும்‌, “உன்னை என் மகனே என்பர்‌ நின்றார்‌” (பெரியா. 3 – 1 – 3) என்றும்‌ – தானும்‌ பிறரும்‌ ஸங்கிக்கும் படியாயிருக்கும்‌. இவருடைய உத்பத்தி – அங்ஙனன்றிக்கே “நெடுங் காலம்‌ கண்ணன்‌ நீண் மலர்ப் பாதம்‌ பரவிப் பெற்ற”’ (திருவிரு. 37) என்றும்‌, “நங்கைமீர்‌ நீருமோர்‌ பெண் பெற்று நல்கினீர்‌” (திருவா. 4 – 2 – 9) என்றும்‌ சொல்லுகிற படியே பரிபூர்ணைகளான நீங்களும்‌ சில பெண்களைப் பெற்று வளர்த்தி கோளல்லிகோளோ, பகவல் லாஞ்சநாதிகளை திவா ராத்ர விபாகமற வாய் புலற்றும்படியான என்‌ பெண் பிள்ளைக்கு ஸத்‌ருஸமுண்டோ என்கையாலே இவர்க்கும்‌ அவர்களுக்கும்‌ அத்யந்த வைஷம்யம்‌ சொல்லிற்று –

பருவம் நிரம்பாமே பாரெல்லாம் உய்ய
திருவின் வடிவு ஒக்கும் தேவகி பெற்ற
உருவு கரிய ஒளி மணி  வண்ணன்

புருவம் இருந்தவா காணீரே பூண் முலையீர் வந்து காணீரே -1-2-17-லஷ்மி துல்ய ஸ்வாபையான தேவகி பிராட்டி இப்படிக்கு ஈடாக நோற்றுப் பெற்ற – திருவின் வடிவு ஒக்கும் என்கையாலே – கீழ் சீதக் கடலுள் அமுதன்ன தேவகி -என்றது -இங்கே ஸ்பஷ்டமாய் இறே இருப்பது –

மருவு நின் திரு நெற்றியில் சுட்டி அசை தர மணி வாய் இடை முத்தம்
தருதலும் உன் தன் தாதையை போலும் வடிவு கண்டு கொண்டு உள்ளம் உள் குளிர
விரலை செஞ்சிறு வாய் இடை சேர்த்து வெகுளியாய் நின்று உரைக்கும் அவ் வுரையும்
திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே –7-5-பால்ய அவஸ்தையிலே அனுபவங்களை அனுபவிக்க பாஹ்ய ஹீனையான நான் இழந்தேன்-இழக்கைக்கு நான் ஒருத்தி உண்டானாப் போலே அனுபவிக்கைக்கு இட்டுப் பிறந்த ஸ்ரீ யசோதைப் பிராட்டி எல்லாம் பெற்றாள் இறே –

தத்துக் கொண்டாள் கொலோ தானே பெற்றாள் கொலோ
சித்தம் அனையாள் அசோதை இளம் சிங்கம்
கொத்தார் கரும் குழல் கோபாலர் கோளரி
அத்தன் வந்து என்னை அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் – 2-1 7- தத்த புத்ரனாக வளர்த்துக் கொண்டாளோ-அன்றியே தானே மெய் நொந்து பெற்றாளோ-அதாவது-அசோதை இளம் சிங்கம் -என்ன -இவள் தத்த ஸ்வீகாரம் செய்யக் கண்டிலோம் –இவள் பெறுகிற போது இவளை பார்த்துப் பேணிக் கொண்டு இருந்த நாம் எல்லாம் இவள் பெறக் கண்டிலோம் –அயர்ந்து உறங்கி விட்டோம் – இவள் தான் -நான் பெற்றேன் -என்று சொல்லக் கேட்டோம் இத்தனை -இறே ––ததர்ச ச ப்ரபுத்தாச யசோதா ஜாதமாத்மஜம்-என்கிறபடியே அவளும் அப்போது பெற்று மோகித்து கிடந்து
உணர்ந்து பின்பு இறே இவனைக் கண்டது –இப்படி தான் சொல்லுகிறது-அதி லோகமான இவனுடைய ரூப குண சேஷ்டிதங்களைக் கண்டால் – இவள் பிள்ளை -என்று -சொல்லப் போகாதபடி இருக்கையாலே –அவள் தானும் –இம் மாயம் வல்ல பிள்ளை நம்பி உன்னை என் மகனே என்பர் நின்றார் -என்று
இவனுடைய அதி மானுஷ  சேஷ்டிதங்களைக் கண்டால் -நீ என்னுடைய பிள்ளையாக கூடாது –
நடு நின்றவர்கள் உன்னை என்னுடைய பிள்ளை என்றே சொல்லா நின்றார்கள் -என்னும்படியாய் இறே இருப்பது –

கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கி குடத் தயிர் சாய்த்துப் பருகி
பொய் மாய மருதான அசுரரை பொன்று வித்து இன்று நீ வந்தாய்
இம் மாயம் வல்ல பிள்ளை நம்பீ உன்னை என் மகனே என்பர் நின்றார்
அம்மா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே 3-1-3- -இந்த ஆச்சர்யங்களை செய்ய வல்லவனாய்- பிள்ளைத் தனத்தால் பூர்ணம் ஆனவனே-இப்படி இருக்கிற உன்னை உன் வாசி அறியாத நடு நின்றவர்கள்- என்னுடைய மகன் -என்று சொல்லுவார்கள் –நான் அங்கன் இன்றிக்கே -என் மகன் அன்று -என்றும் –எல்லார்க்கும் ஸ்வாமி -என்றும் – உன்னை உள்ளபடி அறிந்து கொண்டேன்-ஆன பின்பு உனக்கு அம்மம் தர அஞ்சுவன்-

கொடும் காற் சிலையர் நிரை  கோள் உழவர்  கொலையில் வெய்ய
கடுங்கா விளைஞர் துடி படுங்கவ் வைத்து அருவினையேன்
நெடும்காலமும் கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்ற
தொடுங்கால்  ஓசியும்   இடை இள மான் சென்ற சூழ் கடமே 
–37–தேவகியாரைப் போலே அநந்த வ்ரதம் அனுஷ்டித்து கிடீர் –தன்னையும் அறியாதே தன்னை பெறப் பட்ட அருமையும் அறியாதே கிடீர் போயிற்று –மஹாதா தபஸா ராம மஹாதா சாபி கர்மணா –ஆரண்ய காண்டம் – 66-3 – நீண்ட காலம் உடலை வருத்தி –பல நியமங்களை கடப் பிடித்து – பல கர்மங்களை இயற்றி அல்லவோ-ராமனாகிய உன்னை பெற்றாள் -என்று ஸ்ரீ கௌசல்யார் சொல்லுமா போலே –நீண் மலர் பாதம் –ஆஸ்ரிதர் இருந்த இடத்தளவும் செல்ல தானே வளரும் படி ஸூலபமான திரு அடிகள்–அது தானும் தன் பேறாய் இருந்த படி–மலர்-செவ்வி –பரவிப் பெற்ற – ஸ்தோத்ர வாதங்களை பண்ணிப் பெற்ற –நிதி எடுத்தாற் போலே பெற்ற இவள்-

நங்கைமீர்! நீரும் ஓர் பெண் பெற்று நல்கினீர்;
எங்ஙனே சொல்லுகேன் யான் பெற்ற ஏழையை?
சங்கு என்னும்; சக்கரம் என்னும்; துழாய் என்னும்;
இங்ஙனே சொல்லும் இராப்பகல் என்செய்கேன்?–4-2-9–உங்கள் பூர்த்தி நான் சொல்லக் கேட்டு அறிய வேணுமே உங்களுக்கு நீங்களும் ஒரு பெண் பிள்ளையை பெற்று வளர்த்தி கோளே-நல்குகை -வளர்க்கை -இவள் பட்டது பட்டார் உண்டோ-உன் பெண் பிள்ளைக்கு வாசி என் என்ன-எங்ஙனே சொல்லுகேன் யான் பெற்ற ஏழையை?-என்னுடைய பெண் பிள்ளை படி என்னாலே பாசுரம் இட்டுச் சொல்லாயோ இருக்கிறது-நங்கைமீர் என்று சம்போதிப்பது சஜாதீயரை -இவளுக்கு சஜாதீயர் ஆழ்வார்களாம் இத்தனை-நீங்களும் பகவத் விஷயத்தில் பிரவணர் நான் பட்டது பட்டார் உண்டோ -என்று கருத்து-யதோ வாசோ நிவர்த்தந்தே-என்கிற விஷயத்தை முடிய பேசிலும் இவ்விஷயத்தில் அவகாஹித்தார் படி பாசுரம் இட்டு சொல்ல முடியாது என்கை-சதா பரகுணாவிஷ்டோ த்ரஷ்டாவ்யஸ் சர்வ தேஹிபி -என்று கண்டு இருக்கும் அத்தனை போக்கி பேசப் போகாது-ப்ரியோஹி ஜஃனானி நோஸ்யார்த்தம் -என்று இறே அவன் வார்த்தையும் கிடையாததிலே கிடைக்குமதில் பண்ணும் சாபல்யத்தை பண்ணுகிறவள்-

இனி மூவருடைய உத்பத்தி ஸ்தல கந்த விசேஷங்களை பார்த்தால், மற்றை இரண்டிலும் , இவருடைய உத்பத்தி ஸ்தலத்துக்கு உண்டான வைபவம் விலஷணம் என்னும் இடத்தை மூதலிக்கிறார்-

மீன நவநீதங்கள் கந்திக்கும் இடமும் வெறி கொள் துழாய் கமழும் இடமும் தன்னில் ஒக்குமோ-சூரணை -79-(மீன கந்திக்கும் இடம் -வியாசர் அவதார ஸ்தலம் -நவநீதம் கந்திக்கும் இடம் -ஸ்ரீ கிருஷ்ணன் திருவவதார ஸ்தலம் -வெறி கொள் துழாய் கமழும் இடம் -நம்மாழ்வார் திரு அவதார ஸ்தலம் )

அதாவது
மீன் வெறி நாறுகிற வியாச உத்பத்தி ஸ்தலமும் , வெண்ணெய் முடை நாறுகிற கிருஷ்ண உத்பத்தி ஸ்தலமும் ,-வெறி கொள் துழாய் மலர் நாறும் வினயுடையாட்டியேன் பெற்ற–திருவாய் -4 -4-3- -என்றும்
இவள் அம் தண் துழாய் கமழ்தல்–திருவாய் -8-9-10-என்றும் பகவத் சம்பந்த பிரகாசமான திருத்துழாய் மணம் நாறுகிற ஆழ்வார் அவதரித்த ஸ்தலத்துக்கு சத்ருசமோ என்றபடி-பிராக்ருத விஷய சம்சர்கஜமான ஹேய கந்தங்கள் இறே அவை .-அப்ராக்ருத விஷய சம்சர்கஜமான உபாதேய கந்தம் இறே இது -இத்தால் தாத்ருச ஸ்தலங்களில் உண்டான அவர்கள் உத்பத்தியில் -ஈத்ருச ஸ்தலத்தில் உண்டான இவருடைய உத்பத்தியின் ஏற்றம் காட்டப் பட்டது

மத்ஸ்ய கந்தத்தையுடைய வ்யாஸன்‌ பிறந்த விடமும்‌ நவநீத கந்தியான க்ருஷ்ணன்‌ பிறந்தவிடமும்‌ – ‘“வெறி கொள் துழாய்‌ மலர் நாறும்‌ வினையுடை யாட்டியேன்‌ பெற்ற”’ (திருவா. 4 – 4 – 9) என்கிற பகவத் ஸம்பந்த கந்தியான் ஆழ்வார்‌ திருவவதரித்த இடத்துக்கு ஸத்‌ஸருமன்றே-

அறியும் செந்தீயைத் தழுவி,‘அச்சுதன்’ என்னும்;மெய் வேவாள்;
எறியும் தண் காற்றைத் தழுவி, ‘என்னுடைக் கோவிந்தன்’ என்னும்;
வெறி கொள் துழாய் மலர் நாறும் வினையுடை யாட்டியேன் பெற்ற
செறிவளை முன்கைச் சிறுமான் செய்கின்றது என்கண்ணுக்கு ஒன்றே?–4-4-3-இத்தசையில் சம்ச்லேஷ ஸூசகமான இந்த பரிமளம் எங்கனே உண்டாம் படி என்னில்-காற்றோடு புகுந்து அணைந்தார் என்று கார்யத்தைக் கொண்டு கல்பித்தல்-கோவை வாயாளில் அனுபவம் பத்துக் குளிக்கு நிற்கும் என்னுதல்
வந்தேறி கழிந்தால் ஆத்ம ஸ்வரூபம் பகவத் சம்பந்தியாய் இருக்கும் -என்னுதல்-அன்றி மற்று ஓர் உபாயம் என் இவள் அம் தண் துழாய் கமழ்தல்-என்னக் கடவது இறே-வினையுடை யாட்டியேன் பெற்ற –
பிரிவிலும் திருத் துழாய் மணம் மாறாத படி அவகாஹித்து போலி கண்டு பிரமிக்கும் படி ப்ரேமம் யாய் விட்டது பாபத்தை பண்ணின என் வயிற்றிலே பிறப்பு இ றே பாக்ய பலத்தை பாப பலமாக சொல்லுகிறாள் -இழவைப் பற்ற-

அன்றி மற்றோர் உபாயம் என் இவள் அம்தண் துழாய் கமழ்தல்
குன்ற மா மணி மாட மாளிகைக் கோலக் குழாங்கள் மல்கி
தென் திசைத் திலதம் புரை குட்ட நாட்டுத் திருப் புலியூர்
நின்ற மாயப் பிரான் திருவருளாம் இவள் நேர் பட்டதே–8-9-10—வேறு மற்று உபாயம் உண்டோ -இவள் அழகியதாய் குளிர்ந்து இருக்கிற திருத் துழாய் நாறுகைக்கு -ராஜ புத்ரனை அணையாதார்க்கு மாளிகைச் சாந்து நாறுமோ -என்னுடம்பு திருத் துழாய் நாறா நின்றதோ -ஸ்வாபதேசத்தில் –அம் தண் துழாய் கமழ்தல்-என்கிறது அங்கீ கார ஸூ சகமாய் இருக்கிறது –

இன்னமும் அவர்களுடைய உத்பத்தி ஸ்தலங்களுக்கும் , இவர் உத்பத்தி ஸ்தலத்துக்கும் உள்ள வைஷம்ய அதிசயத்தை காட்டுகிறார்-

ஆற்றில்–துறையில்–ஊரில் உள்ள வைலஷம்யம் வாசா மகோசரம்-சூரணை -80-

அதாவது –
வ்யாச உத்பத்தி ஸ்தலம் -ஆறு தானே அசிஷ்ட பரிக்ரகம் ( சிவ சம்பந்தம் ) உடைய கங்கையாய் ,
அத் துறை ஓடத் துறையாய் , ஊர் வலைச் சேரியாய் இருக்கும்-கிருஷ்ண உத்பத்தி ஸ்தலம் -ஆறானது கிருஷ்ண ஜல பிரவாஹதயா தமோ மயியான, யமுனையாய் , துறையும் அதில் காளிய விஷ தூஷிதமான துறையாய் , ஊர் தானே –அறிவொன்றும் இல்லாத ஆய்க் குலம்–திருப்பாவை -28–என்கிற படி இடக்கை வலக்கை அறியாதார் வர்த்திக்கிற இடைச் சேரியாய் இருக்கும்-இவ் ஆழ்வாருடைய உத்பத்தி ஸ்தலம் -ஆறு-பவள நன் படர்க் கீழ் சங்கு உறை பொருநல்–திருவாய் -9-2–5-என்கிற படி
விலக்ஷண பதார்த்தங்களுக்கு ஆகரமுமாய் , வாஸ ஸ்தலமுமாய் கொண்டு அதி ஸ்லாக்யமுமாய் இருக்கும் தாம்ரபரணி யாய் ,-துறை சுத்த ஸ்வாபமாய் ,அவகாதாமாய் இருக்கிற சங்கங்கள்
வந்து சேருகிற திருச் சங்கணி துறையாய்–திருவாய் -10–3-11-ஊர்-நல்லார் நவில் குருகூர்–திருவிருத்தம் –100 -என்கிற படி சகல சஞ்சன ஸ்லாகநீயமாய்-சயப் புகழார் பலர் வாழும் தடம் குருகூர் -திருவாய் -3-1-11-என்றும்-நல்லார் பலர் வாழ் குருகூர்–திருவாய் -10-8-11-என்கிற படியே சம்சாரத்தை ஜெயித்த புகழை உடையராய் , பகவத் அனுபவம் பண்ணி வாழ்கிற ,ஞாநாதிகரான விலக்ஷணர் பலரும் நிரந்தர வாசம் பண்ணுகிற திரு குருகூராய் இருக்கும்-ஆகையால் அந்த ஆறுகளையும் துறைகளையும் ஊர்களையும் பற்ற இந்த ஆற்றுக்கும் துறைக்கும் ஊருக்கும் உண்டான வைஷம்யம்
பேச்சுக்கு அவிஷயமாய் இருக்கும் என்கை –ஆக-கிருஷ்ண-கிருஷ்ண த்வைபாயனர் உத்பத்தியில் காட்டில் கிருஷ்ண த்ருஷ்ணா தத்வமான இவர் உத்பத்திக்கு ஏற்றத்துக்கு உடலாக கீழ் விவஷிதமானவற்றை வெளி இட்டார் ஆய்த்து.

வ்யாஸனுக்கு உத்பத்தி ஸ்தலமான அஸிஷ்ட பரிக்‌ரஹமுடைய கங்கா நதிக்கும்‌, அதில்‌ ஓடத் துறைக்கும்‌, அவ் விடத்தில்‌ வலைச் சேரிக்கும்‌, க்ருஷ்ணோத்பத்தி ஸ்தலமான க்ருஷ்ண ஜல ப்ரவாஹமான யமுநா நதிக்கும்‌, காளிய விஷ தூஷிதமான அதில்‌ துறைக்கும்‌, “கறவைகள்‌ பின் சென்று ” என்கிறபடியே ‘பசுக்கள் தான்‌ ஸர்வஜ்ஞம்‌’ என்னும்படி அறிவு கேடரான இடையர்‌ வர்த்திக்கிற இடைச் சேரிக்கும்‌ ஆகிய இவற்றுக்கும்‌, முக்தா பல ப்ரஸவோந்முக ஸங்க ஸமூஹங்களுக்கு வாஸஸ்தாநமான தாம்ரபர்ணி நதிக்கும்‌ ஸூத்‌த ஸ்வபாவமாயிருக்கிற அந்த ஸங்கங்கள் சேருகிற திருச் சங்கணித்‌ துறைக்கும்‌, “நல்லார்‌ நவில்‌ குருகூர்‌” (திருவிரு, 100) என்கிறபடியே ஸத்துக்களாலே கொண்டாடப்‌ படுமதாய்‌ ““சயப் புகழார்‌ பலர்‌ வாழும்‌ தடங் குருகூர்‌” (திருவா, 3 – 1 11) என்கிறபடியே ஸம்ஸாரத்தை ஜயித்த புகழை உடையராய்‌, பகவதநுப,வம்‌ பண்ணி வாழ்கிற ஜ்ஞாநாதிகர்‌ பலரும்‌ வர்த்திக்கிற திருக்குருகூர்க்கு முண்டான வைஷம்யம்‌ பேச்சுக்கு அவிஷயமா யிருக்கும்‌. ஆக, க்ருஷ்ணக்ருஷ்ணத்‌வைபாயநோத்பத்தி என்று தொடங்கி, இவ்வளவாக, அவர்களவதாரத்தோடு இவருடைய அவதாரத்துக் குண்டான ஸாதர்ம்ய வைதர்ம்ய, தர்ம்யங்கள்‌ சொல்லிற்று

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன் தன்னைப்
பிறவி பெறும்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உன் தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச்
சிறு பேர் அழைத்தனவோம் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்–28—கறவைகள் பின் சென்றுஇவர்கள் சேவித்த ஆச்சார்யர்கள் இருக்கிறபடி-எங்களைப் பார்த்தால் -பசுக்கள் -வசிஷ்டாதிகளுக்கு சத்ருசமாக போரும் – பசுக்கள் அசுக்காட்டில் -அனுகரிக்கையில் -ஆர்ஜவம் –1-அறிவில்லை2-அறிவு ஓன்று இல்லை3-அறிவு ஒன்றும் இல்லைகர்மாதிகள் இல்லை என்ற சொற்களே சொல்ல அறியாமல் இவ்வாறே சொல்லும்படி அன்றோ எங்கள் அறிவு

பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வந்து நின் பல் நிலா முத்தம்
தவழ் கதிர் முறுவல் செய்து நின் திருக் கண் தாமரை தயங்க நின்று அருளாய்
பவள நன் படர்க் கீழ் சங்கு உறை பொருநல் தண் திருப் புளிங்குடி கிடந்தாய்
கவள மாக் களிற்றின் இடர் கெடத் தடத்துக் காய்சினப் பறவை ஊர்ந்தானே–9-2-5–நல்ல பவள படரின் கீழே சங்குகள்-நிர்ப்பாதமாய் வர்த்திக்கிற திருப் பெருநலை யுடைத்தாய் -ஸ்ரமஹரமான திருப் புளிங்குடியிலே கண் வளர்ந்து அருளுகிறவனே –படர் -தூறு /நிர்ப்பாதமாய் பவளத் தூற்றில் சங்குகள் வர்த்திகையால் அவ்வூரிலே பதார்த்தங்களுக்கு பாதகங்களால் அச்சம் இல்லை என்கை –

செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு அத் திருவடி திருவடி மேல் பொருநல்
சங்கணி துறைவன்
வண்தென் குருகூர் வண் சடகோபன் சொல்லாயிரத்துள்
மங்கையர் ஆய்ச்சியர் ஆராய்ந்த மாலை அவனோடும் பிரிவதற்கு இரங்கி தையல்
அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன இவையும் பத்து அவற்றின் சார்வே-10-3-11-இவர் இருந்த இடத்தே சத்துக்கள் சேருமா போலே -சங்குகளாலே அணியப் பட்ட -திருப் பொருநலை யுடையராய் –சம்ருதமான திரு நகரியை யுடையராய் –பரம உதாரரான ஆழ்வார் அருளிச் செய்த ஆயிரத்திலும்-

நல்லார் நவில் குருகூர் நகரான் திரு மால் திருப்பேர்
வல்லார் அடிக் கண்ணி சூடிய மாறன் விண்ணப்பம் செய்த
சொல்லார் தொடையில் இந்நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பாம்
பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே – 100–லோகத்தில் சத்துக்கள் அடைய -ஆழ்வார் ஆழ்வார் -என்னா நிற்கும் இத்தனை –ராமோ ராமோ ராம -இதிவத் -(ராமோத்வைதம் போல் ஆழ்வார் ஒருவரே இங்கு பேசப்படுகிறார் ) சர்வதாபி கதஸ் சத்பி –பெருமாள் சிரமம் செய்து விட்டு ஒரு-நிழலிலே இருந்த அளவிலே – பர சம்ருத்யை  ஏக பிரயோஜனாந்தர வர்கள் அதுக்கு உறுப்பான-கற்கைக்காக படு காடு கிடப்பர்கள் –-சமுத்திர இவ சிந்துபி -இப்படி கிடக்கிறது -இவர் குறை-நிரம்புக்கைக்கோ என்னில் –-பண்டே நிரம்பி நிற்கிற கடலை நிரப்புக்கைக்கு அன்றிக்கே ஆறுகள் வந்து புகுருகிறது –-நடுவு தரிப்பு இல்லாமை இத்தனை இறே –

வியப்பாய வியப்பில்லா மெய்ஜ்ஞான வேதியனை
சயப்புகழார் பலர் வாழும் தடம் குருகூர் சடகோபன்
துயக்கின்று தொழுதுரைத்த வாயிரத்துள் இப்பத்தும்
உயக்கொண்டு பிறப்பு அறுக்கும் ஒலி முந்நீர் ஞாலத்தே -3-1-11-சம்சாரத்தை ஜெயித்த புகழை உடையராய் இருக்கை –ஆழ்வார் உடன் சாம்யா பன்னராய் இருக்கை –இப்படி இருப்பார் அநேகர் ஆழ்வாரை அனுபவித்து இருக்கை

நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப் பேர் மேல்
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்
சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே–10-8-11-துக்கங்கள் ஆனவை -இது நமக்கு தேசம் அன்று என்று தானே விட்டுப் போம் -பெருத்த வயல் சூழ்ந்து இருந்துள்ள திருப்பேர் மேலே யாய்த்து சொல்லிற்று -வி க்ஷணர் பலரும் தம்மை அனுபவித்து இனியராய் இருக்கும் திரு நகரியை யுடையராய் இருக்கும் ஆழ்வார் அருளிச் செய்தது –நல்லார் நவில் குருகூர் -ஸர்வதா அபிகதஸ் சத்பி-

எல்லாம் செய்தாலும் ,பூர்வ வர்ணங்களில் பிறவி போலே ,சதுர்த்த வர்ணத்தில் பிறவி
தேஜஸ்கரம் அன்றே என்ன – தாஸ்ய ரசஞ்ஞற்கு இது தேஜஸ்கரம் என்னும் அத்தை திருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார்-இனி மேல்‌, இப்படி ஆழ்வார்‌ தாழ்ந்த வர்ணத்திலே அவதரித்தாரே யாகிலும்‌, மிகவும்‌ தேஜஸ்ஸு உண்டாமென்கிறார்‌. எங்ஙனே என்னில்‌, ஸர்வேஸ்வரன்‌ லோக ஸம்ரஷணார்த்தமாக அவதரித்த விடத்தில்‌ பரத்வ ஸங்கையும்‌ அஸஹ்யமாம்படி தாழ்ந்தவதரிக்க, தேஜஸ்ஸு அதிஸயித்திருக்குமாப் போலே பாகவதத்வ ரஹிதமான உத் க்ருஷ்ட ஜந்மமும்‌ அவத்‌யம்‌ என்றிருக்கிறவர்களுக்கு ஜந்மாதிகளால்‌ வருகிற அஹங்கார மின்றிக்கே கைங்கர்யமே நிரூபகமான குலங்களில்‌ ஜந்மம்‌ நித்ய விபூதியிலும்‌ தேஜஸ் கரம்‌ என்கிறார்‌-

தேவத்மும் நிந்தை யானவனுக்கு ஒளி வரும் ஜனிகள் போலே ப்ரஹ்ம ஜன்மமும் இழுக்கு என்பார்க்கு
பண்டை நாளில் பிறவி உள் நாட்டு தேசு இறே
சூரணை -81-

(தேவத்மும் நிந்தை யானவனுக்கு-ஸ்ரீ ராமனுக்கு -ஸ்ரீ கிருஷ்ணனுக்கு –உள் நாட்டு தேசு-பரமபத தேஜஸ்)அதாவது-ராவண வத அநந்தரம் ப்ரஹ்மாதிகள்-பவான் நாராயணோ தேவோ–யுத்த –120–13-என்றது அசஹ்யமாய் –ஆத்மானம் மானுஷம் மந்யே ராமம் தசரதாத்மஜம் – யுத்த -120-11-என்கையாலும் ,கோவர்தந உத்தரண அநந்தரம் அந்த அதி மானுஷ சேஷ்டிதம் கண்டு ஆச்சரியப் பட்ட கோபர்
பாலத் வஞ்ச அதி வீர்யஞ்ச ஜன்மச அஸ்மாஸ்வ அசோபனம்
சிந்தய மாநமமே யாத்மன் சங்காம் கிருஷ்ண பிரயச்சதி
தேவோ வா தானவோ வா த்வம் யஷோ கந்தர்வ ஏவ வா
-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-7–என்று சங்கித்து சொல்ல-ஷணம் பூத்வா த்வசவ் தூஷ்ணீம் கிஞ்சித் ப்ரணய கோபவான்–ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13 9–என்கிற படியே-அது அசஹ்யமாம் என்னும் இடம் தோன்ற சிறிது போது வாய் திறவாமல் இருந்து பின்னை –நாஹம் தேவோ ந கந்தர்வோ ந யஷோ ந ச தானவ அஹம் வோ பாந்தவோ ஜாத நைவ சிந்தய மதோன்யதா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-12- -என்கையாலும்-தேவர்க்கும் தேவனான தான், லோக ரஷண அர்த்தமாக மனுஷ்ய சஜாதீயனாக அவதரித்த அளவில் தேவனாக சொல்லுகையும் நிந்தையாகும் படி புரையறப் பிறக்கும் சீலாதிகனான சர்வேஸ்வரனுக்கு-சவு ஸ்ரேயான் பவதி ஜாயமான–யஜுர் வேதம் -3-6-3- -என்கிற படியே-பல பிறப்பாய் ஒளி வரும் முழு நலம் -திருவாய் -1-3-2 –என்று தாழ விழுந்த தனையும் கல்யாண குணங்கள் ஒளி பெற்ற வரும் ஜென்மங்கள் போலே
மாஸ்ம பூதபி மே ஜன்ம சதுர் முகாத்மான–ஸ்தோத்ர ரத்னம் -35–என்று பிராமணியத்துக்கு எல்லை நிலமான பிரம்மாவாய் பிறக்கையும் சேஷத்வ விரோதியான அஹங்கார ஹேது வாகையாலே
ஆத்மாவுக்கு அவத்யம் என்று இகழும் படி –தாஸ்ய ரசம் அறிந்தார்க்கு -பண்டை நாள்– 9-2–என்ற திரு வாய் மொழியில்-பல் படி கால் குடி குடி வழி வந்து ஆள் செய்யும் தொண்டர் -என்றும்-உன் பொன் அடி கடவாதே வழி வருகின்ற அடியார்-என்றும்-தொல் அடிமை வழி வரும் தொண்டர்-என்றும் சொன்ன படியே தாஸ்ய விரோதியான ஜன்மாத்ய அபிமானம் இன்றிக்கே கைங்கர்ய அனுரூபமான குடிப் பிறவி-
ஆழி அம் கை பேராயருக்கு ஆளாம் பிறப்பு –உள் நாட்டு தேசு அன்றே –பெரிய திருவந்தாதி -79-
என்கிறபடியே –பகவத் விமுக பிரசுரம் ஆகையாலே புற நாடான லீலா விபூதி போல் அன்றிக்கே பகவத் அனுகூல்ய ஏக போக ரசத்திலே நெருங்கி போக விபூதியாய் ,அவனுக்கு அந்தரங்கமாய் இருக்கிற பரம பதத்தில் வர்த்திக்கிற தேஜசை உடைத்து இறே என்கை —பரம பதத்தில் பகவத் கைங்கர்ய அனுகுணமாக பரிக்ரஹிக்கும் தேஹத்தோபாதி சேஷ வஸ்துவான ஆத்மாவுக்கு இதுவும் தேஜஸ்கரம் என்று கருத்து –

(தே,வத்வமும்‌ நிந்தை யானவனுக்கு) ராவண வதாநந்தரம்‌ ப்‌ரஹ்மாதிகள்‌ “பவாந் நாராயணோ தேவ?” (ரா.யு. 120 – 13) என்றவது – திருவுள்ளத்துக்கு அஸஹ்யமாய்‌, “ ஆத்மாநம்‌ மாநுஷம்‌ மந்யே ராமம்‌ தஸரதராத்மஜம்‌”’ (ரா. யு. 120 – 11) என்றும்‌, கோவர்த்ந தோத்தரணாநந்தரம்‌. அந்த அதிமாதுஷ சேஷ்டிதங் கண்டு ஆச்சா்யப்பட்ட இடையர்‌ *““பாலத்வஞ்சாதி வீர்யஞ்ச ஐந்ம சாஸ்மாஸ்வ ஸோபநம் ॥ தேவோ வா தாநவோ வா த்வம்‌ யக்ஷோ கந்தர்வ ஏவ வா! (வி. பு. 5 – 13 – 7) என்று ஸங்கிக்க, “ஷணம்‌ பூத்வா த்வஸெள தூஷ்ணீம்‌ கிஞ்சித் ப்ரணய ரோஷவாத்‌” என்று அது அஸஹ்யமாய்‌, ”நாஹம்‌ தேவோ ந கந்தர் வோ ந யஷோ ந ச தாநவ ! அஹம்‌ வோ பாந், வோ ஜாத? நைதச்சிந்த்ய மதோந் யதா ‘” (வி. பு. 5 – 13 – 12) என்று இப்படி பரத்வ ஸங்கையும்‌, அஸஹ்யமாம்படி ஸீலாதிகனா யிருக்கிறவனுக்கு.
(ஒளிவரும்‌ ஜநிகள்‌் போலே) ““ஸ உ ஸ்ரேயான் பவதி ஜாயமாந” என்றும்‌, “பல் பிறப்பாய்‌ ஒளி வரு முழு நலம்‌”’ (திருவா. 1 – பீ – 2) என்றும்‌ சொல்லுகிறபடியே ஆநந்தாதி கல்யாண குணங்கள்‌ ஒனி பெற்று வரும்‌ அவதாரங்கள்‌ போலே.-(ப்‌ரஹ்ம ஜத்மமும்‌ இழுக்கென்பார்க்கு) ‘இதராவஸதேஷு மா ஸ்ம பூதபி மே ஜந்ம சதுர்முகாத்மநா’” (ஸ்தோ. ர. 55) என்கிறபடியே அபாாகவத க்‌ருஹ்ங்களில்‌ ப்‌ரஹ்மாவாய்ப்‌ பிறக்கையும்‌ அவத்‌யமாம்படி பகவத்‌ தாஸ்யமே ரஸித்த ஜ்ஞாநாதிகர்க்கு (பண்டை நாளில்‌ பிறவி) “பண்டை நாள்‌” (திருவா. 9 – 2 – 1) என்கிற பாட்டின் படியே லக்ஷ்மீ-தத்‌ வல்லபருடைய கடாக்ஷமடியாகக்‌ கைங்கர்யமே நிரூபகமாக உடைத்தாய்‌, தாஸ்ய விரோதி ஜந்மாதிகளால்‌ வரும்‌ அஹங்கார ரஹிதமான குலங்களில்‌ ஜந்மமும்‌.(உண்ணாட்டுத் தேசிறே) புற நாடான வீலாவிபூதி போலன்றிக்கே பகவதாநுகூல்யைக போகராலே நெருங்கி பகவானுக்கு போக விபூ,தியாகையாலே அந்தரங்கமா யிருக்கிற பரமபதத்தில்‌ தேஜஸ்ஸன்றோ என்கிறார்-

எளிவரும் இயல்வினன் நிலை வரம்பில பல பிறப்பாய்
ஒளி வரு முழு நலம்
முதலில கேடில வீடாம்
தெளிதரு நிலைமையது ஒழிவிலன் முழுவதும் இறையோன்
அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே –1-3-2-வேதம் சொல்லிலும் –பஹூதா விஜாயதே -என்னும் அத்தனை –-தான் சொல்லிலும் –பஹூநிமே -என்னும் அத்தனை –-உட்புக்க தம் போல்வார் சொல்லிலும் –என்நின்ற யோநியுமாய் பிறந்தாய் -என்னும் அத்தனை – பிறப்பாய் –-பரார்த்தமாக தாழ நின்றோம் என்று தம் பக்கலிலும் புரை இன்றிக்கே இருக்கை –என்னக் கடவது இறே-ஒளி வரு முழு நலம் –பிறக்கப் பிறக்கக் கல்யாண குணங்கள் கட்டடங்க உஜ்ஜ்வலமாகா நிற்கும்-ச உ ஸ்ரேயான் பவதி ஜாயமான –

தவ தாஸ்ய ஸுகைக ஸங்கிநாம்
பவநேஷ்வஸ் த்வபி கீடஜந்ம மே |
இதராவஸதேஷு மா ஸ்ம பூத்
அபி மே ஜந்ம சதுர் முகாத்மநா ||–55-
எம்பெருமானுக்குத் தொண்டு செய்வதில் மூழ்கியிருப்பவர்களின் திருமாளிகைகளில் ஒரு புழுவாகவாவது பிறக்க வேண்டும்.-மற்ற க்ருஹங்களில் ப்ரஹ்மாவாகப் பிறப்பதும் எனக்கு வேண்டாம்.

பண்டை நாளாலே நின் திரு வருளும் பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல்படிகால் குடி குடி வழி வந்து ஆள் செய்யும்

தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-1-நெடுநாள் கூடவே பண்ணிப் போந்த கடாக்ஷத்தையும் –எதிர் சூழல் புக்கு நெடுநாள் பட்ட கிலேசத்தின் பலம் அன்றோ இது -நெடு நாள் கிருஷி பண்ணி பல வேளையில் கை விடவோபங்கயத்தாள் திருவருளும்-கொண்டு — அதுக்கு அடியாக பெரிய பிராட்டியார் கடாக்ஷத்தையும் கொண்டு –அவனுடைய அருளின் ஸ்வாதந்தர்யத்தை கெடுக்கும் அவள் அருள் -பிரணயித்தவத்தால் வந்த பாரதந்தர்யம் இறே ஸ்வாதந்தர்யத்தை தவிர்ப்பது-என்னடியார் யது செய்யார் -என்னும் உன் கடாக்ஷமும் -நகச்சின் நபராத்யதி –என்னும் அவள் கடாக்ஷத்தையும் பெற்று –க்ருபயா பர்யபாலயத் -என்று கிருபா பரதந்த்ரமான உன் கடாக்ஷமும் -அந்த பாரதந்தர்யத்துக்கு அடியான அவள் கடாக்ஷமும் -என்றுமாம் –
நின் கோயில் சீய்த்துப் –-உகந்து அருளின நிலங்களிலே அசாதாரண பரிசர்யை பண்ணி -தேஹாத்ம அபிமானிகள் தம் தாமுடைய க்ருஹங்களைப் பேணுமவர்கள் –பிராட்டி யடியாக பகவத் பிரசாதம் பெற்றவர்கள் உகந்து அருளின தேசங்களை பேணுவர்கள் –-பல்படிகால்-இன்று புதிதாய் வந்ததோ -நீ விசேஷ கடாக்ஷம் பண்ண தொடங்கின அன்றே தொடங்கி வந்தது அன்றோ -என்கை –
குடி குடி -சபரிகரமாக-வழி வந்து –ஆள் செய்யும் -சாஸ்திரங்களில் சொல்லுகிற முறை தப்பாதபடி வந்து ஆட் செய்யும் தொண்டரோர்க்கு அருளிச் -அடிமை செய்கிற அடியோங்கள் பக்கலிலே கிருபை பண்ணி-

உண்ணாட்டுத் தேசன்றே ஊழ் வினையை யஞ்சுமே
விண்ணாட்டை யொன்றாக மெச்சுமே-மண்ணாட்டில்
ஆராகி என் இழிலிற்று ஆனாலும் ஆழி யங்கைப்
பேராயற்கு ஆளாம் பிறப்பு –79-
–ஆழியங்கைப் பேராயற்கு ஆளாம் பிறப்பு-ஸர்வேஸ்வரனாய் வைத்து இதர ஸஜாதீயனாய்ப் பிறந்தவனுக்குக் கைங்கர்யம் பண்ணுகைக்கு யோக்யமான ஜென்மம் பரம பதத்தில் இருக்கும் தேஜஸ்ஸை யுடைத்தன்றே என்றுமாம்-உண்ணாட்டுத் தேசன்றே-உள் நாடு என்று பரம பதமாகக் கொள்ளுகிறது-பகவத் அபிப்ராயத்தாலே(அக்கரை -சம்சாரம் இக்கரை பரமபதம் என்று உண்டே )தேசன்றே -தேசன்றோ என்றபடி-பரம பதத்தில் பகவத் கைங்கர்ய அனுகுணமாக பரிக்ரஹிக்கும் தேஹத்தோபாதி சேஷ வஸ்துவான ஆத்மாவுக்கு இதுவும் தேஜஸ் கரம் என்று கருத்து
ச ஏக பவதி இத்யாதி போல் அங்கு கைங்கர்யத்துக்கு எடுத்துக் கொள்ளும் பிறப்புக்களில் ஒன்றே இதுவும் 

இனி இவர் அவதாரத்தின் பரோ உபகாரகத்வத்தை ச நிதர்சனமாக அருளிச் செய்கிறார் .-இப்படிப்பட்ட இவருடைய அவதாரம்‌ ஜநக குல ஸுந்தரியான நாச்சிமார்‌ முதலானாரூடைய அவதாரம் போலே ஸர்வோபகாரகம்‌ என்கிறார்‌-

ஜனக தசரத வசுதேவ குலங்களுக்கு மூத்த பெண்ணும் நடுவில் பிள்ளையும் கடைக் குட்டியும் போலே
இவரும் பிறந்து புகழும் ஆக்கமும் ஆக்கி அம் சிறையும் அறுத்தார்-சூரணை -82-

( ஜனக குலத்துக்கு மூத்த பெண் பிறந்து புகழை ஆக்கினால் போலேயும்-தசரத குலத்துக்கு நடுவில் பிள்ளை -ஸ்ரீ பரதாழ்வான் -பிறந்து ஆக்கத்தை ஆக்கினால் போலேயும்-வசுதேவ குலத்துக்கு கடைக்குட்டி பிறந்து அம் சிறை அறுத்தால் போலேயும்-இவரும் பிறந்து புகழும் ஆக்கமும் ஆக்கி அம் சிறையும் அறுத்தார் )அதாவது
ஜனக குலத்துக்கு மூத்த பெண்ணான பிராட்டி பிறந்து –
ஜனகானாம் குலே கீர்த்தி மா ஹரிஷ்யதி மே ஸூதா சீதா பர்த்தார மாசாத்ய ராமம் தசரதாத் மஜம்–பால -67-21- -என்கிற படியே- தான் பிறந்த குலத்துக்கு கீர்த்தி உண்டாக்கினால் போலேயும்-தசரத குலத்துக்கு நடுவில் பிள்ளையான ஸ்ரீ பரதாழ்வான் பிறந்து-ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய தர்மம் வக்தும் இஹார்ஹசி கதம் தசரதாஜ் ஜாதோ பவேத் ராஜ்ய அபஹாரஹா அயோத்யா –82-12–இத்யாதியாலே
மூத்தார் இருக்க இளையார் முடி சூடக் கடவர் அன்று என்கிற குல மரியாதையை நடத்தின அளவு அன்றிக்கே –ஜடிலம் சீர வசனம் ப்ராஞ்சலீம் பதிதம் புவி–அயோத்யா -100-1-என்றும்-பங்கதிக் தஸ்து ஜடிலோ பரதஸ் த்வாம் ப்ரதீஷிதே –யுத்த –127-5-என்றும் சொல்லுகிற படி ஜ்யேஷ்டரான பெருமாள் உடைய விஸ்லேஷத்தில் ,சடை புனைந்து வற்கலை உடுத்தி ,கண்ண நீரால் உண்டான சேற்றிலே தரைக் கிடை கிடந்து , குலத்துக்கு முன்பு இல்லாத ஏற்றங்களை உண்டாக்கினால் போலேயும் –வசுதேவ குலத்துக்கு –மக்கள் அறுவரை கல்லிடை மோத இழந்தவள் தன் வயிற்றில் சிக்கென வந்து பிறந்து நின்றாய் -பெரியாழ்வார் -5-3-1-என்கிற படியே கடைக் குட்டியான ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்து
தந்தை காலில் பெரு விலங்கு தாள வீழ -பெரிய திருமொழி -7-5-1-என்கிறபடியே-தங்களால் விடுவித்துக் கொள்ள ஒண்ணாத மாதா பிதாக்கள் கால் கட்டை அறுத்தால் போலேயும்-இவரும் திரு அவதரித்து –மலி புகழ் வண் குருகூர் –திருவாய் -4-2-11-என்னும் படி தாம் பிறந்த ஊருக்கு புகழ் உண்டாக்கிகுடி கிடந்தது ஆக்கம் செய்து –என்கிற படியே சேஷத்வ குல மரியாதை தப்பாத படி நின்ற மாத்ரம் அன்றிக்கே ,சேஷி விரஹ கிலேச அதிசயத்தாலே , காண வாராய் என்று என்றே கண்ணும் வாயும் துவர்ந்து–திருவாய் -8-5-2- -என்றும்-கண்ண நீர் கைகளால் இறைத்து –7-2-1–என்றும்
இட்ட கால் இட்ட கையாம் படி நிஸ் சேஷ்டராய் ,தரைக் கிடை கிடந்த பிரேம விசேஷத்தாலே ,
இக் குடிக்கு பண்டு இல்லாத ஏற்றத்தை உண்டாக்கி .அறுவர் தம் பிறவி அம் சிறையே –1-3-11-என்கிறபடி தம் உடைய பிரபந்த அப்யாச முகத்தாலே தம்மோட அந்விதரான இவர்கள் உடைய சம்சாரமாகிற அரிய சிறையும் அறுத்தார் என்கை-திருஷ்டாந்த பூதரான மூவர் செய்ததும் ஒருத்தரே செய்கையாலும் , இத்தனையும் ஸ்வரூப அனுகூலமாக செய்கையாலும் இவர் பிறப்பு இறே மிகவும் பரோ உபகாரம் ஆய்த்து-

ஜநக குலத்துக்கு மூத்த பெண்ணான நாச்சியார்‌ திருவவதரித்து. “ “ஸீதா பர்த்தாரமாஸாத்‌ய. ராமம்‌ தஸரதாத்மஜம்‌ | ஜநகாநாம்‌ குலே கீர்த்திம்‌ ஆஹரிஷ்யதி மே ஸுதா”'(ரா. பரா. 67 – 21) என்று தான்‌ பிறந்து ஜநக குலத்துக்குக்‌ கீர்த்தியை உண்டாக்கினாப் போலவும்‌,
தஸரத குலத்துக்கு நடுவில்‌ பிள்ளையான ஸ்ரீபரதாழ்வான்‌ பிறந்து ‘விலலாப ஸப மத்‌யே ஜகர்ஹே ச புரோஹிதம்‌ ! ராஜ்யஞ் சாஹஞ்ச ராமஸ்ய தர்மம்‌ வக்து மிஹார்ஹஸி”’ (ரா. ௮. 82 – 10) என்றும்‌, “‘ஜடிலம்‌ சீர வஸநம்‌ ப்ராஞ்ஜலிம்‌ பதிதம்‌ புவி?” (ரா. ஆ. 102 – 1) என்றும்‌, ““குடிக் கிடந்தாக்கம்‌ செய்து” (திருவா. 9 – 2 – 2) என்றும்‌ சொல்லுகிற படியே மூத்தாரிருக்க இளையார்‌ முடிசூடக் கடவதன்று என்கிற குல மர்யாதையை நடத்தின வளவன்றிக்கே, ஜயேஷ்டரான பெருமாளுடைய விஸ்லேஷத்தில்‌ ஜடை புனைந்து, வல்கலை சாத்தி, கண்ணநீராலுண்டான சேற்றிலே தரைக் கிடை கிடந்து அக்குலத்துக்கு முன்பில்லாத ஏற்றங்களை உண்டாக்கினாப் போலேயும்‌,
வஸாுதேவ குலத்துக்கு “‘மக்களறுவரைக்‌ கல்லிடை மோத இழந்தவள் தன்‌ வயிற்றில்‌ சிக்கென வந்து பிறந்து நின்றாய்‌” (பெரியா. தி. 5 – 3 – 1) என்று சொல்லுகிறபடியே கடைக் குட்டியான க்ருஷ்ணன்‌ பிறந்து ““தந்தை காலில்‌ பெரு விலங்கு தாளவிழ”‘ (திருமொழி 7 – 5 – 1) என்கிறபடியே தங்களாலே விடுவித்துக் கொள்ள வொண்ணாத மாதா பிதாக்களுடைய கட்டை அறுத்தாப் போலேயும்‌,
இவரும்‌ திருவவதரித்து ““மலி புகழ் வண் குருகூர்‌’‘ (திருவா. 4 – 2 – 11) என்றும்‌, “ஏற்கும்‌ பெரும்புகழ்‌ வண் குருகூர்‌‘” (திருவா. 3 – 9 – 11) என்றும்‌ சொல்லுகிறபடியே தாம்‌ திருவவதரித்து அந்நகரிக்குக்‌ கீர்த்தியை உண்டாக்கி, “*குடிக்கிடந் தாக்கம்‌ செய்து” (திருவா. 9 – 2 – 2) என்கிறபடியே அங்குள்ளார்க்கு ஜ்ஞாந வர்த்தகரான மாத்ரமே யன்றியிலே ப்ரேம வர்த்தகராயும்‌, ”அறுவர் தம்‌ பிறவி அஞ்சிறையே”’ (திருவா. 1 – 311) என்கிறபடியே தம்முடைய ப்ரபந்தாப்‌யாஸ முகத்தாலே ஸம்ஸாரிகளுடைய அறவைச் சிறையையு மறுத்தார் –

குடிக் கிடந்து ஆக்கம் செய்து நின் தீர்த்த வடிமைக்குக் குற்றேவல் செய்து உன் பொன்
அடிக் கடவாதே வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி நீ யொருநாள்
படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கணியாய்
கொடிக்கொள் பொன் மதில் சூழ் குளிர் வயல் சோலைத் திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-2-குடிக்கு ஈடாக வர்த்தித்து -குல மரியாதை தப்பாதே வர்த்திக்கை –இஷுவாகு வம்சயரில் -கநிஷ்டர் முடி சூடி அறிவார் இல்லை -என்றான் இறே-ஸ்ரீ பரதாழ்வான்-ஆக்கம் செய்து-குடியில் பண்டு இல்லாத நன்மைகளை யுண்டாக்கி –பங்கதிக் தஸ்து ஜடில -என்கிறபடியே ஜடாவல்கலமும் கண்ணும் கண்ண நீருமாய் இருக்கை –

துக்கச் சுழலையை சூழ்ந்து கிடந்த வலையை அறப் பறித்து
புக்கினில் புக்கு உன்னை கண்டு கொண்டேன் இனிப் போக விடுவது உண்டே
மக்கள் அறுவரைக் கல்லிடை மோத இழந்தவள் தன் வயிற்றில்
சிக்கனே வந்து பிறந்து நின்றாய்
திரு மால் இரும் சோலை எந்தாய் – 5-3- 1-இழந்தவள் இழவு தீர்ந்தால் போலே என்னுடைய இழவு தீர்க்க வேணும் என்கிறார் –தேவகிப் பிராட்டிக்கு அஷ்டம கர்ப்பம் இறே ஸ்ரீ கிருஷ்ணன் – கால நேமியோடே சம்பந்தம் உடையராய் – ஹிரண்ய சாபத்தாலே பாதாளத்திலே வர்திப்பார் ஆறு ராஷசரை யோக நித்ரையால் பிரவேசிப்பிக்க – தேவகியார் வயிற்றிலே பிறந்த ஆறு ராஷசரை(ஹிரண்யாக்ஷன் பிள்ளை கால நேமி பிள்ளைகள் இந்த ஆறு பேரும்-கால நேமி கம்சன்
ப்ரஹ்மா சாபத்தால் பாதாளத்தில் வர்த்திக்கப் பெற்றார்கள்-அங்கும் விஷ்ணு பக்தராக இருந்ததால்
ஹிரண்ய கசிபு சாபத்தால் தந்தையால் கொல்லப்பட்டார்கள் )கல்லிடை மோத – கம்சனால் நிரசிக்கப்பட -ஏழாம் கர்ப்பமான நம்பி மூத்த பிரானை ரோகிணியார் வயிற்றினில் அவதரிப்பித்து –
தாம் எட்டாம் கர்ப்பமாய் இறே வந்து அவதரித்தது-அவள் முன்பு இழந்த இழவு தீர சிக்கன வந்து பிறந்து நின்றாய்-

தந்தை காலில் பெரு விலங்கு தாள விழ  நல்லிருள் கண்  வந்த
எந்தை பெருமானார் மருவி நின்ற ஊர் போலும்
முந்தி வானம் மழை பொழியும் மூவா வுருவில் மறையாளர்
அந்தி மூன்று அனல் ஓம்பும் அணியார் வீதி அழுந்தூரே –7-5-1–ஆபத்திலே வந்து உதவி அவற்றைப் போக்கும் ஸ்வபாவன் ஆய்த்து–ஸ்ரீ வசுதேவர் காலில் உண்டான  பெரு விலங்கு உண்டு – எட்டு கர்ப்பத்துக்கே அவ்வருகே இட்ட விலங்கு அது தன்னடையே விட்டுப் போம்படியாக – இவன் வந்து அவதரித்த அநந்தரம் திருவாய்ப்பாடி ஏறக் கொண்டு போக வல்லாரானார் இறே 

மெலியும் நோய் தீர்க்கும் நம் கண்ணன் கழல்கள் மேல்
மலிபுகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
மலிபுகழ் வானவர்க்கு ஆவர் நற்கோவையே.–4-2-11–கிட்டாதவற்றையும் அனுபவிக்க ஆசைப் பட்டார் என்னும் புகழ் மிக்கு இருக்கிற ஆழ்வார் சொன்னது-தேச காலங்களால் கை கழிந்த அவன் படிகளையும் இப்போதே பெற வேண்டும்’ என்று விடாய்க்கும்படி பகவத் விஷயத்திலே விடாய்க்கையால் வந்த புகழே அன்றோ? ஆதலின், ‘மலிபுகழ்’ என்கிறது.

ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் றனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர்பத்து
ஏற்கும் பெரும்புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே.–3-9-11-உபய விபூதி உக்தன் என்றால் -அவனுக்கு தக்கு இருக்குமா போலே சர்வேஸ்வரன் கவி என்றால் அதுக்கு போரும்படி இருக்கிற ஆழ்வார் –தேவிற் சிறந்த திருமாற்குத் தக்க தெய்வக் கவிஞன் பாவிற் சிறந்த திருவாய் மொழி பகர் பண்டிதனே: நாவிற் சிறந்த அம் மாறற்குத் தக்க நன்னா வலவன் பூவிற் சிறந்த ஆழ்வான் கம்ப நாட்டுப் புலமையனே.’–என்பது சடகோபரந்தாதி, சிறப்புப்பாயிரம்.

குடிக் கிடந்து ஆக்கம் செய்து நின் தீர்த்த வடிமைக்குக் குற்றேவல் செய்து உன் பொன்
அடிக் கடவாதே வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி நீ யொருநாள்
படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கணியாய்
கொடிக்கொள் பொன் மதில் சூழ் குளிர் வயல் சோலைத் திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-2–குடிக்கு ஈடாக வர்த்தித்து -குல மரியாதை தப்பாதே வர்த்திக்கை -இஷுவாகு வம்சயரில் -கநிஷ்டர் முடி சூடி அறிவார் இல்லை -என்றான் இறே-ஸ்ரீ பரதாழ்வான்–ஆக்கம் செய்து-குடியில் பண்டு இல்லாத நன்மைகளை யுண்டாக்கி -பங்கதிக் தஸ்து ஜடில -என்கிறபடியே ஜடாவல்கலமும் கண்ணும் கண்ண நீருமாய் இருக்கை – நின் தீர்த்த வடிமைக்குக் குற்றேவல் செய்து-தன்னுடைய ரஸ்யத்தை யாலே இதர புருஷார்த்தங்களிலே நசை அறுக்க வல்ல அடிமைகளில் அந்தரங்கமான அடிமைகளை செய்து
உன் பொன்-அடிக் கடவாதே-உன்னுடைய ஸ்ப்ருஹணீயமான திருவடிகளை அல்லது அறியாதே -என்னுதல் -உன் திருவடிகளை தப்பாதே என்னுதல் -அல்லது அறியாமை யாவது -அநந்ய பிரயோஜனகை -தப்பாது ஒழிகை யாவது -ஆஞ்ஞஜையை அதி லங்கியாது ஒழிகை –ராஜ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய -என்று இருக்கையும் -பெருமாளை மீடகைக்கு சென்று திருவடிகளிலே விழ -பித்ரு வசனத்தை அனுஷ்டித்தோமானா நிறம் நமக்கு யுண்டாவது நீ ராஜ்யத்திலே இருக்கிறது காண் -என்ன ஆரூரோஹ ரதம் ஹ்ருஷ்ட -என்று மீளுகையும்-வழி வருகின்ற-பரம்பரையாக வருகின்ற என்னுதல் -அடிமை செய்யும் முறையில் ஒன்றுமே தப்பாத படி போருகிற -என்னுதல்-அடியரோர்க்கு அருளி -அநந்ய கதியாய் இருக்கிற எங்கள் பக்கலிலே கிருபை பண்ணி-

அமரர்கள் தொழுது எழு அலை கடல் கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளம் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அமர்சுவை யாயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார்
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அஞ்சிறையே–1-3-11–சிறையில் இருந்த ராஜகுமாரன் தலையிலே அபிஷேகத்தை வைத்து பின்னை சிறையை வெட்டி விடுவாரைப் போலே நித்ய ஸூரிகள் வரிசையைக் கொடுத்து பின்னை சம்சார அஞ்சிறையை கழிக்கும் ஈஸ்வரன் ஆதி வாஹிகரோடு விரஜையில் சென்று ஸூஷ்ம சரீர விதூ நனம் பெறுவார்-

இன்னமும் இவருடைய அவதாரத்தாலே லோகத்துக்கு உண்டான நன்மைகளை அருளிச் செய்கிறார் .-அவ்வளவே யன்றிக்கே அஜ்ஞாந அந்தகார நிரஸநாதிகளாலே ஆதித்ய ராம க்ருஷ்ணர்‌களில்‌ வ்யாவ்ருத்தர்‌ என்கிறார்‌.

ஆதித்ய ராம திவாகர அச்யுத பானுக்களுக்கு போகாத உள்ளிருள் நீங்கி சோஷியாத பிறவிக் கடல் வற்றி விகஸியாத போதில் கமலம் மலர்ந்தது வகுள பூஷண பாஸ்கர உதயத்தாலே-சூரணை -83-

(வகுள பூஷண பாஸ்கர உதயத்தாலே-ஆதித்யனுக்கு போகாத உள்ளிருள் நீங்கி –ராம திவாகரனுக்கு சோஷியாத பிறவிக் கடல் வற்றி –அச்யுத பானுக்கு விகஸியாத போதில் கமலம் மலர்ந்தது )-ஆதித்யனுக்கு போகாத உள்ளிருள் நீங்கி-அதாவது
கதிரவன் குண சிகை சிகரம் வந்து அணைந்தான் -கனவிருள் அகன்றது –திருப்பள்ளி -1- என்னும் படி
பாஹ்ய அந்தகாரத்தை போக்கிக் கொண்டு உதிக்கும் ஆதித்யனுக்கு போகாத உள்ளிருளான அஞ்ஞான அந்தகாரம் தமோ பாஹ்யம் வினச்யேத்து பாவக ஆதித்ய சந்நிதவ் பாஹ்ய மாப்யந்தரஞ்சைவ விஷ்ணு பக்தார்க்க சந்நிதவ் -என்கிற படியே நீங்கி–ராம திவாகரனுக்கு சோஷியாத பிறவிக் கடல் வற்றிஅதாவது – சர ஜாலாம் சுமான் சூர கபே ராம திவாகர சத்ருர ஷோமயம் தோயம் உபசோஷம் நயிஷ்யதே–ஸூ ந்தர -37-16-(ராம சூர்யன் இராக்கதக் கடலை வற்றும்படி செய்யப் போகிறார் ) என்கிற படியே – சர ஜாலங்கள் ஆகிற கிரணங்களை உடையனாய் கொண்டு சத்ரு ராஷசர் ஆகிற சமுத்ரத்தை வற்றப் பண்ணின ராம திவாகரனுக்கும் வற்றாத பிறவி என்னும் பெரும் கடல்-என்கிற சம்சார சாகரம் வற்றி அச்யுத பானுக்கு விகஸியாத போதில் கமலம் மலர்ந்தது
அதாவது-ததோகில ஜகத் பத்ம போதய அச்யுத பாநுனா தேவகி பூர்வ சந்த்யாயாம் ஆவிர்பூதம் மஹாத்மனா-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-2-என்ற ஜகத் பத்மம் விசிதாகும் படியாக தேவகியாகிற பூர்வ சந்தையில் ,ஆவீர் பாவித்த அச்யுத பானுவான கிருஷ்ணனுக்கு விகஸியாத –போதில் கமல வன் நெஞ்சம் -பெரியாழ்வார் -5-2-8–என்கிற ஹிருதய பத்மம் விகசிதம் ஆய்த்து-யத் கோ சஹாஸ்ரம் அபஹந்தி தமாம்சி பும்ஸாம் நாராயணோ வசதி யத்ர ச சங்க சக்கர யன் மண்டலம் சுருதி கதம் பிரணமந்தி விப்ராஸ் தஸ்மை நமோ வகுள பூஷண பாஸ்கராய –ஸ்ரீ பராங்குச அஷ்டகம் -என்று
திரு வாய் மொழி ஆயிரம் ஆகிற கிரணங்களை உடையவராய் , மகிஷீ பூஷண ஆயூத விசிஷ்டனான நாராயணனை –-கண்கள் சிவந்ததில்-8-8-1–படியே உள்ளே உடையவராய் , வேத வித்துகளான சர்வ சிஷ்டர்களும் கேட்ட போதே தாம் இருந்த தேசத்தை நோக்கி வணங்கும் படியான வைபவத்தை உடையராய் , வகுளா பரணாராய் இருக்கிற ஆழ்வார் ஆகிற பாஸ்கரனுடைய உதயத்தில் என்கை-ஆதித்ய திவாகர பானு சப்தங்களால் அன்றிக்கே-( ஆதித்யன் –அதிதியின் புத்ரன் –திவாகரன் பகலை செய்கிறவன் —பானு -பிரகாசிக்கிறவன் –பாஸ்கரன் -பிரகாசிக்கச் செய்கிறவன் ) பாஸ்கர சப்தத்தாலே இவரைச் சொல்லுகையாலே – ஊரும் நாடும்-6-7-2- -இத்யாதி படியே ஸ்வ சம்பந்தத்தை உடையார் எல்லாருக்கும் பிரகாசத்தைப் பண்ணுமவர் என்று தோற்றுகிறது —

(ஆதித்யேத்யாதி,). பாஹ்யமான அந்த காரத்தைப்‌ போக்கிக்‌ கொண்டு உதிக்கிற ஆதித்யனுக்குப் போகாத உள்ளிருளான அஜ்ஞாந அந்தகாரமும்‌,-தமோ பாஹ்யம்‌ விநஸ்யேத்து பாவக ஆதித்ய ஸந்நிதெள ந பாஹ்யாப்‌, யந்தரஞ்சைவ விஷ்ணு பக்தார்க்க ஸந்நிதெள”’ என்கிறபடியே நீங்கி, ‘ஸரஜாலாம் ஸூமாந்‌ ஸூர கபே ராம திவாகர:। ஸத்ருரஷோமயம்‌ தோயம்‌ உபஸோஷம்‌ நயிஷ்யதி”‘ (ரா.ஸு. 37 – 16) என்று ஸரஜாலங்களாகிற கிரணங்களை உடையனாய்க் கொண்டு ஸத்ரு ராக்ஷஸராகிற ஸமுத்ரத்தை வற்றப் பண்ணுகிற ராம திவாகரர்க்கு வற்றாத ஸம்ஸார ஸமுத்‌ரம்‌ “பிறவி என்னும்‌ கடலும்‌ வற்றி” (பெரியா, தி, 5 – 4 – 2) என்கிறபடியே வற்றி,*“ததோகில ஜகத் பத்‌மபோதாய அச்யுத பாநுநா ! தேவகீ பூர்வ ஸந்த்‌யாயாம்‌ ஆவிர்பூதம்‌ மஹாத்மநா”’” (வி.பு. 5- 3 – 2) என்று ஜகத் பத்‌மம்‌ விகஸிதமாம்படி தேவகி யாகிற பூர்வ ஸந்த்‌யையிலே ஆவிர்பூதனான அச்யுத பாநுவான் க்ருஷ்ணனுக்கு விகஸியாத ”போதில்‌ கமல வன்னெஞ்சம்‌”‘ (பெரியா. தி. 5 – 2- 8) என்கிற ஹ்ருத் பத்‌மம் விகஸிதமாயிற்று,
“யத்‌, கோ ஸஹஸ்ர மபஹந்தி தமாம்ஸி பும்ஸாம்‌ நாராயணோ வஸதி யத்ர ஸ சங்க, சக்ரா | யந் மண்டலம்‌ ஸ்ருதிகதம்‌ ப்ரணமந்தி விப்ரா? தஸ்மை நமோ வகுள பூ,ஷண பாஸ்கராய”” (பரா. ௮.) என்றும்‌ திருவாய்மொழி ஆயிரமாகிற கிரணங்களை உடையராய்‌, மஹிஷீ பூக்ஷணாயுத விஸிஷ்டனான நாராயணனை *கண்கள்‌ சிவந்திற்படியே உள்ளே உடையராய்‌, வேத வித்துக்களான ஸர்வ ஸிஷ்டர்களும்‌ ப்ரணாமம்‌ பண்ணும்படியான வைபவத்தை உடையராய்‌, வகுள பூஷணரான ஆழ்வாராகிற பாஸ்கரோதயத்திலே என்கிறார்‌. கீழ்ச் சொன்ன ஆதித்ய திவாகர பாநு சப்‌தம்‌ போலன்றிக்கே இவர் பக்கவிலே பாஸ்கர சப்‌த ப்ரயோகம்‌ பண்ணுகையாலே **ஊரும்‌ நாடும்‌ உலகமும்‌ தன்னைப்‌ போல்‌ (திருவா. 6 – 7- 2) என்கிறபடியே தம்மோடு ஸம்பந்த, முடையா ரெல்லார்க்கும்‌ தம்மோடொத்த ப்ரபாவத்தை உண்டாக்குமவர்‌ என்னுமிடமும்‌ தோற்றுகிறது –

கதிரவன் குண திசை சிகரம் வந்து அணைந்தான் கன இருள் அகன்றது காலை அம் பொழுதாய்
மது விரிந்து ஒழுகின மா மலர் எல்லாம் வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி
எதிர் திசை நிறைந்தனர் இவரோடும் புகுந்த இரும் களிற்று ஈட்டமும் பிடியோடு முரசும்
அதிர்தலில் அலை கடல் போன்று உளது எங்கும் அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—-1-தன்னுடைய ஆயிரம் கிரணங்களாலும் ஜகத்திலந்தகாரத்தை நீக்கி வெளிச் செறிப்பைப் பண்ண வல்ல ஆதித்யனானவன், கிழக்கிலே உதய கிரியிலே வந்து ஸங்கதனானான். அவனுக்கடுத்தாப் போலே கோயிலாய்த்துக் காணும் ; திருவடிகளும் அத் திக்கிலேயாகப் பெற்றது: கண் வளர்ந்தருளுகிற தேவரீருக்கு ப்ராத:காலத்திலே ஸந்த்யா தீபங்கொண்டு வருவாரைப்போலே.திநகரனானவன் தன் கிரணங்களெல்லாவற்றோடும் கீழ் திக்கில் உதய கிரியை வந்தணையா நின்றான்–(உம் திருவடிப் பக்கத்திலே திருவடிக் குற்றேவல் செய்யத் தோன்றினது போலே உள்ளது. )அடியிலும் முடியிலும் ஆதித்யர்கள் வந்து நிற்க, நடுவே கிடந்து கண் வளர்ந்தருளுகிறதென்? “கதிராயிரமிரவி கலந்தெரித்தா லொத்த நீண் முடி “பெரியா திரு 4-1-1)-யிறே. “மிக்க செஞ்சுடர்ப் பரிதி சூடி” (திருவாசிரியம் – 1 ] முடியிலே ஆயிரம் ஸூர்யர்களுடைய ஒளியுடைய கிரீடமாகிற ஆதித்யனும், அடியிலே உலகிலிருள் நீக்கும் ஆதியனும் வந்து நிற்க, நடுவே கிடந்து கண்ணுறங்கலாமோ? என்று நஞ்ஜீயர் கருத்தருளுவர் .(கனவிருளகன்றது) ராத்ரியில் மிக்க இருளானது ஸவாஸநமாகப் போய்த்து. ஆதித்யன் வரவுக்குத் தக்கபடியே- செறிந்த இருளானது குறைய வாங்கிற்று. “இருள் வீற்றிருந்தது பார் முழுதும்”-திருவிருத்தம் – 18 – என்கிறபடியே ராஜாஜ்ஞையை பங்கித்து வன்னியர் குறும்பு செய்யுமா போலே,ஸாம்ராஜ்யம் பண்ணிற்று. மதிப்பனான ராஜா ஸ பரிகரனாய் எடுத்து விட்டவாறே ஒரு பயணங் குறைய வாங்குமா போலே-இருட்டும் ஒரு பயணம் குறைய வாங்கிற்று.-(காலை யம் பொழுதாய்) ஆராதகர் ஆராத நார்த்தமாக உத்யோகிக்கக் கடவ காலமாய்த்து.

பறவை ஏறு பரம் புருடா நீ என்னைக் கை கொண்ட பின்
பிறவி என்னும் கடலும் வற்றிப் பெரும் பதம் ஆகின்றதால்
இறவு செய்யும்  பாவக்காடு தீக்கொளீஇ  வேகின்றதால்
அறிவை என்னும் அமுதவாறு தலைப் பற்றி வாய்க் கொண்டதே -5- 4-2 –சம்சாரம் ஆகிற பெரிய கடலும் சுவறி-பெரும் பதம் ஆகின்றதால் – பெரியதாம் பெற்ற படி –மேல் சாத்தும் பரியட்டமும் பெற்று –-திருப் பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறிக்கப் பெற்று திருப் பல்லாண்டு பாடின படி-உடுத்துக் களைந்த -இத்யாதி –ஆகின்றதால் – இது மேன்மேல் என வளர்ந்து வருகிற படி-எத்திறத்தும் இன்பம் (திருச்சந்த ) எங்கும் திருவருள் பெற்று –இழவுக்கு சம்சாரமும் அதுக்கு அடியான கர்மமும் போலே-மோஷத்துக்கு ஞானமும் பக்தியும் –பிறவி என்னும் கடலும் வற்றி -என்று சம்சாரம் போன படி சொன்னார் –இனிஅதுக்கு அடியான கர்மம் போன படியை அருளிச் செய்கிறார்-

ஏதங்கள் ஆயின எல்லாம் இறங்க விடுவித்து என்னுள்ளே
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து
போதில் கமல வல் நெஞ்சம் புகுந்தும் என் சென்னித் திடரில்
பாத இலச்சினை வைத்தார் பண்டு அன்று பட்டினம் காப்பே -5- 2-8 –போதில் கமலம் வல் நெஞ்சும் புகுந்தும் –போது -அறிவு-இல் -இருப்பிடம்-கமலம் -ஹிருதய கமலம்-வன்மை -அந்தர்யாமியையும் அறிய ஒட்டாத வலிமை-ஞான பிரசவ த்வாரமான நெஞ்சை இருப்பிடமாக உடைய கமலம் புகுந்தும் –
இப்படிக்கொத்த நெஞ்சுக்கு உள்ளே புகுந்து திருத்தின படி-

கண்கள் சிவந்து –ப்ரவேஸம்--தன் வடிவைக் காட்டி இவரை வர வணைத்து–இவருடைய ஸ்வரூபம் தனக்கு பிரகாரமாய் -தன்னைக் காணும் காட்சிக்குள்ளே காணலாம் படி இருக்கிறபடியையும்
தனக்கும் நிறம் கொடுக்கும் படியான வை லக்ஷண்யத்தை யுடைத்தாய் இருக்கிற படியையும் காட்டிக் கொடுக்கக் கண்டு ப்ரீதர் ஆகிறார்-முதல் இரண்டரைப் பாட்டாலே தன் வடிவு அழகைக் காட்டி அவ்வழி யாலே ஸ்வரூபத்தை காட்டிக் கொடுக்கிறனாய் இருக்கிறது –-முதல் இரண்டரைப் பாட்டு ஆத்மாஸ்ரயம் என்னும் இடத்தை காட்டிக் கொடுக்கைக்காக ஆஸ்ரயமான-தன்னைக் காட்டிக் கொடுக்கிறான் என்றும் சொல்லுவர்-இருத்தும் வியந்தில் அழகு பின்னாட்டுகிறது என்றும் சொல்லுவர்கள் –

ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய
பேரும் தார்களுமே பிதற்ற
க் கற்பு வான் இடறி
சேரும் நல் வளம் சேர் பழனத் திருக் கோளூர்க்கே
போருங்கொல் உரையீர் கொடியேன் கொடி பூவைகளே –6-7-2–தான் இருந்த ஊரும்-அத்தோடு சேர்ந்த நாடும் -அத்தோடு சேர்ந்த லோகமும் –ராமாவதாரத்திலும் ஒரு ஊர் இறே திருந்திற்று -இங்கு லோகே அவ தீர்ண பாமர்த்த சமக்ர பக்தி யோகாயா -என்கிறபடியே யாயிற்று திருத்துகை –அங்கே பரம சாம்யா பன்னரைத் தேடித் போகிறாள் ஆகில் தான் திருத்தினார் ஆகாதோ –அவனுடைய பேரும் தார்களுமே பிதற்றக் –அரவிந்த லோசனன் என்றும் –மட்டவிழ் தண்ணம் துழாய் -என்றும் விரை மட்டலர் தண் துழாய் -என்றும் சொல்லா நிற்கை -ப்ரீதி பிரேரிதராய் அக்ரமாகச் சொல்லுகை –ஜாமதகன் யஸ்ய ஜல்பத -என்கிற படியே -இப்படி லோகம் அடங்க அக்ரமமாக சொல்லும் படி பண்ணி

இப்படி பர உபகார ஜன்மமான இவர் வர்ணத் த்ரயத்தில் ஒன்றிலே அவதரியாதே , சதுர்த்த வர்ணத்தில் தாழ இழிவான் என் என்ன , அதுவும் பர ரஷண அர்த்தமாகவே என்கிறார் ..-இப்படி மஹாப்ரபாவத்தை உடையரான இவர்‌ அத்ரைவர்ணிகத்திலே தாழ இழிவானென்‌ என்னில்‌-

வம்ச பூமிகளை உத்தரிக்க கீழ்க் குலம் புக்க வராஹ கோபாலரைப் போலே இவரும் நிமக்னரை உயர்த்த தாழ இழிந்தார்-சூரணை -84-

(வம்சத்தை உத்தரிக்க கீழ்க் குலம்-யாதவ குலம் – புக்க கோபாலனைப் போலேயும்-பூமியை உத்தரிக்கக் கீழ்ப்புக்க வராஹனைப் போலேயும்-இவரும் நிமக்னரை உயர்த்த தாழ இழிந்தார்-)வம்சத்தை உத்தரிக்க கீழ்க் குலம் புக்க கோபாலனைப் போலேயும்-அதாவது யயாதி சாபாத் வம்சோயம் ராஜ்யாநர்ஹோ ஹி சாம்ப்ரதம்–ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-21-12- -என்கிற படி யயாதி சாபத்தாலே ராஜ்யார்ஹம் இல்லாத படி நிஹீனமான யது வம்சத்தை – அயம் ச கத்யதே பிராஞ்சை புரானார்த்த விசாரதை கோபாலோ யாதவம் வம்சம் மக்னப் உத்தரிஷயதி–ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-20-49 -என்கிற படி உத்தரிப்பிக்கைக்காக–அங்கோர் ஆய்க் குலம் புக்கதும் -திருவாய் -6-4-5–என்கிற படியே கோப குலத்தில் உள் புக்கு கோபாலனான ஸ்ரீ கிருஷ்ணனைப் போலவும் –பூமியை உத்தரிக்கக் கீழ்ப்புக்க வராஹனைப் போலேயும்–அதாவது – ஹிரண்யாஷா பலத்தாலே நிலை குலைந்து பிரளயங்கதையான பூமியை- உத்த்ரு தாஸி வராஹேண கிருஷ்னேண சத பாஹுந –தைத்ரியம் – –என்றும்-நமஸ்தஸ்மை வராஹாயா லீல யோத்தரதே மஹீம்—ஸ்ரீ வராஹ புராணம் என்றும்
சொல்லுகிற படி உத்தரிக்கைக்காக –கேழலாய் கீழ் புக்கு இடந்திடும்–திருவாய் -2-8-7–என்கிற படியே
பாதாளத்தில் தாழ வீழ்ந்த வராஹா ரூபியை போலவும் –இவரும் நிமக்னரை உயர்த்த தாழ இழிந்தார்
அதாவது-குலம் தாங்கும் அபிமானத்தாலே சம்சாரத்தில் நிமக்னர் ஆனவர்களை , அந் நிலையில் நின்றும் பேதித்து –அபிமான துங்கன்–திருப்பல்லாண்டு –11-என்னும்-உயர்த்தியை உடையவர் ஆக்குகைக்காக அஹங்கார ஹேதுவான வர்ணங்கள் அனர்த்த கரம் என்று தோற்றும் படி தத் ரஹீதமான சதுர்த்த வர்ணத்திலே தாழ இழிந்தார் என்கை-இத்தால்- நாம் உத்க்ருஷ்ட வர்ணம் என்னும் துர் அபிமானத்தாலே -சம்சாரத்திலே அழுந்துகிறவர்கள் அது ஹேயம் என்று அறிந்து -அவ் அபிமானம் அற்று கரை யேறுகைக்காக- அவர்கள் உத்க்ருஷ்டமாக நினைத்து இருக்கும் வர்ணங்களை ஹேயம் என்று விட்டு நித்க்ருஷ்ட வர்ணத்தில் தாழ இழிந்தார் என்று ஆய்த்து-

க்ஷத்ரியரில்‌ வைத்துக் கொண்டு ஹீநமான யது குலத்தை உத்‌தரிக்கைக்‌காக ”அங்கோராய்க் குலம்‌ புக்கு?” (திருவா. 6 – 4 – 5) என்றும்‌, அயம்‌ ஸ கத்‌யதே ப்ராஜ்ஞை? புராணார்த்த,விஸாரதை, ! கோபாலோ யாதவம்‌ வம்ஸம்‌ மக்‌ந மப்‌யுத்‌தரிஷ்யதி’‘ (வி. பு. 5 – 20 – 49) என்றும்‌ சொல்லுகிறபடியே அறிவு கேடர்க்கு எல்லையான இடையரோடு ஸஜாதீயனாய்க் கொண்டு கோபாலனானாப் போலவும்‌, ப்ரளயார்ணவ மக்‌னையான ஸ்ரீ பூமிப் பிராட்டியை எடுக்கைக்காக ““உத்‌த்‌ருதாஸி வராஹேண க்ருஷ்ணேந ஸத பாஹுநா”’ (தை. உ.) என்றும்‌, “‘நமஸ் தஸ்மை வராஹாய லீலயோத்‌தரதே மஹீம்‌ | குரமத்‌யக,தோ யஸ்ய மேரு கணகணாயதே”’ (வராஹபு.) என்கிறபடியே வராஹ ஸஜாதீயனாய்க் கொண்டு ““கேழலாய்க்‌ கீழ்ப் புக்கு (திருவா. 2 8 – 7) என்கிறபடியே பாதாளத்திலே தாழ இழிந்த வராஹ ரூபியைப் போலவும்‌, ஸம்ஸாரார்ணவ மக்நரான ஸகல ஜந்துக்களையும்‌ அதில் நின்றும்‌ எடுக்கைக்காக அத்ரைவர்ண்யத்திலே தாழ இழிந்தார்‌ என்கிறார்‌.-அல்லது த்ரைவர்ண்யத்திலே நின்று ப்ரபந்தீ, கரித்தாராகில்‌ வேதமும்‌ ததுப ப்‌ரும்ஹணங்களும் போலே அதி க்ருதாதி காரமாமிறே,

வேண்டித்தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கிருள்வாய்ப்
பூண்டு அன்று அன்னை புலம்பப் போய் அங்கோர் ஆய்க்குலம்புக்கதும்
காண்ட லின்றி வளர்ந்து கஞ்சனைத் துஞ்ச வஞ்சம்செய்ததும்
ஈண்டு நான் அலற்றப் பெற்றேன் எனக்கு என்ன இகல்உளதே?–6-4-5—அத்தசையிலே அஞ்சினான் புகலிடமாய் இருப்பது ஓர் இடைச்சேரி உண்டாவதே –கம்சனுக்கு குடி மக்களாய் இருக்கச் செய்தேயும் -அவனுக்கு அநிஷ்டம் என்று பாராதே மறைத்து வைத்து அடைக்கலம் நோக்க வல்ல ஊர்

கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ்ப் புக்கு
இடந்திடும்
தன்னுள் கரக்கும் உமிழும்
தடம் பெரும் தோள் ஆரத் தழுவும் பார் என்னும்
மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பரே –2-8-7-பூமியை பிரளயம் கொள்ள -தன் மேன்மை பாராதே நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்டு-கீழ்ப் புக்கு-இடந்திடும்- அண்ட புத்தியில் புக்கு ஒட்டு விடுவித்துக் கொண்டு ஏறின படி-

அல் வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியூர் கோன் அபிமான துங்கன்
செல்வனைப் போலே திருமாலே நானும் உனக்கு பழ வடியேன்
நல் வகையால் நமோ நாராயணா என்று நாமம் பல பரவிப்
பல் வகையாலும் பவித்ரனே உனக்குப் பல்லாண்டு கூறுவனே –11-அபிமான துங்கன் – அபிமானம் சேஷத்வ விரோதியாய் இருக்க அத்தால் மிக்கு இருப்பார் என் என்னில் –கர்மத்தால் வந்த துர்மானம் ஆய்த்து த்யாஜ்யம் -தாசோஹம் -என்கிற வைஷ்ணவ அபிமானம் உபாதேயம் ஆகையாலே அத்தாலே பூரணராய் இருப்பர் என்கிறது –அதாவது உகந்து அருளின நிலங்களில் உண்டான குறைவு நிறைவுகளும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடைய தேக யாத்ரையில் குறைவு நிறைவுகளும் தம்மதமாய இருக்கை-செல்வன் -என்று-ஸ்வரூப ப்ராப்தமான ஐஸ்வர்யத்தாலே குறைவற்றவர் என்கை -அதாவது
ஞான பக்தி வைராக்யங்களால் குறை வற்றவர் யென்கையும்-லஷ்மணோ லஷ்மி சம்பன்ந -என்கிறபடி அஹம் சர்வம் கரிஷ்யாமி –என்று இருக்கையும்-உபமான சேஷாணாம் ஸாதூநாம் -என்கிறபடியே சாத்விகருக்கு உபமான பூமியாய் இருக்குமவர்-இவரை திருஷ்டாந்தம் ஆக்கிக் கொண்டு -பழ வடியேன் -என்று முன்பு ஐஸ்வர்யார்த்தியாய் இன்று ஸ்வரூப ஞானம் பிறந்தவன் சொல்லுகை அநுப பன்னம் அன்றோ  என்னில் கர்மத்தால் வந்த அஹங்காரம் போனால் தாஸ்யம் சர்வ ஆத்மாக்களுக்கும் சத்தா
ப்ரயுக்தம் ஆகையாலே சொல்லுகிறார்கள்-
அதவா – நை சர்க்கிகமான ஞானம் உடையாருக்கும் இன்று ஆஸ்ரயிக்கும் இவனுக்கும் வாசி வையாதே விஷயீ கரிக்கும் ஈஸ்வர அபிப்ராயத்தாலே சொல்லவுமாம்

ஆக வீட்டு இன்பம் –சூர்ணிகை -75- என்று தொடங்கி இவ்வளவும் மந்த மதிகளுடைய சங்க நிராகரண அர்த்தமாக ஆழ்வாருடைய உத்பத்தி நிரூபணத்தில் வரும் பிரத்யவாயமும் – வ்யாசாதிகளை பற்ற இவர் அவதார வைலஷண்யமும் -78-79-80-81- அவதாரம் பரார்த்தம் என்னும் இடமும் ,82-83-
மகா பிரபாவர் ஆன இவர் தாழ அவதரிக்கைக்கு நிதானமும்-84 அருளி செய்தாராய் நின்றார்
.

ஆக, வீட்டின்பமென்று தொடங்கி, இவ்வளவும்‌ வர மந்த மதிகளுடைய ஸங்கா நிராகரணார்த்த மாக ‘ப்ரமாண ப்ரமேயங்களினுடைய சரமாவதியான அர்ச்சாவதாரத்தினுடையவும்‌ திருவாய்மொழியினுடையவும்‌ த்‌ரவ்ய பாஷா நிரூபணத்தோடொக்கும்‌ ஆழ்வாருடைய உத்பத்தி நிரூபணமும்‌’ என்று இவருடைய உத்பத்தி நிரூபணத்தால்‌ வரும்‌ ப்ரத்யவாயத்தையும்‌, வ்யாஸாதிகளைப் பற்ற இவருடைய அவதார வைலக்ஷண்‌யத்தையும்‌, அவதாரம்‌ பரார்த்த,ம்‌ என்னுமிடத்தையும்‌, இப்படி மஹா ப்ரபாவரான இவர்‌ தாழ அவதரிக்கைக்கு ஹேதுவையும்‌ அருளிச் செய்தார்

இன்னமும் ஆழ்வாருடைய வைபவத்துக்கு உறுப்பாக சாமான்யேன பாகவத வைபவத்தை பல உதாஹரணங்களாலும் பிரகாசிப்பியா நின்று கொண்டு இவ் ஆகாரங்கள் அறிவார்க்கு இறே-ஜென்மத்தில் உத்கர்ஷம் அபகர்ஷம் தெரிவது என்கிறார் மேல் ஒரு சூரணையாலே..-இனிமேல்‌ ஆழ்வாருடைய வைபவத்துக்கு உறுப்பாக ஸாமாந்யேந பாகவத வைபவத்தைப்‌ பல உதாஹரணங்களாலும்‌ அருளிச் செய்கிறார்‌. அதில்‌, அவர்கள்‌ ஐத்ம வ்ருத்த ஜ்ஞாநங்களால்‌ குறைய நின்றார்களே யாகிலும்‌ பகவத்‌ பக்தரானார்களாகில்‌ அவர்கள்‌ ஸர்வ உத்க்ருஷடரென்றும்‌, அவர்கள்‌ உத்க்ருஷ்ட ஜந்மாக்களாலே அநுவர்த்த நீயரென்றும்‌, அவர்களுடைய ஸம்பந்தமே உத்தாரக மென்றும்‌, அவர்கள் விஷயத்தில்‌ பகவானுடையவும்‌, பகவதீயருடையவும்‌ ஆதர ப்ரகாரத்தையும்‌, அநு வர்த்த நீயரான ப்ரகாரத்தையும்‌,- அவர்களுடைய ஸ்பர்ஸாதிகளே பாவநம்‌ என்னுமிடத்தையும்‌, ப்ரமேய பூதனுடையவும்‌, ப்ரமாதாக்களினுடையவும்‌, உக்த் யநுஷ்டாநங்களாலே வெளியிடுகிறார்‌.

1–ம்லேச்சனும்‌ பக்தனானால்‌ சதுர்வேதிகள்‌ அநுவர்த்திக்க அறிவு கொடுத்து, குல தைவத்தோ டொக்கப்‌ பூஜை கொண்டு பாவந தீர்த்த, ப்ரஸாதனாம்‌ என்கிற திருமுகப் படியும்‌, –2–விஸ்வாமித்ர -விஷ்ணுசித்த -துளஸீ ப்‌ருத்யரோடே உள் கலந்து தொழு குலமானவன்‌ நிலையார்‌ பாடலாலே ப்‌ராஹ்மண வேள்விக் குறை முடித்தமையும்‌, (துளஸீ ப்ருத்யர் –துளவத் தொண்டு செய்த தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -தொழு குலமானவர்-நம்பாடுவான் -ப்ராஹ்மணன் –ஸோம சர்மா )-3-கீழ் மகன்‌ தலை மகனுக்கு ஸம ஸஹாவாய்த்‌ தம்பிக்கு முன் பிறந்து வேலும்‌ வில்லுங் கொண்டு பின் பிறந்தாரைச் சோதித்துத்‌ தமையனுக்கு இளையோன்‌ ஸத்‌ பாவம்‌ சொல்லும்படி ஏக குலமானமையும்‌, –4-தூது மொழிந்து நடந்து வந்தவர்களுடைய ஸம்யக் -ஸகுண-ஸஹ போஜநமும்‌, (தூது மொழிந்தவருடைய சம்யக் போஜனமும் –தூது நடந்தவருடைய சகுண போஜனமும் —
தூது வந்தவருடைய ஸஹ போஜனமும் )-5-ஒரு பிறவியிலே இரு பிறவியானா ரிருவர்க்கு தர்ம ஸூநு ஸ்வாமிகள்‌ அக்‌ர பூஜை கொடுத்தமையும்‌, (பெரும்புலியூர் ஸ்வாமிகள் -அங்குள்ள பிராமணர்கள் -யாகத்தில் திருமழிசைப்பிரானைக் கௌரவித்தார்கள் – திருவையாறு மேற்கே ஒரு மேலே தொலைவில் உள்ள பெரும்புலியூர் )-6-ஐவரில்‌ நால்வரில்‌ மூவரில்‌ முற்பட்டவர்கள்‌ ஸந்தேஹியாமல்‌ ஸஹஜரோடே புரோடாஸமமாகச்‌ செய்த புத்ர க்ருத்யமும்‌, –7-புஷ்ப த்யாக போக மண்டபங்‌களில்‌ பணிப் பூவும்‌ ஆல வட்டமும்‌ வீணையுங் கையுமான அந்தரங்கரை முடி மன்னவனும்‌ வைதிகோத்தமரும்‌ மஹா முனியும்‌ அநுவர்த்தித்த க்ரமமும்‌, –8-யாக,அநுயாக உத்தர விதிகளில்‌ காய அந்ந ஸ்தல ஸூத்‌தி பண்ணின வ்ருத்‌தாசாரமும்‌ அறிவார்க்கிறே ஜந்ம உத்கர்ஷ அபகர்‌ஷங்கள்‌ தெரிவது.–சூரணை -85-(ஸ்ரீ வசன பூஷணத்தில் -226 -239 -சூர்ணிகைகளில் அருளிச் செய்தவற்றைப் போலவே இவையும் –)

ம்லேச்சனும் பக்தன் ஆனால்-அதாவது –மத் பக்த ஜன வாத்சல்யம் பூஜாயாஞ்ச அனுமோதனம் ஸ்வயம் அப்ரயச்ச நஞ்சைவ மதர்தே டம்பவர்ஜனம் –மத் கதா ஸ்ரவணே பக்தி ஸ்வர நேத்ராங்க விக்ரியா-
மம அனுஸ்மரணம் நித்யம் யச்சமாம் நோப ஜீவதி ,பக்தி ரஷ்ட விதா , ஹ்யேஷா யஸ்மின் ம்லேச்சேபி வர்த்ததே –
என்கிற படியே-ம்லேச்ச ஜாதியில் உள்ளவனும்-1-என்னுடைய -பக்தி ஜன பக்கல் வாத்சல்யமும் –2-என்னுடைய ஆராதனத்தில் உகப்பும்-3-தானே ஆராதிக்கையும்-4-என் பக்கல் டம்பம் அற்று இருக்கையும் –5-என் கதையைக் கேட்கும் இடத்தில் பக்தியும் –6-பக்தி கார்யமான ஸ்வர நேத்ராங்களில் விகாரமும் –7-என்னையே எப்பொழுதும் நினைக்கையும் –8-என்னை பிரயோஜ நாந்தரம் கொள்ளாது ஒழிகையும் –அஷ்ட விதையாக அருளிச் செய்த பக்தி உடையவன் ஆனால்-

“மத்‌ பக்த ஜந வாத்ஸல்யம்‌ பூஜாயாஞ்ச அநுமோதநம்‌ ! ஸ்வயமப்‌யர்ச்சதஞ்சைவ மதர்த்தே டம்ப வர்ஜநம்‌ |) மத் கதா ஸ்ரவணே ப்ரீதி ஸ்வர நேத்ராங்க விக்ரியா । மமாநுஸ்மரணம்‌ நித்யம்‌ யச்ச மாம்‌ நோபஜீவதி । பக்திரஷ்டவிதா ஹ்யேஷா யஸ்மிந்‌ ம்லேச்சேபி வர்த்ததே’* (பகவச் ஸாஸ்த்ரே) என்று பாகவத விஷயத்தில்‌ வாத்ஸல்யம்‌ முதலான அஷ்டவிதையான பக்தி ம்லேச்சன் பக்கலிலே உண்டாயிற்றாகிலும்‌.

சதுர் வேதிகள் அனுவர்திக்க அறிவு கொடுத்து –அதாவது –ச விப்ரேந்தரோ முனி ஸ்ரீமான் ச யதிஸ் ச பண்டித தஸ்மை தேயம் ததோ க்ராஹ்யம் -என்றும் –பழுது இலா ஒழுகலாற்று பல சதுப் பேதிமார்கள் இழி குலத்தவர்கள் ஏலும் எம் அடியார்கள் ஆகில் தொழுமினீர் – கொடுமின் கொள்மின் -திருமாலை -42-என்றும் சொல்லுகிற படியே – சர்வோத்க்ருஷ்டனாய் -உத்க்ருஷ்ட வர்ணரான சதுர்வேதிகள் அபிஜன அத்யபிமான தூஷிதமான ஸ்வ ஸ்வரூப சுத்யர்தமாக -அனுவர்த்திக்கைக்கு விஷயமாய் – அவர்களுக்கு ஞான அபேஷை உண்டாகில் ஞான பிரதானம் பண்ணி-குல தெய்வத்தோடு ஒக்க பூஜை கொண்டு –அதாவது –ச ச பூஜ்யோ யதாஹ்யஹம் -என்றும்-நின்னோடு ஒக்க வழி பட அருளினாய் -போல் மதிள் திருவரங்கத்தானே -திருமாலை -42-என்கிற படியே-மம நாதம் -மம குலதைவதம்–கத்யத்ரயம் –என்று குல தெய்வமாக சொல்லப் படுகிற சர்வேஸ்வரனோடு ஒக்க –( யாவர்க்கும் தொழு குலமாம் இராமன் -கம்பர் – குகப்படலம் -68-)கடல் மல்லைத் தல சயனம் ஆர் என்னும் நெஞ்சுடையார் -அவர்கள் எங்கள் குல தெய்வமே –பெரிய திருமொழி -2-6-4-என்கிற படியே குல தெய்வமாய் அவர்களை பூஜை கொண்டு-பாவன தீர்த்த பிரசாதனாம் என்கிற திரு முகப் படியும் –அதாவது –தத் பாதாம்பு அதுலம் தீர்த்தம் தத் உச்சிஷ்டம் ஸு பாவனம் -என்று அவன் திருவடிகளை விளக்கின ஜலம் அனுபமமான தீர்த்தம் –அவன் அமுது செய்த சேஷம் பரம பாவனம் என்கையாலே –அஹங்கார மதிரா பாந மத்தரான அசுத்தரும் இந்த தீர்த்த பிரசாத அன்வயத்தாலே – சுத்த ஸ்வரூபராம் படி பாவன தீர்த்த பிரசதனனாம் என்று அருளிச் செய்த பகவத் உக்தியான திரு முகமும் – அதன் படி எடுப்பான ஆழ்வார் பாசுரமும் ..
(வானுளார் அறியலாகா வானவா என்பராகில் -தேனுலாம் துளப மாலைச் சென்னியாய் என்பராகில்
ஊனமாயினகள் செய்யும் ஊன காரகர்களேலும் போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதமன்றே
–)

““ஸ விப்ரேந்தரோ முநிஸ் ஸ்ரீமாறந் ஸ யதிஸ்ஸ ச பண்டித:। தஸ்மை தேயம்‌ ததோ க்‌ராஹ்யம்‌-ஸ ச பூஜ்யோ யதா ஹ்யஹம்‌ । தத் பாதாம் ப்வதுலம்‌ தீர்த்தம்‌ ததுச்சிஷ்டம்‌ ஸுஃபாவநம்‌ | ததுக்தி மாத்ரம்‌ மந்த்ராக்‌ர்யம்‌ தத் ஸ்ப்ருஷ்ட மகிலம்‌ ஸூசி?” (பகவஸ் ஸாஸ்த்ரே) என்று – அவர்கள்‌ ஜந்ம வ்ருத்த ஜ்ஞாநங்களால்‌ உத்க்ருஷ்டர்‌. அவர்கள்‌ உத்க்ருஷ்ட ஜந்மாக்‌களாலே அநுவர்த்தநீயர்‌. அவர்கள்‌ வித்‌யோபஜீவநத்துக்கு விஷய பூதர்‌. அவர்கள்‌ என்னைப் போலே யாகிலும்‌ பூஜ்யர்‌, அவர்கள்‌ தீர்த்த ப்ரஸாதாதிகள்‌ பரம பாவநம்‌” என்கிற திருமுகமான பகவதுக்தியும்‌, ”பழுதிலா ஒழுகலாற்று””  (திருமாலை 42) இத்யாதியான திருமுகப்படியும்‌.

பழுதிலா வொழுகலாற்றுப் பல சதுப்பேதிமார்கள்
இழி குலத்தவர்கள் ஏலும் எம் அடியார்கள் ஆகில்
தொழுமினீர் கொடுமின் கொண்மின் என்று நின்னோடும் ஒக்க
வழிபட்டு அருளினாய் போல் மதிள் திருவரங்கத்தானே–42—எம் அடியார்கள் ஆகில் – என்னோட்டை அசாதாரண பந்தத்தை அறிந்து ஜ்ஞான அனுகூலமான ஸ்வ ஆசாரத்தை உடையராகில் –
கைங்கர்யமே எல்லா நன்மைகளுமாக நினைத்து இருக்குமவர்களாய் ஈஸ்வரனும் இவர்கள் திறத்தில் நாமே இவர்களுக்கு உபாய உபேயங்களும் எல்லா உறவும் என்றும் நினைத்து இருக்கப் பெறுமவர்கள் –பகவத் பிரசாதம் ஒழிந்த சாதனாந்தரங்கள் பய ஸ்தானம் என்று இருக்கும் நீங்கள் அவர்களை ஆராதியுங்கோள–கொடுமின் கொண்மின்-அவர்கள் உங்கள் பக்கல் ஒரு ஜ்ஞான அபேஷை பண்ணில் நீங்கள் ஆதரித்து சொல்லுங்கோள் – அவர்கள் பகவத் ஜ்ஞானத்தை உங்களுக்கு பிரசாதிக்கில் கேட்டு க்ருதார்த்தர் ஆகுங்கோள் – ஜாதி நிபந்தனமான சம்பந்தம் போலே யாதல்-குண நிபந்தனமான சம்பந்தம் போலே யாதல்-நீர் மேல் எழுத்தான சம்பந்தம் அன்று இறே இவர்களோடு பண்ணும் சம்பந்தம் –இது யாவதாத்மபாவியான சம்பந்தம் இறே –இப் பாசுரம் பல பிரதரான தேவரீரே அருளிச் செய்த பின்பு இதில் ஒரு சம்சயம் உண்டோ –நின்னோடும் ஒக்க வழி பட- எனக்கு மேல் பூஜ்யர் இல்லாமையாலே என் மாத்ரமே யாகிலும்-அவர்களை ஆராதித்து நல் வழி போங்கோள் –அருளினாய் – பக்தி ரஷ்டவிதாஹ் ஏஷா யாஸ்மின் ம்லேச்சேபி வர்த்ததே சவிப்ரேந்த்ரோ முனிச் ஸ்ரீ மான் சயதிச்சை பண்டித தஸ்மை தேயம் ததோராஹ்யம் – என்கிறபடியே –இந்தாஹாச்யம் தேவரீர் கிருபையால் அருளிச் செய்த இத்தனை இறே –

விண்டாரை வென்றாவி விலங்குண்ண மெல்லியிலார்
கொண்டாடு மல்லகலம் அழலேற வெஞ்சமத்து
கண்டாரைக் கடல் மல்லைத் தல சயனத்து உறைவாரை
கொண்டாடும் நெஞ்சுடையார் அவர் எங்கள் குல தெய்வமே -2-6-4-
கொண்டாடும் நெஞ்சுடையார்-
இவர் என்ன அபேஷையாலே வந்து கிடக்கிறார்-நமக்காக விறே -என்று நின்று இருந்து வெக்கணைக் கிடந்தது என்ன நீர்மையே -என்று இதிலே ஈடுபடுமவர்கள் – (திருமழிசை ஆழ்வாரே கொண்டாடும் நெஞ்சுடையார் அவரே என் குல தெய்வம்)அவர் எங்கள் குல தெய்வமே- குல தைவதம் தத் பாதாராவிந்தம் -ஆளவந்தார் என்னும் அளவல்ல எங்களது- ததீய பாதாரவிந்தம்–சரம பர்வ நிஷ்டை

வானுளார் அறியலாகா வானவா என்பாராகில்
தேனுளாம் துளப மாலைச் சென்னியா என்பராகில்
ஊன மாயினகள் செய்யும் ஊன காரகர்கள்  ஏனும்
போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதம் அன்றே –41-தருவரேல் –பகவத் பிரசாதம் போலே
பிரயோஜனாந்த பரர்க்கும் பொதுவாய் இருக்குமது அன்றோ இது –அலாப்ய லாபம் கிட்டிற்று ஆகில் –
ஒரு நாள் பட்டர் பிரசன்னராய் ஜீயருக்கு இட்ட பிரசாதத்தை நினைப்பது –புனிதம் அன்றே –தேசாந்தர
காலாந்தர-தேகாந்தரே அன்றியே-ஸ்பர்ச வேதியாய் இரும்பு பொன்னாப் போலே அப்போதே பரி ஸூத்தம் –தத் உச்சிஷ்டம் ஸூ பாவனம் – பகவத் பிரசாதம் -பாவனம் இது ஸூ பாவனம்

விஸ்வாமித்ர விஷ்ணுசித்த துளஸீ ப்ருத்யரோடே உள் கலந்து தொழு குலமானவன்-அதாவது –
அபர ராத்ரியிலே சென்று பாடி -நம்பியை திரு பள்ளி உணர்த்துகையாலே –கௌசல்யா ஸுப்ரஜா ராமா பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே உத்திஷ்ட நரசார் தூலே கர்த்தவ்யம் தைவமாஹ்நிவம் –பால -23-2—என்றும் ,அரவணையாய் ஆயர் ஏறே அம்மம் உண்ணத் துயில் எழாயே –பெரியாழ்வார் -2-2-1 -என்றும் ,
அரங்கத்தம்மா பள்ளி எழுந்து அருளாயே -திருப்பள்ளி எழுச்சி -என்று திரு பள்ளி உணர்த்தின
விஸ்வாமித்திரன் ,பெரியாழ்வார் ,துளபத் தொண்டாய தொண்டர் அடி பொடி ஆழ்வார் ஆகிற இவர்களோடு ச கோத்ரியாய்– வலம் தாங்கு சக்கரத்து அண்ணல் மணி வண்ணற்கு ஆள் என்று உள் கலந்தார் -என்கிற படியே – பகவத் சேஷத்வ ஞான பூர்வகமாக -அநந்ய பிரயோஜன வ்ருத்தியிலே -அன்விதனாய் உள் கலந்து – (நம்பியைத் திருப்பள்ளி உணர்த்துகையாலே மூவருடன் ஒரு சேர எண்ணப்பட்டு ) வலம் தங்கு சக்கரத்து அண்ணல் மணி வண்ணற்கு ஆள் என்று உள் கலந்தார் –திருவாய் -3-7-9–என்கிறபடியே ஒப்பும்மைப் பெற்று எம் தொழு குலம் -திருவாய் -3-7-8-என்று விசேஜ்ஞர் ஆதரிக்கும் ஏற்றத்தை அடைந்த ஜன்ம சித்த நைச்யனான பாகவதன் –(நம்பாடுவான் )

(விஸ்வாமித்ர-விஷ்ணுசித்த-துளஸீ ப்‌ருத்யரோடே உள் கலந்து) ““கெளஸல்யா ஸுப்ரஜா ராம பூர்வா ஸந்த்‌,யா ப்ரவர்த்ததே । உத்திஷ்ட, நரஸார்தூ,ல கர்த்தவ்யம்‌ தைவமாஹ்நிகம்‌”” (ரா. படா, 23 – 2) என்று பெரிய பெருமாளைத்‌ திருப்பள்ளி உணர்த்தின விஸ்வாமித்ரனோடும்‌, “ அரவணையாய்‌ ஆயரேறே அம்மமுண்ணத் துபிலெழாயே”” (பெரியா. தி.2-2-1) என்று க்ருஷ்ணனைத்‌ திருப்பள்ளி உணர்த்தின பெரியாழ்வாரோடும்‌, ”அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே”’ (திருப்பள்ளி.) என்று பெரியபெருமாளைத்‌ திருப்பள்ளி உணர்த்தின துளவத் தொண்டாய ஸ்ரீதொண்டரடிப்பொடி ஆழ்வாரோடும்‌ ஸகேத்ரிகளாய்க்‌ கொண்டு திருப்பள்ளி உணர்த்தி, **வலந்தாங்கு சக்கரத் தண்ணல்‌ மணி வண்ணர்க்‌காளென்று உள் கலந்தாரடியார்‌’‘ (திருவா. 3 – 7 – 9) என்கிறபடியே வலவருகே தரிக்கப்‌ பட்ட திருவாழியையும்‌ அதுக்குப் பரபாகமான நீலமணி போலே இருக்கிற திருமேனியை யுமுடைய ஸர்வ ஸ்வாமிக்கு அநந்யார்ஹ ஸேஷ பூதரென்று கொண்டு ஸேஷத்வ ஜ்ஞாந பூர்வகமான வ்ருத்தியிலே அந்வயித்து, “எம்‌ தொழு குலம்‌ தாங்களே” (திருவா. 3- 7 – 8) என்று ஜ்ஞாதாக்களாலே அநுவர்த்த நீயருமாய்‌, ஸேஷத்வ ஜ்ஞாநாநுகுணமான குலத்திலே பிறந்தவர்‌-

அரவு அணையாய் ஆயர் ஏறே அம்மம் உண்ணத் துயில் எழாயே
இரவும் உண்ணாது உறங்கி நீ போய் இன்றும் உச்சி கொண்டதாலோ
வரவும் காணேன் வயிறு அசைந்தாய் வன முலைகள் சோர்ந்து பாய
திரு உடைய வாய் மடுத்து திளைத்து உதைத்து பருகிடாயே -2 2-1 –அழகிய திருப் பவளத்தை மடுத்து -திரு-அழகு –இவ் வன முலையிலே உன்னுடைய திரு உடைய வாயை அபிநிவேசம் தோற்ற மடுத்து –முலை உண்ணுகிற ஹர்ஷம் தோற்ற கர்வித்து கால்களாலே என் உடம்பிலே உதைத்து கொண்டு -இருந்து உண்டிடாய் –பருகுதல்-பானம் பண்ணுதல் –யசோதை பிராட்டி அத்தை அறிந்து –அம்மம்  உண்ணத் துயில் எழாயே-என்று அவனை எழுப்பி – நெடும் போதாக முலை உண்ணாமையை அவனுக்கு அறிவித்து –நெறித்து பாய்கிற தன் முலைகளை உண்ண வேண்டும் என்று அபேஷித்து-
அவன் இறாய்த்து இருந்த அளவிலும் -விடாதே நிர்பந்தித்து  முலை ஊட்டின பிரகாரத்தை தாம் அனுபவிக்க ஆசைப் பட்டு – தத் பாவ யுக்தராய் கொண்டு – அவனை அம்மம் உண்ண எழுப்புகை முதலான ரசத்தை அனுபவித்து பேசி ஹ்ர்ஷ்டராகிறார் இத் திரு மொழியில் –

பெரிய பெருமாள் உணர்ந்தருளும் போதை யழகு கண்டு அடிமை செய்ய ஆசைப் பட்டுத் திருப் பள்ளி யுணர்த்துகிறார்.-திருப் பள்ளி யுணர்த்துகைக்கு நிபந்தனம் என் என்னில்: – “ஆம் பரிசறிந்து கொண்டு”(திருமாலை 38] – எம்பெருமான் உகந்த கைங்கரியமே பேறு” என்னும் உண்மையை அறிந்திவராகையாலே-)என்கிறபடியே – கைங்கர்ய யாதாத்ம்யம் அறியுமவராகையாலே,(பாவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஸா நுஷ ரம்ஸ்யதே | அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்ரதஸ் ஸ்வபத ச தே!![ரா-அ 31-25](நீர் வைதேஹி யுடன் கூட மலைத் தாழ்வரைகளில் விளையாடுவீர்; அடியேன் நீர் விழித்துக் கொண்டிருக்கும் போதும் தூங்குப் போதும் உமக்கு எல்லா அடிமைகளையும் செய்வேன்.] என்றும், ) ” ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி ’(திருவாய் 3-3-1) என்கிறபடியே-ஸர்வதேச ஸர்வகால ஸர்வாவஸ்தைகளிலும் ஸர்வ வித,கைங்கர்யத்தையும் பண்ணுமிடத்தில் “தனக்கே யாக வெனைக் கொள்ளுமீதே” –2-9-4-என்று அவனுகந்த கைங்கர்யமாக வேணும்; அதுசெய்யுமிடத்தில் (க்ரியதாமிதி மாம் வத.)என்றும், “எனக்கே யாட் செய்” -2-9-4-என்றும், முகப்பே கூவிப் பணி கொள்ளாய்’’ -8-5-7-என்றும் சொல்லுகிறபடியே – ஏவிக் கொள்ள வேணுமென்றிருக்குமவ ராகையாலே ப்ரபாத ஸூ சகங்களைச் சொல்லித் திருப் பள்ளி யுணர்த்துகிறார்.

குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து எத்தனை
நலந்தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்
வலந்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு ஆள் என்று உள்
கலந்தார் அடியார் தம்மடியார் எம் அடிகளே
.–3-7-9—வலவருகே தரிக்கப் பட்ட திரு வாழி யை உடையனாய் -அதுக்கு ஆச்ரயமான நீல மணி போலே சிரமஹரமான திரு நிறத்தை உடைய சர்வாதிகனுக்கு-ஸ்வரூப ஞானம் முன்னாக அடிமை செய்கையே பிரயோஜனம் என்று இருக்குமவர்களுடைய சம்பந்தி சம்பந்திகள் நாதர் என்கிறார் –

நம்பனை ஞாலம் படைத்தவனைத் திரு மார்பனை
உம்பர் உலகினில் யார்க்கும் உணர்வு அரியான் தன்னைச்
கும்பி நரகர்கள் ஏத்துவரேலும் அவர் கண்டீர்
எம்பல் பிறப்பிடைதோறு எம் தொழு குலம் தாங்களே.–3-7-8—பலவகைப் பட்ட ஜென்மங்களில் அவகாசம் தோறும் திரு நாமத்தை சொன்னவர்களே யன்று உத்தேச்யர்–அவர்கள் குலமாக எங்கள் குலத்துக்கு ஆச்சார்ய சந்தானம் –

நிலையார் பாடலாலே ப்ராஹ்மண வேள்வி குறை முடித்தமையும் –அதாவது – சரக குலோத்பவனான சோம சர்மா வாகிற பிராமணன் உபக்ரமித்த யாகத்யை யதாக்ரமம் அனுஷ்டியாமையாலும் –
அது சமாமிப்பதுக்கு முன்னே மரிக்கையாலும் -பிரம ரஷசாய் பிறந்து திரியா நிற்க செய்தே –
த்வம் வை கீதப் ப்ரவானே நிஸ்தார யிதுமர்ஹசி ஏவ முக்த்வாத ,சண்டாளம் ராஷசஸ் சரணம் கத -என்கிற படியே நீ உன்னுடைய கீத பிரபாவத்தாலே என்னை இவ் ஆபத்தில் நின்றும் கரை ஏற்ற வேணும் என்று சரணம் புக – யன் மயா பஸ்சிமம் கீதம் ஸ்வரம் கைசிக முத்தமம் – பலேன தஸ்ய பத்ரம் தே மோஷ இஷ்யதி கில்பிஷாத் –கௌசிக மஹாத்ம்யம் (உயர்ந்த ஸ்வரம் கௌசிகம் பலத்தால் உன்னை இந்தப் பாபத்தில் இருந்து விடுக்கிறேன் )என்று நம்பி சந்நிதியில் பின்பு பாடின – நிலையார் பாடலான கைசிக பண்ணாலே – ஏவம் தத்ர வரம் க்ருஹ்ய ராஷசோ ப்ரஹ்ம சம்ஜ்ஞத யக்ஜா சாபாத் விநிர் முக்த சோமசர்மா மகாயச -கௌசிக மஹாத்ம்யம் –என்னும் படியாக வைகல்ய தோஷத்தால் வந்த ராஷசத் வத்தைப் போக்கி உஜ்ஜீவிப்பிக்கையாலே – அந்த ப்ராஹ்மணன் உடைய யாகத்தில் குறையை தலைக் கட்டின படியும்-

(நிலையார்‌ பாடலாலே ப்‌ராஹ்மண வேள்விக் குறை முடித்தமையும்‌) சரக வம்ஸத்திலே பிறந்த ஸோம ஸர்மாவான ப்‌ராஹ்மணன்‌ வைதிகமான யாகத்தை உபக்ரமித்து அதில்‌ மந்த்ர-க்ரியா-த்‌ரவ்ய-தஷிணா-லோபத்தாலே யாக மத்‌யே ம்ருதனாய்‌ ப்‌ரஹ்ம ரக்ஷஸ்‌த்வத்தை அடைந்து வந்தவன்‌, கைஸிக வ்ருத்தாந்தத்தில்‌ வந்த ஸ்ரீ வைஷ்ணவரைக் கண்டு -த்வம்‌ வை கீத ப்ரபாவேந நிஸ்தாரயிதுமர்ஹஸி ஏவமுக்த்வாத, சண்டாளம்‌ ராக்ஷஸ ஸ்ரவணம்‌ ௧,த2 | ப்‌ரஹ்ம ரக்ஷோ வசஸ் ஸ்ருத்வா ஸ்வபாகஸ் ஸம்ஸிதவ்ரத ! பாட, மித்யேவ தத்‌ வாக்யம்‌ ப்‌ரஹ்ம ராக்ஷஸ சோதிதம்‌ । யந் மயா பஸ்சிமம்‌ கீதம்‌ ஸ்வரம்‌ கைஸிக முத்தமம்‌ । ப,லேந தஸ்ய பத்‌ரம்‌ தே மோக்ஷயிஷ்யாமி கில்பிஷாத்‌ । ஏவம்‌ தத்ர வரம்‌ க்ருஹ்ய ராக்ஷஸோ ப்‌ரஹ்ம ஸம்ஜ்ஞீத: | யஜ்ஞ ஸாபாத்‌, விநிர்முக்தஸ் ஸோமஸர்மா மஹா யஸா” (கை. பு.) என்று அவன்‌ ஸரணம்‌ புக, (நிலையார்‌ பாடலாலே) கைஸிகம்‌ என்கிற பண்ணில்‌ தாம்‌ பண்ணின கீத ப்ரபாவத்தாலே அவனுடைய ப்‌ரஹ்ம ரக்ஷஸ்‌த்வத்தை விடுவித்து உஜ்ஜீவிப்பிக்கையாலே அந்த யாகக் குறையும்‌ தலைக் கட்‌டினாரானமையும்‌.-

சிலையால் இலங்கை செற்றான் மற்றோர் சினவேழம்
கொலையார் கொம்பு கொண்டான் மேய குறுங்குடி மேல்
கலையார் பனுவல் வல்லான் கலியன் ஒலி மாலை
நிலையார் பாடல் பாடப் பாவம் நில்லாவே
—9-6-10—சாஸ்திர உக்தமான லஷணத்தில் ஒன்றும் குறையாத படி கவி பாட வல்லரான ஆழ்வார் ஒலியை உடைத்தாக அருளிச் செய்த -உக்தி ஆபாசங்களால் அழிக்க ஒண்ணாத படியான திண்மையை உடைய இத்தை அஹ்ருத்யமாகச் சொல்ல
புத்தி பூர்வகமாகப் பண்ணின பாபங்கள் போம்
–(கைசிக மஹாத்ம்யம் -கார்த்திகை சுக்ல பக்ஷம் ஏகாதசி -நாடகம் இன்றும் இங்கு நடக்கும்)

கீழ் மகன் தலை மகனுக்கு சக சகாவாய் – அதாவது – நிஷாத வம்ச ஜராகையாலே-(வேடர் குலத்தில் பிறந்தவர் ஆகையால்) – ஏழை ஏதலன் கீழ் மகன் –பெரிய திருமொழி -5-8-1–என்னும் படி , ஜன்ம வ்ருத்த ஞானங்களால் தண்ணியரான ஸ்ரீ குஹப் பெருமாள்-(தலை மகனுக்கு )அயோத்தியர் கோமான் ஆகையாலே அவை-ஜன்ம வ்ருத்த ஞானங்களால் எல்லாத்தாலும் உத்க்ருஷ்டனாய் இருக்கும் அளவு அன்றிக்கே – தர்ம ஐக்யத்தாலே -( ஆதி யம் சோதி யுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்தவன் ஆகையால் ) வானோர் தலை மகனாய் -7-2-10–இருக்கிற சக்கரவர்த்தி திரு மகனுக்கு உகந்து தோழன் நீ –பெரிய திருமொழி -5-8-1-என்கையாலே சமனான சஹாவாய்- (ஆழ நீர்க் கங்கை அம்பி கடாவிய ஏழை வேடனுக்கு எம்பி நின் தம்பி நீ தோழன் மங்கை கொழுந்தி எனச் சொன்ன வாழி நண்பினை உன்னி மயங்குவான் –கம்ப நாட்டாழ்வார் )-

(கீழ்மகன்‌) “ஏழை ஏதலன்‌ கீழ்மகன்‌” (திருமொழி 5 – 8 – 1) என்று ஜந்ம வ்ருத்த ஜ்ஞாநங்களால்‌ குறைய நின்ற ஸ்ரீகுஹப் பெருமாள்‌ ”வானோர் தலைமகன்‌”” (திரு விருத்த-53 )என்கிறபடியே தலைமகனான சக்ரவர்த்தித் திருமகனோடே “உகந்து தோழன்‌ நீ?” (திருமொழி 5 – 8 – 1) என்னும்படி ஸமஸஹாவாய்‌,

ஏழை  ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்று அவர்க்கு இன்னருள் சுரந்து
மாழை மான் மட நோக்கி யுன் தோழி உம்பி யெம்பி என்று ஒழிந்திலை  உகந்து
தோழன் நீ எனக்கு
இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட
ஆழி வண்ண நின்னடி இணை  அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே –5-8-1-கீழ் மகன் -இவை இத்தனையும் பூஷணமாம் படியான ஜென்மத்தை உடையவன் கீழ்ச் சொன்னவை இரண்டும் ஜ்ஞான சாத்யமாயும்-பிராயச்சித்த சாத்யமாயும் இருக்கும் இறே – இது வேறு ஒன்றால் கழிக்க ஒண்ணாதே-இஷ்வாகு வம்ச பிரபவ -என்கிறவர்க்கு எதிர் தட்டாய் இருக்கும் படி – இத்தால் ஜன்மத்தின் கொத்தை சொல்லுகிறது –இம் மூன்றாலுமாக பெருமாள் உடைய நீர்மையின் ஏற்றம் சொல்லிற்று ஆய்த்து ––யுன் தோழி – உனக்கு ஸ்வாமிநி- என்னாதே தோழி என்கிறார் -நீர்மையாலே- –உம்பி யெம்பி –உன்னுடைய தம்பி என்னுடைய தம்பி – இங்கனே சொல்லுவான் என் என்னில்-பெருமாள் விஷயீ கரித்து இருக்குமவர்களை அவரோபாதியாக நினைத்து இருக்கும் இளைய பெருமாள் கருத்தாலே-என்று ஒழிந்திலை- அவ்வளவிலே விட்டிலை பிராட்டியை தோழி என்றும் இளைய பெருமாளை தம்பி என்றும் சொன்ன போதே ஆர்த்தமாக வரும் இறே தம்முடைய தோழமை – – உகப்பாலே -தோழன் நீ -எனக்கு என்கிறார்-உகப்பு ஓர் அளவில் நிற்குமது அன்றே (உனக்கு நான் தோழன் என்றால் தனது ப்ராதான்யம் சித்திக்கும் -ஆகவே இப்படி )தோழன் நீ எனக்கு – ஸ்வ நிகர்ஷத்தைச் சொல்லி புருஷகாரத்தை முன்னிட்டு ஸ்ரீ வைஷ்ணவ அங்கீ காரம் உண்டானால்-அநந்தரம் உபாய ஸ்வரூபம் அனுசந்தேயமாகக் கடவது இறே அத்தைச் சொல்லுகிறது – (நாலடி வந்ததே இவற்றுக்கு சமம் )

முடிவிவள் தனக்கு ஒன்று அறிகிலேன்’ என்னும்; ‘மூவுல காளியே!’ என்னும்;
‘கடி கமழ் கொன்றைச் சடையனே!’ என்னும்; ‘நான்முகக் கடவுளே!’ என்னும்;
வடிவுடை வானோர் தலைவனே!’ என்னும்; ‘வண் திரு வரங்கனே!’ என்னும்;
அடி யடையா தாள் போல் இவள் அணுகி அடைந்தனள் முகில்வண்ணன் அடியே.–7-2-10–இப்படி ஈஸ்வர அபிமானிகளான ப்ரயோஜனாந்தர பரர்க்கும் பிரகாரியான சீலத்துக்கும் மேலே தன்னோடு லப்த சா ரூப்யரான நித்ய ஸூ ரிகளுக்கு சேஷியானவனே –என்னும்

வாராயின முலையாள் இவள் வானோர் தலைமகனாம்
சீராயின தெய்வ நல் நல் நோயிது தெய்வத் தண் அம் துழாய்
தாராயினும் தழை யாயினும் தண் கொம்பதாயினும்   கீழ்
வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே -53 —வானோர் தலைமகனாம் சீராயின தெய்வ நல் நல் நோயிது–அயர்வறும் அமரர்கள் அதிபதியான ஸர்வேஸ்வரனுடைய குணங்கள் அடியாக யுண்டாய்-நாட்டார் கொள்ளுவது அன்றியே திவ்யமாய்-கிலேச பலம் இன்றியே-போக பலமான நோயாய் இருக்கும்–இத்தால்-நோய் முதலும் நோயும்-நாடினாள் ஆயிற்று மேல் துணிவுக்கு உபாயம் நாடிச் சொல்லுகிறாள்

தம்பிக்கு முன் பிறந்து –அதாவது –மாழை மான் மட நோக்கி உன் தோழி உம்பி எம்பி என்று ஒழிந்திலை –பெரிய திருமொழி -5-8-1- என்கையாலே -இவர் தம்பியான இளைய பெருமாளுக்கு முன் பிறந்தவராய்-வேலும் வில்லும் கொண்டு பின் பிறந்தாரை சோதித்து –அதாவது –இப்படி தம்மை அங்கீகரித்த அன்று இராத்திரி பெருமாள் பள்ளி கொண்டு அருளா நிற்க – அவருடைய சௌகுமார்ய அனுசந்தாநத்தால் உண்டான பரிவாலே கண் உறக்கம் அற்று , கையும் வில்லுமாய் காத்துக் கொண்டு நிற்கிற இளைய பெருமாளை அதி சங்கை பண்ணி –-கூர் அணிந்த வேல் வலவன்–பெரியாழ்வார் -3-10-4- -என்றும்
ததஸ்த் வஹஞ்ச உத்தம பாண சாப த்ருத் ஸ்திதோபவம் தத்ர ச யஸ்ய லஷ்மண –அயோத்யா –87-23-–
( இளைய பெருமாள் ஸ்ரீ குகப்பெருமாளை அதி சங்கை பண்ண இருவரையும் அதி சங்கை பண்ணி ஸ்ரீ குகப் பெருமாள் பரிக்ரகம் பெருமாளை நோக்கிற்று இறே-ஒரு நாள் முகத்தில் விழித்தவர்களை வடிவழக்கு படுத்தும் பாடாயிற்று இது –ஸ்ரீ வசன பூஷணம் )(மாலைவாய் நியமம் செய்து மரபுளி இயற்றி வைகல் வேலை வாயமிர் தன்னாளும் வீரனும் விரித்த நாணல்-மாலை வாய்ப் பாரின் பாயல் வைகினன் – வரி வில் ஏந்திக் காலை வாய் அளவும் தம்பி இமைப்பிலன் காத்து நின்றான்=தும்பியின் குழாத்தின் சுற்றம் சுற்றத்தன் தொடுத்த வில்லன் வெம்பி வெந்து அழியா நின்ற நெஞ்சினன் விழித்த கண்ணன் தம்பி நின்றானை நோக்கித் தலைமகன் தனிமை நோக்கி அம்பியின் தலைவன் கண்ணீர்
அருவி சோர் குன்றின் நின்றான்
-கம்ப நாட்டாழ்வார் ) என்றும் சொல்லுகிற படியே சாயுதராய் கொண்டு
இவர் மேல் கண்ணாய் நின்று அவர் நினைவு சோதித்து-

(தம்பிக்கு முன் பிறந்து) “என் தம்பி உன் தம்பி‘ என்கையாலே அவருடைய தம்பியாரான இளைய பெருமாளுக்கும்‌ முற்பாடராய்‌, (வேலும்‌ வில்லுங் கொண்டு பின் பிறந்தாரைச் சோதித்து) இளைய பெருமாள்‌ பெருமாள் பக்கல்‌ ஸெளகுமார்யா நுஸந்தாநத்தா லுண்டான பரிவாலே அநிமிஷ த்‌ருஷ்டியாய்க்‌ கொண்டு இவரையும்‌ அதி ஸங்கை பண்ணி ஸாயுதராய்க் கொண்டு நோக்கும்படி பெருமாள் பக்கல்‌ பரிவை யுடையராய்‌

வாரணிந்த முலை மடவாய் வைதேவீ விண்ணப்பம்
தேரணிந்த வயோத்தியர் கோன் பெரும் தேவீ கேட்டருளாய்
கூரணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கை தன்னில்
சீரணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம்
–3-10-4-மிகக் கூர்மையை யுடைய வேல் தொழில் வல்லவன் – ஸ்ரீ குஹப் பெருமாள் வேல் வாங்கினார் என்றால் சத்ருபக்ஷம் மண் உண்ணும்படி யாய்த்து இவருடைய ஸுர்யம் இருப்பது-இப்படி வேலும் கையுமாய்த் திரியுமது ஒழிய – ஏழை ஏதலன் –இத்யாதிப் படியே – (ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது—சொல்லிக் கொள்ளவும் இல்லையே ) அபிஜன வித்யா வ்ருத்தங்கள் ஒன்றும் இல்லாத ஸ்ரீ குஹப் பெருமாளோடே –-மாழை மான் மட நோக்கி உன் தோழி உம்பி எம்பி தோழன் நீ எனக்கு -என்று அருளிச் செய்த படியே குணத்தோடு கூடின தோழமை கொண்டதும் ஓர் அடையாளம் –

தமையனுக்கு இளையோன் சத்பாவம் சொல்லும் படி ஏக குலம் ஆனமையும் –-அதாவது- ஆச சஷேத சத்பாவம் லஷ்மணஸ்ய மகாத்மான பரதாயா அப்ரேமயாயா குஹோ கஹன கோசர –அயோத்யா -86-1–என்கிற படியே ஸ்ரீ ராம விரக கிலிஷ்டனாய் – சித்ர கூடத்து ஏறப் போவதாக வந்த தமையனான
ஸ்ரீ பரதாழ்வானுக்கு தம்பியான ஸ்ரீ இளைய பெருமாள் உடைய – பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ் நிக்த – பால -18-27–என்றும் –பரவாநஸ்மி காகுத்ஸ்த த்வயி வர்ஷ சதம் ஸ்திதே –ஆரண்ய -15-7–என்றும் -சொல்லுகிற படியே ஸ்ரீ பெருமாள் பக்கல் பிரேம பாரதந்த்ர்யங்களே நிரூபகமாம் படி இருக்கையாகிற சத்தையோடே ,( ஸத்பாவம் -பிரேம பாரதந்தர்யங்களே சத்தையாம்படி ) வ்யாப்தமான ஸ்வாபத்தை சொல்லும் படி இஷ்வாகு வம்சயரோடு ஏக குலம் ஆனபடியும் –

(தமையனுக்கு இளையோன்‌ ஸத்‌ பாவம்‌ சொல்லும்படி ஏக குலமானமையும்‌) ‘*ஆசசக்ஷேத ஸத்‌ பாவம்‌ லக்ஷ்மணஸ்ய மஹாத்மந: | பரதாயா ப்ரமேயாய குஹோ கஹந கோசர?” (ரா. ஆ. 86 – 1) என்று அளவிறந்த வைபவத்தை உடையரா யிருக்கிற ஸ்ரீபரதாழ்வானுக்கு இளைய பெருமாள்‌ கைங்கர்ய ஸ்ரீயாலே உளராயிருக்கிற படியை இவர்‌ உபதேஸிக்கும்படி இஷ்வாகு வம்ஸ்யரோடு ஏக குலமானமையும்‌.

தூது மொழிந்து நடந்து வந்தவர்களுடைய சம்யக் சகுன சஹ போஜனமும்-அதாவது –முன்னோர் தூது வானரத்தின் வாய் மொழிந்து -பெரிய திருமொழி -2-2-3-என்று ஸ்ரீ பிராட்டிக்கு தூது வாக்யத்தை ஸ்ரீ திருவடி வாயிலே சொல்லி விட்ட ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன்-சபர்யா பூஜி தஸ் சம்யக் ராமோ தசரதாத்மஜா–பால-1-57- -என்கிற படி ஸ்ரீ சபரி கையால் பண்ணின சம்யக் போஜனமும் ,
(ஆண்டவள் அன்பின் ஏத்தி யழுதிழி அருவிக் கண்ணன் மாண்டது என் மாயப்பாசம் வந்தது வரம்பில் காலம் பூண்ட மாதவத்தின் செல்வம் போயது பிறவி என்பாள் வேண்டிய கொணர்ந்து நல்க விருந்து செய்திருந்த வேலை –கம்ப நாட்டாழ்வார் ) குடை மன்னரிடை நடந்த தூதா-பெரிய திருமொழி -6-2-9- -என்னும் படி -ஸ்ரீ பாண்டவர்களுக்கு தூது போன ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்ரீ பீஷ்ம ஸ்ரீ துரோணாதி க்ருஹங்களை விட்டு –ஆதியால் துரியோதனன் க்ருஹம் விதுரான்னானி புபுஜே சுசீனி குணவந்தி ச பாரதம் -உத்யோக பர்வம் – என்கிறபடியே-ச காரம் பாவனத்வமும் போக்யத்வமும் பாவனத்வ போக்யத்வங்கள் கண்டு உகந்து ஸ்ரீ விதுரர் திரு மாளிகையிலே பண்ணின ச குண போஜனமும் ,தூது வந்த குரங்கு -பெரிய திருமொழி -10-2-6–என்கிற ஸ்ரீ திருவடி -த்ருஷ்டா சீதா -பால-1-78- என்ற ப்ரீதியாலே
( கண்டனன் கற்பினுக்கு அணியைக் கண்களால் ) உபகாராய சுக்ரீவோ ராஜ்ய காங்ஷி விபீஷண-நிஷ்காரணாய ஹனுமான் தத் துல்யம் சஹ போஜனம் –பாத்மோத்தர புராணம் – என்று திரு உள்ளம் பற்றி –கோதில் வாய்மையினானோடு உடனே உண்பன் நான் –பெரிய திருமொழி -5-8-2- என்று ஸ்ரீ பெருமாளோடு பண்ணின சஹ போஜனமும் –

(தூதுமொழிந்து) ““முன்னோர்‌ தூது வானரத்தின்‌ வாயில்‌ மொழிந்து” ‘ (திருமொழி 2 – 2 3) என்று பிராட்டி பக்கல்‌ திருவடியோடே தூத வாக்யத்தை அருளிச் செய்துவிட்ட பெருமாள்‌ “ ஸ பர்யா பூஜிதஸ் ஸம்யக்‌, ராமோ தஸரதாத்மஜ?’‘ (ரா. பா. 1 – 58) என்று ஸபரி கையாலே ஸம்யக்காக பூஜிதரான பின்பு அழகு நிலைபெற்ற படியையும்‌, (நடந்து) குடைமன்னரிடை நடந்த தூதா’” (திருமொழி 6 – 2 – 9) என்று பாண்டவ தூதனான க்ருஷ்ணனுடைய ““புக்தவத்ஸு த்‌விஜாக்‌ர்யேஷு நிஷண்ண? பரமாஸநே ! விதுராந்நாநி புபுஜே ஸூசீநி குணவந்தி ச ” (படர. உத்‌,.) என்று பாவநத்வ போக்‌யத்வங்களை உடைத்தா யிருக்கிற விதுராந்த போஜநத்தையும்‌, (வந்த) ”தூது வந்த குரங்கு?” (திருமொழி 10 – 2 – 6) என்கிறபடியே ”த்‌ருஷ்டா ஸீதா” (ரா.பா. 1 – 78) என்ற திருவடியோடே ““உபகாராய ஸுக்‌ ரீவோ ராஜ்யகாங்க்ஷி விபிஷண? ! நிஷ் காரணாய ஹநுமாந்‌ தத் துல்யம்‌ ஸஹ போஜநம்‌” (பாத்‌மோத்தரே) என்றும்‌; “உடனே உண்பன்‌ நானென்ற ஒண் பொருள்‌?” (திருமொழி 5 – 8 – 2) என்கிறபடியே பெருமாள்‌ ஸஹ போஜநம்‌ பண்ணின படியும்‌.-

முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து அரக்கன்
மன்னூர் தன்னை வாளியினால் மாள முனிந்து அவனே
பின்னோர் தூது ஆதி மன்னர்க்காகிப் பெரு நிலத்தார்
இன்னார் தூதனென நின்றான் எவ்வுள் கிடந்தானே–2-2-3-த்வாபரத்தின் உடைய ஆதியிலே
பிராட்டியைப் பிரிந்த ஆற்றாமை மீதூர்ந்து கடலிலே புக்கு முடியும் அளவானவாறே ஒரு குரங்கின் வாயிலே வார்த்தையைச் சொல்லி விட்டான் –

போதார் தாமரையாள் புலவிக் குல வானவர் தம்
கோதா கோதில் செங்கோல் குடை மன்னரிடை நடந்த
தூதா தூ மொழியாய் சுடர் போல் என் மனத்து இருந்த
வேதா
நின்னடைந்தேன் திரு விண்ணகரம் மேயவனே —6-2-9-பாண்டவர்கள் உடைய சத்ர சாமாராதிகள்  அடையப் பறித்துக் கொண்டு ஒருவரால் பிரதிஹதி பண்ண ஒண்ணாத ஆஞ்ஞையை உடையராய்க் கொண்டு முத்தின் குடை நிழல் கீழ் இருந்து  பூமிப் பரப்புக்கு எல்லாம் தாங்களே ராஜாக்களாக நிர்வஹித்துக் கொண்டு போருகிற துரியோத நாதிகளின் நடுவே கழுத்திலே ஓலையைக் கட்டிக் கொண்டு தூது போனவனே-அன்றிக்கே கிருஷ்ணன் உடைய அபிப்ராயத்தாலே
கோதில் செங்கோல் குடை மன்னர் -என்று பாண்டவர்களையே சொல்லுகிறது ஆகவுமாம் –

ஓத மா கடலைக் கடந்தேறி யுயர் கொள் மாக் கடிகாவை யிறுத்துக்
காதல் மக்களும் சுற்றமும் கொன்று கடி யிலங்கை மலங்க எரித்துத்
தூது வந்த குரங்குக்கே உங்கள் தோன்றல் தேவியை விட்டுக் கொடாதே
ஆதர் நின்று படுகின்றது  அந்தோ   அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ–10-2-6-வெறும் கையே தூது வந்தான் ஒருவன் செய்தது இதுவானால் – நாம் இவளைக் கொண்டு இருப்போம் அல்லோம்
என்று அவன் கையிலே பிராட்டியை விட்டுக் கொடாதே

வாத மா மகன் மற்கடம் விலங்கு மற்றோர் சாதி என்று ஒழிந்திலை உகந்து
காதலாதரம் கடலினும் பெருகச் செய் தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று
கோதில் வாய்மையினோடும் உடனே உண்பன் நான் என்ற ஒண் பொருள் எனக்கும்
ஆதல் வேண்டும்
என்று அடியிணை யடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –5-8-2—வாய்மை -வாக் இந்த்ரிய வியாபாரம் அதாகிறது வசனம்-அதுக்கு கோது இல்லாமை யாவது
சம்ஸ்ரவே மதுரம் வாக்கியம் -என்று பிராட்டி உடைய திரு உள்ளத்தை மெய் என்று பட்டு அவள் தரிக்கும்படி சொல்லுகையும்-த்ருஷ்டா சீதா -என்று இவர் தரிக்கும்படி சொல்லுகையும் – ( கண்டேன் சீதையை -கம்பரும்-தரிக்க சொன்னவாறு )-உடனே உண்பன் நான் என்று – இனி நாம் ஒக்க ஜீவிக்கக் கடவோம்-இவ்வர்த்தம் –ஏஷ சர்வஸ்வ  பூதஸ்து-என்கிறத்தைப் பற்றச் சொல்லுகிறது
(சோஸ்நுதே ஸர்வான் காமான் -ப்ரஹ்ம குண சேஷ்டிதங்களை அனுபவிக்கிறோம்-பாலே போல் சீர் –அங்கு தான் நாம் சரீரம் அவன் சரீரீ என்பதை முற்றுமாக உணர்கிறோம் ) ஒரு கலத்தில் உண்பாரைப் போலே சேஷ சேஷிகள் இருவருக்கும் அனுபாவ்யம் இறே திரு மேனி –

ஒரு பிறவியிலே -இத்யாதி –அதாவது – யது குலத்திலே பிறந்து -கோப குலத்தில் சஜாதீயத்வேன வளருகையாலே ஒரு பிறவியிலே இரு பிறவியான ஸ்ரீ கிருஷ்ணனுக்கு ஸ்ரீ தர்ம புத்ரர் தம்முடைய
யாகத்திலே அக்ர பூஜை கொடுத்தமையும்
–ருஷி புத்ரராய் பிறந்து -போய் மற்றோர் இடத்திலே -தஜ் ஜாதீயராய் வளருகையாலே ஒரு பிறவியில் இரு பிறவியான திரு மழிசைப் பிரானுக்கு ஸ்ரீ பெரும் புலியூர் அடிகள் தம்முடைய யாகத்தில் அக்ர பூஜை கொடுத்தமையும்-

ஒரு பிறவியிலே இரு பிறவியானா ரிருவர்க்கு] யது குலத்திலே பிறந்து கோப குலத்திலே வளர்ந்த கிருஷ்ணனுக்கும்‌, ருஷி கர்ப்பமாய்க் கொண்டு போந்த விடத்திலே வளர்ந்த திருமழிசைப் பிரானுக்கும்‌, (தர்ம ஸுநு ஸ்வாமிகள்‌ அக்‌ர பூஜை கொடுத்தமையும்- தர்ம புத்ரரும்‌, பெரும்புலி யூரடிகளும்‌ தங்கள்‌ யாகங்களிலே அக்ர பூஜை கொடுத்தமையும்‌.-

ஐவரில் இத்யாதி -அதாவது – பாண்டவர்கள் ஐவரில் பிரதானரான ஸ்ரீ தர்ம புத்ரர் ஸ்ரீ விதுரருக்கு
ஞானாதிக்யத்தையும் -அசரீரீ வாக்யத்தையும் கொண்டு சந்தேகியாமல் செய்த புத்ர க்ருத்யமும் –ஸ்ரீ தசரதாத்மஜர் நால்வரில் பிரதானரான ஸ்ரீ பெருமாள்–சௌமித்ரே ஹரே காஷ்டானி நிர்மதிஷ்யாமி பாவகம் க்ருத்ரராஜம் திதஷாமி மத்க்ருதே நிதனம் கதம் –ஆரண்ய -68-27- என்று சகஜரான ஸ்ரீ இளைய பெருமாளும் கூட நிற்க செய்தே அவர் கையிலும் காட்டாமல் – ஏவமுக்த்வா சிதாம் தீப்தாமாரோப்ய பதகேச்வரம் – ததாஹா ராமோ தர்மாத்மா ஸ்வ பந்துமிவ துக்கித –ஆரண்ய -68-31-என்கிற படியே
ஸ்ரீ பெரிய உடையாருக்கு செய்த புத்ர க்ருத்யமும் –(இந்தநம் எனைய என்னக் காரகில் ஈட்டத்தோடும் சந்தனம் குவித்து வேண்டும் தருப்பையும் திருத்திப் பூவும்-சிந்தினன் மணலின் வேதி தீர் தர இயற்றித் தெண்ணீர் தந்தனன் தாதை தன்னைத் தடக்கையால் எடுத்துச் சார்வான்-ஏந்தினன் இருகை தன்னால் ஏற்றினன் ஈமம் தன் மேல் சாந்தொடு மலரும் நீரும் சொரிந்தனன் தலையின் சாரல் காந்தெரி கஜலமூட்டிக் கடன்முறை கடவா வண்ணம் நேர்ந்தனன் நிரம்பு நன்னூல் மந்த்ர நெறியின் வல்லான் –கம்ப நாட்டாழ்வார் )ஸ்ரீ பெரிய நம்பி ,ஸ்ரீ திரு கோட்டியூர் நம்பி ,ஸ்ரீ பெரிய திரு மலை நம்பி -என்று சக ப்ரஹ்மச்சாரிகளாய்க் கொண்டு ஸ்ரீ ஆளவந்தார் திரு அடியிலே சேவிக்கையாலும் -ஸ்ரீ உடையவருக்கு ஆச்சார்யர்கள் ஆகையாலும் – பிரசித்தரான ஸ்ரீ நம்பிகள் மூவரிலும் –பிரதானரான ஸ்ரீ பெரிய நம்பி ஸ்ரீ மாறனேர் நம்பிக்கு – புரோடாசத்தை நாய்க்கு இடாதே கொள்ளும் -என்று அவர் அருளிச் செய்து போந்த படி புரோடாசமாக நினைத்து செய்த புத்ர க்ருத்யமும்-

(ஐவரில்‌ இத்யாதி,) ஐவரில்‌ முற்பட்ட தர்ம புத்ரர்‌ ஸ்ரீவிதுரர்க்கு ஜ்ஞாநாதிக் யத்தையும்‌ அசரீரி வாக்யத்தையம்‌ கொண்டு ஸந்தேஹியாமல்‌ புத்ர க்ருத்யம்‌ பண்ணினமையும்‌, நால்வரில்‌ முற்பட்ட சக்ரவர்த்தித் திருமகன்‌ ஸஹஜரான இளைய பெருமாளோடே கூட “ததஸ்தேநைவ ஸோகேந க்ருத்‌ரம்‌ தக்‌த்‌வா ஜடாயுஷம்‌”’ (ரா.பா.1 – 54) என்கிற படியே பெரிய உடையார்க்குப்‌ புத்ர க்ருத்யம்‌ அநுஷ்டித்தபடியும்‌, மூவரில்‌ முற்பட்ட . பெரிய நம்பி மாறனேரி நம்பிக்குப்‌ புரோடாஸமமாகப்‌ புத்ர க்ருத்யம்‌ அநுஷ்டித்தபடியும்

புஷ்ப த்யாக இத்யாதி -அதாவது-சிந்து பூ மகிழும் திருவேம்கடம்-திருவாய் -3-3-2-என்கிறபடியே புஷ்ப மண்டபமான ஸ்ரீ திரு மலையிலே-பணிப்பூவும் கையுமாய் திரு உள்ளம் அறிந்து பரிமாறுகையாலே ஸ்ரீ திரு வேங்கடம் உடையானுக்கு அந்தரங்கரான ஸ்ரீ குரும்பறுத்த நம்பியை-துளங்கு நீண் முடி அரசர் தம் குரிசில் தொண்டை மன்னவன் –பெரிய திருமொழி -5-8-9–என்கிற அபிஷிக்த ஷத்ரியாக்யரான ஸ்ரீ தொண்டை மான் சக்கரவர்த்தி அனுவர்தித்த க்ரமும் வேகவத் உத்தரே தீரே புண்ய கோட்யாம் ஹரிஸ் ஸ்வயம் வரதஸ் சர்வ பூதானாம் அத்யாபி பரித்ருச்யதே –ஸ்ரீ காஞ்சீ மஹாத்ம்யம் -என்கிற படியே
த்யாக மண்டபமான ஸ்ரீ பெருமாள் கோவிலிலே திரு ஆல வட்டமும் கையுமாய் பெருமாளுக்கு அந்தரங்கராய் நின்ற ஸ்ரீ திரு கச்சி நம்பியை வைதிகோதமரான உடையவர் அனுவர்தித்த க்ரமமும்-தெண்ணீர் பொன்னி திரைக் கையால் அடி வருட பள்ளி கொள்ளும்–பெருமாள்–1-1–என்கிற படியே
போக மண்டபமான ஸ்ரீ கோவிலில் வீணையும் கையுமாய் பெருமாளுக்கு அந்தரங்கராய்
வர்த்தித்த ஸ்ரீ திரு பாண் ஆழ்வாரை ஸ்ரீ லோக சாரங்க முனிவர் அனுவர்தித்த க்ரமும்

(புஷ்ப த்யாகேத்யாதி,) “சிந்து பூ மகிமும்‌ திருவேங்கடத்து”” (திருவா. 3 – 3 – 2) என்கிற படியே புஷ்ப மண்டபமான திருமலையிலே பணிப் பூவுங் கையுமாய்த்‌ திருவுள்ள மறியப்‌ பறிமாறுகையாலே திருவேங்கடமுடையானுக்கு அந்தரங்கரான குறும்பறுத்த நம்பியை ““துளங்கு நீண் முடி அரசர் தம்‌ குரிசில்‌ தொண்டை மன்னவன்‌”’ (திருமொழி 5 – 8 – 9) என்கிற அபிஷிக்த க்ஷத்ரிய புத்ரரான தொண்டை மான்‌ சக்ரவர்த்தி அநுவர்த்தித்த க்ரமமும்‌, ““வேகவத் யுத்தரே தீரே புண்ய கோட்யாம்‌ ஹ்ரிஸ் ஸ்வயம்‌ । வரதஸ் ஸர்வ பூதாநாம் அத்‌யாபி பரித்‌ரு்ஸ்யதே”” (ஹஸ்திகிரி மாஹா.) என்கிறபடியே த்யாக மண்டபமான பெருமாள் கோயிவிலே திருவாலவட்டமும்‌ கையுமாய்ப்‌ பெருமாளுக்கு அந்தரங்கராய்‌ நின்ற திருக்கச்சி நம்பியை வைதிகோத்தமரான உடையவர்‌ அநுவர்த்தித்த க்ரமமும்‌, ““தெண்ணீப்பொன்னி திரைக் கையாலடி வருடப் பள்ளி கொள்ளும்‌”’ (பெருமாள் தி, 1 1) என்கிறபடியே போக மண்டபமான கோயிலில்‌ வீணையுங் கையுமாய்ப்‌ பெரிய பெருமாளுக்கு அந்தரங்கரான திருப்பாணாழ்வாரை லோக ஸாரங்க மஹாமுனிகள்‌ அநுவர்த்தித்த க்ரமமும்‌.

எந்தை தந்தை தந்தைதந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்து பூமகிழும் திரு வேங்கடத்து
அந்தம் இல்புகழ்க் கார்எழில் அண்ணலே.–3-3-2-
சிந்து பூ- திருவேங்கடமுடையானுடைய நீர்மைக்கு தோற்று அக்ரமமாக பிரயோகிக்கிற படி – இங்கு உள்ளார் அங்கு சென்றால் மேன்மை கண்டு படும் பாடு எல்லாம் அங்கு உள்ளார் எல்லாம் இங்கு நீர்மை கண்டு படும் படி-கானமும் வானரமும் வேடுமுடை வேங்கடம் இறே-மகிழும் திரு வேங்கடத்து-அந்தம் இல்புகழ்--பரம பதத்தில் சாவதி என்னும் படி யாயிற்று திருமலையில் வந்த பின்பாயிற்று புகழ் நிரவதிகம் ஆயிற்று-

துளங்கு நீண் முடி யரசர் தம் குரிசில் தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு
உளம் கொள் அன்பினோடு இன்னருள் சுரந்து அங்கோடு நாழிகை ஏழு உடன் இருப்ப
வளம் கொள் மந்திரம் மற்று அவர்க்கு அருளிச் செய்தவாறு அடியேன் அறிந்து உலகம்
அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் அணி பொழில் திருவரங்கத் தம்மானே –5-8-9-உளம் கொள் அன்பினோடு – ஹித உபதேசத்துக்காக பண்ணின அன்பாகையாலே திரு உள்ளத்தைப் பற்றி இருக்கும் இறே–இன்னருள் –-தன் பேறான அருள்-உதாரா -என்று பிரயோஜனாந்தர பரர் அளவிலும்  இருக்கச் செய்தே-ஜ்ஞாநீத் வாத்மைவ -என்கிற விசேஷணம் உண்டு இறே

இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த
அரவரச பெரும் சோதி அனந்தன் என்னும் அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி
திரு அரங்க பெரு நகருள் தெண்ணீர் பொன்னி திரை கையால் அடி வருட பள்ளி கொள்ளும்
கருமணியை கோமளத்தை 
கண்டு கொண்டு என் கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாளே–1-1-தெளிந்த நீரை உடைத்த காவேரி -திரையாகிற கைகளாலே திருவடிகளை வருட-பள்ளி கொள்ளும் கருமணியை – ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் மேலே ஒரு நீல ரத்னம் சாய்ந்தால் போலே கண் வளர்ந்து அருளுகிறவனை-கோமளத்தை -கண்ணார துகைக்க ஒண்ணாத சௌகுமார்யம் உடையவன்

யாக அனுயாக உத்தர வீதிகளில் காய அன்ன ஸ்தல சுத்தி பண்ணின வ்ருத்தாசாரமும்- அதாவது –-யஜ தேவ பூஜாயாம் -என்கையாலே யாக சப்த வாச்யமான திரு ஆராதனத்திலே ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் ஸ்பர்சத்தாலே காய சுத்தி பண்ணிய ஸ்ரீ உடையவரும்–பகவத் ஆராதன அநந்தரம் தத் சமாப்தி ரூபேண பண்ணப் படும் அது ஆகையாலே – அனுயாக சப்த வாச்யமான பிரசாத ஸ்வீகாரத்தில் –ஸ்ரீ பிள்ளை ஏறு திரு உடையார் தாசர் கர ஸ்பர்சத்தாலே -அன்ன சுத்தி பண்ணின ஸ்ரீ நம் பிள்ளையும் –உத்தர வீதி குடி புகுகிற போது ஸ்ரீ பிள்ளை வானமாமலை தாசர் சஞ்சரணத்தாலே ஸ்தல சுத்தி
பண்ணின ஸ்ரீ நடுவில் திரு வீதிப் பிள்ளை பட்டரும்
–ஆகிய ஞான வ்ருத்தர்களுடைய ஆசாரமும் -அறிவார்க்கு இறே ஜன்ம உத்கர்ஷ அபகர்ஷங்கள் தெரிவது – அதாவது – இப்படி கீழ் சொன்ன இவை எல்லாம் அறிவார்க்கு இறே-இன்ன ஜன்மம் உத்க்ருஷ்டம் -இன்ன ஜன்மம் அபக்ருஷ்டம் -என்று
ஜென்மத்தினுடைய உத்கர்ஷமும் அபகர்ஷமும் தோன்றுவது என்ற படி 

(யாகா நுயாகேத்யாதி,) யாகம் என்று – திருவாராதநமாய்‌, அதுக்குப்‌ பிள்ளை யுறங்கா வில்லி தாஸர் ஸ்பர்ஸத்தாலே காய ஸூத்‌தி, பண்ணின உடையவருடையவும்‌, அநு யாகம்‌ என்று – பகவத் ஸமாராதநாநந்தரம்‌ பண்ணப் படுகிற ப்ரஸாத ஸ்விகாரம்‌. அதுக்குப்‌ பிள்ளை ஏறு திருவுடையார்‌ தாஸருடைய கர ஸ்பர்ஸத்தாலே அந்ந ஸூத்‌தி, பண்ணின நம்பிள்ளை யுடையவும்‌, உத்தர வீதி குடி புகுருகைக்கு “ஆலோக்ய ராஜநகரீ மதி, ராஜஸூநு ராஜாநமேவ பிதரம்‌ பரிசிந்த்ய பூ,ப ! ஸூக்‌ரீவ மாருதி விபீஷண புண்ய பாத ஸஞ்சார பூத பவநம்‌ ப்ரவிவேஸ ராம?” என்று பெருமாள்‌ ஸ்தல ஸூத்‌தி பண்ணினாப் போலே, உத்தர வீதி குடி புகுருகிற காலத்திலே பிள்ளை வானமாமலை தாஸருடைய ஸஞ்சாரத்தாலே ஸ்தல ஸூத்‌தி பண்ணின நடுவில்‌ திருவீதிப் பிள்ளை பட்டருடையவும்‌ அநுஷ்டாந ப்ரகாரங்களையும்‌ அறிவார்க்கிறே ஐந்மத்தினுடைய உத்க்ருஷ்ட அபக்ருஷ்டத்வம்‌ தெரிவது-

இத்தால் ஜென்மாத் யபக்ருஷ்டர் பகவத் பக்தர்கள் ஆனார்கள் ஆகில் – உத்க்ருஷ்ட வர்ணரால் அனுவர்த நீயராய் – அவர்களுக்கு ஞான பிரதராய் – ஸ்ரீ ஈஸ்வரனோபாதி அவர்களுக்கு பூஜ்யராய் –
ஸ்வ தீர்த்த பிரசாதங்களாலே சர்வரையும் சுத்தர் ஆக்குமவர்களாம் படியும் -பாப மக்னரான உத்க்ருஷ்ட வர்ணருக்கும் ஸ்வ சம்பந்தத்தாலே உத்தராகராம் படியையும் ,-அவர்கள் அளவில் ஸ்ரீ பகவத் ததீயர்கள் உடைய ஆதார அனுவர்த்த பிரகாரங்களையும் – அவர்களுடைய ஸ்பர்சமே பரம பாவனத்வம் என்னும் அத்தையும் –பிரமேய பூதனான ஸ்ரீ ஈஸ்வரனுடையவும் பிரமாத்ரு பூதரான ஸ்ரீ ததீயர் உடையவும்
வசன அனுஷ்டானங்களாலே -மந்த மதிகளும் அறியும் படி பிரகாசிப்பித்தார் ஆய்த்து
-(ஸ்ரீ வசன பூஷணத்தில் -226-தொடங்கி-239-வரை உள்ள சூத்திரங்களையும் அவற்றின் வியாக்யானத்தையும் போலே இங்கும் )

ஆக கீழ்‌ ஜந்ம வ்ருத்த ஜ்ஞாநங்களால்‌ குறைய நின்றார்களேயாகிலும்‌ பகவதீ யரானார்‌களாகில்‌ அவர்கள்‌ ஸர்வோத்க்ருஷ்டராய்க்கொண்டு உபாதேயரென்னு மிடத்தைச்‌ சொல்லிற்று

ஜென்ம உத்கர்ஷ அபகர்ஷங்கள் தெரிவது -என்ற இடத்தில் –தத் உத்கர்ஷ அபகர்ஷங்களுக்கு
உடலாக விவஷிதமானவற்றை -மேல் இரண்டு வாக்யத்தாலே வெளி இடுகிறார் – அதில் பிரதமத்தில் அபக்ருஷ்ட ஜென்மம் இன்னது என்று தோற்றும்படி பகவத் ஞான ரஹிதமான வர்ணாதிகளின் ஹேயத்வத்தை ச ப்ரமாணமாக தர்சிப்பிக்கிறார்-
இனிமேல்‌ பகவஜ் ஜ்ஞாநமின்றியிலே இருக்கிற அஜ்ஞர்‌ ப்‌ரமிக்கிற கேவல வர்ணாதிகள்‌ வ்யர்த்தமாகையாலே த்யாஜ்ய மென்னுமிடத்தை ஸ ப்ரமாணமாக அருளிச் செய்கிறார்‌-

அஜ்ஞர் பிரமிக்கிற வர்ண ஆஸ்ரம வித்ய வ்ருத்தங்களை கர்த்தப ஜென்மம் ஸ்வபசா தமம் சில்ப நைபுணம் பஸ்மாஹூதி சவ விதவா அலங்காரம் என்று கழிப்பர்கள்-சூரணை-86-

(அஜ்ஞர் பிரமிக்கிற வர்ணத்தைக் கர்த்தப ஜென்மம்-கழுதைப்பிறப்பு -என்றும் –
ஆஸ்ரமத்தை ஸ்வபசா தமம்-நாய் இறைச்சி தின்னும் நீசனை விட தாழ்ந்தது -என்றும்
வித்யயையைச் சில்ப நைபுணம்-செய் தொழில் திறன் -செருப்பு குத்த கற்றவோபாதி -என்றும்
வ்ருத்தத்தைப் பஸ்மாஹூதி–சாம்பலில் இட்ட ஆஹுதி -என்றும் கொண்டு சவ அலங்காரம் என்றும் –
விதவா அலங்காரம்-என்றும் கழிப்பர்கள்-பகவத் சம்பந்தம் இல்லாத வர்ணமும் -ஆஸ்ரமும் -ஞானமும் -அனுஷ்டானமும் -தள்ளத்தக்கவை -என்றதாயிற்று )அதாவது – பகவத் தாஸ்யமே ஆத்மாவுக்கு நிரூபகம் என்று நிஷ்கர்ஷித்து – தத் அனுகுணமாக -ஹேய உபாதேய விபாகம் பண்ணத் தக்க ஞானம் இல்லாதவர்கள் – பகவத் அந்வய ரஹித தயா அபக்ருஷ்டராய் இருக்க – உத்தம வர்ணம் -உத்தம ஆஸ்ரமம் ,சத் விதியை, சத் வ்ருத்தம்-என்று உத்க்ருஷ்டமாக பிரமிக்கிற வர்ணாதியான அத்தை
சதுர் வேத தரோ விப்ரோ வாஸூ தேவம் ந விந்ததி வேத பரா பராக்ராந்தஸ் ஸ்வை ப்ராஹ்மண கர்தப -என்று நாலு வேதங்களையும் அதிகரித்து வைத்தே – சர்வே வேதா யத்பதம் ஆமனந்தி–கடவல்லி -என்றும்-வேதைஸ்ச – சர்வைர் அஹமேவ வேதே –ஸ்ரீ கீதை -15-15-என்கிற படியே
சகல வேத பிரதி பாத்யனான ஸ்ரீ சர்வேஸ்வரனை அறியாதவன் குங்குமம் சுமந்த கழுதை போல் தான் பரித்து-சுமந்து கொண்டு திரிகிற வேதத்தின் பரிமளம் அறியாத பிராமண கழுதை என்றும்

அஜ்ஞர்‌ – பகவச் சேஷத்வ ஜ்ஞாதமில்லாதவர்கள்‌, உத்தம வர்ணமென்றும்‌, உத்தமாஸ்ரமமென்றும்‌, ஸத்‌வித்‌யை என்றும்‌,ஸத்‌ வ்ருத்தமென்றும்‌ கேவலம்‌ உத்க்ருஷ்டமாக ப்‌ரமிக்கிற இவற்றை.
(கர்த்தப ஜந்ம மித்யாதி,) ”சதுர்வேத தரோ விப்ரோ வாஸு தேவம்‌ ந விந்த,தி । வேத பாரபராக்ராந்தஸ்ஸ வை ப்‌ராஹ்மண கர்த்தப”” என்கிறபடியே ஸகல வேதத்‌தையும்‌ அதிகரித்து வைத்து ““வேதைஸ் ச ஸர்வைரஹமேவ வேத்‌ய” (கீதை 15 – 15) என்கிறபடியே ஸகல வேத,ப்ரதிபாத்‌யன்‌ ஸர்வேஸ்வரன்‌ என்றறியாதவர்‌ குங்குமம்‌ சுமந்த கமுதையோ பாதி என்றும்‌,

ஸ்வபசோபி மஹீபால விஷ்ணு பக்தோ த்விஜாதிக விஷ்ணு பக்தி விஹீனஸ்து யதிஸ்ஸ ச்வபச அதமா -என்று -யதிஸ்ஸ-சரம ஆஸ்ரயமி ஆகிலும் பகவத் பக்தி ஹீனன் ஆனவன் ஸ்வபசனில் காட்டில் தண்ணியன் என்றும் –தத் கர்ம யத் ந பந்தாப சா வித்யா யா விமுக்தயே ஆயாசாயா அபரம் கர்ம வித்யான்யா சில்பனை புணம்–ஸ்ரீ விஷ்ணு புராணம் –1-9-41 -என்று பகவத் பரத்ய மோஷார்த்தை ஆனதுவே வித்யை –அல்லாதவை செருப்பு குத்த கற்றவோபாதி என்றும்-ஆம்னா யாப்யசநான் யரண்யருதிதம் வேத விரதான் அன்வஹம் மேத்ஸ் சேத பலானி பூர்த்த விதயஸ் சர்வே ஹுதம் பஸ்மினி தீர்த்தா நாம் அவகாஹாநாநி ச கஜஸ்நானம் வினா யத்பத த்வந்த்வாம் போருஹ சம்ஸ்ம்ருதிர் விஜயதே தேவஸ் ச நாராயண –முகுந்தமாலை –25-என்று-பகவத் ஸ்ம்ருதி இல்லாதவர்கள் உடைய கர்ம அனுஷ்டானம் – பஸ்மாஹூதிவத் நிஷ் பிரயோஜனம் என்றும் –

விஷ்ணு பக்தி விஹீநஸ் சேத்‌ யதிஸ்ச ஸ்வபசாதம?’‘ என்று யதியே யாகிலும்‌ பகவத்‌ பக்தி இன்றிக்கே இருக்குமாகில்‌ அவன்‌ ஸ்வபாகனிற் காட்டில்‌ தண்ணிய னென்றும்‌, “’தத் கர்ம யந்ந பந்தாய ஸா வித்‌யா யா விமுக்தயே ! ஆயாஸாயாபரம்‌ கர்ம வித்‌யாந்யா ஸில்பநைபுணம்‌” (வி.பு. 1 – 19) என்று மோக்ஷார்த்த,மான ஜ்ஞாநமே ஜ்ஞாநம்‌; அல்லாத ஜ்ஞாநம்‌ செருப்புக்குத்தக்‌ கற்றவோபாதி என்றும்‌, ”ஆம்நாயாப்‌யபஸ நாந்யரண்யருதி,தம்‌ வேத வரதாந் யந்வஹம்‌ மேத,ஸ்சேத,ப,லாநி பூர்த்த விதய? ஸர்வே ஹுதம்‌ பஸ்மநி | தீர்த்தா நாம வகாஹதாநி ச கஜஸ்நாதம்‌ விநா யத்பத த்‌வந்தவாம் போருஹ ஸம்ஸ்ம்ருதீர் விஐயதே தேவஸ் ஸ நாராயண??‘ (முகுந்தமாலை 25) என்றும்‌ பகவஜ் ஜ்ஞாதமில்லாதவர்களுடைய கர்மாதிகளெல்லாம்‌ பஸ்மா ஹுதி போலே நிஷ் ப்ரயோஜநமென்றும்‌,

யச்யாகிலாமி வஹபிஸ் ஸூமங்கலை வாசோவிமிச்ரா குண கர்ம ஜன்மபி பிரணாந்தி சும்பந்தி புனந்தி வை ஜகத் யாஸ் தத் விமுக்தாஸ் சவ சோபநா மத–ஸ்ரீ பாகவதம் -10-18-12— விஷ்ணு பக்தி விஹீனச்ய வேதஸ் சாஸ்திரம் ஜெபஸ் தப அப்ராணாஸ் யேவ தேஹஸ்ய மண்டனம் லோக ரஞ்சனம்–என்று பகவத் அந்வய ரஹிதோக்திகளும் பகவத் பக்தி ஹீனனுடைய வித்யா வருத்தங்களும் ஸ்வ அலங்கார கல்பம் என்றும் –பிராதுர் பாவைஸ் ஸூர நர சமோ தேவதேவாஸ் ததீய ஜாத்ய வ்ருத்தை ரபிச குணதஸ் தாத்ருசோ நாத்ர கர்ஹா கிந்து ஸ்ரீமத் புவன த்ராண தோன்யேஷு வித்யா வ்ருத்த ப்ராயோ பவதி விதவா கல்ப கல்ப ப்ரகர்ஷ– என்று பகவத் அநன்விதருடைய வித்யா வ்ருத்த பாஹுள்யமாகிற உத்கர்ஷம் – பகவத் சம்பந்த ஞானம் ரூப சௌமாங்கல்ய அபாவத்தாலே விதவ அலங்கார சமம் என்றும் ஞானிகள் ஆனவர்கள் இகழ்வார்கள் என்கை .–ஆக –இப்படி பகவத் விஷய ஸ்பர்சம் அற்ற
வர்ண ஆஸ்ரமங்களும் ஞான வ்ருத்தங்களும் ஹேயம் என்கையாலே – கீழ் அப்க்ருஷ்ட ஜென்மதயா விவஷிதமானது இன்னது என்னும் இடம் அறிவித்தா
ர் ஆய்த்து –

தேசவா? புருஷா லோகே யேஷாம்‌ ஹ்ருதி, ந கேஸவ? । கேஸவார்ப்பித ஸர்வாங்கா ந பாவா ந புநர்ப வா?”, “யஸ்யாகி லாமீவஹபிஸ் ஸுமங்கலைர் வாசோ விமிஸ்ரா குண கர்ம ஜந்மபி ! ப்ராணந்தி ஸூம்பந்தி புநந்தி வை ஜகத்யாஸ் தத்‌ வியுக்தா ஸவ ஸோபநா மதா?” என்று பகவஜ் ஜ்ஞாநமில்லாதவர்கள்‌ ஜீவந்ம்ருதராகையாலே அவர்கள்‌ ஸவ ப்ராயரென்றும்‌, ““ப்ராதுர் பாவைஸ் ஸுர நர ஸமோதே வதேவஸ் ததீயா ஜாத்யா வ்ருத்தைரபி ச குண தஸ்தாத்‌ ருஸோ நாத்ர கர்ஹா கிந்து ஸ்ரீமத்‌ புவநப வந த்ராணதோந்யேஷு வித்‌யா வ்ருத்த ப்ராயோ பவதி வித வாகல்பகல்ப? ப்ரகர்ஷூ” என்று பகவஜ் ஜ்ஞாநமில்லாத வர்களுடைய வித்‌யாதி,கள்‌ பகவத் ஸம்பந்த ஜ்ஞாந மென்கிற ஸெளமங்கல்ய மில்லாமையாலே விதவால்ங்காரமென்று இந்த ஜந்மாதிகளை ப்ரமாணிகரான ஜ்ஞாதாக்கள்‌ அநாதரிப்பர்க ளென்கிறார்‌. பகவஜ் ஜ்ஞாநமில்லாத ஜந்மாதிகள்‌ தயாஜ்யமென்னுமிடம்‌ சொல்லிற்று

முதல்‌ ப்ரகரணம்‌ முற்றிற்று

இனி மேல் ஆத்மா நிரூபக சேஷத்வ அனுகூல ஜென்மமே உத்க்ருஷ்ட ஜென்மம் என்னும் அத்தை அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரும் -முமுஷுக்களுமான மகாத்மாக்கள் ஆதார முகேன பிரகாசிப்பிக்கிறார் -இனி மேல்‌ பகவத்‌ விநியோகார்ஹமாயும்‌, பகவத் ஸம்பந்தத்தை உடைத்தாயு மிருக்கிற திர்யக் ஸ்தாவரங்களே யாகிலும்‌ மிகவும்‌ உத்க்ருஷ்டங்களென்னுமிடத்தை ““வாசிகை பக்ஷி மிருகதாம்‌ மாநஸைரந்த்ய ஜாதிதாம்‌ | ஸாரீரஜை: கர்ம தோஷைர்யாதி ஸ்தாவரதாம்‌ நர” (மநு) என்று வாசிக காயிக பலமாய்க் கொண்டு அல்லாதார்க்கு வரக்‌ கடவதான திர்யக் ஸ்தாவர ஜந்மங்கள்‌ போலன்றிக்கே, பகவத்‌ விநியோகார்ஹமாய்‌, பகவத் ஸம்பந்தத்தை உடைத்தாயுமிருக்கிற திர்யக் ஸ்தாவரங்களே உபாதேயமென்று மஹாத்மாக்களாலே பரிக்‌ரஹிக்கவும்‌ ஆதரிக்கவும்‌ படுகையாலே தந் முகேந ப்ரகாஸிப்பிக்கிறார்‌

அணைய ஊர புனைய அடியும் பொடியும் பட பர்வத பவனங்களில் ஏதேனுமாக ஜனிக்கப் பெறுகிற
திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை பெருமக்களும் பெரியோரும் பரிக்ரஹித்து பிரார்த்திப்பர்கள்-சூரணை -87-

(அணையப் பெறுகிற ஊரப் பெறுகிற புணையப் பெறுகிற திர்யக்கு ஸ்தாவர ஜன்மங்களை
பெருமக்கள்-ஸ்ரீ நித்ய ஸூரிகள் – பரிக்ரஹித்தார்கள்–அடி படப் பெறுகிற- பொடி படப் பெறுகிற-பர்வதத்திலே ஏதேனுமாகப் பெறுகிற –பவனங்களில் ஜனிக்கப் பெறுகிற திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை பெரியோர்— ஸ்ரீ ஸூகப் ப்ரஹ்ம ரிஷி-ஸ்ரீ உத்தவர் -ஸ்ரீ குலசேகர பெருமாள் -ஸ்ரீ ஆளவந்தார் -பிரார்த்திப்பர்கள்-)-அதாவது– அணைவது அரவணை மேல் பூம் பாவை யாகம் புணர்வது–திருவாய் -2-8-1 -என்று ஸ்ரீ பிராட்டி திரு மேனி ஸ்பர்சத்தோடு ஒக்க விகல்பிக்கலாம் படி -அத்யந்த ஸூக ஸ்பர்சமாய் – சைத்ய மார்தவ ஸௌரப்யங்களை பிரகிருதியாக உடைத்தாய் கொண்டு –ஸ்ரீயபதி யானவன் கண் வளர்ந்து அருளுகைக்கு பாங்காய் இருக்கும் ஸ்ரீ திரு அரவணை யாயும் –

*அணைவதரவணைமேல்‌” (திருவா.2 – 8 – 1) விடாயர்‌ மடுவிலே சேர்ந்தாப் போலே ஸ்ரம ஹரமாய்‌, அதாவது – “பூம்பாவை யாகம்‌ புணர்வது” என்று நாச்சிமாரோட்டைச்‌ சேர்த்தியோடே விகல்பிக்கலாம் படியான ஸூக ஸ்பர்ஸத்தை உடையனாகையாலே ஸர்வேஸ்வரன்‌ கண் வளர்ந்தருளுகைக்குப்‌ பாங்காயிருப்பதான திருவனந்தாழ்வானாயும்‌

அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம்
புணர்வது இருவரவர் முதலும் தானே

இணைவனாம் எப்பொருட்கும் வீடு முதலாம்
புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே –2-8-1—சேஷ பூதன் அடிமை செய்து அல்லது தரிக்க மாட்டாதாப் போலே சேஷியும் திரு அநந்த ஆழ்வான் மேல் அணைந்து அல்லது தரியானாய் இருக்கிறபடி-பூ என்று அழகு -பாவை என்று ஸ்த்ரீத்வம்-நிரவதிகமான போக்யதையும் ஸ்த்ரீத்வத்தையும் உடையாளாய் இருக்கை-தேஹ குணத்தாலும் ஆத்ம குணத்தாலும் குறைவற்று இருக்கை-யாகம்-புணர்வது
இவருடைய ரூப குணத்திலே துவக்குண்டு ஆத்ம குணத்து அளவும் செல்ல மாட்டாது இருக்கை
அணைவது புணர்வது -என்கையாலே போகம் ஒத்து இருக்கிற படி-ரம மாணா வநேத்ரய -மாதா பிதாக்கள் கூட இருக்கும் படுக்கையில் சம்பந்தமே ஹேது வாக ஏறும் புத்ரனைப் போலே
பிராட்டியும் அவனும் திரு அநந்த ஆழ்வான் மேலே இருக்க-தமேவம்வித் பாதே நாத்யாரோஹதி -என்கிறபடியே அதிலே ஏறி அவர்களை இவனை அணைக்கை இறே முக்த ப்ராப்யம் –

ஊரும் புள் கொடியும் அஃதே –திருவாய் –10-2-3-என்கிற படியே ஆர்த்த ரஷணத்துக்கும் அனுகூலரை அனுபவிப்பக்கைக்கும் -தன் உகப்பு தனக்குமாக – அவன் பல காலம் மேற் கொண்டு நடத்துகைக்கு வாகனமான ஸ்ரீ கருள புள்ளாயும்-

“ஊரும்‌ புட்கொடியுமக்தே”” (திருவா. 10 – 2 – 3) என்கிறபடியே வேதாந்த வேத்‌யத்வத யோதகமான கருட வாஹநன்‌ கருட த்‌வஜன்‌ என்று சொல்லப்படும்படி அவனுக்கு வாஹநமாயும்‌ த்‌வஜமாயுமிருக்கும்‌ பெரிய திருவடியாயும்‌-

ஊரும் புள் கொடியும் அக்தே உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தான்
சேரும் தண்ணனந்தபுரம் சிக்கெனப் புகுதிராகில்
தீரும் நோய் வினைகள் எல்லாம் திண்ணம் நாம் அறியச் சொன்னோம்
பேரும் ஓர் ஆயிரத்துள் ஓன்று நீர் பேசுமினே-10-2-3—வாஹனமானது பெரிய திருவடி –கொடியும் அக்தே -இது நித்ய ஸூரிகளுக்கும் உப லக்ஷணம் -இது நித்ய ஸூரிகளுக்கு கொடுத்து வைக்கும் நாநா ரஸ அனுபவத்தை -இன்று செல்லுமவனுக்கும் கொடுக்கும் என்னுமிதுக்காக சொல்கிறது

தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும் தாளிணை மேலும் -திருவாய் -1-9-7-
புணைந்த தண் அம் துழாய் –என்கிற படியே -அவன் ஆதரித்து ( கேசவ பிரியா அன்றோ )சாத்துகைக்கு அர்ஹமான திருத் துழாயாயும் இருக்கும்- திர்யக் ஸ்தாவர ஜென்மங்களை-

“தாளிணை மேலும்‌ புனைந்த” (திருவா, 1 – 9 – 7), ““புனையுங் கண்ணி”” (திருவா. 4 – 3 – 2) என்கிறபடியே ஸர்வேஸ்வரத்வ ஸூூசகமான தனி மாலையாய்‌, ”மலர்த் துழாய் மாட்டே நீ மனம்‌ வைத்தாய்‌” (திருவா. 3- 1 & 4) என்கிறபடியே அவன் திருவுள்ளத்தைக்‌ கொள்ளை கொள்ளவற்றான திருத் துழாயாழ்வாராயுமிருக்கிற திர்யக் ஸ்தாவர ஜந்மங்களை-

தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும்
தாளிணை மேலும்
புனைந்த தண்ணம் துழாய் யுடை யம்மான்
கேளிணை ஒன்றும் இலாதான் கிளரும் சுடர் ஒளி மூர்த்தி
நாள் அணைந்து ஒன்றும் அகலான் என்னுடை நாவில் உளானே –1-9-7—அபிமத விஷயத்தை அணைவார் புழுகு நெய் ஒட்டிக் கொண்டு போமா போலே தாம் உகந்த படியே திருத் துழாயாலே திருமேனியை எல்லாம் அலங்கரித்து வந்தபடி –தோளிணை மேலும் ஸூ காடம் பரிஷஸ் வஜே -என்கிறபடியே அணைக்கும் தோள்களிலும்-நன் மார்பின் மேலும்-அவன் அப்படி அணைக்கைக்கு பற்றாசான பிராட்டி இருக்கிற திரு மார்பிலும்-சுடர் முடி மேலும் –இவ்வணைக்கை தான் வகுத்த விஷயம் ஆகில் இறே புருஷார்த்தம் ஆவது –அந்த சேஷித்வ பிரகாசகமான சர்வாதிகாத்தவ லக்ஷணமான திரு அபிஷேகத்திலும் –தாளிணை மேலும்- அந்த சேஷித்வத்துக்கு தோற்று விழும் திருவடிகளிலும்-சாத்தின திருத் துழாயை உடைய சர்வேஸ்வரன் -இது தான் சர்வாதிக லக்ஷணம் இறே

பூசும் சாந்து என்நெஞ்சமே; புனையும் கண்ணி எனதுடைய
வாசகம் செய் மாலையே;
வான் பட்டாடையும் அஃதே;
தேசமான அணிகலனும் என்கை கூப்புச் செய்கையே;
ஈசன், ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே.–4-3-2—இவருடைய பாவ பந்தம் அவனுக்கு பரிமளிதமான அங்க ராகமே யாயிற்று-வழக்கனான மாலை அன்றிக்கே ஆதரித்துச் சூடும் மாலை –என்னுடைய யுக்தி மாத்திரமே-இவர் நெஞ்சிலும் பரிமளிதம் யாயிற்று இவர் வாக்கு -வாக்கான மாலை இறே சாந்துக்கு பூக்கட்டி இறே மனம் கொடுப்பது

மாட்டாதே யாகிலும் மலர்தலை மா ஞாலம் நின்
மாட்டாய மலர்புரையும் திருவுருவம் மனம் வைக்க
மாட்டாதே பல சமய மதி கொடுத்தாய் மலர்த்துழாய்
மாட்டே நீ மனம் வைத்தாய் மா ஞாலம் வருந்தாதே –
3-1-4–உன் திரு உள்ளத்தையும் கால் தாழ பண்ண வல்ல திருத் துழாய் முதலான போக்கிய ஜாதங்களிலே பிரவணனாய்-மாடு – இடம் -அதன் பக்கலிலே –

பெரு மக்கள் உள்ளவர் –திருவாய் -3-7-5-என்கிற படி -அஹ்ருத சஹஜ (திருட முடியாத -கூடவே உள்ள) தாஸ்யர் ஆகையாலே –-அசந்நேவ ச பவதி அஸத் ப்ரஹ் மேதி வேத சேத் -தைத்ரியம் –என்பது –
அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத சந்த மேனம் ததோ விது இது –தைத்ரியம் – -என்பதாக வேண்டாதபடி என்றும் ஒக்க உளராய் இருக்கிற மகாத்மாக்களான ஸ்ரீ நித்ய ஸூரிகள் -பகவத் கைங்கர்ய இச்சையாலே பரிக்ரஹித்தார்கள் –

பெரு மக்களுள்ளவர்‌’” (திருவா. 3 – 7 – 5) என்னும்படி மஹாத்மாக்களாயும்‌, ஸத்தையே பிடித்து மோஷத்வ ஜ்ஞாந திரோதாந மில்லாமையாலே “’அஸந்நேவ’”, ‘“ஸந்தமேநம்‌”’ (தை.ஆ.) என்ன வேண்டாதபடி இருக்கையாலே நித்யரான ஸூரிகள்‌ பகவத்‌ விநியோகார்ஹமாக ஸ்வேச்சையாலே பரிக்‌ரஹித்தார்கள்‌-

பெருமக்கள் உள்ளவர் தம் பெருமானை அமரர்கட்கு
அருமை ஒழிய அன்று ஆர்அமுது ஊட்டிய அப்பனைப்
பெருமை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர்
வருமையும் இம்மையும் நம்மை அளிக்கும் பிராக்களே.–3-7-5–நித்ய ஸூரிகள்–பேராளன் பேரோதும் பெரியோர் என்றும் –ச மஹாத்மா ஸூ துர்லபா -என்றும் முமுஷுக்களை யும் சர்வ உத்க்ருஷ்டராக சொல்லக் கடவதானால்-நித்ய சித்தராய்ச் சொல்ல வேண்டா இறே-உள்ளவர்- நிரூபகமான சேஷத்வ ஞானம் நித்யம் ஆகையால் தாங்களும் நித்யராய் இருக்கை –-இங்கு உள்ளாரைப் போலே அசன்னேவா-என்பது சந்தமேனம்-என்பதாக வேண்டாதவர்கள் –

பத்யு பிரஜானாம் ஐஸ்வர்யம் பசூணாம் வா ந காமயே அஹம் கதம்போ பூயாசம் குந்தோ வா யமுனா தடே – என்று பிராஜாபதி பசுபதிகள் உடைய ஐஸ்வர்யத்தையும் வேண்டேன் –பூத்த நீள் கடம்பேறி –நாச்சியார் -4-4–என்றும் –பூம் குருந்து ஏறி இருத்தி –நாச்சியார் -3-3–என்றும் சொல்லுகிற படி
யமுனை கரையில் அவன் திரு அடிகளால் மிதித்து ஏறின கடம்பாதல் -குருந்தாதல் ஆக வேணும் என்றும் –ஆஸாமஹோ சரண ரேணு ஜூஷாமஹம் ஸ்யாம் ப்ருந்தாவனே கிமபி குல்ம லதெவ்ஷதீனாம் யா துஸ்த்யஜம் ஸ்வ ஜன மார்ய பதஞ்ச ஹித்வா பேஜூர் முகுந்த பதவீம் ஸ்ருதிபிர் விம்ருக்யாம்–ஸ்ரீ பாகவதம் -10-48-61—என்று ஸ்ருதிகளால் தேடப் படும் ஸ்ரீ கிருஷ்ணன் போன வழியை ஸ்வ ஜனாதிகளும் அதிக்ரமித்து -யாவர் சில பெண்கள் பின் தொடர்ந்தார்கள் -அவர்கள் உடைய பாத ரேணுவை பஜித்து இருப்பனவாய் பிருந்தாவனத்தில் இருக்கும் சில செடிகள் கொடிகள் ஒவ்ஷதிகளில் வைத்து கொண்டு – ஏதேனும் ஒன்றாகவேனாக வேணும் என்றும் -( ஸ்ரீ உத்தவர் –

(அடியும்‌ பொடியும் பட) ““பத்யு? ப்ரஜாநாமைஸ்வர்யம்‌ பஸூநாம்‌ வா ந காமயே அஹம்‌ கதம்போ பூயாஸம்‌ குந்தேரா வா யமுநா தடே”’ என்று ப்ரஜாபதி பஸூ பதிகளுடைய ஐஸ்வர்யத்தையும்‌ வேண்டேன்‌; ”பூத்த நீள்‌ கடம்பேறி”’ (நா. தி. 4 – 4] என்றும்‌, ‘“பூங்குருந்தேறி யிருத்தி” (நா. தி. 3 – 3) என்றும்‌ சொல்லுகிற க்ருஷ்ணனுடைய திருவடிகளோட்டை ஸ்பர்ஸத்துக்கு விஷயமான குருந்தாதல்‌, கடம்பாதல்‌ ஆவேனாக வேணும்‌ என்றும்‌, ““ஆஸாமஹோ சரண ரேணு ஜுஷாமஹம்‌ ஸ்யாம்‌ ப்‌,ருந்ததாவநே கிமபி குல்மல தெளஷதீநாம்‌ । யா து ஸ்த்யஷம்‌ ஸ்வஜ ந மார்ய பதஞ்ச ஹித்வா பேஜுர் முகுந்த பதவீம்‌ ஸ்ருதிபிர் விம்ருக்‌யாம்‌”‘ (பாக,.10) என்று வேதங்களாலும்‌ தேடவரிய க்ருஷ்ணன்‌ போன வழியை ஸ்வ ஜநத்தையும்‌ குலாசாரத்தையும்‌ அதிக்ரமித்து யாவர் சில பெண்கள்‌ பின் தொடர்ந்தார்கள்‌, அந்த க்ருஷ்ணனுடையவும்‌, பெண்களுடையவும்‌ பாத ரேணுவை தரித்திருக்கும்‌ ப்‌ருந்தா வநத்தில்‌ சிறு செடிகள்‌ கொடிகள்‌ ஓஷதிகள்‌ இவையாவேனாக வேணும்‌ என்றும்‌,ஸ்ரீ ஸூகர் பிரார்த்தனை அடி பட -பொடி பட )

ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட
பூத்த நீள் கடம்பேறிப் புகப் பாய்ந்து
வாய்த்த காளியன் மேல் நடமாடிய
கூத்தனார் வரில் கூடிடு கூடலே–4-4—விஷ தக்தமான கடம்பு -திருவடிகள் பட்டவாறே பூத்தது-அங்கோல தைலத்துக்கு உள்ள சக்தியும் இங்கு இல்லை அன்றே –-கல்லு பெண்ணானால் கடம்பு பூக்கச் சொல்ல வேணுமோ-

எல்லே ஈது என்ன விளமை எம்மனைமார் காணில் ஒட்டார்
பொல்லாங்கு ஈது என்று கருதாய் பூங்குருந்தேறி யிருத்தி
வில்லால் இலங்கை யழித்தாய் நீ வேண்டியது எல்லாம் தருவோம்
பல்லாரும் காணாமே போவோம் பட்டைப் பணித்து அருளாயே—–3-3–நான் பழிக்கு அஞ்சினேன் ஆகிலும் உங்களுக்கு இது தர வேண்டுவது இல்லை இறே –என்று குருந்தின் மேல் இவற்றையும் கொண்டு அதில் பூ பொருந்தினால் போலே பொருந்தி -இழியக் கணிசியாதே இருந்தான்

கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே -ஸ்ரீ பெருமாள் -4-1-
மீனாய் பிறக்கும் விதி உடையேன் ஆவேனே –ஸ்ரீ பெருமாள் –4-2-
செண்மகமாய் நிற்கும் திரு உடையேன் ஆவேனே —ஸ்ரீ பெருமாள் -4-4-
தம்பகமாய் நிற்கும் தவம் உடையேன் ஆவேனே –ஸ்ரீ பெருமாள் -4-5-
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே –என்று ஸ்ரீ திருமலை ஆழ்வாரோட்டை சம்பந்தம் உடைய திர்யக் ஸ்தாவர ஜன்மங்களில் ஏதேனும் ஒன்றாகப் பெறுவேனாக வேணும் என்றும் –ஸ்ரீ பெருமாள் -4-10-இத்தகையப் பிறப்பையும் –(பொன்மலை – பர்வதங்களில் ஏதேனுமாக -)

(பர்வத) “கோனேரி வாழும்‌ குருகாய்ப் பிறப்பேனே’‘ (பெருமா. தி. 4 – 1) என்றும்‌, “திருவேங்கடச் சுனையில்‌ மீனாய்ப் பிறக்கும்‌ விதி யுடையே னாவேனே”‘ (பெருமா.தி, 4 2) என்றும்‌ “‘தம்பகமாய்‌ நிற்கும்‌ (பெருமா. தி. 4 – 5) , “*செண்பகமாய்‌ நிற்கும்‌‘” (பெருமா. தி. 4 – ச்‌) , “கானாறாய்ப் பாயும்‌”(பெருமா. தி. 4 – 7), எம்பெருமான்‌ பொன் மலை மேல்‌ ஏதேனுமாவேனே”'(பெருமா. தி. 4 – 10) என்றும்‌ திருமலை யாழ்வாரோட்டை ஸம்பந்தமுடைய திர்யக் ஸ்தாரவரங்களில்‌ ஏதேனுமொன்றாகப்‌ பெறுவேனாக . வேணும்‌ என்றும்‌,

வேங்கடத்து கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே –4-1--விரஜையைப் பற்றி அமாநவ வசத்திலே வர்த்திக்குமா போலே –கோனேரியைப் பற்றி வர்த்திக்கும் குருகாய் பிறப்பேன் -என்கிறார் –திரு வேங்கட சுனையில் மீனாய் பிறக்கும் விதி வுடையேன் ஆவேனே— 4-2-கீழ்ச் சொன்ன குருகாய் பிறக்கில் அதுக்கு சிறகு உண்டாகையாலே ஸ்ரீ திருமலையில் அல்லனாய் கழியப் பறக்கைக்கு யோக்யதை யுண்டு இறே-அப்படியும் ஓன்று அன்றியே-உத்பத்தி ஸ்திதி லயங்களுக்கு ஸ்ரீ திருமலையிலேயாய் மீனாய்ப் பிறப்பேன் -என்கிறார் –வேம்கடத்து செண்பகமாய் நிற்கும் திரு உடையன் ஆவேனே –4-4-ஸ்ரீ திருமலையிலே செண்பகமாய் நிற்கும் சம்பத்து உண்டாக வேணும் –
அதாவது –பகவத் பிரத்யாசத்தி இறே பிராப்யம் -அது கிட்டுமான பின்பு ஸ்தாவரமாய் நிற்கவும் அமையும்- -மேலே ஏறின சைதன்யத்தாலே கார்ய கரம் இல்லை –என்கிறார் –வேம்கட மலை மேல்
தம்பகமாய் நிற்கும் தவம் உடையன் ஆவேனே
–4-5-ஒரு பிரயோஜனத்துக்கு காகாதே அங்கே மூத்தற்று தீய்ந்து போவதொரு ஸ்தாவரமாம் தவம் உடையன் ஆவேனே –அநேக ஜன்ம தப பலம் என்று இருக்கிறார் காணும் இது தன்னை —வேங்கடத்துள் அன்னனைய பொற் குவடாம் அரும் தவததேன் ஆவேனே –4-6-பொற்குவடம் என்னும் அத்தனை -வேறு உபமானம் இல்லை –திரு வேங்கட மலை மேல்
கானாறாய் பாயும் கருத்துடையன் ஆவேனே
– 4-7-சஹ்யம் பற்றினதாகில் கீழே போம் இறே –
அங்கே சுவறிப் போம் காட்டாறுகள் அபிசந்தியை யுடையேனாக வேணும் –திருவேங்கட மலை மேல்
நெறியாய் கிடக்கும் நிலை வுடையேன் ஆவேனே
– 4-8-எப்போதும் ஒக்க வைஷ்ணவர்கள் சஞ்சரிக்கையாலே அவர்கள் பாத ரேணு படும்படி வழியாய்க் கிடக்கும் துணிவு உடையேன் ஆவேனே –
தொண்டர் அடிப்பொடி யாட நாம் பெறில் -என்று இருக்குமவர் இறேநின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தது இயங்கும் படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேனே
–4-9-அநந்ய பிரயோஜனரும் –பிரயோஜனாந்தர பரரும்-அந்ய பரரும் கிடந்தது சஞ்சரியா நின்றால் ஒரு நினைவுற்று அசேதனவத் கிடக்க வேணும்-பார தந்த்ர்யத்துக்கு அசேதன சமாதியாகவும் வேணும் – அது புருஷார்த்தமாகைக்கு காணவும் வேணும் –திரு வேம்கடம் என்னும் எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே –4-10–ஸ்ரீ அனந்தாழ்வான் இவ்விடத்துக்கு -ஸ்ரீ திருவேங்கடமுடையான் தானாகவே அமையும் -என்னும் அது என் என்னில் – சேஷ பூதர் திரளுக்கு புறம்பான சேஷியாகிலும் அமையும் என்கை–அங்கன் அன்றிக்கே ஸ்ரீ பட்டர் அருளிச் செய்யும் படி –
நாம் அறிய வேண்டா திரு வேங்கட முடையானும் அறிய வேண்டா –கண்டாரும் அறிந்து ஸ்லாகிக்கவும் வேண்டா ஸ்ரீ திருமலை மேலே உள்ள தொரு பதார்த்தமாக அமையும்
-என்றார் –

தவ தாஸ்ய ஸுகைக ஏக சங்கினாம் பவனேஷூ அஸ்த்வபி கீட ஜன்ம மே–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -55-என்று தேவரீர் உடைய தாஸ்ய சுகம் ஒன்றிலுமே சங்கத்தை உடையரான ஸ்ரீ வைஷ்ணவர் திரு மாளிகைகளிலே உத்பத்தி விநாசங்கள் இரண்டும் அங்கேயாம் படி – கீட ஜன்மமே எனக்கு உண்டாக வேணும் என்றும் -( பவனங்களில் ஏதேனுமாக -)

(ப,வநங்களில்‌]) “தவத,ஸ்ய ஸுகைக ஸங்கிநாம்‌ பவநேஷ் வஸ்த்வபி கீடஜந்ம மே”? (ஸ்தோ.ர. 55) என்று – தேவரீருடைய தாஸ்ய ஸுக மொன்றிலுமே ஸங்கத்தை உடையரான ஸ்ரீவைஷ்ணவர்கள் திருமாளிகைகளிலே உத்பத்தி விநாஸங்களிரண்டும்‌ அங்கேயாம் படியான கீட ஜத்மமே எனக்கு உண்டாக வேணும்‌ என்றும்‌;

தவ தாஸ்ய ஸுகைக ஸங்கிநாம்
பவநேஷ்வஸ் த்வபி கீடஜந்ம மே |
இதராவஸதேஷு மா ஸ்ம பூத்
அபி மே ஜந்ம சதுர் முகாத்மநா ||
–55–எம்பெருமானுக்குத் தொண்டு செய்வதில் மூழ்கியிருப்பவர்களின் திருமாளிகைகளில் ஒரு புழுவாகவாவது பிறக்க வேண்டும்.-மற்ற க்ருஹங்களில் ப்ரஹ்மாவாகப் பிறப்பதும் எனக்கு வேண்டாம்.-ஆளவந்தார் பகவானிடத்தில் அதிகமான பக்தியைப் பெற்றபின், பகவானிடத்தில் அடிமைத்தனத்துடன் நிறுத்தாமல், அவனுடைய அடியார்களுக்கு அடிமையாக இருப்பதை ப்ரார்த்திக்கிறார்.

இப்படி-அவனடி படவும்–அவனை அணைந்தார் அடியில் பொடி படவும் –-அவன் உகந்து அருளின நிலத்தே ஆதல் ,-அவன் அடியார் அபிமானம் உள்ள நிலத்திலே ஆதல் , வர்திக்கவும் ஈடாக ஜனிக்க பெறுகிற திர்யக் ஸ்தாவர ஜன்மங்களைபேராளன் பேரோதும் பெரியாரான–ஸ்ரீ பெரிய திருமொழி -7-4-4- –ஸ்ரீ ஸுக பிரம ரிஷி ,ஸ்ரீ உத்தவர் ,ஸ்ரீ குலசேகர பெருமாள் , ஸ்ரீ பெரிய முதலியார் முதலான முமுஷுக்கள் பிரார்த்தித்தார்கள் என்ற படி .

இப்படி பகவத்‌ பாகவத ஸம்பந்தங்களை யுடைய திர்யக் ஸ்தாவர ஜந்மங்களை *பேராளன்‌ பேரோதும்‌ பெரியோரான ஸ்ரீஸூக ப்‌ரஹ்மர்ஷி, ஸ்ரீகுலசேகரப் பெருமாள்‌, பெரிய முதலியார்‌ தொடக்கமான முமுஷுக்கள்‌ ப்ரார்த்தித்தார்கள்‌.

தேராளும் வாளரக்கன் தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழப்
போராளும் சிலையதனால்   பொரு கணைகள் போக்குவித்தாய் என்று நாளும்
தாராளும் வரை மார்பன் தண் சேறை  எம்பெருமான் உம்பராளும்
பேராளன் பேரோதும் பெரியோரை யொரு காலும் பிரிகிலேனே  -7-4-4-வாயாலே திரு நாமம் சொல்லா விடில் தரியாத ஸ்வபாவத்தை உடையராயக் கொண்டு சங்கீர்த்தனம் பண்ணுகிற பெரியோர் உண்டு -( ஓதும் நிகழ் காலம் ) அவன் தானும் அகப்பட -மகாத்மான -என்னும்படி இருக்கிற மகா பிரபாவர்களை –ஷண காலமும் பிரிய காலம் எல்லாம் இடை விடாமல் அனுபவிக்கலாம் என்னிலும் பிரிய ஷமன் அல்லேன் –

இத்தால் –வாசிகை பஷி ம்ருகதாம் மானஸைர் அந்த்ய ஜாதிதாம் சரீரஜை கர்ம தோஷைர் யாதி ஸ்தாவரதாம் நர –மனு ஸ்ம்ருதி -12-9- -என்று இந்த விபூதியிலே -திர்யக், ஸ்தாவர ஜன்மங்கள் -வாசிக காயிக பாப பலங்களாக சாஸ்திரம் சொல்லா நிற்க-அப்படி இன்றிக்கே ஸ்ரீ பகவத் விநியோக அர்ஹமாக இந்த ஜன்மங்களை நித்ய ஸூரிகள் ஸ்வ இச்சையால் ஏறிட்டுக் கொள்வார்கள் என்றும் –
தாஸ்ய ரசஜ்ஞரான முமுஷுக்கள் தத் சம்பந்த -ததீய சம்பந்தம் உள்ள திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை பிரார்த்திப்பார்கள் என்றும் சொல்லுகையாலே –தாஸ்ய குண ஜன்மமே உத்க்ருஷ்ட ஜன்மம் என்றது ஆய்த்து–

ஆக இத்தால்‌ பகவஜ் ஜ்ஞாந ரஹிதமான உத்க்ருஷ்ட வர்ணாதிகள்‌ ஸத்துக்களுக்கு அநாதரணீய மென்றும்‌, பகவத்‌ விநியோகார்ஹமான திர்யக் ஸ்தாவர ஜந்மங்கள்‌ ஆதரணிய மென்னுமிடத்தையும்‌ சேர அருளிச் செய்தார்

பகவத் விநியோஹ அர்ஹம் ஆகையாலே திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை நித்ய ஸூரிகள் பரிக்ரஹிக்கைக்கு பிராப்தம் –அங்கன் இன்றிக்கே-முமுஷுக்கள் ஆன இவர்கள் – பகவத் ,பாகவத சேஷத்வ வாஞ்சையாலே திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை பிரார்த்தித்தார்கள் ஆகிலும்
உத்க்ருஷ்டதயா சாஸ்திர சித்தமான வர்ணத்தை இப்படிக் கழிக்கிறது என் என்ன அருளிச் செய்கிறார்-இனி மேல்‌ ஸேஷத்வத்துக்குப்‌ புறம்பான ஆத்மாவையும்‌ அநாதரிக்கிறவர்களுககு ஓளபாதிகமான வர்ணாதிகளை அநாதரிக்கச்‌ சொல்ல வேணுமோ? என்கிறார்‌-

சேஷத்வ பஹிர்பூத ஞான ஆனந்த மயனையும் சஹியாதார் த்யாஜ்ய உபாதியை ஆதரியார்களே-சூரணை -88-

(த்யாஜ்ய உபாதியை-தள்ளத்தக்க-கர்மம் அடியாக -இடையில் வந்த வர்ணத்தை -ஆதரிக்க மாட்டார்களே )-அதாவது – ந தேஹம் ந பிராணான் நச ஸுகம் அசேஷ அபிலஷிதம் நச ஆத்மானம்
நாந்யத் கிமபி தவ சேஷத்வ விபவாத் பஹிர்பூதம் நாத ஷணமபி சஹே யாது சததா வினாசம் தத் சத்யம் மதுமதன !விக்ஜ்ஞாபனமிதம்
–ஸ்தோத்ர ரத்னம் -56–என்று தேவரீர் உடைய சேஷத்வதுக்கு புறம்பான தேஹாதிகள் ஒன்றினையும் ஷணமும் சகியேன் –அவ்வளவு அன்றியே –ஞான ஆனந்த மயமான ஆத்ம வஸ்துவையும் சகியேன் –அது சததாவாக விநாசத்தை அடைவதாக —இந்த விண்ணப்பம் அஹ்ருதயம் அன்று -சத்யம்-திரு முன்னே பொய் சொன்னேன் ஆகில் தேவருக்கு பொய்யனான மது பட்டது படுகிறேன் என்கையாலே-சேஷத்வத்துக்கு புறம்பான போது – ஞான ஆனந்த மயஸ்த்வாத்மா-என்று-ஞான ஆனந்த மயத்வாலே ஸ்லாக்யமாய் இருக்கும் ஆத்மாவையும் சகியாதவர்கள் –சேஷத்வ விரோதி பூத அஹங்கார ஹேது ஆகையால் த்யாஜ்யமாய் -கர்ம நிபந்தனம் ஆகையாலே ஒவ்பாதிகமாய் இருக்கிற வர்ணத்தை ஆதரிப்பார்களோ என்கை–ஒவ்பாதிகமான இத்தை உபாதி என்றது கார்ய காரண உபசாரம்

“ந தேஹம்‌ ந ப்ராணாந்‌ ந ச ஸுக,மஸேஷாபி லஷிதம்‌ ந சாத்மாநம்‌ நாந்யத்‌ கிமபி தவ ஸேஷத்வ விப்வாத்‌ ! பஹிர்பூ,தம்‌ நாத க்ஷணமபி ஸஹே யாது ஸததா விநாஸம்‌ தத்‌ ஸத்யம்‌ மது மதந விஜ்ஞாபநமித,ம்‌”” (ஸ்தோ, ர. 57) என்று – தேவரீருடைய ஸேஷத்வத்துக்குப்‌ புறம்பான தேஹாதிகள்‌ ஒன்றையும்‌ ஸஹியேன்‌; அவ்‌வளவே யன்றியிலே ஜ்ஞாநாநந்த,மயமான ஆத்ம வஸ்துவையும்‌ ஸஹியேன்‌; அது ஸததாவாக விநாஸத்தை அடைவதாக. இது – அஹ்ருதயமன்று ஸத்யம்‌- இது அஸத்யமாகில்‌ தேவரீர் ஸந்நிதி யில்‌ அஸத்யம்‌ சொன்ன மது பட்டது படக் கடவேன்‌-என்று ஸேஷத்வத்துக்குப்‌ புறம்பான போது ““ஜஞாநாநந்த மயஸ்த்வாத்மா” (பாஞ்ச) என்று ஜ்ஞாநாநந்த மயனையும்‌ ஸஹியாதவர்கள்‌, ஸேஷத்வ ஜஞாந விரோதியான அஹங்காரத்துக்கு ஹேதுவாகையாலே த்யாஜ்யமாய்‌, காமமடியாக வருவதொன்றாகையாலே ஓளபாதிகமான வர்ணத்தை ஆதரியார்க ளென்னுமிடம்‌ சொல்ல வேணுமோ ? என்கிறார் –

இந்த வர்ணத்தினுடைய ஓளபாதிகத்வத்தை உதாஹரண முகத்தாலே வெளியிடுகிறார்‌-இந்த வர்ணத்தினுடைய ஓளபாதிகத்வத்தை உதாஹரண முகத்தாலே வெளியிடுகிறார்‌-

இதின் ஒவ்பாதிகத்வம் ஒரு ராஜா தன்னை மறை முனிவன் ஆக்கினவன் நீசனாக்குவித்த ராஜாவை
வாரே உறுப்பாக யஜிப்பித்து ஸ்வர்கம் ஏற்றின போதே தெரியும்-சூரணை -89-

(இதின் ஒவ்பாதிகத்வம்-வந்தேறி -ஒரு ராஜா-விசுவாமித்திரர் – தன்னை மறை முனிவன் ஆக்கினவன்-ப்ரஹ்ம ரிஷி யாகும்படி செய்த வசிஷ்ட பகவான் -நீசனாக்குவித்த ராஜாவை-வசிஷ்டராலே நீசனாகும் படி சபிக்கப்பட்ட திரிசங்கு என்னும் அரசன் – வாரே உறுப்பாக யஜிப்பித்து-தோலாகிய வார் -வேள்விக்கு அங்கமான உறுப்புத் தோலாக-ஸ்வர்கம் ஏற்றின போதே வர்ணம் வந்தேறி ஸ்வாபாவிகம் இல்லை என்று தெரியும்-சரு மாத்தின கதை -ஜமதக்கினி -பரசுராமர் -பிறப்பால் ப்ராஹ்மணர் -க்ஷத்ரியர் ஆனார் )அதாவது இவ் வர்ணத்தின் உடைய ஒவ்பாதிகத்வம் குசிக வம்சனாய் ராஜாவான விஸ்வாமித்திரன் ப்ரஹ்ம ரிஷித்வ காமனாய்–நெடும் காலம் தபசு பண்ணின தன்னை –-மந்திரம் கொள் மறை முனிவன் –பெருமாள் -10-2- என்னும் படி ப்ரஹ்ம ரிஷி ஆக்கின சக்திமான வசிஷ்டன் தன் வார்த்தை கேளாமல் -தன்னை அவ மதி பண்ணிப் போனது கொண்டு ஸ்வ புத்ரர்கள் பண்ணின சாபத்தாலே மார்பில் இட்ட யக்ஜோபவீதமே வாராம் படி -சண்டாளன் ஆக்குவித்த – இஷ்வாகு வம்சனாய் உள்ள திரி சங்கு என்கிற ராஜாவை -அந்த வார் தான் யஜ்ஞாங்கமான உருப்பு தோலாகக் கொண்டு தன்னுடைய தபோ பலத்தாலே யஜிப்பித்து ஸ்வர்க ஆரோகணம் பண்ணுவித்த போது ஸுஸ்பஷ்டம் என்கை .–இத்தால் ஒரு ஷத்ரியன் ஸூஹ்ருத விசேஷத்தால் -அந்த சரீரம் தன்னோடே ப்ரஹ்ம ரிஷி ஆகையாலும் –ஒரு ஷத்ரியன் துஷ்க்ருத விசேஷத்தாலே அந்த சரீரம் தன்னோடே சண்டாளன் ஆகையாலும் ,ஷத்ரியத்வம் போய் ப்ரஹ்ம ரிஷி ஆனவன் –தான் ப்ரஹ்ம ரிஷி ஆவதற்கு முன்பே ஷத்ரிய வேஷம் போய் சண்டாள வேஷமாய் நிற்கிறவனை அந்த வேஷம் தன்னோடே யஜிப்பித்து ஸ்வர்கத்தில் ஏற்றுகையாலும் வர்ணத்தின் கர்ம ஒவ்பாதிகத்வம் எல்லோருக்கும் தோன்றும் என்றது ஆய்த்து-

ருஷிக வம்ஸ உத்பவனாய்‌ ராஜாவான விஸ்வாமித்ரன்‌ ப்‌ரஹ்ம ரிஷித் வத்தை ஆசைப்பட்டு நெடுங்காலம்‌ தபஸ்ஸு பண்ணின தன்னை ‘‘மந்திரங்‌ கொள்‌ மறை முனிவன்‌” (பெருமா.தி.10 – 2) என்னும் படி ப்ரஹ்ம ரிஷியாக்கின வஸிஷ்டன்‌ தன்னுடைய வார்தாதிலங்கநம்‌ பண்ணின த்ரி ஸங்குவைத்‌ தன்‌ புத்ரர்களுடைய ஸாபத்தாலே மார்விலிட்ட யஜ்ஞோபவீதந் தானே வாராம்படி சண்டாளனாக்கு விக்க, அந்த த்ரிஸங்குவையும்‌ அந்த வாரே யஜ்ஞாங்கமான உறுப்புத் தோலாம் படித்‌ தன்னுடைய தபோ பலத்தாலே யஜிப்பித்து ஸ்வர்க்காரோஹணம்‌ பண்ணுவித்த போதே வர்ணம்‌ கர்மோபாதிகம்‌ என்னுமிடம்‌ ஸுவ்யக்த மென்கிறார்‌,-ஆக இத்தால்‌ ஒரு க்ஷத்ரியன்‌ ப்‌ரஹ்ம ரிஷியானானென்றும்‌, ஒரு க்ஷத்ரியன்‌ சண்டாளனானானென்றும்‌, அந்த சண்டாளனானவனை அந்த ப்‌ரஹ்ம ரிஷியானவன்‌ தபோ பலத்தாலே ஸ்வர்க்க மேற்றினான்‌ என்றும்‌ சொல்லுகையாலே வர்ணம்‌ ஓளபாதிகம்‌ என்னுமிடம்‌ ஸுஸ்திரமாய்த்து –

வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தை கீறி வரு குருதி பொழி தர வன் கணை ஒன்றேவி
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்
செந்தளிர் வாய் மலர் நகை சேர் செழும் தண் சோலை தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த அணி மணி யாசனத்து இருந்த அம்மான் தானே– 10-2–ரிஷி தனக்கே தனக்கு என்னாதபடி நிர்ப்பரனாய்த் தன்னுடைய அனுஷ்டானங்கள் எல்லாம் அடைவே அனுஷ்டித்து யாகத்தைத் தலைக் கட்டும்படி பண்ணி யஜ்ஞ் விக்னரரான மாரீச ஸூபாஹூகளைக் முடித்த பிள்ளைத் தனத்தை உடையவனை மாரீசன் பட்டானோ என்னில் -பின்னை இருந்த இருப்பு ம்ருத ப்ராயன் என்று கருத்து-

இனி மேல் ப்ராகரணிகமாய் வருகிற பிரமாத்ரு வைபவ ஸ்தாபனத்துக்கு உறுப்பாக பிரமாண பிரமேயங்களையும் கூட்டிக் கொண்டு மூன்றிலும் த்யாஜ்ய உபதேயங்கள் உண்டு என்னும் இடத்தை விபஜித்து சொல்லி – இவ் விசேஷம் அறிவார் பெரும் பேற்றையும் -இது அறியாமல் பாகவத ஜன்ம நிரூபணம் பண்ணுவார் அதஹ்பதிக்கும் படியும் அறிவிக்கிறார் —ஆக கீழ்‌ பகவத் ஸம்பந்த, ஜஞாந ரஹிதமான உத்க்ருஷ்ட ஜந்மம்‌ அபக்ருஷ்ட மாகையாலே அதினளவிலே நிற்கிற ப்ரமாதாக்கள்‌ அநுபாதேயரென்றும்‌, பகவத் ஸம்பந்த ஜ்ஞாந முகத்தாலே அபக்ருஷ்ட ஜந்மம்‌ உத்க்ருஷ்ட ஜந்மமாகையாலே அதிலே நிற்கிற ப்ரமாதாக்கள்‌ உபாதேயரென்றும்‌ சொல்லா நின்றது. இனி மேல்‌ ப்ரமாதாக்களளவே யன்றிக்கே ப்ரமாண-ப்ரமேய-ப்ரமாதாக்கள்‌ மூன்றிலும்‌ த்யாஜ்யமுமுண்டு, உபாதேயமுமுண்டு; அப்படி உபாதேயமான ப்ரமாண-ப்ரமேயங்களோடு விகல்பிக்கலாம்‌ படியான அந்த ப்ரமாதாக்களுடைய வைபவத்தை ப்ரமாணங்களும்‌ ப்ராமாணிகரும் சொல்லா நிற்க, அத்தை அறியாதே மந்த மதிகளாய்க் கொண்டு ஜந்ம நிரூபணம்‌ பண்ணுமவர்கள்‌ அத பதிப்பர்களென்று கீழே ““வீட்டின்ப வின்பப்பாக்களில்‌ த்‌ரவ்ய பாஷா நிரூபண ஸமம்‌ இன்பமாரியிலாராய்ச்சி” என்று உபக்ரமித்த அர்த்தத்தை நிகமிக்கிறார்‌

மா வுருவில் கள்ள வேடம் திருந்து வேத மலமான மானிடம் பாடல் சர்வ வர்ண சூத்ரத்வம் காடு வாழ் சாதியில் கடல் வண்ணன் வேடம் தென்னுரையில் ஹரி கீர்த்தி ஸ்வபசரில் பத்தி பாசனுமும்
அறிவார் ஆரார் அமரர் என்ன வேற (ஏற) அறியாதார் சாதி அந்தணர்கள் ஏலும் தகர விழுவர்
-சூரணை -90-

அதாவது
எம்மா உருவும் வேண்டும் ஆற்றாலாவாய் எழில் ஏறே –திருவாய் -5-8-2-என்கிற படியே எல்லா ரூபமும்
அப்ராக்ருதம் ஆகையாலே ஸ்லாக்யமுமாய் -இச்சா க்ருஹீதமாயுமாய் இருக்கும்-பகவத அவதார விக்ரஹங்களில் வைத்துக் கொண்டு -வேத அப்ராமாண்யத்தை உபபாதித்து –-வைதிக ருசியை குலைக்கைகாக – யதாஹி சோரஸ் சத்தாஹி புத்த – அயோத்யா -109-33-என்கிற படியே
கள்ள வேடத்தைக் கொண்டு போய்ப் புறம் புக்கவாறும் –திருவாய் -5-10-4-என்னும் படி பரிக்ரஹித்த புத்த முனியான விக்ரஹமும் –

எம்மா வுருவும்‌ வேண்டு மாற்றாலாவா யெழிலேறே”’ (திருவா. 5 – 8 – 2) “எவ் வுருவும்‌ மாவுரு’ என்று அவன்‌ பரிக்‌ரஹித்த விக்‌ரஹமெல்லாம்‌ அப்ராக்ருதமா யிருக்குமென்றும்‌, “இச்சா க்‌ருஹீதாபி மதோருதேஹா “” (வி.பு. 6 – 7 – 84) என்று இச்சையாலே பரிக்‌ருஹீதமா யிருக்குமென்றும்‌ சொல்லுகிற விக்‌ரஹங்களில் வைத்துக்கொண்டு “கள்ள வேடத்தைக் கொண்டு போய்ப் புரம் புக்கவாறும்‌”” (திருவா. 3 – 10 – 4) என்று, “யாதா ஹி சோரஸ்ஸ ததா ஹி புத்தா (ரா. ஆ. 109 – 73) என்று வேதத்துக்கு அப்ராமாண்யம்‌ சொல்லுகிற புத்‌த முனியான விக்‌ரஹமும்‌,

எம்மானே! என் வெள்ளை மூர்த்தி! என்னை ஆள்வானே
எம்மா உருவும் வேண்டு மாற்றால் ஆவாய்! எழிலேறே!
செம்மா கமலம் செழுநீர் மிசைக் கண் மலரும் திருக் குடந்தை
அம்மா மலர்க் கண் வளர்கின்றானே! என் நான் செய்கேனே?–5-8-2—எ உரு -மா உரு –எவ்வுரு கொண்டால் ஆர்த்த ரக்ஷணம் தலைக் கட்டும்-அவ்வுருவைக் கொள்ளும் -அது தான் அப்ராக்ருத திவ்ய சமஸ்தானமாய் இருக்கை-இச்சையால் என்னுதல்ஆஸ்ரிதற்கு ஈடாக என்னுதல்-நித்ய ஸூ ரிகள் நடு இருப்பில் காட்டில் ஆஸ்ரித கார்யம் செய்யப் பெறுகையாலே நிரதிசய தீப்தி உக்தனாய் மேனாணித்து இருக்கை –பல் பிறப்பாய் ஓளி வரு முழு நலம்

கள்ள வேடத்தைக் கொண்டு போய்ப் புறம் புக்க வாறும் கலந்த சுரரை
உள்ளம் பேதம் செய்திட்டு உயிருண்ட உபாயங்களும்
வெள்ள நீர்ச் சடையானும் நின்னிடை வேறலாமை விளங்க நின்றதும்
உள்ளமுள் குடைந்து என் உயிரை உருக்கி உண்ணுமே.–5-10-4-யதா ஹி சோரஸ் சததா ஹி புத்த -என்கிறபடியே க்ரித்ரிம வேஷத்தை கொண்டு – வேதைஸ் ச சர்வை ரஹமேவ வேத்ய-என்று வேதார்த்த தத்வ ஞானனானவன் வேத அபிராமாணிக வாதிகள் வேஷத்தை கொள்ளுகை-பாகத்தாலும் அழகிய சந்நிவேசத்தாலும் சென்று புக்க போதே ஆப்தன் என்று விஸ்வஸிக்கும் படி புக்க படியும்
வைதிக ஹிம்சையையும் சாமான்ய ஹிம்சையோபாதி யாக்கப் புகுகிறவன் ஆகையாலே -பசும் புல்லுச் சாவ மிதியாதே கூசி யடியிட்டுப் புக்க படி

பகவத் ஸ்வரூபாதிகளை யாதாவாக பிரதிபாதிக்கையாலே கட்டளைப் பட்டு இருந்த வேதத்தில் –
ந ஸ்மர்தவ்யோ விசேஷண வேத மந்த்ரோப்ய வைஷ்ணவ -என்கிற படியே-ஸ்மரிக்கவும் ஆகாத படி மல அம்சமான –மானிடம் பாடல் என்னாவது–திருவாய் -3-9-3 -என்கிற படி ஷேத்ரஜ்ஞரை பிரசம்சிக்கிற வாக்யங்களும் —

(திருந்து வேதம்‌) ஸகல ஸப்‌தங்களும்‌ ஸத்‌வாரகமாகவும்‌, அத்‌வாரகமாகவும்‌ ஸர்வேஸ்வரனை ப்ரதி பாதிக்கையாலே கட்டளைப் பட்ட வேதத்தில்‌ (மலமான மானிடம்‌ பாடல்‌) *’ஓர்‌ மானிடம்‌ பாடலென்னாவதே” (திருவா. 3 – 9 – 3) என்றும்‌, “ந ஸ்மர்த்தவ்யோ விஸேஷேண வேத மந்த்ரோப்ய வைஷ்ணவ:? ! காவ்யாலாபோபி ஜப்யோஸெள யத்ர ஸங்கீர்த்ய தேச்யுதா ” என்றும்‌ சொல்லுகிறபடியே ஹேயரான க்ஷேத்ரஜ்ஞரை ப்ரஸம்ஸிக்கிற வாக்யங்களும்‌,-

ஒழிவு ஒன்று இலாத பல் ஊழிதோறு ஊழி நிலாவப் போம்
வழியைத் தரும் நங்கள் வானவர் ஈசனை நிற்கப் போய்க்
கழிய மிக நல்ல வான்கவி கொண்டு புலவீர்காள்!
இழியக் கருதி ஓர் மானிடம் பாடல் என்னாவதே?–3-9-3—நின்ற நிலையும் அழியும்படி பார்த்து த்ருஷ்டத்தில் ஸ்வரூப ஹானி -அத்ருஷ்டத்தில் நரகம் அறிவுக்கு பிரயோஜனம் மேல் மேல் என உயர்ந்த தேடுகை அன்றோ –ஷூ த்ர மனுஷ்யரை கவி பாடுகிறது ஏதுக்காக–பகவத் சேஷ பூதராய் இருக்கிற உங்கள் ஸ்வரூபத்துக்கு சேர்ந்ததோ -உங்கள் கவிக்கு சேர்ந்ததோ-பாட்டு உண்கிறவனுக்கு ஒரு நன்மை உண்டாகவோ –

ந சூத்ரா பகவத் பக்தா விப்ரா பாகவதஸ் ஸ்ம்ருதா சர்வ வர்ணேஷு தே சூத்ரா யேஹ்ய பக்தா ஜனார்தனா –பாரதம் ஆஸ்வ -118-32-என்று எல்லா வர்ணங்களிலும் பகவத் பக்தர் அல்லாதார் சூத்ரத்வம் ஆகிற –-பிரமேயத்திலும் -பிரமாணத்திலும் -பிரமாதாக்களிலும் உண்டான த்யாஜ்ய அம்சங்களும்-

(ஸர்வ வர்ண ஸூத்‌ரத்வம்‌) “ந ஸூத்‌ரா பகவத்‌ பக்தா விப்ரா பாகவதாஸ் ஸ்ம்ருதா? | ஸர்வ வர்ணேஷு தே ஸூத்‌ரா யே ஹ்ய பக்தா ஜநார்த்தநே” என்று பகவத்‌ பக்தனல்லாதவன்‌ எல்லா வர்ணங்களிலும்‌ ஸூத்‌ரனென்றும்‌, ப்ரமாண-ப்ரமேய -ப்ரமாதாக்கள்‌ மூவரிலும்‌ த்யாஜ்யரையும்‌ சொல்லி இனி மேல்‌ உபாதேயரையும்‌ சொல்லுகிறது-

காடு வாழ் சாதியும் ஆகப் பெற்றான் -நாச்சியார் -12-8-என்று ஊர் மனையில் வஸியாமல் – பசுக்களுக்கு புல்லும் தண்ணீரும் உள்ள காடுகளில் வர்திக்கையாலே –-காடு வாழ் சாதி -என்கிற கோப ஜாதியில் சஜாதீயனாய் வந்து அவதரித்து நிற்கிற ஸ்ரீ கிருஷ்ணன் உடைய –காலிப் பின்னே வருகின்ற கடல் வண்ணர் வேடத்தை வந்து காணீர் –பெரியாழ்வார் -3-3-1–என்று தாம் அனுபவித்து பிறர்க்கும் அழைத்துக் காட்டும் படி பசு மேய்த்து வருகிற போதை அலங்காரத்தோடு கூடி இருக்கிற விக்கிரஹமும்-

(காடு வாழ் சாதியில்‌ கடல் வண்ணன் வேடம்‌] ““கற்றினம்‌ மேய்க்கிலும்‌ மேய்க்கப்‌ பெற்றான்‌ காடு வாழ்‌ சாதியுமாகப் பெற்றான்‌”” (நா.திரு. 12 – 8) என்று கோபாலனாய்க்‌ கொண்டு காட்டிலே பசுக்களின் பின்னே ”கறையினார்‌” (திருவா. ச – 8 – 4) என்னும் படி பேணாதே திரியச் செய்தேயும்‌ ‘‘கடல் வண்ணன்‌ வேடத்தை வந்து காணீர்‌”” (பெரியா… 3 – 3 – 1) என்னும்படி பிறர்க்கும்‌ அழைத்துக் காட்ட வேண்டும்படி த்ரஷ்டவ்யமான க்ருஷ்ண லிக்ரஹமும்‌,

கற்றினம் மேய்க்கலும் மேக்கப் பெற்றான் காடு வாழ் சாதியுமாகப் பெற்றான்
பற்றி உரலிடை ஆப்புமுண்டான் பாவிகாள் உங்களுக்கு ஏச்சுக் கோலோ
கற்றன பேசி வசவு உணாதே காலிகளுய்ய மழை தடுத்த
கொற்றக் குடையாக வேந்தி நின்ற கோவர்த்தனத்து என்னை யுய்த்திடுமின்–12-8-வானிளவரசாய்-பெரியாழ்வார் -3-6-3- இருக்குமவன் –திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி –திருவாய் -10-3-10-என்கிறபடியே-(தெய்வத்தை காட்டிலும் ஐந்தாம் வேற்றுமை -அதை விட / இரண்டாம் வேற்றுமை அங்கேயும் –டியோ டியோ -சொல்லி -பசு மேய்க்கும் மந்த்ரம் என்பான் -ஹாவு ஹாவு சொல்வது போலே )அது தன்னிலும் ஸ்வ ரஷணத்தில் அந்வயம் அல்லாத கன்றுகளை மேய்க்கையையே மிகவும் பெறாப் பேறு பெற்றானாக நினைத்து இருந்தான் –கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் -திரு நெடும் தாண்டகம் -16–இவனுக்கு ஒரு ஜன்மம் இல்லை காண் என்னும் இழவு தீர பசுக்களுக்கு புல்லும் தண்ணீரும் உள்ள காட்டைத் தேடி-அங்கு தங்கும்படியான ஜன்மமும் ஆகப் பெற்றான் –

நிறையினால் குறைவில்லா நெடும் பணைத் தோள் மடப்பின்னை
பொறையினால் முலை யணைவான் பொரு விடை ஏழு அடர்த்த உகந்த
கறையினார் துவர் உடுக்கைக் கடையாவின் கழி கோல் கை
சறையினார் கவராத தளிர் நிறத்தால் குறைவிலமே –4-8-4—கறை மிக்கு துவரூட்டின -சிவந்த தோலாயிற்று –உடுக்கை -இடையர் காட்டிலே போனால் முன் கிழியாமைக்கு உடுக்கும் உடைத் தோலைச் சொல்லுகிறது – துவர் என்னைச் செய்தே-கறையினார் என்கிறது -காட்டில் பழங்களை அறுத்து இடுகையாலே கறை மிக்கு இருக்கை

சீசீலைக் குதம்பை ஒருகாது ஒரு காது செந்நிறம் மேல் தோன்றிப் பூ
கோலப் பணைக் கச்சம் கூறை உடையும் குளிர் முத்தின் கோடாலாமும்
காலிப் பின்னே வருகின்ற கடல் வண்ணன் வேடத்தை வந்து காணீர்
ஞாலத்து புத்திரனைப் பெற்றார் நங்கைமீர் நானே மற்றாரும் இல்லை – 3-3 1- காலி –என்கிற இது –
ஜாதிப் பேர் ஆகையாலே இவ்விடத்தில் கன்றுகளைச் சொல்லுகிறது – கன்றுகளை வயிறு நிறைய மேய்த்து – அவற்றை முன் நடக்க விட்டு – தான் பின்னே வாரா நிற்க –கடல் போன்ற நிறத்தை உடையவனுடைய அலங்காரத்தை வந்து காணும் கோள்

தென்னுரையில் கேட்டு அறிவது உண்டு -பெரிய திரு மடல் -6-என்கிற படி தஷிண திக் வர்தியானது கொண்டு – தென்னுரை என்று சொல்லப் படுகிற திராவிட பாஷை யான பிரபந்தங்களில் –
ஹரி கீர்த்திம் வினை வான்யத் ப்ராஹ்மணோ நரோத்தம பாஷா காநம் ந கர்த்தவ்யம் -காதவ்யம்-
தஸ்மாத் பாபம் த்வயா க்ருதம்
–ஸ்ரீ மத்ஸ்ய புராணம் – இத்யாதிப் படியே பகவத் பிரதிபாதாக மானவையும்-

(தென்னுரையில்‌ ஹரி கீர்த்தி) த்‌ராவிட பாஷா பரிகல்பிதமான ப்ரபந்தங்களில்‌ வைத்துக் கொண்டு *ஹரி கீர்த்திம்‌ விநைவாந்யத் ‘ ” (மாத்ஸ்யே) இத்யாதிப்படியே பகவத் ப்ரதிபாதக மானவையும்‌ –

மானோக்கின் அன்ன நடையார் அலரேச ஆடவர் மேல் —–38
மன்னு மடலூரார் என்பதோர் வாசகமும்
தென்னுரையில் கேட்டு அறிவது உண்டு அதனை யாம் தெளியோம் ——39
மன்னும் வட நெறியே வேண்டினோம் –மடலூர்வதென்பது நாணத்தை அறவே யொழித்துக் காதலை வெளிப்படையாக்கித் தெருவேற்ப்புறப்பட்டுச் செய்யுங் காரியமாதலால், நாணத்தையே ஸர்வஸ்வமாகக் கொண்ட மாதர்கட்கு இக்காரியம் கூடவே கூடாதென்று தமிழர் மறுத்தனர்.-அந்த ஸித்தாந்தத்தையே “கடலன்ன காமத்தராயினும் மாதர், மடலூரார் மற்றையார்மேல்“ இத்யாதிகளால் பின்புள்ளார் வெளியிட்டனர்.-காதல் கடல்போல் வளர்ந்து கிடந்தாலும் அபவாதத்துக் ஆஸ்பதமான மடலூர்தல் பெண்டுகளுக்கு கூடாதென்பது தமிழர்களின் கொள்கையாயிருந்தாலும் அதனை நான் உசிதமாகக் கொள்ளேனென்கிறார் ஆழ்வார்.-மடலூர்வதற்குக் காமத்தின் மிகையே அதிகாரமாதலால் அப்படிப்பட்ட காம்முள்ளவர்கள் ஆணாயிருந்தாலென்? பெண்ணாயிருந்தாலென்? யாரேனும் மடலூரலாம், ஆசையை வரம்பிட்டுக்காக்க ஆராலும் முடியாது, அரசராணைக்குக் கட்டுப்படுமோ ஆசை, வேலியடைத்தால் நிற்குமோ வேட்கை,-அளவு கடந்த வேட்கையின் காரியமாக விளையக்கடவதான் மடலூருகையை ஆண்கள் தாம் செய்யலாம், பெண்கள் செய்யலாகாதென ஒரு வரம்பு கட்டுவதானது ப்ரேமத்தின் போக்கை அறியாதவர்களுடைய செயலாமத்தனை யென்பது ஆழ்வாருடைய திருவுள்ளம்

ஸ்வபசோபி மஹீபால விஷ்ணு பக்தோ த்விஜாதாக –என்கிற படி ஸ்வபசரில்-பெறற்கு அரிய நின் பாத பத்தி யான பாசனம் –திருச்சந்த -100–என்று ஸ்வ யத்னத்தாலே,-பெறற்கு அரிதாய் உள்ள பகவத் பாத கமல பக்தி ஆகிற தனம் உடையார்களும் ஆகிற –பிரேமயாதி த்ரயத்திலும் உபாதேய அம்சங்களும் ஆன இவ் விபாகம் அறிவார் –நீரார் முகில் வண்ணன் பேரார் ஓதுவார் ஆரார் அமரர்—திருவாய் -10-5-8-என்கிற படியே – ஏதேனும் ஜென்ம வருத்தங்களை உடையேரே ஆகிலும் -ஸூரி சமர் என்னும் படி ஸ்லாக்க்கியராய் –இலங்கு வான் யாவரும் ஏறுவர் சொன்னாலே –திருவாய் -3-8-11-என்கிற படியே
அத்யுஜ்வலமான பரம பதத்தை ப்ராபிக்க —

(ஸ்வபசரில்‌) ஸ்வபரோபி மஹீபால் விஷ்ணு பக்தோ த்விஜாதி க” (பாஞ்ச. என்று ஸ்வபாகரே யாகிலும்‌, (பத்தி பாசனமுமறிவார்‌) “பெறற்கரிய நின்ன பாத பத்தியான பாசனம்‌” (திருச்ச, விரு. 100) என்று சொல்லுகிறபடியே ஸ்வ யத்நத்தாலே பெறுதற்கரிதான பகவச் சரணார விந்தங்களில்‌ பக்தியைத்‌ தங்களுக்கு தநம்‌ என்று அறியுமவர்களுமாகிற ப்ரமாண -ப்ரமேய-ப்ரமாதாக்கள்‌ மூன்றும்‌ -உத்க்ருஷ்ட தமம்‌ என்றும்‌ சொல்லி இந்த உத்க்ருஷ்ட -தமமான ப்ரமாண-ப்ரமேயங்களோடு விகல்பிக்கும்படியான இந்த ப்ரமாதாக்கள் வைபவத்தை (ஆராரமாரென்ன) “நீரார்‌ முகில் வண்ணன்‌ பேராரோதுவார்‌ ஆராரமரரே”” (திருவா. 10 – 5 – 8) என்று விலக்ஷண விக்‌ரஹ யுக்தனான ஸர்வேஸ்வரனுடைய திரு நாமங்களை அநுஸந்திக்க வல்லவர்கள்‌ ஏதேனுமொரு ஐந்ம வ்ருத்தங்களை உடையரே யாகிலும்‌ அவர்கள்‌ நித்ய ஸூரிகள்‌ என்றும்‌, (ஏற) ”இலங்குவான்‌ யாவரூமேறுவர்‌ சொன்னாலே”” (திருவா. 3 – 8 – 11) என்று பகவத விஷயத்தில்‌ அந்வயித்தவர்கள்‌ ஆரேனுமாகிலும்‌ தேஸ விஸேஷ ப்ராப்தி பண்ணுவர்கள்‌ என்றும்‌

பிறப்பினோடு பேர் இடர் சுழிக்கண் நின்று நீங்கும் அஃது
இறப்ப வைத்த  ஞான நீசரைக் கரைக்கொடு ஏற்றமா
பெறற்கு அரிய நின்ன பாத பத்தியான பாசனம்
பெறற்கு அரிய மாயனே யெனக்கு நல்க வேண்டுமே -100-பெருதருக்கு அரிய உன் திருவடிகளை விஷயமாக உடைத்தான பரம பக்தி யாகிற பாஜனத்தை-ப்ராப்யன் ஆனவனை காட்டில் தத் விஷய பக்தி துர்லபம் இறே–யா ப்ரீதி ரவிவேகா நாம் -என்றும் – முக்திஸ் தஸ்ய க்ரேஸ்திதா -என்றும் –
சமஸ்த ஜகதாம் மூலே யஸ்ய பக்திஸ் ஸ்திராத்வயி -என்றும் சொல்லக் கடவது இறே-பாசனம் -மரக்கலம்-அத்தாலே தனத்தை லஷிக்கிறது -தனமாய தானே கைகூடும் -என்னக் கடவது இறே-யாமேவை ஷவ்ர்ணு தேதே நலப்யே -என்றும் –ஹ்ர்தாம நீ ஷா மனஸா பிக்ல்ப்த –என்றும் –
வேதாந்தங்கள் உன் திருவடிகளைப் பெறுகைக்கு சாதனமான பக்தியை உபதேசித்து-வைத்தது இறே -அந்த பக்தியை –பெறற்கு அரிய மாயனே –உன் கேவல க்ருபை ஒழிய வேறு ஒரு வழியாலே உன்னைப் பெற இருப்பார்க்கு இருப்பார்க்கு-சித்தியாத ஆச்சர்ய பூதனே –லோகத்திலே சாத்யங்களுக்கு  எல்லாம் சாதனம் உண்டாய் இருக்க அநந்ய சாத்யனான-ஆச்சர்ய பூதனே-எனக்கு நல்க வேண்டுமே – பெற வேண்டுமவை எல்லாவற்றுக்கும் உன் கிருபையை  அல்லாது அறியாத எனக்கு-அந்த பக்தியை தேவரீர் தந்து அருள வேணும் பிரயோஜநாந்த பரருக்கு மோஷ ருசியைப் பிறப்பித்து -தத் சாதனமான பக்தியைக் கொடுத்தருளக் கடவ தேவரீர் – அநந்ய ப்ரயோஜனனாய் – அநந்ய சாதனனாய் –இருந்துள்ள எனக்கு த்வத் அனுபவ பரிகரமான அந்த பக்தியை தந்து அருளுகை தேவரீருக்கு அபிமதம் அன்றோ -அத்தை தந்து அருள வேணும் -என்றது ஆய்த்து –

சாரா ஏதங்கள் நீரார் முகில் வண்ணன்
பேர் ஆர் ஓதுவார் ஆரார் அமரரே
–10-5-8–நீராலே பூர்ணமான மேகம் போலே இருக்கிற நிறத்தை யுடையவன் -அவ்வடிவைக் காணும் தனையும் இ றே உபதேசிக்க வேண்டுவது – பேர் ஆர் ஓதுவார் -அவன் திரு நாமத்தை நிரந்தரமாகச் சொல்லுவார் யாவர் சிலர்-ஆரார் அமரரே–அவர்கள் ஏதேனும் ஜென்ம வ்ருத்தங்களை யுடையரே யாகிலும் அவர்கள் இருந்த படியே நித்ய ஸூரிகளோடு ஒப்பர்கள்--இத்தால் ஆஸ்ரயிப்பார்க்கு ருசி பிறக்கைக்காக அவர்கள் ஏற்றம் அருளிச் செய்கிறார் –

புலம்பு சீர்ப் பூமி யளந்த பெருமானை நலங்கொள் சீர் நன் குருகூர்ச் சடகோபன் சொல்
வலங்கொண்ட வாயிரத்துள் இவையுமோர் பத்து இலங்குவான் யாவரும் ஏறுவர் சொன்னாலே –3-8-11-இருந்ததே குடியாக ஏத்தும் படியான குணங்களை உடையனாய் தன் விபூதியை அளந்து கொள்ளுகையினாலே ஸ்வாமி யானவனை யாய்த்து கவி பாடுகிறது-இதில் சொன்ன பெரு விடாயை உடைய ஆழ்வார் ஸ்ரீ ஸூக்திகள் ப்ரதிபாத்யனை விளாக் குலை கொண்டு இருக்கும் -என்னுதல்
ப்ரதிபாதன சாமர்த்யார்த்த்தை உடைய ஆயிரம் என்னுதல் அத்விதீயமான இப்பத்தை சொன்னால் இன்னார் இனையார் என்னாதே பகவத் அனுபவத்துக்கு விச்சேதம் இல்லாத வை லக்ஷண்யத்தை உடைய பரமபதத்தை பிராபிக்க பெறுவர் 

இப் பிரேமயாதி த்ரயத்திலும் ,கீழ் சொன்ன வாசி அறியாதாராய் கொண்டு -பாகவத ஜென்ம நிரூபணம் பண்ணுவார் –அமர வோரங்க மாறும்—திருமாலை -43-என்கிற பாட்டில் சாங்கமாக சகல வேதங்களையும் அத்யயனம் பண்ணி ததீய ஸ்ரேஷ்டருமாய் -உத்க்ருஷ்ட ஜன்மாக்க்களுமாய் இருந்தார் ஆகிலும் தேவரீர் திரு அடிகளின் சம்பத்- ஏக நிரூபணியரான ஸ்ரீ வைஷ்ணவர்களை – ஜென்மாதிகளை இட்டு நிந்திப்பர் ஆகில் காலாந்திர தேசாந்தர அன்றிக்கே அப்போதே அவ்விடம் தன்னிலே அவர்கள் தங்கள் சண்டாளர்கள் ஆவர்கள் என்கிற படி உத்க்ருஷ்ட ஜென்மாக்களே ஆகிலும் கர்ம சண்டாளராய் இனி ஒரு காலமும் கரை ஏற யோக்யதை இல்லை என்னும் படி அதபதிப்பர்கள் என்கை-அநாசாரான் துராசாரான் அஜ்ஞாத்ரூந் ஹீன ஜென்மன மத் பக்தான் ஸ்ரோத்ரியோ நிந்தன் சத்யஸ் சண்டாளதாம் வ்ரஜேத்–ப்ரஹ்மாண்ட புராணம் -என்னக் கடவதிறே-

இப்படி ஸர்வோத்க்ருஷ்டராகச்‌ சொல்லா நிற்க (அறியதார்‌) ஜந்மாதிகளால்‌ வந்த அஹங்காரத்தாலே மந்த மதிகளாய்க் கொண்டு அவர்கள் வைபவத்தை அறியாதே ஜந்ம நிரூபணம்‌ பண்ணுமவர்கள்‌ (சாதி யந்தணர்களேலும்‌ தகர விழுவர்‌) ‘அமரவோரங்கமாறும்‌”’ (திருமாலை 43) என்கிற பாட்டின் படியே ““அநாசாராந்‌ துராசாராந் அஜ்ஞாத்ரூதந் ஹீந ஜந்மந? । மத்‌ பக்தாந்‌ ஸ்ரோத்ரியோ நிந்தந்‌ ஸத்‌யஸ் சண்டாளதாம்‌ வ்ரஜேத்‌”” என்றும்‌ சொல்லுகிறபடியே உத்க்ருஷ்ட ஜந்மத்திலே பிறந்து அங்க ஸஹிதமான நாலு வேதங்களையும்‌ அதிகரித்து பகவத்‌ பக்தரா யிருந்தார்களே யாகிலும்‌ ஜந்மாதிகளால்‌ குறைய நின்று பகவதீயரா யிருப்பாருடைய ஜந்மத்தை காதா சித்கமாக வாகிலும்‌ நிரூபித்‌தார்களாகில்‌ அந் நிலையிலே அவர்கள்‌ சண்டாளராவர்‌ என்கையாலே பின்னை ஒரு காலும்‌ உஜ்ஜிவந மில்லாதபடி அத, பதிப்பர்க ளென்கிறார்‌. “ஸூத்‌ரம்‌ வா பகவத்‌ பக்தம்‌ நிஷாதம்‌ ஸ்வபசம்‌ ததா | ஈக்ஷதே ஜாதி ஸாமாந்யாத்‌ ஸ யாதி நரகம்‌ நர- என்றும்‌, “ப்ரத்யக்ஷிதாத்மநாதாநாம்‌ நைஷாம்‌ சிந்த்யம்‌ குலாதிகம்‌” என்றும்‌ சொல்லா நின்றதிறே –

அமர ஓர் அங்கம் ஆறும் வேதம் ஓர் நான்கும் ஓதித்
தமர்களில் தலைவராய சாதி அந்தணர்கள் ஏலும்
நுமர்களைப் பழிப்பர் ஆகில் நொடிப்பது ஓர் அளவில் ஆங்கே
அவர்கள் தாம் புலையர் போலும் அரங்க மா நகர் உளானே –43-அத்விதீயமான ஷட் அங்கங்களையும் அழகிதாக பாடங்களையும் தரித்து அர்த்தத்தையும் தரிக்குமவர்கள் ஆகை –அங்கங்களுக்கு அத்விதீயம் ஆவது ஓர் அங்கத்தில் ஜ்ஞானம் குறைவு அற உண்டானால் லோகத்தார் அவனை சர்வஞ்ஞன் என்று சொல்லும்படி இருக்கை – சீஷாயாம் வர்ண சிஷா -இத்யாதி –ஜாதி சண்டாளனுக்கு ஒரு காலத்திலே வைஷ்ணவன் ஆகைக்கு அதிகாரம் உண்டு – இவன் உயர வேறித் தானே விழுந்தவன் ஆகையாலும் பாகவத அபசாரம் ஆகிற மகா பாபத்தை பண்ணினவன் ஆகையாலும் அவனிலும் தண்ணியன் கர்ம சண்டாளன் இறே –பெறுகைக்கு அவர்கள் சம்பந்தமே அமைகிறாப் போலே
இழக்கைக்கும் அபசாரமே அமையும்

ஆக
சூரணை 75–வீட்டின்ப இத்யாதி வாக்கியம் தொடங்கி, சூரணை -84 -நிமக்னரை உயர்த்த தாழ இழிந்த்தார் -என்னும் அளவும் -ஆழ்வாருடைய வைபவத்தை பிரதிபாதித்து – தத் ஸ்தாபன அர்த்தமாக -மிலேசனும் பக்தன் ஆனால் -என்று தொடங்கி – மேல் எல்லாம் சாமான்யேன பாகவத வைபவத்தை விஸ்தரேண பிரகாசிப்பித்தது -உபக்ரம வாக்கியத்தில் போலே – பிரமாண பிரமேயங்கள் உடனே சேர்த்து பிரமாத்ரு வைபவத்தை நிகமித்தார் ஆய்த்து –

இப்படி பாகவத சாமான்ய ப்ரயுக்த வைபவம் மாதரம் அன்றிக்கே ,-ஜனக தசரத -சூரணை -82 -இத்யாதி வாக்கியம் தொடக்கமாக மூன்று வாக்யத்தாலே -கீழ் சொன்ன வைபவ விசேஷதய உதகமான பிரமாணம் ஏது என்னும் ஆ காங்க்ஷையிலே அருளி செய்கிறார் மேல் –இப்படி பாகவத ஸாமாந்யத்தாலே ஆழ்வாருடைய உத்பத்தி நிரூபிக்கலாகாது என்கிற மாத்ர மன்றிக்கே, ஆழ்வாருடைய அவதாரம்‌ வ்யாஸ ஸூகாதி களாலும்‌ ப்ரகாஸிப்பிக்கப்‌ பட்ட தென்கிறார்‌ மேல்‌.-

தமிழ் மா முனி திக்கு சரண்யம் என்றவர்களாலே க்வசித் க்வசித் என்று இவர் ஆவிர்பாவம் கலியும் கெடும் போலே ஸூசிதம்-சூரணை-91-

தமிழ் மா முனி திக்கு சரண்யம் என்றவர்களாலே–-அதாவது-தஷிண திக் க்ருதா யேன சரண்யா புண்ய கர்மண –குருகா மஹாத்ம்யம் –என்று – வண் தமிழ் மா முனி –என்கிற படியே -திராவிட சாஸ்திர பிரவர்தகரான அகஸ்தியன் இருக்கிற திக்கு சர்வருக்கும் புகல் இடம் என்றே மக ரிஷிகளால் –
இப்போது இது சொல்லிற்று – வைதிகரான ருஷிகள்-திராவிட பிரபந்த வக்தாவான இவரை இப்படி
பஹுமதி பண்ணி சொல்லக் கூடுமோ என்று சங்கிப்பார்க்கு ஒரு திராவிட ஜ்ஞானாலே தஷிண திக்குக்கு நன்மை சொன்னவர்கள் திராவிட பிரபந்த முகேன – லோஹ உஜ்ஜீவகரரான இவரையும் இப்படி பஹுமானம் பண்ணிச் சொல்லக் குறை இல்லை என்று தோற்றுகைக்காக –க்வசித் க்வசித் என்று இவர் ஆவிர்பாவம் —அதாவது –
க்ருதா திஷு நரா ராஜன் கலா விச்சந்தி சம்பவம் –
கலவ் கலு பவிஷ்யந்தி நாராயணா பராயணா
க்வசித் க்வசின் மஹா ராஜ த்ராவிடேஷு ச பூரிச
தாமரபரணி நதி யத்ர கிருதமாலா பயஸ்விநீ
காவேரீச மஹாபாகா ப்ரதீசீச மஹாநதி
யேபிபந்தி ஜலம் தாஸாம் மனுஜா மனுஜேச்வர-
தேஷாம் நாராயண பக்திர் பூயஸீ நிருபத்ரவா
–ஸ்ரீ பாகவதம் -11-5-38 /39–என்று
ஜ்ஞாதாக்கள் வந்து ஆவிர்பவிக்கும் ஸ்தல விசேஷங்களைத் தத்தம் நதீ விசேஷங்களாலே பிரகாசிப்பித்தது அந்த நதி விசேஷ ஜலத்தை பானம் பண்ணுகிறவர்களுக்கு பகவத் பக்தி அதிசயிக்கும் படியையும் சொல்லுகிற அளவில் – பிரதமத்தில் –தாமர பரணி நதீ எத்ர – என்று இவர் ஆவிர்பாவ ஸ்தலத்தை சொல்லுகையாலே – இவ் ஆழ்வார் உடைய ஆவிர்பாவமானது –கலியும் கெடும் கண்டு கொண்மின் -திருவாய் -5-2-1-இவர் தாம் மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் ஆகையாலே –
திரு மங்கை ஆழ்வார் உடையவர் போல்வார் அவதரித்து -கலி யுக ஸ்வாபம் கழியும் என்றும் –
மேல் வரும் அம்சத்தை தர்சித்து அருளி செய்தாற் போலே – திரிகால ஜ்ஞரான ஸ்ரீ ஸூகாதிகளால் ஸூசிக்கப் பட்டது
என்கை–க்ரூரே கலியுகே ப்ராப்தே நாஸ்திகை: கலுஷீக்ருதே விஷ்ணோர் அம்சாம்ச சம்பூதே வேத வேதார்த்த தத்வ வித் ஸ்தோத்ரம் வேத மயம் கர்த்தும் த்ராவிட்யாபிச பாஷயா
ஜனிஷ்யதி சதாம் ஸ்ரேஷ்டா லோகானாம் ஹிதகாம்யயா –குருகா மஹாத்ம்யம்
-இத்யாதி
வசனங்களும் இவர் ஆவிர்பாவ ஸூசகங்கள் ஆகையால் இவ் இடத்தில் விவஷிதங்கள் –கேவல ஜன்ம வாசக சப்தங்கள் ஒன்றை சொல்லாதே அவதார சப்த பரியாயமான ஆவிர்பாவ சப்தம் சொல்லிற்று
இவர் பிறப்பும் ஈஸ்வரன் பிறப்போபாதி பரார்த்தம் என்று தோற்றுகைக்காக – இத்தால் இவர் ஒரு அவதார விசேஷம் என்றது ஆயிற்று –

“வண்டமிழ்‌ மாமுனி”’ (பெருமா.தி. 10 – 5) தக்ஷிணாதிக்‌ க்ருதா யேந ஸரண்யா புண்ய கர்மணா”’ (குருகா மாஹாத்ம்யம்‌) என்று த்ராவிட ஸாஸ்த்ர ப்ரவர்த்தகனான அகஸ்த்யன்‌ நின்ற திக்கு ஸர்வர்க்கும்‌ புகலிடம்‌ என்ற வ்யாஸ ஸூகாதிகளாலே (க்வசித்‌ க்வசித்‌ என்று இவர்‌ ஆவிர்பாவம்‌) *’கலெள கலு பவிஷ்யந்தி நாராயண பராயணா: | க்வசித் கவசிந் மஹா பாகா த்‌ராவிடேஷு ச பூயாஸ ? தாம்ர பர்ணீ நதீ யத்ர க்ருதமாலா பயஸ்விநீ । காவேரி ச மஹா பாகா ப்ரதீசீ ச மஹாநதீ, । யே பிபந்தி ஜலம்‌ தாஸாம்‌ மநுஜா மநுஜேஸ்வர ! தேஷாம்‌ நாராயணே பக்திர் பூயஸீ நிருபத்‌ரவா”’ (வி.பு.) என்றும்‌,
“க்ரூரே கலியுகே, ப்ராப்தே நாஸ்திகைச கலுஷீக்ருதே ॥ விஷ்ணோரம்ஸாம் ஸ ஸம்பூதோ வேத வேதார்த்த ஸாரவித்‌ | ஸ்தோத்ரம்‌ வேத மயம்‌ கர்த்தும்‌ த்‌ராவிட்‌யா ஸ ச பாஷயா ஜநிஷ்யதி ஸதாம்‌ ஸ்ரேஷ்டோ லோகாநாம்‌ ஹித காம்யயா ! கஸ்சிந் மநுஷ்ய ரூபேண க்ருபயா தத்ர வை முநி? । ப்ரயாஸ்யதி புநஸ்ஸோபி ஸாயுஜ்யம்‌ பரமாத்மநா அத்‌ யேதவ்யம்‌ த்‌விஜஸ் ஸ்ரேஷ்டைர் வேத ரூபமிதம்‌ க்ருதம்‌ ! ஸ்த்ரீபிஸ் , ஸூத்‌ரா திபிஸ் சைவ தேஷாம்‌ முக்தி? கரே ஸ்திதா’” (குருகாமா.) என்றும்‌, ““கலெள புந பாபரதாபி பூதே ஸ உத்‌ பபூ வாஸ்ரித வத்ஸலத்வாத்‌ ! பக்தாத்மநா ஸர்வ ஜநாந்‌ ஸு கோப்தும்‌ விஸ்வாதி கோ விஸ்வ மயோ ஹி விஷ்ணு?” என்றும்‌ இவ் வாழ்வாருடைய ஆவிர்பாவம்‌ கர்ம மூலமன்றிக்கே பகவதவதாரம் போலே ஜகத்‌ ரக்ஷணார்த்தமாக பகவதிச்சையாலே உண்டான தாகையாலே ஆவிர்பாவம்‌ என்கிறது –அந்த ஆவிர்பாவம் ““கலியும்‌ கெடும்‌”” (திருவா. 5 – 2 – 1) என்று இவர் தாம்‌ திருமங்கையாழ்வார்‌, உடையவர் போல்வார்‌ வந்துதித்து கலியுக, ஸ்வபாவம்‌ கெடும்‌ என்று அருளிச் செய்தாப் போலே அவர்களாலே ஸசிப்பிக்கப்பட்ட தென்கிறார் –

வலி வணக்கு வரை நெடும் தோள் விராதை கொன்று வண் தமிழ் மா முனி கொடுத்த வரி வில் வாங்கி
கலை வணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கி கரனோடு தூடணன் தன் உயிர் ரை வாங்கி
சிலை வணக்கி மான் மறிய வெய்தான் தன்னை தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
தலை வணக்கி கை கூப்பி ஏத்த வல்லார் திரிதலால் தவமுடைத்து தரணி தானே —10-5–எதிரிகள் வலியைத் தோற்பிக்கக் கடவதாய்-மலை போலே திண்ணியதான தோள்களையும் உடைய
விராதனைக் கொன்று-ஸ்ரீ அகஸ்த்யன் கொடுத்த தர்ச நீயமான வில்லை வாங்கி-

பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை
கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்.–5-2-1—கர்மம் போகையால் கர்ம அநு குணமாக அனுபவிப்பிக்கும் நரகமும் கோப்புக் குலைந்து கட்டு அழிந்து போயிற்று –-சிறை கிடப்பார் இல்லாமையால் சிறைக் கூடம் பேணா வேண்டா விறே – கர்மமும் கர்ம அனுபவ ஸ்தானமும் போகையாலே-அதுக்கு நிர்வாஹகானான யமனுக்கு இந்த சம்சாரத்தில் சாத்தியம் ஒன்றும் இல்லாத படி யாயிற்று –நமன் தமரால் ஆராய பட்டு அறியார் -ஸ்வ புருஷ மபிவீஷ்ய பாச ஹஸ்தம் –அவன் முக்த ப்ராப்ய பூமியிலே ஆராயில் ஆராயும் இத்தனை -இங்கு ஓர் அவகாசமும் இல்லை என்கை-அபாபனான தர்ம புத்திரனுக்கு ஒரு பாப லேசத்தாலே நன்றாக தர்சனம் பண்ண வேண்டிற்று இறே -அதுவும் இல்லை இறே இவர்களுக்கு -அதுக்கு எல்லாம் அடியான கால தோஷமும் போயிற்றே -கலிக்கு அடைத்த காலமாய் இருக்க போகை யாவது என் என்னில் –அநுபூத அர்த்தத்திலும் சம்சயம் உண்டோ –இவை அடங்க போகைக்கு அடி என் என்ன –பாகவத சஞ்சாரம் இல்லாமையினாலே கால தோஷம் உண்டாகிறது –அவர்கள் சஞ்சாரம் உண்டாகையாலே கலி துர்லபம் யாயிற்று-பூதங்கள் என்கிறது –பூ சத்தாயாம்-என்று தாது வாகையாலே அவன் சத்தத்தையே சத்தையாய் அறுகையாலே-அவன் வடிவு அழகை அனுபவித்து -அத்தாலே லப்த சத்தாகராய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் –

இப்படி அவதரித்த இவர் தாம் யார் என்னும் ஆ காங்க்ஷையிலே பேர் அளவு உடையாரும் – இவரை இன்னார் என்று அளவிடாமை – அதிசங்கை பண்ணும் படியை அருளிச் செய்கிறார் மேல் –இப்படி அருளிச் செய்கிற இவருடைய அவதார வைபவத்தைப் பார்த்து பகவதவதாரங்களில்‌ ஸ்வருபேண அவதாரமோ? ஆவேஸாவதாரமோ? நித்யரோ? முக்தரோ? ஸித்‌தரோ? தம்முடைய ஜந்மாந்தர ஸஹஸ்ர புண்ய ஸஞ்சயங்களாலே வந்தவரோ? ஈஸ்வரனுடைய பாக்‌ய பலத்தாலே வந்தவரோ? என்று அதி ஸங்கிப்பர்கள்‌ என்கிறார்‌-

அத்ரி ஜமதக்னி பங்கிதிரத வஸு நந்த ஸூனுவானுடைய யுக வர்ண க்ரம அவதாரமோ ? வ்யாசாதிவத் ஆவேசமோ ? மூதுவர் கரை கண்டோர் சீரியரில் ஒருவரோ ? முன்னம் நோற்ற அனந்தன் மேல் புண்ணியங்கள் பலித்தவரோ ? என்று சங்கிப்பார்கள் –சூரணை -92-

(அத்ரி ஸூனு -தத்தாத்திரேயன் -அந்தணர் -கிருதயுகம் -ஜமதக்கினி ஸூனு -பரசு ராமன் -த்ரேதா யுகம் – பங்கிதிரத ஸூனு -சக்கரவர்த்தி திருமகன் -த்ரேதா யுகம் -க்ஷத்ரியர் -பங்க்தி -தச-வஸூ நந்த ஸூனு -துவாபர யுகம்-வைசிய குலம் -மூத்தவர் -நித்ய ஸூரிகள் -கரை கண்டோர் -முக்தர் -சீரியர் -ஸ்வேதத் தீவு வாசிகள் )அதாவது-கிருத யுகத்தில் அத்ரியும் ஜமதக்னியும் ஆகிய ப்ராஹ்மண உத்தமர்களுக்கு
பிள்ளையாய்க் கொண்டு -தத்தாரேயனும் பரசு ராமனுமாய் – த்ரேதா யுகத்தில் ஷத்ரியனானான தசரத சக்கரவர்த்திக்குப் பிள்ளையாய் – த்வாபர யுகத்தில் யயாதி சாபத்தாலே அபிஷேக பிராப்தி அற்ற யது குலோத்பவர் ஆகையாலே ஷத்ரியரில் தண்ணியராய் -வைஸ்ய பிராயராய் இருக்கிற வஸு தேவருக்கும் – கிருஷி கோரஷ வாணிஜ்யம் வைஸ்யம் கர்ம ஸ்வ பாவஜம்–ஸ்ரீ கீதை -18-44- –
( பயிர் செய்தல் -பசுக்களைக் காத்தல் -வாணிகம் இவை வைச்யனுக்கு இயல்பான தொழில்கள் ) என்கிற படி – கோ ரஷணாதி தர்மத்தை உடைய சாஷாத் வைச்யரான ஸ்ரீ நந்தகோபர்க்கும் புத்ரனாய்-
இப்படி கிருதாதி யுக தர்மத்தில் ப்ராஹ்மணாதி வர்ண க்ரமேண அவதரித்து வந்த
சர்வேஸ்வரன் சதுர்தமான கலி யுகத்தில் சதுர்த்த வர்ணத்திலே வந்து அவதரித்த படியோ என்கை –பூர்வ யுக த்ரயத்திலும் -அடைவே வர்ண த்ரயத்திலும் -அவதரித்து வருகையாலும்
கலவ் புன :பாபரதா பிபூதே ச உத்ப பூவ ஆஸ்ரித வத்சலத்வாத் பக்தாத்மனா சர்வ ஜனான் ஸூகோப்தும் விச்வாதி கோ விச்வ மயோஹி விஷ்ணு -என்று கலி யுகத்தில் சர்வேஸ்வரன் பக்த ரூபேண அவதரித்தான் என்று ருஷிகள் சொல்லுகையாலும் இவர் வைபவம் கண்டவர்களுக்கு இப்படி சங்கிக்க யோக்யதை உண்டு இறே–வ்யாசாதி வத் ஆவேசமோ -அதாவது –-கிருஷ்ண த்வைபாயனம் வியாசம் வித்தி நாராயணம் ப்ரபும்–ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-4-5- -என்றும் ,-சோயம் நாராயணஸ் சாஷாத் வியாச ரூபீ மஹாமுனி–பாரதம் – –என்றும் சொல்லுகிற படி வேதங்களை வ்யசிக்கை முதலான கார்யங்களை நிர்வகிக்கைக்காக வ்யாசாதிகள் பக்கல் ஆவேசித்தால் போலே – இவரைக் கொண்டு திராவிட வேதத்தை பிரவர்த்திப்பைக்காக – இவர் பக்கல் ஆவேசித்தானானோ என்கை-இவரைக் கொண்டு லோகத்தை திருத்துகைக்காக இவர் பக்கலிலே –ஆவேசித்து நிற்கவும் கூடும் ஆகையாலே
இப்படியும் சங்கிக்கலாம் இறே–மூதுவர் கரை கண்டோர் சீரியரில் ஒருவரோ-அதாவது – விண்ணாட்டவர் மூதுவர்–திருவிருத்தம் -2- -என்று பரம பதத்துக்கு நிலத் தாளிகளான
நித்ய ஸூரிகளிலே இவ் விபூதியை திருத்துகைக்காக ஈஸ்வர ந்யோகத்தாலே அவதரித்தார் ஒருவரோ ?-அன்றிக்கே –கலக்கமில்லா நல் தவ முனிவர் கரை கண்டோர்–திருவாய் -8-3-10- -என்று சம்சாரத்தை கடந்து அக்கரைப் பட்டு இருக்கும் முக்தரில் சம்சாரிகளைத் திருத்துகைக்காக பகவத் நிதேசத்தால் ,அவதரித்தார் ஒருவரோ ?அன்றிக்கே –முக்தானாம் லஷணம் ஹ்யதேத் ஸ்வேத த்வீபநி வாசினாம் –பாரதம் -சாந்தி பர்வம் – என்கிற படியே-முக்த ப்ராயராய் –பாற் கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும் சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியர் -திருவிருத்தம் –79-என்கிற ஸ்வேத தீப வாசிகளிலே இவ் அருகு உள்ளாரை திருத்துகைக்காக ஈஸ்வர இச்சையாலே அவதரித்தார் ஒருவரோ என்கை -இவருடைய வைபவம் பார்த்தால் ,எல்லார் படியும் சொல்லலாம் படி இருக்கையாலே – இப்படியும் தனித் தனியே சங்கிப்பார்க்கு சங்கிக்கலாம் இறே —பின்னை கொல் நில மா மகள் கொல் திரு மகள் கொல் —என்கிற படியே பிராட்டிமாரோடு சேர்த்து பார்க்கும் போதும் -தனித் தனியே சங்கிக்கலாம் படி இறே இருப்பது — மற்று உள்ள ததீயர் உடன் பின்னை சொல்ல வேண்டா இறேமுன்னம் நோற்ற அநந்தன் மேல் புண்ணியங்கள் பலித்தவரோ –(முன்னம் நோற்ற புண்ணியங்கள் பலித்தவரோ -என்றும் –அநந்தன் மேல் புண்ணியம் பலித்தவரோ -என்றும் தனித்தனியே கூட்டிப் பொருள் )அதாவது –கீழ் சொன்னவர்கள் ஒருவரும் அன்றிக்கே சம்சாரிகள் தன்னிலே –
முன்னம் நோற்ற விதி கொலோ —திருவாய் -6-5-7-என்கிறபடியே ஜன்மாந்திர சகஸ்ர சஞ்சிதமான
தன்னுடைய ஸூஹ்ருத பலமாக கொண்டு இப்படி திருந்தினார் ஒருவரோ ?
அன்றிக்கே –அநந்தன் மேல் கிடந்த எம் புண்ணியா -திருச்சந்த -45-என்று நிர்ஹேதுக கடாஷ விசேஷத்தாலே – நித்ய சம்சாரியை நித்ய ஸூரி கல்பம் ஆக்க வல்ல அநந்த சாயியான சநாதன புண்யம் – முழு நோக்காகாப் பலித்து இப்படி திருந்தினார் ஒருவரோ சங்கிப்பார்கள் –அதாவது –
இப்படி கீழ் சொன்ன வகைகளால் இவரை இன்னார் என்று நிச்சயிக்க மாட்டாமல் பேரளவு உடையாரும் சங்கியா நிற்ப்பார்கள் என்ற படி –

க்ருத யுகத்திலே அத்ரி ஜமதக்‌நிகள் பக்கலிலே தத்தாத்ரேயராயும்‌, பரஸூராமனாயும்‌-த்ரேதா யுகத்திலே ஷத்ரியனான தஸரத சக்ரவர்த்தி பக்கலிலே வந்தவதரித்தும்‌-த்‌வாபர- யுகத்திலே க்ஷத்ரியரில்‌ தண்ணியராகையாலே வைஸ்ய ப்ராயரான வஸுதேவ ஸூநுவாயும்‌, ‘“க்ருஷி கோரக்ஷ வாணிஜ்யம்‌ வைஸ்யம்‌ கர்ம ஸ்வபாவஜம்‌” (கீ. 18 – 44) என்று கோ ரக்ஷண தர்மத்தை உடையராகையாலே வைஸ்யரான ஸ்ரீநந்தகோபர்க்குப்‌ புத்ரராயும்‌, யுக க்ரமத்திலும்‌ அடைவே வர்ண த்ரயத்திலே வந்து அவதரித்துப் போந்த ஸர்வேஸ்வரன்‌ கலியுகத்திலே நாலாம்‌ வர்ணத்திலே ஆழ்வாராய்த்‌ திருவவதரித்தானோ என்றும்‌,-““க்ருஷ்ண த்‌வைபாயநம்‌ வ்யாஸம்‌ வித்தி, நாராயணம்‌ ப்ரபும்‌” (விபு. 3 – 4-5) என்கிறபடியே வேதங்களை வ்யஸிக்கைக்காக வ்யாஸாதிகள் போல்‌ வந்தவதரித்தானோ ? என்றும்‌, ”கரை கண்டோர்‌”” (திருவா. 8 – 3 – 10)என்று ஸம்ஸாரத்தைக்‌ கரை கண்ட முக்தரிலே ஒருவர்‌ அப்படியே அவதரித்தாரோ? ““பாம்பணை மேல்‌ பன்ளி கொண்டருளும்‌ சீதனையே தொழுவார்‌ விண்ணுளாரிலும்‌ சீரியரே” (திருவிரு. 79) என்றும்‌, .““முக்தாநாம்‌ லக்ஷணம்‌ ஹ்யேதச்ச்‌ வேத த்‌வீப நிவாஸிநாம்‌?” (பர. ரா. 337 – 40) என்றும்‌ நித்ய முக்தரோடொக்கச்‌ சொல்லலாம்படி இருக்கிற பவேதத்‌,வீபவாஸிகளான ஸித்‌தரிலே ஒருவரோ? “முன்னம்‌ நோற்ற விதி கொலோ” (திருவா. 6 – 5 – 7) என்கிற படியே ஜந்மாந்தர ஸஞ்சிதமான தம்முடைய பாக்‌யத்தாலே பிறந்தவரோ? “அனந்தன்‌ மேல்‌ கிடந்த வெம் புண்ணியா?” (திருச்ச. 45) என்று அநந்தஸாயியான ஸர்வேஸ்வரனுடைய பாக்‌யத்தாலே பிறந்தவரோ? என்று சங்கிப்பர்கள்‌ என்கிறார் –

க்ருஷிகௌரக்ஷ்யவாணிஜ்யம் வைஸ்யகர்ம ஸ்வபாவஜம்
பரிசர்யாத்மகம் கர்ம ஸூத்ரஸ்யாபி ஸ்வபாவஜம்
–18-44-உழவு, பசுக்காத்தல், வணிகம் இவை இயற்கையிலே பிறக்கும் வைசியக் கர்மங்களாம். தொண்டு புரிதல் சூத்திரனுக்கு அவனியற்கையாய் ஏற்பட்ட தொழில்.

கலக்கமில்லா நல் தவ முனிவர் கரை கண்டோர்
துளக்கமில்லா வானவர் எல்லாம் தொழுவார்கள்
மலக்கமெய்த மா கடல் தன்னைக் கடைந்தானை
உலக்க நாம் புகழ் கிற்பது என் செய்வதுரையீரே–8-3-10–தங்கள் ஞானத்துக்கு விஷயங்களால் கலக்கம் இன்றிக்கே மஹா தபஸ் ஸூ க்களை யுடைய மனன சீலரான சனகாதிகள்-கரை கண்டோர்-முக்தர் –
துளக்கமில்லா வானவர்-முதலிலே சம்சார ஸ்பர்ஸ கந்தம் இல்லாத நித்ய ஸூ ரிகள் —துளக்கம் –சலனம் -அதாகிறது -சங்கோசம் –எல்லாம் தொழுவார்கள்-முமுஷுக்களும் -முக்தரும் -நித்யசித்தருமான இவர்கள் எல்லாம் அடிமை செய்கிறவர்கள் -அடிமை செய்கையாவது ஸ்வாமிக்கு அதிசயத்தை பண்ணுமது ஆகையால் மங்களா சாசனம் இறே –

வேதனை வெண் புரி நூலனை விண்ணோர் பரவ நின்ற
நாதனை ஞாலம் விழுங்கும்  அநாதனை ஞாலந்தத்தும்
பாதனைப் பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும்   சீரியரே 
– – -79–சீதனை-திருப்பாற்கடலில் கிடக்கிறபடியை நினைத்தாலே தாபம் போக்கி குளிர வைப்பவன் அன்றோ-தாபார்த்த ஜல ஸாயீனம் –சீதனையே-அவனைத் தொழுது வேறே ஒரு பிரயோஜனத்தைக் கொள்ள இருக்காமல் அவனைப் பிரசங்கிக்க மாத்திரத்தாலே நெஞ்சு தளராமல் அனுபவிக்க வேண்டுமே-இதுவே அவதாரிகையில் பார்த்தோம்-நிறுத்தி நிதானமாக அனுபவிக்க வேண்டும்-விண்ணுளாரிலும் சீரியரே –நிரந்தர பகவத் அனுபவமே யாத்ரை யான -அத்தேசத்தில் அன்றியிலே – அப்படிக்கு விரோதியான சம்சாரத்திலே இருந்தே -அதுவே யாத்ரையாய் இருக்கையாலே – இவர்கள் நித்ய ஸூரிகளிலும் சீரியர்–அநாதனை –ஆத்மேஸ்வரம் –என்னுமா போலே தனக்கு ஒரு நியந்தா இல்லாதவன் –நாயகனைப் பிரியாத மகளிர் பாக்யத்தை கூறித் தலைவி இரங்கும் பாசுரம் –-இங்கேயே அவனை-இடைவிடாமல் அனுபவிக்கப் பெற்றவர் முக்தர்களிலும் சீரியர்-பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும்-சீதனையே-ஸ்ரீ தேவி பூ தேவி திருவடி வருட – அப்படிப்பட்ட இடையில்லாத் போகம் தனக்கு கிடையாமையை சொல்லி-வேத முதல்வன் விளங்கு பூரி நூலன் -ஞாலந்தத்தும் பாதனைப் –திரு உலகு அளந்த திருவடி யுடையவன் -உத்பத்தி ஸ்தானமான திருவடியை யுடையவன் என்றுமாம்-திருமாலின் திருவடியின் நின்றும் பூ லகம் வந்தமை புருஷ ஸூகதம் சொல்லுமே-உண்ணும் சோறு இத்யாதி -மனம் மொழி காயம் மூன்றாலும் இங்கேயே பகவத் அனுபவமே யாத்திரையாக-கொண்ட ஆழ்வார் நித்ய ஸூரிகளிகளும் மேம்பட்டவர் என்றதாயிற்று-

அன்னைமீர்! அணி மாமயில் சிறு மானிவள்நம்மைக் கை வலிந்து
என்ன வார்த்தையும் கேட்குறாள் தொலை வில்லி மங்கலம் என்றலால்
முன்னம் நோற்ற விதி கொலோ? முகில் வண்ணன் மாயம் கொலோ?
அவன் சின்னமும் திருநாமமும் இவள் வாயனகள் திருந்தவே.–6-5-7—தொலை வில்லி மங்கலம் என்கை ஒழிய ஏதேனும் ஒரு வார்த்தையும் கேட்க்கிறீலள் -என்னுடைய வார்த்தையும் கேட்க்கிறீலள் -உங்களை மறைத்ததும் சொல்லுவது எனக்கு இ றே -அவ் வூரை நான் சொல்லிலும் கேட்க்கும் –-முன்னம் நோற்ற விதி கொலோ? -முன்னே பண்ணின பாக்ய பலமோ -ஜன்மாந்தர சகஸ்ரரேஷூ -பஹு நாம் ஜென்ம நா மந்தே – முகில் வண்ணன் மாயம் கொலோ?-அதுக்கு இத்தனை கனத்த பலம் உண்டாக மாட்டாது -அழகைக் காட்டிப் பண்ணின ஆச்சர்ய சேஷ்டிதங்களோ -அதில் சம்சயம் இத்தலையாலே சாதித்ததுக்கு இத்தனை கனத்த பலம் உண்டாக மாட்டாது என்று -இதில் சம்சயம் -இதுக்கு முன்பு ஒரு வ்யக்தியில் இப்படி பிறக்கக் காணாமையாலே-

மண்ணுளாய் கொல் விண்ணுளாய் கொல் மண்ணுளே மயங்கி நின்று
எண்ணும் எண் அகப்படாய் கொல் என்ன மாயை நின்தமர்
கண்ணுளாய் கொல் சேயை கொல் அநந்தன் மேல் கிடந்த வெம்
புண்ணியா புனம் துழாய் அலங்கல் அம் புனிதனே –45—திருவநந்த ஆழ்வான் மேல் சாய்ந்து அருளின வடிவு அழகைக் காட்டி தேவரீர் உடைய ஆஸ்ரித சம்ச்லேஷ ஸ்வபாவத்தையும் என்னுடைய அனன்யார்ஹ சேஷத்வத்தையும் எனக்கு உணர்தினவனே –பும்ஸ்த்வம் நயதீதி புண்ய -என்கிறபடியே இவருடைய ஸ்ரூபத்தையும் பிரகாசிப்பிக்கைக்கு உபாயம் ஆனவனே-தோளும் தோள் மாலையுமான அழகைக் காட்டி -விஷயாந்தர ருசி என்ன -சோரேண ,ஆத்ம அபஹாரிணா -என்கிற ஆத்ம அபஹாரம் என்ன –இவ் வசுதங்களைத் தவிர்த்த பரம-பாவனனே-இது என்ன ஆச்சர்யம்-என் திறத்தில் நீ செய்து அருளின இவை என்னால் பரிச்சேதிக்கலாய் இருந்தது இல்லை என்கிறார் –

இப்படி இவரை ஞானிகள் ஆனவர்கள் சங்கிக்கைக்கு ஹேது என்னும் ஆ காங்ஷையிலே-இதுக்கு மூலம் இவருடைய பிரபாவம் என்கிறார் மேல் –இப்படி இவர்கள்‌ சங்கிக்கைக்கு ஹேது என்னென்னில்‌, இவருடைய ப்ரபாவம்‌ கண்டு என்கிறார்‌ மேல்‌.

