திருமங்கை ஆழ்வாரின் மடிபிடி ரகஸ்யம்

வார்த்தை -340-
பாகவத சேஷத்வ விதுரமான பகவத் சேஷத்வமும் -தேகாத்ம அபிமானம் போலே
பொல்லாது என்று முதலி யாண்டான் –

திருமங்கை ஆழ்வாருக்கு ததீய விஷயத்தில் உண்டான ஊற்றம் சொல்லுகிறது –
இது இவரின் மடிபிடி ரகஸ்யம் என்பார்கள் –

நம்பி தன் நல்ல மா மலர் சேவடி சென்னியில் சூடியும் தொழுதும் எழுந்தாடியும் -பெரிய திருமொழி -7-3-10-

தோடு விண்டலர் பூம் பொழில் மங்கையர் தோன்றல் வாள் கலியன் திருவாலி
நாடன் நன்னறையூர் நின்ற நம்பி தன் நல்ல மா மலர்ச் சேவடி சென்னிச்
சூடியும் தொழுதும் எழுந்து  ஆடியும்
  தொண்டர்க்கு அவன் சொன்ன சொல் மாலை
பாடல் பத்திவை படுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாதே -7-3-10-

இதழ் விண்டு அலருகிற பூவை உடைத்தான பொழிலாலே சூழப் பட்ட திரு மங்கையில் உள்ளார்க்கு பிரதானராய் உள்ள ஆழ்வார்  –வாள் கலியன் ––பகவத் பிராப்திக்கு பிரபத்தி போலே யாய்த்து பிரதி பஷ நிரசனத்துக்கு கையிலே வாள் –திருவாலி நாடன் —இதுவே போருமாய்த்து ஏற்றம் –நன்னறையூர் நின்ற நம்பி தன் –திரு நறையூரிலே வந்து நிற்கையாலே கல்யாண குண பூர்ணன் ஆனாவன்  –நல்ல மா மலர்ச் சேவடி சென்னிச் சூடியும்-நிரதிசய போக்யமாய்-குணாகுணம் நிரூபணம் பண்ணாத திருவடிகளை திரு முடிக்கு வளையமாக வைத்தும்  –தொழுதும் எழுந்து  ஆடியும் –நம புரஸ்தாத் அத ப்ருஷ்ட –முன்னும் பின்னும் எல்லாப் பக்கமும் தொழுத அர்ஜுனன் – என்கிறபடியே தொழுதும்
தொழப் பெற்ற ஹர்ஷத்தாலே இச் சரீரம் இருந்த இடத்தே இராதே ஆடியும் –

பாசுரத்தை கேட்டு இவர் கால் வாசி அறிந்தவராய் இருந்தார் என்று -ஆழ்வீர்
திருச்சேறையிலே வாரீர் -உம்முடைய அபேஷிதத்தை தலைக் கட்டித் தருகிறோம் -என்ன –
இவர் திருச் சேறையிலே எழுந்து அருள –
இவ் வாழ்வார் உடைய அசைந்த வளையத்திலே புனுகை வழிய வார்த்தால் போலே –

மா மதலைப் பிரான் -தம்முடைய திருவடிகளை கொண்டு வந்து வைக்கப் புக –
அத்தை புறம்கையாலே தட்டி –
உன் பொது நின்ற பொன்னம் கழலோ -மூன்றாம் திருவந்தாதி -88-என் தலை மேல் இருப்பது
உன் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலார் -பெரிய திருமொழி -7-4-1–என்ன

அது நன்று இது தீது என்று ஐயப்படாதே
மது நின்ற தண்  துழாய் மார்வன் –பொது நின்ற
பொன்னங்கழலே தொழுமின்
முழுவினைகள்
முன்னம் கழலும் முடிந்து ——–88-

