Archive for November, 2025

ஸ்ரீ அருளிச்செயலில் ஸ்ரீ இராமாயணம்-ஸ்ரீ பாசுரப்படி இராமாயண விவரணம்-

November 25, 2025

ஸ்ரீ அவதாரம் -ஸ்ரீ திருநாமம் சாத்துதல் -தாலாட்டு -தாடகா வதம் -சிவதனுஸ் பங்கம் -சீதா கல்யாணம் -பரசுராம கர்வ பங்கம்

ஸ்ரீ அவதாரம்-
அந்தர்யதிகரணம் -சாது பரித்ராணாம் ஏவ காரணம் மற்றவை ஆனு ஷங்கிகம்-ராவணஸ்ய வதார்த்தம் வால்மீகி –திரு உள்ளம் அறிந்து ஆழ்வார்கள்-மேரு-அணு வாசி-

துயர் கெடும் கடிது அடைந்து வந்து அடியவர் தொழுமின்
உயர் கொள் சோலை ஒண் தட மணி யொளி திரு மோகூர்
பெயர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர் புக்கு அழுந்த
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே–10-1-8-

பெயர்கள் ஆயிரம் உடைய-சர்வேஸ்வரன் அளித்துப் படைத்த-பெயர்களோ பாதி போரும் ஆயிற்று இவர்கள் பிறர்களை துன்புறுத்தி பெற்ற பெயர்கள்-
யஞ்ஞ சத்ரு – ப்ரஹ்ம சத்ரு –என்பன போன்றவனவே அன்றோ இவர்கள் பெயர்கள் – தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே –சக்கரவர்த்தி பெற்ற-நீல மணி போலே இருக்கிற-தடாகத்தை-அடைந்து வந்து அடியவர் தொழுமின்-பதி தரு மரு வாபீ வாரிவத் சர்வ போக்கியம் -பிரமாணம் மரு பூமி –நீரும் நிழலும் இல்லாத இடம்-வழியில் உள்ள மரம் என்ன-மரு பூமியில் உள்ள தண்ணீர் என்ன–இவற்றைப் போன்று எல்லாருக்கும் இனியனை -என்கிறபடியே-அடியவர்கட்கு பாதுகாவலனாய்-சம்ஹாரிணா ராகவ சாகரேன ப்ரச்சாத்யமானா தாச பவத்பி- யுக்தஸ்து அயம் தாரயிதம் சமேத்ய காகுஸ்த பாதாளமுகே பதான் ச -யுத்த -14-20- இராமபிரான் ஆகிற வடவாமுகாக்னியில் விழுகின்றவனான-அந்த இராவணன் -என்கிறபடியே விரும்பாத பகைவர்க்கு அழிவினைத் தரத் தக்கவனாய்-அன்றோ இருப்பது-மயா த்வம் சம் அநுஜ்ஞாத கச்ச லோகன் அநுத்தமான்-ஆரண்ய -68-30-என்னால் நீவிர் அனுமதிக்கப் பட்டவராய் மேலான உலகத்தை அடைவீராக-என்கிறபடியே -பறவையையும் -ஜடாயுவையும் –வழி நடத்துமவன் அன்றோ –

தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள் திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை
எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று அது முதலா தன் உலகம் புக்கது கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள் கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார் நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே–10-11–பஹூ குணனான ஸ்ரீ சக்கரவர்த்திக்கு –பிதரம் ரோசயாமாச – என்று பிள்ளையாய் தோற்றம் -ஆவிர்பாவம்-தொடக்கமாக-

மன்னு புகழ் கௌசலை தன் மணி வயிறு வாய்த்தவனே!
தென் இலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர்
கன்னி நன் மா மதிள் புடை சூழ் கண புரத்து என் கரு மணியே!
என்னுடைய இன் அமுதே! ராகவனே! தாலேலோ— 8-1–ஸ்ரீ சர்வேஸ்வரனைப் பிள்ளையாகப் பெற்றாள் -என்ற நிலை நின்ற புகழை உடைய –ஸ்ரீ கௌசலையாருடைய அழகிய வயிற்றிலே அவளுக்குப் பிள்ளையாகப் பெற்றவனே-சித்தியை வளர்பிறை நவமி புனர்வசு -நக்ஷத்ரம் -பன்னிரு திங்கள் -நாம் தந்தையிடம் 2 மாசம் அண்ணையிடம் 10 மாசம் -பாயாசம் மூலமும் -தேவகி கர்ப்பம்-8 மாஸம் -அதுக்கு சரி பண்ண

நாட்டிற் பிறந்தவர் நாரணற்கு ஆளன்றி ஆவரோ?
நாட்டிற் பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா
நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு
நாட்டை அளித்து
உய்யச் செய்து நடந்தமை கேட்டுமே.–7-5-2-ப்ரஹ்மாதி கள் தேசத்தை அருவருத்து வர்த்திக்கிற நித்ய ஸூ ரிகளோடே வர்த்திக்கிறவன் -அந்த ப்ரஹ்மாதிகளும் குத்ஸிக்கும் பூமியிலே பிறந்து -சம்சாரிகள் தன்னில் அறிவு பிறந்தாரும் காற்கடைக் கொள்ளுகிற தேசத்திலே இ றே பிறந்து –அகர்மவஸ்யனான தான் கர்ம வச்யரோடு ஓக்க கர்ப்ப வாசம் பண்ணிப் பிறந்து-சம்சாரிகள் கர்மத்தால் படும் அளவு அன்று இறே அவன் அனுக்ரஹத்தாலே பட்டது -ஒரு சேதனன் பிறந்தால் இருக்கும் நாள் தானும் ஸ்திரீயும் சேர இருந்து ஜீவித்து போகா நின்றான் -அவ்வளவும் அன்றிக்கே பிராட்டி ஓர் இடத்திலும் தான் ஓர் இடத்திலும் வர்த்திக்க வேண்டிற்று இறே -ராஜ்யாத்ப்ராம்ச -இத்யாதி -இப்படி படுகிறது யாருக்காக -என்னில் –மனிசர்க்கா-தங்களுக்காக அனுக்ரஹத்தால் படுகிற இம் மஹா குணத்தை குண ஹானியாக சொல்லும் க்ருதக்நர்காக-ராவண பவனத்தில் இருந்தவளோடே சேர வர்த்தியா நின்றான் -என்று சொன்னது இறே இரண்டாம் பிரிவுக்கு முதல் –கர்ம வஸ்யரை சொல்லும் வார்த்தையை சொன்னார்கள் இறே-இருந்ததே குடியாக உண்டு உடுத்து திரிகிறது ஹேதுவாக நலிகிற ராக்ஷஸரை நாடித் தடிந்திட்டு-அவர்கள் வந்து மேலிட்டால் அன்றிக்கே -அவர்கள் இருந்த இடங்களிலே சென்று அவர்களை அழியச் செய்து -சர்வ சாதாரணன் நலிகிறது நிர் நிபந்தனமாக விபூதியை நலிகையால் இறே-நாட்டை அளித்து-போந்த கார்யம் தலைக் காட்டிற்று ஆகில் இனி போவோம் என்னாதே மீண்டும் தம்முடைய ஸுந்தரியாதிகளாலே இருந்ததே குடியாக வாழ்வித்து -தம் வரவு பார்த்து இருக்கிற ஸ்ரீ பரத ஆழ்வானையும்-அபிஷேக மஹோத்சவங்கள் காண ஆசைப்பட்ட தாய்மாரையும் -பின் தொடர வழி மாற்றிப் போந்த நாட்டையும் -கடல் ஞாலத்து அளி மிக்கான் -என்கிறபடியே நெடு நாள் ஆஸ்வசிப்பித்து-உய்யச் செய்து-தம்மைப் பெறுகைக்கு அவர்கள் பக்கல் ஒரு கைம்முதல் இன்றிக்கே அசத்சமமாய் இருக்கிறவர்களை -சந்தமேனம்-என்னும் படி பண்ணி–தர்மம் வழி நடந்தால் வானரங்களும் உதவும் -அதர்மம் வழி நடந்தால் தம்பியும் உதவ மாட்டான் -என்று காட்டி –

அம் கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும் அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி
வெம் கதிரோன் குலத்துக்கோர் விளக்காய் தோன்றி
விண் முழுதும் உய்ய கொண்ட வீரன் தன்னை
செம் கண் நெடும் கரு முகிலை ராமன் தன்னை தில்லை நகர் திரு சித்திர கூடம் தன்னுள்
எங்கள் தனி முதல்வனை எம்பெருமான் தன்னை என்று கொலோ? கண் குளிர காணும் நாளே— 10-1-அபராஜிதை என்று சொல்லுகிற ஸ்ரீ பரமபதம் போலே சத்ருக்களுக்கு கணிசிக்க ஒண்ணாத ஊர்-என்னும் –-ஸ்ரீ பரம பதம் போல் சிலர் அறிந்து சிலர் அறியாதாய் இருக்கை யன்றிக்கே சர்வ லோக பிரசித்தமாய் இருக்கை –அலங்காரங்களால் குறைவற்ற ஊர் -என்னுதல்-சர்வ லோகங்களையும் தன் தேஜஸ்ஸாலே –நாராயண பரஞ்சோதி -என்கிறபடியே பரஞ்ஜோதிஸ்ஸாய் உள்ளது-ஜகத்தில் அந்தகாரம் எல்லாம் நீக்கக் கடவ ஆதித்யன் வம்சத்திலே -அவனைப் போலே இரவு கலவாத அத்விதீயமான தேஜஸ்ஸாய் வந்து உதித்து –தன் வீர்ய குணத்தாலே தேவ ஜாதியடைய உஜ்ஜீவிப்பித்தவனை-தேவ ஜாதி யன்றிக்கே ஜகத்தை அடைய ரஷிப்பதாக-கடலிலே மணலே சேஷமாக பருகின காளமேகத்தினுடைய வடிவையும் ஸ்ரீ சர்வேஸ்வரத்வ லஷணமான புண்டரீகாஷத்வங்களையும் உடையவன்-வடிவு அழகாலும் கண் அழகாலும் அபிராமத்தாலும் அனுகூல பிரதிகூல விபாகம் இன்றியே தோற்ப்பிக்குமவனை –
கீழில் -வீரன் -என்கிறதும் -இங்கும் அன்வயிக்கக் கடவது -சத்யேதியாதிவத் –

2-நாம கரணம்
வசிஷ்டர் -ராமன் பரதன் லஷ்மண சத்ருக்ந
ரமயதி இதி ராமன் -மனத்துக்கு இனியான் -திருப்பாவை-12–சஞ்ஜாத பாஷ்ப பரவீர ஹந்தா -என்று சத்ருக்களுக்கும் கண்ண நீர் பாய்ந்து-உண்ணாது உறங்காது ஒலி கடலை யூடறுத்து -தன்னைப் பிரிந்து நாம் படுமவற்றை நம்மைப் பிரிந்து தான் பட வல்லன்-கிருஷ்ண விரஹத்தாலே கமர் பிளந்த நெஞ்சு பதம் செய்யும் படிக்காக சக்கரவர்த்தி திருமகனைப் பாடச் செய்தேயும் போன உயிர் மீளும்படியானவனை பாட வாய் திறக்கின்றிலை –

பரணாத் பரதன் -ராஜ்ஜியம் -பாதுகை –பழி ஏற்றுக்கொண்டு -நானே தான் ஆயிடுக -இல்லாத குற்றத்தையும் சிலர் -உண்டு -என்றால் -இல்லை செய்யாதே இசைகை இறே ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் –(ந மந்தராயா -கைகேயியும் தசரதனுக்கு பெருமாளும் இல்லை நானே தான் ஆயிடுக-மத் பாபமே வாத்ர நிமித்தம் ஆஸீத் -என்று பிறர் குற்றத்தையும் தன் குற்றமாக இசைந்தார் இறே ஸ்ரீ பரத ஆழ்வான்

லஷ்மீ ஸம்பன்னன்-நற்செல்வன் –-தோற்றி மாயும் சம்பத் அன்றிக்கே-நிலை நின்ற சம்பத்து –கைங்கர்ய லஷ்மி இறே இவ்வாத்மாவுக்கு நிலை நின்ற சம்பத்து -ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே என்கிறபடி-தன் வைஷ்ணவ ஸ்ரீ யாலே ஜகத்துக்கு அடைய-வைஷ்ணத்வம் உண்டாம்படி இருக்கை –

நித்ய சத்ருக்ந -அநக -ராமனை அன்றி அறியாத பரதனை அன்றி அறியாத – கோதில் அடியார் -அடியார் தம் அடியார்-3-10-10-

ராம லஷ்மணர் பரத சத்ருக்ந -தொட்டில் தொடங்கி-பரதனும் தம்பி சத்ருக்கனனும் இலக்குமனோடு மைதிலியும்
இரவு நன் பகலும் துதி செய்ய நின்ற இராவணாந்தகனை
யெம்மானை
குரவமே கமழும் குளிர் பொழிலூடு குயிலொடு மயில்கள் நின்றால
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத் திருவல்லிக்கேணிக் கண்டேனே—2-3-7-

3-தாலாட்டு-மன்னு புகழ் கௌசலை தன் மணி வயிறு வாய்த்தவனே!
தென் இலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர்
கன்னி நன் மா மதிள் புடை சூழ் கண புரத்து என் கரு மணியே!
என்னுடைய இன் அமுதே! ராகவனே! தாலேலோ— 8-1–தாலாட்டு சந்தையிலே அருளிச் செய்தார் –கௌசல்யா ஸூ ப்ரஜா -எழுப்புகிறார் விச்வாமித்ரர் -இங்கு பொங்கும் பரிவால் தாலாட்டு-ராகவனே! தாலேலோ –8-2–-8-3-8-4-என் தாசரதீ ! தாலேலோ—– 8-5-சீ ராமா! தாலேலோ –8-6–-அயோத்தி மனே! தாலேலோ— 8-7–-சீ ராமா! தாலேலோ– 8-8–ராகவனே! தாலேலோ– 8-9-ஏவரி வெஞ்சிலை வலவா! ராகவனே! தாலேலோ— 8-10–என் காகுத்தன்
தன் அடி மேல் தாலேலோ என்று உரைத்த தமிழ் மாலை-8-11-

4-தாடகா வதம் –12 திருநக்ஷத்ரம் -விஸ்வாமித்ரர் -சித்தாஸ்ரமத்தில் யாக ரக்ஷணம் –

வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தை கீறி வரு குருதி பொழி தர வன் கணை ஒன்றேவி
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து
வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்
செந்தளிர் வாய் மலர் நகை சேர் செழும் தண் சோலை தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த அணி மணி யாசனத்து இருந்த அம்மான் தானே– 10-2–தான் மிகைத்து வந்து மேலிட்ட தாடகையை -நக்ர்த்திக்கு-சந்நிவேசத்துக்கு –ஒப்பில்லாதவள் – தன்னிகர் ஒன்றில்லாத தாடகை இறே –ஸ்ரீ பெருமாள் பக்கல் பொல்லாங்கு நினைத்த நெஞ்சை -மலை போலே பிளந்து-செம்பாட்டுத் தரையிலே-செம்மண் தரையிலே- மலை யருவி விழுந்தால் போலே ருதிரம் வந்து கொழிக்க –
வலிக்கு ஒப்பில்லாத திருச் சரத்தை நடத்தி ரிஷி தனக்கே தனக்கு என்னாதபடி நிர்ப்பரனாய்த் தன்னுடைய அனுஷ்டானங்கள் எல்லாம் அடைவே அனுஷ்டித்து
யாகத்தைத் தலைக் கட்டும்படி பண்ணி-யஜ்ஞ் விக்னரரான மாரீச ஸூபாஹூகளைக் முடித்த பிள்ளைத் தனத்தை உடையவனை
-மாரீசன் பட்டானோ என்னில் -பின்னை இருந்த இருப்பு ம்ருத ப்ராயன் என்று கருத்து

என் வில் வலி கண்டு போ என்று எதிர் வந்தான்
தன் வில்லினோடும் தவத்தை எதிர் வாங்கி
முன் வில் வலித்து முது பெண் உயிர் உண்டான்
தன் வில்லின் வன்மையைப் பாடிப் பற

தாசரதி தன்மையைப் பாடிப் பற – 3-9-2- –விஸ்வாமித்ர மகரிஷியினுடைய அத்ரவா த்ராணார்த்தமாக-(யாக ரக்ஷணத்துக்காக ) மகரிஷியோடே கூட எழுந்து அருளின அளவிலே-யாகங்களையும் பிராமணரையும் -தபச்சுக்களையும் – அழித்துக்
கொண்டு திரியும்-முது பெண்–(பர ஹிம்சையில்) பழகிக் கிடந்த ராஷசியான தாடகை – அதிரக் கூப்பிட்டு கைகளையும் எடுத்துக் கொண்டு -மிருந்த மிகுந்த கோபத்தோடு நலிவதாக அடர்ந்து வர –ஸ்ரீ விஸ்வாமித்ர நியோகத்தாலே -திருக் கையில் வில் வளைத்து அவளுடைய பிராணனை முடித்தவன் –மலை போலும் தன்னிகர் ஓன்று இல்லாத தாடகை -பெரிய திருமடல் -மா முனிக்காய் -தென்னுலகம் ஏற்றுவித்த திண் திறலோன்-பெரிய திருமடல்-திண் திறலாள் தாடகை தன் உரம் உருவ சிலை வளைத்தாய்!-8-2-ஸ்ருஷ்டிக்குமது அன்றியே -பயிரைச் செய்து களை பிடுங்குமா போலே ஆஸூர வர்க்கத்தைப் போக்கின படி

5-விச்வாமித்ரர் யாகம் ரக்ஷணம் -6 நாள்கள்
வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தை கீறி
வரு குருதி பொழி தர வன் கணை ஒன்றேவி
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து
வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்-10-2- காயத்ரி மந்த்ரம் கண்டு வழங்கிய -ரிஷி தனக்கே தனக்கு என்னாதபடி நிர்ப்பரனாய்த் தன்னுடைய அனுஷ்டானங்கள் எல்லாம் அடைவே அனுஷ்டித்து யாகத்தைத் தலைக் கட்டும்படி பண்ணி-யஜ்ஞ் விக்னரரான மாரீச ஸூபாஹூகளைக் முடித்த பிள்ளைத் தனத்தை உடையவனை-மாரீசன் பட்டானோ என்னில் -பின்னை இருந்த இருப்பு ம்ருத ப்ராயன் என்று கருத்து-யாகம் பண்ணும் பொழுது கோபமோ சாபம் கொடுப்பதோ கூடாதே -ஆகவே யாகத்துக்கு இடையூறு பண்ண வந்தார்கள் முன்னூறு பின்னூறு பண்ணாமல் நடுவிலே வந்தார்கள்-மாரீசனை விரட்டிய மிடுக்கால் மைந்தன் -தாடகைக்கு ஈமச்செயல் பண்ண வேண்டுமே –இங்கு கோதண்டத்தால் அல்ல – கல்விச்சிலையால் காத்தானூர்-பெரிய திருமொழி -பயிற்சிக்கான வில்

வல்லாளரக்கர் குலப்பாவை   வாட முனி தன் வேள்வியைக்
கல்விச் சிலையால்
காத்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே  —8-6-3-வலிய ஆண்மையை உடைய ராஷச ஜாதிக்காக கண் காட்டி யானவள் முடியும்படியாக –(பாவை -மரப்பாவை -அத்தைப்போலே தர்சனீயம் –கண் காட்டி -ராக்ஷஸர்களுக்கு முதலில் இருந்து காட்டிய தாடகை அன்றோ ) முனி தன் வேள்வியைக் கல்விச் சிலையால் காத்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே  – ருஷியினுடைய யாகத்தை – ஸ்ரீ பரசுராமன் ஆழ்வானை வென்று
தன்னைதான வில்லை ( வைஷ்ணவ சாபம் ) வாங்குவதற்கு முன்பே பிடித்த வில்லைக் கொண்டு காத்தானூர் –ராஷசர்கள் புற்றுப் போலே என்றும் ஒக்க துர் வர்க்கம் மாறாத
இலங்கையில் உண்டான ராஷசரையும் கூட்டிக் கொண்டு போக பூமியான பாதாளத்தில் புக்கு மறைய –கருந்தாட் சிலை கைக் கொண்டானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே    – வயிரம் பற்றித் திண்ணியதான வில்லை கையிலே பிடித்தவனுடைய ஊரான திருக் கண்ண புரத்தை நாம் தொழுவோம் –

அவப்ரத ஸ்நாநம் -மாமுனி வேள்வியை காத்து அவபிரதம் ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே! அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே–4-விசுவாமித்திரர் யாகத்துக்கு விக்ந கர்த்தாக்கள் -ராவண வதத்துக்கு அடியானை -தாடகை தாடகாதிகள் – அருணோதயம் போலே இது அதுக்கு -சமாராதானம் -நீராடி -சத்ருக்கள் மண் உண்ணும் படி –மா முனி –
முனி மனன சீலர் -கவி ரிஷி முனி என்னும் ஆழ்வார் –-கிராந்தி காலம் தாண்டிப் பார்க்கும் கவி –ரிஷி மந்த்ர த்ரஷ்டா – விச்வாமித்ரர்-ரக்ஷ பரம் பெருமாள் –சித்த உபாயம் பற்றியதால் மா முனி –

6-மிதிலை நோக்கி பயணம் -மூவரும்

மான் முனிந்து ஒரு கால் வரி சிலை வளைத்த மன்னவன் பொன்னிறத்து உரவோன்
ஊன் முனிந்து அவனது உடல் இரு பிளவா உகிர் நுதி மடுத்து அயன் அரனைத்
தான் முனிந்திட்ட வெந்திறல் சாபம் தவிர்த்தவன் தவம் புரிந்து உயர்ந்த
மா முனி கொணர்ந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானே–1-4-8-
கங்கையில் நீராடி பாபங்களைப் போக்கி கொள்கிறோம் –அந்த கங்கையின் பாபத்தைப்போக்கவே இவர்கள் நீராட்டம்-தவம் புரிந்து உயர்ந்த மா முனி கொணர்ந்த -என்கிறது -விச்வாமித்ரனை–அவன் ஷத்ரியனாய் இருக்கச் செய்தேயும் தபோ பலத்தாலே ப்ரஹ்ம ரிஷி ஆனான் இறே – அவன் பெருமாளையும் இளைய பெருமாளையும் நடத்திக் கொண்டு வந்தது அக்கரையே ஆகையாலே அத்தை சொல்லிற்று ஆகவுமாம்-தபஸை செய்து உயர்ந்த என்ற – இதுக்கு ஸ்ரீ பராங்குச தாசர் -ஜீயா மா முனி புகன்ற -என்று பாட பேதத்தை பண்ணி அதினுடைய பிரபாவத்தை பிள்ளைகளுக்கு சொல்லிப் போந்தான் இறே அத்தைச் சொல்லிற்று ஆகவுமாம் -என்ன அதுக்கு நமக்கு பலம் போராது -என்று அருளிச் செய்வர்-அன்றிக்கே (உயர்ந்த தவம் புரிந்தார் என்று கொண்டு)-பகீரதன் தன்னையே சொல்லுகிறதாய் அவன் கொடு வந்த கங்கை என்னுதல்

இப்பொழுது தான் அஹல்யா சாப விமோசனம் -கௌசல்யை முனிவர் -ஆழ்வார்கள் இத்தை அருளிச் செய்யவில்லை-இந்திரன் லீலை -அவனுக்கும் சாபம் -திருவடி துகள் -காகுத்தன் திருவடி துகள் கதுவ -கம்பர் -திருவடியால் கூடவே தீண்ட மாட்டார் பெருமாள் –பெண்ணின் கற்பை இழிவாகச் சொல்லி ரஷித்த பெருமை -கங்கையையே புனிதமாக்கிய பெருமாளுக்கு இது பெரிய செயல் அல்லவே

7-ஸீதா திருமணம்
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்
-கம்பர் மட்டுமே ஆழ்வார் அருளிச் செயல்களை ஒட்டி அருளிச் செய்கிறார்-செவ்வரி நல் கரு நெடும் கண் சீதைக்காகி
சின விடையோன் சிலை இருத்து
-10-3-அஸி தேஷணா –என்கிறபடியே -கண் அழகிலே தோற்று சினத்தை உடைய ரிஷபத்தை-தனக்கு வாஹநமான ருத்ரனுடைய வில்லை
ஒருவரால் கிட்ட ஒண்ணாதே வில்லை அநாயாசேன முறித்து அச் செயலிலே தோற்ற
ஸ்ரீ பிராட்டியை திருமணம் புணர்ந்து-கன்னி மாடம் மேலிருந்து கீழே பார்க்கக் பெருமாள் மேல் பார்க்க-நோக்கினான் -உற்றுப்பார்த்தல்-nokkiya-

எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி.
கண்ணொடு கண் இணை கவ்வி. ஒன்றை ஒன்று
உண்ணவும். நிலை பெறாது உணர்வும் ஒன்றிட.
அண்ணலும் நோக்கினான்: அவளும் நோக்கினாள்.

பார்வையே கயிறாக மாறி இருவர் மனமும் ஒவ்வொருவர் இடமும் மாறிற்றே –பத்து பொருத்தம் பார்த்து ஒன்பது கிரஹம் சேர்த்து எட்டு திசைகளுக்கும் பத்திரிகை அனுப்பி ஏழு ஏழு ஜென்மங்களுக்கும் சேர்ந்து இருக்குமாறு ஆறு சுவை உணவு அளித்து ஐந்து பூதங்கள் சாக்ஷியாக அக்னியில் போட்டு நான்கு வேதம் ஓதி மூன்று முடிச்சு போட்டு இரண்டு மனமும் ஒன்றாவதே திருமணம்-நீரில் சேர்ந்து ஒருவர் நெருப்பில் பாயாசம் மூலm ஒருவர் நிலத்தில் சீதையாக வந்து சேர்ந்தனர் -பிரிந்தவர் பேச மறந்து –

நெறித்திட்ட மென் கூழை நன்னேரிழையோடு உடனாய வில்லென்ன வல்லேயதனை
இருத்திட்டவள்
இன்பம் அன்போடணைந்தித்திட்டு இளங் கொற்றவனாய்த் துளங்காத முந்நீர்
செறித்திட்டி லங்கை மலங்க வரக்கன் செழு நீண் முடி தோளோடு தாள் துணிய
அறுத்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே —10-6-8-நெறித்து-மிருதுவான மயிர் முடியை உடையளாய் விலஷணமான ஆபரணங்களாலே அலங்க்ருதையான பிராட்டியோடு ஒக்கப் பிறந்த தனுஸ்-பிரசித்தியை உடைத்தாய்-மிடுக்கை உடைத்தாய் இருக்கிற அந்த வில்லை –-இவ் வில்லை முறித்தாருக்கு இவளைக் கொடுக்கக் கடவதாக நியமித்த படியாலே-அந்த வில்லை முறித்து அவளோட்டை சம்ஸ்லேஷ சுகத்தை ப்ரீதியோடு லபித்து-சிவ தனுஸ் -ஹுங்காரத்தாலே வெடித்தது -உடைந்த வில்லை -(உடனாய வில்லென்ன-தநுஸ் ப்ரஸித்தி -வம்ஸம் வழியாக வந்ததால் ஓக்க பிறந்த தநுஸ் என்கிறார் ஷீரத்வஜன் முதல் ஜனகன் பெற்ற சிவ தநுஸ்-அல் -என்று இருளாய் -இருண்ட வில்

வாராரும் இளம் கொங்கை மைதிலியை மணம் புணர்வான்
காரார் திண் சிலை இறுத்த தனிக் காளை
கருதும் இடம்
ஏராரும் பெரும் செல்வத் தெழில் மறையோர் நாங்கை தன்னுள்
சீராரும் மலர்ப் பொழில் சூழ் திருத் தேவனார் தொகையே—4-1-8-ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளை மணம் புணருகைக்காக-பதி சம்யோக சுலபம் வயோ த்ருஷ்ட்வா சமேபிதா சிந்தார்ணவகத பாரம் நாசசாதாப் லவோயதா -அயோத்யா காண்டம்-வயிரம் பற்றி ஒருவரால் சலிப்பிக்க ஒண்ணாது இருக்கிற வில்லை முறித்த உபமான ரஹிதமான பருவத்தை உடையவன்-அடிப்பகுதி இடது திருவடி தீண்ட -நடுப்பகுதி கையால் ஸ்பர்சம் -மேல் பகுதி தானே வந்து வலது திருவடி தொட்டதாம்-

நாந்தகம் சங்கு தண்டு நாண்  ஒலி சார்ங்கம்  திருச் சக்கரம் 
ஏந்து பெருமை இராமனை இருக்கும் இடம் நாடுதிரேல் 
காந்தள் முகிழ் விரல் சீதைக்காகிக் கடும் சிலை சென்று இறுக்க
வேந்தர் தலைவன் ஜனக ராஜன் தன் வேள்வியில் கண்டார் உளர் -4
– 1-2 –ரௌத்ரமாய் ஒருவரால் எடுக்கவும் வளைக்கவும்  அரிது என்று கிடந்த வலிய வில்லை முறிக்க (ருத்ரனுடைய வில் அன்றோ )கடுமை -திண்மை -ராஜ தர்மத்தோடு தத்வ ஞான அனுஷ்டானங்களையும் உடையவன் ஆகையாலே (ராஜ ரிஷி அன்றோ ) ராஜக்களுக்கு எல்லாம் தலைவனான ஸ்ரீ ஜனக ராஜன் உடைய யாகத்திலே கண்டார் உளர் 

இயம் ஸீதா மம ஸூதா பத்ரம் தே பாணி க்ருஹந் -ஐயர் பார்த்து-அவர் காலைப் பிடித்த பின்பே இவள் கையைப் பிடிப்பேன்-வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்னும்-13-பிராட்டியை லபிக்கைக்கு இடைச் சுவரான வில்லை முறித்து – அவ் வாண் பிள்ளைத் தனத்தைக் காட்டி ஸ்த்ரீத்வத்தால் வந்த அபிமானத்தையும் போக்கி பிரக்ருத்யா ம்ர்துவாய் இருந்துள்ள பிராட்டியோடு சம்ஸ்லேஷிதவனே-ஸ்ரீ ஜனக சக்கரவர்த்தி இவ் வில்லை முறித்தார்க்கு இவளைக் கொடுக்கக் கடவோம் -என்று பிரதிஞ்ஞை பண்ணுகையாலே வில்லை எடுத்து நாண் ஏறிட்டு வலிக்கப் புக்க அளவிலே வில்லை முறித்து அவ் வளவிலே பொற் கிண்டியைக் கொண்டு உதகம் பண்ணப் புக
ராஜ குமாரர் ஆகையாலே வீர வாசி கொண்டாட வந்தோம் இத்தனை ஒழிய விவாஹம் தாழ்த்து பெண் தேடி வந்தோமோ நாங்கள் – அத்தை வசிஷ்டாதிகளையும் ஐயரையும் கேட்பது என்ன –வில்லை முறித்த ஆண் பிள்ளைத் தனத்தையும் வார்த்தை சொன்ன சீர்மையையும் கண்டு நீராடினாள் பிராட்டி – அவ் வில் முறித்த ஆயாசத்தாலே வந்த ஸ்ரமம் தீர அவள் தோளில் முழுகினான் -ஆயத்துதோள் தோய்ந்தான் என்னும் – விபுத்வம் ஏக அவயவத்தில் அடங்கினபடி – அல்லாத அவயவங்களும் ஆத்ம குணங்களும் குமர் இருந்து போம் இத்தனை –இத்தால் – நித்ய அநபாயிநியான பிராட்டியைப் பிரிந்தாலும் உதகம் பண்ணுவாறும் சேர்ப்பாரும் வேண்டி இருக்கிறபடி – சேதனனுக்கும் இவளோபாதி அனந்யார்ஹத்வம் ஸ்வரூபத்தில் உண்டானாலும் ஆச்சார்யா சமாஸ்ரயணனும் புருஷகார அபேஷையும் உண்டாய் இறே ஈஸ்வர விஷயீ காரத்துக்கும் இருப்பது –நீர் போல் அணைத்து நம்மை சேர்விக்கிறாள் –

ஊர்மிளை லஷ்மணனுக்கும் -தம்பி யான குசத்வஜன் பெண்கள் மாண்டவி பரதனுக்கும் ஸூதகீர்த்தி யை சத்ருக்கனனுக்கும் திருமணம்

இயம் ஸீதா மம ஸூதா ஸஹதர்ம சரீதவ ப்ரதீச்ச சைனாம் பத்ரம் தே பாணிம் க்ருண்ஹீஷ்வ பாணிநா--இந்த ஸீதா என் மகள்-தர்மங்களை ஒன்றாகச் செய்யக்கூடியவள்-இவளை ஏற்றுக்கொள்ளுங்கள்-உங்களுக்கு மங்களம் உண்டாகட்டும்-இவளுடைய கையை உங்கள் கைகளால் பிடித்துக் கொள்ளுங்கள்.

தாமரை மேல் அயன் அவனை படைத்தவனே! தயரதன் தன்
மா முதலாய்! மைதிலி தன் மணவாளா வண்டினங்கள்
காமரங்கள் இசை பாடும் கண புரத்து என் கருமணியே!
ஏமருவும் வெம் சிலை வலவா! ராகவனே! தாலேலோ– 8-4–

பற்றார் நடுங்க முன் பாஞ்ச சனியத்தை வாய் வைத்த போரேறே என்
சிற்றாயர் சிங்கமே சீதை மணாளா சிறுக்குட்டச் செம் கண் மாலே
சிற்றாடையும் சிறுப் பத்திரமும்  இவை கட்டிலின் மேல் வைத்து போய்க்
கற்றாயரோடு நீ கன்றுகள் மேய்த்து கலந்து உடன் வந்தாய் போலும் -3 3-5 –பிரதிகூல நிரசனமும் அனுகூல ரஷணமும் கண்டால் -பார்த்தாரம் பரிஷஸ்வஜே -என்கிறபடியே –
உகந்து அணைக்கும் ஸ்ரீ ஜனகராஜன் திரு மகளுக்கு வல்லபன் ஆனவனே-அப்ரமேயம் தத் தேஜஸ் ஜனகாத்மஜா

8-பரசுராம கர்வ பங்கம் –

என் வில் வலி கண்டு போ என்று எதிர் வந்தான்
தன் வில்லினோடும் தவத்தை எதிர் வாங்கி

முன் வில் வலித்து முது பெண் உயிர் உண்டான்
தன் வில்லின் வன்மையைப் பாடிப் பற
தாசரதி தன்மையைப் பாடிப் பற – 3-9-2- –என்னுடைய வில்லின் வலியை கண்டு போ -என்று
எதிரே வந்த பரசுராமனுடைய –அதாவது –மகேஸ்வர தநுர் பங்கம் பண்ணி –ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளை திருக் கல்யாணம் புணர்ந்து பெரிய செருக்கோடு திரு அயோதியை நோக்கி எழுந்து அருளா நிற்கச் செய்தே – இந்த விசேஷத்தை கேட்டு -குபித ஹ்ருதயனாய்  
தன்னுடைய வில்லையும் எடுத்துக் கொண்டு நடு வழியிலே வந்து தோன்ற –ஸ்ரீ சக்கரவர்த்தி எதிரே சென்று பொற் பூக்களையும் காலிலே பொகட்டு அனுவர்த்தித்து –
பாலானாம் மம புத்ரானாம் அபயம் தாது மர்ஹசி -என்று அர்த்தித்த அளவிலும் – அத்தை அதிகிரமித்து தள்ளிக் கொடு போந்து – தன் சீற்றம் எல்லாம் தோற்றும்படி முகத்தை பார்த்து –முன்பே மூரிப் போய் பல இடங்களிலும் பூண் கட்டிக் கிடக்கிறதொரு சொத்தை
வில்லை முறித்தேன் -என்று கர்வோத்தரனாய் வருகிற -நீ –என் கையில் -வில்லை வாங்கி வளைத்தாய் ஆகில் சமத்தன் -என்ற நினைவால் – என் வில் வலி கண்டு போ – என்று தன்னுடைய பூர்வ பராக்ரமங்களையும் – அதுக்கடியான தபஸ்ஸும் கனக்க நினைத்து –
ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் -என்றும் மதியாதே அடர்ந்து வந்த படியை சொல்லுகிறது-தன் வில்லினோடும் தவத்தை எதிர் வாங்கி – ஆனால் தன்னுடைய வில்லை தந்து காண் -என்று வில்லை வாங்குகிற அளவில் – அந்த வில்லோடு கூட அவனுடைய கர்வ ஹேதுவான தபச்சையும் அவன் பார்த்து நிற்கச் செய்தே வாங்கி எதிர் வந்தான் தன் வில் என்று – எதிரே வந்தவனுடைய வில்-என்னுதல்-எதிரே வந்த ஸ்ரீ பரசு ராமன் கையில் இருப்பதாய் -வைஷ்ணமான தனுஸ் ஆகையாலே முன்பே தன்னுடையதாய் இருக்கிற  வில் -என்னுதல் –இப்படி இருக்கிற வில்லோடு அவனுடைய தபஸ்ஸை எதிர் வாங்குகையாவது –
அந்த வில்லை வாங்கி – அதிலே சரத்தை தொடுத்து – இத்தை கொண்டு உன் பிராணனை போக்கி விட என்றால்- நீ பிராமணனாய் இரா நின்றாய் – ஆன பின்பு உன்னுடைய கதி பங்கத்தை பண்ணி விடவோ உன்னுடைய தப பலங்களை அழித்து பொகட்டு விடவோ -என்று கேட்ட அளவில்-கதி பங்கம் பண்ணினால் -எனக்கு வாசஸ்தலமான மகேந்தர பர்வதத்தே ஏறப் போகாது – என்னுடைய தப பலத்தை அழித்து விடும் -என்ன- அப்படி செய்து விட்டது –

ஸ்வரூப ஆவேச அவதாரமாய் – தசாவதார மத்யே சஹ படிதனாய் போகிற அப் பரசு ராமன் தான் நிரஸ்தன் ஆனபடி  எங்கனே என்னில்-ஸ்வரூப ஆவேசத்தாலும் -சாஷாத் அவதாரம் பிரபலம் ஆகையால் அத் யுத்கடத்வம் உண்டான போது-இதினாலே அது (ஸ்வரூப ஆவேசம் ) நிரஸ்தமாகக் குறை இல்லை-பரசுராமன் எதிர்த்தது ஜீவ ஸ்வா தந்தர்யத்தாலே -உடனே ஆவேசம் நீங்கி வேறு ஜீவன் ஆவானே தபஸ்ஸூ பண்ணி ஆவேசிக்க பிரார்த்தத்து பெட்ரா தபஸ்ஸும் போகுமே – ஸ்வ தந்திரமாய் செயல்பட்டு அனுகூலித்தால் சரி -பிரதிகூலித்தால் முடிவானே -சக்தி ஆவேசத்தில் -ஸ்வரூப ஆவேசம் பிரபலமான வோபாதி
ஸ்வரூப ஆவேசத்தில் சாஷாத் அவதாரம் பிரபலமாகத் தட்டில்லை இறே-சக்தி ஆவேசத்தில் ஸ்வரூப ஆவேசம் பிரபலம் ஆகையாலே இறே சஹச்ர பாஹ்வைர்ஜுனன் பரசு ராமனாலே நிரஸ்தன் ஆய்த்து-(வேத வியாசர் கார்த்த வீர்யார்ஜுனன் போல்வார் சக்தி ஆவேசம்
பரசுராமன் பல ராமன் ஸ்வரூப ஆவேச அவதாரம் )

செவ்வரி நல் சிலை வாங்கி வென்றி கொண்டு வேல் வேந்தர் பகை தடிந்த வீரன் தன்னை-10-3-வெம்மையை உடைத்தாய் தர்ச நீயமான வில்லை வாங்கி இவனை வென்று தான் திருவவதாரம் பண்ணின ஷத்ரிய குலத்துக்கு பகை தீர்ந்த வீரத்தை யுடை

ஒரு நாள் மழு வாளி சிலை வாங்கி அவன் தவத்தை முற்றும் செற்றாய்-9-9-முன் ஒரு காலத்திலே மழுவை ஆயுதமாக உடைய ஸ்ரீ பரசுராமன் கையிலே
ஸ்ரீ சார்ங்கத் திரு வில்லை வாங்கி-அவன் லோகாந்தரங்களை ப்ராபிக்கக் கடவதாக ஆர்ஜித்த தபஸ்ஸை அவ்வம்பாலே அழித்துப் பொகட்டாய்

சீதை வாய் அமுதம் உண்டாய்-2-10-12 ஆண்டுகள் -74 ருதுக்கள் சந்தோஷமாக இருந்தார்கள்-பெருமாளுக்கு 24 திரு நக்ஷத்ரம் -பிராத்திக்கு 12 நக்ஷத்ரம்-

9-கூனியின் சூழ்ச்சி -10-வனம் செல்லுதல்-11-குகனுடன் ஸஹ்யம் -12-பாதுகா பட்டாபிஷேகம் -13-காகாசூரன் சரித்திரம்

9-கூனியின் சூழ்ச்சி -காரணம் வால்மீகி சொல்ல வில்லையே -ஆழ்வார்கள் அருளிச்செயல்களில் உண்டு

கொண்டை  கொண்ட கோதை மீது தேனுலாவு கூனி கூன்
உண்டை கொண்டு அரங்கவோட்டி யுண் மகிழ்ந்த நாதனூர்
நண்டை உண்டு நாரை பேர வாளை பாய நீலமே
அண்டை கொண்டு கெண்டை மேயும் அம் தண் நீர் அரங்கமே –49-லீலார்தமாக வில்லிலே உண்டியை வைத்து கூனை உள்ளே புகும்படி ஒட்டித் தெறித்து அவத்யமான அஹங்காரத்தை அநாயேசேநப் போக்க வல்ல சக்தியை நினைக்கிறார்-ஆஸ்ரிதருக்கு அவத்யமான அஹங்காரத்தை அநாயாசேநப் போக்குகையாலே
ஹ்ர்ஷ்டனாய் -அச் செயலாலே என்னை எழுதிக் கொண்ட சக்கரவர்த்தி திருமகன்
வர்த்திக்கிற தேசம் -இத்தால் -ஆஸ்ரிதருடைய அவத்யங்களைப் போக்கி உகப்பானும் தானே என்கை –

மானேய் நோக்கி மடவாளை மார்பில் கொண்ட மாதவா
கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறிந்தாய் கோவிந்தா
வானார் சோதி மணி வண்ணா மதுசூதா நீ யருளாய் உன்
தேனே மலரும் திருப்பாதம் சேருமாறு வினையேனே –1-5-5-ஆஸ்ரிதரை அவத்யம் பாராதே விஷயீ கரித்து பின்னை அவர்களுடைய அவத்யத்தை போக்குமவனே-திர்யக்குகளோடும் பொருந்துமவன் –என்கை அங்கன் இன்றிக்கே பெருமாளுடைய பால்யத்தில் சுண்டு வில்லையிட்டு கூனியுடைய கூன் சிதையும் படி மர்மத்தில் தெறித்த படியைச் சொல்லிற்று ஆகவுமாம்-கோவிந்தா -பூமிக்கு ரஷகன் -என்கை-அப்பஷத்தில் தீம்பு சொல்வது கிருஷ்ணனுக்கு ஆகையாலே பெருமாள் தீம்பை அவன் பக்கலிலே வைத்து கோவிந்தா என்கிறது

கூன் தொழுத்தை சிதகுரைப்ப கொடியவள் வாய் கடிய சொல் கேட்டு 
ஈன்று எடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கு ஒழியக்
கான் தொடுத்த நெறி போகி
கண்டகரை களைந்தானூர்      
தேன் தொடுத்த மலர் சோலை  திருவரங்கம் என்பதுவே -4- 8-4 –கூனியாகிற அடியாட்டி ஆனவள் –திரு அபிஷேக மகோத்சவத்துக்கு அழிவான துருக்திகளை சொல்ல –ஜ்ஞாதி தாசியானதொழுத்தை-இவள் யதார்ச்சிகமாக மாளிகை தளத்தின் மேலே ஏறிப் பார்த்தவாறே –பெருமாளுடைய திரு அபிஷேகத்துக்கு திருப் படை வீடு எல்லாம் கோடித்து கிடக்கிற படியையும் – ப்ருந்தம் ப்ருந்தம் அயோத்யாயாம் -என்கிறபடியே  திரள் திரளாக வந்து கிடக்கிற ஜன சம்ருதத்தையும் – மங்கள வாத்திய கோஷங்களையும்  கண்டு சஹிக்க மாட்டாதே தளத்தின் நின்றும் இறங்கி வந்து -கைகேயியை பர்த்சித்து -உன்  மாற்றாட்டி மகன் அபிஷேகம் செய்ய தேடுகிறான்  உன் மகன் அவனுக்கு  இனி இழி தொழில் செய்து இருக்கும் அத்தனை இறே இத்தைப் பார்த்து கொண்டு நீ இருக்கிறது ஏது
அவனுடைய அபிஷேகத்தை குலைத்து உன் மகனை அபிஷேகம் பண்ணுவிக்கும்படி
ராஜாவோடே சொல்லு –அதுக்கு உபாயம் – முன்பே உனக்கு தந்து இருப்பது இரண்டு வரம் உண்டே -அவை இரண்டையும் உன் மகனை அபிஷேகம் பண்ணுவிக்கையும் ராமனை காடேற போக விடுகையும் -என்று வேண்டிக் கொள் -சத்ய தர்ம பரரான ராஜாவால்  செய்யாது ஒழியப் போகாது காண் -என்று  திரு அபிஷேகத்துக்கு விக்நமான துருக்திகளை சொன்னாள் இறே -இப்படி குப்ஜை  சொன்ன வார்த்தையாலே கலங்கி   பின்பு ராஜா உடனே  முன்பு சொன்ன இரண்டு வரமும் எனக்கு இப்போது தர வேணும் -அதாவது –
என் மகனை அபிஷேகம் பண்ணுவிக்கையும்  ராமனை பதினாலு சம்வத்சரம் வனவாச அர்த்தமாக போக விடுகையும் -என்ன –இத்தை கேட்டு ராஜா அதுக்கு இசையாமை தோற்ற இருக்க –அறுபதினாயிரம் சம்வத்சரம் சத்ய தர்மத்தை தப்பாமல் நடத்தி போந்தவன் 
இப்போது சத்தியத்தை அதிகிரமிக்கிறான் சகல தேவதைகளுக்கும் இத்தை – அறிவியுங்கோள்-என்று இவள் கூப்பிட்ட வாறே –அவன் -செயல் அற்றுப் போய் – செய்வதற்கு அனுமதி பண்ண -அவ்வளவிலே அவள் சுமந்த்ரனை போக விட்டு பெருமாளை அழைத்து விட-அவர் எழுந்து அருளி வந்து -சக்கரவர்த்தி கலங்கிக் கிடக்கிற படியை கண்டு 
இதுக்கு அடி என் -என்று இவளைக் கேட்க –இச் செய்திகளை எல்லாம் சொல்லி –
உம்மை காடேற போக விடுவதாக அழைத்து விட்டார் -உம்மை கண்ட வாறே சொல்ல மாட்டாமல் கிடக்கிறார் இத்தனை –உங்கள் ஐயர் சத்ய தர்மத்தை நோக்கவும் 
நீர் அவருக்கு பிரியம் செய்யவும்  வேண்டி இருந்தீர் ஆகில் -அவர் நினைவு நான் சொல்லுகிறேன் – நீர் கடுகக் காடேறிப் போம் -என்று சொன்ன கொடுமையை உடையளான கைகேயி வாயில் இந்த வெட்டிய சொல்லை கேட்டு -ஏக புத்ரையான நான் உம்மை பிரிந்து இருக்க மாட்டேன் -கூடப் போரும் இத்தனை – என்று பின் தொடர்ந்த பெற்ற தாயாரான கௌசல்யை யாரையும்  ஸ்தாவரங்களோடு ஜங்கமங்களோடு வாசி அற தன் குணங்களில் ஈடுபட்டு  பிரியில் தரிக்க மாட்டாத படி இருக்கிற இராச்சியத்தையும் கை விட்டு -காட்டோடு காடு தொடுத்து கிடக்கிற வழியிலே –நெய்வாய வேல் நெடும் கண்  நேர் இழையும் இளம் கோவும்  பின்பு போக –என்கிற படியே  பிராட்டியும் இளைய பெருமாளும் பின்னே சேவித்து கொண்டு வர  ஸ்ரீ தண்ட காரண்யத்தில் எழுந்து  அருளி

பாராளும் படர் செல்வம் பரத நம்பிக்கே அருளி
ஆரா அன்பில் இளையவனோடு அரும் கானம் அடைந்தவனே
சீராளும் வரை மார்பா ! திரு கண்ண புரத்தரசே !
தாராளும் நீண் முடி என் தாசரதீ ! தாலேலோ—– 8-5–பூமிப் பரப்படைய ஆளக் கடவதான பெரிய சம்பத்தை –பாரதந்த்ர்ய குணங்களாலே பூர்ணனாய் இருக்கிற ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு அருளி -அவனைப் போலவே நியமித்த இடத்திலே பிரிந்து இருக்க மாட்டாதே –குருஷ்வ மாம் -என்னும் ஸ்ரீ இளைய பெருமாளோடு கூடி ஒருவராலும் இயங்க ஒண்ணாத துஷ்ட சத்வ பிரசுரமான காட்டிலே பிரவேசித்தவனே-தொத்தலர் பூம் சுரி குழல் கைகேசி சொல்லால் தொன் நகரம் துறந்து-10-4-ஸ்ரீ சக்கரவர்த்தி வாய் திறக்க மாட்டாதே இருக்க -பிள்ளாய் -உங்கள் ஐயர் உன்னைக் காடேறப் போகச் சொல்லா நின்றார் – என்று கைகேயி சொன்ன வார்த்தையாலே –மந்தரை உடைய வசனத்தை கொண்டு –ந மந்த்ர்யாயா ந ச மாதுரச்யா தோஷோ தோஷோ நு ராஜ்ஜா -என்கிறபடியே – வன ப்ரேவேச ஹேதுக்கள் சொல்லுகிற இடத்தில் முந்துற எடுத்தது இவளை இறே-

கொங்கை வன் கூனி சொல் கொண்டு குவலயத்
துங்க கரியும் பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற்கு அருளி வான் கானடை–அம் கண்ணன்--2-1-8-கைகேயி வர அனுகுணமாக சக்ரவர்த்தி வசனத்தின் படியே ஸ்ரீ பரதாழ்வானுக்கு கொடுத்து –ஒருவரால் ப்ரேவேசிக்க அரிதான -வலிய காட்டை அடைந்த-அழகிய சுலபனானவன் -கட்டின காப்போடே காடேறப் போக சொன்ன இடத்தில் முகத்தில் கருகுதல் இன்றிக்கே -முடியை தவிர்ந்து ஜடையை புனைந்து நாட்டை விட்டு காடேறப் போன படியை நினைத்து – அழகிய சுலபன் -என்கிறது –ராம கமல பத்ராஷா-என்கிறபடி-அழகிய திருக் கண்களை உடையவன் -என்னவுமாம் –
அப்போது-ராஜ்ய ஐஸ்வர்யத்தை விட்டு காட்டுக்கு போந்தோம் -என்ற க்லேசம் இன்றிக்கே –
அக வாயில் ஹர்ஷம் திருக் கண்களில் தோன்றும் படியாக போன படியை சொல்கிறது –அப்போது அலர்ந்த செந்தாமரையை வென்றதம்மா- ராஜ்ய நாசம் இருள் வளர வளர ராமசந்திரன் ஒளி விஞ்சி இருந்ததே

வனவாசம் –தம்பியொடு தாமொருவர் தன் துணைவி காதல்  துணையாக முன நாள்
வெம்பி யெரி கானக முலாவுமவர்
-5-10-6-சௌகுமார்யத்துக்கு அத்விதீயரான
தம்பியோடு கூட- தம்பியொடு-இவர் முன்னாலே தயாராக நிற்க–பிராட்டியோடு கூடப் போகை-நில வெம்மை தோற்றிற்று இல்லை யாய்த்து -அவற்றின் மேலே-பஞ்சடியால் -பூவிலே அடியிடிலும் கொப்பளிக்கும் படியான திருவடிகளாலே –மன்னன் இராமன் பின்-அந்நிலை வெம்மைக்கு நீரும் நிழலும் இருக்கிறபடி ––இவர் முன்னாலே தயாராக நிற்கஉன் பிரிவினும் சுடுமோ வன் காடு -ஸ்வர்க்கம் என்ன நரகம் என்ன-

மாற்றுத் தாய் சென்று வனம் போகே என்றிட
ஈற்றுத் தாய் பின் தொடர்ந்து எம்பிரான் என்று அழ
கூற்றுத் தாய் சொல்ல கொடிய வனம் போன
சீற்றம் இலாதானைப் பாடிப் பற
சீதை மணாளனைப் பாடிப் பற -3- 9-4 –மாற்றுத் தாய் -என்றது மற்றைத் தாய்-ஸ்ரீ கௌசலையரோபாதி  -ஸ்ரீ பெருமாள் பக்கலிலே அதி ச்நேஹிதையாய் இறே ஸ்ரீ சுமித்ரையார்   இருப்பது இப்படி இருக்கிற தாயார் ஆனவள் சென்று (ராமன் அருகில் சென்று )-நீர் வனத்திலே போம் -என்று சொல்ல –ஸ்ர்ஷ்டஸ்த்வம் வன வாசாய ஸ்வ துரக்தச் ஸூஹர்ஜ் ஜன ராமே பிரமாதம் மகார்ஷி புத்ர ப்ராதரி கச்சதி -என்றும்-ராமம் தசரதம் வித்தி மாம் வித்தி ஜனகாத்மஜாம் அயோத்யாமடவிம் வித்தி கச்ச தாதா சுகம் -என்றும் சொல்லி இவரை ஒருப்படுத்தி-பெருமாளுடைய ஸௌகுமாரத்தையும்-போகிற இடத்தில் உண்டான கொடுமையையும் பாராமல்–பதினாலு சம்வத்சரம் வனவாசம் பண்ண சொன்ன க்ரௌர்யத்தை பற்ற -இவளைக் கூற்றுத் தாய் -என்கிறது–ஆசை உள்ளம்-எல்லாம் தனக்கேயாக -கூற்றுத்தாய் –அன்பு உள்ளம் -தனக்கும் பிறருக்கும்-கௌசல்யா தேவி –அருள் உள்ளம் – பிறருக்காகவே–சுமத்ரா தேவி -மூன்றையும் உணர்த்தியபடி-சீற்றம் இலாதனை –
கட்டின காப்போடே காட்டிலே தள்ளி விட்டாள் – என்னும் சீற்றம் ஏக தேசமும் திரு உள்ளத்தில் இல்லாதவனை-மாச லஷ்மண சந்தாபம் கார்ஷிர் லஷம்யா விபர்ய யே-ராஜ்ஜியம் வா வனவாசோ வா வனவாசோ மகோதய (அயோத்யா -22)-என்று சந்தோஷத்தோடே இறே எழுந்து அருளிற்று

சுற்றம் எல்லாம் பின் தொடர தொல் கானம் அடைந்தவனே!--8-6–எல்லாரும் போனார்களோ -சிறிதிடம் போய் மீண்டது என்று அன்றோ சொல்லிற்றாய்த்து –-அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று சொன்ன எல்லா அடிமையும் செய்யும் ஸ்ரீ இளைய பெருமாள் கூடப் போகையாலே-எல்லா பந்துக்களும் கூடப் போனார்கள் யாய்த்து இறே -என்று ஸ்ரீ எம்பெருமானார் அருளிச் செய்து அருளினார்-தன் விந்தை தந்த தந்தையாகவும் தாங்குபவளான தாயாவும் ஆக்குபவள் அக்கா போலவும் பேரை உடையவ பேரனைப்போலவும் தமது பின் பிறந்தவ தம்பி போலவும் -அன்பு அறிவு அக்கறை பாசம் வழிமுறை அனைத்தையுமே காட்டி பணிவிடையும் செய்து-

உன்னை பயந்த கைகேசி தன் சொல் கேட்டு நன்றாக நானிலத்தை ஆள்வித்தேன்
நன் மகனே! உன்னை நானே—- 9-1–நெய் வாய வேல் நெடும் கண் நேர் இழையும்
இளம் கோவும் பின்பு போக எவ்வாறு நடந்தனை? எம்மி ராமாவோ! எம்பெருமான்! என் செய்கேனே ?– 9-2–இன்று இனி போய் வியன் கான மரத்தின் நீழல் கல்லணை மேல் கண் துயில கற்றனையோ? காகுத்தா! கரிய கோவே! —–9-3–மனம் உருக்கும் மகனே! இன்று நீ போக என் நெஞ்சம் இரு பிளவாய்ப் போகாதே நிற்க்குமாறே! —9-4–கேகயர் கோன் மகளாய் பெற்ற அரும் பாவி சொல் கேட்ட அரு வினையேன் என் செய்கேன்? அந்தோ! யானே— 9-5–கமலம் போல் முகமும் காணாது எம்மானை என் மகனை இழந்திட்ட இழி தகையேன் இருகின்றேனே– 9-6–வனம் தான் சேர்த்தல் தூ மறையீர்! இது தகவோ? சுமந்திரனே!
வசிட்டனே! சொல்லீர் நீரே –9-7-என்னையும் நீள் வானில் போக்க என் பெற்றாய்? கைகேசி! இரு நிலத்தில் இனிதாக இருக்கின்றாயே– 9-8-என்னையும் என் மெய் உரையும் மெய்யாக
கொண்டு வனம் புக்க எந்தாய்! நின்னையே மகனாய் பெற பெறுவேன் ஏழ் பிறப்பும்
(எழுகின்ற பிறவிகளில் தோறும் -அவதரிக்கும் போதும்)நெடும் தோள் வேந்தே —9-9-நானும் வானகமே மிக விரும்பி போகின்றேன் மனு குலத்தார் தங்கள் கோவே! —9-10–ஏரார்ந்த கரு நெடுமால் ராமனாய் வனம் புக்க வதனுக்கு ஆற்றா தாரர்ந்த தடவரை தோள் தயரதன் தான் புலம்பிய அப் புலம்பல்-9-11--பிரதிகிரியை அல்லாத செயலைச் செய்த என்னால் செய்யலாம் பரிஹாரம் இல்லை –இப்படித் தண்ணிய செயலை செய்தக்கால் முடியவும் ஆகாதே இருக்கவும் வேணுமோ நான் –- பிராமணரே -நீங்கள் இது சொல்லி கோள்-இது தர்மமோ-ராஜ தர்மங்களை உபதேசித்துப் போருகிற ஸ்ரீ வசிஷ்ட பகவானே சொல்லாய் –அம்மா என்று அழைக்கும் ஆர்வ சொல்-தந்தையும் அம்மா என்றும் அளிக்கும் பெருமாளைப் பிரிந்து–என்னுயிர் பிரிந்து போவதை நானே பார்க்கும் பாவி-நீ இல்லாத நகரி இறே -அத்தாலே ஸ்வர்க்கமே யாகிலும் நீ இல்லாத ஊரை விட்டுப் போகின்றேன்-கர்மவஸ்யரும் போகத் தகாத காட்டில் புக்கான் -என்றதுக்கு ஆற்ற மாட்டாதே-ஸ்ரீ சக்கரவர்த்தி பிரலாபித்த பாசுரம்-

குக ஸஹ்யம்ஏழை  ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்று அவர்க்கு இன்னருள் சுரந்து-5-8-1–ஏழை-விஷய சாபல்யம் -அஞ்ஞான கார்யம் இறே – அஞ்ஞானம் தான் -ஜ்ஞான அநுதயம்-அந்யதா ஜ்ஞானம் – விபரீத ஜ்ஞானம் – என்று த்ரி பிரகாரமாய் இறே இருப்பது –
ஜ்ஞானம்   பிறந்தவாறே ஜ்ஞான அநுதயம் போம் –-யதா ஜ்ஞானத்தாலே அந்யதா ஜ்ஞானம் போம் – விஷய ப்ராவண்ய ரூபமான விபரீத ஜ்ஞானம் இறே போக்க வரிது
தர்மஞ்ஞ -யசஸ் வீ -ஜ்ஞான சம்பன்ன -என்கிற தேவர்க்கு எதிர் தட்டாய் இருக்கிறபடி –இத்தால் ஜ்ஞான கொத்தையைச்   சொல்லிற்று –-ஏதலன் –சத்ரு-தாயைச் சோறு வேண்டும் போது வாளை விதிர்த்த வேண்டும்படியான  சாத்ரவத்தை சொல்லுகிறது –-ரிபூணாம் அபி வத்சல-என்கிறதுக்கு எதர் தட்டாய் இருக்கிறபடி-இத்தால் வ்ருத்தத்தில் கொத்தை சொல்லுகிறது–கீழ் மகன் -இவை இத்தனையும் பூஷணமாம் படியான ஜென்மத்தை உடையவன்-கீழ்ச் சொன்னவை இரண்டும் ஜ்ஞான சாத்யமாயும் பிராயச்சித்த சாத்யமாயும் இருக்கும் இறே – இது வேறு ஒன்றால் கழிக்க ஒண்ணாதே-இஷ்வாகு வம்ச பிரபவ -என்கிறவர்க்கு எதிர் தட்டாய் இருக்கும் படி – இத்தால் ஜன்மத்தின் கொத்தை சொல்லுகிறது –என்னாது இரங்கி-இப் பாசுரம் சொல்லாது இருக்க -இரங்கி –இவர் இரக்கமே உபாயம்–இவ் விஷயீ காரத்துக்கு மேலே-இனிய அருளைச் சுரந்து-இன்னருள் –-தன் பேறான அருள்-சுரந்து – வத்ச சகாசத்தில் தேனு வானது ஷீரத்தை சுரக்குமா போலே
குணங்களைச் சுரந்து –குஹே  ந சஹிதோ ராமோ லஷ்மணனேன  ச சீதயா-என்று
ஸ்ரீ வால்மீகி பகவான் சொல்லி வைத்தான் இறே –யுன் தோழி –உனக்கு ஸ்வாமிநி- என்னாதே தோழி என்கிறார் -நீர்மையாலே-உம்பி யெம்பி –உன்னுடைய தம்பி என்னுடைய தம்பி –-பெருமாள் விஷயீ கரித்து இருக்குமவர்களை அவரோபாதியாக நினைத்து இருக்கும் இளைய பெருமாள் கருத்தாலே-பிராட்டியை தோழி என்றும் -இளைய பெருமாளை தம்பி என்றும் சொன்ன போதே-ஆர்த்தமாக வரும் இறே தம்முடைய தோழமை –தோழன் நீ எனக்கு –ஸ்வ நிகர்ஷத்தைச் சொல்லி-புருஷகாரத்தை முன்னிட்டு-ஸ்ரீ வைஷ்ணவ அங்கீகாரம் உண்டானால் அநந்தரம் உபாய ஸ்வரூபம் அனுசந்தேயமாகக் கடவது இறே அத்தைச் சொல்லுகிறது –

தொன் நகரம் துறந்து துறை கங்கை தன்னை பத்தி உடை குகன் கடத்த வனம் போய் புக்கு
பரதனுக்கு பாதுகமும் அரசும் ஈந்து சித்ர கூடத்து இருந்தான் தன்னை இன்று-10-4-தம்பிமாரைக் காட்டில் ஸ்நேஹத்தை உடையனாய் -பிரியில் தரியாத படி ஸ்ரீ பெருமாள் நியமிக்கையாலே நின்றவனுமாய் ஸ்ரீ பரத ஆழ்வானையும் கூட அசிர்க்கும் படியான ஸ்ரீ குஹப் பெருமான் கங்கையைக் கடத்த-மனுஷ்ய சஞ்சாரம் இன்றியே துஷ்ட ம்ருஹங்களேயான காட்டிலே போய்ப் புக்கு –பெருமாள் திருவடியையே அலம்பி படகில் ஏறச்சொல்ல –துகள் பட்டு கல் பெண்னானதே -அதனால் -படகோட்டி -இருவரும் –வைகுந்தன் என்னும் தோணி -அன்றோ ஸஜாதீயர்

ஸ்ரீ சித்ரகூடத்திலே எழுந்தி அருளி இருக்கிற இருப்பு தான் பெறாதே பிற்பட்டார்க்கும் இழவு தீர சர்வ காலத்திலும் அனுபவிக்கைக்காக திருச் சித்ரகூடத்திலே வர்த்திக்கிறவனை-இவனைக் காணப் பெறாதே விடாய்த்த கண் குளிரும்படி –-காணப் பெற்ற–கேட்டே போகை அன்றிக்கே கண்டு அனுபவிக்கப் பெற்ற

பாதுகா பட்டாபிஷேகம் -சேனை எழ-அனைவருடன் – பரதன் செல்ல கைகேயி மனமும் மாறி உடன் செல்ல-கைகேயி அப்பா அஸ்வபதிக்கு வாக்கு -பேரனுக்கு பட்டாபிஷேகம் -சுமந்திரன் சொல்ல பின்பே பெருமாள் இத்தை அறிந்தார்

முடி ஒன்றி மூ உலகங்களும் ஆண்டு உன்
அடியேற்கு அருள் என்று அவன் பின் தொடர்ந்த
படியில் குணத்து பரத நம்பிக்கு அன்று
அடி நிலை ஈர்ந்தானைப் பாடிப் பற
அயோத்தியர் கோமானைப் பாடிப் பற -3- 9-6 –
நாம் எல்லோரும் கூடப் போய் பெருமாள் திருவடிகளிலே விழுந்து –அவரை மீட்டுக் கொண்டு வந்து திரு அபிஷேகம் பண்ணுவிப்போம் வாரும் கோள் -என்று எல்லோரையும் கூடக் கொண்டு –படியில் குணத்து பரத நம்பிக்கு –1-இக் குடியில் (இஷ்வாகு குடியில் ) மூத்தார் இருக்க இளையார் முடி சூடி அறிவார் இல்லை -என்று குல மரியாதையை நோக்குகையாலும் (நடுவில் பிள்ளை புகழும் ஆக்கமும் ஆக்கி -நாயனார் )-2-ஸ்வா தந்த்ர்ய பீதியாலே முடி சூட வெருவி -தன் ஸ்வரூபத்தை நோக்குகையாலும்-3-ஆர்த்தியோடே திரு வடிகளிலே வந்து விழுந்து -மீண்டு எழுந்து அருளி திரு அபிஷேகம் பண்ணி அருள வேணும் -என்று அர்த்திக்கையாலும் ஒப்பிலாத குணத்தை உடையனான ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு
(படி-ஒப்பு –ஓர் ஆயிரம் ராமர் நின் கேழ் ஆவரோ தெரியல அம்மா -கம்பர் )

அன்று அடி நிலை ஈந்தானை – அவன் ஆர்த்தனாய் நிற்கிற அக் காலத்திலே –
நீ சொல்ல நாம் இப்போது மீண்டோம் ஆகில் – நாம் ஐயர் சொன்னது செய்யாமல் ராஜ்ய ஸ்ரத்தையாலே மீண்டோம் ஆவோம் -நீ நம்மை மீட்டுக் கொண்டு போனாய் ஆகில் –
ஸ்ரீ பரத ஆழ்வான் இரண்டும் செய்ய வல்லனாய் இருந்தான் –-1-முன்பு கீழ் ஓலை வைத்து தாயை கொண்டு ராஜ்யத்தை வாங்கி தமையனை காடேறப் போக விட்டான் –
-2- இப்போது லோக அபவாதம் முதிர்ந்தவாறே பின் தொடர்ந்து சென்று கண்ணை பிசைந்து
காலிலே விழுந்து மீட்டுக் கொண்டு வந்தான் – என்னும் அவத்யமும் உனக்கு வரும்-ஆன பின்பு உன்னை ஸ்வ தந்த்ரனாக்கி வார்த்தை சொன்னார் முன்னே – உன் ஸ்வரூப அனுரூபமான பார தந்த்ர்யத்தை நீ பெற்று போ -என்று அவன் நிர்ப்பந்தியாதபடி வார்த்தை சொல்லி இசைவித்து-மரவடியை தம்பிக்கு வான் பணையம் வைத்து -என்கிற படியே
1-அவன் ஸ்வ தந்த்ர்ய பயம் எல்லாம் போம் படியாகவும்-2-மீண்டு எழுந்து அருளுவர் -என்னும் அதுக்கு விசுவாசமாகவும் திருவடி நிலைகளைக் கொடுத்து-அடி சூடும் அரசாக்கி விட்டவனைப் பாடிப் பற அயோத்தியர் கோமானைப் பாடிப் பற-ஸ்ரீ பரத ஆழ்வான் முடி சூடாமல் -அடி சூடிப் போகையாலே திரு அயோத்தியில் உள்ளவர்களுக்கு தானே நிர்வாஹனாய் ஆனவனைப் பாடிப் பற -என்று எதிரியைப் பார்த்து சொல்லுகிறாள்-மரவடியை தம்பிக்கு வான் பணயம் வைத்து போய் வானோர் வாழ-4-9-1-பணயம் ஆவது –
விஸ்வாச ஹேதுவாய் உள்ளது-வான் பணையம் -என்கையாலே-மகா விஸ்வாச ஹேதுவாய் உள்ளது என்னும் இடம் தோற்றுகிறது-வான் -என்று-வலியதால் –-பெருமை யாதல்

பாதாவநி ப்ரபவத: ஜகதாம் த்ரயாணம்
ராமாதபி த்வமதிகா நியதம் ப்ரபாவாத்
நோ சேத் கதந்நு பரதஸ்ய தம் ஏவ லிப்ஸோ:
பரத்யாயநம் பரிபணம் பவதீ பவித்ரீ
—-108-ஸ்ரீ பாதுகையே -பெருமாள் உன்னை அடகு வைத்து தன்னை மீட்டுக் கொண்டார் –உன் மதிப்பு பெருமாளை விடவும் மூ உலகங்களிலும் உயர்ந்ததாக இருந்ததால் தானே உன்னை அடகுப் பொருளாக ஏற்றுக் கொண்டார்-ராமராஜ்யம் விட சிறந்த ராஜ்ஜியம் -நம்மாழ்வார் –அவியின்றி யான் பெரியன் -நீ பெரியவர் என்பதை யார் அறிவர்-பாதுகாப்பூ -பாதுகையில் பூ

காகாசூரன் வ்ருத்தாந்தம் –பிராட்டி தொடையில் தலை வைத்து சயனம் –பொன் திகள் சித்திர கூடப் பொருப்பினில்
உற்ற வடிவில் ஒரு கண்ணும் கொண்ட அக்
கற்றைக் குழலன் கடியன் விரைந்து உன்னை
மற்றைக் கண் கொள்ளாமே கோல் கொண்டு வா
மணி வண்ணன் நம்பிக்கு ஓர் கோல் கொண்டு வா
-2 6-7 –பிராட்டியும் தாமும் கூட ஜலக்ரீடை பண்ணின பின்பு பெருமாள் மடியிலே முந்துற பிராட்டி கண் வளர்ந்து அநந்தரம்-
பார்யாயேன ப்ரசூப்த -என்கிறபடியே – பிராட்டி மடியில் பெருமாள் கண் வளர்ந்து அருளா நிற்கச் செய்தே – இந்திர புத்ரனான ஜெயந்தன் – ஆசூர பிரகிருதி ஆகையாலே -தேவ ரூபத்தை மறைத்து காக ரூபத்தை பரிகிரஹித்து கொண்டு ஜனனி-என்று அறியாதே -பிராட்டி உடைய வடிவு அழகை கண்டு -விபரீத புத்தியாலே வந்து திருமேனியிலே புண் படுத்த –அத்தாலே பெருமாள் சீறி அருளி -காகத்தை குறித்து ப்ரஹ்மாஸ்த்ரத்தை பிரயோகிக்க -அது புக்க இடம் எங்கும் தொடருகையாலே – ஓர் இடத்திலும் போக்கற்று -தமேவ சரணம் கத -என்கிறபடியே தன்னுடைய பிராண ரஷணம் அர்த்தமாக  வந்து சரணம் புக – அத்தாலே ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கு ஒரு கண் அழிவை கற்ப்பித்து பிராணனோடு   போக விட்ட கதையைச்  சொல்லுகிறது-விபரீத புத்தி அடியாக பிராட்டி உடைய வடிவிலே சென்று உற்ற இரண்டு கண்ணில் ஒரு கண்ணைப் பறித்து விட்டவன்-அக் கற்றை குழலன் கடியன்
அப்படிப்பட்ட ஸ்வாபவனாய்-செறிந்த திருக் குழலை உடையனாய் இருக்கிறவன்- குற்றத்துக்கு ஈடாக தண்டிக்கும் க்ரூரன்-இவள் சந்நிதியாலே காகம் தலை பெற்றது அது இல்லாமையால் ராவணன் மாண்டான்-ஒரு கண் கொண்டே இருபக்கமும் பார்க்கும் திறனையும் கொடுத்து அருளினவன் -கா ககா எவன் எவள் -எவனுக்கு ராமன் போல் கருணை உள்ளது எவனுக்கு சீதா போல் கருணை உள்ளது -ஆகவே காகா கத்துகிறது –

முனிவர் தவம் செய்து இருக்கும் இடம் சித்ரகூடம் -அயோத்யா மக்கள் அறிந்த இடம் -தண்டகாரண்யம் சென்றால் தானே அசுரர்களை முடிக்க முடியும் -போகும் வழியில் அத்ரி அநஸூயை ஆஸ்ரமம் -ரிஷி பத்னி பிரசாதம் -பெற்றார்கள்

மேல் ஏழு நிகழ்வுகள் பார்ப்போம் – அகஸ்தியர் இடமும் விஷ்ணு தனுஸ் வாங்கியது -சூர்ப்பணகை அங்க பங்கம் -கர தூஷண வதம் -மாரீச வதம் -பிராட்டி பிரிவு -ஜடாயு மோக்ஷம் -சுக்ரீவ பட்டாபிஷேகம்

போர் வேந்தன் ——46
தன்னுடைய தாதை பணியாலர சொழிந்து
பொன்னகரம் பின்னே புலம்ப வலம் கொண்டு ——-47
மன்னும் வள நாடு கை விட்டு மாதிரங்கள்
மின்னுருவில் வெண் தேர் திரிந்து வெளிப்பட்டுக் ——48
கன்னிரைந்து தீய்ந்து கழை யுடைந்து கால் சுழன்று
பின்னும் திரை வயிற்ருப் பேயே திரிந்து உலாவக்———-49
கொன்னவிலும் வெங்கானத்தூடு கொடும் கதிரோன்
துன்னு வெயில் வறுத்த வெம் பரல் மேல் பஞ்சடியால் —–50
மன்னன் இராமன் பின் வைதேவி என்றுரைக்கும்
அன்ன நடைய வணங்கு நடந்திலளே——செல்வம் மிகுந்த நாட்டை உபக்ஷித்துவிட்டு-திக்குகள்தோறும் மின் போன்ற கானலே பரவி யிருக்கப் பெற்றதும்.-எல்லாம் சூந்ய ஸ்தலமாகவுமிருக்கப் பெற்றதும்-கல்லுகள் நிறைந்து (புல்லுகள்) தீஞ்சு மூங்கில்கள் வெடித்து சுழல்காற்று அடித்துக்கொண்டிருக்கப் பெற்றதும்–அதற்குமேலும்-ஆஹாரமில்லாமையால்) மடிந்த வயிற்றேயுடைய பேய்களே திரிந்து கொண்டிருக்கப் பெற்றதும்-கொலையைப் பற்றின சப்தமே கிளம்பிக்கொண்டிருக்கப்பெற்றதுமான-வெவ்விய காட்டினுள்ளே-உஷ்ண கிரணனான ஸூர்யனுடைய வெய்யிலாலே வறுக்கப்பட்ட வெவ்விய பருக்கைக் கற்களின் மேலே (எழுந்தருளின வளவிலே)வைதேஹீ என்று சொல்லப்பட்டவளாய்-அந்த ஸ்ரீராம மஹாராஜன் பின்னே-பஞ்சுபோல் மெல்லிய திருவடிகளாலே-தானும் நடந்து செல்லவில்லையா?

பைம் கண் விறல் செம் முகத்து வாலி மாளப் படர் வனத்துக் கவந்தனொடும் படையார் திண் கை செங்கண் விறல் விராதன் உக வில் குனித்த விண்ணவர் கோன் தாள் அணைகிற்பீர் -3-4-6-ஜாதி பிரயுக்தமான கண்ணில் பசுமையையும் மிடுக்கையும் சீற்றத்தாலே சிவந்த முகத்தையும் உடைய வாலி முடியும்படியாக-பரந்த காட்டிலே உண்டான சத்வங்களை அடைய
இரண்டு கையாலும் வாரி பஷித்துக் கொண்டு வருகிற கபந்தனோடு கூட-படையார் திண் கை –-திண்ணிய படையார்ந்த கை-வெவ்விய கண்களையும் மிடுக்கையும் உடைய விராதன் முடியும்படியாக வில்லை வளைத்த(ராகவ் ராம லஷ்மன் இருவரும் -கட்கம் கொண்டு விராதனை முடித்ததாக ஸ்லோகம் வில் என்றது உப லக்ஷணம் )விராதன் மூவர் நடப்பதைப் பார்த்து —அவனை முடித்தது மேல் பலர் மாளாப் போவதற்கு முன் நோட்டம்

கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய்
சிலையும் கணையும் துணையாகச் சென்றான் வென்றிச் செருக்களத்து

மலை கொண்டலை நீரணை கட்டி மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர்
தலைவன் தலை பத்து அறுத்து உகந்தான் சாளக்ராமம் அடை நெஞ்சே —1-5-1-கலை முதலாக –வர்த்திக்கக் கடவதான காட்டைக் கடந்து போய்--மாய மானாக வருவான் இங்குதே வநே ந வநம் கத்வா -என்கிறபடியே படை வீட்டில் நின்றும் காட்டிலே புகுகை அன்றிக்கே
காட்டில் நின்றும் ஆயிற்று காட்டிலே வந்து புகுந்தது- (கைகேயி நாட்டில் இருந்து காட்டுக்கு செல்ல ஆணை– இவர் காட்டில் இருந்து காட்டுக்கு -)அப்படியே இங்கும் துஷ்ட சத்வ பிரசுரமான காட்டை கழிந்து பின்னை யுத்த பூமியிலே யாயிற்று வந்து புகுந்தது
கலைகளையும்  ஆனைகளையும் குதிரைகளையும் உடைத்தாய் இருக்கிற காட்டைக் கடந்து போய் வென்றிச் செருக் களத்திலே வந்து புகுந்தான்

நெய் வாய வேல் நெடும் கண் நேர் இழையும் இளம் கோவும் பின்பு போக
எவ்வாறு நடந்தனை? எம்மி ராமாவோ! எம்பெருமான்! என் செய்கேனே
?– 9-2–இந்த தேசத்துக்கு போலியான தேசத்திலே போய்ப் புகாதே வனமே மேவி-நீர் போய்ப் புக்காலும் புகுகைக்கு தகாதவர்களை கூடக் கொண்டு-கால் நடை நடந்து அறியாத நீர் இவர்களையும் கூடக் கொண்டு பொல்லாத காட்டிலே போனீர் –என்னாயனே நான் என் செய்கேன் –நேர் இழையும்-சக்ரவர்த்தி நிர்பந்திக்க–ஆபரணங்கள் அணிந்தே சீதாபிராட்டி செல்கிறாள்-அத்ரி கொடுத்ததையும் அணிந்தே போகிறாள்- -பின்பு வானர முதலிகளை இவை கொண்டே கடாக்ஷிக்க வேண்டுமே–அக்ரே ராம மத்யே ஸீதா ஸூ மத்யமா ஹா-பெருமாள்-பிராட்டி -இளைய பெருமாள் மூவரும்பிரணவமே நடந்து செல்வதைப் போல் நடந்தார்கள்

வலி வணக்கு வரை நெடும் தோள் விராதை கொன்று வண் தமிழ் மா முனி கொடுத்த வரி வில் வாங்கி கலை வணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கி கரனோடு தூடணன் தன் உயிர் ரை வாங்கி சிலை வணக்கி மான் மறிய வெய்தான் தன்னை-10-5-எதிரிகள் வலியைத் தோற்பிக்கக் கடவதாய்-மலை போலே திண்ணியதான தோள்களையும் உடைய
விராதனைக் கொன்று-ஸ்ரீ அகஸ்த்யன் கொடுத்த தர்ச நீயமான வில்லை வாங்கி-(10 வர்ஷம் வனவாசம் பின்பே அகஸ்தியர் இடமும் இருந்து சிலை வாங்கினார்)கலை நோக்கைத் தோற்பிக்கும் படியான நோக்கை உடைய ஸூர்ப்பணகி யுடைய மூக்கை வாங்கி-இவளுடைய ரூப வைரூப்யம் கண்டு பொறுக்க மாட்டாத வந்த கர தூஷணர்களை ப்ராணன்களை ஹரித்து-அது கேட்டுப் பொறாதே-ராவணனாலே ப்ரேரிதனாய் வந்த மாரீசனான மாயா ம்ருகத்ததை எய்து கொன்றவனை-

அகஸ்திய பாஷா -தமிழ் -வண் -அனைவரும் புரியும்படியாக வள்ளல் தன்மை கொண்டது- வரி சில் -சிறந்த அழகிய -மா முனி வடிவத்தில் சிறியவர் கீர்த்தி பெரியவர் -கீழே -பரசுராமர் இடம் -வாங்கி -வில்லுடன் போகாமல் -வருண தேவன் வாங்கி அகஸ்தியர் இடம் கொடுத்து பின்பு வாங்கிக் கொண்டார் -ஆச்சார்யர் இடம் வாங்கிக் கொண்டது போல் -நாசிக் -பஞ்சவடி -ஐந்து ஆலமரம் சூழ்ந்த இடம் –மூன்று வருஷங்கள் இங்கு இருந்தார்கள்
சூர்ப்பணகை அங்க பங்கம் -இவள் கணவன் வித்யுஜ்ம்ன ராவணன் முன்பே கொன்றான்

மீதோடி வாள் எயிறு மின்னிலக முன் விலகும் உருவினாளைக்
காதோடு கொடி மூக்கு அன்று உடன் அறுத்த கைத் தலத்தா என்று நின்று
தாதோடு வண்டலம்பும் தண் சேறை எம்பெருமான் தாளை ஏத்திப்
போதொடு புனல் தூவும் புண்ணியரே விண்ணவரில் பொலிகின்றாரே –7-4-3-மேல் எங்கும் பரந்து ஒளியை உடைத்தாய் இருக்கிற எயிறானது ஒளி விட –மின் போலே விளங்க –மின்னின் எதிர் விழிக்க ஒண்ணாதாப் போலே மேலே பரந்து ஒளியை உடைய எயிறானது
மின் போலே விளங்க –துணுக் என்ன வேண்டும்படியான வடிவை உடையவளை –மேலே பரந்து ஒளியை உடைய எயிறானது மின் போலே விளங்க –முன்னே சஞ்சரிக்கிற வடிவை உடையவள் -என்றுமாம் –பிராட்டியோடு போலியாகப் பண்ணிக் கொடு வந்த-( பேணிக் கொண்டு வந்த )அவயவங்களைப் போக்கின திருக் கைகளை உடையவனே-ராமஸ்ய தஷிணோ பாஹூ பாஹ்ய பிராணன் (இளைய பெருமாள் )-என்னக் கடவது இறே –
(கொல்லை அரக்கியை மூக்கு அறுத்து விட்ட குமாரனார் )

தென்னிலங்கை யாட்டி யரக்கர் குலப்பாவை
மன்னன் இராவணன் தன நல் தங்கை வாள் எயிற்றுத்——144
துன்னு சுடு சினத்துச் சூர்பணகாச் சோர்வெய்திப்
பொன்னிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால்—-145
தன்னை நயந்தாளைத் தான் முனிந்து மூக்கரிந்து
மன்னிய திண் எனவும் –பிரபுவாகிய ராவணனது அன்புக்குரி தங்கையானவளும்-இருவரும் பொருத்தமான –நல் தங்கை-வாள் போன்றபற்களையுடையளும்-எப்போதும் (எதிரிகளைச்) சுடக்கடவதான் கோபத்தை யுடையளுமான-சூர்பணகை யென்பவள்-அதிகமாக வுண்டான காம நோயினால்-வைவர்ணிய மடைந்து-பரவசப்பட்டு (தளர்ந்து)-தன்னை ஆசைப்பட அந்த அரக்கியை-தான் சீறி-மூக்கை யறுத்து-இதையே ஒரு ப்ரதிஷ்டையாக நினைத்துக கொண்டிருப்பதென்ன.-“ஸ்த்ரிவதம் பண்ணினால் அநுதாபமுமின்றிக்கே பெரிய ஆண் பிள்ளைத் தனம் செய்ததாக நினைத்திருக்கிற நிலை நின்ற த்ருடதவமும்“ 

கலை இலங்கும் அகலல்குல் அரக்கர் குலக் கொடியைக்
காதோடு மூக்குடன் அரியக் கதறி அவளோடி
தலையில் அங்கை வைத்து மலை இலங்கை புகச் செய்த
தடந்தோளன்
-3-9-4—திருநக்ஷத்ரம் பெருமாளுக்கு-37 -சூர்ப்பணகை -அனைய யுக -த்ரேதா யுகம் -13 வது -மாறுவேடம் பூண்டு வந்தாளே–விளங்கா நின்றுள்ள பரியட்டத்தை உடைத்தான அகன்ற நிதம்ப பிரதேசத்தை உடையளாய் கொண்டு தோற்றின ராஷசியைக் கொண்டாடும்படி இருக்கிற பெண்ணை –தனக்கு ஒரு பரியட்டமும் பெருமையும் உடையளாய் வந்து தோற்றினாள் ஆயிற்று – அவள் ஏறிட்டுக் கொண்டு வந்த வடிவைப் போக்கி தானாம்படி பண்ணி விட்டான் ஆயிற்று-அநந்தரம் அவளும் கூப்பிட்டு கொண்டு
தலையிலே கையை வைத்து மலையின் மேலேயான இலங்கையிலே புகும்படி பண்ணின
தோள் வலியை உடையவன் 

அடுத்தார்த்து எழுந்தாள் பில வாய் விட்டலற அவள் மூக்கயில் வாளால்
விடுத்தான் விளங்கு சுடர் ஆழி விண்ணோர் பெருமான்-
1-5-5–மேல் விழுந்து கிட்டி-ஆரவாரத்தைப் பண்ணிக் கொண்டு – கிளர்ந்து வந்து தோற்றினவள் –பிலம் போலே இருக்கிற வாயைத் திறந்து கூப்பிட அவள் மூக்கை(காதுக்கும் இது உப லக்ஷணம்
நாசிகா -நாசி மூக்கு -கோதாவரிக்கு இரு பக்கமும் பஞ்சவடியும் நாசிக் நகரமும் உண்டே )
அயில்-கூர்மை கூரிய திருக்குற்றுடை வாளை வாங்கிப் போக்கினான்-கையும் திருவாழி யுமான சேர்த்தி அழகைக் காட்டி நித்ய ஸூரிகள் கார்யத்தை நிர்வஹித்துக் கொண்டு போகிறவன்-

கருமகள் இலங்கையாட்டி பிலங்கொள் வாய் திறந்து தன்மேல் வருமவள் செவியும் மூக்கும் வாளினால் தடிந்த எந்தை பெருமகள் பேதை மங்கை தன்னொடும் பிரிவிலாத திருமகளா மருவும் நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே!”.–தண்ணிய ஸ்திரீ-ராவணன் உடன் பிறந்தவள் ஆகையாலே இலங்கையில் உள்ளார் அடையக் கொண்டாடும்படி இருக்கிறவள்-பிலம் போலே இருக்கிற வாயைத் திறந்து-அனன்யை யானவளை நோக்கி வந்த படியாலே
தன் மேலே வந்ததாய் இருந்தபடி
-ஏறிட்டுக் கொடு வந்த துர்மானத்தைப் போக்கி
தானான படியே யாக்கி விட்ட படி- இவனை புஜிக்கைக்கு விரோதி இவள் இறே என்று
பிராட்டியை நலிவதாக வாயை அங்காந்து கொண்டு வந்தாள் ஆய்த்து    – அவளுடைய செவியையும் மூக்கையும் வாளாலே அறுத்த என் ஸ்வாமி –

தார்க்கு இள தம்பிக்கு அரசு ஈந்து தண்டக
நூற்றவள் சொல் கொண்டு போகி நுடங்கிடை
சூர்பணகாவை செவியோடு மூக்கவள்
ஆர்க்க அரிந்தானைப் பாடிப் பற
அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற
-3 -9-8 –காம ரூபிணி ஆகையாலே   -ஸ்வ வேஷத்தை மறைத்து –(காம ரூபிணி–இஷ்டமான ரூபம் கொள்ள வல்லவள் ) அத்யந்த அபிமதமான ஒரு ஸ்திரீ வேஷத்தை கொண்டு வருகையாலே – நுடங்கின இடையை உடையளான சூர்பணகயை -தன் அழகைக் காட்டி – என்னை விஷயீ கரிக்க வேணும் -என்று வந்த அளவில் –பிராட்டியைக் கண்டு -நமக்கு இவள் ஒரு ஸ்திரீ உண்டு -அங்கே போ -என்று
இளைய பெருமாளைக் காட்ட – அங்கே சென்ற அளவில் -நான் அவருக்கு சேஷ பூதனாய் இருப்பான் ஒருத்தன் – இன்னம் அவர் பக்கலிலே போ -என்ன-இப்படி உபாலம்பிக்கையாலே (பரிஹாஸ ரஸத்தை அனுபவிக்கையாலே ) அவள் அதிக்ருதையாய் -பழைய வேஷத்தை கொண்டு- எடுத்துக் கொண்டு போகப் புக்க அளவிலே – (பிராட்டி மேலே காய்ந்து -எடுத்து விட்டு -சண்டை போடப் புறப்பட்டு வியாக்யானங்களில் காண்கிறோம் ) செவியோடு கூட அவள் மூக்கையும் – அவள் கதற கதற அறுத்தவனை-ராமஸ்ய தஷிணோ பாஹூ –என்கிற படியே இளைய பெருமாள் கரண பூதர் ஆகையாலே அறுத்ததில் கர்த்ருத்வம் பெருமாளதாகச் சொல்லுகிறது-பஹிர் பிராணன் அன்றோ இவன்-

முல்லைப் பிராட்டி நீ யுன் முறுவல்கள் கொண்டு எம்மை
அல்லல் விளைவியேல் ஆழி நங்காய் உன் அடைக்கலம்
கொல்லை அரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார்
சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமை பொய்யன்றே —10-4-வரம்பு அழிந்த செயலை உடையவள் -மரியாதை தப்பி நின்றவள் இறே
பிராட்டியை புருஷகாரமாகக் கொண்டு பெருமாளைப் பற்ற பிராப்தமாய் இருக்க –
அவளோடு மலைந்து பெறப் பார்த்தவளை –இவளே இறே இவனோட்டை அனுபவத்துக்கு தண்ணீர் துரும்பு -என்று அவள் மேலே விழுந்தாள் யாய்த்து –தமக்கு அனந்யார்ஹராய் இருப்பாரோடு உண்டான சம்ஸலேஷத்துக்கு விரோதிகளாய் வருவாரை
அழியச் செய்யுமவர் கிடீர்-நோவு பட்டவள் —தருனௌ ரூப சம்பன்னௌ–ஆரண்ய -19-14-என்று கூப்பிடும்படியான பருவம் படைத்தவர் – தான் பட்ட பரிபவத்தை முறைப்பட சென்றவள் இறே –தருனௌ -என்கிறாள்-அப்பருவத்திலே துவக்கு பட்ட படியாலே –தான் பட்ட நலிவை சம்போக மத்யத்தில் பிறந்த போக சிஹ்னத்தோ பாதியாக நினைத்து இருந்தாள் யாய்த்து — இல்லையாகில் பருவத்தை பேசக் கூடாது இறே –

ஜனஸ்தானம் ஓடுகிறாள் –கர தூஷண வதம் -பஞ்சவடி அருகில் உள்ளது -ஓன்று விட்ட சகோதரர்கள் -14000 அரக்கர்கள் –அன்று நேர்ந்த நிசாசரரைக்-கவர்ந்த வெங்கணைக் காகுத்தன்அன்று – ஜன ஸ்தானத்திலே இருக்கிற வன்று ரஷகனாவன் ரஷ்யத்தை நோக்கக் கடவதாக வந்து நின்ற அன்று –நிசாசரர் -வெளியில் முகம் கண்டு அறியாத பையல்கள்-கவர்ந்த-புறப்படும் போது வினயத்தோடு புறப்பட்டு வேட்டை நாய்கள் ஓடி மேல் விழுமா போலே விழுகை-விடும் போது அம்பாய் படும் போது காலாக்நி போலே இருக்கை-தீப்த பாவக சங்காசைத்தரை -என்கிறபடியே பெருமாள் கண் பார்க்கிலும் முடித்து அல்லது நில்லாத வெம்மை-குடிப் பிறப்பால் தரம் பாராதே விஷயீ கரித்தபடியும் வீரவாதியும்-

புகழும் இவள் நின்று இராப்பகல் பொரு நீர்க் கடல் தீப் பட்டு எங்கும்
திகழும் எரியோடு செல்வது ஒப்ப செழும் கதிர் ஆழி முதல்
புகழும் பொரு படை ஏந்தி போர் புக்கு அசுரரைப் பொன்றுவித்தான்

திகழும் மணி நெடு மாடம் நீடு திருப் புலியூர் வளமே–8-9-3-தோலாத தனிவீரன்-பிரசித்தமான வீரத்தை உடையவனும்-பராக்ரமங்களாலே மகிழச் செய்கின்றவனுமான ஸ்ரீ ராம பிரான்–ஞானம் உடைய திரு ஆழி முதலான ஆயுதங்களாலே-புகழப் பட்ட வெற்றி ஒலியை உடைய பெருமானே–சத்ரோ பிரத்யாக வீரஸ்யரஞ்சனி யஸ்ய விக்ரமை-பஸ்யத யுத்த லுப்த அஹம் க்ருத கா புருஷ த்வயா –சுந்தர -105-6-என்கிறபடியே-கையும் ஆயுதமுமாய் பொருத்தம் இருந்தபடி என் என்று- பகைவர்கள்-புகழும் படியைச் சொல்கிறது என்று எம்பெருமானார் அருளிச் செய்வர் –ஆயுதம் தரித்தவனாய்-போரிலே புக்கு தீயோர்களை முடித்தான் –பொன்றுவித்தான் -முடித்தான்-

சாலி வேலி தண் வயல் தட கிடங்கு பூம் பொழில்
கோல மாட நீடு தண் குடந்தை மேய கோவலா
காலநேமி வக்கிரன் கரன் முரன் சிரமவை
காலனோடு கூட வில் குனித்த வில் கை வீரனே –-59-கரன் அரக்கன் நிரஸனம் ராம பெருமான் –காலனோடு கூட வில் குனித்த – இவர்கள் பேர் கேட்க அஞ்சும் காலன் இவர்களுக்கு நிர்வாஹகனாய் இவர்கள் அஞ்சிச் சென்று கூப்பிடும்படியாக
சங்கல்பத்தாலே அன்றி -வில்லாலே -அழியச் செய்தவனே –வில் கை வீரனே —
ஆஸ்ரித விரோதிகளை அழியச் செய்கைக்கு வில் வளைக்கவும் வேண்டாதே
சக்ர சாப நிபே சாபே க்ர்ஹீத்வா சத்ரு நாசநே -என்னும்படியே வில் பிடித்த பிடியிலே
அவர்கள் முடியும்படி
ஆண் பிள்ளைத் தனத்தை உடையவனே –ஒன்றரை முகூர்த்தத்தில் -அகம்பணன் மட்டுமே பெண் வேடம் பூண்டு தப்பிச்சென்று ராவணனிடம் சொன்னான்-அவட்க்கு மூத்தோனை வெந் நரகம் சேரா வகையே வில் குனித்தான் – -கையும் வில்லையும் பார்த்ததே -பல்லாயிரம் நரக வேதனை இங்கேயே அனுபவித்தான்-கூடலர் சேனை பொருது அழியச்  சிலையால் மராமரம் எய்த தேவனைச் சிக்கென நாடுதிரேல் -4-1-3-மகர்ஷிகளை நலிகையாலே சத்ருக்களான ஜனஸ்தான வாசிகளான ராஷசர் உடைய  சேனையானது –
விசேஷம் சொல்லவும் ஒருவர் இல்லாதபடி அழியும் படியாக பொருது –(அகம்பனன் ஒருவன் இருந்தானே என்னில்-கர தூஷணாதிகள் உடன் யுத்தம் செய்ய வந்தவன் அல்லவே இவன்-புடவை சுத்தி இருந்தேன் -பெண் என்று நினைத்து என்னைக் கொல்ல வில்லை என்றானே ராவணன் இடம் )

கலை இலங்கும் அகலல்குல் அரக்கர் குலக் கொடியைக்
காதோடு மூக்குடன் அரியக் கதறி அவளோடி
தலையில் அங்கை வைத்து மலை இலங்கை புகச் செய்த
தடந்தோளன்
-3-9-4-தலை இலங்கை வைத்து மலை இலங்கை புகச் செய்த-அவளும் கூப்பிட்டு கொண்டு தலையிலே கையை வைத்து மலையின் மேலேயான இலங்கையிலே புகும்படி பண்ணின தோள் வலியை உடையவன்-ராவணன் இடமும் சொல்லி -மேல் மாரீச வதம்-(கிவாஜா கடை சிப்பந்த்திக்கு கடைசி பந்தியா –இம்மைக்கும் மறுமைக்கும் சரியில்லை -இம்மை மறுமை சரியில்லை பேச மைக் சரியாக வேலை செய்யாததால் சொன்னாராம்)

இலை மலி பள்ளி யெய்தி யிது மாயம் யென்ன இன மாய மான் பின் எழில் சேர்
அலை மலி வேற்  கணாளை அகல்விப்பதற்கு ஓருருவாய மானை யமையா
கொலை மலி வெய்துவித்த கொடியோன் இலங்கை பொடியாக வென்றி யமருள்
சிலை மலி செஞ்சரங்கள் செல வுய்த்த நங்கள் திருமால் நமக்கோர் அரணே –11-4-7-இலை மலி பள்ளி
 -பர்ணசாலைக்கு தமிழ்-பர்ண சாலையிலே இருந்தும் இது ஒரு ஆச்சர்யம் இருந்த படி என் -என்னும்படியாக இனத்தின் மான்களோடு கூடி வரில் அவை வெருவும் யென்று அவற்றின் பின்னே –ஆஸ்ரமத்வார மாகம்ய  -இத்யாதி –எழிலை உடையாளாய்
இலக்கானாரை அழித்து பிணிப்புண்ணப் பண்ண வற்றாய் ஓர் ஆளும் ஓர் நோக்கும் நேராம் படி இருக்கிற பிராட்டியை பிரிக்கைக்கு ஈடாய் இருப்பதொரு வடிவைக் கொண்டு
வந்த மாயா மிருகத்தை நிரசித்து  –பர ஹிம்சையே யாத்ரையாக திரியும் அதி க்ரூரரான பையல் உடைய இலங்கை பொடியாம் படி வெற்றியை விளைப்பதான சமர பூமியிலே-ஆயிரம் இரண்டாயிரமுமாக ஒரு தொடையிலே தொடை யுண்ணும் செவ்விய அம்புகளை நடத்தின – இதடையச் செய்தது -பிராட்டி பக்கல் பிச்சாலே இறே-இப்படி தம்  மார்பிலே அம்பை ஏற்று ரஷிக்குமவர் நமக்கு ரஷகர் நமக்கு மேல் ஒரு குறை உண்டோ –

கிளர் பொறிய மறி திரிய வதனின் பின்னே படர்ந்தானை-2-5-6-புள்ளி மான் துள்ளி விளையாட-கிளர்ந்து –நாநா வர்ணமான பொறியை உடைத்தான மான் குட்டியை பிராட்டி பிடித்துத் தர வேணும் -என்ன துஷ்ட ம்ருகமாகையாலே அது அங்கே இங்கே சஞ்சரிக்க
அதின் பின்னே அடி தீயப் போனவனை – பிராட்டி பிரிவு விளையும்  படியாக இறே
கை கழியப் போன படி –

தெரிந்த உணர்வு ஓன்று இன்மையால் தீ வினையேன் வாளா
இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் கரந்த உருவின்
அம் மானை அந் நான்று பின் தொடர்ந்த ஆழி யங்கை
அம்மானை ஏத்தாது அயர்த்து–82-
கைகேயி வரத்தில் அகப்படா விட்டது திருக் கையில் அருகாழி ஒன்றுமே யாகாதே வடிவைக் கரந்து வர்த்திக்கிற அம் மாய மானை அன்று தொடர்ந்த அருகாழியைக் கையிலே யுடைய ஸர்வேஸ்வரனை இளைய பெருமாளும் உதவாத தசையில் ஏத்தப் பெறுவது அறிவு கெட்டுக் கிடந்த நான் பழுதே போக்கினேன்-ஏத்துகை –அடிமையாய்-இப்படி அடிமை செய்யப் பெற்றிலேன் என்று இழவு பட்ட பேர் உண்டோ என்ன அருளிச் செய்கிறார் –(பேய் முலை உண்ட அவ்வாயன் நிற்க இவ்வாயன்-ஆயப்பிள்ளை அதே போல் இங்கும் அம்மானை பத பிரயோகம் )பெருமாள் மாய மானை எய்து மீண்டு எழுந்து அருளுகிற போது அடிக் கொதித்து நடக்க மாட்டாமை தளிர்களை முறித்திட்டு அதின் மேலே எழுந்து அருளினார் -என்று ஒருவன் கவி பாடவும்-எம்பெருமானார் கேட்டு அருளி மாறி இடுகிற திருவடிகளிலே என் தலையை வைக்கப் பெற்றிலேன் -என்று அருளிச் செய்தார்

மான் முனிந்து ஒரு கால் வரி சிலை வளைத்த –ஹா ஸீதா ஹா லஷ்மணா கத்திப் போக -லஷ்மணன் மேல் சுடு சொல் -லீலைபாகவத அபசாரம் க்ரூரம் என்பதைக் காட்டவே –

பிராட்டி பிரிவு -முக்கோல் முனிவர் வேஷம்-காசை யாடை மூடி யோடிக் காதல் செய்தானவனூர் நாசமாக நம்ப வல்ல நம்பி நம்பெருமான்-2-2-1-காஷாய வஸ்த்ரத்தை இட்டு
உடம்பு எங்கும்  மறையும்படி மூடி ராம பயத்தாலே பயந்து நடந்து போய்-ஜநநீ என்று பாராதே –வீத ராக வேஷத்தைத் தரித்து வைத்து ராகத்தைப் பண்ணின –பையலுடைய ஊரானது –ஸ்மாசந சத்ருசமாம்படி யாக திரு உள்ளத்திலே கொண்டருளி அப்படி செய்து தலைக் கட்டுகைக்கு ஈடான வீரஸ்ரீ யால் பூரணன் ஆனவன் –லஷ்மண ரேகா -வால்மீகி கம்பர் -இவர் தாயுக்கு கட்டளை இடமாட்டாரே -ராவண சன்யாசி -பர்ணசாலைக்குள்ளே வந்து உபசாரம் பெற்றான் -உள்ளே வந்து தானவன் ஆனான்-பிரமனின் சாபத்தால் தப்பான நோக்கால் தொட்டால் தலைகள் வெடித்து சுக்குநூறாகும்

தளிர்நிறத்தால் குறையில்லாத் தனிச்சிறையில் விளப்புற்ற
கிளிமொழியாள் காரணமாக் கிளர்அரக்கன் நகர்எரித்த
களிமலர்த் துழாய்அலங்கல் கமழ்முடியன் கடல்ஞாலத்து
அளிமிக்கான் கவராத அறிவினால் குறையிலமே.
-4-8-5-ஒளியையும் ஒளியைஉடைய பொருளையும் (சூரியனையும்) பிரித்து வைத்தாற் போலே இருப்பது ஒன்றே அன்றோ அரக்கியர் நடுவில் தடைபட்டவளாய் இருந்தபடி? விளப்புற்ற – 1‘கண்ணீரால் நிறைந்த முகமுடையவளும், இரங்குவதற்குரியவளும், ஆகாரம் இன்மையால் இளைத்திருப்பவளும்’ என்கிறபடியே, ‘தன்னைப் பேணாதே இருந்தாள்’ என்று திருவடியாலே பெருமாளுக்கு விண்ணப்பம் செய்யப்பட்டவள் என்னுதல்; அன்றிக்கே, ‘தெய்வப் பெண்கள் கால்களில் விலங்கை வெட்டி விடுகைக்காகத் தன்னைப் பேணாதே அங்கே புக்குத் தன் காலிலே விலங்கைக் கோத்துக் கொண்டவள்,’ என்று நாட்டிலே பிரசித்தையானவள் என்னுதல்.திருவடி வாயிலே ஒன்று தங்கிய அவள் வார்த்தையைக் கேட்டு, அவ்வழியாலே 2‘இனியவளும் இனிய வார்த்தையையுடையவளும்’ என்றாரே அன்றோ? அதனை நினைத்துக் ‘கிளிமொழியாள்’ என்கிறது.-சிறை இருந்தவள் ஏற்றமே ஸ்ரீ இராமாயணம் -அசோகவனம் அடைய பெருமாள் சோகவனம் -வால்மீகி கவனம் கவிதை -நாம் வனம் கண்ணீருடன் கேட்க்கிறோம்

தன மருவு வைதேகி பிரியல் உற்று தளர்வெய்தி சடாயுவை வைகுந்தத்து ஏற்றி
வன மருவு கவி அரசன் காதல் கொண்டு வாலியை கொன்று இலங்கை நகர் அரக்கர் கோமான் சினம் அடங்க மாருதியால் சுடுவித்தானை
-10-6-திரு முலைத் தடத்தின் அழகாலும் -ஆபிஜாத்யத்தாலும் -பிரியத் தகாத ஸ்ரீ பிராட்டி பிரிவாலே – ஸ்ரீ பெருமாள் தம்மளவிலே நோவு பட்டு ஸ்ரீ பிராட்டிக்காக ராவணனோடு யுத்தம் பண்ணி -பிராணனை விட்ட ஸ்ரீ பெரிய உடையாரை ஸ்ரீ பரம பதத்து ஏறப் போக விட்டு –தனமருவு வைதேகி -என்று விஷ்ணோ ஸ்ரீ -என்கிறபடியே ஸ்ரீ பெருமாளுக்குத் தனமான ஸ்ரீ பிராட்டி என்றுசடாயுவை வைகுந்தத்து ஏற்றிமாம் –தேவத்வம் அஸ்நுதே -இவள் கடாக்ஷத்தாலேயே தேவனானன்-ஜடாயு மோக்ஷம் –

ஆயுஷ்மன் -அந்த தருணத்திலும் மங்களாசாசனம் -பெரிய உடையார் -செய்தியும் சுருக்கமாக சொல்லி -தேவி மம பிராணன் கூட கொண்டு சென்றான் -விந்தோ நாம முஹூர்த்தம் -விந்தம் முஹூர்த்தம் காணலாம் போனது மாறுதல் இல்லாமல் உடையவனிடம் சேரும் கவலைப்படாதே –சடாயுவை வைகுந்தத்து ஏற்றி-10-6-பரத்வம் பீடிற்று கச்ச லோகான் அநுத்தமான்சத்யேனே லோகான் ஜயதி–ஈமச் சடங்கும் செய்து முடித்தான்

கறை வளர் வேல் கரன் முதலாகக் கவந்தன் வாலி கணை யொன்றினால் மடிய இலங்கை தன்னுள்
பிறை எயிற்று வாள் அரக்கர் சேனை எல்லாம் பெருந்தகையோடு உடன் துணித்த பெம்மான் தன்னை
-2-10-5-பர ஹிம்சையில் த்வரையாலும் எப்போதும் ஒக்க சத்ரு நிரசனம் பண்ணுகையாலும் கறை கழுவுகைக்கு அவகாசம் இன்றிக்கே இருக்கையாலே மிக்க கறையை உடைத்தாய் இருக்கிற வேலை உடைய கரன் துடக்கமாக கபந்தன் வாலி -என்கிற இவர்கள் – கரன் விராதன் இவர்கள் வந்து தோற்றுகிற போது சிம்ஹங்கள் புலிகள் இவற்றை சூலத்திலே கோத்துக் கொண்டு வந்து இறே தோற்றுவது–கணை யொன்றினால்-கைக்கு எட்டிற்று ஓர் அம்பாலே முடித்தான் இறே

கவந்தனை முடித்து ரிஷ்யமுகம் -வந்து சபரி மோக்ஷம் –ஆழ்வார்கள் அருளிச் செயலில் இல்லை -பெருமாள் சாக்ஷியாக மட்டும் –சாஷீ பூதர் மதங்கர் முனி ஆச்சார்யர் அனுக்ரஹம் மூலம் பெற்றவள் -ரஹஸ்ய கிரந்தங்களில் உண்டு-ஆச்சார்யர் திருவடிகளை அடைகிறோம் –தானே வைகுந்தம் தரும்

சுக்ரீவ பட்டாபிஷேகம் -திருவடியை முதல் முதலில் கடாக்ஷம் -அக்னி சாக்ஷியாக -நட்ப்பு -உடன்படிக்கை சுக்ரீவ மஹா ராஜர்

கடைந்த பாற்கடல் கிடந்து கால நேமியைக் கடிந்து
உடைந்த வாலி தந்தனுக்கு உதவ வந்தி ராமனாய்
மிடைந்த மேழ் மரங்களும் அடங்க வெய்து வேங்கடம்
அடைந்து மால பாதமே யடைந்து நாளும் உய்மினோ –81-ப்ரஹ்மாதிகள் அளவு அல்லாத திர்யக்குகளுடைய ரஷணத்துக்காக சக்ரவர்த்தி திருமகனாய் வந்து அவதரித்து – தேவதாந்தர ஸ்பர்சத்தாலே ஸ்வரூபம் அறிந்த வாலிக்கு – ராம பாணா சைஷிப்த மாவஹத் பரமாங்கதிம் -என்கிறபடியே ச்வஹஸ் தவதத்தாலே மோஷ ப்ரதன் ஆகைக்காக தசரதாத் மஜனாய் வந்து-தனக்கு துஷ் ப்ராபமான ரிச்யமுகத்திலே பகையான மஹாராஜர் இருக்கையாலே பகை மீளப் பெறாத நாம் என்ன ராஜ்யம் பண்ணுகிறோம் -என்று நெஞ்சு அழிந்த வாலியாலே மஹாராஜருக்கு பிறந்த ஆபத்தை தீர்க்கைக்காக வந்து என்றுமாம் –தம்பி தனக்கு -மவ்வுக்கு -ன -ஆதேசமாய் தம்பி -என்றதை -தன் -என்று கடைக் குறைத்தலாய்க் கிடக்கிறது -என்று ஒரு தமிழன்-ஆபத்திலே ரஷிக்க வர கண்டு -ரஷணத்திலே அதி சங்கை பண்ணின மஹாராஜர் விஸ்வசிக்கைகாக -இலக்கு குறிக்க ஒண்ணாதபடி மிடைந்து நிற்கிற மராமரங்கள் ஏழையும் அநுக்தமான கிரி ரஸாதலங்கள் ஏழையும் அடங்கத் துளைத்து வாலி -ஸ்வ பரிஷை பண்ணுவது ஒரு மராமரத்தளவிலேயாய் இருக்க – மஹாராஜர் உடைய அதி சங்கையை சவாசனமாக போக்குகைக்காக ஏழு என்ற பேர் பெற்றது அடைய எய்தார் ஆய்த்துவாலி தந்தனுக்கு உதவ வந்தி ராமனாய்
-அவதாரத்தில் தாழ்ந்தாருக்கு முகம் கொடுத்த சீலமும் –பிற்பாடானவர்கள் இழவாமைக்கு திரு மலையில் ஆஸ்ரயித்து நிற்கிற வ்யாமுகன்-வாலி மா வலத்தொருவனது உடல் கெட வரி சிலை வளைவித்து அன்று-1-2-1-வாலி என்று பேராய்-மஹா பலத்தில் வந்தால் தன்னை எண்ணினால் இரண்டாம் விரலுக்கு ஆள் இல்லாதபடி அத்விதீயனாய் இருக்கிறவனுடைய உடலானது சிந்தும்படியாக தர்சநீயமான வில்லை வளைத்து – வாலியும் அழிகையும் கிடக்கச் செய்தேயும் -அக் கையும் வில்லும் சேர்ந்த சேர்த்தியும் தர்சநீயதையும் அனுபவிக்கிறார் யாயிற்று இவர்-உருத்தெழு வாலி மார்வில் ஒரு கணை யுருவ வோட்டிக்
கருத்துடைத் தம்பிக்கு இன்பக் கதிர் முடி யரசளித்தாய்
-4-6-3-உருவென்று சீற்றம்
வெஞ்சினத்த  வேழ வெண்  மருப்பு ஒசித்து உருத்த மா கஞ்சனைக் கடந்து -திருச்சந்த -என்றது இறே-மிக்க சீற்றத்தை உடையனாய் அகாலத்திலே வந்து அறை கூறுகிறவன் தான் யார் -என்று பெரிய கிளர்த்தியோடே வந்து தோற்றின-அங்கே நாமி பலம் இங்கே நாம பலம் திருமாலை வியாக்யானத்தில் -விட்டார் விட்ட அம்புகள் அடங்கலும் வாய் மடிந்து போம் இத்தனையாய் தனக்கு ஓர் அழிவு இல்லாதபடி இருக்கிற வாலியுடைய திண்ணிய மார்விலே- ஏகேந மகேஷூணா-என்கிறபடியே கைக்கு எட்டிற்று ஓர் அம்பை வாங்கி
மறுபாட உருவும்படி நடத்தி ஒசழக்காக –அஸ்ரத்தையாக-விட்ட அம்பு தானே மறுபாடு உருவம்படி நடத்தி (ஏழு பெயர் உள்ள மலைகள் கடல்கள் பாதாள லோகங்கள் நடுங்கும் படி )-வாலி செலுத்திப் போந்த ராஜ்யத்தை அப்படி நடத்துகைக்கு ஈடான கருத்தை உடையவன் -என்னுதல்-வாலி பேர் கேட்க வனம் அடைந்து கிடந்த சுக்ரீவன் தன்னையே (ஆளாக்கி ஜெயிப்பித்தாய் )ந காங்ஷே விஜயம் கிருஷ்ண -என்னச் செய்தே இறே பின்னையும் அவர்களை ஜெயிப்பித்தது உனது திரு உள்ளம் படியே உன் திரு உள்ளம் உடைய மகா ராஜர்க்கு என்றுமாம்இன்பக் கதிர் முடி அரசு அளித்தாய்-இன்பத்தை விளைப்பதாய்
ஆனந்தாவஹமாய் மதிப்புடைத்தான முடியையும் அதுக்கு விஷயமான ராஜ்யத்தையும் கொடுத்து அருளினாய்-

இது இலங்கை ஈடழியக் கட்டிய சேது
இது விலங்கு வாலியை வீழ்த்ததுவும் -இது விலங்கை
தான் ஒடுங்க வில் நுடங்கத் தண்டார் இராவணனை
ஊன் ஒடுங்க எய்தான் உகப்பு –28-திர்யக்கான வாலியை வீழ்த்தது இது –(மறைந்து கொன்றது குற்றம் இல்லை திர்யக் என்பதால்

கழி சினத்த வல்லாளன் வானவர் கோன் வாலி மதன் அழித்த
வில்லாளன் நெஞ்சத்து உளன்
–85–அதிக கோபத்தை யுடையனாய் -பலிஷ்டனாய் -வானர ராஜாவான வாலியினுடைய கர்வத்தைப் போக்கின தநுர்த் தரனான சக்ரவர்த்தி திருமகன்-ஸஹ ஜீவ காருண்யம் இல்லாதவனுக்கு இறைவன் காருண்யம் பெற வாய்ப்பே இல்லையே

வைது நின்னை வல்லவா பழித்தவர்க்கும் மாறில் போர்
செய்து நின்ன செற்றத் தீயின் வெந்தவர்க்கும் வந்து உனை
எய்தலாகும் என்பர் ஆதலால் எம்மாய நாயினேன்
செய்த குற்றம் நற்றமாகவே கொள் ஞால நாதனே -111-எதிர் இல்லாத யுத்தத்தை பண்ணி -உன் கோப அக்நியாலே தக்தர் ஆனவர்களுக்கும் – மஹா ராஜரோடே வாலி பண்ணின யுத்தத்தை யாய்த்து இவர் –மாறிலாத போர் –என்கிறது –ராம பாணா ஹத -ஷிப்ர மா வஹத் பரமாங்கதம் -என்று வாலி உடைய பகவத் ப்ராப்தியை சொன்னான் ஸ்ரீ வால்மீகி பகவான் –ஆதலால் – உன்னை நிந்தித்தாருக்கும் எதிரிட்டாருக்கும் அகப்பட குண ப்ரபாவத்தாலே உன்னைப் பெறலாம்

சேனைகளை நாலாபுறமும் அனுப்புவது -கணையாழி கொடுத்து திருவடியை தெற்கே அனுப்பி -ஸூந்தர காண்டம் -அனைத்து ராமாயண செயல்களும் இதில் உண்டு -திரிஜடை கனவில் எதிர்காலம் நடக்கப் போவதும் உண்டு -ஸூந்தரன் திருவடிக்கு அஞ்சலிதேவித் தாயார் இட்ட திருநாமம் -மற்றவை காரணப் பெயர்கள் -அவர் பெருமையைச் சொல்லும் காண்டம் இதுவே-அங்குலீய அளித்து சூடாமணி பெற்று திரும்பினார்- -விபீஷண ஸரணாகதி -சேது பந்தனம் –

அரங்கனே தரங்க நீர் கலங்க வன்று குன்று சூழ்
மரங்கள் தேய மா நிலம் குலுங்க மா சுணம் சுலாய்
நெருங்க நீ கடைந்த போது நின்ற சூரர் என் செய்தார்
குரங்கை யாள் உகந்த வெந்தை கூறு தேற வேறிதே –21-குரங்கை யாள் உகந்த வெந்தை –
கீழ் சொன்ன பஷபாததுக்கு த்ர்ஷ்டாந்தம் சொல்லுகிறது-.-ராவணனை தேவரீரே அழியச் செய்து -பிரதிபஷத்தை வென்று தந்தாரார்களாக- ஸ்ரீ வானர வீரர்களை ஆதரித்தது போலே-எந்தை – என்று நித்ய ஸூரிகளை அடிமை  கொள்ளும் ஏற்றத்தை உடையனாய் வைத்து திர்யக்குகள் என்று இகழாதே அடிமை கொண்ட இத்தை தனது  பேறாக நினைத்து
இருக்கையாலே என் நாதனே என்கிறார் –அரங்கனே கூறு தேற வேறிதே — ஈஸ்வரன் ஒருவன் உளான் என்று அறியாத சம்சாரத்தில் இஸ் ஆஸ்ரித பஷபாதத்தை-பிரகாசிப்பிக்கைகாக அர்ச்சையாய் வந்து கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற தேவரீர்- இத்தை விசேஷித்து தெரிய அருளிச் செய்ய வேணும் –வ்யூஹத்திலும் விபவத்திலும் சொன்ன பஷபாதங்கள் காணலாவது பெரிய பெருமாள் பக்கலிலே

முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து அரக்கன்
மன்னூர் தன்னை வாளியினால் மாள முனிந்து அவனே
பின்னோர் தூது ஆதி மன்னர்க்காகிப் பெரு நிலத்தார்
இன்னார் தூதனென நின்றான் எவ்வுள் கிடந்தானே–
2-2-3-த்வாபரத்தின் உடைய ஆதியிலே
பிராட்டியைப் பிரிந்த ஆற்றாமை மீதூர்ந்து கடலிலே புக்கு முடியும் அளவானவாறே ஒரு குரங்கின் வாயிலே வார்த்தையைச் சொல்லி விட்டான் –அரக்கன் உடைய வராதிகளாலே
பூண் கட்டின ஊரை –ப்ரஹ்மாஸ்த்ராதிகளுக் கேளாத ஊரை மனிச்சுக்கு ஏகாந்தமான
அம்பாலே அழியும்படி சீறினான் ஆயிற்று – *ஸத்ய வாக்யனாக இருந்தால் என்று பிரதிஜ்ஜை செய்து விட்டாரே பெருமாள்)-கடலில் நீரே நெய்யாகப் பற்றி எரிய வல்ல அம்பு உடையனாய்-ஆதி மன்னர்க்காகி-பாண்டவர்க்காகி-பாண்டவ தூதன் -ஸ்ரீ பாடகம் -வைத்துக் கொண்டு உகந்து அருளுகிறானே

100யோஜனை 1000 மைல் தள்ளி திரேதாயுகத்தில் இலங்கை இருந்ததாம் – சம்பாதி கழுகு பார்வை

ஓத மா கடலைக் கடந்தேறி யுயர் கொள் மாக் கடிகாவை யிறுத்துக்
காதல் மக்களும் சுற்றமும் கொன்று கடி யிலங்கை மலங்க எரித்துத்
தூது வந்த குரங்குக்கே உங்கள் தோன்றல் தேவியை விட்டுக் கொடாதே
ஆதர் நின்று படுகின்றது  அந்தோ   அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ–10-2-6-அலை எறிகிற பெரும் கடலை தன் கவட்டின் கீழே யாம்படி கடந்து அக்கரைப் பட்டு –ஒக்கத்தை உடைத்தாய் பரந்து பரிமளிதமாய் இருந்துள்ள சோலையை உடைய அசோக வநிகை -அத்தை முறித்து –ராவணனுக்கு சிநேக விஷயமான அஷய குமாரன் தொடக்கமான புத்ரர்களையும் அவனுக்கு அந்தரங்கரான கிங்கரர் தொடக்க மானவரையும் கொன்று –அரணை உடைத்தாய் அக்னியும் புகுர அஞ்சி இருக்கும் இவ்வூர் ஒருவர் கூறை எழுவர் உடுக்கும் படி அக்னியை பிரவேசிப்பித்து –வெறும் கையே தூது வந்தான் ஒருவன் செய்தது இதுவானால் – நாம் இவளைக் கொண்டு இருப்போம் அல்லோம் என்று அவன் கையிலே பிராட்டியை விட்டுக் கொடாதே

நான் தேட கிடைக்கவில்லை -நான் இல்லாமல் பிராட்டி அருளாலே காட்டக் கண்டார் -நமோஸ்து ராமாய-இத்யாதி–அசோக வனம் சிஞ்சுபா மரத்தில் – அமர்ந்து-grey brown கலந்த நிறம்-

நெறிந்த குழல் மடவாய் நின்னடியேன் விண்ணப்பம்
செறிந்த மணி முடிச் சனகன் சிலையிறுத்து நினைக் கொணர்ந்த
தறிந்து அரசு களை கட்ட வரும் தவத்தோன் இடை விலங்கச்
செறிந்த சிலை கொடு தவத்தைச் சிதைத்ததும் ஓர் அடையாளம்
–3-10-1-மடப்பத்தை யுடையவளுமான பிராட்டீ உமது அடியவனான என்னுடைய விஞ்ஞாபனம் ஒன்றைக் கேட்டருள வேண்டும்-நெருங்கின ரத்தினங்களை யுடைய கிரீடத்தை அணிந்த ஜனக மகா ராஜன் கன்யா சுல்கமாக ஏற்படுத்தின ருத்ர தனுசுவை முறித்து -உம்மை -பிராட்டியை -திரு மனம் புரிந்து கொண்டதை தறிந்து அரசு களை கட்ட வரும் தவத்தோன் இடை விலங்கச் -தெரிந்து கொண்டு துஷ்ட ராஜாக்களை பயிருக்குக் களை களைவது போலே
அழித்து- 21-தலைமுறை கார்த்த வீர்யார்ஜுனன் போல்வாரை -அழித்து அரிய தவத்தை யுடைய பரசுராமன் நடுவழியில் தடுக்க தனக்குத் தகுந்த அப்பரசுராமன் கையில் இருந்த விஷ்ணு தனுசுவை –இதனாலே செறிந்த சிலை -வாங்கிக் கொண்டு அப்பரசுராமனுடைய தபஸை அழித்ததுவும் ஒரு அடையாளமாகும்-தவத்தை சிதைத்தது அடையாளம் -என்னாதே
சிதைத்தும் ஓர் அடையாளம் -என்கையாலே
இன்னும் பல அடையாளங்களும் சொல்லுவதாக நினைத்துச் சொல்கிறான் என்னும் இடம் தோற்றுகிறது- சங்கா நிவ்ருத்தி பிறக்கும் அளவும் சொல்ல வேணும் இறே

அல்லியம் பூ மலர்க் கோதாய் அடி பணிந்தேன் விண்ணப்பம்
சொல்லுகேன் கேட்டருளாய் துணை மலர்க் கண் மடமானே
எல்லியம் போது இனிதிருத்தல் இருந்தது ஓர் இட வகையில்
மல்லிகை மா மாலை கொண்டு அங்கு ஆர்த்ததும் ஓர் அடையாளம்
–3-10-2-வால்மீகிக்கும் தெரியாத அடையாளம் -உன்னுடைய விக்ரமம் -ஓன்று ஒழியாமல் எல்லாம் – பெரியாழ்வார் மட்டுமே அறிந்து அருளிச் செய்த அடையாளம் இது பெருமாள் சொல்லி விட்ட அந்தரங்க அடையாளம்என்னுடைய ஸ்வரூப அநு ரூபமாக தேவரீர் திருவடிகளில் வணங்கி
தலை படைத்த பிரயோஜனம் பெற்றேன்(அடி பணிந்தேன் -காயிக விருத்தி
விண்ணப்பம் -வாசிக விருத்தி ) இனி வாய் படைத்த பிரயோஜனம் பெறும்படி விண்ணப்பம் செய்யத் தக்கது ஓன்று உண்டு என்ன-ராத்ரி காலத்தில் பெருமாளும் தேவரீருமாய் ரஸோத்தரமான இருப்பாக இருந்த தொரு ஸ்தலத்திலே-ஸ்லாக்கியமான மல்லிகை மாலையைக் கொண்டு பெருமாளை பந்தி வைத்ததும் ஓர் அடையாளம்-பெருமாளுடைய- பிரணயித்வ-பாரதந்த்ர ப்ரயுக்தமாய் -போக தசையில் நடப்பதொரு ரசமாய்த்து இது ஆகையால் அல்லாத அடையாளங்கள் போல் அன்றிக்கே அத்யந்த ரஹஸ்யமாய் இருப்பது ஓன்று இறே இது தான்-ஸமா த்வாதச தத்ராஹம் ராகவஸ்ய நிவேசநே -புஞ்ஜாநா அமானுஷாந் போகான் சர்வ காம ஸம்ருத்தி நீ -என்று இவள் தானும் பெருமாளும் அறியும் அத்தனை இறே –

கலக்கிய மா மனத்தளளாய்க் கைகேசி வரம் வேண்ட
மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மாறாது ஒழியக்
குலக்குமரா காடுறையப் போ வென்று விடை கொடுப்ப
இலக்குமணன் தன்னொடும் அங்கு ஏகியதும் ஓர் அடையாளம்
–3-10-3-குப்ஜையாலே கலக்கப் பட்ட பெரிய மனசை யுடையளாய் – முன்பு புத்ரனான ஸ்ரீ பரதாழ்வானைக் காட்டில் பெருமாள் பக்கல் ஸ்நேஹிநியாய் பர்த்தாவான சக்கரவர்த்தியினுடைய ப்ரியமே செய்து போந்தவளாகையாலே – பெரிய மனசை யுடையவள் -என்கிறது –ப்ராகேவது மஹா பாகஸ் ஸுமித்ரிர் மித்ர நந்தன பூர்வஜஸ் யாநுயாத்ரார்த்தே த்ரும சீரை ரலந்க்ருத்த -என்கிறபடியே
தான் புறப்படுவதுக்கு முன்னே இளைய பெருமாளோடே காடேற எழுந்து அருளினது ஓர் அடையாளம் –

வாரணிந்த முலை மடவாய் வைதேவீ விண்ணப்பம்
தேரணிந்த வயோத்தியர் கோன் பெரும் தேவீ கேட்டருளாய்
கூரணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கை தன்னில்
சீரணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம்
–3-10-4-ஒரு சிறு தேவி யுண்டாய் பெரும் தேவி என்கிறது அன்று இறே – பெருமாள் ஏக தார வ்ரதராகையாலே-ஏழை ஏதலன் -இத்யாதிப் படியே –அபிஜன வித்யா வ்ருத்தங்கள் ஒன்றும் இல்லாத ஸ்ரீ குஹப் பெருமாளோடே – மாழை மான் மட நோக்கி உன் தோழி உம்பி எம்பி தோழன் நீ எனக்கு -என்று அருளிச் செய்த படியே குணத்தோடு கூடின தோழமை கொண்டதும் ஓர் அடையாளம்

மானமரும் மென்னோக்கி வைதேவீ விண்ணப்பம்
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த காலத்துத்
தேனமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து இருப்பப்
பான் மொழியாய் பரத நம்பி பணிந்ததுமோர் அடையாளம்
–3-10-5-பான் மொழியாய்
பால் போலே ரசாவகமான பேச்சை யுடையவளே – இதுக்கு முன்பு இவள் சொன்ன வார்த்தைகளில் ரஸ்யத்தையாலும்-இது கேட்க்கையில் யுண்டான ஆதார அதிசயத்தாலும் சொல்லுகிறான்-பாரதந்தர்யத்தால் பூர்ணனான ஸ்ரீ பரதாழ்வான் வந்து – மீண்டு எழுந்து அருள வேணும் – என்று பிரபத்தி பண்ணினதும் ஓர் அடையாளம் –தேவர்கள் ராமன் பரதன் மட்டுமே காணும்படி வந்து சொன்னதும் பாதுகா தேவியைப்பெற்று திரும்பினான்

சித்ர கூடத்து இருப்பச் சிறு காக்கை முலை தீண்ட
அத்திரமே கொண்டெறிய வனைத்துலகும் திரிந்தோடி
வித்தகனே இராமா ஓ நின்னபயம் என்று அழைப்ப
அத்திரமே அதன் கண்ணை யறுத்ததும் ஓர் அடையாளம்
–3-10-6-பெருமாளும் தேவரீருமாய்க் கொண்டு ஏகாந்த ரசம் அனுபவித்து ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி மடியிலே கண் வளர்ந்து ரஸோத்தரராய் இரா நிற்கச் செய்தே-ஒரு தர்ப்பத்தை எடுத்து -அதில் ப்ரஹ்மாஸ்திரத்தை யோஜித்து அத்தை அந்த காகத்தின் மேலே செலுத்தி விட-எல்லாரையும் குணத்தால் ரமிப்பிக்க வல்லவனே என்று சரண்யனான பெருமாள் குணத்தைச் சொல்லி ஓ என்று தன்னுடைய அநந்ய கதித்வத்தை முன்னிட்டுக் கொண்டு –
உனக்கு அபயம் -என்று சரணாகதனானமை தோற்றக் கூப்பிட கிருபையால் பெருமாள் ரஷித்து அருளுகிற அளவில் காகத்துக்கு பிராண பிரதானம் பண்ணி அஸ்திரத்துக்கு ஒரு கண் அழிவு கற்பிக்கையாலே முன்பு தலை அறுப்பதாக தொடர்ந்த அஸ்திரம் தானே
அதனுடைய ஒரு கண்ணை அறுத்து விட்டதும் ஓர் அடையாளம் 

மின்னொத்த நுண்ணிடையாய் மெய்யடியேன் விண்ணப்பம்
பொன்னொத்த மான் ஓன்று புகுந்து இனிது விளையாட
நின் அன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏகப்
பின்னே யங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓர் அடையாளம்
-3-10-7- -தேவரீருடைய ஆசையின் வழியிலே நின்று–ஹா சீதே ஹா லஷ்மணா -என்று பெருமாள் மிடற்று ஓசை போலே கூப்பிட்டுக் கொண்டு விழ–பெருமாளுக்கு ஏதேனும் அபாயம் வந்ததாக நினைத்து – இத்தைச் சடக்கென போய் அறியும் -என்று தேவரீர் அருளிச் செய்யச் செய்தேயும்-இங்குத்தைக்குக் காவலாக நிறுத்திப் போகையாலும்- பெருமாளுடைய ஸுர்யத்தை அறிகையாலும்-அங்குத்தைக்கு ஒன்றும் வாராது தேவரீர் பயப்பட்டு அருள வேண்டா -என்று விண்ணப்பம் செய்து – தாம் போக மாட்டாமல் சுற்றிக் கொண்டு நிற்க –அவர் நில்லாமல் போக வேண்டும்படி தேவரீர் சில அருளிச் செய்கையாலே பிற்பாடு அங்கே இளைய பெருமாள் பிரிந்து போனதும் ஓர் அடையாளம் –

மைத் தகு மா மலர்க் குழலாய் வைதேவீ விண்ணப்பம்
ஒத்த புகழ் வானரக் கோன் உடன் இருந்து நினைத் தேட
அத் தகு சீர் அயோத்தியர் கோன் அடையாளம் இவை மொழிந்தான்
இத் தகையால் அடையாளம் ஈது அவன் கை மோதிரமே
–3-10-8-கீழ் ஏழு விண்ணப்பங்கள்-தனக்கு சுல்கமாகக் கல்பித்து இருந்த வில்லை முறித்த பெருமாளுடைய திருக் கையிலே அப்போது கிடந்ததாய் பின்பு பாணி கிரஹணம் பண்ணுகிற போது தன் கையில் உறுத்தினதாய்- சர்வ காலமும் பெருமாள் திருக் கையில் கிடக்குமதான திருவாழி மோதிரத்தைக் கண்டு-அநுமானே நீ முன்பு சொன்ன அடையாளங்களும் திருவாழி மோதிரத்தின் அடையாளமும் ஒக்கும் என்று அவன் முகத்தைப் பார்த்துச் சொல்லி
க்ருஹீத்வா ப்ரேஷா மாணா சா பர்த்து கர விபூஷணம் -பர்த்தாராம் இவ ஸம் ப்ராப்தா ஜானகீம் உதிதாபவத் –என்கிறபடியே அத் திருவாழி மோதிரத்தை வாங்கி அதினுடைய கௌரவமும் -தன்னுடைய ஆதரமும் தோற்றத் தலை மேல் வைத்துக் கொண்டு –பின்னை அத்தைக் கையிலே ஏந்தி -வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண்டு இருக்கையாலே –
அத் திருவாழி மோதிரத்தோடே சேர்ந்த திரு விரலையும் – அத்தோடு சேர்ந்த -திருக் கையையும் – அத்தோடு சேர்ந்த திருத் தோள்களையும் நினையா நின்று கொண்டு அவ் வழியாலே திருமேனி எல்லாவற்றையும் நினைத்து பாவநா ப்ரகரஷத்தாலே (நினைவின் முதிர்ச்சியாலே )பெருமாள் அலங்கரிக்கப் பூ முடித்து ஒரு படுக்கையிலே இருந்தால் போலே தோன்றி -முன்பு ஊடலில் கடகராக கணையாழி தானே என்பதை நினைத்துப் பார்த்து-பிராட்டி மிகவும் ப்ரீதையானாள் என்று ஆச்சர்யப்பட்டு அருளிச் செய்கிறார் –

வாராரும் முலை மடவாள் வைதேவி தனைக் கண்டு
சீராரும் திறல் அனுமன் தெரிந்து உரைத்த அடையாளம்
பாராரும் புகழ்ப் புதுவைப் பட்டர் பிரான் பாடல் வல்லார்
ஏராரும் வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே
–3-10-10-பெரியாழ்வார் திருவடி நிலையில் அருளிச் செய்தவை-சூடாமணி கொடுத்தருளி -கோணலாக திலகமிட்டு வைத்த வ்ருத்தாந்தம் சொல்லி -கால் பிடிக்க தயங்கி -கல்மோதிரங்கள் பெண்ணாகுமே -சிந்தையாலும் மற்ற பெண்களை நினையேன் சொன்னதையம் சொல்லி —

அசோகவன துவம்சம் –யுயர் கொள் மாக் கடிகாவை யிறுத்து-10-2-6-ஒக்கத்தை உடைத்தாய் பரந்து பரிமளிதமாய் இருந்துள்ள சோலையை உடைய அசோக வநிகை -அத்தை முறித்து –காதல் மக்களும் சுற்றமும் கொன்று –ராவணனுக்கு சிநேக விஷயமான அஷய குமாரன் தொடக்கமான புத்ரர்களையும் அவனுக்கு அந்தரங்கரான கிங்கரர் தொடக்க மானவரையும் கொன்று –முன்பு ராம தூதன் இப்பொழுது ராமதாசன்-உன் வரங்கள் பொய்க்கலாம் பெருமாள் சரங்கள் பொய்க்காது -தேவியைக் கொடுத்து விடு இல்லையே; ஆவி போகும்தூது வந்த குரங்குக்கே உங்கள் தோன்றல் தேவியை விட்டுக் கொடாதே – வெறும் கையே தூது வந்தான் ஒருவன் செய்தது இதுவானால் – நாம் இவளைக் கொண்டு இருப்போம் அல்லோம் என்று அவன் கையிலே பிராட்டியை விட்டுக் கொடாதே–கடி யிலங்கை மலங்க எரித்துத்-அரணை உடைத்தாய் அக்னியும் புகுர அஞ்சி இருக்கும் இவ்வூர் ஒருவர் கூறை எழுவர் உடுக்கும் படி அக்னியை பிரவேசிப்பித்து – (வாயு குமாரன் -அக்னி பெற்றதாயும் குமாரனும் சேர்ந்து வந்து -வாயு அக்னி பெற்றது அன்றோ -)-இளிம்பரான நாங்கள் இப்படிப் படா நின்றோம் –அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ–அச்சம் அல்லாத அன்று பட்டத்தை இன்று பட வேணுமோ

தொன்னீர் இலங்கை மலங்க விலங்கெரி யூட்டினான்
நன்னீர் நறையூர் தொழுது எழு மட நெஞ்சமே
–6-4-6-கடலை அகழாக-(அகழியாக துர்கமாக ) உடைத்தான இலங்கை ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படி விலங்காலே எரி ஊட்டினான்-இலங்கு எரி ஊட்டினான்-பெருமாள் தோளை அண்டை கொண்டு அத்தாலே வயிறு நிறைய புஜித்து தன்னிறம் பெற்று உஜ்ஜ்வலமாம் படியைச் சொல்லுகிறது-முன்பு சோறு வேவப் பண்ணுகைக்கு வேண்டும் அளவு புக்கு வெளுத்து இருந்தது-அரக்கராவி மாள வன்று  ஆழ்  கடல் சூழ் இலங்கை செற்ற குரக்கரசன் என்றும் கோல வில்லி-—4-8-5– என்றும்-பிரித்த பையல் ஒருவனை அழித்த மாத்ரம் இல்லாமல்-ராக்ஷஸ ஜாதி அடங்க மாளும் படி ராவணன் எதிர்த்த அன்று அகாதமான கடலால் -இதுவே அரண் -அத்தை அழியச் செய்த வானவர் ஜாதிக்கு நிர்வாகன் –வானர ஜாதியைக் கொண்டு வென்றவன் –அரசன் –நிர்வாககன்-ப்ரஹ்மாதிகள் குடி இருப்பை அழித்த ராவணன் குடி இருப்பை அழித்து இடக்கை வலக்கை அறியாத வானர ஜாதிகளை பரிகரமாகக் கொண்டு ஆய்த்து

முன்பொலா ராவணன் தன் முது மதிள் லங்கை வேவித்து
அன்பினால் அனுமன் வந்து ஆங்கு அடியிணை பணிய நின்றார்க்கு
என்பொலாம் உருகி யுக்கிட்டு என்னுடை நெஞ்சம் என்னும்
அன்பினால் ஞான நீர் கொண்டு ஆட்டுவன் அடியனேனே -15-அதுவும் ஒரு காலமே -என்று வயிறு பிடிக்கிறார் – ஸ்ரீ ராமாயணத்தில் பேசின பரப்பை எல்லாம் ஒரு வார்த்தையாலே சொல்லுகிறார் – ஏக த்ரவ்யத்தை பின்னம் ஆக்கினாப் போலே தாயையும் தமப்பனையும் பிரித்த பையல் –சுரி குழற் கனிவாய்த் திருவினைப் பிரிந்த கொடுமையிற் கடுவிசை யரக்கனாகையாலே பொல்லாதவன் என்ற பொதுவிலே கொடுமையிற் கடுவிசை யரக்கனாகையாலே பொல்லாதவன் என்று பொதுவிலே சொல்லாமத்தனை யொழியப் பிரித்துப் பாசுரமிடப் போகாதென்க.-திருவடி வாலில் நெருப்பாலே சுடுவித்து –
நெருப்பும் காற்றும் கூடினால் போலே இறே வாயு புத்திரன் வாலில் -நெருப்பு –இட்டு வா என்றால் சுட்டு வர வேண்டுமே-கணையாழியை இட்டு வா சொல்லி-இலங்கையை சுட்டு -வேவித்து வந்தான்)அன்பினால் அனுமன் வந்து – காலால் அன்று போலே – அந ஸனம் தீஷித்தும் – கடல் கடந்தும் – யுத்தம் பண்ணியும் – இளைத்து இருக்கச் செய்தேயும் பிராட்டி திருவடியைத் தொழுது – த்ரஷ்டா சீதா -என்று பெரிய ப்ரீதி யோடு இறே வந்தது ஆங்கு அடியிணை பணிய நின்றார்க்கு – பிராட்டி விருத்தாந்தம் கேட்டு ஸ்தப்தராய் நின்றவர்க்கு –

தெற்கு நோக்கி தொழுதான் திருவடி-(த்ருஷ்டா தேவேதி ஹனுமத் வத நாதம் ருதோபமாம்
ஆகர்ண்ய வசனம் ராமோ ஹர்ஷ மாப ஸ லஷ்மண -ஸூந்தர –64-37-(’கண்டனென் கற்பினுக்கு அணியை’, கண்களால்
தெண் திரை அலை கடல் இலங்கைத் தென் நகர்;
அண்டர் நாயக! இனி, துறத்தி ஐயமும்
பண்டு உள துயரும்’ என்று அனுமன் பன்னுவான்.(சுந்தரகாண்டம், திருவடி தொழுத படலம்)நெஞ்சு என்ற பேராய்
பகவத் ப்ரேமமே வடிவாய் இருக்கிற அன்பாலே
ஜ்ஞானம் ஆகிற திரு மஞ்சனத்தாலே
நீராட்டுவன் –தெற்கு நோக்கி தொழுதான் திருவடி-(த்ருஷ்டா தேவேதி ஹனுமத் வத நாதம் ருதோபமாம்
ஆகர்ண்ய வசனம் ராமோ ஹர்ஷ மாப ஸ லஷ்மண -ஸூந்தர –64-37-(’கண்டனென் கற்பினுக்கு அணியை’, கண்களால்
தெண் திரை அலை கடல் இலங்கைத் தென் நகர்;
அண்டர் நாயக! இனி, துறத்தி ஐயமும்
பண்டு உள துயரும்’ என்று அனுமன் பன்னுவான்.(சுந்தரகாண்டம், திருவடி தொழுத படலம்)

நெஞ்சு என்ற பேராய் பகவத் ப்ரேமமே வடிவாய் இருக்கிற அன்பாலே ஜ்ஞானம் ஆகிற திரு மஞ்சனத்தாலே நீராட்டுவன் –அன்புடனே கூடின நீர் –அந் நீருக்கு சம்ஸ்காரம் இறே அன்பு –அடியனேனே –அங்குத்தைக்கு யோக்யராவது அடியார் ஆனால் போலே காணும் –பரிஷ்வங்கோ ஹனுமதோ -எனக்கே தன்னைத்தந்த கற்பகம்

எஞ்சலில் இலங்கைக்கு இறை எங்கோன் தன்னை முன் பணிந்து எங்கள் கண் முகப்பே
நஞ்சு தான் அரக்கர் குடிக்கு என்று நங்கையை அவன் தம்பியே சொன்னான்-
10-2-4-பிராட்டியைக் கொண்டு புகுந்தானாய் இவ்வூரிலே வந்து இவளை மீட்க வல்லார் உண்டோ -என்று குறைவற்றவனாய் இருந்த ராவணனை நாங்கள் அடைய ஓலக்கம் கொடுத்துக் கொண்டு இருக்க எங்கள் முன்னே அவன் காலிலே விழுந்து-கல்யாண குணங்களால் பூரணையாய் இருக்கிற இவளை ராஷச குலத்துக்கு நஞ்சு கிடாய் -என்று ஸ்ரீ விபீஷண ஆழ்வான் சொன்னான் –கல்லார் மதிள் சூழ் கடி இலங்கைக் கார் அரக்கன் வல்லாகம் கீள வரி வெஞ்சரம் துரந்த வில்லானைச் செல்வ விபீடணற்கு வேறாக நல்லானை நாடி நறையூரில் கண்டேனே –6-8-5-ப்ரஹ்மாஸ்த்ராதிகளுக்கும் சிளையாத படி வரபலத்தாலே
திண்ணியதான உடல் கிழியும்படிக்கு   ஈடாக தர்ச  நீயமாய் தீப்த பாவக சங்காசை  -என்கிறபடியே தொடுத்து விடும் போது அம்பாய் சத்ருக்கள்  சரீரங்களில் அக்னியாய் பிரவேசிக்கும்அம்பை நடத்தின வில் வலியை உடையவனை  –செல்வ விபீடணற்கு
ராவண பவனத்தை விட்டு-ஆகாச ஸ்தானனானன் ஆன போதே அந்தரிஷ கதஸ் ஸ்ரீ மான் -என்கிறபடியே ஸ்ரீ ராம சம்பந்தத்தால் வந்த ஐஸ்வர்யம் குடி கொண்டாய்த்து –வேறாக நல்லானை – வருகிற விபீஷணன் புகுரக் கடவன் அல்லன் என்று மகா ராஜர் உள்ளிட்டார் நிரோதிக்க அவனைக் கைக் கொள்ளுகை தவிரோம் – என்று பெருமாளும் நிர்பந்திக்க
ஆகில் கிஷ்கிந்தையில் பரிகரம் இங்கனே விடை கொள்ளுகிறது -என்ன வேணுமாகில் அது செய்கிறது  -இது ஒரு படியாலும் தவிரோம் (கதஞ்சன -நத்வதேயம் ) என்று அவன் பக்கலிலே விசேஷித்து சங்கத்தைப் பண்ணினவனை-ராவணனுக்கு வில்லானானவனே இவனுக்கு நல்லான் -மித்ரா பாவேனே -வந்தாலும் -கைவிடேன்-கொல்லை அரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார் சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமை பொய்யன்றே —10-4-குமரனார் –நோவு பட்டவள் —தருனௌ ரூப சம்பன்னௌ–ஆரண்ய -19-14-என்று கூப்பிடும்படியான பருவம் படைத்தவர் – தான் பட்ட பரிபவத்தை முறைப்பட சென்றவள் இறே –தருனௌ -என்கிறாள் அப்பருவத்திலே துவக்கு பட்ட படியாலே – தான் பட்ட நலிவை சம்போக மத்யத்தில் பிறந்த போக சிஹ்னத்தோ பாதியாக நினைத்து இருந்தாள் யாய்த்து —
இல்லையாகில் பருவத்தை பேசக் கூடாது இறே –சொல்லும் பொய்யானால் –ஆஸீத சம்ஸ்லேஷ விரோதிகளை போக்கும் இடத்தில் அர்த்த க்ரியா கார்யமாம் படி பண்ணித் தலைக் கட்டுமவர்-இங்கு உக்தியையும் தலைக் கட்டு கிறிலர்-தம்மை ஆஸ்ரயித்தவர்கள் விரோதியைப் போக்கக் கடவ அவர் தம்மையும் -அப்போது நியமிக்க மாட்டு கிறிலர் –அவ்வார்த்தை பொய்யாம் என்று பொய்யானால் -என்கிறாள் அல்லள் அதுக்கு விஷயம் நாமாகையாலே தப்பிலும் தப்பும் என்கிறாள் –

தென் இலங்கை மன்னன் சிரம் தோள் துணி செய்து
மின் இலங்கு பூண் விபீடணன் நம்பிக்கு
என் இலங்கு   நாமத்து அளவும் அரசு என்ற

மின் இலங்கு ஆரற்க்கு  ஓர் கோல் கொண்டு வா
வேம்கட வாணற்க்கு   ஓர் கோல் கொண்டு வா -2 -6-9 –ஒளி விடா நின்றுள்ள ஆபரணத்தை உடைய ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு – அந்தரிஷ கத ஸ்ரீ மான் -என்கிறபடியே இலங்கையை விட்டு அந்தரிஷ கதனான போதே ராவண சம்பந்தத்தால் வந்த அஸ்ரீ குடி போய் – ராம சம்பந்தத்தால் வந்த ஸ்ரீ யால் பூரணன்- ஆகையாலே -நம்பி என்கிறது-அஞ்சலி முத்தரையே ஒளி வீசும் ஆபரணம்-சரணாகதி பண்ண வேண்டியவனுக்கு வேண்டிய அங்கங்கள் அனைத்தும் நிறைந்தவன் -நம்பி-சிரஞ்சீவி -ராமநாமம் உள்ளளவும் அரசுகைங்கர்யம்-கடலைக் கடக்க விபீஷணன் தனக்குப் பலித்த சரணாகதி -எருது கெடுத்தாருக்கும் ஏழு கடுக்காய் -திருப்புல்லாணி தர்பசயனம் கிடந்தகோலம் -நின்றவாறு மிருந்தவாறும் கிடந்தவாறும் நினைப்பரியன-5-10-6-புஜங்க சயனம் வீர சயனம் -தர்ப்ப சயனம்-பால சயனம் மாணிக்க சயனம் வீர சயனம் – இத்யாதி-கிடந்தவாறும்-“ஸ்ரீ ராமன் கடற்கரையில் கடலை நோக்கிக் கிழக்கு முகமாகக் கையைக் கூப்பிக் கொண்டு படுத்தார்” என்கிறபடியே,
“அஞ்சலிம் ப்ராங்முக: க்ருத்வா ப்ரதிஸிஸ்யே மஹோததே:”– ஸ்ரீராமா. யுத். 21 : 1.கடற்கரையிலே கிடந்த கிடையும்.-ப்ரதிஸிஸ்யே-எதிர் நோக்கிப் படுத்தார்” என்கிறதன்றோ, ஒரு கடலோடே ஒரு கடல் ஸ்பர்சித்து பொறாமை கொண்டு கிடந்தாற்போலே இருக்கையாலே; “கருணையங்கடல் துயின்றனன் கருங்கடல் நோக்கி” என்றான் அன்றோ. என்றது, பின்பு விடக் கடவதாகத் தொடுத்த அம்பு முன்பு விடமாட்டாமை இல்லை அன்றோ; அப்படிப்பட்ட அம்பு இருக்க, தம் தோள் வலி கிடக்க, தரம் போராதார் முகங்காட்டாதே இருக்கப் பொறுத்துக் கிடந்த கிடையைச் சொல்லுகிறது.