இதுக்கு மூலம்-1-யான் நீ என்று மறுதலித்து-2-வானத்து மண் மிசை மாறும் நிகரும் இன்றி-3-நிலையிடம் தெரியாதே-4-தெய்வத்தின் ஒரு வகைக்கு ஒப்பாக-5-இனத்தலைவன் அம்தாமத்து அன்பு செய்ய-6-சேர்ந்தமைக்கு அடையாளம் உளவாகவே-7-உகந்து உகந்து திமிர் கொண்டால் ஒத்து-8-நாட்டியல் ஒழிந்து-9-சடரை ஒட்டி-10-மதாவலிப்தர்க்கு அங்குசம் இட்டு-11-நடாவிய கூற்றமாய்-12-தீயன மருங்கு வாராமல்-13-கலியுகம் நீங்கி கிருதயுகம் பற்றி-14-பட்டு எழு போது அறியாது இருந்த
பிரபாவம் இதுக்கு மூலம் –சூரணை -93-

அதாவது-இவரை கண்ட ஞானாதிகர் -இவர் இன்னார் -என்று நிர்ணயிக்க மாட்டாமை –இங்கன் சங்கிகைக்கு ஹேது –
1-யான் நீ என்று மறுதலைத்து-மாறுபட்டு இருந்த பிரபாவம் –-அதாவது –
புவியும் இரு விசும்பும் நின்னகத்த நீ என் செவியின் வழி புகுந்து என் உள்ளாய் அவிவின்றி யான் பெரியன்-நீ பெரிய என்பதனை யார் அறிவார் ஊன் பருகு நேமியாய் உள்ளு -பெரிய திருவந்தாதி -75–என்று தொடங்கி உபய விபூதியும் உன் சங்கல்ப்பத்தில் கிடக்கின்றன – ஏவம் பூதனான நீ என்னுடைய ஸ்ரோத்ர இந்திரயத்வாரா புகுந்து விச்சேதம் இன்றி என் ஹிருதயத்தில் உளையாகா நின்றாய் –இப்படியான பின்பு விபூதியை உடைய நீயோ விபூதிமானை உடைய நானோ -பெரியார் என்று அறிவார் ஆர் ? அப்ரதிஹத சக்தியான நீ தான் இத்தை நிரூபித்து அறிந்து காண் என்று உபய விபூதி யுக்தனோடே மறுதலைக்கிற வைபவத்தை உடையராய்

“’புவியும்‌ இரு விசும்பும்‌ நின்னகத்த, நீ என்‌ செவியின்‌ வழி புகுந்தென்னுள்ளாய்‌, அவிவின்றி யான்‌ பெரியன்‌ நீ பெரியை என்பதனை யாரறிவார்‌, ஊன் பருகு நேமியாய்‌ உள்ளு”” (பெரிய திரு. 75) என்று – உபய விபூ,தியையும்‌ உன்‌ ஸங்கல்பைக தேஸத்திலே வைத்து என்‌ ஸ்ரவண த்‌வாரா நெஞ்சிலே புகுந்து விச்சேதமின்றியிலே நித்ய வாஸம்‌ பண்ணா நின்ற பின்பு, நானோ, நீயோ பெரியாய்‌? ஆரென்று ஸர்வாதிகனான நீயே விசாரி – என்று ஸர்வேஸ்வரனோடே விகல்பிக்கலாம் படியாய்‌

புவியும் இரு விசும்பும் நின்னகத்த நீ என்
செவியின் வழி புகுந்து என்னுள்ளே -அவிவின்றி
யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார்
ஊன் பருகு நேமியாய் உள்ளு
–75–உபய விபூதியும் உன் ஸங்கல்பத்திலே கிடக்கின்றன-உபய விபூதி யுக்தனான நீ என்னுடைய ஸ்ரோத்ர இந்திரியத்தை வழியே புகுந்து விச்சேதம் இன்றிக்கே என் ஹ்ருதயத்திலே உளையாகா நின்றாய்-உபய விபூதியை யுடைய நீயோ-விபூதிமானை யுடைய நானோ-பெரியார் யார் என்று அறிவார் யார்-அப்ரதிஹத சக்தியான நீ அறிவுதி யாகில் சொல்லு-சத்ரு சரீரங்களைப் பருகுகிற திருவாழி–(விஸ்வம் பர பரா ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம் -சமக்யா பந்ததி -ஆழ்வாரை
இப்பாசுரம் அடியாகவே அருளிச் செய்கிறார் )

2-வானத்து மண் மிசை மாறும் நிகருமின்றி இருந்த பிரபாவம் –( வானத்து நிகரும் இன்றி -மண்மிசை மாறும் இன்றி -என்று தனித்தனியே கொண்டு பொருள் )-அதாவது –தண் தாமரை சுமக்கும் பாதப் பெருமானைச் சொல் மாலைகள் சொல்லுமாறு அமைக்க வல்லேற்கு இனி யாவர் நிகர் அகல் வானத்தே–திருவாய்-4-5 8– -என்றும்-வலக்கை ஆழி இடக்கைச் சங்கம் இவையுடைய மால் வண்ணனை மலைக்கு நா வுடையேற்கு மாறுளதோ விம் மண்ணின் மிசையே –திருவாய் -6-4-9–என்றும்
அவனுடைய விபூதி யோகத்துக்கும் ஸுகுமார்யத்துக்கும் தகுதி யாம்படி யாகவும் – சர்வேஸ்வரனாய் அவாப்த சமஸ்த காமனாய் ஒன்றுக்கும் விக்ருதம் ஆகாதவன் தம்முடைய உக்தி ஸ்ரவண ஹர்ஷ பிரகர்ஷத்தாலே தெகிடாகும் படியாகவும் திரு வாய் மொழி பாடுகிற நாவீறு உடைமையாலே –
உபய விபூதியிலும் உபமான ரஹிதராய்-3-நிலை இடம் தெரியாதே இருந்த பிரபாவம்
-அதாவது – கலவியும் பிரிவும் கலசி நடக்கையாலே -கல்வியால் வந்த ரசமேயாக செல்லும் அங்குள்ளார் படியும் அன்றிக்கே – பகவத் குணைக தாரகதையால் அன்ன பானாதிகளால் தரிக்கும் இங்குள்ளார் படியும் அன்றிக்கே – இப்படி உபய விபூதியிலும் அடங்காமல் –-வைகுந்தமோ வையமோ நும் நிலையிடம்-திருவிருத்தம் -75- என்று வாசஸ்தலம் தெரியாத படியாய் –

(வானத்து மண்மிசை மாறும்‌ நிகருமின்றி) ““இனி யாவர்‌ நிகரகல் வானத்தே’” (திருவா. 4 5 – 8) என்றும்‌, ““மாறுளதோ இம் மண்ணின் மிசையே”’ (திருவா. 6 – 4 – 9) என்றும்‌ ‘ உபய விபூதி யிலும்‌ எனக்கு ஸத்‌ருஸருண்டோ என்னும்படி த தாஸ்ய ஹ்ருஷ்டோக்தியை உடையராய்‌ (நிலையிடம்‌ தெரியாதே) ““வைகுந்தமோ வையமோ நும்‌ நிலையிடம்‌”” (திருவிரு -75) என்று – இந்த விபூதிஸ்தரோ? நித்யவிபூதிஸ்தரோ? என்று அறுதியிட ஒண்ணாதபடி இருக்கையாலே உபய விபூ,தியிலும்‌ வ்யாவ்ருத்தராய்‌,

நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார்
தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானைத் தண் தாமரை
சுமக்கும் பாதப் பெருமானைச் சொல்மாலைகள் சொல்லுமாறு
அமைக்க வல்லேற்கு இனியாவர் நிகர் அகல் வானத்தே?–4-5-8-
–அநாதி அஞ்ஞானாதி சம்சாரக்கத்தாலே நித்ய சம்சாரிகளுக்கும் இவ்வருகான நமக்கும் – பூவில் பிறப்பால் வந்த போக்யதையாலும் ஆத்ம குண பூர்த்தியாலும் நித்ய ஸூ ரிகளுக்கும் அவ்வருகான பிராட்டிக்கும் தன் போக்யதா அதிசயத்தாலே ஆனந்த ஜனகனனாய்–இவ்விரண்டு ஆகாரத்துக்கும் உப பாதகமாய் அவிசேஷஞ்ஞரான லீலா விபூதியில் உள்ளாரோடு -விசேஷஞ்ஞரான பரமபத வாசிகளோடு வாசியற நிருபாதிகமான சர்வ சேஷித்வத்தை யுடையனாய் இந்த போக்யதைக்கும் மேன்மைக்கும் மேலே ஸுந்தர்ய ஸுகந்த்ய ஸுகுமார்ய லாவண்யாதி குணங்களுக்குத் தோற்று-செவ்வியையுடைய தாமரை சுமக்கும்படியான திருவடிகளை யுடையனான சர்வாதிகனை இவ்வாகார அநு சந்தானத்தாலே உடை குலைப்படாதே-சப்த சந்தர்ப்பங்களை சொல்லும்படியாக என்னை அமைத்து தரிக்க வல்ல எனக்கு-அதி விஸ்தீரணையான த்ரிபாத் விபூதியில் அதிகார ஆகாரராய் அனுபவிக்கிறவர்கள் ஆர் தான் இனி ஒப்பார் –இந்தளத்திலே தாமரை போலே இருள் தரும் மா ஞாலத்தில் அனுபவிப்பார்க்கு தெளி விசும்பில் அனுபவிப்பார் சத்ருசர் அல்லர்கள் என்று கருத்து –

கலக்க ஏழ்கடல் ஏழ்மலை உலகேழும் கழியக் கடாய்
உலக்கத் தேர்கொடு சென்ற மாயமும் உட்பட மற்றும்பல
வலக்கை ஆழி இடக்கைச் சங்கம் இவை யுடை மால்வண்ணனை
மலக்கு நாவுடையேற்கு மாறுளதோ இம்மண்ணின் மிசையே?–6-4-9-–ஹர்ஷ ப்ரகரஷத்தாலே அலமாக்கும் படி பண்ணும் நா வீறு யுடைய எனக்கு இந்த பூமியின் மேலே எதிர் உண்டோ-ஈஸ்வரனுக்கு மநோ ஹாரியான வாக்கையுடையார் வேறு பூமியில் இல்லை என்று கருத்து –

உலாகின்ற கெண்டை  யொளி யம்பு எம்மாவியை யூடுருவக்
குலாகின்ற வெஞ்சிலை வாள்   முகத்தீர் குனிசங்கிடறிப்
புலாகின்ற வேலைப் புணரி யம்பள்ளி யம்மான் அடியார்
நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலை இடமே –
-75 –-இஜ் ஜகத் ரஷண அர்த்தமாக வந்து கண் வளர்ந்து அருளுகிற – இந் நீர்மைக்குத் தோற்று இருக்கிற நித்ய ஸூரிகள் நித்ய வாசம் பண்ணுகிற ஸ்ரீ வைகுண்டமோ-அன்றிக்கே – மானாவிச் சோலை போலே ஆவது அழிவதாய் – காதாசித்கமாக அவன் வந்து முகம் காட்டிப் போகும்-லீலா விபூதியோ – உங்களுடைய வாஸ ஸ்தானம் –வானவர் நாடு -என்கிறபடியே – அவர்கள் இட்ட வழக்காய் இருக்கும் இறே அவ் விபூதி –அஹங்கார மமஹாரங்களாலே -ஈஸ்வர ஸ்வா தந்த்ர்யம்-நடை யாடாதபடி – பண்ணிக் கொண்டு இருப்பார்கள் இறே இங்கு உள்ளோர் –பிள்ளை திரு நறையூர் அரையர் – அடியார் நிலாகின்ற வைகுந்தமோ – அன்றிக்கே அவனதான வையமோ -என்று பணிப்பாராம் –

4-தெய்வத்தின் ஒரு வகைக்கு ஒப்பாக இருந்த பிரபாவம் –அதாவது –தெய்வத்தினம் ஓர் அனை யீர்களாய்-திருவிருத்தம்-23-என்று ஒருவர் இருவர் அன்றிக்கே –நித்ய ஸூரிகள் எல்லாரும் கூடினாலும்
தமக்கு ஒருவகைக்கு ஒப்பாம் படியாய் —

(தெய்வத்தினம்‌ ஒருவகைக் கொப்டாக) “*தெய்வத்தினமோரனையீர்களாய்‌” (திருவிரு. 23) என்று நித்யஸூரிகளெல்லாரும்‌ கூடினாலும்‌ தம்முடைய ஒருவகைக் கொப்பாக உடையராய்‌,

புனமோ புனத் தயலே வழி போகும் அரு வினையேன்
மனமோ மகளிர் நும் காவல் சொல்லீர் புண்டரீகத்து அம் கேழ்
வனமோர் அனைய கண்ணான் கண்ணன் வானாடு அமரும் தெய்வத்
தினம் ஓர் அனையீர் களாய், இவையோ நும் இயல்வுகளே
 –23-தெய்வத்தினம் ஓர் அனையீர் களாய்,– ஆழ்வார் ஒருவர் எழுந்து அருளி இருக்கும் இருப்பு நித்ய ஸூரிகள் திரள இருந்தால் போல் இருக்கிறதே என்றவாறு -திவ்ய சங்கத்தோடே ஒரு பிரகாரத்தாலே ஒப்புடையீராய் இருக்கை -நித்ய ஸூரி சங்கத்தோடே ஒரு பிரகாரத்தாலே ஒப்புடையீர்களாய் இருக்கிறீகோளே–இவையோ நும் இயல்வுகளே -பர சித்த அபஹாரியான பிரதிகூலா சரணம் உங்களுக்கு ஸ்வ பாவ மாகவாயோ என்று தன் குறையற யுரைத்தானாயிற்று-ஒருபடி நம் மநோ வ்ருத்தி அறியாதவர்களாய் ஒருபடி நம்மிடம் ப்ரீதி யுடையவர்களாய் இருக்கிறி கோளே-உங்களுடைய ஸ்வ பாவங்கள் இங்கே புனம் காக்கும் தோழி தலைவி இவர்களோடு ஒத்த ஸ்வ பாவத்தால் திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்கள்–புனம் -இவர்கள் இருக்கும் தேசம்-யுக்தமான ஸூரி சாத்ருஸ் யமும் இவ்விருவருக்கும் ஒக்கும் என்றதாயிற்று-

5-இனத் தலைவன் அம் தாமத்து அன்பு செய்ய இருந்த பிரபாவம் –அதாவது – வானோர் இனத் தலைவன் கண்ணன் -பெரிய திருவந்தாதி -25-என்று-அந்த நித்ய ஸூரி சங்க நிர்வாஹனான சர்வேஸ்வரன் ,-அந்தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மானுக்கு –திருவாய் -2-5-1–என்று
அழகிய தாமமான பரம பதத்திலே பண்ணும் வியோமோஹத்தை அடைய தம் பக்கலில் பெரு மடை கொள்ளப் பண்ண –

(இனத் தலைவன்‌ இத்யாதி,) ”வானோரினத் தலைவன்‌”’ (பெரியதிரு. 25) என்று அப்படிப்பட்ட ஸூரி ஸமூஹத்துக்கு நிர்வாஹகனான ஸர்வேஸ்வரன்‌, ““அந்தாமத்தன்பு செய்து”‘ (திருவா. 2 – 5 – 1) என்று விலக்ஷணமான பரம பதத்தில்‌ பண்ணும்‌ வ்யாமோஹத்தை இவர் பக்கலிலே பண்ண

ஆரானும் ஆதானும் செய்ய அகலிடத்தை
ஆராய்ந்து அது திருத்தல் ஆவதே -சீரார்
மனத் தலை வன் துன்பத்தை மாற்றினேன் வானோர்
இனத் தலைவன் கண்ணனால் யான் —25-
நித்ய ஸூரிகளுக்குத் தலைவனாய் வைத்துத் தன்னை இதர சஜாதீயனாக்கி ஸூலபனான கிருஷ்ணனாலே பகவத் சம்பந்தம் ஆகிற ஐஸ்வர்யத்தை யுடைத்தான மனஸ்ஸிலே தலையிலே கிடக்கிற ஸம்ஸார துக்கத்தை மாற்றினேன்-எல்லாரையும் நம்மாலே திருத்தப் போமோ என்கிறார் –

அந்தாமத்தன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு
அந்தாம வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரமுள
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் செங்கமலம்
செந்தாமரை யடிக்கள் செம்பொன் திருவுடம்பே –2-5-1–பரமபதத்தில் உள்ளார் எல்லார் பக்கலிலும் பண்ணும் அபி நிவேசத்தை என் பக்கலிலே பண்ணி –மஞ்சா க்ரோசந்தி இத்வத்என்னாவி சேர் –
கமர் பிளந்த தரையிலே நீரைப் பாய்ச்சினால் போலே –உள்ளூலாவி உலர்ந்து உலர்ந்து -என்று
குருத்து வற்றாக வற்றான என்னாத்மாவிலே-விடாயர் மடுவில் விழுமா போலே வந்து கலந்தான் –
அம்மானுக்கு– நித்ய விபூதியில் உள்ளரோபாதி லீலா விபூதியில் உள்ளாருக்கும் வந்து முகம் காட்ட வேண்டும் பிராப்தி உடையவனுக்கு இவரைப் பெற்ற பின்பு யாயிற்று அவன் சர்வேஸ்வரன் யாயிற்று

6-சேர்ந்தமைக்கு அடையாளம் உளவாக இருந்த பிரபாவம் –அதாவது –திரு அருள்களும் சேர்ந்தமைக்கு அடையாளம் திருந்த உள – திருவாய் -8-9-6- என்று மேன்மேலும் அவன் விஷயீகாரங்களை பெற்றமைக்கு -ஸூவ்யக்த லாஞ்சனமான ராகம் வாய் கரையில்- (உதட்டிலே செந்நிறம் -) தோன்றுகை முதலான கலவிக் குறிகள் உண்டாய் செல்ல –7-உகந்து உகந்து திமிர் கொண்டால் ஒத்து இருந்த பிரபாவம் –அதாவது – உகந்து உகந்து உள் மகிழ்ந்து குழையுமே திருவாய் -6-5-4–என்றும்-திமிர் கொண்டால் ஒத்து நிற்கும் -திருவாய் -6-5-2-என்றும் அவன் சௌந்தர்ய சீலாதிகளை அனுசந்தித்து -உத்தரோதரம் விளைகிற பாஹ்யாப்யந்தர ஹர்ஷத்தாலே -சிதிலராவது – ஸ்தப்தோஸ்யுத தமா தேசம ப்ராஷ்ய -சாந்தோக்யம் –(திமிர் கொண்டவனைப் போலே இருக்கின்றாய் அந்தப் பரம் பொருளைக் கேட்டு அறிந்தாயோ )என்கிறபடியே சர்வ நியாமக ,பர ப்ரஹ்ம சாஷாத் காரம் பிறந்தாரைப் போலே ஸ்திமித ராவதாய்–

(சேர்ந்தமைக் கடையாளமுளவாக) “திருவருள்களும்‌ சேர்ந்தமைக் கடையாளம்‌ திருந்தவுள”’ (திருவா. 8 – 9 – 6) என்று ஸர்வேஸ்வரனுடைய க்ருபையாலே விஷயீ க்ருதரானமைக்கு ஸுவ்யக்தமாக லாஞ்சநமான ராகத்தை வாய்க் கரையிலே உடையராய்‌ கேவலம்‌ வாய்க் கரையில்‌ ராக மாத்ர மன்றிக்கே “‘உகந்துகந்துள் மகிழ்ந்து குழையுமே”’ (திருவா. 6 – 5 – 4) என்று பாஹ்யாப் யந்தர ஹர்ஷத்தாலே ஸிதிலராய்‌, “’திமிர கொண்டாலொத்து நிற்கும்‌ ”” (திருவா. 6 – 52) என்று அநுஸந்தா நத்தாலுண்டான ஆதராதிஸயத்தாலே ““ஸ்தப்‌தோஸ்யுத தமாதேஸம ப்ராக்ஷ்ய?”” (சா. 6 – 1 – 3) என்று ஸர்வ நியாமகமான ப்‌ரஹ்ம ஸ்வரூப ஸாக்ஷாத்காரம்‌ பிறந்தாரைப் போலே ஸ்திமிதராய்‌,

திருவருள் மூழ்கி வைகலும் செழு நீர் கண்ண பிரான்
திருவருள்களும் சேர்ந்தமைக்கு அடையாளம் திருந்த உள
திருவருள் அருளால் அவன் சென்று சேர் தண் திருப் புலியூர்
திருவருள் கமுகு ஒண் பழத் தது மெல்லியல் செவ்விதழே–8-9-6–அவன் விஷயீ காரங்களையும் பெற்றமைக்கு அடையாளம் வ்யக்தமாக உள-குணாகுண நிரூபணம் பண்ணாதே விஷயீ கரிக்கை யாகிற ஸ்வ பாவத்தை உபகரிக்கைக்காக -அவன் தானே சென்று பொருந்தும் சிரமஹரமான வூர் /-திருவருள் கமுகு-என்று சில உண்டு -நீரால் வளருமது அன்றிக்கே பிராட்டியும் தானுமாக கடாக்ஷிக்க அதுவே நீராக வளருமவை-ஒண் பழத்தது மெல்லியல் செவ்விதழே–ம்ருது ஸ்வ பாவையான இவளுடைய அதரம் செவ்விப் பழம் போலே இரா நின்றது –இவளுடைய அதரம் அவ் வூர்க்காய் யன்றோ இருக்கிறது 

நிற்கும் நான்மறை வாணர் வாழ்தொலை வில்லி மங்கலம் கண்டபின்
அற்க மொன்றும் அறவு றாள்மலிந் தாள்கண் டீர்இவள் அன்னைமீர்!
கற்கும் கல்வி யெல்லாம் கருங்கடல் வண்ணன் கண்ண பிரான் என்றே
ஒற்கம் ஒன்றும் இலள் உகந்துகந்து உண்மகிழ்ந்து குழையுமே.–6-5-4-
–சொல்லும் சொல் எல்லாம் திரு நாமமே யாய் -இது தன்னிலும் வடிவு அழகுக்கும் ஆஸ்ரித பாரதந்தர்யத்துக்கும் வாசகமான திரு நாமங்களையே சொல்லா நின்றாள் -கிருஷ்ணன் ஆகில் ஆஸ்ரித பாரதந்தர்யம் பிரசித்தம் இறே -பிரான் -உபகார சீலன் –திருநாமங்களை இடைவிடாதே செல்லா நின்றால்-இளைப்பு ஒன்றும் இன்றிக்கே இரா நின்றாள்–ஒற்கம் -ஒல்குதல்-அதாவது ஒடுங்குதல் -இளைப்பு-திரு நாமங்கள் வழியே அவன் அழகையும் குணங்களையும் நினைந்து மேன் மேல் என ப்ரீதையாய்-உண்மகிழ்ந்து குழையுமே.-– அந்தகாரண ப்ரீதி அதிசயத்தாலே ஆஸ்ரயம் அழியா நிற்கும்-

குமுறுமோசை விழவொலித் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
அமுத மென்மொழி யாளை நீர்உமக் காசை யின்றி அகற்றினீர்
திமிர்கொ டாலொத்து நிற்கும் மற்றிவள் தேவ தேவபிரான்என்றே
நிமியும் வாயொடு கண்கள் நீர்மல்க நெக்கொசிந்து கரையுமே.–6-5-2-
–திமிர் கொண்டால் போலேயாய் பேசாதே நில்லா நிற்கும் –மற்று இவள் வார்த்தை சொன்னால் தேவர்களான நித்ய ஸூரி களுக்கும் தேவர்களான விஷ்வக் சேனாதிகளுக்கும் தன்னை அநு பதிப்பித்துக் கொண்டு இருக்கிற மஹா உபகாரகன் என்கிற அர்த்த யுக்தி மாத்திரத்திலே-நெளிந்த வாயை யுடையளாய் கண்கள் நீர் மலக்கும்படியாக கட்டுக் குலைந்து தளர்ந்து நீர்ப்பண்டமாகா நின்றால் –-நிமிதல்-நெளிதல்-

8-நாட்டியல் ஒழிந்து இருந்த பிரபாவம் –அதாவது – நாட்டாரோடு இயல் ஒழிந்து நாரணனை நண்ணினமே -திருவாய் -10-6-2–என்றும் உண்டியே உடையே உகந்து ஓடி -என்றும்-யானே என் தனதே –திருவாய் -2-9-9–என்றும் அஹங்கார மமகார வச்யராய் இருக்கிற லௌகீகரோடு சம்பந்தம் அற்று –9-சடரை ஒட்டி இருந்த பிரபாவம் –அதாவது –சடகோபர் ஆகையாலே –ஆர்ஷம் ப்ரஹ்ம தர்ம உபதேசம்ச வேத சாஸ்த்ர விரோதினா -மனு தர்ம சாஸ்திரம் -12–106-( வேத சாஸ்திரத்துக்கு மாறுபாடு அல்லாத )என்கிற படி பிராமண அனுகூல்ய தர்கங்களாலே மத்யஸ்தமாக அர்த்தத்தை சாதிக்கை அன்றிக்கே ,
பாஹ்ய குத்ருஷ்டிகள் ஆகிற சடரை ஸ்ருத்யந்த தாத்பர்யமான ஸ்வோக்தி விசேஷங்களாலே
ஸ்வ சந்நிதானத்தில் நில்லாதபடி துறத்தி –

““நாட்டாரோடியல் வொழிந்து”‘ (திருவா. 10 – 6 – 2) என்று ஸம்ஸாரிகளோட்டை ஸங்கத்தை விட்டு (ஸடரையோட்டி) ஸட கோபராகையாலே ப்ரமாணாநு குணமாக தர்க்கம்‌ சொல்லுகை யன்றிக்கே ஸ்வ மநீஷையாகக்‌ கற்பித்துக்‌ கொண்டு, ஷூஷ்க தர்க்கங்களாலே அர்த்த ஸ்தாபநம்‌ பண்ண விருக்கிற ஸடரைத்‌ தம்முடைய உக்தி ஸ்ரவண மாத்ரத்தாலே தம்முடைய ஸந்நிதாநத்தில்‌ நில்லாதபடி பண்ணி,

வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞாலம் பிறப்பு அறுப்பான்
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம்பெருமானைப்
பாட்டாயே பல பாடிப் பழ வினைகள் பற்று அறுத்து
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே–10-6-2--நாம் அடிமை செய்ய -பிராப்தி பிரதிபந்தகமாய் அநாதி கால ஆர்ஜிதமான அவித்யாதிகள் எல்லாம் போகப் பெற்ற படி கண்டாயே -நாம் அநாதி காலம் கூட ஆர்ஜித்த வற்றை ஒரு சர்வ சக்தி அல்ப காலத்திலேயே போக்கினை படி கண்டாயே –நாட்டாரோடு இயல்வு ஒழிந்து –அஹங்கார மமக வச்யரோடு தொற்றற்ற படி கண்டாயே –இவை என்ன உலகு இயற்கை –கொடு உலகம் காட்டேல்-என்னப் பண்ணின படி கண்டாயே – நாரணனை நண்ணினமே--நிருபாதிக சர்வ ரக்ஷகனைக் கிட்டப் பெற்றோம் -நிருபாதிக சர்வ பந்துவைக் கிட்டப் பெற்றோம் –கேட்டாயே மட நெஞ்சே-பவ்யமான நெஞ்சே கேட்டாயே –என்று உபகார ஸ்ம்ருதி தொடராக கூறிக் கொள்ளுகிறார் –

யானே என்னை யறியகிலாதே
யானே என்தனதே என்று இருந்தேன்

யானே நீ என்னுடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே –2-9-9—அவனுக்கு கலக்கம் இல்லாமையால் -தன்னைத் தருகைக்கு எதிர் சூழல் புக்கு திரிய -நான் என்னை முடிய சூழ்த்துக் கொண்டேன்-தேஹாத்ம அபிமானத்தாலே என்னை அவனுக்கு பிரகாரம் என்று அறிந்திலேன்–ஈஸ்வரோஹம் என்று இருந்தேன்-இவன் நான் என்றால் ஈஸ்வரனுக்கு கிட்ட அரிதாய் இ றே இருப்பது-நானும் எனக்கு உரியேன் இன்றிக்கே இருக்க எனக்கு ஒரு உடைமையும் உண்டாக நினைத்து இருந்தேன்-தேகத்தை ஆத்மாவாகவும் -ஈஸ்வர விபூதியை என் உடைமை யாகவும் இந்த விபரீத அஞ்ஞானமே யாய் இருந்தேன்-இருந்தேன் இப்படி ஸ்வரூபம் நசித்துக் கிடைக்க அனுதாபம் இன்றிக்கே க்ருதக்ருத்யனாய் இருந்தேன்-அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று இருக்கை பிராப்தமாய் இருக்க ஒரு கார்யம் இல்லாதாரைப் போலே இருந்தேன்

10-மதா வலிப்தர்க்கு அங்குசம் இட்டு இருந்த பிரபாவம் –அதாவது – பராங்குசர் ஆகையாலே –வித்யாமதோ தன மதஸ் த்ருதீயோ அபிஜனோ மத ஏதே மதாவலிப்தானாம்- ( வித்யா மதம் செல்வா மதம் குடிப்பிறப்பு மதம் ) என்று மத ஹஸ்தி போலே அபிஜன வித்யாதி மத த்ரயா வலிப்தராய் திரியும் அவர்களுக்கு நிர் மதராய் தலை வணக்கும் படி உபதேச ரூப அங்குசம் இட்டு 

(மதா வலிப்தர்க்கு அங்குஸ மிட்டு) பராங்குஸ ராகையாலே ‘வித்‌யா மதோ தந மத,ஸ்‌த்ருதியோபி ஜநோ மத, | ஏதே மதா வலிப்தாநாம்‌ ஏத ஏவ ஸதாம்‌ தம?”’ என்று அபிஜந வித்‌யா வ்ருத்தங்களாகிற மத,த்ரயங்களினாலே தூஷிதரா யிருக்கிறவர்களை ஸ்வோக்தி ரூபமான அங்குஸங்களாலே நிர்மதராம்படி பண்ணி,

11-நடாவிய கூற்றமாய் இருந்த பிரபாவம் –-அதாவது –பறவையின் பாகன் மதன செங்கோல் நடாவிய கூற்றம்–திருவிருத்தம் -6- -என்று வேத வேத்யத்வ த்யோதகமாம்படி வேத மய கருட வாஹனான சர்வேஸ்வரன் விஷயத்தில்- நின் கண் வேட்கை எழுவிப்பன்–திருவிருத்தம்–96-என்று எல்லார்க்கும் பக்தியை உண்டாக்கி நடத்தா நின்று கொண்டு தம் தர்சனத்தில் அகப் பட்டவர்களின் சம்சாரத்துக்கு ம்ருத்துவாய் —

“பறவையின்‌ பாகன்‌ மதன செங்கோல்‌ நடாவிய கூற்றங் கண்டீர்‌”” (திருவிரு. 6) என்று வேத, வேத்‌யத்வ ஸூசகமான கரூட வாஹநனான ஸர்வேஸ்வரன் விஷயத்திலே, “நின்‌ கண்‌ வேட்கை எழுவிப்பனே”” (திருவிரு. 96) என்கிறபடியே எல்லார்க்கும்‌ பக்தியை உண்டாக்கி நடத்துமவராய்‌ கூற்றம்‌ என்கையாலே தம்முடைய தர்ஸநஸ்தருடைய ஸாம்ஸாரிகமான ருசிக்கு விநாஸகரராய்‌

தடாவிய வம்பும் முரிந்த சிலைகளும் போக விட்டு
கடாயின கொண்டொல்கும் வல்லி ஈதேனும் அசுரர் மங்கக்
கடாவிய வேகப் பறவையின் பாகன் மதன செங்கோல்
நடாவிய கூற்றம் கண்டீர் உயிர் காமின்கள் ஞாலத்துள்ளே
–6—இவளைப் பிராட்டியாக உடையவன்-காமனுடைய ஆஞ்ஞையை நிர்வஹிக்கிற –மதனன் ஆஜ்ஜையை நடத்துவதால் எதிர்ப்பட்டாரை அழியச் செய்வதொரு மிருத்யுவாய் இருக்கும்–புற மதஸ்தர்கள் நிலை கெடும்படி வேத ஸ்தாபன ப்ரவர்த்தகாச்சார்யார்-வேத நாயகன் எம்பெருமான் பக்கலிலே வேட்க்கையை எழுவித்து முக்தராக்கி ஊழ்வினைத் தொடர்ச்சிக்கு யமன் போன்றவர் என்றவாறு–கூற்றம் –அவனைப் போலே பாணங்களாலே மோஹிக்கப் பண்ணுகை அன்றிக்கே தானே முடிக்கை என்கிறது –ஜீவிக்க நினைத்து இருப்பார் தம் தாமை நோக்கிக் கொள்ளுங்கோள்-கண்டவர்கள் ப்ராணனைத் தன் வசம் ஆக்குகையாலே உங்கள் உயிரைக் காத்துக் கொள்ளுங்கோள்-இந்த லோகத்திலே அந்த மிருத்யுவைத் தப்பினாலும் இந்த மிருத்யுவைத் தப்ப ஒண்ணாது –

வணங்கும் துறைகள் பல பல வாக்கி மதி விகற்பால்
பிணங்கும் சமயம் பல பல வாக்கி  அவையவை தோறு
அணங்கும் பல பல வாக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
இணங்கு நின்னோரை இல்லாய் நின் கண் வேட்கை எழுவிப்பனே – -96 –ஸ்வ தந்த்ர்யத்தையும் தவிர்த்து – அவர்கள் தங்கள் அறிவு கெட்டு-இன்பம் அனுபவியாதபடி -பண்ணி – எல்லாரும் என்னைப் போலே உன் பக்கலிலே ஆசை-உடையராம்படி -பண்ணக் கடவேன் –இது சம்சாரத்தில் இருக்கச் செய்தே பகவத் ஜ்ஞானம்-பிறக்கையால் வந்த கர்வோக்தி யிருந்தபடி இறே –நீ கை விட்டாலும் நான் கை விடவோ – அனைவரையும் ஆஸ்ரிதர்-ஆக்குகிறேன் என்று ஈஸ்வரன் இடம் மார் தட்டுகிறார் –வணங்குந் துறைகள் பலபல ஆக்கியிருந்தாலும் ப்ரபத்தி மார்க்மொன்றையே பரவச் செய்வேன்;-மதிவிகற்பாற் பிணங்குஞ்சமயம் பலபல ஆக்கியிருந்தாலும் ஸ்ரீவைஷ்ணவ சமயமொன்றையே பரவச் செய்வேன்;-அணங்கும் பலபல ஆக்கியிருந்தாலும் ஸ்ரீமந்நாராயண ரூபியான நின் வடிவத்திலேயே பக்தியை நிகழ்த்துவேன் என்பதாகக் கொள்க.–ஸமாப்யதிக தரித்ரனாய்-ஸர்வ சரீரியான உன் பக்கலிலே அபிநிவேசத்தைப் பிறப்பிப்பன் –

12-தீயன மருங்கு வாராமல் இருந்த பிரபாவம் –அதாவது – கொன்று உயிர் உண்ணும் விசாதி பகை பசி தீயன எல்லாம்–திருவாய் -5-2-6-என்று சரீரத்தை முடித்து பிராணனை அபகரிக்க கடவதான வியாதி சாத்ரவ ஸூதாதி( நோய் பகை பசி ) தோஷங்களும் சாம்சாரிக சகல துக்க ஹேதுவான பாபங்களும் –
வன் துயரை — மருங்கும் –கண்டிலமால்-பெரிய திருவந்தாதி –54-என்ற படி அருகில் வாராத படியாய்-

(தீயன மருங்கு வாராமல்‌) **கொன்றுயிருண்‌ணும்‌ விசாதி பகை பசி தீயன வெல்லாம்‌”’ (திருவா. 5 – 2 – 6) என்று சேதநரை முடித்து ப்ராணாபஹாரம்‌ பண்ணக் கடவதான ஆதி வ்யாதி ரூபமான தோஷங்களும்‌ “வானே மறி கடலோ”’ (பெரியதிரு. 54) இத்யாதி,ப்படி ஸாம்ஸாரிக து,:க ஹேதுவான பாபங்‌களும்‌ பார்ஸ்வத்திலும்‌ வாராதபடியாய்‌,

கொன்று உயிர் உண்ணும் விசாதி பகைபசி தீயன எல்லாம்
நின்று இவ் வுலகில் கடிவான் நேமிப்பிரான் தமர் போந்தார்
நன்று இசை பாடியும் துள்ளி ஆடியும் ஞாலம் பரந்தார்
சென்று தொழுதுய்ம்மின் தொண்டீர்! சிந்தையைச் செந்நிறுத்தியே.–5-2-6—கையும் திரு வாழி யுமான அழகிலே ஈடுபட்டு இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் –கடிவான் போந்தார் ஆனவர்கள் –அதுக்காக லோகத்தில் பூமியிலே பரந்தார்கள்-யத்ர அஷ்டாக்ஷர சமசித்தோ மஹா பாகோ மஹீயதே –இத்யாதி-

வானோ மறி கடலோ மாருதமோ தீயகமோ
கானோ ஒருங்கிற்றும் கண்டிலமால்
-ஆ ஈன்ற
கன்று உயரத் தாம் எறிந்து காய் உதிர்த்தார் தாள் பணிந்தோம்
வன் துயரை ஆ ஆ மருங்கு –54—ஆகாஸ கமனம் பண்ணிற்றோ -மஹா ப்ரஸ்த்தானம் -மஹா விந்த்யம் -பண்ணிற்றோ-இவற்றில் எங்கே சேர்ந்தது-சமீபத்திலே காணாது ஒழிகையால் ஒருங்கிற்றுக் கண்டிலமால் -என்றதிலே மருங்கு என்றது பொருள் இன்றிக்கே நிற்கும் என் அருகில் காணோம் என்றபடி –பிரபல பிரதிபந்தகங்களைப் போக்குமவர் திருவடிகளிலே பணிந்தோம்-நம்மோடே நெடு நாள் பழகிப் போந்த வலிய துயரை அருகும் கண்டிலோம்-இவர் எங்கே புக்கு முடித்தார்-ஐயோ ஐயோ என்கிறார் –

13-கலியுகம் நீங்கி கிருத யுகம் பற்றி இருந்த பிரபாவம் – அதாவது – திரியும் கலியுகம் நீங்கி –திருவாய் -5-2-3-என்றும் –பவிஷ்ய த்யத ரோத்தரம்-பாரதம் (பொருள்களின் தன்மை தலைகீழாக மாறாடிப் போகின்றன )-என்கிற படி பதார்த்த ஸ்வ பாவங்கள் மாறாடும் படி பண்ணுவதாய் – கலவ் ஜகத் பதிம் விஷ்ணும் சர்வ சரஷ்டாரம் ஈஸ்வரம் நார்சயிஷ்யந்தி மைத்ரேய பாஷண்டோ பஹதா ஜனா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-1-50–( கலியுகத்தில் மைத்ரேயரே சர்வேஸ்வரனை பாபங்களால் கெடுக்கப்பட்ட மக்கள் வணங்க மாட்டார்கள் ) என்கிற படி பகவத் ருசி விரோதியான கலி யுகம் போய் -பெரிய கிருத யுகம் பற்றி–திருவாய் -52-3- – என்கிற படியே கேவல வைஷ்ணவ தர்மமே நடக்குமதாய் யுகாந்தர வ்யதானம் அன்றிக்கே ஒரு போகியாக கிருத யுகம் பிரவேசிக்கும் படியாக –4-பட்டு எழு போது அறியாது இருந்த பிரபாவம்-( பட்ட போது-எழு போது -என்று பிரித்து பொருள் )அதாவது – பட்ட போது எழு போது அறியாள் விரை மட்டலர் தண் துழாய் என்னும் –திருவாய் –2-4-9-என்று பகவத் விஷயத்திலே போக்யதா அனுசந்தானத்தாலே – நந்தந்த்யுதித ஆதித்யே நந்தந்த்யச்தமிதே ரவவ் –அயோத்யா -105-24–என்று ஆதித்ய உதயத்திலே வந்தவாறே – த்ரவ்யார்ஜன காலம் வந்தது என்று உகப்பர்கள்–அவன் அஸ்தமித்தவாறே அபிமத விஷயங்களோடு ரமிக்கைக்கு காலம் வந்தது என்று உகப்பர்கள் என்றும் –
பிராதர் மூத்ர புரீஷாப்யாம் மத்யாஹ்னே ஷூத் பிபாச்ய சாயம் காமேன பாத்யந்தே ஜந்தவோ நிசி
நித்ரயா
-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-62-( மக்கள் காலையில் மூத்திரம் மலம் இவற்றாலும் – நடுப்பகலில் பசி தாகத்தாலும் – மாலையில் காமத்தாலும் இரவில் தூக்கத்தாலும் துன்புறுத்தப் படுகின்றார்கள் )என்றும் –சொல்லுகிற படி நாட்டாருக்கு புறம்பே கால ஷேபத்துக்கு உடலாய் செல்லுகிற திவாராத்ரா விபாகமும் அறியாதே அகால்ய கால்யமான தேசத்தில் போலே பகவத் அனுபவ ஏக கரராய் இருந்த பிரபாவம் – இதுக்கு மூலம்–இப்படி இருந்த பிரபாவம்-என்று வாக்ய சம்பந்தம் –இத்தால் கீழ் சொன்ன சங்கைக்கு காரணம் இன்னது என்று எல்லாரும் அறியும் படி அருளிச் செய்தார் ஆய்த்து

(கலியுகம்‌ நீங்கிக்‌ கிதயுகம்‌ பற்றி) “திரியும்‌ கலியுகம்‌ நீங்கி!” (திருவா. 5 – 2 – 9) என்று ‘“பவிஷ்யத்யத ரோத்தரம்‌”‘ (பார.சா .மோ) என்கிறபடியே பதார்த்த ஸ்வபாவங்கள்‌ வேறுபட்டு வருகிற கவியுக தோஷமும்‌ நீங்கி, ““பெரிய கிதயுகம்‌ பற்றிப்‌ பேரின்ப வெள்ளம்‌ பெருக) (திருவா. 5 – 2 – 3) என்று ஆதி க்ருத யுகத்தை யொக்க மஹத்தான ஆநந்த ஸாகரம்‌ அபி வ்ருத்‌தமாக, “பட்ட போதெழு போதறியாள்‌ விரை மட்டலர்‌ தண்டுழா யென்னும்‌”‘ (திருவா. 2 – 4 – 9) என்று பகவத்‌ விஷயத்தில்‌ போக்‌யதாநுஸந்தாநத்தாலே “‘தந்தந்த் யுதித ஆதித்யே நந்தந்த் யஸ்தமிதே ரவெள”’ என்றும்‌, ‘ப்ராதர் மூத்ர புரீஷாப்‌,யாம்‌ மத்‌யாஹ்நே ஷூத் பிபாஸயா । ஸாயம்‌ காமேந படத்‌யந்தே ஜந்தவோ நிமி நித்‌ரயா” என்கிறபடியே ஸம்ஸாரிகளுக்குப்‌ புறம்பே கால க்ஷேப ஹேதுவான திவா ராத்ர விபாக மறியாதே அகால கால்யமான தேஸ விஸேஷத்திற்‌ போலே பகவதநுபவைக பரராய்ப்‌ போந்த இவருடைய ப்ரபாவம்‌ கீழ்‌ அப்படி சங்கிக்கைக்கு ஹேது என்கிறார்-

திரியும் கலியுகம் நீங்கித் தேவர்கள் தாமும் புகுந்து
பெரிய கிதயுகம் பற்றிப் பேரின்ப வெள்ளம் பெருகக்

கரிய முகில் வண்ணன் எம்மான் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
இரியப் புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே.–5-2-3—பவிஷ்யத் யத்ரோத்தரம் என்கிறபடியே -பதார்த்தங்களினுடைய ஸ்வ பாவம் மாராடி இருக்கும் கலி ஸ்வ பாவம் போய் -ஷூ த்ர தேவதைகள் பரராகவும் பர தேவதை அபரனாகவும் கடவதாய் இறே இக்காலம் இருப்பது -தேவர்கள் என்கிறது -ஆக்கரான இந்த்ராதிகளை யன்று -இவர்களுடைய லோகத்தை கண்டால் சங்கை பண்ணும் நித்ய ஸூரிகளும் புகுந்தார்கள்-வா ஸூ தேவ மநோ யஸ்ய தஸ்யாந்தராயோ மைத்ரேய தேவேந்த்ராத் த்வாதிகம் பலம் –என்னக் கடவது இறே–யுகாந்தர வியவதானம் இன்றிக்கே ஒரு போகியான க்ருத யுகம் பிரவேசித்து -கேவலம் வைஷ்ணவ தர்மமே நடையாடக் கடவ காலமாகை- பண்டே பெரிதான ஆனந்த சமுத்திரம் -அதுக்கு மேலே பெருகும் படி -அநந்த கிலேச பாஜனமான தேசத்திலே அந்தமில் பேரின்பம் உண்டாம் படி யாயிற்று

பட்டபோது எழுபோது அறியாள் விரை
மட்டலர் தண் துழாய் என்னும் சுடர்
வட்ட வாய் நுதி நேமியீர் நும்
திட்டமென் கொல் இவ்வேழைக்கே
–2-4-9-உதித்ததும் அஸ்தமித்ததும் அறிகிறிலள் -இனிச் செய்வது என் -இது தாயார் இருந்தபடி என் என்னில்-ராத்திரியில் நித்திரை காணாமையாலும் -பகலில் வார்த்தை சொல்லிப் போது போக்காமையாலும்-இவ் வறியாமை சர்வ விஷயமாகிலுமாம் இ றே -ஒன்றையே எப்போதும் வாய் வெருவா நிற்கும்-பரிமளத்தாலும் தேனாலும் பரிபூரணமான திருத் துழாய் என்னும்
பரிமளம் தேன் செவ்வி குளிர்த்தி இவற்றை உடைய திருத் துழாய் என்னுதல்–கையும் திரு வாழி யான சேர்த்தியைக் காட்டி அனுபவிப்பித்தல் -விரோதிகளை அழியச் செய்தல் செய்கை அன்றிக்கே
அச் சேர்த்தியை இவளுக்கு காட்டி அவ் வழகைக் கொண்டு அகல நின்று நலியத் தொடங்கினீர்
சுடரையும் வட்டமான வாயையும் கூர்மையையும் உடைத்தாகை-உகப்பாரை அவ் வழகைக் காட்டி அவ் வழகைக் கொண்டு அகல நின்று முடிக்கும் – யுகாவாதாரைக் கிட்டி நின்று அத் திரு வாழி யாலே அழியச் செய்து முடிக்கும் -என்பர் சீயர்-வேறு ஒன்றையும் அறியாதே அவனையே வாய் புலற்றுகிற இத்தையும் பேற்றுக்கு பரிகரம் என்று இருக்கிறிலள் அவன் நினைவே உபாயம் என்று இருக்கிறாள்இப்படி இருபத்தொரு வ்யக்தி புறம்பு இல்லை என்கிறாள்-

–——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌ – 5 –ஸூரி வைபவ பாதம்-5– க்‌ரந்த,-தத் கர்த்ரு வைப, வாதி, கரணம்‌ -இரண்டாம் பகுதி-(50-74) -ஸ்ரீ மணவாள மா முனிகள் -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் வியாக்யானங்கள்–

July 5, 2026

5 –ஸூரி வைபவ பாத, – 3 அதிகரணங்கள் இதில்-
5– க்‌ரந்த,-தத் கர்த்ரு வைப, வாதி, கரணம்‌ —39 – 74 –மொத்தம் 36 ஸூரணைகள்
6—ஸூரி ப்ராமாண்ய விஸேஷாதி கரணம்‌(ப்ரமாத்ரு வைபவம் ) 75 – 93 –மொத்தம் 19-ஸூரணைகள்
7-ப,க,வத் கடாக்ஷ விஸேஷாதி கரணம்‌ 94–96—மொத்தம் -3- ஸூரணைகள்

5– க்‌ரந்த,-தத் கர்த்ரு வைப, வாதி, கரணம்‌ —39 – 74 –மொத்தம் 36 ஸூரணைகள்–முதல் பகுதி-39 – 49–மொத்தம் 11-ஸூரணைகள்இரண்டாம் பகுதி-50-74மொத்தம் 25-ஸூரணைகள்

திரு வாய் மொழி ஒன்றுக்கும் அன்றே வேதத்வம் சாதித்தது . இவருடைய பிரபந்தங்கள் நாலுக்கும் ஒக்கும் இறே –ஆகை இறே-வேத சதுஷ்டய -சூரணை 43–இத்யாதி வாக்யத்தில் இவர் பிரபந்தங்கள் நாலையும் நாலு வேதத்தினுடைய ஸ்தாநேயாக அருளிச் செய்தது – -அதில் எந்த பிரபந்தம் எந்த வேதத்தின் உடைய ஸ்தானத்திலே என்ன அருளிச் செய்கிறார் -கீழே இவருடைய ப்ரபந்தங்கள்‌ நாலும்‌ வேத சதுஷ்டயம் போலே என்றது, எந்த ப்ரபந்தம்‌ எந்த வேத ஸ்தாநத்திலே என்னில்‌-

இயற்பா மூன்றும் வேத த்ரயம் போலே-பண்ணார் பாடல் பண்புரை இசை கொள் வேதம் போலே-சூரணை -50–

அதாவது
இயற்பாவான திரு விருத்தம் திருவாசிரியம் , பெரிய திரு அந்தாதி என்கிற பிரபந்தங்கள் மூன்றும் -அடைவே ருக், யஜுர், அதர்வணங்கள் ஆகிற மூன்று வேதத்தின் உடையவும் ஸ்தானத்திலே ..-பண்ணார் பாடல்–திருவாய்-10-7-5-என்று -பண்ணோடு சேர்ந்து இருந்துள்ள இசையை உடைய திருவாய்மொழி –-பண்புரை வேதம்-திருவாய்-6-6-5–என்றும் -இசை கொள் வேதம்–பெரிய திருமொழி-5-3-2–என்றும்-பண்ணையும் இசையும் உடைத்தான சாம வேதம் போலே என்கை ..வியாக்யானங்களில் -பண்புடை வேதம் -என்று ஒழிய –பண்புரை வேதம்-என்ற பாடமும் ,-இசை கொள் வேதம் என்கிறதுக்கு -சாம வேத பரத்வம் கண்டது இல்லை ஆகிலும் , ஆப்த தமரான இவர் ,இப் பிரபந்தத்திலே இப்படி அருளிச் செய்கையாலே ,இப்படியும் கொள்ள வேணும் ..-அப்போதைக்கு அவ்வவ ஸ்தலங்களில் சாம வேத வைலஷண்யத்தைப் பற்ற இத்தைச் சொன்னதே உள்ளது . மற்றயவற்றுக்கும் இது உப லஷணம் என்று கொள்ளக் கடவது .-பண்புரை வேதம் என்றது -பண்ணை புரைந்து இருக்கிற வேதம் என்றதாய்
அப் பண்ணுக்கு ஆஸ்ரயமான வேதம் என்ற படி ..-இசை கொள் வேதம்-என்றது இசையை உடைத்தான வேதம் என்ற படி-பண்ணார் பாடல் என்று -திரு வாய் மொழி பண்ணையும் இசையையும் உடைத்தாய் –
ஆகையாலே சாம வேதத்துக்கு பண்ணும் இசையும் உண்டு என்னும் இடம் அறிவிக்கைக்காக வாய்த்து
சாம வேத பரமான சந்தைகள் வேண்டுவது உண்டாய் இருக்க ,இவற்றை இவர் இப்போது எடுத்தது-

இயற்பாவா யிருக்கிற திருவிருத்தம்‌, திருவாசிரியம்‌, திருவந்தாதி என்கிற ப்ரபந்தங்கள்‌ மூன்றும்‌ ருக்‌, யஜூர் அதர்வணம்‌ என்கிற மூன்று வேத ஸ்தாநத்திலே; ”பண்ணார் பாடல்‌”’ (திருவா, 10 – 7 – 5) என்கிற திருவாய்மொழி “பண்புடை வேதம்‌”, (திருவா. 6 – 6 – 5) ‘இசை கொள் வேதநூல்‌ (திருமொழி 5 – 3 – 2) என்றும்‌ சொல்லுகிற காந ப்ரதாநமான ஸாம வேதம் போலே என்கிறார் –

நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணா தனகள் எண்ணும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப
பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே–10-7-5—பண்ணார் பாடல் இன் கவிகள் —ஆர்தல் -சேர்தல் -மிகுதல்-பண் மிக்கு இருந்துள்ள பாடல் -புஷ்ப்பம் பரிமளத்தோடே அலருமா போலே -திருவாய் மொழி அவதரித்த போதே பண் மினுங்கி யாய்த்து இருப்பது –இன் கவி–பண்ணுக்கு ஆஸ்ரயமான கவி தானே இனிதாய் இருக்கை –

பண்புடை வேதம் பயந்த பரனுக்கு
மண்புரை வையம் இடந்த வராகற்கு
தெண்புனற் பள்ளிஎம் தேவபி ரானுக்குஎன்
கண்புனை கோதை இழந்தது கற்பே.–6-6-5—ஈஸ்வரனை உள்ளபடியே காட்டித் தரும் நீர்மையை யுடைய வேதம் —

வசையில் நான்மறை கெடுத்த அம் மலர் அயற்கு அருளி முன் பரி முகமாய்
இசை கொள் வேத நூல் என்று இவை பயந்தவனே எனக்கு அருள் புரியே
உயர் கொள் மாதவிப் போதொடு உலாவிய மாருதம் வீதியின் வாய்த்
திசை எல்லாம் கமழும் பொழில் சூழ் திரு வெள்ளறை நின்றானே –5-3-2—நல்ல நாதத்தை உடைத்தாய் இருந்துள்ள வேதம் இதிஹாசாதிகள் இவற்றை உண்டாக்கினவனே என் பக்கலிலே கிருபையை பண்ணி யருள வேணும் –

ஆனால் அந்த சதுஷ்டயத்தில் ருக்கு சாம ரூபேண விஸ்த்ருதமாம் ஆகாரம் இங்கும் ஒக்குமோ என்னும்
ஆ காங்ஷையிலே அருளிச் செய்கிறார் மேல் ..இதில்‌ ருக்கு ஸாமமாகப்‌ பாடப்படுகிறாப் போலே ருக்‌ வேத ஸ்தாநே யாயிருக்கிற திருவிருத்தம்‌ திருவாய்மொழியாகப்‌ பாடப்படும்‌ என்கிறார்‌-

ருக்கு சாமத்தாலே சரசமமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே சொல்லார் தொடையல் இசை கூட்ட
அமர் சுவை ஆயிரம் ஆயிற்று-சூரணை-51-

அதாவது-
சாம ஸங்க்ரஹமான ருக்கானது ஸ்வ விவரணமாய் ருசஸ் சாம ரச -என்கிற படியே தனக்கு
ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே , ரச சகிதமாய் ,-ஹாவு ஹாவு-இத்யாதியான ஸ்தோபத்தாலே விச்த்ருதமாமா போலே ருக் வேத ஸ்தாநேயாய் இருக்கிற சொல்லார் தொடையலான–(தொடையல் -சப்த சந்தர்ப்பம் )திருவிருத்தம்-100–திரு விருத்தம் நூறு பாட்டும்- இசை கூட்டி-திருவாய்-2-4-11- என்கிற படியே -இசையிலே கூட்டினவாறே-சாம வேத ஸ்தாநேயாய் –அமர் சுவை ஆயிரம்–திருவாய்-1-3-11-என்கிற படியே சரசமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாய் பரம்பின என்கை .

ஸாம ஸங்க்‌,ரஹம்‌ ருக்கு; ருக்‌ விவரணம்‌ ஸாமம்‌. அப்படியே திருவிருத்தமும் திருவாய்மொழியும்‌. (ருக்கு ஸாமத்தாலே ஸரஸமாய்‌) ருக்கு ஸாமத்தோடே கூடி ரஸ ஸஹிதமாய்‌. (ஸ்தோப,த்தாலே பரம்புமாப் போலே) ஸ்தோப,ம்‌ என்கிறது ருக்‌ வேதங்களை யொழிந்த “*ஹாவு ஹாவு ஹாவு”” இத்யாதிகளாலே பாட, ஒன்று பத்தாக விஸ்த்ருதமாமாப் போலே *சொல்லார் தொடையலான இந் நூறு பாட்டும்‌ ““இசை கூட்டி வண் சடகோபன்‌”‘ (திருவா. 2 – 4 – 11) என்கிறபடியே இசையிலே கூட்டினவாறே “அமர்‌ சுவை யாயிரம்‌”’ (திருவா. 1 – 3 – 11)என்கிறபடியே ஸரஸமான ஆயிரமாயிற்று-

நல்லார் நவில் குருகூர் நகரான் திரு மால் திருப்பேர்
வல்லார் அடிக் கண்ணி சூடிய மாறன் விண்ணப்பம் செய்த
சொல்லார் தொடையில் இந்நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பாம்
பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே – – 100–ஆப்த வாக்கியம் என்று ஆதரிக்க வேண்டா –பாட்யே கேயே ச மதுரம் -என்கிறபடியே-இதில் சாரஸ்யத்துக்கும்  ஆக ஆதரிக்க வேணும்-

வாட்டமில் புகழ் வாமனனை இசை
கூட்டி வண் சடகோபன் சொல்
அமை
பாட்டோராயிரத்து இப்பத்தால் அடி
சூட்டலாகுமே அந்தாமமே –2-4-11–இசை-கூட்டி –இயல் தானே ஆகர்ஷகமாய் இருக்க புஷ்ப்பம் பரிமளத்தோடே அலர்ந்தால் போலே இசையோடே புணர்ப்புண்டது என்கை-வண் சடகோபன் சொல்
மானஸ அனுபவம் அன்றிக்கே வாசகம் ஆக்கி நாட்டை அடைய வாழ்வித்த உதார குணம்
அமை பாட்டு-சப்த லக்ஷணங்களாலும் அர்த்தத்தாலும் பூரணமாய் இருக்கை -அமைவு -சமைவு-

அமரர்கள் தொழுது எழு அலை கடல் கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளம் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அமர்சுவை யாயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார்
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அஞ்சிறையே–1-3-11—இவ் வாசிகமான அடிமை -முறை என்று -கார்யாபுத்த்யா செய்ய வேண்டாதபடி -ரச கனமாயிற்று இவ்வாயிரமும் –ரசகனமாயிற்று -சுவை நிறைந்தனவாய் இருக்கிற ஆயிரம்.-‘இதனால், சொற்களைக் கொண்டு செய்யும் அடிமை ‘முறை’ என்று காரிய புத்தியாகச் செய்ய வேண்டா என்றபடி.

இனி சாமம் தான் அநேக விதம் ஆகையாலே ,இது எந்த சாமத்தொடு ஒக்கும் என அருளி செய்கிறார் மேல் –ஸாமந்தான்‌ ஆயிரமாய்‌ அநேக விதமாயிருக்குமே. எந்த ஸாமத்தோடே ஓப்பாகிறது என்னில்‌, சாந்தோக்‌ய ஸமமாயிருக்கும்‌ என்கிறார்‌ மேல்‌

சாந்தோகன் என்று சாமான்யம் ஆகாமல் முதலிலே பிரித்து-யாழ் பயில் கான ஸ்வரூபியை பாலையாகி என்று விசேஷிக்கையாலே-வேத கீத சாமி நான் என்ற சாமம் தோன்ற உத்கீத பிரணவத்தை பிரதமத்திலே மாறாடி சரம கதி முடிவாக தொண்டர்க்கு அமுது என்ன தேவான்னம் ஆக்கி மகா கோஷ நல் வேத ஒலி போலே மகாத்யயனம் என்ன பாடுகையாலே இத்தை சாந்தோக்ய சமம் என்பர்கள்.–சூரணை-52-

சாந்தோகன் என்று சாமான்யம் ஆகாமல் முதலிலே பிரித்து — அதாவது –சாம வேத கீதனாய சக்ரபாணி அல்லையே–திருச்சந்த -14- – திசை முகனார் தங்கள் அப்பன் சாமி அப்பன் – பெரிய திருமொழி –2-2-7-
சாமவேதோஸ்மி-ஸ்ரீ கீதை –10-22- -என்று அபியுக்தரும் ,அவன் தானும் சொன்ன சாமம் சாமான்யம் ஆகாமல் சாந்தோகன் ,பவ்ழியன்,ஐம் தழல் ஓம்பு தைத்ரியன் ,சாம வேதி –பெரிய திருமொழி-5-5-9-
என்ற இடத்தில் –சாம வேதி -என்று மேல் சொல்லா நிற்க –சந்தோகன் -என்று முதலில் பிரித்தது என்கை –இது நினைவன்றாகில் –சாம வேதி -என்றதுக்குள்ளே இந்த சாமமும் அந்தர் பவிக்குமாய் இருக்க இங்கன் பிரித்து சொல்ல வேண்டா விறே- என்ற கருத்து-யாழ் பயில் கான ஸ்வரூபியை பாலையாகி என்று விசேஷிக்கையாலே– அதாவது –யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவை திருவாய்-2-3-7–என்று
யாழ் விஷயமாக அப்யசிக்க படுவதான சாஸ்திரத்தில் சொன்ன லஷணத்தை உடைய நரம்பிலே பிறந்த பண் பட்ட ரசம் என்னும் படி கான ஸ்வரூபம் போலே இனியன் ஆனவனை -கான சாமான்யம் ஆகாமல் –யாழ் நரம்பில் பெற்ற பாலை யாகி-(பாலையாகிய கான ஸ்வரூபி )-பெரிய திருமொழி-7-3-7–என்று அந்த சாந்தோக சாமத்தின் நிறமான-பாலையாழ் என்கிற பண்ணை இட்டு விசேஷிக்கையாலே என்கை ..இப்போது இது சொல்லிற்று – சாம வேத கீதன் –என்கிற இடத்தில் வேதத்தோடு அன்றிக்கே , அதன் கீதத்தோடு சாமானாதி கரிக்கையாலே அந்த கீதமும் சாந்தோக சாம வேதம் என்று அறிவிக்கைகாக —வேத கீத சாமி நான் என்ற சாமம் தோன்ற — அதாவது –இப்படி விசேஷிக்கையாலே ,பச்வதி கரண ந்யாயத்தாலே ,-சாம வேத கீதன்–சாமி–சாம வேதோச்மி –என்று சொன்ன சாமான்யமான இஸ் சாம சப்தமும் ,-கீத சப்தமும் ,கீழ் சொன்ன சந்தோக தத் கீதங்கள் ஆகிற விசேஷத்தில் பர்யவசிக்கும் இறே –-ஆன பின்பு சாந்தோக சாமமே இத்தால் சொல்லப் பட்டது-ஆகையாலே இப்படி அப்யுக்தரும் தானும் தன்னோடு சாமானாதி கரிக்கும் படி உத்க்ருஷ்டமாய் அவனுக்கு ஆதரீயணமான சாந்தோக சாமம் ஈது என்னும் இடம் தோன்றும் படியாக என்கை ..

“சந்தோகன்‌ பெளழியன்‌ ஐந்தழலோம்பு தைத்திரியன்‌ சாமவேதி”” (திருமொழி 5 – 5 9) என்கிற விடத்தில்‌ ““’ஸாமவேதி” என்று ஸாம ஸாமாந்யமாகாமல்‌ ““சந்தோகன்‌”” என்று முதலிலே பிரித்து “’முன்னல் யாழ் பயில்‌ நூல் நரம்பின்‌ முதிர்சுவை”’ (திருவா 2-5 – 7) என்கிற காந ரூபியை காந ரஸமானவனை; ““யாழ் நரம்பில் பெற்ற பாலையாகி”’ (திருமொழி 7 – 3 – 7) என்று கொண்டு காந ஸ்வரூபி என்று ஸமுதாயமாக்காமல்‌, “பாலை?””, “யாழ்‌” என்கிற பண்ணை யிட்டு விஸேஷிக்கையாலே “சாம வேத கீதனாய”” (திருச்ச. 14) என்றும்‌, “’வேதா நாம்‌ ஸாம வேதோஸ்மி?”  (கீதை 10 – 22) என்றும்‌ அவன் தன்னோடொக்க ஸமாநாதி, கரிக்கும் படியான சந்தோக ஸாமம்‌ இத்திருவாய்‌ மொழி என்னுமிடம்‌ தோற்ற-

தூய்மை யோகமாயினாய் துழாய் அலங்கல் மலையாய்
ஆமையாகி ஆழ் கடல் துயின்ற வாதிதேவ நின்
நாமதேயமின்னதென்ன வல்லமல்ல வாகிலும்
சாமவேத கீதனாய சக்ர பாணி அல்லையே
 –14-நீ அழிவுக்கு இட்ட கூர்ம விக்ரஹம் சாந்தோக்ய சித்தமாய் -கையும் திரு வாழியுமான அதி ரமணீய விக்ரஹம் என்று அறிந்தேன் –ய ஏஷோ அந்தராதித்யே ஹிரண்மயம் புருஷோ தர்ச்யதே ஹிரண்மய ஸ்மஸ்ருர் ஹிரண்யகேஸ ஆப்ரணகாத் சர்வ ஏவ ஸுவர்ண: தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீக மேவ மக்ஷிணி (சாந்தோக்யம் 1-6 and 7)-த்யேயஸ் ஸதா சவித்ர் மண்டலமத்யே வரதீ நாராயணாயஸ் சஸரஸிஜாஸன ஸன்னிவிஷ்ட கேயூரவான் மகரகுண்டலவான் கிரீடி ஹரீ ஹிரண்மயவபுர் -த்ர்த சங்கசக்ர (ஸ்ரீ நரஸிம்ஹ புராணம் )

திங்களப்பு வானெரி காலாகித் திசை முகனார்
தங்களப்பன் சாமியப்பன் பாகத்திருந்த வண்டுண்
தொங்கலப்பு நீண் முடியான் சூழ் கழல் சூட நின்ற
எங்களப்பன் எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே–2-2-7—கார்ய வர்க்கத்துக்கு உப லஷணமாக சந்திரனையும் காரணமான பூத பஞ்சகத்துக்கு உப லஷணமாக நாலையும் சொல்லி இவற்றுக்கு  அந்தராத்மாவாய் நிற்கிறான் என்றபடி – சதுர் முகனுக்கும் ஜநகன் ஆனவன் –சாம வேத ப்ரதிபாத்யனான காரண -பூதன் -( ஏக விஞ்ஞான சர்வ விஞ்ஞானம் )

வேதாநாம் ஸாமவேதோऽஸ்மி தேவாநாமஸ்மி வாஸவ:
இந்த்ரியாணாம் மநஸ்சாஸ்மி பூதாநாமஸ்மி சேதநா–
10-22-வேதங்களில் யான் சாமவேதம்; தேவரில் இந்திரன்; புலன்களில் மனம் யான்; உயிர்களிடத்தே உணர்வு நான்.-மஹா விஷ்ணுவுக்கே ஸாமக அதாவது ஸாமவேதம் ஓதுபவர் என்ற பெயர், விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் அமைந்துள்ளது-இசையோடு கூடியிருப்பதால் ஸாமவேதம் பொருள் விளங்காதவர்களுக்கும் உள்ளத்தைக் கவர வல்லதாகிறது.

பந்தோடு கழல் மருவாள் பைங்கிளியும் பாலூட்டாள் பாவை பேணாள்
வந்தானோ திருவரங்கன் வாரானோ  என்று என்றே வளையும் சோரும்
சந்தோகன் பவுழியன் ஐந்து அழல் ஓம்பு தைத்ரியன் சாம வேதி
அந்தோ என் மகளைச் செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே —5-5-9—சந்தோகன் –சந்தோக சாமத்தை பிரித்துச் சொல்லுகிறதாகவுமாம் – அன்றிக்கே இத்தால் –வேதைக சமதி கம்யன் என்ற படியாய் –பவுழியன் ஐந்து அழல் ஓம்பு தைத்ரியன் சாம வேதி-மேல் வேதாந்த வித்தமன் என்றதாகவுமாம் –

முன் நல் யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவையே
பன்னலார் பயிலும் பரனே பவித்திரனே

கன்னலே அமுதே கார் முகிலே என் கண்ணா
நின்னலால் இலேன் காண் என்னை நீ குறிக்கொள்ளே–2-3-7—பழையதாய் வி லக்ஷணமாய் யாழ் விஷயமாக ப்ரவ்ருத்தமாய் அப்யஸிக்கப் படுவதான நூல் உண்டு சாஸ்திரம்-அது சொன்ன லக்ஷணத்தை உடைய நரம்பில் பிறந்த முதிர்ந்த ரசம் போலே போக்யமானவனே
ய ஆத்ய ஸ்வா தூ நாம் -என்று சப்த சாரஸ்யத்தை தலையாகச் சொல்லக் கடவது இறே
மிடற்றைச் சொல்லாதே நரம்பைச் சொல்லிற்று கர்மத்தால் போது செய்யாதது ஆகையால்-

பண்ணின் இன் மொழி யாழ் நரம்பில் பெற்ற பாலையாகி இங்கே புகுந்து என்
கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான் கொண்ட பின் மறையோர் மனம் தன்னுள்
விண்ணுளார் பெருமானை எம்மானை வீங்கு நீர் மகரம் திளைக்கும் கடல்
வண்ணன் மா மணி வண்ணன் எம் அண்ணல் வண்ணமே அன்றி வாய் யுரையாதே –7-3-7–பண் வர்க்கத்திலே இனிய பேச்சை உடைய யாழ் நரம்பிலே – யாழிலே பிறக்கப் பெற்ற -பாலை -யாகிற பண்ணாய் அப் பண் போலே போக்யனாய்க் கொண்டு வந்து புகுந்து –

உத்கீத பிரணவத்தை பிரதமத்திலே மாறாடி — அதாவது –ஒரு சாமம் தனக்கே ,பிரஸ்தாபம், உத்கீதம் ,ப்ரதீஹாரம் ,உபத்ரவம் ,நிதநம் என்று அஞ்சு பாகங்கள் உண்டாகையாலே ,அவற்றுக்குள் ஒன்றாக இருக்கச் செய்தே , சாம்ன உத்கீதோ ரச –சாந்தோக்யம்- என்று சாமத்துக்கு ரசமாக சொல்லப் படுமதாய் ,பிரணவ பூர்வமாக , கானம் பண்ணப் படுமதாய் ,இருப்பது ஓன்று இறே உத்கீதம் –-ஆகையால் அந்த உத்கீத அவயவமான பிரணவத்தை ,-ஓம் இத் ஏதத அஷரம் உத்கீதம் உபாசீத -என்று சாந்தோக்யம் தன்னில் பிரதமத்தில் எடுத்தால் போலே ,இங்கும் பிரதமத்திலே எடுக்கிற அளவில் ,ஓம் என்று
சம்ஹிதா காரேன வெடுத்தால் அதிகிரிதா அதிகாரமாம் என்று அசம்ஹிதா காரேன அஷர த்ரயத்தையும் பிரதம த்வதீய த்ருதீய பாதங்களில் எடா நிற்க செய்தே , பிரதம அஷரமான அ காரம் முதலாக எடாதே உ காரம் முதலாக எடுக்கையாலே அஷர க்ரமத்தை மாறாடி
என்கை-இப்படி உ காரம் முதலாக எடுத்ததுக்கு பிரயோஜனம் அந்த சாந்தோக்ய ரசமான உத் கீதத்துக்கு நோக்கான உத் -என்கிற
திரு நாமம் இதற்க்கு உள்ளுறை யானமை தோன்ற உ காராதியாக எடுத்து -உயர்ந்தே
-10-10-11–என்று தகாராந்தமாக முடிக்கை ….-இது தான் மேலில் சூர்ணையில் வியக்தம் ..-ஆக இப்படி அஷர த்ரய ரூபேண ,பிரணவத்தை பிரதமத்திலே கீர்த்தியா நிற்கச் செய்தே ஏதத் அபிப்ரா யேன அஷர க்ரமத்தை மாறாடி-

உத்‌ கீத மேதத் பரமநுப்‌ரஹ்ம””, ““ஓங்காரோத்‌ கீத மேவ”, “ஓமித் யேததக்ஷர முத்‌ கீத முபாஸீத”‘(சா. 1 – 1 – 1) என்று சொல்லுகிற உத்‌ கீத ப்ரணவத்தை ப்ரதமத்திலே மாறாடி. இப் ப்ரபந்தத்துக்கு உத்‌கீதம்‌ என்கிற இது ப்ரதாநம்‌ என்னுமாகாரம்‌ தோன்ற ப்ரணவத்தை ப்ரபந்த ஆதியிலே “உயர்வற-மயர்வற, அயர்வறும்‌”” என்று மாறாடி

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11-அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே-இந்த பத்தும் அனுசந்தித்து -உயர்ந்தே பிறந்தார்

சரம கதி முடிவாக — அதாவது -சாந்தோக்ய மத்யே சொன்ன ,அர்சிராதியான சரம கதியை –
சூழ் விசும்பு அணி முகிலிலே
-10-9-1- -பேசுகையாலே சரம கதியை முடிவாக கொண்டு என்கை ..
இத்தை சரம கதி என்கிறது -கர்ப்ப யாம்ய தூமாதிகள் போல் அன்றிக்கே எல்லை நிலமான முக்தி மார்க்கம் என்கையாலேதொண்டர்க்கு அமுது என்ன தேவான்னம் ஆக்கி —அதாவது -அந்த சாமம் –ஏதத் சாம காயன்னாச்தே–தைத்ரியம்–என்கிற படியே பகவத் அனுபவ ஜனித ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக –ஹாவு ஹாவு -இத்யாதிபடியே சாம கானம் பண்ணி அஹம் அந்நாதா -என்று களிக்கும் நித்ய முக்தரான தேவர்களுக்கு போக்யமாம் ஆம் போலே –தொண்டர்க்கு அமுது உண்ண -9-4-9–என்கிற படியே
இதுவும் பகவத் அனுபவ சபலர்க்கு போக்யமாம் படி ஆக்கி என்கை ..மகா கோஷ நல் வேத ஒலி போலே மகாத்யயனம் என்னப் பாடுகையாலே —-அதாவது –சர்வேப்யோபிஹி வேதேப்ய சாமகோஷோ மகாநபூத் அன்வ கோஷாய தத்யர்த்தம் தேன ப்ரஹ்மாண்ட மண்டப -என்றும்–பாடு நல் வேத ஒலி -திருவாய்-5-9-3–என்றும் சொல்லுகிற பெரிய கோஷத்தை உடைத்தான சாம வேதம் போலே ,பெரிய திரு அத்யயனம் என்னப் பாடுகையாலே என்கை .. இத்தை சாந்தோக்ய சமம் என்பர்கள்..-ஆக இப்படி கீழ் சொன்ன ஆகாரங்களை கொண்டு ,இத்தை சாந்தோக சாமத்தில் உபநிஷத் பாகமான சாந்தோக்யத்துக்கு சமம் என்று அபியுக்தர்கள் சொல்லுவார்கள் என்கை-

“உயர்ந்தே” என்று சரம கதி முடிவாக அகார மகாரங்களிரண்டினுடைய சரமமான நடு தகாரம்‌ அத்தைத் திருவாய்மொழிக்கு முடிவாக்கி {அகார-உகாரங்களின்‌ சரமமான தகாரத்தைத்‌ திருவாய்மொழிக்கு முடிவாக்கி!.–அன்றிக்கே அர்ச்சிராதி,யை முடிவாக்கி என்னவுமாம்‌. அதுக்கடி – முடிவிலே சூழ்‌ விசும்பணிமுகிலாகையாலே. “’தொண்டர்க்கமுதுண்ணச்‌ சொன் மாலைகள்‌ சொன்னேன்‌”’ (திருவா. 9 – 4 – 9) என்று இப் ப்ரப,ந்த,த்தை ““ஹாவு ஹாவு ஹாவு” என்று தொடங்கி,  “அஹமந்நாதோரஹ மந்நாதோரஹமந்நாத,?‘” என்று தேவ போக்‌யமானாப் போலே, ப,க,வத்‌,விஷயத்தில்‌ சபலரானார்க்கு போக்‌யமாக்கி.““ஸர்வேப்‌யோபி ஹி வேதேப்‌ய: ஸாம கோஷோ மஹாநபூத்‌ | அந்வ கோஷய தத்யர்த்த,ம்‌ தேந ப்ரஹ்மாண்ட,மண்டபா ” என்று (மஹாகோஷம்‌) பெரிய ஆரவாரத்தை உடைத்தாயிருப்பது ஸாம கோஷமிறே. “எழுந்த நல்வேதத்தொலி”* என்றும்‌, *“ஸாமத்‌வநி” என்றும்‌ சொல்லுமாப் போலே இப்ப்ரபந்தத்தையும்‌ மஹாத்‌யயநமென்னப்‌ பாடுகையாலே பெரிய திருவத்யயந மென்னக் கடவதிறே. ஆகையாலே இத்தை சாந்தோக்‌ய ஸமமென்பர்கள்‌ என்கிறார்

சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தாமரைக் கண்டு உகந்தே
–10-9-1–அங்குத்தை அனுபத்துக்கு ஈடாம்படி மிகவும் விடாய் பிறக்கைக்காக – தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளைக் கண்ணாலே கண்டால் போலே விசதமாக பிரகாசிக்கும் படி பண்ணி அருளினான் –காட்டி அருளக் கண்டு ப்ரீதராய் -அத்தை அந்யாபதேசத்தாலே பேசி அனுபவிக்கிறார் –தமக்கு அவன் பண்ணிக் கொடுத்த பேற்றை ஸ்ரீ வைஷ்ணவர்கள் எல்லாரும் பெற்றவராக பேசுகிற இது -அந்யாபதேசமாவது–அது தனக்கு பிரயோஜனம் -இங்குள்ளார் ஆழ்வார் பேறு நமக்குத் தப்பாது -என்று இருக்கைக்காக –

கண்டு கொண்டு என் கண்ணினை ஆரக் களித்து
பண்டை வினை ஆயின பற்றோடு அறுத்துத்
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்
அண்டத்து அமரர் பெருமான் அடியேனே –9-4-9—ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் உபகாரகனாகப் பெற்றேன்-இப்பேறு என்னால் வந்ததாக மாட்டாது -நான் சர்வேஸ்வரனால் விஷயீக்ருதன் ஆனேன் –

சூடு மலர்க் குழலீர்! துயராட்டியேனை மெலியப்
பாடு நல் வேத ஒலி பரவைத் திரை போல் முழங்க
மாடுயர்ந் தோமப் புகை கமழும் தண் திரு வல்லவாழ்
நீடுறை கின்ற பிரான் கழல் காண்டுங் கொல் நிச்சலுமே.–5-9-3—ஈஸ்வரனைப் பாடுகிற பழம் புணர்ப்பான வேதம் என்னுதல்-கானத்தை யுடைய சாம வேதம் என்னுதல் -உளன் சுடர் மிகு சுருதியுள்-என்று பிரமாணங்களில் உத்கர்ஷம் ஆதல் -வேதா நாம் சாம வேதோ அஸ்மி -என்னும் உத்கர்ஷம் ஆதல்-

உத்கீத பிரணவத்தை பிரதமத்திலே மாறாடி-என்று கீழ் சொன்னதின் கருத்தை ஆப்த உபதேச முகேன அறிவிக்கிறார் மேல் .-அந்தராதித்யவித்‌யை தொடக்கமான வற்றையும்‌ இதிலே சொல்லுமென்று கொண்டு முற்பட்ட யோஜனையை அருளிச் செய்கிறார்‌ மேல்‌-

புரவி ஏழு ஒரு கால் உடைய தேரிலே திரு சக்கரம் ஒத்து கால சக்கரச் செங்கோல் நடாவி ஜோதிஸ் சக்கர ஒளி சுருக்கி அக்நீஷோ மீய தேஜோ அம்ருதத்துக்குக் ஊற்றும் மந்தேஹர்க்கு செம் தீயும்
முக்தி மார்க்கத் தலை வாசலும் கண்ணாவான் கண்ணில் பிறந்த கண்மணியும் த்ரயீ மயமுமான மண்டலத்திலே தண் தாமரை சுமக்க தோள் வளையும் குழையும் திரு செய்ய முடியும் ஆரமும் படையும் திகழும் பொன் மேனியும் செஞ்சுடர் தாமரை கண்ணுமாய் அணி நிற மூர்த்தி ஈது என்னும் படி இரண்டையும் தன்னிறம் ஆக்குகிற செய்யாளான வித்தை யோடே அருக்கன் மேவின சதாத்யேய தேஜஸ்ஸின் சாம ரச உத்கான நாமம் உள்ளுறையான ஆத்யந்தங்களாலே ஓர் ஆயிரமாம் அவற்றிலே ஒன்றை ஆயிரம் முகத்தினால் அருளின தீர்த்தம் போலே தீர்த்தங்கள் ஆயிரமுமாக விஸ்தரிக்கிறார் என்று வேத குரு உபதேசம் .–சூரணை -53–

1-புரவி ஏழு ஒரு கால் உடைய தேரிலே –-அதாவது –காரார் புரவி ஏழ் பூண்ட தனி ஆழி -சிறிய திருமடல் –என்றும்-ஒரு கால் உடைய தேர் -பெரிய திருமொழி-5-7-8–என்றும் சொல்லுகிற படியே – காயத்ரீ /ப்ருஹதீ /உஷ்ணிக் /ஜகதீ/த்ருஷ்டுப் /அனுஷ்டுப் /பங்க்தி -என்கிற ஏழு சந்தஸ்ஸூக்களும் ஏழு குதிரைகளாக கொண்டு வகிக்கையாலே ,-சப்தாஸ்வ யுக்தமாய் .கால சக்ர மயமான ஏக சக்கரத்தையும் உடையதான ரதத்திலே என்கை–சப்த யுஜ்ஞஜந்தி ரதமேக சக்ரம் -ஆரணம்–என்றும்
ஹாயாச்ச சப்த சந்தாம்சி தேஷாம் நாமாநி மே ஸ்ருணு காயத்ரீ ச ப்ருஹத் யுஷ்ணிக் ஜகதீ
த்ருஷ்டுபேவச அனுஷ்டுப் பங்க்தி ரித்யுக்தா சந்தாம்சி ஹரயோ ரவ
-ஸ்ரீ விஷ்ணு புராணம்-2-8-4-– என்றும் சொல்லக் கடவதிறே-ஏகோ அச்வோ வஹதி சப்தநாமா-ஆரணம்-–என்றதுக்கு ஹிருதயம் ஏதத் அனுகுணமாக வியாக்யாதமான இடங்களில் கண்டு கொள்வது —திரிநாபிமதி பஞ்சாரே ஷண்ணே மின்யஷா ஆத்மகே , சம்வத்சர மயே க்ருத்ஸ்னம் காலசக்ரேத் மகே பிரதிஷ்டிதம் –ஸ்ரீ விஷ்ணு புராணம்-2-8-3- என்கிற படியே , சாதுர் மாஸ்ய த்ரயாத் மகமான நாபியை உடைத்தாய்-சம்வஸ்தரம் பரிவஸ்த்ரம் , இதாவஸ்த்ரம்.அனுவஸ்த்ரம் , இத்வஸ்த்ரம் என்று சொல்லப் பட்ட ஐஞ்சு
வஸ்தரத்தையும் ,அரங்களாக உடைத்தாய் வசந்த கிரீஷ்ம வர்ஷா சரத்தே மந்த சிசிரங்களாகிற ஆறு ருதுக்களையும் நேமியாக உடைத்தாய் , ப்ரவாஹா பரி விருத்தியாலே , அஷய ரூபமாக இருக்கிற கால சக்கரத்திலே , சர்வம் பிரதிஷ்டிதம்-என்கையாலே , இந்த ஏக சக்கரம் கால சக்கரமாய் இறே இருப்பது .
ஆக இப்படி இருந்துள்ள சப்த அஸ்வங்களையும் ,ஏக சக்கரத்தையும் உடைத்து ஆகையாலே ,இதர வ்யாவ்ருத்த வைபவமான ரதத்திலே என்ற படி –

“காரார்‌ புரவியேழ்‌”’ (சி. திருமடல்‌) என்றும்‌, ““ஓருகாலுடைய தேரொருவன்‌”” (திருமொழி 5 – 7 – 8) என்றும்‌, “ஸப்த யுஞ்ஜந்தி ரத மேக சக்ரம்‌”” (அருணம்‌ 3) என்றும்‌, “ஏகோ அஸ்வோ வஹதி ஸப்தநாமா‘ (அருணம்‌ 3) என்று ஸப்தநாமா வாயிருப்பதொரு அஸ்வத்தாலே வஹிக்கப்படுவதாய்‌, ஏக சக்ரியுமாயிருக்கிற தேரிலே-

கார் ஆர் புரவி ஏழ் பூண்ட தனி ஆழித் தேரார் – நிறை கதிரோன் -மண்டலத்தைக் கீண்டு புக்கு –
ஆராவமுதம் அங்கு எய்தி -அதில் நின்றும் வாராது ஒழிவது  ஓன்று உண்டே –மேக மண்டலத்தில் செல்லுவதும் ஏழு குதிரைகள் பூட்டப் பெற்றதும் ஒற்றைச் சக்கரத்தை வுடையதுமான – அது தான் உங்களுக்கு ஏற்க உண்டே என்று தோற்றிற்றோ -தனி ஆழித் தேரார் – பிள்ளாய் -இரண்டாதல் நாலாதல் அன்றிக்கே தனிச் சக்கரமாம் –பிள்ளாய் -ஆகாசத்திலே ஒருவன் தேர் நடக்கை யாவதென் –மேக பதத்திலே குதிரை சஞ்சரிக்கை யாவது என் புரவி -இரண்டு அல்ல நாலு அல்ல ஆறு அல்ல -எட்டு அல்ல ஏழு குதிரை பூண்கை யாவது என் –நிறை கதிரோன் – ஒரு விளக்கின் சந்நிதியில் விழிக்க மாட்டாத அதி சூத்திரன் உஷ்ண கிரணங்களால் பூர்ணனாய் இருக்கிற ஆதித்யனைச் சென்று கிட்டுகை யாவதென் –மண்டலத்தைக் கீண்டு புக்கு –ஒருவனை இங்கே உபாசித்து அவனுடைய ராஜகுலத்தாலே -ஆதித்ய மண்டலத்தின் நடுவே போகிறானாம் இறே அங்கே ஏறப் போனால் அவ்வழிப் போக்குத் தான் இங்குப் போலே இரண்டருகும் பணையாக நடவே போகிறானோ தான் -என்கை –

ஊழியாய் ஓமத்து உச்சியாய் ஒரு காலுடைய தேர் ஒருவனாய் உலகினில்
சூழி மால் யானைத் துயர் கெடுத்து இலங்கை மலங்க வன்று வடு சரம் துரந்து
பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளிப் பகலவன் ஒளி கெடப் பகலே
ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே —5-7-8–காலோ பல ஷிதமான சகல பதார்த்தங்களுக்கும் நிர்வாஹகனாய்-அஹம் ஹி சர்வ யஞ்ஞாநாம் போக்தா பிரபு – என்றும்-போக்தாம் யஜ்ஞ  தபஸாம் -என்கிறபடியே-சர்வ கர்ம சமாராத்யனாய்-ஏக சக்கரமான ரதத்தை உடைய ஆதித்யனுக்கு அந்தராத்மாவாகக் கொண்டு அவ் வழியாலே உபாஸ்யனாய்-

இனி மேல் மண்டலத்தை வர்ணிக்கிறது –2-திரு சக்கரம் ஒத்து -அதாவது — அம் மேருவில் செஞ்சுடரோன் திரு மால் திருக் கை திருச் சக்கரம் ஒக்கும் -திரு விருத்தம் -88–என்னும் படி
விருத்தாகாரதையாலும் ,தேஜோ விசேஷத்தாலும் ,திரு ஆழியோடு ஒத்து இருக்கை–3-கால சக்கரம் செம் கோல் நடாவி —- அதாவது –திரு சக்கரத்தால் அகல் விசும்பும் ,நிலனும்,இருளார் வினை கெட செம் கோல் நடாவுதீர்–திரு விருத்தம் -33 -என்கிற படி உபய விபூதியிலும் ,ஈஸ்வரன் தன் ஆக்ஜையை நிர்வகிக்கைக்கு உபகரணமான திரு ஆழியைப் போலே ,-கால சக்கரத்தாய்–-திருவாய்-7-2-7-என்னும் படி கால சக்கர நிர்வாகனானவனுடைய கால சக்கர விஷயமான ஆக்ஜையை-தனி வளர் செம் கோல் நடாவு தழல் வாய் அரசு -திரு விருத்தம் -13- -என்கிற படியே நடத்துகை .

திருமால்‌ திருக்கைத்‌ திருச் சக்கரமொக்கும்‌”’ (திருவிரு. 86) என்கிறபடியே திருவாழி யாழ்வானோடே ஒப்புச் சொல்லலாய்‌, (கால சக்கரச் செங்கோல்‌ நடாவி) ““கால சக்கரத்தாய்‌” (திருவா. 7 – 2 – 7), ‘தனி வளர்‌ செங்கோல்‌ நடாவுதிர்‌’” (திருவிரு, 13) என்கிறபடியே கால சக்ர நிர்வாஹகமுமாய்‌,

திருமாலுரு வொக்கும் மேரு அம் மேருவில் செஞ்சுடரோன்
திருமால் திருக் கைத் திருச் சக்கர மொக்கும்
அன்ன கண்டும்
திருமாலுருவோடு அவன் சின்னமே பிதற்றா நிற்பது ஓர்
திருமால் தலைக் கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீ வினையே – – -88-அம் மேருவிலே சஞ்சரியா நிற்கிற ஆதித்யன் ஆனவன் –திருமால் திருக்கை திருச் சக்கரம் ஒக்கும் –வடிவார் சோதி வலத் துறையும் சுடர் ஆழியும் -என்கிறபடியே –அவன் கையிலே திரு வாழியைப் போலே இருக்கும்-அந்த மஹாமேருபர்வதததின் ஸமீபத்திலே விளங்கா நின்ற சிவந்த லொளியையுடைய ஸூர்யன் அவ்வெம்பெருமானுடைய அழகிய திருக்கையிலுள்ள திருவாழியாழ்னாவ் போன்றிருப்பான்-

பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்! பற்றிலார் பற்ற நின்றானே!
கால சக் கரத்தாய்! கடலிடங் கொண்ட கடல்வண்ணா! கண்ணனே!’ என்னும்;
‘சேல்கொள் தண் புனல்சூழ் திருவரங்கத்தாய்!’ என்னும்’என் தீர்த்தனே!’ என்னும்;
கோல மா மழைக்கண் பனி மல்க இருக்கும் என்னுடையக் கோமளக் கொழுந்தே.–7-2-7-விஷயீ கரிக்க காலமாக வேணுமே என்ன –கால தத்வம் நீ இட்ட வழக்கு அன்றோ -ஆஸ்ரிதர்க்காக பகலை இரவாக்கினவன் அன்றோ -அங்கனம் அன்றிக்கே பிரதிபந்தகமும் உண்டு காணும் என்ன -ப்ரதி பஷத்துக்கு ம்ருத்யுவான திரு வாழி கையிலே இருக்க பிரதிபந்தகம் உண்டோ 

தனி வளர் செங்கோல்  நடாவு தழல் வாயரசவிய
பனிவளர் செங்கோல்  இருள் வீற்று இருந்தது பார் முழுதும்
துனி வளர் காதல் துழாயை துழாவு தண் வாடை தடிந்து
இனி வளை காப்பவர் ஆர் எனை வூழிகள் ஈர்வனனே-13-தன்னுடைய தேஜஸ்ஸிலே அல்லாத தேஜஸ் பதார்த்தங்கள் அடைய மறையும்படி அத்விதீயமாய்க் கொண்டு வளருவதான தன்னுடைய பிரகாசத்தை எங்கும் ஓக்க நடத்துவானாய் உஷ்ண கிரணன் ஆகையாலே ப்ரதாப உத்தரரான ஆதித்யன் அஸ்தமிக்க

4-ஜோதீஸ் சக்கர ஒளி சுருக்கி –அதாவது –சுடர் ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம் -திருப்பள்ளி எழுச்சி -7–என்னும் படி ,சர்வதோதிக்கமாக வ்யாப்தமான ஸ்வ தேஜஸ் பிரகர்ஷத்தாலே –துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி –திருப்பள்ளி எழுச்சி -3- இத்யாதிப் படியே ,நஷத்ராதியான ஜ்யோதிர் கணங்களின் தேஜஸ்ஸை சங்கோசைப்பிக்கை –5-அக்நி ஷோமீய தேஜோ அம்ருதத்து ஊற்றும் -அதாவது –அக்னிம் வா வாதித்யஸ் சாயம் ப்ரவிசதி தஸ்மாத் அக்னிர் தூராத் நக்தம் தத்ருசே உபேவா தேஜஸீ சம்பத்யேதே–அஷ்டகம் -2- –என்றும்-ப்ரபா விவஸ்வதோ ராத்ரவ் அஸ்தம் கச்சதி பாச்கரே விசத்யக்னி மாதோ ராத்ரவ் வஹ்நிர் தூராத் பிரகாசதே-ஸ்ரீ விஷ்ணு புராணம்-2-8-20-என்றும் சொல்லுகிற படியே அஸ்தமய சமயத்திலே தன்னுடைய பிரபையை அக்னியிலே பிரவேசிப்பித்து ராத்ரியில் அக்னிக்கு தேஜோ வ்ருத்தியை வுண்டாக்குகையாலே அக்நியுடைய தேஜஸ் ஸூக்கு ஊற்று என்கிறது .-6-ஷீணம் பீதம் ஸூரைஸ் சோமம் ஆப்யாயயதி தீப்தி மான் ,மைத்ரேயைககலம்
சந்தம் ரச்மினைகேன பாஸ்கர , க்ரமேண ஏன பீதோசவ் தேவைஸ் தேன நிசாகரம்
ஆப்யாயத் யனுதினம் பாஸ்கரோ வாரி தஸ்கர
–ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-12-13-–என்கிற படியே
அபார பாசத்தில் ,பிரதமை தொடங்கி சதுர்த்தசி அளவும் நித்யம் ஒரு கலையாக அமிர்த மயமான பதினாலு கலைகளையும் தேவர்கள் புசித்து பதினைந்தாவது கலையை பஞ்சதசி அன்று அபராஹனத்திலே , பித்ருக்கள் புசிக்க ,இப்படி ஷீணனான சந்த்ரனுக்கு , பூர்வ பஷ பிரதமை தொடங்கி நித்யம் ஒரு கலையாக பஞ்ச தசி அளவும் பதினஞ்சு கலைகளையும் தன்னுடைய ரச்மிகளாலே ,வர்திப்பிக்கை யாலே ,சோமனுடைய அமிர்தத்துக்கு ஊற்று என்கிறது ..-ஆக இப்படி அக்னியினுடைய தேஜஸ்ஸூக்கும் ,சோமனுடைய அமிர்ததுக்கும் உத்பத்தி ஸ்தானமாய் இருக்கும் என்கை.-

(ஜயோதிஸ் சக்ரவொளி சுருக்கி) “துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி” (திருப்பள்ளி. 3) என்கிறபடியே நக்ஷத்ர தேஷஸ்ஸுக்கு ஸங்கோசத்தைப் பண்ணுமதாய்‌-(அக்‌நீஷோமீய தேஜோம்ருதத்துக்கு ஊற்றும்‌) அக்‌நியினுடைய தேஜஸ்ஸூக்கும் சந்தரனுடைய அம்ருத கலைக்கும்‌ உத்பத்தி ஸ்தலமுமாய்‌. பூர்வாபரங்களாகிற பக்ஷ த்வயத்திலும்‌ சந்த்ர கலையானது போவது வருவதாவது ஆதித்யன் பக்கல் நின்றுமிறே.-

சுடர் ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம் துன்னிய தாரகை மின் ஒளி சுருங்கி
படர் ஒளி பசுத்தனன் பனி மதி இவனோ பாய் இருள் அகன்றது பைம் பொழில் கமுகின்
மடல் இடை கீறி வண் பாளைகள் நாற வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ
அடல் ஒளி திகழ் தரு திகிரி அம் தடக் கை அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே-—3 –சூழ்ந்த திக்குகளெங்கும், சுடரொளியானது ஆதித்யனுடைய தேஜஸ்ஸானது விஸ்த்ருதமாய்த்து- (தேஜஸாம் ராஸி மூர்ஜிதம்) என்றும், “பயிலும் சுடரொளி” என்றும் சொல்லுகிறபடியே தேவரீருடைய திருமேனி யொளியானது எங்குமொக்க விஸ்த்ருதமாம்படியாக உணர்ந்தருளலாகாதோ? என்று கருத்து.
( தம் த்,ருஷ்ட்வா தே ததா தேவா: ஸங்க சக்ர க,தா த ரம் அபூர்வ ரூப ஸம்ஸ்தாநம் தேஜஸாம் ராஸி மூர்ஜிதம்!!|(வி-பு 1-9-67][சங்க,சக்ர கதா தரனாய், அபூர்வமான திருமேனி அமைப்பை உடையவனாய், உறுதி யானவனாய், தேஜோ ராலியான அந்த பாகவானைக் கண்ட தேவர்கள் அப்போது (ஸ்துதிக்கத் தொடங்கினர்)] என்றும், “பயிலும் சுடரொளி ” [ கிருவாய் 3-7-1] என்றும் சொல்லு கிறபடியே, கோடி ஸூர்ய ப்ரகாஸமான தேவரீருடைய திருமேனி ஒளியானது எல்லா விடங்களிலும் பரவும் படியாக விழித்தெழ வேண்டாவோ? என்று கருத்து. )(துன்னிய இத்யாதி)நெருங்கின நக்ஷத்ரங்களினுடைய பரஞ்செய்கிற தேஜஸ்ஸானது ஸங்குசிதமாய், விஸ்த்ருதமான ஒளியை யுடைய குளிர்ந்த சந்த்ரனும்,
(பசுத்தனன்) விவர்ணனானான்;-கருகினானென்று கருத்து.

7-மந்தேஹருக்கு செம் தீயும் –அதாவது மந்தேகர் என்பார் ,சில ராஷசர் சந்த்யா சமயத்தில் ,ஆதித்ய ரதத்தை பற்றிக் கொண்டு ,போக ஒட்டாதே ஆதித்யனோடே மகா யுத்தம் பண்ணி , அவனைக் கொல்லத் தேடுவர்களாய் ,அவ்வளவிலே பிராமணர் காயத்ரி அபி மந்திரிதைகளான அப்புக்களை அர்க்க்ய ரூபேண ஊர்தவமாக ப்ரேஷேபிக்க அந்த காயத்ரி பூத அர்க்க்ய சக்தியாலே , ஆதித்ய மண்டலத்தில் ஜொலித்து கொண்டு , தோற்றின சிவந்த அக்னியிலே விழுந்து முடிந்து போவார்கள் என்று –
-மீண்டு அவற்றுள் எரி கொள் செம்தீ வீழ் அசுரரை போல் –திருவிருத்தம் -82—என்று ஆழ்வார்
அருளிச் செய்கையாலே ,மந்தேஹருக்கு ஜொலிக்கிற அக்நியாய் இருக்கும் என்கிறது ..-ராஷசரை அசுரர் என்று ஆழ்வார் அருளி செய்தது –தானவனாகம் தரணியில்-பெரிய திருமொழி-1-4-1-என்றும் –
தானவன் வாள் அரக்கன்-பெரிய திருமொழி-2-2-2–என்றும் சொன்னவை போலே ஆசூர பிரக்ருதிகளான ஆகாரத்தாலே ..-ததுஹா வா ஏத ப்ரஹ்மவாதின பூர்வாபிமுகா சந்த்யாயம் காயத்ரி அபிமந்த்ரிதா ஆப ஊர்த்வம் விஷி பந்தி -ஆரணம்–என்றும்
சந்த்யா காலே து சம்ப்ராப்தே ரவ்த்ரே பரம தாருனே மன்தேஹா ராஷசா கோராஸ் சூர்ய மிச்சந்தி காதிதும் பிரஜாபதி க்ருதஸ் சாபஸ் தேஷாம் மைத்ரேய ரஷசாம் அஷயத்வம் சரீரானாம் மரணம் ச தினே தினே ததஸ் சூர்யஸ்ஸ தேஷாம் வை யுத்த மாஸீத் ஸூதாகுணம் ததோ திவிஜோத்தமாஸ் தோயம் ப்ரஷிபந்தி மகாமுனே ஓங்கார ப்ரஹ்ம சம்யுக்தம் காயத்ரியா சாபி மந்த்ரிதம் தேன தக்யந்தி தே பாபா வஜ்ர பூதேன வாரிணா –என்றும் பிராமணர் இங்கு பிரேஷேபிக்கிற அர்க்க்ய ஜலம் தானே
வஜ்ரீ பூதமாய் கொண்டு அந்த ராஷசரை நிரசிக்கும் என்று ஸ்ருதியிலும் புராணங்களிலும் சொல்லுகையாலும் , அந்த அர்க்க்ய ஜலம் ஆதித்ய மண்டலத்தையும் ஜொலிப்பித்து அணுக செல்லில் நசிக்கும் படி ஆக்கும் என்றும் சொல்லலாம் இறே

(மந்தேஹர்க்குச்‌ செந்தீயும்‌)மந்தேஹரென்று – ஆதித்யனோடே உத,யாஸ்தமய ஸமயங்களிலே யுத்தம்‌ பண்ணுவார்‌ சில அசுரர்கள்‌. அவர்களை ‘“எரிகொள்‌ செந்தீ வீழ்‌” (திருவிரூ. 82) என்கிறபடியே தப்தமாக்குகைக்கு ஒரு அக்‌நி ஜ்வாலையுமாய்‌,

எரி கொள் செந் நாயிறு இரண்டுடனே உதய மலை வாய்
விரிகின்ற வண்ணத்த எம்பெருமான் கண்கள் மீண்டவற்றுள்
எரி கொள் செந் தீ வீழ் அசுரரைப் போலே    எம்போலியர்க்கும்
விரிவ சொல்லீர் இதுவோ வையமுற்றும் விளரியதே – – – 82–அவ் வாதித்யர்கள் உடைய தேஜஸ்சிலே விழுந்து முடிந்து போகிற ஆசூரப் பிரக்ருதிகளைப் போலே ஆயிற்று என் போல்வார்களுக்கும்  இக் கண்கள் பாதகமாம் ஆகிறபடி

ஏனம் முனாகி யிரு நிலம் இடந்து அன்று இணை யடி யிமையவர் வணங்க
தான வனாகம் தரணியில் புரளத் தடஞ்சிலை குனித்த வென் தலைவன்
தேனமர் சோலைக் கற்பகம் பயந்த தெய்வ நன்னறு மலர் கொணர்ந்து
வானவர் வணங்கும் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே –1-4-1-இப்பொழுது தானவன் என்கிறது ராவணனை –-தையலாள் மேல் காதல் செய்த தானவன் வாளரக்கன் -என்னக் கடவது இறே
தநுவினுடைய வம்சஜன் என்று தானவன் என்கிறது ஆதல் -தநு வம்சம் ராவணனுக்கு மாத்ரு வம்சம்
ஆசூரமான வியாபாரங்களை உடையவன் என்றாதல் – ராவணன் உடைய வராதிகளாலே  பூண் கட்டி இருக்கிற சரீரமானது அம்பு தைச்சு பூமியிலே புரளும் படியாக-

தையலாள் மேல் காதல் செய்த தானவன் வாளரக்கன்
பொய்யிலாத பொன் முடிகள் ஒன்பதோடு ஒன்றும் அன்று
செய்த வெம்போர் தன்னில் அங்கோர் செஞ்சரத்தால் உருள
எய்த வெந்தை யெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே–2-2-2–நிரூபாதிக ஸ்த்ரீத்வத்தை உடையவள் பக்கலில் ஜநநீ என்று பாராதே அப்ராப்தமான சங்கத்தைப் பண்ணினான் ஆயிற்று – அதுக்கடி ஆசூர பிரக்ருதியாகைலே -யாயிற்று-தேவதை கொடுத்த வாளை விஸ்வசித்து இருந்தான் ஆயிற்று – பெருமாள் மிடுக்கை பார்க்க அறியாதே –

8-முக்தி மார்க்கத் தலை வாசலும்-அதாவது அர்ச்சிராதி கதி என்னும் முக்தி மார்க்கத்தாலே போம் அளவில் – அர்சிஷா மேவாபி சம்பவந்தி -இத்யாதி படியே- அர்ச்சி ப்ரப்ருதிகளை சென்று கிட்டிப் போகிற மாத்ரம் அன்றிக்கே ,- தத் பித்வா சூர்யச மண்டலம்-என்றும் – தேரோர் நிறை கதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கு -சிறிய திருமடல்-என்றும்–வெம் கதிர் வட்டத்தூடு போய்–பெரிய திருமொழி-4-5-10-என்றும் – சொல்லுகிற படியே , இம் மண்டலதூடே போகையாலும்- அண்ட கடாஹத்தைப் பேதித்து புறப்படும் அதுக்கு முற்பட்டது ஆகையாலும் இத்தை இம் மார்க்கத்துக்கு தலை வாசல் என்கிறது -9-கண்ணாவான் கண்ணில் பிறந்த கண் மணியும் -அதாவது கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு –திருவாய்-1-8-3- சஷூர் தேவநாமுத மர்த்யாநாம்-யஜுர் வேதம் – -என்கிற படியே – சர்வருக்கும் திருஷ்டி பூதனான சர்வேஸ்வரன் கண்ணிலே –-சஷோஸ் சூர்யோ அஜாயத -புருஷ ஸூக்தம்-என்கிற படியே ஜனிப்பதும் செய்து-ஜகதேக சஷுஷே -என்ற படி ஜகத்துக்கு திருஷ்டி பூதமுமாய் இருக்கும் என்கை –10-த்ரயீ மயமுமான மண்டலத்திலே -அதாவது -‘ த்ரயீ மயாய-என்கிற படியே வேத மயமாய் இருக்கிற ஆதித்ய மண்டலத்திலே என்கை ..–இத்தால்-த்யேய சதா சவித்ரு மண்டல மத்திய வர்த்தி நாராயண சரசி ஜாசன சந்நிவிஷ்ட கேயூரவான் மகர குண்டலவான் கிரீடி ஹாரி ஹிரண்மயவபு த்ருத சங்க சக்கர -என்ற இதில் அவன் எழுந்து அருளி இருக்கிற சவித்ரு மண்டலத்தை வர்ணித்தார் ஆயிற்று .

(முக்தி மார்க்கத் தலை வாசலும்‌)“’நக்ஷத்ராதாதித்யம்‌” என்று முக்தி மார்க்க த்‌வாரமுமாய்‌,- “ஸம்வத்ஸராதாதித்யம்‌‘”’ என்று ஆதித்யனைக் கூட்டி “’தத்‌ பித்வா ஸூர்ய மண்ட,லம்‌”” என்றும்‌, “தேரார்‌ நிறை கதிரோன்‌ மண்டலத்தைக்‌ கீண்டு புக்கு” (சி.திருமடல்‌) என்றும்‌ சொல்லுகிறபடியே ஆதித்ய மண்டலத்தை பேதித்தே முக்தனுக்குப்‌ போக வேண்‌டுகையாலும்‌, மற்றவை யெல்லாம்‌ கிட்டுமளவேயாய்‌ ௮ண்ட பேதம்‌ பின்பே (அண்ட பேதத்துக்கு முன்‌பே )யாகையாலே முக்தி மார்க்கத் தலை வாசலும்‌ என்கிறார்‌. (கண்ணாவான்‌ கண்ணில்‌ பிறந்த கண் மணியும்‌) *“’கண்ணாவானென்றும்‌ மண்ணோர்‌ விண்ணோர்க்கு’‘ (திருவாய்‌. 1.- 8 – 3) என்றும்‌, ““சஷுர் தேவாநாமூத மர்த்யாநாம்‌” (யஜு. ஸம்‌. ச்‌ – 6) என்றும்‌ சொல்லுகிறபடியே தேவர்களுக்கு நேத்ர பூதனான ஸர்வேஸ்வரனுடைய  “’சக்ஷோஸ் ஸூர்யோ அஜாயத’” (பு.ஸூ .) என்கிறபடியே திவ்ய சக்ஷுஸ்ஸைப்‌ பிறப்பகமாக உடைத்தாய்‌- ”ஜக தேக சக்ஷுஷே”’ என்கிறபடியே ஜகத்துக்கு த்‌ருஷ்டி பூதமாய்‌, (த்ரயீ
மயமுமான மண்டலத்திலே) ““தரயீ மயாய” 
என்கிறபடியே வேத மயமுமான ஆதித்ய மண்டலத்‌திலே

கார் ஆர் புரவி ஏழ் பூண்ட தனி ஆழித் தேரார் –
நிறை கதிரோன் -மண்டலத்தைக் கீண்டு புக்கு

ஆராவமுதம் அங்கு எய்தி–மேக மண்டலத்தில் செல்லுவதும் ஏழு குதிரைகள் பூட்டப் பெற்றதும்
ஒற்றைச் சக்கரத்தை வுடையதுமான – அது தான் உங்களுக்கு ஏற்க உண்டே என்று தோற்றிற்றோ
மேக பதத்திலே குதிரை சஞ்சரிக்கை யாவது என்-புரவி -இரண்டு அல்ல நாலு அல்ல ஆறு அல்ல -எட்டு அல்ல ஏழு குதிரை பூண்கை யாவது என் –தனி ஆழித் தேரார் –பிள்ளாய் -இரண்டாதல் நாலாதல் அன்றிக்கே-தனிச் சக்கரமாம் – பிள்ளாய் -ஆகாசத்திலே ஒருவன் தேர் நடக்கை யாவதென் –நிறை கதிரோன் –ஒரு விளக்கின் சந்நிதியில் விழிக்க மாட்டாத அதி சூத்திரன் -உஷ்ண கிரணங்களால் பூர்ணனாய் இருக்கிற ஆதித்யனைச் சென்று கிட்டுகை யாவதென் –மண்டலத்தைக் கீண்டு புக்கு –
ஒருவனை இங்கே உபாசித்து அவனுடைய ராஜகுலத்தாலே -ஆதித்ய மண்டலத்தின் நடுவே போகிறானாம் இறே-அங்கே ஏறப் போனால் அவ்வழிப் போக்குத் தான் இங்குப் போலே இரண்டருகும் பணை யாக நடவே போகிறானோ தான் -என்கை –

திங்கள் தோய் மாட நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானை
மங்கையர் தலைவன் வண்டார் கலியன் வாயொலிகள் வல்லார்
பொங்கு நீருலகம் ஆண்டு பொன்னுலகு ஆண்டு பின்னும்
வெங்கதிர்ப் பருதி வட்டத்தூடு போய் விளங்குவாரே –4-5-10-ஆதித்ய மண்டலத்தின் நடுவிட்டு அர்ச்சிராதி மார்க்கமே போய் பரமபதத்திலே சென்று ஸ்வ ஸ்வரூபத்தை பெற்று உஜ்ஜ்வலராவர்

கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு
தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே –1-8-3—சம்சாரிகளோடு நித்ய ஸூ ரிகளோடு வாசி இல்லை – அரை க்ஷணம் தங்கள் கார்யம் நிர்வஹித்துக் கொள்ள மாட்டாமைக்கு-கண்ணாகைக்காக என்னுதல்-கண்ணாம் அவன் என்னுதல்-கண் -என்று நிர்வாஹகன் – சஷூர் தேவா நாம் உதமர்த்தயா நாம் –என்கிற ஸ்ருதி அர்த்தத்தின் படியே சொல்கிறார்-

இனி அதில் எழுந்து அருளி இருக்கிற படியை வர்ணிக்கிறார் –1-தண் தாமரை சுமக்க –அதாவது
தண் தாமரை சுமக்கும் பாத பெருமான் -திருவாய்-4-5-8–என்கிற படியே-சரசி ஜசன சந்நிவிஷ்டனாய் இருக்கை-தோள் வளையும் குழையும் பெரியாழ்வார்-1-5-10–அதாவது-இத்தால் கேயூரவான் மகர குண்டலவான் -என்றதை சொல்லுகிறது .-திரு செய்ய முடியும் ஆரமும் படையும் திகழ-திருவாய்-8-4-7-
இத்தால் கிரீடி ஹாரி த்ருத சங்க சக்கர -என்றதைச் சொல்லுகிறது ..–2-திகழும் பொன் மேனியும்-அதாவது-ஆரமும் படையும் திகழ திருவாய்-8-4-7–என்கிற படியே கீழ் சொன்ன ஆயுத ஆபரணங்கள் எல்லாம் விளங்கும் படி இருப்பதாய் ,பொன் மேனி கண்டேன்-மூன்றாம்-1–என்னும் படி ஹிரண்ய மயமான திரு மேனியும்-ச எஷாந்தர் ஆதித்யே ஹிரண்மய புருஷோ த்ருச்யதே ஹிரண்ய ச்மஸ்ரூர்
ஹிரண்ய கேச ஆப்ரணகாத் சர்வ ஏவ ஸூவர்ண
-சாந்தோக்யம்-–என்றும் ஹிரண்மயவபு –என்றும் சொல்லக் கடவதிறே-3-செஞ்சுடர் தாமரை கண்ணுமாய் -அதாவது அஞ்சுடர் வெய்யோன் அணி நெடும் தேர் தோன்றாதால்-என்ற அநந்தரம்-செஞ்சுடர் தாமரை கண் செல்வனும் வாரான்-என்றது அந்த ஆதித்ய மண்டலத்தில் எழுந்து அருளி இருக்கிறவனை இறே ..-ஸ்ருதியும் -தஸ்ய யதா கப்யாசம் புண்டரீக மேவ மஷிணீ-என்றது அவ் இருப்பிலே இறே .. ஆகையால் ஆதித்ய கிரணங்களால் விகசிதமான போதை சிவந்த ஒளியை உடைய தாமரை போன்ற திரு கண்களுமாய் என்கை-

(தண்டாமரை சுமக்க) ”தண்டாமரை சுமக்கும்‌ பாதப் பெருமான்‌”” (திருவாய்‌. 4 5 – 8) என்றும்‌, “த்யேயஸ் ஸதா ஸவித்ரு மண்டல மத்‌ய வர்த்தீ நாரயாணஸ்‌ ஸரஸி ஜாஸந ஸந்நிவிஷ்டா கேயூரவாந்‌ மகர குண்டலவாந்‌ கிரீடீ ஹாரீ ஹிரண்மயவபுஸ் த்‌ருத சங்க சக்ர” என்றும்‌, ““மங்கல வைம்படையும்‌ தோள் வளையும்‌ குழையும்‌ மகரமும்‌” (பெரியா.திரு, 1 – 8 -9) என்றும்‌, ”திருச் செய்ய முடியுமாரமும்‌ படையுந் திகழ” (திருவாய்‌. 8 – 4 – 7) என்றும்‌, ‘‘நீண்ட பொன் மேனியோடும்‌’” (திருவாய்‌. 5- 5- 7), *“செஞ்சுடர்த் தாமரைக் கண்‌ செல்வனும்‌”’ (திருவாய்‌. 5 – 4 – 9) என்றும்‌ சொல்லுகிற படியே பாஹு-வலய-மகர குண்டல-அபிஷேக-ஹார-கேயூர- சங்க, -சக்ராதி, திவ்ய பூூஷணங்களாலும்‌ விளங்கா நிற்பதுமாய்‌, ““ருக்மாபம்‌ ஸ்வப்ந தீ கம்யம்‌ வித்‌யாத்து புருஷம்‌ பரம்‌” (மநு. 12 – 122) என்றும்‌, “’ஆப்ரணகாத்‌ ஸர்வ ஏவ ஸுவர்ண?”‘ (சா. 1 – 6 – 6) என்றும்‌ சொல்லுகிற ஸ்ப்ருஹணீயமான திவ்ய விக்‌ரஹத்தையும்‌, “யதா கப்யாஸம்‌ புண்டரீக மேவ மக்ஷிணீ”” (ச,ா.) என்கிறபடியேஆதித்ய கிரணத்தாலே அலர்த்தப்பட்டு சிவந்த தேஜஸ்ஸை யுடைய திருக் கண் மலரையுமுடைத்தாய்‌,

நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார்
தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானைத் தண் தாமரை
சுமக்கும் பாதப் பெருமானை
ச் சொல்மாலைகள் சொல்லுமாறு
அமைக்க வல்லேற்கு இனியாவர் நிகர் அகல் வானத்தே?–4-5-8—குளிர்ந்த ஆசன பத்மத்தாலே தரிக்கப் பட்ட திருவடிகளை உடைய சர்வேஸ்வரனை-திருவடிகளில் மென்மை குளிர்த்தி நாற்றம் தொடக்கமான போக்யதைக்கு தோற்று சுமக்கிற படி-ஆசன பத்மத்தால் அல்லது தனக்கு ஸ்திதி இல்லாதா போலே என் கவி அல்லாது தரிக்க மாட்டாது இருக்கை

செங்கமலக் கழலில் சிற்று இதழ் போல் விரலில் சேர் திகழ் ஆழிகளும் கிண்கிணியும் அறையில்
தங்கிய பொன் வடமும் தாள நன் மாதுளையின் பூவொடு பொன் மணியும் மோதிரமும் கிறியும்
மங்கல ஐம் படையும் தோள் வளையும் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்து இலக
எங்கள் குடிக்கரசே ஆடுக செங்கீரை யேழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே – 1-5 10- –திரு மார்பில் சாத்தின மங்கள அவஹமான ஸ்ரீ பஞ்சாயுதமும் – அதுக்கு பரபாகமாக கொண்டு இரண்டு அருகும் விளங்கா நின்றுள்ள திருத் தோள் வளைகளும் திருக் காது பணிகளும் -திரு மகரக் குழைகளும்-திருச் செவி மடல் மேல் சாத்தின வாளிகளும் – திருக் குழலில் சாத்தி திரு நெற்றிக்கு அலங்காரமாக -நாலும் = தொங்குகின்ற -சுட்டியும் –

திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு அதனுள் கண்ட அத்திருவடி என்றும்
திருச் செய்ய கமலக் கண்ணும் செவ்வாயும் செவ்வடியும் செய்ய கையும்
திருச் செய்ய கமல வுந்தியும் செய்ய கமலை மார்பும் செய்ய வுடையும்
திருச் செய்ய முடியும் ஆரமும் படையும் திகழ வென்ன சிந்தை யுளானே–8-4-7-அப்படி திரு மேனிக்கு பரபாகமாய் பயம் தீரும் படி ரக்ஷகத்வ ஸூ சகமாய் இருந்துள்ள திரு அபிஷேகமும்-ஆரமும்-பெரிய வரை மார்பில் பேராரம் பூண்டு -என்கிறபடியே திரு மார்வுக்குத் தகுதியான திருவாரமும் –-படையும்-வினைத்தலையில் ஆயுதமாய் போக தசையில் ஆபரணமாய் இருக்கிற திவ்யாயுதங்களும் திகழ -சோபபயன் தாண்ட காரண்யம்-என்கிறபடியே திவ்யாயுதம் தானே விளங்கும்படியாக
என்றும் — வென்ன சிந்தை யுளானே–அவன் என்றும் ஓக்க என் நெஞ்சிலே வர்த்திகையாலே பயத்துக்கு ஒதுங்க இடம் இல்லை –பயம் பய நாஸநம்

திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் -செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக் கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று ———-1-திருக் கண்டேன்– தர்மம் தன்னைக் கண்டேன் –பொன் மேனி கண்டேன்–அவள் இருக்கும் ஆசனம் கண்டேன்

நிறைந்த வன்பழி நம்குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள்
சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியொடும்
நிறைந்து என்னுள்ளே நின்றொழிந்தான் நேமி அம் கை உளதே.–5-5-7-அபரிச்சின்னமான தேஜஸ்ஸினுள்ளே உன்நேயமாம் படி யாயிற்று திரு மேனி இருப்பது -இது தேஜஸ்ஸினுள்ளே வடிவு தான் அபரிச்சேதயமான போக்யதையை யுடையதாய் நித்ய ஸ்ப்ருஹா விஷயமாய் இருக்கை –

வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண் துளியாய்
அஞ்சுடர வெய்யோன் அணி நெடுந்தேர் தோன்றாதால்
செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால்
நெஞ்சிடர் தீர்ப்பாரினி யார்? நின்று ருகுகின்றேனே.–5-4-9–இத்தசையில் புண்டரீ காஷனான ஸ்ரீ யபதியும் வருகிறிலன் -சிவந்த ஒளியை யுடைய தாமரைப் பூ போல் இருக்கிற திருக் கண்களை யுடைய ஸ்ரீ யபதியும் வருகிறிலன் -இந்த துர்த்தசையிலே குளிர நோக்கிக் கொண்டு இருவருமாய் வர ப்ராப்தமாய் இருக்க அது கிட்டிற்று இல்லை -ஆதித்யன் உதித்தாலும் ராத்திரி வர சம்பாவனை யுண்டு -அஸ்தமியாத ஆதித்யன் வருகிறிலன் -பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -என்ன கடவது இறே-

4-அணி நிற மூர்த்தி ஈது என்னும் படி இரண்டையும் தன்னிறம் ஆக்குகிற செய்யாளான வித்தையோடே –அதாவது-திருக் கண்டேன்-என்று முதலில் தன்னை கண்ட அநந்தரம்-ருக்மாபம்-என்னும் படி இருக்கிற அவன் திரு மேனியைக் கண்டு –பொன் மேனி கண்டேன்-என்று இருக்கச் செய்தேயும்-தன் திரு மேனி நிறத்தில் வியாப்தியாலே இள வெய்யில் கலந்தால் போல் விளங்கி , தர்சநீயமாய் இருக்கும் அவன் திரு மேனி நிறத்தைக் கண்டு திகழும் அருக்கன் அணி நிறமும் கண்டேன் -என்னும்படி யாகவும் ..–செய்யதோர் ஞாயிற்றை காட்டி சிரீதரன் மூர்த்தி ஈது என்னும்—திருவாய் –4-4-2-என்று அந்த மண்டல வாசிநியான தன் விக்ரக தேஜோ வியாப்தி யாலே சிவந்த ஒளியாலே அத்வீதீயமாய் இருக்கும் படியைக் கண்டு ஸ்ரீ தரன் வடிவு ஈது என்று பிரமித்து சொல்லும் படியாகவும் , பகவத் விக்ரகமும் ஆதித்ய மண்டலமும் ஆகிய இரண்டையும் தன்னிறமாகும் படி பண்ணுகிற சிவந்த நிறத்தை உடையவள் ஆகையாலே ஹிரண்ய வர்ணாம்—ஸ்ரீ ஸூக்தம் – இத்யாதி படியே கமல மலர் மேல் செய்யாள்–திருவாய்-9-4-1-என்று நிரூபகம் ஆகும் படி இருப்பாளாய் வித்யா சகாய மாதித்ய சமஸ்தம் வித்யா பிரசாதகம் -என்றும்-வித்யா சகாய வந்தம் மாம் ஆதித்யஸ்தம் சனாதனம்-என்றும் சொல்லுகிற படியே வித்யா சப்த வாச்யையான பிராட்டி யோடே கூடே–அருக்கன் மேவின- அதாவது வானிடை அருக்கன் மேவி நிற்ப்பார்க்கு -பெரிய திருமொழி-2-1-7-என்கிற படியே சவித்ரு மண்டல மத்ய வர்தியான
-ய ஏஷ அந்தராதித்யே -என்றதை சொல்லுகிறது-சதாத்யேய தேஜஸ்ஸின்-அதாவது த்யேயஸ் சதா -என்கிற படியே சர்வ காலமும் த்யானம் பண்ணுவாருக்கு விஷயமாய்-ஹிரண்மயஸ் சகுநிர் ப்ரஹ்ம நாம ஏன சூர்யஸ் தபதி தேஜசேத்த–காடகம்–என்றும்-தத் சவிதுர் வரேண்யம் பர்க்க -காயத்ரி –என்றும்
தேஜ பரம் தத் சவிதுர் வரேண்யம் தாம்னா பரேணா பிரணகாத் ஸூவர்ணம்–ஸ்ரீ ரெங்கராஜ ஸ்த்வம் உத்தர -79-என்றும் சொல்லுகிற படி தேஜோ மயமாய் இருக்கிற வஸ்துவினுடைய-

““அருக்கனணிநிறமும்‌ கண்டேன்‌” (மூ.திரு. 1) என்றும்‌, ““செய்யதோர்‌ நாயிற்றைக்‌ காட்டிச் சிரீதரன்மூர்த்தி”” (திருவாய்‌. 4 –4– 2) என்றும்‌ சொல்லுகிறபடியே ஆதித்ய தேஜஸ்ஸு போலே யிருக்கிற பகவத்‌ விக்‌ரஹத்தையும்‌, ப்ரபா -ப்ரபாவான்‌௧ளுடைய சேர்த்தியாலே ஸ்ரியப் பதித்வத்துக்கு ஸ்மாரகமு மாயிருக்கிற ஆதித்ய மண்டலத்தையும்‌,இவை யிரண்டையும்‌ தன்னிறமாக்கும்படியான ““கமலமலர் மேல்‌ செய்யாள்‌” (திருவாய்‌. 9 – 3 – 1) என்கிறபடியே ஹிரண்ய வர்ணையாய்‌, *“வித்‌யா ஸஹாயம்‌” “ஆதித்ய ஸம்ஸ்தம்‌ வித்‌யாப்ரபாவகம்‌ (ப்ரஸாதகம்‌)’” என்கிறபடியே வித்யை என்கிற திருநாமத்தை உடையளாயிருக்கிற பெரிய பிராட்டியாரோடே.-“வானிடை அருக்கன்‌ மேவி நிற்பார்க்கு’” (பெ.திருமொழி 2 – 1 – 7) என்கிறபடியே ஆதி,த்யாந்தர் வர்த்தியாய்‌, ஸதாத்‌, த்யேய தேஜோ ருபமாயிருக்கிற இவரை ப்ரதிபாதி,க்கிற .

திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன்
-செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக் கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று ———-1–இருவரும் சேர்ந்த சேர்த்தியாலே இள வெய்யில் கலந்தால் போலே இருக்கிறபடி –இருவர் ஒளி சேர்ந்து -தங்கத்தின் பெருமை தங்க ஒளி கலந்து –லோக விஜாதீயம்--பால ஸூர்யன் ஒளி –இருளின் ஒளியும் வெளிச்சமும் சேர்ந்தால் போல் -என்று சொல்லலாம் படி சமுதாய சோபை பொன் மேனி ஸுந்தர்யம் -நீல மேனி ஐயோ -நீலமாக ஸ்ப்ருஹணீயமாய் மேல் அவயவ சோபை லாவண்யம்-

பெய் வளைக் கைகளைக் கூப்பி, ‘பிரான் கிடக்கும் கடல்’ என்னும்;
செய்யது ஓர் ஞாயிற்றைக் காட்டி, ‘சிரீதரன் மூர்த்தி ஈது’ என்னும்;
நையும் கண்ணீர் மல்க நின்று, ‘நாரணன்’ என்னும்; அன்னே!என்
தெய்வ உருவிற் சிறுமான் செய்கின்றது ஒன்று அறியேனே.–4-4-2—இராத்திரி எல்லாம் சமுத்திர கோஷத்துக்கு ஆடல் கொடுத்து ஆதித்யன் உதித்தவாறே ஆதித்யனும் பிரபையும் சேர்ந்து இருக்கிற படியைக் கண்டு -இது ஸ்ரீதரனுடைய வடிவு என்று ஹ்ருஷ்டை யாகா நின்றாள் – பிரபா ப்ரபாவன்கள் உடைய சேர்த்தி மாத்ரத்தையே கொண்டு சொல்லா நின்றாள் – செய்யதோர் ஞாயிற்றை – அழகியதாய் அத்விதீயமான நாயிறு -தாயும் தமப்பனும் சேர இருந்த சந்நிதியிலே பசித்த பிரஜைகளை போலே சிதிலையாகா நின்றாள்-

மையார் கருங்கண்ணி கமல மலர்மேல்
செய்யாள்
திரு மார்வினில் சேர் திருமாலே
வெய்யார் சுடர் ஆழி சுரி சங்கம் ஏந்தும்
கையா உனைக் காணக் கருதும் என் கண்ணே–9-4-1-ஸ்வா பாவிகமான கறுப்பை யுடைத்தாய் அஞ்ஞனத்தாலே அலங்க்ருதமான திருக் கண்களை யுடையவள் -ஒன்றால் சமாதானம் பண்ண வேண்டாத படி அழகு ஸ்வாபாவகமாய் இருக்கையாலே கண்ணுக்கு அஞ்சனம் மங்களமார்த்தம் இறே –
கமல மலர்மேல்-செய்யாள் –ஸுகுமார்யத்தாலே வந்த போக்யதையை யுடையவள் – திரு மார்வினில் சேர் -மேகத்திலே மின் சேர்ந்தால் போல் யாயிற்று சேர்த்தியால் வந்த அழகு -அபூ அடி கொதித்துக் கால் வாங்கி திரு மார்விலே ஏற வேண்டும் படி யாயிற்று -அவளுக்கு திரு மார்வில் சேர்த்தி இருப்பது –
திருமாலே-அவன் பக்கல் அத்யந்தம் வ்யாமுக்தனானவனே –அவள் திரு மார்வில் பண்ணும் வ்யாமோஹத்தை இவன் அவயவங்கள் தோறும் பண்ணும் என்கை -இப்படி அந்நியோன்யம் சேர்ந்த சேர்த்தியிலே இறே கைங்கர்யம் பண்ண ஆசைப் பட்டது -இச்சேர்த்தியைப் பற்ற இறே அவள் முன்னாக பற்ற ஆசைப்படுவார் ஆசைப்படுவது –நகச்சின் நபராத்யதி -என்னும் அவளும் –என்னடியார் அது செய்யார் -என்னுமவனுமான சேர்த்தி இறே -சம்சாரிகளுக்கு தஞ்சம்

தருக்கினால் சமண் செய்து சோறு தண் தயிரினால் திரளை மிடற்றிடை
நெருக்குவார் அலக்கண் அது கண்டு என்னெஞ்சம் என்பாய்
மருட்கள் வண்டுகள் பாடும் வேங்கடம் கோயில் கொண்டதனோடும் வானிடை
அருக்கன் மேவி நிற்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே
—2-1-7-வைதிகர் ஆனவர் ஆஸ்ரயிக்கும் படியாக-ஆதித்ய அந்தர்யாத்மாவாகக் கொண்டு நிற்கிறவனுக்கு –ஆதித்ய அந்தராத்மாவாய் இருக்கும் என்று அனுசந்தித்துப் போகை அன்றிக்கே கண்ணாலே கண்டு அடிமை செய்து அனுபவிக்கப் பெற்றாயே நீ –

சாமரே சோத்கானநாமம் உள்ளுறையான ஆத்யந்தங்களாலே – அதாவது சாம்ன உத்கீதோ ரச – என்கையாலே சந்தோக சாமத்துக்கு ரசமாய் இருந்துள்ள உத்கானம் உண்டு–உத்கீதம்-( சாம ரஸம் உத்கீதம் -அதில் நாமம் உத் ) அதில் –உத்-என்று சொல்ல பட்ட –தஸ்ய உதிதி நாம -என்கிற திரு நாமம்
இதுக்கு உள்ளுறை யானமை தோற்றும் படியான ஆத்யந்தங்களை உடைத்தாய் இருக்கையாலே என்கை .. உயர்வு-என்று எடுத்து உயர்ந்தே -என்று தலைக் கட்டுகையாலே உ காரம் ஆதியும் த காரம் அந்தமும் ஆய இறே இருக்கிறது ஆத்யந்தங்களாலே -என்றது மேல் சொல்லுகிறதுக்கு ஹேது இது என்று தோற்றுகைக்காகா-ஓர் ஆயிரம் அவற்றிலே ஒன்றை-அதாவது-ஓர் ஆயிரமாய் உலகு எழ அளிக்கும் பேர் ஆயிரம்-என்கிற படியே ஒரு திரு நாமமே ஆயிரம் முகமாக நின்று ஜகத் ரஷணம் பண்ண வல்ல திரு நாமங்களிலே ஒரு திரு நாமத்தை – (ஒன்றே ஆயிரமாய் அளிக்கும் என்றால் ஆயிரமும் பத்து லக்ஷமாக அளிக்கும்)ஆயிரம் முகத்தினால் அருளிய -இத்யாதி-அதாவது –
ஆயிரம் முகத்தினால் அருளி மந்தரத்து இழிந்த கங்கை–பெரிய திருமொழி-1-4-7–என்று
கங்கை தானும் ஒன்றாய் இருக்க ,லோக பாவன அர்த்தமாக சகஸ்ர முகமாக பிரவஹித்தால் போலே
தீர்த்தங்கள்-ஆயிரம் என்ற படியே –லோக பாவனமான ஆயிரம் பாட்டாக விஸ்தரிக்கிறார் என்று ஸ்ரீ வேதாசார்ய பட்டர் உபதேசித்து அருளும் படி என்கை ..-விஸ்தரிக்கிறார் என்ற கர்த்ருத்வத்தை அபௌருஷேயத்வ விரோதமற கீழ் சொன்ன படி கொள்வது-

ஸாம்ந உத்‌கீதோரஸ?” (சாந்) என்று ஸாமத்துக்கு ரஸமாய்‌, ““தஸ்யோதிதி நாம”‘ (சாந்த ] என்கிறபடியே அவர்க்குக்‌ திருநாமமாயிருக்கிற உத்‌காந நாமத்தை உள்ளுறையாக உடைத்தாகையாலே * ‘உத்‌’” என்கிற விதில்‌ உகார தகாரங்களை ஆதி யந்தங்களில்‌ உடைத்தாயிருக்கிற இப் பரபந்தத்தை.
ஓராயிரமா யுலகேழளிக்கும்‌ பேராயிரம்‌”” (திருவாய்‌;9 – 3 – 1) என்கிறபடியே ஒரோ திருநாமமே அநேக பிரகாரமாக ரக்ஷிக்கும் படியான திருநாமங்களில்‌ வைத்துக் கொண்டு ஆதித்யாந்தர வஸ்திதனான வனுக்குத்‌ திருநாமமான ”உத்‌” என்கிற உத்துக்கு பர்யாயமான நாராயண ஸப்‌தத்தை “’ஆயிர முகத்தினாலருளி மந்தரத் திழிந்த கங்கை” (பெரிய. திரு. 1 – 4 – 7) என்கிறபடியே கங்கை லோக பாவநார்த்தமாக ஸஹஸ்ர முகமாக ப்ரவஹித்தாப் போலே “’தீர்த்தங்களாயிரத்து”’ (திருவாய்‌. 7 – 10 – 11) என்கிறபடியே லோக பாவநார்த்தமாக ஆயிரம்‌ பாட்டாக விஸ்தரிக்கிறார்‌ என்று வேதாசார்ய ப,ட்டர்‌ அருளிச் செய்யும்படி

ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும்
பேர் ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன்

கார் ஆயின காள நல் மேனியினன்
நாராயணன் நங்கள் பிரான் அவனே–9-3-1-ஓர் ஆயிரமாய் -ஒரோ திரு நாமங்களே ஆயிரம் முகத்தால் ரக்ஷிக்க வற்றாய் இருக்கும் –ஐஸ்வர்யஸ்ய சமக்ரஸ்ய வீர்யஸ்ய யசசச் ச்ரிய- என்று நிர்வசன பேதத்தால் அநேகம் படி ரக்ஷிக்க வற்றாய் இறே இருப்பது –-உலகு -ரக்ஷிக்கும் இடத்திலே ஓரோர் ஒருத்தரை அன்றிக்கே லோகமாக ரக்ஷிக்கும்-ஏழ் -அது தன்னிலும் ஒரு லோகம் மாத்திரம் அன்றிக்கே சர்வ லோகங்களையும் ரக்ஷிக்கும் – அளிக்கும்- பேர்— அவன் பாப பிராஸுர்யத்தாலே ஷிபாமி என்னக் கடவன் -இவை ரஷிக்கையே ஸ்வபாவமாக இருக்கும் ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன்–இப்படிப்பட்ட திரு நாமங்களை ஆயிரம் உடையனாகையால் யுண்டான பெருமையை யுடையவன் -தேவோ நாம சஹஸ்ரவான்

வெந்திறல் களிறும் வேலை வாய் அமுதும் விண்ணோடு விண்ணவர்க்கு அரசும்
இந்திரர்க்கு அருளி எமக்கும் ஈந்து அருளும் எந்தை எம்மடிகள் எம்பெருமான்
அந்தரத்து அமரர் அடி இணை வணங்க ஆயிர முகத்தினால் அருளி
மந்தரத்து இழிந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானே–1-4-7-ஆயிர முகத்தினால் –
மேருவிலே இழிந்து மந்த்ரத்திலே இழிந்து ஹிமவானில் இழிந்து இங்கே பல வகைகளிலே வரும்படியை சொல்லக் கடவது இறே-

தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரணில்லை என்று எண்ணித் தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தனனாகிச் செழுங் குரு கூர்ச்சட கோபன் சொன்ன
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களைத் தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி யுரைப்பர் தம் தேவியர்க்கே.–7-10-11-தன் இனிமையால் புறம்புள்ளவற்றை அறுக்கும் என்னுதல் -பாவனம் என்னுதல் –

ஆக –எவ்வுலகத்து எவ்வகையும் -சூரணை -39- தொடங்கி இவ் ஆழ்வார்-பிரபந்த சதுஷ்டயத்துக்கும்
வேத ரூபவத்வமும் அங்க உபாங்க சாகித்யமும் சாஸ்திர வாதி வேத லஷண சாம்யமும் இதில் இவருக்கு தோற்றுகிற கர்த்ருத்வத்தால் இதின் நித்ய அபௌருஷேயத்வ ஹானி இல்லாமையும்
அதில் சாம வேத ஸ்த்தாநீயமான திரு வாய் மொழி சாம வேத ஸ்ரேஷ்டமான சந்தோக சாம உபநிஷத் சமம் என்னும்
அதுவும் சொல்லிற்று ஆயத்து-

ஆக, ‘“எவ்வுலகத்தெவ்வெவையும்‌”’ என்று தொடங்கி, இவ் வாழ்வார்‌ அருளிச் செய்த ப்ரபந்தங்கள்‌ நாலுக்கும்‌ வேத ரூபத்வமும்‌, அங்கோபாங்க ஸஹிதத்வமும்‌, ஸாஸ்த்ரதவம்‌ முதலான வேத லக்ஷணங்களும்‌ இவற்றினுடைய நித்யத்வ-அபெளருஷேயத்வமும்‌, இந்நாலு ப்ரபந்தங்களுக்கும்‌ நாலு வேத ஸ்தாநேயான ப்ரகாரத்தையும்‌, அதில்‌ திருவாய்மொழி ஸாம ஸாமாந்ய மன்றிக்கே, சந்தோக,ஸாமோபநிஷத் தாயிருக்கிற ப்ரகாரத்தையும்‌, அதில்‌ விசேஷ லக்ஷணங்களையும்‌ சொல்லுகையாலே இப்ப்ரபந்தத்‌துக்கு வேத,ஸாம்யம்‌ சொல்லா நின்றது –

ஆக இப்படி இப் பிரபந்த சதுஷ்டத்யத்துக்கும் வேத சாம்யத்தை சாதித்தார் கீழ் .. இங்கன் அன்றிக்கே இது தனக்கு வேதோபப்ருஹ்மண சாம்யமும் சொல்லுவார்கள் என்கிறார் மேல் ..-இனி மேல்‌ ஸ்வரூபாதிகளை விஸத,மாகச்‌ சொல்லுகிற ஸ்ரீபாஞ்சராத்ராதிகளைப் போலே விக்‌ரஹத்தை விஸதமாகச்‌ சொல்லுகிற வேதத்துக்கு இப் ப்ரபந்தம்‌ விவரண ரூபமாயிருக்கும்‌ என்பாரு முண்டென்கிறார்‌ 

அன்றிக்கே ஸ்வரூப குண விபூதி சேஷ்டிதங்களை விசதமாக்குகிற பாஞ்சராத்ர புராண
இதிகாசங்கள் போலே நீலபாரூ போக்தி தெரியச் சொன்ன வேத உப ப்ருஹ்மணம் என்பர்கள்-சூரணை -54-

அதாவது இப்படி வேத சாம்யம் சொல்லுகை அன்றிக்கே பகவத் ஸ்வரூப குண விபூதி சேஷ்டிதங்களுக்கு எல்லாம் -பிரதிபாதகமாய் இருந்துள்ள வேதத்தில்-யத்த தத்ரேச மக்ராஹ்ய மகோதர மவர்ண மசஷுஸ் ச்ரோத்ரம் தாதா பாணி பாதம் நித்யம் விபும் சர்வகதம் ஸூ ஸூஷ்மம் ததவ்யயம்யத் பூதயோநிம் பரிபஸ்யந்தி தீரா -என்றும்-சத்யம் ஞான அநந்தம் ப்ருஹ்ம-என்றும்-நிஷ்கலம் ,நிஷ்க்ரியம் ,சாந்தம் நிரவத்யம் ,நிரஞ்சனம் நிர்குணம் -இத்யாதிகளால் சொல்லப் படுகிற ஸ்வரூபத்தையும்-யஸ் சர்வஜ்ஞஸ் சர்வவித்–முண்டோகம்-பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வாபாவிகீ ஞான பல க்ரியா ச–ஸ்வேதாஸ்வதரம் சத்ய காமஸ் சத்ய சங்கல்ப -சாந்தோக்யம் –இத்யாதிகளால் சொல்லப் படுகிற குணங்களும்-ஸ்ருணு தத் பரமம் ஸூஷ்மம் சர்வஞ்ஜம் சர்வப்ருத் ததா ,ஞான ரூபம் அநாதி அந்தம் அவிகாரி நிராமயம் அசஷுச் ஸ்ரோத்ரம் அஸ்பர்சம் அபாணி சரணம் த்ருவம், நாம ஜாத் ஆதி ரஹிதம் அவர்ணம் அ குணம் த்வபி விச்வஸ்ரவோ ,விச்வ சஷூர் , விச்வ பாணி பதம் பரம் , அ சக்தம் அ சரம்
சாந்தம் ஸ்வயம் ஜோதிரநூபமம் ,தூரஸ்த்தம் அந்திக சரம் ,ஜ்ஞான கம்யம் , நிரஞ்சனம் ,பூத பர்த்ரு சமம் ,ஜ்யோதிர் ஜ்யோதிஷாம் தமஸ பரம் அஷரம் சர்வ பூதஸ்தம் தத் விஷ்ணோ பரமம் பதம்–ஸ்ரீ பாஞ்ச ராத்ரம் –
இத்யாதிகளாலும்–அப்ராக்ருத குண ஸ்பர்சாத் நிர்க் குணம் பரிகீயதே ,ஸ்ருணு நாரத ஷாட் குண்யம் கத்திய மானம் மயானன.அ ஜடம் ஸ்வாத்ம சம்போதி நித்யம் சர்வ அவகாஹனம் .ஜ்ஞானம் நாம குணம் பிராஹு பிரதமம் குண சிந்தகா . ஸ்வரூபம் ப்ரஹ்மணஸ் தச்ச குணச்ச பரிகீயதே
ஜகத் பிரக்ருத் பாவோய சா சக்தி பரிகீர்த்திதா கர்த்ருத்வம் நாம யத் தஸ்ய ஸ்வாதந்த்ர்யம் ,பரிப்ரும்ஹிதம் ஐஸ்வர்யம் நாம தத் ப்ரோக்தம் குண தத்வார்த்த சிந்தகை ,ச்ரம ஹானிஸ்து யாதஸ்ய சததம் குர்வதோ ஜகத்பலம் நாம குணஸ் தஸ்ய கதிதோ குண சிந்தகை தஸ்யோபாதான பாவேபி
விகார விரஹோ ஹி யவீர்யம் நாம குணஸ் சோயம் அச்யுதத்வா பராஹ்வய , சக கார்ய நபேஷா
யாதத் தேஜஸ் சமுதாஹ்ருதம்–அஹிர் புத்ன்யா சம்ஹிதை
-இத்யாதிகளால் விசதமாக்குகிற பாஞ்ச ராத்ரம் போலேயும்--யதோ வா இமானி பூதானி ஜாயந்தே ,யேன ஜாதானி ஜீவந்தி
யத் பிரயந்தி அபிசம்விசந்தி
–தைத்ரியம்-ப்ராஹ்மணோஸ்ய முகம் ஆசீத் பாஹு ராஜன்ய க்ருத ஊரூ ததஸ்ய யத் வைஸ்ய பத்ப்யாம் ஸூத்ரோ அஜாயத–புருஷ ஸூக்தம் – அந்த ப்ரவிஷ்ட சாஸ்தா ஜனானாம் சர்வாத்மா -ஆரணம் – பாதோஸ்ய விஸ்வா பூதானி –புருஷ ஸூக்தம் –தைத்ரியம் –இத்யாதியாலும்–ச ஹோவாச மஹிமான ஏ வைஷாம் ஏதே த்ரயஸ் த்ரிம் ச தேவ தேவா இதி
கதமேத த்ரயஸ் த்ரிம்சதிதி அஷ்டவ் வஸவ் ஏகாதச ருத்ரா த்வாதச ஆதித்ய த ஏகரிம்சத் இநதிரஸ் சைவ பிரஜாபதிஸ் ச த்ரயச்த்ரிசம்த்
-ப்ருஹதாரண்யம்- -இத்யாதியாலும்–பவ்திமாப்யோ கோபவநாத் கோபவன , கௌசிகாத் கௌசிக ,கௌடிந்ண்யாத் கௌடிண்ந்ய சாண்டில்யாத் சாண்டில்ய ,கௌசிகாச்ச ,கௌதமாச்ச ,கௌதம ,அக்நிவைச்யா அக்னிவைஸ்ய சாண்டில்யாத் -ப்ருஹதாரண்யம்-இத்யாதியாலும்–ஜகஜ் ஜென்மாதிகளையும் ப்ராஹ்மணாதி வர்ணங்களையும் தேவ ஜாதியில் வைவித்யத்தையும் ருஷி வம்சாதிகளையும் பிரதிபாதிக்கிற வாக்யங்களால் சொல்லப் படுகிற விபூதியை-சர்க்கச்ச பிரதி சர்கச்ச வம்சோ மன்வந்த்ராணி ச ,வம்சானுசரிதஞ் சைவ புராணம் பஞ்ச லஷணம்-அமரம்- என்கிறபடியே சர்க்காதிகளையும் ,வம்சங்களையும் , மன் வந்தரங்களையும் ,வம்சானு சரிதங்களையும் , விஸ்தரேண பிரதி பாதிக்கிற முகேன விசதமாக்குகிற புராணம் போலவும்உத்ர்ர்தாசி வராஹேண -தைத்ரியம்-இதம் விஷ்ணு விசக்ரமே த்ரேதா நிததே பதம் –ஸ்ரீ விஷ்ணு ஸூக்தம் -இத்யாதிகளாலே சொல்லப் படுகிற அவதார சேஷ்டிதங்களைஸ்ரீ ராமாயணம் நாராயண கதாம் -என்னும் படி ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணா அவதார சேஷ்டிதங்களை விஸ்தரேண பிரதி பாதிக்கையாலும்-அத விஷ்ணுர் மகா தேஜ அதித்யாம் சமஜாயதே ,வமானம் ரூபமாஸ்த்தாய, வைரோசநிமுபாகமத் ,த்ரீன் க்ரமாநத பிஷித்வ பிரதி க்ருஹ்ய ச மாதவ ஆக்ரம்யலோகன் லோகாத்மா சர்வ லோகே ஹிதே ரத மஹேந்த்ராய புன பிரதாந் நியம்ய பலிமோஜசா––பால காண்டம் -29-19-இத்யாதிகளாலே ப்ராசங்கிகமாக அவதாராந்தர சேஷ்டிதங்களையும் ஸ்ரீ ராமாயணத்தில் சொல்லுகையாலும் ,–மோஷ தர்மத்திலே ஸ்ரீ ஜன்ம ரகஸ்யத்திலே-அவதார ரஹஸ்யத்திலே –நார தேனைவ முக்தச்து பிரத்யுவாச ஜனார்தனா -என்று தொடங்கி-பூர்வம் மஸ்த்யோ பவிஷ்யாமி ஸத்தா பயிஷ்யாமி மேதிநீம் வேதாம்ஸ்வை உத்தரிஷ்யாமி மஜ்ஜமானான் மகார்ணவே,த்வதீயம் கூர்ம ரூபேண ஹேம கூட சமப்ரபம் ,மந்தரம் தாரைஷ்யாமி அமிர்தார்த்தே த்விஜோத்தம –சாந்தி பர்வம் –348-3-4-இத்யாதியாலே தசாவதார சேஷ்டிதங்களையும் விசதமாக்கும் இதிகாசம் போலவும்-நீல தோயாத மத்யஸ்தா வித்யுத்லேகேவ பாஸ்வர –நாராயண அநுவாகம்-மனோமய பிராண சரீரோ பாருப -முண்டகம்-இத்யாதிகளாலே விக்ரஹத்தை சொன்ன இத்தை-ஆதி மத் யந்தம்–விக்ரஹத்தை பல இடங்களிலும் வர்ணித்து கொண்டு பேசுகையாலே- தெரியச் சொன்ன-திருவாய் -6-9-11–என்கிற படியே விசதமாக்கி சொன்ன வேத உப ப்ரஹ்மணம் என்று இத்தை சொல்லுவார்கள் என்கை-

இப் பிரபந்த சதுஷ்டயமும்
முழு நீர் முகில் வண்ணன்
-திருவிருத்தம் -2–என்றும்
மைப்படி மேனி-திருவிருத்தம் -94-
பச்சை மேனி–திருவாசிரியம்-1-
தாமரைக் காடு–திருவாசிரியம்-5-
நற் பூவை பூவீன்ற–பெரிய திருவந்தாதி –1-
கார் கலந்த மேனி–பெரிய திருவந்தாதி –86-
துயர் அறு சுடர் அடி–திருவாய்-1-1-1-
புனக் காயா நிறத்த–திருவாய்-10-10-6- என்று உபக்கிரமம் பிடித்து உபசம்ஹாரம் பரியந்தம்
விக்ரஹத்தை வர்ணித்து கொண்டு செல்லா நிற்கும்
இறே .-தெரியச் சொன்ன–திருவாய்-6-9-11- -என்கிற இது திருவாய்மொழி சந்தையே ஆகிலும் உப ப்ரஹ்மணத்வம் பிரபந்தாந்தரங்களுக்கு ஒக்கும் என்றே கொள்ள வேணும்-வேதத்வம் சொன்ன போது சாதாரணமாக சொன்னது இங்கும் ஒக்கும் இறே
பாஞ்ச ராத்ர புராண இதிகாசங்களிலும் இப் பிரபந்தத்திலும் ஸ்வரூபாதி சம்ஸ்தார்தங்களும் சொல்லப் பட்டதே ஆகிலும் இவ்வோ அர்த்தங்களில் இவற்றுக்கு நோக்கு ஆகையாலே- இப்படி வகை இட்டு சொல்லக் குறை இல்லை-

ஸ்வரூப ரூப கு,ண விபூதி சேஷ்டிதங்களித்தனையும்‌ வேதத்திலே சொல்லும்‌-ஸ்வருபத்தையும்‌, குணத்தையும்‌ விஸதமாகச்‌ சொல்லும்‌ ஸ்ரீபாஞ்சராத்ரம்‌-விபூதியை விஸதமாகச்‌ சொல்லும்‌ புராணங்கள்‌-அவனுடைய திவ்ய சேஷ்டிதங்களுக்கு பிரகாஸகமாயிருக்கும்‌ இதிஹாஸங்கள்‌, அவை போலே “’நீல தோயத மத்‌யஸ்த வித்யுல்‌லேகேவ பாஸ்வரா”‘ (தை.நா.) என்றும்‌, பாரூபஸ் ஸத்ய ஸங்கல்ப ” (முண்டக 2- 27) என்றும்‌ விக்‌ரஹ பரமான வே வாக்யங்களை “*“தெரியச் சொன்ன ஓராயிரம்‌” (திருவாய்‌. 6 – 9 -11)என்கிறபடியே விஸதமாக்குகிற வேத உப ப்‌ரும்ஹணம்‌ என்பாருமுண்டென்கிறார்‌.

தெரிதல் நினைதல் எண்ண லாகாத் திருமாலுக்கு
உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்
தெரியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
உரிய தொண்ட ராக்கும் உலகம் உண்டாற்கே.–6-9-11—இதர புருஷார்த்தங்களில் அல்ப அஸ்திரத்வாதிகளையும்-பகவத் விஷயத்தின் உடைய வை லக்ஷண்யத்தையும் வ்யக்தமாகச் சொன்ன

செழு நீர்த் தடத்துக் கயல் மிளிர்ந்தால் ஒப்ப சேயரிக் கண்
அழுநீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ
முழுநீர்  முகில் வண்ணன் கண்ணன் விண்ணாட்டவர் மூதுவராம்
தொழுநீர் இணையடிக்கே அன்பு சூட்டிய சூழ் குழற்கே —-2—இக் கடலைத் தரையாக பருகின மேகம் இருந்தபடி-இவ்வடிவு உடையானும் தானேயாய் வருவானும் தானேயாய் இருக்கிறபடி – மேகம் ஜலம் இரண்டாய்  இன்றிக்கே ஜலமாகவே இருக்கை -ஆதார ஆதேய இரண்டுமே நீராயாயேயான மேகம் போலே இருக்கும்-இவளைப் பிரிந்த அவன் வடிவு என்று நிச்சயிக்கிறாள்-இவளைக் கண்டு அனுமானிக்கிறாள்–இது தான் முழு நீர் மேகம்-மேகத்தில் உள்ள நீர் மேகமே நீர்-அவன் இடத்தில் கறுமை -கறுமையே அவன்-கண்ணன் என்னும் கறும் தெய்வம்முழு நீர் முகில் வண்ணன் என்று-ப்ரேம விஷயம் பூர்ணமாய் –-தர்ச நீயமாய்-உத்துங்கமாய் இருக்கும் என்றதாயிற்று-கண்ணன் என்று-இவ் விஷயம் இவருக்குக் கை புகுந்தமை தோற்றுகிறது-

மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும் வைதிகரே
மெய்ப்படியால் உன் திருவடிச் சூடும் தகைமையினார்
எப்படி யூராமி லைக்கக் குருட்டாமிலைக்கும் என்னும்
அப்படி யானும் சொன்னேன் அடியேன் மற்று யாது என்பனே — – 94—அஞ்சனத்தின் படியான திரு மேனியும் –-கண்டார்கள் கண் குளிரும்படியான-வடிவும் –பட்டர் ஒருகால் இவ்விடத்தை அருளிச் செய்யா நிற்க –-பிள்ளை விழுப்பர் அரையரும் -ஆப்பான் திருவழுந்தூர் அரையரும் -இருந்தார்களாய் –-அனுசந்தித்தார் நெஞ்சில் இருள் படியும் படியான-திரு மேனியும் -என்று அருளிச் செய்ய –நஞ்சீயர் –இன்னார் என்று அறியேன்–என்னப் பண்ணுகை யாகாதே -என்று அருளிச் செய்து அருள –(பொன்னார் சார்ங்கம் யுடைய அடிகளை இன்னார் என்று அறியேன் -சார்ங்க பாணி உள்ளத்தில் அமர்ந்து இருட்டாக்கி அருளச் செய்ததற்கு பிரமாணம்)-இவ்வார்த்தை சொன்னார் யார் -என்ன -ஜீயர் -என்று அவர்கள் சொல்ல –நூற்றுப் பதின் காதத்து அவ்வருகே பிறந்து –இவ்வளவும் வந்து –இன்று நமக்கு இத்தை உபகரிப்பதே -என்று கொண்டாடி அருளினாராம் –மைப்படி –காதல் மையலை உண்டாக்கும் படியான திரு மேனி-பொன்னார் சார்ங்கம் உடைய யடிகளை இன்னார் என்று அறியேன்செந்தாமரை கண்ணும் –அகவாயில் குண பிரகாசமான திருக் கண்களும் –

செக்கர் மா முகில் உடுத்து மிக்க செம் சுடர்
பரிதி சூடி அம் சுடர் மதியம் பூண்டு
பல சுடர் புனைந்த பவள செவ்வாய்
திகழ பசும் சோதி மரகத குன்றம்
கடலோன் கை மிசை கண் வளர்வது போல்
பீதக ஆடை முடி பூண் முதலா
மேதகு பல் கலன் அணிந்து சோதி
வாயவும் கண்ணவும் சிவப்ப மீது இட்டு
பச்சை மேனி மிக பகைப்ப
நச்சு வினை கவர் தலை அரவின் அமளி ஏறி
எறி கடல் நடுவுள் அறி துயில் அமர்ந்து
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர்
தெய்வ குழாங்கள் கை தொழ கிடந்த
தாமரை வுந்தி தனி பெரு நாயக
மூ வுலகு அளந்த சேவடியோயே –1–மீது இட்டு பச்சை மேனி மிக பகைப்ப-கீழ்ச் சொன்னவற்றாலும் -அவற்றை நெருக்கிற தன்னாலும் ஒன்றை ஓன்று ஸ்பர்த்தித்து- ஸ்யாமமான நிறமும் மிகவும் உஜ்ஜவலமாக – அவற்றை அடைய நெருக்கி உள்ளே இட்டுக் கொள்ளப் பார்த்ததான அத்தையும் அழித்து ப்ரசரிக்க திருமேனி தேஜஸ் மிகவும் பிரகாசிக்க என்றபடி –-கடலோன் கை மிசைக் கண் வளர்வது போலே -என்ற உபமானத்துக்கு இது உபமேயம்-

மா முதல் அடி போது ஓன்று கவிழ்த்து அலர்த்தி
மண் முழுதும் அகப்படுத்து ஒண் சுடர் அடி போது
ஓன்று விண் செலீ இ நான் முகப் புத்தேள்
நாடு வியந்து உவப்ப வானவர் முறை முறை
வழி பட நெறீ இ தாமரை காடு
மலர்க் கண்ணொடு கனி வாய் உடையது

மாய் இரு நாயிறு ஆயிரம் மலர்ந்தன்ன
கற்பகக காவு பற்பல வன்ன
முடி தோள் ஆயிரம் தழைத்த
நெடியோய் கல்லது அடியதோ வுலகே–5-தாமரை காடு மலர்க் கண்ணொடு கனி வாய் உடையதுமாய்
ஆரேனுமாகத் தன திருவடிகளைத் தலையிலே வைத்தால் ஆதித்ய சந்நிதியில் தாமரை போலே
திருக்கண் செவ்வி பெறுமாயிற்று- தாமரைக் காடு அலர்ந்தால் போலே இருக்கிற திருக் கண்ணோடே கனிந்த வாயையும் யுடைத்தாய் இருப்பதுமாய் –

முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே
இயற்றுவாய் எம்மோடி நீ கூடி –நயப் புடைய
நாவீன் தொடை கிளவி யுள் பொதிவோம் நற் பூவைப்
பூ வீன்ற வண்ணன் புகழ்
–1-நற் பூவைப்-வாசகத்துக்கு எட்டுமது அன்று என்கிறது
(திருமேனி அழகு ஸ்வரூபத்தின் அளவு அல்லவே ) உபமானம் உபமேயத்துக்குப் போராமையாலே
உபமானத்தையும் சிக்ஷிக்கிறது-பூ வீன்ற வண்ணன்-பூவைப் பூ காட்டுகிற நிறத்தை யுடையவன்
பூவைப் பூவைக் காட்டுகிற நிறத்தை யுடையவன் என்றுமாம் –-கோ சத்ருஸோ கவய கவய சத்ரூஸோ கவ் –என்னுமா போலே-

கார் கலந்த மேனியான் கை கலந்த வாழியான்
பார் கலந்த வல் வயிற்றான் பாம்பணையான் -சீர் கலந்த
சொல் நினைந்து போக்காரேல் சூழ் வினையின் ஆழ் துயரை
என்னினைந்து போக்குவார் இப்போது –86-ஸர்வதா ஸத்ருசமான மேகத்தோடே ஒத்த திரு மேனியை யுடையவன்-கார் கலந்த மேனியான் சீர் கலந்த சொல் –ஸ்ரீ ராமாயணம்-கை கலந்த வாழியான் சீர் கலந்த சொல் –ஸ்ரீ பாகவதம்-பார் கலந்த வல் வயிற்றான் சீர் கலந்த சொல் –இதிஹாசங்கள் புராணங்கள்-பாம்பணையான் -சீர் கலந்த சொல் -அருளிச் செயல்கள்சீர் கலந்த சொல்–திருநாமங்கள் என்றுமாம் –

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே 
–1-1-1-துயர் அற்ற என்றபடி-இவர் மயர்வு அற அவன் துயர் அற்றபடி–சுடரடி-நிரவதிக தேஜோ ரூபமான திவ்ய விக்ரஹம்-அடி -சேஷபூதர் அனுபவிக்க இழியும் துறை

எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ–10-10-6-—புனக்காயா நிறத்த-தன்னிலத்திலே காயாய் பூ போலே யாய்த்து வடிவு இருப்பது –புண்டரீகக் கண் –வாத்சல்ய அமிருத வர்ஷியாய் யாய்த்து கண்கள் இருப்பது —செங்கனி வாய்-சிவந்து கனிந்தாய் யாய்த்து முறுவல் இருப்பது -பிராட்டி விரும்பும் துறைகள் இறே இவை –

உப ப்ருஹ்மணத்வ சாம்யம் உண்டானாலும் ,இவ் ஆழ்வார் பிரபந்தங்களுக்கு உள்ள ஏற்றம்
ஆர்ஷமான புராணாதிகளுக்கு இல்லை என்னும் இடத்தை அறிவிக்கைக்காக , உபயத்தின் உடையவவும் உத்பத்தி மூலங்களை அருளி செய்ய கோலி ,பிரதமம் ஆர்ஷோ பிரபந்த உத்பத்தி மூலத்தை அருளி செய்கிறார்-கீழ்ச் சொன்ன புராணேதிஹாஸ கர்த்தாக்களான ருஷிகளாலே சொல்லப்பட்ட ஆர்ஷங்களுக்கு மூலமெது; இவர்‌ திருவாய்மொழி பாடுகைக்கு மூலமெது என்ன; கல்பாதியிலே உத்‌ரிக்த குணாநுகுணமாகச்‌ சொல்லும்‌ ப்‌ரஹ்மாவின்‌ ப்ரஸாதமும்‌, ரஜஸ் தமஸ் ப்ரசுரனான ருத்ரன்‌, அவை தலை சாய்ந்து ஸத்த்வம்‌ தலை யெடுத்த போது அத்‌யாத்மம்‌ சொல்லக் கேட்ட ஸப்‌ரஹ்மசாரிகளான ப்‌ரூகு-புலஸ்த்ய-மார்க்கண்டேய வாமதேவாதி,கள்‌ என்று சொல்லப்படுகிறவர்கள்‌ ப்ரஸாதமும்‌ ஆர்ஷத்துக்கு மூலம்‌-ப்‌,ரஹ்ம ருத்‌ராதிகளுக்கு அந்தர்யாமியாய்க் கொண்டு அவர்களுக்கு ஜ்ஞாந ப்ரதாநம்‌ பண்ணினவன் தானே ஸ்ரீ யப்பதியாய்‌, பரம ஸத்த்வ ஸமாஸ்ரயமான திவ்ய விக்‌ரஹ யுக்தனுமாய்‌ நின்று செய்த ப்ரஸாதம்‌ இவர்க்கு மூலம்‌ என்கிறார்‌ –

கல்பாதியில் தோற்றிற்று வர்ணிக்கும் சதுர் முகன் சந்தஸூம் மோஹ சாஸ்திர பிரவர்தகன்
பிண சுடலை வெந்தார் அக்கும் ஆறும் அணிந்து ஏறி ஏறி சுழன்று ஆடும் ஆலமமர் பிச்சுத் தெளிந்து
தான் வணங்குமாறு உரைக்க கேட்ட சஜாதீயர் பிரசாதமும் ஆர்ஷ மூலம்-சூரணை -55-

அதாவது
யஸ்மின் கல்பேது யத் ப்ரோக்தம் புராணம் ப்ரஹ்மணா புரா தஸ்ய தஸ்யது மஹாத்மியம் தத் ஸ்வரூபேண வர்ண்யதே –ஸ்ரீ மாத்ஸ்ய புராணம் –என்கிறபடியே-குண த்ரய வஸ்யனான தனக்கு கால பேத குண த்ரயமும் சங்கீர்ணமாயும்-அதில் ஒரு குணம் பிரசுரமாய் இருக்கும் விசேஷத்தை இட்டு –
சங்கீர்ணாஸ் சாத்விகாஸ் சைவ ராஜசாஸ் தாமசாஸ் ததா-ஸ்ரீ மாத்ஸ்ய புராணம் – -என்று சங்கீர்ணங்கள் என்றும் சாத்விகங்கள் என்றும் ,ராஜசங்கள் என்றும் ,தாமசங்கள் என்றும் சொல்லப் படுகிற அஹஸ் ஸூக்களாகிற கல்பங்களுடைய ஆதிகளிலே உத்ரிக்தமான குணானுகுனமான பிரதி பந்தம் ஆன படியே —அக்னேஸ் சிவஸ்ய மஹாத்மியம் தாமசேஷு பிரகீர்திதம் ராஜசேஷு ச மஹாத்மியம் அதிகம் ப்ரஹ்மணோ விது– சாத்விகேஷ்வத கல்பேஷு மஹாத்ம்யமதிகம் ஹரே தேஷ்வேவ யோக சம்சித்தா கமிஷ்யந்தி பராம் கதிம் , சங்கீர்னேஷூ சரஸ்வத்யா பித்ரூணாம் ச நிகத்யதே –ஸ்ரீ மாத்ஸ்ய புராணம்-என்கிற படி – தாமச கல்பங்களிலே அக்னி சிவர்களுடைய மகாத்ம்யத்தையும் ராஜச கல்பங்களில் தன்னுடைய மகாத்ம்யத்தையும் சாத்விக கல்பங்களில் சர்வேஸ்வரனுடைய மகாத்ம்யங்களையும் சங்கீர்ண கல்பங்களில் பித்ரு சரஸ்வதியின் மகாத்ம்யத்தையும் வர்ணியா நிற்கும் சதுர் முகனுடையமச் சந்தா தேவ தே ப்ரஹ்மன் பிரவ்ருதேயம் சரஸ்வதி–பால காண்டம் 2-30- என்கிற படி இவன் வாக்கிலே இச் சப்தம் பிறக்கைக்கு அடியான அனுக்ரக கார்யமான நினைவும் .. சந்தஸ் என்கிற இது நினைவு என்றே இவ் இடத்தில் கொள்ள வேண்டும் .
சந்தம் என்றே நினைவுக்கு வாசகம் . சந்தஸ் என்கிற இதுவும் நினைவுக்கு வாசகமாக வந்த இடங்களிலோ கண்டு கொள்வது . ஆக இப்படி இருந்துள்ள சதுர் முகன் நினைவும் –மோஹ சாஸ்திர பிரவர்தகன்-அன்யம் தேஹி வரம் தேவ பிரசித்தம் சர்வ ஜந்துஜூ மர்த்த்யோ பூத்வா பாவனேவ மாமாராதய கேசவ .. மாம் வ்ருணீஷ் வச தேவேச வரம் மத்தோ க்ருஹாணச, யேநாஹம் சர்வ பூதானாம் பூஜ்யாத் பூஜ்யதரோ பவம்–என்று வரம் வேண்டின ஸ்வ உத்கர்ஷ காமன் ஆகையாலே — த்வஞ்ச ருத்ர மஹாபாஹோ மோஹா சாஸ்த்ராணி காரய -என்று பகவான் நியோகித்தது வியாஜமாக ஆகமாதி மோஹ சாஸ்த்ர பிரவர்தகனான ருத்ரன் ,-பிணங்கள் இடு காடதனுள் ,நடமாடு பிஞ்சகன் -பெரிய திருமொழி-2-6-9–என்றும் ,-சுடலையில் சுடு நீறன்-பெரிய திருமொழி-10-1-5–என்றும்-வெந்தார் என்பும் சுடு நீரும் மெய்யிற் பூசி–பெரிய திருமொழி-1-5-8–என்றும்-அக்கும் புலி இன தளும் உடையார் –பெரிய திருமொழி-9-6-1–என்றும் ஆறும் பிறையும் அரவமும் உடம்பும் சடை மேல் அணித்து –பெரிய திருமொழி-6-7-9–என்றும் எரி உருவத்து ஏறேறி –இரண்டாம் திரு வந்தாதி — 63-என்றும் – சுழன்றாடும் கொன்னவிலும் மூவிலை மேல் கூத்தன்-பெரிய திருமடல்-60- -என்றும்-ஆலமமர் கண்டத்தவன்–முதல் திருவந்தாதி-4- -என்றும் சொல்லுகிற படியே தம பிரசுரன் ஆகையாலே நிஹீன வ்ருத்தி பரனாய்உன்மத்த வத நுன்மத்த .பிரபு ,பிரபவதாமபி ராத்ரவ் ஸ்மசாநேப்யடசிதத் கிமே தத் தவேச்வர – -இத்யாதியாலே சிம்சான பர்யடனம் தொடக்கமான நிஹீன வ்ருத்திகளை நீ அனுஷ்டிக்கைக்கு ஹேது என் என்று தேவி கேட்க்கும் படி சம்சானங்களிலே சஞ்சரித்து ,சப பஸ்மத்தை உடம்பு எங்கும் பூசி ,
அத்தி மாலையை பூண்டு ,வயாக்ர சர்மத்தை உடுத்தி ,நதி சந்திர சர்பாதிகளை ஜடையிலே அணிந்து ,
சர்வேஸ்வரன் தன சார்வஜ்ஞ அனுகுணமாக , வேத மயனான விஹஹேச்வரனை மேற் கொண்டு உலவுவா போலே , தன் அறிவு கேட்டுக்கு அனுகுணமாக ஞான ஹீனமான ரிஷபத்தை வாகனமாய் உடையனாய் ,மத்தர் களித்து ந்ருத்தம் பண்ணுமா போலே சக்ர பிரமம் போலே சுழன்று ஆடுவது ,விஷத்தை கண்டத்திலே தரிக்கை ஆகையாலே ,நம்மில் காட்டில் அதிசயித சக்திகர் இல்லை என்று தன்னை ஈஸ்வரனாக நினைத்து இருப்பதாக பிராந்தி நீங்கி ,சத்வ குணம் தலை எடுத்து ,-சத்வம் விஷ்ணு பிரகாசம் ஆகையாலே –-ஆல் மேல் வளர்ந்தானை தான் வணங்குமாறு -நால்வருக்கு மேலை யுகத்துரைத்தான் –நான்முகன்-17–என்கிற படியே -அகடிதகடநா சமர்த்தனான சர்வேஸ்வரனை தான் உபாசிக்கும் பிரகாரத்தை உபதேசிக்கக் கேட்டவர்கள் ஆகையாலே , சத்வ நிஷ்டராய் ,ருஷித்வத்தால் வந்த சாஜாத்யத்தை யுடையரான அகஸ்த்ய புலஸ்திய தஷ மார்கண்டேயர்கள் நால்வரில் ஒருவனான புலஸ்த்யன் புராண சம்ஹிதா கர்த்தா பவான் வத்ஸ பவிஷ்யதி தேவதாபார மார்த்யஞ்ச யதாவத் வேத்ச்யதே பவான் -என்று ஸ்ரீ பராசர பகவானுக்கு வர பிரதானம் பண்ணுகையாலே சஜாதியரான ருஷிகள் பிரசாதமும் ருஷி ப்ரோதக்தங்களான பிர பந்தகளுடைய மூலம் என்கை-–ஸ்ரீ வால்மீகி பகவானுக்கு அனுக்ரகரான பிரம்மாவை போலே விஜாதீயன் அன்றிக்கே ஸ்ரீ பராசர பகவானுக்கு வரபிரதனான புலஸ்தயனும் ருஷி ஆகையாலே ,இவனுக்கு சஜாதியன் என்னத் தட்டில்லை இறே..மற்று உண்டான இதிகாச புராண கர்த்தாக்கள் உடைய பிரபந்தங்களுக்கு மூலமும் ஆராய்ந்தால் ,இப்புடையிலே யாயிருக்கும் அத்தனை அல்லது அத்வாரக பகவத் பிரசாதம் ஒரு விஷயத்திலும் இல்லை என்று நினைத்து இறே ஆர்ஷ மூலம் என்று திரள அருளி செய்தது—

(கல்பாதி,யில்‌) ‘“யஸ்மிந்‌ கல்பே து யத் ப்ரோக்தம்‌ புராணம்‌ ப்‌ரஹ்மணா புரா ! தஸ்ய தஸ்ய து மாஹாத்ம்யம்‌ தத் ஸ்வரூபேண வர்ண்யதே ॥ அக்‌நேஸ் ஸிவஸ்ய மாஹாத்ம்யம்‌ தாமஸேஷு ப்ரகீர்த்யதே । ரஜஸேஷு ச மாஹாத்ம்யம்‌ அதிகம்‌ ப்‌ரஹ்மணோ விது | ஸாத்த்விகேஷ்வத கல்பேஷு மாஹாத்ம்யம்‌ அதிகம்‌ ஹரே -தேஷ்வேவ யோக ஸம் ஸித்‌தாக,மிஷ்யந்தி பராம்‌ க,திம்‌”” (மாத்ஸ்யே) என்று குண த்ரய வஸ்யனாகையாலே கல்பாதியிலே தனக்குத்‌ தோற்றின குணாநுகுணமாக தமஸ்ஸு தலையெடுத்த போது ருத்‌ராக்‌நி மாஹாத்ம்யமும்‌, ரஜஸ்ஸு தலையெடுத்த போது ஸ்வ வர்ணநமும்‌, ஸத்த்வம்‌ தலையெடுத்த போது பகவத்‌,வர்ணநமும்‌ சொல்லக் கடவனான ப்‌,ரஹ்மாவினுடைய ““மச்சந்தா தேவ தே ப்‌ரஹ்மந்‌ ப்ரவ்ருத்தேயம்‌ ஸரஸ்வதீ?” (ரா. பா. 2 – 31) என்கிற நினைவும்‌.  ““சந்தஸ்ஸு”  என்றது நினைவென்றபடி–(மோஹ ஸாஸ்த்ர ப்ரவர்த்தகன்‌”) “தவம்‌ ஹி ருத்‌ர மஹா பாஹோ மோஹ ஸாஸ்த்ராணி காரய ! மாஞ்ச கோபய யேந ஸ்யாத்‌ ஸ்ருஷ்டிரேஷோத்தரோத்தரா | த்ரய்யாமபி ச ஸாமாந்ய வாதஸ்சித்த விபே,த,த₹ ॥ கிம்புநர் லோக மோஹார்த்த,ம்‌ ப்ரவ்ரூத்தம்‌ ருத்‌ர ஸாஸநம்‌ | மயாநுமிஷ்டோ ருத்‌ரஸ்து மோஹ ஸாஸ்த்ரம்‌ வ்யதாத்‌ ஸ்வயம்‌”’-என்கிறபடியே பகவந் நியோகத்தாலே மோஹ ஸாஸ்த்ர ப்ரவர்த்தகனான ருத்‌ரன்‌- (பிணச்சுடலை இத்யாதி, ) பிணங்களிடுகாடதனுள்‌”’ (திருமொழி 2 – 6 – 9) என்றும்‌, “சுடலையில்‌ சுடு நீறன்‌’” (திருமொழி 10 – 1 – 5) என்றும்‌, ““வெந்தாரென்பும்‌ சுடு நீறும்‌” (திருமொழி 1 – 5 – 8) என்றும்‌, ““அக்கும்‌ புவியினதளுமுடையர்‌” (திருமொழி 9 – 6 – 1) என்றும்‌, “ஆறும்‌ பிறையுமரவமும்‌ அடம்பும்‌ சடைமேலணிந்து”” (திருமொழி 6 – 7 – 9) என்றும்‌, “வேறேறிப்‌ பட்டவிடுசாபம்‌”” (இர.திருவ. 63) என்றும்‌, “’தன்னினுடனே சுழலச்‌ சுழன்றாடும்‌”’ (பெ.திருமடல்‌) என்றும்‌, “’ஆலமமர்‌ கண்டத்தரன்‌”’ (மு.திருவ. 4] என்றும்‌, ““ஆல் மேல்‌ வளர்ந்தானைத் தான்‌ வணங்குமாறு – மேலை யுகத்துரைத்தான்‌’” (நா. திருவ, 17) என்றும்‌ சொல்லுகிற இவற்றாலே ருத்‌ரன்‌ தமஸ்ஸு தலை மண்டை யிட்டு பகவத்‌ விமுகனய்‌ ப்‌ரமித்து, பிணங்களிடுகாடுகள்தோறும்‌ ஸஞ்சரியாநின்றுகொண்டு, “தீ பாக்‌நிம்‌ தீ பதைலஞ்ச பஸ்ம சாஸ்திம்‌ ரஜஸ் வலாம்‌ ॥ ப்ரமாதாத்‌ ஸ்பர்ஸநாத்‌, விப்ரஸ்ஸவாஸா ஜலமாவிஸேத்‌’” என்று தர்ஸந-ஸ்பர்ஸந-அநர்ஹங்களான பஸ்மாஸ்திகளைத் தரித்து வ்யாக்‌ர சர்மவஸநனாய்‌, நதீ சந்த்‌ரர்களை ஜடையிலே தரித்து, ஸாபோபஹதனாய்‌, க்ருத்யாக்ருத்ய விவேக ஸூந்யனாய்‌ விஷத்தை தரித்து, சக்ர ப்‌ரமம்‌ போலே ப்‌ரமிக்கிறவன்‌,-அதுக்கு மேலே ஸத்த்வம்‌ தலை யெடுத்து, ஸத்த்வம்‌ விஷ்ணு ப்ரகாஸகமாகையாலே, அகடிதகடநா ஸாமர்த்‌யத்தை யுடைய ஸர்வேஸ்வரனே உபாஸ்யனென்று தான்‌ அவனை உபாஸிக்கும்‌ ப்ரகாரத்தை உபதேஸிக்கக் கேட்டு ஸத்த்வஸ்தராய்‌, ருஷித்வத்தால்‌ ஸாஜாத்யத்தை யுடையரான புஸஸ்த்ய ப்‌ருகு. மார்க்கண்டேய-வாம தேவாதிகளுடைய ப்ரஸாத,ம்‌ ஆர்ஷங்களான புராணேதிஹாஸங்களுக்கு காரணமென்றதாய்த்து. புலஸ்த்யாதிகளுக்கு பராஸரனோடே ருஷி ஸாஜாத்யமுண்டாகையாலே ஸஜாதீயர்‌ என்றது.

பிணங்கள் இடு காடதனுள்  நடமாடு பிஞ்ஞகனோடு
இணங்கு திருச் சக்கரத்து எம்பெருமானார்க்கிடம் விசும்பில்
கணங்கள் இயங்கும் மல்லைக் கடல் தல  சயனம்
வணங்கும் மனத்தாரவரை வணங்கு என் தன் மட நெஞ்சே-2-6-9–மனிச்சு கலவாத நெஞ்சை உடைய
ருத்ரனோடு கூட – ஸ்மசாந பூமியிலே ஆடா நின்றுள்ள ருத்ரனோடே கூட – அபிமான உபஹதரானவர்களுக்கும் நித்ய ஸூரிகளுக்கும் ஒக்க திருமேனியில் இடம் கொடுத்து இருக்கும் நீர்மையைச் சொல்லுகிறது – திரு வாழி ஆழ்வானைச் சொல்லுகிற இடம் நித்ய ஸூரிகளுக்கும் உப லஷணம்-

வெந்தார் என்பும் சுடு நீரும் மெய்யில் பூசிக் கையகத்து ஓர்
சந்தார் தலை கொண்டு உலகு ஏழும் திரியும் பெரியோன்
தான் சென்று என்
எந்தாய் சாபம் தீர் என்ன இலங்கமுது நீர் திரு மார்வில்
தந்தான் சந்தார் பொழில் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே –1-5-8—வெந்தவர்களுடைய எலும்பும்
அது சுட்ட சாம்பலும் உடம்பிலே பூசி கையிலே சந்துகள் ஆர்ந்து இருந்துள்ள தலையைக் கொண்டு –
எல்லா நரம்புகளும் வந்து கூடின இடத்திலே யிறே சேதித்தது – தலை என்னாமல் சந்தார் என்பதால் -எல்லா நரம்புகளும் இத்யாதி -என்கிறார்-கூறு செய்த ஊரிலே -கையும் கைத்தளையுமாய்-கை விலங்குமாய் – திரிவாரைப் போலே-ஈஸ்வர அபிமாநியாய் தன் ஆஞ்ஞை நடத்திப் போந்த இடத்தில்
கையும் ஒடுமாய் திரிந்த துர் மாநியானவன் சென்று – என் ஸ்வாமீ – என்னுடைய சாபத்தைப் போக்க வேணும் -என்ன –

அக்கும் புலியின தளமுடையார் அவரொருவர்
பக்கம் நிற்க நின்ற பண்பரூர் போலும்

தக்க மரத்தின் தாழ்சினை ஏறி தாய் வாயில்
கொக்கின் பிள்ளை வெள்ளிற  வுண்ணும் குறுங்குடியே —9-6-1-தொடையொத்த துளவமும் கூடையும் பொலிந்து -என்கிறபடியே அனுகூல சிஹ்னத்தோடே வருகை அன்றிக்கே-அக்கும் -எலும்பும்
புலித் தோலும் உடையராய்-மற்றும் எருக்கம் பூ சாம்பல் என்றால் போலே நிஷித்த த்ரவ்யங்களுக்கு ஒரு அவதி இல்லை இறே –ஈஸ்வர அபிமாநிகளாய் இருப்பர்க்கும் முகம் கொடுத்துக் கொண்டு இருக்குமவன் அனுகூலராய்ச் சென்று கிட்டுகிற நமக்கு முகம் தரச் சொல்ல வேணுமோ –

ஆறும் பிறையும் அரவமும் அடம்பும் சடை மேல் அணிந்து உடலம்
நீறும் பூசியேறூரும் இறையோன் சென்று குறை யிரப்ப
மாறு ஒன்றில்லா வாச நீர் வரை மார்வகலத்து அளித்து உகந்தான்
நாறும் பொழில் சூழ்ந்து அழகாய நறையூர் நின்ற நம்பியே–6-7-9—என்னுடைய ரஷணம் நானே பள்ளிக் கொள்ள வல்லேன் -என்று துர்மானத்தைப் பண்ணி அதுக்கு ஈடான அடையாளங்களை  உடையனாய் இருக்கிற தன் ஜடையில் ஏக தேசத்தில் கங்கையை தரித்து -( கங்கா தரன் ) போக பிரதானன் என்று தோற்ற சந்த்ரனையும் தரித்து -( சந்த்ர சேகரன் ) சர்ப்பத்தையும் அடப்பம் பூவையும் ஜடையிலே அணிந்து –அடம்பம் பூ-கடம்பம் மர விசேஷ பூ – உடம்பிலே பஸ்மத்தையும் அணிந்து ருஷபத்தை நிர்வஹியா நின்றுள்ள ஈஸ்வர அபிமாநியானவன் லோக குருவுமாய் தனக்குப் பிதாவுமாய் இருக்கிற
ப்ரஹ்மாவின் உடைய தலையைச் சேதித்து அத்தாலே பாதகியாய்க் கொண்டு சர்வேஸ்வரன் திருவடிகளில் தன் குறையை அறிவிக்க 

ஏறு எழும் வென்று அடர்த்த வெந்தை எரி உருவத்து
ஏறேறி பட்ட விடு சாபம் -பாறேறி
யுண்ட தலை வாய் நிறையக் கோட்டங்கை யொண் குருதி
கண்ட பொருள் சொல்லில் கதை–63-ஏறு ஏழையும் வென்ற ஸ்வாமி எரியினுடைய உருவை உடையனாய் ருஷபத்தை ஏறின ருத்ரனை ப்ரஹ்மா கபாலீ த்வம் பவிஷ்யஸி -என்று இட்ட சாபத்தை
ஒட்டின அழகிய கை –கழுகும் பருந்தும் ஏறி உண்ணா நின்ற தலையை உடைய வாய் நிறையும்படிக்கு ஈடாக அழகிய குருதியைக் கண்ட அர்த்தத்தைச் சொல்லில் அது ஒரு மகா பாரதம்-

மன்னு குலவரையும் மாருதமும் தாரகையும்
தன்னினுடனே சுழலச் சுழன்று ஆடும்  ———–70
கொன்னவிலும் மூவிலைக் வேற்கூத்தன் பொடியாடி
அன்னவன் தன் பொன்னகலம் சென்று ஆங்கு அணைந்து இலளே  —–71–திரு வுலகு அளந்து அருளின தேசம் எல்லாம் உபதஹதமான படி –கிடந்த விடத்தில் கிடவாது ஒழிகை-குலவரை யுள்ளிட்ட பதார்த்தங்கள் எல்லாம் புன்னைப் பூ போலே சுழன்று வர –ஆசைப் பட்டாரும் வயிறு பிடிக்கும் படி இருக்கை-கண் மூன்றானால் போலே இருக்கிறது அன்றோ –

நெறி வாசல் தானேயாய் நின்றானை யைந்து
பொறி வாசல் போர்க் கதவம் சாத்தி அறிவானாம்
ஆலமர நீழல் அறம் நால்வர்க்கு அன்றுரைத்த
ஆலமர் கண்டத் தரன் –4—தாமஸ குணத்துக்குச் சேர்ந்தது செய்யுமது அல்லது –
சத்வாத் சஞ்ஜாயதே ஞானம்–ஸ்ரீ கீதை -14-17–என்கிறபடியே கதற (உபதேசிக்க )அவன் கடவானோ -என்கிறார்-எம்பெருமான் கொடுத்த வெளிச்சிறப்பு மாத்ரத்தையும் விஷ ஹரண சக்தியையும் கொண்டு இத் துறையிலே இழியப் போமோ –

ஆல நிழல் கீழ் அற நெறியை நால்வர்க்கு
மேலை யுகத்து உரைத்தான் மெய்த்தவத்தோன் -ஞாலம்
அளந்தானை ஆழிக் கிடந்தானை ஆல் மேல்
வளர்ந்தானைத தான் வணங்குமாறு -17-ஆகம பிரசித்தமான வட விருஷத்தின் கீழே இருந்து தர்ம மார்க்கத்தை ஆப்தரான நாலு சிஷ்யர்களுக்குப் போன யுகத்தில் சொன்னான் – பகவத் ஜ்ஞானம் அறிக்கைக்கு ஈடான தபஸ்சை யுடையவன் –

இனி இவ் ஆழ்வார் பிரபந்தங்களுக்கு மூலம் இன்னது என்கிறார் —

பரம சத்வத்தோடே உள்ளி உரைக்கும் நிறை ஞானத்து அயனாம் சிவனாம் திருமால் அருள் கொண்டு
இவர் பாடினார்-சூரணை -56-

அதாவது –
கல்பாதியில் உத்ரிக்தமான குண அனுகுணமாக தோற்றிற்று வர்ணிக்கும் என்றதுக்கு எதிர் தட்டாம் படி
பரம சத்வத்தோடே -உள்ளி உரைக்கும் -என்று ரஜஸ் தமஸ் ஸூக்களோடும் தத் சகபடிதமான சத்வதோடும் அந்வயம் இன்றிக்கே , பரம சத்வ சமாஸ்ரய ஸ்தோத்ர ரத்னம் -12–என்கிறபடியே –
தனக்கு மேல் எல்லை இல்லை என்னும் படியான சுத்த சத்வ யுக்தனாய் ,தான் சொல்லிற்று அடைய வேதார்தமாய் இருக்கச் செய்தே சடக்கென சொன்னால்,-வாய் வந்த படி சொன்னான் நிரூபியாதே -என்பார்கள் என்று சேதனர் பக்கல் வாத்சல்யாதிசயத்தாலே இவர்களுக்கு ஆப்திக்கு உறுப்பாக –
நெறி உள்ளி உரைத்த திருவாய்-1-3-5-–என்கிற படியே வேத மார்க்கத்தை விசாரித்து ,அருளி செய்யுமவனாய் பிச்சு தெளிந்து சொன்னவன் வார்த்தை கேட்டு உண்டான , ஞான மாத்ரத்தை உடையவர்கள் போல் அன்றிக்கே ,-நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி – திருவாய்-4-8-6–என்கிறபடி பரி பூர்ண ஞானத்தை நிரூபகமாக உடையவனாய் ,-அயனாம் சிவனாம் திரு மாலால் -என்கிற படி கீழ் சொன்ன பிரம்மா ருத்ரருகளுக்கும் அந்தர்யாமியாய் நின்று , அவ்வவ கார்யங்களை நிர்வஹிக்கையாலே ,தத் தத் சப்த வாச்யனாய் , சர்வாதிகனான ஸ்ரீயபதி யினாலே –
அருளப் பட்ட சடகோபன்–திருவாய்-8-8-1- என்கிறபடியே மயர்வற மதி நலம் அருளப் பெற்றவராய் அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் -கண்ணி 8–– என்கிற படியே அந்த அத்வாரக பகவத் பிரசாதத்தை மூலமாக கொண்டு இவர் இப் பிரபந்தங்கள் பாடி அருளினார் என்கை .-

பரம ஸத்த்வஸமாஸ்ரய: கஸ் (ஸ்தோ.ர. 12) என்கிறபடியே ரஜஸ் தமஸ்ஸூக்கு ஆஸ்ரயமன்றிக்கே பரம ஸத்வ ஸ்மாஸ்ரயனாய்‌, அவர்களைப் போலே தோற்றிற்றுச்‌ சொல்லுகை யன்றிக்கே “நெறி யுள்ளி யுரைத்த ” (திருவா. 1 – 3 – 8) என்கிறபடியே இவன்‌ சொல்லிற்றொன்று வேதர்த்தமாயிருக்கச்‌ செய்தேயும்‌, இச் சேதநர் பக்கல்‌ க்ருபாதிஸயத்தாலே விசாரித்துச்‌ சொல்லலாம்படி ஆப்தனுமாய்‌, ““நிறை ஞானத்தொரு மூர்த்தி”” (திருவா. 4 – 9 – 6) என்கிறபடியே அதுக்கடியான ஸார்வஜ்ஞ்யத்தை யுமுடையனாய்‌, *’அயனாய்‌ சிவனானாய்‌ திருமாலாலருளப்பட்ட சடகோபன்‌”’ (திருவா. 8 – 8- 11) என்கிறபடியே ப்‌ரஹ்ம ருத்‌ராதி களுக்கும்‌ அந்தர்யாமியாய் நின்று அவர்களை ப்ரவர்த்திப்பித்தாப் போலே ஸ்ரீயப் பதியாய்‌ அஸாதாரண விக்‌ரஹ யுக்தனான ஈஸ்வரனுடைய க்ருபை இவர்‌ திருவாய்மொழி பாடுகைக்கு மூலமென்கிறார் –

கஶ்ஶ்ரீ: ஶ்ரிய: பரம ஸத்வ ஸமாஶ்ரய: க:
க: புண்டரீகநயந: புருஷோத்தம: க: |
கஸ்யாயுதாயுத ஶதைக கலாம்ஶகாம்ஶே
விஶ்வம் விசித்ர சிதசித் ப்ரவிபாக வ்ருத்தம்||-ஶ்லோகம் 12 –யாரிடத்தில் சுத்த ஸத்வம் உள்ளது?

பிணக்கற வறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த
கணக்கற நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புறநெறி களை கட்டு
உணக்குமின் பசையற வவனுடை உணர்வு கொண்டு உணர்ந்தே –1-3-5-ஆறு வகைப்பட்ட பாஹ்ய சமயத்துக்கு வைதிக சமயத்தோடு உண்டான பிணக்கு அற-வேத மார்க்கத்தை ஆராய்ந்து அருளிச் செய்த படி-வாக்விவ்ருதாச்சா வேதா -என்று தான் சொன்னது அடங்க வழியாய் இருக்க பிரஜைகள் பக்கல் பரிவாலே-ஒர்ரர்த்தம் போதியாதவன் நிரூபிக்குமா போலே ஆராய்ந்து அருளிச் செய்த படி –

அறிவினால் குறையில்லா அகல் ஞாலத்தவர் அறிய,
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி,
குறிய மாண் உருவாகி, கொடுங் கோளால் நிலங்கொண்ட
கிறி அம்மான் கவராத கிளர் ஒளியால் குறையிலமே.–4-8-6-சேதன பேதத்தோ பாதி போறும் இறே உபாய பேதமும் -கர்ம யோகம் முதலாக பிரபத்தி பர்யந்தமாக சகல உபாயங்களையும் வ்யக்தமாக உபதேசித்த படி-கர்ம ஞான பகுதிகள் -அவதார ரஹஸ்யம் புருஷோத்தம வித்யை -ஸ்வரூப யாதாம்யம் -விரோதி நிவ்ருத்திக்கு பிரபத்தி -ஆத்மாபிராப்திக்கு பிராப்தி -பகவல்லாபத்துக்கு பிரபத்தி -இவற்றை அடங்க விசத்தமாக அருளிச் செய்தநிறைந்த ஞானத்தை உடைய அத்விதீயமான ஸ்வரூபத்தை யுடையவன் – ஞானாதிகன் சொன்னது இறே பிரமாணம் ஆவது -எல்லாருடைய ஞானத்துக்கும் அடியான ஞான பூர்த்தியை யுடையவன் –

தெருளும் மருளும் மாய்த்துத் தன் திருந்து செம் பொற் கழல் அடிக் கீழ்
அருளி இருத்தும் அம்மானாம் அயனாம் சிவனாம் திருமாலால்
அருளப் பட்ட சடகோபன்
ஓராயிரத்துள் இப்பத்தால்
அருளி யடிக் கீழ் இருத்தும் நம் அண்ணல் கரு மாணிக்கமே–8-8-11–ப்ரஹ்ம ருத்ர பிரமுகரான சர்வாத்மாக்களுக்கும் நிர்வாஹகனாய் -சர்வேஸ்வரனான ஸ்ரீ யபதியாலே – அருளப் பட்ட சடகோபன்-மயர்வற மதி நலம் அருளினன்-என்கிறபடியே கிருபைக்கு விஷய பூதரான ஆழ்வார் -இவ்வருளுக்கு வாய்த்தலை பிராட்டி -என்கை-

அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
வருளினான் அவ் வருமறையின் பொருள்
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே-8--பரம ரஹஸ்யமான வேதார்த்தத்தை நிர்ஹேதுகமாகத் தன் பக்கல் ஆசாலேசம் உடையார் வாழும் படி-ஸ்ரீ கீதா உபநிஷத் ஆச்சார்யனாய் நின்று வெளியிட்டான்
வேதங்கள் மறைத்த அர்த்தத்தை தீரோத்தகன் ஆகையாலே பிரகாசிப்பித்தான் (மூலையில் உள்ள உபநிஷத் அர்த்தங்களை நடு முற்றத்தில் இட்டு அருளி பதன் பதன் என்று அர்ஜுனனுக்கு  அருளிச் செய்தானே )-ஆழ்வாருக்குத் திருவாய் மொழிக்கு உள்ளுறை போலே காணும் அருளிச் செய்தது-(சூத்ரம் -உபநிஷத் -விருத்திக்காரர் -கீதாச்சார்யன் -ஆழ்வார் ப்ரஹ்ம சூத்ரம் போலே ) இருவருக்கும் முழு நோக்காகப் பெற்றால் ஆழ்வாருக்கு செய்யப் போகாது இல்லை யாகாதே-வேத அதிகாரிகளுக்கு உஜ்ஜீவமாம் படி எம்பெருமான் செய்தது -அநாதிகாரிகளும் க்ருதார்த்தராம் படி ஆழ்வார் அருளிச் செய்தது-எம்பெருமான் அருளினது ப்ராதேசிகம் –ஆழ்வார் அருள் சார்வத்ரிகம்- பாலேய் தமிழ் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரம் -என்றும் -தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் -என்றும் இறே சொல்லிற்று –

அவர்கள் பிரசாதம் ஆர்ஷ மூலம் என்னும் இடம்-மச் சந்தா தேவாதே ப்ரஹ்மன் -என்றும்
புராண சம்ஹிதா -இத்யாதியாலே பிரபன்ன வக்தாக்களானவர்கள் வசன சித்தமாய் இருந்தது …
அப்படியே இவர் பிரபந்தங்களுக்கு ,மூலம் பகவத் பிரசாதம் என்னும் அது இவர் வசன சித்தமோ
என்னும் அபேஷையில் அத்தை மூதலிக்கிறார்-
அவர்களுடைய ப்ரஸாதம்‌ ஆர்ஷத்துக்கு மூலமென்னுமிடம்‌ பரமாண ப்ரஸித்‌தமா யிருந்தது. இவருடைய பரபந்தத்துக்கு பகவத் ப்ரஸாதம்‌ மூலமென்னுமிடம்‌ அறிந்தபடி என்‌ என்னில்‌, அவர் தம்முடைய வசநங்கள்‌ ப்ரமாணமென்கிறார்‌

கருவுள் வேறலாமை அரன் அயன் எனச் செய்யும் அவை போலே மூவுருவா முதல்வன் துப்பரவாலே பரம கவிகளால் பாடுவியாது நேர் படச் சொல்லும் நீர்மை இலா என்னை தன்னாக்கி என் நா முதல் வந்து புகுந்து தப்புதல் அற தன்னை வைகுந்தனாக தன் சொல்லால் தானே துதித்து மலக்கு நாவியல் மொய்ய சொல்லால் சொல்ல வல்லேன் என்று நானும் சொல்லி நாடும் கை எடுக்கும் படி என் சொல்லால் யான் சொன்ன இன்கவி என்பித்தான் என்றார் இறே-சூரணை-57–

அதாவது
ஸ்ருஷ்டும் தத கரிஷ்யாமி த்வாமாவிச்ய பிரஜாபதே —ஸ்ரீ விஷ்ணு தர்மம் –-கல்பாந்தே ருத்ரரூபீ யோ க்ரசதே சகலம் ஜகத் – விஷ்ணுராத்மா பகவதோ பவஸ்யாமித தேஜச -பாரதம் கர்ணபர்வம் -என்கிற படியே-திசை முகன் கருவுள் வீற்று இருந்து படைத்திட்ட கருமங்களும் –திருவாய்-5-10-8–என்றும்
வெள்ளை நீர் சடையானும் நின்னிடை வேறலாமை விளங்க நின்றதும் திருவாய்-5-10-4–என்றும் சொல்லும் படி பிரம்மா ருத்ரர்களுக்கு அந்தர்யாமியாய் கொண்டு ஸ்ருஷ்ட்டி சம்ஹாராதிகளை பண்ணா நிற்கச் செய்தே-அரன் அயன் என உலகு அழித்து அமைத்து உளனே -திருவாய்-1-1-8–என்று
ஜகத் ஸ்ருஷ்ட்டி வேதோபதேசம் ஜகத் சம்ஹாரம் திரி புர தஹனம் இவற்றை பிரம்மா ருத்ரர்கள் தாங்களே செய்தார்களாக லோகத்தார் சொல்லும்படி செய்தாற் போலே-

“ஸ்ருஷ்டி ஸ்தித் யந்தகரணீம்‌ ப்‌ரஹ்ம விஷ்ணு ஸிவாத்மிகாம்‌ | ஸ ஸம்ஜ்ஞாம்‌ யாதி பகவாந்‌ ஏக ஏவ ஜநார்த்தநா ”” (வி.பு.1 – 2) என்றும்‌, “ஸ்ருஷ்டிம்‌ தத? கரிஷ்யாமி த்வாமாவிஸ்ய ப்ரஜாபதே”’, “கல்பாந்தே ருத்‌ரரூபீ யோ க்ரஸதே ஸகலம்‌ ஜகத்‌ ! தமாத்‌யம்‌ புருஷம்‌ விஷ்ணும்‌ ப்ரணதோஸ்மி ஜநார்த்தநம்‌”’, “’விஷ்ணுராத்மா பகவதோ பவஸ்யாமித தேஜஸ । தஸ்மாத்‌ தநுர்ஜ்யா ஸம்ஸ்பர்ஸம்‌ ஸவிஷேஹோ மஹேஸ்வர?” (பார. கர்ண. 29) என்றும்‌, ”திசைமுகன்‌ கருவுள்‌ வீற்றிருந்து படைத்திட்ட கருமங்‌களும்‌’” (திருவா. 5 – 10 – 8) என்றும்‌, ‘“வெள்ள நீர்ச் சடையானும்‌ நின்னிடை வேறலாமை விளங்க நின்றதும்‌”” (திருவா. 5 – 10 – 4) என்றும்‌ சொல்லுகிறபடியே ப்‌ரஹ்மாதிகளுக்கு அந்தர் யாமியாய்‌ ஸ்ருஷ்ட்யாதிகளைப்‌ பண்ணா நிற்கச் செய்தேயும்‌ ‘அரனயனென உலகழித்தமைத்துளன்‌”’ (திருவா. 1 – 1 – 8) என்கிறபடியே ப்‌ரஹ்மா ஜகத்தை ஸ்ருஷ்டித்தான்‌; வேதங்களை உபதேஸித்தான்‌; ருத்ரன்‌ ஜகத்தை ஸம்ஹரித்தான்‌; த்ரிபுரங்களை தஹித்தான்‌” என்று லோகத்தார்‌ சொல்லும்படி செய்தாப் போலே

திருவுருவு கிடந்தவாறும் கொப்பூழ்ச் செந்தாமரை மேல் திசைமுகன்
கருவுள் வீற்றிருந்து படைத்திட்ட கருமங்களும்
பொருவிலுன் தனி நாயக மவை கேட்குந்தோறும் என்நெஞ்சம் நின்று நெக்கு
அருவி சோருங் கண்ணீர் என்செய்கேன் அடியேனே.–5-10-8-திரு நாபி கமலத்தில் சதுர்முகன் ஆகிற அதிஷ்டானத்துக்கு உள்ளே –ஸ்ருஷ்டிம் தாத்தா கரிஷ்யாமி த்வாமாவிஸ்ய ப்ரஜாபதே-என்கிறபடியே சதுர்முகன் ஆசன பத்மத்தோ பாதியாய் இருக்கை–அவனுக்கு அந்தராத்மாவாய் -சர்வ நியந்தரு த்வத்தால் வந்த வேறுபாடு தோன்ற இருந்து-ஸ்ருஷ்டித்த வியாபாரங்களும் -ப்ரஹ்ம ஸ்ருஷ்ட்டி அடைய அவனே செய்கிறான் என்னும் படி இருந்த படி-

கள்ள வேடத்தைக் கொண்டு போய்ப் புரம் புக்க வாறும் கலந்த சுரரை
உள்ளம் பேதம் செய்திட்டு உயிருண்ட உபாயங்களும்
வெள்ள நீர்ச் சடையானும் நின்னிடை வேறலாமை விளங்க நின்றதும்
உள்ளமுள் குடைந்து என் உயிரை உருக்கி உண்ணுமே.–5-10-4-கங்கையினுடைய நீர் வெள்ளத்தை ஜடையிலே தரித்த ப்ரபாவத்தை யுடைய ருத்ரனும் விஷ்ணுராத்மா என்கிறபடியே சரீரவத் பரதந்த்ரன் என்னும் இடம் ப்ரஸித்தமாம்படி நின்றதுவும்

சுரர் அறிவரு நிலை விண் முதல் முழுவதும்
வரன் முதலாயவை முழுதுண்ட பரபரன்
புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து
அரன் அயன் என வுலகு அழித்து அமைத்து உளனே 
–1-1-8–ருத்ரனுக்கு அந்தர்யாமியாய் கொண்டு திரிபுர தஹனம் பண்ணி-பிரம்மாவுக்கு அந்தர்யாமியாய் நின்று வைதிக ஜ்ஞானத்தை தேவர்களுக்கு உபதேசித்து-இயந்து -ஈந்து -அறிவையீந்து -என்றபடி-திரிபுர தஹனம் பண்ணின ருத்ரன் என்றும் -வைதிக ஜ்ஞானம் ப்ரவர்த்தகன் ப்ரஹ்மா என்றும் அவர்களுக்கு பிரசித்தியை கொடுத்தால் போலே-ப்ரஹ்மாவுக்கு அந்தர்யாமியாக அண்டாந்த வர்த்திகளை ஸ்ருஷ்டித்தும் அவனுக்கு நிலம் அல்லாத ப்ராக்ருத சிருஷ்டியை ஸ்வேன ரூபேண பண்ணியும்-ருத்ரனுக்கு அந்தர்யாமியாய் நின்று அவனாலே சம்ஹார்யமான அம்சத்தை சம்ஹரித்தும் அவனுக்கு நிலம் அல்லாத ப்ராக்ருத சம்ஹாரத்தை ஸ்வேன ரூபேண பண்ணினான் சர்வேஸ்வரனே – ஏதௌ த்வௌ விபுதஸ் ரேஷ்டௌ- இப்படி சமஸ்த சிருஷ்டி சம்ஹாரங்களையும் தானே செய்கையாலே வேறேயும் சிலர் சிருஷ்டி சம்ஹாரங்களுக்கு கடவர் உண்டு என்று சொல்ல முடியாது –

மூவுருவா முதல்வனே--அதாவது –-என் முன் சொல்லும் மூவுருவாம் முதல்வனே-திருவாய் -7-9-2-
என்று ஸ்வேன ரூபேண நின்று கார்யம் செய்யும் இடத்தில் தனக்கு தானே அடி ஆனால் போலே பிரம்மா ருத்ரர்களுக்கும் தானே அடியாய் அவர்களை சரீரமாக கொண்டு நின்று சிருஷ்டி யாதிகளைப் பண்ணி
அவர்கள் செய்தார்கள் என்று பிரசித்தம் ஆக்கும் அவன்-துப்புரவாம்-அதாவது –திறத்துக்கே துப்புரவாம் திருமால்—திருவாய் -7-9-9-என்கிற படி ஏதேனும் ஒரு கார்யத்திலும் வந்தால் ஒரு த்ருணைத்தை கொண்டு கார்யம் தலை கட்டிக் கொள்ள வல்ல சாமர்த்தியத்தை உடையவன் ஆகையால் –பரம கவிகளால் பாடுவியாது-அதாவது –-இன் கவி பாடும் பரம கவிகளால் தன் கவி தான் தன்னை பாடுவியாது –திருவாய்-7-9-6- என்று சொல்லுகிறபடியே ,தன்னைக் கவி பாடுவிக்க வேண்டினால், அதுக்கு ஈடான ஞான சக்தி யாதிகளால் குறை வற்றவர்களாய் , இனிய கவி பாட வல்ல மேலான கவிகளான , வியாச பராசர வால்மீகி ப்ரப்ருதிகளும் ,செம்தமிழ் -பாடுவாரான முதல் ஆழ்வார்கள் உண்டாம் இருக்க , அவர்களைக் கொண்டு பாடுவித்து கொள்ளாதே ,–நேர் பட யான் சொல்லும் நீர்மை இலாமையால் ஏர்விலா என்னைத் தன் ஆக்கி —திருவாய்-7-9-5-என்கிற படியே , தனக்கு தகுதியாம் படி வாய்க்க சொல்லுகைக்கு அடியான ஞானாதி குணங்கள் எனக்கு இன்றிக்கே இருக்க ,-என்னை தன்னாக்கி -என்கிற படியே ,என்னை தன்னோடு ஒக்க ஞான சக்திகளை உடையனாம் படி பண்ணி-
ஆ முதல்வன் இவன் என்று தன்தேற்றி என் நா முதல் வந்து புகுந்து-திருவாய் -7-9-3- -என்கிற படியே
என்னுடைய வாக் பிரவர்திக்கு முதாலாய் வந்து புகுந்து-என்னாகியே தப்புதல் இன்றித் தனைக் கவி தான் சொல்லி–திருவாய் -7-9-4 -என்கிறபடியே -என்னை உபகரணமாக கொண்டு பாடா நிற்க செய்தே ,என்னுடைய ஸ்பர்சத்தால் வந்த தோஷம் தட்டாத படியாகக் கொண்டு ,-என்னால் தன்னை வைகுந்தனாக புகழ -திருவாய் -7-9-7-என்கிற படியே நான் புகழ்ந்த இத்தாலே , ஸ்ரீ வைகுண்ட நாதனாய் ,அங்குத்தை ஐஸ்வர்யம் பெற்றானாய் நினைத்து ,-தன் சொல்லால் தான் தன்னைக் கீர்தித்த மாயன்—திருவாய் -7-9-2-என்றும்-தானே யான் என்பரானாகித் தன்னைத் தானே துதித்து -திருவாய்-10-7-2–என்றும் சொல்லுகிற படி-சொல்லும் தன்னது ,சொன்னானும் தான் ,சொல்லிற்றும் தன்னை-என்னும் படி எனக்கு அந்தர் ஆத்மாவாய் நின்று ,தன்னைத் தானே ஸ்துதித்து-

“மூவுருவாம்‌ மூதல்வன்‌” (திருவா. 7 – 9- 2) என்கிறபடியே ப்ரஹ்மாதிகளுக்குத்‌ தானே காரணமானாப் போலே தனக்குத் தானே அடியாயிருக்கிறவன்‌,-*திறத்துக்கே துப்பரவாம்‌”‘ (திருவா. 7 – 9 – 9) என்கிறபடியே யாதொன்றைக் கொண்டு யாதொரு கார்யம்‌ கொள்ள நினைத்தான்‌, அத்தைக் கொண்டே அக் கார்யம்‌ கொள்ள வல்ல ஸாமர்த்‌யத்தை உடையனாகையாலே, தன்னைக் கவி சொல்லுவித்துக் கொள்ள நினைத்தால்‌ ‘“இன் கவிபாடும்‌ பரம கவிகளால்‌ தன் கவி தான்‌ தன்னைப்‌ பாடுவியாது” ‘ (திருவா. 7 – 9 – 6) என்கிறபடியே வ்யாஸ-பராஸர-வால்மீகிகளைக் கொண்டு கவி பாடுவித்துக் கொள்ளுதல்‌, முதலாழ்வார்களைக் கொண்டு கவி பாடுவித்துக் கொள்ளுதல்‌ செய்யாதே. (நேர் படச் சொல்லும்‌ நீர்மையிலா என்னைத்‌ தன்னாக்கி) “நேர் பட யான் சொல்லும்‌ நீர்மையிலாமையில்‌”” (திருவா. 7 – 9 – 5) என்கிறபடியே தன்னைக் கவி பாடுகைக்குத்‌ தகுதியான ஜ்ஞாந சக்த்யாதிகளின்றிக்கே இருக்க, “என்னைத்‌ தன்னாக்கி”” (திருவா, 7 – 9 – 1) என்கிறபடியே என்னைத்‌ தனக்கு அநந்யார்ஹமாக்கி என்னுதல்‌; என்னைத்‌ தன்னோடொத்த ஜஞாந சக்த்யாதிகளை உடையனாம்படி பண்ணி, “என்‌ நா முதல்‌ வந்து புகுத்து’” (திருவா. 7 – 9 – 3) என்கிறபடியே ஜ்ஞாநாதிகளை உண்டாக்கித்‌ தான்‌ தூரஸ்தனாயிராதே என்னுடைய ஜிஹ்வாக்‌ரத்திலே வந்து புகுந்திருந்து–தப்புதலின்றித் தனைக் கவி தான்‌ சொல்லி?” (திருவா. 7 – 9 – 4) என்கிறபடியே என்னை உபகரணமாகக் கொண்டு கவி பாடா நிற்கச் செய்தே என்னுடைய ஸ்பர்ஸத்தால்‌ வந்த தோஷம்‌ தட்டாத படி பண்ணி, *’தன்னை வைகுந்தனாகப் புகழ வண் தீங்கவி’‘ (திருவா, 7 – 9- 7) என்கிறபடியே நான்‌ கவி பாடின பின்பு தன்னை ஸ்ரீவைகுண்ட நாதனாகவும்‌ அவ்‌ விபூதியில்‌ ஐஸ்வர்யம்‌ தான்‌ பெற்றானாகவும்‌ நினைத்து, *‘தன் சொல்லால்‌ தான்‌ தன்னைக்‌ கீர்த்தித்த மாயன்‌” (திருவா. 7 – 9 – 2) என்கிறபடியே சொல்லும்‌ தன்னதாய்‌, சொன்னானும்‌ தானாய்‌, சொல்லிற்றும்‌ தன்னையாய்‌, தன்னைத் தானே துதித்து” (திருவா. 10 – 7- 2) என்கிறபடியே எனக்கு அந்தர்யாமியாய்‌ நின்று தன்னைத் தானே ஸ்துதியா நிற்கச்‌ செய்தேயும்‌–

என் சொல்லி நிற்பன்?என் இன்னுயிர் இன்று ஒன்றாய்
என் சொல்லால் யான் சொன்ன இன்கவி என்பித்துத்
தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த மாயன் என்
முன் சொல்லும் மூவுருவாம் முதல்வனே.–7-9-2-
மூவுருவாம் முதல்வனே.-அது தானே ஏது போலே என்னில் த்ரி மூர்த்திகள் என்று தன்னையும் கூட எண்ணும் படி ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு அடியானால் போலேயும் -ப்ரஹ்மாவை ஓதுவித்து தேவர்களுக்கு வெளிச்சிறப்பு பண்ணி அத்தை அவன் தலையிலே ஏறிட்டால் போலேயும் -ருத்ரனுக்கு அந்தராத்மாவாய் நின்று திரிபுர தஹனம் பண்ணி அவன் தலையிலே ஏறிட்டால் போலேயும் தானே காரியம் செய்து பிறர் கையிலே ப்ரஸித்தியை ஏறிடுகை பண்டே ஸ்வபாவம் என்கை –

திறத்துக்கே துப்பரவாம் திரு மாலின் சீர்
இறப்பெதிர் காலம் பருகிலும் ஆர்வனோ?
மறப்பிலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னை
உறப்பல இன்கவி சொன்ன உதவிக்கே?–7-9-9—ஏதேனும் ஒன்றிலே புக்கால் அத்தை தலைக் கட்ட வல்ல சாமர்த்தியத்தை யுடையவன் -த்ருணத்தைக் கொண்டு ஒரு கார்யம் கொள்ளப் புக்கால் -அத்தைக் கொண்டே நினைத்த கார்யம் கொள்ளும் சாமர்த்தியத்தை யுடையவன் –திறம் -கூறுபாடு துப்புரவு -சாமர்த்தியம்-திரு மாலின் சீர்-இந்த சாமர்த்யரத்துக்கு அடியாய் இருக்கிறது ஸ்ரீ யபதித்தவம் ஆயிற்று –

இன் கவி பாடும் பரம கவிகளால்
தன் கவி தான் தன்னைப் பாடுவியாது
இன்று
நன்கு வந்து என்னுடன் ஆக்கி என்னால் தன்னை
வன் கவி பாடும் என் வைகுந்த நாதனே.–7-9-6—தன்னை கவி பாடுவித்துக் கொள்ள நினைத்தால்-பராசர வ்யாஸ வால்மீகிகள் ஆதல் -செந்தமிழ் பாடுவார் என்னும் முதல் ஆழ்வார்கள் ஆதல் அன்றோ பாத்ர பூதர் -அவர்களை ஒழிய –தன் கவி தான் தன்னைப் பாடுவியாது-கவியும் தன்னது –கர்த்தாவும் தான் -விஷயமும் தான் –

சீர் கண்டு கொண்டு திருந்து நல் இன் கவி
நேர்பட யான் சொல்லும் நீர்மை இலாமையில்
ஏர்வுஇலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னைப்
பார் பரவு இன் கவி பாடும் பரமரே.–7-9-5-நான் கவி பாடுகைக்கு அடியான ஞானாதி குணங்கள் இன்றிக்கே இருக்கச் செய் தேயும் ஏர்வுஇலா என்னைத்-சைதன்ய ப்ரயுக்தமான இச்சையும் இன்றிக்கே இருக்கிற என்னை தன் ஆக்கி என்னால் தன்னைப்-தனக்கு உண்டான ஞானாதிகளை எனக்கு உண்டாக்கி -என்னைக் கொண்டு அபரிச்சின்னனான தன்னை -என்னை தன்னாக்கி -தனக்கு அநந்யார்ஹம் என்னும் இடத்தை அறிவித்து என்றுமாம்-

என்றைக்கும் என்னை உய்யக்கொண்டு போகிய
அன்றைக்கு அன்று என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை
இன் தமிழ் பாடிய ஈசனை ஆதியாய்
நின்ற என் சோதியை என் சொல்லி நிற்பனோ?–7-9-1-கவி பாடுகைக்கு அனுரூபமான ஞான சக்தி யாதிகள் இல்லாத என்னை -தன்னோபாதி ஞான சக்தி யாதிகளை யுடையேனாம் படி பண்ணி -என்னுதல் -என்னைத் தன்னாக்கி-தனக்கு ஆளாம் படி பண்ணி என்னுதல் –

ஆ முதல்வன் இவன் என்று தன் தேற்றி என்
நா முதல் வத்து புகுந்து
நல் இன்கவி
தூமுதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என்
வாய் முதல் அப்பனை என்று மறப்பனோ!–7-9-3–ஸ்ரீ வால்மீகி பகவான் கவி பாடிற்று ஈஸ்வரன் திரு உள்ளம் அடியாக ப்ரஹ்மா சரஸ்வதியை அவன் நாவிலே ஏவி இ றே -அங்கனம் இடையீடு இன்றிக்கே தானே என்னுடைய வாக் பிரவ்ருத்திக்கு முதலாய் வந்து புகுந்து என்னுதல் –முந்துற நாவில் வந்து புகுந்து என்னுதல் –

அப்பனை என்று மறப்பன் என் ஆகியே
தப்புதல் இன்றித் தனைக் கவி தான் சொல்லி
ஒப்பிலாத் தீ வினையேனை உயக்கொண்டு
செப்பமே செய்து திரிகின்ற சீர்கண்டே.–7-9-4—என்னோட்டை சம்சர்க்கத்தால் வந்த தோஷம் தட்டாமே -நானே கவி பாடினேன் ஆகில் நிரவத்யமாம்-இது இ றே அரிது-தனைக் கவி தான் சொல்லி-தனக்கு சத்ருசமாக தான் சொல்லி

வைகுந்த நாதன் என் வல்வினை மாய்ந்து அறச்
செய்குந்தன் தன்னை என்னாக்கி என்னால் தன்னை
வைகுந்தனாகப் புகழ்
வண் தீங்கவி
செய்குந்தன் தன்னை எந்நாள் சிந்தித்து ஆர்வனோ?–7-9-7—நான் புகழ்ந்தால் தான் ஸ்ரீ வைகுண்ட நாதன் ஆவானாய் இறா நின்றான் -அது தான் முன்பே நித்தியமாய் இருக்க -என் கவி பாட்டாலே இப்போது பெற்றானாய் இருக்கை -தமப்பன் கொடுத்து அது தன்னையே மகன் கொடுக்க அன்று பெற்றானாய் இரா நின்றான் இறே -ஆத்மா நித்தியமாய் இருக்கச் செய்தே அசன்னேவா என்றும் சந்தமேனம்-என்றும் சொல்லுகிறது-

என் சொல்லி நிற்பன்?என் இன்னுயிர் இன்று ஒன்றாய்
என் சொல்லால் யான் சொன்ன இன்கவி என்பித்துத்
தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த மாயன் என்
முன் சொல்லும் மூவுருவாம் முதல்வனே.–7-9-2-சொல்லும் தன்னது -சொன்னானும் தானே -சொல்லிற்றும் தன்னை –கவி பாட்டுண்டேன் ஆகில் கிடீர் கவி பாடினேன் ஆவது -தான் தன்னைக் கவி பாடினான் ஆகில் உம்முடைய கவி என்று நாட்டிலே பிரசித்தம் ஆக்கின படி எங்கனே என்னில்
மாயன் -இது இ றே அவனுடைய ஆச்சர்ய சக்தி இருக்கும் படி -நீர் இதில் அந்வயித்த படி என் என்ன -என்னை உபகரணமாக கொண்டு தானே கவி பாடினான்

வலக்கை ஆழி இடக்கை சங்கம் இவை உடைய மால் வண்ணனை மலக்கு நாவுடையேற்கு –திருவாய்-6-4-9-என்று ஒன்றுக்கும் விக்ருதன் ஆகாத ,சர்வாதிகனை என் உக்தி மாத்ரத்தாலே விக்ருதனாம் படி
பண்ண வல்ல நா வீறுடைய எனக்கு என்றும் – நாவியலால் இசை மாலைகள் ஏத்தி நண்ணப் பெற்றேன்–திருவாய்-4-5-4–என்று நெஞ்சு ஒழிய வாக் பிரவர்த்தி மாத்ரத்தாலே ,இசை மாலைகளைக் கொண்டு ஸ்துதிக்க கிட்டப் பெற்றேன் என்றும் –மொய்ய சொல்லால் இசை மாலைகள் , ஏத்தி உள்ளப் பெற்றேன்–திருவாய்-4-5-2–என்று செறிந்த சொல்லாலே உண்டாய் ,இசையோடு கூடி இருந்துள்ள தொடைகளால் ஏத்தி அனுசந்திக்கப் பெற்றேன் என்றும் வானக் கோனை கவி சொல்ல வல்லேற்க்கு–திருவாய்-4-5-9-என்று- ஸ்ரீ வைகுண்ட நாதனை கவி சொல்ல வல்ல எனக்கு என்றும்-நான் பாடினேனாக நினைத்து நானும் சொல்ல –-சடகோபன் சொல் -திருவாய்-2-2-11–என்றவாறே நான் இத்தை பாடினேனாக நினைத்து நாடும் அஞ்சலி பண்ணும் படி –என் சொல்லால் யான் சொன்ன இன் கவி என்பித்து –திருவாய்-7-9-2–என்ற படி என்னுடைய வசன வ்யக்தியாலே ,நான் கர்த்தாவாக சொன்ன இனிய கவி என்று நாட்டிலே பிரசித்தம் ஆக்கினான் என்று அருளிச் செயதார் இறே என்கை ..
ஆகையால் இவர் சர்வேஸ்வரன் அருள் அடியாகவே பாடினதாய் நிச்சிதம் என்று கருத்து
.

மலக்கு நா வுடையேற்கு”’ (திருவா. 6 – 4- 9) என்றும்‌,“நாவியலாலிசை மாலைகளேத்தி”’ (திருவா. 4 – 5 – 4) என்றும்‌, ‘மொய்ய சொல்லாலிசை மாலைகளேத்தி”” (திருவா. 4 – 5 2) எனறும்‌, ‘‘வானக் கோனைக் கவி சொல்ல வல்லேற்கு”” (திருவா. 4 – 5 – 9) என்றும்‌ இப்படி நானும்‌ சொல்லி, *’சடகோபன் சொல்‌”” என்றவாறே நாடும்‌ அஞ்ஜலி பண்ணும்‌ படி பண்ணி, *“என்சொல்லால்‌ யான்‌ சொன்ன இன் கவி என்பித்து”’ (திருவா. 7- 9- 2) என்று – சொல்‌ என்னதாகவும்‌, சொன்னேன்‌ நானாகவும்‌, அது தான்‌ எனக்கு இனிதாகவும்‌ சொல்லுவித்தான்‌ என்கிறாரிறே. ஆகையால்‌ இவருடைய உக்திகளால்‌ ஸர்வேஸ்வரனருளாலே திருவாய்மொழி பாடினார்‌ என்னுமிடம்‌ ஸித்‌தம் 

கலக்க ஏழ்கடல் ஏழ்மலை உலகேழும் கழியக் கடாய்
உலக்கத் தேர்கொடு சென்ற மாயமும் உட்பட மற்றும்பல
வலக்கை ஆழி இடக்கைச் சங்கம் இவை யுடை மால்வண்ணனை
மலக்கு நாவுடையேற்கு மாறுளதோ இம்மண்ணின் மிசையே?–6-4-9-
-தாமஸ பரமோ தாதா சங்க சக்ர கதா தரா-என்று சர்வாதிக வஸ்துவுக்கு லக்ஷணம் ஆயிற்று திவ்யாயுதங்கள் -வலக்கையில் திரு வாழி யையும் -இடக்கையில் ஸ்ரீ பாஞ்ச ஜன்யமும் -இவற்றை யுடையனுமாய் -கறுத்த நிறத்தை யுடையவனை
மால் வண்ணனை என்ன அமைந்து இருக்க திவ்யாயுதங்களை சொல்லுவான் என் என்று கஞ்சனூர் வண் துவரைப் பெருமாள் பட்டரை கேட்க -அவிக்ருத வஸ்துவுக்கு லக்ஷணம் இ றே திவ்யாயுதங்கள் என்றார்-மலக்கு நாவுடையேற்கு மாறுளதோ இம்மண்ணின் மிசையே?அவாக்ய அ நாதரா என்கிற சர்வாதிக வஸ்துவை விக்ருதமாக்கும் நா வீறுடைய எனக்கு சோழேந்திர சிம்ஹனை உளுக்காகப் பண்ண வல்ல நாவைப் படைத்த எனக்கு -பூமியில் எதிர் உண்டோ-ஈஸ்வரன் உளுக்கு ஆகும் படி கவி சொல்ல வல்லார் தம்மை ஒழிய சிலைவர் இல்லாமையால் வேறு என்னோடு ஒப்பார் இல்லை என்கிறார்-

மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான்
தூவி அம் புள்ளுடையான் அடல் ஆழி அம்மான் தன்னை
நாவியலால் இசை மாலைகள் ஏத்தி நண்ணப் பெற்றேன்;
ஆவி என் ஆவியை யான் அறியேன் செய்த ஆற்றையே.–4-5-4-நெஞ்சின் வருத்தம் இன்றிக்கே வாக் ப்ரவ்ருத்தி மாத்ரமான திருவாய்மொழி யைக் கொண்டு நா புரட்டின இடம் எங்கும் கவியாய்க் கிடக்கை
ஏத்தி நண்ணப் பெற்றேன்;-இவர் நண்ணி ஏத்தினவர் அல்லர் -ஏத்திக் கொண்டு பண்ணுகிறார்-

மைய கண்ணாள் மலர்மேல் உறை வாள் உறை மார்பினன்
செய்ய கோலத்தடங் கண்ணன் விண்ணோர் பெருமான் தனை
மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேன்
வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே.–4-5-2—மொய் என்று வலி யாதல் -பெருமை யாதல்
வலி யான போது-சிதிலமாய் இராதே சொல் செறிந்து கட்டுடைத்தாய் இருக்கை–பெருமையான போது இவ்விஷயத்தை விளாக் குலை கொள்ளவற்றாய் இருக்கை –யதோ வாசோ நிவர்த்தந்தே-என்று மீளாதே இவ்விஷயத்துக்கு நேரே வாசகமாய் இருக்கை –இசை மாலைகள் – பரிமள பிரசுரமான பூ மாலைகள் போலே கேட்டார் நெஞ்சு பிணிப்புண்ணும் படி இசை விஞ்சி இருக்கை – அவனும் அவளும் நித்ய ஸூ ரிகளுமாய் இருந்து கேட்டுக் கொண்டாட பிறந்த பிரபந்தம் இறே-ஸ்ரீ ராமாயணத்தில் காட்டில் இப்பிரபந்தத்துக்கு ஏற்றம் -பகவத் ஹ்ருதயத்தை பின் சென்ற ப்ரஹ்மா அடியாக நாரதாதிகள் முன்னிலையாக பிறந்த பிரபந்தம் அன்றிக்கே-கேட்டாரார் வானவர்கள் – தென்னா வென்னும் என் அம்மான் -என்கிறபடி தானும் நித்ய ஸூரிகளும் கேட்டுக் கொண்டாடும் படி இருக்கை –-ஏத்தி உள்ளப் பெற்றேன்மன பூர்வோ வாக் உத்தர -என்கிற நாட்டார் படியும் அன்று –இவர் படி-ஏத்தி பின்னை யாயிற்று நினைத்தது-கவி பாடுகைக்கு நினைவு அத்தலையில் யானாலும் பேறு தம்மதாய் இருக்கிற படி-சாஸ்திர பலம் ப்ரயோத்த்ரி என்கிற இடம் அன்றியிலே இருக்கிற படி-முடியானே -யிலே விடாய்த்த போது தனித்தனியே கரணங்கள் விடாய்த்தால் போலே இங்கு தனித் தனியே யாயிற்று அனுபவிக்கிறதுஈஸ்வரன் நினைவாலே பாடுகிற கவி யாகையாலே தாமும் கரணங்களோ பாதி அந்வயித்தார்

வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ்த்
தானத்தும் எண் திசையும் தவிராது நின்றான் தனை,
கூனற் சங்கத் தடக்கை யவனை, குடமாடியை,
வானக் கோனைக் கவிசொல்ல வல்லேற்கு இனி மாறுஉண்டோ?–4-5-9-இப்படிப் பட்டவனை கவி சொல்ல வல்லேனுக்கு -அகல் வானம் என்று விசேஷிக்க வேணுமோ -உபய விபூதியிலும் எதிரில்லை-

ஏத்த வேழுலகும் கொண்ட கோலக்
கூத்தனை குருகூர்ச் சடகோபன் சொல்
வாய்ந்த வாயிரத்துள் இவை பத்துடன்
ஏத்த வல்லார்க்கு இல்லையோ ரூனமே –2-2-11-வேதத்தில் காட்டில் ஆழ்வார் அடியாகப் பிறந்த ஆபி ஜாத்யம்-ஆப்திக்கு இன்னார் கூறியது என்ன வேண்டுதலின், ‘குருகூர்ச் சடகோபன்’ என்கிறார்.
இதனால், (த்ரீணீ பதா விசக்ரமே )வேதாந்தத்தைக் காட்டிலும் ஆழ்வாரிடத்தில் பிறந்த திருவாய்மொழிக்குள்ள ஆபி ஜாத்யம் — உயர்குடிப் பிறப்பின் சிறப்பினைக் கூறியபடி

என் சொல்லி நிற்பன்?என் இன்னுயிர் இன்று ஒன்றாய்
என் சொல்லால் யான் சொன்ன இன்கவி என்பித்துத்
தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த மாயன்
என்
முன் சொல்லும் மூவுருவாம் முதல்வனே.–7-9-2-சொல்லும் என்னதாய் -சொன்னேனும் நானேயாய் -அது தான் இனிய கவியாம் படி நாட்டிலே பிரசித்தம் ஆக்கினான் –என்பித்து-பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் -என்கிறபடியே லோக பிரசித்தம் ஆக்கி –தான் வென்று அர்ஜுனனை நாட்டார் உடன் ஓக்க புகழுமா போலே -அது தான் அப்படி அன்றோ என்னில் – தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த -சொல்லும் தன்னது -சொன்னானும் தானே -சொல்லிற்றும் தன்னை –கவி பாட்டுண்டேன் ஆகில் கிடீர் கவி பாடினேன் ஆவது -தான் தன்னைக் கவி பாடினான் ஆகில் உம்முடைய கவி என்று நாட்டிலே பிரசித்தம் ஆக்கின படி எங்கனே என்னில்-மாயன் -இது இ றே அவனுடைய ஆச்சர்ய சக்தி இருக்கும் படி -நீர் இதில் அந்வயித்த படி என் என்ன -என்னை உபகரணமாக கொண்டு தானே கவி பாடினான் -உபகரணமான படி தான் என் என்ன-என்-முன் சொல்லும்-அவன் முன்னே சந்தை இட பின்னே சொன்னேன் –தானே சொன்னான் ஆகில் ஸ்ரீ கீதை போலே வறமுறுகலாம் இறே –

இப்படி இப் பிரபந்தங்களுக்கு மூல வைலஷண்யத்தால் வந்த ஏற்றம் உண்டு என்று அறிவித்த அளவும் அன்றிக்கே, வக்த்ரு வைலஷண்யத்தால் ,வந்த ஏற்றமும் உண்டு ,என்று அறிவிக்கைகாக ருஷிகளில் காட்டில் ஆழ்வாருக்கு உண்டான வ்யாவ்ருத்தியை அருளிச் செய்கிறார் ..(ஆழ்வார் ஏற்றம் ஐந்து சூரணைகளில்-பிரேமம் -வைராக்யம் -தாரக போஷாக போக்யங்களில் வேறுபாடு பல சாதன தேவதாந்தர-இவற்றைச் சொல்லும்) இதுக்குக் கீழ்‌ ப்ரபந்த, மூல வைலக்ஷண்யம்‌ சொல்லிற்று. இனி மேல்‌ வக்த்ரு வைலக்ஷண்‌யம்‌ சொல்லுகிறது-

தர்ம வீர்ய ஞானத்தாலே தெளிந்து ஹ்ருஷ்டராய் மேலே மேலே தொடுப்பாரைப் போல் அன்றி
அருளின பக்தியாலே உள் கலங்கி சோகித்து மூவாறு மாசம் மோஹித்து வருந்தி ஏங்கி தாழ்ந்த சொற்களாலே நூற்கிற இவர்-சூரணை -58-
(பக்தியாலே உள் கலங்கி-தாழ்ந்த சொற்களாலே நூற்கிற இவர்-ஞானத்தாலே மேலே மேலே தொடுப்பாரைப் போல் அன்றே -)

அதாவது
ஹஷிதம் பாஷிதம் சைவ கதிர்யா யச்ச சேஷ்டிதம் தத் சர்வம் தர்ம வீர்யேண யதாவத் சம்பிரபச்யதி—ஸ்ரீ பாலகாண்டம் –3-4-(ஸ்ரீ ராமபிரானுடைய புன்முறுவல் வார்த்தைகள் என்னும் இவற்றையும் -சஞ்சாரத்தையும் -செயல்களையும் மற்றும் எல்லாவற்றையும் பிரமனுடைய வரபலத்தால் உள்ளபடியே நன்கு அறிகின்றார் )என்கிற படியே தாம் தாம் அனுஷ்டித்த தபோ ரூபமான தர்மத்தின் உடைய சக்தியாலே ஜனித்த ஞானத்தாலே –கண்டும் தெளிந்தும் கற்றார் கண்ணற்க்கு ஆள் அன்றி ஆவரோ –திருவாய் -7-5–7-என்கிற படியே ஜ்ஞாதவ்யங்களை தெளிய அறிந்து , அது தான் –ந போதாத் அபரம் சுகம்-(ஞானத்தை தவிர வேறு இன்பம் இல்லை )என்னும் படி இருக்கையாலே ,ஹர்ஷ யுக்தராய் ,அந்த தெளிவும் ஹர்ஷமும் அடியாக உத்தரோத்தரம் சப்தங்களை தொடுக்கும் ருஷிகளை போல் அன்றியே–தர்ம வீர்யத்தாலே வந்ததுக்கும் -அது தான் ஞான மாத்ரத்துக்கும் -எதிர் தட்டாம் படி-மயர்வற மதி நலம் அருளினன்–திருவாய் -1-1-1–என்கிற படியே , நிர்ஹேதுக பகவத் பிரசாதத்தாலே வந்ததாய் ஞான விபாக ரூபையான பக்தியாலே தெளிவுக்கும் ஹர்ஷத்துக்கும் எதிர் தட்டாம் படி-மதி எல்லாம் உள் கலங்கி–திருவாய் -1-4-3-என்கிற படி விரஹவ்யதையாலே ஞானம் எல்லாம் அடி மண்டியோடே கலங்கி ,
யதா மனோரதம் பகவத் அனுபவம் பெறாமையாலே-ஆடியாடி அகம் கரைந்து-2-4-பதிகங்கள் படியே சோகித்து —மூவாறு மாசம் மோகித்துமேலே தொடுக்கும் அதுக்கு எதிர் தட்டாம் படி –-எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே –திருவாய் -1-3-1- என்றும்-பிறந்த வாறும் வளர்ந்தவாறும் –5-10-1-திருவாய் — என்றும் –-கண்கள் சிவந்து பெரியவாய் –திருவாய் -8-6-1-என்றும்
சர்வாதிகனாய் ,அவாப்த சமஸ்த காமனாய் இருக்க செய்தே , ஷூத்ரராய் ,சபலராய் இருப்பாரைப் போலே -அவன் செய்த நவநீத சௌர்ய வ்ருத்தாந்தையும் –-அகர்ம வச்யனாய் இருக்க செய்தேயும் -கர்ம வச்யரை போலே பிறந்த படியையும்-மாயக் கூத்தனில் தான் கண்ணும் வாயும் துவர்ந்தால் போல் தம்மை பிறிகையாலே ,அவன் கண்ணும் வாயும் துவர்ந்து ,தம்மோடு கலந்த பின்பு அவை தன்னிறம் பெற்ற படியும் அனுசந்தித்து -ஈது என்ன பிரகாரம் -ஈது என்ன பிரகாரம்- என்று ஓர் ஒன்றில் அவ்வாறு மாசமாக மூவாறு மாசம் மோஹித்து — வருந்தி நான் வாசக மாலை கொண்டு–திருவாய் -3-8-10-என்கிற படியே ஒரு சொல் எடுக்கும் பொது ஒரு மலை எடுக்குமா போலே வருத்தப் பட்டு —என்று என்று ஏங்கி அழுதக்கால்–திருவாய் -8-5-3-என்கிற படியே அனுபவ அலாப க்லேசத்தால் அவன் படிகளை பல காலும் சொல்லி பொருமி பொருமி அழுது–அங்கே தாழ்ந்த சொற்களால்—திருவாய் -8-5-11-என்கிற படியே -எங்கே காண்கேன்-என்ற மன சைதில்யத்தாலே கத்கத ஸ்வரமான சப்தங்களால் –வண் தமிழ் நூற்க நோற்றேன் –திருவாய் -4-5-10-என்ற இப் பிரபந்தத்தை நூற்கிறவர் இவர் என்கை .

“ஹஸிதம்‌ பாஷிதஞ்‌சைவ கதிர்யா யச்ச சேஷ்டிதம்‌ | தத் ஸர்வம்‌ தர்ம வீர்யேண யதாவத் ஸம் ப்ரபஸ்யதி?” (ரா. பாடி – 4) என்கிறபடியே தந்தாமுடைய தபோ பலத்தாலே லப்‌தமான ஜ்ஞாநத்தாலே “கண்டும்‌ தெளிந்தும்‌’” (திருவா. 7- 5- 7) என்கிறபடியே கண்டு தெளிந்து ஹ்ருஷ்டராய்‌, மேலே மேலே ஸப்‌தங்களைத்‌ தொடுக்கும்‌ ருஷிகளைப் போலன்றே அருளின ப,க்தி ரூபமான ஜ்ஞாநமெல்லாம்‌ அடி மண்டியோடே கலங்கி யதா மநோரதம்‌ பகவதநுபவம்‌ பண்ணப் பெறாமையாலே ஸோகித்து, “’தாம்நா சைவோதரே பத்‌த்‌வா ப்ரத்யபத்‌ நாதுலூகலே யதி ஸக்நோஷி கச்ச த்வம்‌ அதி சஞ்சல சேஷ்டித” என்றும்‌, “‘உரலினோடிணைந் திருந்தேங்கிய எளிவு எத்திறம்‌’” (திருவா, 1 – 3 1) என்றும்‌, “போனாய்‌ மா மருதின்‌ நடுவே ” (திருவா. 5 – 1 – 2) என்றும்‌, ““பிறந்தவாறும்‌ வளர்ந்தவாறும்‌”’ (திருவா. 8 – 10 – 1) என்றும்‌, “ஸர்வஜ்ஞனாய்‌ ஸர்வ ஸக்தியா யிருக்கச்‌ செய்தே இப்படி ஓரபலை கையாலே கட்டுண்பதே! இதென்ன ஆஸ்ரித வ்யாமோஹந்‌தான்‌!’ என்கிற ஆஸ்ரித வ்யாமோஹாநுஸந்தாநமும்‌, இவர்‌ பக்தி பாரவஸ்யத்தாலே கலங்கி ஸர்வஜ்ஞத்வாதிகளை மறந்து விரோதம்‌ பண்ணுவதாக நின்ற இரண்டு மருதுக்கும்‌ நடுவே தவழ்ந்து சென்றதை அநுஸந்தித்து, உலகங்கட்கெல்லாம்‌ ஒருயிரான வஸ்துவுக்கு ஒரு தீங்குவரில்‌ செய்வதென்‌?” என்கிற ப்ரேமாதிஸயமும்‌, ‘ஜநந ஹேதுவான கர்ம ஸ்பர்ஸ மில்லாத வஸ்து “’ததஸ் ச த்‌வாதஸே மாஸே”? (ரா.படா. 10 – 8) என்கிறபடியே பன்னிரண்டு மாஸம்‌ கர்ப்பவாஸம் பண்ணி ஸத்ரு க்‌ருஹத்திலே இருளிலே வந்து அவதரிப்பதே!” என்றும்‌, ஓரொன்றில்‌ மூவாறு மாஸம்‌ மோஹித்து, ““வருந்தி நன்‌ வாசக மாலை கொண்டு” (திருவா. 3 – 8 – 10) என்கிற படியே ஒரு சொல்‌ எடுக்கும் போது ஒரு மலை எடுத்தாப் போலே வருந்தி, (ஏங்கி) “என்றென்றேங்கி அழுதக்கால்‌”” (திருவா. 8 – 5 – 3) என்கிறபடியே அவன் திருநாமங்‌களைச்‌ சொல்லப் புக்கு பல ஹாநியாலே நடுவு நடுவே ஏங்குவது இளைப்பதாய்‌. (தாழ்ந்த) “அங்கே தாழ்ந்த சொற்களால்‌”” (திருவா. 8 – 5 – 11) என்கிறபடியே சொல்லப் புக்குச்‌ சொல்ல மாட்டாதே தரைப்பட்டு கத்‌கத ஸ்வரத்தோடே ““வண்டமிழ் நோற்க நோற்றேன்‌”” (திருவா. 4 – 5 – 10) என்று நூற்கிற விவர்‌ என்கிறார்

கண்டு தெளிந்தும் கற்றார் கண்ணற்கு ஆளன்றி ஆவரோ?
வண்டுண் மலர்த் தொங்கல் மார்க்கண்டேயனுக்கு வாழுநாள்
இண்டைச் சடைமுடி ஈசன் உடன்கொண்டு உசாச் செல்லக்
கொண்டங்குத் தன்னொடுங் கொண்டு உடன் சென்றது உணர்ந்துமே.–7-5-7–பிரிய ஹிதங்களை ஸ்ரவணம் பண்ணி -தங்களிலே அத்யவசித்து -அத்தை சாஷாத் கரித்தவர்கள்–சர்வ ஸூலபனுக்கு அன்றி ஆளாவாரோ -ஐஸ்வர்யார்த்திக்கு ஐஸ்வர்ய விசிஷ்டானாயும் -கேவலனுக்கு சுத்தி குண உக்தனாயும் -பகவத் சரணார்த்திக்கு ஸமஸ்த கல்யாண குண விசிஷ்டானாயும் -இப்படியால் சர்வ ஸூலபன் ஆனவனுக்கு –ஒருவன் பக்கலிலே ஓர் அர்த்தத்தைக் கேட்டு, அதிலே தெளிய வாசனை பண்ணி. பின்பு நேரே அறிதல் பரியந்தமாக்கி வைப்பார்.-கேட்டல் தெளிதல்கள் தாம், நேரே பார்ப்பதற்குச் சமானமான ஆகாரத்தளவும் சென்று நிற்கும் அன்றோ? (த்ரஷ்டவ்ய -ஸ்ருதி போல் ஆழ்வார் இங்கும் கண்டும் என்கிறார் ஸ்ரவணம் மனனம் நிதித்யாசிதவ்யம் சாஷாத்காரம் அளவு கூட்டிப்போகுமே )-

விதியினால் பெடை மணக்கும் மென்னடைய அன்னங்காள்
மதியினால் குறள் மாணாய் வுலகிரந்த கள்வர்க்கு
மதியிலேன் வல்வினையே மாளாதோ வென்று ஒருத்தி
மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே –
1-4-3-நீர் கொடுத்த மயர்வறு மதி நலம் எல்லாம் அடி மண்டியோடே கலங்கிற்று என்று சொல்லுங்கோள் –மயங்குமால் –இப்போது அறிவு போயிற்று ஆகில் பின்பு அறிவு உண்டாகிறது என்று இராமே முடியும் தசை யாயிற்று என்னுங்கோள் 

எம்பெருமானோடே புணர்ந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி -க்ஷண மாத்திரை விஸ்லேஷத்தாலே -அறத் தளர்ந்து -ஆர்த்தியாலே கிடந்த இடத்தே கிடவாதே மோகமும் உணர்ச்சியுமாய் மாறி மாறிச் சென்று கண்டார்க்கு எல்லாம்தயை நீயை யான தசையை பிராப்த்தையாய்-நோவு படுகிற இவளைக் கண்ட திருத் தாயார் -அவன் திரு முன்பே பொகட்டு ராம கிருஷ்ணாதி ரூபேண வந்து திருவவதாரம் பண்ணி ஆர்ஜித்த நீர்மைகளை எல்லாம் இவளுடைய அவசாதத்தை போக்காமையாலே இழக்கப் புகா நின்றீர் என்று கூப்பிடுகிறாள்-அஞ்சிறைய மட நாரையிலும் வாயும் திரையுகளிலும் காட்டில் இதில் ஆற்றாமை விஞ்சி இருக்கும் காசை இழந்தவனுக்கும் பொன்னை இழந்தவனுக்கும் மாணிக்கத்தை இழந்தவனுக்கும் இழவு ஒத்து இராது இறே -இங்கு தம் தசை தாம் பேச மாட்டார் –2-4-ஆடியாடி -பிரவேசம் –

பத்துடை யடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே
 –1-3-1-மார்வினிடையிலே கட்டுண்டு –உரத்த ஏறு போலச் செருக்கன் -என்றுமாம் –எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே – உரலோடு ஒக்கச் சலியாதே இருந்து -அச்சத்தாலே ஏங்கின -குரல் இரங்க மாட்டாத – எளிமை என்னபடியாய் இருக்கிறது –எளிவு -எளிமை 

போனாய் மாமருதின் நடுவே! என் பொல்லா மணியே!
தேனே! இன்னமுதே! என்றேன்றே சில கூத்துச் சொல்லத்
தானேல் எம்பெருமான் அவன் என்னாகி ஒழிந்தான்
வானே மாநிலமே மற்றும் முற்றும் என்னுள்ளனவே.–5-1-2-போனாய் -யாமலார்ஜுனங்கள் நடுவே போன போது யசோதை பிராட்டி ப்ரேமத்தாலே சொன்ன வார்த்தையை -ப்ரேம கந்தம் இன்றிக்கே இருக்கிற நான் சொன்னேன் –போனாய் -கை கழிந்தது -இனி பிரதிகிரியை இல்லை -பல அனுபவமே என்று இருக்கிறார் -பூத காலமாய் இருக்க இவருக்கு வர்த்தமான காலம் போலே இருக்கிறது –ஈஸ்வரன் கொடுத்த ஞான வைஸத்யம் இவருக்கு வயிறு எரிச்சலுக்கு உறுப்பாயிற்று -நலிய வந்தவை தான் நலிய பற்றாமை தானே சென்று புக்கான் என்கிறார்-மா மருது-மஹா அசுரர்கள் வடிவுக்குத் தகுதியாக ஆவிர்பவித்த மருதுகள்-இவன் மௌக்யத்தை அறிந்து பணைத்தவை என்றுமாம் -அவ்வருகே சாய்ந்தவை இப்பெரிய வடிவோடே உள்ளே சாய்ந்தனவாகில்-என்னாவக் கடவது என்கிறார் –
நடுவே போனாய் -இருவரும் க்ருத சங்கேதர்களாய் இருக்க -ஒன்றிலே துளை கண்டு போனாய் போலே யாயிற்று போனது- புணர் மருதம் இறே – மௌக்யத்தாலே ஓர் அருகு ஒதுங்க அறியானே -யாமளார்ஜ்ஜுன யோர் மத்யே ஜகாம என்று ருஷி வயிறு பிடிக்கிறான் -இவர் மா மருதுவின் நடுவே போனாய் என்கிறார்

5-10-பிறந்த வாறும் வளர்ந்த வாறும்-ப்ரவேஸம்-திரு வல்ல வாழிலே புக வேணும் பரிமாற வேணும் என்று மநோ ரதித்து-அப்படிப் பெறாதே மிகவும் அவசன்னராய் -நின்றார் கீழே-இத் திருவாய் மொழியில் அவனுடைய குண சேஷ்டிதாதிகளை அனுசந்திக்கப் புக்கு சிதிலரானவர் –இச் ஸைதில்யத்தை போக்கி அருளி தரித்து நின்று அனுபவிக்க வல்லேனாம் படி பண்ணி அருள வேணும் என்று சரணம் புகுகிறார்-8-8-கண்கள் சிவந்து -ப்ரவேஸம்-மாயாக் கூத்தனில் விடாய் தீர இருத்தும் வியந்திலே இப்படி -எவ்வாய்ச் சுடரும் தம்மில் முன் வளவாய்க் கொள்ள -என்கிறபடியே –
நிரவதிக ப்ரீதியோடே சம்ச்லேஷிக்க பெற்றானாய் -இவர் விடாயும் தீர்ந்து -தன் விடாயும் தீர்ந்து -தம்மிலும் அதிக ப்ரீதனானவன் –

பொருந்திய மாமருதின்னிடை போய எம் பொருந் தகாய்! உன் கழல் காணிய பேதுற்று
வருந்தி நான் வாசக மாலை கொண்டு உன்னையே இருந்திருந்து எத்தனை காலம் புலம்புவனே?–3-8-10-ஆசைப்பட்ட விஷய அநு குணமாய் இறே நோவு பாடும் இருப்பது –ஒரு சொல் தொடை எடுக்கையாகிறது ஒரு மலையை எடுத்தால் போலே இருக்கிறது-நான் விரஹம் பொறுக்க மாட்டாத மேன்மையை உடைய நான்-வாசக மாலை கொண்டு உன் குணத்துக்கு வாசகமான சொல் தொடையைக் கொண்டு-உன்னையே இருந்திருந்து-யதோ வாசோ நிவர்த்தந்தே-என்னும்படியான உன்னையே ஒரு வார்த்தை தலைக் கட்டுகைக்கு நடுவே பல படி இளைப்பாற வேண்டி இருக்கை
எத்தனை காலம் புலம்புவனே?–-இதுக்கு முடிவு என்று -என்கிறார் -சாதனா புத்தியா சொல்ல மாட்டார் -ப்ராப்யபுத்தியாலே தவிர மாட்டார்-

முடி சேர் சென்னி யம்மா நின் மொய் பூந்தாமத் தண் துழாய்
கடி சேர் கண்ணிப் பெருமானே என்று என்றே ஏங்கி அழுதக்கால்
படிசேர் மகரக் குழைகளும் பவளவாயும் நால் தோளும்
துடி சேரிடையும் அமைந்ததோர் தூ நீர் முகில் போல் தோன்றாயே–8-5-3-என்று என்றே-ஒரு கால் சொல்லி யாறி இருந்தேனாய் தான் தாழ்கிறாயோ-ஏங்கி அழுதக்கால்-பொருமி அழுதக்கால் -என்னுடைய அழுகை குரலில் தளர்த்தியை கேட்டால் சடக்கென வந்து கொடு நிற்க வேண்டாவோ –

எங்கே காண்கேன் ஈன் துழாய் அம்மான் தன்னை யான் என்று என்று
அங்கே தாழ்ந்த சொற்களால் அந்தண் குருகூர்ச் சடகோபன்
செங்கேழ் சொன்ன வாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
இங்கே காண விப் பிறப்பே மகிழ்வர் எல்லியும் காலையே-8-5-11–நிரந்தரமாக சொல்லி -ஒரு கால் சொல்லி -ஆசையை ஆவிஷ்கரித்தோம் இ றே -என்று ஆறி இருக்கிறார் அல்லரே -லாபத்தளவும் சொல்லும் அத்தனை இறே-அங்கே தாழ்ந்த சொற்களால்-தோளும் தோள் மாலையிலும் அந்த சேஷித்வத்திலும் பிரவணமான சொற்களாலே-அந்தண் குருகூர்ச் சடகோபன்-உபதிஷ்டந்து மாம் சர்வே என்னுமா போலே இவ்வாற்றமைக்கு எல்லாம் இடம் கொடுத்த ஆழ்வார் என்று ஆளவந்தார் நிர்வாஹம்

உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் றன்னை
வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.–4-5-10-––விலக்ஷணமாய் சர்வாதிகாரமான திராவிட பிரபந்தத்தை நிர்மிகைக்கு- அவனுடைய அங்கீ காரமாகிற புண்யத்தைப் பண்ணினேன்-அவனுக்கு அடியாராக பாகவதருக்கு இப்பிரபந்தம் ஆனந்த வர்ஷியான மேகமாய் இறே இருக்கிறது –

இப்படி பகவத் பிரேமத்தாலே ருஷிகளில் வ்யாவ்ருத்தரான அளவின்றிக்கே , இதர விஷய வைராக்யத்தாலும் ,அவர்களில் இவர் வ்யாவ்ருத்தர் என்கிறார் .-இனி மேல்‌ இந்த ருஷிகளிற் காட்டில்‌ இவர்க்கு ஸம்ஸாரத்தில்‌ நசை யறுகையாலுண்டான வைலக்ஷண்யம்‌ சொல்லுகிறது-

ஸ்வாத்யாய யோகங்களைக் கற்றும் தெளிந்தும் கண்டமை மைப்பாலே ஓதி உணர்ந்தவர்
இன்னும் ஆசாபாச பத்தர்-அவன் வழங்கும் திவ்ய சஷுஸ்ஸாலே நேரே கார் செறிந்த நீறாடி
கட்கரிய அரும் பொருளை கண்ட போதே யாமுறாமை என்னும் படி இவர்க்கு வன் பாசங்கள் நீங்கிற்று -சூரணை -59-..

(ஸ்வாத்யாயம் -வேதம் – ஓதி உணர்ந்தவர் கண்டமை மைப்பாலே –கண்ட காட்சியில் கலக்கத்தாலே -மயக்கத்தால் –( வானமே நோக்கும் மையாக்கும் –திருவாய் -7-2-3- )இன்னும் ஆசாபாச பத்தர்-
அவன் வழங்கும் திவ்ய சஷுஸ்ஸாலே நேரே கண்ட போதே இவர்க்கு வன் பாசங்கள் நீங்கிற்று .)-அதாவது-
ஸ்வாத்யாயாத் யோகமாசீத யோகாத் ஸ்வாத்யாய மாமேநேத் , ஸ்வாத்யாய யோக சம்பத்யா பரமாத்மா பிரகாசதே , ததீஷணாய ஸ்வாத்யாயஸ் சஷூர் யோகஸ் ததா பரம் , ந மாம்ச சஷுஷா த்ரஷ்டும் ப்ரஹ்ம பூதஸ் ச சக்யதே –-ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-6-2-3- என்கிறபடியே ,( வேதத்தாலே பொருளை அறிந்து அஷ்டாங்க யோகத்தை அடையக் கடவன் -யோகத்தால் மீண்டும் வேதத்தை சொல்லக் கடவன்
வேதம் யோகம் இவ்விரண்டின் நிறைவினால் பரம்பொருள் பிரகாசிக்கின்றன -அந்தப் பரம் பொருளைப் பார்ப்பதற்கு வேதம் ஒரு கண் அப்படியே யோகம் சிறந்த கண் -பரம்பொருளாகிய அவன் ஊனக் கண்களால் பார்க்க முடியாதவன் ) ஸ்வாத்யாய யோகங்கள் ஆகிற இரண்டு த்ருஷ்டிகளாலும் ஒழிய மாம்ச சஷுசால் பரமாத்மாவை காணப் போகாமையாலே ஸ்வாத்யாத்யா சப்த வாசகமான வேதத்தை ஓதியும்- யம நியமாத் அஷ்டாங்க யோகத்தை அப்யசித்தும் அவ் வழியாலே தத் உபய விஷயமான பரமாத்மாவை ஏவம் பூதன் என்று தெளிந்தும் ,இம் முகத்தாலே ஸ்வ யத்நேன கண்ட காட்சியில்-அ வைசத்யாலே –ஓதி உணர்ந்தவர் முன்னா -திருவாய் –3-5-5-என்கிறபடியே வேத சாஸ்த்ரங்களை ஓதி , த்யாஜ்ய உபாதேயங்களை உணர்ந்து இருக்கிற ருஷிகள் இன்று அளவும்
ஆசா பாச சதைர் பத்தா–ஸ்ரீ கீதை -16-12- (ஆசைகளாகிற பல வகைப்பட்ட தளைகளால் கட்டுண்டு இருப்பார்கள் ) -என்கிற படியே சாம்சாரிக போக விஷயங்களான ஆசாக்ய பாத சதங்களாலே பந்திக்கப் பட்டு இருப்பார்கள் ..-திவ்யம் ததாமி தே சஷு –ஸ்ரீ கீதை -11-8- -என்கிற படி தன்னைக் காண்கைக்கு சாதனமாக அவன் கொடுத்த திவ்ய ஞான ரூப சஷுசாலே –நேரே கடிக் கமலத்துள் இருந்தும் காணகிலான் -முதல் திருவந்தாதி -56-என்றும் ,-கார் செறிந்த கண்டத்தான் எண் கண்ணான் காணான்—நான்முகன் –73-என்றும் , நீறாடி தான் காண மாட்டாத தாரகல சேவடி –நான்முகன் 27–என்றும்
கட்கரிய பிரமன் சிவன் இந்திரன் இவர்கட்க்கும் கட்கரிய கண்ணன் -திருவாய் –7-7-11-என்றும்
சொல்லுகிற படி இவ் அருகில் உள்ளாரைக் காட்டில் ஞான சக்தி யாதிகளில் அதிகராய் ,
தாமோதரனை ,தனி முதல்வனை ஞாலம் உண்டவனை–திருவாய் -2-7-12-–ஒருவருக்கும் தரம் அறியலாமோ – என்று தங்களை ஒழிய ஒருவருக்கும் அறியப் போகாது என்று இருக்கும் பிரம ருத்ராதிகளுக்கும் காண அரியனாய்

வேதங்களைக்‌ கற்றும்‌ அதில்‌ அர்த்தத்தைத்‌ தெளிந்தும்‌ யம நியமாத்‌,யஷ்‌டாங்க, யோகத்தாலேயும்‌ அவனைக் கண்ட மைமைப்பாலே – ஸ்வ ப,ஹு பலாரா்ஜிதமான ஸாஸ்த்ர ஜந்ய ஜ்ஞாதத்தாலே தாங்கள்‌ காண்கிறதாகையாலே மெய்ம்மை யற்றிருக்கும்‌; அவிஸத மாயுமிருக்கும்‌. அத்தாலே ““ஓதி யுணர்ந்தவர்‌ முன்னா” (திருவா. 3 – 5- 5) என்கிறபடியே வேத ஸாஸ்த்ரங்களை ஓதி, த்யாஜ்யோபாதேயங்களை உணரந்திருக்கிற ருஷிகள்‌ இன்றும்‌ “ஆஸா பாஸ ஸதைர் பத்‌தா காம க்ரோத,பராயணா ”” என்கிறபடியே ஸாம்ஸாரிக ஸங்க பாஸ பத்‌தர்‌. இவர்க்கோ வென்னில்‌ 2- (அவன்‌ வழங்கும்‌ திவ்ய சக்ஷுஸ்ஸாலே) “அவன்‌ கண்களாலே அமலங்களாக விழிக்கும்‌” (திருவா. 1 – 9 – 9) என்றும்‌, ““திவ்யம்‌ ததாமி தே சஷு பஸ்ய மே யோக,மைஸ்வரம்‌”‘ (கீதை 11 – 8) என்றும்‌ சொல்லுகிற படியே இவரை அமலராம்படி கடாக்ஷித்து, அவனாலே தத்தமான திவ்ய சஷுஸ்ஸாலே நேரே கடிக்கமலத் துள்ளிருந்தும்‌ காண்கிலான்‌ கண்ணனடிக்‌ கமலந் தன்னை அயன்‌”” (மூ.திருவ. 56) என்றும்‌, ““கார் செறிந்த கண்டத்தான்‌ எண் கண்ணான்‌ காணான்‌’” (தா.திருவ. 73) என்றும்‌, “*நீறாடி தான்‌ காண மாட்டாத-தாரகல சேவடி ” (நா. திருவ. 27) என்றும்‌, *“கட்கரிய பிரமன்‌ சிவனிந்திரனென் றிவர்க்கும்‌ கட்கரிய கண்ணன்‌’‘ (திருவா. 7 – 7 – 11) என்றும்‌, ”விதி ஸிவ ஸநகாத்‌, யைர்த்‌ யாதுமத்யந்த தூ,ரம்‌”’ (ஸ்தோ.ர. 47) என்றும்‌ சொல்லுகிறபடியே தங்களைப் போரப் பொலிய நினைத்திருக்கும்‌ ப்‌ரஹ்ம ருத்‌ராதிகளுக்கும்‌ காண வரிதாயிருக்கிற-

சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு
ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த
வேத முதல்வனைப் பாடி வீதிகள் தோறும் துள்ளாதார்
ஓதி உணர்ந்தவர் முன்னா என் சவிப்பார் மனிசரே?–3-5-5-பரபரக்கற்ற அறிவுடையராக தங்களை நினைத்து இருக்குமவர்கள் ஞான பலம் இல்லாமையால் நிந்தியரில் பிரதம பாவிகள் என்கை –
விதுஷோ அதிக்ரமே தாண்ட பூயஸ்தம்

கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான் காண்பன் அவன் கண்களாலே
அமலங்களாக விழிக்கும்
ஐம்புலனும் அவன் மூர்த்தி
கமலத்தயன் நம்பி தன்னைக் கண்ணுத லானொடும் தோற்றி
அமலத் தெய்வத்தோடு உலகமாக்கி என் நெற்றி உளானே –1-9-9-அவன் திருக் கண்களால் நிர் தோஷனாம் படியும் -காண வல்லேனாம் படியும் விசேஷ கடாக்ஷத்தைப் பண்ணினான்-

ஆஸாபாஸஸதைர்பத்தா: காமக்ரோதபராயணா:
ஈஹந்தே காமபோகார்தமந்யாயேநார்தஸஞ்சயாந்
-16-12-நூற்றுக்கணக்கான ஆசைக் கயிறுகளால் கட்டுண்டு காமத்துக்கும் சினத்துக்கும் ஆட்பட்டோராய்க் காம போகத்துக்காக
அநியாயஞ்செய்து பொருட் குவைகள் சேர்க்க விரும்புகிறார்கள்.

ந து மாம் ஸக்யஸே த்ரஷ்டுமநேநைவ ஸ்வசக்ஷúஷா
திவ்யம் ததாமி தே சக்ஷú: பஸ்ய மே யோகமைஸ்வரம்
–11-8-உன்னுடைய இயற்கையான இக்கண்களால் என்னைப் பார்க்க முடியாது. உனக்கு ஞானக் கண் கொடுக்கிறேன்.
என்னுடைய ஈசுவர யோகத்தைப் பார்.

பேரே வரப் பிதற்ற லல்லால் எம் பெம்மானை
ஆரே யறிவார் அது நிற்க நேரே
கடிக் கமலத் துள்ளிருந்தும் காண்கிலான்
கண்ண
னடிக் கமலம் தன்னை யயன் ——56-சர்வேஸ்வரனுடைய பரிமளத்தை யுடைத்தான திரு நாபீ கமலத்தில் அவ்யவதாநேந பிறந்து அவன் தன்னாலே ஓதுவிக்கப் பட்டு அங்கே இருக்கிற ப்ரஹ்மா சர்வேஸ்வரனைக் காண்கிறிலன்-அறிகிறிலன்-(கண்ணன் -கண் இடம் முடையவன் சர்வ வியாபி -சர்வேஸ்வரன் )

ஆரே அறிவார் அனைத்துலகும் உண்டு உமிழ்ந்த
பேராழியான் தன் பெருமையை -கார் செறிந்த
கண்டத்தான் எண் கண்ணான் காணான் அவன் வைத்த
பண்டைத் தானத்தின் பதி–73-—சர்வ லோகத்தையும் யுண்பது உமிழ்வதாய் பிரதிகூல  நிரசனத்துக்கு உறுப்பான திரு வாழியை யுடையவன் –உபாயாந்தரங்களை யருளிச் செய்யாதே தன்னையே யுபாயமாகச் சொன்ன மஹா குணத்தை யறிய வல்லார் யார் –கறுத்த கண்டத்தை யுடைய ரூத்ரனோடு கூடின எட்டுக் கண்களை யுடைய ப்ரஹ்மாவும் அறிய மாட்டான் –

மாறான் புகுந்த மட நெஞ்சம் மற்றதுவும்
பேறாககே கொள்வேனோ பேதைகாள் -நீறாடி
தான் காண மாட்டாத தாரகல சேவடியை
யான் காண வல்லேற்கு இது-27-–பேரளவு யுடையனான ருத்ரன் காண மாட்டாத –தாரை யுடைத்தாய் அகன்று சிவந்து இருந்துள்ள திருவடியை நான் காண வல்லேனான பின்பு-அவன் தானே அபி நிவிஷ்டனாய்க் கொண்டு என் பக்கலிலே புகுரா நின்ற பின்பு-நான் அவன் திரு நிறத்திலே சிறிது அறிந்தேன் என்று இது பேறாகக் கொள்வேனோ – ஒரு லாபமோ -என்கிறார்-இது மாறன் புகுந்த மட நெஞ்சம் – மால் தான் புகுந்த மட நெஞ்சம் –சர்வேஸ்வரன் தானே விரும்பிப் புகுந்த பவ்யமான நெஞ்சு –

கட்குஅரிய பிரமன் சிவன் இந்திரன் என்ற இவர்க்கும்
கட்குஅரிய கண்ணனை
க் குருகூர்ச் சடகோபன் சொன்ன
உட்குஉடை ஆயிரத்துள் இவையும் ஒருபத்தும் வல்லார்
உட்குஉடை வானவரோடு உட னாய் என்றும் மாயாரே.–7-7-11-மநுஷ்யர்கள் உடைய கண்ணுக்கு காண ஒண்ணாத ப்ரஹ்மாதிகள் கண்ணுக்கும் அவிஷயமான கண்ணனை –ப்ரஹ்மாதிகள் என்றும் கேட்டே போம் அத்தனை அல்லது அவர்களுக்கு காண ஒண்ணாதாய் இருக்கிறவன் -உறவு வெளிப்பட்டால் –சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றும் கண்டீர் -என்கிறபடியே பார்த்த பார்த்த இடம் எங்கும் தானேயாய் இரா நின்றான்

தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை
ஆமோ தரமறிய
ஒருவர்கென்றே தொழுமவர்கள்
தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசை முகற்கும்
ஆமோ தரமறிய எம்மானை என்னாழி வண்ணனையே –2-7-12-தாமோதரனைத் தனி முதல்வனை ஞாலம் உண்டவனை-ப்ரஹ்மாதிகள் பாசுரம் இருக்கிற படி -ஆஸ்ரித பாரதந்தர்யம் ஒருவருக்கும் தரை காணப் போமோ –தனி முதல்வனை-சதேவ என்கிறபடியே -ஜகத்துக்கு த்ரிவித காரணமும் தானே யாய் இருக்கிற படியை தான் அறியப் போமோ –-ஞாலம் உண்டவனை-ஆபத் ஸகத்வத்தைத் தான் அறியப் போமோ-ஆமோ தரமறிய ஒருவர்க்கு -என்றே தொழுமவர்கள் தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசை முகற்கும் ஆமோ தரமறிய- எங்களை ஒழிய ஒருவருக்குத் தான் அறியப் போமோ என்பர்கள் -இப்படி சொல்லிக் கொண்டு தொழும் ஸ்வ பாவருமாய் -அவனுக்கு சரீரவத் அந்தரங்கரான ருத்ரனுக்கும் ப்ரஹ்மாவுக்கும் தான் அறியலாமோ-எம்மானை என்னாழி வண்ணனையே- தன் குண ஆர்ணவத்தை என் பக்கலிலே மடுத்து என்னை அடிமை கொண்டவனை –

திகஶுசிம் அவிநீதம் நிர்த்தயம் மாமலஜ்ஜம்
பரம புருஷ! யோ’ஹம் யோகிவர்யாக்ரகண்யை: |
விதிஶிவ ஸநகாத்யைர் த்யாதும் அத்யந்த தூரம்
தவ பரிஜநபாவம் காமயே காமவ்ருத்த:
||–47—புருஷோத்தமனே! என்னுடைய (தவறான) எண்ணப்படி நடக்கும் தன்மையை உடைய காரணத்தால் ப்ரஸித்தமான நான், என்னுடைய புனிதமற்ற தன்மையாலும், சீர் செய்யப்படாத தன்மையாலும், கருணையும், வெட்கமும் இல்லாத தன்மையாலும்,
ப்ரஹ்மா, சிவன், ஸனகாதி முனிவர்கள் போன்ற உயர்ந்த யோகிகளுக்கும் எட்டாததான உன் கைங்கர்யத்தை ஆசைப்பட்டதை என்னையே நினைத்து நொந்துகொள்ள வேண்டும்.

அறிந்தன வேத வரும் பொருள் நூல்கள் அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல்-திருவாய் -9–3-3-என்கிற படியே-யஸ்ய அமதம் தஸ்ய மதம்—கேனோ உபநிஷத் — (எவன் பரம்பொருளை அளவிடப் பட்டதாக எண்ண வில்லையோ அவன் பரம்பொருளை அறிகிறான் ) இத்யாதியாலே வேதங்களும் அறிவரிய வஸ்து என்றே அறியும் படியாய் ,–கேட்ப்பார்க்கு அரும் பொருளாய் நின்ற –நான்முகன் –60-என்று –நாயமாத்மா ப்ரவசநேன லப்யா ந மேதையா ந பஹுநா ஸ்ருதேந –கட உபநிஷத் –( பரம்பொருள் மனத்தாலும் தியானத்தாலும் கேள்வியாலும் -இறைவனாகிய தன்னுடைய அருளால் ஒழிய – அடையத்தக்கவன் அல்லன் -)என்ற படி தன் பிரசாதம் ஒழிய ஸ்வ யத்னத்தாலே ஸ்ரவணாதிகள்-கேட்டு -சிந்தித்து -தெளிந்து -இத்யாதிகள் – பண்ணுவாருக்கு துர் லப வஸ்துவான சர்வேஸ்வரனை-கண்டேன் கமல மலர்ப் பாதம் – திருவாய் -10-4-9- என்கிற படியே அவன் தானே காட்டுகையாலே ,
விசதமமாக கண்ட போதே ,-பொய் நின்ற ஞானமும் -திருவிருத்தம் -1–என்று தொடங்கி , இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று அவித்யாதிகளை விடுவித்து அருள வேண்டும் என்று அவனைக் கால் கட்டும் படி இவருக்கு–மற்ற வன் பாசங்கள் –திருவாய் -8-2-11-என்று ஸ்வ யத்ன நிவர்த்யம் அல்லாத படி பிரபலமான பாஹ்ய சங்கங்கள் –பாசங்கள் நீக்கி என்னை உனக்கே அறக் கொண்டிட்டு -திருவாய் -7–8–5-என்னும் படி , தத் ப்ரசாதத்தாலே ஸ்வாசனமாக விட்டு அகன்றது என்கை ..

அரும் பொருளாய்‌ நின்ற அரங்கனே?” (நா. திருவ. 60) என்கிற படியே பெறுதற்கரிய ப்ரயோஜநமாய்‌ பரத்வ- ஸெளலப்‌ய விஸிஷ்டனான ஸர்வேஸ்வரனை “கண்டேன்‌ கமல மலர்ப் பாதம்‌” (திருவா. 10 – 4- 9) என்கிறபடியே கண்ட போதே ““பொய்ந் நின்ற ஞானமும்‌ ” (திருவிரு. 1) என்று தொடங்கி, “’இனி யாமுறாமை”” (திருவிரு. 1) என்று – ‘அவித்‌யாதிகளை விடுவித்தருளவேணும்‌” என்று இவர் தாமே அவனைக் கால்கட்டி அபேக்ஷிக்கும்படி இவர்க்கு வேறொருவரால்‌ விடுவிக்க அரிதான ‘“மற்ற வன் பாசங்கள்‌”’ (திருவா. 6 – 2 11) என்கிறபடியே ஸாம்ஸாரிக ஸகல பாபயங்களும்‌ “பாசங்கள்‌ நீக்கி” (திருவா. 7 – 8 5) என்கிறபடியே அவன்தானே போக்குகையாலே நீங்கிற்று; நேராக நிவ்ருத்த மாய்த்தென்கிறார்-

அறிந்தன வேத அரும் பொருள் நூல்கள்
அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல்
அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே–9-3-3-துர்ஜ்ஜேயன் என்னும் -இவ்வளவு அறிந்தனவாக கொல்ல அமையும் –யதோ வாசோ நிவர்த்தந்தே –யஸ்யாமதம் தஸ்ய மதம் –அவ்விஞ்ஞாதம் விஜா நதம் -என்னும் இவ்வளவே அறிந்தது –

ஆட் பார்த்து உழி தருவாய் கண்டு கோள் என்றும் நின்
தாட் பார்த்து உழி தருவேன் தன்மையை -கேட்பார்க்கு
அரும் பொருளாய் நின்ற வரங்கனே
உன்னை
விரும்புவதே விள்ளேன் மனம்–60--புக்கு அநு பவிக்கில் அநு பவிக்கும் இத்தனை போக்கி ஆராயப் புகில் அளவிட ஒண்ணாத-வைலஷண்யத்தை யுடையையாய்க் கொண்டு கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிறவனே–உன்னை விரும்பும் அத்தனை மனசை உன் பக்கல் நின்றும் வாங்கேன் –த்வாம்ருதஸ் யந்தி நி -ஸ்தோத்ர ரத்னம் -27-இதிவத்

கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே
விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக
பண்டே பரமன் பணித்த பணி வகையே–10-4-9—கண்டேன்–என்றும் கேட்டே போம் விஷயத்தை சாஷாத் கரிக்கப் பெற்றேன் — கமல மலர்ப்பாதம் –பிராப்தி ஒழியவே ஞான லாபமே அமையும் படியான போக்ய விஷயம் என்கிறது – காண்டலுமே-விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்–கண்ட போதே வினை என்று பேர் பெற்றவை எல்லாம் விட்டுப் போய்த்து –சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்னுமவன் அடியாக வந்ததாகையாலே தட்டில்லை இறே –

பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
எந் நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
மெய்ந் நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே 
–1–சர்வஞ்ஞனுமாய் சர்வ சக்தியாய் இருக்கிற நான் இவற்றைச் செய்து வருகிறேன்-உன்னுடைய அவதாரத்துக்கு பிரயோஜனம் சொல் என்கிறார் – நீயோ நானோ உபாய அனுஷ்டாம் பண்ணுவது சொல்லு–அவதார பிரயோஜனம் சாது பரித்ராணாம் துஷ்ட நிக்ரஹம் தர்ம ஸம் ஸ்தாபனம் மூன்றுக்கும் அல்லவே ஸித்த உபாயம் ஆகவதர்க்கே அன்றோ நீர் அவதரித்தீர்அடியேன் -என்று தம்முடைய ஸ்வரூபத்தை விண்ணப்பம் செய்கிறார்-செய்யும் –இவ் வபேஷைக்கு மேல் இல்லை –இப் பாட்டில் விரோதி நிவ்ருத்தியையும் அவதார ஸுலப்யத்தாலே -உபாய பாவத்தையும் நித்ய ஸூரி ஸேவ்யமான -ப்ராப்யத்தையும் அடியேன் -என்று ஸ்வரூபத்தையும் மெய்ந்நின்று கேட்டு அருளாய் -என்று பல அபேக்ஷையும் பண்ணுகையாலே அர்த்த பஞ்சகம் ஸூசிதமாயிற்று-

பாதமடை வதன் பாசத்தாலே மற்றவன்பாசங்கள் முற்ற விட்டு
கோதில் புகழ்க் கண்ணன் தன்னடி மேல் வண் குருகூர் சடகோபன் சொன்ன
தீதில் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவையுமோர் பத்திசை யோடும் வல்லார்
ஆதுமோர் தீதிலராகி இங்கு மங்கு மெல்லாம் அமைவார்கள் தாமே–8-2-11—திருவடிகளில் கிட்டுகையில் உண்டான சங்கத்தால் புறம்பு உண்டான வலிய சங்கங்களை நிச்சேஷமாக விட்டார் -இதுவாயிற்று இத்திருவாய் மொழியிலே சொல்லிற்று யாயிற்று -புறம்புள்ள பற்று அற்று திருவடிகளிலே ஆசைப்பட்டவர் அல்லர் –மால் பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு -என்கிறபடியே திருவடிகளிலே சங்கத்தால் உபாதிகமான பாஹ்ய சங்கத்தை தவிர்ந்தவர்-

பாசங்கள் நீக்கி என்னை உனக்கே அறக் கொண்டிட்டு நீ
வாச மலர்த் தண் துழாய் முடி மாயவனே!அருளாய்
காயமும் சீவனுமாய்க் கழிவாய்ப் பிறப்பாய் பின்னும் நீ
மாயங்கள் செய்து வைத்தி;இவை என்ன மயக்குகளே.–7-8-5-அவித்யா கர்ம வாசனா ருசிகளைப் போக்கி-என்னை-விஷயாந்தரங்களிலே கால் தாழ்ந்து இருக்கிற என்னை-உனக்கே அறக் கொண்டிட்டு நீ-துயர் அறு சுடர் தொழுது எழு-என்னும் படி பண்ணி

இவ்வளவும் அன்றிக்கே ,தாரகாதி வைலஷண்யத்தாலும் அவர்களில் இவருக்கு உண்டான வ்யாவ்ருதியை அருளிச் செய்கிறார் .-இனி மேல்‌ அவர்களுக்கும்‌ இவர்க்கும்‌ தாரகாதிகளும்‌ வேறுபட்டபடி சொல்லுகிறது-

அவர்களுக்கு காயோடு என்னும் இவையே தாரகாதிகள் .. இவர்க்கு எல்லாம் கண்ணன் இறே-சூரணை -60-

அதாவது –
ருஷிகள் ஆனவர்களுக்கு-காயோடு நீடு கனி உண்டு வீசு கடும்கால் நுகர்ந்து –பெரிய திருமொழி -3–2-2–என்றும் –வீழ் கனியும் ஊழ் இலையும் என்னும் இவையே நுகர்ந்து–பெரிய திரு மடல் -12- என்றும் சொல்லுகிற படி பல மூல பத்ர வாயு தோயங்களே-(கனிகள் கிழங்குகள் இலைகள் காற்றுத்தண்ணீர் என்னும் இவைகளே ) தாரக போஷாக போக்யங்கள் .-ருஷிம் ஜுஷாமஹி–ஸ்ரீ பராங்குச அஷ்டகம் –) ரிஷியாகிற நம்மாழ்வாரை வணங்குகிறேன் )-என்று இவரையும் ருஷி என்று சொல்லிற்று ஆகிலும் ,
தாரகாதிகள் அவை அன்று –கிருஷ்ண த்ருஷ்ண தத்வமான இவர்க்கு- உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் –திருவாய் -6-7-1- என்கையாலே ,தாரக போஷாக போக்யங்கள் எல்லாம் கண்ணன் இறே என்கை-

“காயோடு நீடு கனியுண்டு”” (திருமொழி 3 – 2 – 2) என்றும்‌, ““வீழ் கனியுமூழிலையு மென்னு மிவையே நுகர்ந்து ”” (பெ.திருமடல்‌) என்றும்‌ சொல்லுகிறபடியே பல-மூலபத்ர-வாயு- தோயங்களே அவர்களுக்கு தாரக போஷக போக்‌யங்கள்‌. இவரையும்‌ “ருஷி” என்று கீழே சொல்லிற்றிறே. அது இவர்க்கும்‌ ஒவ்வாதோ என்னில்‌, ஒவ்வாது. “உண்ணும்‌ சோறு பருகுநீர்‌ தின்னும்‌ வெற்றிலையு மெல்லாம்‌ கண்ணன்‌” (திருவா. 6 – 7 – 1) என்கிறபடியே தாரகாதிகளுமெல்லாம்‌ ஸர்வ ஸுலபனான ஸர்வேஸ்வரனிறே இவர்க்கு.

காயோடு நீடு கனி யுண்டு வீசு கடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம் ஐந்து
தீயோடு நின்று தவம்
செய்ய வேண்டா திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்
வாயோது வேதம் மலிகின்ற தொல் சீர் மறையாளர் நாளும் முறையால் வளர்த்த
தீயோங்க வோங்கப் புகழ் ஓங்கு தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே–3-2-2—பருவம் இளைதான காய்களையும் வெய்யிலிலும் காற்றிலும் உலர்ந்து பசையற்ற கனிகளையும் புஜித்து வீசின வெட்டிய காற்றைப் பருகி நெடும் காலம் பஞ்சாக்னி மத்யஸ்தராய் நின்று தபஸு பண்ண வேண்டா-ஸ்ரீயபதியை ஹிருதயத்தில் பிரியாதபடி வைத்துக் கொள்வோம் என்பீர் (வைப்பவர்கள் இல்லை –வைக்க நினைத்தாலே போதும் அவன் உள்ளே புக தான் காத்துக் கொண்டு இருக்கிறானே விலக்காமையே வேண்டுவது )

தொன்னெறியை வேண்டுவார் வீழ் கனியும் ஊழிலையும் –12
என்னும் இவையே நுகர்ந்து உடலம் தாம் வருந்தித்
துன்னும் இலைக் குரம்பைத் துஞ்சியும் வெஞ்சுடரோன் —-13
மன்னு மழல் நுகர்ந்தும் வண் தடத்தினுள் கிடந்தும்-
இன்னதோர் தன்மையராய் ஈங்குடலம் விட்டு எழுந்து —-14
தொன்னெறிக் கண் சென்றார் எனப் படும் சொல் அல்லால்வீழ் கனியும் – தானே விழுந்து பசை அற்ற கனியும்–ஊழிலையும் – முளையிலே விழுந்த இலையும் – முற்றிப் பழுத்த சருகான இலையும் –என்னும் இவையே நுகர்ந்து உடலம் தாம் வருந்தித்- அதாவது -சருகு இலை தின்றும்  காயும் கிழங்கும் தின்றும் இறே தபஸ் ஸூ அனுஷ்டிப்பது-அவதாரணத்தாலே-ஒரு வ்ரத சமாப்தி பிறந்து பின்னை ஒரு வ்ரத ஆரம்பித்ததின் முன்னே யாகிலும் ஏகவாரம் அன்னம் புஜித்ததும் இல்லை என்று தோன்றுகிறது  –
இத்தால் அநவரத காயக் கிலேசம் சொல்லுகிறது-நுகர்ந்து – அந்த சாதனத்தில் பண்ணின ஆதரம் தோற்ற போக்யதை உண்டானது போலே இருக்க புஜிககை-உடலம் தாம் வருந்தி –அபிமத விஷயத்தைக் கண்டு இங்கே அனுபவிக்கலாய் இருக்கிற சரீரத்தை கிலேசிப்பித்து-தாம் வருந்தி-இவனுடைய கர்மம் கொண்டு போய் கிலேசிப்பித்தல் தைவம் கொண்டு போய் கிலேசிப்பித்தல் செய்யும் அது ஒழிய தாமே கிலேசிப்பித்து-துன்னும் இலைக் குரம்பைத் துஞ்சியும் – இலையாலே நெருங்கச் செய்த பர்ண சாலைகளிலே கிடந்தும் – அதில் நின்றும் உதிர்ந்த புழுதியானது கண்ணிலே புக்கு நோவு படும்படியாகத் துஞ்சியும் நித்ரை மரணத்தோடு  பர்யாயம்  ஆகையாலே துஞ்சியும் -என்கிறது –

உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும்வெற்றிலையு மெல்லாம்
கண்ணன்எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி

மண்ணினுள் அவன் சீர்வளம் மிக்கவன் ஊர்வினவித்
திண்ணம் என்இளமான் புகுமுர் திருக்கோளூரே.–6-7-1-ஜீவித்து அல்லது தரிக்க ஒண்ணாத சோறு -தாஹித்தால் பானம் பண்ணி யல்லது நிற்க ஒண்ணாத தண்ணீர் -தின்றால் அல்லது புஷ்டனாக விரகு இன்றிக்கே இருக்கும் வெற்றிலையும் -தாரக போஷக போக்யம் ஆனவை எல்லாம் எனக்கு நாதனான கிருஷ்ணன் -வாஸூ தேவஸ் சர்வம் -என்று ஆயிற்று இவள் இருப்பது-என்றென்றே கண்கள் நீர்மல்கி-
இடைவிடாமல் இப்படியே சொல்லி -அவளைக் காணப் பெறாமையாலே கண்கள் சோகா ஸ்ருவாலே நிரம்பி -அவ்விஷயத்தை இடைவிடாமல் அனுசந்தித்து -ஸ்மர்த்தவ்ய விஷய சாரஸ்யத்தாலே-ஆஹ்லாத சீத நேத்ராம்பு -என்கிறபடியே ஆனந்தா ஸ்ருவாலே நிரம்பி என்னவுமாம் –

இப்படி சர்வ பிரகாரத்தாலும் பிராக்ருத விஷயங்களில் நசை அற்று பகவத் ஏக பரரான இவர் தத் விரஹத்தில் படும் அது எல்லாம் அவர்கள் ப்ராக்ருத விஷய சங்கம் அறாமையாலே ,அவ் விஷயங்களுடைய விரஹத்தில் படுவார்கள் என்கிறார்.-ஆகில்‌ இவர்க்கு ஸம்ஸாரத்தில்‌ நசையற்ற தென்றும்‌, அவர்களுக்கு நசையற்ற தில்லை என்றும்‌ சொல்லிற்றே, அதறிந்தபடி என்‌ என்னில்‌, அத்தைச் சொல்லுகிறது-

அழுநீர் துளும்ப கடலும் மலையும் விசும்பும் துழாய் திரு மால் என்று எங்கே காண்கேன் என்னும் இவர் அலமாப்பு , அவர்களுக்கு புத்ர வ்யோகத்திலே–சூரணை -61-

அதாவது –
சேயரி கண் அழுநீர் துளும்ப அலமருகின்றன–திருவிருத்தம் –2-என்றும்
கடலும் மலையும் விசும்பும் துழாய் -திருவாய் -2-1-4-என்றும்
சிந்தை கலங்கி திரு மால் என்று அழைப்பன்–திருவாய் -9-8-10–என்றும்
எங்கே காண்கேன் ஈன் துழாய் அம்மான் தன்னை—திருவாய் -8-5–11-என்றும்
உன்னை காண்பான் நான் அலப்பாய் -திருவாய் -5-8-4-என்றும் சொல்லுகிற படி பகவத் விரஹ விசயனத்தாலே கண்ணும் கண்ணீருமாய் அபரிச்சேத்யமான கடலோடு,நிர்விவரமான மலையோடு – அச்சமான ஆகாசத்தோடு வாசி அற , எங்கும் தேடி ,ஹ்ருதயம் கலங்கி ,ஸ்ரீ ய பதியே -என்று கூப்பிட்டு
எங்கே காணக் கடவேன் என்று இவர் படும் அலமாப்பு –ஸ்ரீ வசிஷ்ட பகவான் புத்ர வியோக க்லேசத்தாலே ,-ச மேரு கூடாதாத்மானம் முமோச பகவான் ருஷி சிரஸ் தஸ்ய சிலாயஞ்ச தூலராசா விவாபதத் , ந மமார ச பாதேன ததாச முனி சத்தமே ததாக் நிமித்வா பகவான் ச விவேச மகாவனே
தம் ததா ஸூ சமித் தோபி ந ததாஹா ஹூதாசன தீப்ய மானோப்ய மித்ரக்னம் சீதோக்நிர்பவத்ததா
ச சமுத்திர மபிப்ரேத்ய சோஹாவிஷ்டோ மகா முனி கண்டே பத்தவா சிலாம் குர்வீம் நிபபாத ததம்பசி
-என்கிற படியே(அந்த பகவானான வசிஷ்ட முனிவர் மேரு மலையின் சிகரத்தில் இருந்து விழுந்தார் -அவருடைய தலை கல்லில்பஞ்சுக் குவியலில் விழுவது போலே விழுந்தது -அப்பொழுது அந்த முனிவர் தலைவன் அப்படி விழுந்ததனால் இறந்தார் இலர் – ஏ முனிவரே அந்த வசிஷ்ட பகவான் அப்படியே நெருப்பினை மூட்டி அதிலே புகுந்தார் -நெருப்பு மிக்க ஆற்றல் வாய்ந்ததாயினும் – அப்பொழுது அந்த நெருப்பு எரிந்து கொண்டு இருந்தாலும் அவரை எரிக்க வில்லை -சோகத்தினால் பீடிக்கப்பட்டு இருக்கும்-அந்த வசிஷ்ட முனிவர் கடலை அடைந்து பெரிய கல்லினை கழுத்தினில் கட்டிக்க கொண்டு அந்தக் கடலிலே விழுந்தார் ) என்கிறபடி மலையில் ஏறி விழுவது ,நெருப்பிலே புகுவது , கழுத்திலே கல்லைக் கட்டி கடலிலே விழுவது ஆகையாலும் ,–ஸ்ரீ வேத வியாச பகவான் புத்ர விரகம் பொறுக்க மாட்டாமல்த்வை பாயனோ விரஹ காதர ஆஜுஹாவ புத்ரேதி –ஸ்ரீ பாகவதம் -1-2-2–( வியாசர் புத்திரனான சுகரைப் பிரிந்த பிரிவுக்கு அஞ்சினவராய் புத்திரனே என்று கூப்பிட்டார் )என்கிற படியே
புத்ரனே என்று வாய் விட்டுக் கூப்பிட்டு அழுது கொண்டு காணப் பெறாமையால் அலமந்து திரிகையாலும் , அவர்களுக்கு புத்ர விச்லேஷத்திலே நடக்கும் என்றபடி –

அழுநீர் துளும்ப அலமருகின்றன (திருவிரு. 2) என்றும்‌, ‘‘கடலும்‌ மலையும்‌ விசும்பும்‌ துழாய்‌” ்‌ (திருவா. 2 -1- 4) என்றுதொடங்கி, * ‘சிந்தை கலங்கித் திருமால்‌ என்றழைப்பன்‌ (திருவா. 9 – 8 – 10) என்றும்‌, ”எங்கே காண்கேன்‌ ஈன் துழாயம்மான்‌ தனனை ” (திருவா, 8-5-11) என்றும்‌, “‘உன்னைக் காண்பான்‌ நானலைப்பாய்‌”” (திருவா, 5 – 8 – 4) என்றும்‌ சொல்லுகிறபடியே பகவத் விஸ்லேஷ வ்யஸநத்தாலே கண்ணும்‌ கண்ணீருமாய்‌ அபரிச்சேத்யமான கடலோடு, நிர்விவரமான மலையோடு, அச்சமான ஆகாஸத்தோடு வாசியற, எங்கும்‌ தேடி ‘ஸ்ரீயப் பதியே!’ என்று கூப்பிட்டுப் படுகிற இவருடைய அலமாப்பு – (அவர்களுக்கு புத்ர வியோகத்திலே) வஸிஷ்ட வ்யாஸாதிகளான அவர்களுக்கு ஸக்தி ஸூகாதிகளாகிற புத்ர வியோகத்திலே காணலாம் –

செழு நீர்த் தடத்துக் கயல் மிளிர்ந்தால் ஒப்ப சேயரிக் கண்
அழுநீர் துளும்ப அலமருகின்றன
வாழியரோ
முழுநீர்  முகில் வண்ணன் கண்ணன் விண்ணாட்டவர் மூதுவராம்
தொழுநீர் இணையடிக்கே அன்பு சூட்டிய சூழ் குழற்கே —-2—அஸி தேஷணை-கண் கிடீர்-சேய் -அழகாய் –அரி -வண்டாய்-அன்றிக்கே-ஹரிக்கிற மநோ ஹாரி என்றுமாம்-அன்றிக்கே-சிவந்த அரியை உடைத்தான-அன்றிக்கே-சிவந்து மநோ ஹரிக்கும் கண்கள்-ஸ்ரீ வாதி கேசரி ஸ்வாமி நிர்வாகம் –-கறும் கண்ணி தவிர்ந்து விஸ்லேஷத்தால் கரும் கண்ணி மாறி சிவந்து இருக்கை-அஸ்ரு பிரவஹிக்கிறது–என் கார்யம் தலைக் கட்டிற்று-இவள் கார்யம் தலைக் கட்டும் அத்தனை-பகவத் வ்யதிரேகத்தில் கண்ணும் கண்ணீருமாய் இருக்கும் இது இறே ஆத்மாவுக்கு ஸ்வரூபம்–இத்தைக் காணும் அது இறே இவர்களுக்கு உத்தேச்யம்-இவ்விருப்பை இவனும் காணப் பெற்றதில்லை – அசலிட்டுக் கேட்கும்-தோழி சொல்ல – இத்தனை இறே  –கிமர்த்தம் -இத்யாதி-ஆர் குடி வேர் பறிய இக்கண்ணும் கண்ண நீருமாய் இருக்கிறது-ஆரைச் சேதனராகக் கொண்டு -என்றுமாம் –-அவன் கண்டு உகக்கும் அலமருகின்றன -தடுமாறா நின்றனஅழு நீர் துளும்ப அமலருகின்றன -என்கையாலே-அபிநிவேசம் மிகுந்தமை தோற்றுகிறது-

கடலும் மலையும் விசும்பும் துழாய் எம் போல்
சுடர் கொள் இராப்பகல் துஞ்சாயால் தண் வாடாய்
அடல் கொள் படை யாழி அம்மானைக் காண்பான் நீ
உடலம் நோய் உற்றாயோ ஊழி தோர் ஊழியே –2-1-4—பரப்பு உடைத்தான் கடலோடே-நிர் விவரமான மலையோடு -அபரிச்சின்னமான ஆகாசத்தோடு -வாசி அறத் துழாவி –-காரார் திரு மேனி காணும் அளவும் போய் –என்று ஷீராப்தி யோடு -திருமலையோடு -பரமபதத்தோடு வாசி அறத் தேடுவார்க்கு போலியாய் இருக்கிற படி –தவ் வனானி கிரீன் சைவ சரிதச்ச சராம்ஸிச நிகிலேந விசின்வா நவ் ஸீதாம் தசரதாத் மஜவ் –

அந்தோ அணுகப் பெறு நாள் என்று எப்போதும்
சிந்தை கலங்கி திருமால் என்று அழைப்பன்

கொந்தார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
வந்தே உறைகின்ற எம்மா மணி வண்ணா–9-8-10–சொல்லத் தொடங்கினது தலைக் கட்ட மாட்டாத பல ஹானியாலே அந்தோ -என்கிறார் -அணுகப் பெறு நாள் யாவை என்ன வேண்டி இருக்க -அது மாட்டாது ஒழிகிறார் இறே -ஒரு கால் சொல்லி பல ஹானியாலே விடுகை அன்றிக்கே –சர்வ காலமும் ஹிருதயம் கலங்கி -மாதா பிதாக்களைக் கூப்பிடுமா போலே திருமால் என்று அழையா நிற்பன் -பிதா மாதா ச மாதவ –

எங்கே காண்கேன் ஈன் துழாய் அம்மான் தன்னை யான் என்று என்று
அங்கே தாழ்ந்த சொற்களால் அந்தண் குருகூர்ச் சடகோபன்
செங்கேழ் சொன்ன வாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
இங்கே காண விப் பிறப்பே மகிழ்வர் எல்லியும் காலையே-8-5-11—-ஐஸ்வர்ய ஸூ சகமான திருத் துழாய் மாலையை யுடைய சர்வேஸ்வரனை கண்டு அல்லது தரிக்க மாட்டாத படி சபலனான நான் எங்கே காணக் கட வேன்-என்று என்று-நிரந்தரமாக சொல்லி -ஒரு கால் சொல்லி -ஆசையை ஆவிஷ்கரித்தோம் இறே -என்று ஆறி இருக்கிறார் அல்லரே -லாபத்தளவும் சொல்லும் அத்தனை இறே
அங்கே தாழ்ந்த சொற்களால்-தோளும் தோள் மாலையிலும் அந்த சேஷித்வத்திலும் பிரவணமான சொற்களாலே

செலக் காண்கிற்பார் காணு மளவும் செல்லும் கீர்த்தியாய்!
உலப்பிலானே! எல்லா உலகு முடைய ஒருமூர்த்தி!
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்! உன்னைக் காண்பான் நான்
அலப்பாய்
ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே.–5-8-4—ஆஸ்ரித வத்சலனான உன்னை காண் கைக்காக -அத்தலை இத்தலையாய் நீ என்னை காண பட்ட அளவன்று-நான் உன்னை காண் கைக்கு பட்டது-அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே-அலமந்து -விஷயம் சந்நிஹிதமாய் இருக்கச் செய்தே-ஆகாசத்தை பார்க்கிறது -நினைத்த பரிமாற்றம் பெறாமையாலே ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு உதவ வந்து தோற்றினால் போலே -தம் தசையைப் பார்த்து தோற்றுகிறானோ என்று பார்த்து -என்னுடைய நிராலம்பநதையைப் பார்த்து என்னுமாம் ஆண்டான்-வரக் காணா மையாலே ஸ்நே ஹிதிகள் செய்வதும் செய்யா நின்றேன் -க்ருபணர் செய்வதும் செய்யா நின்றேன் -சபலர் செய்வதும் செய்யா நின்றேன் -விரக்தர் செய்வதும் செய்யா நின்றேன் –

இம் மாத்ரமே அன்றியே பல சாதனாதிகளில் பிரதிபத்தி விசேஷத்தாலும் , இரண்டு தலைக்கும் உண்டான நெடு வாசியை அருளி செய்கிறார் மேல் .-பல ஸாதந தேவதாந்தரங்களில்‌ இவர்களிருவர்க்கும்‌ நினைவு ஒக்குமோ என்னில்‌,

பல சாதன தேவதாந்தரங்களில் இவர்கள் நினைவு பேச்சிலே தோன்றும்–சூரணை -62-

அதாவது
நிரஸ்தாதிஸயாஹ்லாத ஸூக பாவைக லஷணா பேஷஜம் பகவத் ப்ராப்தி ரேகாந்தாத் யந்திகீ மதா
தஸ்மாத் தத் ப்ராப்தயே யத்ன கர்தவ்ய பண்டிதைர் நரை தத் பிராப்தி ஹேதுர் ஜ்ஞானாநஞ்ச கர்ம சோக்தம் மகாமுனே –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-59-6
0— (தனக்கு மேல் ஒன்றும் இல்லாததாக ஆனந்த ரூபமான சுகம் ஒன்றையே வடிவாக யுடையதும் துக்கம் இல்லாததும் மீண்டு வருதல் இல்லாததுமான பகவானை அடையும் பேறானது சம்சார துக்கத்துக்கு மருந்தாக இருக்கும் –ஆகையால் பண்டிதர்களான மனிதர்கள் அந்தப் எம் பெருமானை அடைவதற்கு முயற்சி செய்யக் கடவர் –-மைத்ரேய முனிவரே ஞானமும் கர்மமும் அவனை அடைவதற்கு உபாயமாகச் சொல்லப் பட்டன ) இத்யாதிகளாலே
பகவத் ப்ராப்தியே பலமாகவும் , கர்ம ஞானாதிகளே உபாயமாகவும் , இந்திராதி தேவ அந்தர்யாமியான ஈச்வரனே உத்தேச்யன் ஆகையாலே , இந்திராதி தேவதைகள் அனுவர்த்த நீயராகவும் இறே ருஷிகள் சொல்லுவது ..தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே –திருவாய் -2-9-4-என்றும்-வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம் –திருவாய் -3-3–1-என்றும் கைங்கர்யமே புருஷார்த்தம் ஆகவும் தத் சாதனமும் ,
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் -திருவாய் -5–10 -11-என்றும் –அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே–திருவாய் -6-10 –10 -என்கிற பிரபத்தி யாகவும் , உன்னித்து மற்றோர் தெய்வம் தொழாள்–திருவாய் -4–6–10-என்று -தேவதாந்தரங்கள் அனுவர்த்தநீயர் அல்லராகவும் இறே இவர்கள் அருளிச் செய்தது ..

““பேஷஜம்‌ பகவத் ப்ராப்தி?”‘(வி. பு. 6 – 5 – 59) என்று பகவத் ப்ராப்தி பலமாகவும்‌, அதுக்கு ஸாதநம்‌ கர்ம ஜ்ஞாந பத்திகள்‌ என்றும்‌, இந்த்‌ராதி, தேவதாந்தர்யாமியாய்க் கொண்டு ஈஸ்வரன்‌ உபாஸ்யனா யிருக்கு மென்றுமிறே அவர்கள்‌ சொல்லுவது. இவரோ வென்றால்‌ ““தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே”’ (திருவா. 2- 9-4) என்றும்‌, *“வழு விலா வடிமை செய்ய வேண்டும் நாம்‌”’ (திருவா. 3 – 3- 1) என்கிற கைங்கர்யம்‌ புருஷார்த்தமாகவும்‌, அதுக்கு ஸாதநம்‌ ““நாகணை மிசை நம்பிரான்‌ சரணே சரண்‌ நமக்கு”’ (திருவா. 5 – 19 – 11) என்றும்‌, *’அடிக் கீழமர்ந்து புகுந்தேன்‌” (திரூவா. 6 – 10 – 10) என்றும்‌ சொல்லுகிற ப்ரபத்தி என்றும்‌, தேவதாந்தரங்களை ‘‘உன்னித்து மற்றொரு தெய்வம்‌ தொழாள்‌‘ (திருவா. 4 – 6 – 10) என்றுமிறே இவரருளிச் செய்வது –

எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என்
மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே –2-9-4—சேஷ சேஷிகள் கலந்தால் சேஷ பூதனுக்கும் வருவதொரு ரசம் உண்டு இறே-அப்படியே அன்றியே நீ உகந்த அடிமை கொண்டு அருள வேணும்
ஸ் ரக் சந்த நாதிகளைப் போலே மிக்க அம்சம் கழிக்கலாய் இருக்கை–கீழ் முன்னிலையாய் போரச் செய்தே தனக்கே என்கிறது –முகத்தைப் பார்க்கில் நோக்கிலும் ஸ்மிதத்திலும் துவக்குண்டு அத்தாலே நிஷ்கர்ஷம் குலையும் என்று கவிழ்ந்து இருந்து கையோலை செய்து கொடுக்கிறார் –-எனக்கே ஆடச்செய் -என்கிற இடம் -அந்நிய சேஷத்வத்தை தவிர்க்கிறது தனக்கே யாக என்கிற இடம் -தன்னோடு தனக்கு உள்ள அன்வயத்தைத் தவிர்க்கிறது

ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–3-3-1—சர்வ தேசத்திலும் -காட்டிலும் தொடர்ந்து அடிமை செய்த இளைய பெருமாளை போலே-மன்னி-சர்வ அவஸ்தையிலும் -உலகத்தோடு ஏகாந்தத்தோடு வாசி அற-வழு இலா அடிமை -சர்வ சேஷ வ்ருத்தியும்-செய்ய வேண்டும்-சாஸ்த்ரங்களால் இதுவே புருஷார்த்தம் என்று அறிக்கை போராது-அனுஷ்டான பர்யந்தமாக வேணும் –நாம்-திரு உள்ளத்தைக் கூட்டிக் கொள்ளுகிறார் ஆதல்-கேசவன் தமருக்கு பின்பு தனியர் அல்லாமை யாலே திரு உள்ளத்தோடு ஒக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களையும் கூட்டிக் கொண்டு சொல்லுகிறார் ஆதல்

நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும்
ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்

ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையுமொர் பத்தும் வல்லார்
மாக வைகுந்தத்து மகிழ் வெய்துவர் வைகலுமே.–5-10-11—அனந்த சாயித்தவம் சர்வாதிக வஸ்துவுக்கு லக்ஷணம் ஆகையாலே -சர்வாதிகனே சரண்யன் என்கிறது -திரு வனந்த ஆழ்வானுடைய புருஷகார பாவம் சொல்லுகிறது என்றுமாம் –படுக்கையைச் சொல்ல படுக்கை யுடையாரைச் சொல்லிற்றாம் இறே
நம்பிரான் -ஆஸ்ரித விஷயத்தில் உபகார சீலனானவன் –சரணே சரண் நமக்கு என்று -நமக்கு திருவடிகளே உபாயம் என்று –அவதாரணத்தாலே உபாய நைரபேஷ்யம் சொல்லுகிறது -சம்சாரிக ஸ்வ பாவங்கள் மேலிட்டு விபரீதமே பலியா நின்றாலும் இது தவிர வேறு ஒன்றில் கால் தாழாது ஒழி கை -மஹா விச்வாஸம் ஆகிறது –நாடொறும் ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்-ஆக நூற்ற
நாள் தோறும் இதுவே மநோ ரதமான ஆழ்வார் -பகவத் குண பிரேரிதராய் தாம் உள்ராகைக்காக-

அகல கில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல் ஓன் றில்லா அடியேன் உன் னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே.–6-10-10-–சாஸ்திரங்களில் சொல்லுகிற உபாயாந்தரங்களில் அந்வயம் இன்றிக்கே அநந்யார்ஹ சேஷ பூதனான நான் -இத்தால் -அநந்ய கதித்வமும் ஸ்வரூப ஞானமும் ப்ரபத்திக்கு பரிகரம் என்கிறது-உன்னடிக் கீழ் -விக்ரஹ யோகம் சொல்லுகிறது-அமர்ந்து -செறிந்து -சஹகாரி வ்யவதானம் இன்றிக்கே ஒழிகை-புகுந்தேனே.–போக்கு வரவு யுண்டாய் அன்று -புத்தி கதியாய் அத்யாவசாயத்தை சொல்லுகிறது-

உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள், அவனை அல்லால்;
நும் இச்சை சொல்லி,நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்!
மன்னப் படுமறை வாணனை வண் துவராபதி
மன்னனை ஏத்துமின்! ஏத்துதலும்,தொழுது ஆடுமே.–4-6-10—உன்னித்து -மதித்து -நெஞ்சால் ஒன்றாக நினைத்து கிருஷ்ணனை ஒழிய வேறு ஒரு தேவதையை தொழாள்-வேறு ஒன்றை தேவதை என்று மதித்தல் தொழுதல் செய்யுமவள் அல்லள்-தேவதாந்தர்ய ஸ்பர்சம் பொறாத இவளுக்கே இந்த பரிஹாரம் பண்ணுவது

ஆகையால் பலத்திலும் ,சாதனத்திலும் ,தேவதாந்தரங்களிலும் ,-அவர்கள் பிரதி பத்தியும் இவர் பிரதி பத்தியும் இரண்டு தலையில் பேச்சில் தெரியும் என்கை-சகல வேத ஸங்க்ரஹமான திரு மந்த்ரத்திலே பிரதம பதத்தால் சேஷத்வைக நிரூபணியமாக பிரதி பாதிக்க பட்ட ஆத்மாவுககு ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தம் சரமபதத்தில் சதுர்த்தி யால் சொல்லப் பட்ட கைங்கர்யமே ஆகையாலும் , மத்யம பத பிரதிபாதிதமான பகவத் அத் யந்த பாரதந்த்ர்யதுக்கு தத் ஏக உபாயத்வம் ஒழிய ஸ்வ ரக்ஷண ஸ்வ பிரவ்ருத்தி சேராமையாலும் மத்யம அஷர பிரதிபாதிதமான ,பகவத் அனந்யார்ஹத்வதுக்கு
தேவதாந்தர அனுவர்தன கந்தமும் சகியாமையாலும் , பகவத் ப்ராப்தமே பலமாகவும் ,
ஸ்வ யத்ன ரூப கர்மாதிகள் உபாயமாகவும் , அஹங்கார யுக்த தேவதைகள் பகவத் விசேஷண தயா உபாதேயராகவும் கொள்ளுமது ஸ்வரூப யாதாம்ய தர்சிகளுக்கு பரித்யாஜமாய் இறே இருப்பது .-ஆன பின்பு பலாதி த்ரயத்தில் , அவர்கள் பிரதி பத்திக்கும் ,இவர் பிரதி பத்திக்கும் நெடு வாசி உண்டாகையால், இவ் வழியிலும் ,அவர்களில் இவர் அத்யந்த வ்யாவ்ருத்தர் என்றது ஆயிற்று-

ஆக தர்ம வீர்யேத்யாதி-சூரணை-58– தொடங்கி இது வரை இப் பிரபந்த வக்த்ரு வைலஷண்யம் பிரதி பாதித்து -இனி இப் பிரபந்த வைலஷண்யம் தன்னை பிரதிபாதிக்கிறார்-ஆக, இதுக்கு கீழ்‌ வக்த்ரு வைலக்ஷண்யம்‌ சொல்லிற்று – இனி மேல்‌ ப்ரபந்த,வைலக்ஷண்யம்‌ சொல்லுகிறது. அவர்கள் ப்ரபந்தங்களுக்கு கதாந்தர ப்ரஸ்தாவமுண்டு; இதுக்கில்லை என்னா நின்று கொண்டு இதினுடைய ஸார தமத்வம்‌ சொல்லுகிறார்‌ –

ஸ்ரீ ராமாயணம் ,நாராயண கதை என்று தொடங்கி , கங்கா காங்கேய சம்பவாத் யசத் கீர்த்தனம்
பண்ணின எச்சில் வாய் சுத்தி பண்ணாமல் , திரு மால் அவன் கவி என்றே , வாயோலை படியே
மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு உரிய சொல் வாய்த்த இது வேதாதிகளில் , பௌருஷ மாநவ கீதா வைஷ்ணவங்கள் போலே அருளிச் செயல் சாரம்-சூரணை -63-

அதாவது —
காவ்யம் ராமாயணம் க்ருத்ஸ்னம் ஈத்ருசை : கரவாண்யஹம்—பாலகாண்டம் -2-42- ( ஸ்ரீ ராமாயணம் காவ்யம் முழுவதும் இத்தகைய ஸ்லோகங்களால் நான் செய்கிறேன் )என்றுஸ்ரீ ராம கதையை சொல்லுவதாக ஸ்ரீ ராமாயணம் என்று உபக்ரமித்து கங்கா சம்பவ ,ஸூப்ரஹ்மண்ய உத்பத்தி- புஷ்பக வர்ண ரூப கதைகளை பரக்கப் பேசுகையாலே ,அசத் கீர்த்தனம் பண்ணி , வாக் அசுத்தி வந்தது இறே
ஸ்ரீ வால்மீகி பகவானுக்கு
நாராயண கதாமிமாம்–பாரதம் ஆதிபர்வம் -என்கிற படி ,நாராயண கதை என்று உபக்ரமித்து சம்பவ பர்வதத்திலே காங்கேயரான ஸ்ரீ பீஷ்மருடைய உத்பத்தி தொடக்கமாக
அநேகருடைய உத்பத்தி பிரகாரங்களை ,விஸ்தரேண பிரதி பாதிக்கை யாலும் ,-பூசல் பட்டோலை -என்னும் படி பாரத யுத்த பிரகாராதிகளையே பரக்க நின்று வர்ணித்த படியாலும் ,அசத்கீர்தனத்திலே மிகவும் பரந்து ,அ சுத்த வாக்கை ,-அசத் கீர்த்தனா காந்தார பரிவர்த்தன பாம்ஸூலாம் ,வாசம் ஸௌரி கதா லாப கங்கயைவ புநீமஹே-ஸ்ரீ ஹரிவம்சம் –என்று –( பொருள் அல்லாதவற்றைப் பேசுதலாகிற காட்டிலே சுற்றியதால் புழுதி அடைந்த வாக்கினை ஸ்ரீ கண்ணபிரானுடைய சரிதையைச் சொல்லுதலாகிற கங்கை நீரால் தூய்மை ஆக்குகிறேன் ) –என்று அசத் கீர்தனமாகிற காட்டிலே ,அலைந்து புழுதி படைத்த வாக்கை ,பகவத் கதா லாபமாகிற கங்கையிலே ,சுத்தம் ஆக்குகிறேன் என்று சுத்தி பண்ணினான் இறே ஸ்ரீ வேத வியாச பகவான் .-ஸ்ரீ வால்மீகி பகவான் இப்படி அனுதபித்து ,வாக் சுத்தி பண்ணிற்று இலன் ஆகிலும் , இந்த நியாயம் அவனுக்கும் ஒக்கும் என்று ,நினைத்து இறே இவர் கூட்டி எடுத்தது ..ஆக இப்படி உபக்ரமித்ததர்க்குச் சேராத படி அசத் கீர்த்தனம் பண்ணி ,வாக்கை அசுத்தை ஆக்கி அதுக்கு சுத்தி பண்ண வேண்டாதபடி ,-திரு மாலவன் கவி யாது கற்றேன் -திருவிருத்தம் –48-என்று ஸ்ரீய பதி என்று அடியிலே வாயோலை இட்ட பிரகாரத்திலே ,-
மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு மது ஸூதன் அடி மேல் –திருவாய் -6-8-11-என்கிற படியே , அந்ய பரமான சப்தங்கள் ஒன்றும் ஊடு கலசாத படி சப்தங்களைத் தெரிந்து எடுத்து ,-உரிய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி திருவாய் -4–5-6-என்கிற படியே விஷயத்துக்கு தகுதியான சொல்லாலே
சொல்லப் பட்டதாய் ,-வாய்த்த வாயிரம்-திருவாய் -2-2-11-என்று வாஸ்யனான சர்வேஸ்வரனுக்கு வாய்த்த இப் பிரபந்தம் வேதேஷு பௌருஷம் ஸூக்தம்-தர்ம சாஸ்த்ரேஷூ மாநவம்-பாரதே பகவத் கீதா புராணேஷூ ச வைஷ்ணவம்–( வேதங்களில் புருஷ ஸூக்தமும் -தர்ம சாஸ்த்ரங்களுக்குள் மனுவால் சொல்லப்பட்ட மனு தர்ம சாஸ்திரமும் – மஹா பாரதத்தில் ஸ்ரீ கீதையும் -புராணங்களில் ஸ்ரீ விஷ்ணு புராணமும் ) என்று வேதங்களில் புருஷ சூக்தமும் ,-தர்ம சாஸ்த்ரங்களில் மனு பிரனீதமும் ,
மகா பாரதத்தில் ஸ்ரீ கீதையும் புராணங்களில் ஸ்ரீ விஷ்ணு புராணமும் சாரமாய் இருக்குமா போலே –
அந்யகதா கந்த ரஹிதமான அருளிச் செயலிலே சாரமாய் இருக்கும் என்கை-
-இத்தால்-தீதில் அந்தாதி -திருவாய் -8-2–11-என்கிற படியே கதாந்திர பிரஸ்தாப தோஷ ராஹித்யாலே , ஆர்ஷ பிரபந்தங்களில் ,வ்யாவிருத்தமாய் , பகவத் பிரதிபாதன சாமர்த்தியத்தாலே , பகவத் ஏக பரமான மற்றை ஆழ்வார் பிரபந்தங்களிலும் ,சாரமாய் இருக்கும் என்று இப் பிர பந்த வைலஷண்யம் சொல்லிற்று ஆயிற்று –

“காவ்யம்‌ ராமாயணம்‌ கருத்ஸ்நமீத்‌ருஸை கரவாண்யஹம்‌”‘ (ராபா. 2 – 42), “நமோ பகவதேதஸ்மை வயாஸாயாமித தேஜஸே | யஸ்ய ப்ரஸாதாத்‌,வஹ்யாமி நாராயண கத மிமாம்‌” (ப.ர.ஆதி;) என்றும்‌ சொல்லுகிறபடியே இதிஹாஸ ஸ்ரேஷ்டமான ஸ்ரீராமாயணம்‌ நாராயண கதை என்று தொடங்கி, கங்கையினுடைய வர்ணநமும்‌, ஸுப்‌ரஹ்மண்ய கதையும்‌, புஷ்பக வர்ணநமூமாய்‌, ஸ்ரீமஹாபாரதத்தில்‌ நாராயண கதை என்று தொடங்கி, கங்கையினுடையவும்‌ ஸ்ரீபீஷ்மருடையவும்‌ உத்பத்தி முதலான பூசல் பட்டோலையாய்‌, *அஸத் கீர்த்தந காந்தார பரிவர்த்தந பாம்ஸுலாம்‌” (ஹரிவம்பே) என்கிறபடியே அஸத் கீர்த்தநம் பண்ணின எச்சில் வாயானது “வாசம்‌ சவ்ரிகதா லாபகங்கயைவ புநீமஹே”’ என்று ஸூத்‌,தி, பண்ண வேண்டிற்றிறே அவர்களுக்கு. “ஸா ஜிஹ்வா யா ஹரிம்‌ ஸ்தெளதி”’ (வி.த,ர்மே 1) என்றும்‌, “வாயவனை யல்லது வாழ்த்தாது”” (மு.திரு11) என்றும்‌ சொல்லுகிற இவர் நாக்குக்கு பகவத்‌ வ்யதிரிக்தமான வர்ணநம்‌ உச்சிஷ்டமிறே.-இவருடைய ப்ரபந்தத்தில்‌ அப்படி எச்சில் வாய்‌ ஸூத்‌தி பண்ண வேண்டாதே திருமாலவன் கவி யாது கற்றேன்‌’‘( திருவிரு. 48) என்று வாயோலை யிட்டாப் போலே மாற்றங்களாய்ந்து கொண்டு”’ (திருவா. 6 – 8- 11) என்கிறபடியே எல்லாச்‌ சொற்களும்‌ புறம்பு அந்ய பரங்களாயிராதே ஸர்வமும்‌ *“உரிய சொல்லாலிசை மாலைகளேத்தி’* (திருவா. 4 – 5 – 6) என்கிறபடியே அவனுக்கு ப்ராப்தமான சொல்லாய்‌ “*வாய்த்த வாயிரத்துள்‌”’ (திருவா. 2 – 2 – 11) என்கிறபடியே வாச்யனுக்கு வாய்த்த ப்ரபந்தம்‌; (வேதாதிகளில்‌) வேத ஸாஸ்த்ரேதிஹாஸ புராணங்களில் வைத்துக் கொண்டு “வேதேஷு பெளருஷம்‌ ஸூக்தம்‌ தர்மமமாஸ்த்ரேஷு மாநவம்‌ ! பாரதே பகவத்‌ கீதா புராணேஷு ச வைஷ்ணவம்‌”’ என்கிறபடியே வேதத்தில்‌ ஸாரமான ஸ்ரீபுருஷ ஸூக்தம் போலேயும்‌, தர்ம ஸாஸ்த்ரத்தில்‌ மநு ப்ரணீதமானது ஸாரமானாப் போலேயும்‌, ஸ்ரீமஹா பாரதத்தில்‌ கீதை ஸாரமானாப் போலவும்‌, புராணங்களில் வைத்துக் கொண்டு ஸ்ரீவிஷ்ணுபுராணம்‌ ஸாரமானாப் போலவும்‌, அருளிச்செயலில் வைத்துக் கொண்டு இத் திருவாய்மொழி ப்ரபந்தத்தினுடைய ஸார தமத்வம்‌ சொல்லிற்று 

வாய் அவனை அல்லது வாழ்த்தாது கை யுலகம்
தாயவனை அல்லது தாந்தொழ  பேய் முலை நஞ்
சூணாக வுண்டான் உருவோடு பேர் அல்லால்
காணாக் கண் கேளா செவி —11-–நீ அளவிதாம் படி அமையும் காண் என்றாலும் கேளாது-என்னிலும் காட்டிலும் அவன் எங்குற்றான் என்று பார்க்கிற என்னுடைய வாக் இந்த்ரியமானது அவனை ஒழியப் புகழாது –

மெல்லியல் ஆக்கைக் கிருமி குருவில் மிளிர் தந்தாங்கே
செல்லியசெல் கைத்துலகை என் காணும் என்னாலும் தன்னைச்
சொல்லிய சூழல் திருமாலவன் கவியாது கற்றேன்
பல்லியின் சொல்லும் சொல்லாக் கொள்வதோ வுண்டு பண்டு பண்டே-48 —திரு மால் –இந்த ஆச்சர்ய சக்தி தான் புறம்பு கிடவாதே –இவ்வாஸ்ரயத்தில் கிடக்க வேண்டுவான் என் என்னில் – ஸ்ரீய பதி ஆகையாலே –திருமாலவன் கவி –அவனும் அவளுமான சேர்த்திக்கு தகுதியான கவி –இத்தால் – ஸ்ரீ ராமாயணத்தில் வ்யாவ்ருத்தி சொல்லுகிறது –ஸீதாயாஸ் சரிதம் மகத்-என்று தொடங்கச் செய்தே அவளை ஒழிய-தனியே இறே இருந்து கேட்டது –1-யாது கற்றேன் -என்னுதல் –2-ஆறு கற்றேன் என்னுதல் –3-அவன்  கவி யாது கற்றேன் என்னுதல் –4-யாதொன்று நான் கற்றது -அது திருமாலவன் கவி -என்னுதல் –யாது ஓன்று நான் கற்றது -எந்த சிறியத்தையும் நான் கற்றாலும் அதுவும் திருமாலவன் கவியே-ஆறு -ஸமஸத்தையும் கற்றேன்கற்றேன் -என் முன் சொல்லும் -என்கிறபடியே அவன் முன்னே  சந்தை இட – நான் பின்னே சொன்னேன் இத்தனை-

மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு மதுசூதபிரான் அடிமேல்
நாற்றங்கொள் பூம்பொழில் சூழ் குருகூர்ச்சட கோபன்சொன்ன
தோற்றங்க ளாயிரத்துள் இவையும்ஒரு பத்தும்வல்லார்
ஊற்றின்கண் நுண்மணல்போல் உருகாநிற்பர் நீராயே.–6-8-11-நல்ல சொற்களை தெரிந்து கொண்டு -இத் தசையிலும் வாசக சப்தங்கள் விலக்ஷணமாய் இருக்கிற படி –சோக ஸ்லோகத்வமாகத -என்கிறபடியே –விரோதிகளை போக்கி தன்னை யுபரிக்குமவனை யாயிற்று கவி பாடிற்று-

கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும்
பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
உரிய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேற்கு
அரியது உண்டோ எனக்கு இன்று தொட்டும் இனி என்றுமே?–4-5-6-இவ்விஷயத்துக்கு நேரே வாசகமான சொல்லாலே-இசைமாலைகள்-ஸம்ஸரவே மதுரம் வாக்கியம் என்னும் படி திருச் செவி சாத்தலாய் இருக்கை-ஏத்தி உள்ளப்பெற்றேற்கு-ஏத்தி அனுபவிக்கப் பெற்ற எனக்கு அரியது உண்டோ-நான் பெறாதே இனி பெற வேண்டி இருப்பது ஒரு பொருள் உண்டோ-எனக்கு-ஈஸ்வரோஹம் என்று இருக்கிற சம்சாரத்தில் சேஷத்வம் ரசிக்கப் பெற்று ஸ்வரூப அநு ரூபமாக வாசிகமான அடிமை செய்யப் பெற்று வினை நோய்கள் கரியவே -என்று விரோதியும் கழிக்கப் பெற்ற எனக்கு-

ஏத்த வேழுலகும் கொண்ட கோலக்
கூத்தனை குருகூர்ச் சடகோபன் சொல்
வாய்ந்த வாயிரத்துள் இவை பத்துடன்
ஏத்த வல்லார்க்கு இல்லையோ ரூனமே –2-2-11—வாய்ந்த வாயிரம் – ஈஸ்வரனுக்கு இதுவும் ஓர் ஐஸ்வர்யம் ஆயிற்று நேர் பட்டது-சொல் வாய்ந்த வாயிரம் – வாஸ்யத்தில் காட்டில் வாசகம் நேர் பட்டது என்றுமாம் -அதாவது விஷயத்தை உள்ள அளவும் பேச வற்றாய் இருக்கை-உடனே ஏத்த வல்லார்க்கு –
சாபிப்ராயமாக சொல்லுமவர்க்கு –அல்லாதாருடைய அநீஸ்வரத்தையும் இவனுடைய பரத்வத்தையும் சொல்லுகிறது ஆகையால் அபிப்ராயத்தோடே கற்க வேணும் என்றதாயிற்று-இல்லையோ ரூனமே-
தேவதைகளோடு ஓக்க நினைத்தால் -அவர்களுக்கு உத்கர்ஷத்தை நினைத்தல் –இவனுக்கு அபகர்ஷத்தை நினைத்தல் -இவை யாயிற்று ஊனம்-அவை இவர்களுக்கு இல்லை -தேவதாந்த்ர ஸ்பர்சம் ஆயிற்று சம்சார பீஜம் –

பாதமடை வதன் பாசத்தாலே மற்றவன்பாசங்கள் முற்ற விட்டு
கோதில் புகழ்க் கண்ணன் தன்னடி மேல் வண் குருகூர் சடகோபன் சொன்ன
தீதில் அந்தாதி ஓர் ஆயிரத்துள்இவையுமோர் பத்திசை யோடும் வல்லார்
ஆதுமோர் தீதிலராகி இங்கு மங்கு மெல்லாம் அமைவார்கள் தாமே–8-2-11—பிரபந்தத்துக்கு தீதாவதுகதான்தர ப்ரஸ்தாவம்-ராம வ்ருத்தாந்தத்தை சொல்லப் புக்கு ஸூ ப்ரஹ்மண்ய உத்பத்தி -புஷ்ப்பக வர்ணன் இவற்றிலே இழிகையும்-நாராயண கதாமிமாம் என்று சொல்லி விட்டு விட்டார் விட்ட அம்பு எண்ணுகையும் இவை –

இனி மேல் இப்படி அருளிச் செயலில் சாரமான இதன் ப்ரமாண்ய அதிசயத்தை
பிரகாசிப்பைகாக ,ஆழ்வார்களுடைய ஐக கண்ட்யைத்தையும் ,அவர்களில் தலைவரான இவர்
அருளிச் செய்த இப் பிரபந்ததினுடைய பிராபல்யத்தையும் ,பிரதி பாதியா நின்று கொண்டு ,
ஏவம் பூதமான விதுக்குச் சேராத சாஸ்திரங்கள் பரீஷக பரித்யாஜ்யங்களாம் படியை அருளிச் செய்கிறார் –ஆனால்‌ இவ்வாழ்வார்களுடைய ப்ரபந்தங்களும்‌ பரஸ்பர விருத்‌தங்களாயிருக்குமோ என்ன, இவர்களெல்லாரும்‌ ஏக கண்டராகையாலே எல்லாம்‌ ஏகரர்த்த ப்ரதிபாதகங்களுமாய்‌, எல்லா ப்ரபந்தங்களும்‌ இவருடைய ப்ரபந்தத்தைப்‌ பின் செல்லும்படியான வைபவத்தை உடைத்தாய்‌, இத்தோடு சேராத ஸாஸ்த்ரங்களெல்லாம்‌ த்யாஜ்யங்களா யிருக்குமென்று இதினுடைய ப்ராமாண்யம்‌ சொல்லுகிறது –

குரு சிஷ்ய கிரந்த விரோதங்களை பரமதாதிகளாலே பரிஹரியாமல் செஞ்சொல் செம்தமிழ் இன் கவி
பரவி அழைக்கும் என்று அந்யோந்யம் கொண்டாடி பேசிற்றே பேசும் ஏக கண்டரில் என்னில் மிகு வென்னும் இவர் உரை கொள் இன் மொழி கொண்டு சாஸ்த்ரார்தங்களை நிர்ணயிக்க வேண்டுகையாலே வலம் கொண்டு இதுக்கு சேராதவை மநு விபரீதங்கள் போலே-
(விலக்கப்படுவனவாம் )-சூரணை -64-

அதாவது –
ருஷிகளில் ,குரு சிஷ்யர்களான வியாச ஜைமிநிகளில் , குருவான வியாசனுடைய கிரந்தமான ,ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரத்தோடு சிஷ்யனான ஜைமினி உடைய கிரந்தமான கர்ம ஸூத்ரத்தோடு நிரீஸ்வர வாதாதிகளால் ,வந்த விரோதத்தை , சம்பத் தேரிதி , ஜைமினி–ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்–1-2-32
( பிராணா ஹூதி ஹோமங்களை அக்னி ஹோத்ர ஹோமங்களாக செய்வதற்காக உபாசகனுடைய
மார்பு முதலான உறுப்புகளை நெருப்பு களாக கூறியுள்ளது என்று ஜைமினி சொன்னார் )
அன்யார்த்தம் து ஜைமினி–ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்– 1-4-18-( வேறு பயனுக்காகவே இங்கு ஜீவனைச் சொல்லுகிறது என்று ஜைமினி சொல்கிறார் )பரம் ஜைமினி முக்யத்வாத்—ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்– 4-3-11-
( பர ப்ரஹ்மத்தை உபாசிக்கின்றவர்களையே ஆதி வாஹிகர்கள் அழைத்துக் கொண்டு போகிறார்கள் என்று ஜைமினி எண்ணுகிறார்-ப்ரஹ்ம கமயிதி என்ற இடத்தில் உள்ள ப்ரஹ்ம சப்தம் ப்ரஹ்மத்தின் இடமே முக்கியமாக இருப்பதால் )ப்ராஹ்மனே ஜைமினி –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்-4-4 -5-( ப்ரஹ்ம சம்பந்தியான அபஹத பாப்மத்வம் முதலான குணங்களோடு முக்தன் தோன்றுகிறான் என்று
ஜைமினி சொல்லுகிறார் ) இத்யாதியான ,ப்ரஹ்ம ஸூத்தரங்களாலே ஜைமினிக்கு ப்ரஹ்ம ஸ்வரூப தத் குண தத் உபாசன தத் பலாதிகளின் உடைய அங்கீகாரம் உண்டு என்னும் இடமும் தோற்றுகையாலும் ,மகா பாரதத்திலே ,ஹய சிர உபாக்யானாதிகளிலே பகவத் வியாச உபதேச லப்த
பரமாத்மா தத்வ ஞானம் உடையவனாய் சொல்லுகையாலும் , ஸ்ரீ வேத வியாசனும் ஜைமினியும் ஏக கண்டர்கள்.
-இனி தேவதா நிராகரணம் பண்ணின இது ,ஈஸ்வர பிரநீதமாக வேதத்தை சிலர் சொல்லுகையாலே ,அந்த பௌ ருஷேத்வம் அடியாக விப்ரலம்பாதி தோஷங்களை கல்பித்து வேத அப்ராமண்யம் சொல்லுவது , வைதிக கர்மங்களை ,நிந்திப்பதாகிற பாஹ்யரை நிராகரித்து ,
வேத ப்ராமண்ய கர்மா அவச்ய ,கர்தவ்யைகளை சாதிக்கையில் உண்டான இச்சையாலே
ஸ்வ மதம் அன்றிலே இருக்க பரம பதத்தை அவலம்பித்து சொன்னான் என்றாதல் ..
அன்றிக்கே -தேவதா நிராகரணத்தில் ,தாத்பர்யம் இல்லை
..–அஸ்ருத வேதாந்தருக்கு கர்மத்தில் ,அச்ரத்தையை நிவாரிக்கைக்காக , கர்ம பிரதாண்யம் சொல்லுகையிலே தாத்பர்யம் ஆகையாலே ,
நஹி நிந்த்யா நிந்த்யம் நிந்திதும் ந பிரவர்த்ததே நிந்திதாத் இதரத் பிரசம்கிதம் -(நிந்தையானது நிந்திக்கும் பொருளை நிந்திப்பதற்கு வரவில்லை – நிந்திக்கும் பொருளைக் காட்டிலும் வேறான ஒரு பொருளைத் துதிப்பதற்காக வந்தது ) –என்கிற ந்யாயத்தாலே , தேவதா நிரகரணம் பண்ணின இது ,கர்ம பிரசம்சார்த்தம் ஆகையாலே அந்ய பரம் என்றாதல் கொள்ள வேணும் என்று இப்படி பரமத அன்ய பரத்வங்களால் பரிஹரிக்க வேண்டிற்று இறே .( கர்மங்களை அவசியம் செய்ய வேண்டும் என்பதன் பொருட்டு ஆகையால் கடவுள் இல்லை என்று கூறின இது வேறு ஒன்றிலே நோக்கு என்றாதல் கொள்ள வேண்டும் -என்று இப்படி பிறர் தம் மதம் மேற்கொண்டு கூறினார் – வேறு ஒன்றினை உட்க்கொண்டு கூறினார் என்று பரிஹாரம் செய்ய வேண்டுமே )

ருஷிகளில்‌ குரு ஸிஷ்யர்களான வ்யாஸ ஜைமிநிகளில்‌ குருவான வியாஸனுடைய க்ரந்தமான ப்‌ரஹ்ம ஸூத்ரத்துக்கு ஸிஷ்பனான ஜைமிநி க்‌ரந்தமான கர்ம ஸூத்ரத்தில்‌ நிரீஸ்வர வாதத்தால்‌ வந்த விரோத,த்தை வ்யாஸன் தானே “’ஜைமீிநி ராசார்யோ மந்யதே”’ என்று ஆப்தமாக எடுக்கையாலே இருவரும்‌ ஏக கண்டர்‌; இனி நிரீஸ்வர வாதம்‌ சொன்னது – வைதிக க்ரியைகளை நாஸ்திவாதம்‌ பண்ணுகிற பாஹ்யரை நிராகரிக்கைக்காக பர மதத்தை அதிஷ்டித்துச் சொன்னானென்று பரிஹரிக்க வேண்டிற்று அங்கு.

அப்படியே
இங்கும் அந்யோந்ய வசன விரோதம் உண்டாய் ,அதுக்கு பரிகாரம் பண்ண வேண்டாத படி
செஞ்சொல் கவிகாள்–திருவாய் -10-7-1-என்றும்
செம் தமிழ் பாடுவார் தாம் வணங்கும் -பெரிய திருமொழி -2-8-2–என்றும்
இன் கவி பாடும் பரம கவிகள்-திருவாய் -7-9-6 -என்றும்
பதியே பரவித் தொழும் தொண்டர் -பெரிய திருமொழி -7–1-7-என்றும்
அரங்காவோ என்று அழைக்கும் தொண்டர் -பெருமாள் திருமொழி -2-2–என்றும் பரஸ்பரம் ஸ்லாகித்து கொண்டு ,பேசிற்றே பேசல் அல்லால்–திருமாலை -22- -என்ற படியே ஒருவர் பேசினதே எல்லாரும் பேசும் ஏக கண்டரான ஆழ்வார்களில் வைத்து கொண்டு-என்னில் மிகு புகழார் யாவர் –பெரிய திருவந்தாதி –4-என்று சேஷிக்கு அதிசயகராகப் பெற்ற ப்ரீதி பிரகர்ஷத்தாலே என்னில் காட்டில் மிக புகழ் உடையார் ஆர் என்னும் சர்வாதிகரான இவருடைய –உரை கொள் இன் மொழியாளை-திருவாய் -6-5–3- -என்கிற படியே ஸ்ரீ ராமாயணாதிகளையும் ஸ்வ வைலஷண்யத்தாலே ஜெயிக்கும் படியான
சக்திகளைக் கொண்டு வேத தத் உப ப்ரும்ஹண ரூப சாஸ்த்ரங்களில் ,சம்சயிதமான அர்த்தங்களை நிர்ணயிக்க வேண்டும் படியாய் இருக்கும் ஆகையாலே –வலம் கொண்ட வாயிரம்
–திருவாய் -3–8-11-என்கிற படியே பிரதி பாத்ய வஸ்துவை உள்ள படியே பிரதி பாதிக்க வல்ல சாமர்த்தியத்தை உடைத்தான இப் பிரபந்தத்துக்கு சேராத சாஸ்திரங்கள் –மன் வர்த்த விபரீதா து யா ஸ்ம்ருதிஸ் ஸா ந சஸ்யதே
( எந்த ஸ்ம்ருதியானது மனுவினால் சொல்லப்பட்ட பொருளுக்கு மாறுபட்டு இருக்கிறதோ அது புகழப்படுவது இல்லை ) என்று சொல்லப் பட்ட மநு விபரீதமான ஸ்ம்ருதிகள் போலே கழிக்க படும் என்கை-

இதுக்கு அப்படிப்‌ பரிஹரிக்க வேண்டாதபடி ”சென்சொற் கவிகாள்‌’” (திருவா. 10 – 7 – 1) என்றும்‌, ‘‘செந்தமிழ் பாடுவார்தாம்‌”” (திருமொழி 2 – 8 – 2) என்றும்‌, “இன்கவி பாடும்‌ பரம கவிகள்‌” (திருவா. 7 – 9 – 6] என்றும்‌, “பாலேய்‌ தமிழரிசைகாரர்‌ பத்தர்‌ பரவுமாயிரம்‌”’ (திருவா. 1 – 5- 11) என்றும்‌, ““பரவித்தொழும்‌ தொண்டர் தமக்குக்கதி?’ [திருமொழி 7 – 1 – 7) என்றும்‌, *’அழைப்பன்‌ திருமாலை ஆங்கவர்கள்‌ சொன்ன பிழைப்பில்‌ பெரும் பெயரே பேசி” (இ. திருவ. 50) என்றும்‌, * அரங்கவோ என்றழைக்‌கும்‌?” (பெரு. தி, 2 – 2) என்றும்‌ சொல்லுகிறபடியே அந்யோந்யம்‌ கொண்டாடி “பேசிற்றே பேசலல்லால்‌“‘ (திருமாலை 22) என்று ஏக கண்டராகையாலே ஏகார்த்த ப்ரதிபாதகரான இவர்களில் வைத்துக் கொண்டு, ‘ “என்னில்‌ மிகு புகழார்‌ யாவரே?” (பெ. திருவ. 4) என்கிறபடியே தாஸ்ய ஹ்ருஷ்டோக்தியை உடையரான இவருடைய “உரை கொளின்மொழி’” (திருவா. 6 – 5 – 9) என்கிறபடியே “அது அது’ என்று வாய்‌ புலற்றும் படியாகப்‌ பேச்சுக்கு அவிஷயமாய்‌-மாற்று முறையு மற்றிருப்பதாய்‌, ஸ்ரீராமாயணத்திலுங் காட்டில்‌ இனிமையை உடைத்தாயிருக்கிற இவருடைய உக்திகளைக் கொணடு தத்வ ஹித புருஷார்த்தங்களை ப்ரதிபாதி,க்கிற வேதாந்த ஸாஸ்தரங்களில்‌ ஸம்ஸயித்தவற்றை நிர்ணயிக்க வேண்டும்படி இருக்கையாலே “சொல்‌ வலங்கொண்ட” (திருவா. 53. 9. 11) என்கிறபடியே அர்த்த ப்ரதிபாதந ஸாமர்த்‌யத்தை உடைத்தான இப்‌ ப்ரபந்தத்தோடு சேராதவை யாவை சில ஸமாஸ்த்ரங்கள்‌, அவை, **மந்வர்த்த விபரீதா து யா ஸ்ம்ருதிஸ்ஸா ந ஸஸ்யதே” என்று மநு விபரீதமான ஸ்ம்ருதிகளைப் போலே கழிக்கப்படுகிறது-

செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின் திருமால் இரும் சோலை
வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே யாகி நிறைந்தானே–10-7-1—செவ்விய சொல்லை யுடைய கவிகாள் -கவிக்குச் செவ்வை யாகிறது –அநந்ய பிரயோஜனமாய் இருக்கை -பிரயோஜனத்தைக் கணிசிக்கை கவிக்கு குடிலம் ஆகையாவது –இன் கவி பாடும் பரம கவிகள் -என்றும் –செந்தமிழ் பாடுவார் என்றும் -சொல்லுகிற முதல் ஆழ்வாரைகளை யாய்த்து நினைக்கிறது –பெரும் தமிழன் அல்லேன் -என்னா- வாய் அவனை அல்லது வாழ்த்தாது -என்கிறவர்கள் இறே அநந்ய பிரயோஜனர்

வெந்திறல் வீரரில் வீரர் ஒப்பார் வேதமுரைத்து இமையோர் வணங்கும்
செந்தமிழ் பாடுவார் தாம் வணங்கும் தேவர் இவர் கொல் தெரிக்க மாட்டேன்
வந்து குறள் உருவாய் நிமிர்ந்து மாவலி வேள்வியில் மண்ணளந்த
அந்தணர் போன்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே–2-8-2-பெருகு மத வேழம் என்கிறபடியே கலப்பற்ற பசும் தமிழ் பாடும் முதல் ஆழ்வார்கள் 

இன் கவி பாடும் பரம கவிகளால்
தன் கவி தான் தன்னைப் பாடுவியாது இன்று
நன்கு வந்து என்னுடன் ஆக்கி என்னால் தன்னை
வன் கவி பாடும் என் வைகுந்த நாதனே.–7-9-6–தன்னை கவி பாடுவித்துக் கொள்ள நினைத்தால்-பராசர வ்யாஸ வால்மீகிகள் ஆதல் –செந்தமிழ் பாடுவார் என்னும் முதல் ஆழ்வார்கள் ஆதல் அன்றோ பாத்ர பூதர் -அவர்களை ஒழிய –

மாலே மாயப் பெருமானே மா மாயனே என்று என்று
மாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே –-1-5-11-பாலேய் தமிழர்-பாலோடு ஒத்து உள்ள தமிழ் அறிவார்-இசைகாரர் இசை அறிவார்-பத்தர் பரவும்-சர்வேஸ்வரனும் ஆழ்வாருமான பரிமாற்றத்திலே கால் தாழ்ந்து இருக்குமவர்கள்-பாலேய் தமிழர் –என்கிறது முதல் ஆழ்வார்களை
இசைகாரர் –என்கிறது ஸ்ரீ மதுர கவிகள் போல்வாரை-பத்தர் -என்கிறது பெரியாழ்வார் போல்வாரை
ஸ்ரீ பராங்குச நம்பி -ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் பிள்ளை யுறங்கா வல்லி தாசர் போல்வர் என்னுமாம் -ஆழ்வான் ஓர் உருவிலே

அழைப்பன் திருமாலை ஆங்கு அவர்கள் சொன்ன
பிழைப்பில் பெரும் பெயரே பேசி
-இழைப்பரிய
வாயவனே யாதவனே என்றவனை யார் முகப்பும்
மாயவனே என்று மதித்து —50-சிறியாத்தான் -த்வயத்தில் ஆநு பூர்வி பிரதானம் -அவைகளை நினைத்து பிரசன்னனாம் – அர்த்தம் விட சொற்களே முக்கியம் -அவற்றை கேட்டே எம்பெருமான் மகிழ்வான் -என்றபடி –ரிஷிகள் கோஷ்டியில் -ய படேத் ராமசரித்ரம் சர்வ பாபி ப்ரமுச்யதே -பால -1-97- என்று பாவனமாய் இருக்கும்-ஆழ்வார்கள் கோஷ்டியில் அது நச்சுப் பொய்கை –-உயிர்க்கு அது காலன் என்று இரந்தேற்க்கு நீர் குயில் பைதல்காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் – திருவாய் -9-5-8-என்னக் கடவது இறே-

தோடுலா மலர் மங்கை தோள் இணை தோய்ந்ததும் சுடர் வாளியால்
நீடு மா மரம் செற்றதும் நிரை மேய்த்ததும் இவையே நினைந்து
ஆடி பாடி அரங்காவோ! என்று அழைக்கும் தொண்டர் அடி பொடி
ஆட
நாம் பெறில் கங்கை நீர் குடைந்து ஆடும் வேட்கை என்னாவதே ?–2-2-இந்த சீலாதி குணங்களையே நினைந்து இவற்றை நினைக்கும் அது ஒழிய வேறொரு பிரயோஜனத்தையும் கணிசியாதே –ப்ரீதி பிரகர்ஷத்தாலே இருக்க மாட்டாதே ஆடிப்பாடி-ஸ்ரீ பெருமாள் திரு நாமத்தைச் சொல்லி யாற்ற மாட்டாதே கூப்பிடும்-பகவத் குண வித்தரான ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய பாத ரேணுக்களிலே அவகாஹிக்கப் பெறில்-

பேசிற்றே பேசல் அல்லால் பெருமை ஓன்று உணரலாகாது
ஆசற்றார் தங்கட்கு அல்லால் அறியலாவான் அவனும் அல்லன்
மாசற்றார் மனத்து உளானை வணங்கி நாம் இருப்பது அல்லால்
பேசத்தான் ஆவது உண்டோ பேதை நெஞ்சே நீ சொல்லாய்–22-நீல தோயாத மத்யஸ்தா வித்யுல்லகேவ-என்றும்-நீலமுண்ட மின்னன்ன மேனி -என்றும்-அதஸீ புஷ்ப சங்காசம் -என்றும்-ஹிரண்மய புருஷோ த்ர்சயே -என்றும்-ருக் மாபம் -என்றும் சுட்டு உரைத்த நன் பொன் உன் திரு மேனி ஒளி ஒவ்வாது -இத்யாதி –வேதங்கள் பேசும் படியே பேசும் அத்தனை அல்லது நம்மால் பேச முடியாது –அப்ராப்ய -என்று பேசின இத்தனை அப்படியே பேச ஒண்ணாது என்று பேசும் அத்தனை என்றுமாம்–ஆசற்றார் நம் ஆழ்வார் போல்வார்-நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று ஏக சிந்தையராய் இருக்கும் சித்தோபாய விசுவாசிகள்-மாசற்றார் பெரியாழ்வார் போல்வார்
வடதடமும் வைகுந்தமும் மதிள் த்வாராபதியும் இடவகைகள் இகழ்ந்திட்டு என்பாள் இடவகை கொண்டனையே -என்றபடி நித்யவாசம் செய்து அருளுபவன் என்று சொல்லிக் கொண்டு வணங்கினால் நமக்குள்ளும் நித்ய வாஸம் செய்து அருளுவான்-

என்னின் மிகு புகழார் யாவரே பின்னையும் மற்று
எண்ணில் மிகு புகழேன் யான் அல்லால்
–என்ன
கருஞ்சோதிக் கண்ணன் கடல் புரையும் சீலப்
பெருஞ்சோதிக் கென்னஞ்சாள் பெற்று -4—என்னில் காட்டில் மிக்க புகழை யுடையார் எவர் என்றுமாம்
(ஆத்மா அணு -கீர்த்தியோ விபூவாகி எட்டுத்திக்கிலும் பரவி உள்ளது –என் தன் அளவு என்றால் யானுடைய அன்பு பூதத்தாழ்வார் போல் இங்கும் -ஆஸ்ரயத்தில் (ஆத்மாவில் ) அடங்காத புகழை யுடையேன் யானே யன்றோ-அளவிறந்த சீலத்தை யுடைய ஸர்வேஸ்வரனுக்கு அதிசயத்தைப் பண்ணப் பெற்று இருக்கிற என்னில் காட்டில் மிக்க புகழை யுடையார் யார் –

கரைகொள் பைம்பொழில் தண்பணைத் தொலை வில்லி மங்கலம்கொண்டுபுக்கு
உரைகொள் இன்மொழி யாளை நீர்உமக் காசை யின்றி அகற்றினீர்
திரைகொள் பௌவத்துச் சேர்ந்ததும்திசை ஞாலம் தாவி அளந்ததும்
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடுங்கண் நீர்மல்க நிற்குமே.–6-5-3—கேட்டார் அடங்க இது ஒரு பேச்சே என்று கொண்டாடும்படியான இனிய மொழியை யுடையவள் என்னுதல் –அர்த்தத்தில் இழியா வேண்டாதே சப்தமே அமைந்து இருக்கும் என்னுதல் -பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரம் –என்று நின்றார் நின்ற துறைகளில் ஈடுபடும்படி இருக்கை –மாற்றும் உரையும் அற்ற பேச்சு என்னுதல் -உரை என்று -“-“பாட்யே கேயே ச மதுரம் பிரமாணை: த்ரிபி: அந்விதம்படிப்பதிலும் இசையுடன் பாடுவதிலும் இனிமையோடு கூடியதும்” என்னும்ஸ்ரீ ராமாயணமாய் அது குத்துண்ணும் படி இருக்கும் என்னுதல்

புலம்பு சீர்ப் பூமி யளந்த பெருமானை நலங்கொள் சீர் நன் குருகூர்ச் சடகோபன் சொல்
வலங்கொண்ட வாயிரத்துள் இவையுமோர் பத்து இலங்குவான் யாவரும் ஏறுவர் சொன்னாலே –3-8-11-இருந்ததே குடியாக ஏத்தும் படியான குணங்களை உடையனாய் தன் விபூதியை அளந்து கொள்ளுகையினாலே ஸ்வாமி யானவனை யாய்த்து கவி பாடுகிறது-இதில் சொன்ன பேறு விடாயை உடைய ஆழ்வார் ஸ்ரீ ஸூக்திகள் -ப்ரதிபாத்யனை விளாக் குலை கொண்டு இருக்கும் -என்னுதல்
ப்ரதிபாதன சாமர்த்யார்த்த்தை உடைய ஆயிரம் என்னுதல்-

இப்படி இது கொண்டு சாஸ்திர அர்த்தங்கள் நிர்ணயித்தவர் யார் என்னும் அபேஷையிலே அருளிச் செய்கிறார் .-

பாஷ்யகாரர் இது கொண்டு சூத்திர வாக்யங்கள் ஒருங்க விடுவர்-சூரணை -65–

அதாவது
ஸ்ரீ பாஷ்ய காரர் ஸ்ரீ பாஷ்யம் பண்ணி அருளும் பொழுது ஸூத்திர வாக்யங்களில் சந்நிதிக்தங்களான அர்த்தங்கள் எல்லாம் இப் பிரபந்தத்தில் ,ஸூக்திகளைக் கொண்டு நிர்ணயித்து ஒருங்க விட்டு அருளுவர் என்கை-( பேத சுருதி -அபேத சுருதி -ஒருங்க கடக சுருதி -தத்வ த்ரயம் -பேதம் -விஸிஷ்ட அத்வைதம் -ப்ரஹ்மாத்மகம் – சரீராத்மா பாவம் -சாமானாதி கரண்யம் -பின்ன பிரவ்ருத்தி நிமித்தம் -காரிய காரண நிபந்தம் – த்ரிவித காரணம் -உபாதானமாக இருந்தும் நிர்விகாரம் -சரீரம் மாறலாம் ஆத்மா விகாரம் அடையாமல் -விஸிஷ்ட ப்ரஹ்மம் இல்லதும் உள்ளதும் அல்லது அவன் உரு -இப்படிப்பட்ட உரு இல்லை -உருவமே இல்லை என்பது இல்லை-அசித் சித் விலக்ஷணன்-வியாப்ய கத தோஷம் இல்லாதவன் –உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்-யானே நீ என் உடைமையும் நீயே –நீராய் நிலனாய் –சிவனாய் அயனானாய்-பரன் திறம் அன்றி பல்லுலகீர் தெய்வம் மற்று இல்லை -பிரகார பிரகாரி பாவம்-உரு பெரும் செல்வமும் இத்யாதி –மாறன் தமிழ் ஆரணமே )

ஆகையாலே பாஷ்யகாரர்‌ இப் ப்ரபந்தங் கொண்டு ஸூத்ர வாக்யங்கள்‌ ஒருங்கவிடுவர்‌” என்கிறார்

அவர் தாம் அருளிச் செய்து அருளுகைக்கு மூலம் எது என்னும் -வேதாந்த ஸூத்ரங்களைக் கொண்டு இதிலர்த்தங்களைக் கடிப்பியாதே இப் ப்ரபந்தத்தைக்‌ கொண்டு வேதாந்த ஸூத்ரங்களை கடிப்பிப்பானென்‌ என்னில்‌அபேஷையில் அருளிச் செய்கிறார் மேல் ..

அதுக்கு மூலம் விதயச்ச என்கிற பரமாச்சார்ய வசனம்-சூரணை -66-

அதாவது
ஸ்ரீ பாஷ்ய காரர் அப்படி செய்து அருளுகைக்கு அடி –விதயச்ச வைதிகாஸ் த்வதீய கம்பீர மனோ னுசாரின-ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -20- (த்வதீயர் -பாகவதர்கள் -பக்தர்கள் வேதத்தில் சொல்லப்படுகின்ற விதிகள்-வேத வாக்கியங்கள் – தேவரீரைச் சரணமாகப் பற்றி இருக்கின்ற பெரியோர்களுடைய கம்பீரமான மனத்தினை அனுசரித்தவைகளாக ஆகின்றன -என்று இதம் குரு -இதம் மகார்ஷீ -ஆரணம் -( இதனைச் செய்க இதனைச் செய்யற்க )-என்கிற ஸ்வதந்த்ரமான வைதிக விதிகளும் , அநந்ய பிரயோஜனராய் ஆஸ்ரயித்து இருக்கும் த்வதீயருடைய ஐஸ் வர்யாதிகளால் கலக்க ஒண்ணாத படி கம்பீரமான மனசை பின் செல்லும் என்று -இந்த ஸ்ரீ ஆழ்வார் போல்வார் நினைவை சாஸ்திரங்கள் தான் பின் செல்லுமதாக பரம ஆசார்யரான ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்த வசனம் என்கை-

*“வைதிகா: வித யஸ்ச த்வதீய கம்பீர மநோநு ஸாரிண?”” என்று கொண்டு ‘இத,ம்‌ குர்யாத்‌ இதம்‌ ந குர்யாத்‌”, “விஜ்ஞாய ப்ரஜ்ஞாம்‌ குர்வீத”” (ப்‌,ரூ. 6 – 4 – 21), “த்‌யாயத,”‘ (மூ. 2- 2- 6), “‘உபாஸீத” (கா. 1 – 1 – 1) என்கிற வைதிக ஸாஸ்த்ரங்களானவை ஐஸ்வர்ய கைவல்யங்களால்‌ கடக்க ஓண்ணாதபடி கம்பீரமான த்வதீயருடைய மஸ்ஸைப் பின் செல்லுமென்று கொண்டு பரமாசார்யரான ஆளவந்தார்‌ அருளிச் செய்கையாலே –

த்வதாஶ்ரிதாநாம் ஜகதுத்பவ ஸ்திதி
ப்ரணாஶ ஸம்ஸார விமோசநாதய: |
பவந்தி லீலா விதயஶ்ச வைதிகா:
த்வதீய கம்பீர மநோநுஸாரிண: ||–20
-வேதத்தின் விதிகளும் கூட உன்னுடைய அடியார்களின் ஆழமான நெஞ்சங்களையே தொடரும்.

இப்படி அபியுக்தர்கள் ஆனவர்கள் இது கொண்டு சாஸ்திர அர்த்தங்கள் நிர்ணயிக்கும் படி ,சகல வேத உப ப்ருஹ்மணங்களிலும் அதி பிரபலமாய் , இவ்வளவும் அன்றிக்கே கீழ் சொன்ன படியே ,திராவிட வேதமாக கொண்டு , வேத சமமாய் இருக்கிற ஆப்த தமமான இப் பிரபந்தத்திலே ஆப்திக்கு உறுப்பாக
இவர் வேறே சில விஷயங்களை எடுப்பான் என் என்கிற சங்கையிலே
,அருளிச் செய்கிறார் ..–ஆனால்‌ பாஷ்யகாரருட்பட ப்‌ரஹ்ம ஸூத்ரங்களில்‌ ஸந்தேஹார்த்தங்களையும்‌ இது கொண்டு நிர்ணயிக்கும்படியான ஆப்தியை யுடைய இப் ப்ரபந்தத்துக்கு இவர்‌ வேறே சிலரை ஆப்தராக எடுப்பானென்‌ என்னில்‌

ஆப்திக்கு இவர் சுருதி மார்கண்டேயன் பார்த்தன் என்கிற இவை வியாச மநு பிரமவாதிகளை வேதம் சொல்லுமா போலே—சூரணை -67-

அதாவது –
இதில் சொல்லுகிற அர்த்தங்கள் ஆப்த்திக்கு உறுப்பாக இவர் –-சுடர் மிகு சுருதியுள் -திருவாய் -1-1-7-என்றும்-மார்கண்டேயனும் கரியே –திருவாய் -5–2-7-என்றும்-பார்த்தன் தெளிந்து ஒழிந்த–திருவாய் -2-8-6- -என்றும்-ஸ்ருதியையும் ,மார்கண்டேனயனையும் ,பார்த்தனையும் சொல்லுகிறவை –பரம ஆப்தமான வேதம் –ச ஹோவாச வியாச :பாராசர்ய –ஆரணம் -(பராசர முனிவருடைய புதல்வரான அந்த வியாசர் சொன்னார் )என்றும்-யத் வை கிஞ்ச மநுரவதத் தத் பேஷஜம் -யஜுர்வேதம் (எது ஒன்றினை மனுவானவர் சொன்னாரோ அது மருந்து )என்றும்-ப்ரஹ்ம வாதினோ வதந்தி-யஜுர்வேதம் (ப்ரஹ்மத்தை அறிந்தவர்கள் சொல்லுகிறார்கள் ) -என்றும் ஆப்திக்கு உறுப்பாக வ்யாசனையும், மநுவையும் ,ப்ரஹ்ம வாதிகளையும் சொல்லுகிறாப் போல் என்கை ..-ஆன பின்பு ,அது தாழ்வு அல்ல –ஆப்தி அதிசயத்துக்கு உறுப்பு என்று கருத்து ..( கீதாச்சார்யனும் மனு இஷுவாகு இவர்களுக்கு நானே முன்பு சொன்னவை என்று அர்ஜுனனுக்கு சொன்னால் போலேயும் )

வேதந் தான்‌ ஆப்ததமமா யிருக்கச்‌ செய்தேயும்‌ ஆப்திக்கு ”ஸஹோவாச வ்யாஸ? பாராமர்ய?” (யஜு. அரு.), ‘“யத்‌ வை கிஞ்ச மநுரவதத்‌ தத்‌ பேஷஜம்‌”” (யஜு. 2 – 2 – 10) என்றும்‌, ““ப்‌ரஹ்மவாதி நோ வதந்தி!” (யஜு. 1 – 7 – 1) என்றுமெடுத்தாப் போலே இவரும்‌, “உளன்‌ சுடர் மிகு சுருதியுள்‌’* (திருவா. 1 – 1 – 7) என்றும்‌, ““மார்க்கண்டேயனும்‌ கரியே”’ (திருவா. 5 – 2 7) என்றும்‌, ““பார்த்தன்‌ தெளிந்தொழிந்த”’ (திருவா. 2 – 8 – 6) என்றும்‌ ஆப்த யதிஸயத்‌துக்காக எடுத்தார்‌ என்கிறார்-

திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும்
உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை யுண்ட சுரனே –
1-1-7-முதல் பாட்டுத் தொடங்கிச் சொன்ன அர்த்தங்கள் எல்லாவற்றுக்கும் பிரமாணம் நிர்த்தோஷ ஸ்ருதி என்கிறது-சுடர் மிகுகை யாவது -பௌருஷ்யத்வ நிபந்தனமான விப்ரலம்பாதி தோஷ ரஹிதமுமாய் பிரமாணாந்தரங்களைக் கொண்டு பாஹ்ய குத்ருஷ்டிகளால் அவிசால்யமாகையாலே மிக்க தேஜச்சை யுடைத்தாகை-ஒருவரால் பண்ணப் பட்டது அன்றிக்கே என்றும் கேட்டே வருமதாகையாலே ஸ்ருதி என்கிறது –

நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள் உம்மை உய்யக்கொள்
மறுத்தும் அவனொடே கண்டீர் மார்க்கண்டேயனும் கரியே
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
இறுப்பதெல்லாம் அவன் மூர்த்தி யாயவர்க்கே இறுமினே.–5-2-7-அவன் பிரசாதத்தாலே கிடீர் -நீங்கள் அவர்களை ஆஸ்ரயித்ததாலும் பலம் தருவான் அவனே –-பலமத-நஹி பாலன சாமர்த்த்யம் ருதே ஸர்வேச்வரீம் ஹரீம் – இவர்களை ஆஸ்ரயிக்க வேறே ஒருவன் பலம் தருமது எங்கே கண்டோம் என்னில்-ஸ்ரீ மார்க்கண்டேய பகவான் சாக்ஷி-

தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம்
சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயன் பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே –2-8-6—அந்த பூ மாலைகள் தன்னையே ருத்ரன் ஜடையில் கண்டு
அவையே -தஜ் ஜாதீயங்கள் அன்றியே அவை தன்னையே-சிவன் முடி மேல் -இவன் திருவடிகளில் இட்டத்தை அவன் தலையிலே கண்டான்-தான் கண்டு -அர்ஜுனன் தானே கண்டு -சுருதி யாலே யாதல் -ஆப்த வாக்யத்தாலே யாதல் அன்றிக்கே அதாகிறது அர்ஜுனனுக்கு ஆர் அஸ்திர அபேக்ஷையாலே அத்தேவதையை அர்ச்சிக்க வேண்ட -அத்தை என் காலிலே இடு என்று இடுவித்துக் கொள்ள
ஸ்வப்னத்தில் அம்மாலையை சிரஸிலிலே தரித்துக் கொண்டு வந்து அஸ்திரத்தைக் கொடுத்துப் போயிற்று-பார்த்தன் தெளிந்து ஒழிந்த- அவன் சாரதியாய் தாழ நிற்கச் செய்த்தேயும்-அதில் கலங்காதே சது பார்த்தோ மஹா ம நா என்கிற அர்ஜுனன் நிஷ் கர்ஷித்தான் அன்றோ

ஆனால் இத்தை உபப்ருஹ்மணமாக சொன்ன பஷத்தில் ,வேத வ்யாக்யை யாமது ஒழிய
வேத ரூபம் இதம் க்ருதம் -என்றும் த்ராவிடீம் பிரம சம்ஹிதாம் -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் பூர்வ –6-என்றும்
திராவிட வேத ஸூக்தை–ரெங்கராஜ ஸ்தவம் பூர்வ –16-என்று அபியுக்தர் சொல்லுகிற வேதத்வம்
இதுக்கு கூடுமோ என்ன அருளி செய்கிறார் ..-கீழே இதுக்கு வேத ரஹஸ்யத்வம்‌ சொல்லிற்று; இப்படி யிருக்க இத்தை கரந்தஸ்தமாக்கி வ்யாக்‌யாநம்‌ பண்ணப்படா நின்றது-

பாரத கீதைகளின் வேத உபநிஷ்த்த்வம் போலே இதுவும் வ்யாக்க்யை யானாலும் வேத ரஹச்யமாம்-சூரணை -68-(பாரதத்தின் வேதத்வம் போலேயும் கீதையின் உபநிஷத்த்வம் போலேயும் )

இத்தால் கீழே வேத சாம்யம் சொன்ன இடத்தில் சொல்ல வேண்டி இருக்க அநுத்தமாய் கிடந்தவற்றை இங்கே அருளிச் செய்தார் ஆய்த்து-அதாவது –-வேத உபப்ருஹ்மாணமான மகா பாரதமும் ,அதில் சாரமான ஸ்ரீ கீதையும் , வேதாந் அத்யாப யாமாச மகாபாரத பஞ்சமான் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -என்றும்
( நீடாழி உலகத்து மறை நாலொடு ஐந்து நிலை நிற்கவே -ஸ்ரீ வில்லி பாரதம் ) பகவத் கீதா ஸூபநிஷத் ஸூ -என்றும் சொல்லுகிற படியே , வேதமும் உபநிஷத்தும் ஆகிறாப் போலே-இது வேத வ்யாக்க்யையான உப ப்ருஹ்மணமே ஆனாலும் வேத ரகஸ்யமாம் என்கை–வேத ரஹஸ்யம் ஆவது வேதத்தில் ரஹஸ்ய பாகமான உபநிஷத் ,கீழே சாந்தோக்ய சமமாகவே சொல்லிற்று –ஆகையால் இந்த பஷத்திலும் , இதின் திராவிட வேதத்வ ஹானி வாராது என்று கருத்து .

அப்போது வேதத்வத்துக்கும்‌ ரஹஸ்யத்வத்துக்கும்‌ கொத்தை வாராதோ என்னில்‌, ப்ரஸித்‌த,-லிகித-படித- பாடங்களான மஹா பாரதத்துக்கும்‌ ஸ்ரீகீதைக்கும்‌ ‘“வேதாநத்‌யாபயாமாஸ மஹாபாரத பஞ்சமாந்‌”’ (வி.பு) என்றும்‌, “பகவத்‌ கீதாஸு உபநிஷத்ஸு’”'(கீ. 1) என்றும்‌ சொல்லுகிறபடியே இவை யிரண்‌டுக்கும்‌ வேதத்வ-உபநிஷத்த்வங்கள்‌ உண்டானாப் போலே இதுவும்‌ விகித-படிதங்‌களாய்ப்‌ போந்ததே யாகிலும்‌ வேத,த்வமும்‌ ரஹஸ்யத்வமும்‌ உண்டாம் -என்கிறார் –

ஆக இப்படி இப் பிரபந்தத்தை வேத சமம் என்பது தத் வேத உபப்ருஹ்மண சமம் என்பதாகா நின்றீர் ..
அவை இரண்டுக்கும் ,தத் அனுரூபமாய் இருப்பன சில அலங்காரங்கள் உண்டு இறே – தத்ருச அலங்காரங்கள் இதுக்கும் உண்டோ- என்ன—சம்ஸ்க்ருதமான வற்றுக்கு தத் அனுகுனமான அலங்காரங்கள் பலவும் உண்டானாப் போலே த்ராவிடமான இதுக்கும் ஏதத் அனுகுனமான அலங்காரங்கள்-( செய்கோலம்) பலவும் உண்டு என்கிறார் –ஆக, இப்ப்ரபந்த,ம்‌ வேதத்தோடும்‌, உப ப்‌ரும்ஹணத்தோடும்‌ துல்யமென்றீர்‌, அவை யிரண்டுக்குமுன்ள உதாத்தாதிகளான வேத லக்ஷணங்களும்‌, அத்யாய அம்ச பர்வாதிகளான உப ப்‌ரும்ஹண லக்ஷணங்களும்‌ இதுக்குமுண்டோ என்னில்‌,பலவும் உண்டு என்கிறார் –

உதாத்தாதி பத க்ரம ஜடா வாக்ய பஞ்சாதி பாத வ்ருத்த ப்ரஸ்ன காண்ட அஷ்டக அத்யாய அம்ச
பர்வ ஆதி அலங்காரங்கள் போல் எழுத்து அசை சீர் பந்தம் அடி தொடை நிரை நிரை யோசை தளை இனம் யாப்பு பாத்துறை பண் இசை தாளம் பத்து நூறாயிரம் முதலான செய் கோலம் இதுக்கும் உண்டு-சூரணை –69-

அதாவது-
உதாத்யாதி என்கிற இடத்தில் -ஆதி -சப்தத்தால் அனுதாத்த ஸ்வரித பிரசயங்களை சொல்லுகிறது . .
(உதாத்தம்-ஒலியை சமமாக வைத்து அத்யயனம் -அநுத்தாதம் -ஒலியைப் படுத்து அத்யயனம் –
ஸ்வரிதம் -ஒலியை எடுத்து வைத்து அத்யயனம் /பிரசயம்- முதலில் ஓசையை எடுத்துக் கூறி –
மற்றப் பதங்களையும் அதுக்கு சமமாக வைத்து அத்யயனம் ) இந்த உதாத்தாதி ஸ்வர விசேஷங்களும் ,க்ரம ஜடா பஞ்சாதிகளும் ( ஜடை ஒரு சொல்லை மாற்றி மாற்றி இரண்டு முறை சொல்லுதல்/ பஞ்சாதி -50 – சொற்கள் கொண்டது – ) ப்ரஸ்ன அஷ்டகங்களும் ,( ஒத்து இயல் போன்ற சிறு பகுதி ப்ரச்னம் என்றும் எட்டு ப்ரச்னங்கள் கொண்டதை அஷ்டகம் ) வேதா சாதாரணம்-(வேதத்துக்கே உரியவை ) .
அம்ச பர்வாதிகள் உப ப்ரஹ்மண சாதாரணம் .. பர்வாதி என்கிற இடத்தில் ஆதி சப்தத்தால் ,ஸ்கந்தாதிகளை சொல்லுகிறது ..
பத வாக்ய பாத வ்ருத்த காண்ட அத்யாயங்கள் உபய சாதாரணம் .(பாதம் -ஆதி / விருத்தம் -செய்யுள் ) ஸ்ரீ ராமாயணத்தில் ,பிரதான பரிசேதனங்களிலும் காண்ட வ்யஹாரம் உண்டு இறே ..-கௌஷீதகி முதலான உபநிஷத்களில் ,அத்யாயம் என்கிற பரிசேத வ்யவஹாரம் கண்டு கொள்வது ..-ஆக இப்படி வேதத்துக்கும் தத் உபப்ருஹ்மணங்களுக்கும் உண்டான அலங்காரங்களைச் சொல்லி , அப்படியே இதுக்கும் உண்டான அலங்காரங்களைச் சொல்லுகிறது மேல்எழுத்து இத்யாதி –எழுத்தாவது -குற்றெழுத்து ,நெட்டெழுத்து ,முதலான பதின் மூன்று எழுத்தும் ..
(குறிலும்- நெடிலும் -உயிரும்- குற்றியலுகரம் -குற்றியலிகரம் -ஐகாரக் குறுக்கமும் -ஆய்தமும் -மெய்யும் –வல்லினமும் -மெல்லினமும் -இடையினமும் -உயிர்மெய்யும் -அளபெடையும் -ஆக -13-) இவை அசைக்கு உறுப்பாக நிற்கும்-அசையாவது -நேரசை ,நிரை அசை இரண்டையும்(குறிலே நெடிலே குறிலிணை ஏனைக் குறில் நெடிலே நெறியே வரினும் நிறைந்து ஒற்றடுப்பினும் நேரும் நிறையுமாம் )சீராவது -ஆசிரிய உரிசீர் நான்கும் (நேர் நேர்- நிரை நேர்- நேர் நிரை-நிரை நிரை -என்பன ஆசிரிய உரிச்சீர் )வெண்பா உரிச்சீர் நான்கும் ,(நேர் நேர் நேர் -நிரை நேர் நேர் -நேர் நிரை நேர் -நிரை நிரை நேர் நான்கும் வெண்பா உரிச்சீராம் )வஞ்சி உரிச்சீர் நான்கும் ,(நேர் நேர் நிரை -நிரை நேர் நிரை -நேர் நிரை நிரை -நிரை நிரை நிரை -நான்கும் வஞ்சி உரிச்சீராம் )பொதுச்சீர் பதினாறும் , ஓர் அசைச் சீர் இரண்டும் –ஆக முப்பது சீரும்-(பொதுச் சீர் -மேல் கூறிய ஈரசைச் சிர் நான்கின் இறுதியிலும் -நேர் நேர் -நேர் நிரை -நிரை நேர் -என்னும் ஈர் அசைச் சீர்கள் நான்கினையும் தனித்தனியே தந்து உறழ்ந்தால் பொதுச் சீர் -16-/நேர் நிரை இரண்டும் ஓர் அசைச் சீர் )பந்தம் எனிலும் ,தளை எனிலும் ஒக்கும் என்று தமிழர் சொல்லுகையாலே பந்தமும் தளையும் ஒன்றாகையால் ,இங்கே பந்தம் என்றும் , மேலே தளை என்றும் ,சொல்லும் அளவில் ,புனருக்தம் ஆகையாலே இரண்டத்து ஓன்று வர்ஜிக்க-( நீக்க -) வேண்டும்-அடியாவது – குறள் அடி ,சிந்தடி முதலான அடி ஐந்தும்(குறள் அடி- சிந்தடி – அளவடி -நெடிலடி -கழி நெடிலடி –(குறள் இரு சீரடி -சிந்து முச்சீரடி -நேரடி நாலொரு சீர் -ஐந்து சீர் நெடிலடி -ஐந்து சீருக்கு
மேற்பட்ட சீர்களையுடைய அடிகள் எல்லாம் கழி நெடிலடி )தொடையாவது மோனை, இயைபு ,எதுகை, முரண் ,அளபெடை என்கிற ஐந்திலும் அடி மோனை முதலாக ஓர் ஒன்றிலே எவ்வெட்டு தொடையாக நாற்பதும் , அந்தாதி தொடை ,இரட்டை தொடை ,செந்தொடை என்கிற மூன்றுமாக ஆக நாற்பத்து மூன்று தொடையும் .-(எழுவாய் எழுத்து ஒன்றின் மோனை இறுதி இயைபு -இரண்டாம் வழுவா எழுத்து ஒன்றின் மாதே எதுகை-மறுதலைத்த மொழியான் வரினும் முரண் -அடிதோறும் முதன் மொழிக் கண் அழியா தளபெடுத்து ஒன்றுவதாகும் அளபெடையே –-அந்த முதலா தொடுப்ப தந்தாதி -அடி முழுதும் வந்த மொழியே வருவது இரட்டை -வரன் முறையான் முந்திய மோனை முதலா முழுவதும் ஒவ்வாது விட்டால் செந்தொடை நாமம் பெறும் -நறு மென் குழல் தே மொழியே )நிரை நிரை யாவது
நேர் நிரை நிரை ,நிரை நிரை நிரை முதலானவை .
.(இத்தால் பொருள்கோளை சொன்னபடி -நிரனிறை சுண்ணம் அடிமறி மொழி மாற்று அவை நான்கு என்ப மொழி புனர் இயல்பே )ஓசையாவது –
செப்பலோசை ,அகவலோசை ,முதலான நாலு ஓசையும் ( வெண்பாவுக்கு உரியது செப்பலோசை -அகவலோசை ஆசிரியப்பாவுக்கு -துள்ளலோசை கலிப்பாவுக்கு -தூங்கலோசை வஞ்சிப்பாவுக்கு )தளை யாவது-நேர் ஓன்று ஆசிரிய தளை ,நிரை ஓன்று ஆசிரிய தளை-இயல் சீர் வெண்டளை-வெண் சீர் வெண்டளை -கலித்தளை – ஒன்றிய வஞ்சித்தளை -ஒன்றாத வஞ்சித்தளை –முதலான ஏழு தளையும்-இனமாவது தாழிசை துறை விருத்தம் -என்கிற பாக்கள் இனம் மூன்றும்-யாப்பாவது பிரபந்த ரூபமாய் இருக்கை ( தொகுத்தல் விரித்தல் தோகைவிரி மொழி பெயர்ப்பு எனத்தகு நூல் யாப்பு ஈர் இரண்டு என்ப )பாவாவது -வெண்பா ,ஆசிரியப்பா ,(கலிப்பா வஞ்சிப்பா )முதலான நான்கு பாக்கள்-துறை என்கிற இதுவும் இனத்தின் வகையில் ஒன்றாகையாலே புனருக்தமாம் –அர்த்தாந்தரம் உண்டாகில் கண்டு கொள்வது – (நாற்பெரு பண்ணும் இருபத்தொரு திறனும் ஆகிய இவை
எல்லாம் செந்துறை என்பது – மேற்புறமும் பதினோராடலும் என்ற இவை எல்லாம் வெண்டுறை யாகும் –செந்துறை பாடற்கு ஏற்கும்-ஒலி குறித்தற்றே என்பதால் -/ வெண்டுறை ஆடற்கு ஏற்பது -கூத்தின் மேற்றே என்பதால்-யாப்பு அருங்கல விருத்தி )பண் ஆவது –(ராகங்கள்) முதிர்ந்த குறிஞ்சி ,நட்ட பாஷை ,நட்டராகம் செந்திரி -பியந்தை இந்தளம் முதலானவை-இசையாவது –(ஸ்வர ஸ்தானம்)
குரல் ,துத்தம் ,கைக்கிளை -உழை இளி விளரி தாரம் -என்கிற பேரால் சொல்லப் படுகிற
நிஷாத ரிஷப ,காந்தார ,ஷட்ஜ மத்யம தைவத பஞ்சமங்கள் ஆகிற ஏழு இசையும்
(இளி குரல் துத்தம் நான்கு மாத்திரை விளரி கைக்கிளை மூன்றே யாகும் தாரம் உழை இரண்டாகத் தகுமே )தாளமாவது-கஜகர்ணச் சோராகதி மகரத்வஜ தாளக லஷ்மீ கீர்த்தி பாணி பாதவ் கௌரீ பஞ்சாநநஸ்ததா சதுராம்நாய தாளச்ச தாளோயம் கருடத்வஜ சங்கீத ஸாஸ்த்ர வித்வத்பிரேதா தாளா ப்ரகீர்த்திதா — ) கஜகர்ணம் – சோரகதிர் -மகரத்வஜ -லஷ்மி கீர்த்தி- பாணி -பாதவ் கௌரி -பஞ்சானனம் – , சதுராம் நாயம் .கருடத்வஜம் சங்கீத சாஸ்த்ர வித்வத்பி ரேதே தாளா பிரகீர்திதா -என்கிற படியே கஜகர்ணம் ,சோரகதி , மகரத்வஜம் முதலான தாளங்கள் .. ஆதி – ரூபகம்- சாபு -ஜம்பை -ஏகம் -மட்டியம் -துருவம் -அட –போன்றவை தாள வேறுபாடுகள் –பத்தாவது அம்ச பர்வாதிகளில் அவாந்தர பரிச்சேதங்களான அத்யாயாதிகள் போலே நூற்றினுடைய அவாந்தர பரிச்சேதங்களாய்
இப் பத்தும்-9-4-11- -இவை பத்தும்-5-5-11- -என்று சொல்லப் படுகிற திரு வாய் மொழிகள் . ,
நூறாவது – பிரதான பரிச்சேதங்களான அம்ச பர்வ காண்டாதிகள் போலே நூறே சொன்ன -9-4-11-
பத்து நூறு–6-7-11- என்னும் படி ..நூறு நூறு பாட்டாய் இருந்துள்ள பிரதான பரிச்சேதங்கள் .
ஆயிரமாவது சதுர் விம்சத் சஹஸ்ராணி ஸ்லோகானாம் –பாலகாண்டம் –4-2-என்னுமா போலே இருந்துள்ள மகா பரிச்சேதம்
–முதலான என்கையாலே முதல் இட்டு மூன்று பத்து உத்தர கண்ட விவரணமாய் நடு இட்ட மூன்று பத்தும் பூர்வ கண்ட விவரணமாய் மேல் இட்டு மூன்று பத்தும் அதுக்கு உபயோகியான அர்த்த பிரதி பாதகமாய் மேலில் பத்து பல அவாப்தி கதனமாய் இருக்கையாலே உண்டான விபாக விசேஷங்களும் விவஷிதங்கள் என்று தோற்றுகிறது- ( பிரதம ஷட்கம் கர்ம ஞான யோகம் /மத்யம ஷட்கம் பக்தி யோகம்/ சரம ஷட்கம் பூர்வ ஷட்க சேஷம்-ஸ்ரீ கீதையில் போலே )முதலான செய் கோலம் இதுக்கும் உண்டு -என்றது செய் கோலத்து ஆயிரம் -4–1 -11-என்று கவிக்கு சொல்லுகிற அலங்காரங்களால் குறை வற்ற ஆயிரம் என்கையாலே ,ஏவமாதிகளான சர்வ அலங்காரங்களும் இதுக்கு உண்டு என்கை .

த்‌ரமிடோபநிஷத்‌ விஹிதங்களாய்‌, “’செய்கோலத் தாயிரம்‌” (திருவா. 4 – 1 – 11) என்கிறபடியே ‘எழுத்து, அசை, சீர்‌’ என்று இத்யாதிகளான அலங்காரங்கள்‌ இதுக்குமுண்டென்கிறார்‌ (உதாத்தாதி, என்று தொடங்கி] பாஷாநுகுணமாயும்‌, வேதா அநு குணமாயுமிறே லக்ஷணங்களிருப்பது, ஆகையாலே அந்த பாஷாநுகுணமான லஷணங்களை அருளிச் செய்தது.

அஃதே உய்யப் புகும் ஆறு என்று கண்ணன் கழல்கள் மேல்
கொய் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்
செய்கோலத்து ஆயிரம் சீர்த்தொடைப் பாடல் இவை பத்தும்
அஃகாமல் கற்பவர் ஆழ் துயர் போய் உய்யற் பாலரே.–4-1-11-கவிக்கு செய் -செய்த கவி –வாசிகமான அடிமை என்னுதல்-கோலத்து ஆயிரம்–கவிக்கு சொல்லுகிற அலங்காரங்களால் குறைவற்று இருக்கை
சீர்த்தொடைப் பாடல் இவை பத்தும் -கல்யாண குணங்களை தொடுத்துச் சொன்ன இது திருவாய் மொழி

ஆக இதுக்கு கீழ் திவ்ய பிரபந்தத்துக்கு வேத சாம்யமும் , தத் உப ப்ருஹ்மண சாம்யமும் உண்டு என்னும் இடத்தை அருளிச் செய்தார் .. இங்கன் அன்றிக்கே வேத ஆவிர்ப்பாவ விசேஷமாய் இவ் ஆழ்வாரால் நிர்மிதமாக பிரசித்தமாய் இருப்பது ஓன்று என்று ,இதுக்கு இன்னும் ஒரு யோஜனை பண்ணுகிறார் மேல் .-ஆக இதுக்குக் கீழ்‌ வேதத்தினுடையவும்‌, தது,பப்‌ரும்ஹணத்தினுடையவும் ஸ்தாநத்திலே யாக்கி அவற்றினுடைய ஸப்‌த லக்ஷணங்களும்‌ அர்த்த லக்ஷணங்களும்‌ அருளிச் செய்தார்‌. இனி மேல்‌ ப்ரமேய பூதனான ஸர்வ ஸ்மாத் பரனுடைய அவதார பரம்‌பரையில்‌ எல்லையான அர்ச்சாவதாரம் போலே ப்ரமாண வேதாவதாரத்தினுடைய எல்லை இத் திருவாய்மொழி என்கிறார்‌-

அதவா வேத வேத்ய ந்யாயத்தாலே , பரத்வ பர முது வேதம் வியூஹ வியாப்தி அவதரணங்களில்
ஓதின நீதி கேட்ட மனு படு கதைகளாய் ஆக மூர்த்தியில் பண்ணின தமிழ் ஆனவாறே வேதத்தை திராவிடமாகச் செய்தார் என்னும்–சூரணை -70-

(வேத வேத்ய ந்யாயத்தாலே , பரத்வ பர முது வேதம்- வியூஹத்தில் ஓதின நீதியாய் -வியாப்தி யிலே கேட்ட மனுவாய் – அவதரணங்களிலே படு கதைகளாய் ஆக மூர்த்தியில் பண்ணின தமிழ் ஆயிற்று
ஆதலால் வேதத்தை திராவிடமாகச் செய்தார்-அப்படி இன்றியும்-வியாப்தி -கரந்த சில இடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும் பரந்து நிற்றல்-ஓதின நீதி -பாஞ்சராத்ரம்-கேட்ட மனு -மனு தர்ம சாஸ்திரம் படுகதைகள் -ஸ்ரீ ராமாயணமும் ஸ்ரீ மஹா பாரதமும் ஆகமூர்த்தி -அர்ச்சாவதாரம் )

அதாவது
கீழ் சொன்ன-உபய பிரகாரமும் -(வேத சாம்யம் -உப ப்ரஹ்மணம் சாம்யம் )அன்றிக்கே ,
வேத வேதே பரே பும்சி ஜாதே வேத பிராசேத ஸாதா சீத் சாஷாத் ராமயணாத்மநா –பாலகாண்டம் –
(வேதங்களால் அறியப்படும் பரமபுருஷன் சக்கரவர்த்தி திருமகனாக அவதரித்தவாறே அந்த வேதங்களும் பிரசேதஸ்ஸின் புதல்வரான ஸ்ரீ வாலமீகி பகவானிடம் இருந்து ஸ்ரீ ராமாயணமாகப் பிறந்தது ) -என்று வேத வேத்யனான பரம புருஷன் தசரத புத்ரனே அவதரித்த இடத்தில் ,
அபௌ ருஷேயமான வேதமும் , ஸ்ரீ வால்மீகி பகவான் பக்கல் ஸ்ரீ இராமாயண ரூபேண அவதரித்தது என்கிற ந்யாயத்தாலே —ஷயந்தமஷ்ய , ரஜஸ ,பராகே-தைத்ரியம் -( இந்த ராக்ஷஸ தாமச குணங்களின் மயமான இப்பிரக்ருதி மண்டலத்தின் மேலே பரமபதத்தில் எழுந்து அருளி இருப்பவரான -)
ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத்–புருஷ ஸூக்தம் –( சூரியனனுடைய வர்ணம் போன்ற வர்ணத்தை யுடைய இந்த பரம புருஷனை நான் அறிவேன் -அவன் தமஸ்ஸாகிற பிரகிருதி மண்டலத்துக்கு அப்பால் பரமபதத்தில் இருக்கிறான் ) தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி ஸூரயே –யஜுர் வேதம் ( விஷ்ணுவுடைய அந்த உயர்ந்த பரமபதத்தை நித்ய ஸூரீகள் எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள் )யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வ்யோமன் ,சோஸ்நுதே சர்வான் காமான் சக – ப்ரஹ்மணா விபிச்சதா -தைத்ரியம்( ஹிருதய குகையில் உள்ள இந்த ப்ரஹ்மத்தை எவன் வழிபடுகிறானோ அவன் பிரகிருதி சம்பந்தம் இல்லாதது என்று சொல்லப்படும் பரமபதத்தில் அந்த ப்ரஹ்மத்துடன் கூட எல்லாக் கல்யாண குணங்களையும் அனுபவிக்கிறான் )- இத்யாதிகளாலே
பல விடங்களிலும் ,ஈஸ்வரனுடைய பராவஸ்தையைப் பிரதி பாதிக்கையாலே ,பரத்வத்திலே நோக்காய் ,-முது வேதம்—திருவாய் -1-6–2-என்கிற படியே-புருஷ புத்தி பிரபவ தோஷம் கந்தம் இல்லாதபடி அநாதித்வேன பழையதாய் இருக்கும் வேதம் ஆனது—

வியூகத்தில் ஓதின நீதியாய் –அதாவது – ஷாண் குண்யாத் வாஸூ தேவ பர இதி ச பவான் முக்த போக்ய –ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -யுத்த -39- ( தேவரீர் பரவாஸூ திவ்ய மங்கள விக்ரகத்தோடே கூடினவராய் ஆறு குணங்களால் முக்தருக்கு இனியராகா நின்றீர் ) என்கிற படியே ஷாட் குணிய பரி பூர்ணனாய் , முக்த போக்யனாய் இருக்கிற அந்த பரனாவன்-பலாட்யாத் போதாத் சங்கர்ஷணஸ் த்வம் ஹரசி விதனுஷே சாஸ்த்ர மைச்வர்ய வீர்யாத் , பிரத்யும்னஸ் சரக்க தர்மவ் நயசி ச பகவன் சக்தி தேஜோ அநிருத்தோ பிப்ராண பாசி தத்வம் கமயசிச ததா வ்யூஹ்ய -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் உத்த -39- (வலிமையோடு கூடின ஞானத்தால் சங்கர்ஷணராகிய நீர் சம்ஹாரத்தைச் செய்கின்றீர் -–சாஸ்திரங்களையும் நன்கு விரிவு படுத்துகின்றீர்– ப்ரத்யும்னராய் ஐஸ்வர்யத்தாலும் வீர்யத்தாலும் ஸ்ருஷ்ட்டியையும் செய்து தர்மத்தை பரப்புகின்றீர்- அப்படியே அநிருத்தராய் சக்தியையும் ஒளியையும் தரித்துக் கொண்டு ரஷிக்கவும் செய்து தத்துவத்தையும் பரப்புகின்றீர்-) என்கிற படி சர்க்காதி நிர்வஹனார்தமாக வியூஹி பவித்த அவஸ்தையில் –

சங்கர்ஷணாதி சத்பாவம் பஜே லோக ஹிதேப்யச கிரமச
பிரளயோத்பத்தி ஸ்த்திபி பிராண்யனுக்ரக பிரயோஜன மதான்யச்ச
சாஸ்த்ர சாஸ்த்தார்த்த தத்பலை தசாஸ் துர்ய ஸூஷூப் த்யாத் யாச்
சதுர் வியூஹேபி லஷயே –
ஸ்ரீ விஷ்வக்ஸேன சம்ஹிதை
( லோக க்ஷேமார்த்தமாக ஸ்வ இச்சையால் சங்கர்ஷணாதி முதலிய வ்யூஹ நிலைகளை அடைகிறேன் –முறையாக சம்ஹாரம் ஸ்ருஷ்ட்டி ரக்ஷணம் என்பைகளால் உயிர்களுக்கு அனுக்ரஹம் ஏற்படுகின்றது –பின்னும் சாஸ்திரம் -சாஸ்திரத்தின் பொருளான தர்மம் – அவற்றாலாய தத்வ ஞானம் முதலிய பயன்களும் இருக்கின்றன –நான்கு வியூகங்களிலும் துரியம் ஸூஷூப்தி இவை முதலான நிலைகளையும் அறிந்து கோடல் வேண்டும் ) இத்யாதியாலும்-தத்ர ஞான பல த்வந்த் வாத் ரூபம் சங்கர்ஷணம் ஹரே ஐஸ் வர்ய வீர்ய சம்பேதாத் ரூபம் பிரத்யும்ன முச்யதே சக்தி தேஜஸ் சமுத்கர்ஷா தா அநிருத்த தனுர் ஹரே ஏதே சக்தி மயா வியூஹா குணோன் மேஷ ஸ்வ லஷணா -ஸ்ரீ விஷ்வக்ஸேன சம்ஹிதை – (அந்த வியூகத்தில் ஞானம் பலம் முதலிய குணங்களின் சேர்க்கையால் சங்கர்ஷண திரு உருவம் உண்டாகிறது –ஐஸ்வர்யம் வீர்யம் ப்ரத்யும்னன் திரு மேனி / சக்தி தேஜஸ் மூலம் அநிருத்தன் – இந்த சக்தி மயங்களான வியூகங்கள் குணங்களின் பிரகாசங்களுக்கு இலக்கணங்கள் )இத்யாதியாலும்-அந்த வியூஹ விசேஷ தத் குண ரூப க்ருத்யாதிகளை விஸ்தரேண பிரதி பாதிக்கைக்காக பஞ்ச ராத்ரச்ய க்ருஸ்த்னச்ய வக்தா நாராயணா ஸ்வயம்–பாரதம் -(எல்லா பாஞ்ச ராத்ரங்களையும் சொன்னவன் நாராயணனே )என்கிற படியே சர்வத்துக்கும் ஆதி வக்தா ஈஸ்வரன் ஆகையாலே –ஓதினாய் நீதி –இரண்டாம் திருவந்தாதி –48-என்று சொல்லப் பட்ட பாஞ்ச ராத்ரமாய் ஆவிர்பவித்து-

வியாப்தியில் கேட்ட மனுவாய்-அதாவது இப்படி வியூஹிப்பித்த மாத்ரம் அன்றிக்கே சர்வ சப்த வாஸ்யனாய் சர்வ கர்ம சமாராத்யனாய் கொண்டு சர்வ அந்தர்யாமித்வேன வியாபித்து நிற்கும் அவஸ்தையில் –ஆபோ நாரா இதி ப்ராக்தோ ஆபோ வை நர ஸூனவே
தா யதஸ்யாயநம் பூர்வம் தேன நாராயண ஸ்ம்ருத –மனு ஸ்ம்ருதி -1-19-
(தண்ணீரானது நரேன் என்ற பரமாத்மாவினிடம் இருந்து தோன்றியது -ஆதலால் நாரம் என்று சொல்லப்படுகிறது –-முன்பு யாது ஒரு காரணத்தால் அந்நீரானது பரமாத்மாவுக்கு சரீரமாக இருந்ததோ அதனால் நாராயணன் என்று எண்ணப்படுகிறான் )-இத்யாதியாலும்

பிரசாசிதாரம் சர்வேஷாம் அணீயாம் சமணீயசாம்
ருக்மாபம் ஸ்வப்னதீகம்யம் வித்யாத்து புருஷம் பரம்
–மனு ஸ்ம்ருதி -12–122-
( பரம புருஷனை எல்லாவற்றையும் நியமிக்கப்படுகின்றவனாகவும் சூஷ்மமானத்தைக் காட்டிலும் சூஷ்மமானவனாயும் ஓடவைத்த பொன்னிறம் யுடையவனாகவும் கனவில் உள்ள புத்தி போன்ற யோகத்தால் அடையத் தக்கவனாயும் அறிதல் வேண்டும் )
ஏநமேக வதந்த்யக்னிம் மருதோன்ய பிரஜாபதீம்
இந்திரமே கேபரே பிராண மபரே ப்ரஹ்ம சாஸ்வதம்–
மனு ஸ்ம்ருதி -12-123-
(இவனைச் சிலர் நெருப்பு என்று சொல்கிறார்கள் – வேறு சிலர் மருத்துக்களாவும் சொல்கிறார்கள் -சிலர் பிரமனாகவும் இந்த்ரனாகவும் மற்றும் பிராணனாகவும் மற்றும் சிலர் நித்தியமான ப்ரஹ்மமாகவும் சொல்கிறார்கள் )
ஏஷ சர்வாணி பூதானி பஞ்சபிர் வ்யாப்ய மூர்திபி
ஜன்ம வ்ருத்தி ஷயைர் நித்யம் சம்சார யதி சக்ரவத்
–மனு ஸ்ம்ருதி -12-124 –
(இவன் எல்லா உயிர்களையும் மண் முதலிய ஐந்து ஐந்து பூதங்களாலான சரீரங்களால் பரந்து பிறத்தல் வளர்த்தல் இறத்தல் என்னும் இவைகளால் எப்பொழுதும் சக்கரம் போன்று சுழலும்படி செய்கிறான் )இத்யாதியாலும்

ச ஆத்மா அங்கான்யன்ய தேவதா-தைத்ரியம் –என்கிற படியே சர்வ தேவதா சரீரதையா சர்வ கர்ம சாமார்த்யன் –இவன் என்று தோற்றும் படி பூர்வ பாக உப ப்ரஹ்மணமாய்க் கொண்டு சர்வ அந்தர்யாமிதயா வ்யாப்தியை பிரதி பாதிக்கைக்காக-கேட்ட மனு –நான்முகன்–76–என்கிற படியே
ஆப்தமாய் கேட்கப் பட்ட ,மன்வாதி ஸ்ம்ருதியாய் ஆவீர் பாவித்து-அவதரணத்தில் படுகதைகளாய்
அதாவது அப்படி அதீந்த்ரியனாய் நிற்கிறவன் சாது பரித்ராணாதிகளுக்காக ஸ்ரீ ராம ஸ்ரீ கிருக்ஷ்ணாத்ய அவதாரங்களைப் பண்ணின அவஸ்தையில் தத் அவதார சேஷ்ட்யாதிகளை
பிரதி பாதிக்கைக்காக -படு கதையும் -நான்முகன் -76-என்கிற படியே வ்ருத்த கீர்த்தன ரூபமான-பாடும் கதையாக – ஸ்ரீ இராமாயண ஸ்ரீ மகா பாரத இதிகாசங்களாய் ஆவீர் பாவித்து –

ஆக மூர்த்தியை பண்ணின தமிழனாவாறே -அதாவது-அப்படி அவதார முகேன நின்று ரஷித்து அருளுமவன் ,அவதாரத்தில் பிற்பட்டாரும் இழவாத படி – ஆக மூர்த்தி யாய வண்ணம் என் கொல் –திருச்சந்த -17-(யாக மூர்த்தி -ஆக மூர்த்தியாக -யஜ தேவ பூஜாயாம் -அர்ச்சிக்கத்தக்க மூர்த்தி
அன்றிக்கே இப்படியாக வேண்டும் என்று சங்கல்பித்துக் கொண்டு தோன்றிய திவ்ய மங்கள விக்ரஹம் -என்றுமாம் ) என்று விசேஷஜ்ஞர் ஈடுபடும் படி ஆஸ்ரித ஹிருதய அனுகுணமாக – ( நெஞ்சில் நினைப்பவன் எவன் -என்பதை நாமும் அறியும் படி மா முனிகள் )தமர் உகந்தது எவ் உருவம் –முதல் திருவந்தாதி -44–இத்யாதிப் படியே-த்ரவ்ய நாம ரூப ஆசன சயனாதிகளிலும்-தேச கால அதிகாராதிகளிலும் ஸ்நான போஜனாதிகளிலும் ஒரு நியமமற பண்ணிக் கொண்டு அத்யந்த ஸூலபனாய் இருக்கும் அர்ச்சாவாதார அவஸ்தையில் -தத் வைபவ பிரதிபாதன அர்த்தமாக
சடகோபன் பண்ணிய தமிழ்-2-7–13–என்னும் படி பிரமேயம் தன்னைப் போலே தானும் சர்வ ஸூலபமாய் சர்வ அதிகாரமாய் ஆகைக்கு உறுப்பாக த்ராவிட ரூபமாக கொண்டு செய்வதாக சொல்லுவதும் ஒரு பிரகாரம் உண்டு என்கை..எய்தற்கு அறிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் செய்தற்கு உலகில் வரும் சடகோபனை –இராமானுச நூற்றந்தாதி -18-என்னக் கடவதிறே..

இவை எல்லாத்திலும் -( வேதம் -பாஞ்சராத்ரம் மனு சாஸ்திரம் ஸ்ரீ ராமாயணம் ஸ்ரீ மஹா பாரதம் திருவாய் மொழி ) எல்லாம் சொல்லுமே ஆகிலும் ஒன்றுக்கு ஒன்றிலே நோக்காய் இருக்கையாலே இறே இவர் இப்படி அருளிச் செய்தது .. இது தான் பரத்வ பரம் -என்கையாலே ஸ்பஷ்டம் இறே ..

(அதவா) என்றது – கீழ்ச் சொன்ன யோஜனை யொழிய யோஜநாந்தர மென்கை. “வேத வேத்‌யே பரே பும்ஸி ஜாதே தஸரதாத்மஜே ! வேதா ப்ராசேத ஸாதாஸீத்‌ ஸாக்ஷாத்‌ ராமாயணாத்மநா”” (ரா. பா.) என்கிறபடியே வேத வேத்‌யனான பரம புருஷன்‌ தஸரத புத்ரனாய்‌ வந்தவதரித்த விடத்தில்‌ அபெள்ருஷேயமான வேதமும்‌ ஸ்ரீவால்மீகி பகவான் பக்கலிலே ஸ்ரீராமாயணமாய்‌ வந்தவதரித்த தென்கிற ந்யாயத்தாலே. (பரத்வபரமுதுவேதம்‌) “’முதுவேத முதல்வனுக்கு?” (திருவா. 1 – 6 – 2) என்கிற ப்ரத்வ ப்ரதிபாதகமான பழைய வேதம்‌. இத்தால்‌ நித்ய நிர்தோஷமாய்‌, அபெளருஷேயமாய்‌ ப்‌ரம விப்ரலம்பாதி, தோஷ ரஹிதமான வேதம்‌ என்றபடி.-அந்த பரத்வம் தானே வ்யூஹீபவித்த அவஸ்தையில்‌ அந்த வேதந்தானே “பஞ்சராத்ரஸ்ய க்ருத்ஸ்நஸ்ய வக்தா நாராயணஸ் ஸ்வயம்‌”” (பர. மோ.) என்றும்‌, ““ஓதினாய்‌ நீதி”‘ (இ, திருவ.48) என்றும்‌ சொல்லுகிறபடியே அவனருளிச் செய்த ஸ்ரீபாஞ்சராத்ர ஸாஸ்த்ரமாய்‌ வந்தவதரித்தும்‌,-அந்தர்யாமியான அவஸ்தையில்‌ “கேட்ட மனுவும்‌” (நா.திருவ. 76) என்கிறபடியே ஆசார வ்யவஹார ப்ராயஸ் சித்தங்களுக்கு ப்ரகாஸ கமான மந்வாதி ஸ்ம்ருதிகளாயும்‌,ராம க்ருஷ்ணாத்‌ யவதாரங்களில்‌ வந்தவாறே ”பாட்டும்‌ முறையும்‌ படு கதையும்‌‘” (நா. திருவ. 76) என்கிறபடியே வேதங்கள் தான்‌ இதிஹாஸாதிகளானாப்‌ போலேயும்‌,
”ஆகமூர்த்தியாய வண்ணம்‌”” (திருச்ச, 17) என்கிறபடியே ஸர்வேஸ்வரன்‌ ஆஸ்ரித ஹ்ருதயாநுகுணமாக “’தமருகந்ததெவ்வுருவம்‌”'(மூ.திரூவ. 45) என்கிறபடியே த்ரவ்ய-நாம-ரூப-ஆஸந-ஸயந-தேஸ – கால-அதிகாயு-போஜநாதீ ஸகல வ்யாபாரங்‌களையும்‌ ஆஸ்ரித ஹ்ருதயாநுகுணமாக்கிக் கொண்டு ஸர்வ ஸுலபமான அர்ச்சாவதாரமான விடத்தில்‌ ப்ரமாணமும்‌ அப்படியே ப்ரமேயம் போலே ஸர்வ ஸுலபமாய்‌ ஸர்வாகதிகாரமாம்படி த்‌ரவிட ஸம்ஹிதையாக ப்ராப்த மாகையாலே **பண்ணிய தமிழ் மாலை”” (திருவா. 2 – 7 – 13) என்கிறபடியே வேதத்தைத்‌ திருவாய்மொழியாகச்‌ செய்தருளினார்‌ என்னவுமாம்‌ என்கிறார்‌. அந்த வேதம்‌ முதலானவை எல்லாத்திலும்‌ எல்லாம்‌ சொல்லிற்றே யாகிலும்‌ ஒன்றுக் கொன்றிலே நோக்காகக் கடவது –

மதுவார் தண்ணம் துழாயான் –முது வேத முதல்வனுக்கு
எதுவேது என் பணி என்னாது அதுவே ஆட்செய்யுமீடே –1-6-2—இவ்விஷயத்தை பேசும் போது
அபௌரு ஷேயம் ஆகையாலே நித்தியமான வேதமே யாக வேண்டாவோ -என்கிறார் –
வேத முதல்வன் ஆகையாவது -சாஸ்திர யோநித்வாத் -என்கிறபடியே வேத பிரதிபாத்யன் என்கை
திருத் துழாய் மாலையாலே அலங்கருதன் என்கைக்கு மேல் இல்லை சர்வாதிகன் என்கைக்கு
அதுக்கு மேலே ஓன்று இறே வேதைக சமதிகன்யன் என்னுமது-

உணர்ந்தாய் மறை நான்கும் ஓதினாய் நீதி
மணந்தாய் மலர்மகள் தோள் மாலே -மணந்தாய் போய்
வேயிரும் சாரல் வியலிரு ஞாலம் சூழ்
மா யிரும் சோலை மலை——48—வேத உப ப்ரும்ஹணமான இதிஹாச புராணங்களை உண்டாக்கினாய் அந்த வேதங்களின் பொருளை விவரிக்க வல்ல ஸ்ம்ருதி முதலிய உப ப்ரும்ஹண நூல்களையும் –மநு முதலிய மஹர்ஷிகள் முகமாக) அருளிச் செய்கின்றாய் ப்ராஹ்மணமான -ஸ்ம்ருதி  இதிஹாச புராணங்களையும் யுண்டாக்கி – திரு முகத்துக்கு படியெடுத்துக் காட்டினாப் போலே –

பாட்டும் முறையும் படுகதையும் பல் பொருளும்
ஈட்டிய தீயும் இரு விசும்பும் -கேட்ட
மனுவும் சுருதி மறை நான்கும் மாயன்
தனமாயையில் பட்டதற்பு-76-—பாட்டுக்களும் அவற்றுக்கு வ்யக்தமான ரூபமானவையும் –
இசையும் இயலும் என்னவுமாம் – –படுகதை இத்யாதி-உத் க்ரந்தமாகச் சொல்லும் கதைகளும் -அவற்றின் யுடைய பஹூ விதமான பொருள்களும்-பாட்டும் – கீர்த்தனமான இதிஹாசங்கள்-
பல் பொருளும்--அவற்றுக்கு வ்யாக்யனாமான நாநாவான அவ்வர்த்தங்களைச் சொல்லுகிற புராணங்கள் என்றுமாம் –ஈட்டிய தீயும் இரு விசும்பும்-ஒன்றிலே எல்லாம் யுண்டாம்படி பஞ்சீ கரணத்தாலே  சேர்க்கப் பட்ட அக்னியும் பரப்பை யுடைத்தான ஆகாசமும்-இவை அண்ட காரணமான பூத பஞ்சகங்களுக்கும் உபலஷிதையான தேவாதி கார்ய லஷணங்களுக்கும் உப லஷணம்-
கேட்ட மனுவும் – ஆப்த தமமாக ஜகத்து எல்லாம் கேட்டுப் போருகிற மனுவும்
சுருதி மறை நான்கும் – ஓதி வருகிற நாலு வேதங்களும்-மாயன் – ஆச்சர்ய பூதனானவனுடைய
தன மாயையில் பட்ட தற்பு- தன்னுடைய சங்கல்ப்பத்திலே யுண்டான தத்தவத்தை யுடைத்து
தற்பு – தத்த்வார்த்தம் –

ஏக மூர்த்தி மூன்று மூர்த்தி நாலு மூர்த்தி நன்மை சேர்
போக மூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தி எண்ணில் மூர்த்தியாய்
நாக மூர்த்தி சயநமாய் நலம் கடல் கிடந்தது மேல்
ஆக மூர்த்தி யாய வண்ணம் என் கொல் ஆதி தேவனே –17-ஆஸ்ரிதர் தேவரீருக்கு விக்ரஹமாக  நினைத்த த்ரவ்யத்திலே ஸ்வ அசாதாராண விக்ரஹத்தில் பண்ணும் விருப்பத்தை பண்ணுகிற இஸ் ஸ்வபாவம் என்னாய் இருக்கிறது –ஆஸ்ரிதர் உனக்கு விக்ரஹமாக நினைத்த த்ரவ்யத்தை இறே ஸ்வ அசாதாராண விக்ரஹத்தோபாதி விரும்புவது -தமர் உகந்த எவ்வுருவம் அவ்வுருவம் ஆனாய்-ஜகத்துக்கு எல்லாம் காரண பூதனான நீ கார்ய பூதனாய் இருப்பான் ஒரு சேதனனுடைய
இச்ச அதீநமாக உன்னைப் பண்ணுவதே –

தமருகந்த   தெவ் வுருவம் அவ் வுருவம் தானே
தமருகந்த தெப்பெர் மற்றப் பேர்
தமருகந்து
எவ் வண்ணம் சிந்தித்து இமையா திருப்பரே
அவ் வண்ணம் ஆழியானாம் -44–-யார் எப்படி என்னை சேவிக்க ஆசைப்படுகிறானோ ) நமக்கு நல்லவர்கள் இன்னார் என்றும் இல்லை -இன்னபடி பஜிப்பார் ஒன்றும் இல்லை –அவர்கள் நின்ற நிலையிலே அவர்கள் பஜித்த படியே அவர்களை பற்றுவேன் என்கிறது -தமரானவர்கள் பிராகிருத த்ரவ்யங்களிலே ஒன்றை உனக்குத் திரு மேனியாகக் கொள்ள வேணும் -என்றால் அத்தைத் திருமேனியாகக் கொள்ளும் – -சதங்கை அழகியார் -என்று திரு நாமம் சாத்தினார் ஆகில்
நாராயணாதி நாமங்களைக் காட்டிலும் அத்தை விரும்பும் –

வண்ண மா மணிச் சோதியை அமரர் தலைமகனை
கண்ணனை நெடுமாலைத் தென் குருகூத்ச் சடகோபன்
பண்ணிய தமிழ் மாலை யாயிரத்துள்
இவை பன்னிரண்டும்
பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு அண்ணல் தாள் அணைவிக்குமே–2-7-13-வேதம் போலே அடி அன்றிக்கே இருக்கிறது அன்று -அப்வருஷேயம் -என்னுமதில் காட்டிலும் விலக்ஷணமாய் இருக்கிறதாயிற்று வக்த்ரு சுத்தியால்-

எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால்
செய்தற்கு உலகில் வரும் சடகோபனை
ச் சிந்தை யுள்ளே
பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம்
உய்தற்கு உதவும் இராமானுசன் எம் உறு துணையே – 18- துஷ் ப்ராபங்களான வேதங்களை –
பிரவணம் போலே சுருங்கி இருத்தல்-வேதம் போலே பரந்து இருத்தல் -செய்கை அன்றிக்கே -ஆயிரம் பாட்டாகவும் அது தான் சாரமாகவும்-ஸ்திரீ பாலர்களுக்கும் கற்கலாம் படியான பாஷையிலே செய்து அருளுகைக்கு லோகத்திலே வந்து அவதரித்து அருளினவராய் -பாஹ்ய குத்ருஷ்டிகள் ஆகிய சடர்க்கு பிரதிபடராய் இருக்கையாலே – ஸ்ரீ சடகோபர் -என்னும் திரு நாமத்தை உடையவரான ஆழ்வாரை–

ஆனால் அபௌருஷேயமான வேதம் இப்படி அவஸ்தாந்தரத்தை பஜித்ததாகில் கலுஷமாய் அர்த்த பிரகாசத்வம் குன்றாதோ -என்ன – வக்த்ரு விசேஷத்தாலே அது மற்றை படியாய்த்து-( தெளிந்து பிரகாசம் மிக்கு ) என்னும் அத்தை சத்ருஷ்டாந்தமாக அருளி செய்கிறார்–ஆனால்‌ இப்படி பரத்வ ப்ரதிபாதகமான வேதம்‌ அவஸ்தாந்தர பாக்காயுள்ள வளவில்‌ ப்ரமேய ப்ரகாஸகமாக வற்றோ என்ன, இவ் வவஸ்தையிலே யதாவாக ப்ரகஸிக்கும்‌ என்னுமிடத்தை த்ருஷ்டாந்த முகத்தாலே பேசுகிறார்‌

மண்ணாடின சக்ய ஜலம் தோதவத்தி சங்கணி துறையிலே துகில் வண்ணத் தெண்ணீராய்
அந்தஸ் ஸ்தத்தத்தை காட்டுமா போலே அல்ப ஸ்ருதர் கலக்கின சுருதி நன் ஞானத் துறை சேர்ந்து
தெளி உற்று ஆழ் பொருளை அறிவித்தது .-சூரணை -71-

அதாவது
உச்ச ஸ்தலத்தில் நின்றும் ,வேகத்தோடு வந்து பூமியில் விழுகையாலே, ம்ருன் மிஸ்ரமாய் கலங்கி சஹ்யத்தில் நின்று வரும் ஜலமானது ,
தோதவத்தி தூய் மறையோர் துறை -பெரியாழ்வார் -4-8-1-என்றும்
பொருநல் சங்கணி துறை –திருவாய் -10-3-11-என்றும் சொல்லுகிற துறைகளிலே வந்தவாறே துறை வாசியாலே ,
துகில் வண்ண தூ நீர்–திருவாய் -7-2-11- -என்றும்
தெண்ணீர் பொன்னி–பெருமாள் திரு -1-1- -என்றும் சொல்லுகிற படியே தெளிந்த நீராய் ,தனக்குள்ளே கிடக்கிற பதார்த்தங்களை பிரகாசிக்குமா போலே-பிபேத் யல்ப ச்ருதான் வேதோ மாமயம் பிரதரிஷ்யதி –என்கிற படி –வேதம் தான் நடுங்கும் படி ,தத் அபிப்ராயம் அறியாமல் ,பிரதி பந்தங்களை சொல்லும் அல்ப ஸ்ருதர் ஒரு வாக்யத்து அர்த்தம் சொல்ல புக்கால் ,அது தன்னில் நின்று விபிரதிபத்தி பண்ணி
த்வைதம் என்பார் அத்வைதம் என்பார் த்வைதாத்வைதம் என்பராய் இப்படி கலக்க கலங்கிய சுருதியானது-நல் ஞானத் துறை -என்று இவர் தாம் அருளிச் செய்த படி-யதா ஞானத்து துறையான இவ் ஆழ்வார் பக்கலிலே வந்து சேர்ந்து ,-தெளி உற்ற ஆயிரம் -என்கிற படியே முன்புத்தை கலக்கம் தீர்ந்து ,தெளிவை அடைந்து ,-அறிவித்தேன் ஆழ் பொருளை -என்கிற படியே அகாதமாய் ,பரம ரகஸ்யமான அர்த்த விசேஷங்களை எல்லாம் தோன்றுவித்தது என்கை-

மண்ணாடின ஸஹ்ய ஜலமாவது – ‘*தோதவத்தித் தூய் மறையோர்‌ துறை படிய”’ (பெரியா. 4 – 8 – 1) என்றும்‌, “பொருநல்‌ சங்கணி துறை ”” (திருவா. 10 – 3 – 11) என்றும்‌ சொல்லுகிற துறைகளிலே ‘ ‘துகில் வண்ணத் தூநீர்ச் சேர்ப்பன்‌’‘ (திருவா. 7 – 211) என்றும்‌, “தெண்ணீர்ப் பொன்னி” (பெருமா. தி. 1 – 1 ) என்றும்‌ சொல்லுகிறபடியே தெளிந்த நீராய்த்‌ தனக்குள்ளே கிடக்கிற பதார்த்தங்களை ப்ரகாஸிப்பிக்குமாப்‌ போலே, அல்ப ஸ்ருதர்‌ கலக்கின ஸ்ருதி – ”இதிஹாஸ புராணாப்‌யாம்‌ வேதம்‌ ஸமுபப்‌ரும்ஹயேத்‌ பிபேத் யல்ப ஸ்ருதாத்‌ வேத-மாமயம்‌ ப்ரதரிஷ்யதி” (பர. ஆதி.) என்கிறபடியே அல்ப ஸ்ருதராயிருக்கு மவர்கள்‌ ஒரு ஸ்ருதி வாக்யத்தைப் பிடித்து இதுக்குப் பொருள்‌ த்வைதமென்றும்‌, அத்‌வைதமென்றும்‌, த்‌வைதாத்‌வைதமென்றும்‌ இப்படி பஹு ப்ரகாரமாகக் கலக்க, கலங்கின ஸ்ருதியானது – (நன் ஞானத்துறை சேர்ந்து) ‘“ரமணீயம்‌ ப்ரஸந் நாம்பு, ஸந் மநுஷ்யமதோ யத (ரா. பரா. 2 – 5) என்றும்‌, ““காலை நன்‌ ஞானத்‌துறை”: (திருவிரு. 93) என்றும்‌ சொல்லுகிறபடியே ஞானத் துறையான இவ்வாழ்வார்‌ பக்கலிலே சேர்ந்து, (தெளிவுற்று ஆழ் பொருளை அறிவித்தது) *’தெளிவுற்ற வரயிரம்‌ ” (திருவா, 7 – 5 – 11) என்கிறபடியே ப்ரஸந்ந கம்பீரமான ஆயிரம் பாட்டாய்‌, ““அறிவித்தேன் ஆழ்பொருளை ” (நா. திருவ. 1) என்கிறபடியே அகதமாய்‌ பரம ரஹஸ்யமான அர்த்த விஸேஷங்களை யெல்லாம்‌ யதா தர்ஸநம்‌ பண்ணுவிக்கும் என்கிறார் –

மா தவத்தோன் புத்திரன் போய் மறி கடல் வாய் மாண்டானை
ஓதுவித்த தக்கணையா வுரு வுருவே கொடுத்தானூர்
தோதவத்தி தூய்  மறையோர்  துறை படிய துளும்பி எங்கும்
போதில் வைத்த தேன் சொரியும் புனல் அரங்கம் என்பதுவே – 4-8- 1—சமாசார (சம்யக் ஆச்சாரமாய் ) பரர் ஆகையாலே – பரிசுத்தமாய் தோய்த்து உலர்த்தின வஸ்தரங்களை தரித்து கொண்டு இருப்பாராய்-
தூய்தான மறையே  தங்களுக்கு நிரூபகமாய் உடையராய் இருக்குமவர்கள்–மறைக்கு தூய்மையாவது –அபவ்ருஷேயமாய்-நித்ய – நிர்தோஷமாய் – இருக்கையாலேசர்வ பிரமாண விலஷணமாய்- பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை –  உள்ளபடி பிரதி பாதிக்க வற்றாய் இருக்கை –இத்தை இவர்கள் நிரூபகமாக உடையராய் இருக்கை யாவதுஸ்வாத்யாயோ அத்யே தவ்யே-என்கிற விதி பிரகாரம் தப்பாமல் அத்யயனம் பண்ணி – அதில் அர்த்த ஞானத்தையும் அதுக்கு அனுரூபமான அனுஷ்டானத்தையும் உடையராய் இருக்கையாலே வைதிகர் என்றே நிரூபகமாய் படி இருக்கைதுறை படி- கங்கையில் புனிதமாய காவேரி –என்கிறபடி கலந்து இழி புனலான கங்கையில் காட்டிலும் பரி சுத்தமான காவேரியிலே பெரிய பெருமாளுடைய திருக் கண் நோக்கான திரு முகத்  துறை முதலான துறைகளிலே – திரள் திரளாக அவஹாகித்து ஸ்நானம் பண்ணி-

செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு அத் திருவடி திருவடி மேல் பொருநல்
சங்கணி துறைவன்
வண்தென் குருகூர் வண் சடகோபன் சொல்லாயிரத்துள்
மங்கையர் ஆய்ச்சியர் ஆராய்ந்த மாலை அவனோடும் பிரிவதற்கு இரங்கி தையல்
அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன இவையும் பத்து அவற்றின் சார்வே-10-3-11-இவர் இருந்த இடத்தே சத்துக்கள் சேருமா போலே -சங்குகளாலே அணியப் பட்ட -திருப் பொருநலை யுடையராய் –

முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் மொய்புனல் பொருநல்
துகில் வண்ணத் தூ நீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ் வண் குரு கூர்ச் சட கோபன்
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர் பேரின்ப வெள்ளத்தே.–7-2-11-பொருநலில் துகிலினுடைய வர்ணமான சுத்த ஜலத்திலே சேர்க்கப் பட்டவர்–தம்முடைய திரு உள்ளம் போலே ப்ரசன்னமான ஜலத்தோடே சங்கதரானவர்-தூ நீர்த் துறைவன்-

இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த
அரவரச பெரும் சோதி அனந்தன் என்னும் அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி
திரு அரங்க பெரு நகருள் தெண்ணீர் பொன்னி திரை கையால் அடி வருட பள்ளி கொள்ளும்
கருமணியை கோமளத்தை  கண்டு கொண்டு என் கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாளே–1-1-தெளிந்த நீரை உடைத்த காவேரி -திரையாகிற கைகளாலே திருவடிகளை வருட-

காலை வெய்யோற்கு முன்னோட்டுக் கொடுத்த கங்குல் குறும்பர்
மாலை வெய்யோன் பட வையகம் பரவுவர் அன்ன கண்டும்
காலை நன் ஞானத் துறை படிந்தாடிக் கண் போது செய்து
மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் அவன் மைப்படியே –  -93–காலை –சத்வோத்தரமான காலையிலே –நல் ஞானம் –ஞானம் ஆகில்-பகவத் விஷயத்தை பற்றி அன்றி இராது இறே –ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -(முதல் திருவந்தாதி )என்னக் கடவது இறே –தத் ஜ்ஞானம் அஞ்ஞானம் அதோன்யதுக்தம் (பராசர மகரிஷி )- என்றும் –வித்யான் யாசில் பகை புணம் – புறம்பே ஒன்றை அறிந்ததோடு துன்னம் பெய்ய அறிந்ததோடு வாசி இல்லை இறே –துறை படிந்தாடி –ஜ்ஞானம் ஆகிற இத் தீர்த்தத்திலே புக்கு அவஹாகித்து –

தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக்கதி செய்யும்
தெளிவுற்ற கண்ணனைத் தென் குரு கூர்ச்சட கோபன் சொல்
தெளிவுற்ற ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவர்
தெளிவுற்ற சிந்தையர் பாமரு மூவுல கத்துள்ளே.–7-5-11-தெளிவுற்ற கண்ணனைத் –நாம் இவன் கார்யம் செய்யக் கடவோம் -என்று இருக்கும் கிருஷ்ணனை -இவன் கலங்கின அன்றும் தான் தெளிந்து முடிய நடத்துமவனை-தென் குரு கூர்ச்சட கோபன் சொல்-அவன் படி கிடக்க -சொன்னவர் படியாலும் ஆப்தர் என்று விஸ்வஸித்து இருக்கலாம் வார்த்தை –-தெளிவுற்ற ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவர்
இவை இரண்டும் கிடக்க இப்பாசுரம் தானே விஸ்வசிக்கலாம் படி தெளிவைப் பிறப்பிக்கும் இத்தை அப்யசிப்பவர்கள்-

நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
தான்முகமாய் சங்கரனைத தான் படைத்தான்– யான்முகமாய்
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளைச்
சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து–1-ப்ரஹ்மாவை சர்வேஸ்வரன் சிருஷ்டித்தான் – ஈஸ்வரனும் அறிய வேண்டாதே ப்ரஹ்மா தானே பிரதானனாய் ருத்ரனை சிருஷ்டித்தான் –அப்படி நானும் சொல்ல வல்லேனாய் அந்தாதி முகத்தாலே அகாதமான வேதார்த்தை அறிவித்தேன் –

ஆனால் வேதத்துக்கு அத்யயன கால நியதியும் ,அதிகாரி நியதியும் உண்டாய் இரா நின்றதே -அந்த வேத அவதாரமான இதுக்கு அவை இன்றிக்கே ஒழிவான் என் என்ன அருளி செய்கிறார் -இனிமேல்‌ அந்த ப்ரதாநமான வேதத்திற் காட்டிலும்‌ இதினுடைய அவதார ரூபமான திருவாய்மொழிக்கு இவருடைய ஸ்பர்ஸத்தாலே வந்த ஏற்றம்‌ சொல்லுகிறது

மேகம் பருகின சமுத்ராம்பு போலே நூற் கடல் சொல் இவர் வாயான வாய்த் திருந்தின வாறே சர்வதா சர்வோப ஜீவ்யம் ஆமே –சூரணை -72-

அதாவது –
விரசமாய் ,தத் அந்தர்கத சத்வங்களுக்கு ஒழிய புறம்புள்ளார்க்கு உப ஜீவ்யம் அன்றிக்கே -பர்வங்களில் ஒழிய ஸ்பர்சிக்கலாகாது என்கையாலே , ஸ்பர்ச கால நியதியை உடைத்தாய் ,இருக்கிற சமுத்திர ஜலமானது , மேகம் பருகி வர்ஷிக்க , அந்த மேக ஸ்பர்சத்தாலே, தன் விரதசை போய் , சர்வதா சர்வ ஜன போக்யமாம் போலே ,-ஸ்ராவண்யாம் ப்ரவ்ஷ்ட பாத்யம் வா உபாத்க்ருத்ய யதா விதி யுக்தச் சந்தாம் ஸ்யதீ யீத ஈன மாசான் விப்ரோர்த்த பஞ்சமான் ,அத ஊர்த்த்வம் து சந்தாம்சி சுக்லேது நியத படேத்
வேதான்காநி ரஹஸ்யம் ச கிருஷ்ண பஷேது சம்படேத்–மனு ஸ்ம்ருதி -4-95-
(பிராமணன் ஆவணி மாதத்திலாவது புரட்டாசி மாதத்திலாவது சாஸ்திரத்தில் சொல்லியபடி உபாகர்மாக்களை செய்து
நியமத்துடன் கூடினவனாய் நாலரை மாதங்களில் வேதங்களை அத்யயனம் செய்யக் கடவன் –
இதற்குப் பிறகு நியமத்துடன் கூடினவனாய் சுக்லபக்ஷத்தில் வேதங்களை ஓதக் கடவன் –
வேதங்களையும் உபநிஷத்துக்களையும் கிருஷ்ண பக்ஷத்தில் நன்றாக அத்யயனம் செய்யக் கடவன் ) என்கிற படியே அத்யயன கால நியதியையும் த்ரைவர்ணிகாதி காரதயா அதிகார நியதியையும் உடைத்தாய் உள்ள –நூல் கடல்—மூன்றாம் திருவந்தாதி -32-என்கிற வேத வித்யா சமுத்ரத்தில் வசனம்-இவள் வாயனகள் திருந்த–திருவாய் -6-5–7- -என்கிற படியே ,இவருடைய வாக்கதமாய் ,-கால நியம ,அதிகாரி நியம நிரபேஷமான ஆகாரத்தை அடைந்து ,கட்டளைப் பட்டவாறே – அத்யே தவ்யம் த்விஜச் ரேஷ்டை : வேத ரூபமிதம் க்ருதம் ச்த்ரீபிஸ் சூத்ராதிபிச் சைவ தேஷாம் முக்திஸ் கரே ஸ்திதா–பாஞ்சராத்ரம் -(வேதரூபமாகச் செய்யப்பட இத்திருவாய் மொழி ப்ராஹ்மண உத்தமர்களாலும் பெண்களாலும் நான்காம் வருணத்தவர்களாலும் அத்யயனம் செய்யத்தக்கது –-இதனை அத்யயனம் செய்யுமவர்களுக்கு மோக்ஷம் கையில் இருக்கிறது -) -என்கிற படியே ஒரு கால நியமம் இன்றிக்கே ,சர்வ காலமும் சர்வருக்கும் உப ஜீவ்யமாம் இறே என்கை-

ஸமுத்‌ர ஜலம்‌ விரஸதையை யுடைத்தாய்‌ ததந்தர்கதமான பதார்த்தங்களுக்கே உபஜீவ்யமாய்‌, புறம்புள்ளார்க்கு உப ஜீவ்யமன்றியிலே இருப்பதாய்‌, அபர்வணி ஸ்பர்ஸிக்கைக்குக்‌ கால நியதியையு முடைத்தாயிருக்கும்‌. அந்த ஸமுத்‌ர ஜலத்தை மேகமானது பாநம்‌ பண்ணி ஐகத்திலே வர்ஷிக்க அந்த மேக, ஸ்பர்ஸத்‌தாலே அதினுடைய விரஸ்தையும்‌, ஸ்பர்ஸ கால நியதமும்‌ போய்‌, ஸர்வ ஜந போக்‌யமுமாமாப் போலே, பகவத் ஸ்வரூபாநுரூப குண விபூ,திகளை ப்ரதிபாதிக்கிற வேதம்‌ பகவத்‌ விபூதி பூ.தரான தேவதாந்தரங்களை ப்ரதிபாதிக்கை யாகிற விரஸதையை உடைத்தாய்‌, வேதாதிகாரிகளான த்ரை வர்ணிகர்க்கே அத்‌யேதவ்யமாகையாலே அதி க்ருதாதி காரமுமாய்‌ அத்‌யயந-அநத்‌யயந-கால நியதியையு முடைத்தா யிருக்கும்‌. ‘“நூற் கடல்‌’” (மூ. திருவ, 92) என்கிறபடியே அபரிச்சேத்யமான அந்த வேதமாகிற ஸாஸ்த்ரத்திலுண்டான அர்த்த விஸேஷங்கள்‌ ‘‘இவள் வாயனகள்‌ திருந்தவே” (திருவா. 6 – 5- 7) என்கிறபடியே இவருடைய வாக் கதமாய்க் கொண்டு கட்டளைப் பட்டவாறே பகவத்‌ வ்யதிரிக்த ப்ரஸம்ஸா பரதையாகிற விரஸதையும் போய்‌ “அத்‌யேதவ்யம்‌ த்‌விஜ ஸ்ரேஷ்டைர் வேத ரூபமிதம்‌ க்ருதம்‌ । ஸ்த்ரீபிஸ் ஸூத்‌ராதி பிஸ்சைவ தேஷாம்‌ முக்தி: கரே ஸ்திதா” (பாஞ்ச.) என்கிறபடியே ஸர்வாதி காரமுமாய்‌ ஸர்வ காலாத்‌ யேதவ்யமுமா யிருக்கும்‌-

பாற் கடலும் வேங்கடமும் பாம்பும் பனி விசும்பும்
நூற் கடலும் நுண்ணூல தாமரை மேல் -பாற் பட்டு
இருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்
குருந்து ஒசித்த கோபாலகன் ——-32–வித்யா சமுத்ரமும்-இதிஹாச புராணங்கள்   ஆகிற
கடலும் —

அன்னைமீர்! அணி மாமயில் சிறு மானிவள்நம்மைக் கை வலிந்து
என்ன வார்த்தையும் கேட்குறாள் தொலை வில்லி மங்கலம் என்றலால்
முன்னம் நோற்ற விதி கொலோ? முகில் வண்ணன் மாயம் கொலோ?
அவன்சின்னமும் திருநாமமும் இவள் வாயனகள் திருந்தவே.–6-5-7-அல்லாதார் தங்கள் திருந்துகைக்காக திரு நாமங்கள் சொல்லுவார்கள் –திருநாமம் திருந்துகைக்கு இவள் சொல்ல வேணும் -நாமும் திரு நாமங்கள் சொல்கிறோம் -இவள் வாயில் பட்ட வாறே இங்கனம் உயிர் பெற வேணுமோ என்கிறாள் –

இன்னமும் வேத கார்யமாய் இருக்க செய்தே காரணமனவது போல் அதிகிருதாதிகாரம் இன்றியே ,இது சர்வாதிகாரமாய் இருக்கக் குறை இல்லை என்னும் இடத்துக்கு ஒரு திருஷ்டாந்த விசேஷம் தர்சிப்பிகிறார்-ஸமுத்‌ர ஜலத்தையும் தத்கார்யமான மேகம்‌ பருகின ஜலத்தையும்‌ அதி க்ருதாதிகாரமான வேதத்துக்கும்‌ தத் கார்யமான திருவாய்மொழிக்கும்‌ த்‌ருஷ்டாத்தமாக்கினால்‌ காரணம்‌ போலே கார்யமும்‌ அதிக்ருதாதிகாரமா யிருக்குமோ என்னில்‌, அப்படியிராது–ஸர்வாதிகாரமாய்‌, ஸ்லாக்‌யமாய்‌,ஸ்ப்ருஹணீயமா யிருக்குமென்கிறார்‌

ம்ருத் கடம் போல் அன்றே பொற்குடம்-சூரணை -73-

அதாவது –
ம்ருத் கடம் தொடும் அவர்களே தொடும் இத்தனை போக்கி ,எல்லாரும் தொட ஒண்ணாதே இருக்க ,
பார்திவமாய் இரா நிற்க செய்தே ,பொற் குடம் எல்லோருக்கும் ஸ்பர்சிக்க இரா நின்றது இறே என்கை .
இத்தால் காரணமான வேதம், அதிக்ருதிதாதிகாரமாய் இருந்தாலும் , தத் கார்யமான இது
சம்ஸ்கார விசேஷத்தாலே ,சர்வாதிகாரமாய் இருக்கக் குறை இல்லை என்றதாயிற்று —
த்ருஷ்டாந்தத்திலே தோற்றுகிற காரணதய கார்ய ஸ்லாக்யாதிகள் ,தார்ஷ்டாந்திகத்திலும் விவஷிதம்

ம்ருத்‌ கடமானது தொடுமவர்களே தொடுமித்தனை போக்கி எல்லார்க்கும்‌ தொட வொண்ணாதிறே. அங்ஙனன்றிக்கே பொற் குடம்‌ பார்த்திவமா யிருக்கச் செய்தேயும்‌ எல்லார்க்கும்‌ ஸ்பர்ஸிக்கவுமாய, ஸ்லாக்‌யமுமாய்‌, ஸ்ப்ருஹணீய முமாயிருக்கும்‌. ஆகையாலே அதி க்ருதாதிகாரமான வேதந் தான்‌ திருவாய்மொழியான அவஸ்தையை பஜித்தாலும்‌ ஸர்வாதிகாரமுமாய்‌, ஸ்ப்ருஹணீயமுமா யிருக்குமென்கிறார்‌-

இனி மேல் இப்படி இருந்துள்ள திருவாய் மொழியும் ,ஏதத் பிரதிபாத்யமான அர்ச்சாவதாரம் ஆகிய பிரமாண பிரமேய சரமங்கள் இவற்றின் உடைய பூர்வ அவஸ்தைகளில் , அவஹாகன ஷமர் அல்லாதவருக்கு சுலபமாக கல்பிதங்கள் ஆனவை என்று –-வேத வேதே -சூரணை -70– இத்யாதி வாக்யத்தில் சொன்ன பிரமாண பிரமேய சரமங்களை நிகமிக்கிறார் –ஸர்வ ஸுலபமாய்‌ ஸர்வாதிகாரமான அர்ச்சாவதாரத்தையும்‌ திருவாய் மொழியையும்‌ கீழ்‌ ‘“பரத்வபரமுது வேதம்‌” என்று ப்ரஸ்துதமான ப்ரமாண ப்ரமேயங்களை “‘பெரும்புறக்‌ கடலும்‌” ““ஸ்ருதி ஸாகரமும்‌ என்று பராமர்ஸித்து, அவற்றினுடைய எல்லையான அர்ச்சாவதாரமும்‌ திருவாய்மொழியும்‌ கீழ்ச் சொன்ன பரத்வாதிகளுக்கும்‌ வேதம்‌ முதலான ஸாஸ்த்ரங்களுக்கும்‌ அயோக்‌யரானார்க்கும்‌ அநுபாவ்யமாம்படி சரமமாயிருக்கும்‌ என்கிறார்‌.

பெரும் புறக் கடலும் சுருதி சாகரமும் அலைந்து ஆழ்ந்து ஓடும் இடங்களில் அயோக்யருக்கு சமைத்த மடுவும் சாய் கரகமும் மாண மேய சரமம்-சூரணை -74-

அதாவது
பெரும் புறக்கடலை –பெரிய திருமொழி -7-10 -1-எல்லாக் கடலுக்கும் புறம்பாய் ,தான் பெருத்து இருக்கிற கடல் போலே அபரிசேத்யமாய் இருக்கிற ,பரவஸ்துவான பிரமேயம் – சமுத்ரம் தரங்கிதமாய் அலைந்து நிற்கும் இடம் போலே ,ஜ்ஞானாதி ஷட் குண பரிபூரணமான தானே–அவற்றில் இவ் இரண்டு குணங்களை பிரகடிப்பித்து கொண்டு ,-பிரகாசிப்பித்துக் கொண்டு – சங்கர்ஷ்ணாதி ரூபேண ,வியூஹித்து இருக்கும் இடத்திலும் ,-சமுத்ரத்தில் நிலை காண ஒண்ணாத படி , ஆழ்ந்து இருக்கும் இடம் போலே ,-யாமாத்மா ந வேத -ப்ருஹதாரண்யம் -5-7-22(எந்தப் பரம்பொருளை ஆன்மா அறியவில்லையா )-என்றும்-கட்கிலி உன்னைக் காணுமாறு அருளாய் –திருவாய் -7-2-3 –என்றும் சொல்லுகிறபடி
அத்ருச்யத்வேன அந்தர்யாமியாய் நிற்கும் இடத்திலும்–சமுத்ரமானது ,கழிகளாய் கொண்டு ஓடும் இடம் போலே-மானுஷே லோகே ஜஜ்ஞே விஷ்ணு சநாதன-அயோத்யா காண்டம் -1-7- ( மனித லோகத்தில் நித்யரான விஷ்ணுவானவர் பிறந்தார் )என்றும் – யஸ்யாம் ஜாதோ ஜகன்னாதச் சாஷாத் விஷ்ணுஸ் ஸநாதன-( உலக நாதனான நித்யனான விஷ்ணு எவ்விடத்தில் அவதரித்தாரோ )-என்றும் –
நாக பர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாதோ மதுராம் புரீம்–ஸ்ரீ ஹரி வம்சம் -113-62-( திருவனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையைத் தனக்கு முன்னே அவதரிக்கும்படி போகவிட்டு வடமதுரை என்னும் நகரத்துக்கு எழுந்து அருளினாரோ ) என்றும்-விஷ்ணுர் மானுஷ ரூபேண சசார வஸூ தாதலே –( விஷ்ணுவானவர் மனித உருவத்தோடு பூ லோகத்தில் சஞ்சரித்தார் )-என்கிற படியே கண் காண வந்து தோன்றி ஞாலத்தூடே நடந்து திரிந்த அவதாரமான இடத்திலும் , தேச கரண கால விப்ரக்ருஷ்டைதகளால் கிட்டி அனுபவிக்க யோக்யதை அல்லாதவருக்கு ,-அதிலே தேங்கின மடுக்கள் போலே -( பூதக ஜலம் போலே அந்தர்யாமித்வம் -ஆவரண ஜலம் போலே பரத்வம் – பாற்கடல் போலே வ்யூஹம் -பெருக்காறு போலே விபவங்கள்-அதிலே தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரம் — ஸ்ரீ வசன பூஷணம் –சூர்ணிகை -39-) -என்கிறபடியே தேசாதி விப்ரகர்ஷ கந்தம் இல்லாதபடி ,கல்பிக்க பட்ட அத்யந்த சுலப விஷயம்
பிரமேய ஆவிர்பாவ பரம்பரையின் உடைய சரம அவஸ்தையான அர்ச்சாவதாரம் .–மதி மந்தாந மாவித்ய யேனாஸௌ சுருதி சாகராத் –( எந்த வியாச பகவானால் வேதமாகிய கடலில் நின்றும்
ஞானமாகிய மத்தை த்தை கடைந்து )-என்கிறபடியே அபரிசேத்யமாய் பரத்வ பரமான வேதம் –
சமுத்திர தரங்கித பிரதேசம் போலே தத் வியூஹ பிரதி பாதகதயா அவச்த்தாந்தராபன்னமாய் பஞ்ச ராத்ரமான விடத்திலும் , சமுத்ரத்தில் அகாத ஸ்தலம் போலே தத் அந்தர்யாமித்வ பிரதிபாதகதயா அவஹாகித்து அர்த்த தர்சனம் பண்ண அரிதாம் படி மன்வாதி ஸ்ம்ருதி ரூபமான இடத்திலும்
சமுத்ரம் கழிகளாய் ஓடுமா போலே தத் அவதார பிரதிபாதகதயா இதிகாச ரூபேண விஸ்த்ருதமாய் நடக்கிற இடத்திலும் , ஞானசக்தியாதி சங்கோசத்தால் அவஹாகித்து விடாய் தீர மாட்டாருக்கு
–விடாய்த்தவன் வாயை அங்காந்து இருக்க தானே தண்ணீர் வந்து குதிக்கும் படி ,கல்பிதமான சாய் கரகம் போலே
, அனாசாயேன உஜ்ஜீவிக்கலாம் படி ,அத்யந்த சுலபமான சாஸ்திரம் பிரமாண பூதமான வேதத்தின் உடைய ஆவிர்பாவ பரம்பர சரம அவஸ்தையான திருவாய் மொழி என்கை–இத்தால் மடுவும் சாய் கரகமும் என்கையாலே பிரமாண பிரமேயங்களின் உடைய ஒளியும் எளிமையும் இனிமையும் தொடக்கமான சத்குண சாஹித்யம் சொல்லப் பட்டது-(உப்புக் கடல் -எம்பெருமானாகிய பெரும் புறக்கடல் -வேதக்கடல் – மூன்றுக்கும் முடிந்தநிலை -தடாகம் -அர்ச்சாவதார -திருவாய்மொழி-என்றவாறு )-

பெரும் புறக்கடலும்‌ ஸ்ருதி ஸாகரமும்‌) அபரிச்சேத்‌யமான ப்ரமாண ப்ரமேயங்கள்‌; அவை யாவன – பரத்வமும்‌ பரத்வ ப்ரதி பாதகமான வேதமும்‌-அவற்றுக்குடலானால்‌ அலையக் கடவதிறே – அலைகையாவது – பர வாஸுதேவர் பக்கல் நின்றும்‌ பிறந்த ஸங்கர்ஷண ப்ரத்யும்நாதிகளான  வ்யூஹமூம்‌ தத் ப்ரதிபாதகமான ஸ்ரீபாஞ்சராத்ர ஸாஸ்த்ரமும்‌-(ஆழ்ந்து) “யமாத்மா ந வேத,” (ப்‌,௬. 5 – 7 – 22) என்று சொல்லுகிற அந்தர்யாமித்வமும்‌, தத் பரமான மந்வாதி ஸ்ம்ருதிகளும்‌. (ஓடுமிடம்‌) ராம க்ருஷ்ணாத்‌ யவதாரங்களும்‌ தத் ப்ரகாஸகங்களான இதிஹாஸங்களும்‌;-இவை தேஸ -கால -இந்திரிய -விப்ரக்ருஷ்டங்களாகையாலே பரத்வாதிகளை அநுபவிக்க யோக்‌யரல்லாதவர்களுக்கு அப்படி தேஸ கால விப்ரகர்ஷமு மின்றிக்கே பெருகின ஆற்றில்‌ மடுப் போலே ஸர்வ ஸுலப,முமாய்‌, ருசி ஜநகமூமாய்‌, ஸ்ரமஹரமுமாய்‌, ஸர்வ ஜந போக்‌யமுமாய்‌, ஸர்வாபாஸ்ரயமுமான அர்ச்சாவதாரமும்‌, வேதாதி களுக்கு யோக்‌யரா யிருக்கிறவர்களுக்கு சாய் கரகம் போலே ஸுகரமுமாய்‌, ஸர்வாதிகாரமுமான திருவாய் மொழியும்‌ ப்ரமாண ப்ரமேயங்களினுடைய சரம மென்கிறார்‌. ஆக, இத்தால்‌ **பரத்வபரமுதுவேதம்‌’” என்று தொடங்கின அர்த்தங்களை உபபாதி,த்து அவ் வர்த்தத்துக்கெல்லை அர்ச்சாவதாரமும்‌ திருவாய்மொழியுமென்று நிகமித்தாராய் ஆய்த்து –

பெரும் புறக் கடலை யடல் ஏற்றினைப் பெண்ணை யாணை எண்ணில் முனிவர்க்கு அருள்
தரும் தவத்தை முத்தின் திரட்கோவையைப் பத்தராவியை நித்திலத் தொத்தினை
அரும்பினை யலரை அடியேன் மனத்தாசையை அமுதம் பொதியின் சுவைக்
கரும்பினைக் கனியைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே–7-10-1-சர்வ பதார்த்தங்களையும் தன்னுள்ளே அடக்கி நோக்கும் கடல் போலே-அபரிச்சேத்யனாய் உள்ளவனை –
எல்லா கடலுக்கும் புறம்பாய்-தான் பெருத்து இருக்கிற கடல் போன்று இருக்கிறவனை –

பூகத ஜலம் போலே அந்தர்யாமித்வம் – ஆவரண ஜலம் போலே பரத்வம் – பால் கடல் போலே வியூஹம் –
பெருக்காறு போலே விபவங்கள் – அதில் தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரம் —சூரணை-39--இவனுக்கும் தேச கால கரண விப்ரக்ருஷ்டமின்றிக்கே – கோயில்களிலும் கிருஹங்களிலும் -என்றும் ஒக்க எல்லாருக்கும் கண்ணுக்கு இலக்காம்படி நிற்கிற – பின்னானார் வணங்கும் ஜோதி யான அர்ச்சாவதாரம் –(திருநெடும் தாண்டகம் ) பௌம நிகேதநேஷ் வபி குடி குஞ்சேஜ்ஷூ-என்கிறபடியே -பல இடங்களிலும் சன்னதி பண்ணி நிற்கும் படியை நினைத்து இறேமடுக்கள் போலே – என்ற பஹு வசனத்தாலே அருளிச் செய்தது – அவதார குணங்கள் எல்லாம் அர்ச்சா ஸ்தலங்களில் பரி பூரணமாய் இருக்கையாலும் – அவதார விக்ரஹங்களை அர்ச்சா ரூபேண பல இடங்களிலும் பரிக்ரஹித்து கொண்டு இருக்கையாலும்-அதிலே தேங்கின மடுக்கள் போலே -என்கிறது –மடுக்கள் பன்மை ஓர் அவதாரத்துக்கு பல பல சேஷ்டிதங்களுக்கும் பல திவ்ய தேசங்கள் உண்டே –அயத்ன ஸித்தமாய் –அதி ஸந்நிஹிதனுமாய்-அஷ்டாங்க தூர கமன நிரபேஷமாய்- கோயில் முதலான திவ்ய தேசங்களிலும் -க்ருஹங்களிலும் ஸ்தாவர ப்ரதிஷ்டையாய் இருந்து நிலைத்து தத் தத் அவதாரங்களில் நித்ய விக்ரஹமாய் கண்ணுக்கு இலக்காய் கொண்டு- சர்வ ஸமாஸ்ரயணீயமாய் – துர்லப பராங்முகையான பிரபத்திக்கு பிரிய விஷயம்-பெரிய விடாயான் -குளிர்ந்து தெளிந்து நிறைந்த –கிணறு கல்லியும் அண்டத்துக்கு பாய்ந்து பாற் கடலை கடைந்து  -வற்றின ஆற்றிலே ஓடிச் சென்று தண்ணீர் தேடுவது போலே இத்தை விட்டு அங்கே தேடுகை –

–——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர விளக்கங்கள்-மூன்றாம் அத்யாயம்-ஸாதந அத்யாயம் – இரண்டாம் பாதம்-உபய லிங்க பாதம்–ஸ்ரீ வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்-

July 5, 2026

அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநித விவித பூத விராத ரக்ஷைக தீக்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||-இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.

பாராசர்ய வசஸ்ஸுதா₄ம் உபநிஷத் து₃க்₃தா₄ப்₃தி₄ மத்₄யோத்₃த்₄ருதாம்
ஸம்ஸாராக்₃நி விதீ₃பந வ்யபக₃த ப்ராணாத்ம ஸஞ்ஜீவநீம் |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் ப₃ஹுமதி வ்யாகா₄த தூ₃ரஸ்தி₂தாம்
ஆநீதாம் து நிஜாக்ஷரை : ஸுமநஸ: பௌ₄மா: பிப₃ந்து அந்வஹம்
 ||இரண்டாவது மங்கள ஸ்லோஹம்-

ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் |
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே ||

யதீந்த்ர க்ருத பாஷ்யார்த்தா யத் வ்யாக்யாநேந   தர்சிதா:
வரம் ஸுதர்சனார்யம் தம் வந்தே கூர குலாதிபம்-ஸ்ருத  ப்ரகாசிகா பட்டருடைய தனியன்:

————————-

இரண்டாம் பாதம் –உபய லிங்க பாதம் -8 அதிகரணங்கள்-40 ஸூத்ரங்கள்

முதல் அதிகரணம் -சந்த்யாதி கரணம்– 6 ஸூத்ரங்கள்-
கனவில் காணும் பொருள்கள் அனைத்தும் பரமாத்வால் படைக்கப் படுகின்றன -எனபது நிரூபிக்கப் பட்டுள்ளது-

இரண்டாம் அதிகரணம் -தத்பாவாதிகரணம் -2 ஸூத்ரங்கள்-
ஜீவன் உறங்கும் இடங்கள் எவை எவை என்று நிரூபிக்கப் படுகிறது-

மூன்றாவது அதிகரணம் -கர்மாநு ஸ்ம்ருதி சப்த வித்யதிகரணம் — 1 ஸூத்ரம்–
உறங்கிய ஜீவனே மீண்டும் விளித்து எழுகிறான் -வேறே ஜீவன் இல்லை என்று நிரூபிக்கிறது –

நான்காவது அதிகரணம் -முக்தாதிகரணம் – 1 ஸூத்ரம்-
விழிப்பு கனவு ஆழ்ந்த உறக்கம் மூன்றை விட மாறுபட்ட மூர்ச்சை நிலை-

ஐந்தாவது அதிகரணம் – உபய லிங்க அதிகரணம் -15 ஸூத்ரங்கள்–
அந்த்ர்யாமியாக இருந்தும் உடலின் தோஷங்கள் தட்டாதவன் பரப் ப்ரஹ்மம்-

ஆறாவது அதிகரணம் -அஹி குண்டலாதிகரணம் -4 ஸூத்ரங்கள்–
ப்ரஹ்மத்தின் ரூபம் அசேதன பொருள்களான மூர்த்தமும் -விக்ரகமும் -பிரபஞ்சமே ப்ரஹ்மத்துக்கு சரீரம் என்றும் கூறப்பட்டன –
அசேதனங்களின் தோஷங்கள் ப்ரஹ்மத்துக்கு ஏற்படாது என்று நிரூபிக்கப் படுகிறது –

ஏழாவது அதிகரணம் -பராதிகரணம் -7 ஸூத்ரங்கள்–
ப்ரஹ்மத்தை விட உயர்ந்த வஸ்து வேறு இல்லை என்றும் இவனை
தவிர அடைய வேண்டிய வஸ்து வேறு இல்லை என்றும் நிரூபிக்கப் படுகிறது –

எட்டாவது அதிகரணம்-பலாதிகரணம் – 4 ஸூத்ரங்கள்-
கர்மங்களின் அனைத்து பலன்களையும் பரமாத்மாவே அளிக்கிறான் என்று நிரூபிக்கப் படுகிறது

3-2-1-ஸந்த்₄யாதி₄கரணம்-நாம் கனவில் காணும் பொருள்களை யார் படைக்கிறார்? –பாதத்தின் ஸங்கதி-மூன்றாம் அத்யாயமான ஸாதந அத்யாயத்தில், பக்தி யோகம் என்ற ஸாதனத்தைப் பற்றிக் கூறுவதற்கு முன்னால், அதைச் செய்வதற்கான தகுதியை ஏற்படுத்த முதல் இரண்டு பாதங்கள் அமைந்துள்ளன. வைராக்ய பாதம் என்ற முதல் பாதத்தில் இந்த ஸம்ஸாரத்தில் ஜீவாத்மா படும் கஷ்டங்களைச் சொல்லி அதன் மூலம் உலகில் பற்றின்மையை ஏற்படுத்துகிறார் வ்யாஸர். அதைத் தொ டர்ந்து உபய லிங்க பாதம் என்ற இரண்டாவது பாதத்தில், பகவானிடம் ஆசையை வளர்ப்பதற்காக பரமாத்மாவின் இரண்டு அடையாளங்களைச் சொல்கிறார்
1-அகி₂ல ஹேய ப்ரத்யநீகத்வம் – எல்லா தாழ்ச்சிகளுக்கும் -தோஷங்களுக்கும் எதிர்த் தட்டாய் இருத்தல்
2-கல்யாண கு₃ண ஏக தாநத்வம் – அனைத்து கல்யாைண குணங்கள் -நற் பண்புகளுக்கும் இருப்பிடமாய் இருத்தல்.

ப்₃ரஹ்மைவ ஸ்வை ꞉ ஸ்வபா₄வை ꞉ ப₃ஹுமுக₂ம் அவத₃த் ப்ராக்தநாத்₄யாய யுக்₃மே
தஸ்யேஹ ஆக்ருஷ்ய சிந்தா கிமிதி புநரஸௌ ஸாத₄நாத்₄யாய மத்₄யே ।
மைவம் வித்₃யா꞉ ப்ரபே₄த்தும் விஶத₃யதி பரம் தத்₃தி₄ தத்₃ரூப பே₄தா₃த்
ஸித்₃தோ₄பாயாதி₃பா₄வம் ப்ரத₂யதி ச விபோ ₄꞉ ப்ராப்ய த்ருஷ்ணாய ப்ரதி₂ம் நே ॥

கேள்வி – முன் இரண்டு அத்யாயங்களில் ப்ரஹ்மத்தை அதன் குணங்களோடு கூடப் பல விதமாகச் சொல்லி விட்டாரே ? மறுபடியும் இதில் எதற்காக ஸாதனத்தைச் சொல்ல வேண்டிய இடத்தில் இழுத்து வைத்து ப்ரஹ்மத்தைப் பற்றிப் பேசுகிறார்?
பதில் – மேல் மூன்றாவது பாதத்தில் பக்தி யோகம் -உபாஸனத்தின் வகைகளை வேறுபடுத்திச் சொல்ல வேண்டும், உபாஸனத்தின் வேறுபாடு அதில் த்யானிக்கப்படும் குணங்களின் வேறுபாட்டால் தான், அதற்காக இந்த இடத்தில் ப்ரஹ்மத்துக்கு எண்ணிறந்த கல்யாண குணங்கள் உள்ளன என்று சொல்வது பொருத்தமானது தான். மேலும், மோக்ஷம் அடைவதற்கு பக்தி யோகம் என்ற ஸாத்₄ய உபாயம் (நம்மால் செய்யப்பட வேண்டிய வழி-உபாயம்) இருப்பது போல், ப்ரஹ்மமே ஸித்த உபாயமாக (நம்மால் செய்யப்படத் தேவை யில்லாமல் தானே ஸித்தமாக இருக்கும் உபாயமாக) இருப்பதால், ஸாதனத்தைச் சொல்ல வேண்டிய இந்த அத்யாயத்தில் ப்ரஹ்மத்தையும் சொல்வது பொருத்தமானதே –

பாதத்தின் சுருக்கம்
முன் பாதத்தில், ஜீவாத்மா விழித்திருக்கும் போதும் மரணமடைந்த பிறகும் அனுபவிக்கும் துன்பங்களைப் பற்றிச் சொன்னார் வ்யாஸர். இந்தப் பாதத்தில் கனவு, தூக்கம், மயக்கம் என்ற மூன்று நிலைகளைப் பற்றிப் பேசுகிறார்.

த்யக்தம் தோ₃ஷை ꞉ கு₃ணாட்₄யம் யதி₃ புநரிஹ தத் ப்₃ரஹ்ம சிந்த்யேத பாதே ₃
ஜீவ ஸ்வப்நாத்₃ யவஸ்தா₂ மநநம் அத₂ கத₂ம் ஸங்க₄டே தீதி சேந் ந ।
ஸ்வாப்நார்த₂ ஸ்ரஷ்ட்ருபா₄வ ப்ரப்₄ருதி ப₃ஹுவித₄ ப்₃ரஹ்ம மஹாத்ம்ய ஸித்₃த்₄யை
ஜந்தோரஸ்ய ஸ்வ முக்தௌ அதி பரவஶ தாஜ்ஞப்தேய ச ஏத த₃த்ர ॥

கேள்வி – ப்ரஹ்மம் தோஷங்களற்றவர், குணங்களுடையவர் என்று சொல்ல வந்த பாதத்தில் எதற்காக மறுபடியும் ஜீவனுடைய கனவு முதலானவற்றைப் பேச வேண்டும்? இதை முன் பாதத்திலேயே
சேர்த்திருக்கலாமே ?
பதில் – ஜீவாத்மாவின் கனவு முதலான நிலைகளைப் பற்றி ஆராய்ந்தாலும், அதில் முக்கியமாக ப்ரஹ்மத்தின் பல ஒப்பற்ற குணங்கள் சொல்லப் படுகின்றன – அவர் தான் நாம் கனவில் காணும் பொருள்களைப் படைக்கிறார் என்று தொடங்கி. எனவே , பரமாத்மாவின் பெருமைகளைச் சொல்ல வந்த இந்த பாதத்திலும் இது பொருத்தமானதே . மேலும், கனவு தூக்கம் முதலான நிலைகளில் எல்லாம் இந்த ஜீவாத்மா எவ்வளவு தூரம் பரமாத்மாவை அண்டியே இருக்கிறார் என்று காட்டுவதன் மூலம், இந்த ஸம்ஸாரத்தைத் தாண்டி மோக்ஷம் அடைவதற்கும் நாம் அந்த பரமாத்மாவைத் தான் எதிர்பார்த்து இருக்க வேண்டும், நாமாக அடைந்து விட முடியாது என்பதையும் உணர்த்துகிறார்.

3-2-1-ஸந்த்₄யாதி₄கரணம் – ஸங்கதி – முன் பாதத்தின் இறுதி வரை , ஜீவாத்மா பிறக்கும் போது அனுபவிக்கும் துக்கங்களைக் கூறினார். இந்த அதிகரணத்தில் ஸ்வப்நத்தில் ஜீவாத்மாவின் நிலையை ஆராய்கிறார்.

உபநிஷத்தில் ஸ்வப்நத்தைப்பற்றி
விஷய வாக்யம்
– ப்ருஹதாரண்யக உபநிஷத்தின் 4ஆவது அத்யாயத்தின் 3ஆவது கண்டத்தில் உள்ளது.-தஸ்ய வா ஏதஸ்ய புருஷஸ்ய த்₃ வே ஏவ ஸ்தா₂நே ப ₄வத இத₃ம் ச பரலோக ஸ்தா₂நம் ச |-இந்த ஜீவாத்மாவுக்கு இரண்டு இடங்கள் – இந்த உலகமும் ஸ்வர்கமும்-

ஸந்த்₄யம் த்ருதீயம் ஸ்வப்ந ஸ்தா₂நம் । தஸ்மிந் ஸந்த்₄யே ஸ்தா₂நே திஷ்ட₂ந் நேதே உபே ₄ ஸ்தா₂நே பஶ்யதி–ஸந்த்யம்-– (ஸ்வப்நம்) மூன்றாவது இடம். அந்த இடத்தில் இவன் இந்த உலகம் ஸ்வர்கம் இரண்டையும் காண்கிறான்.-ஸந்த்₄யம் என்றால் விழிப்புக்கும் தூக்கத்துக்குமான ஸந்தி₄யில் (இடையில்) உண்டானது – அதாவது ஸ்வப்நம்.

ந தத்ர ரதா₂ ந ரத₂யோகா₃ ந பந்தா₂நோ ப₄வந்த்யத₂ ரதா₂ந் ரத₂ யோகா₃ந் பத₂꞉ ஸ்ருஜதே ।-அங்கு தேர்கள், குதிரைகள், பாதைகள் இல்லை . தேர்களையும் குதிரைகளையும் பாதைகளையும் ஸ்ருஷ்டிக்கிறார்.

ந தத்ர ஆனந்தா₃ முத₃꞉ ப்ரமுதோ ₃ ப₄வந்தி அத₂ ஆனந்தா₃ந் முத₃꞉ ப்ரமுதோ ₃ ஸ்ருஜதே ।-அங்கு ஆநந்தம், மோதம், ப்ரமோதம் இல்லை . ஆநந்தத்தையும் மோதத்ணதயும் ப்ரவமாதத்தையும் ஸ்ருஷ்டிக்கிறார்.
பார்ப்பதால் இன்பமளிக்கும் பொருள்கள் தான் ஆநந்தம் என்றும், நம்முடையது என்று அறிவதால் இன்பமளிக்கும் பொருள்கள் மோதம் என்றும், பயன்படுத்துவதால் இன்பமளிக்கும் பொருள்கள் ப்ரமோதம் என்றும் கூறப் படுகின்றன-

ந தத்ர வேஶாந்தா꞉ புஷ்கரிண்ய꞉ ஸ்ரவந்த்யோ ப₄வந்த்யத₂ வேஶாந்தா₃ந் புஷ்கரிணீ꞉ ஸ்ரவந்தீ꞉ ஸ்ருஜதே ।ஸ ஹி கர்தா–அங்கு குட்டைகள், குளங்கள், நதிகள் இல்லை . குட்டைகளையும் குளங்களையும் நதிகளையும் ஸ்ருஷ்டிக்கிறான்.

பூர்வ பக்ஷியின் வாதம்
ஸந்தேஹம்
– இங்கு ஸ்வப்நத்தில் காணப்படும் பொருள்களைப் படைப்பவர் ஜீவாத்மாவா? பரமாத்மாவா?
பூர்வ பக்ஷம் – ஜீவாத்மா தான் இவற்றை ஸ்ருஷ்டிக்கிறார் என்று 2 ஸூத்ரங்களால் கூறுகிறார் பூர்வ பக்ஷீ.
1–ஸந்த்₄யே ஸ்ருஷ்டி: ஆஹ ஹி–
“ஸந்த்₄யத்தில் ஸ்ருஷ்டி (ஜீவாத்மாவால்), அப்படி யன்றோ கூறிற்று” ஸந்த்யத்தில் (ஸ்வப்னத்தில்) காணப்படும் பொருள்களின் ஸ்ருஷ்டி, அந்த ஸ்வப்நத்தைக் காணும் ஜீவனால் தான் செய்யப் படுகிறது என்கிறது வேதமே – ’-ஸ ஹி கர்த்தா’ (அவர் அன்றோ கர்த்தா) என்று ஜீவனையே சொல்வதால்.

2-நிர்மாதாரம் ச ஏகே புத்ராத₃ய: ச
ஏகே –
ஒரு சிலர், அதாவது க்ருஷ்ண யஜுர் வேதத்தைக் கற்பவர்கள், அதன் பகுதியான கடோபநிஷத்தில்
நிர்மாதாரம் – ஜீவாத்மா தான் ஸ்வப்நப் பொருள்களை உண்டக்குபவர் (நிர்மாதா) என்று கூறுகிறார்கள் – அதாவது(ய ஏஷு ஸுப்தேஷு ஜாக₃ர்தி காமம் காமம் புருஷோ நிர்மிமாண : ) அதாவது “புலன்கள் எல்லாம் தூங்கும் போது இந்த ஜீவாத்மா மட்டும் விழித்துக் கொண்டிருந்து, தன்னுடைய காமங்களை
(ஆசைப்பட்ட பொருள்களை ) உண்டாக்குகிறார்” என்று கடோபநிஷத் கூறுகிறது.
புத்ராத₃ய: ச – புத்ரன் முதலானவை தான் (இங்கு காமங்கள் என்று சொல்லப் படுகின்றன). காமம் என்றால் பொதுவாக ’ஆசை ’ என்று பொருள் இருந்தாலும், இங்கு அந்தச் சொல் ஆசைப்படப்படும் பொருள்களையே காட்டுகிறது.-ஏனென்றால் இந்த கடோபநிஷத்தில் இதற்கு முன்னாலும் யமன் நசிகேதஸ்ஸிடம் பேசும் போது காமம் என்ற சொல்லால் பொருள்களையே குறிப்பிடுகிறார்.

யே யே காமா: து₃ர்லபா ₄: மர்த்ய லோகே ஸர்வாந் காமாந் ச₂ந்த₃த: ப்ரார்த₂ யஸ்வ-“எந்தெந்தப் பொருள்கள் எல்லாம் மனித உலகில் கிடைக்க அரிதானவையோ , அவற்றை ஆசைப்படி கேட்டுக் கொள்” அவன் அன்றோ கர்த்தா (செய்பவன்)

பரமாத்மா தான் படைக்கிறார்
ஸித்தாந்தம் –
தன் ஸித்தாந்தத்தை வ்யாஸர் 4 ஸூத்ரங்களால் சொல்கிறார்.
3–மாயா மாத்ரம் து கார்த்ஸ்ந்யேந அநபி₄ வ்யக்த ஸ்வரூ பத்வாத்
மாயா மாத்ரம் து –
“(ஸ்வப்நத்தில் காணப்படும் பொருள்கள் எல்லாம்) மாயமானவையே ”. மாயம் என்ற சொல்லுக்குப் பொய்யானது என்று பொருள் அல்ல, ஆச்சர்யமானது என்று தான் பொருள். ஸ்வப்நத்தில் நாம் காணும் பொருள்கள் எல்லாம் மிகவும் ஆச்சர்யமானவை , ஏனென்றால் அவற்றை நாம் மட்டும் தான் காண முடியும், அதுவும் அப்போது மட்டும் தான் காண முடியும். மற்றவர்களோ , நாமே விழித்த பிறகோ காண முடியாது.
வ்யாஸரின் கருத்து – இப்படிப்பட்ட ஆச்சர்யமான பொருள்களை பரமாத்மாவால் மட்டுமே ஸ்ருஷ்டிக்க முடியும்.

(ஜனகஸ்ய குலே ஜாதே தேவ மாயேவ நிர்மிதா -பால -2-27- ந பவந்தி -கனவில் காண்பவை அவன் ஒருவன் மட்டுமே காணுமாறு பரம் பொருள் படைக்கிறான் என்கிறது – இந்த ஆச்சர்யமே மாயா-சத்ய சங்கல்பன் அன்றோ –)

கேள்வி – உபநிஷத்தில் ஜீவாத்மாவும் ஸத்ய ஸங்கல்பன், அதாவது நினைத்ததை எல்லாம் நடத்தும் வல்லமை படைத்தவர் என்று சொல்லப்பட்டுள்ளதே ? அவர் ஏன் இந்த ஆச்சர்யமான ஸ்ருஷ்டியைச் செய்திருக்க முடியாது?
பதில் –
கார்த்ஸ்ந்யே
–முழுவதுமாக
அநபி₄வ்யக்த -வெளிப்படாத
ஸ்வரூபத்வாத் -தன்மைகளைக் கொண்ட படியால்
பரமாத்மாவைப் போல் ஜீவாத்மாவுக்கும் (1) பாபமின்மை , (2) மூப்பின்மை , (3) மரணமின்மை , (4) சோகமின்மை , (5) பசியின்மை , (6) தாகமின்மை , (7) எல்லா ஆசைகளும் நிரம்பி யிருத்தல், (8) நினைத்ததை நடத்தும் வல்லமை ஆகியவை இயற்கையான பண்புகள் தான். ஆனாலும், ஸம்ஸாரத்தில் இருக்கும் போது ஜீவாத்மாவின் இந்த இயற்கைத் தன்மைகள் மறைக்கப் பட்டுள்ளன. மோக்ஷம் அடையும் பொழுது தான் தன்னுடைய இயற்கையான தன்மைகளோடு ஜீவாத்மா முழுவதுமான வெளிப்படுகிறார் என்று வேதமே கூறுகிறது. எனவே ஸம்ஸாரத்தில் இருக்கும் ஜீவாத்மாவால் இப்படிப்பட்ட ஆச்சர்யமான ஸ்வப்நப் பொருள்களைப் படைக்க முடியாது.

ய ஏஷு ஸுப்தேஷு ஜாக₃ர்தி காமம் காமம் புருஷோ நிர்மிமாண :” என்ற கடோபநிஷத் வாக்கியத்திலும்
“ஜீவாத்மாக்கள் அனைவரும் தூங்கும் போதும் பரமாத்மா விழித்திருந்து ஸங்கல்பித்து ஸங்கல்பித்து
ஸ்வப்நப் பொருள்களைப் படைக்கிறார்” என்று பரமாத்மா தான் சொல்லப் படுகிறார், ஏனென்றால் இதற்கு முன்னும் பின்னும் “இவரே ப்ரஹ்மம், இவரிடம் உலகப் பொருள்கள் எல்லாம் ஆச்ரயித்துள்ளன” என்று சொல்கிற படியால்.

(கட உபநிஷத் -5-8-7- ஏஷூ சுப்தேஷூ ஜாகர்தி –-இவை தூங்கும் பொழுது அவன் விழித்து உள்ளான்-மேலும் அதே வரியில் – தத் ஏவ சுக்ரம் தத் ப்ரஹ்ம தத் ஏவ அம்ருதம் உஸ்யதே தஸ்மின் லோகாஸ்ரித சர்வே தது நான்யேதி கச்சன -என்று அந்த ப்ரஹ்மமே ஒளி அமிர்தம் அனைத்தும் ஒடுங்கி உள்ளன –
அவனைக் கடந்து ஏதும் இல்லை என்கிறது-ப்ருஹத் உபநிஷத் -4-3-10-வேசாந்தா புஷ்கரிண்ய ஸ்ரவந்த்ய ஸ்ருஜதே ஸ ஹி கர்த்தா என்று பரம புருஷனைப் பற்றிக் கூறியது)

ஸ்வப்நப் பொருள்களும் உண்மையே
கேள்வி –
ஸத்ய ஸங்கல்பம் முதலானவை ஜீவாத்மாவுக்கு இயற்கையான பண்புகள் என்றால் அவை ஏன் ஸம்ஸாரத்தில் இருக்கும் பொழுது மறைக்கப் பட்டுள்ளன? பதில் – அடுத்த ஸூத்ரத்தில்
4-பராபி₄த்₄யாநாத் து திரோஹிதம் தத: ஹி அஸ்ய ப₃ந்த₄விபர்யயௌ
பராபி₄த்₄யாநாத் து
– (ஜீவாத்மா எண்ணிறந்த பிறவிகளாகத் தவறு செய்ததால்) பரமாத்மாவின் ஸங்கல்பத்தால் தான்
திரோஹிதம் – ஜீவாத்மாவுக்கு இயற்கையான இந்த பண்புகள் வெளிப்படாமல் மறைக்கப்பட்டுள்ளன.
தத: ஹி அஸ்ய – அந்த பரமாத்மாவின் ஸங்கல்பத்தால் அன்றோ இந்த ஜீவாத்மாவுக்கு
ப₃ந்த₄விபர்யயௌ- ஸம்ஸாரத்தில் பந்தமும் (கட்டுப் பட்டிருப்பதும்) அதற்கு எதிரான முக்தியும்.
ஸம்ஸாரத்தில் இருப்பதே பரமாத்மாவின் ஸங்கல்பத்தால் தான் என்றால், இங்கு இருக்கும் பொழுது இயற்கையான பண்புகள் மறைக்கப் பட்டிருப்பதும் அவர் ஸங்கல்பத்தால் தான் என்று தானாகவே அறியலாம்.

(தைத்ரியம் -2-7-1-யதா ஹி ஏவ ஏஷ ஏ தஸ்மின் அத்ருஷ்ய அநாத்ம்யே அநிருக்தே அநிலயநே
அபயம் பிரதிஷ்டாம் விந்ததே அத ச அபயம் கத பவதி யதா ஹி ஏவ ஏஷ ஏதஸ்மின் உதரம் அந்தரம் குருதே அத தஸ்ய பயம் பவதி -என்றும்ஏஷ ஹி ஏவ ஆனந்தயாதி -என்றும்2-8-1-பீஷாச்மாத் வாத பவதே -என்றும் கூறும்-கோஹ்யே வாந் யாத்க ப்ராண்யாத்-யதேஷ ஆகாஸ ஆனந்தோ நஸ்யாத்
ஏஷஹ் ஏவ ஆனந்தயாதி பரஞ்சோதி ரூப சம்பத்ய ஸ்வேந ரூபேண அபி நிஷ்பத்யதே -முதலிய ஸ்ருதிகளால்-பரமாத்மாவின் மூலமே ஜீவனின் ஸூக துக்கங்களை பறை சாற்றுகின்றன)

கேள்வி – எதன் மூலம் பரமாத்மா இப்படி மறைக்கிறார்?
பதில் –5-தே ₃ஹ யோகா₃த் வா ஸ: அபி –
“அதுவும் (மறைக்கப் படுவதும்) உடலோடு சேர்க்கையாலோ (அல்லது மூல ப்ரக்ருதியோடு சேர்க்கையாலோ)”-ஸ்ருஷ்டி காலத்தில் உடலோடு உள்ள சேர்க்கையாலும், ப்ரளயத்தில் (நமக்கு உடலே இல்லாத பொழுது) ஸூக்ஷ்மமாக (பெயர் உருவத்தால் பிரித்துப் பார்க்க முடியாததான) மூல ப்ரக்ருதியோடு சேர்க்கையாலும் மறைக்கப் படுகின்றன.

(கட உபநிஷத் -5-8-தஸ்மின் லோகாஸ்ரித சர்வே தது நாத்யேதி கச்சன -என்பது
பரம் பொருளுக்கே பொருந்தும்-)

6– ஸூசக: ச ஹி ச்ருதே : ஆசக்ஷதே ஹி தத்₃வித₃:
ஸூசக: ச ஹி –
கனவில் வரும் காட்சிகள் உண்மையில் நடக்கப் போகும் நிகழ்வுகளைக் கோடி காட்டுகின்றன என்று
ச்ருதே : – வேதம் சொல்கிறது – ஒரு கர்மத்தைச் செய்யும் பொழுது கனவில் ஒரு பெண்ணைக் கண்டால் அந்தக் கர்மம் நன்கு பலனளிக்கும், கொலை செய்யப் படுவதைக் கண்டால் உண்மையில் செய்யப்படுவான், என்பது போல்.
ஆசக்ஷதே ஹி தத்₃வித₃: – ஸ்வப்நத்தின் உண்மைத் தன்மையை அறிந்த ஜ்ஞாநிகள் இவ்வாறே கூறுகிறார்கள்.

(சாந்தோக்யம் -5-2-8-யதா கர்ம ஸூ காம்யேஷூ ஸ்த்ரியம் ச்வப்நேஷூ பச்யதி ஸ்ம்ருத்திம் தத்ர ஜாநீயாத் தஸ்மின் ஸ்வப்ன நிதர்சனே —)

ஜீவாத்மா தான் ஸ்வப்நப் பொருள்களைப் படைக்கிறார் என்றால், நல்ல நிகழ்வுகளைக் கோடி காட்டும் பொருள்களை மட்டும் கனவில் ஸ்ருஷ்டித்துக் கண்டு விடலாம். துன்பம் தரும் காட்சிகளையே பார்க்க மாட்டார். எனவே ஜீவன் படைக்கவில்லை .-ஆக, ஸ்வப்நப் பொருள்களும் உண்மை யானவையே , நமது சிறு புண்ய பாபங்களைக் கழிப்பதற்காகப் பரமாத்மா படைக்கிறார்.

3-2-2-தத₃பா₄வாதி₄கரணம்– ஜீவாத்மா எங்கு தூங்குகிறார்?-அதிகரணத்தின் பின்புலம-ஸங்கதி–
முன் அதிகரணத்தில் ஸ்வப்நத்தைப் பற்றி ஆராய்ந்து விட்டு,இந்த அதிகரணத்தில் ஸுஷுப்தி அதாவது ஆழ்ந்த உறக்கம் என்ற நிலையைப்பற்றி ஆராய்கிறார்.-
விஷய வாக்யம்–
உபநிஷத்தில் ஜீவாத்மா எங்கு தூங்குகிறார் என்பது மூன்று விதமாகக் கூறப்படுகிறது
1- யத்ர ஏதத் ஸுப்த: ஸமஸ்த: ஸம் ப்ரஸந்ந: ஸ்வப்நம் ந விஜாநாதி, ஆஸு ததா₃ நாடீ₃ஷு ஸூ ப்தோ பவதி: –சாந்தோக்யம் -8-6-3--எப்போது இந்த ஜீவாத்மா எல்லாப் புலன்களும் செயலிழந்த நிலையில், புலன்களால் ஏற்படும் துன்பங்கள் இல்லாமல், கனவும் காணாமல், ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறாரோ அப்போது இந்த நாடிகளில் தான் சேர்ந்திருக்கிறார்.
2–அத₂ யதா₃ ஸுஷுப்த: ப₄வதி யதா₃ந கஸ்யசந வேத₃, ஹிதா நாம நாட்₃ய: த்₃வா ஸப்ததி-ஸஹஸ்ராணி ஹ்ருத₃யாத் புரீ ததம் அபி₄ப்ரதிஷ்ட₂ந்தே , தாபி₄: ப்ரத்யவ ஸ்ருப்ய புரீததி சேதே –ப்ருஹத் உபநிஷத் -2-1-19– எப்போது இந்த ஜீவாத்மா தூங்குகிறாரோ அப்போது இதயத்தில் பூரீதத் என்ற இடத்துக்குச் செல்லும் 72000 நாடிகளின் மூலம் சென்று அந்த புரீதத் என்பதில் சயனிக்கிறான்
3-யத்ர ஏதத் புருஷ: ஸ்வபிதி நாம ஸதா ஸோம்ய! ததா₃ ஸம்பந்ந: ப₄வதி –சாந்தோக்யம் -6-8-1--எப்போது இந்த ஜீவாத்மா உறங்குகிறானோ அப்போது ஸத் என்கிற பரமாத்மாவோடு சேர்ந்திருக்கிறார்.
ஆக உப்படி நாடிகள், புரீதத், பரமாத்மா என்ற மூன்று இடங்களில் ஜீவாத்மா உறங்குவதாகச் சொல்லப்படுகிறது.

ஸந்தேஹம்– இந்த மூன்று இடங்களுக்கும் விகல்பமா? ஸமுச்சயமா? விகல்பம் என்றால் ஒரே இலக்கை அடைய இருக்கும் பல வழிகளுள் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது–திருவரங்கம் செல்ல விழுப்புரம் கடற்கரை பாதையில் செல்வது. ஸமுச்சயம் என்றால் ஒரு இலக்கை அடைய பல பொருள்களைச் சேர்த்துப் பயன் படுத்துவது–அரிசி பருப்பு வெல்லம் முதலானவற்றைச் சேர்த்து சக்கரைப் பொங்கல் செய்வது போல்.

பூர்வ பக்ஷம் -இவற்றுக்குள் விகல்பம் தான்– அதாவது ஒரு ஸமயத்தில் இவற்றில் ஏதோ ஒன்றில் தான் ஜீவாத்மா தூங்குகிறார். ஏனென்றால் அந்த அந்த வாக்கியத்தில் நாடிகளும், புரீதத்தும், பரமாத்மாவும் தனித் தனியாகத் தான் சொல்லப்பட்டுள்ளார்கள். மேலும்,ஆத்மா அணுவான படியால் அவர் ஒரு காலத்தில் ஒரு இடத்தில் தான் இருக்கமுடியும். எனவே மூன்று இடங்களுக்குள் விகல்பம் தான்.

வியாசரின் ஸித்தாந்தம்-
1- தத₃பா₄வ: நாடீ₃ஷு தச் ச்₂ருதே : ஆத்மநி ச
தத₃பா₄வ: –
ஸ்வப்நம் இல்லாத நிலையான ஸுஷுப்தி என்ற ஆழ்ந்தஉறக்கம்
நாடீ₃ஷு நாடிகளிலும்
ஆத்மநி பரமாத்மாவிடத்திலும்
ச புரீதத் என்ற இதயப் பகுதியிலும் (ஏற்படுகிறது)
தச்ச்₂ருதே : – மூன்றை யுமே தூக்கத்துக்கான இடமாக வேதம் உபதேசிக்கிறபடியால்.

வ்யாஸரின் அபிப்ராயம்–விகல்பம் சொன்னால், ஒரு வாக்கியத்தின் படி நடக்கும் பொழுது மற்ற இரண்டு வாக்கியங்களும் தற்காலிகமாகப் புறக் கணிக்கப் பட வேண்டும். இது வேத வாக்கியத்துக்கு ஒரு குறை யாகும். எனவே ஸமுச்சயம் என்று தான் கொள்ள வேண்டும்.
ப்ராஸாத₃ க₂ட்வா பர்யங்க ந்யாயம்–ராமன் மேல் மாடியில்(ப்ராஸாத₃ம்) தூங்குகிறான்,-கட்டிலில்(க₂ட்வா) தூங்குகிறான், மெத்தையில் (பர்யங்கம்) தூங்குகிறான் என்று சொன்னால் எப்படி மூன்றுக்கும் ஸமுச்சயம்(சேர்க்கை ) கொள்கிறோமோ அதே போல் இங்கும் நாடிகள், புரீதத், பரமாத்மா என்ற மூன்று இடங்களிலும் சேர்த்துத் தான் சயனிக்கிறார் ஜீவாத்மா.

நேரடியாகத் தூங்குவது பரமாத்மாவிடம் – இந்த மூன்றிலும் வைத்துக் கொண்டு, நாடிகளும் புரீதத்தும் மேல் மாடியின் நிலையிலும் கட்டிலின் நிலையிலும் உள்ளன. பரமாத்மா தான் மெத்தையின் நிலையில் உள்ளார், அதாவது அவர் தான் நேரடியாக இந்த ஜீவாத்மா சயனிக்கும் இடமாக உள்ளார்.

ஏன் இப்படிக் கொள்ள வேண்டும் என்பதை அடுத்த ஸூத்ரத்தில் கூறுகிறார் வ்யாஸர்
2-அத: ப்ரபோ₃த₄: அஸ்மாத்
– “ஆகையால் தான் இதிலிருந்து விழிக்கிறான்”
வேதாந்தத்தில் (ஸத: ஆக₃ம்ய ந விது₃: ஸத ஆக₃ச்சா₂ம: இதி)-சாந்தோக்யம் -6-10-2— அதாவது “விழிக்கும் பொழுது ஸத் என்ற பரமாத்மாவிடமிருந்து எழுந்து வரும் இந்த ஜீவாத்மா ’நான் பரமாத்மாவோடு இவ்வளவு நேரம் கூடி இருந்தேன்’ என்று அறியாமலேயே விழிக்கிறார்” என்று கூறுகிறது.
இந்த வாக்கியம் பொருந்த வேண்டுமென்றால், ஜீவாத்மா உறங்கும் மெத்தை ஸ்தானத்தில் பரமாத்மா இருக்கிறார் என்று தான் கொள்ள வேண்டும். மூன்று இடங்களுக்குள் விகல்பமாக இருந்தால், ’பரமாத்மாவிலிருந்தோ நாடியிலிருந்தோ புரீதத்திலிருந்தோ எழுந்து வருகிறார்’ என்று வேதம் சொல்லி யிருக்க வேண்டும். அப்படிச் சொல்ல வில்லை . ஆக, ஜீவாத்மா தூங்கும் பொழுது இம் மூன்று இடங்களுக்கும் ஸமுச்சயம் தான், அதிலும் நேரடியாகப் பரமாத்மாவிடம் சயனிக்கிறார் என்று நிரூபிக்கப்பட்டது.

3-2-3-கர்மாநுஸ்ம்ருதி சப்₃த₃ வித்₄யதி₄கரணம் –தூங்குபவர் தான் விழிக்கிறாரா? (தூங்குபவரே விழிக்கிறார் )
ஸங்கதி–
முன் அதிகரணத்தில் தூக்கத்தைப் பற்றின பேச்சு எழுந்த படியால், அதோடு தொடர்புபட்ட வேறொரு விஷயத்தை இதில் ஆராய்கிறார்.
ஸந்தேஹம்– எந்த ஜீவாத்மா தூங்கச் சென்றாரோ அவரே தான் பிற்பாடு விழிக்கிறாரா? அல்லது வேறொரு ஜீவாத்மா விழிக்கிறாரா?

பூர்வ பக்ஷம்– தூங்கப் போகும் ஜீவாத்மா புலன்கள், மனது முதலானவற்றோடு தொடர்பை இழந்து, பரமாத்மாவோடு தூக்கத்தில் சேர்கிறார் என்று வேதத்தில் கூறப்படுகிறது. இதற்கும் முக்திக்கும் வேறுபாடே இல்லை . எனவே , அந்த ஜீவாத்மா திரும்பவும் விழிக்க இயலாது, எனவே வேறொரு ஜீவாத்மா தான் தூக்கத்திலிருந்து விழிக்கிறார்.

ஸித்தாந்தம்- 1– ஸ: ஏவ து கர்ம-அநு ஸ்ம்ருதி-சப்₃த₃-விதி₄ப்₄ய:
ஸ: ஏவ து–
“அவன் தான் அன்றோ ” –அதாவது, தூங்கப் போன அதே ஜீவாத்மா தான் விழிக்கிறார் அன்றோ-(இதற்கு நான்கு ஹேதுக்கள்-1-கர்ம-2-அநு ஸ்ம்ருதி-3-சப்₃த₃-4-விதி-)
கர்ம–இந்த ஜீவாத்மா சேர்த்து வைத்த புண்ய பாபங்களின் பயன்களை அவன் அநுபவித்தே ஆக வேண்டும், கர்மங்களை அழிக்க்கக் கூடிய பரமாத்மாவைப் பற்றின ஜ்ஞாநம் இவனுக்கு ஏற்படாதபடியால்.
அநு ஸ்ம்ருதி:–“நேற்று தூங்கப் போன நானே இன்று விழித்துள்ளேன்” என்கிற நினைவு உள்ள படியால்.
சப்₃த₃:– வேதச் சொல் அவ்வாறு சொல்வதாலும்-(சாந்தோக்யம் -6-10-2- த இஹ வ்யாகரோ வா சிம்ஹோ வா வ்ருகோ வா வரஹா வா கீடோ வா பதங்கோ வா தம்சோ வா மசகோ வா யத்யத் பவந்தி தத் ஆபவந்தி) அதாவது ’தூக்கத்துக்கு முன் புலியாகவோ சிங்கமாகவோ எதுவாக எந்த ஜீவாத்மா இருந்தானோ அதுவாகவே அவன் தூக்கத்துக்குப் பின் விழிக்கிறான்”
விதி₄: – வேதத்தில் மோக்ஷம் அடைவதற்குத் தியானம் செய்ய வேண்டும் என்று சொல்லும் கட்டளைகள் எல்லாம் வீணாகப் போகுமான படியால். – தூங்கினாலே முக்தி என்றால் எதற்குத் தியானம் செய்ய வேண்டும்?

தூக்கமும் முக்தியும்
முக்திக்கும் தூக்கத்துக்கும் எந்த வேறுபாடும் இல்லையே என்று பூர்வ பஷி கேட்டிருந்தார். அது தவறானது.
ஸுஷுப்தியைப் பற்றி உபநிஷத் சொல்லும் பொழுது, அது எந்த விதமான செயல்பாடுகளும் இல்லாமல், ஜீவாத்மாவின் ஜ்ஞாநம் மிகவும் சுருங்கி யிருக்கும் நிலை என்கிறது
சாந்தோக்யம் -8-11-1-தத் யத்ர ஏதத் ஸூ ஷூப்த –நாஹகலு அயம் ஏவம் சம்ப்ரதி ஆத்மானம் ஜா நாதி அயம் அஹம் அஸ்மி இதி நோ ஏவ இமானி பூதானி வி நாசமேவ அபீத பவதி நாஹம் அத்ர போக்யம் பச்யாமி-“இந்த ஸுஷுப்தி நிலையில், ஒரு ஜீவாத்மா’ நான் இன்னார்’ என்று தன்னையும் அறிவதில்லை , தன்னைச் சுற்றி இருக்கும் பொருள்களையும் அறிவதில்லை , அறிவின் வெளிப்பாடில்லாமல் அழிந்தது போல் இருக்கிறார்”

முக்தியைப் பற்றி உபநிஷத் சொல்லும் பொழுது, அதில் இந்த ஜீவாத்மா முழுவதுமாக அறிவின் மலர்ச்சியைப் பெற்று, எல்லா விதமான இன்பங்களையும் அநுபவிக்கிறார் என்கிறது
பரம் ஜ்யோதி: உப ஸம்பத்₃ய ஸ்வேந ரூபேண அபி₄நிஷ்பத்₃யதே — பரமாத்மாவை அடைந்து தன் இயற்கையான பண்புகளோடு கூட முழுவதுமாக வெளிப்படுகிறார்-

ஸர்வம் ஹ பச்ய: பச்யதி ஸர்வம் ஆப்நோதி ஸர்வ ச:-முக்தி அடைபவன் அனைத்தையும் அறிகிறான், அனைத்தையும் எல்லா விதத்திலும்அடைகிறான்-

சாந்தோக்யம் -8-12-3-பரம் ஜ்யோதிரூப சம்பத்ய ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே ச தத்ர பர்யேதி ஐ ஷத் கிரீடன் ரமமாண- என்றும்7-25-2-ஸ ஸ்வ ராட் பவதி தஸ்ய சர்வேஷூ லோகேஷூ காம சாரோ பவதி -என்றும்7-26-2-சர்வம் ஹ பச்ய பஸ்யதி சர்வம் ஆப் நோதி சர்வச -என்றும் கூறும் –

ஸ: தத்ர பர்யேதி ஜக்ஷத் க்ரீடன் ரமமாண:, ஸ: ஸ்வராட் ப₄வதி, தஸ்ய ஸர்வேஷு லோகேஷு காம சார: ப₄வதி--அவன் அந்த வைகுந்தத்தில் ஆநந்தமாக விளையாடிக் கொண்டு திரிகிறான், செயற்கையாக யாருக்கும் அடிமையாக இருப்பதில்லை , அவனுக்கு எல்லா உலகங்களிலும் அவன் ஆசைப்பட்டபடி இன்பங்கள் கிடைக்கின்றன
ஆக இப்படி தூக்கத்துக்கும் முக்திக்கும் பெருத்த வேறுபாடு உள்ளதால், களைப்படைந்து செயல்பட முடியாமல் தூங்கப்போன ஜீவாத்மா தான் பரமாத்மாவிடமிருந்து புத்துணர்ச்சி பெற்று திரும்பவும் விழிக்கிறார்.

3-2-4-முக்₃தா₄தி₄கரணம் –மயக்கம் ஒரு தனி நிலையா?(மரணத்தில் பாதி மயக்கம் )
முக்₃தா₄தி₄கரணம்–ஸங்கதி–
முன் அதிகரணங்களில் விழிப்பு, கனவு, தூக்கம், மரணம் முதலான நான்கு நிலைகளைப் பற்றி ஆராய்ந்தார் வ்யாஸர். இந்த அதிகரணத்தில், மயக்கம் என்ற நிலையைப் பற்றி ஆராய்கிறார்-

ஸந்தேஹம்– மயக்கம் என்பது முன் சொல்லப்பட்ட4 நிலைகளுக்குள் ஒன்று தானா? அல்லது தனி நிலையா?
பூர்வ பக்ஷம்– தனி நிலை என்று சொல்லத் தேவை யில்லை . மயக்கத்தில் ஜ்ஞாநம் வெளிப்படாமல் இருப்பது போல் தூக்க நிலையிலும் அறிவு வெளிப்படுவதில்லை . எனவே அதிலேயே இதை அடக்கி விடலாம்

ஸித்தாந்தம்- 1- முக்₃தே ₄ அர்த₄ ஸம்பத்தி: பரிசேஷாத்
முக்₃தே ₄-
மயக்க மடைந்த புருஷனிடம் யாதொரு நிலை உள்ளதோ , அந்த மயக்கம் என்ற நிலை
அர்த₄ஸம்பத்தி: – மரணத்தில் பாதியை அடைந்தது போன்றது (எனவே தனி நிலை என்று தான் ஏற்க வேண்டும்)
பரிசேஷாத்–மீதமிருக்கிற படியால்.

மயக்கம் என்ற நிலையில் ஜ்ஞாநம் வெளிப் படாதபடியால் இது விழிப்பு மற்றும் கனவு நிலைகளில் அடங்காது. இது ஆழ்ந்த உறக்கத்திலும் அடங்காது, காரணம் மாறுகிறபடியால். தூக்கத்துக்குக் காரணம் தமோ குணம், மயக்கத்துக்குக் காரணம் அடிபடுவது, –அத்யந்த அநிஷ்ட ஸ்ரவணாத்-மிகவும் அதிர்ச்சி தரும் கெட்ட செய்தியைக் கேட்பது, முதலானவை .

மரணத்திலும் இது அடங்காது–-நிமித்த வைரூப்யாத்தன்மை மாறுபடுகிற படியால். மரணத்தில் உடலோடும் ப்ராணனோடும் முழுவதுமாகத் தொடர்பு அற்று விடும். ஆனால் மயக்கத்திலோ அவை முற்றுமாக அறுவதில்லை , மிகவும் வலு விழந்தாலும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அதனால் –ஆகார வைரூப்யாத்-தன்மையில் மாறுபாடு உள்ளது.-ஆக, விழிப்பு தூக்கம் கனவு மரணம் என்று நமக்குத் தெரிந்த நான்கு நிலைகளில் இது அடங்காதபடியால், மயக்கம் என்பது ஒரு தனி நிலை என்று தான் கொள்ள வேண்டும்.

இந்த நான்கு அதிகரணங்களும் ஒரு பேடிகைஇதில் ஜீவனுக்கு நான்கு நிலைகளிலும் உள்ள துக்கங்கள் காட்டப்படுகின்றனஇனி ப்ரஹ்மம் ஜாக்ராதிகள் ஆகிய எந்த நிலையிலும் தோஷம் அற்றது என்றும் தானே நிர்த் தோஷமான கல்யாண குணம் மிக்கது என்றும் நான்கு அதிகரணங்களாலும் விளக்குகிறார் –

3-2-5-உப₄ய லிங்கா₃தி₄ கரணம் குற்ற மில்லாக் கல்யாண குணக் கடல் –அதிகரணத்தின் பின் புலம்–ஸங்கதி– இது வரை வைராக்யம் உண்டு செய்வதற்காக ஜீவாத்மா ஸம்ஸாரத்தில் படும் துன்பங்களைக் கூறினார் வ்யாஸர். இனி பரமாத்மாவிடம் ஆசை பிறப்பதற்காக-பகவத் ப்ராப்தி த்ருஷ்ணா -ஆர்த்தி பெருக- அவனுடைய பெருமைகளையும் குற்ற மின்மையையும் விரித்துரைக்கிறார்-

ஸந்தேகம்– விழிப்பு, கனவு முதலான நிலைகளில் உடலில் இருப்பதால் ஜீவாத்மாவுக்கு தோஷங்கள் ஏற்படுவது போல் பரமாத்மாவும் உடலில் இருப்பதால் அவருக்கும் தோஷம் உண்டா? அல்லது கிடையாதா?

பூர்வ பக்ஷம்– உடலில் வெவ்வேறு நிலைகளில் பரமாத்மா அவற்றில் உள்ளபடியால் அவருக்கும் தோஷம் உண்டு-

ஸம்போ₄க₃ ப்ராப்தி: இதி தேத் ந வைசேஷ்யாத்(அதிகரணம்1.2.1 ஸூத்ரம் 8)என்ற ஸூத்ரத்தில் பரமாத்மா தியானத்துக்காக இதயத்தில் இருப்பதால் அவருக்கு தோஷம் வருமா என்று கேட்டு, அவர் கர்மத்தால் அல்லாமல் கருணையால் இதயத்தில் இருக்கிற படியால் தோஷம் வராது என்று கூறப்பட்டது

போ₄க்த்ரா பத்தே: அவிபா₄க₃: ஸ்யாத் லோகவத் (அதிகரணம் 2.1.5 ஸூத்ரம் 1) என்ற ஸூத்ரத்தில் உலகத்தை ஸ்ருஷ்டிக்கும் பரமாத்மாவுக்கு மூல ப்ரக்ருதியே உடலானபடியால், உடல் என்பதே துக்கத்தைத் தரக் கூடியது என்று நாம் உலகில் ஜீவாத்மாக்களிடம் காண்கிறபடியால், பரமாத்மாவுக்கும் இந்த உடலால் தோஷங்கள் வருமே என்று கேட்டுக் கொண்டு, அப்படி யில்லை ,கர்மத்தால் ஏற்கப்பட்ட உடல் தான் துன்பங்களைக் கொடுக்கும், எல்லா உடல்களும் அப்படி அல்ல, முக்தர்கள் ஏற்கும் உடல்கள் துன்பங்களைக் கொடுப்பதில்லை , அதுபோல் பரமாத்மாவும் கர்மங்களின் காரணமாக உடல் எடுத்துக் கொள்ளாதபடியால் அவருக்கு தோஷம் இல்லை என்றார்

இப்போது பூர்வ பஷி கூறுவது–எந்தக் காரணத்தால் வேண்டுமானாலும் பரமாத்மா உடலை உடையவராக இருக்கட்டும். ஆனால் உடல் என்பதே தாழ்ந்தது, அதோடு தொடர்பு என்பதே தோஷம் தான். இதை வஸ்து ஸ்வபாவம்(பொருளின் தன்மை )என்பார்கள். சேற்றில் ஒருவன் தெரியாமல் விழுந்தாலும் தெரிந்தே விழுந்தாலும் அது உடலை அழுக்காக்கத் தான் செய்யும். அதுபோல் இந்த உடல்களோடு பரமாத்மாவுக்கு தொடர்பு இருப்பதாலேயே அவருக்கும் தோஷம் இருந்தேவாக வேண்டும்.

பரமாத்மாவின் இரண்டு அடையாளங்கள் 1- ந ஸ்தா ₂நத: அபி பரஸ்ய உப₄ய லிங்க₃ம் ஸர்வத்ர ஹி
ஸ்தா₂நத: அபி–
விழிப்பு முதலான நிலைகளில் இருக்கும் அந்தந்த உடல்களுக்குள் இருந்தாலும்
பரஸ்ய ந–பரமாத்மாவுக்கு எந்த தோஷங்களும் கிடையாது
ஸர்வத்ர ஹி–ஏனென்றால் எல்லா உபநிஷத்துக்களிலும் ஸ்ம்ருதிகளிலும்
உப₄ய லிங்க₃ம்–அவர் குற்றமின்மை குணமுடைமை என்ற 2 அடையளங்கள் உடையவராகவே கூறப் படுகிறார்-

வேதத்தில்–(அபஹத பாப்மா விஜர: விம்ருத்யு: விஸோக: விஜிக₄த்ஸ: அபிபாஸ: ஸத்ய காம: ஸத்ய ஸங்கல்ப:-சாந்தோக்யம் -8-1-5- ) அதாவது “பாப மற்றவர், மூப் பற்றவர், மரண மற்றவர், ஸோக மற்றவர், பசி யற்றவர், தாக மற்றவர், எல்லா ஆசைகளும் நிரம்பியவர், நினைத்ததை நடத்தும் வல்லமை படைத்தவர்” என்று கூறப்படுகிறது. இதில் முதல் 6 பண்புகளால் பரமாத்மாவுக்கு எந்தக் குற்றங்களும் இல்லை என்றும், கடைசி 2 பண்புகளால் பரமாத்மாவுக்குக் கல்யாண குணங்கள் உள்ளன என்றும் தெரிகிறது

ஸ்ம்ருதியில்-ஸமஸ்த கல்யாண கு₃ணாத்மக: அஸௌ ஸ்வ சக்தி லேச உத்₃த்₄ருத பூ₄த ஸர்க₃: | தேஜோ ப₃ல ஐச்வர்ய மஹாவபோத ₄ஸு வீர்ய சக்த்யாதி₃ கு₃ணை கராசி: || -(ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-84-)“எல்லாக் கல்யாண குணங்களும் உடையவர்; தன் சக்தியின் ஒரு சிறு பகுதியால் உலகத்தை எல்லாம் படைக்கிறது;தேஜஸ் பலம் ஐச்வர்யம் ஜ்ஞாநம் வீரம் சக்தி என்ற குணங்களின் கடல்”-

பர: பராணாம் ஸகலா: ந யத்ர க்லேசாத₃ய: ஸந்தி பராவரேசே -((ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-85)- பரமாத்மா உயர்ந்தவர்களை விட உயர்ந்தவர்; அவரிடம் எந்த விதமான தோஷங்களும் இல்லை-

ஸமஸ்த ஹேய ரஹிதம் விஷ்ண் வாக்₂யம் பரம் பதம் (ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-22-51)–எந்த விதமான குற்றங்களும் அற்றவரான விஷ்ணு உயர்ந்த இலக்காவார்-

ஜீவாத்மாவுக்கு எப்படி குற்றங்கள்? கேள்வி–பரமாத்மாவைப் பற்றி’அபஹத பாப்மா’ என்று சொல்லும் வேதம், ஜீவாத்மாவைப் பற்றியும் இப்படி தான் கூறுகிறது. ஆனால் அது ஜீவாத்மாவின் இயற்கையான நிலை ஆகும். ஆனால் இப்போது ஜீவாத்மா தேவர் மனிதன் விலங்கு தாவரம் முதலான உடல்களை எடுத்துக் கொண்டு பிறப்பதால் இது வேறொரு நிலை ஆகும். இந்த நிலை வேறு பாட்டால் -அவஸ்தா பேதாத் –இப்போது ஜீவாத்மாவுக்குக் குற்றங்கள் உள்ளன என்று ஏற்கிறோம். அதே போல் பரமாத்மாவுக்கும் நிலை வேறு பாட்டால் இயற்கையில் தூய்மையானவரான அவருக்கும் தோஷம் உண்டு.

பதில்-2– பே₄தா₃த் இதி தேத் ந ப்ரத்யேகம் அதத்₃ வசநாத்
பே₄தா₃த்
– (நிலை ) மாறுபாட்டால் (பரமாத்மாவுக்கும் தோஷங்கள் வரலாமே )
இதி தேத் ந–என்று நீங்கள் கூறினால் அது தவறானது
ப்ரத்யேகம் அதத்₃ வசநாத்– ஒவ்வொரு முறையும் பரமாத்மாவுக்கு தோஷம் இல்லை என்று வேதம் சொல்வதால்-

ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் உள்ள அந்தர்யாமி ப்ராஹ்மணம் என்ற பகுதியில் தான் பரமாத்மா அனைத்துப் பொருள்களுக்குள்ளும் அந்தர்யாமியாக இருக்கிறார் என்று தெளிவாகச் சொல்லப்படுகிறது. ப்ருதிவீ, ஜலம், அக்நி, வாயு, வானம், ஸ்வர்கம், ஸூர்யன், திசைகள், சந்த்ரன், நக்ஷத்ரங்கள், மூல ப்ரக்ருதி, கண், காது, மனது, தோல், ஜ்ஞாநம் முதலானவற்றை ஒவ்வொன்றாக எடுத்து, “இதில் பரமாத்மா உள்ளார், இதற்குள் பரமாத்மா உள்ளார், இது அவரை அறிவதில்லை , இதுவும் அவருக்கு சரீரம், இதை அவர் இயக்குகிறார்” என்று தனித் தனியாகச் சொல்லி விட்டு, உடனடியாக ஒவ்வொரு முறையும் “குற்றமற்றவரான அவர் தான் உனக்கும் அந்தர்யாமீ” என்று வேதம் கூறுகிறது. எனவே , இந்த உடல்களுக்குள் இருப்பதால் வரக் கூடிய தோஷங்கள் அவருக்கு இல்லை என்பது தான் உபநிஷத்தின் கறுத்துஆகும்

ஜீவாத்மா இயற்கையாகக் குற்ற மற்றவரானாலும்,பரமாத்மாவின் ஸங்கல்பத்தால் அவர் ஸம்ஸாரத்தில் கட்டுப்படுவதை வேதம் சொல்வதால், அந்தக் குற்றமின்மை இப்போது இல்லை என்று சுருக்கிக் கொள்கிறோம். ஆனால் பரமாத்மாவுக்கு அப்படி எந்த வாக்கியமும் இல்லாத்தால் அவர் எப்போதும் குற்ற மற்றவரே .-

வஸ்து ஸ்வபாவத்தை ஆராய்தல்
பூர்வ பஷி ஒருவாதத்தை முன் வைத்தார்–உடல் என்பது அதன் ஸ்வபாவம் அதாவது இயற்கையாலேயே தாழ்ந்தது. எனவே அதோடு பரமாத்மாவுக்குத் தொடர்பு இருந்தாலேயே தோஷங்கள் வந்தே தீரும் என்று. இது தவறானது.– உலகில் எந்தப் பொருளும் இயற்கையில் துக்கமளிப்பதாகவோ ஸுகமளிப்பதாகவோ இருப்பதில்லை . அப்படி இருந்தால், ஒரு பொருள் எல்லா மனிதர்களுக்கும் எல்லா இடங்களிலும் எல்லாக் காலத்திலும் துக்கத்தையோ ஸுகத்தையோ மட்டும் தான் அளிக்க வேண்டும். ஆனால் உலகில் நாம் அப்படிக் காண வில்லை . ஒரே பாகற்காய் சிலருக்கு ஸுகத்தையும் சிலருக்குத் துன்பத்தையும் தருகிறது. கெட்டியான ஆடைகள் இமாலயத்தில் இன்பம் அளிக்கின்றன- ஆனால் சென்னையில் துன்பம் அளிக்கின்றன. ஒரு போர்வை ஒரே ஊரிலேயே குளிர் காலத்தில் இன்பத்தையும் வெயில் காலத்தில் துன்பத்தையும் தருகிறது. ஆகவே , ஒரு பொருள் இன்ப துன்பங்களை அளிப்பது அதன் தன்மையால் இருக்கவே முடியாது, அந்தந்த ஜீவாத்மாவின் பாப புண்யங்களுக்கு ஏற்பத்தான் சில சில பொருள்கள் அவனுக்கு சில சில காலங்களில் இன்பமோ துன்பமோ அளிக்கின்றன

(ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-6-46-48- நரக ஸ்வர்க்க சம்ஜ்ஞே வை பாப புனே த்விஜோத்தம -வஸ்து ஏகம் ஏவ துக்காய ஸூ காய ஈர்ஷ்யா கமாய ச – கோபாய ச யத தஸ்மாத் வஸ்து வஸ்தவாமகம் குத-தத் ஏவ ப்ரீதயே பூத்வா புன துக்காய ஜாயதே – தத் ஏவ கோபாய யத் பிரசாதாய ச ஜாயதே தஸ்மாத் துக்காத்மகம் நாஸ்தி ந ச கிஞ்சித் ஸூ காத்மகம் –என்றபடி)

(சீதா பிராட்டி-பெருமாளிடம் -ஸ்வர்க்கம் நரகம் -சேர்ந்து இருப்பதும் பிரிந்து இருப்பதும் -வஸ்துவின் தன்மையால் அல்ல -)

(நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்
வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப்
பல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானைச்
செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே
.–6-3-1–தன் விருத்த விபூதி கத்வத்தைக் காட்டக் கண்டு -முன்பு பிரிவாலே வந்த அவசாதத்துக்கு உதவிற்றிலன் -என்று வெறுத்தவர் -சர்வ கதனாய்-தத்கத தோஷ ரசம் ஸ்ப்ருஷ்டனாய் ஸமஸ்த கல்யாண குணாத்மகனான இவனே நமக்கு ப்ராப்யமும் ப்ராபகமும் மற்றும் உள்ள சர்வ வித பந்துவும் என்று அவன் பெருமையை அனுபவித்து ப்ரீதராய் கொண்டு பேசுகிறார்)

ததே₃வ ப்ரீதயே பூ₄த்வா புநர் து₃꞉கா₂ய ஜாயதே । தஸ்மாத் து₃꞉கா₂த்மகம் நாஸ்தி ந ச கிஞ்சித் ஸுகா₂த்மகம் ॥ ஒரே பொருள் இன்பத்தை அளித்து விட்டு, பிறகு அதுவே துன்பத்தைத் தருகிறது. எனவே ஸுக வடிவமானது என்றோ துக்க வடிவமானது என்றோ ஒரு பொருளே கிடையாது. அது ஜீவாத்மாவின் பாப புண்யங்களால் ஏற்படுகிறது.-எனவே , உடல் என்பதே இயற்கையில் துன்பத்தையே அளிக்கக் கூடியது என்று பூர்வ பஷி சொன்னது பொருந்தாது. ஆகையால், பரமாத்மா கருணையால் இந்த உடலோடு தொடர்பு பட்டிருந்தாலும், அவருக்கு பாபங்களோ புண்யங்களோ இல்லாத படியால் அவருக்கு அது துன்பத்தையோ இன்பத்தையோ அளிக்காது. அவர் அந்தந்த பொருள்களுள் இருந்து கொண்டு அவற்றை இயக்குகிறார், அவ்வளவு தான்.

வேதம் உபதேசிப்பது ஜீவாத்மாவுக்கா? பரமாத்மாவுக்கா?
3- அபி ச ஏவம் ஏகே –
“மேலும் ஒரு சிலர் இவ்வாறு (கூறுகிறார்கள்)
வேதங்களில் ஒரு சாகையைச் சேர்ந்தவர்கள், ஒரே உடலில் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் இருந்தாலும், ஜீவாத்மா மட்டும் தான் தோஷங்களை உடையவராகிறார், பரமாத்மாவுக்கு தோஷங்கள் கிடையாது என்று படிக்கிறார்கள்-
த் ₃வா ஸுபர்ணா ஸயுஜா ஸகா₂யா ஸமாநம் வ்ருக்ஷம் பரிஷஸ்வ ஜாதே| தயோ : அந்ய: பிப்பலம் ஸ்வாது₃ அத்தி அநச்நன் அந்ய:அபி₄சாக சீதி||(முண்டக உபநிஷத் -3-1-1-)
ஒரே தன்மைகளை உடையவர்களாக(அபஹத பாப்மத்வம் முதலான 8 பண்புகளை உடையவர்களான) இரண்டு பறவைகள் (ஜீவாத்மாவும் பரமாத்மாவும்) ஒரு மரத்தில்(உடலில்) உள்ளனர். அம் மரத்தில் உண்டாகும் பழங்களை (இன்ப துன்பங்களை ) ஒரு பறவை (ஜீவாத்மா) மட்டும் உண்டு ஒளி மங்கிப் போகிறது. மற்றொரு பறவை (பரமாத்மா) உண்ணாமல் ஒளி விஞ்சி இருக்கிறது

பூர்வ பக்ஷியின் கேள்வி– ’அநேந ஜீவேந ஆத்மநா அநு ப்ரவிச்ய நாம ரூபே வ்யாகரவாணி’ (சாந்தோக்யம் –)தாவது ’இந்த ஜீவாத்மாக்களை உடலாகக் கொண்ட நான் எல்லாப் பொருள்களுக்கும் புகுந்து பெயராலும் உருவத்தாலும் அவற்றை வேறு படுத்தப் போகிறேன்’ என்று பரமாத்மா கூறுவதால், எல்லாச் சொற்களுமே ஒரு அசேதனப் பொருளைச் சொல்லி, அதற்குள் இருக்கும் ஜீவாத்மாவைச் சொல்லி, அதற்குள் இருக்கும் பரமாத்மாவைச் சொல்கின்றன-(அபர்யாவஸ்யமான வ்ருத்தி). ஆகவே வேதத்தில் “ப்ரஹ்மசாரீ இப்படிச் செய்ய வேண்டும்”, “ஸந்யாஸீ இப்படிச் செய்ய வேண்டும்” என்று சொல்லும் வாக்கியங்களிலெல்லாம் பரமாத்மாவுக்குத் தான் கட்டளை இடப்படுகிறது என்றாகும். அப்படியானால் அவரும் கர்மங்களுக்கு வசப்பட்டவராக வேண்டுமே ?

பதில் (அடுத்த ஸூத்ரத்தில்) 4-அரூபவதே₃வ ஹி தத் ப்ரதா₄நத்வாத்–“அது உருவமற்றது போல; இயக்குவதால் பரமாத்மாவுக்கு உலகமே உருவமானாலும் அவர் உருவமற்றவர் போலத் தான் உள்ளார், அதாவது அந்தந்த உடலால் வரும் இன்ப துன்பங்களால் பாதிக்கப் படாமல் தான் உள்ளார்.ஏனென்றால் வேதமே “ஆகாதசோ ஹ வை நாம நாம ரூபயோ : நிர்வஹிதா , தே யத₃ந்ரா தத் ப்ரஹ்மம்- (சந்தோக்யம் -8-14-1) அதாவது “ஆகாசம் எனப்படும் பரமாத்மா பெயர்களையும் உருவங்களையும் நிர்வாஹம் செய்பவர், அவற்றுக்கு அப்பாற்பட்டவர்” என்று தெளிவாகக் கூறுகிறது.எனவே பரமாத்மா கர்மத்துக்கு வசப்படமாட்டார். வேதம் நமக்குத் தான் கட்டளை இடுகிறதே தவிற பரமாத்மாவுக்கு அல்ல

3-2-5-உப₄ய லிங்கா₃தி₄கரணம்– கல்யாண குணங்கள் இருப்பதை நிரூபித்தல் –ஒரு குணம் மற்றொன்றைப் பாதிக்காது –
பூர்வ பக்ஷியின் கேள்வி
– ப்ரஹ்மத்தைப் பற்றி (ஸத்யம் ஜ்ஞாநம் அநந்தம் ப்₃ரஹ்ம) அதாவது “ப்ரஹ்மம் என்றும் இருப்பது, ஜ்ஞாநமே வடிவமானது, எல்லை யற்றது” என்று ச்ருதி கூறுகிறது. இந்த வாக்கியத்தால், ‘ப்ரஹ்மம் ஜ்ஞாநமே வடிவானவர்’என்று சொல்வதன் மூலம் ப்ரஹ்மத்துக்கு ஜ்ஞாநம் முதலான எந்தப் பண்புகளும் கிடையாது என்று தெரிகிறது. எனவே அவருக்கு கல்யாண குணங்கள் இல்லாத படியால் அவருக்கு உபய லிங்கம் (இரண்டு அடையாளங்கள்) கிடையாது

வ்யாஸரின் பதில் – அடுத்த ஸூத்ரத்தில்– 5-ப்ரகாசவச் ச அவை யர்த்₂யாத் –
ச—மேலும்

ப்ரகாசவத்— ப்ரகாச ஸ்வரூபத்தைப் போலே
அவையர்த்₂யாத்— (மற்ற வாக்யங்களும்)வீண அல்லாததால்.-
பூர்வ பக்ஷீ கூறுவது போல் , ஞானம் ப்ரஹ்மம் என்ற வாக்கியம் ப்ரஹ்மம் ப்ரகாச ஸ்வரூபம் என்பதை உணர்த்துகிறது என்பது ஏற்றுக் கொள்ளப் படுகிறது. ஆனால், அதனால் ப்ரஹ்மத்தின் மற்ற தன்மைகள் மறுக்கப்பட வில்லை . ஏனெனில், ‘ப்ரஹ்மம் ப்ரகாச ஸ்வரூபமானவர்’ என்று கூறும் வேத வாக்கியம் வீண் அல்லாததால் ப்ரஹ்மம் ஜ்ஞாநமே வடிவமானவர் என்று ஏற்பது போல்,’ப்ரஹ்மம் உலகத்திற்குக் காரணமானவர், ஸர்வஜ்ஞர், ஸத்ய ஸங்கல்பர்’ என்றும் கூறும் ஸ்ருதி வாக்கியங்களும் வீண் அல்லாதபடியால் ப்ரஹ்மம் அந்தந்தக் கல்யாைண குணங்களை உடையவர் என்றும் ஏற்க வேண்டும்

(ஐந்து ஆறு ஏழு ஸூத்ரங்களும் இதே கருத்தையே காட்டுகின்றன)

6–ஆஹ ச தன் மாத்ரம் –
ச —
மேலும்;
ஆஹ— (ஸ்ருதி) கூறுகிறது
தந்மாத்ரம்— அதனை மட்டும்.
மேலும், ‘ஸத்யம் ஜ்ஞாநம்’ என்ற வாக்கியம் ப்ரஹ்மத்தின் ப்ரகாச ஸ்வரூபத்தை மட்டுமே கூறுகிறது; வேறு வாக்கியங்களில் கூறப்பட்ட ஸத்ய ஸங்கல்பத்வம் முதலான தன்மைகளை மறுப்பதில்லை .
எனவே , மற்ற வாக்கியங்களில் கூறப்பட்ட ஸத்ய ஸங்கல்பத்வம், ஸர்வ ஜ்ஞத்வம், ஜகத் காரணத்வம் போன்ற தன்மைகள் அனைத்தும் உண்மை யானவையே .-ஞானம் ப்ரஹ்மம் என்ற வாக்கியத்திற்கும், மற்ற குணங்களைக் கூறும் மற்ற ஸ்ருதி வாக்கியங்களுக்கும் எந்த முரண்பாடும் இல்லை . அனைத்தையும் ஒருங்கிணைத்தே புரிந்து கொள்ள வேண்டும்.

(அயோக விவச்சேதம் -அர்ஜுனன் வில்லாளியே மற்றவரும் வில்லாளியாக இருக்கலாம் -ஆனால் —அந்ய யோக விவச்சேதம் -அர்ஜுனனே வில்லாளி -வேறு யாரும் இல்லை -அதே போல் –ப்ரஹ்மம் அஜடம் அல்ல -ஞானமே வடிவானவர் -மற்ற குணங்கள் இல்லை என்று சொன்னதாகக் கொள்ள முடியாதே)

வேதம் காட்டும் உபய லிங்கம் –7-த₃ர்ஶயதி ச அதோ ₂ அபி ஸ்மர்யதே
மேலும்
அதோ ₂ முழுமையாக
த₃ர்ஶயதி (ஸ்ருதி) காட்டுகிறது;
அபி மே லும்
ஸ்மர்யதே ஸ்ம்ருதியிலும் கூறப்படுகிறது. மேலும், வேதாந்த வாக்கியங்கள் அனைத்தும் இருவகை லிங்கங்களும் இருப்பதை உணர்த்துகின்றன;ஸ்ம்ருதியும் கூறுகிறது

ஸ்வேதாஸ்வதார உபநிஷத் –-6-7-தம் ஈஸ்வரானாம் பரமம் மகேஸ்வரம் தம் தைவதாநாம் பரமம் ச தைவதம் -என்றும்“உலகத்தில் இயக்கும் தன்மை உடையவர்களையும் கூடஇயக்குபவர்,-தேவர்களுக்கும் தேவர் போன்றவர் பரமாத்மா”

6-9-ச காரணம் கரணாதி பாதிபோ ந சாஸ்ய கச்சித் ஜனிதா ந சாதிப -என்றும்–அவரே உலகுக்குக் காரணம், புலன்களை இயக்கும் ஜீவனுக்கும் தலைவர்”

6-8-ந தஸ்ய கார்யம் கரணம் ச வித்யதே ந தத் சமச் சாப்யதிகச்ச த்ருஸ்யதே பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வாபாவிகீ ஞான பல க்ரியா ச -என்றும்“பரமாத்மாவுக்கு உடலும் புலன்களும் தேவை யில்லை , அவருக்கு நிகரானவரோ உயர்ந்தவர்களோ இல்லை , இயற்கையான மிக உயர்ந்த பலவிதமான சக்திகள் அவருக்கு உள்ளன, அதே போல் ஜ்ஞாநம் ப₃லம் முதலான குணங்களும் உள்ளன”

முண்டக உபநிஷத் -1-1-9-ய சர்வஜ்ஞ சர்வவித் யஸ்ய ஞான மயம் தப -என்றும்-“யார் ஓருவர் எல்லாப் பொருள்களையும் ஸ்வரூபத்தாலும் தன்மைகளாலும் அறிவாரோ

2-9-யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனசா சஹ ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதஸ்சந-என்றும்–“பேச்சும் மனதும் எட்ட முடியாமல் திரும்பக் கூடிய உயர்ந்த ஆநந்தம் ப்ரஹ்மத்தினுடையது-

(மனிதர்களுக்குத் தேவர் போலே தேவர்களுக்கும் தேவர் -மிகுனரை இலனே -ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன்)

அதே சமயம் –ஸ்வேதாஸ்வதார உபநிஷத் -6-19-நிஷ்கலம் நிஷ்க்ரியம் சாந்தம் நிரவத்யம் நிரஞ்ஜனம் என்றும்–அதாவது“பகுதிகளோ குற்றங்களோ துன்பங்களோ பற்றுகளோ அற்றவர்”என்பது போன்ற நிவேத வாக்கியங்கள், ப்ரஹ்மத்திற்கு எந்த குணமும் இல்லை என்று கூற வில்லை . கல்யாண குணங்களைத் தவிர, அவற்றிற்கு எதிரான அனைத்து தோஷங்களும் அவரிடம் இல்லை என்பதற்கு

தைத்ரிய ஆனந்த வல்லி–2-8-1-பீஷாஸ்மாத்வாத பவதே பீஷோ தேதி சூர்ய -என்றும்-தைத்ரிய ஆனந்த வல்லி-2-8-ச ஏகோ ப்ரஹ்மண ஆனந்த -என்றும்

ஸ்ரீ கீதையில் பல இடங்களில் – –
10-3-யோ மாம் அஜம் அநாதிம் ச வேத்தி லோக மகேஸ்வரம் –
–அதாவது “நான் பிறப்பற்றவன், தொடக்க மற்றவன் , உலகத்தின் ஈஸ்வரன்” என்றும், “
10-42-விஷ்டப்யாஹமிதம் க்ருத்ஸ் நம் ஏகாம் சேந ஸ்திதோ ஜகத் ––“என் சக்தியின் ஒரு சிறு பகுதியால் உலகனைத்தையும் தாங்குகிறவன்” என்றும்,

15-17-உத்தம புருஷ த்வன்ய பரமாத் மேத்யுதா ஹ்ருத யோ லோகத்ரயமா விஸ்ய பிபர்த்யவ்யய ஈஸ்வர-அதாவது “பரமாத்மா என்று பெயர் பெற்றவர் ஜீவர்கள் அனைவரையும் காட்டிலும் உயர்ந்தவர்” என்றும்

9-10-மயா அத்ய ஷேண பிரகிருதி ஸூயதே ச சராசரம் ஹேது நா அநேன கௌந்தேய ஜகத்தி பரிவர்த்ததே -என்றும்

ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-1-46/47– சர்வஜ்ஞ சர்வக்ருத் சர்வ சக்தி ஞான பலர்த்திமான் அன்யூனஸ் சாபி அவ்ருத்திச்ச ஸ்வாதிநோ அநாதிமான் வசீ க்லமதந்த்ரீ பயக்ரோத காமாதி பிரசம்யூத நிரவத்ய பர ப்ராப்தே நிரதிஷ்டோ அஷர க்ரம-அதாவது “அனைத்தையும் அறிந்தவர், அனைத்தையும் உண்டாக்குபவர், சக்தி ஜ்ஞாநம் பலமுடையவரும் ஆவார்-தோஷங்கள் அற்றவர்-” என்றும் கூறப்படுகிறது.

(மேல் 8 -9-10-ஸூத்ரங்கள் ஒரே விஷயத்தை -உவமை காட்டி -ஒப்பிட்டு -விளக்குகிறார்)

ஸூர்யனோடும் சந்ரனோடும் ஒப்பிடல் –8-அத ஏவ ச உபமா ஸூர்யகாதி₃வத்
அத ஏவ—
அதனாலேயே ;
ச — மேலும்;
உபமா — உவமை ;
ஸூர்யகாதி ₃வத் — ஸூரியன் முதலியவற்றைப் போலே “அதனாலேயே , ஸூரியன் முதலியவற்றைப் போன்ற உவமையும் பொருந்துகிறது.”
யாஜ்ஞாவல்க்ய ஸ்ம்ருதி 3-144–ஆகாசம் ஏகம் ஹி யதா கடாதி ஷூ ப்ருதக் பவேத் –ததாத்மைகோ ஹ்ய நேகஸ்தோ ஜலாதாரேஷ்வி வாம்சுமான் – “ஒரே ஆகாசம் பல குடங்களில் தனித்தனியாக இருப்பது போலவும், ஒரே ஸூரியன் பல நீர் நிலைகளில் பிரதிபலிப்பது போலவும், ஒரே பரமாத்மா பல இடங்களில் இருக்கிறார்” –
அதே போல் –ஏக ஏவ ஹி பூதாத்மா பூதே பூதே வ்யவஸ்திதே ஏகதா பஹூதா ச ஏவ த்ருச்யதே ஜல சந்த்ரவத் “ஒருவரே அனைத்து ஜீவர்களிலும் உள்ளவராக இருந்தாலும், பல நீர் நிலைகளில் பிரதிபலிக்கும் சந்திரனைப் போலே , பலராகக் காணப்படுகிறார்.“என்றும் கூறுகிறது.

இங்கு ப்ரஹ்மத்தை ஸூரியனோடு ஒப்பிடுகிறது-ஒரே ஸூரியன் நீர், கண்ணாடி போன்ற பொருள்களில் பிரதிபலிக்கிறார். அந்த பிரதிபலிப்புகள் இருக்கும் இடங்கள் அசுத்தமாக இருந்தாலும், அவற்றின் தோஷங்கள் ஸூரியனைத் தீண்டுவதில்லை . அது போலவே , ப்ரஹ்மம் அனைத்து சேதன–அசேதனப் பொருள்களிலும் அந்தர்யாமியாக இருந்தாலும், அவற்றின் தாேஷங்கள் அவரைத் தீண்டுவதில்லை . இந்த ஒப்பிடல் பொருந்த வேண்டுமென்றால் பரமாத்மா குற்றங்களற்ற வராகத் தான் இருக்க வேண்டும்

பூர்வ பக்ஷியின் கேள்வி–ப்ரஹ்மம் ஸூரியனைப் போல் குற்றமற்றவர் என்ற எடுத்துக்காட்டே பொருந்தாது என்கிைறார் அடுத்த ஸூத்ரத்தில்.
9-அம்பு₃வத் அக்₃ரஹணாத் து ந ததா₂த்வம் –
து -ஆனால்

அம்பு₃வத் –நீரில் (இல்லாத ஸூரியனை இருப்பதாக அறிவது) போலே
அக்₃ரஹணாத் –க்ரஹிக்கப்படாததால்;
ந ததாத்₂த்வம் –பரமாத்மா அப்படி யல்ல “ஆனால், நீரில் காணப்படும் ஸூரியனைப் போல ப்ரஹ்மத்தை உண்மையில் கொள்ள முடியாததால், அந்த உவமை பொருந்தாது.” நீர் அல்லது கண்ணாடியில் ஸூரியன் இருப்பதாக நாம் காண்கிறோம். ஆனால், உண்மையில் ஸூரியன் அங்கே இல்லை . பார்ப்பவரின் ப்ரமை யினால் மட்டுமே அவர் அங்ககே இருப்பதாகத் தோன்றுகிறார். ஆகையால், பிரதிபலிப்பில் காணப்படும் அசுத்தம் போன்ற தாேஷங்கள் ஸூரியனைத் தீண்டாததற்குக் காரணம், ஸூரியன் உண்மையில் அங்கே இல்லாமை -.ஆனால், ப்ரஹ்மம் அனைத்துப் பொருள்களிலும் உண்மை யாகவே இருப்பதாக ஸ்ருதி கூறுகிறது.அப்படியானால், அவற்றின் தாேஷங்களும் அவருக்கு வருமே ? எனவே , ப்ரஹ்மத்தின் குற்ற மின்மையை நிறுவுவதற்கு, ஸூரியனின் உவமை பொருத்தமான எடுத்துக் காட்டு அல்ல என்று பூர்வபஷி கூறுகிறார்.எனவே ப்ரஹ்மத்துக்குக் குற்றங்கள் இருப்பதால் உபய லிங்கம்(இரண்டு அடையாளங்கள் உள்ளன)-என்பது தவறானது.

ஆகாசத்தோடு ஒப்பிடலின் கருத்து–ஸித்தாந்தியின் பதில்–10- வ்ருத்₃தி₄ ஹ்ராஸ பா₄க்த்வம் அந்தர் பா₄வாத் உப₄ய ஸாமஞ்ஜஸ்யாத் ஏவம் த₃ர்ஶநாச் ச
அந்தர்பா₄வாத்–
உள்ளிருப்பதன் காரணமாக;
வ்ருத்₃தி₄ ஹ்ராஸ பா₄க்த்வம் — வளர்ச்சியும் தேய்வும் உடையவனாக இருத்தல் (கண்டிக்கப்படுகிறது);
உப₄ய ஸாமஞ்ஜஸ்யாத் -இரண்டு எடுத்துக் காட்டுகளும் பொருந்துவதால்;
— மேலும்
ஏவம் த₃ர்ஶநாத்-இவ்வாறு பயன்பாடு உலகிலும் காணப்படுவதால்; “அனைத்திற்குள்ளும் இருப்பதால் ஸந்தேஹப் படப்படும் வளர்ச்சி, தேய்வு போன்றவை ப்ரஹ்மத்துக்கு இல்லை . ஏனெனில், இரண்டு எடுத்துக் காட்டுகளும் அப்போது தான் பொருந்துகின்றன; மேலும், இவ்வாறான எடுத்துக் காட்டுகள் உலகிலும் காணப்படுகின்றன”

பூர்வ பஷி , ஸூரியன் உண்மையில் நீரில் இல்லாததால் தான் நீரின் தாேஷங்கள் அவரைத் தீண்டுவதில்லை என்று கூறினார். ஆனால், அதுவே இந்த எடுத்துக் காட்டின் நோக்கம் அல்ல , ஏனெனில், ஸாஸ்த்ரம் ஆகாசத்தையும் எடுத்துக் காட்டாகக் கூறுகிறது.ஆகாஸம் அனைத்துப் பொருள்களுக்கும் உள்ளேயே இருந்தாலும், அவற்றின் தாேஷங்கள் ஆகாசத்தைத் தீண்டுவதில்லை . எனவே , ஸூரியனும் ஆகாசமும் ஆகிய இரண்டு எடுத்துக் காட்டுகளையும் சேர்த்துப் பார்க்கும் போது, ப்ரஹ்மம் உலகத்துடன் தொடர்புடையவராக இருந்தாலும், உலகத்தின் தாேஷங்கள் அவரைத் தீண்டுவதில்லை என்பதே அவற்றின் பொதுவான கருத்து என்பது தெளிவாகிறது. -ஸூரியனுக்குத் தாேஷங்கள் தீண்டாததற்குக் காரணம், அவர் அந்தப் பொருளில் உண்மையாக இல்லாமல் வேறு இடத்தில் இருப்பதால். ஆகாசத்திற்கு, தேச வேறுபாடு இல்ல விட்டாலும், ஸ்வபாவ வேறுபாடு உள்ளது, எனவே பொருள்களின் குற்றங்கள் அதைத் தீண்டுவதில்லை . அதே போல் ப்ரஹ்மத்திடமும், உலகத்தின் தாேஷங்கள் தீண்டாததற்குக் காரணம், இந்த ஸ்வபாவ வேறுபாடே

கேள்வி– அப்படியானால் சிறந்த எடுத்துக் காட்டான ஆகாசத்தை மட்டும் வேதம் கூறி யிருக்கலாமே ? ஸூரியனை ஏன் சொல் வேண்டும்?
பதில்-
எடுத்துக் காட்டின் ஒவ்வொரு அம்சமும் பொருந்த வேண்டும் என்பது அவசியமல்ல. சொல்ல வேண்டிய கருத்திற்குப் பொருந்தும் அம்சத்தை மட்டும் எடுத்துக் கொண்டு உவமை கூறப்படுவது உலக வழக்கிலும் காணப்படுகிறது.உதாரணமாக, “சந்திரனைப் போன்ற முகம்”, “சிங்கத்தைப் போன்ற வீரன்” என்று கூறும் போது, சந்திரனுக்கும் முகத்திற்கும், சிங்கத்திற்கும் மனிதனுக்கும் உள்ள அனைத்து அம்சங்களும் ஒன்றாக இருப்பதில்லை . குறிப்பிட்ட ஒரு ஒற்றுமையை மட்டுமே எடுத்துக் கொண்டு இவ்வாறான உவமைகள் கூறப்படுகின்றன–அது போலே , ஸூரியன் மற்றும் ஆகாசம் ஆகிய எடுத்துக் காட்டுகளும், ப்ரஹ்மம் உலகத்துடன் தொடர்புடையவராக இருந்தாலும், உலகத்தின் தோஷங்கள் அவரைத் தீண்டுவதில்லை என்ற ஒரு கருத்தை உணர்த்துவதற்காகவே கூறப்பட்டுள்ளன.

நேதி நேதி என்ற வாக்கியத்தை ஆராய்தல் பூர்வ பக்ஷியின் கேள்வி – ப்ரஹ்மத்தின் ரூபம், குணங்கள் முதலியவற்றைக் கூறிய பிறகு, (சேதன அசேதன விஸிஷ்ட ப்ரஹ்மம் -மூர்த்தம் அமூர்த்தம் திருமேனியில் உள்ளவன் என்றும் ஸமஸ்த கல்யாண குணாத்மகன் என்று சொல்லிய பின்பு)” (அதா₂த ஆதே ₃ஶ: நேதி நேதி) என்று ச்ருதி கூறுகிறது. இதனால், இதற்கு முன் ப்ரஹ்மத்தைப் பற்றிக் கூறப்பட்ட அனைத்து விசேஷணங்களும் “நேதி நேதி” அதாவது“இவ்வாறு அல்ல, இவ்வாறு அல்ல”என்று மறுக்கப் படுகின்றன. எனவே , ப்ரஹ்மம் மட்டுமே உண்மை யானவர்; உருவம், குணம், ஸர்வஜ்ஞத்வம், ஜகத் காரணத்வம் போன்ற அனைத்து விசேஷணங்களும் உண்மை யானவை அல்ல. ப்ரஹ்மத்தின் உண்மையான ஸ்வரூபத்ணத அறியாதவர்களால் கற்பிக்கப்பட்டவையே அவை என்று பூர்வ பஷி கூறுகிறார்.

ஸித்தாந்தியின்பதில்–11-ப்ரக்ருதைைாவத்த்வம் ஹி ப்ரதிஷேதி₄ ததோ ப்₃ரவீதி ச பூ₄ய:
ஹி
— ஏனெனில்;
ப்ரக்ருதைைாவத்த்வம் — இதற்கு முன் கூறப்பட்ட அளவுக்கே ப்ரஹ்மம் உட்பட்டவர் என்பதையே ;
ப்ரதிஷேதி₄ — மறுக்கிறது;
— மேலும்;
தத — அதன் பிறகு;
பூ₄ய: — மீண்டும்;
ப்₃ரவீதி — கூறுகிறது;.
“ஏனெனில், ‘நேதி நேதி’ என்பது, ப்ரஹ்மம் இதற்கு முன் கூறப்பட்ட அளவுக்கே உட்பட்டவர் என்பதையே மறுக்கிறது. அதன் பிறகும், அவருடைய மேன்மையையே மீண்டும் ச்ருதி கூறுவதால், இப்படிப் பொருள் கொள்வதே பொருத்தமானது

பூர்வ பஷி கூறுவது போலே , “நேதி நேதி” என்பது “இவ்வாறு அல்ல, இவ்வாறு அல்ல” என்று ப்ரஹ்மத்தின் அனைத்து பண்புகளையும் மறுப்பதாக இருக்க முடியாது.ஏனெனில், ச்ருதி முதலில், வேறு எந்தப் ப்ரமாணத்தாலும் அறிய முடியாத ப்ரஹ்மத்தின் தன்மை களையும், அவருடைய விசேஷணங்களையும் விரிவாக உபதேசிக்கிறது. அவற்றைக் கூறி விட்டு, அதே ச்ருதி அவற்றை யெல்லாம் மறுத்து விட்டால், அது ப்ரமத்தால் உளறியது போல் ஆகி விடும்.எனவே , “நேதி நேதி” என்பதன் பொருள்“இவ்வளவு அல்ல, இவ்வளவு அல்ல”, அதாவது “ப்ரஹ்மம் இதுவரை கூறப்பட்ட தன்மைகளை மட்டும் உடையவர் அல்ல” என்பதே -அதனால் தான், “நேதி நேதி” என்று கூறிய உடனேயே ச்ருதி, –

(ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா வலியும் அல்லேன்
காணலும் ஆகான் உளன் அல்லன் இல்லை அல்லன்
பேணும் கால் பேணும் உருவாகும் அல்லனுமாம்
கோணை பெரிதுடைத்து எம் பெம்மானைக் கூறுதலே –2-5-10–காணப்படாதவன்.
இத்தால்,ஏகப் பிரமாண கம்யத்வ சாம்யமும் இல்லை என்கை.)

ப்ருஹத் உபநிஷத் -2-3-6–ந ஹி ஏ தஸ்மாத் இதி நேத்யன்யத் பரமஸ்தி அத நாமதேயம் சத்யச்ய சத்யமிதி ப்ராணா வை சத்யம் தேஷாம் ஏஷ சத்யம் இதி -என்கிறது (பிராணன் உள்ளதால் ஜீவன் -ஆகாயம் போல் அல்லாமல் நித்யம் சத்யம் – இப்படிப்பட்ட ஜீவர்களைக் காட்டிலும் உயர்ந்தவன் பர ப்ரஹ்மம்-ஞானம் சுருங்குவதும் விரிவதும் இல்லை -பாபங்களால் தீண்டப் படாதவன் -கர்ம வச்யன் இல்லை – அதனால் இவர்களைக் காட்டிலும் மேலான சத்யம் என்கிறது –)-அதாவது, “இவ்வளவு மட்டும் அல்ல என்று கூறப்பட்ட ப்ரஹ்மத்தை விட உயர்ந்தவை வேறு எந்தப் பொருளும் இல்லை ” என்று ச்ருதி அறிவிக்கிறது. ஸ்வரூபத்திலும், குணங்களிலும் அவரை விட மேலானவர் இல்லை என்று கருத்து.
மேலும் (அத நாமதேயம் சத்யச்ய சத்யமிதி ப்ராணா வை சத்யம் தேஷாம் ஏஷ சத்யம் இதி -என்கிறது) என்றும் ச்ருதி கூறுகிறது.அதாவது, ஜீவர்களுக்கு அவரவர் கர்மத்திற்கு ஏற்ற வாறு ஜ்ஞானம் சுருங்குவதும் விரிவடைவதும் உண்டு. ஆனால், ப்ரஹ்மத்திற்கு அத்தகைய குறைவு எதுவும் இல்லை . அந்த வகையில், ஸத்யம் எனப்படும் ஜீவர்களுக்கும் மேலான ஸத்யமாக இருப்பவர் ப்ரஹ்மமே என்று ச்ருதி மேலும் அவருடைய மேன்மையைப் போதிக்கிறது.

பரமாத்மாவை அறியும் முறை – 12-தத் அ₃வ்யக்தமாஹ ஹி
தத்
— அந்தப் ப்ரஹ்மத்தை ;
அவ்யக்தம் — பிற ப்ரமாணங்களால் அறிய முடியாதவர் என்று;
ஆஹ — கூறுகிறது;
ஹி — ஏனெனில்.
“ஏனெனில், அந்தப் ப்ரஹ்மம் மற்ற ப்ரமாணங்களால் அறிய முடியாதவர் என்று சாஸ்த்ரமே கூறுகிறது.”
நேதி நேதி” என்பது, ப்ரஹ்மத்திற்கு முன்பு கூறப்பட்ட மூர்த்தம், அமூர்த்தம் போன்ற விசேஷணங்களை மறுப்பதாக இருக்க முடியாது. ஏனெனில், ஒரு பொருளை மறுக்க வேண்டும் என்றால், அது முன்பே ஏதோ ஒரு ப்ரமாணத்தால் அறியப்பட்டிருக்க வேண்டும். ப்ரஹ்மம் மற்ற எந்தப் ப்ரமாணத்தாலும் அறிய முடியாதவர் என்று ஸாஸ்த்ரமே கூறுகிறது

முண்டக உபநிஷத் -3-2-8-ந சஷூஷா க்ருஹ்யதே நாபி வாசா -என்று “அவரை கண்ணால் காண முடியாது; வாக்காலும் அறிய முடியாது” -எனவே , ப்ரஹ்மம் பிற ப்ரமாணங்களால் அறிய முடியாதவராக இருப்பதால், அவரைப் பற்றி ஏற்கெனவே தெரிந்த மூர்த்தம், அமூர்த்தம் போன்ற தன்மைகளை இங்கு இல்லை யென்று சொல்ல முடியாது. அவற்றைப் புதிதாக உணர்த்தி விட்டு, பின்னர் அவற்றையே மறுக்கிறது என்று தான் கொள்ள வேண்டும். அப்படி யானால் அது உளறலாக ஆகி விடும்.

13-அபி ஸம்ராத₄நே ப்ரத்யக்ஷ அநுமாநாப்₄யாம்
அபி —
மேலும்;
ஸம்ராத₄நே — முறையாக ஆராதனை செய்வதால் அதாவது பக்தி ரூபமான த்யானத்தால் தான்(பரமாத்மாவின் உருவத்தைக் காண முடியும் -தர்சன சாமானகாரம் -ஞானக் கண்ணால் சஷாத்காரம் செய்யலாம்-என்று தெரிகிறது)
ப்ரத்யக்ஷாநுமாநாப்₄யாம் — ச்ருதியாலும் ஸ்ம்ருதியாலும்.
ச்ருதியில்- முண்டக உபநிஷத் -3-2-3- நாயமாத்மா ப்ரவச நேன லப்யோ ந மேதயா ந பஹூ நா ஸ்ருதே ந யமேவைஷ வ்ருணுதே தேன லப்யஸ் தச்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்-என்று -“எந்த பக்தனை பரமாத்மா தேர்ந்தெடுக்கிறாரோ அவனுக்கே தன் திரு மேனியைக் காட்டுகிறார்”
அதே போல், ஸ்ம்ருதியிலும், (நாஹம் வேதை₃ர் ந தபஸா…) அதாவது “வேதத்தை ஓதுவதாலோ , தபஸ்ஸாலோ , தானத்தாலோ , யாகத்தாவலோ , நீ என் உருவத்தைக் கண்டது போலே யாரும் கண்டு விட முடியாது” என்றும்,
(ப₄க்த்யா த்வநந்யயா ஶக்ய:..) அதாவது “என்னிடம் மட்டும செலுத்தப் படும் பக்தியினால் மட்டும் தான் என்னை அறியவும் காணவும் அடையவும் முடியும்” என்றும் பகவத் கீதையில் கண்ணன் அர்ஜுனனிடம் கூறுகிறார்.
எனவே , ப்ரஹ்மத்தின் மூர்த்த அமூர்த்த வடிவங்கள் முன்னமே அறியப் பட்டிருக்க முடியாதலால் அவற்றை நிவேதிக்க இயலாது.

(3-1-8-ஜ்ஞான பிரசாதேன விசுத்த சத்த்வ ததஸ்து தம் பச்யதி நிஷ்கலம் த்யாய மாந-என்றும்ஸ்ரீ கீதையில் -11-53- நாஹம் வேதைர் ந தபஸா ந தாநேன ந சேஜ்யயா-என்றும்11-54-பக்த்யா த்வ நன்யயா சக்ய அஹம் ஏவம் விதோ அர்ஜுனா ஜ்ஞாதும் த்ரஷ்டும் ச தத்த்வேன பிரவேஷ்டும் ச பரந்தப–என்றும் சொல்லுமே-)

உருவமும் கல்யாண குணங்களும் உண்மை யானவையே -14 ् ப்ரகாசாதி₃வச்ச அவை சேஷ்யம் ப்ரகாசஶ்ச கர்மணி அப்₄யாஸாத்
ப்ரகாசாதி₃வத்
—ப்ரகாச வடிவம் போலவே
அவை சேஷ்யம்—(ப்ரஹ்மத்தின் உருவத்துக்கும் குணங்களுக்கும்) வேறுபாடு இல்லை ;
ப்ரகாசஶ் ச —ப்ரகாச வடிவமாயிருப்பதும்;
கர்மணி— பக்தி ரூபமான ஆராதனையில்;
அப்₄யாஸாத் — பயிற்சியால் (அறியப் பட்டது)
“ப்ரகாசம் முதலான ஸ்வரூப குணங்களைப் போலவே , மூர்த்தம்–அமூர்த்தம் ஆகிய விசேஷணங்களும் வேறுபாடின்றி உண்மையானவையே . ஏனெனில், பக்தி ரூபமான ஆராதனையின் மூலம் இரண்டுமே ஒரே வகையில் அனுபவிக்கப் படுகின்றன.”

வாம தேவர் போன்ற மஹ ரிஷிகள் ப்ரஹ்மத்தை ஸாக்ஷாத்காரம் செய்த போது, ப்ரஹ்மத்தின் ஜ்ஞானமே ஸ்வரூபமாக (வடிவாக) இருப்பதை அநுபவித்தது போல், மூர்த்தம், அமூர்த்தம் ஆகிய உலகத்துடன் விசிஷ்டராக இருக்கும் அவருடைய நினைவையும் அனுபவித்தனர்.இதையே ச்ருதி, ப்ருஹத் உபநிஷத் -1-4-10-தத்தை தத் பஸ்யன் ருஷிர் வாமதேவ பிரதிபேத அஹம் மநுரபவம் ஸூர்யச்ச-என்று கூறுகிறது. ப்ரஹ்மத்தின் ஜ்ஞான வடிவு த்யானத்தில் நேரடியாக அனுபவிக்கப்படுவதால், அது உண்மையானது என்று ஏற்பது போலே , அதே த்யானத்தின் மூலம் ப்ரஹ்மம் உருவம் மற்றும் குணங்களோடு இருப்பதும் அறியப்படுகிறது.எனவே , ப்ரஹ்மத்தின் மூர்த்தம்–அமூர்த்தம் என்ற வடிவுகளும், பண்புகளும் உண்மை யானவையே என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்.

(ஆக -11-12-13-14-ஆகிய நான்கு ஸூத்ரங்களால் நேதி நேதி ஸ்ருதியின் உண்மையான அர்த்தம் காட்டப்பட்டது)

15–அதோ அநந்தேன ததாஹி லிங்கம்
அதோ :
— ஆகையால்;
அநந்தேந — எல்லை யற்ற (குணங்கவளோடு கூடியவர்);
ததா ₂ ஹி — இவ்வாறே ;
லிங்க₃ம் — (வேதம் சொல்லும் இரண்டு) அடையாளங்கள்(பொருந்துகின்றன).
ஆகையால், ப்ரஹ்மம் எல்லை யற்ற கல்யாண குணங்களோடு கூடியவர் என்பது நிரூபிக்கப் பட்டதால் அவர் குற்றமற்றவர் என்றும் கல்யாண குணக் கடல் என்றும் கூறப்படும் உபய லிங்கம்(இரண்டு அடையாளங்களும்) பொருத்தமானவையே .
இவ்வாறு, பரமாத்மாவை அடைவதில் நமக்கு ஆசையை உண்டாக்குவதற்காக வேத வ்யாஸர் இந்த அதிகரணத்தால் பரமாத்மா குற்ற மற்றவர் என்றும், எண்ணிறந்த அளவற்ற குணங்களை உடையவர் என்றும் நிரூபித்தார்.

(எண்ணில் தொல் புகழ் -வண் புகழ் நாரணன் -அல்லலில் -இத்யாதி அருளிச் செயல்கள் உண்டே)

3.2.6 அஹிகுண்ட₃லாதி₄கரணம் அசேதனப் பொருள் எப்படி ப்ரஹ்மத்தின் வடிவம் ஆகிறது?–அதிகரணத்தின் பின்புலம் –ஸங்கதி- (த்₃வே வாவ ப்₃ரஹ்மணொ ரூபே மூர்த்தம் ச அமூர்த்தம் ஏவ ச ) அதாவது “ப்ரஹ்மத்திற்கு இரண்டு ரூபங்கள் உள்ளன. அவவ மூர்த்தமும் அமூர்த்தமும் ஆகும்” என்று மூர்த்தாமூர்த்த ப்ராஹ்மணத்தில் கூறப்படுகிறது. இதனால், சேதனப் பொருள்களும் அசேதனப் பொருள்களும் ப்ரஹ்மத்தின் ரூபங்களே என்பது தெளிவாகிறது. ஜீவர்கள் ப்ரஹ்மத்தின் ரூபமாக இருப்பது முந்தைய அதிகரணங்களில் நிறுவப்பட்டு விட்டது. ஆகையால், இப்போது அசேதனப் பொருள்கள் எந்த வகையில் ப்ரஹ்மத்தின் ரூபமாக இருக்கின்றன? என்பதையே இந்த அதிகரணம் ஆராய்கிறது.
இந்த ஆராய்ச்சி வெறுமனே அசேதனப் பொருள்களுக்கும் ப்ரஹ்மத்திற்கும் உள்ள தொடர்பை அறிந்து கொள்வதற்காக மட்டுமல்ல. ப்ரஹ்மம் எந்தத் தோஷமும் இல்லாதவர் என்பதை நிறுவுவதற்கும் இதுவே அடிப்படையாக அமைகிறது. ஏனெனில், அசேதனப் பொருள்களுக்கு மாற்றம், அழிவு, ஜடத்வம் போன்ற பல தோஷங்கள் காணப்படுகின்றன. அவை ப்ரஹ்மத்தின் ரூபங்கள் என்று ஏற்றுக் கொள்ளும் போது, அந்தத் தோஷங்கள் ப்ரஹ்மத்திற்கும் சேர்ந்து விடுமா என்ற சந்தேகம் எழுகிறது. எனவே , அசேதனப் பொருள்கள் ப்ரஹ்மத்தின் ரூபமாக இருக்கும் முறை என்ன என்பதை இந்த அதிகரணம் ஆராய்ந்து, அவற்றின் தோஷங்கள் ப்ரஹ்மத்தை எவ்விதத்திலும் தீண்டுவதில்லை என்பதை நிலை நிறுத்துகிறது.

சம்சயம்- அசேதனப் பொருள்கள் ப்ரஹ்மத்தின் ரூபங்கள் என்று ச்ருதி கூறுகிறது. ஆனால், அவை எந்த வகையில் ப்ரஹ்மத்தின் ரூபங்களாக இருக்கின்றன?
(1) பாம்புக்கும் அதன் சுருண்ட வடிவுக்கும் உள்ள தொடர்பைப் போலவா?
(2) அல்லது, ஒளிக்கும் அதற்கு ஆதாரமான பொருளுக்கும் உள்ள தொடர்பைப் போலவா?
(3) அல்லது, பகுதியும் முழுமையும் கொண்ட தொடர்பு (அம்சம்–அம்சி பாவம்) போலவா?

இந்த அதிகரணத்தில் நிறுவப்படவிருக்கும் அம்சம்–அம்சி பாவத்தாய் அடிப்படையாகக் கொண்டே , முன்னர் கூறப்பட்ட ப்ரக்ருத்யதிகரணம் மற்றும் ஆரம்பணாதிகரணம் ஆகிய அதிகரணங்கணேயும் புரிந்து கொள்ள வேண்டும். ஆகையால், இந்த அதிகரணம் மிகவும் முக்கியமானதாகும்.

முதல் பூர்வபக்ஷம் –
இந்த அதிகரணத்தில் முதல் இரண்டு ஸூத்ரங்களால் இரண்டு பூர்வ பக்ஷங்கள் கூறப்படுகின்றன.

1-— உ ப₄ய வ்யபதே₃சாத் அஹி குண்ட₃லவத்
உ ப₄ய-
-இரண்டும்
வ்யபதே₃சாத்–உபதேசிக்கப் படுவதால்
அஹி– பாம்பு
குண்ட₃லவத்–உருண்ட வடிவம் போல.
“பேதம் (வேறுபாடு), அபேதம் (ஒன்றாயிருத்தல்) ஆகிய இருவகை உபதேசங்களும் ச்ருதியில் இருப்பதால், பாம்புக்கும் அதன் சுருண்ட வடிவுக்கும் உள்ள தொடர்பைப் போலவே உலகமும் ப்ரஹ்மமும் தொடர்புடையவை .
ஒருபுறம், ” (ப்₃ரஹ்மை வேத₃ம் ஸர்வம்) அதாவது “இவ் வனைத்தும் ப்ரஹ்மமே ” என்று ச்ருதி கூறுகிறது. அதே போல், (ஆத்மை வேத₃ம் ஸர்வம்) அதாவது “இவ்வனைத்தும் ஆத்மாவே ” என்றும் ச்ருதி கூறுகிறது. இவ்வகையான வாக்கியங்கள் உலகத்திற்கும் ப்ரஹ்மத்திற்கும் அபேதத்தைப் (ஐக்கியத்தைப் ) போதிக்கின்றன–ஆனால், மறுபுறம் (ஹந்தாஹம்...) என்று படைப்பவராகிய ப்ரஹ்மம் ஸங்கல்பம் செய்வதாக ச்ருதி கூறுகிறது. இவ்வகையான வாக்கியங்கள், படைப்பவராகிய ப்ரஹ்மத்திற்கும் படைக்கப்படும் உலகத்திற்கும் பேதம் இருப்பதை உணர்த்துகின்றன.எனவே , பேதத்தையும் அபேதத்தையும் போதிக்கும் ச்ருதிகள் இரண்டிற்கும் பொருந்தக்கூடிய ஒரு கருத்தை முன் வைப்பதாக பூர்வபஷி கூறுகிறார்.
ஒரே பாம்பு சில சமயங்களில் சுருண்ட நிலையிலும், வேறு சில சமயங்களில் நீண்ட நிலையிலும் காணப்படுகிறது. சுருண்ட வடிவமும் நேரான வடிவமும் ஒன்றுக்கொன்று வேறுபட்டதாகத் தோன்றினாலும், அவை இரண்டும் ஒரே பாம்பின் வெவ்வேறு அமைப்புகளே .அதுபோலவே , அசேதனப் பொருள்களும் ப்ரஹ்மத்திலிருந்து வேறுபட்ட பொருள்கள் அல்ல. அவை ப்ரஹ்மத்தின் வெவ்வேறு அமைப்புகள் (ஸம்ஸ்தாந விசேஷங்கள்) மட்டுமே என்று பூர்வ பஷி கூறுகிறார்

அதாவது, பாம்பே சுருண்ட வடிவமாகக் காணப்படுவது போல, ப்ரஹ்மமே பலவிதமான அசேதனப் பொருள்களாகக் காணப்படுகிறார். உலகம் என்று தனியாக வேறு ஒரு பொருள் இல்லை ; ப்ரஹ்மமே பல் வேறு அமைப்புகளில் வெளிப்படுகிறார் என்பதே இந்தப் பக்ஷத்தின் கருத்து.

இரண்டாம் பூர்வபக்ஷம் –
2-ப்ரகாசாச்ரயவத்₃வா தேஜஸ்த்வாத்
வா
-அல்லது
பிரகாச -ஒளியையும்
ஆஸ்ரய- அதற்கு ஆதாரமான பொருளையும் போல
தேஜஸ்த்வாத்தேஜஸ்-என்ற ஒரே ஜாதியைச் சேர்ந்திருப்பதால்.
“அல்லது, ஒளிக்கும் அதற்கு ஆதாரமான பொருளுக்கும் உள்ள தொடர்பைப் போலவே , தேஜஸ் என்ற ஒரே ஜாதியைச் சேர்ந்திருப்தன் காரணமாக, அசேதனப் பிரபஞ்சம் ப்ரஹ்மத்தின் ரூபமாக இருக்கிறது

முதல் பக்ஷத்தின் படி உலகமே ப்ரஹ்மத்தின் அமைப்பு மாறிய நிலை என்று ஏற்றுக் கொண்டால், பேதத்தைப் போதிக்கும் ச்ருதிகளுக்கும், ப்ரஹ்மம் எவ்வித மாற்றமும் அடைவதில்லை என்று போதிக்கும் ச்ருதிகளுக்கும் இடம் இல்லாமல் போய்விடும்.ஆகையால், உலகம் ப்ரஹ்மத்தின் மாற்றமே என்று கூறாமல், இரண்டிற்கும் வேறொரு வகையான தொடர்பு இருக்க வேண்டும் என்று இந்தப் பக்ஷத்தில் கூறப்படுகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக ஒளியும் அதற்கு ஆதாரமான பொருளும் கூறப்படுகின்றன.ஒளியும், அதற்கு ஆதாரமான ஸூரியன் போன்ற பொருளும் வேறுபட்டவையாக இருந்தாலும், இரண்டிலும் தேஜஸ் என்ற ஒரே ஜாதி உள்ளது. அந்தப் பொதுவான ஜாதியின் காரணமாக, அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்று கூறப்படுகின்றன.
அது போலவே , ப்ரஹ்மத்திற்கும் அசேதனப் பிரபஞ்சத்திற்கும் ப்ரஹ்மத்வம் என்ற ஒரு பொதுவான ஜாதி உள்ளது என்று இந்தப் பக்ஷத்தில் கருதப்படுகிறது. அந்த ஒரே ஜாதியை அடிப்படையாகக் கொண்டே , அசேதனப் பிரபஞ்சம் ப்ரஹ்மத்தின் ரூபம் என்று ச்ருதி கூறுகிறது என்று பூர்வபஷி விளக்குகிறார்

ஸித்தாந்தம் 3- பூர்வ வத்₃வா –
வா
-அல்லது
பூர்வ வத் –முன்பு கூறியது போல.(அம்ச அதிகரணம் -2-3- 7-போல்)
அல்லது, முன்பு ஜீவர்களைப் பற்றி கூறியது போலவே , அசேதனப் பொருள்களும் ப்ரஹ்மத்தின் அம்சங்களாக இருக்கின்றன.”
இந்தப் பக்ஷத்தில், முதல் இரண்டு பக்ஷங்களையும் ஏற்றுக் கொள்ளாமல், வேறொரு விளக்கத்தை ஸித்தாந்தீ வ்யாஸர் கூறுகிறார்.

விட்டுப் பிரியாத தன்மை
முதல் பக்ஷத்தில், உலகமே ப்ரஹ்மத்தின் வெவ்வேறு அமைப்புகள் என்று கூறப்பட்டது.அப்படிக் கொண்டால் ப்ரஹ்மத்துக்கு மாறுபாடுகள் இல்லை என்று சொல்லும் ச்ருதி வாக்கியங்கள் தவறாக ஆகும்.
இரண்டாம் பக்ஷத்தில், உலகத்திற்கும் ப்ரஹ்மத்திற்கும் இடையே பொதுவாக இரண்டிலும் காணப்படும் ஒரே ஜாதி இருப்பதால் தொடர்பு ஏற்படுகிறது என்று கூறப்பட்டது.ஆனால், ப்ரஹ்மத்வம் என்ற ஒரே ஜாதி, சேதனப் பொருள்கள், அசேதனப் பொருள்கள், ஈச்வரர் ஆகிய அனைவரிடத்திலும் இருப்பதாகக் கூறினால், உலகத்திற்குக் காரணமானவரும், உலகத்திற்கு ஆதாரமாக இருப்பவரும், அனைத்தையும் அறிந்தவரும் ப்ரஹ்மமே என்று கூறுவது தவறாக ஆகி விடும், ஏனென்றால் அசேதனமோ , சேதனமோ , ஈச்வரவனோ இப் பண்புகளை உணடயவர்கள் அல்லர்கள்

இதற்கு மாற்றாக, முன்பு ஜீவர்களைப் பற்றி நிறுவப்பட்ட கருத்தையே இங்கும் ஏற்றுக் கொள்ல வேண்டும் என்று கூறுகிறார்.அதாவது, (அம்சோ நாநா வ்யபதேசாத்) (2.3.7.1) மற்றும் (ப்ரகாசாதி₃வத் து நைவம் பர:)(2.3.7.4) என்ற ஸூத்ரங்களில், ஜீவர்கள் ப்ரஹ்மத்திலிருந்து தனியே பிரிந்து நிற்கும் பொருள்கள் அல்ல; ப்ரஹ்மத்தை விட்டு ஒரு போதும் பிரியாத பிரிக்க முடியாத விசேஷணங்கள் (அப்ருதக் ஸித்த விசேஷணங்கள்) என்று நிறுவப்பட்டது.அதி போலவே , அசேதனப் பொருள்களும் ப்ரஹ்மத்திலிருந்து பிரிந்து நிற்கும் பருள்கள் அல்ல. அவையும் ப்ரஹ்மத்தை விட்டு ஒரு போதும் பிரியாத அப்ருதக் ஸித்த விசேஷணங்களே .இந்த வகையில், அசேதனப் பொருள்களும் ப்ரஹ்மத்தின் அம்சங்களாக இருக்கின்றன.

இதனால், பேத ச்ருதிகளுக்கும் அபேத ச்ருதிகளுக்கும் இரண்டிற்கும் இடம் கிடைக்கிறது. விசிஷ்டமான(சேர்ந்த) ஒரு பொருளின் ஒரு பகுதியாக இருப்பதன் காரணமாக, அசேதனப் பொருள்களுக்கும் ப்ரஹ்மத்திற்கும் அபேதம் கூறப்படுகிறது. அதே சமயம், விசேஷணத்திற்கும் விசேஷ்யத்திற்கும் ஸ்வரூபத்திலும், ஸ்வபாவத்திலும் வேறுபாடு இருப்பதால், அவற்றிற்கிடையே பேதமும் கூறப்படுகிறது. மேலும், இந்த விளக்கத்ணத ஏற்றுக் கொண்டால், உலகத்தில் காணப்படும் தோஷங்கள் ப்ரஹ்மத்தைத் தீண்டுவதற்கும் இடமில்லை

மணியில் ஒளியும், பொருளில் ஜாதியும், பொருளில் பண்பும், ஆத்மாவிடம் உடலும் இருப்பது போல் ஜீவர்களும் அசேதனப் பொருள்களும் ப்ரஹ்மத்ணத விட்டு பிரிந்து நிற்காத பண்புகள் ஆனதால் அம்சமாக இருக்கின்றன.

அதிகரணத்தின் தாக்கம்
4-பிரதி ஷேதாச் ச —
ச =
மேலும்
பிரதி ஷேதாச்-மறுத்துக் கூறும் ச்ருதிகள் இருப்பதாலும்.
மேலும், அசேதனப் பொருள்களின் தர்மங்களைப் ப்ரஹ்மத்திடம் மறுத்துக் கூறும் ச்ருதிகள் இருப்பதாலும்”

முந்தைய ஸூத்ரத்தில், அசேதனப் பொருள்கள் ப்ரஹ்மத்தின் அப்ருதக் ஸித்த விசேஷணங்களாக இருந்து, அந்த வகையிலேயே அவருடைய அம்சங்களாக இருக்கின்றன என்பது நிறுவப்பட்டது. அதையே இந்த ஸூத்ரம் ச்ருதி ப்ரமாணத்தால் மேலும் உறுதிப்படுத்துகிறது

(ஸ வா ஏஷ மஹாந் அஜ ஆத்மா அஜர: அமர:) அதாவது “இவரே மகத்தான ஆத்மா ; பிறப்பற்றவர், மூப்பற்றவர், மரணமற்றவர்” என்றும்,
(நாஸ்ய ஜரயா ஏதஜ் ஜீர்யதே ) அதாவது “மூப்பு இவரைத் தீண்டுவதில்லை ” என்றும் ச்ருதி கூறுகிறது. இவ்வாறு, அசேதனப் பொருள்களுக்கு உரிய மாற்றம், மூப்பு, அழிவு போன்ற தர்மங்களைப் ப்ரஹ்மத்திடம் ச்ருதி மறுத்துக் கூறுகிறது. எனவே , அசேதனப் பொருள்கள் ப்ரஹ்மத்தின் பிரிக்க முடியாத அம்சங்களாக இருப்பதே பொருந்தும், பூர்வ பஷி சொன்னது போல் ப்ரஹ்மமே அசேதனமாக மாற முடியாது

ஆக, அசேதனப் பொருள்களும் சேதனப் பொருள்களும் ப்ரஹ்மத்துக்கு விட்டுப் பிரிக்க முடியாத அம்சங்கள் என்று நிரூபிக்கப் பட்டதால், ஸ்ருஷ்டிக்கு முன்னால், ப்ரளயத்தின் போது, காரண நிலையில்,ப்ரஹ்மம் ஸூக்ஷ்ம சேதன–அசேதன விசிஷ்டமாக உள்ளது. கார்ய நிலையில், ஸ்தூல சேதன–அசேதன விசிஷ்டமக உள்ளது. ஸூக்ஷ்மம் என்றால் பெயர் மற்றும் உருவங்களால் வேறுபடாதது. ஸ்தூ₂லம் என்றால் அந்த வேறுபாடுகளை உடையது. எனவே , காரணம் கார்யம் இரண்டுமே ப்ரஹ்மம் தான் என்பதால், கார்யம் காரணத்திலிருந்து வேறுபட்டது அல்ல (காரணாத் கார்யம் அநந்யத்).அதனால் தான், காரணமான ப்ரஹ்மத்தை அறிந்தாலே , அவருடைய விசேஷணங்களாக உள்ள அனைத்து கார்யங்களையும் அறிந்ததாக ஆகிறது. இதையே “ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறியலாம்” (ஏக விஜ்ஞாநேந ஸர்வ விஜ்ஞாநம்) என்று வேதம் கூறுகிறது.

3-2-7-பராதி₄கரணம் ஜகத்துக்குக் காரணமானவர் தான் அடையப் பட வேண்டியவரா?–அதிகரணத்தின் பின் புலம் –ஸங்கதி–
5 ஆவது அதிகரணத்தில் ப்ரஹ்மம் குற்றமற்றவர் என்றும் எல்லா குணங்களையும் உணடயவர் என்றும் கூறப்பட்டது.
6 ஆவது அதிகரணத்தில், அசேதனப் பொருள்களோடு சேர்ந்திருப்பதால் தோஷம் வருமோ என்று கேட்டுக் கொண்டு அது இல்லை என்று நிரூபிப்பதன் மூலம் ப்ரஹ்மம் குற்றமற்றவர் தான் என்பது வலுவூட்டப் பட்டது.
இப்போது 7ஆவது அதிகரணத்தில் ப்ரஹ்மம் எல்லா கல்யாண குணங்களையும் உடையவர் தான் என்பது வலுவூட்டப் படுகிறது

சேதனர்களுக்கும் அசேதனங்களுக்கும் இருக்கும் தோஷங்கள் ப்ரஹ்மத்துக்கு இல்லா விட்டாலும், தன்னை விட உயர்ந்த வேறு ஒரு பொருளைச் சேர்ந்தவராக இருத்தல் என்ற குறை உள்ளதா? என்கிற கேள்வி எழுகிறது. மேலும், அவரைக் காட்டிலும் வேறொரு பொருள் தான் அடைய வேண்டிய பொருளாகவும், அனுபவிக்க வேண்டிய பொருளாகவும் உள்ள தென்றால், ப்ரஹ்மம் எல்லாக் கல்யாண குணங்களையும் உடையவர் என்று கூறவும் முடியாது

ஸம்ஶயம்- இந்த உலகிற்குக் காரணமாகவும், உபாஸிக்கப்பட வேண்டியவராகவும் உள்ள பரம ப்ரஹ்மத்தை விட உயர்ந்த வேறு ஏதாவது தத்துவம் உள்ளதா? அல்லது, இவரே அனைத்தையும் விட உயர்ந்த பரம் பொருளா ?

பூர்வபக்ஷம்-1–பரம் அத: ஸேது-உந்மாந-ஸம்ப₃ந்த₄-பே₄த₃-வ்யபதே₃ஸேப்₄ய:
அத:
— இந்தப் ப்ரஹ்மத்தை விட;
பரம் — உயர்ந்த வேறு ஒரு பொருள்(உள்ளது);
ஸேது — அணை என்றும்;
உந்மாந — அளவுடையது என்றும்;
ஸம்ப₃ந்த₄ — தொடர்பும்;
பே₄த₃ — வேறுபாடும்;
வ்யபதே ₃ஸேப்₄ய: — ஸ்ருதியில் கூறப் படுவதால்-

“இந்தப் ப்ரஹ்மத்தை விட உயர்ந்த வேறு ஒரு தத்துவம் உள்ளது. ஏனெனில், ஸ்ருதி அவரை அணை என்றும், அளவுடையவர் என்றும், வேறு ஒன்றோடு தொடர்புடையவர் என்றும், அதிலிருந்து வேறுபட்டவர் என்றும் கூறுகிறது

பூர்வ பக்ஷியின் யுக்திகள்
1–ஸேது- (அத₂ ய ஆத்மா ஸ ஸேதுர் வித்₄ருதி:)
அதாவது “இந்த ஆத்மாவே அனைத்தையும் தாங்கும் அணையாக இருக்கிறார்” என்று கூறுகிறது.ஸேது என்பது ஒரு கரையிலிருந்து மற்றொரு கரையை அடைய உதவும் பாலம்.எனவே , இந்தப் ப்ரஹ்மத்தைத் தாண்டி அடைய வேண்டிய வேறு ஒரு உயர்ந்த பொருள் இருக்கிறது.
மேலும்,(ஏதம் ஸேதும் தீர்த்வா அந்த₄ஸ்ஸந் அநந்தோ ₄ ப₄வதி), அதாவது “இந்த அணையைக் கடந்தவன் அறியாமையிலிருந்து விடுபடுகிறான்” என்று ஸ்ருதி கூறுகிறது.எனவே , இந்தப் ப்ரஹ்மத்தைத் தாண்ட வேண்டும்- கடக்க வேண்டும் என்று கூறப்படுவதால், அடைய வேண்டிய வேறு ஒரு பொருள் இருக்கிறது-(கூலாந்தர ப்ராப்ய ஹேதுவே ஸேது -அக்கரையை அடைவிக்கும் வழியே ஸேது)

2-உந்மானம்– உந்மானம் என்றால் அளவு படுத்துவது. (சதுஷ்பாத் ப்₃ரஹ்ம ஷோட₃ஶகலம் ப்₃ரஹ்ம), அதாவது “ப்ரஹ்மம் நான்கு பாதங்களையும் பதினாறு கலைகளையும் உடையவர்” என்று ப்ரஹ்மத்திற்கு ஒரு குறிப்பிட்ட அளவு இருப்பதாக வேதத்தில் கூறப்படுகிறது. அதே சமயம் , அளவில்லாத ஒரு பொருளும் வேதத்தில் சொல்லப்படுகிறது. எனவே , ப்ரஹ்மத்தை விட உயர்ந்த அளவில்லாத ஒரு பொருள் இருக்க வேண்டும்.

3-ஸம்பந்தம்ப்ராப்யம் (அடையப்படுவது) – ப்ராபகம் (அடையும்வழி) என்ற தொடர்பு இந்த ப்ரஹ்மத்துக்கும் வேறொரு பொருளுக்கும் கூறப்படுகிறது (அம்ருதஸ்ய பரம் ஸேதும் த₃க்₃தே₄ந்த₄நமிவாநலம்) என்றும், (அம்ருதஸ்ய ஏஷ ஸேது:) என்றும் கூறுகிறது வேதம்.அம்ருதம் எனப்படும் இலக்கை அடைவிக்கும் வழியாக’ஸேது’ எனப்படும் ப்ரஹ்மம் கூறப்படுகிறது

4-பே₄தம்– வேறுபாடு. (பராத் பரம் புருஷமுபைதி), அதாவது “அனைத்தையும் விட உயர்ந்த புருஷனை அடைகிறான்” என்றும், (பராத்பரம் யந் மஹதோ மஹாந்தம்), அதாவது “பெரியவற்றையும் விட உயர்ந்தது அந்தப் பரம் பொருள்” என்றும் ஸ்ருதி கூறுகிறது.இவ் விடங்களில், பரம் எனப்படும் ஜகத் காரணமான ப்ரஹம்த்தை விட’பரம்’ உயர்ந்தவன் இருக்கிறார் என்று தெளிவாக வேறுபாட்டைக் காட்டுகிறது.

எனவே , உலகிற்குக் காரணமான இந்தப் ப்ரஹ்மத்தை விட உயர்ந்த வேறு ஒரு பரம் பொருள் உள்ளது என்று பூர்வபஷி கூறுகிறார்.

முதல் இரண்டு யுக்திகளை மறுத்தல்-
2- ஸாமாந்யாத் து –
து
-ஆனால்
ஸாமாந்யாத் -ஒற்றுமையால் -பொதுவான தன்மையால்;.
இந்த ஸூத்ரத்தால் முதல் யுக்தியைக் கண்டிக்கிறார். ப்ரஹ்மத்தை “ஸேது” (அணை) என்று ஸ்ருதி கூறுவதால், அவரை விட உயர்ந்த வேறு ஒரு பொருள் உள்ளது என்று பொருள் கொள்ளக் கூடாது. (அத₂ ய ஆத்மா ஸ ஸேதுர்வித்₄ருதி:), அதாவது “இந்த ஆத்மாவே அனைத்தையும் தாங்கும் அணையாக இருக்கிறார்” என்று கூறப்படுவதில், “ஸேது” என்ற சொல்லுக்கு இரண்டு விதமாகப் பொருள் கொள்ளலாம்.
1-ஒற்றுமையின் அடிப்படையில்-எப்படி நீரைக் கட்டுப்படுத்தி இரண்டு நீர் நிலைகள் கலந்து விடாமல் அணை காக்கிறவதோ , அது போலவே ப்ரஹ்மமும் உலகங்கள் ஒன்றொ டொன்று கலந்து விடாமல் காக்கிறார். இதையே ஸ்ருதி, (ஏஷாம் லோகாநாம் அஸம்பே₄தா₃ய), அதாவது “இந்த உலகங்கள் ஒன்றோ டொன்று கலந்து விடாமல் இருப்பதற்காக” என்று ஸ்ருதி.
2-பொதுவான தன்மையின் அடிப்படையில்-“ஸேது” என்ற சொல்லைப் பகுதிகளாகப் பிரித்துப் பார்த்தால் ’ஸிநோதி ப₃த்₄நாதி இதி ஸேது:’ என்ற வ்யுத்பத்தியால் “அனைத்தையும் தன்னுள் கட்டிப் பிணைப்பது” என்ற யௌகிகப் பொருளும் உள்ளது. அந்தப் பொருளிலும் ப்ரஹ்மம் “ஸேது” என்று அழைக்கப் படுகிறார்.

மேலும், (ஏதம் ஸேதும் தீர்த்வா) என்ற இடத்திலும், ’தரணம்’ என்பது தாண்டுதல் அல்ல, அடைதல் தான். அதனால், தாண்டப் பட வேண்டிய ப்ரஹ்மத்தை விட அடையப்பட வேண்டிய வேறு ஒரு பொருள் இருக்க வேண்டும் என்று கூற முடியாது.
3-பு₃த்₃த்₄யர்த: பாத₃வத்-
பு₃த்₃த்₄யர்த:
–தியானத்திற்கு உதவுவதற்காக;
பாத₃வத் “நான்கு பாதங்கள்” என்றதைப் போல
இந்த ஸூத்ரம் இரண்டாவது யுக்தியைக் கண்டிக்கிறது. ஸ்ருதியில் (பாவதா₃ அஸ்ய விஶ்வா பூ₄தாநி), அதாவது “எல்லா உயிர்களும் அவருடைய ஒரு பாதமே ” என்று ப்ரஹ்மத்தை அளவுபட்டவராகச் சொல்வது தியானத்திற்கு உதவுவதற்காகவே ; உண்மையில் அவருக்கு அளவு உண்டு என்பதற்காக அல்ல. (ஸத்யம் ஜ்ஞாநம் அநந்தம் ப்₃ரஹ்ம), அதாவது “ப்ரஹ்மம் அளவற்றவர்” என்று சொல்லிவிட்டு, அவரே தான் ஜகத் காரணம் ஆவார் என்று மேலே வேதம்கூறுகிறது- (தஸ்மாத்வா ஏதஸ்மாத் ஆத்மந ஆகாஶ: ஸம்பூ₄த:), அதாவது “இந்த ஆத்மாவிலிருந்தே ஆகாசம் தோன்றியது”, என்று. எனவே ஜகத் காரணமான ப்ரஹ்மம் அளவுபட்டவர், அளவுபடாத வேறொரு உயர்ந்த பொருள் உள்ளது என்பது தவறு.

இதற்கு எடுத்துக் காட்டு’பாத₃வத்’ என்ற பகுதியில் கூறப்படுகிறது-ஸ்ருதி (மநோ ப்₃ரஹ்வமேத் யுபாஸீத), அதாவது “மனதைப் ப்ரஹ்மமாக உபாஸிக்க வேண்டும்” என்று கூறிய பிறகு,(வாக் பாத₃: ப்ராண : பாத₃: சக்ஷுஸ் : பாத₃: ஶ்ரோத்ரம் பாத₃:), அதாவது “வாக்கு ஒரு பாதம், ப்ராணன் ஒரு பாதம், கண் ஒரு பாதம், காது ஒரு பாதம்” என்று கூறுகிறது. உண்மையில் அணுவாக இருக்கும் மனதுக்கு இவை யெல்லாம் உறுப்புகள் ஆக முடியாதே . உபாஸனைக்காக மட்டுமே கூறப் பட்டுள்ளது.அதே போல, இங்கும் “ப்ரஹ்மத்துக்கு நான்கு பாதங்கள்” என்று கூறப்படுவது உபாஸனைக்காகவே , உண்மையான அளவு அல்ல. -(திருஷ்ட்டி விதி -இஹ லோக பயன்களை அடைய இது போன்ற ஸ்ருதிகள் சொல்லும்)

மூன்றாவது யுக்தியை மறுத்தல்
கேள்வி
– மனம் உண்மையில் அளவில்லாதது. அப்படி யிருக்க, அதை உபாஸனைக்காகவே என்றாலும், “நான்கு பாதங்கள்” போன்ற அளவுகளுடன் ஸ்ருதி எவ்வாறு கூற முடியும்?
ஸித்தாந்தியின் பதில் – 4- ஸ்தா₂ந விஸேஷாத் ப்ரகாசாதி₃வத்
ஸ்தா₂ந விஸேஷாத் —
குறிப்பிட்ட இடங்களுடன் தொடர்பு படுவதால்;
ப்ரகாசாதி₃வத் — ஒளி முதலியவற்றைப் போல.(ஆதி -ஆகாசம் போல்வன)
மனம் உண்மையில் அளவில்லாததாக இருந்தாலும், வாக்கு, ப்ராணன், கண், காது போன்ற குறிப்பிட்ட இடங்களோடு தொடர்பு பட்டதாக இருப்பதால் அவற்றைக் கொண்டு அளவுபட்டது போல் சொல்லப்படுகிறது.
ப்ரகாசாதி₃வத் –ஒளியும் ஆகாசமும் இயல்பாக எல்லை யற்றவையாக இருந்தாலும், அவை ஜன்னல், குடம் போன்றவற்றின் வழியாகத் தோன்றும் போது, அவற்றின் எல்லைக்கு உட்பட்டதாகவே நாம் அவற்றை நினைத்துக் கொள்கிவறாம்.
அதே போல், உபாஸனைக்காக ப்ரஹ்மத்தையும் குறிப்பிட்ட உபாதிகளுடன் தொடர்புபடுத்தி, “நான்கு பாதங்கள்” போன்ற அமைப்புடன் தியானிப்பதில் எந்தத் தவறும் இல்லை . அது ப்ரஹ்மத்தின் உண்மையான அளவை உணர்த்துவதற்காக அல்ல; உபாஸனைக்கு உதவுவதற்காகவே –

5-உபபத்தே : ச –
-மேலும்
உபபத்தே :-பொருத்தமாக இருப்பதால்;.
இந்த ஸூத்ரத்தால் மூன்றாவது யுக்தியைக் கண்டிக்கிறார்.
(அம்ருதஸ்ய ஏஷ ஸேது:)
என்று ப்ரஹ்மத்தை உபாயமாக வேதம் கூறுவதால், அவரை விட வேறொரு உயர்ந்த பொருள் தான் அடையப் படுவதாக இருக்க வேண்டும் என்று சொல்வது பொருந்தாது, தன்னை அடைவதற்கான உபாயமாகத் தானே இருப்பது பொருத்தமானபடியால்

நாயமாத்மா ப்ரவசநேந லப்₄ய: ந மேத₄யா ந ப₃ஹுநா ச்ருதேந|யமேவைஷ வ்ருணுதே தேந லப்₄ய: தஸ்யை ஷாத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்
“இந்த பரமாத்மாவை பேசுவதாலோ , த்யானிப்பதாலோ , கேட்பதாலோ அடைய முடியாது. இந்த பரமாத்மா எந்த பக்தனைத் தேர்ந்தெடுக்கிறாரோ அவனால் தான் அடைய முடியும், அந்த பக்தனுக்குப் பரமாத்மா தன் திரு மேனியை வெளிப்படுத்துகிறார்-(சரணாகதி ஒரு பிரார்த்தனை மட்டுமே -கூக்குரல் –நீயே உன்னை அடைவிக்கும் வழியாக ஆக வேண்டும் என்னும் பிரார்த்தனை)

அதே கருத்தை ஆழ்வாரும்,“நெறி வாசல் தானேயாய் நின்றானை “என்று அருளிச் செய்கிறார். அதாவது, அவரே அடைய வேண்டிய இலக்காகவும், அவரே அதனை அடையச் செய்யும் வழியாகவும் இருக்கிறார்.மற்றொரு இடத்தில்,”ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஓழிந்தாய்“அதாவது “எனக்கு உய்வதற்கான வழியாக உன்னுடைய திருவடிகளையே தந்தாய்” என்கிறார்.
எனவே , ப்ரஹ்மமே உபாயமும் (அடைவதற்கான வழியும்) உபேயமும் (அடைய வேண்டிய பொருளும்) ஆவார். ஆகையால், “ஸேது” என்ற சொல்லால் அவரை விட உயர்ந்த வேறு ஒரு தத்துவம் இருப்பதாகக் கொள்ள முடியாது.

நான்காவது யுக்தியை மறுத்தல்
6- ததா₂ அந்ய ப்ரதிஷேதா₄த் –
“அதே போல், வேறு எதுவும் இல்லை என்று ச்ருதி மறுப்பதாலும்”–
இந்த ஸூத்ரத்தால் நான்காவது யுக்தி மறுக்கப் படுகிறது. “பராத் பரம்”, “அக்ஷராத் பரத: பர:” போன்ற வாக்கியங்கள், ப்ரஹ்மத்தை விட உயர்ந்த வேறு ஒரு தத்துவம் இருப்பதைக் கூற வில்லை . ஸ்ருதியே , அவரை விட உயர்ந்த வேறு எதுவும் இல்லை என்று அறிவிப்பதால்.

(ஸர்வே நிமேஷா ஜஜ்ஞிரே வித்₃யுத: புருஷாத₃தி₄) அதாவது “அனைத்தும் அந்த பரம புருஷனிடமிருந்தே தோன்றின” என்று கூறி விட்டு,(ந தஸ்யேஸே கஶ்ஸந தஸ்ய நாம மஹத்₃யஶ:) அதாவது “அவருக்கு மேலாக ஆட்சி செய்யக் கூடியவர் எவரும் இல்லை ” என்று ஸ்ருதி கூறுகிறது.எனவே ஜகத் காரணமான ப்ரஹ்மம் தான் அனைத்திலும் உயர்ந்தது. அதே போல்,” (ந ஹ்யே தஸ்மாத் இதி ந இதி அந்யத் பரமஸ்தி), அதாவது “இவரை விட உயர்ந்த வேறு எதுவும் இல்லை ” என்று தெளிவாக அறிவிக்கிறது.மேலும்,” (பராத் பரம் புருஷமுபைதி தி₃வ்யம்) மற்றும் (அக்ஷராத் பரத: பர🙂 ஆகியவை , அத்ருஶ்யத்வாதி குணகாதிகரணத்தில் (1.2.5) சொன்னபடி பரம புருஷனையே குறிக்கின்றன-

பூர்வ பக்ஷியின் கேள்வி- (தமேவ விதி₃த்வா அதி ம்ருத்யுமேதி நாந்ய: பந்தா₂: வித்₃யதே அயநாய), அதாவது “இந்தப் பரம புருஷனை அறிந்தால் தான் மரணத்தைத் தாண்ட முடியும்; வேறு வழி இல்லை ” என்று வேதம் கூறுகிறது. அதற்குப் பிறகு, “ (யஸ்மாத் பரம் நாபரமஸ்தி கிஞ்சித் யஸ்மாத் நாணீயோ ந ஜ்யாயோ அஸ்தி கஶ்வசித்), அதாவது “அவரை விட உயர்ந்ததும் இல்லை ; அவரை விட சிறியதும் பெரியதும் எதுவும் இல்லை ” என்று ஸ்ருதி உறுதியாக அறிவிக்கிறது.அதற்குப் பின், (ததோ யது₃த்தரதரம் தத₃ரூபம் அநாமயம்। ய ஏதத்₃விது₃: அம்ருதாஸ்தே ப₄வந்தி), அதாவது “அவரை விட எது உயர்ந்ததோ , அது உருவமற்றது குற்றமற்றது; அதை அறிந்தவன் முக்தி அடைகிறான் ” என்று வேதம் சொல்கிறதே . எனவே ப்ரஹ்மத்தை விட உயர்ந்த ஒன்று இருக்க வேண்டுமே ?

ஸித்தாந்தியின் பதில்–“தத: யது₃த்தர தரம்“என்பதற்கு “ப்ரஹ்மத்தை விட உயர்ந்த்து” என்று பொருளல்ல. “அந்த உயர்ந்த பரம புருஷனே உருவ மற்றவரும், குற்ற மற்றவரும் ஆவார்; ஆகையால் அவரை அறிந்தவர்களே அமரத்துவத்தை அடைகிறார்கள்” என்று கூறுகிறது. (தத-ஆகையால் -என்ற பொருளில் -)எனவே , இவ் வனைத்து வாக்கியங்களையும் ஒருங்கிணைத்துப் பார்த்தால், பரம புருஷனை விட உயர்ந்த வேறு ஒரு தத்துவம் உள்ளது என்று கூற முடியாது.அவ்வாறு பொருள் கொண்டால், அந்தப் பகுதியில் ஆரம்பத்தில் கூறப்பட்ட கருத்திற்கும், அதன் பின்னர் வரும் ஸ்ருதி வாக்கியங்களுக்கும் முரண்பாடு ஏற்படும். எனவே , பரம ப்ரஹ்மமே அனைத்தையும் விட உயர்ந்த பரம் பொருள் என்பதே ஸித்தாந்தம் –

ஒத்தாரும் மிக்காரும் இல்லாதவன்
இதுவரை , இந்த ப்ரஹ்மத்தை விட உயர்ந்த பொருள் உள்ளது என்ற வாதத்தில் உள்ள தோஷங்கள் கூறப்பட்டன. இனி, கடைசி ஸூத்ரத்தால், தன் பக்ஷத்தை ஸாதிக்கக் கூடிய யுக்தியைச் சொல்கிறார்
7-அநேந ஸர்வ க₃தத்வம் ஆயாம ஶப்₃தா₃தி₃ப்₄ய:
அநேந
— இந்த ப்ரஹ்மத்தால்
ஸர்வக₃தத்வம்— உலகம் வ்யாபிக்கப் பட்டுள்ளது;(கரந்து எங்கும் பரந்துளன்)
ஆயாம ஶப்₃தா₃தி₃ப்₄ய: — ’வ்யாபகம்’ என்று பொருள் தரும் சொற்கள் முதலியவற்றால்.
ப்ரஹ்மம் எங்கும் நிறைந்திருப்பவர் என்று ஸ்ருதிகள் பல இடங்களில் தெளிவாகக் கூறுகின்றன

(தே நேத₃ம் பூர்ணம் புருஷேண ஸர்வம்), அதாவது “இந்த உலகம் முழுவதும் புருஷனால் நிறைந்துள்ளது“.
யச்ச கிஞ்சித் ஜக₃த் யஸ்மிந் த்₃ருச்யதே ச்ரூயதேபி வா| அந்தர் ப₃ஹிஶ் ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண : ஸ்தி₂த: “இந்த உலகத்தில் உள்ள அனைத்திற்கும் உள்ளும் புறமும் வ்யாபித்து அந்த நாராயணனே இருக்கிறார்”
மேலும், “ஆதி” என்ற சொல்லால், ப்ரஹ்மத்தைத் தவிர வேறு எந்தப் பர தத்துவமும் இல்லை என்று கூறும் ஸ்ருதி வாக்கியங்களும், அனைத்தையும் தாங்குபவர், அனைத்தையும் நியமிப்பவர், அநைத்திலும் வியாபித்து இருப்பவர் என்று கூறும் வாக்கியங்களும் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

உதாரணமாக, (ப்₃ரஹ்மை வேத₃ம் ஸர்வம்), அதாவது “இவை அனைத்தும் ப்ரஹ்மமே ” என்றும்,(ஆத்மை வேத₃ம் ஸர்வம்), அதாவது “இவை அனைத்தும் ஆத்மாவே ” என்றும் ஸ்ருதி கூறுகிறது.

இவ்வாறு, ப்ரஹ்மம் அனைத்திலும் வியாபித்து நிறைந்திருப்பவர், அனைத்தையும் தாங்குபவர், நியமிப்பவர், படைப்பவர் என்றெல்லாம் வேதம் பல இடங்களில் கூறுவதால், அவரை விட உயர்ந்த வேறு ஒரு பொருள் இருக்க முடியாது.எனவே , உலகிற்குக் காரணமான இந்தப் பரம ப்ரஹ்மமே அனைத்தையும் விட உயர்ந்த பரம் பொருள், அவரே அடையப் படவேண்டிய இலக்கும் ஆவார் என்பதே இந்த அதிகரணத்தின் ஸித்தாந்தம்.

3-2-8-ப₂லாதி₄கரணம் –நாம் ஆசைப்பட்ட அனைத்துப் பயன்களையும் வழங்குபவர் -அதிகரணத்தின் ஸங்கதி -இந்த அதிகரணத்திற்கு மூன்று வகையான ஸங்கதிகள் கூறப்படுகின்றன.

1–உபாஸனை செய்ய வேண்டும் என்ற விருப்பம் உண்டாவதற்காக, இதுவரை ஜீவாத்மா ஜாக்ரத், ஸ்வப்நம், ஸுஷுப்தி, மூர்ச்சை , உத்க்ராந்தி முதலான எல்லா அவஸ்தைகளிலும் தோஷங்களுடன் கூடியவராக இருப்பது கூறப்பட்டது. அதே சமயம், பரம புருஷர் குற்றமற்றவராகவும், எல்லாக் கல்யாண குணங்களின் இருப்பிடமாகவும், அனைத்தையும் விட உயர்ந்தவராகவும், அடையப்பட வேண்டிய பரம் பொருளாகவும் இருப்பது நிலை நாட்டப்பட்டது. இதற்குப் பிறகு, அந்தப் பரம புருஷனை உபாஸிக்க வேண்டும் என்பதை விளக்குவதற்காக, அவரை உபாஸிப்பவர்களுக்கு, அவரிடமிருந்தே மோக்ஷம் என்னும் பரம பலன் கிடைக்கிறது என்பதை இந்த அதிகரணம் கூறுகிறது–

2–முந்தைய அதிகரணத்தில், உபாஸனைக்கு உதவும் ஒரு முக்கிய அம்சமாக, “ப்ரஹ்மம் அடையப்பட வேண்டிய பரம் பொருள் (ப்ராப்யம்)” என்பது நிறுவப்பட்டது. இப்போது, உபாஸனைக்கு உதவும் மற்றொரு முக்கிய அம்சமாக, “ப்ரஹ்மமே பலன்களை வழங்குபவர்” என்பதும் நிறுவப் படுகிறது. இந்தப் பல ப்ரதத்வம் (பலனை வழங்கும் தன்மை ) ப்ரஹ்மத்தின் கல்யாண குணங்களில் ஒன்றான படியால் இந்த அதைக் கூறும் இந்த அதிகரணம் இந்த பாதத்தில் இடம் பெருவது பொருத்தமானதே –

3-முந்தைய அதிகரணத்தில், (உபபத்தேஶ் ச – 3.2.7.5) என்ற ஸூத்ரத்தில், ப்ரஹ்மம் உபாயமாக (அடைவதற்கான வழியாக) இருக்கிறார் என்பதை ஏற்கனவே நிலை நாட்டப் பட்டதாகக் கொண்டு, அவர் உபேயம் (அடையப் பட வேண்டியவர்) என்றும் கூறப்பட்டது. இப்போது, அந்த உபாயத்வமே ஆராயப்பட்டு உறுதிப் படுத்தப் படுகிறது.

இந்த அதிகரணத்தின் சிறப்பு அம்சம்-எப்படி ப்ரஹ்மமே மோக்ஷத்தை அளிப்பவர் என்று நிரூபிக்கப் படுகிறாரோ , அதே நியாயத்தின் அடிப்படையில், இவ் வுலகிலும் மறுமையிலும் கிடைக்கும் அநைத்து பலன்களையும் அளிப்பவரும் அவரே என்பதும் இந்த அதிகரணத்தில் நிரூபிக்கப் படுகிறது.

ஸம்ஶயம்– ஸ்வர்க்கம், மோக்ஷம் முதலான பலன்கள், கர்மங்களும் உபாஸனைகளும் உண்டாக்கும் அபூர்வத்தால் உண்டாகின்றனவா? அல்லது, கர்மங்களாலும் உபாஸனைகளாலும் ஆராதிக்கப்படும் வாயு முதலான தேவதைகளாலும், இறுதியில் பரம ப்ரஹ்மத்தாலேயே வழங்கப் படுகின்றனவா?

பரமாத்மாவே எல்லாப் பயன்களையும் வழங்குகிறார்-
இந்த அதிகரணத்தில், முதலில் ஸித்தாந்தாம் கூறப்படுகிறது. அதன் பிறகு பூர்வ பக்ஷியின் கேள்வி எழுப்பப்பட்டு, இறுதியில் அதற்கான விடை அளிக்கப் படுகிறது.
1- ப₂லம் அத: உபபத்தே:-
பலம்
-பலன்;
அத: இந்தப் பரம புருஷரிடமிருந்தே
உபபத்தே: பொருத்தத்தால் –
“ஸாஸ்திரத்தில் கூறப்படும் இம்மை மற்றும் மறுமை ஆகிய இரண்டிலும் உள்ள எல்லாப் பலன்களும், இந்தப் பரம புருஷரிடமிருந்தே கிடைக்கின்றன . ஏனெனில், அதுவே பொருத்தமானது.”

பரமபுருஷரே ஸர்வஜ்ஞர்– எந்த ஜீவனுக்கு எந்தப் பலனை எப்போது வழங்க வேண்டும் என்பதையும், அந்தப் பலன் கிடைப்பதற்கு உள்ள தடைகளையும் அறிந்திருப்பவர்.அவரே ஸர்வ சக்திமான்– அனுபவிக்க வேண்டிய பொருள்கள், அவற்றை அனுபவிப்பதற்கான சாதனங்கள் ஆகிய அனைத்தையும் உண்டாக்கவும், பலன் கிடைப்பதற்குத் தடையாக இருப்பவற்றை நீக்கவும் வல்லவர்.அவரே மஹா உதாரர், அதாவது அளவற்ற கருணையும் தாராள மனமும் உடையவர். அறிவும் சக்தியும் இருந்தாலும், கொடுக்க விருப்பமில்லாத ஒருவரால் பலன் வழங்க முடியாது. பகவானுக்கு அக்குறையும் இல்லை .எனவே , யாகம், தானம், ஹோமம் போன்ற கர்மங்களாலும், உபாஸனையாலும் ஆராதிக்கப்படுகின்ற பரம புருஷரே , இம்மையில் கிடைக்கும் பலன்களையும், மறுமையில் கிடைக்கும் பலன்களையும், இறுதியில் மோக்ஷத்தையும் வழங்க வல்லவர்(ஆராதனம் -ராது -பிரிய வர்த்தகம் -மகிழ்விப்பிக்கும் செயல்)

கர்மம் தானாகப் பலனை வழங்க முடியாது. ஏனெனில், கர்மம் அசேதனமானது-அசேதனமான ஒன்று, ஒரு சேதனனால் இயக்கப்படாமல் எந்தச் செயலையும் செய்ய முடியாது.மேலும், கர்மம் க்ஷணத்தில் அழிந்து விடுவது. ஒரு கணத்தில் அழிந்து போகும் ஒன்று, நீண்ட காலத்திற்குப் பிறகு கிடைக்கும் பலனுக்கு காரணமாக முடியாது.ஓட்டை விழுந்த குடத்தால் தண்ணீரை எடுத்துச் செல்ல முடியாதது போல, அழிந்து போன கர்மமும், காலம் கழித்து கிடைக்கும் பலனை உண்டாக்க முடியாது

2–ச்ருதத் வாச் ச –
-மேலும்
ச்ருதத்வாத் –ச்ருதியிலேயே கூறப் பட்டிருப்பதாலும்;.
“மேலும், பரம புருஷரே பலனை வழங்குபவர் என்பது நமது கற்பனை அல்ல; ச்ருதியிலேயே தெளிவாகக் கூறப்பட்டுள்ளது

(ஸ வா ஏஷ மஹாந் அஜ ஆத்மா அந்நாத: வஸுதா₃ந:), அதாவது “இந்த மஹத்தான , பிறப்பற்ற ஆத்மாவே அன்னத்தை வழங்குபவர்; செல்வத்தை வழங்குபவர்” என்று கூறுகிறது.இங்கு “அந்நாத:” என்பது அன்னத்தை வழங்குபவர் என்ற பொருளில் மட்டுமல்ல; இம்மையிலும் மறுமையிலும் அனுபவிக்க வேண்டிய எல்லாப் பலன்களையும் வழங்குபவர் என்ற பொருளிலும் வருகிறது.
“வஸுதாந:
” என்பது செல்வத்தாய் வழங்குபவர் என்றும், மேலும் தன்னையே (பரம புருஷரையே ) வழங்குபவர், அதாவது தம்மை அடையச் செய்து மோக்ஷத்தை அருள்பவர் என்றும் பொருள் தருகிறது.

புண்யமா? தெய்வங்களா?
3– த₄ர்மம் ஜைமிநி: அத ஏவ
ஜைமிநி:
–ஜைமிநி முனிவர்;
த₄ர்மம் (யாகம், உபாஸனை முதலிய) தர்மமே (பயனளிக்கிறது என்கிறார்);
அத ஏவ–அதனாலேயே ;
இந்தக் காரணத்தினாலேயே , யாகம், ஹோமம், உபாஸனை ஆகிய தர்மங்களே பலனை வழங்குகின்றன என்று ஜைமிநி கருதுகிறார்.”

உபபத்தி (பொருத்தம்)– உலகத்தில், உழவு, பிடித்து விடுதல் போன்ற செயல்கள், நேரடியாகவோ அல்லது இடை நிலைக் காரணங்கள் மூலமாகவோ , தாமாகவே தங்களுக்குரிய பலனை உண்டாக்குகின்றன என்று காண்கிறோம். அதைப் போலவே , வேதத்தில் கூறப்பட்டுள்ள யாகம் முதலான கர்மங்கள், பலனை நேரடியாக உண்டாக்க இயலா விட்டாலும், அவற்றால் உண்டாகும் அபூர்வம் என்னும் அத்ருஷ்ட சக்தியின் மூலம் பலனை உண்டாக்குகின்றன என்று ஜைமிநி கருதுகிறார்

ஸாஸ்த்ர ப்ரமாணம்-வேதம் – (யஜேத ஸ்வர்க₃காம:) என்று, “ஸ்வர்க்கத்தை விரும்புபவன் யாகம் செய்ய வேண்டும்” என்று விதிக்கிறது. இவ்வாறு, ஸ்வர்க்கத்தை விரும்புபவருக்கு யாகத்தை ஒரு கடமையாக விதிப்பதன் மூலம், யாகமே ஸ்வர்க்க பலனுக்குச் சாதனம் (காரணம்) என்பதை வேதம் உணர்த்துகிறது.யாகம் செய்த உடனேயே ஸ்வர்க்கம் கிடைப்பதில்லை என்பதால், அந்தப் பலன் பின்னர் கிடைப்பதற்கு, யாகத்தால் உண்டாகும் அபூர்வம் என்னும் இடை நிலைக் காரணத்தை ஏற்க வேண்டும்.

4- பூர்வம் து பாதா₃ராயண: ஹேது வ்யபதே₃சாத்
து –
ஆனால்;
பாதா₃ராயண: — வேத வ்யாஸர்;
பூர்வம் -முன்பே கூறப்பட்ட கருத்தையே ஏற்கிறார்;
ஹேது வ்யபதே₃சாத் — வேதத்தில் ப்ரஹ்மமே பயன்களுக்குக் காரணமாக இருப்பவர் என்று உபதேசிக்கப் பட்டிருப்பதனால்-

“யஜ ” என்ற தாது தேவ பூஜை என்ற பொருளைத் தருகிறது. ஆகவே , யாகம் என்பது தேவதைகளை ஆராதிப்பதே ஆகும். அந்த யாகங்களில் ஆராதிக்கப்படும் அக்னி, வாயு முதலான தேவதைகளே அந்தந்த பலன்களுக்கு காரணம் என்று ச்ருதி பல இடங்களில் கூறுகிறது.உதாரணமாக- (வாயுர்வை ஷேபிஷ்டா தே₃வதா வாயுமேவ ஸ்வேந பா₄க₃தே₃யேந உபதா₄வதி, ஸஏவைநம் பூ₄திம் க₃மயதி), என்று, “வாயுவே மிக விரைவாக அருள் செய்பவர். தமக்குரிய ஹவிஸை அர்ப்பணித்து வாயுவை ஆராதிப்பவன், அவராலேயே செல்வமும் வளமையும் அடைகிறான்” என்று கூறுகிறது-

விதி₄(கட்டளை ) வாக்கியத்தில்“ஸ்வர்கத்தை விரும்புபவன் யாகத்தைச் செய்ய வேண்டும்” என்று சொல்வதால், யாகம் ஸ்வர்கத்துக்குக் காரணம் என்று தெரிந்தாலும், அது எவ்வாறு உண்டாக்கப் படுகிறது என்ற ஸந்தேகம் தீர வில்லை . அதை இந்த மேற் சொன்ன வாக்கியம் தீர்த்து வைக்கிறபடியால், இப்படிப் பொருள் கொள்வதே பொருத்தமானது.

எல்லா தெய்வங்களுக்கும் அந்தர்யாமி பரமாத்மாவே
மந்திரங்களும் அர்த்த வாதங்களும் தங்களுடைய நேரடியான பொருளையே குறிக்கின்றன என்பது தேவதாதிகரணத்தில் ஏற்கனவே நிரூபிக்கப் பட்டுள்ளது. ஆகவே , அவற்றை நேரடிப் பொருளை விட்டு விட்டு, ஒரு கர்மத்தைப் புகழ்வதற்காக மட்டுமே கூறப்பட்டவை என்று லக்ஷணையாக எடுத்துக் கொள்வதும், ஸ்ருதியில் எங்கும் கூறப்படாத அபூர்வம் என்னும் ஒரு புதிய தத்துவத்தைக் கற்பனை செய்வதும் நியாயமல்ல

உண்மையில், அக்னி, வாயு முதலான தேவதைகளின் அந்தராத்மாவாகப் பரம புருஷரே இருந்து, அவர்களுடைய ரூபத்தில் ஆராதிக்கப் படுபவராகவும், பலன்களை வழங்குபவராகவும் இருக்கிறார் என்று வேதம் கூறுகிறது. இஷ்டா பூர்தம் ப₃ ஹுதா₄ ஜாயம் ஜாயமாநம் விஶ்வம் பி₃ப₄ர்தி பு₄வநஸ்ய நாதி₄: । ததே₃ வாக்₃நி: தத்₃வாயு: தத் ஸூர்யஶ் ச தது சந்த்₃ரமா: ||
“இஷ்டம், பூர்த்தம் ஆகிய கர்மங்களையும், தோன்றியதும் தோன்றிக் கொண்டிருப்பதுமான இந்த உலகம் முழுவதையும் தாங்குபவர் அவரே . அவரே அக்னி; அவரே வாயு; அவரே ஸூரியன்; அவரே சந்திரன்.”

(புகழும் நல் ஒருவன் என்கோ! பொரு இல் சீர்ப் பூமி என்கோ!
திகழும் தண் பரவை என்கோ தீ என்கோ! வாயு என்கோ!
நிகழும் ஆகாசம் என்கோ! நீள் சுடர் இரண்டும் என்கோ!
இகழ்வு இல் இவ் வனைத்தும் என்கோ! கண்ணனைக் கூவு மாறே.—–3-4-1–விபூதி வாசகமான சப்தம் விபூதி முகத்தால் அவனுக்கு பிரதிபாதகம் ஆகையாலும் விபூதி விஷயமான சப்தத்தோடு நாராயணாதி நாமங்களோடு வாசி அற்று இருக்கிற படியால் அவற்றைச் சொல்லும் சொல்லாலே சர்வ சப்தங்களாலும் அவனைச் சொல்லி –வாசகமான அடிமையில் பிரவ்ருத்தர் ஆகிறார் –)

அதே போல், ” (யோ வாயௌ திஷ்ட₂ந்), அதாவது “வாயுவினுள் இருந்து அவரை நியமிப்பவர்” என்றும் ஸ்ருதி கூறுகிறது.

ஸ்ம்ருதியிலும் பகவான் கண்ணன் கீதையில் இதையே விளக்குகிறார்–
யோ யோ யாம் யாம் தநும் ப₄க்த: ச்ரத்₃த₄ யார்சிதுமிச்ச₂தி। தஸ்ய தஸ்யா சலாம் ச்ரத்₃தா₄ம் தாமேவ வித₃தா₄ம்யஹம்॥ “எந்த பக்தன் என்னுடைய உடலாக இருக்கும் எந்தத் தேவதையைச் ச்ரத்தையுடன் ஆராதிக்க விரும்புகிறானோ , அவனுக்கு அந்தத் தேவதாயிடத்தில் அசைக்க முடியாத ஸ்ரத்தையை நானே உண்டாக்குகிறேன்.”

ஸ யா ஸ்ரத்₃த₄யா யுக்தஸ் தஸ் யாராத₄ந மீஹதே। லப₄தே ச தத காமாந் மயைவ விஹிதாந்ஹி தாந்॥ “அந்தச் ச்ரத்தை யுடன் அவன் அந்தத் தேவதையின் வடிவில் இருக்கும் என்னையே ஆராதிக்கிறான். அதன் மூலம் அவன் விரும்பிய பலன்களைப் பெறுகிறான். ஆனால், அந்தப் பலன்களை வழங்குவது நானே .”

(அஹம் ஹி ஸர்வ யஜ்ஞாநாம் போ₄க்தா ச ப்ரபு₄ரேவ ச ) “எல்லா யஜ்ஞங்களுக்கும் போ₄க்தா (ஆராதிக்கப்படுபவர்) நானே ; அவற்றின் ப்ரபு₄வும்(பலன்களை வழங்குபவனும்) நானே .”

உலகத்திலும், உழவு முதலான செயல்களால் பலவகையான பொருள்களைப் பெற்று, அவற்றைக் கொண்டு அரசனை நேரடியாகவோ அல்லது அவனுடைய பணியாளர்கள் மூலமாகவோ மக்கள் ஆராதிக்கிறார்கள். அவ்வாறு ஆராதிக்கப்பட்ட அரசனே , தன்னை ஆராதித்த விதத்திற்கு ஏற்ற பலன்களை வழங்குகிறான் என்று காண்கிறோம். அது போலவே , கர்மங்களில் அக்னி, வாயு முதலான தேவதைகள் ஆராதிக்கப்படுவதாகத் தோன்றினாலும், அவர்களுக்குள் அந்தர்யாமியாக இருக்கும் பரம புருஷரே எல்லாப் பலன்களையும் உண்மையில் வழங்குபவர் ஆவார்.

பாதத்தின் சுருக்கம்
ஆதௌ வேதா பிரமாணம் ஸ்ம்ருதிர் உப குருதே ஸேதிஹாசை புராணை
ந்யாயை சார்த்தம் தவ தர்ச்சா விதி முபரி பரிஷீயதே பூர்வ பாக
ஊர்த்வோ பாகஸ் த்வதீஹா குண விபவ பரி ஜ்ஞாபநைஸ் த்வத் பதாப்தௌ
வேத்யோ வேதைஸ்ச சர்வைர் அஹமிதி பகவன் ஸ்வேன ஸ வியாச கர்த்த -ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -உத்தர சதகம் -19 ஸ்லோகம் ––ஶ்ரீ பராசர பட்டர்,

பரமாத்மாவை அறிய வேதமே முதன்மையானப் ப்ரமாணமாகும். இதிஹாஸ புராணங்கள் மற்றும் யுக்திகளின் துணையுடன் ஸ்ம்ருதிகள் இதற்கு உதவி செய்கின்றன. வேதத்தின் முதல் பகுதியான கர்ம காண்டத்தில் பகவானை ஆராதிக்கும் முறைகள் ஆராயப்படுகின்றன. பின்னர் வரும் பகுதி(உபநிஷத்-வேதாந்தம்), பகவானுடைய கல்யாண குணங்கள், ஐஸ்வர்யம், விபூதிகள் ஆகியவை விளக்குவதன் மூலம் அவன் திருவடிகளை அடைவதைக் கூறுகின்றன. “எல்லா வேதங்களாலும் அறியப்பட வேண்டியவர் நானே ” என்று பகவான் தாமே கண்ணனாக கீதையில் உபதேசித்தார்

ஆதௌ -முதலிலே -மற்று ஒரு பிரமாணத்தை எதிர்பாராமல் தானாகவே –
வேதா -வேதங்களானவை-
பிரமாணம்-உண்மை அறிவை யுண்டாக்கும் பிரமாணம் ஆகின்றன –
ஸ்ம்ருதி -மநு முதலானோர் இயற்றிய ஸ்ம்ருதி சமூஹம்
ஸேதி ஹாசை புராணை-இதிஹாசங்களோடு கூடிய புராணங்க ளோடும்
ந்யாயை  சார்த்தம் -பூர்வ உத்தர மீமாம்ஸா நியாயங்களோடும் கூட
உப குருதே-வேதங்களுக்கு பொருள் காணும் விஷயத்தில் உதவுகிறது –
பூர்வ பாக -வேதத்தில் கர்ம காண்டம் என்கிற முற்பகுதி
தவதர்ச்சா விதி முபரி -தேவரீருடைய திரு வாராதன முறையைச் சொல்லும் வழியில்
பரிஷீயதே -தலைக் கட்டுகிறது-
ஊர்த்வோ பாகஸ்-ப்ரஹ்ம காண்டம் எனப்படும் பிற்பகுதி யாகிய உபநிஷத் பாகம்
த்வதீஹா குண விபவ பரி ஜ்ஞாப நைஸ்-தேவரீருடைய ஸேஷ்டிதங்கள்-குணங்கள் -செல்வங்கள் ஆகிய இவற்றை விளங்கத் தெரிவிப்பதாலே –
த்வத் பதாப்தௌ -தேவரீருடைய திருவடிகளை அடைவதில்
பரிஷீயதே -தலைக் கட்டுகின்றது –
பகவன்-எம்பெருமானே
சர்வை ஸ வேதை -பூர்வ உத்தர பாக ரூபமான எல்லா வேதங்களாலும்
அஹம் -நானே
வேத்ய இதி -அறியப் படுபவன் -என்று
ஸ்வேந -தேவரீர் தாமே
வியாச கர்த்த -ஸ -அருளிச் செய்தும் வைத்தீர் அன்றோ –

இந்தப் பாதத்தில் சொல்லப்பட்ட அர்த்தங்களை ஶ்ரீ வேதாந்த தேசிகன் தனது அதிகரண ஸாராவலியில் இவ்வாறு சுருக்கமாக உரைக்கிறார்
சுத்₃தா₄நந்தே ₃ ததி₃த்த₂ம் சுப₄ கு₃ண ஜலதௌ₄ ஸத்ய நித்யஸ்வதே ₃ ஹே தே₃வீ பூ₄ஷாயுதா₄த்₃யை : அதிஶயிநி கநத்₃ போ₄க₃ லீலா விபூ₄தௌ।
ஸேஷித்வாதா₄ர பா₄வ ப்ரப்ருதி ப₃ஹுவித₄ ஸ்தா₂ஸ்நு ஸம்ப₃ந்த₄ தீ₃ப்தே த்₃ருஷ்டி: ஸ்வர்கா₃ பவர்க₃ ப்ரஸவிதரி ஹரௌ நிர்நிமேஷா ச்ருதிர்ந:॥

தூய ஆனந்த ஸ்வரூபராகவும், எண்ணற்ற கல்யாண குணங்களின் பெருங்கடலாகவும், நித்யமும் உண்மையுமான திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையவராகவும், திவ்ய மஹிஷிகள், ஆபரணங்கள், ஆயுதங்கள், ஒளிவிடும் நித்ய விபூதி, லீலா விபூதி ஆகிய அனைத்தாலும் சிறப்புற்றவராகவும், ஸேஷிதத்வம், ஆதாரத்வம், நியமிப்பவரா யிருத்தல் போன்ற எண்ணற்ற ஸம்பந்தங்களால் உலகுடன் தொடர்புடையவராகவும், ஸ்வர்க்கம் முதல் மோக்ஷம் வரை எல்லாப் பலன்களையும் வழங்குபவராகவுமுள்ள ஹரியை அறிய வேதமே குறை யில்லாத ப்ரமாணமாக உள்ளது-

பாவே ₃ஸ்வாப்நார்த₂ ஹேது: தத₃யமிஹ ஸுஷுப்த்யாத்₄ருதி: ஸுப்த கோ₃ப்தா முக்₃தோ₄த்₃ போ₃தா₄தி₃ கர்தா த்வநக₄சுப₄கு₃ண : அசித்₃பி₄ரம்சீ ஸ்வ தே ஹை : பாரம்யஸ்யைக ஸீமா ஸகல பலத₃ இத்யுச்யதே ப₄க்தி பூ₄ம்நே ஸத்யே ஹ்யேவம் கு₃ணா தௌ₃ அத₂ பரப₄ஜநே ரூப பே₄தா₃தி₃ சிந்த்யம்॥
இந்தப் பாதத்தில், கனவில் காணப்படும் பொருள்களைப் படைப்பவர்,ஸுஷுப்தியில் ஆதாரமாக இருப்பவர், உறங்குபவரைக் காப்பவர், மயங்கினவரை எழுப்புபவர், குற்றமற்ற எண்ணற்ற கல்யாண குணங்களை உடையவர், அசித் பொருள்களையும் தமது சரீரமாகக் கொண்டவர், பரத்துவத்தின் எல்லையாக இருப்பவர், எல்லாப் பலன்களையும் வழங்குபவர் பரமாத்மா என்று அவரது மகிமை விளக்கப் படுகிறது, அவரிடம் பக்தியை வளர்ப்பதற்காக.

இப்பாத அர்த்தங்களை சுருக்கமாக ஸ்வாமி தேசிகன் காட்டி அருளுகிறார்

1-சந்த்யாதி கரணத்தில் -ஸர்வேஸ்வரனே ஸ்வப்ன பதார்த்தங்களை படைக்கிறான் என்றும்
2-தத்பாவாதிகரணத்தில் -அவனே ஸூஷ்ப்தி தசையில் ஆதாரம் என்றும்
3-கர்மாநு ஸ்ம்ருதி சப்த வித்யதிகரணத்தில் -உறங்கி விழிப்பவனும் ஒருவனே என்றும்
4-முக்தாதிகரணத்தில் -மூர்ச்சை அடைந்தவனை எழுப்புவான் என்றும் சில சமயங்களில் மரணத்திற்கும் காரணம் என்றும்
5-உபய லிங்க அதிகரணத்தில் -நிர்தோஷன் -கல்யாண குணகரன் என்றும்
6-அஹி குண்டலாதிகரணத்தில் -தனி சரீரமான அசித்துக்களை அம்சமாகக் கொண்டவன் என்றும்
7-பராதிகரணத்தில் எல்லாவற்றையும் விட இவனே சிறந்தவன் என்றும்
8-பலாதிகரணத்தில் -ஸர்வ கர்ம உபாசனங்களுக்கும் இவனே பல பிரதன் என்றும்-அருளிச் செய்து
இந்தக் குணங்களைக் கூறியது ப்ரஹ்ம வித்யா ரூபத்தில் பக்தி ஸித்திப்பதற்காக
யதார்த்தமான குணங்களைக் கொண்டு எம்பெருமானை உபாஸிக்கையில் ரூப பேதங்கள் சொல்ல வேண்டி இருப்பதால் அவற்றைப் பிற மதத்தவர் போலே வ்யவஹாரிகங்கள் என்று சொல்வது பொருந்தாது என்பது ஸூத்ரகாரரின் திரு உள்ளம் –

இனி, உபாஸனத்தின் வேறுபாடுகள் முதலான விஷயங்கள் அடுத்த பாதத்தில் ஆராயப் படுகின்றன.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌ – 5 –ஸூரி வைபவ பாதம்-5– க்‌ரந்த,-தத் கர்த்ரு வைப, வாதி, கரணம்‌ -முதல் பகுதி -(39-49)-ஸ்ரீ மணவாள மா முனிகள் -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் வியாக்யானங்கள்–

July 2, 2026

5 –ஸூரி வைபவ பாத, – 3 அதிகரணங்கள் இதில்-
5– க்‌ரந்த,-தத் கர்த்ரு வைப, வாதி, கரணம்‌ —39 – 74 –மொத்தம் 36 ஸூரணைகள்
6—ஸூரி ப்ராமாண்ய விஸேஷாதி கரணம்‌(ப்ரமாத்ரு வைபவம் ) 75 – 93 –மொத்தம் 19-ஸூரணைகள்
7-ப,க,வத் கடாக்ஷ விஸேஷாதி கரணம்‌ 94–96—மொத்தம் -3- ஸூரணைகள்

5– க்‌ரந்த,-தத் கர்த்ரு வைப, வாதி, கரணம்‌ —39 – 74 –மொத்தம் 36 ஸூரணைகள்–முதல் பகுதி-39 – 49–மொத்தம் 11-ஸூரணைகள்

இனிமேல் –சந்தங்கள் ஆயிரம்-திருவாய்-10-9-11- –என்று திருவாய் மொழிக்கு சொன்ன வேதத்வத்தை சாதிக்கக் கோலி பிரதமம் ஏவம் விதமாய் இருப்பதொரு வேதம் உண்டோ என்கிற சங்கைக்கு பரிஹாரம் பண்ணுகிறார் மேல்-வேத அத்‌,யயந விதி, போலே இப் ப்ரப,ந்த,அத்‌,யயநமும்‌ விதி, என்பது, இதினுடைய அர்த்த, பரிஜ்ஞாநா பாவத்தில்‌ உத்பத்தி நிரூபிக்க வேணு மென்பதாய்க் கொண்டு வேதத்தோ டொக்கச்‌ சொல்லா நின்றீர்‌. இதுவும்‌ பிற்றை வேதமோ என்னில்‌ ; இதுவும் வேதம்‌; இது என்ன வேதம்‌ என்ன

எவ்வுலகத்து எவ்வெவையும் என்கையாலே வேதம் பஹு விதம்–சூரணை-39-

அதாவது
ஓதுவார் ஒத்து எல்லாம் எவ்வுலகத்து எவ்வவையும் -திருவாய்-3-1-6–என்கையாலே வேதம் ஆனது
அத்யேதாக்கள் உடைய பேதத்தாலும் ,லோக பேதத்தாலும் பஹுவிதமாய் இருக்கும்
என்கை .. ஆகையால் அதிலே இதுவும் ஒரு விதம் என்ற கருத்து-

‘வேதா வா ஏதே । அநந்தா வை வேதா ச’” (யஜு. கா.) என்றும்‌, ‘“ஓதுவாரோத்தெல்லாம்‌ எவ்வுலகத் தெவ்வெவையும்‌”* (திருவா. 3 – 1- 6) என்றும்‌ சொல்லுகிறபடியே அத்‌யேதாக்களுடைய பேதத்தாலும்‌, லோக பேதத்‌தாலும்‌ வேதம்‌ ப,ஹு வித,ம்‌ என்கிறார் –

ஓதுவார் ஒத்து எல்லாம் எவ்வுலகத்து எவ்வெவையும்
சாதுவாய் நின் புகழின் தகையல்லால் பிறிதில்லை
போது வாழ் புனந்துழாய் முடியினாய் பூவின் மேல்
மாது வாழ் மார்பினாய் என் சொல்லி நான் வாழ்த்துவனே -3-1-6–ஓதுவார் என்கையாலே -அதிகாரி வைவித்யத்தைச் சொல்லுகிறது –-ருகாதி சதுர் வேதங்களும் அத்யேத்ரு பேதத்தாலே பிறந்த சாகா பேதங்களும் –ஊர்த்த லோகங்களில் உள்ளார் ஞானாதிகருமாய் -ஆயுஸ் சாலே அதிகருமாய் இருக்கையாலே அவர்களுக்கு அனுரூபமாக அவ்வோ லோகங்களிலும் இந்த பேதங்களும் உண்டு

ஆனால் ஏக பாஷையாய் இருக்க வேண்டாவோ ? சம்ஸ்க்ருதமும் த்ராவிடமுமாய் அன்யோன்யம் பேதித்து இரா நின்றதீ என்ன சொல்லுகிறது மேல்-ஆனால்‌ அது ஸம்ஸ்க்ருதமாய்‌, இது த்‌ராவிடமாய்ப்‌ பிரிந்திராறின்றதீ என்ன, சொல்லுகிறது மேல்‌.

இதில் சமஸ்க்ருதம் திராவிடம் என்கிற பிரிவு ருகாதி பேதம் போலே-சூரணை -40-

அதாவது
இப்படி பஹு விதமான இவ் வேதத்திலே சமஸ்க்ருத வேதம் திராவிட வேதம் என்கிற பிரிவு-சமஸ்க்ருதாம் சந்தன்னில் ருக் வேதம் ,யஜுர் வேதம் சாம வேதம், அதர்வண வேதம் ,என்கிற பிரிவு போலே என்கை ….-இத்தால் வேத ராசி ஒன்றாய் இருக்க செய்தே ,சமஸ்க்ருத பாஷா ரூபம் ஆனவது தன்னிலே ருகாதி ரூபேண பல படியாய் பிரிந்தால் போலே பாஷா பேதேநவும் இப்படி பிரிந்து இருக்கும் என்ற படி-(ஆதித்யருக்குள் அஹம் விஷ்ணு -ஏகாதச ருத்ரனுக்குள் சங்கரன் -அந்த கோஷ்ட்டிக்குள் –
நக்ஷத்திரங்களில் அஹம் – சந்திரன் -இல்லாத போதும் என்பதுக்கு த்ருஷ்டாந்தம் )

(இதில்‌) இந்த வேதத்தில்‌. (ஸம்ஸ்க்ருதம்‌ த்‌ராவிட,ம்‌ என்கிற பிரிவு ருகாதி பேதம் போலே என்று) வேதங்கள் தான்‌ ஒன்று போலேயோ மற்றது? ஸம்ஸ்க்ருத வேதந்தான்‌ ரூக்‌,யஜுஸ் ஸாம அத,ர்வணங்களாய்ப்‌ பிரிந்தாப் போலே வேதந்தான்‌ ஸம்ஸ்க்ருத ரூபமாயும்‌, த்‌ராவிட ரூபமாயும்‌ பிரிந்ததென்கிறார் –

அப்படி சொல்லலாமோ ? சமஸ்க்ருத பாஷை போலே திராவிட பாஷை அநாதி அன்றே –ஆகஸ்த்யம் அன்றோ இது ?என்ன சொல்லுகிறது மேல்-ஆனாலும்‌ அந்த ஸம்ஸ்க்ருத பாஷைதான்‌ அநாதியாயிரா நின்றதே என்ன-

செந்திறத்த தமிழ் என்கையாலே ஆகஸ்யமும் அநாதி-சூரணை -41-

அதாவது
செம் திறத்த தமிழ் ஓசை வட சொல் ஆகி-திரு நெடும் தாண்டகம் -4- – -என்று (ஓசை -சொல் என்ற அர்த்தத்தில் இங்கு -ஸ்தான பிரமாணத்தாலே) சமஸ்க்ருததோடே சஹபடிதமும் , ப்ரதமோக்தமும் ஆகையாலே அகஸ்த்ய பிரகாசிதமான மாத்ரம் கொண்டு ஆகஸ்த்யம் என்று சொல்லப் படுகிற
திராவிடமும் அநாதியாய் உள்ளது என்கை .-இத்தால் அநாதித்வம் சமஸ்க்ருத திராவிட சாதாரணம் என்றது ஆய்த்து-

செந்திறத்த தமிழோசை வடசொல்லாகி’ (திருநெடு. 4) என்று ஸம்ஸ்க்ருதத்தோடே ஸஹபடிக்குமிடத்தில்‌ ‘“செந்திறத்த தமிழோசை” என்றதுக்குப்‌ பின்பிறே “வட சொல்லாகி’” என்றது. ஆகையாலே இரண்டும்‌ அநாதி யிறே-

இந்த்ரற்கும் பிரமற்கும் முதல்வன் தன்னை யிரு நிலம் தீ நீர் விண் பூதம் ஐந்தாய்ச்
செந்திறத்த தமிழோசை வடசொல்லாகித் திசை நான்குமாய் திங்கள் நாயிறாகி
அந்தரத்தில் தேவர்க்கும் அறியலாகா அந்தணனை அந்தி மாட்டு அந்தி வைத்த
மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழ்தியேல் வாழலாம் மட நெஞ்சமே–4—சாஸ்திர வஸ்யர் உடைய (திசை நான்குமாய்த் திங்கள் ஞாயிறாகி,)ஸ்ருஷ்டியைச் சொல்லுகைக்காக சாஸ்திர ஸ்ருஷ்டியைச் சொல்லுகிறார் – திராவிட சம்ஸ்க்ருதங்களை ஸ்ருஷ்டித்து-ஆரியத்தைச் சொல்லி அதனுடைய சிதைவாகையாலே பின்னை தமிழைச் சொல்ல பிராப்தமாய் இருக்க – இத்தை பிரதமத்திலே உபாதானம் பண்ணிற்று —1-இது சர்வாதிகாரம் ஆகையாலும்-2-ஸ்வார்த்தத்தைச் செவ்வே பிரகாசிப்பிக்க கடவதாகையாலும்-3-தம் பாழி ( தம் துறை )யாகையாலும்-4-இன்னமும் அத்தோபாதி இதுவும் பிரமாணம் என்கைக்காக முற்பட அருளிச் செய்கிறார்-வேதங்கள் போலேயும் இதிஹாச புராணங்கள் போலேயும் அன்று இறே ஆழ்வார்கள் வார்த்தை – அனுஷ்டாவின் வார்த்தை இறே இது – (த்ரை குண்யா விஷயா வேதா )ஐஸ்வர்ய கைவல்யங்கள் த்யாஜ்ய தயா புகுரும் இத்தனை இறே இவர்கள் பக்கலில் –செந் திறத்த தமிழ் ஓசைதிறம் –கூறுபாடும்-பிரகாரமும் –-ஸ்வாரதத்தை செவ்வியதாக பிரகாசிப்பிக்கையே கூறான -த்ரமிட சப்தம்-உப ப்ரஹ்மண அபேஷை அற்று இருக்கை-
வேதங்களுக்கு உப ப்ரஹ்மண அபேஷை உண்டு இறே–‘ஈரத் தமிழ்‘ –-செவிக்கினிய செஞ்சொல்– ”செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய வோதித் தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே” –வேதாந்த தேசிகன்–ஓசை -என்று பாட்டுக்கும் த்வனிக்கும் பெயர்-லஷணையால் சப்தத்தை சொல்கிறது -மேல் வடசொல் -என்கையாலே-வடசொல் -என்று சமஸ்க்ரதத்தை சொல்கிறது –சாஸ்த்ரத்தை ஈஸ்வரன் ஸ்ருஷ்டிக்கை யாவது -பிரகாசிப்பிக்கை -(வெளியிட்டு அருளினான் ஆழ்வார்கள் மூலம் )

ஆனால் அந்த பாஷை அநாதி ஆகிறது ..-திருவாய் மொழிக்கு வேதத்வ பிரகாசமான வசனம் உண்டோ என்ன சொல்லுகிறது மேலே-ஆனால்‌ அந்த பாஷை அநாதி யாகிறது; திருவாய்மொழிக்கு வேதத்வ முண்டாக வேணுமென்கிற நிர்பந்த, முண்டோ என்னில்‌;

வட மொழி மறை என்றது தென் மொழி மறையை நினைத்து இறே-சூரணை -42-
(பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை என்றதால் நல்ல அரக்கன் ஸ்ரீ விபீஷண ஆழ்வான் இருப்பதால் தானே இன சுட்டு அடை மொழி )

அதாவது
மறை-என்று கேவல வேத வாசி சப்தத்தாலே சொல்ல அமைந்து இருக்க –வட மொழி மறை -திருவாய் -8-9-8–என்று சமஸ்க்ருத வேதம் என்றது -திராவிட வேதம் உண்டு என்று நினைத்திறே என்கை
பிரதி கோடி இல்லாத போது இப்படி விசேஷிக்க வேண்டியது இல்லை இறே என்று கருத்து-

வேதம்‌ என்னாதே ஸம்ஸ்க்ருத வேதம்‌ என்கையாலே த்ராவிட, வேதமுமுண்டாக வேணுமென்கிறார்-

மடவரல் அன்னை மீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் மல்லைச் செல்வ
வடமொழி மறை வாணர் வேள்வியுள் நெய் யழல்வான்புகை போய்
திட விசும்பில் அமரர் நாட்டை மறைக்கும் தண் திருப் புலியூர்
படவர வணையான் தன் நாமம் அல்லால் பரவாள் இவளே–8-9-8—சம்ஸ்க்ருத பாஷையும் வேதங்களும் தாங்கள் இட்ட வழக்காய் வ்யாஸ பாதம் செலுத்த வல்ல ப்ராஹ்மணர் ஸமாராதன ரூபமான யாகங்களில் ஹோமம் பண்ணின நெய்யால் ஜ்வலித்த அக்னிகளினின்றும் புறப்பட்ட மிக்க புகையானது –

ஆனால் அந்த வேதத்துக்கு அங்க உபாங்கங்கள் உண்டானவோ பாதி இதுக்கும் அவை உண்டோ என்ன சொல்லுகிறது மேல்-அங்கோபாங்க ஸஹிதத்வம்‌ இதுக்குமுண்டோ என்ன, உண்டென்கிறார்‌ மேல்‌-

வேத சதுஷ்ட (த்தயத்துக்கு-இங்கும் லுப்தம் ) அங்க உபாங்கங்கள் போலே இந் நாலுக்கும்
இரும் தமிழ் நூல் புலவர் பனுவல் ஆறும் மற்றை எண்மர் நன் மாலைகளும்- (இருமை -பெருமை -)-சூரணை-43-

அதாவது
ருகாதி வேத சதுஷ்டயத்துக்கும்-சீஷா வியாகரண நிருக்த சந்த கல்ப ஜோதிஷங்கள் ஆகிற ஆறு அங்கங்களும் மீமாம்ச நியாய புராண தர்ம சாஸ்த்ராத் உப அங்கங்கள் எட்டுமாய் இருந்துள்ள பதினாலும் போலே-(ஆதி -ஆயுர்வேதம் காந்தர்வ வேதம் அர்த்த வேதம் தனுர் வேதம் )-இந்த திராவிட வேத சதுஷ்டயதுக்கும்-இரும் தமிழ் நூல் புலவன் நங்கை யாளன்–பெரிய திருமொழி -1-7-10- -என்று
ஒருவரால் கரை காண ஒண்ணாத படி இருக்கிற திராவிட வேத சாஸ்த்ரத்தை கரை கண்ட ஞான ஆதிக்கத்தை உடையரான திரு மங்கை ஆழ்வார் உடைய-கலியன் வாயொலி செய்த பனுவல் -பெரிய திருமொழி -1-4-10–என்று சாஸ்திர ரூபங்களான பிரபந்தங்கள் ஆறும்–மற்றை ஆழ்வார்கள் எண்மர் உடையவும் விலஷணமான பிர பந்தங்களும் என்கை ..-நன் மாலைகள் என்றது –நய நின்ற நன் மாலை -முதல் திருவந்தாதி -57–என்று முதல் ஆழ்வார் பிரபந்தத்தில் அருளிச் செய்தது எல்லா பிரபந்ததுக்கும் ஒக்கும் என்று நினைத்து .

1-பொய் நின்ற ஞானமும் -திருவிருத்தம் -1––இத்யாதியாலே ஸ்வரூப விரோதியாய் வந்தேறி யான தோஷங்களை முதல் அடியிலே பேசினால் போலே பிரதமத்திலே -வாடினேன் வாடி-பெரிய திருமொழி -1-1-1- -இத்யாதியாலே ஸ்வ ரூபத்துக்கு வந்தேறியான தோஷங்களை கண்டு நொந்து பேசுகையும்
2-பகவத் ப்ராவண்ய ப்ராசுர்யமும்-பத்துடை அடியவர்க்கு எளியவன் –எத்திறம் –ப்ராவண்ய ப்ராஸூர்யம் – உருகுமால் நெஞ்சம் கார் ஒக்கும் காட்கரை அப்பன் /முலையோ முழு முற்றும் போந்தில –பால்யாத் ப்ராவண்யம் -கணபுரம் கை தொழும் பிள்ளையை -பிறர் சொல்ல கேட்டு கை தொழும் இவள் -அருவி சோர் வேங்கடம் நீர் மலை உருகினாள் உள் மெலிந்தாள்
3-அதில் அர்ச்சாவதாரத்தில் ஊற்றமும்-செய்ய பரத்துவுமாய் –எய்துபவர்க்கு அர்ச்சாவதார எளிது -அவனாகும் நீள் கடல் வண்ணனே –-அன்று தேர் கடாவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொலோ-ஸ்ரீ கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் – விபவம் பாடப் பிறந்தவர் அர்ச்சையை பாடுவது ஏற்றம் –
காரார் திருவேங்கடம் காணும் அளவும் போய்–ஆராமம் சூழ் /-மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யலாமே–ஏரார் முயல் வீட்டுக் காக்கை பின் போவதே
4-கலவியும் பிரிவும் மாறி மாறி வருகையும்-அந்தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மான் -ஆடி ஆடி அகம் கரைந்து –வாடி வாடி இவ்வாணுதலே /-கோவை வாயாள் பொருட்டு–பூசும் சாந்து என் நெஞ்சமே -ஹர்ஷம் மிக்கு -மண்ணை இருந்து துழாவி —-ஏறிய பித்தினோடு -மாயன் திறத்தனள் இத்திரு தேறியும் தேறாமல் /-யானும் ஏத்தி –ஏத்த ஏத்த எங்கு எய்தும் /ஒரு நாள் காண வாராயே–வருத்தம் -8-5-எல்லியும் காலையும் திருக்கடித்தானாம் தாயப்பத்தி விட்டு -ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்காமல் சன்னிஹிதன் -மைந்தனும் வந்திலன் என் செய்கேன் -திருக்கண்ணபுர பாசுரம் -வருத்தம் சொல்லி ஆழ்வார் /8-5-வருந்தாது இரு மட நெஞ்சே ஆறாம் பத்தில் நம் மேல் வினைகள் வாரா -சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸூ ச – நேரான மொழி பெயர்ப்பு-சோகப்படாதே முதலில் சொல்லி –
5–அந்ய உபதேச பேச்சும்–ஆறு கிண்ணகம்-தாய் மகள் தோழி
6-அது தன்னில் ராத்ரி வ்யசனமும்-மடல் எடுக்க ஒட்டாமல் -ஊரெல்லாம் துஞ்சி பெண் பிறந்தார் பெரும் துயர் காண மாட்டாமல் -கண்ணனும் வாரானால் -காகுத்தனும் வாரானால் -காப்பார் யார் -நங்கள் அடிகள்-தோழியும் நானும் ஒழிய -வியக்தமாக தோழி பாசுரம் இல்லை ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் அருளிச் செயலில் -கோழியும் கூவுகின்றதில்லையே -கூர் இருள் ஆயிற்றே
7-தூத ப்ரேஷணமும்-நான்கு தூது பதிகம் -அவ்வளவு தெம்பு இல்லையே ஸ்ரீ திருமங்கை ஆழ்வாருக்கு -நான்கு பாசுரங்களுக்கு பின்பே நேராக-ஓ மண் அளந்த தாடாளா -வரை எடுத்த தோளாளா –தண் குடந்தை நகராளா–மலையாள ஊட்டு இல்லையே
8-அநுகாரம்-கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் -பதிகம் -ஜெகதாகாரம் –வடவரை நின்றும் வந்து இன்று கணபுரம் இட வகை கொள்வது யான் என்று பேசினாள்
9–மடல் எடுக்கை-மாசறு சோதி பதிகம் –/ஸ்ரீ சிறிய திருமடல் ஸ்ரீ பெரிய திரு மடல் -ஸ்ரீ திரு நறையூர் நம்பி மேல் –
10/11/12-தோழி தாய் மகள் என்னும் அவஸ்தை த்ர்யாபத்திகளும்-சாழல் பதிகம் அவ்யக்தம் தோழி பதிகம்-இவள் திறத்து இருவரும் –2-7-/-7-2-திருத்தாயார் பதிகங்கள் -திண்ணம் என் இள மான் புகுமூர் திருக்கோளூரே-உண்ணும் சோறு / கள்வன் கொல்-அவனூர் வினவி சென்றாள்-கரியான் ஒரு காளை வந்து–அணி யாலி புகுவார் கொலோ -கள்வன் கொல் பிராட்டி திருக்கோலம் இன்றும் சேவை உண்டே -பொன்னிவர் மேனி -நாள் வேதம் ஓதும் -அவர் நாகரீகர் செல்வர் பெரியர்-என்னையும் நோக்கி
அன்னையும் நோக்கும் என்று அஞ்சுகிறேன் –அச்சோ ஒருவர் அழகியவா -ஸுந்தர்யம் இங்கு -எங்கனே நீ லாவண்யம் அங்கு-இரண்டும் மகள் பாசுரங்கள்
13-இந்திரிய பய குரோசம் -ஐவர் திசை திசை எற்றி-
14-ஈஸ்வர ஸ்வாதந்த்ர்ய பயம் ,-அரவணை மேல் பள்ளி கொள்ளும் முகில் வண்ணனே அறையோ முறையோ ஸ்ரீ திருவிருத்தம் —தடுப்பார் இல்லாத நிரங்குச ஸ்வாதந்தர்யம் /-தெள்ளியீர்-கை வளை கொள்வது தக்கதோ -ஸ்ரீ நீல மேக பெருமாள் -நீணிலா முற்றத்து நின்று இவள் நோக்கினாள்
15-அசக்ருத் பிரபத்தி கரணம்-ஐந்து தடவை-நோற்ற நாலும்–உலகுண்ட பெரு வாயா ஸ்ரீ நம்மாழ்வார் –பத்து தடவை இவர்–ஸ்ரீ நைமிசாரண்யம் -ஸ்ரீ திருவேங்கடமுடையான் -ஸ்ரீ அண்ணன் கோயில் -ஸ்ரீ திருவரங்கம் -ஸ்ரீ திரு விண்ணகர்–திரு நறையூர் இடர் கெடுத்த திருவாளர் –6-9-பாட்டு தோறும் திருப்பாத பிரஸ்தாபம் இங்கும் உலகுண்ட பெரு வாயா போலே–தேரெழுந்தூர் -திருக்குறுங்குடி மகள் பாவனையில் -9-5-/ 5-9 மானே நோக்கு அங்கு நாயகா பாவம் /
16-ஆர்த்தியின் உடைய கரை புரட்சிகளும்–மாலுக்கு ஏரார் விசும்பில் இருப்பு அரிதாம் படி அங்கு -ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சி இவர் –
17-பர துக்க அசஹிஷ்ணுதையாலே பல காலும் ஹிதம் சொல்லுகையும்–தொடக்கமான கட்டளையாலே மற்றை ஸ்ரீ ஆழ்வார் பிர பந்தங்களைக் காட்டிலும் ,இப் பிரபந்த சதுஷ்டியார்த்த ஜ்ஞாபகமாய் இருக்கையாலே ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் பிரபந்தங்களையே இதுக்கு அங்கங்கள் என்கிறது ..-மற்றை ஸ்ரீ ஆழ்வார் பிரபந்தங்கங்களும் எதார்த்த அனுசாரிகளாய் , இதில் அர்த்த நிர்ணயத்துக்கு உறுப்பு ஆகையாலே .இதுக்கு உப அங்கங்கள் என்கிறது ..ஆக –சீஷாயாம் வர்ண சிஷா பத சமதிகமோ வ்யாக்ரியா நிர்வசோப்யாம் சந்தஸ்
சந்தச் சிதவ் ஸ்யாத் கமயதி சமயம் ஜ்யோதிஷம் ரெங்கநாத ,கல்ப அனுஷ்டான
முக்தம் ஹ்யுசித கமிதயோர் நியாய மீமாம்ச யோஸ் ஸ்யாத் அர்த்த வ்யக்தி
புராண ஸ்ம்ருதிஷூ ததனுகாஸ் த்வாம் விசின் வந்தி வேதா -ஸ்ரீ ரெங்கராஜ உத்தர ஸ்தவம்-18- –என்கிற படியே அவை அந்த வேத சதுஷ்டயத்துக்கும் உபகார அங்கங்களாய் இருக்குமா போலே இவையும் கீழ் சொன்ன படியே இத வேத சதுஷ்டயத்துக்கும் உப அங்கங்களாய் இருக்கும் என்றது ஆய்த்து —

““அங்காநி வேதாஸ் சத்வாரோ மீமாம்ஸா ந்யாய விஸ்தர? ! புராணம்‌ த,ர்ம ஸாஸ்த்ரஞ்ச வித்‌,யா ஹ்யேதாஸ் சதுர்தஸ -என்கிறபடியே சதுர்தஸ வித்‌யாஸ்தாந வேதம் போல்‌ இங்கும்‌ இவருடைய ப்ரபந்தங்கள்‌ நாலும்‌ நாலு வேதத்தினுடைய ஸ்தாநேயாய்‌, “இருந் தமிழ் நூற் புலவன் மங்கை யாளன்‌?” (திருமொழி 1 – 7 – 10) என்றும்‌, ““கலியன் வாயொலி செய்த பனுவல்‌ ” (திருமொழி 1 – 4 – 10) என்றும்‌ சொல்லுகிற திருமங்கை யாழ்வாருடைய ப்ரபந்தங்களாறும்‌, அங்கங்களினுடைய ஸ்தாநத்திலேயாய்‌, மற்றை எட்டு ஆழ்வார்களுடைய ப்ரபந்தங்களும்‌ உபாங்கங்களா யிருக்கும் –

செங்கணாளி யிட்டிறைஞ்சும் சிங்க வேள் குன்றுடைய
எங்கள் ஈசன் எம்பிரானை இரும் தமிழ் நூல் புலவன்
மங்கை யாளன் மன்னு தொல் சீர் வண்டறை தார்க் கலியன்
செங்கை யாளன் செஞ்சொல் மாலை வல்லவர் தீதிலரே-1-7-10–ஒருவரால் கரை காண ஒண்ணாத படி இருக்கிற தமிழ் சாஸ்திர உக்தமான படியைக் கரை கண்ட ஜ்ஞான ஆதிக்யத்தை உடையவர் –

வரும் திரை மணி நீர்க் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானை
கரும் கடல் முந்நீர் வண்ணனை எண்ணிக் கலியன் வாயொலி செய்த பனுவல்
வரம் செய்த வைந்தும் ஐந்தும் வல்லார்கள் வானவர் உலகுடன் மருவி
இரும் கடல் உலகம் ஆண்டு வெண் குடைக் கீழ் இமையவராகுவர் தாமே —1-4-10-

அயல் நின்ற வல் வினையை அஞ்சினேன் அஞ்சி
உய நின் திருவடியே சேர்வான் நய நின்ற
நன் மாலை கொண்டு நமோ நாரணா வென்னும்
சொன் மாலை கற்றேன் தொழுது —
—57-நிர் வசன ரூபமாக நின்ற நல்ல மாலை கொண்டு-நயம் நின்ற நன் மாலை -நயம் -அன்பும் மகிழ்ச்சியும் -திருமந்த்ரார்த்தை நயப்பிக்கையில் ஈடுபட்ட திவ்ய பிரபந்தம் என்றுமாம்-ஸாஸ்த்ர ரூபமாய் இருக்கும் விலக்ஷணமான மாலையைக் கொண்டு என்றுமாம்-நயப்புடைத்தாய் –அதி விலக்ஷணமான சப்தங்களாலே தொடுக்கப் பட்ட இப் பிரபந்த ரூபமான மாலையைக் கொண்டு உன்னை ஆஸ்ரயித்து உனக்கு வாசகமாய் திரு மந்திரம் என்று பிரசித்தமான சொல் தொடை

வித்யாந்தரங்களில் வேதத்துக்கு உண்டான ஆதிக்யம் இதுக்கும் உண்டோ என்ன சொல்லுகிறது மேல் -ஸகல வித்‌யைகளிலும்‌ வைத்துக் கொண்டு அங்கியான வேதம்‌ அதிகமாயன்றோ இருப்பது என்னில்‌,

சகல வித்யாதிக வேதம் போலே இதுவும் திவ்ய பிரபந்த பிரதானம்-..சூரணை -44 –

அதாவது
அங்கானி வேதாஸ் சத்வாரோ மீமாம்ச நியாய விஸ்தர புராணம் தர்ம சாஸ்த்ரஞ்ச வித்யா ஹ்யேதாச் சதுர்தச —என்று சக படிதமாய் இருக்க செய்தே ,ஸ்வ அங்கோ உபாங்களான சகல வித்யைகளிலும் ,ஸ்வ வைபவத்தால் மேலாய் இருக்கும் வேதம் போலே ஸ்ரீ திவ்ய பிரபந்தங்களிலும் சகபடிதமாய் இருக்க செய்தே ஸ்வ அங்க உபாங்களான சகல ஸ்ரீ திவ்ய பிரபந்தகளிலும் ஸ்வ வைபவத்தாலே இதுவும் மேலாய் இருக்கும் என்கை-

அந்த ஸகல வித்‌யைகளிலும்‌ அதிகமான வேதம்‌ ப்ரதாநமானாப் போலே இதுவும்‌ திவ்ய ப்ரபந்தங்களில்‌ ப்ரதாநமாயிருக்கும்‌.

ஆனால் அந்த வைபவத்துக்கு உடலான சாஸ்த்ரத்வ பாகவத ஜ்ஞாரூபவத்வ நிர்தோஷத்வ ஸ்ருதித்வ சத்யத்வ அநாதி நித்யத்வங்கள் இதுக்கும் உண்டோ என்ன சொல்லுகிறது மேல்-ஆனால்‌ வேதத்துக்குச்‌ சொல்லுகிற ”வேத ஸாஸ்த்ராத் பரம்‌ நாஸ்தி” (ஹரிவம்ஸே ) என்கிற ஸாஸ்த்ரத்வமும்‌, ““ஸ்ருதி ஸ்ம்ருதிர் மமைவாஜ்ஞா” என்கிற பகவதாஜ்ஞா ரூபத்வமும்‌, ப்‌ரம விப்ரலம்பாதி, தோஷ ரஹிதத்வமும்‌, பூர்வ பூர்வோச்சாரண க்ரமத்தாலே உத்த ரோத்தரோச்சார்யமாணத்வம்‌, நித்யத்வம்‌, ஸத்யத்வம்‌ தொடக்கமான லக்ஷணங்கள்‌ இத்திருவாய்மொழிக்குமுண்டோ என்னில்‌, உண்டென்கிறார்‌-

வேத நூல் இரும் தமிழ் நூல்–ஆக்ஜை ஆணை வசையில் ஏதமில் சுருதி செவிக்கு இனிய ஓதுகின்றது உண்மை பொய்யில் பாடல் பண்டை நிற்கும் முந்தை அழிவில்லா என்னும் லஷணங்கள் ஒக்கும்-சூரணை -45-

அதாவது
வேத நூல் பிராயம் நூறு – திருமாலை -3- என்ற அத்தை வேத சாஸ்திரம் என்றால் போலே இத்தையும் –இரும் தமிழ் நூல் புலவன்-பெரிய திருமொழி -1-7-10–என்று பெரிய திராவிட சாஸ்திரம் என்கையாலும்
அத்தை — ஸ்ருதிஸ் ஸ்ம்ருதிர் மமை ஆக்ஜை -பாஞ்சராத்ரம் –என்று பகவத் ஆக்ஜை ரூபமாக சொன்னால் போலே-இத்தை –ஆணை ஆயிரம் -திருவாய்-6-3-11–என்று தத் ஆக்ஜா ரூபமாக சொல்லுகையாலும் ,-அத்தை -வசையில் நான் மறை –பெரிய திருமொழி-5-3-2- என்று விப்ரலம்பாதி தோஷ ரகிதம் என்றால் போலே ,-இத்தையும் –ஏதமில் ஆயிரம்-திருவாய்-1-6-11- -என்று நிர்தோஷமாக சொல்லுகையாலும் ,-அத்தை-சுடர் மிகு சுருதி-திருவாய்-1-1-7- -என்று ஸ்ரூயதே இதி ஸ்ருதி -என்கிறபடியே பூர்வ பூர்வோச்சாரண கிரமத்திலே சரவண இந்திரியத்தாலே கிரகிக்க படுமதாய் சொன்னால் போலே , இத்தையும் –கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே -திருவாய்-10-6-11 -என்று ஸ்ராவ்யமாய் சொல்லுகையாலும் ,-அத்தை –வேத நூல் ஓதுகின்றது உண்மை-திருச்சந்த -72- -என்று சொல்லும் அதில் ஒரு பொய் இல்லை என்றால் போலே ,-இத்தையும் –பொய்யில் பாடல்-திருவாய்-4-3-11–என்று அசத்திய கந்த ரகிதம் இல்லை என்கையாலும்,-அத்தை பண்டை நான்மறை -பெரிய திருமொழி-5-7-1–என்று அநாதியாகவும்-நிற்கும் நான்மறை-திருவாய்-6-5-4- -என்று -அநதினத்தவம்-அழிவில்லாததாகவும் சொன்னால் போலே இத்தையும் முந்தை ஆயிரம் -திருவாய்-6-5-11-அழிவில்லா ஆயிரம் -திருவாய்-9-7-11-என்று அநாதியாய் அழிவற்று இருக்குமதாய் சொல்லுகையாலும் இந்த லஷணங்கள் எல்லாம் இரண்டுக்கும் ஒக்கும் என்கை-

வேதநூல்‌?” (திருச்ச.72) என்றாப் போலே ““இருந்தமிழ்நூல்‌ ‘” (திருமொழி 1 – 7 – 10) என்று ஸாஸ்த்ரத்வமும்‌, ”ஸ்ருதி ஸ்ம்ருதிர் மமைவாஜ்ஞா’” என்றாப்போலே ஆணை யாயிரத்து”” (திருவா. 6 – 3 – 11) என்று பகவதநுஸாஸந ரூபமாய்‌, “வசையில்‌ வேதம்‌”” (திருமொழி 5 – 3 – 2) என்றாப் போலே ““ஏதமிலாயிரம்‌” (திருவா. 1 – 0 – 11) என்று ப்‌ரம விப்ரலம்பாதி, தோஷ ரஹிதமாய்‌, “*சுடர் மிகு சுருதி”’ (திருவா. 1 – 1 – 7) என்றும்‌, *’செவிக்கினிய செஞ்சொல்‌?” (திருவா. 10 – 6 – 11) என்றும்‌ ஸ்ராவ்யமாய்‌, ““வேத நூலோதுகின்றதுண்மை?” (திருச்ச.72) என்றாப் போலே ‘“பொய்யில் பாடலாயிரம்‌”? (திருவா. 4 – 3 – 11) என்று இதில்‌ சொல்லுகிற அர்த்தங்களில்‌ ஒரு பொய்‌ இன்றியிலே இருப்பதாய்‌, ‘“பண்டைநான்மறை” (திருமொழி 5 – 7 – 3), “நிற்கும்‌ நான்மறை”! (திருவா. 6 – 5 – 4) என்றாப் போலே ‘‘முந்தை யாயிரம்‌’‘ (திருவா. 6 – 5 – 11) என்றும்‌, “அழிவில்லா ஆயிரம்‌”’ (திருவா. 9 – 7 – 11) என்றும்‌ ஆத்‌யந்த ரஹிதமாய்‌, அதிற் சொல்‌லுகிற லக்ஷணங்கள்‌ இதுக்குமுண்டென்கிறார் –

வேத நூல் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவரேலும்
பாதியும் உறங்கிப் போகும் நின்ற விப்பதினை யாண்டு (நின்றதில் பதினை யாண்டு -என்றும் பாடம் )
பேதை பாலகனதாகும் பிணி பசி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்க மா நகர் உளானே–3—வேத சாஸ்த்ரா விரோதிநா -என்கிறபடியே
வேதமாகிற நூல் -வேதாக்ய சாஸ்திரம் -என்னக் கடவது இறே-நூல் -சாஸ்திரம்-அதவா வேதங்களும் நூல்களும் -என்னவுமாம் -வேதங்களும் வேதார்த்த ஞானம் உடைய புருஷர்கள் உடைய வசனங்களும் –

போதில் மங்கை பூதலம் கிழத்தி தேவி யன்றியும்
போது தங்கு நான்முகன் மகன் அவன்மகன் சொலில்
மாது தங்கு கூறனேற தூர்தி என்று வேத நூல்
ஓதுகின்றது உண்மை யல்லது இல்லை மற்றுரைக்கிலே –72–ஸ்ரீ பூமி சஹிதன் பிரம்மாவுக்கு உத்பாதகன் ப்ரஹ்ம உத்பன்னன் ருத்ரன் என்று வேதாக்ய சாஸ்திரம் ஓதுகிற அர்த்தமே சத்யம்-அதுக்கு புறம்பாக ஓர் அர்த்தம் சொல்லில் அது அசத்யம் – ஸூபர்ண வைகுண்ட சம்வாதே – யத்தத் பத்ம மபூத் பூர்வம் யத்ர ப்ரஹ்மா வ்யஜாயதே ப்ரஹ்மணச்சாபி சம்பூதச்சிவ இத்யவதார்யதாம் சிவாத் ஸ்கந்தஸ் சம்பபூவ ஏதத் ஸ்ர்ஷ்டி சதுஷ்டயம் –இத்யாதி –

செங்கணாளி யிட்டிறைஞ்சும் சிங்க வேள் குன்றுடைய
எங்கள் ஈசன் எம்பிரானை இரும் தமிழ் நூல் புலவன்
மங்கை யாளன் மன்னு தொல் சீர் வண்டறை தார்க் கலியன்
செங்கை யாளன் செஞ்சொல் மாலை வல்லவர் தீதிலரே-1-7-10–ஒருவரால் கரை காண ஒண்ணாத படி இருக்கிற தமிழ் சாஸ்திர உக்தமான படியைக் கரை கண்ட ஜ்ஞான ஆதிக்யத்தை உடையவர் –

காண்மின்கள் உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்த
தாளிணையன்தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
ஆணை ஆயிரத்து
த் திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்
கோணைஇன்றி விண்ணோர்க் கென்று மாவர் குரவர்களே.–6-3-11-பீஷாஸ் மாத் வாதே பவதே -என்கிறபடியே ஆயிரத்திலும்-ஜெகன் நியமனத்தைச் சொன்ன –

வசையில் நான்மறை கெடுத்த அம் மலர் அயற்கு அருளி முன் பரி முகமாய்
இசை கொள் வேத நூல் என்று இவை பயந்தவனே எனக்கு அருள் புரியே
உயர் கொள் மாதவிப் போதொடு உலாவிய மாருதம் வீதியின் வாய்த்
திசை எல்லாம் கமழும் பொழில் சூழ் திரு வெள்ளறை நின்றானே –5-3-2—விப்ரலம்பாதி தோஷ சம்பாவனை இல்லாத நாலு வேதத்தைக் கொடுத்துதாதா யதபூர்வ மகல்பயத்-என்று
முன்பு போலே இவற்றை உண்டாக்கு -என்று விட அவனும் வேதத்தை அசுரர்கள் கையில் பறிகொடுத்து
வேதா மே பரமஞ் சஷூர் வேதா மே பரமம் தனம் -என்று கண்ணும் கண்ண நீருமாய் நின்று கூப்பிட
அவன் பக்கலிலே கிருபையைப் பண்ணி  –

மாதவன் பால் சட கோபன் தீ தவம் இன்றி உரைத்த
ஏதமில் ஆயிரத்து இப் பத்து ஓத வல்லார் பிறவாரே–1-6-11-தீதாவது -தன் மேன்மையைப் பார்த்து எழ நிற்கை-அவமாவது -ஆஸ்ரயிக்கிறவனுடைய சிறுமை பார்த்து கையிடுகை –-இன்றியுரைத்த -இரண்டு குற்றமும் இல்லாமையைச் சொன்ன – ஏதமில் ஆயிரம் -லஷண ஹாநியால் வரும் குற்றம் இன்றிக்கே இருக்கை-

திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும்
உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை யுண்ட சுரனே –1-1-7–முதல் பாட்டுத் தொடங்கிச் சொன்ன அர்த்தங்கள் எல்லாவற்றுக்கும் பிரமாணம் நிர்த்தோஷ ஸ்ருதி என்கிறது சுடர் மிகுகை யாவது -பௌருஷ்யத்வ நிபந்தனமான விப்ரலம்பாதி தோஷ ரஹிதமுமாய் பிரமாணாந்தரங்களைக் கொண்டு பாஹ்ய குத்ருஷ்டிகளால் அவிசால்யமாகையாலே மிக்க தேஜச்சை யுடைத்தாகை-ஒருவரால் பண்ணப் பட்டது அன்றிக்கே என்றும் கேட்டே வருமதாகையாலே ஸ்ருதி என்கிறது –

காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த
வாட்டாற்று எம் பெருமானை வளம் குருகூர்ச் சடகோபன்
பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே–10-6-11–பாட்யே கே யே ச மதுரம் -என்கிறபடியே இசையோடு புணர்ப்புண்ட தமிழ்த்தொடை –நித்ய ஸூரிகள் இத்தைக் கேட்டால் பர்யாப்தர் ஆகார் -இப்பாடுகிறது உள்ளீடானவன் சீலத்தாலேயே என்னில் –பாசுரத்துக்காக என்கிறது –ஸம்ஸ்ரவே மதுரம் -என்கிறபடியே செவியே தொடங்கி ரசிக்கும்-செஞ்சொல்லே–-நினைவும் சொல்லும் செயலும் ஒருபடிப் பட்ட சொல்லு –சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினால் -என்னா செந்தமிழ் பத்தும் என்றார் இறே –

போதில் மங்கை பூதலம் கிழத்தி தேவி யன்றியும்
போது தங்கு நான்முகன் மகன் அவன்மகன் சொலில்
மாது தங்கு கூறனேற தூர்தி என்று வேத நூல்
ஓதுகின்றது உண்மை யல்லது இல்லை மற்றுரைக்கிலே –
72-ஸ்ரீ பூமி சஹிதன் பிரம்மாவுக்கு உத்பாதகன் ப்ரஹ்ம உத்பன்னன் ருத்ரன் என்று வேதாக்ய சாஸ்திரம் ஓதுகிற அர்த்தமே சத்யம்-யல்லது இல்லை மற்றுரைக்கிலே — அதுக்கு புறம்பாக ஓர் அர்த்தம் சொல்லில் அது அசத்யம் –-ஸூபர்ண வைகுண்ட சம்வாதே – யத்தத் பத்ம மபூத் பூர்வம் யத்ர ப்ரஹ்மா வ்யஜாயதே ப்ரஹ்மணச்சாபி  சம்பூதச்சிவ இத்யவதார்யதாம் சிவாத் ஸ்கந்தஸ் சம்பபூவ ஏதத் ஸ்ர்ஷ்டி சதுஷ்டயம் -இத்யாதி –

உய்வு உபாயம் மற்று இன்மை தேறி, கண்ணன் ஒண் கழல் மேல்
செய்ய தாமரைப் பழனம் தென்னன் குருகூர்ச் சடகோபன்
பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே.–4-3-11-ஆழ்வார் பிரணயித்வ குண அனுசந்தானத்தாலே தரித்தவாறே ஊரும் தளிரும் முறியுமாயிற்று -அகாலப்பலிநோ வ்ருஷா
சிவந்த தாமரையை உடைய பழனங்களை உடைத்தாய் தெற்குத் திக்குக்கு ஸ்லாக்யமான திரு நகரியை உடைய ஆழ்வார்-ந தே வாக ந்ருதா காவ்யே காசிதத்ர பவிஷ்யதி -என்கிறபடியே திருவாய் மொழி எல்லாவற்றுக்கும் ஆதல்-அவாப்த ஸமஸ்த காமன் ஒரு சம்சாரியினுடைய சத்தாதிகளே தனக்கு போக உபகரணமாக இருந்தான் -என்கிற பிரணயித்வத்தில் ஒரு பொய் இன்றிக்கே இருக்கிற பத்து என்னுதல் –

பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் பதங்களின் பொருளும்
பிண்டமாய் விரிந்த பிறங்கு ஒளி அனலும் பெருகிய புனலொடு நிலனும்
கொண்டல் மாருதமும்  குரை கடல் ஏழும் ஏழு மா மலைகளும் விசும்பும்
அண்டமும் தானாய் நின்ற  எம்பெருமான் அரங்க மா நகர் அமர்ந்தானே –5-7-1-பூர்வே பூர்வேப்யோ வச ஏத தூசு -என்கிறபடியே பூர்வ பூர்வ உச்சாரண க்ரமத்தைப் பற்ற உத்தர உத்தர உச்சாரணம்   ஆகையாலே புருஷ புத்தி அதீனம் ஆனால் வரக் கடவ தோஷங்கள் ஒன்றும் இல்லாத வேதங்களும் –

நிற்கும் நான்மறை வாணர் வாழ்தொலை வில்லி மங்கலம் கண்டபின்
அற்க மொன்றும் அறவு றாள்மலிந் தாள்கண் டீர்இவள் அன்னைமீர்!
கற்கும் கல்வி யெல்லாம் கருங்கடல் வண்ணன் கண்ண பிரான்என்றே
ஒற்கம் ஒன்றும் இலள் உகந்துகந்து உண்மகிழ்ந்து குழையுமே.–6-5-4-அபவ்ருஷேயமாய் நித்தியமான வேதங்கள் –

சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே
தந்தை தாய் என்றடைந்த வண்குரு கூரவர் சடகோபன்
முந்தை ஆயிரத்துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச்சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமாலுக்கே.–6-5-11–பழையதான வேதார்த்தத்தை அருளிச் செய்கையாலே சர்வேஸ்வரன் இதர சஜாதீயன் ஆனால் போலே -வேதமும் தமிழாய் வந்து இவர் பக்கலிலே அவதரித்த படி-செவ்விய தமிழ் -பசும் தமிழ் -அர்த்தத்தை விசதமாகக் காட்டுவது -இப் பத்தை அப்யஸிக்க வல்லார் ஸ்ரீ யபதிக்கு அடிமை செய்வார்-

ஒழிவின்றித் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடரை
ஒழிவில்லா அணி மழலைக் கிளி மொழியாள் அலற்றிய சொல்
வழு வில்லா வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த
அழிவு இல்லா ஆயிரத்து இப்பத்தும் நோய் அறுக்குமே–9-7-11–கேட்டார்கள் நெஞ்சை ஒரு நாளும் விடாதே வர்த்திக்கிற இப்பத்து –இப்பாசுரத்தை கேட்டார்க்கு சம காலத்தில் போலே சர்வ காலமும் ரசம் பிறக்கும் படி யாய்த்து இருப்பது-

அந்த வேதம் போலே இதுவும் அஸ்ம்ருத கர்த்ருகமாய் இருக்க வேண்டாவோ ? ஸ்ரீ ஆழ்வார் இதுக்கு கர்த்தா என்கையாலே ,நித்யத்வ அபௌருஷேயத்வங்கள் கூடாதீ என்ன சொல்லுகிறது மேல்-ஆனால்‌ “சொல்லப்பட்ட ஆயிரத்துள்‌” (திருவா. 8 – 10 – 11) என்று இவர் தம்மாலே சொல்லப்பட்டது என்கிற இதில்‌ கர்த்ருத்வத்தால்‌ நித்யத்வ-அபெளருஷேயத்வ-ஹாநி வாராதோ என்னில்‌, வாராதென்கிறார்‌. அது என் போல வென்னில்‌-

சொல்லப் பட்ட என்ற இதில் கர்த்ருத்வம் ஸ்ம்ருதி அத்தை ஸ்வயம்பூ படைத்தான் என்றது போலே-சூரணை -46-

அதாவது
சடகோபன் சொல்லப் பட்ட ஆயிரம்–திருவாய்-8-10-11–என்று இதில் ஸ்ரீ ஆழ்வாருக்கு சொன்ன கர்த்ருத்வம்-அநாதி நிதனா ஹ்யேஷா வாகுத் ஸ்ருஷ்டா ஸ்வயம்புவா -என்று-(அநாதி அநிதன -பண்டை நின்ற வேதத்தை ) ஸ்ம்ருதி அந்த வேதத்தை-( ஜகத்தை-) பிரம்மா சிருஷ்டித்தான் என்று சொன்னாவோ பாதி என்கை- ஸ்வயம்பு சிருஷ்டித்தான் என்னாதே–படைத்தான்-என்றது முன்னம் திசை முகனை தான் படைக்க மற்றவனும் முன்னம் படைத்தனன் நான் மறைகள்-பெரிய திருமடல்-10 -என்று ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தியையும் தர்சிப்பைக்காக .. அநாதி நிதானமான சந்தர்ப்பம் பிரம்மாவின் வாக்கில் நின்றும் ஆவிர்பவித்த மாத்ரம் கொண்டு ,பிரம்மாவுக்கு அதில் சொன்ன கர்த்ருத்வ உபாதி இதிலும் ஸ்ரீ ஆழ்வாருக்கு சொன்ன கர்த்ருத்வம் ஆகையால் இத்தால் ,இதன் நித்யத்வ அபௌருஷேயத்வ ஹானி வாராது என்று கருத்து-

முன்னம்‌ திசை முகனைத் தான்‌ படைக்க, மற்றவனும்‌ முன்னம்‌ படைத்தனன்‌ நான்மறைகள்‌”! (பெ.திருமடல்‌) என்றும்‌, ““அநாதி நிதாநா ஹ்யேஷா வாகுத்ஸ்ருஷ்டா ஸ்வயம்பு வா?‘ (பார-சபா ) என்றும்‌ சொல்லுகிறபடியே, ஸ்ம்ருதி, “ப்ரஹ்மா வேதங்களைப்‌ படைத்தான்‌ ‘ என்ற இடத்தில்‌, அந்த ப்‌,ரஹ்மாவால்‌ வந்த கர்த்ருத்வத்தால்‌ அவறறினுடைய நித்யத்வ-அபெளருஷேயத்வங்களுக்கு ஹாநி வாராதாப் போலே இதுக்கும்‌ நித்யத்வ அபெளருஷேயத்வ ஹாநி வாராது –

நல்ல கோட்பாட்டுலகங்கள் மூன்றின் உள்ளும் தான் நிறைந்த
அல்லிக் கமலக் கண்ணனை அந்தண் குருகூர்ச் சடகோபன்
சொல்லப்பட்ட வாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே–8-10-11-வேதம் போலே தான் தோன்றி அன்றிக்கே இருக்கை-பரத்வம் போலே வேதம்-அவதாரம் போலே திருவாய்மொழி –பிரமேய சரமம் -பிராமண சரமம் -பரத்வ பர முது வேதம் -அர்ச்சாவதாரங்களை திருவாய் மொழி சொல்லுமே —

மன்னிய தாமரை மா மலர்ப் பூ பூத்தம் மலர் மேல் —–9
முன்னம் திசை முகனைத் தான் படைக்க -மற்றவனும்
முன்னம் படைத்தனன் நான்மறைகள் அம்மறை தான் –10—-அந்தச் சதுர முகனும் முன்பு உண்டாக்கின நான்மறைகள் என்றால் போலே இருக்கிறது-சர்வேஸ்வரன் இவ் வேத அஷர ராசியை-ஸூப்த பிரபுத்த ந்யாயத்தாலே முன்புத்தை ஆநு பூர்வியை ஸ்மரித்துச் சொல்லும் என்று வேதத்தின் உடைய அபௌ ருஷேயத்வம் சொல்லா நிற்க-இவன் சிருஷ்டித்தான் -என்னில் பிரமாண விருத்தமாம் இறே-
இனித் தானே-யோ ப்ரஹ்மாணம் விததாதி   பூர்வம் யோ வை வேதாம்ச்ச ப்ரஹிணோதி தஸ்மை -என்று சொல்லுகிற்றவற்றோடும் விரோதிக்கும் இறே-ஆனால் பின்னை என் சொல்லிற்று ஆகிற்றது  என்னில்
இன்னான் தன் பிதாவின் பக்கல் படைத்த த்ரவ்யம் இன்னதனை -என்னுமா போலே அந்த ப்ரஹ்மாவும் சர்வேஸ்வரன் பக்கல் அதிகரித்த நாலு வேதங்களும் -என்றபடி- பிறந்து படைத்தான் -என்னக் கடவது இறே பெற்றத்தை –

பூர்வ சந்தர்ப்ப பிரக்ரியை இவர் தர்சிப்பித்து பேசினதே உள்ளது என்னும் இடத்தை அறிவிக்கிறார் மேல்-

நால் வேதம் கண்ட புராண ரிஷி மந்த்ர தர்சிகளை போலே இவரையும் ரிஷி முனி கவி என்னும்-சூரணை -47-

அதாவது
நால் வேதம் கண்ட புராண ரிஷி–நால் வேதம் கண்டானே -பெரிய திருமொழி-8-10-1–என்னும் படி
ஈஸ்வரன் தான் அடியிலே செய்தால் போல் நாலு வேதங்களையும் சாஷாத் கரித்து அஷ்டா தச புராணம் கர்த்தா சத்யவதீ ஸுத-என்கிற படி அஷ்டாதச புராணங்கள் உடைய ஆநு பூர்வியையும் தர்சித்துச் சொன்ன வேத வியாச பகவானை சொல்லுகிறது-நால் வேதம் கண்டான் -என்கிற இடத்தில் ஸ்வேன ரூபேண நின்று தர்சித்தமை அன்றிக்கே வியாச ரூபேண நின்று தர்சித்தமை தன்னைச் சொல்லுகின்றது இவருக்கு கருத்தாகவுமாம் சங்கீர்ண புத்தயோ தேவா பிரம ருத்ர புரஸ்ஸர சரண்யம் சரணம் ஜக்மு நாராயண மநாமயம்..தைர் விக்ஜ்ஞாபித்த கார்யஸ்து பகவான் புருஷோத்தம அவதீர்னோ மகா யோகி சத்யவத்யாம் பராசராத் என்றும்-கிருஷ்ண த்வைபாயனம் வியாசம் வித்தி நாராயண பிரபும் -என்றும் பகவத் ஏவச அவதாரயா பகவான் தானாக சொல்லக் கடவதிறே..–இப்படி இருந்துள்ள ஸ்ரீ வேத வியாச பகவானை வேதங்களின் பூர்வ சித்த அனுபூர்வியை தர்சித்து சொன்ன படியாலே தர்சநாத் ருஷி மனந சீலோ முனி கவி கிராந்த தர்சீ-என்கிற வர்தங்களை நினைத்துக் கொண்டு-ஸ்ரூயதாம் சிம்ஹனா தோயம் ருஷேச்தச்ய மகாத்மனா தர்மேச அர்த்தேச கர்மே ச மோஷே ச பரதர்ஷப -என்றும்-ஏவம் விதம் பாரதம் து ப்ரோக்தம் ஏன மகாத்மனா சோயம் நாராயணஸ் சாஷாத் வியாச ரூபீ மகா முனி –என்றும் சஷால் லோகான் பாவ்யமான கவி முக்ய பராசர்ய-என்றும்
ருஷி முனி கவி என்றும் சொல்லிற்று இறே–மந்த்ர தர்சிகள் ஆனவர்களை பூர்வ ஸித்த சந்தர்ப்பத்தை
சாஷாத் கரித்து சொன்னவர்கள் என்னும் இடம் தோற்ற நம ருஷிப்யோ மந்த்ர க்ருத்ப்ய -என்றும்
பகவான் சௌனக முனி -என்றும் இத்யாதிகளாலே ருஷி முனி என்று சொல்லிற்று இறே .-இவர்கள் விஷயத்திலும் கவி சப்த பிரயோகம் உண்டாகில் வந்த ஸ்தலங்களிலே கண்டு கொள்வது -ஆக இப்படி இவர்களை சொன்னால் போலே த்ராவிடமான இதின் பூர்வ ஸித்த அனுபூர்வியை சாஷாத் கரித்து பேசின இவ் ஆழ்வாரையும் –-ருஷிம் சுஷாமஹே கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் இவோதிதம்
சகஸ்ர சாகாம் யோத்ரா ஷீத் த்ராவிடீம் ப்ரஹ்ம சம்ஹிதாம்
–என்றும்-சடகோபம் முனிம் வந்தே சடானாம் புத்தி தூஷகம் , அஞ்ஞானம் ஜ்ஞான ஜனகம் திந்திரிணீ மூல சம்ஸ்ரயம் -என்றும்-உலகம் படைத்தான் கவி யாயினேற்கு -திருவாய்-3-9-10–என்றும் முன்பு உண்டான சந்தர்ப்பத்தை தர்சிப்பித்து பேசினவர் என்னும் இடம் தோற்ற ருஷி என்றும் ,முனி என்றும் ,கவி என்றும் சொல்லும் என்கை 

”நால் வேதங் கண்டானே”’ (திருமொழி 8 – 10 – 1) என்கிறபடியே நாலு வேதங்களைக்‌ கரை கண்ட வர்களையும்‌ அஷ்டாதஸ புராண கர்த்தாக்‌களையும்‌ “*சதுர் வேத தர்ஸநாத்‌ ருஷி:‘” என்கிறபடியே ருஷிகளென்றும்‌, ”ஜிதந்தே”” இத்யாதி, ஜிதந்தா- மந்த்ர தர்ஸிகளான சவ்நகாதிகளை முனிகளென்றும்‌, இதிஹாஸ கர்த்தாக்களான ஸ்ரீ வால்மீகி பகவான் போல்வாரை கவிகளென்றும்‌ சொல்லுமாப் போலே இவரையும்‌ ““ருஷிம்‌ ஜுஷாமஹே க்ருஷ்ண த்ருஷ்ணா தத்த்வமிவோதிதம்‌ | ஸஹஸ்ர ஸாகாம்‌ யோ த்‌ராஷீத்‌, த்‌ராவிடீம்‌ ப்‌ரஹ்ம ஸம்ஹிதாம்‌” (பரா.௮.) என்றும்‌, ““ஸட,கோபமுநிம்‌ வந்தே, ஸடாநாம்‌ புத்‌தி தூஷகம்‌ | அஜ்ஞாநாம்‌ ஜ்ஞாந ஜநகம்‌ திந்த்ரிணீ மூல ஸம்ஸ்ரயம்‌””’ (பரா. அ) என்றும்‌, “உலகம்‌ படைத்தான்‌ கவி” (திருவா. 3 – 9 – 10) என்றும்‌ சொல்லுகையாலே இவரையும்‌ ருஷி முனி கவி என்னும்‌ என்கிறார் –

வண்டார் பூ மா மலர் மங்கை மண நோக்கம்
உண்டானே உன்னை உகந்து உகந்து உன் தனக்கே
தொண்டானேற்கு என் செய்கின்றாய் சொல்லு நால் வேதம்
கண்டானே கண்ண புரத் துறை யம்மானே—8-10-1-
பிரளய காலத்திலே இவற்றின் உடைய ஆநு பூர்வியை ஸ்மரித்து இருந்து வெளி இடுகை -இறே இவற்றைக் காண்கை யாவது-நித்தியமான வேதத்தில் சாஷாத் காரத்துக்கு மேற்பட இல்லை இறே (ஆகவே படைத்தானே என்னாமல் -கண்டானே -சப்தங்கள் போனாலும் ஆனு பூர்வி அழியாதே )அன்றிக்கே பட்டர் அருளிச் செய்ததாக சிறியாத்தான் பணிக்கும் படி – இது கர்த்தரி அன்று -கர்மணி கிடாய் -என்று பிராப்ய பிராபகங்கள் இரண்டும் அவனே என்னும் இடத்தை யாயிற்று வேதங்கள் வெளி இட்டது –

ருஷிம் ஜுஷாமஹே க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வமிவோதிதம் |
ஸஹஸ்ர சாகாம் யோத்ராக்ஷீத் த்ராவிடீம் ப்ரஹ்ம ஸம்ஹிதாம் ||
–3-எந்த ஒரு முனிவர் – ஆயிரம் சாகைகள் உள்ள சாம வேதம் போலே ஆயிரம் பாசுரங்களை யுடையதான திராவிட ப்ரஹ்ம சம்ஹிதையை சாஷாத் கரித்தாரோ, ஸ்ரீ கிருஷ்ண பக்தியே வடிவு எடுத்து அவதரித்தது என்று சொல்லும்படியான அந்த ஸ்ரீ சடகோப முனிவரை ஸேவிக்கிறோம்!

சடகோப முநிம் வந்தே சடாநாம் புத்தி தூஷணம் |
அஜ்ஞாநாம் ஜ்ஞான ஜனகம் திந்த்ரிணீ மூல ஸம்ஸ்ரயம் ||–6
-குடில புத்திகளுடைய துர்ப்புத்தியைத் தொலைப்பவரும் – தீய மனத்தவர்களுடைய தீய மனத்தை கெடுத்து – அறிவில்லாதவர்களுக்கு நல்லறிவை நல்குமவரும் – அறிவிலிகளுக்கு மருவித் தொழும் மனமே தந்து – ஸ்ரீ திருப்புளி யாழ்வார் அடியிலே வீற்று இருப்பவருமான – இங்குத்தை வாழ்வே தமக்கு நிரூபகமாகக் கொண்ட ஸ்ரீ நம்மாழ்வாரை வணங்குகிறேன்!

நின்று நின்று பல நாள் உய்க்கும் இவ்வுடல் நீங்கிப் போய்ச்
சென்று சென்றாகிலும் கண்டு,சன்மம் கழிப்பான் எண்ணி,
ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு
என்றும் என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே?–
3-9-10-ஸ்ருஷ்டிகள் பலித்ததில்லை என்று கை வாங்காதே மிகவும் ஒருப்பட்டு லோகங்களை உண்டாக்கினான் கவி ஆயினேற்கு-கவியாயினுக்கு
அவன் ஸ்ருஷ்ட்டி பலித்து அநந்யார்ஹனான எனக்கு என்றும் -கால தத்வம் உள்ளதனையும் வேறு சிலருடைய கவியில் எனக்கு அந்வயம் உண்டாகி தகுமோ-வேறு சிலர்க்கு கவியாக நான் தகு வேனோ என்றுமாம்-இப்போது பகவத் குணங்களை பாடி மேலும் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத – ஏதத் சாம காயன் நாஸ்தே-என்று பாடப் புகுகிற நான் வேறு சிலர்க்கு தகு வேனோ

இன்னமும் இதன் உடைய அநாதித்வ ஸூசுகமானது ஒன்றை தர்சிப்பிக்கிறார் மேலே-

படைத்தான் கவி என்ற போதே இதுவும் யதா பூர்வ கல்பனம் ஆமே-சூரணை -48-

அதாவது உலகம் படைத்தான் கவி –என்கையாலே ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் -என்கிற படியே
ஒருப் பட்டு மேன்மேலும் லோக சிருஷ்டியை பண்ணும் இடத்தில் ஸுூர்யா சந்திர மசவ் ததா எத பூர்வ மகல்பயத்––தைத்ரியம்-என்கிற படியே ஸ்ருஷ்ட்டி தோறும் சந்திர சூர்யாதி சகல பதார்த்தங்களையும்
யதா பூர்வ கல்பனமாய் வருமா போலே திராவிட வேதமான இப் பிரபந்தமும் ஸ்ருஷ்ட்டி தோறும் யதா பூர்வ கல்பனமாய் வரும் என்று தோன்றும் இறே
என்கை ..

‘ஒன்றி யொன்றி உலகம்‌ படைத்தான்‌ கவியாயினேற்கு’” (திருவா-3-9-10) என்று அடுத்தடுத்து ஜகத் ஸ்ருஷ்டியைப்‌ பண்ணினவனுக்குக்‌ கவி யானேன்‌ என்கையாலே “ஸுூர்யா சந்தரமஸெள ததா யத பூர்வ மகல்பயத்‌?” (தை. உ.) என்று ஸ்ருஷ்டி தோறும்‌ ஸூர்யா சந்த்‌ரமாக்கள்‌ உண்டானாப் போலே  ஸ்ருஷ்டி தோறும்‌ இந்த ப்ரபந்தமும்‌ உண்டென்னுமிடம்‌ தோற்றுகிறது. இத்தாலும்‌ இதினுடைய அநாதித்வம்‌ சொல்லுகிறது.

ஏவம் பூதமான இது பகவத் பிரசாதத்தாலே ஆழ்வாருக்கு சித்தித்து ,-ஆழ்வார் பிரசாத்தாலே இவ் அருகு உள்ளாருக்கு உப ஜீவ்யமாய் ,இவரை இட்டு நிரூபிக்கும் படியானமையை ச த்ருஷ்டாந்தமாக அருளி செய்கிறார் மேல்-ஆனால்‌ அதிகாரிகள்‌ ஸம்ஹ்ருதராக வேதம்‌ நித்யமானபடி என்‌ என்னில்‌, ஸர்வஜ்ஞனான ஸர்வேஸ்வரன்‌ நித்யனாகையாலே அவன் திருவுள்ளத்திலே வாஸனை கிடந்து ஸூப்த ப்ரபுத்‌த, ந்யாயத்தாலே ஸம்ஹாராநந்தரம்‌ “யோ ப்‌,ரஹ்மாணம்‌ விததாதி பூர்வம்‌ யோ வை வேதாம்ஸ் ச பரஹிணோதி தஸ்மை” (ஸ்வே.6 – 18) என்கிறபடியே ப்‌,ரஹ்மாவை உண்டாக்கி, அநந்தரம்‌ அவனுக்கு வேத ப்ரதாநத்தைப் பண்ண, ஸர்வேஸ்வரனோடே அத்‌யயநம்‌ பண்ணின அந்த ப்‌ரஹ்மாவானவன்‌ ஜ்யேஷ்ட புத்ரனான ருத்‌ரன்‌ தொடக்கமானாரை ஒதுவித்தாப் போலே ஸர்வேஸ்வரன்‌ இந்த த்‌ராவிட வேத ஸம்ஸ்காரத்தைத்‌ திருவுள்ளத்திலே வைத்து இவரை ஓதுவிக்க, இவரும்‌ தம் பக்கலில்‌ க்ருதஜ்ஞரான ஸ்ரீ மதுர கவிகள் போல்வாரை அத்‌யயநம்‌ பண்ணுவிக்க, இதுவும்‌ இவரை யிட்டு நிரூபிக்கும்படி யாய்த்து என்கிறார்‌-

உறக்கம் தலை கொண்ட பின்னை மறை நான்கும் உணர்ந்த தங்கள் அப்பனோடே ஓதின சந்த சதுமுகன் சலம் கலந்த வெண்புரி நூல் மானுரி திரி தந்து உண்ணும் காமன் உடல் இருக்கு இலங்கு
ஜ்யேஷ்ட புத்ராதிகளுக்கு மறை பயந்தாப் போலே-ஆதுமில் காலத்து எந்தையான வாய் முதல் அப்பன் பிரம குருவாய் இராப் பகல் முன் சொல்ல-கற்றனமே என்ற இவரும் நாவினால் நன்மையால் என்னும் ஓத வல்ல பிராக்களை கன்மின்கள் என்று சொல் பயிற்ற வேதம் ஓதுவார் ஒத்து ஆகையாலே ஆதர்வணாதிகள் போலே இதுவும் பேர் பெற்றது-சூரணை -49-

அதாவது
உன்னிய யோகத்து உறக்கம் தலை கொண்ட பின்னை-பெரிய திருமடல் -8- -என்கிற படியே சம்ஹ்ருதி சமயத்தில் நாம ரூப விவாகநர்ஹமாய் சதவஸ்தமாய் கிடந்த இத்தை ஸ்ருஷ்ட்டி காலம் வந்தவாறே
விபக்தம் ஆக்கி மகதாதி சகல தத்வங்களையும் அண்டத்தையும் சிருஷ்டித்து சதுர் முக சிருஷ்டிக்கு முன்னாக ஏகார்ணவத்திலே –இவை நல் வழியாய் கரை சேரும் விரகு ஏதோ -என்று அனுசந்திக்கை யாகிற யோக நித்தரை செய்த அனந்தரம்

உன்னிய யோகத் துறக்கம்‌ தலைக் கொண்ட பின்னை”’ (பெ. திருமடல்‌) என்கிறபடியே “ந ப்ரஹ்மா நேஸாநோ நேமே த்‌யாவாப்ரூதிவீ ந நக்ஷத்ராணி”’ (மஹோபநிஷத்‌) என்றும்‌, ““ப்ருதி வ்யப்ஸு ப்ரலீயதே” என்று தொடங்கி, “மஹாநவ்யக்தே லீயதே அவ்யக்தம் அஷரே லியதே அக்ஷரம்‌ தமஸி லீயதே தம? பரே தேவ ஏகீ பவதி” ‘(ஸு.உ.), “ஏகோ ஹ வை நாராயண ஆஸீத்‌” (ம.உ.) என்றும்‌, ““ஒன்றுந் தேவுமுலகுமுயிரும்‌ மற்றும்‌ யாதுமில்லாவன்று”” (திருவா. 4 – 10 – 1) என்றும்‌ சொல்லுகிறபடியே ஸகல தத்த்வங்களும்‌ அவர் பக்கலிலே ஏகீபவித்து ‘அப்ரஜ்ஞாதமலக்ஷணம்‌”‘ (மநு. 1 – 5) என்கிறபடியே நாம ரூப விபாகா நர்ஹமாய்‌ அவனை யிட்டு நிரூபிக்க வேண்டும்படி அவனெருவனுமேயாய்‌ மேல்‌ ஸ்ருஷ்ட்யாதி முகத்தாலே சேதநருடைய ரக்ஷண ப்ரகாரங்களைத்‌ திரு வுள்ளத்தோடே கூட்டுகிற தஸை யிறே ஸம்ஹாரமாவது.

தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும்———6
என்னும் இவையே முலையா வடிவமைந்த
அன்ன நடைய வணங்கேய் அடி இணையைத்—————7
தன்னுடைய அம் கைகளால் தான் தடவத் தான் கிடந்ததோர்
உன்னிய யோகத் துறக்கம் தலைக் கொண்ட—————8தான் கிடந்து –-ஸ்வதஸ்   சர்வஞ்ஞானாய் -ஒன்றால் ஒரு காலுஷ்யம் இன்றிக்கே இருக்கக் கடவ அவன்-இவள் உடைய ஸ்பரசத்தாலே  வந்த ஸூகத்தாலே இரண்டும் அறியாதே கிடந்தது உறங்கா நிற்கும் –தோர் உன்னிய யோகத் துறக்கம் தலைக் கொண்ட பின்னை   – அல்லாதார்க்கு முன்பே தானே நெஞ்சு இருண்டு இருக்கும் இ றே
அதுக்கு மேலே கண்ணைச் செம்பளித்தவாறே புறம்பு பிரகாசிக்கிற இதுவும் போய் இருளும் இறே –
இவனுக்கு அங்கன் ஒன்றும் இன்றியே திருக் கண்களை செம்பளித்தால் அகவாயில்
பிரகாசிக்குமதுக்கு வர்த்தமானாய் இருக்கும் –உன்னுகை –அனுசந்திக்கை –யோகத் துறக்கம் –
ரஜஸ் தமஸ் ஸூ க்களால் அபி பூதனாய்உறங்குகிறான் -அன்று-உறங்குவான் போல் யோகு செய்த பெருமான்
-திரு வாய் மொழி -5-4-11-யோக நித்தரை இறே அவை நல் வழியாக கரை சேரும் வகையதோ -என்று ஜகத் ரஷண சிந்தை பண்ணிக் கொண்டாயிற்று கண் வளர்ந்து அருளுகிறது –

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர்படைத்தான்

குன்றம் போல் மணிமாடம் நீடு திருக் குருகூரதனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே!–4-10-1–தேவ ஜாதியும் அவர்களுக்கு இருப்பிடமான லோகங்களும் மனுஷ்யாதிகளான ஆத்மாக்களும் அண்டத்துக்கு அடியான மஹதாதிகளும் ஒன்றும் இல்லாத அன்று-ஒன்றும் தேவும் என்று தேவாதி காரியங்களுக்கு காரணத்திலே லயத்தை சொல்லுகிறது என்று ஒரு தமிழன் சொன்னான் அன்று,-கரண களேபரங்களை இழந்து அசித் விசிஷ்டமாய்க் கிடந்த அன்று நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்-சதுர்முகனோடு கூட தேவ ஜாதியையும் லோகங்களையும் மனுஷ்யாதி யாத்மாக்களையும் உண்டாக்கினான் – இவை அழிந்தது என்கிற இடத்தில் மஹதாதிகளையும் சொன்னார் –ஸ்ருஷ்டியில் ப்ரஹ்மா தொடக்கமாக சொன்னார் இதுக்கு கருத்து என் என்னில்-மஹதாதிகளிலே பரத்வ சங்கை பண்ணுவார் இல்லாமையால் பரத்வ சங்கை பண்ணுகிற இடமே பிடித்துச் சொல்லுகிறார் -அவர்கள் பக்கல் பரத்வத்தை கழிக்கைக்காக- சதுர்தச புவன சிரேஷ்டாவோடு -அவனாலே ஸ்ருஷ்டராய் நித்ய ஸ்ருஷ்டிக்கு கடவரான தச பிரஜாபதிகளோடு அவர்களுக்கு போக ஸ்தானமான லோகங்களோடு -அவர்களுக்கு குடி மக்களான மனுஷ்யாதிகளோடு வாசி அற படைத்தான்-போக மோக்ஷங்களை விளைத்து கொள்ளுகைக்காக கரணங்களைக் கொடுத்தான்

உறங்குவான் போல் யோகு செய்த பெருமானைச்
சிறந்த பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
நிறங் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இப்பத்தால்
இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ?–5-4-11—நம்மால் கார்யம் இல்லாத இவர்களால் கார்யம் என் -என்று லோகத்தாரை விட்டு -இத்தசையை விளைத்தவன் இவ்வளவில் செய்வது என் -என்று அவளை அனுசந்தித்தார் –ஜகத் ரக்ஷணார்த்தமாக திருப் பாற் கடலிலே சாய்ந்து அருளின படியை அனுசந்தித்து –இப்போது வாராமையாலே வெறுத்தோம் அத்தனை -நம்முடைய ரக்ஷண சிந்தை பண்ணிக் கிடக்கிறன் நம்மைக் கை விடான் -என்று இம் மஹா குணத்தை அனுசந்தித்து தரிக்கிறார்-கண் வளருகை என்று ஒரு பேராய்-ஜகத் ரக்ஷண உபாய சிந்தை பண்ணுகிற சர்வேஸ்வரனை

உணர்ந்தாய் மறை நான்கும் -இரண்டாம் திருவந்தாதி -48–என்கிற படியே-ஸூப்த பிரபுத்த ந்யாயத்தாலே ,சம்ஸ்கார கதமாய் கிடந்த நாலு வேதங்களையும் ஆநு பூர்வி தப்பாத படி ஸ்மரித்த –திசை முகனார் தங்கள் அப்பன் -என்கிற படியே தனக்கு ஜநகனான சர்வேஸ்வரனோடே-
யோ வை வேதாம்ச ப்ரஹனோதி தஸ்மை –ஸ்வேதாஸ்வர உபநிஷத்–என்னும் படி ஓதின –
சந்த சது முகன் –பெரியாழ்வார் திருமொழி-2-5-8–என்கிற படி சந்தசை நிரூபகமாக உடைய சதுர் முகன் –சலம் கலந்த செஞ்சடை –திருச்சந்த –113-வெண் புரி நூல் மார்வன் -முதல் திருவந்தாதி -46- –மானுரிய தளம் உடையவர் –பெரிய திருமொழி-10-9-4-பிறர் மனை திரிந்து உண்ணும் -திருக் குறும் தாண்டகம் -19-
காமன் உடல் கொண்ட தவத்தார் -நான்முகன்-78- இருக்கிலங்கு திருமொழிவா எண் தோள் ஈசர் -பெரிய திருமொழி-6-6-8- என்று நித்ய ஸ்நான உபவீத கிருஷ்ணாஜினதரான-பிஷான போஜன -இந்திரிய ஜெய -சதா அத்யயன – பரத்வங்களான பிராமச்சர்ய லஷண யுக்தனாய் -ப்ரஹ்மண புத்ராயா சேஷ்டாய – என்கிற படியே தனக்கு ஜேஷ்ட புத்ரனான ருத்ரன் முதலானார்க்கும் – சரணாம் மறை பயந்த -முதல் திருவந்தாதி-60–என்கிற படியே புருஷார்த்த தத் உபாய ஞான சாதனமான வேதத்தை ஒதுவித்தாப் போலே —

பின்னை ஸம்ஹாராநந்தரம்‌ யோக, நித்‌ராஸமா ரூடனாய் ஸ்ருஷ்ட் யுந்முகனான காலத்தில்‌  ““உணர்ந்தாய்‌ மறை நான்கும்‌’” (இ.திருவ.48) என்கிறபடியே நாலு வேதங்களையும்‌ ஸ்மரித்த “திசை முகனார்‌ தங்களப்பன்‌” (திருமொழி 2 – 2- 7) என்கிறபடியே தனக்குப்‌ பிதாவான ஸர்வேஸ்வரனோடே அத்‌யயநம்‌ பண்ணின.–முன்புள்ளவையை யிறே அத்‌யயநம்‌ பண்ணலாவதும்‌-ஸ்மரிக்கலாவதும்‌- ”சந்தச் சதுமுகன்‌” (பெரியா. 2 – 5 8) என்கிறபடியே ப்‌,ரஹ்மாவானவன்‌ ”சலங் கலந்த செஞ்சடை”, (திருச்ச. 113) “வெண் புரிநூல் மார்வன்‌”’(மு.திரூவ. 46) , ““மானுரியதளுமுடையவர்‌‘ (திருமொழி 10 9 – 5) , ““பிறர் மனை திரி தந்துண்ணும்‌”’ (திருக்குறு. 19) , ““காமனுடல் கொண்ட தவத்தான்‌”’ (நா.திருவ.. 79) , ““இருக்கிலங்கு திருமொழி வாய்‌ எண்டோளீசர்‌”’ (திருமொழி 6 – 6 – 9) என்றும்‌, நித்ய ஸ்நாந யஜ்ஞோபவித க்ருஷ்ணாஜிந தாரணமும்‌, பிக்ஷாசரணமும்‌, ஜிதேந்த்‌ரியத்வமும்‌, ஸதா அத்‌யயந பரத்வமுமாகிற ப்‌ரஹ்மசர்ய லக்ஷணத்தை உடையனாய்‌, “ப்‌ரஹ்மண? புத்ராய ஜ்யேஷ்டாய ஸ்ரேஷ்டாய”’ என்கிறபடியே ஜ்யேஷ்ட புத்ரனான ருத்ரன் முதலானார்க்கு சரணா மறை பயந்த தாமரையான்‌’‘ (மூ.திருவ. 60) என்று புருஷார்த்த, தத் ஸாதந ஜ்ஞாந ஸாதநமான வேதத்தை ஓதுவித்தாப் போலே

உணர்ந்தாய் மறை நான்கும் ஓதினாய் நீதி
மணந்தாய் மலர்மகள் தோள் மாலே -மணந்தாய் போய்
வேயிரும் சாரல் வியலிரு ஞாலம் சூழ்
மா யிரும் சோலை மலை——48–நாலு வகைப்பட்ட வேதங்களையும் ஸ்மரித்தாய்–பிரளய காலத்திலே இவை இழந்து கிடக்கிறபடி திரு உள்ளத்திலே பட்டு இவற்றை அடித் தொட்டும் யுண்டாக்க வேணும் என்று கோலி யருளி ஸூப்த பிரபுத்த ந்யாயத்தாலே மறந்தவன் நினைத்தால் போலே -உறங்கினவன் உணர்ந்தாப் போலே -மறைந்து கிடந்த வேதங்களையும் யுண்டாக்கினாய்–அந்த ஆனுபூர்வி தப்பாதபடி ஸ்மரிக்கையாலே- அபௌ ருஷேயத்வமும் நித்யத்வமும் எல்லாம் சித்தித்தது ஆய்த்து வேதத்துக்கு –வாக்யத்துக்கு பத நியதியோபாதியும் போருமாய்த்து -பதங்களில் வர்ண நியதியும் – வேதங்களும் தன்னோடு ஒக்க நித்யமாய்ப் பழையதாய் இருக்கையாலே பண்ணினான் என்னாதே உணர்ந்தான் என்கிறது-பூர்வே பூர்வேப்யோ வாச எத தூசு -காட்டகம் -3-9-50–உளன் சுடர் மிகு சுருதியுள் -என்றும் முது வேத முதல்வன் -திருவாய் 1-6-2- செப்பெட்டைக் கையிலே கொடுத்து நிதியைக் காட்டுமாப் போலே –

திங்களப்பு வானெரி காலாகித் திசை முகனார்
தங்களப்பன்
சாமியப்பன் பாகத்திருந்த வண்டுண்
தொங்கலப்பு நீண் முடியான் சூழ் கழல் சூட நின்ற
எங்களப்பன் எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே–2-2-7–கார்ய வர்க்கத்துக்கு உப லஷணமாக சந்திரனையும் காரணமான பூத பஞ்சகத்துக்கு உப லஷணமாக நாலையும் சொல்லி இவற்றுக்கு அந்தராத்மாவாய் நிற்கிறான் என்றபடி -சதுர் முகனுக்கும் ஜநகன் ஆனவன் –

உந்தி எழுந்த வுருவ மலர் தன்னில்
சந்தச் சதுமுகன் தன்னைப் படைத்தவன்

கொந்தக் குழலை குறந்து புளி யட்டித்
தந்தத்தின் சீப்பால் குழல் வாராய் அக்காக்காய்
தாமோதரன் தன்  குழல் வாராய் அக்காக்காய் -2 5-8 – திரு நாபியிலே கிளர்ந்த அழகிய தாமரைப் பூவிலே உருவம்-அழகு –ஜகத் சிருஷ்டியில் வந்தால் தன்னோடு ஒக்க விகல்ப்பிக்கலாம்படி ஞான சக்திகளால் வந்த வைலஷண்யத்தை உடைய சதுர்முகனை சிருஷ்டித்தவன்-சந்தம் -அழகு–அன்றிக்கே
சந்தம் என்று சந்தஸை வேதத்தை தனக்கு நிரூபகமாக உடையவன் -என்னவுமாம்-

சலம் கலந்த செஞ்சடைக் கறுத்த கண்டன் வெண்டலைப்
புலன் கலங்க வுண்ட பாதகத்தன் வன் துயர் கெட
அலங்கல் மார்பில் வாச நீர் கொடுத்தவன் அடுத்த சீர்
நலம் கொள் மாலை நண்ணும் வண்ணம் எண்ணு வாழி நெஞ்சமே –113-கங்கா ஜலத்தை சாகல்யேந  தன்னுள்ளே அடக்கினதாய் -சிவந்த சடையையும் -ஷீராப்தி சமுத்திதமான விஷத்தாலே கறுத்த கண்டத்தையும் உடைய ருத்ரன் –கங்கா தரத்வமும் -நீல கண்டத்வமும் -இவனுடைய சக்திக்கு ஸூசகமாய் இருக்கிறது –சிவந்த ஜடை என்கையாலே -இந்த சக்தி சாதித்துப் பெற்றது என்கைக்கு ஸூசகம் –இப்போது இவனுடைய சக்தி சொல்லுகிறது என் -என்னில் – குரு பாதக ஹேதுவாய் இருந்துள்ள இந்த துர்மாநத்துக்கு அடி இந்த சக்தி என்கைக்காக –சத் பிரக்ருதிகளுக்கு உண்டான சக்தி சாத்விகருக்கு நிழல் ஆமாப் போலே துர்மாநிகளுக்கு உண்டானது பிறர்க்கும் பாதகமாய் இறே இருப்பது –

பண்புரிந்த நான்மறையோன் சென்னிப் பலியேற்ற
வெண் புரி நூல் மார்பன் வினை தீர புண் புரிந்த
ஆகத்தான் தாள் பணிவார் கண்டீர் அமரர் தம்
போகத்தால் பூமி யாள்வார் –46-அழகிய ஸ்வரத்தை யுடைத்தான வேதத்தைத் தரித்துள்ள ப்ரஹ்மாவினுடைய தலையை ருத்ரன் அறுத்தான் ஆய்த்து-லோக குருவுமாய் தனக்குப் பிதாவுமான அவனுடைய சிரஸை இறே சேதித்தது   –வாமாங்குஷ்ட நகாக்ரேண சிந்னம் தஸ்ய சிரோ மயா -என்கிறபடியே – அவனும் கபாலீத்வம் பவிஷ்யசி -என்று சபிக்கப்ரஹ்ம ஹத்யையாலே அத்தலை யோட்டிலே சிரகாலம் பிஷை புக்குக் கொடு திரிந்தான் ஆய்த்து –வெண் புரி நூல் மார்பன் வினை தீர –
பிராயச்சித்த வேஷத்தோடு கூட சர்வேஸ்வரன் உடைய முன்னே வந்து தோற்றினான் ஆய்த்து –விநீத வேஷத்தோடு ப்ராயசித்தியான படி – மூலை யடியே திரிந்தார் பாதகிகள் ஆனவாறே முழுகித் திரியுமா போலே இவனும் தேவியும் சண்டேஸ்வரனும் அப்படியே-வினை தீர –என்கிற இத்தால் இவனுடைய கர்ம வஸ்யத்வமும் தான் பண்ணின கார்யம் தனக்குப் பரிஹரிக்கப் போகாமையும் சொல்லுகிறது
இத்தால் ஈஸ்வரத்வ சங்கை இல்லை -என்கிறது –

மல்கிய தோளும் மானுரியதளும் உடையவர் தமக்குமோர் பாகம்
நல்கிய நலமோ நரகனைத் தொலைத்த  கர தலத்தது அமைதியின் கருத்தோ
அல்லியங் கோதை யணி நிறம் கொண்டு வந்து முன்னே நின்று போகாய்
சொல்லி யென் நம்பி இவளை நீ யுங்கள் தொண்டர் கைத் தண்டு என்றவாறே –10-9-4—பல தோள்களை உடையனாய் – மானுடைய தோல் என்னுதல் –அன்றிக்கே-மகானான ஆனையினுடைய தோலை உடையனாய் (மானுரியதளும்-மான் -மகான் -மான் யானை -இரண்டின் -உரி அதளும் )-தன் தபோ பலத்தாலே நான் கார்யம் கொள்ள வல்லேன் -என்று கொண்டு துர்மானத்தை உடையனாய் இருக்கிற ருத்ரனுக்கும் திரு மேனியிலே இடம் கொடுத்த சீலாதிசயத்தை நினைத்து இருக்கிறாயோ –

பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர் மனை  திரி தந்து உண்ணும்
முண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர்
உலகம் ஏத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று
மண்டினார் உய்யல் அல்லால் மற்றை யார்க்கு உய்யலாமே -19–உளுத்து அளம் பற்றின சுவர் போலே
பொடி உதிருகிற தலையோட்டையைக் கையிலே ஏந்தி –முடை யடர்த்த சிரம் ஏந்தி -மூ வுலகும் பலி திரிவோன் -என்கிறபடியே நெடும் காலம் கையோட்டைக் கொண்டு திரிந்து இரந்து உண்டான் –வெந்தார் என்பும் சுடு நீரும் மெய்யில் பூசிக் கையகத்து ஓர்
சந்தார் தலை கொண்டு உலகு ஏழும் திரியும் பெரியோன் தான் சென்று என்
எந்தாய் சாபம் தீர் என்ன இலங்கமுது நீர் திரு மார்வில்
தந்தான் சந்தார் பொழில் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே
—1-5-8-)

கண்டு வணங்கினார்க்கு என்னாம் கொல் காமன் உடல்
கொண்ட தவத்தான் குமை உணர்த்த
-வண்டலம்பும்
தார் அலங்கல் நீண் முடியான் தன் பேரே கேட்டு இருந்து அங்கு
ஆர் அலங்கல் ஆனமையால் ஆய்ந்து-78—மன்மதனுடைய உடலை நீறாக்கின தபஸ்ஸை யுடைய ருத்ரனுக்கு-மஹிஷியான உமையானவள் முறை மாறாடி அஞ்ஞான ஞாபனம் பண்ண-

முருக் கிலங்கு கனித் துவர் வாய் பின்னை கேள்வன் மன்னெல்லாம் முன்னவியச்  சென்று வென்றிச்
செருக் களத்து திறல் அழியச் செற்ற வேந்தன் சிரம் துணித்தான் திருவடி நும் சென்னி வைப்பீர்
இருக் கிலங்கு திரு மொழி வாய் எண் தோள் ஈசற்கு  எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட
திருக் குலத்து வளச் சோழன் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே –6-6-8–வேதத்தில் ஸ்ரீ புருஷ ஸூக்தாதிகளை உச்சரியா நின்றுள்ள வாயை உடையராய் எட்டுத் தோள்களையும் உடையராய் இருக்கிற தேவர்க்கு -(ருத்ரன் )-

சரணா மறை பயந்த தாமரை யானோடு
மரணாய மன்னுயிர் கட்கெல்லாம் அரணாய
பேராழி கொண்ட பிரான் அன்றி மற்று அறியாது
ஓராழி சூழ்ந்த வுலகு ———–60–எல்லாருக்கும் ஹிதத்தை சொல்லக் கடவதான வேதத்தை ஓதுவிக்கப் பட்ட ப்ரஹ்மாவோடு –-சரணா மறை பயந்த–என்றத்தை -அரணாய-என்றத்தோடே கூட்டி ஈஸ்வரனுக்கு விசேஷணம் ஆக்கவுமாம் –சரணா மறை பயந்த–அபிமத சித்திகளுக்கு அடைத்த உபாய பேதங்களை யுடைய வேதங்களை ஜகத்துக்கு ஓதுவிக்கும்-ப்ரஹ்ம விதாவான ப்ரஹ்மா மந்த்ர க்ருத் என்பது(ப்ரஹ்ம விதம் வர -ப்ரஹ்மத்தை அறிந்தவர்களின் ஸ்ரேஷ்டரான நான்முகன் )

ஆதுமில் காலத்து எந்தை-திருவாய் -3-3-4- –என்றும் –ஒன்றும் தேவும்-திருவாய் -4-10-1- -இத்யாதிப் படியே
ஒன்றும் இல்லாத சம்ஹார காலத்திலே-நாம ரூபங்களை இழந்தவோ பாதி-சத்தையும் இழந்து போகாமே எந்தையான முறையாலே தன் மேல் ஏறிட்டுக் கொண்டு நோக்கி-மீளவும் கரணாதிகளை தந்து , ஞான விகாசத்தை பண்ணின –வாய் முதல் அப்பன்-திருவாய் -7-9-3- -என்கிற வாய்த்த காரண பூதனான உபகாரகன்-பீதக வாடை பிரானார் பிரம குருவாக வந்து -பெரியாழ்வார் -5-2-8–என்கிற படியே தானே ஆசார்யனாய் –-இராப் பகல் ஓதுவித்து பெரியாழ்வார் -5-2-3–என்கிற படியே -திவாராத்ர விபாகம் அற-என் முன் சொல்லும் -திருவாய் -7-9-2–என்கிற படியே – முன் உருச் சொல்ல – திரு நாமச் சொல் கற்றனமே -திருவிருத்தம் -66–என்று அநூச்சாரணம் பண்ணினேன் என்று இப்படியே அவனோடு ஓதின இவரும்-

ஆதுமில்‌ காலத்தெந்தை”’ (திருவா. 3 – 4 – 4) என்கிறபடியே-சேதநாசேதநாத்மகமான ஸகல பதார்த்தங்களும்‌ வஸ்துத்வ-நாம பாக்த்வங்களை இழந்த காலத்தில்‌ இவற்றைத்‌ தன் பக்கலிலே ஏறிட்டுக் கொண்டு நோக்கி, “எந்தை” என்கிற படியே ஸ்வாமியா யிருக்கிறவன்‌. “என்‌ வாய் முதலப்பன்‌’‘ (திருவா. 7 – 9 – 3) எனக்கு வாய்த்த ப்ரதமோபகாரகன்‌ என்கிற. ““பீதகவாடைப் பிரானார்‌ பிரம குருவாகி’” (பெரியா. 5 – 2 – 8) என்கிறபடியே ஸர்வேஸ்வரன் தானே இவர் தமக்கு ஆசார்யனாய் வந்து ““எயிற்றிடை மண் கொண்ட எந்தை இராப் பகலோதுவித்து”’ (பெரியா. 5 – 2 – 3) என்கிறபடியே திவா ராத்ரமோதுவித்து. இப்படி ஓதுவிக்குமிடத்தில்‌ “என்‌ முன்‌ சொல்லும்‌ மூவுருவாம்‌ முதல்வனே”’(திருவா. 7 – 9 – 2) என்கிறபடியே ஈஸ்வரன்‌ முன்னுருச் சொல்ல, “’திருநாமச் சொல்‌ கற்றனமே” (திருவிரு. 64) என்று அநூச்சாரணம்‌ பண்ணினேன்‌ என்று அவனோடே ஓதின இவரும்‌.

சாதி மாணிக்கம் என்கோ! சவி கொள் பொன் முத்தம் என்கோ!
சாதி நல் வயிரம் என்கோ! தவிவு இல் சீர் விளக்கம் என்கோ!
ஆதி அம் சோதி என்கோ! ஆதி அம் புருடன் என்கோ!
ஆதும் இல் காலத்து எந்தை அச்சுதன் அமலனையே.–3-4-4–எனக்கு ஒரு துணை அல்லாத சம்சார அவஸ்தையில் தன்னோடே உண்டான சம்பந்தத்தை அறிவித்தவன்-எனக்குத் தன்னைப் பெறுகைக்கு முதல் ஒன்றுமில்லாத காலத்திலே, தான் எந்தையான முறையை எனக்கு அறிவித்து, பின்பு ஒரு காலமும் நழுவ விடாதே பாதுகாத்து, இதுதான் என்பக்கல் ஒரு பிரயோஜனம் கொண்டன்றியே நிர்ஹேதுகமாகத் தன் பேறாகப் பாதுகாத்தவனை.

ஆ முதல்வன் இவன் என்று தன் தேற்றி என்
நா முதல் வத்து புகுந்து நல் இன்கவி
தூமுதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என்
வாய் முதல் அப்பனை என்று மறப்பனோ!
–7-9-3–என்னை உபகரணமாகக் கொண்டு -கர்த்தாவும் தானேயாய் -கர்மீபவிப்பானும் தானே யானான்-எனக்கு வாய்த்த -காரண பூதனான -உபகாரகனை-இனி ஒரு நாளும் மறக்க உபாயம் இல்லை-

ஏதங்கள் ஆயின எல்லாம் இறங்க விடுவித்து என்னுள்ளே
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து
போதில் கமல வல் நெஞ்சம் புகுந்தும் என் சென்னித் திடரில்
பாத இலச்சினை வைத்தார் பண்டு அன்று பட்டினம் காப்பே -5- 2-8 –-ஸ்ரீ சர்வேஸ்வரத்வ சிஹ்னமுமாய் –
ஸ்ரீ புருஷோத்வ லஷணமுமாய் இருக்கும் திருப் பீதாம்பரத்தை உடைய சர்வேஸ்வரன்-ப்ரஹ்மத்தை உபதேசிக்கிறவன்-உத்பாதக ப்ரஹ்ம பித்ரோர் கரீயான் பிரமத பிதா –என்னக் கடவது இறே-ப்ரஹ்ம சப்தம் ஞான வாசி-ஈஸ்வரத் பிடார் கொண்டு திருத்த ஒண்ணாமல் ஆசார்யனாய் இறே திருத்துவது (மண் மிசை மாதவன் —-நண்ணறு ஞானம் தலைக்கொண்டது அண்ணல் ராமானுஜன் வந்து தோன்றிய அப்பொழுதே )

வயிற்றில் தொழுவைப் பிரித்து வன் புல சேவை அதக்கி
கயிற்றும் அக்கும் ஆணி கழித்து காலிடை பாசம் கழற்றி
எயிற்றிடை மண் கொண்ட எந்தை யிராப் பகலா ஓதுவித்து என்னை
பயிற்றிப் பணி செய்யக் கொண்டான் பண்டன்று பட்டினம் காப்பே -5- 2-3 –பிரளய ஆவர்ணத்திலே அகப்பட்டு கிடக்கிற பூமியை எடுத்தால் போலே – சரீர வச்யனான என்னை எடுத்த ஸ்வாமி –திவா ராத்ர விபாகம் அற-சர்வ காலமும் -என்றபடி –என்னை சிஷிப்பித்து –அதாவது –கர்ப்ப வாசமும் —இந்திரிய வச்யத்வமும் –கர்ம வச்யத்வமும் –யம வச்யத்வமும் – த்யாஜ்யம் என்னும் அத்தை அறிவித்து-தன்னுடைய சர்வ சேஷித்வத்தையும் – நிரதிசய போக்யதையும் – தமக்கு சேஷத்வம் ஸ்வரூபம் என்னும் இடத்தையும் ஆய்த்து -ஒதுவித்து–இத்தை அனுஷ்டான பர்யந்தமாக்கி – செய்யேல் தீ வினை ( திருவாய் -2-9-3 ) -என்று-ஓதுவித்த பிரயோஜனம் பெற்ற படி – நித்ய கைங்கர்யம் கொள்ளக் கடவோம் -என்று திரு உள்ளத்தாலே அறுதி இட்டு -கொண்டபடி –

என் சொல்லி நிற்பன்?என் இன்னுயிர் இன்று ஒன்றாய்
என் சொல்லால் யான் சொன்ன இன்கவி என்பித்துத்
தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த மாயன் என்
முன் சொல்லும் மூவுருவாம் முதல்வனே.–7-9-2-
–அவன் முன்னே சந்தை இட பின்னே சொன்னேன் –தானே சொன்னான் ஆகில் ஸ்ரீ கீதை போலே வறமுறுகலாம் இறே –அது தானே ஏது போலே என்னில் த்ரி மூர்த்திகள் என்று தன்னையும் கூட எண்ணும் படி ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு அடியானால் போலேயும் -ப்ரஹ்மாவை ஓதுவித்து தேவர்களுக்கு வெளிச்சிறப்பு பண்ணி அத்தை அவன் தலையிலே ஏறிட்டால் போலேயும் -ருத்ரனுக்கு அந்தராத்மாவாய் நின்று திரிபுர தஹனம் பண்ணி அவன் தலையிலே ஏறிட்டால் போலேயும் தானே காரியம் செய்து பிறர் கையிலே ப்ரஸித்தியை ஏறிடுகை பண்டே ஸ்வபாவம் என்கை –

இருக்கார் மொழியால் நெறி இழுக்காமை உலகளந்த
திருத் தாளிணை நிலத் தேவர் வணங்குவர் யாமுமவா
ஒருக்கா வினையொடும் எம்மோடும் நொந்து கனியின்மையின்
கருக்காய் கடிப்பவர் போல் திருநாமம் சொல் கற்றனமே – -64–பூர்ண அனுபவம் பெறாமையாலே சத்தை கிடைக்கைக்காக அவன் திரு நாமத்தைச் சொல்லுகையை அப்யஸித்தோம் (இத்தனை ) என்றபடி-இல்லாமையால் கருக்காய் கடிப்பார் போல் ஆயிற்று- இவருடைய அபிநிவேசத்துக்கு திரு நாமம் –அவனைக் கண்ணாலே கண்டு கையாலே அணைக்க-ஆசைப்பட்டாருக்கு அவன் பேரைக் கொண்டு என் செய்வார்-அதிகாரம் இல்லை யாகிலும் திரு நாமம் மாத்ரம் சொன்னேன் – இத்தை வ்யாஜ்யமாக்கி நிர்ஹேதுகமாக கடாஷித்தான் என்றபடி –அவர்களைப் போல் பக்தி பரவசனாய் அனுபவிக்க பெறாமை இழந்தேன் என்றும் –அவர்கள் அனுபவிக்கும் விஷயத்தை கிட்டி அவத்யத்தை விளைத்தேன் என்றும் விஷாதத்திலே தாத்பர்யம்-

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் -என்று தொடங்கி– குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித் திரிவன் -என்று ஸ்வாச்சார்ய பிரேமத்தையும்-நன்மையால் மிக்க நான் மறை யாளர்கள் புன்மையாய் கருதும் படியான என்னை அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும் தன்மையான் சடகோபன் -என்று க்ருதக்ஜைதையை முன்னிட்டு கொண்டு – ஓத வல்ல பிராக்கள்-திருவாய்-9-1-11- -என்று இத்தை அப்யசிக்க வல்ல உபகாரகர் என்னும் படி .. ஸ்ரத்தா பூர்வகமாக ஓதும் ஸ்ரீ மதுர கவிகள் போல்வாரை-கன்மின்கள் என்று உம்மை யான் -என்கிற படியே -இத்தை அப்யசி யுங்கோள்–என்று சொல்லி ,-சொல் பயிற்றிய -திருவாய்-9-5-8–என்கிற படியே -இச் சப்தத்தை அப்யசிக்க-வேதமானது -ஓதுவார் ஒத்து -என்று அத்யேதாக்களை இட்டு நிரூபிக்கபடுமது ஆகையாலே ,ஆதர்வணம் ,தைத்ரியம் காண்வம் என்று பேர் பெற்றால் போலே , இவர் இதுக்கு பிரதமாத்யேதாவனது கொண்டு -இதுவும் சடகோபன் சொல் -திருவாய்–1-2-11–என்று பேர் பெற்றது என்கை

‘நாவினால்‌ நவிற்றின்பமெய்‌தினேன்‌”’ (க.நு.சி. 2) என்று தொடங்கி ““குருகூர் நம்பிப் பாவினின்னிசை பாடித் திரிவன்‌”” என்றும்‌, “நன்மையால்‌ மிக்க நான்மறையாளர்கள்‌ புன்மையாகக்‌ கருதுவரா”ம் படியான “என்னை ஆண்டிடும்‌ தன்மையான்‌ சடகோபன்‌’‘ (க.நு.சி,4) என்கிற ப்ரதிபத்தியை யுடைய *ஓத வல்ல பிராக்களான ஸ்ரீமதுரகவிகள் போல்வாரை ““கன்மின்களென்றும்மை யான்‌ கற்பியா வைத்த மாற்றம்‌” (திருவா, 6 – 8 – 6) என்கிறபடியே இப் ப்ரபந்தத்தை அப்‌யஸியுங்கோள்‌ என்று ““சொல் பயிற்றிய நல் வளமூட்டினீர்‌”” (திருவா. 9 – 5 – 8) என்கிறபடியே சொல்லிச்‌ சொல்லுவிக்க, வேதமானது “’ஓதுவாரோத்தெல்லாம்‌ ‘? (திருவா, 3 – 1 – 6) என்கிறபடியே அத்‌யேதாக்களை யிட்டு, அதர்வணமென்றும்‌, தைத்திரீயம்‌ என்றும்‌ பேர் பெற்றாப் போலே இதுவும்‌ “சட கோபன் சொல்‌”” என்கையாலே ‘திருவாய்மொழி’ என்று பேர் பெற்றது 

ஆதும் இல்லை மற்று அவனில் என்று அதுவே துணிந்து
தாது சேர் தோள் கண்ணனை குருகூர்ச் சடகோபன் சொன்ன
தீதிலாத ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப்பத்தும்
ஓத வல்ல பிராக்கள் நம்மை ஆளுடையார்கள் பண்டே-9-1-11-–சம்சாரத்தின் தண்மையும்-ஈஸ்வரனே ப்ராப்ய ப்ராபகங்கள் என்றும் இறே இதில் சொல்லிற்று -இத்தை அப்யஸித்து நல்வழியே போமிது இறே உபகாரகராகை யாவது–அத்தை அப்யசிக்கைக்கு ஹேதுவான சரீர பரிக்ரஹம் பண்ணின காலமே பிடித்து நாதர் என்கிறார் –

என்மின்னு நூல்மார்வன் என்கரும்பெருமான் என்கண்ணன்
தன்மன்னு நீள்கழல்மேல் தண்துழாய் நமக்கன்றி நல்கான்
கன்மின்கள் என்று உம்மை யான் கற்பியா வைத்த மாற்றம் சொல்லிச்
சென்மின்கள் தீவினையேன் வளர்த்த சிறு பூவைகளே!–6-8-6—நீங்கள் அபேக்ஷியாது இருக்க -நான் சொல்லுங்கோள் என்று -ரஷ்யங்களான உங்களை -ரஷகை யான நான் -கற்பித்து வைத்த மாற்றம் -தண்துழாய் நமக்கன்றி நல்கான்-என்கின்ற மாற்றத்தை என்னுதல் –இதுவோ தக்கவாறு என்று கற்பித்த மாற்றத்தை என்னுதல்–அவனுக்கு மறுமாற்றத்துக்கு அவகாசம் இல்லாத படி -கிட்டினால் -என்று இராதே -வழியே பிடித்து சொல்லிக் கொண்டு செல்லுங்கோள்-

உயிர்க்கு அது காலன் என்று உம்மை யான் இரந்தேற்கு நீர்
குயிற் பைதல் காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்
தயிர் பழம் சோற்றோடு பால் அடிசிலும் தந்து சொல்
பயிற்றிய நல் வளம் ஊட்டினீர் பண்பு உடையீரே
–9-5-8—தயிரும் பழம் சோறும் -பாலும் வெஞ்சோறும் அவ்வவ காலங்களுக்கு உசிதமாகத் தந்து திரு நாமங்களை கற்பித்ததற்கு பிரதியுபகாரம் பண்ணினி கோள்-நல்ல சம்பத்தை புஜிப்பித்தி கோள் -நான் காலம் தோறும் உங்களுடைய ரக்ஷணம் பண்ணிப் போந்தேன் -நீங்களும் இவ்விடங்களில் நலிந்து போந்தி கோளே-

ஓதுவார் ஒத்து எல்லாம் எவ்வுலகத்து எவ்வெவையும்
சாதுவாய் நின் புகழின் தகையல்லால் பிறிதில்லை
போது வாழ் புனந்துழாய் முடியினாய் பூவின் மேல்
மாது வாழ் மார்பினாய் என் சொல்லி நான் வாழ்த்துவனே -3-1-6-ஓதுவார் என்கையாலே -அதிகாரி வைவித்யத்தைச் சொல்லுகிறது – ருகாதி சதுர் வேதங்களும் அத்யேத்ரு பேதத்தாலே பிறந்த சாகா பேதங்களும் –ஆக அத்யேத்ரு பேதத்தால் சாகா பேதங்களாய்க் கொண்டு பிரி யுண்ட வேதங்கள் எல்லாம்

சேரத் தடத் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
சீர்த் தொடை யாயிரத்து ஒர்த்த விப்பத்தே –1-2-11-ஹிதம் -நன்மை சொல்ல என்று இழிந்து அஹிதத்தை -தீமையைச் சொல்லுவான் ஒருவன் வார்த்தை அன்று; ஆப்த தமரானவர் வார்த்தை என்கை.

ஆக –அத்யயன -சூரணை-37-இத்யாதி வாக்யத்தில் சந்தங்கள் ஆயிரம் என்று பிரஸ்துதமான திரு வாய் மொழியின் வேதத்வத்தை –எவ்வுலகத்து -சூரணை -39 -இத்யாதி வாக்கியம் தொடங்கி இவ்வளவாக சாதித்தார் ஆய்த்து-

–——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதயம்‌–ஸ்ரீ திராவிட ப்‌,ரஹ்ம ஸூத்ரம்‌ – 4-ஆசார பாதம்-4-ஸாஸ்த்ர தாத்பர்ய நிஷ்டாசாராதிகரணம்‌ -(19-38-ஸூரணைகள்) -ஸ்ரீ மணவாள மா முனிகள் -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் வியாக்யானங்கள்–

July 1, 2026

இனி மேல் இந்த சாஸ்திர நிஷ்டராயும்-தாத்பர்ய நிஷ்டராயும் இருக்கும் முமுஷுக்கள் படிகளைச் சொல்லுகிறது-இனி மேல்‌ ஸாஸ்த்ரோப லக்ஷிதமான பக்தி நிஷ்டனுடையவும்‌, தாத்பர்யோப லக்ஷிதமான பிரபத்தி நிஷ்டனுடையவும்‌ ப்ரதிபத்திகளைச்‌ சொல்லுகிறது 

சாஸ்திரிகள் தெப்பக் கரையரை போலே இரண்டையும் இடுக்கி பிறவிக் கடலை நீந்த -சாரஜ்ஞர் விட்டத்தில் இருப்பாரைப் போலே இரு கையும் விட்டு கரை குறுகும் காலம் எண்ணுவார்கள்-சூரணை-19-

அதாவது-ஆத்மா வா அரே த்ரஷ்டவ்யாஸ் ஸ்ரோதவ்ய மந்தவ்ய நிதித்யாசி தவ்ய–ப்ருஹதாரண்யம் –
ஆத்மேத் யேவோபாசீத–ப்ருஹதாரண்யம் – ஒமித் யாத்மானாம் த்யாயத-முண்டகம் – என்று சம்சார நிவ்ருத்தி பூர்வக பகவத் பிராப்தி சாதனமாக பகவத் உபாசனத்தை விதித்து அம்ருதஸ் யைஷ சேது-முண்டகம் – பலமதே உபபத்தே-ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -3-2-8– என்று பகவானே அதற்க்கு பல பிரதானனாகவும் சொல்லும் சாஸ்த்ரத்தில் நிஷ்டர் ஆனவர்கள்
ஆறு நீஞ்சுவார் தெப்பத்தை ஒரு கையிலே இடுக்கி தாங்களும் ஒரு கை துழாவுமா போலே
ஸ்வ யத்னமும் தத் சாத்திய பகவத் கிருபையும் ஆகிய உபயத்தையும் அவலம்பித்து கொண்டு -பிறவி கடல் நீந்துவார்க்கே -திருவாய் -2-8-1–என்கிற படியே சம்சார சாகரத்தை கடக்க தேட–ஸ்வ யத்ன நிஷேத பூர்வகமாக ஆத்மாவின் பகவத் ஏக உபாயத்தை பிரதி பாதிக்கிற சாஸ்திர சாரமான திரு மந்த்ரஜ்ஞர் ஆனவர்கள் ஓடம் ஏறினவர்கள் தீரகமனார்தமான ஸ்வ யத்னத்தையும் தெப்பத்தையும் கை விட்டு –கரை குறுவது எப்போது -என்று பார்த்து கொண்டு அதன் விட்டத்திலே இருக்குமா போலே சம்சார ஆர்ணவ மக்நாநாம் விஷயாக்ராந்த சேதஸாம் விஷ்ணு போதம் விநாநாந்யத் கிஞ்சித் அஸ்தி பாராயணம் –ஸ்ரீ விஷ்ணு தர்மம்-என்கிற படியே அக்கரையும் இக்கரையும் ஊடுருவ நின்று சம்சார சமுத்ரத்தை கடத்தும்
வைகுந்தன் என்பதோர் தோணியை-நாச்சியார் -5–4– சம்சார நிஸ்தாரமாகப் பற்றி-தத் ஞான சக்தியாதி அனுசந்தானத்தாலும் ஸ்வ பாரதந்த்ர்யாதி அனுசந்தானத்தாலும் நிர் பரர் ஆகையாலே இரண்டு கையும் விடுமா போலே ஸ்வ யத்ன ரூப உபாசனாதியையும் தத் சாத்திய பகவத் கிருபையையும்
அவலம்பிக்கையை விட்டு கேவல பகவத் கிருபையே உத்தாரகம் என்று அத்யவசித்து
கூவிக் கொள்ளும் காலம் இன்னும் குறுகாதோ
-திருவாய் -6–9–9 -என்றும்
ஆக்கை விடும் பொழுது எண்ணே–திருவாய் -1–2–9-என்று சொல்லுகிற படியே
பகவத் பிராப்தி ஆகிய கரையை குறுகைக்கு ஈடான கால சிந்தனை பண்ணா நிற்பார்கள் என்கை-இத்தால் சாஸ்த்ரஜ்ஞர் உடையவும் சாரஜ்ஞர் உடையவும் பிரபத்தி க்ரமம் சொல்லிற்று ஆயிற்று-

ஆறு நீஞ்ச வந்தவன்‌ தெப்பத்தை ஒரு கையிலே இடுக்கியும்‌, தானும்‌ ஓரு கையாலே நீஞ்சுமாப் போலே, பக்தி நிஷ்டனும்‌, ஸ்வ யத்நமும்‌ ஸ்வ யத்ந ஸாத்‌யமான பகவத் க்ருபையையுங் கொண்டு ”புணைவன்‌ பிறவிக் கடல்‌ நீந்துவார்க்கே”‘ (திருவாய்‌, 2 – 8 – 1) என்கிறபடியே ஸம்ஸார ஸாக,ரத்தைக்‌ கடக்கத்‌ தேடும்‌. (ஸாரஜ்ஞர்‌) தாத்பர்ய நிஷ்டரான ப்ரபந்நரானவர்கள்‌. (விட்டத்திலிருப்பாரைப்‌ போலே) ஆற்றின்‌ கரையேறிப்‌ போகிறவன்‌ அதில்‌ யத்நத்தில்‌ அந்வயமற்று விட்டத்திலிருக்குமாப் போலே ; ”விஷ்ணு போதம்‌ விநா நாந்யத் கிஞ்சிதஸ்தி பராயணம்‌?’ ( ) என்கிறபடியே அக்கரையோடு உருவ நின்று நடத்துகிற ‘*வைகுந்தனென்பதோர்‌ தோணி?” (நா. திரு. 5 – 4) என்கிற விஷ்ணு போதத்திலே இருந்து அவனுடைய ஜ்ஞாந ஸக்த்யாதி, கு,ணாநுபவத்தாலும்‌ ஸ்வ பாரதந்தர் யாநுஸந்தாநத்தாலும்‌ நிர்பரராய்‌ மேல்‌ உபாயதயா கர்த்தவ்ய மில்லாமையாலே, இரு கையும்‌ விட்டு – அசேதந க்ரியா கலாபத்தையும்‌ தத் ஸாத்‌யமான பகவத் க்ருபையையும்‌ விட்டு – கேவல பகவத் க்ருபையே தங்களுக்கு உத்தாரகம்‌ என்று அத்‌யவஸித்துக்‌ கரை குறுகும்‌ காலமெண்ணுவர்கள்‌.கூவிக் கொள்ளுங்கால மின்னம்‌ குறுகாதோ” (திருவாய்‌. 6 – 9-9) என்றும்‌, “ஆக்கை விடும் பொழுதெண்ணே’” (திருவாய்‌, 1 – 2 – 9) என்றும்‌ சொல்லுகிறபடியே ப்ராப்தியைச்‌ சிந்தித்திருப்பார்கள்‌,

அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம்
புணர்வது இருவரவர் முதலும் தானே
இணைவனாம் எப்பொருட்கும் வீடு முதலாம்
புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே –2-8-1-–சம்சாரம் ஆகிறது ஒரு கடல் -அது நம்மால் கடக்க அரிது -ஒரு சர்வ சக்தியைப் பற்றி கடக்க வேணும் -என்று நினைப்பார்க்கு ப்ரதி பூவாய்த் தலைக்கு கட்டிக் கொடுக்கும் சர்வ பர நிர்வாஹகன் இறே– ப்ரதி பூ விஷ்ணு போதம் என்கையாலே தெப்பம் என்னவுமாம்

என்புருகி இனவேல் நெடும் கண்கள் இமை பொருந்தா பல நாளும்
துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன்
அன்புடையாரைப் பிரிவுறு நோயது நீயுமறிதி குயிலே
பொன்புரை மேனிக் கருளக் கொடி யுடைப் புண்ணியனை வரக் கூவாய்–5-4—உகந்து அருளின நிலங்களிலே புக்கு அனுபவிக்கக் கோலி அங்கு அணைத்தல் வார்த்தை சொல்லுதல் செய்யக் காணாமையாலே அப்படிப் பரிமாறின அவதாரங்களிலே போய் அவை தீர்த்தம் பிரசாதித்து போகையாலே-பரத்வத்து அளவும் சென்று அவ்விருப்புத் தானும் பெரும் கடலுக்கு ஒரு மரத் தோணி போலே யாம்படியாக அபி நிவேசம் கரை புரண்டு அதனுடைய அலாபத்தாலே படுகிற அலமாப்பு இருக்கிறபடி –

ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
பாவி யேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ?
தாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ.–6-9-9-
–வரையாதே எல்லார்க்கும் கொடுக்கும் நிரதிசய போக்யமான திருவடிகளில் -அழைத்துக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ –விஷயாந்தர தர்சன மாத்திரத்திலே முடியும் படி யானாலும் அணித்தாகாதோ -தாவி வையம் கொண்ட -என்கிறது உபாய அம்சம் –தடந்தா மரைகள் -என்கிறது உபேய அம்சம் –கூவிக் கொள்ளும் காலம்-என்று தாம் சென்று காண்கை அன்றிக்கே தானே அழைத்துக் காட்டுகை முறையாகையாலே கிட்டும் பிரகாரம் சொல்லுகிறது-

ஒடுங்க அவன் கண் ஓடுங்கலும் எல்லாம்
விடும் பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணே
–1-2-9—ஈச்வரோஹம் என்று இருக்கை தவிர்ந்து -அவனுக்குப் பிரகாரமாக அவன் அபிமானத்துக்கு உள்ளே அந்தர்பவிக்கவே-எல்லாம் விடும்
ஒடுங்கல் -ஒடுக்கத்தை பண்ணுமவை – ஆத்மாவுக்கு சங்கோசகங்களான அவித்யாதிகள் எல்லாம் போம் –ஒடுங்கல் -வந்தேறி யாய் -ஒடுங்கிக் கிடந்தவை என்னுமாம்-ஸ்வரூபாதி ரேகியாய் ஒடுங்கிக் கிடந்த அவித்யாதிகள் எல்லாம் போம்-எல்லாம் என்கையாலே -பஜன விரோதியோடு -பிராப்தி விரோதியோடு -வாசி அற சர்வமும் நசிக்கும் என்கிறது-பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணே-
பின்பு சரீர அவசானமே விளம்பம் காமிநி தன் உடம்பில் அழுக்கைக் கழற்றி போகத்திலே அந்வயிக்க அவசர ப்ரதீஷியையாய் இருக்குமா போலே சரீர அவசானத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கை

இவர்களுக்கு இவ் ஆகாரங்கள் உண்டாகுகைக்கு அடி இன்னது என்கிறது-இவர்களுக்கு அவ்வதி,காரமுண்டாகைக்கு ஹேதுவான ஸ்வரூப ஜ்ஞாந தாரதம்யத்தைச்‌ சொல்லுகிறது

இவை ஸ்வரூபத்தை உணர்ந்து உணர்ந்து உணரவும் உணர்வைப் பெற ஊர மிக உணரவும் உண்டாம்-சூரணை -20-

அதாவது சாஸ்த்ரிகள் ஆனவர்களுக்கு-உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து
உருவியந்த இந் நிலைமை உணர்ந்து உணர்ந்து உணரிலும்
–திருவாய் -1-3-6- என்கிற படியே
ஆத்ம ஸ்வரூபத்தை ஜ்ஞப்த்தி மாத்ரம் அன்றிக்கே-நித்ய ஞான குணகமாய்-அந்த ஞானத்தாலே எங்கும் ஒக்க வியாபித்து-தேஹத்தில் காட்டில் வேறு பட்டு இருக்குமதாய்-அந்த ஜ்ஞாத்ருத்வ பலாயாத கர்த்ருத்வ போக்த்ருத்வ சஹிதமாய் பகவத் சேஷமாய் இருக்கும் என்று ஸ்ரவண மனனங்களாலே சாஷாத் கரிக்கவே ஸுவ யத்னத்தாலே சம்ஸார நிஸ்தரணம் பண்ண தேடுகை யாகிற இது உண்டாம்-சாரஞ்ஸ்தஞரானவர்களுக்கு ஆத்ம ஸ்வரூப வைலஷண்யத்தை தர்சிப்பைக்கு உடலாக
உணர்வும் உயிரும் உடம்பும் மற்று உலப்பினவும் பழுதே யாம் உணர்வை பெற ஊர்ந்து -திருவாய் -8–8–3-–என்கிற படியே வைஷயிக ஞானமும் பிராணனும் சரீரமும் மற்றும் பரிசேத்யமான பிராகிருதி விகாரங்களும் , பிரக்ருதியும் ஹேயம் என்னும் அறிவை பெரும் படி நிர்ஹேதுகமாக ஈஸ்வரன் நடத்த
மெய்ம்மையை மிக உணர்ந்து-திருமாலை -38 -என்கிறபடியே-ஆத்ம ஸ்வரூபத்தை-தேஹாதி விலக்ஷணமாய் ஞான ஆனந்த ஸ்வரூபமாய் ஞாத்ருவாதி குணகமாய் ததீய சேஷத்வ பர்யந்த தத் சேஷத்வ யுக்தமாய் தத் காஷ்டையான பார தந்த்ர்ய யோக்யதை ஏக வேஷமாய் இருக்கும் என்றே உணரவே ஸ்வ பரத்தை அவன் மேல் புகட்டு ஸ்வ யத்ன ரஹிதையராய் இருக்கிற இது உண்டாம் என்கை–இத்தால் இவர்கள் உடைய ஸ்வரூப ஜ்ஞான ஆகார தார தம்யமே கீழ் சொன்ன ஆகாரங்கள் இவர்களுக்கு உண்டாகுகைக்கு ஹேது என்றது ஆயிற்று-

(உணர்ந்துணர்ந்துணரவும்‌) ‘உணர்ந்துணர்ந்திழிந்தகன்று உயர்ந்து உருவியந்த இந் நிலைமை உணர்ந்துணர்ந்துணரிலும்‌’” (திருவாய்‌. 1 – 3 – 6) என்கிறபடியே ஆத்ம ஸ்வரூபத்தை ஜ்ஞப்தி மாத்ர மன்றிக்கே நித்ய ஜ்ஞாந குணகமாய்‌ தேஹேந்தரியாதி, விலக்ஷணனாகவும்‌, ஜ்ஞாதாவாகவும்‌, கர்த்தாவாகவும்‌ பகவச் சேஷமாகவும்‌ ஸ்ரவண மநநாதிகளாலே ஸாக்ஷாத்கரித்த ஸாஸ்த்ரிகளுக்கு அந்த வ்ருத்தி உண்டாம்‌. (உணர்வைப்‌ பெறவூர மிகவுணர்வுமுண்டாம்‌)‘உணர்வுமுயிருமுடம்பும்‌ மற்றுலப்பிலனவும்‌ பழுதேயாம்‌ உணர்வைப் பெறவூர்ந்து ” (திருவாய்‌. 8. 8.3) என்கிறபடியே தேஹேந்த்‌ரியாதிகளில்‌ வ்யாவ்ருத்தமான ஆத்ம ஸ்வரூபத்தை ஸாக்ஷாத்கரிக்கும்படி நிர்ஹேதுகமாக ஈஸ்வரன்‌ நடத்த “மெய்ம்மையை மிக வுணர்ந்து’‘ (திருமாலை 38) என்கிறபடியே ததீய ஸேஷத்வ பர்யந்தமாக உணர ப்ரபந்நனுக்கு இந்த ப்ரதிபத்தி உண்டாம் –

உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உருவியந்த இந்நிலைமை
உணர்ந்து உணர்ந்து உணரிலும்
இறை நிலை உணர்வு வரிது உயிர்காள்
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் மனப்பட்ட தொன்றே –1-3-6–உணர்ந்து உணர்ந்து -ஞாத்ருத்வ ஸ்வபாவனாகையாலே என்றும் ஓக்க உணருகையே ஸ்வபாவமாக உடையனாய்
இழிந்து அகன்று உயர்ந்து -அந்த ஞானம் நிஷ்க்ருஷ்ட வேஷத்தில் அபரிச்சின்னமாகையாலே தத் த்வாரா பத்து திக்கிலும் வியாபித்து-உருவியந்த -உரு வியந்த -ரூப யோக்கியமான அசித்தில் காட்டில் வேறு பட்டு இருந்த -இயத்தால்-வேறுபாட்டால் விலக்ஷணமாய் இருத்தல்-இந் நிலைமை-இந்த ஆத்மாவின் நிலைமையை -இந்நிலைமை என்று யுக்த பிரகார வைலக்ஷண்யம் ஆத்மாவுக்கு ஒழிய இல்லை என்கிற ஸம்ப்ரதிபத்தியைச் சொல்லுகிறது –-உணர்ந்து உணர்ந்து உணரிலும் – ஸ்ரவணத்தாலே உணர்ந்து -அதுக்கு மேலே மனனத்தாலே உணர்ந்து -யோகத்தால் சாஷாத் கரித்து உணர்ந்தாலும்-இறை நிலை உணர்வு வரிது -சர்வேஸ்வரன் ப்ரஹ்ம ருத்ரர்கள் நடுவே தன்னை மறைத்து நிற்கிற நிலை விவேகித்து அறிய அரிது–உயிர்காள்-சேதனர் ஆனபடியால் விவேகித்து அறியும் ஸ்வ பாவரானவர்களே-அரி அயன் அரன் என்னும் இவரை-அரி அயன் அரன் என்று பிரசித்த ரானவர்களை-உணர்ந்து உணர்ந்து –அவர்கள் குண விபூதியாதிகளை இட்டுப் பலகாலும் ஆராய்ந்து
உரைத்து உரைத்து –தத் ப்ரதிபாதகமான ப்ரமாணங்களையும் பலகாலும் வ்யவஹரித்துப் பார்த்துப் பார்த்து-மனப்பட்ட தொன்றே-நெஞ்சிலே ஈஸ்வரனாகப் பட்ட ஒரு வஸ்துவை – வ்யாஹரன் மாம் அநு ஸ்மரந்–என்கிறபடியே-உணர்ந்து உணர்ந்து -தத் குண விக்ரஹாதிகளைப் பலகாலும் அநு சந்தித்து
உரைத்து உரைத்து இறைஞ்சுமின் –தத் வாசகமான மந்த்ர நாமாதிகளைப் பலகாலும் வ்யவஹரித்து உபாசியுங்கோள் –

உணர்விலும் உம்பர் ஒருவனை அவனது அருளால் உறல் பொருட்டு என்
உணர்வினுள்ளே யிருத்தினேன் அதுவுமவன தின்னருளே
உணர்வும் உயிரும் உடம்பும் மற்று உலப்பினவும் பழுதேயாம்
உணர்வைப் பெற ஊர்ந்திறவேறி யானும் தானாய் ஒழிந்தானே–8
-8-3—உணர்வும்-வைஷயிக ஞானமும்
உயிரும்-பஞ்ச வ்ருத்தி பிராணனும் உடம்பும்-சரீரமும்-மற்று உலப்பினவும் -மற்றும் அபரிச்சேத்யமான மஹதாதி ப்ரக்ருதி விகாரங்களும் -ப்ரக்ருதியும்-பழுதேயாம்-உணர்வைப் பெற ஊர்ந்து–இவை ஹேயம் என்னும் அறிவை நான் பெறும்படி நடத்தி -தேரூர்ந்து என்னுமா போலே -இவை அபுருஷார்த்தம் என்னும் உணர்வு யுண்டு -மயர்வற்ற மதி -அத்தை நான் உடையேனாம் படி பண்ணி-இறவேறி-ப்ரக்ருதி ப்ராக்ருதங்கள் அபுருஷார்த்தம் என்னும் அளவே அன்றிக்கே முடிய போய் -ஞானானந்த ஸ்வரூபனாய் -நித்யனாய் -ஸ்வதஸ் ஸூ கியாய் இருக்கிற அளவும் செல்ல அறிவித்து-யானும் தானாய் ஒழிந்தானே––அவ்வளவிலும் பர்யவசியாதே –என்னைச் சொல்லும் சொல்லாலே தன்னைச் சொல்லலாம் படி தனக்கு பிரகார தயா சேஷம் என்னும் இடத்தைக் காட்டித் தந்தான் –அஹம் புத்தியும் அஹம் சப்தமும் தன்னளவும் செல்லும் படி பிரகார தைக வேஷமாய் இருக்கிறபடியைக் காட்டித் தந்தான் –தச்சப்தம் குண விசிஷ்ட வாசியானாவோ பாதி -த்வம் -சப்தமும் -அசித் விசிஷ்ட ஜீவ அந்தர்யாமி யாம் அளவும் காட்டக் கடவது இறே –

மேம் பொருள் போக விட்டு மெய்ம்மையை மிக உணர்ந்து
ஆம் பரிசறிந்து கொண்டு ஐம் புலன் அகத்தடக்கிக்
காம்பறத் தலை சிரைத்து உன் கடைத் தலை இருந்து வாழும்
சோம்பரை உகத்தி போலும் சூழ் புனல் அரங்கத்தானே–38–மெய்ம்மையை மிக உணர்ந்து –மெய் -என்கிறது ஆத்மாவை –மெய் -எனபது ஆத்மாவைக் காட்டுமோ -என்னில் —சத்யஞ்சா ந்ர்தஞ்ச சத்ய மவபவத் -என்கிற ஸ்ருதி சாயையால் அருளிச் செய்கிறார் –-சத்ய சப்தம் அசத்திய வ்யாவர்த்தியை சொல்லுகிறது அன்று ஆத்ம ஸ்வரூபத்தின் நித்யதையைச் சொல்லுகிறது –மெய்ம்மை -என்று முழுச் சொல்லாய் – பிரத்யக் விஷயத்தைச் சொல்லுகிறது – கைம்மை பொய்ம்மை -என்னுமா போலே-ஆக மெய்ம்மை -என்று – மெய்யான தன்மை -என்றபடி –மிக உணர்ந்து –தேகமே ஆத்மா என்று இருக்கும் லோகாயதிகன் அளவன்றிக்கே –தேகாதிரிக்தமாய்-ஸூயமாய் இருக்கும் ஆத்மா என்னும் மீமாம்சகன் அளவன்றிக்கே-ஜ்ஞானம் ஆகந்துகம் -என்னும் வைசேஷிகன் அளவன்றிக்கே –1-ஸுவயம் பிரகாசனாய்-2-நித்யனாய்-3-ஜ்ஞான குணகனாய்-4-அணு வாய்-5-ஈஸ்வரனுக்கு அனன்யார்ஹ சேஷமாய்-6-அது தான் ததீய சேஷத்வ பர்யந்தமாக உணருகை –
அதாவது ஆத்மாவை உள்ளபடி உணருகை –ஆம் பரிசறிந்து கொண்டு--பிரக்ருத ப்ராக்ருதங்கள் த்யாஜ்யம் -என்று அறிந்து மேலும் ஆத்மாவை உள்ளபடி உணர்ந்தால் – பின்னையும்-ஆம் பரிசு ஆவது –
கைங்கர்யமே யாய்த்து –-ஆம் பரிசு வர்த்திக்கும் படியை அறிந்து – ஆத்மா அபிமான ரூபமாக வாய்த்து வ்ருத்தி ஹேதுக்கள் தான் இருப்பது –தாசோஹம் -என்ற போது -கைங்கர்யமே வ்ருத்தி ஹேதுவாகக் கடவது –பிரகிருதி பிராக்ருதங்களில் சங்கோசம் போய் ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்தால் சஹஜ கைங்கர்யமே இறே வ்ருத்தி ஹேதுவாவது –பிரகிருதி பிராக்ருதங்கள் த்யாஜ்யம் என்கிற ஜ்ஞானமும் –
ஆத்மா பகவத் பரதந்த்ரன் என்கிற ஜ்ஞானமும் பிராப்யம் கைங்கர்யம் என்கிற ஜ்ஞானமும் இறே சேதனனுக்கு வேண்டுவது –விடுவிக்கையும் பற்றுவிக்கையும் உபாய பூதனான ஈஸ்வரன் கார்யம் இறே –

ஆக-முனிவரை இடுக்கியும் -சூரணை -17 -என்று தொடங்கி இவ் வளைவாக சாஸ்திர தாத் பர்யங்களின்
விஷய பேதமும் அதிகாரி பேதமும் அவ் அதிகாரிகளின் பிரதி பத்தி பேதமும் அதுக்கு அடியான ஜ்ஞான ஆகார தார தம்யமும் சொல்லப் பட்டது-

ஸ்வரூப ஞானம் என்றும் ஸ்வரூப யாதாத்மா ஞானம் என்றும் ஆத்ம ஸ்வரூப விஷய ஞானத்திலே தார தம்யம் உண்டு இறே -அதில் பதிம் விச்வசஸ்ய-ஸ்ரீ புருஷ ஸூக்தம்- என்றும்-யஸ்யாஸ்மி என்றும்
நஹி விஜ்ஞாதர் விஜ்ஞாதேர் விபரிலோபோ வித்யதே ஞாநாத் யேவாயம்புருஷ -ப்ருஹதாரண்யம்-6-3-10–என்றும்-ஆத்மாவுக்கு பகவத் சேஷத்வத்தையும் ஜ்ஞாத்ருத்வத்தையும் சொல்லி-அந்த ஜ்ஞாத்ருத்வ கார்யமான போக்த்ருத்வ பிரயோஜனமாக-சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மண விபச்சிதா -தைத்ரியம் -என்று பகவத் அனுபவத்தையும் சொல்லுகிற சாஸ்திர முகத்தாலே ஸ்வரூபத்தை அறியும் அளவில் பகவத் சேஷத்வமும் பகவத் அனுபவ போக்த்ருத்வமும் இறே பிரகாசிப்பது-அந்த சாஸ்திர தாத் பர்யமான திரு மந்த்ரத்தில் உள் புக்கால் இறே பாரதந்திர போக்யதா ரூபமான ஸ்வரூப யாதாத்ம்யம் பிரகாசிப்பது-இதுவே ஸ்வரூப யாதாத்ம்யம் என்னும் இடத்தை அறிவிக்கிறார் மேல்-
(சேஷத்வம் -அகாரம்-லுப்த சதுர்த்தி -பரமாத்மாவுக்கே ஜீவாத்மா சேஷன் -சேஷத்வம் ஸ்வரூபம்-தாதரத்தே சதுர்த்தி- லுப்த சதுர்த்தி -போக்த்ருத்வம் மகாரம்-ஞாத்ருத்வம் -மன ஞானே–மன அவபோதனே-பாரதந்தர்யம் நம -போக்யதை-நாராயணாய நம -பிரார்த்தனா சதுர்த்தி இங்கு -அஹம் அன்னம் –அவன் -அந்நாதா –தட்டு மாறும் சீலம் காட்கரையிலே கொழிக்கும் சந்தன குசுமாதிகள் போலே நாராயணாய நம -என்றபடி )-இந்த ஸ்வரூப ஜ்ஞாநமும்‌ ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞாநமுமாகிற இவை யிரண்டும்‌ தன்னிலொக்குமோ என்னில்‌ ; ஒவ்வாது என்கிறார்‌

சேஷத்வ போக்த்ருத்வங்கள்-போல் அன்றே-பாரதந்திர போக்யதைகள்--சூரணை -21 –

அதாவது –சேஷத்வம் ஆவது இஷ்ட விநியோக அர்ஹதா மாத்ரம்-பாரதந்த்ர்யம் ஆவது சேஷிக்கு இஷ்டமான படியே விநியோகப் படுகை-கட்டிப் பொன் போலே சேஷத்வம்-பணிப் பொன் போலே பாரதந்த்ர்யம்-என்னக் கடவதிறே ஆகையால் சேஷ வஸ்துவை சேஷிக்கு இஷ்டமான படியே
விநியோகப் படுத்தும் அது பாரதந்த்ர்யம்
போக்த்ருத்வம் ஆவது ஜ்ஞாத்ருத்வ பலத்தாலே போக தசையிலே விளைகிற ரசங்களுக்கு தான் போக்தாவாகை-போக்யதை யாவது பதார்த்த கதமான ரச வர்ணாதிகள் போக்தாவுக்கு போக்யமாய் இருக்கும் போலே ஆத்ம கதமான ஜ்ஞானாதிகளும் ஈஸ்வரனுக்கே போக்யமாய் இருக்கை-ஆகையால் இஷ்ட விநியோக அர்ஹ மாத்ரமாய் சேஷத்வம் போல் அன்றே-இவ் வஸ்துவை சேஷிக்கு இஷ்டமான படி விநியோகப் படுத்தி கொடுக்கிற
பாரதந்த்ர்யம் போகத்தில் ஸ்வார்ததா புத்தி ஹேதுவான போக்த்ருத்வம் போல் அன்றே அந்த
போக்த்ருத்வத்தை சேஷி உடைய பிரிய உபயோகி ஆக்கிக் கொடுக்கிற போக்யதை
என்ற படி-

ஸேஷத்வமாவது – இஷ்ட விநியோக அர்ஹதா மாத்ரம்‌. பாரதந்தர்யமாவது – அந்த ஸேஷ வஸ்துவை ஸேஷிக்கு இஷ்ட மானபடி விநியோகப் படுத்திக்‌ கொடுக்குமது. போக்த்ருத்வமாவது – ரஸாரஸங்‌களுக்குத்‌ தானே போக்தாவாகை. போக்‌யதையாவது – பதார்த்த, கதமான ரஸ வர்ணாதிகள்‌ போக்தாவுக்கே போக்‌யமா யிருக்குமாப் போலே ஆத்ம கதமான ஜ்ஞாநாதிகளும்‌ ஈஸ்வரனுக்கே போக்‌யமாயிருக்கை, ஆகையால்‌ இஷ்ட விநியோக அர்ஹதா மாத்ரமான சேஷத்வம் போலே யன்றே, அத்தை இஷ்டமானபடி விநியோகப் படுத்திக்‌ கொடுக்கிற பாரதந்த்ர்யம்‌. ஸ்வ போகத்துக்கும்‌ ஹேதுவாயிருக்கிற போக்த்ருத்வம்‌ போலே யன்றே அந்த போக்த்ருத்வத்தை ஸேஷியினுடைய ப்ரியோப யோகி,யாக்கிக்‌ கொடுக்கிற போக்‌யதை.

இவ் அர்த்தத்தை ஸ்வரூப யாதாத்ம்ய பிரகாசமான திரு மந்த்ரத்திலே தர்சிப்பிக்கிறார்-

ஜ்ஞான சதுர்த்திகளின் மேலே இறே ஆநந்த ஷஷ்டிகளுக்கு உதயம்--சூரணை -22 –
(ஞான -மகாரம் -லுப்த சதுர்த்தி முன்னால்–போக்யதை -ஆனந்தம் -நாராயணாய அர்த்தம் -ஷ்ஷடி -நமஸ் -பாரதந்தர்யம் -சதுர்த்தி ஞானங்களுக்கு மேலே இறே ஷ்ஷடி ஆனந்தங்களுக்கு உதயம் என்று சொல்லாமல் —உத்கீத பிரணவத்தை பிரதமத்தில் மாறாடி-என்பதால் – அச்சு எழுத்து குறைவாக -அல்ப அக்ஷரம் பூர்வம் -என்பதாலும் -)

அதாவது ஆத்ம வாசியான ம காரத்திலே –மன – ஜ்ஞானே -என்கிற தாதுவிலே உதிதமாய்
போக்த்ருத்வ பிரகாசமாய் இருக்கிற ஜ்ஞானத்தின் மேலே இறே-அந்த மகார விவரண ரூபமாய் போக்யதா பிரகாசகமான சதுர்த்தியில்-ஆனந்தத்துக்கு உதயம்-பிரதம அஷரத்தில் சேஷத்வ வாசியான லுப்த சதுர்த்தியின் மேலே இறே பாரதந்த்ர்ய பிரகாசமான நமஸுக்கு உதயம் என்கை–இத்தால் ஆத்ம ஸ்வரூபத்தின் உடைய சேஷத்வ போக்த்ருத்வங்கள் உதித்து இருக்க செய்தே அதன் மேலே ஸ்வரூப யாதாத்ம்ய வேஷமாக உதித்தவை ஆகையாலே சேஷத்வ போக்த்ருத்வங்களில் -பாரதந்த்ர்ய போக்யதைகளுக்கு நெடு வாசி உண்டு என்றது ஆயிற்று–இந்த யோஜனைக்கு அல்பம் அனுபபத்தி உண்டு-ஷஷ்டி என்கிற இது -முக்ய விருத்தி யாலே ஆதல்-கௌன விருத்தியாலே ஆதல் நமஸை காட்டாமையாலே-ஷஷ்ட்யந்த பதம் என்கிறதை ஷஷ்டி என்று சொல்லிற்று ஆகாதோ என்னில்
அது சேராது –நமஸு இரண்டு பதம் ஆகையாலும் அதில் உத்தர பதமே ஷஷ்ட்யந்தம் ஆகையாலும் ..
ஆனால் செய்ய அடுப்பது என் என்னில் இன்னும் ஒரு யோஜனை சொல்லப் படுகிறது-
(ஞாத்ருத்வமும் போக்த்ருத்வமும் -தங்கள் விரோதிகளை -ஸ்வாதந்த்ரத்தையும் ஸ்வார்த்தத்தயா போக்த்ருத்வத்தையும் – உதிப்பத்தை சகிக்கும் -ஆனால் பின்பு தள்ளும் -ந -நிஷேதையாலே-
ஆகவே நமஸ் நாராயணாய நம என்று கூட்டி பொருள் என்றவாறே – சேஷத்வத்துக்கு மேலே ஸ்வாதந்தர்யம் உதிப்பதால் அது தாழ்வு –பாரதந்தர்யம் உயர்ந்தது என்றவாறு இத்தை விசாரிக்கவே ஸ்ரீ மா முனிகள் ஸ்ரீ மேல்கோட்டைக்கு எழுந்து அருளி ஸ்ரீ ஆய் ஸ்வாமிகளைக் கண்டு இருவரும் ஸ்ரீ திருக்குருகூருக்கு மீண்டார்கள் )அதாவது த்ருதிய அஷரத்திலே –மன -ஜ்ஞானே -என்கிற தாதுவிலே உதிதமாய் போக்த்ருத்வ பிரகாசமான ஜ்ஞானத்தின் மேலே இறே மகார விவரணமான சதுர்த்தியில்
சொல்லப் படுகிற போகத்தில் காகாஷி ந்யாயத்தாலே நமஸ் சப்தத்தாலே கழிக்க படுகிற ஸ்வ பிரயோஜனத்வ பிரயுக்தமான ஆனந்தத்துக்கு உதயம் பிரதம அஷரத்திலே சேஷத்வ வாசியான சதுர்த்தியின் மேலே இறே--நஜ்ஞாலே நிஷேதிக்க படுகிற ஸ்வ ரஷணே ஸ்வ பிரவ்ருத்தி ஹேது பூத
ஸ்வதந்த்ர்யா பிரகாசி யான ஷஷ்டிக்கு உதயம்
என்கை
இத்தால் சேஷத்வ பிரகாசமான சதுர்த்தியின் மேலே ஸ்வ ரக்ஷண ஹேது பூத ஸ்வதந்த்ர்ய வாசியான ஷஷ்டி உதிக்கையாலும் போக்த்ருத்வ பிரகாசமான ஜ்ஞானத்தின் மேலே போக ஸ்வார்ததா புத்தி மூலமான ஆனந்தம் உதிக்கை யாலும் சேஷத்வ போக்த்ருத்வங்கள் ஸ்வரூப விரோதி உதய சஹங்களாய் இருக்கும்-நமஸிலே பாரதந்த்ர்யம் உதித்த பின்பு ஸ்வ ரஷணே ஸ்வ யத்னம் நிவ்ருத்தம் ஆகையாலும் நமஸ் சப்த அனுக்ருஹீதையான-(நாராயணாயா நம )சரம சதுர்த்தியிலே ஈஸ்வரனுக்கு போக்யமாய் இருக்கையே ஆத்மாவுக்கு வேஷம் என்று தோற்றின பின்பு ஸ்வ பிரயோஜனம் நிவ்ருத்தம் ஆகையாலும் பாரதந்த்ர்ய போக்யதைகள் ஸ்வரூப விரோதி உதய சஹங்கள் அன்று .-ஆகையால் ஸ்வரூப விரோதி உதய சஹங்களான சேஷத்வ போக்த்ருத்வங்கள் போல அன்றே அத்தை சகியாத படி இருக்கும் பாரதந்த்ர்ய போக்யதைகள் என்றது ஆயிற்று-

ஆகையிறே போக்த்ருத்வ ப்ரகாஸகமாய்‌ “மந – ஜ்ஞாநே‘ என்கிற தாதுவிலே உதிதமான ஜ்ஞாநத்துக்கு மேலே அந்த மகார விவரண ரூபமாய்‌ போக்‌யதா ப்ரகாஸகமான சரம சதுர்த்தி யிலே ஆநந்தம்‌ உதித்ததும்‌, ஸேஷத்வ ப்ரகாஸகமான சதுர்த்தியின் மேலே பாரதந்த்ர்ய ப்ரகாஸகமான ஷஷ்டி, உதித்ததும்-

இப்படி ஸ்வரூப யாதாம்ய ஞான தசையில் தோற்றுகிற பாரதந்த்ர்யாதிகள் ஸ்வரூப ஞான தசையில் தோற்றுகிற சேஷத்வாதிகளை திரஸ் க்ருதமாக்கும் படி சொல்லுகிறது–இனிமேல்‌ இந்த ஸ்வரூப ஜ்ஞாநத்தினுடையவும்‌ ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞாநத்தினுடையவும்‌ அத்யந்த வைஷம்யம்‌ சொல்லுகிறது

முளைத்து எழுந்த சூர்ய துல்ய யாதாத்ம்ய சரமம் விதியில் காணும் பிரதம மத்யம தசைகளை
பகல் விளக்கும் மின்மினியும் ஆக்கும்-
–சூரணை -23 –- (பகல் விளக்கு வீண் –மின்மினி அல்பம் என்றவாறு )

அதாவது–முளைத்து எழுந்த திங்கள் தானாய்-திரு நெடும் தாண்டகம் -1—என்றும்-யதா சூர்யஸ் ததா ஞானம்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -6–5–62- என்றும் சொல்லப் பட்ட ஸ்வரூப சாஷத்கார ஞானத்தின் உடைய யாதம்ய அவஸ்தையான சரமம் என்று ஸ்வரூப யாதாம்ய வேஷமாக பின்பு சொன்ன பாரதந்த்ர்ய போக்யதைகளைச் சொல்லுகிறது-ஸ்வரூப சாஷாத் கார ஞானத்திற்கு சந்த்ரனை திருஷ்டாந்தமாக ஆழ்வார் அருளிச் செய்தது தமக்கு பகவத் பிரசாத லப்தம் ஆகையாலே அயத்ன சித்தம் ஆகையாலும் அந்த ஞானம் தான் ஆஹ்லாத கரமாய் இருக்கையிலுமாம் இறே-இங்கும் உணர்வை பெற மிக ஊர உணர்வும் உண்டாம் -சூரணை -20 என்று இந்த ஸ்வரூப யாதாத்ம்ய ஞானம் பகவத் பிரசாத லப்தமாக இறே சொல்லிற்று-யதா சூர்யா -என்கிற இதில் ஸ்வ யத்னத்தாலே வந்த க்லிஷ்டதை தோற்றிற்று ஆகிலும இவ் இடத்தில் அது அவிவஷிதம் ஞானத்தின் உடைய பிரகா அதிசயம் சொல்லுகிற மாத்திரமே அபேஷிதம்–ஏவம்பூதமாய் இருந்துள்ள சாஷாத் காரத்தின் உடைய ஞானத்தின் உடைய
யாதாத்ம அவஸ்தையிலே பிரகாசிக்கிற பாரதந்த்ர்ய போக்யதைகள் ஆகிற சரமங்கள் –
ஸ்வரூபத்தை உணர்ந்து உணர்ந்து உணரவும்
-சூரணை -20 -கீழ் சொன்ன ந்யாயத்தாலே – விதியிலே காண்பார்– திருக் குறும் தாண்டகம் -18–என்கிற படியே சாஸ்திர விதி பிரகாரேன ஸ்ரவண மனநாதிகளாலே தர்சிக்க படுகிற பிரதம தசையான சேஷத்வத்தையும் மத்யம தசையான போக்த்க்ருத்வத்தையும் – பகல் விளக்கும் மின் மினியும் போலே அப்ரயோஜனமாகவும் அல்ப பிரகாசமாகவும் பண்ணும் என்கை –பிரண வோதிதமான ஸ்வரூபத்தின் உடைய யாதாத்ம்ய யத்வேன மத்யம சரம பதங்களிலே பின்பு உதிக்கும் அவை ஆகையாலே ,பாரதந்த்ர்ய போக்யதைகளை சரமங்கள் என்கிறது பிரதம அஷரத்தில் சதுர்த்தியிலே பிரதம ஏவ சேஷத்வம் உதிக்கை யாலும்
அநந்தரம் தத் ஆஸ்ரய வாசியான சரம அஷரத்தில் உத்தர பத த்வயத்தில் பாரதந்த்ர்ய போக்யதை உதயத்துக்கு முன்னே நடுவே ஜ்ஞாத்ருத்வ பலாயாத போக்த்ருத்வம் உதிக்கை யாலும் சேஷத்வ போக்த்ருதவங்களை பிரதம மத்திய தசைகள் என்கிறது--ஆக இவ் வாக்யத்தால் ஸ்வ யதன ஸ்வ பிரயோஜன கந்த அசகங்களாய் ஸ்வ சேஷி போகாத்யந்த அனுகூலங்களாய்க் கொண்டு ஸ்வரூபத்தை நிறம் பெறுத்தும் இப் பாரதந்த்ர்ய போக்யதைகள் இவ் ஆகாரங்கள் இல்லாத சேஷத்வ போக்த்ருதவங்களை திரஸ் க்ருதமாக்கி தானே மேலாய் இருக்கும் என்ற தாயிற்று-

முளைத்தெழுந்த திங்கள் தானாய்‌’” (திருநெடு. 1) என்றும்‌, *‘யதா ஸுூர்யஸ் ததா ஜ்ஞாநம்‌”‘ (வி. பு. 6 – 5 – 62) என்றும்‌, ஆஹ்லாத கரனாயும்‌, அதி ப்ரகாஸ கனாயுமிருக்கிற சந்த்‌ராதித்யர்களை யாதாத்ம்ய சரமமான பாரதந்த்ர்ய போக்‌யதா ஜ்ஞாதங்களுக்கு த்ருஷ்டாந்தமாக்குகையாலே பகவத் ப்ரஸாத லப்‌தமாகையாலே அயத்ந ஸித்‌த,மாய்‌, அதி ப்ரகாஸகமுமான அத்யந்த பாரதந்த்ர்ய போக்‌யதா ஜ்ஞாநங்களில்‌ பாரதந்தர்யம்‌ ஸேஷத்வ லக்ஷணமான இஷ்ட விநியோக அர்ஹதையை ஸ்வயமேவ நிரவஹித்துத்‌ தலைக் கட்டுகையாலும்‌, போக்‌யதையானது அசித்‌ வ்யாவ்ருத்தி லக்ஷ்ண மாத்ரமான போக்தருத்வத்தை சேஷியினுடைய ப்ரியோபயோகி,யாக்கிக்‌ கொடுக்கையாலும்‌ விதியில்‌ காணும்‌ ப்ரதம மத்‌யம தஸைகளை ”விளக்கினை விதியில்‌ காண்பார்‌” (திருக்குறு. 18) என்கிறபடியே ஸாஸ்த்ர முக,த்தாலே வந்த ஸ்ரவண மநதநாதிகளால்‌ காணப்படுகிற ப்ரதம தஸையான ஸேஷத்வத்தையும்‌, மத்யம தஸையான போக்த்ருத்வத்தையும்‌, அந்த பாரதந்தர்ய போக்யதைகள்‌ பகல் விளக்கையும்‌ மின்மினியையும் போலே்‌ அப்ரயோஜகமாகவும்‌ அல்ப ப்ரகாஸகமாகவும்‌ பண்ணும்‌ என்கிறார் –

மின்னுருவாய் முன்னுருவில் வேத நான்காய்
விளக்கொளியாய் முளைத்து எழுந்த திங்கள் தானாய்
பின்னுருவாய் முன்னுருவில் பிணி மூப்பில்லாப்
பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது எண்ணும்
பொன்னுருவாய் மணிவுருவில் பூதமைந்தாய்
புனலுருவாய் அனல் வுருவில் திகழும் சோதி
தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தாய்
தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே—-1—விளக்கொளியாய் முளைத்து எழுந்த திங்கள் தானாய் –என்று –மந்தவ்ய நிதித்த்யாசிதவ்ய த்ரஷடவ்ய -என்கிற மனந நிதித்யாசன தர்சனங்களைச் சொல்லுகிறது –ஸ்ரோதவ்ய -மந்தவ்ய – நிதித்யாஸி தவ்ய -த்ரஷ்டவ்ய-ப்ருஹதாரண்யம்–விளக்கொளியாய் -முளைத்து எழுந்த திங்கள் தானாய் )முளைத்து – பர்வதாக்ரத்திலே தோன்றின சந்தரனைப் போலே தீப த்ர்ஷ்டாந்தத்தால் சொன்ன ஸ்ரவண ஜ்ஞானத்தில் காட்டிலும் பிரகாச ரூபமான மனந தசையைச் சொன்னபடி –எழுந்து – பர்வதாக்ரத்தை விட்டு ஆகாசத்தில் எழுந்த சந்தரனைப் போலே மனந அவஸ்தையில் காட்டிலும் அதி பிரகாசமான அநவரத பாவனையைச் சொல்லிற்றாயிற்று-திங்கள் தானாய் – சாஷாத் காரத்தைச் சொல்லுகிறது –
எங்கனே என்னில் – தானான திங்கள் -என்று – ஆகந்துகமான களங்கம்- இன்றியே இருக்கிற சந்த்ரனைச் சொல்லுகையாலே ஆகந்துகமான களங்கம் -பூமியினுடைய சாயை பிரதிபலிக்கையாலே –
சந்த்ர பிரபா ஸ்தானத்திலே ஆத்மாவுக்கு பிரபா ரூபமான தர்ம பூத ஜ்ஞானம் – பிரகிருதி சம்சர்க்கம் நேராக அற்று நிஷ்க்ர்ஷ்டமான ஆத்ம வஸ்துவைச் சொன்னபடி –நிஷ்க்ர்ஷ்ட ஸ்வரூபத்தைக் கண்டால் இறே- சாஷாத்காரம் சித்தித்ததாவது – சாஷாத்கார விசிசிஷ்ட ஆத்மா -சாஷாத்காரம் தந்தவன் -என்று -பரமாத்மா சாஷாத்காரம் – சந்திர த்ர்ஷ்டாந்தத்தாலே – சதி ஆஹ்லாதே -என்கிறபடியே ஆஹ்லாத ரூபம் தோற்றுகைக்காகவும் பகவத் பிரசாத லப்தம் ஆகையாலே அனாயாச சித்தியால் வந்த அம்லானதை தோற்றுகைக்காவும்-சந்திரனை த்ருஷ்டாந்திக்கிறார் –யதா ஸூர்யஸ் ததா ஞானம் -என்று
ஸூர்யனை த்ருஷ்டாந்தித்தது சந்திரனுக்கு ஸ்வ யத்னத்தால் வந்த க்லிஷ்டதை தோற்றுக்கைக்காக 

இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையைக் கூட்டி
அளப்பில் ஐம்புலன் அடக்கி அன்பு அவர் கண்ணே வைத்து
துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே
விளக்கினை விதியில் காண்பர் மெய்ம்மையே காண்கிற் பாரே–18–தைல தாரை போலே அவிச்சிந்ந ஸ்ம்ருதி ஸந்தான ரூபமான பக்தியை பகவத் விஷயமாகப் பண்ணி-சுடர் விட்டு தோன்றலும் – இப்படி சுடர் விட்டு தோன்றும் ஜ்ஞானத்தாலே –வேதங்களாலே ஜோதி ரூபனாக பிரதிபாதிக்கப் பட்ட விளக்கை-சாஸ்த்ரங்களில் விதித்தபடியே உபாசித்து அவனைக் காண்பார் –என்றும் உளனாய் இருக்கிற சர்வேஸ்வரனை காண வல்லரே -காண -மாட்டார் -என்றபடி –அதவா – இப்படி யோக சாஸ்த்ரத்தில் சொல்லுகிறபடியே உபாசித்துக் காண்பாருக்கு காணலாம் -என்றுமாம் –அங்க பிரபத்தி இல்லாமல் காண மாட்டார் என்றபடி

இப்படி இருந்துள்ள ஸ்வரூப ஞானத்தையும் ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞானத்தை உடையவராய் சாஸ்த்ரிகள் -சூரணை -19 –இத்யாதி வாக்யத்தில் பிரவ்ருத்தி பரராயும் நிவ்ருத்தி பரராயும் சொல்லப் பட்ட அதிகாரிகளுக்கு பிரவர்த்த நிவர்தககங்கள் இன்னது என்கிறது மேல்-இந்நாலிலும்‌ வைத்துக் கொண்டு உபாஸகனுக்கு போக்த்ருத்வம்‌ உபாய ருப ப்ரவ்ருத்தி ஹேதுவாயிருக்கும்‌ ; ப்ரபந்தனுக்கு போக்‌யதை நிவருத்தி ஹேதுவாயிருக்கும்‌ என்கிறார்‌ மேல்‌

நாலில் ஓன்று பிரவர்தகம் ஓன்று நிவர்தகம்-சூரணை -24 –

அதாவது சேஷத்வ போக்த்க்ருத்வங்களும் பாரதந்திர போக்யதைகளும் ஆகிற நாலிலும் வைத்து கொண்டு சேஷத்வ போக்த்ருத்வங்களே ஆத்மாவுக்கு ஸ்வரூபம் என்று தர்சித்த சாஸ்த்ரஜ்ஞர்களை-
போக்த்ருத்வம் ஆனது போக்தாவனவன் போக்ய சித்திக்கு யத்னம் பண்ண வேண்டாவோ என்னும் நினைவாலே போக்ய பூத பகவத் விஷய லாப அர்த்தமான உபாய பிரவர்தியிலே மூள்விக்கும்--பாரதந்த்ர்ய போக்தைகளையே ஸ்வரூப யாதாம்ய வேஷம் என்று தர்சித்த சாரஜ்ஞரை
போக்யதை ஆனது -போக்தாவான ஈஸ்வரன் அன்றோ -ஸ்வ போக்யமான இவ் வஸ்துவை பெருகைக்கு யத்னம் பண்ணுவான் –தத் போக்ய பூதமான இவ் வஸ்துவுக்கு தல் லாபத்துக்கு யத்தனிக்க பிராப்தி இல்லை என்னும் நினைவாலே உபாய பிரவர்த்தியில் நின்று மீள்விக்கும் என்கை-

உபாயத்வ அனுசந்தானம் நிவர்த்தகம் – உபேயத்வ அனுசந்தானம் பிரவர்த்தகம் –ஸ்ரீ வசன பூஷணம் –சூர்ணிகை -87—உபாயம் -நினைக்க யத்னம் நீங்கும் –செய்யும் செயல்களில் உபாய பாவனை இல்லாமல் என்றும் -ஸாத்ய உபாயம் எண்ணியும் –உபேயம் புருஷார்த்தம் என்ற நினைவால் கைங்கர்யம் -அனைத்தையும் செய்ய வைக்கும் -ஸூ சரீர தியாக -ஸூ யத்னம் தானே –பாரதந்தர்ய தூஷணம் ஆகாதோ என்ன -உபாய அதிகாரிக்குத் தான் தூஷணம் -உபேய அதிகாரிக்கு இல்லை-பற்றுவது –கத்யார்த்தா புத்யர்த்தா மானஸ கார்யம் -பிரார்த்தனா மதி சரணாகதி – உபேய அதிகாரி வழு விலா அடிமை செய்ய வேண்டுமே -சென்றால் குடையாம் இத்யாதி-தோழி -தாயார் மகள் -சம்பந்தம் -தாயார் -உபேயத்தில் துணிவு தலை மகள் பாசுரம் –தூது விட்டது உபாயமாக என்று அஞ்சுவது தாயார் –ப்ராப்ய தவரையால் பண்ணலாமே –மோக்ஷ உபாயம் தப்பு கால விளம்பம் கூடாது என்பதற்காக பண்ணலாமே உபாயத்வ அநு சந்தானம் நிவர்த்தகம் -என்றது – வைதமாய் வரும் தசையில் -தேக த்யாக ரூப பிரவ்ருத்தியில் உபாயத்வ அநு சந்தானம் நடக்கையாலே -அவ் அனுசந்தானம் இவனை சாதனதயா சம் பிரதிபன்னமான இத் தேக த்யாக ரூப பிரவிருத்தியில் நின்று மீளுவிக்கும் -என்றபடி –
உபேயத்வ அநு சந்தானம் பிரவர்தகம் -என்றதுராக பிராப்தமாய் வரும் தசையில் -இவ் விஷயத்துக்கு ஹானி வரக் கண்டு இருப்பதில் -முடிகையே நல்லது என்று –தேகத் த்யாகம் தன்னை புருஷார்த்தமாக அநு சந்திக்கையாலே -அவ் அனுசந்தானம் இவனை அதிலே மூளுவிக்கும் என்றபடி —
அன்றிக்கே – வைதமாய் வரும் போது -பகவத் விஷயத்தில் உபாயத்வ அநு சந்தானம் இதுக்கு(தேகத் த்யாகத்துக்கு ) நிவர்தகமாம் – ராக பிராப்தமாய் வரும் போது-அவ் விஷயத்தில் உபேயயத்வ அனுசந்தானம் இதுக்கு பிரவர்தகமாம் என்னவுமாம் –

ஆனால் சேஷத்வ போக்த்க்ருத்வங்கள் இவர்களுக்கும் உண்டே-அவை செய்வது என்ன என்ன சொல்லுகிறது மேல்-ஆனால்‌ இந்த ஸேஷத்வ போக்த்ருத்வங்க ளிரண்டும்‌ இவனுக்குச்‌ செய்யும்படி என்‌ என்னில்‌ ; இவனுடைய வ்ருத்திக்கு அநு ரூபமாயிருக்கும்‌ . என்னுமிடத்தைச்‌ சொல்லுகிறது மேல்‌

முற்பாடர்க்கு க்ரிய அங்கம் ஆனவை இரண்டும் செயல் தீர்ந்தார் வ்ருத்தியிலே ஸ்வ நிர்பந்தம் அறுக்கும்-சூரணை-25 –

(கர்ம யோகத்துக்கு அங்கங்களே சேஷத்வமும் போக்த்ருத்வமும்-செய்த வேள்வியர் -செயல் தீர்ந்தார்
வ்ருத்தி -கைங்கர்யம்
போகத்தில் தட்டு மாறும் சீலம் காட்கரையில் கொழிக்கும்-அடுத்த திருவடியை நீட்டினாரே ஆழ்வார்-பேரக்குழந்தை காலை தாத்தா கன்னத்தில் அடித்துக் கொள்ளுமாறு –-ஸ்ரீ பெரிய நம்பி ஸ்ரீ ராமானுஜர் ஐதிக்யமும் உண்டே-படியாய்க்கிடந்து பவளவாய் காண வேண்டுமே -எதிர் விழி கொடுக்கும் பாரதந்தர்யம் –-போக்த்ருவத்துக்கும் விநியோகம் உண்டே-அவன் அனுபவத்துக்கு உறுப்பாகும் -)அதாவது சாஸ்த்ரஜ்ஞர்கள் -என்று சொல்லப் பட்ட உபாசகருக்கு போக்த்க்ருத்வம் ஆனது போக்ய சித்திக்கு உடலான யத்னத்திலே மூட்டுகையாலும்-அது தான் ஆத்ம ஞான பூர்வகமாக யத்தனிக்க வேண்டுகையாலே சேஷத்வமும் அதுக்கு உறுப்பாகையாலும்-உபாசன பிரதம பாவியான -கர்மத்துக்கு உத்பத்தியிலே சக கரித்துக் கொண்டு தத் அங்கங்களாய் இருக்கிற அவை இரண்டும்
செயல் தீர சிந்தித்து வாழ்வார்-நான்முகன் -88- (போக்யம் என்று அறிந்து -சிந்தித்து செயல் தீர்ந்தார் -)-என்கிற படியே இவ் ஆத்மா செய்யக் கடவது ஒன்றும் இல்லை-எம்பெருமானே நிர்வாககன் -என்று அனுசந்தித்து உபாய ரூப ப்ரவர்தியிலே நிவ்ருத்தரான பிர பன்னருடைய கைங்கர்ய ரூப பிரவர்த்தியில் அவன் உகப்பை பின் செல்லும் அது ஒழிய தங்கள் நிர்பந்தத்தை தவிர்க்கும் என்கை-பரகத அதிசய ஆதான இச்சையா உபாதேயத்வ மேவ யஸ்ய ஸ்வரூபம் ச சேஷ (-சேஷத்வ லக்ஷணம் ஸ்ரீ பாஷ்யகாரர் ஸ்ரீ ஸூக்திகள் )- என்கிற படியே –பரகத அதிசய கரத்தவ ரூபமான சேஷத்வம்
ஸ்வ ஆஸ்ரயா இச்சையா வரும் ஸ்வ நிர்பந்தத்தை தவிர்க்கும்
இறே–இனி போக்த்க்ருத்வம் ஸ்வ நிர்பந்தத்தை தவிர்க்கை யாவது பாரதந்த்ர்ய போக்யதா ஞானம் பிறந்தவன் உடைய போக்த்க்ருத்வம்
ஆகையாலே ,ஸ்வ ரசத்துக்கு உடல் அன்றிக்கே ,சேஷி ரசத்துக்கு உடலாய் இருக்கை.
.-ஆனந்தம் அவன் ப்ரீதியை துளிர் எழுப்ப – என்கிற படியே இவனுடைய போக்த்க்ருத்வம் சேஷியானவன் ப்ரீதிக்கு வர்தகமாய் இறே இருப்பது-ஆகை இறே –அஹம் அன்னம் அஹம் அன்னம் -தைத்ரியம்-என்று ஸ்வ போக்யதையை முன்னிட்டு சேஷியை உகப்பிக்க இழிந்தவன் அஹம் அந்நாத-தைத்ரியம் -என்று ஸ்வ போக்த்க்ருத்வத்தையும் புரஸ் கரிக்கிறது-இப்படி அல்லாத போது ஒரு சேதனனோடு அனுபவித்ததாய் இராது இறே-இவற்றை எல்லாத்தையும் உள் கொண்டு ஆய்த்து — வ்ருத்தியிலே ஸ்வ நிர்பந்தம் அறுக்கும் –என்று அருளி செய்தது-

‘முற்பாடர்‌’ என்று சொல்லப்‌பட்ட உபாஸகர்க்கு (க்ரியாங்க, மானவை, இரண்டும்‌) கர்மத்துக்கு, அங்கமான ஸேஷத்வ போக்த்ருத்வங்க ளிரண்டும்‌ ; கர்மத்துக்கு யோக்‌யதாபாதகங்களான ஸேஷத்வ போக்த்ருத்வங்கள்‌ ; இப்படி இருக்கிற இவற்றைச்‌ சொல்லுவான்‌ என்‌ என்னில்‌ ; போக்த்ருத்வமாவது – போக்‌ய ஸித்‌திக்கு அடியான யத்நத்திலே மூட்டுகையாலும்‌, ஸேஷத்வம்‌ அதில்‌ ஆத்ம ஜ்ஞாநம்‌ முன்னாக ப்ரவர்த்திக்க வேண்டுகையாலும்‌, அந்த சேஷத்வ போக்த்ருத்வங்கள்‌ ஸாதந ப்ரதம பாவியான கர்மத்தினுடைய உத்பத்தியிலே ஸஹ கரிக்கையாலும்‌ அவற்றை க்ரியாங்கம்‌ என்கிறது –
இப்படிப்பட்ட ஸேஷத்வ போக்த்ருத்வங்கள்‌ (செயல் தீரந்தார்‌ வ்ருத்தியில்‌) “செயல்‌ தீரச் சிந்தித்து வாழ்வாரே வாழ்வார்‌”? (நா. திருவ. 88) என்கிறபடியே உபாய ரூப ப்ரவ்ருத்தியில்‌ ஸ்வரூப பாரதந்த்ர்யத்தாலே நிவ்ருத்தரான ப்ரபந்தருடைய, வ்ருத்தியில்‌ – கைங்கர்ய வ்ருத்தியிலே என்றபடி. (ஸ்வ நிர்பந்த, மறுக்கும்‌)-ஸ்வ போக்த்ருத்வ ப்ரதிபத்தியையும்‌, மதீயத்வ ப்ரதிபத்தியையும்‌ தவிர்க்கும்‌. எங்ஙனே என்னில்‌ ; இவனுடைய போக்த்ருத்வம்‌ அவனுடைய போகத்துக்கு வர்த்தகமாயிருக்கும்‌, * அஹமந்நம்‌ என்ற பின்பு ‘‘அஹமந்தாத.:” என்றது – போக்த்ருத்வமிறே, இப்படிச் சொல்லாத போது ஒரு சேதநனோடே அநுபவித்ததா யிராதிறே ; இவனுடைய ஸேஷத்வமும்‌ அத் தலைக்கு அதிஸய கரமாயிருக்கும்‌, “*பரகத-அதிஸய-ஆதநேச்சயா உபாதேயத்வமேவ யஸ்ய ஸ்வரூபம்‌ ஸ ஸேஷ:”, ‘“யதேஷ்ட விநியோகர்ஹம்‌ ஸேஷ ஸப்தேந கத்‌யதே”, “ஈஸ்வரேண ஜகத் ஸர்வம்‌ யதேஷ்டம்‌ விநியுஜ்யதே” என்னக் கடவதிறே

போகத்தில் தட்டு மாறும் சீலம் காட்கரையிலே கரை அழிக்கும்–சூரணை -178-அதாவது
இப்படி போக்ய பூதரான ஆழ்வாருடன் கலந்து பரிமாறும் இடத்தில் – ஆள் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயன் –திருவாய்-9-6-7–என்றும் – ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது -திருவாய்-9-6-9–என்றும் பேசும்படி அத் தலை இத் தலையாய் சேஷி சேஷ பாவம் மாறாடும் சீல குணம் –காட்கரையிலே கரை அழிக்கும்-அதாவது–திரு காட்கரை மருவிய மாயன் தன் மாயம் நினை தொரு-திருவாய்-9-6-1- -என்று
வித்தராய்ப் பேசின திருகாட்கரையிலே கரை அழியப் பெருகும் என்கை — கரை அழிக்கும் என்கிறது -காட்கரை -என்கிற சமாதியாலே .–நம் கண்ணன் கள்வங்கள்-என்னில் முன்னம் பாரித்து என்னை முற்றம் பருகினான் –-கீழே என் உயிர் தான் உண்டான் -இங்கு பருகினான் -பெருமானுடைய உண்ணும் சோறு பருகும் நீர் இருக்கும் படி -தட்டு மாறும் சீலம் – ஆராவமுத ஆழ்வார் திருமழிசைப் பிரான் -அங்கும் தட்டு மாறிற்றே -)

செடியாய வல் வினைகள் தீர்க்கும் திரு மாலே!
நெடியானே! வேம்கடவா! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தது இயங்கும்
படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேனே –4
-9-அநந்ய பிரயோஜனரும் – பிரயோஜனாந்தர பரரும்- அந்ய பரரும் கிடந்தது சஞ்சரியா நின்றால் ஒரு நினைவுற்று அசேதனவத் கிடக்க வேணும்-பார தந்த்ர்யத்துக்கு அசேதன சமாதியாகவும் வேணும் – அது புருஷார்த்தமாகைக்கு காணவும் வேணும்

உயிர் கொண்டு உடல் ஒழிய ஓடும் போது ஓடி
அயர்வு என்று தீர்ப்பான் பெயர் பாடி -செயல் தீரச்
சிந்தித்து வாழ்வாரே வாழ்வார் சிறு சமயப்
பந்தனையார் வாழ்வேல் பழுது-88-ஆத்மா சரீரங்களை விட்டு பிராணன்களைக் கொண்டு யமபடராலே ப்ரேரிதனாய் போம் போது- ஆளிட்டு அந்தி தொழ ஒண்ணா தாப் போலே ஆஸ்ரிதரை ஆளிட்டு அழைத்துக் கொள்ளாதே- தானே ஓடி வந்து இவர்கள் தர்சனத்தாலே வந்த அறிவு கேடு முதலான துரிதங்களை எல்லாம் போக்குமவன் திரு நாமத்தை ப்ரீதியோடு சொல்லித் தனக்கு ஒரு சாத்யம் இல்லாத படி  அனுசந்தித்து வாழ்வாரே வாழ்வார்-செயல் என்று கர்மா ஆகவுமாம்
இவ்வாத்மா தான் செய்யக் கடவ ஷூத்ர சமயம் ஆகிற பந்தத்தை யுடையார் வாழ்வு வ்யர்த்தம்
துக்க ஹேதுவான அஹங்கார மமகார கர்ப்பமாகையாலே பந்தகமாய் ஷூத்ர மான கர்மாத் யுபாய பேதங்களைப் பற்றினார்க்கு ஒரு பிரயோஜனமும் இல்லை – அந்வய வ்யதி ரேகங்களாலே இவற்றுக்கு உபாயத்வம் முதலிலே இல்லை என்று உள்ளபடி யுணர்ந்து இருக்கும்-ஞானி நாமக் ரேசரர் ஆகையாலே
பந்தனையார் வாழ்வேல் பழுதென்று அவற்றில் ஒரு சரக்கற அருளிச் செய்கிறார் –
துக்க ஹேதுவான-அஹங்கார கர்ப்பம் ஆகையாலே பந்தகமாய்- ஷூத்ரமான கர்மாத் யுபாய பேதங்களைப் பற்றினார்க்கு
ஒரு பிரயோஜனமும் இல்லை –பகவத் ப்ரீதியே பலத்துக்கு உபாயம்-கண்டாகர்ணன் க்ஷத்ர பந்து பக்கலிலே பார்த்தோமே 

இந்த க்ரியா வ்ருத்தி சப்தங்களால் சொன்ன கர்ம கைங்கர்யங்கள் இவர்களுக்கு எதுக்கு அநுகுணமாய் இருக்கும் -இந்த க்ரியா வாசியான கர்மமும்‌ வ்ருத்தி வாசியான கைங்கர்யமும்‌ எதுக்கு அநுரு,ணமா யிருக்கு மென்னில்‌ மேல் சொல்லுகிறது-

கர்ம கைங்கர்யங்கள் சத்ய அசத்ய நித்ய அநித்திய வர்ண தாஸ்ய அனுகுணங்கள்-சூரணை -26 –(அதாவது கர்மம் அசத்யமாய்–அநித்யுமுமான வர்ணத்துக்கு அநுகுணமாய் இருக்கும்
கைங்கர்யம் சத்தியமாய் நித்யமுமான தாஸ்யத்துக்கு அநுகுணமாய் இருக்கும்
என்கை-)

வர்ணத்தை அசத்தியம் அநித்தியம் என்கிறது ஆத்மாவுக்கு உள்ள வேஷம் அல்லாமையாலே
சததைக ரூபம் அன்றிக்கே -ஔ பாதிகமுமாய் அநித்யமுமாய் நச்வரமான தேக அவதியாய் போருகையாலே
–தாஸ்யத்தை சத்யம் நித்யம் என்கிறது-திருமாலே நானும் உனக்கு பழ வடியேன் திருப்பல்லாண்டு -11– என்கிறபடியே ஆத்மாக்கு உள்ள வேஷம் ஆகையாலே சததைக ரூபமாய் யாவதாத்மா அனுவர்த்தி யாகையலே-வர்ண அனுகுணம் என்றது -வர்ணத்துக்கு சேர்ந்தது என்ற படி-
தாஸ்ய அனுகுணம் என்றதும் அப்படியே-தாஸ்யத்துக்கு சேர்ந்தது என்ற படி-(விசிஷ்ட வேஷத்தை பொறுத்தே இருக்கும் கர்மம் -அசத்திய அநித்ய வர்ணம்-கைங்கர்யம் நிஷ்க்ருஷ்ட வேஷம் பொறுத்தே இருக்கும் -சத்யமாயும் -நித்யமாயும் தாஸ்யம் திருமாலே நானும் உனக்குப் பழ வடியேன் -தாஸ்யம் பழைமை நித்யம் -அங்கும் உண்டே நிருபாதிகம் -சத்யம் )

இவை இரண்டிலும்‌ வைத்துக் கொண்டு எத்தை எதுக்கு அநுகுணம்‌ என்கிறதென்னில்‌ ; கர்மம்‌ அஸத்யமுமாய்‌, அநித்யமுமான வர்ணத்துக்கு அநு கு,ணமாயிருக்குமென்றும்‌, கைங்கர்யம்‌ ஸத்யமுமாய்‌ நித்யமுமான ஸ்வரூபத்திலே ஆகையாலே ஸத்யமுமாய்‌ நித்யமுமாயிருக்கும்

அல் வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியூர் கோன் அபிமான துங்கன்
செல்வனைப் போலே திருமாலே நானும் உனக்கு பழ வடியேன்
நல் வகையால் நமோ நாராயணா என்று நாமம் பல பரவிப்
பல் வகையாலும் பவித்ரனே உனக்குப் பல்லாண்டு கூறுவனே –11-திருமாலே – இவ்வாத்ம வஸ்து ஒரு மிதுன சேஷம் -என்று சேஷத்வ பிரதி சம்பந்தியை சொல்லுகிறார்கள்-இத்தால் மாதா பித்ர் சேஷத்வமும் -தேவதாந்தர சேஷத்வமும் கர்ம உபாதிகம் என்கை
அதவா-தேவரீருக்கு பிராட்டி நிரூபக பூதையாய் இருக்கிறாப் போலே எங்களுக்கும் தாஸ்யம்
நிரூபகம் என்கிறார்கள் -என்றுமாம் நானும் – பிரயோஜனாந்தர பரதையாலே அநாதி காலம் அன்யார்ஹனாய் போந்த நானும் – சேஷி பக்கல் பிரயோஜனாந்தரத்தை அபேஷிக்கை யாவது -பதிவ்ரதை பர்த்தாவின் பக்கலிலே வ்யபிசாரத்தை அபேஷித்தவோபாதி இறே –உனக்குப் பழ வடியேன் – உனக்கு சேஷித்வம் அநாதி யானவோபாதி எனக்கும் சேஷத்வம் அநாதி என்கை
உனக்கு – பிரயோஜனாந்தரத்தை அபேஷித்து திருவடிகளில் கிட்டினதுவே ஹேதுவாக அநந்ய
பிரயோஜநன் ஆக்க வல்ல உனக்கு-இந்த ஸ்வரூப ஞானம் எவ் வழியாலே பிறந்தது என்னில்
சகல வேதாந்த தாத்பர்யமான மந்திர ரஹச்யத்தாலே பிறந்தது என்கிறார் மேல்-

இவை இரண்டுக்கும் பிரேரகங்கள் எவை -இவை இரண்டுக்கும்‌ ப்ரேரகர்‌ ஆர்‌ என்னில்‌ -என்ன சொல்லுகிறது-

இவற்றுக்கு விதி ராகங்கள் பிரேரகங்கள்-சூரணை -27 –

அதாவது – யஜேத -யஜுர் வேதம்-ஜூஹுயாத்–கர்ம மீமாம்சை-இத்யாதி யான சாஸ்திர விதி கர்மத்துக்கு பிரேரகம் -அசேஷ சேஷ தைகரதி யாகிற ராகம் கைங்கர்யத்துக்கு பிரேரகம் என்கை .
(பிரேரகம் தூண்டுபவை-காதல் -நின் கண் வேட்கை எழுவிப்பேனே -இசைவித்து – ஒழிவிலா காலம் எல்லாம் வழு விலா அடிமை -அசேஷ -சேஷதைக ரதி ரூபம் நித்ய கிங்கரோ பவாமி -அனுபவம் -ப்ரீதியைத் தூண்ட -அது கைங்கர்யத்தில் தூண்டும்-அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யம்-இட்ட கால் இட்ட கைகளாய் இருக்கும் -மூவாறு மோசம் மோகிக்கப் பண்ணுமே ) பகவத் அனுபவ ஜனித ப்ரீதி காரிதம் இறே கைங்கர்யம் .-உற்றேன் உகந்து பணி செய்து உன பாதம் பெற்றேன் -திருவாய் -10-8-10–என்னக் கடவது இறே- (கிரமம் படி இல்லாமல் -பணி செய்து முதலில் பாதம் பெற்றது அப்புறம் -உபாசகருக்குத் தானே கிரமம் )

“இத,ம் குரு ‘, “அநேந யஜேத” என்றும்‌ சேதநனைக்‌ குறித்துச் சொல்லுகிற ஸாஸ்த்ர விதிகள்‌ கர்மத்துக்கு ப்ரேரகம்‌. பகவதநுபவ ஜநித ப்ரீதி கைங்கர்யத்துக்கு ப்ரேரகம்‌. ““உற்றேனுகந்து பணி செய்து” (திருவாய்‌. 10- 8 – 10)என்னக் கடவதிறே.

உற்றேன் உகந்து பணி செய்ய உன பாதம்
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்

கற்றார் மறை வாணர்கள் வாழ் திருப் பேராற்கு
அற்றார் அடியார் தமக்கு அல்லால் நில்லாவே–10-8-10-கெடு மரக்கலம் கரை சேர்ந்தால் போலே கிட்டிக் கொடு நின்றேன் –ப்ரீதி ப்ரேரிதனாயக் கொண்டு -திருவாய் மொழி பாடி -உன் திருவடிகளை அனுபவிக்கப் பெற்றேன் – –சாதகமாய் மேல் -சாத்தியமாகச் சொல்லுகிறது அன்று -இரண்டும் ஏக காலத்திலே உள்ளதாகையாலே –ஈதே இன்னம் வேண்டுவது-இது தானே மாறி மாறி யாவதாத்ம பாவியாகச் செல்லுகை இறே –பு நரா வ்ருத்தி இன்றிக்கே ஒழிகை யாவது -மீளாது ஒழிகை -விதி போலே இருக்கிறதன்றே – எந்தாய்--இவ்வனுபவம் ஸ்வரூப அனுரூபம் என்கிறது –இத்தலைக்கு சேஷத்வமும் தேவர்க்கு சேஷித்வமும் இறே ஸ்வரூபம் -இவர் அபேக்ஷித்த படியே செய்கிறோம் என்ன -ப்ரீதராய் அருளிச் செய்கிறார் –

இவற்றுக்கு ஆஸ்ரயம் யார் என்ன சொல்லுகிறது-இவற்றுக்கு ஆஸ்ரயம்‌ ஆர்‌ என்னில்‌

மண்டினாரும் மற்றையாரும் ஆஸ்ரயம்-சூரணை -28 –

அதாவது-கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று மண்டினார்-திருக் குறும் தாண்டகம் -19– என்று உகந்து அருளின நிலங்களிலே அத்ய அபிநிவிஷ்டராய் இருக்கிற பிர பின்னர்
கைங்கர்யத்துக்கு ஆஸ்ரயம்-விளக்கினை விதியின் காண்பார் மெய்மையைக் காண்கிற்பாரே -திருக் குறும் தாண்டகம்-18–என்று கீழில் பாட்டில் சொன்ன மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யலாமே -திருக் குறும் தாண்டகம் -19—மற்றையரான உபாசகர் கர்மத்துக்கு ஆஸ்ரயம் என்கை-(சாஸ்திரம் – –உபாசனம்-விளக்கினை விதியில் காணும் மற்றையரான உபாசகர் -கர்மத்துக்கு ஆஸ்ரயம்-சாஸ்த்ர தாத்பர்யம் -திருமந்திரம் —பிரபன்னர் -அர்ச்சாவதார திவ்ய மங்கள விக்ரஹ கைங்கர்யம் –என்றவாறு )இத்தால் கர்ம கர்த்தாக்களையும் கைங்கர்ய கர்த்தாக்களையும் சொல்லிற்று ஆய்த்து-

(மண்டினாரும்‌ மற்றையாரும்‌ ஆஸ்ரயம்‌)-“கண்டியூர்‌” (திருக்குறு. 19) இத்யாதி,. மண்டினார்‌ என்கிறது – உகந்தருளின நிலங்களிலே அத்யபிநிவிஷ்டராயிருக்கிற ப்ரபந்நரை ; மற்றையார்‌ என்கிறது – “விளக்கினை விதியில்‌ காண்பார்‌” (திருக்குறு. 18) என்கிற உபாஸகர்‌ என்று ப்ரஸித்‌தமிறே. இத்தால்‌ கர்மத்துக்கு ஆஸ்ரயம்‌ உபாஸகர்‌, கைங்கர்யத்துக்கு ஆஸ்ரயம்‌ ப்ரபந்நர்‌ என்றபடி-

பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர் மனை  திரி தந்து உண்ணும்
முண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர் உலகம் ஏத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று
மண்டினார் உய்யல் அல்லால் மற்றை யார்க்கு உய்யலாமே -19-–அவன் உகந்து அருளின இத் திருப் பதிகளிலே நெஞ்சு மண்டினவர்கள் உய்யல் அல்லது அல்லாதார்க்கு உஜ்ஜீவிக்க விரகு உண்டோ –

இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையைக் கூட்டி
அளப்பில் ஐம்புலன் அடக்கி அன்பு அவர் கண்ணே வைத்து
துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே
விளக்கினை விதியில் காண்பர் மெய்ம்மையே காண்கிற் பாரே–18--சாஸ்த்ரங்களில் விதித்தபடியே
உபாசித்து அவனைக் காண்பார் –என்றும் உளனாய் இருக்கிற சர்வேஸ்வரனை காண வல்லரே -காண -மாட்டார் -என்றபடி –அங்க பிரபத்தி இல்லாமல் காண மாட்டார் என்றபடி-

இவற்றுக்கு விஷயம் ஏது என்ன சொல்லுகிறது-இவற்றுக்கு விஷயம்‌ ஏதென்னில்‌ ;

அருள் முடிய நிறுத்தி அடைய நின்றதும் நல்லதோர் அருள் தன்னாலே நன்றும் எளியன் ஆகிறதும் விஷயம்-சூரணை -29 –

அதாவது-எத் தவம் செய்தாருக்கும் அருள் முடிவது ஆழியான் பால் -நான்முகன் 2–என்கிற படியே ஆஸ்ரயண பல சித்தி தன்னுடைய பிரசாதத்தாலே யாம்படி –-தன் மூர்த்தி நிறுத்தினான் தெய்வங்களாக -திருவாய் -5-2-8–என்ற படியே தனக்கு தனுபூதரான தேவதைகளை நிறுத்தி –
அவரவர் விதி வழி அடைய நின்றனர் -திருவாய்-1-1-5–என்கிற படியே ஆஸ்ரயிக்கிற சேதனர் வித்யுக்த பிரகாரேன ஆஸ்ரயித்து பலம் பெரும் படி தேவதாந்தர்யாமியாய் நின்ற இடம் கர்மத்துக்கு விஷயம்நல்லதோர் அருள் தன்னாலே காட்டினான் திரு அரங்கம் -திருமாலை -10–என்றும்-கருத்துக்கு நன்றும் எளியனாய்-திருவாய்-3-6-11- -என்று சொல்லுகிறபடியே கேவல ஸுய க்ருபையாலே அத்யந்த சுலபனாய் கொண்டு அர்ச்சாவதாரமாய் நிற்கிற இடமே கைங்கர்யத்துக்கு விஷயம் என்கை-

”எத் தவம்‌ செய்தார்க்கும்‌ அருள் முடிவதாழியான்‌ பால்‌”: (நான்‌. திருவ. 2) என்றும்‌, “’நிறுத்தி நும்‌ உள்ளத்துக் கொள்ளும்‌ தெய்வங்களும்மை உய்யக் கொள்‌ மறுத்துமவனோடே கண்டீர்‌” (திருவாய்‌. 5 – 2- 7) என்றும்‌, ”அவரவர்‌ விதி வழி அடைய நின்றனரே” (திருவாய்‌. 1 – 1 – 5] என்றும்‌ சொல்லுகிறபடியே தேவதைகளுக்கு அந்தர்யாமியாய்க் கொண்டு நின்ற விடமும்‌, ”நல்லதோரருள் தன்னாலே காட்டினான்‌ திருவரங்கம்‌”? (திருமாலை 10) என்றும்‌, “கருத்துக்கு நன்றுமெளியன்‌”’ (திரு வாய்‌. 3 – 6 – 11) என்றும்‌ சொல்லுகிறபடியே அர்ச்சாவதாரமாய்க் கொண்டு நின்ற இடமும்‌. –

தேருங்கால் தேவன் ஒருவனே என்று உரைப்பர்
ஆரும் அறியார் அவன் பெருமை -ஒரும்
பொருள் முடிவும் இத்தனையே எத் தவம் செய்தார்க்கும்
அருள் முடிவது ஆழியான் பால் –2–எல்லா சாதன அனுஷ்டானம் பண்ணினவர்களுக்கும்
அவற்றுக்கும் பலம் சர்வேஸ்வரன் பக்கலில் நின்றும் என்கை-ஏழு ஏழு  படி இங்கனே தபஸ் ஸூ பண்ணினாருக்கும் எம்பெருமான் பிரசாதத்தால் அல்லது பல பர்யந்தமாய் முடியாது-

நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள் உம்மை உய்யக்கொள்
மறுத்தும் அவனொடே கண்டீர் மார்க்கண்டேயனும் கரியே

கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
இறுப்பதெல்லாம் அவன் மூர்த்தி யாயவர்க்கே இறுமினே.–5-2-7—உங்கள் நெஞ்சிலே நீங்கள் நிறுத்திக் கொள்ளுகிற தேவதைகள் –த்யேய வஸ்துக்களை நிறுத்துகையும் த்யாதாவுக்கே பரம் என்கை அங்குஷ்ட மாத்ர புருஷோமத்ய ஆத்மனி திஷ்ட்ட்தி-என்கிறவன் அவசர ப்ரதீஷனாய் நிற்கிறது அன்றே -யுக்த்யா ஆபாசங்களாலும் வசன ஆபாசங்களாலும் பொரி புறம் தடவி நிறுத்துகை –உங்களை உய்யக் கொள்ளும் இடத்தில் -ரஷிக்கும் போது தாங்கள் அக்ஷமர் ஆகையால் –பேணிலும் வரம் தர மிடிக்கில்லாத தேவரை -திருவில்லாத் தேவரை –மறுத்தும் அவனொடே கண்டீர் – மீண்டும் அவனோடே சேர்த்து -அவன் பிரசாதத்தாலே கிடீர் –நீங்கள் அவர்களை ஆஸ்ரயித்ததாலும் பலம் தருவான் அவனே –
பலமத-நஹி பாலன சாமர்த்த்யம் ருதே ஸர்வேச்வரீம் ஹரீம்
– இவர்களை ஆஸ்ரயிக்க வேறே ஒருவன் பலம் தருமது எங்கே கண்டோம் என்னில் –மார்க்கண்டேயனும் கரியே- ஸ்ரீ மார்க்கண்டேய பகவான் சாக்ஷி-

இறுக்கும் இறை இறுத்து உண்ண எவ்வுலகுக்குந் தன்மூர்த்தி
நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே

மறுத் திரு மார்வன் அவன் தன் பூதங்கள் கீதங்கள் பாடி
வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார் மேவித் தொழுது உய்ம்மினீரே.–5-2-8—ஸ்வ வர்ண ஸ்வ ஆஸ்ரம உசித கர்மங்களாலே சமாராதித்து ஸ்வ அபிலஷிதங்களை பெற்று உஜ்ஜீவிக்க-எவ் வுலகுக்குந் தன்மூர்த்தி நிறுத்தினான் தெய்வங்களாக –-பின்ன ருசிகளான -அதிகாரிகளை யுடைத்தான சர்வ லோகங்களுக்கும் –தன் சரீர பூதரான தேவதைகளை சமாராத்யராக நிறுத்தினான் –ஈஸ்வரோஹம் என்று இருப்பார் தலை வணங்குகைக்காக நிறுத்தினான் –-அத் தெய்வ நாயகன் தானே-
ஆஸ்ரயிப்பார்களோடு ஆஸ்ரயணீயரோடு வாசி அற எல்லார்க்கும் நிர்வாஹகன் அவன் தானே -சேதனருடைய குண அனுரூபமாக ஆராத்யராகவும் அபிமத பலப்ரதராம் படியும் பண்ணினான்

அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி யடைவார்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி யடைய நின்றனரே 
–1-1-5—அவரவர் இறையவர் அவ்வோ தேவதைகள்-குறைவிலர்
ஆஸ்ரயிக்கிற வர்களுடைய பலம் கொடுக்கைக்கு குறை யுடையவர் அல்லர்-இறையவர்-நிருபாதிக சர்வேஸ்வரன்-அவரவர் விதி வழி யடைய-ஆஸ்ரயிக்கிறவர்கள் வித்யுக்த பிரகாரத்தாலே ஆஸ்ரயிக்கவும்-ஆஸ்ரயணீயர் அவர்களுக்கு பல பிரதானத்துக்கு சக்தராகவும்-நின்றனரே அந்தராத்மதயா நின்றார்-

நாட்டினான் தெய்வம் எங்கும் நல்லதோர் அருள் தன்னாலே
காட்டினான் திருவரங்கம் உய்பவர்க்கு உய்யும் வண்ணம்
கேட்டீரே நம்பிமீர்காள் கெருட வாகனும் நிற்கச்
சேட்டை தன் மடி யகத்துச் செல்வம் பார்த்து இருக்கின்றீரே–10—சத்வ பிரசுரராய் தன்னைப் பற்றும் அளவு உடையவர் அன்றிக்கே இருக்கும் ரஜஸ் தமஸ் பிரசுரர்க்கும் தேவதைகளை நாட்டினான் –
அதுக்கடி தன்னரசு போலே ஸ்வ தந்த்ரராய் மூலையடியே திரியப் புக்கவாறே ஸ்வ ஸ்வ குண அனுகூலமாக தேவதைகளை ஆஸ்ரயித்து பின்னை சேதனர் இறே – நம் வாசி அறிந்து -நம்மைப் பற்றுகிறார்கள் என்னும் நினைவாலே யாய்த்து தேவதைகளை நாட்டிற்று –உபக்நத்தை பெறாத கொடி போலே யாய்த்து ஈஸ்வரனுடைய ஆத்ம பாவத்தை ஒழியில் தேவதைகள் உடைய சத்தாதிகள் இருப்பது –சுள்ளிக் கால் நாட்டினால் போலே இருக்கிறது ஆய்த்து-நிறுத்தினான் தெய்வங்களாக -என்னக் கடவது இறே –நல்லதோர் அருள் தன்னாலே – தான் நினைத்த வழியே தன்னுடைய ஹிதம் அறிந்து போராதே
நோவு பட்டு இருந்தன ஆகாதே என்று கிருபை பண்ணினான் ஆய்த்து –நல்லதோர் அருள் –இவற்றின் உடைய கர்ம அனுகுணம் ஆதல் – ஆஸ்ரய அனுகுணம் ஆதல்-பண்ணும் அருள்போல் அன்றியே –க்ர்ப்பயா கேவலம் –என்கிறபடியே-இவற்றின் உடைய துர்கதியைக் கண்டு பண்ணும் அருள் –இவர்கள் தம் தாம் தசையை நினைந்து அனுசந்தித்து அதுக்கு அனுதபிக்கவும் அறியாதே இருக்கச் செய்தே பண்ணும் அருள் இறே-நல்லதோர் அருள் -என்கையாலே-கீழ் தேவதைகளை உண்டாக்கி வைத்ததும் அருளின் கார்யம் என்கிறது –நல்லதோர் அருள் தன்னாலே -காட்டினான் திருவரங்கம்--சிலர் எங்களுக்கு காட்ட வேண்டும் என்ன -காட்டுகை அன்றிக்கே முலைக் கடுப்பு தீர தரையிலே பீச்சுவாரைப் போலே தன் செல்லாமையினால் காட்டினான் ஆய்த்து –

கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய்
மண்கொள் ஞாலத்து உயிர்க்கெலாம் அருள்செய்யும் வானவர் ஈசனைப்
பண்கொள் சோலை வழுதி வளநாடன் குருகைக்கோன் சடகோபன் சொல்
பண்கொள் ஆயிரத்து இப் பத்தால் பத்தராகக் கூடும் பயிலுமினே.–3-6-11–கண்ணுக்கு விஷயம் அன்றிக்கே அகவாயிலே மிகவும் பிரகாசிக்கிற படி – இவருக்கு எங்கும் இதுவே சம்ச்லேஷ விஸ்லேஷன்களுக்கு பிரயோஜம்-சம்ச்லேஷம் ஆகிறது -மானஸ அனுபவம் -விஸ்லேஷம் ஆகிறது -பாஹ்ய சம்ச்லேஷ அபேக்ஷையாலே மானஸ அனுபவத்துக்கு வரும் குலைதல்-மண் கொள் ஞாலத்து உயிர்க்கெலாம் அருள்செய்யும் வானவர் ஈசனைப்-நித்ய ஸூரிகளுக்கு ஸூலபன் ஆனால் போலே-சம்சாரிகள் என்று வாசி வையாதே அர்ச்சாவதார முகத்தால் வந்து ஸூலபனானவனை-

இவ்வோ நிலைகளை விஷயமாக உடைத்தாய் ஆகையாலே கர்ம கைங்கர்யங்கள் இப்படி சொல்லப் பட்டன என்கிறார்-

இவற்றாலே சாதாரணம் அசாதாரணம் என்னும்–சூரணை -30 –

அதாவது-இப்படி தேவதா அந்தர்யாமியையும் அர்ச்சாவதார தையும் விஷயமாக உடைய இவ் ஆகாரங்களாலே சாதாரண விக்ரக விசிஷ்டனை விஷயமாக உடைய கர்மத்தை சாதாரணம் என்றும்
அசாதாரண விக்ரக விசிஷ்டனை விஷயமாக உடைய கைங்கர்யத்தை அசாதாரணம் என்றும் சொல்லும்
என்கை-

(இவற்றாலே) இந்த ப்ரமாண ப்ரகாரங்களாலே (ஸாதாரணம்‌ அஸாதாரணம்‌ என்னும்‌) ஸாதாரணமான்‌ விக்‌ரஹ விஸிஷ்டன்‌ கர்மத்துக்கு விஷயம்‌, அஸாதாரணமான விக்‌ரஹ விஸிஷ்டன்‌ கைங்கர்யத்துக்கு விஷயம்‌ என்று விஷய பேதத்தை அருளிச் செய்து, அதில்‌ அஸாதாரண விக்‌ரஹ விஷய கைங்கர்ய நிஷ்டன்‌ ஸாதாரண விக்ரஹ விஷயத்திலே ஸர்வ ஸாமாந்ய தயா கர்த்தவ்யமானவற்றில்‌ அந்வயியான்‌ என்கிறார் –

இவ் அசாதாரண சேவையிலே அதிகரித்தாருக்கு சாதாரணமான வதில் அந்யவம் தன்னடையே கழியும்படியை ச த்ருஷ்டாந்தமாக அருளி செய்கிறார்-ஆனால்‌ பழையதாக அநுவர்த்தித்துப்‌ போந்ததுமாய்‌ வர்ணாத்‌,ய ஸாதாரணமுமான ஸத்‌வாரக விஷய ப்ரவ்ருத்தியை இப்போது இவனாலே விடப் போமோ என்னில்‌

ஜாதி ஆஸ்ரம தீஷைகளில் பேதிக்கும் தர்மங்கள் போலே அத்தாணி சேவகத்தில் பொதுவானது நழுவும்-சூரணை-31

(அசாதரண கைங்கர்யத்தில் இழியவே சாதாரணமான கர்மம் தன்னடையே கழியும் –-ஸ்ரீ லஷ்மணன் ஸ்ரீ ராம கைங்கர்யத்தில் இழியவே ஊர்மிளை உடன் கூடின தர்ம அனுஷ்டானம்
தன்னடையே கழிந்ததே –நற்செல்வன் தங்காய்-ஸ்ரீ ஆச்சார்ய கைங்கர்யத்தில் இழியவே பகவத் கைங்கர்யம் நழுவும் – ஸ்ரீ வடுக நம்பி பால் காய்ச்சி ஸ்ரீ நம் பெருமாள் சேவை விட்டாரே )-அதாவது
ஸ்வ கர்ம ப்ராஹ்மணஸ்ய -அத்யயனம் ,அத்யாபனம் ,யஜனம் யாஜனம் ,தானம் ப்ரதிக்ரஹணம்,
தாயாத்யம், சிலோஞ்ச்ச ,அந்யச்ச, அபரிக்ருஹீதம் , ஏதான் ஏவ ஷத்ரியஸ்ய அத்யாபன யாஜன பிரதிக்ரஹணாதி ,பரிஹார்யாணி ,தண்ட யுத்த தாதிகார , ஷத்ரியவத் வைச்யஸ்ய தண்ட யுத்த வர்ஜம் க்ருஷி கோரஷண வாணிஜ் யாதிகம் க்ராஹ்யம்–ஆபஸ்தம்ப ஸூத்ரம்
-என்கையாலே
அத்யயன அத்யாபன யஜன யாஜன தான பிரதிஹ்ருக -ரூப ஷட் கர்மமும் பிராமணனுக்கு கர்தவ்யமாய் ஷத்ரிய வைஸ்யர்களுக்கும் அத்யாபனாதி த்ரயம் ஒழிய அத்யயனாதி த்ரயமே கர்தவ்யமாய் , அவர்கள் தங்கள் உள்ளும் தண்ட யுத்தங்கள் ஷத்ரியனுக்கே அசாதாரணமாய் ,
க்ருஷி கோ ரக்ஷண வாணிஜ்யங்கள் வைஸ்யனுக்கு அசாதாரணமாய் , சுஸ்ருஷா சூத்ரச்ய இதரேஷாம் வர்ணானாம்-என்கையாலே சூத்ரனுக்கு திரை வர்ணிக ஸூஸ்ருஷையே தர்மமாய் ,
இப்படி தத் ஜாத்ய அனுகுணமாக ஒருவனுக்கு உபாதேயம் ஆனது ஒருவனுக்கு த்யாஜ்யமாக கொண்டு தர்மங்கள் பேதித்து இருக்கும் இறே-
–பிரமச்சாரியான தசையில் உபாதேயமான பிஷா சரண சமிதா தரணாதிகள் க்ருகஸ்தனான தசையில் த்யாஜ்யங்களாய் அக்னி கோத்ர அதிதி சத்காராதிகள் உபாதேயம் ஆகையாலும் வனஸ்தனான தசையில் – -சந்த்யஜ்ய க்ராம்யமாகாரம் சர்வஞ்சைவ பாரிசாதம்-என்கையாலே பூர்வ ஆஸ்ரமத்தில் உபாதேயமான க்ராம்யாகார பரிச்சதாதிகள் த்யாஜமாய் –
வசீத சர்வ சீரம் வா -என்று தொடங்கி சொல்லப் பட்ட சரம சீர வசனத்வ ஜடிலத்வ மச்முருச்லோம நகதாரண வன்ய ஆகாரங்கள் உபாதேயம் ஆகையாலும் சந்யாசியான தசையில் பூர்வ ஆஸ்ரம உபாதேயமான அக்நிஹோத்ர அதிதி சத்காராதிகளும் ஜடிலத்வாதிகளும் த்யாஜ்யமாய்
அநக்நிஸ் அநிகேதஸ் ஸ்யாத் -மனு ஸ்ம்ருதி -இத்யாதிப் படியே அனக்நித்வ அநிகேதத்வ
அசஹாயத்வாதிகளும் உபாதேயம் ஆகையாலும் ஆஸ்ரய தர்மம் பேதியா நின்றது இறே .-ஜியோஷிடோமாதிகளில் தீஷித்தவனுக்கு வர்ணத்ரைய ஆஸ்ரம சச்துஷ்டைய சாதாரணமாய்
அகரேண பிரத்யவா எதாய அவஸ்ய கர்தவ்யமாய் போரும் நித்ய கர்மம் அநனுஷ்டேயமாய்
ஜியோதிஷ்டோமாதி தர்மமே அனுஷ்டேயம் ஆகையாலே தீஷையிலே தர்மம் பேதித்து இருக்கும் இறே-ஆக இப்படி பிராமணாதி ஜாதிகளிலும் பிராமசார்யாதி ஆஸ்ரமங்களிலும் ஜியோதிஷ்டோமாதி தர்மாந்தர தீஷைகளிலும் பேதிக்கும் தர்மங்கள் போலே அசாதாரண விக்ரக சஹிதேஸ்வர விஷயம் ஆகையாலே அசாதாரணமாய் ,அத ஏவ –அத்தாணி சேவகம் –திருப்பல்லாண்டு -8- -என்று
அந்தரங்க சேவை யாகிற கைங்கர்யத்திலே அதிகரித்தவர்களுக்கு தேவதாந்த்ரி விஷயமாய் தத் சரீர பூத தேவதாத்வார தத் ஆராதனம் ஆகையாலே சாதாரணமாய் இருந்து உள்ள கர்மம் உறங்குவான் கை பிண்டம் போலே தன்னடைவே நழுவும் என்கை –இத்தால் வர்ணாஸ்ரம நிஷ்டர்க்கு தத் அதிகார அநுரூப தர்மம் ஒழிய அநுகுணமானது த்யாஜ்யதையா கழிக்கப் படுமா போலே ஸ்வரூப யாதாம்ய தர்சிகள் ஆனவர்களுக்கு தத் அநுரூப தர்மம் ஒழிய அனனுரூபமானது த்யாஜ்யமாய் தன்னடையே விட்டுக் கழியும் என்றது ஆயிற்று--இப்படி இருக்கச் செய்தே ,சிஷ்டர்கள் அனுஷ்டித்து போருகிறது –
ஸ்வ அனுஷ்டத்தை-அநநுஷ்டானத்தை – பின் சென்று லோகம் நசிக்க ஒண்ணாது என்று
ஆந்ரு சம்சயத்தாலே இறே-யதி ஹ்யஹம் ந வர்த்தேயம் ஜாது கரமண்ய தந்த்ரித மம வர்த்மாநுவர்த்தந்தே மனுஷ்யா பார்த்த ஸர்வஸ –ஸ்ரீ கீதை -23–உத் சீதே யுரிமே லோகா ந குர்யாம் கர்ம சேதஹம் சங்கரஸ்ய ச கர்த்தா ஸ்யாம் உபஹந்யாம் இமா பிரஜா –ஸ்ரீ கீதை -24- என்கிற படி பரார்தமாகவே இறே இவர்கள் அனுஷ்டிப்பது –(குல வர்ண ஆஸ்ரம தர்ம ஸங்க்ரஹம் ஆகாமைக்காக
-பரார்த்தம் பரனது ஆனந்தத்துக்கு என்றுமாம் )

ஜாதி த,ர்மமானது ஜாத்யந்தரத்திலே பேதிக்கக் கண்டோம்‌, கண்ட படி என்‌ என்னில்‌, யஜந-யாஜந-அத் யயந-அத்யாபந தாந ப்ரதி க்‌ரஹங்களாகிற ஷட் கர்மங்கள்‌ க்ஷத்ரியாதி,களில்‌ பேதியா நின்றன விறே –ஆஸ்ரம தர்மம்‌ ஆஸ்ரமாந்தரத்தில்‌ பேதியா நின்றது. இவை இத்தனையும்‌ பேதித்தாலும்‌ பேதியாத நித்ய தர்ம-நைமித்திக த,ர்மங்கள்‌ ஜ்யோதிஷ்டோமாதி, தீக்ஷைகளில்‌ பேதிக்குமாப் போலே ‘அத்தாணிச் சேவகமும்‌”’ (திருப்பல்‌. 8) என்கிற அந்தரங்க கைங்கர்யத்தில்‌ வர்ணாஸ்ரம ஸாதரண தர்மம்‌ தானே நழுவுமிறே-உறங்குகிறவன கையில்‌ எலுமிச்சம் பழம் போலே இது தனக்கு அவகாஸ மில்லை. இந்த த்‌ருஷ்டாந்த பலத்தாலே இவ் வதிகாரிக்கு அகரணே ப்ரத்யவாயமில்லை என்கிறது. கீழ்ச் சொன்னவை தன்னைப் போலே ; இப்படி இருக்கச் செய்தேயும்‌ ஸிஷ்டர்கள்‌ அநுஷ்டித்துப்‌ போருகிது ஆந்ரு ஸம்ஸ்யத்தாலே யிறே 

நெய்யிடை நல்லதோர் சோறு நியதமும் அத்தாணிச் சேவகமும்
கையடைக்காயும் கழுத்துக்கு பூணொடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிர் ஆக்க வல்ல
பையுடை நாகப் பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே –8-–அத்தாணி -என்று பிரியாமை –சேவகம் -என்று சேவை-ஐஸ்வர்யார்த்திக்கும் அநவரத பாவநையும் -அந்திம ச்ம்ர்த்தியும் அநந்ய பிரயோஜநோபாதி கர்த்தவ்யம் இறே–ஆனால் ஐஸ்வர்ய சாதனத்தையும் –தந்து -என்று பிரயோஜத்தோடு ஒக்க சொல்வான் என் என்னில் வெள்ளுயிர் ஆன பின்பு சொல்லுகிறார்கள் ஆகையாலே அந்த சாதனமும் ஸ்வயம் பிரயோஜனமாய் இறே இருப்பது -அநந்ய பிரயோஜனனுக்கு ஸ்வயம் பிரயோஜனமான சேவை சாதனமாக்கி கிடீர் ஷூத்தரமான ஐஸ்வர்யத்தை தந்தது என்கை

இந்த கைங்கர்ய நிஷ்டருக்கு கர்ம நிஷ்டரோடு சேர்த்தி இல்லாமையை சொல்லுகிறது மேல்-இனி கர்ம நிஷ்டனிற் காட்டில்‌ கைஙகர்ய நிஷ்ட,னுக்குள்ள வைஷம்யம்‌ சொல்லுகிறது-

சாதன சாத்தியங்களில் முதலும் முடிவும் வர்ண தர்மிகள் தாச வ்ருத்திகள் என்று துறை வேறு இடுவித்தது-சூரணை -32 –

(சாதனத்தில் முதல் வர்ண தர்மிகள் என்று துறை வேறு விடுவித்து -என்றும்-சாத்யத்தில் முடிவு தாச விருத்திகள் என்று துறை வேறு விடுவித்து -என்றும் பிரித்து பொருள்-சாதனம் -உபாசனம் முதல் படி- கர்ம யோகம் – வர்ண தர்மம் – பகவத் அனுபவம்- சாத்தியம் முடிவு தானே வ்ருத்தி கைங்கர்யம் முடிவு- தாஸ்யம் தானே சத்யம்- நித்யம்- அந்தரங்க அத்தாணிச் சேவகம்-இந்த உயர்ந்த நிலையைக் காட்டவே அது தன்னடையே கழியும் ) அதாவது சாதனத்தில் முதல் அடியான கர்மமும் முடிந்த நிலமான கைங்கர்யமும் -இந்த நெடு வாசி அறிந்தவர்களை நீங்கள் வர்ண தர்மிகள் ,நாங்கள் தாஸ வ்ருத்திகள் -என்று உறவு அறுத்து துறை வேறு இட்டு போகப் பண்ணிற்று என்கை
அதாவது – ஸ்ரீ திரு வயிந்திர புரத்திலே -ஸ்ரீ வில்லி புத்தூர் பகவர் -என்பார் ஒருவர்
எல்லாரும் ஒரு துறையில் அனுஷ்டானம் பண்ண ,தனியே ஒரு துறையில் அனுஷ்டானம்
பண்ணுவராய் -ஒரு நாள் அனுஷ்டானம் பண்ணி ,மீளா நிற்க செய்தே இருந்த பிராமணர் -ஜீயரே -எங்கள் துறையில் அனுஷ்டானம் பண்ண வாராது ஒழிகிறது என்-என்ன-விஷ்ணு தாஸா வயம் யூயம் ப்ராஹ்மணா வர்ண தர்மின–அஸ்மாகம் தாஸ வ்ருத்தினாம் யுஷ்மாகம் நாஸ்தி சங்கதி -என்று துறை வேற இட்டு போனார் ஆய்த்து-(அன்னைமீர் விடுமினோ போலே-ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ கோயிலில் உள்ள சம்சாரிகள் சென்ற பின்பே ஸ்ரீ கோயிலிலுக்குள் நுழைந்த ஐதிக்யம் ஸ்வார்த்தமான கைங்கர்யம் அங்கும் உபாசகனுக்கு -துளி ஸ்வாதந்தர்யம் ஒட்டிக் கொண்டு இருக்குமே- அவன் திரு உள்ளத்திலும் இவன் வந்த வழி பட்டு இருக்குமே )-

ஸாதநங்களில்‌ முதற் சொல்லுகிறது கர்மம்‌, கர்ம ஜ்ஞாந பக்திகளிறே ஸாதநங்கள்‌. ஸாத்‌யங்களில்‌ முடிவு கைங்கர்யம்‌பகவதநுபவம்‌, அநுபவ ஜநித ப்ரீதி, அநந்தரமிறே பீரீதி காரித கைங்கர்யம்‌, திருவயிந்திரபுரத்தில்‌ வில்லி புத்தூர்ப் பகவர்‌ என்பாரொருவர்‌ எல்லாரும்‌ ஒரு துறையிலே அநுஷ்டாநம்‌ பண்ண, தாம்‌ ஒரு துறையிலே அநுஷ்டாநம்‌ பண்ணுவாராய்‌, ஒருநாள்‌ அநுஷ்டாநம்‌ பண்ணி மீண்டெழுந்தருளா நிற்கச் செய்தே, இருந்த ப்‌ராஹ்மணர்‌ ‘ஏன்‌ ஜீயரே! எங்கள்‌ துறையில்‌ அநுஷ்டாநம்‌ பண்ண வாராதொழிவானென்‌’ என்ன, *’விஷணு தாஸா வயம்‌ யூயம்‌ ப்‌ராஹ்மணா வர்ண தர்மிண? ! அஸ்மாகம்‌ தாஸ விருத்தீநாம்‌ யுஷ்மாகம்‌ நாஸ்தி ஸங்கதி:’‘ என்று – ‘நீங்கள்‌ ப்‌ராஹ்மணார்‌, வர்ண தர்மிகள்‌; நாங்கள்‌ தாஸ வ்ருத்திகள்‌, கைங்கர்ய பரர்‌. ஆகையாலே உங்களோடே எங்களுக்கு அந்வயமில்லை” என்று துறை வேறிட்டுப் போனாரிறே

கீழ் –ஜாதியாதிகளில் பேதிக்கும் தர்மங்கள் போலே -சூரணை-31 என்ற இத்தாலே ஸூசிதமான அதிகார பேதத்துக்கும் துறை வேறு இட்டு போகும் படியான நெடு வாசிக்கும் பிரகாசகமான கர்ம கைங்கர்ய நிஷ்டர் இருவருக்கும் உண்டான ஜென்மாதி விசேஷத்தை தர்சிப்பதாக கோலி ,பிரதமம் ஜன்ம விசேஷத்தை சொல்லுகிறது மேல்-இனி மேல்‌ இவர்களிருவர்க்கும்‌ ஜந்ம நிருபக கூடஸ்தரிருக்கும்படி என்‌ என்ன; இவை இப்படிப் பட்டிருக்கும்‌ என்கிறார்‌-

வேத வித்துக்களும் மிக்க வேதியரும் சந்தஸாம் மாதாவாலும் அதுக்கும் தாயாய்த் தாயினும் ஆயின
செய்யும் அத்தாலும் பிறப்பிக்கும் அது இருவருக்கும் ஸ்ரேஷ்ட ஜன்மம் –சூரணை -33 –

அதாவது-யேச வேத விதோ விப்ர—பாரதம்-என்கிற வேத வித்துகிகளான பூர்வ பாக நிஷ்டர்
காயத்ரீம் சந்தசா மாதா – தைத்ரீயம் என்கிறபடி சந்தசுகளுக்கு மாதாவாய் இருக்கிற காயத்ரி உபதேசத்தாலே பிறப்பிக்கும் அது -கர்ம நிஷ்டருக்கு ஸ்ரேஷ்ட ஜன்மம் யேசாத் யாத்மவிதோ ஜனா -( ஏச அத்யாத்ம வித் )-பாரதம்-என்கிற மிக்க வேதியரான வேத தாத் பர்ய வித்துக்கள்-ரூசோ யஜூம்ஷி சாமானி ததைவா தர்வணா நிச சர்வம் அஷ்டாஷராந்தச்தம் யச்சன்யா தபி வாங்மயம் –என்று சகல வேத ஸங்க்ரஹம் ஆகையாலே அந்த காயத்ரிக்கும் மாத்ரு பூமியாய் – பெற்ற தாயினும் ஆயின செய்யும் –பெரிய திருமொழி -1-1-9-என்கிற படியே சரீர உத்பாதிகையான மாதா மாத்ரம் அன்றிக்கே
உஜ்ஜீவனத்துக்கு உறுப்பான ஞானத்தை உண்டாக்கும் திரு மந்த்ரத்தாலே பிறப்பிக்கும் அது கைங்கர்ய நிஷ்டருக்கு ஸ்ரேஷ்ட ஜன்மம் என்கை–சஹி வித்யாஸ் தம் ஜனயிதி தஸ் ஸ்ரேஷ்டம் ஜன்ம-ஆபஸ்தம்ப சூத்ரம் -என்கையாலே-கேவல ஜன்மம் என்னாதே ஸ்ரேஷ்ட ஜன்மம் என்கிறது ..-அது வர்ண அனுகுணமான விதி நிஷேதங்களுக்கும் தத் அநுரூப அனுஷ்டானந்தக்கும்-தத் அனுகுண பல பிராப்த்திக்கும் உறுப்பாகையாலே அவர்களுக்கு ஸ்ரேஷ்ட ஜன்மம் —இது ஸ்வரூப அனுரூபமான-( ஆத்ம ஸ்வரூபத்துக்கு இங்கு )- விதி நிஷேதங்களுக்கும் தத் அநுரூப அனுஷ்டானந்தக்கும்
தத் அநுரூப பல பிராப்த்திக்கும் உறுப்பாகையாலே இவர்களுக்கு ஸ்ரேஷ்ட ஜன்மம்-
(தாஸ்ய சத்யன் -சகல ஆகமங்களும் உன்னையே காட்டும்-அந்தராத்மதயா உபாசகன் – அவரவர் இறையவர் –விதி வழி அடைய நின்றனர் –-சகல பலாநாம் ப்ரசூதி தேசிகன் -சாஸ்த்ர தாத்பர்யத்தை பிடித்து தாஸ்யம் -அச்யுத சதகம் 17-20-ஸ்லோகத்தில்-இந்தக் கருத்தை அருளிச் செய்கிறார் )

 யே ச வேத விதோ விப்ரா” (பார. ஆர.) என்கிற. வேத வித்துக்கள்‌, ““காயத்ரீம்‌ சந்தஸாம்‌ மாதா’‘ என்கிற க,௱யத்ர் யுபதேஸத்தாலே பிறப்பிக்குமது கர்ம நிஷ்ட,னுக்கு ஸ்ரேஷ்ட ஜந்மம்‌; ‘“யே சாத்‌,யாத்ம விதோ ஜநா?” என்கிறபடியே மிக்க வேதியரான வேத தாத்பர்யம்‌ கைப்பட்டவர்கள்‌ ““ஸர்வ மஷ்டாக்ஷராந் தஸ்தம்‌”” (வ்ரு.ஹா. )என்கிறபடியே, அந்த காயத்ரி தனக்கும்‌ மாத்ரு ஸ்தாநமாய்‌, “பெற்ற தாயினுமாயின செய்யும்‌”‘ (திருமொழி–1– 1 – 9) என்கிறபடியே ஸரீரோத்பத்தி மாத்ர மன்றியிலே ஜ்ஞாந விகாஸத்‌தைப்‌ பண்ணிக் கொடுப்பதான திருமந்த்ரத்தாலே பிறப்பிக்குமது கைங்கர்ய நிஷ்டர்க்கு ஸ்ரேஷ்ட ஜந்மம்‌. “ஜந்மநா ஜாயதே ஸூத்‌ர? கர்மணா ஜாயதே த்‌விஜ? । வேதாப்‌,யாஸேந விப்ரத்வம்‌ ப்‌,ரஹ்ம வித்‌ ப்‌ராஹ்மணோ விது,” என்றும்‌, “ஸ ஹி வித்‌யாதஸ்‌“ தம்‌ ஜநயதி தச் ச்‌ரேஷ்ட,ம்‌ ஜந்ம” (ஆப.த.1 – 1 – 16) என்னக் கடவதிறே

குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படு துயர் ஆயின எல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் —9—மாதாவானவள் சரீரத்துக்கு உத்பாத யாம் அளவு இறே-ஆத்மாவுக்கு ஸ்வரூபமான ஜ்ஞான விகாசத்தை பிறப்பிப்பான் அவனே இறே-சரீரமே மாதாபிதரௌ ஜநயதே -என்று விரோதியான சரீரத்தை உத்பாதித்து விடும் அளவு இறே அவர்கள் செய்தது-சஹி வித்யா தஸ்தம் ஜநயதி தச் ஸ்ரேஷ்டம் -ஜ்ஞானப் ப்ரதன் அவன் இறே-

இப்படி ஸ்ரேஷ்ட ஜன்மாக்களான இருவருக்கும் நிரூபகங்கள்–இப்படி ஸ்ரேஷ்ட ஜந்மரான இருவர்க்கும்‌ நிரூபகம்‌ ஏதென்னில்‌- இன்னது என்கிறது-

அந்தணர் மறையோர் என்றும்–அடியார் தொண்டர் என்றும்–இவர்களுக்கு நிரூபகம்-சூரணை -34 –-

(அந்தணர் -ப்ராஹ்மண்யமும் மறையோர் -வைதிகத்வமும்-அடியார் -சேஷத்வம் அடிமைத்தனம் அறிந்தவர் -தொண்டர் -கிஞ்சித் கைங்கர்யம் செய்தவர் என்றவாறு – எது எது ஏன் பணி என்னாது அதுவே ஆட் செய்யும் ஈடு )-அதாவது-சாதி அந்தணர் -திருமாலை -43–துணை நூல் மார்வில் அந்தணர் -பெரிய திருமொழி -1-5-9–தீ யோம்பு கை மறையோர்-பெரிய திருமொழி -7-9-7–நந்தா வண் கை மறையோர்– -பெரிய திருமொழி -6-7-8- என்று விசேஷண பூத சரீரத்வாரா வந்த வர்ணமும் தத் பிரயுக்தமான வைதிகவத்மமும் அவர்களுக்கு நிரூபகம்-திருமால் அடியார்-திருவாய் -5-6-11-
அணி அரங்கன் திரு முற்றத்து அடியார்-பெருமாள் -1-10-திரு மாலுக்கு உரிய தொண்டர்-திருவாய் -6-9-11
திரு நாரணன் தொண்டர்-திருவாய் -3-7-4- என்று ஆத்மா வஸ்துவுக்கு ஞான ஆனந்தங்களில் காட்டிலும்
அந்தரங்க நிரூபகமான சேஷத்வம் தத் பிரயுக்த கிஞ்சித் கரத்வமும் இவர்களுக்கு நிரூபகம் என்கை-

“’துணை நூல்‌ மார்விலத்தணர்‌”” (திருமொழி 1 – 5 – 9) என்றும்‌, ”தீயோம்புகைமறையோர்‌’” (திருமொழி 7 – 9 – 7) என்றும்‌ சொல்லுகிற இவை கர்ம நிஷ்டரர்க்கு நிரூபகம்‌. “வேதார்த்த அநுஷ்டாந யோக்‌யர்‌ அந்தணர்‌” என்றும்‌, ‘வேதார்த்த அநுஷ்டாந பரர்‌ மறையோர்‌’ என்றும்‌ சொல்லக் கடவது. இனி, “அணியரங்கன்‌ திருமுற்றத்தடியார்‌”” (பெரு. திரு 1 – 10) என்றும்‌, “’அக மகிமும்‌ தொண்டர்‌”” (பெரு.திரு 1 – 10) என்றும்‌ சொல்லுகிறபடியே கைங்கர்ய நிஷ்டனுக்கு நிரூபகம்‌ – அடியார்‌-கிஞ்சித்கார அர்ஹர்‌. தொண்டர்‌-கிஞ்சித்கார ஸ்வபாவர்

அமர ஓர் அங்கம் ஆறும் வேதம் ஓர் நான்கும் ஓதித்
தமர்களில் தலைவராய சாதி அந்தணர்கள் ஏலும்
நுமர்களைப் பழிப்பர் ஆகில் நொடிப்பது ஓர் அளவில் ஆங்கே
அவர்கள் தாம் புலையர் போலும் அரங்க மா நகர் உளானே43—சாதி அந்தணர்கள் –கீழ்ச் சொன்னவை ஷத்ரிய வைஸ்யர்களுக்கும் பொது விறே – அவ்வளவு அன்றியே ஜாத்யா பிராமணராய் இருக்கை –ஏலும் –கீழ்ச் சொன்னவை ஒருவருக்கும் சித்திக்கும் அது அல்ல –சித்திக்குமே யாகிலும் – வைஷ்ணவ நிந்தையில் வந்தால் இவை எல்லாம் அசத் சமம் என்கை – துர்மானோ பஹதர்க்கு அபசார ஹேதுவுமாய் – இவை இல்லாதார் தலை மேலே கால் இட்டு திரிகைக்கு உடலாம் இத்தனை –

தொண்டாம் இனமும் இமையோரும் துணை நூல் மார்பில் அந்தணரும்
அண்டா வெமக்கே யருளாய் என்று அணையும் கோயிலருகெல்லாம்
வந்தார் பொழிலின் பழனத்து வயலினயலே கயல் பாய
தன்டாமரைகள் முக மலர்த்தும் சாளக்கிராமம் அடை நெஞ்சே –1-5-9–-கேவல ப்ராஹ்மணரும் –
வித்யா விநய சம்பந்நே ப்ராஹ்மனே -என்று பிரித்தார் இறே ஸ்ரீ பாஷ்ய காரர் 

சேயோங்கு தண் திருமாலிரும் சோலை யுறையும்
மாயா வெனக்கு உரையாய் இது மறை நான்கினுளாயோ
தீ யோம்புகை  மறையோர் சிறுபுலியூர்ச் சலசயனத்
தாயோ வுன தடியார் மனத்தாயோ வறியேனே—7-9-7–எப்போதும்  ஒக்க அக்நி கார்யத்தில் அவஹிதராய்ப் போருகிற பிராமணர் உடைய

பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரதத்துக்
கந்தார் களிற்றுக் கழல் மன்னர்  கலங்கச் சங்கம் வாய் வைத்தான்
செந்தாமரை மேல் அயனோடு சிவனும்  அனைய பெருமையோர்
நந்தா  வண்கை மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியே –6-7-8—தனித் தனியே சிருஷ்டி சம்ஹாரத்துக்கு ஷமராய் ப்ரஹ்ம ருத்ரர்களில் காட்டில் ஏற்றமான ஔதார்யத்தை உடைய
பிராமணர்
நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் –

கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
வாய்ந்த வழுதி வளநாடன் மன்னு குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து
ஆய்ந்த தமிழ்மாலை ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில்
ஏந்து பெருஞ் செல்வத்தராய்த் திருமால் அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே.–5-6-11—இந்த லோகத்தில் எல்லாரும் கொண்டாடும் படியான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யை யுடையராய் ஸ்ரீ லஷ்மீ பாதிக்கு அடியாரானவர்களை ஆராதிக்கப் பெறுவார்கள் -அவர்களுக்கு ஆராதனம் ஆகிறது இவர் அநு கரித்த இப் பாசுரத்தை சொல்லுகை-தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல்மாலைகள் சொன்னேன் என்ன கடவது இ றே-இவர் இவ் வநுகாரத்தாலே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ப்ரியகரர் ஆனால் போலே இது கற்றாரும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு பிரியமான வ்ருத்தியைப் பண்ணக் கடவர் என்கை-

வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய மண் உய்ய மண் உலகில் மனிசர் உய்ய
துன்பம் மிகு துயர் அகல அயர் ஒன்றில்லா சுகம் வளர அக மகிழும் தொண்டர் வாழ
அன்போடு தென் திசை நோக்கி பள்ளி கொள்ளும் அணி அரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள்
இன்ப மிகு பெரும் குழுவு கண்டு யானும் இசைந்த உடனே என்று கொலோ விருக்கும் நாளே ?—1-10–பகவத் அனுபவத்தாலே நிரதிசய ஆனந்த உக்தரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் வாழ-

தெரிதல் நினைதல் எண்ண லாகாத் திருமாலுக்கு
உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்

தெரியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
உரிய தொண்ட ராக்கும் உலகம் உண்டாற்கே.–6-9-11–ஸ்ரீ யபதிக்கு அசாதாரணமான தாஸ்யத்துக்கு பர்யவசான பூமியான ஆழ்வார் -இவருடைய அஹம் புத்தி இருக்கிற படி -பயிலும் சுடர் ஒளிக்கு பின்பு ததீய சேஷத்வ பர்யந்தமாயிற்று -இவருடைய அஹம் அர்த்தம் இருப்பது -இவ்வளவு வருகை இறே அநந்யார்ஹ சேஷம் ஆவது

உடை ஆர்ந்த ஆடையன் கண்டிகையன் உடை நாணினன்
புடையார் பொன் நூலினன் பொன்முடியன் மற்றும் பல்கலன்
நடையா உடைத் திரு நாரணன் தொண்டர் தொண்டர் கண்டீர்
இடையார் பிறப்பிடை தோறு எமக்கு எம் பெரு மக்களே
.–3-7-4–ஸ்ரீ மன் நாராயணன் –ஆபரணங்களில் அந்நிய தமமாய் இருக்கிறபடி லஷ்மீ சம்பந்தமும் ஆபரண சோபையினுடைய போக்யத்தையாலே சொல்லாது ஒழிய மாட்டார் அசங்க்யாதம் ஆகையால் பேச மாட்டார் –அந்த ஆபரண சேர்த்திக்கும் மிதுனத்துக்கும் தோற்று அடிமை புக்கவர்கள் அன்று அவர்கள் தோற்ற தோல்விக்கு அடிமை புக்கவர்கள் எனக்கு நிரந்தரமான ஜென்மத்தில் அவகாசம் தோறும் சேஷிகள் –

கேவலம் இவையோ நிரூபகம்-க்ராம குலாதி வியாபதேசங்களும் இல்லையோ —கர்ம கைங்கர்யங்களில்‌ நிஷ்டராயிருக்கும்‌ இருவர்க்கும்‌ வ்யபதேஸம்‌ ஏதென்னில்‌ — சொல்லுகிறது மேல்-

ஒரு தலையில் க்ராம குலாதி வியாபதேசம்-குலம் தரும் என்னும் மாசிற் குடி பழி என்று பதியாக கோயிலில் வாழும் என்பர்கள்-சூரணை -35 –

அதாவது
கர்ம நிஷ்டர் என்று சொல்லப் பட்ட ஒரு தலையில் சரீர அனுபந்திகளான க்ராம குலாதிகளை இட்டு
வியபதேசிக்கும் அந்த வியபதேசத்தை கைங்கர்ய நிஷ்டரான மற்றை தலையில் உள்ளவர்கள்
குலம் தரும் -பெரிய திருமொழி-1-1-9–என்கிற படியே திரு மந்திர சித்த பகவத் சம்பந்த ஜ்ஞான பிரயுக்தமாய் மாசில் குடி -மூன்றாம் திருவந்தாதி –10—என்று சேஷத்வ விரோதியான அஹங்காராதிகள் இல்லாமையாலே நிர் தோஷமாய் இருக்கிற இக் குலத்துக்கு -(கீழ் சொன்ன வியபதேசத்தை )அவத்ய கரம் என்று கருதி-வேம்கடத்தை பதியாக வாழ்வீர்காள்–நாச்சியார் -8-9–
கோயிலில் வாழும் வைட்டணவன்—பெரியாழ்வார் 5-1-3–என்று பகவத் அன்வயம் உள்ள தேச சம்பந்தத்தை விட்டு வ்யவகரிப்பர்கள் என்கை .. இது பகவத் சம்பந்தத்தை இட்டு வ்யபதேசிக்கும் அதுக்கும் உப லஷணம்.(ஊரிலேன் காணி இல்லை உறவு மற்று ஒருவர் இல்லை பாரில் நின் பாத மூலம் பற்றிலேன் –கதறுகின்றேன்) ஏகாந்தீ வ்யபேதேஷ்டவ்யோ நைவ க்ராம குலாதிபி விஷ்ணுனா
வ்யபேதேஷ்டவ்யஸ் தஸ்ய சர்வம் ச ஏவ ஹி—பரமைகாந்தி தர்மம்
-என்னக் கடவதிறே-

 கரம நிஷ்டரை க்ராம குலாதிகளாலே வ்யபதேஸிக்கக் கடவது; கைங்கர்ய நிஷ்டனுக்கு அந்த க்‌ராம குலாதிகளால்‌ வருகிற வ்யபதேஸம்‌ ”குலந் தரும்‌’” (திருமொழி 1 – 1 – 9) என்றும்‌, “மாசில்‌ குடிப்‌ பிறப்பு” (மூ.திருவ. 10)என்றும்‌ பகவத் ஸம்பந்த ஜ்ஞாநத்தாலே இதர வ்யாவ்ருத்தமான வைஷ்ணவ ஜாதீயனான இவனுக்கு அவத்‌யமாகையாலே நிரவத்‌யமான பகவத்‌ ஸம்பந்த ப்ராதாந்யமே தோற்றும்படியாக, ““வேங்கடத்தைப்‌ பதியாக வாழ்வீர்காள்‌” (நா.திரு.8 – 9) என்றும்‌, “கோயிலில்‌ வாழும்‌ வைட்டணவர்‌” (பெரியா.திரு. 5 – 1 .. 3) என்றும்‌ சொல்லுகிறபடியே பகவத் ஸம்பந்தமுள்ள தேஸத்தையிட்டும்‌, பகவத்‌ ஸம்பந்த தந் தன்னை யிட்டும்‌ வ்யபதேஸிக்கக் கடவது; “ஏகாந்த வ்யபதேஷ்டவ்யோ நைவ க்‌ராம குலாதி,பி। விஷ்ணுநா வ்யபதேஷ்டவ்யஸ் தஸ்ய ஸர்வம் ஸ ஏவ ஹி நத்யாஸ் தஸ்யைவ நாமாதி, ப்ரவிஷ்டாயா யதார்ணவம்‌ ! ஸர்வாத்மநா ப்ரபந்தஸ்ய விஷ்ணு மேகாந்திநஸ் ததா”” என்னா நின்றதிறே –

குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படு துயர் ஆயின எல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் —9—ஜன்ம வருத்தங்களால் குறைய நின்றான் ஒருத்தனுக்கு பகவத் சம்பந்தம் உண்டானால் இவற்றால் உயர்ந்தான் ஒருத்தன் இவை இரண்டிலும் இவனுக்கு தாழ்வு உண்டாகவும் தான் உயர்ந்தான் ஆகவும் -நினைத்து இருக்கவும் கூட கூச வேண்டும்படி யாயிற்று பகவத் பிரபாவம் இருப்பது –
ஆனாலும் பெண் கொடுத்தல் கொள்ளுதல் செய்கிறார் இல்லை – அதுக்கடி ஜாதி நிபந்தனம் ஆகை
ஸ்லாகைக்கு நிபந்தனம் ஸ ஸ்லாக்யஸ் ஸ குணீ தந்யஸ் ஸகுலீந -என்னக் கடவது இறே –கண்ட தெல்லாம் தர்ம சந்தேஹம் பண்ணக் கடவ தர்ம புத்திரன் பகவத் ப்ரத்யாசத்தியாலும் அசரீரி வாக்யத்தாலும் விதுரரை ப்ரஹ்ம ரதத்தாலே சம்ஸ்காரம் பண்ணினான் இறே – ருஷிகள் தர்ம வ்யாதன் மாம்ஸ விக்ரயம் பண்ணி கை ஒழியும் தனையும் பார்த்து நின்று தர்ம சங்கங்கள் கேட்டுப் போனார்கள் இறே –இங்கன் அன்றாகில் பஞ்சம வேதமான மஹா பாரதத்திலே எழுதக் கூடாது இறே – கைசிக கதையிலே வந்தவாறே விலஷணனாய் இருப்பான் ஒரு ப்ரஹ்ம ராஜஸ் ஆசார வைகல்யத்துக்கு -பகவத் ஜ்ஞானம் உடையான் ஒரு பாடுவானாலே பரிஹாரம் இருந்தது இறே –ஸ்ரீ விபீஷண ஆழ்வான் ராவணனைப் பார்த்து -பெருமாளை சரணம் புகு-என்று சொல்ல – த்வாந்துதிக்  குல பாம்ஸநம் -என்று -நீ இக்குடிக்கு உடல் அல்ல என்றான் இறே – ராவணனுக்கு வார்த்தை சொல்லும் இடத்தில் –நிசாசர -என்று அவனை ராஷசனாகவும் தான் அல்லனாகவும் சொன்னான் – இங்கனே அன்றிக்கே -ராஷசாநாம் பல அபலம் என்று பெருமாள் தாமும் அருளிச் செய்தார் –ஆகையாலே பகவத் சம்பந்தம் ஸ்பர்ச வேதியாய் இருந்தது –

தேசும் திறலும் திருவும் உருவமும்
மாசில் குடிப் பிறப்பும்   மற்றவையும்
வலம் புரிந்த வான் சங்கம் கொண்டான் பேரோத
நலம் புரிந்து சென்றடையும் நன்கு —-10–மதிப்பும் –பராபிபாவன சாமர்த்தியமும் -ஐஸ்வர்யமும் -வடிவு அழகும் –குற்றம் அற்ற பிறப்பும் –குற்றம் அற்ற பகவத் ப்ரத்யாசத்தியால் வரும் ஆபி ஜாத்யமும்–-அநுக்தமான அவையும் -இவை எல்லாமான நன்மைகளும்-

மத யானை போல் எழுந்த மா முகில்காள் வேங்கடத்தைப்
பதியாக வாழ்வீர்காள்
பாம்பணையான் வார்த்தை என்னே
கதி என்றும் தானாவான் கருதாது ஓர் பெண் கொடியை
வதை செய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே–8-9–ஏஷ ஹ்யேவா நந்தயாதி -தைத் ஆனந்த -7-என்கிறபடியே அவன் ஆனந்திப்பிக்க ஆனந்தித்து திரிகிறி கோள் அன்றோ நீங்கள்-ஒரு விபூதியாக  அஹம் அன்னம் அஹம் அன்னம் என்று களிக்குமா போலே நீங்களும் திரள் திரளாக வர்த்திக்கிறிகோள் அன்றோ-வந்தேறிகளாய் திருநாள் சேவித்து போவாரைப் போலே போராதே-
அங்கே நித்ய வாசம் பண்ணப் பெறுவதே நீங்கள்
 -சேறு தோய்ந்து கழுவினவர்கள் அன்றிக்கே –
முக்தரைப் போலே அன்றிக்கே – நித்ய சித்தரைப் போலே யாய்த்து –
அங்குத்தை வர்த்தநத்தை இறே வாழ்வாகச் சொல்லுகிறது-இரண்டு ஆற்றுக்கும் நடுவில் வாசம் போலே – நல்லார்கள் வாழும் நளிர் அரங்கம் -11-5- என்னக் கடவது இறே பல நீ காட்டிப் படுப்பாயோ –திருவாய் -6-9-9- என்றும் –
புறத்து இட்டு இன்னம் கெடுப்பாயோ
 -6-9-8-என்றும் இதர விஷய ப்ராவண்யம் விநாச ஹேதுவாய் இருக்கும் – பகவத் ப்ராவண்யம் வாழ்வாய் இருக்கும்

நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன் நாரணா என்னும் இத்தனை அல்லால்
புன்மையால் உன்னை புள்ளுவம் பேசி புகழ்வான் அன்று கண்டாய் திருமாலே
உன்னும் ஆறு உன்னை ஒன்றும் அறியேன் ஓவாதே நமோ நாரணா என்பன்
வன்மை யாவது உன் கோயிலில் வாழும் வைட்டணவன் என்னும் வன்மை கண்டாய் -5- 1-3 –வன்மை -மிடுக்கு-ஸ்ரீ கோயிலில் வாழும் என்று புறம்புள்ள அபிமானம் குலைகையாலும் தாம் அநந்ய பிரயோஜனர் ஆகையாலும் இவருடைய ராஜ குலம் இருக்கும் படிபவத் விஷய வாஸிந -(ஸ்ரீ ராமாயணம் ) இவற்றின் புறத்தான் என்று எண்ணானோ-(திரு விருத்தம் )என்று ஸ்ரீ பகவத் அபிமானம் உள்ள தேசத்தே கிடக்கை இறே தங்களுக்கு பேறாக நினைத்து இருப்பது-

ஊரிலேன் காணி இல்லை உறவு மற்று ஒருவர் இல்லை
பாரில் நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி
கார் ஒளி வண்ணனே கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர் களைகண் அம்மா அரங்க மா நகர் உளானே –29—வேறு எவ்வித யோக்யதையுமில்லாமற் போனாலும் ஸாளக்ராமம், கோயில் திருமலை, பெருமாள் கோயில் முதலிய திவ்யதேசங்களில் ஜந்மமாவது கிடைத்தால் அதைக் கொண்டு உய்வு பெறலாம்.-அப்படிப்பட்ட ஒரு தேசத்திலும் எனக்குப் பிறவி நேரவில்லையே!-திவ்யதேசத்தில் ஐந்மமில்லாவிடினும் உதரபோஷணார்த்தமாக ஏதாவது கொஞ்சம் க்ராம பூமிகள் ஏற்பட்டிருந்தால் அங்குப் போக வேண்டிய காலங்களில் யாத்ருச்சிகமாக இடையிலே ஒரு திவ்யதேவஸேவை கிடைக்கக்கூடும் அப்படிப்பட்ட ப்ரஸக்தி நேருவதற்கு ஒரு குழியளவு காணியுமில்லை யென்கிறார்.-இவையொன்றுமில்லையாகிலும் திவ்யதேசவாஸிகளோடு உறவு இருக்குமாகில் பந்து க்ருத்ய பரிபாலனத்துக்காகச் சிலகாலம் அங்குப்போகவும் அதடியாக பகவத்ஸேவை கிடைக்கவும் ப்ரஸக்தியுண்டு; அப்படிப்பட்ட உறவினர்களும் எனக்கில்லை.

இனி உபயர் உடையவும் கூடஸ்தரை சொல்லுகிறது-இனிமேல்‌ இருவருடையவும்‌ கூடஸ்தரைச்‌ சொல்லுகிறது-

விப்ரருக்கு கோத்ர சரண சூத்ர கூடஸ்த்தர் பராசர பாராசர்ய போதாய நாதிகள்-பிரபன்ன ஜன கூடஸ்த்தர் பராங்குச பரகால யதி வராதிகள் .-சூரணை -36-

அதாவது
அந்தணர் மறையோர் என்கிற பிராமணருக்கு கோத்ர கூடஸ்தர் பரசராதிகள்
கோத்ரமாவது-அபத்ய சந்ததி ( பிள்ளைப்பிறப்பின் சந்ததி ) – சந்ததிர் கோத்ர ஜனன குலம் அபிஜனம் அன்வயம் -பர்யாய சொற்கள் -அமரகோசம் -என்னக் கடவதிறே-அந்த கோத்ரம் தான் அநேகமாய் தத் தத் கூடஸ்தரான வசிஷ்ட காஸ்யப பரத்வாஜ வத்ஸ ப்ரப்ருதிகள் பலர் உண்டாகையாலே பராசராதிகள் என்கிறது .-சரண கூடஸ்தர் பாராசர்யாதிகள் —சரணங்கள் ஆனவை -வேத சாகைகள் தத் அத்யாதிகளையும் கௌணமாக சரண சப்தத்தாலே சொல்லக் கடவது .-சரண சப்த காடக காலாபாதி சாகா விசேஷஷு முக்ய தத்தத் யாயிஷு புருஷே ஷு கௌண-என்கையாலே இவ் இடத்தில் சாகைகளைச் சொல்லுகிறது ..சர்வ சாகைகளுக்கும் பிரதான பிரவர்தகன் பாராசர்யனாக இருக்க செய்தேயும் பின்பு தத் தத் சாகைகளுக்கு தனி தனி பிரவர்தகரான கடக லாப கண்வராதிகளும் உண்டாகையாலே பாராசர்யாதிகள் என்கிறது-சூத்ரம் ஆவது -கர்ம அனுஷ்டான பிரதி பாதகமான கல்பம் . சீஷாயாம் வர்ண சிஷா—ஸ்ரீ ரெங்கராஜ உத்தர சதகம் -18- -என்று தொடங்கி சொல்லி வருகிற அளவிலே கல்பேனுஷ்டானம் முக்தம் -என்றது இறே ..அது தானும் பலவாய் ,தத் தத் கர்த்தாக்கள் ஆன ஆபஸ்தம்ப ஆஸ்வலாயநாதிகளும் உண்டாகையாலே போதாயானாதிகள் என்கிறது . ஆக இவர்கள் விப்ரருக்கு கூடஸ்த புருஷர்கள் அடியார் தொண்டர் -என்கிற பிரபன்ன ஜனங்களுக்கு கூடஸ்தர்
பத்யு ஸ்ரிய பிரசாதேன ப்ராப்த சார்வஜ்ஞய சம்பதம்
(மயர்வற மதிநலம் அருளப்பெற்றவருக்கு மொழி பெயர்ப்பு ) பிர பன்ன ஜன கூடஸ்தம் பிரபத்யே ஸ்ரீ பராங்குசம் -ஸ்ரீ பராங்குச அஷ்டகம் -4–. என்கிற நம் ஆழ்வார் திரு மங்கை ஆழ்வார் தொடக்கமான எல்லா ஆழ்வார்களும் ,எம்பெருமானார் முதலிய ஆச்சார்யர்களும் என்கை .-கூடஸ்தர் ஆகிறார் –மூல பூதர் இறே-உபதேச அனுஷ்டானங்களாலே பிரபத்தி மார்க்கத்தை தலை பெருத்தி வளர்த்தவர்கள் ஆகையால் இவர்களை பிர பன்ன ஜன கூடஸ்தர்கள் என்கிறது –(ப்ரஹ்ம ஞானம் அளித்தவர் ஸ்ரீ நம்மாழ்வார் – கைங்கர்யம் செய்ய உணர்த்தியவர் ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் –ஆச்சார்ய அபிமானம் அனுஷ்டானம் ஸ்ரீ ராமானுஜர் )

முற்பட்ட ப்‌ராஹ்மணர்க்கு பராஸர(வ்யாஸ)வஸிஷ்டாதிகள்‌ கோத்ர குருக்களுமாய்‌- போதாயநாதிகள்‌ ஸூத்ர குருக்களுமாய்‌, (தத் தச் சரண- உபயங்‌களில்‌) பூர்வ பூர்வ புருஷர்கள்‌ கூடஸ்தருமாய்‌ இருப்பர்கள்‌. ப்ரபந்ந ஜந கூடஸ்த ர்‌ ““பத்யுஸ் ஸ்ரிய? ப்ரஸாதேந ப்ராப்த ஸார்வஜ்ஞ்ய ஸம்பதம்‌ ! ப்ரபந்ந ஜந கூடஸ்தம்‌ ப்ரபத்‌யே ஸ்ரீபராங்குஸம்‌?” (பரா.௮..] என்றும்‌, ‘‘ராமாநுஜாங்க்‌ரி ஸரணோஸ்மி குல ப்ரதீபஸ் த்வாஸீத்‌ ஸ யாமுந முநேஸ் ஸ ச நாத வம்ஸ்யச । வம்ஸ்ய? பராங்குஸ முநேஸ்ஸ ச ஸோபி தேவ்யா ததாஸஸ் தவேதி வரதாஸ்மி தவேக்ஷணீய?” (வரத.ஸ்தவே 102) என்றும்‌ சொல்லுகிறபடியே  நம்மாழ்வார்‌, திருமங்கையாழ்வார்‌ தொடக்கமான ஆழ்வார்‌களும்‌, உடையவர்க்கு முன்பும்‌ பின்புமுள்ள ஆசார்யர்களும்‌ என்கிறார்

சீஷாயாம் வர்ண சிஷா பதசமதிகம வியாக்ரியா நிர்வசோப்யாம்
சந்தஸ் சந்தஸ்திதவ் ஸ்யாத் கமயதி சமயம் ஜ்யவ்திஷம் ரங்க நாத
கல்பே அனுஷ்டானம் யுக்தம் ஹி உசிதகமிதயோ நியாய மீமாம்சயோ ஸ்யாத்
அர்த்த வ்யக்தி புராண ஸ்ம்ருதிஷு தத் அனுகா த்வாம் விசின் வந்தி வேதா –18-கல்ப ஸூத்ரத்திலே வைதிக கர்மங்களை அனுஷ்ட்டிக்க வேண்டிய முறைமை சொல்லப் பட்டது

பத்யு: ச்ரிய பிரசாதேன ப்ராப்த சார்வஜ்ஞ்ய சம்பதம் |
ப்ரபன்ன ஜன கூடஸ்தம் ப்ரபத்யே ஸ்ரீ பராங்குசம் ||-
-5-ஸ்ரீ திருமால் திருவருளால் – மயர்வற மதிநலம் அருளினன் யவனவன் – சர்வஜ்ஞத்வம் ஆகிற சம்பத்தைப் பெற்றவரும் பிரபன்ன ஜனங்களுக்கு தலைவருமான – ஸ்ரீ நம்மாழ்வாரைத் தஞ்சமாகப் பற்றுகிறேன்

ராமானுஜ அங்க்ரி சரணோஸ்மி குல ப்ரதீபத்வ ஆஸீத் ச யமுந முநேஸ் ச ச நாத வம்ஸ்யஸ்
பராங்குச முநேஸ் ச ச ஸோபி தேவ்யாஸ் தாஸஸ் தவேதி வரதாஸ்மி தவே ஷணீயஸ் –102–அடியேன் எம்பெருமானாருடைய திருவடிகளைச் சரணமாக அடைந்தவன்-விப்ரர்க்கு கோத்ர சரண ஸூத்ர கூடஸ்தர் பராசர பாராசர்ய போதாய நாதிகள் – ப்ரபந்ந ஜன கூடஸ்தர் பராங்குச பரகால யதிவராதிகள்-அந்த எம்பெருமானாரோ ஆளவந்தாருடைய வித்யா வம்சத்துக்கு அணி விளக்காக ஆனார்
ராமானுஜரும் –தூய் நெறி சேர் எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம் கதி பெற்று உடையன் அன்றோ –அந்த ஆளவந்தார் தாமும் வித்யா அந் வயத்தாலும் குடல் துடைக்காலும் ஸ்ரீ மந் நாதமுனிகளுடைய வம்சத்தவர்-பிதா மஹம் நாத முனிம் விலோக்ய ப்ரஸீத மத் வ்ருத்தம் அசிந்தயித்வா -என்ற குடல் துவக்கும் உண்டே–அந்த நாதமுனிகளும் நம்மாழ்வாருடைய வம்சத்தவர்
குருகையில் வந்த குல முனிவனுடைய குலக் கொழுந்து-ஆரப் பொழில் தென் குருகைப் பிரான் அமுதத் திரு வாய் ஈரத் தமிழின் இசை உணர்ந்தோர்கட்க்கு இனியவர் தம் சீரைப் பயின்று உய்யும் சீலம் கொள் நாத முனி அன்றோ-அந்த ஆழ்வாரும் உனது பிராட்டிக்கு அடியவர்-ஆழ்வாரும் உனக்குப் படுக்கைப் பற்று அன்றோ – பங்கயத்தாள் திரு அருளும் கொண்டவர் அன்றோ–இந்த பாரம்பர்யத்தாலே தேவரீருக்கு அடியேன் கடாக்ஷிக்கத் தகுந்தவன் ஆகின்றேன் அன்றோ–நிகமத்தில் தம்மைக் கடாக்ஷித்து அருள வேண்டுவது பேர் அருளாளனும் அவர்ஜநீயம் என்னும் இடத்தை மூதலிக்கிறார்

இனி இரண்டு தலைக்கும் பிராமணிய வைஷ்ணவத்ய சித்தி ஹேது நியமங்களை தர்சிப்பிகிறார் மேல்-இனிமேல்‌ விப்ரரூம்‌ ப்ரபந்நருமான இவர்களிருவர்க்கும்‌ ப்‌ராஹ்மண்ய ஸித்‌தி, ஹேது எது? வைஷ்ணவத்வ ஸித்‌தி, ஹேது ஏது? என்னச்‌ சொல்லுகிறார்‌ –

அத்யயன ஞான அனுஷ்டானங்களாலே பிராமண்யம் ஆகிறார் போலே சந்தங்கள் ஆயிரம் அறிய
கற்று வல்லார் ஆனால் வைஷ்ணவத்த ஸித்தி- சூரணை-37-
-(அத்யயனம் ஞானம் அனுஷ்டானம் மூன்றுக்கும் அறிய கற்று வல்லார் மூன்று சப்தங்கள் )

அதாவது
ஸ்வ அத்யாயோத்ய தவ்ய–என்கிற படியே – ப்ரதமம் வேதத்தை ஆச்சார்ய உச்சரண அனுச்சாரண முகேன அஷர ராசி க்ரஹணம் பண்ணுகை யாகிற அத்யயனத்தை பண்ணி மீமாம்ச ஸ்ரவணாதிகளாலே தத் அர்த்த ஞானம் பிறந்து தத் அனுரூபமான அனுஷ்டானமும் உண்டானால் பிராமண்யம் சித்திக்குமா போலே ,சந்தங்கள் ஆயிரம்–திருவாய்-10-9-11- என்ற படியே சந்தோ ரூபமாய் சகஸ்ர சாகையாய் இருக்கிற திருவாய் மொழியை-அறியக் கற்று வல்லார் வைட்டணவர்––திருவாய்-5-5-11-என்கிற படியே அத்யே தவ்யம் திவிஜ ஸ்ரேஷ்டை வேத ரூபம் இதம் க்ருதம்- என்கிற பிரகாரத்திலே ஆச்சர்ய உச்சாரண அனுசாரண முகேன அப்யசிக்கை யாகிற அத்யயனத்தை பண்ணி உபதேச முகத்தாலே தத் அர்த்த ஞானம் பிறந்து தத் அனுரூபமாக அனுஷ்ட்டிக்கவும் வல்லார் ஆனால் ஆய்த்து வைஷ்ணத்வம் சித்திப்பது என்கை –

அத்‌யயநமாவது – ஓதுகை. ஜ்ஞாநமாவது அதில்‌ அர்த்த பரிஜ்ஞாநம்‌. அநுஷ்டாநமாவது – அறிந்தபடியே அநுஷ்டிக்கை என்று இவற்றாலே ப்‌,ராஹ்மண்ய மாகிறாப் போலே, (சந்தங்களாயிரமும்‌) ““சந்தங்களாயிரத்திவை வல்லார்‌” (திருவா. 10 – 9 – 11) என்று சந்தோ ரூபமான ஆயிரத்தையும்‌, “அறியக்‌ கற்று வல்லார்‌ வைட்டணவர்‌”’ (திருவா. 5 – 5 – 11) என்கிறபடியே திருவாய்மொழி ஆயிரமும்‌ அத்‌யயநம் பண்ணி, ஆசார்ய முகத்தாலே அர்த்த ஸ்ரவணம் பண்ணி, அறிந்த படியே அநுஷ்டிக்கவும்‌ வல்லாரானாலாய்த்து வைஷ்ணவத்வம்‌ ஸித்‌தித்ததாவது. ‘ஸ்வாத்‌யாயோத்‌ யேதவ்ய?”‘ (தை. ஆ.2) என்கிற விதி போலே “அத்‌யேதவ்யம்‌ த்விஜ ஸ்ரேஷ்டை வேத ரூபமித,ம்‌ க்ருதம்‌?” என்று அந்த வேதாந்த தாத்பர்யமாய்‌, இந்த திராவிட வேதத்துக்கு உள்ளீடான பாகவத ஸேஷத்வ பர்யந்தமான பகவச்‌ சேஷத்வ பரிஜ்ஞாநா பாவத்தால்‌ ப்‌ராஹ்மண்ய ஸித்‌தியுமில்லை –

வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-சந்தங்களை யுடைத்தான ஆயிரம் என்னுதல் -சந்தோ ரூபமான ஆயிரம் என்னுதல் -இப்பத்தையும் அப்யஸிக்க வல்லார் அத்தேசத்திலே பகவத் குண அனுபவம் பண்ணி -அதிலே வித்தராய் அதுக்கு அவ்வருகு கால் வாங்க மாட்டாதே இருக்குமவர்களைப் போலே யாவர் –

அறிவரிய பிரானை ஆழி அம் கையனையே அலற்றி
நறிய நன்மலர் நாடி நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன
குறி கொள் ஆயிரத்துளிவை பத்தும் திருக்குறுங்குடி யதன்மேல்
அறியக் கற்று வல்லார் வைட்ணவர் ஆழ்கடல் ஞாலத்துள்ளே.–5-5-11-பரம பதத்திலும் அவதாரங்களிலும் திருக்குறுங்குடி நிலையிலே அழகாலும் சீலத்தாலும் உண்டான ஏற்றம் அறிந்து கற்க வல்லவர்கள் -குணாதிக்யம் இறே வஸ்துவுக்கு ஏற்றம் -வியக்தமாக கற்க வல்லார்கள் என்றுமாம்-மரு பூமியான சம்சாரத்திலே -உகந்து அருளினை ஏற்றம் அறியுமவர்கள் நித்ய ஸூ ரிகளோடு ஒப்பார்கள்-

அந்த வேத அத்யயனாதிகள் உடையவர்களுக்கு இந்த வேத அத்யயனாதிகள் இல்லாத அளவில் வைஷ்ணத்வ அஸித்தி ஒழிய பிராமணிய ஹானி இல்லையே என்ன சொல்லுகிறது மேல் ..அவர்களுடைய உத்பத்தியும்‌ நிரூபிக்க வேணுமென்கிறார்‌–

இந்த உள் பொருள் கற்று உணர்ந்து மேலைத் தலை மறையோர் ஆகாதாரை அயல் சதுப் பேதிமார் என்று உத்பத்தி நிரூபிக்கும்-சூரணை -38-

அதாவது
மிக்க வேதியர் வேதத்தின் உள் பொருள் -கண்ணி நுண் – 9—என்று உபநிஷத் குஹ்யமான
இந்த திராவிட வேதார்த்தத்தை –கற்று உணர்ந்த மேலை தலை மறையோர்-முதல் திருவந்தாதி -66–என்கிற படியே-ஆச்சார்ய உபதேச முகேன கற்று அறிந்து உத்க்ருஷ்டரான-வேதாந்திகள் ஆகாதவரை –அயல் சதுப் பேதிமார் -திருமாலை -39-என்று — வேத அத்யயன பிரயோஜனம் ஈஸ்வரனை உள்ளபடி அறிந்து , ஸ்வரூப அனுரூபம் புருஷார்த்தம் கைங்கர்யம் என்று இருக்கையாய் இருக்கிற இந்த ஞான பாவத்தாலே ,நாலு வேதங்களையும் அதிகரிக்கச் செய்தே அந்த வேதத்தோடு தங்களுக்கு ஒட்டு இன்றி அதுக்கு அசலானவர்கள் என்று அறுதி இட்டு –-விஷ்ணு பக்தி விஹீநோய சர்வ சாஸ்த்ரார்த்த வேத்யபி
ப்ராஹ்மண்யம் தஸ்ய ந பவேத் தாஸ் யோத்பத்திர் நிரூப்யதாம்
-பாத்ம புராணம் –என்கிற படியே
இவர்கள் பிராமணர் அல்லர் என்று உத்பத்தி ஆராயப் படும் என்கை ..-யா புத்ர பிதரம் த்வேஷ்டிதம் வித்யா தந்த்யரேசதம் -யோ விஷ்ணும் சததம் த்வேஷ்டி தம் வித்யா தந்த்யரேசதம் –என்னக் கடவதிறே..

““மிக்க வேதியர்‌ வேதத்தினுட்பொருள்‌‘” (க.நு.சி. 9) என்று உபநிஷத்‌ குஹ்யமுமான இந்த த்‌ராவிட வேதத்தினுடைய ரஹஸ்யார்த்தத்தை, (கற்றுணர்ந்து மேலைத் தலைமறை யோராகாதாரை) ““வேட்பனவும்‌” (மு.திருவ.66) என்கிறபடியே கற்றுணர்ந்தும்‌ அநுஷ்டாந பரருமாகாதாரை ““அயல் சதுப்பேதிமார்கள்‌”” (திருமாலை 39) என்று அசலிட்டு உத்பத்தி நிரூபிக்கக் கடவதிறே. ‘‘ஓளபாஸநி ஸஹஸ்‌ரேப்‌யோ ஹ்யாஹிதாக்‌நிர் விஸிஷ்யதே | ஆஹிதாக்‌நி ஸஹஸ்ரேப்‌,யஸ் ஸோமயாஜி விஸிஷ்யதே | ஸோமயாஜி ஸஹஸ்ரேப்‌,யஸ் ஸத்ரயாஜி விஸிஷ்யதே ! ஸத்ரயாஜிஸ் ஸஹஸ்ரேப்‌,யஸ் ஸர்வவேதாந்த பாரக,ீ ! ஸர்வ வேதாந்த வித்கோட்யா விஷ்ணு ப,க்தோ விஸிஷ்யதே । விஷ்ணு ப,க்தி விஹீநோ யஸ் ஸர்வ ஸாஸ்த்ரார்த்த, வேத்‌,யபி ! ப்‌,ராஹ்மண்யம்‌ தஸ்ய ந பவேத்‌ தஸ்யோத் பத்திர் நிரூப்யதாம்‌ ‘ –(பாத்ம புராணம் –)என்னக் கடவதிறே –

மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள்
நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்க சீர் சடகோபன் என்னம்பிக்கு ஆட்
புக்க காதல் அடிமைப் பயன் அன்றே -9–ப்ரமாண ஸ்ரேஷ்டமான வேதத்தை நிரூபகமாக உடையவர்கள் –உளன் சுடர் மிகு சுருதியுள் -என்று ஆழ்வார் அருளிச் செய்ய கேட்டிருக்கையாலே – அநேக சாக அத்யயனம் -பண்ணினவர்கள் என்றுமாம் –சகல வேதங்களின் உடைய ரஹஸ்யார்த்தத்தை – வேதாந்த ரஹஸ்யம் –ததீய சேஷத்வ பர்யந்தமான பகவத் சேஷத்வம் என்று இறே-வைதிக சாஸ்திரம் நிர்ணயித்தது-துர்க்ரஹமான இந்த ரஹஸ்யார்த்தத்தை கேட்பார்க்கு பிரதிபத்தி விஷயமாம் படி –பாடி –
பரமனைப் பயிலும் திரு வுடையார் எவரேலும் -என்றும் –எம்மை யாளும் பரமர் -என்றும்-அருளிச் செய்தார் இறே-பகவத் சேஷத்வத்துக்கும் கூட மேட்டு மடையான என் நெஞ்சிலே இத்தை
ஸ்திரமாக்கினார் –-கல்லைத் துளைத்து அதிலே நீரை நிறுத்துவாரைப் போலே நிர் விவரமான என்  நெஞ்சுக்கும் இதுவே விஷயமாம் படி பண்ணினார்–இது இறே –என் தண்மையைப் பாராதே என் திறத்தே பண்ணின உபகாரம்

காலை எழுந்து உலகம் கற்பனவும் கற்று உணர்ந்த
மேலைத் தலை மறையோர் வேட்பனவும் வேலைக் கண்
ஓராழி யானடியே யோதுவது மோர்ப்பனவும்
பேராழி கொண்டான் பெயர் ——66–அறிவு தலைக் கட்டினவர்கள்-பாவன பிரகர்ஷத்தாலே சாஷாத் கரிப்பனவும்-அறிவு தலை நின்றேறி அறிந்தவர்கள் பாவனா பிரகர்ஷத்தாலே சாஷாத் கரிக்க ஆசைப் படுமதுவும் –

அடிமையில் குடிமை யில்லா அயல் சதுப் பேதிமாரில்
குடிமையில் கடமை பட்ட குக்கரில் பிறப்பரேலும்
முடியினில் துளபம் வைத்தாய் மொய் கழற்கு அன்பு செய்யும்
அடியரை உகத்தி போலும் அரங்க மா நகர் உளானே–39–கைங்கர்யம் நமக்கு கர்த்தவ்யம் என்று இருக்கும் அவர்கள் அன்றிக்கே இருக்கை –கைங்கர்யம் ஆகிறது -சஹஜம் – அது ஒழியச் செல்லாது இருக்கை யாவது -பிராப்தம் – அது இன்றிக்கே இருக்குமவர்கள் –அடிமைக்கு அசலான சதுர் வேதிகளாய் இருப்பாரில் காட்டில் –வேதத்யயனம் -பண்ணுகிறதுக்கு பிரயோஜனம்-ஈஸ்வரனை உள்ளபடி அறிகையும்-தன்னை உள்ளபடி அறிகையும் – கைங்கர்யம் ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தம் என்று அறிகையும் -ஆய்த்து –அசல் ஆகையாவது – இந்த ஜ்ஞானத்துக்கு உடலாக வேத அத்யயனம் பண்ணுகிறோம் என்று அறியாது இருக்கை –-அத்யயன பலம் அர்த்த ஜ்ஞானம் என்று அறியாதவர்கள்-சதுர் வேதிகள் ஆனாலும் நிஷ் பிரயோஜனம் -என்கை –விஷ்ணு பக்தி விஹீ நோயஸ் சர்வ சாஸ்த்ரார்த்த வேத்யபி ப்ராஹ்மண்யம் தன் நபவேத் தச்யோத்பத்திர் நிரூப்யதாம் – என்னக் கடவது இறே –

ஆக கர்ம கைங்கர்யங்கள் -26-என்று தொடங்கி– இவ்வளவாக இரண்டும் இன்னத்துக்கு அனுகுணம் என்றும்-இவற்றுக்கு பிரேரக ஆஸ்ரய விஷய பேதங்களும் இவற்றின் சாதாரண அசாதாரணத்வமும்
அசாதாரண அன்வயத்தில் சாதாரண நிவ்ருத்தியும் , கைங்கர்ய நிஷ்டருக்கு கர்ம நிஷ்டரோடு பொருந்தாமையும்அதுக்கு அடியாக இருவருடைய ஜன்ம நிரூபக கூடஸ்த பேதங்களும் ,
இருவருக்கும் பிராமணிய வைஷணத்வ ஸித்தி ஹேதுக்களும் , திராவிட வேதார்த்த ஞான அபாவத்தில் ஸ்வாதீத வேதாநன்வயராய் நிஹீனத்வ புத்தயர்ஹராம் படியும் சொல்லிற்று-

சாஸ்த்ர சாஸ்த்ர தாரதம்ய பிரகரணம் முற்றிற்று

–——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜநந்யாசார்யர்‌ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்