சமசயிக்க ஒண்ணாத படி ஆதி ராஜ்ய ஸூ சகமான திருத் துழாயை யுடையவனுடைய
திருவடிகளை ஆஸ்ரயியுங்கோள்-நீங்கள் பண்ணின பாபம் வ்யக்த்யந்தரத்துக்கு ஆகாத படி நசிக்கும்-சாமான்யம் அதி தெய்வதம்-உறுதியாக பற்ற வேண்டுமே-சர்வ லோக சரண்யாய ராகவாய -யுத்தம் -17-15-என்றான் இறே ஸ்ரீ விபீஷண ஆழ்வான்-சர்வாத்மாக்களுக்கும் சம்பந்தம் ஒத்து இருப்பதாய் ஸ்ப்ருஹணீயமாய் அழகிதான திருவடிகளை தொழப் பாருங்கோள் –

கண் சோர வெங்குருதி வந்திழிய வெந்தழல் போல் கூந்தலாளை
மண் சேர முலை உண்ட  மா மதலாய் வானவர் தம் கோவே என்று
விண் சேரும் இளம் திங்கள்  அகடு உரிஞ்சு மணி மாட மல்கு செல்வத்
தண் சேறை எம்பெருமான்  தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலாரே -7-4-1-

திருத் துழாய் போலேயும் ஸ்ரீ கௌஸ்துபம் போலேயும் உம்முடைய ஸ்பர்சம் நமக்கு இனிதாய் இரா நின்றது – உம்முடைய தலையைக் கொடு வாரும் நம்முடைய காலை வைக்க என்ன-இங்கு உமக்கு ஒழியாது-வகுத்தவர்கள் காலுக்கு இடம் போரும் இத்தனை

அத்தைக் கேட்டு லஜ்ஜா விஷ்டனாய் -உமக்கு அந்தர்யாமியாய் இருந்தோமே -என்ன –

எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே -பெரிய திருமொழி -7-4-2-என்ன –

அம் புருவ வரி நெடுங்கண் அலர் மகளை வரை யகலத்து அமர்ந்து மல்லல்
கொம்பு உருவ விளங்கனி மேல் இளங்கன்று கொண்டு எறிந்த கூத்தர் போலாம்
வம்பலரும் தண் சோலை வண் சேறை வான் உந்து கோயில் மேய
எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே–7-4-2-

நித்ய வசந்தமாய் ஸ்ரமஹரமான பொழிலை உடைத்தாய் இருக்கிற திருச் சேறையிலே
ஸ்பர்தையாலே ( போட்டியாலே )ஆகாசத்தைத் தள்ளுகிறாப் போலே இருக்கிற கோயிலிலே வந்து நித்ய வாஸம் பண்ணுகிறவனுடைய திருவடிகளைத் தொழுவார் –எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே –நிதித்யாசி தவ்ய-என்கிற விஷயத்துக்கு இடம் காண்கிறிலேன் 

ஆகிலும் அர்ச்சாவதாரமாய் ஸு லபனாய் இருந்தோமே என்ன –

கடல் மல்லைத் தல சயநத்து உறைவாரை கொண்டாடும் நெஞ்சுடையார் அவர்
எங்கள் குல தெய்வமே -பெரிய திருமொழி -2-6-4-என்ன –

அவர்கள் எங்கே உளர் என்ன –

போதோடு புனல் தூவும் புண்ணியரே விண்ணவரில் பொலிகின்றாரே -பெரிய திருமொழி-7-4-3- என்று
அவர்கள் ஸ்வரூபத்தை சொல்ல –

விண்டாரை வென்றாவி விலங்குண்ண மெல்லியிலார்
கொண்டாடு மல்லகலம் அழலேற வெஞ்சமத்து
கண்டாரைக் கடல் மல்லைத் தல சயனத்து உறைவாரை
கொண்டாடும் நெஞ்சுடையார் அவர் எங்கள் குல தெய்வமே -2-6-4