தருண மங்கையை மீட்பதோர் நெறி தரு கென்னும் பொருள் நயந்து நன்னூல் நெறி யடுக்கிய புல்லில்
கருணை யங்கடல் துயின்றனன் கருங்கடல் நோக்கி வருண மந்திரம் எண்ணினன்
விதிமுறை வணங்கி
. -கம்பராமாயணம், வருணனை வழிவேண்டு படலம், 5.

கரந்திட்டு நின்ற கடலைக் கலங்க சரம் தொட்ட கைகளால் கொட்டாய் சப்பாணி -சாரங்க வில் கையனே சப்பாணி -1-6 7-மூன்று நாள் கிடந்த கிடக்கை–முகம் காட்டாதே மறைந்து நின்ற கடலை –பீதியாலே கீழ் மண் கொண்டு மேல் மண் எறியும்படி கலங்க – சாபமா ந யா ஸௌ மித்ரே சராம்சாசீ விஷோபமான் -என்கிறபடியே சீறி –கடல் என்கிற சப்தத்தாலே அபிமானியான வருணனை சொல்லுகிறது –அப்போது கையும் வில்லுமாக நின்ற அழகை உடையவன்-வேலை வேவ வில் வளைத்த வெல் சினத்த வீர நின்
பாலராய பத்தர் சித்தம் முத்தி செய்யு மூர்த்தியே –31-கடல் சுஷ்கத்ர்ண சமூஹம் போலே தக்தமாம்படி -வில் வளைத்தவனாய் –பிரதி பஷத்தை வெல்லும் சினத்தை உடைய வீரனே –இத்தால் ஆஸ்ரிதருக்கு ஸுவ அனுபவ விரோதி-வர்க்கத்தை அநாயாசேந போக்குமவன் என்கை இவன் சினம் வென்றதின் பின் தான் தீரும் – வெல் சினத்த வீரன் -என்கிறார் அதனால்-வெண் திரைக் கரும் கடல் சிவந்து வேவ முன்னொரு நாள்
திண் திறல் சிலைக்கை வாளி விட்ட வீரர்-50-வெளுத்த திரைகளை உடைத்தான கரும் கடல் –திரைக் கிளர்த்தியின் மிகுதி சொல்லிற்று –கறுத்த கடலோடு வெளுத்த திரைகளோடு வாசியற அக்நியின் நிறமான சிவப்பே நிறமாய் மறுகும்படி தக்தமான படி –-இத்தால் -ஆஸ்ரித ரஷணத்துக்கு வருணன் விரோதியாக அவனுக்கு இருப்பிடமான கடலை அழியச் செய்தபடி-இருபத்தெட்டாம் சதுர் யுகத்தில் மிக்க வலியை உடைய ஸ்ரீ சார்ங்கத்தை
சாப மாநய -என்கிறபடியே வாங்கி அம்புகளை ஏவின ஆண் பிள்ளை red sea-அம்பால் சிவக்க -கடலசரன் பணி கொண்டு-

மிடைத்திட்டு  எழுந்த குரங்கைப் படையா விலங்கல் புகப் பாய்ச்சி விம்ம கடலை
அடைத்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே
—10-6-7-நெருக்கிக் கொண்டு தோற்றின ஸ்ரீ வானர வீரர்களையே சேனையாகக் கொண்டு மலைகளை இட்டு நிரம்பும் படியாக பாய்ச்சி கடலை அணை செய்தவன் கிடீர்-மஹத் தத்வமான கடலை அணை கட்டினவன் கிடீர் இன்று ஒருத்தி கட்டு அவிட்க மாட்டாதே இருக்கிறான் –

வெற்பெடுத்து வேலை நீர் கலக்கினாய் அதன்றியும்
வெற்பெடுத்து வேலை நீர் வரம்பு கட்டி வேலை சூழ்
வெற்பெடுத்த இஞ்சி சூழ் இலங்கை கட்டழித்த நீ
வெற்பெடுத்து மாரி காத்த மேக வண்ணன் அல்லையே –39துர்வாசசாபத்தாலே இந்த்ராதிகள் ஐஸ்வர்யத்தை இழந்து -சரணம் த்வாம் அநுப்ராப்தா –
என்கிறபடியே திருவடிகளில் சரணம் புகுர -கடல் கொண்டு முழுகும் மந்த்ரத்தைப்
பரிகரமாகக் கொண்டு சமுத்திர ஜலத்தில் அவர்கள் இழந்தவை அடங்கலும்
உத் பன்னநாம் படி கலக்கினாய் -ரத்நாகரம் -மத்ஸ்யாகரம்-என்று லோக பிரசித்தமாய்
இருந்துள்ள சமுத்ர ஸ்வபாவத்தை தவிர்ந்து ஸ்வர்க்கத்தில் உள்ள பதார்த்தங்களுக்கு
உத்பாதகம் ஆக்கினாய் –பிரயோஜ நாந்தர பரன் என்று அவன் சிறுமை பாராதே -மோஷ பிரதனாய் இருக்கும் தன் பெருமை பாராதே -ஈச்வரோஹம் – என்று இருக்குமவன் என்று அவன் பூர்வ வ்ருத்தம் பாராதே -சரணம் என்று நின்றான் -என்றத்தையே பார்த்து ரஷித்து அருளினாய் –அதன்றியும் – இது தானே போருமாய்த்து -ஆஸ்ரிதர் உன்னை தஞ்சம் என்று விஸ்வசித்து இருக்கைக்கு -அதுக்கு மேலே –வெற்பெடுத்து வேலை நீர் வரம்பு கட்டி –
கண்ட மலைகளைப் பிடுங்கி சமுத்திர ஜலத்தின் மேலே -பூமியிலே வரம்பு கட்டுமா
போலே -ப்லவங்கங்கள் காலாலே நடந்து போம்படி அணை கட்டி – இது ஒரு அதிமானுஷமான ஆச்சர்யம் -அகாதமான சமுத்ரத்திலே மலை யமிழ்ந்தது இல்லை -திரைக் கிளர்த்தியில் மண் கரையப் பெற்றதில்லை –வேலை சூழ் வெற்பெடுத்த இஞ்சி சூழ் இலங்கை கட்டழித்த நீ – கடலை அழகாக உடைத்தாய் -த்ரிகூட பர்வதத்திலே விச்வகர்மாவாலே சமைக்கப் பட்டதாய் -கடக்க வரிதான மதிளாலே சூழப்பட்ட லங்கையின் அரணை –யதாஸை கதமம் பஸி -என்கிறபடியே தார்மிகனை நிர்வாஹகனாக்கி தர்மமே
சஞ்சரிக்கும் படியைச் சொல்லிற்று –

குரங்குகள் மலையை  நூக்கக் குளித்து தாம் புரண்டிட்டு ஓடித்
தரங்க நீர் அடிக்கல் உற்ற சலமிலா வணிலம் போலேன்
மரங்கள் போல் வலிய நெஞ்சம் வஞ்சனேன் நெஞ்சு தன்னால்
அரங்கனார்கு ஆட்செய்யாதே அளியத்தேன் அயர்க்கின்றேனே –
27-மலைகளாலே கடலைத் தூர்க்கிற விடத்தில் மலைகளுக்கு தொகை உண்டாய் – ஸ்ரீ வானர வீரர்களுக்கு தொகை இல்லாமையாலே ஒரு மலையை அநேகர் கூடித் தொட்டுக் கொண்டு வருவார்கள் ஆய்த்து –ஒரு மலை ஒருவற்கு பாத்தம் போராதபடி பெரு மிடுக்கராய் இருக்கச் செய்தேயும்
உபாத்யாயர் ஊசி போலே –மரத்தில் ஊசி குத்தி கொண்டு வந்த சிஷ்யர் கூட்டம் போலே –
எல்லோரும் கிஞ்சித் கரித்து ஸ்வரூபம் நிலை பெற வேணும் என்று இருக்கிறவர்கள் ஆகையால் இப்படி செய்கிறார்கள் ஆய்த்து –ஸ்வரூப ஜ்ஞானம் உடையாதரோடு இல்லாதாரோடு வாசி அற துரும்பு எழுந்து ஆடும் படி இறே அடிமை கொள்ளுகிறவர் கையும் வில்லுமாய் நின்ற நிலை தான் –மலையை நூக்க –கடலிலே பொகட -என்னாதே -நூக்க -என்றது –ஒரு திரளுக்கு ஒரு மலை விஷயமாகவும் போராமையாலே வேறு ஒரு திரளும் வந்து பற்ற அவர்கள் பக்கலிலே -நூக்க -இப்படி கை மேலே போலே யாய்த்து மலை கடலிலே புகுவது –அவகாஹ் யார்ணவம் ஸ்வப்சயே-என்று கொண்டு பெருமாளுக்கு ஆற்றாமை கரை புரண்டு செல்லா நிற்க அக் கார்யத்துக்கு வேண்டுவார் ப்ரவர்தியா நின்றார்கள் ஆறி இருக்க ஒண்ணாது இறே – கடல் தூர்ப்புண்டு அக்கரைப் பட்டதாய் விடவற்று என்னும் த்வரையாலே எல்லாரும் ஒக்க ப்ரவர்த்திதார் ஆய்த்து-குளித்து தாம் புரண்டிட்டு ஓடித்
குளித்து –ஸ்ரீ வானர வீரர்கள் உடைய த்வரை தான் அணில்களுக்கு போந்திராமையாலே
பெருமாளுக்கு ஆற்றாமை கரை புரளா நிற்க முதலிகளுக்கு இத்தனை மெத்தனம்
எல்லாம் தான் என் –இருந்தபடியால் சடக்கெனக் கடல் அடைக்க இவர்களுக்கும் சக்தி இல்லை –ஆன பின்பு மலையாலே தூர்ப்புண்ட பிரதேசத்துக்கு மணல் சுமக்க பரிகரம் இல்லையே என்று அணில் நீரிலே புக்குத் தோய்கையும் கரையிலே ஏறினால் மணல் தொற்றுகையும் உதறினவாறே விட்டுக் கழிகையும் இவை முன்பே கை கண்ட படியாலே
இப் பிரகாரத்தாலே கடலைத் தூர்ப்போம் என்று பார்த்து கடலிலே புக்கு முழுகும் ஆய்த்து –
இம் முழுக்கு தன்னாலே நீர் சுவரும் மணலும் கொண்டு வரலாம் என்று ஆய்த்து நினைவு –தாம் –கடலிலே நீர் சுவறுவதும் மணல் தொற்றுவதும் தம் உடம்பிலே என்று அறியாது யாய்த்து அடிமையில் த்வரையாலே தாழ்வு பட்ட கார்யம் அடங்க தங்களாலே தலைக் கட்டுகிறதாக அபிமாநித்துத் திரிகிறபடியால் – தாம் -என்னவுமாம் –புரண்டிட்டு ஓடி –
புக்க மலைகளுக்கு நொய் மணல் புக்குச் சொரிந்து கொண்டு வருகிறபடி போராது என்று பார்த்து மணலிலே புரண்டோடி நிற்கும் யாய்த்து –உள்ள மணலும் வழியிலே உதிரும்படியாக ஓட-இடையில் நின்றவர்கள் இவற்றின் த்வரையைக் கண்டு என் தான் இத்தனை வேகம் என்றால் –பெருமாளுக்கு பகல் அமுது இலங்கையில் வடக்கு வாசலில் விடுவித்ததாய் இருக்கும் உங்களுக்கு த்வரை அற்று இருந்ததீ-என்னும் யாய்த்து – ருசியானது தாம்தாம் அளவைப் பார்க்க ஒட்டாது இறே-தரங்க நீர் அடிக்கல் உற்ற –
திரையை உடைத்தாய் கிளர்ந்து இருந்துள்ள கடலை அடைக்கையிலே சமைந்த-உற்ற –
கடலை அடைக்கிறவர்கள் தாங்களாய் முதலிகளும் தங்களுக்கு எடுத்துக் கை நீட்டுபவர்களாய் ஆய்த்து இவற்றின் உடைய அபிமானம் –சலமிலா வணிலம் போலேன் –
இவற்றின் உடைய வியாபாரம் அங்குத்தைக்கு கிஞ்சித் காரமாய் பலிப்பது ஓன்று இல்லை யாகில் இது அடிமை யாகிற படி எங்கனே என்னில் – அடிமை கொள்ளுகிறவனுக்கு இவற்றின் பாவ சுத்தியே அமையும் -என்கை –சலமிலாமை யாவது – கடல் தூரப்புண்டு பெருமாள் அக்கரை பட்டார் ஆக வல்லரே -என்கிற பாவத்தில்புரை அற்று இருக்கை –
சலம் -வ்யாஜம்-இலா -இல்லாமை –-நின்ற நிலை பேராதே நிற்கை – சாஸ்திர வஸ்யதையும் இன்றிக்கே –வர்ணாஸ்ரம நியமும் இன்றிக்கே –ஹஸ்த பாதாதி கரணமும் இன்றியிலே இருக்கிற திர்யக் சாமான்யமான மாத்ரமான இவை-குளிப்பது-ஓடுவது-புரளுவது ஆகிற இவற்றின் உடைய பாவமும் எனக்கு இல்லை என்று குளித்து -மூன்று அனலை –ஒளித்திட்டேன் -என்கிறார் ––

விலங்கலால் கடலடைத்து   விளங்கு இழை பொருட்டு வில்லால்
இலங்கை மா நகர்க்கு இறைவன் இருவது புயம் துணிந்தான்

நலங்கொள் நான்மறை வல்லார்கள் ஓத்தொலி யேத்தக் கேட்டு
மலங்கு பாய் வயல் திருப்பேர் மருவி நான் வாழ்ந்த வாறே—5-9-6-நீரிலே ஆழக் கடவதான மலைகளாலே கடலை அடைத்து விளங்கா நின்றுள்ள ஆபரணத்தாலே அலங்க்ருதையான
பிராட்டி உடைய ஒப்பனையிலே தோற்று ஷத்ரியத்வத்துக்கு ஏகாந்தமான வில்லாலே  ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கும் அழியாத இலங்கை அன்றோ எனக்குப் படை வீடு
நான் இவ் ஊருக்கு நிர்வாஹகன் அன்றோ -என்று அபிமானித்து இருக்கிற ராவணன் உடைய அவ் ஊருக்கு கணையம்-உழல் தடி -ரக்ஷகம் – போலே இருக்கிற தோள்களைத் துணித்தான் ஆய்த்து – 

அன்று ஆயர் குலமளுக்கு அரையன் தன்னை அலை கடலைக் கடைந்த அம்மான் தன்னைக்
குன்றாத வலி யரக்கர் கோனை மாளக் கொடுஞ்சிலை வாய்ச் சரம் துரந்து குலங்களைந்து
வென்றானைக் குன்றெடுத்த தோளினானை
-29-பிராட்டியை லபிக்கைக்காக கடலைக் கடைந்தது –அவளுடைய தனிமையைத் தீர்க்கைக்காக கடலைக் கடந்தது –யாருக்காக நீ கடலைக் கடைந்தாயோ,யாருக்காக நீ கடலில் அணை கட்டினாயோ–பிராட்டியைப் பெறுதலே முக்கிய மான பலன்; மற்றது ஆநுஷங்கிகம் -அம்ருத பிரதானமும் குடி இருப்பு கொடுக்கையும் ஆநுஷங்கிகம் -இறே –தெய்வீக ஸ்ருங்கார ரஸத்துக்கு அடையாளமே சேது-

ஆனைப் புரவித் தேரொடு காலாள் அணி கொண்ட
சேனைத் தொகையைச் சாடி இலங்கை செற்றானூர்
-6-5-3-ராவணனுடைய படை எழுச்சியை
அந்த க்ரமத்திலே  பேசுகிறார் – மலைகள் நடந்தால் போலே யானைகளைப் புறப்பட விட்டு
அநந்தரம் – குதிரைகளை விட்டு-அநந்தரம்   தேர்களாலே அலங்கரித்து – இவை அத்தனைக்கும் காவலாக காலாளைப் புறப்பட விட்டு இப்படிப் பட்ட சேனா சமூஹத்தை துகைத்து கழித்து இலங்கையை அழியச் செய்த தசரதாத் மஜன் வர்த்திக்கிற ஊர் 

கான  வெண்கும் குரங்கும் முசுவும் படையா அடல் அரக்கர்
மானம் அழித்து நின்ற வென்றி யம்மான்
எனக்கு என்றும்
தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமம்
நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணமே —6-10-6-இந்த்ராதி தேவதைகள் முதுகிட்டு போமது ஒழிய எதிர் நிற்க மாட்டாத படி பண்ணும் மிடுக்கை உடையனான
ராவணன் உடைய துர்மாநத்தை போக்கும் இடத்தில் – இடக்கை வலக்கை வாசி அறியாதே
என்றும் காட்டிலே வர்த்திக்குமது ஒழிய பூசல் கண்டு அறியாத – எண்கும் -கரடியும்-குரங்கையும் முசுவையும் சேனையாகக் கொண்டு திக்பாலாதிகளை அழியச் செய்த மிடுக்கை உடைய ராவணன் உடைய மானம் அழித்து நின்ற வென்றி யம்மான் -துர்மாநத்தைப் போக்கின சர்வாதிகன் –

ஒரு முறை இரு சுடர்  மீதினிலியங்கா மும் மதிளிலங்கை இரு கால் வளைய ஒரு சிலை
ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் வாளியின் அட்டனை
–ஒரு பர்யாயம் சந்த்ராதித்யர்கள் மேலே சஞ்சரிக்கப் பயப்படும்படியாய் –கிரி துர்க்க ஜல துர்க்க வன துர்க்க என்கிற
மூன்றையும் உடைத்தான நினைத்தாற்கு அஞ்ச வேண்டும்படியான ராஷசர்
குளவிக் கூடு சேர்ந்தால் போலே சேர்த்து அம்மணக் கூத்தடிக்கும் தேசம் –இரண்டு கோடியும் வளைந்து நிற்கும் பிரதானமான ஸ்ரீ சார்ங்கத்திலே பொருந்தி –
இரண்டு எயிற்றையும் யுடைத்தாய் -நெருப்பை உமிழா நின்றுள்ள சரத்தாலே கட்டுப் பொகட்டாய்-ப்ரஹ்ம சிருஷ்டியைப் போல் அன்றியே – பத்தும் பத்தாக அம்பால் எதிர்த்துப்-பிராட்டியினுடைய சம்ச்லேஷ விரோதியைப் போக்கினால் போலே என்னுடைய விரோதிகளையும் போக்க வேண்டும் என்று கருத்து-பிரிவுக்கு ஹேது பூதனான ராவணனை அழியச் செய்தாள் பிராட்டியோ -நீ யன்றோ –ஒரு கால் சந்த்ர ஸூர்யர்களும் கூட மேலே சஞ்சரிக்கவும் அஞ்சும்படியாய் காட்டரண் மலை யரண் நீர் அரண் என்கிற மூன்று வகைப்பட்ட அரணை யுடைத்தாய் இருக்கிற இலங்கையை வில்லினுடைய கோடித்வயமும் வளையும் படி அத்விதீயமான ஸ்ரீ சார்ங்கத்திலே பூட்டப்பட்டு -இரண்டு எயிற்றையும் யுடைத்தாய் தொடுக்கும் போது அம்பாய் எதிரிகள் மேலே தைக்கும் போது நெருப்பாய்த் தைக்கும் அம்பாலே முடித்தாய்-

அலம்பா வெருட்டா கொன்று திரியும் அரக்கரை
குலம் பாழ் படுத்து குல விளக்காய் நின்ற கோன் மலை-
4-2-1-பிராணிகளை இருந்த இடத்தில் இருக்க ஒண்ணாதபடி அலைத்து- அதாவது – இவர்கள் கீழ் நமக்கு வர்த்திக்க போகாது – எங்கே போவோம் -என்று நின்று தளும்பும் படி பண்ணுகை-வெருளப் பண்ணி –
அதாவது தங்களுடைய உக்ர வேஷங்களையும் உக்ர வியாபாரங்களையும் -கண்டு பயப்படும்படி பண்ணுகை-அலம்பா வெருட்டா -என்றதுக்கு ஆராவரித்து சிவிட்கை விளைத்து அஞ்சப் பண்ணி -என்னவுமாம்-

மாறு நிரைத்திரைக் குஞ்ச ரங்களின்
நூறு பிணம் மலை போற் புரளக் கடல்
ஆறு மடுத்து உதிரப் புனலா அப்பன்
நீறு பட இலங்கை செற்ற நேரே.
–7-4-7-சாரிகை வருகிற கடுப்பாலே எதிராக நிரைத்து இரையா நிற்கிற சர ஸமூஹத்தாலே -ஓர் அம்பை விட்டால் அதற்கு எதிராக மற்றை யம்பை விடுகையாலே திருச் சரங்கள் தன்னிலே முட்டி த்வநிக்கிற படி-இனமான நூறு நூறாக பிணங்கள் மலை போலே புரண்டு கிடக்க -அநேக பிணங்கள் என்றுமாம்-பூர்ய மாணமசல ப்ரதிஷ்ட்டம்-என்கிறபடியே அவிக்ருதமான கடல் ரத்தத்தால் நிரம்பி ஆறுகளில் எதிரே மடுத்து ரக்த ஜலமாக -ரக்ஷகனானவன் லங்கை பஸ்மாமாம் படி அழித்த நேர்பாடு என்னுதல் -நேரே என்று ஐஸ்வர்யமான ப்ரபாவத்தாலே அன்றிக்கே செவ்வையான ஆண் பிள்ளைத் தனத்தால் என்னுதல் -க்ருதரிம யோதிகளான ராக்ஷஸரைத் போல் அன்றிக்கே நேர் போராக என்னுதல்-

தான் போலும் என்று எழுந்தான் தரணியாளன் அது கண்டு தரித்து இருப்பான் அரக்கர் தங்கள் கோன் போலும் என்று எழுந்தான் குன்றம் அன்ன இருபது தோளுடன் துணித்த ஒருவன் கண்டீர்-4-4-6-தான் போலும் -ஷத்ரியன் போலே எதிரி என்று வந்தான்-அது கண்டு தரித்து இருப்பான் ராஷசராஜானாம் -என்று கிளர்ந்து எழுந்த ராவணன் உடைய மலை போல் இருக்கிற இருபது தோளையும் துணித்த தனி வீரன் கிடீர்-சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற-பாகவத அபசாரம் பொறாமல் சினம் கொண்டு மகுட பங்கம்-வெறும் கையே போகும்படி அவமானப்படுத்தி போக வைத்த என்பதையே செற்ற-மனத்துக்கு இனியான்

காற்றிடைப் பூளை கரந்தன வரந்தை யுறக் கடல் அரக்கர் தம் சேனை
கூற்றிடைச் செல்லக் கொடுங்கணை துரந்த கோல வில்லி ராமன் தன் கோயில்-
4-10-6-பெரும் காற்றிலே பூளைப் பூவானது பறந்து உரு மாய்ந்து போமா  போலே-துன்பம் உற-ஓதம் கிளர்ந்த -ஓங்கிக் கிளர்ந்த கடல் போல் மிகைத்து வந்து தோற்றின ராஷச சேனை எல்லாம் -முன்பு யமனைத் திறை கொண்டு -ஜெயித்து – பர தந்த்ரனாக்கி வர்த்தித்தவர்கள்-இப்போது அவனுக்கு குடி மக்களாக திக் விஜயம் பண்ணுகிற போது முந்துற அழியச் செய்வது யமனை இறே–கொடுங்கணை துரந்த – பெருமாள் கண் பார்க்கிலும் கண் பாராத க்ரௌர்யத்தை உடைய அம்பை விட்ட கோல வில்லி ராமன் தன் கோயில் – கையில் வில் பிடித்த பிடியிலே முடிந்து போகிற ராஷசர் அடங்க இவன் கையில் நாம் பட்டுப் போனால் ஆகாதோ -என்னும்படி தர்ச நீயமான வில்லை உடைய சக்கரவர்த்தி திரு மகன் வர்த்திக்கிற திருக் கோயில்(கோலம் வில்லுக்கு விசேஷணம் )-இன்று போய் நாளை வாகும்பகர்ணனும் தோற்று உனக்குப் பெரும் துயில் தந்தானோ

மிகப் புருவம் ஒன்றுக்கு ஒன்றோ ஒசணையான் வீழ ஒரு கணையால் அன்றிக் கொண்டு எய்தான் அவன் –29-ஒரு புருவத்துக்கு ஒரு புருவம் யோசனை நீளம் -10 mile -நீளம் உடைய-கும்பகர்ணன் பட்டு விழும்படி சங்கல்பத்தால் அன்றிக்கே திருச் சரத்தாலே-தேவ கார்யம் செய்தானாகை அன்றிக்கே தனக்கே வந்ததாக சீற்றத்தை ஏறிட்டுக் கொண்டு-எய்தான் –சங்கல்பத்தால் கொன்றான் ஆகில் நற் கொலையாய் இருக்குமே
ஷமையா பிருத்வி சமயா –அவஸ்தை மாறி-க்ரோதம் ஆஹாரயத் தீவ்ரம் -கோப வஸ்யமாகி–தேவர் கார்யம் செய்தானாகை இன்றிக்கே தனது காரியமாக -ஏறிட்டுக் கொண்டு செய்த செயல் – வெந்நரகம் சேரா வகையே சிலை குனித்தான் அன்றோ

எம்பிரானே என்னை ஆள்வா என்று என்று அலற்றாதே
அம்பின் வாய்ப்பட்டு ஆற்ற கில்லாது இந்த்ரஜித் அழிந்தான்
நம்பி அனுமா சுக்ரீவா வங்கதனே நளனே
கும்பகர்ணன் பட்டுப் போனான்  குழமணி தூரமே 
—10-3-2-மூல பல சேனையும் தான் ஒருவனே அழித்து-

செருக்கடுத்தன்று திகைத்த வரக்கரை
உருக்கெட வாளி பொழிந்த வொருவனே
–8-6-2–யுத்த கண்டூதி வர்த்தித்து திகைத்த வரக்கரை-சக்கரவர்த்தி திருமகனை வெல்ல நினைத்த மதி கேடரான ராக்ஷஸரை –அன்று -ந நமேயம்-என்ற அன்று –உருக்கெட -சின்னம் பின்னம் சரைர்த்தக்தம் –வாளி பொழிந்த-சர வர்ஷம் வவர்ஷஹ –ஒருவனான –பிரான் கண்டீர் -ஏக வீரனான உபகாரகன் கண்டீர் –

ஒருவர் இருவர் ஓர் மூவர் என நின்று
உருவு கரந்து உள்ளும் தோறும் தித்திப்பான்-
8-6-3-மூல பலம் சாம்படி அருளுகிற அன்று முந்துற ஒருவனாய்த் தோற்றி -சாரிகையிலே வேகம் மிக மிக இருவரும் மூவருமாய்த் தோற்றி –உருவு கரந்து –வேகம் மிக்க வாறே இந்திரிய சம்யோகத்துக்கு இடம் இல்லாத படி யாகையாலே -ரூப கிரஹணம் அரிதாய் -உருக்கெட வாளி பொழிந்த வொருவனே-என்று அந்வயம் –வ்யாபரித்த சடக்காலே ரூபம் கண்ணுக்கு பிடிபடாது ஒழிகை

மூள வெரி சிந்தி முனி வெய்தி யமர் செய்தும் என வந்த வசுரர்
தோளு மவர் தாளும் முடியோடு பொடியாக   நொடியாம் அளவெய்தான்
வாளும் வரி வில்லும்  வளை யாழி கதை சங்கம் இவை யங்கை யுடையான்

நாளும் உறைகின்ற நகர் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே—5-10-5-புகையும்படி அதுக்கடியான அக்னியை சிந்தி சீறி பூசல் பொரும் இத்தனை -என்று வந்த அசுர -தாளைக் குறையா தோளைக் குறையா முடியைத் தள்ளா ஒரு ஷண காலத்திலே எய்தவன்   வர்க்கத்தின் உடைய அப்படி இன்னமும் யுத்தத்துக்கு பரிகரமான வாளும் தர்ச நீயமான வில்லும் வளைந்த வாயை உடைத்தான திரு ஆழியும் கதையும் இவற்றை அழகிய திருக் கையிலே உடையவன்

மாதலி தேர் முன்பு கோல் கொள்ள மாயன் இராவணன் மேல் சரமாரி
தாய் தலை யற்று யற்று வீழத் தொடுத்த தலைவன் வர எங்கும் காணேன்
போதலர் காவில் புதுமணம் நாறப் பொறி வண்டின் காமரம் கேட்டு உன்
காதலியோடு உடன் வாழ் குயிலே என் கரு மாணிக்கம் வரக் கூவாய் —5-3-மாதலி பச்சைக் குதிரை -ஏழாம் நாள் இந்திரனின் கைங்கர்யம் -இந்திரன் என்றும் ஒக்க முது காட்டிப் போருகையாலே ஒரு நாளும் முன் நின்று அறியான் யாய்த்து – பெருமாளும் ராவணனுமாக பொருத அன்றாய்த்து-முன் நின்று சாரத்தியம் பண்ணப் பெற்றது –மாயன் ராவணன் –
செவ்வை பூசல் பொர அறியாத -என்றும் ஒக்க வஞ்சனத்தால் பொருமவன் யாய்த்து –த்வம் நீச சச வத் ஸ்ம்ருத-சுந்த -32-16-என்றாள் இறே பிராட்டியும் –கோழையாய் ராஜ புத்ரர்களை மதித்து இருந்த படியாலே –அவர்களை அகற்றி தனி இருப்பிலே கொடு போர்க் கடவ நீயே இவ்வார்த்தை சொல்லுகிறாய் -என்கிறாள்-யதந்தரம் சிம்ஹ ஸ்ருகாலயோர்வனே -ஆரண்ய -47-45-என்று – சிம்ஹ ஸ்ருகாலயோ-என்றவாறேதன்னை சிம்ஹமாக சொன்னால் என்று பையல் பிரமிக்கக் கூடும் என்று –த்வம் நீச சச வத் –என்றாள் இறே -நீ முயல் போன்றவன் என்று பிரித்துக் கொண்டு போந்து தனி இருப்பு இருத்தினவன் முன்னே இறே இவ்வார்த்தை சொல்லுகிறது – அவனை மதியாத வீர பத்னி யாகையாலே-மாயன் ராவணன் மேல் -வஞ்சகனான ராவணன் மேலே- சர மாரி-சர வர்ஷம் வவர்ஷ ஹ –என்கிறபடியே பாட்டம் பாட்டமாக –தாய் தலை யற்று யற்று வீழத் தொடுத்த தலைவன் வர எங்கும் காணேன் பிரதானமான தலை அற்று வீழ – தாய் தலை -மெய்யான தலை -என்றவாறு-திருச் சரங்கள் பண்ணின பாக்யத்தாலே அறுக்க அறுக்க முளைத்தது யாய்த்து
பின்னை அது தானே போது போக்காக நின்று கொன்றான் யாய்த்து அப்படி முளைத்தது இல்லையாகில் திருச் சரங்களின் வரவு இவனால் -பெருமாளால் -பானங்களை திருப்தி செய்து அடக்கப் போகாதே-தலைவன் -தீரோத்தாத நாயகன்

தோள் இரண்டும் எட்டு ஏழும் மூன்றும் முடி அனைத்தும்
தாள் இரண்டும் வீழச் சரம் துணிந்தான் -தாள் இரண்டும்
ஆர் தொழுவார் பாதம் அவை தொழுவது அன்றே என்
சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு —43–எட்டும் இரண்டும் ஏழும் மூன்றுமாக இருபது தோள்களையும்-முடி அனைத்தையும்-முடி அனைத்தும்-
அறுக்க வறுக்க முளைக்கையாலே ஒரு சங்க்யை சொல்ல ஒண்ணாத படியான தலைகளையும் – தாள் இரண்டும் வீழச் –இவை எல்லா வற்றுக்கும் ஆதாரமான தாள் இரண்டையும் விழும்படிக்கு ஈடாக- சரத்தை துரந்தவன்–சரம் துணிந்தான் –இந்த க்ரம விவஷையால் பிரயோஜனம் – திருச் சரத்துக்குப் போது போக்குண்டாம் படி பண்ணுகையைச் சொல்லுகை –திருச்சரம் விளையாடின க்ரமம்-ஆஸ்ரித விரோதி யாகையாலே- நம்மாலே ஸ்ருஷ்டன் என்றும் பாராதே-முடியச் செய்தவனுடைய திருவடிகள் இரண்டையும்- யாவர் சிலர் தொழுதார்கள்-ஏதேனும் ஜன்மம் ஆகிலும் அவர்கள் உடைய தாளைத் தொழுகை அன்றோ-புருஷார்த்தம் தர வந்த தோள் செய்யும் உபகாரம்-

சரங்களைத் துரந்து வில் வளைத்து இலங்கை மன்னவன்
சிரங்கள் பத்தறுத்து உதிர்த்த செல்வர் மன்னு பொன்னிடம்
பரந்து பொன்னிரந்து நுந்தி வந்தலைக்கும் வார் புனல்
அரங்கம் என்பர் நான்முகத் தயன் பணிந்த கோயிலிலே –51-

இலைத்தலைச் சரம் துரந்து இலங்கை கட்டு அழித்தவன்
மலைத்தலைப் பிறந்து இழிந்து வந்து நுந்து சந்தனம்
குலைத்தலைத் திறுத்து எறிந்த குங்குமக் குழம்பினோடு
அலைத் தொழுகு காவிரி அரங்கமேய வண்ணலே –54-

இலங்கை மன்னன் ஐந் தொடைந்து பைந்தலை நிலத்துகக்
கலங்க அன்று சென்று கொன்று வென்றி கொண்ட வீரனே
விலங்கு நூலர் வேத நாவர் நீதியான கேள்வியார்
வலம்கொளக் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே –56-குளவிக்கூடு சேர்த்தாப்  போலே ஹிம்சகர் சேர வர்த்திக்கும் இலங்கைக்கு நிர்வாஹகனான ராவணன் -ராவணோ ராஷஸேஸ்வர -என்கிறபடியே அந்த துர் வர்க்கத்துக்கடைய நிழலாய் இருக்குமவன் இறே ஐந்தொடைந்து பைந்தலை நிலத்துக-அறுக்க அரிதான பத்துத் தலையையும் பூமியிலே உதிர்த்து உரு மாய்ந்து போம்படி-பைந்தலை -வலிய தலை-ஐந்தொடைந்து-என்று தசேந்த்ரியாநநம் -என்கிறபடியே அநந்ய பிரயோஜனருக்கு பாதகமான சில வஞ்சகங்களை நினைக்கிறார் ஆய்த்து –கலங்க அன்று சென்று கொன்று வென்றி கொண்ட வீரனே –
பயமிருக்கும்படி அறியாதவன் பயத்தாலே போக்கற்று கலங்கும்படி – இவனுக்கு வரம் கொடுத்த தேவதைகளும் குடி இருப்பு இழக்கும்படியான தசையிலே ஜனஸ்தான  வதத்தையும் -சேது பந்தனத்தையும் பண்ணிச் சென்று அவனைக் கொன்று விஜயத்தை லபித்த ஆண் புலியானவனே –

சங்கு தங்கு முன்கை நங்கை கொங்கை தங்கல் உற்றவன்
அங்க மங்க வன்று சென்று அடர்த்து எறிந்த  வாழியான்
கொங்கு தங்கு வார் குழல் மடைந்தமார் குடைந்த நீர்
பொங்கு தண் குடந்தையுள் கிடந்த புண்டரீகனே –57-வளை கழலாதே இருந்துள்ள முன்கையை உடையவள் –அவன் கொண்டாடும் வளை- முன் கை வளை – யாகையாலே வ்யதிரேகத்தில் கழலுவதும் அதுவே இறே -இத்தால் -நித்ய அநபாயிநி -என்கை –நங்கை-
ரூப குணத்தாலும் ஆத்ம குணத்தாலும் பூர்ணை யானவள் –துல்ய சீல வயோ வ்ர்த்தாம் துல்ய அபி ஜந லஷணாம் –என்கிற பிராட்டி பக்கலிலே –கொங்கை தங்கல் உற்றவன் அங்க மங்க –திருவடிகளில் தங்க ப்ராப்தமாய் இருக்க -மாதர்  விஷயம் என்று பாராதே அதிக்ரமத்தை நினைத்த ராவணனுடைய சரீரம் அழிகைக்காக –தங்கல் -தொங்கல்
இந்த துர் புத்திக்கு அடி -தேஹாத்ம அபிமானம் ஆகையாலே அதுக்கடியான சரீரத்தை
யாய்த்து அழிக்க நினைத்தது-வன்று – உடலையும் உயிரையும் பிரித்தாப் போலே -இருவரையும் கடலுக்கு அக்கரையும் இக்கரையுமாம்படி பண்ணின அன்று என்னுதல்
வேணி யுத்க்ரதந தசையிலே -என்னுதல்-சென்று –அபியாதா ப்ரஹர்த்தாசா -என்கிறபடியே அவன் இருந்த  இடத்தே  சென்று-அடர்த்து எறிந்த  வாழியான் – அடை மதிள் படைத்து -அவந்தலையை அறுத்து அந்த ஹர்ஷத்தாலே கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை உடையவன்-எறிதல் -அறுத்தல்

சதுரமா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து
உதிர வோட்டி ஓர் வெங்கணை வுய்த்தவன் ஓத வண்ணன்

மதுர மா வண்டு பாட மா மயிலாட அரங்கத்தம்மான் திரு வயிற்று
உதர பந்தம் என்னுள்ளத்துள் நின்றுலாகின்றதே —-4-சர்வேஸ்வரன் ஸ்ரீ வைகுண்டத்தை கலவிருக்கையாக கொண்டு வீற்று  இருந்தாப் போலே காணும் இவனும் இலங்கைக்கு ஈஸ்வரன் என்று இருந்தபடி-விரக்தனான திருவடியும் கூட மதித்த ஐஸ்வர்யம் இறே
யத்ய தர்மோ ந பலவான் ஸ்யாதாயம் ராஷசேஸ்வர ஸ்யாதயம் ஸூர லோகஸ்ய சக்ரஸ் யாபி ச ரஷிதா -என்றான் இறே-யாவன் ஒருவனுக்காக இவனை அழியச் செய்ய நினைக்கிறார் -அவன் தன்னையே இவ் வரணுக்கு காவலாக வைப்பர் கிடீர் அல்பம் அனுகூலிததான் ஆகில் –தலை பத்து உதிர –பனங்குலை உதிர்ந்தாப் போலே உதிர -அறுக்க அறுக்க முளைத்த சடக்கு ஒட்டி – அனுகூலிக்குமாகில் அழியச் செய்ய-ஓர் வெங்கணை வுய்த்தவன் –பிற்றை நாளில் பூசலிலே ஜய அபஜயங்கள் அவ்யவஸ்திதம் அன்றோ என்று ப்ரஹ்மாதிகள் கருதினவாறே –அத் தலைகளுக்கு வேர் பற்றான நெஞ்சிலே அத்விதீயமான ப்ரஹ்மாஸ்த்ரத்தை விட்டவன்அவன் பிரதி கூல்யத்தில் நிலை நின்றான் என்று அறிந்த பின்பு ப்ரஹ்மாஸ்த்ரத்தை விட்டபடி

புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்ப்
–13-பொல்லா அரக்கனைக் –
தாயையும் தமப்பனையும் உடலையும் உயிரையும் பிரித்தாப் போலே பிரித்த நிர்க்குணன் –
சுரிகுழல் கனிவாய் -இத்யாதி முன்பொலா இராவணன் -என்னும் இத்தனை போக்கி
அவன் தண்ணிமைக்கு ஒரு பாசுரம் இல்லை இறே அத்தாலே இறே பிராட்டியும் -நல்ல அரக்கனும் -உண்டு என்றாள் இறே –கிள்ளிக் களைந்தானைக் –திருவிளையாடு சூழலிலே நோய் புக்க இடங்களைக் கிள்ளிக் பொகடுமா போலே தோஷாம்சத்தை வாங்கிப் பொகட்ட படி –வீர பத்னி யாகையாலே-கல் எடுத்து (கலியன் )-என்னுமா போலே –-கிள்ளி –என்கிறார்கள்-திரு விளையாடு சூழலில் நோவு பட்ட இடங்களைக் கிள்ளிப் பொகடுமா போலே –தோஷ அம்சத்தை வாங்கிப் பொகட்ட படி

இரக்கமின்றி எங்கோன் செய்த தீமை யிம்மையே எமக்கு எய்திற்று காணீர்
பரக்க யாம் இன்று உரைத்தென்  இராவணன் பட்டனன் இனி யாவர்க்கு உரைக்கோம்
குரக்கு நாயகர்காள் இளங்கோவே கோல  வல் விலி  ராமபிரானே
அரக்கர் ஆடு அழைப்பார் இல்லை நாங்கள் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ
—10-2-1-

பத்து நீண் முடியும் அவற்றிரட்டிப் பாழித் தோளும் படைத்தவன் செல்வம்
சித்தம் மங்கையர் பால் வைத்துக் கெட்டான் செய்வதொன்று அறியா வடியோங்கள்
ஒத்த தோள் இரண்டும்  ஒரு முடியும் ஒருவர் தம் திறத்தோம் அன்றி வாழ்ந்தோம்
அத்த யெம்பெருமான் எம்மைக் கொல்லேல் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ 
–10-2-2-இரண்டு தோளும் ஒரு முடியும் விக்ருத வேஷர் அல்லாத பெருமாளை பெறாமையாலே கெட்டோம் வாழ்ந்தோம் -என்று ஷேப பரம் –

ஏத்துகின்றோம் நாத்தழும்ப இராமன் திருநாமம்
சோத்த நம்பி சுக்ரீவா யும்மைத் தொழுகின்றோம்
வார்த்தை பேசீர் எம்மை யுங்கள் வானரம் கொல்லாமே
கூத்தர் போலே ஆடுகின்றோம் குழமணி தூரமே 
–10-3-1-குணாலைக் கூத்துப் போலே தோற்றார் தோல்விக்கு ஈடாக குழமணி தூரக் கூத்து என்று ஒரு கூத்து உண்டு ஆடுவது –
அத்தை ராஷசர் செய்த படி பேசி அவர்கள் பாசுரத்தாலே பகவத் விஷயத்தை அனுபவிக்கிறார் –

ஞாலம் ஆளும் உங்கள் கோமான் எங்கள் இராவணற்கு
காலனாகி வந்தவா கண்டு அஞ்சிக் கரு முகில் போல்
நீலன் வாழ்க சுடேணன் வாழ்க வங்கதன் வாழ்க என்று
கோலமாக வாடுகின்றோம் குழமணி தூரமே
–10-3-3-

காரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு
ஓராதான் பொன் முடி ஒன்பதோடு ஒன்றையும்
நேரா அவன் தம்பிக்கே நீள் அரசு ஈந்த
ஆராவமுதனைப் பாடிப் பற
அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற
– 3-9- 10—நேரா–அறுத்துப் போகட்டு-விபீஷண பட்டாபிஷேகம் செய்த பின்பே பிராட்டியை மீட்டான் -ராஜநீதி -மன்னனால் சிறை வைத்தவளை மன்னனே விடுவிக்க வேண்டும்-திரு வடிகளை சேர்ந்த ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கே என்னிலங்கு நாமத்தளவுமாக (2-6 )-என்று – தீர்க்க காலம் நடக்கும்படி இலங்கைக்கு அரசாகிற ஐஸ்வர்யத்தை கொடுத்த

அடைந்த வருவினையோ டல்லல் நோய் பாவம்
மிடந்தவை மீண்டு ஒழிய வேண்டில் நுடங்கிடையை
முன்னிலங்கை வைத்தான் முரண் அழிய முன்னொரு நாள்
தன் விலங்கை வைத்தான் சரண்
——-59-

இத்தால் –

1-சர்வேஸ்வரனுக்கு போக்யமாய் இருந்துள்ள ஆத்மாவை -என்னது -என்று இருக்குமவன் -பிராட்டியைப் பிரிந்த ராவணன்
உடன் ஒக்கும் என்னும் இடமும் –

2-இவ் வாத்மா அவனுடையது -என்று அனுகூலித்தவனுக்கு பிராட்டி இருந்த மார்விலே அம்பு ஏற்றுப்
பரிஹரித்தால் போலே பரிஹரிக்கும் என்னும் இடமும் –

3-அவளோடு கூடினவன் உபாயம் என்கையாலே பற்றுமவர்கள்-அவள் முன்னாகப் பற்ற வேணும் என்னும் இடமும் சொல்கிறது(ஸஹ வைதேஹ்யா அஹம் சர்வம் கரிஷ்யாமி )

(மனம் இந்திரியங்கள் இராவணன் இத்யாதி-முதலியாண்டான் வார்த்தை -தேசிகர் ஸ்லோகம் )

(கீழே பல பாசுரங்களில் )திரு உள்ளம் -இந்திரிய ஜெயம் பண்ணு என்றது -தொழு என்றது -திரு நாமம் சொல்லு என்றது -நினை என்றது
பல படிகள் சொன்ன இவற்றுக்குத் தாத்பர்யம் என் என்னில் –

இதுக்கு கீழ் எல்லாம் ஷட் கத்ய த்ரயத்தில் சொன்ன வார்த்தை போலே ஸ்வரூபம் விசதம் ஆக்கைக்கு சொன்ன நிலை –

இது சரம ஸ்லோகத்தில் நிலை போலே (நடுநாயகமாக ரத்னம் போல் இந்த பாசுரம் -சரம ஸ்லோகம் போல் )-உணர்ந்த அன்று அவன் அல்லது இல்லை –

அடைந்த அருவினை -அவித்யாதிகள் –ஆத்மா ஹேய சம்சர்க்கத்துக்கு அநர்ஹன் ஆகையால் -அடைந்த -என்றது
பரமாத்வுக்கும் பிரவேசம் ஒக்கும் இறே -அனஸ்னன்(சிறைச் சாலைக்குள் அரையனும் சிறையனும் உண்டே )

(தேகத்துக்குள் இருந்தாலே கர்மங்கள் இயற்கை என்று சொல்வாய் ஆனால் அது அல்ல என்று காட்டவே இங்கு
ஒரு மரம் -இரண்டு பறவைகள் -ஓன்று உண்டு ஒளி குறைய -மற்ற ஓன்று உண்ணாமல் ஒளி விஞ்சி
மரம் -சரீரம் -பழம் -கர்மாக்கள் -பரமாத்மாவுக்கு கர்மம் தீண்டாதே)

அல்லல் நோய் -ஆதி வியாதி -பாவம் -சரீரத்துடன் பண்ணும் பாவம்
மிடந்தவை–சமிதை இடாத மாணி -ப்ரஹ்மசாரி போலே –பரணிக் கூடு வரித்தால் போலே –
மீண்டு ஒழிய வேண்டில் -தொடருகிற பாம்பை திரிய விடுத்தால் போலே –சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி இறே

சர்வ சக்தியைக் கொண்டு கார்யம் கொள்ள வேண்டாவோ – நுடங்கிடையை -(நித்ய அநபாயினி நிரவத்யாம் )ஏக த்ரவ்யத்தை பின்னம் ஆக்கின
இலங்கை வைத்தான் -தாயையும் தமப்பனையும் பிரித்த பையல் மிடுக்கு ஒழிய -பிராட்டி அம்பெய்யும் அன்று இவனால் போக்கலாவது-

தத் தஸ்ய சத்ருசம் பவேத் –கூர்மையை விஸ்வஸித்து இருக்கும் அத்தனை -(சொல்லினால் சுடுவேன் –மாசு என்று அஞ்சினேன் )
அவளுக்கு பரியுமா போலே பரியும் அவதார ஸுலப்யம்
பிறந்து முன்னே உன்னைப் பெறுகைக்கு யத்னம் பண்ணா நின்றான் -இனி பிரதிபத்தியே உள்ளது -(வாரிக் கொண்டு –என்னில் முன்னம் பாரித்து -காட்கரை அப்பன் )

அல்லல் நோய் –அல்லல் என்று பாப காரணமாய் வரும் மனத்துன்பங்கள் -நோய் -சரீரத் துன்பங்கள் இவற்றையே ஆதி -வியாதி என்று வடமொழியில் சொல்வர்-மிடைந்தவை -வெளியேற முடியாதபடி சூழ்த்துக் கொண்டவை(சும்மெனாதே கை -விட்டோடி பெரியாழ்வார் -5-4-3–மாமேகம் சரணம் வ்ரஜ ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி0

இப் பாசுரம் ரத்ன காரத்துக்கு நடு நாயகக் கல் போல் ஸம்ஸாரம் -சீதாபிராட்டி சிறையில் இருந்தது போல்
தத் தஸ்ய ஸத்ருசம் பவேத் மற்ற உபாயந்தரங்களை விட்டு அவனையே பற்ற வேண்டுமே
சிந்தித்து இரு -41-
வாரி சுருக்கி –உணர்வார் காண்பரே -47
மருவாழி –நெஞ்சே -48-
முயல்கிற்ப்பார்க்கு அல்லால் –ஆதி காண்பார்க்கும் அரிது -49-
அரிய புலன் ஐந்து அடக்கி –புல்கில் –எளிது -50-
திரு நாமம் எண் –51-
தொழுது எழுதும் எழு –58
-என்று சொன்னது எல்லாம் உபாயாந்தர புத்தியால் அல்ல -தேஹ யாத்ரை நடக்க உடலாகவே-மற்ற உபாயாந்தரங்களை உபதேசித்து அதனால் ஸ்வரூபம் தெளிவடைந்து – திரு உள்ளம் சோகம் அடைந்த பின்பே சரம ஸ்லோக உபதேசம் போல் இப்பாசுரமும் –-இச்சேதனன் ஸ்வரூபத்தை உணர்ந்த அன்று அவன் அல்லது உபாயம் இல்லை என்பதே இப்பாசுர சாரார்த்தம் இப்பிரபந்த சாரார்த்தமும் இதுவே -)

வாத மா மகன் மற்கடம் விலங்கு மற்றோர் சாதி என்று ஒழிந்திலை உகந்து
காதலாதரம் கடலினும் பெருகச் செய் தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று
கோதில் வாய்மையினோடும் உடனே உண்பன் நான் என்ற ஒண் பொருள் எனக்கும்
ஆதல் வேண்டும் என்று அடியிணை யடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –
5-8-2-பிரயாகையில் பரத்வாஜர் ஆஸ்ரமத்தில் புஷ்பகவிமானம் இறங்க-திருவடியை பரதனுக்கு செய்தி சொல்லி அனுப்ப -சொல்லி திரும்ப வந்து -உடன் உண்ட சரித்திரம் இங்கு —உடனே உண்பன் நான் என்ற ஒண் பொருள்-வாழை இலையில் நரம்பு பின்பு-காய்கனிகள் மேல் பாதியில் –

அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி அரசு எய்தி அகத்தியன் வாய் தான் முன் கொன்றான்
தன் பெரும் தொல் கதை கேட்டு மிதிலை செல்வி உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள்
செம் பவள திறல் வாய் தன் சரிதை கேட்டான் தில்லை நகர் சித்ர கூடம் தன்னுள்
எம்பெருமான் தான் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன் அமுதம் மதியோம் அன்றே—
10-8–அம் கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும்அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி-10-1-பாதுகாதேவியின் அரசால் வந்த பெருமை

கதிர் ஆயிரம் இரவி கலந்து எறித்தால் ஒத்த  நீள் முடியன் 
எதிரில் பெருமை இராமனை இருக்கும் இடம் நாடுதிரேல் 

அதிரும் கழல் பொரு தோள் இரணியன் ஆகம் பிளந்து அரியாய்   
உதிரம் அளைந்த கையோடு இருந்தானை உள்ளவாறு கண்டார் உளர் – 4-1- 1-கஸ்ர கிரணங்கள் ஆன ஆயிரம்  ஆதித்யர்கள் சேர பிரகாசித்தால் போலே  இருக்கும் தேஜசை உடைத்தாய் – ஆதி ராஜ்ய ஸூசுகமான ஒக்கத்தை உடைத்தான  திரு அபிஷேகத்தை உடையவன் –-இத்தால்- ராவண வதம் பண்ணி  ஸ்ரீ விபீஷண ஆழ்வானை இலங்கைக்கு ராஜாவாக அபிஷேகம் செய்து  ஸ்ரீ பிராட்டியும் தாமும் ஆன சேர்த்தியோடே- ஸ்ரீ திரு அயோத்யையில் எழுந்து அருளி  திரு அபிஷேகம் பண்ணி இருந்த படியை சொல்லுகிறது –

தன்னடியார் திறத்தகத்து தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல்
என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும்
மன்னுடைய விபீடணர்க்காய் மதிள் இலங்கை திசை நோக்கி மலர் கண் வைத்த
என்னுடைய திருவரங்கர்க்கு அன்றியும் மற்று ஒருவர்க்கு ஆளாவரே
  – 4-9 -2-இப் பாட்டை -சென்னி யோங்கு பாசுரத்தில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யாநித்த
பிரக்ரியைக்கு இணங்க இங்கும் ஸ்ரீ மா முனிகள் வ்யாக்யாநித்து அருளுகிறார்-இவன் பொறுத்தது நமக்காகவா – இவர்களுக்காகவா — நம் போகத்துக்காகவா -என்று ஆராய்க்கைகாக சிதகுரைக்க தொடங்கினாள் ஆனால்-என் அடியார் அது செய்யார் -என்னும் அவன்-அது செய்யார்ஆஸ்ரயணத்துக்கு முன்பு இவள் மன்றாடும் – பின்பு அவன் மன்றாடும்

உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் றன்னை
வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.
–4-5-10–கிடந்தும் – என்றது,
‘பகைவர்களை அழிக்கின்ற ஸ்ரீராமபிரான் பாம்பின் உடல் போலே இருக்கிற திருக்கையைத் தலையணையாகக் கொண்டு, கிழக்கு-முகமாகக் கையைக் கூப்பிக்கொண்டு கடலை நோக்கிச் சயனித்தார்,’ என்கிறபடியே, கிடந்த கிடையிலே இலங்கை குடி வாங்கும்படியாக,-ஒரு கடல் ஒரு கடலோடே சீறிக் கிடந்தாற்போலே கடற்கரையிலே கிடந்தபடியைத் தெரிவித்தவாறு.
நின்றும் –‘கம்பீரமான வில்லைப் பிடித்துக் கொண்டு நிற்கின்ற ஸ்ரீ ராமபிரானைத் தாரையானவள் கண்டாள்,’ என்கிறபடியே, நின்ற நிலை
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் –‘பர்ணசாலையில் எழுந்தருளியிருப்பவரும் சடை மரவுரி இவற்றைத் தரித்தவருமான ஸ்ரீ ராமபிரானை ஸ்ரீ பரதாழ்வான் பார்த்தார்,’ என்கிறபடியே,-இருந்த இருப்பாதல்; க்ஷத்திரியர்களுக்குரிய ஒப்பனையோடே பதினோராயிரம் ஆண்டு இருந்த இருப்பாதல்.
மணம் கூடியும் –பதினோராயிரம் ஆண்டு தன் படுக்கைப் பற்றான பூமியைக் காப்பாற்றுகையாலே ஸ்ரீ பூமிப்பிராட்டி அணைக்க, அவளோடே கலந்தும்.-மணம் கூடியும்
பதினோறாயிரம் ஆண்டு பூமியை ரஷிக்கையாலே பூமிக்கு அபிமானியான பிராட்டி விரும்பி அணைக்க அவளோடு சம்ச்லேஷித்தும்-கண்ட ஆற்றால் உலகு தனதே என நின்றான் தன்னை –பிரமாணங்கொண்டு அறிய வேண்டாமல், தொன்று தொட்டு வருகின்ற அனுபவம் கொண்டு,-‘இவனுக்கே உரிமை’ என்று அறியலாய் இருக்கை; என்றது, ஒருவன் ஒரு நிலத்தைத் திருத்துவது கமுகு வைப்பது-எரு இடுவதாய்க் கிருஷி பண்ணாநின்றால், ‘இது இவனது’ என்று அறியலாமே அன்றோ?’ ஒத்தி நிலத்தில் கமுகு வைக்க மாட்டார்கள் —
‘பெய்த காவு கண்டீர் பெருந்தேவுடை மூவுலகே,’ –திருவாய். 6. 3 : 5.-என்னக் கடவதன்றோ?-அருளிச் செயல்களில் இந்த ஒரே பாசுரம் தான் ஸ்ரீ ராம பட்டாபிஷேகம் காட்டும்

கற்பார் இராம பிரானை அல் லால் மற்றும் கற்பரோ?
புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஒன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே
.–7-5-1-நற்பாலுக்கு உய்த்தனன்-நல்ல ஸ்வ பாவத்தை யுடைத்தாம் படி பண்ணினவன் –தன் சம்ச்லேஷ விஸ்லேஷமே ஸூக துக்கமாம் படி பண்ணினான் –திர்யக் யோனி கதச்சாபி சர்வோ ராமம நுவரத–என்றும் – -அபி வ்ருஷா பரிம்லா நா -என்றும் –ராம மேவா நுகச்சத்வ மஸ்ருதிம் வாபி கச்சித -என்றும் -ராமேண ரஹி தா நாந்து கிமர்த்தம் ஜீவிதம் ஹிந-என்றும் -இப்படி ஸ்வ சம்ச்லேஷ விஸ்லேஷ ஸூ க துக்கமாம் படி பண்ணிற்று ஒரு தேச விசேஷத்திலேயோ -என்ன
நான்முகனார் பெற்ற நாட்டுளே.–ப்ரஹ்மாவுக்கு அடைத்த நாட்டுள்ளே-அவனுடைய நியாமகத்வத்தையும் தவிர்த்து -சேதனருடைய கர்ம வஸ்யத்தையும் தவிர்த்து தான் கைக்கு கொண்டு தன்னால் அல்லது செல்லாத படி பண்ணினான் –அவன் ஸ்வாதந்திரியத்தையும் தவிர்த்து, இவற்றின் கர்ம பாரதந்திரியத்தையும் தன் குணத்தாலே பதஞ்செய்து,
தன்னைப் பெற்ற போது ஜீவிக்கும்படியாய்ப் பெறாத போது உறாவும்படியான தன்மையை உண்டாக்கினான். ஆன பின்பு அவனை ஒழிய வேறேயும் சிலவற்றைக் கற்பரோ?

கோயில் கந்தாடை ஆயன் -முதலிகள் சம்வாதம் மூவரும் திருவரங்கம் திருக்கோயிலில் ரெங்க விலாஸ மண்டபத்தில் சேர்ந்து எழுந்து அருளி இருக்க காரணம்
பாவோ நான்யத்ர கச்சதி -திருவடி
அச்சவை பெறினும் வேண்டேன் -தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்
மற்று ஒன்றைக் காணாவே -திருப்பாண் ஆழ்வார் -என்றாராம் –
யத்ர நந்யத்ர பஸ்யதி –ஒன்றைக் கண்டால் வேறே ஒன்றைக் கானாவோ நினைக்காது பேசாதோ அதுவே –பூமா இவர்களுக்கு ராம அனுபவம் அரங்கன் அனுபவம் திருநாம சங்கீர்த்தனமே பூமா

பரதனும் தம்பி சத்ருக்கனனும் இலக்குமனோடு மைதிலியும்
இரவு நன் பகலும் துதி செய்ய நின்ற இராவணாந்தகனை யெம்மானை
குரவமே கமழும் குளிர் பொழிலூடு குயிலொடு மயில்கள் நின்றால
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத் திருவல்லிக்கேணிக் கண்டேனே
—2-3-7–ஸ்ரீ பரதாழ்வானும் அவனோடே கையடைப்பான ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வானும் –
(கச்சதா மாதுல குலம் அ ந க -என்பதால் இங்கு தம்பி-உடைவாள் போல்வான் )இரவு நன் பகலும் துதி செய்ய நின்ற--சமரம் காலத்திலே கண்டு அனுபவித்தார்களோடு –
கேட்டார் வாய் கேட்டாரோடு வாசி யற ஏத்தா நிற்பர்கள் ஆயிற்று – தேசிகர் அடங்கலும் திரள் திரளாக நின்றாயிற்று ஏத்துவது –
(சத்ருக்களும் கொண்டாடும் பெருமாள் -வேண்டியவர்களுக்கு கை விடுவார்கள் கண்ணனை–தீர்த்த யாத்திரை போனார் நம்பி மூத்தபிரான் –-கேட்டார் கேட்ட வாய் ஸ்தோத்ரம் பரத சத்ருக்னர்கள் ராவண விஜயம் கேட்டவர்களும்-கேட்ட வாய் கேட்டவர்களும்
முதலிகளும் தேவர்களும் ரிஷிகளும் )நமக்கும் ஓர் காலம் நெஞ்சு ஒழிந்த போது ஏத்துவது என்று ஓன்று அன்றோ
அங்கன் இன்றிக்கே
திவ ராத்ர விபாகமற கிட்டினதனையும் ஆழம் கால் படுகைக்கு உடலான வித்தனை -( கண்டு அறிவாரும் கேட்டு அறிவாரும் )இப்படி ஏத்துவது தான் ராவண வதம் பண்ணின அபதானம் ஒன்றுமே ஆயிற்று –யெம்மானை – அவர்களோபாதி நானும் தோற்று ஏத்தும்படி -பண்ணினவனை-ஸ்ரமஹரமான பொழிலின் ஊடே குயில்களோடே கூட மயில்கள் ஸ ஸம் ப்ரம ந்ருத்தம் பண்ண –ஈஸ்வர ஆஞ்ஞை நடை யாடாத தேசம் ஆயிற்று – பீஷோ தேதி -தைத்ரியம் -என்றது அவ்விடத்தை ஒழிய யாயிற்று- (ராவணனுக்கு அஞ்சிய ஸூர்யன் ராவணாந்தகனுக்கு அஞ்சுவது சொல்ல வேண்டுமோ- பக்தர்கள் பாகவதர்கள் ஆணை நடமாடும் இடம் )

தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள் திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை
எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று அது முதலா தன் உலகம் புக்கது
கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள் கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார் நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே
–10-11–பாவோ நான்யத்ர கச்சதி -என்று அங்குப் போகேன் என்ற ஸ்ரீ திருவடியை விட மாட்டாமே இங்கே வந்து நித்ய வாஸம் பண்ணுகிறவனை-பஹூ குணனான ஸ்ரீ சக்கரவர்த்திக்கு –பிதரம் ரோசயாமாச – என்று பிள்ளையாய் பிறந்தது தொடக்கமாக
ஸ்ரீ பரமபதம் புக்கது முடிவாக யுண்டான ஸ்ரீ இராமாயண கதையை-கொலையை முயலா நின்றுள்ள வேலையை யுடையராய் –வெற்றியையும் அழகையும் உடைய வாளையும் உடைய கோழியர்க்குக் கோன்-கோழி -ஸ்ரீ உறையூர் -சோழ ராஜாவானவன் – வெண் கொற்றக் குடையை உடையரான ஸ்ரீ குலசேகரப் பெருமாள் அருளிச் செய்த அழகிய இயலை உடைய தமிழ் மாலை பத்தும் வல்லார் –
ஸ்ரீ பரமபதத்திலே விளங்கா நின்றுள்ள ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளைக் கிட்டப் பெறுவார்

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

வெற்றிக்கு ஆழ்வார் காட்டும் வழி – ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள்

November 22, 2025

அவதாரிகை – விநா வேங்கடேசம் ந நதோ நநாத: ஸதா வேங்கடேசம் ஸ்மராமி ஸ்மராமி ஹரே வேங்கடேச ப்ரஸீத ப்ரஸீத ப்ரியம் வேங்கடேச ப்ரயச்ச ப்ரயச்ச . எம்பெருமானை பற்றி சொல்ல வந்த வேதங்கள் ஆழ்வார்களின் ஸ்ரீஸூக்திகள் அனைத்தும் எம்பெருமானின் அனுக்ரஹத்தால் நடைபெறுகின்றன. நம் தோஷத்தை நினைக்க நினைக்க பயம். எம்பெருமான் வைபவத்தை கேட்க கேட்க பயம் விலகும். பயக்ருத் பயநாசன: ஆழ்வார் தன் பாசுரங்கள் வாயிலாக வெற்றி அடைய வழிகளை வகுத்து இருக்கிறார். ஸ்ரீனிவாச பெருமாள் அலமேலுமங்கா தாயார் ஆழ்வார் திருவடிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு பாடி தொடர்வோம். சின்னப் பிள்ளைகளுக்கு பரீக்ஷையில் தேர்வு அடைந்தால் வெற்றி ஒரு சம்சாரிக்கு நல்ல வேலை கிட்டி நன்கு சம்பாதித்து வீடு கட்டி உறவினர்களிடம் நல்ல பெயரை எடுத்தால் வெற்றி ஆக வெற்றி என்பது அவரவர் வயதிற்கேற்ப அவரவர் தகுதிக்கேற்ப வெற்றி அடைவோம். ஒருவருக்கே காலத்திற்கேற்ப அவன் இலக்கு மாறிக் கொண்டே இருக்கும். வெற்றிக் கொள்ளும் போது அதை அடையும் வழி உபாயமும் மாறும். ஆத்மாவின் முயற்சி பரமாத்மாவின் அருள் இரண்டும் இருந்தால் தான் ஒரு காரியம் வெற்றிகரமாக முடியும். கடவுளிடம் செய்நன்றி மறக்காமல் இருக்க வேண்டும். இந்திரியங்களை அடக்க யோகம் வேண்டும். மனசு அடக்க த்யான பயிற்சி அவசியம். புலன்கள் அடக்க அனுஷ்டானம் முக்கியம். ப்ராணனை அடக்க ப்ராணாயாமம் செய்யனும். நரம்புகளை வசப்படுத்த பத்மாசனத்தில் அமர பழகிக் கொள்ளனும். நம் இஷ்டப்படி வாழ்வது வாழ்க்கையல்ல. சாந்தி சம-வெளி இந்திரியங்களான கண்காது மூக்கு நாக்கு . போன்றவையும் தமம் – உள் இந்திரியமான மனதை அடக்குவது இரண்டும் சரிவர இருக்கனும். ஆழ்வார் தன் பாசுரத்தில் கிளரொளியிளமை கெடுவதன் முன்னம் வளரொளி மாயோன் மருவிய கோவில் வளரிளம் பொழில் சூழ் மாலிருஞ் சோலை தளிர்விலராதில் சார்வது சதிரே. என இளமை இருக்கும் போதே திருமாலிருஞ்சோலை அழகரை ஆஸ்ரயிங்கள் என்கிறார். இளம் வயதில் உடம்பு ஒன்றை செய்ய ஒத்து வரும். ஆனால் மனசு ஒத்து வராது. வயதானபின் மனம் ஒத்து வரும். ஆனால் உடம்பு ஒத்துழைக்காது. நம்மாழ்வார் நமக்காக கருணையுடன் 7ம்பத்து 4ம் திருமொழி ஆழி எழ சங்கும் வில்லும் எழ எனத் துவங்கும்10 பா சுரங்கள் எம்பெருமானின் அவதாரங்களில் அவர் வெற்றி விஜயம் கண்டதையும் பின் 11வது பாசுரம் பலஸ்ருதியாய் இந்த 10 பாசுரங்கள் பக்தியுடன் கூறினால் வெற்றி நிச்சயம் என தெரிவித்ததையும் மேற்கோளிட்டார்.

பெருமான் கோவர்த்தன மலையை தூக்க ஒரு சக்தி வேண்டும். பூமா தேவியை வராஹராக இடர்ந்தெடுக்க வேறுவிதமான சத்தி வேண்டும். வில்லை முறித்து ராமன் ராவணனை கொல்ல அபாரசக்தி இருந்தது. திரௌபதி கூக்குரலுக்கு புடவையை மட்டும் கண்ணன் சுரந்தது வேற சக்தி எந்தெந்த நேரத்தில் எந்தந்த விதமான ஆற்றலை பயன்படுத்த வேண்டுமோ அதை பயன்படுத்த வேண்டும். உலகம் முழுக்க தாவி திரிவிக்ரம அவதாரம் எடுப்பதற்கு வேற சக்தி, எல்லாவிதமான ஆற்றலும் துளி துளியாவது நமக்கு வேண்டும். பெருமாளின் அவதார பெருமைகளை படிக்கவோ கேட்கவோ செய்யச் செய்ய நமக்கும் நம்மை அறியாமல் பலம் வந்து விடும். எப்போதும் என்னுடையது என்று ஒரு காரியம் செய்யும் போது பதட்டம் வருவது சகஜம். அகங்காரம் மமகாரம் விட்டு நாம் அதை செய்தால் அந்தக் காரியத்தில் வென்று விடுவோம். பகவானின் லீலைகள் மனதில் நிற்க நிற்க தானே அந்த செய்யும் திறனை அவரே நமக்கு கொடுப்பார். சாது பரித்ராணம் துஷ்ட நிரசனம் தர்ம சம்ஸ்தாபனம் தான் சனாதன தர்மத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. இந்திரியங்கள் மனசு ப்ராண வாயு எல்லாம் அடக்கி சம்சாரத்தை ஜெயித்து திரும்பி வராத மோக்ஷத்தை அடைவதே ஒவ்வொரு ஜீவாத்மாவின் இலக்கு ஆத்ம பரமாத்மா விஷயத்தில் மோக்ஷ இஷ்யாமி என்பதே பிரார்த்தனை . இதன் அடியாய் ஆழ்வார் 7ம்பத்து 4 ம்திருமொழியில் 10 பாசுரார்த்தங்களை சாதிக்கத் துவங்கினார். முதல் பாசுரமான ஆழி எழ சங்கும் வில்லும் எழ…. க்ருதயுகத்தில் நடந்த த்ரிவிக்ரம அவதாரத்தை பற்றியது. உலகத்தையே அளந்து தன் சொத்தாக (பூ, புவக, ஸூவக மூன்று லோகத்தையும் இந்திரனிடத்தில் பெருமான் கொடுத்து வைத்திருந்தார். அதை மஹாபலி பறித்து போக பெருமாள் ப்ரஹ்லாதனுக்கு அவன் வம்சத்தில் இனி யாரையும் கொல்வதில்லை என்ற வரத்தை கொடுத்ததால் வாமனனாய் 3 அடியில் போய் மஹா பலியிடம் யாசகம் கேட்டு பெற்ற பின் வானம் முட்டுமளவிற்கு வளர்ந்து ஒரு அடியால் கீழ் உலகத்தையும் மற்றொரு அடியால் மேல் உலகத்தையும் அளந்து 3வது அடியை எங்கு வைப்பது என்ற காலை தூக்கிய திரிவிக்ரம அவதாரத்தை திருக்கோவிலூரில் காணலாம் என்றார். ஜெய விஜயீ பவ என்றனர் தேவர்கள். சங்கு சக்ரம் பெருமானுக்கு முன்னால் மேலே போய் ஜெய விஜயீ பவ என்று மங்களாசாசனம் செய்தது. இங்கனம் மஹாபலியிடம் தன் சொத்தை சாமர்த்தியமாய் திரும்ப வாங்கி இந்திரனிடத்தில் ஒப்படைத்தார். இதன் அடியாய் ஹனுமன் சூடாமணியை சீதையிடம் கொடுத்து பின் ராவணனின் சேனைப்படை ஆயுதப்படை போன்ற அனைத்தையும் சேர்த்து பார்த்துக் கொண்டு வந்தார். ஒரு காரியம் செய்ய சாம- சமமாய் பேசி முடிப்பது அரக்கர்களிடம் இயலாத காரியம் என கைவிட்டார். தான- தானம் கொடுக்க அந்த நேரத்தில் ஹனுமனுக்கு சக்தியில்லை. பேதம் – அரக்கர்களிடம் பேதம் செய்ய முடியாது. ஆதலால் தண்டம் – அங்குள்ள கதையை எடுத்து அக்ஷய குமாரன் இந்திரஜித் போன்றோரை முடித்தார். ஆக எந்த வழியை கையாளனும் என்பது முக்கியம் என்பதை விளக்கினார். திரிவிக்ரம அவதாரத்தை விளக்கும் விதத்தில் திருமங்கை ஆழ்வாரின் திருநெடுந் தாண்டகத்தில் ஒண் மிதியிற் புனலுருவி ஒரு கால் நிற்ப ஒரு காலும் காமருசீர வுணனுள்ளத்து * என மதியும் கடந்து அண்ட மீது போகி இருவிசும்னூடு போயெழுந்து * மேலைத் தண்மதியும் கதிரவனும் தவிரவோடித் தாரகையின் புரம் தடவி அப்பால் மிக்கு* மண் முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை மலர் புரையும் திருவடியே வணங்கினேனே. கின்னர்கள் தேவர்கள் பெருமாள் ஜெயித்தார் என கூக்குரலிட்டனர். அடுத்த பாசுரத்தில் அமிர்த மதனம் செய்த சரித்ரம். தேவர்கள் அசுரர்கள் விருப்பப்படி கடைவதற்கு வந்தவர்கள். அவர்களால் முடியவில்லை ஆயிரம் ஆயிரம் தோள்கள் ஆயிரம் ஆயிரம் தாள்கள் கொண்டு ஆரா அமுதம் கடைந்து பெரிய மந்திர மலையை மத்தாக நாட்டி கடைந்தார். அப்போது அஸ்வம் – குதிரை உச்சஸ்வரஸ் அப்சரஸ்கள், ஆலகால விஷம் வந்தது. அமிர்தத்தை எதிர் நோக்கி இருந்தனர். ஆரா அமுதனாய் பெருமான் கடைந்து கொண்டு இருக்கிறார்

பேரெயில் சூழ் கடல் தென்னிலங்கை செற்ற பிரான் -என்றும் –கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன் -என்று-தம்முடைய தோல்வி பிரஸ்துதம் ஆகையால் எதிர்தலையில் வெற்றியை அனுசந்தித்து-அத்தோடு சேர்ந்த இல்லாத விஜயங்களை பேசி அனுபவிக்கிறார்-தன்னுடைய விஜய பரம்பரைகளைப் பத்தும் பத்தாகக் காட்டிக் கொடுக்கக் கண்டு அனுபவித்து உவகை அடைகிறார்.

குன்றம் எடுத்த பிரான் அடியாரொடும்
ஒன்றி நின்ற சட கோபன் உரை செயல்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே
–7-4-11-இத் திருவாய்மொழியைக் கற்றவர்கட்கு இது தானே வெற்றியைத் தரும்,-ஆசையோடு கற்பார் யாவர் சிலர், அவர்களுக்கு வெற்றியைப் பண்ணிக் கொடுக்கும்.-இன்ன வெற்றி விசேஷித்து இல்லாமையால் ஸமஸ்த வெற்றிசெல்வத்தை விரும்புகிறவனுக்குச் செல்வத்திற்குத் தடையாக வுள்ளனவற்றை-கவனக்குறைவு அசுத்தி பேராசை போன்ற -வென்று கொடுக்கும்;-கேவலனுக்கு -வேறே ப்ரயோஜனமாகிய -விரோதியைப் போக்கிக் கொடுக்கும்;-பகவானைச் சரணம் அடைந்தவர்களில் உபாசகனுக்கு ஐம்புலன்களையும் வெல்லுதல் முதலியவற்றைச் செய்து கொடுக்கும்;-பிரபந்நனுக்குக் கைங்கரிய விரோதிகளை வென்று கொடுக்கும்.

இது தான் ‘குலந்தரும்’ என்கிறபடியே எல்லா அபேக்ஷிதங்களையும் கொடுக்கும்’;
‘ஐஸ்வர்ய கைவல்ய பகவல் லாபங்களை ஆசைப் பட்டவர்களுக்கு அவற்றைக் கொடுக்கும்’;
‘கர்ம ஞான பத்திகளிலே இழிந்தவர்களுக்கு விரோதியைப் போக்கி அவற்றைத் தலைக் கட்டிக் கொடுக்கும்’;
‘பிரபத்தியிலே இழிந்தவர்களுக்கு ஸ்வரூப ஞானத்தைப் பிறப்பித்துக் கால க்ஷேபத்துக்கும் போகத்துக்கும்
ஹேதுவாயிருக்கும்’ என்ற வாக்கியங்கள் இங்கு அநுசந்தேயங்கள்.
(முமுக்ஷூப்படி. திருமந்திரம். சூ. 18-21.)

உலக இன்பங்கள் காம்யார்த்தமாய் கிட்ட இந்திரன் சந்திரன் குபேரன் போன்ற தேவதாந்திரங்களை நியமித்து அவர்களை பிரார்த்தித் தால் நமக்கு வேண்டியது கிட்டும் என எம்பெருமான் வைத்திருக்கார். ஆனால் மோக்ஷத்திற்கு எம்பெருமானைத்தான் பிரார்த்திக்கனும். இன்னென்ன பாசுரங்கள் கூறினால் இன்னென்ன பலன்கள் கிடைக்கும் என பலத்தை எதிர்பார்த்து தான் லௌகீக வாழ்க்கையில் இருக்கோம். ஒரு காரியத்தை செய்ய நமக்கு சக்தியும் வேண்டும். ப்ராப்தியும் வேண்டும்

திருக்குடந்தையில் கிடந்த கோலத்தில் ஆரா அமுதமாய் இருப்பது போல ஆரா அமுதம் கரையில் கடைய. ஆறுமலைக்கு எதிர்ந்தோடும் ஒலிகோமதி துவாரகாவில் கோமதி நதியில் காலையில் உப்பு இருக்காது. கடல் நீர் மட்டம் உயர்ந்து கோமதி நதிக்குள் புகுந்தால் நதி தீர்த்தம் சிறிது உப்பாகி விடும். அது போல் ஆறு மலைக்கு எதிர்ந்து ஓடுகிறது . அர ஊறுசுலாய் மலை தேய்க்கும் ஒலி – அரவு என்றால் பாம்பு. இது நன்றாக சொறிந்து விடுகிறது. கடல் மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி. அப்பன் ஊன்றி இடத்து எயிற்றில் கொண்ட நாளே. ப்ரயோஜனாந்தரம் என்றால் பெருமானை தவிர்த்து வேறு ப்ரயோஜனத்தை எதிர்பார்ப்பது. இந்த தேவர்களுக்கு தற்போது அமுதம் வேண்டும் என்பதற்காக ஆரா அமுதன் கடைந்தார். அநன்ய ப்ரஜோனம் என்றால் பெருமாளே எல்லாம் என்று இருக்கை. ஆக தேவர்களுக்காக அமுதம் கடைந்து கொடுத்தார். இங்கனம் தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு உதவி செய்து இருக்கார் பெருமாள். இந்திரன் தன்னிடத்தில் விருந்து வைக்க அங்கு கண்ணன் சத்யபாமாவை அழைக்க சத்யபாமா இந்திரன் தோட்டத்தில் இருக்கும் பாரிஜாத பூவின் செடியை தன்னிடத்தில் வைக்க விரும்பி கேட்க அதை உபகாரம் செய்த பெருமானுக்கே அவன் கொடுக்க மறுக்க பின் ஒரு கிளையை கருடன் மூலம் பூமிக்கு எடுத்துக் கொண்டு வந்தார். பெரிய மலை போன்று தோற்றமளிக்கும் வராஹரின் மேல் ஒட்டியிருக்கும் இரண்டு கோரப் பற்கள் தான் சந்திரன் போல் இருந்ததாம். பூமா தேவியை தன் மடியில் அமர்த்தி உபதேசம் செய்தார். ஸ்ரீ வராஹ சரமஸ்லோகமாய் ” ஸ்திதே மநஸீ ஸீஸ்வஸ்தே சரீரே ஸ்தியோதர: தாது ஸாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விச்வரூபஞ்ச மாம ஜம! ததஸ்து ப்ரியமாணத்து காஷ்ட பாஷான ஸன்னிபம். அஹம் ஸ்மராமி மத்பக்தம் நமாமி பரமாங்கதும்.!! நம் அனைவரையும் உலகத்தோடு தூக்கி தாங்குகிறார். நான்றிலே ஏழுமண்ணும் தானத்தவே. பூமியில் ஒரு சின்னதூசி கூட அசையாமல் பூமாதேவியின் திருமேனி அலுங்காமல் தூக்கி நிறுத்தினார். நான்றிலேலே ஏழ் மலைதானத்தவே பின்னும் நான்றிலே ஏழ் கடல் தானத்தவே . கடலில் இருக்கும் நீர்த் திவலைகள் கூட சிதறாமல் தூக்கி எயிற்றில் கொண்டார். ஈனச் சொல்லாயினுமாக எறிதிரை வையம் முற்றும் ஏனத்துருவாய் இடந்த பிரான் * இரு கற்பகம் சேர் வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்றெல்லா வர்க்கும ஞானப்பிரானை யயல்லா வில்லை* நான் கண்ட நல்லதுவே* என திருவிருத்தம் பாசுரம். நாம் சிறு வயதில் இந்த வராஹ பெருமாளை சரணாகதி பண்ணி அதை மறந்தாலும் நம் ப்ராண ப்ராயணத்தின் போது நாம் மறந்தாலும் நினைவு தப்பினாலும் பெருமான் ஞாபகம் வைத்துக் கொண்டு அழைத்து போகிறேன் என்கிறார். முக்தியை கொடுப்பார். அடுத்து ப்ரளய காலத்தில் ஆபத்து வர தன் வயிற்றில் வைத்து உபகரித்து சின்ன ஆலிலையில் சயனித்து உலகத்தையே விழுங்கி அங்கனம் விழுங்கும் போது ஆலிலை மட்டும் வைத்தாரா எனில் அதுவே அவரின் அகடிதகடனா சாமர்த்தியம். அதாவது சேராததை சேர்த்து வைக்கும் சாமர்த்தியம். மார்க்கேண்டேய ரிஷி தன் தவத்தின் பலனால் இந்த கோலத்தை காண பின் மார்க்கண்டேயனும் கண்ணன் மூச்சு உள்ளே இழுக்கும் போது போக கண்ணன் வயிற்றில் இருந்து கொண்டு வெளியே இருக்கும் தன் ஆசிரமத்தை பார்க்க கண்ணன் மூச்சை வெளியே விடும்போது திரும்ப தன் ஆசிரமத்திற்கே வந்தடைந்தார் என்பது சரித்ரம். அந்த ஆலிலையில் பரம சுந்தரராய் சயளித்த ப்ரபாவம் அளப்பறியது. அந்த கண்ணன் திருவடிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு. நாளுமெழ நில நீருமெழ* விண்ணும் கோளுமெழ எரிகாலுமெழ * மலை தாருமெழச் சுடர்தானுமெழ* விண்ணும் கோளும் எழ சுடர் தானும் சூரியன் சந்திரன் எல்லாம் மறைந்தார். முடிந்தார். ஜலம் ” என்று சப்தமிட ப்ரளய காலத்தில் ஒட்டுமொத்த உலகமும் கண்ணன் வாய்க்குள் போயிற்று .

ஆழி எழச் சங்கும் வில்லும் எழத் திசை
வாழி எழத் தண்டும் வாளும் எழ அண்டம்
மோழை எழ முடி பாதம் எழ அப்பன்
ஊழி எழ உலகங் கொண்ட வாறே.
–7-4-1-

ஆழி எழச் -மஹா பலி பக்கல் அர்த்தியாய்ச் சென்று அபேக்ஷித்து கையிலே நீர் விழுந்த அநந்தரம் வளர்ந்து அருளின போது -அவ்விடத்தில் என்ன தீங்கு வருகிறதோ -என்று ஓக்க கிளர்ந்த படி -ஆயிரக் காதம் பறப்பதன் குட்டி ஐஞ் நூற்று காதம் சிறகடிக் கொள்ளும்-என்று பிள்ளை அருளிச் செய்வர்
சங்கும் வில்லும் எழத்-தூசியிலே திரு வாழி யாழ்வான் ஏறின வாறே -அநந்தரம் திவ்யாயுதங்கள் ஓக்க எழ -த்ரி விக்ரம க்ரமாக்ரந்தத்ர லோக்யஸ் ஸ்ப்புரதாயுத
திசை-வாழி எழத் -திவ்யாயுதங்கள் அவனுக்கு பரிந்து எழ -அவனுக்கும் இவற்றுக்கும் பரிந்து சர்வதோதிக்கமாக அனுகூலருடைய மங்களாசாச த்வனி எழ –சங்கைஸ் ஸூ ராணாம் திவி பூதலஸ் த்தைஸ் ததா மனுஷ்யைர்க்கக நேச கேஸரை ஸ் துத-க்ரமான்ய ப்ரசஸார ஸர்வதா மமாஸ்து மாங்கல்ய விவ்ருத்தயே ஹரி –ஏத்த ஏழ் உலகும் கொண்ட -இடக்கை வலம்புரி நின்று ஆர்ப்ப -என்கிறபடியே வலம் புரி முழங்க -திரு வாழி அழல் உமிழ
தண்டும் வாளும் எழ -புறப்பட்டோம் என்று மற்றும் இல்ல திவ்யாயுதங்களும் கிளர
அண்டம்-மோழை எழ -தரணி தல முழுதும் தாரகையின் இன்னுலகும் தடவிய தன் புறமும் விம்ம வளர்ந்தவன் -என்று தன்னுடைய வளர்த்திக்கு அண்டாந்தரம் இடம் போராமையாலே -அண்ட புத்தி பிளந்து -ஆவரண ஜலம் உள்ளே வந்து புகுர- மோழை-குமிழி
முடி பாதம் எழ -முடியும் பாதமும் ஓக்க எழ
அப்பன்-என் நாயகன் பண்ணின உபகாரமே-என்கிறார் –
ஊழி எழ -மஹா பலியால் உபத்திரவம் பட்ட காலம் போய் நல்ல காலம் வந்து தோற்றும் படியாகவும்
உலகங் கொண்ட வாறே.–உலகை அளந்து கொண்ட பிரகாரம் -தேவாஸ் ஸ்வ ஸ்த்தா நமா யாந்தி தைத்யாஸ் சர்வே ஹதா கதா நபயம் வித்யதே கிஞ்சித் ஜிதம் பகவதா ஜகத்

ஆறு மலைக்கு எதிர்ந்து ஒடும் ஒலி அர
வூறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி கடல்
மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி அப்பன்
சாறு பட அமுதம் கொண்ட நான்றே.–7-4-2-

ஆறு மலைக்கு எதிர்ந்து ஒடும் ஒலி அர-வூறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி கடல்-மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி –
கடலை தாழியாகக் கொண்டு -மலையை மத்தாகக் கொண்டு -வா ஸூ கியைக் கயிறாகக் கொண்டு -ஆயிரம் தோளால்-என்கிறபடியே தோளும் தோள் மாலையுமாய் -ஒரு மஹா பாஹு கடை கிற போது -கடல் கொந்தளித்து ஸஹ்யங்களை நோக்கி ஆறு எதிரே ஓடு கிற ஓசையும் -வா ஸூ கியினுடைய உடம்பைச் சுற்றி மலையைத் தேய்கிற த்வனியும் -அரவு -வாஸூகி / ஊறு -உடம்பு / சுலாய் -சுற்றி / வாஸூகியினுடைய உடைலைச் சுற்றி கடைந்த போதை சர சர என்கிற த்வனியும் –
கடல்-மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி –மந்த்ரத்தை கொடு புக்கு நட்டுத் திரித்த போது -கீழ் கடல் மேல் கடலாய் கிடாய்ப்பாய்ச்சல் போலே திரையோடு திரை தாக்கி கிளறுகிற ஒலியும்
அப்பன்-உபகாரகன்
சாறு பட -கடலில் நீர் கோதாம் படி பிரயோஜனமாக அம்ருதம் உண்டாக –சாறு என்று உத்சவமாய் -தேவ ஜாதிக்கு உத்சவம் உண்டாம்படியாக என்னுதல் —சாறு பட -விழவு பட -என்றபடி -நீரிலே ரசமான பசை பட என்னுதல் -உத்சவமாம் படி என்னுதல்
அமுதம் கொண்ட நான்றே.–அம்ருத மதனம் பண்ணின காலத்தில் இவை எல்லாம் உண்டாயிற்று –

நான்றில ஏழ் மண்ணுந் தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் மலை தானத்தவே பின்னும்
நான்றில ஏழ்கடல் தானத்தவே அப்பன்
ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே.
–7-4-3-ஹா வராஹ வ்ருத்தாந்தத்தை அனுசந்திக்கிறார் –

நான்றில ஏழ் மண்ணுந் தானத்தவே பின்னும்
பூமி பிரளயம் கொள்ள மஹா வராஹமாய் பூமி உத்தரணம் பண்ணின போது –நான்றில-சலித்தது அல்லை / ஏழ் மண்ணும் -சப்த த்வீபமும் /தானத்தவே -ஸ்வ ஸ்தானஸ்த்தானங்கள் ஆயிற்றன -ஒரு வியாபாரத்தால் செய்ததாய் இருக்கை அன்றிக்கே ஸ்வ சங்கல்பத்தாலே செய்தால் போலே இருக்கை -/ பின்னும்-அதுக்கும் மேலே –
நான்றில ஏழ் மலை தானத்தவே பின்னும்-
பூமிக்கு ஆதாரமான குல பர்வதங்களும் சலியாதே ஸ்தானஸ்த்தமாயிற்றன-இவை திண்ணியதாகையாலே இப்படி செய்யலாம்
நான்றில ஏழ்கடல் தானத்தவே -த்ரவத்ரயமான சமுத்திரமும் சலியாதே ஸ்தானஸ்த்தானமாயிற்றன
அப்பன்-நஷ்ட உத்தாரணம் பண்ணின உபகாரகன்
ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே.–மாறுபாடு உருவக்குத்தி இடந்து எறட்டு-பந்தை எறட்டு செண்டிலே ஏற்றால் போலே இருந்தது திரு எயிற்றிலே ஏற்ற போது –

நாளும் எழநிலம் நீரும் எழ விண்ணும்
கோளும் எழ எரி காலும் எழ மலை
தாளும் எழச் சுடர் தானும் எழ அப்பன்
ஊளி எழ உலகம் உண்ட ஊணே.–7-4-4-
பிரளய காலத்தில் பூத பவ்திகங்களோடு கூடின ஜகத்தை திரு வயிற்றிலே வைத்து ரஷித்த படியை சொல்லுகிறார்  –

நாளும் எழ-கால வ்யவஸ்தை பேர -வியவச் சேதகரான ஆதித்யாதிகள் போனவாறே காலா காஷ்டாதி ரூபமான வியவச் சேதமும் போயிற்றது என்கை
நிலம் நீரும் எழ -காரணமான பூமியும் ஜலமும் போக
விண்ணும்-கோளும் எழ –ஆகாசமும் க்ரஹங்களும் போக
எரி காலும் எழ -அக்னியும் வாயுவும் போக
மலை-தாளும் எழச் -பூமிக்கு ஆதாரமான மலைகள் வேரோடு பறித்து விழ
சுடர் தானும் எழ -அனுக்தமான நக்ஷத்ராதி தேஜோ பதார்த்தங்கள் போக
அப்பன்-பிரளய ஆபத்சகன்
ஊளி எழ உலகம் உண்ட ஊணே.–திரு வயிற்றிலே புகுரும் நெருக்கத்தால் வந்த ஆரவாரம் உண்டாம் படி
ஊளி -சப்தம் -உறிஞ்சின ஓசை என்னவுமாம் –எழ -என்றது தோற்ற என்றபடி -லோகத்தை உண்ட படி –

ஸ்ரீகிருஷ்ண அவதாரம். கிருஷ்ணன் மகன் ப்ரத்யும்னன். அவன் மகன் அநிருத்தன் . பாணாசுரன் பெண் உஷை தன் கனவில் அநிருத்தனை காண அவனையே திருமணம் புரிய விருப்பப்பட்டாள். உஷையின் தோழி சித்ரா தேவி கனவில் யார் எதை பார்த்தாலும் வரையும் கலை கொண்டவள். அவள் முதலில் கண்ணனின் படம் வரைய, பின் ப்ரத்யும்னன் படம் வரைய கிட்டத்தட்ட இப்படித்தான் இருப்பான் ஆனால் இவன் இல்லை என்று கூற கடைசியில் அநிருத்தன் படம் வரைய இவனே என்று நிச்சயித்தாள் உஷை. கண்ணனுக்கும் பாணாசுரனுக்கும் சண்டை நிகழ கண்ணன் பாணாசுரனின் 1௦௦௦ தோள்களில் 998 தோள்கள் வெட்ட 2 மட்டுமே அவன் பெண் கல்யாணத்திற்கு அவனும் இருக்கனும் என்று விட்டு வைத்தார். இந்த சண்டையில் நேர் சரிந்தான் …(8ம் பாசுரம்) கொடி கோழி கொண்டான் (சுப்ரமணியன்) நேர் சரிந்தான் எரியும் அனலோன் அக்கினியும் பறந்தது. அப்பன் நேர் சரிந்தான் முக்கண் மூர்த்தி – திரிநேத்ர சிவனார் சரிந்து விழ நேர் சரிந்தான் திண் தோள் பாணாசுரனின் 2 தோள்களை விட்டுவிட்டு பாக்கி தோள்களை கண்ணன் வெட்டினார். அன்று மண் நீரெரி கால் விண்மலை முதல் * அன்று சுடர் இரண்டு பிறவும் பின்னும் அன்று மழை உயிர்தேவும் மற்றும் * அப்பன் அன்று முதல் உலகம் செய்ததுமே . ப்ரளய காலம் முடிந்து வ்யஷ்தி சிருஷ்டி வரை பர ப்ரஹ்மம் படைத்து பின் நான்முக ப்ரஹ்மாவை படைத்து இதர சிருஷ்டி தொழிலை செய்யக் கூறுகிறார். தேவான் பாவயதி தேன அப்பன் அன்று முதல் உலகம் செய்தார். நாராயண பரோ ஜ்யோதி ஆத்ம நார யண பர: வருணன் இந்திராதிகளை படைத்து வருணன் பூஜையை கூறினார். பூவில் நான் முகனை படைத்த ப்ரஹ்மம் மூல ப்ரக்ருதி வரை தான் படைத்து பின்வரும் படைப்பு தொழிலை அவரவர் கர்மத்தின் அடிப்படையில் படைக்க கோர அதன்படி நான் முகனும் செய்தார் என்பது சரித்ரம். இன ஆ நிரை பாடி அங்கே ஒடுங்க அப்பன் தீ மழைகாத்து குன்றமெடுத்தானே. கோவர்த்தன உத்தாரணம் சரித்ரம்.

நேர் சரிந்தான் கொடிக் கோழி கொண்டான் பின்னும்
நேர் சரிந்தான் எரியும் அனலோன் பின்னும்
நேர் சரிந்தான் முக்கண் மூர்த்தி கண்டீர் அப்பன்
நேர் சரி வாணன் திண் தோள் கொண்ட அன்றே–7-4-8
-பாண விஜயத்தை அனுசந்திக்கிறார் –

நேர் சரிந்தான்-தோற்றத்தில் கெட்டுப் போனான் என்னுதல் -முதுகிட்டுப் பிழைத்து போனான் என்னுதல் –
கொடிக் கோழி கொண்டான் -மயிலை த்வஜமாக யுடையவன் -இளமறியான தேவ சேனாபதி யாகையாலே ஸூ ப்ரஹ்மண்யன் தூசியிலே கெட்டுப் போனான் என்கை
பின்னும்-நேர் சரிந்தான் எரியும் அனலோன்-அவன் கெட்டுப் போன பின்பு ஜ்வலியா நின்றுள்ள அக்னி வந்து தோற்றி கேட்டு ஓடினான் –
பின்னும்-நேர் சரிந்தான் முக்கண் மூர்த்தி கண்டீர் -நாற்பத்து ஒன்பது அக்னியும் கேட்டு ஓடின பின்பு த்ரி நேத்ரனான ருத்ரன் முதுகிட்டான்-மகன் கொடியால் அகப்பட்டான் என்று கொடியை மறைத்த இடத்திலும் கண்ணை மறைக்க ஒண்ணாமையாலே அகப்பட்டு கெட்டு ஓடிப் போனான் -கண்ணை மறைக்க ஒண்ணாமை யாலே அகப்பட்டு கெட்டு ஓடிப் போனான் –தேவதாந்தரங்களை ரக்ஷகமாக பற்றினாரை-அவர்கள் எதிரி கையிலே காட்டிக் கொடுத்து தம் தாமைக் கொண்டு தப்பிப் போவார்கள் -என்கை
அப்பன்-நிருபாதிக ரக்ஷகன்
நேர் சரி வாணன் திண் தோள் -ரக்ஷகரானார் அளவு இது வானால் ரஷ்ய பூதன் ஆனவனுக்கு முதுகு காட்டிப் பிழைத்து போம் அது ஒழிய வேறு போக்கடி இல்லை இ றே -திண் தோள் -ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபி பேதி என்று இருக்குமா போலே -தேவதாந்தரங்களைப் பற்றி தோள் வலி கொண்டாடி இருந்த படி –ருத்ரன் வர பலத்தால் திண்ணிதான தோள்
திண் தோள் கொண்ட அன்றே–உஷை பித்ரு ஹீனை யாகாமைக்காக தலை அறாதே தோளைத் துணித்து விட்டான்
கீழ் அசுரர்களை மார்விலே அம்பேற்று ஜெயித்த படி சொல்லிற்று -அவர்களுக்கு ஆபாஸ்ரயமாக வந்த தேவ ஜாதியையும் ஜெயித்த படி சொல்லிற்று இப்பாட்டில் –

ஊனுடை மல்லர் உதைந்த வொலி* மன்னர் ஆணுடைச் சேனை நடுங்கு மொலி * விண்ணுள் ஏணுடைத் தேவர் வெளிப்பட்ட ஒலி * அபபன் கானுடைப் பாரதம் கையறை போழ்தே பெருமானே கடல். நம்மை ஆட்டி வைப்பார் சிறிய வயதில் மாடுகளை மேய்த்தார். பெரியவரானதற்கு குதிரைகளை மேய்த்தார். இது தான் வித்யாசம். குதிரையை போன்று நம் இந்திரியங்கள் தறிகெட்டு ஓடும். மனம் தான் கடிவாளம். புத்திதான் சாரதி . கையில் சின்ன கடிவாளம் வைத்துக் கொண்டு அர்ஜுனனுக்கு உப தேசம் . செய்தார். ஆயுதம் எடுக்காமலே தேரை முன்னும் பின்னும் நகர்த்தி சாரத்யம் பண்ணியே அசுரர்கள் போன்ற திமிங்கலம் போன்று கெளரவர்களை போரில் ஜெயித்தார். தீர்ப்பாரையாம் இனி எங்கனம் நாடுதும் ? அன்னை மீர்* ஓர்ப்பால் இவ் வொண்ணுதல் உற்ற நல் நோயிலு தேறினோம் போர்ப்பாகு தான் செய்து அன்றைவரை வெல்வித்த *மாயப் போர்த் தேர்ப் பாகனார்க்கு இவள் சிந்தை துழாய் திசைக்கின்றதே என்பது பாசுரம். சரியான பாகு பதத்தில் நாம் இனிப்பு பண்டம் செய்வது போல போர்ப் பாகு . தேர்பாகு நன்றாக இருக்க பாகிலே பிடிபட்ட மா வாய் நம்மாழ்வார் போர்ப்பாடு செய்த மாயப் போர் கண்ணன் சாரத்யம் செய்தே எல்லோரையும் முடித்து பூ பாரத்தை ரக்ஷிப்பதற்கு அவதாரம் செய்தார். அசுரத்தன்மை உடைய துரியோதனாதிகள். ஆக போரை தொடுக்காமல் தன் சங்கல்பத்தாலே பாரதப் போரை முடித்து விட்டார். அடுத்து 6ம்பாசுரம். போழ்து மெலிந்த புன்செக்கரில் வான் திசை சூழுமெழுந்து உதிரப் புனலா* மலை கீழ்து பிளந்த சிங்க மொத்ததால் * அப்பன் ஆழ்துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே. நரசிம்ம அவதாரத்தின் பாசுரம். தேவர்கள் கொடுத்த வரத்தை மதித்து பெருமான் சிங்க முகத்துடன் மனித உடலுடன் நரஹரியாய் ப்ரஹ்லாதன் என்ற பக்தனுக்காக அவன் காட்டின தூணிலே உதித்து தன் . நகத்தையே சுதர்சனமாய் கொண்டு ப்ரஹ்லாதன் தந்தை ஹிரண்ய கசிபுவை 2 ஆக பிளந்தார். அப்போது பூமியே தடம்புரண்டு சொர்க்கம் கீழேயும் பூமி மேலேயும் போய் திசைகளே தெரியாமல் விழித்தனர். பக்தனிடத்தில் ஒரு பாகவதனிடத்தில் அபச்சாரம் செய்தது கண்டு பொறுக்காமல் எடுத்த அவதாரம்

ஊணுடை மல்லர் ததர்ந்த ஒலி மன்னர்
ஆணுடைச் சேனை நடுங்கும் ஒலி விண்ணள்
ஏணுடைத் தேவர் வெளிப்பட்ட ஒலி அப்பன்
காணுடைப் பாரதம் கையறை போழ்தே.–7-4-5-
பாரத சமர வ்ருத்தாந்தத்தை அனுபவிக்கிறார்-

ஊணுடை மல்லர் தகர்த்த ஒலி -பலகரமான த்ரவ்யங்களை மிகவும் புஜித்து மிடுக்கரான மல்லர் நெரித்து விழுகிற ஒலி
மன்னர்-ஆணுடைச் சேனை நடுங்கும் ஒலி -ராஜாக்களுடைய ஆண் பிள்ளைத் தனத்தை உடைத்தான சேனை -என்னுதல் -பீஷ்மாதிகளை ரக்ஷகமாக உடைத்தான சேனை என்னுதல் –கிருஷ்ணன் பிரதிபக்ஷத்தில் ஆனான் என்று நடுங்கி அலமாக்கிற த்வனி
விண்ணள்-ஏணுடைத் தேவர் வெளிப்பட்ட ஒலி -சுவர்க்கத்தில் மதிப்பராக எண்ணப்  பட்ட தேவர்கள் -தெரிவரிய சிவன் பிரமன் அமரர் கோன் என்கிறபடியே ப்ரோக்ஷபூதர் ஆனவர்கள் -கண்ணுக்கு விஷயமாய் ஸ்துதிக்கிற த்வனி -ஸ்ரீ வேத வியாச பகவான் த்ருதராஷ்ட்ரனை யுத்தம் கண்டு இருப்பாயா உனக்கு கண் தர என்ன -நான் பொறுக்க மாட்டேன் என்ன சஞ்சயனுக்கு கண் கொடுத்து கண்டு சொல் என்றான் –
அப்பன்-பூ பார நிரஹரணம் பண்ணின உபகாரகன் –
காணுடைப் பாரதம் கையறை போழ்தே.–தர்ச நீயமான பாரதம் -அதாவது முட் கோலும் சிறு வாய்க் கயிறும் சேனா தூளியுமாய் சாரத்த்ய வேஷத்தோடே நின்ற நிலை –கையறை போழ்தே–கையும் அணியும் வகுத்து திரிகிற சமயம் தொடங்கின போது என்றுமாம் –

போழ்து மெலிந்த புன் செக்கரில் வான் திசை
சூழும் எழுந்து உதிரப் புனலா மலை
கீழ்து பிளந்த சிங்கம் ஓத்ததால் அப்பன்
ஆழ் துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே
.–7-4-6-ஆஸ்ரிதர்க்கு உஜ்ஜீவன ஹேது வான ஹிரண்ய வத வ்ருத்தாந்தத்தை அனுபவித்து  அருளிச் செய்கிறார் –

போழ்து மெலிந்த புன் செக்கரில்-ஸந்த்யா வேளையிலே நாள் முற்று சந்தையாய்ச் செவ்வானம் மறைவதற்கு முன்பே -அவன் கொண்ட வரத்தில் புகாத காலத்திலே –
வான் திசை-சூழும் எழுந்து உதிரப் புனலா-ஆகாசமும் திக்குகள் எங்கும் ரக்த ஜலமாக -ஸந்த்யா ராகத்தில் காட்டில் ரக்தமானது எல்லாவிடத்தையும் சிவப்பிக்க என்றுமாம்
மலை-கீழ்து பிளந்த சிங்கம் ஓத்ததால் -மலையை கீழே இட்டு மேலே இருந்து அத்தை பிளக்கிற ஸிம்ஹம் போலே இருந்தது என்னுதல் -மலையை இரண்டு கூறாக கிழித்துப் பிளந்த ஸிம்ஹம் போலே என்னுதல் –கீழ்ந்து பிளந்த ஸிம்ஹம் –
அப்பன்-பிதா எதிராக வந்து உதவின உபகாரகன் –கீழில் பாட்டில் பந்துக்கள் பகையாக வந்து உதவின படி சொல்லிற்று -இதில் ரக்ஷகனான பிதா பகையாக வந்து உதவின்படி சொல்லுகிறது -பந்துக்கள் பகையாக வந்து உதவினவன் -ஜனகன் பகையாக வந்து உதவினவன் -ஆத்மை வரி புராத்மநா -என்று தனக்குத் தானே பாதகனான அவ்வளவிலும் வந்து உதவுமவன் -ஆனபின்பு சர்வரையும் விட்டு அவனையே யன்றோ பற்ற அடுத்து
ஆழ் துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே-தன் சீற்றத்தைக் காட்டி மிகவும் துக்கத்தை விளைத்து அசூரனைக் கொன்ற படி -நரசிம்ஹத்தின் தோற்றத்தில் சவகல்பனானான் -பின்னை உடலைக் கிழித்து பொகட்டான் -அவன் வீயத் தோன்றிய –சிங்கப் பிரான் -என்ன கடவது இறே-

நரசிம்ம அவதாரத்தில் ப்ரஹ்லாத வரதனாய் லக்ஷ்மி நரசிம்மனாய் பெருமான் எழுந்தருளியிருக்கார் . அங்கண் ஞாலம் அஞ்ச அங்கு ஓராளரியாய் * அவுணன் பொங்க ஆகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதனிடம் * பைங்காணை கொம்பு கொண்டு பத்தி மையால் அடிக்கீழ் செங்கணாளி இட்டிறைஞ்சும் சிங்கவேள் குன்றமே. சிங்கவேள் குன்றம் என திருமங்கை ஆழ்வார் இட்ட பெயர். காட்டிற்கு மட்டுமல்ல எல்லாவற்றிற்கும் ராஜாதி ராஜனாய் பெருமான் விளங்குகிறார். 7வது பாசுரம் – மாறுநிரைத்து இரைக்கும் சரங்கள் இன நூறு பிணம் மலைபோல் புரள கடல் ஆறு மடுத்து உதிரப்புனலா* அப்பன் நீறுபட இலங்கை சென்றநேரே மஹாபாரதப் போர் பகலில் மட்டும் தான் நடந்தது. ஆனால் ராம ராவண யுத்தம் இரவு பகல் பாராது விடியவிடிய சண்டை நடந்தது. ஏனெனில் இரவு பொழுது அசுரர்கள் பலம் பெறுவார்கள். சூரிய அஸ்தமனத்தில் தூங்கும் போது செரிமானம் நடக்கும். எந்தெந்த நேரத்தில் எந்தெந்த திசையில் சூரியன் உதிக்குமோ அதன்படி தான் செரிமானமும் இருக்கும். மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள். இலங்கை சென்ற நேரே நேர்மையின் வடிவமாய் ராமன் சண்டையிட்டார். எங்கிருந்து அம்பு வருகிறது என்று தெரியாமல் தப்பு தப்பாய் ராவணன் அம்பு விட்ட போதும் தான் நேர்மை தவறாமல் சண்டையிட்டார். ஒருவில் ஒரு சொல் ஒரு இல் என்ற கொள்கையை கடைபிடிக்கும் ராமன். மாறு ஒன்றுக் கொன்று சண்டையிட்டு அலை அலையாய் இரைச்சலுடன் சடலங்கள் வந்து விழ அதாவது ராமன் பாணத்திலிருந்து அம்பு போக போக சடலம் சரமாரியாய் வந்து விழுந்தது. இதன் அடியாய் அழகான சரித்ரம். இந்திராதி தேவர்கள் ராமன் வெற்றி பெற்றதற்கு ராமனை வேண்டுகிறார்கள். ராமன் இந்திரனிடம் கை கூப்பி எனக்கு ப்ரதி உபகாரமாய் ஏதாவது கொடுக்க நினைத்தால் அதை போரில் மடிந்த குரங்குகளை உயிர் பிச்சை கொடு என்று சொல்ல இந்திரனும் உயிர்பிச்சை கொடுத்தான், ராமன் வீபீஷணன் பக்கம் திரும்பி உங்கள் பக்கம் யாரையாவது பிழைக்க வைக்கனுமா என்று கேட்க விபீஷணன் இறந்த சடலங்களை ராவணன் சண்டை போட்டுக் கொண்டு இருக்கும் அசுரர்களுக்கு மலைப்பாய் இருக்கும் என கடலில் வீசி எறிந்து விட்டான் என்றான். சுற்றி இரத்த ஆறு ஓடிற்று. நீலக் கடல் இரத்தக் கடலாய் மாறியது. மொத்த பூமியும் கரை கண்டு ஆடும் அளவிற்கு இலங்கையை முடித்தார் ராமன். இந்திரியங்களை ராவணனின் 10 தலைக்கு உவமையாகக் கொண்டு இந்திரியம் சொல்வதை மனசு கேட்கும். விவேகம் என்ற உண்மையான பகுத்தறிவு ஆத்மா வேறு தேஹம் வேற என்ற அறிவு புரிதல் வேண்டும்

மாறு நிரைத்திரைக் குஞ்ச ரங்களின்
நூறு பிணம் மலை போற் புரளக் கடல்
ஆறு மடுத்து உதிரப் புனலா அப்பன்
நீறு பட இலங்கை செற்ற நேரே.–7-4-7-
ராவண வத வ்ருத்தாந்தத்தை அனுபவிக்கிறார் –

மாறு நிரைத்திரைக் குஞ்ச ரங்களின்-சாரிகை வருகிற கடுப்பாலே எதிராக நிரைத்து இரையா நிற்கிற சர ஸமூஹத்தாலே -ஓர் அம்பை விட்டால் அதற்கு எதிராக மற்றை யம்பை விடுகையாலே திருச் சரங்கள் தன்னிலே முட்டி த்வநிக்கிற படி
நூறு பிணம் மலை போற் புரளக் -இனமான நூறு நூறாக பிணங்கள் மலை போலே புரண்டு கிடக்க -அநேக பிணங்கள் என்றுமாம்
கடல்-ஆறு மடுத்து உதிரப் புனலா -அப்பன்-நீறு பட இலங்கை செற்ற நேரே-அபூர்ய மாணமசல ப்ரதிஷ்ட்டம்-என்கிறபடியே அவிக்ருதமான கடல் ரத்தத்தால் நிரம்பி ஆறுகளில் எதிரே மடுத்து ரக்த ஜலமாக -ரக்ஷகனானவன் லங்கை பஸ்மாமாம் படி அழித்த நேர்பாடு என்னுதல் -நேரே என்று ஐஸ்வர்யமான ப்ரபாவத்தாலே அன்றிக்கே செவ்வையான ஆண் பிள்ளைத் தனத்தால் என்னுதல் -க்ருதரிம யோதிகளான ராக்ஷஸரைத் போல் அன்றிக்கே நேர் போராக என்னுதல்-

அன்று மண் நீர் எரி கால் விண் மலை முதல்
அன்று சுடர் இரண்டும் பிறவும் பின்னும்
அன்று மழை உயிர் தேவும் மற்றும் அப்பன்
அன்று முதல் உலகம் செய்ததுமே
.–7-4-9-பாணனை தமித்த -ஜெயித்த -அன்று தொடங்கி ஜகத் உண்டாயிற்று என்கிறார் -ஆதி ஸ்ருஷ்ட்டி ஆகவுமாம் –

அன்று மண் நீர் எரி கால் விண் மலை முதல்-பூத பஞ்சகங்கள் என்ன -பூமிக்கு ஆதாரமான மலை என்ன -இவை தொடக்கமாக –
அன்று சுடர் இரண்டும்-சந்த்ர ஸூ ரியர்களும் உண்டாயிற்று
பிறவும்-மற்றும் உண்டான நக்ஷத்ர க்ரஹாதி தேஜோ பதார்த்தங்களும்
பின்னும்-அன்று மழை உயிர் தேவும் மற்றும் -மேகத்தையும் -வர்ஷ ஜலத்தால் ஜீவிக்க கடவ பிராணிகளையும் -வருஷத்துக்கு உத்பாதகரான தேவர்களையும் -மற்றும் அனுக்தமான பதார்த்தங்களையும் அன்று உண்டாக்கினான் –
அப்பன்-சர்வ உத்பாதகன் ஆனவன் –
அன்று முதல் உலகம் செய்ததுமே.–அன்று முதல் ஜகத்தை உண்டாக்கிற்று -வாணனை தோற்பித்த அன்று முதல் என்னுதல் -ரூப நாமங்களை இழந்து சதேவ -என்கிற தசையில் பஹுஸ்யாம் -என்று சங்கல்பித்த அன்று முதல் என்றுமாம் –

ப்ரதி வருஷம் இந்திரனுக்கு படைத்த ஆயர்பாடி மக்கள் அடுத்த வருஷம் வரும் போது அதே மாதிரி இந்திரனுக்கு படைக்க வரும் போது கண்ணன் தடுத்து கோவர்த்தன மலைக்கு படைக்கும் படி கூறினார். கோவர்த்தன மலையால் தான் செடி கொடிகள் போன்ற உயிரினங்கள் வாழ்கிறது. பருவமழை பொழிகிறது. அதற்கே படைக்க கோர ஆயர்பாடிகுழந்தைகளும் செய்வதறியாது ஒத்துக் கொள்ள , வைத்த விதவிதமான அனைத்து தின் பண்டங்களையும் மலைக்கு திரையிட முடியாது நீங்கள் எல்லோரும கண்களை மூடிக்கொள்ளுங்கள் என்று கூற அவர்களும் மூடிக்கொள்ள கண்ணன் துளி மிச்சம் வைக்காமல் அத்தனையும் உண்டான் என்பது சரித்ரம். மேலும் இந்திரன் படைப்பதை பார்ப்பானே தவிர அதை தொடக்கூட மாட்டான் அலட்சியமாய் இவர்கள் படைத்தது தானே என்று இருந்து விடுவான். ஆனால் தனக்கு படைக்காத கோபத்தில் வருணனை மழை பெய்ய கூறினான் இந்திரன். மழை விடாமல் பெய்ய கண்ணன் அந்த கோவர்த்தன மலையையே குடையாக பிடித்து ஆயர்பாடி மக்களையும் ஆநிரைகளையும் காக்க இந்திரன் மனம் திருந்தி கண்ணன் காலில் விழுந்து க்ஷமா கேட்டதாய் சரித்ரம், இந்த .பாசுரங்களின் பல ஸ்ருதியாய் இந்த 10 பாசுரங்களை அப்யஸிப்பவருக்கு அவர்கள் பிரார்த்தனை படி வெற்றி நிச்சயம் கிட்டும் என்று முடித்தார். ,

குன்றம்  எடுத்த பிரான் அடியாரொடும்
ஒன்றி நின்ற சட கோபன் உரை செயல்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே–7-4-11- .நிகமத்தில் எம்பெருமானுடைய விஜயங்களைத் தொடுத்த இத்திருவாய் மொழியை சஹ்ருதயமாக கற்பார்க்கு இது தானே விஜயங்களைக் கொடுக்கும் என்கிறார் –

குன்றம் எடுத்த பிரான் அடியாரொடும்-ஒன்றி நின்ற சட கோபன் உரை செயல்
கோவர்த்தன உத்தாரணம் பண்ணின உபகாரகனான கிருஷ்ணன் திருவடிகளையே தஞ்சமாக நினைத்து இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களிலே தம்மையும் அந்நிய தமராக நினைத்து இருந்த ஆழ்வார் அருளிச் செய்த இது -மலையை எடுத்த அன்று மலைக்கு கீழே ஒதுங்கினவர்களை போலே சம்சாரத்துக்கு அஞ்சி கிருஷ்ணன் திருவடிகளிலே ஒதுங்குமவர்கள் ஸ்ரீ வைஷ்ணவர்கள் -அச் செயலுக்கு தோற்று அடிமை புக்கவர் ஆயிற்று இவர்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை-வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே-
சர்வேஸ்வரன் விஜயங்களை சேராத தொடுத்த இவை பத்தும் -ஆதரித்து கற்பார்க்கு இதில் சொல்லுகிற விஜயத்தை கொடுக்கும் -இச் சேதனனுக்கு விஜயமாவது -சர்வேஸ்வர விஜயம் இ றே -அதுவே இ றே இவருக்கு புருஷார்த்தமும் -சம்சார விஜயத்தை கொடுக்கும் என்றுமாம் –
நன்றி புனைந்த– சர்வேஸ்வர விஜய ரூபமாய் ஆத்மாவுக்குப் புருஷார்த்தமுமாய் இருந்த இத்தை தொடுத்த என்றபடி-

அந்தரங்கத்தை விடவேண்டும் சரணாகதி !!! அந்த ரங்கத்தை தொடவேண்டும் சரணாகதி !!! முயலும் ஆமையும் பண்ணலாம் சரணாகதி !!! முயலாமையை உணர்ந்து பண்ணனும் சரணாகதி !!! குமரிகாண்டத்திலும் பண்ணலாம் சரணாகதி !!! அமெரிக்கா கண்டத்திலும் பண்ணலாம் சரணாகதி !!! மதி நிறைந்த நன்னாளிலும் பண்ணலாம் சரணாகதி !!! நிதி தொலைத்த எந்நாளிலும் பண்ணலாம் சரணாகதி !!! பெண்ணும் பேதையும் பண்ணலாம் சரணாகதி !!! கண்ணனும் கோதையும் பண்ணலாம் சரணாகதி !!! மீமாம்சை கற்றவனும் பண்ணலாம் சரணாகதி !!! மீன் மாம்சம் விற்பவனும் பண்ணலாம் சரணாகதி !!! பக்தியை கேட்டுப் பெறலாம் சரணாகதி !!! முக்தியை கேட்டும் பெறலாம் சரணாகதி !!! காமன் சோமனிடம் கூடாத சரணாகதி !!! ராமன் மனம் கூடும் சரணாகதி !!!

——————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ எம்பெருமானும் -மலையும் -கடலும் -முகிலும் -பொன்னும்-மணியும் யானையும் தெய்வ வண்டும் நிதியும் ஸிம்ஹமும்–

November 22, 2025

வார்த்தை -440-
பச்சை மா மலை போல் மேனி-திருமாலை -2-  என்றது –
ஒருத்தரிட்டு ஆகாது ஒழிகையும் –
எல்லாவற்றாலும் பெருத்து இருக்கையும் –
தானே எல்லாவற்றையும் தரித்து இருக்கவற்றாய் இருக்கையும் –
இதிலே அன்வயித்தால் எங்கும் தெரியும்படியாய் இருக்கையும் –
ஒருத்தரால் பேர்க்கப் போகாதே இருக்கையும் –

இதிலே அன்வயித்தாருக்கு சகல போகங்களும் இதுக்கு உள்ளே உண்டாய் இருக்கையும் –
கத்யாகதி இன்றியிலே இருக்கையும் –
அஞ்சினான் புகலிடமாய் இருக்கையும் –

கடலேயும் ஒப்பார் -பெரிய திருமொழி -2-8-8-என்றது –
எல்லாவற்றையும் வளைத்துக் கொண்டு இருக்கையும்கண்ணுக்கு இலக்காய் இருக்கச் செய்தே ஆழமும் அகலமும் அளவிட ஒண்ணாதாய் இருக்கையும் –

உயிர் அற்றவற்றை உட்கொள்ளாது ஒழிகையும் –
ஸ்வ சக்தியாலே உள்ளுப் போகாது ஒழிகையும் –
தான் அள்ளி விநியோகம் கொள்ளாது ஒழிகையும் –
ஒன்றின் வாயாலே(மேகம் -ஆச்சார்யர் –லஷ்மீ நாதாயா சிந்தவ் இத்யாதி) விநியோகம் கொள்ளலாய் இருக்கையும் –
தர்சநீயமாய் இருக்கையும் –

கார் முகில் -திருவாய்மொழி -2-3-7- என்கிறது –
தர்சன மாத்ரத்திலே தாக சாந்தியைப் பண்ணுகையும் –
எங்கும் ஒக்க வர்ஷிக்கும் இடத்தில் தான் ஒரு பிரயோஜனத்தை கணிசியாது
ஒழிகையும் –
கொண்டவன் பிரத்யுபகாரம் தேடாது ஒழிகையும் –
ஒரு படிப்பட உபகரிக்கப் பெறாமையாலே உடம்பு வெளுக்கையும்

———

எண்ணும் பொன்னுருவாய் -திருநெடும்தான்டகம் -1- என்றது –
நித்தியமாய் இருக்கையாலும் –
சகலராலும் கௌரவிக்கப்படுவது ஒன்றாகையாலும் –
உரை உண்டாகையாலும்
உண்டென்ன உயிர் நிற்கையாலும்

இது கைபட்டவன் நினைத்தபடி பண்ணலாய் இருக்கையாலும் –
அவனுக்கு அபிமதங்கள் எல்லாம் கொடுக்கவற்றாய் இருக்கையாலும் –
அலங்காரமாய் இருக்கையாலும் –
ஆபத்துக்கு உதவுகையாலும் –
இது கைப்பட்டவனை ஸ்ரீ மான் என்கையாலும் –
இது கைப்பட்டவன் சகலராலும் சேவ்யமானாய் இருக்கையாலும் -சொல்லுகிறது –

பொன்னுருவாய் –பொன்னின் உடைய ஸ்வபாவத்தை உடைத்தாய் ஆகையாலே –ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது –அதாகிறது-1- -ஸ்பர்ஹணீயமாய் இருக்கையும் –
2-உண்டு என்ன உயிர் நிற்கையும் –3-இத்தைக் கொண்டு சர்வ அபேஷிதங்களையும் சாதித்துக் கொள்ளலாய் இருக்கையும் –4-இத்தை உடையவன் காலில் லோகம் அடங்க விழும்படியாய் இருக்கையும்-

————-

மணியை வானவர் கண்ணனை –
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா –
மாலே மணி வண்ணா –
சாம்யம் ரத்னத்துக்கும் எம்பெருமானுக்கும் பல படிகளில் –

1-உறங்காமை –
கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்கு உண்டோ கண்கள் துஞ்சுதலே
சதா பஸ்யந்தி சூரய
உறகல் உறகல் உறகல் ஒண் சுடர் ஆழியே சங்கே-
2-தலைப்பில் முடிந்து ஆளலாம்
பத்துடை அடியவர்க்கு எளியவன்
ஆயர் புத்திரன் அல்லன் அரும் தெய்வம் பாய சீருடை
பண்புடைப் பாலகன் மாயன் என்று மகிழ்ந்தனர் –
3-மணி ரத்னம் மலையிலும் கடலில் இருக்குமே
ஒண் குறவர் மால் யானை பேர வெறிந்த பெரு மணியை -முதல் திருவந்தாதி
மலை மேல் நிற்பாய் கடல் சேர்ப்பாய் –
4-செருக்கு பண்ணப் பண்ணும்
எனக்கு யாரும் நிகர் இல்லையே
மாறுளதோ இம் மண்ணின் மிசையே
எனக்கு என் இனி வேண்டுவதே
இனி யாவர் நிகர் அகல் வானத்தே-
5- தன்னை உடையாரை லோகம் எல்லாம் அனுவர்த்திக்கப் படும்படி பண்ணுபவன்-
6-இடைத் தரகர் கொண்டே ரத்னம் கொள்ளுவார்
வேதம் வல்லார்களைக் கொண்டே விண்ணோர் பெருமான்
திருப் பாதம் பணிந்து
விபீஷண ஆழ்வான் -நிவேதயமாம் ஷிப்ரம் விபீஷனம் உபஸ்திதம் –

7-ரத்னம் சில சில ஆச்ரயங்களில் அதிக மதிப்பு பெரும்
வேடார் திருவேங்கடம் மேய விளக்கே -போலே ஆழ்வார்கள் அருளிச் செயல்களால் சிறப்பு பெறுவான் எம்பெருமானும்-

8-ரத்னம் ஒளியை விட்டு இராது -எம்பெருமானும் பிராட்டியை விட்டு இரான் -தேவத்வே தேவ தேஹேயம் மனுஷ்யத்வே ச மாநுஷீ-
அநு ஜனர் அநு ரூபரூப சேஷ்டா –இந்திரா -அனந்யா ராகவேணாஹம் பாஸ்கரேண பிரபா யதா -அனந்யா ஹி மா சீதா பாஸ்கரேண பிரபா யதா
ரத்னங்களில் ஒளி உத்பூதமாயும் அநுத்பூதமாயும் இருப்பது போலே ஸ்பஷ்டமாயும் மறைந்தும் பிராட்டி இருப்பாள்
வாமன

கிருஷ்ணாஜிநேந சம் வ்ருண்வன் வாமனோ வஷசி ச்ரியம்-என்ற மறைந்து இருந்தாள்

9- ரத்னம் ஒளியால் மேன்மை பெரும் -திருவில்லா தேவரை தேறேல்மின் தேவு -ச்ரத்தயா அதேவ தேவத்வம் அஸ்நுதே –
அப்ரமேயம் ஹி தத் தேஜோ யஸ்ய சா ஜனகாத்மஜா —

10-ரத்னம் தன்னை இழந்தவனை கதறி அழப் பண்ணும் -பரதனும் விலலாபா சபா மத்யே -கதறி அழுதான்
ஏரார்ந்த கரு நெடுமால் இராமனாய் வனம் புக்க அதனுக்கு ஆற்றாத் தாரார்ந்த தடா வரைத் தோல் தயரதன் புலம்பிய புலம்பல் பிரசித்தம்
பழுதே பல பகலும் போயின -என்று அஞ்சி அழுதார்கள்
இன்பத்தை இழந்த பாவியேன் எனதாவி நில்லாதே தைவத் தேவகி புலம்பலும் பிரசித்தம்
உன்னைக் காண்பான் அலப்பாய் நான் ஆகாயத்தை நோக்கி அழுவேன் –

11-ரத்னம் அதமன் மத்யமன் உத்தமன் கையில் பட்டு -அல்ப விலை உள்ள விலை ஸ்வயம் போக்கியம் ஆகும்
இச்சுவை யான் பொய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன்
எம்மா வீட்டுத் திறமும் செப்பம்
வைகுண்ட வாசே அபி ந அபிலாஷா
எனக்கு தேனே பாலே கண்ணாலே அமுதே
அநுபாயங்களில் உபாயத்வ புத்தி பண்ணுபவர்கள் வியாபாரிகள் போலே
சூத்திர பலார்த்திகள் செம்படவன் போல்வார்

12-சேற்றிலே ரத்னம் இருந்தால் மதிப்பு அறியாமல் இருப்பார்கள் -மாய வன் சேற்று அள்ளல் பொய்ந்நிலத்தே
அவஜா நந்தி மாம்மூடா மானுஷீம் தனுமாஸ்ரிதம் –
மகா ஞானிகளோ எத்திறம் உரலினோடே இணைந்து ஏங்கி இருந்த எளிவே -பிறந்தவாறும் வளர்ந்த வாறும் என்று மோஹித்து இருப்பார்கள் –

13 க்ருத்ரிமான கல்லும் ரத்னம் பேரில் இருந்தால் வாசி அறிய மாட்டாதார்கள்
தேவதாந்த்ரங்களும் பகவான் என்று போலியாக ராஜச தாமசர்கள் பிரமிக்க சாத்விகர்கள் அடுப்பில் இட்ட கல்லோபாதி நினைப்பார்கள்

——————————————————————————————————————-

முகில் வண்ணன் -மேக வண்ணன் -ஒக்கும் அம்மான் உருவம் என்று உள்ளம் குழைந்து நாள் நாளும் தொக்க மேகப் பல் குழாங்கள் காணும் தோறும் தொலைவன் நான்

1- மேகம் பெய்ய வேண்டும் இடம் வரை சென்று பொழியும்
எம்பெருமானும் -வந்து அருளி என்நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்து –
-மண் மீது உழல்வாய் -கிருபா ரசம் பொழிய -வாழ உலகினில் பெய்திடுவான் –

2-மேகம் மின்னுள்ள காலம் நீர் நிரம்பி இருக்கும் -இவள் சந்நிதியாலே காகம் தலைப் பெற்றது -அது இல்லாமையாலே ராவணன் முடிந்தான்
ஆவியை சனகன் பெற்ற அன்னத்தை அமிழ்தின் வந்த தேவியைப் பிரிந்த பின்னைத் திகைத்தனை போலும் செய்கை –

3- மேகம் தான் மொண்ட இடத்திலும் பெய்யும் வசிஷ்டாதிகளுக்கும் பெருமாள் உபதேசித்த்காது பிரசித்தம்

4- மேகம் பெய்யப் பெறாத காலத்திலே வறக்கும்
கோவிந்தேதி யதாக்ரந்தம் கிருஷ்ணா மாம் தூர வாஸினம் ருணம் பிரவர்த்தமிவ மே ஹ்ருதயாத் நாபசர்ப்பதி-

5-மேகம் இன்ன பொது பெய்யும் என்று அறுதி இட ஒண்ணாது -வந்தாய் போலே வாராதாய் வாராதாய் போல் வருவானே -திரௌபதிக்கு ஆபத்திலே முகம் காட்டாது ஒழிந்தான் அபேஷா நிரபெஷமாக தாவி அன்று உலகமெல்லாம் தலைவிளாக் கொண்டான்

6-வனத்திடரை ஏரியாம் வண்ணம் இயற்றும் இது அல்லால் மாரி யார் பெய்கிற்பார் மற்று -வளைப்புக்காக கார்யம் செய்பவன் அல்லன் -பெண்ணுலாம் சடையினானும்
பிரமனும் காண்பான் எண்ணிலா ஊழி ஊநிழி தவம் செய்தார் வெள்கி நிற்க விண்ணுளார் வியப்ப ன்று ஆணைக்கு அன்று அருளை ஈந்தவன்

7-மேகம் ஜல ஸ்தல விபாகம் இன்றி பெய்யும் -அநா லோசித விசேஷ அசேஷ லோக சரண்யன் -வசிசிஷ்டர் சண்டாளன் வாசி இல்லாமல் அனுக்ரஹ சீலன்
வேடன் வேடுவிச்சி பஷி குரங்கு சராசரம் இடைச்சி இடையர் தயிர் தாலி கூனி மாலாகாரர் பிணவிருந்து வேண்டி அடிசில் இட்டவர்
அவன் மகன் அவன் தம்பி ஆனை அரவம் மறையாளன் பெற்ற மைந்தன் -நிர்விசெஷமாக அனைவருக்கும் அருளை பொழிபவன் –

8-மேகம் கர்ஜித்துப் போகும் ஆடம்பரம் இன்றியும் பொழியும் -குசேலருக்கு அருள் மலை பொழிந்தான் –

9–விராட பார்வை கால ஷேபம் கேட்க மேகம் வந்து நிற்கும் -பகவத் விஷய கால ஷேபத்துக்கு இவனும் வந்து நிற்பான் –
மா முனிகள் கால ஷேப கோஷ்டியில் ஸ்ரீ சைல தயா பாத்ரம் தனியன் சாதித்துன் கொண்டு வந்தானே –

10-மேகம் சுக்திகளில் பெய்து முத்தாகும் -அடியாருக்கு இன்பமாரியாகிய எம்பெருமான் உடைய கடாஷ தாரையும் ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள்
இடத்தே ப்ரவஹித்து மிக்க பயன் விளைத்து முத்தன்ன அருளிச் செயல்களையும் ஸ்ரீ வசன பூஷணாதிகளையும் பயக்கும்

11-மேகத்தை வேங்கடக் கோன் விடு தூதில் விண்ணப்பம் -இத்யாதிப் படியே தூது விடப் பெரும் -இவனும் இன்னார் தூதன் என நின்றான் என்றும்
கோதை வேல் ஐவர் க்காய் மண்ணகலம் கூறிடுவான் தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் -என்ற பாண்டவ தூதன் என்று அழியாப் பெயர் பெற்றான்

12-மழை பெய்ய எல்லா மரங்களும் தளிர்க்கும் -எருக்கிலை போல்வன வீழ்ந்து ஒழியும்-இவனும் பரித்ராணாயா சாது நாம்
விநாசாய ச துஷ்க்ருதாம் -என்று சோதி வாய் திறந்து அருளினானே-கஞ்சன் நாள் கவர் கரு முகில் எந்தாய் -தாயார் மகிழ ஒன்னார் தளர –

13-மேகமானது -எத்தனையோ வான் மறந்த காலத்தும் பைங்கூழ்கள் மைத்து எழுந்த மா முகிலே பார்த்து இருக்கும் வேறு புகல் இல்லாமல் –
எம்பெருமானும் -களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களைகண் மற்றிலேன் -என்று சாதக வ்ருத்திகளான அனன்ய கதிகளால் ப்ரதீஷிக்கப் பட்டிருப்பன் –

14-மேகமானது விருப்பம் இல்லா விடிலும் கண்ணீர் விட்டாலும் வாளா நிற்கும்-ஸ்ரீ பரத ஆழ்வான் -ஏபிச் ச சசிவைஸ் சார்த்தம் சிரஸா யாசிதோ மயா-ப்ராதுச் சிஷ்யஸ்ய
தாஸஸ்ய பிரசாதம் கர்த்துமர்ஹசி-என்று பலருடன் கண்ணநீர் சித்ரகூடத்தில் விட்டாலும்
ச காமம் அநவாப்யைவ-என்னும்படி மநோ ரதம் நிறைவேறப் பெறாமல் மீண்டு போம்படி ஆயிற்று-

15-மேகம் கடலில் படிந்து அங்கு நின்றும் எழுந்து தோன்றி வர்ஷித்து விட்டு மீண்டும் கடலில் புகும் -எம்பெருமானும் அவதார கந்தமான திருப் பாற் கடலிலே படிந்து
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் -என்றபடி
ஸ்ரீ ராம கிருஷ்ணாதி திருவவதாரங்களில் கிருபா ரசத்தை பொழிந்து மீண்டும் அங்கே புகுவான்
பின் துரக்கும் காற்று இழிந்த சூல் கொண்டல் பேர்ந்தும் போய் வன் திரைக்கண் வந்து அணைந்த வாய்மைத்தே -பெரிய திருவந்தாதி

16-மேகம் தான் தோன்றின வாறே மயில்களை சிறகு விரித்து ஆடப் பண்ணும் -கார் முகில் போல் வண்ணன் கண்ணன் எம்மானைச் சொல்லிப் பாடி
எழுந்தும் பறந்தும் துல்லாதார் தம்மால் கருமம் என் சொல்லீர்-என்றபடியே தத் பஷ பாதிகளை எழுந்தும் பறந்தும் துள்ளப் பண்ணும் –

——————————————————————————–

கடல் வண்ணன் -விசேஷார்த்தம்
அஞ்சலிம் ப்ராங்முக க்ருத்வா பிரதிசிச்யே மஹோததயே -கடலை நோக்கி கடல் பள்ளி கொண்டது போலே
கருணை யம் கடல் கிடந்தனன் கரும் கடல் நோக்கி –
பிரதிஜலதிதோ வேலாசய்யாம் -பட்டர் –

1-நீண்ட மலைகளும் மா மணியும் மலர்மேல் மங்கையும் சங்கமும் தங்குகின்ற அலை கடல் போன்றிவர் -பெரிய திரு மொழி -2-8-5-
கடல் மைநாகம் போன்ற மலைகளை கொண்டது போலே இவனும் ஈரிரண்டு மால் வரைத் தோள் செங்கண் திரு முகத்து செல்வத் திரு மால் -மலை போன்ற திருத் தோள்களை உடையவன்
நகு கதிர் வழங்கு தகடு படு செம்பொன் நவமணி குயின்ற தொடு யணி யணிந்த ககனவிலிடு நீலே வெற்பு ஒத்து இருந்தனை -பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
கடல் சிறந்த நவ மணிகளை உடைத்தால் போலே இவனும் குரு மா மணிப்பூண் -கௌச்துப மணியையும் -செங்கமலக் கழலில் சிற்றிதழ் போல் விரலில் சேர் திகழ் ஆழிகளும் –கிண்கிணியும் அரையில் தங்கிய பொன்வடமும் தாள நன் மாதுளையின் பூவொடு பொன்மணியும் மோதிரமும் கிறியும் மங்கள ஐம்படையும் தோள் வளையும் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும் -உடையவன்
கடல் லஷ்மி பிரஸூதிக்ருஹம் ஆகையாலே பெரிய பிராட்டியாருக்கு உறைவிடம் -இவனும் அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பன்
கடல் சங்கு தங்குமிடம் இவனும் வெள்ளை சுரி சங்கு ஏந்துமவன் –

2- கடல் முன்னீர் -எல்லா வற்றுக்கும் முன்னே உண்டான நீர் -அப ஏவ சசர்ஜ ஆதௌ-நன்மைப் புனல் பண்ணி -இவனும் முனைவன் மூ வுலகாளி யப்பன் –

3- கடல் முந்நீர்-ஆற்று நீர் ஊற்று நீர் மழை நீர் ஆகிய மூன்று வகை பட்ட நீரையும் உடைத்தாய் இருக்கும்
எம்பெருமானுக்கும் ஸ்வா பாவிக கருணை ரசமும் -பிறர் படும் துயரைக் கண்டு தோன்றும் அருள் நீறு பிராட்டியால் தூண்டுவிக்கப் பட்டு பொழியும் அருள் நீரும் உண்டே –

4-கடல் சிறு மீன் திமிங்கலம் கிளிஞ்சல் மணி மாணிக்கம் அதம உத்தம விபாகம் இல்லாமல் தன பக்கம் இடம் கொடுத்து இருப்பது போலே
சிவனோடு பிரமன் வண் திருமடந்தை சேர் திருவாகம் -என்றும் ஏறாளும் இறையோனும் திசைமுகனும் திரு மகளும் கூறாளும் தனிவுடம்பன் -என்றும்
பச்யாமி தேவான் தவ தேவ தேஹ -என்கிறபடியே சர்வ அபாஸ்ரயமாய் இருப்பான் –

5-கடல் சாவா மருந்தான அமிர்தத்தை தேவர்களுக்கு அளித்தது -எம்பெருமானும் உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம் -என்றும்
தன்னைப் பெற்றேற்குத் தன வாய் அமுதம் தந்து என்னைத் தளிர்ப்பிக்கின்றான் -என்றபடி பேரன்புடையாருக்கு சாவா மருந்தான தனது வாயமுதைத் தந்து அருள்வான் –

6-கடல் அளவிட முடியாத ஆழம் -இவனும் சமுத்திர இவ காம்பீர்ய -கொள்ள மாளா இன்ப வெள்ளம் ஆகையாலே இதில் இழிவார்க்கு உள் ஆழம் காண்பது அரிது –

7-கடல் தன பக்கல் உள்ளதை மேகத்துக்கு கொடுக்கவும் செய்யும் மேகம் பொழிவதை தன்னிடமும் பெற்றுக் கொள்ளும்
எம்பெருமானும் அர்த்திதார்த்த பரிதான தீஷிதம் -என்றும் சகல பல பிரதோ ஹி விஷ்ணு -என்கிரபடுயே கொடுக்கவும் செய்வான்
கரோமி யத் யத் சகலம் பிரச்னை நாராயணா யேதி சமர்ப்பயாமி -கொடுப்பவற்றை கொள்ளவும் வல்லவன் தத் குருஷ்வ மதர்ப்பணம் -என்பன்-

8-கடலுக்கு மழை நீரால் அதிசயம் இல்லை முகிலுக்கு ஆத்மலாபம் -எம்பெருமானுக்கு எவ்வளவு சமர்ப்பித்தாலும் அது போலே நாம் க்ருதார்த்தர்கள் ஆவது தவிர புதிதாக அவனுக்கு செல்வா நிறைவு இல்லை

9-கடல் நீர் நம் போல்வார் வாயில் புக மாட்டாது -துவர்க்கும் -ஆசாந்த சிந்தோ கும்பீ ஸூ நோ -என்றபடி குறு முனிவனுக்கு உணவாயிற்று -எம்பெருமானும் தோன்றல் வாளரக்கன் கெடத் தோன்றின நஞ்சு -சுவை அறிந்தாற்கு அமுதிலும் ஆற்ற இனியன் –எனக்குத் தேனே பாலே கண்ணாலே அமுதே திரு மால் இரும் சோலை கோனேயாகி-என்னும்படி பரம போக்யன்-

10-கடல் அஞ்சினார்க்கு புகலிடம் இந்த்ரன் இடத்து அஞ்சின மைநாக கிரிக்கு புகலிடமாக இருந்ததே -இவனும் அஞ்சினேற்கு அஞ்சேல் என்று காவி போல் வண்ணர் வந்து
என் கண்ணின் உள்ளே தோன்றினாரே -ஆர்த்த த்ராணா பராயணஸ் ச பகவான் நாராயணோ மே கதி –

11-கடல் நீர் மா முகில் வாய் மூலம் வந்தால் அன்றி யாருக்கும் உபஜீவிக்க ஒண்ணாது -எம்பெருமானும் ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் திரு வாய் மூலம் வந்தால் அன்றி உபஜீவிக்கலாகான்
லஷ்மீ நாதாக்ய சிந்தௌ சடரிபு ஜலத ப்ராப்ய காருண்ய நீரம் நாதாத்ரௌ அப்ய ஷிஞ்சத் -என்றும்
மேகம் பருகின சமுத்ராம்பு போலே நூற்கடல் சொல் இவர் வாயனவாய்த் திருந்தினவாறே சர்வதா சர்வ உபஜீவ்யமாமே –

12-கடல் குளிர்ந்தே பெரும்பாலும் இருந்தாலும் ஒரு புறத்தில் பாடபாக்னி பொங்கி இருக்கும் -எம்பெருமானே தண்ணளி வே வடிவாய் இருந்தாலும்
நீரிலே நெருப்பு கிளருமா போலே குளிர்ந்த திரு உள்ளத்திலே அபராதத்தாலே சீற்றம் பிறக்கும் –

13–கடல் சந்த்ரணைக் கண்டால் பொங்கி கிளரும் -எம்பெருமானும் ஞானிகளைக் கண்டால் தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் என்னும்படி சத சதமாகப் பணைப்பன் –

14- நாம் கடல் கரையிலே நின்றே அனுபவிக்க முடியும் -நிலவர்களே உட்புகுந்து ரத்னங்களை கொணர்வர் -நம்பிள்ளை போல்வாரே அவஹாகித்து வேதாந்த விழுப் பொருள் நிதிகளை வாரிக் கொணர்ந்து நமக்கு அளிக்க வல்லவர்கள் –

15-கடல் விஷத்தையும் தந்தது அமுதத்தையும் தந்தது இவனும் பயக்ருத் பய நாசன –நல்குரவும் செல்வமும் நரகமும் சுவர்க்கமுமாய் வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய் இருப்பவன் -பட்டர் -பல மோஷண யோஸ் த்வயைவ ஜந்து க்ரியதே ரங்க நிதே -என்பர்

16-கடல் எத்தனை தரம் பார்த்தாலும் திருப்தி பெறாமல் அபூர்வ தர்சனமாய் இருக்கும் இவனும் அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதம் –

17-கடலுக்கு நதிகள் மூலம் வரவும் மேகம் மூலம் செலவும் உண்டு -அர்ச்சாவதார உண்டியலில் வரவும் உண்டு செலவும் உண்டு

18-திரை கடல் ஓடியும் திரவியம் தேடுவார் -நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான் தன்னையே வேண்டும் செல்வம் -எம்பெருமான் வழியே போவார்க்கு மஹார்த்தங்கள் கிட்டும்-

19-வானர வீரர்கள் கடலைக் கடந்து விட்டாலும் உள் ஆழம் அறியாதார் -அழுந்தின மந்தர மலைக்கே தெரியும் -நாம் அவனை ஸ்துதி செய்தாலும் அறியோம் ஆழ்வார்கள் மட்டுமே அறிவார்
பாலில் கிடந்ததுவும் பண்டு அரங்கம் மேயதுவும் ஆலில் துயின்றதுவும் ஆரறிவார் –ஞாலத்து ஒரு பொருளை வானவர் தம் மெய்ப் பொருளை அப்பில் ஒரு பொருளை யான் அறிந்த வாறு -என்பர் திரு மழிசைப் பிரான் —

20-கடல் கலங்காது கலங்கினாலும் சீக்கிரம் தெளியும்
சீற்றம் கொள்ளான் கொண்டாலும் அருள் சீக்கிரம் சுரக்கும் -சுக்ரீவ மகாராஜர் சமுத்திர ராஜன் நரகாசுரன் போல்வார் இடம் கண்டோம்-

21- அபரிச்சேத்யமான கடலும் குறு முனிவன் கையில் ஆசமனத்துக்கு போதும்படி அடங்கி இருந்தது -வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸா சஹ -பகவத் விஷயம் ஆழ்வார்களுக்கு பரிச்சேத்யம் ஆயிற்று
நண்ணா அசுரர் நலிவெய்த நல்லவமரர் பொலிவெய்த எண்ணாதன்கள் என்னும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப பண்ணார் பாடல் இன்கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி -திருவாய் -10-7-5-
ஆனந்தம் ஒன்றையே பேசி மீண்டதே வேதம் -ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்களை விரிவாக பேச ஒரு கிரந்தம் வேண்டுமே என்று எண்ண
திருவாய் மொழி திரு வவதரித்த பின்னர் இன்னம் எம்பெருமானுக்கு ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்கள் வேண்டுமே என்று எண்ணம் படி ஆனதாம் -ஈட்டு ஸ்ரீ ஸூ க்திகள்
அனைத்தும் ஆழ்வார் திரு வாக்கிலே அடங்கி விட்டன என்றே கருத்தாகும் –

22–கடல் சம்பந்த ஞானம் இல்லாத புல்லை வெளியே தள்ளும் -மகரம் போன்றவற்றை அங்கனம் தள்ளாது -அடங்கு எழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன் அடங்கு எழில் அஃது என்று அடங்குக உள்ளே –1-2-5-

23–கடல் கடக்க அரிதாயினும் நாவாயால் எளிதில்கடக்கலாம்
பாதாம் போஜ வரத பவதோ பக்தி நாவம் ப்ரயச்ச -முகுந்த மாலை -பத்துடை அடியவக்கு எளியவன் –

24-கடல் அருகே இருந்தாலும் தாக விடாய் தீர்க்க வேறு நீர் நிலை தேட்டமாய் இருக்கும் -சாச்த்ரன்களால் எம்பெருமானை எவ்வளவு அனுபவித்தாலும் அர்ச்சையில் இழிந்தால் அன்றி ஆர்த்த சாந்தி இல்லை இ றே-

25–எவ்வளவு கார்ய நிர்பந்தங்கள் இருந்தாலும் பெரிய செல்வந்தர்களும் சிறிய நேரமாவது கடல் கரை சாராது இரார்கள்
பல காரியங்களை சுருக்கிக் கொண்டு ஒரு நாழிகை பொழுது யாவது பகவத் ஆராதனத்தில் அந்வயியாது இரார்கள் –

கடலில் அலை ஓயாது -அலம் புரிந்த நெடும் தடக்கையும் ஓயாது
கடல் கோஷித்துக் கொண்டே இருக்கும் -இவனும் ஏதத் வ்ரதம் மம–மோஷயிஷ்யாமி மாசுச -நமே மோகம் வசே பவேத் -இத்யாதிகளை சாதித்துக் கொண்டே இருப்பான்
கடல் ஒரு நாளும் வற்றாது -எம்பெருமானுக்கு நாஸ்தித்வம் உண்டாகாது
கடல் ஏறுவதும் வடிவதுமாய் இருக்கும் -இவனும் சேவை சாதிப்பதும் மறைவதுமாய் இருப்பான்
இப்படி பலவும் உண்டே –

———————————————————————————————————————————-

நீர் வண்ணன் எம்பெருமான் -நீருக்கும் அவனுக்கும் சாம்யம் பல படிகளில்

1-நீர் பள்ளத்திலே பாயும் –மேட்டில் ஏற்றுவது ஸ்ரமம்-ஜாதி முதலியவற்றால் குறைந்தார் இடம் எளிதாக செல்வான்
உயர்ந்தவர் என்று மார்பு நெறித்து இருந்தால் அணுக விரும்பான்
பாண்டவ தூதனாக விதுரர் திருமாளிகை சென்றவன் ஞானத்தால் உயர்ந்த பீஷ்மாச்சார்யர் -குலத்தால் சிறந்த த்ரோனாச்சார்யர் செல்வத்தால் சிறந்த துரியோதனை பொருட்டாக மதியாமல்
முன்னமே துயின்று அருளிய முதுபயோததியோ பன்னகாதிபப் பாயலோ பச்சை ஆலிலையோ சொன்ன நால்வகைச் சுருதியோ கருதி நீ எய்தற்கு எண்ண மாதவம் செய்தது இச் சிறு குடில் என்றான் -வில்லிபுத்தூரார் பாரதம் –

2-நீர் இல்லாமல் ஒரு காரியமும் ஆகாதே -லோகோ பின்னருசி யாக இருந்தாலும் நீர் அனைவருக்கும் வேண்டுமே -அது போலேயும் எம்பெருமானும்

3-நீருக்கு குளிர்ச்சி இயற்கை -சூடு வந்தேறி -தண்ணளி இயற்கை -நீரிலே நெருப்பு கிளருமா போலே குளிர்ந்த திரு உள்ளத்திலே அபராதத்தால் சீற்றம் பிறக்கலாம் –

4- நீர் சுட்டாலும் ஆற்றுவதற்கு நீரே வேண்டும் -அவன் சீறினாலும் அவன் தானே தெளிவு பெற வேணும் -தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரணில்லை –

5- நீர் இஷ்டப்படி தேக்கி வைக்கவும் ஓட விடவும் உரித்தாய் இருக்கும் -ஆண்டாள் சூடிக் களைந்த மாலையால் விலங்கிட்டு வைத்து
புஜிக்க நின்றான் -பாண்டவர்கட்காக கழுத்திலே ஓலை கட்டி தூது போக விடப் பெற்றான் –

6-நீர் மற்ற பண்டங்களை சமைக்க பயன்படும் தானாக குடிக்கவும் பயன்படும் -இவனுக்கும் உபாயத்வமும் உபேயத்வமும் உண்டு –
எம்பெருமானைக் கொண்டு வேறு பிரயோஜனம் பெற விரும்புவாரும் ஸ்வயம் பிரயோஜனமாய் அவனையே பெற விரும்புவாரும் உண்டே –

7-அன்னம் காய் கனி வேர் கிழங்கு பால் பின்ற பிரதி நிதிகளை சஹிக்கும் -நீருக்கு நீரே வேணும் -எம்பெருமானும் அப்படியே
ஒரு நாள் காண வாராயே-அடியேன் தொழ வந்து அருளே
என்று பிரார்த்தித்துப் பெற்றே தீர வேண்டும்
நீரை ஒருவராலும் விட முடியாது கர்ம ஞான பக்தி பரபக்தி இவற்றில் எத்தை விட்டு எத்தைப் பற்றினாலும் ஒருபடியாலும் விடத் தகாதவன் –

8-சோறு உண்ணும் போதும் நீர் வேண்டும் நீர் வேறு ஒன்றையும் அபேஷியாது-உபாயாந்தரங்களுக்கும் அவனே வேண்டும் -உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் –

9-கொள்ளும் பாத்ரங்களின் தாரதம்யமே அன்றி நீர் தானே குறைய நில்லாது -கொள்ளக் குறைவிலன் வேண்டிற்று எல்லாம் தரும் கோதில் வள்ளல்
கொள்வார் குறையே அத்தனை –அல்ப ஐஸ்வர்யகைவல்யம் பெற்று போவாரும் உண்டே -எழுவார் விடை கொள்வார் -இத்யாதி

10-நீர் ஐவகைப் பட்டு இருக்கும் -பூமிக்கு உள்ளே கிடக்கும் நீர் –ஆவரண ஜலம்–பாற் கடல் நீர் -பெருக்காற்று நீர் –தடாக நீர்
அந்தர்யாமி –பரத்வம் -வ்யூஹம் -விபவம் -அர்ச்சை -பெருகாற்றிலே தேங்கின மடுக்கள் போலே கோயில்களிலும் கிருஹங்களிலும் எங்கும் ஒக்க எல்லாருக்கும் கண்ணுக்கு இலக்காம் படி –

11- நீரானது ச்வத பரிசுத்தம் ஆயினும் ஆஸ்ரய வசத்தால் த்யாஜ்யமும் உபாதேயமும் ஆகும் -அப்படியே தேவதாந்த்ரங்களில் அந்தர்யாமியான எம்பெருமானும்
த்யாஜ்யன் -கூராழி வெண் சங்கு ஏந்தி உள்ள ஸ்ரீ யபதியே உபாதேயன் –

12-தோண்டத் தோண்ட சுரக்கும் நீர் -இவனும் கொள்ள மாளா இன்ப வெள்ளம் -பேசப் பேச வளர்ந்திடுவன் -செலக் காண்கிற்பார் காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய் இருப்பன்

13-நீர் பரார்தமாயே இருக்கும் -தனக்கு என்று பிரயோஜனம் இல்லாமல் -பக்தாநாம் -என்றபடி எம்பெருமானுடைய ஆத்மாத்மீயங்கள் எல்லாம் ஆஸ்ரிதர்க்காகவே இருக்கும் –

14-நீர் தானே பெய்ய வேணும் -ஒருவரால் வடிம்பிட்டு பெய்விக்க முடியாது -எம்பெருமானும் அப்படியே –

15-நீர் கடலில் இருந்து காளமேகம் வழியாக வந்தால் அன்றி உபஜீவிக்க உரியது ஆகாது -இவனும் சாஸ்த்ரங்களில் இருந்து ஆச்சார்யர் மூலமாக
வந்தே உபஜீவ்யன் ஆகிறான் -மேகம் பருகின சமுத்ராம்பு போலே நூற் கடல் சொல் இவர் வாயனவாய்த் திருந்தினவாறே சர்வதா சர்வ உபஜீவ்யம் ஆகும் –

16–சிறியார் பெரியார் விபாகம் இன்றி ஒரே துறையிலே படிந்து குடைந்து ஆடலாம் -எம்பெருமானும் -நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திரு வேங்கடத்தானே -என்றும்
கானமும் வானரமும் வேடுமுடை வேங்கடம் –

17- நீர் சிறிய த்வாரம் கிடைத்தாலும் உட்புகுந்து விடும் -எம்பெருமானுக்கும் சிறிய வ்யாஜ்யமே போதும் -திரு மால் இரும் சோலை மலை என்றேன் என்ன திருமால் வந்து
என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -என் ஊரைச் சொன்னாய் என் பேரைச் சொன்னாய் -இத்யாதி –

18-தீர்த்த விசேஷங்களில் நீருக்கு மஹாத்ம்யம் அதிகம் -எம்பெருமானுக்கும் கோயில் திருமலை பெருமாள் கோயில் திருப்பதிகளிலே சிறப்பு பொலியும்-

19-தாபம் மிக்கவர்கள் முகத்தில் எறேட்டுவது முதுகிலே கொட்டுவது உள்ளில் இழிச்சுவது படிந்து குடைந்து ஆடுவது போலே
வாக்கினால் கருமம் தன்னால் மனத்தினால் சிரத்தை தன்னால் வேட்கை மீதூர வாங்கி விழுங்குவர்கள் எம்பெருமானையும் –

20-நீர் வேண்டியவன் நுனி நாக்கு நனைக்கக் கிடைத்தால் போதும் என்பான் -கூரார் ஆழி வெண் சங்கு ஏந்தி கொடியேன் பால் வாராய் ஒரு நாள்மண்ணும் விண்ணும் மகிழவே -என்பர் –

21–நீரில் சிறிய கல்லும் அமிழும் தெப்ப மரமும் மிதக்கும் – எம்பெருமான் பக்கலிலும் ப்ரஹ்மாவாய் இழந்து போவதும் இடைச்சியாய் பெற்று விடுதலும் செய்யக் கானா நின்றோம்
நேரே கடிக் கமலத்துள் இருந்தும் காண்கிலான் கண்ணன் அடிக் கமலம் தன்னை அயன் -என்றும்
மருவு நின் திரு நெற்றியில் சுட்டி யசை தர மணி வாயிடை முத்தம் தருதலும் உந்தன் தாதையைப் போலும் வடிவு கண்டு கொண்டுள்ள முள் குளிர
விரலைச் செஞ்சிறு வாயிடை சேர்த்து வெகுளியாய் நின்று உரைக்கும் அவ்வுரையும் திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே-என்றும்
பகவத் குணங்களில் சிறு மா மனிதர் அமிழ்தலும் ஊன் மல்கி மோடு பருப்பார் வாய்க் கரையிலே நிற்றலும் உண்டே –

22-துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு துப்பாய தூவும் மழை-போக சாதனமாயும் ஸ்வயம் போக்யமாயும் நீர் இருக்கும் -ப்ராபகனும் பிராப்யனும் பிராப்திக்கு உகப்பானும் அவனே —

—————————————————————

யானையுடன் ஒப்புமை -திருவேங்கடத்து என் யானை -சொன்னால் விரோதம் ஒரே பாசுரம் -நம்மாழ்வார் -தென்னானாய் வடவானாய் குடபாலானாய் குணபால மத யானாய் –

“தென்னானாய் வடவானாப் குடபாலானாய் குணபாலமதயானாய்” என்று திருநெடுந்தாண்டகத்திலும் அருளிச் செய்வர்.

“என்னானை என்னப்பனெம்பெருமான்” என்றார் நம்மாழ்வாரும் திருவாய்மொழியில்.

1. யானையை எத்தனை தடவை பார்த்தாலும் பார்க்கும் போதெல்லாம் அபூர்வவஸ்து போலவேயிருந்து பரமாநந்தத்தைத் தருவது போல எம்பெருமானும் ”அப்பொழுதைக்கப்பொழு தென்னாராவமுதமே” என்னும்படியிருத்தலால் ஆனையாகச் சொல்லப்படுவன்.

2. ஆனையின் மேல் ஏறவேண்டியவன் ஆனையின் காலைப்பற்றியே ஏறவேண்டுவதுபோல, எம்பெருமானிடம் சென்று சேரவேண்டியவர்களும் அவனது திருவடிகளையே பற்றி ஏறவேண்டுதலாலும் ஆனையென்கிறது.

3. ஆனையானது தன்னைக்கட்டத் தானே கயிறு கொடுக்கும்; “எட்டினோ டிரண்டெனுங் கயிற்றினால்” (திருச்சந்த விருத்தம்.) என்றபடி பக்தியாகிற கயிற்றை எம்பெருமானே தந்தருள்வன்.

4. யானையை நீராட்டினாலும் அடுத்த க்ஷணத்திலே அழுக்கோடே சேரும்; எம்பெருமான் சுத்த ஸத்வமயனாய்ப் பரமபவித்திரனாயிருக்கக் செய்தேயும்* பொய்ந்நின்ற ஞானமும் பொல்லாவொழுக்கும் அழுக்குடம்புமுடைய நம்போல்வாரோடே சேரத் திருவுள்ளமாயிருப்பன் வாத்ஸல்யத்தாலே.

5. யானையைப் பிடிக்கவேண்டில் பெண்யானையைக் கொண்டே பிடிக்கவேண்டும்; பிராட்டியின் புருஷகாரமின்றி எம்பெருமான் வசப்படான்.

6. பாகனுடைய அநுமதியின்றித் தன் பக்கல் வருமவர்களைத் தள்ளி விடும் யானை; எம்பெருமானும் 1. “வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து” என்றபடி பாகவதர்களை முன்னிட்டுப் புகாதாரை அங்கீகரித்தருளான்.

7. யானையின் பாஷை யானைப்பாகனுக்கே தெரியும்; எம்பெருமானுடைய பாஷை திருக்கச்சி நம்பிபோல்வார்க்கே தெரியும்; பேரருளாளனோடே பேசுமவரிரே நம்பிகள்.

8. யானையினுடைய நிற்றல் இருத்தல் கிடத்தல் திரிதல் முதலிய தொழில்கள் பாகனிட்ட வழக்கு; எம்பெருமானும் 1. “கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி மணிவண்ணா நீ கிடக்க வேண்டா – உன்றன் பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்” என்றும் 2. “கிடந்தவா றெழுந்திருந்து பேசு” என்றுஞ் சொல்லுகிற திருமழிசைப்பிரான் போல்வார்க்கு ஸர்வாத்மநா விதேயனிறே.

9. யானைக்குக் கை நீளம்; எம்பெருமானும்* அலம்புரிந்த நெடுந்தடக் கையனிறே.

10. யானை உண்ணும் போது இறைக்கும் அரிசி பலகோடி நூறாயிர மெறும்புகளுக்கு உணவாகும். எம்பெருமானமுது செய்து சேஷித்த ப்ரஸாதத்தாலே பலகோடி பக்தவர்க்கங்கள் உஜ்ஜீவிக்கக் காண்கிறோமிறே.

11. யானை இறந்த பின்பும் உதவும்; எம்பெருமானும் தீர்த்தம் ஸாதித்துத் தன்னுடைச் சோதிக்கு எழுந்தருளின பின்பும் இதிஹாஸ புராணங்கள் அருளிச் செயல்கள் மூலமாகத் தனது சரிதைகளை உணர்த்தி உதவுகின்றானிறே.

12. யானைக்கு ஒரு கையே; எம்பெருமானுக்கும் கொடுக்கும் கையொழியக் கொள்ளுங்கையில்லையிறே.

13. பாகனுக்கு ஜீவநங்கள் ஸம்பாதித்துக் கொடுக்கும் யானை; எம்பெருமானும் அர்ச்சக பரிசாரகர்களுக்கு – இங்ஙனே மற்றும் பல உவமைப் பொருத்தங்கள் கண்டு கொள்க…

யானை -தென்னானாய் வடவானாய் குடபாலானாய் குணபாலமதயானாய் –என்றும்
என்னானை என்னப்பன் எம்பெருமான் -என்றும் சோலை மழகளிறே -என்றும் சொல்வார்களே –
குஞ்ஜரம் வா அத்ரி குஞ்ஜே -என்றார் பட்டர் –

1- யானை எத்தனை தடவை பார்த்தாலும் பார்க்கும் பொழுது எல்லாம்அபூர்வ வஸ்துவாகவே -பரமானந்தமாகவே -இருக்கும்–இவனும் எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு
ஊழி ஊழி தோறும் அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதமே -பண்டு இவரைக் கண்டது எவ் ஊரில் -என்றும் சொல்லப் பண்ணுவன்

2-ஆனை உடைய காலைப் பற்றியே ஏற வேண்டும் -இவன் திருவடிகளைப் பற்றியே அடைய வேண்டும்
உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்பர் –

3- தன்னைக் கட்ட கையிற்றை தானே எடுத்துக் கொடுக்கும்-எட்டினோடு இரண்டு என்னும் கயிற்றினால் -பக்தியாகிய கயிற்றை அவனே தந்து அருள்வான் -மதி நலம் அருளினான் –

4-நீராட்டிய உடனே அழுக்கோடு சேரும் -சுத்த சத்வமயன் -பரம பவித்ரன் -இருந்தும் வாத்சல்யத்தாலே பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் உடைய நம் போல்வாருடன் சேர்வான் –

5-பெண் யானையைக் கொண்டே பிடிக்க வேண்டும் -பிராட்டியின் புருஷகாரம் இன்றி இவனும் வசப்படான் –

6-பாகனுடைய அனுமதி இன்றி தனது பக்கல் வருமவர்களைத் தள்ளி விடும் -வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து –
என்றபடி பாகவதர்களை முன்னிட்டு புகாதாராய் அங்கீ கரித்து அருளான் –

7-யானையின் பாஷை பாகனுக்கு தெரியும் -எம்பெருமான் பாஷை திருக் கச்சி நம்பி போல்வாருக்கே தெரியும் ஸ்ரீ காஞ்சி பூர்ண மிஸ்ரேண ப்ரீதா சர்வ அபி பாஷிணே-

8-யானையினுடைய நிற்றல் இருத்தல் கிடத்தல் திரிதல் பாகன் இட்ட வழக்காய் இருக்கும் -இவனும்
கனி கண்ணன் போகின்றான் –காமரு பூங்கச்சி மணி வண்ணா நீ கிடக்க வேண்டா -உன் தன் பைந்நாகப் பாயைச் சுருட்டிக் கொள் -என்றும்
கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு என்றும் சொல்வாருக்கு சர்வாத்மநா விதேயன் இ றே–

9-யானை உண்ணும் போது இறைக்கும் அரிசி பல கோடி நூறாயிரம் எறும்புகளுக்கு உணவாகும் -இவன் அமுது செய்து சேஷித்த பிரசாதத்தால் பல கோடி பக்த வர்க்கங்கள் உஜ்ஜீவிக்கக் காண்கிறோம் –

10-யானைக்கு கை நீளம் -இவனுக்கும் அலம் புரிந்த நெடும் தடக்கை -நீண்ட அந்தக் கருமுகிலை எம்மான் தன்னை –

11-யானை இறந்த பின்பும் உதவும் -இவனும் தீர்த்தம் பிரசாதித்து தன்னுடைச் சோதிக்கு எழுந்து அருளிய பின்பும் இதிஹாச புராணங்கள் அருளிச் செயல்கள் மூலமாக தனது சரிதைகளை உணர்த்தி உதவுகிறான் –

12-யானைக்கு ஒரு கையே உள்ளது -இவனுக்கும் கொடுக்கும் கை மட்டுமே கொள்ளும் கை இல்லை இ றே

13-பாகனுக்கு ஜீவனங்கள் சம்பாதித்துக் கொடுக்கும் யானை -இவனும் அர்ச்சக பரிசாரகர்களுக்கும் தன்னை நிர்வஹிக்கும் வித்வான்களுக்கும் ஜீவன உஜ்ஜீவன ப்ரதன்-எனக்கே தன்னைத் தந்த கற்பகம் –

——————————————————————————————————————————-
பொன்னப்பன் மணியப்பன் –பொன்னை மா மணியை –பொன்னானாய் –பொருது வருகின்ற பொன்னே —

1- ஹேம்நா கேதோ ந தாஹேந சேதேந கஷணேந வா ஏத தேவ மஹத் துக்கம் யத் குஞ்ஜா சமதோல நம் -தீயிலிட்டோ உரை கல்லிலோ உளியை இட்டோ வெட்டினாலும்
ஹிம்சையால் வருந்தாமல் ஒளி விஞ்சி காட்டும் குந்துமணிக்கு ஒப்பாக நிறுத்திப் பார்த்தால் குன்றிப் போகும்
இன்னார் தூதன் என நின்றான் -பாண்டவ தூதன் என்றதாலே தரிப்பு உண்டாயிற்று
வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால் புடைக்க அலர்ந்தானை -கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் அவதார பிரயோஜனம் பெற்றோம் என்று ஒளி விஞ்சி இருப்பான்
ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயன் -அதி சூத்திர வஸ்துக்களோடு ஒப்பிட்டால் துக்க ஹேது
ஒட்டுரைத்து இவ் உலகு உன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும் பட்டுரையாய் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி —

2–பொன்னானது மண்ணில் கலந்து இருந்தாலும் சேற்றில் அழுந்திக் கிடந்தாலும் உள்ளே மாசு ஏறப் பெறாது -எம்பெருமானும் ஹேய வச்துக்களோடு கூடி இருந்தாலும் மாசறு சோதியனே யாவான் –

3-பொன்னின் மதிப்பிக்கு ஒரு நாளும் குறை இல்லை -பொன் நகைகளுக்கு எந்நாளும் ஏற்றம் உண்டே -இவன் மதிப்பிக்கு என்றுமே கொத்தை இல்லை-

————————————————————————————————————————————————————-

ஆயர் ஏறு –ஆயர்கள் போர் ஏறு —

1-வ்ருஷபத்துக்கு சரணங்கள் நான்கு -கால் செய்கை -சிருஷ்டி சம்ரஷணம் சம்ஹாரம் மோஷ பிரதானம் –வீடாம் தெளிதரு நிலைமையது ஒழிவிலன் -ஜகத் உத்பவ ஸ்திதி பிரணாச சம்சார விமோசன –ஆளவந்தார் –

2 வ்ருஷபம்-வ்ருஷபத்துக்கும் தர்மத்துக்கும் பெயர் -கிருஷ்ணம் தர்மம் சநாதனம் –ராமோ விக்ரஹவான் தர்ம –தர்ம சம்ஸ்தாபனம் பண்ணப் பிறந்தவன் தானே சேரம தர்மங்களையும் விட்டு என்னைப் பற்று என்கையாலே சாஷாத் தர்மம் தானே என்கிறது —

4- உணவுக்கு பிறர் கை பார்த்து இருக்கும் வ்ருஷம் -அர்ச்சையில் அப்படியே விபவத்திலும் வேர்த்து பசித்து வயிறு அசைந்து வேண்டி அடிசில் உண்ணும் போது ஈது என்று பார்த்து இருந்து நெடு நோக்கு கொள்ளும் பக்த விலோசனன் —

5- வ்ருஷபம் -மாடு -அறிவிலி-இவனும் அவிஜ்ஞாதா -பக்தர்கள் அபராதங்கள் பற்றி அறிவில்லாதவன் குற்றங்களில் கண் செலுத்த மாட்டான் கண் செலுத்தினாலும் நற்றமாகவே கொள்வான்

5-வ்ருஷபம் கறுவுதல் உண்டானால் முட்டித் தள்ளும் -சீமாலி கனவனோடு தோழமை கொள்ளவும் வல்லாய் சாமாறு அவனை எண்ணி சக்கரத்தால் தலை கொண்டாய் –

6-வ்ருஷபம் காசு கொடுத்து வாங்கி விட்டால் நம் வீட்டையே நாடி வரும் -பக்திக்ரீதோ ஜநார்த்தனா-நம்மையே நாடி நிற்பன் -எங்கும் பக்க நோக்கம் அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே -கனிவார் வீட்டின்பமாய் இருப்பவன் —

7-வ்ருஷபம் பிறருக்கு உழைப்பதையே இயல்பாக கொண்டது -இவனும் தூது செல்வதும் தேர் பாகனாய் நிற்பதுவும் மனிசர்க்காய் நாட்டில் பிறந்து படாதன பட்டும்
ந தே ரூபம் ந சாகாரோ நா யுதானி ந்சாச்பதம் ததாபி புருஷாகாரோ பக்தாநாம் த்வா பிரகாசசே -என்றும்
இமௌ ஸ்ம முநிசார்த்தூல கின்கரௌ சமுபச்திதௌ ஆஜ்ஞாபய யதேஷ்டம் வை சாசனம் கரவாவிகிம் –

8- வ்ருஷபம் பாரத்தை வஹிக்கும் -இவனும் பக்தர் யோக ஷேமங்களை வஹிப்பன் -யோக ஷேமம் வஹாமி அஹம் -ஸ்ரீ கீதை-

9-வ்ருஷபம் எத்தனை அடி பட்டாலும் லஷ்யம் பண்ணாது -இவன் அடிபட்டதும் மகாபாரதம் இ றே–ஆங்கு ஒரு நாள் ஆய்ப்பாடி –தீரா வெகுளியளாய்ச் சிக்கென ஆர்த்து அடிப்ப -ஆரா வயிற்றினோடு ஆற்றாதான் –

10-வ்ருஷபம் நிலம் உழ சாதனம் -இவனும் பக்தி உழவன்-தம் த்வாம் ஷேமக்ருஷீவலம் ஹலதரம் -பட்டர் -பக்தி யாகிற பயிருக்கு நெஞ்சு விளை நிலம்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி நம் கண்ணன் -பெரும் பாழில் ஷேத்ரஜ்ஞன் பெருஞ்செய் –

11- வ்ருஷபம் நல்ல வழிகளில் நன்றாக ஓடும் -சேற்று நிலம் கண்டால் தளரும் -இவனும் நன்னெறி நின்றவர்கள் பக்கல் விரைந்து கார்யம் செய்வான்
மாய வான் சேற்று அள்ளலில் படிந்தவர்கள் இடம் தளரச் தோன்ற இருப்பன் —

———————————————————————————————————————————————–

தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டு /வண்டுகளோ வம்மின் /அறுகால சிறு வண்டே தொழுதேன் உன்னை -என்று அவனையும் ஆச்சார்யர்களையும் வண்டாகச் சொல்வர்

1-வண்டு சாரக்ராஹி -போதில் கமல வன்னெஞ்சம் -பக்தாநாம் யத் வபுஷி தஹரம் பண்டிதம் புண்டரீகம் -படிந்து சாரத்தை கவர்ந்து களிப்பவன்-

2-வண்டுக்கு பத்ம அபி நிவேசம் உண்டு இவனுக்கும் பத்ம அபி நிவேசம் உண்டு-பத்மம் தாமரெஐ பத்மை பிராட்டி

3-சாகா சஞ்சாரம் உடையது வண்டு சாகை கிளை வேதம்

4-வண்டு செவிக்கு இன்பமாக பாடும் -இவனும் அப்படியே குழலின் ஓசை செவியைப் பற்றி வாங்க —

5-வண்டின் ஜாதி வேட்டு வேளாண் குளவி தன்னிறம் ஆக்கும் -இவனும் பொருள் அல்லாத என்னை பொருளாக்கி அடிமை கொண்டான்
தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்கட்கு தம்மையே ஒக்க அருள் செய்வான்

6-வண்டு சோலைகளிலே சுழலும்
இவனும் வண்டினம் முரலும் சோலை –அண்டர் கோன் அமரும் சோலை –ஆராமம் சூழ்ந்த அரங்கம் முதலான திருப்பதிகளிலே அனுரக்தன் –

7-வண்டு மதுவைப் பருக தென்னா என்று முரலும் -தென்னா தென் வென்று வண்டு முரல் -தொண்டர்களின் அமுத வாக்கைப் பருகி -தென்னா என்று தெகுடாடுகிறான்
பண்ணார் பாடலின் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடித் தென்னா வென்னும் என் அம்மான் திருமால் இரும் சோலை யானே —

——————————————————————————————————–

நிதியே திரு நீர்மலை நிலத் தொத்தே –நிதியினை பவளத் தூணை –வைத்த மா நிதியம் மது சூதனன் –அந்தர் ஹிதோ நிதி ரசி த்வம்–ஸ்ரீ கூரத் ஆழ்வான் மயானி கூடம் அநபாய மகா நிதிம் த்வாம் -ஸ்ரீ தேசிகன் –

1-நிதி கண்ணுக்கு புலப்படாதபடி மறைந்து இருக்கும் -இவனும் கண் காண நிற்கில் ஆணை இட்டு விலக்குவார்கள் என்று கண்ணுக்கு தோற்றாதபடி மறைந்து நிற்கும் –
இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய் -கரந்து எங்கும் பரந்துளன் –கட்கிலி யாய் இருப்பன்

2-மறைந்து கிடக்கும் நிதி சில பாக்ய சாலிகளுக்கே புலப்படும் -யானே தவம் செய்தேன் –கோர மா தவம் செய்தனன் கொல்அறியேன் -லப்யோசி புண்ய புருஷை இதரைர் துராப -ஸ்ரீ கூரத் ஆழ்வான்

3-ஒரு வகை சித்த அஞ்சனம் அணிதவர்களுக்கு கண்ணுக்கு புலப்படுவான் -பக்த்யா சாஸ்தராத் வேதமி ஜனார்த்தனம் -சஞ்சயன் த்ருஸ்தராஷ்திரன் இடம் காட்டினான் –

4-நிதியானது தன்னைப் படைத்தவர்களை -த்ருணீக்ருத விரிஞ்சாதி நிரங்குச விபூதிகர்கள் ஆக்கி ஆனந்த பரம காஷ்டையில் கொண்டு வைக்கும் –
உகந்து உகந்து உள் மகிழ்ந்து குழையுமே –தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே —

5- நவ நிதி பிரசித்தம் -நவ ஒன்பது புதியது -எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தொறும் அப் பொழுதைக்கு அப்பொழுது எனக்கு ஆராவமுதமே -நவ நவமாகத் தோற்றுவன்

6-நிதி எவ்வளவு அனுபவிக்கப் பட்டாலும் கொள்ளக் கொள்ள மாலாததாய் அஷய்யமாய் இருக்கும் -இவனும் எத்தனை ஊழி காலம் அனுபவிக்கப் பட்டாலும் மேன்மேலும் பெருகிச் செல்வன் –

—————————————————————————————-

யசோதை இளம் சிங்கம் –சிற்றாயர் சிங்கமே –

1- சிம்ஹம் மிருகங்களில் ராஜா -பாரளந்த பேரரசே எம் விசும்பரசே –இவனே ராஜாதி ராஜன் –

2-காடுகளிலே திரியும் -ப்ருஹ தாரண்யகம் போன்ற உபநிஷத்துக்களில் உலாவுவான் –

3-சிம்ஹம் மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்தது உறங்கும் –தென்னன் உயர் பொருப்பு தெய்வ வடமலை திருவத்தி மலை களிலே உகந்து வசிப்பான்
அணி மணி சேர் துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் -நீளா துங்கஸ் தனம் -இத்யாதி –

4- சிம்ஹம் ஒருவராலும் அடக்க முடியாதே இருக்கும் -தன்னைப் பழக்கிக் கொண்டு இருக்கும் சிலருக்கு சர்வாத்மநா விதேயமாய் இருக்கும்
இவனும் பிறர்களுக்கு அறிய வித்தகன் -பத்துடை அடியவர்களுக்கு எளியவன்
சேநேயோ உபயோர் மத்யே ரதம் ஸ்தாபாய மே அச்யுத -அர்ஜுனன் நியமிக்கும் படி பவ்யனாய் இருப்பன் –

5-கம்பீர நடை நடக்கும் -கானகம் படி உலாவி உலாவி கரும் சிறுக்கன் –சிம்ஹ விக்ராந்த மாமினம் நடைச் சக்ரவர்த்து பிடிக்கலாம் படி நடை அழகு உடையவன் –
ராமே பிரமாதம் மா கார்ஷீ புத்திர ப்ராதரி கச்சதி -ஸ்ரீ சுமுத்ரா தேவி இளைய பெருமாளை நடை அழகில் கண் வையாமல் கைங்கர்யம் செய அறிவுறுத்தினாள்-

6-சிம்ஹம் மத யானைகளை அவலீலை யாக தொலைத்து விடும் -இவனும் மது கைடப ஹிரண்ய ஹிரண்யாஷ ராவண கும்பகர்ண ஹம்ச சிசுபாலாதிகளை -மத யானைகளை கிள்ளிக் களைந்தவன் –

—————–——————————————————–————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ நின்ற திருத்தாண்டகம்

November 22, 2025

சைவ வேதம் என்று போற்றக் கூடிய பன்னிரு திருமுறைகளில், திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய தேவாரத்தில், ” நின்ற திருத்தாண்டகம் ” எனும் பகுதி வடமொழியில் அமைந்த ஸ்ரீ ருத்ரத்தின் தமிழின் நேர் வடிவம் என்று ஆய்வாளர்கள் மதிக்கின்றார்கள்.

இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி
இயமான னாயெறியுங் காற்று மாகி
அருநிலைய திங்களாய் ஞாயி றாகி
ஆகாச மாயட்ட மூர்த்தி யாகிப்
பெருநலமுங் குற்றமும் பெண்ணும் ஆணும்
பிறருருவுந் தம்முருவுந் தாமே யாகி
நெருநலையாய் இன்றாகி நாளை யாகி
நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே.

பெரிய பூமியாகியும், நீராகியும், தீயாகியும், எறியும் காற்றாகியும், ஆகாயமாகியும், ஞாயிறாகியும், அழிவில்லாத நிலையையுடைய திங்களாகியும், இயமானனாகியும் இங்ஙனம் அட்ட மூர்த்தியாகியும், பெருமையுடையதாகிய நன்மையும், சிறுமை உடையதாகிய குற்றமும், பெண்ணும், ஆணும் ஏனைய தேவருடைய வடிவங்களும் அருவம், உருவம், அருவுருவம் என்னும் தம் மூவகைத் திருமேனிகளும் தாமே ஆகியும், நேற்று ஆகியும், இன்று ஆகியும், நாளை ஆகியும் நீண்ட செஞ்சடையுடைய எம்பெருமான் நின்றவாறு வியக்கத் தக்கதாகும்.

மண்ணாகி விண்ணாகி மலையு மாகி
வயிரமுமாய் மாணிக்கந் தானே யாகிக்
கண்ணாகிக் கண்ணுக்கோர் மணியு மாகிக்
கலையாகிக் கலைஞானந் தானே யாகிப்
பெண்ணாகிப் பெண்ணுக்கோ ராணு மாகிப்
பிரளயத்துக் கப்பாலோ ரண்ட மாகி
எண்ணாகி யெண்ணுக்கோ ரெழுத்து மாகி
யெழுஞ்சுடரா யெம்மடிகள் நின்ற வாறே.

மண் ஆகியும், விண் ஆகியும், மலையாகியும் வயிரமாகியும், மாணிக்கமாகியும், கண்ணாகியும், கண்ணுக்குப் பொருத்தமான மணியாகியும், நூல் ஆகியும் நூலறிவாகியும் பெண் ஆகியும் பெண்ணுக்கு ஏற்ற ஒப்பற்ற ஆணாகியும், பிரளலயத்துக்கு அப்பால் உள்ள அண்டமாகிய சுத்த மாயாபுவனம் ஆகியும் எண்ணுதற்குப் பொருந்திய பொருள் ஆகியும் அவ்வெண்ணத்தை வெளிப்படுத்தும் ஒப்பற்ற எழுத்தாகியும் தோன்றி விளங்கும் ஒளியாகியும், எம்பெருமான் நின்றவாறு வியக்கத்தக்கதாகும்.

கல்லாகிக் களறாகிக் கானு மாகிக்
காவிரியாய்க் கால்ஆறாய்க் கழியு மாகிப்
புல்லாகிப் புதலாகிப் பூடு மாகிப்
புரமாகிப் புரமூன்றுங் கெடுத்தா னாகிச்
சொல்லாகிச் சொல்லுக்கோர் பொருளு மாகிச்
சுலாவாகிச் சுலாவுக்கோர் சூழ லாகி
நெல்லாகி நிலனாகி நீரு மாகி
நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்ற வாறே.

மலையாகியும் களர்நிலமாகியும் காடாகியும், ஆறாகியும், வாய்க்காலாகிய வழியாகியும், கடற்கரைக்கழியாகியும், புல்லாகியும், புதராகியும், பூடு ஆகியும், நகர் ஆகியும், புரம் மூன்றிற்கும் அழிவாகியும் சொல்லாகியும், சொல்லிற்குப் பொருந்திய பொருள் ஆகியும், போக்கு வரவு ஆகியும், அப்போக்குவரவுக்கு வேண்டிய இடம் ஆகியும் நிலனாகியும், நீராகியும், நெல்லாகியும், நெடிய ஒளிப் பிழம்பாகியும் எம்பெருமான் நெடுகப்பரவி நின்றவாறு வியக்கத் தக்கதாகும்.

காற்றாகிக் கார்முகிலாய்க் காலம் மூன்றாய்க்
கனவாகி நனவாகிக் கங்கு லாகிக்
கூற்றாகிக் கூற்றுதைத்த கொல்களிறு மாகிக்
குரைகடலாய்க் குரைகடற்கோர் கோமா னுமாய்
நீற்றானாய் நீறேற்ற மேனி யாகி
நீள்விசும்பாய் நீள்விசும்பி னுச்சி யாகி
ஏற்றானா யேறூர்ந்த செல்வ னாகி
யெழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே.

காற்றாகியும், கரியமுகிலாகியும், இறப்பு நிகழ்வு எதிர்வெனக் காலம் மூன்றாகியும், கனவாகியும், நனவாகியும், இரவாகியும், நாளின் மற்றொரு கூறாகிய பகலாகியும் அல்லது இயமனால் வரும் சாவு ஆகியும், இயமனை உதைத்துக் கொன்ற களிறாகியும், ஒலிக்கும் கடலாகியும், அக்கடற்குத் தலைவனாம் வருணன் ஆகியும், நீறணிந்த கோலத்தன் ஆகியும், நீறணிதற்கு ஏற்ற வடிவத்தன் ஆகியும், நீண்ட ஆகாயம் ஆகியும், அவ்வாகாயத்து உச்சியாகியும், உலகத்தின் தொழிற்பாடுகள் எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டவனாகியும், இடபத்தை ஊரும் தலைவனாகியும் தோன்றி விளங்கும் ஒளியாகியும் எம்பெருமான் நின்றவாறு வியக்கத்தக்கதாம்.

தீயாகி நீராகித் திண்மை யாகித்
திசையாகி அத்திசைக் கோர்தெய்வ மாகித்
தாயாகித் தந்தையாய்ச் சார்வு மாகித்
தாரகையும் ஞாயிறுந்தண் மதியு மாகிக்
காயாகிப் பழமாகிப் பழத்தில் நின்ற
இரதங்கள் நுகர்வானுந் தானே யாகி
நீயாகி நானாகி நேர்மை யாகி
நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்ற வாறே.

தீயின் வெம்மையாகியும், நீரின் தண்மையாகியும், நிலத்தின் திண்மையாகியும், திசைகள் ஆகியும், அத்திசைகள் ஒவ்வொன்றிற்கும் உரிய தெய்வமாகியும், தாயாகியும், தந்தையாகியும், சார்தற்குரிய பற்றுக்கோடாகியும், நாண் மீனாகியும், ஞாயிறாகியும், குளிர் மதியமாகியும், காயாகியும், பழங்கள் ஆகியும், பழத்தில் நின்ற சுவைகள் ஆகியும், அச்சுவைகளை நுகர்பவன் ஆகியும் தன்மை முன்னிலை படர்க்கை என்னும் மூன்று இடங்கள் ஆகியும் நுண்மை ஆகியும் நீண்ட ஒளிப்பிழம்பாகியும் எம்பெருமான் பரவி நின்றவாறு வியக்கத்தக்கதாகும்.

அங்கமா யாதியாய் வேத மாகி
அருமறையோ டைம்பூதந் தானே யாகிப்
பங்கமாய்ப் பலசொல்லுந் தானே யாகிப்
பால்மதியோ டாதியாய்ப் பான்மை யாகிக்
கங்கையாய்க் காவிரியாய்க் கன்னி யாகிக்
கடலாகி மலையாகிக் கழியு மாகி
எங்குமாய் ஏறூர்ந்த செல்வ னாகி
எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே.

ஆறு அங்கங்கள் ஆகியும், ஆதியாய வேதங்கள் ஆகியும், அரிய மந்திரங்கள் ஆகியும், ஐம்பூதங்களின் தலைவராய தேவர்கள் ஆகியும், புகழ்ச் சொற்களேயன்றி இகழ்ச் சொற்களும் ஆகியும், வெள்ளிய மதி ஆகியும், உலகிற்கு முதல் ஆகியும், வினையாகியும், கங்கை, காவிரி, கன்னி போன்ற தீர்த்தங்களுக்குரிய தேவர்கள் ஆகியும், கடலாகியும், மலையாகியும், கழி ஆகியும், எங்கும் நிறைபொருளாகியும் ஏறூர்ந்த தலைவன் ஆகியும், தோன்றி விளங்கும் ஒளியாகியும் எம்பெருமான் நின்றவாறு வியக்கத்தக்கதாம்.

மாதா பிதாவாகி மக்க ளாகி
மறிகடலும் மால்விசும்புந் தானே யாகிக்
கோதா விரியாய்க் குமரி யாகிக்
கொல்புலித்தோ லாடைக் குழக னாகிப்
போதாய மலர்கொண்டு போற்றி நின்று
புனைவார் பிறப்பறுக்கும் புனித னாகி
யாதானு மெனநினைந்தார்க் கௌதே யாகி
அழல் வண்ண வண்ணர்தாம் நின்ற வாறே.

மாதாபிதா மக்கள் ஆகியும், அலை எழுந்து மடங்கும் கடலும் பெரிய ஆகாயமும் ஆகியும், கோதாவிரி குமரிகள் ஆகியும், கொல்லும் புலியினது தோலை ஆடையாகக் கொண்ட அழகன் ஆகியும், உரிய பொழுதில் மலர்வதாகிய பூக்கொண்டு புனைந்து புகழ்ந்து நிற்பாருடைய பிறப்பறுக்கும் புனிதன் ஆகியும். ‘யாது நிகழினும் நிகழ்க’ எனக் கவலையற்றுத் தன்னையே நினைவார்க்கு எளிய பொருள் ஆகியும் நெருப்பின் நிறம் போலும் நிறமுடைய எம்பெருமான் நின்றவாறு வியக்கத்தக்கதாம்.

ஆவாகி ஆவினில் ஐந்து மாகி
அறிவாகி அழலாகி அவியு மாகி
நாவாகி நாவுக்கோர் உரையு மாகி
நாதனாய் வேதத்தி னுள்ளோ னாகிப்
பூவாகிப் பூவுக்கோர் நாற்ற மாகிப்
புக்குளால் வாசமாய் நின்றா னாகித்
தேவாதி தேவர் முதலு மாகிச்
செழுஞ்சுடராய்ச் சென்றடிகள் நின்ற வாறே.

பசுவும் பசுவிடத்துத் தோன்றும் ஐம்பொருளும் ஆகியும் வேள்விக்குரியன அறியும் அறிவும், வேள்வித்தீயும், அத்தீயுட்பெய்யும் உணவும் ஆகியும், நாவும் நாவுக்கு ஏற்ற உரையும் ஆகியும், நாதமும் வேதத்தின் பொருளும் ஆகியும், பூவும், அப்பூவிற்குரிய ஒப்பற்ற நாற்றமும் ஆகியும், நாற்றம் பூவிற்குள் ஒன்றாய் நிற்கும் ஒற்றுமை நிலையாகியும், தேவர்களும் தேவர்களின் தலைமைத் தேவரும் ஆகியும், செழுஞ்சுடராய் எம்பெருமான் பரவி நின்றவாறு வியக்கத்தக்கதாகும்.

நீராகி நீளகலந் தானே யாகி
நிழலாகி நீள்விசும்பி னுச்சி யாகிப்
பேராகிப் பேருக்கோர் பெருமை யாகிப்
பெருமதில்கள் மூன்றினையு மெய்தா னாகி
ஆரேனுந் தன்னடைந்தோர் தம்மை யெல்லாம்
ஆட்கொள்ள வல்லவெம் மீச னார்தாம்
பாராகிப் பண்ணாகிப் பாட லாகிப்
பரஞ்சுடராய்ச் சென்றடிகள் நின்ற வாறே.

பெரிய மதில்கள் மூன்றையும் எய்தானும், தன்னையடைந்தார் யாராயினும் அவரெல்லாரையும் ஆட்கொள்ளவல்லானும் ஆகிய எம் ஈசன் ஆம் அடிகள் நீரின் சுவையும், நீள அகலங்களும் ஆகியும், புகழும் புகழுக்குப் பொருந்திய ஒப்பற்ற பெருமையும் ஆகியும், பூமியின் பொறைக்குணமும், பண்ணின் இனிமைப் பண்பும், அப்பண்புடைய பாடலும் ஆகியும், மேலான ஒளியாகியும் விளங்கி நின்றவாறு வியக்கத்தக்கதாம்.

மாலாகி நான்முகனாய் மாபூ தமாய்
மருக்கமாய் அருக்கமாய் மகிழ்வு மாகிப்
பாலாகி யெண்டிசைக்கும் எல்லை யாகிப்
பரப்பாகிப் பரலோகந் தானே யாகிப்
பூலோக புவலோக சுவலோ கமாய்ப்
பூதங்க ளாய்ப்புராணன் தானே யாகி
ஏலா தனவெல்லாம் ஏல்விப் பானாய்
எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே.

மாலும், நான்முகனும் ஆகியும், பெரும்பூதங்கள் ஆகியும், பெருக்கமும், சுருக்கமும், மகிழ்ச்சியும், ஆகியும், எட்டுத்திசைக் கூறும் அவ்வெட்டுத் திசைகளுக்கும் உரிய எல்லையும் ஆகியும், பரப்பும் பரலோகமும் ஆகியும், பூலோக புவலோக சுவலோகங்களும், அவற்றின் உட்பட்ட அண்டங்களும் ஆகியும், புராணனுக்குரிய பழமையாகியும், தான் இன்றித் தாமாக நடைபெறாத சட உலகங்களும், அவைகளை நடைபெறுவித்தற்கு அமைந்தவனும் ஆகியும், எழும் ஒளிப்பிழம்பாகியும், எம்பெருமான் விளங்கி நின்றவாறு வியக்கத்தக்கதாகும்.


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ஈட்டில் -பல சுருதி பாசுரங்களின் வியாக்கியானதொகுப்பு–-ஸ்ரீ திருவாய் மொழியின் தசாவதாரம் -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்–

November 21, 2025

கர விசும்பு எரி வளி நீர்நிலம் இவை மிசை
வரன் நவில் திறல் வலி அளி பொறையாய் நின்ற
பரன் அடி மேற் குருகூர்ச் சடகோபன் சொல்
நிரல் நிறை ஆயிரத்து இவை பத்தும் வீடே–1-1-11-இவை பத்தும் பரன் அடிமேல் சமர்ப்பிக்கப்பட்டன-வீட்டை விளைக்கும் என்றபடியாய், மோக்ஷத்தைக் கொடுக்கும்-

சேர்த் தடத் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
சீர்த் தொடை ஆயிரத்து, ஓர்த்த இப் பத்தே–1-2-11-சேதனர்க்கு ஹிதமாவது – நன்மையாவது ஏது என்று நிரூபித்துச் சொல்லப்பட்டவை;-ஆகையாலே எப்போதும் ஓரப்படுவது –

அமரர்கள் தொழுது எழ அலை கடல் கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளங் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அமர்சுவை ஆயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார்
அமரரோடு உயர்விற் சென்று அறுவர் தம் பிறவி அஞ் சிறையே
–1-3-11-ஸ்ரீ நித்திய ஸூரிகளோடு ஒத்த உயர்வினையுடையராய்த் தங்களுடைய பிறவியாகிற விலங்கு அறப் பெறுவர்கள்-ஸ்ரீ ஆதி வாஹிகரோடே விரஜையிலே சென்று ஸூஷ்ம சரீரமும் விதூநம் நீங்கப் பெறுவர்-த்யக்த்வா தேகம் புநர் ஜென்ம நைதி மா மேதி-அவதாரத்தின் எளிமையினைக் கூறுகின்ற இப் பத்துப் பாசுரங்களையும் கற்றவர்கள்
‘அறுவர் தம் பிறவி அஞ்சிறையே’
என்கிறார்.

அளவியன்ற ஏழ் உலகத்தவர் பெருமான் கண்ணனை
வள வயல் சூழ் வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்துரைத்த
அளவியன்ற அந்தாதி ஆயிரத்துள் இப் பத்தின்
வள வுரையால் பெறலாகும் வானோங்கு பெரு வளமே–1-4-11-
சப்த மாத்திரம் அப்யஸிக்கவே -‘சொற்களை மாத்திரம் கற்றலே அமையும், திருநாட்டினைப் பெருகைக்கு,-சங்குசிதமான- குறைவான நிலை போய், பரமபதத்தில் சென்று, தன் ஸ்வ ரூபத்தைப் பெற்று –விஸ்த்ருதன் -விரிவையடைந்தவன் ஆகையாகிற எல்லை இல்லாத செல்வத்தைப் பெறலாம்,

மாலே ! மாயப் பெருமானே! மா மாயவனே ! என்று என்று
மாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே–1-5-11-
அஞ்சிறைய மடநாராய்’ என்னும் திருவாய்மொழியில் தூது விட்டு, ஸ்ரீ இறைவன்-சம்ஸ்லேஷ உன்முகன் ஆனவாறே வந்து காட்சி அளித்தவாறே அயோக்கியன் -‘தாழ்ந்தவன்’ என்று அகன்று படும் துக்கம் இல்லை.

மாதவன் பால் சட கோபன் தீ தவம் இன்றி உரைத்த
ஏதமில் ஆயிரத்து இப் பத்து ஓத வல்லார் பிறவாரே–1-6-11-உபதேசம் இல்லாமலே நிரபேஷமாக- -சம்சார சம்பந்தம் அற்று ஸ்ரீ பகவானுடைய அனுபவமே யாத்திரையாம்படி இருக்கிறவர்களோடே கூடி அனுபவிக்கப் பெறுவர்கள்

குடைந்து வண்டு உண்ணும் துழாய் முடியானை
அடைந்த தென் குருகூர்ச் சடகோபன்
மிடைந்த சொல் தொடை ஆயிரத்து இப்பத்து
உடைந்து நோய்களை ஓடு விக்குமே–1-7-11-
பிராப்தி பிரதிபந்தகங்களை பலத்திற்குத் தடையாக உள்ளவற்றை உன்மீலிதமாக்கும்- வேரோடு அழித்து விடும்-சிதறுண்டு தனித் தனியே ஓடச் செய்யும் வேறு இடத்திற் சென்று சேரினும் –மறுமுட்டப் பெறாதபடி-தத்தம் பயன்களைக் கொடுப்பதற்குத் தகுதியுடையன’ அல்லாதனவாகக் கெடும்-

நீர் புரை வண்ணன், சீர் சடகோபன்
நேர்தல் ஆயிரத்து, ஓர்தல் இவையே–1-8-11-அவனுடைய ஆர்ஜவ குணத்தை ஆராய்ந்து சொன்ன பத்து- சம்சாரிகளுடைய செவ்வைக் கேட்டை நினைந்து, அத்தால் இழக்க வேண்டாதபடி அவனுடைய ஆர்ஜவ குணத்தை நினைத்து அருளிச் செய்யப் பட்டவை – சம்சாரிகள் ஓரப்படுமவை என்று கூறலுமாம்.-

உச்சியுள்ளே நிற்கும் தேவ தேவருக்குக் கண்ண பிராற்கு
இச்சையில் செல்ல யுணர்த்தி வண் குருகூர்ச் சடகோபன்
இச் சொன்ன வாயிரத்துள் இவையுமோர் பத்து எம்பிராற்கு
நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள் கழல் சென்னி பொருமே–1-9-11–பொரு
-என்று ஒப்பாய் ஒப்பாவது -சேருகையாய் -சேரும் என்றபடி –தனக்குப் பாங்கான சமயத்தில் ஒரு கால் விண்ணப்பம் செய்ய நாள் தோறும் ஆசாலேசம் உள்ளார் இடத்திலே செல்ல வளரும் திருவடிகள் சென்னியோடே சேரும்-ஸ்ரீ ஆழ்வார் க்ரமத்திலே உச்சி உளானே என்ற பேறு இது கற்றார்க்கு முதல் அடியிலே உண்டாம்

மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர்
அணியைத் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
பணி செய் ஆயிரத்துள் இவை பத்துடன்
தணிவிலர் கற்பரேல் கல்வி வாயுமே–1-10-11-
தணிவு – முயற்சி அற்று இருத்தல்;
அதாவது, ‘வரில் போகடேன், கெடில் தேடேன்’ என்றிருக்கை அன்றி, சிரத்தை மாறாமல் கற்பராகில் -நிரதிசய – தன்னின் மேம் பட்டது இல்லாத புருஷார்த்தமான ஸ்ரீ பகவத் கைங்கரியத்தைப் பெறுவர்-‘ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு’ என்கிறபடியே,-ஞானமாகில் பகவத் விஷயத்தைப் பற்றியல்லது இராமையாலே, இதனைக் கற்க,-இதற்குப் பலமாகத் தொண்டினை இது தானே தரும்.-இனி, இதற்குக் கல்வி தானே பயன்’ என்று பொருள் கூறலும் ஒன்று.

சோராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்
ஓராயிரம் சொன்ன அவற்றுள் இவை பத்தும்
சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் திண்ணனவே–2-1-11-
இவ்விருப்பை விட்டுக் கண்ணால் கண்டார் அடங்கலும் ஸ்ரீ பகவானைப் பெற்றமையால் களிக்கும் நித்திய விபூதியை விடாமல் நித்திய அநுபவம் பண்ணப் பெறுவர்கள்.‘கண்டீர்’ என்று கையெழுத்துக் கூப்பிடுகிறார்.‘திண்ணன்’ என்றது, -ஸூ நிச்சிதம் -ஐயமின்மையைக் குறிக்க வந்தது.

ஏத்த ஏழுலகும் கொண்ட கோலக்
கூத்தனைக் குருகூர்ச் சடகோபன் சொல்
வாய்த்த ஆயிரத்துள் இவை பத்துடன்
ஏத்த வல்லவர்க்கு இல்லை ஓர் ஊனமே–2-2-11-
இவ்வாத்துமாவுக்கு ஊனமாவது –அபர தேவதைகள் பக்கல் – இறைவர் அல்லாதாரை- ஸ்ரீ பரத்வ புத்தி பண்ணுகையும் இறைவர் என்று எண்ணுதலும், ஸ்ரீ பர தேவதை பக்கல் -ஸ்ரீ இறைவனை -பரத்வ பிரதிபத்தி பண்ணாமையும் -ஸ்ரீ இறைவன் என்று எண்ணாமையும். இப்படி வரக்கூடிய ஊனம் இது கற்றார்க்கு இல்லை

குழாங்கொள் பேர் அரக்கன் குலம் வீய முனிந்தவனைக்
குழாங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்து உரைத்த
குழாங்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் உடன் பாடிக்
குழாங்களாய் அடியீர்! உடன் கூடி நின்று ஆடுமினே–2-3-11-
அவன் பக்கலிலே நிக்ஷிப்த பரராய் இருக்கிற நீங்கள் நால்வர் இருவர் இங்கிருக்கும் நான்கு நாளும் தள்ளத் தக்க அர்த்த காமங்களைப் பற்றிச் ‘சீறு, பாறு’ என்னாதே, நம் பெரிய குழாத்திலே போய்ப் புகுமளவும் ஒரு மிடறாய் அனுபவிக்கப் பாருங்கள்.-ஸ்ரீ நம்பிள்ளை ஸ்ரீ நஞ்சீயரைப் பார்த்து, ‘இதர உபாயங்களுக்கு அனுஷ்டாதாக்கள் பலராய் இருக்க, இதற்கு அநுஷ்டாதாக்கள் மிகச் சிலராய் இருத்தற்குக் காரணம் யாது?’ என்று கேட்க, ‘உலகத்தில் இருந்ததே குடியாக அனைவரும் சமுசாரிகளாக இருக்க, அதில் நாலிரண்டு பேர் உத்தம ஆஸ்ரமிகளானால் சமுசாரிகளுக்கு ஒரு உத்கர்ஷமும் சந்யாசிகளுக்கு ஒரு அபகர்ஷமுமே உண்டோ?
சுவர்க்க அனுபவத்துக்கு ஜ்யோதிஷ்டோமம் முதலிய யாகங்களைச் சாதனமாகச் சாஸ்திரங்கள் விதிக்கின்றன; ஓர் ஊரில் ஒரவனன்றோ யாகம் செய்தான் என்று கேள்விப்படுகிறோம்? ஆதலால், இதற்கோ உமக்கு ஆள் பற்றப் போகிறது?’ என்று ஸ்ரீ நம்பிள்ளைக்கு ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்தார் –

வாட்டம் இல் புகழ் வாமனனை இசை
கூட்டி, வண் சடகோபன் சொல் அமை
பாட்டு ஓர் ஆயிரத்து இப்பத்தால் அடி
சூட்ட லாகும் அம் தாமமே–2-4-11
-பித்ரு தனம் -தமப்பன் செல்வம் புத்திரனுக்குக் கிடைக்க வேண்டியது முறையாமாறு போன்று, இவ் வாற்றாமையால் வந்த கிலேசம் இது கற்றவர்களுக்கு அனுபவிக்க வேண்டாமல்,‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ!’ என்று இவர் ஆசைப்பட்டபடியே அத்திரளிலே போய்ப் புக்கு அனுபவிக்கப் பெறுவர்-‘சூட்டு நன்மாலை’ப்படியே திருமாலை சாத்தி அடிமை செய்யப் பெறுவார்கள்

கூறுதல் ஒன்று ஆராக் குடக் கூத்த அம்மானைக்
கூறுதலே மேவிக் குருகூர்ச் சடகோபன்
கூறின அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
கூறுதல் வல்லார் உளரேல் கூடுவர் வைகுந்தமே–2-5-11
-‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்றுகொலோ’ என்று ஆசைப்பட்டுப் பெறாது‘ஆடியாடி’யாய் விசனப் படாமல், இப் பாசுர மாத்திரத்தைச் சொல்லவே நான் பிரார்த்தித்துப் பெற்ற பேறு பெறுவார்கள்-இவருடைய அனுபவத்தைப் பரமபதத்திலே அனுபவிக்கப் பெறுவர்.-

கண்ணித் தண் அம் துழாய் முடிக் கமலத் தடம் பெருங் கண்ணனைப் புகழ்
நண்ணித் தென் குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன
எண்ணில் சோர்வு இல் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசை யொடும்
பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே!–2-6-11-
அவர்கள் யாரேனுமாகவுமாம், குலம் சரணம் கோத்திரம் முதலானவைகள் -அப்ரயோஜம் -பயன் அற்றவைகள்;‘விண்ணப்பஞ் செய்வார்கள்’ என்னுமாறு போன்று, இத் தன்மையாலே அவர்கள் ஸ்ரீ பகவதீயர் -ஸ்ரீ பகவானுக்கு உரிமைப்பட்டவர்கள்.

வண்ண மாமணிச் சோதியை அமரர் தலை மகனைக்
கண்ணனை நெடு மாலைத் தென் குருகூர்ச் சடகோபன்
பண்ணிய தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பன்னிரண்டும்
பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு அண்ணல் தாள் அணைவிக்கும–2-7-13-
ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளோடே சேர்த்து விடும்;-‘இத் திருவாய்மொழியின் சம்பந்தந்தானே ஸ்ரீ கேசவன் தமராக்கி விடும்,‘

கண்டலங்கள் செய்ய கருமேனி யம்மானை
வண்டலம்பும் சோலை வழுதி வளநாடன்
பண்டலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
விண்டலையில் வீற்று இருந்து ஆள்வர் எம்மா வீடே –2-8-11-
இத் திருவாய் மொழியில் சொன்ன முக்த ப்ராப்ய போகத்தைப் பெறுவார் -அங்குள்ளார் தங்கள் ஆஜ்ஞ்ஞா அநு வர்த்தனம் பண்ணும் படியாகப் பெறுவார்-ஆத்மா லாபத்து அளவும் அன்றிக்கே பரம புருஷார்த்த லஷண மோஷத்தை ஆளப் பெறுவார்-

விடலில் சக்கரத்து அண்ணலை மேவல்
விடலில் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
கெடலில் ஆயிரத்துள் இவை பத்தும்
கெடலில் வீடு செய்யும் கிளர்வார்க்கே–2-9-11-
‘தனக்கேயாக வேணும்’ இவர் பிரார்த்தித்தபடியே இவ்வாத்மாவினுடைய ஸ்வரூபத்திற்குத் தகுதியான-அனுரூபமான பேற்றினைச் செய்து கொடுக்கும்.

பொருள் என்று இவ் உலகம் படைத்தவன் புகழ் மேல்
மருள் இல் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்து
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே–2-10-11-
அருளைக் கொண்டே ஸ்ரீ பரம் பொருளை நிரூபிக்க வேண்டி இருத்தலின், ‘அருளையுடையவன்’ என்கிறார்.
அது செய்யுமிடத்துச் சம்சார சம்பந்தத்தை வாசனையோடே போக்கித் திருவடிகளிலே சேர்த்து விடும்.-ஒரு ஞான லாபத்தைப் பண்ணித் தந்து விடுதலே அன்றி, அர்த்த கிரியாகாரியாய் இருக்குமாதலின், ‘முடித்தே’ என ஏகாரங் கொடுத்து அருளிச் செய்கிறார்-

வியப்பு ஆய வியப்பு இல்லா மெய்ஞ்ஞான வேதியனைச்
சயப் புகழார் பலர் வாழும் தடங்குருகூர்ச் சடகோபன்
துயக்கு இன்றித் தொழுது உரைத்த ஆயிரத்துள் இப் பத்தும்
உயக் கொண்டு பிறப்பு அறுக்கும் ஒலி முந்நீர் ஞாலத்தே–3-1-11–
அராஜகமான தேசத்திலே ராஜ புத்திரன் தலையிலே முடியை வைத்து விலங்கு வெட்டி விடுமா போலே , ஸ்ரீ அழகர் திருவடிகளிலே செய்யும் கைங்கர்யத்தில் அந்வயிப்பித்துப் பின்பு தத் விரோதியான சமுசார சம்பந்தத்தை அறுத்துக் கொடுக்கும் என்கிறார்,’

உயிர்கள் எல்லா உலகமும் உடையவனைக்
குயில் கொள் சோலைத் தென் குருகூர்ச் சடகோபன்
செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரத்துள் இப்பத்தும்
உயிரின் மேல் ஆக்கை ஊனிடை ஒழிவிக்குமே–3-2-11-
கட்டுவித்துக் கிடக்கிற அவித்தியை முதலானவைகளை வாசனையோடே போக்குவிக்கும்.-இவர்க்கு இப்போது உண்டாய்ப் போக்குவிக்குமென்கிறது அன்று;‘இந்நின்ற நீர்மை இனி யாமுறாமை’ என்ற போதே ஸ்ரீ ஈஸ்வரன் இவர்க்கு இது போவதாக நினைப்பிட்டான்.‘ஆயின், ‘பொல்லா ஆக்கையின் புணர்வினை யறுக்கலறா’ என்கிறது என்னை?’ எனின், பாதிதாநுவ்ருத்தியாலே அருளிச் செய்கிறார்.-ஆனாலும், இவர் கூப்பீட்டுக்கும் ஒரு பலன் வேண்டுமே?-இவரோடு சம்பந்த முடையவர்களுடைய சரீர சம்பந்தத்தை அறுத்துக் கொடுக்கும்.

தாள் பரப்பி மண் தாவிய ஈசனை
நீள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல்
கேழ் இல் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
வாழ்வர் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே–3-3-11-
ஸ்ரீ ஆழ்வார் பிரார்த்தித்த படியே ஸ்ரீ திருவேங்கடமுடையான் திருவடிகளிலே எப்பேர்ப்பட்ட அடிமைகளும் செய்யப்பெறுவர்,’-கைங்கரியத்தை மநோ ரதித்து விடுகை அன்றி இவருடைய மநோ ரதமே மநோ ரதமாக
கைங்கரியமாகிற சம்பத்தைப் பிராபித்து அனுபவிக்கப் பெறுவர்கள்.-இருந்ததே குடியாக எல்லாரும் பிரீதியோடே புகழ்வார்கள்,’ என்பார், ‘ஞாலம் புகழ வாழ்வர்’ என்கிறார்.-

கூடி வண்டு அறையும் தண் தார்க் கொண்டல் போல் வண்ணன் தன்னை
மாடு அலர் பொழில் குருகூர் வண் சடகோபன் சொன்ன
பாடல் ஓர் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார்
வீடு இல போகம் எய்தி விரும்புவர் அமரர் மொய்த்தே–3-4-11-
நித்ய கைங்கரியத்தைப் பெற்று, ஸ்ரீ அயர்வறும் அமரர்களாலே விரும்பப்படுவார்கள்,’-இவ்வுலகத்தே இருந்து வைத்தும் இப்படி இருப்பதொரு ஞான விசேஷம் பிறந்து அநுசந்திப்பதே!’என்று ஸ்ரீ ஆழ்வார் பக்கல் பண்ணின பிரேம அதிசயத்தாலே, அவருடைய பிரபந்தங்களைக் கற்றவர்களை, ஸ்ரீ சர்வேஸ்வரனை விட்டு இவர்களை மொய்த்து விரும்புவர்-நெருங்கி ஆதரிப்பார்கள்-

தீர்ந்த அடியவர் தம்மைத் திருத்திப் பணி கொள்ள வல்ல
ஆர்த்த புகழ் அச்சுதனை அமரர் பிரானை எம்மானை
வாய்ந்த வள வயல் சூழ் தண் வளம் குருகூர்ச் சட கோபன்
நேர்ந்த ஓர் ஆயிரத்து இப் பத்தும் அருவினை நீறு செய்யுமே–3-5-11-மஹாபாவத்தை இது தானே-நிஸ் சேஷமாக அடியோடு போக்கும்-ஸ்ரீ பகவானுடைய குணங்களைக் கேட்டால் விக்ருதாராகாமல் -வேறுபடாதே திண்ணியராய் இருக்கைக்கு அடியான மஹா பாவங்களைச் சாம்பல் ஆக்கும்.-

கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய்
மண் கொள் ஞாலத்து உயிர்க்கெலாம் அருள் செய்யும் வானவர் ஈசனைப்
பண் கொள் சோலை வழுதி வளநாடன் குருகைக் கோன் சடகோபன் சொல்
பண் கொள் ஆயிரத்து இப் பத்தால் பத்தராகக் கூடும் பயிலுமினே–3-6-11-ஸ்ரீ பரத்வ ஞானத்துக்கு அடியான -ஸூஹ்ருதம் -புண்ணியமாதல்,சாஸ்திர ஞானமாதல்,
ஸ்ரீ சதாச்சார்ய -நற்குருவின் உபதேசமாதல், ஸ்ரீ பகவானுடைய நிர்ஹேதுகத் திருவருளாதல் -ஸ்ரீ பகவத் கடாக்ஷம் –இவையனைத்தும் இல்லாதார்க்கும் ஸ்ரீ அர்ச்சாவதார சௌலப்யத்தை அநுசந்திக்கவே ஸ்ரீ பகவானிடத்தில் பத்தி உண்டாகக் கூடும் என்கிறார்.

அடி ஓங்கு நூற்றுவர் வீய அன்று ஐவர்க்கு அருள் செய்த
நெடியோனைத் தென் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அடி ஆர்ந்த ஆயிரத்துள் இவை பத்து,அவன் தொண்டர் மேல்
முடிவு ஆரக் கற்கில் சன்மம் செய்யாமை முடியுமே–3-7-11-
பாகவதசேஷத்வ ப்ரதிபாதகமான இத் திருவாய் மொழியைக் கற்றவர்கள், இப் புருஷார்த்தத்துக்கு விரோதியான சம்சாரத்தைக் கடப்பர்கள்,’

புலம்பு சீர்ப் பூமி யளந்த பெருமானை
நலங்கொள் சீர் நன் குருகூர்ச் சடகோபன் சொல்
வலங்கொண்ட வாயிரத்துள் இவையுமோர் பத்து
இலங்குவான் யாவரும் ஏறுவர் சொன்னாலே –3-8-11-
-சப்த மாத்ரத்தாலே இதில் பிரார்த்தித்த படியே அனுபவிக்கலான -பரமபதத்தைச் செல்லப் பெறுவர்-ச ஏகதா பவதி -என்றபடியே -அநேக சரீரங் களைப் பரிக்ரஹித்து அவ்வோ சரீரங்களிலும் கரணங்களும் ஒவ் ஒரு இந்த்ரியமும் மற்றவற்றை எல்லாம் விரும்பி அனுபவித்து பூர்ண அனுபவம் பண்ணலாம் படி தேசத்திலே பெறப் பெறுவர் 

ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் தனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து
ஏற்கும் பெரும் புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே–3-9-11-
இயல் மாத்திரத்தை அப்யசித்தார்களுக்கு பிறரைக் கவி பாட யோக்கியமான ஜென்மம் இல்லை,’ -ஸ்ரீ நித்ய ஸூரிகளைப் ‘பிறரைக் கவி பாடாதே கொண்மின்’ என்று கற்பிக்க வேண்டுவது இல்லை அன்றே?-பிறத்தலால் அன்றோ பிறரைக் கவி பாட வேண்டுகிறது?-பிறரைக் கவி பாடாதே கொண்மின் என்று கற்பிக்க வேண்டும்படியான தண்ணிய பிறவிகளிலே சேரமாட்டார்கள்.

கேடு இல் விழுப் புகழ்க் கேசவனைக் குருகூர்ச் சட கோபன் சொன்ன
பாடல் ஓர் ஆயிரத்துள் இவையும் ஒரு பத்தும் பயிற்ற வல்லார்க்கு அவன்
நாடும் நகரமும் நன்குடன் காண நலனிடை ஊர்தி பண்ணி
வீடும் பெறுத்தித் தன் மூ வுலகுக்கும் தரும் ஒரு நாயகமே–3-10-11–
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யில் -செல்வத்திலே நடத்தி,மேலே ஸ்ரீ பரமபதத்திலே சென்றால் தன் ஐஸ்வர்யம் -செல்வத்தை இவர்கள் இட்ட வழக்கு ஆக்கும்,’ -தன் ஐஸ்வர்யத்திலே அந்தர்பூதமாம் -அடங்கியதாகும் -படி பண்ணிக் கொடுக்கும் –-என்கிறார்.

அஃதே உய்யப் புகும் ஆறு என்று கண்ணன் கழல்கள் மேல்
கொய் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்
செய் கோலத்து ஆயிரம் சீர்த் தொடைப் பாடல் இவை பத்தும்
அஃகாமல் கற்பவர் ஆழ் துயர் போய் உய்யற் பாலரே–4-1-11-
அஃகல் – சுருங்கல்.-இத்திருவாய்மொழி பத்துப் பாசுரங்களையும் கற்றவர்கள் ஐஸ்வரியம் கைவல்யம் எனப்படுகின்ற ஷூத்ர – சிறிய புருஷார்த்தங்களைத் தவிர்ந்து, ஸ்ரீ பகவானுடைய கைங்கரியத்தையே -ஏக போக –புருஷார்த்தமாகப் பெற்றவர் ஆவர்,-காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ’ என்று தாம் சொன்னபடியே உடையவர் ஆவர் என்றபடி.

மெலியும் நோய் தீர்க்கும் நம் கண்ணன் கழல்கள் மேல்
மலி புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஒலி புகழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
மலி புகழ் வானவர்க்கு ஆவர் நற் கோவையே–4-2-11-
ஸ்ரீ நித்ய ஸூரிகளோடு சத்ருசர் -ஒத்தவர் ஆவர்,’-வானவரோடு நல்ல சேர்த்தி ஆவர்.-

உய்வு உபாயம் மற்று இன்மை தேறி, கண்ணன் ஒண் கழல் மேல்
செய்ய தாமரைப் பழனம் தென்னன் குருகூர்ச் சடகோபன்
பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே–4-3-11-
ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய உபய விபூதியும் திருவாய்மொழியை அப்யசித்தவர்கள் இட்ட வழக்கு,’ -பூமியிலே ஸ்ரீ எம்பெருமானாரைப் போலே ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயோடே பல காலம் இருந்து. இங்கே இருக்கச் செய்தே ஸ்ரீ பரமபதம் தங்கள் சிறு முறிப்படி செல்லும்படி ஆள்வர்கள்-பல காலம் பூமியிலே ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயோடே ‘நாட்டாரோடு இயல்வொழிந்து’ என்கிறபடியே,
தங்கள் வேறுபாடு தோன்ற இருக்கப் பெறுவர்கள்,’ என்று ஸ்ரீ சீயர் உருத்தோறும் அருளிச் செய்வர்.

வல் வினை தீர்க்கும் கண்ணனை வண் குருகூர்ச் சட கோபன்
சொல் வினையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இவை பத்தும்
நல் வினை என்று கற்பார்கள் நலனிடை வைகுந்தம் நண்ணித்
தொல் வினை தீர எல்லாரும் தொழுது எழ வீற்றிருப்பாரே–4-4-11-
-வீற்று -வேறுபாடு.-சம்சார துரிதமும் போய், ஸ்ரீ பகவத் விஸ்லேஷம் கந்தம் இல்லாத திருநாட்டிலே எல்லாரும்-சிரஸா வஹிக்கும் – தலைமேல் தாங்கும்படி மேன்மையோடே இருக்கப்பெறுவர்,’-இவர் பாடின ஸ்ரீ திருவாய் மொழியைக் கற்றவர்களைத் தொழுது ஸ்ரீ நித்ய ஸூரிகள் உய்வு பெறும்படி.
அவன் சேஷித்வத்துக்கு முடிசூடி இருக்குமா போலே இவர்களும் சேஷத்வ சாம்ராஜ்யத்துக்கு முடி சூடி இருக்கப் பெறுவர்கள்

மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை
வாரி மாறாத பைம் பூம் பொழில் சூழ் குருகூர் நகர்க்
காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இப் பத்தால்
வேரி மாறாத பூமேல் இருப்பாள் வினை தீர்க்குமே–4-5-11-
இந்தப் பிரபாவத்தை அறிந்து இவர் வெளியிட்டார்,’ என்னும் பிரசாத அதிசயத்தாலே -கருணையின் மிகுதியாலே,
சர்வேஸ்வரன் பலம் கொடுக்கிற நிலையிலே அவனை விலக்கி,‘நானே இதற்குப் பலம் கொடுக்கவேண்டும்,’ என்று தனக்கே -பரமாக -பொறுப்பாக ஏறிட்டுக் கொண்டு, பலம் கொடுக்கும்.-‘இத்திருவாய்மொழி கற்றார்க்கு அந்தப்புரத்திலே படியும் நடையும்’

தொழுது ஆடித் தூ மணி வண்ணனுக்கு ஆட் செய்து நோய் தீர்ந்த
வழுவாத தொல் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
வழுவாத ஆயிரத்துள் இவை பத்து வெறிகளும்
தொழுது ஆடிப் பாட வல்லார் துக்க சீலம் இலர்களே–4-6-11-
இவ்வாத்மாவுக்கு ஞாதவ்யமான -அறிய வேண்டிய அர்த்தங்களில் ஒன்றும் தப்பாதபடி சொன்ன வெறி விஷயமான இப்பத்தும். வெறி விலக்கு’ என்று ஒரு துறை உண்டு; அதாவது, விரஹ சுரத்தாலே நோவுபடுகிறவளுக்கும் ஆடு அறுப்பது, கள் உகுப்பது, பலியிடுவதாகப் பரிஹரிக்கப் புக, தோழியானவள்,இது ஒரு விஷயத்தில் பாவபந்தம் அடியாக வந்த நோயாயிற்று; மற்று ஒன்றால் அன்று,’ என்று அவர்கள் செய்கின்றவற்றை விலக்குவது.-தொழுது ஆடிப் பாட வல்லார் -பெண் பிள்ளையினுடைய மோஹம் தீர்ந்தால் பந்துக்களுக்கு உள்ள பிரியம் ‘இது கற்றார்க்கும் உண்டு’ என்று இருக்கிறார் ஆயிற்று இவர்.-துக்க சீலம் இலர்களே – மோஹித்தவிடத்து தேவதாந்த்ர ஸ்பர்சம் -வேறு தெய்வங்களினுடைய சம்பந்தம் உண்டாகையும், பாகவத ஸ்பர்சம் -சம்பந்தம் இன்றிக்கே ஒழிகையுமாயிற்றுத் துக்கமாவது. அஃது இல்லாமையே ஸ்வபாவமாகவே தன்மையாக உடையர் ஆவர். சீலம் – ஸ்வபாவம் -தன்மை.

தழுவி நின்ற காதல் தன்னால் தாமரைக் கண்ணன் தனைக்
குழுவு மாடம் தென் குருகூர் மாறன் சடகோபன் சொல்
வழு விலாத ஒண் தமிழ்கள் ஆயிரத்துள் இப் பத்தும்
தழுவப் பாடி ஆட வல்லார் வைகுந்தம் ஏறுவரே–4-7-11-
ஆழ்வாருடைய பாவ வ்ருத்தி -மனநலம் ஒருவர்க்கும் பிறக்கமாட்டாதே அன்றோ? அதிலே சிறிது அணைய நின்றாகிலும் இதனைக் கற்க -அப்யஸிக்க வல்லவர்கள்-பாரவசயத்தாலே விக்ருதராய் ஆட வல்லவர்கள் -காண ஆசைப்பட்டுக் கூப்பிடுகிற சம்சாரத்தை -இவ் வுலகத்தைக் கழித்து, எப்பொழுதும் அனுபவிக்கத் தக்க பரமபதத்திலே புகப் பெறுவர்.–

உயிரினால் குறைஇல்லா உலகுஏழ்தன் உள்ஒடுக்கித்
தயிர்வெண்ணெய் உண்டானைத் தடங்குருகூர்ச் சடகோபன்
செயிர்இல்சொல் இசைமாலை ஆயிரத்துள் இப்பத்தால்
வயிரம்சேர் பிறப்புஅறுத்து வைகுந்தம் நண்ணுவரே–4-8-11-
இவர் ‘வேண்டா’ என்று கழித்தாலும் விடாதபடி காழ்ப்பு ஏறிக் கிடக்கிற பிறவியினைக் கழித்து.-ஓர் உடம்பாய், ‘இதுதானும் வேண்டா’ என்று கழிக்கும்படியான இவ்வுடம்பை விட்டு, ச ஏகதா பவதி த்ரிதா பவதி -அந்த முத்தன் பல சரீரங்களை மேற்கொள்ளுகிறான்,’ என்கிறபடியே, அவனுடைய சங்கல்ப அதீனமாகவும் -நினைவின் வண்ணமும் அஃது அடியான தன் சங்கல்ப அதீனமாகவும் -நினைவின் வண்ணமும்- அநேக சரீர பரிக்ரஹம் பண்ணி – பல சரீரங்களை மேற்கொண்டு அடிமை செய்யலாம் படியான தேசத்திலே போய்ப் புகப் பெறுவர். என்றது, ‘பல படிகளாலும் -‘பல சரீரங்களாலும், பல விதங்களாலும்’–விரும்பின விதம்’ ‘விரும்பின திருமேனி’ அடிமை செய்யப் பெறுவர்-

திருவடியை நாரணனைக் கேசவனைப் பரஞ்சுடரைத்
திருவடி சேர்வது கருதிச் செழுங்குருகூர்ச் சடகோபன்
திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றுமினே–4-9-11-
அவன் திருவடிகளிலே சொன்ன தமிழ் ஆயிரத்திலும் வைத்துக்கொண்டு இந்தப் பத்தும் அவன் திருவடிகளிலே சென்று அடைவிக்கும்;-நீங்களும் அதற்கு உறுப்பாகத் திருவடிகளிலே சென்று கிட்டுங்கோள்.-அவன் திருவடிகளிலே கிட்டக் கொள்ள, நீங்கள் உங்களுக்குமாய் இராமல்,
அடிசிற்பானை போலே அவன் திருவடிகளிலே நித்ய கைங்கரியத்திலே சேரப் பாருங்கோள்.

ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான்,
நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப் பத்தும் வல்லார்
மீட்சி இன்றி வைகுந்த மாநகர் மற்றது கையதுவே–4-10-11-
தம்முடைய வேட்கையால் சொல்லுகிறாராதலின், ‘வேட்கையால் சொன்ன’ என்கிறார்.-இந்தப் பத்தும் பத்தாக இவர்கள் கையது பரமபதம்.-இப்பொருளில் ‘மற்றது’ என்பது அவ்யயமாய் -இடைச்சொல்.
அன்றிக்கே, ‘மற்றது’ என்பதனை வைகுந்த மா நகருக்கு அடைமொழியாக்கி, ‘ மற்றையதான – அதாவது, சம்சாரத்துக்கு -இவ்வுலக வாழ்க்கைக்கு எதிர்த்தட்டான
வைகுந்த மாநகரமானது இவர்கள் கையது,’ என்னலுமாம்.-அன்றிக்கே, ‘பகவானுடைய பரத்வ ஞானமே பிரயோஜனம் போரும்;-அதற்குமேல், ஞான பல ரூபமான கைங்கரியத்திற்கு ஏகாந்த தேசமான பரமபதமும் இவர்களுக்கு எளிதாம்,’ என்னலுமாம்.

கார் வண்ணன் கண்ண பிரான் கமலத்தடங் கண்ணன் தன்னை
ஏர் வள வொண் கழனிக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
சீர் வண்ண வொண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும்
ஆர் வண்ணத் தாலுரைப்பார் அடிக் கீழ்ப் புகுவார் பொலிந்தே–5-1-11-
 நிரவதிக -தனக்கு மேல் ஒன்று இல்லாததான ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயையுடையராய் அவன் திருவடிக் கீழே புகப் பெறுவர் -நம்பிக்கை மாத்திரமேயாய் ருசி இன்றிக்கே இருக்கப் போய்ப் புகுதல் அன்றிக்கே,
ஸ்ரீ எம்பெருமானாரைப் போலே நூறு ஆண்டுகள் ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயோடே இருந்து,
பின்பு தாய் நிழலிலே ஒதுங்குவாரைப் போலே அவன் திருவடிகளிலே புகப் பெறுவர்
.

கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான் கண்ணன் தன்னைக்
கலி வயல் தென்னன் குருகூர்க் காரி மாறன் சடகோபன்
ஒலி புகழ் ஆயிரத்து இப்பத்து உள்ளத்தை மாசறுக்குமே–5-2-11-இத்திருவாய்மொழி கற்றார்க்கு, தேவதாந்த்ரங்கள் -மற்றைத் தேவர்கள் பக்கல் உண்டான பரத்வ சங்கையும்,
ஸ்ரீ வைஷ்ணவர்கள் பக்கல் சஜாதீய புத்தி பண்ணுதல், அபாகவத ஸஹவாசம் -பாகவதரல்லாதாருடைய சகவாசம் நன்று என்று இருத்தல், ஸ்ரீ எம்பெருமான் பக்கல் ப்ரயோஜனாந்தர பரதையுமான –வேறு பிரயோஜனங்களை விரும்புகின்ற தன்மையுமான மனத்தின் தோஷங்கள் எல்லாம் போகும் 

இரைக்குங் கருங்கடல் வண்ணன் கண்ண பிரான் தன்னை
விரைக் கொள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொன்ன
நிரைக் கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
உரைக்க வல்லார்க்கு வைகுந்த மாகும் தம் மூரெல்லாம்–5-3-11-
இருந்த தேசத்தே
அவ் வெம்பெருமான் தானே வந்து நித்ய சம்ச்லேஷம் பண்ணும் –எப்பொழுதும் சேர்ந்திருப்பான்-நாடு அறிய மடல் எடுத்துக் கொண்டு இவர்கள் புறப்பட வேண்டாமல்,
இவர்கள் இருந்த இடம் தானே ஸ்ரீ பரம பதமாம்-அவன் சந்நிதி உள்ள இடம் ஸ்ரீ வைகுண்டமாகக் குறை இல்லை அன்றோ.-

உறங்குவான் போல் யோகு செய்த பெருமானைச்
சிறந்த பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
நிறங் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இப் பத்தால்
இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ?–5-4-11-
இந்த உலகத்தில் இருந்து வருந்தாமல் அஸ்தமியாத -மறைதலில்லாத ஸூரியனும் அஸ்தமியாத மறைதலில்லாத பகலுமான தேசத்திலே புகப் பெறுவர்-பிரகிருதி விஸ்லேஷ அநந்தரம் -சரீரம் நீங்கிய பின்னர், அவர்கள் ப்ராப்யமாக -பேறாக நினைத்திருக்கும்- ஸ்ரீ தேச பிராப்தி – தேசத்தின் சம்பந்தம் தப்பாது –

அறிவரிய பிரானை ஆழி அம் கையனையே அலற்றி
நறிய நன் மலர் நாடி நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன
குறி கொள் ஆயிரத்துளிவை பத்தும் திருக் குறுங்குடி யதன் மேல்
அறியக் கற்று வல்லார் வைட்ணவர் ஆழ் கடல் ஞாலத் துள்ளே–5-5-11-
இத் திருவாய் மொழியைக் கற்க வல்லவர்கள் சம்சாரத்தில் இருந்தே ஸ்ரீ வைஷ்ணவர்கள்-மரு பூமியான சம்சாரத்தில் இருக்கச் செய்தே ஸ்ரீ நித்ய ஸூரிகளோடு ஒக்கச் சொல்லலாம் படி ஆவர்கள்
ஸ்ரீ உகந்தருளின நிலங்களில் வாசி அறியுமவர்கள்-

கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
வாய்ந்த வழுதி வள நாடன் மன்னு
குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து
ஆய்ந்த தமிழ் மாலை ஆயிரத்துள்
இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில்
ஏந்து பெருஞ் செல்வத்தராய்த் திருமால்
அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே–5-6-11-
இத் திருவாய் மொழியைக் கற்க வல்லவர்கள் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அடிமை செய்யப் பெறுவர்கள்-ஸ்ரீவைஷ்ணவர்களுக்குப் பிரியத்தைக் கொடுக்கக் கூடிய வ்ருத்தி – கைங்கரியத்தைச் செய்யப் பெறுவர் என்கை-

தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணை மிசைக்
கொய் கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன்
செய்க ஆயிரத் துள்ளிவை தண் சிரீ வர மங்கை மேய பத்துடன்
வைகல் பாட வல்லார் வானோர்க்கு ஆராவமுதே–5-7-11-
இத் திருவாய் மொழியைப் பொருள் அறிவோடு -சாபிப்ராயமாக –கற்குமவர்கள் நித்ய ஸூரிகளுக்கு என்றும் போக்யர் -இனிய பொருளாவர்-ஸ்ரீ நித்ய ஸூரிகள் ‘இவர்களைப் பெற்றோம்’ என்று கிருதார்த்தராவர் என்பார் ‘ஆராவமுதே’ என்கிறார்-

உழலை என்பில் பேய்ச்சி முலையூடு அவளை உயிர் உண்டான்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்
குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே–5-8-11-
இப் பத்தைப் பழுது அறக் கற்க வல்லவர்கள், காமினிகளுக்குக் காமுகரைப் போலே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு போக்யர் -இனியர் ஆவர்-இது கற்றாரை ஸ்ரீ எம்பெருமானும் ஸ்ரீ வைஷ்ணவர்களும் மேல் விழுந்து இனியராகக் கொள்ளுவர்கள்-

நாமங்க ளாயிரமுடைய நம் பெருமானடி மேல்
சேமங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த
நாமங்க ளாயிரத்துள் இவை பத்தும் திருவல்ல வாழ்
சேமங்கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே–5-9-11-
இத் திருவாய் மொழியைக் கற்க வல்லவர்கள் சம்சாரத்தில் இருந்து வைத்தே ஸ்ரீ பகவானுடைய குணாநுபவத்தாலே எல்லாரிலும் சிறந்தவர்கள்-இவர்களுடைய ஜன்மங்கள் கர்மம் காரணமாக இருக்கச் செய்தே அவனுக்கு உறுப்பாகையாலே முக்தர்களுடைய சரீரத்தைக் காட்டிலும் ஸ்லாக்கியம்.-ஆஸ்ரித அர்த்தமாக -அடியார்களின் பொருட்டு அவதரித்த ஸ்ரீ பகவானுடைய அவதாரம் போலே ஸ்லாக்கியம் என்கை –

நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும்
ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையுமொர் பத்தும் வல்லார்
மாக வைகுந்தத்து மகிழ்வெய்துவர் வைகலுமே–5-10-11-
ஸ்ரீ பரம பதத்திலே சென்று நித்யாநுபவம் பண்ணப் பெறுவர்-சம்சாரத்தைவிட்டு, ஸ்ரீ பகவானுடைய அநுபவத்துக்கு விச்சேதம் -நழுவுதல் ஒரு நாளும் இல்லாத ஸ்ரீ பரம பதத்திலே புக்கு அநுபவிக்கப் பெறுவர்

மின் கொள் சேர் புரி நூல் குறளாய் அகல் ஞாலம் கொண்ட
வன் கள்வ னடி மேல் குருகூர்ச் சடகோபன் சொன்ன
பண் கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திருவண் வண்டூர்க்கு
இன் கொள் பாடல் வல்லார் மதனர்; மின்னிடை யவர்க்கே–6-1-11-
-இத் திருவாய்மொழி வல்லவர்கள், காமினிகளுக்குக் காமுகர் போக்யமாமா –இனிய பொருளாயிருக்குமாறு – போலே, ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு ஸ்ப்ருஹா விஷயம் –விரும்பத் தக்க பொருளாவர்

ஆய்ச்சியாகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்ற முண்டழு
கூத்த அப்பன் தன்னைக் குருகூர்ச் சடகோபன்
ஏந்திய தமிழ் மாலை ஆயிரத்துள் இவையும் ஒர் பத்து இசை யொடும்
நாத் தன்னால் நவில உரைப்பார்க்கு இல்லை நல்குரவே–6-2-11-
இத் திருவாய் மொழியை ஆதரத்தோடு சொல்ல வல்லார்க்கு ஸ்ரீ பகவானுடைய அநுபவத்தின் வறுமை இல்லை-தூது விட்டு, அவன் வரக் கொண்டு ‘புகுர ஓட்டோம்’ என்று பட்ட கிலேசம் பட வேண்டா-அவன் தானே வந்து மேல் விழ நித்யாநுபவம் பண்ணப் பெறுவர்கள்-

காண்மின்கள் உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்த
தாளிணையன் தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
ஆணை ஆயிரத்துத் திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்
கோணை இன்றி விண்ணோர்க் கென்று மாவர் குரவர்களே–6-3-11
-இத் திருவாய் மொழி வல்லார் ஸ்ரீ நித்ய ஸூரிகளுக்கு நாள் தோறும் கௌரவிக்கத் தக்கவராவர்-சம்சாரத்தே இருந்து வைத்தே நம் படி ஒருவனுக்கு உண்டாவதே!’ என்று கொண்டாடி இருப்பார்கள்-ஸ்ரீதரனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே-வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.

நாயகன் முழு வேழுல குக்குமாய் முழு வேழுலகுந் தன்
வாயகம் புக வைத்துமிழ்ந்து அவையாய் அவை அல்லனுமாம்
கேசவன் அடி யிணை மிசைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தூய ஆயிரத் திப்பத்தால் பத்த ராவர் துவளின்றியே–6-4-11--ஸ்ரீ கிருஷ்ணனுடைய செயல்களைச் சொல்லுகையாலே தூய்மையை யுடைத்தான இப் பத்தும் கற்றார், தம்மைப் போன்றே ஸ்ரீ கிருஷ்ண பக்தராவர்

சிந்தை யாலும் சொல் லாலும் செய்கை யினாலும் தேவ பிரானையே
தந்தை தாய் என்றடைந்த வண் குருகூ ரவர் சட கோபன்
முந்தை ஆயிரத் துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச் சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமா லுக்கே–6-5-11-இதனைக் கற்றவர்கள் இதற்குத் தகுதியான அனுரூபமான -கைங்கரியத்தைச் செய்யப் பெறுவர்கள்-ஸ்ரீ பெருமாளும் ஸ்ரீ பிராட்டியும் சேர இருக்க ஸ்ரீ இளைய பெருமாள் அடிமை செய்தால் போலே,
விசிஷ்ட வேஷத்தில் சேர்த்தியிலே அடிமை செய்யப் பெறுவர் –

கட்டெழில் சோலை நல் வேங்கட வாணனைக்
கட்டெழில் தென் குருகூர்ச் சடகோபன்சொல்
கட்டெழில் ஆயிரத்து இப் பத்தும் வல்லவர்
கட்டெழில் வானவர் போகம் உண்பாரே–6-6-11-
இத் திருவாய் மொழியினை வல்லவர்கள் ஸ்ரீ நித்ய ஸூரிகள் அநுபவிக்கின்ற இன்பத்தினை -போகத்தை புஜிக்க பெறுவர் -அநுபவிப்பார்கள்-நீர்மைக்கு எல்லையான ஸ்ரீ திருமலை ஆஸ்ரயணீய -பற்றுதற்குரிய ஸ்தலம்;-மேன்மைக்கு எல்லையான ஸ்ரீ பரம பதம் -அனுபவ அநுபவத்திற்குரிய ஸ்தானம் .

வைத்த மா நிதியாம் மது சூதனையே அலற்றிக்
கொத்தலர் பொழில் சூழ் குருகூர்ச் சட கோபன் சொன்ன
பத்து நூற்றுள் இப் பத்து அவன் சேர் திருக் கோளூர்க்கே
சித்தம் வைத்துரைப்பார் திகழ் பொன்னுல காள்வாரே–6-7-11-
இப் பத்தும் கற்றார் இட்ட வழக்கு ஸ்ரீ திரு நாடு என்கிறார்.-ஒருத்தி கூப்பிட, ஒருத்தி தனியே போகை அன்றிக்கே, நித்யாநுபவம் பண்ணலாம் ஸ்ரீ நிலத்திலே புகப் பெறுவர்.தனி வழி போகாதே, ஸ்ரீ அர்ச்சிராதி கணம் சேவிக்க, விலக்ஷணமான ஸ்ரீ தேசத்தே போய்ப் புகப் பெறுவர்-

மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு மது சூத பிரான் அடி மேல்
நாற்றங்கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தோற்றங்க ளாயிரத்துள் இவையும் ஒரு பத்தும் வல்லார்
ஊற்றின் கண் நுண் மணல் போல் உருகா நிற்பர் நீராயே–6-8-11-
இத் திருவாய்மொழியில் ஸ்ரீ ஆழ்வாருடைய ஆர்த்தியை -துன்பத்தை –அனுசந்திப்பார் -நினைத்தவர்கள் தாமும் உருகுவர்-ஸ்ரீ பகவானுடைய குணங்களிலே ஈடுபட்டவர்கள்-குண வித்தகர் – பாசுரம் கேட்டு அழிகையும் பேற்றிலே சேர்ந்த தாகையாலே இது தானே பலம் என்கிறது.

தெரிதல் நினைதல் எண்ண லாகாத் திருமாலுக்கு
உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்
தெரியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
உரிய தொண்ட ராக்கும் உலகம் உண்டாற்கே–6-9-11-
இப் பத்தும் கற்றவர்கள் ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு அந்தரங்கமான கிங்கரர் -தொண்டராவர்-சர்வ ரக்ஷகனான ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு அநந்யார்ஹ சேஷமாக்கும் இத் திருவாய்மொழி.-சம்சாரம் நன்றுமாய், பகவத் விஷயம் தீதானாலும் அதனை விட மாட்டாதவர் களாதலின் உரிய தொண்டர்’ என்கிறார்.-குண க்ருத தாஸ்யத்திலும் காட்டில் ஸ்வரூப ப்ரயுக்தமான தாஸ்யமிறே பிரதானம்” -ஸ்ரீ வசன பூஷணம்,

அடிக் கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்றென் றருள் கொடுக்கும்
படிக் கேழில்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திரு வேங்கடத்துக் கிவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே–6-10-11-
ஸ்ரீ பரம பதத்திலே சென்று தாஸ்யத்தில் அபி ஷிக்தராய் -அடிமையிலே முடி சூடினவராய் அடிமை செய்யப் பெறுவர்கள்-நற் கன்றுக்கு இரங்கினது தோல் கன்றுக்கு இரங்குமாறு போலே, இவரை நினைத்து இப் பத்துங் கற்றார் பக்கலிலும் ஈஸ்வரன் பிரசந்நனாம்.

கொண்ட மூர்த்தி ஓர் மூவ ராய்க் குணங்கள் படைத் தளித்துக் கெடுக்கு மப்
புண்டரிகக் கொப் பூழ்ப் புனற் பள்ளி அப்பனுக்கே
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்லா யிரத்துள் இப்பத்தும்
கண்டு பாட வல்லார் வினை போம் கங்குலும் பகலே–7-1-11-
இத் திருவாய் மொழியை அப்யசித்தார்க்கு இந்திரியங்களால் ஆத்மாவுக்கு வரும் நலிவு போம்

முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் மொய் புனல் பொருநல்
துகில் வண்ணத் தூநீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ் வண் குருகூர்ச் சட கோபன்
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரத்து இப் பத்தும் வல்லார்
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர் பேரின்ப வெள்ளத்தே–7-2-11-
இத் திருவாய் மொழியை அப்யஸிக்க வல்லவர்கள், இவர் பட்ட கிலேசம் படாமல் ஸ்ரீ திரு நாட்டிலே பேரின்ப வெள்ளத்தினை யுடையவராய், ஸ்ரீ நித்ய ஸூரிகள் சூழ இருக்கப் பெறுவர்,’

ஊழி தோறு ஊழி உருவும் பேரும் செய்கையும் வேறவன் வையம் காக்கும்
ஆழி நீர் வண்ணனை அச்சுதனை அணி குருகூர்ச் சடகோபன் சொன்ன
கேழில் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவை திருப் பேரெயில் மேய பத்தும்
ஆழி அம் கையனை ஏத்த வல்லார் அவர் அடிமைத் திறத்து ஆழியாரே–7-3-11-
இத் திருவாய் மொழி கற்றார், பகவானுடைய கைங்கரியத்திலே மிகவும் அவகாஹித்தார் -மூழ்கினாரேயாவர்,’ -அடிமைக் கூட்டத்தில் திரு வாழியின் தன்மையை யுடையவர் என்னுதல்;-அடிமை இடையாட்டத்தில் ஒருவரால் மீட்க ஒண்ணாதபடி உட் புகுவர் என்னுதல்.

குன்றம் எடுத்த பிரான் அடி யாரொடும்
ஒன்றி நின்ற சடகோபன் உரை செயல்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே–7-4-11-
இத் திருவாய் மொழியைக் அப்யசித்தவர்களுக்கு இது தானே விஜயத்தைக் கொடுக்கும்-எல்லா அபேக்ஷிதங்களையும் கொடுக்கும்-ஐஸ்வர்ய கைவல்ய பகவல்லாபங்களை ஆசைப்பட்டவர்களுக்கு அவற்றைக்கொடுக்கும்-கர்ம ஞான பத்திகளிலே இழிந்தவர்களுக்கு விரோதியைப் போக்கி அவற்றைத் தலைக்கட்டிக் கொடுக்கும்-பிரபத்தியிலே இழிந்தவர்களுக்கு ஸ்வரூப ஞானத்தைப் பிறப்பித்துக் கால க்ஷேபத்துக்கும் போகத்துக்கும் ஹேதுவாயிருக்கும்’ –முமுக்ஷூப்படி.

தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக் கதி செய்யும்
தெளிவுற்ற கண்ணனைத் தென் குரு கூர்ச் சடகோபன் சொல்
தெளிவுற்ற ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவர்
தெளிவுற்ற சிந்தையர் பாமரு மூவுல கத்துள்ளே–7-5-11-
இத் திருவாய் மொழி அப்யசித்தார் சம்சாரத்துக்குள் இருந்து வைத்தே சுத்த ஸ்வபாவர்-ஸ்ரீ சர்வேஸ்வரன் தானே இங்கு வந்து அவதரிக்கிலும் சோக மோகத்தைச் செய்ய வல்ல சம்சாரத்தே இருந்தே குற்றங்களுக்கு எல்லாம் எதிர்த் தட்டான ஸ்ரீ பரமாத்மாவையும் தன் வழி ஆக்க வல்ல இவ் விபூதியிலே இருந்து வைத்தே சுத்த ஸ்வபாவராய் இருப்பர்-

புக்க அரி உருவாய் அவுணன் உடல் கீண்டு உகந்த
சக்கரச் செல்வன் தன்னைக் குருகூர்ச் சட கோபன் சொன்ன
மிக்க ஒர் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவரைத்
தொக்குப் பல்லாண்டி சைத்துக் கவரி செய்வர் ஏழையரே–7-6-11-
இத் திருவாய் மொழி கற்றாரை மதி முக மடந்தையர் விரும்பித் ஸ்ரீ திருப் பல்லாண்டு பாடிச் சிறப்பிப்பர்கள்,-நெடு நாள் சம்சாரத்தில் பட்ட இழவெல்லாம் தீரும்படி அவர்களாலே கொண்டாடப் பெறுவர்கள்.

கட்கு அரிய பிரமன் சிவன் இந்திரன் என்ற இவர்க்கும்
கட்கு அரிய கண்ணனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
உட்கு உடை ஆயிரத்துள் இவையும் ஒரு பத்தும் வல்லார்
உட்கு உடை வானவரோடு உடனாய் என்றும் மாயாரே–7-7-11-
இத் திருவாய் மொழியை அப்யசித்தவர்கள் பகவத் விஸ்லேஷத்தால் கிலேசப்படாதே ஸ்ரீ நித்ய ஸூரிகளோடே -ஒரு கோவையாய்-உருவு வெளிப் பாட்டாலே நோவு படாமல்-கூடி நித்யானுபவம் பண்ணப் பெறுவார்கள்,’ 

ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை
ஆம் வண்ணத்தால் குருகூர்ச் சடகோபன் அறிந்து உரைத்த
ஆம் வண்ண ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும்
ஆம் வண்ணத்தால் உரைப்பார் அமைந்தார் தமக்கு என்றைக்குமே–7-8-11-
இத் திருவாய் மொழியை யதா சக்தி -தங்கள் தகுதிக்குத் தக்கவாறு சொல்ல வல்லார் என்றைக்கும் கிருத்தியர்-அவர்களுக்கு இவ் வாத்மா உள்ளதனையும், ஸ்ரீ ஈஸ்வரன் முழங்கைத் தண்ணீர் வேண்டா;-ஸ்ரீ ஆழ்வார் பரிக்ரஹம் – அங்கீகாரத்துக்கு விஷயமானதுவே போரும்.-என்றைக்கும் தந்தாமுக்குத் தாமே அமைந்தார்களாய் இருப்பர்கள்.

இங்கும் அங்கும் திருமால் அன்றி இன்மை கண்டு
அங்ஙனே வண் குருகூர்ச் சடகோபன்
இங்ஙனே சொன்ன ஓர் ஆயிரத்து இப்பத்து
எங்ஙனே சொல்லிலும் இன்பம் பயக்குமே–7-9-11-
இத் திருவாய் மொழி, ஏதேனும் ஒரு படி சொல்லிலும் ஆனந்தத்தை உண்டாக்கும்-இவர் தம்முடைய பாசுரத்தைக் கற்றவர்கள் என்றே அன்றோ ஸ்ரீ ஈஸ்வரன் இவர்களைக் கடாஷிப்பது? இல்லையாகில், இவர் தம்மைப் போலே மனம் வாக்குக் காயம் என்னும் இவற்றினுடைய நியதி உண்டாய் அனுபவிக்கப் பெறில் அழகிது; அது இல்லாத போதும் பலம் தவறாது என்கைக்காகச் சொல்லிற் றத்தனை-

தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரணில்லை என்று எண்ணித் தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தனனாகிச் செழுங் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களைத் தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி யுரைப்பர் தம் தேவியர்க்கே–7-10-11-
இத் திருவாய் மொழி கற்றவர்கள் ஸ்ரீ அயர்வறும் அமரர்களுக்குச் ஸ்லாகிக்கத் தக்கவர்கள்,-நாள் தோறும் பவித்ர பூதர் -தூயர் ஆவார்’ என்று ஆதரித்துக் கொண்டு போந்து. தங்கள் மஹிஷிகளை -மனைவி மார்களைச் ஸ்னேகித்துக் கொண்டாடும் தசையிலே சொல்லுவார்கள்.

பெரிய வப்பனைப் பிரமனப்பனை உருதிரனப்பனை முனிவர்க்
குரியவப்பனை யமரரப்பனை உலகுக்குகோர் தனியப்பனை தன்னை
பெரிய வண் குருகூர்ச் சடகோபன் பேணின ஆயிரத்துள்ளும்
உரிய சொல் மாலை இவையும் பத்து இவற்றால் உய்யலாம் தொண்டீர் ! நம் கட்கே–8-1-11-இதனை அப்யசிப்பார்க்கு -கற்கின்றவர்கள் ஸ்ரீ சர்வேஸ்வரனை அடைந்து உஜ்ஜீவிக்கலாம்

பாத மடைவதன் பாசத்தாலே மற்ற வன் பாசங்கள் முற்ற விட்டு
கோதில் புகழ்க் கண்ணன் தன்னடி மேல் வண் குருகூர் சடகோபன் சொன்ன
தீதில் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவையு மோர் பத்திசை யோடும் வல்லார்
ஆதுமோர் தீதிலராகி இங்கு மங்கு மெல்லாம் அமைவார்கள் தாமே–8-2-11-
‘இத் திருவாய் மொழி வல்லார் அவித்யாதி சகல தோஷங்களும் –அறிவின்மை முதலிய எல்லா குற்றங்களும் நீங்கி-இஹ லோக இவ் உலகத்திலும்-பர லோகங்களிலும் மேல் உலகத்திலும்
தாங்களே கிருதக்ருத்யர் ஆவார் -நான் எல்லா அடிமைகளும் செய்வேன் -என்று குறைவு அற்று இருப்பார்கள் –ஸ்ரீ ஈஸ்வரன் முழங்கை தண்ணீர் வேண்டா-உபய விபூதியிலும் தாங்களே பிரதானர் -முதன்மை பெற்றவர்கள் ஆவார்கள்

உரையா வெந்நோய் தவிர அருள் நீண் முடியானை
வரையார் மாட மன்னு குருகூர்ச் சடகோபன்
உரையேய் சொல் தொடை ஓராயிரத் துளிப்பத்தும்
நிரையே வல்லார் நீடுலகத்தப் பிறவாரே–8-3-11-
இத் திருவாய் மொழி அப்யசிப்பார் -கற்பவர்கள் அவன் தனிமை கண்டு பயப்படும் சம்சாரத்தில்-பிறவார்-ஸ்ரீ சர்வேஸ்வரன் தனிமைக்கு பரிய ஒருவரைக் கிடைக்காத இத் தேசத்தில் பிறவார்கள் ஒரு நாடாக மங்களா சாசனம் செய்கிற தேசத்திலே சென்று நித்ய அனுபவம் பண்ணப் பெறுவர்-

தேனை நன் பாலைக் கன்னலை யமுதைத் திருந்துல குண்ட வம்மானை
வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ் மலர்மிசைப் படைத்த மாயோனை
கோனை வண் குருகூர் சடகோபன் சொன்ன வாயிரத்துள் இப் பத்தும்
வானின் மீதேற்றி யருள் செய்து முடிக்கும் பிறவி மா மாயக் கூத்தினையே–8-4-11-
இத் திருவாய்மொழியை அப்யசிப்பார்க்கு -கற்றவர்கட்கு இது தானே முதலில் ஸ்ரீ பரம பதத்து ஏறக் கொடுபோய் பின்பு சம்சாரம் ஆகிய மகா நாடகத்தினை அறுக்கும்-அராஜகம் ஆனால் அரச புத்திரன் தலையிலே முடியை வைத்து விலங்கு வெட்டி விடுமாறு போலே இப் பத்து தானே முந்துற ஸ்ரீ பரம பதத்தைக் கொடுத்து-பின்பு சம்சாரம் ஆகிற மகா நாடகத்தை அறுக்கும் –

எங்கே காண்கேன் ஈன் துழாய் அம்மான் தன்னை யான் என்று என்று
அங்கே தாழ்ந்த சொற்களால் அந்தண் குருகூர்ச் சடகோபன்
செங்கேழ் சொன்ன வாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
இங்கே காண விப் பிறப்பே மகிழ்வர் எல்லியும் காலையே-8-5-11-
இத் திருவாய் மொழி வல்லார் தாம் பட்ட துக்கம் படாதே-இஹ -இந்த உலகத்தில்-இப் பிறப்பிலே-அவனைப் பெற்று -ஸ்ரீ பகவத் அனுபவம் பண்ணி-எப்பொழுதும் இன்பத்தை அனுபவிப்பர்

சோலைத் திருக் கடித் தானத்துறை திரு
மாலை மதிட் குருகூர்ச் சடகோப சொல்
பாலோடு அமுதன்ன ஆயிரத்திப் பத்தும்
மேலை வைகுந்தத்து இருத்தும் வியந்தே–8-6-11-
இத் திருவாய் மொழி கற்றவர்களை இது தானே ஸ்ரீ திரு நாட்டில் கொடு போய் விடும்-சம்சாரத்தில் இதனைக் கற்பவன் அப்யசிப்பான் – ஒருவன் உண்டாவதே என்று விஸ்மயப்பட்டு -ஆச்சர்யப் பட்டு-
சர்வாதிகமான -எல்லா உலகங்கட்கும் மேலான ஸ்ரீ பரம பதத்தில் கொடு போய் வைக்கும் -என்றது-மாயக் கூத்தா -என்ற ஸ்ரீ திருவாய் மொழியில் உண்டான விடாய் நடையாடாத தேசத்திலே வைத்து-ஒரு நாளும் பிரியாத அனுபவத்தைக் கொடுக்கும்

சுடர்ப் பாம்பணை நம் பரனைத் திருமாலை
அடிச்சேர் வகை வண் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன வாயிரத்து இப்பத்தும் சன்மம்
விட தேய்ந்தற நோக்கும் தன் கண்கள் சிவந்தே–8-7-11-
இப் பத்தானது தன்னைக் கற்றவர்கள் உடைய பிறவிக்கு த்ருஷ்ட்டி விஷம் -இப் பத்துக்கும் பிறவிக்கும் சஹா நவஸ்தா லக்ஷண -ஒரே இடத்தில் இருக்கக் கூடிய தன்மையில் விரோதம் உண்டு -என்றபடி 

தெருளும் மருளும் மாய்த்துத் தன் திருந்து செம் பொற் கழல் அடிக் கீழ்
அருளி இருத்தும் அம்மானாம் அயனாம் சிவனாம் திருமாலால்
அருளப் பட்ட சடகோபன் ஓரா யிரத்துள் இப் பத்தால்
அருளி யடிக் கீழ் இருத்தும் நம் அண்ணல் கரு மாணிக்கமே–8-8-11-
இப் பத்தும் கற்றாரை-தம்மை விஷயீகரித்தாப் -அங்கீகரித்தாப் போலே விஷயீகரித்து -அங்கீகரித்து
தன் திருவடிகளின் கீழே வைத்துக் கொள்ளும்-ஸ்ரீ சர்வேஸ்வரன் தானே அருள் செய்து
தன் திருவடிக் கீழே சேர்த்துக் கொள்ளும் –இத் திருவாய் மொழி அப்யசித்தாருக்கு -கற்றார்க்கு தாம் பெற்ற பேறு என்கிறார் –

நேர் பட்ட நிறை மூ வுலகுக்கும் நாயகன் தன்னடிமை
நேர் பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்
நேர் பட்ட தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பத்தும்
நேர் பட்டார் அவர் நேர் பட்டார் நெடுமாற்கு அடிமை செய்யவே–8-9-11-
இப்பத்தைக் கற்றவர் ஸ்வரூபத்துக்கு அனுரூபமான -தகுதியான கைங்கர்யத்தைச் செய்யப் பெறுவர்

நல்ல கோட்பாட்டுலகங்கள் மூன்றின் உள்ளும் தான் நிறைந்த
அல்லிக் கமலக் கண்ணனை அந்தண் குருகூர்ச் சடகோபன்
சொல்லப்பட்ட வாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே–8-10-11-
இத் திருவாய் மொழி வல்லார் இதில் சொன்ன ஸ்ரீ பாகவதர்களுக்கு அடிமைப் பட்டு இருத்தலைப் பெற்று-
ச பரிகரமாக –-பெண்டு பிள்ளைகளோடு வாழப் பெறுவர் என்கிறார்

ஆதும் இல்லை மற்று அவனில் என்று அதுவே துணிந்து
தாது சேர் தோள் கண்ணனை குருகூர்ச் சடகோபன் சொன்ன
தீதிலாத ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப்பத்தும்
ஓத வல்ல பிராக்கள் நம்மை ஆளுடையார்கள் பண்டே–9-1-11-
இத் திருவாய் மொழியை அப்யசிப்பார் -கற்பவர்கள் எனக்கு ப்ரியகரர் -பிரியத்தை செய்கின்றவர்-என்கிறார்-இதனைக் கற்பதற்கு அப்யசிக்கைக்கு ஈடான தகுதியான தன்மை உள்ளவர் பிறவி தொடக்கி நமக்கு ஸ்ரீ நாதர்

கூவுதல் வருதல் செய்திடாய் என்று குரை கடல் கடைந்தவன் தன்னை
மேவி நன்கு அமர்ந்த வியன் புனல் பொருநல் வழுதி நாடன் சடகோபன்
நாவில் பாடல் ஆயிரத் துள்ளும் இவையும் ஓர் பத்தும் வல்லார்கள்
ஓவுதல் இன்றி யுலகம் மூன்று அளந்தான் அடி இணை யுள்ளத் தோர்வாரே–9-2-11-
இத் திருவாய்மொழி கற்றார் அவனை நிரந்தரமாக -எப்பொழுதும் நினைக்கப் பெறுவார் என்கிறார்-ஆஸ்ரித அடியவர்கட்கு ஸூலபன் ஆனவனுடைய திருவடிகளை ஹ்ருதயத்தில் மனத்தால் நிரந்தரமாக –எப்பொழுதும் அனுபவிக்கப் பெறுவார் இத்தனை போதும் இவர் தாம் -இவற்றைப் பெற வேண்டும் -என்னும் அபேஷையோடே ஆசையோடு திருக் கண்களால் குளிர நோக்கி அருள வேண்டும்-திருவடிகளை தலைக்கு மேலே வைத்து அருள வேண்டும்-தேவரீர் எழுந்து அருளி இருக்கும் இருப்பைக் காண வேண்டும்
நாய்ச்சிமாரும் தேவருமான இருப்பைக் காண வேண்டும் உலாவும்படி காண வேண்டும்
ஸ்மிதம் புன்முறுவல் இருக்கும் படி காண வேண்டும் என்று ஆசைப் பட்ட இவருக்கு
அப்போதே கிடையாமையாலே இவற்றைப் பெற வேண்டும் என்னும் மநோ ரதம் -எண்ணம் தானே பேறு ஆகத் தோற்றிற்று-இதனைக் கற்றவர்களுக்கும் அப்யசித்தவர்களும் -இந்த மநோ ரதம் -எண்ணம் மாறாமலே முடியச் செல்லும் என்கிறார்-

சீலம் எல்லை இலான் அடி மேல் அணி
கோல நீள் குருகூர்ச் சடகோபன் சொல்
மாலை ஆயிரத்துள் இவை பத்தினின்
பாலர் வைகுந்தம் ஏறுதல் பான்மையே–9-3-11-
இத் திருவாய் மொழி கற்றார் ஸ்ரீ பரம பதத்தே செல்லுதல் ஆச்சர்யம் அன்று –ப்ராப்தமே தக்கதே -இயல்பாகவே இருக்கும் –-–என்கிறார் –இப் பத்தின் பக்கத்தில் உளராமவர் -என்றது-யுக்தி மாத்திரம் -இப் பாசுரங்களை ஒரு கால் சொல்லுதல்-பாட தாரணம் -இவற்றைப் பாடம் செய்தல்-அர்த்த அனுசந்தானம் -இவற்றைப் பொருள் அறிவோடு படித்தல் – என்னும் இவற்றில் ஒரு வழியாலே இதில் சம்பந்தம் உடையவர் -என்றபடி –தமப்பன் செல்வம் மகனுக்கு-தாய பிராப்தம் – தாய பாகமாக அடைய வேண்டியதாகவே இருக்கும் அன்றோ –

ஆறா மதயானை அடர்த்தவன் தன்னைச்
சேறு ஆர் வயல் தென் குருகூர் சடகோபன்
நூறே சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
ஏறே தரும் வானவர் தம் இன்னுயிர்க்கே–9-4-11-
இத் திருவாய்மொழி தன் போக்யத்தையால் -இனிமையினால் ஸ்ரீ நித்ய ஸூரிகள் மனத்தினைப் புண்படுத்தும் –
ஹ்ருதயம் ஈர்க்கப் பண்ணும் -என்கிறார்-அன்றிக்கே-ஸ்ரீ நித்ய ஸூரிகளுக்கு ஏறான ஸ்ரீ சர்வேஸ்வரனைத் தரும் -என்னுதல்-

இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைத்த பல் ஊழிக்குத்
தன் புகழ் ஏத்தத் தனக்கு அருள் செய்த மாயனைத்
தென் குருகூர் சடகோபன் சொல் ஆயிரத்துள் இவை
ஒன்பதோடு ஒன்றுக்கும் மூ வுலகும் உருகுமே–9-5-11-
இத் திருவாய்மொழி பாசுரங்கள் ஹிருதயத்திலே -நெஞ்சில் படில் ஆரேனுமாகிலும் தரியார்-என்கிறார்-என்னுடைய ஆர்த்த நாதத்தாலே –துக்க ஒலியைக் கேட்டு நாடு அழியலாகாது என்றவர்க்கு பின்னையும் நாட்டில் உள்ளார்க்கு ஸைதில்யமே -நலிந்து வருந்துவதே பலித்து விட்டது-

கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னைக்
கொடி மதிள் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
வடிவு அமை ஆயிரத்து இப்பத்தினால் சன்மம்
முடிவு எய்தி நாசம் கண்டீர்கள் எம் கானலே–9-6-11-
இத் திருவாய் மொழியை அப்யசிப்பார்க்கு – கற்பார்க்கு பிறவி முடிந்து-அதற்கு அடியான சம்சாரமும் நசிக்கும் –இங்கே பிறக்க இருக்காமல்- ஸ்ரீ பகவான் உடைய குணங்களை அனுசந்திக்கும்
அனுசந்தானம் சாத்மிக்கும் -பொறுக்கக் கூடிய தேசத்திலே புகுவார்கள் –என்கிறார் –

ஒழிவின்றித் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடரை
ஒழிவில்லா அணி மழலைக் கிளி மொழியாள் அலற்றிய சொல்
வழு வில்லா வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த
அழிவு இல்லா ஆயிரத்து இப்பத்தும் நோய் அறுக்குமே–9-7-11- பிரிவுக்கு அடியான -சம்சார துரிதத்தை –பிறப்பாகிய நோயினை இது தானே அறுத்துக் கொடுக்கும் –ஸ்ரீ பகவானைப் பிரிதல்-விஸ்லேஷம் – ஆகிற நோயை அறுக்கும் -என்றது-கலந்து பிரிந்து துக்கம் பட வேண்டா-கலந்து பிரிந்து திர்யக்குகளின் காலிலே விழுந்து கிளேஸிக்க வேண்டா –
விஸ்லேஷம் -பிரிவு இல்லாத தேசத்தில் புகப் பெறுவார் -என்றபடி –

வண்ணம் மணிமாடம் நல் நாவாய் உள்ளானைத்
திண்ணம் மதிள் தென் குருகூர்ச் சடகோபன்
பண்ணார் தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
மண் ஆண்டு மணம் கமழ்வர் மல்லிகையே–9-8-11-
ஐஹிக ஆமுஷ்மிக சகல போகங்களையும் புஜிக்கப் பெறுவர்-இவ் உலகம் அவ் உலகம் என்னும் இரண்டு உலகங்களிலும் எல்லா இன்பங்களையும் அனுப்பிக்கப் பெறுவர் –சர்வ கந்த -என்கிற விஷயத்தோடு ஒத்து இருத்தலைப் பெறுவார்

அவனை விட்டு அகன்று உயிர் ஆற்ற கில்லா அணி யிழையாய்ச்சியர் மாலைப் பூசல்
அவனை விட்டகல்வதற்கே யிரங்கி அணி குருகூர்ச் சடகோபன் மாறன்
அவனியுண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு
அவனியுள் அலற்றி நின்று உய்ம்மின் தொண்டீர் அச் சொன்ன மாலை நண்ணித் தொழுதே–
9-9-11–அவன் பக்கல் சாபல்யம் -ஆசை உடையார் இத் திருவாய் மொழியைச் சொல்லி அவனைப் பெறுங்கோள் -ப்பாசுரத்தை அப்யசிப்பாருக்கு -கற்பார்க்கு என்னைப் போன்று கூப்பிட வேண்டா –என் சொல்லி உய்வன் -என்று-ஆசைப் பட்ட பேறு பெறுகையில் கண் அழிவு இல்லை –என்கிறார்-

பாடு சாரா வினை பற்று அற வேண்டுவீர்
மாட நீடு குருகூர்ச் சடகோபன் சொல்
பாடலான தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
பாடி ஆடிப் பணிமின் அவன் தாள்களே–9-10-11-
உங்களுடைய துன்பங்கள் எல்லாம் வாசனையோடு போக வேண்டி இருக்கில் இத் திருவாய் மொழியில் ப்ரீதி பூர்வகமாக -முன்னாகச் சொல்லிக் கொண்டு அவன் திருவடியைப் பற்றுங்கோள்-ஆஸ்ரயியுங்கோள் –இது அன்றோ நான் உங்களைக் குடிக்கச் சொல்லுகிற வேப்பங்குடி நீர்-தேனே மலரும் திருப் பாதத்தை அன்றோ சேரச் சொல்லுகிறது –

ஏத்துமின் நமர்காள் என்று தான் குடமாடு
கூத்தனை குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
வாய்த்த வாயிரத்துள் இவை வண் திரு மோகூர்க்கு
ஈத்த பத்திவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே–10-1-11-
பரம உதாரமான -மேலான வண்மையை உடைய ஸ்ரீ திரு மோகூருக்கு கொடுத்த இத் திருவாய் மொழியை அப்யஸிக்க கற்க வல்லார்க்கு துக்க நிவ்ருத்தி யுண்டாம்–சரீர அவசானத்திலே –உடலை விட்டு உயர் நீங்குகிற காலத்திலேயே வழித் துணை இல்லை என்று கிலேசப்பட – வருந்த வேண்டாதபடி ஸ்ரீ காளமேகம் வழித் துணையாம்-

அந்தமில் புகழ் அனந்த புர நகராதி தன்னை
கொந்தலர் பொழில் குருகூர் மாறன் சொல் லாயிரத்துள்
ஐந்தினோடு ஐந்தும் வல்லார் அணைவர் போய் அமர் உலகில்
பைந்தொடி மடந்தையர் தம் வேய் மரு தோள் இணையே–10-2-11-
இத் திருவாய் மொழி வல்லார் ஸ்ரீ திரு நாட்டில் உள்ளாருக்கு போக்யர் -இனியர் ஆவார்-அங்குத்தை அப்சரஸ் ஸூக்களுடைய ஆதரத்துக்கு விஷய பூதராய் – விருப்பத்துக்குப் பொருளாக இருப்பார்-

செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு அத் திருவடி திருவடி மேல் பொருநல்
சங்கணி துறைவன் வண்தென் குருகூர் வண் சடகோபன் சொல்லாயிரத்துள்
மங்கையர் ஆய்ச்சியர் ஆராய்ந்த மாலை அவனோடும் பிரிவதற்கு இரங்கி தையல்
அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன இவையும் பத்து அவற்றின் சார்வே–10-3-11-அவர்கள் நீ போகாதே கொள் -என்ன-அவன் தவிர்ந்து அவர்கள் உடன் கலந்தால் போலே இது கற்றாரும் அவனோடு நித்ய சம்ச்லேஷம் -நீங்காத கலவியைப் பெறுவார் -அவனை பசு நிரைமேய்க்க போக வேண்டாம் என்று நிஷேதித்த -விலக்கிய பாசுரமான இத் திருவாய் மொழியும் மற்றைய திருவாய் மொழியைப் போன்று ஒரு திருவாய் மொழியே -என்று விஸ்மிதராகிறார் – 

பற்று என்று பற்றி பரம பரம்பரனை
மல் திண் தோள் மாலை வழுதி வள நாடன்
சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
கற்றார்க்கு ஓர் பற்றாகும் கண்ணன் கழலிணையே–10-4-11-
இத் திருவாய் மொழியைக் கற்றார்க்கு ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகள் ஸூலபமாம்-அவ்வருகு போய் ஓன்று தேடித் பற்ற வேண்டாதபடியான பற்றாகும்-

நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன்
நொடி ஆயிரத்து இப்பத்து அடியார்க்கு அருள் பேறே–10-5-11–அப்யசித்தவர்களை -கற்றவர்களை ஸ்ரீ ஆழ்வார் தம்மைப் போலே பகவான் உடைய விஷயீகார பாத்ரம் -திருவருளுக்குப் பாத்ரமாக்கும்

காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த
வாட்டாற்று எம் பெருமானை வளம் குருகூர்ச் சடகோபன்
பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே–10-6-11-
-செவி வழியே புக்கு நெஞ்சுக்கு இனிதாகை அன்றிக்கே செவியில் பட்ட போதே பிடித்து இனிதாய் இருக்கையாலே-இத் திருவாய் மொழியை கற்க -அனுபவிக்க -உரியவர்கள் ஸ்ரீ நித்ய ஸூரிகள் ஆவார்கள் என்கிறார்-

மான் ஆங்கார மனம் கெட ஐவர் வன்கையர் மங்க
தான் ஆங்கார மாயப் புக்கு தானேதானே ஆனானைத்
தேன் ஆங்காரப் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள்
மான் ஆங்காரத் திவை பத்தும் திருமால் இரும் சோலை மலைக்கே–10-7-11-
மஹான் அஹங்காரம் இவை முதலானவற்றின் விஷயமான இத் திருவாய் மொழி திரு மால் இரும் சோலை மலையிலே சொல்லிற்று –ஸ்ரீ திருமலை விஷயமாய ஆயிற்று சொல்லிற்று –
ஸ்ரீ அழகரைச் சொன்ன இடம் உண்டாகில் அதில் கற்பகத் தருவினை சொன்னதைப் போன்று-ஸ்ரீ திருமலையில் உள்ளன அடங்க உத்தேச்யமாக கடவன அன்றோ-

நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப் பேர் மேல்
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்
சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார் தொண்டர் ஆள் வது சூழ் பொன் விசும்பே–10-8-11-
இத் திருவாய் மொழியினை அப்யஸிக்க -கற்க வல்லவர்கள் இட்ட வழக்கு பரம பதம் –ஆண்மின்கள் வானகம் -10-9-8-என்று ஆயிற்று அங்கு உள்ளார் சொல்லுவது-

வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-இத் திருவாய் மொழியைக் கற்றவர்-அப்யசித்தவர்கள் – நித்ய ஸூரிகளோடு ஒப்பர்-அப் பரம பதத்திலே ஸ்ரீ பகவான் உடைய குணங்களை அனுபவித்து அவற்றிலே வித்தராய் -ஈடுபட்டவராய் அதற்கு அவ்வருகு கால் வாங்க மாட்டாதே இருக்குமவர்களைப் போலே ஆவார்கள்-

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11–
-பரம பக்தியாலே –
ஸ்ரீ பகவானுடைய பிரசாதம் -திருவருள் பாதியும் தாங்கள் பாதியுமாக சொல்லுமவர்களுக்கு
சரீரத்தின் அவசானத்திலே -முடிவிலே இப் பரபத்தி முதலானவைகள் உண்டாகும்
இவர் அடியிலே மயர்வற மதி நலம் அருளப் பெறுகையாலே எழுந்து அருளி இருக்கும் போதே உண்டாயின – கர்மத்தாலும் ஞானத்தாலும் உண்டாகின்ற -அனுக்ருஹீதையான -பக்தியினுடைய இடத்திலே ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய திருவருள் நிற்க அது அடியாக பிறந்த
பரபக்தி பர ஞான பரம பக்திகள் அன்றோ இவரது – இதனை அறிந்தவர்கள்-சம்சாரத்திலே -இவ் உலகத்தில் பிறந்து வைத்தே ஸ்ரீ நித்ய ஸூரிகளோடு ஒப்பர் – ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய அவதாரம் போன்றதாம் இவர்களுடைய பிறப்பும் –

—————

கம்பர் தெய்வப் பனுவலான திருவாய்மொழியைக் ‘கண்ணன் உண்ணும் அறுசுவை உணவு’ (7) பக்திக்கு மூலப்பனுவல் (8) திருமாலின் 11ஆவது அவதாரம் (78), நான்கு வேதத்தின் சாரம் (71) எனப் பலவாகக் காண்கின்றார்.

கவிப்பா அமுத இசையின் கறியோடு கண்ணன் உண்ணக்
குவிப்பான் குருகைப் பிரான்
சட கோபன் குமரி கொண்கன்
புவிப் பாவலர் தம் பிரான் திரு வாய்மொழி பூசுரர் தம்
செவிப் பால் நுழைந்து புக் குள்ளத்துளே நின்று தித்திக்குமே. 7-திருமால் அமுது செய்து அருளும்படி பரிமாறுபவர்

தித்திக்கும் மூலத் தெளி யமுதே யுண்டு தெய்வ மென்பார்
பத்திக்கு மூலப் பனுவற்கு மூலம் பவம் அறுப்பார்
முத்திக்கு மூலம் முளரிக்கை வாணகை மொய் குழலார்
அத்திக்கு மூலம் குருகைப் பிரான் சொன்ன ஆயிரமே. 8-ஆஸ்திகர்களுடைய பக்திக்கு காரணமுமாம்-மற்றத் திவ்ய பிரபந்தங்களும் மூலம் -முதல் நூல்-முமுஷுக்களுக்கு முத்தி சாதனம்

பதியந் தமிழ் என்ன நான்மறை என்ன இப் பார் புரக்கும்
மதியந் தமிழ் ஒளி மாலைகள் என்ன மறை தமிழின்
அதியம் தரும் கவி ஆயிரம் செய்தளித் தானமுதம்
பொதியம் தருநதி யங் குருகூர் எந்தை பூசுரர்க்கே. 71–வேதம் தமிழ் செய்த மாறன் அருளிச் செய்த ஆயிரம் திருவாய் மொழிகளும்-மேலோட்டமாக பார்ப்பவர் தமிழ் பதிகங்கள் என்பர்கள்-ஆழ்ந்து நோக்குபவர்கள் நான்கு வேதங்களே இவை என்பர்கள்-நிலத்தேவரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு -தொண்டர்க்கு அமுதமாய் அருளினான்-

பாவகத்தால் தன் திரு அவதாரம் பதி னொன்றென்றிப்
பூவகத்தார் அறியாத வண்ணம் தன்னையே புகழந்து
நாவகத்தால் கவி ஆயிரம் பாடி நடித்தளித்த
கோவகத்தாற் கன்றி என் புறத்தார் செய் குற்றேவல்களே. 78–-அத்ரி ஜமதக்கினி ப்ராஹ்மண -தத்தாத்ரேயர் -பரசுராமன் முதல் யுகத்தில் சக்ரவர்த்தி திருமகன் க்ஷத்ரியர் அடுத்த யுகத்திலும் வைஸ்ய யதுகுல கண்ணன் அடுத்தும் கலியுகத்தில் ஆவேச அவதாரம் -வேத வியாசராய் வேதங்களை வெளியிட்டு அருளினால் போல் திவ்ய பிரபந்தங்களை
வெளியிட்டு அருளவே அன்றோ இவர் திரு அவதாரம் –திருமாலது பதினொன்றாவதாகிய திருவவதாரமே என்று அறிந்து கொள்ளாத படி-வங்கி புரத்து நம்பி -ஆழ்வார் ப்ரபாவத்தாலே எம்பெருமானே இவ்வாறு திரு அவதரித்தார் என்னலாம் படி என்று அருளிச் செய்வார்

————————

ஸ்ரீ எம்பெருமானுடைய அவதாரங்களுக்கு என்ன என்ன ப்ரயோஜனங்களோ அவை யெல்லாம்‌ திருவாய்மொழியின்‌ திருவவதாரத்தினாலும்‌ நன்கு தேறுகின்‌ றன வென்றும்‌ அறியக் கிடக்கின்றது. இவ் விஷயம்‌ ஆழ்வாருடைய திவ்ய ஸூத்திகளைக்‌ கொண்டே இங்கு நிரூபிக்கப் படுகின்றது.

1-2--ஸாது பரித்ராண துஷ்க்ருத விநாசனங்கள்‌ -பரித்ராணாய ஸாதூநாம்‌ விநாசாய ச  துஷ்க்ருதாம்‌ சம்பவாமி யுகே யுகே -*சாதுசனத்தை லியுங்‌  கஞ்சனைச்‌ சாதிப்பதற்கு ஆதியஞ்‌ சோதி யுருவை அங்கு வைத்திங்குப்‌  பிறந்த வேத முதல்வன்‌*-*நண்ணாவசுரர்‌  நவிவெய்த  நல்லவமரர்‌ பொலிவெய்த-பண்ணார்‌ பாடல்‌ இன்கவிகள்‌ யானாய்த்‌ தன்னைத்‌ தான்‌ பாடி”-ஸ்துத்யனுடைய அவதாரம்‌ 
போலேயாயிற்று ஸ்துதியினுடைய அவதாரமும்‌
.”-திருவாய்மொழி யென்றும்‌ ஸ்ரீராமாயண மென்றும்‌ இரண்டு வலிய மதிள்கள்‌ என்று மழியமாட்டாதபடி யன்றோ வுள்ளன, அந்த மதிள்‌களை இவன்‌ அசைக்கவும்‌ முடியாதவனன்றோ-ஆகவே திருவாய்‌
மொழியானது எம்பெருமானுக்குப்‌ பெரிய திரு மதிள்‌ போலே யிருந்து ஸாது பரித்ராணமும்‌ துஷ்க்ருத் விநாசநமும்‌ செய்யுமதென்றறிக.


3-4--மயர்வையறுத்து மதிநலமளித்தல்‌ -1. அஜ்ஞாந நிவர்த்தகத்வம்‌, 2. ஜ்ஞாந ப்ரதத்வம்‌. -3. பக்தி ப்ரதத்வம்‌ ஆகிற. இம் மூன்றும்‌ திருவாய்மொழிக்குமுண்டு. மாறன்‌ சடகோபன்‌ ஒலி புகழாயிரத்திப்‌ பத்து உள்ளத்தை மாசறுக்குமே என்கிற பாசுரத்தினால்‌ அஜ்ஞாந நிவர்த்தகத்வமும்‌ “வண் சடகோபன்‌ தெருள் கொள்ளச்‌ சொன்ன வோராயிரம்‌!” என்ற பாசுரத்தினால்‌ ஜ்ஞாந ப்ரதத்வமும்‌, “குருகூர்ச்‌ சடகோபன்‌ சொன்ன, தூய வாயிரத்திப் பத்தால்‌ பத்தராவர்‌ துவளின்‌றியே”' என்ற பாசுரத்தினால்‌ பக்தி ப்ரதத்வமும்‌ திருவாய்‌ மொழிக்கு முண்டென்பது அறியத்தக்கது,

5-எம்பெருமானுக்கு உரிய தொண்டராக்குதல்‌ -எம்பெருமான்‌ நம்மைத்‌ தனக்கு அநந்யார்ஹ சேஷமாக அங்கீ கரிப்பவன்‌ என்பது “வெறித் துளப முடியானே ! வினையேனை உனக் கடிமை அறக் கொண்டாய்‌'' என்கிற பாசுரத்தினால்‌ விளங்கும்‌. திருவாய்மொழியும்‌ நம்மை எம்பெருமானுக்கு அநந்யார்ஹ சேஷமாக்கு மென்னுமிடம்‌ “தொண்டன்‌ சடகோபன்‌ தெரியச்‌ சொன்ன ஓராயிரத் துளிப்பத்து உரிய தொண்டராக்கு முலக முண்டாற்கே” என்ற பாசுரத்தினால்‌ விளங்கும்‌-

6-நோய்களறுக்கும்‌ மருந்தாதல்‌ -எம்பெருமான்‌ ஸம்ஸாரமாகிற வியாதிக்கு மருந்தா யிருப்பவன்‌ என்னுமிடம்‌ அறிந்தனரெல்லாம்‌ அரியை வணங்கி அறிந்தனர்‌ நோய்களறுக்கும்‌ மருந்தே” என்ற பாசுரத்தினால்‌ விளங்கும்‌ -திருவாய்மொழியும்‌ ஸாம்ஸாரிக ஸகல துரிதங்களையும்‌ உரு மாய்ந்து போம்படி பண்ணு மென்னுமிடம்‌ *தென் குருகூர்ச்‌ சடகோபன்‌ மிடைந்த சொல் தொடை ஆயிரத்துளிப்பத்து உடைந்து நோய்களை ஓடுவிக்குமே'” என்ற பாசுரத்தினால்‌ விளங்கும்‌.

7-வானின் மீதேற்றி யருள்‌ செய்தல்‌ -எம்பெருமான்‌ பக்தர்கட்குப்‌ பரமபதத்தை யளிப்பன்‌ என்னுமிடம்‌ “ஏற்றரும்‌ வைகுந்தத்தை அருளும்‌ நமக்கு ஆற்றல்‌ மிக்கான்‌ பெரிய பரஞ்சோதி புக்க வரியே” என்ற பாசுரத்தினால்‌ விளங்கும்‌.திருவாய்மொழியும்‌ பரமபத ப்ராப்தியைப்‌ பண்ணி வைக்கு மென்னுமிடம்‌ “கோனை வண் குருகூர்‌ வண் சடகோபன்‌ சொன்ன வாயிரத்‌துளிப்பத்தும்‌ வானின் மீதேற்றி யருள் செய்து'” என்ற பாசுரத்தினால்‌ விளங்கும்‌.

6-அருளி யடிக்கீ ழிருத்துதல்‌ -எம்பெருமான்‌ நம்மைத்‌ திருவடிகளின் கீழ்ச்‌ சேர்த்துக்‌
கொள்ளுமென்னுமிடம்‌ “பெருந் துன்பம்‌ வேரற நீக்கித்‌ தன் தாளின்‌ கீழ்ச்‌ சேர்த்து அவன் செய்யும்‌ சேமம்‌” என்ற பாசுரத்தினால்‌ விளங்கும்‌.-திருவாய்மொழியும்‌ அவன்‌ திருவடிகளின் கீழே சேர்த்து வைக்குமென்னுமிடம்‌-திருமாலா லருளப்பட்ட சடகோபன் சொல்லாயிரத்துளிப்‌ பத்தால்‌ அருளி யடிக் கீழிருத்தும்‌'-என்ற பாசுரத்தினால்‌ விளங்கும்‌.

9-இன்பக் கதி பயக்குந் தன்மை -எம்பெருமான்‌ தன்னோடு அந்வயித்தவர்களுக்குத்‌ தன்னுடைய அநுபவமாகிற நிரதிசய ஆநந்த யுக்தமான ப்ராப்யத்தைக்‌ கொடுப்பன்‌ என்னுமிடம்‌ “தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக் கதி செய்யும்‌ தெளிவுற்ற கண்ணன்‌” என்கிற பாசுரத்தினால்‌ விளங்கும்‌. திருவாய்மொழியும்‌ தன் பால்‌ அந்வயித்தார்க்கு பகவதநுபவ ஆனந்தத்தை யுண்டாக்கு மென்னுமிடம்‌ **வண் குருகூர்ச் சடகோபன்‌ இங்ஙனே சொன்ன வோராயிரத்துளிப்‌ பத்து எங்ஙனே சொல்லிலு மின்‌பம்‌ பயக்குமே” என்ற பாசுரத்தினால்‌ விளங்கும்‌.

10-நீராயுருக்குந்‌ தன்மை -எம்பெருமான்‌ தன்னை யனுபவிக்க இழிந்தவர்களை த்ரவ த்ரவ்யமாம்படி உருக்கு வனென்னுமிடம்‌ ““ஊடு புக்கு என தாவியை யுருக்கி யுண்டிடுகின்ற நின்றன்னை” என்கிற பாசுரத்தினால்‌ விளங்கும்‌. திருவாய்மொழியும்‌ தன்னை யநுபவிக்க இழிந்தாரை நீர்ப் பண்டமாக உருக்கு மென்னுமிடம்‌ “தென் குருகூர்ச்‌ சடகோபன்‌ சொல்லாயிரத் துள்ளிவை ஒன்பதோ டொன்றுக்கும்‌ மூவுலகு முருகுமே” என்கிற பாசுரத்தினாலும்‌' தோற்றங்களா யிரத்துள்‌ இவையுமொரு பத்தும்‌ வல்லார்‌ ஊற்றின் கண்‌ நுண் மணல் போல்‌ உருகா நிற்பர்‌ நீராயே!” என்கிற பாசுரத்தினாலும்‌ விளங்கும்‌,

ஆக இப்படி பத்து ப்ரகாரங்களாலே எம்பெருமானோடு ஸாம்யத்தை யுடைத்தாகையாலே, வாஸ்யனான அந்த ஸர்வேஸ்வரனுடைய *பத்தினாய தோற்றம்‌!” என்கிற பத்து அவதாரம் போலே “தோற்றங்களாயிரம்‌'! என்கிற இதனுடைய பத்துப் பத்தான ஆவிர்ப்பாவமும்‌-என்று அறியத்தக்கது-எம்பெருமான்‌ லோக ரஷணார்த்தமாக அவதரித்தது போலே திருவாய்மொழியும்‌ லோக ரக்ஷணார்த்தமாகவே அவதரித்த தென்‌றதாயிற்று.
———————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

November 21, 2025

ஆத்திச்சூடி வெண்பா என்பது ஔவையாருடைய ஆத்திச்சூடியிலுள்ள “அறஞ்செய விரும்பு” முதலிய சூத்திரங்களை இறுதியாகக் கொண்டு வேண்பாயாப்பினாற் செய்யப்பட்ட காரணம்பற்றி வந்த பெயர். இது செய்தவர் இராமபாரதி என்பவர், பார்த்தசாரதி யென்பாருமுளர்

பாரோர் புகழிராம பாரதிசெம் பாகமதாய்ச்
சீராத்தி சூடிச் செழுந்தமிழைப்-பேராக
நாகரிகன் புன்னைவன நாதமகி பன்புனைந்தான்
வாகுவினிற் கீர்த்து வர்*-காப்பு..

அருளார் கபிலை யறமே செயமென
றிருளகல வேங்கைக் கியம்பும்-பெருமையினான்
மாவளரும் புன்னை வனநாத மெய்த்துணையா
மேவியறஞ் செய்ய விரும்பு. (1)

உத்தரபூமியிலே குடிதாங்கினான் என்னும் பெயருடைய இடையனாலே மேய்க்கப்பட்ட பசுக்களுள்ளே கபிலை என்னும் பசு ஒன்று தனியே மேயும்படி ஒரு நாள் ஒருகாட்டிற் போயிற்று. அதனை ஒரு புலி கண்டு தனக்கு நல்லுணவு கிடைத்ததென்று தடுத்துக் கொல்ல முயன்றது. அப்போது கபிலை அப்புலியை நோக்கிப் பல தருமங்களையும் போதித்து விலகிக்கொண்டது.

ஆதி நிமிசிவிகைக் காளாய்ச் சடபரதர்
தீது பொறுத்துச் சிறப்புற்றார்-சோதிப்
புயமா வளர்கின்ற புன்னை வனநாதா
செயமா றுவது சினம். (2)

பரதர் என்னும் அரசரானவர் உலகப்பற்றினை முற்றுத்துறந்து காட்டிற்பகுந்து தவஞ்செய்யும்போது ஸ்நாநஞ்செய்யும்பொருட்டுக் கண்*டகியாற்றங் கரைக்குப் போனார். அப்போது பூரணகர்ப்பமுடைய மானுமொன்று தண்ணீர் குடிக்க அங்கே வந்து ஒரு சிங்கத்தின் முழக்கங்கேட்டு அஞ்சி நடுநடுங்கித் தன்கர்ப்பத்தையும் விழவிடுத்து விரைந்தோடிற்று. கருப்பத்திலிருந்த குட்டியும் நீரிலே மிதந்து நீந்திற்று. அதுகண்ட பரதரும் அக்குட்டியின்மேலே பெரிதும் இரக்கம்வைத்து அதனை எடுத்துப் பேணி வளர்ப்பவர் தம்மைவிட யாருமில்லையென்று எண்ணினவராய் ஆதரவோடும் எடுத்துவந்து வளர்த்தார். அவர் சிந்தனையெல்லாம் அந்த மான்குட்டிமேலே இருந்தபடியால் அவருக்கு மரணகாலத்திலும் அச்சிந்தனையே மேலிட்டது. அச்சிந்தனைகாரணமாகப் பின்னர் அந்த மிருகயோனியிற் பிறந்து முன்னைச் சென்மவுணர்வு சிறிதுங் குறையாமல் அம்மிருக சென்மத்துக்குக் காரணமான கன்மநீக்கத்தை நினைத்துக்கொண்டு தம் சென்ம பூமியாகிய காலாஞ்சனம் என்னும் தேசத்தைவிட்டுச் சாளக்கிராமம் என்னும் இடத்தையடைந்தார். அங்கே மானின் சென்மம் நீங்கிவிடப் பின்னர் அங்கிராமுநிவர் மரபிற் பிறந்து யாதொரு தொழின் முயற்சியுமின்றிச் சடம்போலச் சுக துக்கமுமறியாதிருந்தமைபற்றிச் சடபரதர் எனப்பட்டுச் சுற்றத்தாரால் வயலுக்குக் காவற்காரராக நியமிக்கப்பட்டார்.

அப்போது ஒரு சூத்திரன் புத்திரப்பேற்றினைவிரும்பிக் காளிதேவிக்குப் பலிகொடுக்கும்படி ஒருவனை நியமித்துவைத்திருக்க அவனும் விதிவசத்தினாலே தப்பியோடிவிட்டான். அச்சூத்திரன் அவனைத்தேடிப் போகும்போது இப்பரதர் எதிர்ப்பட இவரையே பலியிடும்படி காளிக்குமுன்னே கொண்டுபோய் நிறுத்தினான். அப்போது காளிதேவி இப்பரதருடைய பிரமதேசசுவினாலே தகிக்கப்பட்டுக் கோரவடிவத்தோடுதோன்றி இவரைப் பலியிடத் துணிந்தோருடைய இரத்தங்களை குடித்து நடித்தாள். அக்காலத்திலே நிமி என்னும் அரசன் (இரகுகணன் என்பாருமுளர்) ஞானோபதேசம் பெறக்கருதிக் கபிலமுநிவருடைய ஆச்சிரமத்தை நோக்கிச் செல்லும்போது இப்பரதருடைய மேன்மையை அறியாது தன் சிவிகையைச் சுமக்கும்படி பிடிக்க அதற்கும் உடன்பட்டுத் தான்கொண்ட விரதமுந் தவறாது கோபமுங் கொள்ளாது மெல்லமெல்ல நடந்து ஓருயிர்க்கும் இறுதிவாராமற் காத்து அவ்வரசன் முதலிய பலரானுஞ் சீவன்முத்தா என நன்கு மதிக்கப்பட்டார்.

இந்துமதி விற்றுமலைந் தீனனுக்கா ளாயுமரிச்
சந்திரனோ தன்னிலைமை தப்பவில்லை – நத்தம்
மநுநெறிதேர் புன்னை வனகாதா பூமி
யினிய*ல வதுகர வேல். (3)

சூரியகுலத்துள்ள திரிசங்குமகாராசாவின் மகனாகிய அரிச்சந்திரன் தன் மனைவியாகிய இந்துமதியை விற்றும் புலையனுக்குத் தான் அடிமையாகப் பெற்றுந் தன்னுடைய சத்திய நிலையிலே தவறாது நடந்தான்.

மாவலியை மாலுக்கு மண்ணுதவா மற்றடுத்த
காவலினாற் சுக்கிரனுங் கண்ணிழந்தான் – நாவதனால்
நன்னீதிப் புன்னைவன நாதமகி பாவுலகத்
தின்னீ வதுவிலக் கேல். (4)

விரோசனன் மகனாகிய மாவலி என்னும் அசுரனானவன் மூவுலகங்களுக்கும் அரசனாக வரம்பெற்று அரசுசெய்யுங்காலத்திலே தம்முலகங்களை இழந்த தேவர்கள் யாவரும் விட்டுணுமூர்த்தியையடைந்து தங்கள் குறைகளைத் தீர்க்க வேண்டும் என்று பிரார்த்தித்தார்கள். விட்டுணுமூர்த்தியும் காசிபன் அதிதி என்னும் இருவருக்கும் மகனாகப் பிறந்து வாமனரூபத்தோடும் மாவலியிடம் போய் மூவடி மண்கேட்டார். மாவலியும் மூவடிக்கும் உடன்பட்டு நீர்விட்டுக் கொடுக்கும்போது குருவாகிய சுக்கிராசாரியர் வண்டுவடிவங்கொண்டு சென்று நீர்விடுங்கரக மூக்கிலிருந்து தடுத்து விட்டுணுமூர்த்தியின் தர்ப்பைநுனியாற் குத்துண்டு கண்ணிழந்தார்.

உள்ளபடி தன்சிறகி லுண்டுபல மென்றொருசொல்
விள்ளுஞ் சடாயுமுனம் வீழ்ததுபார – வள்ளற்
றனபதியே புன்னைவனத் தாளாளா வொன்னார்க்
குனதுடைய துவவிளம் பேல். (5)

காசிபமுனிவருக்கு வினதையென்பவளிடத்திலே கருடன், அருணன் என்னும் இருபிள்ளைகள் பிறந்தார்கள். அருணனுக்குச் சமபாதி, சடாயு என இருபிள்ளைகள் பிறந்தார்கள். இந்தச்சடாயு தசரதனுக்கு நண்பனாதலாற் சீதா பிராட்டியை இராவணன் கவர்ந்துகொண்டு போனபோது தன்சிறகிலே பெலமுண்டென்று சொல்லி இராவணனோடு தடுத்துப்போராடி அவனுக்கு வருத்தத்தை யுண்டாக்கினான். உண்டாக்கியும் பின்னர் இராவணனாலேயே சிறகு வெட்டப் பட்டுப் பூமியிலே விழுந்தான்.

ஊரி னரபலிக்கா வூர்சகட மேல்வீமன்
தீரன் பகசூரன் றீதடக்குங் – காரணம்பார்
தேக்குபுகழ்ப் புன்னைவன தீரனே யாவுறினும்
ஊக்க மதுகை விடேல்.

தருமன் முதலிய பாண்டவர்கள் ஐவரும் வேதத்திரகீயநகரத்திலே போய் ஆண்டுள்ள வேதியர் வீடொன்றிலே வாசஞ்செய்தகாலத்திலே அந்நகருக்குச் சமீபமாயுள்ள ஏகசக்கிரம் என்னுங் காட்டிலிருந்துகொண்டு பகன் என்னும் இராட்சதன் குடிக்கொரு பண்டிசோறும் நரபலி ஒன்றுந் திறைவாங்கி உண்டு வந்தான். இப்படி உண்டுவருங் காலத்திலே பாண்டவர்கள் இருக்கும் வீட்டார் கொடுக்கவேண்டிய நாள் வந்தது. அவ்வீட்டுப் பிராமணன் மனைவி தன்னுடைய குலமுதல்வனாகிய ஒரேமகனைப் பலிகொடுப்பது எப்படி என்று வருந்தினாள். அதனை அறிந்த குந்திதேவி அவளுடைய துன்பத்தையாற்றித் தன் மகனாகிய வீமனையே பலிக்கு நியமிக்க வீமனும் உடன்பட்டு அவ்வீட்டார்கொடுத்த சோற்றினையும் வண்டியிலேற்றிக்கொண்டுபோய் அவனைச் சமீபித்தவுடன் அச்சோற்றினையுமுண்டு அதுகண்டு கோபித்து வந்தெதிர்த்த அந்தப் பகனையும் ஊக்கமுடன் கொன்றான்.

எண்ணரிய கோளுடுக்க ளெல்லா மொருமையாதாத்
திண்ணந் துருவர்கையிற் சேர்தலினான் – மண்ணுலகிற்
போற்றுந் தமிழ்ப்பாகைப் புன்னைவன பூபாகேள்
ஏற்றெண் ணெழுத்திகழேல். (7)

சுவாயம்பு மனுவின்மகனாகிய உத்தாநபாதனுடைய மனைவியராகிய சுருதி. சுநீதி என்னும் இருவருள்ளே சுருதி என்பவளிடத்திலே உத்தமன் என்பவன் பிறந்தான். சுநீதி என்பவளிடத்திலே துருவன் என்பவன் பிறந்தான். ஒருநாள் உத்தாநபாதனாகிய பிதாச் சிங்காசநத்திலே வீற்றிருக்கும்போது அவன்மடியிலே மகனாகிய உத்தமன் என்பவன் ஏறியிருந்தான். அப்போது மற்றமகனாகிய துருவன் என்பவனும் ஏறினான். அதுகண்ட சுருதி என்பவள் அவனைநோக்கி நீ பட்டத்துகுரியையல்லை; சிங்காசநத்திலேறாதே என்று தடுத்தாள். சுருதி என்பவளிடத்தேயுள்ள காதலால் அரசனும் அதற்குடன்பாடு டையவனாயிருந்தான். அதுகண்ட துருவன் மிகவும் மனம்நொந்து நடந்த சம்பவத்தைத் தாய்க்கு வந்தறிவித்துத் தாயின் சம்மதியோடு சத்தமுனிவரையடைந்து உபதேசம் பெற்றுத் தவஞ்செய்து கிரக நட்சத்திரங்களையெல்லாம் பிணித்த திகிரியைக் கணக்கின்படி சுற்றியிழுத்து விளங்கும் உயர்பதவியை விட்டிணுவாற் பெற்று மாதாவோடு மேம்பட்டான்.

மாவலிபான் மண்ணிரக்க மாதவனே வாமவுரு
வாமென்றான் மாதவற்கஃ தாகுமோ-மூவுலகிற்
பேர்பரவும் புன்னைவனப் பேரரசே யெவ்வகையாற்
சீர்பெறினு மேற்பதிகழ்ச்சி. (8)

வன்பிரம ராக்கதன்பான் மங்கலியப் பிச்சையருள்
என்பவளுக் கேகொடுத்தீ டேறினான் – அன்பதனால்
வள்ளலெனும் புன்னை வனநாத வஞ்சமிலா
துள்ளதிலே யையமிட் டுண். (9)

தாரணிபோ லெவ்வுயிருந் தாங்குந் தகைமையதாச்
சீரணிந்து நாளுஞ் சிறந்தோங்க-ஆரந்
தழைந்தபுகழ்ப் புன்னைவனத் தாளாளா யார்க்குங்
குழைந்தொப்புரவொழுகு. (10)

மச்சகந்தி தன்வயிற்றில் வந்துதித்து மோதலினால்
விச்சைபெற்ற வேத வியாசனைப்பார்-நிச்சயமே
பன்னுதமிழ்ப் புன்னைவனப் பார்த்திவனே யுண்மைநூ
லின்னோ துவதொழியேல். (11)

முன்னொருகாலத்திலே பராசரமுனிவர் பல சிவஸ்தலங்களைந் தரிசித்துப் பல தீர்த்தங்களிலும் ஸ்நாநஞ்செய்து பூமிப்பிரதக்கிணஞ்செய்து வருகையிலே கெளதமை (கங்கையென்பார் சிலர்) என்னும் யாற்றிலுந் தீர்த்தமாடினார். தீர்த்தமாடியபின் கவுதமையாற்றினைக் கடந்துபோக ஓடம்விடுதற்கு யாருங் கிடையாமல் அங்குள்ள வலைஞர்மகளாகிய மச்சகந்தி என்பவளை ஓடம்விட இயலுமா என்று கேட்டார். மச்சகந்தி ஆயிரம்பேருடைய பாரமமைந்தாலன்றி இந்த ஓடம்விடுதல் அரிதென்றாள். பராசரமுனிவர் ஆயிரம்பேருடைய பாரத்தையும் யானே அமைப்பேன் என்றுசொல்லி ஓடம்விடுவதற்கு அவளை உடம்படுத்தி ஏறிச் சென்றார். செல்லும்போது அந்த மச்சகந்தியிடத்திலே இச்சைமிகுந்தவாராய்ப் பனியினாலே சூரியனைமறைத்து மீன்மணம்போய் நறுமணங்கமழும்படி பரிமளங்கொடுத்துப் பரிமளகந்தியாக்கி அவளைப் புணர்ந்தார். அப்போது வியாச முனிவர் அம்மச்சகந்தியிடத்திலே அவதரித்தார். வியாசமுனிவர் மச்சகந்தியிடத்திற பிறந்தும் வேதம் முதலியவைகளை ஓதுதலினாலே ஞாநம் பெற்றுயர்ந்தார்.

மாதர்முன்னே யுத்தரனு மாபெலவான் போலுரைத்துக்
காதமரி லாச்சுனனாற் கட்டுண்டாண் – ஆதலினால்
வண்மைபெறு புன்னை வனநாதா சீருடைய
திண்மையுன்னி யெளவியம்பேசேல். (12)

பாண்டவர்கள் விராடனுடைய மச்சநாட்டிலே அஞ்ஞாதவாசஞ் செய்யுங் காலத்திலே விராடன்மகனாகிய உத்தரன் என்பவன் தன்னகரத்திலே பசுக்கவர வந்தவர்களை இமைப்பொழுதுள்ளே வெற்றிகொள்வேன் என்று தாய்முதலிய பெண்களுக்குச் சொல்லிவந்தும் போரிலே பயந்தோடித் தேர்விட்டுவந்த அருச்சுனனாற் பிடித்துக் கட்டப்பட்டான்.

மைக்கடல்கொண் முட்டைதனைவாங்குவோமென்றுசிட்டுப்
புக்கதனை வென்றதுதன் புத்தியினால்-அக்கதைபோல்
வேளாளா புன்னைவன மேகமே யுண்மையெனக்
கேளாயஃ கஞ்சுருக் கேல். (13)

ஒருகடற்கரையிலே சேவலும் பேடுமாக இரண்டு சிட்டுக்குருவிகள் வாசஞ்செய்தன. பேடு தன் முட்டைகளையெல்லாம் பலமுறையுங் கடல்வந்து கவர்ந்துகொண்டு போகக்கண்டு துக்கங்கொண்டு தன் நாயகனாகிய சேவலுக்கு முறையிட்டது. சேவல் பறைவைகளையும் அழைத்துக்கொண்டுபோய்ப் பறவை வேந்தனாகிய கருடனுக்கு முறையிட்டது. கருடன்போய் விட்டுணுமூர்த்திக்கு முறையிட்டது. விட்டுணுமூர்த்தி கடலைவருவித்து முட்டைகளைச் சிட்டுக்குருவிடங் கொடுக்கும்படி கட்டளை செய்தார்.

கள்ளற் குரைத்தான் கனகத் தியவிரதன்
உள்ளபடி வேதியர்சொல் லோர்வழியைத்-தெள்ளியசீர்
மாதனதா புன்னைவன வள்ளலே மேலெண்ணா
தேதெனினுங் கண்டனசொல்லேல். (18)

தீதி லரிட்டங்கள் செய்யவுண வைக்கொள்ள
மேதினியிற் றம்மினத்தை மேவுதலால்-நீதிநெறி
போற்றுபுகழ்ப் புன்னைவன பூபாலா வுற்றாரை
மாற்றிருமெய் ஙப்போல் வளை. (19)

அரிட்டம்-காகம். காகங்கள் யாதேனும் உணவைக் காணும்போது தம்மினத்தினையும் அழைத்து உண்பது வழக்கம்.

ஞாயிறுயிர்க் கீறுதிங்க ணம்பரருள் செய்கிலர்செவ்
வாய்பிணிதுக் கங்குருநாள் வாழ்வுபோந் – தூயவெள்ளி
போடிதெல்லாம் புன்னைவன பூபாலா மிக்கபுத‌
னோடுசனி நீராடு. (16)

தொட்ட‌டித்தோ னன்றிசெய்த தூயோ னிருவருக்கும்
பட்டணத்துப் பிள்ளை பகர்ந்ததுபார் – மட்டுலவுந்
தென்பாகைப் புன்னைவன தீரனே யாரிடத்தும்
அன்பாய் ஞயம்பட வுரை. (17)

பட்டணத்துப் பிள்ளையார் சிவஸ்தல‌ யாத்திரையாக‌ப் பலநாடுகளுக்கும் போய்க் கொங்குநாட்டில் வந்தபோது ஒருநாள் அர்த்த ராத்திரியிலே பசியினால் வருந்தி மூர்க்கனான ஒரு இல்லாச் வாயிலிலே நின்று கையிலே தட்டினார். அவன் இவர் ஒரு சிவயோகி என்றறியாது யாரோ காமதூர்த்தன் என்றெண்ணிக்கொண்டு விரைந்து வந்து தடியினாலே அடித்தான். அடிக்கும்போது பிள்ளையார் நின்றநிலைதானும் பெயரவில்லை. சிவ சிவ என்றார். அப்போது அடுத்த‌ வீட்டுப் புறத்திண்ணையிற் கிடந்த கிழவன் ஒருவன் ஓடிவந்து அம்மூர்க்கனை நோக்கி ஏடா! பேதையே! இவர் ஒரு சிறந்த சிவயோகி! இவருக்கேன் இத்தீங்கு செய்தனை! என்று விலக்கிப் பிள்ளையாரை அழைத்துக்கொண்டுபோய் அன்போடும் உண்பித்துப் பெரிதும் உபசரித்தான். அப்போது பிள்ளையார் திருவருளை நினைத்துப் “பூணும்பணிக்கல்ல” “இருக்குமிடந்தேடி” என்னும் பாக்களைப் பாடினார்.

நித்தியமாம் வீட்டு நெறியிலிடம் பாடல்லாற்
பொய்த்தவின்ப வீட்டிற் பொருளடையா – தத்தம்
நடையறியும் புன்னைவன நாதனே பூமி
இடையிடம்ப டவ்வீ டெடேல். (18)

செய்யபுகழ் விக்கிரமா தித்தனொரு தட்டாரப்
பைய லுறவுபற்றிப் பட்டதனால் – வையம்
மணக்குஞ்சீர்ப் புன்னை வனநாதா நீயும்
இணக்க மறிந்திணங் கு. (19)

விக்ரமாதித்தன் கூரியபுத்தியுடைய ஓர் அரசனாயிருந்தும் விசயன் என்னுந் தட்டான் ஒருவனைத் தனக்குச் சிறந்த நட்பாளனாகக்கொண்டு நடந்தான். அவன் மந்திரியாகிய பட்டி என்பவன் இதனை அறிந்து தட்டானுறவு தப்பாது தீங்கு பயக்கும் என்று தடுத்தும் தீவினையனுபவிக்கும் ஊழ்வசத்தால் அரசன் கேட்கவில்லை. அரசன் அத்தட்டான் கற்றிருந்த இந்திரசாலம், மகேந்திரசாலம் என்னும் வித்தைகளை அவனிடத்திலே கற்றுக்கொண்டு, தான் கற்றிருந்த பரகாயப் பிரவேசவித்தையை அத்தட்டானுக்குக் கற்பித்தான். தட்டானோ அரசனை வஞ்சித்து இராச்சியபோகங்களைத் தான் அநுபவிக்க வேண்டும் என்று சமயம் பார்த்திருந்தான்.

இப்படியிருக்கும் நாளிலே அரசன் மந்திரியைவிடுத்துத் தனியேசென்று வேட்டையாடும்படி காட்டிற்போயிருந்தான். இதுவே சமயமென்று தட்டானும் அக்காட்டினை அடைந்தான். பின் அரசன் தட்டான் என்னும் இருவருங் கூடி வேட்டையாடிக்கொண்டு ஒரு குளக்கரையிலே நின்ற ஓர் ஆலமரத்தின் நிழலை அடைந்தார்கள். அரசன் ஆயாசத்தினாலே தட்டான் மடியிலே தலையை வைத்துப் படுத்துக்கொண்டு மேலே பார்த்தான். அவ்வாலமரத்திலே ஆணும் பெண்ணுமாக இரண்டு கிளிப்பறவைகள் புணர்ச்சிசெய்துகொண்டிருந்தன. அப்போது ஆண்கிளி சடிதியாக இறந்துவிடப் பெண்கிளி அதன் பிரிவாற்றாது மிகவருந்திற்று. அதனைச் சீவகாருண்ணியமுடைய அரசன் பார்த்துப் பெண்கிளியின் துயரைத் தீர்க்கக்கருதிப் பரகாயப்பிரவேசவித்தையினாலே தன்னுடலை விடுத்து ஆண்கிளியினுடலிற் பிரவேசித்தான். உடனே ஆண்கிளி எழுந்து பெண்கிளியை மகிழ்வித்தது. அரசனுடல் கிடந்தது. தட்டானும் சமயம் வாய்த்தது என்று தனக்கு அரசன் கற்பித்த பரகாயப்பிரவேச வித்தையைக் கொண்டு அரசனுடலிலே புகுந்து பட்டணத்தையடைந்தான். இவைகளைக் குறிப்பினால் அறிந்த மந்திரி அரசன்மனைவியர் கற்புக்குப் பங்கம்வாராது உபாயஞ்செய்து கொண்டான். கிளியுடலிற் பிரவேசித்த அரசன் மகதநாட்டிலே போய் ஒரு வேடன் வலையிலகப்பட்டு பின் ஒரு செட்டிக்கு விற்கப்பட்டு ஒருதாசியின் விகாரத்திலே வருந்திக் கிளியுருநீங்கித் தன்னுருவம் பெற்றான்.

அணையிடர்தீர்த் தான்கருட னந்தணன் செங்கந்தை
தனையெடுத்துச் சாவு தவிர்த்தான் – இனையவர்போற்
சீராரும் புன்னைவன தீரனே நாடோறும்
பேராருந் தந்தைதாய்ப் பேண். (20)

காசிபமுனிவருடைய மனைவியர்களுள்ளே கத்திரு என்பவள் அநந்தன் முதலிய பாம்புகளைப் பெற்றாள். வினதை என்பவள் கருடன் அருணன் என்னும் இருவரையும் பெற்றாள். ஒருநாள் இவ்வினதை கத்திரு என்னும் இருவரும் ஓரிடத்திலே இருக்கும்போது அங்கே இந்திரனுடைய உச்சைச்சிரவம் என்னுங் குதிரை வந்தது. அக்குதிரையின் வாலைக் கத்திரு பார்த்து கருமை என்ன வினதை வெணமை என்றாள். இவ்வாறு இருவரும் முரணி ஏவள் வார்த்தை மெய்ம்மையாகுமோ அவளுக்கு மற்றவள் அடியாளாகக் கடவுள் ……… ….. …… (Proof Reader: Pls include the missing characters. I can’t read from image ) எனச் சபதமுங் கூறினர். பின்னர் கத்திரு தன்மகனாகிய கார்க்கோடகன் என்னும் பாம்பினால் அவ்வாலைச் சுற்றிக் கருமையாக்குவித்துக் காண்பித்து வினதையைத் தனக்கடிமையாக்கினாள். பின்னர்க் கருடன் அமுதங் கொண்டுவந்து கத்துருவின் பிள்ளைகளுக்குக் கொடுத்துத் தாயாகிய வினதையின் அடிமையை நீக்கினான். அந்தணன்கதை வந்துழிக் காண்க-

உன்னாட்டா ரெல்லா முயிர்காத்துக் கோத்திரத்தில்
எந்நாளும் வாழ்ந்தே யிருத்தலாற்- பன்னாளும்
பூதலத்தின் மேன்மைபெறும் புன்னைவன நாதனே
ஏதிகழ்ந்து நன்றிமற வேல். (21)

உன்னாட்டிற் பொற்களந்தை யூரர்நன்னாட் செய்தபயிர்
பொன்னே விளையப் புகழ்பெற்றார் – ஒன்னார்
பயந்திடுவேற் புன்னைவன பார்த்திவனே நீயுஞ்
செயும்

கூறவழக் கெண்ணாத கூதைசக டற்குவண்டி
ஏறமுன்போல் வாரா திருந்ததனாற் – றேறியென்றும்
மாதிலாக புன்னைவன மன்னாகேள் பூமியதில்
ஏதிலன் மண்பறித்துண்ணேல். (23)

மன்னவனுக் குன்னாட்டார் வந்து முடிசூட்ட‌
முன்னனலின் மூழ்கிமுதன்மைபெற்றார்- அன்னவர்போல்
நன்றரியும் புன்னைவன நாதனே வையகத்தில்
என்றுமியங் கித்திரி யேல். (24)

இருடிமேற் செத்தபாம் பேற்றிப் பரீக்கித்
தரவினாற் பட்ட தறிந்தே – திரைகடல்சூழ்
மண்ணுலகிற் புன்னைவன மன்னவா பாவமிதென்
றெண்ணி யரவமாட் டேல். (25)

அருச்சுனனுடைய மகன் அபிமன்னு. அபிமன்னுவின் மகன் பரீக்கிது. அந்தப் பரீக்கிது மகாராசன் காட்டிலே வேட்டைக்குப்போய் ஒரு மானை எய்தான். அந்தமான் அம்பு பட்டுந் தப்பியோடிற்று. அதனைத் தேடிப் பார்க்கும்போது சமீகர் என்னும் முனிவர் எதிர்ப்பட்டார். அவரை நோக்கி மானை விசாரித்தான். அவர் யாதொன்றும் பேசவில்லை. அவர் பேசவில்லை என்று கோபங்கொண்டு செத்துக் கிடந்த பாம்பொன்றை எடுத்துக் கொண்டு போய் அவருடைய‌ தலையிலே போட்டுவிட்டுப் போனான. பின் அவருடைய மகன் அதனை அறிந்து சொல்லிய சாபப்படி தக்கன் என்னும் பாம்பினாற் கடிக்கப்ப‌ட்டிறந்தான்

அன்னத்தின் றூவிகோங் காகு மரசர்க்குப்
பன்னும் பருத்திதான் பாங்கல்ல – இன்னதனால்
வள்ளலெனும் புன்னை வனநாதா மையிரவிற்
றுள்ளிலவம் பஞ்சிற் றுயில். (26)

மாயனார் தம்மக்கண் மாமுனியைக் கேட்டகர்ப்ப‌
மேயவரைக் கொல்லு மிருப்புலக்கை – ஆயதனான்
மாரனெனும் புன்னை வனநாதா வையகத்திற்
சீருறா வஞ்சகம்பேசேல். (27)

துவாரகையிலே கண்ணபிரான் தருமராசனுக்கு வேள்விகளை முடித்துத் தன்பதஞ்சாருதற்கு நினைத்திருக்குங் காலத்திலே அவரைக் காண விரும்பித் துருவாசர், விசுவாமித்திரர், நாரதர்முதலிய முனிவர்கள் வந்தார்கள். அப்போது யாதவகுமார‌ரிற் சிலர் சாம்பவன் என்பவனை ஒரு கர்ப்பஸ்திரிபோல அலங்கரித்து அம்முனிவர்களுக்கு முன்னே நிறுத்தி “இப்பெண் என்னபிள்ளை பெறுவாள்? சொல்லுங்கள்” என்று கேட்டார்கள். அம்முனிவர்கள் இவர்களுடைய கபடத்தை அறிந்து கோபங்கொண்டு “இக்கருப்பத்தினின்று ஒருமுசலம் பிறக்கும். அந்தமுசலத்தாலே இந்த யாதவகுலமெல்லாம் நாசமாகும்” என்று சாபஞ் சொல்லிவிட்டுக் கண்ணபிரானையும் காணமல் வந்த வழியே திரும்பிப்போய் விட்டார்கள். மற்றைநாள் யமதண்டம்போன்ற ஓருலக்கை சாம்பன் வயிற்றினின்றும் பிறந்தது. அவ்வுலக்கையைக் கண்ட யாதவர்களெல்லாம் அஞ்சி நடுநடுங்கிக் கண்ணபிரானுடைய பிதாவாகிய வசுதேவருக்கு நடந்த காரியத்தை அறிவித்தார்கள். வசுதேவர் அவ்வுலக்கையை அரத்தால் அராவிப் பொடியாக்கி அப்பொடிகளைக் கடலிலே இடும்படிசொன்னார். யாதவர்களும் அவ்வாறே செய்துமுடித்து முனிவர்சாபத்தைக் கடலிலே கரைத்து விட்டோம் என்று நினைத்திருந்தார்கள்.

பின்னர் அந்தப் பொடிகளெல்லாம் அலையினாலொதுக்கப்பட்டுக் கரையிலே வந்து வாட்கோரைப் புல்லாக முளைத்து வளர்ந்திருந்தன. அந்த இரும்புப் பொடிகளுள்ளே கடலைவிதையளவு பிரமாணமுடைய ஒருதுண்டு ஒரு மீனால் விழுங்கப்பட்டு உலுப்தகனென்னும் வேடன்கையிலகப்பட அவன் அத்துண்டினைத் தன்னம்பொன்றின் நுனியிலே வைத்திருந்தான். பின்னர்க் கண்ணபிரானும் பலராமனும் யாதவரும் கடற்கரையிற்போய்க் கடனீரிலாடிக் கடற்றெய்வத்துக்குப் பூசையும் விழாவுநடத்தினார்கள். நடத்தியபின் பலராமனுங் கண்ணபிரானுந் தவம்புரியுமாறு காடுநோக்கினர். நைவேதித்த கள்ளினை அதிகமாக உண்டயாதவர்கள் வெறியினாலே ஒருவரை ஒருவர் இகழ்ந்து பேசிக் கோபமூள இருப்புலக்கைப் பொடியினாலே அங்கே முளைத்திருந்த அவ்வாட்கோரைகளைப் பிடுங்கி ஒருவருக்குருவர் அடிக்க எல்லோரும் இறந்தார்கள். இக்கதை மகாபாரதத்து மெளசலபருவத்திலுஞ் சீர்காழிப்புராணத்திலும் அற்ப வேறுபாட்டுடன் காணப்படும். சாபஞ்சொன்னவர் கபிலர் என்றும், துருவாசர் என்றுஞ் சொல்வாருமுளர்.

வாணன் சிவனை வணங்கிவசஞ் செய்துலகோர்
காணநின்று தன்வாயில் காக்கவைத்தும்-பாணியெல்லாம்
போனதனாற் புன்னைவன பூபாலா யாரிடத்துந்
தானழக லாதனசெ யேல். (28)

காசிபமுனிவருக்குத் திதி என்பவளிடத்திலே இரணியகசிபு இரணியாக்கன் என்னும் இருவரும் பிறந்தார்கள். இரணியகசிபுவுடைய பிள்ளைகள் பிரகிலாதன், அநுகிலாதன் முதலிய நால்வர். பிரகிலாதன் பிள்ளைகள் ஆயுண்மான் விரோசனன் முதலிய நால்வர். விரோசனனுடைய பிள்ளை மாவலி. மாவலிக்குப் பிள்ளைகள் நூறுபேர். அவருள்ளே வாணன் என்பவனும் ஒருவன். இந்த வாணன் என்பவன் திருக்கைலாச மலையிற்சென்று சிவனுடைய திருநடனத்திற்கு மத்தளம் அடித்துச் சிவனை மகிழ்வித்துத் தான் என்றுங் கண்டு வணங்கும்படி தன்னுடைய சோணிதபுரவாயிலிலே வந்து வீற்றிருக்கும்படி செய்தான். செய்தும் அழகலாதவைகளைச் செய்து பலரோடும் போராடி இறுதியிலே விட்டுணுமூர்த்தியாலே கைகளெல்லாம் இழக்கப்பெற்றான்.

கல்வியிள மைக்குளிலாக் காளிதா சன்மனையாள்
வல்வசையாற் பொல்லா மரணமுற்றுச்-செல்வதனான்
நற்றாமா புன்னைவன நாதா விதையறிந்து
கற்றா லிளமையிற் கல். (29)

அரிகரபுரத்திலுள்ள அனந்தநாராயணன் என்னும் விப்பிரனுக்கு அரிகரன் என்னும் பெயருடைய புத்திரனெருவனிருந்தான். அப்புத்திரன் அதிக மூடனாக ஆடுமேய்க்க நியமிக்கப்பட்டு மேய்க்கும் நாள்களிலே ஒருநாள் ஆடுகளுண்ணும் குழைக்காக ஒரு மரத்திலேறி நுனிக்கொம்பிலிருந்து அடிக்கொம்பைத் தறித்தான்.

கல்வியிலே வாதுசெய்து தன்னை வெல்லுகிறவனையே விவாகஞ்செய்ய நிச்சயித்திருந்த ஓரிராசகுமாரியோடு வாதுசெய்து தோல்விபெற்ற வித்துவான்கள் சிலர், இவனை மரத்தினின்றும் இறக்கிக்கொண்டுபோய் அவ்விராசகுமாரிக்கு வித்துவான் என்று காட்டி அங்கீகரிக்கச்செய்தார்கள். அவ்விராசகுமாரி வித்துவான்கள்செய்த அமடுகளெல்லாம் அறிந்து காளிதேவியிடம்போய் வரம்பெறும்படி அவனை அனுப்பினாள். அப்படியே அவன் காளிதேவியிடம்போய் வரம்பெற்று வித்துவானாய்க் காளிதாசன் என்னும் பெயரும்பெற்றுப் போசராசனுடைய சபை வித்துவான்களுக்குத் தலைவனாக விளங்கினான்.

இப்படிப் போசராசனுடைய சபையிலே பலநாளிருந்து பின் யாதோ ஒரு காரணத்தால் அவனை வெறுத்துத் தன்னுடைய தாசிவீட்டிலேபோய் மறைந்திருந்தான். அப்போது போசராசன் காளிதாசனை வெளிப்படுத்தக் கருதி ஒரு சுலோகத்திற் பாதியை முடித்து மற்றப்பாதி முடிப்பவனுக்கு தன்னரசாட்சியிற் பாதி கொடுக்கப்படும் என்று பிரசித்தஞ்செய்தான். இதனை அறிந்த அந்தத் தாசி காளிதாசனைக்கொண்டு மற்றைப்பாதியை முடிப்பித்து அரசாட்சியின் பாதியைத் தானே பெறக்கருதிக் காளிதாசனை வெட்டிக்கொன்றுவிட்டுச் சுலோகப்பாதியைக் கொண்டுபோய்ப் போசராசனுக்குக் காட்டினாள்.

பத்ரகிரி ராசன் பகர்சனகன மெய்விதுரன்
சித்தபரி சுத்தஞ் செலுத்துதலால்-இத்தரையில்
மன்னனெனும் புன்னை வனநாதா யாவுறினும்
என்ன வறனைமற வேல். (30)

பத்திரகிரிராசன் -கோவிந்தசாமி என்பனுடையமகன்; அரசனாயிருந்து பட்டணத்துப்பிள்ளையுடைய அருளினாலே துறவுபூண்டவன். சனகன் – துரவு போண்ட ஓரரசன். விதுரன் – வியாசனுக்கு அம்பாலிகையிடம் பிறந்தவன்.

காலைதுயில் சீலமபோங் கண்டபக லாக்கம்போம்
மாலைதுயி னோயாம் வகையறிந்து-ஞாலமதிற்
புண்ணியகா லந்தெரிந்து புன்னைவன பூபாலா
எண்ணி யனந்தலா டேல். (31)

இரணியனு மாங்காரத் தெண்ணா துரைத்து
நரகரியா லிற்றான்முன் னாளிற்-சுரதருவைப்
போலே கொடுக்கின்ற புன்னை வனநாதா
மாலே கடிவதுமற. (32)

இரணியன் தவஞ்செய்து பிரமதேவரிடத்திலே வரம்பெற்று மூவுலகுக்கும் அரசனாய் இரணியனேநம என யாவருந் தன்னை வணங்கும்படி கட்டளை யிட்டான். அவன் மகனாகிய பிரகிலாதன் அதனைமறுத்து ஓநமோநாராயணாய என்று சொல்லி வாதாடினான். அவனைநோக்கி உனது நாராயணன் இத்தூணிலும் இருப்பானோ என்று சொல்லி இரணியன் அத் தூணிலே தன்கையால் அடித்தான். அப்போது விட்டுணுமூர்த்தி அத்தூணிலிருந்து நரசிங்கமாகத்தோன்றி அவனைக்கொன்றார்.

துய்ய சிலாதன்சேய் துங்கவிர தங்களெலாஞ்
செய்யநந்தி யாகச் சிறப்புற்றான்-பொய்யலவே
தேன்காண்சொற் புன்னைவன தீரனே யைம்பொறியைத்
தான்காப் பதுவிர தம். (33)

முன்னொரு காலத்திலே திருமறைக்காட்டிலே இருந்த ஒரு பிராமணச் சிறுவர் தம்வீட்டிலே பிச்சைக்குவந்த மற்றொரு பிராமணணுடைய பிச்சையன்னத்துக்குள்ளே ஒரு சிறுகல்லையிட்டு விட்டார். அந்த பிராமணன் அவ்வன்னத்தை அக்கல்லோடுதானே கொண்டுபோய் உண்டான். பின்னர் இச்சிறுவர் வளர்ந்து சாத்திரங்களும் படித்துத் தவங்களுஞ் செய்து கோரதவசி எனப் பேரும் பெற்று அட்டசித்திகளிலும் வல்லராய் யமபுரத்திலும் போய் அங்கே செய்யுந் தண்டனைகளையும் பார்தது வருகையிலே அங்கே ஒரு பெரிய மலையைக் கண்டு இம்மலை யாதென்று வுனாவினார். அப்போது அங்கேநின்றசிலர் அவரை நோக்கிப் “பூமியிலே கோரதபசி என்றொரு பாவி பிச்சைக்குவந்த ஒரு பிராமணனுடைய அன்னத்திலே ஒருகல்லையிட அக்கல்லோடு பிராமணன் அவ்வன்னத்தையுண்டான். அக்கல்லே அக்கோரதபசி இறந்தபின் உண்டற்கு இங்கே மலையா வளர்கின்றது” என்றார்கள். அதனைக் கேட்ட கோரதபசி அஞ்சி அதுசெய்தவன் இதினின்று தப்பிக்கொள்ளும் வகையுளதோ என்று வினாவினான். “பூமியிலே இவ்வளவோர் மலையைக் கரைத்துண்பானாயின்; இம்மலைய*ம் தானாக இங்கே கரைந்துவிடும்” என்றார்கள். கோதரபசி உடனே பூமியிலேவந்து தன்னூரை அடைந்து ஒரு மலையை நியமித்துச் சிறிதுசிறிதாக நாடோறும் இடித்துப் பொடியாக்கி நீரிற்கரைத்து உண்டுவந்தார். அம்மலை உண்டொழிய இயமபுரத்திலுள்ள மலையுங் கரைந் தொழிந்தது. அக்கோரதபசி மலையைக் கரைத்துண்ட காரணத்தாற் சிலாதர் என்னும் பெயர் பெற்றார்.

இந்தச் சிலாதர் புத்திரப்பேற்றினை விரும்பித் திருவையாற்றிலே பஞ்சாக்கினி மத்தியினின்று பலவருடங்களாகத் தவஞ்செய்தார். அத்தவத்திற் கிரங்கிச் சிவபெருமானும் வெளிப்பட்டு முனிவனே! உனக்கு வேண்டும் வரம் யாதென்று வினாவச் சிலாதமுனிவர் ஒரு சற்புத்திரனைத் தந்தருளவேண்டுமென்றார். சிவ பெருமான், “சகலகுணங்களும் நிறைந்த ஒரு சற்புத்திரன் பதினாறுவயதுடையவனாய் நீ செய்யும் யாகபூமியிலே உழுபடைச்சாலிலே தோன்றுவான்” எனச்சொல்லி மறைந்தார். பின்னர் யாகசாலையை உழுதபோது ஒரு மாணிக்கப்பெட்டி தோன்றிற்று. சிலாத முனிவர் அப்பெட்டியைத் திறந்தார். பெட்டிக்குள்ளே நெற்றிக் கண்ணுஞ் சந்திரசடாமுடியும், சதுர்ப்புயமுமாக விளங்குஞ் சிவமூர்த்தம் இருக்கக்கண்டு துதித்து நின்றார். அப்போது “முனிவனே! பெட்டியை மூடித்திற” என்றோர் அசரீரி தோன்றிற்று. பின்னர் அந்த அசரீரிப்படி மூடித் திறந்தார். அப்பொழுது பெருமான் ஒரு குழந்தையாக அழுதார். சிலாதமுனிவர் அக்குழந்தையை எடுத்துக்கொண்டுபோய்ப் பிராமணர்க்குரிய கிரியைகளெல்லாஞ்செய்து செப்பீசுவரர் எனப் பெயரிட்டு வளர்த்தனர். வளர்த்துவருங்காலத்திலே பதினாறாம் வயசும் வந்தது. பதினாறுவயசென்னும் நியமத்தைக் குறித்துத் தந்தையார் வருந்தினர். புத்திரர் அவர்களைப் பயப்படவேண்டாம் என்று சொல்லி அயனரிதீர்த்தநடுவினின்று ஸ்ரீருத்திரத்தை ஓதி அருந்தவஞ் செய்தார். அப்போது சிவபிரான் வெளிப்பட்டு நித்தியமாகிய சாரூப்பியங் கொடுத்து தமது நாமமாகிய நந்தி என்னும் நாமத்தையுஞ் சூட்டி சுகேசி என்னுங் கன்னிகையையும் மணம்புணர்வித்துக் கணத்தலைமையுங் கொடுத்துத் தமது கோயில் வாயிலிலே காவல்செய்யும்படி சுரிகையும் பிரம்புங் கொடுத்து முடிசூட்டி வைத்தார்.

தண்டமிழ்க்காக் கம்பருக்குத் தாமடிமை யென்றுதொண்டை
மண்டலத்தா ரேட்டில் வரைந்ததுபோல்-எண்டிசைக்கும்
பொன்னான புன்னைவன பூபாலா தென்பாகை
மன்னா கிழமைபட வாழ். 34)

கவிச்சக்கரவர்த்தியாகிய கம்பநாட்டாழ்வார் ஏரெழுபதென்னும் பிரபந்தம் பாடியபோது தொண்டைமண்டலத்துள்ள வேளாளர் யாவரும் பெருமகிழ்ச்சியுற்று இதற்கு எங்களாலே தரத்தக்க வேறுபரிசு யாதொன்றுமில்லை எங்களையடிமையாக உமக்குத் தருவதே பரிசாகும் என்றுசொல்லிக் கம்பருக்கு அடிமையோலை எழுதிக் கொடுத்தார்கள்.

பெண்கேட்ட வேந்தனுக்குப் பெண்ணாயைப் பந்தரிலே
கண்காண நின்குலத்தார் கட்டிவைத்த-பண்பதுபார்
நன்பாகைப் புன்னைவன நாதனே யப்படிப்போல்
அன்பான கீழ்மை யகற்று. (35)

நீர்கலந்த பாலையன்ன நீர்பிரித்துக் கொள்வதுபோற்
சீர்கலந்தார் நற்குணமே சேர்ந்துகொள்வார்-ஏர்கொள்
புகழாளா புன்னைவன பூபால னேமிக்
குண மதுகை விடேல். (36)

அர்ச்சுனன்மால் சார்பிழந்த வன்றே கருதலர்*முன்
கைச்சிலைவெற் பாக்கனத்துக் கைதளர்ந்தான் – நிச்சயமே
மன்றலர்சூழ் புன்னை வனநாதா தக்கோரை
என்றுங்கூ டிப்பிரி யேல். (37)

பாண்டவர்கள் அத்தினாபுரத்திலிருக்கும்போது ஒரு தூதன் வந்து யாதவகுமாரர் யாவரும் கடல்விழாக் கொண்டாடிக் கள்ளுக்குடித்துத் தம்முள்ளே பகைத்துப் போராடி இறந்தார்கள் என்றும், கண்ணபிரானும் பலதேவனும் தவம் புரியுமாறு காட்டிற்புகுந்தார்கள் என்றுஞ் சொன்னான். அதுகேட்ட பாண்டவரும் பெண்களும் பெருந்துயரடைந்து புலம்பினார்கள். அவருள்ளே அருச்சுனன் மிகுவிரைவாகத் துவாரகைக்குப் போய் வசுதேவனையும் பெண்களையும் கண்டு புலம்பி அவர்களுக்கும் ஆறுதல்கூறிப் பின் காட்டிற்புகுந்து கண்ணபிரானையும் பலதேவனையுந் தேடியபோது அவர்களுடைய உடம்புகண்மாத்திரமிருக்கக் கண்டு விழுந்து புரண்டழுது கண்ணபிரானுடைய பேரனாகிய வச்சிரமேவனைக்கொண்டு அந்தியக்கர்மங்களைச் செய்வித்தான். செய்வித்தபின் ஏழுநாளுள்ளே துவாரகை கடலாற் கொள்ளப்படும் என்று முன்னரே கண்ணபிரான் சொன்னபடி நடக்குமென்றஞ்சி அங்கே இருக்கவிடாமல் கண்ணன்மனைவியரையும் நகரத்தாரையும் அழைத்துக்கொண்டு துவாரகையை நீங்கிப் பஞ்சவடம் என்னும் இடத்திலே வரப் பொழுதும்பட்டது. அப்போது அவர்கள் துவாரகையிலேயிருந்து கொண்டு வந்த திரவியங்களையும் பெண்களின் ஆபரணங்களையும் கண்டு சில வேடர்கள் அங்கே வந்து பறித்தார்கள். அப்போது தடுத்து வில்லிலே அம்புபூட்டி அருச்சுனன் பிரயோகஞ் செய்தும் கண்ணன்சார்பிழந்தமையாற் பயன்படவில்லை.

வாலிகெட ராமனொரு வாளிதொட்ட வெம்பழியை
மேலொருசென் மத்திலன்னோன் மீண்டுகொன்றான் – ஞாலமதில்
வல்லவனே புன்னை வனநாதா யாரெனினும்
ஒல்லை கெடுப்ப தொழி. (38)

விட்டுணுவின் அவதாரமாகிய ஸ்ரீராமச் சந்திரன் கிட்கிந்தைமலையிலே குரங்குகளுக்குத் தலைவனாயிருந்த வாலியென்பவனை அவன்தம்பியாகிய சுக்கிரீவன் பொருட்டு மறைந்துநின்று பாணப்பிரயோகஞ் செய்து கொன்றான். அவ்வாறு கொல்லப்பட்ட வாலி பின்னர் உலுப்தகன் என்னும் வேடனாகப்பிறந்து விட்டுணுவின் மற்றோரவதாரமாகிய கண்ணபிரானை ஒரு காட்டிலே படுத்திருக்கும்போது உள்ளங்காலிலே பாணப் பிரயோகஞ் செய்து கொன்றான்.

முன்பகவற் கீதை முனியுரைக்கக் கன்னிமரந்
தன்படியே கேட்டுலகிற் றார்வேந்தர் – அன்புறல்போல்
மாதவனே புன்னை வனநாதா நன்மையுற
மூதறிவோர் கேள்வி முயல். (39)

இந்திரன்வாள் வைக்க வெடுத்துமுன முற்கலனார்
தந்தருமம விட்டுத் தவமிழந்தார் – சந்ததமும்
பாகையில்வாழ் புன்னைவன பார்த்திவா வாகையினா
லேகை வினைகர வேல். (40)

பிரம்மதேவருடைய மநத்திலே பிறந்த முநிவர் பதின்மர். அவர் மநு, மரீசி, புலத்தியன், தக்கன், புயகன், அங்கிரா, வசிட்டன், பிருகு, அத்திரி, கிருது, என்பவர். அவருள்ளே அங்கிரா என்னும் முநிவர்கணத்தோர் முப்பத்துமூவர். அவர் அங்கிரசு, மாந்தாதா, புருகுச்சன், முற்கலன் முதலியோர். அவருள்ளே முற்கலமுநிவர் தவஞ்செய்யுங்-காலத்திலே அத்தவத்தைக் கெடுக்க நினைத்த இந்திரன் வாட்படையைக் கொண்டுபோய் அம்முனிவருக்கு முன்வைத்தான். அம்முற்கலமுநிவர் அவ்வாட்படையை எடுத்து மரங்களையன்றிப் பலமிருகங்களையும் வெட்டிக் கொன்றார். வாளெடுத்து வெட்டிய காரணத்தினாலே தம்முடைய தருமமுந் தவமுமிழந்து நரகயாதனையும் பெற்றார்.

கொட்டமிட்டே யுத்தரத்திற் கோக்கொள்ளை யாடவந்த
துட்டனர வக்கொடியோன் றோற்றிடுக்கண் – பட்டதனால்
நீதிபரா புன்னைவன நேயனே யேதெனினும்
பேதைமையாக் கொள்ளைவிரும் பேல். (41)

பாண்டவர்கள் விராடபுரத்திலே வசிக்கும்போது விராடனுடைய பசுக்கவரவந்த துரியோதனன்பக்கத்தார்க்கும் விராடன்பக்கத்தார்க்கும் யுத்தம் நடந்தது. அப்போது துரியோதனனும் வந்து பேடிவடிவத்தோடும் அங்கே இருந்த அருச்சுனனாலே முடியும் பங்கப்பட்டுத் தோல்வியும் பகற்றுத் துயருமடைந்தான்.

நம்பனுக்காஞ் செவ்வந்தி நன்மலர்வே சிக்களித்த
செம்பியனு மணமழையாற் சீரழிந்தான் – அம்புவியில்
எவ்வாறும் புன்னைவன மென்னுமுகி லேநீதிக்
கொவ்வாத கோதாட் டொழி. (42)

சாரமாமுனிவர் என்பவர் திரிசிராமலையையடைந்து சிவபூசைசெய்துவரும் நாள்களிலே ஒருநாள் அங்கே நாககன்னிகைகள் கொண்டுவந்து பூசித்த சுகந்தமுள்ள செவ்வந்திமலரைக்கண்டு தாமும் அம்மலர்களாற் பூசிக்கவிரும்பி அக்கன்னிகைகளோடும் பாதலத்திற்போய் அந்தச் செவ்ந்திச்செடிகளைக் கொண்டு வ வந்துந்து அங்கே உண்டாக்கி அம்மலராற் புசித்துவந்தார். அக்காலத்திலே அரசனாக உறையூரிலேயிருந்த பராந்தகன்என்னுஞ் சோழன் அம்மலர்களைப்பறித்துத் தன்னிச்சைப்படி உபயோகப்படுத்தினான். அதனைஅறிந்த அம்முனிவர் சிவபெருமானுடைய சந்நிதியையடைந்து முறையிடச் சிவபெருமான் அவனுடைய உறையூரிலே மண்மாரிபெய்யச் செய்தார். மண்மாரிபெய்து நகரழிதலைக்கண்ட அவ்வரசன் மனைவியையும் அழைத்துக்கொண்டு தன்னகரை விட்டோடினான். ஓடியுஞ் சிவபூசைக்குரிய பூவைக் கவர்ந்த குற்றத்தினாலே நகரோடழிந்து நரகமடைந்தான். செம்பியன் – சோழன்.

மண்டலத்திற் செங்கோல் வழியிற் செலுத்தாமற்
றண்டகனென னும்மொருவன் றான்மடியக் – கண்டதனால்
வேள்புரையும் புன்னைவன வித்தகா வெந்நாளும்
நீழ்சக் கரநெறி நில். (43)

மனுமரபிலே தோன்றிய தண்டகன் என்பவன் தன்னாட்டினைத் தருமமுந்தயையுமின்றி அரசுசெய்துவருநாளிலே குருவாகிய சுக்கிரன் தவஞ்செய்யுங் காட்டிலேபோய்ச் சுக்கிரன்மகளைக்கண்டு மனமயங்கி அவளை வலாற்காரமாகப் புணர்ந்தான். அவளுந் துக்கத்தோடும் போய்ப் பிதாவுக்கு முறையிட்டாள். பிதாவாகிய சுக்கிரன் மிக்க கோபமுடையவனாய் “என்மகளுக்குத் தீராவிடும்பைசெய்த தண்டகனும் அவனாடும் கிளையும் பிறவும் வெந்து பொடியாகுக” எனச் சாபஞ் சொன்னான். அச்சாபப்படியே அவனுடைய நாடுங் காடாகித் தண்டகாரணியம் என்னும் பெயாராயிற்று.

ஈச னுமைமணத்தி லேவடதிக் காழ்ந்ததெனக்
காசினிசீ ராக்கக் கலசமுனி-வாசமுற்றுச்
செய்ததுபார் புன்னைவன தீரனே யப்படிச்சீர்
எய்துஞ்சான் றோரினத்திரு. (44)

இமயமலையிலே சிவபிரானுக்கும் உமாதேவிக்கும் நடந்த கல்யாணத்தைத் தெரிசிக்குமாறு பலரும் போய்ச் சேர்ந்தபோது பாரம்மிகுந்து பூமியின் வடபாகந் தாழத் தென்பாகம் உயர்ந்தது. உலகமுழுதும் நிலைகுலைந்தது. தேவரும் பிறரும் வருந்திச் சிவனேயென்றிரங்கினர். யாவரும் இரங்குதலைச் சிவபெருமானுணர்ந்து பூமியைச் சமப்படுத்தக் கருதி அகத்திய முனிவரை அழைத்துத் தெற்கேயுள்ள பொதியமலையிலே போயிருக்கும்படி கட்டளையிட்டார். அப்படியே அகத்தியரும் பொதியமலையிலே போயிருந்து பூமியைச் சமமாக்கினார்.

சீதைபண்பி ராவணற்குச் செப்பிக் குலங்கெடுத்த
பாதகிமூக் கன்றிழந்த பங்கம்பார் – ஆதலினால்
தாரணிக்குட் புன்னைவனத் தாளாளா தன்னையெண்ணாச்
சேரலர்க்குச் சித்திரம்பேசேல். (45)

சுமாலி என்பவனுடைய மகளாகிய கைகசி என்பவளிடத்திலே விச்சிரவா என்னும் முனிவனுக்கு இராவணன் முதலிய புத்திரர்களும் சூர்ப்பநகை என்பவர்களும் பிறந்தார்கள். இந்தச் சூர்ப்பணகி தண்டகாரணியத்திலே இராமலக்குமணர்களையுஞ் சீதாப்பிராட்டியையுங் கண்டபோது இராமலக்குமணரை விரும்பியுந் தன்கருத்துச் சித்தியாகாது சீதாப்பிராட்டியைக் கவர்ந்துசெல்ல முயன்று இலக்குமணராலே மூக்குவெட்டப்பட்டாள். பின்னர் இராவணனிடம்போய்ச் சீதா பிராட்டியுடைய அழகு முதலியவைகளை அறிவித்தாள். இராவணன்வந்து சீதா பிராட்டியைக் கவர்ந்துபோனான். பின்னர் இராமசுவாமிபோய் இராவணன் முதலியோரைக் கொன்றார். ஆதலால் தன்குலங் கெடுதற்குச் சூர்ப்பணகியே காரணமாயினாள்.

உற்றதொடைப்* புண்ணுக் குடைகீறிக் காட்டிநின்றான்
கொற்றவன்மு னுன்கங்கை கோத்திரத்தான்-வெற்றிபுனை
மன்னான புன்னைவன வள்ளலே யாதலினால்
எந்நாளுஞ் சீர்மைமறவேல். (46)

சகுனிதுரி யோதனற்குச் சர்ப்பனையாக் கேடு
மிகவுரைத்துத் தன்னுயிரும் வீந்த- நகைபார்
மனுநெறிதேர் புன்னை வனநாதா யாவ
ரெனினுஞ் சுளிக்கச்சொல்லேல். (47)

காந்தாரதேசரானாகிய சகுனியென்பவன் வஞ்சகப் புத்திகளைச் சொல்லிக் கொடுத்துத் தன் மருகனாகிய துரியோதனனைக் கெடுத்தழித்தன்றித் தானுங் கெட்டழிந்தான்.

தோராத நூற்றுவருந் தோற்றபஞ்ச பாண்டவரும்
பாரே யகன்றுபட்ட பாரதம்பார் – பேராண்மை
வற்றாத புன்னைவன மாகடலே மிக்கசெல்வம்
பெற்றாலுஞ் சூதுவிரும் பேல். (48)

பாரதவீரர்களாகிய நூற்றுவர் ஐவர் என்னும் இருபாலருள்ளே தருமன் முதலிய ஐவரும் துரியோதனன்முதலிய நூற்றுவரோடுஞ் சூதாடி இராச்சியமுமிழந்து காடடைந்தார்கள். நூற்றுவரும் இராச்சியம் பெறவந்த ஐவரோடும் போராடி இறந்தார்கள்.

வேள்விக்கு மூவருமே வேண்டுமென் றெண்ணாமற்
றாழ்வுசெய்து தக்கன் றலையிழந்தான் – ஏழுலகும்
வீசுபுகழ்ப் புன்னைவன வித்தகா செய்கையறிந்
தேசெய்வன திருந்தச் செய். (49)

இருமைக்கு மெய்த்துணையா மென்றுமார்க் கண்டன்
அரனடியைச் சேர்ந்தா னவன்போல-அருள்பெருகும்
பூசா பலாபாகைப் புன்னைவன மேமனமொத்
தேசேர் விடமறிந்து சேர். (50)

மிருகண்டுமுனிவருடைய புதல்வராகிய மார்க்கண்டேயமுனிவர் இம்மைக்கும் மறுமைக்கும் நற்றுணையென்று கருதிச் சிவனடியைச் சேர்ந்து பூசித்து யமனையும் வென்று தீர்காயுசும் பெற்றார்.

தூயரகு ராமனபாற் சோரமுன்னி மாரீசன்
மாயமா னாய்த்திரிந்து மாய்ந்ததுபார்- ஞாயமன்றோ
வீசுபுகழ்ப் புன்னைவன மேகமே யித்தலத்தி
லேசை யெனத்திரி யேல். (51)

தாடகையென்பவளுடைய மகனாகிய மாரீசனைச் சீதையைக் கவரும்படி இராவணன் நினைத்து இராமலக்குமணர்களைப் பிரித்துச் சீதையைத் தனிமை யாக்கும்படி அனுப்பினான். மாரீசனும் ஒருமானின் வடிவெடுத்துப்போய்ச் சீதாபிராட்டி காணும்படி உலாவினான். மானின் சிறப்பைக்கண்ட சீதாப்பிராட்டி இம்மானை எனக்குப் பிடித்துத் தரவேண்டும் என்று இராமனை வேண்டினாள். இராமனும் வெகுதூரந் தொடர்ந்துபோயும் அகப்படாமைக்கண்டு அம்புசெலுத்த அவ்வம்பினால் விழுந்திறந்தான். விழும்போது “சீதாலக்குமணா” என்ற சொற் கேட்டு இலக்குமணனுந் தொடர்ந்தான். சீதையுந் தனியளாயினாள். அப்போது சந்நியாசியாக இராவணன் சென்று சீதையைக் கவர்ந்தான்.

நித்தியத்தைக் கேட்கப்போய் நித்திரையென் றேகுளறிப்
புத்தியற்ற கும்பகன்னன் பொன்றினன்பார் – மத்தமத
குன்றநிகர் புன்னைவனக் கொற்றவா பாகைமன்னா
என்றுஞ்சொற் சோர்வுப டேல். (52)

இராவணன், கும்பகன்னன், விபூடணன் என்னும் புத்திரர் மூவரும் உக்கிரமான தவஞ்செய்து பிரமதேவரிடத்திலே வேண்டிய வரங்களைக்கேட்டார்கள். அப்போது பிரமதேவர் கும்பகன்னனை நோக்கி உனக்கு வேண்டும் வரம் யாது என்று கேட்கக் கும்பகன்னன் நித்தியவரங்கேட்க நினைத்திருந்தும் சொற்சோர்ந்து நித்திரையென்று குளறிக் கேட்டடைந்தான்.

நளனிருது பன்னன்றோ நாண்மூன்றில் வீமன்
வளநகரி சேர்த்து மனையா-ளுளமகிழ
நின்றதுபார் புன்னைவன நேயனே தன்முயற்சி
என்றுஞ்சோம் பித்திரி யேல். (53)

வீரசேனன் என்பவனுடைய மகனும் நிடததேசராசனுமாகிய நளனென்பவன் சூதாடித் தோல்வியடைந்து நாட்டினைவிட்டுத் தன்மனைவியாகிய தமயந்தியோடுங் காட்டில் வசிக்குங்காலத்திலே ஒருநாளிரவு கலியின்வசத்தினாலே அத்தமயந்தியைப் பிரிந்து அயோத்திநகரிலே போயு இருதுபன்னன் என்பவனுக்குத் தேர்ப்பாகனாக இருந்தான். தமயந்தியும் தேடிக் காணாமற் குண்டினபுரத்திலே பிதாவாகிய வீமனுடைய வீட்டிலே போயிருந்தாள். பின்னர்ச் சயமரமென்று இருதுபன்னனுக்குத் தெரிவித்தபோது இருதுபன்னன் குண்டினபுரத்துக்கு வரப் புறப்படத் தேர்ப்பாகனாயிருந்த நளன் அவனைத் தேரிலேற்றி மூன்றுநாளைக்குள்ளே குண்டினபுரத்திலே கொண்டுவந்து சேர்த்துத் தமயந்தியும் மனமகிழும்படி நின்றான்.

சைவ சமயத்தைத் தலையாகச் சம்பந்தர்
செய்துலகில் யாண்டுஞ் சிறப்புற்றார்-வையமிசைப்
பொங்குபுகழ்ப் புன்னைவன பூபாலா பாகைமன்னா
எங்குந்தக் கோனெனத்தி ரி. (54)

சீர்காழிப்பதியிலே திருவவதாரஞ் செய்த திருஞானசம்பந்தர் தாம்பாடியருளிய தேவாரத்தினாலும் தாஞ் செய்தருளிய அற்புதத்தினாலுஞ் சமணரோடு செய்த வாதத்தினாலுஞ் சிவனே முழுமுதற் கடவுள் எனவும், சைவமே மெய்ச் சமயம் எனவும் எங்குந் தாபித்துப் பெரும்புகழ்பெற்றார்.

முன்செ யறத்தை முகுந்தற் களித்தகன்னன்
பின்செயலு மீவனென்றே பேர்பெற்றான் – தன்செயல்போல்
தாதாவே புன்னைவனத் தாளாளா பூமியின்மேல்
தான மதுவிரும் பு. (55)

சூரன் என்பவனுக்கு மகளாய்ப் பிறந்து குந்திபோசன் என்பவனுக்குத் தத்தபுத்திரியான குந்தி கன்னியாயிருக்குங் காலத்திலே சூரியனைச்சேர்ந்து ஒரு புதல்வனைப் பெற்றுப் பெட்டியிலடைத்துக் கடலிலே விட்டாள். அப்பிள்ளை கரையையடைந்து ஒரு தோப்பாகனால் வளர்க்கப்பட்டுத் துரியோதனனையடைந்து அங்கதேசத்துக்கு அரசனாக்கப்பட்டுக் கன்னன் என்னும் பெயரோடு விளங்கினான். இந்தக் கன்னன் பதினேழாம் நாட்போரிலே அருச்சுனனுடைய அம்பினாலே தாக்கப்பட்டுத் தளர்ந்து தேரிலே விழுந்து கிடந்தபோது கண்ணபிரான் ஒரு மாதவவேதிய வேடத்தோடு சென்று கன்னனை நோக்கி “நின் புண்ணிய முற்றுந் தருக” என்று யாசிக்கப் புண்ணியம் முற்றுங் கொடுத்துப் “பின்செய்வதுந் தருவேன்” என்றான்.

அண்டர் முனிவர்க் கவதாரம் பத்தெடுத்து
மிண்டரைவெட் டித்தரும மேபுரக்கக்-கண்டதனால்
மந்தரனே புன்னைவன வள்ளலே யெந்நாளுஞ்
செந்திருமா லுக்கடிமை செய். (56)

ஈசர்வர முஞ்சிதைந்தே யெய்தியபோ ராக்கமும்போய்த்
தேசழிந்து தானவர்கள் தேய்ந்ததனாற்-காசினியில்
வாழ்பாகைப் புன்னைவன மன்னவா நன்மையன்றிச்
சூழ்தீ வினையகற் று. (57)

தூயரா மன்பகையாற் றுன்பமுற்றுந் தஞ்சமென்றே
சேயினையுந் தேவேந் திரனிழந்த-ஞாயம்பார்
மாதுங்கா புன்னைவன மன்னவா வஃதறிந்
தேதுன்பத் திற்கிடங்கொ டேல். (58)

எதிரிபலம் பாதிகொள்வ னென்றறிந்து வாலி
வதைபுரிய ராமன் மறைந்து-துதிபெறல்பார்
பாரளந்த புன்னைவனப் பார்த்திவா வப்படியே
சீரறிந்து தூக்கிவினை செய். (59)

வினதை என்பவளுடைய மகனாகிய அருணன் சூரியனுக்குத் தேர்ப்பாகனாயிருக்குங் காலத்திலே தேவலோகத்திற் போய்ப் பெண்வடிவத்தோடு நின்ற அருணனை இந்திரன் கண்டு விரும்பித் புணர்ந்து வாலி என்பவனைப் பெற்றான். இந்த வாலியென்பவன் சிவனை வழிபட்டுத் தன்னுடனே எதிர்க்கும் எதிரிகளுடைய பெலத்திற் பாதி தன்னைச் சேருமாறு வரம்பெற்றுக் குரங்குகளுக்குத் தலைவனாய்க் கிட்கிந்தையிலே வசித்தான். அதனையறிந்த இராமர் மறைந்து நின்று பாணம் விட்டுக் கொன்றார்.

தாருகத்தார் மூவரையுந் தாழ்வுசெய்து தங்கடங்கள்
காரியத்தால் வேறு கதியளித்தார்-தாரணிக்கண்
மாதவனே புன்னை வனநாத மீதிடுக்கண்
ஏதெனினுந் தெய்வமிக ழேல். (60)

எல்லா மதத்திற்கு மெவ்வுயிர்க்கு நீர்நிழல்போல்
நல்லா தரவை நயந்தருளி-வல்லாண்மை
சூழ்தேசு புன்னைவனத் தோன்றலே நீயுமென்றும்
வாழ்தேசத் தோடொத்து வாழ். (61)

மாதுசித்தி ராங்கிசொல்லான் மைந்தனைக்கை கால்களைந்
தேதுபெற்றா னோர்மன்ன னிப்புவியில்-நீதிநெறி
மாதவனே புன்னை வனநாதா பாகைமன்னா
ஏதெனினுந் தையல்சொற்கே ளேல். (62)

சித்தாராங்கியென்பவள் இராசராசநரேந்திரன் என்னும் அரசன் மனைவி. இவள் ஒருநாள் அந்தப்புரத்தில்வந்த சக்களத்திமகனைக்கண்டு மோகங்கொண்டு புணரும்படி பிடித்திழுக்க அவன் மறுத்தோடினான். அதனால் அவன்மேற் கோபமுற்று அரசனிடம்போய் அரசனே! நின்மகன்செய்த அநீதியைப் பாரென்று வளைத் தழும்பையுங் கிழிந்த புடவையையுங் காட்டி முறையிட்டாள். அரசனும் அவள் சொல்லை நம்பி மகனுடைய கைகால்களை வெட்டுவித்துப் பின்னர் உண்மையறிந்து பெருதுந் துக்கப்பட்டான்.

பண்டு துரோணன் பழமையெண்ணாப் பாஞ்சாலன்
மிண்டமரி லர்ச்சுனனால் வீறழிந்தான்-கண்டதன்றோ
பொன்னாளும் புன்னைவன பூபாலா தன்னையிறந்
தெந்நாளுந் தொன்மைமற வேல். (63)

இளமைப்பருவத்திலே தன்னோடு பிரியநண்பனாகத் துரோணாச்சாரியர் நடந்த்தையுந் தான் அவருக்கு அரசனாய் வருங்காலத்திலே உலகிற் பாதி தருவேன் என்று சொன்னதையும் மறந்து துரோணாச்சாரியரை அறியேன் என்ற பாஞ்சால தேசராசனாகிய யாகசேனன் பின்னர்த் துரோணாச்சாரியராலே ஏவிவிடப்பட்ட அருச்சுன்னோடு போராடித் தோல்வியடைந்தான்.

சண்டனொடு மிண்டன் றனைவென்ற சங்கரிபால்
மிண்டுமகு டன்பொருது வெட்டுண்டான்-புண்டரிக
மாதாரும் புன்னை வனநாதா நீணிலத்தி
லேதோற் பனதொட ரேல். (64)

முன்னொரு காலத்திலே தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போரிலே தேவர்களால் அசுரர்கள் இறந்தார்கள். புத்திரரை இழந்த அசுரமாதாவாகிய‌ திதியென்பவள் தன்மகளைநோக்கித் தேவர்களெல்லாரையும் வெல்லத்தக்க ஒரு புத்திரனைப் பெறும்படி தவஞ்செய்யவிட்டாள். அவள் அவ்வாறே தவஞ்செய்து சுபாரிசமுனிவருடைய அருளினாலே மகிடன் என்னும் புத்திரனைப் பெற்றாள். இம்மகிடாசுரன் போரிலே பலரையும் வென்று பின்னர்த் துர்க்கையோடும் போராடி வாளால் வெட்ட‌ப்பட்டான்.

அரசமரந் தொல்கடனீந் தந்தணனைக் கால‌
புரவழியிற் காத்த புகழின் – பெருமையைப்பார்
மன்றலந்தார்ப் புன்னைவன வள்ளலே யார்க்கும்
என்றுநன் மைகடைப்பி டி. (65)

நடோடும் போது நடுவோட வேண்டுமென்று
தேடுந் தருமர்சொன்ன சீரதனால் – நீடு
பொருந்துபுகழ்ப் புன்னைவன பூபாலா நன்றாய்த்
தெரிந்து நாடேற்பன செய். (66)

சஞ்சரித்து நின்ற சைலங் களையெல்லாம்
வெஞ்சினத்தா லிந்திரன்முன் வெட்டுதலாற் – செஞ்சரணால்
மண்ணளந்த புன்னை வனநாதா வென்றுநன்மை
எண்ணிநிலை யிற்பிரி யேல். (67)

முன்னொருகாலத்திலே மலைகளெல்லாம் சிறகுடையனவாய் ஆகாயத்திலே பறந்து பட்டணங்களிலே போய்த் தங்கிப் பட்டணங்களையுஞ் சீவராசிக‌ளையும் அழித்துப் பெருந்துயர் விளைத்தன. அதனையறிந்த இந்திரன் அம்கமலைக‌ளின் சிறகுகளையெல்லாம் வெட்டிவிட்டான்.

கண்ண‌னருண‌ மைந்தர் கருங்கடனீராடி
எண்ணரும்வாட் கோரையினா லிற்றனரால் – புண்ணியத்தின்
கண்ணான் புன்னைவனக் காராளா மேல்வருஞ்சீர்
எண்மையினா னீர்விளையா டேல். (68)

கோசிகனார் மாணக்கர் கூறரிய நாய்நிணத்தைப்
போசனஞ்செய் தேபுலையாய்ப் போயினார் – வீசுபுகழ்த்
தென்பாகைப் புன்னைவன தீரனே யெள்ளளவும்
இன்பான நுண்மைநுக ரேல். (69)

கற்றதனா லுங்கள் கவிவீர ராகவமால்
வெற்றிபர ராசசிங்க மேன்மைசெயப் – பெற்றதனால்
ஞாலமதிற் புன்னைவன நாதனே நற்பருவ‌
காலமதி னூல்பல கல். (70)

அண்டா முதலோர்க் கமிர்தமய மாவடிவு
கொண்டறமே முத்திக்குங் கொள்கருவாக் – கண்டதனால்
தக்கபுகழ்ப் புன்னைவனத் தாளாளா வெப்பயிர்க்கும்
மிக்ககுண நெற்பயிர்வி ளை. (71)

வேத நெறிநின்ற வேதியர்போ னின்மரபோர்
ஆதிமுத லாப்புகழை யாண்டதுபார் – ஆதுலர்க்குத்
தாயான புன்னைவனத் தாளாளா பாகைமன்னா
நீயுநேர் கோனெறி நில். (72)

செய்தவமும் பாராமற் சீராமன் சம்புகனை
நைதலின்றிச் சென்னிகொண்ட ஞாயம்பார் – உய்தரும‌
வானான புன்னை வனநாதா துட்டர்பங்கி
லேநை வினைநணு கேல். (73)

ஸ்ரீராமச்சந்திரன் அரசுசெய்யுங்காலத்திலே சம்புகன் என்னும் பெயருடைய சூத்திரவருணத்தோன் ஒரு சோலையிலே தலைகீழுங் கால்கள் மேலுமாகத் தூங்கிக்கொண்டு தவஞ்செய்தான். அவன் தனக்குரியதல்லாத தவத்தினைச் செய்த காரணத்தினால் அந்நாட்டிலே ஒரு பிராமணச் சிறுவன் அகாலதிலே இற‌ந்தான். இறந்த சிறுவனையும் எடுத்துக்கொண்டு தாயுந் தந்தையும் வந்து ஸ்ரீராமச்சந்திரனுக்கு முறையிட்டுப் புலம்பினார்கள். இராமச்சந்திரனும் விசாரணை செய்து சம்புகன் தவஞ்செய்தலே அகாலமரண‌மாக அச்சிறுவன் இறத்தற்குக் காரணமென்றறிந்து பல‌திசையுந் தேடித் தவஞ்செய்யுஞ் சம்புகனைக்கண்டு வாளினால் அவன்றலையை வெட்டி வீழ்த்தினான்.

கந்தருவன் றஞ்செமன்ற காலையின்மா யோன்பகையைச்
சிந்தையில்வைத் தெண்ணினனோ தேர்விசயன் – பைந்தமிழ்தேர்
போற்றுபுகழ்ப் புன்னைவன பூபாலா யாரெனினும்
ஏற்றதற்பி னொய்யவுரை யேல். (74)

பசியூண் விலக்கினர்முன் பார்த்திவன் சீயாக்காய்
பிசைபுனலுண் டப்பசியைப் பேர்த்தான் – இசைபெறவே
பொன்னாளும் புன்னைவன பூபாலா வப்படியே
எந்நாளு நோய்க்கிடங்கொ டேல். (75)

பரதன் என்னும் அரசன் போசந‌காலஞ் சிறிதுந் தவறாமல் “அருந்தியத‌ற்றது போற்றியுண்டு” நோய்க்கிடங்கொடாமல் நடந்து வருதலை அறிந்த ஒருவைத்தியன் அரசனுடைய வேலைக்காரனைத் தன்வசமாக்கி அரசன் தைலமிட்டிருக்கும் ஒருதினத்திலே அவனது போசன‌காலத்திற்குச் சமீபமாகச் சீயாக்காயயும் வெந்நீரையும் அமைத்து வைக்கும்படி செய்தான். அரசன் ஸ்நான மண்டபம் அடைந்தவுடனே பசியுமுண்டாயிற்று. போசநமகப்படவில்லை. பின் அந்தச் சீயாக்காயையும் வெந்நீரையும் உன்டு தன் பசியைப் போக்கினான்.

சூடுமுடி ராகவனார் சூடாமற் கைகேயி
கேடுசொன்ன வார்த்தை கிடைப்பதனால் – நீடுபுகழ்க்
காராளா புன்னைவன்க் கற்பகமே யாரிடத்தும்
*ஏரா பழிப்பனபக ரேல். (76)

அயோத்திநகர‌ராசனாகிய தசரதச்சக்கரவர்த்திக்கு கோசலை, கைகேயி, சுமித்திரை என மூன்று மனைவியருளர். கோசலையிடத்திலே ஸ்ரீராமனும், கைகேயியிடத்திலே பரதனும், சுமித்திரையிடத்திலே இலக்குமணன், சத்துருக்கினன் என்னும் இருவருமாக நான்குபுத்திரர் அச்சக்கரவர்த்திக்குப் பிறந்தார்கள். நால்வரும் வளர்ந்து சமர்த்தராய் விளங்கினர். தசரதச் சக்கரவர்த்தியும் வெகு வருடங்களாக அரசுசெய்து பின்னர் வயோதிகானாய்த் தளர்ச்சியுற்றுத் தன்னரசியலை இராமனுகுக் கொடுக்க நிச்சயித்தான். இதனை அறிந்த கூனியென்பவளாலே வ‌ப்பட்ட கைகேயி சக்கரவர்த்தியை நோக்கித் தன்மகன் பரதனுக்கு முடிசூட்ட வேண்டும் என்றும் இராமன் காட்டிற்போகவேண்டும் என்றும் இருவரங் கேட்டாள். சக்கரவர்த்தியும் முன்னொருகாரியத்திலே கைகேயிடத்திலே மகிழ்ச்சியுற்ற‌போது உனக்கு இரண்டு வரம் நீ கேட்டபடி தருவேன் என்று சொல்லியிருந்தபடியே கைகேயி கேட்ட இருவரத்தையுங் கொடுத்தான். இராமன் காடுசென்றான்.

வாசுகிமுன் னாட்பழகும் வானோர்க் கமுதெழுமுன்
மோசமுற நஞ்சுமிழ்ந்த மூர்க்கம்பார் – காசினியில்
நன்றறியும் புன்னைவன நாதா விஃதறிந்தே
என்றும்பாம் பொடுபழ கேல். (77)

காசிபமுனிவருடைய மனைவியர்களுள் ஒருத்தியாகிய கத்திரு என்பவளிட‌த்திலே அனந்தன், வாசுகி முதலிய பல பாம்புகள் பிறந்தன. அவற்றுள்ளே வாசுகி என்னும் பாம்பைத் தேவர்கள் திருபாற்கடலைக் கடைந்தபோது தாங்கள் கொண்ட மரத்திலே கயிறாகப்பூட்டி இழுத்தார்கள். அப்போது வாசுகி என்னும் பாம்பு நஞ்சினை உமிழ்ந்தது.

சாபால ராமன் சபையிலோர் சொற்பிழைத்துக்
கோபால னஞ்சுடாமெய் குன்றியே – சோகமுற்றான்
ஆதலினாற் புன்னைவனத் தையனே யாவரிடத்
தேதும் பிழைபடச்சொல் லேல். (78)

நீலிபழி யைக்களைந்து நின்மரபில் வேளாளர்
சூலிமுது கிற்சூடச் சோறிட்டு – மேலான‌
ஞாயம்பார் புன்னைவன நாதனே யப்படியே
நீயுமிகப் பீடுபெற நில். (79)

ஒருபெண் தன்னாயகன் நாடோறும் வேறு பெண்களிடஞ்சென்று கொண்டாடி வருதலையறிந்து கோபத்தோடும் அவனைத் தடுத்துத் தன்வசமாக்கும்படி வேண்டிய உபாயங்கள் செய்தாள். அவனோ இவள் என்கருத்திற்கு மிகவும் இடையூறாய் நிற்கிறாளென்று நினைத்த்க்கொண்டு அடுத்தவூரிலே நடக்கும் ஒரு சிறப்புக் காட்டுகிறேன் என்று சொல்லி அவளைக் கூட்டிகொண்டுபோய் ஒரு காட்டின் நடுவிலே விட்டுக் கொன்றுவிட்டான். பின் அவள் ஒரு பிசாசாய்ப் பிறந்து நீலி என்னும் பெயர் பெற்று அவனைக் கொல்லக் கருதியிருந்தாள். அவ‌னும் பின்னரிறந்து ஒரு செட்டியாகப் பிறந்திருந்தான்.

பின்னர் அந்தச் செட்டியின் சாதகத்தை ஒரு சோதிடன் பார்த்து அந்தச் செட்டியை நோக்கி நீ வடதிசை நோக்கிச் செலவாயாயின்; ஒரு பேயினாலே நிச்சயமாய் மரணமடைவாய்; நான் ஒரு மந்திரவாள் தருகிறேன். அந்த வாள் உன்னிடமிருக்கும் வரையும் அந்தப் பேய் உன்னை அணுகமாட்டாதென்று சொல்லி வாளையுங் கொடுத்துவிட்டுச் சென்றான். அச்செட்டியும் அவ்வாளை எடுத்துக் கொண்டு வியாபாரஞ் செய்யும்படி வடதிசைநோக்கிப் போனான்.

நீலி என்னும் பேயும் அச்செட்டியின் மனைவிபோல் வடிவங்கொண்டு ஒரு கள்ளிக்கொம்பினை ஒருகுழந்தையாக்கிக்கொண்டு அவனைத் தொடர்ந்தது. அவன் சில குறிப்பினாலே இது பேயென்றறிந்துந் தன்கையிலிருக்கும் மந்திரவாளின் வலியினாலே சிறிதும் பயப்படாமல் அங்கே எதிர்ப்பட்ட வேளாளர்களையடைந்தான். அந்தப் பேயும் அவர்களையடைந்து “இவர் என்கணவர்; வெகுநாளாக என்னோடு விரோதமாயிருக்கிறார், நான் எவ்வளவோ பணிந்து நடந்துஞ் சிறிதும் இரக்கமின்றி என்னை வெறுத்துத் தள்ளுகிறார். நீதிமான்களாகிய நீங்கள் அவ‌ருக்கு என்மேலுள்ள கோப‌த்தை நீக்கி இம்மண்டபத்திலே அவரையும் என்னையுஞ் சில வார்த்தை பேசும்படி விடவேண்டும்” என்று வஞ்சகமாய்ச் சொல்லிற்று. செட்டியும் அவர்களை நோக்கி ” இவள் என்மனைவியல்லள்; கொல்லும்படி வந்த ஒரு பேய்” என்றான். அதுகேட்ட நீலிஎன்னும் பேய் ‘ என்னிடுப்பிலுள்ள இக்குழந்தையை இவரிடம் விட்டால் அது இவரென்கணவர் என்பதை உங்களுக்கு நிச்சயமாய்க் காண்பிக்கும்” என்று சொல்லி அக்குழந்தையை நிலத்திலேவிட அக்குழதையும் அச்செட்டியின் மேலேறி விழுந்து விளையாடிற்று.

அது கண்ட வேளாளரெல்லாஞ் செட்டியை நோக்கிச் “செட்டியாரே! நீரேன் பொய் சொல்லுகிறீர்? இவள் உம்முடைய மனைவிதான்! இவள் வருந்தாமல் இம்மண்டப்பத்திற் புகுந்து இவளுக்குச் சமாதானஞ்சொல்லிவாரும்” என்றார்கள். தன்கையில் வாளுடனே அந்தச்செட்டி மண்டபம் நோக்கிச் சென்றான். அது கண்ட நீலி அந்த வேளாளரை நோக்கி ” இந்த வாளினை வாங்கிக்கொண்டு விடுங்கள்; வாளோடு வருவாராயின் என்னைக் கொன்றுவிடுவார்” என்றது. அவ‌ர்கள் அவ்வார்த்தையை நிச்சயமென்று நம்பி வாளினை வாங்கச் செட்டி பயந்து இந்தவாளிருந்தபடியால் இதுவரையும் பிழைத்திருந்தேன். இது என்னைவிட்டு நீங்குமாயின் இந்தப் பேயினாலே இறந்துபோவேன்” என்றான். நீர் ஒருவர் இறந்து போவிராயின் நாங்கள் எழுபதின்மரும் உயிர் விடுகின்றோம் என்று தேற்றி அவ‌ர்கள் அவனை அனுப்பினார்கள்.

அவன் புகுந்த அக்கணமே அந்தப் பேயும் புகுந்து அவனைக் கொன்றுவிட்டுப் பின்னர் அவன் தாய்போல வடிவமெடுத்துவந்து அவ்வேளாளர்களை நோக்கி “உங்களிடத்திலே வந்த என்மகனை யாதுசெய்தீர்கள்?” என்று கேட்டது. அவ‌வேளாள‌ர்கள் வெகுநேரம் பார்த்து செட்டிவாராமையாற் போய்க் கதவைத் திறந்துபார்த்து செட்டியினுடலம் கிழிக்கப்பட்டிருத்தலைக்கண்டு தாங்கள் எழுபது பேருந் தீயிலே குதித்துச் சொன்னசொல்லுந் தவறாமல் இறந்தார்கள்

விழுமிந் திரத்துய்மன் மிக்கபுகழ் சொல்லிக்
கழறமுன்போ னாடடைந்த காதை – பழமையன்றோ
செய்ய புகழ் புன்னைவன தீரனே நீயுமிந்த‌
வையம் புகழ்பட வாழ். (80)

இந்திரத்துய்மன் என்னும் அரசன் எத்தனையோ யாகங்கள் செய்து தேவுல‌கம்பெற்று எண்ணிறந்த இந்திரகாலம் போகமநுவித்து வரும் நாள்களிலே தேவர்கள் அவனை நோக்கி நின்பெயர் பூமியிலே நிலைபெறாமையால் நீ பூமியிற் போய்ப் பெயர்நாட்டிவரக் கடவாய் என்று தள்ளிவிட்டார்கள். பூமியிலே விழுந்த அவ்வரசன் மார்க்கண்டேய முனிவரைக்கண்டு “முனிவரே! என்பெயர் உலக‌த்திலே உண்டா இல்லையா?” என்று கேட்டான். மார்க்கண்டேய முனிவர் “சிவனிடத்திலே நான் சிரஞ்சீவியாக வரம்பெற்ற நாண்முதல் இன்றுவரையும் 187 பிரமகற்பமாயிற்று; இதற்குள்ளே உன்பெயரில்லை; என்னினும் மிக்க வய‌துடைய கூகையொன்று இமய‌மலைச்சாரலிலே தவஞ்செய்து கொண்டிருக்கின்றது. அதனைக் கண்டு கேட்டறி” என்றார். என்றவுடனே இந்திரத்துய்மன் ஒரு வெள்ளைக் குதிரை வடிவங்கொண்டு மார்க்கண்டேயரையுஞ் சுமந்துகொண்டு போய் அக்கூகையைக் கண்டு கேட்டான். கூகை “நான் 224 பிரமகற்பங் கண்டேன். இதற்குள்ளே உன் பெயரில்லை; சரசுவதி நதி தீரத்திலே என்னினும் மூத்தவர் ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் குரண்டதேவர். அவரைக்கண்டு கேட்டறி” என்றது. அதனையுங் கூட்டிக்கொண்டுபோய் அக்குரண்டதேவரைக் கண்டு கேட்டான். குரண்டதேவர் “நான் 350 பிரமகற்பங் கண்டுளேன். இத‌ற்குள்ளே உன் பெயர் வரவில்லை. கோபஞ்சக‌த்திலிருந்து தவஞ்செய்யுங் கூர்ம‌ தேவர் என்னினும் மூத்தவர். அவரைக் கண்டு கேட்டறி” என்றார். பின்னர் எல்லாரும் போய் அக்கூர்மதேவரைக் கண்டு கேட்டபோது கூர்மதேவர் இந்திரத் துய்மன் செய்த தர்மம் முதலியவைகளை யாவர்க்கும் புலப்படச்சொன்னார். உட‌னே தேவர்கள் விமானத்தோடுவந்து ” அரசனே! நின்னைப் பூமியிலே விட்டது
நின் கீர்த்தியை விளக்க” என்று சொல்லி அழைத்துக்கொண்டு போனார்கள். அரசனும் மார்க்கண்டேயர் முதலியவர்களை ஆங்காங்கு விடுத்துத் தேவர்களுட‌ன் தேவுலகம் புகுந்தான்.

தலந்தீர்த்தந் தானந் தவஞ்சேய்சந் தானம்
நலம்பெறலாற் றேவரெலா நாடி – நிலந்துதிப்பார்
மந்திரியே புன்னை வனநாதா வாதலினாற்
புந்தியினிற் பூமி விரும்பு. (81)

தந்தை யிரணியனைத் தள்ளிப் பிரகிலாதன்
சிந்தையின்மா யன்றுணையே தேடினாந்–சந்ததமும்
நட்பறியும் புன்னைவன நாதமகி பாவுலகிற்
குட்பெரியோ ரைத்துணைக் கொள். (82)

கோவதைசெய் யப்பிடித்த கோளரிக்குத் தன்னுடலை
ஈவனென்றா னேதிலீப னென்னுமன்னன்–ஆவதனால்
நட்பாளும் புன்னைவன நாதமன்னா வெப்போதும்
உட்பேதை மையகற் று. (83)

திலீபன் என்பவன் சூரியவமிசத்துள்ள ஓரரசன். இவன் பிரபல கீர்த்திமானாய் அரசியல் செய்து வருங்காலத்திலே புத்திரப்பேறின்றிப் பிதிர்கடனை எப்படித் தீர்ப்பேன் என்று மிக்க விசனமுற்றுத் தன்மனைவியோடு குலகுருவாகிய வசிட்டமுனிவரையடைந்து தன்குறையை முறையிட்டான். வசிட்டமுனிவரும் திலீபனுக்குச் சந்ததி பிறப்பதற்குத் தடையாயுள்ள காரணத்தை ஆராய்ந்து “அரசனே! நீ ஒருமுறை தேவலோகம் போய் வருகையிலே வழியிற்கிடந்த காமதேனுவை வழிபடாது புத்திரோற்பவகாலங்கருதி விரைந்து வந்தாய்! அக்காமதேனு தன்னை அவமானஞ்செய்தாய் என்று கோபித்துச் சாபங்கூறிற்று.

அக்காமதேனுவின் கன்றாகிய இந்த நந்தினியை விரதம்பூண்டு வழிபடுவாயா யின்; அச்சாபநீங்கப்பெற்றுப் புத்திரப்பேற்றினையும் அடைவாய்” என்றார். பின்னர் திலீபன் அம்முனிவரை நோக்கி இந்த நந்தினியை எப்படிவழிபட வேண்டும் என்று கேட்டான். வசிட்டமுனிவர் திலீபனை நோக்கி “அரசனே! காமம் முதலியவைகளை வெறுத்துச் சாகமூலபலாதிகளைப் புசித்துப் பரிசுத்தத்தோடும் இந்த நந்தினிக்குப் பூசை செய்தி. இந்த நந்தினி நிற்கும்போது நீயும் நிற்றி! போகும்போது நீயும் போகுதி1 நீருண்ணும்போது நீயும் உண்ணுதி! கிடக்கு்போது நீயும் இருத்தி! இது நின் வழிபாட்டிலே மனம் மகிழும்வரைக்கும் வேறொன்றை எண்ணாதே! இதற்கு யாதொரு தீங்கும் வாராது காத்தி! நின் பெருந் தேவிதானும் இது மேயச் செல்லும்போது என்னுடைய ஆச்சிரம வெல்லைவரையும் கொண்டுபோய் விடவேண்டும். அது திரும்பி வரும்போது அவ்வெல்லையிற் போய்நின்று வழிபட்டுப் பூசித்துப் பின்வரல் வேண்டும்”
என்று கட்டளையிட்டு ஆசீர்வதித்துப் பன்னசாலையில் விடுத்தார்.

பின்னர் மற்றைநாள்தொடங்கி வசிட்டமுனிவர் சொல்லியபடியே விரதம் பூண்டு நந்தினியை பூசித்து வழிபட்டு வந்தான்.அப்படியே இருபத்தொரு நாள் சென்றொழிந்தது. அவ்விருபத்தொராம் நாளிலே அந்த நந்தினி அரசனுடைய அன்பினைப் பரிசோதிக்கக் கருதி மேய்ந்து மேய்ந்து இமயமலைச்சாரலிற் போயிற்று. அரசன் இமயமலையின் சிறப்புக்களை ஒருகணம் வரையிற் பார்த்து நின்றான். நந்தினி இளம்புல்லை மேய்ந்துகொண்டு அங்குள்ள ஒரு முழைஞ்சிலே புகுந்தது. அப்போது சிங்கமொன்று நந்திநிமேலே பாய நந்தினி குளறி விழுந்தது. அரசன் பாணம்விட முயன்றுங் கைகள் பந்தமாயின. பின்னர் அரசனுஞ் சிங்கமுஞ் சம்பாஷணை செய்தபோது அரசன் இப்பசுவை விடும்படியும் அதற்காகத் தன்னுடலை யுண்ணும்படியுங் கேட்டுப் பல நியாயங்காட்டி யாசித்தான். பின்னர்ப் பசுவாகிய நந்தினி சிங்கமாய் வந்ததுந் தானே என்று சொல்லிப் புத்திரப்பேற்றிற்கும் அருள் செய்தது. இப்படியே நந்தினியின் வரத்தினாலே இத்திலீபன் இரகு என்பவனைப் பெற்றான்.

சச்சந் தனைமுன் சதிகட்டி யங்காரன்
நிச்சயமாய்ச் செய்த நிறைபிழைபார் – பொற்சிகர
தீபமென்னும் புன்னைவன தீரனே யானதுகண்
டேபைய லோடிணங் கேல். (84)

சச்சந்தன் என்பவன் ஏமாங்கதநாட்டிலே இராசமாபுரத்திலே அரசு செய்துவந்த ஓர் அரசன். இவனுக்கு மந்திரிமார் பலர். அவருள்ளே கட்டியங்காரன் என்பவனும் ஒருவன். சச்சந்தன் ஸ்ரீதத்தன் மகளாகிய விசயை என்பவளை விவாகஞ்செய்து பேரழகுடைய அவண்மேற்கொண்ட ஆசைப்பாட்டின் மிகுதியினாலே இடையறாமல் அவளோடு சுகமநுபவிக்கக் கருதி இராச்சியபாரத்தையும் வெறுத்து மற்றை மந்திரிமார் சொல்லையுங் கொள்ளானாய்க் கட்டியங்காரனை அழைத்து “நான் மனைவியாகிய விசயைப் பிரிதலாற்றேன். நீயே அரசனாய் இந்நாட்டினைக் காத்துவருக” என்று அவனை நியமித்து மனைவியைப் பிரியாது வாழ்ந்தான். பின்னர்க் கட்டியங்காரன் சேனைகளோடும் போய் அரசனோடு போராடி அரசனைக் கொன்றுவிட்டுத் தான் கருதியபடியே இராச்சியத்தைத் தன்னுடையதாக்கிக் கொண்டான்.

நவநிதி பெற்றுந்தன் னம்பாரு ளில்லார்க்
கவிழுநல்கான் காப்பா னவன்போற் – புவிதழையத்
தேன்பொழியும் புன்னைவன தீரனே நீயென்றும்
வான்பொரு டனைப்போற்றி வாழ். (85)

சங்கரனை யன்றியுமை தன்னைவலஞ் செய்யாமற்
பிங்கிருடி மூன்றுகால் பெற்றதனாற் – றுங்க
மனந்தளராப் புன்னை வனநாதா தொண்டர்
இனம்போற் றடிப்பிரி யேல். (86)

வேதாந்தங்களை நன்றாகக் கற்றுணர்ந்த பிருங்கி என்னும் முனிவர் “சிவனொருவரே தியானிக்கப்படத்தக்கவர்” என்பது முதலிய சுருதிகளைக் கடைப்பிடித்துத் தேவியாகிய உமையை விலக்கிச் சிவனை மாத்திரம் வலஞ்செய்துவந்தார். இதனை அறிந்த உமாதேவியார் எம்பெருமானுடைய திருமேனியிலே தாமும் பாதியாயிருக்கக் கருதித் திருக்கேதாரத்திலே போய்ச் சிவனை நோக்கித் தவஞ்செய்து சிவனுடைய திருமேனியிலே தாமும் பாதியாயினர். பின்னர்ப் பிருங்கிருடி வண்டு வடிவங்கொண்டு தேவியுஞ்சிவனுமாயிருக்குந் திருமேனியிலே தேவியை விலக்கவெண்ணி நடுவே துளைத்தார். அதுகண்ட உமாதேவியார் அவ்வண்டின் சக்தியை இழுத்துவிட வண்டுருவங்கொண்ட பிருங்கிருடி கீழே விழுந்தார். அதுகண்ட சிவன் அம்முனிவருக்கு முன்னொருகாலும் ஒருதண்டமுங் கொடுத்தார்.

கஞ்சனூ ராழ்வார் கனன்முக்கா லிக்குளிருந்
தஞ்சாமற் சைவநிலை யாக்கினர்*பார்–தஞ்சமென்பார்
புண்ணியமே மெய்த்துணையாம் புன்னைவன பூபதியே
எண்ணி மனந்தடுமா றேல். (87)

இவர்-அரதத்தாசாரியர்- கஞ்சனூரிலே இருந்த வைஷ்ணவப் பிராமணர்களுள்ளே ஒருவராகிய வாசுதேவர் என்பவருடைய புதல்வர். அதுபற்றி இவரைக் கஞ்சனூராழ்வார் எனவுஞ்சொல்வர். இவர் பிதாவாகிய வாசுதேவர் கொள்ளும் விஷ்ணுசமயத்தை இளம்பருவந் தொடங்கி மறுத்துரையாடி சைவசமயமேன்மைதளையே பாராட்டி வந்தார். வைஷ்ணவர்கள் வந்து விஷ்ணுபரத்துவம் பேசியபோது யான் ஒழுகக் காய்ச்சிய இருப்பு முக்காலியின் மேலிருந்து சிவபிரானே கடவுளென்று சாதிப்பேன் என்று சொல்லி அவ்வாறு காய்ச்சி வைக்கப்பட்ட இருப்பு முக்காலியின் மேலிருந்து சதுர்வேத‌தாற்பரியம் முதலியவைகளைச் சொல்லிச் சைவசமயத்தைத் தாபித்தார். அப்போது சிவானுக்கிரகத்தினாலே அந்தக் காய்ச்சிய முக்காலி அவருக்குச் சீதளமாயிருந்தது.

காகம் பசித்துவரக் காரிருளி ன‌ன்மைசெய்த‌
கூகை பகற்பட்ட கொடுமையினால்—வாகு
புனைதாமா புன்னைவன பூபாலா மோச‌
மெனமாற்றா னுக்கிடங்கொ டேல். (88)

தென்தேசத்திலே மயிலை என்னும் நகரிலே ஓராலமரத்திலே மேகவர்ணன் என்னும் பெயருடைய காகராசன் தன்னினங்களோடும் வாசஞ்தெய்தது. அந்தக் காகங்களையெல்லாம் உருமர்த்தனன் என்னும் கூகையரசன் தன்னினங்களோடு இராக்காலங்களிலே வந்து கொல்லத் தொடங்கிற்று. இதனைக் காகராசன் அறிந்து மந்திரிகளோடும் ஆலோசித்தபோது பலரும் பலவாறு கூறினர். அவருள்ளே சிரஞ்சீவி என்னும் பெயருடைய கிழமந்திரி “அடுத்துக்கெடுத்தலே தக்க புத்தி”என்று அரசனுக்குச் சொல்லிவிட்டுக் கூகைகள் இருக்குமிடத்திலே போய் “யான் நீதிகூறி அரசனாலே தண்டிக்கப்பட்டதனாலே பிரிந்து பசித்து உங்களிடம் அடைக்கலம் வந்தேன்” என்றது. குரூரநாசன் என்னும் மந்திரி யொழிந்த கூகைகளெல்லாம் அக்காகத்தினை நம்பி உபசரித்துச் சேர்த்துக் கொண்டன. குரூரநாசன் என்னும் மந்திரி உடனே வேற்றிடம்போயிற்று. காகம் நாளுக்குநாள் கூகைகளின் கோட்டைவாயிலிலே சிறிதுசிறிதாக விறகுகளைச் சேர்த்துவைத்துப் பின்னர்த் தன்னினங்களைக்கொண்டு நெருப்பு வைப்பித்து விடக் கூகைகளெல்லாம் எரிந்துபோயின

சங்கரா சாரியனார் தாயை யிகழ்குலத்தார்
தங்கணமனை யேசுடலை தானாகிப்–பங்கமுற்றார்
ஆதலினாற் புன்னைவன வையனே யாரிடத்தும்
ஏது மிகைபடச்சொல்லேல் (89)

சங்கராசாரியர் சந்நியாசம்பெறும்போது அவர்தாயாகிய ஆரியாம்பாள் அவரை நோக்கி “மகனே! என்னுடைய அந்தியகாலத்திலே உன்கையாலே கடன் கழிக்கப்பெற்றுக் கதியடையவிரும்புகிறேன்” என்றாள். சங்கராசாரியர் தாயை நோக்கி “அன்னாய்! நீ அந்தியகாலத்திலே என்னை நினைப்பாயாயின்; நான் எங்கே இருந்தாலும் நீ இருக்குமிடத்திலே வந்து உனக்குச் செயற்பாலனவாகிய கிரியைகளை யெல்லாஞ் செய்துமுடித்து நற்கதியிலே உன்னைச் சேர்ப்பேன்” என்று சொல்லித் தீர்த்தயாத்திரை போயினர். பின்னர்த் தாயின் அந்தியகாலத்தை யோகத்தினாலே உணர்ந்து வான்வழிக்கொண்டு மலைநாட்டை அடைந்து தாய்க்கு முன்னர்ச்சென்று நின்றார். தாயார் சங்கராசாரியரைக் கண்டு பெருமகிழ்ச்சி கொண்டு “மகனே! எனக்குக் கடன்களைச் செய்து நற்கதியில்விடுக” என்றாள். சங்கராசாரியர் தாயார்க்கு அத்துவித உண்மையாகிய நிர்க்குணத்துவ உபாசனா மார்க்கங்கூறினார். தாயார் “மகனே! என்னறிவு இதற்கேற்றதன்று; சகுணோ பாசனையுட் சிறந்ததொன்று கூறவல்லையோ?” என்றார். அப்போது சங்கராசாரியர் எட்டுப் புயங்கப் பிரயாத விருத்தத்தினாலே சிவத்துதி செய்தார். உடனே சிவாஞ்ஞையினாலே சிவகணங்கள் தோன்றின.

அதுகண்ட தாயார் கண்களை இறுக மூடிக்கொண்டு “மகனே! மகனே! நான் இவர்களோடு செல்லமாட்டேன்” என்றார். சங்கராசாரியர் “உனக்கறும் பெரும் பேறுங்கிடையாதொழிந்ததா?” என்று கூறி விட்டுணுபுயங்க தோத்திரஞ் செய்தார். உடனே விட்டுணுவாஞ்ஞையினாலே விட்டுணுகணங்கள் தோன்றினர. உடனே தாயார் விட்டுணுபாதங்களிற் சிந்தைவைத்துத் தேகத்தை விடுத்தார். அப்போது சங்கராசாரியர் தமது முன்னையாச்சிரமத்தின் தாயுடம்பினைச் சம்ஸ்காரஞ்செய்யும்படி பிராமணர்களை வருவித்து அவர்கள் வீட்டிலுள்ள பரிசுத்தமான அக்கினியைத்தரும்படி கேட்டார். பிராமணர்கள் இவர் சந்நியாச தருமத்திற்கு மாறாக நடக்கின்றார் என்று தங்களுக்குத் தோன்றியவாறெல்லாம் பேசி அக்கிநிகொடுக்க உடன்படாது போயினர். தாயாரைச் சுமந்துகொண்டு போய்ச் சுடலையிற் சேர்ப்பாருமில்லாமையாற் சங்கராசாரியர் இரண்டு கைகளையுந் தேய்த்து வலக்கையிலே தீயுண்டாக்கி அவ்வீட்டையே விறகாக்கித் தாயார் கிரியையைமுடித்துவிட்டுப் பிராமணர்களை நோக்கி “உங்களுக்குச் சந்நியாசி பிச்சைதருந் தகுதியில்லாது போகக்கடவது; நீவிர் வேதத்துக்குப் புறத்தராகக் கடவீர்; உங்கள் வீடுகளிலே மயானம் உண்டாகுக; உங்கள் தேசம் சந்நியாசிகள் வருவதற்கு தகுதியற்றாதாகுக” என்று சபித்துச் சென்றார்

இழிவறிந் துண்பான்க னின்பம்போ னிற்குங்
கழிபோ ரிரையான்க ணோயென்—றுளமுதுநூல்
வாக்கியத்தாற் புன்னை வனநாதா முன்னயிறல்
போக்கிமீ தூண் விரும்பேல் (90)

ஆட்டுக் கடாப்போரி லன்றுதசை நாடிநரி
மாட்டிக்கொண் டேயுயிரு மாய்ந்ததுபார்—தோட்டுமலர்
மாமருவும் புன்னைவனநாதா வீணாக
வேமுனைமு கத்துநில் லேல் (91)

இரண்டு ஆட்டுக்கடாக்கள் ஒன்றோடொன்று பகைகொண்டு உக்கிரமான கோபத்தோடும் அடிபட்டன. இரண்டுக்குங் காயமுண்டாகிச் சரீரத்தினின்றும் இரத்தம் பெருகிற்று. அதனை ஒரு நரி கண்டு இரத்தம்பொருந்திய தசையையுண்பேன் என்று விரும்பிச் சென்று அவ்விரண்டுக்கும் இடையிலே அச்சமயத்திலே போய் அகப்பட்டுத் தாக்குண்டிறந்தது.

வேங்கை வரிப்புலி நோய்தீர்த்த விடகரியென்
றோங்கு மவ்வை சொன்ன வுரைப்பொருள்பார்–பாங்குடைய
காமாற்றும் புன்னைவனக் காராளா வானதனால்
மூர்க்க ரோடிணங்கேல் (92)

போதவே நற்குணங்கள் போந்துந் தனைமூத்த
மாதரின்பந் தீதே மனுநெறியார்—-ஆதலினால்
துய்யபுகழ்ப் புன்னைவனச் சோமா விளையாளாஞ்
செய்யகுண மெல்லியாடோள் சேர் (93)

ஆசிரியன் சொற்கேட்ட வன்றே தசரதனார்
கோசிகன் பாலிராகவனைக் கூட்டிமிக்க–தேசுபெற்றார்
நாட்கமலப் புன்னைவன நாதமகி பாதருமங்
கேட்கின்மேன் மக்கள் சொற் கேள் (94)

சூரியகுலத்துள்ள இரகுவென்பவனுடைய புத்திரன் அயன். அயனுடைய மகன் தசரதன். இந்தத் தசரதனுக்கு புத்திரர் நால்வர். அவருள்ளே மூத்த புத்திரன் ஸ்ரீராமன். இந்த இராமன் வளர்ந்து சாமர்த்தியமுடையவனாய் விளங்குங் காலத்திலே விசுவாமித்திரமுனிவர் செய்யும் யாகங்களுக்கு இராட்சதர்கள் இடையூறு செய்து வந்தார்கள். விசுவாமித்திர் இராட்சதர்களை அடக்கித் தம்முடைய யாகத்துக்குத் துணைசெய்யத்தக்கவன் இராமனே என்று நிச்சயித்துத் தசரதனிடம் போய் இராமனைத் தமக்குத் துணையாக விடும்படி கேட்டார். குருவாகிய வசிட்டமுனிவரும் விசுவாமித்திரருடனே இராமனை விடும்படி சொன்னார். பின்னர்த் தசரதன் பெரிதும் மனவருத்தமுடையனாய் மறுத்தற்கஞ்சி இராமனை விசுவாமித்திரரோடுங் கூட்டியனுப்பினான். இராமன் விசுவாமித்திரரோடு கூடிச்சென்று கல்லாகக் கிடந்த அகலிகையை முன்போலப் பெண்ணாக்கியும், விசுவாமித்திரருடைய யாகத்துக்குத் தீங்குசெய்ய வந்த தாடகை என்பவளைக் கொன்றும், மிதிலையிலே வந்து வில்லுமுறித்துச் சீதாபிராட்டியை விவாகஞ் செய்துந் தந்தைக்குங் கீர்த்தியை உண்டாக்கினான்.

விப்பிரநா ராயணன்முன் வேசிதன்மே லாசையினால்
இப்புவியிற் கட்டுண் டிழுக்குற்றான்–தப்பலவே
சைவநெறிப் புன்னைவனத் தாளாளா வெந்நாளும்
மைவிழியார் மனைய கல் (95)

வீமனுட லிற்பாதி மெய்வழக்கிற் றேர்ந்தபுரு
டாமிருகத் தின்பங்கென் றார்தருமர்—ஆமவர்போல்
பூமியெலாங் கொண்டாடும பொய்யாத புன்னைவன
மேமொழிவ தறமொ ழி. (96)

பாண்டவருள்ளே தருமர், இராயசூயயாகஞ்செய்தபோது புருடா மிருகத்தினை அழைத்து வரும்படி வீமசேனனை அனுப்பினார். வீமசேனன் போய்ப் புருடா-மிருகத்தினை வரும்படி கேட்டான். புருடாமிருகம் வீமசேனனை நோக்கி “நீ நான்குகாதவழி முன்னே செல்லுதி; யான் பின்னே உன்னைத் தொடர்ந்து வருவேன்; நான்வரும்போது நீ என்னெல்லையுள்ளே அகப்படுவாயாயின்; உன்னை யான் உண்டுவிடுவேன். என்னெல்லையைத்தாண்டி உன்னெல்லையிற் போய்விடுவாயாயின், நான் உன்னைத் தொடர்ந்து வருவேன்” என்று சொல்லிற்று. வீமனும் அதற்குடன்பட்டவனாய் வேகமாய் வரும்போது புருடாமிருகமும் வீமனைத் தொடர்ந்து நெருங்கி வந்தது. அதுகண்ட வீமன் அப்போது ஒரு மணீயாம்பரற் கல்லைப் பூமியிலே போட்டான். அவ்விடத்திலே ஒரு சிவாலயமுந் தீர்த்தமு-முண்டாயின. புருடாமிருகம் அத்தீர்த்ததிலே ஸ்நானஞ் செய்து சிவாலயத்தையும் வழிபட்டு வருமுன் வீமசேனன் வெகுதூரம் நடந்தும் வீமசேனனை நெருங்கித் தொடர்ந்தது. நெருங்க நெருங்க அப்படியே ஒவ்வொன்றாக ஏழுமுறை பரற்கல்லிட்டான். புருடாமிருகமும் அவ்வப்போதே அங்கங்கே தோன்றிய தீர்த்தங்களிலே ஸ்நானஞ்செய்து கோயில்களையும் வழிபட்டு வழிக் கொண்டுவந்து பின்னர் வீமசேனன் தன்னெல்லையில் ஒருகாலும் மற்றையெல்லையில் ஒருகாலுமாகப் பொகும்போது அவனைப் பிடித்தது. அப்போது வீமசேனன் எல்லைதவறிப் பிடித்தாயென்னப் புருடாமிருகந் தன்னெல்லையிற் பிடித்தேனெனன இருவரும் வழக்காடித் தருமரிடம்போய் முறையிட்டார்கள். இருவர் வாய்மொழியையுந் தருமர் கேட்டுத் தம்பி என்றும் பாராமல் வீமசேனனைச் சரீரத்திற் பாதி புருடாமிருகத்திற்குக் கொடுக்கும்படி சொன்னார்.

தேவா முனிவர்மண்ணோர் தென்புலத் தார்க்குமோகம்
பாவவித் தென்றோதும் பழமறைகள்—ஆவதனால்
வேளாளா புன்னைவன வித்தகா வித்தரையின்
மூளுமோ கத்தை முனி. (97)

குழந்தையென்று மாயனைப்பேய் கொல்லமுலைப் பாலீந்
திழந்ததுயி ரென்பதுல கெங்கும்—முழங்குதலால்
வீறாளா புன்னைவன மேகமே யாரிடத்தும்
மாறான வல்லமைபே சேல் (98)

கண்ணபிரான் இடைச்சேரியிலே குழந்தையாய் வளருங்காலத்திலே கஞ்சனாகிய மாதுலனால் அவரைக்கொல்லும்படி வஞ்சகமாக அனுப்பபட்ட பூதனை என்னும் பேயானது தாய்போலச் சென்று கண்ணபிரானாகிய குழந்தைக்கு முலைப்பால் கொடுத்தது, கண்ணபிரான் இது கஞ்சனுடைய வஞ்சகமென்றுணர்ந்து முலைப்பாலோடு அப்பேயின் உயிரையும் உண்டார்.

இந்திரன்முன் கோசிகன்வ சிட்டனுடன் வாதிலரிச்
சந்திரனைப் பொய்யனென்ற தப்பதனால்—வந்ததுபார்
மாதனே புன்னை வனநாதா வாயிடும்பால்
ஏதெனினும் வாதுமுற்கூ றேல். (99)

தேவுலத்திலே இந்திரசபையிலே ஒருநாள் பூவுலகத்துள்ள பலமுனிவர்களும் போய்க்கூடினார்கள். அப்போது முனிவர்களையெல்லாம் இந்திரன் நோக்கி “முனிவர்களே! பூவுலகத்திலே அரசர்களுள்ளே காட்சிக்கெளியனாய்க், கடுஞ் சொல்லிலனாய், ஏகபத்தினிவிரதனாய், சத்தியவானாய், பொறுமையுடைவனாய், மநுநீதிதவறாது அரசு செய்பவன் யாவன்” என்றுவினாவினான். அப்போது வசிட்ட முனிவர் அதற்குவிடையாக அரிச்சந்திரனை வியந்துகூறினர். அதுகேட்டவிசுவா-மித்திரர் வசிட்டர் கூறியதனை மறுத்து வெய்யன், கபடன், வீணன், பொய்யன், கையன், கயவன், அரசர்க்குரிய வொழுக்கமில்லாதவன் என்று இன்னோரன்ன நிந்தைவார்த்தைகளால் அரிசந்திரனை இகழ்ந்தார். இப்படி இருவரும் வாதுபேசியபோது வசிட்டமுனிவர் “அரிச்சந்திரனிடத்திலேயுளதாக நான்கூறிய நல்லொழுக்கங்களிற் சிறிதானுந் தவறுமாயின்; நான் என்தவம் முழுவதுங் கைவிட்டுத் தலையோட்டிலே கள்ளேந்தியுண்டு தெற்குநோக்கிச் செல்வேன்” என்று சபதங்கூறினர். விசுவாமித்திரரும் “நான் பரிசோதிக்கும்போது இவர் கூறிய நற்குணங்கள் அவ்வரிச்சந்திரனிடத்தே தவறாதிருக்குமாயின்; நான் வருந்திச் செய்த தவத்திலே பாதிகொடுப்பேன்” என்று சபதங்கூறினர். பின்னர் விசுவாமித்திரர் பலவாறு பரிசோதித்தும் அரிசந்திரன் சிறிதும் வழுவாமை கண்டு விசுவாமித்திரர் சொல்லியவாறே தவத்திலே பாதிகொடுத்துவிட்டார்.

வள்ளுவரைக் கல்வியன்றோ வண்டமிழ்ச்சங் கஞ்சயிக்கத்
தெள்ளுதமிழ் நூலுதவி செய்ததெல்லாம்–உள்ளதன்றோ
சந்திரனே புன்னைவனத் தாளாளா பேரறிவாம்
புந்தியினில் வித்தைவிரும் பு (100)

புலைத்தொடர்புடையராயிருந்தும் வள்ளுவர் தம்மிடமிருந்த கல்வி மகத்துவத்தினாலே மதுரைச் சங்கத்திலே போய்ச் சங்கப்புலவர்களையும் வென்று சங்கப்பலகையும் பெற்றுத் தமது நூலாகிய திருக்குறளையும் அரங்கேற்றிச் சங்கப் புலவராற் பாயிரமும் பெற்றார்.

நிலையா வுடல்பொரு ணீரி னிறைகஞ்சம்
மலரிலைபோ லெத்தனைநாள் வாழ்த்தும்-இலகுபொருள்
பக்தியெனும் புன்னைவனப் பார்த்திவா சனகனைப்போல்
நித்தியமாம் வீடுபெற நில். (101)

வேத வியாசன் விதுர னுருப்பசிதன்
காதன்மைந்த னான கனவசிட்ட-னீதியைப்பார்
நேயத்தாற் புன்னைவன நீதிபா தாரணியி
லேயுத் தமனா யிரு. (102)

ஊருந்தா யுஞ்சரியே யூரையன்றி யேதனிவாழ்ந்
தாருந்தா யைத்தளிவாழ்ந் தாருமொப்பர்-பாரின்பால்
பொன்னூரும் புன்னைவன பூபாலா நீயிதெண்ணி
மன்னூ ருடன்கூடி வாழ். (103)

தருமருயர் வெள்வி தனிற்சிசுபா லன்பார்த்
தரியைநிந்தை சொல்லி யழிந்தான் – தெரிவதன்றோ
பார்புகழும் புன்னைவன பார்த்திபா மேலோரைச்
சீர்மைதப்பி வெட்டெனப்பே சேல் (104)

சேதிதேசராசனும் தமகோஷன் மகனுமாகிய சிசுபாலன் என்பவன் தருமருடைய இராயசூயத்திலே கண்ணபிரானுக்கு அக்கிரபூசை செய்யப்பட்டதென்று கண்ணபிரானை நிந்தித்துக் கண்ணபிரானாற் கொல்லப்பட்டான்.

ஆடாசாய் வேந்தாடா யாற்றுரும் வாசமதாய்த்
தேடுமிடைக் காடருரை செய்ததுபார்-நீடழகு
சார்ந்தபுகழ்ப் புன்னைவனத் தாளாளா நன்றாகத்
தேர்ந்துகொண்டு வேண்டிவினை செய். (105)

செய்யமுகம் வாய்கைகாற் றேகசுத்தி செய்துமெய்யிற்
றுய்யவெண்ணீ றிட்டரனைத் தோத்திரஞ்செய்-துய்யும்வகை
மாவெய்தும் புன்னைவன மன்னவா மையிரவி
லேவைக றைத்துயிலெ ழு. (106)

தொழுதகை யுள்ளும் படையொடுங்கு மொன்னார்
அழுதகண் ணீரு மனைத்தென்-றெழுசொலைப்பார்
தூயபுகழ்ப் புன்னைவனத் தோன்றலே சொப்பனத்தி
லேயுமொன் னாரைத்தே றேல். (107)

அந்தணர்கள் வாழி யறம்வாழி கீர்த்திநிலை
தந்தவர்கள் வாழி தவம்வாழி-சந்ததமும்
மானஞ் செறிபுன்னை வனாநாதா விவ்வகையே
தானோ துவது தவம். (108)

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ முமுஷுப்படி -தெளிவுரை-ஸ்ரீ சரம ஸ்லோக ப்ரகரணம்‌-

November 18, 2025

மத்திய ரஹஸ்யமான்‌ த்வயத்தினுடைய அர்த்தத்தை அருளிச்‌ செய்த பிறகு அதில்‌, த்வயத்தின்‌ முதல்‌ வாக்கியத்தில்‌ சொல்லுகிற உபாயத்தை ஸர்வேஸ்வரன்‌ தானே விதிக்கையாலே, இந்த உபாயம்‌ கண்ணனெம்பெருமானுக்கு மிகவும்‌
இஷ்டமென்னுமத்தையும்‌, உபாயத்தை கைக்கொள்ளுவதற்கு முன்னோடியாம்‌ செயலான மற்றைச்‌ சாதன த்யாகத்தையும்‌, உபாயமாக வரித்த செயலே உபாயமென்ற புத்தியையும்‌ விட்டு உபாயமாக வரிக்கப் பெற்ற எம்பெருமானே உபாயமென்பதையும்‌, இவ்வர்த்தங்களை நேரே காட்டும்‌ சப்தத்தால்‌ முதல்‌ வாக்யம்‌ ‘சொல்லுகையாலும்‌.
த்வயத்தின்‌ உத்தர வாக்கியத்தில்‌ (பிற்பாதி வாக்கியத்ததாலே) சொல்லுகிற கைங்கர்யத்துக்கு முன்‌ நிகழக்‌ கூடியதான அடைதற்குத்‌ தடையான அனைத்துப்பாபங்களின்‌ விடுதலையையும்‌ “அஹம் த்வா’ என்ற பின் வாக்கியத்தாலே நேரே சப்தமாகச்‌ சொல்லுகையாலும்‌, த்வயத்துக்கு
விவரணமாய்‌ ஐந்தாம்‌ வேதமான ஸ்ரீமஹாபாரத ஸாரமான கீதோபநிஷத்தின்‌ தாத்பர்யமாய்‌, முடிவான ரஹஸ்ய மாயிருந்துள்ள சரம ஸ்லோகத்தினுடைய அர்த்தத்தை
ஐயந்திரிபுகளின்றி அருளிச்‌ செய்கிறார்‌.-
இதில்‌, அர்த்தங்‌ கேட்கைக்காக வன்றோ எம்பெருமானார்‌ 18 தடவை திருக்கோட்டியூர்‌ நம்பி பக்கல்‌ எழுந்தருளியது-நம்பி தாமும்‌ இதில்‌, அர்த்தத்தினுடைய பெருமையையும்‌ இதை மேற்கொண்டோழுகுமவர்கள்‌ இல்லாமையையும்‌ பார்த்துத் தான்‌ இவருடைய நம்பிக்கையையும்‌
விருப்பத்தையும்‌ பரீக்ஷிப்பதற்காகப்‌ பல்கால்‌ நடந்து துவளச்‌ செய்து ப்ரதிஜ்ஞை கொண்டு ஒரு மாஸம்‌ உபவாஸம்‌ இருக்கச்‌ செய்து அருமைப்படுத்தி அருளிச்‌ செய்தது. ஸுத்த ஸத்வ நிஷ்டனாய்‌, பரமாத்ம விஷயத்தில்‌ அபார ப்ரேமை யுடையனாய்‌, இதற்குப் புறம்பான மற்றவற்றில்‌ மிக்க வெறுப்புடையவனாய்‌, ப்ரமாணங்களை மீறாது அதற்கு உடன்பட்ட வனாய்‌, பகவத்‌ வைபவம்‌ கேள்வி யுற்றால்‌ பொருந்து மென்று விசாலமான ஹ்ருதயமும்‌ மிக்க நம்பிக்கை யுடையனாய்‌, சாஸ்த்ர நம்பிக்கை யுடையவர்களில்‌ தலைவனாய்‌ ஒருவன்‌ உண்டானால்‌ அவன்‌ இந்த ஸ்லோகார்த்தம்‌ கேட்டு அதன்‌ படி அநுஷ்டிக்கத்தக்க அதிகாரியாவான்‌. ஆகையாலே, அப்படிப்பட்ட அதிகாரி கிடைமையாலும்‌ அர்த்தத்தின்‌ சீர்மையாலும்‌ இத்தை வெளியிடாதே மறைத்துக்‌ கொண்டு வந்தார்கள்‌ எம்பெருமானாருக்கு முன்புள்ளார்‌. ஸம்ஸாரிகள்‌ துர்க்கதி கண்டு பொறுக்க மாட்டாதபடி, கருணை கரை புரண்டிருக்கையாலே, அர்த்தத்தின்‌ கெளரவம்‌ பாராதே பிறப்பு மரணம்‌ போன்ற துன்பத்தில்‌ சிக்கித்‌ தவிக்கும்‌ மக்களுடைய இழவை நினைத்து எம்பெருமானார்‌ தகுதியுடைய அதிகாரிகளுக்கு உபதேச மூலமாக வெளியிட்டருளினார்‌ என்கிறார்‌. அப்படி உபதேசித்து விடுவதல்லாமல்‌, இந்த அர்த்தமாகிற பொருளை எல்லாருமறிந்து உய்வு பெற வேணுமென்ற மேலான கருணையாலே,, இதன்‌ அர்த்தத்தை பல நூல்களிலும்‌ சுருக்கமாகவும்‌, விரிவாகவும்‌ (இவர்‌) பிள்ளைலோகாசாரியர்‌ அருளிச்‌ செய்தது. மற்றுள்ள ப்ரபந்தங்கள்‌ எல்லாவற்றிலும்‌ போலன்றிக்கே பெண்களும்‌ பாலர்களும்‌ கற்றுணரலாம்படி தெளிய அருளிச்‌ செய்தது இந்த ப்ரபந்தமாகும்‌ என்கிறார்‌ மணவாள மாமுநிகள்‌.
அநுஷ்டாநம்‌ – ஒழுக்கம்‌.

இதில்‌, முதலிலே இந்த ஸ்லோகார்த்தத்தினுடைய பெருமையை எல்லாருடைய மனத்திலும்‌ படுத்துகைக்காக இது தனக்குச் சரம ஸ்லோகமென்று திருநாமமாகைக்குக்‌
காரணத்தை அருளிச் செய்கிறார்‌.
ஸூர்ணை -185. கீழே சில உபாய விசேஷங்களை உபதேசிக்க அவை துச்சகங்களென்றும்‌,ஸ்வரூப விரோதிகளென்றும்‌ நினைத்து சோகாவிஷ்டனான அர்ஜுநனைக் குறித்து, அவனுடைய சோக நிவருத்த்யர்‌த்தமாக ‘இனி இதுக்கு அவ்வருகில்லை’ என்னும்‌படியான சரமோபாயத்தை அருளிச்‌ செய்கையாலே சரம ஸ்லோக மென்று இதுக்குப்‌ பேராயிருக்கிறது

இந்த ஸ்லோகத்துக்குக்‌ கீழே சில உபாய விசேஷங்களை அநேகாத்யாயங்களிலே கர்ம ஜ்‌ஞாநாதிகளைத்‌ தன்னை அடைதற்குரிய மோக்ஷ ஸாதநமாக விரிவாக உபதேசிக்கக்‌ கேட்டு, உடலை வருத்தி ஓடுக்கிச்‌ செய்கை முதலானவையும்‌, இந்திரிய ஐயம்‌ அரிதாகையாலும்‌, குறிக்கொண்டு நீண்டகாலம்‌ ஒழுக்கம்‌ மேற் கொண்டு ஸாதிக்க வேண்டி யிருக்கையாலும்‌, அவைகளை கடைப் பிடித்து ஒழுக இயலாதென்றும்‌, பகவானுக்குச்‌ சரீரமா யிருக்கிற ஆத்மாவின்‌ பரதந்த்ரமான ஸ்வரூபத்துக்குத்‌ தன்‌ முயற்சியாலே முயல்வது இவை விரோதிகளென்‌றும்‌ புத்தி பண்ணி, இவற்றாலே எம்பெருமானைப்‌ பெறுவது என்பது ஒன்றில்லை; இனி இழந்தே போனோம்‌’ என்கிற சோகத்தாலே கவரப் பெற்றவனான அர்ஜுநனைக் குறித்து, அவனுடைய அந்த சோகம்‌ போகைக்காக எளிதில்‌ ஒழுகக் கூடியதும்‌ ஸ்வரூபத்துக்குப்‌ பொருந்திய தாகையாலும்‌ இனி இதற்கு மேலில்லை என்னும்‌ படியான முடிந்த உபாயத்தை அருளிச் செய்கையாலே சரம ஸ்லோகமென்‌று இதற்குத்‌ திருநாமமா யிருக்கிறது

இனி, இந்த ஸ்லோகத்துக்கு வாக்யார்‌த்தம்‌ அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -186 – இதில்‌ பூர்வார்த்தத்தாலே அதிகாரி க்ருத்யத்தை அருளிச்‌ செய்கிறான்‌; உத்தரார்த்தத்‌தாலே உபாய க்ருத்யத்தை அருளிச்‌ செய்கிறான்‌.
இரண்டு அர்த்தங்களின்‌ (முற்பாதி பிற்பாதி) வடிவமான இந்த ஸ்லோகத்தில்‌, முற் பாதியாலே இந்த உயாயத்துக்கு அதிகாரி யானவன்‌ செய்யுமத்தை அருளிச்‌ செய்கிறான்‌; பிற் பாதியாலே உபாயமான தான்‌ இவனுக்குச்‌ செய்யுமதை அருளிச்‌ செய்கிறான்‌ என்கை.

அதிகாரி செய்யுமது எது? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -187-அதிகாரிக்கு க்ருத்யமாவது – உபாய பரிக்ரஹம்‌
அதிகாரியானவனுக்கு இங்குச்‌ செய்யத் தக்கது, இந்த உபாயத்தைப்‌ பற்றுகை என்கை.

ஆனால்‌, அவ்வளவு சொல்லாதே வேறு பட்ட உபாயங்களை விடச்‌ சொல்வானென்‌? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -186- அத்தை ஸாங்கமாக விதிக்கிறான்‌-
அந்த உபாயத்தைப்‌ பற்றுகிறதை மற்ற உபாயங்களை விடுகையாகிற அங்கத்தோடே கூட விதிக்கிறான்‌: என்கை.
“ப்ரக்ஷாள்ய பாதா வாசாமேத்‌ ஸ்நாத்வா விதிவதர்ச்சயேத்‌ ஸ்தித்வார்க்யம்‌ பாநவே தத்யாத்‌ த்யாத்வா தேவம்‌ ஐபேந்மநும்‌”
பாதெள
– கை கால்களை,
ப்ரஷாள்ய – கழுவிக்கொண்டபின்புதான்‌,
ஆசாமேத்‌ – “ ஆசமனம்‌ பண்ணக் கடவன்‌, .ஸ்நாத்வா – ஸ்நாநம்‌ பண்ணியே,
விதிவத்‌ – விதிப்படி,
அர்ச்சயேத்‌– அர்ச்சிக்கக்‌ கடவன்‌,
ஸ்தித்வா – நின்று கொண்டே,
அர்க்யம்‌ – அர்க்யத்தை,
பாநவே – சூரியன்‌ பொருட்டு,
தத்யாத்‌ – கொடுக்கக்கடவன்‌,
தேவம்‌ – தேவனை,
த்யாத்வா – த்யாநித்துக்‌ கொண்டேதான்‌, மநும்‌ ஜயேத்‌ – மந்த்ரத்தை ஜபிக்கக்கடவன்‌ என்று கைகால்‌ கழுவுதலை முதலில்‌ செய்து விட்டுத்தான்‌ பிறகு ஆசமனம்‌ முதலானவற்றை செய்ய வேண்டும்‌. இல்லையென்றால்‌, அநுஷ்டாநத்திற்குக்‌ குறைவேற்படும்‌. அது போலே, ஸித்தோபாயமான எம்பெருமானைப் பற்றும்‌ பொழுது உபாயாந்திரங்களை (மற்ற உபாயங்களை) முதலில்‌ விட்டே பற்றவேணும்‌. இதை த்யஜ்ய என்ற பதத்தில்‌ இறுதியிலிருக்கும்‌ ல்யப்‌ என்ற விகுதி, ‘விடுதல்‌’ என்ற பொருளைக் காட்டும்‌ த்யாகத்தை வொழிய பற்றுதல்‌ என்ற ஸ்வீகாரம்‌ பொருந்தாது என்பதைக்‌ காட்டிக்கொடுக்கிறது.
ஆகையால்‌ “ஸர்வ தர்மாந்‌ பரித்யஜ்ய ஸ்திதச்சேத்‌” (எல்லா தர்‌மங்களையும்‌ விட்டிருந்தானாகில்‌) என்று தாம்‌ மேற் கொண்டொழுகுவதாகிய தன்‌ முயற்சியால்‌ செய்யக்‌கூடிய கர்ம ஜ்ஞாத பக்திகள்‌, செய்வதற்கு அருமையாயிருத்தலால்‌ ப்ரபத்தி பற்ற எளிதாயிருத்தலால்‌, அதை விட்டு இதை பற்றலாம்‌ என்று அநுவதித்து ஸித்தோபாய ஸ்வீகாரத்தை விதிக்கிறதென்கிற பிறருடைய வாதம்‌ பொருத்தமற்றது என்கிறார்‌.

எளிதில்‌ செய்யக் கூடியதும்‌ தன்‌ தகுதிக்கு ஏற்றதும்‌ விரும்பி மேற் கொண்டு ஒழுகுவதற்கும்‌ உரியதான இந்த ப்ரபத்தியைச்‌ செய்யென்று நியமிக்க வேணுமோ? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌ ராக ப்ராப்தம்‌ எனறு தொடங்கி-ராக ப்ராப்தம்‌ – விருப்பத்துக்குரியது.
ஸூர்ணை -189-ராக ப்ராப்தமான உபாயந்தானே வைதமானால்‌ கடுகப் பரிக்ரஹிக்கைக்கு உடலாயிருக்குமிறே .
இனிமையாலே விரும்புதலுக்குரியதான பாலைப்‌ பித்த ரோகத்துக்கு மருந்தாகக்‌ கொடுக்கச்‌ சொல்லி நியமித்தால்‌ உடனே கைக் கொள்ளுகைக்கு உரித்தாமாப் போலே, மற்ற உபாயங்களைக்‌ காட்டிலும்‌ இந்தப் ப்ரபத்தியாகிற சரணாகதிக் குண்டான தனிச் சிறப்பாலே சேதனனுடைய விருப்பத்திற்கு ஏற்றதாகக்‌ கை கொள்ளத் தக்கதாயுள்ள இந்த உபாயத்தை ‘மேற் கொள்ள வேண்டும் என்ற ஆணையுமிட்டால்‌ விரைந்து ஏற்கைக்கு உரித்தாயிருக்குமன்றோ என்கை.

இனி, இதற்கு அர்த்தம்‌ அருளிச்‌ செய்வதாக முற்பாதியின்‌ பதங்களின்‌ எண்ணிக்கையைக்‌ குறிப்பிடுகிறார்‌.
ஸூர்ணை -190 -இதில பூர்வார்த்தம்‌ ஆறு பதம்‌.
அதில்‌ முதல் பதத்தை தொடங்குகிறார்‌.
ஸூர்ணை -191- ஸர்வ தர்மாந்‌ – எல்லா தர்மங்‌களையும்‌ –
“ஸர்வதர்மாந்‌ என்று அர்த்தம்‌ அருளிச் செய்கிறார்‌ எல்லாத்‌ தர்மங்களையும்‌ என்று.

அது தான்‌ தர்மமும்‌, பன்மையும்‌, ஸர்வ சப்தமுமாய்‌ மூன்று விதமாயிருக்கையாலே இம் மூன்‌றுக்கும்‌ அர்த்தம்‌ அருளிச் செய்வதாக, முதலில்‌ தர்ம லக்ஷணத்தை அருளிச் செய்கிறார்‌.
ஸூர்ணை -192- தர்மமாவது – பல ஸாதநமா யிருக்குமது
தர்மம்‌’ என்ற சொல்‌ பயனை ஸாதித்துத்‌ தரும்‌ ஸாதநமாயிருக்குமது.
தர்ம சப்தம்‌ இம்மைப்‌ பலங்களையும்‌ ஸ்வர்க்கம்‌ முதலிய மறுமைப் பலன்களுக்கும்‌ ஸாதநமாகையால்‌ இவைகளை வேறுபடுத்துகிறார்‌.
ஸூர்ணை -193 -இங்குச்‌ சொல்லுகிற தர்ம சப்தம்‌ த்ருஷ்ட பல ஸாதநங்களைச்‌ சொல்லுகை யன்றிக்கே, மோக்ஷ பல ஸாதநங்களைச்‌ சொல்லுகிறது .
அதாவது, கீதையில்‌ கண்ணன்‌ இதற்கு முன்‌ உபதேசித்த கர்ம ஜ்ஞாந பக்திகளை, உபதேசிக்கிற போதே இம்மைப்‌ பல ஸாதநங்கள்‌ இவற்றுக்கு வேறுபட்டவையாகையாலும்‌, மோக்ஷோபாயங்களை உபதேசித்து வருகிற பகுதியாகையாலும்‌, இவ் விடத்தில்‌ சொல்லுகிற தர்ம சப்தம்‌ புத்ர,பசு, அந்நம்‌ முதலிய இவ்வுலக பலன்களையும்‌ ஸ்வர்க்கம்‌ முதலிய பர லோக பலன்களையும்‌ உள்ளவற்றுக்கு ஸாதநங்‌களைச்‌ சொல்லுகை யன்றிக்கே, பகவத்‌ விஷயத்தை அடைந்‌தின்புறுவதாகிய மோக்ஷ பல ஸாதநமா யுள்ளவற்றைச்‌ சொல்‌லுகிற தென்கை.

மேல்‌ பன்மையின்‌ பொருளை அருளிச்‌ செய்கிறார்
ஸூர்ணை -194 -அவைதான்‌ – ஸ்ருதி ஸ்ம்ருதி விஹிதங்களாய்ப்‌ பலவா யிருக்கையாலே பஹு வசந ப்ரயோகம்‌ பண்ணுகிறது .
அந்த மோக்ஷ பல ஸாதநங்கள்‌ தாம்‌, வேதங்களாலும்‌ அதன்‌ வழி நூல்களான தர்ம சாஸ்திர இதிஹாஸப்‌ புராணங்களாலும்‌ சொல்லப் பெற்றவையாய்‌ அநேகங்களா யிருக்கையாலே *தர்மாந்‌’ என்று பன்மை விகுதி உபயோகிக்கப் பெற்றுள்ளது என்கை.

அப்படி இருந்துள்ளவை தாம்‌ எவை? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -195-அவையாவன – கர்ம ஜ்ஞாந பக்தி யோகங்களும்‌, அவதார ரஹஸ்ய ஞாநம்‌, புருஷோத்தம வித்யை, தேச வாஸம்‌, திருநாம ஸங்கீர்த்தநம்‌,
திருவிளக்கெரிக்கை, திருமாலை யெடுக்கை தொடக்கமான உபாய புத்தயா செய்யுமவையும்‌
கீழ்ப் பலவாகச்‌ சொல்லப் பட்டவையாவன, “கர்மணைவ ஹி ஸம் ஸித்தி மாஸ்திதா ஐநகாதய: தஸ்மாத ஸக்தஸ் ஸததம்‌ கார்யம்‌ கர்ம ஸமாசர
அசக்தோஹ்யா சரந் கர்ம பரமாப்நோதி புருஷ:”
தஸ்மாத்‌
– ஸாதநமில்லாமலே ஆத்மாவைக்‌ காண வல்ல முக்தனுக்கோ மஹா யஜ்ஞம்‌ முதலிய வர்ணாஸ்ரமங்கடட்கு ஏற்ற தர்மத்தைச்‌ செய்ய வேண்டியதில்லை யாதலால்‌,
அசக்த:– (தர்மத்திலே) பற்றுதலில்லாமலே, கார்யம்‌ – கர்மம்‌ செய்யத் தக்கது,
(இத்யேவ) என்று நினைத்தே,
ஸததம்‌- ஆத்மாவை அடையும்‌ வரைக்கும்‌-எப்போதும்‌,
கர்ம-கர்மத்தையே,
ஸமாசர – அநுஷ்டிப்பாய்‌,
அசக்த-பற்று இல்லாமல்‌,
கர்ம ஆசரந்‌ – கர்மத்தை அநுஷ்டிக்கிற, புருஷ: புருஷன்‌,
பரம்‌ ஆப்நோதி ஹி – ஆத்மாவை அடைகின்றா னன்றோ?
ஐநகாதய:– ஜனகர்‌ முதலியோர்‌, கர்மணைவ – கர்ம யோகத்தினாலேயே, ஸம்ஸித்திம்‌ – ஆத்மாவை நேரே காணுதல்‌,
அஸ்திதா: ஹி – அடைந்தார்களன்றோ! என்று அங்கமாக இராமல்‌ தானே ஸாதநமென்று சொல்லப்பட்டுள்ள கர்ம யோகமும்‌, “ஸ்ரேயாந்‌ த்ரவ்ய மயாத்‌ யஜ்ஞாத்‌ ஜ்ஞாந யஜ்ஞு:பரந்தப, ஸர்வம்‌ கர்மாகிலம்‌ பார்த்த ஜ்ஞாநே பரி ஸமாப்யதே”
பரந்தப-சத்ருக்களைத்‌ தவிக்கச்‌ செய்பவனே!
த்ரவ்யம்‌ ஜ்ஞாநம்‌ –என்ற இரண்டு அம்சங்களை யுடைய கர்மத்தில்‌,
த்ரவ்ய மயாத்‌ யஜ்ஞாத்‌ – த்ரவ்ய அம்ச மாயிருக்கிற யஜ்ஞ்த்தைக்‌ காட்டிலும்‌, ஜ்ஞாந யஞ்ஞ :- ஜஞாநாம்‌சமாயிருக்கிற யஜ்ஞம்‌,
ஸ்ரேயாந்‌ – சிறப்புடையது,
பார்த்த – குந்தி புத்திரனே,
ஸர்வ கர்ம – ஸகல கருமமும்‌,
அகிலம்‌ (அந்தக்‌ கர்மத்துக்குப் புறம்பா யிருக்கிற) எல்லாமும்‌, (அந்தக் கர்மத்துக்கு உபயோகமான ‘ஸகலவஸ்‌துக்களும்‌),
ஜ்ஞாநே – ஜ்ஞாந யோகத்திலே
பரி ஸமாப்யதே – முடிக்கப்படுகிறது.
ந ஹி ஜ்ஞாநேந ஸத்ருசம்‌ பவித்ரமிஹ
வித்யதே, ஜஞாநாக்நிஸ்‌ ஸர்வ கர்மாணி பஸ்மஸாத்‌ குருதே ததா”
ஜ்ஞாநஅக்நி
: -ஜ்ஞாநமாகிற அக்நியானது,
ஸர்வகர்‌மாணி -எல்லாக்‌ கர்மங்களையும்‌, பஸ்மஸாத்குருதே – பஸ்மமாகச்‌ செய்கிறது,
ஜ்ஞாநேந ஸத்ருசம்‌ – ஜ்ஞாந யோகத்தைப் போன்று,
பவித்ரம்‌ – சுத்தியானது,
இஹ – இந்த லோகத்தில்‌,
ந வித்யதே ஹி – வேறொன்று இல்லை யன்றோ!
என்று சொல்லப்பட்ட கர்மத்தால்‌ ஸாதிக்கக் கூடிய ஜ்ஞாந யோகமும்‌ “பக்த்யாத்வநந்யயாசக்ய:” பக்த்யா
அநந்யயா – வேறு இடத்திலில்லாது சிறந்த பக்தியினாலே,
ஸக்ய: அடையக்‌ கூடியவன்‌ (நான்‌) . இவை முதலானவைகளால்‌ சொல்லப்பட்ட கர்ம ஜ்ஞாநங்களை அங்கமாகக்‌ கொண்ட பக்தி யோகமும்‌ “ஐந்ம கர்ம ச மே திவ்யம்‌ ஏவம்‌
யோ வேத்தி தத்த்வத: த்யக்த்வா தேஹம்‌ புநர் ஜன்ம நைதி மாமேதி ஸோர்ஜுந’ அர்ஜாந -அர்ஜ்ஜுநனே!,
மே
– என்னுடைய,
ஐந்ம கர்மச- பிறப்பும்‌ செயலும்‌ திவ்யமானவை,
ய: எவன்‌, ஏவம்‌ – இப்படி, தத்வது: வேத்தி – உள்ளபடி அறிகிறானோ, ஸு: அவன்‌, தேஹேம்த்யகத்வா – -தேகத்தை விட்டு, புநர்ஜன்மநைதி – மீண்டும்‌ பிறப்பை
அடைய மாட்டான்‌,
மாம்‌ஏதி – என்னையே அடைகிறான்‌-என்று விரோதி கழிவது முன்னாகத்‌ தன்னை அடைதற்குச்‌ சாதநமாகக்‌ கண்ணன்‌ சொன்ன அவதார ரஹஸ்ய ஜ்ஞாநம்‌.
“ஏதத்‌ புத்த்வா புத்திமாந்‌ ஸ்யாத்‌ க்ருதக்ருத்யச்ச பாரக்‌
பாரத
– பாரத குலத்தில்‌ பிறந்த அர்ஜுந, ஏதத்‌ – இந்த புருஷோத்தம வித்யயை, புத்வா – தெரிந்து கொண்டவன்‌,
புத்திமாந்‌-நல்ல ஜ்ஞாநத்தை யுடையவனாகவும்‌,
க்ருதக்ருத்யச்‌ச -செய்ய வேண்டிய கர்மங்களைச்‌ செய்தவனாகவும்‌,
ஸ்யாத்‌ – ஆவான்‌-என்று விரும்பிய பலன்‌ தருவதாக!
(க்ருதக்ருத்ய) செய்யவேண்டியதை செய்தவனாக்கும்‌ என்‌கிற புருஷோத்தம வித்யை,
“தேசோயம்‌ ஸர்வ காம து…
அயம்தேச:
-இந்த புண்ணிய ஸ்தலம்‌, ஸர்வகாமதுக்‌-எல்‌லா விருப்பங்களையும்‌ கொடுக்கும்‌ என்கிற புண்ணிய தேசவாஸம்
ஸர்வபாபவிசுத்தாத்மா யாதி ப்ரஹ்ம ஸநாதநம்‌” அனைத்துப்‌ பாப விமோசநம்‌ முதலாக ப்ரஹ்மத்‌தை அடைவதைப்‌ பலமாகச்‌ சொல்லி யிருக்கிற திருநாமஸங்கீர்த்தநமும்‌. “க்ருதே வாத தைலேந தீபம்‌ போ ஜ்வாலயேந்நர:, விஷ்ணவே விதிவத்‌ பக்த்யா தஸ்யபுல்‌!।. !
பலம்‌ ச்ருணு, விஹாய ஸகலம்‌ பாபம்‌ ஸஹஸ்நாத்‌:.ஸந்நிப: ஜ்யோதிஷ்மதா விமாநேந விஷ்ணுலே…..மஹீயதே”
ய:நர:-
எந்த மனிதன்‌,
விஷ்ணவே பகவாந்பொருட்டு,
பக்த்யா – பக்தியோடு,
விதிவல்‌ சாஸ்திரத்தில்‌ சொன்ன படி, க்ருதேந- நெய்யினாலாது ,
அதாவா – அல்லது, தைலேந -எண்ணையினாலாவது,
தீப தீபத்தை,
ஜ்வாலயேத்‌– எரியும்படி செய்கிறோனோ, தஸ்ய– அவனுடைய,
புண்யபலம்‌ – புண்ணியத்தின்‌ பலத்தை, ஸ்ருணு– கேள்‌,
ஸ:-அவன்‌,
ஸகலம்‌ பாபம்‌: எல்லாப்பாபங்களையும்‌,
விஹாய – விட்டு,
ஸஹஸ்ராதித்ய ஸந்நிப -ஆயிரம்‌ ஸூர்யனுக்கு ஓப்பானவனாகி, ஜ்யோதிஷ்மதா – காந்தியோடு கூடிய, விமாநேந – விமாநத்தாலே (போய்‌) விஷ்ணு லோகே – விஷ்ணு லோகத்தில்‌, மஹீயதே – கெளரவிக்கப்படுகிறான்‌.
என்ற பாப விடுதலை முன்னாக பகவானை அடைவதற்குச்‌ சாதகமாகச்‌ சொல்லபடுகிற திருவிளக்கெரிக்கை திருமாலை எடுக்கை முதலாக ஸாதந புத்தியோடு செய்யப்படும்‌
உபாயங்கள்‌
என்கை.

இனி, ஸர்வ சப்தார்த்தத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -196 – ஸர்வ சப்தத்தாலே அவ்வவ ஸாதந விசேஷங்களை அநுஷ்டிக்குமிடத்தில்‌ அவற்றுக்கு யோக்யதா பாதகங்களான நித்ய கர்மங்களைச்‌ சொல்லுகிறது ,
தர்ம விசேஷேணமான ஸர்வ சப்தத்தாலே பன்மையாகச்‌ சொல்லப் பெற்ற அந்த அந்த
ஸாதந விசேஷங்களைக்‌ கைக் கொண்டு ஒழுகும்‌ இடத்தில்‌
“ஸந்த்யா ஹீநோ?சுசிர்‌ நித்யம்‌ அநர்ஹஸ் ஸர்வ கர்மஸ-“,
ஸந்த்யாஹிந:
-ஸந்த்யாவந்தநம்‌ செய்யாதவன்‌,
நித்‌யம்‌ – எப்பொழுதும்‌,
ஸர்வ கர்மஸு – எல்லாக் கர்மங்களும்‌ செய்ய,
அநர்ஹ: – தகுதியற்ற வனாகிறான்‌.-என்கிறபடியே தகுதி யற்றவனாகாமல்‌ தன்னை மேற்கொண்டொழுகுவதாலே அவற்றுக்குத் தகுதியை உண்டாக்கிக்‌ கொடுக்கும்‌ ஸந்த்யாவந்தந பஞ்ச மஹா யஜ்ஞங்கள்‌ முதலிய நித்ய கர்‌மங்களைச்‌ சொல்லுகிறது என்கை.

சொன்னதை முடிக்கிறார்‌.
ஸூர்ணை -197- ஆக, ஸ்ருதி ஸ்ம்ருதி சோதிதங்களாய்‌ நித்ய நைமித்திகாதி ரூபங்களான கர்ம யோகாத் யுபாயங்களை என்றபடி.
ஆக, கீழ்ச்‌ சொன்ன எல்லாவற்றாலும்‌ “சோதநாலக்ஷணார்த்தோ தர்ம.” (விதியினால்‌ -‘விதிக்கப்படும்‌ பொருள்‌ தர்மம்‌ என்கிறது.) என்கிறபடியே விதியை விதிக்கிற ப்ரமாணத்தை உடைத்தான அர்த்தம்‌ தர்மம்‌ என்கையாலே, வேதம்‌ தர்ம சாஸ்திரங்களாகிற
ப்ரமாணங்களாலே விதிக்கப் பட்டுள்ளவையாய்‌, நித்யம்‌ நைமித்திகம்‌ முதலானவற்றை வடிவாக உடைத்தான கர்ம யோகம்‌ தொடக்கமான உபாயங்களை என்றபடி. என்கை.
நித்யம்‌-தினந்தோறும்‌ செய்யக்கூடிய திருவாராதநம்‌. நைமித்திகம்‌- பக்ஷங்களிலும்‌ மாஸங்களிலும்‌ செய்யக்கூடிய தர்மங்கள்‌-

ஸ்வரூபத்துக்கு தகுதி யல்லாததாய்‌ அதர்மமாகச்‌ சொல்ல வேண்டியவற்றைத்‌ தர்மம்‌ என்கிறதுக்கு காரணத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -198 – இவற்றை, தர்மம்‌ என்கிறது – ப்ரமித்த அர்ஜுநன்‌ கருத்தாலே பகவதத்யந்த பாரதந்த்ர்ய மாகிற ஆத்மாவின்‌ இயல்பிற்கு விரோதியா யிருக்கையாலே அதர்மம்‌ என்று சொல்ல வேண்டிய இவைகளை தர்மம்‌ என்று சொல்லுகிறது, தன்னுடைய தர்மமான யுத்தத்தை அதர்மம்‌ என்றும்‌, இவற்றை (ஸாதந தர்மங்களை) தர்மமென்றும்‌ (ப்ரமித்து மயங்கிய அர்ஜுநனுடைய நினைவாலே என்கை.

ஆக, முதல் பத அர்த்தத்தை அருளிச்‌ செய்தாராயிற்று. பிறகு, இரண்டாம்‌ பதத்தைத்‌ தொடங்குகிறார்‌.
ஸூர்ணை -199- பரித்யஜ்ய .
இதுவும்‌, த்யாகமும்‌ ல்யப்பும் த்யஜ்ய என்றதின்‌ விகுதியும்‌ உப ஸர்க்கமுமாய்‌,
மூன்று விதமா யிருக்கையாலே, அதில்‌ த்யாகத்தை முதலில்‌ அருளிச் செய்கிறார்‌.
ஸூர்ணை -200- த்யாகமாவது -உக்தோபாயங்‌களை அநுஸந்தித்து, ‘சுக்திகையிலே ரஜத புத்தி பண்ணுவாரைப் போலேயும்‌, விபரீத திசாகமநம்‌ பண்‌ணுவாரைப் போலேயும்‌, அநுபாயங்களிலே உபாய புத்தி“பண்ணினோம்‌’ என்கிற புத்தி விசேஷத்தோடே த்யஜிக்கை .
இவ்விடத்திற்‌ சொல்லுகிற த்யாகமாவது – வெறும்‌ விடுகை மாத்திரமன்‌று சொல்லுகிறது. -கீழ்ச்‌ சொல்லப்பட்ட உபாயங்களை நினைத்து வெள்ளி யல்லாத கிளிஞ்சலை வெள்ளி யென்று நினைப்‌பாரைப்‌ போலேயும்‌, தன்‌ கார்யத்துக்கு உரியதான திசையிலே போக நினைத்து அதற்கு எதிரான திக்கிலே அதுவாக நினைத்துப்‌ போவாரைப் போலேயும்‌, பகவானை அடைதற்குரிய உபாயத்தை விரும்பக் கூடிய நாம்‌ உபாயமல்லாதவற்றிலே உபாய புத்தி பண்ணினோம்‌’ என்கிற அனுதாபத்தோடே விடவேண்டும்‌ என்றபடி.

இனி, (உபஸர்க்கத்தின்‌) உரிச்‌சொல்லின்‌ அர்த்தத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -201 – பரி என்கிற உப ஸர்க்கத்தாலே – பாதகாதிகளை விடுமா போலே ருசி வாஸனைகளோடும்‌ லஜ்ஜையோடுங் கூட மறுவலிடாதபடி. விட வேணுமென்கிறது .
(பரி ஸாகல்யே என்று பரி என்ற உரிச் சொல்லுக்கு (ஸகலம்‌) எல்லாம்‌” என்ற பொருள்‌ கொள்ளலாமாயினும்‌, அது ஸர்வ சப்தத்தாலே சொல்லியதால்‌ ஸகலம்‌ என்ற அர்த்தம்‌ இங்குத்‌ தேவை யில்லாமையால்‌, மிகுதி என்ற பொருள்‌ தரும்‌ “பரி’ என்ற உரிச்‌ சொல்லாலே “ப்ரஹ்ம ஹத்யா ஸுராபாநம்‌ ஸ்தேயம்‌ குர்வங்க நாகம :” –
அதாவது, (ப்ரஹ்ம ஹத்தி,) பிராம்ணனைக்‌ கொல்லுதல்‌, மது வருந்துதல்‌, பொன் திருடுதல்‌, குரு பத்நியைத்‌ தழுவுதல்‌- என்கிறபடியே இவைகள்‌ மஹா பாதகங்களாகையால்‌ -இவைகளை விடும் போது, மீண்டும்‌ இதில்‌ , தொடர்பு வராதபடி “நாம்‌ இதைச்‌ செய்வதே’ என்ற லஜ்ஜா பயங்களோடே விடுமா போலே, ” அத பாதக பீதஸ்த்வம்‌” (இனி உபாயாந்தரங்களில்‌ மிக்க – பாதகம்‌* என்கிற அச்சமுடைய நீ இதை அறவிட்டு நாராயணனையே உபாயமாகப்‌ பற்று.) என்று தர்ம தேவதை பாதகமாகச்‌
சொன்ன உபாயாந்தரங்களை விடும் போது புத்தி பூர்வகமாக அவற்றில்‌ மூளுகைக்கு உறுப்பான ருசியும்‌, வாசனையும்‌ ஆகிறவற்றோடே கூட பகவானே உபாயம்‌ என்ற ஒன்றையே ஸாதநமாகக்‌ கொள்ளுதற்கு உரிய தன்‌ ஸ்வரூபத்துக்கு (தன்‌ இயல்புக்கு) மிகவும்‌ ‘தகாததைச்‌ செய்வதே என்கிற லஜ்ஜையோடு கூடியவனாய்‌, மீண்டும்‌ அதில்‌ தொடர்பு உண்டாகதபடி விட வேண்டுமென்று சொல்லுகிற தென்றபடி.

இதில்‌ ‘ல்யப்‌’ (த்யஜ்ய) என்ற பத அர்த்தத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -202- லயப்பாலே “ஸ்நாத்வா புஞ்ஜீத” என்னுமா போலே, உபாயாந்தரங்களை விட்டே பற்ற வேணும்‌ என்கிறது.
த்யஜ்ய’ என்கிற லயப்பாலே -‘த்யஜ்ய’ என்பதிலுள்ள யகர விகுதியை வடமொழி
இலக்கணப்படி. “ல்யப்‌’ என்று சொல்லுவர்‌. “புக்த்வா சாந்த்ராயணம்‌ சரேத்‌” (வஸ்திரத்திலும்‌, கல்லிலும்‌, தாமிர பத்திரத்திலும்‌, ஆலிலையிலும்‌, அரச இலையிலும்‌) புசித்திருந்தால்‌, சாந்த்ராயண விரதத்தை (அதற்கு ப்ராயசித்தமாக), அநுஷ்டிக்க வேண்டும்‌ என்னுமா போலன்றிக்கே, ‘ஸ்நாத்வா புஞ்ஜீத’ (ஸ்நாநம்‌ செய்து விட்டே புஜிக்க வேண்டும்‌) என்கிற விதி புஜிக்கமளவில்‌ நியமத்தைச்‌ சொல்லுமா போலே, ஸித்தோபாயத்தைப்‌ பற்றுமளவில்‌
விட வேண்டியதான உபாயாந்தரங்களான கர்ம ஜ்ஞாந பக்த்யாதிகளை விட்டே பற்ற வேணும்‌ என்கிற நியமத்தைச்‌ சொல்லுகிறதென்கை.

இப்படி விட்டே பற்ற வேணுமென்கிற இதன்‌ கருத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -203- “சசால சாபஞ்ச முமோச வீர” என்கிறபடியே இவை அநுபாயங்களான மாத்ரமன்றிக்கே கால் கட்டு என்கிறது .
“யோ வஜ்ரபாதாசநிஸந்நிபாதாந்‌ த சுக்ஷுபே நாபி சசால ராஜா, ஸ ராம பாணாபிஹதோ ப்ருசார்த்த : சசால சாபஞ்ச முமோச வீர:”
ய : ராஜா
– எந்த ராஜாவான ராவணன்‌,
வஜ்ரபாத – வஜ்ராயுதத்தாலும்‌ அடி பட்டாலும்‌,
அசநிஸந்நிபாதாத்‌ – இடியே மேல்‌ விழுந்தாலும்‌,
நகுக்ஷுபே – மன க்லேசமடைய வில்லையோ,
நஅபிசசால – சரீர நடுக்கத்தையும்‌ அடைய வில்லையோ,
ஸு: – அவனே,
ராம பாண அபிஹத : ஸந்‌ – ஸ்ரீராம பாணத்தினால்‌ அடி பட்டவனாய்க்‌ கொண்டு,-ப்ருச ஆர்த்த: – மிகவும்‌ கலங்கி,
சசால – நடு நடுங்கினான்‌,
வீர:– சூரனாயிருந்தாலும்‌
(தன் கையில்‌ ஆயுதமிருந்தால்‌ ஸ்ரீராமன்‌ போக வொட்டானென்று நினைத்து உயிரினிடத்துள்ள ஆசையினாலே,)
சாபம்‌ – வில்லை,
முமோச – விடவும்‌ செய்தான்‌ என்கிற இந்த
ஸ்லோகத்தில்‌ ராவணன்‌ ஸ்ரீராம பாணங்களாலே மிகவும்‌ கலங்கி நிலை குலைந்து போகப்‌ பார்த்த அளவிலும்‌ கையில்‌ வில்லிருக்குமளவும்‌ பெருமாள்‌ போக வொட்டாமையாலே
பின்பு போட்ட வில்‌ கையிலிருந்த போது, எதிரியை வெல்லுதற்கு உரித்தாகாத மாத்ர மன்றிக்கே “இன்று போய்‌ நாளை வா” என்று பின்பு செய்த அநுமதி, பெருமாள்‌
அப்போது செய்யக்‌ காணாமையாலே போகவும்‌ ஒண்ணாதபடி. கால்‌ கட்டானமையைச்‌ சொல்லுகிறபடியே உபாயாந்தரங்களான இவற்றிலே அல்பம்‌ தொடர்பிருக்கிலும்‌ இவை பலத்துக்கு ஸாதநமாகாத மாத்திரமன்றிக்கே பலத்துக்குத்‌ தடையாய்த்‌ தலைக் கட்டுமென்றபடி.

இன்னமும்‌ இவற்றில்‌ அந்வயம்‌ (தொடர்பு) இருப்பதற்குக்‌ காரணமா மென்னுமத்தை உதாரண முகத்தாலே காட்டுகிறார்‌.
ஸூர்ணை -204 – சக்ரவர்த்தியைப்‌ போலே இழக்‌கைக்கு உறுப்பு.
முன்பே வரங்கொடுத்து வைத்து இப் போததை மறுக்க வொண்ணாதென்று ஆபாஸமான ஸத்ய தர்மத்தைப்‌ பற்றி நின்று “ராமோ விக்ரஹவாந் தர்ம: ” (தர்மமே திருமேனியாக வடிவெடுத்த ராமன்‌) என்கிற பெருமாளோடே கூடி வாழு இருந்த மேலாம்‌ பயனை இழந்த தசரத சக்ரவர்த்தியைப்‌ போலே தாழ்ந்ததான சேதநனுடைய முயற்சியாலே உண்டாவதான உபாயாந்தரங்களில்‌ அந்வயித்து நிற்கிறதாகிறது, “க்ருஷ்ணம்‌ தர்மம்‌ ஸநாதநம்‌” – க்ருஷ்ணனையே ஸநாதமான தர்மம்‌ என்று சொல்லுகிறார்கள்‌- என்கிற பகவத் விஷயத்தோடே கூடி வாழுகை யாகிற பெரும் பயனை இழக்கைக்கு உறுப்பாய்‌ விடுமென்கை .

இனி, இங்குச்‌ சொன்ன ஸர்வ தர்மங்‌களையும்‌ விடுகையாகிற இதன்‌ கருத்தறியாதார்‌ சொல்லும்‌ குறைபாட்டைத்‌ தள்ளுகைக்காக அந்தப்‌ பக்ஷத்தை எடுக்கிறார்‌.
ஸூர்ணை -205- ஸர்வ தர்மங்களையும்‌ விட்டு என்று சொல்லுகையாலே, சிலர்‌ “அதர்மங்கள்‌ புகுரும்‌’ என்கிறார்கள்‌
விடத் தக்க தர்மந்தான்‌, “இதம்‌ குரு இதம்‌ மாகாரீஷீ:” என்று செய்யச்‌ சொல்லுவதும்‌ விடச்‌ சொல்லுவது மாயிருக்கையாலே ஸர்வ தர்மங்களையும்‌ விட்டு’ என்று சொல்லுகையாலே தக்கதை செய்யச்‌ சொல்வதோடு, தகாததையும்‌ ஒரு சேரத் தள்ளுமளவில்‌, மூடின கதவைத்‌
திறந்தால்‌ நாய்‌ முதலானவை புகுமா போலே அதர்மங்களான தகாத செயல்களும்‌ புகும்‌’ என்று, சிலர்‌ சொன்னார்கள்‌ என்கை.

அந்தப்‌ பக்ஷத்தைத்‌ தள்ளுகிறார்‌.
ஸூர்ணை -206- அது கூடாது ; ‘அதர்மங்‌களைச்‌ செய்‌’ என்று சொல்லாமையாலே .
ஸர்வ தர்மங்களையும்‌ விடச்‌ சொன்ன இத்தால்‌ அதர்மங்கள்‌ புகும்‌ என்கிற இதுஉண்டாகாது ; ஏனெனில்‌? இங்கு, தர்மங்களை விடச்‌ சொன்ன மாத்திரம்‌ தவிர அதர்மங்களைச்‌ செய்யென்று சொல்லாமையாலே என்கை.

‘அதர்மத்தை தவிர்தலையும்‌ தர்ம சப்தம்‌ காட்டுமாகையாலே, அதை விடச்‌ சொன்னால்‌ அதர்மத்தைச்‌ செய்யென்பது குறிப்புப்‌ பொருளாகாதோ? என்கிற எதிர்வாதியின்‌ கருத்தை அநுவதிக்கிறார்‌. ஸூர்ணை -207.- ‘தன்னடையே சொல்லிற்றாகாதோ?’ என்னில்‌ ,
இதற்கு விடை அளிக்கிறார்‌.
ஸூர்ணை -208 – ஆகாது, தர்ம சப்தம்‌ அதர்மநி வ்ருத்தியைக்‌ காட்டாமையாலே
.
தர்மங்களை விடச்‌ சொன்ன இத்தால்‌ ‘அதர்மங்களைச்‌ செய்‌’ யென்னுமிடம்‌ தன்னடையே சொல்லிற்றாகாது; தர்ம சப்தம்‌ அதர்மத்தை செய்யாதே என்ற அங்கங்களோடு கூடிய முதன்மையா யிருந்துள்ள செய்ய வேண்டிய தர்மத்தைக்‌ காட்டுமதொழிய, பொதுவில்‌ அதர்மத்தை தவிர்தலை மாத்திரத்தைக்‌ காட்டாமையாலே என்கை.

தர்மம்‌ என்ற சொல்‌ அதர்மத்தை விடுகை என்பதில்‌ முக்கியப்‌ பொருள்‌ இல்லையே யாகிலும்‌ ஸர்வ சப்தமான இது தன்னையுங்‌ காட்டாதோ’ என்ன, அருளிச்‌
செய்கிறார்‌.
ஸூர்ணை -209 – காட்டினாலும்‌, அத்தை ஒழிந்தவற்றைச்‌ சொல்லிற்றாமித்தனை.
அப்படிக்‌ காட்டிற்றாகிலும்‌ அது இவ் விடத்தில்‌ சொன்னவன்‌ கருத்து அது அல்லாமையாலே, அதைத்‌ தவிர்த்த விதிரபமான தர்மங்களானவற்றைச்‌ சொல்லிற்றாமித்தனை என்கை.

இப்படி ஒதுக்குகிறது எது கொண்டு? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -210- தன்னையும்‌, ஈஸ்வரனையும்‌, பலத்‌தையும்‌ பார்த்தால்‌ அவை புகுர வழி யில்லை.
அதர்மத்தைச்‌ செய்தல்‌ சேஷியான எம்பெருமானுக்கு மிகவும்‌ வெறுப்புக்குரிய தாகையாலே, அவன்‌ விருப்பத்துக்குரியனாமது ஒழிய,அவன்‌ இஷ்டத்துக்கு சேராத படியான ஸ்வரூபத்தை யுடைய சேஷ பூதனாகிற தன்னைப்‌ பார்த்தாலும்‌, அவனை
ரக்ஷகனாகக்‌ கொள்ளும் போது வேறு துணை கூட்டுப்‌ பொறாதவனாகையாலே இத் தலையில்‌ தன் முயற்சியை விட்டிருக்கும்‌ நிலையை ஒழிய, செயல் படுவதை ஒன்றையும்‌ பொறாத உபாய பூதனான ஈஸ்வரனைப் பார்த்தாலும்‌, இவனுடைய முயற்சிக்குப் பலம்‌ அவன்‌ முக மலர்த்தியாகையாலே இத்தகைய பலனைப் பார்த்தாலும்‌, இம் மூன்றுக்கும்‌
முரண்பட்டவைகளான அவை புகுவதற்கு வழியில்லை என்கை.
ஆகையால்‌, தர்ம சப்தம்‌ அதர்மத்தை விடுகையைக்‌ காட்டிற்றாகிலும்‌, அத்தை தவிர்ந்த வேறு ஸாதநங்களை சொல்லிற்றாகக்‌ கொள்ள வேணும்‌ என்று கருத்து. ஆக, இரண்டாம்‌ பத அர்த்தத்தை அருளிச்‌ செய்தாராயிற்று.

பிறகு, மூன்றாம்‌ பதத்தை எடுக்கிறார்‌.
ஸூர்ணை -211- மாம்‌ – ஸர்வ ரஷகனாய்‌, உனக்குக் கையாளாய்‌, உன்னிசைவு பார்த்து, உன்‌ தோஷத்தை போக்யமாகக்‌ கொண்டு, உனக்குப்‌ புகலாய்‌, நீர் சுடுமா போலே சேர்ப்பாரே பிரிக்கும்‌ போதும்‌ விட மாட்டாதே ரஷிக்கிற என்னை,
‘மாம்‌’ என்ற பதத்துக்கு அர்த்தம்‌ அருளிச்‌ செய்கிறார்‌. ஸர்வ ரக்ஷகனா யென்று தொடங்கி அதாவது, நம்மைக்‌ காக்குமோ? காவானோ? என்று ஸந்தேஹிக்க வேண்டாதபடி, அனைவருடைய காப்பிலும்‌ காப்பது என்ற விரதத்தை யுடையவனாய்‌, தன்‌ பெருமையையும்‌ நம்‌ சிறுமையையும்‌ பார்த்து நம்மோடு கூட்டற்றிருக்குமோ? என்று என்ன வேண்டாதபடி “ஸேநயோ ருபயோர்‌ மத்யே ரதம்‌ ஸ்தாபய” (இரு சைந்யங்களின்‌ நடுவில்‌ ரதத்தை நிறுத்து)
என்று ஏவிக்‌ கொள்ளலாம்படி உனக்குக்‌ கையாளாய்‌, உன்னைக்‌ காப்பதில்‌ உண்டான அசையாலே“ரஷ்யாபேக்ஷாம்‌ ப்ரதீஷதே’ ரக்ஷிக்க வேண்டும்‌ என்ற ப்ரார்த்தனையை இறைவன்‌ எதிர்பார்க்கிறான்‌) என்கிறபடியே காக்கப்படுகிற உன்‌ இசைவு பார்த்து, நம்‌ குற்றங்கண்டு கை விடுமோ? என்று அஞ்ச வேண்டாதபடி. தகாத இடத்தில்‌ ஸ்நேஹ காருண்யங்கள்‌ காட்டியும்‌, தர்மம்‌ இன்னது, அதர்மம்‌ இன்னது என்ற விஷயத்தில்‌ கலங்குகிற உன்‌ குற்றத்தைக்‌ குணமாகக்‌ கொண்டு, தஞ்சமற்றவர்களுக்குத்‌ தான்‌ தஞ்சமாகையாலே நீயும்‌ பிறரும்‌ உனக்குத்‌ தஞ்சமில்லாத நிலையில்‌ ஒதுங்கலாம்படியான புகலாய்‌, குளிர்ச்சியே இயல்பான நீர்‌, சூடேற்றிக்‌ கொள்ளுமா போலே அபராதங்‌களைப் பொறுப்பித்துச்‌ சேர்ப்பிக்கும்‌ புருஷகார பூதரே “தாமரையாளாகிலும்‌ சிதகுரைக்குமேல்‌” என்கிறபடியே -குற்றங்காட்டி அகற்றும்‌ போதும்‌ விட மாட்டாதவனாய்‌ “என்னடியாரது செய்யார்‌” என்று எதிரிட்டு ஒருநிலை நின்று ரஷிக்கும்‌ என்னை என்றபடி…

‘என்னை’ என்று விபாவதாரக்‌ கண்ணனாகிய தன்னைக்‌ காட்டுகையாலே வேறுபடுத்த வேண்டியவற்றைக்‌ காட்டுகிறார்‌.
ஸூர்ணை -212-இத்தால்‌, பர வ்யூஹங்களையும்‌ தேவதாந்தர்யாமித்வத்தையும்‌ தவிர்க்கிறது.
என்னை” என்று அவதரித்துக்‌ கண்‌ காண நிற்கிற தன்னைத்‌ தஞ்சமென்று பற்றத்‌
தக்கவனாகச்‌ சொன்ன இத்தாலே, வேறு தேசத்திலிருப்‌பதாலே காணவும்‌ கிட்டவும்‌ இயலாதபடி இருக்கிற பர வாஸுதேவனையும்‌ பாற்கடல் வாஸுதேவனையும்‌, சிறந்ததான திருமேனி யன்றிக்கே உபாஸகரான வேற்றுபாய நிஷ்டர்க்கு இலக்காயிருக்கிற அக்நி இந்திரன்‌ முதலான தேவதாந்தர்யா மித்வத்தையும்‌ நீக்குகிறது – என்கை.

தர்மங்களை எல்லாம்‌ விட்டுத்‌ தன்னைப்‌ பற்றச்‌ சொல்லுகையாலே ஏற்பட்டதொரு
அர்த்தத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -213- தா்ம ஸம்ஸ்தாபநம்‌ பண்ணப்‌ பிறந்தவன்‌ தானே ‘ ஸர்வ தர்மங்களையும்‌ விட்டு என்னைப் பற்று என்கையாலே ஸாக்ஷாத்‌ தர்மம்‌ தானே யென்கிறது.
‘தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்‌பவாமி யுகே யுகே
” என்கிறபடியே தன்னை அடைதற்குரித்‌தான தர்மத்தை நிலை நிறுத்‌துவதற்குப்‌ பிறந்தவன் தானே
“ஸர்வ தர்மாந்‌ பரித்யஜ்ய” என்று மோஷத்துக்கு ஸாதநமாக சாஸ்திரங்களில்‌ சொல்லப் பெற்ற ஸர்வ தர்மங்களையும்‌ விட்டு என்னைப் பற்று என்று சொல்லுகையாலே, அவைதான்‌ நேரே பயனைத் தரும்‌ தருமங்களல்ல, நிலைநாட்டுதற்‌குரிய ஸாக்ஷாத்‌ தர்மம்‌ “க்ருஷ்ணம்‌ தர்மம்‌ ஸநாதநம்‌”(ஸநாதந தர்மம்‌ கிருஷ்ணனே) என்கிறபடியே பழைய தர்மமான தானே என்னுமிடம்‌ சொல்லுகிறது.

இத்தால்‌ என்‌? சொல்கிறது என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -214 – இத்தால்‌, விட்ட ஸாதநங்களில்‌ ஏற்றம்‌ சொல்லுகிறது.
இப்படிச்‌ சொன்ன இத்தால்‌, கீழ் விட்ட ஸாதநங்களிற் காட்டில்‌ இந்த ஸாதநத்துக்குண்‌டான ஏற்றம்‌ சொல்லுகிறது என்கை.
அதுதான்‌ எது ? என்ன, அருளிச்‌செய்கிறார்‌.
ஸூர்ணை -215- அதாவது – ஸித்தமாய்‌, பரமசேதநமாய்‌, ஸர்வ சக்தியாய்‌, நிரபாயமாய்‌, ப்ராப்தமாய்‌, ஸஹாயாந்தர நிரபேக்ஷமாயிருக்கை.
கீழ்விட்ட ஸாதநங்களிற்‌ காட்டில்‌ இதற்கு ஏற்றமாவது – சேதநனுடைய செயலாலே
(ஸ்வரூப ஸித்தியாம்படி,) தானுளதாம்படி. இருக்கை யன்றிக்கே பழமையான தர்ம மாகையாலே ஸித்தமாய்‌, “யஸ் ஸர்வஜ்ஞஸ் ஸர்வவித்‌”(எவனொருவன்‌ எல்லாப்‌ பொருளையும்‌ அவற்‌றின்‌ ஸ்வபாவங்களையும்‌ அறிகிறானோ) என்று சொல்லுகிறபடி ஸர்வஜ்ஞ விஷயமாகையாலே பரபீசதநமாய்‌,”பரா அஸ்ய சக்திர்‌ விவிதைவஸ்ரூயதே” (அந்த பரமாத்மாவுக்கு பலபடிப்பட்டதும்‌ மேலானதுமான சக்தியும்‌ உளதென்று கேட்கப்பபடுகிறது) என்கிறபடியே ஸர்வ “சக்தியாய்‌, சேதநனால்‌ செய்யப்படுமதாய்‌ நடுவே அபாயங்கள்‌ புகுவதற்கு . அவகாச முண்டாம்படி யிருக்கை யன்றிக்கே, பழையதாக நிலை நின்ற பொருளாயிருக்கையாலே அபாயமற்றதாய்‌ பரதந்திரனான இந்த சேதநனுடைய இயல்பான ஸ்வரூபத்துக்குத்‌ தகுதி யற்றதாய்‌ இராதே தகுதி யுடைத்தானதாய்‌, கீழ்ச்‌ சொன்ன பரம சேதநத்வம்‌ முதலானவைகளாலே வேறு துணையை விரும்பாமை யாகிற
கூட்டு வேண்டாதபடி. இருக்கை யென்றபடி

இந்த வேறு துணை வேண்டாமையைக்‌ காரணத்தோடு நிலைநிறுத்துகிறார்‌.
ஸூர்ணை -216- மற்றை உபாயங்கள்‌ ஸாத்யங்களாகையாலே, ஸ்வரூப ஸித்தியில்‌ சேதநனை அபேஷித்திருக்கும்‌; அசேதநங்களுமாய, அசக்தங்களுமா யிருக்கையாலே கார்ய ஸித்தியில்‌ ஈஸ்வரனை அபேக்ஷித்திருக்கும்‌ . இந்த உபாயம்‌ அவற்றுக்கு எதிர்‌த்தட்டா யிருக்கையாலே, இதர நிரபேக்ஷமாயிருக்கும்‌ .
இதைத் தவிர்த்த உபாயங்கள்‌ சேதநனுடைய செயல் மூலம்‌ உருவாக்கப்படுமவை யாகையாலே தானுளதாம்‌ படியான ஸ்வரூப ஸித்தியில்‌ முயன்று செய்பவனான சேதநனை விரும்பி இருக்கும்‌; இவனுக்குச்‌ செய்ய வேண்டுமவை அறிகைக்கும்‌ அவை தன்னைச்‌ செய்து தலைக்கட்டுகைக்கும்‌ தகுதி யில்லாத (அசேதநங்களுமாய்‌)
அறிவில்லாதவைகளாய்‌ (அசக்தங்களுமாய்‌) ஆற்றலில்லாதவையாய்‌ இருக்கையாலே, சேதநனுடைய இஷ்டம்‌ தருகைக்கும்‌, அநிஷ்டம்‌ தவிருகைக்குமான கார்யத்தினுடைய ஸித்தியில்‌ “பலமத உபபத்தே:” (பலத்தை யளிப்பவன்‌ ஈஸ்வரனே) என்ற ப்ரஹ்ம ஸூத்திரப்படி பலத்தை அளிப்பதற்கு உபயோகியான ஸர்வ சக்தி முதலான தகுதிகளை யுடையனான ஈஸ்வரனை எதிர்பார்த்திருக்கும்‌; இந்த உபாயம்‌ ஏற்கனவே பூர்ணமாயிருப்பதாய்‌, அனைத்து சக்திகளாலும்‌ நிறைவுற்றதாய்‌, உபாயாந்தரங்களுக்கு எதிர்த் தட்டாயிருக்கையாலே வேறொன்றைத்‌ துணை கோலாதிருக்கும்‌ என்கை.

இனி, இப்பதத்திலே தஞ்சமென்று பற்றுகைக்கு அநுகூலிப்பதான குணச்‌ சிறப்புக்களெல்லாம்‌ ப்ரகாசிக்கிறபடியை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -217 – இதிலே, வாத்ஸல்ய ஸ்வாமித்வ ஸெளசீல்ய ஸெளலப்யங்களாகிற குண விசேஷங்கள்‌ நேராக பரகாசிக்கிறது .
இதிலே என்றது, “மாம்‌” என்ற பதத்திலே என்றபடி, அதாவது – அதர்மம்‌ என்ற நினைவாலே தர்மத்தினின்றும்‌ விலகியவனான அர்ஜுுநனுக்குக்‌ குற்றம்‌ பாராதே தேவையான அர்த்தங்களனைத்தும்‌ அருளிச்‌ செய்கையாலே, வாத்ஸல்யம்‌ என்ற குணம்‌ ப்ரகாசிக்கிறது; தன்னுடைய பரத்வத்தைப்‌ பலகாலும்‌ அருளிச்‌ செய்த அளவன்றிக்கே அர்ஜுநன்‌ ப்ரத்யக்ஷிக்கும்படி விஸ்வரூபத்‌தால்‌ தன்னை நேரே காணும்படிச்‌ செய்கையாலே, ஸ்வாமித்‌வம்‌ ப்ரகாசிக்கிறது; “ஹே க்ருஷ்ண ஹே யாதவ” என்று அழைத்ததாக அர்ஜுநன்‌ தானே சொல்லும்படி, இவனோடே கலந்து பரிமாறுகையாலே, ஸெளசீல்யம்‌ ப்ரகாசிக்கிறது; ஸுத்த ஸத்வமான அப்ராக்ருதமான திருமேனியைக்‌ கண்ணுக்கிலக்காம்படி செய்கையாலே, ஸெளலப்யம்‌ ப்ரகாசிக்கிறது என்கை.
குண விசேஷங்கள்‌” என்றது, தஞ்சம்‌ என்று பற்றுகைக்குத் தேவையான குணங்களென்று தோற்றுகைக்காக.-நேராக ப்ரகாசிக்கிறது என்றது – தெளிவாகப் ப்ரகாசிக்கிறது – என்றபடி.

இவை அனைத்திலும்‌ வைத்துக்‌கொண்டு மிகவும்‌ விரும்புகைக்குரித்தானது ஸெளலப்யமாகையாலே, அவதார மூலமான ஸெளலப்யத் தளவன்றிக்கே
தன்னைத்‌ தாழ விட்டுக்‌ கொண்டு ஸாரதியாய் நிற்கிற நிலையிலே தோற்றுகிற ஸெளலப்யத்தின்‌ மிகுதியை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -218- கையும்‌ உழவுகோலும்‌, பிடித்த சிறுவாய்க் கயிறும்‌, ஸேநா தூளிதுரஸரிதமான திருக்‌குழலும்‌, தேருக்குக் கீழே நாற்றின திருவடிகளுமாய்‌ நிற்‌கிற ஸாரத்ய வேஷத்தை மாம்‌ என்று காட்டுகிறான்‌.
குதிரைகளைத்‌ தூண்டுகைக்குத்‌ திருக் கையிலே தரித்த உழவுகோலும்‌, குதிரைகளை இடப் பக்கம்‌ வலப் பக்கம்‌ திருப்புகைக்காகவும்‌ நிறுத்த வேண்டுமிடத்திலே தாங்கி நிறுத்துகைக்காவும்‌ பிடித்த சிறுவாய்க்‌ கயிறும்‌, திரு முடியில்‌ எதுவும்‌ மறைக்காமல்‌ – அணியாமல்‌ நிற்கையாலே ஸேநாதூளியாலே புழுதி அளைந்த திருக்குழலும்‌ “தேர்‌ கடவிய பெருமான்‌ கனைகழல்‌” என்கிறபடியே சாத்தின சிறுசதங்கையும்‌ தானுமாகத்‌ தேருக்குக் கீழே தொங்க விட்ட திருவடிகளுமாய்‌ நிற்கிற ஸாரத்ய வேஷத்தை ‘மாம்‌’ (என்னை) என்று காட்டுகிறான்‌ என்கிறார்‌.

பிறகு, நான்காம்‌ பதத்தை எடுக்கிறார்‌.
ஸூர்ணை -219- ஏகம்‌.
ஏகம்‌ – என்னையே என்று இப்பதத்தின்‌அர்த்தத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -220- இந்த ஏக சப்தம்‌ ஸ்தாந ப்ரமாணத்தாலே அவதாரணார்த்ததைக்‌ காட்டுகிறது-
இந்த உபாய விசேஷத்தைச்‌ சொல்லும்‌ இடங்களிலே பல விடங்களிலும்‌ தேற்றேவகாரமாக உபயோகிக்கப் படுகையாலே, உகாரம்‌ போலே இந்த’ஏக’ சப்தமும்‌ ஸ்தாந ப்ரமாணத்தாலே தேற்றேவகாரமாகிற அர்த்தத்தைக்‌ காட்டுகிறது. என்கை. அவதாரணம்‌ – தேற்றேவகாரம்‌,

இந்த உபாயத்தை நிர்ணயம்‌ பண்‌ணின பிறகு அவதாரண ப்ரயோகம்‌ – ஏவகார ப்ரயோகம்‌ பண்ணிய வசனங்கள்‌ பலவற்றையும்‌ இதுக்கு உதாரணமாக அருளிச்‌ செய்கிறார்‌, என்கை.
ஸூர்ணை -221 – “மாமேவயே ப்ரபத்யந்தே” “தமேவசாத்யம்‌” “த்வமேவோபாய பூதோ மே பவ” “ஆறெனக்கு நின்‌ பாதமே சரணாகத்‌ தந்தொழிந்தாய்‌” என்றுஞ்‌ சொல்லுகிறபடியே.
அதாவது, “மாமேவ யே ப்ரபத்யந்தே”(என்னையே யாவர்‌ சிலர்‌ ப்ரபத்தி செய்கிறார்களோ.) என்றும்‌ “தமேவ சாத்யம்‌ புருஷம்‌ ப்ரபத்யே” முழு முதல்வனான அந்தப்‌ புருஷனையே ப்ரபத்தி செய்கிறேன்‌) என்றும்‌, “த்வமேவோபாய பூதோ மே பவ” (நீயே எனக்கு
உபாயமாக வேணும்‌) என்றும்‌, “ஆறெனக்கு நின் பாதமே சரணாகத்‌ தந்தொழிந்தாய்‌” (எனக்கு உபாயந் தருமிடத்தில்‌ உன்‌ திருவடிகளையே உபாயமாகத் தந்தாய்‌)என்றும்‌ சொல்லுகிற இவ் விடங்களில்‌ “மாமேவ” “தமேவ” “த்வமேவ””நின்‌ பாதமே” என்று பற்றும்‌ பொருளை நிர்ணயித்த பிறகு தேற்றேவகாரமாகச் சொல்லப்பட்டதல்லவா என்கிறார்‌

இப்படி ஏவகாரத்தை யுடைய இந்த’ஏக’ சப்தத்தால்‌ தவிர்க்கப்பட வேண்டியது எது? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -222- இத்தால்‌, வ்ரஜ என்கிற ஸ்வீகாரத்தில்‌ உபாய பாவத்தைத்‌ தவிர்க்கிறது. உபாயாந்தரங்கள்‌ தவிர்க்கப்‌படுமளவில்‌ ஏற்கனவே ‘ஸர்வ தர்மான்‌ பரித்யஜ்ய’ என்ற இடத்திலே உபாயாந்தரங்கள்‌ தவிர்க்கத்‌ தக்கவை யென்று ஏற்பட்டு விட்டபடியால்‌ அதை மறுபடியும்‌ கூறுதல்‌, “கூறியவை கூறல்‌’ என்ற குற்றம்‌ வருகையாலும்‌, இதர
தெய்வங்களினுடைய ஸம்பந்தத்தைத தவிர்க்கப்படுமளவில்‌, அது மாம்‌” என்ற பதத்தில்‌ எம்‌பெருமானுடைய தனித் தன்மையை “என்னை என்று காட்டி விட்டபடியால்‌, இந்த ‘ஏகம்‌’ என்ற தேற்றேவகாரத்தால்‌ வ்ரஜ என்று மேல்‌ சொல்‌லுகிற ஸ்வகாரத்தில்‌ தான்‌ பற்றக் கூடிய பற்றையே உபாயம்‌’ என்று சொல்லுவதைக்‌ கழிக்கிறது என்றபடி.

பற்றின பிறகே உபாயம்‌ கார்யம்‌ செய்கையாலே பலத்துக்கு இது அவஸ்யம்‌ வேண்டி யிருக்க, இதில்‌ உபாயம்‌ என்ற நினைவைக்‌ கழிக்கிறபடி தான்‌ எங்ஙனே”? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -223–ஸ்வீகாரந்தானும்‌ அவனாலே வந்‌தது.
உபாயமாகப்‌ பற்றின பிறகு இவனுக்கு வேண்டாததைத்‌ தவிர்க்கையும்‌ வேண்டியதைக்‌ கொடுக்கையும்‌ செய்கையாகிற இது எம்பெருமானாலே ஆனாற் போலே, இதற்கு முன்‌ நிகழ்வதான பற்றுமதுதானும்‌ எம்பெருமானாலே உண்டானது என்கை. இத்தால்‌,
பற்றக்கூடிய உபாயமான பகவானாலே கார்யஞ்‌ செய்யப்படுவது தவிர நேரே “வ்ரஜ என்ற ஸ்வீகாரத்திற்கு உபாயத்வம்‌ இல்லை என்கை.

பற்றுகை அவனாலே வந்தது என்‌? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -224- ஸ்ருஷ்ட்யவதாராதி முகத்தாலே பண்ணின க்ருஷி பலம்‌
(கரண களேபர விதுரனாய்‌) கை கால்‌ முதலிய உறுப்புகளோடு சேர்ந்த உடம்பு
இல்லாதவனாய்‌, இங்கு நுகரும்‌ இன்பமோ, மோக்ஷ இன்பமோ இல்லாதவனாய்‌, அறிவற்ற ஐடப்பொருளுக்கும்‌ தனக்கும்‌ வேற்றுமை யின்றிக்‌ கிடக்கிற நிலையிலே, எம்பெருமான்‌ இவனுக்கு உடல்‌ இந்த்ரியங்களோடு கூடியவனாய்‌ அறிவு ப்ரகாசம்‌ அடைவதற்கு உரியனாம்படி படைத்து எதிர்‌ சூழல்‌ புக்கு’ என்கிறபடியே இவனை அங்கீகரிக்கைக்காக அநேக அவதாரங்களைச்‌ செய்து, அவதரித்த இடங்களிலே தன்னைஅடைகைக்கு ருசியையும்‌ விஸ்வாஸமும்‌ விளைவிக்குமதான தன்‌ குணங்கள்‌ செயல்களைக்‌ காட்டி, இவ்வழியாலே அந்த எம்பெருமான்‌ செய்த செயலாலே பலித்தது இது என்கை,

இவ் வர்த்தத்‌ துக்கு மேற்கோள்‌ காட்டுகிறார்‌.
ஸூர்ணை -225-“அதுவும்‌ அவனது இன்னருளே”.
“உணர்வில்‌ உம்பரொருவனை அவன தருளாலுறற்‌ பொருட்டுஎன்னுணர்வினுள்ளே யிருத்தினேன்‌
” என்று ஞானம்‌ மிக்கிருக்கக் கடவரான நித்ய ஸுரிகளுடைய நிலை பேறு முதலானவைகளுக்குக்‌ கடவனான ஓப்பிலான அவனருளாலே அவனை அடைகைக்காக, என்னுடைய விருப்பத்தோடு கூடிய ஜ்ஞாநத்துக்குள்ளே இருத்தினேன்‌ என்று தாம்‌ அவனைத்‌ தஞ்சமென்று பற்றினதைச்‌ சொன்ன பிறகு, “அதுவும்‌ அவனது இன்னருளே” என்று அந்தப்‌ பற்றுகை தானும்‌ அவனுடைய காரணமில்லாமல்‌ உண்டான கருணையாலே உண்டானதென்று ஆழ்வார்‌ அருளிச்‌ செய்கையாலே, அந்தப்‌ பற்றுதல்‌ தானும்‌ எம்பெருமானுடைய முயற்சியின்‌ பலமென்றே கொள்ளவேணும்‌ என்கை.

இப்படியாகையால்‌, இந்த ஸ்வீகாரத்தில்‌ (பற்றுகையில்‌) உபாயத்வ புத்தியை நீக்கி நினைக்கக்‌ கடவன்‌ என்கிறார்‌.
ஸூர்ணை -226- இத்தை ஒழியவும்‌ தானே கார்யஞ் செய்யும்‌ என்று நினைக்கக் கடவன்‌
இந்தப்‌ பற்றுதலுக்கும்‌ தானே க்ருஷி(முயற்சி) பண்ணுவான்‌ ஒருவனாகையாலே, இதுக்காகவன்று அவன்‌ நமக்குக்‌ கார்யஞ்‌ செய்கிறது; இத்தை ஒழியவும்‌ இவ்வாத்மோஜ்ஜீவநம்‌ செய்பவன்‌ தானே நம்முடைய இஷ்டம்‌ கொடுக்கை, அநிஷ்டம்‌ (இஷ்டமில்லாததை) தவிர்‌க்கை யாகிய கார்யம்‌ செய்யும்‌ என்று நினைக்கக் கடவன்‌
என்கை.

இப்படி நினைக்க வேண்டுகிறது என்‌? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -227- அல்லாத போது உபாய நைரபேக்ஷ்யம்‌ ஜீவியாது.
இத்தை ஒழியவும்‌ கார்யஞ்செய்‌யும்‌’ என்று நினையாதே, “இதுவும்‌ வேணும்‌ அவன்‌ கார்யஞ்‌செய்கைக்கு என்று நினைக்குமளவில்‌ உபாய பூதனான பகவானுடைய வேற்றுத்‌ துணை வேண்டாமையாகிய தன்மை நிலை பெறாது என்கை.

ஆனால்‌, இந்தப்‌ பற்று தான்‌ ஏதாவதென்ன? அருளிச் செய்கிறார்‌-
ஸூர்ணை 228 . இதுஸர்வ முக்தி ப்ரஸங்க பரிஹாரார்த்தம்‌, புத்தியமாதாநார்த்தம்‌, சைதந்ய கார்யம்‌, ராக ப்ராப்தம்‌, ஸ்வரூயநிஷ்டம்‌, அப்ரதிஷேதத் யோதகம்‌.
இந்தப்‌ பற்றுதல்‌, இந்த சேதநனிடத்தில்‌ ஒன்றுமின்றிக்கே இருக்க, எம்பெருமான்‌ தானே இவனை உஜ்ஜீவிப்பிக்குமளவில்‌, “பின்னை எல்லாரும்‌ முக்தராக வேண்டாவோ”? என்கிற ஸர்வ முக்தி ப்ரஸங்கத்தைத்‌ தவிர்க்கைக்கு உறுப்பு;இதுதான்‌, ‘நெடுங்காலம்‌ நம்மை ரக்ஷியாதவன்‌, இன்று நம்மை ரக்ஷிக்கு மென்று இருக்கிறது நாம்‌ என் கொண்டு? என்று இவன்‌ தளும்பாமல்‌ புத்தி ஸமாதாநம்‌ பிறந்திருக்கைக்கு உறுப்பு; இவன் தான்‌ அசேதநமன்றிக்கே சேதநமாகையாலே அவனே உபாயம்‌’ என்கிற திட நம்பிக்கைக்‌ கொள்ளுதல்‌ இவன்‌ அறிவுடைமையின்‌ கார்யம்‌; சாஸ்திரம்‌ முதலானவற்றின்‌ விதி யின்றிக்கே எம்பெருமானையே சரணமாகப்‌ பற்றுவதிலுள்ள ருசியை அறிந்தவனான இவனுடைய இச்சையால்‌ வந்த இது, ஸ்வரூபத்திற்கு மாறுபட்ட தன்றிக்கே அவன்‌ காப்பிலேயே ஓதுங்குகையாகிய ஸ்வரூபத்திலே நிற்குமது; கீழ்‌ அநாதி காலமாக அவன்‌ தன்னைக்‌ காக்குமதை தன் முயற்சியால்‌ விலக்கிக்‌ கொண்டு வந்த இவன்‌, : அதைத்‌ தவிர்த்தமையைக்‌ காட்டும்‌ என்கை.

இனி, ‘மாம்‌’ என்கிற பதத்துக்கு முன்பும்‌, இங்கும்‌ ஈஸ்வரனுடைய செயல்களை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -229- கீழ்‌ தானும்‌ பிறருமான நிலையைக்‌ குலைத்தான்‌; இங்குத் தானும்‌ இவனுமான நிலையைக்‌ குலைக்கிறான்‌
அதாவது – ‘ஸர்வ தர்மாந்‌ பரித்யஜ்ய’ என்ற இடத்தில்‌ ஸகல உபாயங்களையும்‌ விடச்‌ சொல்லுகையாலே, பலம்‌ தருவானான தானும்‌ கர்ம ஜ்ஞாந பக்தியாகிற உபாயாந்தரங்களுமாய்க்‌ கூடி நிற்கிற நிலையைக்‌ குலைத்தான்‌. ‘ஏகம்‌’ என்கிற இடத்தில்‌ ஸ்வீகாரத்தில்‌ உபாய பாவத்தைக்‌ கழிக்கையாலே, உபாயமாகிற தானும்‌, தான்‌ பற்றிய பற்றில்‌ உபாய புத்தி பண்ணிய இவனுமான நிலையைக் குலைக்கிறான்‌ என்பது. அஃதாவது : “நாம்‌ எம்பெருமானை உபாயமாகப்‌ பற்றின தாலன்றோ அவன்‌ நம்மை ரக்ஷிக்கப்‌ .போகின்றான்‌’ என்று தான்‌ ஈஸ்வரனை உபாயமாகப்‌ பற்றிய பற்றில்‌ உபாயத்வ புத்தியைக்‌ கொள்ளுகிற இந்த சேதநன்‌ நிலையைக்‌ குலைக்கிறான்‌ என்கை. –உபாயாந்தரங்களைப் பிறர்‌ என்றது, “உன்னாலல்‌லால்‌ யாவராலும்‌?” என்றன்றோ ஆழ்வார்‌ அருளியது.-ஸ்ரீகீதையில்‌ சரம ஸ்லோகத்துக்கு முன்பு அருளிச்‌ செய்துள்ள கர்ம யோகம்‌ முதலிய உபாயங்களை எல்லாம்‌ விளக்கி அங்கு ரக்ஷகனாகச்‌ சொன்ன தன்னையே இங்கு
உபாயமாகச்‌ சொன்னதால்‌, கர்ம யோகம்‌ முதலானவை உபாயமாம்‌ போது தான்‌ ரக்ஷகனாக வேண்டுமென்ற நிர்பந்தம்‌ உள்ளது. இங்கு, தானே உபாயமாம்‌ போது வேறொரு உபாயம்‌ வேண்டியதில்லை என்பது பெறப்படுதல்‌ காண்க.

இனி, உபாய புத்தியாக இவன்‌ செய்யும்‌ (ஸ்வீகாரத்தை) பற்றுதலினுடைய குறைபாட்டை அருளிச் செய்கிறார்‌.
ஸூர்ணை – 230- அவனை இவன்‌ பற்றும்‌ பற்று அஹங்கார கர்ப்பம்‌, அவத்யகரம்‌ –
காரணமில்லாத இயல்பான பந்தத்தாலே ரக்ஷகனான அவனை, அவனால்‌ காக்கப்படுகிற இவன்‌, தன்‌ காப்புக்கு உறுப்பாகப்‌ பற்றுகிற பற்று, தான்‌ கர்த்தா என்ற அஹங்காரத்தோடு கூடியதாய்‌, பிதாவினிடத்திலே நான்‌ என்னை ரஷித்துக் கொள்கிறேன்‌’ என்று
கையெழுத்திடும்படி புத்திரன்‌ கையெழுத்து வாங்குமா போலே பழிப்புக் கிடமாயிருக்குமென்கை.

ஆனால்‌, ரக்ஷகமாவது தான்‌ எது? என்ன”, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -231-அவனுடைய ஸ்வீகாரமே ரஷகம்‌
இவ் வாத்மாவினுடைய ரக்ஷணத்துக்குக்‌ கடவனான எம்பெருமான்‌, ‘ இவனை நாம்‌ ரக்ஷிக்கக்‌ கடவோம்‌’ என்று அபிமாநித்துக்‌ கொள்ளுகை யாகிற ஸ்வீகாரமே – பற்றே இவனுக்கு ரக்ஷகமாகும்‌ – என்கை.

‘சேதநன்‌ முயற்சியில்‌ ஒன்றையும்‌ இவ் வுபாயம்‌ ஸஹியாது’ என்னுமத்தைத்‌ தெளிவிக்கைக்காக, உபாயாந்தரங்களுக்கும்‌ இவ் வுபாயத்துக்கும்‌ உண்டான வேற்றுமையை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -232- மற்றை உபாயங்களுக்கு நிவ்ருத்தி தோஷம் , இதுக்கு ப்ரவ்ருத்தி தோஷம்‌
ஏற்கனவே ஸித்தமாயிருக்குமதான இவ் வுபாயத்தை ஒழிந்த மற்ற உபாயங்களுக்கு, சேதநன்‌ தன்‌ செயல் மூலம்‌ உண்டாக்க வேண்டுமாகையாலே இவனுடைய தன் முயற்சி தவிர்கை குறை யுடைத்தாகும்‌; இந்த ப்ரபத்தி உபாயத்துக்குத்‌ துணைக்‌ கூட்டு பொறுக்காமையாலே இச் சேதநனுடைய முயற்சி குறைபாடுடைத்தாயிருக்குமென்கை

சேதனனுடைய முயற்சி ஒன்றும்‌ வேண்டா’ என்னுமிடத்துக்கு மேற்கோள் காட்டுகிறார்‌.
ஸூர்ணை -233- “சிற்ற வேண்டா” ,
ஸித்தோபாயத்தைப்‌ பற்றுகையைச்‌ சொல்லுகிற “மற்றொன்றில்லை” -9-1-7-என்கிற பாட்டிலே, ‘சிற்ற வேண்டா” என்று சிற்றுதல்‌ – சிதறுதலாய்‌ ‘பரக்க ஒரு செயலும்‌ செய்ய வேண்டா’ என்கையாலே, இவ் வுபாயத்தில்‌ இழியுமவனுக்கு ஒரு செயலும்‌ செய்ய வேண்டா என்று சொல்லிற்றன்றோ என்கை.

சிற்ற வேண்டா -ஆயாசிக்க வேண்டா -சிற்றுதல் -சிதறுதலாய் -பரக்க வேண்டா -வேறு ஒரு செய்கை வேண்டா என்கை –சிந்திப்பே அமையும்கண்டீர்கள் அந்தோ-யுக்தி நிரபேஷமாக சிந்தா மாத்திரமே அமையும் கிடி கோள் –அவனைப் பற்றி பேசுதல் வணங்குதல் வேண்டா -என்பார்-சிந்திப்பே – எனப் பிரிநிலை ஏவகாரம் கொடுத்துப் பேசுகிறார்-அந்தோ-இவ் விலக்ஷண விஷயத்தை இழப்பதே -என்னுதல் -இது ஸூ லபம் என்றால் காற்கடைக் கொள்ளுகைக்கு உறுப்பாவதே என்னுதல் –

இது தான்‌ இந்த ஸ்லோகத்திலேயே சொல்லிற்றென்கிறார்‌.
ஸூர்ணை -234 – நிவ்ருத்தி கீழே சொல்லிற்று –
“ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய’ என்று ப்ரவ்ருத்தி தர்மமான அனைத்துச்‌ செயலையும்‌ தவிர்கையே இவனுக்கு வேண்டுவது என்பது கீழே சொல்லிற்று என்கை.

ஆனால்‌, நன்றி பாராட்டுகை தான்‌ வேணுமோ? அது உபாயத்தில்‌ முதலிடாதோ?’ என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -235- உபகார ஸ்ம்ருதியும்‌ சைதந்யத்‌தாலே வந்தது; உபாயத்தில்‌ அந்தார்பவியாது.
“என்னைத்‌ தீ மனங்கெடுத்தாய்‌ -“மருவித்தொழும்‌ மனமே தந்தாய்‌”
என்று இவை முதலானவைகளாலே இவன்‌ செய்யும்‌ நன்றி அறிதலும்‌ இவனுடைய ஜ்ஞாந மூலமாய்‌ வந்ததித்தனை; இது உண்டாகையா லன்றோ ஈஸ்வரன்‌ கார்யம்‌ செய்தது என்று உபாயத்தில்‌ உட்புகாது – என்கை.

இனி, ஐந்தாம்‌ பத அர்த்தத்தை விளக்குகிறார்‌.
ஸூர்ணை -236 – சரணம்‌ – உபாயமாக.
சரணம்‌’
– என்று அதற்கு அர்த்தம்‌ அருளிச்‌ செய்கிறார்‌ உபாயமாக என்று.
சரண சப்தத்திற்கு வேறு அர்த்தங்களையும்‌ காட்டக்‌ கூடியதாயிருக்க, இவ்விடத்தில்‌ உபாயத்தையே காட்டுகின்றமையைக்‌ காரணத்தோடு கூட அருளிச்‌
செய்கிறார்‌.
ஸூர்ணை -237 – இந்த சரண சப்தம்‌ – ரஷிதாவையும்‌ க்ருஹத்தையும்‌ உபாயத்தையும்‌ காட்டக்‌ கடவதே யாகிலும்‌, இவ் விடத்தில்‌ உபாயத்தையே காட்டுகிறது; கீழோடே சேர வேண்டுகையாலே .
“உபாயே க்ருஹ ரஷித்ரோச்‌ சப்தச்‌ சரண மித்யயம்‌, வர்த்ததே ஸாம்ப்ரதம்‌ சைஷ உபாயார்த்தைகவாசக :
சரணம்‌ இதி –
சரணமென்கிற,
அயம்‌ சப்த :- இந்த சப்தமானது,
உபாயே – உபாயத்திலும்‌,
க்ருஹ ரஷித்ரோ:- க்ருஹத்திலும்‌ ரக்ஷகனிடத்திலும்‌,
வர்த்ததே – உபயோகிக்கத் தக்கது,(இப்படியானாலும்‌)
ஸாம்ப்ரதம்‌ – இப்போது(இவ்விடத்தில்‌) ஏஷ: – இந்த சரண சப்தமானது,
உபாயார்த்த ஏக வாசக : – உபாயத்திற்கே பேராகக்‌ கடவது. என்கிறபடியே இந்த சரண சப்தமான இது ரஷிப்பவனையும்‌, இல்லத்தையும்‌ உபாயத்தையும்‌ காட்டக்‌ கடவதே யாகிலும்‌, இந்த இடத்தில்‌ உபாயத்தையே காட்டுகிறது. ஸர்வ தர்மங்களையும்‌ விட்டுத்‌ தன்னையே பற்றச்‌ சொல்லுகிற பகுதியாகையால்‌, கீழோடே சேர வேண்டுகையாலே, இந்த ‘சரண’ சப்தத்திற்கு உபாயம்‌” என்ற பொருளைத் தான்‌ கொள்ள வேண்டும்‌ என்கிறார்‌. கர்ம யோகம்‌ முதலான எல்லாம் கேட்டு அவை சுலபமாகச்‌ செய்யக் கூடியவை அல்ல வென்றும்‌, ஸ்வரூப விரோதம்‌ என்று நினைத்து, நாம் கரை ஏறும்‌ உபாயம்‌ எதுவோ என்று கவலை கொண்டுள்ள அர்‌ஜூநனைக்‌ குறித்து இந்தச்‌ சரம ஸ்லோகம்‌ அருளிச்‌ செய்கையால்‌ அதற்கேற்ப, க்ருஹம்‌ ரக்ஷகன்‌ என்றவற்றை விட்டு, உபாயம்‌ என்ற பொருளைக்‌ கொண்டால் தான்‌ கர்மம்‌ முதலானவைகளை உபாயமாகக்‌ கொள்ளுதலை விட்டுவிட வேணு மென்றிருக்கிற அர்ஜூநனுக்கு ஸமாதானஞ்‌ சொல்லுகிற தென்று கீழோடே பொருந்த வருமென்றபடி. ஆனால்‌, கீழ்ச்‌ சொன்ன உபாயாந்தரங்களை விடுகை தானே உபாயமாகப்‌ பற்றுகிற கண்ணன் எம்‌பெருமானின்‌ உபாயத்வத்தைத்‌ தோற்றுவிப்பதாயிருக்க, சரண சப்த ப்ரயோகம்‌ இங்கு வேணுமோ? என்னில்‌, ஆம்‌ வேணும்‌; இங்கே ஒரு ஆக்ஷேபம்‌ எழுகிறது. அதாவது, சரண சப்தத்துக்கு ப்ரகரண பலத்தாலே உபாயம்‌ என்ற பொருளைக்‌ கொண்டு வர வேண்டுமானால்‌, சரண சப்தமில்லாமலே ‘ஸர்வ தர்மாந்‌ பரித்யஜ்ய மாமேகம்‌ – வ்ரஜ என்ற இம் மாத்திரமே சொன்னாலும்‌, ப்ரகரண பலத்தாலே ‘வ்ரஜ’ என்பதற்கு – (உபாயமாகப்‌) புத்தி பண்ணு என்று அர்த்தம்‌ கொண்டு விடலாமே? இந்த சரண சப்தம்‌ ஏதுக்கு? என்று அவ்வாக்ஷேபம்‌.-அதற்குச்‌ சமாதாநம்‌:- எம்பெருமானை உயேயமாகப்‌ பயனாகப்‌ பற்றும் போதும்‌, நதியை கடந்தவனுக்கு ஓடத்தின்‌ தேவை யில்லாதது போல்‌ ஸாதநாந்தரங்கள்‌ ஒன்றும்‌ வேண்டியதில்லை யாகையால்‌,’ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாம்‌ ஏகம்‌ வ்ரஜ என்பதற்கு – எல்லா சாதநங்களையும்‌ விட்டு உபேயமாக எம்பெருமான்‌ ஒருவனையே பற்று என்று பொருள்‌ கொள்ளவும்‌ இடமுண்டாகையால்‌, “சரணம்‌ வ்ரஜூ என்னாமல்‌ ‘வ்ரஜ’ என்று மாத்திரம்‌ விதிக்கும்‌ ஸ்வீகாரம்‌ அப்படி உபேயமாக :பற்றுதலைத்‌ தவிர்க்காது; ஆகவே, ஸர்வ தர்மங்களையும்‌ விட்டு உபேயமாக ஸ்வீகரித்தலைத்‌ தவிர்ப்பதற்காக “சரண”சப்தம்‌ அவஸ்யம்‌ வேண்டுமென்றபடி.-மறுபடியும்‌ இன்னுமொரு ஆக்ஷேபம்‌ வருகிறது அதாவது, “யத் யத்‌ ஸாங்கம்‌ தத்தத்‌ ஸாதநம்‌” (எது எது அங்கத்தோடு கூடியதோ, அது அது உபாயம்‌) என்ற நியாயத்துக்கு ஏற்ப ‘வ்ரஜூ என்ற விதிக்கு அங்கமாக ‘ஸர்வ தர்மாந்‌ பரித்யஜ்ய’ என்று உபாயாந்தரத்தை விடுதலைச்‌ சொல்லி யிருத்தலால்‌, இங்கு “வ்ரஜ என்பதனால்‌ விதிக்கப்படும்‌ ஸ்வீகாரம்‌, உபாயமாக ஸ்வீகரித்தலையே காட்டக்‌ கூடிய தாகையாலே, இந்த சரண சப்தம்‌ வேண்டிய தில்லையே என்று அவ்வாக்ஷேபம்‌ இதற்குச்‌ சமாதாநம்‌ :-அர்த்த பலத்தால்‌ கிடைக்கக் கூடிய பொருளைக் காட்டிலும்‌ சப்தத்தாலே சொல்லக் கூடிய பொருளே சிறப்புடையதாகையாலே, “ஆக்ஷேபத:ப்ராப்தாத்‌ ஆபிதாநிகஸ்யைவ க்ராஹ்யத்வாத்‌” (அர்த்த பலத்தால்‌ வரும்‌ பொருளைக் காட்டிலும்‌ சப்த பலத்தால்‌ வருவதே ஏற்றுக்‌ கொள்ளத்‌ தக்கதாகையால்‌) என்று ஸ்ரீபாஷ்யகாரரும்‌ ஸ்ரீ பாஷ்யத்தில்‌ அருளிச்‌ செய்தார்‌.ஆக, உபாயத்தைச்‌ சொல்லக் கூடிய இந்த சரண சப்தத்தாலே, உபேயமாகவும்‌ உபாயமாகவும்‌ பற்றக்‌ கூடிய இரண்டு தன்மையும்‌ எம்பெருமானுக்கு உண்டாகையால்‌ அதில்‌, உபேயமாக பற்றும்‌ தன்மையை இங்கு வேறு படுத்திக் காட்டினாராயிற்று.

இனி, ஆறாம்‌ பதத்தை எடுக்கிறார்‌.
ஸூர்ணை – 238 -வ்ரஜ-புத்தி பண்ணு
வ்ரஜ என்று இதற்கு அர்த்தம்‌ அருளிச்‌ செய்கிறார்‌ ‘புத்தி பண்ணு’ என்று.
அது தன்னை விவரிக்கிறார்‌.
ஸூர்ணை -239- கத்யர்த்தமாவது-புத்த்யர்த்தமாய்‌, அத்யவஸி யென்றபடி
“வ்ரஜ கதெள’
என்கிற தாது (வினைப்பகுதி) செல்லுதல்‌ என்று பொருளாகும்‌. “கத்யர்த்தா புத்த்யர்த்தா :” (கதி சப்தம்‌ புத்தியைக் காட்டும்‌.) அதாவது – கதியைச்‌ சொல்லும்‌ சப்தங்கள்‌ மானஸ கதியான புத்தியையும்‌ சொல்லுகின்றன என்கிறபடி. மனத்தில்‌ ஏற்படக்கூடிய திட நம்பிக்கையைச்‌ சொல்லுகிறது இந்த வ்ரஜ என்ற பதம்‌ என்கிறார்‌-“இந்தப்‌ புத்தியாகிறது விடத் தக்கதான த்யாகத்தின்‌ முடிந்த நிலையிலிருப்பதாய்‌, உபாயத்வத்தில்‌ சேராததாய்‌,
உபாயாந்தரங்களை விடுவதை முன்னிட்டுக்‌ கொண்டிருப்பதாய்‌, பகவான்‌ செய்யும்‌ ரக்ஷகத்வத்தை அநுமதிப்பதாய்‌, அறிவின்‌ செயலாய்‌, ப்ரார்த்திப்பதை உட் கொண்டதாய்‌, பகவந் முக மலர்த்திக் குரியதாய்‌, ஜ்ஞாநத்தின்‌ கார்யமான ஸ்வரூபமாம்‌ தன்னியல்புக்கும்‌ பொருந்தியதாய்‌, தப்பாமல்‌ தாமதமின்றிப் பயனைத் தரக் கூடியதாயிருப்தொரு திட நம்பிக்கையோடு கூடிய ஞான கார்யம்‌
” என்று இந்த புத்தி விசேஷத்தை பரந்த படியில்‌ பிள்ளை லோகாசாரியர்‌ அருளிச்‌ செய்ததை இவ்விடத்தில்‌ அதை நினைவில்‌ கொள்ளக்‌ கூடியது என்கிறார்‌ மாமுநிகள்‌.

பொதுவில்‌ சஞ்சரித்தலைச்‌ சொல்லக்‌கூடிய கதி சப்தம்‌, மனம்‌ வாக்கு உடல்‌ என்ற முக் கரணங்களாலும்‌ இறைவனை அடைதலைக் காட்டா நிற்க, மனஸாலே அடைகிற திட நம்பிக்கை மாத்திரம்‌ சொல்லி ஒன்றில்‌ ஒதுக்குகிறதென்‌? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -240- வாசிக காயிகங்களும்‌ இதுக்கு அபேஷிதிதங்களா யிருக்கச்‌ செய்தேயும்‌, ஜ்ஞாநாந்மோஷ மாகையாலே மாநஸமான அநுஷ்டானத்தை
அதாவது – “சிந்தையாலும்‌ சொல்லாலும்‌ செய்கையினாலும்‌” என்கிறபடியே முக் கரணங்களாலும்‌ உண்டான பற்றுதல்‌ அதிகார பூர்த்திக்கு வேண்டியதாகையாலே “வரிக்கிறேன்‌’ என்று சொல்லக் கூடிய வாக்கும்‌, அஞ்ஜலி முதலான காயிகமும்‌, உபாயமாகப்‌ பற்றுகைக்கு உரியதா யிருக்கச்‌ செய்தேயும்‌, “ஜ்ஞாநாந் மோக்ஷ:” என்று ஜ்ஞாநத்தாலே மோக்ஷமாகையாலே அவை இரண்டும்‌ நீங்கலாக மாநஸ அநுஷ்டான மாத்திரத்தைச்‌ சொல்லுகிறது என்கிறார்‌. ஆக, ஆறாம் பத்ததுக்கு பதவுரை அருளிச்‌ செய்தாயிற்று.

இனி, முற்பாதியால்‌ சொன்ன அர்த்த்தத்தை அநுவதித்து (திரும்பச்‌ சொல்லி) முடிக்கிறார்‌.
ஸூர்ணை -241-ஆக த்யாஜ்யத்தைச்‌ சொல்லி, த்யாக ப்ரகாரத்தைச்‌ சொல்லி, பற்றப்படும்‌ உபாயத்தைச்‌ சொல்லி, உபாய நைரபேக்ஷ்யஞ் சொல்லி, உபாயத்வஞ் சொல்லி, உபாய ஸ்வீகாரம்‌ சொல்லுகிறது.
அதாவது – ஆக, முற் பாதி ஸ்லோகத்தால்‌’ஸர்வ தர்மாந்‌ என்று விட வேண்டியதைச்‌ சொல்லி, ‘பரித்யஜ்ய’ என்று த்யாக ப்ரகாரத்தைச்‌ சொல்லி, ‘மாம்‌’ என்று பற்றப்படும்‌ உபாயத்தைச்‌ சொல்லி, ‘ஏகம்‌’ என்று இந்த ஸித்தோபாயம்‌ இன்னொரு உபாயத்தை விரும்பாதது என்பதைச்‌ சொல்லி, ‘சரணம்‌” என்று உபாயத்தைச்‌ சொல்லி, ‘வ்ரஜ’ என்று உபாய ஸ்வீகாரஞ்‌ சொல்லுகிறது என்கை.

பிறகு, பிற்பாதிக்கு அர்த்தம்‌ அருளிச்‌ செய்வதாக ஆரம்பித்து, அதில்‌ முதல்‌ பதத்தை விளக்குகிறார்‌.
ஸூர்ணை -242 -அஹம்‌ –
அஹம்‌ – நான்‌ – என்று.
இந்த பிற்பாதியில்‌ ஈஸ்வரன்‌ செய்தருளுகிற அம்சத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -243 -ஸ்வ க்ருத்யத்தை அருளிச்‌ செய்கிறான்‌:
அதிகாரிச்‌ செயலை முற்பாதியிற்‌ சொன்‌னான்‌. உபாயமாகிய தன்‌ செயலை இதிலே அருளிச் செய்‌கிறான்‌.
இனி ‘அஹம்‌’ என்ற இப் பதத்துக்கு அர்த்தம்‌ அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -244-ஸர்வஜ்ஞனாய்‌, ஸர்வ சக்தியாய்‌, ப்ராப்தனான நான்‌ .
அதாவது, “யஸ்‌ ஸர்வஜ்ஞஸ் ஸர்வவித்‌“(யாவனொரு பரமாத்மா எல்லாவற்றையும்‌ அறிகிறானோ ?) என்கிறபடியே ஸர்வத்தையும்‌ அறியுமவனாய்‌ “பராஸ்ய சக்திர்‌ விவிதைவ ஸ்ரூயதே‘ என்கிறபடியே எல்லா ஸாமர்த்யத்தையும்‌ உடையவனாய்‌, எஜமானனாகையாலே உரிமை யாளனாயிருக்கிற நான்‌ – என்கை.

மற்ற குணங்களெல்லாம்‌ கிடக்க இந்தக் குண விசேஷங்களை இந்த ‘அஹம்‌’ என்கிற சப்தம்‌ காட்டுகிற இதற்கு ப்ரயோஜநம்‌ அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -245- இவன்‌ கீழ்‌ நின்ற நிலையும்‌, மேல்‌ போக்கடியும்‌ அறிகைக்கும்‌, அறிந்தபடியே செய்து தலைக் கட்டுகைக்கும்‌ ஏகாந்தமான குண விசேஷங்களையும்‌, தன் பேறாகச்‌ செய்து தலைக் கட்டுகைக்கு ஈடான பந்த விசேஷத்தையும்‌ காட்டுகிறது.
அதாவது, எம்பெருமான்‌ இந்த சேதநனுக்கு வேண்டாதனதைத் தள்ளி வேண்டியதைக்‌ கொடுக்குமளவில்‌, -முன் நின்ற நிலையும்‌, மேல்‌ போகத் தகும்‌ நிலையை அறிந்தும் அறிந்தபடியே அவற்றைச்‌ செய்து தலைக் கட்டுகைக்கும்‌ தகுந்தவை யாயிருந்‌ துள்ள (ஸர்வஜ்ஞத்வ) எல்லாவற்றையும்‌ ஒரே காலத்தில்‌ அறிவது ஸர்வ சக்தித்வங்களாகிற குண விசேஷங்களையும்‌, இவன்‌ கார்யம்‌ செய்யுமிடத்தில்‌ இவனுக்காக அன்றிக்கே தன் பேறாகச்‌ செய்து தலைக் கட்டுகைக்கு ஈடான சேஷித்வ ரூப (எஜமானான) பந்த விசேஷத்‌தையும்‌ ப்ரகாசிப்பிக்கிறது – என்கை. மாம்‌” என்கிற இடத்தில்‌ அடைதற்கே அவஸ்யமான குண விசேஷங்கள்‌ ப்ரகாசித்தாற்போலே, ‘அஹம்‌’ என்கிற இடத்திலும்‌ கார்ய கரத்வத்‌துக்கு அவஸ்யமான குண விசேஷங்கள்‌ ப்ரகாசிக்குமன்றோ? வாத்ஸல்யாதிகள்‌ இல்லாத போது தஞ்சமாக அடைகைக்‌ கூடாதாப் போலே, ஜ்ஞாந சக்த்யாதிகள்‌ இல்லாத போது
கார்ய கரத்வம்‌ பொருந்தாமையாலே, இவ் விடத்தில்‌ ஜ்ஞாந சக்திகளும்‌ ப்ராப்தியாம்‌ உறவையும்‌ சொன்ன இது பூர்த்திக்கும்‌ உபலக்ஷணம்‌
. உபலகஷணம்‌ -மற்றுமுண்டான லக்ஷணத்தையும்‌ கூட்டிச்‌ சொல்வது.

இந்தப் பதத்தில்‌ ‘மாம்‌’ என்ற இடத்தில்‌, ஸாரதியாய்‌ நின்ற பாரதந்த்ரியத்துக்கு எதிர்த்தட்டான தன்‌ ஸ்வாந்ந்த்ர்யத்தை ப்ரகாசிப்பித்தமையை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -246- தனக்காகக்‌ கொண்ட ஸாரத்ய வேஷத்தை அவனை யிட்டுப்‌ பாராதே தன்னை யிட்டுப்‌ பார்த்து, அஞ்சின அச்சந் தீரத்‌ தானான தன்மையை அஹம்‌” என்று காட்டுகிறான்‌.
அதாவது, மாம்‌’ என்று ஸாரத்ய வேஷத்தோடே நிற்கிற தன்னைப்‌ பற்றச்‌ சொன்ன போது, அர்‌ஜுநன்‌, தன்‌னைக்‌ காப்பதற்காக ஏறிட்டுக்‌ கொண்ட தேரோட்டியான வேஷத்தை அனைத்துக்கும்‌ மேலானவன்‌ இப்படித்‌ தாழ நின்றது தன்‌ இச்சையான குணத்தலான்றோ’ என்று அவனை யிட்டுப்‌ பார்க்காமல்‌, ‘நமக்கு இழி தொழில்‌ செய்து ஸாரதியாய்‌ நிற்கிறவனன்றோ?” என்று தன்னை யிட்டுப்‌ பார்த்து, “ஸர்வ தர்மங்களையும்‌ விட்டு என்னைப் பற்று’ என்னா நின்றான்‌; இது’ என்னாகுமோ? என்று அஞ்சின அச்சந்தீர, தனக்கு வஸப்பட்ட பத்தர்‌, முக்தர்‌, நித்யர்களான மூன்று விதமான சேதநர்கள்‌, ஸுத்த ஸத்வமாகிய பரம பதம்‌, மிஸ்ர ஸத்வமான ப்ருக்ருதி மண்டலமான லீலா விபூதியும்‌ இவைகளின்‌ நிர்வாஹங்களுக்குத்‌ துணையான காலமும்‌ ஆகிய தன்னதீநமான சேதநா சேதநங்களின்‌ ஸ்வரூபமும்‌, இவைகளின்‌ நிலைபேறும்‌ காப்பும்‌ செயல்களும்‌, தடை யற்ற சுதந்திரனா யிருக்கிற தன்னுடைய உண்மையான வேஷத்தை ‘அஹம்‌’ (நான்‌) என்று வெளிப்படுத்‌துகிறான்‌ – என்கை.

இத்தன்மை யானவன்‌ பரதந்த்ரனானதும்‌, தன்‌ இயல்பாலானதன்று என்னுமிடத்தை அருளிச்‌செய்கிறார்‌. பரதந்த்ரம்‌ – பிறர்க்கு வஸப்படுதல்‌.
ஸூர்ணை -247-கீழில்‌ பாரதந்தர்யமும்‌ இந்த ஸ்வாதந்தர்யத்தினுடைய எல்லை நிலமிறே.-
அதாவது- கீழ்‌, ஸாரதியாய்‌ நின்ற பாரதந்த்ர்யமும்‌, தான்‌ நினைத்தது செய்யுமளவில்‌ தன்னைத்‌ தடை செய்பவ ரில்லாதபடியான இந்த ஸ்வாதந்த்ர்‌யத்தினுடைய முடிவெல்லை யன்றோ-என்கை.

பிறகு ‘த்வா என்ற இரண்டாவது பதத்தை வெளியிடுகிறார்‌.
ஸூர்ணை -248 – த்வா – அஜ்ஞனாய, அசக்தனாய்‌, அப்ராப்தனாய்‌, என்னையே உபாயமாகப்‌ பறிறியிருக்‌கிற உன்னை.
‘த்வா’ என்று அதற்கு அர்த்தம்‌ அருளிச்‌ செய்கிறார்‌. அதாவது – அஜ்ஞனாய்‌ என்று தொடங்கி-உன்கார்யங்கள்‌ அறிவதற்குத்‌ தக்க ஜ்ஞாநமில்லாதவனாய்‌, அறிந்தாலும்‌ செய்து தலைக் கட்டிக்‌ கொள்ளுகைக்கு சக்தி இல்லாதவனாய்‌, அது தான்‌ உண்டானாலும்‌ உன்னுடைய
ரக்ஷணத்தில்‌ உனக்கு உரிமை இல்லாதவனாய்‌, இப்படி இருக்கையாலே எல்லாத்‌ தர்மங்களையும்‌ விட்டு என்னையே (வேறொரு உபாயம்‌ வேண்டாதபடியான) உபாயமாகப்‌ பற்றி யிருக்கிற உன்னை – என்கை.

பிறகு, மூன்றாம்‌ பதத்தை எடுக்கிறார்‌.’ஸர்வ பாபேப்ய –” என்று.
ஸூர்ணை -249 – ஸர்வ பாபேப்ய :- மத் ப்ராப்தி ப்ரதி பந்தகங்கள்‌ என்று யாவை யாவை சில பாபங்களைக்‌ குறித்து அஞ்கிறாய்‌, அவ்வோ பாபங்கள்‌ எல்லாவற்றில்‌ நின்றும்‌ .
ஸர்வபாபேப்ய : ” என்று இதுவும்‌ –பாபமும்‌ என்று ஒருமையும்‌, பாபங்களும்‌ என்று பன்மையும்‌, ஸர்வ சப்தமுமாய்‌ மூன்று விதமாயிருக்கையாலே, இம் மூன்றையும்‌ உட் கொண்டு இப்பதத்துக்கு அர்த்தம்‌ அருளிச்‌ செய்கிறார்‌. “மத் ப்ராப்தி ப்ரதிபந்தகங்கள்‌’ என்று தொடங்கி,-அதாவது – பாபமாகிறது இஷ்ட விரோதியாயும்‌ இஷ்டமில்லாதான துன்பத்திற்குக்‌ காரணமாயிருக்கு மதாகையாலும்‌, மோக்ஷப் பகுதி யாகையாலே இவ்விடத்தில்‌ இஷ்டவிரோதி களாகின்றன-பகவானை அடையத் தடை செய்யுமவை யாகையாலும்‌, அதில்‌ ஜ்ஞாந விரோதியும்‌ ருசி விரோதியும்‌ உபாய விரோதியும்‌ ஆகிற இவை திருமந்த்ரத்தில்‌ நம சப்தத்தாலே முன்பே கழிக்கப் பட்டதாகையாலும்‌, இனி யுள்ளது என்னை அடைவதற்கு தடையா யிருக்கும்‌ விரோதி யாகையாலே, நீ என்னை அடைய தடையா யிருக்கும்‌ விரோதிகள்‌ என்று யாவை யாவை சில பாபங்களைக்‌ குறித்து
பயப்படுகிறாயோ? அந்த அந்தப்‌ பாபங்களெல்லா வற்றிலிருந்தும்‌-விடுவிக்கிறேன்‌ என்கிறான்‌-
என்றபடி.

பன்மை மிகுதியால்‌ காட்டுமதை விவரிக்கிறார்‌.
ஸூர்ணை -250- “பொய் நின்ற ஞானமும்‌ பொல்‌லா வொழுக்கும்‌ அழுக்குடம்பும்‌” என்கிறபடியே, அவித்யா கர்ம வாஸநா ருசி ப்ரக்ருதி ஸம்பந்தங்களைச்‌ சொல்லுகிறது
அதாவது, “பொய்ந்நின்ற ஞானமும்‌ பொல்லாவொழுக்குமழுக்குடம்பும்‌” என்று உண்டாதல்‌, அழிதல்‌ முதலியவற்றின்‌ தொடர்பாலே அறிவு இல்லாமையாலே இல்லை யென்று சொல்லும்படியான அறிவற்ற ஜடப்‌ பொருளான அசேதனத்தை ஆத்மாவாக நினைக்கும்‌
நினைவும்‌, அந் நினைவாலே தேகமே ஆத்மா என்கிற இந்த புத்தியால்‌ உலகியலைச்‌ சார்ந்த தீய செயல்கள்‌ செய்கையும்‌, இந்தக்‌ கர்மங்‌ காரணமாக வரக் கூடியதான தீண்டா வழும்பும்‌
செந்நீரும்‌ செறி தசையுமான மல ரூபமான தேக ஸம்பந்தமும்‌
‘ என்று சொல்லுகிறபடியே அறிவின்மையும்‌, கர்மமும்‌, வாஸனையும்‌, ருசியும்‌, ப்ரக்ருதி ஸம்பந்தமாகிற இவற்றைச்‌ சொல்லுகிறது – என்கை. இவைகளில்‌ அறிவின்மையாவது :- தேகமே ஆத்மாவாக நினைக்கும்‌ நினைவும்‌, ஐய உணர்வும்‌ திரிபு உணர்வும்‌ ஆகிய மூவகைப்பட்ட அறிவின்மை. -கர்மமாவது :- நல் வினை, தீ வினைகள்‌. பகவானை அடைய நல் வினையும்‌ பாபத்தைப்‌ போலே விடத் தக்கது. வாஸனையாவது -அஜ்ஞாந வாஸனை, கர்ம வாஸனை, தேக ஸம்பந்த வாஸனை என மூன்றாகும்‌. ருசியாவது– விஷய பேதத்தாலே பலவாயிருக்கும்‌; ப்ரக்ருதி ஸம்பந்தமாவது– பரு உருவும்‌ அருவ உருவுமாகிய இரு வகையான ஐடப் பொருளைப்‌ பற்றிய அசித் ஸம்பந்தமாகும்‌. என்றபடி.

இனி, ஸர்வ சப்தத்தின்‌ கருத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -251- தருணச்‌ சேத கண்டூயநாதிகளைப்‌ போலே ப்ரக்ருதி வாஸனையாலே அநுவர்த்திக்குமவை- யென்ன, லோகாபவாத பீதியாலும்‌, கருணையாலும்‌, கலக்கத்தாலும்‌ செய்யுமவையென்ன, எல்லாவற்றையும்‌ நினைக்கிறது .
அதாவது – துரும்பு நறுக்குகை, தினவு எடுத்த இடத்தில்‌ சொறிகை முதலானவை போல நினைவின்றிக்கே உடலின்‌ வாஸனையாலே தொடரும்‌ ப்ரபத்தி செய்த பிறகும்‌ செய்யும்‌ வினைகளென்ன; நாம்‌ இவற்றைச்‌ செய்யாத போது “உலகம்‌ நம்மைப்‌ பழித்துச்‌ சொல்லுமே” என்கிற பயத்தாலும்‌, நாம்‌ செய்யாத போது மற்றவர்களும்‌ செய்யாது விடுவார்களாகில்‌ இது அவர்களுக்கு நாசமாமே; ஐயோ! என்கிற இரக்கத்தாலும்‌ செய்யும்‌ தினசரி செய்யுமவையென்ன, ஏதேனும்‌ ஒரு நிமித்தத்தால்‌ செய்யும்‌ கர்மங்களென்ன, ராஜஸ தாமஸங்களாலே கலங்கி முன்‌ விட்ட உபாயங்களில்‌ தொடர்பு கொள்ளுதல்‌ மீண்டும்‌ ப்ரபத்தி செய்தலென்ன, இவை எல்லாவற்றையும்‌ நினைக்கிறது என்கிறார்‌.

உபாயமென்கிற புத்தியோடு செய்யாதவையும்‌ பொருள்‌ தொடர்பால்‌ உபாயம்‌ என்ற நிலையில்‌ சேரும்‌ என்னும்‌ கேள்வியை முன் வைத்‌து அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -252- ‘உந்மத்த ப்ரவ்ருத்திக்கு க்ராம ப்ராப்தி போலே’ த்யஜித்த உபாயங்களிலே இவை அந்விதங்களாமோ ? என்று நினைக்க வேண்டா.
அதாவது ” உந்மாதச்‌ சித்த விப்ரம:” (பைத்தியம்‌ பிடித்தவனும்‌ மனம்‌ கலங்கியவனும்‌ ஆகிற இரண்டும்‌ ஒரே பொருளைக்‌ கொடுக்கும்‌) என்கிறபடியே பைத்தியக்காரன்‌ ‘இன்ன ஊருக்குப்‌ போகிறோம்‌’ என்கிற நினைவு இன்றிக்கே ஒரு வழியே போகா நின்றால்‌, அவ்வழி ஒரு ஊரோடே ஸம்பந்த முண்டா யிருக்கையாலே அவ் வூரிலே சென்று சேருமா போலே, உபாயம்‌ என்கிற நினைவு இன்றிக்கே உலகத்தவர்‌ பழிக்கஞ்சி செய்தல்‌ முதலானவைகளாலே செய்யப்படுகிற இவை-விட்ட உபாயங்களில்‌ தொடர்பு கொள்ளுமோ என்று நினைக்க வேண்டா ; தொடர்பு கொண்டே விடும்‌ என்றபடி. (ஆந்ரு சம்ஸ்ய ப்ரதாநராய்‌) பிறரிடத்தில்‌ இரக்கம்‌ கொண்டவராய்‌ அதாவது – ” இவ்வளவு ஞானவானே கர்மங்களைச்‌ செய்யாது விட்டால்‌ உலகத்தவர்‌ அவரே விட்டார்‌; நமக்கென்‌? என்று பகவதாஜ்ஞா ரூபமான கர்மங்களை விட்டால்‌ அதனால்‌ அவர்கட்கு பகவத்‌ ஆஜ்ஞையை மீறின பாபம்‌ வரும்‌. பிறரிடத்தில்‌ கருணையால்‌ அநுஷ்டித்தாலும்‌, உயர எறிந்த கல்‌ ஆகாயத்தில்‌ நில்லாதாப் போலே, அவையும்‌ ஒரு பலத்தைக்‌ கொடுத்தே விடும்‌. ஆகையாலே, அவையும்‌ பாப சப்தத்தாலே சொல்லக்‌ கடவது” என்று தனி சரமத்தில்‌ இவர் தாமே அருளிச்‌ செய்தது என்கிறார்‌ மாமுநிகள்‌.

அதுதானே யாகிறது, திரும்பவும்‌ மறுபடியும்‌ பண்ணும்‌ ப்ரபத்திக்கு குறை எது?” என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -253-கலங்கி உபாய புத்த்யா பண்ணும்‌ ப்ரபத்தியும்‌ பாதகத்தோடு ஓக்கும்‌.
அதாவது – ஒரு தடவை செய்யும தொழிய மறுபடி செய்யுமதை ஸஹியாத ப்ரபத்தி ஸ்வபாவத்தை அறியாதே கலங்கி விரோதியைக்‌ கழிப்பதற்காகவோ கஷ்டத்தை அடைவதற்காகவோ உபாய புத்தியோடு மீண்டும்‌ பண்ணும்‌ ப்ரபத்தியும்‌ – “அத பாதக பீதஸ் த்வம்‌” அத – இனி, த்வம்‌ – நீ, பாதக பீத: -உபாயாநுஷ்டாநமாகிய பாவத்தைச்‌ செய்ய அஞ்சினாயானால்‌. என்று உபாயாந்தரம்‌ போலே பாதக ஸமமென்கை.

பிறகு, நாலாம்‌ பதத்தை விளக்குகிறார்‌.
ஸூர்ணை -254- மோக்ஷயிஷ்யாமி -முக்தனாம்படி பண்ணக் கடவேன்‌.
இதிலிருந்தும்‌ (இந்த பாபங்களிலிருந்து) விடுபட்டுப் போம்படி பண்ணக் கடவேன்‌ -என்கை.

இனி, ‘யிஷ்‌’ என்கிற ‘ணிஜ’ ர்த்தத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -255 – ணிச்சாலே – நானும் வேண்டா, நீயும்‌ வேண்டா -அவை தன்னடையே விட்டுப்‌போம் காணென்கிறான்‌.
அதாவது – ‘யிஷ்யாமி’ என்கிற ணிச்சாலே இயற்றுதல்‌ கர்த்தா வன்றிக்கே ஏவுதல்‌ கர்த்தாவாய்‌ விடுவிக்கக்‌ கடவேன்‌ என்கையாலே, இதற்கு நானும்‌ ஒரு முயற்சி செய்ய வேண்டா; நீயும்‌ இதற்காக ப்ரார்த்திக்க வேண்டா; நீ என்னைத்‌ தஞ்சமாக அடைந்த ராஜ குல (மாஹாத்ம்யத்தாலே) பெருமையாலே அந்த பாபங்கள்‌ உன்னைக் கண்டு பயப்பட்டு “கானோ ஒருங்கிற்றுக்‌ கண்டிலமால்‌” என்கிறபடியே போன வழி தெரியாதபடி தன்னடையே விட்டுப்‌ போங்காண்‌ என்று அருளிச்‌ செய்கிறானென்கை.

இப்படிச்‌ சொன்னதன்‌ கருத்தை வெளி யிட்டு அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -256 – என்னுடைய நிக்ரஹ பலமாய்‌ வந்தவை நானிரங்கினால்‌ கிடக்குமோ? என்கை.
அதாவது, பாபங்களாகின்றன குப்பையில்‌ ஆமணக்குப்‌ போலே எழுந்து பாம்பு போலே கழுத்தைப்‌ பிடிப்பதொன்றன்றே; சேதநன்‌ பண்ணின கர்மங்கள்‌ நொடிப்‌ போதில்‌ நசிப்பதொன்றாகையாலே, அப்போதே போம்‌; அஜ்ஞனாகையாலே (செய்த செயலை மறந்தவனாகையாலே) கர்த்தாவான இவனும்‌ மறந்து போக, இயல்பாகவே பேரறிவாளனாய்‌ ஒன்றொழியாமல்‌ உணர்ந்திருந்து அந்தந்த காலங்களிலே தப்பாமல்‌ நிறுத்து அநுபவிப்பிக்கிற என்னுடைய நிக்ரஹ பலமாகையாலே, அந்த என்னுடைய நிக்ரஹ பலமாய்‌ வந்தவை, நிக்ரஹத்துக்கு எதிர்த் தலையான அநுக்ரஹத்தை நான்‌ பண்ணினால்‌ பாபங்கள்‌ அவ் விஷயத்தில்‌ பின்னைக்‌ கிடக்குமோ? என்று இதற்குக்‌
கருத்தென்றபடி.

‘தன்னடையே விட்டுப் போம்‌’ என்ற இடத்தில்‌ அபிப்ராயத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -257- அநாதி காலம்‌ பாபங்களைக்‌ கண்டு நீ பட்ட பாட்டை அவை தாம்‌ படும்படி. பண்ணுகிறேன்‌.
அதாவது – அநாதியான காலமெல்லாம்‌ துன்பம்‌ தருவதான பாபங்கள்‌ வந்துமேலிடப் புகுந்தால்‌, அவற்றைக்‌ கண்டு நீ நடுங்கின நடுக்கமெல்லாம்‌ என்னைத்‌ தஞ்சமடைந்த ராஜ குல மாஹாத்ம்யத்தாலே உன்னைக் கண்டு அவை தான்‌ குடல்‌ வெந்து நடுங்கும்படி பண்ணக்‌ கடவனென்கை. “அவை தாமே விட்டுப் போம்படி பண்ணுகையாவது -இவை தமக்கு முன்பு உண்டாய்க்‌ கழிந்தவை என்று தோற்றாதபடிபோக்குகை ; அதாகிறது – இவை நினைவுக்கு வந்தாலும்‌ ப்ரபந்நனான தான்‌ பகவானுக்கே அற்றுத்‌ தீர்ந்த தன்மையைப்‌ பார்த்து கனவு கண்டாற் போலே இவை நமக்கு இடையில்‌ வந்தவையாய்‌ கழிந்தவை என்றிருக்கையும்‌, நினைவாலே துக்கம்‌ அணுகாதிருக்கையும்‌” என்று தனி சரமத்தில்‌ இவர்‌ தாமே அருளிச்‌ செய்தார்‌ என்பது இங்கே நினைவில்‌ கொள்ளத் தக்கவை.

“மோக்ஷயிஷ்யாமி” என்கிற தன்மை இடத்துப்‌ பொருளில்‌ அபிப்ராயமான ஓரர்த்த விசேஷத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -258 – இனி உன் கையிலும்‌ உன்னைக்‌ காட்டித்‌ தாரேன்‌, என்னுடம்பிலழுக்கை நானே போக்கிக்‌ கொள்ளேனோ?
அதாவது, இத்தனை காலமும்‌ நம்‌ கார்யத்துக்கு நாமே உரிமை யுடையவன்‌ என்று நீ திரிகையாலே தன்‌ கார்யம்‌ தானே செய்‌து கொள்கிறான்‌ என்றிருந்த இத்தனை யல்லது எனக்கு நீ உடம்பைப்‌ போலே அடிமை’ என்றறிந்து என்‌ பக்கலிலே உன்னை ஸமர்ப்பணம்‌ செய்த பின்பு உன்னுடைய பாப விமோசனத்தின்‌ பொருட்டு முயற்சி நீ செய்து கொள்ளென்று உன்‌ கையிலும்‌ உன்னை காட்டித் தாரேன்‌; என்னுடம்பான உன்னுடைய அறிவின்மையான அழுக்கைச்‌ சரீரியாய்‌ உயிரான நானே போக்கிக்‌ கொள்ளேனோ? என்கை. ‘ என்னுடம்பிலழுக்கை நானே போக்கிக்‌ கொள்ளேனோ’ என்றது, முயற்சி பயனிரண்டும்‌ தன்னதென்று தோற்றுகைக்காக. ஆகையால்‌, உன்னுடைய விரோதியில்‌ கிடப்பது ஒன்றில்லை என்றபடி. “விரோதியைக்‌ கழிப்பதும்‌ இஷ்டம்‌ பெறுகையும்‌ இரண்டும்‌ பலமாயிருக்க ஒன்றைச்‌ சொல்லுவானென்னென்னில்‌ ?” ஒன்றைச்‌ சொன்னால்‌ மற்றையது தன்னடையே வருகையாலே சொல்லிற்றில்லை. “மாமே வைஷ்யஸி” – (என்னையே அடைகிறாய்‌) என்று, முன்னே சொல்லப்பட்ட உபாயத்துக்குச்‌ சொன்ன பலந் தவிர வேறு பலம்‌ இல்லாமையாலே சொல்லிற்றில்லை என்னவுமாம்‌; ஆனால்‌, விரோதியை ஒழிப்பது மட்டில்‌ சொல்லுவான்‌ ஏன்‌? என்னில்‌, – அது அதிகமாகையாலே சொல்லிற்று. விரோதி கழிகை உண்டானால்‌ பலம்‌ இயல்பாக ஸித்தமாயிருக்கையாலே, தனித்துச்‌ சொல்ல வேண்டாவன்றோ” என்று சுருக்கமாக ஸ்ரீய:பதிப்படி ரஹஸ்யத்திலும்‌, விரிவாகப் பரந்தபடி தனி சரமங்களிலும்‌, அருளிச்‌ செய்த கேள்வியும்‌ விடையும்‌ இவ் விடத்தில்‌ சொல்லிக்‌ கொள்ள வேணும்‌.

பிறகு, கடைசி பதத்தை எடுக்கிறார்‌.
ஸூர்ணை -259- மாஸூச: – “நீ உன்‌ கார்யத்திலே அதிகரியாமையாலும்‌, நான்‌ உன்‌ கார்யத்திலே அதிகரித்‌துக்‌ கொண்டு போருகையா லும்‌, உனக்கு சோக நிமித்தம்‌ இல்லை காண்‌: என்று அவனுடைய சோக நிவருத்தியைப்‌ பண்ணிக்‌ கொடுக்கிறான்‌.
மாஸூச :’ என்று அதற்கு அர்த்தம்‌ அருளிச்‌ செய்கிறார்‌. அதாவது, “ நீ உன்‌ கார்யத்திலே அதிகரித்து நின்றாயாகில்‌, “நம்‌ கார்யத்துக்கு என்‌ செய்வோம்‌” என்று கரைந்து சோகிக்கத்‌ தகுதி; நான்‌ உன்‌ காரியத்திலே அதிகரியாதிருந்தேனாகில்‌, ‘தம்‌ கார்யத்தில்‌ இவன்‌ உதாஸீநனா யிராநின்றான்‌,; நாம்‌ எங்ஙனே உஜ்ஜிவிக்கப்‌ போகிறோம்‌?” என்று சோகிக்கத்‌ தகுதி உண்டு; -இங்ஙனன்றிக்கே “முயற்சியும்‌ பயனும்‌ ஆகிய இரண்டும்‌ உனக்கு இல்லாத படியான பாரதந்தர்ய ஸ்வரூபத்தைஉணர்ந்து, நீ உன்னுடைய காப்பிலே முயற்சி பண்ணாதொழிகையாலும்‌, உன்னுடைய ரக்ஷணத்தில்‌ முயற்சியும்‌ பயனுமாகிற இரண்டும்‌ என்னதாம்படி, ஸ்வாமியான நான்‌ உன்‌ கார்யத்தில்‌ தடையறுக்கையாலே உன்னுடைய ரக்ஷண கார்யத்திலே அதிகரித்துக்‌ கொண்டு போருகையாலும்‌, உனக்குச்‌ சோகிக்கக்‌ காரணம்‌ இல்லை காண்‌’ என்று, முன்பு சோக முடையவனாய்‌ நின்ற அவனுடைய சோக நிவருத்தியைப்‌ பண்ணிக்‌ கொடுக்கிறான்‌ – என்கை.இத்தால்‌, அஹம்‌ த்வா என்கிற பதங்களாலே சொல்லப்பட்ட ர்க்ஷக ரக்ஷ்யரான (காப்பவன்‌, காக்கப்படுபவன்‌) இருவருடைய ஸ்வபாவத்தையும்‌ அநுவதித்துக் கொண்டு சோகத்தைத்‌ தவிர்த்தபடியை அருளிச்‌ செய்தாராயிற்று.

இனிமேல்‌, பாபத்தைப்‌ போக்குபவனான தன்னுடையவும்‌ போக்கப்படுபவையான பாபங்களினுடையவும்‌ தன்மைகளைச்‌ சொல்லிச்‌ சோகம்‌ தவிர்த்தபடியை
அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -260- நிவர்த்தக ஸ்வரூபத்தைச்‌ சொல்‌லி, நிவர்த்யங்கள்‌ உன்னை வந்து மேலிடாதென்று சொல்லி, உனக்கு சோக நிமித்தம்‌ இல்லை காண்‌ என்கிறான்‌.
அதாவது- அஹம்‌ என்று ஸர்வஜ்ஞத்வம்‌ முதலான குணங்களோடு கூடினவனாய்க்‌. கொண்டு விரோதியைப் போக்குபவனா யிருக்கிற தன்‌ ஸ்வரூபத்தைச்‌ சொல்லி, “த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷ யிஷ்யாமி” என்று ‘ணி”ச்சால்‌ நிவர்த்திக்கப்படுமதான பாபங்கள்‌ உன்‌னைக் கண்டு தானே அஞ்சி ஓடிப் போமதொழிய, என்னையே உபாயமாகப்‌ பற்றி இருக்கிற உன்னை வந்து மேவிடாது என்னுமிடம்‌ சொல்லி, பிறகு ‘மாஸூச:‘ என்கையாலே
‘இப்படியான பின்பு உனக்குச்‌ சோகிக்கக்‌ காரண மில்லை” என்கிறானென்கை.

இத் தலையில்‌ விரோதியைப்‌ போக்குகைக்குத்‌ தான்‌ மூண்டு நிற்கிற படியை அறிவித்து, இவனுடைய சோகத்தைப்‌ போக்குகின்றமையைப்‌ பெரியோரின்‌ பாசுரத்தை மேற்கோள் காட்டிக்‌ கொண்டு அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -261 “எத்தினா லிடர்க்கடற் கிடத்‌தி யேழை நெஞ்சமே” என்கிறான்‌.
அதாவது – திருமழிசைப்‌ பிரான்‌ தம்முடைய திருவுள்ளத்தைக்‌ குறித்‌து ,ஸர்வேஸ்வரன்‌ இத் தலையில்‌ (நம்மிடத்தில்‌)விரோதியைப்‌ போக்கி அடிமை கொள்வதாக என்று ஏன்று கொண்டு வந்து புகுந்திருக்கிற படியைச்‌ சொல்லி, ‘இனி ஏதுக்காக நீ துன்பக் கடலில்‌ அழுந்துகிறாய்‌” என்றாற்போலே, ஈஸ்வரனும்‌ இப்போது இத் தலையில்‌ அனைத்துப்‌ பாபங்களையும்‌ போக்குவதாகத்‌ தானே, ஏறிட்டுக்‌ கொண்டமையை அறிவித்து, “இனி ஏதுக்காக சோகிக்கிறாய்‌ ?’ என்று இவனைக்‌ (அர்ஜுனனைக்‌) குறித்து அருளிச்‌ செய்கிறான்‌ என்கை.

இனி, இவனுடைய சோகம்‌ மறுவலிடாமல்‌ போக்குவதற் குறுப்பான பகவதபிப்ராய விசேஷத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -262 – பாபங்களை நான்‌ பொறுத்துப்‌ புண்யமென்‌று. நினைப்பிடா நிற்க நீ சோகிக்கக்‌ கடவையோ ?
அதாவது – நீ செய்த பாபங்களை நான்‌முந்துற என்னுடைய பொறுமைக் குரித்தாக்கி – அவ்வளவுமன்றிக்கே பின்பு: உன் பக்கல்‌ எனக்கு உண்டான வாத்ஸல்யத்தாலே “செய்த குற்றம்‌ நற்றமாகவே கொள்‌” என்று இவன்‌ ப்ரார்த்தனை. அடியார்‌ திறத்‌து அவன்‌
சொல்வது, ” செய்தாரேல்‌ நன்று செய்தார்‌” என்கிறபடியே அவை தன்னைப்‌ பாபமாக நினையாதே புண்ணியமென்று நினைப்பிடா நிற்க , இனி நீ சோகிக்கக்‌ கடவையோ? என்கை.
ஆக, இவ்வுத்தரார்த்தத்தில்‌ ஐந்து பதத்தாலும்‌, நிவர்த்தகனான ஈஸ்வர ஸ்வரூபத்தை அஹம்‌” என்ற பதத்தால்‌ சொல்லப்பட்டது. நிவர்த்யாஸ்ரயத்தையும்‌ பகவானால்‌ போக்குதற்குரிய பாபங்களுக்குச்‌ சார்பான சரணாகதனை த்வா’ என்ற பதத்தால்‌ சொல்லப்பட்டுள்ளது. ஸர்வ பாபேப்யோ பதத்தால்‌, போக்குதற்குரிய பாபங்களையும்‌,
மோக்ஷயிஷ்யாமி’ பதத்தால்‌ அவைகளைப்‌ போக்குகிற விதத்தையும்‌, மாஸூச:’ பதத்தால்‌ அதன்‌ காரணமான சோக நிவ்ருத்தியையும்‌ சொல்லிற்றாயிற்று.

இனி, இந்த ஸ்லோகத்திற்‌ சொன்ன விஷயங்களின்‌ சார்பான பொருள்களை மாமுநிகள்‌ அருளிச்‌ செய்கிறார்‌. இனி என்று தொடங்கி,
இனி, இந்த ஸ்லோகார்த்தத்தில்‌ சுவை ஒருவனுக்கு உண்டாகையில்‌ உள்ள அருமையையும்‌, இந்த ஸ்லோகந்தனக்கு இன்னதிலே நோக்கு என்னுமத்தையும்‌, இதில்‌ நம்பிக்கை உண்டாவதில்‌ அருமையையும்‌ இதில்‌ ஆசை உண்டாவதின்‌ அருமையையும்‌, ஈஸ்வரன்‌ இத்தை முதற்கண்‌ உபதேசியாமைக்குக்‌ காரணத்தையும்‌, வேத புருஷன்‌ ப்ரபத்திக்கு வேறான உபாயங்களை விதிப்பதற்குச்‌ காரணத்தையும்‌ உபாயாந்தரங்‌-களை (ப்ரபத்திக்கு வேறானவைகளை) உபாயமாக மேற் கொண்டொழுகாது விட்டு விடுமளவில்‌ குற்றமில்லை என்னுமத்தையும்‌, அவை தான்‌ வேற்று முகத்தால்‌தொடர்புடையதாகையாலே இயல்பாக விடப்படுவதன்‌று என்னுமிட்‌த்தையும்‌, பயன் கிடைத்தற்கு ஸாதநம்‌ இன்னது என்னுமிடத்தையும்‌ பலன் கிட்டுகைக்கு இவன்‌ பக்கல்‌ வேண்டுமவற்றையும்‌, ஈஸ்வரனுக்கு இவனுடைய நல் வினைகள்‌ தேவையற்றது என்னுமத்தையும்‌, இவ் வர்த்தத்தில்‌ நம்பிக்கை உண்டாகி உஜ்ஜிவித்தல்‌ இல்லை யாகில்‌ நசித்தலித்தனை என்னுமத்தையும்‌, இதில்‌ திட நம்பிக்கை இல்லாதவன்‌ இதில்‌ தொடர்பு கொண்டால்‌ விநாசத்துக்குரித்தென்னுமத்தையும்‌, இதற்குத்‌ தகுதியுடைய அதிகாரிகள்‌ இன்னா ரென்னுமத்தையும்‌ முறையே அருளிச்‌ செய்து தலைக்‌ காட்டுகிறார்‌ என்கிறார்‌ மாமுநிகள்‌.
அவற்றில்‌ முதலில்‌, இதில்‌ ஒருவனுக்கு சுவை பிறப்பதிலுள்ள அருமையைக்‌ காட்டுவதற்காசு ஒரு உதாரணத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -263- உய்யக்‌ கொண்டார்‌ விஷயமாக உடையவர்‌ அருளிச்‌ செய்த வார்த்தையை ஸ்மரிப்பது.
அதாவது – தத்வ நிர்ணயம்‌ பண்ணின உய்யக்‌கொண்டார்‌ என்பவர்‌ பக்தி நிஷ்டராயிருந்தார்‌. அவரை ப்ரபத்தி நிஷ்டராம்படிச்‌ செய்ய வேணுமென்று உடையவர்‌ இந்த ஸ்லோகார்த்தத்தை அருளிச்‌ செய்த அளவில்‌, ‘அர்த்தம்‌ அழகியதாயிருந்தது; ஆகிலும்‌ இத்தை மேற்கொண்டொழுகுவதில்‌ எனக்குச்‌ சுவை யில்லை’ என்ன, ‘வித்வானாகையால்‌ அர்த்தத்துக்கு இசைந்தாய்‌; பகவத்‌ கடாக்ஷ விசேஷமில்லாமையாலே உனக்கு ருசி பிறக்கவில்லை என்று அவர்‌ விஷயமாக உடையவர்‌ அருளிச்‌ செய்த வார்த்தையை நினைப்பது என்கை.

இந்த ஸ்லோகந்‌ தனக்கு இன்னதிலே நோக்கு என்னுமத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -264. இதுக்கு ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யத்திலே நோக்கு .
அதாவது – சாஸ்திரங்களெல்லாம்‌ ஒரு தலையும்‌, தான்‌ ஒரு தலையுமாயிருக்கிற இந்த ஸ்லோகத்துக்கு சாஸ்திரங்களில்‌ சொன்ன தர்மங்களை வாஸனையோடு
விடுவித்து, இந்தச்‌ சேதநனுக்குத்‌ தானே வேறொன்றையும்‌ எதிர்பாராமல்‌ தன்னை அடைதற்குத்‌ தடையான அனைத்துப்‌ பாபங்களையும்‌ தள்ளிப் போட்டுத்‌ தன்னை அடைவித்துக்‌ கொள்ளும்‌ ஸ்வாதீநமான அனைத்து (ப்ரவர்த்தகங்களையும்‌)
செயல்களையும்‌ உடைய ஈஸ்வரனுடைய ஸ்வாதந்த்ர்யத்திலே தாத்பரியம்‌ என்கை.

இதில்‌ விருப்பம்‌ உண்டாவதில்‌ அருமையை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -265. “இதுதான்‌ அநுவாத கோடியிலே” என்று வங்கிப்புரத்‌து நம்பி வார்த்தை –
அதாவது – இந்த ஸ்லோகார்த்தந்தான்‌ அநுவாத கோடியிலே என்று ஆப்த தமர்‌ – ப்ரமாணங்களில்‌ மெய்ம்மை கண்டவர்‌ வங்கிப்புரத்து நம்பி அருளிச்‌ செய்தது என்கை. அநுவாத கோடி – ஒருவர்‌ சொல்லி யிருக்கும்‌ வார்த்‌தையை இன்னொருவர்‌ அதையே மேற் கொண்டு சொல்லுதல்‌.

அது. எத்தாலே என்ன? அருளிச்‌ செய்கிறார்‌ ; ‘அர்ஜுனன்‌’ என்று தொடங்கி.
ஸூர்ணை -266-அர்ஜூநன்‌, க்ருஷ்ணனுடைய ஆனைத் தொழில்களாலும்‌, ருஷிகள்‌ வாக்யங்களாலும்‌, க்ருஷ்ணன் தன்‌ காரியத்திலே அதிகரித்துக்‌ கொண்டு
போருகையாலும்‌, இவனே நமக்குத்‌ தஞ்சமென்று துணிந்த பின்பு தன்னைப்‌ பற்றச்‌ சொல்லுகையாலே :-

அதாவது, இதுக்கு அதிகாரியான அர்ஜுநன்‌ இளமைப் பிராயந்தொடங்கி கிருஷ்ணனுடைய பொருந்தாதெல்லாம்‌ பொருந்தும்படி செய்யக்கூடிய செயல்களெல்லாம்‌ காட்டுமதான மனிதர்கள்‌ செய்யக்கூடிய செயல்களை மீறின செயல்களாலும்‌ “ஏஷ நாராயண: ஸ்ரீமாந்‌ க்ஷீரார்ணவ நிகேதந;, நாகபர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம்‌ புரீம்‌”
ஸ்ரீமான்‌ – பெரிய பிராட்டியோடு கூடின, க்ஷீரார்ணவ நிகேதந:– திருப்பாற்கடலை இருப்பிடமாகக்‌ கொண்ட,
ஏஷ: நாராயண:- இந்த க்ருஷ்ணன்‌, நாகபர்யங்கம்‌ ்‌ பாம்பணையான கட்டிலை, உத்ஸ்ருஜய – நன்றாகவிட்டு
மதுராம்புரீம்‌ – மதுரா பட்டணத்துக்கு, ஆகதோ ஹி – எழுந்தருளினாரன்றோ.
“புண்யா த்வாரவதீ யத்ர தத்ராஸ்தே மது ஸதெந : ஸாக்ஷாத்தேவ : புராணோ8ஸெள
ஸஹிதர்மஸ் ஸநாதந :
புண்யா
– பயனும்‌ ஸாதநமுமான,
த்வாரவதீ- துவராகையானது,
யத்ர – எவ்விடத்திலிருக்கிறதோ,
தத்ர – அவ்விடத்தில்‌,
மதுஸுூதந : – மது என்ற அஸூரனைக்‌ கொன்ற நாராயணன்‌,
அஸ்தே – இருக்கிறான்‌,
௮ணெள – இவர்‌,
ஸாக்ஷாத்‌ – ஸாக்ஷாத்‌ தேவனானவனும்‌, புராண :- அநாதியானவருமாகி,
ஸஹி – ப்ரஸித்தியான,
ஸநாதந தர்ம :– ஸநாதநமாயிருக்குமவர்‌ பழமையானவர்‌ என்றபடி.
“யத்ர நாராயணோ தேவ: பரமாத்மா ஸநாதந :, தத்ர க்ருத்ஸ்நம்‌ ஜகத்‌ பார்த்த தீர்த்தாந்யாயதநாநிச “
ஹே பார்த்த –
ஓ அர்ஜுநா,
யத்ர – எவ்விடத்தில்‌,
ஸநாதநஃ அநாதியாயும்‌,
பரமாத்மா – பரம்பொருளுமாயிருக்கிற,
நாராயணோ தேவ:-ஸ்ரீக்ருஷ்ண னிருக்கிறானோ,
தத்ர – அவ்விடத்தில்‌,
க்ருத்ஸ்நம்‌ ஜகத்‌ – அனைத்து உலகங்களும்‌,
தீர்த்தாநி – தீர்த்தங்களும்‌,
ஆயதநாநிச – அனைத்து தேவாலயங்களும்‌ இருக்கின்றன)
பவித்ராணாம்‌ ஹி கோவிந்த : பவித்ரம்‌ பரமுச்யதே, புண்யாநாமபி புண்யோ5$ ஸெள மங்களாநாஞ்சமங்களம்‌”
அஸெள கோவிந்த
-இந்த கோவிந்தன்‌, பவித்ராணாம்‌ ஹி -பவித்ரங்களுக்கெல்லாம்‌,
பரம்‌ பவித்ரம்‌ – மேலான புனிதப்‌ பொருளாக,
உச்யதே – சொல்லப்படுகிறார்‌.
புண்யாநாமபி புண்ய -புண்யங்களுக்கெல்லாம்‌ புண்யமும்‌,
மங்களாநாஞ்ச மங்களம்‌ –மங்களங்கட்கெல்லாம்‌ மங்களமும்‌ அவனே.
“யே ச வேத விதோ விப்ரா: யே சாத்யாத்‌ மவிதோ ஐநா :,
தே வதந்தி மஹாத்‌ மாநம்‌ க்ருஷ்ணம்‌ தர்மம்‌ ஸநாதநம்‌”
வேத வித:
வேதத்தை உணர்ந்தவர்களான, விப்ரா: பராஹ்மணர்கள்‌,
யேச – யாவருளரோ,
அத்யாத்மவித்‌ ஜநா :- வேதாந்த வித்யையை உணர்ந்த ஜநங்கள்‌,
யேச – யாவருளரோ,
தே – அவர்களெல்லாம்‌,
மஹாத்மாநம்‌ – பரமாத்மாவான, க்ருஷ்ணம்‌ – கிருஷ்ணனை,
ஸநாதநம்‌ தர்மம்‌ -(ஸநாதநமான)பழையதான தர்மஸ்வரூபியாக,
வதந்தி – சொல்லுகிறார்கள்‌.
“க்ருஷ்ண ஏவ ஹி லோகாநாமுத்பத் திரபி சாப்யய :, க்ருஷ்ணஸ்ய ஹி க்ருதே பூதம்‌ இதம்‌ விச்வம்‌ சராசரம்‌”
லோகாநாம்‌
– உலகங்கட்கெல்லாம்‌, உத்பத்திஅபிச -படைக்கின்றவனும்‌ காக்கின்றவனும்‌,
அப்யய: அழிக்கின்றவனும்‌,
க்ருஷ்ண : ஏவஹி – க்ருஷ்ணனே,
இதம்‌ விச்வம்‌ – இந்த எல்லாமான,
சராசரம்‌ – சேதநாசேதநங்களும்‌, க்ருஷ்ணஸ்‌ யக்ருதே – கிருஷ்ணனை உத்தேசித்தே,
பூதம்‌ – உண்டாயிற்று.
என்று இவை முதலானவைகளாலே உயர்ந்ததும்‌ தாழ்ந்ததுமான தத்துவங்களின்‌ உண்மை யுணர்ந்தவர்களான, ருஷிகள்‌ வாக்யங்களாலும்‌, இளமை தொடங்கி நகர இருப்போடு, வநத்திலிருப்போடு எவ்வித வித்யாசமுமில்லாத கிருஷ்ணன்‌, தன்‌ கார்யத்துக்குக்‌ கடவனாய்‌ நோக்கிக்‌ கொண்டு போகையாலும்‌, இவன்‌ சொல்லுகிற உபாயங்களெல்லாம்‌ நமக்குத்‌ தஞ்சமல்ல; இவனே நமக்குத்‌ தஞ்சம்‌ என்று துணிந்த பின்பு “அப்படியானால்‌ என்னைப் பற்று’ என்று சொல்லுகையாலே

இது தன்னை முதலிலே உபதேசிக்கமைக்குக்‌ காரணம்‌ அருளிச்‌ செய்கிறார்‌ புறம்பு என்று தொடங்கி-
ஸூர்ணை – 267 – புறம்பு பிறந்தது எல்லாம்‌, இவன்‌ நெஞ்சை சோதிக்கைக்காக.
அதாவது – “யச்ச்ரேய : ஸ்யாந்‌ நிச்சிதம்‌ ப்ரூஹி தந்மே சிஷ்யஸ்தேஹம்‌ சாதிமாம்‌ த்வாம்‌ ப்ரபந்நம்‌”
யத்‌ –
எதுவானது,
மே – எனக்கு,
ஸ்ரேய :– சிறந்த ஸாதநமாக,
நிச்சிதம்‌ – நிச்சயமாக,
ஸ்யாத்‌ – ஆகுமோ, தத்‌ – அதை,
ப்ரூஹி – சொல்லுக, தே – உனக்கு,
அஹம்‌ – நான்‌, சிஷ்ய: – மாணாக்கன்‌, த்வாம்‌ – உன்னை, ப்ரபந்தம்‌ – சரணமாக அடைந்த,
மாம்‌ – என்னை, சாதி -நல்லுணர்வையுடையவனாகச்‌ செய்வாய்‌. என்று இவனுக்கு உபாய உபதேசம்‌ செய்யத்‌ தொடங்குகிற அளவிலே, முதலிலே இத்தை உபதேசியாதே வேற்றுபாயங்களைப்‌ பரக்க நின்று உபதேசித்ததெல்லாம்‌ ‘இவன்‌ இவைகளிலேயே நிலை பெற்று- விடுவானோ அவைகளினுடைய குறைபாடுகளைப்‌ பார்த்து இப்போது சொன்ன இந்த உபாய உபதேசத்‌துக்கு அதிகாரியாமோ? என்று, இவன்‌ நெஞ்சை சோதிக்கைக்காக – என்கை.

ஆனால்‌, இவன்‌ வேண்டுமானால்‌ இவன்‌ நெஞ்சை சோதிப்பதற்காக வேற்றுபாயங்களை உபதேசித்தவனாகலாம்‌; வேத புருஷன்‌ அவற்றை விதிப்பான்‌ என்‌? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -268-வேத புருஷன்‌ உபாயாந்தரங்களை விதித்தது, கொண்டிப் பசுவுக்குத்‌ தடி கட்டி விடுவாரைப்‌ போலே, அஹங்கார மமகாரங்களால்‌ வந்த களிப்பு அற்று ஸ்வரூப ஜ்ஞாநம்‌ பிறக்கைக்காக.
அதாவது – ஆப்த தமன்‌ (மெய்ம்மை கண்டு அதையே சொல்லுபவன்‌) ஆன வேதபுருஷன்‌ “விஜ்ஞாய ப்ரஜீஞாம்‌ குர்வீத” (அறிவுடையனாய்க்‌ கேட்டல்‌, சிந்தித்தல்‌ முதலியவைகளால்‌ அந்தப்‌ பரமாத்மாவை அறிந்து நிரந்தர த்யானம்‌ பண்ணக் கடவன்‌) என்‌றும்‌, “ஓமித்யாத்மாநம்‌ த்யாயத’, ஆத்மாநம்‌ – பரமாத்வை, ஓம்‌ இதி- ஓம்‌ என்று த்யாயத – த்யாநம்‌ பண்ணுங்கள்‌. என்றும்‌, “ஆத்மாநமேவ லோகமுபாஸீத” ஆத்மாநம்‌ – ஸாதநமாகிய பரமாத்வையே, –லோகம்‌ – ஸாத்யமான பயனாக, உபாஸீத –உபாஸிக்கக்‌ கடவன்‌. என்றும்‌, “ஆத்மாவாஅரே த்ரஷ்டவ்ய ச ஸ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாஸிதவ்ய :”. அரே – ஏ சிஷ்யனே,-ஆத்மாவா-ஆத்மாவே, த்ரஷ்டவ்ய:-பார்க்கத் தக்கது, ஸ்ரோதவ்ய:– கேட்கத் தக்கது மந்தவ்ய :- மநநம்‌ செய்யத் தக்கது, நிதித்யாஸிதவ்ய: தர்சந ஸமாநாகார முண்டாம்படி தியானிக்கத் தக்கது, என்றும்‌ இவை முதலானவைகளாலே வேற்று உபாயங்களை மோக்ஷ ஸாதநமாக விதித்தது – பட்டி மேய்ந்து திரிகிற பசுவுக்கு தம் வழிப் படுத்துகைக்காகக்‌ கழுத்திலே தடியைக் கட்டி விடுவாரைப்‌ போலே, அஹங்கார மமகார வஸ்யனாய்க்‌ களித்துத்‌ திரிகிற இவனுக்கு, “ஜந்மாந்தர ஸஹஸ்ரேஷு தபோ ஜ்ஞாந ஸமாதிபி:” ஜந்மாந்தர ஸஹஸ்ரேஷு – ஆயிரம்‌ ஐந்மங்களில்‌, தபோ ஜ்ஞாந ஸமாதிபி – கர்ம ஜ்ஞாந பக்திகளினால்‌ அநுஷ்டாநம்‌ பண்ணி, என்கிறபடியே சரீரத்தை வருத்துமதான கர்மாநுஷ்‌டாநம்‌ இந்த்ரிய ஐயம்‌ முதலான அரிய செயல்களால்‌ தாக்குண்டு அந்தக்‌ களிப்பும்‌ போய்‌ பகவத்‌ பாரதந்த்ர்யமாகிற ஸ்வரூபஜ்ஞாதம்‌ பிறக்கைக்காக – என்கை.

“ஆனால்‌, இப்படி ஸ்வரூப ஜ்ஞாநம்‌ பிறக்கைக்குக்‌ காரணமான இவற்றை விட்டால்‌ குற்றம்‌ வாராதோ?’ என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -269 – ஸந்யாஸி முன்புள்ளவற்றை விடுமா போலே இவ்வளவு பிறந்தவன்‌ இவற்றை விட்டால்‌ குற்றம்‌ வாராது.
அதாவது கடைசியான ஆஸ்ரமத்திலே தொடர்பு கொண்டவன்‌ முன்புள்ள ஆஸ்ரம தர்மங்களை விடுமா போலே, ஸித்தோபாயத்துக்கு வேறான உபாயங்களினுடைய ஸ்வரூப விரோதித்வ முதலானவைகளாலே ஸித்தோபாயத்தில்‌ இழியும்‌ இவ்வளவான ஜ்ஞாந பரி பக்குவமுடையவன்‌ இந்த வேற்று உபாயங்களை விட்டால்‌ தோஷமில்லை – என்றபடி.

‘இவைதான்‌ வேறு ப்ரகாரங்களாலே தொடர்புண்டாகையாலே, இவற்றில்‌ இவன்‌ தனக்குக் கர்ம ஜ்ஞான பக்‌தியாகிற செயலை நேரே விட்டானென்பதில்லை
என்னுமத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -270 – இவன் தான்‌ இவை தன்னை நேராக விட்டிலன்‌-
வேறு ஸாதநங்களை விடுவது முன்னாக (பகவானான) ஸித்த ஸாதநத்தைக்‌ கைக் கொண்ட இந்த அதிகாரி தான்‌, கர்ம ஜ்ஞாந பக்திகளாகிற இவைகளைத் தன்‌ செயல்‌ மூலம்‌ இயல்பாக விட்டானென்‌பதில்லை.

அது எங்ஙனே? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -271 – கர்மம்‌ – கைங்கர்யத்திலே புகும்‌-ஜ்ஞாநம்‌ – ஸ்வரூப ப்ரகாசத்திலே புகும்‌; பக்தி – ப்ராப்ய ருசியிலே புகும்‌;ப்ரபத்தி – ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞாநத்திலே புகும்‌.
அதாவது தத்தம்‌ ஜாதிக்கும்‌ ஆஸ்ரமத்துக்கும்‌ பொருந்தியதாக இவன்‌ மேற் கொண்டொழுகும்‌ விதிக்கப்‌பெற்ற (கர்மம்‌) நற் செயல்‌ ஸாதநம்‌ என்ற புத்தி இன்றிக்கே பிறர்‌ விஷயத்தில்‌ கருணையாலே இவைகளை அனைவரும்‌ ஒழுக வேண்டுமென்று பிறருக்காகத்‌ தாம்‌ ஒழுகிக் காட்டுகையாலே, பகவானுச்கு மிகவும்‌ உகப்பாகையாலே, அவன்‌ ப்ரீதியை மூன்னிட்டுச்‌ செய்யும்‌ கைங்கர்யத்திலே உட் புகும்‌. “நுண்ணறிவு என்கிறபடியே தன் ஸ்வரூப ஜ்ஞாநம்‌ பெறும்‌ முகமாக பர ஸ்வரூபத்தை ஸாக்ஷாத்‌கரிக்கைக்கு உறுப்பான ஸுஷ்ம ஜ்ஞாநம்‌, ஸாதநம்‌ என்ற புத்தி கழிந்ததும்‌ ஸ்வரூபத்தினுடைய ப்ரகாசத்திலே உட் புகும்‌. “பக்த்யா த்வநந்யயா சக்ய.” (வேறிடத்திலில்லாது என்னிடமே கொண்டுள்ள சிறந்த பக்தியினாலே என்கிறபடியே பகவானை அடைவதற்கு ஸாதநமான பக்தியில்‌ அந்த ஸாதந புத்தி கழிந்தவாறே போஜநத்துக்குப்‌ பசி போலே பலமான கைங்கர்யத்துக்கு முன்‌ வரக் கடவதான ருசியிலே உட் புகும்‌.-பகவானை உபாயமாகக்‌ கொள்ளுகைக்கு அடையாளமான ப்ரபத்தி, ‘ஏக’ பதத்தில்‌ சொல்லுகிறபடியே ஸாதநம்‌ என்ற நினைவு கழிந்தவாறே அத்யந்த பரதந்த்ரமான வேறு தஞ்சமற்றதா யிருந்துள்ள ஸ்வரூபத்தினுடைய யதார்த்த ஜ்ஞாநத்திலே (உண்மை யறிவிலே) உட் புகும்‌ என்கை.

“பக்தி ப்ரபத்திகளிரண்டையும்‌ கழித்தால்‌ இவனுக்குப்‌ பலத்துக்கு ஸாதநமாவது எது? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -272- ஒரு பலத்துக்கு அரிய வழியையும்‌, எளிய வழியையும்‌ உபதேசிக்கையாலே, இவை இரண்டும்‌ ஒழிய பகவத்‌ ப்ரஸாதமே உபாயமாகக்‌ கடவது –
அதாவது, பகவானை யடைதலாகிற ஒரு பலத்துக்கு “ஜந்மாந்தர ஸஹஸ்ரேஷ தபோ ஜ்ஞாந ஸமாதிபி : நராணாம்‌ ஷீண பாபாநாம்‌ க்ருஷ்ணே பக்தி : ப்ரஜாயதே”. (ஜந்மாந்தர ஸஹஸ்ரேஷ – முன்புண்டான ஆயிரம்‌ பிறவிகளில்‌ செய்த கர்ம ஜ்ஞாந பக்தியினால்‌ சேதநர்களுடைய பாபங்கள்‌ நசிக்கப்‌ பெற்று கிருஷ்ணனிட த்தில்‌ பக்தி உண்டாகப்பெறுவர்கள்‌. ) என்கிறபடியே அநேக ஐந்மங்களிலே செய்கிற கர்ம ஜ்ஞாநம்‌ முதலான அங்கங்களாலே ஸாதிக்கப்படுவதாலே அரியதாயிருந்துள்ள பக்தி மார்க்கத்தையும்‌, ‘ஸர்வ தர்மாந்‌ பரித்யஜ்ய’ என்று கர்மம்‌ முதலான அனைத்திலும்‌ செயல்படுதலை தவிர்க்கக் கூடியதை முன்னிட்டுக்‌ கொண்டிருக்கிற ஒரே தடவை
செய்யக் கூடியதாகையாலே எளிதா யிருந்துள்ள ப்ரபத்தி மார்க்கத்தையும்‌ உபதேசிக்கையாலே, உபாயங்களில்‌ அருமை எளிமை என்பதில்‌ நோக்கின்றி அவற்றை ஒரு காரணமாகக்‌ கொண்டு பலந் தருபவனான இறைவனுடைய கருணையே முக்கியமாகையாலே பக்தி ப்ரபத்திகளாகிற இவை இரண்டும்‌ ஒழிய பகவானுடைய கருணையே உபாயமாகக்‌ கடவது: ‘ஆனாலும்‌, பலன்‌ பெறுகைக்கு இவன்‌ வேண்டாவோ?” (சேதனன்‌) பக்கலிலும்‌ ஏதேனும்‌ உண்டாக என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -273. பேற்றுக்கு வேண்டுவது – விலக்காமையும்‌ இரப்பும்‌ –
அதாவது, பலன்‌ பெறுகைக்குச்‌ சேதநன்‌ பக்கல்‌ உண்டாக வேண்டுவது – தன்‌ முயற்சியாலே அவன்‌ பண்ணும்‌ ரக்ஷணத்தை விலக்காதொழிகையும்‌, அது பயனாக அமைவதற்கு உறுப்பான ஜீவனுடைய ப்ரார்த்தனையும்‌ என்கை.

‘இங்ஙனன்றிக்கே, இவன்‌ பக்கலிலும்‌ சில நற் செயல்கள்‌ உண்டானால்‌ ஆகாதோ?’ அது உபாயமாக யிருக்கிற பகவானுக்கு வெறுப்புக்கிடம்‌ என்னுமத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -274- சக்ரவர்த்தித்‌ திருமகன்‌, பாபத்‌தோடே வரிலும்‌ அமையுமென்றான்‌; இவன்‌, புண்யத்‌தைப்‌ பொகட்டு வர வேணுமென்றான்‌.
அதாவது, “ராமோ விக்ஹவாந்‌ தர்ம“(ராமன்‌ தர்மமே வடிவானவன்‌) என்கிற சக்ரவர்த்தி திருமகன்‌ ” யதி வா ராவணஸ்‌ ஸ்வயம்‌” (ராவணனேயானாலும்‌) என்று ‘பாபிஷ்டனான ராவணனே யானாலும்‌ அழைத்து வாரும்‌’ என்கையாலே பாபம்‌ பலத்துக்குக்‌ காரணமென்று நினைக்கைக்கு உரிய தல்லாமையாலே, “பாபத்தோடே வரிலும்‌ கைக்‌ கொள்ளுகிறேன்‌” என்றான்‌; “க்ருஷ்ணம்‌ தர்மம்‌ ஸநாதநம்‌” (கிருஷ்ணனே அநாதியான பழமையான தர்மம்‌) என்கிற இவன்‌ “ஸர்வ தர்மாந்‌ பரித்யஜ்ய ” என்கையாலே பலத்துக்குக்‌ காரணமென்று
நினைத்தற் குரித்தான புண்யத்தை போட்டு விட்டு வரவேணுமென்றான்‌ என்கை.-ஆகையால்‌, வேறு ஒரு உபாயத்தின்‌ துணைக் கூட்டுதலை பொறுக்காதவனான உபாய பூதனுக்கு இவன்‌ பக்கல்‌ தன்‌ முயற்சி மூலமாக வரும்‌ நற் செயல்கள்‌ எம்பெருமானுக்கு இஷ்டமில்லாதது என்று கருத்து.

இவ் வர்த்தத்தைக் கேட்டு அதன் படியே அநுஷ்டிக்க இழிந்தவனுக்கு -ஆஸ்திகனாய்‌ உஜ்ஜீவித்தல்‌ அல்லது நாஸ்திகனாய்‌ நசித்தல்‌ ஒழிய, நடுவில்‌ நிலை யில்லை என்பதைப்‌ பூர்வாசார்ய வசநத்தால்‌ அறிவிக்கிறார்‌.
ஸூர்ணை -275- “ஆஸ்திகனாய்‌ இவ் வர்த்தத்தில்‌ ருசி விஸ்வாஸங் களுடையனாய்‌ உஜ்ஜிவித்தல்‌, நாஸ்திகனாய்‌ நசித்தல்‌ ஒழிய நடுவில்‌ நிலை யில்லை” என்று பட்டர்க்கு எம்பார்‌ அருளிச்‌ செய்த வார்த்தை.
அதாவது – ‘இவ் வர்த்தத்தை மேற் கொண்டவன்‌ பகவத்‌ ப்ரபாவத்தால்‌ “இது ஸத்யம்‌’ என்ற சாஸ்த்ர நம்பிக்கை யுடையவனாய்‌ இவ் வர்த்தத்தில்‌ சுவையும்‌ “இது தப்பாது’ என்கிற விஸ்வாஸ முடையவானாய்‌ உஜ்ஜீவித்தல்‌; சாஸ்த்ரங்களெல்லாம்‌ ஒரு தலையும்‌ இது ஒரு தலையுமாய்‌ இப்படி இருப்ப தொன்றுண்டோ? என்று நாஸ்திகனாய்‌ இத்தை அநாதரித்து நசித்தல்‌ தவிர, நடுவில்‌ நிலை யில்லை’ என்று ஸகல சாஸ்த்ர பாரங்கதரான பட்டருக்கு உண்மை உணர்ந்ததையே சொல்லும்‌ உண்மை யறிந்தவரான எம்பார்‌ அருளிச்‌ செய்த வார்த்தை – என்கை.

மஹா விஸ்வாஸமான நம்பிக்கை யற்றவனுக்கு இதில்‌ தொடர்பு பிறப்பு இறப்பாகிற (விநாசத்துக்குரித்தாம்‌) அழிவுக்கு உரியதாம்‌’ என்னுமத்தை உதாரணத்தோடு அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -276- வ்யவஸாயம்‌ இல்லாதவனுக்கு இதில்‌ அந்வயம்‌, ஆமத்தில்‌ போஜநம்‌ போலே ,
அதாவது – இதில்‌ சொல்‌லுகிற விட வேண்‌டியவை, பற்ற வேண்டியவை களுக்கீடான நம்பிக்கை இல்லாதவனுக்கு இதில்‌ உண்டான தொடர்பு, அஜீரண நிலையில்‌ செய்த போஜநம்‌ மரணத்துக்குச்‌ காரணமாமா போலே அழிவாகிற மறு பிறவிக்குக்‌ காரணமாய்‌ முடியுமென்கை.

இதற்கு அதிகாரிகள்‌ இன்னாரென்னுமத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -277- “விட்டு சித்தர்‌ கேட்டிருப்பார்‌” என்கிறபடியே அதிகாரிகள்‌ நியதர்‌.
“செம்மை யுடைய திருவரங்கர்‌ தாம்‌பணித்த மெய்ம்மைப்‌ பெரு வார்த்தை விட்டு சித்தர்‌ கேட்டிருப்பர்‌’ என்று ‘முக் கரணங்களாலும்‌ செவ்வியராய்‌, அவற்றை செயல் மூலம்‌ காட்ட வேணுமென்று கோயிலிலே அரவணையிற் கண்‌ வளர்ந்தருளினவர் தாம்‌, அர்ஜுநனைக்‌ கருவியாகக்‌ கொண்டு திருத் தேர்த் தட்டிலே நின்று அருளிச் செய்த யதார்த்தமுமாய்‌ (உண்மையான அர்த்தத்தை யுடையதாய்‌) சீரியதுமாய்‌ சுலபமுமான “மாமேகம்‌ சரணம்‌
வ்ரஜ என்கிற வார்த்தையைப்‌ பெரியாழ்வார்‌ கேட்டு, “அதன் படியே ஒழுகுவார்‌’
என்கிறபடியே இவ் வர்த்ததுக்கு அதிகாரிகள்‌ இது கேட்டால்‌ இதன் படியே நியதமாக ஓழுகுவார்கள்‌ என்கை.

இவ்வர்த்தத்தின்‌ படியே ஓழுகுமவர்களான ஆழ்வார்களுடைய அருளிச்‌ செயலில்‌ இதுக்கு அர்த்தமாக அநுஸந்திக்கப்‌ படுமவற்றை அருளிச்‌ செய்து இது தன்னை நிறைவு பெறுத்துகிறார்‌.
ஸூர்ணை -278 – “வார்த்தை யறிபவா்‌” என்கிற பாட்டும்‌, “அத்தனாகி” என்கிற பாட்டும்‌ இதுக்கு அர்த்தமாக அநுஸந்தேயம்‌
அதாவது – “வார்த்தை யறிபவர்‌ – பேர்த்த பிறப்போடு நோயொடு மூப்பொடு இறப்பவை பேர்த்துப்‌ பெருந்துன்பம்‌ வேரற நீக்கித்‌ தன்‌ தாளின்‌ கீழ்ச்‌ சேர்த்து அவன்‌ செய்யும்‌ சேமத்தை எண்ணித்‌ தெளிவுற்று மாயவற்‌காளன்றி ஆவரோ?” என்று, “மா மேகம்‌ சரணம்‌ வ்ரஜ – ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி” என்ற நல் வார்த்‌தையை அறியுமவர்கள்‌, பரணிக் கூடு வரிந்தாற்போலே இவ் வாத்மாவைச்‌ சூழ்ந்து பொதிந்து கொண்டு கிடக்கிற
ஐந்மங்களோடும்‌, அவை புகுந்த விடத்தே புகக் கடவதான வ்யாதியோடும்‌ அப்படி யிருந்தாலும்‌ பரவாயில்லை, நாம்‌ சில நாள்‌ வாழலாம்‌ என்று இருக்க முடியாதபடி திடீரென்று இடி விழுந்தாற்போலே வரக் கூடிய நரையும்‌ மூப்போடு கூடிய கிழட்டு சரீரத்தில்‌ உண்டாகக்கூடிய துன்பமும்‌, அங்ஙனே யாகிலும்‌ இருக்க வொண்ணாதபடி (அதையும்‌ பொறுத்துக்‌ கொண்டு இருந்தாலும்‌,) அடுத்தபடி வரக் கூடிய மரண அவஸ்தையும்‌, இப்படிப்பட்ட இவனுக்கு விருப்பமற்ற அழிவைத் தரக் கூடிய அவற்றை யுத்தியாகத்‌ தொழில்‌ செய்ய வல்லவர்‌ நெடுஞ்சுவர்‌ தள்ளுமா போலே தள்ளி, அவை போன பிறகு வரக் கடவதான கைவல்யமாகிற பெருந் துன்‌பத்தை நிர் மூலமாகப்‌ போக்கி, பாத தூளி போலே தன்‌ திருவடிகளில்‌ கீழே சேரும்படி. பண்ணி மீண்டு வருகை இல்லாதபடி அவன்‌ செய்யும்‌ சேமத்தை எண்ணி மஹா விஸ்வாஸமுடையராய்க்‌ கொண்டு தாங்கள்‌ தஞ்சமென்று
பற்றுதற்குரியவனாய்‌ விரோதிகளைப்‌ போக்க வல்ல வியப்புக்குரிய எம்பெருமானைத்‌ தவிர வேறொருவர்க்கு ஆளாவரோ? – என்று நம்மாழ்வார்‌ அருளிச்‌ செய்த “வார்த்தை யறிபவர்‌” என்கிற இந்தப்‌ பாட்டும்‌”முத்தனார்‌ முகுந்தனார்‌ ஓத்தொவ்வாத பல்பிறப்பொழித்து நம்மை
யாட்‌ கொள்வான்‌ – அத்தனாகி அன்னையாகி ஆளும்‌
எம்பிரானுமாய்ப்‌ புகுந்து – நம்‌ முள்‌ மேவினார்‌; ஏழை
நெஞ்சமே! எத்தினாலிடர்க்‌ கடல்‌ கிடத்தி”
என்று ‘புன்மையாதும்‌ தீண்டாதவராகையாலே ஸம்ஸார வாசனையும்‌ தொடாதவராய்‌, முக்தியை அருளக் கூடியவரும்‌அனைத்துடம்புகளில்‌ உறைவதான ஆத்மாக்களும்‌, ஜ்ஞாநத்தால்‌ ஒருபடிப்பட ஓத்து தேவர்‌, மனிதர்‌, விலங்கு தாவரம்‌ ஆகிய ரூப பேதத்தாலே ஒவ்வாமலிருக்கும்‌ – பலவகைப்பட்டபிறவிகளைப்‌ போக்கி, நித்ய .ஸம்ஸாரிகளாய்க் கிடந்த)நிரந்தரமாக பல பிறவிகளில்‌ கிடந்த நம்மை நித்ய ஸுரிகளைக்‌ கொள்ளும்‌ அடிமையைக்‌ கொள்ளுகைக்காகநன்மையே விளைவிக்கும்‌ பிதாவாயும்‌ பிரியமே விளைவிக்கும்‌ மாதாவாயும்‌ இருந்து அடிமை கொள்ளக் கடவ நம்முடைய ஸ்வாமியாயும்‌ இப்படி எல்லாவித உறவுமாய்‌, நம்முடைய தாழ்வையும்‌ தம்முடைய பெருமையையும்‌ பாராதே நம்முடைய பாரமனைத்தும்‌ தாமே ஏறிட்டுக்‌ கொண்டு செய்வாராகத்‌ தாழ்வுக்குரிய நம்முள்ளே புகுந்து ஒரு நீராகப்‌ பொருந்தினார்‌; அறிவிலியான நெஞ்சே! நம்முடைய நன்மையை அறிகைக்கு நாம்‌ முற்றின அறிவாளியோ? அவன்‌ அறிவில்லாதவனோ ? நமக்கு நாமே நன்மையைச்‌ செய்து கொள்ள ஆற்றலுடையவரோ, அவன்‌ ஆற்றலில்லாதவனோ, நாம் நம்‌ கார்யஞ்‌ செய்து கொள்ள உரியவரோ, அவன்‌ உரிமை யற்றவனோ, தன்‌ மேன்மை பாராதே தாழ நின்று நமக்கு உதவி புரிபவனா யிருக்க எதற்காக நீ துன்பக் கடலில்‌ கிடக்கிறது? என்று திருமழிசைப் பிரான்‌ அருளிச்‌ செய்த
அத்தனாகி” என்கிற பாட்டும்‌ இந்த ஸ்லோகத்துக்கு அர்த்தமாக நினைக்கக் கடவது என்கிறார்‌.
(அரிமா நோக்கம்‌) ஆக, இந்த சரம ஸ்லோகத்தால்‌ 1-பற்றுகைக்கு அங்கமாகக்‌ கடவதான கர்ம ஜ்ஞான பக்திகளாகிற தர்ம விசேஷங்களையும்‌, 2-அந்தத்‌ தர்மங்களை விடுவதினுடைய விதத்தையும்‌, 3-அந்தத்‌ தர்மங்களை விடுவதற்கு முன்பாகப்‌ பற்றும்‌ பகவத்‌ விஷயத்தினுடைய எளிமை முதலான குணங்களோடு கூடிய குணத்தின்‌ சிறப்பையும்‌, 4-அந்த குணங்களோடு கூடின பொருளான எம்பெருமானுடைய வேறு துணையைப்‌ பொறாத தனக்குத் துணையாக வேரொன்றை விரும்பாத தன்மையையும்‌, 5-பிறிதொன்றையும்‌ விரும்பாத எம்பெருமானுடைய தஞ்சமாகுந்‌ தன்மையையும்‌, 6-அவனையே உபாயமாகப்‌ பற்றுகையையும்‌, 7-இப்படிப் பற்றின உபாயத்தினுடைய (ஜஞான சக்தியாதி) அறிவாற்றல்‌ முதலான குணங்களின்‌ கூட்டத்தையும்‌, 8-அந்தக்‌ குணங்களோடு கூடியவனான எம்பெருமானிடத்தில்‌ தன்னை ஸமர்ப்பித்த அதிகாரியையும்‌,. 9-இந்த அதிகாரிக்கு விரோதியான பாபக்‌ கூட்டத்தையும்‌, 10-அந்தப்‌ பாபத்தை போக்கக் கூடிய விதத்தையும்‌, 11-அந்தப்‌ பாவத்தைப்‌ போக்கும்‌ எம்பெருமானை பற்றின அதிகாரியினுடைய பாரமற்ற தன்மையையும்‌ இது வரை இந்தச்‌ சரம ஸ்லோகத்தால்‌ சொல்லப்பட்டதாகும்‌.

மணவாள மாமுநிகள்‌ அருளிச்செய்த முமுக்ஷ ப்படி வ்யாக்யானத்தின்‌ தெளிவுரை முற்றுப்‌ பெற்றது.

———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ முமுஷுப்படி -தெளிவுரை-ஸ்ரீ த்வய ப்ரகரணம்‌-

November 17, 2025

முதல்‌ மந்த்ரமான திருமந்த்ரத்தினுடைய அர்த்தத்தை அருளிச்‌ செய்த பிறகு, அதில்‌ இரண்டாம்‌ பதத்தாலும்‌ மூன்றாம்‌ பதத்தாலும்‌ சொன்ன உபாய உபேயங்களை விரிவாகச்‌ சொல்லா நின்றுள்ள த்வயத்தினுடைய அர்த்தத்தை அருளிச்செய்கிறார்‌-முன்பு அருளிச்‌ செய்த ஸ்ரீய:பதிப்படி யாத்ருச்சிகப்படி பரந்தபடி. என்ற மூன்று ப்ரபந்தங்களிலும்‌ திருமந்த்ர அர்த்தத்துக்குப்‌ பிறகு சரம ஸ்லோக அர்த்தத்தை அருளிச்‌ செய்து பின்பு த்வயார்த்தம்‌ அருளிச்‌ செய்தவர்‌, இப்போது த்வயத்தின்‌ அர்த்தத்தை முன்னம்‌ அருளிச்‌ செய்வானென்‌? என்னில்‌, இரண்டு விதங்களும்‌ அருளிச்‌ செய்யலா யிருக்கையாலே. பெரியவாச்சான்பிள்ளை, வாதிகேஸரி அழகிய மணவாளச்சீயர்‌ முதலானாரும்‌ இந்த விதமாக வன்றே அருளிச்‌ செய்தது. இந்த இரண்டு விதங்களுக்கும்‌ கருத்து என்ன? என்னில்‌: சரம ஸ்லோகார்த்தம்‌ முன்னாகவும்‌, த்வயார்த்தம்‌ பின்னாகவும்‌ சொன்னது, சரம ஸ்லோகத்தில்‌ “சரணம்‌ வ்ரஜ -உபாயமாகப்‌ பற்று” என்று விதிக்க, த்வயத்தில்‌ “சரணம்‌ ப்ரபத்யே’ என்று அநுஷ்டானத்தை மேற் கொண்டு ‘உபாயமாகப் பற்றுகிறேன்‌’ என்று சொல்லிப்‌ பற்றுகையாலே, விதிக்கவும்‌ அதை மேற் கொண்டு பற்றுகையுமா யிருக்கையாலே, இப்படி விதி முன்னாகவும்‌ -அதநுஷ்டாநம்‌- மேற்கொண்டொழுகுவது பின்பாகவும்‌ முறையாகையாலும்‌ சரம ஸ்லோகம்‌ முன்பும்‌ த்வயம்‌ பின்பும்‌ சொன்னதாம்‌.திருமந்த்ரம்‌ பயனைச்‌ சொல்லுமதாய்‌, சரம ஸ்லோகம்‌ அந்தப்‌ பயனைத்‌ தரும்‌ சாதனத்தைச்‌ சொல்லு மதாயிருக்கையாலே முன்‌ மூன்று ப்ரபந்தங்களில்‌ சரம ஸ்லோகம்‌ முன்னும்‌ த்வயம்‌ பின்னுமாகச்‌ சொன்னார்‌-இந்த முமுஷுப்படியில்‌, திருமந்த்ரார்த்தம்‌ த்வயார்த்தம்‌ சரம ஸ்லோகார்த்தம்‌ இப்படிச்‌ சொல்லியிருப்‌பதாவது: திருமந்திரத்தில்‌ நடுப் பதத்துக்கும்‌ மூன்றாம்‌ பதத்துக்கும்‌ இரண்டு வாக்கியங்களை யுடைய த்வயம்‌ விவரணமாய்‌, அந்த த்வயத்துக்கு சரம ஸ்லோகத்தில்‌, முற்பாதி பிற்பாதி இரண்டு வாக்கியங்களை யுடைய சரம ஸ்லோகம்‌ விவரணமாய்‌ இருக்கும்‌ ஆகாரத்தாலே அப்படி சொல்லப்பட்டது. இப்படி இரு முறைகளும்‌ சொல்லலாயிருக்கை யாகையாலே, முன்‌ மூன்று ப்ரபந்தங்களும்‌ சரம ஸ்லோகம்‌ முன்னாக த்வயம்‌ பின்னாகச்‌ சொன்னவர்‌, மற்ற முறையும்‌ சொல்ல வேண்டிய தாகையாலே இந்த ப்ரபந்தத்தில்‌ த்வயம்‌ முன்னாகச்‌
சொல்லுகிறார்‌ என்றபடி.

அதில்‌ முதலிலே வைஷ்ணவனாய் யிருப்‌பானொருவனுக்குத்‌ தன்‌ அதிகாரார்த்தமாக அவச்யம்‌ மேற் கொண்டொழுக வேண்டியவற்றைச்‌ சுருங்கவும்‌, தெளிவாகவும்‌ அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -116-புறம்புண்டான பற்றுக்களை யடைய வாசனையோடே விடுகையும்‌, எம்பெருமானையே தஞ்சமென்று பற்றுகையும்‌, பேறு தப்பாதென்று துணிந்திருக்கையும்‌, பேற்றுக்கு த்வரிக்கையும்‌, இருக்கும்‌ நாள்‌ உகந்தருளின நிலங்களிலே ப்ரவணனாய் குணாநுபவ கைங்கர்யங்களே பொழுது போக்காகையும்‌, இப்படி இருக்கும்‌ ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ ஏற்ற மறிந்து உகந்திருக்கையும்‌, திருமந்திரத்திலும்‌ த்வயத்திலும்‌ நியதனாகையும்‌, ஆசார்ய ப்ரேமம்‌ கனத்திருக்கையும்‌, ஆசார்யன்‌ பக்கலிலும்‌ எம்பெருமான்‌ பக்கலிலும்‌ க்ருதஜ்ஞனாய்ப்‌ போருகையும்‌, ஜ்ஞாநமும்‌, விரக்தியும்‌, சாந்தியும்‌ உடையவனா யிருக்கும்‌ பரம ஸாத்விகனோடே ஸஹவாஸம்‌ பண்ணுகையும்‌ வைஷ்வண அதிகாரிக்கு அவஸ்யாபேஷிதம்‌.

புறம்புண்டான பற்றுக்களை யடைய வாசனையோடே விடுகையாவது, “பிதரம்‌ மாதரம்‌ தாராந்‌ புத்ராந்‌ பந்தூந்‌ ஸகீந் குரூந்‌, ரத்நாநி தநதாந்யாநி க்ஷேத்ராணி சக்ருஹாணி ச , ஸர்வ தர்மாம்ச்ச ஸந்த்யஜ்ய ஸர்வ காமாம்சச ஸாக்ஷராந்‌,
லோக விக்ராந்த சரணெள சரணம்‌ தேவ்ரஜம்‌ விபோ”
பிதரம்‌
– பிதாவையும்‌,
மாதரம்‌ – மாதாவையும்‌,
தாராந்‌-மனைவியையும்‌,
புத்ராந்‌-பிள்ளைகளையும்‌,
பந்தூந்‌– பந்துக்களையும்‌,
ஸகீந்‌-ஸ்நேஹிதர்களையும்‌,
குரூந்‌-ஆசார்யா்‌களையும்‌,
ரத்நாநி- ரத்தினங்களையும்‌,
தந தாந்யாநி- -தந தாந்யங்களையும்‌, க்ஷேத்ராணிச-வயல்களையும்‌,
க்ருஹாணிச-வீடுகளையும்‌,
ஸர்வ தர்மாம்ச்ச (உபாயாந்தரங்‌களான) அனைத்து தர்மங்களையும்‌,
ஸாக்ஷ்ராந்‌ – கைவல்யத்தோடு கூடிய, ஸர்வ காமாம்ச்ச – (மற்ற) அனைத்துப் பயன்‌களையும்‌,
ஸந்த்யஜ்ய-நன்றாக விட்டு,
விபோ-ஸ்வாமி!
தே-தேவரீருடைய,
லோக விக்ராந்த சரணெள-உலகளந்த திருவடிகளையே,
சரணம்‌– உபாயமாக,
அவ்ரஜம்‌-பற்றினேன்‌.
இவை முதலானவற்றின்‌ படியே எப்பெருமானைத்‌ தவிர்ந்த விஷயங்களில்‌ பற்றுக்களெல்லாவற்றையும்‌, மீண்டும்‌ வாராதபடி. வாசனையோடு விடுகை.

எம்பெருமானையே தஞ்சமென்று பற்றுகையாவது, வேறொன்று தஞ்சமென்கிற நினைவு கலசாதபடி, காரணமில்லாது இயல்பாகவே ரக்ஷகனான ஸர்வேஸ்வரனையே தஞ்சமாகப்‌ பற்றுகை.
இந்த இரண்டு வாக்யத்தாலும்‌ சரம ஸ்லோகத்தில்‌ முற்‌பாதியில்‌ அர்த்தத்தத்தைச்‌ சொல்லுகிறது. எவ்வாறெனில்‌? புறம்புண்டான பற்றுக்களை யடைய என்று ஸர்வ தர்மாந்‌’
என்கிற பதத்தில்‌ அர்த்தத்தையும்‌, வாசனையோடே விடுகையும்‌ என்று ‘பரித்யஜ்ய’ என்கிற பதத்திலர்த்தத்தையும்‌, எம்பெருமானை என்று ‘மாம்‌’ என்கிற பதத்தில்‌ அர்த்தத்தையும்‌ -‘ஏ’ என்ற ஏவகாரத்தாலே ஏக’ பதார்த்தத்ததையும்‌, தஞ்சம்‌ என்கையாலே ‘சரண பதத்தில்‌ அர்த்தத்தையும்‌, பற்றுகையும்‌ என்று வ்ரஜ பதத்திலர்த்தத்தையும்‌ அடைவே சொல்லுகையாலே.

பேறு தப்பாது என்று துணிந்திருக்கையாவது, -உபாயத்தின்‌ எளிமையையும்‌ பெற வேண்டிய பலத்தில்‌ நம்பிக்கை கொள்வதில்‌ உண்டான அருமையையும்‌, தன்‌ திறத்துண்டான குறைபாடுகளையும்‌, இதன்‌ மூலமாக வரும்‌ மூன்று ஐயங்களும்‌ இல்லாமல்‌, பலம்‌ தப்பாமல்‌ கிடைக்கு மென்று நம்பிக்கை யோடிருக்கை

பேற்றுக்கு த்வரிக்கையாவது: இப்படி நம்பிக்கையோடிருந்து பலம்‌ கிடைத்த போது கிடைக்கட்டுமென்று ஆறி இராமல்‌ “மாக வைகுந்தம்‌ காண்பதற்கு என்‌ மனம்‌ ஏகமெண்ணும்‌” என்று “தாவி வையங் கொண்ட தடந்தாமரைகட்கே கூவிக்‌ கொள்‌
ளுங் காலம்‌ இன்னங் குறுகாதோ?’
என்கிறபடியே முறைப்படி.வரட்டும்‌ என்று பொறுத்திருக்காமல்‌ பதறுகை.

இருக்கும்‌ நாள்‌ உகந்தருளின நிலங்களிலே ப்ரவணனாய்‌ குணா நுபவ
கைங்கர்யங்களே பொழுது போக்காகையாவது:
-பரமபதத்திலே போய்‌ பகவதநுபவ கைங்கர்யங்களைப்‌ பண்ணுகையாகிற பேற்றில்‌ வேட்கை நடவா நிற்கச்‌ செய்தேயும்‌, இந்தச்‌ சரீரத்தோடே இருக்கும்‌ நாள்‌ ‘தானுகந்த ஊர்‌” என்கிற படியே எம்பெருமான்‌ உகந்து கோயில்‌ கொண்டுள்ள திவ்விய தேசங்களிலே “கண்டியூரரங்கம்‌ மெய்யம்‌ கச்சி பேர் மல்லை’ என்று மண்டுகையாகிற வேட்கை யுடையவனாய்‌, அவ்வோ திவ்விய தேசங்களிலே
நிற்கிறவனுடைய கல்யாண குணாநுபவமும்‌, அதன்‌ மூலமாக முக் கரணங்களாலும்‌ அவன்‌ விஷயத்தில்‌ செய்யுங்‌ கைங்கர்யமுமே காலக் கழிவுக்கு விஷயமாம்படி, இருக்கை.

இப்படி. இருக்கும்‌ ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ ஏற்றமறிந்து உகந்திருக்கையாவது: கீழ்ச்‌ சொன்ன இந்த நிலைமைகளெல்லாம்‌ உடையராயிருக்கும்‌ ஸ்ரீவைஷ்ணவர்களைக்‌ கண்டால்‌ நெருப்புச்‌ சட்டியில்‌ தாமரை பூத்தாற் போலே இந்த இருள்‌ தருமா ஞாலத்திலும்‌ இப்படியும்‌ சிலருண்டாவதே! என்று அவர்கள்‌ வைபவமறிந்து அவர்களளவில்‌ பேரன்புடையனா யிருக்கை.-கீழ்ச்சொன்னவை எல்லாம்‌ உண்டானாலும்‌ இது உண்டாவதரிதா யிருப்ப தொன்றன்றோ.

திருமந்த்ரத்திலும்‌ த்வயத்திலும்‌ ‘ நியதனாகையாவது:- வேறு மந்த்ரங்களின்‌ திறத்தில்‌ மறந்தும்‌ போகாதே விட வேண்டிய வற்றையும்‌, பற்ற வேண்டிய வற்றையும்‌ தெளிய அறிவிக்குந்‌ திருமந்த்ரத்திலும்‌, அதன்‌ அர்த்தத்துக்கு விவரணமான த்வயத்திலும்‌ நிலைத்த. நிஷ்டை யுடையனாகை.

ஆசார்ய ப்ரேமம்‌ கனத்திருக்கையாவது:– கீழ்ச்‌சொன்ன நிலைமைகளெல்லாம்‌ உபதேசத்தாலே தனக்குண்‌டாக்கின ஆசார்ய விஷயத்தில்‌, “யஸ்ய தேவே பரா பக்திர்‌ யதா தேவே ததா குரெள”,
யஸ்யதேவே
– யாதொருவனுக்குத்‌ தெய்வத்தினிடத்தில்‌,
பரா பக்தி:- மேலான பக்தி (இருக்கிறதோ), ததா – அப்படியே,
யதா தேவே – அந்தத்‌ தெய்வத்திற்குச்‌ சமமான,
குரெள-ஆசார்யனிடத்திலும்‌,
பரா பக்தி: மேலான பக்தி இருக்கின்றதோ, தஸ்ய மஹாத்மந:- அந்த மஹாத்மாவுக்கு,
கதிதா:– சொல்லப்பட்ட,
ஏதே அர்த்தா:- இந்த அர்த்தங்கள்‌,
ப்ரகாசந்தே – ப்ரகாஸியா நிற்கும்‌. என்கிறபடியே ப்ரேமம்‌ மிகுந்திருக்கை.

ஆசார்யன்‌ பக்கலிலும்‌, எம்பெருமான்‌ பக்கலிலும்‌ க்ருதஜ்ஞனாய்ப்‌ போருகை யாவது:– நித்ய ஸம்ஸாரியான தன்னை நித்யஸூரிகள்‌ நிலைமைக்குத்‌ தகுந்தவனாம்‌ படி. ‘இரும்பைப்‌ பொன்னாக்குவாரைப்‌ போலே’ திருத்தின ஆசார்யன்‌ பக்கலிலும்‌ தன் திறத்‌து த்வேஷமின்மை முதலானவைகளை உண்டாக்கிக்‌ கொண்டு வந்து ஆசார்யன்‌ திறத்துச்‌ சேர்த்த எம்பெருமான்‌ பக்கலிலும்‌ நன்றி பாராட்டும்‌வனாகை.

ஜ்ஞாநமும்‌ விரக்தியும்‌ சாந்தியும்‌ உடையனாயிருக்கும்‌ பரம ஸாத்விகனோடே ஸஹவாசம்‌ பண்ணுகையாவது – தான்‌ கலங்கினாலும்‌ கலங்காமல்‌ நோக்குகைக்கு உறுப்பாகவும்‌, கீழ்ச் சொன்ன நிலைமைகள்‌ தனக்கு மேம்படுகைக்கு உறுப்பாகவும்‌, (தத்வ யாதாத்ம்ய ஜ்ஞாநமும்‌) உண்மையான வற்றை உள்ளபடி. அறிகிற அறிவும்‌, தகாதவற்றில்‌ வைராக்யமும்‌ இவை இரண்டும்‌ நமக்குண்டென்று இறுமாப்பற்றிருக்கையாகிற சாந்தியும்‌ உடையனாயிருக்கும்‌ பரம ஸத்வ நிஷ்டனாயிருப்பான்‌ ஒரு பாகவதனோடே
ரசித்துப்‌ போருகை வைஷ்ணவாதிகாரிக்கு அவஸ்யாபேஷிதம்‌ என்றது, இவை இத்தனையும்‌ வைஷ்ணவன்‌ என்றிருப்‌பான்‌ ஒரு அதிகாரிக்கு அவசியம்‌ உண்டாக வேணுமென்கை –

இப்படி இருக்கும்‌ இவனுக்கு அநுஸந்திக்க வேண்டியதை வகுத்து அருளிச்‌ செய்கிறார்‌-
ஸூர்ணை -117-இந்த அதிகாரிக்கு ரஹஸ்ய த்ரயமும்‌ அவஸ்யம் அநு ஸந்தேயம்‌.
கீழ்ச்‌ சொன்ன நிலைமைகளை யுடையனாயிருக்கும்‌ இவ் வதிகாரிக்கு, அந்த அறிவு வர்க்கங்களை வளர்ப்பதான்‌ இந்த மூன்று மந்த்ரங்களுமே அர்த்தத்தோடு அறிகைக் குரித்தான நினைவிற்கு விஷயமாகக்‌ கொள்ள வேண்டும்‌-

இனி, த்வயத்திற்‌ சொல்லுகிற சிறப்புடைமையை அறிவிக்கைக்காக, சாஸ்திரம்‌ திருமந்த்ரம்‌ சரம ஸ்லோகம்‌ இவைகளில்‌ அருளிச்‌ செய்கிற விதங்களைச்‌ சொல்லிக்‌ கொண்டு போய்‌ த்வயார்த்தச்‌ சிறப்பை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -118- எல்லா ப்ரமாணங்களிலும்‌ தேஹத்‌தாலே பேறென்கிறது;திருமந்த்ரத்தில்‌ ஆத்மாவாலே பேறென்கிறது; சரம ஸ்லோகத்தில்‌ ஈஸ்வரனாலே
பேறென்கிறது; த்வயத்தில் பெரிய பிராட்டியாராலே பேறென்கிறது .

சேதனனுடைய சரீரத்தோடு யுள்ள நிலையிலே நோக்கான ஸகல சாஸ்த்ரங்களிலும்‌ சாதனத்தைக்‌ கொண்டு ஒழுகுவதற்கு ஏற்றதான தேகத்தாலே ப்ரயோஜன லாபமென்கிறது. தேகத்தைத்‌ தள்ளி ஆத்ம ஸ்வரூபத்தில்‌ நோக்கான திருமந்த்ரத்தில்‌, இவன்‌ காப்பில்‌ நின்றும்‌ கை வாங்கினாலொழிய எம்பெருமானுடைய ரக்ஷகத்வம்‌ நடவாதாகையாலே, பகவத் ரக்ஷகத்வ விரோதியான தன் முயற்சியை விட்டிருக்கும்‌ ஆத்மாவாலே
புருஷார்த்த லாபமான பயனென்கிறது. எம்பெருமானுடைய ஸ்வதந்தரத்திலே நோக்கமான சரம ஸ்லோகத்தில்‌, (சேதனனுடைய) இவனுடைய பற்றுக் கோடும்‌ மிகையாம்படி
தானே கைக் கொண்டு தன்னை அடையத் தடையான அனைத்துப்‌ பாபங்களையும்‌ தள்ளி, தன்‌ திருவடிகளில்‌ சேர்த்துக்‌ கொள்ளும்‌ எம்பெருமானாலே பயனாகிற லாபமென்கிறது. எம்பெருமான்‌ பிராட்டியுடன்‌ கூடியிருக்கிற நிலையில்‌ நோக்கான த்வயத்தில்‌, எம்பெருமானை சார்ந்திருப்பவளான பெரிய பிராட்டியாராலே புருஷார்த்த லாபம்‌
என்கிறது என்கை. புருஷார்த்தம்‌ – புருஷனாலே ஆர்த்திக்கப்பட்ட பேறு பயன்‌.

விரோதியைப்‌ போக்கித்‌ தன்னிடத்தில்‌ சேர்த்துக்‌ கொள்ளும்‌ உபாயம்‌ எம்பெருமானாயிருக்க பிராட்டியாலே பேறாகையாவதென்‌? என்கிற ஐய வினாவை அருளிச்‌ செய்கிறார்‌. பேறு – பயன்‌.
ஸூர்ணை -119 – பெரிய பிராட்டியாராலே பேறாகையாவது- இவள்‌ புருஷகாரமானாலல்லது ஈஸ்வரன்‌ கார்யஞ் செய்யானென்கை .
இஷ்டத்தைக்‌ கொடுக்கையும்‌, இஷ்ட மல்லாததைத்‌ தள்ளுகையும்‌ இரண்டும்‌ “செய்வான்‌ எம்பெருமானா யிருக்கப்‌ பெரிய பிராட்டியாலே இவனுக்குப்‌ பேறாகையாவது:- இவனுடைய அபராதத்தைப்‌ பாராதே ரஷிக்கும்படி இவள்‌ சிபாரிசு செய்தாலொழிய, ஈஸ்வரன்‌
கார்யம்‌ செய்யானென்றபடி என்கை.

கீழ்ப்‌ பொதுவிலே வைஷ்ணவாதிகாரிக்கு வேண்டியவற்றைச்‌ சொல்லிற்று;-சிறப்பித்து த்வயத்துக்கு அதிகாரி யாமவனுக்கு வேண்டியவற்றை அருளிச்‌
செய்கிறார்‌.
ஸூர்ணை -120-த்வயத்துக்கு அதிகாரி அகிஞ்சந்யமும்‌ அநந்ய கதித்வமும்‌ உடையவன்‌ .
ஸித்தமாயிருக்கிற எம்பெருமானை உபாயமாக வரிப்பதைச்‌ சொல்லுவதாகிய த்வயத்துக்கு அதிகாரி, “அகிஞ்சந: அகதி:‘ (தன்‌ காப்பில்‌ கைம்‌ முதலில்லாதவன்‌. பிறன்‌ வாசலும்‌ புகாதவன்‌) “த்வமேவோபாய பூதோ மே பவ” (எனக்கு நீயே உபாயமாக வேணும்‌). “அகிஞ்சநோ அநந்ய கதிஸ்‌ சரண்ய” (தஞ்சமாகப்‌ பற்றுவதற்கு உரியவனே, என்‌ காப்பில்‌ எனக்குரிமையும்‌ பிறன்‌ வாசல்‌ புக உரிமையும்‌ இல்லாதவன்‌.) “புகலொன்றில்லா அடியேன்‌” என்றுஞ்‌ சொல்லுகிறபடியே (அகிஞ்சந்யமும்‌) கை முதல்‌ இல்லாமையும்‌, (அநந்ய கதித்வமும்‌) வேறு கதி யற்றவனும்‌ ஆகிற இரண்டும்‌ உடையவனென்கை.

இவை இரண்டின்‌ நிலை தான்‌ என்‌? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -121 – இவை இரண்டும்‌ ப்ரபந்ந பரித்‌ராணத்திலே சொன்னோம்‌ .
எம்பெருமானைத்‌ தவிர வேறு உபாயங்களை மேற் கொண்டொழுகுவதை அறத் தள்ளுகையாகிற அகிஞ்சந்யத்தின்‌ நிலையையும்‌, வேறொருவரை ரக்ஷகமாகக்‌ கொள்ளாமை யாகிற அநந்ய கதித்வத்தின்‌ நிலையையும்‌ ப்ரபந்ந பரித்ராணம்‌ என்ற நூலிலே தெரியச்‌ சொன்னோம்‌. அதிலே கண்டு கொள்வதென்கை.

இனி, த்வயத்துக்கு வாக்யார்த்தம்‌ அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -122- இதில்‌ முற் கூற்றால்‌, பெரிய பிராட்டியாரை முன்னிட்டு ஈஸ்வரன்‌ திருவடிகளை உபாயமாகப்‌ பற்றுகிறது; பிற் கூற்றால்‌ அச் சேர்த்தியிலே அடிமையை இரக்கிறது-
இந்த த்வயத்தில்‌ முதல்‌ வாக்கியத்தாலே ”ஸ்ரீமத்‌’ என்று பெரிய பிராட்டியாரை
முன்னிட்டு, “நாராயண சரணெள” என்று ஈஸ்வரன்‌ திருவடிகளை “சரணம்‌ ப்ரபத்யே என்று உபாயமாகப்‌ பற்றுகிறது. உத்தர வாக்கியத்தாலே “ ஸ்ரீமதே” என்று பெரிய
பிராட்டியாரும்‌ அவனுமான சேர்த்தியிலே, நாராயணாய -என்கிற நான்காம்‌ வேற்றுமை யுருபாலே தொண்டினை ப்ரார்த்திக்கிறது என்கை. நமஸ்ஸு-கைங்கர்யத்தை நான்‌ செய்கிறேன்‌ என்ற கர்த்ருவத்தையும்‌, இது எனக்கு இன்‌ பமாயிருக்கிறது” என்கிற போக்த்ருத்வமும்‌; அதாவது, நான்‌’ என்‌னது’ என்கிற அஹங்கார மமகாரங்களை தொண்டாற்றுவதில்‌ வரும்‌ விரோதியைக்‌ கழிப்பதைச்‌ சொல்லுகையாலே, அடிமையை இரக்கிறது என்ற இதிலே உட்படும்‌.

இனி, பதத்துக்குப்‌ பதம்‌ அர்த்தம்‌ அருளிச் செய்வதாகத்‌ திருவுள்ளம்‌ பற்றி “ஸ்ரீமத்‌” பதத்துக்கு அர்த்தம்‌ அருளிச்‌ செய்ய ஆரம்பிக்கிறார்‌.
ஸூர்ணை -123 – ஸ்ரீ என்று பெரிய பிராட்டியாருக்குத்‌ திருநாமம்‌ –
“ஸ்ரீ” என்ற சொல்‌ செல்வம்‌ முதலானவைகளுக்குப்‌ பெயராக உலகில்‌ வழங்கக்‌ காண்கையாலே, அதை வேறுபடுத்துகைக்காக “ஸ்ரீ” என்கிற இது பெரிய பிராட்டியாருக்குத்‌ திருநாமம்‌ என்கிறார்‌. ஆகையாலன்றோ “லக்ஷ்மி: பத்மாலயா பத்மா கமலா ஸ்ரீர்‌ ஹரி ப்ரியா” என்று மற்றத்‌ திரு நாமங்களோடே கூட்டிச்‌ சொல்லப்பட்டது. இது தான்‌ எல்லாத்‌ திருநாமங்கள்‌ போலன்றிக்கே “ஸ்ரீரிதி ப்ரதமம்‌ நாம லக்ஷ்ம்யா:” ஸ்ரீ என்ற இது லக்ஷ்மீ தேவிக்கு முதல்‌ திருநாமம்‌-என்கிறபடியே இவளுக்கு இது முதன்மையான
பெயராயிருக்கும்‌. “அ இதி பகவதோ நாராயணஸ்ய ப்ரதமாபிதாநம்‌” (அகாரமானது பகவானான நாராயணனுடைய முதல்‌ திருநாமம்‌) என்று அகாரம்‌ எம்பெருமானுக்கு முதன்மையான திருநாமமானாற் போலே, இவளுக்கும்‌ இது முதன்மையான திருநாமமா யிருக்கும்‌ படி. அது, அவனுடைய ரக்ஷகத்துக்கு அவஸ்யமான ஸ்வபாவங்களைச்‌ சொல்லும்‌; இது இவளுடைய புருஷகாரத்துக்கு அவஸ்யமான ஸ்வபாவங்‌களைச்‌ சொல்லக்‌ கடவதா யிருக்கும்‌. புருஷகாரம்‌- சேர்ப்பித்‌தல்‌. அல்லது சிபார்சு செய்தல்‌ என்பதைக்‌ குறிக்கும்‌.

இனி, இந்த சப்தத்துக்கு அர்த்தம்‌ அருளிச்‌ செய்வதாக முதலில்‌ இதன்‌ மேல்‌ வந்த சொல்‌ பொருள்‌ தொடர்புகளின்‌ இரண்டு வகைகளை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -124 – ஸ்ரீயதே ஸ்ரயதே .
அதாவது – “ஸ்ரிஞ்ஸேவாயாம்‌” என்கிற வினைப் பகுதியில்‌ ‘ஸ்ரீயத இதி – ஸ்ரீ :, ஸ்ரயத இதி – ஸ்ரீ:’ என்ற தேர்ந்ததான செயப்படு பொருளைக் காட்டுவதாயும்‌, எழுவாய்‌ பொருளைக்‌ காட்டுவதாயும்‌ உள்ளதைச்‌ சொன்னபடி.

இந்தச்‌ சொல் பொருள்‌ தொடர்புகளின்‌ வகை இரண்டுக்கும்‌ அர்த்தம்‌ அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -125- இதுக்கு அர்த்தம்‌ -எல்லார்க்‌கும்‌ இவளைப் பற்றி ஸ்வரூப லாபமாய்‌, இவள்‌ தனக்கும்‌ அவனைப்‌ பற்றி ஸ்வரூப லாபமாயிருக்கும்‌ என்று .
கர்மணி, கர்த்தரி என்ற இந்த இரண்டு வ்யுத்பத்திகளுக்கும்‌ அர்த்தம்‌ ‘ஸ்ரீயதே” என்று எல்லோராலும்‌ ஸேவிக்கப்‌ பெறுகிறாள்‌ என்பதாலே எல்லா (சேதநர்களுக்கும்‌) மக்களுக்கும்‌ இவளைப்‌ பற்றித்‌ தங்களுடைய சேஷத்வமான ஸ்வரூப லாபமாய்‌, “ஸ்ரயதே” என்று ஈஸ்வரனை ஸேவியா நின்றாள்‌ என்கையாலே, இவள்‌ தனக்கும்‌ ஈஸ்வரனைப்‌ பற்றித்‌ தன்னுடைய சேஷத்வ ரூப லாபமாயிருக்கும்‌ என்கை. இவள்‌ தனக்கு சேதந விஷயத்தில்‌ சேஷித்வமும்‌ ஈஸ்வர விஷயத்தில்‌ சேஷத்வமும்‌ என்றும்‌ உண்டா யன்றோ இருப்பது. ஆகையால்‌, இந்த ஸேவிக்கப்‌ பெறுகை, ஸேவிக்கை என்கிற இரண்டும்‌ இவளுக்கு நித்யமாய்ச்‌ செல்லா நிற்கும்‌.

எம்பெருமானுக்கு உபாயத்வமும்‌ (உபேயத்வமும்‌) பயனுமாகிற இருநிலைகளும்‌ உண்டானாற் போலே இவளுக்குப்‌ புருஷகாரத்வமும்‌ (ப்ராப்‌யத்வமுமாகிற) பயனுமாகிற இரு நிலைகளும்‌ உண்டாகையாலே, இதில்‌ எந்த நிலையை நினைத்து இப்போது சொல்லுகிறது? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -126- இப்போது இவளைச்‌ சொல்லுகிறது புருஷகாரமாக .
‘புருஷகாரமாக’ என்கையாலே உபாய வஸ்து விசேஷணமாகச்‌ சேர்ந்திருக்கை யாகிற நிலையை யிட்டு இவளுக்கும்‌ உபாயத்வம்‌ சொல்லும்‌ கொள்கை யுடையாருடைய பக்ஷம்‌ கணடிக்கப்பட்டது என்கை.

எம்‌ பெருமானுடைய நாராயணத்வம்‌ காரணமாக இயல்பான ஸம்பந்த ஜ்ஞாநம்‌ முதலியவை உடையவனாய்க்‌ கொண்டு அவனை ஆஸ்ரயிக்கிற இந்தச்‌ சேதநனுக்கு இவளைச்‌ சிபாரிசாகிற புருஷகாரமாக முன்னிட வேண்டுகிறது தான்‌ எதற்கு? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -127- நீரிலே நெருப்புக்‌ கிளருமா போலே குளிர்ந்த திருவுள்ளத்திலே அபராதத்தால்‌ சீற்றம்‌ பிறந்தால்‌ பொறுப்பது இவளுக்காக .
குளிர்ந்த நீரிலே, சென்று அணுக வொண்‌ணாத படியான நெருப்புக் கிளருமா போலே, “ஸுஹ்ருதம்‌ ஸர்வ பூதாநாம்‌” (எல்லா ப்ராணிகளிடத்தும்‌ நட்பையே உடையவன்‌). “ஸமோஹம்‌ ஸர்வ பூதேஷு தான்‌ எல்லா ப்ராணிகளிடத்தும்‌ வித்யாச மில்லாமல்‌ ஸமமாகவே இருக்கிறவன் தான்‌) என்கிறபடியே எல்லா ப்ராணிகளிடத்தும்‌ நேய மனப்பான்மை யுடையனாயும்‌, ஸமமாகவே எல்லாராலும்‌ தஞ்சமடையத் தக்கவனாயுமுன்ள ஸ்வபாவ விசேஷங்களாலே, தெளிந்து குளிர்ந்திருக்கிற எம்பெருமான்‌ திரு வுள்ளத்திலே “பரிபூர்ணாகஸி ஜநே ஹிதஸ் ரோதோ வ்ருத்த்யா பவதிச கதாசித்‌ கலுஷதீ:”
பரிபூர்ண அகஸி –
நிரம்பின குற்றத்தைச்‌ செய்த,
ஐநே – சேதநர்களிடத்தில்‌,
ஹிதஸ்ரோதோ வ்ருத்த்யா– (பிற்காலத்‌தில்‌) நன்மையை விளைக்கிற நீர்ப் பெருக்கின்‌ செயல் போன்ற செயலாலே (அநுகூலனே யானாலும்‌, பின் விளையும்‌ நன்மையைக்‌ கருதி),
கதாசித்‌ – ஒரு கால்‌ (பெருங்குற்றத்தைச்‌ சேதநர்களிடத்தில்‌ காண்பதனால்‌)
கலுஷதீ: – கலங்கினவனாக,
பவதிச – ஆகவும்‌ ஆகிறான்‌
என்கிறபடியே சேதநனுடைய அளவிறந்த குற்றங்களின்‌ காரணமாக ஷிபாமி (பிறவிக் கடலில்‌ தள்ளுவேன்‌) ந க்ஷமாமி (பொறுக்க மாட்டேன்‌) என்னும்‌படியான சீற்றம் பிறந்தால்‌ அந்தக்‌ குற்றங்களைப்‌ பொறுப்பது.”கிமேதந்‌ நிர்தோஷ:க இஹஜசதி”
ஏதத்‌
– இந்தக் கோபம்‌,
கிம்‌ – இங்ஙனம்‌ மனம்‌ கலங்குவது- என்ன?
இஹ ஜகதி – இந்த உலகத்தில்‌,
நிர்தோஷ: குற்றமற்றவன்‌
க: ஆர்‌?,
இதி – என்றவாறு சொல்லி,
என்கிற படியே, தன்‌ உபதேசம்‌ முதலானவைகளாலே அந்தக் கோபத்தை யாற்றித்‌ தயையைப்‌ பிறப்பிக்கும்‌ இவளுக்காக என்கை. ஆகையாலே, பகவான்‌ திறத்து ஸம்பந்த ஜ்ஞாநம்‌ பிறந்தவனுக்கும்‌ இவன்‌ அபராத பயத்தாலே புருஷகாரத்தை முன்னிடுகை தேவை என்று கருத்து.

சேதநன்‌ கார்யத்தைத்‌ தான்‌ மேற்‌கொண்டும்‌ எம்பெருமானை வசீகரித்தும்‌ இரண்டு பக்ஷத்தையும்‌ பொருத்துகைக்கு இவள்‌ தான்‌ இடையூறில்லாத புருஷகாரமோ? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -128- இவள்‌ தாயாய்‌, இவர்கள்‌ க்லேசம்‌ பொறுக்க மாட்டாதே அவனுக்குப்‌ பத்நியாய்‌, இனிய விஷயமா யிருக்கையாலே, கண்ணழிவற்ற புருஷகாரம்‌ .
“த்வம்‌ மாதா ஸர்வ லோகாநாம்‌”
(உலகத்து எல்லா ப்ராணிகளுக்கும்‌ நீயே தாய்‌) என்றும்‌
“அகில ஜகந் மாதரம்‌” (அனைத்து ஜகத்து ப்ராணிகளுக்கும்‌ தாயானவளை) என்றும்‌ சொல்லுகிறபடியே இந்தச்‌ சேதநர்களுக்கு இவள்‌ தாயாய்‌, ” தந்தம்‌ மக்களழுது சென்றால்‌ தாய்மாராவார்‌ தரிக்க கில்லார்‌ என்கிறபடியே தாயான தொடர்பின்‌ காரணமாக இவர்களுடைய வருத்தங் கண்டால்‌ பொறுக்க மாட்டாதே, “விஷ்ணு பத்நி” என்று அவனுக்குப்‌ பத்தினியாய்‌, ” பித்தர்‌ பனி மலர் மேல்‌ பாவைக்கு” என்கிறபடியே, அவன்‌ இவள்‌ தன்னுடைய பிறரெவர்க்கு மில்லாத பேரழகு முதலானவற்றைக்‌ கண்டு பிச்சேறித்‌ தன்‌ சொல் வழி நடக்கும்படி இஷ்டமான பொருளா யிருக்கையாலே (கண்ணழி வற்ற) தடையற்ற புருஷகாரம்‌ ஆவாள்‌ என்றபடி.

எல்லாம்‌ செய்தாலும்‌ தடையில்லாத சுதந்திரனான எம்பெருமான்‌ சேதநனுடைய அபராதங்களைத்‌ தான்‌ பத்தும்‌ பத்தாக நிறுத்து அறுத்துத்‌ தீர்த்துவன்‌ என்றவன்‌ நிற்குமளவில்‌, இவளாலே பொறுப்பிக்கப்‌ போமோ? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -129- திருவடியைப்‌ பொறுப்பிக்குமவள்‌ தன்‌ சொல் வழி வருமவனைப்‌ பொறுப்பிக்கச் சொல்ல வேண்டா விறே .
பிராட்டியைப்‌ பத்து மாதம்‌ மருட்டுவதும்‌ பழிப்பதுமாகிய கொடுஞ் செயல்களைச்‌ செய்த ராக்ஷஸிகளின்‌ அபராதங்களைக்‌ கணக்கிட்டுச்‌ சித்ர வதம்‌ செய்ய முயன்ற சொல்லை மீறுந் தன்மையனான திருவடியையும்‌ உட்பட, “க:குப்யேத்‌” (அரசன்‌ வயத்தவராய்‌ அவனால்‌ ஜீவிக்கு மவர்களாய்‌ அவன்‌ அதீனத்தி லிருப்பவர்களாய்‌, அவன்‌ ஏவினதைச்‌ செய்ததைக்‌ கொடுந்தொழிலென்று எவன் கோபிப்பான்‌) என்றும்‌ “ந கச்சிந் நாபராத்யதி” (தப்புச் செய்யாதவன்‌ எவன்‌) என்றும்‌, இவை முதலான உபதேசங்களாலே பொறுப்பிக்குமவள்‌, “மலராள்‌ தனத்துள்ளான்‌” என்றும்‌, “மா மலர்‌ மங்கை மண நோக்க முண்டான்‌” என்றும்‌ “அல்லிமலர்‌ மகள்‌ போக மயக்குக்களாகியும்‌ நிற்கும்‌” என்றும்‌, தன்‌ இனிமையிலே ஆழ்ந்து “நின்னன்‌ பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரானேக” என்கிறபடியே ‘மாயா விலங்கின்‌ பின்னே போ’ என்னிலும்‌ மேல் விளைவு அறியாதே அதன் பின்னே போம்‌ படி, தன்‌ சொல் வழி வருமவனைப்‌ பொறுப்பிக்க வல்லள்‌ என்னுமிடம்‌ சொல்ல வேண்டாதாயிற்று என்கை. “செய் தகவினுக் கில்லை கைம்மாறு” என்னும்‌படி. இருவர்க்கும்‌ கலங்கி உபகரித்து தன்‌ சொல் வழியே போக வேண்டும்‌ படியான திருவடியோடே (மறுதலிக்குமவள்‌) எதிரிடுமவள்‌, “தான்‌ முயங்கும்‌” (அணைக்கப்பெற்ற) என்னும்‌ படியான இனிமைக்குத் தோற்று எத்தைச்‌
செய்வோம்‌’. என்று கலங்கி, “நின்னன்பின் வழி நின்று”,அதனின்‌ பின்னே படர்ந்தான்‌’ என்னும்படி மேல்‌ விளைவ தறியாதே, புன்முறுவலுக்குத்‌ தோற்று சொல்‌ வழி போமவனைப்‌ பொறுப்பிக்கும்‌ என்னுமிடம்‌ சொல்ல வேண்டா என்று இது தன்னை இவர்‌ திருத் தம்பியாரும்‌ அருளிச்‌ செய்தார்‌ என்ற படி.
ஆக, ஸ்ரீமத்‌ பதத்தில்‌ பகுதியைக்‌ குறித்து அருளிச்‌ செய்தார்‌ கீழ்‌; விகுதிப்‌ பொருளைக்‌ குறித்து அருளிச்‌ செய்கிறார்‌ மேல்‌.

ஸூர்ணை – 130 -மதுப்பாலே இருவர்‌ சேர்த்தியும்‌ நித்ய மென்கிறது –
“ஸ்ரீமத்‌”
என்ற பதத்தில்‌ ஸ்ரீ என்ற பகுதிப் பொருளைச்‌ சென்னார்‌. இப்போது ‘மத்‌’ என்ற விகுதிப்‌ பொருளைச்‌ சொல்லுகிறார்‌. அதாவது, இம் மதுப்புத் தான்‌ நித்தியமாகவே கூடி இருத்தல்‌ என்ற பொருளைத் தரும்‌ மதுப்பாகையாலே,-இத்தால்‌ புருஷகாரம்‌ செய்பவளான பிராட்டியும்‌, இவள்‌ புருஷகாரத்தை ஏற்றுச்‌ சேதநனுக்கு உபாயமாகும்‌ ஈஸ்வரனும்‌ ஆகிய இருவருடைய சேர்த்தியும்‌ எப்போதும்‌ உண்டு என்னுமிடம்‌ சொல்லுகிறதென்கை. நித்யம்‌ -நிலையாக.

இந்த நித்ய யோகத்தின்‌ சிறப்பைச்‌ சொல்லுகிறார்‌.
ஸூர்ணை -131 -இவளோடே கூடியே வஸ்துவினுடைய உணமை.
“ஸ்ரீய: பதிர்‌ நிகில ஹேய ப்‌ரத்ய நீக கல்யாணைகதாநஸ்‌ ஸ்வேதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணாநந்த ஜ்ஞாநாநந்தைக ஸ்வரூப!”
நிகில:
– ஸமஸ்தமான,
ஹேய ப்ரத்யநீக – தாழ்ச்சிக்கெல்லாம்‌ எதிர்த் தலையான,
கல்யாண – மங்கள குணங்கட்கு,
ஏக தான – முக்கியமான ஆதாரமும்‌,
ஸ்வ இதர -தன்னில்‌ வேறுபட்ட,
ஸமஸ்த வஸ்து -எல்லாப் பொருள்களை விட,
விலக்ஷண – வேறுபட்டுத்‌ தோன்றுபவனாய்‌,
ஜ்ஞாந – ஞாநமென்ன,
அநந்த – அநந்தமென்ன (இவைகளை)
ஏக ஸ்வரூப – முக்கியமான ஸ்வரூபமாக உடையவனுமான,
ஸ்ரீ யபதி – திருமால்‌
என்று ஸ்வரூப நிரூபகமான ஜ்ஞாநாந்தாதிகளுக்கு முன்னே ஸ்ரீய:பதித்வத்தைச்‌ சொல்லும்படி அவன்‌ ஸ்வரூபத்துக்கு முக்கிய நிரூபகையா யிருக்கையாலே, இவளோடே கூடியே வஸ்துவினுடைய நிலை பேறு இருப்பது என்கை.
ஆக, பிராட்டியின்‌ ஸ்வரூபத்தோடே சேர்ந்திருக்கும் படியான எம்பெருமானுடைய நித்ய யோகத்தை அருளிச்‌ செய்தாராயிற்று.

இனி, இவளுடைய குணமடியாக எப்போதுங்‌ கூடி யிருக்குமதை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -132 -ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யத்தையும்‌ சேதனனுடைய அபராதத்தையுங்‌ கண்டு அகல மாட்டாள்‌-
அபராதங்களை ஒன்றும்‌ விடாது கணக்கிட்டு, அறுத்து அறுத்துத் தீர்க்கும்‌
எம்பெருமானுடைய ஸ்வாதந்தர்யத்தையும்‌, “யத் ப்ரஹ்ம கல்பநியுதா நுபவேப்ய நாச்யம்‌” (யத்‌ – எந்தப்‌ பாபமானது,
ப்ரஹ்மகல்பதியுத அநுபவேபி – பிரமனுக்கு ஏற்பட்டிருக்கும்‌ படியான ஆயுளின்‌ லக்ஷம்‌ மடங்கு காலம்‌ அநுபவித்தாலும்‌, அதாச்யம்‌– நீங்காதோ, தத்கில்பிஷம்‌ – அப்படிப்பட்ட பாபத்தை இஹ ப்ராணி – இவ்வுலகில்‌ ப்ராணியானது, ஷணார்த்தே ஸ்ரூஜதி – அரை க்ஷணத்தில்‌ செய்கிறது.-என்றபடி கால தத்துவமுள்ளதனையும்‌ அதுபவித்தாலும்‌ சிறிது கழிந்தது என்றுஅளவிட்டுக் காட்ட முடியாதபடி செய்து வைத்திருக்கும்‌ இச் சேததனுடைய தகாத செயல்களையுங் கண்டு ஏதாய் விடுமோ? என்னும்‌ பயத்தாலே எம்பெருமானை விட்டு பிராட்டி ஒரு கணமும்‌ விட்டகல மாட்டாள்‌ என்கை.

இத்தால்‌ சேதநனுக்கு பலிக்குமதை அருளிச் செய்கிறார்‌.
ஸூர்ணை -133- சேதநனுக்கு இவை யிரண்டையும்‌ நினைத்து அஞ்சவேண்டா .
இப்படி இவள்‌ இருந்து நோக்குகையாலே ஈஸ்வரனுடைய ஸ்வாதத்தர்யமும்‌, தன்‌ அபராதமுமாகிற இவை இரண்டையும்‌ நினைத்து “நமக்கு என்ன (தீங்கு) விளையுமோ?” என்று அஞ்ச வேண்டா என்கை.

இனி, இம் மதுப்பின்‌ (தாத்பர்யம்‌) சுருக்‌கமான ஸாராம்ஸம்‌ இது என்று அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -134 – இத்தால் ஆஸ்ரயிக்கைக்கு ருசியே வேண்டுவது, காலம்‌ பார்க்க வேண்டா என்கிறது-
இப்படிப் புருஷகார உபாயமாகிய வஸ்துக்களான இருவருமான சேர்த்தியை எப்போதுங் கூடி இருப்பதைக்‌ காட்டும்‌ இம் மதுப்பால்‌ உபாயமான எம்பெருமானை ஆஸ்ரயிப்பார்க்கு, ஆஸ்ரயிக்கையில்‌ ருசியே வேண்டுவது. இருவரும்‌ சேர்ந்திருக்கும்‌ தசையிலே ஆஸ்ரயிக்க வேணுமே’ என்று ஆஸ்ரயணத்துக்குக்‌ காலம்‌ பார்க்க வேண்டா யென்கிற தென்கை-

இனி, இவள்‌ புருஷகாரம்‌ அவஸ்யம்‌ தேவை என்பதை அறிவிக்கைக்காக,இவள்‌ கூடி இருப்பதாலும்‌ பிரிந்திருப்பதாலும்‌ உண்டான நன்மை, தீமைகளை அருளிச் செய்கிறார்‌.
ஸூர்ணை -135 – இவள்‌ ஸந்நிதியாலே காகம்‌ தலை பெற்றது; அது இல்லாமையாலே ராவணன்‌ முடிந்‌தான்‌.
“தேவ்யா காருண்ய ரூபயா”
(ஸ்ரீதேவியானவள்‌ கருணையே வடி வெடுத்தவள்‌) என்கிறபடியே கருணை தான்‌ ஒரு வடிவு கொண்டாற் போலே இருப்பவளாய்‌, ஸ்வதந்திரனான ஈஸ்வரனுக்கு ஸ்வாதந்தர்யத்தை அமுக்கிக்‌ கருணையைக் கிளப்புமவளான இவள்‌ கூடி. இருந்ததாலே பேரபராதத்தைச்‌ செய்து அதனாலே ப்ரஹ்மாஸ்திரத்துக்கு இலக்காய்‌ தலை யறுப்புண்கைக்கு உரித்தான காகம்‌, ‘க்ருபயா பர்யபாலயத்‌” (தன்னுடைய கருணையாலே நன்றாக ரக்ஷித்தான்‌) என்கிறபடியே, கருணைக்கு இலக்காய்‌ தலை பெற்றுப்‌ போயிற்று. அப்படியான இவள்‌ கூடி இல்லாமையாலே போக்கற்றுச்‌ செயல்‌ மாண்ட நிலை ஒத்திருக்கச்‌ செய்தேயும்‌, காகத்தினுடைய பேரபராதம்‌ இல்லாதிருக்க, ஸ்ரீராம பாணத்துக்கு இலக்காய்‌ ராவணன்‌
முடிந்து போனான்‌ என்கை. ஆகையால்‌, பெருமானை அடையும் பொழுது பிராட்டி ஸந்நிதி அவஸ்யம்‌ வேணும்‌ என்று கருத்து. ஆக, ஸ்ரீமத்‌ பதத்தினுடைய அர்த்தத்தை அருளிச்‌ செய்து முடித்தார்‌.

பிறகு, நாராயண பத அர்த்தத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -136- புருஷகார பலத்தாலே ஸ்வாதந்‌தர்யம்‌ தலை சாய்ந்தால்‌ தலை யெடுக்குங்‌ குணங்களைச்‌ சொல்லுகிறது நாராயண பதம்‌ .
உபதேசத்தாலும்‌, தன் பேரழகாலும்‌ தடையற வசீகரித்து காரியங்கொள்ள வல்ல புருஷகார பலத்தாலே அவனை அடைய முயலும்‌ சேதநன்‌, ஆரம்பம்‌ அறிய முடியாத காலமாகப்‌ பண்ணின குற்றங்களைப்‌ பார்த்துச் சீறி, கைக் கொள்ள மாட்டேன்‌’, என்றிருக்கும்‌ ஈஸ்வர
ஸ்வாதந்த்ர்யம்‌ தலை மடிந்தால்‌, அதன்‌ கீழ் தலை எடுக்க முடியாத அழுத்தம்‌ தீர்ந்துத்‌ தலை யெடுக்கும்‌ குணங்களைச்‌ சொல்லுகிறது நாராயண பதம்‌ என்கை.

அந்தக்‌ குணங்கள்‌ தான்‌ எவை? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -137 – அவையாவன – வாத்ஸல்யமும்‌, ஸ்வாமித்வமும்‌, ஸெளசீல்யமும்‌, ஸெளலப்யமும்‌ ஜ்ஞாநமும்‌, சக்தியும்‌
அவையாவன – என்று தொடங்கி இவற்றில்‌, வாத்ஸல்யம்‌ ஆவது: அன்றீன்ற கன்றின்‌ திறத்துப் பசு காட்டும்‌ பரிவு. அதாவது, அதன்‌ மீதுள்ள வழும்பைச்‌ சுவைத்துப்‌ புஜிக்கையும்‌, பால் கொடுத்து வளர்க்கையும்‌, அதன்‌ அருகே சென்றவர்களை முட்டுதல்‌ உதைத்தல்‌
முதலியவைகளால்‌ ரஷிக்கையும்‌; அப்படியே ஈஸ்வரனும்‌ குற்றங்களைக்‌ குணமாகக்‌ கொண்டு “பாலே போல்‌ சீரெ“ன்ற குணங்களாலே தரிக்கச்‌ செய்து “கதஞ்சன – ந த்யஜேயம்‌’
ஒருபடியாலும்‌ கைவிடுபவனல்லேன்‌). “அபயம்‌ ஸர்வ பூதேப்ய:” (எல்லா ப்ராணிகளிடத்தும்‌ பயமற்றிக்கச்‌ செய்‌வேன்‌.) என்கிறபடியே அநுகூலர் நிமித்தமாகவும்‌ ப்ரதிகூலர்‌ நிமித்தமாகவும்‌ நோக்கும்‌. ஸ்வாமித்வமாவது:- இவன்‌ பராமுகனான நிலையிலும்‌ விடாதே நின்று நன்மையே குறிக் கொள்ளற்குக் காரணமான ஒரு பந்த விசேஷம்‌; அதாவது
உடையவனா யிருக்குமிருப்பு; துவேஷம்‌ இல்லாமை தொடங்கி கைங்கர்யம்‌ வரை உண்டான ஸ்வபாவ விசேஷங்களை யெல்லாம்‌ உண்டாக்குகிறது இந்த பந்த விசேஷம்‌. -ஸெளசீல்யமாவது:– உபய விபூதி நாயகத்வத்தாலும்‌ பெரிய பிராட்டியாருடைய சேர்த்தியாலும்‌, தடையற்ற ஸ்வாதீநனா யிருக்கிற மேன்மையையும்‌, தங்கள்‌ சிறுமையை-யும்‌ பார்த்து “அவனெவ்விடத்தான்‌ யானார்‌” என்று பின்‌ வாங்காதபடி எல்லாரோடும்‌ ஓக்க மேல் விழுந்து வேறு பாடின்றி கலக்கையும்‌, அது தன்‌ பயனாகக்‌ கருதுகையும்‌, எதிர்த் தலையில்‌ விருப்பமின்றிக்கே இருக்கக்‌ கலந்து பரிமாறுகையும்‌ முதலானவைகள்‌. -ஸெளலப்யமாவது:– கண் காண முடியாதபடி இருக்கிற தான்‌ கண்ணாலே கண்டு பற்றலாம்படி இருக்கை. -ஜ்ஞாநமாவது:- எம்பெருமான்‌ இந்த அடியானுக்குக்‌ கழிக்க வேண்டிய விரோதி வர்க்கத்தையும்‌ கொடுக்க வேண்டிய விருப்பத்திற் குரியதையும்‌ நேரே அறிந்து கொள்ளற்குரிய தன்னையும்‌ அனைத்துப்‌ பொருள்களையும்‌ ஓரே நேரத்தில்‌
காண வல்ல பேறறிவு-சக்தியாவது – மிகத் தாழ்ந்தவர்களான ஸம்ஸாரிகளை நித்ய ஸூரிகளோடு ஒரு கோவை யாக்க வல்ல பொருந்தாத வற்றையும்‌ பொருந்துவிக்கும்‌ ஸாமர்த்யம்‌-இவற்றில்‌ வாத்ஸல்யாதிகள்‌ நாலும்‌ எம்பெருமானை அடையச்‌ செளகரியத்தை செய்யக் கூடிய மணங்கள்‌. ஜ்ஞாந சக்திகள்‌ அடைந்தாருடைய காரியங்கள்‌ செய்கைக்குரிய குணங்கள்‌. “நிகரில்‌ புகழாய்‌” என்று தொடங்கி வாத்ஸல்‌யாதிகள்‌ நாலையுமல்லவா அடையத் தக்கதாக ஆழ்வார்‌ அருளிச்‌ செய்தது. ஜ்ஞாந சக்திகள்‌ இரண்டைச் சொன்னது, ப்ராப்தி பூர்த்திகளுக்கும்‌ உப லக்ஷணம்‌; கார்யம்செய்வதற்கு இவையும்‌ தேவைப் படுவதால்‌ சொல்லப்பட்டது என்கை, ‘

இந்தக்‌ குணங்களுக்கு இவ்விடத்தில்‌ உபயோகம்‌ எவை? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -138 – குற்றங் கண்டு வெறுவாமைக்கு வாத்ஸல்யம்‌; கார்யஞ் செய்யுமென்று துணிகைக்கு ஸ்வாமித்வம்‌; ஸ்வாமித்வங் கண்டு அகலாமைக்கு ஸெளசீல்யம்‌; கண்டு பற்றுகைக்கு ஸெளலப்யம்‌; விரோ தியைப்‌ போக்கித்‌ தன்னைக்‌ கொடுக்கைக்கு
ஜ்ஞாந சக்திகள்‌ .

அடைய முயலும்‌ இச்சேதநன்‌, தன்‌ குற்றத்தைக்‌ கண்டு அஞ்சாமைக்குரியது, குற்றத்தைக்‌ குணமாகக்‌ கொள்ளும்‌ வாத்ஸல்யம்‌ என்ற குணம்‌. நம்‌ கார்யம்‌ செய்யுமோ, செய்யானோ? ‘ என்று ஐயப் படாதே கார்யம்‌ செய்யுமென்று நம்புகைக்கு உறுப்பு ஸ்வாமித்வம்‌ என்ற
குணம்‌. இத்தால்‌, இழத்தல்‌ பெறுதல்‌ தன்னதாம் படியான ஸ்வாமித்வ குணத்தின்‌ செயல்‌ எனப்படும்‌, இருள்‌ தருமா ஞாலம்‌ என்கிற பூலோம்‌ தொடக்கமான உலகத்திற்கும்‌ தெளி விசும்பு திரு நாடு என்ற பரம பதம்‌ என்கிற இரண்டு விதமான உலகங்களுக்கெல்லாம்‌ நாயகத்‌ தன்மையைக் காட்டிக்‌ கொடுக்கிற ஸ்வாமித்வத்தைக்‌ கண்டு, தன் தாழ்வை நினைத்து அகலாமைக்கு உறுப்பு; தாழ்ந்தாரோடும்‌ வேற்றுமையறக்‌ கலக்கும்‌ தன்மையது ஸெளசீல்யம்‌ என்ற குணம்‌. கண் காண முடியாதவனென்று பின் வாங்காதபடி கண்ணாலே கண்டு பற்றுகைக்குரியது, தன்‌ வடிவைக்‌ கண்ணுக்கிலக்‌காக்கும்‌ ஸெளலப்யம்‌ என்ற குணம்‌. “ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி” எல்லாப்‌ பாபங்களினின்றும்‌ விடுவிக்கிறேன்‌.’ என்கிறபடியே தன்னை யடையத்‌ தடை செய்யும்‌ விரோதிகளைப்‌ போக்கிப்‌ பயனான தன்னை உபகரிக்கைக்கு உறுப்பு, பயனான தன்னை அடையும்‌ இச் சேதநன்‌ இவன்‌ கீழ் நின்ற நிலையும்‌ மேல்‌அடைய வேண்டிய தேசத்தையும்‌ அறிகைக்கும்‌ அறிந்தபடியே செய்து முடிக்கைக்கும்‌ அவஸ்யமானது ஜ்ஞாந சக்திகளென்ற குணங்களென்பது.

அவனை அடைய உதவும்‌ நான்கு குணங்‌களில்‌ ஸெளலப்யம்‌ முக்கியமாகையாலே அந்த ஸெளலப்யத்தில்‌ எல்லையை அருளிச்‌ செய்கிறார்‌. ஸெளலப்யம்‌- சுலபத்‌தன்மை.
ஸூர்ணை -139- இங்குச் சொன்ன ஸெளலப்யத்துக்கு எல்லை நிலம்‌ அர்ச்சாவதாரம்‌ –
இந்த நாராயண பதத்தில்‌ அவனை அடைய முக்கிய உபயோகியான ஸெளலப்யத்துக்கு
முடிவானது “தமருகந்த தெவ்வுருவம்‌ அவ்வுருவம்‌ தானே” என்கிறபடியே அடியார்‌ உகந்த தொன்றைத்‌ திருமேனியாகக்‌ கொண்டு கோயில்களிலும்‌ இல்லங்களிலும்‌ எழுந்தருளி இருக்கும்‌ அர்ச்சாவதாரம்‌ என்கை.

அவற்றைத்‌ தொடர்ந்து சொல்லுகிறார்‌.
ஸூர்ணை -140 – இது தான்‌ பர வ்யூஹ விபவங்கள்‌ போலன்றிக்கே கண்ணாலே காணலாம்படி. இருக்கும்‌ .
இந்த அர்ச்சாவதாரம் தான்‌ வேறு தேசமான பரத்வத்துக்கு இடமான பரம பதமும்‌,
வ்யூஹத்துக்கிடமான பாற்கடலும்‌ இந்தத் தேகத்தால்‌ காண முடியாததாயும்‌ கால வேறு பாட்டாலே இப்போது நாம்‌ காண முடியாதபடி போன ராமன்‌ கண்ணன்‌ முதலான விபவாவதாரங்கள்‌ போலல்லாமல்‌, நமக்கு ஸமீபமாய்‌ நாம்‌ காணலாம்படி திவ்ய தேசங்களிலும்‌ இல்லங்களிலும்‌ என்றும்‌ இருக்கும்‌ அர்ச்சாவதாரம்‌ என்கை.

இந்தக்‌ குணங்களெல்லாம்‌ அர்ச்சாவதாரத்தில்‌ காணலாமோ? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -141- இவை யெல்லாம்‌ நமக்கு நம்‌ பெருமாள்‌ பக்கலிலே காணலாம்‌ .
அவனை அடையத் தடை செய்யுமவற்றை நீக்குமதும்‌, அவன்‌ நம்‌ கார்யம்‌ செய்ய உபயோகப் படுமதாயும்‌ உள்ள இந்த குணங்களெல்லாம்‌ இவற்றைக்‌ காண விருப்பமுடைய நமக்கு நம்முடைய பெருமாள்‌ பக்கலிலே காணலாமென்கை.

பெருமாள்‌ பக்கலில்‌ இக் குணங்களுக்கு ப்ரகாசங்களாய்‌ விளக்கங்களா யுள்ளவற்றைச்‌ சொல்லி, இவற்றோடு நிற்கிற நிலையே நமக்குத்‌ தஞ்சமென்கிறார்‌.
ஸூர்ணை -142- திருக்கையிலே பிடித்த திவ்யாயுதங்களும்‌, வைத்து அஞ்சல்‌ என்ற கையும்‌, கவித்த முடியும்‌, முகமும்‌ முறுவலும்‌, ஆஸந பத்மத்திலே அழுத்தின திருவடிகளுமாய்‌ நிற்கிற நிலையே நமக்குத்‌ தஞ்சம்‌.
கார்யஞ்செய்ய உபயோகியான ஜ்ஞான சக்திகளுக்கு விளக்கமாம்படி திருக்கைகளிலே தரித்துக்‌ கொண்டிருக்கிற சங்க சக்ரம்‌ முதலான திவ்யாயுதங்களும்‌, வாத்ஸல்யம்‌ தோன்றும்படி வைத்து அஞ்சலென்ற கையும்‌, ஸ்வாமித்வம்‌ விளங்கும்படியான கவித்த முடியும்‌ ஸெளசீல்யத்தை விளக்குமதான முகமும்‌ முறுவலும்‌ அனைவரும்‌ கண்டு பற்றலாம்படியான ஸெளலப்யங்‌ காட்டுமதான (ஆஸந பத்மத்திலே) தாமரை மலராசனத்திலே அழுத்தின திருவடிகளுமாய்க்‌ கொண்டு எழுந்தருளி நிற்கிற நிலையே வேறு புகலற்ற நமக்கு ரக்ஷகமென்கை. உபாய உபேய நிஷ்டர்கள்‌ விரும்பும்‌ ரக்ஷகத்வமும்‌, சுவையுடைய பயனும்‌ ஆகிற இரண்டு தன்மையும்‌ கீழ்ச்‌ சொன்னபடியே எம்பெருமானுடைய திருமேனியிலே தோற்றும்‌ என்கிறார்‌. ஆயுதங்களை யேந்துகை, சக்திமானுடைய கார்யமாகையாலும்‌, அடியார்கள்‌ விரோதிகளை அறிந்து ஏந்திய ஆயுதங்களைக்‌ கொண்டு களைவது ஜ்ஞாநவானுடைய கார்யமாகையாலும்‌, : எம்பெருமான்‌ தனது திருக்கையிலேந்திய திவ்யாயுதங்கள்‌ அவனது ஜ்ஞாந சக்திகளுக்கு விளக்கம்‌. எம்பெருமானது அஞ்சலென்று காட்டுகிற அபய முத்திரை. சேதநர்‌ தங்களது குற்றங்களை நினைந்து அசுலாமலிருக்கைக்குக்‌ காரணமாகையால்‌ வாத்ஸலயம்‌ அடையாளமாகும்‌. பெரியோனாயிருப்பவன்‌ மிகவும்‌ தாழ்ந்தாரோடு பேதமின்றிச்‌ சேர்ந்திருக்கை புன்முறுவலும்‌ மலர்ந்த முகமும்‌ உண்டாவது இஷ்டங்களைக்‌ காணும்‌ போதே யாத்லால்‌, சேதநனை அவ் வெம்பெருமான்‌ காணும் போது அந்தப்‌ பரமனிடத்துத்‌ தோன்றுகின்ற முக மலர்ச்சியும்‌, குதூகலமும்‌ அவ் வெம் பெருமானுடைய ஸெளசீல்யத்தைக்‌ காட்டும்‌. -வேறு புகலற்றவர்கள்‌ – அவ் வெம் பெருமானைத்‌ தவிர வேறெரு புகலிட மில்லாதவர்கள்‌.

எம்பெருமானை (ஆறும்‌)உபாயமாகவும்‌ (பேறுமாக) பயனுமாகக்‌ கொண்டு ள்ளவர்கள்‌ வேண்டும்‌ நிலைமை களிரண்டும்‌ கீழ்ச்‌ சொன்னபடியே நிற்கிற திருமேனியிலே தோற்றும்‌ என்கிறார்‌.
ஸூர்ணை -143 – ரஷகத்வ போக்யத்வங்கள்‌ இரண்டும்‌ திருமேனியிலே தோற்றும்‌ .
காத்தலுக்கு உபயோகமான திவ்யாயுதங்களோடும்‌, காப்பதற்குக்‌ கவித்த முடியோடும்‌ கூடியிருக்கையாலே ரக்ஷ்கத்வம்‌ தோன்றுகையாலும்‌,
‘அணியாராழியும்‌ சங்கமும்‌ ஏந்தும்‌”, “முடிச்சோதியாய்‌ உனது முகச்சோதி மலர்ந்ததுவோ” என்கிற படியே அவை தானே அழகை உண்டாக்குவதற்குக்‌ கருவியாய்‌, வைத்தஞ்சலென்றகையும்‌ முகமும்‌ முறுவலும்‌ தாமரை மலரில்‌ அழுத்தின திருவடிகளும்‌ ஒவ்வொன்றே அழகுக்குச்‌ சிகரமாயிருக்கையாலே இனிமையா யிருக்கக்கூடிய போக்யத்வம்‌ தோற்றுகையாலும்‌ இரண்டும் திருமேனியிலே தோற்றுமென்பது.
ஆக, நாராயண பதப் பொருளை அருளிச் செய்தாராயிற்று

இனி, ‘சரணெள’ என்கிற பதத்துக்கு அர்த்தம்‌ அருளிச்‌ செய்கிறார்‌. .
ஸூர்ணை -144 – சரணெள – திருவடிகளை ‘சரணெள’ என்றால்‌, திருவடிகளை என்று
பொருள்‌. இந்த ‘சரணெள’ என்கிற (த்வி வசனம்‌) இருமைச்‌ சொல்லால்‌ சொல்லுகின்ற அர்த்தத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -145 -இத்தால் சேர்த்தி யழகையும்‌, உபாய பூர்த்தியையும்‌ சொல்லுகிறது .
அதாவது, ‘சரணெள’ என்று இரண்டு திருவடிகளையும்‌ சொல்லுகிற இத்தால்‌, “இணைத் தாமரை யடி.” என்கிறபடியே, இரண்டு தாமரைப் பூவை வரிசையாகச்‌ சேர வைத்தாற் போலே சேர்த்தி யழகையும்‌, இருமைச்‌ சொல்‌லானது இரண்டுக்கு மேல்‌ வேறொன்று புகுவதைப்‌ பொறுக்‌காமையாலே இன்னொன்றைத்‌ துணையாகக்‌ கூட்டு வேண்‌டாத அவனுடைய பரிபூர்ண உபாயத் தன்மையைச்‌ சொல்லுகிறது என்பது. ்‌

உபாயமான தனித்தன்மைக்கு இதன்‌ குண மிகுதியை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -146 – பிராட்டியும்‌ அவனும்‌ விடிலும்‌ திருவடிகள்‌ விடாது; திண்‌ கழலாயிருக்கும்‌-
“ஸ்ரீமத்‌”
பதத்திலே புருஷகாரபூதையாகச்‌ சொன்ன பிராட்டியும்‌, இவள்‌ தானே
“சிதகுரைக்கிலும்‌” என்கிறபடியே குறை கூறிலும்‌ “என்னடியார்‌ அது செய்யார்‌” என்னும்படி, நாராயண பதத்‌தில்‌ சொன்ன குணங்களோடு கூடிய அவனும்‌ கை விடிலும்‌, திருவடிகள்‌ தன் பேரழகைக்‌ காட்டிக்‌ கட்டுப்படுத்திக் கொள்ளுகையாலே கை விடாது; “வண் புகழ்‌ நாரணன்‌ திண் கழல்‌” என்கிறபடியே பற்றினாரை நழுவ விடாதபடி-திண்மையை– உறுதியை உடைத்தா யிருக்குமென்கை.
இந்தக்‌ குண மிகுதியைப்‌ பற்றவுமல்லாமல்‌, அடியவனான தன்‌ இயல்பாம்‌ தன்மைக்குப்‌ பொருந்த திருவடிகளிலே இழிகை என்பதற்கு உதாரண முகத்தால்‌ அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -147 – சேஷி பக்கல்‌ சேஷ பூதன்‌ இழியும்‌ துறை; ப்ரஜை முலையிலே வாய் வைக்குமா போலே .
ஆண்டானைத்‌ தஞ்சமென்றடைய நினைக்கும்‌ அடியான்‌ தன்‌ இயல்புக்குப்‌ பொருந்த இழியும்‌ துறை திருவடிகளாகும்‌. எது போலே யென்னில்‌? முலை யுண் குழவி தாயினுடைய உறுப்பெல்லாமிருக்கத்‌ தனக்கு வகுத்ததாயுள்ள ஸ்தநத்திலே வாய்‌ வைக்குமா போலே என்கை.

திருவடிகளைச்‌ சொன்ன இது திரு- மேனிக்கும்‌ உபலக்ஷணம்‌ என்கிறார்‌ மேல்‌.
ஸூர்ணை -148 – இத்தால்‌, பிராட்டிக்கு இருப்பிடமாய்‌, குண ப்ரகாசகமுமாய்‌, சிசுபாலனையும்‌ அகப்படத்‌ திருத்திச்‌ சேர்த்துக்‌ கொள்ளும்‌ திருமேனியை நினைக்கிறது .
‘சரணெள’ என்கிற இது, திருமேனியின்‌ ஒரு பகுதியான திருவடிகளைச்‌ சொன்ன இத்தால்‌, “திருவிருந்த மார்பன்‌” என்னும்படி “ஸ்ரீமத்‌” பதத்தில்‌ சிபாரிசு செய்பவளான பிராட்டிக்கு இருப்பிடமாய்‌ “நாராயண” பதத்திற்‌ சொன்ன குணங்களுக்கு விளக்கமாய்‌
“பலபல நாழஞ்சொல்லிப்‌ பழித்த சிசுபாலன்‌” என்கிறபடியே பல நிந்தைகளைச்‌ சொல்லிப்‌ பகை வைத்தவனாய்ப்‌ பழிச்‌ சொற்களைச்‌ சொல்லித் திரிந்த சிசுபாலனையும்‌
உட்பட “அலவலைமை தவிர்த்த அழகன்‌” என்கிறபடியே வாய் வந்தபடியே பிதற்றின பகைமை தவிரும்படி தன்னழகாலே திருத்தி “திருவடி தாட்பாலடைந்த” என்கிறபடியே சேர்த்துக்‌ கொள்ளும்‌ இயல்புடைத்தான திருவடி என்று சொல்லுகிற படி பரமபதத்திலுள்ள பஞ்ச உபநிஷத் மயமாய்‌ குறைபாடொன்றும்‌ சாராததான திருமேனியை நினைக்கிறது
என்கை.-

பிறகு ‘சரணம் ‘ பதப் பொருளை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -149 -சரணம்‌ – இஷ்ட ப்ராப்திக்கும்‌ அநிஷ்ட நிவாரணத்துக்கும்‌ தப்பாத உபாயமாக,
“உபாயே க்ருஹ ரஷித்ரோச்‌ சப்தச் சரணமித்யயம்‌, வர்த்ததே ஸாம் ப்ரதஞ்சைஷ உபாயார்த்தைக வாசக:” சரணம்‌ இதி
– சரணமென்கிற,
அயம்‌ சப்த: – இந்த சப்தமானது,
உபாயே -உபாயத்திலும்‌,
க்ருஹ ரஷித்ரோச்‌ – க்ருஹத்திலும்‌ ரக்ஷ்கனிடத்திலும்‌,
வர்த்ததே– இருக்கிறது.
(இப்படி அர்த்தமானாலும்‌) ஸாம்ப்ரதம்‌ இப்போது (இவ்விடத்தில்‌),
ஏஷ: – இந்த சரண சப்தமானது,
உபாயார்த்த ஏக வாசக: – உபாயத்திற்கே பேராகக்‌ கடவது.
என்கிற படியே, சரண சப்தம்‌ ரக்ஷகனுக்கும்‌, வீட்டிற்கும்‌, உபாயத்துக்கும்‌ பேரே யாகிலும்‌, இவ்விடத்தில்‌ உபாயத்துக்கே பெயராகும்‌. இந்த உபாயத்தின்‌ செய்கையாவது,
இஷ்டத்தைக்‌ கொடுப்பதும்‌, இஷ்டமில்லாததைக்‌ போக்கக்‌ கூடியதும்‌ ஆகையாலே இஷ்டப்ராப்திக்கும்‌ அநிஷ்ட நிவாரணத்துக்கும்‌ தப்பாத உபாயமாக என்று இப் பதத்துக்கு அர்த்தம்‌ அருளுகிறார்‌.
இஷ்டம்‌, அநிஷ்டம்‌ என்பவைகள்‌ தாம்‌ இன்னவை என்பதனைப்‌ “பரந்தபடி’ என்ற நூலிலே விரிவாக அருளிச்‌ செய்தார்‌.
ஸ்ரீய: பதிப்படியிலும்‌ “அநிஷ்டமாகிறது – அறிவின்‌மையும்‌ இவற்றின்‌ காரியமான இச்சையும்‌, பகைமையும்‌ இவற்றின்‌ கார்யமான நல்வினை, தீவினைகளும்‌ இவற்றின்‌ கார்யமான தேவன்‌, மனுஷ்யன்‌, விலங்கு, தாவரங்களான நான்கு விதமான உடல்களும்‌. ஆதி ஆத்மிகம்‌ (தன்னாலேயே நேரும்‌ துன்பங்கள்‌), ஆதிபெளதிகம்‌ இதர ப்ராணிகளால்‌ வருந் துன்பங்கள்‌.) ஆதி தைவீகம்‌ (தெய்வத்தால்‌ வரக்கூடியது.) முதலான துக்கப் பரம்பரைகள்‌ என்று கூறி யிருக்கிறார்‌.
இஷ்டமாகிறது – எம்பெருமானது மேலான கருணையாலே மோக்ஷத்தைப்‌ பெறும்‌ ஆத்மாக்கள்‌, இந்த ஸ்தூல உடம்பிலிருந்து ஸூஷ்ம உடலோடு புறப்பட்டு ஸூர்ய கிரணத்தைப்‌ பற்றிக்‌ கொண்டு முதலில்‌ அர்ச்சிஸென்கிற அக்னியையும்‌, பின்பு அஹஸ்ஸையும்‌, சுக்ல பக்ஷ அபிமானியையும்‌,உத்தராயணாபிமாநியையும்‌, ஸம்வத்ஸர அபிமாநியையும்‌, வாயுவையும்‌, முறையே கிட்டி, இவர்கள்‌ வழி நடத்தப்‌ பின்பு ஸூர்ய மண்டலத்தைப்‌ பேதித்துக்‌ கொண்டு போய்ச்‌ சந்திரனைக் கிட்டி, அவன்‌ கெளரவித்து அவன்‌ வழி நடத்த, . பின்பு வருணனையும்‌, இந்திரனையும்‌ பிரம்மாவையும்‌ முறையே கிட்டி அவர்கள்‌ உலகங்களையும்‌ கடந்து, இவ் வண்டத்தையும்‌, இதைச் சுற்றியுள்ள ஏழு ஆவரணங்களையும்‌, (மூல ப்ரக்ருதி) மூலப் பகுதியையும்‌ கடந்து விரஜை யாற்றை அடைந்து அதில்‌ மூழ்கித்‌ தாம்‌ கொண்டிருந்த அரு உடல்‌ முதலியன கழியப் பெற்று, அந் நதியின்‌ அக்கரையிலுள்ள அமாநவர்‌ தொடுகையாலே பஞ்ச உபநிஷந்‌ மயமான திவ்ய தேஹம்‌ பெற்று, மீளுதலில்லாத பரம பதத்தைப்‌ பெற்று, பரமாத்ம தர்சநமும்‌ குணாநுபவ கைங்கர்யங்களை பெறுகையுமாம்‌.”

கீழ்க்‌ குறிப்பிட்டபொருளை உபாயமாகச்‌ சொன்னதின்‌ தாத்பர்ய ஸாரத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -150-இத்தால் ப்ராப்யந்தானே ப்ராபகம்‌ என்கிறது .
கீழ்‌ 148 ஆம்‌ ஸூத்ரத்தில்‌, பிராட்டிக்கு இருப்பிடமான எம்பெருமானையே உபாயமாகச்‌ சொல்லுகிற இத்தால்‌, பயனாம் பொருள் தானே பயனைச்‌ சாதிக்கும்‌ சாதனமாகச்‌ சொல்லுகிற தென்கை.

கீழே பயனைச்‌ சொன்னதுண்டோ? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -151–கீழ்ச்‌ சொன்ன மூன்றும்‌ ப்ராப்யமிறே.
“ஸ்ரீமந்‌ நாராயண சரணெள”
என்று ஒரு தொடராகச்‌ சொன்ன இதில்‌, பெரிய
பிராட்டியாரோடு கூடி இருக்கை, திவ்ய மங்கள குணங்கள்‌, திருமேனியோடு இருக்கையாகிய மூன்றும்‌. * ஸ்ரீயா ஸார்த்தம்‌ ஆஸ்தே” நித்ய முக்தர்களோடும்‌ பிராட்டியோடும்‌ கூட எம்பெருமான்‌ பரம பதத்தில்‌ வாழ்கிறான் ) என்றும்‌, ‘ஸர்வாந்‌
காமாந்‌ அஸ்நுதே
‘ (இந்த உபாஸகன்‌ எல்லாவற்றையும்‌ உணர்ந்த பர ப்ரஹ்மத்தோடு அணைத்துக்‌ கல்யாண குணங்களையும்‌ அநுபவிக்கிறான்‌). என்றும்‌, “ஸதா பச்யந்தி
ஸூரய:
” (பரமபதத்தில்‌ அந்த எம்பெருமானுடைய திவ்ய மங்கள விக்ரஹத்தை நித்ய ஸூரிகள்‌ நிரந்தர மாகக்‌ கண்டு இன்புறுகிறார்கள்‌) என்றும்‌, இப்படி, பெரிய பிராட்டியோடும்‌, கல்யாண குணங்களோடும்‌, திவ்ய மங்கள விக்ரஹத்தோடும்‌ கூடி இருப்பவனைக்‌ கண்டு இச்சேதநன்‌ இன்புறும்‌ பயனெனச்‌ சொன்னதாம்‌. சேதநன்‌ – ஜீவாத்மா.

ஆனால்‌, பயனகிய இத்தை, உபாயமாகிய சாதனமாக்குகிறது தான்‌ என்‌? “என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -152- இவன்‌ செயலறுதியாலே உபாயமாக்கு கிறானித்தனை .
தன்னைத் தானே ரக்ஷித்துக் கொள்ள முடியாத அகிஞ்சனானவனும்‌ எம்பெருமானைத்‌ தவிர வேறொருவரையும்‌ காப்பாகக்‌ கொள்ளாதவனுமாகிய இவன்‌, தன்‌ செயலறுதியாலே சுவை மிக்க பாலை மருந்தாக்குவரைப்‌ போலே, – பயனான பெருமானையே சாதனமாக்குகிறானித்‌தனை என்கிறார்‌.

இது தன்னாலே இந்த உபாயத்துக்கு ஒரு சிறப்பைச்‌ சொல்லுகிறது என்கிறார்‌
ஸூர்ணை -153- “சரணெள சரணம்‌ என்கையாலே உபாயாந்தர வ்யாவருத்தமான உபாயம்‌ என்கிறது
“சரணெள சரணம்‌”
என்று பயனான வஸ்து தன்னையே சாதனமாகச்‌ சொல்லுகையாலே, (உபாயாந்தரங்களான) வேறு உபாயங்களான கர்ம ஜ்ஞாந பக்திகள்‌ முதலானவைகள்‌ சாதனமாகவும்‌, அவைகளால்‌ சாதிக்கப்படும்‌ பகவத் கைங்கர்யமாகிய பயனும்‌
வெவ்வேறாயிருக்கும்‌ உபாயாந்தரங்களில்‌ காட்டில்‌, வேறுபட்ட உபாயம்‌ இது என்னுமிடம்‌ சொல்லுகிறது என்கை.

பிறகு, வினைச்‌ சொல்‌லுக்குப் பொருள்‌ அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -154 – ப்ரபத்யே- பற்றுகிறேன்‌ .
இப்பதம்‌ பதகதெள’ என்ற வினைப் பகுதியடியாக வந்ததாகையாலே கதி சப்தம்‌ பற்றுதல்‌ என்ற பொருளைத் தருவதாகையாலும்‌ தன்மை முன்னிலை படர்க்கை ஆகிய மூன்றிடங்களில்‌ உத்தமன்‌ என்ற தன்மைக்கு இடமாகையர்லே ; ‘பற்றுகிறேன்‌’ என்று இதற்கு அர்த்தம்‌ அருளிச் செய்கிறார்‌.

இந்தப்‌ ‘பற்றுதல்‌’ தான்‌ மாநஸமாயும்‌) மனதாலும்‌, (வாசிகமாயும்‌) வாக்காலும்‌, (காயிகமாயும்‌) உடலாலும்‌ ஆகிய முக் கரணங்களாலும்‌ பற்றுதலைக்‌ காட்டக்‌
கடவதாகையாலே, எந்தக்‌ கரணத்தால்‌ உண்டான பற்றுதலைச்‌ சொல்லுகிறது? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -155- வாசிகமாகவும்‌ காயிகமாகவும்‌ பற்றினாலும்‌ பேற்றுக்கு (இழவில்லை) அழிவில்லை ‘ஜ்ஞாநாந் மோக்ஷம்‌’ ஆகையாலே, மாநஸமாகக்‌ கடவது
“பவ சரணம்‌” (நீயே) உபாயமாக ஆவாய்‌.) என்கிறபடியே ப்ரார்த்திக்கையாகிற வெறும்‌ வாசிகமாகவும்‌, “அஞ்ஜலி: பரமா முத்ரா ஷிப்ரம்‌ தேவ ப்ரஸாதிநீ”
பரமா முத்ரா-சிறந்த அடையாளமான,
அஞ்ஜலி: – இருகைகளும்‌ கூப்பி வணங்குகை,
ஷிப்ரம்‌ – சீக்கிரமாக,
தேவப்ரஸாதிநீ – தேவனுடைய கருணையை உண்டாக்கும்‌. என்கிறபடியே பகவானுடைய கருணையை உண்டாக்குகின்ற அஞ்ஜலியைச்‌ செய்தல்‌. குகப் பெருமாள்‌ காகம்‌ முதலானவைகளைப்‌ போலே ரஷிக்கக் கூடிய எம்பெருமான்‌ இருக்குமிடத்தில்‌ போதலாகிற வெறும்‌ உடாலாகிய உறுப்பாலே பற்றினாலும்‌ பலம்‌ கிடைப்பது தவறுவது கிடையாது. “ஜ்ஞாநாந்‌ மோக்ஷ; ஜ்ஞாநத்தாலேயே மோக்ஷம்‌-என்கையாலே, மாநஸமான கரணத்தாலே
பற்றுதலாகக்‌ கடவது என்கை, அதாவது, மனஸாலே பற்றுவதென்பது மனத்தின் கார்யமான உறுதியான நினைவு, -இதை புத்தி விசேஷம்‌’ என்பர்‌. இந்தப்‌ புத்தி விசேஷத்தைப்‌ பரந்த படியிலே விரிவாகச்‌ சொன்னார்‌. ஸ்ரீய: பதிப்படியிலும்‌, இந்தப்‌ புத்தி விசேஷமாகிறது: பிறர்க்குரியதல்லாத அவனுக்கே உரிமையான சேஷத்வ ஜ்ஞாந கார்யமாய்‌
மற்ற உபாயங்களில்‌ மேம்பட்டு வேறுபட்டதாய்‌,(காக்குமவன்‌ செயலைத்‌ தடுக்குமதான தன்‌ முயற்சியைத்‌ தள்ளி,) பகவான்‌ காப்பதை அநுமதிப்பதாய்‌, ஒரே முறை
(சரணாகதி) செய்ய வேண்டியதாய்‌, பலனில்‌ நழுவுதல்‌ கால தாமதம்‌ செய்தலில்லாததாய்‌, பிறப்பு செயல்‌ அறிவுகளால்‌ குறைவாளரும்‌ செய்தற்குரியதாய்‌, இன்னார்‌ தான்‌ செய்யக்கூடும்‌ இன்ன காலத்தில்‌ தான்‌ செய்யலாம்‌ இன்ன விதம்‌ தான்‌ செய்வது இவை முதலான நியமங்களில்‌லாததாய்‌, மரண காலத்தில்‌ பகவானை நினைவு
கொள்ள வேண்டுமென்பதில்லாததாய்‌, வருத்தமின்றிச்‌ செய்யக்‌ கூடியதாய்‌, (ப்ரார்த்தநா ரூபமாய்‌) ப்ரார்த்திப்பதை செயலாக உடையதாய்‌, திட நம்பிக்கை யோடிருப்பது முதலான ஜ்ஞாந விசேஷம்‌
” என்று ப்ரபத்தியினுடைய லக்ஷணத்தை அருளிச்‌ செய்தார்‌. ஆகையால்‌, இவ்விடத்தில்‌ அதையும்‌ நினைவில்‌ கொள்வது.

இப்படி, மாநஸ மாத்திரமே போதுமோ?”சிந்தையாலும்‌ சொல்லாலும்‌ செய்கையாலும்‌” என்று ஆழ்வார்‌ அருளியபடியே முக் கரணங்களாலும்‌ பற்ற வேண்டாவோ? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -155–உபாயம்‌ அவனாகையாலும்‌, இவை நேரே உபாயம்‌ அல்லாமையாலும்‌, இம் மூன்றும்‌ வேணும்‌ என்கிற நிர்ப்பந்தம்‌ இல்லை .
பலன்‌ தருபவன்‌ பகவானே யாகையாலும்‌ முக் கரணங்களாலும்‌ பற்றுதல்களான இவை மேலெழுந்த வாரியாக உபாயம் போல்‌ தோற்றிக் கழியுண்டு போம தொழிய, இது ஸாஷாத்தான உபாய மல்லாமையாலும்‌, பயனடைதற்கு நம்பிக்கையோடு கூடிய மனக் கரணத்தால்‌ பற்றுகையே போதும்‌. இவை மூன்றும்‌ வேண்டுமென்ற நிர்‌பந்த மில்லை யென்கை. -அன்றிக்கே இப்படி ஓவ்வொன்றே போதுமென்று சொல்லுவானென்‌? முக் கரணங்களாலும்‌ பற்றுதலைச்‌ சொன்னாலோ என்ன? உபாயம்‌ அவனாகையாலும்‌ என்று
தொடங்கி அருளிச்‌ செய்கிறாராகவுமாம்‌. அப்போதும்‌ ஓரொன்றே போதும்‌. இம் மூன்றும்‌ வேணும்‌ என்ற நிர்பந்தமில்லை என்கை. -நிர்பந்தம்‌ இல்லை என்கையாலே இந்தப்‌ பற்றுகையானது முக் கரணங்களாலும்‌ உண்டானாலும்‌ குறையில்லை என்பது தோற்றுகிறது.”பற்றுகிறேன்‌’ என்ற “இந்த ப்ரபத்தி, முக்கரணங்களாலும்‌ உண்டாகவுமாம்‌ -ஒரு கரணத்தாலே உண்டாகவுமாம்‌ பலன்‌ கிடைப்பதில்‌ குறையில்லை. இவன்‌ தகுதிக்கு முக் கரணங்களுமே வேணும்‌; பலன்‌ கிடைப்பதற்கு ஒரு கரணமே போதும்‌. உபாயமாகும்‌ அவன்‌ தகுதிக்கு ஸ்ரீய: பதித்வமும்‌, வாத்ஸல்யம்‌ ‘ முதலான குணங்களும்‌, திவ்ய மங்களமான திருமேனியும்‌ வேண்டற் பாடாயிருக்குமா போலே, இவன்‌ தகுதியாம்‌ பூர்த்திக்கு முக் கரணங்களுமே வேண்டற்பாடா யிருக்கும்‌” ‘ என்றிவர்‌ தாமே பரந்தபடியிலே அருளிச்‌ செய்தது.

“ஸக்ருதேவஹி சாஸ்த்ரார்த்த:க்ருதோயம்‌ தாரயேந்நரம்‌”
ஸக்ருத்‌
– ஒரு தடவை,
க்ருத: – அநுஷ்டிக்கப்பட்ட,
அயம்‌ – இந்த,
சாஸ்த்ரார்த்த – சாஸ்த்ரார்த்தமான,
ஏவஹி – இந்த பரபத்தியே,
நரம்‌-மநுஷ்யனை,
தாரயேத்‌ – ஸம்ஸாரத்தினின்றும்‌ தாண்டு விப்பிக்கும்‌.
‘ஸக்ருதேவ ப்ரபந்நாய” (ஸக்ருதேவ-ஒரு தரமே, ப்ரபந்நாய– ப்ரபத்தி பண்ணினவனும்‌) இவை முதலானவைகளில்‌ சொல்லுகிறபடியே ப்ரபத்தி ஒரு தரமே அநுஷ்டிக்க வேண்டியதா யிருக்க. “முக் காலத்திலும்‌ ஒத்தியல்‌ பொருளைச்‌ செப்புவர்‌ நிகழுங் காலத்தானே” என்று நிகழ் காலத்துச் சொல்‌ முக் காலத்திய நிகழ்ச்சியைச்‌ சொல்லுவதாகையாலே, -பற்றுகிறேன்‌’ என்ற நிகழ் காலமாகச்‌ சொல்வதால்‌
எப்போதும்‌ சொல்ல வேண்டிய தாகுமாதலால்‌ “நிகழ் காலமாகச்‌ சொல்வது எதற்கு? என்ன, அருளிச் செய்கிறார்‌.
ஸூர்ணை -157 -வர்த்தமாந நிர்த்தேசம்‌ -ஸத்வம்‌ தலை எடுத்து அஞ்சின போது அநுஸந்திக்கைக்காக .
“லோக விக்ராந்த சரணெள சரணம்‌ தே5 வ்ரஜம்‌ விபோ”
விபோ –
ஸ்வாமீ |,
தே – தேவரீருடைய,
லோக விக்ராந்த சரணெள – உலகத்தை யளந்த திருவடிகளையே,
சரணம்‌‘ – உபாயமாக,
அவ்ரஜம்‌ – பற்றினேன்‌. என்றும்‌, ‘நின்னடியினை அடைந்தேன்‌” என்றும்‌, “அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேன்‌” என்றும்‌ இறந்த காலமாகச்‌ சொல்லாமல்‌, “ப்ரபத்யே” பற்றுகிறேன்‌ என்று நிகழ் காலமாகச்‌ சொல்லுகிறதாவது, சரீரத்தோடே இருக்கிற இவன்‌, ராஜஸ தாமஸங்களாலே கலங்கி இதர உபாயங்களான அபாயங்களில்‌ ஏதேனும்‌ ஒன்றில்‌ தொடர்பு கொண்டு பிறகு ஸத்வம்‌ தலை யெடுத்து அநுதாபம்‌ பிறந்து பயப் பட்ட காலத்திலே, “ப்ராயச் சித்திரியம்‌ ஸாத்ர யத் புநச் சரணம்‌-வ்ரஜேத்‌ ” புந மறுபடியும்‌, சரணம்‌ வ்ரஜேத்‌ (இதியத்‌) (பகவானையே) உபாயமாகப் புத்தி பண்ணுகிறானென்பது யாதொன்றுண்டு,
ஸாஇயம்‌ – இந்த இதுவே,
ப்ராயச்சித்தி:– (தவறினதுக்கு) ப்ராயச் சித்தமாகும்‌–என்கிறபடியே ப்ரபத்தி
தவிர அதற்குப்‌ பரிஹார மில்லாமையாலும்‌, அது தான்‌ ஒரு தரமே செய்ய வேண்டிய நியமமாகையாலும்‌, மீண்டும்‌ செய்தல்‌ கூடாமையாலும்‌ முன் செய்த ப்ரபத்தியையே நினைவிற்‌ கொள்ளுகைக்காக (கொழுந்து படக் கிடக்கிறது) இந்தப் ப்ரபத்தியே மேன் மேலும்‌ உண்டாயிருக்கும்‌
என்றபடி.

இன்னமும்‌ நிகழ் காலமாக பற்றுவதற்குச்‌ சில ப்ரயோஜநங்களை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -158- உபாயாந்தரங்களில்‌ நெஞ்சு செல்‌லாமைக்கும்‌, கால க்ஷேயத்துக்கும்‌, இணிமையாலே விட வொண்ணாமையாலும்‌ நடக்கும்‌ .
முன் பின்‌ பழக்கத்தாலே எப்போதாகிலும்‌ பகவானைத்‌ தவிர்ந்த வேறு உபாயங்களான கர்ம ஜ்ஞாந பக்திகளிலே மநம்‌ செல்லாமைக்கும்‌, இதைச்‌ சொல்லுகை யின்றி பொழுது போக்க அரிதாகையாலே காலங் கழிப்பதற்காகவும்‌ இதனுடைய சுவை மிகுதியாலே இதை விட மாட்டாமையாலும்‌, இடைவிடாமல்‌ நடக்கக்‌ கடவதா யிருக்குமென்கை.

இவ்வாறன்றி, பலங் கிடைக்கப்‌ பல காலும்‌ சொல்ல வேணு மென்றாலோ? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -159-பேற்றுக்குப்‌ பலகாலும்‌ வேணுமென்று நினைக்கில்‌ உபாயம்‌ நழுவும்‌ –
முன்‌ ஸூத்திரத்தில்‌ சொன்ன ப்ரயோஜனங்களுக் கன்றிக்கே பலங் கிடைப்பதற்குப்‌ பலகாலும்‌ சொல்ல வேணுமென்று நினைக்கில்‌, வேற்றுத் துணை பொறுக்காத பகவானாகிய ஸித்தோபாயம்‌ சணற்கயிறு கண்ட ப்ரஹ்மாஸ்திரம்‌ போலே தன்னைக்‌ கொண்டு நழுவுமென்கை.
ஆக, த்வயத்தின்‌ முதல்‌ வாக்கியத்துக்கு அர்த்தம்‌ அருளிச்‌ செய்தாராயிற்று.

இனி, உத்தர வாக்கியத்துக்கு அர்த்தம்‌ அருளிச்‌ செய்வதாக ஆரம்பிக்கிறார்‌.
ஸூர்ணை -160-உத்தர வாக்யத்தாலே ப்ராப்யம்‌ சொல்லுகிறது –
ப்ராப்யமாவது, (ஸ்ரீய: பதியாய்‌) திருமகள்‌ கேள்வனாய்‌ ஸர்வ ஸ்வாமி யாயிருக்கிற ஸர்வேஸ்வரன்‌ திருவடிகளில்‌ செய்யும்‌ தொண்டு.

உபாயத்தைப் பற்றிய பிறகு அடையத்‌தக்க பயனைச்‌ சொல்லுகிற இதற்கு அபிப்ராயத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -161 -ப்ராப்யாந்தரத்‌துக்கு அன்றென்கை –
முதல்‌ வாக்யத்தில்‌ சொன்ன உபாயத்துக்கு-1- நூதனமான செல்வத்தை வேண்டுபவனும்‌,
2-இழந்த செல்வத்தைப் பெற வேண்டுபவனும்‌, -3-கைவல்யத்தைப்‌ பெற வேண்டுபவனும்‌, -4-அவ் வெம்பெருமான்‌ திருவடிகளை அடைய வேண்டுபவனும்‌ ஆகிய நான்கு விதமான பலன்களை அடைய விரும்புகிறவர்களுக்கும்‌ இந்த உபாயம்‌ பொதுவாகையாலே, உத்தர வாக்யத்தில்‌ சொல்லுகிற பலந்தான்‌ இன்னது என்று நிரூபிக்க வேண்டுகையாலே வேறு
பயன்களுக்கன்று, அவன்‌ திருவடிகளில்‌ பண்ணும்‌ கைங்கர்யமே இதற்குப்‌ பலனாகும்‌
என்பதாம்‌.

மற்ற பயன்களை விட்டு பகவத் கைங்‌கர்யமாகிற இதொன்றையுமே வேண்டுவானென்‌? என்ன, விடை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -162 – உபாயாந்தரங்களை விட்டுச்‌ சரமோபாயத்தைப்‌ பற்றினாற் போலே, உபேயாந்தரமான ஐஸ்வர்ய கைவல்யங்களை விட்டு எல்லையான ப்ராப்யத்தை அர்த்திக்கிறது.
உபாயத்தைப்‌ பற்றும்‌ போது அவனைத்‌ தவிர்த்து வேறொன்றையும்‌ உபாயமாகப்‌ பற்றத் தகாத தன்னியல்பான ஸ்வரூபத்துக்குப்‌ பொருந்த, கர்ம ஜ்ஞாந பக்திகளாகிய வேற்று உபாயங்களை விட்டு முடிந்த உபாயமான ஸித்தோபாயமான அவனைப் பற்றினாற்‌-
போலே, பயனைப் ப்ரார்த்திக்கிற சமயத்திலும்‌ அவன்‌ தவிர்‌த்த வேறுப் பயன்‌ நுகராத தன்னியல்பான ஸ்வரூபத்துக்குப்‌ பொருந்த வேறு பயன்களான ஐஸ்வர்ய கைவல்யங்களை விட்டுச்‌ சரமமான முடிந்த சிறந்த பயனைப்‌ பிரார்த்திக்கிறது என்கை.

நினைவறியும்‌ ஈஸ்வரன்‌ ஸ்ரீமந் நாராயணன்‌ பக்கல்‌ ப்ரார்த்தனை அதிகம்‌ என்றிருப்பார்‌ செய்யும்‌ வினாவை தாமே ப்ரதிவாதம்‌ பண்ணுகிறார்‌.
ஸூர்ணை -163 – இவன்‌ அர்த்திக்க வேணுமோ? ஸர்வஜ்ஞன்‌ இவன்‌ நினைவறியானோ ? என்னில்‌ .
இவன்‌ ப்ராத்திக்க வேணுமோ? அனைத்‌தும்‌ அறியுமவன்‌ இவன்‌ நினைவறியானோ ? என்னில்‌, அதற்கு விடை அருளிச்‌ செய்கிறார்‌.

ஸூர்ணை -164 – இவன் பாசுரங் கேட்டவாறே திருவுள்ளம்‌ உகக்கும்‌ –
அதாவது, நோய் வாய்ப்பட்டமையாலே சோற்றில்‌ ஆசை யற்றுக் கிடந்த சிறு குழந்தை, நோய்‌ தீர்ந்து பசி யுண்டாகி “சோறு’ என்று கேட்டவாறே பெற்ற தாய்‌ உகக்குமா போலே, அநாதி காலமாக இவன்‌ பகவானைத்‌ தவிர்த்த வேறு பயன்களில்‌ மனம்‌ ஊன்றியவனாகை யாகிற நோய்‌ கொண்டு இந்தப்‌ பயனில்‌ நசையற்றுக் கிடந்தவன்‌, நோய்‌ தீர்ந்து இதிலே சுவை பிறந்து தன்‌ பக்கல்‌ வந்து இத்தை விரும்பிக் கேட்டவாறே தலைவனாகிற எம்பெருமான்‌ திரு வுள்ளம்‌ உகக்கும்‌. அதற்காக ப்ரார்த்திக்கிறான்‌ என்கை.

இனி, இந்த வாக்யத்துக்குப் பதந்தோறும்‌ பொருள்‌ சொல்வதாகத்‌ திருவுள்ளம்‌ பற்றி முதல்‌ பதத்தை ஆரம்பிக்கிறார்‌.
ஸூர்ணை -165- ஸ்ரீமதே – பெரிய பிராட்டியாரோடே கூடி யிருந்துள்ளவனுக்கு -ஸ்ரீமதே‘ என்று இதற்கு அர்த்தம்‌ அருளிச்‌ செய்கிறார்‌. பெரிய பிராட்டியாரோடே கூடி இருந்துள்ளவனுக்கு’ என்று இங்கும்‌ முதல்‌ வாக்யத்திற் போலே ஸ்ரீசப்தத்துக்குச்‌ சொன்ன (கர்மணி வ்யுத்பத்தி, கர்த்தரி வ்யுத்பத்தி) செயப்படு பொருள்‌, எழுவாய்‌ என்ற இரண்டு வ்யுத்பத்திகளும்‌, அதில்‌ அர்த்தமும்‌ மதுபர்த்தமான (நித்யயோகமும்‌) என்றுங்கூடி இருக்கையும்‌ நினைக்க வேண்டும்‌ என்கிறார்‌.

முதல்‌ வாக்கியத்திலும்‌ இரண்டாம்‌ வாக்கியத்திலும்‌ நித்ய யோகம்‌- எப்போதும்‌ கூடி இருக்கை ஓத்திருக்கச் செய்தே அந்தந்த நிலைகளுக்குப்‌ பொருந்த இவளிருக்கும்‌ இருப்பை அருளிச் செய்கிறார்‌.
ஸூர்ணை -166 – அவன்‌ உபாயமாமிடத்தில் தான்‌ புருஷகாரமாயிருக்கும்‌; அவன்‌ ப்ராப்யனாமிடத்தில்‌ தான்‌ ப்ராப்யையுமாய் கைங்கர்ய வர்த்தகையுமா யிருக்கும்‌ .
எம்பெருமான்‌ சேதநர்க்கு விரோதமானவற்றைத்‌ தவிர்க்கையும்‌ இஷ்டமானவற்றைக்‌ கொடுக்கையுமாகிற உபாயமாமிடத்தில்‌, வேறொரு துணைக்‌ கூட்டாகிற சேர்த்தியை பொறுக்காமையாலே, பிராட்டியாகிய தான்‌ உபாயத்வத்தில்‌ தொடர்பு கொள்ளாமல்‌,
குற்றங்களோடு கூடிய சேதநரைப்‌ பார்த்து அவன்‌ சீறுமளவில்‌ அத்தைப்‌ பொறுத்து கைக் கொள்ளும்படியாகச்‌ செய்‌யும்‌ புருஷகாரமாயிருக்கும்‌
-அவன்‌ சேதநர்கள்‌ செய்யும்‌ தொண்டினை ஏற்கும்‌ பயனாமிடத்தில்‌, அவனைப் போல தொண்டினை ஏற்பவளாய்க்‌ கொண்டு பயனுமாய்‌, இவர்கள்‌ செய்யும்‌ தொண்‌டினை அவன்‌ திருவுள்ளத்திலே ஒன்று பத்தாகப் படுத்தி அவனை உகப்பிக்கையாலே கைங்கர்யத்தை வளர்ப்பவளாயிருக்கும்‌ என்றபடி-இது தன்னைப்‌ பரந்தபடியிலே த்வயத்தில்‌ முதல்‌ வாக்யத்தில்‌, “ஸ்ரீமத்‌ சப்தம்‌ சேதநருடைய அபராதத்தையும்‌, ஈஸ்வரனுடைய ஸ்வாதந்த்ர்யத்தையுங் கண்டு, இவர்கள்‌ அவனுடைய கோபத்துக்கு உரியராய்‌ நசித்துப் போகாதே அவனைக் கிட்டி, உஜ்ஜீவித்துப்‌ போக வேணும்‌. என்று குற்றங்களோடு கூடிய சேதநரை ஈஸ்வரனேடே சேர்க்கைக்காக என்றும்‌ ஒக்க விடாதே இருக்கும்‌ இருப்பைச்‌ சொல்லுகிறது;(உத்தர) பின்‌ வாக்கியமாகிய ஸ்ரீமச்சப்தம்‌ கைங்கர்யத்தை ஏற்பதைப் பற்றவும்‌, இவர்கள்‌ செய்யும்‌ கைங்கர்யத்தை ஈஸ்வரன்‌ திருவுள்ளத்திலே ஒன்று பத்தாகப்‌ படுத்துகைக்காகவும்‌ அநுபவத்தில்‌ இடையூறு வாராமைக்காகவும்‌ (அநுபவ விச்சேதத்தில்‌) பகவதநுபவம்‌ குறைவதினால்‌ தான்‌ இல்லை என்னலாம்‌படி. தரியாமையாலே இடைவிடாமற்‌ சேர்ந்து அவனை நொடியும்‌ பிரியாதே எல்லாக்‌ காலங்களிலும்‌ கூடி யிருக்கும்‌ இருப்பைச்‌ சொல்லுகிறது.”என்று விரிவாக அருளிச்‌ செய்தார்‌.

திருமந்த்ரத்தில்‌ உத்தர பதத்துக்கு இந்த உத்தர வாக்யம்‌ விவரணமா யிருக்கிற படியை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -167- இதிலே திருமந்த்ரத்தில்‌ சொன்ன ப்ராப்யத்தை விசதமாக அநுஸந்திக்கிறது .
கைங்கர்யத்தை ஏற்பது (ஒரு மிதுநம்‌) ஓர்‌ இருவர்‌ என்பதைச்‌ சப்தத்தாலேயே சொல்லுகிற இந்த வாக்யத்திலே, திருமந்த்ரத்திலே நாராயணாய என்று கைங்கர்யத்தை ஏற்பது ஒரு திவ்ய தம்பதிகள்‌ என்னுமிடம்‌ அர்த்த பலத்தாலே சொல்லுகையாலே, சுருங்கச்‌ சொன்ன பயனை விரியச்‌ சொல்லுகிற தென்கை. அங்கு ‘நாராயணனுக்கே அடிமை செய்யப்‌ பெறுவேனாக வேணும்‌’ என்கிற இவ்வளவொழிய “அடிமை கொள்ளுமவன்‌ ஸ்ரீமானாக வேணும்‌’ என்றும்‌ ‘அடிமை செய்பவன்‌ மமகாரம்‌ அற்றவனாக வேணும்‌’ என்றும்‌ சொல்லாமையாலும்‌ அவை இரண்டும்‌ இங்குச்‌ சொல்லுகையா லன்றோ அந்தப்‌ பதத்துக்கு இந்த வாக்யம்‌ விவரணமாயிற்று என்பதாகும்‌.

இந்தத்‌ திவ்ய தம்பதிகளுக்கே அடிமை செய்ய வேணும்‌ என்கிற நிர்பந்தம்‌ தான்‌ என்‌? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -168-இளைய பெருமாளைப் போலே இருவருமான சோர்த்தியிலே அடிமை செய்கை முறை –
“பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஸாநுஷு ரம்ஸ்யதே அஹம்‌ ஸர்வம்‌ . கரிஷ்யாமி ஜாக்ரதஸ்‌ ஸ்வபதச்சதே” பவாம்ஸ்து
– தேவரீர்‌,
வைதேஹ்யா -பிராட்டியோடுகூட,
கிரிஸா நுஷ-–பர்வதத்தின்‌ தாழ்வரைகளிலே,
ரம்ஸ்யதே – விளையாடப்‌ போகிறீர்‌,
அஹம்‌ – நான்‌,
ஜாக்ரத:- விழித்துக்‌ கொண்டும்‌,
ஸ்வபதச்ச – நித்திரை செய்து கொண்டு மிருக்கிற,
தே-தேவரீருக்கு,
ஸர்வம்‌ கரிஷ்யாமி– அனைத்துத்‌ தொண்டுகளும்‌ செய்வேன்‌. என்கிறபடியே எல்லா தேசங்களிலும்‌, எல்லாக் காலங்களிலும்‌, எல்லா நிலைகளிலும்‌ பெரிய பிராட்டியாரும்‌ ஸ்ரீமானுமான மிதுநத்துக்கு அடிமை செய்கையே சேஷ பூதனுக்கு ப்ரயோஜனமென்பது. இப்படி, பெருமாளும்‌ பிராட்டியுமானச்‌ சேர்த்தியிலே அடிமை செய்த இளைய பெருமாளைப் போலே இருவருமானச்‌ சேர்த்தியிலே அடிமை செய்கை இவ்வாத்மாவுக்கு இயல்பு. திவ்ய தம்பதிகளான இருவருக்கும்‌ அடிமை செய்வது (மிதுந சேஷத்வம்‌) இயல்பானால்‌, மிதுந கைங்கர்ய மன்றோ (ஸ்வரூபாநுரூபமான) இயல்புக்குச்‌ சேர்ந்த ப்ரயோஜனமென்கை. -ஸ்வரூபம்‌ – ஆத்மாவின்‌ இயல்பு.

இன்னமும்‌ அச் சேர்த்தியிலே அடிமை செய்யுமளவில்‌ உள்ள வித்யாசமான தன்மையை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -169-அடிமை தான்‌ ஸித்திப்பதும்‌ ரஸிப்பதும்‌ அச் சேர்த்தியிலே ஸ்வதந்த்ரனான ஈஸ்வரன்‌ அநாதரிக்காமல்‌ கைங்கர்யங்‌ கொண்டருளும்படி செய்பவள்‌ இவளாகையாலே “ஸீதாமுவாச” (ஸீதையிடம்‌ விண்ணப்பித்தான்‌) என்கிறபடியே பிராட்டியைப்‌ புருஷகாரமாகக்‌ கொண்டு, “ஸீதாஸமக்ஷம்‌ காகுத்ஸ்தமிதம்‌ வசநம்‌ அப்ரவீத்‌”
(ஸீதாபிராட்டியின்‌ முன்னிலையாகத்‌ தம்முடைய இயல்புக்கு ஏற்ற ‘ தொண்டை வேண்டிப்‌ பெற்ற) இளைய பெருமாளைப்‌ போலே, இவன்‌ (சேதநன்‌) ப்ரார்த்திக்கிற தொண்டு தான்‌ ஸித்திப்பதும்‌ (தனக்கு உண்டாவதும்‌) மாதா பிதாக்கள்‌ இருவருமான சேர்த்தியிலே தொண்டு செய்யும்‌ புத்திரனைப் போலே, செய்கிற தொண்டு தான்‌ ரஸிப்பதும்‌ பிராட்‌டியும்‌ அவனுமானச்‌ சேர்த்தியிலே என்பது.

இனி, இரண்டாம்‌ பதமான நாராயணாய”, என்ற பதத்தை விவரிக்கிறார்‌, ஸர்வ சேஷியாயுள்ளவனுக்கு’ என்று அதற்குப் பொருள்‌ சொல்லுகிறார்‌.
ஸூர்ணை -170 – நாராயணாய – ஸர்வ சேஷியாயுள்ளவனுக்கு-
நாராயணத்வம்‌ என்பது அதாவது – நாராயணன்‌ என்பவன்‌ இரண்டு விதமான உலகத்திற்கும்‌ நாதன்‌ ஆகையாலே, ஸர்வ சேஷியாயுள்ளவனுக்கு தான்‌ தவிர்ந்த எல்லாப் பொருள்களுக்கும்‌ எஜமானனா யுள்ளவனுக்கு என்கிறார்‌. தொண்டை. ஏற்றுக் கொள்ளுபவன்‌ எஜமானனாகையாலே.

கைங்கர்யந்தான்‌ – பகவானுக்குச்‌ செய்யும்‌ தொண்டு தான்‌ பகவானை அநுபவிப்பதால்‌ பிறந்த உகப்பின்‌ கார்யமாகையாலும்‌, அந்த உகப்பு தான்‌ அநுபவிக்கிற பகவத் விஷயத்தி லாகையாலும்‌ நாம்‌ அநுபவிக்‌கிற விஷயத்தை இன்னது என்று சொல்ல வேண்டுகையாலே அருளிச் செய்கிறார்‌.
ஸூர்ணை -171 – இதிலே திருமேனியையும்‌ குணங்களையும்‌ சொல்லும்‌ –
தொண்டன்‌ செய்யும்‌ தொண்டினை ஏற்கும்‌ பொருளைச்‌ சொல்லுகிற இப் பதத்திலே,
கைங்கர்யத்துக்கு முன்னோடியா யிருக்கிற அநுபவத்துக்கு இலக்கான பகவானுடைய திவ்ய மங்கள விக்ரஹத்தையும்‌ கல்யாண குணங்களையும்‌ சொல்லும்‌ என்கை. “ஸதா பஸ்யந்‌தி ஸூரய: (நித்ய ஸூரிகள்‌ எம்பெருமானின்‌ திவ்ய மங்கள விக்ரஹத்தை நிரந்தரமாக ஸேவிக்கிறார்கள்‌.) என்றும்‌,
ஸோஸ்நுதே ஸர்வான்‌ காமான்‌” (உபாசகன்‌ எம்பெருமானுடைய அனைத்துக் கல்யாண குணங்களையும்‌ அநுபவித்துக் கொண்டிருக்கிறான்‌) என்றும்‌, “ரஸம்ஹ்யேவாயம்‌ லப்த்வா-
ஆநந்தி பவதி
” (அந்தப்‌ புருஷன்‌ அனைத்துச்‌ சுவைகளாலும்‌ நிரம்பிய பெருமானை அடைந்து அநந்திக்கிறான்‌.) என்றாற்‌போல்‌ அவனுடைய ஸ்வரூபம்‌ எப்படி அநுபவத்துக்கு இலக்கோ? அதே போன்றே அவனுடைய திவ்ய மங்கள விக்ரஹமும்‌ கல்யாண குணங்களும்‌ அநுபவத்துக்குரியதாய்‌, தொண்டினை மேன்மேலென வளர்ப்பிப்பதாய்‌, இனிமை மிகுந்து மன்றோ இருப்பது.-குணங்களென்று பொதுவாகச்‌ சொல்லுகையாலே ஜ்ஞாந சக்தியாதி குணங்களோடு, வாத்ஸல்யாதி குணங்களோடு, செளர்யாதி குணங்களோடு வாசியற எல்லாக்‌ குணங்களும்‌ அநுபவிக்கப் பெறுவதா யிருக்கையாலே, முதல்‌ வாக்யத்தில்‌ நாராயண பதத்தில்‌ உபாயமாக வரிப்பதற்கு உபயோகமாகச்‌ சொல்லப் பெற்ற குணங்களும்‌ இப் பதத்தில்‌ பயனாக நினைக்கத் தக்கவை, ஆதாரமான
ஸ்வரூபத்துக்கு உபாயம்‌, உபேயம்‌ என்ற இரண்டு நிலைகளுண்டா யிருக்கிறாற் போன்றே அதேயமான குணங்‌களுக்கும்‌ உபாயம்‌, உபேயம்‌ என்ற இவ்விரண்டு நிலைகளும்‌ உண்டாயன்றோ இருப்பது.-இவை எல்லாம்‌ பரந்தபடியிலே அருளிச் செய்தார்‌ என்கிறார்‌ மாணவாள மாமுநிகள்‌.

இனி, இப்பதத்துக்கு நோக்கு இன்னதிலே என்கிறார்‌.
ஸூர்ணை -172- சேஷித்வத்திலே நோக்கு –
அனுபவித்தற்கு ஏற்றலாதலென்பது பகவானுடைய எல்லா குணங்களையும்‌ நாராயண பதம்‌ சொல்லி யிருந்தாலும்‌ சதுர்த்தி யம்ஸத்தில்‌ ஆய” என்கிற நான்காம்‌ வேற்றுமையில்‌ சொல்லுகிற கைங்கர்ய விசேஷத்துக்கு (சிறப்புக்கு) மிகவும்‌ உரியதாயிருப்பது சேஷித்வ (எஜமானத்வ) மாகையாலே, இப் பதத்‌ துக்கு அதிலே நோக்கு என்கை என்கிறார்‌

இந்த சேஷித்வம்‌ சொல்லுகைக்கு ப்ரயோஜநம்‌ அருளிச் செய்கிறார்‌.
ஸூர்ணை -173- ப்ராப்த விஷயத்தில் கைங்கர்‌யமிறே ரஸிப்பது
“ஸர்வம்‌ பரவசம்‌ துக்கம்‌”
(பிறன்‌ வசத்து இருப்பது அனைத்தும்‌ துன்பமே) என்றும்‌,
“ஸேவா ஸ்வவ்ருத்தி” (அடிமை நாய்த் தொழில்‌) என்றும்‌ சொல்லுகிற படியே சாஸ்திரங்கள்‌ தகாதென்ற விஷயத்தில்‌ தொண்டாற்றுகைப்‌ போலன்றிக்கே “சாயாவா ஸத்வ மநுகச்சேத்‌”( பரன்‌ திறத்தில்‌ நிழல் போல்‌ தொடரக் கடவன்‌.)என்றும்‌, “ஸாகிமர்த்தம்‌ ‘நஸேவ்யதே” (பரனுக்குத்‌ தொண்டாற்றுகை சிறந்த தாயிருக்க ஏன்‌? செய்யப்படவில்லை) என்றும்‌, சொல்லுகிற படியே சாஸ்திரங்கள்‌ விதித்த -தகுந்த விஷயத்தில்‌ தொண்டாற்றுகை யன்றோ இவனுக்குச்‌ சுவைப்பது என்கை.

இனி இப் பதத்தில்‌ வேற்றுமை உருபுக்‌குப் பொருள்‌ சொல்லுகிறார்‌.
ஸூர்ணை -174 – இந்தச்‌ சதுர்த்தி கைங்கர்யத்தை ப்ரகாசிப்பிக்கிறது.
சேஷத்வ ஜ்ஞாந கார்யமான உபாயத்தைக் கைக்‌ கொண்டதின்‌ பிறகு வந்ததாகையாலே, இந்த நான்காம்‌ வேற்றுமை “அதற்காக’ என்ற முறைப்‌ பொருளுணர்த்துகை யன்றிக்கே, இந்த சதுர்த்தி, கை பற்றிய உபாயத்தினுடைய பலமான கைங்கர்யத்தைப்‌ பிரகாசிப்‌பிக்கிற தென்கை.-கைங்கர்யத்தை ப்ரகாசிப்பிக்கையாவது – கைங்கர்ய ப்ரார்த்தனையைச்‌ சொல்லுகை. கைங்கர்யமாவது:- பகவாந்‌ முகமலர்த்திக் குறுப்பான தொண்டாற்றுகை. இந்தக்‌ கைங்கர்யந்தான்‌ “ஏதத்‌ ஸாம காயந் நாஸ்தே” (முக்தன்‌ இந்த ஸாமத்தைப்‌ பாடிக்‌ கொண்டிருக்கிறான்‌.) என்றும்‌, “நம இத்யேவ வாதிந:” நம: என்ற இத்தைச்‌ சொல்லிக்‌ கொண்டிருக்கிறார்கள்‌.) “யேந யேந ததா கச்சதி தேந தேந ஸஹ கச்சதி’ (எந்தெந்த வழியில்‌ ப்ரபு செல்கிறானோ அந்தந்த வழியில்‌ இவனும்‌ செல்கிறான்‌.) என்றும்‌ இவை முதலானவைகளில்‌ சொல்லுகிறபடியே தொண்டு வாசிக காயிக ரூபமாயிருக்கும்‌ என்றபடி.

இந்தக்‌ கைங்கர்யம்‌ ப்ரார்த்திக்கப்‌-பெறுமதாகில்‌ எப்போதாவது ஒரு ஸமயத்திலாகாதோ வென்‌னில்‌? அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -175 – கைங்கர்யந்தான்‌ நித்யம்‌ .
அதாவது, (சேஷத்வமே) அடிமையே ஆத்‌மாவுக்கு இன்றியமையாத லக்ஷண்‌ மாகையாலும்‌, “அகிஞ்சித் கரஸ்ய சேஷத்வாநுபபத்தி’: (அடிமையை மேற்‌- கொண்டொழுகாத போது ஆத்மாவுக்கு சேஷத்வம்‌ என்ற லக்ஷணம்‌ பொருந்தாது.) என்கிறபடியே தொண்டு செய்யாத-
போது அடிமைத்‌ தன்மைப்‌ பொருந்தாமையால்‌ ஆத்மாவுக்குக்‌ கைங்கர்யம்‌ நித்யமென்கை.-ஆகையாலன்றோ “நித்ய கிங்கர: ப்ரஹர்ஷ யிஷ்யாமி”( நித்திய கிங்கரனாகவே இருந்து உன்னை களிப்புறச்‌ செய்வது என்றோ.) என்றும்‌, “நித்ய கிங்கரோ பவாநி” (எப்போதும்‌ கைங்கர்யம் பண்ணுபவனாகவே ஆகக் கடவன்‌) என்றும்‌ நம்‌ ஆசார்யர்கள்‌ அருளிச்‌
செய்தது.

நித்தியமாயிருக்குமாகில்‌ ப்ரார்த்திக்க வேணுமோ? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -176 – நித்யமாக ப்ரார்த்தித்தே பெறவேணும்‌ .
கைங்கர்யத்தை ஏற்குமவன்‌ பரம்‌ பரனாகையாலும்‌, தொண்டு செய்யும்‌ சேதநன்‌ அத்யந்த பரதந்த்ர னாகையாலும்‌, ப்ரார்த்தநா விசேஷம்‌ இல்லாத போது கைங்கர்யம்‌ ஸித்தியாமையாலும்‌, நித்யமாக ப்ரார்த்தித்தே பெற வேணும்‌ என்கிறது

நித்தியமும்‌ ப்ரார்த்தனைக்கு உரித்தாகைக்கு நிதாநம்‌ அருளிச்செய்கிறார்‌.
ஸூர்ணை -177- சேஷிக்கு அதிசயத்தை விளைக்கை சேஷபூதனுக்கு ஸ்வரூப லாபமும்‌, ப்ராப்யமுமம்‌ ,
“நாகிஞ்சித் குர்வதச்‌ சேஷத்வம்‌” என்கிறபடியே தொண்டாற்றி சேஷிக்கு ஸந்தோஷத்தை விளைவிக்காத வஸ்துவுக்கு சேஷத்வம்‌ இல்லாமையாலே, சேஷியான ஈஸ்வரனுக்குத்‌ தன்னுடைய அடிமைச்‌ செயலாலே ப்ரீதியை விளைவிக்கை ஆடியவனுக்குத்‌ தன்‌ ஸ்வரூப லாபமாய்‌, அவனுடைய முக மலர்த்திக்‌ குறுப்பாயிருக்கையாலே பயனுமாயிருக்குமென்கை. ஆகையாலே, நித்யமும்‌ ப்ராத்தனைக் குரித்தாயிருக்குமது பகவத்‌ கைங்கர்யம்‌ எனப்படுவது இவ் விடத்தில்‌ கருத்தாயிருக்கும்‌. சேஷி-எஜமானனான எம்பெருமான்‌. சேஷ பூதன்‌ – அடிமையாகிற நாம்‌. (ஆத்மாக்கள்‌).

பிறகு கடைசி பதத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை – 178- நம: கைங்கர்யத்தில்‌-களையறுக்கிறது.
நம:
என்கிற இதற்கு அர்த்தம்‌ அருளிச் செய்கிறார்‌. * கைங்கர்யத்தில்‌ களை யறுக்கிறது’ என்று அதாவது, நமச் சப்தம்‌ பொதுவாக அஹங்கார மமகாரங்‌களைக்‌ கழிக்கையாலே, திருமந்த்ரத்தில்‌ மத்யம பதமான நமச்‌ சப்தம்‌ போலே ஸ்வரூப உபாய புருஷார்த்த விரோதிகள்‌ மூன்றையுங்‌ கழிக்க வற்றா யிருந்ததே யாகிலும்‌, இங்கு அங்ஙனன்றிக்கே, இந்த நமப் பதம்‌ கைங்கர்ய ப்ரார்த்தனைக்குப்‌ பிறகு சொல்வதாகையாலே, இந்தக் கைங்கர்யத்தில்‌ விரோதியைக்‌ கழிக்கிறது என்கை.

கைங்கர்யத்துக்குக் களை எது” என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -179- களையாவது-தனக்கென்னப் பண்‌ணுவது
தனக்கென்னப் பண்ணுகையாவது, “போக்‌-தாஹம்‌ மம போகோயம்‌” (நான்‌ புஜிக்கிறவன்‌, இது எனக்கு புஜிக்கப்படுவது.) என்கிறபடியே இத்தைத்‌ தன்னுடைய ஸந்தோஷத்துக்கு உறுப்பாக நினைத்துப்‌ பண்ணுகை: கைங்கர்யம்‌ பகவாந்‌ முக மலர்த்திக்கு சந்தோஷத்திற்கு ஏதுவாகையாலே இது நமக்கு விரும்பத் தக்கது என்கிற நினைவு ஒழிய, இது என்னுடைய போகத்துக்குரியது’ என்றும்‌, இது என்னுடையது” என்ற புத்தியும்‌ நடக்குமாகில்‌ பயனற்றதா யன்றோ இருப்பது இந்த கைங்கர்யம்‌. இப்படி,
எனக்கென்றும்‌ என்னுடைய தென்றும்‌ வருகிற நினைவை அடியோடு களைகிறது, இந்த நமப்பதம்‌ என்கை .

இன்னமும்‌ இந்தக்‌ கைங்கர்யத்தைப்‌ பெறுகைக்கு விரோதிகளானவையும்‌ இதிலே கழியுண்ணுமென்கிறார்‌.
ஸூர்ணை -180-இதிலே அவித்யாதிகளும்‌ கழியுண்ணும்‌
அஹங்கார மமகார நிவ்ருத்தியை ப்ரார்த்திக்கிற இந்த நமஸ்ஸிலே, “அநாத்மந்யாத்ம புத்திர்யா அஸ்வே ஸ்வமிதி யாமதி; அவித்யா தருஸம்‌ பூதிபீஜமேதத்‌ தீவிதா ஸ்திதம்‌”
அநாத்மநி – ஆத்மாவல்லாத தேகத்தில்‌,
ஆத்மபுத்தி:– ஆத்மா என்கிற புத்தியானது, யாமதி – தொன்றுண்டோ,
அவித்யாதரு – அஜ்ஞாநமாகிய மரம்‌,
ஸம்பூதி – உண்டாவதற்கு,
பீஜம்‌ – காரணமானது,
ஏதத்த்‌- விதாஸ்திதம்‌ – இப்படி (அஹங்கார மமகாரமென்கிற)இரண்டாக இருக்கிறது. என்கிறபடியே ஆத்மாவல்லாத உடலை ஆத்மாவாக புத்தி பண்ணுவதையே வடிவாக உடைத்‌தாய்க் கர்ம உற்பத்தி காரணமா யிருந்துள்ள அறிவின்மையும்‌,அதன்‌ கார்யமான கர்மங்களும்‌, அதன்‌ கார்யமாய்‌ வரும்‌ உடல்‌ தொடர்பும்‌ எல்லாம்‌ கழி யுண்ணும்‌ என்கிறது. -ஆகையாலே தான்‌ த்வய விவரணமான கத்யத்திலே எம்பெருமானார்‌ நமச் சப்தார்த்தத்தைச்‌ சொல்லி யருளுகிற அளவில்‌ “மநோ வாக்காயை:” என்ற சூர்ணையாலே முக் கரணங்களாலும்‌ செய்யக்‌ கூடாததைச்‌ செய்கை, செய்யக்‌ கூடியதைச்‌ செய்யாமை முதலான அனைத்துக் கர்மங்களும்‌ கழிகையும்‌, “அநாதி கால ப்ரவருத்த” முதலான குர்ணையாலே அறிவின்மை அழிகையும்‌, “மதீயாநாதி” என்றசூர்ணையாலே, உடல்‌ தொடர்பு கழிவும்‌ ப்ராத்தித்தருளினார்‌.

ஆனாலும்‌, இதற்கு முதன்மையான பொருள்‌ கைங்கர்யத்தில்‌ தன்னலங்கழிகையே. அத்தைச்‌ சொல்லி அருளுகிறார்‌ மேல்‌. அதில்‌ முதலில்‌ பகவத் கைங்கர்‌யம்‌ பண்ணும் போது தான்‌ எப்படியாக வேணும்‌? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -181- “உனக்கே நாமாட் செய்வோம்‌ ‘ என்னும்‌ படியே ஆக வேணும்‌ .
கைங்கர்யம்‌ செய்யுமளவில்‌ “உனக்கே நாமாட்செய்வோம்‌” என்று “உனக்கும்‌ எங்களுக்கு மாயிருக்கும்‌ இருப்புத்‌ தவிர்ந்து, உனக்கே உகப்பாக நாங்கள்‌ அடிமை செய்ய வேணும்‌’ ‘என்கிறபடியே ஆண்டானுக்கே உகப்பாக அடிமைத்‌ தொழில்‌ செய்ய வேணுமென்கை.
“தனக்கே யாக எனைக்‌ கொள்ளுமீதே“என்றன்றோ ஆழ்வாரும்‌ அருளிச்‌ செய்தது.

இனி, இந்தக்‌ கைங்கர்யத்துக்குத்‌ தடைகளை அருள்கிறார்‌.
ஸூர்ணை -182-ஸெளந்தர்யமும்‌ அந்தராயம்‌; கீழ்ச்‌ சொன்ன கைங்கர்யமும்‌ அப்படியே .
அவன்‌ திருமேனி அழகும்‌ மனத்‌தைக்‌ கொள்ளை கொள்வதாய்க்‌ கொண்டு கை சோரப்‌ பண்‌ணுகையாலே, கைங்கர்யத்துக்குத்‌ தடை; இந்த நமஸ்ஸுக்குக் கீழே ‘ஆய’ பதமான சதுர்த்தியிற்‌ சொன்ன கைங்கர்யமும்‌, கணவன்‌ மனைவி என்ற இருவரும்‌ ஒருவர்க் கொருவர்‌ செய்து கொள்ளும் பரிமாற்றம்‌ போலே சுயநலத்துக் குறுப்பாகையாலே, எம்பெருமான்‌ முகமலர்த்‌தியே நமக்கு பயன்‌’ என்ற உண்மையான நிலைக்கு மாறாக
சுயநலம்‌ கலந்த அநுபவம்‌ வருவதால்‌ அந்த கைங்கர்யத்துக்கு பெருமானுடைய திருமேனி அழகு தடையாகும்‌
என்கை.

இப்படியாகையால்‌, இந்த விரோதி கழிகைக்குச்‌ செய்யும்‌ ப்ரார்த்தனையும்‌ இடைவிடாமல்‌ நடக்கும்‌ படியை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -183- கைங்கர்ய ப்ரார்த்தனை போலே, இப்பதத்தில்‌ ப்ரார்த்தனையும்‌ என்றுமுண்டு .
அதாவது, நாராயண பதத்திலிருக்கும்‌ ஆய” என்ற நான்காம்‌ வேற்றுமையில்‌ சொல்லுகிற கைங்கர்ய ப்ராத்தனை எப்போதோ ஒருக்காலுண்டாவது என்பதில்லாமல்‌ நித்தியமாய்ச்‌ செல்லுமா போலே, இந்த நமப் பதத்திற்‌ சொல்லுகிற கைங்கர்ய விரோதி கழிகைக்குச்‌ செய்யும்‌ ப்ரார்த்தனையும்‌, இங்கிருக்கும்‌ காலத்தோடு பரமபதத்தில்‌ புகுகிற காலத்தோடு வாசியற எல்லாக் காலத்திலும்‌ இந்த ப்ரார்த்தனை நடக்கக்‌ கடவதாயிருக்குமென்கை.

அஹங்கார மமகாரத்துக்கு விளை நிலமான இந்த உடல் தொடர்பற்று பரம பதம்‌ சென்ற பின்பும்‌, அங்கேயும்‌ தன்‌ அநுபவத்திற்காக பகவதநுபவம்‌ பண்ணுகை என்ற சுயநல புத்தி உண்டாமோ? என்ன, அருளிச் செய்கிறார்‌.
ஸூர்ணை -184- “மருந்தே நங்கள்‌ போக மகிழ்ச்‌சிக்கு என்னா நின்றதிறே.
உன்னுடைய அநுபவத்தாலே எங்களுக்கு வரும்‌ ஆனந்தத்துக்கு சுய அதுபவமாகிற புத்தி விளையாமல்‌, எங்கள்‌ (பரதந்திர ஸ்வரூபத்தை) உனக்காகவே நாங்கள்‌ இருக்கும்‌ நிலையை அழியாத படி தணிவிக்கும்‌ மருந்தானவனே’ என்று நித்ய ஸுிரிகள்‌ பேசும்‌ பாசுரமாகச்‌சொல்லா நின்றதல்லவா! ஆகையால்‌, பகவானுடைய திருமேனி அழகாலும்‌ அவனுக்குச்‌ செய்யும்‌ கைங்கர்யத்‌தாலும்‌ விளையும்‌ சிறந்த ஆனந்தம்‌, அதைத் தன்னாநந்தத்திற்காக என்று நினைக்கிற சுய நலமாகிற புத்தி அங்கும்‌ உண்டாவதாலே, இப் பதத்தில்‌ ப்ரார்த்தனை என்றும்‌ உண்டென்பது நிச்சயமாயிற்று. ஆகையன்றோ முக்தர்க்குலக்ஷணம்‌ சொல்லுகிற விடத்திலே “நமஇத்யேவ வாதித: (நம: நாங்கள்‌ உனக்குரியவர்கள்‌,எங்களுக்குரியவரன்று ஆகையால்‌, நாங்கள்‌ செய்யும்‌ தொண்டு உனக்குரியதே எங்களுக்கல்ல) என்று பரம பதத்திலுள்ளவர்கள்‌ கூறினார்‌களன்றோ என்றது.
ஆக,
(புருஷகாரத்தையும்‌) சேர்த்து வைத்தலையும்‌,
அந்தப்‌ புருஷகாரம்‌ செய்யும்‌ பிராட்டியும்‌
பெருமானும்‌ என்றும்‌ பிரியாது சேர்ந்திருக்கையும்‌,
பெருமான்‌, சேதநன்‌ அபராதங்கண்டு சீற்றம்‌ கொள்ளும்‌போது பிராட்டியால்‌ கிளப்பி விடப்பட்ட வாத்ஸல்யம்‌ முதலான குணங்களையும்‌,
அந்தக்‌ குணங்களுக்கு விளக்கமான திருமேனியையும்‌, குணங்களோடும்‌, திருமேனியோடும்‌ கூடி இருக்கிற எம்பெருமானுடைய உபாயத்தையும்‌, அவ்வுபாயத்தை வரிப்பதையும்‌,
அதன்‌ பலமான கைங்கர்யத்தை ஏற்பது
ஒரு திவ்ய தம்பதிகள்‌ என்னுமிடமும்‌,
அவ் வஸ்துவினுடைய ஸர்வ சேஷித்வத்தையும்‌,
அவ் விஷயத்தில்‌ செய்யும்‌ கைங்கர்யத்தையும்‌
கைங்கர்ய விரோதி கழிகையையும்‌
சொல்லிற்றாயிற்று
என்று த்வய ப்ரகரணத்தை முற்றுவிக்கிறார்‌

———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ முமுஷுப்படி -தெளிவுரை-ஸ்ரீ திருமந்த்ர ப்ரகரணம்‌-

November 16, 2025

ஸ்ரீ முமுஷுப்படி – மோக்ஷ்த்திலே இச்சை யுடையவன்‌ – படி-நிலை. அதாவது, நிரதிஸய ஆநந்தத்தைத்‌ தருகிற மோக்ஷத்திலே ஆசை யுடையவன்‌-இதில்‌, தத்வ. ஹித புருஷார்த்தங்களை விளக்கப்படுகிற மூன்று மந்த்ரங்களிலும்‌, ஒவ்வொன்றையும்‌ ஒவ்வொரு மந்த்ரமும்‌ ப்ரதாநமாகச்‌ சொல்லும்‌. அதாவது, ‘தத்வம்‌’ என்ற ஆத்ம ஸ்வரூபத்தையும்‌ பரமாத்ம ஸ்வரூபத்தையும்‌ நன்றாக விளக்குகிறது திருமந்த்ரம்‌ என்ற அஷ்டாக்ஷர மஹாமந்த்ரம்‌. ‘ஹிதம்‌’ என்ற உபாயத்தை நன்றாக விளக்குகிறது கீதையின்‌ சரம ச்லோகம்‌. ‘புருஷார்த்‌தம்‌” என்ற பயனை நன்றாக விளக்குகிறது த்வயம்‌ என்ற
உபநிஷத் மந்த்ரம்‌
. இவற்றை விரிவாக அங்காங்கே இந்நூலில்‌ விளக்கப்பட்டுள்ளது.

த்வயம்‌’ என்ற மந்திரத்தில்‌, “ஸ்ரீமந்‌ நாராயண சரணெள” என்ற பதத்தில்‌ ‘ஸ்ரீமந்‌ நாராயண’ என்றால்‌, பெரிய பிராட்டியோடு சேர்ந்துள்ள நாராயணன்‌ என்று பொருளாகும்‌. இப்படி, பெரிய பிராட்டியார்‌ நாராயணனோடு சேர்ந்திருப்பதாலே “ஸ்ரீமத்‌ சப்தத்தாலே
பத்நீ விசிஷ்டத்துக்கும்‌ உபாயத்வம்‌ உண்டு”
அதாவது, பெரிய பிராட்டிக்கும்‌ உபாயத்வம்‌ உண்டு என்று இன்றுள்ள நவீன ஸம்ப்ரதாயஸ்தர்கள்‌ வாதிடுகிறார்கள்‌. –அவர்கள்‌ வாதம்‌ நிலை நிற்காது எங்கனே யென்னில்‌? கேண்மின்‌, பெரிய பிராட்டியோடு கூடி யிருக்கும்‌ நிலையைக்‌ கொண்டு பிராட்டிக்கு உபாயத்வம்‌ கற்பித்தால்‌, “ஜகந்நாதம்‌ ப்ரபத்யேத்‌” என்ற இடத்தில்‌, ஜகத்தும்‌ எம்பெருமானும்‌ சேர்த்திருப்பதால்‌ அந்த ஐகத்துக்கும்‌ உபாயத்வம்‌ கொள்ள வேண்டி வரும்‌. பிராட்டி அவனை விட்டு பிரியாதாப் போலே -“ஐகத்‌ ஸர்வம்‌ சரீரந்தே‘ எல்லா உலகமும்‌ அவனுக்கு சரீரமா யிருப்பதாலே ஐகத்தும்‌ அவனை விட்டுப்‌ பிரியாது. அதே போல “யஸ்ய ஆத்மா சரீரம்‌, யஸ்ய ப்ருதிவீ சரீரம்‌” என்ற இடங்களிலும்‌ ஸகல ஆத்மாக்களோடு எம்பெருமான்‌ கூடி யிருப்பதாலே ஆத்மாவுக்கும்‌ உபாயத்வம்‌ கொள்ள வேண்டி வரும்‌. அசேதனத்தோடும்‌ கூடி யிருக்கையாலே அந்த அசேதனத்துக்கும்‌ உபாயத்வம்‌ கொள்ள வேண்டி வரும்‌. எனவே, அவர்கள்‌ வாதம்‌ அசட்டுத்தனமான வாதம்‌ அறிவாளிகள்‌ யாரும்‌ இத்த வாதத்தை ஏற்க மாட்டார்கள்‌.

எம்பெருமானோடு பிராட்டி கூடி யிருப்பது எதற்‌காக யென்னில்‌? “ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யத்தையும்‌ சேதனனுடைய அபராதத்தையும்‌ கண்டு அகல மாட்டாள்‌” என்பது லோகாசார்யர்‌ ஸ்ரீஸூக்தி-த்வயத்தில்‌, ‘சரணெள” சப்தத்தைக்‌ கொண்டு “பெருமானுடைய திருவடிகளுக்கு உபாயத்வம்‌ போலே பிராட்டியினுடைய திருவடிகளுக்கும்‌ உபாயத்வம்‌ கொள்ள வேண்டும்‌” என்று வாதம்‌ செய்கிறார்கள்‌ இந்த நவீன ஸம்ப்ரதாயத்தைச்‌ சேர்ந்தவர்கள்‌-வடமொழியில்‌ ஏக வசநம்‌, த்வி வசநம்‌, பஹு வசநம்‌ முறையே ஒருமை, இருமை, பன்மை என்று இலக்கணம்‌. ஆனால்‌, தமிழில்‌ ஒருமை, பன்மை தான்‌-இருமை கிடையாது. அந்த ப்ரகாரம்‌ பார்த்தால்‌ இங்கு “சரணெள” என்பதற்கு நாராயணனுடைய இரண்டு திருவடிகள்‌ என்று அர்த்தம்‌ கொள்ள வேண்டும்‌.
பிராட்டியினுடைய இரண்டு திருவடிகளையும்‌ சேர்த்தால்‌ பஹு வசனமாக (பன்மையாக) வந்திருக்க வேண்டும்‌. -அப்படியில்லாமல்‌ ‘சரணெள’ என்பதால்‌ இரண்‌டு திருவடிகள்‌ என்ற அர்த்தத்தில்‌ ப்ரயோகம்‌ வந்திருக்கிறது.-இந்த த்விவசநம்‌ இருமை -இரண்டுக்கு மேல்‌ மற்றொன்று வருவதற்கு ஸஹிக்காதது. சரண: என்று ஜாத்யேக வசநமாகக்‌ கொண்டு (ஜாதி யொருமையாகக்‌ கொண்டு) வந்திருந்தால்‌ அவளுக்கும்‌ உபாயத்வம்‌ கொள்ளலாம்‌.
அல்லது “சரணாந்‌” என்று பன்மையில்‌ ப்ரயோகம்‌ வந்திருந்திருந்தாலும்‌ பிராட்டி திருவடியும்‌ -நான்காகச் சேர்த்து -அவளுக்கும்‌ உபாயத்வம்‌ கொள்ளலாம்‌.
-அப்படியில்லாமல்‌ “சரணெள” என்று த்வி வசநம்‌ வந்திருப்பதாலே எம்பெருமான்‌ ஒருவனுக்குத் தான்‌ உபயத்‌வம்‌ உண்டு. பிராட்டிக்கு புருஷகாரத்வமே உண்டு என்று எம்பெருமான்‌ தானே தன்‌ சோதி வாய் திறந்து ஸ்ரீ பாஞ்சராத்ர சாஸ்த்ரத்தில்‌ அருளிச்‌ செய்துள்ளான்‌-அகிஞ்சந்யைக சரணா: கேசித் பாக்யாதிகா: புந: மத்‌ பதாம் போருஹத்‌-வந்த்வம்‌ ப்ரபத்ய ப்ரீத மாநஸா: –இந்த ப்ரமாணத்தில்‌, “மத்பதாம்‌ போருஹ த்வந்த்வம்‌” – (எனது இரண்டு திருவடித் தாமரைகளையே) என்று த்வி வசந ப்ரயோகம்‌ பண்ணி யிருக்கிறான்‌ எம்பெருமான்‌. ஆகவே, சரணெள-சப்தத்திற்கு எம்பெருமான்‌ ஒருவனுக்குத் தான்‌ உபாயத்வம்‌ உண்டு பிராட்டிக்கில்லை என்று ஏற்படுகிறது.

“மத்‌ ப்ராப்திம்‌ ப்ரதி ஐந்துநாம்‌ ஸம்ஸாரே பததாமத: லக்ஷ்மீ: புருஷகாரத்வே நிர்‌திஷ்டா பரமர்ஷிபி: மமாபிச மதம்‌ ஹ்யேதந்‌ நாந்யதா லக்ஷணம்‌ பவேத்‌” பிறவியாகிற படு குழியில்‌ விழுகிற இம்மக்களுக்கு, என்னை அடையுமிடத்தில்‌ லக்ஷ்மி தேவியானவள்‌ புருஷகார மாயிருக்கும்‌ தன்மையில்‌ பரம ருஷிகளாலே வரம்பு கட்டப்‌் பட்டிருக்கிறாள்‌; எனக்கும்‌ அதுவே இஷ்டம்‌.-இது தவிர வேறான இலக்கணம்‌ அவளுக்கில்லை என்று ஸ்ரீய: பதியான எம்பெருமானே கூறியிருப்பதால்‌ இதற்கு- மேலே ஒன்று கற்பிப்பது ப்ராமணங்களுக்கு முரணானது.

“ஜாயமாநம்‌ ஹி புருஷம்‌ யம் பச்யேந்‌ மதுஸூதந: ஸாத்விகஸ்‌ ஸ து விஜற்னோயஸ்‌ ஸவை மோக்ஷார்த்தசிந்தக:” அதாவது, மதுஸூதனான எம்பெருமான் யவனை ஜாயமாந காலத்தில்‌ கடாஷிக்கிறானோ அந்த புருஷன் ஸாத்‌விக குணத்தைப்‌ பெற்று ஜ்ஞானம்‌ உள்ளவனாகி மோக்ஷ விஷயத்தைப்‌ பற்றியே சிந்திக்கிறான்‌ என்று கூறப்படுகிறது. -எனவே, ஒருவனுக்கு பகவானுடைய பூர்ணமான நல்லருள்‌ உண்டாக வேண்டுமானால்‌, அவன்‌ ஆசாரியன்‌ திருவடியை அடைந்து ஐந்து தீக்ஷைகளைப்‌ பெற்று அதனால்‌ ரஜஸ்‌, தமஸ்ஸூக்கள்‌ தலை மடிந்து அவன்‌ முறையாக இந் நூலில்‌-முமுஷுப்படியில் – கூறப்பட்ட விஷயத்தைக்‌ கேட்டு முழுப் பயனையும்‌ அடைவான்‌-
“ஆத்ம குணங்களில்‌ ப்ரதாநம்‌ – ஸமமும்‌, தமமும்‌.” -ஸ்ரீவ.- 97.
இவை இரண்டு முண்டானால்‌ ஆசாரியன்‌ கைபுகுரும்‌; ஆசார்யன்‌ கைபுகுந்தவாறே
திருமந்த்ரம்‌ கைபுகுரும்‌; திருமந்த்ரம்‌ கைபுகுந்தவாறே ஈச்வரன்‌ கைபுகுரும்‌;
ஈச்வரன்‌ கைபுகுந்தவாறே வைகுந்த மாநகர்‌ மற்றது கையதுவே’ என்கிறபடியே ப்ராப்ய பூமி கைபுகுரும்‌.
” -ஸ்ரீவ.-98.

காருணிகனான ஸர்வேஸ்வரன்‌ இவர்கள் மேல்‌ கருணை கரை புரண்டு இவர்களை மீட்கும்‌ விரகு யாதோ என்று பார்த்து, இவர்களை மீட்கும்‌ வழி இது வன்றி வேறில்லை என அறுதி யிட்டு பதரிகாச்ரமத்தில்‌ தானே ஆசார்யனாகவும்‌ சிஷ்யனாகவும்‌ நின்று திருவஷ்டாக்ஷர மந்த்ரத்தை வெளியிட்டான்‌. -த்வயத்தை தன்‌ தேவியான பெரிய பிராட்டிக்கு விஷ்ணு லோகத்தில்‌ உபதேசித்தான்‌. முடிந்த உபாயமான- சரம ஸ்லோகத்தை அர்ஜுனனுக்கு உபதேசித்து அதை இவ் வுலகவர்களுக்கு உதவும்படி செய்தான்‌.-திருமந்த்ரத்தின்‌ விரிவே மற்றைய இரண்டு மந்த்ரங்களும்‌ என முன்னோர்‌ அருள்வர்‌.-மக்கள்‌ உய்வுபேற்றுக்குரிய பொருளனைத்தும்‌ திருமந்த்ரத்திலேயே உண்டென்பார்‌.

ஸ்ரீ மா முனிகள் ரஹஸ்ய அர்த்த ஸம்ப்ரதாய பரம்பரைக்கு அருளிச் செய்த தனியன்
தாயம்
ப்ரதாயம்
ஸம் ப்ரதாயம்
ஸூத்த ஸத்வ சம்ப்ரதாயம் அன்றோ இது

லோக குருஸ் குருபிஸ் ஸஹ பூர்வைஸ் கூர குலோத்தம தாஸம் உதாரம்
ஸ்ரீ நக பதயபி ராமவரே ஸு தீப்ரஸயாந குருஸ் சபேஜஹம் –

——

ஸ்ரீ ஈயுண்ணி பத்ம நாபர் அருளிச் செய்த ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் விஷயமான தனியன்

லோகாச்சார்யாய குரவே க்ருஷ்ண பாதஸ்ய ஸூநவே
ஸம்ஸார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம

——–

பூர்வ உக்த குரு பரம்பரைக்கு ப்ரத்யேக தனியன்கள்
ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்ரீ கூர குலோத்தம தாசர் விஷயமான தனியன்

லோகாச்சார்ய கிருபா பாத்ரம் கௌண்டின்ய குல பூஷணம்
ஸமஸ்த ஆத்ம குண வாஸஸ் வந்தே கூர குலோத்தமம்

—-

ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை விஷயமான தனியன்

நமஸ் ஸ்ரீ சைல நாதாயா குந்தீ நகர ஜன்மனே
ப்ரஸாத லப்த பரம ப்ராப்ய கைங்கர்ய சாலிநே

——–

ஸ்ரீ மா முனிகளுக்கு மாதா மஹாரான ஸ்ரீ கோட்டூர் அழகிய மணவாளப் பெருமாள் பிள்ளை தனியன்

லோகாச்சார்ய பதாம் போஜ ராஜ ஹம்ஸாயி தாந்தரம்
ஞான வைராக்ய ஜலதி வந்தே ஸும்ய வர குரும்

———-

ஸ்ரீ மா முனிகள் அருளிச் செய்த திகழக் கிடந்தான் திரு நா வீறுடைய பிரான் தாதர் அண்ணரையன் விஷயமான தனியன்

ஸ்ரீ ஜிஹ்வா வததீச தாஸம் அமலம் அசேஷ ஸாஸ்த்ர விதம்
ஸூந்தர வர குரு கருணா கந்தளிதா ஞான மந்த்ரம் கலயே –

————-

ஸ்ரீ வானமாலை ஜீயர் அருளிச் செய்த தனியன் –

கோதில் உலகாசரியன் கூர குலோத்தம தாதர்
தீதில் திருமலை ஆழ்வார் செழும் குரவை மணவாளர்
ஒதரிய புகழ் திரு நாவீறுடைய பிரான் தாதருடன்
போத மணவாள மா முனிவன் பொன்னடிகள் போற்றுவனே –

வாழி யுலகாரியன் வாழி யவன் மன்னு குலம்
வாழி முடும்பை என்னு மா நகரம் -வாழி
மனம் சூழ்ந்த பேர் இன்ப மல்கு மிகு நல்லார்
இனம் சூழ்ந்து இருக்கும் இருப்பு

ஒது முடும்பை யுலகாரியன் அருள்
ஏது மறவாத வெம்பெருமான் நீதி
வழுவாச் சிறு நல்லூர் மா மறையோன் பாதம்
தொழுவார்க்கு வாரா துயர் —

முடும்பை குலத்துக்கும் இடத்துக்கும் பெயர்

————–

(ஸ்ரீயப்பதியான தனக்கு லோக ரக்ஷணத்தில் உண்டான மஹா ஆர்த்தி தீர்ந்து திருப்தி பெறுகைக்காக அவதரிப்பித்து அருள திரு அவதரித்தவராய் -திரு அனந்தாழ்வானுடைய திரு அவதார விசேஷமான அழகிய ஸ்ரீ மணவாள மா முனிகள் ஸம்ஸார சேதன உஜ்ஜீவன அர்த்தமாக ஸர்வேஸ்வரன் ஆச்சார்யனாய் நின்று பிரகாசிப்பித்து அருளின ரஹஸ்ய த்ரயத்தினுடைய சம்பிரதாய ப்ராப்தமான அர்த்த விசேஷங்களை சர்வரும் அறிந்து உஜ்ஜீவிக்கும் படி ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் தம்முடைய பரம கிருபையாலே செய்து அருளின ஸ்ரீ முமுஷுப்படி என்னும் கிரந்தத்தின் வாக்ய அர்த்தங்களை அத்யந்தம் மந்த மத்தியிலும் அநாயாசேன அறிந்து உஜ்ஜீவிக்கும் படி பஞ்ச லக்ஷண லஷிதமான வியாக்யானம் செய்து அருளுவதாக திரு உள்ளம் பற்றி முமுஷுப்படிக்கு மூலமான ரஹஸ்யத் த்ரயத்தினுடைய அவதாரண க்ரமத்தைஉபோத்காத சங்கதியாக முந்துற இந்த ஸூர்ணையாலே அருளிச் செய்கிறார் )

——–

ஸ்ரீ யபதியாய்–ஸ்ரீ வைகுண்ட நிகேதனாய் –நித்ய முக்த அனுபாவ்யனாய் -நிரதிசய ஆனந்த யுக்தனாய் –
இருக்கிற சர்வேஸ்வரன் —

(ஸ்ரீ யபதியாகை யாவது -ஸர்வ மங்களாவஹையாய் -ஸர்வ உத்கர்ஷாவஹையான பெரிய பிராட்டியாருக்கு வல்லபனாய் இருக்கை
ஸ்ரீ வைகுண்ட நிகேதனாகை யாவது -ஸ்ரீயப்பதித்வத்தால் வந்த மேன்மைக்குத் தகுதியான தேச விசேஷத்தையும் நகர விசேஷத்தையும் இருப்பிடமாக உடையனாய் இருக்கை

நித்ய முக்த அனுபாவ்யனாகை யாவது -அபரிச்சின்ன ஞானாதி குணகரான நித்ய முக்தராலும் ஸதா பஸ்யந்திப்படியே அனுபாவ்யனாய் இருக்கை
நிரதிசய ஆனந்த யுக்தனாகை யாவது -ஆனந்த வல்லியில் சொல்லுகிறபடியே நிரதிசய ஆனந்த குண யுக்தனாய் இருக்கை
சர்வேஸ்வரன் -ஆகையாவது -த்ரிவித ஆத்ம வர்க்கத்துக்கும் ஈஸ்வரனாய் இருக்கை )

——–

அந்த நித்ய ஸூரிகளோபாதி தன்னை அனுபவித்து நித்ய கைங்கர்ய ரசராய்
வாழுகைக்கு பிராப்தி உண்டாய் இருக்கச் செய்தேயும் –அத்தை இழந்து –அசந்நேவ-என்கிறபடியே
அசத் கல்பராய் கிடக்கிற சம்சார சேதனர் உடைய இழவை அனுசந்தித்து -அத்யந்த வியாகுல சித்தனாய் –

———-

(அந்த நித்ய ஸூரிகளோபாதி தன்னை அனுபவிக்கை யாவது -அவர்கள் ஸதா பஸ்யந்தி ப்படியே அனுபவிக்கிறாப்போலே
பகவத் கடாக்ஷத்தாலே ஸம்ஸாரம் கழிந்து முக்தராய் -அபரிச்சின்ன ஞானாதி குணகராய் அனுபவிக்கை
தன்னை -ஸர்வ சேஷியான தன்னை
கைங்கர்யமாவது -பகவன் முக விலாஸ ஹேதுவான வ்ருத்தி விசேஷம்
நித்ய கைங்கர்ய ரசராய்-என்றது -அனுபவ ஜெனித ப்ரீதி காரித நித்ய கைங்கர்யத்தில் ப்ரீதி உடையவர்களாய் என்றபடி
வாழுகையாவது -ஸ்வாமி ஸந்நிதியிலேயே ஸூகமாக வர்த்திக்கை
பிராப்தி யாவது -சேஷ சேஷி பாவ சம்பந்தம்
அத்தை இழந்து என்றது -அந்த சேஷ சேஷி பாவ ஞானத்தை இழந்தது என்றபடி
அசந்நேவ-என்கிறபடியே-என்றது -அசந்நேவ-என்ற ஸ்ருதி அர்த்தத்தின் படியே என்றபடி
அசத் கல்பராய் கிடக்கிற என்றது -அஸத் ஸப்த வாஸ்ய மானத்தோடு கிஞ்சித் ந்யூனமாக ஸத்ருசராய் இருக்கிற என்றபடி
சம்சார சேதனர் உடைய இழவை -என்றது அநாதி அசித் சம்பந்தத்தாலே ப்ரவாஹ ரூபேண வருகிற
அவித்யா கர்ம வாஸனா ருசி விவசராய் ஜென்ம மரணாதி கிலேச பாகிகளாய்த் திரிகிற பத்த சேதனருடைய இழவை என்றபடி
அனுசந்திக்கை யாவது -இடைவிடாமல் எண்ணுகை
அத்யந்த வியாகுல சித்தனாய் -அந்தம் இல்லாத வ்யாகுல ஹ்ருதனாய் -என்றபடி )

———

இவர்கள் கரண களேபரங்களை இழந்து இறகு ஒடிந்த பஷி போலே கிடக்கிற தசையிலே –
கரணாதிகளைக் கொடுத்து -அவற்றைக் கொண்டு வியபிசரியாதே தன்னை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிகைக்கு உடலாக –

——-

(இவர்கள் -கீழ்ச் சொன்ன ஸம்ஸாரி சேதனர்
கரணம் -ஸ்ரோத்ரம் முதலான கரணங்கள்
களேபரங்கள் -கரணங்களுக்கு ஆஸ்ரயமான சரீரங்கள்
இறகு ஒடிந்த பஷி போலே–விஷ்ணு பத ப்ராப்தி ஸாதனங்களான இறகுகள் ஒடிந்த பக்ஷி போலே என்றபடி
கிடக்கிற தசையிலே -மூல ப்ரகாராதிகளிலே கிடக்கிற தசையில்
கரணாதிகளைக் கொடுத்து -பகவத் ப்ராப்தி உபகரணங்களான காத்ரங்களைச் சொல்கிறது
அவற்றைக் கொண்டு -தன்னை ஆஸ்ரயிக்கைக்குக் கொடுத்த அந்தக் கரணாதிகளைக் கொண்டு
வியபிசரியாதே -அந்தக் கரணாதிகளைக் கொண்டு அந்யத்ர ஸஞ்சரியாதே
தன்னை ஆஸ்ரயித்து -அவற்றைக் கொண்டு தன்னை ஆஸ்ரயித்து
உஜ்ஜீவிகைக்கு உடலாக -உத்க்ருஷ்டமாக ஜீவிக்கைக்கு உபாயமாக )

——–

அபுருஷேயமாய்-நித்ய நிர் தோஷமாய் -ஸ்வத பிரமாணமான வேதத்தையும் -தத் உப ப்ரும்ஹணங்களான
ஸ்ம்ருதி இதிகாச புராணங்களையும் ப்ரவர்ப்பித்த இடத்திலும் –

——–

(அபுருஷேயமாய்-புருஷனால் செய்யப்படாதது
நித்ய நிர் தோஷமாய் -நித்யமாயும் நிர்தோஷமாயும்
ஸ்வத பிரமாணமான -ஸாஸ்த்ரங்களிலே சொல்லுகிற அர்த்தங்களுக்குப் பிரமாணமாகத் தன்னை அபேக்ஷிக்குமா போலே
தன்னில் சொல்லுகிற அர்த்தங்களுக்கு ப்ரமாணமாகத் தான் ஒன்றுமே அபேஷியாமல் தனக்குத் தானே ப்ரமாணமாய் இருக்கை
வேதத்தையும் -புபுதஸூ க்களாய் ஆஸ்திகராய் இருப்பவருக்கு ஸ்வ அர்த்த ப்ரகாசமாய் இருக்கையாலே வேதம் என்கிறது
தத் உப ப்ரும்ஹணங்களான-அந்த வேதார்த்த வ்யக்தீ கரணங்களான
ஸ்ம்ருதி -மன்வாதி ஸ்ம்ருதிகள்
இதிகாச -மஹாபாரத ராமாயணங்கள்
புராணங்களையும் -விஷ்ணு புராணாதிகள்
ப்ரவர்ப்பித்த இடத்திலும் -மந்த மதிகளாலே வேதார்த்தம் அறுதி இடப் போகாது என்று மஹா மதிகளான
பராசர பாராசார்ய வால்மீகி ப்ரப்ருதி மஹரிஷிகளைக் கொண்டு ப்ரவர்த்திப்பித்த இடத்திலும் -_

——-

அந்த சாஸ்திர அப்யாசத்துக்கு அநேக யோக்யதை வேண்டுகையாலே –
அவ்வழியாலே ஞானம் பிறந்து சேதனர் உஜ்ஜீவிக்கை அரிதாய் இருக்கிற படியை திரு உள்ளம் பற்றி –
சகல சாஸ்திர தாத்பர்யங்களையும் ஸூக்ரகமாக இவர்கள் அறியலாம் படி பண்ண வேண்டும் என்று
ஸ்வரூப உபாய புருஷார்த்த யாதாத்ம்ய பிரதிபாதகமான
ரகஸ்ய த்ரயத்தையும் ஸ்வயமேவ ஆசார்யனாய் நின்று பிரகாசிப்பித்து அருளினான்-

——–

(அந்த சாஸ்திர அப்யாசத்துக்கு -ஸ உப ப்ரஹ்மணமான அந்த வேத ஸாஸ்த்ர அப்யாசத்துக்கு
அநேக யோக்யதை வேண்டுகையாலே -நியமம் பஹு வேதந சாமர்த்தியம் தீர்க்க ஆயுஷ்யம் முதலான அநேக யோக்யதை அவஸ்ய அபேக்ஷிதம் ஆகையாலே
அவ்வழியாலே -அநேக யோக்யதா சா பேஷமான அந்த மார்க்கத்தாலே
ஞானம் பிறந்து -ஸ்வரூப உபாய புருஷார்த்த யாதாத்ம்ய ஞானம் பிறந்து
சேதனர் உஜ்ஜீவிக்கை அரிதாய் இருக்கிற படியை திரு உள்ளம் பற்றி -உஜ்ஜீவிக்கை துர்லபமாய் இருக்கும் பிரகாரத்தைத் திரு உள்ளத்திலே விசாரித்து
சகல சாஸ்திர தாத்பர்யங்களையும் -ஸ்ருதி ஸ்ம்ருதி யாதி ஸகல ஸாஸ்த்ர தாத்பர்யங்களையும்
ஸூக்ரகமாக -அநாயாசமாக
இவர்கள் -பரிமித கால வர்த்திகளாய் -அல்பஞ்ஞராய் அல்ப ஸக்தர்களாய் இருக்கிற ஸம்ஸார சேதனர்கள்
அறியலாம் படி பண்ண வேண்டும் என்று -அறியும்படியாக
ஸ்வரூப உபாய புருஷார்த்த யாதாத்ம்ய பிரதிபாதகமான ரகஸ்ய த்ரயத்தையும் -இவற்றினுடைய யதாவஸ்தித வேஷத்தைப் ப்ரதிபாதியா நிற்கிற
ஸ்வயமேவ –ஸ்ருதி ஸ்ம்ருதியாதிகளைப் போலே அந்யரை இட்டுப் ப்ரவர்த்திப்பியாதே ஸ்வயமேவ என்றபடி
ஆசார்யனாய் நின்று -ஆச்சார்ய ரூபேண அவதரித்து
பிரகாசிப்பித்து அருளினான்– ஸர்வ ஸ்லாக்யமாகப் பண்ணினான் )

——–

அதில்
திருமந்த்ரத்தை ஸ்ரீ பதரிகாஸ்ரமத்தில் ஸ்வ அம்ச பூதனான ஸ்ரீ நரன் விஷயமாக பிரகாசிப்பித்தான் –
த்வயத்தை ஸ்ரீ விஷ்ணு லோகத்திலே ஸ்வ மகிஷியான ஸ்ரீ பிராட்டி விஷயமாக பிரகாசிப்பித்தான் –
சரம ஸ்லோகத்தை திருத் தேர் தட்டிலே ஸ்வ ஆஸ்ரீதனான ஸ்ரீ அர்ஜுனன் விஷயமாக பிரகாசிப்பித்தான் –
ஆகையால் இறே
ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் என்று குரு பரம்பராதியிலே ஸ்ரீ ஈஸ்வரனை அனுசந்திக்கிறது –

(அதில்-அந்த ரஹஸ்ய த்ரயத்திலும்
ஸ்வ மகிஷி-என்றது பிராட்டிமாரில் பிரதானை என்றபடி –
த்வயம் என்கிறது இரண்டு வாக்யமாய் இருக்கையாலே
சரம ஸ்லோகம் என்கிறது சரமமான ஸ்லோகம் என்று அன்று -சரமமான உபாயத்தை ப்ரதிபாதிக்கையாலே சரம ஸ்லோகம் என்கிறது
ஆகையால் -ஸர்வேஸ்வரன் ஸ்வயமேவ ஆச்சார்யனாய் நின்று ரஹஸ்ய த்ரயத்தையும்
தத் தத் விஷயங்களில் பிரகாசிப்பித்து அருளினான் என்கையாலே இறே -இவ்வர்த்தம் பிரசித்தம் அன்றோ என்றபடி )

(இவ்வளவாய் ரஹஸ்ய த்ரயத்தினுடைய அவதரண கிரமத்தை அருளிச் செய்து
இனி தாம் வியாக்யானம் செய்து அருளும் முமுஷுப்படி கிரந்த அவதரண கிராமத்தை அருளிச் செய்கிறார் )

இனி இந்த ரகஸ்ய த்ரயம் தான் சப்தம் ஸூக்ரமமாய் இருந்ததே ஆகிலும் –
அர்த்தம் உபதேச கம்யம் ஆகையாலும் –
அது அறிந்தே எல்லார்க்கும் உஜ்ஜீவிக்க வேண்டுகையாலும் –
அந்த ரகஸ்ய த்ரயத்திலும் –
பூர்வாச்சார்யர்கள் உடைய உபதேச பரம்பரா ப்ராப்தமான அர்த்த விசேஷங்களை
சர்வருக்கும் ஸூக்ரமாகவும் ஸூவ்யக்தமாகவும் ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் –
தம்முடைய பரம கிருபையாலே -இப்பிரபந்த முகேன அருளிச் செய்கிறார் –

——–

(இனி -இப்போது என்றபடி
இந்த ரகஸ்ய த்ரயம் தான் -ஸம்ஸார சேதன உஜ்ஜீவன அர்த்தமாக ஸர்வேஸ்வரன் ஆச்சார்யனாய் நின்று பிரகாசிப்பித்து அருளினை ரஹஸ்யத் த்ரயம் தான்
சப்தம் ஸூக்ரமமாய் இருந்ததே ஆகிலும் -ஸ்ருதி ஸ்ம்ருதாதிகள் போலே க்ரஹண தாரணாதிகளுக்கு வருத்தமாம் படி பல ஸப்தங்களாய் இருக்கை அன்றிக்கே
எட்டு எழுத்தும்
இருபத்தைந்து எழுத்தும்
முப்பத்து இரண்டு எழுத்துமாக
அநாயாசேன க்ரஹிக்கும் படி இருந்த போதிலும்
அர்த்தம் உபதேச கம்யம் ஆகையாலும் -ஸ்வ புத்தி பலத்தாலும் ஸாஸ்த்ர அப்யாஸத்தாலும் அறியத்தக்கது அன்றிக்கே ஆச்சார்ய உபதேசத்தால் அறியத்தக்கத்து ஆகையாலும் –
அது அறிந்தே எல்லார்க்கும் உஜ்ஜீவிக்க வேண்டுகையாலும் -உபதேஸ கம்யமான அந்த ரஹஸ்யத்ரய அர்த்தத்தை அறிந்தே எல்லாரும் உஜ்ஜீவிக்க வேண்டுகையாலும்
அறிந்தே -என்ற அவதாரணத்தாலே அறியாத போது உஜ்ஜீவனம் இல்லை என்றதாயிற்று
அந்த ரகஸ்ய த்ரயத்திலும் -அந்த ரஹஸ்யத்ரய அர்த்தம் தன்னிலும்
பூர்வாச்சார்யர்கள் உடைய உபதேச பரம்பரா ப்ராப்தமான அர்த்த விசேஷங்களை -நம்மாழ்வார் தொடக்கமான பூர்வாச்சார்யர்களுடைய உபதேஸ பரம்பரையாகத் தமக்குப் பிராப்தமான விசேஷ அர்த்தங்களை
சர்வருக்கும் -ஸ்த்ரீ பாலாதி சர்வருக்கும்
ஸூக்ரமாகவும் -அநாயாசேன க்ரஹிக்கும் படியாகவும்
ஸூவ்யக்தமாகவும் -மிகவும் அர்த்த ப்ரகாசகமாகவும்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் -தம்முடைய பரம கிருபையாலே -ரஹஸ் யத்ரய கிருபையிலும் அதிசயிதமான கிருபையால்
இப் பிரபந்த முகேன அருளிச் செய்கிறார் –வியாக்யானமான இப் பிரபந்த ஸ்ரேஷ்டத்தாலே -)

———–

(இப் பிரபந்த முகேன-என்றதாலே -இதற்கு முன்பே சில பிரபந்தங்கள் அருளிச் செய்ததாகத் தோன்றுகையாலே
அவற்றை உதாஹரித்து -அவற்றுக்கு உண்டான தோஷத்தையும்
அவற்றைக் காட்டில் இதற்கு உண்டான வை லக்ஷண்யத்தையும் அருளிச் செய்கிறார் மேல் )

—————

முன்பே ரகஸ்ய த்ரய விஷயமாக மூன்று பிரபந்தம் இட்டு அருளி  இருக்க செய்தேயும் -அதில்
யாத்ருக்சிகப்படி அதி ஸங்க்ரஹம் ஆகையாலும் –
பரந்த படி -அதி விஸ்ருதம் ஆகையாலும் –
ஸ்ரீ யபதிப்படி உபய தோஷம் இன்றிக்கே இருந்ததே ஆகிலும் -சம்ஸ்க்ருத வாக்ய பகுளம் ஆகையாலே –
பெண்ணுக்கும் பேதைக்கும் அதிகரிக்கப் போகாமை யாலும் –
த்ரிவித தோஷம் இல்லாத படி இன்னமும் ஒரு பிரபந்தம் இட வேண்டும் என்று திரு உள்ளம் பற்றி
எல்லா வற்றுக்கும் பின்பு இறே முமுஷுப்படி ஆகிற இப் பிரபந்தம் இட்டு அருளிற்று –

ஆகை இறே அல்லாத பிரபந்தங்கள் கிடக்க -இத்தை எல்லாரும் அதிகரிக்க போருகிறது –
இன்னமும் பூர்வ பிரபந்தங்களில் அனுக்தமான அர்த்த விசேஷங்களும் இப் பிரபந்தத்திலே
உண்டு ஆகையாலும் இதுவே எல்லார்க்கும் ஆதரணீயமாய் இருக்கும் .

(முன்பே -இப்பிரபந்தம் அருளிச் செய்வதற்கு முன்பே
அதி ஸங்க்ரஹம் ஆகையாலும் -பெண்ணுக்கும் பேதைக்கும் விசதமாக அர்த்த பிரகாசம் ஆகாமையாலும்
அதி விஸ்ருதம் ஆகையாலும் -இன்ன இடத்தில் இன்ன அர்த்தம் சொல்லிற்று என்று அறியப் போகாமையாலும்
உபய தோஷம் இன்றிக்கே இருந்ததே ஆகிலும் -அதி ஸங்க்ரஹமாயும் அதி விஸ்தாரமாயும் இன்றிக்கே இருந்ததே யாகிலும்
பேதை -அறிவில்லா சபலை
எல்லார்க்கும் ஆதரணீயமாய் இருக்கும்-பண்டிதர்களுக்கும் பரிக்ரஹிக்கத் தக்கது )

திருமகள்‌ கேள்வனாய்‌, ஸ்ரீவைகுண்டத்தை இருப்‌பிடமாக உள்ளவனாய்‌, நித்திய முக்தர்களால்‌ ஸேவித்தின்‌புறத் தக்கவனாய்‌, அளவிறந்த ஆநந்தத்தோடு கூடி இருக்கிற எல்லாவற்றுக்கும்‌ மேம்பட்ட இறைவன்‌. இவ்வுலகவர்‌ தன்னை அந்த பரமபதத்திலிருக்கும்‌ நித்திய முக்தரோடு கண்டுகந்து நிரந்தரமாக வாழ்த்தி வாழுகைக்கு உரிமை இருக்கச்‌ செய்தேயும்‌ அத்தை இழந்து (அஸந்நேவ) அசத்தைப் போல இருந்தும்‌ இல்லை என்னலாம்படி. அசத்துக்களாய்க்‌ கிடக்கிற ஸம்ஸாரி சேதநர்களுடைய இழவைக்‌- குறித்து, மிக மிகத் துன்புற்ற மனத்தினை யுடைய இறைவன்‌, இவர்கள்‌ உடல்‌ ஐம்பொறிகளை இழந்து இறகொடிந்த பறவை போலே கிடக்கிற நிலையிலே, உடல்‌ பொறி முதலானவற்றைக்‌ கொடுத்து அவற்றைக்‌ கொண்டு புறம்‌ போகாதே தன்னை யடைந்து உய்வு பெறுகைக்கு ஏதுவாக, ஒரு (சேதநனால்‌) மனிதனால்‌ இயற்றப்படாததும்‌, அழிவற்றதும்‌, குறையில்லாததும்‌ தனக்குத் தானே சான்றாய்‌ இருக்கிற வேதங்களையும்‌, இதன்‌. வழி நூல்களாம்‌ இதிஹாஸ புராணாதிகளையும்‌ தோற்றுவித்த விடத்திலும்‌, இவைகளைப்‌ பயில்வதற்கு அநேக தகுதிகள்‌ வேண்டுகையாலே, அந்த சாஸ்‌த்‌திர நூல் வழியாலே அறிவுண்டாகி மக்கள்‌ உய்வு பெறுகை அரிதாயிருக்கிற படியைத்‌ திருவுள்ளம்‌ பற்றி அனைத்துச்‌ சாஸ்த்திர ஸாரார்த்தங்களை தெளிய சுலபமாக அறிந்து உய்யும்படி செய்ய வேணுமென்று, தத்துவம்‌ உபாயம்‌ பயன்‌ இவைகளை உள்ளவாறு காட்டுமதான மூன்று மந்திரங்களையும்‌ தானே ஆசார்யனாய்‌ நின்று வெளிப்படுத்தினான்‌.அதில்‌, திருமந்த்ரத்தை ஸ்ரீ பதரிகாச்ரமத்திலே தன்‌ அம்ஸமாகிய ‘நரன்‌ மூலமாக வெளிப் படுத்தினான்‌. த்வயத்தை தன்‌ தேவியான லக்ஷ்மீ மூலமாக ஸ்ரீவிஷ்ணு லோகத்தில்‌ வெளிப் படுத்தினான்‌. சரம ஸ்லோகத்தை திருத்தேர்‌ தட்டிலே தன்‌ அடியவனான அர்ஜுநன்‌ மூலமாக வெளிப்படுத்தினான்‌. ஆகையால் தான்‌, “லக்ஷ்மீ நாத ஸமாரம்பாம்‌” என்று குருபரம்பராதியிலே இறைவனைச்‌ சொல்லுகிறது. இனி,மந்த்ரங்கள்‌ மூன்றும்‌ சப்தம்‌ எளிதா யிருந்ததே யாகிலும்‌, இதன்‌ பொருளை அறிந்தே எல்லோர்க்கும்‌ உய்ய வேண்டுகையாலும்‌, இந்த மூன்று மந்த்ரங்களிலும்‌ பூர்வாசார்யர்களுடைய உபதேச பரம்பரையாக வந்த பொருட் சிறப்புக்களை அனைவர்க்கும்‌ சுலபமாயும்‌ தெளிவாயும்‌ அறிய, பிள்ளை லோகாசார்யர்‌ தம் மேலான கருணையாலே இந்த நூல்‌ மூலமாக அருளிச்‌ செய்கிறார்‌.முன்பே இந்த மந்த்ரங்களின்‌ விஷயமாக மூன்று நூல்கள்‌ அருளி இருக்கச்‌ செய்தேயும்‌, இதில்‌ “யாத்ருச்சிகப்‌படி” மிகச்‌ சுருக்கமாகையாலும்‌, “பரந்தபடி” மிக விரிவாகையாலும்‌ “ஸ்ரீய:பதிப்படி” இவ் விரண்டு குறைகளும்‌ இல்லையே யாகிலும்‌, வடமொழி மிகுத்திருக்கையால்‌ எளிதாக அனைவரும்‌ பயில்வதற் கில்லாமையால்‌ இந்த மூன்று குறைகளும்‌ இல்லாத படியாக இன்னமும்‌ ஒரு நூல்‌ இயற்ற வேண்டுமென்று திருவுள்ளம்‌ பற்றி எல்லாவற்றுக்கும்‌ பின்பாக இந்த நூலிட்டருளினார்‌.அதனால் தான்‌, மற்ற ப்ரபந்தங்கள்‌ இருக்க இதை எல்லோரும்‌ விரும்பிக் கற்பது. இன்னமும்‌ முந்திய ப்ரபந்‌தங்களில்‌ சொல்லாத சிறந்த பொருள்களும்‌ இதிலே சொல்லி இருக்கையாலே, எல்லோர்க்கும்‌ இதுவே விரும்பிக் கற்பதற்கு ஏற்றதாயிருக்கும்‌.
வ்யாக்யான அவதாரிகையின்‌ தெளிவுரை முற்றிற்று

ஸூத்ரம்‌ .1 . முமுஷுவுக்கு அறிய வேண்‌டும்‌ ரஹஸ்யம்‌ மூன்று

மோக்ஷத்திலே இச்சை உடையவனுக்கு முமுஷு என்று பெயர்‌. முமுஷு என்ற சொல்‌ “மூச்ல்‌ மோக்ஷணே” என்ற தாதுவாகிய வினைப் பகுதி யடியாகப்‌ பிறந்த சொல்‌. இது, மரணம்‌ விடுதலை நித்தியாநந்த பர வீடு என்ற மூன்று பொருள்களையுமுடைய இச்சொல்‌, இங்கே
விடுதலை என்ற பொருளிலே வந்து பிறப்பு இறப்பாகிய ஸம்ஸார விமோசநத்தில்‌ ஆசை பிறந்தவனுக்கு முமுக்ஷு என்ற பொருளைக்‌ காட்டும்‌. தன்‌ ஆத்மாவை தான்‌ அடைய ஆசை யுடைய கைவல்ய நிஷ்டனுக்கும்‌ முமுஷுத்வம்‌ உண்டானாலும்‌, இவ் விடத்தில்‌ அவனைக்‌ குறிப்பிடவில்லை. அவனுக்கு மூன்று ரஹஸ்யங்களை அறிய வேண்டிய விருப்பம்‌ இல்லை யல்லவா. ப்ரணவம்‌ என்ற ஓரு மந்த்ரம்‌ போதும்‌ அவனுக்கு. ஆகையால்‌, இவர்‌ முமுஷு என்றது பகவானை அடைவதில்‌ ஆசையும்‌ பிறவிப் பிணியிலிருந்து விடுதலை அடைய இச்சையும்‌ உடையவனை முமுஷு என்கிறார்‌.

இப்படி, பகவானை அடைவதில்‌ ஆசையும்‌ பிறப்பிலிருந்து விடுதலையிலிச்சை யுமுடையவனுக்கு அவசியம்‌ அறிய வேண்டியது, தன்‌ இயல்பையும்‌, அதற்குத்‌ தகுந்த உபாயத்தை (வழியையும்‌, அந்த உபாயத்தால்‌ ஸாதிக்கக்‌ கூடிய பயனையும்‌ இந்த மூன்று மந்த்ர ரஹஸ்யங்களிலுமே உள்ளதை உள்ளபடி சொல்லப் பட்டிருக்கிறபடியால்‌, இம் மூன்று ரஹஸ்ய மந்த்ரங்களுமே இவ் வதிகாரி அறியவேண்டுவ தொன்றாகாகையாலே “அறிய வேண்டும்‌ ரஹஸ்யம்‌ மூன்றென்கிறார்‌.
“ஸ்வ ஜ்ஞாநம்‌ ப்ராபக ஜ்ஞாநம்‌ ப்ராப்ய ஜ்ஞாநம்‌ முமுக்ஷுபி : ஜஞாந த்ரய முபாதேயம்‌ ஏததந்யந்ந கிஞ்சந”
ஸ்வ ஜ்ஞாதம்‌
– தன்னைப் பற்றிய அறிவும்‌, ப்ராபகஜ்‌ஞாநம்‌ – உபாயத்தைப்‌ பற்றிய அறிவும்‌,
ப்ராப்ய ஜ்ஞாநம்‌ – பயனைப் பற்றிய அறிவும்‌.
ஜ்ஞாந த்ரயம்‌ – மூன்று வகை அறிவும்‌, முமுக்ஷுபி : – முமுக்ஷாக்களால்‌. உபாதேயம்‌ – கொள்ளத்தக்கது.
ஏதத்‌ அந்யந்‌ – இதை விட வேறொன்று.
கிஞ்சந – கொஞ்சமும்‌.
– வேண்டியதில்லை. என்று -சொல்லப்பட்ட தன்றோ.

ரஹஸ்யம்‌ மூன்று என்று இவர்‌ குறிப்பிடுவது, -திருமந்த்ரமூம்‌ த்வயமும்‌ சரம ஸ்லோகமும்‌ ஆகிய இவற்றை மேலே நன்றாக விளக்கிக்‌ கூறப் போகிறார்‌ என்பதை அறியலாம்‌. இவற்றை ரஹஸ்யங்களென்கிறது – எல்லா வேதங்களின்‌ அர்த்தங்களை சொல்லப் படுவதாலும்‌ மறைக்கப்பட வேண்டியவற்றில்‌ மேம்பட்ட தாகையாலே. ஆக இந்த ஸூத்ர வாக்கியத்தால்‌, வீடு பேற்றுக்கு தகுதி யுடைய அதிகாரியைப்‌ பற்றியும்‌ அவன்‌ அறிய வேண்டிய அர்த்தத்தின்‌ சிறப்பையும்‌ நிரூபணம்‌ செய்து முடிக்கிறார்‌.

இனி, அந்த மூன்று ரஹஸ்யங்களிலும்‌ முதல்‌ ரஹஸ்யம்‌ எது? என்ற கேள்விக்கு விடை கூறுகிறார்‌.
ஸூர்ணை – 2 அதில்‌ ப்ரதம ரஹஸ்யம்‌ – திருமந்த்ரம்‌

அந்த மூன்று ரஹஸ்யத்திலும்‌ வைத்துக்‌ கொண்டு இந்த அதிகாரிக்கு முதற்கண்‌ அறிய வேண்டிய ரஹஸ்யம்‌, ஸ்வரூபத்தை உண்மை யாம்‌ வகையில்‌ சொல்லுமதாய்‌, . விட வேண்டிய வற்றையும்‌ பற்ற வேண்டியவற்றின்‌ வேறுபாடுகளை அறிவித்து முழுமையான ஜ்ஞாநத்தை உண்டாக்குவதில்‌ திரு மந்த்ரம்‌ சிறந்தது. (அநந்யார்ஹ சேஷத்வம்‌) பகவானுக்கே அற்றுத் தீர்ந்த அடிமை, (அநந்ய சரணத்வம்‌) மற்றொருவரை தஞ்சமாக பற்றாது அவனையே தஞ்சமென்று பற்றுகை, (அநந்ய போக்யத்வம்‌ அவனையே அநுபவிக்கிற சுவைப் பொருளாகக்‌ கொள்ளுகையாகிற இன்றியமையாத மூன்று தன்மைகளையும்‌ சொல்லுகையாலே (சேதநனுடைய) மனிதனுடைய இயல்பை உண்மையாம்‌ வகையில்‌ சொல்லுமதாய்‌ இவற்றுக்குப்‌ பொருந்தியதான விட வேண்டிய, பற்ற வேண்டிய வேறுபாட்டை தெளியச் சொல்லுமதா யிருந்துள்ள இந்த மந்த்ரத்தாலே தோற்றுவிக்கப்பட்ட தன்மை யுடையவனுக் கன்றோ மற்ற மந்திரங்களிரண்‌டாலும்‌ சொல்லப்படுகிற உபாய உபேயங்களில்‌ வேட்கை யுண்டாவது. ஆகையால்‌ (ஸ்வரூபத்தினுடைய) ஆத்மாவினுடைய இயல்பை சொல்லுகிற திருமந்த்ரம்‌ முதல்‌ மந்திர மென்‌னக்‌ குறையில்லை.

இன்னமும்‌, ப்ரணவத்தை நமோ நாராயணாய என்கிற பதம்‌ விரித்துச்‌ சொல்வது போலே, நமோ நாராயணாய பதத்துக்கு த்வயம்‌ விவரணமாய்‌, த்வயத்துக்குச்‌ சரம ஸ்லோகம்‌ விவரணமா யன்றோ இருப்பது. அந்த ந்யாயத்தாலும்‌ இதனுடைய முதன்மை ஸித்தம்‌. ஆக, இவை எல்லாவற்றையும்‌ திருவுள்ளம்‌ பற்றியாயிற்று ப்ரதம (முதல்‌) ரஹஸ்யம்‌ திருமந்த்ரம்‌ என்று இவர்‌ அருளிச்‌ செய்தது.
இத்தை மந்த்ரமென்கிறது, “மந்தாரம்‌ த்ராயத இதி மந்த்ர :” என்கிற படியே மநநம்‌ செய்பவர்களை சப்த சக்தியாலும்‌, அர்த்தத்தை அறிவிப்பதாலும்‌ தன்னைப்‌ பற்றுவார்க்கு ரக்ஷகமாகையாலே. சப்த சக்தியாலே ரக்ஷகமாம்‌ ஐப ஹோமம்‌ முதலானவைகளாலே கார்யங்கொள்ளும்‌ உபாஸகரான பக்தி யோக நிஷ்டருக்கு. அர்த்தத்தை அறிவிப்பதாலே ரக்ஷகமாம்‌, ஈஸ்வரனே ஸாதநமும்‌ பலனும்‌ என்றிருக்கிற ப்ரபந்நர்க்கு. அர்த்த போதநத்தாலே ரக்ஷகமாகையாவது,

“தேஹாஸக்தாத்ம புத்திர்‌ யதி பவதி பதம்‌ ஸாது வித்யா த்ருதீயம்‌, ஸ்வாதந்தர்யாந்தோ யதி ஸ்யாத்‌ ப்ரதமம்‌ இதர சேஷத்வதீச்‌ சேத் த்விதீயம்‌, ஆத்ம த்‌ராணோந்முகச்‌ சேந்நம இதி சபதம்‌ பாந்த வாபாஸ லோலச்‌ சப்தம்‌ நாராயணாக்யம்‌ விஷய சபல தீச்சேச்‌ சதுர்த்தீம்‌ ப்ரபந்ந :”
ப்ரபந்ந
:- பரபந்நனானவன்‌.
தேஹாஸத்த – -தேஹத்தில் தானே.
ஆத்ம புத்திர் யதி பவதி – ஆத்மா என்கிற நினைவை யுடையவனானால்‌-உடலே உயிர்‌ என்கிற மயக்கத்‌தை யுடையவனனால்
த்ருதீயம்‌ பதம்‌ – ஜ்ஞாநத்தை- யுடையதென்று தெரிவிப்பதன்‌ மூலம்‌ தேஹத்தில்‌ ஆத்மா வேறுபட்டது என்று காட்டுகிற மூன்றாம்‌ பதமான மகாரத்தை.
ஸாது – நன்றாக (அர்த்தத்தோடு)
வித்யாத்‌ – அறியக் கடவன்‌.
ஸ்வாதந்தர்ய அந்த : ஸ்வாதந்தர்யனாக அறிவு கெட்டவனாக (தான்‌ ஸ்வதந்த்ரனென்கிற அறியாமையை யுடையவனாக).
ஸ்யாத்யதி – ஆவானே யானால்‌.
ப்ரதமம்‌– (எம்பெருமானுக்கு அடிமை என்று தெரிவிக்கிற) ப்ரணவத்தின்‌ முதல் பதமான அகாரத்தை.
வித்யாத்‌ – அறியக் கடவன்‌.
இதர சேஷத்வ – (ஸ்ரீமந் நாராயணனைத்‌ தவிர) மற்றவர்களுக்கு அடிமை என்கிற, தீ:சேத்‌ -கெட்ட புத்தி உண்டாகுமாயின்‌
த்விதீயம்‌ – வேறொருவர்க்கு அடிமையைத்‌ தவிர்க்கிற இரண்டாம்‌ பதமான உகாரத்தை.
ஸாது வித்யாத்‌ – நன்றாக அறியக் கடவன்‌. ஆத்ம த்ராண : – தன்னைத் தானே
காப்பாற்றுதலில்‌.
உந்முக : சேத்‌ – முயற்சி யுடையவனானால்‌.
நம:இதி பதம்‌-தற்காப்பில்‌ தொடர் பில்லாமையைத்‌ தெரிவிக்‌கிற நம: என்னும்‌ பதத்தை.
ஸாது வித்யாத்‌ – நன்றாக அறியக் கடவன்‌. பாந்தவ ஆபாஸ லோல :- வினைத் தொடர்‌பால்‌ பிதா புத்திரர்‌ முதலான பந்துக்கள்‌ போலத்‌ தோன்று மவர்களிடத்தில்‌ ஆசை யுடையவனா யிருப்பானானால்‌,
நாராயணாக்யம்‌ சப்தம்‌ – நாராயணனே எல்லா உறவு முறையும்‌ என்று தெரிவிக்கிற நாராயண னென்கிற பதத்தை,
ஸாது வித்யாத்‌ – நன்றாக அறியக் கடவன்‌. விஷய சபல தீச்சேத்‌ : ஐம்புலனுகர்ச்சியில்‌ செல்லுகிற புத்தியை உடையவனாகில்‌. சதுர்த்தீம்‌ – பகவத்‌ தொண்டின்‌ ப்ரார்த்தனையைக்‌ காட்டுகிற ‘ஆய’ என்கிற நான்காம்‌ வேற்றுமையை
ஸாது வித்யாத்‌ – நன்றாக அறியக் கடவன்‌
என்று பட்டர்‌ அருளியபடியே, தன்னை அறியுமவர்களுக்கு தேஹமே ஆத்மா என்கிற நினைவும்‌, சுதந்திர புத்தியும்‌, அவனைத் தவிர்த்த பிறர்க்கடிமை என்ற நினைவும்‌, தற்காப்பில்‌ தொடர்பும்‌, உறவல்லாதாரிடத்தில்‌ உறவுடைமை என்கிற புத்தியும்‌, ஐம்புலனுகர்ச்சியில்‌ வேட்கையும்‌, மேலிடாதபடி செய்து தன்னியல்புக்குப்‌ பொருந்த நடக்கும்படி, நோக்குகை.

————-

இனிமேல்‌ இந்த மந்திரத்தினுடைய சிறப்பை விரிவாக அருளிச்‌ செய்வதாக திருவுள்ளம்‌ பற்றி முதலில்‌ சொல்ல வேண்டிய முறையைச்‌ சொல்லும்‌ முகத்தால்‌ இதன்‌ சிறப்பை அருளிச்‌ செய்கிறார்‌-
ஸூர்ணை -3 . திருமந்தரத்தினுடைய சீர்மைக்குப்‌ போரும்படி ப்ரேமத்தோடே பேணி அநு ஸந்திக்க வேணும்‌

திருமந்த்ரத்துக்குச்‌ சீர்மையாவது,
“ருசோ யஜூம்ஷி ஸாமாநி ததைவா தர்வணாநிச, ஸர்வ மஷ்டாக்ஷராந்த:ஸ்தம்‌”.
ரூசோ
-ருக்‌ வேதங்களும்‌,
யஜும்ஷி – யஜூர்‌ வேதங்களும்‌.
ஸாமாநி – ஸாம வேதங்களும்‌,
ததைவ – அப்படியே
அதர்வணாநிச – அதர்வண வேதங்களும்‌.
ஸர்வம்‌ – ஆகிய எல்லாமும்‌, அஷ்டாக்ஷராந்தஸ்தம்‌ – -திருமந்த்ரத்தினுள்ளே இருப்பனவாம்‌-என்கிறபடியே , அனைத்து வேதங்களின்‌ சுருக்கமாய்‌ “மற்றெல்லாம்‌ பேசிலும்‌” என்கிறபடியே அறிய வேண்டிய எல்லா அர்த்தங்களையும்‌ அறிவிப்பதாய்‌,
மந்த்ராணாம்‌ பரமோ மந்த்ரோ குஹ்யாநாம்‌ குஹ்ய முத்தமம்‌, பவித்ரம்‌ ச பவித்ராணாம்‌ மூலமந்த்ரஸ்‌ ஸநாதந :”
ஸநாதந
:- மிகவும்‌ பழமையானதான மூலமந்த்ர:- எல்லா மந்த்ரங்கட்கும்‌ மூல மந்த்ரமாகிய திருவஷ்டாக்ஷரமானது.
மந்த்ராணாம்‌ – மந்திரங்கட்குள்ளே,
பரமோ மந்த்ர:- சிறந்த மந்திரமாகும்‌,
குஹ்யாநாம்‌ – ரஹஸ்யங்களுக்குள்ளே,
உத்தமம்‌ குஹ்யம்‌ – உத்தமமான ரஹஸ்யமாகும்‌.
பவித்ராணாம்‌ – புனிதங்கட்கெல்லாம்‌, பவித்ரம்ச – இது பவித்ரமாகும்‌. என்கிறபடியே மந்த்ரங்களில்‌ வைத்துக்‌ கொண்டு மேலான மந்த்ரமாய்‌, ரஹஸ்யங்களில்‌ உத்தமமான ரஹஸ்யமாய்‌, பவித்ரங்களுக்கும்‌ பவித்ரமாயிருக்கும்‌ கெளரவம்‌.
சீர்மைக்குப்‌ போரும்படி என்றது-தகும்படி என்கை.
ப்ரேமத்தோடே பேணி அநுஸந்திக்கை யாவது;– இத்தைச்‌ சொல்லுமளவில்‌ வரண்ட மனமுடையவனா யன்றிக்கே மேற்‌சொன்ன இதன்‌ கெளரவமடியாக இதன்‌ பக்கல்‌ தனக்குண்‌டான ப்ரேமத்தோடே மறைக்க வேண்டியவை யாகையாலே தகாதார்‌ செவிப்படாதபடி. “மந்த்ரம்‌ யத்நேத கோபயேத்‌” (மந்திரம்‌ முயன்று மறைக்கக்‌ கூடியது) என்கிறபடியே மிக மறைத்‌துக்‌ கொண்டு சொல்லுகை.
இப்படிச்‌ சொல்ல வேண்டுமாகையாலே வேறு விதமாகச் சொல்லக் கூடாது என்கிற நியமம்‌ தோற்றுகிறது.

இப்படித் தன்‌ பக்கல்‌ ப்ரேமம்‌ உண்டாகவே இம் மந்திரம்‌ இவனுக்குக்‌ கார்ய கரமாகுமோ? என்ன , அருளிச்‌ செய்கிறார்‌.
சூர்ணை -4 மந்த்ரத்திலும்‌ மந்த்ரத்துக் குள்ளீடான வஸ்துவிலும்‌ மந்தர ப்ரதனான ஆசார்யன்‌ பக்கலிலும்‌ ப்ரேமம்‌ கநக்க உண்டானால்‌ கார்யகரமாவது

அதாவது, அறிய வேண்டியவற்றை அறிவிக்கிற இம்மந்த்ரந் தன்னிலும்‌, தலைவனா யிருக்குந்‌ தன்மை, தஞ்சமாக அடையப்படும்‌ தன்மை அநுபவிப்பதற்குப்‌ பயனாக இருக்கும்‌ தன்மை ஆகிய இம் மூன்று நிலைகளோடு கூடி இம் மந்த்ரத்தின்‌ பொருளாயிருக்கிற
ஈஸ்வரன்‌ திறத்திலும்‌, “தந் மந்த்ரம்‌ ப்ராஹ்மணாதீநம்‌” (அந்த மந்திரம்‌ ஆசார்யன்‌ அதீநமாயிருப்பது)-என்கிறபடியே இதன்‌ தகுதிக்கேற்ப நினைவுடையவனாய்க்‌ கொண்டு தனக்கு உபகரித்த ஆசார்யன்‌ திறத்திலும்‌ அந்தந்த தகுதிகளுக்குப்‌ பொருந்த விருப்பம்‌ மிக உண்டானால்‌ இம் மந்திரம்‌ இவனுக்குக்‌ காரியம்‌ கூட்டுவிக்கும்‌ என்கை –
“மந்த்ரே தத் தேவதாயாஞ்ச ததா மந்த்ர ப்ரதே குரெள, த்ரிஷு பக்திஸ்‌ ஸதா கார்‌யா ஸாஹி ப்ரதம ஸாதநம்‌”
மந்த்ரே
– மந்திரத்தினிடத்திலும்‌
தத் தேவதாயம்ச – அதனுடைய தேவதை யினிடத்திலும்‌,
ததா – அப்படியே
மந்த்ர ப்ரதே குரெள – மந்திரம்‌ உபதேசித்தவனிடத்திலும்‌
த்ரிஷுபக்தி :– இம் மூவிடத்திலும்‌ பக்தியானது,
ஸதா கார்யா – எப்போதும்‌ செய்யத் தக்கது, ப்ரதம ஸாதநம்‌ ஸா ஹி – அந்தப்‌ பக்தியானது முதல்‌ ஸாதநமன்றோ?-என்னக்‌ கடவதன்றோ.

இனி, இம் மந்த்ரத்தினுடைய தோற்றத்‌தின்‌ முறையை சொல்லும்‌ முகத்தாலே இதனுடைய அளவு கடந்த சிறப்பை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -5-ஸம்ஸாரிகள்‌ தங்களையும்‌ ஈஸ்வரனையும்‌ மறந்து, ஈஸ்வர கைங்கர்யத்தையும்‌ இழந்து, இழந்தோ மென்கிற இழவு மின்றிக்கே ஸம்ஸாரமாகிற பெருங் கடலிலே விழுந்து நோவு பட, ஸர்வேஸ்வரன்‌ தன் க்ருபையாலே இவர்கள்‌ தன்னை யறிந்து கரை மரஞ் சேரும்படி தானே சிஷ்யனுமாய்‌, ஆசார்யனுமாய்‌ நின்று திரு மந்த்ரத்தை வெளியிட்ட ருளினான்‌.

ஸம்ஸாரிகளாகிறார்‌ – ஆரம்பங் காணமுடியாத காலமாய்‌ (அசேதநத்தின்‌) அறிவற்ற ஐடப்‌பொருளின்‌ தொடர்பாலே மாறி மாறி முன்னுள்ள (நாம ரூபங்களோடு) பெயர்‌ உருவங்களோடு வருகிற அறிவின்மை, இதனால்‌ வரும்‌ தீய வினை, இவற்றில்‌ நீளப் பழகின வாஸனை(தீயதில்‌ நெஞ்சறிய முயலும்‌ வாஸனை), இவைகளின்‌ வயத்தராய்‌ பிறப்பு, இறப்பு இவைகளில்‌ கட்டுண்டு துன்பமுடையராய்த் திரிகிற (சேதநர்‌)மக்கள்‌.
தங்களையும்‌ ஈச்வரனையும்‌ மறந்து என்றது – “தாஸபூதா: ஸ்வதஸ்‌ ஸர்வேஹ் யாத்மாந : பரமாத்மந :நாந்யதா லக்ஷணம்‌ தேஷாம்‌ பந்தே மோக்ஷேதவைச.
பரமாத்மந -அப் பரமாத்மாவான எம்பெருமானுக்கு,
ஸர்வே ஆத்மாந :- எல்லா (ஆத்மாக்களும்‌) மக்களும்‌,
ஸ்வத :- இயல்பான ஸ்வரூபத்தாலேயே,
தாஸ பூதாஹி – அடிமை யுடையவர்களாய்‌ நிலை பெற்றவர்களன்றோ.
தேஷாம்‌ – அவர்களுக்கு,
பந்தே – பிறப்பிறப்பில்‌ கட்டுண்டுழலும்‌ நிலையிலும்‌,
அப்படியே மோஷ – முக்த நிலையிலும்‌
அந்யதா – வேறான சுதந்திரம்‌ என்கிற, லக்ஷணம்‌
ந – லக்ஷணம்‌ இல்லை.
சேதநா சேதநங்கட்கு அடிமைத் தன்மை பொதுவாயிருந்தாலும்‌, ஆத்மாவுக்கு முக்கியமான ஸ்வரூபம்‌, இயல்பாகவே உண்டான பகவத் சேஷத்வத்தை லக்ஷணமாக வுடையரா யிருக்கிற தங்களையும்‌, “பதிம் விஸ்வஸ்ய(இயல்பாகவே எல்லோருக்கும்‌ ஸ்வாமியா யிருப்பவன்‌) என்றும்‌,“ஸ்வாமித்வம்‌ ப்ரஹ்மணி ஸ்திதம்‌” அனைத்தையும்‌ சொத்தாகக்‌ கொண்டு உடையவனா யிருக்குந்தன்மை ப்ரஹ்மத்தினிடம்‌ நிலை பெற்றுள்ளது.-இவை முதலானவைகளில்‌ சொல்லுகிறபடியே தங்களுக்குக் கராணமின்றி இயல்பாகவே ஆண்டானா யிருக்கிற ஈஸ்வரனையும்‌ அறியாதே -என்கை.
ஆனால்‌, அறியாமலென்னாதே மறந்து என்பான்‌ என்‌? என்னில்‌, முன்‌ ஒருக்கால்‌ நினைவிலிருந்து பின்பு மறந்த போதன்றோ மறந்து என்று சொல்ல வேண்டுவதென்னில்‌: திருமங்கையாழ்வார்‌ “மறந்தேனுன்னை முன்னம்‌” என்கிறபடியே, நமக்கும்‌ இறைவனுக்குமுண்டான இயல்பாகவே அழிவின்றி நித்தியமாக இருக்கும்‌ தொடர்பின்‌ உறைப்பை உணர்ந்தால்‌ மறந்து என்ன வேண்டி இருத்தலால்‌ இப்படி அருளிச்‌ செய்தாராமித்தனை.
ஈஸ்வர கைங்கர்‌யத்தையும்‌ இழந்து-என்றது, கீழ்ச்‌ சொன்ன அறிவின்மையாலே தகுந்த ஆண்டானான பகவத் விஷயத்தில்‌ தொண்டாற்றுகை யாகிற மேலாம் பயனையும்‌ பெறப் பெறாதே என்கை.-பயனினுடைய கெளரவத்தையும்‌, அதுக்கென்றிட்டுப்‌ பிறந்து வைத்து இழந்து கிடந்தபடியையுங் குறித்து இழந்து என்கிறார்‌.
இழந்தோமென்கிற இழவுமின்றிக்கே என்றது, தன்னியல்பும்‌, பரனியல்பும்‌,பயனின்‌ இயல்பும்‌ ஆகிய நல்லறிவு இல்லாமையாலே, தன்‌ அடிமைக்குப்‌ பொருந்திய ஆண்டான்‌ முக மலர்த்திக் குறுப்பாக தொண்டாற்றுகை யாகிற பயனை இழந்தோமென்கிற துன்‌பந்தானு மின்றிக்கே என்கை.
ஸம்ஸாரமாகிற பெருங்கடலிலே விழுந்து நோவுபட – என்றது “ஸம்ஸார ஸாகரம்‌ கோரம்‌ அநந்த க்‌லேச பாஜநம்‌”.
ஸம்ஸார ஸாகரம்‌ –
ஸம்ஸாரமாகிற பெருங்கடல்‌,
கோரம்‌ – பயத்துக்குரிய கோரமாய்‌, அநந்தக்‌லேச – எல்லை காண் பரிய துன்பத்துக்கு,
பாஜநம்‌ – இருப்பிடம்‌ என்கிறபடியே, அளவிட முடியாத துன்பத்துக் கிருப்பிடமாய்‌, யாவராலும்‌ தன்‌ முயற்சியால்‌ கரை காண அரிதாம்படி இருக்கிற பிறவிப்‌ பெருங் கடலிலே விழுந்து தன்னால்‌ நேரும்‌ துன்பங்களால்‌ தபிக்கப்படுவதும்‌, பிற உயிர்களால்‌ வரும்‌ துன்பங்களால்‌ தபிக்கப்படுவதும்‌,-தெய்வீகமாக வரும்‌ துன்பங்களால்‌ தபிக்கப் படுவதுமாகிய தாப த்ரயங்களால்‌ -மூன்று தாபங்களால்‌- வருந்துவார்கள்‌ என்கை.
இத்தால்‌ தங்களையும்‌, ஈஸ்வரனையும்‌ அறியாமையாலும்‌, ப்ரயோஜநத்தை அறியாமையாலும்‌, ஸம்ஸார ஸமுத்திரத்துக்குள்ளே கிடந்து நோவு படா நிற்கிற விரோதியான ஸம்ஸாரந் தன்னையும்‌, அத்தைக்‌ கடத்தற்கு மார்கமறியாமையாலும்‌, அறிய வேண்டியதான தன்னியல்பு பரனியல்பு, உபாயத்தினியல்பு, பயனியல்பு, விரோதியினியல்புகளாகிய (அர்த்த பஞ்சக ஜ்‌ஞாநத்தில்‌) ஐந்து பொருள்‌களைப் பற்றி அறிவதில்‌ ஒன்றையும்‌ அறியாதவர்களாய்க்‌ கிடந்தார்களென்கை. “ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ருபம்‌” என்ற சான்றுகளின் படி. ஸகல சாஸ்த்திரங்களும்‌ இந்த அர்த்த
பஞ்சகத்தை அன்றோ சொல்வது. இவ் வர்த்தங்களை இவர்களுக்குத்‌ தெளிய அறிவிக்கைக்காக அனைத்து சாஸ்த்ர சுருக்கமான திரு மந்த்ரத்தை ஸர்வேஸ்வரன்‌ வெளியிட்ட விதத்தைச்‌ சொல்லுகிறது மேல்‌,

ஸர்வேஸ்வரன்‌ தன்‌ க்ருபையாலே” என்றது, “ஈசேசிதவ்ய ஸம்பந்தாத்‌ அநிதம் ப்ரதமாதபி:” இப்பொழுது உண்டாயிற் றென்‌பதின்றி அநாதியான ரக்ஷகன்‌, ரக்ஷ்யன்‌ என்ற ஸம்பந்தம்‌-
என்கிறபடியே காலாரம்பம்‌ அறிய முடியாதபடி, அநாதியாக அனைவரோடும்‌ உண்டான உடையவன்‌ உடமை என்ற ஸம்பந்தத்தை உடையவனான எம்பெருமான்‌-“ஏவம்‌ ஸம்ஸ்ருதி சக்ரஸ்தே ப்ராம்யமாணே ஸ்வ கர்மபி: ஜீவேது:காகுலே விஷ்ணோ: க்ருபாகாப் யுப ஜாயதே”
ய ஏவம்‌
– இவ்விதமாக,
ஸம்ஸ்ருதி சச்ரஸ்தே – ஸம்ஸாரமாகிற சக்கரத்திலிருந்து கொண்டு,
ஸ்வகர்மபி : ப்ராம்யமாணே – தன்னுடைய கர்மங்களால்‌ சுழன்று,
துக்கா குலே – துக்கத்தினாற்‌ கலங்கின.
ஜீவே – ஜீவனிடத்தில்‌.
விஷ்ணோ : – விஷ்ணுவுக்கு.
காபி – சொல்ல முடியாத,
க்ருபா உபஜாயதே – கருணையானது உண்டாகிறது. என்கிறபடியே, எம்பெருமான்‌ இவர்கள்‌ படுகிற துன்பத்தைக்‌ காண்பது மாத்திரத்தா லுண்டான தன்‌ காரணமில்லாத கருணையாலே என்கை.

இவர்கள்‌ தன்னை யறிந்து கரைமரஞ்சேரும்‌ படி என்றது – இப்படி ஸம்ஸார ஸாகரத்திலே கிடந்து நோவு படுகிற இவர்கள்‌ “த்வாமேவ சரணம்‌ ப்ராப்ய திஸ்தரந்திமநீஷிண :”
மநீஷ்ண:
– புத்திமான்கள்‌,
த்வாம்‌ஏவ – தேவரீரையே,
சரணம்‌ – உபாயமாக,
ப்ராப்ய – அடைந்து,
நிஸ்தரந்தி – கடக்கிறார்கள்‌. என்றும்‌,
“ஸம்ஸாரார்ணவ மக்நாநாம்‌ விஷயாக்ராந்த சேதஸாம்‌ விஷ்ணு போதம்‌ விநாநாந்யத் கிஞ்சி தஸ்திபராயணம்‌”, ஸம்ஸார ஆர்ணவ – ஸம்ஸாரமாகிற ஸமுத்திரத்திலே.
மக்நாநாம்‌ – முழுகி,
விஷய அக்ராந்த சேதஸாம்‌ – ஸப்தாதி விஷயங்களாலே ஆக்ரமிக்கப்பட்ட மநஸ்ஸை உடையவர்க-ளுக்கு, விஷ்ணுபோதம் விநா – ஸர்வ வ்யாபகனான ஸர்வேஸ்வரனாகிற தெப்பத்தைத்‌ தவிர.
அந்யத்‌ கிஞ்சித்‌ – மற்று எதுவும்‌,
பராயணம்‌ – முக்கியமான ஆஸ்ரயமாக, நாஸ்தி – இல்லை. என்றும்‌ சொல்லுகிறபடியே, ஸம்ஸாரமாகிற கடலைத்‌ தாண்டுவதற்கு உபாயமான தன்னை அறிந்து, அந்த ஸம்ஸார கடலைக்‌ கடந்து அக்கரைப்படும்படி என்கை.
தானே சிஷ்யனுமாய்‌ ஆசார்யனுமாய்‌ நின்று என்றது, -நர நாரணனா யுலகத்தற நூல்‌ சிங்காமை விரித்தவன்‌ -என்கிறபடியே, நர நாராயண ரூபத்தால்‌ அவதரித்து நரனான தான்‌ சிஷ்யனுமாய்‌, நாராயணனான தான்‌ ஆசார்யனுமாய்‌ நின்று என்கை.

திருமந்திரத்தை வெளியிட்டருளினான்‌ என்றது, -ஸகல சாஸ்திர சுருக்கமாய்‌, அந்த சாஸ்திர தாத்பர்யமான அர்த்த பஞ்சகத்தை தெளிவாகச்‌ சொல்லா நிற்கும்‌ திருமந்திரத்தை வெளியிட்டருளினா னென்கை. அருளிச்‌ செய்தானென்‌னாதே வெளியிட்டருளினா னென்றது, இப்போது, தான்‌ ஒன்றை நிர்மித்துச்‌ சொன்னானல்லன்‌, ஏற்கனவே அநாதியா யுள்ளதொன்றை வெளிப்படுத்தினா னென்னுமிடமும்‌, மிக்க ரஹஸ்யமாகையால்‌ மறைந்திருந்ததை இவர்கள்‌ துர்க்கதி கண்டு பொறுக்க மாட்டாதே வெளிக்‌ கொணர்ந்தானென்னு மிடமும்‌ தோற்றுகைக்காக என்கிறார்‌.

ஆனால்‌, ஆசார்யனாய்‌ நின்று வெளியிட்டமை போதாவோ? சிஷ்யனாய்‌ நின்றது எதற்காக? என்ன -அருளிச்‌ செய்கிறார்‌. –
ஸூர்ணை -6-சிஷ்யனாய்‌ நின்றது சிஷ்யனிருக்குமிருப்பு நாட்டாரறியாமையாலே அத்தை அறிவிக்கைக்காக

ஆசார்யனாய்‌ நின்று வெளியிட்டருளின அளவன்றிக்கே தானே சிஷ்யனுமாய்க்‌ கொண்டு நின்றது, “ஆஸ்திகோ தர்மசீலச் ச சீலவாந்‌ வைஷ்ணவச் சுசி : கம்பீரச் சதுரோ தீரச்‌ சிஷ்ய இத்யபிதீயதே ” ஆஸ்திக : சாஸ்திரத்தில்‌ நம்பிக்கை உள்ளவனும்‌,
தர்ம சீலச்ச – நல்வினைகளில்‌ ஈடுபாடுடையவனும்‌,
சீலவாந்‌ – நல் வினைகளை மேற் கொண்டொழுகுபவனும்‌,
வைஷ்ணவ:– விஷ்ணுவிடத்தில்‌ பக்தி யுடையவனும்‌, -விஷ்ணுவையே ஆறும்‌ பேறுமாகப்‌ பற்றினவனும்‌.
சுசி :- தற்பெருமை யில்லாதவனும்‌,
கம்பீர: ஆசார்யனிடத்தில்‌ ஆழ்ந்த பக்தியுள்ளவனும்‌,
சதுர: ஆசார்ய முகமலர்த்திக்கு றுப்பான கைங்கர்யத்தில்‌ சாதுர்யமுடையவனும்‌,
தீர :- சிரமப்பட்டு செய்யக்கூடிய ஆசார்ய கைங்கர்யத்‌தில் மநோ தைர்யமுடைய.
இத்யபிதீயதே – சிஷ்யனென்றுசொல்லுதற்குரிய லக்ஷணமென்பதாகும்‌. “சரீரம்‌ வஸ–விஜ்‌ஞாநம்‌ வாஸ : கர்ம குணான ஸுரிந்‌ குர்வர்த்தம்‌ தாரயேத்‌ யஸ்து ஸ சிஷ்யோ நேதர: ஸ்ம்ருத :”
சரீரம்‌ –
உடலையும்‌,
வஸு – பொருளையும்‌,
விஜ்ஞாநம்‌ – அறிவையும்‌,
வாஸ : வஸிக்குமிடத்தையும்‌.
கர்ம- செயலையும்‌,
குணாந்‌ – குணங்களையும்‌,
அஸுந்‌ – ப்ராணன்களையும்‌,
குர்வர்த்தம்‌ – குருவின்‌ நிமித்தமாகவே,
: – எவன்‌,
தாரயேத்‌ – தரிக்கிறானோ,
ச : சிஷ்ய – அவனே சிஷ்யன்‌ என்னத்‌ தக்கவன்‌,
இதர: வேறு வகையாக இருப்பவன்‌,
ந ஸ்ம்ருத
:- சிஷ்யனென்று சொல்லத் தகாதவன்‌.

“ஸத்புத்திஸ் ஸாது ஸேவீ ஸமுசித சரிதஸ் தத்வ போதாபிலாஷீ சுச்ருஷிஸ் த்யக்தமாந : ப்ரணிபதந பர : ப்ரச்ந கால ப்ரதீக்ஷ: சாந்தோ தாந்தோ நஸரியு : சரண முபகதச்‌ சாஸ்த்ர விஸ்வாஸ சாலீ சிஷ்ய : ப்ராப்த : பரீ க்ஷாம்‌ க்ருதவிதபி மதஸ் தத்வதஸ்‌ சிக்ஷணீய :”
ஸத் புத்தி:
– விடுகை பற்றுகை முதலானவைகளை அறியும்‌ நற்புத்தியை யுடையவனும்‌,
ஸாது ஸேவீ – அதற்கடியாகப்‌ பெரியோர்களை (அநுவர்த்திப்பவனும்‌) அடிபணிபவனும்‌.
ஸமுசித சரித : ஜ்ஞாநத்துக்கேற்ற ஒழுக்கமுடையவனும்‌.
தத்வபோதாபிலாஷீ – முத் தத்‌துவங்களுடைய உண்மை யறிவதில்‌ ஆசை யுடையவனும்‌.
சுச்ருஷு:– ஆசார்யனுக்குத்‌ தொண்டு செய்வதில்‌ இச்சை உடையவனும்‌.
த்யக்தமாந : – அதற்கு விரோதியான அஹங்காரத்தை விட்டவனும்‌,
ப்ரணிபதந பர: ஆசார்யனிடத்து நமஸ்காராதிகளைச்‌ செய்பவனும்‌.
ஸாந்த :- மனம்‌ முதலான அகக் கரணங்களை அடக்குபவனும்‌.
தாந்த :- புறக் கரணங்களை அடக்குபவனும்‌.
அநஸு-ரியு : ஆசார்யனிடத்து பொறாமை யில்லாதவனும்‌.
சரணம்‌ உபகத :- ஆசார்யன்‌ திருமாளிகையில்‌ காத்திருப்பவனும்‌.
சாஸ்திர விஸ்வாஸ சாலீ – சாஸ்திரங்‌களில்‌ விஸ்வாஸ முடையவனுமான.
சிஷ்ய : சிஷ்யன்‌ –
பாக்ஷாம்‌ . ப்ராப்த:– உபதேசிக்கப் படுகிற -செய்யப்பட்டு,
க்ருதவித்‌ அபிமத –ஆசார்யன்‌ செய்த உபகாரத்தை மறவாத பெரியோர்களாலே -இவன்‌ உபதேசிக்கத் தக்கவனென்று அங்கீகரிக்கப் பெற்றவனாய்க்‌ கொண்டு. தத்வத : உண்மையாக
“சிக்ஷ்ணீய :- (சிக்ஷைக்குத் தக்கவன்‌) ஞானோபதேசத்திற்குத் தகுதியானவன்‌ என்று,
இவை முதலானவைகளிற் சொல்லுகிற படிகளும்‌, ஆசார்ய அநுவர்த்தநமாகிற-அடிமை செய்தலாகிற பயனுக்குப்‌ புறம்பானவையான வேறு பயனில்‌ விருப்பத்தைத்‌ தவிர்க்கையும்‌, ஆசார்ய உகப்புக்குப் பாத்ரமான பலனுக்குச்‌ சாதநமான ஆசார்யத்‌ தொண்டும்‌, ஆர்த்தியும்‌, விருப்பமும்‌, பொறாமையும் யில்லாதவனா யிருக்கையாகிற சிஷ்ய லக்ஷணம்‌ உலகத்தவர்க்குத்‌ தெரியமையாலே-அதைத் தன்‌ ஒழுக்கத்தால்‌ காட்டுகைக்காக சிஷ்யனாய்‌ நின்றது என்கிறார்‌.-ஆசாரியனாய்‌ சொல்லுமளவில்‌ தன்‌ மேன்மை தேடிக்‌ கொள்கிறானென்று நினைக்கவும்‌ கூடும்‌. –ஒழுகிக்‌ காட்டுமளவில்‌ இது நமக்கும்‌ வேண்டுமென்று உலகோர்‌ கைக்‌ கொள்வதற்கு ஏதுவாயிருக்கும்‌.

இப்படி சிஷ்யனாய்‌ நின்று இந்த மந்த்ர சிக்ஷை பண்ணி இதன் மூலமாக ஜ்ஞாநம்‌ பிறக்க வேணுமோ? “ஞாநக்‌ கலைகள்‌” என்கிறபடியே ஸகல சாஸ்த்ரங்களும்‌ ஜ்ஞாந சாதநமாயன்றோ இருப்பது.-அவற்றைப்‌ பயின்று அவ் வழியாலே ஜ்ஞாநம்‌ பிறந்தாலோ? என்ன, சாஸ்திரப்‌ பயிற்சியால்‌ பிறக்கும்‌ ஜ்ஞாநத்துக்கும்‌, இந்த திருமந்த்ர உபதேச மூலமாக பிறக்கும்‌ ஜ்ஞாநத்துக்கும்‌ உண்டான வேற்றுமையை உதாரண முகத்தாலே காட்டுகிறார்‌.
ஸூர்ணை – 7-ஸகல சாஸ்த்ரங்களாலும்‌ பிறக்கும்‌ ஜ்ஞாநம்‌ ஸ்வயமார்ஜிதம் போலே; திருமந்த்ரத்தால் பிறக்கும்‌ ஜ்ஞாநம்‌ பைத்ருக தநம்‌ போலே .

தத்வ ஜ்ஞாநமாம்‌ மெய்யுணர்வை விளக்குமதான வேதங்கள்‌ அற நூல்கள்‌ இவை முதலான அனைத்து சாஸ்திரங்களாலும்‌ உண்டாகும்‌ ஜ்ஞானம்‌ தானே முயன்று வருந்திச்‌ சம்பாதிக்கும்‌ திரவியம்‌ போன்று மிகச்‌ சிரமப்பட்டும்‌ பெறுவதும்‌ பெறாதிருப்பதும்‌ போலுமாயிருக்கும்‌. ஆசார்ய உபதேசம்‌ மூலமாக திருமந்த்ரத்தால்‌ உண்டாகும்‌ ஜ்ஞாநம்‌ பிதா சேமித்து வைத்த திரவியத்தை பிறந்த உரிமை தானே காரணமாகத்‌ தான்‌ பெறும்‌ திரவியம்‌ போலும்‌ எளிதில்‌ பெறலாமாயிருக்கும்‌ என்கிறார்‌.
” சாஸ்த்ர- ஜ்ஞாநம்‌ பஹு க்லேசம்‌ புத்தேச்சசலந காரணம்‌, உபதேசாத்‌-
ஹரிம்‌ புத்தவா விரமேத் ஸர்வகர்மஸ-.” சாஸ்த்ரஜ்ஞாநம்‌
– சாஸ்த்ர நூல்களைப்‌ படித்துப்‌ பெறும்‌ மெய்யுணர்வு,
பஹுக்லேசம்‌ – மிகச்‌ சிரமமுடைத்தா யிருக்கும்‌.
புத்தே : – புத்திக்கு,
சலந காரணம்‌ – கலக்கத்தை உண்டாக்கு மாதயிருக்கும்‌. (ஆகையாலே)
உபதேசாத்‌ – உபதேசத்தாலே.
ஹரிம் புத்வா – ஈஸ்வரனை (உபாயமாக) அறிந்து,
ஸர்வகர்‌மஸு – உபாயாந்த்ரமாகிற எல்லாக்‌ கர்மங்களிலிருந்தும்‌,
விரமேத்‌ – ஓழியக் கடவன்‌.
இத்தால்‌ சாஸ்திரங்களிற்‌ காட்டில்‌ இவைகளின்‌ ஸாரமான திருமந்த்ரத்தின்‌ ஏற்றஞ்‌ சொல்லிற்றாம்‌ என்பது.

சாஸ்திரங்களின்‌ நிலை யிதுவானால்‌ மற்றுமுண்டான பகவந் மந்த்ரங்கள்‌ மெய் யுணர்வை பிறப்பிக்‌காதோ? என்ற கேள்வியிலே மற்ற மந்த்ரங்களிற்‌ காட்டில்‌ இந்த மந்த்ரத்துக் குண்டான ஏற்றத்தை அருளிச்‌ செய்வதாகத்‌ திருவுள்ளம்‌ பற்றி,
ஸூர்ணை –8-பகவந் மந்தரங்கள்‌ தான்‌ அநேகங்கள்‌.

ஆஸ்தாந்தே குண ராசிவத்‌ குண பரீவாஹாத்மநாம்‌ ஐந்மநாம்‌ ஸங்க்யா” குணராசிவத்‌ – உமது – ஜ்ஞாநம்‌ சக்தி முதலிய குணங்கட்கு எல்லை யில்லாமை போலவே.
குண பரிவாஹ ஆத்மநாம்‌ –தயை; வாத்ஸல்யம்‌ முதலிய குணங்களுடைய
பிரவாஹ ரூபங்களான -தேவரீரது தயாதி குணங்களைப்‌ பிரகாசப்படுத்துவதான. ஜந்மநாம்‌ – பிறவிகளுடைய,-ஸங்க்யா – எண்ணிக்கையானது. ஆஸ்தாம்‌– எல்லையில்லாததாக இருக்கும்‌.
“பஹவோந்ருப கல்யாண குணா: புத்ரஸ்ய ஸந்திதே. “
ந்ரூப :- ராஜாவே!,
தே – உன்னுடைய.
புத்ரஸ்ய – பிள்ளைக்கு.
பஹுவ : கல்யாண குணா : – பலவான கல்யாண குணங்கள்‌,
ஸந்தி – இருக்கின்றன.
“தவாநந்த குணஸ்யாபி ஷடேவ ப்ரதமே குணா:”
அநந்த குணஸ்யா அபி – எல்லை யில்லாத குணங்களை யுடையவனாக இருந்தாலும்‌. தவ – உனக்கு.-ஷட்குணா: ஏவ- ஆறு குணங்களே.-ப்ரதமே– முதன்மையானவை.
“பஹூநி மேவ்யதீ தாநி ஜந்மாநி தவசார்ஜுந “
அர்ஜாந
“ அர்ஜுநனே.
மே – எனக்கு,
பஹுநி – அளவிறந்த,
ஜந்மாநி – ஐந்மங்கள்‌,
வ்யதீதாநி – கடந்து போயின.
தவ ச – உனக்கும்‌ அப்படியே,
“எண்ணில்‌ தொல்‌ புகழ்‌” (எண்ணிக்கை யில்லாத குணங்கள்‌) “எந் நின்ற யோநியுமாய்‌ பிறந்தாய்‌” (எல்லா வித பிறப்புக்களும்‌ பிறந்தாய்‌) என்றும்‌ இவை முதலானவைகளில்‌ சொல்லுகிறபடியே, பகவத்‌ குணங்களும்‌ – குணங்களுக்குப்‌ போக்கு வீடான அவதாரங்களும்‌ எல்லை யில்லாதனவா யிருக்குமாப் போலே இவைகளைச்‌ சொல்லும்‌ மந்த்ர விசேஷங்களும்‌,
“அநந்தாவை பகவந்‌ மந்த்ரா: (பகவன்‌ மந்த்ரங்கள்‌ எல்லை யில்லாதன) என்கிறபடியே அநேகங்களா யிருக்கு மென்கை.

அவை எல்லாம்‌ ஒரே வர்க்கத்தில்‌ சேர்ந்ததோ என்ன?
ஸூர்ணை -9.-அவை தான்‌, வ்யாபகங்களென்றும்‌ அவ்‌யாபகங்களென்‌றும்‌ இரண்டு வர்க்கம்‌

எல்லா இடத்திலும்‌ உள்ளும்‌ புறமும்‌ பரவி வ்யாபித்திருக்கும்‌ பகவத்‌ ஸ்வரூபத்தைச்‌
சொல்லுகையால்‌ வ்யாபகங்களென்றும்‌, பகவதவதாரமான குணம்‌ செயல்கள்‌ இவைகளில்‌ ஒவ்வொன்றைச்‌ சொல்லுகையாலே அவ்யாபகங்களென்றும்‌
இரண்டு வர்க்கமா யிருக்கும்‌ என்கை. .

இருவர்க்கங்களும்‌ ஓத்திருக்குமோ- யென்னில்‌?
ஸூர்ணை -10.-அவ்யாபகங்களில்‌ வ்யாபகங்கள்‌ மூன்‌றும்‌ ஸ்ரேஷ்டங்கள்‌ –

அவ்யாபகங்களா யிருந்துள்ள எல்லா மந்த்ரங்களிலும்‌ “நாராயணாய வித்மஹே, வாஸூதேவாய தீமஹி, தந்நோ விஷ்ணு : ப்ரசோதயாத்‌” என்றும்‌ விஷ்ணு காயத்ரியில்‌ ஓதப்படுகிற வ்யாபகங்கள்‌ மூன்றும்‌ சிறந்தவைகளா யிருக்குமென்கை. இந்த விஷ்ணு காயத்ரியிலே -நாராயண வாசுதேவ விஷ்ணு சப்தங்கள்‌, -அந்த மூன்று
மந்த்ரங்களுக்கும்‌ ப்ரதானமான மூன்று நாமங்கள்‌ -ஆகையாலே, பொதுவில்‌ ப்ரணவ – நமஸ்ஸுக்களோடே கூடின மூன்று மந்த்ரங்களுக்கும்‌ (உப லக்ஷணமாக) விடுபட்டதைக்‌ கூட்டிச்‌ சொல்லக்‌ கடவது.

இந்த மூன்று வ்யாபக மந்த்ரங்களும்‌ தம்முள்‌ ஒக்குமோ என்ன? அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -11- இவை மூன்றிலும்‌ வைத்துக்‌ கொண்டு பெரிய திருமந்தீரம்‌ ப்ரதாநம்‌.

அவ்யாபகங்களில்‌ காட்டில்‌ சிறந்ததா யிருந்துள்ள இந்த வ்யாபக மந்த்ரங்கள்‌ மூன்றையும்‌ வைத்துப்‌ பார்க்கும் போது. “நாராயணாய வித்மஹே” என்று தைத்‌-நாரணவல்லி உபநிஷத்தில்‌ முதலில்‌ இந்த நாராயண மந்த்ரததை ஒதுவதாலும்‌, முழுமையான அர்த்தங்களை உடையதாகையாலும்‌, “நாஸ்தி சாஷ்டாக்ஷராத் பர:” (பல மந்திரங்களில்‌ அஷ்டாக்ஷர மந்த்ரமான நாராயண மந்திரத்தைக்‌ காட்டிலும்‌ மேலானதில்லை) என்னும்‌ படியான பெருமை யுடையதாகையாலே பெரிய திருமந்த்ரம்‌ முதன்மையாக இருக்கும்‌ என்கை.

ஸூர்ணை 12-. மற்றையவை இரண்டுக்கும்‌ அசிஷ்ட பரிக்ரஹமும்‌, அபூர்த்தியுமுண்டு .

வாஸுதேவ விஷ்ணு சப்தங்களான மற்ற வ்யாபக மந்த்ரங்களிரண்டுக்கும்‌ நாராயண சப்தம்‌ போலே ஸ்வரூபம்‌- இயற்கை வடிவம்‌, உருவம்‌ ரூபம்‌, குணம்‌ முதலானவைகளெல்லாம்‌ சொல்லாதே ஸ்வரூப மாத்திரத்தைச்‌ சொல்லுகையாலே யாதொரு லக்ஷணமுமின்றி “ஜ்ஞாந மாத்ரமா யிருப்பது ப்ரஹ்மம்‌” என்று வேதாந்தங்களுக்குப்‌ பொருந்தாத வேற்றுப் பொருள்‌ கொள்ளுகிற குத்ருஷ்டிகள்‌ மிகவும்‌ விரும்பிக்‌ கொள்ளுகையாகிற சிஷ்டரல்லாதார்‌ ஏற்பதாலும்‌, வ்யாபிக்கப்பட்ட பொருள்கள்‌ இன்னது என்று சொல்லாமையாலும்‌, இதற்காக ‘ஸர்வம்‌’ என்ற சொல்லை இசை எச்சமாகக்‌ கொள்ள வேண்டி யிருத்தலாலும்‌, வாஸுதேவ மந்திரம்‌ முற்றுஞ்‌ சொல்லாமையாகிற அபூர்த்தியும்‌, மாயா வாதிகள்‌ ஆதரிப்பதாகிய அசிஷ்டர்‌ கொள்ளுகை யாகிற குறைபாடும்‌ உண்டு.
“ஓம்‌ நமோ விஷ்ணவே”
என்ற ஆறு எழுத்துக்களாலாய இம் மந்திரம்‌ : வ்யாப்தி என்ற இம் மாத்திரமே சொல்லி, வ்யாபிக்கப்படும்‌ பொருள்களைச்‌ சொல்லாமை, இன்ன படி வ்யாபித் திருக்கிறான்‌ என்று சொல்லாமை, வ்யாபித்திருப்‌பவன்‌ குணங்களைச்‌ சொல்லாமை, வ்யாபித்தலால்‌ வரும்‌ பலத்தையும்‌ சொல்லாமையாகிற குறைபாடுகளும்‌, அதோடு இதுவும்‌ அசிஷ்டர்‌ விரும்புவதாகிய குறைபாடும்‌ உண்டு.
இன்னமும்‌, வாஸுதேவ மந்த்ரம்‌ : “ஸர்வத்ர வஸதி இதி வாஸுதேவ :” என்று வ்யாபிக்கும்‌ ப்ரகாரம்‌ “வஸதி” என்று சொல்லியதால்‌ எந்தப்‌ பொருளில்‌ வஸிக்கிறான்‌ என்பது சொல்லாமை. இதற்கு “எங்கும்‌” என்ற அர்த்தம்‌ தோன்ற “ஸர்வம்‌” என்ற இசை எச்சம்‌ கூட்டிக்‌
கொண்டாலும்‌ வ்யாபகனுடைய குணம்‌ சொல்லாமையால்‌ இந்த குணத்துக்காக “ஓம்‌ நமோ பகவதே வாஸுதேவாய”-என்று பகவச்‌ சப்தம்‌ கூட்டிக்‌ கொள்ள வேண்டுகையாலும்‌ -வ்யாபித்தலின்‌ பலஞ்‌ சொல்லாமையாலும்‌ திரு த்வாதச அக்ஷ்ர்‌ மந்த்ரமும்‌, குறைபாடுக ளுடையதேயாம்‌. இந்த நாராயண மந்த்ரமாகிற அஷ்டாக்ஷரி வ்யாபகத்தைச்‌ சொல்லி, வ்யாபிக்கப்படும்‌ பொருள்களைச்‌ சொல்லி, வ்யாபிக்கும்‌ விதம்‌ சொல்லி, வ்யாபித்தலின்‌ பலன்‌ சொல்லி, வ்யாபிக்கின்றவன்‌ குணங்களைச்‌ சொல்லி, இவைகளை எல்லாம்‌ சப்த்தாலே சொல்லி யிருக்கையாலே இதற்கு அர்த்த பூர்த்தியின்‌ காரணமான அதிச்யம்‌ உண்டு என்று, மற்ற வ்யாபக மந்த்ரங்களிரண்டினுடைய குறைபாடாம்‌ -அபூர்த்தியையும்‌ திருமந்த்ரமாம்‌ நாராயண மந்திரத்தினுடைய பூர்த்தியையும்‌ தெளிய பெரியவாச்சான்‌ பிள்ளைப்‌ பரந்த ரஹஸ்யத்தில்‌ காட்டி யருளினார்‌ என்கை.

வ்யாபகாந்தரங்களில் காட்டிலும் அர்த்த பௌஷ்கல்யத்தாலே  நெடு வாசி யுண்டு –
அவற்றில் காட்டில் இதுக்கு அர்த்த பூர்த்தியால் உண்டான வாசி எது என்னில் –-ஷடஷரி -வ்யாப்ய பதார்த்தங்களையும் -வ்யாபத பிரகாரத்தையும் -வ்யாப்தி பலத்தையும் -வ்யாபகனுடைய குணங்களையும் சொல்லாதே வ்யாப்தி மாத்ர பிரகாசகம் ஆகையாலே அபூர்ணம் –வ்யாபன பிரகாரத்தை சொல்லா நிற்கச் செய்தேயும் -வ்யாப்ய பதார்த்தங்களுக்கு வாசக சப்தம் இல்லாமையாலும் – சர்வம் வசதி என்று அர்த்த பலத்தாலே சர்வ சப்தம் புகுந்தாலும் அதில் குணம் அன்வயியாமையாலும்
இதில் குண சித்திக்காக பகவத் சப்தத்தைக் கூட்டிக் கொள்ள வேண்டுகையாலும் –
வ்யாப்தி பலத்தைச் சொல்லாமையாலும் – திரு த்வாதச அஷரியும் அபூர்ணம் –
இம்மந்த்ரம் அவை போல் அன்றியே வ்யாப்ய பதார்த்தங்களோடு -வ்யாபன பிரகாரத்தோடு-வ்யாப்தி பலத்தோடு – வ்யாபகனுடைய குணங்களோடு வாசி அற சாப்தமாகக் காட்டுகையாலே
அல்லாத வ்யாபக மந்த்ரங்களைக் காட்டில்  இதுக்கு அர்த்த பௌஷ்கல்ய நிபந்தனமான ஆதிக்யம் யுண்டு –

மற்ற வ்யாபக மந்திரங்கள்‌ மாயாவாதி அத்வைத மதங்களாம்‌ குத்ருஷ்டிகள்‌ விரும்பும்‌ குறைபாடு, விசிஷ்டாத்வைதிகளாம்‌ சிஷ்டர்கள்‌ விரும்புவதாகிய மேம்பாடு உண்டோ? இந்த நாராயண மந்த்ரத்‌ துக்கு என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -13- இத்தை வேதங்களும்‌, ருஷிகளும்‌, ஆழ்வார்களும்‌, ஆசார்யர்களும்‌ விரும்பினார்கள்‌.

விஷ்ணு காயத்ரியிலே வ்யாபக மந்த்ரம்‌ மூன்றைஞ்சொல்லும்‌ போது முதற் கண்‌
நாராயண சப்தத்தை ப்ரதாநமாகச்‌ சொல்லுகையாலும்‌,
“விஸ்வம்‌ நாராயணம்‌”
என்று தொடங்கி “நாராயண பரம் ப்ரஹ்ம தத்வம்‌ நாராயண: பர: நாராயண பரோஜ்யோதி: ஆத்மா நாராயண: பர: யச்ச கிஞ்சித்‌ ஜகத்யஸ்மின்‌ த்ருஸ்யதே ஸ்ரூயதே பிவா, அந்தர்‌ பஹிஸ் ச தத் ஸர்வம்‌ வ்யாப்ய நாராயணஸ்‌ ஸ்தித:” என்று ஸகல வேதாந்த ஸாரமான நாராயண அநு வாகத்திலும்‌,
விஸ்வம் நாராயணம்‌– அனைத்துச்‌ சேதந அசேதநகங்‌களுக்கும்‌ ஆத்மாவானவன்‌ நாராயணன்‌ என்றும்‌, ‘
நாராயண பரம் ப்ரஹ்ம- பர ப்ரஹ்மமும்‌ நாராயணனே
தத்வம்‌ நாராயண;:பர:-பர தத்துவமும்‌ நாராயணனே
ஆத்மா நாராயண: பர: – பரமாத்வாவும்‌ நாராயணனே,
அஸ்மிந்‌ ஜகதி – இந்த உலகத்திலே. யச்ச கிஞ்சித்‌ – யாதானுமொன்று,
த்ருஸ்யதே- காணப்படுகிறதோ,
ஸ்ரூயதேபிவா – கேட்கப்‌ படுகிறதோ,
தத் ஸர்வம்‌ – அந்த வஸ்துக்கள்‌ எல்லா வற்றினுடையவும்‌.
அந்த :* உள்ளும்‌,
பஹிச்ச – புறமும்‌,
வ்யாப்ய
– நிறைந்து,
நாராயண : ஸ்தித : – நாராயணன்‌ இருக்கிறான்‌.
“ஏகோஹவை நாராயண ஆஸீத்‌ ந ப்ரஹ்மா நேசாந : நேமே த்யாவா ப்ருதிவீ”
மஹாப்ரளயத்தில்‌,
ஏகோஹவை நாராயண: – நாராயணன்‌ ஒருவன்‌ மாத்திரமன்றோ,
ஸீத்‌ – இருந்தான்‌,
ப்ரஹ்மா – ப்ரம்மாவும்‌,
– இல்லை,
ஈசாந : – சிவனும்‌,
– இல்லை,
இமே – இந்த,
த்யாவாப்ருதிவீ – ஆகாசமும்‌ பூமியும்‌,
– இல்லை,
‘ சஷுஸ்ச த்ரஷ்டவ்யஞ்ச நாராயண: ஸ்ரோத்ரஞ்ச ஸ்ரோதவ்யஞ்ச நாராயண :
சஷுஸ்ச
– பார்க்கிற கண்களும்‌, த்ரஷ்டவ்யஞ்ச – பார்க்கப்படும்‌ பொருள்களும்‌,
நாராயண ஃ நாராயணனே,
ஸ்ரோத்ரஞ்‌ – கேட்கிற செவிகளும்‌, ஸ்ரோதவ்யஞ்ச – கேட்கப்படும்‌ சப்தமும்‌, நாராயண :- – நாராயணனே.
“திசச்ச ப்ரதி சச்ச நாராயண :”(திக்குகளும்‌ மூலை திக்குகளும்‌ நாராயணனே) என்று முடிவாக, நடுவடைய ஸுபாலோப நிஷத்திலும்‌,

“யஸ்யாத்மா சரீரம்‌ யஸ்ய ப்ருதிவீ சரீரம்‌” யஸ்ய – எவனுக்கு,
ஆத்மா சரீரம்‌ – ஆத்மா சரீரமாக இருக்கிறதோ,
யஸ்ய – எவனுக்கு,
ப்ருதிவீ சரீரம்‌ – பூமியானது சரீரமாக இருக்கிறதோ,
யஸ்ய – எவனுக்கு,
ம்ருத்யுச் சரீரம்‌ – ம்ருத்யு வானவன்‌ சரீரமாக இருக்கிறோனோ, என்பதீறாக நடுவுள்ள இடங்கள்‌ தோறும்‌.
“ஏஷ ஸர்வ பூதாந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண :”
ஏஷ :
இவன்‌,
ஸர்வபூத அந்தராத்மா – எல்லா ஆத்மாக்களுக்கும்‌ அந்தராத்மாவாயும்‌, அபஹத பாப்மா – அவற்றின்‌ தோஷம்‌ தீண்டாதவனாயும்‌,
திவ்ய: பரமபத நிலயனாயும்‌,
தேவ :- உபய விபூதிக்கும்‌ நாதனாயும்‌, .
ஏக : நிகரற்றவனாயும்‌ உள்ள,
நாராயண :- நாராயணன்‌-என்று, அந்தர்யாமி ப்ராஹ்மணத்திலும்‌,வாஸுதேவ விஷ்ணு சப்தங்களை அநாதரித்து நாராயண சப்தத்தையிட்டு பகவத்‌ ஸ்வரூபாதிகளை நிர்தேசிக்கையாலும்‌, அபெளருஷேயமாய்‌, நித்ய நிர்தோஷமாய்‌, தனக்குத் தானே
ப்ரமாணங்களான வேதங்களும்‌ விரும்பின.
“யதா ஸர்வேஷு தேவேஷு நாஸ்தி நாராயணாத் பர :
ததா ஸர்வேஷு மந்த்ரேஷு நாஸ்தி ச அஷ்டாக்ஷராத் பர :”

யதா ஸர்வேஷு தேவேஷாு – எப்படி எல்லாத்‌ தேவர்களிலும்‌,
நாராயணாத் பர: நாராயணனைக்‌ காட்டிலும்‌ உயர்ந்தவர்களும்‌ ஒத்தவர்களும்‌,
நாஸ்தி – இல்லையோ,
ததா ஸர்வேஷு மந்த்ரேஷு .- அப்படியே எல்லா மந்த்ரங்களிலும்‌, நாஸ்திசாஷ்டா்ஷ்ராத் பர:- அஷ்டாக்ஷர மந்த்ரத்தோடு மிக்கதும்‌ ஒத்ததுமில்லை.
“பூத்வோர்த்வ பாஹுரத்யாத்ர ஸத்ய பூர்வம்‌ ப்ரவீமிவ :
ஹே புத்ர சிஷ்யா : ஸ்ருணுத நமந்த்ரோஷ்டாக்ஷராத் பர :”
ஹே புத்ர சிஷ்யா
: ஏ புத்ரர்களே சிஷ்யர்களே,
அத்ர – இவ்விடத்தில்‌,
ஊர்த்வ பாஹு : பூத்வா – உயரத் தூக்கின கையை உடையவனாய்‌.
அத்ய – இப்பொழுது.
ஸத்ய பூர்வம்‌ – சபத பூர்வகமாக,
:- உங்களுக்கு,
ப்ரவீமி – சொல்லுகிறேன்‌.
யூயம் ஸ்ருணுத – நீங்கள்‌ கேளுங்கள்‌.
பர -மேலான,
அஷ்‌டாக்ஷர மந்த்ர : – எட்டெழுத்து மந்த்ரமானது
– இல்லை.
“ஸர்வ வேதாந்த ஸாரார்த்தஸ்‌ ஸம்ஸாரார்ணவ தாரக : கதிரஷ்டாக்ஷரோ ந்ரூணாம்‌ அபுநர்ப்பவ காங்க்ஷிணாம்‌”.
ஸர்வ வேதாந்த ஸாரார்த்த
: அனைத்து வேதங்களினுடைய ஸாரமான அர்த்ததைச்‌ சொல்லுவதும்‌.
ஸம்ஸாரார்ணவ தாரக:– ஸம்ஸாரமாகிற கடலைக்‌ கடத்துவதுமான.
அஷ்டாஷர: திருவஷ்டாக்ஷர மந்திரமானது.
அபுநர்ப்பவ காங்ஷிநிணாம்‌- மீண்டும்‌ பிறவாமலிருக்கும்படி விரும்பும்‌ முமுஷுக்களான,
ந்ரூணாம்‌ – மனிதர்களுக்கு,
கதி : புகலாகும்‌. ,
ஆர்த்தா விஷண்ணாஸ்‌ சிதிலாச்ச பீதா : கோரேக்ஷுச வ்யாதிஷு வர்த்த மாநா : ஸங்கீர்த்ய நாராயண சப்த மாத்ரம்‌ விமுக்த து:காஸ்‌ ஸுகிநோ பவந்தி”.
ஆர்த்தா
: ஐச்வர்யம் நஷ்ட மடைந்தவரும்‌,
விஷண்ணா :- நூதநமாக செல்வத்தை விரும்புபவரும்‌.
ஸிதிலா:– மனோ வியாதிகளை யுடையவரும்‌.
பீதா -சத்ருக்களிடத்தில்‌ பயப்பட்டவர்களும்‌. கோரஷு ச வ்‌யாதிஷு – வர்த்தமாநா :கொடிய வியாதிகளினால்‌ பீடிக்கப்‌பட்டவர்களும்‌.
நாராயண சப்த மாத்ரம்‌ – திருமந்த்ரத்தை.
ஸங்கீர்த்ய – ஸ்ரத்தையோடு அநுஸந்தித்து. விமுக்ததுக்கா : – செல்வ நாசம்‌ முதலியவற்றாலுண்டாகும்‌ துக்கத்தினின்றும்‌ விடுபட்டவர்களாய்‌, ஸுகிந : செல்வம்‌ முதலிய ஊதியத்திலுண்டான ஸுகத்தை உடையவர்களாய்‌
பவந்தி – ஆகிறார்கள்‌.
உள்ளுறை பொருள்‌ :
ஆர்த்தா :
கைங்கர்யம்‌ நழுவுதலைப் பொறுக்க மாட்டர்தவர்களாய்‌,
விஷண்ணா : தற்காப்பின்‌ தொடர்பைப்‌ பொறாதவர்களாய்‌.
சிதிலா -தேவதாந்தரங்கட்கு அடிமைப்படும்‌ நிலை வந்த போது மனம்‌ இடிந்துபோகும்படி யானவர்களாய்‌.
பீதா -சுதந்திரத்திற்கு அஞ்சினவர்களும்‌. கோரேஷு-தம்‌ முயற்சியால்‌ போக்க அரியதான.
வ்யாதிஷு-தேஹாத்மா பிமானம்‌, விஷய சபலம்‌ ஆகியவற்றிலே.
வர்த்தமாநா -இருப்பவர்களும்‌.
நாராயண சப்த மாத்ரம்‌ ஸங்கீர்த்ய – -நாராயண சப்தத்தை மாத்ரம்‌ சொன்னவர்கள்‌.
விமுக்‌தது:கா: கைங்கர்யத்‌ தடை முதலியவற்றால்‌ வரக் கடவ துன்பம்‌ அடியோடு நீங்கப்‌ பெற்றவர்களாய்‌. ஸுகிந:– நித்ய கைங்கர்யத்தால்‌ அநந்த பரிபூர்ணராய்‌,
பவந்தி– ஸ்வரூபத்தை உடையவர்களாவார்‌.
“நாராயணேதி சப்தோஸ்திவாகஸ்தி வசவர்த்திநீ ததாபி நரகே கோரே பதந்தீதி கிமத்புதம்‌”
நாராயண இதி
– நாராயணனென்கிற
சப்த : அஸ்தி – சப்தம்‌ இருக்கிறது. வசவர்த்திநீ – அத்தைச்‌ சொல்லுகைக்கு-ஸ்வாதீநமான
வாக்‌ – வாகிந்த்ரியம்‌.
அஸ்தி – இருக்கிறது,
ததாபி – அப்படி இருக்கச்‌ செய்தேயும்‌ கோரே நரகே – கோரமாந நரகத்தில்‌, பதந்தி – விழுகிறார்கள்‌.
இதிகிம்‌ – இது என்‌? (என்று சித்திர குப்தன்‌ யமனைக் கேட்க, யமனும்‌ தனக்குச்‌ காரணம்‌ தெரியாமல்‌) அற்புதம்‌ – இதுவும்‌ ஓர்‌ ஆச்சரியம்‌ என்கிறான்‌.
“கிம் தத்ர பஹுபிர் மந்த்ரை: கிம் தத்ர பஹுபிர் வ்ரதை
நமோ நாராயணாயேதி மந்த்ரஸ்‌ ஸர்வார்த்த ஸாதக:”
நமோ நாராயணாய இதி –
நமோ நாராயணாய என்னும்‌,
மந்த்ர: மந்த்ரமானது,
ஸர்வாத்த ஸாதக -அனைத்துப்‌ பொருள்களையும்‌ ஸாதித்துக்‌ கொடுக்கும்‌. தத்ர- அப்படி இஷ்டத்தைப்‌ பெறுவதில்‌, பஹுபி: மந்த்ரை:- பல மந்திரங்களாலே, கிம்‌ – என்ன ப்ரயோஜநம்‌?
பஹுபி : வ்ரதை : அநேக விரதங்களாலே. கிம்‌ – என்ன ப்ரயோஜநம்‌?
இவை முதலானவைகளாலே வேதார்த்தத்தை விளங்கச்‌ சொல்லுகிற தத்தம்‌ நூல்களிலே பல இடங்களிலும்‌ இத்தைச்‌ சிறப்பித்துச்‌ சொல்லுகையாலே வேதார்த்தத்தை விரிவுபடுத்தும்‌ முயற்சி யுடையரான மேலான ரிஷிகளும்‌ விரும்பினார்கள்‌.
‘வண் புகழ்‌ நாரணன்‌’ ‘செல்வ நாரணன்‌‘ என்று தொடங்கி, ‘வாழ்புகழ் நாரணன்‌‘ என்று முதல்‌ நடு முடிவாக நம்மாழ்வாரும்‌ அருளிச்‌ செய்கையாலும்‌, “நாடும்‌ நகரமும்‌
நன்கறிய நமோ நாராயணாய
” என்று தொடங்கி, “ஓவாதே நமோ நாரணா வென்பன்‌” என்று பெரியாழ்வாரும்‌,
நாத்தழும்பெழ நாரணா” என்று தொடங்கி, ‘நலந் திகழ்‌ நாரணன்‌’ என்று குலசேகரப்‌ பெருமாளும்‌, “நான்முகனை நாராயணன்‌ படைத்தான்‌” என்று தொடங்கி “எட்டெழுத்தும்‌ ஓதுவார்கள்‌ வல்லர் வானமாளவே” என்று திருமழிசைப் பிரானும்‌, “நான்‌ கண்டு கொண்டேன்‌ நாராயணா வென்னும்‌ நாமம்‌” என்று ஆரம்பத்தில்‌ ஒருகால்‌ சொன்னாற்‌ போலே ஒன்பது முறை சொல்லி “நாராயணா ஓ மணி வண்ணா நாகணையாய்‌ வாராய்‌”-என்று திருமங்கையாழ்வாரும்‌, முதல்‌ கடைவாசியற அருளிச்செய்கையாலும்‌,
நன் மாலை கொண்டு நமோ .நாரணா என்னும் சொன்மாலை கற்றேன்‌” என்றும்‌, “‘நாரணா வென்றோவா துரைக்கும்‌ உரை யுண்டே?” என்றும்‌ “ஞானச்‌ சுடர்‌ விளக்கேற்றினேன்‌ நாரணற்கு” “நாரணன் தன்‌ நாமங்கள்‌”, “பகல் கண்டேன்‌ நாரணனைக்‌ கண்டேன்‌” என்றும்‌ “நாமம் பல சொல்லி நாராயணா” என்றும்‌ முதலாழ்வார்களும்‌ அருளிச்‌ செய்கையாலும்‌ “மயர்வற மதி நலம்‌ அருளினன்‌” என்கிறபடியே, நிர்ஹேதுக பகவத்‌ கடாக்ஷத்தாலே செவ்வையான ஜ்ஞானத்தை அடைந்து எல்லாவற்றையும்‌ உண்மையாம்‌ வகை தம்‌ ஞானக் கண்ணாலே காண்பவர்களான ஆழ்வார்களெல்லாரும்‌ விரும்பினார்கள்‌. மற்ற மந்த்ரங்களை அநாதரித்து இத்தையே தந்தமக்குத் தஞ்சமாகத்‌ குறிக்‌ கொண்டு பிறர்க்கு உபதேசிக்கும்‌ போதும்‌, தந் தம்மைப்‌ பற்றினார்க்கும்‌ இத்தையே உபதேசிக்கையாலும்‌, அந்த
ஆழ்வார்களைப்‌ பின்‌ சென்ற ஆசார்யர்களெல்லாரும்‌ விரும்பினார்களென்கை.
இத்தால்‌ வேற்று மந்த்ரங்களிற் காட்டில்‌ இம்மந்த்ரத்துக் குண்டான சிறப்பு சொல்லிற்றாயிற்று.

இனி மந்த்ரத்தின்‌ பொருளான ஈஸ்வரனைக் காட்டிலும்‌, மந்த்ரத்துக்கு உண்டான சிறப்பைச்‌ சொல்லுகிறார்‌.
ஸூர்ணை -14-வாஸ்ய ப்ரபாவம்‌ போலன்‌று வாஸக ப்ரபாவம்‌ –

இதற்குப்‌ பொருளான ஈஸ்வரனுடைய பெருமையே போலன்று, அவன்‌ பெயரான இம் மந்த்ரத்தின்‌ பெருமை என்றபடி-அது தான்‌ ஏதென்ன? அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -15 – அவன்‌தூரதஸ்தனானாலும்‌ இது கிட்டி நின்று உதவும்‌ –

இம் மந்த்ரத்தின்‌ பொருளான ஈஸ்வரன்‌ ஸமீபத்தி லின்றிக்கே யிருந்தாலும்‌, அவன்‌ பெயரான இது கிட்டி நின்று தன்னைச்‌ சொன்னவர்களுடைய விருப்பங்‌களை ஸாதித்‌துத்‌ தரும்‌ என்கை.

இப்படி. இம் மந்த்ரத்துக்குப்‌ பொருளான இறைவன்‌ தூரவானாய்‌ இருக்க, அவனைச்‌ சொல்லுகிற சொல்லான இம் மந்த்ரம்‌ அருகே நின்று உதவின இடமுண்டோ என்ன? அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -16- திரெளபதிக்கு ஆபத்திலே புடவை சுரந்தது திருநாமமிறே –

பெரிய சபையிலே துச்சாஸநன்‌ ஆடையைக் களையும்‌ போது திரெளபதி யானவள்‌ “மஹத்‌யாபதி ஸம்ப்ராப்தே ஸ்மர்த்தவ்யோ பகவாந் ஹரி :”பேராபத்து விளைந்த போது ஹரியான பகவானை நினைப்பாயாக-என்று ஸ்ரீவஸிஷ்ட ரிஷி சொல்லி வைத்ததை நினைத்து,
“சங்கு சக்ர கதா பாணே த்வாரகா நிலைய அச்யுத,கோவிந்த புண்டரீகாஷ் ரக்ஷமாம்‌ சரணாகதாம்‌” என்று சரணம்‌ புகுந்த த்ரெளபதிக்கு அவ் வாபத்திலே மானக் குறை வராமல்‌ மேன்மேலென அடைகளை வளரவித்தது கோவிந்தா என்ற திருநாமமன்றோ ?.(சங்க சக்ரங்களைக்‌ கையிலேந்தியவனே! துவராகையை இருப்பிடமாக உடையவனே! அடைந்தாரை நழுவ விடாதவனே! பசுக்களைக் காப்பதையே விந்தையாக உடையவனே!
தாமரைக் கண்ணனே! உன்னையே தஞ்சமடைந்த என்னைக்‌ காத்தரூள்வாயாக). என்று சரணம்‌ புகுந்த த்ரெளபதிக்கு அந்த ஆபத்திலே “கோவிந்தேதி யதா க்ரந்தத்‌ க்ருஷ்ணாமாம்‌
தூரவாஸிநம்‌ ச ருணம்‌ ப்ரவ்ருத்த மிவமே ஹ்ருதயாந்‌ நாப ஸர்ப்பதி”
(தரெளபதி யானவள்‌ தூரத்தில்‌ இருந்த என்னைக்‌ குறித்து கோவிந்தா! என்று அழுதாள்‌ என்பது யாதொன்றுண்டோ அது வட்டிக்கு வட்டியாக வளரும்‌ கடனைப்‌ போல்‌, என்னுடைய மனத்தினின்றும்‌ நீங்கவில்லை, என்று பாண்டவர்களை வந வாஸம்‌ நீங்கி உபப்லாவ்யத்தில்‌ கண்டு சொன்னது) என்கிறபடியே நாமத்துக்குப்‌ பொருளான கண்ணன்‌ தூர வாஸனாயிருக்கச்‌ செய்தேயும்‌, ஆடையை உண்டாக்கிக்‌ கொடுத்தது அந்த அவதாரத்தின்‌ பேரான கோவிந்தனென்கிற திருநாமமென்கை. நாராயண சப்தார்த்தப்‌ பல்லாயிரப் பகுதியில்‌ ஒரு பகுதியான கோவிந்த நாமம்‌ இப்படிச்‌ செய்த தென்றால்‌ நாராயண நாமத்தின்‌ ஏற்றம்‌ சொல்ல வேண்டாதாயிற்று.

இன்னமும்‌ ஒரு விதத்தாலே இதன்‌ பெருமையைச்‌ சொல்கிறார்‌.
ஸூர்ணை -17. சொல்லும்‌ கிரமம்‌ ஒழியச்‌ சொன்‌னாலும்‌ தன்‌ ஸ்வரூபம்‌ கெட நில்லாது

யாதொரு மந்த்ரமும்‌ தன்னைத்‌ தஞ்சமாக மிக விருப்பத்தோடு சொன்னவர்களுக்கல்லது காப்பதாகிய தன்‌ கார்யஞ்‌ செய்யாதே யாகிலும்‌, இந்த மந்த்ரம்‌ அவ்வாறன்றிக்கே தன்னைத் தஞ்சமாக விரும்பிச்‌ சொல்லுகை யாகிற முறை யன்றிக்கே “ஸாங்கேத்யம்‌ பாரிஹாஸ்யஞ்ச, ஸ்தோபம்‌ ஹேள ந மேவ வா” (இடுகுறியாகிய ஒருவன்‌ பெயராகச்‌ சொன்னாலும்‌ அநுகூலர்‌ விஷயத்தில்‌ தரிக்காமல்‌ பெயராக அழைத்தாலும்‌, கீதம்‌ பாடுமவர்கள்‌ பல பெயர்களைப்‌ பன்னுகிற முறையில்‌ சொன்னாலும்‌, சிசுபாலன்‌ முதலானாரைப்‌ போல்‌ கோபம்‌ பிறக்கச்‌ சொன்னாலும்‌ தான்‌ நற்பலன்‌ தருவதில்‌ தவறாது) என்கிறபடியே, எங்கனே சொல்லினும்‌ சொன்னவர்களைக்‌ காப்பதாகிற தன் நிலை கெடாது.

இது தான்‌ எவரெவர்‌ எந்த எந்த பலன்களை விரும்புகிறார்களோ அவரவர்கள்‌: விரும்பினபடியே தரும் படியான பெருமையைச்‌ சொல்கிறார்‌-
ஸூர்ணை -18 -இது தான்‌ “குலந்தரும்‌” என்கிறபடியே எல்லா அபேஷிதிதங்களையும் கொடுக்கும்‌ .

இந்த மந்த்ரமானது “குலந்தரும்‌” என்று தொடங்கி, ஆழ்வார்‌ அருளிச்‌ செய்தபடியே அவரவர்‌ தகுதிகளுக்கேற்ப எல்லா கோரிக்கைகளையும்‌ கொடுக்கும்‌ என்கை.

மேற்சொன்னவற்றை விவரிக்கிறார்‌.
ஸூர்ணை -19 -ஐஸ்வர்ய கைவல்ய பகவல் லாபங்‌களை ஆசைப்பட்டவர்களுக்கு அவற்றைக்‌ கொடுக்கும்‌ .

ஐஹலெளகிகம் ஜஸ்வர்யம்‌. ஸ்வர்க்காத்யம்‌ பார லெளகிகம்‌, கைவல்யம்‌ பகவந்தஞ்ச மந்த்ரோயம்‌ ஸாதயிஷ்யதி”, (இவ்வுலகச்‌ செல்வம்‌, ஸ்வர்க்கம்‌ முதலான பர லோகத்துச்‌ செல்வம்‌, ஆத்மாநுபவமாகிய கைவல்யம்‌, பரமாத்மாநுபவமாகிய பரம பதத்தின்பம்‌ ஆகியவைகளை இந்த மந்திரம்‌ ஸாதித்துக்‌ கொடுக்கும்‌. என்கிறபடியே -இவ் வுலகத்ததாயும்‌, மேல்‌ பர லோகத்ததாயும்‌ உள்ள ஐஸ்வர்யங்களையும்‌, ஆத்மாவின்‌ இயற்கை நிலை எய்துவதாகிய கைவல்யத்தையும்‌. அளவற்றதும்‌, அழிவற்றதும்‌, மேம்பட்டதுமாகிய பரமாத்மாநுபவமாகிய பரம பதத்தில்‌ அநுபவத்தையும்‌ ஆசைப்பட்ட அந்த அந்த தகுதி யுடையார்க்கு ஜப ஹோமம்‌ முதலானவைகளாலே நேரே தானே ஸாதநமாய்‌ நின்று அவ் வவற்றைக்‌ கொடுக்கும்‌ என்கை.

கர்மம்‌ முதலான ஸாதநங்களுக்குத்‌ துணை பண்ணும்‌ இதன்‌ சிறப்பைச்‌ சொல்லுகிறார்‌.
ஸூர்ணை -20 -கர்ம ஜ்ஞாந பக்திகளிலே இழிந்தவர்களுக்கு விரோதியைப்‌ போக்கி அவற்றைத்‌ தலைக் கட்டிக்‌ கொடுக்கும்‌

கர்ம யோகத்தை முக்தி ஸாதநமாகக்‌ கொள்ளுமவர்களுக்கு கர்ம யோக ஆரம்ப
விரோதியான பாபத்தைத்‌ தள்ளி அந்தக்‌ கர்மம்‌ நிர்விக்நமாயிருந்து, அதை முடிவு பெறச்‌ செய்யும்‌. முதற் கண்‌ ஜ்ஞாந யோகத்தை முன்னிடுமவர்களுக்குத்‌ தன்னைத்‌ துணை கொள்ளுமளவில்‌, கர்மத்தால்‌ ஸாதிக்கக்‌ கூடிய ஜ்ஞாநாரம்ப விரோதியான பாபத்தைத்‌ தள்ளி அந்த ஜ்ஞாநத்துக்கு நாள்‌ தோறும்‌ வளர்ச்சியைச்‌ செய்து கொண்டு, அத்தை முடிவு
பெறுத்துவிக்கும்‌. பக்தி யோகத்தை மோக்ஷ ஸாதநமாகக்‌ கொள்ளுமவர்களுக்கு, தன்னைத்‌ துணை கொள்ளுமளவில்‌, பக்தி யோகாரம்ப விரோதியான பாபத்தை ஒழித்து,
பக்தி யோக வளர்ச்சிக்குக்‌ காரணமாய்‌ நின்று அதை முடிவு பெறுத்துவிக்கு மென்கை.

இங்ஙனன்றிக்கே ப்ரபந்நர்க்கு இது செய்யும்‌ உபகார வைபவத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -21 – ப்ரபத்தியிலே இழிந்தவர்களுக்கு ஸ்வரூப ஜ்ஞாநத்தைப்‌ பிறப்பித்துக்‌ கால ஷேபத்துக்கும்‌ போகத்துக்கும்‌ ஹேதுவாயிருக்கும்‌ .

கீழ்ச்‌ சொன்னவை போலே செயற்கரியதாய்‌, ஜீவர்களுடைய பரதந்த்ர ஸ்வரூபத்துக்கு முரண் பட்டதாய்‌ இருக்கை யன்றிக்கே, சுலபமாக ஓழுகுவதற்‌குரித்தாய்‌, ஸ்வரூபத்துக்குப்‌ பொருந்தியதுமான ப்ரபத்தியாகிய நிஷ்டையில்‌ நின்றவர்களுக்கு இந்த நிஷ்டைக்குப்‌ பொருந்தியதான, பரதந்த்ர ரூப ஸ்வரூப ஜ்ஞாநத்தை மிக விரிவாக உண்டாக்கி, அர்த்தா நுஸந்தாநம்‌ பண்ணுதல்‌ முதலியவைகளாலே போது போக்குகைக்கும்‌ உரித்தாய்‌, “எனக்‌ கென்றுந்தேனும்‌ பாலும்‌ அமுதுமாய திருமால்‌ திருநாமம்‌” என்கிறபடியே திருமந்த்ர பொருளான எம்பெருமான்‌ நலமந்தமில்லாதவனைப்‌ போலே, இது தானே சுவை மிகுத்து இனிய போகத்துக்கும்‌ உரித்தாயிருக்கும்‌.

அறியப்‌ பெறுவனவாகிய அனைத்து அர்த்தங்களையும்‌ சொல்லுகையாகிற இதன்‌ வைபவத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை – 22- “மற்றெல்லாம்‌ பேசிலும்‌” என்கிறபடியே அறிய வேண்டும்‌ அர்த்தமெல்லாம்‌ இதுக்குள்ளே உண்டு .

நின்திருவெட்டெழுத்துங்‌ கற்று, மற்றெல்லாம்‌ பேசிலும்‌” என்கிறபடியே, ஆத்மா உஜ்ஜீவனத்துக்குப்‌ பொருந்த அறிய வேண்டும்‌ அர்த்த விசேஷங்களெல்லாம்‌ இந்த மந்த்ரத்துக்குள்ளே உண்டென்கை.

அறிய வேண்டும்‌ அர்த்தமெல்லாம்‌ எது? என்னும்‌, விருப்ப முடைமை யாலருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -23 – அதாவது – அஞ்சர்த்தம்‌ .

அஞ்சர்த்தமாவது : ஆத்மாவின்‌ இயல்‌பான தன்மையையும்‌ பரமாத்மாவின்‌ இயல்பான தன்மையையும்‌, பரமாத்மாவால்‌ ஜீவாத்மா பெறும்‌ பயனின்‌ தன்மையையும்‌, இப் பயனை ஸாதித்துத்‌ தரும்‌ ஸாதநத்தின்‌ தன்மையையும்‌, இவற்றை தடுக்கிற தடையின்‌ தன்மையையும்‌ இந்த மந்த்ரம்‌ சொல்வதாகும்‌. இவற்றுக்கு ப்ரமாணமாவது,
ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம்‌ ப்ராப்துசச ப்ரத்யகாத்மந: ப்ராப்த் யுபாயம்‌ பலம்‌ ப்ராப்தேஸ்‌ ததா ப்ராப்தி விரோதிச, வதந்தி ஸகலா வேதாஸ்‌ ஸேதிஹாஸ புராணகா: முநயச் ச மஹாத்மாநோ வேத வேதார்த்த வேதிந :”
(அடையத் தக்க பர ப்ரஹ்மத்தினுடைய ஸ்வரூபத்தையும்‌, அடைபவனான ஜீவனுடைய ஸ்வரூபத்தையும்‌, அடைகிறதற்கேற்ற உபாய ஸ்வரூபத்தையும்‌, அடையும்‌
பலனின்‌ ஸ்வரூபத்தையும்‌, அப்படியே அடைவதற்கு விரோதியா யிருப்பதன்‌ ஸ்வரூபத்தையும்‌, இதிஹாஸ புராணங்களுடன்‌ கூடின எல்லா வேதங்களும்‌ சொல்லுகின்றன.-வேதங்களையும்‌, வேதாந்தங்களான வற்றையும்‌ அறிந்தவர்‌களான மஹாத்மாக்களான மஹரிஷிகளும்‌ சொல்லுகிறார்‌கள்‌.) இப்படியே ஸகல வேத சாஸ்திரங்களும்‌ சொல்லுவது இவ் வர்த்த பஞ்சகத்தையும்‌ ஆகையாலே, அதன்‌ சுருக்கமான இந்த மந்த்ரத்தில்‌ சொல்லப் பெறுவதும்‌ இதுவே யாம்‌. -இந்த மந்த்ரந்தான்‌ ப்ரணவத்தாலே ஜீவ ஸ்வரூபத்தையும்‌, நமஸ்ஸாலே விரோதி, உபாய ஸ்வரூபங்களையும்‌, நாராயண பதத்தாலே பர ஸ்வரூபத்தையும்‌, அதில்‌ நான்காம்‌ வேற்றுமையாலே பல ஸ்வரூபத்தையும்‌ சொல்லுவதாயிருப்பதாகும்‌.

இந்த மந்த்ரத்தின்‌ பொருளின்‌ சிறப்பை அருளிச்‌ செய்கிறார்‌ மேல்‌.
ஸூர்ணை -24- பூர்வாசார்யர்கள்‌ இதில்‌ அர்த்தம்‌ அறிவதற்கு முன்பு தங்களைப்‌ பிறந்தார்களாக நினைத்திரார்கள்‌; இதில்‌ அர்த்த ஜ்ஞாநம்‌ பிறந்த பின்பு, “பிறந்தபின்‌ மறந்திலேன்‌” என்கிறபடியே இத்தை யொழிய வேறொன்றால்‌ கால க்ஷேபம்‌ பண்ணி அறியார்கள்‌ .

நாதமுநிகள்‌ ஆளவந்தார்‌ எதிராஜர்‌ முதலான நம்‌ பூர்வாசார்யர்கள்‌ “அன்று நான்‌ பிறந்திலேன்‌” என்கிறபடியே இந்த மந்த்ரத்தில்‌ அர்த்தம்‌ அறிவதற்கு முன்பு தங்களைப்‌ பிறந்தார்களாக நினைத்திறார்கள்‌. இதில்‌ அர்த்த ஜ்ஞாநம்‌ தங்களுக்கு உண்டான பின்பு “பிறந்த பின்‌ மறந்திலேன்‌” என்று ஆழ்வார்‌ பாசுரத்திற்‌ சொல்லுகிறபடியே இந்த மந்த்ர அர்த்தத்தைத்‌ தவிர வேறொன்றால்‌ காலங் கழிக்க மாட்டார்கள்‌ என்கை-வேத சாஸ்திரங்களிலோ, ஆழ்வார்கள்‌ அருளிச்‌ செயல்களிலோ பொழுது போக்கும்‌ போதும்‌ இந்த மந்த்ர அர்த்தத்தை உட் கொண்டே விசாரிப்பதாலே இத்தை யொழிய வேறொன்றால்‌ காலக்ஷேபம்‌ பண்ணி யறியார்களென்னத்‌ தட்டில்லை.

சப்த சக்தி தானே அனைத்தையும்‌ ஸாதித்துத்‌ தருவதாயிருக்க, இவர்கள்‌ இதன்‌ அர்த்தத்திலே ஊன்றுகைக்குக்‌ காரணம்‌ என்‌? என்ன, அருளுகிறார்‌.
ஸூர்ணை -25- வாசகத்திற் காட்டில்‌ வாச்யத்தில்‌ ஊன்றுகைக்கடி, ஈஸ்வரனே உபாய உபேயமென்று நினைத்திருக்கை ;

அனைத்துப் பலன்களுக்கும்‌ இம் மந்த்ரம்‌ தானே ஸாதநமாயும்‌ மற்றைச்‌ சாதனங்களுக்குத்‌ துணையாய்‌ நின்று தலைக் கட்டிக்‌ கொடுக்குமதான சப்த சக்தி தானே அமைந்திருக்கச்‌ செய்தே, இதை விட்டு முன்‌ ஸூத்திரத்தில்‌ சொன்ன படியே இந்த மந்த்ரத்தினுடைய அர்த்தத்திலே பூர்வாசார்யர்கள்‌ நோக்கா யிருப்பதற்குக்‌ காரணம்‌, எம்பெருமான்‌ உகப்பை விட்டு வேற்றுப்‌ பயன்‌ கருதுமவராய்‌ இம் மந்திர சப்தத்தை ஸாதநமாகக்‌ கொண்டு
சாதித்தல்‌; வேறு ஸாதநங்களைக்‌ கைக்‌ கொள்ளுமவர்களாய்‌ அது முற்றுப்‌ பெறுவதற்கு இதன்‌ சப்தத்தை துணைக்‌ கொள்ளுமவர்களைப்‌ போலன்றிக்கே, உபாய உபேயங்கள்‌ இரண்டும்‌ எம்பெருமானே என்று நினைவிற் கொண்டு ஒழுகுகை என்றபடி.

இனி மேல்‌ இம் மந்த்ரத்துக்கு அர்த்தம்‌ இரண்டு வாக்யங்களாக அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -20- இது தன்னில்‌ சொல்லுகிற அர்த்தம்‌ ஸ்வரூபமுமம்‌, ஸ்வரூபாநுரூபமான ப்ராப்யமும்‌; ஸ்வரூபமும்‌, உபாயமும்‌, பலமும்‌ என்னவுமாம்‌.

இந்த மந்த்ரந் தன்னில்‌ சொல்லுகிற அர்த்தமாவது, இது ஆத்மாவினுடைய அடிமையும்‌ பராதீநனாயும்‌ இருக்கிற இயல்பான ஸ்வரூபமும்‌, இந்த ஸ்வரூபத்துக்குப்‌ பொருந்தியதான தொண்டாற்றுகை யாகிற பலமும்‌. (ஸ்வரூபத்துக்குப்‌ பொருந்துகையாவது: தன்னலங்‌ கருதுகை யாகிற சுய நலமும்‌, தான்‌ செய்வதாகக்‌ கருதுகையாகிற அஹங்காரமும்‌ நீங்கிப்‌ பகவந் நியமநத்தால்‌ அவனுகப்புக்கென்றே செய்கையாகிற நியமம்‌.)
அல்லது
அடிமையாகிற ஸ்வரூபமும்‌, இந்த ஸ்வரூபத்துக்குப்‌ பொருந்திய உபாயமும்‌.” இந்த உபாயத்தால்‌ ஸாதிப்பதாகிற பயனுமாமென்கை.
இதில்‌ முன்னர்‌ பொருள்‌ கொண்ட ரீதியில்‌ ப்ரணவ நமஸ்ஸுக்களாலே ஸ்வரூபமும்‌, நாராயண பதத்தாலே பயனுஞ் சொல்லுகிறது.
பின்னர்‌ பொருள்கோளில்‌ ப்ரணவத்தாலே சேஷத்வமாகிற ஸ்வரூபமும்‌, நமஸ்ஸாலே உபாயமும்‌, நாராயண பதத்தாலே பலமும்‌ சொல்லுகிறது.

ஸூர்ணை -27-பலம்‌ இருக்கும்படி. ப்ரமேய சேகரத்திலும்‌, அர்ச்சிராதி கதியிலும்‌ சொன்னோம்‌ .

இவ் வாத்மாவுக்குப்‌ பெறப்‌-பெறுகை யாகிற பலந்தான்‌ -அர்ச்சிராதி மார்க்கத்தாலே பரம பதத்திலே போய்‌ பரிபூர்ண பகவதநுபவத்தைச்‌ செய்து அவ் வநுபவத்தால்‌ பிறந்த ப்ரேமை தூண்டச்‌ செய்யும்‌ அனைத்துத்‌ தொண்டும்‌ ஆகையாலே, அது இருக்கும்படியைச்‌
சுருக்கமாக “ப்ரமேய சேகரம்‌” என்கிற ப்ரபந்தத்திலும்‌, விரிவாக “அர்ச்சிராதி கதி” யாகிற ப்ரபந்தத்திலும்‌ சொன்னோம்‌, அவற்றிலே கண்டு கொள்வதென்கை.

இந்த மந்த்ரத்துக்கு பதவுரை அருளிச்‌ செய்வதாகத்‌ திருவுள்ளம் பற்றி,இதனுடைய எழுத்திலக்கத்தையும்‌, பத இலக்கத்தையும்‌ முதலில்‌ அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -28- இதுதான்‌ எட்டு திரு வக்ஷரமாய்‌ -மூன்‌று பதமாயிருக்கும்‌ .

இந்த மந்த்ரம்‌ தான்‌ “ஓமித்யேகாக்ஷரம்‌, நம இதித்வே அக்ஷரே, நாராயணாயேதி
பஞ்சாக்ஷராணி, இத்யஷ்டாக்ஷரம்‌ சந்தஸா காயத்ரீ சேதி
” என்றும்‌ “ஓமித்யக்ரே வ்யாஹரேத்‌, நம இதி பச்சாத்‌, நாராயணாயேத்யுபரிஷ்டாத்‌” என்கிறபடியே, எட்டு திருவக்ஷரமாய்‌, மூன்று பதமாயிருக்குமென்கை. இதனுடைய அஷ்‌டாக்ஷரத்வம்‌ சொல்லுகிற இடத்தில்‌ “ஓமித்யே காக்ஷரம்‌” என்று ப்ரணவத்தை ஒரக்ஷரமாகவும்‌ “நம இதித்வே அக்ஷரே” என்று நமஸ்ஸை இரண்டக்ஷரமாகவும்‌, “நாராயணாயேதி
பஞ்சாக்ஷ்ராணி”
என்று நாராயண பதத்தை அஞ்சக்ஷரமாகவும்‌ வேதம்‌ சொல்லுகையாலே ஸமஸ்த பதமான நாராயண பதத்தில்‌ நார பதத்தைப்‌ பிரித்து ஆறு எழுத்தாக்கி ப்ரணவம்‌ நீங்கலாக அஷ்டாக்ஷரத்வம்‌ சொல்லுகையாகிற பக்ஷம்‌ வேத மார்கம்‌ அல்லாததாகையாலே ஏற்றுக்‌ கொள்ளத்தக்க தன்று என்கை.

இதில்‌, மூன்று பதங்களும்‌ எவ்வர்த்தத்தைச்‌ சொல்லுகிறது என்னும்‌ வேட்கையில் அருளிச் செய்கிறார்‌.

ஸூர்ணை -29- மூன்று பதமும்‌ மூன்றர்த்தத்தைச்‌ சொல்லுகிறது –
மூன்று பதமும்‌ மூன்று அர்த்தத்தைச்‌ சொல்லுகிறது என்கிறார்‌.
அவ்வர்த்தங்கள்‌ தம்மை விரிவாக அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -30- அதாவது, சேஷத்வமும்‌, பாரதந்த்ரியமும்‌, கைங்கா்யமும்‌

ப்ரணவத்தாலே சேஷத்வமும்‌, நமப் பதத்தாலே பாரதந்த்ரியமும்‌, நாராயண பதத்தாலே கைங்கர்யமும்‌ என்று விவரிக்கிறார்‌-ஸ்வரூபமும்‌, ஸ்வரூபாநுரூபமான ப்ராப்யமும்‌ என்று முதலில் சொன்ன வாக்யார்த்தம்‌, இத்தை நினைத்துச்‌ சொன்னதாம்‌.

இந்த மூன்று பதங்களில்‌ முதற்பதம்‌ எது என்ன? அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -31- இதில்‌ முதல்‌ பதம்‌ ப்ரணவம்‌ .
“ஓமித்யக்ரே வ்யாஹரேத்‌”
ப்ரணவத்தை முதலில்‌ ஓதக் கடவது; என்றன்றோ வேதஞ் சொல்லிற்று. தர்ம சாஸ்திரமாகிய ஸ்ம்ருதியும்‌ “ப்ரணவாத்யம்‌ நமோ மத்யம்‌ நாராயண யதாந்திமம்‌, மந்த்ரமஷ்டாக்ஷரம்‌ வித்யாத்‌ ஸர்வ ஸித்தி கரம் ந்ருணாம்‌”
ப்ரணவம்‌’ முதற்‌ பதமாகவும்‌, நம:’ பதம்‌ மத்யமாகவும்‌ “நாராயண” பதம்‌ கடைசியாகவும்‌ உடைய அஷ்டாக்ஷர மந்த்ரம்‌, சேதநர்களுக்கு எல்லா விருப்பங்களையும்‌ தரும்‌ என்றறியக்‌ கடவன்‌ என்றது.

இனி ப்ரணவத்துக்கு அர்த்தம்‌ அருளிச்‌ செய்வதாக, இதனுடைய மூன்றெழுத்தா யிருக்குமதை அருளிச்‌ செய்கிறார்‌-

ஸூர்ணை – 32 -இது -அ-. என்றும்‌ -உ – என்றும்‌ -ம்‌ -என்றும்‌ மூன்று திருவக்ஷரம்‌ ஃ
இந்த ப்ரணவந்தான்‌ விபக்தமாகப்‌ பிரிந்த நிலையிலே மூன்றெழுத்துக்களாய்‌, மூன்று பதமாய்‌, மூன்று அர்த்தங்கள்‌ காட்டுமதாய்‌, கூட்டான நிலையிலே ஒரெழுத்தாய்‌, ஒரு பதமாய்‌, ஒரர்த்தங் காட்டுமதா யிருக்கும்‌.

இனி, இந்த மூன்றெழுத்துக்களும்‌ உற்பத்தியான கிரமத்தை உபமாந முகத்தாலே காட்டுகிறார்‌.

ஸூர்ணை -33 – மூன்று தாழியிலே தயிரை நிறைத்துக்‌ கடைந்து வெண்ணெய்‌ திரட்டினாற் போலே மூன்று வேதத்திலும்‌ மூன்றக்ஷரத்தையும்‌ எடுத்தது.

மூன்று தாழியிலே என்று தொடங்கி “பூரிதிரிக்‌ வேதாதஜாயத, புவ இதி யஜுர் வேதாத்‌, ஸுவரிதி சாம வேதாத்‌, தாநி ஸாக்ராணி அப்யதபத்‌, தேப்யோ அபிதப்தேப்ய ஸ்‌ த்ரயோ வர்ணா அஜாயந்த, அகார உகார மகார இதி, தாநேகதா ஸமபரத்ததே ததோமிதி”
“பூ:” என்பது ரிக்வேத ஸாரமாக உண்டாயிற்று; ‘புவ:’ என்பது யஜுர்வேத ஸாரமாக உண்டாயிற்று; ‘ஸுவ:” என்பது சாமவேத ஸாரமாக உண்டாயிற்று.
தாநி – அந்த “பூ; புவ:, ஸுவ:” என்கிற சாரச்‌ சொற்களாகிற,
ஸுக்ராணி – பரிசுத்தமான பொன் திவலைகளை,
அப்யதபத்‌-மீண்டும் சுருங்க உருக்கினான்‌. தேப்ய: “அபிதப்தேப்ய த்ரயோ வர்ணா : உருக்கப்பட்டதான . அந்த, ‘பூ ; புவ ஸுவ: மூன்றும்‌ (லயத்தை அடைந்து) சுருங்கி, அகார, உகார, மகார இதி – அ’ ‘௨’ ‘ம’ என்று, த்ரயோவர்ணா : மூன்று எழுத்துக்கள்‌.
அஜாயந்த – உண்டாயின,
தாந்‌ – அந்த மூன்று எழுத்துக்களையும்‌, ஏகதாஸமபரத்‌ – ஒன்றாகச்‌ சேர்த்தான்‌,
தத்‌ ஏதத்‌ – சேர்த்த அந்த இது தான்‌ .
ஓம்‌ இதி – ஓம்‌ என்பது அகும்‌.

தகாரஞ்சாப்யுகாரஞ்ச மகாரஞ்ச ப்ரஜாபதி : வேதத்ரயாநீ நிரப்ருஹத்‌ பூர்புவஸ்‌ ஸவரிதீதிச “
அகாரஞ்சஅபி
– அகாரத்தையும்‌,
உகாரஞ்ச – உகாரத்தையும்‌,
மகாரஞ்ச – மகாரத்தையும்‌,
பூ : புவ: ஸுவ : – வயாஹ்ருதிகளென்ற இந்த ஸாரமான சொற்களை
ப்ரஜாபதி :- எம்பெருமான்‌,
வேத த்ரயாத்‌ – மூன்று வேதங்களினின்‌றும்‌,
நிர ப்ருஹத்‌ – எடுத்தான்‌. என்று வேதங்களிலும்‌ தர்ம சாஸ்திரங்களிலும்‌ சொல்லுகிறபடியே -ரிக் யஜுஸ்‌ சாமங்களான மூன்று வேதங்களினின்றும்‌ ‘பூ : புவ : ஸுவ:” என்ற ஸாரச்‌ சொற்கள்‌ மூன்றையும்‌ தோற்றுவித்து, அவைகளை மீண்டும்‌ பொன்‌ உருக்குமா போலே எம்பெருமான்‌ தன்‌ ஸங்கல்பத்தாலே சுருங்கச்‌ செய்து அவற்றில்‌ நின்றும்‌ அகார உகார மகாரங்களாகிற எழுத்துக்கள்‌ மூன்றும்‌ முறையே தோன்ற வைத்து, இப்படி. உண்டாக்கின படியைத்‌ திருவுள்ளம்‌ பற்றி மூன்று தாழியில்‌ தயிரை நிறைத்து தனித்தனியே கடைந்து,
அதன்‌ ஸாரமான வெண்ணெயைத்‌ திரட்டினாற் போலே மூன்று வேதத்திலும்‌ மூன்றெழுத்தையும்‌ எடுத்ததென்கிறார்‌.

இத்தால்‌ பலித்த அம்ஸத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -34 – ஆகையாலிது, ஸகல வேத ஸாரம்‌.

ப்ரணவத்திலுள்ள மூன்று எழுத்துக்களான அ , ௨, ம, ஓவ்வொரு வேதத்தினுடைய ஸாரமாக எடுக்கப்பட்ட தாகையாலே இது, ஸகல வேத ஸாரம்‌ என்ற படி.

மூன்றெழுத்துக்களுக்கும்‌ முறையே அர்த்தம்‌ அருளிச்‌ செய்வதாகத்‌ திருவுள்ளம்‌ பற்றி முதற் கண்‌ அகாரார்த்தத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -35- இதில்‌ அகாரம்‌, ஸகல ஸப்தத்துக்கும்‌ காரணமாய்‌ நாராயண பதத்துக்கு ஸங்க்ரஹமாயிருக்‌கையாலே, ஸகல ஐகத்துக்கும்‌ காரணமாய்‌ ஸர்வ ரக்ஷகனான எம்பெருமானைச்‌ சொல்லுகிறது .

இந்த மூன்றெழுத்துக்களிலும்‌ வைத்துக்‌ கொண்டு முதலெழுத்தான அகாரம்‌,
“நாமரூபஞ்ச பூதாநாம்‌ க்ருத்யா நாஞ்ச ப்ரபஞ்சநம்‌ வேத ஸப்தேப்ய ஏவா தெள தேவாதீ நாஞ்‌ ச காரஸ :”
ஸ எ –
பிரமன்‌,
அதெள – படைப்புக் காலத்தில்‌,
தேவாதீநாம்‌ – தேவர்‌ முதலாக தாவரங்களீறாக உள்ள,
பூதாதாம்‌ – ப்ராணிகளுக்கு,
நாம – பெயர்களையும்‌,
ரூபஞ்ச – வடிவங்களையும்‌,
க்ருத்யாநாம்‌ ப்ரபஞ்ச நஞ்ச : – தொழில்‌முறைகளாகிற விரிவையும்‌,
வேத ஸப்தேப்ய:ஏவ – வேதத்தினுடைய சப்தங்களிலிருந்தே,
சகார – படைத்தான்‌, -என்கிறபடியே உலகில்‌ சப்தங்களுக்கு வேதம்‌ காரணமாய்‌,
ப்ரணவாத்யா ஸ்‌ ததா வேதா!”
வேதா:
– வேதங்கள்‌,
ப்ரணவாத்யா :- ப்ரணவத்தை முதலாக உடைத்தாயிருக்கின்றன.
ஓம்கார ப்ரபவா வேதா:”
வேதா
-வேதங்கள்‌,
ஓங்கார ப்ரபவா – ப்ரணவத்தைப்‌ பிறப்பிடமாக உடையன. இவை முதலானவைகளிற் சொல்லுகிறபடியே அந்த வேதங்களுக்கும்‌ ப்ரணவம்‌ காரணமாய்‌,
“தஸ்ய ப்ரக்ருதி லீநஸ்ய”
ப்ரக்ருதி லீநஸ்ய
– தன்‌ காரணமான அகாரத்திலே அடங்கி இருக்கிற;
தஸ்ய – அந்த ப்ரணவத்திற்கு. என்கிறபடியே அந்தப் ப்ரணவம்‌ தனக்கு அகாரம்‌ காரணமாயிருக்கையாலே,
“அகாரோவை ஸர்வா வாக்‌”
ஸர்வாவாக்‌
– எல்லா வாக்குக்களும்‌,
அகாரோவை – அகாரமாயே-அகாரத்தைத்‌ அணைக்‌ கொண்டே (பாண்டமெல்லாம்‌ மாண்ணாலேயே இருக்கும்‌) என்பது போல, ‘அகாரத்தின்‌ சிதைவே எல்லா எழுத்துக்களும்‌ என்றதென்க.
“ஸமஸ்த ஸப்த மூலத்வாதகாரஸ்ய ஸ்வபாவத:” (இயல்‌ பாகவே அகாரம்‌ எல்லாச்‌ சொற்களுக்கும்‌ காரணமாயிருக்கும்‌) இப்படிகளால்‌ அகாரம்‌ ஸகல ஸப்தங்களுக்கும்‌ காரணமாயும்‌, ஸர்வேஸ்வரன்‌ உலகிலுள்ள அனைத்துப்‌ பொருள்களும்‌ தனக்கு உடலாயும்‌, தான்‌ அவற்றுக்கு உயிராயும்‌ இருந்து ஸர்வ ரக்ஷகனாயிருக்கும்‌ படியை சொல்‌லுகிற நாராயண பதத்துக்கு சுருக்கமா யிருக்கையாலே,
“யதோவா இமாநி பூதாநி ஜாயந்தே, யேந ஜாதாநி ஜீவந்தி”.
யதோவா –
எவனிடத்திலிருந்து,
இமாநி பூதாநி – இந்த தேவ மநுஷ்யாதி ப்ராணிகள்‌ எல்லாம்‌,
ஜாயந்தே – உண்டாகின்றனவோ,
யேந – இவ்வாத்மாவாயிருக்கிறது எதனால்‌,
ஜாதாநி – உண்டான பூதங்களெல்லாம்‌, ஜீவந்தி – உயிருடன்‌ இருக்கின்றனவோ என்றும்‌,
ஸஏவ ஸ்ருஜ்யஸ்‌ ஸ ச ஸார்க்ககர்த்தா ஸ ஏவ பாத்யத்‌ தி ச பால்யதே ச “
ஸ_ஏவ
– அவனே,
ஸ்ருஜ்ய:– படைக்கப்‌ படுகின்றான்‌,
ஸர்க்க கர்த்தாச – ஸ்ருஷ்டி, பண்ணுகிறவனும்‌,
:- அவனே,
ஸஏவபாதி – ரக்ஷிக்கிறவனும்‌ ௮வனே, பால்யதேச – ரஷிக்கப்படுகிறவனும்‌ அவனே,
அத்தி – ஸ்ம்ஹரிக்கிறவனும்‌ அவனே என்றும்‌, இவைகளிற்‌ சொல்லுகிறபடியே எல்லா ஐகத்துக்குங்‌ காரணமாய்‌, எல்லார்க்கும்‌ ரக்ஷகனாயிருக்கும்‌ எம்பெருமானைச்‌ சொல்லுகிறதென்கை. இத்தால்‌ இவ் வெழுத்தில்‌ எழுத்தினியல்பான பொருளான காரணத்வமும்‌, பகுதியான(தாத்வர்த்தமான) வினை யடியாகப்‌ பிறந்த ரக்ஷ்கத்வமும்‌, சொல்லிற்றாயிற்று. இந்த அகாரத்துக்கு நாராயண பதத்தின்‌ சுருக்கமான ரக்ஷகத்வம்‌ சொல்லும் போதும்‌ தாதுவினால்‌ கிடைத்த தன்மையை முன்னிட்டே சொல்ல வேணுமென்றதாம்‌.

ரக்ஷிக்கும்‌ விதம்‌ எது? என்னும்‌ வேட்கையிலே அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -36 – ரஷிக்கையாவது விரோதியைப்‌ யோக்‌குகையும்‌ அபேஷிதிதத்தைக்‌ கொடுக்கையும்‌-

ரக்ஷிப்பதென்பது இஷ்டமில்‌லா தவற்றைத்‌ தவிர்க்கையும்‌, இஷ்டமானதைக்‌ கொடுக்கையும்‌ ஆகிய இரண்டுவகை யாகையாலே, ஈஸ்வரன்‌ சேதநரை
ரக்ஷிக்கையாவது – அவர்களுக்கு வருத்தத்துக்‌ கேதுவான விரோதியைப்‌ போக்குகையும்‌ சுகத்துக் கேதுவான விருப்பத்‌துக் குரியதைத் தருகையும்‌ என்கை-

இவன்‌ இவர்களுக்குப்‌ போக்கும்‌ விரோதி எது? கொடுக்கும்‌ (அபேஷிதம்‌) விருப்பம்‌ எது? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.

ஸூர்ணை -37-இவை இரண்டும்‌ சேதநர்‌ நின்ற நின்ற அளவுக்கீடாயிருக்கும்‌ .
சேதநர்‌ .நின்ற நின்ற அளவுக்கீடாயிருக்கும்‌ என்றது, தாம்‌ தாம்‌ நின்ற (அதிகாரத்துக் கீடான) தகுதிகளுக்குப்‌ பொருந்த இருக்கும்‌ என்றபடி.

இது தன்னைத்‌ தெளிய அருளிச்‌ செய்‌கிறார்‌ மேல்‌.
ஸூர்ணை –38 –ஸம்ஸாரிகளுக்கு விரோதி ஸத்ரூ பீடாதிகள்‌, அபேஷிதிதம்‌ – அந்ந பாநாதிகள்‌; முமுஷுக்களுக்கு விரோதி – ஸம்ஸார ஸம்பந்தம்‌, அபேஷிதிதம்‌ – பரம பத ப்ராப்தி;முக்தர்க்கும்‌ நித்யர்க்கும்‌ விரோதி கைங்கர்ய ஹாநி, அபேஷிதிதம்‌ கைங்கர்ய வ்ருத்தி .
தேகமே ஆத்மா என்கிற நினைவும்‌ ஐம்புலனுகர்ச்சி அநுபவமே நிரந்தர அநுபவமாக நினைத்து வாழ்க்கை நடத்துகிற ஸம்ஸாரிகளுக்கு போக்க வேண்டிய விரோதி – ஸத்ருக்களால்‌ வரும்‌ நலிவு தொடக்கமானவை, பெறுகைக்குரிய விருப்பம்‌ – சோறு
தண்ணீர்‌ முதலானவைகள்‌. ஸம்ஸாரிகள்‌ – மாறி மாறி பிறந்‌ துழலும்‌ மக்கள்‌.
ஸத்ரு பீடாதிகள்‌‘ என்கிற விடத்தில்‌, ஆதி சப்தத்‌தாலே அதிவ்யாதி – மன ஸங்கடமுதலான வற்றால்‌ வரும்‌ துன்பங்களைச் சொல்லுகிறது.’அந்நபாதாதிகள்‌‘ என்கிற விடத்தில்‌ ஆதி சப்தத்தாலே மலர் மாலை, ஆடை அணிகலன்‌, சந்தநம்‌, பெண்‌ சேர்க்கை முதலானவைகளைச்‌ சொல்லுகிறது.
முமுஷுக்களுக்கென்றது – இவ் வுலகத்தில்‌ அடிக் கொதித்து பரம பதத்துக்குப்‌ போக ஆசைப்‌படா நிற்குமிவர்களுக்கு போக்க வேண்டிய விரோதி, பொய்‌ நின்ற ஞாநமாய்‌, பொல்லா ஒழுக்குமாய்‌, அழுக்குடம்‌புமாய்க்‌ கொண்டு, இவ் வுலகிலிருக்கை யாகிற ஸம்ஸார ஸம்பந்தம்‌. முமுஷுக்களுக்குப்‌ பெற வேண்டிய விருப்பம்‌ – பகவதநுபவம்‌ முதலானவைகளுக்கு அநுகூலமான பரமபதத்தை அடைவதென்கை. முக்த நித்யர்களுக்கு என்றது- இவ்வுலகிலிருந்து விடுபட்டவர்களும்‌, இவ்வுலகத்‌ தொடர்பே அற்றவர்களாயும்‌, பகவத நுபவத்தால்‌ உண்டான ப்ரீதியால்‌ கைங்கர்ய பரர்களாயுமிருக்கும்‌ முக்த நித்யர்களான இவர்களுக்கு விரோதி – வகுத்த ஸ்வாமியான ஸர்வேஸ்வரன்‌ திருவடிகளிலே தம்மியல்புக் கேற்ற வகை செய்து கொண்டு போகும்‌ தொண்டுக்கு வரும்‌ இடையூறு. இவர்களுக்கு விருப்பமாவது மேன்மேலெனச்‌ செய்கையாகிற கைங்கர்ய விருத்தி என்கை.
ஆக இப்படி அவரவர்‌ தகுதிகளுக்‌கேற்ப விரோதியைப்‌ போக்கி விருப்பத்தைத்‌ தருகையால்‌ எம்பெருமானே ஸர்வ ரஷகனென்னுமிடம்‌ சொல்லிற்றாயிற்று.

இப்படி, எம்பெருமானொருவனேயோ எல்லாரையும்‌ ரக்ஷிக்கிறவன்‌?? உலகில்‌ மாதா, பிதா, தேவதாந்‌தரங்கள்‌ (இதர தெய்வங்கள்‌) முதலானோர்‌ பலரும்‌ ரக்ஷகராக இல்லையோ என்ன ? அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை – 39-ஈஸ்வரனை யொழிந்தவர்கள்‌ ரக்ஷகரல்லர்‌ என்னுமிடம்‌ பிரபந்ந பரித்ராணத்திலே சொன்னோம்‌ .

இயற்கையான உறவாய்‌, எல்லாக் காலத்திலும்‌ நம்மைக்‌ கை விடாதே ரக்ஷித்துக்‌ கொண்டு வரும்‌ எம்பெருமானை யொழிந்தவர்களான தோன்றி மறையக் கூடிய ஆபாஸ பந்துக்களான தாய்‌ தந்‌தை முதலானவர்களும்‌, இடையில்‌ தோன்றி மறையக்‌ கூடிய மற்றத் தெய்வங்களும்‌ நம்மை காப்பவர்கள்‌ அல்லரென்னுமிடம்‌ பல காரணங்களைக் காட்டி ‘ப்ரபன்ன பரித்ராணம்‌” என்கிற நூலிலே சொன்னோம்‌; அந்த நூலிலே இவற்றை கண்டு கொள்ளலாம்‌ என்கிறார்‌.-

பிறகு அர்த்த பலத்தாலே இப் பதத்தில்‌ சொல்லப்படும்‌ ஸ்ரீய: பதித்வத்தை (திருமகள்‌ கேள்வனென்‌பதை) அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை –40–ரக்ஷிக்கும்‌ போது பிராட்டி ஸந்நிதி அநுஸந்தேயம்‌ .

“லக்ஷ்ம்யா ஸஹ ஹ்ருஷீகேசோ தேவ்யா காருண்ய ரூபயா, ரக்ஷகஸ்‌ ஸர்வ ஸிந்தாந்தே வேதாந்தேபிச கீயதே”
காருண்ய ரூபயா
– காருண்யத்தை-அதற்கு ஏற்ற விஷயத்திலே சேர்த்து அந்தக்‌ காருண்யத்தை வடிவுடைய தாக்குமவளான-
லக்ஷ்ம்யாதேவ்யாணஹ – லக்ஷ்மி தேவியோடு கூட,
ஹ்ருஷீகேச : விஷ்ணு வானவர்‌,
ரக்ஷக : – காப்பாற்றுவரான,
ஸர்வ ஸித்தாந்தே – ஸ்ரீ பாஞ்சராத்ரத்தில்‌ உள்ளனவான மந்த்ர ஸித்தாந்தமென்ன, ஆகம ஸித்தாந்த மென்ன, தந்த்ர ஸித்தாந்தமென்ன, தந்த்ராந்தர ஸித்தாந்தமென்ன ஆகிய-எல்லா ஸித்தாந்தங்களிலும்‌.
வேதாந்தே அபிச – புருஷ ஸூக்தம்‌ முதலிய உபநிஷத்துக்களிலும்‌, ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்களிலும்‌,
கீயதே –சொல்லப்படுகிறான்‌.
என்கிறபடியே ரக்ஷ்கனான இறைவன்‌ ஆத்மாக்‌களை ரக்ஷிக்கும்‌ நிலையில்‌, இவர்களுடைய குற்றங்களைக்‌ கண்டாதல்‌ தன்‌ சுதந்திரத்தாலே யாதல்‌, அநாதரித்துக்‌ கை விடாமல்‌ காப்பதற்குறுப்பான இரக்கத்தைப்‌ பிறப்பிக்கும்‌ (புருஷகாரம்‌) சிபாரிசு செய்கிறவளான பிராட்டி சேர்ந்திருப்பது மிக மிக முக்யமாகையாலே காப்பாளனாம்‌ அவனைச்‌ சொல்லுகிற இவ் வகாரத்தில்‌ அவனுடைய தேவியான லக்ஷ்மீ ஸம்பந்தமும்‌ சொல்ல வேண்டுமென்கை. -‘லக்ஷ்மீ’ என்னாதே ஸ்ரீ என்றது (ஸ்ரேயதி இதிஸ்ரீ🙂 என்கிறபடியே, அவனை நித்ய ஸேவை செய்கையாலே அவனோடு இவளுக்குண்டான பிரிவின்மையும்‌, (ஸ்ரீயத இதி ஸ்ரீ) என்கிறபடியே சேதநர்களால்‌ இவள்‌ என்றும்‌ ஸேவிக்கப்‌ பெறுமவளாகையாலே ஸ்ரீ என்று சொல்லப்பட்ட தென்கை.

இன்னமும்‌ இவ் வகாரத்திலே இறைவனுடைய லக்ஷ்மீ ஸம்பந்தம்‌ நியமேன தோற்றும்‌ என்னுமத்தை மெய்மைமை கூறுவார்‌ கூற்றாலே காண்பிக்கிறார்‌.
ஸூர்ணை -41-அத்ர பகவத் ஸேநாபதி மிச்ரர்‌ வாக்‌யம்‌ :- அவன்‌ மார்பு விட்டுப்‌ பிரியில்‌ இவ் வக்ஷரம்‌ விட்டுப் பிரிவது

இவ் விடத்தில்‌ அறிவில்‌ முதிர்ந்தவரான ஸ்ரீஸேநாபதி ஜீயர்‌ அருளிச்‌ செய்யும்‌ வார்த்தை. “அகலகில்லேனிறையும்‌’ என்று அவன்‌ திருமார்‌பிலே நித்ய வாஸம்‌ செய்யுமிவள்‌, அவன்‌ மார்பை விட்டுப்‌ பிரியும் போது அவனுக்குப்‌ பெயரான இந்த (அக்ஷரம்‌) எழுத்தை விட்டுப்‌ பிரிவது” என்று என்கை. “என்று என்கிற இத்தனையும்‌ கூட்டாத போது கீழோட இவ் வாக்கியம்‌ பொருந்தாது-
இத்தால்‌, அவன்‌ திருமார்பில்‌ ஸம்பந்தம்‌ இவளுக்கு நித்தியமாகையாலே அவன்‌ தோற்றுமிடமெல்லாம்‌ இவளும்‌ தோற்றுகை நிச்சயமாகையாலே அவன்‌ திருமார்பில்‌ தொடர்போடு அவனுக்குப்‌ பெயரான அ காரத்தில்‌ தொடர்பும்‌ நித்தியம்‌ என்றதாயிற்று.

இன்னமும்‌ எம்பெருமான்‌ தோற்றுமிடத்தில்‌ லக்ஷ்மியும்‌ தோற்றுவா ளென்‌பதை நிலை நிறுத்துகைக்காக பரமாத்மா ஆத்மாக்களின்‌ பெயர்களான அகார
மகாரங்களிரண்டிலும்‌ இவளுக்குண்டான, என்றும்‌ உள்ளதான தொடர்பை உபமான முகத்தாலே காட்டுகிறார்‌.
ஸூர்ணை -42 -பர்த்தாவினுடைய படுக்கையையும்‌ ப்ரஜையினுடைய தொட்டிலையும்‌ விடாதே யிருக்கும்‌ மாதாவைப் போலே ப்ரதம சரம பதங்களை விடாதே இருக்கும்‌ இருப்பு –

பர்த்தாவுக்கு அடிமையான தன்‌ தன்மைக்குச்‌ சேரும்படி அவனை உகப்பிக்கைக்காக பர்த்தாவினுடைய படுக்கையை விடாதே, காக்கும்‌ தன்மைக்குச்‌ சேரும்படி காப்பதற்காக ப்ரஜையினுடைய தொட்டிலையும்‌ விடாதே இருக்கும்‌ மாதாவானவளைப்‌ போலே, இந்தப்‌ பிராட்டியும்‌, கேள்வனான எம்பெருமானுக்குப்‌ பெயரான முதல்‌ பதமான அகாரத்தையும்‌, மக்களாந் தன்மையரான ஆத்மாக்களின்‌ பெயரான ப்ரணவத்தில்‌ ஈற்றுப்‌ பதமான மகாரத்தையும்‌ அந்த அந்த விஷயத்தில்‌ தனக்குண்டான தொடர்புகளுக்கேற்ப, உகப்பிக்கை ரஷிக்கையாகிற இவற்றை முன்னிட்டு, விடாதே இருக்கும்‌ இருப்பு என்கை.

முன் பொது உபமாநத்தாலே சொன்‌னதை ஒரு சிறப்பு உபமாநத்தாலே சொல்லுகிறார்‌.

ஸூர்ணை -43- ஸ்ரீநந்தகோபரையும்‌ க்ருஷ்ணணையும்‌ விடாத யசோதைப்‌ பிராட்டியைப்‌ போலே .
பார்யையான தன்‌ இயல்புக்‌கேற்ப உகப்பிக்கைக்காக பர்த்தாவான ஸ்ரீ நந்தகோபரையும்‌ விடாதே, மாதாவான தன்னியல்புக் கேற்ப காப்பதற்காக புத்ரனான கண்ணனையும்‌ விடாதே “அம்பரமே” என்கிற பாட்டிற்‌ சொல்லுகிறபடியே இடையே நிற்கும்‌
யசோதைப்‌ பிராட்டியைப்‌ போலே ப்ரணவம்‌ முதல்‌ பத ஈற்றுப்‌ பதங்களின்‌ பொருள்களான பரமாத்மா ஆத்மாக்க ளிருவரையும்‌ விடாதே இவளும்‌ பொருந்தி இருக்கும்‌ என்பதாம்‌.

ஈஸ்வர சேஷத்வமென்பதன்றி பிராட்டிக்கும்‌ அடிமை என்னுமிடம்‌ இந்த அகாரத்தில்‌ சப்தத்தால்‌ சொல்லா திருக்கச்‌ செய்தேயும்‌ இவளுக்கும்‌ அடிமை யென்று நாம்‌ கொள்ளுகிற படி எங்ஙனே என்ன?அருளிச்‌ செய்கிறார்‌.

ஸூர்ணை -44- ஒருவனடிமை கொள்ளும்‌ போது கீருஹிணிக் கென்றன்றே ஆவண வோலை எழுதுவது; ஆகிலும்‌, பணி செய்வது க்ருஹிணிக்கிறே அது போலே
நாம்‌ பிராட்டிக்கு அடிமையா யிருக்கும்படி .

உலகில்‌ ஒருவன்‌ தாஸ தாஸிகள்‌ முதலான ஓரடிமையைக்‌ கொள்ளும் போது தனக்கென்றே எழுதிக்‌ கொள்ளுமதொழிய தன்‌ மனைவிக் கென்றல்ல விலை யோலை எழுதுவது; ஆயிருக்கச்‌ செய்தேயும்‌ அடிமைத்‌ தொழில்‌ செய்வது மனைவிக்கும் தான்‌: அது போலே இந்த அகாரம்‌ எம்பெருமானுக்கடிமை என்னுமளவைச்‌ சொல்லிற்‌றாகிலும்‌ நாம்‌ பிராட்டிக்கும்‌ அடிமையா யிருக்கும்படி என்கை.

கீழ்ச்‌ சொன்ன காரணங்களை எல்லாம்‌ (அநுவதித்து) திரும்பச் சொல்லி இறைவனுக்கும்‌ இறைவிக்கும்‌ ஒருக் காலும்‌ பிரிவின்மையை அருளிச்‌செய்கிறார்‌.

ஸூர்ணை -45 – ஆகவே பிரித்‌து நிலையில்லை
இந்தப்‌ பிரிவின்மைக்கு இரண்டு உதாஹரணம்‌ காட்டுகிறார்‌.

ஸூர்ணை -46-ப்ரபையையும்‌, ப்ரபாவானையும்‌, புஷ்பத்தையும்‌ மணத்தையும்‌ போலே.

ஒளிக்கும்‌ ஒளியை யுடையையாய் இருக்கும்‌ ஸூர்யனுக்கும் பிரிவென்பதில்லாதாப் போலேவும்‌, மலருக்கும்‌ மணத்துக்கும்‌ பிரிவென்பதில்லாதாப்‌ போலவும்‌ “அநந்யா ராகவேணாஹம்‌ பாஸ்கரேண ப்ரபாயதா” (சூரியனை விட்டுப்‌ பிரியாத ஒளி போல்‌ நான்‌, ஸ்ரீராமனை .விட்டு பிரிவின்றியே இருப்பவள்‌) என்று ஸீதையும்‌, “அநந்யா ஹி மயா ஸீதா பாஸ்கரேண ப்ரபா யதா” ஸூரியனோடு ஒளியைப்‌ போல்‌ சீதையானவள்‌ என்னோடு சேர்ந்தே இருப்பவளன்றோ என்று சீதையும்‌ ராகவனும்‌ சொன்னார்கள்‌. இப்படி இருவர்‌ வாக்காலும்‌ சொன்னதால்‌ பிரிவு என்பது எப்போதுமில்லை. “ப்ரஸ-தெம்‌ புஷ்யந்தீமபி பரிமளர்த்திம்‌ ஜிகதிஷ-:” (மலரை மேன்மை யுறச்‌ செய்யும்‌ மணத்துக்கு மேன்மைத்‌ தன்மை இயல்பு.-இது போல்‌ இயல்பில்‌ மங்களமான நீ பெருமானைச்‌ சேர்ந்து மங்கள கரனாக்குகிறாய்‌ என்று பட்டரும்‌ அருளிச் செய்தபடி-கதிரவனும்‌ கதிரும்‌ போன்றும்‌ மலரும்‌ மணமும்‌ போன்றும்‌ பெருமானும்‌ பிராட்டியும்‌ பிரிவின்றியே இருப்பர்‌ என்பதாம்‌.

இந்தப்‌ பிரிவின்மையை அநுவதித்துக்‌ கொண்டு இந்தச் சேர்த்தியே சேதநர்களுக்குப்‌ பற்றுவதற்கு உத்தேச்யமாய்த் தலைக்‌ கட்டின படியை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -47- ஆக, இச் சேர்த்தி உத்தேச்யமாய்‌ விட்டது.

இந்தச்‌ சேர்த்தியே பற்றுகைக்குத்‌ தகுதியாய் விட்ட படியால்‌, இவற்றுக்கு முரணாக தனித் தனியே விரும்புகை தகுதி அன்றென்றபடி. இருவரையும்‌ பிரித்து விரும்பினால்‌ ராவண சூர்ப்பணகைகளுக்குப்‌ போலே அழிவே உண்டாகும்‌. இருவரையும்‌ பற்றினால் தான்‌ ஸ்ரீவிபீஷணாழ்வான்‌ போல்‌ வாழலாவது என்பதாம்‌.

இனி மேல்‌, இதில்‌ வேற்றுமை உருபின்‌ பொருளைச்‌ சொல்வதாக நான்காம்‌ வேற்றுமையை எடுத்துக்‌ கூறுகிறார்‌.
ஸூர்ணை -48 – இதிலே சதுர்த்தி ஏறிக் கழியும்‌.

இவ்வகாரத்திலே நான்காம்‌ வேற்றுமைப்‌ பொருளில் தோற்றிச்‌ சொல்லில்‌ தோற்றாது வேற்றுமைத்‌ தொகையாக மறையும்‌.

எட்டு வேற்றுமைகளில்‌ மற்ற வேற்றுமைகளெல்லாம்‌ இருக்க நான்காம்‌ வேற்றுமை தோற்றுவான்‌ என்‌? என்று ஆஷேபிக்கிறார்‌.
ஸூர்ணை -49 -சதுர்த்தி ஏறினபடி என்‌? என்னில்‌:
அதற்கு விடை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -50 – நாராயண பதத்துக்கு ஸங்க்ரஹமாயிருக்கையாலே.
இந்த அகாரம்‌, நான்காம்‌ வேற்றுமையை ஈற்றிலே உடைய நாராயண பதத்துக்குச்‌ சுருக்கமா யிருக்கையாலே இதிலும்‌, (அகாரத்திலும்‌) நான்காம்‌ வேற்றுமை ஏறிற்றென்கை. இப்படி அன்றாகில்‌ இரண்டுக்கும்‌ சுருக்கம்‌ விரிவு என்கிற தன்மை குலையும்‌.

இந்த நான்காம்‌ வேற்றுமையால்‌ சொல்‌லுகிற பொருள் தான்‌ எது என்ன? அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -51- இத்தால்‌, ஈஸ்வரனுக்கு சேஷமென்‌கிறது.
இது தான்‌ “தாதர்த்த்யே சதூர்த்தி” (இது நான்காம்‌ வேற்றுமையின்‌ பொருட்டுப்‌ பொருளதாம்‌) என்கையாலே, இந்த நான்காம்‌ வேற்றுமையால்‌ நாராயணனுக்கு அடிமை’ என்று சொல்லுகிற தென்கை.

ஸர்வம்‌ பர வசம்‌ து:க்கம்‌‘(பிறர்க் கடிமையா யிருத்தல்‌ துன்பங்களனைத்தும்‌ நேரும்‌)”, ஸேவா ச்வவ்ருத்தி:‘ (அடிமை நாய்த்‌தொழில்‌) என்கிற உலக வழக்கைக்‌ கொண்டு அடிமை துன்பமென்று நினைப்பவர்‌ செய்யும்‌ வினாவை அநுவதிக்கிறார்‌.
ஸூர்ணை -52 – ‘சேஷத்வம்‌ து:க்க ரூபமாக வன்றோ நாட்‌டில்‌ காண்கிறது” என்னில்‌:
அடிமைத்‌ தன்மை துன்ப மயமா யன்றோ நாட்டில்‌ காண்கிறது என்றால்‌, இதற்கு விடை சொல்கிறார்‌.
ஸூர்ணை -53- அந்த நியமமில்லை; உகந்த விஷயத்துக்குச்‌ சேஷமாயிருக்கும்‌ இருப்பு ஸுகமாகக்‌ காண்கையாலே
நாட்டில்‌ “பணிமின்‌ திருவருள்‌” என்று பரியப்‌ பெறுமவளாம்‌ மனைவிக்கு அந்தரங்கத்தில்‌ அடிமை யாயிருக்கும்‌ இருப்பு இன்பமாகக்‌ காண்கையாலே, அடிமை என்றால்‌ துன்ப மயம்‌ என்கிற நியமமில்லை.
“மனைவி விஷயத்தில்‌ அடிமை இன்பமாகிறது அவளிடத்துள்ள குணங்களடியாக வந்ததன்றோ” என்ன, அதற்கு விடை சொல்கிறார்‌.
ஸூர்ணை -54 -அகாரத்திலே கல்யாண குணங்‌களைச்‌ சொல்லுகையாலே, இந்த சேஷத்வமும்‌ குணத்தாலே வந்தது –
ஈஸ்வரனுடைய காக்கும்‌ தன்மையைச் சொல்‌லுகிற அகாரத்திலே காப்பதற்கு உபயோகப்படும்‌ கல்யாண குணங்களைச்‌ சொல்லுகையாலே. நாராயணன்‌ விஷயமான இந்த அடிமைத்‌ தன்மையும்‌ அந்த குணம்‌ காரணமாக வந்ததென்கை. ஆகையால்‌, இதுவும்‌ இன்பமயமா யிருக்கக்‌ குறையில்லை என்று கருத்து.

ஆனால்‌, செயற்கையாக குணங் காரணமாக வந்த இந்த அடிமை இயற்கையான தன்னியல்புக்குப்‌ பொருந்திய தல்லவே என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -59- சேஷத்வமே ஆத்மாவுக்கு ஸ்வரூபம்‌.
உகந்த விஷயத்தில்‌ இதன்‌ இன்ப மயமாகைக்குக்‌ குணங்களடியாகக்‌ காரணத்தைச்‌ சொல்‌லுகையாலே, குணங்களடியாக வருகை இங்கும்‌ உண்டென்னுமிடத்துக்குச்‌ சொன்னது தவிர, அர்த்த ஸ்திதியை நிரூபிக்கும் போது, “ஸ்வத்வமாத்மநி ஸஞ்ஜாதம்‌
ஸ்வாமித்வம்‌ ப்ரஹ்மணி ஸ்திதம்‌”.
ஸ்வத்வம்‌ –
சொத்தாயிருக்கும்‌ தன்மை. ஆத்மநி – ஆத்மாவினிடத்தில்‌,
ஸஞ்ஜாதம்‌ – உண்டாயிருக்கிறது.
ஸ்வாமித்வம்‌ – யஜமாநத்வம்‌. ப்ரஹ்மணிஸ்திதம்‌ – ப்ரஹ்மத்தினிடத்தில்‌ நிலைத்திருக்கிறது.
ஆத்ம தாஸ்யம்‌ ஹரே ஸ்வாம்யம்‌ ஸ்வபாவஞ்ச ஸதா ஸ்மர”
ஆத்மதாஸ்யம்‌ –
ஆத்மாவினிடத்தில்‌ அடிமைத்‌ தன்மையும்‌,
ஹரேஸ்வாம்யம்ச – ஹரியினிடத்தில்‌ ஸ்வாமியாயிருக்குந்‌ தன்மையுமே,
ஸ்வபாவம்‌ – இயல்பாகவே உள்ளன என்று, ஸதா ஸ்மர – எப்போதும்‌ நினைவிற்‌ கொள்‌.
தாஸ பூதாஸ்‌ ஸ்வதஸ் ஸர்வே ஹ்யாத்மாந: பரமாத்மந : நாந்யதா லக்ஷணம்‌ தேஷாம்‌ பந்தே மோக்ஷே ததைவச”
பரமாத்மந :
– பரமாத்மாவுக்கு,
ஸர்வே ஆத்மாந : – எல்லா ஆத்மாக்களும்‌, ஸ்வத : – இயல்பான ஸ்வரூபத்தாலேயே, தாஸ பூதா : – தாஸ பூதர்களாய்‌ நிலை பெற்றவர்கள்‌,
ஹி – அன்றோ,
தேஷாம்‌ – அவர்களுக்கு,
பந்தே – பந்த நிலையிலும்‌,
மோக்ஷே – மோக்ஷ நிலையிலும்‌,
அந்யதா – வேறான ஸ்வதந்திரத் தன்மை, லக்ஷணம்‌ ந – தனக்கே உரித்‌தான லக்ஷணமன்‌று.
இவை முதலானவைகளிலே (சேஷத்வத்தை) பகவானுக்கடிமையை ஆத்மாவுக்கு (ஸ்வாபாவிகமாக) இயல்பாகச்‌ சொல்லுகையாலே (சேஷத்வமே) அடிமையே ஆத்மாவுக்கு
ஸ்வரூப மென்கை.

சேஷத்வமே என்‌ று தேற்றேவகாரத்தால்‌ சொல்லுவானென்‌ -ஜ்ஞாநம்‌, ஆநந்தம்‌ இவைகளை ஸ்வரூபமாக உள்ள ஆத்மாவுக்கு அடிமை அல்லாத போதும்‌ ஸ்வரூபம்‌ இல்லையோ? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -56 – சேஷத்வமில்லாத போது ஸ்வரூபமில்லை.
(சேஷத்வமில்லாதபோது ) பகவானுக்கு அடிமை யில்லாத போது ஆத்மாவை அபஹரிப்பதான ஸ்வாதந்த்ரிய புத்தி நடக்கையாலே, ஸ்வரூபம்‌- ஆத்மாவின்‌
இயல்பு அழிந்து விடும்‌ என்னுமத்தைச்‌ சொல்லுகிறார்‌ -மேலிரண்டு வாக்யத்தாலே.

ஸூர்ணை – 57- ஆத்மாபஹாரமாவது – ஸ்வதந்த்‌ரமென்கிற நினைவு; ஸ்வதந்த்ரமாம் போது இல்லையாய்‌ விடும்‌
“யோந்யதாஸந்தமாத்மாநம்‌ அந்யதா ப்ரதிபத்யதே, கிம்தேத ந க்ருதம்‌ பாபம்‌ சோரேணாத்மாப ஹாரிணா”
ய: –
எவன்‌,
அந்யதாஸந்தம்‌ – வேறு வகையாயிருக்கிற(பகவச்‌ சேஷமாயிருக்கிற),
ஆத்மாநம்‌ – ஆத்ம வஸ்துவை,
அந்யதா – ஸ்வதந்த்ரமாக,
ப்ரதிபத்யதே – நினைக்கிறானோ,
ஆத்மாபஹாரிணா – ஆத்மாவை அபஹரித்தவனான,
தேந சோரேண – அந்தத்‌ திருடனால்‌,
கிம் பாபம்‌ – எந்தப்‌ பாபம்‌,
ந க்ருதம்‌ – செய்யப்படவில்லை. அதாவது, ஆத்மாபஹாரஞ்‌ செய்தவன்‌ எல்லாப்‌ பாபங்களும்‌ செய்தவனாகிறான்‌ என்றபடி.

ஆக, அகாரத்தின்‌ இயல்பாலே சொல்லப்பட்ட பொருளான ஈஸ்வரனுடைய காரணத்வமும்‌, வினைப்‌ பகுதி அர்த்தமான ரக்ஷகத்வமும்‌, அர்த்த பலத்தால்‌ வந்த திருமகள்‌ கேள்வனாந் தன்மையும்‌, வேற்றுமை யுருபால்‌ கிடைத்த சேதநனுடைய சேஷத்வ எதிர்த் தலையான சேஷித்வமும்‌ ஆகிற அகாரார்த்தத்தை அருளிச்‌ செய்தாராயிற்று.

பிறகு, ப்ரணவத்திலிருக்கும்‌ மூன்றெழுத்துக்களில்‌ நடுவெழுத்தான உகாரத்துக்கு அர்த்தம்‌ அருளிச்‌ செய்வதாக ஆரம்பிக்கிறார்‌.
ஸூர்ணை -58- ஸ்தாந ப்ரமாணத்தாலே உகாரம்‌ அவதாரணார்த்தம்‌ –
ததேவபூதம்‌ ததுபவ்யமா இதம்‌”
பூதம்‌
– கழிந்த காலத்துப்‌ பொருளும்‌, ததேவ – அந்த ப்ரஹ்மமே,
பவ்யமாயிதம்‌ – எதிர்கலப்‌ பொருளாக இருப்பதும்‌ (நினைப்பதும்‌,)
தது – அந்த ப்ரஹ்மமே.
“ததேவாக்நிஸ்‌ தத்‌ வாயுஸ்‌ தத்‌ ஸுிர்யஸ்தது சந்த்ரமா:”
அக்நி :
– அக்நியும்‌,
ததேவ – அந்த ப்ரஹ்மமே,
வாயு : – காற்றும்‌,
ததேவ – அந்த ப்ரஹ்மமே,
ஸூர்ய :- சூர்யனும்‌,
ததேவ – அந்த ப்ரஹ்மமே,
சந்த்ரமா :- சந்திரனும்‌,
தது – அந்த ப்ரஹ்மமே.
இவைகளில்‌, கழிந்த காலப்‌ பொருளைக்‌ காட்டும் போது, ‘ததேவ’ அந்த ப்ரஹ்மமே என்றும்‌, எதிர்காலப்‌ பொருளைக்‌ காட்டும்‌ போது, ‘தது-ததேவ’ என்று முன்‌ சொன்ன ஏவகாரமே தது என்று உகாரமாக மாறி வந்துள்ளதும்‌,
அக்நியும்‌, ததேவ – அந்த ப்ரஹ்மமே என்றும்‌, வாயுவும்‌, ததேவ – அந்த ப்ரஹ்மமே என்றும்‌, ஸுர்யனும்‌, ததேவ – அந்த ப்ரஹ்மமே என்றும்‌ சொல்லி சந்திரனும்‌ அந்த ப்ரஹ்மமே என்றும்‌ சொன்ன இடத்தில்‌, ‘தது’ என்று உகாரமாக மாறி வந்ததுங்‌ காண்க.
இவை . முதலான இடங்களிலே ஏவகாரத்தை உபயோகிக்குமிடத்தில்‌ உகாரத்தை உபயோகிக்கக்‌ காண்கையாலே, ஸ்தாந ப்ரமாணத்தாலே உகாரம்‌ ஏவகாரார்த்தத்தை
உடைத்தாயிருக்குமென்கை.

ஸ்தான ப்ரமாணமாவது !- ஒரு பதம்‌ இருக்க வேண்டிய இடத்தில்‌ ஒரே பொருளைத் தருகிற வேறே ஒரு பதம்‌ உபயோகித்தால்‌ முன்னிருந்த பதத்தின்‌ பொருளே அந்த பதத்துக்கும்‌ ஆகி வருவது. ஏவகாரம்‌ இருக்க வேண்டியிடத்தில்‌ உகாரம்‌ இருத்தலால்‌, உகாரத்துக்கு ஏவகாரத்தின்‌ பொருளைக்‌ கொள்ள வேண்டிய தென்கை.,

அவதாரணத்துக்கு (பிரிநிலை ஏவகார த்திற்கு) அர்த்தம்‌ அவயோக வ்யவச்சேதமாதல்‌, -அந்யயோக வ்யவச்சேதமாதல்‌ ஆகையாலே, இவ்வதாரணத்தால்‌ சொல்கிறது எது? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.

ஸூர்ணை -59 – இத்தால் , பிறர்க்கு சேஷம்‌ அன்று என்கிறது .

ஏவகாரமான இந்த உகாரத்தால்‌ கீழ்‌ ஈஸ்வர சேஷமாகச்‌ சொன்ன இந்த ஆத்மாவானது,
பிறர்க்கு சேஷம்‌ அன்று என்னுமிடத்தைச்‌ சொல்லுகிறது என்கை. -நான்காம்‌ வேற்றுமையால்‌ எம்பெருமானுக்கு அடிமை என்று சொல்லி யிருக்கப்‌ பிறர்க்கு அடிமை என்பது உண்டாகுமோ? என்னில்‌, உலகிலே ஒருவனுக்கு அடிமையான வீடு, நிலம்‌, பிள்ளை, வேலைக்காரி, வேலைக்காரர்‌ இவைகள்‌ பிறர்க்கும்‌ அடிமையாகக்‌ காண்கையாலே அத்ததைய பிறர்க்கு அடிமை இந்த இடத்திலும்‌ உண்டோ? என்று ஒரு ஐயம்‌ உண்டாகுமன்றோ? ஆகையாலே அத்தகைய பிறர்க்கு அடிமை இங்கு இல்லை என்பதைச்‌ சொல்லுகிறது உகாரம்‌.

அங்ஙனன்றிக்கே அந்த உகாரத்தால்‌ பிராட்டிக்கு அடிமை என்று சொல்லுகிறது என்பாரும்‌ உண்டென்கிறார்‌.
ஸூர்ணை –60- பெரிய பிராட்டியாருக்கு சேஷமென்‌கிற தென்றுஞ்‌ சொல்லுவார்கள்‌ .
” அகாரச் சித் ஸ்‌வரூபஸ்ய விஷ்ணோர்‌ வாசக இஷ்யதே,
உகாரச் சித் ஸ்வரூபாயா; ஸ்ரீயோ வாசீ ததா விது:
மகாரஸ்து தயோர்‌ தாஸ இதி ப்ரணவ லக்ஷணம்‌”
“அகாரேணோச்யதே விஷ்ணுஸ்‌ ஸர்வ லோகேஸ்வரோ-
ஹரி: உத்த்ருதா விஷ்ணு நா லக்ஷீமீ : உகாரேணோச்‌-
யதே ஸதா மகாரஸ்து தயோர் விப்ர ஸ்ரீநாராயணயோஸ் ஸதா ஆத்மநஸ் சேஷ பூதஸ்ய வாசக: ஸ்ருதி சோதித:”
அகார:-
அகாரமானது,
சித் ஸ்வரூபஸ்யா – ஜ்ஞாந ஸ்வரூபனான, விஷ்ணோர் வாசக: – விஷ்ணுவுக்குப்‌ பெயராக,
இஷ்யதே – இச்சிக்கப்‌ படா நின்றது,
ததா – அப்படியே,
உகார: – உகாரமானது,
சித் ஸ்வரூபாயா – ஜ்ஞாந ஸ்வரூபையான, ஸ்ரய : வாசீ – ஸ்ரீதேவிக்குப்‌ பெயராக,
விது – அறிகிறார்கள்‌,
மகாரஸ்து – மகாரமோவென்றால்‌,
தயோ : தாஸ : – அவ்விருவருக்கும்‌ தாஸ பூதனான, ஆத்மாவாகச்‌ சொல்லப் படுகிறது,
இதி ப்ரணவ லக்ஷணம்‌ – இது ப்ரணவ லக்ஷணம்‌,
விப்ர – ப்ராஹ்மணனே!
ஸர்வ லோகேஸ்வர: – அனைத்துலகங்களுக்கும்‌ இறைவனாம்‌, விஷ்ணு :– ஸர்வ வ்யாபகனும்‌ ஆன,
ஹரி :- ஹரியானவன்‌,
அகாரேண உச்யதே – அகாரத்தாலே சொல்லப்படாநின்றான்‌,
விஷ்ணுநா – அந்த விஷ்ணுவாலே,
உத்த்ருதா – எப்போதும்‌ திருமார்‌பிலே தரிக்கப்படுகிற,
லக்ஷ்மீ – லக்ஷ்மியானவள்‌,
ஸதா உகாரேண உச்யதே – எப்பொழுதும்‌ உகாரத்தாலே சொல்லப்படா நின்றாள்‌, மகாரஸ்து – மகாரமோ வென்றால்‌,
தயோ ஸ்ரீநாராயணயோ :- அந்த ஸ்ரீ நாராயணர்களாகிய இவர்களிருவர்க்கும்‌, ஸதா சேஷபூதஸ்ய ஆத்மாந :- எப்போதும்‌ சேஷ பூதனான ஆத்மாவுக்கு,
வாசக.“ பெயராக,
ஸ்ருதி சோதித . : வேதங்களால்‌ சொல்லப் பட்டிருக்கிறது -என்றும்‌, இவை முதலான பகவச்‌ சாஸ்திரங்களிலே அகாரத்தைப்‌ பெருமானுக்குப்‌ பெயராகவும்‌, உகாரத்தைப்‌ பிராட்டிக்குப்‌ பெயராகவும்‌, மகாரத்தை’ இவ்விருவர்க்கும்‌ அடியானான ஜீவனுக்குப்‌ பெயராகச்‌ சொல்லுகையாலே, உகாரத்தை ஏவகாரமாகக்‌ கொள்ளாதே பிராட்டி பெயராகக்‌ கொண்டு, இவ் வுகாரத்தாலே பெரிய பிராட்டியார்க்கு அடிமை என்கிற தென்றும்‌ நிர்வஹிப்பார்களென்கை.

இப்படிச்‌ சொல்வதை விட முன்‌ சொன்ன பொருளே முக்கியமென்றருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -61 – அதிலும்‌, அந்ய சேஷத்வங் கழிகையே ப்ரதாநம்‌ –
பெரிய பிராட்டியார்க்கு அடிமை என்கிறதை விட கீழ்ச்‌ சொன்ன பகவானுக்கு அடிமை என்பதற்கு விரோதியான பிறர்க்கடிமை என்பது கழிகையே முக்கியமாகக்‌ கொள்ளக்‌ கடவது என்கிறார்‌.

பிறர்க்கடிமை என்பது இப்படி கொடியதோ? என்ன, அதன்‌ கொடுமையை உதாரண முகத்தாலே காட்டுகிறார்‌.
ஸூர்ணை -62- தேவர்களுக்கு சேஷமான புரோடாசத்தை நாய்க்கிடுமா போலே, ஈஸ்வர சேஷமான ஆத்ம வஸ்துவை ஸம்ஸாரிகளுக்கு சேஷமாக்குகை.
ஆராதிக்கப்படுகிற இந்திரன்‌ முதலான தேவர்களுக்குச்‌ சுவை மிக்கதாக கல்பிக்கப் பெற்ற ஹவிர்‌ பாகத்தைக்‌ காணவும்‌, தொடவும்‌ தகுதியற்ற. தாழ்மையை உடைத்தான நாய்க்கு இடுமா போலே இருப்பதோன்று, தகுந்த எஜமானான பகவானுக்கு அடிமையான ஆத்மாவை பகவானில்‌ மிக மிகத்‌ தாழ்ந்தவர்களான ஸம்ஸாரிகளுக்கு அடிமையாக்குகை என்கை. இங்கு, ஸம்ஸாரி என்பது-தேவர்கள்‌ முதலானவர்‌களைக் குறிக்கும்‌.

இப்படிக்‌ கொடியதான பிறர்க்கடிமை என்பது கழிகையே முக்கியமான கொள்கை என்று கீழ்ச்‌ சொன்ன அர்த்தத்தை திடப்படுத்துகிறார்‌.
ஸூர்ணை -3- பகவச்‌ சேஷத்வத்திலும்‌ அந்ய சேஷத்வம்‌ கழிகையே ப்ரதாநம்‌ .

பிராட்டிக்‌ கடிமை என்பதிலுங்‌காட்டில்‌ பிறர்க்கடிமை என்பது கழிகையே ப்ரதாநம்‌ என்பது மட்டுமல்ல, பகவானுக்கு அடிமையா யிருக்கும்‌ அதிலுங்‌காட்டில்‌ பிறர்க்கடிமை என்பது கழிகையே ஆத்மாவுக்கு முக்கியக்‌ கொள்கையாகும்‌ என்கை.

இதற்கு ப்ரமாணங்‌ காட்டுகிறார்‌.
ஸூர்ணை -64 – “மறந்தும்‌ புறம் தொழா மாந்தர்‌’ -என்கையாலே

யம கிங்கர ஸம்வாதத்தைத்‌ திருமழிசைப் பிரான்‌ அருளிச்‌ செய்த “திறம்பேன்மின்‌
கண்டீர்‌
” என்கிற பாட்டிலே பாகவத லக்ஷணஞ்‌ சொல்லுகிற அளவில்‌ “திருவடி தன் நாமம்‌ மறந்தும்‌ புறந்தொழா மாந்தர்‌” என்று ஸ்வாமியான வனுடைய திருநாமத்தை மறந்தார்களாகிலும்‌, மற்றொரு விஷயத்தில்‌ அடிமைத்‌ தொழில்‌ செய்யாதவர்கள்‌ என்று சொல்லுகையாலே என்கை.

பகவானுக்கு அடிமையான ஆத்மவஸ்து தனக்கும்‌ அடிமையா யிருக்கை, பகவான்‌ தவிர்த்த மற்றவர்களுக் கடிமையா யிருத்தல்‌ என்ற இரண்டும்‌ அந்ய சேஷத்வமாகையாலே இவ் விரண்டையும்‌ இந்த உகாரம்‌ கழிக்கிறதென்‌று சொல்லி முடிக்கிறார்‌.
ஸூர்ணை -65-இத்தால்‌, தனக்கும்‌ பிறர்க்கும்‌ உரித்தன்‌று என்கிறது .

அந்ய சேஷத்தைக்‌ கழிக்குமதான இந்த உகாரத்தால்‌, (அந்யரில்‌) பிறரில்‌ தானும்‌ ஒருவனாகையாலே தனக்கும் தான்‌ உரிமை என்பது கூடாது. -அது போல தன்னை யொழிந்த மற்றவர்களான மனிதருக்கும்‌ (மற்ற தெய்வங்களுக்கும்‌) உரிமை படுதல்‌ கூடாது என்பதை தெரிவிக்கிறது இந்த உகாரம்‌.
ஆக, உகாரார்த்தம்‌ அருளிச்‌ செய்தாராயிற்று.

பிறகு மூன்றாம்‌ எழுத்தாகிய மகாரார்த்தத்தை அருளிச்‌ செய்கிறார்‌-
ஸூர்ணை -66 – மகாரம்‌ இருபத்தைந்தாம்‌ அக்ஷரமாய்‌ (எழுத்தாய்‌), ஜ்ஞாந வாசியுமா யிருக்கையாலே ஆத்மாவைச்‌ சொல்லுகிறது
வடமொழிப்படி, ‘பூதாநிச கவர்க்கேண சவர்க்கே ணேந்த்ரியாணி ச டவர்கேண தவர்கேண ஜ்ஞாந கந்தாதயஸ் ததா மந :பகாரேணை வோக்தம்‌ பகாரேணத்வ ஹங்க்ருதி: பகாரேண பகாரேண மஹாந்‌ ப்ரக்ருதி ருச்யதே, ஆத்மாது ஸமகாரேண பஞ்சவிம்ச : ப்ரகீர்த்தித :”
கவர்க்கேண
– “KA, KKA, GA, GGA, ங ” என்ற பிரிவுகளுடைய கவர்க்கத்தாலே,
பூதாநிச – ‘ச, ச்ச, ஐ, ஜஜ, ஞ்‌ என்ற பிரிவுகளை யுடைய சவர்க்கத்தாலே, பூதங்களைந்தும்‌,
இந்த்ரியாணிச – வாக்கு, பாதம்‌, பாணி, பாயு, உபஸ்தம்‌ ஆகிய கர்மேந்த்ரியங்களைந்தும்‌,
டவர்கேண – ட, ட்ட, DA, 00, ண்‌ ஆகிய டவர்க்கத்தால்‌,
ஜ்ஞாந – .ஜ்ஞாநேந்திரியங்‌களைந்தும்‌,
தவர்கேண – “THA, TTHA, DHA, DDHA, ந” என்ற தவர்க்கத்தால்‌,
கந்தாதய :– ஓசை, ஊறு ஒளி, சுவை, மணம்‌ ஆகிய ஐந்து புலன்களும்‌.
பகாரேணே… ‘ப’ என்ற எழுத்தால்‌,
மந : – மநஸ்ஸாம்‌,
பகாரேண – ‘ப்ப’ என்ற எழுத்தால்‌, அஹங்க்ருதி – அஹங்காரமும்‌,
உக்தம்‌ – சொல்லப்படுகிறது,
பகாரேண – ப என்ற எழுத்தால்‌,
மஹாந்‌ – மஹத்தும்‌,
பகாரேண – BBA என்ற எழுத்தால்‌,
ப்ரக்ருதி – மூல ப்ரக்ருதியும்‌,
உச்யதே
-சொல்லப்படுகின்றன,
மகாரேண – “ம’ காரத்தால்‌,
ஆதீமாது – அந்த ஆத்மவோ,
பஞ்சவிம்ச : – இருபத்தைந்தாம்‌ அவனாக, பரகீர்த்தித : – சொல்லப்பட்டுள்ளான்‌.
என்கிறபடியே நிலம்‌ முதல்‌ மூல ப்ரக்ருதி ஈறாக இருபத்து நாலு தத்துவங்களுக்கும்‌ பெயராயிருந்துள்ள ககாரம்‌ முதல்‌ ‘ப” என்ற எழுத்தீறாக உள்ள இருபத்து நாலு
எழுத்துக்கள்‌ போலன்றிக்கே மகாரம்‌ இருபத்தைந்தாம்‌ அக்ஷரமாய்‌, மகாரம்‌’மந்யதே இதி மம்‌” என்றாவது “மநுதே இதி மம்‌” என்றாவது, மகாரத்துக்கு வ்யுத்பத்தி. ‘மநஜ்ஞாநே்‌ ‘மந’ என்ற வினைப் பகுதி, ஜ்ஞாநே -ஜ்ஞாநார்த்தத்தில்‌, அல்லது மநு அவபோதநே, மநு – என்ற வினைப் பகுதி-அவபோதநே. போதம்‌ என்ற ஜ்ஞாநார்த்தத்தில்‌ வரும்‌ என்கிற தாதுவாம்‌ வினைப்பகுதி காட்டப்பட்டிருப்பதால்‌
ஜ்ஞாநத்துக்குப்‌ பெயராயிருக்கையாலே, “பஞ்ச விம்சோயம்‌ புருஷ:” – அயம் புருஷ : ஆத்மாவாகிற இந்த புருஷன்‌, பஞ்சவிம்ச :- இருபத்தைந்தாம்‌ தத்‌துவமானவன்‌.
“பஞ்சவிம்சஆத்மாபவதி” ஆத்மா -ஆத்மாவானவன்‌,
பஞ்ச விம்ச : பவதி – இருபத்தைந்தாவது தத்‌துவமாகிறான்‌. இவை, இருபத்தைந்தாம்‌ தத்துவம்‌ ஆத்மா என்று காட்டுவதாம்‌.
” விஜ்ஞாநாத்மா புருஷ:”
புருஷ: – ஜீவன்‌,
விஜ்ஞாநாத்மா – ஜ்ஞாந ஸ்வரூபன்‌, இது ஆத்மா ஞான வடிவமானவன்‌ என்று காட்டும்‌.
“விஜ்ஞாதாரமரே கேந விஜாநீயாத்‌” அரே – ஓ, சிஷ்யனே,
விஜ்ஞாதாரம்‌ – குணமான, ஞாநத்தால்‌ அறியுந்‌தன்மையனான ஆத்மாவை,
கேந – எதனால்‌, விஜாநீயாத்‌ – அறியவாம்‌. (எம்பெருமானருளால்‌ இவனை அறியலாமென்‌பதனைக்‌ காட்டுமென்பர்‌). இதனால்‌ ஜீவன்‌ ஞாந குணகன்‌ என்றது. இவற்றால்‌, ஆத்மா இருபத்தைந்தாம்‌ தத்‌ துவமாயும்‌, ஞாந வடிவனாயும்‌, ஞானத்தைக்‌ கருவியாக உடைய ஞாந குணகனாயும்‌ இருப்பான்‌ என்பதாம்‌.

கீழ்ச்‌ சொன்ன அடிமைத்‌ தன்மை அனைத்து ஆத்மாக்களுக்கும்‌ பொதுவாகையாலே நித்ய, முக்த, பத்த என்கிற மூன்று வர்க்க ஆத்மாக்களையும்‌ சொல்ல வேண்டுகையாலே அதை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -67-இது தான்‌ ஸமஷ்டி வாசகம்‌ இப்படி ஆத்மாவின்‌ பெயரான இந்த மகாரந்தான்‌ ஆத்ம கணங்கள்‌ அனைத்துக்கும்‌ பெயராமென்கை. -அதாவது, ஆத்மாக்களின்‌ பன்மையைச்‌ சொல்லுகிறது.

ஆத்மா என்ற ஒருமைப்‌ பெயா்‌ பன்‌மைப்‌ பொருள்களைக்‌ காட்டுவ தெப்படி என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -68- ஜாத்யேக வசநம்‌ .
நெல் குவியலைச்‌ சொல்லுகிறவன்‌, “இது ஒரு நெல்‌’ என்றால்‌ அந்த ஒருமைச்‌ சொல்‌ இன முழுமையையும்‌ காட்டுமா போலே, ஒரு ஆத்மாவைச்‌ சொன்‌னால்‌ அந்த ஆத்ம ஜாதி அனைத்தும்‌ காட்டும்‌ ஒருமைச்‌ சொல்லாகும்‌ என்றபடி.

இந்த மகாரத்தால்‌ ஆத்மாவினுடைய எந்த நிலையைச்‌ சொல்லுகிறது? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -69- இத்தால்‌, ஆத்மா ஜ்ஞாதா என்று தேஹத்தில்‌ வ்யாவ்ருத்தி சொல்விற்றாயிற்று-
அதாவது இருபத்தைந்தாம்‌ எழுத்தாய்‌-ஞாநத்துக்குப்‌ பெயருமா யிருந்துள்ள இந்த மகாரத்தால்‌ அடிமைக்குரித்தான ஆத்மா ஞாநத்துக்கு ஆதாரமாயிருப்பவன்‌ என்று (அசேதநமான) அறிவில்லாத தேஹத்திற்‌ காட்டில்‌ ஆத்மாவின்‌ வேற்றுமையைச்‌ சொல்லிற்றாயிற்று என்கை.

நான்‌ மநுஷ்யன்‌, நான்‌ தேவன்‌, நான்‌ இளைத்திருக்கிறேன்‌, நான்‌ பருத்திருக்கிறேன்‌’ என்று உடம்பில்‌ ‘நான்‌’ என்ற புத்தி நடவா நிற்க, ‘நான்‌’ என்ற சொல்லுக்குப்‌ பொருளான ஆத்மா தேஹத்தில்‌ வேறுபட்டவன்‌ என்று சொல்வதெப்படி? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -70 -தேஹத்தில்‌ வ்யாவ்ருத்தி தத்வ சேகரத்திலே சொன்னோம்‌ .
அதாவது, பல காரணங்களாலே தேஹத்தில்‌ ஆத்ம தன்மை யில்லாமையைச்‌ சாதியா நின்று கொண்டு, ஆத்மா தேஹத்தைக்‌ காட்டிலும்‌ வேறுபட்டது என்பதை தத்வ சேகரம்‌’ என்ற நூலிலே தெளியச்‌ சொன்னோம்‌. -அதிலே கண்டு கொள்வதென்கை. .

தர்மியான ஆத்மாவை முதலில்‌ சொல்லி, இதன்‌ தர்மமான அடிமையைப்‌ பின்‌ சொல்வது முறையா யிருக்க, இந்த ப்ரணவத்தில்‌ முதலில்‌ அடிமையைச்‌ சொல்லி, பிறகு ஆத்மாவைப்‌ சொல்வானென்ன?’ என்ற கேள்விக்கு, அப்படிச்‌ சொல்‌லுகைக்குக்‌ காரணத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -71- மணத்தையும்‌, ஒளியையுங்‌ கொண்டு, பூவையும்‌, ரத்நத்தையும்‌ விரும்புமா போலே, சேஷமென்று ஆத்மாவை ஆதரிக்கிறது; அல்லாத- போது “உயிரினாற்‌ குறைவிலம்‌” என்கிறபடியே த்யாஜ்யம்‌; அது தோன்ற சேஷேத்வத்தைச்‌ சொல்லிப்‌ பின்னை ஆத்மாவைச்‌ சொல்லுகிறது –
அதாவது, மணத்துக்கு ஆதாரமாமிருப்பதால்‌ பூவை விரும்புமா போலேயும்‌, ஒளிக்கு ஆதாரமென்று ரத்நத்தை விரும்புமா போலேயும்‌, அடிமைத்‌ தன்மைக்கு ஆதாரமென்றாயிற்று ஆத்மாவை விரும்புகிறது. (சேஷத்வ) அடிமைத் தன்மை சேராத போது “உயிரினாற்‌ குறைவிலம்‌” என்கிறபடியே ‘சேஷத்வ நீக்கமான ஆத்மாவில்‌
விருப்பமுடை யோமல்லோம்‌” என்கிறபடியே தள்ளுபடிக் குரியனாமித்தனை. இப்படி இருந்துள்ள சேஷத்வத்தின்‌ ஏற்‌றந்‌ தோற்ற அடிமையை முன்னர்‌ சொல்லிப்‌ பின்னர்‌ ஆத்மாவைச்‌ சொல்லிற்றாயிற்றென்கை.

மூன்று பதங்களின்‌ கூட்டான இந்தப்‌ ப்ரணவத்தால்‌ சொல்லித்‌ தலைக்கட்டின்‌ அர்த்தத்தைத்‌ திரள அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -72.-ஆக, ப்ரணவத்தால்‌ “கண்ணபுர மொன்றுடையானுக் கடியேன்‌ ஒருவர்க் குரியேனோ’ என்கிறபடியே ஜீவ பரஸம்பந்தஞ்‌ சொல்லிற்று .
ஆக என்று தொடங்கி அதாவது, கீழ்ச்‌ சொன்ன எல்லாவற்றிலும்‌, ப்ரணவத்தால்‌ “கண்ணபுரமொன்று டையானுக்கு’. என்று நான்காம்‌ வேற்றுமையை ஈற்றிலே உடைய அகாரார்த்தத்தையும்‌ “அடியேன்‌” என்று அடிமைத் தன்மையைக்‌ காட்டக்‌ கூடிய மகாரத்திலர்த்தத்‌தையும்‌, “ஒருவர்க் குரியேனோ” என்று; அந்ய சேஷத்வத்தைக்‌
கழிக்குமதான உகாராத்தத்தை அருளிச்‌ செய்த திருமங்கையாழ்வார்‌ அருளிச்‌ செயலின்‌ படியே, ஜீவ பரர்களுக்குண்‌டான சேஷ சேஷி பாவ (அடியான்‌ ஆண்டான்‌ என்று ஸம்பந்தத்தைச்‌ சொல்லிற்றென்கை.

இன்னமும்‌ பொய்கையாழ்வாருடைய அருளிச்‌ செயலாலே, அடியானுக்கு பற்றுக்கோடாக இருப்‌பது ஒரு மிதுநம்‌ என்னுமிடந்‌ தோற்ற, இந்த ஜீவ பர ஸம்பந்தத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -73- இத்தால்‌, “தாமரையாள்‌ கேள்வன்‌ ஒருவனையே நோக்கு முணர்வு” என்றதாயிற்று –
அதாவது, இந்த ப்ரணவத்தால்‌ “தாமரையாள்‌ கேள்வன்‌” என்று அகாரத்தைப்‌ பெயராக உடையவனாய்‌ சேஷத்வத்துக்கு முன்னிலையான திருமகள்‌ கேள்வனையும்‌, ‘ஓருவனையே நோக்கும்‌ என்று நான்காம்‌ வேற்றுமை உகாரங்களால்‌ சொல்லுகிற அவன்‌ தவிர்த்த மற்றவற்றுக் குரித்தல்லாத சேஷத்வத்தோடு கூடிய ஆத்மாவினுடைய அவன்‌ தனக்கே உரியனாந்‌ தன்மையையும்‌, “உணர்வு” என்று அந்த அடிமைக்கு ஆதாரமாக மகாரத்தால்‌
சொல்லப்பட்ட ஜ்ஞாநமே நிரூபணியனான ஆத்மாவைஞ்‌ சொல்லுகிற அருளிச்‌ செயலின்‌ படியே ஜீவ பர ஸம்பந்தம்‌ சொல்லிற்றாயிற்றென்கை.

அகாரத்தில்‌ இயற்கையில்‌ விளைந்த காரணத்வ – சேஷித்வ ‘ -ப்ர்தூநமாக ‘ ப்ரணவார்த்தத்தை யோஜித்தார்‌ கீழ்‌ ; அதில்‌, வினைப்பகுதி யர்த்த ப்ரதாநமாக
ப்ரணவத்துக்கு இன்னமும்‌ ஒரு யோஜனை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -74 – அகாரத்தாலும்‌ மகாரத்தாலும்‌ ரக்ஷகளையும்‌ ரக்ஷ்யத்தையும்‌ சொல்லிற்று; சதுர்த்தியாலும்‌ உகாரத்தாலும்‌ ரஷண ஹேதுவான ப்ராப்தியையும்‌ பலத்தையும்‌ சொல்லிற்று :
அதாவது, அகாரத்தாலே ரக்ஷ்கனான நாராயணனாகிற ஈஸ்வரனைச்‌ சொல்லிற்று; மகாரத்தாலே அவனால்‌ ரக்ஷிக்கப்படுமதான ஆத்ம வஸ்துவைச்‌ சொல்லிற்று; சதுர்த்தியாலே ரஷிக்கைக்குக் காரணமான அடிமையான ஸம்பந்தஞ்‌ சொல்லிற்று. இப்படி ரக்ஷிகைக்குப்‌ பலம்‌, இந்த ஆத்மாவானது அத் தலைக்கே உரித்தாக விநியோகப் படுகையாலே அவனுக்கே அர்ஹமென்றதுக்குப்‌ பெயரான உகாரத்தாலே ரக்ஷண பலத்தைச்‌ சொல்லிற்று.
ஆக, இம்மந்த்ரத்தில்‌ முதல்‌ பதமான ப்ரணவார்த்தத்தை அருளிச்‌ செய்தாராயிற்று.

இனி, மேலிற்‌ பதங்களுக்கும்‌ அர்த்தம்‌ அருளிச்‌ செய்வதாக (மந்த்ர சேஷமும்‌) மந்த்ரத்தின்‌ மிச்சமான பாகமும்‌ இந்த ப்ரணவத்துக்கு விவரணமாயிருக்கும்‌ படியை முந்துற அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -75 -இனி மேல் பிரணவத்தை விவரிக்‌கிறது.
அதாவது, இவ்விடத்தில்‌ விவரணமாகிறது, சொல்லப்பட்ட அர்த்தத்துக்குப்‌ பொருந்தியதான அர்த்தத்தைச்‌ சொல்லிக்‌ கொண்டு முன்‌ சொன்ன அர்த்தத்தை விரிவு படுத்துகை என்று தீப ப்ரகாசத்திலும்‌,
“உக்தார்த்த விசதீகார யுக்தார்த்தாந்தர போதநம்‌ மதம்‌ விவரணம்‌ தத்ர மஹிதாநாம்‌ மநீஷிணாம்‌”.
உக்தார்த்த விசதீகார
– சொல்லிய அர்த்தத்தைத்‌ தெளிவிப்பதென்ன, யுக்தார்த்தாந்தர போதநம்‌ – அவ்விடத்துக்குத் தக்க வேறு அர்த்தம்‌ சொல்வதென்ன,
(இவை) விவரணம்‌ – விவரணமென்று, தத்ர – அவ்விடத்தில்‌,
மஹிதாநாம்‌ – மேன்மையுடையவரான,
மநீஷிணாம்‌ – பெரியோர்களுக்கு,
மதம்‌ – கொள்கையாகும்‌ -என்று ரஹஸ்ய த்ரயார்த்த விவரண க்ரமம்‌ அருளிச்‌ செய்த ப்ரபந்தத்திலும்‌, விவரண லக்ஷணத்தை வாதி கேஸரி அழகிய மணவாளச்‌ சியர்‌ அருளிச்‌ செய்தார்‌.

விவரிக்கிறபடி தான்‌ எது? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -76-உகாரத்தை விவரிக்கிறது நமஸ்ஸூ -அகாரத்தை விவரிக்கிறது நாராயண பதம்‌; மகாரத்தை விவரிக்கிறது சதூர்த்தி; நார பதமென்றுஞ்‌ சொல்லுவார்கள்‌ –
அதாவது, (அந்யசேஷத்வத்தை) பிறர்க்‌ கடிமையா யிருக்கிற இவற்றைக்‌ கழிக்கிற விடத்தில்‌, பகவத்‌ விஷயத்துக்கு வேறானவனென்பதில்‌ தானும்‌ சேர்ந்தவனாகிய தன்னை வெளிப்படையாகச்‌ சொல்லிக்‌ கழிக்கையாலே உகாரத்தை விவரிக்கிறது நமஸ்ஸு–ரஷிக்கிறவனான ஈஸ்வர ஸ்வரூபத்தையும்‌, -ரக்ஷிக்கப்படுகிற சேதநாசேதநங்களையும்‌, ரக்ஷகத்வத்துக்கு உபயோகப்படுகிற அவன்‌ குணம்‌ முதலானவைகளையும்‌,
ரக்ஷிக்கும்‌ விதத்தையும்‌, விரியச்‌ சொல்‌லுகையாலே அகாரத்தை நாராயண பதம்‌ விவரிக்கிறது. “நாகிஞ்சித்‌ குர்வதச்‌ சேஷத்வம்‌” –
அகிஞ்சித்‌ குர்வத:– கைங்கர்யம்‌ செய்யாதவனுக்கு,
சேஷத்வம்‌ – சேஷத்வமானது,
ந- இல்லை
“அகிஞ்சித்கரஸ்ய சேஷத்வ அநுபபத்தி:”
அகிஞ்சித்‌ கரஸ்ய
– கைங்கர்யம்‌ செய்யாதவனுக்கு,
சேஷத்வ ௮நுபபத்தி:- அடிமைத் தன்மை யில்லை-என்கிறபடியே அடிமையாகிற கிஞ்சித்கார மில்லாத போது அடியானென்ற சேஷத்வ தன்மை இல்லாமையால்‌ அந்த சேஷத்வ ஸித்திக்‌குறுப்பான அடிமையைச்‌ சொல்லுகிற நான்காம்‌ வேற்றுமை உருபுஅடிமைக் குரியனான ஆத்மாவைச்‌ சொல்லுகிற மகாரப்‌ பொருளான ஆத்மாவினுடைய நித்யத்வமாகிய அழிவின்மை, மாறுதலற்ற ஏக ரூபத்வம்‌,
பன்மை முதலானவற்றைச்‌ சொல்லுகையாலே மகாரத்தை விவரிக்கிறது நார பதமென்றுஞ்‌ சொல்லுவார்கள்‌ என்கை.

ப்ரணவத்தின்‌ அக்ஷரங்களமைந்த முறையில்‌ விவரிக்காதே முரணானமுறையில்‌ விவரிப்பானேன்‌? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -77-அடைவே விவரியா தொழிகிறது, விரோதி போய்‌ அநுபவிக்க வேண்டுகையாலே .
அதாவது, அக்ஷரங்களமைந்த முறையிலே விவரியா தொழிகிறது-அகார விவரணமான நாராயண பதத்‌தில்‌ சொல்லும்‌ பகவதனுபவத்துக்கு விரோதியான அஹங்‌கார, மமகாராதிகள்‌ நமஸ்ஸாலே கழி யுண்டு போய்ப்‌ பின்னை அநுபவிக்க வேண்டுகையாலே என்கை.
இனி, இரண்டாம்‌ பதமான மத்ய பதமாம்‌ நமஸ்ஸூக்கு அர்த்தம்‌ அருளிச்‌ செய்வதாக
அதினுடைய உட் பிரிவை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -78- நமஸ்ஸு, ‘ந’ என்றும்‌ ‘ம:’என்‌றும்‌ இரண்டு பதம்‌ .
அதாவது, ‘நம :- என்கிற பதம்‌ ‘ந’ என்றும்‌,-ம:” என்றும்‌ இரண்டு பதமாக வுள்ள து என்கிறார்‌.
இவ் விரண்டு பதங்களுக்கும்‌ அர்த்தம்‌ எது? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -79-ம:’ என்கிற இத்தால்‌, தனக்குரியன்‌ என்கிறது; ‘ந’ என்று அத்தைத்‌ தவிர்க்கிறது .
அதாவது, ‘ம:’ என்று ஆறாம் வேற்றுமை யுருபை ஈற்றிலே யுடைய இந்த மகாரத்ததால்‌, மகாரத்தின்‌ பொருளான ஆத்மாவுக்குக்‌ கீழ்ச் சொன்ன நான்காம்‌ வேற்றுமையால்‌ ‘பகவத் விஷயத்தின்‌ பொருட்டு’ என்றதுக்கு எதிர்த் தட்டான ‘தன் பொருட்டு’ என்று தோற்றுகையாலே, “தனக்குரியன்‌’ என்னுமத்தைச்‌ சொல்லுகிறது. ந என்ற எதிர் மறைப்‌ பொருளாகிற நஞ்சாலே (நகாரத்தாலே) அதைக் கழிக்கிறது என்று.

இரண்டு பதங்களாலும்‌ சொன்ன அர்த்தத்தைச்‌ சேரப் பிடித்து அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -80- ஆக, நம: என்கிற இத்தால் ,”தனக்கு உரியனன்று’ என்கிறது .
அதாவது, ‘நம :’ என்ற முறையில்‌ பொருள்‌சொல்லாதே “ம:ந” என்ற முரணான முறையில்‌ சொன்னது. தனக்குரியன்‌’ என்பது கொடுமை மிக்க தொன்றாகையாலே; கொடுமையை முன்‌ சொல்லி அன்று என்பதைப்‌ பின்‌ சொன்னதாம்‌. முறையில்‌ சொல்லும் போது “வீடுமின் முற்‌றவும்‌” என்னுமா போலே விடுகையை முன்‌ சொல்லி விட வேண்டியதைப்‌ பின்‌ சொல்லுகிறதென்று யோஜிக்க வேணுமென்று பரந்த படியிலே இவர் தாமே அருளிச்‌ செய்தார்‌.

“தனக்கும்‌ பிறர்க்கும்‌ உரித்தன்று’ என்று, பகவத்‌ விஷயம்‌ தவிர்த்த மற்றவற்றுக்கு உரித்தன்று -என்ற அந்ய சேஷத்வத்தைக்‌ கழித்த உகாரத்தை விவரிக்கிறதாகில்‌, பிறர்க்கு உரித்தன்றென்றத்தையும்‌ விவரியாமல்‌ *தனக்குரியனன்று’ என்று இத்தையே விவரிப்பானேன்‌? என்கிற ஐயத்திலே அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -81 – பிறர்க்கு உரியனான அன்று தன்‌ வைலக்ஷண்யத்தைக்‌ காட்டி மீட்கலாம்‌; தனக்கென்னுமன்று யோக்யதையுங் கூட அழியும்‌ .
அதாவது, பிறர்க்குரியனென்ற போது, அடிமைக்கு இசைகையாலே, பிறரில்‌ காட்டில்‌ பகவானுக்கு உண்டான ஸர்வ காரணத்வ, ஸர்வ ரக்ஷகத்வ, ஸர்வ சேஷித்வம்‌ முதலான மேம்பாடுகளைக் காட்டி, அந் நிலையில்‌ நின்றும்‌ மீட்கலாம்‌. ‘தனக்குரியன்‌’ என்று நிற்குமன்று, நீ எனக்குரியன்‌ என்றால்‌, இல்லை; நான்‌ எனக்கே உரியன்‌’ என்னுமது –அடிமைக்கு இசையாமையாலே மீட்கைக்குரிய தகுதியும்‌ கூட இல்லையாய்‌ விடுமென்கை. அதனால் தான்‌ “தனக்குரியன்‌’ என்பதை முதலில்‌ தவிர்க்க வேண்டு மென்கிறார்‌.

இந்த நமஸ்ஸால்‌ செய்யப்படுகிற செயல் தான்‌ எது? என்ன, அருளிச்‌செய்கிறார்‌.
ஸூர்ணை -82- இத்தால்‌, விரோதியைக்‌ கழிக்கிறது .
இத்தால்‌ என்பது நமஸைக் குறிக்கும்‌. அதுதான்‌ விரோதியைக்‌ கழிக்கிறது என்கிறார்‌.

அதுதான்‌ ஒன்றோ? பலவோ? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -83- விரோதி தான்‌ மூன்று .
அந்த விரோதி தான்‌ மூன்று என்கிறார்‌.

அம் மூன்றுந்தான்‌ எவை? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -84- அதாவது, ஸ்வரூப விரோதியும்‌, உபாய விரோதியும்‌, ப்ராப்ய விரோதியும்‌ .
இத்தால்‌, முதல்‌ பதமாம்‌ ப்ரணவத்தில்‌ சொன்ன ஆத்ம ஸ்வரூபத்துக்கு விரோதியும்‌, இந்த நமப் பதத்தில்‌ அர்த்த பலத்தால்‌ கிடைத்த உபாய விரோதியும்‌, கடைசி பதத்தில்‌ சொன்ன பயனுக்கு விரோதியுமென்கை. -இந்த நமப்‌ பதந்தான்‌ காகாக்ஷி ந்யாயத்தாலே முன்‌ பின்‌ பதங்களில்‌ சொல்லுகிற ஸ்வரூப பலங்களின்‌ விரோதிகளைக்‌ கழிக்கக்‌ கடவதா யன்றோ? இருப்பது.

இந்த விரோதி மூன்றுங்‌ கழிகையாவது தான்‌ எது? என்ன, அது தன்னை அடைவே அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -85 – ஸ்வரூப விரோதி கழிகையாவது – யானே நீ என்னுடைமையும்‌ நீயே” என்றிருக்கை;
உபாய விரோதி கழிகையாவது -“களைவாய்‌ துன்பங்‌ களையாதொழிவாய்‌ களை கண் மற்றிலேன்‌‘ என்றிருக்கை; பிராப்ய விரோதி கழிகையாவது – “மற்றை நங் காமங்கள்‌ மாற்று” என்றிருக்கை .-ஸ்வரூப விரோதி கழிகையாவது: தன்னியல்பான ஸ்வரூபத்துக்கு விரோதி, “யானே என்றனதே” என்றிருக்கை யாகிற சுதந்திர புத்தி யாகையாலே. இது
கழிகையாவது, “யானே நீ என்னுடையையும்‌ நீயே” என்று தானும்‌ தன்னுடைமைகளும்‌ எம்பெருமானுக்குச்‌ சரீரங்களாக சேஷமாயிருக்கும்‌ என்றிருக்கை.
உபாய விரோதி கழிகையாவது:-அவனுக்குப்‌ பரதந்திரனாய்‌ அவனையே ரக்ஷகமாகக்‌ கொள்ள வேண்டியதான ஆத்மா தற்காப்பில்‌ தொடர்பு கொள்ளுதல்‌
உபாய விரோதி யாகையால்‌, “களைவாய்‌ துன்பங்களையாதொழிவாய்‌ களை கண் மற்றிலேன்‌” என்று என் துன்பங்‌களைப்‌ போக்குவாய்‌ போக்கா தொழிவாய்‌.-ஆனால்‌, என்னையோ, பிறரையோ காப்பாக உடையேனல்லேன்‌ என்றிருக்கை என்கை. பலத்துக்கு விரோதியாவது: பர தந்த்ரனான தான்‌ தன்னலங் கருதுகையால்‌ “மற்றை நங் காமங்கள்‌ மாற்று” என்று உன்னுகப்புக்குப்‌ புறம்பான என்‌ ஆசையைப்‌ போக்கு, என்றிருக்கை என்கை.

இப்படி ஸ்வரூப, உபாய, பலங்களாகிய மூன்றுக்கும்‌ விரோதியாகிறது,-இவனுடைய அஹங்கார, மமகாரங்களாகையாலே இதனுடைய கொடுமையையும்‌, இது கழிகை யிலுண்டான நன்மையையும்‌ அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -86- “ம” என்கை ஸ்வரூப நாசம்‌; நம: என்கை ஸ்வரூப உஜ்ஜீவனம்‌ .
அதாவது, “சேத நஸ்ய யதா மம்யம்‌ ஸ்வஸ்மிந்‌ ஸ்வீயே ச வஸ்துநி மம இத்யக்ஷர த்வந்த்வம்‌ ததா மம்யஸ்ய வாசகம்‌.”
சேதநஸ்ய –
சேதநனுக்கு,
யதா – எப்பொழுது,
ஸ்வஸ்மின்‌-தன்னிடத்திலும்‌,
ஸ்வீயே ச வஸ்துநி – தன்னுடைமைமைகளின்‌ பக்கலிலும்‌, மம்யம்‌ – (மம) என்னது என்ற புத்தி நடையாடுகிறதோ,
ததா – அப்பொழுது,
மம இதி – (மம) என்னது என்கிற,
அக்ஷரத்வந்தவம்‌ – இரண்டெழுத்‌துக்களும்‌,
மம்யஸ்ய வாசகம்‌ – அஹங்கார மமகாரத்துக்குப்‌ பேராயிருக்கும்‌,
அஹம் மம – நான்‌ எனக்கு உரியன்‌,
இதம்‌ மம – இது எனக்கு உரியது என்று இரண்டிடங்களிலும்‌ வருகிற அஹம்‌ என்பதும்‌, இதம்‌ என்பதும்‌ முறையே அஹங்கார மமகாரங்களென்று கொள்ளக்‌ கூடாது; முறையே அவ் விரண்டிடங்களிலும்‌ வருகிற ‘மம’ என்பதே அஹங்கார மமகாரத்துக்குப்‌ பெயரென்றபடி. ‘மம’ என்ற இரண்டெழுத்‌துக்களே அஹங்கார மமகாரங்களைத்‌ தோற்றுவிக்கும்‌. ம: என்கிற இதிலே அஹங்கார மமகாரங்கள்‌ இரண்டும்‌ உண்டாகையாலே இதிலே தொடர்புடையனாகை இந்த ஆத்மாவினுடைய பரமனுக்கு வசப்பட்டிருக்கும்‌ பரதந்த்ரமாம்‌ ஸ்வரூபத்துக்கு நாசம்‌. “நம:” என்று அதில்‌ தொடர்‌ பற்றிருக்கை ஸ்வரூபத்துக்கு உஜ்ஜீவநம்‌.
“த்வ்யக்ஷரஸ்து பவேந்‌ ம்ருத்யுஸ்‌ த்ர்யக்ஷரம்‌ ப்ரஹ்மண : பதம்‌, மமேதித்வ்யக்ஷ்ரோ ம்ருத்யுர்‌ ந மமேதி ச சாச்‌ வதம்‌”
த்வ்ய க்ஷ ரஸ்து
– இரண்டக்ஷரங்களோ, ம்ருத்யு: பவேத்‌-ஆத்மாவை அழிப்பது, த்ர்யக்ஷரம்‌ – மூன்றக்ஷரங்களோ, ப்ரஹ்மண:பதம்‌ – பர ப்ரஹ்ம ஸ்தாநத்தை அளிப்பதாம்‌(அப்படிப்பட்ட இரண்டும்‌ மூன்‌ றுமாகிய அக்ஷரங்கள்‌ தாம்‌ எவை என்னில்‌?)
மம இதி – மம என்கிற,
த்வ்யக்ஷரம்‌. – இரண்டு அக்ஷரங்களும்‌, ம்ருத்யு:- மரணத்தை யளிப்பது,
நமம இதி ச – நமம என்கிற மூன்று அக்ஷரங்களும்‌,
சாச்வதம்‌ – ஆத்மாவிற்கு நிலை நின்ற ஸ்வரூபம்‌. என்று சொல்லிற்றன்றோ.

இப்படி ஸ்வரூப, உபாய, பல விரோதிகளைக் கழிக்கிற அளவன்றிக்கே இந்த நமஸ்ஸூ தான்‌, ஸ்வரூபம்‌ முதலான மூன்றையும்‌ தெற்றெனக்‌ காட்டும்‌ என்கிறார்‌.

இந்த நமப் பதத்தில்‌, அடியார்க் கடிமை என்பது அர்த்த பலத்தால்‌ சித்திப்பதாலே அத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -89- “உற்றதும்‌ உன்னடியார்க் கடிமை” என்கிறபடியே இதிலே பாகவத சேஷத்வமும்‌ அநுஸந்தேயம்‌ .
அதாவது, “நின்‌ திருவெட்டெழுத்‌துங் கற்று நானுற்றதும்‌ உன்னடியார்க்கடிமை” என்று
திருமந்திரம்‌ சுற்றதால்‌ நான்‌ உற்றதும்‌ உன்‌ அடியார்க்கு அடிமை என்கிறபடியே, அஹங்கார மமகாரங்கள்‌ கழிந்து பகவச்‌ சேஷத்வம்‌ உள்ளபடி தெளிவிக்கிற இந்த நமஸ்ஸிலே, பகவச்‌ சேஷத்வத்தின்‌ முடிவெல்லையான பாகவத சேஷத்வமும்‌ சொல்ல வேணுமென்கை.

இப்படி அர்த்த பலத்தால்‌ சொல்லப் படுகிற பாகவத சேஷேத்வம்‌, இந் நமஸ்ஸி லன்றிக்கே வேறிடங்களிலும்‌ சொல்லுவாரு முண்டாகையாலே அத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -90- இது- அகாரத்திலே என்றும்‌ சொல்லுவர்கள்‌; உகாரத்திலே என்றும்‌ சொல்லுவர்‌கள்‌ .
அதாவது, நான்காம்‌ வேற்‌றுமையாலே ஆத்மாவினுடைய பகவச்‌ சேஷத்வத்தைச்‌ சொல்லுகையாலே, அந்த சேஷத்வத்தின்‌. முடிவெல்லையான : இந்த பாகவத சேஷத்வம்‌ சொல்லுவது அகாரத்திலே என்றும்‌ சிலர்‌ சொல்லுவர்கள்‌. அவன்‌ தவிர்த்த பிறர்க்கு சேஷமன்று என்பதான அநந்யார்ஹ ‘சேஷத்வத்‌ துக்கு முடிவெல்லை அடியார்க்‌கடிமை என்ற அளவு நிற்கையாகையாலே, உகார்த்திலே .என்றுஞ் சிலர்‌ சொல்லுவார்கள்‌. அர்த்த பலத்தால்‌ சொல்லப்‌ படுவதாகையாலே அவ்வவ் விடங்களிலும்‌ சொல்லலாமா யிருந்ததே யாகிலும்‌, அஹங்கார மமகாரங்களாகிய விரோதியாகிற கந்தல்‌. கழிவது நமஸ்ஸிலே யாகையாலே இங்குச்‌ சொல்‌லுவதே பொருந்‌தும்‌ என்கிறார்

இந்த நமஸ்ஸூக்கு முந்திப் பிறந்த நினைவை முன்னிட்டு இதில்‌ பிறந்த நினைவுக்கு உண்டான வாசியை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -91- ஈஸ்வரன்‌ தனக்கே யாயிருக்‌கும் -அசித்துப்‌ பிறர்க்கே யாயிருக்கும்‌; ஆத்மா தனக்கும்‌ பிறர்க்கும்‌ பொதுவா யிருக்கும்‌ என்று முற்பட்ட நினைவு; அங்ஙனன்றிக்கே, அசித்தைப்‌ போலே” தனக்‌கேயாக எனைக்‌ கொள்ள வேணும்‌” என்கிறது
நமஸ்ஸால்‌ .அதாவது “ஸ்வரூபம்‌ ஸ்வாதந்த்ர்யம்‌ பகவத்‌ –
பகவத:- பகவானுடைய,
ஸ்வரூபம்‌ – இயல்பான வடிவமானது. ஸ்வாதந்த்ரியம்‌ – தன் ஸ்வாதீநமாக சுதந்திரமாகவே இருக்கும்‌-என்கிறபடியே ஸ்வாதந்த்ரியமே ஸ்வரூபமான ஈஸ்வரன்‌ தன் பொருட்டே யாயிருக்கும்‌.-அசித்து, ஞாநமில்லாததாகையாலே தனக்கு என்கைக்குத்‌ தகுதி யின்றிக்கே பர தந்தர ஸ்வரூபமாயிருக்கும்‌ -ஆகையால்‌, இது பிறர்‌ பொருட்டே யாயிருக்கும்‌. அகாரத்தில்‌ லுப்த சதுர்த்தியில்‌-மறைந்த நான்காம்‌ வேற்றுமையில்‌ சொன்ன .. சேஷத்வத்தையும்‌, மகாரத்திற்‌ சொன்ன ஜ்ஞாத்ருத்வத்தையும்‌ உடையனான ஆத்மா ஜ்ஞாந முடமையால்‌ தன்‌ பொருட்டும்‌, சேஷத்வமாம்‌ அடிமை யுடைமையால்‌ பிறர்‌ பொருட்டுமாகப்‌ பொதுவா யிருக்கும்‌ என்று நமஸ்ஸுக்கு முன் பதமான ப்ரணவத்தில்‌ பிறந்த நினைவு-அப்படி அன்றிக்கே பிறர்‌ ‘ பொருட்டேயான அசித்தைப்‌ போலே “தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே” என்கிறபடியே – பகவத் விஷயத்துக்கே சுவை உடைத்தாம்படி ஆத்மாவை உபயோகித்துக்‌ கொள்ள வேணும்‌ என்கிறது நமஸ்ஸாலென்கை. –

‘தனக்கேயாக‘ – என்றத்தை விவரித்துரைக்கிறார்‌.
ஸூர்ணை -92-அதாவது, போக தசையில்‌ ஈஸ்வரன்‌ அழிக்கும்‌ போது நோக்க வேணு மென்று அழியா தொழிகை.
இத்தால்‌, அத் தலைக்கே சுவை யுடைத்தாம்படி, உபயோகப்‌ படுகையாவது, தன்னோடே (ஆத்மா வோடே) கலந்து பரிமாறும்‌ நிலையில்‌ அநுபவிக்கிறவனான ஈஸ்வரன்‌ “ஆட்கொள்வானொத் தென்னுயி ருண்ட மாயன்‌” என்கிறபடியே அடிமை கொள்வாரைப்‌ போலே புகுந்து, தன்‌ ப்ரேமை மிகுதியாலே தாழ நின்று பரிமாறி ஆத்மாவினிடத்தில்‌ உள்ள அடிமையை அழிக்கும்‌ போது, நம்‌ அடிமைத்‌ தன்மையை நாம்‌ காத்துக்‌ கொள்ள வேணும்‌’ என்று தாழ்மையைப்‌ பாரித்துப்‌ பின் வாங்கி அவனுக்குப்‌ பிரியமான சுவையான இன்பத்தைத்‌ தடுக்காதொழிகை என்கை.

இப்படி இவன்‌ அழிக்கைக்குக்‌ காரணம்‌ எது? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -93- அழிக்கைக்கு ஹேது கீழே சொல்லிற்று; மேலும்‌ சொல்லும்‌ .
அதாவது, எம்பெருமான்‌ மேல்‌ விழுந்து விநியோகம்‌ கொள்ளும் போது இவன் தன்‌ ‘ அடிமைத்‌ தன்மையாகிற தாழ்மையைப்‌ பாவித்‌துப்‌ பின் வாங்கி அவன்‌ இஷ்டத்தை அழிக்கைக்குக் காரணம்‌, ‘சேஷத்வமே ஆத்மாவுக்கு ஸ்வரூபம்‌” என்கையாலே கீழே ப்ரணவத்திலே சொல்லிற்று, மேலே நாராயண பதத்தில்‌ உள்ள நான்காம்‌ வேற்றுமை தொண்டாற்றும்‌ அடியானாகச்‌ சொல்லுகையாலே மேலும்‌ சொல்லும்‌ என்கை-

இனி, இந்தப்‌ பரதந்த்ரமாம்‌ சிறப்பை அருளிச்‌ செய்யா நின்று கொண்டு நமப் பத அர்த்தத்தை முடிவு செய்கிறார்‌.
ஸூர்ணை – 94 – இந் நினைவு பிறந்த போதே க்ருத க்‌ருத்யன்‌: இந் நினைவு இல்லாத போது எல்லா துஷ்க்ருதங்களும்‌. க்ருதம்‌: இந் நினைவிலே எல்லா ஸூக்ருதங்‌களும்‌ உண்டு. இது இன்றிக்கே இருக்கப்‌ பண்ணும்‌ யஜ்‌ஞாதிகளும்‌ ப்ராயச் சித்தாதிகளும்‌ நிஷ் ப்ரயோஜநங்கள்‌: இது தன்னாலே எல்லா பாபங்களும்‌ போம்‌, -எல்லா பலங்களும்‌ உண்டாம்‌ .’இந்நினைவு பிறந்த போதே க்ருத க்ருத்யன்‌’ என்றது, “தனக்கேயாக எனைக் கொள்ள வேணும்‌” என்னும்‌ பரமாத்மாவுக்கு வசப்படுகிற மிகவும்‌ சிறப்புடைய தான இந்த பாரதந்த்ரியம்‌ ஆகிய நினைவு பிறந்த போதே தன்னுடைய நன்மைக்கு உரித்தாகச்‌ செய்ய வேண்டுவதெல்லாம்‌ செய்து முடித்தவனென்கை.-“இந்நினைவு இல்லாத போது எல்லா துஷ்க்ருதங்களும்‌ க்ருதம்‌” என்றது – இந்தப்‌ பரதந்த்ரமாம்‌ நினைவு இல்லாத போது “கிம்தேந நக்ருதம்‌ பாபம்‌ சோரேணாத்மாப ஹாரிணா” என்கிறபடியே,
சோரேணாத்மாப ஹாரிணா – -பகவச்‌ சேஷமான தன்னைச்‌ சுதந்திரனாக நினைத்திருக்கிறவன்‌- பகவச்‌ சொத்தான ஆத்மாவைத்‌ திருடிய திருடனாகிறான்‌.
தேந – இவனால்‌,
ந க்ருதம்‌ – செய்யப்படாத,
கிம் பாபம்‌ – எந்தப்‌ பாபம்‌ உண்டு? எல்லாப்‌ பாபங்களும்‌ -செய்தவனாகிறான்‌. என்கிறபடியே சகல தீமைகளும்‌ செய்தவனாகிறான்‌ – என்கை.-“இந் நினைவிலே எல்லா ஸூக்ருதங்களும்‌ உண்டு” என்றது- இந்த பாரதந்ரிய நினைவு உண்டாகவே எல்லா நற் செயல்களும்‌ செய்தால்‌ உண்டாகும்‌ ப்ரீதி எம்பெருமானுக்கு விளைகையாலே, இந்தப்‌ பாரதந்ரிய நினைவிலே எல்லா நற் செயல்களும்‌ உண்டு என்கை. “இது இன்றிக்கே இருக்கப் பண்ணும்‌ யக்ஞாதிகளும்‌ ப்ராயச்‌ சித்தாதிகளும்‌ நிஷ் ப்ரயோஜநங்கள்‌ என்றது, இந்தப்‌
பாரதந்த்ரிய நினைவு இல்லாமலிருந்து கொண்டு பகவத்‌ ப்ரீதி உண்டாவதன்‌ பொருட்டுச்‌ செய்யும்‌ யாக யக்ஞங்கள்‌ முதலானவைகள்‌, சுதந்திர புத்தியோடு செய்வதால்‌ பகவானுக்கு ப்ரீதி உண்டாகாது கோபமே உண்டாகும்‌. முன்பு நாம்‌ செய்த பாபங்களின்‌ விமோசத்தின்‌ பொருட்டுச்‌ செய்யும்‌ க்ருச்றம்‌, சாந்த்ராயணம்‌ முதலான ப்ராயச் சித்தங்களாகிய ஸாந்திகளும்‌ சுதந்திர புத்தியோடு செய்வதால்‌ பாப விமோசனம்‌ உண்டாகாமல்‌ பயனற்றுப் போகுமென்கை.
“இது தன்னாலே எல்லா பாபங்களும்‌ போம்‌” என்றது– இந்தப்‌ பரதந்திர நினைவிலே எம்பெருமான்‌ இவனளவிலே கருணை மிகுந்து அருள்‌ செய்வதாலே, அவன்‌ இவனைத்‌ தண்டித்தற் குரித்தான எல்லாப்‌ பாபங்களும்‌ போமென்றும்‌. “எல்லாப்‌ பலன்களும்‌ உண்டாம்‌” என்றது,“உன்னடியார்க்கு என்‌ செய்வனென்றே யிருத்தி நீ” என்கிறபடியே, இவனுக்கு எந்த நன்மையைச்‌ செய்வோமென்று எம்பெருமான்‌ மேன் மேலும்‌ உபகரிக்கையாலே பிறவிக் கடலினின்றும்‌ கரை யேற்றி பரம பதத்திற் கொண்டு போய்‌ அழுகோலக்கத்திலே தன்னைக்‌ கண்டு களித்து வாழ்த்துவதாகிய நிரந்தரத் தொண்டுக் குரியனாம்படி செய்கையாகிய எல்லாப் பலன்களும்‌ உண்டாம்‌ என்கிறார்‌.
ஆக, மத்திய பதமான நமப்‌ பதார்த்தத்தை அருளிச் செய்தாராயிற்று.

இனி, நாராயண பதார்த்தத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை-95- -நாராயணனென்றது -நாரங்களுக்கு அயநமென்றபடி
அதாவது, நாராயண பதந்தான்‌ “நாராணாம்‌ அயநம்‌ ய: ஸ: நாராயண:-நாரங்களுக்கு இடமாக இருப்பவன்‌ எவனோ அவனே நாராயணன்‌- என்று வேற்றுமைத்‌ தொகையாகவும்‌, “நாரா: அயநம்‌ யஸ்ய ஸ: நாராயண: நாரங்களை இடமாக உடையவன்‌ எவனோ அவனே நாராயணன்‌- என்று அன்மொழித் தொகையாகவும்‌ சொல்ல வேண்டுகையாலே அதில்‌ முதலில்‌-தத் புருஷ ஸமாஸம்‌- வேற்றுமைத்‌ தொகையில்‌ அர்த்தத்தை ‘நாரங்களுக்கு
அயநம்‌’ என்றபடி.
” என்று அருளிச்‌ செய்கிறார்‌-

நாரங்களாகிறவை தாம்‌ எவை? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -96 – நாரங்களாவன- நித்ய வஸ்‌ துக்களுடைய திரள்‌ .
அதாவது, நார பதம்‌, ‘நர’ என்றும்‌ “நார”என்றும்‌ “நாரா: என்றுமாய்‌ “ரிங்க்ஷயே” என்கிற வினைப் பகுதியிலே ‘ர’ என்று அழியும்‌ பொருளைச்‌ சொல்லி, ‘ந’ காரம்‌ அழிவது என்பதைக்‌ கழித்து, ‘நர’ என்று அழிவற்ற நித்ய வஸ்துவைக்‌ காட்டி, கூட்டம்‌ என்ற பொருளிலே அண்‌” என்ற விகுதியும்‌ ஆதி நீளுதலுதாய்‌ ‘நார’ என்று நித்திய வஸ்துக்களின்‌ கூட்டத்தைச்‌ சொல்லி ‘நாரா:’ என்று கூட்டங்களின்‌ பன்மையுஞ்‌ சொல்லுகையால்‌ நித்ய வஸ்துக்களுடைய திரள்‌” என்கிறார்‌-இதில்‌, நித்ய என்றதாலே நர சப்தார்த்தமும்‌, ‘வஸ்துக்கள்‌’ என்கையாலே ‘நார’ சப்தார்த்தமும்‌, அவற்றினுடைய திரள்‌’ என்கையாலே நாரா சப்தார்த்தமாகிற பன்மைப்‌ பொருள்களும்‌ சொல்லப் பட்டது.

அப்படிப் பட்டவை தாம்‌ எவை? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -97-அவை யாவன ஜ்ஞாநாநந்தாமலத்‌வாதிகளும்‌, ஜ்ஞாந சக்தி யாதிகளும்‌, வாத்ஸல்ய ளெளசீலயாதிகளும்‌, திருமேனியும்‌, காந்தி ஸெளகுமார்யாதிகளும்‌, திவ்ய பூஷணங்களும்‌, திவ்யாயுதங்‌களும்‌, பெரிய பிராட்டியார்‌ தொடக்கமான
நாச்சிமார்களும்‌, நித்ய ஸூரிகளும்‌, சத்ர சாமராதிகளும்‌ திரு வாசல்‌ காக்கும்‌ முதலிகளும்‌, கணாதிபரும்‌, முக்தரும்‌, பரமாகாசமும்‌, ப்ரக்ருதியும்‌, பத்தாத்மாக்களும்‌, காலமும்‌, மஹதாதி விகாரங்களும்‌, அண்டங்களும்‌, அண்டத்‌துக்கு உட்பட்ட தேவாதி பதார்த்தங்களும்‌ .

ஜ்ஞாநாநந்தாமலத்‌ வாதிகளாவன: ஸ்வரூப நிரூபக தர்மங்கள்‌. அதாவது, ஈஸ்வர ஸ்வரூபம்‌ இன்னபடியானது என்று நிரூபித்துக் காட்டும்‌ தர்மங்களான
குணங்கள்‌. ஆதி சப்தத்தாலே, கணக்கிலடங்காத கல்யாண குணங்களைச்‌ சொல்லுகிறது.
ஜ்ஞாந சக்தியாதிகள்‌ அவன் முன்‌ சொன்ன குணங்களால்‌ நிரூபிக்கப்பட்ட ஸ்வரூபத்தை ஆதாரமாகக் கொண்டிருக்கும்‌ அனைத்து நற் குணங்களுக்கும்‌ ப்ரதாநமாயிருந்துள்ள ஜ்ஞாநம்‌, சச்தி, பலம்‌, ஐஸ்வர்யம்‌, வீரியம்‌, தேஜஸ்‌ ஸூக்களாகிற ஆறு குணங்கள்‌. வாத்ஸல்ய ஸெளசீல்யாதிகளாவன -இவை முன்‌ சொன்ன ஆறு குணங்களிலிருந்து தோன்றக் கூடிய வாத்ஸல்யம்‌ ஸ்வாமித்வம்‌ ஸெளசீல்யம்‌, ஸெளலப்யம்‌ ஆகியவை. இதில்‌ ஜ்ஞாநத்தின்‌ தன்மையாவது – ஸ்வரூபத்தாலேயே எப்போதும்‌ ஓரே காலத்தில்‌ அறியக் கூடியயற்றை எல்லாம்‌ காண்கை. –சக்தியாவது – நினைவாலேயே எண்ணிக்கை யற்ற புவனங்கட்கு எல்லாம்‌ தானே முதற்‌ காரணமா யிருக்கை.-பலமாவது – அனைத்துச்‌ சேதநாசேதநங்களையும்‌ இளைப்பின்றித்‌ தாங்கும்‌ ஆற்றல்‌. வீர்யமாவது- தான்‌ உபாதாந காரணமாகிய முதற் கருவியாகி சேதநாசேதநங்களை உண்டாக்கித்‌ தனக்கொரு மாறுபாடு இன்றிக்கே இருக்கை- ஐஸ்வர்யமாவது- சுதந்திரத்தோடு எங்கும்‌ தடையின்றிச்‌ செல்லுகின்ற நினைவுடைமை.-தேஜஸ்ஸாவது– வேறொரு உதவியின்றி அடைந்தாரது தாபங்களைப்‌ போக்கியும்‌, எதிரிகட்குத்‌ தாபங்களைத்‌ தந்து போருந்தன்மை, ஜ்ஞாநம்‌ முதலான ஆறு குணங்களினின்று தோன்றிய வாத்ஸல்யமாவது – குற்றங்களைக்‌ குணமாகக்‌ கொள்ளுந்‌ தன்மை. ஸ்வாமித்வம்‌ – எப்பொருட்கும்‌ தலைவனாகை. ஸெளசீல்யம்‌ -உயர்ந்தோனாயிருந்தும்‌ தாழ்ந்தாரோடு கலந்தும்‌ வேற்றுமையின்றி யிருக்கை. ஸெளலப்யம்‌ – எல்லா மநுஷ்யர்‌ கண்களுக்கும்‌ தன்னை காணக்‌கொடுக்குங் குணம்‌. –திருமேனி யாவது – தனக்கே உரித்தான திவ்ய மங்கள விக்ரஹம்‌. ஒருமை ஜாத்யேசக வசநமாய்‌ நித்யமான திவ்ய மங்கள விக்ரஹத்தையும்‌, இச்சையால்‌ ஏற்கும்‌ திருமேனிகளையும்‌ சொல்லுகிறது.-அல்லாத போது கூட்டமாக எண்ணி வருவதற்குச்‌ சேராது. இது தான்‌ நடுவில்‌ திருவீதிப்பிள்ளை பட்டர்‌, ஆச்சான்‌ பிள்ளை முதலானோர்‌ அருளிச்‌ செய்த நூல்களிலும்‌ தெளியக்‌ காணலாம்‌. –காந்தி ஸெளகுமார்‌யாதிகள்‌ ஆவன – அந்தத்‌ திருமேனியின்‌ பண்புகளான பேரழகும்‌, மென்மையும்‌, இயல்பிலான மணமும்‌, மெருகிட்ட பொன்னின்‌ ஒளி போல்‌ மேனியின்‌ மீது தவழும்‌ ஒளியும்‌, பதினாறு வயதென மதிக்கலாம்‌ படியான யெளவனத்வமும்‌ ஆகிய இவை முதலான பண்புகளாம்‌-திவ்ய பூஷணங்களாவன – எம்பெருமானார்‌ கத்யத்தில்‌ ஆபரண ஸூர்ணையாக வர்ணித்துச்‌ சொன்ன மகுடம்‌ முதல்‌ பாதச்‌ சிலம்பீறாக அந்தத்‌ திருமேனிக்குச்‌ சாத்தும்‌ கணக்கற்ற திருவாபரணங்கள்‌. திவ்விய ஆயுதங்களாவன – அழகுக்கும்‌, அடியவர்‌ பகை களைவதற்கும்‌ உரித்தான சங்கம்‌, சக்ரம்‌, நாந்தக வாள்‌, கெளமோதகியாம்‌ கதை, சார்ங்கம்‌ முதலான கணக்கற்ற ஆயுத விசேஷங்கள்‌. –பெரிய பிராட்டியார்‌ தொடக்கமான நாச்சிமார்‌ ஆவார்‌ – “ஸ்ரீவல்லப ஏவம்‌ பூத பூமி நீளா நாயக!” ஸ்ரீவல்லப – மகாலக்ஷ்மியை இஷ்டையாக உடையவனே! –ஏவம்‌ பூத பூமி நீனா நாயக – இப்படிப்பட்ட இவளுக்குச்‌ சமாநர்களான பூமி தேவிக்கும்‌, நீளா தேவிக்கும்‌ நாயகனே! “தேவி த்வாம்‌ அநு நீளயா ஸஹ மஹி தேவ்யஸ்‌ ஸஹஸ்ரம்‌ ததா” தேவி – லஷ்மி தேவியே,
த்வாம்‌ அநு – உன்னை அனுஸரித்து; நீளயா – நீளா தேவியோடு,
மஹீ – பூமிதேவியும்‌,
ததா – அப்படியே,
ஸஹஸ்ரம்‌ தேவ்ய : – ஆயிரம்‌ தேவிமார்களும்‌ (இருக்கின்றனர்‌) என்கிற படியே, முதன்மையுடைய பெரிய பிராட்டியார்‌ முதலாக இந்தப்‌ பிராட்டிக்குச்‌ சமாநர்களான பூமி நீளைகளும்‌, மற்றும்‌ அநேகராகச்‌ சொல்லப்படுகிறவர்களும்‌, “லக்ஷ்மீ முதலான தேவிமார்‌ வர்க்கமும்‌” என்றே பெரிய வாச்சான் பிள்ளை அருளிச்‌ செய்தது.
நித்ய ஸ-ிிரிகளாவார்‌ – அநந்த கருட விஷ்வக்ஸேநர்‌ முதலா யிருந்துள்ள கணக்கற்ற ஸுிரி ஜனங்கள்‌. சத்ர சாமராதிகளாவன – கைங்கர்ய உபகரணங்களான குடை, கவரி, விசிறி,வெற்றிலைப் பெட்டி, தாம்பலப் படிக்கம்‌ முதலானவைகள்‌. திரு வாசல்‌ காக்கும்‌ முதலிகளாவார்‌ – சண்ட ப்ரசண்ட பத்ர ஸுபத்ர, ஜய விஜயர்‌ முதலானோர்‌.
கணாதிபராவார்‌ -குமுதர்‌, குமுதாக்ஷர்‌, புண்டரீகர்‌, வாமநர்‌, சங்குகர்ணர்‌, ஸர்வ நேத்ரர்‌, ஸுமுகர்‌, ஸுப்ரதிஷ்டிகர்‌ முதலானவர் களாவார்‌.
முக்தராவார்‌ – “கரை கண்டோர்‌” என்கிறபடியே ஸம்ஸார ஸாகரத்தைக்‌ கடந்து அக்கரைப் பட்டு, நித்ய ஸூரிகளோடு ஸமமான உருவுடையராய்‌ அனைத்துத்‌ தொண்டும்‌ செய்கையே தொழிலாக உடையரா யிருக்கும்‌ எண்ணி லடங்காத சேதநர்‌-பரமாகாசமாவது பரமேஷ்டி, புமாந்‌, விச்வ, நிவ்ருத்த, ஸர்வ: என்ற பெயர்களை யுடைய பஞ்சோபநிஷத் மயமான பரமபதம்‌. இந்த லீலா விபூதியில்‌ பஞ்ச பூதங்களைப்‌ போன்று பரம பதமாகப்‌ பரிணமிப்பதாய்‌ சுத்த ஸத்வமா யிருப்பதொரு அசேதநம்‌. இதுவும்‌ பஞ்ச உபநிஷந்‌ மயமாகையாலே கூட்டமாயிருக்கும்‌.
ஆக, ஜ்ஞாநாநந்தா மலத்வாதிகளும்‌ என்று தொடங்கி இவ்வுளவும்‌ ஸ்வரூப நிரூபக தர்மங்களையும்‌, இப்படி நிரூபித்த ஸ்வரூபத்தைச்‌ சார்ந்துள்ள கல்யாண குணங்களையும்‌, அக் குணங்களுக்கு விளக்கமான திவ்ய மங்களமான திருமேனியையும்‌, இந்தத்‌ திருமேனியின்‌ குணங்களான அழகு முதலானவைகளையும்‌, இந்த அழகு முதலானவற்றோடு புஷ்பம்‌ பூத்தாற் போலே சாத்தின திருவாபரணங்களையும்‌, அந்த ஆபணரங்களோடு (விகல்பிக்கலாம்‌ படியான) ஒளியில்‌ போட்டி யிட்டு எதிர்‌நிற்கும்‌ படியான திவ்யாயுதங்களையும்‌, இவை இத்தனையும்‌ காட்டிலெரித்த நிலவாகாதபடி அருகே இருந்து கண்டு களிக்கிற நாச்சிமாரையும்‌, அச் சேர்த்தியிலே அடிமை செய்கிற நித்ய ஸுரிகளையும்‌, அவர்களுக்குக்‌ கைங்கர்ய உபகரணங்களான-துணைக் கருவிகளான குடை, சாமரம்‌ முதலான-வைகளையும்‌, இச்‌ சேர்த்திக்கு என்ன தீங்கு நேருகிறதோ என்று அஞ்சும்‌ திரு வாசல்‌ காக்கும்‌ முதலிகளையும்‌, இவ் விதமாகவே மங்களாசாஸந பரராய்த்‌ திருப்படை வீட்டுக்கு முழுக் காவலாயிருக்கும்‌ கணாதிபரையும்‌, ஸம்ஸாரமாம்‌ பிறவியை நீத்தவராய்‌ நித்தியரோடு ஒரு கோவையாய்‌ அடிமை செய்கிற முக்தரையும்‌, அவ் வடிமையை வளர்ப்பதான பரம பதத்தையும்‌ அருளிச்‌ செய்தாராயிற்று.
இனி, லீலா விபூதியிலுள்ளவற்றை அருளிச்‌ செய்கிறார்‌ மேல்‌: ப்ரக்ருதியாவது – ஸத்வ ரஜஸ்‌ தமஸ்ஸூக்களாம்‌ முக்குணக்‌ கூட்டமாயிருக்கும்‌ மூல ப்ரக்ருதி. “முக்குண மயமாகையாலே மூல ப்ரக்ருதியும்‌ கூட்டமாயிருக்கும்‌”என்றல்லவா இதுக்கும்‌ பெரிய வாச்சான் பிள்ளை அருளிச்‌ செய்தது. பத்தாத்மாக்களாகிறார்‌ – உரை கல்லில்‌ ஓற்றி யெடுத்த மெழுகில்‌ பொன் போலே இந்த ப்ரக்ருதிக்‌குள்ளே பந்திக்கப்பட்டு உருமாய்ந்து கிடக்கிற ஆத்மாக்கள்‌–காலம்‌ அவது – இரவு பகல்‌ முதலான பிரிவுகளால்‌ கூட்டமாயிருக்கும்‌ அசேதநப்‌ பொருள்‌. இராப் பகல்‌ முதலான வேற்றுமைகளாலே காலமும்‌ கூட்டமாயிருக்கும்‌ என்றே இதுக்கும்‌ பெரியவாச்சான்‌ பிள்ளை அருளிச்‌ செய்தது.ஆக, இவ்வளவும்‌ இயல்பாகவே நித்யமா யிருக்‌கு மவற்றைச்‌ சொல்லினார்‌. இனி மாறுபாட்டோடு கூடியே நித்யங்களாயிருக்கும்‌ அவற்றைச்‌ சொல்லுகிறார்‌. மாறுபாடற்று நித்யமா யிருக்கையாவது – உண்டாவது, அழிவது என்ற மாறுபாடு அடியோடில்லாமை. மாறுபாடுற்றும்‌ நித்திய மாகையாவது -உண்டாவதும்‌, அழிவதுமாக நிற்கச்‌ செய்தேயும்‌ முன் காலத்திலுண்டான பெயர்‌, உரு குறி இவைகள்‌ வேறாகாமல்‌ இருக்கை. இதில்‌ மஹத்து முதலான விகாரங்களாவன – மஹத்‌ தத்வந் தொடங்கி ப்ருதிவி என்ற பூமி பர்யந்தமாக உண்டான இருபத்து மூன்று தத்துவங்களும்‌. -அண்டங்களாவன – இந்த மஹத்து முதலானவைகளாலே உண்டானதாய்‌, “அண்டாநாந்து ஸஹஸ்ராணாம்‌ ஸஹஸ்‌ராண்யயுதாநிச” பல்லாயிரக்கணக்காக அளவின்றியே இருக்‌கும்‌ பல அண்டங்கள்‌-அண்டத்துக்குட்பட்ட தேவாதி பதார்த்தங்களாவன- தேவ, மநுஷ்ய, (திர்யக்‌) விலங்குகள்‌, ஸ்தாவரங்கள்‌ என்பனவாகும்‌. -ஆக, நார பதத்தின்‌ அர்த்தம்‌ அருளிச்‌ செய்தாறாயிற்று

மேல்‌, அயந பதார்த்தத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -98 – அயநமென்றது -இவற்றுக்கு ஆஸ்ரயமென்றபடி. –
‘அயநமென்பது’ தங்கும்‌ இடம்‌ என்பதாலே, சேதநாசேதநமான இவற்றுக்குத் தான்‌ இடமென்றபடி என்கை.

அன்மொழித்‌ தொகையாலான அர்த்தத்தை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -99 – அங்ஙனன்றிக்கே, இவை தன்னை ஆஸ்ரயமாக வுடையனென்னனுமாம்‌
அதாவது – இவற்றுக்கு இடம்‌” என்ற வேற்றுமைத்‌ தொகையாகச்‌ சொன்னதன்றி, இவை தன்னை இடமாக உடையவன்‌’ என்று அன்மொழித் தொகையாச்‌ சொல்லவு மாமென்கை.
இவற்றுக்கு ஆஸ்ரயம்‌என்கிற விடத்தில்‌ குணங்களையும்‌ சொல்லிற்றே யாகிலும்‌, இவை தன்னை ஆஸ்ரயமாக உடையவன்‌” என்கிற விடத்தில்‌, குணங்களைத்‌ தவிரச்‌
சொல்ல வேணும்‌
. அக் குணங்களுக்கு வ்யாபிக்கப்படும் பொருள்‌ என்று சொல்லுமளவில்‌ தன்னில்‌ தானிருக்கை என்ற குற்றமும்‌, முடிவின்மை என்ற குற்றமும்‌ வருமாகையாலே,
“ஈஸ்வரன்‌ தன்‌ குணங்களில்‌ வ்யாபிக்கும் போது குணத்‌தோடு சேர்ந்தே வ்யாபிக்க வேணும்‌. குணமில்லாமல்‌ ஒரு பொருளும்‌ இல்லாமையாலே; அப்போது, வ்யாபிக்கப்‌-
பட்ட குணங்களே வ்யாபக குணங்களாய்‌, வ்யாபக குணங்களே வ்யாபிக்கப்பட்ட குணங்ளா யறுகையாலே, தன்னில் தான்‌ வ்யாபித்தல்‌’ என்ற குற்றம்‌ உண்டாகும்‌.
அதற்கு மேலே, தன்‌ குணங்களிலே குணி வியாபிக்கப் புகுந்தால்‌, அதைச்‌ சேர்ந்த குணங்களையும்‌ குணி வ்யாபிக்க வேண்டும்‌.’ இப்படி வ்யாபித்த குணத்துக்குள்ளும்‌ வேறொரு குணமும்‌ அதற்குள்‌ மற்றொன்றும்‌ என்று இவ்வாறு வரும்‌. ஆதலால்‌, ஒரு முடிவு ஏற்படாதென்று” இவற்றைத்‌ தெளிவாக பெரியவாச்சான் பிள்ளையும்‌ அருளிச் செய்தார்‌ என்கிறார்‌.

வேற்றுமைத்தொகை, அன்மொழித்‌-தொகை என்ற இருவகை தொகையாக வந்த பொருளில்‌ பலித்தவை எவை? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -100-இவை இரண்டாலும்‌ பலித்தது, பரத்வ ஸெளலப்யங்கள்‌ .
அதாவது, நாரங்களுக்கு அயநம்‌ என்றும்‌ நாரங்களை அயநமாக உடையன்‌ என்றும்‌ சொன்ன இவை இரண்டாலும்‌ தேர்ந்த பொருள்‌, தன்னைத்‌ தவிர்த்த மற்ற
அனைத்துக்கும்‌ தான்‌ அதாரமாயிருக்கிற மேன்மையும்‌, இப்படிப்‌ பெரியனான தான்‌ அனைத்துச்‌ சேதனாசேதநங்களிலும்‌ தன்னை அமைத்துக்‌ கொண்டு புகுந்திருக்கையாகிற எளிமைத் தன்மையும்‌ கூறப்படுகிறது என்கை.

இன்னமும்‌ ஒரு முறையாலே இந்தத்‌ தொகைகளிரண்டாலும்‌ தேர்ந்த பொருள்களை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -101 – அந்தர்யாமித்வமும்‌, உபாயத்வமும்‌, உபேயத்வமுமாகவுமாம்‌
அதாவது, அன்மொழித்‌ தொகையும்‌ வேற்றுமைத்‌ தொகையும்‌ ஆகிய இரண்டாலும்‌ தேர்ந்தது, அந்தர்யாமித்வம் சொல்லுகிற நூல்களிலே அனைத்துச்‌
சேதநாசேதநங்களிலும்‌ அந்தராத்மாவாய்‌ இருப்பவனாய்‌, நியமிக்கிறவனாய்‌ இருக்கிற அந்தர்யாமித்வமும்‌, –இண்கதெள’ என்கிற வினைப் பகுதியிலே யாதல்‌, அயகதெள என்கிற வினைப் பகுதியிலே யாதல்‌ நிர்ணயிக்கப்பட்ட அயந பதத்தில்‌ கருவியாகக் காட்டும்‌ முறையிலும்‌, செயப்படு பொருளாகக்‌ காட்டும்‌ முறையிலும்‌, சொல்வதான உபாயத்வமும்‌ உபேயத்வமும்‌ ஆமென்கை. நாரங்களை அயநமாக உடைய என்னும்‌ அன்மொழித் தொகையில்‌ யோக்யதாநுகுணமாக நார சப்தத்தைக்‌ குணங்களைத்‌ தவிர்த்த பொருள்களுக்கு வாசகமாகக்‌ கொண்டாற்போலே, வேற்றுமைத்‌ தொகையிலும்‌
நாரங்களுக்கு அயநமாயிருப்பவன்‌ என்பதில்‌ உபாயமாகவும்‌, உபேயமாகவும்‌ இருப்பவன்‌ என்னும்‌ போது நார சப்தம்‌ சேதநாசேதநங்களைக்‌ காட்டுமதேயாயினும்‌ தகுதிக்கேற்ப
அசேதநங்கள்‌ தவிர்த்த சேதநங்களையே காட்டுவதாகக்‌ கொள்ளவேண்டும்‌. உபாயம்‌ – இறைவனை அடையும்‌ வழி.-“நாரஸ்த்விதி ஸர்வ பும்ஸாம்‌ ஸமூஹ: பரிகத்யதே,
கதிராலம்பநம்‌ தஸ்ய தேத நாராயணஸ்‌ ஸ்ம்ருத:”

நார: துஇதி – நார என்கிற சப்தத்தாலே,
ஸர்வ பும்ஸாம்‌ ஸமூஹ -அனைத்துச்‌ சேதநங்களும்‌,
பரிகத்யதே – சொல்லப்படுகிறது,
தஸ்ய – அந்த ஜீவ சமூகத்துக்கு
கதி :– அடையத்‌ தகுந்த,
அலம்பநம்‌ – ஆஸ்ரயமாகையால்‌,
தேந – அதனால்‌,
நாராயணஸ் ஸ்ம்ருத – நாராயணனென்று சொல்லப்படுகிறான்‌.
“நார சப்தேந ஜீவாநாம்‌ ஸமூஹ: ப்ரோச்யதே புதை: தேஷாமயந பூதத்வாந்‌ நாராயண இஹோச்யதே”.
புதை
:- புத்திமான்களாலே,
நார சப்தேந- நார சப்தத்‌தால்‌,
ஜீவாநாம் ஸமூஹ:– ஜீவர்களுடைய கூட்டமானது,
ப்ரோச்யதே – சொல்லப்படுகிறது.
தேஷாம்‌ – அந்த ஜீவர்களுக்கு,
அயந பூதத்வாத்‌ – உபாயோபேயமாயிருக்‌கையாலே,
இஹ – இவ்விடத்தில்‌, (எம்பெருமான்‌), நாராயண -நாராயணனென்று,
உச்யதே – சொல்லப்படுகிறான்‌. என்று
உபாயோபேயமாகக்‌ கொள்ளும் போது அசேதநங்கள்‌ தவிர்த்த இவை முதலானவைகளிலே சேதநங்களையே சொல்லா நின்றதல்லவா

செயப்படு பொருளைக்‌ காட்டும்‌ விருத்தியால்‌ தேர்ந்த பலத்துக்கு வரம்பில்லாமையாலே எல்லா விதத்தோடும்‌ கூடி யுள்ளதாலும்‌, உறவு முறையார்‌ என்ற இதுவும்‌ ஒரு பயனாயிருக்கையாலும்‌, எல்லா உறவு முறையும்‌ உள்ள எம்பெருமானுடைய உறவுகளையும்‌ இப் பதத்திலே சொல்லும்‌ படியை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -102- “எம்பிரானெந்தை” என்கையாலே, ஈஸ்வரனே எல்லா வுறவுமுறையு மென்று சொல்லும்‌ ,
அதாவது – நாராயண சப்தார்த்தத்தைச்‌ சொல்லுகிற திருமங்கையாழ்வார்‌ “எம்பிரானெந்தை என்‌னுடைச்‌ .சுற்றம்‌ எனக்கரசு என்னுடைய வாழ்நாள்‌” என்கையாலே எம்பெருமானே இந்த ஆத்மாக்களுக்கு எல்லாவித உறவு முறையு மென்று இப்பதத்திலே சொல்லுமென்கை.

இப்படி உறவுடையனாய்க்‌ கொண்டு இவ் வாத்மாக்களுக்கு அவன்‌ செய்யுமவை எவை? என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -103- நாம்‌ பிறர்க்கான அன்றும்‌ அவன்‌ நமக்காயிருக்கும்‌ –
அதாவது – நாம்‌ எம்பெருமானை வெறுத்து .அவனோடு ஓட்டற்றுப் பிறர்க்கு நல்லவரா யிருந்த காலத்திலும்‌, அவன்‌ நமக்கு நல்லவனாயிருக்கு மென்கை. “

நாம்‌ பிறர்க்கான அன்றும்‌ அவன்‌ நமக்‌கே யாயிருந்து செய்யுமவை தான்‌ எவை? என்ன, அருளிச் சென்றார்‌-
ஸூர்ணை -104- இரா மடம்‌ ஊட்டுவாரைப்‌ போலே உள்ளே பதி கிடந்து ஸத்தையே பிடித்து நோக்கிக்‌ கொண்டு போரும்‌
அதாவது – நேராக தங்கள்‌ பக்கல்‌ வந்து விருப்பங்களைப்‌ பெற்று ஜீவியாதே துர்மாநத்தாலே பட்டினியே திரியுமவர்களையும்‌ விட மாட்டாமையாலே,
பிறரறியாதபடி இரவில்‌ ஊர்ச் சாவடியில்‌ உண்பிப்‌பாரைப் போலே, தன்‌ பக்கல்‌தலை வணங்கோம்‌ என்று இந்த சேதநர்கள்‌ சுதந்திரம்‌ பாராட்டித்‌ திரியா நிற்க, இவர்கள்‌ கண் காணாத படி அந்தராத்மாவாய்க்‌ கொண்டு உள்ளே மறைந்திருந்து இவர்கள்‌ நிலை பேற்றையே தொடங்கிக்‌ காத்துக்‌ கொண்டு போருமென்கை.
ஆக, நாராயண பதத்தால்‌ இவன்‌ செய்யும்‌ தொண்டுகளை ஏற்பவனான எம்பெருமான்‌ தன்மையை அருளிச்‌ செய்தாராயிற்று.

இனி, இதில்‌ வேற்றுமை உருபாலே இவன்‌ தொண்டு செய்ய ப்ரார்த்திப்பதை அருளிச்செய்கிறார்‌.
ஸூர்ணை -105- “ஆய” என்கிற இத்தால்‌ “சென்‌றாற் குடையாம்‌” என்கிறபடியே எல்லா அடிமைகளும்‌ செய்ய வேணுமென்று அபேஷிக்கிறது –
அதாவது “ஆய” என்கிற இந்த நான்காம்‌ வேற்றுமையாலே “சென்றால்‌ குடையாம்‌” என்கிற பாட்டில்‌ சொல்லுகிறபடியே, திருவநந்தாழ்வானைப் போலே எல்லா அடிமைகளையும்‌ செய்ய வேணுமென்று விரும்புகிறது என்கை.

‘நமஸ்ஸாலே தனக்கென்று ஒன்றை விரும்புகைக்கு உரிமை யில்லை என்று பாரதந்த்ரியம்‌ சொல்லி யிருக்க, இந்தக்‌ கைங்கர்யத்தைத்‌ தான்‌ விரும்பிக்‌ கோருவது பொருந்தாது” என்று இருக்குமவர்கள்‌ செய்யும்‌ வினாவை அநுவதிக்கிறார்‌.
ஸூர்ணை -106- ‘நமஸ்ஸாலே தன்னோடு உறவில்லை என்று வைத்துக்‌ கைங்கர்யத்தை ப்ரார்த்திக்கக்‌ கூடுமோ?” என்னில்‌ : அதற்கு விடை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -107- “படியாய்க் கிடந்து உன்‌ பவளவாய்‌ காண்பேனே” என்கிறபடியே கைங்கர்ய ப்ரார்த்‌தனை வந்தேறி அன்‌று; ஸ்வரூப ப்ரயுக்தம்‌ .

அதாவது, “படியாய்க் கிடந்து உன்‌ பவளவாய்‌ காண்பேனே” என்று, மிக்க முடிந்த நிலையான பாரதந்த்ரியத்தோடே கைங்கர்ய ப்ரார்த்தனையையும்‌ சொல்லுகிறபடியே, கைங்கர்ய ப்ரார்த்தனை தன்னலங் கருதுவதான அஹங்கார மடியாய்க்‌ கொண்டு இடையில்‌
வந்தேறி யானது அன்று. ஆண்டனுக்கு மிக்க உகப்பை விளைவித்தல்லது தரியாதபடியான தன்‌ இயல்பான ஸ்வரூபத்தைப்‌ பற்றி வந்தது
என்கை.
மேற்சொன்ன வினா விடைகளாவன – நமச்சப்தம்‌ நாராயணாய என்பதோடு சேர்ந்து “நாராயணாய நம.” என்று மகாரத்தில்‌ சொன்ன ஜ்ஞாத்ருத்வத்தால்‌ தொண்டாற்றுவதில்‌ வரும்‌ என்னது என்ற மமகாரத்தை விளைவிக்கும்‌ என்று நமச் சப்தார்த்தப் பகுதியில்‌ சொல்லி விட்டு, இங்கே கைங்கர்ய ப்ரார்த்தனையைச்‌ சதுர்த்தி காட்டுமென்பது பொருந்‌துமோ? என்று வினாவுக்குக் கருத்து-இந்த ஐய வினாவுக்குத்‌ தெளிவான விடையாவது:
இங்கே சொல்லுகிற கைங்கர்ய ப்ரார்த்தனை, அறிவற்ற அசேதநத்துக்கு வேறாக அறிவுடைய சேதநனாயிருந்தும்‌, அறிவில்லாதான ஜடப் பொருளுக்குச்‌ சமமான பகவத்‌ பரதந்‌திரத்தை நமப் பதம்‌ சொல்லுவதால்‌, தன்னலம்‌ சிறிதும்‌ கொள்ளாது ஆண்டானின்‌ முக மலர்த்தியே குறிக் கொண்டதாயும்‌, அசித்துக்கு வேறான மகாரத்தில்‌ சொல்லுகிற தன்னியல்பான அறிவுடைமைக்குப்‌ பொருந்தியதா யிருப்பதால்‌ சமாதாநம்‌ கண்டு கொள்வது.

முன்‌ சொன்னதைக்‌ காரணமாகக்‌ கொண்டு நான்காம்‌ வேற்றுமையின்‌ கைங்கர்ய ப்ரார்த்தனையின்‌ விளக்கத்தை அருளிச் செய்கிறார்‌.
ஸூர்ணை -108- ஆகையால்‌. “வழுவிலா அடிமை செய்ய வேண்டும்‌ நாம்‌” என்கிற ப்ரார்த்தனையைக்‌ காட்டுகிறது . :
அதாவது – கைங்கர்ய ப்ரார்க்தனை இடையில்‌ வந்ததன்றிக்கே, பகவானுக்கு அடியவன்‌ ‘என்ற தொடர்பாலே வந்ததாகையாலே “வழுவிலா அடிமை செய்ய வேண்டும்‌ நாம்‌” என்று, ‘அடிமையில்‌ ஒன்றும்‌ நழுவாதபடி எல்லா அடிமைகளும்‌ செய்ய வேண்டும்‌ நாம்‌’ என்கிற ப்ரார்த்தனையை இந்த நான்காம்‌ வேற்றுமை காட்டுகிறதென்கை.

இந்தக்‌ கைங்கர்ய ப்ரார்த்தனை இடைவிடாமல்‌ நடக்கைக்கு உறுப்பான பயனில்‌ மிக்க சுவையுடையார்‌ தன்மையை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -109- “கண்ணாரக் கண்டு கழிவதோர்‌ காத லுற்றார்க்கு முண்டோ கண்கள்‌ துஞ்சுதல்‌” என்கிறபடியே காண்பதற்கு முன்பு உறக்கமில்லை,-கண்டால்‌ “ஸதா பஸ்யந்தி’ ஆகையாலே உறக்கமில்லை.
அதாவது, “இமையோர்கள்‌ குழாம்‌ தொழுவதும்‌ சூழ்வதுஞ்‌ செய்‌ தொல்லை மாலைக்‌ கண்ணாரக்கண்டு கழிவதோர்‌ காதலுற்றார்க்கும்‌ உண்டோ கண்கள்‌ துஞ்சுதல்‌” என்று ‘நித்ய ஸுிரிகளுடைய திரளானது நிரந்தரம்‌ அநுபவம்‌ பண்ணுகிற ஸர்வேஸ்வரனைக்‌ கண்கள்‌ நிறையும்படி கண்டொழியக் கழியாதபடியான காதலிலே நிலை நின்றவர்களுக்கும்‌ கண்கள்‌ உறங்குதல்‌ உண்டோ என்னுமாப் போலே, பகவத் விஷயத்தைக்‌ காண்பதற்கு முன்பு அறிவு சுருங்குவதால்‌ வரும்‌ உறக்கமில்லை; கண்ட காலத்தில்‌ ‘ஸதா பஸ்யந்தி’ (எப்போதும்‌ பரமபதத்தில்‌ ‘ பகவானைக்‌ காண்கிறான்‌) என்பதாலே உறக்கமில்லை.

இன்னமும்‌ ஒரு காரணத்தினாலே இவனுக்கு உறக்க மில்லாமையை அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -110- “பழுதே பல பகலும்‌ போயின” என்று இழந்த நாளுக்குக்‌ கூப்பிடுகிறவனுக்கு உறங்க விரகில்லை .
அதாவது “செங்கணடலோத வண்ணரடி அரவணை மேல்‌ கண்டு தொழுதேன்‌, பல பகலும்‌ பழுதே போயின வென்று அஞ்சி அழுதேன்‌” என்று “விஷயத்தைக்‌ கண்டு அநுபவித்தவாறே இப்படி அநுபவிக்கைக்கு உடலான அநேக காலமொல்லாம்‌ வீணே போய் விட்டதே’ என்று இழந்த நாளை நினைத்‌து வருந்திக்‌ கூப்பிடுகிறவனுக்கு மேலுள்ள நாளில்‌ உறக்கம்‌ வர வழி இல்லை என்கை.

இன்னமும்‌ (இவ் விஷயத்தில்‌) பகவத்‌- விஷயத்தில்‌ அறிவு பிறந்தார்க்கு மறக்கப் போகாது என்னுமத்தைப்‌ பொருத்துவிக்கிறார்‌.
ஸூர்ணை -111- “அன்று நான்‌ பிறந்திலேன்‌ பிறந்த பின்‌ மறந்திலேன்‌”என்னா நின்றார்களிறே
அதாவது, “அவன்‌ என்னைப்‌ பெறுவதற்குத்‌திருப்பதிகளிலே நிற்பது இருப்பது கிடப்பது ஆகா நிற்க, அக் காலத்தில்‌ ஜ்ஞாந லாப ரூபமான ஜன்மத்தை யுடையனாகப்‌ பெற்றிலேன்‌; அந்த ஜன்மமுண்டான பின்பு, அவனை ஒருக்காலும்‌ மறந்திலேன்‌’ என்று சொல்லா நின்றார்‌களென்கை. ஆக; சிறப்புடைய பயனில்‌ அறிவு பிறந்தார்‌ தன்மை இதுவாகையாலே இந்தக்‌ கைங்கர்ய ப்ரார்த்தனை இடைவிடாமல்‌ நடக்குமென்று கருத்து.

இனி, இந்தக்‌ கைங்கர்யத்துக்கு தேச காலம்‌ முதலான நியமமில்லாமையை அருளிச் செல்கிறார்‌.
ஸூர்ணை -112- இவ் வடிமை தான்‌ “ஒழிவில்‌ காலமெல்லாம்‌ உடனாய்‌ மன்னி” என்கிறபடியே ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வாவஸ்தைகளிலும்‌ அநுவர்த்திக்கும்‌ ,
அதாவது, இவ்வாத்மாவினுடைய இயல்‌பான தன்மைக்குப்‌ பொருந்திய அரும் பயனான இந்தக்‌ கைங்கர்யந்தான்‌, “ஒழிவில்‌ கால மெல்லா முடனாய்‌ மன்னி” என்று ‘ஒழிவில்லாத காலமெல்லாம்‌ எல்லா இடத்திலும்‌ உடனாய்‌ எல்லா நிலைகளிலும்‌ பிரியாது நின்று -என்கிறபடியே எல்லாத் தேசத்திலும்‌ எல்லாக்‌ காலத்திலும்‌, எல்லா நிலைகளிலும்‌ நடந்து செல்லுமென்கை –

‘மணாட்டிக்குத்‌ திருமாங்கல்ய தாரணம்‌,மணாளனுக்கே உரித்தரனவள்‌’ என்று காட்டுமா போலே, திரு மந்த்ர தாரணம்‌ (சேதநர்க்கு) மக்களுக்கு, ‘ “பகவான்‌ ஒருவனுக்கே உரிமைப்பட்டவர்கள்‌ என்பதை விளக்க இத்தை ஒரு மங்கள ஸூத்ரமாக நிரூபித்து அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -113- எட்டிழையாய்‌ மூன்று சரடாயிருப்பதொரு மங்கள ஸுித்ரம்‌ போல திருமந்த்ரம்‌ .
அதாவது, பதினாறிழையாய்‌, இரண்டு சரடாயிருப்பதொரு லெளகிகமான மங்கள ஸூத்திரம்‌ போலன்றிக்கே, வைதிகமான மங்கள ஸூத்திரம்‌ ‘எட்டிழையாய்‌ மூன்று சரடாயிருப்பதொரு மங்கள ஸூத்திரம்‌ போலே’ எட்டுத்‌ திருவக்ஷரமாய்‌ மூன்று பதமாயிருக்கிறது இத் திருமந்த்ரமென்கை

இப்படி நிரூபித்துச்‌ சொன்ன இத்தால்‌ எவ் வர்த்தம்‌ சொல்லுகிறது?” என்ன, அருளிச்‌ செய்கிறார்‌.
ஸூர்ணை -114 – இத்தால் , ஈஸ்வரன்‌ ஆத்மாக்களுக்குப்‌ பதியாய்‌ நின்று ரஷிக்கும்‌ என்கிறது
அதாவது, மங்கள ஸூத்ரமாகச்‌ சொன்ன இத் திருமந்த்ரத்தால்‌, ஈஸ்வரன்‌-நாராயணன்‌- இந்த திரு மந்த்ரத்தை ஆசார்யனாலே உபதேசிக்கப் பெற்ற ஸம்பந்தமுடைய ஆத்மாக்களுக்குப்‌ பதியாய்‌ நின்‌று கொண்டு ரக்ஷிக்‌கும்‌ என்று சொல்லுகிறது என்கை.

இனி, இந்த மந்த்ர்த்தால்‌ சொல்லப்‌-பெற்ற அர்த்தத்தைத்‌ தொகுத்துச்‌ சொல்லி இத்தை முடிக்கிறார்‌. ,
ஸூர்ணை -1 15- ஆக , திரு மந்த்ரத்தால்‌ ‘எம்பெருமானுக்கே உரியேனான நான்‌ எனக்கு உரியனன்றிக்கே ஒழிய வேணும்‌; ஸர்வ சேஷியான நாராயணனுக்கே
எல்லா அடிமைகளும்‌ செய்யப் பெறுவேனாக வேணும்‌’ என்றதாயிற்று .

‘ஆக’ என்றது, கீழே விரிவாக அருளிச்‌-செய்த எல்லாவற்றையும்‌ தொகுத்து அருளிச்‌ செய்கிறாரென்னுமிடந் தோற்ற ‘எம்பெருமானுக்கே உரியேனானநான்‌‘- இதில்‌, “எம்பெருமானுக்கு என்ற நான்காம்‌ வேற்றுமையை ஈற்றிலுடைய முதல்‌ அக்ஷரத்தின்‌ அர்த்தத்‌தையும்‌, ஏவ காரத்தாலே மத்யம அக்ஷ்ரத்தின்‌ அர்த்தத்தையும்‌, ‘உரியேனான நான்‌” என்று மூன்றாமக்ஷரத்தின்‌ அர்த்தத்தையும்‌ சொல்லுகையாலே, ப்ரணவத்தின்‌ முதல்‌ பதத்தைத்‌ தொகுத்ததாகும்‌.
எனக்குரிய னன்றிக்கே ஓழியவேணும்‌ –-இதில்‌, எனக்குரியன்‌ என்று ஆறாம்‌ வேற்றுமையை ஈற்றிலே உடைய மகாரார்த்தத்தையும்‌, அன்றிக்கே ஒழிய என்கையாலே ‘ந’காரார்த்தத்தையும்‌ வேணும்‌ என்கையாலே இவ் வர்த்தம்‌ சேதநனுக்கு ப்ராத்திக்கப்படுமது என்னுமத்தையும்‌ சொல்லுகையாலே நம: என்ற மத்யம பதார்த்தத்தைத்‌ தொகுத்ததாகும்‌.-ஸர்வ சேஷியான நாராயணனுக்கே எல்லா அடிமைகளும்‌ செய்யப் பெறுவேனாக வேணும்‌:- இதில்‌, ஸர்வ சேஷியான
நாராயணனுக்கே’ என்று அடிமையை ஏற்கும்‌ ஆண்டானையும்‌, கைங்கர்ய ப்ரார்த்தனையின்‌ விளக்கமான (ஆய)என்ற நான்காம்‌ வேற்றுமைமையும்‌, ‘எல்லா அடிமைகளும்‌ செய்யப் பெறுவேனாக வேணும்‌’ என்று கைங்கர்ய ப்ரார்த்தனையின்‌ விதத்தையும்‌ சொல்லுகையாலே, மூன்றாம்‌ பதம்‌ தொகுத்ததாம்‌. என்றதாயிற்று என்றது – என்று சொல்லிற்‌- றாயிற்றென்கை.

இப்படி விரிவாக அருளிச்‌ செய்ததை மீண்டும்‌ சுருக்கமாக அருளிச் செய்தது, இந்தத்‌ திருமந்த்ராத்தத்தை எல்‌லோரும்‌ அறிந்து நினைவிற் கொள்வதற்காக. ஆகையாலே, எல்லோருக்கும்‌ இவ்வர்த்தம்‌ எப்போதும்‌ நினைவில்‌ கொள்ள வேண்டும்‌.
ஸ்ரீ திருமந்த்ர ப்ரகரண வ்யாக்யானத்தின்‌ தெளிவுரை முற்றிற்று. .

———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருமங்கை ஆழ்வாரின் மடிபிடி ரகஸ்யம்

November 14, 2025

வார்த்தை -340-
பாகவத சேஷத்வ விதுரமான பகவத் சேஷத்வமும் -தேகாத்ம அபிமானம் போலே
பொல்லாது என்று முதலி யாண்டான் –

திருமங்கை ஆழ்வாருக்கு ததீய விஷயத்தில் உண்டான ஊற்றம் சொல்லுகிறது –
இது இவரின் மடிபிடி ரகஸ்யம் என்பார்கள் –

நம்பி தன் நல்ல மா மலர் சேவடி சென்னியில் சூடியும் தொழுதும் எழுந்தாடியும் -பெரிய திருமொழி -7-3-10-

தோடு விண்டலர் பூம் பொழில் மங்கையர் தோன்றல் வாள் கலியன் திருவாலி
நாடன் நன்னறையூர் நின்ற நம்பி தன் நல்ல மா மலர்ச் சேவடி சென்னிச்
சூடியும் தொழுதும் எழுந்து  ஆடியும்
  தொண்டர்க்கு அவன் சொன்ன சொல் மாலை
பாடல் பத்திவை படுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாதே -7-3-10-

இதழ் விண்டு அலருகிற பூவை உடைத்தான பொழிலாலே சூழப் பட்ட திரு மங்கையில் உள்ளார்க்கு பிரதானராய் உள்ள ஆழ்வார்  –வாள் கலியன் ––பகவத் பிராப்திக்கு பிரபத்தி போலே யாய்த்து பிரதி பஷ நிரசனத்துக்கு கையிலே வாள் –திருவாலி நாடன் —இதுவே போருமாய்த்து ஏற்றம் –நன்னறையூர் நின்ற நம்பி தன் –திரு நறையூரிலே வந்து நிற்கையாலே கல்யாண குண பூர்ணன் ஆனாவன்  –நல்ல மா மலர்ச் சேவடி சென்னிச் சூடியும்-நிரதிசய போக்யமாய்-குணாகுணம் நிரூபணம் பண்ணாத திருவடிகளை திரு முடிக்கு வளையமாக வைத்தும்  –தொழுதும் எழுந்து  ஆடியும் –நம புரஸ்தாத் அத ப்ருஷ்ட –முன்னும் பின்னும் எல்லாப் பக்கமும் தொழுத அர்ஜுனன் – என்கிறபடியே தொழுதும்
தொழப் பெற்ற ஹர்ஷத்தாலே இச் சரீரம் இருந்த இடத்தே இராதே ஆடியும் –

பாசுரத்தை கேட்டு இவர் கால் வாசி அறிந்தவராய் இருந்தார் என்று -ஆழ்வீர்
திருச்சேறையிலே வாரீர் -உம்முடைய அபேஷிதத்தை தலைக் கட்டித் தருகிறோம் -என்ன –
இவர் திருச் சேறையிலே எழுந்து அருள –
இவ் வாழ்வார் உடைய அசைந்த வளையத்திலே புனுகை வழிய வார்த்தால் போலே –

மா மதலைப் பிரான் -தம்முடைய திருவடிகளை கொண்டு வந்து வைக்கப் புக –
அத்தை புறம்கையாலே தட்டி –
உன் பொது நின்ற பொன்னம் கழலோ -மூன்றாம் திருவந்தாதி -88-என் தலை மேல் இருப்பது
உன் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலார் -பெரிய திருமொழி -7-4-1–என்ன

அது நன்று இது தீது என்று ஐயப்படாதே
மது நின்ற தண்  துழாய் மார்வன் –பொது நின்ற
பொன்னங்கழலே தொழுமின்
முழுவினைகள்
முன்னம் கழலும் முடிந்து ——–88-

சமசயிக்க ஒண்ணாத படி ஆதி ராஜ்ய ஸூ சகமான திருத் துழாயை யுடையவனுடைய
திருவடிகளை ஆஸ்ரயியுங்கோள்-நீங்கள் பண்ணின பாபம் வ்யக்த்யந்தரத்துக்கு ஆகாத படி நசிக்கும்-சாமான்யம் அதி தெய்வதம்-உறுதியாக பற்ற வேண்டுமே-சர்வ லோக சரண்யாய ராகவாய -யுத்தம் -17-15-என்றான் இறே ஸ்ரீ விபீஷண ஆழ்வான்-சர்வாத்மாக்களுக்கும் சம்பந்தம் ஒத்து இருப்பதாய் ஸ்ப்ருஹணீயமாய் அழகிதான திருவடிகளை தொழப் பாருங்கோள் –

கண் சோர வெங்குருதி வந்திழிய வெந்தழல் போல் கூந்தலாளை
மண் சேர முலை உண்ட  மா மதலாய் வானவர் தம் கோவே என்று
விண் சேரும் இளம் திங்கள்  அகடு உரிஞ்சு மணி மாட மல்கு செல்வத்
தண் சேறை எம்பெருமான்  தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலாரே -7-4-1-

திருத் துழாய் போலேயும் ஸ்ரீ கௌஸ்துபம் போலேயும் உம்முடைய ஸ்பர்சம் நமக்கு இனிதாய் இரா நின்றது – உம்முடைய தலையைக் கொடு வாரும் நம்முடைய காலை வைக்க என்ன-இங்கு உமக்கு ஒழியாது-வகுத்தவர்கள் காலுக்கு இடம் போரும் இத்தனை

அத்தைக் கேட்டு லஜ்ஜா விஷ்டனாய் -உமக்கு அந்தர்யாமியாய் இருந்தோமே -என்ன –

எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே -பெரிய திருமொழி -7-4-2-என்ன –

அம் புருவ வரி நெடுங்கண் அலர் மகளை வரை யகலத்து அமர்ந்து மல்லல்
கொம்பு உருவ விளங்கனி மேல் இளங்கன்று கொண்டு எறிந்த கூத்தர் போலாம்
வம்பலரும் தண் சோலை வண் சேறை வான் உந்து கோயில் மேய
எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே–7-4-2-

நித்ய வசந்தமாய் ஸ்ரமஹரமான பொழிலை உடைத்தாய் இருக்கிற திருச் சேறையிலே
ஸ்பர்தையாலே ( போட்டியாலே )ஆகாசத்தைத் தள்ளுகிறாப் போலே இருக்கிற கோயிலிலே வந்து நித்ய வாஸம் பண்ணுகிறவனுடைய திருவடிகளைத் தொழுவார் –எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே –நிதித்யாசி தவ்ய-என்கிற விஷயத்துக்கு இடம் காண்கிறிலேன் 

ஆகிலும் அர்ச்சாவதாரமாய் ஸு லபனாய் இருந்தோமே என்ன –

கடல் மல்லைத் தல சயநத்து உறைவாரை கொண்டாடும் நெஞ்சுடையார் அவர்
எங்கள் குல தெய்வமே -பெரிய திருமொழி -2-6-4-என்ன –

அவர்கள் எங்கே உளர் என்ன –

போதோடு புனல் தூவும் புண்ணியரே விண்ணவரில் பொலிகின்றாரே -பெரிய திருமொழி-7-4-3- என்று
அவர்கள் ஸ்வரூபத்தை சொல்ல –

விண்டாரை வென்றாவி விலங்குண்ண மெல்லியிலார்
கொண்டாடு மல்லகலம் அழலேற வெஞ்சமத்து
கண்டாரைக் கடல் மல்லைத் தல சயனத்து உறைவாரை
கொண்டாடும் நெஞ்சுடையார் அவர் எங்கள் குல தெய்வமே -2-6-4

கொண்டாடும் நெஞ்சுடையார்-இவர் என்ன அபேஷையாலே வந்து கிடக்கிறார்
நமக்காக விறே -என்று-நின்று இருந்து வெக்கணைக் கிடந்தது என்ன நீர்மையே -என்று இதிலே ஈடுபடுமவர்கள் –(திருமழிசை ஆழ்வாரே கொண்டாடும் நெஞ்சுடையார்
அவரே என் குல தெய்வம்
)-அவர் எங்கள் குல தெய்வமே–குல தைவதம் தத் பாதாராவிந்தம் -ஆளவந்தார்-என்னும் அளவல்ல எங்களது–ததீய பாதாரவிந்தம்–சரம பர்வ நிஷ்டை

மீதோடி வாள் எயிறு மின்னிலக முன் விலகும் உருவினாளைக்
காதோடு கொடி மூக்கு அன்று உடன் அறுத்த கைத் தலத்தா என்று நின்று
தாதோடு வண்டலம்பும் தண் சேறை எம்பெருமான் தாளை ஏத்திப்
போதொடு புனல் தூவும் புண்ணியரே விண்ணவரில் பொலிகின்றாரே –7-4-3-

தாதோடே வண்டுகள் ஆனவை மது பானம் பண்ணி அறையா நின்றுள்ள திருச் சேறையிலே எழுந்து அருளி இருக்கிறவன் திருவடிகளை ஏத்தி –புஷ்பங்களோடு கூட ஜலத்தைக் கொண்டு ஆஸ்ரயிக்கிற பாக்யாதிகரே –-சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி ஆஸ்ரயிக்கிற நித்ய ஸூரிகளில் சம்ருத்தர் ஆகிறார் – அங்கே இருந்து ஆஸ்ரயிக்கிறவர்கள் இங்கே இருந்தபடியே   ஆஸ்ரயிக்கிறவர்களோடே ஒவ்வார் இறே  

கண்கள் ஆரளவும் நின்று கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே -பெரிய திருமொழி -7-10-9-என்கிறபடியே
கண்ணுக்கு இரை இடுகைக்கும் நெஞ்சுக்கு அனுசந்தானமாக இரை இடுகைக்கும் நாம் வேணுமே -என்ன –

பண்ணினைப் பண்ணில் நின்றதோர் பான்மையைப் பாலுள் நெய்யினை மாலுருவாய்  நின்ற
விண்ணினை விளங்கும் சுடர்ச் சோதியை வேள்வியை விளக்கின் ஒளி தன்னை
மண்ணினை மலையை யலை நீரினை மாலை மா மதியை மறையோர் தங்கள்
கண்ணினைக் கண்கள் ஆர அளவும் நின்று  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே —7-10-9-

வேதத்தை எங்கும் ஒக்க அதிகரித்து இருப்பார்க்கு தன்னை ஒழிய பதார்த்த தர்சனம் பண்ண ஒண்ணாத படி அவர்களுக்கு -திருஷ்டி பூதனாய் உள்ளவனை -காணப் பெறாமையால் உறாவின கண்களின் உறாவுதல் தீரும்படி -நின்று கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –

வண் சேறை எம்பெருமான் அடியார் தம்மைக் கண்டேனுக்கு இது
காணீர் என்னெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே -பெரிய திருமொழி -7-4-6-என்ன

பண்டு ஏனமாய் யுலகை யன்று இடந்த பண்பாளா என்று நின்று
தொண்டானேன் திருவடியே துணை அல்லால் துணை இலேன் சொல்லுகின்றேன்
வண்டு ஏந்து மலர்ப் புறவில் வண் சேறை  எம்பெருமான் அடியார் தம்மைக்
கண்டேனுக்கு இது காணீர் என் நெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே –7-4-6-

வண் சேறை எம்பெருமான் அடியாரைக் கண்ட மாத்ரத்திலே –இது காணீர் என் நெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே  –கண்டி கோளே என்னுடைய நெஞ்சும் கண் இணையும் களிக்கிற படி-ஆன பின்பு அத்யவசிக்கையில் ஒரு குறை உண்டோ  –

ஆகில் சர்வ கந்தஸ் சர்வ ரச -என்கிறபடியே உமக்கு ரசாயன சேவைக்கு நாம் வேண்டுமே -என்ன –

எம்பெருமான் தாளை நாளும் சிந்திப்பாருக்கு என்னுள்ளம்
தேனூறி எப்பொழுதும் தித்திக்குமே -பெரிய திருமொழி -7-4-5-என்ன –

வந்திக்கும் மற்றவர்க்கும் மாசுடம்பில் வல்லமணர் தமக்கும் அல்லேன்
முந்திச் சென்று அரி யுருவாய் இரணியனை முரண் அழித்த முதல்வருக்கு அல்லால்
சந்தப்பூ மலர்ச் சோலைத் தண் சேறை  எம்பெருமான் தாளை நாளும்
சிந்திப்பார்க்கு  என்னுள்ளம் தேனூறி எப்பொழுதும் தித்திக்குமே –7-4-5-

சந்தனப் பூ மலரை உடைத்தான சோலையை உடைத்தாய் ஸ்ரமஹரமாய் இருக்கிற
திருச்  சேறையிலே நாயனார் உடைய திருவடிகளை நாள் தோறும் போக ரூபமாக அனுசந்திப்பாருக்கு –என்னுள்ளம் தேனூறி எப்பொழுதும் தித்திக்குமே –என்னுடைய ஹிருதயமானது தேனூறி எப்பொழுதும் இனிதாக நின்றது இது வெருமனேயோ –

ஆகில் உமக்கு உபாய உபேயத்துக்கு நாம் வேணுமே என்ன –

உபாயத்துக்கு முற்பாடர் ஆகையாலும் –
உபேயத்துக்கு எல்லை நிலம் ஆகையாலும் –
இருந்த நாளுக்கு உசாத் துணை யாகையாலும் –
பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே -பெரிய திருமொழி -7-4-4- என்ன –

தேராளும் வாளரக்கன் தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழப்
போராளும் சிலையதனால்   பொரு கணைகள் போக்குவித்தாய் என்று நாளும்
தாராளும் வரை மார்பன் தண் சேறை  எம்பெருமான் உம்பராளும்
பேராளன் பேரோதும் பெரியோரை யொரு காலும் பிரிகிலேனே  -7-4-4-

ரஷணத்துக்குப் பாங்கான கலவிருக்கையை உடையவன் –உபரிதன லோகங்களை நடத்தும் சர்வாதிகன் –பேரோதும் பெரியோரை –வாயாலே திரு நாமம் சொல்லா விடில் தரியாத ஸ்வபாவத்தை உடையராயக் கொண்டு சங்கீர்த்தனம் பண்ணுகிற பெரியோர் உண்டு –( ஓதும் நிகழ் காலம் ) அவன் தானும் அகப்பட -மகாத்மான -என்னும்படி இருக்கிற மகா பிரபாவர்களை –யொருகாலும் பிரிகிலேனே  —ஷண காலமும் பிரிய காலம் எல்லாம் இடை விடாமல் அனுபவிக்கலாம் என்னிலும் பிரிய ஷமன் அல்லேன் –

ஆகில் அடியிலே நமக்கு தாசர் என்று புகுந்தீரே -என்ன –

மற்று எல்லாம் பேசிலும் நின் திரு எட்டு எழுத்தும் கற்று நான்
உற்றதும் உன் அடியாருக்கு அடிமை -பெரிய திருமொழி -8-10-3-என்ன –

மற்றுமோர் தெய்வம்   உளதென்று இருப்பாரோடு
உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
மற்றெல்லாம் பேசிலும் நின் திரு வெட்டெழுத்தும்
கற்று நான் கண்ண புரத் துறை யம்மானே —8-10-3-

தேவதாந்தர ஸ்பர்சம் உடையாரோடு எனக்கு ஒரு சம்பந்தமும் இல்லை –உற்றதும் உன் அடியார்க்கு அடிமை மற்றெல்லாம் பேசிலும் நின் திரு வெட்டெழுத்தும் கற்று நான் – அவர்களை விட்டு உன் அளவில் நின்றவனும் அல்லேன் –இவ்வனுஷ்டானம் தான் நீர் எங்கே யார் சொல்ல பரிஹரித்தீர் -என்ன நீ சொன்ன முதல் வார்த்தைக்கு அர்த்தமாக
நான் நினைத்து இருப்பது இது -என்கிறார் –(நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் தானே முதல் வார்த்தை திரு மந்த்ரம் என்றது ஆயிற்று )-இது பின்னை அநேக அர்த்தங்களை சொல்லுமே –ஜீவ ஸ்வரூபத்தைச் சொல்லும் –நம்முடைய ஸ்வரூபத்தை சொல்லும் –ஜீவ வஸ்துக்களுக்கும்  நமக்கும் உண்டான சம்பந்தத்தை சொல்லும் –ப்ராப்தி பலமான கைங்கர்யதளவும் வந்திருக்குமே -என்ன-அது அநேக அர்த்தங்களைச் சொல்லிற்றே யாகிலும் அதில் எங்குமாக நான் அறுதி இட்டு இருக்கும் அர்த்தம்-அனந்யார்ஹ சேஷத்வம் – அது தான் ததீய சேஷத்வ பர்யந்தமாய் அல்லது இராது –சேஷத்வம் -அநந்யார்ஹத்வம் -பாகவத சேஷத்வம் -ஆய -உகாரார்த்தம்–நமஸ்ஸூ -கீழே பார்த்தோம் –பகவத் சேஷத்வத்தின் எல்லை நிலம் -அவனது அவயவ பூதங்கள்-மற்று எல்லாம் பேசிலும் -திரு மந்த்ரார்த்தங்கள் பல உண்டே –முதல் வார்த்தைக்கு -பல அர்த்தங்கள் உண்டே -உன் அடியார்க்கு அடிமை என்று அறிந்தேன்-நான் கண்டு கொண்டேன் நாராயணா -உபக்ரமம்-பிராப்தி -சேஷ சேஷி பாவ சம்பந்த நிபந்தன முறை -உறவின் முறை –எங்குமாக அறுதி இட்டு இருக்கும் அர்த்தம் -என்றது -அநந்யார்ஹத்வம் -உனது அடியார்க்கு அடிமை –ததீய சேஷத்வ பர்யந்தமாகப் போனால் தான் பகவத் அநந்யார்ஹத்வம் சித்திக்கும் –அவன் திரு உள்ளம் உகக்கும் படி நடக்க வேண்டுமே –அவன் திரு உள்ளம் உகப்பே பிரயோஜனம்-ஞாதவ்ய தயா -அறிய வேண்டியதாக அறிந்து ஜீவ ஸ்வரூபம் ஆஸ்ரய தயா ஞாதவ்யம் -மகாரம் மனா ஞானி மனா அவ போதனை பகவத் ஸ்வரூபம் விஷய தயா -ஜேயம் தத் விஷய கைங்கர்யம் -சேஷத்வ கார்யம் -சேஷத்வ பலம் –கீழே இவ்வளவும் சொன்னதுக்கு தாத்பர்யம் -சேஷத்வம் சித்திக்க -பாகவத சேஷத்வ பர்யந்தமும் பாகவத பர்யந்த கைங்கர்யம் வரை போனால் தான் நிலை நிற்கும் –ஆகையால் உன் அடிமை ஆகை ஆயிற்று என்பதே உனது அடியார்க்கு அடிமை என்பது சித்திக்கும் )

பிரபன்னன் உடைய லஷணம் ஆகிறது –ஸ்ரீயபதியே -உபாய உபேயங்கள் என்று இருக்கையும்-தேவதாந்தர ஸ்பர்சமும்-தாமஸ புருஷர்களோடு சம்சர்க்கமும் இன்றிக்கே இருக்கையும் – பாகவதரை ஒழிய செல்லாமை யுண்டாய் இருக்கையும் –தர்மியை அனுபந்தித்து இருக்கும் தர்மங்களை நேரே வ்யவஹரித்தது இல்லையே யாகிலும்
தர்மியைச் சொன்ன போதே தர்மங்களை எல்லாம் சொல்லிற்றாம் இறே-அவனைச் சொன்ன போதே அவயவ பூதங்களான பாகவதர்களையும் சொன்னது ஆகுமே-

நின் திரு வெட்டு எழுத்தும் கற்று நான் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்றாவது –
உன் அளவில் நின்றவன் அல்லேன் -என்ற போது அவன் திரு உள்ளம் என் படுகிறதோ  -என்று நஞ்சீயர் அருளிச் செய்ய-பிள்ளை –அல்லிக் கமலக் கண்ணன் ஆகிறான் -(திருவாய் -8-10-11)-என்று அருளிச் செய்தார் –-நீக்கமில்லா அடியார்  தன் அடியார்  அடியார் எம் கோக்கள் -(திருவாய் -8-10-10 )-என்று இவர் பாகவத சேஷத் தளவில் நின்றவாறே அவன் அல்லிக் கமலக் கண்ணன் ஆனான் –

இவர் நின்ற நிலையிலே தமக்கு பிறந்த ப்ரீதி அதிசயத்தாலே -பின்னையும் அவ் வாழ்வார் திரு உள்ளத்தை
சோதிகைக்காக –
அடியிலே நம்மைக் கவி பாட என்று இழிந்து
நம் அடியார் திறத்திலே மண்டிற்று என் -என்ன –

ராஜபுருஷ என்னுமா போலே -ஒருவனைக் கவிபாடுமவன் ஊரும் பேரும் தாரும்
குடியும் வைத்துக் கவிபாடுமா போலே சொன்னேன் இத்தனை –
ததீய விஷயமே உத்தேச்யம் என்ன –

ஆகிலும் பிரித்துச் சொன்னீரே என்ன –

பர்த்தாவின் தேகத்தை விரும்பின பதி வ்ரதைக்கு குற்றம் உண்டாகில் இறே -திவ்ய மங்கள விக்ரஹத்தை
விரும்பின எனக்கு குற்றம் உண்டாவது -என்ன –

என்று தமக்கு ததீய விஷயத்தில் உண்டான ஊற்றத்தைச் சொல்ல

ஈஸ்வரன் திரு உள்ளமும் களித்து –
இவ் வாழ்வாருக்கு தோற்றோம் -என்று-
இவர் திறத்தில் மடல் எடுக்கும்படி யாயிற்று ஈஸ்வரன் திரு உள்ளம் –

———————-

பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே -பெரிய திருமொழி -7-4-4- என்றும் இருக்கை –

(-தத்தாலே ததீயரா – ததீயராலே நாமா-எம்பெருமானுக்கும் திருமங்கையாழ்வாருக்கும் சம்வாதமாக   -ததீய பரகத ஸ்வீ கார மஹிமை வைபவம் -காட்டும்-அவர்கள் மூலமே உம்மைப் பற்றினேன் -உம் மூலமே பாகவத கைங்கர்யம் பெற்றேன் -பேறு பெரும் வரை இவர்களையே மண்டினேன்-பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே -)
ஆழ்வீர் உமக்கு இவர்களோட்டை சம்பந்தம் ஓரளவு இன்றியிலே இருந்ததீ -என்ன
என் செய்கேன் – 1-உபாயத்துக்கு முற்பாடர் ஆகையாலும்
2-உபேயத்துக்கு எல்லை நிலம் ஆகையாலும்
3-இருந்த நாளைக்கு உசாத் துணை யாகையாலும் பிரிகிலேன் என்கிறார்-

(சாண்டில்யை வ்ருத்தாந்தம் -இது வன்றோ எழிலாலி என்றான் தானே -இவையும் உண்டு -இங்கு போல் திவ்ய தேச வாசமும் வேண்டும் என்றும் அடியார் ஸஹவாசமும் வேண்டும் என்பதும் உண்டு-நாம் சாண்டில்யையும் திருமங்கை ஆழ்வாரும் போல் அல்லவே-மனம் ஈடுபாடு வேண்டுமே –போதயந்த பரஸ்பரம் துஷ்யந்தி ச ரமயந்தி இத்யாதி)


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .