ஸ்ரீ அவதாரம் -ஸ்ரீ திருநாமம் சாத்துதல் -தாலாட்டு -தாடகா வதம் -சிவதனுஸ் பங்கம் -சீதா கல்யாணம் -பரசுராம கர்வ பங்கம்
ஸ்ரீ அவதாரம்-
அந்தர்யதிகரணம் -சாது பரித்ராணாம் ஏவ காரணம் மற்றவை ஆனு ஷங்கிகம்-ராவணஸ்ய வதார்த்தம் வால்மீகி –திரு உள்ளம் அறிந்து ஆழ்வார்கள்-மேரு-அணு வாசி-
துயர் கெடும் கடிது அடைந்து வந்து அடியவர் தொழுமின்
உயர் கொள் சோலை ஒண் தட மணி யொளி திரு மோகூர்
பெயர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர் புக்கு அழுந்த
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே–10-1-8-
பெயர்கள் ஆயிரம் உடைய-சர்வேஸ்வரன் அளித்துப் படைத்த-பெயர்களோ பாதி போரும் ஆயிற்று இவர்கள் பிறர்களை துன்புறுத்தி பெற்ற பெயர்கள்-
யஞ்ஞ சத்ரு – ப்ரஹ்ம சத்ரு –என்பன போன்றவனவே அன்றோ இவர்கள் பெயர்கள் – தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே –சக்கரவர்த்தி பெற்ற-நீல மணி போலே இருக்கிற-தடாகத்தை-அடைந்து வந்து அடியவர் தொழுமின்-பதி தரு மரு வாபீ வாரிவத் சர்வ போக்கியம் -பிரமாணம் மரு பூமி –நீரும் நிழலும் இல்லாத இடம்-வழியில் உள்ள மரம் என்ன-மரு பூமியில் உள்ள தண்ணீர் என்ன–இவற்றைப் போன்று எல்லாருக்கும் இனியனை -என்கிறபடியே-அடியவர்கட்கு பாதுகாவலனாய்-சம்ஹாரிணா ராகவ சாகரேன ப்ரச்சாத்யமானா தாச பவத்பி- யுக்தஸ்து அயம் தாரயிதம் சமேத்ய காகுஸ்த பாதாளமுகே பதான் ச -யுத்த -14-20- இராமபிரான் ஆகிற வடவாமுகாக்னியில் விழுகின்றவனான-அந்த இராவணன் -என்கிறபடியே விரும்பாத பகைவர்க்கு அழிவினைத் தரத் தக்கவனாய்-அன்றோ இருப்பது-மயா த்வம் சம் அநுஜ்ஞாத கச்ச லோகன் அநுத்தமான்-ஆரண்ய -68-30-என்னால் நீவிர் அனுமதிக்கப் பட்டவராய் மேலான உலகத்தை அடைவீராக-என்கிறபடியே -பறவையையும் -ஜடாயுவையும் –வழி நடத்துமவன் அன்றோ –
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள் திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை
எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று அது முதலா தன் உலகம் புக்கது கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள் கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார் நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே–10-11–பஹூ குணனான ஸ்ரீ சக்கரவர்த்திக்கு –பிதரம் ரோசயாமாச – என்று பிள்ளையாய் தோற்றம் -ஆவிர்பாவம்-தொடக்கமாக-
மன்னு புகழ் கௌசலை தன் மணி வயிறு வாய்த்தவனே!
தென் இலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர்
கன்னி நன் மா மதிள் புடை சூழ் கண புரத்து என் கரு மணியே!
என்னுடைய இன் அமுதே! ராகவனே! தாலேலோ— 8-1–ஸ்ரீ சர்வேஸ்வரனைப் பிள்ளையாகப் பெற்றாள் -என்ற நிலை நின்ற புகழை உடைய –ஸ்ரீ கௌசலையாருடைய அழகிய வயிற்றிலே அவளுக்குப் பிள்ளையாகப் பெற்றவனே-சித்தியை வளர்பிறை நவமி புனர்வசு -நக்ஷத்ரம் -பன்னிரு திங்கள் -நாம் தந்தையிடம் 2 மாசம் அண்ணையிடம் 10 மாசம் -பாயாசம் மூலமும் -தேவகி கர்ப்பம்-8 மாஸம் -அதுக்கு சரி பண்ண
நாட்டிற் பிறந்தவர் நாரணற்கு ஆளன்றி ஆவரோ?
நாட்டிற் பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா
நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு
நாட்டை அளித்து உய்யச் செய்து நடந்தமை கேட்டுமே.–7-5-2-ப்ரஹ்மாதி கள் தேசத்தை அருவருத்து வர்த்திக்கிற நித்ய ஸூ ரிகளோடே வர்த்திக்கிறவன் -அந்த ப்ரஹ்மாதிகளும் குத்ஸிக்கும் பூமியிலே பிறந்து -சம்சாரிகள் தன்னில் அறிவு பிறந்தாரும் காற்கடைக் கொள்ளுகிற தேசத்திலே இ றே பிறந்து –அகர்மவஸ்யனான தான் கர்ம வச்யரோடு ஓக்க கர்ப்ப வாசம் பண்ணிப் பிறந்து-சம்சாரிகள் கர்மத்தால் படும் அளவு அன்று இறே அவன் அனுக்ரஹத்தாலே பட்டது -ஒரு சேதனன் பிறந்தால் இருக்கும் நாள் தானும் ஸ்திரீயும் சேர இருந்து ஜீவித்து போகா நின்றான் -அவ்வளவும் அன்றிக்கே பிராட்டி ஓர் இடத்திலும் தான் ஓர் இடத்திலும் வர்த்திக்க வேண்டிற்று இறே -ராஜ்யாத்ப்ராம்ச -இத்யாதி -இப்படி படுகிறது யாருக்காக -என்னில் –மனிசர்க்கா-தங்களுக்காக அனுக்ரஹத்தால் படுகிற இம் மஹா குணத்தை குண ஹானியாக சொல்லும் க்ருதக்நர்காக-ராவண பவனத்தில் இருந்தவளோடே சேர வர்த்தியா நின்றான் -என்று சொன்னது இறே இரண்டாம் பிரிவுக்கு முதல் –கர்ம வஸ்யரை சொல்லும் வார்த்தையை சொன்னார்கள் இறே-இருந்ததே குடியாக உண்டு உடுத்து திரிகிறது ஹேதுவாக நலிகிற ராக்ஷஸரை நாடித் தடிந்திட்டு-அவர்கள் வந்து மேலிட்டால் அன்றிக்கே -அவர்கள் இருந்த இடங்களிலே சென்று அவர்களை அழியச் செய்து -சர்வ சாதாரணன் நலிகிறது நிர் நிபந்தனமாக விபூதியை நலிகையால் இறே-நாட்டை அளித்து-போந்த கார்யம் தலைக் காட்டிற்று ஆகில் இனி போவோம் என்னாதே மீண்டும் தம்முடைய ஸுந்தரியாதிகளாலே இருந்ததே குடியாக வாழ்வித்து -தம் வரவு பார்த்து இருக்கிற ஸ்ரீ பரத ஆழ்வானையும்-அபிஷேக மஹோத்சவங்கள் காண ஆசைப்பட்ட தாய்மாரையும் -பின் தொடர வழி மாற்றிப் போந்த நாட்டையும் -கடல் ஞாலத்து அளி மிக்கான் -என்கிறபடியே நெடு நாள் ஆஸ்வசிப்பித்து-உய்யச் செய்து-தம்மைப் பெறுகைக்கு அவர்கள் பக்கல் ஒரு கைம்முதல் இன்றிக்கே அசத்சமமாய் இருக்கிறவர்களை -சந்தமேனம்-என்னும் படி பண்ணி–தர்மம் வழி நடந்தால் வானரங்களும் உதவும் -அதர்மம் வழி நடந்தால் தம்பியும் உதவ மாட்டான் -என்று காட்டி –
அம் கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும் அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி
வெம் கதிரோன் குலத்துக்கோர் விளக்காய் தோன்றி விண் முழுதும் உய்ய கொண்ட வீரன் தன்னை
செம் கண் நெடும் கரு முகிலை ராமன் தன்னை தில்லை நகர் திரு சித்திர கூடம் தன்னுள்
எங்கள் தனி முதல்வனை எம்பெருமான் தன்னை என்று கொலோ? கண் குளிர காணும் நாளே— 10-1-அபராஜிதை என்று சொல்லுகிற ஸ்ரீ பரமபதம் போலே சத்ருக்களுக்கு கணிசிக்க ஒண்ணாத ஊர்-என்னும் –-ஸ்ரீ பரம பதம் போல் சிலர் அறிந்து சிலர் அறியாதாய் இருக்கை யன்றிக்கே சர்வ லோக பிரசித்தமாய் இருக்கை –அலங்காரங்களால் குறைவற்ற ஊர் -என்னுதல்-சர்வ லோகங்களையும் தன் தேஜஸ்ஸாலே –நாராயண பரஞ்சோதி -என்கிறபடியே பரஞ்ஜோதிஸ்ஸாய் உள்ளது-ஜகத்தில் அந்தகாரம் எல்லாம் நீக்கக் கடவ ஆதித்யன் வம்சத்திலே -அவனைப் போலே இரவு கலவாத அத்விதீயமான தேஜஸ்ஸாய் வந்து உதித்து –தன் வீர்ய குணத்தாலே தேவ ஜாதியடைய உஜ்ஜீவிப்பித்தவனை-தேவ ஜாதி யன்றிக்கே ஜகத்தை அடைய ரஷிப்பதாக-கடலிலே மணலே சேஷமாக பருகின காளமேகத்தினுடைய வடிவையும் ஸ்ரீ சர்வேஸ்வரத்வ லஷணமான புண்டரீகாஷத்வங்களையும் உடையவன்-வடிவு அழகாலும் கண் அழகாலும் அபிராமத்தாலும் அனுகூல பிரதிகூல விபாகம் இன்றியே தோற்ப்பிக்குமவனை –
கீழில் -வீரன் -என்கிறதும் -இங்கும் அன்வயிக்கக் கடவது -சத்யேதியாதிவத் –
2-நாம கரணம்
வசிஷ்டர் -ராமன் பரதன் லஷ்மண சத்ருக்ந
ரமயதி இதி ராமன் -மனத்துக்கு இனியான் -திருப்பாவை-12–சஞ்ஜாத பாஷ்ப பரவீர ஹந்தா -என்று சத்ருக்களுக்கும் கண்ண நீர் பாய்ந்து-உண்ணாது உறங்காது ஒலி கடலை யூடறுத்து -தன்னைப் பிரிந்து நாம் படுமவற்றை நம்மைப் பிரிந்து தான் பட வல்லன்-கிருஷ்ண விரஹத்தாலே கமர் பிளந்த நெஞ்சு பதம் செய்யும் படிக்காக சக்கரவர்த்தி திருமகனைப் பாடச் செய்தேயும் போன உயிர் மீளும்படியானவனை பாட வாய் திறக்கின்றிலை –
பரணாத் பரதன் -ராஜ்ஜியம் -பாதுகை –பழி ஏற்றுக்கொண்டு -நானே தான் ஆயிடுக -இல்லாத குற்றத்தையும் சிலர் -உண்டு -என்றால் -இல்லை செய்யாதே இசைகை இறே ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் –(ந மந்தராயா -கைகேயியும் தசரதனுக்கு பெருமாளும் இல்லை நானே தான் ஆயிடுக-மத் பாபமே வாத்ர நிமித்தம் ஆஸீத் -என்று பிறர் குற்றத்தையும் தன் குற்றமாக இசைந்தார் இறே ஸ்ரீ பரத ஆழ்வான்
லஷ்மீ ஸம்பன்னன்-நற்செல்வன் –-தோற்றி மாயும் சம்பத் அன்றிக்கே-நிலை நின்ற சம்பத்து –கைங்கர்ய லஷ்மி இறே இவ்வாத்மாவுக்கு நிலை நின்ற சம்பத்து -ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே என்கிறபடி-தன் வைஷ்ணவ ஸ்ரீ யாலே ஜகத்துக்கு அடைய-வைஷ்ணத்வம் உண்டாம்படி இருக்கை –
நித்ய சத்ருக்ந -அநக -ராமனை அன்றி அறியாத பரதனை அன்றி அறியாத – கோதில் அடியார் -அடியார் தம் அடியார்-3-10-10-
ராம லஷ்மணர் பரத சத்ருக்ந -தொட்டில் தொடங்கி-பரதனும் தம்பி சத்ருக்கனனும் இலக்குமனோடு மைதிலியும்
இரவு நன் பகலும் துதி செய்ய நின்ற இராவணாந்தகனை யெம்மானை
குரவமே கமழும் குளிர் பொழிலூடு குயிலொடு மயில்கள் நின்றால
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத் திருவல்லிக்கேணிக் கண்டேனே—2-3-7-
3-தாலாட்டு-மன்னு புகழ் கௌசலை தன் மணி வயிறு வாய்த்தவனே!
தென் இலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர்
கன்னி நன் மா மதிள் புடை சூழ் கண புரத்து என் கரு மணியே!
என்னுடைய இன் அமுதே! ராகவனே! தாலேலோ— 8-1–தாலாட்டு சந்தையிலே அருளிச் செய்தார் –கௌசல்யா ஸூ ப்ரஜா -எழுப்புகிறார் விச்வாமித்ரர் -இங்கு பொங்கும் பரிவால் தாலாட்டு-ராகவனே! தாலேலோ –8-2–-8-3-8-4-என் தாசரதீ ! தாலேலோ—– 8-5-சீ ராமா! தாலேலோ –8-6–-அயோத்தி மனே! தாலேலோ— 8-7–-சீ ராமா! தாலேலோ– 8-8–ராகவனே! தாலேலோ– 8-9-ஏவரி வெஞ்சிலை வலவா! ராகவனே! தாலேலோ— 8-10–என் காகுத்தன்
தன் அடி மேல் தாலேலோ என்று உரைத்த தமிழ் மாலை-8-11-
4-தாடகா வதம் –12 திருநக்ஷத்ரம் -விஸ்வாமித்ரர் -சித்தாஸ்ரமத்தில் யாக ரக்ஷணம் –
வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தை கீறி வரு குருதி பொழி தர வன் கணை ஒன்றேவி
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்
செந்தளிர் வாய் மலர் நகை சேர் செழும் தண் சோலை தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த அணி மணி யாசனத்து இருந்த அம்மான் தானே– 10-2–தான் மிகைத்து வந்து மேலிட்ட தாடகையை -நக்ர்த்திக்கு-சந்நிவேசத்துக்கு –ஒப்பில்லாதவள் – தன்னிகர் ஒன்றில்லாத தாடகை இறே –ஸ்ரீ பெருமாள் பக்கல் பொல்லாங்கு நினைத்த நெஞ்சை -மலை போலே பிளந்து-செம்பாட்டுத் தரையிலே-செம்மண் தரையிலே- மலை யருவி விழுந்தால் போலே ருதிரம் வந்து கொழிக்க –
வலிக்கு ஒப்பில்லாத திருச் சரத்தை நடத்தி ரிஷி தனக்கே தனக்கு என்னாதபடி நிர்ப்பரனாய்த் தன்னுடைய அனுஷ்டானங்கள் எல்லாம் அடைவே அனுஷ்டித்து
யாகத்தைத் தலைக் கட்டும்படி பண்ணி-யஜ்ஞ் விக்னரரான மாரீச ஸூபாஹூகளைக் முடித்த பிள்ளைத் தனத்தை உடையவனை-மாரீசன் பட்டானோ என்னில் -பின்னை இருந்த இருப்பு ம்ருத ப்ராயன் என்று கருத்து
என் வில் வலி கண்டு போ என்று எதிர் வந்தான்
தன் வில்லினோடும் தவத்தை எதிர் வாங்கி
முன் வில் வலித்து முது பெண் உயிர் உண்டான்
தன் வில்லின் வன்மையைப் பாடிப் பற
தாசரதி தன்மையைப் பாடிப் பற – 3-9-2- –விஸ்வாமித்ர மகரிஷியினுடைய அத்ரவா த்ராணார்த்தமாக-(யாக ரக்ஷணத்துக்காக ) மகரிஷியோடே கூட எழுந்து அருளின அளவிலே-யாகங்களையும் பிராமணரையும் -தபச்சுக்களையும் – அழித்துக்
கொண்டு திரியும்-முது பெண்–(பர ஹிம்சையில்) பழகிக் கிடந்த ராஷசியான தாடகை – அதிரக் கூப்பிட்டு கைகளையும் எடுத்துக் கொண்டு -மிருந்த மிகுந்த கோபத்தோடு நலிவதாக அடர்ந்து வர –ஸ்ரீ விஸ்வாமித்ர நியோகத்தாலே -திருக் கையில் வில் வளைத்து அவளுடைய பிராணனை முடித்தவன் –மலை போலும் தன்னிகர் ஓன்று இல்லாத தாடகை -பெரிய திருமடல் -மா முனிக்காய் -தென்னுலகம் ஏற்றுவித்த திண் திறலோன்-பெரிய திருமடல்-திண் திறலாள் தாடகை தன் உரம் உருவ சிலை வளைத்தாய்!-8-2-ஸ்ருஷ்டிக்குமது அன்றியே -பயிரைச் செய்து களை பிடுங்குமா போலே ஆஸூர வர்க்கத்தைப் போக்கின படி
5-விச்வாமித்ரர் யாகம் ரக்ஷணம் -6 நாள்கள்
வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தை கீறி
வரு குருதி பொழி தர வன் கணை ஒன்றேவி
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து
வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்-10-2- காயத்ரி மந்த்ரம் கண்டு வழங்கிய -ரிஷி தனக்கே தனக்கு என்னாதபடி நிர்ப்பரனாய்த் தன்னுடைய அனுஷ்டானங்கள் எல்லாம் அடைவே அனுஷ்டித்து யாகத்தைத் தலைக் கட்டும்படி பண்ணி-யஜ்ஞ் விக்னரரான மாரீச ஸூபாஹூகளைக் முடித்த பிள்ளைத் தனத்தை உடையவனை-மாரீசன் பட்டானோ என்னில் -பின்னை இருந்த இருப்பு ம்ருத ப்ராயன் என்று கருத்து-யாகம் பண்ணும் பொழுது கோபமோ சாபம் கொடுப்பதோ கூடாதே -ஆகவே யாகத்துக்கு இடையூறு பண்ண வந்தார்கள் முன்னூறு பின்னூறு பண்ணாமல் நடுவிலே வந்தார்கள்-மாரீசனை விரட்டிய மிடுக்கால் மைந்தன் -தாடகைக்கு ஈமச்செயல் பண்ண வேண்டுமே –இங்கு கோதண்டத்தால் அல்ல – கல்விச்சிலையால் காத்தானூர்-பெரிய திருமொழி -பயிற்சிக்கான வில்
வல்லாளரக்கர் குலப்பாவை வாட முனி தன் வேள்வியைக்
கல்விச் சிலையால் காத்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே —8-6-3-வலிய ஆண்மையை உடைய ராஷச ஜாதிக்காக கண் காட்டி யானவள் முடியும்படியாக –(பாவை -மரப்பாவை -அத்தைப்போலே தர்சனீயம் –கண் காட்டி -ராக்ஷஸர்களுக்கு முதலில் இருந்து காட்டிய தாடகை அன்றோ ) முனி தன் வேள்வியைக் கல்விச் சிலையால் காத்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே – ருஷியினுடைய யாகத்தை – ஸ்ரீ பரசுராமன் ஆழ்வானை வென்று
தன்னைதான வில்லை ( வைஷ்ணவ சாபம் ) வாங்குவதற்கு முன்பே பிடித்த வில்லைக் கொண்டு காத்தானூர் –ராஷசர்கள் புற்றுப் போலே என்றும் ஒக்க துர் வர்க்கம் மாறாத
இலங்கையில் உண்டான ராஷசரையும் கூட்டிக் கொண்டு போக பூமியான பாதாளத்தில் புக்கு மறைய –கருந்தாட் சிலை கைக் கொண்டானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே – வயிரம் பற்றித் திண்ணியதான வில்லை கையிலே பிடித்தவனுடைய ஊரான திருக் கண்ண புரத்தை நாம் தொழுவோம் –
அவப்ரத ஸ்நாநம் -மாமுனி வேள்வியை காத்து அவபிரதம் ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே! அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே–4-விசுவாமித்திரர் யாகத்துக்கு விக்ந கர்த்தாக்கள் -ராவண வதத்துக்கு அடியானை -தாடகை தாடகாதிகள் – அருணோதயம் போலே இது அதுக்கு -சமாராதானம் -நீராடி -சத்ருக்கள் மண் உண்ணும் படி –மா முனி –
முனி மனன சீலர் -கவி ரிஷி முனி என்னும் ஆழ்வார் –-கிராந்தி காலம் தாண்டிப் பார்க்கும் கவி –ரிஷி மந்த்ர த்ரஷ்டா – விச்வாமித்ரர்-ரக்ஷ பரம் பெருமாள் –சித்த உபாயம் பற்றியதால் மா முனி –
6-மிதிலை நோக்கி பயணம் -மூவரும்
மான் முனிந்து ஒரு கால் வரி சிலை வளைத்த மன்னவன் பொன்னிறத்து உரவோன்
ஊன் முனிந்து அவனது உடல் இரு பிளவா உகிர் நுதி மடுத்து அயன் அரனைத்
தான் முனிந்திட்ட வெந்திறல் சாபம் தவிர்த்தவன் தவம் புரிந்து உயர்ந்த
மா முனி கொணர்ந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானே–1-4-8-கங்கையில் நீராடி பாபங்களைப் போக்கி கொள்கிறோம் –அந்த கங்கையின் பாபத்தைப்போக்கவே இவர்கள் நீராட்டம்-தவம் புரிந்து உயர்ந்த மா முனி கொணர்ந்த -என்கிறது -விச்வாமித்ரனை–அவன் ஷத்ரியனாய் இருக்கச் செய்தேயும் தபோ பலத்தாலே ப்ரஹ்ம ரிஷி ஆனான் இறே – அவன் பெருமாளையும் இளைய பெருமாளையும் நடத்திக் கொண்டு வந்தது அக்கரையே ஆகையாலே அத்தை சொல்லிற்று ஆகவுமாம்-தபஸை செய்து உயர்ந்த என்ற – இதுக்கு ஸ்ரீ பராங்குச தாசர் -ஜீயா மா முனி புகன்ற -என்று பாட பேதத்தை பண்ணி அதினுடைய பிரபாவத்தை பிள்ளைகளுக்கு சொல்லிப் போந்தான் இறே அத்தைச் சொல்லிற்று ஆகவுமாம் -என்ன அதுக்கு நமக்கு பலம் போராது -என்று அருளிச் செய்வர்-அன்றிக்கே (உயர்ந்த தவம் புரிந்தார் என்று கொண்டு)-பகீரதன் தன்னையே சொல்லுகிறதாய் அவன் கொடு வந்த கங்கை என்னுதல்
இப்பொழுது தான் அஹல்யா சாப விமோசனம் -கௌசல்யை முனிவர் -ஆழ்வார்கள் இத்தை அருளிச் செய்யவில்லை-இந்திரன் லீலை -அவனுக்கும் சாபம் -திருவடி துகள் -காகுத்தன் திருவடி துகள் கதுவ -கம்பர் -திருவடியால் கூடவே தீண்ட மாட்டார் பெருமாள் –பெண்ணின் கற்பை இழிவாகச் சொல்லி ரஷித்த பெருமை -கங்கையையே புனிதமாக்கிய பெருமாளுக்கு இது பெரிய செயல் அல்லவே
7-ஸீதா திருமணம்
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் -கம்பர் மட்டுமே ஆழ்வார் அருளிச் செயல்களை ஒட்டி அருளிச் செய்கிறார்-செவ்வரி நல் கரு நெடும் கண் சீதைக்காகி
சின விடையோன் சிலை இருத்து-10-3-அஸி தேஷணா –என்கிறபடியே -கண் அழகிலே தோற்று சினத்தை உடைய ரிஷபத்தை-தனக்கு வாஹநமான ருத்ரனுடைய வில்லை
ஒருவரால் கிட்ட ஒண்ணாதே வில்லை அநாயாசேன முறித்து அச் செயலிலே தோற்ற
ஸ்ரீ பிராட்டியை திருமணம் புணர்ந்து-கன்னி மாடம் மேலிருந்து கீழே பார்க்கக் பெருமாள் மேல் பார்க்க-நோக்கினான் -உற்றுப்பார்த்தல்-nokkiya-
எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி.
கண்ணொடு கண் இணை கவ்வி. ஒன்றை ஒன்று
உண்ணவும். நிலை பெறாது உணர்வும் ஒன்றிட.
அண்ணலும் நோக்கினான்: அவளும் நோக்கினாள்.
பார்வையே கயிறாக மாறி இருவர் மனமும் ஒவ்வொருவர் இடமும் மாறிற்றே –பத்து பொருத்தம் பார்த்து ஒன்பது கிரஹம் சேர்த்து எட்டு திசைகளுக்கும் பத்திரிகை அனுப்பி ஏழு ஏழு ஜென்மங்களுக்கும் சேர்ந்து இருக்குமாறு ஆறு சுவை உணவு அளித்து ஐந்து பூதங்கள் சாக்ஷியாக அக்னியில் போட்டு நான்கு வேதம் ஓதி மூன்று முடிச்சு போட்டு இரண்டு மனமும் ஒன்றாவதே திருமணம்-நீரில் சேர்ந்து ஒருவர் நெருப்பில் பாயாசம் மூலm ஒருவர் நிலத்தில் சீதையாக வந்து சேர்ந்தனர் -பிரிந்தவர் பேச மறந்து –
நெறித்திட்ட மென் கூழை நன்னேரிழையோடு உடனாய வில்லென்ன வல்லேயதனை
இருத்திட்டவள் இன்பம் அன்போடணைந்தித்திட்டு இளங் கொற்றவனாய்த் துளங்காத முந்நீர்
செறித்திட்டி லங்கை மலங்க வரக்கன் செழு நீண் முடி தோளோடு தாள் துணிய
அறுத்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே —10-6-8-நெறித்து-மிருதுவான மயிர் முடியை உடையளாய் விலஷணமான ஆபரணங்களாலே அலங்க்ருதையான பிராட்டியோடு ஒக்கப் பிறந்த தனுஸ்-பிரசித்தியை உடைத்தாய்-மிடுக்கை உடைத்தாய் இருக்கிற அந்த வில்லை –-இவ் வில்லை முறித்தாருக்கு இவளைக் கொடுக்கக் கடவதாக நியமித்த படியாலே-அந்த வில்லை முறித்து அவளோட்டை சம்ஸ்லேஷ சுகத்தை ப்ரீதியோடு லபித்து-சிவ தனுஸ் -ஹுங்காரத்தாலே வெடித்தது -உடைந்த வில்லை -(உடனாய வில்லென்ன-தநுஸ் ப்ரஸித்தி -வம்ஸம் வழியாக வந்ததால் ஓக்க பிறந்த தநுஸ் என்கிறார் ஷீரத்வஜன் முதல் ஜனகன் பெற்ற சிவ தநுஸ்-அல் -என்று இருளாய் -இருண்ட வில்
வாராரும் இளம் கொங்கை மைதிலியை மணம் புணர்வான்
காரார் திண் சிலை இறுத்த தனிக் காளை கருதும் இடம்
ஏராரும் பெரும் செல்வத் தெழில் மறையோர் நாங்கை தன்னுள்
சீராரும் மலர்ப் பொழில் சூழ் திருத் தேவனார் தொகையே—4-1-8-ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளை மணம் புணருகைக்காக-பதி சம்யோக சுலபம் வயோ த்ருஷ்ட்வா சமேபிதா சிந்தார்ணவகத பாரம் நாசசாதாப் லவோயதா -அயோத்யா காண்டம்-வயிரம் பற்றி ஒருவரால் சலிப்பிக்க ஒண்ணாது இருக்கிற வில்லை முறித்த உபமான ரஹிதமான பருவத்தை உடையவன்-அடிப்பகுதி இடது திருவடி தீண்ட -நடுப்பகுதி கையால் ஸ்பர்சம் -மேல் பகுதி தானே வந்து வலது திருவடி தொட்டதாம்-
நாந்தகம் சங்கு தண்டு நாண் ஒலி சார்ங்கம் திருச் சக்கரம்
ஏந்து பெருமை இராமனை இருக்கும் இடம் நாடுதிரேல்
காந்தள் முகிழ் விரல் சீதைக்காகிக் கடும் சிலை சென்று இறுக்க
வேந்தர் தலைவன் ஜனக ராஜன் தன் வேள்வியில் கண்டார் உளர் -4– 1-2 –ரௌத்ரமாய் ஒருவரால் எடுக்கவும் வளைக்கவும் அரிது என்று கிடந்த வலிய வில்லை முறிக்க (ருத்ரனுடைய வில் அன்றோ )கடுமை -திண்மை -ராஜ தர்மத்தோடு தத்வ ஞான அனுஷ்டானங்களையும் உடையவன் ஆகையாலே (ராஜ ரிஷி அன்றோ ) ராஜக்களுக்கு எல்லாம் தலைவனான ஸ்ரீ ஜனக ராஜன் உடைய யாகத்திலே கண்டார் உளர்
இயம் ஸீதா மம ஸூதா பத்ரம் தே பாணி க்ருஹந் -ஐயர் பார்த்து-அவர் காலைப் பிடித்த பின்பே இவள் கையைப் பிடிப்பேன்-வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்னும்-13-பிராட்டியை லபிக்கைக்கு இடைச் சுவரான வில்லை முறித்து – அவ் வாண் பிள்ளைத் தனத்தைக் காட்டி ஸ்த்ரீத்வத்தால் வந்த அபிமானத்தையும் போக்கி பிரக்ருத்யா ம்ர்துவாய் இருந்துள்ள பிராட்டியோடு சம்ஸ்லேஷிதவனே-ஸ்ரீ ஜனக சக்கரவர்த்தி இவ் வில்லை முறித்தார்க்கு இவளைக் கொடுக்கக் கடவோம் -என்று பிரதிஞ்ஞை பண்ணுகையாலே வில்லை எடுத்து நாண் ஏறிட்டு வலிக்கப் புக்க அளவிலே வில்லை முறித்து அவ் வளவிலே பொற் கிண்டியைக் கொண்டு உதகம் பண்ணப் புக
ராஜ குமாரர் ஆகையாலே வீர வாசி கொண்டாட வந்தோம் இத்தனை ஒழிய விவாஹம் தாழ்த்து பெண் தேடி வந்தோமோ நாங்கள் – அத்தை வசிஷ்டாதிகளையும் ஐயரையும் கேட்பது என்ன –வில்லை முறித்த ஆண் பிள்ளைத் தனத்தையும் வார்த்தை சொன்ன சீர்மையையும் கண்டு நீராடினாள் பிராட்டி – அவ் வில் முறித்த ஆயாசத்தாலே வந்த ஸ்ரமம் தீர அவள் தோளில் முழுகினான் -ஆயத்து–தோள் தோய்ந்தான் என்னும் – விபுத்வம் ஏக அவயவத்தில் அடங்கினபடி – அல்லாத அவயவங்களும் ஆத்ம குணங்களும் குமர் இருந்து போம் இத்தனை –இத்தால் – நித்ய அநபாயிநியான பிராட்டியைப் பிரிந்தாலும் உதகம் பண்ணுவாறும் சேர்ப்பாரும் வேண்டி இருக்கிறபடி – சேதனனுக்கும் இவளோபாதி அனந்யார்ஹத்வம் ஸ்வரூபத்தில் உண்டானாலும் ஆச்சார்யா சமாஸ்ரயணனும் புருஷகார அபேஷையும் உண்டாய் இறே ஈஸ்வர விஷயீ காரத்துக்கும் இருப்பது –நீர் போல் அணைத்து நம்மை சேர்விக்கிறாள் –
ஊர்மிளை லஷ்மணனுக்கும் -தம்பி யான குசத்வஜன் பெண்கள் மாண்டவி பரதனுக்கும் ஸூதகீர்த்தி யை சத்ருக்கனனுக்கும் திருமணம்
இயம் ஸீதா மம ஸூதா ஸஹதர்ம சரீதவ ப்ரதீச்ச சைனாம் பத்ரம் தே பாணிம் க்ருண்ஹீஷ்வ பாணிநா--இந்த ஸீதா என் மகள்-தர்மங்களை ஒன்றாகச் செய்யக்கூடியவள்-இவளை ஏற்றுக்கொள்ளுங்கள்-உங்களுக்கு மங்களம் உண்டாகட்டும்-இவளுடைய கையை உங்கள் கைகளால் பிடித்துக் கொள்ளுங்கள்.
தாமரை மேல் அயன் அவனை படைத்தவனே! தயரதன் தன்
மா முதலாய்! மைதிலி தன் மணவாளா வண்டினங்கள்
காமரங்கள் இசை பாடும் கண புரத்து என் கருமணியே!
ஏமருவும் வெம் சிலை வலவா! ராகவனே! தாலேலோ– 8-4–
பற்றார் நடுங்க முன் பாஞ்ச சனியத்தை வாய் வைத்த போரேறே என்
சிற்றாயர் சிங்கமே சீதை மணாளா சிறுக்குட்டச் செம் கண் மாலே
சிற்றாடையும் சிறுப் பத்திரமும் இவை கட்டிலின் மேல் வைத்து போய்க்
கற்றாயரோடு நீ கன்றுகள் மேய்த்து கலந்து உடன் வந்தாய் போலும் -3 3-5 –பிரதிகூல நிரசனமும் அனுகூல ரஷணமும் கண்டால் -பார்த்தாரம் பரிஷஸ்வஜே -என்கிறபடியே –
உகந்து அணைக்கும் ஸ்ரீ ஜனகராஜன் திரு மகளுக்கு வல்லபன் ஆனவனே-அப்ரமேயம் தத் தேஜஸ் ஜனகாத்மஜா
8-பரசுராம கர்வ பங்கம் –
என் வில் வலி கண்டு போ என்று எதிர் வந்தான்
தன் வில்லினோடும் தவத்தை எதிர் வாங்கி
முன் வில் வலித்து முது பெண் உயிர் உண்டான்
தன் வில்லின் வன்மையைப் பாடிப் பற
தாசரதி தன்மையைப் பாடிப் பற – 3-9-2- –என்னுடைய வில்லின் வலியை கண்டு போ -என்று
எதிரே வந்த பரசுராமனுடைய –அதாவது –மகேஸ்வர தநுர் பங்கம் பண்ணி –ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளை திருக் கல்யாணம் புணர்ந்து பெரிய செருக்கோடு திரு அயோதியை நோக்கி எழுந்து அருளா நிற்கச் செய்தே – இந்த விசேஷத்தை கேட்டு -குபித ஹ்ருதயனாய்
தன்னுடைய வில்லையும் எடுத்துக் கொண்டு நடு வழியிலே வந்து தோன்ற –ஸ்ரீ சக்கரவர்த்தி எதிரே சென்று பொற் பூக்களையும் காலிலே பொகட்டு அனுவர்த்தித்து –
பாலானாம் மம புத்ரானாம் அபயம் தாது மர்ஹசி -என்று அர்த்தித்த அளவிலும் – அத்தை அதிகிரமித்து தள்ளிக் கொடு போந்து – தன் சீற்றம் எல்லாம் தோற்றும்படி முகத்தை பார்த்து –முன்பே மூரிப் போய் பல இடங்களிலும் பூண் கட்டிக் கிடக்கிறதொரு சொத்தை
வில்லை முறித்தேன் -என்று கர்வோத்தரனாய் வருகிற -நீ –என் கையில் -வில்லை வாங்கி வளைத்தாய் ஆகில் சமத்தன் -என்ற நினைவால் – என் வில் வலி கண்டு போ – என்று தன்னுடைய பூர்வ பராக்ரமங்களையும் – அதுக்கடியான தபஸ்ஸும் கனக்க நினைத்து –
ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் -என்றும் மதியாதே அடர்ந்து வந்த படியை சொல்லுகிறது-தன் வில்லினோடும் தவத்தை எதிர் வாங்கி – ஆனால் தன்னுடைய வில்லை தந்து காண் -என்று வில்லை வாங்குகிற அளவில் – அந்த வில்லோடு கூட அவனுடைய கர்வ ஹேதுவான தபச்சையும் அவன் பார்த்து நிற்கச் செய்தே வாங்கி எதிர் வந்தான் தன் வில் என்று – எதிரே வந்தவனுடைய வில்-என்னுதல்-எதிரே வந்த ஸ்ரீ பரசு ராமன் கையில் இருப்பதாய் -வைஷ்ணமான தனுஸ் ஆகையாலே முன்பே தன்னுடையதாய் இருக்கிற வில் -என்னுதல் –இப்படி இருக்கிற வில்லோடு அவனுடைய தபஸ்ஸை எதிர் வாங்குகையாவது –
அந்த வில்லை வாங்கி – அதிலே சரத்தை தொடுத்து – இத்தை கொண்டு உன் பிராணனை போக்கி விட என்றால்- நீ பிராமணனாய் இரா நின்றாய் – ஆன பின்பு உன்னுடைய கதி பங்கத்தை பண்ணி விடவோ உன்னுடைய தப பலங்களை அழித்து பொகட்டு விடவோ -என்று கேட்ட அளவில்-கதி பங்கம் பண்ணினால் -எனக்கு வாசஸ்தலமான மகேந்தர பர்வதத்தே ஏறப் போகாது – என்னுடைய தப பலத்தை அழித்து விடும் -என்ன- அப்படி செய்து விட்டது –
ஸ்வரூப ஆவேச அவதாரமாய் – தசாவதார மத்யே சஹ படிதனாய் போகிற அப் பரசு ராமன் தான் நிரஸ்தன் ஆனபடி எங்கனே என்னில்-ஸ்வரூப ஆவேசத்தாலும் -சாஷாத் அவதாரம் பிரபலம் ஆகையால் அத் யுத்கடத்வம் உண்டான போது-இதினாலே அது (ஸ்வரூப ஆவேசம் ) நிரஸ்தமாகக் குறை இல்லை-பரசுராமன் எதிர்த்தது ஜீவ ஸ்வா தந்தர்யத்தாலே -உடனே ஆவேசம் நீங்கி வேறு ஜீவன் ஆவானே தபஸ்ஸூ பண்ணி ஆவேசிக்க பிரார்த்தத்து பெட்ரா தபஸ்ஸும் போகுமே – ஸ்வ தந்திரமாய் செயல்பட்டு அனுகூலித்தால் சரி -பிரதிகூலித்தால் முடிவானே -சக்தி ஆவேசத்தில் -ஸ்வரூப ஆவேசம் பிரபலமான வோபாதி
ஸ்வரூப ஆவேசத்தில் சாஷாத் அவதாரம் பிரபலமாகத் தட்டில்லை இறே-சக்தி ஆவேசத்தில் ஸ்வரூப ஆவேசம் பிரபலம் ஆகையாலே இறே சஹச்ர பாஹ்வைர்ஜுனன் பரசு ராமனாலே நிரஸ்தன் ஆய்த்து-(வேத வியாசர் கார்த்த வீர்யார்ஜுனன் போல்வார் சக்தி ஆவேசம்
பரசுராமன் பல ராமன் ஸ்வரூப ஆவேச அவதாரம் )
செவ்வரி நல் சிலை வாங்கி வென்றி கொண்டு வேல் வேந்தர் பகை தடிந்த வீரன் தன்னை-10-3-வெம்மையை உடைத்தாய் தர்ச நீயமான வில்லை வாங்கி இவனை வென்று தான் திருவவதாரம் பண்ணின ஷத்ரிய குலத்துக்கு பகை தீர்ந்த வீரத்தை யுடை
ஒரு நாள் மழு வாளி சிலை வாங்கி அவன் தவத்தை முற்றும் செற்றாய்-9-9-முன் ஒரு காலத்திலே மழுவை ஆயுதமாக உடைய ஸ்ரீ பரசுராமன் கையிலே
ஸ்ரீ சார்ங்கத் திரு வில்லை வாங்கி-அவன் லோகாந்தரங்களை ப்ராபிக்கக் கடவதாக ஆர்ஜித்த தபஸ்ஸை அவ்வம்பாலே அழித்துப் பொகட்டாய்
சீதை வாய் அமுதம் உண்டாய்-2-10-12 ஆண்டுகள் -74 ருதுக்கள் சந்தோஷமாக இருந்தார்கள்-பெருமாளுக்கு 24 திரு நக்ஷத்ரம் -பிராத்திக்கு 12 நக்ஷத்ரம்-
9-கூனியின் சூழ்ச்சி -10-வனம் செல்லுதல்-11-குகனுடன் ஸஹ்யம் -12-பாதுகா பட்டாபிஷேகம் -13-காகாசூரன் சரித்திரம்
9-கூனியின் சூழ்ச்சி -காரணம் வால்மீகி சொல்ல வில்லையே -ஆழ்வார்கள் அருளிச்செயல்களில் உண்டு
கொண்டை கொண்ட கோதை மீது தேனுலாவு கூனி கூன்
உண்டை கொண்டு அரங்கவோட்டி யுண் மகிழ்ந்த நாதனூர்
நண்டை உண்டு நாரை பேர வாளை பாய நீலமே
அண்டை கொண்டு கெண்டை மேயும் அம் தண் நீர் அரங்கமே –49-லீலார்தமாக வில்லிலே உண்டியை வைத்து கூனை உள்ளே புகும்படி ஒட்டித் தெறித்து அவத்யமான அஹங்காரத்தை அநாயேசேநப் போக்க வல்ல சக்தியை நினைக்கிறார்-ஆஸ்ரிதருக்கு அவத்யமான அஹங்காரத்தை அநாயாசேநப் போக்குகையாலே
ஹ்ர்ஷ்டனாய் -அச் செயலாலே என்னை எழுதிக் கொண்ட சக்கரவர்த்தி திருமகன்
வர்த்திக்கிற தேசம் -இத்தால் -ஆஸ்ரிதருடைய அவத்யங்களைப் போக்கி உகப்பானும் தானே என்கை –
மானேய் நோக்கி மடவாளை மார்பில் கொண்ட மாதவா
கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறிந்தாய் கோவிந்தா
வானார் சோதி மணி வண்ணா மதுசூதா நீ யருளாய் உன்
தேனே மலரும் திருப்பாதம் சேருமாறு வினையேனே –1-5-5-ஆஸ்ரிதரை அவத்யம் பாராதே விஷயீ கரித்து பின்னை அவர்களுடைய அவத்யத்தை போக்குமவனே-திர்யக்குகளோடும் பொருந்துமவன் –என்கை அங்கன் இன்றிக்கே பெருமாளுடைய பால்யத்தில் சுண்டு வில்லையிட்டு கூனியுடைய கூன் சிதையும் படி மர்மத்தில் தெறித்த படியைச் சொல்லிற்று ஆகவுமாம்-கோவிந்தா -பூமிக்கு ரஷகன் -என்கை-அப்பஷத்தில் தீம்பு சொல்வது கிருஷ்ணனுக்கு ஆகையாலே பெருமாள் தீம்பை அவன் பக்கலிலே வைத்து கோவிந்தா என்கிறது
கூன் தொழுத்தை சிதகுரைப்ப கொடியவள் வாய் கடிய சொல் கேட்டு
ஈன்று எடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கு ஒழியக்
கான் தொடுத்த நெறி போகி கண்டகரை களைந்தானூர்
தேன் தொடுத்த மலர் சோலை திருவரங்கம் என்பதுவே -4- 8-4 –கூனியாகிற அடியாட்டி ஆனவள் –திரு அபிஷேக மகோத்சவத்துக்கு அழிவான துருக்திகளை சொல்ல –ஜ்ஞாதி தாசியான –தொழுத்தை-இவள் யதார்ச்சிகமாக மாளிகை தளத்தின் மேலே ஏறிப் பார்த்தவாறே –பெருமாளுடைய திரு அபிஷேகத்துக்கு திருப் படை வீடு எல்லாம் கோடித்து கிடக்கிற படியையும் – ப்ருந்தம் ப்ருந்தம் அயோத்யாயாம் -என்கிறபடியே திரள் திரளாக வந்து கிடக்கிற ஜன சம்ருதத்தையும் – மங்கள வாத்திய கோஷங்களையும் கண்டு சஹிக்க மாட்டாதே தளத்தின் நின்றும் இறங்கி வந்து -கைகேயியை பர்த்சித்து -உன் மாற்றாட்டி மகன் அபிஷேகம் செய்ய தேடுகிறான் உன் மகன் அவனுக்கு இனி இழி தொழில் செய்து இருக்கும் அத்தனை இறே இத்தைப் பார்த்து கொண்டு நீ இருக்கிறது ஏது
அவனுடைய அபிஷேகத்தை குலைத்து உன் மகனை அபிஷேகம் பண்ணுவிக்கும்படி
ராஜாவோடே சொல்லு –அதுக்கு உபாயம் – முன்பே உனக்கு தந்து இருப்பது இரண்டு வரம் உண்டே -அவை இரண்டையும் உன் மகனை அபிஷேகம் பண்ணுவிக்கையும் ராமனை காடேற போக விடுகையும் -என்று வேண்டிக் கொள் -சத்ய தர்ம பரரான ராஜாவால் செய்யாது ஒழியப் போகாது காண் -என்று திரு அபிஷேகத்துக்கு விக்நமான துருக்திகளை சொன்னாள் இறே -இப்படி குப்ஜை சொன்ன வார்த்தையாலே கலங்கி பின்பு ராஜா உடனே முன்பு சொன்ன இரண்டு வரமும் எனக்கு இப்போது தர வேணும் -அதாவது –
என் மகனை அபிஷேகம் பண்ணுவிக்கையும் ராமனை பதினாலு சம்வத்சரம் வனவாச அர்த்தமாக போக விடுகையும் -என்ன –இத்தை கேட்டு ராஜா அதுக்கு இசையாமை தோற்ற இருக்க –அறுபதினாயிரம் சம்வத்சரம் சத்ய தர்மத்தை தப்பாமல் நடத்தி போந்தவன்
இப்போது சத்தியத்தை அதிகிரமிக்கிறான் சகல தேவதைகளுக்கும் இத்தை – அறிவியுங்கோள்-என்று இவள் கூப்பிட்ட வாறே –அவன் -செயல் அற்றுப் போய் – செய்வதற்கு அனுமதி பண்ண -அவ்வளவிலே அவள் சுமந்த்ரனை போக விட்டு பெருமாளை அழைத்து விட-அவர் எழுந்து அருளி வந்து -சக்கரவர்த்தி கலங்கிக் கிடக்கிற படியை கண்டு
இதுக்கு அடி என் -என்று இவளைக் கேட்க –இச் செய்திகளை எல்லாம் சொல்லி –
உம்மை காடேற போக விடுவதாக அழைத்து விட்டார் -உம்மை கண்ட வாறே சொல்ல மாட்டாமல் கிடக்கிறார் இத்தனை –உங்கள் ஐயர் சத்ய தர்மத்தை நோக்கவும்
நீர் அவருக்கு பிரியம் செய்யவும் வேண்டி இருந்தீர் ஆகில் -அவர் நினைவு நான் சொல்லுகிறேன் – நீர் கடுகக் காடேறிப் போம் -என்று சொன்ன கொடுமையை உடையளான கைகேயி வாயில் இந்த வெட்டிய சொல்லை கேட்டு -ஏக புத்ரையான நான் உம்மை பிரிந்து இருக்க மாட்டேன் -கூடப் போரும் இத்தனை – என்று பின் தொடர்ந்த பெற்ற தாயாரான கௌசல்யை யாரையும் ஸ்தாவரங்களோடு ஜங்கமங்களோடு வாசி அற தன் குணங்களில் ஈடுபட்டு பிரியில் தரிக்க மாட்டாத படி இருக்கிற இராச்சியத்தையும் கை விட்டு -காட்டோடு காடு தொடுத்து கிடக்கிற வழியிலே –நெய்வாய வேல் நெடும் கண் நேர் இழையும் இளம் கோவும் பின்பு போக –என்கிற படியே பிராட்டியும் இளைய பெருமாளும் பின்னே சேவித்து கொண்டு வர ஸ்ரீ தண்ட காரண்யத்தில் எழுந்து அருளி
பாராளும் படர் செல்வம் பரத நம்பிக்கே அருளி
ஆரா அன்பில் இளையவனோடு அரும் கானம் அடைந்தவனே
சீராளும் வரை மார்பா ! திரு கண்ண புரத்தரசே !
தாராளும் நீண் முடி என் தாசரதீ ! தாலேலோ—– 8-5–பூமிப் பரப்படைய ஆளக் கடவதான பெரிய சம்பத்தை –பாரதந்த்ர்ய குணங்களாலே பூர்ணனாய் இருக்கிற ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு அருளி -அவனைப் போலவே நியமித்த இடத்திலே பிரிந்து இருக்க மாட்டாதே –குருஷ்வ மாம் -என்னும் ஸ்ரீ இளைய பெருமாளோடு கூடி ஒருவராலும் இயங்க ஒண்ணாத துஷ்ட சத்வ பிரசுரமான காட்டிலே பிரவேசித்தவனே-தொத்தலர் பூம் சுரி குழல் கைகேசி சொல்லால் தொன் நகரம் துறந்து-10-4-ஸ்ரீ சக்கரவர்த்தி வாய் திறக்க மாட்டாதே இருக்க -பிள்ளாய் -உங்கள் ஐயர் உன்னைக் காடேறப் போகச் சொல்லா நின்றார் – என்று கைகேயி சொன்ன வார்த்தையாலே –மந்தரை உடைய வசனத்தை கொண்டு –ந மந்த்ர்யாயா ந ச மாதுரச்யா தோஷோ தோஷோ நு ராஜ்ஜா -என்கிறபடியே – வன ப்ரேவேச ஹேதுக்கள் சொல்லுகிற இடத்தில் முந்துற எடுத்தது இவளை இறே-
கொங்கை வன் கூனி சொல் கொண்டு குவலயத்
துங்க கரியும் பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற்கு அருளி வான் கானடை–அம் கண்ணன்--2-1-8-கைகேயி வர அனுகுணமாக சக்ரவர்த்தி வசனத்தின் படியே ஸ்ரீ பரதாழ்வானுக்கு கொடுத்து –ஒருவரால் ப்ரேவேசிக்க அரிதான -வலிய காட்டை அடைந்த-அழகிய சுலபனானவன் -கட்டின காப்போடே காடேறப் போக சொன்ன இடத்தில் முகத்தில் கருகுதல் இன்றிக்கே -முடியை தவிர்ந்து ஜடையை புனைந்து நாட்டை விட்டு காடேறப் போன படியை நினைத்து – அழகிய சுலபன் -என்கிறது –ராம கமல பத்ராஷா-என்கிறபடி-அழகிய திருக் கண்களை உடையவன் -என்னவுமாம் –
அப்போது-ராஜ்ய ஐஸ்வர்யத்தை விட்டு காட்டுக்கு போந்தோம் -என்ற க்லேசம் இன்றிக்கே –
அக வாயில் ஹர்ஷம் திருக் கண்களில் தோன்றும் படியாக போன படியை சொல்கிறது –அப்போது அலர்ந்த செந்தாமரையை வென்றதம்மா- ராஜ்ய நாசம் இருள் வளர வளர ராமசந்திரன் ஒளி விஞ்சி இருந்ததே
வனவாசம் –தம்பியொடு தாமொருவர் தன் துணைவி காதல் துணையாக முன நாள்
வெம்பி யெரி கானக முலாவுமவர்-5-10-6-சௌகுமார்யத்துக்கு அத்விதீயரான
தம்பியோடு கூட- தம்பியொடு-இவர் முன்னாலே தயாராக நிற்க–பிராட்டியோடு கூடப் போகை-நில வெம்மை தோற்றிற்று இல்லை யாய்த்து -அவற்றின் மேலே-பஞ்சடியால் -பூவிலே அடியிடிலும் கொப்பளிக்கும் படியான திருவடிகளாலே –மன்னன் இராமன் பின்-அந்நிலை வெம்மைக்கு நீரும் நிழலும் இருக்கிறபடி ––இவர் முன்னாலே தயாராக நிற்கஉன் பிரிவினும் சுடுமோ வன் காடு -ஸ்வர்க்கம் என்ன நரகம் என்ன-
மாற்றுத் தாய் சென்று வனம் போகே என்றிட
ஈற்றுத் தாய் பின் தொடர்ந்து எம்பிரான் என்று அழ
கூற்றுத் தாய் சொல்ல கொடிய வனம் போன
சீற்றம் இலாதானைப் பாடிப் பற
சீதை மணாளனைப் பாடிப் பற -3- 9-4 –மாற்றுத் தாய் -என்றது மற்றைத் தாய்-ஸ்ரீ கௌசலையரோபாதி -ஸ்ரீ பெருமாள் பக்கலிலே அதி ச்நேஹிதையாய் இறே ஸ்ரீ சுமித்ரையார் இருப்பது இப்படி இருக்கிற தாயார் ஆனவள் சென்று (ராமன் அருகில் சென்று )-நீர் வனத்திலே போம் -என்று சொல்ல –ஸ்ர்ஷ்டஸ்த்வம் வன வாசாய ஸ்வ துரக்தச் ஸூஹர்ஜ் ஜன ராமே பிரமாதம் மகார்ஷி புத்ர ப்ராதரி கச்சதி -என்றும்-ராமம் தசரதம் வித்தி மாம் வித்தி ஜனகாத்மஜாம் அயோத்யாமடவிம் வித்தி கச்ச தாதா சுகம் -என்றும் சொல்லி இவரை ஒருப்படுத்தி-பெருமாளுடைய ஸௌகுமாரத்தையும்-போகிற இடத்தில் உண்டான கொடுமையையும் பாராமல்–பதினாலு சம்வத்சரம் வனவாசம் பண்ண சொன்ன க்ரௌர்யத்தை பற்ற -இவளைக் கூற்றுத் தாய் -என்கிறது–ஆசை உள்ளம்-எல்லாம் தனக்கேயாக -கூற்றுத்தாய் –அன்பு உள்ளம் -தனக்கும் பிறருக்கும்-கௌசல்யா தேவி –அருள் உள்ளம் – பிறருக்காகவே–சுமத்ரா தேவி -மூன்றையும் உணர்த்தியபடி-சீற்றம் இலாதனை –
கட்டின காப்போடே காட்டிலே தள்ளி விட்டாள் – என்னும் சீற்றம் ஏக தேசமும் திரு உள்ளத்தில் இல்லாதவனை-மாச லஷ்மண சந்தாபம் கார்ஷிர் லஷம்யா விபர்ய யே-ராஜ்ஜியம் வா வனவாசோ வா வனவாசோ மகோதய (அயோத்யா -22)-என்று சந்தோஷத்தோடே இறே எழுந்து அருளிற்று
சுற்றம் எல்லாம் பின் தொடர தொல் கானம் அடைந்தவனே!--8-6–எல்லாரும் போனார்களோ -சிறிதிடம் போய் மீண்டது என்று அன்றோ சொல்லிற்றாய்த்து –-அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று சொன்ன எல்லா அடிமையும் செய்யும் ஸ்ரீ இளைய பெருமாள் கூடப் போகையாலே-எல்லா பந்துக்களும் கூடப் போனார்கள் யாய்த்து இறே -என்று ஸ்ரீ எம்பெருமானார் அருளிச் செய்து அருளினார்-தன் விந்தை தந்த தந்தையாகவும் தாங்குபவளான தாயாவும் ஆக்குபவள் அக்கா போலவும் பேரை உடையவ பேரனைப்போலவும் தமது பின் பிறந்தவ தம்பி போலவும் -அன்பு அறிவு அக்கறை பாசம் வழிமுறை அனைத்தையுமே காட்டி பணிவிடையும் செய்து-
உன்னை பயந்த கைகேசி தன் சொல் கேட்டு நன்றாக நானிலத்தை ஆள்வித்தேன்
நன் மகனே! உன்னை நானே—- 9-1–நெய் வாய வேல் நெடும் கண் நேர் இழையும்
இளம் கோவும் பின்பு போக எவ்வாறு நடந்தனை? எம்மி ராமாவோ! எம்பெருமான்! என் செய்கேனே ?– 9-2–இன்று இனி போய் வியன் கான மரத்தின் நீழல் கல்லணை மேல் கண் துயில கற்றனையோ? காகுத்தா! கரிய கோவே! —–9-3–மனம் உருக்கும் மகனே! இன்று நீ போக என் நெஞ்சம் இரு பிளவாய்ப் போகாதே நிற்க்குமாறே! —9-4–கேகயர் கோன் மகளாய் பெற்ற அரும் பாவி சொல் கேட்ட அரு வினையேன் என் செய்கேன்? அந்தோ! யானே— 9-5–கமலம் போல் முகமும் காணாது எம்மானை என் மகனை இழந்திட்ட இழி தகையேன் இருகின்றேனே– 9-6–வனம் தான் சேர்த்தல் தூ மறையீர்! இது தகவோ? சுமந்திரனே!
வசிட்டனே! சொல்லீர் நீரே –9-7-என்னையும் நீள் வானில் போக்க என் பெற்றாய்? கைகேசி! இரு நிலத்தில் இனிதாக இருக்கின்றாயே– 9-8-என்னையும் என் மெய் உரையும் மெய்யாக
கொண்டு வனம் புக்க எந்தாய்! நின்னையே மகனாய் பெற பெறுவேன் ஏழ் பிறப்பும் (எழுகின்ற பிறவிகளில் தோறும் -அவதரிக்கும் போதும்)நெடும் தோள் வேந்தே —9-9-நானும் வானகமே மிக விரும்பி போகின்றேன் மனு குலத்தார் தங்கள் கோவே! —9-10–ஏரார்ந்த கரு நெடுமால் ராமனாய் வனம் புக்க வதனுக்கு ஆற்றா தாரர்ந்த தடவரை தோள் தயரதன் தான் புலம்பிய அப் புலம்பல்-9-11--பிரதிகிரியை அல்லாத செயலைச் செய்த என்னால் செய்யலாம் பரிஹாரம் இல்லை –இப்படித் தண்ணிய செயலை செய்தக்கால் முடியவும் ஆகாதே இருக்கவும் வேணுமோ நான் –- பிராமணரே -நீங்கள் இது சொல்லி கோள்-இது தர்மமோ-ராஜ தர்மங்களை உபதேசித்துப் போருகிற ஸ்ரீ வசிஷ்ட பகவானே சொல்லாய் –அம்மா என்று அழைக்கும் ஆர்வ சொல்-தந்தையும் அம்மா என்றும் அளிக்கும் பெருமாளைப் பிரிந்து–என்னுயிர் பிரிந்து போவதை நானே பார்க்கும் பாவி-நீ இல்லாத நகரி இறே -அத்தாலே ஸ்வர்க்கமே யாகிலும் நீ இல்லாத ஊரை விட்டுப் போகின்றேன்-கர்மவஸ்யரும் போகத் தகாத காட்டில் புக்கான் -என்றதுக்கு ஆற்ற மாட்டாதே-ஸ்ரீ சக்கரவர்த்தி பிரலாபித்த பாசுரம்-
குக ஸஹ்யம்–ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்று அவர்க்கு இன்னருள் சுரந்து-5-8-1–ஏழை-விஷய சாபல்யம் -அஞ்ஞான கார்யம் இறே – அஞ்ஞானம் தான் -ஜ்ஞான அநுதயம்-அந்யதா ஜ்ஞானம் – விபரீத ஜ்ஞானம் – என்று த்ரி பிரகாரமாய் இறே இருப்பது –
ஜ்ஞானம் பிறந்தவாறே ஜ்ஞான அநுதயம் போம் –-யதா ஜ்ஞானத்தாலே அந்யதா ஜ்ஞானம் போம் – விஷய ப்ராவண்ய ரூபமான விபரீத ஜ்ஞானம் இறே போக்க வரிது
தர்மஞ்ஞ -யசஸ் வீ -ஜ்ஞான சம்பன்ன -என்கிற தேவர்க்கு எதிர் தட்டாய் இருக்கிறபடி –இத்தால் ஜ்ஞான கொத்தையைச் சொல்லிற்று –-ஏதலன் –சத்ரு-தாயைச் சோறு வேண்டும் போது வாளை விதிர்த்த வேண்டும்படியான சாத்ரவத்தை சொல்லுகிறது –-ரிபூணாம் அபி வத்சல-என்கிறதுக்கு எதர் தட்டாய் இருக்கிறபடி-இத்தால் வ்ருத்தத்தில் கொத்தை சொல்லுகிறது–கீழ் மகன் -இவை இத்தனையும் பூஷணமாம் படியான ஜென்மத்தை உடையவன்-கீழ்ச் சொன்னவை இரண்டும் ஜ்ஞான சாத்யமாயும் பிராயச்சித்த சாத்யமாயும் இருக்கும் இறே – இது வேறு ஒன்றால் கழிக்க ஒண்ணாதே-இஷ்வாகு வம்ச பிரபவ -என்கிறவர்க்கு எதிர் தட்டாய் இருக்கும் படி – இத்தால் ஜன்மத்தின் கொத்தை சொல்லுகிறது –என்னாது இரங்கி-இப் பாசுரம் சொல்லாது இருக்க -இரங்கி –இவர் இரக்கமே உபாயம்–இவ் விஷயீ காரத்துக்கு மேலே-இனிய அருளைச் சுரந்து-இன்னருள் –-தன் பேறான அருள்-சுரந்து – வத்ச சகாசத்தில் தேனு வானது ஷீரத்தை சுரக்குமா போலே
குணங்களைச் சுரந்து –குஹே ந சஹிதோ ராமோ லஷ்மணனேன ச சீதயா-என்று
ஸ்ரீ வால்மீகி பகவான் சொல்லி வைத்தான் இறே –யுன் தோழி –உனக்கு ஸ்வாமிநி- என்னாதே தோழி என்கிறார் -நீர்மையாலே-உம்பி யெம்பி –உன்னுடைய தம்பி என்னுடைய தம்பி –-பெருமாள் விஷயீ கரித்து இருக்குமவர்களை அவரோபாதியாக நினைத்து இருக்கும் இளைய பெருமாள் கருத்தாலே-பிராட்டியை தோழி என்றும் -இளைய பெருமாளை தம்பி என்றும் சொன்ன போதே-ஆர்த்தமாக வரும் இறே தம்முடைய தோழமை –தோழன் நீ எனக்கு –ஸ்வ நிகர்ஷத்தைச் சொல்லி-புருஷகாரத்தை முன்னிட்டு-ஸ்ரீ வைஷ்ணவ அங்கீகாரம் உண்டானால் அநந்தரம் உபாய ஸ்வரூபம் அனுசந்தேயமாகக் கடவது இறே அத்தைச் சொல்லுகிறது –
தொன் நகரம் துறந்து துறை கங்கை தன்னை பத்தி உடை குகன் கடத்த வனம் போய் புக்கு
பரதனுக்கு பாதுகமும் அரசும் ஈந்து சித்ர கூடத்து இருந்தான் தன்னை இன்று-10-4-தம்பிமாரைக் காட்டில் ஸ்நேஹத்தை உடையனாய் -பிரியில் தரியாத படி ஸ்ரீ பெருமாள் நியமிக்கையாலே நின்றவனுமாய் ஸ்ரீ பரத ஆழ்வானையும் கூட அசிர்க்கும் படியான ஸ்ரீ குஹப் பெருமான் கங்கையைக் கடத்த-மனுஷ்ய சஞ்சாரம் இன்றியே துஷ்ட ம்ருஹங்களேயான காட்டிலே போய்ப் புக்கு –பெருமாள் திருவடியையே அலம்பி படகில் ஏறச்சொல்ல –துகள் பட்டு கல் பெண்னானதே -அதனால் -படகோட்டி -இருவரும் –வைகுந்தன் என்னும் தோணி -அன்றோ ஸஜாதீயர்
ஸ்ரீ சித்ரகூடத்திலே எழுந்தி அருளி இருக்கிற இருப்பு தான் பெறாதே பிற்பட்டார்க்கும் இழவு தீர சர்வ காலத்திலும் அனுபவிக்கைக்காக திருச் சித்ரகூடத்திலே வர்த்திக்கிறவனை-இவனைக் காணப் பெறாதே விடாய்த்த கண் குளிரும்படி –-காணப் பெற்ற–கேட்டே போகை அன்றிக்கே கண்டு அனுபவிக்கப் பெற்ற–
பாதுகா பட்டாபிஷேகம் -சேனை எழ-அனைவருடன் – பரதன் செல்ல கைகேயி மனமும் மாறி உடன் செல்ல-கைகேயி அப்பா அஸ்வபதிக்கு வாக்கு -பேரனுக்கு பட்டாபிஷேகம் -சுமந்திரன் சொல்ல பின்பே பெருமாள் இத்தை அறிந்தார்
முடி ஒன்றி மூ உலகங்களும் ஆண்டு உன்
அடியேற்கு அருள் என்று அவன் பின் தொடர்ந்த
படியில் குணத்து பரத நம்பிக்கு அன்று
அடி நிலை ஈர்ந்தானைப் பாடிப் பற
அயோத்தியர் கோமானைப் பாடிப் பற -3- 9-6 –நாம் எல்லோரும் கூடப் போய் பெருமாள் திருவடிகளிலே விழுந்து –அவரை மீட்டுக் கொண்டு வந்து திரு அபிஷேகம் பண்ணுவிப்போம் வாரும் கோள் -என்று எல்லோரையும் கூடக் கொண்டு –படியில் குணத்து பரத நம்பிக்கு –1-இக் குடியில் (இஷ்வாகு குடியில் ) மூத்தார் இருக்க இளையார் முடி சூடி அறிவார் இல்லை -என்று குல மரியாதையை நோக்குகையாலும் (நடுவில் பிள்ளை புகழும் ஆக்கமும் ஆக்கி -நாயனார் )-2-ஸ்வா தந்த்ர்ய பீதியாலே முடி சூட வெருவி -தன் ஸ்வரூபத்தை நோக்குகையாலும்-3-ஆர்த்தியோடே திரு வடிகளிலே வந்து விழுந்து -மீண்டு எழுந்து அருளி திரு அபிஷேகம் பண்ணி அருள வேணும் -என்று அர்த்திக்கையாலும் ஒப்பிலாத குணத்தை உடையனான ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு
(படி-ஒப்பு –ஓர் ஆயிரம் ராமர் நின் கேழ் ஆவரோ தெரியல அம்மா -கம்பர் )
அன்று அடி நிலை ஈந்தானை – அவன் ஆர்த்தனாய் நிற்கிற அக் காலத்திலே –
நீ சொல்ல நாம் இப்போது மீண்டோம் ஆகில் – நாம் ஐயர் சொன்னது செய்யாமல் ராஜ்ய ஸ்ரத்தையாலே மீண்டோம் ஆவோம் -நீ நம்மை மீட்டுக் கொண்டு போனாய் ஆகில் –
ஸ்ரீ பரத ஆழ்வான் இரண்டும் செய்ய வல்லனாய் இருந்தான் –-1-முன்பு கீழ் ஓலை வைத்து தாயை கொண்டு ராஜ்யத்தை வாங்கி தமையனை காடேறப் போக விட்டான் –
-2- இப்போது லோக அபவாதம் முதிர்ந்தவாறே பின் தொடர்ந்து சென்று கண்ணை பிசைந்து
காலிலே விழுந்து மீட்டுக் கொண்டு வந்தான் – என்னும் அவத்யமும் உனக்கு வரும்-ஆன பின்பு உன்னை ஸ்வ தந்த்ரனாக்கி வார்த்தை சொன்னார் முன்னே – உன் ஸ்வரூப அனுரூபமான பார தந்த்ர்யத்தை நீ பெற்று போ -என்று அவன் நிர்ப்பந்தியாதபடி வார்த்தை சொல்லி இசைவித்து-மரவடியை தம்பிக்கு வான் பணையம் வைத்து -என்கிற படியே
1-அவன் ஸ்வ தந்த்ர்ய பயம் எல்லாம் போம் படியாகவும்-2-மீண்டு எழுந்து அருளுவர் -என்னும் அதுக்கு விசுவாசமாகவும் திருவடி நிலைகளைக் கொடுத்து-அடி சூடும் அரசாக்கி விட்டவனைப் பாடிப் பற அயோத்தியர் கோமானைப் பாடிப் பற-ஸ்ரீ பரத ஆழ்வான் முடி சூடாமல் -அடி சூடிப் போகையாலே திரு அயோத்தியில் உள்ளவர்களுக்கு தானே நிர்வாஹனாய் ஆனவனைப் பாடிப் பற -என்று எதிரியைப் பார்த்து சொல்லுகிறாள்-மரவடியை தம்பிக்கு வான் பணயம் வைத்து போய் வானோர் வாழ-4-9-1-பணயம் ஆவது –
விஸ்வாச ஹேதுவாய் உள்ளது-வான் பணையம் -என்கையாலே-மகா விஸ்வாச ஹேதுவாய் உள்ளது என்னும் இடம் தோற்றுகிறது-வான் -என்று-வலியதால் –-பெருமை யாதல்
பாதாவநி ப்ரபவத: ஜகதாம் த்ரயாணம்
ராமாதபி த்வமதிகா நியதம் ப்ரபாவாத்
நோ சேத் கதந்நு பரதஸ்ய தம் ஏவ லிப்ஸோ:
பரத்யாயநம் பரிபணம் பவதீ பவித்ரீ—-108-ஸ்ரீ பாதுகையே -பெருமாள் உன்னை அடகு வைத்து தன்னை மீட்டுக் கொண்டார் –உன் மதிப்பு பெருமாளை விடவும் மூ உலகங்களிலும் உயர்ந்ததாக இருந்ததால் தானே உன்னை அடகுப் பொருளாக ஏற்றுக் கொண்டார்-ராமராஜ்யம் விட சிறந்த ராஜ்ஜியம் -நம்மாழ்வார் –அவியின்றி யான் பெரியன் -நீ பெரியவர் என்பதை யார் அறிவர்-பாதுகாப்பூ -பாதுகையில் பூ
காகாசூரன் வ்ருத்தாந்தம் –பிராட்டி தொடையில் தலை வைத்து சயனம் –பொன் திகள் சித்திர கூடப் பொருப்பினில்
உற்ற வடிவில் ஒரு கண்ணும் கொண்ட அக்
கற்றைக் குழலன் கடியன் விரைந்து உன்னை
மற்றைக் கண் கொள்ளாமே கோல் கொண்டு வா
மணி வண்ணன் நம்பிக்கு ஓர் கோல் கொண்டு வா -2 6-7 –பிராட்டியும் தாமும் கூட ஜலக்ரீடை பண்ணின பின்பு பெருமாள் மடியிலே முந்துற பிராட்டி கண் வளர்ந்து அநந்தரம்-
பார்யாயேன ப்ரசூப்த -என்கிறபடியே – பிராட்டி மடியில் பெருமாள் கண் வளர்ந்து அருளா நிற்கச் செய்தே – இந்திர புத்ரனான ஜெயந்தன் – ஆசூர பிரகிருதி ஆகையாலே -தேவ ரூபத்தை மறைத்து காக ரூபத்தை பரிகிரஹித்து கொண்டு ஜனனி-என்று அறியாதே -பிராட்டி உடைய வடிவு அழகை கண்டு -விபரீத புத்தியாலே வந்து திருமேனியிலே புண் படுத்த –அத்தாலே பெருமாள் சீறி அருளி -காகத்தை குறித்து ப்ரஹ்மாஸ்த்ரத்தை பிரயோகிக்க -அது புக்க இடம் எங்கும் தொடருகையாலே – ஓர் இடத்திலும் போக்கற்று -தமேவ சரணம் கத -என்கிறபடியே தன்னுடைய பிராண ரஷணம் அர்த்தமாக வந்து சரணம் புக – அத்தாலே ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கு ஒரு கண் அழிவை கற்ப்பித்து பிராணனோடு போக விட்ட கதையைச் சொல்லுகிறது-விபரீத புத்தி அடியாக பிராட்டி உடைய வடிவிலே சென்று உற்ற இரண்டு கண்ணில் ஒரு கண்ணைப் பறித்து விட்டவன்-அக் கற்றை குழலன் கடியன் –
அப்படிப்பட்ட ஸ்வாபவனாய்-செறிந்த திருக் குழலை உடையனாய் இருக்கிறவன்- குற்றத்துக்கு ஈடாக தண்டிக்கும் க்ரூரன்-இவள் சந்நிதியாலே காகம் தலை பெற்றது அது இல்லாமையால் ராவணன் மாண்டான்-ஒரு கண் கொண்டே இருபக்கமும் பார்க்கும் திறனையும் கொடுத்து அருளினவன் -கா ககா எவன் எவள் -எவனுக்கு ராமன் போல் கருணை உள்ளது எவனுக்கு சீதா போல் கருணை உள்ளது -ஆகவே காகா கத்துகிறது –
முனிவர் தவம் செய்து இருக்கும் இடம் சித்ரகூடம் -அயோத்யா மக்கள் அறிந்த இடம் -தண்டகாரண்யம் சென்றால் தானே அசுரர்களை முடிக்க முடியும் -போகும் வழியில் அத்ரி அநஸூயை ஆஸ்ரமம் -ரிஷி பத்னி பிரசாதம் -பெற்றார்கள்
மேல் ஏழு நிகழ்வுகள் பார்ப்போம் – அகஸ்தியர் இடமும் விஷ்ணு தனுஸ் வாங்கியது -சூர்ப்பணகை அங்க பங்கம் -கர தூஷண வதம் -மாரீச வதம் -பிராட்டி பிரிவு -ஜடாயு மோக்ஷம் -சுக்ரீவ பட்டாபிஷேகம்
போர் வேந்தன் ——46
தன்னுடைய தாதை பணியாலர சொழிந்து
பொன்னகரம் பின்னே புலம்ப வலம் கொண்டு ——-47
மன்னும் வள நாடு கை விட்டு மாதிரங்கள்
மின்னுருவில் வெண் தேர் திரிந்து வெளிப்பட்டுக் ——48
கன்னிரைந்து தீய்ந்து கழை யுடைந்து கால் சுழன்று
பின்னும் திரை வயிற்ருப் பேயே திரிந்து உலாவக்———-49
கொன்னவிலும் வெங்கானத்தூடு கொடும் கதிரோன்
துன்னு வெயில் வறுத்த வெம் பரல் மேல் பஞ்சடியால் —–50
மன்னன் இராமன் பின் வைதேவி என்றுரைக்கும்
அன்ன நடைய வணங்கு நடந்திலளே——செல்வம் மிகுந்த நாட்டை உபக்ஷித்துவிட்டு-திக்குகள்தோறும் மின் போன்ற கானலே பரவி யிருக்கப் பெற்றதும்.-எல்லாம் சூந்ய ஸ்தலமாகவுமிருக்கப் பெற்றதும்-கல்லுகள் நிறைந்து (புல்லுகள்) தீஞ்சு மூங்கில்கள் வெடித்து சுழல்காற்று அடித்துக்கொண்டிருக்கப் பெற்றதும்–அதற்குமேலும்-ஆஹாரமில்லாமையால்) மடிந்த வயிற்றேயுடைய பேய்களே திரிந்து கொண்டிருக்கப் பெற்றதும்-கொலையைப் பற்றின சப்தமே கிளம்பிக்கொண்டிருக்கப்பெற்றதுமான-வெவ்விய காட்டினுள்ளே-உஷ்ண கிரணனான ஸூர்யனுடைய வெய்யிலாலே வறுக்கப்பட்ட வெவ்விய பருக்கைக் கற்களின் மேலே (எழுந்தருளின வளவிலே)வைதேஹீ என்று சொல்லப்பட்டவளாய்-அந்த ஸ்ரீராம மஹாராஜன் பின்னே-பஞ்சுபோல் மெல்லிய திருவடிகளாலே-தானும் நடந்து செல்லவில்லையா?
பைம் கண் விறல் செம் முகத்து வாலி மாளப் படர் வனத்துக் கவந்தனொடும் படையார் திண் கை செங்கண் விறல் விராதன் உக வில் குனித்த விண்ணவர் கோன் தாள் அணைகிற்பீர் -3-4-6-ஜாதி பிரயுக்தமான கண்ணில் பசுமையையும் மிடுக்கையும் சீற்றத்தாலே சிவந்த முகத்தையும் உடைய வாலி முடியும்படியாக-பரந்த காட்டிலே உண்டான சத்வங்களை அடைய
இரண்டு கையாலும் வாரி பஷித்துக் கொண்டு வருகிற கபந்தனோடு கூட-படையார் திண் கை –-திண்ணிய படையார்ந்த கை-வெவ்விய கண்களையும் மிடுக்கையும் உடைய விராதன் முடியும்படியாக வில்லை வளைத்த(ராகவ் ராம லஷ்மன் இருவரும் -கட்கம் கொண்டு விராதனை முடித்ததாக ஸ்லோகம் வில் என்றது உப லக்ஷணம் )விராதன் மூவர் நடப்பதைப் பார்த்து —அவனை முடித்தது மேல் பலர் மாளாப் போவதற்கு முன் நோட்டம்
கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய்
சிலையும் கணையும் துணையாகச் சென்றான் வென்றிச் செருக்களத்து
மலை கொண்டலை நீரணை கட்டி மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர்
தலைவன் தலை பத்து அறுத்து உகந்தான் சாளக்ராமம் அடை நெஞ்சே —1-5-1-கலை முதலாக –வர்த்திக்கக் கடவதான காட்டைக் கடந்து போய்--மாய மானாக வருவான் இங்கு—தே வநே ந வநம் கத்வா -என்கிறபடியே படை வீட்டில் நின்றும் காட்டிலே புகுகை அன்றிக்கே
காட்டில் நின்றும் ஆயிற்று காட்டிலே வந்து புகுந்தது- (கைகேயி நாட்டில் இருந்து காட்டுக்கு செல்ல ஆணை– இவர் காட்டில் இருந்து காட்டுக்கு -)அப்படியே இங்கும் துஷ்ட சத்வ பிரசுரமான காட்டை கழிந்து பின்னை யுத்த பூமியிலே யாயிற்று வந்து புகுந்தது
கலைகளையும் ஆனைகளையும் குதிரைகளையும் உடைத்தாய் இருக்கிற காட்டைக் கடந்து போய் வென்றிச் செருக் களத்திலே வந்து புகுந்தான்
நெய் வாய வேல் நெடும் கண் நேர் இழையும் இளம் கோவும் பின்பு போக
எவ்வாறு நடந்தனை? எம்மி ராமாவோ! எம்பெருமான்! என் செய்கேனே ?– 9-2–இந்த தேசத்துக்கு போலியான தேசத்திலே போய்ப் புகாதே வனமே மேவி-நீர் போய்ப் புக்காலும் புகுகைக்கு தகாதவர்களை கூடக் கொண்டு-கால் நடை நடந்து அறியாத நீர் இவர்களையும் கூடக் கொண்டு பொல்லாத காட்டிலே போனீர் –என்னாயனே நான் என் செய்கேன் –நேர் இழையும்-சக்ரவர்த்தி நிர்பந்திக்க–ஆபரணங்கள் அணிந்தே சீதாபிராட்டி செல்கிறாள்-அத்ரி கொடுத்ததையும் அணிந்தே போகிறாள்- -பின்பு வானர முதலிகளை இவை கொண்டே கடாக்ஷிக்க வேண்டுமே–அக்ரே ராம மத்யே ஸீதா ஸூ மத்யமா ஹா-பெருமாள்-பிராட்டி -இளைய பெருமாள் மூவரும்–பிரணவமே நடந்து செல்வதைப் போல் நடந்தார்கள்
வலி வணக்கு வரை நெடும் தோள் விராதை கொன்று வண் தமிழ் மா முனி கொடுத்த வரி வில் வாங்கி கலை வணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கி கரனோடு தூடணன் தன் உயிர் ரை வாங்கி சிலை வணக்கி மான் மறிய வெய்தான் தன்னை-10-5-எதிரிகள் வலியைத் தோற்பிக்கக் கடவதாய்-மலை போலே திண்ணியதான தோள்களையும் உடைய
விராதனைக் கொன்று-ஸ்ரீ அகஸ்த்யன் கொடுத்த தர்ச நீயமான வில்லை வாங்கி-(10 வர்ஷம் வனவாசம் பின்பே அகஸ்தியர் இடமும் இருந்து சிலை வாங்கினார்)கலை நோக்கைத் தோற்பிக்கும் படியான நோக்கை உடைய ஸூர்ப்பணகி யுடைய மூக்கை வாங்கி-இவளுடைய ரூப வைரூப்யம் கண்டு பொறுக்க மாட்டாத வந்த கர தூஷணர்களை ப்ராணன்களை ஹரித்து-அது கேட்டுப் பொறாதே-ராவணனாலே ப்ரேரிதனாய் வந்த மாரீசனான மாயா ம்ருகத்ததை எய்து கொன்றவனை-
அகஸ்திய பாஷா -தமிழ் -வண் -அனைவரும் புரியும்படியாக வள்ளல் தன்மை கொண்டது- வரி சில் -சிறந்த அழகிய -மா முனி வடிவத்தில் சிறியவர் கீர்த்தி பெரியவர் -கீழே -பரசுராமர் இடம் -வாங்கி -வில்லுடன் போகாமல் -வருண தேவன் வாங்கி அகஸ்தியர் இடம் கொடுத்து பின்பு வாங்கிக் கொண்டார் -ஆச்சார்யர் இடம் வாங்கிக் கொண்டது போல் -நாசிக் -பஞ்சவடி -ஐந்து ஆலமரம் சூழ்ந்த இடம் –மூன்று வருஷங்கள் இங்கு இருந்தார்கள்
சூர்ப்பணகை அங்க பங்கம் -இவள் கணவன் வித்யுஜ்ம்ன ராவணன் முன்பே கொன்றான்
மீதோடி வாள் எயிறு மின்னிலக முன் விலகும் உருவினாளைக்
காதோடு கொடி மூக்கு அன்று உடன் அறுத்த கைத் தலத்தா என்று நின்று
தாதோடு வண்டலம்பும் தண் சேறை எம்பெருமான் தாளை ஏத்திப்
போதொடு புனல் தூவும் புண்ணியரே விண்ணவரில் பொலிகின்றாரே –7-4-3-மேல் எங்கும் பரந்து ஒளியை உடைத்தாய் இருக்கிற எயிறானது ஒளி விட –மின் போலே விளங்க –மின்னின் எதிர் விழிக்க ஒண்ணாதாப் போலே மேலே பரந்து ஒளியை உடைய எயிறானது
மின் போலே விளங்க –துணுக் என்ன வேண்டும்படியான வடிவை உடையவளை –மேலே பரந்து ஒளியை உடைய எயிறானது மின் போலே விளங்க –முன்னே சஞ்சரிக்கிற வடிவை உடையவள் -என்றுமாம் –பிராட்டியோடு போலியாகப் பண்ணிக் கொடு வந்த-( பேணிக் கொண்டு வந்த )அவயவங்களைப் போக்கின திருக் கைகளை உடையவனே-ராமஸ்ய தஷிணோ பாஹூ பாஹ்ய பிராணன் (இளைய பெருமாள் )-என்னக் கடவது இறே –
(கொல்லை அரக்கியை மூக்கு அறுத்து விட்ட குமாரனார் )
தென்னிலங்கை யாட்டி யரக்கர் குலப்பாவை
மன்னன் இராவணன் தன நல் தங்கை வாள் எயிற்றுத்——144
துன்னு சுடு சினத்துச் சூர்பணகாச் சோர்வெய்திப்
பொன்னிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால்—-145
தன்னை நயந்தாளைத் தான் முனிந்து மூக்கரிந்து
மன்னிய திண் எனவும் –பிரபுவாகிய ராவணனது அன்புக்குரி தங்கையானவளும்-இருவரும் பொருத்தமான –நல் தங்கை-வாள் போன்றபற்களையுடையளும்-எப்போதும் (எதிரிகளைச்) சுடக்கடவதான் கோபத்தை யுடையளுமான-சூர்பணகை யென்பவள்-அதிகமாக வுண்டான காம நோயினால்-வைவர்ணிய மடைந்து-பரவசப்பட்டு (தளர்ந்து)-தன்னை ஆசைப்பட அந்த அரக்கியை-தான் சீறி-மூக்கை யறுத்து-இதையே ஒரு ப்ரதிஷ்டையாக நினைத்துக கொண்டிருப்பதென்ன.-“ஸ்த்ரிவதம் பண்ணினால் அநுதாபமுமின்றிக்கே பெரிய ஆண் பிள்ளைத் தனம் செய்ததாக நினைத்திருக்கிற நிலை நின்ற த்ருடதவமும்“
கலை இலங்கும் அகலல்குல் அரக்கர் குலக் கொடியைக்
காதோடு மூக்குடன் அரியக் கதறி அவளோடி
தலையில் அங்கை வைத்து மலை இலங்கை புகச் செய்த
தடந்தோளன்-3-9-4—திருநக்ஷத்ரம் பெருமாளுக்கு-37 -சூர்ப்பணகை -அனைய யுக -த்ரேதா யுகம் -13 வது -மாறுவேடம் பூண்டு வந்தாளே–விளங்கா நின்றுள்ள பரியட்டத்தை உடைத்தான அகன்ற நிதம்ப பிரதேசத்தை உடையளாய் கொண்டு தோற்றின ராஷசியைக் கொண்டாடும்படி இருக்கிற பெண்ணை –தனக்கு ஒரு பரியட்டமும் பெருமையும் உடையளாய் வந்து தோற்றினாள் ஆயிற்று – அவள் ஏறிட்டுக் கொண்டு வந்த வடிவைப் போக்கி தானாம்படி பண்ணி விட்டான் ஆயிற்று-அநந்தரம் அவளும் கூப்பிட்டு கொண்டு
தலையிலே கையை வைத்து மலையின் மேலேயான இலங்கையிலே புகும்படி பண்ணின
தோள் வலியை உடையவன்
அடுத்தார்த்து எழுந்தாள் பில வாய் விட்டலற அவள் மூக்கயில் வாளால்
விடுத்தான் விளங்கு சுடர் ஆழி விண்ணோர் பெருமான்-1-5-5–மேல் விழுந்து கிட்டி-ஆரவாரத்தைப் பண்ணிக் கொண்டு – கிளர்ந்து வந்து தோற்றினவள் –பிலம் போலே இருக்கிற வாயைத் திறந்து கூப்பிட அவள் மூக்கை(காதுக்கும் இது உப லக்ஷணம்
நாசிகா -நாசி மூக்கு -கோதாவரிக்கு இரு பக்கமும் பஞ்சவடியும் நாசிக் நகரமும் உண்டே )
அயில்-கூர்மை கூரிய திருக்குற்றுடை வாளை வாங்கிப் போக்கினான்-கையும் திருவாழி யுமான சேர்த்தி அழகைக் காட்டி நித்ய ஸூரிகள் கார்யத்தை நிர்வஹித்துக் கொண்டு போகிறவன்-
கருமகள் இலங்கையாட்டி பிலங்கொள் வாய் திறந்து தன்மேல் வருமவள் செவியும் மூக்கும் வாளினால் தடிந்த எந்தை பெருமகள் பேதை மங்கை தன்னொடும் பிரிவிலாத திருமகளா மருவும் நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே!”.–தண்ணிய ஸ்திரீ-ராவணன் உடன் பிறந்தவள் ஆகையாலே இலங்கையில் உள்ளார் அடையக் கொண்டாடும்படி இருக்கிறவள்-பிலம் போலே இருக்கிற வாயைத் திறந்து-அனன்யை யானவளை நோக்கி வந்த படியாலே
தன் மேலே வந்ததாய் இருந்தபடி-ஏறிட்டுக் கொடு வந்த துர்மானத்தைப் போக்கி
தானான படியே யாக்கி விட்ட படி- இவனை புஜிக்கைக்கு விரோதி இவள் இறே என்று
பிராட்டியை நலிவதாக வாயை அங்காந்து கொண்டு வந்தாள் ஆய்த்து – அவளுடைய செவியையும் மூக்கையும் வாளாலே அறுத்த என் ஸ்வாமி –
தார்க்கு இள தம்பிக்கு அரசு ஈந்து தண்டக
நூற்றவள் சொல் கொண்டு போகி நுடங்கிடை
சூர்பணகாவை செவியோடு மூக்கவள்
ஆர்க்க அரிந்தானைப் பாடிப் பற
அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற -3 -9-8 –காம ரூபிணி ஆகையாலே -ஸ்வ வேஷத்தை மறைத்து –(காம ரூபிணி–இஷ்டமான ரூபம் கொள்ள வல்லவள் ) அத்யந்த அபிமதமான ஒரு ஸ்திரீ வேஷத்தை கொண்டு வருகையாலே – நுடங்கின இடையை உடையளான சூர்பணகயை -தன் அழகைக் காட்டி – என்னை விஷயீ கரிக்க வேணும் -என்று வந்த அளவில் –பிராட்டியைக் கண்டு -நமக்கு இவள் ஒரு ஸ்திரீ உண்டு -அங்கே போ -என்று
இளைய பெருமாளைக் காட்ட – அங்கே சென்ற அளவில் -நான் அவருக்கு சேஷ பூதனாய் இருப்பான் ஒருத்தன் – இன்னம் அவர் பக்கலிலே போ -என்ன-இப்படி உபாலம்பிக்கையாலே (பரிஹாஸ ரஸத்தை அனுபவிக்கையாலே ) அவள் அதிக்ருதையாய் -பழைய வேஷத்தை கொண்டு- எடுத்துக் கொண்டு போகப் புக்க அளவிலே – (பிராட்டி மேலே காய்ந்து -எடுத்து விட்டு -சண்டை போடப் புறப்பட்டு வியாக்யானங்களில் காண்கிறோம் ) செவியோடு கூட அவள் மூக்கையும் – அவள் கதற கதற அறுத்தவனை-ராமஸ்ய தஷிணோ பாஹூ –என்கிற படியே இளைய பெருமாள் கரண பூதர் ஆகையாலே அறுத்ததில் கர்த்ருத்வம் பெருமாளதாகச் சொல்லுகிறது-பஹிர் பிராணன் அன்றோ இவன்-
முல்லைப் பிராட்டி நீ யுன் முறுவல்கள் கொண்டு எம்மை
அல்லல் விளைவியேல் ஆழி நங்காய் உன் அடைக்கலம்
கொல்லை அரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார்
சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமை பொய்யன்றே —10-4-வரம்பு அழிந்த செயலை உடையவள் -மரியாதை தப்பி நின்றவள் இறே
பிராட்டியை புருஷகாரமாகக் கொண்டு பெருமாளைப் பற்ற பிராப்தமாய் இருக்க –
அவளோடு மலைந்து பெறப் பார்த்தவளை –இவளே இறே இவனோட்டை அனுபவத்துக்கு தண்ணீர் துரும்பு -என்று அவள் மேலே விழுந்தாள் யாய்த்து –தமக்கு அனந்யார்ஹராய் இருப்பாரோடு உண்டான சம்ஸலேஷத்துக்கு விரோதிகளாய் வருவாரை
அழியச் செய்யுமவர் கிடீர்-நோவு பட்டவள் —தருனௌ ரூப சம்பன்னௌ–ஆரண்ய -19-14-என்று கூப்பிடும்படியான பருவம் படைத்தவர் – தான் பட்ட பரிபவத்தை முறைப்பட சென்றவள் இறே –தருனௌ -என்கிறாள்-அப்பருவத்திலே துவக்கு பட்ட படியாலே –தான் பட்ட நலிவை சம்போக மத்யத்தில் பிறந்த போக சிஹ்னத்தோ பாதியாக நினைத்து இருந்தாள் யாய்த்து — இல்லையாகில் பருவத்தை பேசக் கூடாது இறே –
ஜனஸ்தானம் ஓடுகிறாள் –கர தூஷண வதம் -பஞ்சவடி அருகில் உள்ளது -ஓன்று விட்ட சகோதரர்கள் -14000 அரக்கர்கள் –அன்று நேர்ந்த நிசாசரரைக்-கவர்ந்த வெங்கணைக் காகுத்தன்—அன்று – ஜன ஸ்தானத்திலே இருக்கிற வன்று ரஷகனாவன் ரஷ்யத்தை நோக்கக் கடவதாக வந்து நின்ற அன்று –நிசாசரர் -வெளியில் முகம் கண்டு அறியாத பையல்கள்-கவர்ந்த-புறப்படும் போது வினயத்தோடு புறப்பட்டு வேட்டை நாய்கள் ஓடி மேல் விழுமா போலே விழுகை-விடும் போது அம்பாய் படும் போது காலாக்நி போலே இருக்கை-தீப்த பாவக சங்காசைத்தரை -என்கிறபடியே பெருமாள் கண் பார்க்கிலும் முடித்து அல்லது நில்லாத வெம்மை-குடிப் பிறப்பால் தரம் பாராதே விஷயீ கரித்தபடியும் வீரவாதியும்-
புகழும் இவள் நின்று இராப்பகல் பொரு நீர்க் கடல் தீப் பட்டு எங்கும்
திகழும் எரியோடு செல்வது ஒப்ப செழும் கதிர் ஆழி முதல்
புகழும் பொரு படை ஏந்தி போர் புக்கு அசுரரைப் பொன்றுவித்தான்
திகழும் மணி நெடு மாடம் நீடு திருப் புலியூர் வளமே–8-9-3-தோலாத தனிவீரன்-பிரசித்தமான வீரத்தை உடையவனும்-பராக்ரமங்களாலே மகிழச் செய்கின்றவனுமான ஸ்ரீ ராம பிரான்–ஞானம் உடைய திரு ஆழி முதலான ஆயுதங்களாலே-புகழப் பட்ட வெற்றி ஒலியை உடைய பெருமானே–சத்ரோ பிரத்யாக வீரஸ்யரஞ்சனி யஸ்ய விக்ரமை-பஸ்யத யுத்த லுப்த அஹம் க்ருத கா புருஷ த்வயா –சுந்தர -105-6-என்கிறபடியே-கையும் ஆயுதமுமாய் பொருத்தம் இருந்தபடி என் என்று- பகைவர்கள்-புகழும் படியைச் சொல்கிறது என்று எம்பெருமானார் அருளிச் செய்வர் –ஆயுதம் தரித்தவனாய்-போரிலே புக்கு தீயோர்களை முடித்தான் –பொன்றுவித்தான் -முடித்தான்-
சாலி வேலி தண் வயல் தட கிடங்கு பூம் பொழில்
கோல மாட நீடு தண் குடந்தை மேய கோவலா
காலநேமி வக்கிரன் கரன் முரன் சிரமவை
காலனோடு கூட வில் குனித்த வில் கை வீரனே –-59-கரன் அரக்கன் நிரஸனம் ராம பெருமான் –காலனோடு கூட வில் குனித்த – இவர்கள் பேர் கேட்க அஞ்சும் காலன் இவர்களுக்கு நிர்வாஹகனாய் இவர்கள் அஞ்சிச் சென்று கூப்பிடும்படியாக
சங்கல்பத்தாலே அன்றி -வில்லாலே -அழியச் செய்தவனே –வில் கை வீரனே —
ஆஸ்ரித விரோதிகளை அழியச் செய்கைக்கு வில் வளைக்கவும் வேண்டாதே
சக்ர சாப நிபே சாபே க்ர்ஹீத்வா சத்ரு நாசநே -என்னும்படியே வில் பிடித்த பிடியிலே
அவர்கள் முடியும்படி ஆண் பிள்ளைத் தனத்தை உடையவனே –ஒன்றரை முகூர்த்தத்தில் -அகம்பணன் மட்டுமே பெண் வேடம் பூண்டு தப்பிச்சென்று ராவணனிடம் சொன்னான்-அவட்க்கு மூத்தோனை வெந் நரகம் சேரா வகையே வில் குனித்தான் – -கையும் வில்லையும் பார்த்ததே -பல்லாயிரம் நரக வேதனை இங்கேயே அனுபவித்தான்-கூடலர் சேனை பொருது அழியச் சிலையால் மராமரம் எய்த தேவனைச் சிக்கென நாடுதிரேல் -4-1-3-மகர்ஷிகளை நலிகையாலே சத்ருக்களான ஜனஸ்தான வாசிகளான ராஷசர் உடைய சேனையானது –
விசேஷம் சொல்லவும் ஒருவர் இல்லாதபடி அழியும் படியாக பொருது –(அகம்பனன் ஒருவன் இருந்தானே என்னில்-கர தூஷணாதிகள் உடன் யுத்தம் செய்ய வந்தவன் அல்லவே இவன்-புடவை சுத்தி இருந்தேன் -பெண் என்று நினைத்து என்னைக் கொல்ல வில்லை என்றானே ராவணன் இடம் )
கலை இலங்கும் அகலல்குல் அரக்கர் குலக் கொடியைக்
காதோடு மூக்குடன் அரியக் கதறி அவளோடி
தலையில் அங்கை வைத்து மலை இலங்கை புகச் செய்த
தடந்தோளன்-3-9-4-தலை இலங்கை வைத்து மலை இலங்கை புகச் செய்த-அவளும் கூப்பிட்டு கொண்டு தலையிலே கையை வைத்து மலையின் மேலேயான இலங்கையிலே புகும்படி பண்ணின தோள் வலியை உடையவன்-ராவணன் இடமும் சொல்லி -மேல் மாரீச வதம்-(கிவாஜா கடை சிப்பந்த்திக்கு கடைசி பந்தியா –இம்மைக்கும் மறுமைக்கும் சரியில்லை -இம்மை மறுமை சரியில்லை பேச மைக் சரியாக வேலை செய்யாததால் சொன்னாராம்)
இலை மலி பள்ளி யெய்தி யிது மாயம் யென்ன இன மாய மான் பின் எழில் சேர்
அலை மலி வேற் கணாளை அகல்விப்பதற்கு ஓருருவாய மானை யமையா
கொலை மலி வெய்துவித்த கொடியோன் இலங்கை பொடியாக வென்றி யமருள்
சிலை மலி செஞ்சரங்கள் செல வுய்த்த நங்கள் திருமால் நமக்கோர் அரணே –11-4-7-இலை மலி பள்ளி -பர்ணசாலைக்கு தமிழ்-பர்ண சாலையிலே இருந்தும் இது ஒரு ஆச்சர்யம் இருந்த படி என் -என்னும்படியாக இனத்தின் மான்களோடு கூடி வரில் அவை வெருவும் யென்று அவற்றின் பின்னே –ஆஸ்ரமத்வார மாகம்ய -இத்யாதி –எழிலை உடையாளாய்
இலக்கானாரை அழித்து பிணிப்புண்ணப் பண்ண வற்றாய் ஓர் ஆளும் ஓர் நோக்கும் நேராம் படி இருக்கிற பிராட்டியை பிரிக்கைக்கு ஈடாய் இருப்பதொரு வடிவைக் கொண்டு
வந்த மாயா மிருகத்தை நிரசித்து –பர ஹிம்சையே யாத்ரையாக திரியும் அதி க்ரூரரான பையல் உடைய இலங்கை பொடியாம் படி வெற்றியை விளைப்பதான சமர பூமியிலே-ஆயிரம் இரண்டாயிரமுமாக ஒரு தொடையிலே தொடை யுண்ணும் செவ்விய அம்புகளை நடத்தின – இதடையச் செய்தது -பிராட்டி பக்கல் பிச்சாலே இறே-இப்படி தம் மார்பிலே அம்பை ஏற்று ரஷிக்குமவர் நமக்கு ரஷகர் நமக்கு மேல் ஒரு குறை உண்டோ –
கிளர் பொறிய மறி திரிய வதனின் பின்னே படர்ந்தானை-2-5-6-புள்ளி மான் துள்ளி விளையாட-கிளர்ந்து –நாநா வர்ணமான பொறியை உடைத்தான மான் குட்டியை பிராட்டி பிடித்துத் தர வேணும் -என்ன துஷ்ட ம்ருகமாகையாலே அது அங்கே இங்கே சஞ்சரிக்க
அதின் பின்னே அடி தீயப் போனவனை – பிராட்டி பிரிவு விளையும் படியாக இறே
கை கழியப் போன படி –
தெரிந்த உணர்வு ஓன்று இன்மையால் தீ வினையேன் வாளா
இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் கரந்த உருவின்
அம் மானை அந் நான்று பின் தொடர்ந்த ஆழி யங்கை
அம்மானை ஏத்தாது அயர்த்து–82-கைகேயி வரத்தில் அகப்படா விட்டது திருக் கையில் அருகாழி ஒன்றுமே யாகாதே வடிவைக் கரந்து வர்த்திக்கிற அம் மாய மானை அன்று தொடர்ந்த அருகாழியைக் கையிலே யுடைய ஸர்வேஸ்வரனை இளைய பெருமாளும் உதவாத தசையில் ஏத்தப் பெறுவது அறிவு கெட்டுக் கிடந்த நான் பழுதே போக்கினேன்-ஏத்துகை –அடிமையாய்-இப்படி அடிமை செய்யப் பெற்றிலேன் என்று இழவு பட்ட பேர் உண்டோ என்ன அருளிச் செய்கிறார் –(பேய் முலை உண்ட அவ்வாயன் நிற்க இவ்வாயன்-ஆயப்பிள்ளை அதே போல் இங்கும் அம்மானை பத பிரயோகம் )பெருமாள் மாய மானை எய்து மீண்டு எழுந்து அருளுகிற போது அடிக் கொதித்து நடக்க மாட்டாமை தளிர்களை முறித்திட்டு அதின் மேலே எழுந்து அருளினார் -என்று ஒருவன் கவி பாடவும்-எம்பெருமானார் கேட்டு அருளி மாறி இடுகிற திருவடிகளிலே என் தலையை வைக்கப் பெற்றிலேன் -என்று அருளிச் செய்தார்
மான் முனிந்து ஒரு கால் வரி சிலை வளைத்த –ஹா ஸீதா ஹா லஷ்மணா கத்திப் போக -லஷ்மணன் மேல் சுடு சொல் -லீலை –பாகவத அபசாரம் க்ரூரம் என்பதைக் காட்டவே –
பிராட்டி பிரிவு -முக்கோல் முனிவர் வேஷம்-காசை யாடை மூடி யோடிக் காதல் செய்தானவனூர் நாசமாக நம்ப வல்ல நம்பி நம்பெருமான்-2-2-1-காஷாய வஸ்த்ரத்தை இட்டு
உடம்பு எங்கும் மறையும்படி மூடி ராம பயத்தாலே பயந்து நடந்து போய்-ஜநநீ என்று பாராதே –வீத ராக வேஷத்தைத் தரித்து வைத்து ராகத்தைப் பண்ணின –பையலுடைய ஊரானது –ஸ்மாசந சத்ருசமாம்படி யாக திரு உள்ளத்திலே கொண்டருளி அப்படி செய்து தலைக் கட்டுகைக்கு ஈடான வீரஸ்ரீ யால் பூரணன் ஆனவன் –லஷ்மண ரேகா -வால்மீகி கம்பர் -இவர் தாயுக்கு கட்டளை இடமாட்டாரே -ராவண சன்யாசி -பர்ணசாலைக்குள்ளே வந்து உபசாரம் பெற்றான் -உள்ளே வந்து தானவன் ஆனான்-பிரமனின் சாபத்தால் தப்பான நோக்கால் தொட்டால் தலைகள் வெடித்து சுக்குநூறாகும்
தளிர்நிறத்தால் குறையில்லாத் தனிச்சிறையில் விளப்புற்ற
கிளிமொழியாள் காரணமாக் கிளர்அரக்கன் நகர்எரித்த
களிமலர்த் துழாய்அலங்கல் கமழ்முடியன் கடல்ஞாலத்து
அளிமிக்கான் கவராத அறிவினால் குறையிலமே.-4-8-5-ஒளியையும் ஒளியைஉடைய பொருளையும் (சூரியனையும்) பிரித்து வைத்தாற் போலே இருப்பது ஒன்றே அன்றோ அரக்கியர் நடுவில் தடைபட்டவளாய் இருந்தபடி? விளப்புற்ற – 1‘கண்ணீரால் நிறைந்த முகமுடையவளும், இரங்குவதற்குரியவளும், ஆகாரம் இன்மையால் இளைத்திருப்பவளும்’ என்கிறபடியே, ‘தன்னைப் பேணாதே இருந்தாள்’ என்று திருவடியாலே பெருமாளுக்கு விண்ணப்பம் செய்யப்பட்டவள் என்னுதல்; அன்றிக்கே, ‘தெய்வப் பெண்கள் கால்களில் விலங்கை வெட்டி விடுகைக்காகத் தன்னைப் பேணாதே அங்கே புக்குத் தன் காலிலே விலங்கைக் கோத்துக் கொண்டவள்,’ என்று நாட்டிலே பிரசித்தையானவள் என்னுதல்.திருவடி வாயிலே ஒன்று தங்கிய அவள் வார்த்தையைக் கேட்டு, அவ்வழியாலே 2‘இனியவளும் இனிய வார்த்தையையுடையவளும்’ என்றாரே அன்றோ? அதனை நினைத்துக் ‘கிளிமொழியாள்’ என்கிறது.-சிறை இருந்தவள் ஏற்றமே ஸ்ரீ இராமாயணம் -அசோகவனம் அடைய பெருமாள் சோகவனம் -வால்மீகி கவனம் கவிதை -நாம் வனம் கண்ணீருடன் கேட்க்கிறோம்
தன மருவு வைதேகி பிரியல் உற்று தளர்வெய்தி சடாயுவை வைகுந்தத்து ஏற்றி
வன மருவு கவி அரசன் காதல் கொண்டு வாலியை கொன்று இலங்கை நகர் அரக்கர் கோமான் சினம் அடங்க மாருதியால் சுடுவித்தானை-10-6-திரு முலைத் தடத்தின் அழகாலும் -ஆபிஜாத்யத்தாலும் -பிரியத் தகாத ஸ்ரீ பிராட்டி பிரிவாலே – ஸ்ரீ பெருமாள் தம்மளவிலே நோவு பட்டு ஸ்ரீ பிராட்டிக்காக ராவணனோடு யுத்தம் பண்ணி -பிராணனை விட்ட ஸ்ரீ பெரிய உடையாரை ஸ்ரீ பரம பதத்து ஏறப் போக விட்டு –தனமருவு வைதேகி -என்று விஷ்ணோ ஸ்ரீ -என்கிறபடியே ஸ்ரீ பெருமாளுக்குத் தனமான ஸ்ரீ பிராட்டி என்றுசடாயுவை வைகுந்தத்து ஏற்றிமாம் –தேவத்வம் அஸ்நுதே -இவள் கடாக்ஷத்தாலேயே தேவனானன்-ஜடாயு மோக்ஷம் –
ஆயுஷ்மன் -அந்த தருணத்திலும் மங்களாசாசனம் -பெரிய உடையார் -செய்தியும் சுருக்கமாக சொல்லி -தேவி மம பிராணன் கூட கொண்டு சென்றான் -விந்தோ நாம முஹூர்த்தம் -விந்தம் முஹூர்த்தம் காணலாம் போனது மாறுதல் இல்லாமல் உடையவனிடம் சேரும் கவலைப்படாதே –சடாயுவை வைகுந்தத்து ஏற்றி-10-6-பரத்வம் பீடிற்று கச்ச லோகான் அநுத்தமான் –சத்யேனே லோகான் ஜயதி–ஈமச் சடங்கும் செய்து முடித்தான்
கறை வளர் வேல் கரன் முதலாகக் கவந்தன் வாலி கணை யொன்றினால் மடிய இலங்கை தன்னுள்
பிறை எயிற்று வாள் அரக்கர் சேனை எல்லாம் பெருந்தகையோடு உடன் துணித்த பெம்மான் தன்னை-2-10-5-பர ஹிம்சையில் த்வரையாலும் எப்போதும் ஒக்க சத்ரு நிரசனம் பண்ணுகையாலும் கறை கழுவுகைக்கு அவகாசம் இன்றிக்கே இருக்கையாலே மிக்க கறையை உடைத்தாய் இருக்கிற வேலை உடைய கரன் துடக்கமாக கபந்தன் வாலி -என்கிற இவர்கள் – கரன் விராதன் இவர்கள் வந்து தோற்றுகிற போது சிம்ஹங்கள் புலிகள் இவற்றை சூலத்திலே கோத்துக் கொண்டு வந்து இறே தோற்றுவது–கணை யொன்றினால்-கைக்கு எட்டிற்று ஓர் அம்பாலே முடித்தான் இறே
கவந்தனை முடித்து ரிஷ்யமுகம் -வந்து சபரி மோக்ஷம் –ஆழ்வார்கள் அருளிச் செயலில் இல்லை -பெருமாள் சாக்ஷியாக மட்டும் –சாஷீ பூதர் –மதங்கர் முனி ஆச்சார்யர் அனுக்ரஹம் மூலம் பெற்றவள் -ரஹஸ்ய கிரந்தங்களில் உண்டு-ஆச்சார்யர் திருவடிகளை அடைகிறோம் –தானே வைகுந்தம் தரும் –
சுக்ரீவ பட்டாபிஷேகம் -திருவடியை முதல் முதலில் கடாக்ஷம் -அக்னி சாக்ஷியாக -நட்ப்பு -உடன்படிக்கை சுக்ரீவ மஹா ராஜர்
கடைந்த பாற்கடல் கிடந்து கால நேமியைக் கடிந்து
உடைந்த வாலி தந்தனுக்கு உதவ வந்தி ராமனாய்
மிடைந்த மேழ் மரங்களும் அடங்க வெய்து வேங்கடம்
அடைந்து மால பாதமே யடைந்து நாளும் உய்மினோ –81-ப்ரஹ்மாதிகள் அளவு அல்லாத திர்யக்குகளுடைய ரஷணத்துக்காக சக்ரவர்த்தி திருமகனாய் வந்து அவதரித்து – தேவதாந்தர ஸ்பர்சத்தாலே ஸ்வரூபம் அறிந்த வாலிக்கு – ராம பாணா சைஷிப்த மாவஹத் பரமாங்கதிம் -என்கிறபடியே ச்வஹஸ் தவதத்தாலே மோஷ ப்ரதன் ஆகைக்காக தசரதாத் மஜனாய் வந்து-தனக்கு துஷ் ப்ராபமான ரிச்யமுகத்திலே பகையான மஹாராஜர் இருக்கையாலே பகை மீளப் பெறாத நாம் என்ன ராஜ்யம் பண்ணுகிறோம் -என்று நெஞ்சு அழிந்த வாலியாலே மஹாராஜருக்கு பிறந்த ஆபத்தை தீர்க்கைக்காக வந்து என்றுமாம் –தம்பி தனக்கு -மவ்வுக்கு -ன -ஆதேசமாய் தம்பி -என்றதை -தன் -என்று கடைக் குறைத்தலாய்க் கிடக்கிறது -என்று ஒரு தமிழன்-ஆபத்திலே ரஷிக்க வர கண்டு -ரஷணத்திலே அதி சங்கை பண்ணின மஹாராஜர் விஸ்வசிக்கைகாக -இலக்கு குறிக்க ஒண்ணாதபடி மிடைந்து நிற்கிற மராமரங்கள் ஏழையும் அநுக்தமான கிரி ரஸாதலங்கள் ஏழையும் அடங்கத் துளைத்து வாலி -ஸ்வ பரிஷை பண்ணுவது ஒரு மராமரத்தளவிலேயாய் இருக்க – மஹாராஜர் உடைய அதி சங்கையை சவாசனமாக போக்குகைக்காக ஏழு என்ற பேர் பெற்றது அடைய எய்தார் ஆய்த்து—வாலி தந்தனுக்கு உதவ வந்தி ராமனாய்
-அவதாரத்தில் தாழ்ந்தாருக்கு முகம் கொடுத்த சீலமும் –பிற்பாடானவர்கள் இழவாமைக்கு திரு மலையில் ஆஸ்ரயித்து நிற்கிற வ்யாமுகன்-வாலி மா வலத்தொருவனது உடல் கெட வரி சிலை வளைவித்து அன்று-1-2-1-வாலி என்று பேராய்-மஹா பலத்தில் வந்தால் தன்னை எண்ணினால் இரண்டாம் விரலுக்கு ஆள் இல்லாதபடி அத்விதீயனாய் இருக்கிறவனுடைய உடலானது சிந்தும்படியாக தர்சநீயமான வில்லை வளைத்து – வாலியும் அழிகையும் கிடக்கச் செய்தேயும் -அக் கையும் வில்லும் சேர்ந்த சேர்த்தியும் தர்சநீயதையும் அனுபவிக்கிறார் யாயிற்று இவர்-உருத்தெழு வாலி மார்வில் ஒரு கணை யுருவ வோட்டிக்
கருத்துடைத் தம்பிக்கு இன்பக் கதிர் முடி யரசளித்தாய்-4-6-3-உருவென்று சீற்றம்
வெஞ்சினத்த வேழ வெண் மருப்பு ஒசித்து உருத்த மா கஞ்சனைக் கடந்து -திருச்சந்த -என்றது இறே-மிக்க சீற்றத்தை உடையனாய் அகாலத்திலே வந்து அறை கூறுகிறவன் தான் யார் -என்று பெரிய கிளர்த்தியோடே வந்து தோற்றின-அங்கே நாமி பலம் இங்கே நாம பலம் திருமாலை வியாக்யானத்தில் -விட்டார் விட்ட அம்புகள் அடங்கலும் வாய் மடிந்து போம் இத்தனையாய் தனக்கு ஓர் அழிவு இல்லாதபடி இருக்கிற வாலியுடைய திண்ணிய மார்விலே- ஏகேந மகேஷூணா-என்கிறபடியே கைக்கு எட்டிற்று ஓர் அம்பை வாங்கி
மறுபாட உருவும்படி நடத்தி ஒசழக்காக –அஸ்ரத்தையாக-விட்ட அம்பு தானே மறுபாடு உருவம்படி நடத்தி (ஏழு பெயர் உள்ள மலைகள் கடல்கள் பாதாள லோகங்கள் நடுங்கும் படி )-வாலி செலுத்திப் போந்த ராஜ்யத்தை அப்படி நடத்துகைக்கு ஈடான கருத்தை உடையவன் -என்னுதல்-வாலி பேர் கேட்க வனம் அடைந்து கிடந்த சுக்ரீவன் தன்னையே (ஆளாக்கி ஜெயிப்பித்தாய் )ந காங்ஷே விஜயம் கிருஷ்ண -என்னச் செய்தே இறே பின்னையும் அவர்களை ஜெயிப்பித்தது உனது திரு உள்ளம் படியே உன் திரு உள்ளம் உடைய மகா ராஜர்க்கு என்றுமாம்–இன்பக் கதிர் முடி அரசு அளித்தாய்-இன்பத்தை விளைப்பதாய்
ஆனந்தாவஹமாய் மதிப்புடைத்தான முடியையும் அதுக்கு விஷயமான ராஜ்யத்தையும் கொடுத்து அருளினாய்-
இது இலங்கை ஈடழியக் கட்டிய சேது
இது விலங்கு வாலியை வீழ்த்ததுவும் -இது விலங்கை
தான் ஒடுங்க வில் நுடங்கத் தண்டார் இராவணனை
ஊன் ஒடுங்க எய்தான் உகப்பு –28-திர்யக்கான வாலியை வீழ்த்தது இது –(மறைந்து கொன்றது குற்றம் இல்லை திர்யக் என்பதால்
கழி சினத்த வல்லாளன் வானவர் கோன் வாலி மதன் அழித்த
வில்லாளன் நெஞ்சத்து உளன் –85–அதிக கோபத்தை யுடையனாய் -பலிஷ்டனாய் -வானர ராஜாவான வாலியினுடைய கர்வத்தைப் போக்கின தநுர்த் தரனான சக்ரவர்த்தி திருமகன்-ஸஹ ஜீவ காருண்யம் இல்லாதவனுக்கு இறைவன் காருண்யம் பெற வாய்ப்பே இல்லையே–
வைது நின்னை வல்லவா பழித்தவர்க்கும் மாறில் போர்
செய்து நின்ன செற்றத் தீயின் வெந்தவர்க்கும் வந்து உனை
எய்தலாகும் என்பர் ஆதலால் எம்மாய நாயினேன்
செய்த குற்றம் நற்றமாகவே கொள் ஞால நாதனே -111-எதிர் இல்லாத யுத்தத்தை பண்ணி -உன் கோப அக்நியாலே தக்தர் ஆனவர்களுக்கும் – மஹா ராஜரோடே வாலி பண்ணின யுத்தத்தை யாய்த்து இவர் –மாறிலாத போர் –என்கிறது –ராம பாணா ஹத -ஷிப்ர மா வஹத் பரமாங்கதம் -என்று வாலி உடைய பகவத் ப்ராப்தியை சொன்னான் ஸ்ரீ வால்மீகி பகவான் –ஆதலால் – உன்னை நிந்தித்தாருக்கும் எதிரிட்டாருக்கும் அகப்பட குண ப்ரபாவத்தாலே உன்னைப் பெறலாம்
சேனைகளை நாலாபுறமும் அனுப்புவது -கணையாழி கொடுத்து திருவடியை தெற்கே அனுப்பி -ஸூந்தர காண்டம் -அனைத்து ராமாயண செயல்களும் இதில் உண்டு -திரிஜடை கனவில் எதிர்காலம் நடக்கப் போவதும் உண்டு -ஸூந்தரன் திருவடிக்கு அஞ்சலிதேவித் தாயார் இட்ட திருநாமம் -மற்றவை காரணப் பெயர்கள் -அவர் பெருமையைச் சொல்லும் காண்டம் இதுவே-அங்குலீய அளித்து சூடாமணி பெற்று திரும்பினார்- -விபீஷண ஸரணாகதி -சேது பந்தனம் –
அரங்கனே தரங்க நீர் கலங்க வன்று குன்று சூழ்
மரங்கள் தேய மா நிலம் குலுங்க மா சுணம் சுலாய்
நெருங்க நீ கடைந்த போது நின்ற சூரர் என் செய்தார்
குரங்கை யாள் உகந்த வெந்தை கூறு தேற வேறிதே –21-குரங்கை யாள் உகந்த வெந்தை –
கீழ் சொன்ன பஷபாததுக்கு த்ர்ஷ்டாந்தம் சொல்லுகிறது-.-ராவணனை தேவரீரே அழியச் செய்து -பிரதிபஷத்தை வென்று தந்தாரார்களாக- ஸ்ரீ வானர வீரர்களை ஆதரித்தது போலே-எந்தை – என்று நித்ய ஸூரிகளை அடிமை கொள்ளும் ஏற்றத்தை உடையனாய் வைத்து திர்யக்குகள் என்று இகழாதே அடிமை கொண்ட இத்தை தனது பேறாக நினைத்து
இருக்கையாலே என் நாதனே என்கிறார் –அரங்கனே கூறு தேற வேறிதே — ஈஸ்வரன் ஒருவன் உளான் என்று அறியாத சம்சாரத்தில் இஸ் ஆஸ்ரித பஷபாதத்தை-பிரகாசிப்பிக்கைகாக அர்ச்சையாய் வந்து கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற தேவரீர்- இத்தை விசேஷித்து தெரிய அருளிச் செய்ய வேணும் –வ்யூஹத்திலும் விபவத்திலும் சொன்ன பஷபாதங்கள் காணலாவது –பெரிய பெருமாள் பக்கலிலே
முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து அரக்கன்
மன்னூர் தன்னை வாளியினால் மாள முனிந்து அவனே
பின்னோர் தூது ஆதி மன்னர்க்காகிப் பெரு நிலத்தார்
இன்னார் தூதனென நின்றான் எவ்வுள் கிடந்தானே–2-2-3-த்வாபரத்தின் உடைய ஆதியிலே
பிராட்டியைப் பிரிந்த ஆற்றாமை மீதூர்ந்து கடலிலே புக்கு முடியும் அளவானவாறே ஒரு குரங்கின் வாயிலே வார்த்தையைச் சொல்லி விட்டான் –அரக்கன் உடைய வராதிகளாலே
பூண் கட்டின ஊரை –ப்ரஹ்மாஸ்த்ராதிகளுக் கேளாத ஊரை மனிச்சுக்கு ஏகாந்தமான
அம்பாலே அழியும்படி சீறினான் ஆயிற்று – *ஸத்ய வாக்யனாக இருந்தால் என்று பிரதிஜ்ஜை செய்து விட்டாரே பெருமாள்)-கடலில் நீரே நெய்யாகப் பற்றி எரிய வல்ல அம்பு உடையனாய்-ஆதி மன்னர்க்காகி-பாண்டவர்க்காகி-பாண்டவ தூதன் -ஸ்ரீ பாடகம் -வைத்துக் கொண்டு உகந்து அருளுகிறானே
100யோஜனை 1000 மைல் தள்ளி திரேதாயுகத்தில் இலங்கை இருந்ததாம் – சம்பாதி கழுகு பார்வை
ஓத மா கடலைக் கடந்தேறி யுயர் கொள் மாக் கடிகாவை யிறுத்துக்
காதல் மக்களும் சுற்றமும் கொன்று கடி யிலங்கை மலங்க எரித்துத்
தூது வந்த குரங்குக்கே உங்கள் தோன்றல் தேவியை விட்டுக் கொடாதே
ஆதர் நின்று படுகின்றது அந்தோ அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ–10-2-6-அலை எறிகிற பெரும் கடலை தன் கவட்டின் கீழே யாம்படி கடந்து அக்கரைப் பட்டு –ஒக்கத்தை உடைத்தாய் பரந்து பரிமளிதமாய் இருந்துள்ள சோலையை உடைய அசோக வநிகை -அத்தை முறித்து –ராவணனுக்கு சிநேக விஷயமான அஷய குமாரன் தொடக்கமான புத்ரர்களையும் அவனுக்கு அந்தரங்கரான கிங்கரர் தொடக்க மானவரையும் கொன்று –அரணை உடைத்தாய் அக்னியும் புகுர அஞ்சி இருக்கும் இவ்வூர் ஒருவர் கூறை எழுவர் உடுக்கும் படி அக்னியை பிரவேசிப்பித்து –வெறும் கையே தூது வந்தான் ஒருவன் செய்தது இதுவானால் – நாம் இவளைக் கொண்டு இருப்போம் அல்லோம் என்று அவன் கையிலே பிராட்டியை விட்டுக் கொடாதே
நான் தேட கிடைக்கவில்லை -நான் இல்லாமல் பிராட்டி அருளாலே காட்டக் கண்டார் -நமோஸ்து ராமாய-இத்யாதி–அசோக வனம் சிஞ்சுபா மரத்தில் – அமர்ந்து-grey brown கலந்த நிறம்-
நெறிந்த குழல் மடவாய் நின்னடியேன் விண்ணப்பம்
செறிந்த மணி முடிச் சனகன் சிலையிறுத்து நினைக் கொணர்ந்த
தறிந்து அரசு களை கட்ட வரும் தவத்தோன் இடை விலங்கச்
செறிந்த சிலை கொடு தவத்தைச் சிதைத்ததும் ஓர் அடையாளம் –3-10-1-மடப்பத்தை யுடையவளுமான பிராட்டீ உமது அடியவனான என்னுடைய விஞ்ஞாபனம் ஒன்றைக் கேட்டருள வேண்டும்-நெருங்கின ரத்தினங்களை யுடைய கிரீடத்தை அணிந்த ஜனக மகா ராஜன் கன்யா சுல்கமாக ஏற்படுத்தின ருத்ர தனுசுவை முறித்து -உம்மை -பிராட்டியை -திரு மனம் புரிந்து கொண்டதை தறிந்து அரசு களை கட்ட வரும் தவத்தோன் இடை விலங்கச் -தெரிந்து கொண்டு துஷ்ட ராஜாக்களை பயிருக்குக் களை களைவது போலே
அழித்து- 21-தலைமுறை கார்த்த வீர்யார்ஜுனன் போல்வாரை -அழித்து அரிய தவத்தை யுடைய பரசுராமன் நடுவழியில் தடுக்க தனக்குத் தகுந்த அப்பரசுராமன் கையில் இருந்த விஷ்ணு தனுசுவை –இதனாலே செறிந்த சிலை -வாங்கிக் கொண்டு அப்பரசுராமனுடைய தபஸை அழித்ததுவும் ஒரு அடையாளமாகும்-தவத்தை சிதைத்தது அடையாளம் -என்னாதே
சிதைத்தும் ஓர் அடையாளம் -என்கையாலே இன்னும் பல அடையாளங்களும் சொல்லுவதாக நினைத்துச் சொல்கிறான் என்னும் இடம் தோற்றுகிறது- சங்கா நிவ்ருத்தி பிறக்கும் அளவும் சொல்ல வேணும் இறே
அல்லியம் பூ மலர்க் கோதாய் அடி பணிந்தேன் விண்ணப்பம்
சொல்லுகேன் கேட்டருளாய் துணை மலர்க் கண் மடமானே
எல்லியம் போது இனிதிருத்தல் இருந்தது ஓர் இட வகையில்
மல்லிகை மா மாலை கொண்டு அங்கு ஆர்த்ததும் ஓர் அடையாளம் –3-10-2-வால்மீகிக்கும் தெரியாத அடையாளம் -உன்னுடைய விக்ரமம் -ஓன்று ஒழியாமல் எல்லாம் – பெரியாழ்வார் மட்டுமே அறிந்து அருளிச் செய்த அடையாளம் இது பெருமாள் சொல்லி விட்ட அந்தரங்க அடையாளம்என்னுடைய ஸ்வரூப அநு ரூபமாக தேவரீர் திருவடிகளில் வணங்கி
தலை படைத்த பிரயோஜனம் பெற்றேன்(அடி பணிந்தேன் -காயிக விருத்தி
விண்ணப்பம் -வாசிக விருத்தி ) இனி வாய் படைத்த பிரயோஜனம் பெறும்படி விண்ணப்பம் செய்யத் தக்கது ஓன்று உண்டு என்ன-ராத்ரி காலத்தில் பெருமாளும் தேவரீருமாய் ரஸோத்தரமான இருப்பாக இருந்த தொரு ஸ்தலத்திலே-ஸ்லாக்கியமான மல்லிகை மாலையைக் கொண்டு பெருமாளை பந்தி வைத்ததும் ஓர் அடையாளம்-பெருமாளுடைய- பிரணயித்வ-பாரதந்த்ர ப்ரயுக்தமாய் -போக தசையில் நடப்பதொரு ரசமாய்த்து இது ஆகையால் அல்லாத அடையாளங்கள் போல் அன்றிக்கே அத்யந்த ரஹஸ்யமாய் இருப்பது ஓன்று இறே இது தான்-ஸமா த்வாதச தத்ராஹம் ராகவஸ்ய நிவேசநே -புஞ்ஜாநா அமானுஷாந் போகான் சர்வ காம ஸம்ருத்தி நீ -என்று இவள் தானும் பெருமாளும் அறியும் அத்தனை இறே –
கலக்கிய மா மனத்தளளாய்க் கைகேசி வரம் வேண்ட
மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மாறாது ஒழியக்
குலக்குமரா காடுறையப் போ வென்று விடை கொடுப்ப
இலக்குமணன் தன்னொடும் அங்கு ஏகியதும் ஓர் அடையாளம் –3-10-3-குப்ஜையாலே கலக்கப் பட்ட பெரிய மனசை யுடையளாய் – முன்பு புத்ரனான ஸ்ரீ பரதாழ்வானைக் காட்டில் பெருமாள் பக்கல் ஸ்நேஹிநியாய் பர்த்தாவான சக்கரவர்த்தியினுடைய ப்ரியமே செய்து போந்தவளாகையாலே – பெரிய மனசை யுடையவள் -என்கிறது –ப்ராகேவது மஹா பாகஸ் ஸுமித்ரிர் மித்ர நந்தன பூர்வஜஸ் யாநுயாத்ரார்த்தே த்ரும சீரை ரலந்க்ருத்த -என்கிறபடியே
தான் புறப்படுவதுக்கு முன்னே இளைய பெருமாளோடே காடேற எழுந்து அருளினது ஓர் அடையாளம் –
வாரணிந்த முலை மடவாய் வைதேவீ விண்ணப்பம்
தேரணிந்த வயோத்தியர் கோன் பெரும் தேவீ கேட்டருளாய்
கூரணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கை தன்னில்
சீரணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம் –3-10-4-ஒரு சிறு தேவி யுண்டாய் பெரும் தேவி என்கிறது அன்று இறே – பெருமாள் ஏக தார வ்ரதராகையாலே-ஏழை ஏதலன் -இத்யாதிப் படியே –அபிஜன வித்யா வ்ருத்தங்கள் ஒன்றும் இல்லாத ஸ்ரீ குஹப் பெருமாளோடே – மாழை மான் மட நோக்கி உன் தோழி உம்பி எம்பி தோழன் நீ எனக்கு -என்று அருளிச் செய்த படியே குணத்தோடு கூடின தோழமை கொண்டதும் ஓர் அடையாளம்
மானமரும் மென்னோக்கி வைதேவீ விண்ணப்பம்
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த காலத்துத்
தேனமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து இருப்பப்
பான் மொழியாய் பரத நம்பி பணிந்ததுமோர் அடையாளம் –3-10-5-பான் மொழியாய்
பால் போலே ரசாவகமான பேச்சை யுடையவளே – இதுக்கு முன்பு இவள் சொன்ன வார்த்தைகளில் ரஸ்யத்தையாலும்-இது கேட்க்கையில் யுண்டான ஆதார அதிசயத்தாலும் சொல்லுகிறான்-பாரதந்தர்யத்தால் பூர்ணனான ஸ்ரீ பரதாழ்வான் வந்து – மீண்டு எழுந்து அருள வேணும் – என்று பிரபத்தி பண்ணினதும் ஓர் அடையாளம் –தேவர்கள் ராமன் பரதன் மட்டுமே காணும்படி வந்து சொன்னதும் பாதுகா தேவியைப்பெற்று திரும்பினான்
சித்ர கூடத்து இருப்பச் சிறு காக்கை முலை தீண்ட
அத்திரமே கொண்டெறிய வனைத்துலகும் திரிந்தோடி
வித்தகனே இராமா ஓ நின்னபயம் என்று அழைப்ப
அத்திரமே அதன் கண்ணை யறுத்ததும் ஓர் அடையாளம் –3-10-6-பெருமாளும் தேவரீருமாய்க் கொண்டு ஏகாந்த ரசம் அனுபவித்து ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி மடியிலே கண் வளர்ந்து ரஸோத்தரராய் இரா நிற்கச் செய்தே-ஒரு தர்ப்பத்தை எடுத்து -அதில் ப்ரஹ்மாஸ்திரத்தை யோஜித்து அத்தை அந்த காகத்தின் மேலே செலுத்தி விட-எல்லாரையும் குணத்தால் ரமிப்பிக்க வல்லவனே என்று சரண்யனான பெருமாள் குணத்தைச் சொல்லி ஓ என்று தன்னுடைய அநந்ய கதித்வத்தை முன்னிட்டுக் கொண்டு –
உனக்கு அபயம் -என்று சரணாகதனானமை தோற்றக் கூப்பிட கிருபையால் பெருமாள் ரஷித்து அருளுகிற அளவில் காகத்துக்கு பிராண பிரதானம் பண்ணி அஸ்திரத்துக்கு ஒரு கண் அழிவு கற்பிக்கையாலே முன்பு தலை அறுப்பதாக தொடர்ந்த அஸ்திரம் தானே
அதனுடைய ஒரு கண்ணை அறுத்து விட்டதும் ஓர் அடையாளம்
மின்னொத்த நுண்ணிடையாய் மெய்யடியேன் விண்ணப்பம்
பொன்னொத்த மான் ஓன்று புகுந்து இனிது விளையாட
நின் அன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏகப்
பின்னே யங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓர் அடையாளம் -3-10-7- -தேவரீருடைய ஆசையின் வழியிலே நின்று–ஹா சீதே ஹா லஷ்மணா -என்று பெருமாள் மிடற்று ஓசை போலே கூப்பிட்டுக் கொண்டு விழ–பெருமாளுக்கு ஏதேனும் அபாயம் வந்ததாக நினைத்து – இத்தைச் சடக்கென போய் அறியும் -என்று தேவரீர் அருளிச் செய்யச் செய்தேயும்-இங்குத்தைக்குக் காவலாக நிறுத்திப் போகையாலும்- பெருமாளுடைய ஸுர்யத்தை அறிகையாலும்-அங்குத்தைக்கு ஒன்றும் வாராது தேவரீர் பயப்பட்டு அருள வேண்டா -என்று விண்ணப்பம் செய்து – தாம் போக மாட்டாமல் சுற்றிக் கொண்டு நிற்க –அவர் நில்லாமல் போக வேண்டும்படி தேவரீர் சில அருளிச் செய்கையாலே பிற்பாடு அங்கே இளைய பெருமாள் பிரிந்து போனதும் ஓர் அடையாளம் –
மைத் தகு மா மலர்க் குழலாய் வைதேவீ விண்ணப்பம்
ஒத்த புகழ் வானரக் கோன் உடன் இருந்து நினைத் தேட
அத் தகு சீர் அயோத்தியர் கோன் அடையாளம் இவை மொழிந்தான்
இத் தகையால் அடையாளம் ஈது அவன் கை மோதிரமே–3-10-8-கீழ் ஏழு விண்ணப்பங்கள்-தனக்கு சுல்கமாகக் கல்பித்து இருந்த வில்லை முறித்த பெருமாளுடைய திருக் கையிலே அப்போது கிடந்ததாய் பின்பு பாணி கிரஹணம் பண்ணுகிற போது தன் கையில் உறுத்தினதாய்- சர்வ காலமும் பெருமாள் திருக் கையில் கிடக்குமதான திருவாழி மோதிரத்தைக் கண்டு-அநுமானே நீ முன்பு சொன்ன அடையாளங்களும் திருவாழி மோதிரத்தின் அடையாளமும் ஒக்கும் என்று அவன் முகத்தைப் பார்த்துச் சொல்லி
க்ருஹீத்வா ப்ரேஷா மாணா சா பர்த்து கர விபூஷணம் -பர்த்தாராம் இவ ஸம் ப்ராப்தா ஜானகீம் உதிதாபவத் –என்கிறபடியே அத் திருவாழி மோதிரத்தை வாங்கி அதினுடைய கௌரவமும் -தன்னுடைய ஆதரமும் தோற்றத் தலை மேல் வைத்துக் கொண்டு –பின்னை அத்தைக் கையிலே ஏந்தி -வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண்டு இருக்கையாலே –
அத் திருவாழி மோதிரத்தோடே சேர்ந்த திரு விரலையும் – அத்தோடு சேர்ந்த -திருக் கையையும் – அத்தோடு சேர்ந்த திருத் தோள்களையும் நினையா நின்று கொண்டு அவ் வழியாலே திருமேனி எல்லாவற்றையும் நினைத்து பாவநா ப்ரகரஷத்தாலே (நினைவின் முதிர்ச்சியாலே )பெருமாள் அலங்கரிக்கப் பூ முடித்து ஒரு படுக்கையிலே இருந்தால் போலே தோன்றி -முன்பு ஊடலில் கடகராக கணையாழி தானே என்பதை நினைத்துப் பார்த்து-பிராட்டி மிகவும் ப்ரீதையானாள் என்று ஆச்சர்யப்பட்டு அருளிச் செய்கிறார் –
வாராரும் முலை மடவாள் வைதேவி தனைக் கண்டு
சீராரும் திறல் அனுமன் தெரிந்து உரைத்த அடையாளம்
பாராரும் புகழ்ப் புதுவைப் பட்டர் பிரான் பாடல் வல்லார்
ஏராரும் வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே –3-10-10-பெரியாழ்வார் திருவடி நிலையில் அருளிச் செய்தவை-சூடாமணி கொடுத்தருளி -கோணலாக திலகமிட்டு வைத்த வ்ருத்தாந்தம் சொல்லி -கால் பிடிக்க தயங்கி -கல்மோதிரங்கள் பெண்ணாகுமே -சிந்தையாலும் மற்ற பெண்களை நினையேன் சொன்னதையம் சொல்லி —
அசோகவன துவம்சம் –யுயர் கொள் மாக் கடிகாவை யிறுத்து-10-2-6-ஒக்கத்தை உடைத்தாய் பரந்து பரிமளிதமாய் இருந்துள்ள சோலையை உடைய அசோக வநிகை -அத்தை முறித்து –காதல் மக்களும் சுற்றமும் கொன்று –ராவணனுக்கு சிநேக விஷயமான அஷய குமாரன் தொடக்கமான புத்ரர்களையும் அவனுக்கு அந்தரங்கரான கிங்கரர் தொடக்க மானவரையும் கொன்று –முன்பு ராம தூதன் இப்பொழுது ராமதாசன்-உன் வரங்கள் பொய்க்கலாம் பெருமாள் சரங்கள் பொய்க்காது– -தேவியைக் கொடுத்து விடு இல்லையே; ஆவி போகும்–தூது வந்த குரங்குக்கே உங்கள் தோன்றல் தேவியை விட்டுக் கொடாதே – வெறும் கையே தூது வந்தான் ஒருவன் செய்தது இதுவானால் – நாம் இவளைக் கொண்டு இருப்போம் அல்லோம் என்று அவன் கையிலே பிராட்டியை விட்டுக் கொடாதே–கடி யிலங்கை மலங்க எரித்துத்-அரணை உடைத்தாய் அக்னியும் புகுர அஞ்சி இருக்கும் இவ்வூர் ஒருவர் கூறை எழுவர் உடுக்கும் படி அக்னியை பிரவேசிப்பித்து – (வாயு குமாரன் -அக்னி பெற்றதாயும் குமாரனும் சேர்ந்து வந்து -வாயு அக்னி பெற்றது அன்றோ -)-இளிம்பரான நாங்கள் இப்படிப் படா நின்றோம் –அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ–அச்சம் அல்லாத அன்று பட்டத்தை இன்று பட வேணுமோ
தொன்னீர் இலங்கை மலங்க விலங்கெரி யூட்டினான்
நன்னீர் நறையூர் தொழுது எழு மட நெஞ்சமே –6-4-6-கடலை அகழாக-(அகழியாக துர்கமாக ) உடைத்தான இலங்கை ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படி விலங்காலே எரி ஊட்டினான்-இலங்கு எரி ஊட்டினான்-பெருமாள் தோளை அண்டை கொண்டு அத்தாலே வயிறு நிறைய புஜித்து தன்னிறம் பெற்று உஜ்ஜ்வலமாம் படியைச் சொல்லுகிறது-முன்பு சோறு வேவப் பண்ணுகைக்கு வேண்டும் அளவு புக்கு வெளுத்து இருந்தது-அரக்கராவி மாள வன்று ஆழ் கடல் சூழ் இலங்கை செற்ற குரக்கரசன் என்றும் கோல வில்லி-—4-8-5– என்றும்-பிரித்த பையல் ஒருவனை அழித்த மாத்ரம் இல்லாமல்-ராக்ஷஸ ஜாதி அடங்க மாளும் படி ராவணன் எதிர்த்த அன்று அகாதமான கடலால் -இதுவே அரண் -அத்தை அழியச் செய்த வானவர் ஜாதிக்கு நிர்வாகன் –வானர ஜாதியைக் கொண்டு வென்றவன் –அரசன் –நிர்வாககன்-ப்ரஹ்மாதிகள் குடி இருப்பை அழித்த ராவணன் குடி இருப்பை அழித்து இடக்கை வலக்கை அறியாத வானர ஜாதிகளை பரிகரமாகக் கொண்டு ஆய்த்து
முன்பொலா ராவணன் தன் முது மதிள் லங்கை வேவித்து
அன்பினால் அனுமன் வந்து ஆங்கு அடியிணை பணிய நின்றார்க்கு
என்பொலாம் உருகி யுக்கிட்டு என்னுடை நெஞ்சம் என்னும்
அன்பினால் ஞான நீர் கொண்டு ஆட்டுவன் அடியனேனே -15-அதுவும் ஒரு காலமே -என்று வயிறு பிடிக்கிறார் – ஸ்ரீ ராமாயணத்தில் பேசின பரப்பை எல்லாம் ஒரு வார்த்தையாலே சொல்லுகிறார் – ஏக த்ரவ்யத்தை பின்னம் ஆக்கினாப் போலே தாயையும் தமப்பனையும் பிரித்த பையல் –சுரி குழற் கனிவாய்த் திருவினைப் பிரிந்த கொடுமையிற் கடுவிசை யரக்கனாகையாலே பொல்லாதவன் என்ற பொதுவிலே கொடுமையிற் கடுவிசை யரக்கனாகையாலே பொல்லாதவன் என்று பொதுவிலே சொல்லாமத்தனை யொழியப் பிரித்துப் பாசுரமிடப் போகாதென்க.-திருவடி வாலில் நெருப்பாலே சுடுவித்து –
நெருப்பும் காற்றும் கூடினால் போலே இறே வாயு புத்திரன் வாலில் -நெருப்பு –இட்டு வா என்றால் சுட்டு வர வேண்டுமே-கணையாழியை இட்டு வா சொல்லி-இலங்கையை சுட்டு -வேவித்து வந்தான்)அன்பினால் அனுமன் வந்து – காலால் அன்று போலே – அந ஸனம் தீஷித்தும் – கடல் கடந்தும் – யுத்தம் பண்ணியும் – இளைத்து இருக்கச் செய்தேயும் பிராட்டி திருவடியைத் தொழுது – த்ரஷ்டா சீதா -என்று பெரிய ப்ரீதி யோடு இறே வந்தது ஆங்கு அடியிணை பணிய நின்றார்க்கு – பிராட்டி விருத்தாந்தம் கேட்டு ஸ்தப்தராய் நின்றவர்க்கு –
தெற்கு நோக்கி தொழுதான் திருவடி-(த்ருஷ்டா தேவேதி ஹனுமத் வத நாதம் ருதோபமாம்
ஆகர்ண்ய வசனம் ராமோ ஹர்ஷ மாப ஸ லஷ்மண -ஸூந்தர –64-37-(’கண்டனென் கற்பினுக்கு அணியை’, கண்களால்
தெண் திரை அலை கடல் இலங்கைத் தென் நகர்;
அண்டர் நாயக! இனி, துறத்தி ஐயமும்
பண்டு உள துயரும்’ என்று அனுமன் பன்னுவான்.(சுந்தரகாண்டம், திருவடி தொழுத படலம்)நெஞ்சு என்ற பேராய்
பகவத் ப்ரேமமே வடிவாய் இருக்கிற அன்பாலே
ஜ்ஞானம் ஆகிற திரு மஞ்சனத்தாலே
நீராட்டுவன் –தெற்கு நோக்கி தொழுதான் திருவடி-(த்ருஷ்டா தேவேதி ஹனுமத் வத நாதம் ருதோபமாம்
ஆகர்ண்ய வசனம் ராமோ ஹர்ஷ மாப ஸ லஷ்மண -ஸூந்தர –64-37-(’கண்டனென் கற்பினுக்கு அணியை’, கண்களால்
தெண் திரை அலை கடல் இலங்கைத் தென் நகர்;
அண்டர் நாயக! இனி, துறத்தி ஐயமும்
பண்டு உள துயரும்’ என்று அனுமன் பன்னுவான்.(சுந்தரகாண்டம், திருவடி தொழுத படலம்)
நெஞ்சு என்ற பேராய் பகவத் ப்ரேமமே வடிவாய் இருக்கிற அன்பாலே ஜ்ஞானம் ஆகிற திரு மஞ்சனத்தாலே நீராட்டுவன் –அன்புடனே கூடின நீர் –அந் நீருக்கு சம்ஸ்காரம் இறே அன்பு –அடியனேனே –அங்குத்தைக்கு யோக்யராவது அடியார் ஆனால் போலே காணும் –பரிஷ்வங்கோ ஹனுமதோ -எனக்கே தன்னைத்தந்த கற்பகம்
எஞ்சலில் இலங்கைக்கு இறை எங்கோன் தன்னை முன் பணிந்து எங்கள் கண் முகப்பே
நஞ்சு தான் அரக்கர் குடிக்கு என்று நங்கையை அவன் தம்பியே சொன்னான்-10-2-4-பிராட்டியைக் கொண்டு புகுந்தானாய் இவ்வூரிலே வந்து இவளை மீட்க வல்லார் உண்டோ -என்று குறைவற்றவனாய் இருந்த ராவணனை நாங்கள் அடைய ஓலக்கம் கொடுத்துக் கொண்டு இருக்க எங்கள் முன்னே அவன் காலிலே விழுந்து-கல்யாண குணங்களால் பூரணையாய் இருக்கிற இவளை ராஷச குலத்துக்கு நஞ்சு கிடாய் -என்று ஸ்ரீ விபீஷண ஆழ்வான் சொன்னான் –கல்லார் மதிள் சூழ் கடி இலங்கைக் கார் அரக்கன் வல்லாகம் கீள வரி வெஞ்சரம் துரந்த வில்லானைச் செல்வ விபீடணற்கு வேறாக நல்லானை நாடி நறையூரில் கண்டேனே –6-8-5-ப்ரஹ்மாஸ்த்ராதிகளுக்கும் சிளையாத படி வரபலத்தாலே
திண்ணியதான உடல் கிழியும்படிக்கு ஈடாக தர்ச நீயமாய் தீப்த பாவக சங்காசை -என்கிறபடியே தொடுத்து விடும் போது அம்பாய் சத்ருக்கள் சரீரங்களில் அக்னியாய் பிரவேசிக்கும்அம்பை நடத்தின வில் வலியை உடையவனை –செல்வ விபீடணற்கு
ராவண பவனத்தை விட்டு-ஆகாச ஸ்தானனானன் ஆன போதே அந்தரிஷ கதஸ் ஸ்ரீ மான் -என்கிறபடியே ஸ்ரீ ராம சம்பந்தத்தால் வந்த ஐஸ்வர்யம் குடி கொண்டாய்த்து –வேறாக நல்லானை – வருகிற விபீஷணன் புகுரக் கடவன் அல்லன் என்று மகா ராஜர் உள்ளிட்டார் நிரோதிக்க அவனைக் கைக் கொள்ளுகை தவிரோம் – என்று பெருமாளும் நிர்பந்திக்க
ஆகில் கிஷ்கிந்தையில் பரிகரம் இங்கனே விடை கொள்ளுகிறது -என்ன வேணுமாகில் அது செய்கிறது -இது ஒரு படியாலும் தவிரோம் (கதஞ்சன -நத்வதேயம் ) என்று அவன் பக்கலிலே விசேஷித்து சங்கத்தைப் பண்ணினவனை-ராவணனுக்கு வில்லானானவனே இவனுக்கு நல்லான் -மித்ரா பாவேனே -வந்தாலும் -கைவிடேன்-கொல்லை அரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார் சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமை பொய்யன்றே —10-4-குமரனார் –நோவு பட்டவள் —தருனௌ ரூப சம்பன்னௌ–ஆரண்ய -19-14-என்று கூப்பிடும்படியான பருவம் படைத்தவர் – தான் பட்ட பரிபவத்தை முறைப்பட சென்றவள் இறே –தருனௌ -என்கிறாள் அப்பருவத்திலே துவக்கு பட்ட படியாலே – தான் பட்ட நலிவை சம்போக மத்யத்தில் பிறந்த போக சிஹ்னத்தோ பாதியாக நினைத்து இருந்தாள் யாய்த்து —
இல்லையாகில் பருவத்தை பேசக் கூடாது இறே –சொல்லும் பொய்யானால் –ஆஸீத சம்ஸ்லேஷ விரோதிகளை போக்கும் இடத்தில் அர்த்த க்ரியா கார்யமாம் படி பண்ணித் தலைக் கட்டுமவர்-இங்கு உக்தியையும் தலைக் கட்டு கிறிலர்-தம்மை ஆஸ்ரயித்தவர்கள் விரோதியைப் போக்கக் கடவ அவர் தம்மையும் -அப்போது நியமிக்க மாட்டு கிறிலர் –அவ்வார்த்தை பொய்யாம் என்று பொய்யானால் -என்கிறாள் அல்லள் அதுக்கு விஷயம் நாமாகையாலே தப்பிலும் தப்பும் என்கிறாள் –
தென் இலங்கை மன்னன் சிரம் தோள் துணி செய்து
மின் இலங்கு பூண் விபீடணன் நம்பிக்கு
என் இலங்கு நாமத்து அளவும் அரசு என்ற
மின் இலங்கு ஆரற்க்கு ஓர் கோல் கொண்டு வா
வேம்கட வாணற்க்கு ஓர் கோல் கொண்டு வா -2 -6-9 –ஒளி விடா நின்றுள்ள ஆபரணத்தை உடைய ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு – அந்தரிஷ கத ஸ்ரீ மான் -என்கிறபடியே இலங்கையை விட்டு அந்தரிஷ கதனான போதே ராவண சம்பந்தத்தால் வந்த அஸ்ரீ குடி போய் – ராம சம்பந்தத்தால் வந்த ஸ்ரீ யால் பூரணன்- ஆகையாலே -நம்பி என்கிறது-அஞ்சலி முத்தரையே ஒளி வீசும் ஆபரணம்-சரணாகதி பண்ண வேண்டியவனுக்கு வேண்டிய அங்கங்கள் அனைத்தும் நிறைந்தவன் -நம்பி-சிரஞ்சீவி -ராமநாமம் உள்ளளவும் அரசு —கைங்கர்யம்-கடலைக் கடக்க விபீஷணன் தனக்குப் பலித்த சரணாகதி -எருது கெடுத்தாருக்கும் ஏழு கடுக்காய் -திருப்புல்லாணி தர்பசயனம் கிடந்தகோலம் -நின்றவாறு மிருந்தவாறும் கிடந்தவாறும் நினைப்பரியன-5-10-6-புஜங்க சயனம் வீர சயனம் -தர்ப்ப சயனம்-பால சயனம் மாணிக்க சயனம் வீர சயனம் – இத்யாதி-கிடந்தவாறும்-“ஸ்ரீ ராமன் கடற்கரையில் கடலை நோக்கிக் கிழக்கு முகமாகக் கையைக் கூப்பிக் கொண்டு படுத்தார்” என்கிறபடியே,
“அஞ்சலிம் ப்ராங்முக: க்ருத்வா ப்ரதிஸிஸ்யே மஹோததே:”– ஸ்ரீராமா. யுத். 21 : 1.கடற்கரையிலே கிடந்த கிடையும்.-ப்ரதிஸிஸ்யே-எதிர் நோக்கிப் படுத்தார்” என்கிறதன்றோ, ஒரு கடலோடே ஒரு கடல் ஸ்பர்சித்து பொறாமை கொண்டு கிடந்தாற்போலே இருக்கையாலே; “கருணையங்கடல் துயின்றனன் கருங்கடல் நோக்கி” என்றான் அன்றோ. என்றது, பின்பு விடக் கடவதாகத் தொடுத்த அம்பு முன்பு விடமாட்டாமை இல்லை அன்றோ; அப்படிப்பட்ட அம்பு இருக்க, தம் தோள் வலி கிடக்க, தரம் போராதார் முகங்காட்டாதே இருக்கப் பொறுத்துக் கிடந்த கிடையைச் சொல்லுகிறது.
தருண மங்கையை மீட்பதோர் நெறி தரு கென்னும் பொருள் நயந்து நன்னூல் நெறி யடுக்கிய புல்லில்
கருணை யங்கடல் துயின்றனன் கருங்கடல் நோக்கி வருண மந்திரம் எண்ணினன்
விதிமுறை வணங்கி. -கம்பராமாயணம், வருணனை வழிவேண்டு படலம், 5.
கரந்திட்டு நின்ற கடலைக் கலங்க சரம் தொட்ட கைகளால் கொட்டாய் சப்பாணி -சாரங்க வில் கையனே சப்பாணி -1-6 7-மூன்று நாள் கிடந்த கிடக்கை–முகம் காட்டாதே மறைந்து நின்ற கடலை –பீதியாலே கீழ் மண் கொண்டு மேல் மண் எறியும்படி கலங்க – சாபமா ந யா ஸௌ மித்ரே சராம்சாசீ விஷோபமான் -என்கிறபடியே சீறி –கடல் என்கிற சப்தத்தாலே அபிமானியான வருணனை சொல்லுகிறது –அப்போது கையும் வில்லுமாக நின்ற அழகை உடையவன்-வேலை வேவ வில் வளைத்த வெல் சினத்த வீர நின்
பாலராய பத்தர் சித்தம் முத்தி செய்யு மூர்த்தியே –31-கடல் சுஷ்கத்ர்ண சமூஹம் போலே தக்தமாம்படி -வில் வளைத்தவனாய் –பிரதி பஷத்தை வெல்லும் சினத்தை உடைய வீரனே –இத்தால் ஆஸ்ரிதருக்கு ஸுவ அனுபவ விரோதி-வர்க்கத்தை அநாயாசேந போக்குமவன் என்கை இவன் சினம் வென்றதின் பின் தான் தீரும் – வெல் சினத்த வீரன் -என்கிறார் அதனால்-வெண் திரைக் கரும் கடல் சிவந்து வேவ முன்னொரு நாள்
திண் திறல் சிலைக்கை வாளி விட்ட வீரர்-50-வெளுத்த திரைகளை உடைத்தான கரும் கடல் –திரைக் கிளர்த்தியின் மிகுதி சொல்லிற்று –கறுத்த கடலோடு வெளுத்த திரைகளோடு வாசியற அக்நியின் நிறமான சிவப்பே நிறமாய் மறுகும்படி தக்தமான படி –-இத்தால் -ஆஸ்ரித ரஷணத்துக்கு வருணன் விரோதியாக அவனுக்கு இருப்பிடமான கடலை அழியச் செய்தபடி-இருபத்தெட்டாம் சதுர் யுகத்தில் மிக்க வலியை உடைய ஸ்ரீ சார்ங்கத்தை
சாப மாநய -என்கிறபடியே வாங்கி அம்புகளை ஏவின ஆண் பிள்ளை red sea-அம்பால் சிவக்க -கடலசரன் பணி கொண்டு-
மிடைத்திட்டு எழுந்த குரங்கைப் படையா விலங்கல் புகப் பாய்ச்சி விம்ம கடலை
அடைத்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே—10-6-7-நெருக்கிக் கொண்டு தோற்றின ஸ்ரீ வானர வீரர்களையே சேனையாகக் கொண்டு மலைகளை இட்டு நிரம்பும் படியாக பாய்ச்சி கடலை அணை செய்தவன் கிடீர்-மஹத் தத்வமான கடலை அணை கட்டினவன் கிடீர் இன்று ஒருத்தி கட்டு அவிட்க மாட்டாதே இருக்கிறான் –
வெற்பெடுத்து வேலை நீர் கலக்கினாய் அதன்றியும்
வெற்பெடுத்து வேலை நீர் வரம்பு கட்டி வேலை சூழ்
வெற்பெடுத்த இஞ்சி சூழ் இலங்கை கட்டழித்த நீ
வெற்பெடுத்து மாரி காத்த மேக வண்ணன் அல்லையே –39துர்வாசசாபத்தாலே இந்த்ராதிகள் ஐஸ்வர்யத்தை இழந்து -சரணம் த்வாம் அநுப்ராப்தா –
என்கிறபடியே திருவடிகளில் சரணம் புகுர -கடல் கொண்டு முழுகும் மந்த்ரத்தைப்
பரிகரமாகக் கொண்டு சமுத்திர ஜலத்தில் அவர்கள் இழந்தவை அடங்கலும்
உத் பன்னநாம் படி கலக்கினாய் -ரத்நாகரம் -மத்ஸ்யாகரம்-என்று லோக பிரசித்தமாய்
இருந்துள்ள சமுத்ர ஸ்வபாவத்தை தவிர்ந்து ஸ்வர்க்கத்தில் உள்ள பதார்த்தங்களுக்கு
உத்பாதகம் ஆக்கினாய் –பிரயோஜ நாந்தர பரன் என்று அவன் சிறுமை பாராதே -மோஷ பிரதனாய் இருக்கும் தன் பெருமை பாராதே -ஈச்வரோஹம் – என்று இருக்குமவன் என்று அவன் பூர்வ வ்ருத்தம் பாராதே -சரணம் என்று நின்றான் -என்றத்தையே பார்த்து ரஷித்து அருளினாய் –அதன்றியும் – இது தானே போருமாய்த்து -ஆஸ்ரிதர் உன்னை தஞ்சம் என்று விஸ்வசித்து இருக்கைக்கு -அதுக்கு மேலே –வெற்பெடுத்து வேலை நீர் வரம்பு கட்டி –
கண்ட மலைகளைப் பிடுங்கி சமுத்திர ஜலத்தின் மேலே -பூமியிலே வரம்பு கட்டுமா
போலே -ப்லவங்கங்கள் காலாலே நடந்து போம்படி அணை கட்டி – இது ஒரு அதிமானுஷமான ஆச்சர்யம் -அகாதமான சமுத்ரத்திலே மலை யமிழ்ந்தது இல்லை -திரைக் கிளர்த்தியில் மண் கரையப் பெற்றதில்லை –வேலை சூழ் வெற்பெடுத்த இஞ்சி சூழ் இலங்கை கட்டழித்த நீ – கடலை அழகாக உடைத்தாய் -த்ரிகூட பர்வதத்திலே விச்வகர்மாவாலே சமைக்கப் பட்டதாய் -கடக்க வரிதான மதிளாலே சூழப்பட்ட லங்கையின் அரணை –யதாஸை கதமம் பஸி -என்கிறபடியே தார்மிகனை நிர்வாஹகனாக்கி தர்மமே
சஞ்சரிக்கும் படியைச் சொல்லிற்று –
குரங்குகள் மலையை நூக்கக் குளித்து தாம் புரண்டிட்டு ஓடித்
தரங்க நீர் அடிக்கல் உற்ற சலமிலா வணிலம் போலேன்
மரங்கள் போல் வலிய நெஞ்சம் வஞ்சனேன் நெஞ்சு தன்னால்
அரங்கனார்கு ஆட்செய்யாதே அளியத்தேன் அயர்க்கின்றேனே –27-மலைகளாலே கடலைத் தூர்க்கிற விடத்தில் மலைகளுக்கு தொகை உண்டாய் – ஸ்ரீ வானர வீரர்களுக்கு தொகை இல்லாமையாலே ஒரு மலையை அநேகர் கூடித் தொட்டுக் கொண்டு வருவார்கள் ஆய்த்து –ஒரு மலை ஒருவற்கு பாத்தம் போராதபடி பெரு மிடுக்கராய் இருக்கச் செய்தேயும்
உபாத்யாயர் ஊசி போலே –மரத்தில் ஊசி குத்தி கொண்டு வந்த சிஷ்யர் கூட்டம் போலே –
எல்லோரும் கிஞ்சித் கரித்து ஸ்வரூபம் நிலை பெற வேணும் என்று இருக்கிறவர்கள் ஆகையால் இப்படி செய்கிறார்கள் ஆய்த்து –ஸ்வரூப ஜ்ஞானம் உடையாதரோடு இல்லாதாரோடு வாசி அற துரும்பு எழுந்து ஆடும் படி இறே அடிமை கொள்ளுகிறவர் கையும் வில்லுமாய் நின்ற நிலை தான் –மலையை நூக்க –கடலிலே பொகட -என்னாதே -நூக்க -என்றது –ஒரு திரளுக்கு ஒரு மலை விஷயமாகவும் போராமையாலே வேறு ஒரு திரளும் வந்து பற்ற அவர்கள் பக்கலிலே -நூக்க -இப்படி கை மேலே போலே யாய்த்து மலை கடலிலே புகுவது –அவகாஹ் யார்ணவம் ஸ்வப்சயே-என்று கொண்டு பெருமாளுக்கு ஆற்றாமை கரை புரண்டு செல்லா நிற்க அக் கார்யத்துக்கு வேண்டுவார் ப்ரவர்தியா நின்றார்கள் ஆறி இருக்க ஒண்ணாது இறே – கடல் தூர்ப்புண்டு அக்கரைப் பட்டதாய் விடவற்று என்னும் த்வரையாலே எல்லாரும் ஒக்க ப்ரவர்த்திதார் ஆய்த்து-குளித்து தாம் புரண்டிட்டு ஓடித்
குளித்து –ஸ்ரீ வானர வீரர்கள் உடைய த்வரை தான் அணில்களுக்கு போந்திராமையாலே
பெருமாளுக்கு ஆற்றாமை கரை புரளா நிற்க முதலிகளுக்கு இத்தனை மெத்தனம்
எல்லாம் தான் என் –இருந்தபடியால் சடக்கெனக் கடல் அடைக்க இவர்களுக்கும் சக்தி இல்லை –ஆன பின்பு மலையாலே தூர்ப்புண்ட பிரதேசத்துக்கு மணல் சுமக்க பரிகரம் இல்லையே என்று அணில் நீரிலே புக்குத் தோய்கையும் கரையிலே ஏறினால் மணல் தொற்றுகையும் உதறினவாறே விட்டுக் கழிகையும் இவை முன்பே கை கண்ட படியாலே
இப் பிரகாரத்தாலே கடலைத் தூர்ப்போம் என்று பார்த்து கடலிலே புக்கு முழுகும் ஆய்த்து –
இம் முழுக்கு தன்னாலே நீர் சுவரும் மணலும் கொண்டு வரலாம் என்று ஆய்த்து நினைவு –தாம் –கடலிலே நீர் சுவறுவதும் மணல் தொற்றுவதும் தம் உடம்பிலே என்று அறியாது யாய்த்து அடிமையில் த்வரையாலே தாழ்வு பட்ட கார்யம் அடங்க தங்களாலே தலைக் கட்டுகிறதாக அபிமாநித்துத் திரிகிறபடியால் – தாம் -என்னவுமாம் –புரண்டிட்டு ஓடி –
புக்க மலைகளுக்கு நொய் மணல் புக்குச் சொரிந்து கொண்டு வருகிறபடி போராது என்று பார்த்து மணலிலே புரண்டோடி நிற்கும் யாய்த்து –உள்ள மணலும் வழியிலே உதிரும்படியாக ஓட-இடையில் நின்றவர்கள் இவற்றின் த்வரையைக் கண்டு என் தான் இத்தனை வேகம் என்றால் –பெருமாளுக்கு பகல் அமுது இலங்கையில் வடக்கு வாசலில் விடுவித்ததாய் இருக்கும் உங்களுக்கு த்வரை அற்று இருந்ததீ-என்னும் யாய்த்து – ருசியானது தாம்தாம் அளவைப் பார்க்க ஒட்டாது இறே-தரங்க நீர் அடிக்கல் உற்ற –
திரையை உடைத்தாய் கிளர்ந்து இருந்துள்ள கடலை அடைக்கையிலே சமைந்த-உற்ற –
கடலை அடைக்கிறவர்கள் தாங்களாய் முதலிகளும் தங்களுக்கு எடுத்துக் கை நீட்டுபவர்களாய் ஆய்த்து இவற்றின் உடைய அபிமானம் –சலமிலா வணிலம் போலேன் –
இவற்றின் உடைய வியாபாரம் அங்குத்தைக்கு கிஞ்சித் காரமாய் பலிப்பது ஓன்று இல்லை யாகில் இது அடிமை யாகிற படி எங்கனே என்னில் – அடிமை கொள்ளுகிறவனுக்கு இவற்றின் பாவ சுத்தியே அமையும் -என்கை –சலமிலாமை யாவது – கடல் தூரப்புண்டு பெருமாள் அக்கரை பட்டார் ஆக வல்லரே -என்கிற பாவத்தில்புரை அற்று இருக்கை –
சலம் -வ்யாஜம்-இலா -இல்லாமை –-நின்ற நிலை பேராதே நிற்கை – சாஸ்திர வஸ்யதையும் இன்றிக்கே –வர்ணாஸ்ரம நியமும் இன்றிக்கே –ஹஸ்த பாதாதி கரணமும் இன்றியிலே இருக்கிற திர்யக் சாமான்யமான மாத்ரமான இவை-குளிப்பது-ஓடுவது-புரளுவது ஆகிற இவற்றின் உடைய பாவமும் எனக்கு இல்லை என்று குளித்து -மூன்று அனலை –ஒளித்திட்டேன் -என்கிறார் ––
விலங்கலால் கடலடைத்து விளங்கு இழை பொருட்டு வில்லால்
இலங்கை மா நகர்க்கு இறைவன் இருவது புயம் துணிந்தான்
நலங்கொள் நான்மறை வல்லார்கள் ஓத்தொலி யேத்தக் கேட்டு
மலங்கு பாய் வயல் திருப்பேர் மருவி நான் வாழ்ந்த வாறே—5-9-6-நீரிலே ஆழக் கடவதான மலைகளாலே கடலை அடைத்து விளங்கா நின்றுள்ள ஆபரணத்தாலே அலங்க்ருதையான
பிராட்டி உடைய ஒப்பனையிலே தோற்று ஷத்ரியத்வத்துக்கு ஏகாந்தமான வில்லாலே ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கும் அழியாத இலங்கை அன்றோ எனக்குப் படை வீடு
நான் இவ் ஊருக்கு நிர்வாஹகன் அன்றோ -என்று அபிமானித்து இருக்கிற ராவணன் உடைய அவ் ஊருக்கு கணையம்-உழல் தடி -ரக்ஷகம் – போலே இருக்கிற தோள்களைத் துணித்தான் ஆய்த்து –
அன்று ஆயர் குலமளுக்கு அரையன் தன்னை அலை கடலைக் கடைந்த அம்மான் தன்னைக்
குன்றாத வலி யரக்கர் கோனை மாளக் கொடுஞ்சிலை வாய்ச் சரம் துரந்து குலங்களைந்து
வென்றானைக் குன்றெடுத்த தோளினானை-29-பிராட்டியை லபிக்கைக்காக கடலைக் கடைந்தது –அவளுடைய தனிமையைத் தீர்க்கைக்காக கடலைக் கடந்தது –யாருக்காக நீ கடலைக் கடைந்தாயோ,யாருக்காக நீ கடலில் அணை கட்டினாயோ–பிராட்டியைப் பெறுதலே முக்கிய மான பலன்; மற்றது ஆநுஷங்கிகம் -அம்ருத பிரதானமும் குடி இருப்பு கொடுக்கையும் ஆநுஷங்கிகம் -இறே –தெய்வீக ஸ்ருங்கார ரஸத்துக்கு அடையாளமே சேது-
ஆனைப் புரவித் தேரொடு காலாள் அணி கொண்ட
சேனைத் தொகையைச் சாடி இலங்கை செற்றானூர்-6-5-3-ராவணனுடைய படை எழுச்சியை
அந்த க்ரமத்திலே பேசுகிறார் – மலைகள் நடந்தால் போலே யானைகளைப் புறப்பட விட்டு
அநந்தரம் – குதிரைகளை விட்டு-அநந்தரம் தேர்களாலே அலங்கரித்து – இவை அத்தனைக்கும் காவலாக காலாளைப் புறப்பட விட்டு இப்படிப் பட்ட சேனா சமூஹத்தை துகைத்து கழித்து இலங்கையை அழியச் செய்த தசரதாத் மஜன் வர்த்திக்கிற ஊர்
கான வெண்கும் குரங்கும் முசுவும் படையா அடல் அரக்கர்
மானம் அழித்து நின்ற வென்றி யம்மான் எனக்கு என்றும்
தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமம்
நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணமே —6-10-6-இந்த்ராதி தேவதைகள் முதுகிட்டு போமது ஒழிய எதிர் நிற்க மாட்டாத படி பண்ணும் மிடுக்கை உடையனான
ராவணன் உடைய துர்மாநத்தை போக்கும் இடத்தில் – இடக்கை வலக்கை வாசி அறியாதே
என்றும் காட்டிலே வர்த்திக்குமது ஒழிய பூசல் கண்டு அறியாத – எண்கும் -கரடியும்-குரங்கையும் முசுவையும் சேனையாகக் கொண்டு திக்பாலாதிகளை அழியச் செய்த மிடுக்கை உடைய ராவணன் உடைய மானம் அழித்து நின்ற வென்றி யம்மான் -துர்மாநத்தைப் போக்கின சர்வாதிகன் –
ஒரு முறை இரு சுடர் மீதினிலியங்கா மும் மதிளிலங்கை இரு கால் வளைய ஒரு சிலை
ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் வாளியின் அட்டனை–ஒரு பர்யாயம் சந்த்ராதித்யர்கள் மேலே சஞ்சரிக்கப் பயப்படும்படியாய் –கிரி துர்க்க ஜல துர்க்க வன துர்க்க என்கிற
மூன்றையும் உடைத்தான நினைத்தாற்கு அஞ்ச வேண்டும்படியான ராஷசர்
குளவிக் கூடு சேர்ந்தால் போலே சேர்த்து அம்மணக் கூத்தடிக்கும் தேசம் –இரண்டு கோடியும் வளைந்து நிற்கும் பிரதானமான ஸ்ரீ சார்ங்கத்திலே பொருந்தி –
இரண்டு எயிற்றையும் யுடைத்தாய் -நெருப்பை உமிழா நின்றுள்ள சரத்தாலே கட்டுப் பொகட்டாய்-ப்ரஹ்ம சிருஷ்டியைப் போல் அன்றியே – பத்தும் பத்தாக அம்பால் எதிர்த்துப்-பிராட்டியினுடைய சம்ச்லேஷ விரோதியைப் போக்கினால் போலே என்னுடைய விரோதிகளையும் போக்க வேண்டும் என்று கருத்து-பிரிவுக்கு ஹேது பூதனான ராவணனை அழியச் செய்தாள் பிராட்டியோ -நீ யன்றோ –ஒரு கால் சந்த்ர ஸூர்யர்களும் கூட மேலே சஞ்சரிக்கவும் அஞ்சும்படியாய் காட்டரண் மலை யரண் நீர் அரண் என்கிற மூன்று வகைப்பட்ட அரணை யுடைத்தாய் இருக்கிற இலங்கையை வில்லினுடைய கோடித்வயமும் வளையும் படி அத்விதீயமான ஸ்ரீ சார்ங்கத்திலே பூட்டப்பட்டு -இரண்டு எயிற்றையும் யுடைத்தாய் தொடுக்கும் போது அம்பாய் எதிரிகள் மேலே தைக்கும் போது நெருப்பாய்த் தைக்கும் அம்பாலே முடித்தாய்-
அலம்பா வெருட்டா கொன்று திரியும் அரக்கரை
குலம் பாழ் படுத்து குல விளக்காய் நின்ற கோன் மலை-4-2-1-பிராணிகளை இருந்த இடத்தில் இருக்க ஒண்ணாதபடி அலைத்து- அதாவது – இவர்கள் கீழ் நமக்கு வர்த்திக்க போகாது – எங்கே போவோம் -என்று நின்று தளும்பும் படி பண்ணுகை-வெருளப் பண்ணி –
அதாவது தங்களுடைய உக்ர வேஷங்களையும் உக்ர வியாபாரங்களையும் -கண்டு பயப்படும்படி பண்ணுகை-அலம்பா வெருட்டா -என்றதுக்கு ஆராவரித்து சிவிட்கை விளைத்து அஞ்சப் பண்ணி -என்னவுமாம்-
மாறு நிரைத்திரைக் குஞ்ச ரங்களின்
நூறு பிணம் மலை போற் புரளக் கடல்
ஆறு மடுத்து உதிரப் புனலா அப்பன்
நீறு பட இலங்கை செற்ற நேரே.–7-4-7-சாரிகை வருகிற கடுப்பாலே எதிராக நிரைத்து இரையா நிற்கிற சர ஸமூஹத்தாலே -ஓர் அம்பை விட்டால் அதற்கு எதிராக மற்றை யம்பை விடுகையாலே திருச் சரங்கள் தன்னிலே முட்டி த்வநிக்கிற படி-இனமான நூறு நூறாக பிணங்கள் மலை போலே புரண்டு கிடக்க -அநேக பிணங்கள் என்றுமாம்-பூர்ய மாணமசல ப்ரதிஷ்ட்டம்-என்கிறபடியே அவிக்ருதமான கடல் ரத்தத்தால் நிரம்பி ஆறுகளில் எதிரே மடுத்து ரக்த ஜலமாக -ரக்ஷகனானவன் லங்கை பஸ்மாமாம் படி அழித்த நேர்பாடு என்னுதல் -நேரே என்று ஐஸ்வர்யமான ப்ரபாவத்தாலே அன்றிக்கே செவ்வையான ஆண் பிள்ளைத் தனத்தால் என்னுதல் -க்ருதரிம யோதிகளான ராக்ஷஸரைத் போல் அன்றிக்கே நேர் போராக என்னுதல்-
தான் போலும் என்று எழுந்தான் தரணியாளன் அது கண்டு தரித்து இருப்பான் அரக்கர் தங்கள் கோன் போலும் என்று எழுந்தான் குன்றம் அன்ன இருபது தோளுடன் துணித்த ஒருவன் கண்டீர்-4-4-6-தான் போலும் -ஷத்ரியன் போலே எதிரி என்று வந்தான்-அது கண்டு தரித்து இருப்பான் ராஷசராஜானாம் -என்று கிளர்ந்து எழுந்த ராவணன் உடைய மலை போல் இருக்கிற இருபது தோளையும் துணித்த தனி வீரன் கிடீர்-சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற-பாகவத அபசாரம் பொறாமல் சினம் கொண்டு மகுட பங்கம்-வெறும் கையே போகும்படி அவமானப்படுத்தி போக வைத்த என்பதையே செற்ற-மனத்துக்கு இனியான்–
காற்றிடைப் பூளை கரந்தன வரந்தை யுறக் கடல் அரக்கர் தம் சேனை
கூற்றிடைச் செல்லக் கொடுங்கணை துரந்த கோல வில்லி ராமன் தன் கோயில்-4-10-6-பெரும் காற்றிலே பூளைப் பூவானது பறந்து உரு மாய்ந்து போமா போலே-துன்பம் உற-ஓதம் கிளர்ந்த -ஓங்கிக் கிளர்ந்த கடல் போல் மிகைத்து வந்து தோற்றின ராஷச சேனை எல்லாம் -முன்பு யமனைத் திறை கொண்டு -ஜெயித்து – பர தந்த்ரனாக்கி வர்த்தித்தவர்கள்-இப்போது அவனுக்கு குடி மக்களாக திக் விஜயம் பண்ணுகிற போது முந்துற அழியச் செய்வது யமனை இறே–கொடுங்கணை துரந்த – பெருமாள் கண் பார்க்கிலும் கண் பாராத க்ரௌர்யத்தை உடைய அம்பை விட்ட கோல வில்லி ராமன் தன் கோயில் – கையில் வில் பிடித்த பிடியிலே முடிந்து போகிற ராஷசர் அடங்க இவன் கையில் நாம் பட்டுப் போனால் ஆகாதோ -என்னும்படி தர்ச நீயமான வில்லை உடைய சக்கரவர்த்தி திரு மகன் வர்த்திக்கிற திருக் கோயில்(கோலம் வில்லுக்கு விசேஷணம் )-இன்று போய் நாளை வா—கும்பகர்ணனும் தோற்று உனக்குப் பெரும் துயில் தந்தானோ–
மிகப் புருவம் ஒன்றுக்கு ஒன்றோ ஒசணையான் வீழ ஒரு கணையால் அன்றிக் கொண்டு எய்தான் அவன் –29-ஒரு புருவத்துக்கு ஒரு புருவம் யோசனை நீளம் -10 mile -நீளம் உடைய-கும்பகர்ணன் பட்டு விழும்படி சங்கல்பத்தால் அன்றிக்கே திருச் சரத்தாலே-தேவ கார்யம் செய்தானாகை அன்றிக்கே தனக்கே வந்ததாக சீற்றத்தை ஏறிட்டுக் கொண்டு-எய்தான் –சங்கல்பத்தால் கொன்றான் ஆகில் நற் கொலையாய் இருக்குமே
ஷமையா பிருத்வி சமயா –அவஸ்தை மாறி-க்ரோதம் ஆஹாரயத் தீவ்ரம் -கோப வஸ்யமாகி–தேவர் கார்யம் செய்தானாகை இன்றிக்கே தனது காரியமாக -ஏறிட்டுக் கொண்டு செய்த செயல் – வெந்நரகம் சேரா வகையே சிலை குனித்தான் அன்றோ
எம்பிரானே என்னை ஆள்வா என்று என்று அலற்றாதே
அம்பின் வாய்ப்பட்டு ஆற்ற கில்லாது இந்த்ரஜித் அழிந்தான்
நம்பி அனுமா சுக்ரீவா வங்கதனே நளனே
கும்பகர்ணன் பட்டுப் போனான் குழமணி தூரமே —10-3-2-மூல பல சேனையும் தான் ஒருவனே அழித்து-
செருக்கடுத்தன்று திகைத்த வரக்கரை
உருக்கெட வாளி பொழிந்த வொருவனே–8-6-2–யுத்த கண்டூதி வர்த்தித்து திகைத்த வரக்கரை-சக்கரவர்த்தி திருமகனை வெல்ல நினைத்த மதி கேடரான ராக்ஷஸரை –அன்று -ந நமேயம்-என்ற அன்று –உருக்கெட -சின்னம் பின்னம் சரைர்த்தக்தம் –வாளி பொழிந்த-சர வர்ஷம் வவர்ஷஹ –ஒருவனான –பிரான் கண்டீர் -ஏக வீரனான உபகாரகன் கண்டீர் –
ஒருவர் இருவர் ஓர் மூவர் என நின்று
உருவு கரந்து உள்ளும் தோறும் தித்திப்பான்-8-6-3-மூல பலம் சாம்படி அருளுகிற அன்று முந்துற ஒருவனாய்த் தோற்றி -சாரிகையிலே வேகம் மிக மிக இருவரும் மூவருமாய்த் தோற்றி –உருவு கரந்து –வேகம் மிக்க வாறே இந்திரிய சம்யோகத்துக்கு இடம் இல்லாத படி யாகையாலே -ரூப கிரஹணம் அரிதாய் -உருக்கெட வாளி பொழிந்த வொருவனே-என்று அந்வயம் –வ்யாபரித்த சடக்காலே ரூபம் கண்ணுக்கு பிடிபடாது ஒழிகை –
மூள வெரி சிந்தி முனி வெய்தி யமர் செய்தும் என வந்த வசுரர்
தோளு மவர் தாளும் முடியோடு பொடியாக நொடியாம் அளவெய்தான்
வாளும் வரி வில்லும் வளை யாழி கதை சங்கம் இவை யங்கை யுடையான்
நாளும் உறைகின்ற நகர் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே—5-10-5-புகையும்படி அதுக்கடியான அக்னியை சிந்தி சீறி பூசல் பொரும் இத்தனை -என்று வந்த அசுர -தாளைக் குறையா தோளைக் குறையா முடியைத் தள்ளா ஒரு ஷண காலத்திலே எய்தவன் வர்க்கத்தின் உடைய அப்படி இன்னமும் யுத்தத்துக்கு பரிகரமான வாளும் தர்ச நீயமான வில்லும் வளைந்த வாயை உடைத்தான திரு ஆழியும் கதையும் இவற்றை அழகிய திருக் கையிலே உடையவன்
மாதலி தேர் முன்பு கோல் கொள்ள மாயன் இராவணன் மேல் சரமாரி
தாய் தலை யற்று யற்று வீழத் தொடுத்த தலைவன் வர எங்கும் காணேன்
போதலர் காவில் புதுமணம் நாறப் பொறி வண்டின் காமரம் கேட்டு உன்
காதலியோடு உடன் வாழ் குயிலே என் கரு மாணிக்கம் வரக் கூவாய் —5-3-மாதலி பச்சைக் குதிரை -ஏழாம் நாள் இந்திரனின் கைங்கர்யம் -இந்திரன் என்றும் ஒக்க முது காட்டிப் போருகையாலே ஒரு நாளும் முன் நின்று அறியான் யாய்த்து – பெருமாளும் ராவணனுமாக பொருத அன்றாய்த்து-முன் நின்று சாரத்தியம் பண்ணப் பெற்றது –மாயன் ராவணன் –
செவ்வை பூசல் பொர அறியாத -என்றும் ஒக்க வஞ்சனத்தால் பொருமவன் யாய்த்து –த்வம் நீச சச வத் ஸ்ம்ருத-சுந்த -32-16-என்றாள் இறே பிராட்டியும் –கோழையாய் ராஜ புத்ரர்களை மதித்து இருந்த படியாலே –அவர்களை அகற்றி தனி இருப்பிலே கொடு போர்க் கடவ நீயே இவ்வார்த்தை சொல்லுகிறாய் -என்கிறாள்-யதந்தரம் சிம்ஹ ஸ்ருகாலயோர்வனே -ஆரண்ய -47-45-என்று – சிம்ஹ ஸ்ருகாலயோ-என்றவாறேதன்னை சிம்ஹமாக சொன்னால் என்று பையல் பிரமிக்கக் கூடும் என்று –த்வம் நீச சச வத் –என்றாள் இறே -நீ முயல் போன்றவன் என்று பிரித்துக் கொண்டு போந்து தனி இருப்பு இருத்தினவன் முன்னே இறே இவ்வார்த்தை சொல்லுகிறது – அவனை மதியாத வீர பத்னி யாகையாலே-மாயன் ராவணன் மேல் -வஞ்சகனான ராவணன் மேலே- சர மாரி-சர வர்ஷம் வவர்ஷ ஹ –என்கிறபடியே பாட்டம் பாட்டமாக –தாய் தலை யற்று யற்று வீழத் தொடுத்த தலைவன் வர எங்கும் காணேன் பிரதானமான தலை அற்று வீழ – தாய் தலை -மெய்யான தலை -என்றவாறு-திருச் சரங்கள் பண்ணின பாக்யத்தாலே அறுக்க அறுக்க முளைத்தது யாய்த்து
பின்னை அது தானே போது போக்காக நின்று கொன்றான் யாய்த்து அப்படி முளைத்தது இல்லையாகில் திருச் சரங்களின் வரவு இவனால் -பெருமாளால் -பானங்களை திருப்தி செய்து அடக்கப் போகாதே-தலைவன் -தீரோத்தாத நாயகன்
தோள் இரண்டும் எட்டு ஏழும் மூன்றும் முடி அனைத்தும்
தாள் இரண்டும் வீழச் சரம் துணிந்தான் -தாள் இரண்டும்
ஆர் தொழுவார் பாதம் அவை தொழுவது அன்றே என்
சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு —43–எட்டும் இரண்டும் ஏழும் மூன்றுமாக இருபது தோள்களையும்-முடி அனைத்தையும்-முடி அனைத்தும்-
அறுக்க வறுக்க முளைக்கையாலே ஒரு சங்க்யை சொல்ல ஒண்ணாத படியான தலைகளையும் – தாள் இரண்டும் வீழச் –இவை எல்லா வற்றுக்கும் ஆதாரமான தாள் இரண்டையும் விழும்படிக்கு ஈடாக- சரத்தை துரந்தவன்–சரம் துணிந்தான் –இந்த க்ரம விவஷையால் பிரயோஜனம் – திருச் சரத்துக்குப் போது போக்குண்டாம் படி பண்ணுகையைச் சொல்லுகை –திருச்சரம் விளையாடின க்ரமம்-ஆஸ்ரித விரோதி யாகையாலே- நம்மாலே ஸ்ருஷ்டன் என்றும் பாராதே-முடியச் செய்தவனுடைய திருவடிகள் இரண்டையும்- யாவர் சிலர் தொழுதார்கள்-ஏதேனும் ஜன்மம் ஆகிலும் அவர்கள் உடைய தாளைத் தொழுகை அன்றோ-புருஷார்த்தம் தர வந்த தோள் செய்யும் உபகாரம்-
சரங்களைத் துரந்து வில் வளைத்து இலங்கை மன்னவன்
சிரங்கள் பத்தறுத்து உதிர்த்த செல்வர் மன்னு பொன்னிடம்
பரந்து பொன்னிரந்து நுந்தி வந்தலைக்கும் வார் புனல்
அரங்கம் என்பர் நான்முகத் தயன் பணிந்த கோயிலிலே –51-
இலைத்தலைச் சரம் துரந்து இலங்கை கட்டு அழித்தவன்
மலைத்தலைப் பிறந்து இழிந்து வந்து நுந்து சந்தனம்
குலைத்தலைத் திறுத்து எறிந்த குங்குமக் குழம்பினோடு
அலைத் தொழுகு காவிரி அரங்கமேய வண்ணலே –54-
இலங்கை மன்னன் ஐந் தொடைந்து பைந்தலை நிலத்துகக்
கலங்க அன்று சென்று கொன்று வென்றி கொண்ட வீரனே
விலங்கு நூலர் வேத நாவர் நீதியான கேள்வியார்
வலம்கொளக் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே –56-குளவிக்கூடு சேர்த்தாப் போலே ஹிம்சகர் சேர வர்த்திக்கும் இலங்கைக்கு நிர்வாஹகனான ராவணன் -ராவணோ ராஷஸேஸ்வர -என்கிறபடியே அந்த துர் வர்க்கத்துக்கடைய நிழலாய் இருக்குமவன் இறே ஐந்தொடைந்து பைந்தலை நிலத்துக-அறுக்க அரிதான பத்துத் தலையையும் பூமியிலே உதிர்த்து உரு மாய்ந்து போம்படி-பைந்தலை -வலிய தலை-ஐந்தொடைந்து-என்று தசேந்த்ரியாநநம் -என்கிறபடியே அநந்ய பிரயோஜனருக்கு பாதகமான சில வஞ்சகங்களை நினைக்கிறார் ஆய்த்து –கலங்க அன்று சென்று கொன்று வென்றி கொண்ட வீரனே –
பயமிருக்கும்படி அறியாதவன் பயத்தாலே போக்கற்று கலங்கும்படி – இவனுக்கு வரம் கொடுத்த தேவதைகளும் குடி இருப்பு இழக்கும்படியான தசையிலே ஜனஸ்தான வதத்தையும் -சேது பந்தனத்தையும் பண்ணிச் சென்று அவனைக் கொன்று விஜயத்தை லபித்த ஆண் புலியானவனே –
சங்கு தங்கு முன்கை நங்கை கொங்கை தங்கல் உற்றவன்
அங்க மங்க வன்று சென்று அடர்த்து எறிந்த வாழியான்
கொங்கு தங்கு வார் குழல் மடைந்தமார் குடைந்த நீர்
பொங்கு தண் குடந்தையுள் கிடந்த புண்டரீகனே –57-வளை கழலாதே இருந்துள்ள முன்கையை உடையவள் –அவன் கொண்டாடும் வளை- முன் கை வளை – யாகையாலே வ்யதிரேகத்தில் கழலுவதும் அதுவே இறே -இத்தால் -நித்ய அநபாயிநி -என்கை –நங்கை-
ரூப குணத்தாலும் ஆத்ம குணத்தாலும் பூர்ணை யானவள் –துல்ய சீல வயோ வ்ர்த்தாம் துல்ய அபி ஜந லஷணாம் –என்கிற பிராட்டி பக்கலிலே –கொங்கை தங்கல் உற்றவன் அங்க மங்க –திருவடிகளில் தங்க ப்ராப்தமாய் இருக்க -மாதர் விஷயம் என்று பாராதே அதிக்ரமத்தை நினைத்த ராவணனுடைய சரீரம் அழிகைக்காக –தங்கல் -தொங்கல்
இந்த துர் புத்திக்கு அடி -தேஹாத்ம அபிமானம் ஆகையாலே அதுக்கடியான சரீரத்தை
யாய்த்து அழிக்க நினைத்தது-வன்று – உடலையும் உயிரையும் பிரித்தாப் போலே -இருவரையும் கடலுக்கு அக்கரையும் இக்கரையுமாம்படி பண்ணின அன்று என்னுதல்
வேணி யுத்க்ரதந தசையிலே -என்னுதல்-சென்று ––அபியாதா ப்ரஹர்த்தாசா -என்கிறபடியே அவன் இருந்த இடத்தே சென்று-அடர்த்து எறிந்த வாழியான் – அடை மதிள் படைத்து -அவந்தலையை அறுத்து அந்த ஹர்ஷத்தாலே கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை உடையவன்-எறிதல் -அறுத்தல்
சதுரமா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து
உதிர வோட்டி ஓர் வெங்கணை வுய்த்தவன் ஓத வண்ணன்
மதுர மா வண்டு பாட மா மயிலாட அரங்கத்தம்மான் திரு வயிற்று
உதர பந்தம் என்னுள்ளத்துள் நின்றுலாகின்றதே —-4-சர்வேஸ்வரன் ஸ்ரீ வைகுண்டத்தை கலவிருக்கையாக கொண்டு வீற்று இருந்தாப் போலே காணும் இவனும் இலங்கைக்கு ஈஸ்வரன் என்று இருந்தபடி-விரக்தனான திருவடியும் கூட மதித்த ஐஸ்வர்யம் இறே
யத்ய தர்மோ ந பலவான் ஸ்யாதாயம் ராஷசேஸ்வர ஸ்யாதயம் ஸூர லோகஸ்ய சக்ரஸ் யாபி ச ரஷிதா -என்றான் இறே-யாவன் ஒருவனுக்காக இவனை அழியச் செய்ய நினைக்கிறார் -அவன் தன்னையே இவ் வரணுக்கு காவலாக வைப்பர் கிடீர் அல்பம் அனுகூலிததான் ஆகில் –தலை பத்து உதிர –பனங்குலை உதிர்ந்தாப் போலே உதிர -அறுக்க அறுக்க முளைத்த சடக்கு ஒட்டி – அனுகூலிக்குமாகில் அழியச் செய்ய-ஓர் வெங்கணை வுய்த்தவன் –பிற்றை நாளில் பூசலிலே ஜய அபஜயங்கள் அவ்யவஸ்திதம் அன்றோ என்று ப்ரஹ்மாதிகள் கருதினவாறே –அத் தலைகளுக்கு வேர் பற்றான நெஞ்சிலே அத்விதீயமான ப்ரஹ்மாஸ்த்ரத்தை விட்டவன் – அவன் பிரதி கூல்யத்தில் நிலை நின்றான் என்று அறிந்த பின்பு ப்ரஹ்மாஸ்த்ரத்தை விட்டபடி –
புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்ப்–13-பொல்லா அரக்கனைக் –
தாயையும் தமப்பனையும் உடலையும் உயிரையும் பிரித்தாப் போலே பிரித்த நிர்க்குணன் –
சுரிகுழல் கனிவாய் -இத்யாதி முன்பொலா இராவணன் -என்னும் இத்தனை போக்கி
அவன் தண்ணிமைக்கு ஒரு பாசுரம் இல்லை இறே அத்தாலே இறே பிராட்டியும் -நல்ல அரக்கனும் -உண்டு என்றாள் இறே –கிள்ளிக் களைந்தானைக் –திருவிளையாடு சூழலிலே நோய் புக்க இடங்களைக் கிள்ளிக் பொகடுமா போலே தோஷாம்சத்தை வாங்கிப் பொகட்ட படி –வீர பத்னி யாகையாலே-கல் எடுத்து (கலியன் )-என்னுமா போலே –-கிள்ளி –என்கிறார்கள்-திரு விளையாடு சூழலில் நோவு பட்ட இடங்களைக் கிள்ளிப் பொகடுமா போலே –தோஷ அம்சத்தை வாங்கிப் பொகட்ட படி
இரக்கமின்றி எங்கோன் செய்த தீமை யிம்மையே எமக்கு எய்திற்று காணீர்
பரக்க யாம் இன்று உரைத்தென் இராவணன் பட்டனன் இனி யாவர்க்கு உரைக்கோம்
குரக்கு நாயகர்காள் இளங்கோவே கோல வல் விலி ராமபிரானே
அரக்கர் ஆடு அழைப்பார் இல்லை நாங்கள் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ —10-2-1-
பத்து நீண் முடியும் அவற்றிரட்டிப் பாழித் தோளும் படைத்தவன் செல்வம்
சித்தம் மங்கையர் பால் வைத்துக் கெட்டான் செய்வதொன்று அறியா வடியோங்கள்
ஒத்த தோள் இரண்டும் ஒரு முடியும் ஒருவர் தம் திறத்தோம் அன்றி வாழ்ந்தோம்
அத்த யெம்பெருமான் எம்மைக் கொல்லேல் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ –10-2-2-இரண்டு தோளும் ஒரு முடியும் விக்ருத வேஷர் அல்லாத பெருமாளை பெறாமையாலே கெட்டோம் வாழ்ந்தோம் -என்று ஷேப பரம் –
ஏத்துகின்றோம் நாத்தழும்ப இராமன் திருநாமம்
சோத்த நம்பி சுக்ரீவா யும்மைத் தொழுகின்றோம்
வார்த்தை பேசீர் எம்மை யுங்கள் வானரம் கொல்லாமே
கூத்தர் போலே ஆடுகின்றோம் குழமணி தூரமே –10-3-1-குணாலைக் கூத்துப் போலே தோற்றார் தோல்விக்கு ஈடாக குழமணி தூரக் கூத்து என்று ஒரு கூத்து உண்டு ஆடுவது –
அத்தை ராஷசர் செய்த படி பேசி அவர்கள் பாசுரத்தாலே பகவத் விஷயத்தை அனுபவிக்கிறார் –
ஞாலம் ஆளும் உங்கள் கோமான் எங்கள் இராவணற்கு
காலனாகி வந்தவா கண்டு அஞ்சிக் கரு முகில் போல்
நீலன் வாழ்க சுடேணன் வாழ்க வங்கதன் வாழ்க என்று
கோலமாக வாடுகின்றோம் குழமணி தூரமே –10-3-3-
காரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு
ஓராதான் பொன் முடி ஒன்பதோடு ஒன்றையும்
நேரா அவன் தம்பிக்கே நீள் அரசு ஈந்த
ஆராவமுதனைப் பாடிப் பற
அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற – 3-9- 10—நேரா–அறுத்துப் போகட்டு-விபீஷண பட்டாபிஷேகம் செய்த பின்பே பிராட்டியை மீட்டான் -ராஜநீதி -மன்னனால் சிறை வைத்தவளை மன்னனே விடுவிக்க வேண்டும்-திரு வடிகளை சேர்ந்த ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கே என்னிலங்கு நாமத்தளவுமாக (2-6 )-என்று – தீர்க்க காலம் நடக்கும்படி இலங்கைக்கு அரசாகிற ஐஸ்வர்யத்தை கொடுத்த
அடைந்த வருவினையோ டல்லல் நோய் பாவம்
மிடந்தவை மீண்டு ஒழிய வேண்டில் நுடங்கிடையை
முன்னிலங்கை வைத்தான் முரண் அழிய முன்னொரு நாள்
தன் விலங்கை வைத்தான் சரண் ——-59-
இத்தால் –
1-சர்வேஸ்வரனுக்கு போக்யமாய் இருந்துள்ள ஆத்மாவை -என்னது -என்று இருக்குமவன் -பிராட்டியைப் பிரிந்த ராவணன்
உடன் ஒக்கும் என்னும் இடமும் –
2-இவ் வாத்மா அவனுடையது -என்று அனுகூலித்தவனுக்கு பிராட்டி இருந்த மார்விலே அம்பு ஏற்றுப்
பரிஹரித்தால் போலே பரிஹரிக்கும் என்னும் இடமும் –
3-அவளோடு கூடினவன் உபாயம் என்கையாலே பற்றுமவர்கள்-அவள் முன்னாகப் பற்ற வேணும் என்னும் இடமும் சொல்கிறது(ஸஹ வைதேஹ்யா அஹம் சர்வம் கரிஷ்யாமி )
(மனம் இந்திரியங்கள் இராவணன் இத்யாதி-முதலியாண்டான் வார்த்தை -தேசிகர் ஸ்லோகம் )
(கீழே பல பாசுரங்களில் )திரு உள்ளம் -இந்திரிய ஜெயம் பண்ணு என்றது -தொழு என்றது -திரு நாமம் சொல்லு என்றது -நினை என்றது
பல படிகள் சொன்ன இவற்றுக்குத் தாத்பர்யம் என் என்னில் –
இதுக்கு கீழ் எல்லாம் ஷட் கத்ய த்ரயத்தில் சொன்ன வார்த்தை போலே ஸ்வரூபம் விசதம் ஆக்கைக்கு சொன்ன நிலை –
இது சரம ஸ்லோகத்தில் நிலை போலே (நடுநாயகமாக ரத்னம் போல் இந்த பாசுரம் -சரம ஸ்லோகம் போல் )-உணர்ந்த அன்று அவன் அல்லது இல்லை –
அடைந்த அருவினை -அவித்யாதிகள் –ஆத்மா ஹேய சம்சர்க்கத்துக்கு அநர்ஹன் ஆகையால் -அடைந்த -என்றது
பரமாத்வுக்கும் பிரவேசம் ஒக்கும் இறே -அனஸ்னன்(சிறைச் சாலைக்குள் அரையனும் சிறையனும் உண்டே )
(தேகத்துக்குள் இருந்தாலே கர்மங்கள் இயற்கை என்று சொல்வாய் ஆனால் அது அல்ல என்று காட்டவே இங்கு
ஒரு மரம் -இரண்டு பறவைகள் -ஓன்று உண்டு ஒளி குறைய -மற்ற ஓன்று உண்ணாமல் ஒளி விஞ்சி
மரம் -சரீரம் -பழம் -கர்மாக்கள் -பரமாத்மாவுக்கு கர்மம் தீண்டாதே)
அல்லல் நோய் -ஆதி வியாதி -பாவம் -சரீரத்துடன் பண்ணும் பாவம்
மிடந்தவை–சமிதை இடாத மாணி -ப்ரஹ்மசாரி போலே –பரணிக் கூடு வரித்தால் போலே –
மீண்டு ஒழிய வேண்டில் -தொடருகிற பாம்பை திரிய விடுத்தால் போலே –சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி இறே
சர்வ சக்தியைக் கொண்டு கார்யம் கொள்ள வேண்டாவோ – நுடங்கிடையை -(நித்ய அநபாயினி நிரவத்யாம் )ஏக த்ரவ்யத்தை பின்னம் ஆக்கின
இலங்கை வைத்தான் -தாயையும் தமப்பனையும் பிரித்த பையல் மிடுக்கு ஒழிய -பிராட்டி அம்பெய்யும் அன்று இவனால் போக்கலாவது-
தத் தஸ்ய சத்ருசம் பவேத் –கூர்மையை விஸ்வஸித்து இருக்கும் அத்தனை -(சொல்லினால் சுடுவேன் –மாசு என்று அஞ்சினேன் )
அவளுக்கு பரியுமா போலே பரியும் அவதார ஸுலப்யம்
பிறந்து முன்னே உன்னைப் பெறுகைக்கு யத்னம் பண்ணா நின்றான் -இனி பிரதிபத்தியே உள்ளது -(வாரிக் கொண்டு –என்னில் முன்னம் பாரித்து -காட்கரை அப்பன் )
அல்லல் நோய் –அல்லல் என்று பாப காரணமாய் வரும் மனத்துன்பங்கள் -நோய் -சரீரத் துன்பங்கள் இவற்றையே ஆதி -வியாதி என்று வடமொழியில் சொல்வர்-மிடைந்தவை -வெளியேற முடியாதபடி சூழ்த்துக் கொண்டவை(சும்மெனாதே கை -விட்டோடி பெரியாழ்வார் -5-4-3–மாமேகம் சரணம் வ்ரஜ ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி0
இப் பாசுரம் ரத்ன காரத்துக்கு நடு நாயகக் கல் போல் ஸம்ஸாரம் -சீதாபிராட்டி சிறையில் இருந்தது போல்
தத் தஸ்ய ஸத்ருசம் பவேத் மற்ற உபாயந்தரங்களை விட்டு அவனையே பற்ற வேண்டுமே
சிந்தித்து இரு -41-
வாரி சுருக்கி –உணர்வார் காண்பரே -47
மருவாழி –நெஞ்சே -48-
முயல்கிற்ப்பார்க்கு அல்லால் –ஆதி காண்பார்க்கும் அரிது -49-
அரிய புலன் ஐந்து அடக்கி –புல்கில் –எளிது -50-
திரு நாமம் எண் –51-
தொழுது எழுதும் எழு –58-என்று சொன்னது எல்லாம் உபாயாந்தர புத்தியால் அல்ல -தேஹ யாத்ரை நடக்க உடலாகவே-மற்ற உபாயாந்தரங்களை உபதேசித்து அதனால் ஸ்வரூபம் தெளிவடைந்து – திரு உள்ளம் சோகம் அடைந்த பின்பே சரம ஸ்லோக உபதேசம் போல் இப்பாசுரமும் –-இச்சேதனன் ஸ்வரூபத்தை உணர்ந்த அன்று அவன் அல்லது உபாயம் இல்லை என்பதே இப்பாசுர சாரார்த்தம் இப்பிரபந்த சாரார்த்தமும் இதுவே -)
வாத மா மகன் மற்கடம் விலங்கு மற்றோர் சாதி என்று ஒழிந்திலை உகந்து
காதலாதரம் கடலினும் பெருகச் செய் தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று
கோதில் வாய்மையினோடும் உடனே உண்பன் நான் என்ற ஒண் பொருள் எனக்கும்
ஆதல் வேண்டும் என்று அடியிணை யடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –5-8-2-பிரயாகையில் பரத்வாஜர் ஆஸ்ரமத்தில் புஷ்பகவிமானம் இறங்க-திருவடியை பரதனுக்கு செய்தி சொல்லி அனுப்ப -சொல்லி திரும்ப வந்து -உடன் உண்ட சரித்திரம் இங்கு —உடனே உண்பன் நான் என்ற ஒண் பொருள்-வாழை இலையில் நரம்பு பின்பு-காய்கனிகள் மேல் பாதியில் –
அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி அரசு எய்தி அகத்தியன் வாய் தான் முன் கொன்றான்
தன் பெரும் தொல் கதை கேட்டு மிதிலை செல்வி உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள்
செம் பவள திறல் வாய் தன் சரிதை கேட்டான் தில்லை நகர் சித்ர கூடம் தன்னுள்
எம்பெருமான் தான் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன் அமுதம் மதியோம் அன்றே— 10-8–அம் கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும்அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி-10-1-பாதுகாதேவியின் அரசால் வந்த பெருமை
கதிர் ஆயிரம் இரவி கலந்து எறித்தால் ஒத்த நீள் முடியன்
எதிரில் பெருமை இராமனை இருக்கும் இடம் நாடுதிரேல்
அதிரும் கழல் பொரு தோள் இரணியன் ஆகம் பிளந்து அரியாய்
உதிரம் அளைந்த கையோடு இருந்தானை உள்ளவாறு கண்டார் உளர் – 4-1- 1-கஸ்ர கிரணங்கள் ஆன ஆயிரம் ஆதித்யர்கள் சேர பிரகாசித்தால் போலே இருக்கும் தேஜசை உடைத்தாய் – ஆதி ராஜ்ய ஸூசுகமான ஒக்கத்தை உடைத்தான திரு அபிஷேகத்தை உடையவன் –-இத்தால்- ராவண வதம் பண்ணி ஸ்ரீ விபீஷண ஆழ்வானை இலங்கைக்கு ராஜாவாக அபிஷேகம் செய்து ஸ்ரீ பிராட்டியும் தாமும் ஆன சேர்த்தியோடே- ஸ்ரீ திரு அயோத்யையில் எழுந்து அருளி திரு அபிஷேகம் பண்ணி இருந்த படியை சொல்லுகிறது –
தன்னடியார் திறத்தகத்து தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல்
என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும்
மன்னுடைய விபீடணர்க்காய் மதிள் இலங்கை திசை நோக்கி மலர் கண் வைத்த
என்னுடைய திருவரங்கர்க்கு அன்றியும் மற்று ஒருவர்க்கு ஆளாவரே – 4-9 -2-இப் பாட்டை -சென்னி யோங்கு பாசுரத்தில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யாநித்த
பிரக்ரியைக்கு இணங்க இங்கும் ஸ்ரீ மா முனிகள் வ்யாக்யாநித்து அருளுகிறார்-இவன் பொறுத்தது நமக்காகவா – இவர்களுக்காகவா — நம் போகத்துக்காகவா -என்று ஆராய்க்கைகாக சிதகுரைக்க தொடங்கினாள் ஆனால்-என் அடியார் அது செய்யார் -என்னும் அவன்-அது செய்யார்–ஆஸ்ரயணத்துக்கு முன்பு இவள் மன்றாடும் – பின்பு அவன் மன்றாடும்
உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் றன்னை
வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.–4-5-10–கிடந்தும் – என்றது,
‘பகைவர்களை அழிக்கின்ற ஸ்ரீராமபிரான் பாம்பின் உடல் போலே இருக்கிற திருக்கையைத் தலையணையாகக் கொண்டு, கிழக்கு-முகமாகக் கையைக் கூப்பிக்கொண்டு கடலை நோக்கிச் சயனித்தார்,’ என்கிறபடியே, கிடந்த கிடையிலே இலங்கை குடி வாங்கும்படியாக,-ஒரு கடல் ஒரு கடலோடே சீறிக் கிடந்தாற்போலே கடற்கரையிலே கிடந்தபடியைத் தெரிவித்தவாறு.
நின்றும் –‘கம்பீரமான வில்லைப் பிடித்துக் கொண்டு நிற்கின்ற ஸ்ரீ ராமபிரானைத் தாரையானவள் கண்டாள்,’ என்கிறபடியே, நின்ற நிலை
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் –‘பர்ணசாலையில் எழுந்தருளியிருப்பவரும் சடை மரவுரி இவற்றைத் தரித்தவருமான ஸ்ரீ ராமபிரானை ஸ்ரீ பரதாழ்வான் பார்த்தார்,’ என்கிறபடியே,-இருந்த இருப்பாதல்; க்ஷத்திரியர்களுக்குரிய ஒப்பனையோடே பதினோராயிரம் ஆண்டு இருந்த இருப்பாதல்.
மணம் கூடியும் –பதினோராயிரம் ஆண்டு தன் படுக்கைப் பற்றான பூமியைக் காப்பாற்றுகையாலே ஸ்ரீ பூமிப்பிராட்டி அணைக்க, அவளோடே கலந்தும்.-மணம் கூடியும்–
பதினோறாயிரம் ஆண்டு பூமியை ரஷிக்கையாலே பூமிக்கு அபிமானியான பிராட்டி விரும்பி அணைக்க அவளோடு சம்ச்லேஷித்தும்-கண்ட ஆற்றால் உலகு தனதே என நின்றான் தன்னை –பிரமாணங்கொண்டு அறிய வேண்டாமல், தொன்று தொட்டு வருகின்ற அனுபவம் கொண்டு,-‘இவனுக்கே உரிமை’ என்று அறியலாய் இருக்கை; என்றது, ஒருவன் ஒரு நிலத்தைத் திருத்துவது கமுகு வைப்பது-எரு இடுவதாய்க் கிருஷி பண்ணாநின்றால், ‘இது இவனது’ என்று அறியலாமே அன்றோ?’ ஒத்தி நிலத்தில் கமுகு வைக்க மாட்டார்கள் —
‘பெய்த காவு கண்டீர் பெருந்தேவுடை மூவுலகே,’ –திருவாய். 6. 3 : 5.-என்னக் கடவதன்றோ?-அருளிச் செயல்களில் இந்த ஒரே பாசுரம் தான் ஸ்ரீ ராம பட்டாபிஷேகம் காட்டும்
கற்பார் இராம பிரானை அல் லால் மற்றும் கற்பரோ?
புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஒன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே.–7-5-1-நற்பாலுக்கு உய்த்தனன்-நல்ல ஸ்வ பாவத்தை யுடைத்தாம் படி பண்ணினவன் –தன் சம்ச்லேஷ விஸ்லேஷமே ஸூக துக்கமாம் படி பண்ணினான் –திர்யக் யோனி கதச்சாபி சர்வோ ராமம நுவரத–என்றும் – -அபி வ்ருஷா பரிம்லா நா -என்றும் –ராம மேவா நுகச்சத்வ மஸ்ருதிம் வாபி கச்சித -என்றும் -ராமேண ரஹி தா நாந்து கிமர்த்தம் ஜீவிதம் ஹிந-என்றும் -இப்படி ஸ்வ சம்ச்லேஷ விஸ்லேஷ ஸூ க துக்கமாம் படி பண்ணிற்று ஒரு தேச விசேஷத்திலேயோ -என்ன
நான்முகனார் பெற்ற நாட்டுளே.–ப்ரஹ்மாவுக்கு அடைத்த நாட்டுள்ளே-அவனுடைய நியாமகத்வத்தையும் தவிர்த்து -சேதனருடைய கர்ம வஸ்யத்தையும் தவிர்த்து தான் கைக்கு கொண்டு தன்னால் அல்லது செல்லாத படி பண்ணினான் –அவன் ஸ்வாதந்திரியத்தையும் தவிர்த்து, இவற்றின் கர்ம பாரதந்திரியத்தையும் தன் குணத்தாலே பதஞ்செய்து,
தன்னைப் பெற்ற போது ஜீவிக்கும்படியாய்ப் பெறாத போது உறாவும்படியான தன்மையை உண்டாக்கினான். ஆன பின்பு அவனை ஒழிய வேறேயும் சிலவற்றைக் கற்பரோ?
கோயில் கந்தாடை ஆயன் -முதலிகள் சம்வாதம் மூவரும் திருவரங்கம் திருக்கோயிலில் ரெங்க விலாஸ மண்டபத்தில் சேர்ந்து எழுந்து அருளி இருக்க காரணம்
பாவோ நான்யத்ர கச்சதி -திருவடி
அச்சவை பெறினும் வேண்டேன் -தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்
மற்று ஒன்றைக் காணாவே -திருப்பாண் ஆழ்வார் -என்றாராம் –
யத்ர நந்யத்ர பஸ்யதி –ஒன்றைக் கண்டால் வேறே ஒன்றைக் கானாவோ நினைக்காது பேசாதோ அதுவே –பூமா –இவர்களுக்கு ராம அனுபவம் அரங்கன் அனுபவம் திருநாம சங்கீர்த்தனமே பூமா –
பரதனும் தம்பி சத்ருக்கனனும் இலக்குமனோடு மைதிலியும்
இரவு நன் பகலும் துதி செய்ய நின்ற இராவணாந்தகனை யெம்மானை
குரவமே கமழும் குளிர் பொழிலூடு குயிலொடு மயில்கள் நின்றால
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத் திருவல்லிக்கேணிக் கண்டேனே—2-3-7–ஸ்ரீ பரதாழ்வானும் அவனோடே கையடைப்பான ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வானும் –
(கச்சதா மாதுல குலம் அ ந க -என்பதால் இங்கு தம்பி-உடைவாள் போல்வான் )இரவு நன் பகலும் துதி செய்ய நின்ற--சமரம் காலத்திலே கண்டு அனுபவித்தார்களோடு –
கேட்டார் வாய் கேட்டாரோடு வாசி யற ஏத்தா நிற்பர்கள் ஆயிற்று – தேசிகர் அடங்கலும் திரள் திரளாக நின்றாயிற்று ஏத்துவது –
(சத்ருக்களும் கொண்டாடும் பெருமாள் -வேண்டியவர்களுக்கு கை விடுவார்கள் கண்ணனை–தீர்த்த யாத்திரை போனார் நம்பி மூத்தபிரான் –-கேட்டார் கேட்ட வாய் ஸ்தோத்ரம் பரத சத்ருக்னர்கள் ராவண விஜயம் கேட்டவர்களும்-கேட்ட வாய் கேட்டவர்களும்
முதலிகளும் தேவர்களும் ரிஷிகளும் )நமக்கும் ஓர் காலம் நெஞ்சு ஒழிந்த போது ஏத்துவது என்று ஓன்று அன்றோ
அங்கன் இன்றிக்கே
திவ ராத்ர விபாகமற கிட்டினதனையும் ஆழம் கால் படுகைக்கு உடலான வித்தனை -( கண்டு அறிவாரும் கேட்டு அறிவாரும் )இப்படி ஏத்துவது தான் ராவண வதம் பண்ணின அபதானம் ஒன்றுமே ஆயிற்று –யெம்மானை – அவர்களோபாதி நானும் தோற்று ஏத்தும்படி -பண்ணினவனை-ஸ்ரமஹரமான பொழிலின் ஊடே குயில்களோடே கூட மயில்கள் ஸ ஸம் ப்ரம ந்ருத்தம் பண்ண –ஈஸ்வர ஆஞ்ஞை நடை யாடாத தேசம் ஆயிற்று – பீஷோ தேதி -தைத்ரியம் -என்றது அவ்விடத்தை ஒழிய யாயிற்று- (ராவணனுக்கு அஞ்சிய ஸூர்யன் ராவணாந்தகனுக்கு அஞ்சுவது சொல்ல வேண்டுமோ- பக்தர்கள் பாகவதர்கள் ஆணை நடமாடும் இடம் )
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள் திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை
எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று அது முதலா தன் உலகம் புக்கது
கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள் கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார் நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே–10-11–பாவோ நான்யத்ர கச்சதி -என்று அங்குப் போகேன் என்ற ஸ்ரீ திருவடியை விட மாட்டாமே இங்கே வந்து நித்ய வாஸம் பண்ணுகிறவனை-பஹூ குணனான ஸ்ரீ சக்கரவர்த்திக்கு –பிதரம் ரோசயாமாச – என்று பிள்ளையாய் பிறந்தது தொடக்கமாக
ஸ்ரீ பரமபதம் புக்கது முடிவாக யுண்டான ஸ்ரீ இராமாயண கதையை-கொலையை முயலா நின்றுள்ள வேலையை யுடையராய் –வெற்றியையும் அழகையும் உடைய வாளையும் உடைய கோழியர்க்குக் கோன்-கோழி -ஸ்ரீ உறையூர் -சோழ ராஜாவானவன் – வெண் கொற்றக் குடையை உடையரான ஸ்ரீ குலசேகரப் பெருமாள் அருளிச் செய்த அழகிய இயலை உடைய தமிழ் மாலை பத்தும் வல்லார் –
ஸ்ரீ பரமபதத்திலே விளங்கா நின்றுள்ள ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளைக் கிட்டப் பெறுவார்
————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்