கொண்டாடும் நெஞ்சுடையார்-இவர் என்ன அபேஷையாலே வந்து கிடக்கிறார்
நமக்காக விறே -என்று-நின்று இருந்து வெக்கணைக் கிடந்தது என்ன நீர்மையே -என்று இதிலே ஈடுபடுமவர்கள் –(திருமழிசை ஆழ்வாரே கொண்டாடும் நெஞ்சுடையார்
அவரே என் குல தெய்வம்
)-அவர் எங்கள் குல தெய்வமே–குல தைவதம் தத் பாதாராவிந்தம் -ஆளவந்தார்-என்னும் அளவல்ல எங்களது–ததீய பாதாரவிந்தம்–சரம பர்வ நிஷ்டை

மீதோடி வாள் எயிறு மின்னிலக முன் விலகும் உருவினாளைக்
காதோடு கொடி மூக்கு அன்று உடன் அறுத்த கைத் தலத்தா என்று நின்று
தாதோடு வண்டலம்பும் தண் சேறை எம்பெருமான் தாளை ஏத்திப்
போதொடு புனல் தூவும் புண்ணியரே விண்ணவரில் பொலிகின்றாரே –7-4-3-

தாதோடே வண்டுகள் ஆனவை மது பானம் பண்ணி அறையா நின்றுள்ள திருச் சேறையிலே எழுந்து அருளி இருக்கிறவன் திருவடிகளை ஏத்தி –புஷ்பங்களோடு கூட ஜலத்தைக் கொண்டு ஆஸ்ரயிக்கிற பாக்யாதிகரே –-சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி ஆஸ்ரயிக்கிற நித்ய ஸூரிகளில் சம்ருத்தர் ஆகிறார் – அங்கே இருந்து ஆஸ்ரயிக்கிறவர்கள் இங்கே இருந்தபடியே   ஆஸ்ரயிக்கிறவர்களோடே ஒவ்வார் இறே  

கண்கள் ஆரளவும் நின்று கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே -பெரிய திருமொழி -7-10-9-என்கிறபடியே
கண்ணுக்கு இரை இடுகைக்கும் நெஞ்சுக்கு அனுசந்தானமாக இரை இடுகைக்கும் நாம் வேணுமே -என்ன –

பண்ணினைப் பண்ணில் நின்றதோர் பான்மையைப் பாலுள் நெய்யினை மாலுருவாய்  நின்ற
விண்ணினை விளங்கும் சுடர்ச் சோதியை வேள்வியை விளக்கின் ஒளி தன்னை
மண்ணினை மலையை யலை நீரினை மாலை மா மதியை மறையோர் தங்கள்
கண்ணினைக் கண்கள் ஆர அளவும் நின்று  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே —7-10-9-

வேதத்தை எங்கும் ஒக்க அதிகரித்து இருப்பார்க்கு தன்னை ஒழிய பதார்த்த தர்சனம் பண்ண ஒண்ணாத படி அவர்களுக்கு -திருஷ்டி பூதனாய் உள்ளவனை -காணப் பெறாமையால் உறாவின கண்களின் உறாவுதல் தீரும்படி -நின்று கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –

வண் சேறை எம்பெருமான் அடியார் தம்மைக் கண்டேனுக்கு இது
காணீர் என்னெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே -பெரிய திருமொழி -7-4-6-என்ன

பண்டு ஏனமாய் யுலகை யன்று இடந்த பண்பாளா என்று நின்று
தொண்டானேன் திருவடியே துணை அல்லால் துணை இலேன் சொல்லுகின்றேன்
வண்டு ஏந்து மலர்ப் புறவில் வண் சேறை  எம்பெருமான் அடியார் தம்மைக்
கண்டேனுக்கு இது காணீர் என் நெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே –7-4-6-

வண் சேறை எம்பெருமான் அடியாரைக் கண்ட மாத்ரத்திலே –இது காணீர் என் நெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே  –கண்டி கோளே என்னுடைய நெஞ்சும் கண் இணையும் களிக்கிற படி-ஆன பின்பு அத்யவசிக்கையில் ஒரு குறை உண்டோ  –

ஆகில் சர்வ கந்தஸ் சர்வ ரச -என்கிறபடியே உமக்கு ரசாயன சேவைக்கு நாம் வேண்டுமே -என்ன –

எம்பெருமான் தாளை நாளும் சிந்திப்பாருக்கு என்னுள்ளம்
தேனூறி எப்பொழுதும் தித்திக்குமே -பெரிய திருமொழி -7-4-5-என்ன –

வந்திக்கும் மற்றவர்க்கும் மாசுடம்பில் வல்லமணர் தமக்கும் அல்லேன்
முந்திச் சென்று அரி யுருவாய் இரணியனை முரண் அழித்த முதல்வருக்கு அல்லால்
சந்தப்பூ மலர்ச் சோலைத் தண் சேறை  எம்பெருமான் தாளை நாளும்
சிந்திப்பார்க்கு  என்னுள்ளம் தேனூறி எப்பொழுதும் தித்திக்குமே –7-4-5-

சந்தனப் பூ மலரை உடைத்தான சோலையை உடைத்தாய் ஸ்ரமஹரமாய் இருக்கிற
திருச்  சேறையிலே நாயனார் உடைய திருவடிகளை நாள் தோறும் போக ரூபமாக அனுசந்திப்பாருக்கு –என்னுள்ளம் தேனூறி எப்பொழுதும் தித்திக்குமே –என்னுடைய ஹிருதயமானது தேனூறி எப்பொழுதும் இனிதாக நின்றது இது வெருமனேயோ –

ஆகில் உமக்கு உபாய உபேயத்துக்கு நாம் வேணுமே என்ன –

உபாயத்துக்கு முற்பாடர் ஆகையாலும் –
உபேயத்துக்கு எல்லை நிலம் ஆகையாலும் –
இருந்த நாளுக்கு உசாத் துணை யாகையாலும் –
பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே -பெரிய திருமொழி -7-4-4- என்ன –

தேராளும் வாளரக்கன் தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழப்
போராளும் சிலையதனால்   பொரு கணைகள் போக்குவித்தாய் என்று நாளும்
தாராளும் வரை மார்பன் தண் சேறை  எம்பெருமான் உம்பராளும்
பேராளன் பேரோதும் பெரியோரை யொரு காலும் பிரிகிலேனே  -7-4-4-

ரஷணத்துக்குப் பாங்கான கலவிருக்கையை உடையவன் –உபரிதன லோகங்களை நடத்தும் சர்வாதிகன் –பேரோதும் பெரியோரை –வாயாலே திரு நாமம் சொல்லா விடில் தரியாத ஸ்வபாவத்தை உடையராயக் கொண்டு சங்கீர்த்தனம் பண்ணுகிற பெரியோர் உண்டு –( ஓதும் நிகழ் காலம் ) அவன் தானும் அகப்பட -மகாத்மான -என்னும்படி இருக்கிற மகா பிரபாவர்களை –யொருகாலும் பிரிகிலேனே  —ஷண காலமும் பிரிய காலம் எல்லாம் இடை விடாமல் அனுபவிக்கலாம் என்னிலும் பிரிய ஷமன் அல்லேன் –

ஆகில் அடியிலே நமக்கு தாசர் என்று புகுந்தீரே -என்ன –

மற்று எல்லாம் பேசிலும் நின் திரு எட்டு எழுத்தும் கற்று நான்
உற்றதும் உன் அடியாருக்கு அடிமை -பெரிய திருமொழி -8-10-3-என்ன –

மற்றுமோர் தெய்வம்   உளதென்று இருப்பாரோடு
உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
மற்றெல்லாம் பேசிலும் நின் திரு வெட்டெழுத்தும்
கற்று நான் கண்ண புரத் துறை யம்மானே —8-10-3-

தேவதாந்தர ஸ்பர்சம் உடையாரோடு எனக்கு ஒரு சம்பந்தமும் இல்லை –உற்றதும் உன் அடியார்க்கு அடிமை மற்றெல்லாம் பேசிலும் நின் திரு வெட்டெழுத்தும் கற்று நான் – அவர்களை விட்டு உன் அளவில் நின்றவனும் அல்லேன் –இவ்வனுஷ்டானம் தான் நீர் எங்கே யார் சொல்ல பரிஹரித்தீர் -என்ன நீ சொன்ன முதல் வார்த்தைக்கு அர்த்தமாக
நான் நினைத்து இருப்பது இது -என்கிறார் –(நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் தானே முதல் வார்த்தை திரு மந்த்ரம் என்றது ஆயிற்று )-இது பின்னை அநேக அர்த்தங்களை சொல்லுமே –ஜீவ ஸ்வரூபத்தைச் சொல்லும் –நம்முடைய ஸ்வரூபத்தை சொல்லும் –ஜீவ வஸ்துக்களுக்கும்  நமக்கும் உண்டான சம்பந்தத்தை சொல்லும் –ப்ராப்தி பலமான கைங்கர்யதளவும் வந்திருக்குமே -என்ன-அது அநேக அர்த்தங்களைச் சொல்லிற்றே யாகிலும் அதில் எங்குமாக நான் அறுதி இட்டு இருக்கும் அர்த்தம்-அனந்யார்ஹ சேஷத்வம் – அது தான் ததீய சேஷத்வ பர்யந்தமாய் அல்லது இராது –சேஷத்வம் -அநந்யார்ஹத்வம் -பாகவத சேஷத்வம் -ஆய -உகாரார்த்தம்–நமஸ்ஸூ -கீழே பார்த்தோம் –பகவத் சேஷத்வத்தின் எல்லை நிலம் -அவனது அவயவ பூதங்கள்-மற்று எல்லாம் பேசிலும் -திரு மந்த்ரார்த்தங்கள் பல உண்டே –முதல் வார்த்தைக்கு -பல அர்த்தங்கள் உண்டே -உன் அடியார்க்கு அடிமை என்று அறிந்தேன்-நான் கண்டு கொண்டேன் நாராயணா -உபக்ரமம்-பிராப்தி -சேஷ சேஷி பாவ சம்பந்த நிபந்தன முறை -உறவின் முறை –எங்குமாக அறுதி இட்டு இருக்கும் அர்த்தம் -என்றது -அநந்யார்ஹத்வம் -உனது அடியார்க்கு அடிமை –ததீய சேஷத்வ பர்யந்தமாகப் போனால் தான் பகவத் அநந்யார்ஹத்வம் சித்திக்கும் –அவன் திரு உள்ளம் உகக்கும் படி நடக்க வேண்டுமே –அவன் திரு உள்ளம் உகப்பே பிரயோஜனம்-ஞாதவ்ய தயா -அறிய வேண்டியதாக அறிந்து ஜீவ ஸ்வரூபம் ஆஸ்ரய தயா ஞாதவ்யம் -மகாரம் மனா ஞானி மனா அவ போதனை பகவத் ஸ்வரூபம் விஷய தயா -ஜேயம் தத் விஷய கைங்கர்யம் -சேஷத்வ கார்யம் -சேஷத்வ பலம் –கீழே இவ்வளவும் சொன்னதுக்கு தாத்பர்யம் -சேஷத்வம் சித்திக்க -பாகவத சேஷத்வ பர்யந்தமும் பாகவத பர்யந்த கைங்கர்யம் வரை போனால் தான் நிலை நிற்கும் –ஆகையால் உன் அடிமை ஆகை ஆயிற்று என்பதே உனது அடியார்க்கு அடிமை என்பது சித்திக்கும் )

பிரபன்னன் உடைய லஷணம் ஆகிறது –ஸ்ரீயபதியே -உபாய உபேயங்கள் என்று இருக்கையும்-தேவதாந்தர ஸ்பர்சமும்-தாமஸ புருஷர்களோடு சம்சர்க்கமும் இன்றிக்கே இருக்கையும் – பாகவதரை ஒழிய செல்லாமை யுண்டாய் இருக்கையும் –தர்மியை அனுபந்தித்து இருக்கும் தர்மங்களை நேரே வ்யவஹரித்தது இல்லையே யாகிலும்
தர்மியைச் சொன்ன போதே தர்மங்களை எல்லாம் சொல்லிற்றாம் இறே-அவனைச் சொன்ன போதே அவயவ பூதங்களான பாகவதர்களையும் சொன்னது ஆகுமே-

நின் திரு வெட்டு எழுத்தும் கற்று நான் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்றாவது –
உன் அளவில் நின்றவன் அல்லேன் -என்ற போது அவன் திரு உள்ளம் என் படுகிறதோ  -என்று நஞ்சீயர் அருளிச் செய்ய-பிள்ளை –அல்லிக் கமலக் கண்ணன் ஆகிறான் -(திருவாய் -8-10-11)-என்று அருளிச் செய்தார் –-நீக்கமில்லா அடியார்  தன் அடியார்  அடியார் எம் கோக்கள் -(திருவாய் -8-10-10 )-என்று இவர் பாகவத சேஷத் தளவில் நின்றவாறே அவன் அல்லிக் கமலக் கண்ணன் ஆனான் –

இவர் நின்ற நிலையிலே தமக்கு பிறந்த ப்ரீதி அதிசயத்தாலே -பின்னையும் அவ் வாழ்வார் திரு உள்ளத்தை
சோதிகைக்காக –
அடியிலே நம்மைக் கவி பாட என்று இழிந்து
நம் அடியார் திறத்திலே மண்டிற்று என் -என்ன –

ராஜபுருஷ என்னுமா போலே -ஒருவனைக் கவிபாடுமவன் ஊரும் பேரும் தாரும்
குடியும் வைத்துக் கவிபாடுமா போலே சொன்னேன் இத்தனை –
ததீய விஷயமே உத்தேச்யம் என்ன –

ஆகிலும் பிரித்துச் சொன்னீரே என்ன –

பர்த்தாவின் தேகத்தை விரும்பின பதி வ்ரதைக்கு குற்றம் உண்டாகில் இறே -திவ்ய மங்கள விக்ரஹத்தை
விரும்பின எனக்கு குற்றம் உண்டாவது -என்ன –

என்று தமக்கு ததீய விஷயத்தில் உண்டான ஊற்றத்தைச் சொல்ல

ஈஸ்வரன் திரு உள்ளமும் களித்து –
இவ் வாழ்வாருக்கு தோற்றோம் -என்று-
இவர் திறத்தில் மடல் எடுக்கும்படி யாயிற்று ஈஸ்வரன் திரு உள்ளம் –

———————-

பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே -பெரிய திருமொழி -7-4-4- என்றும் இருக்கை –

(-தத்தாலே ததீயரா – ததீயராலே நாமா-எம்பெருமானுக்கும் திருமங்கையாழ்வாருக்கும் சம்வாதமாக   -ததீய பரகத ஸ்வீ கார மஹிமை வைபவம் -காட்டும்-அவர்கள் மூலமே உம்மைப் பற்றினேன் -உம் மூலமே பாகவத கைங்கர்யம் பெற்றேன் -பேறு பெரும் வரை இவர்களையே மண்டினேன்-பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே -)
ஆழ்வீர் உமக்கு இவர்களோட்டை சம்பந்தம் ஓரளவு இன்றியிலே இருந்ததீ -என்ன
என் செய்கேன் – 1-உபாயத்துக்கு முற்பாடர் ஆகையாலும்
2-உபேயத்துக்கு எல்லை நிலம் ஆகையாலும்
3-இருந்த நாளைக்கு உசாத் துணை யாகையாலும் பிரிகிலேன் என்கிறார்-

(சாண்டில்யை வ்ருத்தாந்தம் -இது வன்றோ எழிலாலி என்றான் தானே -இவையும் உண்டு -இங்கு போல் திவ்ய தேச வாசமும் வேண்டும் என்றும் அடியார் ஸஹவாசமும் வேண்டும் என்பதும் உண்டு-நாம் சாண்டில்யையும் திருமங்கை ஆழ்வாரும் போல் அல்லவே-மனம் ஈடுபாடு வேண்டுமே –போதயந்த பரஸ்பரம் துஷ்யந்தி ச ரமயந்தி இத்யாதி)


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading