அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநித விவித பூத விராத ரக்ஷைக தீக்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||-இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.
பாராசர்ய வசஸ்ஸுதா₄ம் உபநிஷத் து₃க்₃தா₄ப்₃தி₄ மத்₄யோத்₃த்₄ருதாம்
ஸம்ஸாராக்₃நி விதீ₃பந வ்யபக₃த ப்ராணாத்ம ஸஞ்ஜீவநீம் |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் ப₃ஹுமதி வ்யாகா₄த தூ₃ரஸ்தி₂தாம்
ஆநீதாம் து நிஜாக்ஷரை : ஸுமநஸ: பௌ₄மா: பிப₃ந்து அந்வஹம் ||இரண்டாவது மங்கள ஸ்லோஹம்-
ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் |
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே ||
யதீந்த்ர க்ருத பாஷ்யார்த்தா யத் வ்யாக்யாநேந தர்சிதா:
வரம் ஸுதர்சனார்யம் தம் வந்தே கூர குலாதிபம்-ஸ்ருத ப்ரகாசிகா பட்டருடைய தனியன்:
————————-
இரண்டாம் பாதம் –உபய லிங்க பாதம் -8 அதிகரணங்கள்-40 ஸூத்ரங்கள்
முதல் அதிகரணம் -சந்த்யாதி கரணம்– 6 ஸூத்ரங்கள்-
கனவில் காணும் பொருள்கள் அனைத்தும் பரமாத்வால் படைக்கப் படுகின்றன -எனபது நிரூபிக்கப் பட்டுள்ளது-
இரண்டாம் அதிகரணம் -தத்பாவாதிகரணம் -2 ஸூத்ரங்கள்-
ஜீவன் உறங்கும் இடங்கள் எவை எவை என்று நிரூபிக்கப் படுகிறது-
மூன்றாவது அதிகரணம் -கர்மாநு ஸ்ம்ருதி சப்த வித்யதிகரணம் — 1 ஸூத்ரம்–
உறங்கிய ஜீவனே மீண்டும் விளித்து எழுகிறான் -வேறே ஜீவன் இல்லை என்று நிரூபிக்கிறது –
நான்காவது அதிகரணம் -முக்தாதிகரணம் – 1 ஸூத்ரம்-
விழிப்பு கனவு ஆழ்ந்த உறக்கம் மூன்றை விட மாறுபட்ட மூர்ச்சை நிலை-
ஐந்தாவது அதிகரணம் – உபய லிங்க அதிகரணம் -15 ஸூத்ரங்கள்–
அந்த்ர்யாமியாக இருந்தும் உடலின் தோஷங்கள் தட்டாதவன் பரப் ப்ரஹ்மம்-
ஆறாவது அதிகரணம் -அஹி குண்டலாதிகரணம் -4 ஸூத்ரங்கள்–
ப்ரஹ்மத்தின் ரூபம் அசேதன பொருள்களான மூர்த்தமும் -விக்ரகமும் -பிரபஞ்சமே ப்ரஹ்மத்துக்கு சரீரம் என்றும் கூறப்பட்டன –
அசேதனங்களின் தோஷங்கள் ப்ரஹ்மத்துக்கு ஏற்படாது என்று நிரூபிக்கப் படுகிறது –
ஏழாவது அதிகரணம் -பராதிகரணம் -7 ஸூத்ரங்கள்–
ப்ரஹ்மத்தை விட உயர்ந்த வஸ்து வேறு இல்லை என்றும் இவனை
தவிர அடைய வேண்டிய வஸ்து வேறு இல்லை என்றும் நிரூபிக்கப் படுகிறது –
எட்டாவது அதிகரணம்-பலாதிகரணம் – 4 ஸூத்ரங்கள்-
கர்மங்களின் அனைத்து பலன்களையும் பரமாத்மாவே அளிக்கிறான் என்று நிரூபிக்கப் படுகிறது
—
3-2-1-ஸந்த்₄யாதி₄கரணம்-நாம் கனவில் காணும் பொருள்களை யார் படைக்கிறார்? –பாதத்தின் ஸங்கதி-மூன்றாம் அத்யாயமான ஸாதந அத்யாயத்தில், பக்தி யோகம் என்ற ஸாதனத்தைப் பற்றிக் கூறுவதற்கு முன்னால், அதைச் செய்வதற்கான தகுதியை ஏற்படுத்த முதல் இரண்டு பாதங்கள் அமைந்துள்ளன. வைராக்ய பாதம் என்ற முதல் பாதத்தில் இந்த ஸம்ஸாரத்தில் ஜீவாத்மா படும் கஷ்டங்களைச் சொல்லி அதன் மூலம் உலகில் பற்றின்மையை ஏற்படுத்துகிறார் வ்யாஸர். அதைத் தொ டர்ந்து உபய லிங்க பாதம் என்ற இரண்டாவது பாதத்தில், பகவானிடம் ஆசையை வளர்ப்பதற்காக பரமாத்மாவின் இரண்டு அடையாளங்களைச் சொல்கிறார் –
1-அகி₂ல ஹேய ப்ரத்யநீகத்வம் – எல்லா தாழ்ச்சிகளுக்கும் -தோஷங்களுக்கும் எதிர்த் தட்டாய் இருத்தல்
2-கல்யாண கு₃ண ஏக தாநத்வம் – அனைத்து கல்யாைண குணங்கள் -நற் பண்புகளுக்கும் இருப்பிடமாய் இருத்தல்.
ப்₃ரஹ்மைவ ஸ்வை ꞉ ஸ்வபா₄வை ꞉ ப₃ஹுமுக₂ம் அவத₃த் ப்ராக்தநாத்₄யாய யுக்₃மே
தஸ்யேஹ ஆக்ருஷ்ய சிந்தா கிமிதி புநரஸௌ ஸாத₄நாத்₄யாய மத்₄யே ।
மைவம் வித்₃யா꞉ ப்ரபே₄த்தும் விஶத₃யதி பரம் தத்₃தி₄ தத்₃ரூப பே₄தா₃த்
ஸித்₃தோ₄பாயாதி₃பா₄வம் ப்ரத₂யதி ச விபோ ₄꞉ ப்ராப்ய த்ருஷ்ணாய ப்ரதி₂ம் நே ॥
கேள்வி – முன் இரண்டு அத்யாயங்களில் ப்ரஹ்மத்தை அதன் குணங்களோடு கூடப் பல விதமாகச் சொல்லி விட்டாரே ? மறுபடியும் இதில் எதற்காக ஸாதனத்தைச் சொல்ல வேண்டிய இடத்தில் இழுத்து வைத்து ப்ரஹ்மத்தைப் பற்றிப் பேசுகிறார்?
பதில் – மேல் மூன்றாவது பாதத்தில் பக்தி யோகம் -உபாஸனத்தின் வகைகளை வேறுபடுத்திச் சொல்ல வேண்டும், உபாஸனத்தின் வேறுபாடு அதில் த்யானிக்கப்படும் குணங்களின் வேறுபாட்டால் தான், அதற்காக இந்த இடத்தில் ப்ரஹ்மத்துக்கு எண்ணிறந்த கல்யாண குணங்கள் உள்ளன என்று சொல்வது பொருத்தமானது தான். மேலும், மோக்ஷம் அடைவதற்கு பக்தி யோகம் என்ற ஸாத்₄ய உபாயம் (நம்மால் செய்யப்பட வேண்டிய வழி-உபாயம்) இருப்பது போல், ப்ரஹ்மமே ஸித்த உபாயமாக (நம்மால் செய்யப்படத் தேவை யில்லாமல் தானே ஸித்தமாக இருக்கும் உபாயமாக) இருப்பதால், ஸாதனத்தைச் சொல்ல வேண்டிய இந்த அத்யாயத்தில் ப்ரஹ்மத்தையும் சொல்வது பொருத்தமானதே –
பாதத்தின் சுருக்கம்
முன் பாதத்தில், ஜீவாத்மா விழித்திருக்கும் போதும் மரணமடைந்த பிறகும் அனுபவிக்கும் துன்பங்களைப் பற்றிச் சொன்னார் வ்யாஸர். இந்தப் பாதத்தில் கனவு, தூக்கம், மயக்கம் என்ற மூன்று நிலைகளைப் பற்றிப் பேசுகிறார்.
த்யக்தம் தோ₃ஷை ꞉ கு₃ணாட்₄யம் யதி₃ புநரிஹ தத் ப்₃ரஹ்ம சிந்த்யேத பாதே ₃
ஜீவ ஸ்வப்நாத்₃ யவஸ்தா₂ மநநம் அத₂ கத₂ம் ஸங்க₄டே தீதி சேந் ந ।
ஸ்வாப்நார்த₂ ஸ்ரஷ்ட்ருபா₄வ ப்ரப்₄ருதி ப₃ஹுவித₄ ப்₃ரஹ்ம மஹாத்ம்ய ஸித்₃த்₄யை
ஜந்தோரஸ்ய ஸ்வ முக்தௌ அதி பரவஶ தாஜ்ஞப்தேய ச ஏத த₃த்ர ॥
கேள்வி – ப்ரஹ்மம் தோஷங்களற்றவர், குணங்களுடையவர் என்று சொல்ல வந்த பாதத்தில் எதற்காக மறுபடியும் ஜீவனுடைய கனவு முதலானவற்றைப் பேச வேண்டும்? இதை முன் பாதத்திலேயே
சேர்த்திருக்கலாமே ?
பதில் – ஜீவாத்மாவின் கனவு முதலான நிலைகளைப் பற்றி ஆராய்ந்தாலும், அதில் முக்கியமாக ப்ரஹ்மத்தின் பல ஒப்பற்ற குணங்கள் சொல்லப் படுகின்றன – அவர் தான் நாம் கனவில் காணும் பொருள்களைப் படைக்கிறார் என்று தொடங்கி. எனவே , பரமாத்மாவின் பெருமைகளைச் சொல்ல வந்த இந்த பாதத்திலும் இது பொருத்தமானதே . மேலும், கனவு தூக்கம் முதலான நிலைகளில் எல்லாம் இந்த ஜீவாத்மா எவ்வளவு தூரம் பரமாத்மாவை அண்டியே இருக்கிறார் என்று காட்டுவதன் மூலம், இந்த ஸம்ஸாரத்தைத் தாண்டி மோக்ஷம் அடைவதற்கும் நாம் அந்த பரமாத்மாவைத் தான் எதிர்பார்த்து இருக்க வேண்டும், நாமாக அடைந்து விட முடியாது என்பதையும் உணர்த்துகிறார்.
3-2-1-ஸந்த்₄யாதி₄கரணம் – ஸங்கதி – முன் பாதத்தின் இறுதி வரை , ஜீவாத்மா பிறக்கும் போது அனுபவிக்கும் துக்கங்களைக் கூறினார். இந்த அதிகரணத்தில் ஸ்வப்நத்தில் ஜீவாத்மாவின் நிலையை ஆராய்கிறார்.
உபநிஷத்தில் ஸ்வப்நத்தைப்பற்றி
விஷய வாக்யம் – ப்ருஹதாரண்யக உபநிஷத்தின் 4ஆவது அத்யாயத்தின் 3ஆவது கண்டத்தில் உள்ளது.-தஸ்ய வா ஏதஸ்ய புருஷஸ்ய த்₃ வே ஏவ ஸ்தா₂நே ப ₄வத இத₃ம் ச பரலோக ஸ்தா₂நம் ச |-இந்த ஜீவாத்மாவுக்கு இரண்டு இடங்கள் – இந்த உலகமும் ஸ்வர்கமும்-
ஸந்த்₄யம் த்ருதீயம் ஸ்வப்ந ஸ்தா₂நம் । தஸ்மிந் ஸந்த்₄யே ஸ்தா₂நே திஷ்ட₂ந் நேதே உபே ₄ ஸ்தா₂நே பஶ்யதி–ஸந்த்யம்-– (ஸ்வப்நம்) மூன்றாவது இடம். அந்த இடத்தில் இவன் இந்த உலகம் ஸ்வர்கம் இரண்டையும் காண்கிறான்.-ஸந்த்₄யம் என்றால் விழிப்புக்கும் தூக்கத்துக்குமான ஸந்தி₄யில் (இடையில்) உண்டானது – அதாவது ஸ்வப்நம்.
ந தத்ர ரதா₂ ந ரத₂யோகா₃ ந பந்தா₂நோ ப₄வந்த்யத₂ ரதா₂ந் ரத₂ யோகா₃ந் பத₂꞉ ஸ்ருஜதே ।-அங்கு தேர்கள், குதிரைகள், பாதைகள் இல்லை . தேர்களையும் குதிரைகளையும் பாதைகளையும் ஸ்ருஷ்டிக்கிறார்.
ந தத்ர ஆனந்தா₃ முத₃꞉ ப்ரமுதோ ₃ ப₄வந்தி அத₂ ஆனந்தா₃ந் முத₃꞉ ப்ரமுதோ ₃ ஸ்ருஜதே ।-அங்கு ஆநந்தம், மோதம், ப்ரமோதம் இல்லை . ஆநந்தத்தையும் மோதத்ணதயும் ப்ரவமாதத்தையும் ஸ்ருஷ்டிக்கிறார்.
பார்ப்பதால் இன்பமளிக்கும் பொருள்கள் தான் ஆநந்தம் என்றும், நம்முடையது என்று அறிவதால் இன்பமளிக்கும் பொருள்கள் மோதம் என்றும், பயன்படுத்துவதால் இன்பமளிக்கும் பொருள்கள் ப்ரமோதம் என்றும் கூறப் படுகின்றன-
ந தத்ர வேஶாந்தா꞉ புஷ்கரிண்ய꞉ ஸ்ரவந்த்யோ ப₄வந்த்யத₂ வேஶாந்தா₃ந் புஷ்கரிணீ꞉ ஸ்ரவந்தீ꞉ ஸ்ருஜதே ।ஸ ஹி கர்தா–அங்கு குட்டைகள், குளங்கள், நதிகள் இல்லை . குட்டைகளையும் குளங்களையும் நதிகளையும் ஸ்ருஷ்டிக்கிறான்.
பூர்வ பக்ஷியின் வாதம்
ஸந்தேஹம் – இங்கு ஸ்வப்நத்தில் காணப்படும் பொருள்களைப் படைப்பவர் ஜீவாத்மாவா? பரமாத்மாவா?
பூர்வ பக்ஷம் – ஜீவாத்மா தான் இவற்றை ஸ்ருஷ்டிக்கிறார் என்று 2 ஸூத்ரங்களால் கூறுகிறார் பூர்வ பக்ஷீ.
1–ஸந்த்₄யே ஸ்ருஷ்டி: ஆஹ ஹி–“ஸந்த்₄யத்தில் ஸ்ருஷ்டி (ஜீவாத்மாவால்), அப்படி யன்றோ கூறிற்று” ஸந்த்யத்தில் (ஸ்வப்னத்தில்) காணப்படும் பொருள்களின் ஸ்ருஷ்டி, அந்த ஸ்வப்நத்தைக் காணும் ஜீவனால் தான் செய்யப் படுகிறது என்கிறது வேதமே – ’-ஸ ஹி கர்த்தா’ (அவர் அன்றோ கர்த்தா) என்று ஜீவனையே சொல்வதால்.
2-நிர்மாதாரம் ச ஏகே புத்ராத₃ய: ச
ஏகே – ஒரு சிலர், அதாவது க்ருஷ்ண யஜுர் வேதத்தைக் கற்பவர்கள், அதன் பகுதியான கடோபநிஷத்தில்
நிர்மாதாரம் – ஜீவாத்மா தான் ஸ்வப்நப் பொருள்களை உண்டக்குபவர் (நிர்மாதா) என்று கூறுகிறார்கள் – அதாவது(ய ஏஷு ஸுப்தேஷு ஜாக₃ர்தி காமம் காமம் புருஷோ நிர்மிமாண : ) அதாவது “புலன்கள் எல்லாம் தூங்கும் போது இந்த ஜீவாத்மா மட்டும் விழித்துக் கொண்டிருந்து, தன்னுடைய காமங்களை
(ஆசைப்பட்ட பொருள்களை ) உண்டாக்குகிறார்” என்று கடோபநிஷத் கூறுகிறது.
புத்ராத₃ய: ச – புத்ரன் முதலானவை தான் (இங்கு காமங்கள் என்று சொல்லப் படுகின்றன). காமம் என்றால் பொதுவாக ’ஆசை ’ என்று பொருள் இருந்தாலும், இங்கு அந்தச் சொல் ஆசைப்படப்படும் பொருள்களையே காட்டுகிறது.-ஏனென்றால் இந்த கடோபநிஷத்தில் இதற்கு முன்னாலும் யமன் நசிகேதஸ்ஸிடம் பேசும் போது காமம் என்ற சொல்லால் பொருள்களையே குறிப்பிடுகிறார்.
யே யே காமா: து₃ர்லபா ₄: மர்த்ய லோகே ஸர்வாந் காமாந் ச₂ந்த₃த: ப்ரார்த₂ யஸ்வ-“எந்தெந்தப் பொருள்கள் எல்லாம் மனித உலகில் கிடைக்க அரிதானவையோ , அவற்றை ஆசைப்படி கேட்டுக் கொள்” அவன் அன்றோ கர்த்தா (செய்பவன்)
பரமாத்மா தான் படைக்கிறார்
ஸித்தாந்தம் – தன் ஸித்தாந்தத்தை வ்யாஸர் 4 ஸூத்ரங்களால் சொல்கிறார்.
3–மாயா மாத்ரம் து கார்த்ஸ்ந்யேந அநபி₄ வ்யக்த ஸ்வரூ பத்வாத்
மாயா மாத்ரம் து – “(ஸ்வப்நத்தில் காணப்படும் பொருள்கள் எல்லாம்) மாயமானவையே ”. மாயம் என்ற சொல்லுக்குப் பொய்யானது என்று பொருள் அல்ல, ஆச்சர்யமானது என்று தான் பொருள். ஸ்வப்நத்தில் நாம் காணும் பொருள்கள் எல்லாம் மிகவும் ஆச்சர்யமானவை , ஏனென்றால் அவற்றை நாம் மட்டும் தான் காண முடியும், அதுவும் அப்போது மட்டும் தான் காண முடியும். மற்றவர்களோ , நாமே விழித்த பிறகோ காண முடியாது.
வ்யாஸரின் கருத்து – இப்படிப்பட்ட ஆச்சர்யமான பொருள்களை பரமாத்மாவால் மட்டுமே ஸ்ருஷ்டிக்க முடியும்.
கேள்வி – உபநிஷத்தில் ஜீவாத்மாவும் ஸத்ய ஸங்கல்பன், அதாவது நினைத்ததை எல்லாம் நடத்தும் வல்லமை படைத்தவர் என்று சொல்லப்பட்டுள்ளதே ? அவர் ஏன் இந்த ஆச்சர்யமான ஸ்ருஷ்டியைச் செய்திருக்க முடியாது?
பதில் –
கார்த்ஸ்ந்யே –முழுவதுமாக
அநபி₄வ்யக்த -வெளிப்படாத
ஸ்வரூபத்வாத் -தன்மைகளைக் கொண்ட படியால்
பரமாத்மாவைப் போல் ஜீவாத்மாவுக்கும் (1) பாபமின்மை , (2) மூப்பின்மை , (3) மரணமின்மை , (4) சோகமின்மை , (5) பசியின்மை , (6) தாகமின்மை , (7) எல்லா ஆசைகளும் நிரம்பி யிருத்தல், (8) நினைத்ததை நடத்தும் வல்லமை ஆகியவை இயற்கையான பண்புகள் தான். ஆனாலும், ஸம்ஸாரத்தில் இருக்கும் போது ஜீவாத்மாவின் இந்த இயற்கைத் தன்மைகள் மறைக்கப் பட்டுள்ளன. மோக்ஷம் அடையும் பொழுது தான் தன்னுடைய இயற்கையான தன்மைகளோடு ஜீவாத்மா முழுவதுமான வெளிப்படுகிறார் என்று வேதமே கூறுகிறது. எனவே ஸம்ஸாரத்தில் இருக்கும் ஜீவாத்மாவால் இப்படிப்பட்ட ஆச்சர்யமான ஸ்வப்நப் பொருள்களைப் படைக்க முடியாது.
ய ஏஷு ஸுப்தேஷு ஜாக₃ர்தி காமம் காமம் புருஷோ நிர்மிமாண :” என்ற கடோபநிஷத் வாக்கியத்திலும்
“ஜீவாத்மாக்கள் அனைவரும் தூங்கும் போதும் பரமாத்மா விழித்திருந்து ஸங்கல்பித்து ஸங்கல்பித்து
ஸ்வப்நப் பொருள்களைப் படைக்கிறார்” என்று பரமாத்மா தான் சொல்லப் படுகிறார், ஏனென்றால் இதற்கு முன்னும் பின்னும் “இவரே ப்ரஹ்மம், இவரிடம் உலகப் பொருள்கள் எல்லாம் ஆச்ரயித்துள்ளன” என்று சொல்கிற படியால்.
(கட உபநிஷத் -5-8-7- ஏஷூ சுப்தேஷூ ஜாகர்தி –-இவை தூங்கும் பொழுது அவன் விழித்து உள்ளான்-மேலும் அதே வரியில் – தத் ஏவ சுக்ரம் தத் ப்ரஹ்ம தத் ஏவ அம்ருதம் உஸ்யதே தஸ்மின் லோகாஸ்ரித சர்வே தது நான்யேதி கச்சன -என்று அந்த ப்ரஹ்மமே ஒளி அமிர்தம் அனைத்தும் ஒடுங்கி உள்ளன –
அவனைக் கடந்து ஏதும் இல்லை என்கிறது-ப்ருஹத் உபநிஷத் -4-3-10-வேசாந்தா புஷ்கரிண்ய ஸ்ரவந்த்ய ஸ்ருஜதே ஸ ஹி கர்த்தா என்று பரம புருஷனைப் பற்றிக் கூறியது)
ஸ்வப்நப் பொருள்களும் உண்மையே
கேள்வி – ஸத்ய ஸங்கல்பம் முதலானவை ஜீவாத்மாவுக்கு இயற்கையான பண்புகள் என்றால் அவை ஏன் ஸம்ஸாரத்தில் இருக்கும் பொழுது மறைக்கப் பட்டுள்ளன? பதில் – அடுத்த ஸூத்ரத்தில்
4-பராபி₄த்₄யாநாத் து திரோஹிதம் தத: ஹி அஸ்ய ப₃ந்த₄வி ர்யயௌ
பராபி₄த்₄யாநாத் து – (ஜீவாத்மா எண்ணிறந்த பிறவிகளாகத் தவறு செய்ததால்) பரமாத்மாவின் ஸங்கல்பத்தால் தான்
திரோஹிதம் – ஜீவாத்மாவுக்கு இயற்கையான இந்த பண்புகள் வெளிப்படாமல் மறைக்கப்பட்டுள்ளன.
தத: ஹி அஸ்ய – அந்த பரமாத்மாவின் ஸங்கல்பத்தால் அன்றோ இந்த ஜீவாத்மாவுக்கு
ப₃ந்த₄வி ர்யயௌ- ஸம்ஸாரத்தில் பந்தமும் (கட்டுப் பட்டிருப்பதும்) அதற்கு எதிரான முக்தியும்.
ஸம்ஸாரத்தில் இருப்பதே பரமாத்மாவின் ஸங்கல்பத்தால் தான் என்றால், இங்கு இருக்கும் பொழுது இயற்கையான பண்புகள் மறைக்கப் பட்டிருப்பதும் அவர் ஸங்கல்பத்தால் தான் என்று தானாகவே அறியலாம்.
(தைத்ரியம் -2-7-1-யதா ஹி ஏவ ஏஷ ஏ தஸ்மின் அத்ருஷ்ய அநாத்ம்யே அநிருக்தே அநிலயநே
அபயம் பிரதிஷ்டாம் விந்ததே அத ச அபயம் கத பவதி யதா ஹி ஏவ ஏஷ ஏதஸ்மின் உதரம் அந்தரம் குருதே அத தஸ்ய பயம் பவதி -என்றும்–ஏஷ ஹி ஏவ ஆனந்தயாதி -என்றும்—2-8-1-பீஷாச்மாத் வாத பவதே -என்றும் கூறும்-கோஹ்யே வாந் யாத்க ப்ராண்யாத்-யதேஷ ஆகாஸ ஆனந்தோ நஸ்யாத்
ஏஷஹ் ஏவ ஆனந்தயாதி பரஞ்சோதி ரூப சம்பத்ய ஸ்வேந ரூபேண அபி நிஷ்பத்யதே -முதலிய ஸ்ருதிகளால்-பரமாத்மாவின் மூலமே ஜீவனின் ஸூக துக்கங்களை பறை சாற்றுகின்றன)
கேள்வி – எதன் மூலம் பரமாத்மா இப்படி மறைக்கிறார்?
பதில் –5-தே ₃ஹ யோகா₃த் வா ஸ: அபி –“அதுவும் (மறைக்கப் படுவதும்) உடலோடு சேர்க்கையாலோ (அல்லது மூல ப்ரக்ருதியோடு சேர்க்கையாலோ)”-ஸ்ருஷ்டி காலத்தில் உடலோடு உள்ள சேர்க்கையாலும், ப்ரளயத்தில் (நமக்கு உடலே இல்லாத பொழுது) ஸூக்ஷ்மமாக (பெயர் உருவத்தால் பிரித்துப் பார்க்க முடியாததான) மூல ப்ரக்ருதியோடு சேர்க்கையாலும் மறைக்கப் படுகின்றன.
(கட உபநிஷத் -5-8-தஸ்மின் லோகாஸ்ரித சர்வே தது நாத்யேதி கச்சன -என்பது
பரம் பொருளுக்கே பொருந்தும்-)
6– ஸூசக: ச ஹி ச்ருதே : ஆசக்ஷதே ஹி தத்₃வித₃:
ஸூசக: ச ஹி – கனவில் வரும் காட்சிகள் உண்மையில் நடக்கப் போகும் நிகழ்வுகளைக் கோடி காட்டுகின்றன என்று
ச்ருதே : – வேதம் சொல்கிறது – ஒரு கர்மத்தைச் செய்யும் பொழுது கனவில் ஒரு பெண்ணைக் கண்டால் அந்தக் கர்மம் நன்கு பலனளிக்கும், கொலை செய்யப் படுவதைக் கண்டால் உண்மையில் செய்யப்படுவான், என்பது போல்.
ஆசக்ஷதே ஹி தத்₃வித₃: – ஸ்வப்நத்தின் உண்மைத் தன்மையை அறிந்த ஜ்ஞாநிகள் இவ்வாறே கூறுகிறார்கள்.
(சாந்தோக்யம் -5-2-8-யதா கர்ம ஸூ காம்யேஷூ ஸ்த்ரியம் ச்வப்நேஷூ பச்யதி ஸ்ம்ருத்திம் தத்ர ஜாநீயாத் தஸ்மின் ஸ்வப்ன நிதர்சனே —)
ஜீவாத்மா தான் ஸ்வப்நப் பொருள்களைப் படைக்கிறார் என்றால், நல்ல நிகழ்வுகளைக் கோடி காட்டும் பொருள்களை மட்டும் கனவில் ஸ்ருஷ்டித்துக் கண்டு விடலாம். துன்பம் தரும் காட்சிகளையே பார்க்க மாட்டார். எனவே ஜீவன் படைக்கவில்லை .-ஆக, ஸ்வப்நப் பொருள்களும் உண்மை யானவையே , நமது சிறு புண்ய பாபங்களைக் கழிப்பதற்காகப் பரமாத்மா படைக்கிறார்.
——————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
Leave a Reply