Archive for April, 2025

ஸ்ரீ எங்களாழ்வான் ஸ்வாமிகள்—ஸ்ரீ நடாதூர் அம்மாள்-ஸ்ரீ குரு வரவத்ஸ்ய வரதாச்சாரியார் ஸ்வாமிகள்–

April 10, 2025

திருநக்ஷத்ரம் : சித்திரை ரோஹிணி

அவதார ஸ்தலம் : திருவெள்ளறை

ஆசார்யன் : எம்பெருமானார், திருக்குருகைப் பிரான் பிள்ளான்

சிஷ்யர்கள் : நடாதூர் அம்மாள்

பரமபதம் அடைந்த தேசம் : கொல்லன் கொண்டான் (மதுரை அருகில்)

க்ரந்தங்கள் : சாரார்த்த சதுஷ்டயம் (வார்த்தா மாலையின் ஒரு பகுதி), விஷ்ணு சித்தீயம் (விஷ்ணுபுராண வ்யாக்யானம்)

திருவெள்ளறையில் பிறந்த எங்களாழ்வானுக்கு அவருடைய பெற்றோர் விஷ்ணு சித்தர் என்று திருநாமமிட்டனர். பின்னர் இவர் எம்பெருமானாரின் சிஷ்யரானார். இவர் பகவத்விஷய காலஷேபமும் ஸ்ரீபாஷ்ய காலஷேபமும் திருக்குருகைப்பிரான் பிள்ளான் திருவடியில் அதிகரித்துக்கொண்டார். ஞானம், பக்தி, ஆசார்ய நிஷ்டை முதலியவை கூரத்தாழ்வானைப் போலவே இவரிடம் குடிகொண்டிருந்ததால் எம்பெருமானார் இவருக்கு “எங்களாழ்வான்” என்று திருநாமம் சூட்டியதாகச் சொல்லப்படுகிறது.

நடாதூர் ஆழ்வானின் (எம்பெருமானாரின் சிஷ்யர்) சிஷ்யரான நடாதூர் அம்மாள் (வாத்ஸ்ய வரதாசார்யார்) எங்களாழ்வானின் ப்ரதான சிஷ்யராவார். நடாதூர் அம்மாள் தன் பாட்டனாரான நடாதூர் ஆழ்வானிடம் ஸ்ரீபாஷ்ய காலஷேபம் செய்ய ஆசைப்பட்டபோது அவர் மிகவும் வயது முதிர்ந்த நிலையில் இருந்ததால் பேரனாரை எங்களாழ்வானிடம் சென்று கற்குமாறு அனுப்பினார். நடாதூர் அம்மாள் எங்களாழ்வான் திருமாளிகைக்குச் சென்று கதவைத் தட்டினார். எங்களாழ்வான் “வாசலில் நிற்பது யார்?” என்று கேட்டார். அதற்கு அம்மாள் “நான் வரதன்” என்று பதில் கூறினார். அதற்கு ஆழ்வான் “நான்” செத்த பிறகு இங்கு வரவும் என்று அவரைத் திருப்பி அனுப்பிவிட்டார். அம்மாள் வீட்டிற்கு சென்று தன் பாட்டனாரிடம் நடந்த விஷயத்தைக் கூறி அதன் அர்த்தத்தைக் கேட்டார். ஆழ்வார் தன் பேரனிடம் “நாம் எப்பொழுதும் நம்மை ‘அடியேன் (தாஸன்)’ என்றே மிகவும் அடக்கத்துடன் அறிமுகம் செய்து கொள்ளவேண்டும். நாம் எப்பொழுதும் ‘நான்’, ‘என்னுடைய’ என்பது போன்ற அஹங்காரத்தை விளைவிக்கும் வார்த்தைகளை உபயோகப்படுத்தக்கூடது” என்று கூறினார். “நாம் எல்லோரும் எப்பொழுதும் எம்பெருமானார்க்கும் அவன் அடியவர்களுக்கும் அடியவர்” என்று உணர்ந்துகொண்ட நடாதூர் அம்மாள் எங்களாழ்வான் திருமாளிகைக்குச் சென்று அவரிடம் “அடியேன் வரதன் வந்துள்ளேன்” என்று கூறினார். இதனைக் கேட்டு மிகவும் மகிழ்ந்த எங்களாழ்வான் அம்மாளை ஆசையுடன் வரவேற்று அவருக்கு எல்லா ரஹஸ்ய க்ரந்தங்களையும் காலக்ஷேபம் செய்வித்து அருளினார். பின்னர் நடாதூர் அம்மாள் ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தின் மிகப்பெரிய இவரின் ஆசார்யரானபடியால், எங்களாழ்வான் “அம்மாள் ஆசார்யன்” என்றே அறியப்பட்டார்.

எம்பெருமானார் தன் அந்திம காலத்தின் போது எங்களாழ்வானை அழைத்து அவரைத் திருகுருகைப் பிரான் பிள்ளான் திருவடிவாரத்தில் இருக்குமாறு அருளினார்.

நம் வ்யாக்யானங்களில் எங்களாழ்வானின் மேன்மையைப் பறைசாற்றும் சில ஐதிஹ்யங்கள் (சம்பவங்கள்) இடம் பெற்றுள்ளன. அவற்றை இங்கே காண்போம்:

பெரியாழ்வார் திருமொழி 2.9.10 – திருவாய்மொழிப் பிள்ளை வ்யாக்யானம் – இந்தப் பாசுரத்தில் பெரியாழ்வார் கண்ணனுக்கு நாவல் பழத்தின் மீதுள்ள ஆசையை எடுத்துரைக்கிறார். இப்பாசுர வ்யாக்யானத்தில் எங்களாழ்வானும் நஞ்சீயரும் சம்பந்தப்பட்ட ஒரு சம்பவம் கூறப்பட்டுள்ளது. எங்களாழ்வான் இரவு படுத்து உறங்கியதும் பாதி உறங்கிய நிலையில் அவர் கனவில் ஒரு சிறுவன் தோன்றி, தனக்குக் கொஞ்சம் நாவல் பழங்களைக் கொடுக்குமாறு கேட்டான். எங்களாழ்வான் அச்சிறுவனை “நீ யார் ?” என்று கேட்க, “நான் ஆயர் தேவு – நஞ்சீயரின் பிள்ளை” (ஆயர் தேவு என்பது நஞ்சீயரின் திருவாராதனப் பெருமாளின் திருநாமமாகும்) என்று பதில் கூறினான். உடனே எங்களாழ்வான் நஞ்ஜீயரிடம் சென்று உங்கள் திருவாராதனப் பெருமாள் என்னிடம் நாவல் பழங்களைக்கேட்டு என்னைத் தூங்கவிடாமல் செய்கிறார் என்று கூற நஞ்சீயரும் திருவாராதனை செய்யும் அறைக்குச் சென்று எங்களாழ்வானைத் தொந்திரவு செய்யாமல் இருக்கும்படி எம்பெருமானை ப்ரார்த்தித்துக் கொண்டார்.
முதல் திருவந்தாதி 44 – நம்பிள்ளை / பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் – இந்தப் பாசுரத்தில் பொய்கையாழ்வார் எம்பெருமான் எப்படித் தன் பக்தர்கள் ஆசைப்பட்ட உருவத்தையும் பெயரையும் ஏற்றுக்கொள்கிறார் என்பதை நிலை நாட்டுகிறார். முன்பு கூறப்பட்ட திருவாய்மொழிப் பிள்ளையின் பெரியாழ்வார் திருவாய்மொழி வ்யாக்யானத்தில் கூறப்பட்ட ஐதிஹ்யத்தையே வேறு கோணத்தில் எடுத்து கூறுகிறார். எம்பெருமான் எங்களாழ்வான் கனவில் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் போது “ஆயர் தேவு” என்று நஞ்சீயர் சூட்டிய திருநாமத்தைச் சொல்லியே தன்னைக் கூறிக்கொள்கிறார். இதை எங்களாழ்வானிடமிருந்து அறிந்து கொண்ட நஞ்சீயர் தாம் சூட்டிய பெயரைக்கொன்டே எம்பெருமான் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதால் மிகவும் பரவசமடைந்தார்.
வார்த்தா மாலையில் எங்களாழ்வான் சம்பந்தப்பட்ட சில ஐதிஹ்யங்களைக் (நிகழ்வுகளை) காண்போம் :

17 – அம்மங்கி அம்மாள் என்பவர் எங்களாழ்வானிடம் சென்று ஸ்ரீவைஷ்ணவ சம்பிராதயத்தைப் பற்றிய ஞானத்தை தனக்கு விவரிக்குமாறு பிரார்த்தித்துக் கொண்டார். எங்களாழ்வான் அவருக்கு சாரார்த்த சதுஷ்டயத்தை விவரித்துரைக்கிறார். (சாரார்த்த சதுஷ்டயம் என்பது 4 அடிப்படைக் கொள்கைகளும் 4 மிக முக்கியமான கொள்கைகளும்). அவையாவன :
ஸ்வரூப ஞானம் (ஜீவாத்மாவுக்குத் தான் யார் என்பதைப் பற்றிய அறிவு) தன்னைப் பற்றிய ஞானமானது, தான் பகவானுக்கு அடிமை என்று அறிதலும், தான் எப்பொழுதும் பகவான் இட்ட வழக்காக அவர் விரும்பும் கைங்கர்யங்களைச் செய்வதும் ஆகும்.
ஸ்வரூப யாதாத்ம்ய ஞானம் (ஜீவாத்மவுக்கு தான் யார் என்பதைப் பற்றிய உயர்ந்த ஞானம்) – தான் எம்பெருமானுக்கு மட்டும் அடியவன் என்ற எண்ணம் இல்லாமல் அவனுடைய அடியவர்களுக்கும் தான் அடிமை என்ற ஞானம் உடையவராய் இருத்தல்.
விரோதி ஞானம் – (விரோதியைப்பற்றிய அறிவு) – அடியவர்களைப் பிரிந்திருக்கும் பொழுது அதனைப் பொறுக்க மாட்டாமல் தவிப்பது.
விரோதி யாதாத்ம்ய ஞானம் – (விரோதியைப் பற்றிய முதிர்ந்த ஞானம்) எம்பெருமானின் அடியவர்களை (பாகவதர்களை) அடைந்து அவர்களுடன் இருக்கும் காலத்தில் அவர்களிடம் எந்த குற்றமும் இருப்பதாக நினைக்கக் கூடாது.
பல ஞானம் – (இலக்கைப்பற்றிய ஞானம்) அடியவர்களின் கட்டளைகளை சிறிதும் யோசிக்காமல் செயல்படுத்துவது.
பல யாதாத்ம்ய ஞானம் – (இலக்கைப்பற்றிய முதிர்ந்த ஞானம்) இவ்வுலகத்தில் உள்ள எம்பெருமானின் அடியவர்களுக்கு தான் அவர்கள் ஆசைப்பட்ட சேவையைச் செய்வதினால், பரமபதத்தை அடையும் வாய்ப்பு கிடைக்காமல் போனாலும் அவர்கள் ஆசைப்பட்டதை நிறைவேற்றுவது.
உபாய ஞானம் (எம்பெருமானை அடையும் வழிமுறை பற்றிய ஞானம்) எம்பெருமானுக்கும் ஜீவாத்மாவுக்கும் உள்ள சம்பந்தத்தைப் பற்றித் தெளிவாக அறிந்துகொண்டு அதற்கு ஏற்றார் போல நடந்துகொள்வது (இதற்கு மிகவும் விரிவான விளக்க உரை உள்ளது).
உபாய யாதாத்ம்ய ஞானம் – (எம்பெருமானை அடையும் வழிமுறைகளைப் பற்றிய முதிர்ந்த ஞானம்) எம்பெருமானே எல்லாவற்றிற்கும் ஆத்மா (சரீரீ) எல்லா ஜீவாத்மாக்களும் அவனுக்கு சரீரம் என்பதை அறிந்தும், எம்பெருமான் தன்னுடைய உகப்பிற்காகவே எல்லாக் காரியங்களையும் செய்கிறான் என்ற ஞானம் பெற்று, மற்ற எல்லா உபாயங்களிலும் மேலுள்ள பற்றுதலை விட்டு எம்பெருமானை அடைய எம்பெருமானே உபாயம் என்ற ஞானத்தைப் பெறுதல்.
118 – எங்களாழ்வான் நடாதூர் அம்மாளுக்குச் சரம ச்லோகத்தின் அர்த்த விசேஷங்களை விரித்து உரைத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது “ஸர்வதர்மான் பரித்யக்ஞ” என்ற இடத்தை எங்களாழ்வான் விவரிக்கும்போது, நடாதூர் அம்மாளுக்கு எல்லா சாஸ்த்ரங்களையும் படைத்த எம்பெருமானே எப்படி ஸர்வ ஸ்வதந்த்ரனாய் எல்லா தர்மங்களையும் (உபாயம்) விட்டுவிடும்படிக் கூறுகிறான் என்று ஆச்சர்யம் உண்டாயிற்று. அதற்கு எங்களாழ்வான் பகவானானவன் ஒருவனே எவராலும் குலைக்கமுடியாத நிரங்குச ஸ்வாதந்திரியத்தை உடையவன். அதுவே அவனுடைய உண்மையான ஒரு குணமும் ஆகும். அதனால் அவன் ஒருவன் மட்டுமே “எல்லா தர்மங்களையும் விட்டு என் ஒருவனையே சரணமாகப் பற்று ” என்று கூறத் தகுதியுடையவன் ஆவான் என்று பதில் உரைத்தார். மேலும் ஒரு ஜீவாத்மாவின் தன்மையானது, வேறு எந்த உபாயத்திலும் கை வைக்காது “எம்பெருமானே உபாயம்” என்றிருப்பதாகும். எல்லா ஜீவாத்மாக்களும் எம்பெருமானின் அடியவர்களே. அப்படி இருக்கும் பொழுது “எம்பெருமானே தஞ்சம் (உபாயம்)” என்று இருப்பதே ஜீவாத்மாக்களுக்குப் பொருத்தமுடைய ஒன்றாக இருக்கும். இப்படியாக எங்களாழ்வான் எம்பெருமானின் சரம ச்லோக அர்த்தத்தை சந்தேகத்திற்கு இடமில்லாமல் அவன் (எம்பெருமான்) ஒருவனாலேயே கூறப்பட வேண்டிய ஒன்று என்பதை விளக்கியுள்ளார்.
153 – இதில் எங்களாழ்வான் ஒரு ஆசார்யனின் திருக்குணங்களை அழகாக எடுத்துரைக்கிறார். ஆசார்யன் என்பவர் சரீராத்ம ப்ரமத்தை (சரீரமே ஆத்மா என்ற அஞ்ஞானம்) அறவே ஒழித்தவராவார். எம்பெருமானுக்குத் தான் அடிமை என்பதை நன்கு உணர்ந்தவராவார். மற்றும் பிற தேவதைகளை மறந்தும் உபாஸிக்காமல் அந்தந்த தேவர்களுக்கும் ஆத்மாவாக இருந்துகொண்டு செயல்படுத்துபவரும் எம்பெருமானே என்றும், எம்பெருமானே ஸர்வ வியாபி என்பதையும் நன்கு உணர்ந்தவராவார். தான் இவ்வுலகிலுருக்கும்வரை அர்ச்சாவதார எம்பெருமானுக்கு கைங்கரியம் செய்வதிலேயே காலத்தைக் கழித்து பின் பரமபதம் சென்றடைகிறார். மற்றவர்களோ (உண்மையான ஆசார்யர்கள் அல்லாதவர்) இந்த ப்ரபஞ்சம் முழுவதற்கும் தாங்களே தலைமையானவர் என்று கூறிக்கொண்டு தம் சிஷ்யர்கள் மூலமாகவே தனத்தை சம்பாதித்து அவர்களுக்கே உதவுவர்.
174 – ஒரு சமயம் பின்பழகராம் பெருமாள் ஜீயர் (நம்பிள்ளையின் மிகவும் அன்புக்குரிய் சிஷ்யர்) உடல்நலம் சரியாக இல்லாமல் இருந்தபோது மற்ற ஸ்ரீவைஷ்ணவர்களை அழைத்துத் தனக்கு விரைவாக குணமடைவதற்கு எம்பெருமானை ப்ரார்த்திக்கும்படி கேட்டுக்கொன்டார். இப்படி பெருமாளை வேண்டிக்கொள்வது ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணமில்லை – (ஒருவன் எதற்காகவும் எம்பெருமானை வேண்டிக் கொள்ளக் கூடாது – வியாதி போகும்படிகூட ப்ரார்த்தித்துக் கொள்ளக் கூடாது என்றால் அதற்காக மருத்துவரிடம் செல்வதைப் பற்றிக் கூறவும் வேண்டுமோ?) இப்படி இருக்கும்போது ஜீயர் எப்படி மற்ற ஸ்ரீவைஷ்ணவர்களை எம்பெருமானிடம் பிரார்த்தித்துக் கொள்ளச் சொல்வார் என்று மற்ற சிஷ்யர்கள் நம்பிள்ளையிடம் சென்று கேட்டனர். இப்படி ஜீயர் செய்ததற்குக் காரணம் என்ன என்று மற்ற ஆசார்யர்களிடம் அறிந்து வரும்படி நம்பிள்ளை தன் சிஷ்யர்களை அனுப்பினார். முதலில் ஸகல சாஸ்த்ரங்களையும் கற்ற எங்களாழ்வானிடம் சென்று சந்தேகத்தைக் கேட்டு பதில் அறிந்து வரும்படி கூறினார். அதற்கு எங்களாழ்வான் “ஜீயருக்கு ஸ்ரீரங்கத்தின் மேலுள்ள பற்றுதல் காரணமாக இன்னும் சில காலம் ஸ்ரீரங்கத்திலேயே இருக்க ஆசைப்படுகிறார் போலும் என்று கூறினார். பின் நம்பிள்ளை தன் சிஷ்யர்களை அழைத்து திருநாராயணபுரத்து அரையர் ஸ்வாமியிடம் இதற்கு காரணம் அறிந்து வரும்படி அனுப்பினார். பின்பழகியராம் பெருமாள் ஜீயருக்கு இன்னும் முடிக்கவேண்டிய முக்கியமான கடமைகள் இருப்பதால் அவர் மேலும் சில காலம் இப்பூமியில் தங்கியிருக்க ஆசைப்படுகிறார் போலும் என்று திருநாராயணபுரத்து அரையர் பதில் கூறி அனுப்பினார். பிறகு நம்பிள்ளை தன் சிஷ்யர்களை அம்மங்கி அம்மாள் ஸ்வாமியிடம் சென்று பதில் அறிந்து வருமாறு அனுப்பினார். அதற்கு அம்மாள் “யாருக்குத் தான் நம்பிள்ளையின் காலக்ஷேப கோஷ்டியை விட்டுப் பரமபதம் செல்ல ஆசையிருக்கும்? அதனால் அவர் மேலும் சில காலம் இங்கேயே தங்கியிருந்து நம்பிள்ளையின் காலக்ஷேபத்தை அனுபவிக்க நினைக்கிறார்” என்று கூறி அனுப்பினார். பின் நம்பிள்ளை தன் சிஷ்யர்களை பெரிய முதலியாரிடம் சந்தேகத்தைக் கூறி பதில் அறிந்து வருமாறு அனுப்பினார். அதற்கு பெரிய முதலியார் பின்பழகராம் பெருமாள் ஜீயருக்கு நம்பெருமாளின் மேல் உள்ள மிகுந்த ஈடுபாட்டினால் எம்பெருமானை விட்டு பரமபதம் செல்வதற்கு ஆசையில்லை போலும் என்று கூறினார். பின்னர் நம்பிள்ளை ஜீயரிடம், எல்லா ஸ்வாமிகளும் அவர் இவ்வுலகத்தில் மேலும் சில காலம் இருப்பதற்கு ஆசைப்படுவதின் காரணங்களைக் கூறியவற்றை எடுத்துரைத்து, அவர் அக்காரணங்கள் ஏதோ ஒன்றினால் தான் எம்பெருமானிடம் தனக்கு வியாதி சீக்கிரம் குணமாகும்படி வேண்டிக் கொள்ளச் சொன்னாரோ என்று வினவினார். அதற்கு ஜீயர் “உங்களுக்கு எல்லாம் தெறிந்திருந்தும் உங்களுக்கு என் மேலுள்ள தயை காரணமாக அதை என் வாயினாலேயே அறிய விரும்புகிறீர்கள்” என்று பதில் கூறினார். “நீங்கள் தினமும் நீராடிவிட்டு வரும்பொழுது என்னுடைய ஆசார்யரான உங்களைக் கண்குளிர தரிசித்து உங்களுக்கு ஆலவட்டம் வீசுவது முதலிய அந்தரங்க பணிவிடைகளைச் செய்வதை விட்டு நான் பரமபதம் செல்வதற்கு எப்படி ஆசைப்படுவேன்?” என்று பின்பழகராம் பெருமாள் ஜீயர் மிகவும் உயர்ந்ததான சிஷ்ய லக்ஷணத்தை (ஆசார்யனைப் பிரிந்திருக்கமுடியாத நிலை) வெளிப்படுத்தினார். இந்த பதிலைக் கேட்டு அனைவரும் ஜீயருக்கு நம்பிள்ளை மேலுள்ள குருபக்தியை நினைத்து மெய்சிலிர்த்தனர். குருபக்தியின் மேன்மையைப் பிள்ளை லோகாசார்யர் தம்முடைய ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்திரத்தில் (சூத்ரம் 333) விளக்கியுள்ளார் – “ஆசார்யன் சிஷ்யனுடைய ஸ்வரூபத்தைப் பேணக்கடவன்; சிஷ்யன் ஆசார்யனுடைய தேஹத்தைப் பேணக்கடவன்”. மணவாள மாமுநிகளும் தன்னுடைய உபதேச ரத்தின மாலையில் குரு பக்தியின் மேன்மையைப் பாசுர ங்கள் 65, 66 இல் வெளிப்படுத்தியுள்ளார்.
ஆசாரியன் சிச்சனாருயிரைப் பேணுமவன்
தேசாரும் சிச்சனவன் சீர்வடிவை ஆசையுடன் நோக்குமவனென்னும்
நுண்ணறிவைக் கேட்டுவைத்தும்
ஆர்க்கும் அந்நேர் நிற்கை அரிதாம் (65)

பின்பழகராம் பெருமாள் ஜீயர் பெருந்திவத்தில்
அன்பதுவுமற்று மிக்கவாசையினால் நம்பிள்ளைக்கான
அடிமைகள் செய் அந்நிலையை தன்னெஞ்சே
ஊனமற வெப்பொழுதுமோர் (66)

இப்படியாக நாம் எங்களாழ்வான் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களைப் பார்த்தோம். அவர் தம் வாழ்க்கை முழுவதும் பாகவத கைங்கரியத்திலேயே திளைத்திருந்தார். அவர் எம்பெருமானாரின் அன்புக்கு மிகவும் பாத்திரமானவராயிருந்தார். நமக்கும் சிறிதேனும் இப்படிப்பட்ட பாகவத நிஷ்டை கிடைக்கப் பெற வேண்டுமென்று அவருடைய திருவடிகளில் ப்ரார்த்திப்போம்.

ஸ்ரீ எங்களாழ்வான் தனியன்

ஸ்ரீவிஷ்ணுசித்த பத பங்கஜ ஸம்ச்ரயாய சேதோ மம ஸ்ப்ருஹயதே கிமத: பரேண
நோசேந் மமாபி யதிசேகரபாரதீனாம் பாவ: கதம் பவிதுமர்ஹதி வாக்விதேய:

————————————–

ஸ்ரீ நடாதூர் அம்மாள்

வந்தேஹம் வரதார்யம் தம் வத்ஸாபி ஜநபூஷணம்
பாஷ்யாம்ருத ப்ரதாநாத்ய ஸஞ்ஜீவயதி மாமபி–நடாதூரம்மாளின் தனியன்:

திருநக்ஷத்ரம்: சித்திரை, சித்திரை.
அவதார ஸ்தலம்: காஞ்சிபுரம்.
ஆசார்யன்: எங்களாழ்வான்.
சிஷ்யர்கள்: ஸ்ருத ப்ரகாசிகா பட்டர் (ஸுதர்சன சூரி), கிடாம்பி அப்பிள்ளார் மற்றும் பலர்.
பரமபதித்த இடம்: காஞ்சிபுரம்.
அருளிச்செய்தவை: தத்வ ஸாரம், பரத்வாதி பஞ்சகம் , கஜேந்திர மோக்ஷ ச்லோக த்வயம், பரமார்த்த ச்லோக த்வயம், ப்ரபன்ன பாரிஜாதம், சரமோபாய ஸங்கிரஹம், ஸ்ரீபாஷ்ய உபன்யாசம், ப்ரமேய மாலை, எதிராஜ விஜயாபநம் மற்றும் பல.
காஞ்சிபுரத்தில் அவதரித்த இவருக்கு, பெற்றோர்களால் வரதராஜன் என்ற திருநாமம் இடப்பட்டது. இவர் எம்பெருமானாரால் நியமிக்கப்பட்ட ஸ்ரீபாஷ்ய சிம்ஹாசனாதிபதிகளில் (தலைவர்) ஒருவரான நடாதூராழ்வானின் திருப்பேரனாவார்.

காஞ்சிபுரம் தேவப்பெருமாளுக்கு தினமும் இளம் சூடான பாலமுது ஸமர்ப்பிக்கும் சேவை செய்து வந்தார் . எப்படித் தாய் தன் குழந்தைக்குப் பாலை மிகவும் இளம் சூடான தகுந்த பதத்துடன் பருகத் தருவாளோ அப்படியே தேவப் பெருமாளுக்கும் செய்து வந்ததால், தேவப் பெருமாளே அவருக்கு அம்மாள் அல்லது வாத்ஸ்ய வரதாச்சார்யர் என்று அன்புடன் பெயரிட்டு கௌரவித்தார் .

அம்மாள் தன் பாட்டனாரிடம் ஸ்ரீபாஷ்யம் கற்றுக் கொள்ள ஆசைப்பட்டார். பாட்டனாருக்கு வயது முதிர்ந்த காரணத்தால் அவரை எங்களாழ்வானிடம் சென்று கற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தினார். அம்மாள் ஸ்ரீபாஷ்யம் கற்றுக் கொள்ள எங்களாழ்வான் திருமாளிகை (இல்லம் ) அடைந்து கதவைத் தட்டினார். எங்களாழ்வான் யார் அது என்று கேட்க, அதற்கு அவர் “நான் வரதன்” என்று சொல்ல, எங்களாழ்வான் “நான்” செத்தவுடன் திரும்பி வா என்று அனுப்பிவிட்டார் . அம்மாள் இல்லம் திரும்பிப் பாட்டனாரிடம் இதைப் பற்றி வினவினார். அதற்குப் பாட்டனார் நடாதூராழ்வான் சொன்னார் “நாம் எப்பொழுதும் அறிமுகம் செய்யும்பொழுது அடியேன் (தாசன் ) என்று பணிவுடன் கூறவேண்டும். நான், எனது என்ற சொல்லை உபயோக்கப்படுத்தக் கூடாது. அதுவே அஹங்காரத்தின் காரணமாகும்”. இந்த ஸம்ப்ரதாயத்தைப் புரிந்து கொண்டு அம்மாள் மறுபடியும் எங்களாழ்வான் திருமாளிகைக்குச் சென்று கதவைத் தட்டினார். இந்த முறை எங்களாழ்வான் யார் வந்திருப்பது என்று கேட்க, அம்மாள் “அடியேன் வரதன் வந்திருக்கிறேன்” என்று பதில் கூறினார் . எங்களாழ்வான் இவரது பணிவை மெச்சி, இவரை மனமுவந்து வரவேற்று சிஷ்யராக ஏற்றுக் கொண்டு அவர்க்கு எல்லா சிறந்த வைஷ்ணவ ஸம்ப்ரதாயக் கொள்கைகளையும் கற்பித்தார். நடாதூரம்மாளின் ஆசார்யனாக இருந்து அவரைச் சிறந்த அறிஞர் ஆக்கியதால் எங்களாழ்வான் “அம்மாள் ஆசார்யன்” என்று அறியப்படுகிறார்.

அம்மாளின் பிரதான சிஷ்யர் ச்ருதப்ரகாசிகா பட்டர் (ஸுதர்சன ஸூரி – வேத வ்யாஸ பட்டரின் பேரன் ) ஆவார். இவர் அம்மாளிடமிருந்து ஸ்ரீபாஷ்யத்தைக் கற்ற பிறகு ச்ருத ப்ரகாஸிகை என்னும் புகழ் பெற்ற விளக்கவுரையையும், வேதார்த்த ஸங்க்ரஹம் மற்றும் சரணாகதி கத்யத்திற்கும் விளக்கவுரைகளை அருளிச் செய்தார்.

ஒருமுறை அம்மாள் பல ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஸ்ரீபாஷ்யம் உபதேசித்துக் கொண்டிருந்தார். பக்தி யோகம் கடைபிடிப்பதற்கு மிகவும் கடினம் என்று அந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் கூறினர். அம்மாளும் அது கேட்டு ப்ரபத்தியை ப் பற்றி விளக்கினார். அவர்களும் ப்ரப்பத்தி நடைமுறைக்குக் கொண்டு வருவது மிகவும் கடினம் என்றார்கள். அப்பொழுது அம்மாள் ” எம்பெருமானார் திருவடிகளே சரணம் என்றிருந்தால் நீங்கள் உய்வடையலாம்” என்று கூறினார்.

இதே போன்ற சம்பவம் ஒன்று சரமோபாய நிர்ணயத்தில் வெளிப்படுத்தப் பட்டுள்ளது.

நடாதூரம்மாள் சில ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஸ்ரீபாஷ்யம் உபதேசித்துக் கொண்டிருந்தார். அச்சயமத்தில் அவர்களில் சிலர் அம்மாளிடம் ” ஜீவாத்மாவினால் பக்தி யோகத்தை கடைபிடிக்க முடியாது (அதற்கு தேவையான ஆண் என்ற அதிகாரத்துவம் , த்ரைவர்ணிகர் (ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைசிய என்ற வர்ணங்கள்) என்னும் அதிகாரம், மேலும் இடைவிடாது எம்பெருமானை த்யானித்தும் , தொண்டு செய்துகொண்டும் மற்றும் பல), ப்ரபத்தி செய்ய முடியாது தடுக்கும் ஸ்வரூபம் (எம்பெருமானையே சார்ந்திருக்கும் ஜீவாத்மா இந்தச் சார்ந்திருக்கும் தன்மைக்கு எதிராக, தானே இலக்குக்காக எதனையும் செய்யும் குணம்) என்ற இந்த சூழ்நிலைகளில் ஜீவாத்மா எவ்வாறு தன்னுடைய இலக்கை அடைய முடியும்?” என்று கேட்டனர். ” எவர்களால் இதைக் கடைபிடிக்க முடியவில்லையோ, அவர்களுக்கு எம்பெருமானாரது அபிமானமே இறுதியான வழி, இதைத் தவிர வேறு வழியில்லை, நான் இதை நிச்சயமாக நம்புகிறேன் ” என்று நடாதூரம்மாள் பதிலளித்தார். அம்மாளுடைய சரம உபதேசங்களை விளக்கும் பிரபலமான ச்லோகம், பின்வருமாறு:

ப்ரயாண காலே சதுரச் ச்வஸிஷ்யாந் பதாதிகஸ்தாந் வரதோ ஹி வீக்ஷ்ய
பக்தி ப்ரபத்தி யதி துஷ்கரேவ: ராமாநுஜார்யம் நமதேத்யவாதீத்

நடாதூரம்மாளின் இறுதிக் காலத்தில் அவரின் சிஷ்யர்கள் அவரிடம் சென்று எங்களுக்குப் புகலிடம் என்ன என்று கேட்க அதற்கு நடாதூரம்மாள் “பக்தியும் ப்ரபத்தியும் உங்கள் ஸ்வரூபத்திற்கு உகந்தது இல்லை, எம்பெருமானாரையே அடைக்கலம் புகுந்து அவரையே முழுமையாக சார்ந்து இருங்கள்; உங்களுடைய குறிக்கோள் நிறைவேறிவிடும்” என்று கூறினார்.

வார்த்தாமாலையில் சில இடங்களில் நாடாதூரம்மாளை பற்றி குறிப்பிடப்பட்டு உள்ளது. இப்போது அவற்றை நாம் காண்போம்.

118 – எங்களாழ்வான் நடாதூரம்மாளுக்குச் சரமச்லோகத்தின் அர்த்தத்தை விளக்கிக் கொண்டிருந்தார். “ஸர்வ தர்மான் பரித்யஜ்ய“- என்ற ச்லோகத்தின் பகுதியை எங்களாழ்வான் விளக்கிக் கொண்டிருக்கும் வேளையில், “சாஸ்திரத்தில் விவரிக்கப்பட்டுள்ள அனைத்து தர்மங்களையும் (உபாயங்களை) ஸ்வதந்த்ரமாகப் புறக்கணித்து எதற்காக எம்பெருமான் இப்படிக் கூறியுள்ளார்” என்று நடாதூரம்மாள் வியந்தார். இது பகவானுடைய உண்மை ஸ்வரூபம் – மற்றும் அவர் முழு ஸ்வாதந்திரியம் உள்ளவர் ஆவார்- ஆதலால் அவர் கூறுவது முற்றும் பொருந்தும் என்று எங்களாழ்வான் பதிலளித்தார். மேலும் “எம்பெருமான் ஜீவாத்மாவை அதன் இயற்கைக்கு எதிரான மற்ற உபாயங்கள் மேற்கொள்ளுவதிலிருந்து விடுவிக்கிறார், ஏனென்றால் பகவானையே முற்றிலும் சார்ந்திருக்கும் ஜீவாத்மாவுக்கு, அந்த பகவானையே உபாயமாக கொள்ளுவது மிக பொருந்தும்” என்றும் அவர் கூறினார். இதிலிருந்து பகவானுடைய வார்த்தைகள் முற்றிலும் சரியே என்று எங்களாழ்வான் உரைக்கிறார்.
198 – ஒருமுறை நடாதூரம்மாளும் ஆளிப் பிள்ளான் என்ற ஸ்ரீவைஷ்ணவரும் (அப்ராஹ்மண ஸ்ரீவைஷ்ணவர் அல்லது ஆசார்ய புருஷர் அல்லாதவர்) சேர்ந்து ப்ரசாதம் சாப்பிடும் பொழுது பெருங்கூர்ப்பிள்ளை என்ற ஸ்ரீவைஷ்ணவர் அவர்களைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியுடன் தாங்கள் இந்த ஸ்ரீவைஷ்ணவருடன் சுதந்திரமாகப் பழகுவதற்கும், நான் தற்போது கேட்ட பொதுவான விதிமுறைகளான வர்ணாச்ரம தர்மத்தை எப்போதும் மதிக்கவேண்டும் என்ற சாரத்தை முழுவதுமாக அடியேன் இழந்தித்திருப்பேன் என்று உரைத்தார் . அதற்கு அம்மாள் “உண்மையான ஆசார்யனின் தொடர்பு உள்ள யாராயினும்/எதுவாயினும் , அவர்களுடன்/அவற்றுடன் நாமும் தொடர்பு உள்ளவராக இருக்க வேண்டும். ஆதலால் இப்பொழுது அனுஷ்டானத்துடன் இந்த ஸ்ரீவைஷ்ணவருடன் பழகுவது கூட பூர்வாசார்யர்கள் விளக்கியது போல் பாகவத தர்மத்தின் சிறப்பு வழிமுறைகளுக்கு உட்பட்டது என்பதை புரிந்துகொள்ளவேண்டும்” என்று பதிலுரைத்தார் .
பிள்ளை லோகாசார்யரின் தத்வத்ரயம் சூத்திரம் 35 ல் மணவாளமாமுனிகள் தனது வ்யாக்யானத்தில், அம்மாளின் தத்வ சாரத்திலிருந்து ஒரு அழகான ஸ்லோகத்தை மேற்கோள் காட்டியுள்ளார் – ஜீவ ஸ்வதந்த்ரியம் (எம்பெருமான் ஜீவாத்மாவிற்கு அருளிய ஸ்வதந்திரம் )ஒவ்வொரு செயலின் முதல் நினைவாயும், அதை எவ்வாறு எம்பெருமான் ஜீவாத்மாவிற்கு முதல் நினைவாய் இருந்து ஒவ்வொரு செயலிலும் வழி காட்டுகிறான் என்பதையும் ஊர்ஜிதப்படுத்தியுள்ளார் .

இதுவரை நடாதூரம்மாளின் சிறப்பான வாழ்க்கைச் சம்பவங்களில் சிலவற்றை அனுபவித்தோம். அவர் முற்றும் கற்ற அறிஞர் மேலும் எங்களாழ்வானின் அன்புக்கு மிகவும் பாத்திரமானவர். நாமும் நமக்கு அத்தகைய பாகவத நிஷ்டை சிறிதாவது கிடைப்பதற்கு அவரது திருவடித் தாமரைகளில் ப்ரார்த்தனை செய்வோம்.

தேவராஜ மகாதேசிகனின் மகன் நடதூர் அம்மாள். இவர் சித்திரை மாதம் பௌர்ணமி நாளில் சித்ரா நட்சத்திரத்தில் பிறந்தார். (சில ஆராய்ச்சியாளர்கள் அவர் கி.பி. 1165 இல் பிறந்தார் என்ற முடிவுக்கு வந்துள்ளனர், அதற்குரிய தமிழ் ஆண்டு ‘பார்த்திவா’). வரதகுரு தனது புலமை மிக்க தந்தையால் அனைத்து பீடங்களிலும் நன்கு பயிற்றுவிக்கப்பட்டார், மேலும் தந்தை தனது மகனுக்கு ஸ்ரீ பாஷ்யம் கற்பிக்க முடிவு செய்தார். ஒரு நல்ல நாளில் தேவராஜ மகாதேசிகன் ‘அகில புவனா’ என்ற வார்த்தைகளுடன் தொடங்கும் பாடலின் அழைப்போடு கற்பித்தலைத் தொடங்கினார். ‘சகல ‘நிகிலா’ போன்ற சொற்கள் அனைத்தும் ஒரே பொருளைக் குறிக்கும் போது எம்பெருமானார் ‘அகில’ என்ற சொல்லை ஏன் தேர்வு செய்ய வேண்டும்’ என்ற கேள்வியுடன் தந்தையை நிறுத்தினார் இளையவரதகுரு. இருப்பினும், மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அடைந்த தந்தை, தனது மகனுக்குப் பதிலளித்தார், உதயவர் தனது மகத்தான படைப்பை நாராயண தேவராஜரைக் குறிக்கும் முதல் எழுத்துக்களைக் கொண்டு தனது மகத்தான படைப்பைத் தொடங்குவதாக இருந்தது, அதே நேரத்தில் அவருக்கு வயதாகிவிட்டதால் அறிவுஜீவிகளை அமைதிப்படுத்த போதுமான வலிமை இல்லை என்பதை நன்கு அறிந்திருந்தார். அவரது பையனின் பசி. எனவே அவரை திருவெள்ளறை எங்காள் ஆழ்வானிடம் அனுப்ப முடிவு செய்தார். ராமானுஜரால் அழைக்கப்பட்ட எங்காள் ஆழ்வான், கூரத்தாழ்வான் பார்வையற்றவராகிவிட்டதால், நடதூர் ஆழ்வானுக்கு வேலை எழுத உதவினார். எங்காள் ஆழ்வான் திருக்குருகைப்பிரான் பிள்ளையிடம் நல்ல பயிற்சி பெற்றுத் தனிமையில் வாழ்வதற்காகத் திருவெள்ளறைக்குச் சென்று ஓய்வு பெற்றார்.

குருவுக்கும் சீடருக்கும் இடையே நடக்கும் ஒரு சுவாரசியமான அத்தியாயம் வெளிச்சம். திருவெள்ளறையில் வரதகுரு எங்காள் ஆழ்வானின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து கதவைத் தட்டினார். ஆசிரியர் “யார் அது?” என்று கேட்டார். அதற்கு மாணவன், “நான் காஞ்சி நடதூர் தேவராஜ மகாதேசிகனின் மகன் வரதன்” என்றார். ஆசிரியர் பதிலளித்தார், “நான் இறந்த பிறகு அது யாராக இருந்தாலும் சரி. குழப்பமடைந்த வரதன் வீடு திரும்பி தந்தையிடம் கேட்டான். “நான்” என்ற சொல் ஈகோ அல்லது அஹம்காரத்தைக் குறிக்கிறது என்று தந்தை விளக்கினார், மேலும் ஆசிரியர் அவரிடம் தனது அகங்காரத்தை விட்டுவிட்டு அவரை அணுகுமாறு மட்டுமே கேட்டுக் கொண்டார். மேலும் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தின்படி, “நான்”, “நான்” என்று இல்லை, “அடியேன்” என்ற அழகான வார்த்தை மட்டுமே உள்ளது. வரதன் தன் தவறை உணர்ந்து, சிஷ்யனாக மட்டுமின்றி, தன் அன்பு மகனாகவும் தத்தெடுத்துக் கொண்ட எங்காள் ஆழ்வானை வணங்கினான். இருவரும் ஒன்றாகப் பயணம் செய்து, கோயில்களில் அர்ச்சனை செய்து வழிபட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கொல்லகொண்டா என்ற சிறிய குக்கிராமத்தை அடைந்தனர். எங்காள் ஆழ்வான் ‘விஷ்ணு புராணம்’க்கு விளக்கம் எழுதி, காலப்போக்கில் தனது சொர்க்க வாசஸ்தலத்தை அடைந்தார். கீழ்ப்படிதலுள்ள மகனாக, வரதசூரி அனைத்து இறுதி சடங்குகளையும் செய்து, திருவெள்ளறையில் தனது ஆச்சார்யாவின் அர்கா வடிவத்தை நிறுவினார். இந்த உருவ வடிவத்தில் வரதகுரு தனது குருவின் காலடியில் அமர்ந்திருப்பதைக் காணலாம். அவர் தனது தத்வசாரப் படைப்பின் தியான ஸ்லோகத்திலும் தனது ஆழ்ந்த ஆச்சார்ய பக்தியைக் காட்டியுள்ளார். திருவெள்ளறையில் அர்ச்சனை செய்யும் பொறுப்பை எங்காள் ஆழ்வானின் மகளின் குடும்பத்திற்கு வரதகுரு வழங்கினார். பின்னர் அவர்கள் ‘அம்மாலாச்சாரியார்கள்’ என்று அழைக்கப்பட்டனர். தன் குருவிடம் தன் கடமையைச் செய்த வரதகுரு காஞ்சிபுரம் திரும்பினார்.

காஞ்சியில், வரதகுரு கோவில் கருவறையின் கிழக்குப் பகுதியில் உள்ள ‘கச்சி வாய்த்தான் மண்டபம்’ அருகே ஸ்ரீ பாஷ்ய போதனையைத் தொடங்கினார். திருக்கச்சி நம்பிகளால் ஸ்ரீ ராமானுஜரால் முன்வைக்கப்பட்ட ஆறு கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, பகவான் தானே ஸ்ரீ பாஷ்ய விதைகளை விதைத்த தலம் என்பதால் அவர் இந்தத் தலத்தைத் தேர்ந்தெடுத்தார்.

வரதகுரு பல யாத்திரைகள் செய்தார். சேதுவில் ஒரு சைவனாகிய சிவசுலர், சோழ மன்னனின் அவையில் ஆனந்த மாதவாச்சாரியார், காசி மன்னன் முன் வெறியன் கும்பிசுதன் உட்பட பலருக்கு எதிராக வாக்குவாதத்தில் வெற்றி பெற்றார். காசி அரசர் அவரை சாரதா பீடத்தில் அமர்த்தி கௌரவித்தார். வரதகுரு ‘ஹேதிராஜஸ்தவம்’ இயற்றி ஒரு பிராமணனைக் காப்பாற்றினார். யாத்திரைக்குப் பின் காஞ்சிக்குத் திரும்பி ஸ்ரீ பாஷ்ய உபன்யாசத்தைத் தொடர்ந்தார். அவரது இனிமையான சொற்பொழிவும், சிறந்த சொற்பொழிவும் அப்புல்லார் என்ற ஆத்ரேய ராமானுஜம், வடக்கு திருவீதிப்பிள்ளை, கூரத்தாழ்வானின் கொள்ளுப் பேரன் சுதர்சன சூரி போன்ற பல சீடர்களைக் கவர்ந்தது.

ஒருமுறை, அம்மாளும் அவருடைய சீடர்களும் திருமலை மலைக்கு யாத்திரை மேற்கொண்டனர். அவர்களின் நேர்த்தியான ஆளுமை மற்றும் நடத்தை அனைவரையும் கவர்ந்தது. லாட இனத்தின் தலைவன் கந்தவரன் அவர்களைக் கண்டு எரிச்சலும் எரிச்சலும் அடைந்தான். அவர்களை தொந்தரவு செய்ய முடிவு செய்தார். தனது மந்திர சக்தியால் சீடர்களை மயக்கமடையச் செய்தார். அம்மாள் தியானம் செய்து, சுதர்சன மந்திரத்தையும், ‘ஹேதிபுங்கவஸ்தோத்ரம்’ என்ற தனது சொந்த இசையையும் உச்சரித்து மந்திரத்தை முறித்தார். கோபம் கொண்ட கந்தவரன், அம்மாளை விவாதத்திற்கு அழைத்தான், தோற்கடிக்கப்பட்டதும் ஆச்சாரியாரிடம் சரணடைந்தான். அருளும் குருவானவர் அவரை மன்னித்தது மட்டுமின்றி, அவருக்கு பஞ்சசம்ஸ்காரங்கள் வழங்கி ஸ்ரீவைஷ்ணவராகவும் ஆக்கினார்.கண்டவரன் வழங்கிய பணத்தில் அம்மாள் அழகிய கிராமத்தை நிறுவி அதற்கு ‘லாடக்ரஹாரம்’ என்று பெயரிட்டார். பின்னர் அவர் தனது பயணத்தைத் தொடர்ந்தார். வழியில், இறைவன் ஒரு இளம் பிரம்மச்சாரியாக வந்து, தயிர் மற்றும் சாதம் மூலம் பக்தர்களின் பசியைப் போக்கினார். அதேநேரம், நைவேத்தியத்துடன் கூடிய வெள்ளிப் பாத்திரம் திடீரென மாயமானதால், கோவிலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வெங்கடேசப் பெருமான் தாமே தனது அன்பான அம்மாளுக்கும், சீடர்களுக்கும் உணவளித்ததாகவும், அம்மாளை சகல மரியாதைகளுடன் பெறவும் கோயில் அதிகாரிகளுக்கு அறிவித்தார்.

வரதகுருவுக்கு வரதராஜப் பெருமானின் மேல் ஆழ்ந்த பக்தி இருந்தது. ஒரு நாள் இரவு, பரவச மனநிலையில் குலதெய்வத்தை வணங்கிக்கொண்டிருந்தபோது, ​​அர்ச்சகர் நிவேதனமாக இறைவனுக்கு மிகவும் சூடான பாலை கொண்டு வந்தார். அத்தகைய சூடான பால் இறைவனின் மென்மையான நாக்கை எரித்துவிடும் என்று வரதகுரு மிகவும் வேதனைப்பட்டார்! அவர் சூடான பாலை வழங்குவதை பாதிரியார் நிறுத்தி, அது குடிக்கும் அளவுக்கு சூடாகும் வரை குளிர்விக்கத் தொடங்கினார். இறைவனே வரதரின் வாத்சல்யத்தால் நெகிழ்ந்து அவரை ‘அம்மா!’ என்று அழைத்தார், அதாவது தமிழில் ‘அம்மா’. அன்றிலிருந்து வரதகுரு நடதூர் அம்மாள் ஆனார். இந்த நிகழ்வுக்குப் பிறகு, ஒரு இரவு கனவில், வரதராஜப் பெருமான் தனது வசந்தோத்ஸவத்திற்காக ஒரு மண்டபம் எழுப்பும்படி அம்மாளுக்குக் கட்டளையிட்டார். அதன்படி, ஒரு தாய் தன் மகனின் விருப்பத்தை கஷ்டங்கள் வந்தாலும் நிறைவேற்றுவது போல, இறைவனின் விருப்பத்தை அம்மாள் நிறைவேற்றினாள்.

ஷ்ருதபிரகாஷிகா ஸ்ரீ ராமானுஜரின் மகத்தான படைப்பான ‘ஸ்ரீ பாஷ்ய’ பற்றிய மிக விரிவான விளக்கமாகும். நடதூர் அம்மாள் ஆற்றிய காலக்ஷேப சொற்பொழிவுகளைக் கேட்டும், சொற்பொழிவுகளில் உள்ளவற்றை எழுதிக்கொண்டும் சுதர்சன சூரி தொகுத்ததால் இதற்கு இப்பெயர் வந்தது.

நடதூர் அம்மாள் மற்றும் சுதர்சன சூரி பற்றி ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது. நடாதூர் அம்மாளின் மாணவர்கள் அவருடைய சொற்பொழிவைக் கவனத்துடனும், தங்களுக்குப் பொருத்தமான கேள்விகளாலும் கேட்டுத் தெளிவு பெற்றனர். ஆனால் சுதர்சன சூரி மட்டும் அமைதியாக இருப்பார்; அவரிடம் கேட்க எந்த கேள்வியும் இல்லை. அவரது தோழர்கள் அவரைத் துட் என்று நிராகரித்தனர். ஒரு நாள் வழக்கம் போல் மாணவர்கள் விரிவுரை மண்டபத்தில் கூடியிருந்தனர். ஆனால் சுதர்சன சூரி வராததால் ஆசிரியர் விரிவுரையைத் தொடங்கத் தயாராக இல்லை. சொற்பொழிவின் போது சுதர்சன சூரி போன்ற கல் இருப்பதும் இல்லாமையும் ஒன்றே என்று மாஸ்டரை வற்புறுத்தி சொற்பொழிவைத் தொடங்க மற்ற மாணவர்கள் வற்புறுத்தினர். மாஸ்டர் இந்த வார்த்தைகளைக் கேட்டு வருந்தினார் மற்றும் சுதர்ஷனா சூரியின் ஆழ்ந்த புலமையை அறிந்து அதை வகுப்பிற்கு நிரூபிக்க முடிவு செய்தார். விரிவுரையின் போது, ​​ஆச்சார்யா சுதர்சன சூரியிடம் ஒரு எளிய சொற்றொடரை விளக்குமாறு கேட்டார். அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், சுதர்சன சூரி முந்தைய சந்தர்ப்பத்தில் தனது மாஸ்டர் வழங்கிய நேரடி அர்த்தத்தை மட்டுமல்ல, ஆழமான அர்த்தங்களையும் கொடுத்தார். ஆசிரியரே இதை எதிர்பார்க்கவில்லை. சுதர்ஷன சூரி ஒவ்வொரு இரவும் பனை ஓலைகளில் சொற்பொழிவின் உள்ளடக்கத்தை எழுதும் பழக்கம் இருப்பதாக விளக்கினார் மற்றும் வரதகுருவிடம் ஸ்கிரிப்டை வழங்கினார். இது ஷ்ருதபிரகாஷிகா என்று அறியப்பட்டது. பின்னர், சுதர்சன பட்டர் அதை விரிவுபடுத்தி 36,000 கிரான்தாக்களில் முடித்தார்.

அதன் பிழைப்பில், மாலிக் கஃபூரின் படையெடுப்பு உட்பட, ஷ்ருதபிரகாஷிகா தேசியக் காட்சியில் பல மாறுபாடுகளைக் கண்டார். ஸ்ரீ ஸ்வாமி தேசிகன், சாவைக் காட்டி, பிணங்களுக்கிடையில் செத்தவனைப் போலக் கிடப்பதன் மூலம் எழுத்தைக் காக்க ஒரு குறிப்பிடத்தக்க சேவை செய்தார். ஸ்வாமி வேதாந்த தேசிகரின் ஆச்சாரியார் அப்புல்லார் (ஆத்ரேய ராமானுஜம்) நடதூர் அம்மாளின் சீடராவார் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ நடாதூர் அம்மாள் ஸ்ரீ வரதராஜர் கோயிலின் கிழக்குப் பிரகாரத்தில் ஐந்து வயது ஸ்வாமி தேசிகனுக்கு அருள்பாலிப்பது ஸ்ரீ வைணவ வரலாற்றில் கொண்டாடப்படும் நிகழ்வாகும். இந்த நிகழ்வின் சித்தரிப்பு இன்றும் அதே இடத்தில் உள்ள கூரை ஓவியத்தில் காணப்படுகிறது. பக்தி கொண்ட ஸ்ரீ வைஷணவர்கள், ஸ்ரீ வரதராஜப் பெருமானை தரிசனம் செய்வதற்கு முன் இந்த இடத்தில் தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

நடதூர் அம்மாள் தனது ஸ்ரீ பாஷ்ய பிரவச்சனையை நூறாவது வயதிலும் தொடர்ந்தார். ஒருமுறை, அவரது சீடர்களில் ஒருவரான ஆத்ரேய ராமானுஜம் (அப்புள்ளார் என்று அழைக்கப்படுகிறார்), தூப்புளில் உள்ள அவரது சகோதரி தோடராம்பாவைப் பார்க்கச் சென்றிருந்தார்.  அவர் காஞ்சிக்குத் திரும்பியபோது, ​​அவருடைய ஐந்து வயது மருமகன், வேங்கடநாதரும் அவருடன் சென்றார். அவர்கள் காஞ்சியை அடைந்தவுடன், அப்புல்லார் தனது அன்பான ஆசிரியரைக் காணச் சென்றார்.

அப்போது, ​​நடதூர் அம்மாள் ஸ்ரீ பாஷ்யம் என்ற தலைப்பில் விஷ்ணு புராணத்தின் முக்கியத்துவம் குறித்து அங்குள்ள ஒரு பகுதியைக் குறிப்பிட்டு விரிவுரை செய்து கொண்டிருந்தார். பாடாய் பராசராசதம் என்ற ஒரு பாடலின் தொடக்க சொற்றொடரை விளக்கி அதன் ஆசிரியரான பராசர முனிவரின் பெருமையை விளக்கினார். அப்புல்லரும் அவரது மருமகனும் அவர் முன் பணிந்தபோது வரதகுரு தனது சொற்பொழிவை நிறுத்தினார் – அவர் குழந்தையின் பிரம்மவர்ச்சத்தால் ஈர்க்கப்பட்டார். விசாரித்ததில், அப்புல்லார், தனது சகோதரி திருமலை மலைக்கு யாத்திரை சென்ற பிறகு, கோயிலின் பெரிய மணியை விழுங்குவது போல் கனவு கண்டபோது குழந்தை பிறந்ததாகக் கூறினார். குழந்தைக்கு தெய்வீக தோற்றம் இருந்ததில் ஆச்சரியமில்லை! அம்மாள் குழந்தையை ஆசிர்வதித்து, சொற்பொழிவை நிறுத்திய இடத்திலிருந்து எடுக்க முயன்றார். ஆனால், அந்த இணைப்பை அவரால் நினைவில் கொள்ள முடியவில்லை, இருந்த யாராலும் அவரை வழிநடத்த முடியவில்லை. அனைவருக்கும் ஆச்சரியமாக, சிறிய வேங்கடநாதர் பிராகிருத சொற்றொடரைப் பயன்படுத்தி ஆச்சார்யாவை அவர் நிறுத்திய இடத்தை நினைவுபடுத்தினார். குழந்தை ஒரு அவதாரம் என்பதை புரிந்து கொண்ட அம்மாளின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அந்தக் குழந்தை வேதாந்த சமயத்தை நிலைநாட்டவும், மதவெறியர்களுக்கும் அவர்களின் பொய் வாதங்களுக்கும் பயமுறுத்துவதாகவும், தெய்வீகக் குழந்தை வேங்கடநாதரை முழு மனதுடன் ஆசீர்வதித்தார். அவர் மிகவும் வயதானவராக இருந்ததால், அவர் தனது சீடர் அப்புல்லாரை வேங்கடநாதரின் குருவாகவும், ஸ்ரீ பாஷ்யத்தைக் கற்பிக்கவும் கூறினார். நடாதூர் அம்மாளின் அருளே சாதாரண வேங்கடநாதரை வேதாந்த தேசிகனாக மாற்றியது என்பதை ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் அவர்களே

அதிகார சரவலி, தத்வ முக்த கலாபம், நியாய சித்தாஞ்சனம் தத்வாதிகா போன்ற நூல்களில் திரும்பத் திரும்ப எடுத்துரைத்துள்ளார் . ஸ்வாமி தேசிகனை அம்மாள் அருளிய அதே ஸ்லோகத்தை ஸ்ரீ தேசிகன் தனது சங்கல்ப சூர்யோதயத்தில் சேர்த்துள்ளார் . நடதூர் அம்மாளின் இந்த அருளைப் பற்றி ஸ்ரீ தேசிகனின் மகனும் தன் தந்தையின் மங்களாசாசனத்தில் பதிவு செய்துள்ளார்.

வரதகுரு ஒரு சிறந்த பக்திமான் ஆவார், அவர் இறைவனிடமே ‘அம்மாள்’ என்ற பட்டத்தைப் பெற்றார். அதே சமயம் அம்மாளின் புலமைப் பங்களிப்பையும் மறந்துவிடக் கூடாது.

பின்னர் ஷ்ருதப்பிரகாசமாக மாறியதைக் கூறுவதைத் தவிர, நடதூர் அம்மாள் பின்வரும் பத்தொன்பது படைப்புகளைப் படைத்துள்ளார்:
1. தத்த்வாசரம்
2. பிரபன்ன பாரிஜாதம்
3. பிரமேயமாலா
4. அன்னிகா சூடாமணி
5. ஆராதனா கிராமம்
6. பிரமேய சாரம்
7. மங்களாசாசனம்
8. ஞானநந்தி
8. ஞானநந்தி
10. ஹெதிராஜா ஸ்தவம்
11. ரஹஸ்ய ஸங்க்ரஹம்
12. சதுர்லக்ஷண சங்கிரஹம்
13. பரதத்வ நிர்ணயம்
14. த்ரமிதோபநிஷத் ஸங்க்ரஹம்
15. ஸ்ரீ பாஷ்ய ஸங்க்ரஹம்
16. பிரதரனுசதேய ஸ்லோகங்கள்
17. பரமார்த்த ஶ்லோகாத்வயம்
18. பரத்வாதி பஞ்சாங்கத்தில்
பரத்வாதி பஞ்சாங்கம்.

நூற்றுப் பத்து வருடங்கள் நீண்ட ஆயுளுக்குப் பிறகு, யுவா வருடம் (கி.பி. 1275) தமிழ் மாசி மாத சுக்லபக்ஷ பஞ்சமி அன்று நடதூர் அம்மாள் பரமபதத்திற்குப் புறப்பட்டார்.

அம்மாளுக்கு ஸ்ரீ வரதவிஷ்ணு, ஸ்ரீ தேவராஜர், ஸ்ரீ சுதர்சனர் மற்றும் ஸ்ரீ ஹேதிசா ஆகிய நான்கு மகன்கள் இருந்தனர்.

ஸ்ரீ நடதூர் அம்மாளின் வாழ்க்கை வரலாறு வரததேசிகாப்யுதயம் மற்றும் வரததேசிக வைபவ பிரகாசிகா ஆகிய இரண்டு படைப்புகளிலிருந்து இணங்கியுள்ளது. இந்த இரண்டு படைப்புகளின் ஆசிரியரான மீமாம்ச வல்லபா, எட்டு சர்கங்களைக் கொண்ட முன்னாள் காவியம் ஹேமமாலி தேசிகாவின் ஆச்சார்ய தீபத்தின் சுருக்கப்பட்ட வடிவம் என்று கூறுகிறார். இரண்டு ஆசிரியர்களும் நடதூர் அம்மாளின் வழித்தோன்றல்கள். மீமாம்ச வல்லபர் நடதூர் அம்மாள் மீது மட்டும் ஒன்பது படைப்புகளை இயற்றியுள்ளார்:
1. வரததேசிக சுப்ரபாதம்
2. வரததேசிக தண்டகம்
3. வரததேசிக கத்யம்
4. வரததேசிக பஞ்சாஷத் 5. வரததேசிக அஷ்டோத்ர
ஷதநாம ஸ்தோத்ரம் 6. வரததேசிக சம்பிரதாயம் வைபவ 8. வரததேசிக பிரபவ தீபம் 9. வரததேசிகாப்யுதயம்

—————

ஸ்ரீகுரு வரவத்ஸ்ய வரதாச்சாரியாரால் அருளிச் செய்யப்பட பிரபந்த பாரிஜாதம் –

இந்த புத்தகம் 12 ஆம் நூற்றாண்டின் துறவியான வேதாந்த தேசிகத்தின் போதகரின் போதகராக இருந்த ஸ்ரீ வாத்ஸ்ய வரதகுரு (நடத்தூர் அம்மாள் என்று மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது) என்பவரால் எழுதப்பட்டது.

நடதூர் அம்மாள் ஸ்ரீ வைஷ்ணவ தத்துவத்தில் முதன்மையான அறிஞர் மற்றும் வரதராஜப் பெருமானிடம் ஆழ்ந்த பக்தி கொண்டவர். வரதராஜப் பெருமானிடம் அவர் கொண்டிருந்த அதீத பக்தி அவருக்கு “அம்மாள்” என்ற பெயரைப் பெற்றுத் தந்தது, இறைவனே அவரை “அம்மா!” என்று அழைத்தார். அவரது தாய் பாசத்தால் நெகிழ்ந்தார்.

பிரபந்ந பாரிஜாதா என்ற பெயர் இந்த படைப்பிற்கு ஆசிரியரால் வழங்கப்பட்டது.

பிரபந்ந என்பது ஒரு சமஸ்கிருத வார்த்தை, இதற்கு முழுமையான ‘சரணடைதல்’, ‘அர்ப்பணிப்பு’ என்று பொருள். அனைத்து வகையான மக்களுக்கும் எளிதாக்க, ஸ்ரீ வைஷ்ணவ பாரம்பரியத்தின் பெரிய பரம-ஆச்சார்யரான ராமானுஜர், ஒரு நபர் வெறும் ‘பிரபந்நனாக’ இருக்க வேண்டும், அதாவது கடவுளிடம் முழுமையாக சரணடைந்தவர் என்று கூறினார்.

சமஸ்கிருதத்தில் பாரிஜாதா என்பது ‘வம்சாவளி’, ‘பிறந்தவர்’ அல்லது ‘முழு வளர்ச்சியடைந்தது’ போன்ற அர்த்தங்களை வழங்கலாம். ஆசிரியரே பின்னர் உரையில் இதை இவ்வாறு வரையறுக்கிறார்:

“அதாவது, நல்லொழுக்கமுள்ள குணத்தின் அத்தியாவசியத் தேவைகள் பல்வேறு ஆதாரங்களில் இருந்து இங்கே சேகரிக்கப்பட்டுள்ளன.”

எனவே நான் இங்கு பாரிஜாதத்தை ஆன்மீக பாரம்பரியம் அல்லது கருவூலம் என்ற பொருளில் எடுத்துள்ளேன்.

“பாரிஜாதா” என்ற வார்த்தைக்கு இன்னும் ஒரு பாரம்பரிய அர்த்தம் உள்ளது – வேத மத நூல்களின்படி பாரிஜாதா என்பது ஒரு வான ஆசை-நிறைவேற்ற மரமாகும், அதன் நிழலில் இருக்கும் போது விருப்பங்களைச் செய்பவர்களுக்கு விரும்பிய அனைத்து பழங்களையும் அளிக்கும் திறன் கொண்டது.

வேலை பத்து பத்தாதிகள் அல்லது அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. அழைப்பிதழ் பகுதியைக் கொண்ட 5 வசனங்களுக்குப் பிறகு பின்வரும் பத்து அத்தியாயங்களில் பின்வரும் தலைப்புகள் கையாளப்படுகின்றன:—

  1. பிரமாண பத்தாதி – பிரபத்திக்கான அதிகாரிகள் மீது
  2. ஸ்வரூப பத்தாதி – பிரபத்தியின் தன்மை மீது
  3. அதிகார பத்தாதி – நடைமுறையின் உரிமை.
  4. குரு உபாஸனா பத்தாதி – குருவின் சேவையில்.
  5. பகவத் பரிச்சார்ய பத்தாதி – கடவுளின் இரட்சிப்பு நடவடிக்கைகள்.
  6. பகவத் பரிஜன உபாசனா பத்தாதி – கடவுளின் உதவியாளர்களின் வழிபாடு
  7. பகவத் உபாஸனா பிரதாதி – நல்லொழுக்கமுள்ளவர்களுக்கு சேவை செய்தல்
  8. விஹிதா-வ்யவஸ்தான பத்தாதி – பரிந்துரைக்கப்பட்ட கர்மாவின் நிர்ணயம்
  9. வர்ஜனிய பத்தாதி வரை –
  10. பலோதய பத்ததி – பழத்தின் விடியலில்

பிரபன்ன பாரிஜிதா

அடைக்கலம் தேடுபவரின் பாரிஜாதம்

  1. ஸ்ரீ பாஷ்யத்தின் வர்ணனையின் அமிர்தத்தைக் கொடுத்து என்னையும் உயிர்ப்பிக்கும் வத்ஸர்களின் குடும்பத்தின் அலங்காரமான வரதார்யாவை நான் வணங்குகிறேன்.
  2. பல சூரியங்களைப் போன்ற ஆசிரியர்களின் பாதங்களுக்கு எண்ணற்ற வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன்.
  3. அழியாத செயல்களின் வரங்களால் முனிவர் குணத்தை அடைந்து பெரும் பிரகாசம் கொண்ட குதிரைத் தலை கடவுளுக்கு (ஹயக்ரீவருக்கு ) வணக்கம்.
  4. லக்ஷ்மியின் கண்ணை இடைவிடாமல் தியானித்து, அதனுடன் உவமை அடைந்து, மீனின் வடிவத்தை (மினவபுஹ்) அடைந்து, வேதங்களை அருளியவரை (பிரம்மா) ஆபத்திலிருந்து விடுவித்த கடவுளுக்கு நமஸ்காரம். .
  5. துறவிகளின் பாதங்களின் தூசியின் கீழ் (ரஜஸ்) தஞ்சம் அடைந்து, உணர்ச்சிகளின் (ரஜஸ்) துன்பத்தை குணப்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தது, பிரபன்ன பாரிஜாதா எனப்படும் படைப்பை உருவாக்க முயற்சிப்போம்.

அத்தியாயம் I

பிர பத்திக்கு அதிகாரிகள் மீது

1-2

வேதாந்தம் மற்றும் பிற படைப்புகளின் போதனைகளை சுருக்கமாகக் கூறுவதன் மூலம், இந்த பத்து தலைப்புகளில் நாம் இங்கே கையாள்வோம்:

(1) பிரபத்திக்கு (கடவுளிடம் அடைக்கலம் புகுதல்) பெரிய அதிகாரிகள் –
(2) அதன் இயல்பு –
(3) அதை நடைமுறைப்படுத்த தகுதியுள்ள நபர்கள் –
(4) ஒரு பிரபன்ன (தஞ்சம் அடைபவர்) குருவை நோக்கிய கடமைகள் ( ஆன்மீக போதகர்) –
(5) கடவுளை நோக்கி –
(6) நித்தியங்களை நோக்கி
மற்றும் – (7) மற்ற பக்தர்களிடம் –
(8) பரிந்துரைக்கப்பட்டவர்களிடமிருந்து கடமைகளைத் தீர்மானித்தல் சாஸ்திரங்கள் மற்றும் –
(9) தவிர்க்கப்பட வேண்டிய நடைமுறைகள் மற்றும்
(10) அதன் விளைவு.

என்னுடைய ஒரே முயற்சி, தொடர்ந்து சிந்தித்து, பெற்ற போதனையை மனதில் பதிய வைப்பதே தவிர, வேறெதுவும் இல்லை. இதில் காணப்படும் ஏதேனும் தவறுகள் விஷயத்தின் சிக்கலான தன்மையின் காரணமாக நல்லவர்களால் மன்னிக்கப்பட வேண்டும்.

பிரபத்தி (கடவுளிடம் அடைக்கலம் தேடுவது) முதலில் தைத்திரியத்தின் வேதத்தில் பரிந்துரைக்கப்படுகிறது மற்றும் அங்கு, “வசூரன்யா” என்று தொடங்கும் ஸ்துதி (மந்திரம்) இல், இது நயாஸ (அதாவது ஒருவரின் சுயத்தை கடவுளிடம் ஒப்படைத்தல்) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ) அதன் செயல்பாட்டுடன்.

தவத்திற்குப் பொருளானவரும், அனைத்திற்கும் காரணமானவரும், எல்லாவற்றிலும் வியாபித்திருப்பவரும், அனைத்தையும் உருவாக்குபவருமான பரம ப்ரஹ்மன், தேடப்படுவதற்குத் தகுதியானவர் என்று கூறப்பட்டுள்ளது – அவரது மகிமை இவ்வாறு பாடப்பட்ட ப்ரஹ்மன். :-

“முந்தைய சுழற்சியைப் போலவே சூரியனுக்கும் (இப்போது) ஒளியைக் கொடுப்பவர் நீங்கள்; நீங்கள் விலைமதிப்பற்ற ரத்தினங்களைப் போல புத்திசாலித்தனமாகவும் அழகாகவும் இருக்கிறீர்கள்!”

” ஜீவாத்மாவை (தன்னை) பிரசாதமாக ஆக்கி, ஒருவன் அதை ப்ரஹ்மனின் மகிமையான நெருப்பில் தியாகம் செய்ய வேண்டும், யாருடைய உடம்பு இருக்கிறதோ, அது வேதங்களின் சாரமான ஓம் என்ற மந்திரத்தை மீண்டும் சொல்கிறது.”

இவ்வாறு பிரபத்தியின் பயன்பாடு புனித நூல்களில் பிரணவ (ஓம் என்ற புனித எழுத்து) வடிவத்தை எடுத்துக் கொள்ள அறிவிக்கப்பட்டுள்ளது; அதற்கேற்ப அதை அறிந்தவர்களின் உடலில் அது ஒரு தியாகமாக குறிப்பிடப்படுகிறது.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு தவங்களில், நயாசா எனப்படும் பிரபத்தி மிக உயர்ந்ததாகக் கூறப்படுகிறது. பிரபத்தியின் முதன்மை மந்திரமாக கடா வல்லியில் த்வயமாக கருதப்படுகிறது .

ஸ்வேதாஸ்வதார உபநிஷத் மிகவும் சாதகமான அதிகாரமாக குறிப்பிடப்பட்டுள்ளது [பிரபத்தியின் இந்த விஷயத்தில்]. இந்த உபநிடதம், நடைமுறையின் போக்கைப் பற்றி பேசுகையில் பின்வருமாறு கூறுகிறது: –

“ஆத்ம ஞானத்தைப் பெறுவதற்கு, முக்தியை விரும்பும் ஒருவன், ஆரம்பத்தில் பிரமனைப் படைத்து, வேதங்களைக் கற்றுக் கொடுத்தவனிடம் அடைக்கலம் புக வேண்டும்.”

“ஒரு பிரபன்னன் (அடைக்கலம் தேடுபவன்) கொல்லப்படுவதற்கு தகுதியானவனாக இருந்தாலும் அவன் கைவிடப்படுவதில்லை.” இது போன்ற பல வேதப் பகுதிகளும் இந்த விஷயத்தில் அதிகாரம் பெற்றவை.

மேலும் ஸ்ரீ சாஸ்திரத்தில் (பாஞ்சராத்ர ஆகமம் ) பகவான் (விஷ்ணு)
பிரம்மாவுக்கு ‘ஸ்ரீமன் நாராயணா’ என்ற வார்த்தைகளுடன் தொடங்கும் த்வய என்ற மந்திரத்தை லக்ஷ்மி தந்திரத்தில் லக்ஷ்மி இந்திரனுக்கு விளக்கியதைப் போலவே உபதேசித்தார்.

சனத்-குமார சம்ஹிதா, பிரபத்தி எல்லா ஆசைகளின் பலனையும் தருகிறது மற்றும் மற்ற எல்லா வழிகளிலும் இல்லாமல் [ஒருவரின் இலக்குகளை அடைவதற்கு] சுதந்திரமானது என்று மரியாதையுடன் குறிப்பிடுகிறது.

இவ்வாறு பிரபத்தி வேறு எந்த வழியிலும் முற்றிலும் சுதந்திரமாக உள்ளது . அது எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் எல்லா நபர்களுக்கும் எல்லா ஆசைகளின் பலனையும் (தன்னையே) அளிக்கிறது.

சம்சாரத்தின் பந்தத்தை ஒருமுறை கூட உச்சரிக்கும்போது அது துண்டிக்கிறது.

பிரம்மாவின் ஏவுகணை எதிர்க்க முடியாததாக இருந்தாலும் அதைத் தடுத்து நிறுத்தும் திறன், ராக்ஷஸர் (அதன் சக்தியில்) அனுமனைக் கட்டுவதில் இருந்த அவநம்பிக்கையின் காரணமாக, ஒரேயடியாக செயலிழக்கச் செய்யப்பட்டதால், பிரபத்தி நம்பிக்கையின்மையிலிருந்து பயனற்றதாகிறது .

எனவே, அதில் நம்பிக்கை வைப்பவர்களுக்கு அது சுதந்திரம் (முக்தி) தரும். மற்ற வழிகளுடன் இணைந்தோ அல்லது தானாகவோ, பிரபத்தி பிராணவத்தைப் போலவே முக்தியை விரும்புவோரின் சுதந்திரத்தை நிறைவேற்றுகிறது.

பகவான் (விஷ்ணு) கவனமுள்ள விஸ்வக்சேனரிடம் பின்வருமாறு தெளிவாகக் கூறியுள்ளார்:

“[சுய விடுதலையின்] பிற வழிகளைப் பின்பற்றுவது கடினம்; ஏனெனில் பயிற்சி செய்யத் தேவையான தகுதிகளை இழக்கும் ஆபத்து எப்போதும் உள்ளது [அந்த வழிமுறைகள்]:

இதன் விளைவாக, அனைவருக்கும் பொதுவான ஒரு [விடுதலை] முறையை நான் இப்போது குறிப்பிடுகிறேன்.

“காலத்தின் எதிர்மறையான செல்வாக்கின் காரணமாக, மனதின் நிலையற்ற தன்மையின் காரணமாக, புலன்கள் அவற்றின் பொருள்களின் மீது பற்றுதல் காரணமாக, தடைசெய்யப்பட்ட செயல்களில் ஈடுபடுவதால், செய்ய வேண்டியதைச் செய்யாததன் காரணமாக. , மற்றும் நாம் வாழும் காலங்களின் (பாதகமான) தன்மை காரணமாக, –
சேனைகளின் தலைவரே! சிற்றின்பத்திற்கான உந்துதலை வெல்வது இயலாது.”
“எனவே, பெரிய முனிவரே! அனைவருக்கும் கர்ம யோகம் 10 க்கு தகுதி இல்லை ; ஏனென்றால் [வேதத்தில்] பல பரிந்துரைக்கப்பட்ட கடமைகள் உள்ளன, மேலும் அவற்றைச் செய்ய அனைவரும் தகுதியற்றவர்கள் அல்ல

“மிகச் சிலரே ஞான யோகத்தின் பாதையைப் பின்பற்றுவதில் ஆர்வம் கொண்டுள்ளனர் . அத்தகைய [ஆர்வமில்லாத] பாசமோ (பிரிதி) உயர்ந்த அன்போ (பக்தி) என்மீது எழுவதில்லை

“எனவே, கர்ம யோகத்தையோ அல்லது வேறு எந்த யோகத்தையோ கடைப்பிடிக்க எந்தத் தகுதியும் இல்லாததாலும், பின்பற்றுவதற்கு வேறு எந்த வழியும் இல்லாததாலும், ஒருவன் என் பாதங்களைத் தஞ்சம் அடைய வேண்டும்.”

“ஒருவருக்கு ஏற்பட்ட பரிதாபகரமான நிலையை நன்றாகக் கருதி, எனது [கவர்ச்சிகரமான] குணங்களையும் கருத்தில் கொண்டு, நான் மட்டுமே வழி என்ற முழு உணர்வோடு என்னை நாடுபவன் என்றென்றும் விடுதலை பெறுகிறான்.

[அவரது விருப்பத்திற்கு] இணங்கச் செயல்படுவதற்கான தீர்மானம் [அதற்கு] எதிர்ப்பு [அதற்கு] இல்லாமை, அவர் பாதுகாப்பார் என்ற நம்பிக்கை மற்றும் அவரது பாதுகாப்பிற்காக வேண்டுகோள்; ஒருவரின் சுயத்தை ராஜினாமா செய்தல் [அவரிடம் – ஆத்ம-நிக்ஷேபா] மற்றும் உதவியற்ற உணர்வு –
இவையே சரணாகதியின் (அடைக்கலம்) ஆறு அம்சங்களாகும் .

“இந்த [செயல்முறையின்] பிரபத்தியின் மூலம், என்னை மாதவனாக (லக்ஷ்மியின் இறைவன்) அறிந்து, வேறு வழியில்லை என்ற உணர்வால் வழிநடத்தப்பட்டு, என்னிடம் அடைக்கலம் புக வேண்டும். இவ்வாறு என்னில் இளைப்பாறும் ஒருவன் இலக்கின் நிறைவை அடைகிறான்.”

பகவான் (விஷ்ணு) இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் இவ்வாறு அறிவித்துள்ளார்: —

“என்னிடம் ஒரே ஒரு முறை பாதுகாப்புத் தேடி, என்னிடம் மன்றாடியவருக்கு; நான் உன்னுடையவன்! எல்லா உயிர்களின் பயத்திலிருந்தும் நான் பாதுகாப்பு அளிக்கிறேன். இது என் சபதம்”.

“எல்லா சுயமாகத் தொடங்கப்பட்ட விடுதலை வழிகளையும் (தர்மங்களை) துறந்து, தங்குமிடத்திற்காக என்னிடம் தனியாக வாருங்கள்; உன்னுடைய எல்லா கர்ம வினைகளிலிருந்தும் உன்னை விடுவிப்பேன். துக்கப்பட வேண்டாம்” ( கீதை 18:66 )

வசிஷ்டரின் வரத்தின் மூலம் தெய்வத்தைப் பற்றிய உண்மையை அறிந்த பராசரரும் விஷ்ணு புராணத்தில் பின்வருமாறு கூறினார்:

“எல்லாப் பாவங்களையும் அழிப்பவனான உன்னிடம் (விஷ்ணு) அடைக்கலம் புகும் வரை ஒருவன் துன்பத்தையும் ஆசையையும் மாயையையும் துன்பத்தையும் அனுபவிப்பான்!”

“யாமனின் தூதுவர்களே! என்று கூறும் பாவமற்ற மனிதர்களிடமிருந்து வெகு தொலைவில் இருங்கள்: –

‘ஓ தாமரைக் கண்களையுடைய வாசுதேவா! விஷ்ணு (பிரபஞ்சத்தின் வியாபி)! பூமியின் ஆதரவாளனே! மாறாதவர்! சங்கு மற்றும் வட்டு தாங்குபவன்! எங்களுக்கு அடைக்கலமாக இருங்கள்!”

நான்கு சாதிகள் (வர்ணம்) மற்றும் வாழ்க்கையின் நான்கு ஒழுங்குகள் (ஆஷ்ரமம்) ஆகியவற்றின் கடமைகளைக் கூறும்போது, ​​மனு முனிவர் சன்யாசத்தின் (சுய சரணாகதி) மகிமையையும் தலைப்பின் கீழ் குறிப்பிடுகிறார்:—

“நாராயண வழிபாடு”.

“உன் இதயத்தில் வாழும், உள்ளிருந்து புலன்களைக் கட்டுப்படுத்துபவன், விவஸ்வானில் வசிப்பவன் – சூரியன், ராஜா – ஆட்சியாளரான யமன் யார் என்பதில் உங்களுக்கு எந்த விவாதமும் இல்லை என்றால், கங்கைக்குச் செல்ல வேண்டாம். குருக்ஷேத்திரத்திற்கும் அல்ல.”

“இதயத்தில் வசிப்பது” என்பது முதன்மையாக தெற்கு திசையின் அதிபதியான யமனை (மரணத்தின் கடவுள்) சார்ந்தது அல்ல, ஆனால் அனைத்து உயிரினங்களின் ஆட்சியாளரான அவருக்கு, அவற்றில் நுழைந்து, அவை அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது; சுயத்தில் (ஆத்மன்) மறைந்திருப்பவர் மற்றும் மரணத்தின் கடவுளுக்கு கூட மரணமாக இருக்கிறார்;

எனவே “அவர் இதயத்தில் நிலைத்திருக்கிறார்”; அனைத்திற்கும் அதிபதியான, சூரியனின் வட்டில் வசிப்பவனான “அவருடன் எந்த விதமான சர்ச்சையும் இல்லை” என்பது, அவனுடைய பாதங்களில் தன்னைச் சரணடைவதாகும்.

“உண்மையில் இருந்து வேறுபட்டு சுயத்தை கருத்தரிப்பவர், ஒரு பெரிய பாவி, உண்மையில் சுயத்தை (ஆத்மான்) திருடிய ஒரு திருடன்.”

“ஆகையால், தீர்த்தங்கள் (புனித ஸ்தலங்கள்) முதலியவைகள் கூட, அனைவருக்கும் அதிபதியான, அனைவரின் இதயங்களிலும் நிலைத்திருக்கும் இறைவனிடம் அடைக்கலம் புகுந்தவர்களால் தூய்மைப்படுத்தப்படுகின்றன.

இந்த யோசனை ஷௌனகா 13 மற்றும் பிற பெரிய முனிவர்களால் பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது : —

“அரசே, உங்கள் மனம் விஷ்ணுவிடம் அர்ப்பணிக்கும் வரை நீங்கள் தீர்த்தங்களை (புனித ஸ்தலங்களை) தொடர்ந்து தரிசிக்கலாம்.”

“ஓ வலிமையான ஆட்சியாளரே! உங்களைப் போன்ற பக்தர்கள் தங்களைப் புனிதமாக ஆக்கிக் கொண்டவர்கள்,
தங்களுக்குள்ளேயே வசிக்கும் மஸ்தாபி (விஷ்ணு) மூலம் தீர்த்தங்களைப் புனிதப்படுத்துகிறார்கள்.”

பிரபத்திக்கு இதுவே போதுமான வேதச் சான்று. சௌனகர் மற்றும் வியாசர் (விஷ்ணு-தர்மம் மற்றும் மகாபாரதத்தில் முறையே இவ்வாறு அறிவித்துள்ளனர்:-

“நீங்கள் பல பிறவிகளை கடந்து வந்திருக்கிறீர்கள். அவர்களில் யாரையாவது நன்றாகக் கருதி, அடைக்கலத்தை நாடுங்கள்!”

“ஓ பாரதா! வீழ்ந்துவிடுமோ என்று பயப்படுகிற நீங்கள், மற்ற எல்லா திட்டங்களையும் கைவிட்டு, உங்கள் முழு மனதையும் நாராயணரிடம் அர்ப்பணியுங்கள்.

——————————

150 ஸ்லோகங்கள் கொண்ட பிரபந்தம்
சரணாகதி -சரணம் -ஆகதி -உபாயத்தை வரவைப்பது

அஹம் மத் ரக்ஷண பரோ மஹா ரக்ஷண பலம் ததா
ந மம ஸ்ரீ பதிரேவ இதி ஆத்மாநம் நிஷிபேத் புத்திர்
-1- -ந்யாஸ தஸகம்

—————–

ஆச்சார்ய ஆரியமா பாதேப்யோ நமஸ்யா ததே
யதாஸங்க வஸாத் பும்ஸாம் மந பத்மம் ப்ரபுத்யதே
-1-

ஆச்சார்யர் திருவடிகளே அநேக ஸூர்ய துல்யம்
தேஜோ நிதி -பாவனத்வம் -பரப்ரகாஸத்வம் -வேதமயம் -பகவத் அதிஷ்டிதம் –

இத்தால் தமது குரு பரம்பரை
எங்கள் ஆழ்வான்
திருக்குருகைப் பிரான் பிள்ளான்
எம்பெருமானார்
பெரிய நம்பி
ஆளவந்தார்
மணக்கால் நம்பி
உய்யக்கொண்டார்
நாதமுனிகள்
நம்மாழ்வார்
விஷ்வக்சேனர்
பெரிய பிராட்டிமார்
பெரிய பெருமாள் –
இவர்கள் திருவடித் தாமரைகளைப் பற்றுகிறார்

——————

அபங்குர கலா தான ஸ்தூல லஷ்யாத் வமீயுஷே
துங்காய மஹதே தஸ்மை துரங்காய முகே நம
-2—-ஸ்ரீ லஷ்மீ ஹயக்ரீவரைப் பற்றுகிறார்

கீழே சஹஸ்ர ஸூர்ய துல்யம் -இங்கு பூர்ண சந்திர துல்யம் -உபாசகர்களுக்கு அழியாத நித்ய ப்ரஹ்ம வித்யையை அளிப்பவர் –

———–

லஷ்மீ சஷு அநு த்யாநாத் தத் ஸாரூப்யம் உபேயுஷே
நமோஸ்து மீந வபுஷே வேதவேதி விபன்முஷே —
3-ஸ்ரீ மத்ஸ்ய மூர்த்தி வந்தனம்

மத்ஸ்ய ஹம்ஸ ஹயக்ரீவ திரு வவதாரங்கள் -வேத உபதேசம்
ஏக சேஷித்வம் -ஸ்ரீயபதி –

———–

ரஜோ ரஜஸ் பிரசமனம் –ப்ரபந்ந பாரிஜாதாக்ய ப்ரபந்தய யதாமஹே –4-

தொண்டர் அடிப் பொடிகளே ரஜஸ் குணங்களை ஒழித்து விபரீத அஞ்ஞானங்களைப் போக்கி அருளும் என்கிறார்-இதற்காகவே இந்தப் பிரபந்தம்

——————

பிரபத்தே மானஸ ஸுபாஹ்யம் ஸ்வரூபம் அதிகார் யபி |
ப்ரபந்நானாம் குரவ் வ்ருத்தி ஸ்ரீம்ஸே ஸூரிஷு சத்சு ச
விஹிதேஷு வ்யவஸ்தாநம் வர்ஜநீயம் பலம் ததா |
ஏதே தசார்த்தே கத்யந்தே த்ரயந்தாத்ய அர்த்த ஸங்க்ரஹாத் ||
–5-

இதில் வேதாந்த சாரமாக பத்து விஷயங்கள் அருளிச் செய்யப்பட்டுள்ளன –
1-திடமான வேத பிரமாணம் உள்ள பிரபத்தி -பிரமாண பத்ததி -ஸ்ருதி ஸ்ம்ருதி ஆகமம் இதிகாசங்கள் புராணங்கள் இவற்றில் உள்ள பிரமாணங்கள்
2-ப்ரபத்தியின் ஸ்வரூபம் –ஆர்த்த -திருப்த ப்ரபத்திகள் -அங்கங்கள்
3-அதிகாரி ஸ்வரூபம்
4-ப்ரபந்ந அதிகாரியின் ஆச்சார்யருக்குச் செய்ய வேண்டிய கைங்கர்ய விசேஷங்கள்
5- ப்ரபந்ந அதிகாரியின் ஸ்ரீயப்பதிக்குச் செய்ய வேண்டிய கைங்கர்ய விசேஷங்கள்-ஸ்ரீ வைஷ்ணவ சின்னங்கள் -திருவாராதனம் –
6-ப்ரபந்ந அதிகாரியின் நித்ய முக்தர்களுக்குச் செய்ய வேண்டிய கைங்கர்ய விசேஷங்கள்
7-ப்ரபந்ந அதிகாரியின் பாகவதர்களுக்குச் செய்ய வேண்டிய கைங்கர்ய விசேஷங்கள்-என்னைப் போலாவாது நினைக்க வேண்டும் என்று அன்றோ அவன் வார்த்தை
8-ஸாஸ்த்ர விஹித ப்ரபந்ந அதிகாரியின் கர்தவ்ய விசேஷங்கள்
9-ஸாஸ்த்ர நிஹித ப்ரபந்ந அதிகாரியின் கர்தவ்ய விசேஷங்கள்
10-பல ஸ்வரூபம்

—————-

ஸ்ருத்தார்த்த மனனஸ் தேம்நே மம நேதரதா ஸ்ரம |
ஸோதவ்யம் அத்ர ஸ்கலிதம் ஸத்பிர் விஷய கௌரவாத்
||–6-

க்யாதி லாப பூஜார்த்தமாகச் செய்யப்பட வில்லை
தாம் பெற்ற உயர்ந்த ஆச்சார்ய உபதேசங்களின் சாரமே இப்பிரபந்தம்
குற்றம் குறைகளை பெரியோர் க்ஷமிக்கப் பிரார்த்திக்கிறார் இதில்

——————————————————

அத்தியாயம் 9.

கைவிடப்பட வேண்டிய படைப்புகள்:

1.பிர பன்னரால் துறக்கப்பட வேண்டிய உலக மற்றும் வைதீக நடவடிக்கைகள் இப்போது விவரிக்கப்பட்டுள்ளன. ஒருவர் தனது சொந்த நிலை, இடம் மற்றும் நேரம் ஆகியவற்றுடன் பொருந்தாதவற்றை எப்போதும் தவிர்க்க வேண்டும்.

2.-மனுவாலும் மற்றவர்களாலும் வர்ண ஆஸ்ரம தர்மத்திற்கு முரணானவை என்றும், பஞ்சராத்ர சாஸ்திரத்தில் ஒருவருடைய திறமைக்கு முரணானவை என்றும் கூறப்பட்டுள்ளதைச் செய்யக்கூடாது.

3 – 4.-பொது சாஸ்திரங்களில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து செயல்களும் சிறப்புச் செயல்களுக்கு முரணானவை.
குறுக்கு வழிகள் அல்லது குறுக்கு வழியில் வலஞ்சுழியில் சுற்றி வருவது, ஒரு புனித மரம், ஒரு மங்களகரமான பொருள், சந்திர பதினைந்து நாட்களில் (பிரதோஷம்) 13 வது நாளில் சிவ வழிபாடு மற்றும் பாவத்தைப் போக்குவதாகக் கூறப்படும் பிற செயல்கள் போன்றவை. இரு உலகங்களின் இன்பங்களையும், அதாவது சில குறிப்பிட்ட உலகப் பொருள் மற்றும் எதிர்கால பலன்களுக்காக நிகழ்த்தப்படும் (காம்யா)வைணவப் பயிற்சியாளர்கள் (பரம்-ஏகாந்தி) என்று கூறுபவர்களால் செய்யக்கூடாது.
பொது சாஸ்திரங்களில் பரிந்துரைக்கப்பட்ட, ஆனால் தொடங்கப்பட்ட வைஷ்ணவர்களின் [நடைமுறைகளுக்கு] முரணான மதிப்பெண்கள் மற்றும் பிற டோக்கன்களை அணிவது.

5.குறிப்பிட்ட ஆகமங்களால் விதிக்கப்பட்ட பாடல் மற்றும் நடனம் போன்றவை யமன் மற்றும் சௌனகர் சான்றளிக்கப்பட்ட வைஷ்ணவரால் செய்யப்பட வேண்டும்:—

6.“ஓ மனிதர்களில் சிறந்தவரே, கடவுளின் மகிமைகளைப் பாடுவதைத் தவிர வேறு எந்த [உலக] பாடல்களையும் ஒரு பிராமணரால் பாடக்கூடாது. எனவே [வேறு பாடல்களைப் பாடினால்] பாவம் செய்தாய்!” (மத்ஸ்ய புராணம்)

7.“விஷ்ணுவைப் பற்றிப் பாடுவதும், விஷ்ணுவைப் பற்றி நடனமும் நாடகமும் ஆடுவதும், பிராமணரே! குறிப்பாகப் பிராமண சாதியைச் சேர்ந்தவர்களால் கட்டாய தினசரிச் செயல்களைப் போலவே செய்ய வேண்டும். (நித்யா கர்மா)

8.கடவுளின் முன்னிலையில் நடனமாடுபவர்களின் உடலில் வசிக்கும் பெரும் பாவங்களின் பறவைகள், கைதட்டல் முதலியவற்றால் பயந்துவிடும்.

9.ஒரு வைஷ்ணவர் விஷ்ணுவின் வட்டெழுத்து மற்றும் சிறப்பு [பாஞ்சராத்ரா] சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற சின்னங்களை ஒருபோதும் விட்டுவிடக்கூடாது.

10 – 11.-உலகில் மிகக் குறைவான [உண்மையான] பின்பற்றுபவர்கள் இருப்பதாலும், வலிமையான பலனைப் பெறுவதற்கு இது எளிதான வழி என்பதாலும், மேலும் [பிரபத்தியைப் பற்றிய] வினோதமான காரணத்தினாலும் சிலர் விடுதலையை அடைவதற்கான பிரபத்தியின் சாதகத்தை இழிவுபடுத்துகிறார்கள்.

12.அவர்கள் பொல்லாதவர்கள் மற்றும் முட்டாள்கள் மற்றும் மனிதர்களில் மிக மோசமானவர்களாகக் கருதப்படுகிறார்கள். அவர்களின் புத்திசாலித்தனம் மாயையால் மறைக்கப்பட்டுள்ளது மற்றும் அவர்கள் ஒரு பேய் இயல்பு பெற்றுள்ளனர்.

13.பிறக்கும் போது விஷ்ணுவின் பார்வையைப் பெறாமல், பிரம்மா அல்லது ருத்ரனின் பார்வையைப் பெறாத பாவிகள், ராஜாசிக் (உணர்ச்சி) அல்லது தாமச (அலவமான) இயல்புடையவர்களாக இருப்பார்கள்; அத்தகைய நபருடன் ஒருவர் பேசக்கூடாது:
“ஏனெனில், அநியாயக்காரரோடு எந்த விதமான தொடர்பும் இருக்காது!”

14.மனு தர்ம சாஸ்திரங்களில் போர்க் குணமிக்கவர்கள் மோசமானவர்கள் என்றும் அவர்களுடன் பேசுவதன் மூலம் கூட அவர்களுடன் உடலுறவைத் தடுக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

15.வேதங்களுக்கு முரணான அந்த நூல்களும், பிழையான அந்தத் தத்துவக் கருத்துகளும் மரணத்திற்குப் பிறகு பயனற்றவை;
எனவே அவை உண்மையில் தமஸில் நிறுவப்பட்டதாகக் கருதப்படுகின்றன.

16.-தவறான செயல்களில் ஈடுபடும் மதவெறியர்கள், பூனைகளைப் போல செயல்படும் ஏமாற்றுக்காரர்கள் -மற்றும் மத கபடவாதிகள் கொக்குகள் போல நடந்துகொள்பவர்கள் -(மத பாசாங்கு. ஒரு பெரிய மீன் கடந்து செல்லும் வரை, ஒரு காலில் இறந்த நிலையில் நின்று கொண்டிருக்கும் கொக்கு, மீன் கடந்து செல்லும் வரை, திடீரென்று அதன் மீது பாய்கிறது)

17.ஒரு பிரபன்னர் பிரபத்தியை [செயலை நடைமுறைப்படுத்த] இடையூறு விளைவிக்கும் எந்தச் செயலிலும் ஈடுபடக்கூடாது.
18 – 21.-விஷ்ணுவைத் தவிர மற்ற தெய்வங்களை வழிபடுதல், தினசரி சடங்கு நடைமுறைகள் , பிரபத்தியைத் தவிர வேறு வழிகளை நாடுதல் [விடுதலை அடைய] மற்றும் புனித மனிதர்களிடம் தீமை,கண்மூடித்தனமான நம்பிக்கை, சிற்றின்ப இன்பங்களில் அதீத ஈடுபாடு, மற்றும் லக்ஷ்மியின் இறைவனான லக்ஷ்மியையும் அவர்களது உதவியாளர்களையும் எந்த விதத்திலும் பழிவாங்குவது, எந்த விதமான பரிகாரமும் இல்லாமல் பெரும் பாவங்களைச் செய்வது, -இவை அனைத்தும் தடைகள், ஒரு பிரபன்னர் அவற்றில் ஈடுபடக்கூடாது.

22.-பக்தர்கள் இந்தச் செயல்களில் ஏதேனும் ஒன்றில் ஈடுபட்டு, அவர்கள் மனம் வருந்தினால், அவர்களுக்காகப் பிராயச்சித்தம் செய்ய வேண்டும் – தனிப்பட்ட முறையில் மற்றும் பகிரங்கமாக.

23.-மனந்திரும்பிய பிரபன்னருக்கு தனிப்பட்ட முறையில் மட்டும் பரிகாரம் செய்ய அதிகாரம் இல்லை.
இந்திரனின் கேள்விக்கு லக்ஷ்மி இவ்வாறு பதிலளித்தாள்.

24.முந்தைய நாட்களில், பிரபன்னருக்கு இரகசியப் பரிகாரம் பரிந்துரைக்கப்பட்டது.
அதே கருத்தை பராசரரும் பின்வருமாறு கூறினார்:

25″ஒரு தனிமனிதன் மனம் வருந்தினால், கடவுளை மட்டும் நினைவு கூர்வதே மிக உயர்ந்த பரிகாரமாகும்.”

26.“ஓ மைத்ரேயா! ஸ்வயம்புவும் மற்ற முனிவர்களும் பாவத்திற்கு விகிதாசாரமாகப் பரிகாரம் செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளனர் – ஒரு பெரிய பாவத்திற்கு கடுமையானது மற்றும் சிறிய பாவத்திற்கு லேசானது.”

27.“அனைத்து பரிகாரங்களும் சிக்கனம் ( தபஸ் ) மற்றும் சடங்கு ( கர்மா ) ஆகியவற்றை உள்ளடக்கியது. அனைத்திலும் கிருஷ்ணரை தொடர்ந்து நினைவு செய்வதே சிறந்தது.

28.”ஒரு யாகத்தில் அலட்சியம் அல்லது நிகழ்ச்சியிலிருந்து விலகுதல் ஆகியவற்றால் ஏற்படும் அனைத்து தவறுகளும் விஷ்ணுவின் நினைவால் மட்டுமே நிவர்த்தி செய்யப்படும் என்று புனித நூல்கள் நமக்குக் கற்பிக்கின்றன.”

29.இறைவனைப் பற்றிய தியானத்தில் அர்ப்பணிப்புடன் இருப்பவருக்கு, பரிகாரச் சடங்குகள் (க்ரியாக்கள்) தியானத்தின் தொடக்கத்துடன் முடிவடைகின்றன; ஆனால் ஒரு முட்டாள் அவிசுவாசிக்கு பன்னிரண்டு வருட கால அவகாசம் [பரிகாரச் சடங்குகள்] விதிக்கப்படுகிறது.

30-பன்னிரண்டு ஆண்டுகள் செய்ய வேண்டிய பரிகாரச் சடங்குகள் (கர்தவ்யா) ஒரு அவிசுவாசிக்கு மட்டுமே விதிக்கப்பட்டிருப்பதால், விஷயத்தைத் தெளிவுபடுத்துவதன் மூலம் கடுமையான பாவம் மற்றும் லேசானது என்ற குழப்பம் இருக்காது.

31.-“ஈஸ்வரனை (இறைவன்) பற்றிய அறிவிலிருந்து ஒரு உருவம் கொண்ட ஒருவர் (க்ஷேத்ரஜ்ஞர் ) அடையும் தூய்மையானது யாஜ்ஞவல்கியரால் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
உருவானவருக்கும், கடவுளுக்கும் (ஆத்மன் மற்றும் ஈஸ்வரன்) இடையே உள்ள, உரியவர் மற்றும் உரிமையாளரின் (சேஷ-சேஷி) உறவைப் பற்றிய அறிவிலிருந்து எழும் உடலமைப்பின் சுத்திகரிப்பு பற்றியும் விவரித்தார்.

32.”ஒரு நபர் தீங்கான பழக்கங்களுக்கு அடிமையாக இருந்தாலும், ஒரு கணம் கூட கடவுளை தியானிப்பதன் மூலம், அவர் மீண்டும் ஒரு சந்நியாசியாகவும் (தபஸ்வின்) ஒரு துறவியாகவும் (தபஸ்வின்) அதே வரிசையில் தம்முடன் அமர்ந்திருப்பவர்களை தங்கள் முன்னிலையில் புனிதப்படுத்துகிற தூய்மையானவராகவும் மாறுகிறார். சாப்பிட (பக்திபாவன)” (விஷ்ணு தர்மோத்தர புராணம்)

33.-ஒருவன் சம்பிரதாய சுத்த நிலையில் இருந்தாலும் சரி, தூய்மையற்ற நிலையில் இருந்தாலும் சரி, எந்த நிலையில் இருந்தாலும், தாமரைக்கண்ணை (கிருஷ்ணனை) நினைவு செய்பவன் அகமும் புறமும் தூய்மையானவனாகிறான்.

34.-சௌனகர் மற்றும் பிறரால் குறிப்பிடப்பட்ட கடவுளைத் தியானிப்பவர்கள், ஒரு தவறான செயலைச் செய்யும்போது மனம் வருந்துகிறார்கள், அவர்களின் பரிகாரச் சடங்குகள் அந்தத் தியானத்தின் [கடவுளை] அமைப்பதன் மூலம் உச்சக்கட்டத்தை அடைகின்றன.

35.ஒரு வைஷ்ணவர் மற்ற தெய்வங்களுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவர்களுடனும், பிரபத்தியைத் தவிர வேறு வழிகளில் ஈடுபடுபவர்களுடனும் தொடர்புகளை விட்டுவிட்டு மற்ற பிரபன்னர்களுடன் வசிக்க வேண்டும்.

36.ஒரு நல்லொழுக்கமுள்ள நபர் (சாது) ஒரு முட்டாளிடமிருந்து உதவியை ஏற்க மாட்டார், அல்லது ஒரு குரு ஒரு முட்டாளுக்குக் கற்பிக்கக் கூடாது; ஏனெனில் அறியாமையில் அடைக்கலம் புகுபவனும் அறியாமையும் தாமஸமுமாகிறான். மேலும் ஒரு முட்டாளுக்குக் கொடுக்கப்பட்ட போதனை தரிசு நிலத்தில் விழுகிறது.

37.குருவும் சிஷ்யனும் ஒருவரையொருவர் ஒருபோதும் துவேஷம் கொள்ள மாட்டார்கள். தீங்கிழைக்கும் இந்த இரண்டில் ஏதேனும் ஒன்று விடுதலைப் பாதையில் இருந்து விழுகிறது.

38 – 39.-ஒரு குருவால் கொடுக்கப்படாத மந்திரத்தைப் பயன்படுத்தி யாரும் கடவுளுடன் (ஹரி) தொடர்பு கொள்ளக் கூடாது. செல்வத்தின் மீதுள்ள பேராசையால் ஒரு சீடன் ஒருபோதும் நேர்மையான குருவை நிந்திக்கக்கூடாது. புத்திசாலியான ஒருவன், முதலில் குருவிடம் எதையும் காணிக்கையாகக் கொடுக்காமல் அதைச் சொந்தமாக்கக் கூடாது. ஒரு நல்ல வைணவன் குருவை வெறுப்பவர்களை எல்லாம் கைவிடுவான்.

40 – 41.-விஷ்ணுவின் கோவிலை பிரப்பன்னன் ஒருபோதும் துப்பவோ அல்லது எந்த விதத்திலும் தீட்டுப்படுத்தவோ கூடாது. அங்கே கால்களைக் கழுவக் கூடாது; தெய்வத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையில் நடக்கக்கூடாது ; சரியான வாசலைத் தவிர வேறு எந்த வழியிலும் கோவிலுக்குள் நுழையக்கூடாது.

42 – 43.-ஒரு வைஷ்ணவர் ஒருபோதும் கருப்பு கம்பளி போர்வையால் மூடப்பட்ட கோவிலுக்குள் நுழையக்கூடாது; அல்லது விஷ்ணு கோவிலில் புனித மந்திரங்கள் (ஜபம்) ஓதுதல் அல்லது மாலைகள் செய்தல் மற்றும் இது போன்ற பிற சேவைகளைத் தவிர வேறு எந்த வேலையும் செய்யக்கூடாது.

44.-ஒருவர் வணக்கம் செலுத்தக்கூடாது அல்லது வேறு எந்த தெய்வத்தையும் பார்க்கக்கூடாது; வேறு எந்தக் கோவிலுக்கும் செல்லக்கூடாது, வேறு எந்த சன்னதியிலும் நுழையக்கூடாது.

45.-வராஹ புராணத்தில் கடவுளுக்கு எதிரான முப்பத்திரண்டு குற்றங்கள் குறிப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒரு வைஷ்ணவன் அவை அனைத்திலிருந்தும் விலகியிருக்க வேண்டும்.

46.-ஒரு வைஷ்ணவர் வாசனை திரவியங்கள், பூக்கள், ஆடைகள், நகைகள், விலங்குகள், வீடுகள் மற்றும் தனிப்பட்ட இன்பத்திற்கான பிற பொருட்களை தனக்குப் பொருத்தமாக இருக்கக்கூடாது.

47.-ஒருவர் தனது மகன்கள் போன்றவர்களை ஒருவருக்கு அடிபணிந்தவர்களாகக் கருதக்கூடாது, மாறாக கடவுளின் (விஷ்ணுவின்) மகிமையின் வெளிப்பாடுகளாகக் கருதக்கூடாது. ஒரு புத்திசாலி நபர் எப்போதும் உடைமை உணர்வு (மமதா) தவிர்க்க வேண்டும்.

48.-ஆன்மிகப் பயிற்சியில் (ஏகாந்தா) முழு ஈடுபாடு கொண்ட ஒருவரை ஒருபோதும் அவரது கிராமம், குடும்பம் போன்றவற்றின் பெயரால் குறிப்பிடக்கூடாது, மாறாக விஷ்ணுவின் பெயர்களால் அழைக்கப்பட வேண்டும், ஏனெனில் விஷ்ணுவே அவனுடைய எல்லாமே.

49.-பல்வேறு பெயர்களைக் கொண்ட நதிகள் கடலில் சேரும்போது, ​​எல்லாப் பெயர்களும் சமுத்திரத்தில் மட்டும் ஒன்றாகிவிடுவது போல, விஷ்ணுவின் சேவையில் தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்கள் ஏகாந்திகள்.

50-முனிவர்களின் நிழலில் ஒருவர் காலடி எடுத்து வைக்கக் கூடாது, அல்லது இதுபோன்ற பிற செயல்களைச் செய்யக்கூடாது. ஒருவர் எப்பொழுதும் ஆன்மீக மக்களுடன் பழக வேண்டும், அவர்களுடன் சண்டையிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

51 – 52.-பஞ்சராத்ர ஆகமத்தின் விஷ்வக்சேன ஸம்ஹிதை இவ்வாறு ஒரு பிரப்பன்ன கட்டளையிடுகிறது: —

அவர் வைஷ்ணவ அல்லாத இலக்கியத்தின் மீது ரசனையை வளர்த்துக் கொள்ளவோ ​​அல்லது பொய்யான வேதத்தை விரும்பவோ கூடாது. அவர் தவறான சத்தியம் செய்ய மாட்டார் அல்லது [ஜோதிடர்களிடம்] சுப அல்லது அசுபத்திற்கு [நேரங்கள் மற்றும் நிகழ்வுகள்] ஆலோசனை செய்ய மாட்டார்.

53.-விஷம் எடுக்கவும், பிசாசுகள் மற்றும் பிற ஆவிகளை விரட்டவும் மற்றும் அனைத்து நோய்களைக் குணப்படுத்தவும் பொதுவான மந்திரங்களைப் பயன்படுத்தக்கூடாது.

54.-ஒருவன் மெத்தை அணியக் கூடாது, சாம்பலைப் பூசிக்கொள்ளக் கூடாது. ஒருவர் தனது வாழ்நாள் முழுவதும் அனைத்து வகையான ஹீட்டோரோடாக்ஸ் அடையாள அடையாளங்களையும் விட்டுவிட வேண்டும்.

55.நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படும் மற்றும் ஞானிகளால் அங்கீகரிக்கப்பட்ட வைணவ நடத்தை நடைமுறையில் உள்ள இடங்களில் மட்டுமே ஒருவர் எப்போதும் வசிக்க வேண்டும் என்பதே கருத்து, வேறு எங்கும் இல்லை.

56.-ஒருவர் வாழ்வாதாரத்திற்காக ஒரு சாதாரண தொழிலை எடுக்கக்கூடாது, மாறாக நல்லதை அங்கீகரிக்கும் மற்றும் இடம் மற்றும் காலத்திற்கு இசைவான ஒரு தொழிலைத் தேர்ந்தெடுக்க வேண்டும்; பேராசையால் ஆட்சேபனைக்குரிய ஒன்றைப் பின்பற்ற ஒருவன் ஒருபோதும் ஆசைப்படக்கூடாது.

57 – 58.இது தொடர்பாக பகவான் வியாசர், அறம் சார்ந்தவர்களால் நிராகரிக்கப்பட வேண்டியவற்றைக் கூறினார்:-

“இலக்கியம் (ஷப்த சாஸ்திரம்) மீது மகிழ்ச்சியடைபவருக்கும் , சிறந்த வாழ்விடத்தை விரும்புபவருக்கும் மோட்சம் இல்லை; உணவு மற்றும் உடையில் பிரத்தியேகமாக வெறி கொண்டவருக்கு அல்ல; பிரபலத்தின் மீது குறியாக இருப்பவருக்கும் அல்ல.
ஆனால், ஓய்வுபெறும் மனப்பான்மை உள்ள, ஐம்புலன்களின் இன்பங்களிலிருந்து விலகி, பரம ஞானத்தைப் பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட, எப்பொழுதும் ஆக்ரோஷம் இல்லாதவனுக்கு, உறுதியான பயிற்சி உண்டு”.

59.”மரணத்திற்காக ஏங்காமல் அல்லது வாழ்க்கையின் தொடர்ச்சிக்காக ஏங்கவில்லை, மாறாக கூலித்தொழில் செய்பவர் தனது கூலிக்காகக் காத்திருப்பதைப் போல ஒருவர் தனது நேரத்தை ஒதுக்க வேண்டும்.” (மனு 6:45)

60-பொதுவாக தங்கள் வாழ்க்கையின் இலக்குகளை அடையாதவர்கள் மரணத்தால் கலங்குகிறார்கள்; ஆனால் தங்கள் நோக்கங்களை நிறைவேற்றியவர்கள் வரவேற்பு விருந்தினரைப் போல மரணத்திற்காக காத்திருக்கிறார்கள்.

61.-பக்தி (பக்தி) மற்றும் ஞானம் (ஞானம்) தவிர வேறு எந்த வெகுமதிக்காகவும் ஒருவர் விஷ்ணுவிடம் பிரார்த்தனை செய்யக்கூடாது; ஏனென்றால் மற்ற காரியங்களுக்காக ஜெபிப்பதன் மூலம் ஒருவன் நிச்சயமாக நாசமாகிவிடுவான்.

62.-அலட்சியத்தினாலோ அல்லது நோக்கத்தினாலோ ஒரு முனிவரை புண்படுத்திவிட்டு வருத்தப்பட்டால், அவரைத் தேடி மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையெனில் அமைதி இருக்காது.

63.-கடவுளுக்கு எதிரான குற்றத்தின் விஷயத்தில் கூட இந்த பரிகாரம் [மன்னிப்பு கோருதல்] மீற முடியாதது. ஒரு புத்திசாலி எதிர் பாலினத்தவருடன் [சரீர] தொடர்பைத் தவிர்க்க வேண்டும்.

64.-எனவே அறிவுள்ளவன் விஷம் போன்ற சிற்றின்பத்தை முற்றிலும் கைவிட வேண்டும். அறிவில்லாதவன் சாமானியன் என்று அழைக்கப்படுவான் ஆனால் ஞானி வைஷ்ணவன்.

65.-அறிவுள்ளவன் அறியாதவர்களுடன் எந்த விதத்திலும் ஈடுபட மாட்டான். இதை பகவான் பஞ்சராத்ர சாஸ்திரத்திலும், மனு போன்றவர்களும் சொல்லியிருக்கிறார்.

66 – 67.-எனவே பக்தியுள்ள வைஷ்ணவர் சாதாரண உலக மக்களுடன் பழகுவதைத் தவிர்க்க வேண்டும்.
சமூகமயமாக்கல் எட்டு வகைகளாகக் கூறப்படுகிறது:
ஒரே படுக்கை அல்லது இருக்கையைப் பகிர்ந்துகொள்வது, ஒரே வரிசையில் அமர்ந்து உணவருந்துதல், ஒரு பானையைப் பயன்படுத்துதல், சமைத்த உணவைக் கலக்குதல், யாகம் செய்தல், வேதங்களைக் கற்பித்தல், திருமணம் மற்றும் உணவு-உணவு -இவை அனைத்தும் பொருள்முதல்வாதிகளுடன் கடுமையாக தவிர்க்கப்பட வேண்டும்.

68.-ஒருவர் உரையாடல், தொடுதல் மற்றும் ஒருவர் மற்றவருடன் உறங்குவது மற்றும் அமர்ந்திருப்பது போன்றவற்றாலும், புரோகிதக் கடமைகள், வேதம் கற்பித்தல் மற்றும் கலப்புத் திருமணம் போன்றவற்றால் சிதைக்கப்படுகிறார்.

69.-புரோகித செயல்பாடு, வேதம் கற்பித்தல் மற்றும் விழுந்துபோன ஒருவருடன் படுத்து, உட்கார்ந்து திருமணம் செய்துகொள்வதன் மூலம் ஒரு வருடத்திற்குள் ஒருவன் சீரழிக்கப்படுகிறான்.

70.பிருஹஸ்பதியும் மனுவும் இந்த சமூகமயமாக்கலை (சங்கரா) அதன் பன்முகத்தன்மையில் விவாதித்துள்ளனர், ஆனால் புரோகித செயல்பாடுகள் மற்றும் பிற செயல்பாடுகள் மூலம் சீரழிவு உடனடியாக உள்ளது.

71.சுய-சரணாகதி (நியாச-வித்யா) நடைமுறையில் அர்ப்பணிப்புடன் இருக்கும் உயர்ந்த எண்ணம் கொண்ட வைஷ்ணவர்களுக்கு, பொருள்முதல்வாதிகளால் வழங்கப்படும் பாராட்டு ஒரு தணிக்கை என்று அறிவிக்கப்படுகிறது, மேலும் அவர்களின் கண்டனம் பாராட்டு என்று கூறப்படுகிறது.

72 – 78.“பௌதிகவாதிகளே இனிமேல் நீங்கள் நீங்களே, நாங்கள் நாமே. நீங்கள் உலக செழிப்பு மற்றும் சிற்றின்ப இன்பங்களுக்காக அர்ப்பணிப்புடன் இருக்கிறீர்கள், நாங்கள் நாராயணனிடம் அர்ப்பணித்துள்ளோம். உங்களுக்கும் எங்களுக்கும் இடையே எந்த உடலுறவும் இருக்க முடியாது. நீங்கள் புலன்களின் சேவகர்கள் ஆனால் நாங்கள் விஷ்ணுவின் ஊழியர்கள்.

ப்ரபத்தி மார்க்கத்தில் தான் பிராட்டி புருஷகார பூதையான நிலைநிற்க அவளை முன்னிட்டு கொண்டு சரணமாக பற்றினால் அனுபவ ஜனித ப்ரீதி காரித கைங்கர்யத்தை கொடுக்கிறாள். கர்ம ஞான பக்தியோகம் ஸாத்ய உபாயம். சரணாகதிதான் சித்த உபாயம். 10 பத்ததிகளால் ப்ரபத்தி ஸ்வருபத்தை பூரணமாய் அனுபவித்துள்ளார். ஸ்ரீ வத்ஸ குலத்தில் திரு அவதாரம் பண்ணியவர் வரதாச்சாரியார். இந்த ப்ரபன்ன பாரிஜாதத்தில் ப்ரபன்னன் எது தெரிந்து கொள்ளனும் என்று ஆசைப்படுகிறார்களோ அது இங்கே கிட்டும். முதல் பத்ததி – ப்ரமாண பத்ததி – ப்ராமா – நல்ல அறிவு கரணம் – கருவி எது உண்மையை வெளிப்படுத்துகிறதோ அது ப்ரமாணம். ஜீவாத்மாவின் ஞானம் மலர தண்ணீர் சம்பந்தம் வேண்டும். அதுதான் ஆச்சரிய சம்பந்தம். ஆக எந்த ஆச்சார்யன் மூலம் ஞானம் மலர்கிறதோ அந்த ஆச்சரியன் திருவடிகளை வணங்குகிறேன். உம்பத்ததியில் ஆச்சரிய ஸ்தானத்தில் இருக்கும் ஹயக்ரீவ பெருமானை வணங்குகிறேன். 3ம்பத்ததியில் வேத வித்தான ப்ரஹ்மா இடத்தில் ஆபத்து வந்த போது அதிலிருந்து யார் ஒருவர் ரக்ஷித்து கொடுத்தாரோ அந்த மத்ஸ்ய மூர்த்தியை வணங்குகிறேன். இந்த மத்ஸ்யமூர்த்தி மஹாலஷ்மியின் திருக்கண்களையே உற்று பார்த்து அதையே அனுதியானம் செய்ததால் மத்ஸ்ய மூர்த்தியாய் அவதரித்தார். ஆக வேதத்தை மீட்டுக் கொடுத்த மத்ஸ்ய மூர்த்தியை வணங்குகிறேன். 4வது பத்ததியில் ஆச்சர்யன் ஸ்ரீபாத தூளியை நம் தலையில் தரித்தால் நம் முக்குணங்களில் ரஜோ, தமோ குணங்களை போக்குகிறார். 5, 6ம்பத்ததியில் மத்ஸ்ய ரூப ஸ்லோகமாய் எழுதியுள்ளார். ரிக்யஜீர் சாமம் என்ற த்ரை வேதங்களிலிருந்து ப்ரபத்தி ஸ்வரூபத்திற்கு வேண்டியதை ஒரு இடத்தில் சேர்த்திருக்கார். ப்ரபத்யே மான சௌபாக்யம் – வேதத்தில் நன்கு சொல்லப்பட்டுள்ள மானாதீன மேத் – நமக்கு கிடைத்த பெருப்பாக்கியம் வேதத்தில் பரவலாக சொல்லப்பட்டுள்ள ப்ரபத்யே – ப்ரமாண செளபாக்கியம். ஆக வேத சாஸ்திரத்தை அத்யயனம் பண்றவனே ப்ரபத்திக்கு அதிகாரி .7ம்பத்ததியில் ப்ரபன்னானம் குரோ விருத்தி: மந்திரத்திலும் மந்திரத்திற்கு உள்ளீடான வஸ்துவிலும் ப்ரேமம் ஏற்படனும். நித்யசூரிகளான கருடன் ஆதிசேஷன் விஷ்வக்சேனரிடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கூறுகிறது. 8ம்பத்ததியில் விஹிதம் விவஸ்தானம் – செய்வன திருத்தச் செய்யனும் செய்யக் கூடாதவைகளை சட்டென்று விடனும். த்வயத்தின் முன்வாக்கியம் ப்ரபத்தியையும் அ தன் பின் வாக்கியம் அதன் பலத்தையும் சொல்கிறது பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கரியம் தான் புருஷார்த்தம். உபநிஷத்திலிருந்தும் மேற்கோளிட்டு ப்ரபன்ன பாரிஜாதத்தை சாதிக்கிறார். இந்த ப்ரபன்ன பாரிஜாத விஷயத்தில் நிறை இருந்தால் அது அவர் ஆச்சாரியன்எங்கள் ஆழ்வானுடையது என்று பணிவுடன்தெரிவித்துக் கொள்கிறார். ஆச்சார்யனின் ஸ்லோகங்களுடன் வந்தனம் முற்றிற்று த்திலி என்ற பறவைதான் தைத்தரிய வேதத்தை காப்பாற்றி கொடுத்தது. கிருஷ்ண யஜுர்வேத உபநிஷத்து பாகத்தில் ப்ரபத்தி இவ்வாறு விளக்கப்பட்டுள்ளது. வஸீ ரண்யே என்று தொடங்கும் மந்திரத்தில் ந்யாஸம், அப்யாஸம் என்ற மந்திரம் சொல்லப்பட்டுள்ளது. 32 ப்ரஹ்ம வித்யைகளில் நியாஸம் – ஆத்மாவை பரமாத்மா திருவடிகளில் சமர்ப்பித்தல் பெருமானே விபவாய் இருக்கிறார். இந்த உலகத்திற்கு ஒளியை கொடுப்பதும். அக்னிக்கு எரியும் சக்தியாகவும், சந்திரனுக்கு உள்ள குளிர்ச்சியையும், சூரியனுக்கு இருக்கும் தேஜஸ்ஸையும் தேவரீரே கொடுக்கிறார். சேஷத்துவ ஞானத்துடன் இந்த ப்ரஹ்மம் இடத்தில் ஓம் என்று சொல்லிக் கொண்டு சமர்ப்பிக்கனும். ப்ரஹ்மத்திற்கு ஆக்ருதி கொடுத்தவன் சாம்யத்துவம் அடைகிறான். ஜகத்திற்கு காரணமான ப்ரஹ்மம் உபாஸிக்கத் தக்கது. முமுக்ஷுக்கு பாத்ரமாய் ஸர்வ ஜகத்திற்கும் காரணமாய் விளங்கும் ஸ்ரீமன் நாராயனின் . ஆக ஸர்வ ஜகத்தாரணம் யாரோ அவரிடத்தில் ப்ரபத்தி பண்ண வேண்டும். 1௦வது ஸ்லோகத்தில் தேவரீர் தான் ஜகத்தையே தன் சங்கல்பத்தால் சிருஷ்டிக்கிறார். செல்வத்துடன் அழகான பொன் போன்ற ஒளி படைத்தவராய் இருக்கிறார். 11
வது ஸ்லோகத்தில் இந்த ஜீவாத்மாவை அவிஸ் . ஆக்குகிறார். 12வது ஸ்லோகத்தில் ப்ரபத்தி எப்படி அனுஷ்டிக்க வேண்டுமோ அதை சொல்கிறது. ந்யாஸ வித்யையில் யாருக்கு நம்பிக்கை இருக்கோ அந்த நம்பிக்கை தான் பத்னி நெஞ்சு தான் ஹோம குண்டம் உடம்பு முழுவதும் ரோமம் வளர்ந்ததே தர்ப்பை. யாதொரு பகவான் ஆதிகாலத்தில் ப்ரஹ்ம தேவனை படைத்து அவருக்கு வேதங்களையும் கொடுக்கிறாரோ அந்த பகவானை ப்ரஹ்ம ஞானம் பெறுவதற்காக சரணம் அடைய வேண்டும்

ஸ்ரீவத்ஸ குலத்தில் திரு அவதாரம் பண்ணியவர் வாத்ஸ வரதாச்சாரியார்.
முதல் பத்ததி – ப்ரமாண பத்ததி – எது உண்மையை வெளிப்படுத்துவதோ அது ப்ரமாணம். 2வது பத்ததி – ஸ்வரூப பத்ததி – ப்ரபத்தி ஸ்வரூபத்தை கூறுவது. ப்ரபத்தி என்பது என்ன அதன் தன்மை என்ன என்று சொல்கிறது. 3வது பத்ததி அதிகார பத்ததி – யாருக்கு ப்ரபத்தி செய்ய தகுதி உள்ளது என்பதை கூறுகிறது. 4வது பத்ததி – குருவை உபாசனம் பண்ணும் பத்ததி .5வது பத்ததி – பகவத் பரிசாரிய பத்ததி – இந்த பத்ததியில் பகவானை ஆராதிக்கும் விதத்தை அருளிச் செய்கிறார். 6ம்பத்ததி – பகவத் பரிஜனோ உபாஸந பத்ததி – இந்த பத்ததியில் பகவானுடைய பரிஜனங்களை உபாஸிக்கும் விதத்தை அருளிச் செய்கிறார். 7ம்பத்ததி – நம்பக்கத்தில் இருக்கும் பாகவதர்கள் – பாகவத ஆச்சார்யர்கள் இந்த ஆச்சாரியர்கள் கண்டிப்பாக பாகவதர்களாக இருப்பார்கள் ஆனால் பாகவதர்கள் ஆச்சார்யகளாக ஆக முடியாது. பகவத் உபாசனம் ஆகி பகவத் பரிஜன உபாசனம் ஆகி 7வது சத்து உபாஸன பத்ததி நமக்கு ஆச்சாரியன் யாரு பகவான் யார் என்பது உபதேசித்தது சத்துக்கள். 8ம் பத்ததி – ப்ரபன்னர்கள் பற்ற வேண்டியது. 9வது பத்ததி – வர்ஜநீய பத்ததி – ப்ரபன்னர்களால் விடத்தக்க கர்மங்களை இந்த பத்ததியில் அருளிச் செய்கிறார்.
10 வது பத்ததி – பலோதய பத்ததி – இந்த பத்ததியில் ப்ரபன்னர்களுக்கு பயன் கிடைப்பதை அருளிச் செய்கிறார். பலன் எப்படி கிடைக்கும்? எப்படி அனுபவிக்க போகிறோம் என்பதை பற்றியது.
10ம்பத்ததியில் அருமையாய் சாதித்த
ஸ்லோகார்த்தங்களில் சில –
முதல் ஸ்லோகார்த்தம் – எனக்கு பாண்டவர்கள் ப்ராணனுக்கு சமமானவர்கள். அவரே ஸ்வாமி நாதன் ரக்ஷகன் என்ற உறுதி மாறாமல் இருந்தனர். வாஸீ தேவ ஸர்வமிதி – ஸ மஹாத்மா ஸீதுர்லப: அப்பேர்பட்ட என் திருவடியை தொழும் ப்ரபன்னர்களை பின் தொடர்ந்து விஷ்ணு வருகிறார்.
உம்ஸ்லோகம் – ஜ்ஞாநீ ஆ வாத் மை வ
மே மதம் – அறிவாளியாக இருக்குமிவர் என் உயிரானவர். அதிகமான ப்ரேமத்திற்கு ஆட்பட்ட இவர்களை எம்பெருமானை விட்டு ஒரு போதும் பிரிக்க முடியாது . பலப்பல ஜென்மங்களில் பாக்யசாலிகளாக யார் ஒருவன் பெருமாளை பற்றுகிறானோ , கண்ணனே வாழ்முதல் – பருகுநீர், வளர்முதல் – உண்ணும் சோறு, மகிழ்முதல் – போடும் வத்திலை போகியம். அப்படிப்பட்டவன் தேடினாலும் கிடைக்க மாட்டான். 3ம்
ஸ்லோகம் – ப்ரபன்னன்
செய்ய வேண்டியதை செய்யப்பட்டு விட்டான் . எல்லாரையும் விட பகவான் தான் உயர்ந்தவர் என அறிந்த பின் அவரிடத்தில் அனுத்தமா ப்ரீதி.
4ம் ஸ்லோகம் – விஷ்ணுவை உபாயமாக பற்றி, வேறு உபாயமில்லை என அறிய வேண்டும். 5ம்ஸ்லோகம் – விஷ்ணுவான பெருமானுக்கு கைங்கர்யம் பண்ணுவது தான் பலன். அவரால் மற்றொன்றை அடைந்தால் அதர்மம். மற்றொன்றால் அவரை அடைந்தால் மத்யமம். அவராலே அவரை அடைந்தால் உத்தமம். மாதவன் இரண்டு திருவடிகளே பலம் உபாயம். அவர்கள் இருவரும் சேர்த்தியில் கைங்கர்யம் புரியனும். அவன் தான் உத்தமமான அதிகாரி . இந்த பிறவியிலேயே செய்ய வேண்டியதை செய்தவன் ஆகிறான். 6ம் ஸ்லோகம் – இந்த ப்ரபன்னன் ஒத்துக் கொள்ளப்பட்ட நல்ல கைங்கர்யங்களை பெருமாள் திருவடிகளே உபாயம், அவரே ப்ராப்யம் என்று இருப்பவர்கள் என்னென்ன காரியங்கள் செய்தாலும் அவை அனைத்தையும் தேவதேவனான பெருமான் தன் தலையால் தரிக்கிறான். 7ம் ஸ்லோகம் – தானே வாங்கிப்பார். ஆழ்வார் பாசுரமான –
ஒரு நாயகமாய் ஒட உலகாண்டவர்… பிச்சை தான் கொள்வர். இம்மையிலே இந்த உண்மை பெருமானுக்கு தெரிந்தால் இம்மையிலே தானே வாங்கிப்பர். பக்தர்களின் ப்ரேம பாரத்தை தாங்க முடியாதவனாய் இருக்கிறார். 8ம்ஸ்லோகம் பக்தி இல்லாமல் நிறைய சமர்ப்பித்தாலும் அது அவரை சந்தோஷப்படுத்தாது. பக்தன் – என் – பெருமான்பக்திக்கு விசேஷிப்பவனே ப்ரபன்னன் என கருதப்படுகிறான். 9ம் ஸ்லோகம் – விஷ்வக்சேனர் ஸம்ஹிதையில் இங்கனம் கூறுகிறார். சேவா – பக்தி என்பது ஆசையுடன் நிறைய கொண்டுகளை செய்து தன்னை தாழ்ந்தவன் என நினைக்கச் செய்வது.
10ம்ஸ் லோகம் – இயற்கையில் எல்லோரும் பெருமானுக்கு சேஷபூதன். தாஸன் தான் – அடிமைத்தனத்தின் எல்லையாக இருப்பதே பக்தி. 11ம்
ஸ்லோகம் – லகஷ்மியை புருஷகாரமாய் கொண்டு சரணாகதி பண்ணுபவன் என் ஒன்றையே பற்றுக் கொம்பாக பிடிக்கிறான். என் ஒருவனையே பலமாக அடைகிறான். 12 ம்ஸ்லோகம் – இப்படி என்னை சரணாக பற்றியவன். வருத்தம் துன்பம் எல்லாம் தொலைத்து விடுகிறான். 13ம் ஸ்லோகம் – எப்படிப்பட்ட ப்ரபன்னனும் சம்சார கடலை தாண்டி விடுகிறான். அவன் என்னைத் தவிர வேறு பற்றில் விருப்பம் இல்லாதவன். துளி கூட அகங்காரம்
மமகாரம் இல்லாதவன்.
14ம் ஸ்லோகம் – கர்மயோகத்தாலும் ஞான யோகத்தாலும் நல்ல செயல்கள் செய்தவர்கள் – சரணாகதி அனுஷ்டித்தவர்கள் முன்னே 16000 -ல் ஒரு பங்கு கூட ஒரு சிறு துளி – மஹிமைகூட அந்த கர்ம ஞான நிஷ்டனுக்கு கிடையாது. 15ம்ஸ்லோகம் – இந்த ப்ராப்யத்தை அடைய தடங்கலாய் இருக்கும் பாப புண்ய ரூப கர்மங்கள் தொலைத்தால் தான் போக முடியும். சரணம் என்று வருவதற்கு முன்னால் – பூர்வாகன் நெருப்பிவிட்ட பஞ்சு போல் உருமாறி விடும். சரணாகதிக்கு பின்னால் – உத்தராகன் தாமரையில் இட்ட தண்ணீர் போல் விலகி விடும். 16 ம் ஸ்லோகம் – திருப்த ப்ரபன்னனுக்கு இந்த ஜென்மத்திலேயே எல்லா கர்மங்களும் தொலையாது. பக்தியை உபாயமாக பற்றினால் சஞ்சித கர்மா மட்டும் தொலைப்பர். ப்ராரப்த கர்மா தொலையாது. ஆர்த்த ப்ரபன்னனுக்கு எல்லாமே தொலைந்து அப்போதே மோக்ஷம். உத்தராகத்தில் மதிபூர்வம் – அறிந்து செய்து அதற்கு அனுதாபமே படாது இருப்பவன் அதை அனுபவித்து தான் தீர்க்கனும்.
17ம் ஸ்லோகம் – தப்பு பண்ணிவிட்டு அனுதாபம் படாத வன் தேஹம் கீழே விழும் வரை பட்டுதான் தீர்க்கனும். இப்படி சொல்லப்பட்டதே தவிர வேறு பாபங்கள் எதையும் ஒட்ட விடுவதில்லை. 18ம் ஸ்லோகம் – இதை பெருமானே ஆச்சரியரிடம் சொல்கிறார். உபாய பக்தி – சாதனா பக்தி செய்பவருக்கு சஞ்சித கர்மா மட்டும் தொலையும். சாத்ய பத்தி – (ப்ரபத்தி செய்த பின்) ப்ராரப்த கர்மாவையும் சேர்த்து ஒழிக்கிறார். 19ம் ஸ்லோகம் – இதில் பக்தியோகம் தான் உபாய பக்தி. இதில் பிராரப்த கர்மா ஒழிக்க மாட்டார். 20ம் ஸ்லோகம் – ப்ராரப்த கர்மா – சாத்ய பக்தியில் அழிக்கும். சாதனாபக்தியில் இந்த தேஹம் முடியும் போதுதான் அழியும். 21ம் ஸ்லோகம் – ஆர்த்த ப்ரபன்னர்கள் இந்த ஜென்மத்திலேயே முடித்து விடுவார்கள். ௨௨ம் ஸ்லோகம் – இத்தால் சொல்லப்பட்டது. பக்தி யோகத்தில் பல ஜென்மங்கள் அனுபவித்து தொலைக்கனும். ஆர்த்த ப்ரபன்னனுக்கு உடனே மோக்ஷம். வினைப்பயன் அனுபவிக்கனுமே என சோகப்படுகிறான். அதிலிருந்து உன்னை மோக்ஷம் அடைய வைக்கிறேன் என பெருமாள் கூறுயிருக்கார். 23ம் ஸ்லோகம்
திருப்த ப்ரபன்னன் இருக்கிற ஜென்மத்தில் வருத்தப்பட மாட்டான். 24ம்ஸ்லோகம் – எப்போது இவன் மோக்ஷம் போகும் நிர்ணயம் – ப்ரபன்னனே முடிவு பண்ணுவது. 25 ம் ஸ்லோகம் – ஹ்ருதய கமலத்தில் எழுந்திருக்கும் ஸ்ரியபதியான பெருமாளாலே 101 வது நாடியான ஸுஷும்னா நாடியில் ப்ரயாணிக்கிறான். ஆத்மா இது வழியாக போய் மோக்ஷத்தை அடைவான். 26ம்ஸ்லோகம் – பெருமான் தன் திருமேனி ஒளியாலே இதுதான் ஸீஸீம்னா நாடி என வழிகாட்டுவார். ஆதிவாஹிகள் கையை பிடித்து கூட்டிக் கொண்டு ஆத்மாவை கூட்டிக் கொண்டு போகிறார். 27ம்ஸ்லோகம் – அந்தந்த லோகத்தில் இருக்கும் அமரர்கள் வருவார்கள். அர்ச்சிராதி மார்க்கத்தை தாண்டுகிறார்கள். 28ம் ஸ்லோகம் – விரஜா நதியில் தீர்த்தமாடி அமானவன் ஸ்பரிசத்தாலே ஸ்வரூப விகாரம் பெறுகிறான். 29ம் ஸ்லோகம் – ஸாரூப்யம் – பெருமாள் இருக்கும் அதே உலகம். ஸாமிப் யம் – பெருமாளை ப்போல் சங்கு சக்ரம் பெறுகிறார். ஸாயுஜ்யம் – பெருமானுடன் கூட கல்யாண குணங்களை ஒன்றாக அனுபவிக்கிறான். 30ம் ஸ்லோகம் – ஆசைப்பட்ட உருவம் அவன் எடுத்துக் கொள்கிறான். சாமகானத்துடன் விடாமல் கைங்கரியம் பண்ணுகிறான். அர்ச்சராதி மார்க்கத்தில் போகாமல் அதைவிட விரைவான பாதையில் கூட்டிப் போகிறார் பெருமான். 31 ம் ஸ்லோகம் – தன் ஆசைப்படி சடக்கென்று கூட்டிக் கொண்டு போகிறார். 32ம் ஸ்லோகம் – பூமாதேவி காது கொடுத்து கேட்க – வராஹ சர மஸ்லோகார்த்தத்தை அருமையாய் முன்புதெரிவித்ததை மீண்டும் நினைவு கூர்ந்தார் -ஒருவன் சரீரம் நன்றாக இருக்கும் போது தாதுக்கள் எலும்பு, மஜ்ஜே சமமாக இருக்கும் போது விஸ்வரூபனான என்னை சரணமாக அனுஷ்டித்தால் அவன் ப்ராணன் போகும் தருவாயில் கல்லு போல ஜடமாய் அவன் இருக்கும் போது. நான் என் பக்தனை நினைத்து அழைத்துக் கொண்டு போகிறேன். 33 34, 35 ம்ஸ்லோகங்கள் — எப்போதோ ஒரு வேளை வாதம் பித்தம் கபம் சமமாக இருக்கும் போது பெருமானை நினைக்கக்கடவாய் இவர் தான் செள சீல்யம், ஸ்வாமித்வம், வாத்ஸல்யன் (இதன் பதபதா அர்த்தங்களை விளக்கி ) கொண்ட அப்படிப்பட்ட நான் வராஹன் இறங்கி வருவேன். ஸ்ரீ என்ற பெரிய பிராட்டியுடன் கல்யாண குணங்கள் கொண்ட நான். விருப்பப்படி விக்ரஹத்தை ஏற்றுக்கொண்டு இருப்பேன். 36) ஸ்ரீமன் நாராயணனே ஸ்வாமி. வேறு புகலிடம் அற்ற நான் உன் திருவடிகளை உபாயமாக ப்ராப்யமாக பற்றுகிறேன். 37, அவனுக்கு மற்ற உபாயங்களாலேமறைக்கப்படலை. 38) அவனுக்கு மரணம் ஏற்படும் தருவாயில் கல்லு கட்டை போல கிடக்கான். தேஹத்தில் சலனமில்லை. 39) பிறராலே எழுப்பப்பட்டாலும் புத்தி வரலை. மனம் அழிந்து போயிற்று தனக்கு நன்மை தேட முடியலை. சுற்றி இருப்பவர்களும் ஒன்றும் செய்ய இயலாது. 40) இந்த ஒரு வினாடிக்கு காத்திருக்கிறார் பரமபுருஷர் 41) இவன் ஒவ்வொரு நாள் தூங்கும் போதும் நான் முழித்துக் கொண்டு இருந்தேன். இவனுக்கு விருப்பப்பட்டதையெல்லாம பண்ணிக் கொண்டு இருந்தேன். அப்படிப்பட்ட அடியார்களை ரக்ஷிப்பதில் ஊக்கமுடையவன் பெருமானாகிய நான். இப்போது என்னை அனுபவிக்கும் யோக்யதையை பெற்றாள். அர்ச்சராதி கதி இல்லாமல் கூட்டுக் கொண்டு போகிறேன். 42) நான் அந்த வாகனத்தில் வந்து அந்த குழந்தையை கூட்டிக் கொண்டு போகிறேன். 43) இப்படி ப்ரபாவத்துடன் கூடியவனான ப்ரபன்ன னை – எமதூதர்கள் நெருங்கும் போது இவன் மதுசூதன பெருமாள் திருநாமத்தை சொன்னவன். 44) இவன் வேறு யாருக்கும் ஆட்பட மாட்டாள் என பராசரரும் ஸுகரும் விஷ்ணு புராணத்தில் பேசிக் கொள்கிறார்கள் . 45) அஜாமினோ உபாக்யானத்தை விவரித்தார் . எமதூதர்கள் நரகத்தில் நிற்க – எமன் இவன் திருமால் அடியார் அவர் திருநாமத்தை சொன்னவன் – முடிந்தால் இவனை ப்ரதக்ஷணம் பண்ணி ஸ்ரீபாத தீர்த்தம் வாங்கு அவர் தான் எனக்கு ப்ரபு என்றான் எமன் . 46) ஸ்ரீபாகவதம் – யார் ஒருத்தன் பெருமானே சரணம் என்றவனுக்கு தேவகடன் பித்ரு கடன் ரிஷிகடன் கிடையாது.
உபஸம்ஹாரா -சரணாகதி அனுஷ்டித்து சரணமாக பற்றிய வன் இடத்தில் அவனையே பற்றுவேன். ப்ரபத்தியையே அணையாக கொண்டிருக்கிறார். உபநிஷத்து போன்றவைகளால் சின்ன சின்ன கல்லாய் எடுத்து அணையை கட்டினான். அதனாலேயே சேர்த்து கட்டப்பட்ட ப்ரபன்ன சரித்ரமாகிற க்ஷீராப்திக்கு ஸேது. ப்ரபத்தி என்பது க்ஷீராப்தியால் கட்டப்பட்ட சேது .
48) இந்த ப்ரபத்தி என்னும் ஓடத்தில் அமரனும். கார்ப்பனியம் – என்னிடத்தில் ஒன்றுமில்லை என்ற ஆகிஞ்சன்யம் ஏதும் இல்லாமையே அடிப்பலகையாக கொண்டதாய் , மஹா விசுவாசம் தான் ஆணி. தேவரீரே அடியேனுக்கு உபாயமாக இருக்க வேண்டும். அப்பேற்பட்ட கயிற்றினால் கட்டி இழுத்து போடப்படும் நியாஸம் என்ற ஓடம். இப்படிப்பட்ட ஓடத்திலே சம்சாரம் என்ற பெருங்கடலை தாண்டிவிக்கும் ஓடம். இந்த ப்ரபத்தியான ஓடம் ஒட்டையில்லாத ஓடம். இந்த ஓடம்தான் தூண்டு விக்க போகிறது. தாண்டி விடுகிறார்கள். . கடைசியாய் நிறைவாய் ப்ரபன்னனுக்கு இந்த ப்ரபன்ன பாரிஜாதம் என்ற க்ரந்தம் எல்லா நன்மைகளும் சொல்லப்பட்டது. எல்லா கோணத்திலிந்தும் சத்துக்கள் விருப்பப்பட்டதை கொண்டு வந்து சேர்த்ததால் பாரிஜாதமாகிறது

—————————–

சுத்த குண விட்டு சித்தன் சுடர் அடியோன் வாழியே
ஸ்ருதப் பிரகாசிகையைச் சொல்லி வைத்தோன் வாழியே
தத்வ ப்ரமேயத்தின் தரம் அறிந்தோன் வாழியே
புத்தி மிகு சாரார்த்த சதுஷ்டயத்தோன் வாழியே
புகழ்ப் பாடியப் பொருளை புதர்க்களிப்போன் வாழியே
சித்திரையில் சித்திரை நாள் கச்சி வந்தோன் வாழியே
சீராரும் அம்மாள் தன் சேவடிகள் வாழியே

திங்கள் போன்ற திருமுகம் வாழியே
திருமங்கை காப்புத் திகழ் நெற்றி வாழியே
தொங்கு முப்புரி நூல் மார்பு வாழியே
தோன்று இலச்சினைத் தோள் மிக வாழியே
தனக்கு கோசம் விளங்கு கை வாழியே
தாங்கு சின் முத்ரை விரல் வாழியே
பொங்கு வத்ஸ குல வரதாரியன்
பொன் மலர்ப்பாதம் வாழியே வாழியே

—————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நடாதூர் அம்மாள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

“சிஷ்டக்ருதே நம:”

April 10, 2025

ஒரு முறை வேத வியாசர், தமது சீடர்களைப் பார்த்து,

“அஹல்யா த்ரௌபதீ ஸீதா தாரா மந்தோதரீ ததா

பஞ்சகன்யா ஸ்மரேத் நித்யம் மஹாபாதக நாசினீ”

என்ற சுலோகத்தைச் சொன்னார்.

பஞ்ச கன்னிகைகள் எனப்படும் அகல்யா, திரௌபதி, சீதை, தாரை, மண்டோதரி ஆகிய ஐந்து பெண்களையும் தினமும் காலையில் தியானித்தால், நமது அனைத்து பாபங்களும் தொலையும் என்பது இதன் பொருளாகும்.

“சீடர்களே! அகல்யா, திரௌபதி, சீதை, தாரை, மண்டோதரி ஆகிய இந்த ஐவருமே தாயின் கருவில் வசிக்காமல் பிறந்தவர்கள்.

ஓர் அழகிய பெண்ணை உருவாக்க விழைந்த பிரம்மதேவர், தமது கற்பனையை எல்லாம் திரட்டி, அகல்யாவை உருவாக்கினார்.

அர்ஜுனனை மணப்பதற்கேற்ற பெண்ணை வேண்டித் துருபத மன்னன் வேள்வி செய்தபோது, அந்த வேள்வித் தீயில் தோன்றினாள் திரௌபதி.

ஜனக மன்னன் தனது யாகசாலையை உழுத போது, கலப்பை நுனியில் சீதா தேவியைக் கண்டெடுத்தார்.

பாற்கடல் கடைந்த போது அதிலிருந்து தாரை தோன்றினாள்.

பார்வதியின் சாபத்தால் தவளையாய்ப் பிறந்த மதுரா என்னும் அப்சரஸ் பெண்ணுக்குப் பரமசிவன் சாப விமோசனம் தந்து, அவளை மண்டோதரி என்னும் அழகிய பெண்ணாக மாற்றினார்!” என்று கூறினார் வேத வியாசர்.

“இவர்களுக்கு வேறு ஏதாவது சிறப்புகள் உண்டா?” என்று கேட்டார்கள் சீடர்கள்.

அதற்கு வேத வியாசர், “இந்த ஐவருமே தங்கள் வாழ்வில் பேரிழப்புகளையும் பெருந்துயரங்களையும் சந்தித்த போதும், அவற்றை மனவுறுதியோடு தாண்டி வெற்றி கண்டவர்கள்.

தன் கணவர் கௌதமர் தந்த சாபத்தால் கல்லாக மாறிய போதும், பொறுமையோடும் மனவுறுதியோடும் இருந்த அகல்யாவை, ராமன் தன் திருவடிகளால் தீண்டி மீண்டும் தூய பெண்ணாய் ஆக்கினான்.

கௌரவர்களின் சபையில் பெரும் அவமானத்தைச் சந்தித்த திரௌபதி, மனவுறுதியுடன் துன்பங்களைப் பொறுத்திருந்து, பாரதப் போரின் மூலம் தன் சபதத்தை நிறைவேற்றினாள்.

பத்துமாத காலம் அசோக வனத்தில் அரக்கர்கள் புடைசூழச் சிறையிருந்த போதும், ராமன் வருவான் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்து வெற்றி கண்டாள் சீதை.

வாலியின் மனைவியான தாரை, தன் கணவனை இழந்து தவித்தபோதும், தன் மகனான அங்கதனின் நன்மைக்காகத் துயரத்தைப் பொறுத்துக் கொண்டு உயிர் தரித்திருந்தாள்.

ராவணனின் மனைவியான மண்டோதரி, தனது கணவன், மகன்கள், உறவினர்கள் அனைவரையும் போரில் இழந்த போதும் மனம் தளராதிருந்தாள்

எனவே இந்த ஐவரும் காலையில் தியானிக்கத் தக்கவர்கள்!” என்று கூறினார்.

அப்போது சீடர்கள், “சுவாமி! இந்த ஐவருள் மகாலட்சுமியின் அவதாரமான சீதைக்கு நிகராக மற்ற நால்வரையும் கூறுவது சரியா?

இந்திரனின் ஆசைக்கு இணங்கினாள் அகல்யா.

ஐந்து ஆண்களை மணந்தாள் திரௌபதி.

வாலியின் மரணத்துக்குப் பின் சுக்ரீவனை மணந்தாள் தாரை.

மண்டோதரி நல்லவள் தான் என்றாலும், அவள் பெரும் பாவியான ராவணனின் மனைவியாவாள்.

இந்த நால்வரும் எப்படி சீதைக்குச் சமமானவர்களாக ஆக முடியும்?” என்று வியாசரிடம் கேட்டார்கள்.

அதற்கு வியாசர், “அதற்குத் திருமாலின் திருவருளே காரணம்.

ராமனின் பாதுகையில் உள்ள மண் அகல்யாவின் மீது பட்ட மாத்திரத்தில், அவளுக்கு ஏற்பட்ட அனைத்து தோஷங்களும் நீங்கப் பெற்று அவள் தூய்மையாகி விட்டாள்.

திரௌபதி எப்போதும் கண்ணனையே தியானித்துக் கொண்டிருந்த படியால், அவள் எப்போதும் தூய்மையாகவே இருந்தாள்.

ராம தரிசனத்தால் தாரையும் மண்டோதரியும் தூய்மை பெற்றார்கள்.

இவ்வாறு திருமாலின் அருளால் தூய்மை பெற்ற அகல்யா, திரௌபதி, தாரை, மண்டோதரி ஆகிய நால்வரும் மகாலட்சுமியின் அவதாரமாகிய சீதைக்கு நிகராகப் போற்றப்படுகிறார்கள்!” என்றார்.

அகல்யா, திரௌபதி, தாரை, மண்டோதரி போன்றோரைச் சீதையின் ஸ்தானத்துக்கு நிகராய் உயர்த்தியது போல், சாதாரண மனிதர்களைக் கூடத் தனது சம்பந்தத்தாலே உயர்ந்த மனிதர்களாகத் திருமால் ஆக்குவதால் ‘சிஷ்டக்ருத்’ (உயர்ந்தவர்களை உருவாக்குபவர்) என்று அழைக்கப்படுகிறார்.

உயர்ந்த மனிதர்களை ‘சிஷ்ட:’ என்று சொல்வார்கள். ‘க்ருத்’ என்றால் உருவாக்குபவர் என்று பொருள்.

‘சிஷ்டக்ருத்’ என்பதே ஸஹஸ்ரநாமத்தின் 251-வது திருநாமம்.

அகல்யா, திரௌபதி, தாரை, மண்டோதரி போன்றோருக்குத் தூய்மை அளித்ததைப் போல், தோஷமுள்ளவர்களைக் கூடத் தனது சம்பந்தத்தாலே தூய்மையானவர்களாகத் திருமால் ஆக்குவதால், அவர் ‘சுசி:’ என்றழைக்கப்படுகிறார்.

‘சுசி:’ என்றால் தூய்மை என்று பொருள்.

தானும் தூய்மையாக இருந்து, தன்னைச் சார்ந்தவர்களையும் தூய்மையாக்குவதால், திருமால் ‘சுசி:’ எனப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 252-வது திருநாமம்

“சிஷ்டக்ருதே நம:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் வாழ்வில் மிக உயர்ந்த நிலையை அடையத் திருமால் அருள்புரிவார்.

“சுசயே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களைத் திருமால் தூயவர்களாக ஆக்கி அருள்வார்.ஹேதவே நமஹ…..!!!

—————

மகாபாரதம் உணர்த்தும். உண்மைகள்….

மோகத்தில் வீழ்ந்துவிட்டால், மொத்தமாய் வீழ்ந்திடுவாய்

– சாந்தனுவாய்….

——————————-

சத்தியம் செய்துவிட்டால், சங்கடத்தில் மாட்டிடுவாய்

– கங்கை மைந்தானாய்..

——————————–

முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும்

– பாண்டுவாய்….

——————————

வஞ்சனை நெஞ்சில் கொண்டால், வாழ்வனைத்தும் வீணாகும்

– சகுனியாய்…

——————————

ஒவ்வொரு வினைக்கும், எதிர்வினை உண்டு

– குந்தியாய்…

——————————-

குரோதம் கொண்டால், விரோதம் பிறக்கும்

– திருதராஷ்டிரனாய்….

——————————

பெற்றோர்கள் செய்யும் பாவங்கள், பிள்ளைகளை பாதிக்கும்

– கௌரவர்கள்…

——————————

பேராசை உண்டாக்கும், பெரும் அழிவினையே

– துரியோதனனாய்…

——————————

கூடா நட்பு, கேடாய் முடியும்

– கர்ணனாய்…

——————————

சொல்லும் வார்த்தை, கொல்லும் ஓர்நாள்

– பாஞ்சாலியாய்..

——————————

தலைக்கணம் கொண்டால், தர்மமும் தோற்கும்

– யுதிஷ்டிரனாய்…..

——————————

பலம் மட்டுமே, பலன் தராது

– பீமனாய்….

——————————

இருப்பவர் இருந்தால், கிடைப்பதெல்லாம் வெற்றியே

– அர்ஜூனனாய்….

——————————

சாஸ்திரம் அறிந்தாலும், சமயத்தில் உதவாது

– சகாதேவனாய்..

——————————

விவேகமில்லா வேகம், வெற்றியை ஈட்டாது

– அபிமன்யூ

——————————

நிதர்சனம் உணர்ந்தவன், நெஞ்சம் கலங்கிடான்

– கண்ணனாய்….

——————————

வாழ்க்கையும் ஒரு பாரதம்தான்….

வாழ்ந்திடலாம் பகுத்தறிந்து.

—————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பீஷ்மாச்சார்யர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸூகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வியாஸ பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ இராமாயண தர்மம்-ஸ்ரீ அகர இராமாயணம்!-

April 7, 2025

ஸ்ரீ இராமாயண தர்மம்– ராமாயணம். என்ற சொல் “ராமஸ்ய அயனம்’ எனப் பிரிந்து இராம சரிதமெனவும்-ராம : அய்யதே அனேன இதி – ராமாயணம் எனப் பிரிந்து இதனால் இராமன் அடையப்படுகிறான் எனவும் பொருள்படும்.-இன்னும் ‘ரமாய இதம் சரிதம் – ராமம், தஸ்யாயன மிதி,ராமாயணம்’ எனப் பிரித்து, சீதாப் பிராட்டியின் சரிதமெனச் சாற்றலுமுண்டு.-‘காவ்யம் ராமாயணம் க்ருத்ஸநம் ஸீதாயாச் சரிதம் மஹத்-“மேன்மையான ஸீதா சரித்திரமாயும், மஹா காவ்யமுமான இராமாயணத்தை” என்பது இதை வலியுறுத்தும்.

தருமம்: உலகத்தைத் தரிப்பதால், போஷிப்பதால், தருமமென்று சொல்லுகிறார்கள்.
வேத : ஸ்மருதி: ஸதாசார : ஸ்வஸ்யச ப்ரிய மாத்மான :
ஏதத் சதுர் விதம் பராஹு : ஸாஷாத் தர்மஸ்ய லக்ஷணம்’-
என தருமத்திற்கு நான்கு ப்ரமாணங்கள் ஏற்பட்டிருக்கின்றன-அதாவது,ஒரு விஷயம், தருமமென நிச்சயிப்பதற்கு அது
(1) வேதோக்தமாக இருக்க வேண்டும் அல்லது
(2) ஸ்மிருதியிலாவது கூறப்பட்டிருக்க வேண்டும். அல்லது
(3) அது ஸத் புருஷர்களால் அனுஷ்டிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.அல்லது
(4 )அது மனதிற்கு இனிப்பாகவும் ஆனந்த கரமாகவும் இருக்க வேண்டும்.

இந்த நான்கு பிரமாணங்களுக்கு, ஸ்ரீராமாயணம் பொருத்தமா யிருக்கிறதோ வென்னில் –
முதலாவது:- வேதம். “வேதமு மற்றுஞ் சொல்லு மெய்யற மூர்த்தி வில்லோன்.“” என்றும் –கைவிலேந்தி இலங்கையிற் பொருதாரன்றே மறைகளுக் கிருதி யாவார்.”(கம்பர்)-என்றபடி,வேதத்தினால் அறியும் படியான பரம் புருஷன்,ஸ்ரீராமனாக அவதரித்த போது,–வேத: ப்ராசேதஸா தாஸீத் ஸாஷாத் ராமாயணாத்மநா--அவரை அறிவிக்கிற வேமும், வான்மீக முனிவரினின்றும் நேராய் ஸ்ரீமத் ராமாயண ஸ்வரூபத்தினாலே அவதரித்தது.–இதம் பவித்ரம் பாபாக்னம், புண்ணியம் வேதைச் ச சம்மிதம் !இந்த ஸ்ரீ ராம சரிதமானது,பரிசுத்தம் செய்யத் தக்கதும்,பாபங்களை நாசஞ் செய்ய வல்லதும், நன்மைகளை விளைவிக்கத் தக்கதும், வேதங்களோடு சமானமானதுமா யிருக்கின்றது.
இந்த இரண்டு ஆதாரங்களினால், முதலாவது பிரமாணமாகிய வேதத்திற்கு பொருத்தமாகிறது.

இரண்டாவது:- ஸ்ம்ருதி.
தர்ம சாஸ்த்ர ரதா ரூடா வேதகட்கதரா த்விஜா : கரீடார்த்த மபி யத் ப்ரூயு: ஸ தர்ம; பரம ஸ்மருத || (
போதாயனாச்சாரியார்)-வேதத்தை நன்றாய் அப்யசித்தவர்கள் ஸத் புருஷர்கள். அவர்களால் வேதார்த்தங்களைச் சுருக்கிச் சொல்லப் பட்டவைகளே ஸ்மருதிகளாம்.
“ஸ்ரீ ராமாயணம் (2 வது சர்க்கம்.)
‘மச் சந்தா தேவ தே ப்ரஹ்மந் பிரவ்ருத்தேயம் ஸரஸ்வதீ
ராமஸ்ய சரிதம் ஸர்வம் குருத்வம் ரிஷி ஸத்தம
ந தே வாக ந்ருதா காவ்யே காசிதத்ர பவிஷ்யதி “-

நான்முகக் கடவுள் வான்மீகரை நோக்கி நம்முடைய சங்கல்பத்தினாலேயே இந்த ஸரஸ்வதி உம்முடைய வாக்கிலிருந்து தோன்றினாள். நீர் ராம சரிதத்தை ஒரு பிரபந்தமாகச் செய்யக் கடவீர். நீர்செய்யுங் காவியத்தில் ஒரு சொல்லும் பொய்யாகாமலிருக்கும்.” என்றருளிச் செய்த பிரகாரம், வான்மீக முனிவரால் இராமாயணம் செய்யப் பட்டத்தினால்,இதை ஒரு ஸ்ம்ருதியாகச் சொல்லத் தடையில்லை.

மூன்றவது:- ஸதாசாரம்= (ஸத் புருஷரால் அனுஷ்டிக்கப் பட்டது)
பால காண்டம் முதலாவது சருக்கத்தில் 2- முதல் 4-சுலோகங்களினால், வான்மீக முனிவர் நாரத மகரிஷியைநோக்கி சுவாமி! இவ் வுலகத்தில், இக் காலத்தில், சகல கல்யாண குணங்களும் சவுசில்ய குணமும் மற்றும் அநேக குணங்களுடன் தருமத்தை நன்றாயறிந்த சத் புருஷனைக் கேட்டறிய அடியேன் விரும்புகிறேன்.-அடியேனுக்கு தேவரீர் அருளிச் செய்ய வேண்டும் என்று வினாவின் பொழுது நாரத மகரிஷி, மிகுந்த களிப்புடன் “ஒய் முனிவரே! நீர் கேட்ட குணங்களெல்லாம் பொருந்திய புருஷனைச் சொல்லுகிறேன் கேளும்–இசுவாகுவம்ஸ் ப்ரபவோ ராமோ நாம ஜநை : ஸ்ருத-‘இக்ஷவாகு குலத்தில் அவதரித்த ஸ்ரீராம பிரான் என்பவர் தான்”என விடை யளித்திருக்கிறார்.-இதனால் ஸ்ரீராம பிரான் ஸத் புருஷன் என்றும் அவரால் அனுஷ்டிக்கப் பட்டவை ஸதா சாரம் என்றும்,ஏற்படுவதால், மூன்றாவது ப்ரமாணமும் பொருத்த மாகிறது.

நான்காவது:- ஆத்ம ஸந்துஷ்டி.
“பாட்யே கேயே ச மதுரம் –
” ஹ்லாதயத் ஸர்வ காத்ராணி மநாம்ஸி ஹ்ருதயாநிச
“–இந்த ராமாயணம், மனதிற்கும், இருதயத்திற்கும், மிகக் களிப்பாக இருக்கின்றது என்று 4 வது சருக்கத்தில் கூறப்பட்டிருக்கின்றது.-இதனால் நான்காவதான ப்ரமாணமும் பூர்த்தி யாகின்றது

“ராமோ விக்ரகவான் தர்ம ஸாது: ஸத்ய பராக்ரம :-ஆரண்ய-37- 13.-ஸ்ரீ ராமன் உருவங்கொண்ட தருமம் போலும்,நற் குண முடையோனும், உண்மையான தோள் வலியுற்ற வனுமாகின்றனன். ” என இராவணனுக்கு,ராம த்வேஷியான மாரீசன் உரைத்த வசனம்.
யஸ்மின் ந சலதே தர்மோன யோ தர்மம் நாதி வர்த்ததே ஸ ஏஷ ராம;-யுத்த-. 28-19.
எவரிடமிருந்து தருமம் சலிக்க வில்லையோ எவர் தருமத்தை விட்டு விலக வில்லையோ, அவரே இந்த இராம பிரான்.”என, இராவணனைப் பார்த்து சுகனுடைய வசனம்.

தர்மாத்மா சாத்ய சந்தஸ்ச ராமோ தாசரதிர் யதி
பெளருஷே சா ப்ரதி த்வந்த: ததைனம் ஜஹி ராவணிம்
| ”(யுத்த- 91. 69.) ” ஸ்ரீராம பிரான் தர்ம ஸ்வரூபி என்பதும்,சொன்ன சொல் தவறாதவர் என்பதும், இணை யற்ற பராக்கிரம முடையவரென்பதும் உண்மை யாயின், இந்த பாணம் இந்திரஜித்தை ஹதம் செய்யட்டும்.” என சபத பூர்வமா யுரைத்த, இளைய பெருமாளுடைய வசனம்
‘ஏக பத்நீ ரததரோ ராஜர்ஷி சரித சுசி:]
ஸ்வதர்மம் க்ரு மேதியம் சிசுப ஸ்வய மாசரந்
“(ஸ்ரீமத் பாகவதம் – 9 -10- 55.)ஸ்ரீ இராம பிரான் ஏக பத்நீ விரதத்துடன், சுத்தராக கிருஹஸ்த தர்மத்தைத் தாம் அனுஷ்டித்தார். ஜனங்களும் அதனைக் கண்டு அவர் அவர்கள் தர்மத்தை விடாமல் செய்தார்கள்.” என பரிக்ஷித்து மஹாராஜனை நோக்கி, சுகப் பிரம்ம ரிஷியின் வசனம்

தோன்றிய நல்லற நிறுத்தத் தோன்றினான்” அயோத்தி நகர் -நீங்கு 163
நல்லற நிறுத்த நணுகித், தாமராவணை துறந்து தரை நின்றவரை “‘ ஆரணி – விராத-30.-இராம பிரான் உலகத்தில் தருமத்தை நிலை நிறுத்தவே அவதரித்திருப்பதாக கவிக் கூற்று.

”சூரறுந்தவனுஞ் சுடர் நேமியு மூரறுத்த வொருவ மோம்பினும்
ஆரறத்தி னொடன்றி நின்றாரவர்
வேரறுப்பென் வெருவன் மினீரென்றான்
.”-(ஆரணி-அகத்தி 22)
“வெம்பு கண்டகர் விண் புக வோறுத்
திம்பர் நல்லறஞ் செய்ய வெடுத்தவிற் கொம்பு முண்டருங் கூற்ற முமுண்டுங்க
ளம்பு முண்டென்று சொல்லு நம் மாணையே
.”(கிட்கிந்தை 4)
உலகத்தில், துஷ்ட நிக்கிரகமும்,தர்ம ஸம் ஸ்தாபனமும் செய்வதற்காக, தாம் அவதரித்திருப்பதாக, இராம பிரானுடைய வசனம்”
பின்னை யேது முதவுந் துணை பெறாளுரை பெறாண்
மின்னையே யிடை நுடங்கிட விரைந்து தொடர்வா
ளன்னையே யனையவன் பினாவோர் கடமை விட்
டென்னையே நுகர்தி யென்றன ளெழந்து விழவாள்.
“( ஆரணி- விராத-39)
இராம, லெட்சுமணர் உலகத்துக்கெல்லாந் தாயைப் போன்ற அன்பினை யுடைய தரும் ஸ்வரூபிகள், என சீதா பிராட்டியின் வசனம்,
ஓயாத மலரயனே முதலாக வுளராகி மாயாத வானவர்க்கு மற்றொழிந்த மன்னுயிர்க்கு
நீ யாகின் முதற் றாதை நெறி முறையா லீன்றெடுத்து
தாயாவார் யாவரே தருமத்தின் றனி மூர்த்தி
.”(ஆரணி – விராத 52)
பிரம்ம தேவன் முதலான சகல தேவர்களுக்கும்,உலகத்திலுள்ளஉயிர்களக்கும், இராம பிரான் முதல் தந்தை யெனவும், தரும ஸ்வரூபி எனவும், விராத ஸ்தோத்திரம்.
” இருவர் மானிடர் தாபத ரேந்திய
வரி வில் வாட் கையர் மன்மதன் மேனியர்
தரும நீரர் தயரதன் காதலர்
செருவி னேரு நிருத்ரைத் தேடுவார்.
ஒன்று நோக்கலருந் வலியோங்கற
னின்று நோக்கி நிறுத்து நினைப்பினர்
வென்றி வேற்கை நிருதரை வேரறக்
கொன்று நீக்குது மென்று துணர் கொள்கையார்
‘ (ஆரணி- கா.4,5)

இராம லக்ஷ்மணர்கள் தரும சிந்தை யுடையவர்கள், சிறந்த தரும வழியிலே தாங்கள் நினறு ஆராய்ந்து அத் தருமத்தை உலகமெங்கும் நிலை பெறச் செய்யுங் கருத்துடையவர்கள், என கரனிடம் சூர்ப்பனகை வசனம்.
சங்கு சக்கரக் குறியுள தடக்கை யிற் றாளி லெங்கு மித்தனை யிலக்கணம் யாவர்க்கு மில்லை -செங்கண் விற் கரத்தி ராமனத் திரு நெடுமாலே யிங்குதித்தன னீண்டற நிறுத்துதற் கின்னும் “(கிட்கி- மராமர – 117)
கோதண்ட பாணியான இராமன், தர்ம ஸம் ஸ்தாபனத்தின் பொருட்டு இங்கு திருவவதரித்த ஸ்ரீ மஹா விஷ்ணு வென்பதாக சுக்ரீவ மகாராஜனிடம், தெரிவித்த நவ வ்யாகரண பண்டிதரான திருவடியின் வசனம்.
உழைத்த வல் லிருவினைக் கூறு காண்கலா
தழைத் தயருலகினுக் கறத்தினாறெலா
மிழைத்த வற் கியல் பல வியம்பி யென் செய்தாய்
பிழைத்தனை பாவியுந் பெண்மையா லென்றான்
“‘(கிட்கி. வாலி வதை. 22)
பல பிறப்புகளில் தாம் செய்து சேர்த்த கொடிய கருமங்களை யொழிக்கும் உபாயத்தைக் காணாமல் வருந்திக் கதறுகின்ற உலகத்தவர்கள் உய்யுமாறு அவதரித்துத் தர்ம மார்க்கங்களை யெல்லாம்.தான் அனுஷ்டித்துக் காட்டும் புருஷோத்தமனான இராம பிரான்,என்பதாக, தாரையிடம் கூறிய வாலியின் வசனம்.
“அற மன்னானுட னெம்பி யன்பினோ
டுற வுண்ணா வுயிரொன்ற வோவினான்
பெற வொண்ணாத தொர் பெற்றி பெற்றவற்
கிற வென்னா மிதினின்ப மியாவதோ.
“(கிட்கி. சம்பாதி45)
தர்ம ஸ்வரூபியான இராம பிரான் திறத்தில் ஜடாயு வுயிரைக் கொடுக்க நேர்ந்தது பெரும் பாக்கியமென்று வானரரிடம் சம்பாதி வசனம்.-இத்யாதி வசனங்கள் ஸ்ரீமத் ராமாயணத்தில் ஸ்ரீராம சரித்த்தினாலே தரும ஸ்வரூபமும், தர்மானுஷ்டானமும் வர்ணிக்கப் பட்டிருக்கின்றன வென்பதற்குப் போதிய சான்றாகும்,

இராமாவதார காலம்.
” பயம் த்யஜ்த பத்ரம் வோ ஹிதார்ததம் யுதி ராவணம்
ஸ புத்ர பெளத்ரம் ஸமாதயம் ஸமித்ராஜ்ஞாதி பரந்தவம் | “”ஹத்வா க்ரூரம் துராத்மானம் தேவ ரிஷிணாம் பயாவஹம் தச வருஷ ஸஹஸ்ராணி தச வருஷ சதாநிச
வத்ஸயாமி மாநுஷே லோகே பாலயன் ப்ருத்வீ மிமாம்
.”-பாலகாண்டம்- 15- 28, 29.
“ஓ தேவர்களே! இனி அச்சம் என்பதை விட்டு விடுங்கள்; உங்களுக்கெல்லாம் நன்மையே உண்டாகும். அந்தத் துராத்மாவான இராவணனை அவனுடைய பரிவாரங்களோடு சங்கரித்துப் பூலோக பரிபாலனஞ் செய்து கொண்டு பதினோராயிரம் வருடமிருப்பேன்” என்று தன்னைச் சரணமடைந்த தேவர்களை நோக்கி ஸ்ரீ மஹாவிஷ்ணுவானவர் அருளிச் செய்தனர்.
”க்ருதே யுகே வயதீ தேவை முகே திரேதா யுகஸ்யது ஹிதார்த்தம் தேவ மர்த்யானாம் பவிதா ருப விக்ரஹ இஷ் வாஹு ணாம் ச யோ ராஜா பாவ்யோ தசரதோ புவி
தஸ்ய ஸூநுர் மஹா தேஜா ராமோ நாம பவிஷ்யதி
.–உத்-கர் 37 – க்குப்பின் ப்ரக்ஷிப்த சரு-18,19.ஸனத்குமார முனிவர் இராவணனை நோக்கி சொன்னது – ” க்ருத யுகம் கழிந்த பின்னர் த்ரேதா யுகத்தின் துவக்கத்தில் தேவர்களுக்கும் மனுஷ்யர்களுக்கும் ஹிதமியற்றுமாறு இஷ்வாகு குலத்திலே தசரதனென ஒரு ராஜன் ஜனிப்பான்; அந்தத் தசரத மஹா ராஜனுக்குப் புதல்வனாய் ஸ்ரீராமனென்னும் ஒருமாஹாநுபாவன் அவதரிக்கப் போகின்றனன் என உரைத்தனர்.
த்ரேதா முகே தாசரதிர் பூத்வா ராமோஹம் அவ்யய :
உத்பத்ஸ்யே பரயா சக்த்யா ததாத்ரக்ஷயஸி மாம் தத
–3.அத்யாத்ம ராமா . பால-7-255, 263- அழிவற்ற நான் த்ரேதா யுகத்தில் தசரத சக்ரவர்த்திக்குக் குமாரனாக அவதாரஞ் செய்யப் போகிறேன். அப்போது மறுபடியும் நீ என்னைப் பார்க்கப் போகிறாய் ” என்பதாக ஸ்ரீ மஹாவிஷ்ணு தனக்கு வரமருளி யிருப்பதாக பரசுராமர் ஸ்ரீ ராமபிரானிடம் விண்ணப்பஞ்செய்தனர்.
த்ரேதா யுகே தாசரதிர்பூத் நாராயண: ஸ்வயம் | ஆகமிஷ்யதி தே பாஹுச் சித்யேதே யோஜனாயதெள் தேனசாபாத் வினிர் முக்தோ பவிஷ்யஸி யதா புரா!–அத்யாத்ம -ராமா -ஆரண்ய -9-19-ஸ்ரீமந் நாமாயண மூர்த்தி த்ரேதா யுகத்தில் தசரத குமாரனாக பூமியில் அவதாரமெடுத்து, ஸ்ரீ ராமனென்னும் திரு நாமத்துடன் வரப் போகிறார். அவர் திருக் கரத்தால் உன் கரங்கள் சேதிக்கப் படுங்காலம், உன் சாப விமோசன காலமாகும். ” என்பதாக அஷ்டவக்ர முனிவர் தனக்கு உரைத்திருப்பதாய் கபந்தாசுரன்ஸ்ரீ ராம பிரானை நோக்கிக் கூறினன்.

புராஹம் ப்ரஹ்மண ப்ரோக்தா ஹ்யஷ்டா விம்சதி பர்யயே |த்ரேதா யுகே தாசதீராமோ நாராயணோ அவ்யய: -சுந்தர-1-48.”இருபத்தெட்டாவது பரிவிருத்தியில் த்ரேதா யுகத்தில் சாஷாத் நாராயணன் தசரத குமாரனாகிய ஸ்ரீராமனாக அவதரிக்கப் போவதாய் ப்ரஹ்ம தேவர் என்னிடம் அருளிச் செய்திருக்கிறார் ‘ என்பதாக இலங்கணி என்பவள் திருவடி யிடம் உரைத்தனள்.

ததஸ்ச த்வாதஸே மாஸே சைத்ரே நாவமி கெதிதெள நக்ஷத்ரெ அதிதி தைவத்யே ஸ்வோச்ச ஸம்ஸ் தேஷு பஞ்சஸு க்ரஹேஷ. கர்க்கடெ லக்நே வாக் பதா விந்தூ நாஸஹ ப்ரோத்ய மாநெ ஜகன்னாதம் ஸர்வ லோக நமஸ்கிருதம் கௌஸல்யா ஜநயத் ராமம் ஸர்வ லக்ஷண ஸம்யுதம் விஷ்ணொ சர்த்தம் மஹா பாகம் புத்ர மைஷாவாக வர்த்தகம் —பால -9-10-11–பின்பு பன்னிரண்டாவது மானமான சித்திரை மாஸத்தில் நவமி திதி புநர் வஸு நக்ஷத்திரம் கூடின தினத்தில் ஐந்து க்ரமங்கள் உச்சமாயிருந்த வளவில்,கர்கட லக்நத்தில், குரு சந்திரனோடு கூடியிருந்த வளவில், கௌஸல்யா தேவி, ஸகல ஜகத்துக்கும் நாயகராய், ஸமஸ்த பிராணிகளுக்கும் வந்தநீயராய், சாமுத்ரிக சாஸ்திரத்திற் சொல்லிய ஸமஸ்தமான உத்தம புருஷ லக்ஷ்ணங்களோடு கூடினவராய், விஷ்ணுவினுடைய பேர் பாதி பாகத்தினாலுண்டானவராய், மஹா பாக்யவானாய், பித்ருக்களை நரகத்தில் நின்று முத்தரிப்பிக்குமவராய், தசரத மஹா ராஜனுடைய மனோல்லாசத்தை வ்ருத்தி பண்ணுபவரான ஸ்ரீ ராம பிரானைப் பெற்றனள்.

ஒரு பகலுலகெலா முதரத்துட் பொதிந்
தரு மறைக் குணர் வரு மவனை யஞ்சனக்
கரு முகிற் கொழுந் தெழில் காட்டுஞ் சோதியைக்
திருவுறப் பயந்தன டிறங்கொள் கோசலை. “‘
” மேட மா மதி திதி நவமி மீன் கழை நீடுறு மாலை கற்கடக நீதி சேர்
ஓடை மா களிறனானு தயராசி கோள் நாடினே காதசர் நால்வருச்சரே.”-பால-கா. திரு அவதாரப் படலம்-104, 110.

இந்த ஆதாரங்களினால், வைவஸ்வத மன்வந்தரத்தில் 28- வது சதுர் யுகமான த்ரேதா யுகத்தில் சித்திரை மாஸத்தில் சுக்ல பக்ஷ நவமி திதி, புனர்வசு நஷத்திரம் கூடிய சுப தினத்தில் ஸ்ரீமந் நாராயணனே தசரத சக்கரவர்த்திக்குத் திருக் குமாரராக ஸ்ரீராமனென்னும் திரு நாமத்துடன் அவதாரம் செய்ததாக ஏற்படுகிறது.

தச வர்ஷ ஸஹஸ்ராணி கதாநி மஹாத்மனோ-உத்-42-26-பதினாயிரமாண்டுகள் பெருமையாகச் சென்றன.அப்ரவீச்ச வராரோஹாம் ஸீதாம் ஸூர ஸுதோபமாம் அபத்ய லாபோ வைதேஹி தவய்யயம் ஸமுபஸ்தித: கிமிச்சஸி வராரோஹேகாம : கிம் க்ரியதாம் தவ – உத்-42-31, 82 ஒரு நாள் ஸ்ரீராம பிரான் ஜானகியை நோக்கி ஹே.வைதேஹி! நீ கர்ப்பந் தரித்திருப்பது எனக்கு மிகவும் களிப்பைத் தருகிறது. இப்பொழுது நீ யாது விரும்புகின்றனை? நீ யாது வேண்டினும் அதனை யான் நிறைவேற்றுவேன் ” எனக் கூறினார். அதற்குப் பிராட்டி, கங்கைக் கரையிலுள்ள மிகப் பரிசுத்தமான தபோ வனங்களுக்குச் சென்று, அங்கு, மகரிஷிகளுடைய பாத மூலத்திற் சிலநாள் பணிவிடை செய்து ஆனந்தமனுபவிக்க வேணுமென்ற ஆசை யிருப்பதாகத் தெரிவித்தாள்.

அந்த சமயம் ஸ்ரீராமபிரான் சீதாபிராட்டியை இராவண கிரஹத்திலிருந்து அழைத்து வந்ததைப் பற்றி சிலர் அபவாதம் சொல்வதாகக் கேட்டு, பிராட்டி கருதி யிருந்த காரணத்தையே வியாஜமாகக் கொண்டு,அவளை யழைத்துக் கொண்டு போய் கங்கா நதி தீரத்தில் வான்மீக முனிவராச்சிரமத் தருகே விட்டு விடுமாறு,இளைய பெருமாளுக்கு நியமித்தருளினர்.-சீதாப்பிராட்டி தனியே புலம்பித் தவிப்பதை ரிஷி குமாரர்களால் கேள்வி யுற்ற வான்மீக முனிவர் உடனே அவ்விடம் சென்று, பிராட்டியைச் சமாதானப்படுத்தி தமது ஆச்சிரமத்திற்கு அழைத்து வந்து அங்குள்ள ரிஷி பத்னிகளிடம் ஒப்புவித்து அவளைக் கருந்துடனே காத்து வருமாறு கட்டளை யிட்டனர்.-யமுனாதீர வாசிகளான முனிவர்கள் முலமாக மதுவின் மகிமையையும், அவனது மகன் லவணாஸூரனது வரலாற்றையும் கேட்டு ஸ்ரீராம பிரான், லவணாசுரனை வதைக்குமாறும் அவனது நகரத்திலேயே யிருந்து ராஜ்ய பரிபாலனஞ் செய்து வருமாறும் சத்ருக்கனருக்கு நியமித்தருளினர். லவணாசுரனுடன் போர் புரிவதற்காக அயோத்தியிலிருந்து புறப்பட்டு மூன்றாம் நாள், சத்ருக்னர்,வான்மீகி ஆச்சிரமத்தில் தங்கினர்.

” யாமேவ ராத்ரிம் சத்ருக்ன: பர்ணசாலாம் ஸமாவிசத் தாமேவ ராத்ரிம் ஸ்தாபி ப்ரஸூதா தாரகத்வயம் ”( உத்-6-1.) சத்ருக்ன ஆழ்வார், என்றையத் தினம் இராத்திரி வான்மீக முனிவரது ஆச்சிரமத்திலே பர்ண சாலையில் படுத்திருந்தனரோ, அன்றைய தினம் இராத்திரி ஸீதாப் பிராட்டியார் இரண்டு திருக் குமாரர்களைப் பெற்றனர்.-இந்த ஆதாரங்களினால் ஸ்ரீ இராம பிரானுடைய பட்டாபிஷேகானந்தரம், பதினாயிரம். வர்ஷங்கள் கழிந்த பினனரே, குச லவர் ஜநநம் என ஏற்படுகிறது.

ப்ராப்த ராஜ்யஸ்ய ராமஸ்ய வால்மீகிர் பகவான் ரிஷி: சகார சரிதம் க்ருத்ஸ்னம் விசித்ர பதமாத்மவான்| சதுர் விம்சத் ஸஹஸ்ராணி ஸ்லோகாநா முக்தவான் ரிஷி :
ததா ஸர்க்க சதான் பஞ்ச ஷட் காண்டானி ததோத்தரம்
–பால-4-1-2-
ஸ்ரீராமபிரான் இராஜ்ய பரிபாலனம் செய்துகொண்டி ருக்கும காலத்தில், வான்மீகமுனிவர் இருபத்தினாலாயிரம் சுலோகங்களும் ஐந்நூறு சருக்கங்களும், ஆறு காண்டங்களும், உத்ரகாண்டமும் செய்தருளினார்.
“மானிஷாத என்று ஆரம்பிக்கும் ஸ்லோகத்தினிடமாக வான்மீக முனிவர்க்குற்ற சந்தேகத்தை, (தமஸா நதிக் கரையில்)ப்ரம தேவர் வந்து நிவர்த்தி செய்து வரங்கள் அளித்து அந்தர் கதானமான பின்பு
தத: ஸ சிஷ்யோ வால்மீகிர் முநிர் விஸ்மய மாயயௌ தஸ்ய சிஷ்யாஸ் தத: ஸர்வே ஐகு ஸ்லோகமிம்ம் புன: “முஹர் முஹு : ப்ரீயமாணா: ப்ராஹுஸ்ச ப்ருச விஸ்மிதா–பால்-2-39- வான்மீக முனிவர், தம்முடைய சிஷ்யர்களுடனே கூட அதிக ஆச்சரியத்தை யடைந்தார். அந்த ஸ்லோகத்தை அவருடைய சிஷ்யர்களெல்லோரும் மிகுந்த பிரியத்துடனும் ஆச்சரியத்துடனும்,அடிக்கடி ஒருவரோடொருவர் சொல்லிக் கொண்டு பாடிக் களித்தனர்.சிஷ்யா – என்று பஹு வசனமாகக் கண்டிருப்பதற்கு, கோவிந்த ராஜர் வ்யாக்யானத்தில் தனது ஆச்சிரமத்திலுள்ள, குசலவர், பரத்துவாஜர் என்று வ்யாகயானம் செய்யப்பட்டிருக்கிறது.-இதனால் குசலவர்கள், ஜனித்து தக்க வயது அடைந்த பின்ன்ரே, இராமாயண கிரந்தம் செய்யப்பட்டதாக ஏற்படுகின்றது.
சதருக்ன ஆழ்வான், லவணாஸுரனை சம்ஹரித்து மதுரா புரியை ஸ்தாபித்த பின்
“ததோ த்வா தசமே வர்ஷே சத்ருகனோ ராம பாலி தாம் அயோத்யாம் சக்ரமே கந்துமல்ப ப்ருத்ய பலாநுக –உத்-7- 1 )
பன்னிரண்டாவது வருஷத்தில் சத்ருக்னாழ்வான் ஸ்ரீராகவனைச் சேவிக்கக் காதல் கொண்டு சொற்ப பரிவாரங்களுடன் அயோத்தியைக் குறித்துப் புறப்பட்டனர்-வழியில் 7, 8 நாள் தங்கி வான்மீகாச்சிர மமடைந்து, அம் முனிவர் அளித்த அர்க்கிய பாதியாதி அதிதி பூஜைகளைப் பெற்று,அன்று ராத்திரி அவ்வாச்சிரமத்திலேயே சயனித்திருந்தனர்.

ஸ புத்தவாந் நர ஸ்ரேஷ்டோ கீத மாதுர்ய முத்தமம்
சுச்ராவ ராம சரிதம் தஸ்மின் காலே யதா க்ருதம்
தம் த்ரீலய ஸமா யுக்தம் த்ரிஸ்தான கரணாந்விதம்
ஸமஸ்க்ருதம் லக்ஷணோபேதம் ஸம தால ஸமந்விதம்
சுச்ராவ ராம சரிதம் தஸ்மின் காலே புராக்ருதம்
–உத்தர –71-14-15-16
சத்ருக்னாழ்வான் வான்மீகாச்சிரமத்தில் விருந்தமுது செய்தவளவில், ஸமீபத்தில் அதி மதுரமான ஸங்கீதமொன்று கேட்டது.ஸ்ரீராம சரிதமானது ஸம்ஸ்க்ருத பாஷையில் இசை யொத்த தாள லயங்களுடனே, யாழிலிட்டு,சு லஷணமாக மறைவிலே பாடப்பட்டது. அதனைச் செவி யுற்ற வளவில், சத்ருகனாழ்வானுக்கு முன் நடந்த ஸ்ரீ ராம சரித்திரம் மறுபடி தமது கண்ணெதிரில் நடப்பது போல தோன்றியது.வான்மீக முளிவர் தாமுண்டு பண்ணிய இராமாயண மஹா காவியத்தைக் குச லவருக்கு உபதேசித்தருளின போது, அவர்களுக்கு வயது பன்னிரண்டு என ஏற்படுகின்றது

ஸ்ரீராம பிரான் அச்வமேத யாகஞ் செய்யத் தீர்மானித்து கோமதீ நதீ தீரத்தில் யாக சாலை நிருமித்து வருகிறவர்களுக்கு விடுதிகள் அமைத்து, ஸகல பதார்த்தங்களும் அங்கே சித்தப் படுத்தவும்,வானரர், ராக்ஷஸர் முதலான யாவரையும் அவ் வேள்விக்கு வர வாழைக்கும்படிக்கும் தம்பிமார்களுக்கு நியமித்தருளியும்,
மம மாத்ரூஸ் ததா ஸர்வா: குமாராம் : புராணி ச
காம்சநீம் மம பத்ம்ச தீக்ஷா யாம்ஜ்ஞாம் ஸ்ச கர்மணி
அக்ரதோ பரத: க்ருத்வாகச் சாத்வக்ரே மஹா யசா
: | “உத்தர -91-24-25-
நமது மாதாக்களையும், பரதன் முதலியோர்களுடைய அந்தப்புர ஸ்திரீகளையும், ஸீதைக்குப் பிரதியாக நிருமித்து வைத்திருக்கின்ற சுவர்ண ஸீதையையும் யாகஞ் செய்யும்
நன்குணர்ந்த பிராம்மணர்களையும், முன்னிட்டுக் கொண்டு, பரதன் முன்னாலே செல்லக் கடவன் ” எனவும்nநியமித்தருளினர்.-இதனால் ஸீதாப்பிராட்டி வான்மீகாச்சிரமத்தி லிருக்கும் பொழுது யாகம் ஆரம்பிக்கப்பட்டதாக வாகின்றது.

வர்தமானே ததா பூதே யஜ்ஞேச பரமாத்புதே
ஸ சிஷ்ய ஆஜகாமாசு வால்மீகிர் பகவான் ரிஷி
:-உத்தர -93-1-இவ்வாறு மகா வைபவத்துடனே நடக்கும் அற்புதமான அச்வமேத யாகத்துக்கு வான்மீக முனிவரும் தமது சிஷ்யர்களுடனே எழுந்தருளினர்.”வான்மீக முனிவர் தாம் கற்பித்த இராமாயணத்தை, முனிவர்கள் வாஸஸ்தானங்களிலும், பிராம்மணர்கள் இறங்கி யிருக்கு மிடங்களிலும், ராஜ மார்க்கங்களிலும், அச்வமேத யாகம் நடக்குமிடத்தில் ஸ்ரீராமபிரான் சன்னதியிலும் பாடிக் கொண்டு போகும்படி தமது சிஷ்யர்களான குசலவர்களுக்குக் கட்டளை யிட்டனர். அவ் விருவரும் முனிவர் மொழிந்த வண்ணம், இராமாயணத்தை கானம் செய்து கொண்டு சென்றனர்கள்.

தாம் ஸசுச்ராவ காகுஸ்த: பூர்வாசார்ய விநிர்மிதாம் அபூர்வாம் பாட்ய ஜாதிம்ச கேயேன ஸமலம க்ருதாம் ப்ரமாணைர் பகுபி பத்தாம் கந்த்ரீலய ஸமந்விதாம் பாலாப்யாம் ராகவ: ஸ்ருத்வா கெளதூகல பரோபவத் .”–உத்தர -94-2- இரண்டு பாலகர்கள் வீணை மீட்டிக் கொண்டு ஓத்த குரலினராய் சு லக்ஷணமாக தம்மாசிரியர் கற்பித்த இராமாயணத்தை இன்பமாய்ப் பாடிக் கொண்டு வருவதை ஸ்ரீராகவன் திருச் செவி சார்த்தி இஃது அபூர்வமாயும்,அற்புதமாயு மிருக்கின்றதே யென வியந்து களிப்படைந்தனர்.”‘அனந்தரம் அந்தக் காவியத்தின் வாலாற்றையும், அதை இயற்றியவர் வான்மீக முனிவரென்பதையும் அச் சிறுவர்கள் மூலமாக ஸ்ரீராகவன் தெரிந்து கொண்டனர்–.ராமோ பஹுன் யஹான்யேவ தத் கீதம் பரமம் சுபம் சுச்ராவ முனிபி ஸார்த்தம் பார்த்தி வை: ஸஹ வானரை: “-உத்தர -95-1- ஸ்ரீராகவன் நாள் தோறும் பல முனிவர்களும், அரசர்களும் புடை சூழச் சபையினடுவே முனி குமாரர்களை வரவழைத்து மிகச் சிறந்ததும், சுபமுமான அவர்களது சங்கீதத்தைச் செவி சார்ததிக் களி கூர்ந்தனர்.-இந்த ஆதாரங்களினால் ஸ்ரீராமபிரான் அயோத்யா புரிக்கு ராஜவாக பட்டாபிஷேகம் செய்யப்பட்டு,பதினாயிரம் வருஷங்கள் தரும நெறி தவறாது அரசாட்சி செய்து வந்த பின் சீதாப் பிராட்டி கர்ப்பமடைந்து வான்மீக முனிவராச்சிரமத்தில் குசன், லவன் என்னும் இரண்டு குமாரர்களைப் பெற்று,அக் குமாரர்களுக்கு வயது பன்னிரண்டு நிரம்பிய பொழுது,வான்மீக முனிவருக்கு நாரத மகரிஷியால் ஸ்ரீராம சரிதம் சங்கரஹமாக உபதேசிக்கப்பட்டு பிரம தேவரின் ஆக்ஞா ப்ரகாரம் அம் முனி புங்கவர் 24000 கிரந்தங்களடங்கிய ஸ்ரீஇராமாயண மென்னும் ஆதி காவியத்தைச் செய்தருளி அதைத் தமது சீடர்களான குச லவர்களுக்கு உபதேசிக்க, அவர்களால் அந்த இராமாயணம் ஸ்ரீராமபிரானுடைய அஸ்வமேத மகா மண்டபத்தில் முனிவர்,அரசர், வானார் முதலியோர் சேர்ந்துள்ள சபையில் ஸ்ரீராமபிரான் சனனதியில் தாளலயத்துக் கிணங்க கானம் செய்து அரங்கேற்றப்பட்டு சபையோர்களால் மிகுந்த சந்தோஷத்துடன் ஒப்புக் கொள்ளப்பட்டதாக நிச்சயிக்கப்படுகிறது.

—————

குருசிஷ்ய தருமம்.

குரு சிஷ்ய லக்ஷணம்:-
“தப: ஸ்வாத்யா நிரதம் தபஸ்வி வாக் விதாம் வாம்
நாரதம் பரிபப்ரச்ச வால்மீகிர் முநி புங்கவம்

தபஸ் வேத வேதாந்தங்கள் இவைகளைப் பூர்ணமாக அடைந்தவரும், உபதேசிப்பவர்களுக்குள் மேலானவரும், முனி ஸ்ரேஷ்டருமான நாரத மஹ ரிஷியை, தவத்தோடு கூடிய வான்மீக முனிவர் தெண்டம் ஸமர்ப்பித்து வினாவினார்.”
இது இராமாயணத்தின் முதல் சுலோகம். இதனால் குரு சிஷ்யன் லஷணம் சொல்லப் பட்டதாகிறது.-எவ்விதமெனில்- ஆசார்ய லஷணம்
1- தபோ நிரதம்: தவத்தைப் பூரணமாக அடைந்தவர்,என்றதினால் அவர் சர்வ சக்தி வாய்ந்தவர் என்பது ஸுசகம்.
” யத் துஸ்தரம் யத் துராபம் யத் துர்கம் யச் சதுஷ்கரம்
தத் ஸர்வம் தபஸா ஸாத்யம் தபோஹி தூரதிக்ரமம் “

எது கடக்க முடியாததோ, எது பெற முடியாததோ, எது செய்ய முடியாததோ அவை எல்லாம் தவத்தால் சாதிக்க முடியும். ஆகையால் தவத்தை வெல்வதரிது.”
வேண்டிய வேண்டியாங் கெய்தலாற் செய்தவமீண்டு முயலப்படும்.”
கூற்றங் குதித்தலும் கைகூடு நோற் றவினாற்ற தலைப் பட்டவர்க்கு ‘
என்ற ஆகாரங்கள் நோக்கத் தக்கன.

(2) ஸ்வாத்யாய நிரதம்:- வேத வேதாந்தங்களைப் பூர்ணமாக அடைந்தவர், என்றதினால் நாரதர் சொல்வதெல்லாம் தருமத்தோடு பொருந்திய ஸத்திய வசனம் என்பது ஸூசகம்.

(3) வாக் விதாம் வரம் :உபதேசிப்பவர்களுக்குள் மேலானவர்,என்றதினால் சிறந்த போதனா சக்தி வாய்ந்தவரெனவும்,வ்யாகரணம் முதலான சகல சாஸ்திரங்களையும் நன்றாயறிந்தரெனவும் பொருள்படும்.
(4)முனி புங்கவம் :- முனி ஸ்ரேஷ்டர், என்றதினால் இந்திரிய நிக்கிரகமுள்ளவர் என்பதும், பகவ த்யானத்தோடு கூடிய வரென்பதும்,திரி கால வர்த்தமானங்களை அறியக் கூடியவரென்பதும், ஸதா ஜப பரரென்பதும், ஸுசகம்.
(5) நாரதம் -நாரத மஹரிஷியை,என்றதினால் நாரம்-ஜ்ஞானம், அதைக் கொடுக்கக் கூடியவர் என்பதும், நாரம்- அஜ்ஞானம், அதை நிவர்த்தி செய்யக் கூடியவரென்பதும், த்ரி லோக சஞ்சாரியான படியால்,மூன்று லோகத்திலுள்ள வர்த்தமானங்களை யறிபவரென்பதும்,பிரம்ம புத்திரரான படியால், உத்தம குலத்தைச் சேர்ந்தவரென்பதும் ஸூசகம்.

ஆகவே இந்த ஐந்து பதங்களினால், ஆசார்யன் பூர்ணமான தபஸை யுடையவராகவும், வேத வேதாந்தங்களையும் வியாகரணம் முதலான ஸகல சாஸ்திரங்களை யுமுணர்ந்தவராகவும், பகவத் பக்தியுடன் அநவரத ஜப பரராகவும்,சிஷ்யனுடைய அஜ்ஞானத்தைப் போக்கி,ஜ்ஞானத்தைக் கொடுத்துப் பரமாத்ம ஸ்வரூபத்தை உபதேசிக்க வல்லவராகவும், ஜிதேந்த்ரியராகவும்,உத்தம குலத்தவ ராகவுமிருக்க வேணுமென்று ஆசார்ய லஷணம் சொல்லப் பட்டதாயிற்று.
கு ஸப்தஸ் த்வந்தகார ஸ்யாத் ருகாரஸ் தந் நிவர்தக :
அந்தகார நிரோதித்வாத் குருரித் யபிதீயதே

கு , என்பது அஜ்ஞானத்தையும், ரு -என்பது அதன் நிவர்த்தியையும் சொல்லுகிற படியால் மனதின் கண்ணுள்ள அஜ்ஞானமாகிற விருளை நீக்கி மெய்ஞ் ஞானமாகிற பிரகாசததைத் தருவதால் குருவெனச் சாற்றப் படுகின்றனர்.
“குலனருள் தெய்வங் கொள்கை மேன்மை
கலை பயில் தெளிவு கட்டுரை வண்மை
நில மலை நிறை கோல் மலர் நிகர் மாட்சியும்
உலகிய லறிவோ டுயர் குண மினையவும்
அமைபவன் நூலுரை யாசிரி யன்னே.”
என்ற நன்னூல் இங்கு நோக்கத்தக்கது.

சிஷ்ய லக்ஷணம:-
(1) தபஸ்
:- என்றதினால் பகவத் சொரூபத்தை யறிய ஆவல் கொண்டரென்பதும், பல விரதங்களை யனுஷ்டித்தவரென்பதும், சம தமாதி ஸம்பத்திகளை யடைந்தரென்பதும் ஜீவ காருண்ய முடையவரென்பதும் களங்கமற்ற இருதயமுடையவ ரென்பதும் ஸூசகம்-உற்ற நோய் நோன்ற லுயிர்க்குறு கண் செய்யாமை யற்றே தவத்திற் குரு.”

2-பரிபப்ரச் ச :- என்றதினால், விதிவதுபஸந்ந: என்பது பொருள்.-அதாவது,உபதேசம் பெற்றுக் கொள்ள,குருவைத் தேடிப் போய்,தண்டம் ஸமர்ப்பித்து, விதிப் பிரகாரம் கேட்க வேண்டு மென்பது.
தத்வித்தி ப்ரணிபாதே பரி ப்ரஸ்நேந ஸேவயா
உபதேஷ் யந்தி தே ஞாநம் ஞாநிநஸ் தத்வ தர்ஸிந
”–அந்த ஆத்ம ஜ்ஞானத்தை. குருவைத் தேடிப் போய், தண்டம் ஸமர்ப்பித்து, விதிப் பிரகாரமான கேள்வியினாலும், ஸூஸ்ரூஷையினாலும் அறிந்து கொள்ளக் கடவாய். தத்வ மறிந்த பண்டிதர்கள் உனக்கு ஜ்ஞானத்தை போதிப்பார்கள்.” என்று அர்ஜூனனை நோக்கி யருளிச் செய்தஸ்ரீ கிருஷ்ண பகவானுடைய வசனம் இங்கு கவனிக்கத் தக்கது.
ஆகவே, தபஸ்வீ, பரிபப்ரச்ச என்ற பதங்களினால் சிஷ்ய லக்ஷணம் சொல்லப் பட்டதாயிற்று.
ஸத் புத்திஸ் ஸாது ஸேவீ ஸமுசித சரிதஸ் தத் போதாபிலாஷி
ஸூஸ்ரூஷுஸ் த்யக்தமாந: ப்ரணிபதந பர : பிரஸ்ந கால ப்ரதீஷ :
ஸாந்தோ தாந்தோ ந ஸூயுஸ் ஸரண முபகதஸ் ஸாஸ்தா விஸ்வாஸ ஸாலி
ஸிஷ்ய ப்ராப்த: பரீக்ஷாங் க்ருத விதபி மதம் தத்வதஸ் ஸிஷணீய

நற் புத்தியுடன் ஸாது ஸேவை யுடையவனாகி நன்னடக்கை யுடையவனும்,உண்மை ஞானத்தை அறிவதில் அபிலாஷை யுடையவனும்,பணிவிடைக் காரனும்,மான அவமான மென்பதற்றவனும், ப்ரஸ்ன காலத்தை எதிர் பார்ப்பவனும், சாந்தனும் அஸூயை யில்லாதவனும், சரணாகதி யடைந்தவனும், சாஸ்திர விஸ்வாஸ முடையவனுமே சிஷ்யனாக அங்கீ கரிக்கத் தகுந்தவன் ” என்பது நோக்கத் தக்கது.
வால்மீகி பகவான் பருகு வம்சத்தி லவதரித்தவர். இவர் (வல்மீகம்- புற்று) புற்றிலிருந்து வெளி வந்ததினால் வால்மீகி என்று பெயர். இவர்க்கு”ப்ராசேதஸர்’ ( அதாவது வருணனுடைய புத்திரர்) என்னும் பெயருண்டு.

உபதேசக் கிரமம் :- .
(1) வான்மீக முனிவர் நாரத மஹரிஷியை நோக்கி-“கோந்வஸ்மிந் ஸாம் ப்ரதம் லோகே குணவாந் கச்ச வீர்யவாந் ”என ஆரம்பித்து,”ஏததிச் சாம் யஹம் ஸ்ரோதும் பரம் கெளதூஹலம் ஹி மே-என்றபடி ஒ ஸ்வாமி! இவ்வுலகிலிக் காலத்தில், அனந்த கல்யாண குணங்களும், சவ்ஸீல்யாதி குணங்களுமுடைய உத்தம புருஷன் யார்? என்பதை அடியேன் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.தேவரீர் அடியேனுக்குக் கிருபை செய்தருள வேண்டும்.” என்று பாலகாண்டம் – 1-2 முதல் ஐந்து ஸ்லோகங்கள் மூலமாக ப்ரஸ்நம் பண்ணினர். அதைக் கேட்டு நாரத மஹரிஷி மிகுந்த சந்தோஷ மடைந்தவராய்(பால – 1 -8 முதல் 96-ஸ்லோகங்க ளடங்கிய ஸ்ரீராம சரிதத்தைப் பூராவாகவும், சம்ஷேபமாகவும் வான்மீக முனிவருக்கு உபதேசித்தருளினார்.-இதனால்- ” தத் விஜ்ஞாநார்த்தம் ஸ குருமே வாபி கச்சேத் “ என்றபடி வேதாந்தார்த்தங்களை ஒரு குருவினிடத்தில் போய்க் கேட்டே அறிய வேண்டு மென்ற தருமமும், ” நா ப்ருஷ்ட: கஸ்யசித் ப்ருயாத் ” என்றபடி ஸிஷ்யன் கேட்காமலிருக்கும் போது குரு உபதேசஞ் செய்யலாகாதென்ற தருமமும் ஸூ சிதம்.

(2) விஸ்வாமித்ர மஹரிஷி யாக ஸம் ரக்ஷணார்த்தமாக ஸ்ரீராம லக்ஷமணர்களை அழைத்துக் கொண்டு, சரயூ நதியின் தென் கரையில் சேர்ந்தவுடன மகரிஷி ஸ்ரீராமபிரானை நோக்கி- “ மந்திர க்ரமம் க்ருஹாணத்வம் பலாமதிபலாம் ததா
த்ரிஷு லோகேஷ வா ராம ந பவேத் ஸத்ருஸஸ் தவ
பிதாமஹ ஸு-தே யேதே வித்யே தேஜஸ் ஸமந்விதே
ததாமி தவ காகுத்ஸ்த ஸ்த்ரு ஸஸ் த்வம் ஹி தார்மிக ”’

ஸ்ரீராமா பலை, அதிபலை யென்னும் மந்திரங்களை உபதேசிக்கின்றேன் பெற்றுக் கொள்க.மூன்று லோகங்களிலும் உனக்குச் சரியாக ஒருவனுமாக மாட்டான். மிகுந்த, பிரகாசம் பொருந்திய ப்ரஹ்ம புத்திரிகளான இம் மந்திரங்களை கிரஹிப்பதற்குத் தார்மிகனான நீயே தகுந்தவன். ஆகையால் உனக்கு உபதேசஞ் செய்கின்றேன் ” என்றுரைத்து உபதேசஞ் செய்தருளினர்.-நோக்கின்னவர் முக நோக்க நோக்குடைக்
கோக்கு மரருமடி குறுக நான்முகன் ஆக்கிய விஞ்ஞைகளிரண்டு மவ்வழி
ஊக்கினனவையவ ருகள்ளத் துள்ளினார்.”
என்ற கம்ப ராமாயணம் நோக்கத் தக்கது.

பின்னும் விஸ்வாமித்திரமுனிவர் ஸ்ரீராமபிரானை நோக்கி
“பரிதுஷ்டோஸ்மி பத்ரம் தெ ராஜ புத்ர மஹாயஸ :
ப்ரீத்யா பாமயா யுக்தோ ததாம் யஸ்த்ராணி ஸர்வஸ
தேவாஸூர கணாந்வாபி ஸ கந்தர்வோர காநபி
யைர மித்ராந் ப்ரஸஹ்யாஜௌ வஸீக்ருத்ய ஜயின்யஸி
ஸ்திதஸ்து ப்ராங்முகோ பூத்வா ஸூசிர் முநிவரஸ் ததா
ததெள ராமாய ஸுப்ரீதேர மந்திர க்ரம மனுத்தமம்”–பால -27-2-3-21-
சக்கரவர்த்தி திருக் குமாரரான ஸ்ரீராம உன்னிடத்தில் யான் மிகுதியும் சந்தோஷ முடையவனானேன். உனக்கு மங்களமுண்டாகட்டும். யான் அறிந்ததான எல்லா அஸ்த்திர ஸஸ்த்திர மந்திரங்களையும் உனக்கு உபதேசிக்கின்றேன். அதனால் தேவாஸூர கந்தருவாதி கணங்களை யுத்தத்தில் வஸ்பம் செய்து ஜெயிப்பாய்.” என அருளிச் செய்து முனிவர் கிழக்கு முகமாயிருந்து மிக்கப் பிரீதியுடன் கூடி அஸ்த்திர ஸஸ்த்திரங்களின் மந்திரங்கள் யாவற்றையும் ஸ்ரீராமபிரானுக்கு உபதேசஞ் செய்தருளினர்.-மறுபடியும் விவாமித்திர முனிவர் ஸ்ரீராமரானை நோக்கி”க்ருஸாஸ் வதந யாந் ராம பாஸ்வராந் காம ரூபிண :ப்ரதீச்ச மம பத்ரம் தெ பாத்ர பூதோஸி ராகவ-பால –28-10-

ஸ்ரீராமா க்ருஸாஸ்வ புத்திரர்களும் பிரகாசத்தோடு கூடியவர்களும் காம ரூபிகளுமான உப ஸம்ஹார மந்திரங்களை யெல்லாம் உனக்கு உபதேசஞ் செய்கின்றேன் பெற்றுக் கொள். உனக்கு சேமமுண்டாகும். இவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு நீயே தகுதி யுடையவன் என அருளி செய்து அம் மந்திரங்களையும் உபதேசஞ் செய்தருளினர்.
இதனால் ஆசார்யன் தகுந்த சீடனுக்கே உபதேசம் செய்யவேண்டு மென்பது ஸுசிதம்.
சொல்லொக்குங் கடிய வேகச் சுடு சரங் கரிய செம்மல்
அல்லொக்கும் நிறத்தினாள் மேல் விடுதலும் வயிரக் குன்றக்
கல்லொக்கும் நெஞ்சிற்றங் காதப் புறங் கழன்று கல்லாப்
புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருளெனப் போயிற்றன்றே.

தாடகையின் பேரில் பிரயோகித்த ராம பாணமானது கல்லைப் போன்ற கடினமான அவள் மார்பில் தைத்துத் தங்கி யிராமல்,ஊடுருவிப் பின்புறஞ் சென்று, கல்வி யறிவடையாத மூடர்களுக்கு ஞானவான்கள் உபதேசித்த தத்துவம் போலப் போயிற்று ‘ அறிவிலாதவற் கறிவன சொல்லுவாரவரால் இறுதி யெய்து வாரென்னு மதின்றுகை கண்டோம்.“என,குபேரன் தனது பரிஜனங்களின் முன்னிலையில் கூறி யிருப்பதாலும்,மூடர்களுக்கு (அபக்குவருக்கு) உபதேசஞ் செய்யலாகா தென்பது ஸூசிதம்.
ஸ்ரீராமபிரான் கேட்காமலிருக்கும் பொழுது விஸ்வாமித்திர முனிவர் தாமாகவே முதலில் மந்திரம் உபதேசித்தது உசிதமோ வெனில் –தன்மக னாசான் மகனே மன்மகன் பொருள் நனி கொடுப்போன் வழி படுவோனே உரை கோளாளற்கு உரைப்பது நூலே “-நன்னூல் –என்றபடி,ஸ்ரீ ராமபிரான், சக்கரவர்த்தி திருமகனாகவும்,வழிபாடு செய்பவனாகவும், சிறந்த மேதாவியாகவும் இருந்ததனால். முனிவர் உபதேசித்தது உசிதமேயாம்.

——————————–

ஊந ஷோடச வர்ஷோ மே ராமோ ராஜீவ லோசந : -எனது மைந்தன் இராமன் பதினாறு வயதுக்கும் குறைவான பாலனன்றோ -என்ற தசரதர் வாக்கியத்தினாலும்;
ஊந த்வாதச வர்ஷோயம் அக்ருதாஸ்த்ரச்ச ராகவ: -தாடகாவதம் செய்யும் பொழுது இராம பிரானுக்கு வயது பன்னிரண்டு நிரம்பவில்லை யென்று இராவணனிடம் கூறிய மாரீச வசனத்தினாலும் ;
இராவண ஸந்நியாஸியை நோக்கி ஸீதா தேவி –
“உஷித்வா த்வாதச ஸமா இக்ஷ்வாகூணாம் நிவேசநே –
புஞ்ஜாநா மாநுஷாந் போகாந் ஸர்வ காம ஸம்ருத்திநி –
தத்ர த்ரயோதச வர்ஷே ராஜா மந்த்ரயத ப்ரபு:
அபிஷேச யிதும் ராமம் ஸமேதோ ராஜ மந்த்ரிபி:

” யான் ஸ்ரீராம பிரானைத் திருமணஞ் செய்து கொண்ட பின்னர், திருவயோத்தியில் பன்னிரண்டாண்டு பதியுடன் கூடிச் சகல போகங்களையும் குறைவின்றி யனுபவித்துக் கொண்டு வாழ்ந்திருந்தேன். பதின்மூன்றாவது வருஷத்தில் என் மாமனார் என் பர்த்தாவுக்கு இராஜ்யாபிஷேகஞ் செய்வதற்கு ஆலோசனை செய்தனர்.
ஸீதாப் பிராட்டியாருக்கு விவாஹமாகும் பொழுது வயது ஆறு எனவும், ஸ்ரீராமபிரானுக்கு வயது பன்னிரண்டு எனவும், ஸித்திக்கின்றது.

அயோநி ஜாம் ஹி மாம் ஜ்ஞாத்வா நாத்ய கச்சத் ஸசிந்தயந் -ஸத்ருசம் சா நுருபம் ச மஹீ பால: பதிம் மம –ஸீதாப் பிராட்டியார் அநஸூயா தேவியை நோக்கி-யான் அயோநிஜை யானதால் எனக்கு ஏற்றவனும் அநுரூபமான கணவனை எனது பிதா தெரிந்து கொள்ள முடிய வில்லை.” என உரைத்தனள்.

வஸிஷ்ட விஸ்வாமித்திரர்களிருவரும் ஜனக மஹா ராஜனை நோக்கி
“ஸத்ருசோ தர்ம ஸம்பம்த: ஸத்ருசோ ரூப ஸம்பதா
ராம லக்ஷமணயோ ராஜந் ரீதா ச ஊர்மிலயா ஸஹ

“ஸ்ரீ ராமபிரானுக்கு ஸீதாப் பிராட்டியும்,இளைய பெருமாளுக்கு ஊர்மிளா தேவியும் குல ரூபாதிகளில் தகுதி யுள்ளவர்களாக இருக்கின்றார்கள்.” என்று அருளிச் செய்தனர்.

துல்ய சீல வயோ வ்ருத்தாம் துல்யாபிஜந லக்ஷணாம் -ராகவோர்ஹதி வைதேஹிம் தம் சேய மஸி தேக்ஷணா

பாபாநாம் வா சுபாநாம் வா வதார்ஹாணா மதாபிவா
கார்யம் காருண்ய மார்யேன ந கச்சித் நாபராத்யதி

சூடக வரவுறழ் சூலக் கையினள்
காடுறை வாழ்க்கையள் கண்ணிற் காண்பரேல்
ஆடவர் பெண்மையை யவாவுந் தோளினாய்
தாடகை யென்பதச் சழக்கி நாமமே.

சந்த்ர காந்தா நநாம் ராம மதீவ ப்ரிய தர்சனம்
ரூபௌதார்ய குணை: பும்ஸாம் த்ருஷ்டி சித்தா பஹாரிணம்

தோள் கண்டார் தோளே கண்டார் தொடு கழற் கமலமன்ன
தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரு மஃதே
வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்
ஊழ் கொண்ட சமயத்தன்னா னுருவு கண்டாரை யொத்தார்.”

எண்ணரு நலத்தினா ளினைய நின்றுழி கண்ணொடு கண்ணினை கௌவி யொன்றை யொன் றுண்ணுவு நிலை பெறாதுணர்வு மொன்றிட அண்ணலு நோக்கினான் அவளும் நோக்கினாள்.”
கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச் சொற்க ளென்ன பயனு மில-
குறள்

ஜனக மஹாராஜர் வசிஷ்ட லிச்வாமித்திரர்களை நோக்கி:-“உத்தரேதிவஸே ப்ரஹ்மந் பல்கு நீப்யாம் மநீஷிண: வைவாஹிகம் ப்ரசம் ஸந்தி பகோ யுத்ர ப்ரஜாபதி :
நாளை நின்று விவாஹத்திற்கு ஸ்லாக்கியமான உத்தர பல்குனி நக்ஷத்திர மாகையால் அன்று விவாஹம் நடத்தப்பட வேண்டும். ” என்றுரைத்தனர்.
பங்குனி யுத்தரமான பகற்போதங்க ணிருக்கினி லாயிர நாமச்
சிங்க மணத் தொழில் செய்த திறத்தால் மங்கல வங்கி வதிட்டன் வகுத்தான்.
“என்றபடி ஸீதாப் பிராட்டியாரின் திருமணம் பகற் காலத்தில் உத்தர பல்குனி நக்ஷத்திரத்தில் நடந்திருப்பதால், விவாஹத்திற்கு பகற் பொழுதும் உத்தர பல்குனி நக்ஷத்திரமும் சிறந்ததென்பது ஸூசிதம்.

இயம் ஸீதா மம ஸூதா ஸஹ தர்ம சரீதவ
ப்ரதீச்ச சைநாம் பத்ரம் தெ பாணிம் க்ருஹ்ணீஷ்வ பாணிநா
பதி வ்ருதா மஹா பாகா சாயேவாநுகதா ஸ்தா
இத்யுக்த்வா ப்ராக்ஷிபத் ராஜா மந்த்ர பூதம் ஜலம் ததா “

லக்ஷ்மணாகச்ச பத்ரம் தெ ஊர்மீளா முத்யதாம் மயா
பரதீச்ச பாணிம் க்ருஹ்ணீஷ்வ மாபூத் காலஸ்ய பரிய :
தமேவ முக்த்வா ஐநநோ பரதம் சாப்ய பாஷத
க்ரஹாண பாணிம் மாண்டயா: பாணிநா ரகு நந்தன
சத்ரூக்நம் சாபி தர்மாத்மா அப்ரவீஜ் ஜநகேஸ்வர :
ஸ்ருத கீர்த்யா மஹா பாஹோ பாணிம் க்ருஷ்ணீஷ்வ பாணிநா
ஸர்வே பவந்த: சவ்ம்யாச்ச ஸர்வே ஸு சரித வ்ரதா :
பத்நீபி : ஸந்து காகுத்ஸ்தா மாபூத் காலஸ்ய பர்யய:
ஐநகஸ்ய வச: ஸ்ருத்வா பாணீந் பாணி பிரஸ் ப்ருசந்
சத்வாரஸ்தே சதஸ் ருணாம் வஸிஷ்டஸ்ய மதே ஸ்திதா :
அக்நிம் ப்ரதக்ஷிணீ க்ருத்ய வேதிம் ராஜாநமேவச
ருஷிம்ஸ்சைவ மஹாத்மாந : ஸபார்யா ரகு ஸத்தமா:
யதோக்தேந தாசக்ருர் விவாஹம் விதி பூர்வகம்
த்ரீ ரக்நிம் தே பரிக்ரம்ய ஊஹுர் பார்யா மஹோஜஸ :
அதோபகாயாம் ஜக்முஸ்தே ஸபார்யா ரகு நந்தநா :

ராஜாப் யநு யயெள பஸ்யந் ஸ ருஷி ஸங்க : ஸ பாந்தவ: ‘

ஸீதாப் பிராட்டியாரின் திருமணம் அத்யாத்ம ராமாயணத்திலுள்ளபடி:-
வஸிஷ்டம் கௌசிகம் சைவ சதாநந்த புரோஹித:
யதா க்ரமம் பூஜ யித்வா ராமஸ்யோபுய பார்ஸ்வயோ
ஸ்தாபயித்வா ஸ தத்ராக்நிம் ஜ்வால யித்வா யதாவிதி
ஸீதாமாநீய சோபாட்யாம் நாநா ரத்ந விபூஷிதாம்
ஸ்பார்யோ ஜநக : ப்ராயாத்ராமம் ராஜீவ லோசநம்
பாதெள ப்ரஷால்ய விதிவத் ததபோ மூர்த்ந்யத் தாரயத்
தத: ஸ்தாம் கரே த்ருத்வா ஸாக்ஷத் உதக பூர்வகம்
ராமாய ப்ரததெள ப்ரீத்யா பாணி க்ரஹ விதாநத:
ஸீதா கமல பத்ராக்ஷி ஸ்வர்ண முக்தாதி பூஷிதா
தீயதே மே ஸுதா துப்யம் ப்ரீதோ பவ ரகூத்தம
இதி ப்ரீதேந மநஸா மீதாம் ராம கரே அர்பயந்
ஊர்மிளாம் செளரஸீம் கந் யாம் லக்ஷ்மணாய ததெள முதா
ததைவ ஸ்ருத கீர்திம் ச மாண்டவீம் ப்ராத்ரு கந்யகே
பரதாய ததா வேகாம் சத்ருக்நாயா பராம் ததெவ்

ஸ்ரீராம பிரானுக்கு இரு பக்கத்திலும், வஸிஷ்டர் விஸ்வாமித்திரர், ஸதாநந்தர் இவர்கள் இருந்து கொண்டு அக்நியை ஸ்தாபனஞ் செய்து விதிப்படி பூஜித்து ஜ்வாலை பண்ணி பாணி க்ரஹண முஹுர்த்தக் காரியங்களை ஆரம்பித்தனர். ஜனக மஹாராஜனும் தன் பத்தினியுடன், நவ ரத்னங்களுடன் கூடிய பலவித ஆபரணங்களை யணிந்தவளும் மிகுந்த தேஜஸ்ஸோடு கூடி யவளுமான ஸீதா தேவியை அழைத்துக் கொண்டு வந்து, செந்தாமரைக் கண்ணனாகிய ஸ்ரீராமபிரானுடைய திருவடிகளை ஜலத்தால் அலம்பி அந்தத் தீர்த்தத்தை ஸிரஸில் ப்ரோக்ஷித்துக் கொண்டு ஸீதாதேவியின் கையை பிடித்துக் கொண்டு என் புத்திரியாகிய இந்த ஸீதா தேவியை உமக்குக் கொடுக்கிறேன். நீர் ப்ரீ தியுடன் அங்கீகரிக்கக் கடவீர் என்றுறைத்து மிகுந்த பிரீதியுடன்

ஸ்ரீராம பிரானது கையில் கொடுத்து உதக பூர்வமாகக் கன்னிகாதானஞ் செய்தனர். இந்தப் பிரகாரமே தன் குமாரியாகிய ஊர்மிளையை இளைய பெருமாளுக்கும், தன் ப்ராதாவின் புத்திரிகளான மாண்டவி,ஸ்ருத கீர்த்தி என்னும் கன்னிகைகளை பரத சத்ருக்கனர்களுக்கும் பாணி க்ரஹணம் செய்து கொடுத்தனர்.

(விவாஹங்கள் எட்டு விதங்களென ஸ்மிருதிகளில் கூறப் பட்டுள்ளன.
” ப்ரஹ்மோ தைவஸ்த தைவார்ஷ : ப்ராஜபத்யஸ் ததாஸ்ர :
கந்தர்வோ ராஷஸச் சைவ பைராசஸ் ச அஷ்டமோ தம: “
” பிரம நற்றெய்வ மாரிடம் பிரசா பத்திய மாசுரம் பெட்பின்
மருவுகாந்திருவ மிராக்கதம் பசாச மென மணமெட்டுள.”
” இருவருமிணங்கு களவு கந்தருவ மனந்தலிலிணங்கல் பைசாசம்
பெரு வலியதனான் மருவுதலரக்கம் பெரிலக் கெய்தலே யசுரம்
பொருளுகந்தளித்தலாரிடம் பிரசாபத்தியம் பொருள் கொளாதளித்த லருமகந்தனை வேட்பித்தலே தெய்வ மழைத்தெதிர் கொடுத்தலே பிரமம் “

1 ) பிரம்மம். (2)தைவம் (3) ஆர்ஷம். (4)ப்ராஜா பத்யம். (5)ஆரம். (6)காந்தர்வம்,(7)ராக்ஷஸம். (8)பைசாசம். என்ற எட்டு வித விவாஹங்களுள் ஸீதாப் பிராட்டியாரின் திருமணம் “ஸஹ தர்மம் சரத இதி ப்ராஜா பத்ய ; ” என்ற ஆச்வலாயனார் வசனப் பிரகாரம் ப்ராஜா பத்தியத்தைச் சேர்ந்ததாக ஏற்படுகின்றது.

யதா யதா ஹி கௌஸல்யா தாஸிவச் ச ஸகீவ ச
பார்யாவத் பகிநீவச் ச மாத்ருவச் சோபதிஷ்டதே-
அயோத்யா -12-69-

ராமம் தசரதம் வித்தி மாம் வித்தி ஜனகாத்மஜாம்
அயோத்யா மடவீம் வித்தி கச்சதா தயதா ஸுகம் -அயோத்யா -40-9-
ஆகாத தன்றா லுனக்கவ்வன மிவ்வயோத்தி
மாகாதலிராமனம் மன்னவன் வையமீந்தும்
போகா வுயிர்த் தாயர் நம்பூங்குழற் சீதை யென்றே
ஏகா யினியிவ் வயினிற்றலு மேதமென்றாள். “
“பின்னும் பகர்வாண் மகனே யிவன் பின்செறம்பி
என்னும் படியன் றடியா ரினி லேவல் செய்தி
மன்னும் நகர்க்கே யிவன் வந்திடின் வாவதன்றேல்
முன்னம் முடி யென்றனள் பான் முலைசோர நின்றாள்.”

————-

அகர இராமாயணம்!

அனந்தனே அசுரர்களை அழித்து, அன்பர்களுக்கு அருள அயோத்தி அரசனாக அவதரித்தான்!

அப்போது அரிக்கு அரணாக அரசனின் அம்சமாக அனுமனும் அவதரித்ததாக அறிகிறோம்.

அன்று அஞ்சனை அவனிக்கு அளித்த அன்பளிப்பு அல்லவா அனுமன்?

அவனே அறிவழகன், அன்பழகன், அன்பர்களை அரவணைத்து அருளும் அருட்செல்வன்!

அயோத்தி அடலேறு, அம்மிதிலை அரசவையில் அரசனின் அரியவில்லை அடக்கி, அன்பும் அடக்கமும் அங்கங்களாக அமைந்த அழகியை அடைந்தான் .

அரியணையில் அமரும் அருகதை அண்ணனாகிய அனந்தராமனுக்கே! அப்படியிருக்க அந்தோ ! அக்கைகேயி அசூயையால் அயோத்தி அரசனுக்கும் அடங்காமல் அநியாயமாக அவனை அரண்யத்துக்கு அனுப்பினாள். அங்கேயும் அபாயம்! அரக்கர்களின் அரசன் , அன்னையின் அழகால் அறிவிழந்து அபலையை அபகரித்தான்

அங்கேயும் அபாயம்! அரக்கர்களின் அரசன் , அன்னையின் அழகால் அறிவிழந்து அபலையை அபகரித்தான்

அந்த அடியார்களில் அருகதையுள்ள அன்பனை அரசனாக அரியணையில் அமர்த்தினர்.

அடுத்து அன்னைக்காக அவ்வானரர் அனைவரும் அவனியில் அங்குமிங்கும் அலைந்தனர், அலசினர். அனுமன், அலைகடலை அலட்சியமாக அடியெடுத்து அளந்து அக்கரையை அடைந்தான்.

அசோகமரத்தின் அடியில் , அரக்கிகள் அயர்ந்திருக்க அன்னையை அடிபணிந்து அண்ணலின் அடையாளமாகிய அக்கணையாழியை அவளிடம் அளித்தான்

அன்னை அனுபவித்த அளவற்ற அவதிகள் அநேகமாக அணைந்தன.

அன்னையின் அன்பையும் அருளாசியையும் அக்கணமே அடைந்தான் அனுமன்.

அடுத்து, அரக்கர்களை அலறடித்து , அவர்களின் அரண்களை , அகந்தைகளை அடியோடு அக்கினியால் அழித்த அனுமனின் அட்டகாசம் , அசாத்தியமான அதிசாகசம்.

அனந்தராமன் அலைகடலின் அதிபதியை அடக்கி , அதிசயமான அணையை அமைத்து, அக்கரையை அடைந்தான்.

அரக்கன் அத்தசமுகனை அமரில் அயனின் அஸ்திரத்தால் அழித்தான்.

அக்கினியில் அயராமல் அர்பணித்த அன்னை அவள் அதி அற்புதமாய் அண்ணலை அடைந்தாள்.

அன்னையுடன் அயோத்தியை அடைந்து அரியணையில் அமர்ந்து அருளினான்

அண்ணல்.

அனந்தராமனின் அவதார அருங்கதை அகரத்திலேய அடுக்கடுக்காக அமைந்ததும் அனுமனின் அருளாலே!!

—————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ஆழ்வார்கள் உகந்தருளிய ஸ்ரீ ராமன்–1-ஸ்ரீ பால காண்டம்-

April 6, 2025

1-ஸ்ரீ ராம அவதாரம்-2-தாடகை வதம்-3-விச்வாமித்ரர் வேள்வி காத்தல்-4-ஸ்ரீ சீதா விவாஹம்-5-பரசுராமன் கர்வம் அடக்குதல்-6-கூனி கூனை நிமிர்த்தல்

——–

1-ஸ்ரீ ராம அவதாரம்

திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழத் தீவினைகள் போயகல அடியவர்கட்கு என்றும்
அருள் நடந்து இவ்வேழு லகத்தவர்பணிய வானோர் அமர்ந்தேத்த
-3-10-

ந கச்சின் ந அபராத்யதி -என்று குற்றத்தைப் பொறுப்பிக்கும் பிராட்டியும்
முதலில் குற்றம் தன்னை காண்கிறது என்–பின்னைப் பொறுக்கிறது என் -என்று
குற்றம் கண்டு பொறுக்கையும் கூட மிகையாம்படி இருக்கிற ஸ்ரீ பூமிப் பிராட்டியும்
இரண்டு இடத்திலும் விளங்க –குற்றத்தைப் பொறுப்பிக்கைக்கு பிராட்டி –
குற்றம் கண்டு கைவிட ஒண்ணாத இடத்தில்-குற்றம் கணக்கிடும் இதுக்கு பலம் என் -என்று இருக்கும் ஸ்ரீ பூமிப் பிராட்டி-இப்படிப் பட்ட பிராட்டிமார் உடைய நித்ய சன்னதியாலே
சர்வேஸ்வரனுக்கு ஆஸ்ரித விஷயத்து சம்சாரேஷூ நராதமான் ஷிபாமி -என்கைக்கு
விஷயம் அற்று இருக்கும் ஆயிற்று –பொறுப்பிக்கும் அவளும் பொறைக்கு உவாத்தானவளும் (தூண்டி விட்டு காரணமாக இருப்பவளும் ) எப்போதும் ஒக்க அருகே இருக்கையாலே ஆஸ்ரிதர் பக்கல் எப்போதும் அவன் அருளே நடந்து அத்தாலே கொடிய அபராதங்கள் இவ்வோ விடங்கள் நமக்கு இருப்பிடம் அல்ல என்று விட்டு ஓட –

கொங்கு மலி கரும் குழலாள் கௌசலை தன் குல மதலையாய் தங்கு பெரும் புகழ் சனகன் திரு மருகா தாசரதீ –பெருமாள் திரு –8–3-

மிக்க பரிமளத்தைப் புறப்பட விடுகிற இருண்ட குழலை உடைய ஸ்ரீ கௌசலையாருடைய
குலத்துக்கு உத்தாரகன் ஆனவனே-புகழ் என்று பிறந்தவை எல்லாம் தங்கும் படி பெரிய புகழை உடைய ஸ்ரீ ஜனக ராஜனுக்கு மருமகன் ஆனவனே-அவனோடு சத்ர்ச சம்பந்தம் பண்ணலாம் படியான பிறப்பை உடையவனே-

தயரதன் தன் மா மதலாய் மைதிலி தன் மணவாளா –8–4-

அறுபதினாயிரம் ஆண்டு மலடு நின்ற ஸ்ரீ சக்கரவர்த்தியினுடைய மலடு தீரப் பிறந்தவனே –பிள்ளை பெற்றத்தின் மேலும் பிறப்பில் வந்த ஏற்றத்துக்கு மேலே —யச்யஸா ஜனகாத்மஜா -என்று ஸ்ரீ பிராட்டியை உனக்கு என்று இட்டுப் பிறந்த மேன்மையை உடையவனே

அம் கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும்
அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி
வெம் கதிரோன் குலத்துக்கோர் விளக்காய் தோன்றி
விண் முழுதும் உய்ய கொண்ட வீரன் தன்னை
–10-1-

போக்ய போக உபகரண போக ஸ்தானங்களை உடைத்தாய்-ஆகாச அவகாசம் எல்லாம் தானேயாம்படி நிமிர்ந்த மதிளாலே சூழப் பட்ட ஸ்ரீ அயோத்யை- அபராஜிதை என்று சொல்லுகிற ஸ்ரீ பரமபதம் போலே சத்ருக்களுக்கு கணிசிக்க ஒண்ணாத ஊர்-ஸ்ரீ பரம பதம் போல் சிலர் அறிந்து சிலர் அறியாதாய் இருக்கை யன்றிக்கே சர்வ லோக பிரசித்தமாய் இருக்கை – அலங்காரங்களால் குறைவற்ற ஊர் -என்னுதல்- சர்வ லோகங்களையும் தன் தேஜஸ்ஸாலே –நாராயண பரஞ்சோதி –என்கிறபடியே பரஞ்ஜோதிஸ்ஸாய் உள்ளது-ஜகத்தில் அந்தகாரம் எல்லாம் நீக்கக் கடவ ஆதித்யன் வம்சத்திலே -அவனைப் போலே இரவு கலவாத அத்விதீயமான தேஜஸ்ஸாய் வந்து உதித்து –தன் வீர்ய குணத்தாலே தேவ ஜாதியடைய உஜ்ஜீவிப்பித்தவனை-தேவ ஜாதி யன்றிக்கே ஜகத்தை அடைய ரஷிப்பதாக-கடலிலே மணலே சேஷமாக பருகின காளமேகத்தினுடைய வடிவையும் ஸ்ரீ சர்வேஸ்வரத்வ லஷணமான புண்டரீகாஷத்வங்களையும் உடையவன்-வடிவு அழகாலும் கண் அழகாலும் அபிராமத்தாலும் அனுகூல பிரதிகூல விபாகம் இன்றியே தோற்ப்பிக்குமவனை –

எல்லையில் சீர் தயரதன் தன் மகனாய்த் தோன்றிற்று –10–11-

பஹூ குணனான ஸ்ரீ சக்கரவர்த்திக்கு –பிதரம் ரோசயாமாச – என்று பிள்ளையாய் பிறந்தது தொடக்கமாக

தயரதற்கு மகன் தன்னை யன்றி மற்றிலேன் தஞ்சமாகவே –3–6–8-

ராவண வத சமனந்தரத்திலே முதலிகளிலே சிலரை காணாது ஒழிய தேவதைகளைக் கொண்டு மீட்டும்-ஒரு பாலனுக்கு அகால ம்ருத்யு வர அம்பாலே மீட்டுக் கொடுத்தும் செய்த சக்கரவர்த்தி திருமகனை அன்றி –ததவ் கௌசிக புத்ராய -என்று ராஜ்யத்தை தந்தேன் என்னா அத்தை தவிர்ந்து காடு ஏறப் போம் என்னா ஒரு சம்சாரிக்கு இஷ்ட விநியோக அர்ஹன் ஆனவனை –பவான் நாராயணோ தேவ -என்று ஈஸ்வர அபிமானிகள் தங்கள் வந்து சொன்னால் ஆத்மா நம் மானுஷம் மன்யே என்னுமவன் – மற்றிலேன் தஞ்சமாகவே.-
மற்று என்று பகவத் வியக்த்ரந்தரங்களை நினைக்கிறார் –தஞ்சம் -ஆபத் தனம் –

காயும் கடும் சிலை காகுத்தன் வாரானால் -5–4–3-

முடி சூடி நோக்கும் குடியிலே பிறந்தவனுக்கு வரத் தட்டு என்? ககுஸ்த குலத்தில் பிறந்தவனும் வாராது ஒழிவதே!-பகைவர்கள் வரப் போர் செய்ய இருக்கை அன்றிக்கே, தானே எடுத்து விட்டுச் சென்று பொருமவனும் வருகின்றிலன்-குற்றம் ஒன்றும் இல்லாத கோவலன் —தானே செல்பவன் அன்றோ இவன் -மூன்று குற்றங்கள் இல்லாமல் –
1-வாரணாஸ்ரம தர்மம் நிறைந்தவன் –2-தானே சென்று –3-ஆயுதம் இல்லாதவரை அடிக்க மாட்டார் –

காண் பெரும் தோற்றத்து எம் காகுத்த நம்பிக்கு –6–6–9-

கண்ணுக்கு இனியதாய் அபரிச்சேத்யமான போக்யமான சந்நிதியை யுடையவன் என்னுதல் –ஜென்ம ராமஸ்ய ஸூ மஹத் -என்கிற அவதாரம் ஆதல் -குண பூரணமான சக்கரவர்த்தி திருமகனுக்கு –

குரங்கை யாள் உகந்த வெந்தை கூறு தேற வேறிதே –21-

ராவணனை தேவரீரே அழியச் செய்து -பிரதிபஷத்தை வென்று தந்தாரார்களாக- ஸ்ரீ வானர வீரர்களை ஆதரித்தது போலே–நித்ய ஸூரிகளை அடிமை  கொள்ளும் ஏற்றத்தை உடையனாய் வைத்து திர்யக்குகள் என்று இகழாதே அடிமை கொண்ட இத்தை தனது  பேறாக நினைத்து இருக்கையாலே என் நாதனே என்கிறார் –

ஏமருவும் வெம் சிலை வலவா! ராகவனே! தாலேலோ– 8-4–

ஆரேனும் பிடிக்கிலும் ஏவிலே மீட்டும் ஸ்ரீ சார்ங்கத்தை உன் நினைவிலே வரும் படி செலுத்த வல்லவனே –

பெயர்கள் ஆயிரம் யுடைய வல்லரக்கர் புக்கு அழுந்தத் தயரதன் பெற்ற மரகத மணித் தடம் -10- 1-8-

பெரு மிடுக்கரான அசுரர்கள் புக்கு-அழுந்தும்படி –சக்கரவர்த்தி பெற்ற-நீல மணி போலே எல்லாருக்கும் இனியனை-அடியவர்கட்கு பாதுகாவலனாய்- ருக்கிற-தடாகத்தை-அடைந்து வந்து அடியவர் தொழுமின்-மயா த்வம் சம் அநுஜ்ஞாத கச்ச லோகன் அநுத்தமான்-ஆரண்ய -68-30- என்னால் நீவிர் அனுமதிக்கப் பட்டவராய் மேலான உலகத்தை அடைவீராக-என்கிறபடியே -பறவையையும் -ஜடாயுவையும் –வழி நடத்துமவன் அன்றோ -–-சம்ஹாரிணா ராகவ சாகரேன ப்ரச்சாத்யமானா தாச பவத்பி- யுக்தஸ்து அயம் தாரயிதம் சமேத்ய காகுஸ்த பாதாளமுகே பதான் ச -யுத்த -14-20–இராமபிரான் ஆகிற வடவாமுகாக்னியில் விழுகின்றவனான-அந்த இராவணன் -என்கிறபடியே விரும்பாத பகைவர்க்கு அழிவினைத் தரத் தக்கவனாய்-அன்றோ இருப்பது

சக்கரவர்த்தி பெற்ற-நீல மணி போலே இருக்கிற-தடாகத்தை-அடைந்து வந்து அடியவர் தொழுமின்–பதி தரு மரு வாபீ வாரிவத் சர்வ போக்கியம் -பிரமாணம்–மரு பூமி -நீரும் நிழலும் இல்லாத இடம்-வழியில் உள்ள மரம் என்ன-மரு பூமியில் உள்ள தண்ணீர் என்ன-இவற்றைப் போன்று எல்லாருக்கும் இனியனை -என்கிறபடியே-அடியவர்கட்கு பாதுகாவலனாய்-சம்ஹாரிணா ராகவ சாகரேன ப்ரச்சாத்யமானா தாச பவத்பி-யுக்தஸ்து அயம் தாரயிதம் சமேத்ய காகுஸ்த பாதாளமுகே பதான் ச -யுத்த -14-20-இராமபிரான் ஆகிற வடவாமுகாக்னியில் விழுகின்றவனான-அந்த இராவணன் -என்கிறபடியே விரும்பாத பகைவர்க்கு அழிவினைத் தரத் தக்கவனாய்-அன்றோ இருப்பது மயா த்வம் சம் அநுஜ்ஞாத கச்ச லோகன் அநுத்தமான்-ஆரண்ய -68-30-என்னால் நீவிர் அனுமதிக்கப் பட்டவராய் மேலான உலகத்தை அடைவீராக-என்கிறபடியே -பறவையையும் -ஜடாயுவையும் –வழி நடத்துமவன் அன்றோ –

—————-

தாடகை வதம்

முன் வில் வலித்து முது பெண் உயிர் உண்டான் தன் வில்லின் வன்மையைப் பாடிப் பற
தாசரதி தன்மையைப் பாடிப் பற
– 3-9-2- –

விஸ்வாமித்ர மகரிஷியினுடைய அத்ரவா த்ராணார்த்தமாக-(யாக ரக்ஷணத்துக்காக )
மகரிஷியோடே கூட எழுந்து அருளின அளவிலே

திண் திற லாள் தாடகை தன் உரம் உருவ சிலை வளைத்தாய்!–8-2-

திரு நாபீ கமலத்திலே லோகம் எல்லாம் ஸ்ருஷ்டித்தவனே-ஸ்ருஷ்டிக்குமது அன்றியே -பயிரைச் செய்து களை பிடுங்குமா போலே ஆசூர வர்க்கத்தைப் போக்கின படி
திண்ணிய திறலை உடையளான தாடகை உரத்தை மாறுபாடு உருவ வில்லை வளைத்தவனே-யாகங்களையும் பிராமணரையும் -தபச்சுக்களையும் – அழித்துக்
கொண்டு திரியும் -ராஷசியான தாடகை – அதிரக் கூப்பிட்டு கைகளையும் எடுத்துக் கொண்டு -மிருந்த மிகுந்த கோபத்தோடு நலிவதாக அடர்ந்து வர –ஸ்ரீ விஸ்வாமித்ர நியோகத்தாலே -திருக் கையில் வில் வளைத்து அவளுடைய பிராணனை முடித்தவன் –அவன் தன்னுடைய வில்லின் வன்மையை பாடிக் கொண்டு பற என்று எதிரியைப் பார்த்து சொல்லுகிறாள்-காயும் கடும் சிலை -என்கிற படியே-பிரதிபஷ நிரசனத்திலே -பெருமாள் கண் பார்க்கிலும் கண் பாராமல் கார்யம் செய்யும் திண்மை —இத்தால்- இவ் அதி மானுஷ சேஷ்டிதங்களை செய்யா நிற்கச் செய்தேயும் மீளவும் ஈஸ்வர கந்தம் அற ஐயர் மகன் -என்றே தன்னை நினைத்து நின்று கார்யம் செய்த குணத்தை சொல்லுகிறது

வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தை கீறி வரு குருதி பொழி தர வன் கணை ஒன்றேவி
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்–– 10-2–

தான் மிகைத்து வந்து மேலிட்ட தாடகையை -நக்ர்த்திக்கு-சந்நிவேசத்துக்கு – ஒப்பில்லாதவள் – தன்னிகர் ஒன்றில்லாத தாடகை இறே –ஸ்ரீ பெருமாள் பக்கல் பொல்லாங்கு நினைத்த நெஞ்சை -மலை போலே பிளந்து-செம்பாட்டுத் தரையிலே-செம்மண் தரையிலே- மலை யருவி விழுந்தால் போலே ருதிரம் வந்து கொழிக்க –
வலிக்கு ஒப்பில்லாத திருச் சரத்தை நடத்தி-ரிஷி தனக்கே தனக்கு என்னாதபடி நிர்ப்பரனாய்த் தன்னுடைய அனுஷ்டானங்கள் எல்லாம் அடைவே அனுஷ்டித்து
யாகத்தைத் தலைக் கட்டும்படி பண்ணி-யஜ்ஞ் விக்னரரான மாரீச ஸூபாஹூகளைக் முடித்த பிள்ளைத் தனத்தை உடையவனை-மாரீசன் பட்டானோ என்னில் -பின்னை இருந்த இருப்பு ம்ருத ப்ராயன் என்று கருத்து

வல்லாளரக்கர் குலப்பாவை   வாட முனி தன் வேள்வியைக்
கல்விச் சிலையால் காத்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே
  —8-6-3-

வலிய ஆண்மையை உடைய ராஷச ஜாதிக்காக கண் காட்டி யானவள் முடியும்படியாக –பாவை -மரப்பாவை -அத்தைப்போலே தர்சனீயம் –கண் காட்டி -ராக்ஷஸர்களுக்கு முதலில் இருந்து காட்டிய தாடகை அன்றோ -ருஷியினுடைய யாகத்தை – ஸ்ரீ பரசுராமன் ஆழ்வானை வென்று தன்னைதான வில்லை ( வைஷ்ணவ சாபம் ) வாங்குவதற்கு முன்பே
பிடித்த வில்லைக் கொண்டு காத்தானூர் –

சுடு சரமடு சிலைத் துரந்து நீர்மையிலாத தாடகை மாள நினைந்தவர் –9-8-4-

எதிரிகள் மேலே நெருப்பைத் தூவிக் கொண்டு சென்று விழுகிற அம்புகளை முடிக்க வற்றான வில்லிலே தொடுத்து விட்டு –ஸ்த்ரீத்வ பிரயுக்தமான மென்மை இல்லாத தாடகை முடியும்படியாக ஒரு ருஷி வாக்யத்தையே கொண்டு ஸ்திரீ வதம் என்று பிற்காலியாதே
ரஷகரான நமக்கு ரஷ்ய வர்க்கத்தின் உடைய ரஷணத்துக்கு ஏகாந்தமானது செய்ய வேண்டாவோ -என்று அவள் முடியும்படி திரு உள்ளத்திலே கொண்டவன் –

தன்னிகர் ஓன்று இல்லாத தாடகையை மா முனிக்காத்
தென்னுலகம் ஏற்றுவித்த திண் திறலும் மற்றிவை தான்—–147

தனக்கு ஒப்பார் இன்றிக்கே பெரிய மலை போலே இருக்கிற வடிவை யுடைய தாடகையை-
ஸ்திரீ வதம் பண்ணிற்று -என்று மடியைக் கோத்துப் பிடித்து கேட்டால்-ஒரு பார்ப்பான் சொல்லச் செய்தேன் -என்று ஆயிற்றுச் சொல்லுவது-இது பட்டர் அருளிச் செய்யக் கேட்டேன் -என்று பிள்ளை அருளிச் செய்வர்-அவன் ஒருவன் படி இருந்த படி என்-ஸ்ரீ ஜனக ராஜன்  திருமகள் உடைய ஆற்றாமைக்கு உதவ கடுகக் கொடு சென்றவன் கையும் மடலுமாய் இருக்கிற  என் ஆற்றாமைக்கு உதவக் கொடு வராது ஒழிவதே –

—————

3-விச்வாமித்ரர் வேள்வி காத்தல்-

மாமுனி வேள்வியை காத்து அவபிரதம்
ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே!
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே--4-

விஸ்வாமித்ர ப,கவானுடைய யாக,த்துக்கு விக்ந கர்த்தாக்களாய், ராவண வதத்துக்கு அடியான தாடகாதாட கேயரை நிரஸித்து.(அவபிரதமாட்டிய ) ஸ்மாராதக ரூபமான கர்த்தவ்யம் தலைக் கட்டி ஸத்ரு பக்ஷம் மண்ணுண்ணும்படியான மிடுக்கை உடையராய்,திரு வயோத்யைக்கு நிர்வாஹகராய் வைத்து அவ் வவதாரத்துக்குப் பிற்பாடருமிழக்க வேண்டாதபடி திரு வயோத்யையிலுங் காட்டில் கோயிலை விரும்பின ஸர்வாதிகரான தேவரீர் உணர்ந்தருளி அடிமை கொண்டருள வேணும் என்கிறார்.

லங்கையை அழிக்கைக் கடியான வீர ஸ்ரத்தையைச் சொல்லுகிறார். தந்தாம் கார்யங்களைத் தாந்தாமே மநநம் பண்ணுமவர்கள் முனிகள்; இவனுக்கு மா முனித்வமாவது-தன்னுடைய தபஸ்ஸை யழிய மாறி அவர்களை ஸபித்து, தன்னுடைய பாரதந்த்ர்யத்தையும் அழித்து, பக,வத் ஸ்வாதந்த்ர்யத்தையும் அழியாதே-சக்ரவர்த்தித் திருமகனைக் கொண்டே கார்யம் தலைக் கட்டிக் கொள்ளுகை. (மாமுனியான வில்வமித்திரருடைய யாகத்தை ரக்ஷித்து. ‘முனிவர்’ என்னும் பதம் எப்பொழுதும் மனனம்(சிந்தனம்) செய்பவரைக் குறிக்கும் நினைந்திருந்தே சிரமந் தீர்ந்தேன்” [பெரியாழ் திரு 5-4 8] என்கிறபடியே எம்பெருமானையே மனனம் செய்து அவனாலே தங்களுடைய தாபங்களை ஆற்றிக் கொள்கிறவர்கள் மாமுனிகள்’ ஆகிறார்கள்.)

வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தை கீறி
வரு குருதி பொழி தர வன் கணை ஒன்றேவி
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து
வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்–1
0-2-

தான் மிகைத்து வந்து மேலிட்ட தாடகையை -நக்ர்த்திக்கு-சந்நிவேசத்துக்கு –ஒப்பில்லாதவள் – தன்னிகர் ஒன்றில்லாத தாடகை இறே –ஸ்ரீ பெருமாள் பக்கல் பொல்லாங்கு நினைத்த நெஞ்சை -மலை போலே பிளந்து-செம்பாட்டுத் தரையிலே-செம்மண் தரையிலே- மலை யருவி விழுந்தால் போலே ருதிரம் வந்து கொழிக்க –
வலிக்கு ஒப்பில்லாத திருச் சரத்தை நடத்தி-ரிஷி தனக்கே தனக்கு என்னாதபடி நிர்ப்பரனாய்த் தன்னுடைய அனுஷ்டானங்கள் எல்லாம் அடைவே அனுஷ்டித்து
யாகத்தைத் தலைக் கட்டும்படி பண்ணி-யஜ்ஞ் விக்னரரான மாரீச ஸூபாஹூகளைக் முடித்த பிள்ளைத் தனத்தை உடையவனை-மாரீசன் பட்டானோ என்னில் -பின்னை இருந்த இருப்பு ம்ருத ப்ராயன் என்று கருத்து

முனி தன் வேள்வியைக் கல்விச் சிலையால் காத்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே  —8-6-3-

வலிய ஆண்மையை உடைய ராஷச ஜாதிக்காக கண் காட்டி யானவள் முடியும்படியாக –பாவை -மரப்பாவை -அத்தைப்போலே தர்சனீயம் – கண் காட்டி -ராக்ஷஸர்களுக்கு முதலில் இருந்து காட்டிய தாடகை அன்றோ -ருஷியினுடைய யாகத்தை – ஸ்ரீ பரசுராமன் ஆழ்வானை வென்று தன்னைதான வில்லை ( வைஷ்ணவ சாபம் ) வாங்குவதற்கு முன்பே பிடித்த வில்லைக் கொண்டு காத்தானூர் –

————-

4-ஸ்ரீ சீதா விவாஹம்-

சிலை ஓன்று இறுத்தாய் –2-3-7-

ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளுக்கு சுல்கமாக விட்டதாய் -ஒருவரால் பேர்க்க எடுக்க
ஒண்ணாதபடி -அத்வீதியமாய் இருந்துள்ள -ரவ்த்ரமான வில்லை இறுத்தவனே
(வில் விழா –அந்த வில் -ஓன்று -அத்விதீயம் இல்லையே ஆகையால் இங்கு இந்த வியாக்யானம் )

என் சிற்றாயர் சிங்கமே சீதை மணாளா –3-3-5-

எனக்கு பவ்யனாய் -தன்னேராயிரம் பிள்ளைகள் -என்கிற சிறு பிள்ளைகளோடு
சிம்ஹக் கன்று போலே -மேணானிப்பு தோற்ற  விளையாடித் திரிகிறவனே –பிரதிகூல நிரசனமும் அனுகூல ரஷணமும் கண்டால் –பார்த்தாரம் பரிஷஸ்வஜே -என்கிறபடியே –
உகந்து அணைக்கும் ஸ்ரீ ஜனகராஜன் திரு மகளுக்கு வல்லபன் ஆனவனே

செறிந்த மணி முடிச் சனகன் சிலையிறுத்து நினைக் கொணர்ந்த தறிந்து -3-10-1-

நெருங்கின ரத்னங்களோடே கூடின அபிஷேகத்தை யுடைய ஜனக ராஜன் –
தேவரீருக்கு சுல்கமாக விட்டு வில்லை முறித்து-இந்த வில்லை வளைத்தாருக்கு இவளைக் கொடுக்கக் கடவோம் -என்று வீர்ய சுல்கமாக அவன் கல்பித்து வைத்த வில் இறே அது –அப்படி இருக்கிற வில்லை வளைக்கத் தானும் லோகத்தில் ஆள் இன்றிக்கே இருக்க திருக் கையில் பலத்துக்கு இலக்குப் போராமையாலே-அத்தை முறித்து(எடுத்தது கண்டனர் இற்றது கேட்டனர் )-நினைக் கொணர்ந்த தறிந்து இயம் ஸீதா மமஸூதா ஸஹ தர்ம சரீதவ-ப்ரதீச்ச சைநாம் -பத்ரந்தே – பாணிம் க்ருஹணீஷ்வ பாணிநா (பால) என்கிறபடியே இவளைக் கைக் கொண்டு அருள வேணும் என்று சமர்ப்பிக்க தேவரீரை பாணி கிரஹணம் பண்ணிக் கொண்டு போந்த சேதியை அறிந்து

காந்தள் முகிழ் விரல் சீதைக்காகிக் கடும் சிலை சென்று இறுக்க
வேந்தர் தலைவன் ஜனக ராஜன் தன் வேள்வியில் கண்டார் உளர் –
4- 1-2 –

செங்காந்தள் முகிழ் இதழ் போல் இருக்கிற திரு விரல்களை உடைய ஸ்ரீ பிராட்டிக்காக -விச்வமித்ர மஹரிஷி கொடு செல்லச் சென்று –ரௌத்ரமாய் ஒருவரால் எடுக்கவும் வளைக்கவும் அரிது என்று கிடந்த வலிய வில்லை முறிக்க (ருத்ரனுடைய வில் அன்றோ )-ராஜ தர்மத்தோடு தத்வ ஞான அனுஷ்டானங்களையும் உடையவன் ஆகையாலே (ராஜ ரிஷி அன்றோ )ராஜக்களுக்கு எல்லாம் தலைவனான ஸ்ரீ ஜனக ராஜன் உடைய யாகத்திலே கண்டார் உளர்

காரார் திண் சிலை இறுத்து மைதிலியை மணம் புணர்ந்து

வாராரும் இளம் கொங்கை மைதிலியை மணம் புணர்வான் காரார் திண் சிலை இறுத்த-4-1-8-

தோற்றுகிற போதே வாராலே தாங்க வேண்டும்படியான முலையை உடைய ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளை மணம் புணருகைக்காக-பதி சம்யோக சுலபம் வயோ த்ருஷ்ட்வா சமேபிதா சிந்தார்ணவகத பாரம் நாசசாதாப் லவோயதா -அயோத்யா காண்டம்-வயிரம் பற்றி ஒருவரால் சலிப்பிக்க ஒண்ணாது இருக்கிற வில்லை முறித்த உபமான ரஹிதமான பருவத்தை உடையவன் வர்த்திக்கிற தேசம்

சீதை வாய் அமுதம் உண்டாய் எங்கள் சிற்றில் நீ சிதையேல் என்று–2-10-

கதா நு சாறு பிம்போஷ்டம் தஸ்யா பத்ம மிவாநனம்-
ஈஷதுன் நம்ய பாஸ்யாமி ரசாய நமிவோத்தமம்
 -யுத்த -5-13-என்கிறபடியே
பருவம் நிரம்பினவளோடே இத் தீம்புகள் செய்தால் அன்றோ உனக்கு பிரயோஜனம் உள்ளது – உன் நினைவு அறிந்து பரிமாறுகைக்கு அளவில்லாத எங்கள் சிற்றிலை வந்து சிதையாதே கொள -என்று

தயரதன் தன் மா முதலாய்! மைதிலி தன் மணவாளா -8-4-

அறுபதினாயிரம் ஆண்டு மலடு நின்ற ஸ்ரீ சக்கரவர்த்தியினுடைய மலடு தீரப் பிறந்தவனே –பிள்ளை பெற்றத்தின் மேலும் பிறப்பில் வந்த ஏற்றத்துக்கு மேலே — யச்யஸா ஜனகாத்மஜா -என்று ஸ்ரீ பிராட்டியை உனக்கு என்று இட்டுப் பிறந்த மேன்மையை உடையவனே

வேய் போலும் எழில் தோளி தன் பொருட்டா விடையோன் தன் வில்லை செற்றாய்!–9-4-

பசுமைக்கும் சுற்றுடைமைக்கும் ஒழுகு நீட்சிக்கும் வேய் போலே இருக்கிற அழகிய தோளை
உடையாளாய் இருக்கிற ஸ்ரீ பிராட்டி நிமித்தமாக –பெரு மிடுக்கனான ருத்ரனுடைய வில்லை முறித்தவனே

செவ்வரி நல் கரு நெடும் கண் சீதைக்காகி சின விடையோன் சிலை இருத்து-10-3-

அஸி தேஷணா -என்கிறபடியே -கண் அழகிலே தோற்று சினத்தை உடைய ரிஷபத்தை
தனக்கு வாஹநமான ருத்ரனுடைய வில்லை ஒருவரால் கிட்ட ஒண்ணாதே வில்லை அநாயாசேன முறித்து அச் செயலிலே தோற்ற ஸ்ரீ பிராட்டியை திருமணம் புணர்ந்து

மின்னின் நுண் இடை மடக்கொடி காரணம் விலங்கலின் மிசை இலங்கை
மன்னன் நீள் முடி பொடி செய்த மைந்தன்-3-1-7-

ஆத்ம குணங்களுக்கு எல்லாம் தானே ஆஸ்ரயமாய் ஒரு உபக்னத்தோடே சேர்க்க வேண்டும்படியான பருவத்தை உடைய ஸ்ரீ ஜனகராஜன் திருமகள் ஹேதுவாக –
பிரிவில் ரஷகனை இவ்வார்த்தை சொல்லுவிக்கும்படியான அழகு இறே-ஸூ வேல சைலமாய் -அதின் மேலே த்ரி கூடமாய் -அதின் மேலே படைவீடாய் இறே இருப்பது இப்படி ஒருவரால் அழிக்க ஒண்ணாத படை வீட்டுக்கு நான் ராஜா அல்லனோ என்று அபிமானித்து இருக்கிற பையலுடைய- தேவதைகள் உடைய வரங்களால் பூண் கட்டி இருக்கிற முடிகள் பத்தும் துகளாம்படி பண்ணின மிடுக்கனானவான்

விரை கமழ்ந்த மென் கரும் குழல் காரணம் வில்லிறுத்து –கலியன் —3–1–8-

நறு நாற்றம் கமழா நிற்பதுமாய் மிருதுவான கரும் குழலை உடைய ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகள் ஹேதுவாக வில்லை முறித்து –

வாராரும் இளம் கொங்கை மைதிலியை மணம் புணர்வான்
காரார் திண் சிலை இறுத்த தனிக் காளை கருதும் இடம்-
4-1-8-

ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளை மணம் புணருகைக்காக-பதி சம்யோக சுலபம் வயோ த்ருஷ்ட்வா சமேபிதா சிந்தார்ணவகத பாரம் நாசசாதாப் லவோயதா -அயோத்யா காண்டம்-வயிரம் பற்றி ஒருவரால் சலிப்பிக்க ஒண்ணாது இருக்கிற வில்லை முறித்த உபமான ரஹிதமான பருவத்தை உடையவன் வர்த்திக்கிற தேசம்

நெறித்திட்ட  மென் கூழை நன்னேரிழையோடு உடனாய வில்லென்ன வல்லேயதனை
இருத்திட்டவள் இன்பம் அன்போடணைந்தித்திட்டு இளங் கொற்றவனாய்–—
10-6-8-

நெறித்து மிருதுவான மயிர் முடியை உடையளாய் விலஷணமான ஆபரணங்களாலே அலங்க்ருதையான பிராட்டியோடு ஒக்கப் பிறந்த தனுஸ் பிரசித்தியை உடைத்தாய் மிடுக்கை உடைத்தாய் இருக்கிற அந்த வில்லை – இவ் வில்லை முறித்தாருக்கு இவளைக் கொடுக்கக் கடவதாக நியமித்த படியாலே உடையனாய் -என்கிறது-அல் -என்று இருளாய் -இருண்ட வில் என்னவுமாம்-அந்த வில்லை முறித்து அவளோட்டை சம்ஸ்லேஷ சுகத்தை ப்ரீதியோடு லபித்து யுவ ராஜாவாய்

வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்னும்–13-

பிராட்டியை லபிக்கைக்கு இடைச் சுவரான வில்லை முறித்து –அவ் வாண் பிள்ளைத் தனத்தைக் காட்டி ஸ்த்ரீத்வத்தால் வந்த அபிமானத்தையும் போக்கி பிரக்ருத்யா ம்ர்துவாய் இருந்துள்ள பிராட்டியோடு சம்ஸ்லேஷித்தவனே-ஸ்ரீ ஜனக சக்கரவர்த்தி இவ் வில்லை முறித்தார்க்கு இவளைக் கொடுக்கக் கடவோம் -என்று பிரதிஞ்ஞை பண்ணுகையாலே வில்லை எடுத்து நாண் ஏறிட்டு வலிக்கப் புக்க அளவிலே வில்லை முறித்து அவ் வளவிலே பொற் கிண்டியைக் கொண்டு உதகம் பண்ணப் புக ராஜ குமாரர் ஆகையாலே வீர வாசி கொண்டாட வந்தோம் இத்தனை ஒழிய விவாஹம் தாழ்த்து பெண் தேடி வந்தோமோ நாங்கள் –அத்தை வசிஷ்டாதிகளையும் ஐயரையும் கேட்பது என்ன –வில்லை முறித்த ஆண் பிள்ளைத் தனத்தையும் வார்த்தை சொன்ன சீர்மையையும் கண்டு நீராடினாள் பிராட்டி – அவ் வில் முறித்த ஆயாசத்தாலே வந்த ஸ்ரமம் தீர அவள் தோளில் முழுகினான் -ஆய்த்து-விபுத்வம் ஏக அவயவத்தில் அடங்கினபடி – அல்லாத அவயவங்களும் ஆத்ம குணங்களும் குமர் இருந்து போம் இத்தனை –இத்தால் – நித்ய அநபாயிநியான பிராட்டியைப் பிரிந்தாலும் உதகம் பண்ணுவாறும் சேர்ப்பாரும் வேண்டி இருக்கிறபடி – சேதனனுக்கும் இவளோபாதி அனந்யார்ஹத்வம் ஸ்வரூபத்தில் உண்டானாலும் ஆச்சார்யா சமாஸ்ரயணனும் புருஷகார அபேஷையும் உண்டாய் இறே ஈஸ்வர விஷயீ காரத்துக்கும் இருப்பது – உன்னைப் பிரிந்து தனி இருப்பாருடைய ஆபத்தை போக்கின நீ என் தனிமையால் வந்த ஆபத்தை போக்காது ஒழிவதே –

5-பரசுராமன் கர்வம் அடக்குதல்

இருபத்தொரு கால் அரசு களை கட்ட-மழுவாளேந்தி வெவ்வரி நற் சிலை வாங்கி வென்றி கொண்டுஅவன் தவத்தை முற்றும் செற்று,அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி அரியணை மேல் மன்னன் ஆவான் நிற்க;

இருபத்தோர் கால் அரசு களை கட்ட வென்றி நீள் மழுவா? -6-2-10-

மிடுக்கரான அரசர்களை இருபத்தொருபடிகால் வென்ற உனக்கு அபலைகளான எங்களை வெல்லுகை பெரிய பணியோ?-“எனக்கு” என்று இருப்பாரையும் உனக்கு ஆக்கிக் கொள்ளவல்ல உனக்கு உனக்கேயாய் இருப்பாரை வெல்லுகை பெரிய ஏற்றமோ?-இராஜாக்களை வென்ற உனக்கு ஆய்ச்சியர்களை வென்றாய் என்பது ஓர் ஏற்றமோ?-அசுரத்தன்மை வாய்ந்தவர்களாய் நாட்டினைப் பட அடித்துத் திரிந்த க்ஷத்திரிய குலத்தைக் கிழங்கு எடுத்த மிடுக்கனே!-களை கட்டுகையாவது – எடுத்துப் பொகடுகை-ஜீவ ஸ்வா தந்த்ரமே மறம் கிருஷி பலன் பெற்றோம் என்று மகிழ்வானே

மழு வாள் ஏந்தி செவ்வரி நல் சிலை வாங்கி வென்றி கொண்டு வேல் வேந்தர் பகை தடிந்த வீரன் தன்னை-10-3-

ஸ்ரீ பிராட்டியை திருமணம் புணர்ந்து எழுந்து அருளா நிற்க வழியிலே வந்து தோற்றின -தன் க்ரைர்யத்துக்குத் தக்க மழுவாகிற ஆயுதத்தையும் உடைய ஸ்ரீ பரசுராம ஆழ்வானுடைய-வெம்மையை உடைத்தாய் தர்ச நீயமான வில்லை வாங்கி இவனை வென்று தான் திருவவதாரம் பண்ணின ஷத்ரிய குலத்துக்கு பகை தீர்ந்த வீரத்தை யுடையவனை

முன் ஒரு நாள் மழு வாளி சிலை வாங்கி அவன் தவத்தை முற்றும் செற்றாய்-9-9-

முன் ஒரு காலத்திலே மழுவை ஆயுதமாக உடைய ஸ்ரீ பரசுராமன் கையிலே
ஸ்ரீ சார்ங்கத் திரு வில்லை வாங்கி-அவன் லோகாந்தரங்களை ப்ராபிக்கக் கடவதாக ஆர்ஜித்த தபஸ்ஸை அவ்வம்பாலே அழித்துப் பொகட்டாய்-

என் வில் வலி கண்டு போ என்று எதிர் வந்தான்
தன் வில்லினோடும் தவத்தை எதிர் வாங்கி
முன் வில் வலித்து முது பெண் உயிர் உண்டான்
தன் வில்லின் வன்மையைப் பாடிப் பற
தாசரதி தன்மையைப் பாடிப் பற –
3-9-2- –

பெருமாள் திரு மணம் புரிந்து (புணைந்து) மீண்டு எழுந்து அருளா நிற்கச் செய்தே
ஒரு சொத்தை வில்லை வளைத்தாய் -முரித்தாய் -என்றால் போல் சொல்லுகிறது
இது ஓர் ஏற்றமோ -என்று சில வன்மைகளைச் சொல்லித் தன் தப பலமாய் இருபத்தொரு ஆவேச சக்தி விசேஷத்தாலே எடுத்த கார்யம் பலித்துப் போந்த கர்வத்தாலே எதிரே வந்து
என் வில் வலி கண்டு போனாயானால் நீ சமர்த்தன் -என்ற பரசுராமனுடைய-இது ஒரு தபஸ்ஸை வியாஜமாக்கி பல பிரதானம் பண்ணின அவனை அறியாமை இறே
தன் வில் -என்ன வேண்டிற்று தபஸ்ஸைத் தானும் இவன் தன்னது என்று நினைத்து இருக்கிறது (கர்த்ருத்வ மமதா பல தியாகம் மூன்றும் இருக்க வேண்டுமே )-வாங்கும் போது
ஹேதுவான தபஸ்ஸூ முன்னாக வாங்க வேண்டி இருக்க வில் முன்னாக அருளிச் செய்ய வேண்டிற்று தபஸ்சிலும் தபஸ் பல கர்வமாகையாலே-வாங்கும் போது ஹேதுவான தபஸ்ஸூ முன்னாக வாங்க வேண்டி இருக்க வில் முன்னாக அருளிச் செய்ய வேண்டிற்று
தபஸ்சிலும் தபஸ் பல கர்வமாகையாலே-இது தான் வாங்கும் போது தபஸ் பல போக ஆரம்ப மத்யம நிகமன (முக் ) காலங்களில் அத்யுத்கடம் (நியாயம் மீறும் செயல்கள்) ப்ரவ்ருத்தமானால் வாங்கலுமாய் இருக்கும் இறே

அதி மானுஷ சேஷ்டைகளிலே ஸ்ரத்தாளுக்களாய் (ஈடுபாடு கொண்டவர்களாய் )-
ஈஸ்வர சக்தி ஆவேச பல ஸா பேஷராய்த் தபஸ்ஸூ பண்ணி தபஸ் பலமான ஆவேசம் நீங்கினாலும் ஸ்வயம் க்ருத கர்வத்தாலே தத் ப்ரவ்ருத்தி பாபம் அனுபவிக்க வேணும் என்னும் பீதியாலே ஸ்வரூப ஆவேச ஸா பேஷனாய் ஸ்வ விரோதி நிரசன சமநந்தர காலத்தில் ஸ்வ கர்த்ருத்வ கர்மம் உண்டானாலும் தத் ப்ரவ்ருத்தி பாப பலம் அனுபவிக்கக் கடவன் அல்லேன் -என்று இதுக்கு ஈடான துஷ்கர தபஸ்ஸைப் பூர்வ மேவ செய்கையாலே இறே இவனை தசாவதார மத்யே பரிகணித்து

அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி-10-8-

திரு அபிஷேகத்துக்கு ஈடாக அலங்கரித்து -தர்ச நீயமாய் ஒக்கத்தை உடைத்தாய் நல்ல ரத்னங்களாலே சமைக்கப் பட்ட மாடங்களை உடைய ஸ்ரீ திரு அயோத்யையிலே ஜகத்தை எல்லாம் உகக்கும் படி எழுந்து அருளி

6-கூனி கூனை நிமிர்த்தல்

கூனகம் புகத் தெறிந்த சொற்ற வில்லி யல்லையே –திருச்சந்த –30-

கூனி உடைய கூன் உள்ளே அடங்கும்படி யாகச் சுண்டு வில்லைத் தெறித்த
இத்தால் -அவதாரத்தில் மெய்ப்பாட்டால் வந்த மௌக்த்யமும் ரஷகமாய் இருக்கும் என்கை –
ரஷக வஸ்துவானால் அதில் உள்ளது எல்லாம் ரஷகமாய் இறே இருப்பது-வில் பிடித்த போது -அக்கையையும் வில்லையும் கண்ட போதே ராவணாதிகள் குடல்
குழம்பும்படியான வீர ஸ்ரீ யைச் சொல்லுகிறது –கொற்றம் -வென்றியும் -வலியும்

கொண்டை  கொண்ட கோதை மீது தேனுலாவு கூனி கூன்
உண்டை கொண்டு அரங்கவோட்டி யுண் மகிழ்ந்த நாதனூர்–49-

மயிர் முடியிலே உண்டான மாலையின் மேல் வண்டுகள் சஞ்சரிக்கும்படியான
ஒப்பனையாலே ஸ்ப்ர்ஹணீய வேஷை யான கூனி – இத்தால் –சேதனனுடைய நிஷ்க்ர்ஷ்ட ஸ்வரூபம் ஸ்ரீ கௌஸ்துபம் போலே ஈஸ்வரனுக்கு ஸ்ப்ர்ஹணீ யம் என்று கருத்து –கீழ்ச் சொன்ன வடிவுக்கும் ஒப்பனைக்கும் சேராதே அவளுக்கு நிரூபகமாகப் போந்த கூனை
இத்தால் -ஸ்வரூப விரோதியாய் -தேவோஹம் மனுஷ்யோஹம் –என்று நிரூபகமாய்
ஸ்வரூபத்துக்கு அவத்யமுமாய் இருந்துள்ள அஹங்காரத்தை நினைக்கிறார்-லீலார்தமாக வில்லிலே உண்டியை வைத்து கூனை உள்ளே புகும்படி ஒட்டித் தெறித்து அவத்யமான அஹங்காரத்தை அநாயேசேநப் போக்க வல்ல சக்தியை நினைக்கிறார்-ஆஸ்ரிதருக்கு அவத்யமான அஹங்காரத்தை அநாயாசேநப் போக்குகையாலே ஹ்ர்ஷ்டனாய் -அச் செயலாலே என்னை எழுதிக் கொண்ட சக்கரவர்த்தி திருமகன்
வர்த்திக்கிற தேசம் -இத்தால் -ஆஸ்ரிதருடைய அவத்யங்களைப் போக்கி உகப்பானும் தானே என்கை –

ஒரு கால் நின்றுண்டை கொண்டோட்டி வன் கூன் நிமிர நினைந்த  பெருமான்-10-6-2-

முன்பு நின்ற நிலையிலே நின்று வில்லில் உண்டான உண்டைகளை நடத்தி வலிய கூன் நிமிரும்படி செய்த சர்வேஸ்வரன் –(கண்ணனுக்கு முன்பு நின்ற நிலை -ராமனின் சேஷ்டிதம் என்றும் உண்டை வில் தெரித்தாய் கோவிந்தா )

கூனே சிதைய உண்டை வில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா!-1-5-5-

வன வாசத்திற்குக் காரணமான -ஹேதுபூதையான- குப்ஜையைச் சொல்லிற்றாய்,
இளமையில் சுண்டு வில் கொண்டு திரிகிற காலத்தில் பெருமாள் லீலாரசம் அனுபவித்தார் என்பது ஒன்று உண்டு; அதனை நோக்கிச் சொல்லுகிறார்.-அப்போது ‘கோவிந்தா’ என்றதற்குப் ‘பூமியைக் காப்பவன்’ என்பது பொருள். அவளுடைய மற்றை உறுப்புகட்கு ஒரு வாட்டம் வாராதபடி நிமிர்த்தானாதலின், ‘கூனே சிதைய’ என்கிறார்.-தீம்பு சேர்வது கிருஷ்ணனுக்கே ஆகையாலே ‘போம்பழி எல்லாம் அமணன் தலையோடே’ என்னுமாறு போன்று,கிருஷ்ணன் தலையிலே ஏறிட்டுச் சொல்லுகிறார் என்றலுமாம்-இனி, சாந்து கொடுத்த கூனி தன்னையே சொல்லிற்றாய், வருத்தம் அறச் சுண்டு வில் நிமிர்க்குமாறு போன்று கூனை நிமிர்த்தவன் என்றலும் ஒன்று.

———————————————–———————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஹனுமத் பரத சத்ருக்ந லஷ்மண ஸீதாப் பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர் அருளிச் செய்த அத்யாத்ம சிந்தா –ஜீவாத்மா -பரமாத்மா விசாரணை –

April 3, 2025

ஸ்ரீ ப்ரஹ்ம தேசம் -மன்னார் கோயிலில் 1242-ஆனி -ஸ்வாதி -நக்ஷத்திரத்தில் திருவவதரித்தார் -இயல் பெயர் வரதராஜர் -ஸூந்தர ஜாமாத்ரு முனி -அழகிய மணவாள ஜீயர் -விருது பெற்றவர் -சொட்டை மணவாள முனி என்ற விருதும் பெற்றதாக ஸ்ரீ கீதை வெண்பா இறுதிப் பாசுரம் மூலமும் அறிகிறோம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையின் இறுதிக் காலத்தில் அவதரித்து -அவரை ஆஸ்ரயித்து -அவரது திருக் குமாரரான நாயனார் ஆச்சார்யன் பிள்ளையிடம் ஸம்ப்ரதாய சாஸ்திரங்கள் கற்றவர் –

கோயில் திருமலை பெருமாள் கோயில் திரு நாராயண புரத்து எம்பெருமான்களே -அழகிய மணவாளன் நாயனாராகவும் -திருமலையப்பன் தேசிகராகவும் வரதராஜ பிள்ளை லோகாச்சார்யராகவும் -திருநாராயணத்த்து எம்பெருமான் அழகிய மணவாள ஜீயராகவும் திருவவதாரம் என்பர்

பெரிய பிராட்டியாரை முன்னிட்டு ஈஸ்வரன் திருவடிகளைப் பற்றுவது என்றும் பிள்ளை லோகாச்சார்யார் அருளிச் செய்ததையே இவர் அருளிச் செய்த தத்வ தீப கிரந்தத்தில் ஸ்ரீ மத் சரணவ் -சேர்த்து திருவோடு கூடிய நாராயணன் திருவடிகளை -என்றபொருள் அருளிச் செய்துள்ளார் –நாராயணனுடைய ஸ்ரீ சம்பந்தமுடைய திருவடிகளை உபாயமாகப் பற்ற -என்று இவர் நிர்வாகம் -ஸ்ரீ மந்தவ் ஹரி சரணவ் –இரண்டிலும் பன்மை பிரயோகம் –

இவரது 32 வயதில் பெரியவாச்சான் கைக் கொண்டு முதலில் உபதேசம் -உலக்கைக் கொழுந்து துளிர்க்காதது போல் உனக்கும் ஞானம் வராது என்ற கேலிப்பேச்சு –

முசல கில சயம் -உலக்கை துளிர்க்குமோ -கேலி செய்ய -பெரிய ஆச்சார்யன் கிருபையால் அனைத்து ஸம்ப்ரதாய அர்த்தங்களையும் கற்று அதே பெயரில் கிரந்தமும் சாதித்து அருளி உள்ளார் –

அபய ப்ரதநாமாநாம் அஸ்மத் குரும் அஹம் பஜே|
யத் கடாக்ஷாதயம் ஜந்து: அபுநர் ஜந்மதாம் கத: ||
–ஆச்சார்ய வந்தனம்

ஒன்றும் அறியாத விலங்கு போல் இருந்த அடியேன், எவருடைய கடாக்ஷத்தால் பிறவாமை பெற்றேனோ, அத்தகைய பெருமை பெற்ற அபய ப்ரதர் என்னும் திருநாமமுடைய நம் ஆசார்யரை அடியேன் வணங்குகிறேன்.

ஸ்ரீமத் க்ருஷ்ண ஸமாஹ்வாய  நமோ யாமுன ஸுனவே
யத் கடாஷை லக்ஷ்யானாம் ஸுலப: ஸ்ரீதரஸ் ஸதா
–பெரியவாச்சான் பிள்ளையின் தனியன்

யாமுனரின் திருக்குமாரரும், யாருடைய கடாக்ஷம் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் கிருபையையும் நமக்கு எளிதாக அளிக்க வல்லதோ அந்தப் பெரியவாச்சான் பிள்ளையை வணங்குகிறேன் .

இவர் அருளிச் செய்தவை
தத்வ தீபம்
தத்வ நிரூபணம்
தத்வ ஸங்க்ரஹம்
தத்வ பூஷணம்
ஞான ஆர்ணவம்
சாரீரிகக் கண்டியம்
அத்யாத்ம சிந்தை
சதுஸ்லோகீ
கீதா சாரம்
தீப பிரகாசிகை
நரஸிம்ஹ அஷ்டகம்
திரு விருத்த ஸ்வாபதேச வியாக்யானம்
பன்னீராயிரப்படி
இருபத்து நாலாயிரப்படி பிரமாணத் திரட்டு
ரஹஸ்ய த்ரய விவரணம்
ரஹஸ்ய மணி மாலை
தமிழ்க் கனி பிரபந்தம்
பகவத் கீதை வெண்பா

இவர் 108 திரு நக்ஷத்திரங்கள் இங்கு இருந்தது 1350 திரு நாட்டை அலங்கரித்தார்

அன்போடு அழகிய மணவாளச் சீயர்
பின்போரும் கற்றறிந்து பேசுகைக்காகத்
தம் பெரிய போதமுடன் மாறன் மறையின் பொருள் உரைத்தது
ஏதமில் பன்னீராயிரம்

———–

தனியன் ஸ்லோகங்கள் -2-
அவதாரிகை ஸ்லோகங்கள் -6-
தத்வ ஞான விளக்கம் -ஸ்லோகங்கள் -1-24-
ரஹஸ்ய த்ரய விவரணம் -அஷ்டாக்ஷரீ -விவரணத் தொடக்கம் -ஸ்லோகம் -25-
பிரணவ ஸப்தார்த்தம் -ஸ்லோகம் -26-
மகாரார்த்தம் -ஸ்லோகம் -27-
நமஸ் பதார்த்தம் -ஸ்லோகம் -28-29-
நாராயண ஸப்தார்த்தம்-ஸ்லோகம் -30-34-
த்வய -ரத்ன மந்த்ரம் -விவரணம்-ஸ்லோகம் -35-46-
கீதா சரம ஸ்லோக விவரணம் -ஸ்லோகம் -47-56-
பகவான் உகந்த உபாயம் ஸரணாகதியே -ஸ்லோகம் -57-66-
ப்ராக்ருத சரீரத்தில் இருந்து விடுபட பிரார்த்தனை -ஸ்லோகம் -67-69-
அர்ச்சிராதி மார்க்கம் நிரூபணம் -ஸ்லோகம் -70-72-
ஸூஷ்ம சரீரம் விடுபட அருள வேண்டுதல் -ஸ்லோகம் -73-74-
ஸ்வரூப ஆவிர்பாவம் பெற வேண்டுதல் -ஸ்லோகம் -75-
அப்ராக்ருத பஞ்ச உபநிஷத் ரூப திருமேனி பெற பிரார்த்தனை -ஸ்லோகம் -76-81-
ஸ்ரீ வைகுண்டம் -அயோத்யா-வர்ணனம் -ஸ்லோகம் -82-122

——————

அஸ்மத் வித பரித்ராண ப்ரேம ப்ரத்ராண மாநஸம்
வாதி கேஸரிணம் வந்தே சவும்ய ஜாமாதரம் முநிம்

நம்மைப் போன்ற அஞ்ஞர்களைக் காத்து அருளவே ஸ்நேக பாவ திரு உள்ளம் கொண்ட வாதி கேஸரி என்ற விருது பெற்ற ஸூந்தர ஜாமாத்ரு முனியை வணங்குகின்றேன்

ஸிம்ஹம் பூவைப்பூ வண்ணா -ஆண் ஸிம்ஹம் பெண் ஸிம்ஹம் குழந்தை -பாதுகா தேவி பரதனைக் கூட்டிப் போனது-இவரும் நரஸிம்ஹம் போல் ஸ்வாதி திருநக்ஷத்ரத்தில் திருவவதாரம் –

ஸூந்தர ஜாமாத்ர முநே ப்ரபத்யே சரணாம்புஜம்
ஸம்ஸார ஆர்ணவ ஸம் மக்நஸ் ஜந்து ஸம்ஸார போதகம்

பிறவிக் கடலில் நன்கு அழுந்தி இருக்கும் சேதனர்களை அக்கரைப் படுத்தும் ஓட்டமாக இருக்கும் வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயரை வணங்குகின்றேன்

ஸ்வாதி ஜாதம் கிருஷ்ண பதாஸ்ரிதம் வாதி கேஸரிம் வந்தே சவும்ய ஜாமாத்ரு யோகிநம்

அத்யாத்ம சிந்தா-ஸ்லோக ரூப-மூல கிரந்தம்
அத்யாத்ம சிந்தாமணி -அதற்கு தாமே அருளிச் செய்த வியாக்யானம்

அத்யாத்ம சிந்தா-சப்த -ஏழாம் வேற்றுமை -ஆத்மா விஷயமான விசாரம் -இதுவே அதி -பத பிரயோகம் –ஆத்மாவை விஷயமாகக் கொண்டவற்றைப் பற்றிய விசாரம் -என்றபடி -ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் குறிக்கும் -அத்யாத்ம சிந்தாமணி வியாக்யானம் இவரே சாதித்து அருளி உள்ளார்

———-

நமோ அஸ்த் வஸ்மத் குருப்யஸ் ஸ்யாத் தத் குருப்யஸ் ததா நம
பரமேப்யோ குருப்யச்ச நிகிலேப்யோ நமோ நம
-1-

அடியேனுடைய ஆச்சார்யர் பொருட்டு ப்ரணாமங்கள் ஆகுக -அவ்வாறே அவர் தம் ஆச்சார்யர்கள் பொருட்டு ப்ரணாமங்கள்-பரம ஆச்சார்யர்களான அனைவருக்கும் மறுபடியும் மறுபடியும் ப்ரணாமங்கள்-ஸ்வாமி ராமானுஜர் அருளிச் செய்த நித்ய கிரந்தப்படியே –குரு பரம்பரயா பரம குரும் பக வந்தம் ப்ரணம்ய -படியே -நிகிலேப்ய -என்று அனைவருக்கும் தனித் தனியே நமஸ்காரம் சொன்னபடி யாயிற்று -நம நம –பக்தியின் மிகுதியைத் தெரிவித்தபடி

(நித்யம் விததாமி -அத்யாத்ம சிந்தாமணி -ப்ரகாசப்படுத்த-ஆத்ம தத்வ ப்ரகாசகம் -முதல் பிரயோஜனம் -யாதாத்ம்ய தத்வம் அறிந்து மகிழ்வோம் -ஹ்ருதய அபீஷ்டம் -இரண்டாவது பிரயோஜனம் -பாவ பிரதம் -ஆத்ம பர்த்தா ஸ்வரூப ஆகாங்க்ஷை -அழகிய மணவாளப் பெருமானுடைய ஸ்வரூப பிரகாசப் படுத்துவது மூன்றாம் விஷயம் -)

(மந்த்ரத்திலும் மந்த்ரத்தில் உள்ளீடான வஸ்துவிலும் மந்த்ர ப்ரதானரான ஆச்சார்யர் பக்கலிலும் ப்ரேமம் கனக்க இருக்க வேண்டுமே -ஆகையால் அஸ்மத் குருப்யோ தொடங்கி ஸ்ரீ லஷ்மீ நாதன் வரையிலும் அனுசந்தானம் -மேல் –)

(அசவ் அசவ் –போந்தார் போந்து எண்ணிக் கொள் -ஒவ்வொருவரையும் அனுசந்திக்க இயலாமையால் பொதுவான முதலில் அருளிச் செய்து -மேல் பிரசித்தரான அனைவருக்கும் நமஸ்காரங்கள்)

நமோ ராமானுஜா யேதம் பூர்ணாய மஹதே நம
யாமுநாய முநீந்த்ராய நமஸ் ஸர்வார்த்த வேதிநே —
2-

ஸ்வாமி ராமானுஜருக்கு -பெரிய நம்பிகளுக்கும் -ஸர்வஞ்ஞரான யதிகட்க்கு இறைவனான யாமுனாச்சார்யருக்கும் நமஸ்காரங்கள்(மனனம் -சம்பிரதாயத்துக்கு ராமானுஜரை கொண்டு வரவும் ஸ்ரீ பாஷ்யம் பிரகாசப் படுத்தவும் மனனம் செய்த முனி

நமோ அஸ்து ராம மிஸ்ராய புண்டரீக த்ருசே நம
நாதாய முநயே நித்யம் நம பரம யோகிநீ –3-

ராமமிஸ்ரர் -புண்டரீகாக்ஷர் -நல்ல யோக ஞானமுடைய ஸ்ரீ மந் நாதமுனிகளுக்கு நித்யம் நமஸ்காரங்கள்(மணக்கால் நம்பி ராம மிஸ்ரர் -நான்காவது ராமர் -உய்யக்கொண்டார் -புண்டரீகாக்ஷர் -ரங்க நாத முனி -நாதமுனி -நம்மாழ்வாரை யோகத்தாலேயே சாஷாத்கரித்தவர் -)

ஆத்யாய குல நாதாய நமோ அஸ்து சட வைரிணே
நம சேநாதி பதயே ஞான யாதாம்ய வேதிநே —
4-

ப்ரபந்ந ஜன கூடஸ்தரான நம்மாழ்வாருக்கு அவருக்கு தத்வ யதாத்ம்ய ஞான உபதேசம் செய்து அருளிய விஷ்வக் சேனருக்கும் நமஸ்காரங்கள்(சட வாயு -பாஹ்ய குத்ருஷ்டிகளை நிரசித்த ஆழ்வார் -வைரி -விரோதி -பராங்குசர் -புறம்பாய் உள்ளவரை ஹிம்ஸித்து -அங்குசம் இட்டு தடுத்த பராங்குசர் -பாதத்தின் முன் செல்ல மாட்டான் பரன் கூட -)(ஸூத்ரவதி சமேதராய் திரு மாலிருஞ் சோலையில் விஷ்வக் சேனர் சேவை உண்டு )

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||-4-அடி ஒட்டி அருளிச் செய்த ஸ்லோகம்

ஸ்ரீயை ஸ்ரீச அநபாயிந்யை ஜகன் மாத்ரே நமோ நம
ஸ்ரீ தராயாதி குரவே நமோ பூயோ நமோ நம –5-

(ஸ்ரீயை நமோ நம
ஸ்ரீச அநபாயிந்யை நமோ நம
ஜகன் மாத்ரே நமோ நம
கட்டிலையையும் தொட்டிலையும் விடாமல்
)

அகில ஜெகன் மாதரம் அஸ்மின் மாதரம் -உலகுக்கு எல்லாமே தாயார் நாராயண க்ஷண காலமும் பிரியாமல் -அகலகில்லேன் இறையும் -என்று இருக்கும் பெரிய பிராட்டியாருக்கும் முதல் ஆச்சார்யரான பெரிய பெருமாளுக்கும் மறு படியும் மறுபடியும் பலமுறை நமஸ்காரங்கள்-வாத்சல்யம் -தோஷ தர்சித்வம் என்றும் தோஷ போக்யத்வம் என்றும் உண்டே – இதுவரை ஐந்து ஸ்லோகங்கள் –அஸ்மத் குருப்யோ நம -என்று ஆரம்பித்து ஆரோஹண கிரமத்தில் குரு பரம்பரை அனுசந்தானமாயிற்று –முதல் ஸ்லோகத்தில் –ஆ பகவத்த –-பகவான் வரை என்றும் பகவான் முதற்கொண்டும் என்றும் கொள்ளலாம்

இத்தம் ஸம் சிந்த்ய மநசா ஸூபாம் குரு பரம்பராம்
அத் யாத்ம விஷயாம் சிந்தாம் கரோம் யாத்ம விஸூத்தயே
–6-

இவ்விதமான பவித்ரமான ஆச்சார்ய பரம் பரையை மனத்தில் நினைத்துக் கொண்டு ஆத்ம ஸ்வரூபத்தை நிச்சயித்துத் தெரிந்து கொள்ள வேண்டியதற்காக ஆத்ம ஸ்வரூபத்தை குறித்து விமர்சனம் செய்து அத்யாத்ம சிந்தா என்ற இந்த க்ரந்தத்தைப் பணிக்கிறேன்

ஆஸீர் நமஸ் க்ரியா வஸ்து நிர்தேசோ வாபி தந் முகம் -என்றபடி இங்கு ஸூபாம் அடைமொழி-விஸூத்தயே-என்றதால் தேஹ இந்திரிய பிராண விலஷண ஆத்மா –சேஷத்வ -ஞாத்ருத்வ -அணுத்துவ முதலான தர்மங்களைக் வெளிப்படுத்தும் கிரந்தம் என்பதை ஸூசிப்பித்து அருளியவாறு –

(ரஹஸ்ய த்ரய தத்வ த்ரய ஞானம் அளித்ததால் ஸூபாம்)

(இத் யதி தைவம் அத ஆத்மா-இதுவரை தெய்வம் பற்றியது -மேல் ஆத்மாவைப் பற்றியது – உபநிஷத் சொல்லும் -அதே போல் இங்கும் ஆத்மாவைப் பற்றிய விசாரம் என்றும் ஆத்ம ஸ்வரூபன் சொல்லும் ரஹஸ்ய த்ரய விவரணம் என்றும் கொள்ளலாம் -)

———-

தத்வேந யஶ்சிதசிதீஶ்வர தத் ஸ்வபாவ
போகாபவர்க்க ததுபாய கதீருதார: |
ஸந்தர்ஶயந் நிரமிமீத புராண ரத்நம்
தஸ்மை நமோ முநிவராய பராஶராய ||

ரிஷிகளில் தலை சிறந்தவரான, உதார குணத்தை உடையவரான பராசர ரிஷிக்கு என் வணக்கங்கள்.
இவரே சித் (ஆத்மாக்கள்), அசித் (அசேதனப் பொருட்கள்), ஈச்வரன், இவர்களுடைய தன்மைகள்,
இவ்வுலக இன்பங்கள், மோக்ஷம், இவ்வுலக இன்பம் மற்றும் மோக்ஷம் ஆகியவற்றை அடையும் வழி,
ஆத்மாக்களால் அடையப்படும் குறிக்கோள் ஆகியவற்றை உள்ளபடி, புராணங்களில் ரத்னமான
ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் அருளிச் செய்தவர்.

ஆத்ம ஸ்வரூபம்
சென்று சென்று பரம் பரமாய் -என்கிறபடியே
1-தேக
இந்த்ரிய
மன
பிராண
புத்தி
விலஷணமாய்
2-அஜடமாய்
3-ஆனந்த ரூபமாய்
4-நித்யமாய்
5-அணுவாய்
6-அவ்யக்தமாய்
7-அசிந்த்யமாய்
8-நிரவயவமாய்
9-நிர்விகாரமாய்
10-ஜ்ஞாநாஸ்ரயமாய்
11-ஈஸ்வரனுக்கு ந்யாம்யமாய்
12-தார்யமாய்
13-சேஷமாய்
இருக்கும்-

தேஹாதிகள் -என்னுடைய தேஹாதிகள் -என்று-ஆத்மாவில் வேறுபட்டு தோற்றுகையாலும்
-இதம் -என்று தோற்றுகையாலும்—ஆத்மா -நான் என்று தோற்றுகையாலும்
-இவை ஒருகால் தோற்றி ஒரு கால் தோற்றாமையாலும்–ஆத்மா எப்பொழுதும் தோற்றுகையாலும்
-இவை பலவாகையாலும்-ஆத்மா ஒருவன் ஆகையாலும்
ஆத்மா இவற்றில் விலஷணன் என்று-கொள்ள வேணும்-

நனு-ஸ்தூலோஹம் க்ருசோஹம்-என்று தேஹத்திலே அஹம் புத்தி வ்யவஹாரம் காண்கையாலே
அஹம் அர்த்த பூதனான ஆத்மா தேஹம் தானாம் அத்தனை –
இந்த அஹம் புத்தி வ்யவஹாரங்களுக்கு தேஹாதிரிக்தன் விஷயம் என்ன ஒண்ணாது –
அவனுக்கு ஸ்தௌல்யாதிகள் கூடாமையாலே –
கட படாதிகளைப் போலே பார்த்திவமான சரீரத்துக்குச் சைதன்யம் கூடாதே என்னில் மத சக்தி போலே
பரிணாம விசேஷத்தாலே கூடும் இறே-ஸ்ரீ தத்வ சேகரம் -ஜீவ ஸ்வரூப நிர்ணய பிரகரணம்

தத் கண்டனம் –
அது அனுபபன்னம் —

தேஹம் அநேக அவயவ சங்காத் மகம் என்னும் இடம் சித்தம் -அதில் எல்லா அவயவங்களுக்கும் சைதன்யம் உண்டாகில்-அநேக சேதனோ பலபதி பிரசங்கிக்கும் -அவயவங்களுக்கு அந்யோந்யம் அவிவாத நியமமும் –அவற்றில் மமதா புத்தியும் மமதா வ்யவஹாரமும் -கூடாது –ஒரு அவயவத்துக்கே சைதன்யம் கொள்ளில் அது விச்சின்னம் ஆனால் அவயவாந்தரம் அது அனுபவித்ததை அவயாந்தரத்திலே ஸ்மரிக்கக் கூடாது –பின்பு அஹம் புத்தி வ்யவஹாரங்களும் மமதா புத்தி வ்யவஹாரப்ங்களும் தவிர வேணும் –சர்வ சரீர வியாபியான ஸூக துக்க அனுபவமும் கூடாது –

அவயவ சங்காதாத்மகம் அன்று சரீரம் -அயவவி அதிலே சைதன்யம் என்னவும் ஒண்ணாது –உபலம்ப அனுபபத்திகள் இல்லாமையாலே அவயவ ச்வீகாரம் அனுபபன்னம் ஆகையாலே –கிஞ்ச -பாலதே ஹோ அஹம் மந்த ஜ்ஞான –யுவதே ஹோ அஹம் பஹூ ஜ்ஞான மம சரீரம் –என்று சரீர அஹம் அர்த்தங்களில் பிறக்கிற பேத பிரதிபத்தியும் பேத வ்யவஹாரமும் கூடாது – மமாயமாத்மா -என்கிற இடத்தில் போலே அமுக்கியம் என்ன ஒண்ணாது -முக்யே பாதகம் இல்லாமையாலே – அன்றிக்கே அஹம் புத்திக்கு சரீரமே விஷயம் என்று கொண்டாலும் ஸ்ருதியாலும் ஸ்ருத் யர்த்தா பத்தி களாலும் தேஹாதிரிக்தனாய் தேஹாந்தர பரிக்ரஹ யோக்யனான ஆத்மா சித்தன் –பாஹ்யேந்த்ரியங்களும் ஆத்மாவாக மாட்டாது -ஒருவனே சர்வ இந்த்ரிய விஷயங்களையும் அறிகையாலே — இப்படி கொள்ளாத போது யாவன் ஒருவன் நான் இவ்வர்த்தத்தைக் கண்டேன் – அந்த நானே ஸ்பர்சியா நின்றேன் என்கிற பிரதிசந்தானமும் கூடாது – சஷூஸ்ஸே ஆத்மாவாகில் அந்தன் ரூபத்தை ஸ்மரியாது ஒழிய வேணும் – ஸ்ரோத்ரமே ஆத்மாவாகில் பத்திரன் சப்தத்தை ஸ்மரியாது ஒழிய வேணும்-இப்படி மற்ற இந்த்ரியங்களிலும் கண்டு கொள்வது –

அந்த கரணமும் ஆத்மாவாக மாட்டாது — ஸ்மர்த்தாவினுடைய ஸ்மாரணாதி கார்யங்களுக்கு கரணமாகக் கல்பிதங்கள் ஆகையாலே –இது தானே ஸ்மரிக்கிறது என்ன ஒண்ணாது -ஸ்மரணத்துக்கு கரணம் இல்லாமையாலே –கரணமும் தானே என்ன ஒண்ணாது -விருத்தமாகையாலே –வேறே ஓன்று கரணம் என்னில் அது பாஹ்ய கரணம் ஆகில் அது இல்லாதவனுக்கு ஸ்ம்ருதி கூடாது-ஆந்தர கரணம் ஆகில் ஆத்மாவுக்கு மனஸ் என்று பேர் இட்டாதாய் விடும் –ஆந்தர கரணம் அநபேஷிதம் ஆகில் இந்த்ரியார்த்த சம்பந்தம் உண்டான போது எல்லாம் ஜ்ஞானம் பிறக்க வேணும் –ஆகையால் மனஸ்ஸூம் ஆத்மாவாக மாட்டாது –பிராணங்களும் ஆத்மாவாக மாட்டாது –சங்காத ரூபங்கள் ஆகையாலே தேஹம் ஆத்மா என்கிற பஷத்துக்குச் சொன்ன தூஷணங்கள் இங்கும் துல்யம் –

ஜ்ஞானமும் ஆத்மாவாக மாட்டாது -எனக்கு ஜ்ஞானம் பிறந்தது -நசித்தது -என்று ஷணிகமுமாய்- ஆத்ம தர்மமுமாய்த் தோற்றுகையாலே- ஸ்திரனாய் இருப்பான் ஒரு ஆத்மா யுண்டு என்னும் இடம் நேற்றுக் கண்ட நானே இன்றும் காணா நின்றேன் – என்கிற பிரத்யபிஜ்ஞையாலே சித்தம்

ஞானம் இருப்பதாலும் பரிமாணம் விகாரம் இருப்பதாலும் இரண்டுமே வெவ்வேறு தத்வங்கள் என்றும் கொண்டால் தானே பொருந்தும்

ஆச்சார்யனால் தத்வ த்ரய ஞானம் அறிதல்

ஆத்மா ந தேவோ ந நரோ ந திர்யக் ஸ்தாவரோ ந ச
ந தேஹோ ந இந்த்ரியைவ மந ப்ராணோ ந நாபி தீ –
-1-

ஆத்மா தேவஜாதிக்குச் சேர்ந்தவன் இல்லை -மானுட ஜாதிக்குச் சேர்ந்தவன் இல்லை -பசு பறவை முதலான திர்யக் ஜாதிக்கும் சேர்ந்தவன் இல்லை -சரீரமும் ஆத்மா இல்லை -பிராணனும் கூட ஆத்மா இல்லை -ஞானமும் கூட ஆத்மா இல்லை –

சரீரம் எடுத்துக் கொண்டே கர்த்ருத்வம் -ஆத்மாவுக்கு-ஆத்மா -பிறப்பிலி- நித்யம் சாஸ்த்வத புராணம்- -இருந்தாலும் தேஹ சம்பந்தம் கொண்டு ப்ரவ்ருத்தி -முக்குண மயமான தேஹத்தால் -தூண்டப்பட்டு செயல்பட்டு -கர்மங்களைத் தொலைத்து –ஸூஷ்ம சரீரம் கொண்டே அர்ச்சிராதி கதியில் சென்று விரஜையில் நீராடி அனைத்தையுமே கழித்து-ஸூத்த ஆத்மா -முக்தனாகிறான்

தேஹமே ஆத்மா சாருவாக -லோகாயுத மதம் -கண்டதே காட்சி -கொண்டதே கோலம் –நேஹ நாநா அஸ்தி –ஆண் அல்லன் -ஸ்ருதியும் ஆழ்வாரும் -இல்லை என்பதை சொல்லியவாறு

ந ஜடோ ந விகாரீ ச ஜ்ஞான மாத்ராத்மகோ ந ச
ஸ்வஸ்மை ஸ்வயம் ப்ரகாஸ ஸ்யாதேக ரூப ஸ்வரூப்பாக் –
-2-

ஆத்மா ஜட ஸ்வரூபம் -செயலற்ற தன்மை -இல்லை -மாறுபாடுகளை அடைவதும் இல்லை -ஞானம் ஒன்றையே ஸ்வரூபமாக உடையவன் இல்லை -தனக்குத் தானே சுயமாகப் பிரகாசிப்பவன் -எப்போதும் ஒரே விதமான ஸ்வரூபன் உடையவனாய் இருப்பவன் –

விஞ்ஞானம் -ஞானம் முழுவதாக இருப்பதால் ஆத்மாவை ஞானம் என்றும்
க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் -கிருஷ்ண பக்தியே வடிவெடுத்துள்ளார் என்பது போல் -விஞ்ஞாதா என்றும் சொல்லுவோம் –

ஞாதாவுமாகக் கூட இருக்கும் ஆத்மா என்றபடி -தனக்குப் பிரகாசப்பட்டும் -மற்ற ஒன்றின் உதவின இல்லாமல் தானே ஒளி விட்டுக்கொண்டு பிரகாசிப்பார் -அஜடம் -ஸ்வயம் பிரகாசம்-பராக் அர்த்தம்-பிறருக்குத் தோற்றுவித்து -அசேதனப் பொருள்கள் -ப்ரத்யக் அர்த்தம் -தங்களுக்குத் தோற்றுவது -ஜீவாத்மாவும் பரமாத்மாவும் இவ்வாறு – ஷட் பாவ விகாரம் -அஸ்தி ஜாயதே இத்யாதி பரிணாமங்கள் மாறுதல் – கருவில் இருத்தல், பிறத்தல், வளர்தல், மாற்றம் அடைதல், தளர்ச்சி அடைதல், மரணம் என ஆறு நிலைகளுக்கு உட்பட்டது என்பதை குறிக்கும் அசேதனங்களுக்கே உண்டு

தர்மி ஞானம் -அஹம் சப்த கோசரம் -எங்கும் உப்பாகவே உப்புக்கட்டிப் போல் எங்கும் ஞான மயம்-கட்டடங்க ஞான ஆனந்த மயம் -இது மாறாது – -தர்ம ஞானம் இதம் என்று பொருள்களை அறிந்து கொள்வது -இது கர்மம் அடியாக மாறும்

விளக்கு ஒளி ஜ்வாலை ஒளி போல் இரண்டுமே உண்டே -ஓன்று ஒன்றை ஆஸ்ரயிக்கும் – -த்ரவ்யம் -குணம் -ஜாதி -க்ரியா -மூன்றும் சேர்ந்து இருக்கும் -கிரியாவான் குணவான்-என்கிறோம் அன்றோ – குணம் த்ரவ்யத்தை ஆஸ்ரயிக்கலாம் -த்ரவ்யம் த்ரவ்யத்தை ஆஸ்ரயிக்கலாம் –குணத்தை குணம் ஆஸ்ரயிக்காதே -த்ரவ்யம் போக்குவரத்து -கமனக்கிரியா -இருக்கும் ஆஸ்ரயிக்கும் படியாயும் இருக்கும் -ஆத்மா த்ரவ்யம் தான் -ஞான மயமாக இருப்பதால் குணம் என்றும் சொல்வதால் -ஞானம் இதை ஆஸ்ரயித்ததும் இருக்கலாம் –

அஜடமாகை யாவது ஞானத்தை ஒழியவும் தானே தோற்றுகை –சூர்ணிகை -8
ஆனந்த ரூபமாகை யாவது ஸூ கரூபமாய் இருக்கை –9- உணர்ந்தவன் ஸூகமாக உறங்கினேன் என்கையாலே ஸூக ரூபமாகக் கடவது –10- நித்யமாகை யாவது எப்போதும் யுண்டாகை –11- எப்போதும் யுண்டாகில் ஜன்ம மரணங்கள் யுண்டாகிற படி என் என்னில் ஜன்மமாவது தேக சம்பந்தம் மரணமாவது தேக வியோகம் –12-அணுவான படி என் என்னில் – ஹிருதயப் பிரதேசத்தில் நின்றும் உத்க்ரமித்துப் போவது வருவதாம் என்று சாஸ்திரம் சொல்லுகையாலே ஆத்மா அணுவாகக் கடவது –14- அணுவாய் ஹ்ருதயத்து அளவில் நிற்குமாகில் ஸூக துக்கங்களை புஜிக்கிற படி என் என்னில் –15-
மணி த்யுமணி தீபாதிகள் ஓர் இடத்திலே இருக்க பிரபை எங்கும் ஒக்க வ்யாபிக்கையாலே அவற்றைப் பூஜிக்கத் தட்டில்லை –16-ஏக சரீர மாதரத்துக்கு இப்படி கொண்டாலும்
ஒருவன் ஏக காலத்திலே அநேக சரீரங்களை பரிக்ரஹிக்கிறது ஸ்வரூப வயாபதியாலே யாக வேண்டாவோ -என்கிறசங்கையிலே அருளிச் செய்கிறார் –17- அவ்யக்தம் ஆகையாவது கட படாதிகளை க்ரஹிக்கிற சஷூராதிகளாலே தோற்றாது இருக்கை —அவ்யக்தம் அச்சித்தயா அவிகாராய -ஸ்ரீ கீதை-2–25- -சோகம் வர ப்ரமேயம் இல்லை-வியக்தம் புலன்களுக்கு புலப்படும் –18-

அசிந்த்யமாகை யாவது-அசித்தோடு சஜாதீயம் என்று நினைக்க ஒண்ணாது
இருக்கை – சிந்தித்து பழகியவை அசித் -ஆத்ம த்யானம் கைகூடுவது எப்படி –பிரத்யக்ஷம் பார்த்து சிந்திக்க முடியாதே–19-
நிர்வவவமாகை யாவது அவயவ சமுதாயம் அன்றிக்கே இருக்கை – அதாவது –
விஞ்ஞான மய-என்றும் விஞ்ஞான கன-என்றும்சொல்லுகிறபடியே ஞான ஏகாகாரம் ஆகையாலே அசித் வஸ்துகளைப் போலே அவயவ சங்காதாத் மகம் அன்றிக்கே இருக்கை – சரீரத்துக்கு தானே அவயவ சமுதாயம் உண்டு -ஞான வடிவாகவே இருப்பார் -எங்கு பார்த்தாலும் விஞ்ஞானம் –20-
நிர்விகாரம் ஆகையாவது அசித்துப் போல விகரிக்கை அன்றிக்கே ஒருபடிப் பட்டு இருக்கை–21-
இப்படி இருக்கையாலே சஸ்த்ரம் அக்னி ஜலம் வாதம் ஆதபம் தொடக்க மானவற்றால் சேதித்தல்–சேத்தா/ சேதனம் கிரியை /சேத்யம் வெட்டப்படும் பொருள் – தஹித்தல் நனைத்தல் சோஷிப்பித்தல் செய்கைக்கு அயோக்யமாய் இருக்கும் -22-ஆர்ஹதர் ஆத்மாவை தேக பரிமாணன் என்றார்கள் –23-அது ஸ்ருதி விருத்தம் –-24-அநேக தேகங்களை பரிக்ரஹிக்கிற யோகிகள் ஸ்வரூபத்துக்கு சைதில்யமும் வரும் –25-
ஞான ஆஸ்ரயம் ஆகையாவது-ஞானத்துக்கு இருப்பிடமாய் இருக்கை – ஏக தத்வ வாதம் நிரசனம் –26-
ஆத்மா ஜ்ஞானத்துக்கு இருப்பிடம் அன்றிக்கே ஜ்ஞானம் மாத்ரம் ஆகில் –27-
நான் அறிவு என்று சொல்ல வேணும் நான் அறியா நின்றேன் என்னக் கூடாது –28-
ஜ்ஞாதா என்ற போதே கர்த்தா போக்தா என்னுமிடம் சொல்லிற்று ஆய்த்து-29-
கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் ஜ்ஞான அவஸ்தா விசேஷங்கள் ஆகையாலே
அறிவின் நிலைப்பாடுகள் -இவை -தாய் மகள் தோழி அவஸ்தைகள் ஆழ்வாருக்கு போலே-30-சிலர் குணங்களுக்கே கர்த்ருத்வம் உள்ளது
ஆத்மாவுக்கு இல்லை-31-ஸ்ரீ கீதையில் சர்வேஸ்வரன் தானே நா நாயம குனேபயே காததாரம ஹேது பிரகிருதி ருசயதே
புருஷச ஸூ கது காநாமபோக்த்ருத்வே ஹேது ருசயதே –13-14-அத்யாய ஸ்லோகங்கள்-என்று சொல்லுகையாலும்
இப்படி அத்யாத்ம சாஸ்த்ரங்களிலே
ஆத்மாவுக்கு அகர்த்ருத்வத்தையும்
குணங்களுக்கே கர்த்ருத்வத்தையும் சொல்லுகையாலே கர்த்ருத்வம் உள்ளது பிரக்ருதிக்கே ஆத்மாவுக்கு கர்த்ருத்வம் இல்லை போக்த்ருத்வம் மாத்ரமே உள்ளது என்று ஆயத்து அவர்கள் சொல்லுவது –
அப்போது இவனுக்கு சாஸ்திர வச்யதையும்
போக்த்ருத்வமும் குலையும்-32-
சாம்சாரிக பிரவ்ருதிகளில் கர்த்ருதம் ஸ்வரூப பிரயுக்தம் அன்று –33
குண க்ருதம்-34-
சமசர்க்க கர்த்ருத்வம் தான் ஈஸ்வர அதீநம்-35-
ஞான ஆச்ரயமாகில் சாஸ்த்ரங்களில் இவனை ஞானவான் என்று சொல்லுவான் என் என்னில்-36-
ஜ்ஞானத்தை ஒழியவும் தன்னை அறிகையாலும் ஜ்ஞானம் சாரபூத குணமாய் நிரூபக தர்மமாய் இருக்கையாலும் -சொல்லிற்று-37-
நியாமகமாகை ஆவது ஈஸ்வர புத்திய அதீனமாக எல்லா வியாபாரங்களும் யுண்டாம்படி இருக்கை —38-
தார்யம் ஆகையாவது அவனுடைய ஸ்வரூப சங்கல்பங்களை ஒழிந்த போது தன் சத்தை இல்லையாம்படி இருக்கை –39
சேஷமாகை யாவது சந்தன குஸூம-புஷ்பம் தாம்பூலாதிகளைப் போலே அவனுக்கு இஷ்ட விநியோக அர்ஹயமாய் இருக்கை- 40-

சேதநோப் யாப்தி சீலச் ச சித் ஆனந்தாத் மகஸ் ததா
அஹமர்த்த ப்ரதி க்ஷேத்ரம் பிந்நோ அணுர் நித்ய நிர்மல–3-

ஆத்மா சைதன்யம் என்கிற ஞானம் குணத்தை உடையவன் -அந்த ஞானம் பரவுதல் மூலமாக உடல் முழுவதும் பரந்து இருக்கும் தன்மை உடையவன் -மேலும் ஞானம் ஆனந்தம் ஆகியவற்றை ஸ்வரூபமாக உடையவன் -நான் என்ற சொல்லாலே அறியப் படுபவன் -ஒவ்வொரு சரீரத்திலும் இயங்கும் ஆத்மா வேறுபட்டவன் -அணு அளவு உடையவன் -எப்போதும் குற்றமற்று இருப்பவன் –

(சேதனம் -ஞானமுடையவன் -சித் -ஞானமயத்வம் -இரண்டையும் சொன்னவாறு-அனுகூல ஞானமே ஆனந்தமாகும்-வ்யாப்தி சீலம் -தேகம் எங்கும் பரந்து–தர்ம பூத ஞானத்தால் ஸ்வ பாவத்தால் சரீரம் முழுவதும் வியாப்தி-அநந்த கோடி சரீரத்துக்குள்ளே பிறவி தோறும் கர்மத்தால் வியாப்தி உண்டு ஆத்மாவுக்கு -ஸ்வரூப வியாப்தி ப்ரஹ்மத்துக்கு-ஏகாத்ம வாதம் நிரஸனம் -ப்ரதிஷேத்ர பின்னம் -இதம் சரீரம் கௌந்தேய –க்ஷேத்ரம் -ஷேத்ரஞ்ஞ-இதி ஞானாதி -13 அத்யாயம் -சரீர ஆத்ம பேதம்-ஆத்மாக்களுக்குள் பரஸ்பர பேதம் -ஜீவ ஈஸ்வர பேதம் -மூன்றுமே உண்டே-நித்யோ நித்யாநாம் சேதனாஸ் சேதனாம் ஏகோ பஹூனாம் யோ விததாதி காமன் [ஸ்வேது 6.13] )

ததா ஜ்ஞாத்ருத்வ கர்த்ருத்வ போக்த்ருத்வ நிஜ தர்மக
பரமாத்ம ஏக சேஷத்வ ஸ்பாவஸ் ஸர்வதா (ஸ்வ) ஸ்வத–4-

மேலும் அறியும் தன்மை -ஜ்ஞாத்ருத்வம் -செயல்படுத்தம் தன்மை – கர்த்ருத்வம்-அனுபவிக்கும் தன்மை -போக்த்ருத்வம் -என்ற இயல்பான – நிஜ தர்மக -தர்மங்கள் உடையவன் -இயல்பாக உறுதியாய் இருப்பவனான பரமாத்மாவுக்கே அடியவனாம் தன்மை -பரமாத்ம ஏக சேஷத்வ ஸ்பாவஸ் ஸர்வதா ஸ்வ ஸ்வத-என்ற தர்மமும் உடையவன் –

(அநந்யார்ஹ சேஷத்வம் -கோவிந்தா உனக்கே நாம் ஆட்ச் செய்வோம்-பரகத அதிசய ஆதேயத்வம்- தனியாக -நிலை நின்ற ஆந்தர ஸ்வ பாவம்-உள் இதழ் -கீழ் மூன்றும் வெளி இதழ்–இது சத்தா ப்ரயுக்தம் -ஒழிக்க ஒழியாத தன்மை சேஷத்வம்-ஸர்வதா ஸ்வத இயற்கையாகவே இருக்கும் தன்மை -திருமாலே நானும் உனக்கு பழ வடியேன் -அதுவும் அவனது இன்னருளே —-மற்ற மூன்றும் பராயத்வம் -அவன் அதீனம் –சேஷத்வ ஞானமே அறிவாளி -கைங்கர்யங்களே கர்த்ருத்வம் -அவன் நன்மை அனுபவிக்க -பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யம் -)

(ஆத்மா தான் கர்த்தா -ஸாஸ்த்ர அர்த்தவத்வாத் -பொருள் உள்ளவாக வேண்டுமே -ப்ரக்ருதி தூண்டப்பட்டு செயல்படுகிறான் -அஹங்கார விமூடாத்மா -அழுக்கு இருப்பதால் தானே சரீரம் என்றும் நினைப்பவன் -அவனால் நியமிக்கப்பட்டு முக்குண வஸ்யதையால் -உபாதியால் கர்த்தா-கர்மமும் கைங்கர்யத்தில் புகும் அன்றோ- -நிரீஸ்வர சாங்க்யன் -ஞாத்ருத்வம் கர்த்ருத்வம் -நொண்டி குருடன் சேர்ந்து நடக்கலாம் -)

ஏவம் ஸாமாந்யதஸ் ஸித்தி நிஜா கார்யுதோ அப்யஹம்
அநாதேர் குண மாயாயா பலேநைவ திரோஹித –5

இப்படி எல்லா ஜீவர்களுக்கும் இயல்பாக தர்மங்களைக் தன்மைகளாக முக்குணம் உள்ளடங்கப் பெற்ற மூல ப்ரக்ருதியின் ப்ரபாவத்தால் சூழப்பட்ட தன்மைகளைக் உடையவனானேன்

(கடி மா மலர்ப்பாவையோடு ஸாம்யம் -ஷட் குணங்களில் -சாமான்யதஸ் -பொதுவாக -ஸூத்த ஆத்மா -மாயா -பிரக்ருதியால் -முக்குண -பாதிப்பால் -கர்மங்கள் அடிப்படையில் சரீரம் ஏற்றுக் கொண்டு உழல்கிறோம் அன்றோ -)

அப்ரகாச நிஜாகாரோ நித்ய மாந்த்ய முபேயிவாந்
அபதே கர்ம பாசேந க்ருஷ்யமாணோ நிராசய-6

வெளியில் தெரியாத என்னுடைய இயல்பாக தர்மம் உடையவனாய் செயலாற்ற தன்மையை எப்போதும் உடையவனாய் புண்ய பாபம் வடிவில் உள்ள கர்மம் என்ற கயிற்றினால் கட்டப்பட்டு வழி யல்ல வழியிலே இழுக்கப்பட்டவனாய் வேறு ஆதாரம் அற்றவனாய் இருக்கிறேன் –

(அவித்யா- கர்மா- வாசனா- ஜென்ம-சுழல் -மறந்தேன் உன்னை முன்னமே- -பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் -ஆத்மாவை வெய்யிலே வைத்து தேகத்தை நிழலிலே வைக்க -மந்த்ர உபதேசம் பெற்று திருமங்கை ஆழ்வார் ஆனார் அன்றோ -யானே என்னை அறியகிலாதே – யானே என் தனதே என்று இருந்தேன் -யானே நீ என்னுடைமையும் நீயே –அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழன்றேன் -பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன்-)

அஜாநந் நநு கூலஞ்ச ப்ரதிகூலம் ததாத்மந
அந்யதா தத்துவாரோப்ய ராக த்வேஷவ் ப்ரவர்த்தயன் –7-

அப்படியே தனக்குத் தகுந்தவையும் தகாதவையும் எவையோ என்ற பாகுபாடு தெரியாதவனாய் பயன் அளிக்குமவையைப் பயனற்றதாகவும் பயனற்றவையை பயனளிக்க நல்லதாகவும் எண்ணி அவ்வவற்றின் மேல் விருப்பும் வெறுப்பும் வளர்த்துக் கொண்டவனானேன் –

(அஸ்தாந ஸ்நேஹ காருண்ய தர்மாதர்மதியாகுலம்
பார்த்தம்ப்ரபந்நமுத்திஶ்ய ஶாஸ்த்ராவதரணம்க்ருதம்
அஸ்தாந ஸ்நேஹ காருண்ய தர்மாதர்மதியா – தகாத பந்துக்களிடம் பற்றினாலும், கருணையினாலும், உண்டான தர்மத்தில் அதர்ம புத்தியாலே,
ஆகுலம் – கலங்கி நிற்பவனாய், ப்ரபந்நம் – சரணமடைந்தவனான, பார்த்தம் உத்திஶ்ய – அர்ஜுனனைக் குறித்து, ஶாஸ்த்ராவதரணம்க்ருதம் – கீதாசாஸ்த்ரம் (முதலத்தியாயத்தில்) சொல்லப்பட்டது.)

(அவிவேக கநாந்த திங்முகே பஹுதா ஸந்தத து:க்கவர்ஷிணி |
பகவந்! பவதுர்திநே பத: ஸ்கலிதம் மாம் அவலோகயாச்யுத ||-ஶ்லோகம் 49 –
ஞானம், பலம் முதலிய ஆறு குணங்களால் பூர்த்தியை உடைய பகவானே! உன்னுடைய அடியார்களை நழுவ விடாதவனே! திசைகள் கரிய மேகங்களால் மறைக்கப்பட்டிருக்கும், மழைக்கால இருட்டை உடைய, பெரிய மழை தொடர்ந்து பொழியும் இந்த ஸம்ஸாரத்தில், நல்வழியில் இருந்து நான் நழுவுகிறேன்; உன்னுடைய கருணைக் கடாக்ஷத்தை எனக்கு அருள்.)

அக்ருத்ய கரணாதாவப் யத்யாந்தோத் பட வ்ருத்திக
மத்த ப்ரமத்தோந் மத்தாநாம் வர்த்தே ஸத்ருச சேஷ்டித–8-

செய்யத் தகாத வேலைகளைச் செய்வது முதலான பாபங்களும் கூட முழுமையாக தடங்கலற்று இழியுமவனாய் மதம் பிடித்தவன் அசட்டையாக இருப்பவன் -பைத்தியம் பிடித்தவன் என்ற இந்த மூன்று வகைப்பட்ட வர்களின் நடவடிக்கை போலே நடப்பவனாய் இருக்கிறேன் –

(மத்தன்-துஷ்ட ஆகாரத்தால் -பிரமத்தன் -வாதம் பித்தம் கபம் இவற்றால் -உன்மத்தன் -பைத்தியம் -மூவரும் போல் தேஹாத்ம அபிமானத்தால் நானே செய்கிறேன் -நர வபு -பசு பிராயர் -வாநரம் போல் -அவித்யா கர்மா -காரணம் -வாசனை ருசி கார்யம் -பலம் ஜென்மம் -ஆத்மா படும் பாடு –)

கர்ப்ப ஜன்மாத்ய வஸ்தாஸூ துக்க மத்யதுஸ் ஸஹம்
ந கிஞ்சித் கணயந் நித்ய சராம் இந்திரிய கோசர –9-

கர்ப்பத்தில் இருப்பு -அதிலிருந்து வெளி வருதல் முதலான நிலைமைகளிலே மிக்க தாங்க இயலாத கஷ்டத்தை சிறிதும் பொருட்படுத்தாமல் எப்போதும் இந்த்ரியங்களுக்கு வசப்பட்டவனாகத் திரிகிறேன்

(கர்ப்பம் ஜென்மம் -சைஸவம் பால்யம் யவ்வனம்-பேதை பாலகன் அதாகும் பிணி பசி -மூப்பு -துன்பம் -அவஸ்தைகள்-வேத நூல் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவ ரேலும்
பாதியு முறங்கிப் போகும் நின்றதில் பதினை யாண்டு
பேதை பா லகன தாகும் பிணி பசி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகரு ளானே.)

ஏவம் விஷய த்ருஷ்ணாயா வசகஸ்ய ஜரா மம
தத் போகே கரணாநாம் ச ஸுவ் தில்யம் குருதே ப்ருசம்
–10-

இவ்வாறு பொருள்களின் மீது உண்டான ஆசைக்கு அடிமையான என் கீழத்தனம் அந்த சுகங்களை அனுபவிப்பதில் இந்திரியங்களுக்கு மேலோங்கிய இயலாமையைக் கொடுக்கிறது –

(கண்ணும் சுழன்று பீளையோடு ஈளை வந்து ஏங்கினால்
பண்ணின் மொழியார் பைய நடமின் என்னாத முன்
விண்ணும் மலையும் வேதமும்  வேள்வியும் ஆயினான்
நண்ணு நறையூர் நாம் தொழுதும் எழும் நெஞ்சமே –6-4-1-)

ததா து த்ருஷ்ணா மஹாத்ம்யாத் கரணா நாம பாடவாத்
போகாலாப ஸமுத் பூத சோகோ அபி பவதி துவம் –11-

அந்தக் கிழத்தன்மையில் போகத்தின் மேல் ஆசை பெருகுவதாலும் இந்த்ரியங்களில் சக்தி குறைவதாலும் ஆசைப்பட்ட அனுபவம் கிடையாமையாலே பொங்கி வரும் துக்கமும் தவறாமல் ஏற்படும் –

ததா புத்ர களத்ராதி பந்து வர்க்காவ மாநஜம்
துக்கம் துஸ் ஸஹ மேவாபி ஸஹந்நஸ்த்ரா ப்ரதிக்ரிய–12-

அந்த சமயத்தில் பிள்ளைகள் மனைவி முதலானவர்கள் தேஹ ஸம்பந்தம் உடையவர்களால் அவமதிக்கப் பட்டதனால் உண்டான தாங்கமுடியாத மிகுந்த கஷ்டம் இருப்பினும் அதற்க்காகப் பழி தீர்த்துக் கொள்ள முடியாத அவமானமாகிற துக்கத்தைத் தாங்கிக் கொண்டு இருந்தேன் –

ஆதித்யாதி பிரத்யர்த்தம் பீடிதோ மூட சேதன
அர்த்தாதிஷு ததாநீ மப்யபி வ்ருத்த ஸ்ப்ருஹோ அபவம் –13-

மன வருத்தத்தினாலும் சரீரத்தில் வந்த நோய்கள் காரணமாகவும் மிகவும் கஷ்டப் பட்டவனாய் இருந்த சமயத்திலும் செல்வம் முதலான சம்பத்துக்களின் மீது மிகுதியான ஆசை உடையவனாய் இருந்தேன்

(ஆதி -மனப்பீடை -வியாதி -சரீரகத பீடை
சுகுமார் தனுர் கர்ப்ப வாஸத்தில் இருக்கும் பொழுது -பஹு மல-அவள் உடலில் -சூழப்பட்டு -நீர்க்குடத்தால் மூடப்பட்டு துன்பப்படுகிறான் -அவள் உண்ணும் உணவில் சூடு குளிர் -இவற்றால் சுகுமார் உடல் கஷ்டப்படும் அன்றோ -முன் ஜென்மத்தில் பட்ட துன்பங்கள் எல்லாமே கர்ப்பத்தில் இருக்கும் பொழுது நினைவில் வருமாம்-கர்ப்ப காலத்திலும் சரணாகதி செய்து பேறு அடையலாம் -கால தேச நியதி இல்லையே -ஆனால் துர்லபம் -வாய்ப்பு குறைவு தானே -சட வாயு -தூதி மாருதி வீசும் -கர்ப்ப ஸ்ரீ மான்கள் வெகு சிலரே —)

தாபத்ரயங்கள் –ஆத்யாதிகம் இரண்டு வகை -சரீர கதம் -மானஸம் –ஆத்யாத்மீகம் -காமம் க்ரோதம் பயம் கோபம் அசூயை அவமானம் மாத்சர்யம் பொறாமை-போல்வன -முக் குண வசத்தில் இவை விருப்பு வெறுப்பு – ஆதி தெய்விகம் -வெப்பம் குளிர் பூகம்பம் போல்வன -கர்மபலன்களை அனுபவித்தே தீர வேண்டும் -தொலைக்க அவன் காத்துக் கொண்டுள்ளான் -புரியாமல் தவிக்கிறோம் -பலன்களைக் கொடுத்து கர்மங்களைத் தொலைத்து பேறு –மூடன் -இவை சரீர சம்பந்தத்தால் வந்தவை என்றும் அறியாமல் உழல்கிறோம்

தாத்ரும் பந்த்து வியோகேஷு தாத்ருந மஹதா வ்ருத
கால சேஷம் நயாம் யத்ர கர்ம பந்த வசாநுக
–14-

அந்த உறவினர்களில் யாராவது இறந்த போது மிகவும் கஷ்டத்தோடு கூடியவனாய் இந்த உலகில் கர்ம ஸம்பந்தத்துக்கு வசப்பட்டு எஞ்சிய வாழ்க்கையைக் கடக்கின்றேன் –

(வாழ்வு எல்லாமே கால சேஷம் -கர்ப்ப வாசமே பிரதானம் -சடகோபர் போல் சடவாயுவை கோபித்துக் கொண்டு பேறு அடையாலாம் அன்றோ)

அத தேஹா வஸாநே ச துக்க முத்க்ராந்தி ஸம்பவம்
க்ரூச்ச்ரேண தேஹாந் நிஸ்க்ராந்தி யம கிங்கர தர்சன
ம் –15-

பிறகு இந்த சரீர ஸம்பந்தம் அறுத்துக் கொண்டு இதிலிருந்து வெளிக் கிளம்புகையால் உண்டான துன்பத்தைப் மிகப் பெரிய துன்பமாக சரீரத்தில் இருந்து வெளியேறுதல் யம தூதர்களைக் காணுதல் ஆகிய இவற்றை நினைத்து வருந்துகிறேன்

(ஜீவாத்மாவுக்கு சதுர் கதி –கர்மங்களைத் தொலைத்தது -பகவத் ப்ராப்தி-புண்யம் தொலைக்க -ஸ்வர்க்கம் -பாபம் தொலைக்க -நரகம் -மீண்டும் புண்ய பாப மிஸ்ரம் தொலைக்க -ஸம்ஸாரம் -)

(ஆசை வாய்ச் சென்ற சிந்தையராகி அன்னை அத்தன் என் புத்திரர் பூமி
வாசவார் குழலாள் என்று மயங்கி மாளும் எல்லைக் கண் வாய் திறவாதே
கேசவா புருடோத்தமா என்றும் கேழலாகிய கேடிலீ என்றும்
பேசுவார் அவர் எய்தும் பெருமை பேசுவான் புகில் நம் பரம் அன்றே – 4-5 -1-)

(சரம சமயத்திலே (ஆகிலும் )பகவத் சமாஸ்ரயணம் பண்ணுகை ஸ்ரேஷ்டம்
ஆகையால் -சம்சாரிகளை பார்த்து ஹிதோ உபதேசம் பண்ணி அருளுகிறார்-
இத் திரு மொழியில்-)

(வாயோரு பக்கம் வாங்கி வலிப்ப வார்ந்த நீர் குழிக் கண்கள்  மிழற்ற 
தாயொரு பக்கம் தந்தை யொரு பக்கம் தாரமும் ஒரு பக்கம் அலத்த 
தீ ஒரு பக்கம் சேர்வதன் முன்னம் செங்கண் மாலோடும் சிக்கென சுற்ற 
மாயொருபக்க  நிற்க வல்லார்க்கு அரவ தண்டத்தில் உய்யலும் ஆமே -4- 5-9 –)

யாதநா தேஹ ஸம்பந்தம் யாம்யபாசைச் ச கர்ஷணம்
உக்ர மார்க்க கதி கிலேசம் யமஸ்ய புரதஸ் ஸ்திதிம் —
16-

தந் நியோக ஸமாயாதா யாதநாச் ச ஸஹஸ ச
ஸ்ருத்வா ஸ்ம்ருத்வா ச தூயே அஹம் தத் பிரவேச பயாகுல
–17-

நரக வேதனைகளை அனுபவிப்பதன் பொருட்டு ப்ராப்தமாயுள்ள நுண்ணிய சரீர ஸம்பந்தத்தை யம தூதர்கள் கட்டி இழுத்துச் செல்லுகையையும் பயங்கரமான வழியில் செல்லும்போது உண்டாகும் துன்பத்தையும் யமனை எதிரிலே நிற்பவனாகக் காண்கையையும் -அவன் தன் கட்டளையால் நிகழக் கூடிய ஆயிரக் கணக்கான தண்டனைகளைக் கேட்டும் நினைத்தும் அப்படிப்பட்ட நரகத்தில் புகக்கூடும் என்ற பயத்தைப் அடைந்தவனாய் அடியேன் துன்பமடைகிறேன் –

(ஜரா -மூப்பினால் தளர்ந்து -ஜர்ஜரம் -தேகம் சிதிலம் அடைந்து -தூர ப்ரநஷ்ட்ட நயனம் -கரணங்கள் மரண உன்முக -புத்ர தார-அவமானங்கள் ஸ்ம்ருதிக்கு வர -ஆகாரம் இறங்காமல் -எண்ண அலைகளால் துன்பம் -)

(கேசவ-கிலேச நாஸன
காவலிற் புலனை வைத்து கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து
நாவலிட்டு உழிதருகின்றோம் நமன்-தமர் தலைகள் மீதே
மூவுலகு உண்டு உமிழ்ந்த முதல்வ நின் நாமம் கற்ற
ஆவலிப்புடைமை கண்டாய் அரங்க மா நகருளானே-1-)

புநச் ச கர்ப்ப ஜென்மாதி பிரவேசம் கர்ம நிர்மிதம்
முஹுர் வி சிந்த்ய மச்சித்தம் கம்பதே ஜல சந்த்ரவத்
–18-

மேலும் பழ வினைகளின் பயனால் அடுத்த பிறவிக்காக மற்றொரு கருவறையில் புகுகை எனப்படும் மறு ஜென்மத்தை திரும்பத் திரும்ப நினைத்து என் மனம் நீரில் தெரியும் சந்திர பிம்பத்தின் அசைவுக்கு ஒப்பான நடுக்கம் கொள்கிறது –

ஏவம் மாம் பவ சக்ரே அஸ்மந் பிரமந்தம் பாஹு துக்கிதம்
க்ருபயா கேவலம் ஸ்ரீ மந் ரக்ஷ நாத கடாஷித–19-

லஷ்மீ பதியான ஓ ஸ்வாமியே இந்த மாதிரி இந்த ஸம்ஸார மாகிற சக்ரத்தில் சளைக்காமல் திரிந்து பல துக்கங்களைப் பெறுகின்ற என்னை ஒரு காரணமின்றி இயற்கையான க்ருபையோடு உனது கடைக்கண் பாவையாலே காக்க வேணும் –

(நம்மிடம் ஒன்றுமே எதிர்பார்க்காமல் -எனது உணர்வில் நிறுத்தினேன் -அதுவும் அவனது இன்னருளே)

அஹ முத்பத்தி வேளாயாம் த்வத் கடாஷாதி வீக்ஷித
சத்த் வோத்ரே கேண ஸம்பந்ந ஸத் கத்யா காங்க்ஷ யாந்வித–20-

நான் பிறக்கும் சமயத்தில் உம்முடைய சீரான கடாஷித்தால் பார்க்கப் பட்டவனாய்-ஸத்வ குணம் வளர்ந்தவனாய் -மோக்ஷம் என்று சொல்லப்படும் உத்தம கதியைப் பெற வேண்டும் என்ற விருப்பம் கொண்டவன் ஆனேன் –

(ஜாயமானந்தி புருஷம் இத்யாதி -மாக வைகுந்தம் நண்ண எனது மனம் ஏகம் எண்ண வேண்டும் -)

பாஹ்யேஷு விமுகோ நித்யம் வைதிகே அபிமுகஸ் ததா
ஸத்பிஸ் ஸஹைவ நிவஸந் ஸத் கதா ஸ்ரவணே ரதஸ் –21-

எம்பெருமானைத் தவிர மற்ற விஷயங்களில் மற்ற மதத்தில் முழுமையாக ஆர்வம் அற்று -அவ்வாறே வேதத்தினால் அறிவிக்கப் பட்ட எம்பெருமான் திறத்து ஆர்வமுற்ற தத்வ ஞானம் பெற்ற ஸத் புருஷர்களோடு கூடியிருப்பவனாய் பகவத் பாகவதர்களுடைய சரித்ரங்களைக் கேட்பதில் ஊக்கம் கொண்டவன் ஆனேன் –

சதாசார்ய உபசத்தவ் ச ஸாபிலாஷஸ் த்வாத்மகம்
தத்துவ ஞான நிதிம் தத்வ நிஷ்டம் ஸத் குண சாகரம் –22-

உத்தமமான ஆசார்யனை அடைவதில் விருப்பமுடைய நான் பகவத் ஸ்வரூபமாய் பரதத்வ ஞானத்துக்கு இருப்பிடமாய் அந்தப் பரமனிடத்தில் ஆழ்ந்து அபிநிவேசத்தை யுடையராய் நற்குணக் கடலாகத் திகழ்கின்ற ஆசார்யனை வணங்குகிறேன்

ஸதாம் கதிம் காருணிகம் தமாசார்யம் யதா விதி
ப்ரணிபாதந நமஸ்கார ப்ரிய வாக் பிச்ச தோஷயன் –23-

உத்தம சிஷ்யர்களுக்குப் புகலிடமாகவும் கருணை பொருந்தி இருக்கிற அந்தப் ஆசார்யரை ஸாஸ்த்ரங்களில் சொல்லப்பட்ட முறையில் விநயத்துடன் கூடியவனாய் ஸாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணுமவனாய் மென்மையான பேச்சால் சந்தோஷப்படுமவராக -(ஆக்கினேன் நான் 21- ஸ்லோகத்தில் உள்ள அஹம் சொல்லுடன் கொண்டு கூட்டிப் பொருள் கொள்ளவேண்டும் -)

த்வத் ப்ரஸாத வஸேநைவ தத் அங்கீகார லாபவான்
ததுக்த தத்வ யதாத்ம்ய ஞான அம்ருத ஸூ ஸம்புத–24-

உனது அனுக்ரஹ விசேஷத்தினாலேயே ஆசார்யர்கள் என்னையே அங்கீ கரித்தல் என்னும் பயனைப் பெற்றவனாய் அந்த ஆச்சார்யர்கள் தெரிவித்த சித்து அசித்து ஈஸ்வரன் என்ற மூன்று தத்துவங்களின் உண்மைப் பொருளை அறியம்படியான அமுதத்தைப் பெற்று முழுமை பெற்றவன் ஆனேன் –

(மந்த்ரத்திலும் மந்த்ரத்துக்கு. உள்ளீடான வஸ்துவிலும். மந்த்ரப்ரதனான ஆசார்யன் பக்கலிலும் ப்ரேமம் கனக்க உண்டானால். கார்யகரமாவது.)

(ஆச்சார்யர் சர ரூபி –உலாவும் பெருமாள் -அனைவரும் சேர்ந்து குருவையும் புத்திரனையும் பத்நிகளை வணங்க வேண்டும் -ஸ்வ தந்திரனைப் பற்றினாள் சங்கை வரும் -மனித சரீரம் எடுத்து மேலே தூக்க அவதாரம் -ஸாஸ்த்ர பாணியாக –குருவே பராம் கதி ப்ரஹ்ம தானம் ஸ்தானம் பாராயணம் -அறிய வேண்டுமவரும் அவரே -அமுதூறும் என்னாவுக்கே -பசுர் பக்ஷி மனுஷ்ய வா -வைஷ்ணவ ஸம்ஸ்ரயா –அசுரர்களும் தங்கள் குருவான சுக்ராச்சாயரைப் பற்றி பல பேறு பெற்றார்கள் அன்றோ –கு அந்த காரம் -ரு தந் நிரோகத-ஆச்சார்யர் வேத சம்பன்னன் விஷ்ணு பக்தர் -மந்த்ரஞ்ஞா -அறிந்து ஞானம் பெற்று -மேல் பக்தி பக்தஸ்ய-மேல் கைங்கர்யம் – ஸதா மந்தாரஸ்ய -ஆஸ்ரயித்து உறுதியுடன் இருப்பவர் -ஸித்தம் ஸத் ஸம்ப்ரதாயம் -ஸ்திர நெஞ்சம் கொண்டவர் -ப்ரஹ்ம நிஷ்டம் -அந்தக்காலத்துக்குத் தக்க சாஸ்த்ர உபதேசம் -க்ருத யுகம் வேறே கலியுகம் வேறே -டம்பம் அஸூயை இல்லாதவர் -ஆத்ம குணங்கள் நிறைந்தவர் -விஷயாந்தர வைராக்யம் கொண்டு –தீர்க்க கால பந்து -அத்ர பரத்ர ஸாயி )-

(ஆச்சார்யருடைய திரு மேனி த்யானம் ஒன்றே போதும் –பின்பழகராம் பெருமாள் ஜீயர்-பெரும் திவத்திலும் அன்பு அற்று – -ஆன வடிமை -ஒவ்ஷதை சேவை -நம்பிள்ளை திருமுதுகு சேவிக்கவே -ஆலவட்டம் அருளி நடப்பதே புருஷார்த்தம்)

——-

ரஹஸ்ய மந்த்ர த்ரய ஸாரம் -திரு மந்த்ரம் -அஷ்டாக்ஷரீ -விவரணம்

அர்த்த ரஹஸ்ய த்ரிய தய கோசரம் லப்த வாநஹம்
கேவலம் க்ருபயா மாம் து நயதஸ்தே ப்ரஸாதத-
-25-

இயற்க்கை இன்னருளால் மட்டுமே என்னையே உய்விக்க வேண்டும் என்று எண்ணி உன்னுடைய அனுக்ரஹத்தினால் அஷ்டாக்ஷரீ த்வய சரம ஸ்லோகம் என்னும் படியான மந்த்ரங்களினால் தெரிவிக்கப் படுகிற பொருளை அடியேன் பெற்றேன்

(பயனன் றாகிலும்  பாங்கலராகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கன்பையே-10-)

(ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் |
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே ||
)

(உணர்வில் உள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன்னருளே)

(த்ரிதயம் – மந்த்ர ரஹஸ்யம்-திருமந்திரம் ப்ராப்ய ப்ரதானம் -ஸாஸ்த்ர ருசி பரிக்ருஹீதம் -ஆத்மாவாலே பேறு -விதி ரஹஸ்யம் -சரம ஸ்லோகம் -ப்ராபக பிரதானம் –ஈஸ்வர ருசி பரிக்ருஹீதம் -ஈஸ்வரனாலேயே பேறு அனுஷ்டான பிரதானம் -அனுசந்தான ரஹஸ்யம் –மந்த்ர ரத்னம் -ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதம்-பிராட்டியாராலே பேறு -)

பிரணவ ஸப்தார்த்தம்
காரணம் ரக்ஷகம் ஸ்ரீசம் சேஷிணம் த்வாம் விசிந்தயன்
த்வ தர்தமித ரேஷாம் ச சேஷிணாம் விநிவர்த்த நாத்
–26-

உன்னையே எல்லாமே உலகுக்கும் காரணமாக காப்பவனாக திருமகள் நாயகனாக உணர்வது உன் பொருட்டே எஞ்சிய அதிகாரிகள் எனப்படுமவர்களையும் எனக்குத் தலைவர்கள் அல்ல என்று தள்ளி வைப்பதனால் உன்னையே தலைவனாக எண்ணி உள்ளேன் –

(ஸர்வார்த்தம் -ஸர்வ பல பிரதத்வம் –குலம் தரும் இத்யாதி -ஸாயுஜ்யம் -பிரகர்ஷமாக ஸ்தோத்ரம் -பிரணவம் –அகாரம் சகல வாசக காரணம் -உபாதான நிமித்த சஹகாரி காரணம் அவனே -ஆதி பகவன் முதற்றே உலகு -காரணமான அவனே ரக்ஷகன் -நயி பலான ஸாமர்த்யம் –காக்கும் இயல்பினன் கண்ணன் -அவள் மார்பில் நின்று பிரியாதாப் போல் -ஸ்ரீபதி –இதனால் சேஷியாக அறிவோம் -தாதர்த சதுர்த்தி -அநந்யார்ஹ சேஷி –காரணந்து த்யேய–ததர்த்த உன் பொருட்டு ஆன பின்பு -இதரர்கள் சேஷிகள் அல்ல என்று தள்ளியும் விட வேண்டும் அன்றோ –
ஒன்றென, பலவென, அறிய அரும் வடிவினுள் நின்ற,
நன்றெழில் நாரணன் நான்முகன் அரன் எனும் இவரை
ஒன்ற நும் மனத்து வைத்து, உள்ளி நும் இரு பசையறுத்து,
நன்று என நலம் செய்வது, அவனிடை நண்ணினம் நாமே
!)

மகாரார்த்தம்
அநந்யார்ஹம் ஸ்வதோ நித்யம் ப்ரக்ருதியாதி விலக்ஷணம்
பஞ்ச விம்சம் சிதா நந்த ஸ்வரூப குண ஸம்யுதம்
–27-

இயல்பாகவே மற்றை எவர்க்கும் அடியவனாக இருக்க இயலாதவனாய் எல்லாக் காலத்திலும் இருப்பவனாய் ப்ரக்ருதி தொடக்கமான இருபத்து நான்கு தத்வங்களைக் காட்டிலும் வேறுபட்டவனாய்-இருபத்து ஐந்தாம் தத்வமாய்த் திகழ்கின்றவனாய் -ஞான ஆனந்தங்களைத் தம் ஸ்வரூப குணங்களாகக் கொண்டவனாய் உள்ளேன் (இவ்வர்த்தங்களை மேல் உள்ள ஸ்லோக அர்த்தங்களுடன் கூட்டுக -)

(மதி ஹர்ஷ மன ஞாநே மந அவ போதனே மூன்று தாதுக்களும் ஞான ஆனந்த ஸ்வரூபம் -தர்ம தர்மி ஞானங்கள் இரண்டையும் காட்டும்)

நமஸ் ஸப்தார்த்தம்
அஹமர்த்த மணும் நித்யம் ஆத்ம வர்க்கம் நிரூப்ய ச
தஞ்ச ஸ்வ அநர்ஹதா ஸித்தே அஹம்தா மமதா உஞ்சிதம் –
-28-

நான் என்ற பதத்தால் அறியப் படுமவனாய் மிகச் சிறியதான –அணு -பரிமாணம் உடையவனாய்- எல்லாக் காலத்திலும் இருப்பவனாய் -ஜீவாத்ம வர்க்கத்தைக் குறித்து விவரமாக அறிந்து கொண்டு -இயல்பாக ஸ்வா தந்தர்யம் அற்றவனாய் இருக்கும் காரணத்தினால் -அந்த ஆத்மாவை (-அஹம்தா மமதா உஞ்சிதம் –) -நான் -என்ற ஸ்வா தந்த்ர பாவனையும் எனது என்ற மமகார பாவனையும் அற்றவன் என்று அறிந்து கொண்டேன் -(இவ் வர்த்தங்களை இனி வரும் ஸ்லோக அர்த்தங்களுடன் கூட்டுக-)

(பக்தாஞ்சலி -வணக்கம் -நம -என்றும் -அகண்ட நமஸ் -சகண்ட நமஸ் -பிரித்த நமஸ் -நான் எனக்கு அல்லேன் -நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து –அஹந்தா – கீழ் உகாரம் பிறருக்குத் அல்லேன் -இங்கு நான் எனக்கும் அல்லேன்)

ஸ்வ ரக்ஷணேப் யஸ்வ தந்த்ரம் த்வத் ரக்ஷ யத்வ நிரூபிதும்
விஜ்ஞாயா த்வதுபாயத்வாத் அநந்ய சரணஸ் ததா –29-

தன்னைத் தான் காப்பாற்றிக் கொள்வதிலும் ஸ்வா தந்தர்யம் அற்றவனாய் உன்னால் காக்கப்பட வேண்டியவனாய்த் திகழ்கின்றேன் என்பதை அறிந்து நீயே உபாயமாதலால் மற்றவர்க்கும் அடிமையாகாமை எவ்வாறோ அவ்வாறே மற்றவரைச் சரணமாகவும் அடையாதவன் ஆனேன் –

(பெருமாளுக்கு ஊணைப் பரிப்பது போல் நானே நம்மை ரக்ஷிப்பது -கழுத்துக் கட்டி போல் -விலைப்பாலைப் போல் -அவன் ரக்ஷணம் முலைப் பாலைப் போல் -கடற்கரையில் பெருமாள் வில்லும் கையுமாய் முதலிகளை ரஷித்து அருளிய விருத்தாந்தம் -அகாரத்தால் அவன் ரக்ஷகன் என்பது நிரூபகம் -நமஸ்ஸில் நாம் ரஷ்ய வர்க்கம் என்று நிரூபகம்-)

(சம்பந்த உபாய உணர்த்தி -தாய் தோழி தலைமகள்-பேறு தப்பாது என்றும் துணிந்து இருக்கையும் -பேற்றுக்குத் த்வரிக்கையும் உண்டே – -உபாயம் க்ருஹம் ரக்ஷணம் -ஸாதனம் மார்க்கம் -ஆறு எனக்கு நீயே என்று தந்து ஒழிந்தாய் -ஸித்த உபாயம் –களை கண் மற்றிலேன் -என் நான் செய்கேன் -யாரே களை கண் -என்னை என் செய்கின்றாய் -ஆத்ம ரக்ஷணம் -மோக்ஷ பிரதம் -உஜ்ஜீவனம் இதுவே)

நாராயண ஸப்தார்த்தம்
நித்ய நிஸ் ஸீம நிஸ் ஸங்க்ய விபூதிநாம் உபாஸ்ரயம்
தத் அந்தர்யாமிணம் தேவம் நாதம் நாராயணம் ப்ரதி –30-

நித்தியமாய் -எல்லையற்றதாய் -கணக்கற்றதாய் -விளங்கும் எல்லாமே பதார்த்தங்களுக்கும் ஆதாரமானவனாய் -அவ்வவ் பதார்த்தங்களுக்குள் புகுந்து நியமிப்பவனாய் அப்பதார்த்தங்களின் தோஷங்கள் தனக்குத் ததாதி பிரகாசிப்பவனாய் நாயகனுமாய் நாராயணனைக் குறித்து –(கைங்கர்யம் செய்ய எண்ணுகிறேன் -யென்பதை 31 ஸ்லோகத்தோடு கொண்டு கூட்டுக )

(தன்னுள் அனைத்துலகும் நிற்க -ஆதாரம் நெறிமையால் தான் அவற்றுள் நிற்க -அந்தர்யாமி வாத்சல்யம் நியமனம்-தேவம் -விளையாட்டாக பிரகாசமாய் உள்ளவன் –அழுக்கு உடம்புக்குள் இருந்தாலும் -பரஞ்சுடர் உடம்பாய் அழுக்கு உடம்பாய் -விருத்த விபூதிகத்வம் -நாரணன் -முழு ஏழு உலகுக்கும் நாதன் -வேத மயன் -வண் புகழ் நாரணன் -வாழ் புகழ் நாரணன்-)

(ஸங்கல்ப விஸிஷ்ட ப்ரஹ்மம் -தாங்குவது ஸங்கல்ப ஏக தேசத்திலே –நான் எல்லாப் பொருள்களுக்கும் இருந்தாலும் நானே ஆதாரம் -பஸ்ய மே யோக ஐஸ்வர்யம் -கீதையில் -)

(பஹிர் வியாப்தி -ஆதாரம் -அந்தர் வியாப்தி -நியமனம் -சரீராத்மா பாவம் -அகடிகடநா ஸாமர்த்யம்)

நித்யம் ஸர்வத்ர நிகிலா வஸ்தம் நிரவசேஷதஸ்
ப்ரீதி காரித கைங்கர்யம் நிரதம் சிந்தயாம் யஹம் –31-

எல்லாக் காலத்திலும் கைக் கொள்ளத் தக்கதாய் இடப்பாகு பாடின்றி எல்லா இடங்களிலும் செய்யத் தக்கதாய் எல்லாமே நிலையிலும் செய்யத் தக்கதாய் ஒன்றுமே விடாமல் அனைத்தும் விதமுமாய் -மகிழ்ச்சி மேலீட்டால் செய்யும் கைங்கர்யத்தை இடைவிடாமல் அடியேன் செய்ய வேண்டி சிந்திக்கிறேன் –

(ஆய -பிரார்த்த நாயாம் சதுர்த்தி -ஒழிவில் காலம் எல்லாமே உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் -தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யான் கொள்ளும் சிறப்பே -அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யம் -பொரு சிறைப்புள் உகந்து ஏறி -ப்ரகர்ஷயிஷ்யாமி -)

(நிரதம்-நித்ய பிரார்த்தனை -இங்கு -உனது தாமரைக் கண்களால் நோக்காய் -அங்கும் அண்டர் -பிரியாமலேயே இருந்தாலும் தண்ணீர் தண்ணீர் என்று சொல்லும்படியான விலக்ஷணம் உண்டே இவனிடம் – பிரார்த்தனை -சிந்தனை -மாநாஸம் –அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -கைங்கர்யத்தில் நேராக –வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம்-3-3–அவரிடம் பிரார்த்தனை இதில் இல்லை -அது 6-10-10-கைங்கர்ய பிரார்த்தனை -ப்ராப்ய நிஷ்கர்ஷம்-எம் மா வீட்டில் – அம்மா அடியேன் வேண்டுவது ஈதே -இதில் இருந்தாலும் பிரார்த்தனை -3-3-எம்மா வீட்டில் எம்மா வீடு -2-9-4-தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யான் கொள்ளும் சிறப்பே -ஞப்தி ஞானம் –முக்தி பிரார்த்தனை -அப்புறம் விருத்தி -கைங்கர்யம் செய்வது-)

இத்தம் சேதன சாமான்ய ரூப அந்தர் பாவத ஸ்வத
ஸ்வாத்ம நேப் யநு சந்தானம் ததைவ விததாம் யஹம் –32-

இவ்விதமாகத் தெரிவிக்கப் பட்டுள்ள எல்லாமே ஜீவன் ராசிகளுடைய ஸ்வரூபத்தில் அடியேனும் அடங்கி யுள்ளமையால் சுயமாகவே அதே பிரகாரத்தில் அடியேன் செய்ய வேண்டிய மந்த்ரார்த்த அனுசந்தானத்தையும் செய்து வருகிறேன் –

அகாரார்த்தோ அர்த்த பூதோ அஹம் அநந்யார்ஹோசித பர
ஸ்வார்த்ததா ரஹிதோ நித்யம் அநந்ய சரணஸ் ததா —
33-

அகாரார்த்த வாஸ்யனான விஷ்ணுவுக்கு உரியதான கைங்கர்யம் செய்யும் அடியேன் மற்றவர்களுக்கு அல்லாது அவனுக்கே ஆட் செய்பவனாய் -ப்ரக்ருதியைக் காட்டிலும் வேறு பட்டவனாய் -தன்னலம் அற்றவனாய் -எப்போதும் அவ்வாறு வேறு காப்பாளர்கள் அற்றவனாய் -நாராயணனுக்கே அடியவன் ஆவேன் -(இவ்வர்த்தம் கீழ் ஸ்லோகார்த்தத்துடன் கொண்டு கூட்ட வேண்டும் )

நாராயணாய நாதாய கிங்கரஸ் ஸ்யாம் நிரந்தரம்
இதி மந்த்ரம் ஸ்வ யாதாத்ம்ய பரமே வ அநுஸந்ததே –34-

தலைவனான நாராயணனே எப்பொழுதும் அடிமையாய் இருப்பன் என்னும்படியான இப்பொருள் அஷ்டாக்ஷரீ மந்த்ரத்தை ஜீவாத்ம ஸ்வரூப நிர்ணயம் செய்வதாக எண்ணுகிறேன் –

(தேரோட்டி-அவன் முன்பே இருந்தாலும் – -ஓங்காரம்-அகாரம் முன் இருந்தாலும் -உபதேசம் மகாரத்துக்கு -ஆத்ம பரமான உபதேசம் தானே –ஸ்யாம் –இருக்கக் கடவேன்-)

(அநந்யார்ஹ சேஷத்வமும் அநந்ய போக்யத்வமும் -அநந்ய உபாயத்வமம் காட்டி அருளியவாறு -உபேயத்வமுமே பிரதானம் -கருமுகை மாலையை சும்மாட்டு ஆக்குகிறோம் -உபாயமாகக் கொள்ளும் பொழுது -அங்கும் த்ரிவித பக்திகளும் பிரார்த்தித்துப் பெற வேண்டும் -கத்யத்தில் பார்க்கிறோம் -பக்தி யாரம்ப விரோதி போய் பக்தி செய்து -மேலே மேலே வளர்த்துக் கொள்கிறோம் -எல்லாமே அவனது இன்னருளாலேயே -அங்கும் சேர்ந்து இருந்தால் தான் ஸூகம் -இல்லையேல் துக்கம் -பிரியாமல் இருக்கக் கூடாதே என்ற படபடத்த எண்ணமே பர பக்தி -அகலகில்லேன் இறையும் என்று அவளுமே இருக்க நாம் இருப்பதைச் சொல்ல வேண்டாமே -கர்மாதீனம் அல்ல -விஷய வைலக்ஷண்யம் -தர்சனம் கிட்டிய பின்பும் சாமானாகாரம் -ராமனாகவும் நரஸிம்மனாகவும் அங்கும் மாநஸமாக ஸேவிக்கலாமே -)

த்வய மந்த்ர -மந்த்ர ரத்ன விவரணம்
ஸ்ரீ மந் நாராயண சரணவ் சரணம் ப்ரபத்யே -ஸ்ரீ மதே நாராயணாய நம
சித்தம் பிரகாசித ஸ்வாத்ம யதாத்ம்ய ஸ்வ உசிதம் அஹம்
வ்ருத்திம் ப்ரவ்ருத்திம் நிச்சிதய த்வயேந விததாமி தாம் –35-

இவ்வாறாகத் தெரிவிக்கப்பட்ட ஆத்மாவின் உண்மை ஸ்வரூபமுடைய நான் என்னுடைய ஆத்ம ஸ்வரூபத்துக்குத் தகுந்ததான அனுஷ்டானத்தையும் வாழ்வாதாரத்தையும் த்வய மந்திரத்தால் நிர்ணயித்து அந்தப் சரணாகதியைப் பின்பற்றுவேன் –

(ந வேதாந்தாத் ஸாஸ்த்ரம் –த்வய மந்த்ரம் ரத்னம் -ஆரோக்கியத்துக்கு ஸத்வ குணம் –இதம் பூர்ணம் இத்யாதி வாக்கியம் நடுவிலே –அர்ச்சையில் சரணாகதி -குண பூர்ணம் இங்கு தானே –என்பதும் இதனாலேயே –சர்வம் பூர்ணம் ஸஹோம் -குணங்கள் உடைய ஸ்ரீ மன் நாராயணனைப் பற்றி குணங்களுடைய மிதுனத்தில் கைங்கர்யம்-திருமந்த்ரத்தால் ஸ்வரூபம் அறிந்த பின்பு -ஆத்ம யாத்ரைக்கும் தேஹ யாத்ரைக்கும் –வ்ருத்திம் ப்ரவ்ருத்தம் -கற்க கசடற -ஞானம் -கற்ற பின்பு நிற்க அதற்குத் தக -வ்ருத்திம் ப்ரவ்ருத்தம் -உசிதமான வற்றையே கடைப் பிடிக்கிறேன் என்றபடி –)

(அநந்யார்ஹ சேஷத்வம் -ஞானம் -பிரணவம் -பெற்ற பின்பு -அநந்ய உபாயத்வம் -அவனைப் பற்றி -நமஸ் –அநந்ய போக்யத்வம் -அனுபவ ஜெனித ப்ரீதி கார்ய கைங்கர்யம் -நாராயணாய நமஸ் வ்ருத்தி பூர்வ வாக்கியம் -நாராயணாய வ்ருத்தி -உத்தர வாக்கியம் -)

த்வாம் ஸ்ரிதா நிகிலைஸ் ஸேவ்யா ஸ்ரிய கடக பாவத
ஸமாஸ்ரித்ய தயா நித்ய யுக்தம் வாத்சல்ய சாகரம் —
36-

(எம்பெருமானே -எப்போதும் உன்னையே ஆஸ்ரயித்து இருப்பவளாய் –
அனைவராலும் ஆஸ்ரயிக்கத் தகுந்தவளான ஸ்ரீ மஹா லஹமியை புருஷகார ரூபமாகப் பற்றி –
அவளுடன் நித்யம் கலந்து இருப்பவனாய் –
வாத்சல்ய குணக்கடலாய் -தோஷ போக்யத்வம் -)

ஸ்வாமிநம் சீல ஜலதிம் ஸூலபம் ஸூகமம் ததா
ஸர்வஞ்ஞம் ஸக்தி ஸம்பந்தம் ஆப்த காமஞ்ச சேஷிணம் –37-

உலகுக்கு நாயகனாய் ஸ்வாமித்வம் –
சீல குண பூர்ணனாய் -ஸுசீல்யம் –
எளிதாக-துன்பப்படாமல் –
அறியக் கூடியவனாய் -ஸுலப்யம் –
எளிதாகப் பற்றக் கூடியவனாய் -ஸூக மத்வம் –
அவ்வாறே எல்லாமே அறிந்தவனாய் -ஸர்வஞ்ஞத்வம் –
பலவிதமான சக்திகள் உடையவனாய் -ஸர்வ சக்தித்வம் –
விரும்பும் பயன்களை அனைத்தையுமே பெறத் தக்கவனாய் -ஆப்த காமத்வம் –
அடியவர்களின் கைங்கர்யங்களை ஏற்றுக் கொள்பவனாய் -ஸர்வ சேஷித்வம் -)

(1-நிகரில் புகழாய் என்று வாத்சல்யத்தைச் சொன்னபடி; (2). உலகம் மூன்று உடையாய் என்று ஸ்வாமித்துவத்தைச் சொன்னபடி: (3) என்னை யாள்வானே என்று சௌசீல்யத்தைச் சொன்னபடி; (4) நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே என்று சௌலப்பியத்தைச் சொன்னபடி.ஆக இந்த நான்கு குணங்களும் ஆச்ரயண சௌகர்யாபாதகங்களாகையாலே இவை இங்கு வரிசையாக அநுசந்திக்கப் படுகின்றன.)

காரணம் கருணா பூர்ணம் அசேஷ பல தாயகம்
த்வாம் விநிச்சித்ய நிர்தோஷ நித்ய மங்கள ரூபிணம்
–38-

(அனைத்துக்கும் காரணமாய் -ஸர்வ காரணத்வம்
நிரம்பிய கருணை என்னும் குணத்தால் அனைத்தும் பயன்களையும் கொடுப்பவனான -பல தாயகத்வம்
நிரம்பிய உன்னை
தோஷங்கள் தட்டாது அனைவருக்கும் புகலிடமாக இருப்பவனாக நிச்சயித்து

(-நிர்த்தோஷ நித்ய மங்கள-கல்யாண குணங்களைச் சொல்லி -உபய லிங்க-அகில ஹேய ப்ரத்யநீக கல்யாண ஏக குண )

சரணவ் தவ ஸர்வாத்ம ஸாதாரண ஸூபாஸ்ரயவ்
அநிஷ்ட விநிவ்ருத்யர்த்தம் இஷ்ட ப்ராப்யர்த்த மேவ ச
–39-

எல்லாமும் ஆத்மாக்களுக்கும் பொதுவான மங்களகரமான உன் திருவடிகளை(பொது நின்ற பொன்னம் கழல்கள் அன்றோ ) எல்லாத் துன்பங்களும் விளக்குவதன் பொருட்டு -அநிஷ்ட நிவ்ருத்தி –
விரும்பிய மோக்ஷம் அடைவதற்காக -இஷ்ட ப்ராப்தி-
உன்னையே உபாயமாக என்னவனாய்)

உபாய பாவாத் சரணம் ப்ரபத்யே அத்யாவசாயவான்
இயம் ப்ரபத்திர் விஸ்வாஸ பூர்வக ப்ரார்த்தநா மதி –40-

(உன்னையே உபாயமாக என்ன்னவனாய்
த்ருடமான விஸ்வாஸத்தை உடையவனாய்
சரணமாகப் பற்றுகிறேன்
நிலையான விஸ்வாஸத்தோடு விரும்பியதைப் பெறும்படியான அறிவே இந்த சரணாகதி யாகும்)

தஸ்மான் மமாபி முக்யார்த்தம் ப்ரபத்திரிய மித்யத
த்வமே வோபாய பூதஸ் ஸந் பாஹி மாம் கருணாகர –41-

ஓ ஸ்வாமி இவ்வாறு செய்யப்பட்ட சரணாகதி அடியேன் உனக்கும் முகம் கோணாமல் நடப்பவன் என்பதைத் தெரிவிப்பதற்கே -ஆகையால் இவ்வாறு கூறப்பட்டதையே கொண்டு நீயே ஸாஷாத் ரக்ஷகனாய் கருணைக் கடலாய் என்னைக் காத்து அருள்வாய் –

(ஷேம க்ருஷிகன் -ஒட்டி வந்து தனி நெஞ்சை வஞ்சித்து இருக்க- -இசைவித்து அடியேனை அத்வேஷம் மாற்றி ஆபிமுக்யம் பண்ண வைத்து அருளியதால் -இத்தை அறிவிப்பதே சரணாகதி -)

ஸர்வ அதிசயத் ஆகார ஸ்வரூப குண ஸம்பதா
ஸ்ரியா நித்யம் ஸஹ ஸீநம் தேவ தேவம் ஜகத் பதிம் –42-

எல்லாரைக் காட்டிலும் மேன்மையான ஞானம் ஆனந்தம் முதலானவற்றால் நிரம்பிய ஸ்வரூபம் மற்றும் சவுந்தர்யம் காருண்யம் வாத்சல்யம் முதலான குணங்கள் நிரம்பிய பிராட்டியாருடன் வீற்று இருந்து -தேவர்களுக்கும் தேவர் போலே ஜகத்துக்கு நாயகனான

(உத்தர வாக்யார்த்தம்-ஸ்ரீ மதே நாராயணாய நம -அஹம் ஸர்வம் கரிஷ்யாமி-ஸஹ சீதயா -மிதுனத்தில் கைங்கர்யம் -ப்ராப்யம் மிதுனம் -ஸ்வாமித்வம் இங்கும் உண்டு -கீழே ஸ்வாமித்வம் -கைவிடமாட்டார் -உபாயமாக்கப் பற்றலாம்-ஸ்வாமி சொத்து -இங்கு -இங்கு ஸ்வாமித்வம் -கைங்கர்யம் உகந்து கொள்ளும் ஸ்வாமி-ஸ்வாமி -தாஸ்யம் இங்கு-மனிசர்க்குத் தேவர் போல் தேவர்களுக்கும் தேவனான தேவாதி தேவன் )

பவந்த மநு பூயாஹம் ஆஹ்லாத பரி ப்ரும்ஹித
நித்யம் ஸர்வா த்ரிகம் ஸர்வ அவஸ்த்தம் ஸர்வ விதம் ததா –43-

தேவர்களுக்கும் தேவர் போலே ஜகத்துக்கு நாயகனான உன்னைக் கண்டு அனுபவித்து அடியேன் ஆனந்தம் அடைந்தவனாய் -எல்லாக் காலத்திலும் எல்லா இடத்திலும் எல்லா நிலைமையிலும்

ஐஸ்வர்ய கைவல் யோத் தீர்ணம் த்வத் ஆனந்தாத் விலக்ஷணம்
லஷ்மீ போகாத் விஸிஷ்டம் ச கைங்கர்ய ஸூகமாப் நுயாம் –44-

எல்லாக் காலத்திலும் எல்லா இடத்திலும் எல்லா நிலைமையிலும் பலதரப்பட்ட ஐஸ்வர்ய கைவல்ய அனுபவங்களை விஞ்சியதாய் உனக்குக் கிட்டும் மகிழ்ச்சியைக் காட்டிலும் வேறானதாய் திருமகளுக்குக் கிட்டும் ஆனந்தத்தைக் காட்டிலும் சிறந்ததாய் இருக்கும் கைங்கர்ய ஸூகத்தை அடைவேனாக –
பகவத் அனுபவ ப்ரீதி கார்ய கைங்கர்யம் -இப்பால் கைவளையும் மேகலையும் காணேன் -ஐஸ்வர்யம் கைவல்ய த்யாஜ்யம் -ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை -விலக்ஷணம் -இது தானே -அத்திரு அவனைப் பற்றும் -இத்திரு இருவரைப் பற்றும்-அத்திரு திருமார்பினைப் பற்றும் இத்திரு திருவடியையே பற்றும் –

தத்ர ஸ்வார்த்தத்வ ஸம் பூதம் அஹம் தாமம தோஜ்ஜிதம்
ப்ரதி பந்தம் அஸேஷேண விநிவர்த்தய மாதவ –
-45-

ஓ மாதவ ஸ்வார்த்த புத்தியுடன் கூடிய அஹங்காரம் மமகாரங்களின் ஸம்பந்தம் அற்றதான உன் கைங்கர்யத்துக்குத் தடையான கெட்ட நோக்கை முழுவதுமாக நீக்குக –

(கைங்கர்யத்தில் களை அறுக்கிறது -பிரபல தர விரோதியும் போக வேண்டுமே -மற்றை நம் காமங்கள் மாற்று -படியாய் கிடந்து உன் பவளவாய் காண்பேனே –தனக்கே யாக எனைக்கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே)

இத்தம் த்வயார்த்தம் ஸம் சித்ய பூர்ண பிரபதநாத் மகம்
தத்ர த்வதாராவ்ல் பண்யம் ஜாநே ஸ்லோக விதாநத–46-

இவ்வாறாக முழுமையாக சரணாகதியைத் தெரிவிப்பதான த்வய மந்திரத்தின் பொருளைப் பாவித்து அந்த சரணாகதி விஷயத்திலேயே உனக்கும் மிகுந்த ஆதரபுத்தி உள்ளது என்று நீயே சரம ஸ்லோகத்தில் அறுதியிடுவதைத் தெரிந்து கொண்டேன் –

——-

ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸூச —
ஸ்ரீ கீதா சரம ஸ்லோக விவரணம்

(தியாகத்தை முன்னிட்டுக் கொண்டு இருக்கும் ஸ்வீகாரம் செய்வது நம் கர்தவ்யம் -மேல் அவன் கர்தவ்யம் -பாபங்கள் தன்னடையே போம் -சோகப்படாதே -இதுவும் விதி -)

(மன்னு மணவாள அண்ணலொடு
சேமமுடன் வைகுந்தம் சென்றக்கால்
மாம் என்று தொட்டுரைத்த சொல்லும்
துயம் தன்னினாழ்பொருளும் எட்டெழுத்தும் இங்குரைப்பாரார்

நாயனார் இவ்வுலகைவிட்டு பரமபதத்தை அடைந்தபின் ரஹஸ்யத்ரயத்தின் (திருமந்திரம், த்வயம், சரமஸ்லோகம்) சரமஸ்லோகத்தில் எம்பெருமான் தன் ஹ்ருதயத்தைத் தொட்டு “மாம்” (நானே காப்பவன்) என்று சொன்ன ஆழ்ந்த பொருளை இனி எடுத்துரைக்கவல்லார் யார் உளர் ? என்று சோகிக்கிறார். பிள்ளை லோகாசார்யரே இப்படி சோகத்தில் ஆழும்படியானது நாயனாரின் மகிமையாகும்.)

அபீஷ்ட உபாய ரூபேண ஸாத்யாநாம் சிர காலத
ஸ்வ கர்ம ஞான பக்தீ நாம் ஸ்வரூப பரி சோதநாத் –47-

விரும்பிய மோக்ஷ உபாயத்துக்கு சாதனமாக பண்டைக் காலத்தில் இருந்து கைக் கொள்ளப் பட்ட கர்ம ஞானம் பக்தி யோகங்களின் இயல்பைத் பரிசீலித்த போது –

ஸ்வ விளம்ப அஷமத்வேன ஸ்வாகிஞ்சன்ய விரோதத
ஸ்வ அனுபாயத்வ நிஷ்கர்ஷாத் ஸர்வ ஸம்த்யஜ்ய தூரத –
-48-

தான் -ஒரு ஜீவாத்மா -கால தாமதத்தைப் பொறுக்க மாட்டாமையாலும் -தன்னால் அவற்றைக் கடைப் பிடிக்க ஆற்றல் இல்லாமையாலும் பரதந்த்ரனான தனக்கும் இவைகள் உபாயம் அல்ல என்று நிச்சயித்துக் கொண்டதாலும் மேற்கூறிய உபாயங்கள் அனைத்தையுமே அடைய ஒதுக்கி

த்யாகம் ஸ்வீகார வித்யங்கம் விநிசிசத்ய ச மாம் தத
தட் ஸாரத்யே ஸ்தி தத்வேன ஸூ சீலம் பக்த வத்சலம் –
-49-

மேற்கூறிய உபாயங்கள் அனைத்தையுமே அடைய ஒதுக்கி இவ்வாறு உபாயாந்தரங்கள் விடுவதை சரணாகதியைப் பற்றுவதற்குப் பூர்வ அங்கமாக -தகுதி உடையதாக -எண்ணி பின்பு -உனக்குத் தேரோட்டியாய் இந்ததனால் சீலமும் வாத்சல்யம் உள்ளவன் என்றும்

(நிவ்ருத்தி ரூபமாய் இருப்பதால் எதிர்பார்ப்பு இல்லாதது-அனைத்தையுமே விட்டே ஸாஷாத் தர்மமாகப் பற்ற வேண்டும்-ஸ்நாத்வா புஞ்சீத போல் இது -புக்த்வா -விளக்கு அணைந்த பின்பும் ஒருவேளை சாப்பிட்டால் சாந்த்ராயண பிராயச்சித்தம் செய்ய வேண்டும் -என்பது போல் அல்ல )

அநந்ய அபேக்ஷ ரூபத்வாத் அத்விதீயம் அநுத்தமம்
அநிஷ்ட த்வம்ஸ நேதஷம் உபாயம் பரிசிந்தயன்
-50-

மற்றுமோர் எவருடைய உதவியையும் எதிர்பாராத ஒரே சாதனமாக என்றும் ஓத்தார் மிக்கார் இல்லாதவன் என்றும் பாபங்களைப் போக்குவதில் ஸமர்த்தன் என்றும் திகழ்கிற என்னை

(அபின்ன நிமித்த காரணம் பர ப்ரஹ்மம் ஒருவனே -ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் –சத் ஏவ-ஸோம்ய ஏக மேவ அத்விதீயம்-வேதாந்தத்தில் இவ்வாறு அத்விதீயம் -உபாய உபேயமும் அவனே ரஹஸ்ய த்ரயத்தில் -)

மநோ வாக் காய சம்பன்ன கதித்ரய கோசரம்
வ்ரஜநம் ஸர்வ பாவேந குரு விஸ்வாஸ பூர்வகம்
–51-

என்னை ஸாஷாத் ஸாதனமாகப் பற்றி சிந்தை சொல் செயல்களால் கிடைக்கப் பெற்ற மூன்று விதமான பற்றுதல்களை குறிக்கும் சரணாகதியை ஆழ்ந்த நம்பிக்கையுடன் முழுமையாக கடைப் பிடிப்பாயாக –

(ஸர்வ பாவேந -உபாய ப்ராப்ய ப்ராபக பாவனைகள்-தாரக போஷக போக்யம் எல்லாமே அவனே-ப்ரார்த்தனா மதி சரணாகதி -புத்தி பூர்வகமாக செய்ய வேண்டுமே-கத்யர்த்தா புத்த்யர்த்தம் -அவன் கொடுத்த மூன்றாலும் மனம் மொழி மெய் -மூன்றாலும் செய்வது நல்லது )

அஹம் ஸ்வாதீந ஸர்வாத்ம பந்த மோக்ஷ விதிக்ரம
ஸார்வஞ்ஞ ஸர்வ சக்தித்வ பூர்த்தி ப்ராப்தி தயோததி —
52-

என் வசத்தில் இருக்கும் எல்லாமே ஜீவராசிகளுடைய கருமத்துக்கு வசப்படுதல் விடுவித்தல் என்ற தொழிலை யுடையவனாய் ஸர்வஞ்ஞத்வம் ஸர்வசக்தித்வம் உடையவனாய் குறைவற்றவனாய் எல்லோருடனும் நித்ய சம்பந்தம் உடையவனாய் கருணை யுடையவனாய்

(கர்மாதீனமாக பந்தம் அளிப்பதும் ரூபாதீனமாக மோக்ஷம் அளிப்பதும் அவனே)

மயி நிஷிப்ய கர்தவ்யம் தத்ர நிர்பர முஜ்ஜ்வலம்
த்வாம் ப்ரபத்தி க்ரியா முத்ரா முத்ரிதம் மத் பராயணம் –
-53-

இது போன்ற கல்யாணக் குணக்கடலான என்னை –
காப்பாற்றும் பொறுப்பை என்னிடத்தில் வைத்துக் இனி அவ் விஷயத்தில் சிந்தை அற்றவனாய் -ஐயம் தீர்ந்து சந்தோஷத்துடன் சரணாகதியைக் குறிப்பிடும் அஞ்சலி முத்திரையுடன் என்னையே பரம ப்ராப்யமான எண்ணின நீ

(பகவானுக்கு அபய முத்ரா முத்ரிதம் -நமக்கு அஞ்சலி முத்ரா முத்ரிதம்-ஸக்ருதேவ -தவாஸ்மி -உனக்கு உரியேனான என்னை-கைவிடாமல் அடியார்க்கு ஆட்க்கொண்டு அருளுவதே பாராயணம் )

பூர்வ உத்தர ஆராப்தா கௌக விபாகேன விசேஷிதாத்
நிரஸ்த சங்க்யாத் துர் மோசாத் நிகிலாத் பாப சஞ்சயாத்
-54-

போய பிழையும் புகுதருவான் நின்றனவும் -என்னுமா போலே செய்த பிழைகளும் இனிச் செய்யப் போகுமவையும் -தற்போது பயனை அனுபவிக்குமவையுமாக வகை செய்யப்பட்ட எண்ணில் அடங்காதவையாய் தன்னால் விடுவித்துக் கொள்ள இயலாததான எல்லா பாபங்களின் கூட்டத்தில் இருந்து

(அக ஒக-பாபக் கூட்டங்கள் –ஸர்வ பாபேப்யோ-பூர்வ -ப்ராரப்தம் -ஆரப்தம் அநாரப்தம் இரண்டு வகைகள் –வர்த்தமான சரீர ஆரப்தம் -சரீராந்தர ஆரப்தம் -இவை பூர்வாகங்கள்–ஆர்த்த ப்ரபன்னனுக்கு மட்டுமே இந்த சரீர ஆராப்த கர்மங்களையும் போக்கி உடனே பேற்றை அளித்து அருளுகிறவன் -ப்ராப்தி ரோதகம்-பேற்றுக்குத் தடைகள் -உபாயாந்தர நிஷ்டனுக்கு பல பல சரீரங்கள் கழித்தே போக்கி -திருப்த ப்ரபன்னனுக்கு வர்த்தமான சரீராவஸானத்தில் பேற்றை அளித்து அருளுகிறான் –பிரகிருதி சம்பந்தம் வாசாநா ருசிகளால் உத்தராகங்கள்-ஒன்றுமே செய்யாதவன் உத்தமன் -பண்ணி பச்சாதாபம் செய்து பிராய்சசித்தம் செய்பவன் மத்யமான் -அதமன் இவை இல்லாதவன் -லகுதண்டம் இவனுக்கு உண்டாம் -சரணாகதி செய்யாதவனுக்கு குரு தண்டனை உண்டாம் -)

முக்தமேவ கரிஷ்யாமி ஸங்கல்பா தேவ மாமகாத்
கதம் லபேதா வஸ்தானம் தமஸ் சமுதிதே ரவவ் –55

எண்ணில் அடங்காதவையாய் தன்னால் விடுவித்துக் கொள்ள இயலாததான எல்லா பாபங்களின் கூட்டத்தில் இருந்து வீண் போகாத என் சங்கபத்தனால் விடுவித்து அருளுவேன் -கதிரவன் குண திசைச் சிகரம் வந்தடைந்த பின்பு இருள் எப்படிப் நிலைத்திருக்கும் –

(புண்ய பாப ஈஸ்வர ப்ரீதி கோப-இவை அத்ருஷ்டம் -நாம் அறியாமல் -சங்கல்ப லேசத்தாலேயே போக்கி அருளுகிறான் -ஏவ -நீயும் வேண்டாமே நான்முகன் வேண்டாமே -தன்னடையே போகுமே)

தஸ்மாத் உபாய சாத்யத்வ துஷ் கரத்வ விசேஷத
பல ஸித்தேர் விலம்பாச் ச ந சோகம் கர்த்தும் அர்ஹஸி –56

ஆகையால் கர்ம ஞானனாய் முதலான உபாயங்களைப் பற்றுமதால் மட்டுமே மோக்ஷம் என்றோ அவைகளை முழுமையாக நான் கடைப்பிடிக்க முடியவில்லையே என்றோ பயனாகிய மோக்ஷம் காலதாமதமாக எப்போது கிடைக்குமோ என்றோ நீ வருந்தத் தக்கது அன்று-

(ஆறு எனக்கு நின் பாதமே சரண் ஆகத் தந்தொழிந்தாய் உனக்கு ஓர்கைம்
மாறு நான் ஒன்று இலேன் எனது ஆவியும் உனதே
சேறு கொள் கரும்பும் பெரும் செந்நெலும் மலி தண் சிரீவரமங்கை
நாறு பூந் தண் துழாய் முடியாய் தெய்வ நாயகனே)

பகவான் விரும்பிய உபாயம் சரணாகதியே

இத்தம் பார்த்தம் சமுத்திஸ்ய விதாநாத் சரம உதிதாத்
பவதோ பஹு மந்தவ்யாம் ப்ரபத்திம் அநு சந்ததே —
57-

இவ்வாறாக அர்ஜுனனைக் குறித்து சரம ஸ்லோகத்தில் அறுதியிடப்பட்ட பிரபத்தி எனப்படும் சரணாகதியை நீயே விதித்தமையால் உனக்கும் அதுவே அபிமதமான விஷயம் என்று எண்ணி இருக்கிறேன் –

(மந்த்ர ரஹஸ்யம் வேத-ஸாஸ்த்ர ருசி- பரிக்ருஹீதம் -ஞானத்தில் பேறு -மந்த்ர ரத்னம் த்வயம் பிராட்டியாலே பேறு -ஆச்சார்ய ருசி- ரிக்ருஹீதம் -சரம ஸ்லோகம் -அவனாலே பேறு -ஈஸ்வர ருசி-பரிக்ருஹீதம்-அங்க பிரபத்தி -கீதையில் -பக்தி ஆரம்ப விரோதிகளை போக்க -ஸ்வ தந்த்ர பிரபத்தி ரஹஸ்ய த்ரயார்த்தம் -)

(ஸர்வோபனிஷதோ காவோ, தோக்தா கோபால நந்தன: |
பார்தோ வத்ஸ: ஸுதீர் போக்தா துக்தம் கீதாம்ருதம் மஹத்
||-4-
உபநிஷத்துக்களே பசுக்களாக இருக்க கோபால நந்தனன் கறப்போனாக , அர்ஜுனனே கன்றாக, உலகில் உள்ள நல்லோர் பருகுவதற்காக கீதை என்கிற அம்ருதம் கறக்கப்பட்டது.
ஓம் பார்த்தாயா ப்ரதி போதிதாம் பகவதா நாராயணேந ஸ்வயம்
வ்யாஸேந க்ரதிதாம் புராண முநிநா மத்யே மஹா பாரதம்
அத்வைத அம்ருத வர்ஷிணீம் பகவதீம் அஷ்ட தச அத்யாயிநீம் அம்ப
த்வாம் அநு சந்ததாமி பகவத் கீதே பவத் வேஷிணீம்-

புராண முனிவராகிய வியாசரால் மஹாபாரதத்தின் நடுவில் வைக்கப்பட்டவளும், அர்ஜுனனுக்காக பகவான் நாராயணனாலேயே உபதேசிக்கப்பட்டவளும், அத்வைதமாகிய அமுதத்தை வர்ஷிப்பவளும், பதினெட்டு அத்தியாயங்களைக் கொண்டவளும், சம்சார சாகரத்தின் எதிரியும் ஆன பகவத் கீதா என்ற அன்னையை நமஸ்கரிக்கிறேன்.)

ஏதா வந்தம் ஸதா த்யானம் இத்தம் மாம் க்ருபயா நயன்
சேஷாத்வலேச நயனம் க்ருபயா குரு மாதவ
-58-

இவ்வாறு சம்சாரம் என்னும் கொடிய காட்டில் வழி திகைத்துத் தவிர்த்து உனது கருணைக்கடல் நல் வழி அடையச் செய்த ஓ திரு மா மகள் கேள்வனே -எஞ்சிய தூரமும் அந்த நல்ல வழியிலேயே நடக்குமாறு அருளாய்

(எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ–10-10-6-)

த்வத் ஸ்வரூப குணாகார விபூதியில் விஷயாம் மதிம்
விஸதீ க்ருத்ய தாமேவ பக்தி ரூபாம் குருஷ்வ மே –59-

ஞான ஆனந்தங்களுடன் கூடிய உன் ஆத்ம ஸ்வரூபன் -அவ்வாத்மாவுக்கே உரித்தான ஞான பல ஐஸ்வர்யம் தயா வாத்சல்யம் முதலான குணங்கள் திருமேனிக்கு உண்டான சவுந்தர்யம் முதலான குணங்கள் திவ்ய மங்கள விக்ரஹம் அத்திருமேனியாய் விளங்குகிற நித்ய லீலா விபூதிகள்-இவை அனைத்தையுமே குறிக்கும் ஞானமும் தெளிவாகப் பெற்று அன்புடன் கூடிய கைங்கர்ய ரூபமான அந்த ஞானத்தையே அடியேனுக்கு த்ருடமாக அளித்தருள வேணும்

(விஸதீ க்ருத்ய-ஞானம் -விஞ்ஞானம் -அறிந்து அறிந்து தேறித் தேறி -யாதாத்ம்ய -)

பரபக்திம் பரஞ்ஞானம் பரமாம் பக்தி ஸம் பதம்
ஆவிஷ்குரு மமாத்யர்த்தம் ஆத்ம தர்மத்வ யோகத–60-

பரபக்தி பரஞ்ஞானம் மேலான பரமபக்தி ஆகிய இவை எனது ஆத்மாவுக்கு உரித்தான தர்மங்களாகையாலே அஞ்ஞானத்தாலே மறைக்கப்பட்டு இருக்கும் அவைகளை எனக்கு வெளிப்படையாக சாஷாத்காரித்து அருள வேணும் –

(சேஷத்வமாகவும் பாரதந்தர்யமும்-உள்ளிதழ் -வெளிப்பட்டு அவன் ஆனந்தத்துக்காகக் கைங்கர்யம் -பரபக்தி பரஞானம் பரமபக்தி அடியாகவே -அனுபவ ஜெனித ப்ரீதிகாரிக கைங்கர்யம் -)

பூர்வாகம் உத்தராகம் ச சமாராப்த மகம் ததா
த்வத் ப்ராப்திரோதகம் க்ருத்ஸ்னம் நிச்சேஷம் பரிஹாரய–61-

முன்பு செய்யப்பட்டு இனிமேல் பயன் அனுபவிக்கும்படியான பாபங்கள் -இப் பிறவியில் இனி மேல் வரும் பாபங்கள் அவ்வாறே தற்போது பயன்களை அனுபவிக்கத் தொடங்கியதாக பாபங்கள் -உன்னை அடைவதற்குத் தடையான இருக்கும் இது போன்று எல்லாமே பாபங்களில் கூட்டங்களை அவற்றின் ருசி வாசனைகள் இல்லாததாய் நீக்கி அருள வேணும் –

(த்வத் ப்ராப்தி ரோதகம் -அடைய தசைகள் -அதிகாரிகள் தோறும் மாறுபடும் அன்றோ -ஆர்த்த ப்ரபன்னனுக்கு அனைத்துமே போக்கி உடனே தன்னுடன் சேர்த்துக் கொண்டு அருளுகிறான் -திருப்த ப்ரபன்னனுக்கு வர்த்தமான சரீர அவசானத்தில் பேறு –உபாசகனனுக்கு சரீராந்தர அவசானத்தில் பேறு -)

சரீரே தார புத்ராதவ் தந ஷேத்ராதிகே ததா
சங்கம் துர் மோசமதிகம் ஸஹ ஸைவ விநாசய –62-

பாபச் செயல்களுக்குப் புகலிடமான இந்த ஸரீரத்திலும் மனைவி மக்களிடத்திலும் அவ்வாறே செல்வம் வீடு முதலானவற்றிலும் விடுவித்துக் கொள்ள முடியாததான த்ருடமான மமகார ரூபமான பாசத்தை தாமதமின்றி அகற்றி அருள வேணும் –

(ஸக்ருத் ஏவ-சடக்கென -கூரத்தாழ்வான் நிர்வாகம்)

த்வத் குண அனுபாவாஸ்வாத ரஸிகேஷு மஹாத்மஸூ
த்வதீயேஷு பரம் ப்ரேம த்வமேவ பரிவர்த்தய –63-

உனது கல்யாண குணங்களை அனுபவிப்பதாக அமுத பானத்தை ரசித்து ருசித்தவர்களான உன் பக்தர்களான பெரியோர்கள் இடத்தில் மிகுந்த அநுராகத்தை அடியேனுக்கு வளரும்படி அருள வேணும் –

த்வயார்த்த கத வாக் சித்தம் தாயைஸ் த்ரிபிரநா குலம்
யாவச் சரீர பாதம் மாம் குருஷ்வ த்வம் த்வதந்திகே –64-

த்வய மந்திரப் பொருளில் எனது மனமும் வாக்கும் ஊன்றி இருப்பதால் ஆத்யாத்மிகம் ஆதிபவ்திகம் ஆதி தெய்விகம் என்கிற மூன்று வகைப்பட்ட துன்பங்களால் தாக்கப் படாதவனாக என்னையே இந்தச் சரீரம் போமளவும் உனக்குக் கிட்டி இருக்குமாறு அருள வேணும்
ஆத்யாத்மிகம்-உடலைப் பற்றி வருகிற கர்ப்பவாசம் போல்வன
ஆதி பவ்திகம் -பஞ்ச பூதங்களால் உண்டாகும் குளிர்ச்சி வெப்பம் முதலியன
ஆதிதைவிகம் -தேவதையாகிய யமனால் வரும் நரகயாதனை போல்வன

யோ அசவ் த்வயைவ தத்தோமே வ்யவஸாயோ மஹோதய
குருஷ்வ நிச்சல மமும் யாவது ப்ராப்த்யனு வர்தினம் –65-

எம்பெருமானே ரக்ஷகன் என்னும்படியான நன்மை பயக்கக் கூடிய விஸ்வாஸமானது உன்னாலேயே எனக்கு அருளப்பட்டது -அந்த திருட விஸ்வாஸம் நிலை யற்றுப் போகாமல் உன்னை அடையும் வரை தொடரும் படியாக செய்தருள வேணும் –

ததோ தேஹா வஸாநே ச த்யக்த ஸர்வேதர ஸ்ப்ருஹ
த்வாமேவ ப்ரதிபுத்தஸ் ஸந் பஸ்யேயம் பகவந் நஹம் –66-

ஸ்வாமி மேல் ஸ்லோகத்தில் குறிப்பிட்ட அந்த திருட விஸ்வாஸத்துடன் இந்த சரீரம் நீங்கும் தருணத்தில் அனைத்தும் ஆசைகளும் துறந்தவனாய் நான் தத்வ ஞானத்தைத் தெளிவாகப் பெற்றவனாய் உன்னையே காணப் பெறலாவேன்

(கத்ய த்ரயத்தில் இவற்றையே ஸ்வாமிகள் படிப் படியாக வேண்டிக் கொண்டு அருளுகிறார்-பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் -மூன்றும் -ஆழ்வார் -இங்கும் கத்யத்ரயத்திலும் பொல்லா ஒழுக்கும் பொய் நின்ற ஞானமும் அழுக்கு உடம்பும் -என்ற வரிசைகள்-உபதேச அனுஷ்டான க்ரமங்கள் மாறி இருக்குமே )

(தேஹ இந்திரிய ஸூஷ்ம ரூப இந்திரிய ரூபமான ப்ரக்ருதி போக்கி அருள மேல் பிரார்த்தனை -)

பிராகிருத சரீரத்திருந்து என்னை வெளியேற்றுமாறு பிரார்த்தனை –

அவ்யக்த புத்த்யஹங்கார ஞான கர்ம அக்ஷ மாநஸை
ஸதந் மாத்ர மஹா பூதை பரிகல்பித மாதித–67-

மூலப்ப்ரக்ருதி மஹத் தத்வம் ஸாத்விக ராஜஸ தாமஸ அஹங்காரங்கள் ஞான கர்ம இந்திரியங்கள் மனஸ் தன்மாத்திரைகள் எனப்படும் பூத ஸூஷ்மங்கள் கூடியதான பஞ்ச பூதங்களைக் கொண்டு முதலில் படைக்கப்பட்ட

(அத்யாவசாய ஜனகம் மஹத் தத்வம் புத்தி உறுதி எடுக்கும் -சாத்விக அஹங்காரத்தில் இருந்தது 11 இந்திரியங்கள் -தாமச அகங்காரத்தை பூதாதி என்பர் -இவற்றில் இருந்து தன்மாத்ரை -அது மாத்ரம் -குணங்கல் மட்டுமே -பூதங்களாக விரிவடையாமல் இருக்கும் -ராஜஸ அஹங்காரம் இரண்டுக்கும் உதவும் -பிறவிகள் தோறும் ஸூஷ்ம இந்திரியங்கள் பதிவுடன் இருக்குமே -)

சர்மாஸ் ருங்மாம்ஸமே தோஸ்தி மஜ்ஜா சுக்லாதி ஸம் யுக்தம்
ததா மூத்ர புருஷாதி பூர்ணம் நித்ய ஜூகுப் ஸிதம் –68-

பஞ்ச பூதங்களைக் கொண்டு முதலில் படைக்கப்பட்ட தோல் ரத்தம் சதை தசை எலும்பு எலும்புகளில் உள்ளிருக்கும் மஜ்ஜை வீர்யம் ஆகியவற்றோடு கூடினதாய் மற்றும் மல மூத்ரங்களான அழுக்குகளைக் கொண்டதாய் எப்போதும் சகிக்க முடியாததான

இதம் சரீரம் துக்கைக நிதானம் பரிஹார்ய ச
நாட்யா சதாதிசாயிந்யா மாம் நிர் கமய தேஹத–69-

அனைத்து இன்னல்களுக்கும் காரணமான இச்சரீரத்தில் இருந்து எனக்கு விடுதலை அழித்து 101 வது நாடி -மூர்த்தந்ய நாடி -மூலமாக இச் சரீரத்தில் இருந்து என்னை வெளியேறச் செய்து அருள வேண்டுகிறேன் –

சரீர தோஷங்கள் அறிந்தால் தானே ஆத்ம பரமாத்ம வைலக்ஷண்யம் உணர்ந்து -சரீரம் இருக்கவே கர்மங்களைச் சேர்க்கிறோம் – பகவத் திருமேனியை உணர்ந்து இவற்றில் ஆசையை விட்டு அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யங்களை ஏவிப்பணி கொள்ளப் பிரார்த்தித்து பெற்று அவனை ஆனந்திப்பித்து நாமம் ஆனந்தம் பெறுவோம்(மோக்ஷ மார்க்கம் -ஸ்வர்க்க நரக மீண்டும் ஸம்ஸார -ஆகிய நாலுக்கும் தேகத்தில் இருந்து வெளியே புறப்படும் ஆத்மா -சம்சார சாகரத்தில் துக்கப்பட்டு -சுகத்துடன் தொடங்கினாலும் துக்கத்துடன் முடியும் -பரப்ரஹ்ம அனுபவம் ஒன்றே தான் துக்கமே கலசாத இன்பம் -அவற்றை முன்னோட்டமாக இங்கேயே காட்டி அருளி -அதில் பிராவண்யம் அடைய வைக்க அருளி -அபவர்க்க ரசம் அறிந்து இருந்தாலும் ஸம்ஸார துக்கம் பட்டே உணர்கிறோம் -வாக் மனஸ் -எல்லா இந்த்ரியங்களுடன் கூடிய பிராணன் -தேஜஸ் -ஐந்துக்கும் உபலக்ஷணம் -ஆத்மாவுடன் ஸூஷ்மமாகவே சேரும் -ஏவமேவம் -பரமாத்மாவுடன் சேர்கிறான் -ஸூஷ்ம சரீரத்துடன் சென்று விரஜையில் குளித்து -ருசி வாசனைகள் கழித்து – பேறு — இந்த பேரின்பம் ஆசை யுடையவன் இருக்கும் இடமே திவ்ய க்ஷேத்ரம் -ஞானிகள் அத்யந்த ப்ரிய தமர் -அவனும் ஆசைப்படுவான் -வராஹ சரம ஸ்லோகம் -அஹம் ஸ்மராமி மத் பக்தம் -நயாமி பரமாம் கதிம் -ஞானப்பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே -)

சரம ஸ்லோக விவரணம் முற்றிற்று

———

அர்ச்சிராதி மார்க்க நிரூபணம்

வஹ்ந்யஹச் சுக்ல பஷோ தகய நாப்தாநிலாஸ்ரயாத்
மார்க்காத் தவ்ஸ் ஸத் க்ருதோ கத்வா பித்வா ஸூர் யஸ்ய மண்டலம் —
70-

வஹ்நி எனப்படும் அர்ச்சிர் லோகம் பகல் சுக்ல பக்ஷம் உத்தராயணம் ஸம்வத்ஸரம் வாயு ஆகிய பிரதேசங்களை உடையதான அர்ச்சிராதி மார்க்கத்தில் அந்தந்த பிரதேசங்களின் அதிபதிகளால் பூஜிக்கப் படுமவனாய் -அவ்வழியாக ஸூர்ய மண்டலத்தை அடைந்து

சந்திர வித்யுஜ்ஜலே சேந்த்ர ப்ரஜாபதி ஸூபூஜிதா
அண்ட மாவ்ருதி பேதாம்ச் ச வ்யதிவத்ர்ய தசோத் தராந் –7
1-

சந்திரன் வித்யுல்லோக அதிபதியான வருணன் இந்திரன் நான்முகன் இவர்களால் அவ்வவ் உலகங்களில் பூஜிக்கப்படுமவனாய் ப்ரஹ்மாண்டத்தைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகமாக பல்வேறு ஆவரணங்களைக் கடந்து

(ஆதி வாஹிகர் -கூட்டிப்போய் -அமானவன் -வித்யுல்லோக அபிமானியே இவன் என்பர் -ஸமஸ்த கார்ய காரணங்களைக் கடந்து -அபுனராவ்ருத்தி மோக்ஷம் அடைகிறான் -)

அத ஸம்க்யா விஹீநம் தத் அவ்யக்த மதி வர்த்தயன்
விரஜா மம்ருதா காராம் மாம் ப்ராப்ய மஹா நதீம் —
72-

கீழே எண்ணற்ற பரிமாணங்களை யுடைய அந்த மூல ப்ரக்ருதி முழுவதையும் கடந்தவனாய் அழிவற்ற ஸ்வரூபத்தை யுடையதான அல்லது இனிமையான நீரையுடைய விரஜை என்னும் மஹா நதி அருகில் என்னை அடையும்படியாகச் செய்து அருள வேணும் –

(அவாந்தர பிரளயம் -கீழ் ஏழு லோகங்களும் மேல் மூன்றும் அழியும் -அர்ச்சிராதி -12 லோகங்களைத் தாண்டி -சில உபநிஷத்துக்கள் சிலவற்றை விட்டுச் சொல்லும் -அனைத்துக்கும் ஒருங்க விட்டு -சர்வ வேதாந்த சாகை நியாயம் – சத்ய லோகம் தாண்டி -ஆமோத பிரமோத சம்மோத ஸாந்தானிக லோகங்களைத் தாண்டி -விரஜை நீராடி -பேற்றை அடைகிறோம் -தெளி விசும்பு திரு மாடு -மாக வைகுந்தம் -அபராஜிதா -அயோத்யா -பர்யாயம்-தமஸ பரமோ தாதா -ஸாஸ்வத -த்ருவ -அயர்வரும் அம்பரங்கள் அதிபதி-நிறை கதிரோன் கீண்டு புக்கு -ஆராவமுதம் அங்கு எய்தி -)

(முக்தாத்மா ஸ்வரூப ஆவிர்பாவம் -இதுவே இயற்கை –சமத்துவம் -இங்கே பரமாத்மாவின் சரீரம் என்றும் உணர்வது -கர்மங்கள் கழிந்து -மாணிக்கத்தின் சேற்றைக் கழுவி இயற்கையான ஒளி பிரகாசிப்பது போல் -கிணறு வெட்ட வெட்ட கீழ் உள்ள நீர் போல் -ஹேய குண த்வம்சமான பின்பு இருக்கும் கல்யாண குணங்கள் பிராகாசிக்கும் -)

—–

ஸூஷ்ம சரீரம் விடுபட அருள வேணும் என்னும் பிரார்த்தனை

க்ருத்வா ஸூஷ்ம சரீரஸ்ய சிர சக்தஸ்ய தூநநம்
தஸ்மாத்ராஹு விநிர் முக்த சந்திர ஸந்நிப முஜ்ஜ்வலம்
–73-

அநாதியாக தன்னைப் பிடித்துக் கொண்டிருக்கும் பஞ்ச பூதங்களால் வடிவு கொண்ட ஸூஷ்ம சரீரத்தின் தொடர்பு அறுக்கப்பட்ட காரணத்தைக் கிரஹண சமயத்தில் ராஹுவால் விடுவிக்கப்பட்ட சந்திரனுக்கு ஒப்பான காந்தியை யுடையனாய்

தாம் நதீம் மநஸா தீத்ய வைத்யுதே நாநு கச்சதா
அமாந வேந ஸஹிதம் மாம் விபூதிம் பராந்நய–74-

அந்தப் விரஜா நதியை ஸங்கல்ப மாத்ரத்தால் கடந்து பின்தொடர்ந்து வருகிற வித்யுன் மண்டல அபிமானியான திவ்ய புருஷனுடன்-அமானவன் -இருக்கும் என்னை ஸ்ரீ வைகுண்டம் எனப்படும் திவ்ய தாமத்தில் சேர்க்க வேண்டுகிறேன் –

(மன்னுயிர்காள் இங்கே மணவாள மா முனிவன்
பொன்னடியாம் செங்கமலப் போதுகளை -உன்னிச்
சிரத்தாலே தீண்டின் அமானவனும் நம்மைக்
கரத்தாலே தீண்டல் கடன் )

(இந்த உடல் விட்டு இரவி மண்டலத்தூடு ஏகி –விரசை தனில் குளித்து அங்கு அமானவனால் ஒளிக் கொண்ட சோதியும் பெற்று -என்றபடி)

(ஸ்ரீ வைகுண்ட கத்யத்தில் ஸ்வாமி ஸ்ரீ ஸூக்திகள்-சதுர்த³ஶபு⁴வநாத்மகமண்ட³ம் * த³ஶகு³ணிதோத்தரம் ச ஆவரணஸப்தகம் * ஸமஸ்தம் கார்ய காரண ஜாதமதீத்ய வர்த்தமாநே-பரமவ்யோம ஶப்³தா³பி⁴தே⁴யே
ப்³ரஹ்மாதீ³நாம் வாங்மநஸாঽகோ³சரே * ஶ்ரீமதி வைகுண்டே² தி³வ்யலோகே *ஸநகவிதி⁴ஶிவாதி³பி⁴ரபி * அசிந்த்யஸ்வபா⁴வைஶ்வர்யை: * நித்யஸித்³தை⁴:-அநந்தை: ப⁴க³வதா³நுகூல்யைக போ⁴கை:³ * தி³வ்யபுருஷை: மஹாத்மபி⁴: ஆபூரிதே-தேஷாமபி இயத்பரிமாணமியதை³ஶ்வர்யம் * ஈத்³ருʼஶஸ்வபா⁴வமிதி * பரிச்சே²த்து மயோக்³யேதி³வ்யாவரணஶதஸஹஸ்ராவ்ருʼதே * தி³வ்யகல்பகதரூபஶோபி⁴தே * தி³வ்யோத்³யாந,ஶதஸஹஸ்ரகோடிபி⁴ராவ்ருʼதே * அதிப்ரமாணே தி³வ்யாயதநே *)

——

ஸ்வரூப ஆவிர்பாவம் -இயல்பான குணங்கள் -தோன்றும்படி அருளிச் செய்ய பிரார்த்தனை

தத்ர ஸ்வாபாவிக ஆகாராந் அவ போதிகாந் குணாந்
அநந்தாந பரிச்சின்னாந் அசங்க்யாந்மே ப்ரகாசய
–75-

அந்தப் பரம பதத்தில் எனக்கு இயல்பாக இருக்கக் கூடியதாய் அழிவில்லாதவையாய் அளவுபட்டு இல்லாததாய் கணக்கற்றவையான ஞானம் முதலான கல்யாண குணங்கள் தோன்றுமாறு செய்து அருள வேண்டுகிறேன்(அத்ர -இவ்வுலக இருப்பு தாண்டி தத்ர-அங்கு) –

(சாமீப்யம் சாலோக்யம் சாரூப்யம் சாயுஜ்யம் ஸாம்யாபத்தி)

—–

பஞ்ச உபநிஷத் மயமான உருவத்தை அருள பிரார்த்தனை

ததஸ்த்வ ப்ராக்ருதம் திவ்யம் ஸூத்த ஸத்வ ப்ரகாசகம்
பஞ்ச உபநிஷத் ஆகார விக்ரஹம் ஸூ மநோ ஹரம் —
76-

இனி ஸத்வ ரஜஸ் தமோ குணங்களுக்கு இருப்பிடமாய் ப்ரக்ருதிக்குச் சேர்ந்ததாய் நித்யம் பிரகாசிப்பதாய் -ஸத்வ குணத்தை மட்டுமே வளர்ப்பிக்கவல்ல -மிகவும் அழகுடன் திகழ்வதான பஞ்ச உபநிஷத் எனப்படும் பஞ்ச சக்தி மயமான திவ்யமான திருமேனியை எனக்குக் கொடுத்தருளி உனது உத்தமமான பரிமளம் வீசும் ஒளியை பிரவேசிப்பித்து

ப்ராப்பய திவ்யா மோதந்தே பரம் தேஜ ப்ரவேஸ்ய ச
ஸ்வ ஸ்வரூபாதி நிஷ்பத்த்யா லப்த ஸாம்யம் ச மாம் குரு –
-77-

எனக்கு இயல்பாக எட்டு குணங்களை மறுபடியும் தோற்றுவித்து என்னை உன்னுடன் முழுமையாக ஒத்திருக்கும் தன்மையை உடையனாய்ச் செய்து அருள வேண்டும்
அஷ்ட குணங்கள் அபஹத பாப்மாதி -கர்மங்களுக்கு வசப்படாமை-விஜரக -மூப்பின்மை -வருத்தமின்மை -பசியின்மை -தாக்கமின்மை -ஸத்ய காம -பொய்த்து உரிய அழிவற்ற வஸ்துக்களை யுடைமை -ஸத்ய ஸங்கல்ப-நினைத்ததை முடிக்க வல்லமை -பாபமற்றவன் (அபஹத பாப்மா) கிழத்தன்மை இல்லாதவன் (விஜரக) இறப்பில்லாதவன் (விமிருத்யுகு) சோகமில்லாதவன் (விசோகக) (விஜிகத்சக) பசி தாகமற்றவன் (அபிபாசக) நித்திய பொருள்களின் மேல் ஆசை கொண்டவன் (சத்ய காமக) (சத்ய சங்கல்பக) முதலிய எட்டு 

ததச் சைரம் மதீ யாக்யே தடா கேச்வத்த மூலத
திவ்ய அப்சரோ கணை பஞ்ச சதா சங்க்யா ஸமன்விதை –7
8-

மாலா சூர்ண அஞ்சன ஷவ்ம பூஷா ஹஸ்தை ரூபஸ் திதம்
ப்ரஹ்ம அலங்கார ரூபேண சாதரம் சமலங்க்ருதம் –79-

பிறகு ஜரம்மதஹ்ரத-என்னும் பொய்கைக் கரையில் அமைந்துள்ள அஸ்வத் மரத்தின் நிழலிலே (நாளை என்பதே இல்லை -அனைத்தும் ஒன்றே -அஸ்வத் மரம் -)நூற்றுக்கணக்கான பூ மாலைகள் நறுமணம் கமழும் சூர்ணங்கள் சந்தனம் முதலான த்ரவ்யங்கள் பட்டாடைகள் மற்றுமோர் பல்வேறு ரத்ன ஆபரணங்களை கையிலே ஏந்தியவர்களாய் (பரவரா குருக்கள் பூட்டும் ஆத்ம பூஷணங்கள் )ஒளி மிக சவுந்தர்யத்தை யுடைய அப்ஸரஸ்ஸுக்களின் திரளால் சேவை செய்யப்படடவனாய்

(அரசமரத்தடியில் பரகாலனுக்கு திருமந்திர உபதேசம் -மகிழ மரத்தடியில் தீர்க்க சரணாகதி த்வயார்த்தம் பராங்குசருக்கு அருளியது போல்)

அப்யுத்தா நார்த்த மாயதை திவ்ய ஜாநபதைஸ் ஸூரை
சங்க சஸ் ஸம வேதைச் ச ஸத் க்ருதம் ஸம்பமாகுலை
–80-

ஸம்ஸார நிரயாதேவம் உத்தாப்ய கருணா நிதே
த்வம் மாம் கமய தேவேச தத் விஷ்ணோ பரமம் பதம் –81-

எதிர் கோட் வரவேற்பதற்காக திரள் திரளாக பரமபதத்திலுள்ள பல்வேறு இடங்களில் இருந்து வந்து சேர்ந்த நித்ய ஸூரிகளால் ஆச்சார்ய பாவித்துடன் சத்கரிக்கப் படுமவனான என்னையே -ஸம்ஸாரம் என்னும் நரகத்திலிருந்து இவ்வாறு கரையேற்றிய ஓ கருணைக்கடலே தேவர்களுக்கும் தேவனே -ஓ நாராயணா அந்த பரமபதத்தில் நீயே சேர்த்து அருள வேணும் –

(திருவல்லவாழ் கோனாரை அடியேன் அடி சூடுவது எந்நாளே –த்வாம் மாம் –ஸ்ரீ வைகுண்டே பரே லோகே ஸ்ரீயா ஸார்த்தம் பக்தைஸ் பாகவத ஸஹ -மேல் வர்ணனை-அயோத்யா அபராஜிதா ஸ்ரீ வைகுண்டம் -ஸ்ரீ விஷ்ணோ பரமபதம் -பர்யாயம் )

—–

ஸ்ரீ வைகுண்ட புரம் -ஸ்ரீ அயோத்யா நகர வர்ணனை

ததஸ் ஸூரி ஜநைஸ் ஸர்வை வைகுண்ட புர வாஸிபிர்
ராஜ மார்க்க கதம் லாஜ புஷ்ப வ்ருஷ்ட்யாதி தோஷிதம் –82-

பிறகு வைகுண்ட வாசிகளான அனைத்து நித்ய ஸூரிகளால் தான்யங்கள் புஷ்பங்கள் தூவப்பட்டு மகிழ்விக்கப் பட்டவனாய் ப்ரதானமான ராஜவீதியிலே நுழைந்தவனாய்

(வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-)

த்ருஷ்ட்வா ப்ரணம்ய சோத்தாய வைகுண்ட த்வார கோபுரம்
அந்த ப்ரவிஷ்டம் பஸ் யந்தம் தாம திவ்ய மிதஸ் தத–83-

வைகுண்ட நகரத்தின் சிறந்த முகத்வார கோபுரங்களைக் கண்டு தொழுது எழுந்து நகரத்துள் நுழைந்தவனாய் -ஜ்வலிக்கின்ற மாளிகைகளை அங்குமிங்கும் கண்டவனாய் -உனது சேஷபூதனான என்னை-

அத மண்டப ரத்னம் தத் ஆனந்த பரிபூரிதம்
மஹா வகாசம் மாணிக்ய ஸ்தம்ப ஸாஹஸ்ர சோபிதம் –84-

அதற்கு மேல் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாய் மிக்க விசாலமானதாய் ஆயிரக் கணக்கான மாணிக்கக் கம்பங்கள் பொருந்தி பிரகாசிக்கிறதாய் அந்த உத்தமமான மண்டலத்தில்

ஆரோப்ய ஸூரி பரிஷதந்தர்பாவ மஹா தயம்
கமய த்வம் த்வதீயம் மாம் க்ருத்த க்ருத்யஸ் ஸூகீ பவந் –85-

அந்த உத்தமமான மண்டலத்தில் ஏற்றி வைத்துக் செய்ய வேண்டியத்தைச் செய்து முடித்தவன் போல் மகிழும் நீ நித்ய ஸூரிகளின் திரளில் சேரும் சிறந்த அதிஷ்டத்தை அடியேனுக்கு அளித்தருள வேண்டும் –

(அந்தமில் பேரின்பத்து அடியாரோடு இருந்தமை பாரித்தது கிட்டியதே-அடியார் மூலமும் அவனைப் பற்றி அவன் மூலம் அடியார் குழாங்களுடன் சேர்ந்து அனுபவிப்போம் -ஆதியும் அந்தமும் ஒன்றே -செய்த வேள்வியர் -க்ருதக்ருத்யர்-ததா ராம விஜ்வர பிரமோத ஹா-தேவரீர் கிருஷி அடியேனிடம் பலிக்க வேண்டும்-)

தத்ர சாதார சக்த்யாதி க்ரமேண பரிகல்பிதே
தர்மாத்யை ஸூரிபிஸ் தத் தத் பாத காத்ர மயாத்மகை –86-

அந்த மணி மயமான மண்டபத்தில் ஆதார சக்தி சித் சக்தி சதாசிவ சக்தி என்னும் முறையில் மூன்று சக்திகளுடன் கூடிய அந்தந்த பீடங்களின் -ஆசனங்களின் -கால்களாகவும் மற்றும் வேறு பாகங்களாகவும் பரிணமித்த

(கூர்ம பீடம் -கூர்மாசனம் -அதுக்கு மேல் தர்மாதி பீடம் -தர்ம ஞானம் வைராக்யம் ஐஸ்வர்யம் -பாதங்கள் -உடலாக அதர்மம் அஞ்ஞானம் அவைராக்யம் -அனஸ்வர்யம் -வ்ருத்த விபூதிமான்)

நிர்மிதே நிர்மலே பீடே நாநா ரத்ன சமன்விதே
ஸூபாஸ் தரண ஸம் யுக்தே ஸூந்தரே அதி மநோ ஹரே –
-87-

தர்ம ஞான முதலான பேர் கொண்ட எண்மரான -தர்ம -ஞான -வைராக்ய -ஐஸ்வர்ய-அதர்ம -அஞ்ஞான -அவைராக்ய -அனைஸ்வர்யம்-அதிஷ்டான தேவதைகளால் நிர்மிக்கப்பட்ட நிர்மலமான பல ரத்னங்களால் அலங்கரிக்கப்பட்ட பீடத்தின் மேல் பவித்ரமான கம்பளத்துடன் கூடியதாய் அழகாயத் தோற்றுவதாய் மனம் கவருவதாய்

விகசத்தன ஸாஹஸ புண்டரீ காஸ்த்ரு தோத்தரே
தத் கர்ணி கோபரி தலே தப்த சாமீ கரோஜ்வலே —
88-

அநந்த போகி பர்யங்கே விமலே விஸ்த்ரு தோச்ர்ச்சிதே
பணா ஸஹஸ்ர மாணிக்ய ப்ரபா சித்ர விதாநகே –
-89-

ஆயிரம் இதழ்கள் கொண்ட வெண் தாமரை மலர்வது போல் சுட்டுரைத்த நன் பொன் போல் பிரகாசித்துக் கொண்டிருக்கிற அந்த தாமரையின் நடுவிலே இருந்து கர்ணிகா எனப்படும் பசுமையான மஞ்சள் நிறத்தில் மிளிரும் மலரின் மொட்டுக்களை யுடைய அப்பழுக்கு அற்றதாய் பரந்து விரிந்ததாய் -மேன்மையான ஆயிரம் பணங்களில் உள்ள ஒளி வீச்சை விதானமாக வுடைய ஆதி சேஷன் என்னும் படுக்கையின் மேலே

(இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி
இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த
அரவரச பெரும் சோதி அனந்தன் என்னும்
அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி
திரு அரங்க பெரு நகருள் தெண்ணீர் பொன்னி
திரை கையால் அடி வருட பள்ளி கொள்ளும்
கருமணியை கோமளத்தை  கண்டு கொண்டு என்
கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாளே–1-1-)

ஆஸீநம் அகிலஸ் யாஸ்ய ஸ்வாமிந்யா ஜகதஸ் ஸ்வயம்
தேவ்யா த்வதந பாயிந்யா ஸ்ரியா பூம்யா ச நீளயா –
-90-

ஆதி சேஷன் என்னும் படுக்கையின் மேலே இவ்வுலகம் அனைத்துக்கும் பட்ட மஹிஷியாய் உன்னை ஒரு க்ஷணமும் விட்டுப் பிரியாதே இருக்கும்படியான பூஜிக்கத்தக்க திருமகளோடே வீற்று இருப்பவனாய் -பூமி நீளா தேவிமார்களுடன் உடன் இருப்பவனாய் —

ஸமேதம் ஸச்சிதாநந்தம் சாந்தோதித தசாத்மகம்
ஸந் மங்கள குணா வாஸம் ஸதைகாகார விக்ரஹம் –91-

சாந்தோதிதம் என்கிற அலையற்ற கடல் போன்ற ஸ்வரூபம் உடையவனாய் -ஞான ஆனந்தம் முதலான அனைத்தும் நல்ல குணங்களுக்கு இருப்பிடமானவனாய் -எப்பொழுதும் ஒரே விதமான -வளர்வது தேய்வது முதலான பரிணாமங்கள் இல்லாத -திவ்ய திருமேனியை உடையவனாய் –

(நித்யோதித ஸ்வரூப த்யானம் -சாந்தோதித குண த்யானம்)

லாவண்ய காந்தி மதிம யவ்வநாதி குணோ ததிம்
விஸ்வாதி ராஜ்ய பிசுந கிரீட சிகரோ மகுடோ ச்ச்ரிதம் —
92-

லாவண்யம் எனப்படும் சமுதாய சோபையும் மென்மை மற்றும் இளமை முதலான குணங்களுக்குக் கடல் போன்றவனாய் -அனைத்து உலகங்களுக்கும் இவனே ஸார்வ பவ்மன் என்பதைக் குறிக்கும் கிரீடத்தின் முன் பகுதியை உடையவனாய்

ஸூஸ் நிக்த நீல குடிலை ரலகைர் லலிதாளிகம்
ஸூகி பக்த லலாடாப்திம் ஊர்த்வ புண்ட்ரேண ஸேதுநா
–93-

நிகுநிகுவான தோற்றத்துடன் கறுத்து சுருண்டு வளைந்து நெளிந்து அசைந்தாடும் முடியுடன் கூடி ஒரு நீண்ட பாலம் போன்ற ஊர்த்வ புண்ட்ரத்தால் இரண்டு பாகங்களாய்ப் பிரிக்கப்பட்ட கடல் போன்ற விசாலமான நெற்றியை உடையவனாய்

(கொள்கின்ற கோள் இருளைச் சுகிர்ந்திட்ட கொழுஞ் சுருளின்
உள் கொண்ட நீல நன்னூல் தழைகொல்?அன்று மாயன் குழல்
விள்கின்ற பூந் தண் துழாய் விரை நாற வந்து என்னுயிரைக்
கள்கின்றவாறு அறியீர் அன்னைமீர்!கழறா நிற்றிரே.–7-7-9-)

ஆகர்ண பாக விஸ்ராம்த புண்டரீ காருணேஷணம்
ருஜு நாஸா முகாதாத நிஜாஸ் யாமோத ஸம்பதம் –94

காதுகள் வரை நீண்ட செந்தாமரை போன்ற அப்பெரியவாய திருக்கண்களை உடையவனாய் -வளைவு சுழி வற்று நீண்ட மூக்கின் நுனியால் தாமரையாய் அலர்ந்த திருமுக மண்டலத்தின் நறுமணத்தை நுகர்பவனாய்

(ஆட்டியும் தூற்றியும் நின்று அன்னைமீர்! என்னை நீர் நலிந்து என்?
மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன்
ஈட்டிய வெண்ணெய் உண்டான் திருமூக்கு எனதாவி யுள்ளே
மாட்டிய வல் விளக்கின் சுடராய் நிற்கும் வாலியதே.–7-7-2-)

அம்ஸா வலம்பி ரத்நாட்ய கர்ணிகா மகரச்சவிம்
நிரஸ்த நிஸ்த ஸ்து லாபிக்ய தந்த மந்த ஸ்மித உஜ்ஜ்வலம்
–95-

தோள் அளவும் நீண்டு மகர குண்டலங்களால் அலங்கரிக்கப் பட்ட கர்ண பாசங்களை உடையவனாய் -முத்துக்களின் ஒளியை விஞ்சிய பல் வரிசையிலிருந்து வெளியேறும் குளிர்ச்சி மிகு வெண்மையான புன்னகையை உடையவனாய்

(கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து கனிந்து,உள்ளே
வெண்பல் இலகு சுடரிலகுவிலகு மகர குண்டலத்தன்,
கொண்டல் வண்ணன் சுடர்முடியன் நான்கு தோளன் குனிசார்ங்கன்,
ஒண்சங் கதைவா ளாழியானஒருவன் அடியே னுள்ளானே.)

ஸூகந்தி கோமல ஸ்வாது ப்ரவால சத்ருசாதரம்
பிரபுல்ல கண்ட பலகம் கர்ண பூர்வ பரிஷ்க்ருதம் –
-96-

நறுமணத்துடன் திகழ்வதாய் மென்மை இனிமைகளைக் கொண்டதாய் பவளம் போன்ற சிவந்து அதரங்களை உடையவனாய் -மலர்ந்த புஷ்பங்கள் போன்ற விசாலமான கன்னங்களை உடையவனாய் -கர்ண ஆபரணங்களால் அலங்கரிக்கப் பட்டவனாய்

(வாலிய தோர் கனி கொல்?வினையாட்டியேன் வல் வினைகொல்?
கோலம் திரள் பவளக் கொழுந்துண்டங் கொலோ அறியேன்
நீல நெடு முகில் போல் திருமேனி யம்மான் தொண்டை வாய்
ஏலும் திசையுள் எல்லாம் வந்து தோன்றும் என் இன் உயிர்க்கே.–7-7-3-)

பத்ம சந்த்ர அம்ருத சர ப்ரஸ்பர்த்தி முக மண்டலம்
ப்ரூஷோபா லோகிதாலாபை புவனாஹ்லாத காரிணம்
–97-

தாமரை சந்த்ரன் அமுதப்பொய்கை ஆகியவற்றைப் போல் அழகு மிக்கதாக திருமுக மண்டலத்தை உடையவனாய் -திருக்கண்களின் சைகைகளாலும் பார்வைகளாலும் பேச்சாலும் பார்க்குமவர்களுக்கு ஆனந்தத்தைக் கொடுப்பவனாய்

கோளிழைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும்
கோளிழைத் தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்
கோளிழை யாவுடைய கொழுஞ்சோதி வட்டங்கொல்? கண்ணன்
கோளிழை வாண் முகமாய்க் கொடியேன் உயிர் கொள்கின்றதே.–7-7-8-)

க்ரைவேய பூஷா விலஸத் கம்பு க்ரீவா விராஜிதம்
உன்னதாம் சமுதாரோர ஸ்புரச்ச்ரீ வத்ஸ கௌஸ்துபம் —
98-

சங்கு போன்ற கழுத்தில் மணிமாலையால் அலங்கரிக்கப் பட்டவனாய் -உயர்ந்த தோள்களை உடையவனாய் -விசால வக்ஷஸ்தலத்தில் பிரகாசிக்கின்ற ஸ்ரீ வத்ஸம் எனப்படுவம் திரு மறுவும் கௌஸ்துப மணியும் யுடையவனாய்

(மல்லாண்ட திருத்தோள்கள் -ஸூந்தர தோளுடையான் -மந்த்ர கடைந்தால் -பிராட்டி ஆலிங்கணத்தால் -அலங்காரத்தால் -விகாசமாகி தோன்றும் – -திருமறு மார்பன் -மண்டோதரி ஸ்ரீ வத்ஸ -நித்ய ஸ்ரீ இரண்டையும் -பிராட்டிக்கு அந்தப்புரமாக திருமறு -புருடன் மணிவரமாக இத்யாதி -)

உதார பீவரோ தக்ர தீர்க்க பாஹு சதுஷ்ட்யம்
ஹார கேயூர கடகைர் அங்குளீ யைச்ச சோபிதம் —
99-

பருத்து விரிந்து நீண்ட நான்கு தோள்களை உடையவனாய் -தங்கத்தாலான ஆபரணங்களாலும் தோள் வளைகளாலும் கரங்களில் அணியும் கங்கணங்களாலும் விரல்களில் அணியும் மோதிரங்களாலும் ஒளி வீசுமவனாய்

(ஆபரணங்களுக்கும் அழகூட்டும் பெருமாள் -சர்வ பூஷண பூஷிதாயா -திருவடி -ஐயப்பாடு அறுக்கவும் ஆதரவு பெருக்கவும் அழகு -)

புஜத்வய த்ருதோதக்ர சங்க சக்ர விபாஸிநம்
ஜாநு ப்ரசாரித புஜம் பர்யங்க ந்யஸ்த பாஹுகம் –100-

திண் தோள் மணி வண்ணா என்னும்படியான இரண்டு தோள்களில் சங்கு சக்கரங்களுடன் திகழ்பவனாய் -ஒரு புஜத்தைப் படுக்கையின் மேல் வைத்துக் கொண்டு முழங்கால் அளவும் நீண்ட புஜங்கள் உடையவனாய்

தநு மத்யம் ஜகத்ரஷா நிபத்வ உதர பந்தனம்
நதநாபி ஹ்ருதோத் பூத விதி ஸூதி க்ருஹ அம்புஜம் –101-

மெல்லிய இடையை உடையவனாய் -உலகுக்கு அரணாக இருக்கும் பொருட்டு கட்டப்பட்ட அரை நாண் உடையவனாய் –சதுர் முகனான பிரமனுக்குப் பிறந்த அகம் எனக் குறிப்பிடலாம் படியான ஆழ்ந்த நாபீ கமலத்தை உடையவனாய்

(ரக்ஷண தீக்ஷை -கங்கணமும் -அரை நாண் கயிறும் உதரபந்தமும் -உபநயனத்திலும் கல்யாணத்திலும் தர்ம அனுஷ்டானத்துக்கு கங்கணமும் வயிற்றில் கட்டும் உண்டே நமக்கும்-மௌஞ்சி தாரணம் இடுப்பில் கட்டுவர்)

கடீ நிபத்வ காம்சீகம் கனக உஜ்ஜ்வல வாஸஸம்
ரம்பேப ஹஸ்த கரப காந்தி ஸுவ்ர்யக்ஷ மோருகம் –10
2-

தங்கம் போல் மிளிர்கிற பீதாம்பரத்தை உடையவனாய் -வாழை மரத்தினுடையதும் யானையின் துதிக்கையினுடையதும் உள்ளங்கையின் வெளிப் பாகத்தினுடையதும் சன்னிவேச சோபையை விஞ்சி அழகாயத் திகழும் தொடைகளை உடையவனாய்

ககுத்மத் ககுதாகார ஜாநு த்விதய சோபிதம்
மநோஜ்ஞ ஜங்காத் விதயம் மஹார்ஹ மணி நூபுரம் –103-

எருதைப் போன்றதான –முழங்கால்களை உடையவனாய் –அழகான இரு கணைக் கால்களை உடையவனாய் -விலை மதிப்பற்றதான உயர்ந்த ரத்நங்கள் பதித்த சிலம்புகளை உடையவனாய்

சாரதாம்போஜ சத்ருச சரண த்வந்த்வ ஸூந்தரம்
சரண்யம் ஸர்வ பூதானாம் சதுர்வர்க்க பலப்ரதம் –104-

இளவேனில் காலத்தில் மலர்ந்த தாமரையை போன்ற இரு பாதங்களை உடையவனாய் -(இவ்வாறு திவ்ய மங்கள விக்ரஹ வர்ணனை -91 ஸ்லோகம் தொடங்கி -இது வரை -பற்றிலார் பற்ற நின்றான் -அசரண்ய சரண்யன்-இதுவரை திவ்ய மங்கள விக்ரஹ வர்ணனை -மேல் கல்யாண குண வர்ணனை)-எல்லாப் பிராணிகளையும் காக்கும் தொழிலை யுடையனாய் -தர்மம் அர்த்தம் காமம் மோக்ஷம் ஆகிய நான்கு புருஷார்த்தங்களை அளிப்பவனாய்

அபவ்ருஷேய வாசஸாம் அபூமிம் பக்த வத்சலம்
துஷ்ப்ராபம் விதி ருத்ராதயை ஸூப்ரபாம் பக்தி சாலிபிர் –105-

வேத வாக்யங்களுக்கு எட்டாத சீர்மை யுடையவனாய் -பக்த வத்சலனாய் -பிரமன் சிவன் ஆகியோரால் கிட்ட முடியாதவனாய் -களங்கமற்ற பக்தி பாவம் கொண்ட பக்தர்களால் எளிதில் கிட்டுமவனாய்

(பத்துடை அடியவர்க்கு எளியவனாய் பிறருக்குத் அரிய வித்தகனாய்)

சங்க சக்ர கதா கட்க ஸார்ங்காத்யைர் ஆயுதோத்தமை
பரிதம் புருஷகாரரஸ்தான த்ராண தத்பரை–106-

ஆபத்துக்கு இடமில்லாத போதிலும் எம்பெருமானைக் காப்பதில் ஊக்கமுடையவர்களான வீர புருஷர்களாய்த் தோன்றும் கோலார்ந்த நெடும் சார்ங்கம் கூனற் சங்கம் கொலையாழி கொடும் தண்டு கொற்ற ஒள் வாள் -என்ற திவ்ய ஆயுதங்களால் எல்லாப் பக்கங்களிலும் கைங்கர்யங்கள் செய்யப் பட்டவனாய்

(ப்ரஹ்மத்தை அடைந்து அனுபவம் -ப்ரஹ்மத்தை ஒன்றாகி லயம் என்னும் அல்லல் எல்லாமே ஒழித்தான் -ப்ரஹ்மணா ஸஹ -கூடச் சேர்ந்து கல்யாண குண அனுபவம் -ப்ரஹ்மம் ஏவம் அல்ல ப்ரஹ்மம் இஹ பவதி)

(பல அத்யாயம் -நான்காவது அத்யாயம் -முதல் இரண்டு பாதங்களால்-வித்யா பலமான பாப அஸ்லேஷ விநாசமும்
உத் க்ரணமும்-கூறப் படுகின்றன
பின் இரண்டு பாதங்களால்-உத் க்ராந்தனான ஜீவனுக்கு அர்ச்சிராதி மார்க்க கமனமும் ப்ரஹ்ம பிராப்தியும்
முறையே பேசப்படுகின்றன –
சஞ்சித கர்மம் அநாரப்தம் -சேமிக்கப்பட்டதில் பலன் கொடுக்க ஆரம்பிக்காமல் -இவை தொலைக்கப்பட்டு -பிராரப்த கர்மங்கள் உபாசநா – வித்யா மஹாத்ம்யத்தால் தொலைத்துக் கொள்ள வேண்டும் –
492-அநாரப்த கார்யே ஏவது பூர்வே ததவதே –4-1-15-
இதுவரை பலன் அளிக்கத் தொடங்கா புண்ய பாவங்கள் மட்டுமே அழிகின்றன –
சர்வ பாப்மாந பிரயந்துதே –
அனைத்து பாவங்களும் அழியும் என்றால் சரீரம் மட்டும் எவ்விதம் இருக்கும்
சாந்தோக்யம் -6-14-2-தஸ்ய தாவதேவ சிரம் யாவந்த விமோஷயே அத சம்பத்ச்ய -என்று
பலன் அளிக்கத் தொடங்கப் பட்ட கர்மங்கள் முடியும் வரையில் சரீரத்தின் தொடர்பு உள்ளது என்றது-
து ஸப்தம் பக்ஷத்தை விலக்குவது
பூர்வே -அநாரப்த கார்யே ஏவ-வித்ய உத்பத்திக்கு முந்திய ப்ராரப்தம் அல்லாத கர்மங்களே நசிக்கின்றன
ஏன் எனில்
ததவதே-தஸ்ய தாவதேவ சிரம் யாவந்த விமோஷயே அத சம்பத்ச்ய-என்று வித்யை பூர்த்தியானவனுக்கு உடலை விடும் வரை விளம்பம் உண்டு என்று வேதம் கூறுவதால்
சர்வ கர்மங்களும் அழிந்திட்டால் சரீர ஸ்திதியே ஸம்பவிக்காதே
ஆதலின் சரீரத்தைத் தரிப்பதற்குக் காரணமான பிராரப்த கர்மம் தவிர
மற்ற அபிராரப்த கர்மங்களுக்கே நாசம் என்று தேறிற்று –
அவதார ரஹஸ்யம் அறிந்த உபாசகனுக்கும் அந்தப் பிறவியிலே மோக்ஷம் -அந்திம ஸ்ம்ருதி இவனுக்கும் வேண்டும் – ஜன்மாந்தர கர்மங்கள் தேக மன வியாதிகள் மூலமும் கழிக்கிறான் -)

(லயம் -காரணப்பொருள்கள் காரியப்பொருள்களில் சேர்வது -இந்திரியங்கள் மனசிலும் -மனஸ் ப்ராணனிலும் ஸம்ஸ்லேஷம் இவையும் லயம் -அ விபாக ரூபம் -பிராகிருத லயம் போல் அல்லவே இவை -ஜீவாத்மா பரமாதவிடம் சேர்வது ஐக்யம் அல்லவே -ஸ்வாமி தாஸ்ய பாவனை எப்பொழுதும் இருக்குமே -பிரிந்து தனித்து இருக்கத் தகுதி இல்லை என்று உணர்கிறான் அங்கு தானே -இங்கும் அப்படியே இருந்தாலும் பிரக்ருதியால் மறைக்கப்பட்டு மயங்குகிறான் –நியத பிரகாரம் -சரீரம் அவனாலே தாங்கப்பட்டு அவனுக்காகாவே இருக்கும் – கர்மாதீனமாக தேஹ சம்ச்லேஷமும் விஸ்லேஷமும் செய்வதால் ஜீவனுக்கும் காரணம் பரமாத்மாவே -மம சாதரம்யம் -ஞான ஆனந்தங்களில் சாம்யம் -கூடி அனுபவம் -ஸஹ ஸ்ருதி -ப்ரஹ்மத்தை அறிபவன் ப்ரஹ்மத்தை அடைகிறான் -ப்ரஹ்ம ஏவ அல்ல இஹ -அவனைப்போல் ஆகிறான் -சாதரம்ய ஸாம்ய ஸஹ ஸ்ருதிகளை பார்த்து அர்த்தம் கொள்ள வேண்டும் –
511-அவிபாகோ வசநாத் —4-2-15-
பிரித்துக் கூற இயலாதபடி சேர்க்கை மட்டுமே -இப்படியே கூறப்பட்டது –
பூர்வ பஷி லயிப்பது போன்றே என்பர்
உபாதான காரணமாக பர ப்ரஹ்ம் என்பதால்
இது தவறு
லயம் என்றால் அழிவு
சம்பத்யதே -பிரிக்க இயலாதபடி சேர்க்கை என்றே கொள்ள வேண்டும் –
அவசனாத் -என்று இங்கு மறுபடி ஸ்ருஷ்டி பற்றிய வசனம் இல்லாமையால்
விட்டுப் பிரியாமையே ஸம்பத்தி என்று தாத்பர்யம் –
யானே நீ என்னுடைமையும் நீயே -அறிந்த ஆழ்வாருக்கு சூழ் விசும்பில் அந்தப் பேற்றையும் காட்டி அருளி உபதேசிக்க அருளினான் அன்றோ –

அநந்த விஹகாதீச ஸேநேசாத்யைச் ச ஸேவிதம்
கஜாநநாத்யைச் சண்டாத்யை குமுதாத்யைஸ் த்தைவ ச –107-

அனந்த கருட விஷ்வக் சேனர் முதலானோர்களாலும் கைங்கர்யங்கள் செய்யப் பெற்றவனாய் -வேழ முகத்துச் சேவகர்களாலும் அவ்வாறு சண்ட ப்ரசண்ட குமுதாஷர் முதலானோர்களாலும்

(தெற்கு வாசல் –பத்ரன் -ஸூபத்ரன்
வடக்கு வாசல் -தாத்ரு –விதாத்ரு –
மேற்கு வாசல் -ஜெயன் விஜயன்
கிழக்கு வாசல் -சண்டன் -ப்ர சண்டன்-)

அந்யை பரிஜனைர் நித்யை முக்தைர் போக பராயணை
பரங்குசாத்யைர் பக்தைரப்யா சார்யைஸ் ஸமுபஸ்திதம் –108-

பகவத் கைங்கர்யமே பிரதானமாக யுடைய முக்த புருஷர்களாலும் -நம்மாழ்வார் தொடக்கமான அனைத்து ஆழ்வார்களாலும் ராமாநுஜர் முதலான ஆச்சார்யர்களாலும் மிகுந்த ஆதார அதிசயத்தாலே ஆராதிக்கப் படுமவனாய்

அவாப்த காமம் லோகாநாம் அகிலா நாம தீஸ்வரம்
ஆத்ம அனுபவ ஜாநந்தம் அவாகீ நமநாதரம் –109-

எண்ணிய அனைத்து போகங்களையும் அனுபவிக்கச் செய்பவனாய் -எல்லா உலகங்களுக்கும் நாயகனாய் -தனது சீர்மையை எண்ணி தானே களிப்படைபவனாய் -தன் மிடுக்கின் காரணமாய் எவருக்கும் அடங்காதவனாய் -எவரோடும் உரையாடாதவனாய் –

(ஸ்ரீ வைகுண்ட கத்யத்தில் ஸ்வாமி ஸ்ரீ ஸூக்திகள்-ப⁴க³வந்தம் உபேத்ய –எம்பெருமானைக் கிட்டி
தூ³ராதே³வ ப⁴க³வந்தம் *
ஶேஷபோ⁴கே³ ஶ்ரியா ஸஹாஸீநம் * வைநதேயாதி³பி:⁴ ஸேவ்யமாநம் * “ஸமஸ்தபரிவாராய ஶ்ரீமதே நாராயணாய நம” இதி *–திருவநந்தாழ்வான் திருமுடியில் பெரிய பிராட்டியாரோடே கூட இருப்பவனாய்
பெரிய திருவடி முதலான நித்ய ஸூரிகளாலே ஸேவிதனாய் இருக்கிற அப் பெருமாளை
ஸமஸ்த பரிவார ஸமேதனான ஸ்ரீ மன் நாராயணனுக்கு நம -என்று சொல்லி
நெடும் தூரத்தில் நின்றுமே தெண்டனிட்டு
ப்ரணம்ய உத்தா²ய உத்தா²ய * புந: புந: ப்ரணம்ய அத்யந்த ஸாத்⁴வ ஸவிநயா வநதோ பூ⁴த்வா * ப⁴க³வத் பாரிஷத³ க³ணநாயகை: *
த்³வாரபாலை: * க்ருʼபயா ஸ்நேஹ க³ர்ப⁴யா த்³ருʼஶாঽவலோகித: * ஸம்யக³பி⁴வந்தி³தை: * தைரேவாநுமதோ ப⁴க³வந்தமுபேத்ய *
ஶ்ரீமதா மூலமந்த்ரேண “பகவந்! மாம் ஐகாந்திக ஆத்யந்திக பரிசர்யா கரணாய பரிக்³ருʼஹ்ணீஷ்வ”
இதி யாசமாந: * ப்ரணம்ய ஆத்மாநம் ப⁴க³வதே நிவேத³யேத் ॥ 3 ॥
ப்ரணம்ய உத்தா²ய உத்தா²ய * புந: புந: –காலால் நடந்து செல்லுகை அன்றியே
ப்ரணாம பரம்பரைகளினாலேயே சென்று
ப்ரணம்ய அத்யந்த ஸாத்⁴வ ஸவிநயா வநதோ பூ⁴த்வா –மிகவும் கூச்சத்தோடும் விநயத்தோடும் வணங்கி நின்று
ப⁴க³வத் பாரிஷத³ க³ணநாயகை: *
த்³வாரபாலை: * க்ருʼபயா ஸ்நேஹ க³ர்ப⁴யா த்³ருʼஶாঽவலோகித: –எம்பெருமானது திரு ஓலக்கத்தவர்கள் -கணாநதர்கள் –திருவாசல் காப்பார் -ஆகிய இவர்களாலே கிருபையோடே அன்பு ததும்பக் கடாக்ஷிக்கப் பெற்றவனாய்
ஸம்யக³பி⁴வந்தி³தை: * தைரேவாநுமதோ –நன்கு தண்டன் இடப்பட்ட அவ்வவர்களாலே அநுமதி பண்ணப் பெற்றவனாய்
ப⁴க³வந்தமுபேத்ய *
ஶ்ரீமதா மூலமந்த்ரேண –ஸ்ரீ வைகுண்ட நாதனை அணுகி
திரு அஷ்டாக்ஷர மஹா மந்த்ரத்தைக் கொண்டு
பகவந்! மாம் ஐகாந்திக ஆத்யந்திக பரிசர்யா கரணாய பரிக்³ருʼஹ்ணீஷ்வ”
இதி யாசமாந: * ப்ரணம்ய –அடியேனை அநந்ய நித்ய கைங்கர்யத்தைக் கொண்டு அருள வேணும் என்று
யாசிப்பவனாய்த் தெண்டனிட்டு
ஆத்மாநம் ப⁴க³வதே நிவேத³யேத்-தன்னை அப்பெருமானுக்கு ஸமர்ப்பிக்கக் கடவன்
ஆத்ம ஸமர்ப்பணத்திற்குப் பின்:
ததோ ப⁴க³வதா ஸ்வயமேவ * ஆத்மஸஞ்ஜீவநேந * அமர்யாதா³ ஶீலவதா * அதி ப்ரேமாந்விதேந *
அவலோகநேநா அவலோக்ய * ஸர்வதே³ஶ ஸர்வகால ஸர்வாவஸ்தோ²சித * அத்யந்த ஶேஷபா⁴வாய *
ஸ்வீக்ருʼத: அநுஜ்ஞாதஶ்ச * அத்யந்த ஸாத்⁴வ ஸவிநயாவநத: * கிங்குர்வாண: க்ருʼதாஞ்ஜலிபுட: * ப⁴க³வந்தம் உபாஸீத ॥ 4 ॥
ததோ –ஆத்ம சமர்ப்பண அநந்தரம்
ப⁴க³வதா ஸ்வயமேவ -எம்பெருமான் தானாகவே
ஆத்மஸஞ்ஜீவநேந * அமர்யாதா³ ஶீலவதா * அதி ப்ரேமாந்விதேந *
அவலோகநேநா அவலோக்ய -ஆத்ம ஸம் உஜ்ஜீவன ஹேதுவாய்
அளவுகடந்த சீல குணத்தைக் காட்டுமதாய்
மிக அன்போடு கூடியதான கடாக்ஷத்தினால் நோக்கி
ஸர்வதே³ஶ ஸர்வகால ஸர்வாவஸ்தோ²சித * அத்யந்த ஶேஷபா⁴வாய *ஸ்வீக்ருʼத: –ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு விலா அடிமை செய்யுமாறு
ஸ்வீ கரிக்க
அப்பேறு பெற்றவனாகி
அநுஜ்ஞாதஶ்ச –ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார் -என்கிறபடி ஏவவும் பெற்றவனாகி
அத்யந்த ஸாத்⁴வ ஸவிநயாவநத: * கிங்குர்வாண: க்ருʼதாஞ்ஜலிபுட: * ப⁴க³வந்தம் உபாஸீத -மிகவும் அச்சத்தாலும் ஒடுக்கத்தாலும்
தலை சாய்த்துப் பணிவிடைக்காரனாய் இருந்து கொண்டு
கூப்பிய கையனாய்
அப்பெருமானை அநு வர்த்தித்து இருப்பன் ததஶ்ச அநுபூ⁴யமாந பா⁴வவிஶேஷ: * நிரதிஶய ப்ரீத்யா அந்யத் கிஞ்சித் கர்த்தும் த்³ரஷ்டும் ஸ்மர்த்தும் அஶக்த: *
புநரபி ஶேஷபா⁴வமேவ யாசமாந: * ப⁴க³வந்தமேவ * அவிச்சி²ந்ந ஸ்ரோதோரூபேண * அவலோகநேந * அவலோகயந் ஆஸீத ॥ 5 ॥
பின்னையும் எம்பெருமானுடைய ஸ்வரூப ஸ்வ பாதிகளை அநு பவியா நின்று கொண்டு
அளவு கடந்த அன்பினால் வேறு ஒன்றைப் பண்ணுதல் பார்த்தல் நினைத்தால் செய்ய மாட்டாதானாய் –
சேஷத்வம் பெற்று இருக்கச் செய்தேயும் -அதின் இனிமையாலே -இது நிலை நிற்கப் போகிறதோ என்கிற அதி சங்கை கொண்டு –
பின்னையும் இப்படிப்பட்ட சேஷ விருத்தி குலையாதே நிலை நிற்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு
ஸ்ரீ வைகுண்ட நாதனையே இடைவிடாத தாரா ரூபமான பார்வையாலே பார்த்துக் கொண்டு இருக்கக் கடவன் –
ததோ ப⁴க³வதா ஸ்வயமேவ * ஆத்மஸஞ்ஜீவநேந * அவலோகநேந அவலோக்ய * ஸஸ்மிதமாஹூய *
ஸமஸ்தக்லேஶாபஹம் * நிரதிஶய ஸுகா²வஹம் * ஆத்மீயம் * ஶ்ரீமத்பாதா³ரவிந்த³யுக³ளம் *
ஶிரஸி க்ருʼதம் த்⁴யாத்வா * அம்ருʼதஸாக³ர அந்தர்நிமக்³ந: * ஸர்வாவயவ: ஸுக²மாஸீத ॥ 6 ॥
அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான் நான் யார் -என்று ஸ்வரூபத்தை நினைத்து அகலா நிற்க
அப்பெருமான் தானே அழகிய திருக்கண் நோக்கத்தாலே குளிரக் கடாக்ஷித்துப் புன் முறுவல் செய்து
இங்கனே வாராய் என்று திருச் சோதி வாய் திறந்து அழைத்து
ஸகல கிலேசங்களையும் போக்கக் கடவதாய்
இனி இதுக்கு இவ்வருகு இல்லை என்னலாம் படியான ஆனந்தத்தைப் பண்ணக் கடவதான
தனது திருவடித் தாமரை இணையைத் தன் தலையிலே வைத்து அருளினதாகத் த்யானம் பண்ணி
அறிவை என்னும் அமுதவாறு தலைப்பற்றி வாய்க் கொண்டதே -என்கிறபடியே ஆனந்த அமுதக் கடலினுள்ளே ஸர்வ அவயவங்களும் மூழ்கப் பெற்றவனாய்க் கொண்டு இந்து இருப்பன்
லக்ஷ்மீபதேர்யதிபதேஶ்ச த³யைகதா⁴ம்நோ:
யோঽஸௌபுரா ஸமஜநிஷ்ட ஜகத்³தி⁴தார்த²ம் |
ப்ராச்யம் ப்ரகாஶயது நঃ பரமம் ரஹஸ்யம்
ஸம்வாத³ ஏஷ ஶரணாக³தி மந்த்ரஸார: ||

॥ இதி ஶ்ரீப⁴க³வத்³ராமாநுஜமுநிவிரசிதே ஶ்ரீவைகுண்ட²க³த்³யம் ஸமாப்தம் ॥)

பவந்தம் தத்ர த்ரஷ்ட்வா ச ப்ரணம்ய பவதா ஸ்வயம்
அங்கம் ஆரோபித ப்ரேம்ணா புஜைர் ஆலிங்கிதஸ் ததா –110

இவ்வாறு குறிப்பிட்ட ஏற்றங்களை யுடைய உன்னை -அந்த பரமபதத்தில் கண்டு -தொழுது -உன்னாலேயே சுயமாய் அன்புடன் உன் தொடை மேல் உட்கார வைக்கப்பட்டவனாய் -அவ்வாறே தோள்களை ஆரத்தழுவப் பட்டவனாய்

(கண்ணுள் நின்று அகலான் கருத்தின் கண் பெரியன் -இன்னும் என் செய்வன் என்று ஒருத்தி -மறப்பனோ என் மணியை -மறப்பேன் என்றும் செந்தாமரைக் கண்ணுடன் மறப்பற என்னுள் மன்னினான் தன்னை -மறப்பனோ -)

ஆக்ராதோ மூர்த்திநஸ் ஸ்நேஹம் ஆர்த்ரா லோகாபி வீக்ஷித
ஸ்ருணுயாம் ஸாந்த்வ வாக்யாநி ஸ்ரோத்ரு கர்ண அம்ருதாநி தே –111-

ஸ்நேஹ பாவத்தால் உச்சி நுகரப்பட்டவனாய் குளிர்ந்த கடாக்ஷத்துக்கு இலக்கானவனாய் -கேட்க்குமவர் செவிகளுக்கு அம்ருதம் ஊற்றினால் போல் நீ சொல்லும் தோற்றரவு வார்த்தைகளை எப்பொழுது கேட்கப் பெறுவேனோ அல்லவா-

(கோஸி -கேட்டு -அறிவித்து அருளிய நீ -அஹம் ப்ரஹ்மாஸ்மி -அப்ருதக் ஸித்த பிரகாரம்-கீழ் மா ஸூச இப்பொழுது குருஷ்வ -ஏவிப்பணி கொண்டு அருள வேண்டும் -)

தத ப்ரணம்ய புரத பார்ஸ்வ யோஸ்த்வாம் து ப்ருஷ்டத
பக்தி ரூப ப்ரபோதேன பஸ்யந் ஸஹ விபூதிபி
–112-

ஸர்வத்ர ப்ரஸ்ருதாஹ்லாத ஹடாத் காரேண காரித சோதித
த்வரமாணஸ் ஸதா குர்யாம் கைங்கர்யாண் யகிலாந் யஹம் –113-

இனி மேல் உன்னை நேரிலும் இரு பக்கங்களிலும் பின்புறமும் ப்ரதக்ஷிணமாக வந்து தொழுது பக்தியான திவ்ய ஞான ப்ரபாவத்தினால் அனைத்தும் செல்வங்களுடன் கண்டு கொண்டு எங்கும் பொங்கி வரும் களிப்பின் தாக்கத்தினால் தூண்டப் பட்டவனாய் எப்போதும் த்வரை உடையவனாய் அனைத்து விதமான கைங்கர்யங்களையும் அடியேன் செய்யப் பெறுவேன்

பல்லாண் டென்று பவித்திர னைப்பர மேட்டியை சார்ங்கமென்னும்
வில்லாண் டான்தன்னை வில்லிபுத்தூர்விட்டு சித்தன் விரும்பியசொல்
நல்லாண் டென்று நவின்றுரைப் பார்நமோ நாராய ணாயவென்று
பல்லாண் டும்பர மாத்மனைச் சூழ்ந்திருந் தேத்துவர் பல்லாண்டே.)

(பக்தி ரூபாபன்ன ஞானம் -அனைத்து செல்வங்களுடன் கூடிய அவனைப் பார்த்து சேவிக்கப் பெற்றவனாய்முன்னிலும் பின் அழகு பெருமாள் -)

ஏகதா தசதா சைவ சததாத ஸஹஸ்ரதா
அநந்ததா ஸ்வ சங்கல்பாத் ஆத்ம கிங்கர விக்ரஹ–11
4-

ஒரே வடிவுடனும் -பத்து நூறு ஆயிரம் எண்ணற்ற வடிவங்களுடனும் எனக்குத் தோன்றின எண்ணங்களைக் குறித்து அந்தந்த கைங்கர்யங்களுக்கு ஏற்றதான வடிவங்களைப் பெற்றவனாய்

(மேலைத் தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லப் பெற்றேன் -உற்றேன் -உகந்து பணி செய்து உனபாதம் பெற்றேன் -திருவடிகளே சாதனமும் பிராப்பியமும் -ஈதே இன்னும் வேண்டுவது எந்தாய் -)

(தனது சங்கல்பத்தினால் மட்டுமே முக்தி நிலையில் ஜீவன் தன் விருப்பங்களை அடைகிறான் என்று நிரூபிக்கப் படுகிறது –
4-4-8-சங்கல்பாத் ஏவ தத்ஸ்ருதே –
சங்கல்பத்தால் மட்டுமே -என்கிறது
சாந்தோக்யம் -8-2-1-
ச யதி பித்ரு லோகே காமோ பவதி சங்கல்பாதேவ பிதர -அஸ்ய சமுத்திஷ்டந்தி -என்று
முக்தன் பித்ருக்களை காண வேண்டும் என்று விரும்பினால்
அவனது சங்கல்பத்தால் பித்ருக்கள் காட்சி அளிப்பார்கள் என்றது
சங்கல்பாத் ஏவ -சங்கல்பத்தினால் மட்டுமே என்றபடி –
4-4-17-ஜகத் வ்யாபார வர்ஜம் ப்ரகரணாத் அசந்நிஹிதத்வாத் ச —
நிரஞ்சன பரமம் சாம்யமுபைதி -முண்டகம் -3-1-3- என்றதாலும்
சத்ய சங்கல்பத்வம் உள்ளவன் என்றதாலும்
சர்வேஸ்வரத்வம் முக்தனுக்கும் உண்டு
என்பர் பூர்வ பஷி
எனவே உலகை படைத்தல் என்னும் ஐஸ்வர் யமும் உண்டு என்பர்-
அப்படி அல்ல
தைத்ரியம்–3-1–யதோ வா இமானி ஜீவந்தி யத் பிரயந்த்யபி சம்விசசந்தி தத் விஜிஜாஞஸஸ்வ தத் ப்ரஹ்ம -என்று
ப்ரஹ்மத்துக்கே உரிய சர்வேஸ்வரத்வ லஷணம் பொருந்த வேண்டுமே)

யதா திவ்யேஷு லோகேஷு ததா த்வத் தயயா ஸ்ருத
இமாந் லோகாந் காம போக காம ரூப்ய நுஸஞ்சரன்
–115-

உன்னுடைய தயைக்கு இலக்கானவனாய் -ஸ்ரீ வைகுண்டத்தில் அந்தந்த அவாந்தர உலகங்களைப் போன்று வேண்டிய வடிவங்களைப் பெற்று -வேண்டின போகங்களை அனுபவித்து -லீலா விபூதியான இவ்வுலகத்திலும் கூட உன்னுடன் வழி நடப்பவனாய்

இமாந் லோகாந் காமாந் நீ காம ரூப்ய அநு சஞ்சரன்
ஸோஸ்னுதே சேர்வான் காமாந் ஸஹ

ஸர்வதா தூர வித்வஸ்த துக்க லேஸல வாம்சக
குண அனுபவஜ ப்ரீத்யா குர்யாம் தாஸ்யமசேஷத–116-

ஒரே வடிவுடனும் -பத்து நூறு ஆயிரம் எண்ணற்ற வடிவங்களுடனும் எனக்குத் தோன்றின எண்ணங்களைக் குறித்து அந்தந்த கைங்கர்யங்களுக்கு ஏற்றதான வடிவங்களைப் பெற்றவனாய் -உன்னுடைய தயைக்கு இலக்கானவனாய் -ஸ்ரீ வைகுண்டத்தில் அந்தந்த அவாந்தர உலகங்களைப் போன்று வேண்டிய வடிவங்களைப் பெற்று -வேண்டின போகங்களை அனுபவித்து -லீலா விபூதியான இவ்வுலகத்திலும் கூட உன்னுடன் வழி நடப்பவனாய் -அணு மாத்திரமும் துன்பம் அற்றவனாய் -எப்போதும் உன் ஒவ்வொரு குணத்தையும் ப்ரத்யக்ஷமாய் அனுபவித்ததனால் உண்டாகும் இன்பத்தின் மிகுதியால் பல்வேறு கைங்கர்யங்களைச் செய்யக் கடவேன்

யதா சேஷம் ச கருடம் ஸூமித்ரா தநயம் ததா
குருஷ்வ மாம் அநு சரம் தயயைவ தயா நிதே –117-

கருணைக் கடலே ஆதிசேஷனான திருவனந்த ஆழ்வானையும் வைநதேயனான பெரிய திருவடியையும் ஸூமித்ரையின் புதல்வனான லஷ்மணனையும் எவ்விதமாக ஆட்க்கொண்டு அடிமை கொண்டாயோ அவ்விதமே பின்பற்றும் அடியேனையும் உனது கருணையால் ஆட்க்கொண்டு அடிமை கொள்ள வேண்டும் -(ஸூமித்ரா தனய-கைங்கர்யத்துக்காகவே பெற்றவள் பெயர் உத்தேச்யம் அன்றோ-முகப்பே கூவிப் பணி கொள்வாய் -கூவுதல் வருதல் செய்து -குருஷ்வ மாம் அநு சரம் – -)

ஆத்ம அந்தராத்ம ரூபேண ஸ்திதம் ச அனுபவன் ஸதா
பவந்தம் அநுவரத்தேய ஸ்வச் சந்த அனுகதாத்மக –118-

எவனிடமிருந்து பிரிக்க ஒண்ணாத என் அந்தராத்மாவாய் நிலை பெற்று இருக்கும் உன்னைக் தர்சித்துக் கொண்டு ஸங்கல்ப அனுசாரமாய் விரும்பிய சரீரங்களைப் பெற்றவனாய் உன்னைப் பின் பற்றினவனாய் அடியேன் இருக்க வேண்டும் –

(பேரேன் என்றும் என்னெஞ்சு நிறையப் புகுந்தான் திருப்பேர் நகரான்)

பஸ்யந் நமந் ஸமுத்திஷ்டன் ப்ரவ்ருத்த ப்ரணயோ பவந்
ஸ்துவந் ந்ருத்யந் ப்ரமோதேந பவேயம் பவதந்திகே –119-

உன்னையே தர்சித்துக் கொண்டும் தொழுது எழுந்தவனாய் உன் மேல் அன்பின் மிகுதியை வளர்த்துக் கொண்டும் ஸ்துதித்துக் கொண்டும் மகிழ்ச்சியுடன் கும்பீடு நாட்டமிட்டாடிக் கொண்டும் உனது சந்நிதியிலேயே இருப்பேனாக –

யாவதாத்ம மஹம் ஹர்ஷாத் ஸாம காயன் ஸஹாமரை
ஆஸிஷீய ஸ்ரீயா ஸார்த்தம் பவந்தம் அபி நிர் விசந் –120-

இவ்வாத்மா உள்ளத்தையும் அடியேன் மகிழ்ச்சியுடன் அமரர்களான நித்ய ஸூரிகளுடன் சேர்ந்து ஸாமகாநம் பண்ணிக் கொண்டு திருமகளோடு இனிது அமர்ந்து இருக்கும் உன்னை ஸேவித்துக் கொண்டே இருப்பேனாக –

(இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும் இவ் வேழுலகை
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்
அன்புற் றமர்ந் துறைகின்ற அணி பொழில் சூழ் திரு வாறன்விளை
அன்புற் றமர்ந்து வலஞ்செய்து கைதொழும் நாள்களு மாகுங் கொலோ?–7-10-1-)

(தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார்
மேவிய வுலகம் மூன்றவை யாட்சி வேண்டு வேண்டுருவம் நின்னுருவம்
பாவியேன் தன்னை யடுகின்ற கமலக் கண்ணது ஓர் பவளவாய் மணியே
ஆவியே அமுதே அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாயே–8-1-1-)

இத்தம் த்வத் சந்நிதவ் வாசமுக்தாம் மம தயா நிதே
ஸத்யாம் குருஷ்வ தயயா ததா தத் ப்ரதிபாதநாத் –121-

கருணைக் கடலே இவ்வளவிலே இந்த கிரந்தத்தில் முழுமையாக வெளியிடப்பட்டு உனது திருவடித் தாமரைகளில் அடியேன் விண்ணப்பித்தத்தை உனது கருணையால் அறுதியிடப்பட்ட பயன்களை அருளி மெய்ப்பிக்க வேணும் –

(எங்கனே சொல்லிலிலும் இன்பம் பயக்கும் அன்றோ -இளைய புன் கவிதையேலும் எம்பிராற்கு இனியவாறே)

சவும்ய ஜாமாத்ரு முநிநா ஸம்யக் த்ருஷ்டாமி மாம் ஸதா
சிந்தாமத் யாத்ம விஷயாம் பரிசின்வந் பவேத் ஸூகீ –122-

அழகிய மணவாளச் சீயர் என்ற பெயருடைய இந்த கிரந்த கர்த்தாவினா செம்மையாக ஸாஸ்திரங்களில் கூறப்பட்டு ரீதியில் தெளிவாக உள்வாங்கிக் கொண்ட தன்னுடைய ஆத்மாவின் விசாரங்கள் அனைத்தையுமே எப்பொழுதும் அநுஸந்திக்குமவன் எல்லையில்லா ஆனந்தம் பெருகவானாக –

————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ அருளிச் செயல்களில் – ஸ்ரீ ராமாவதாரம் –ஸ்ரீ -ஆழ்வார்கள் உகந்த ஸ்ரீ ராமன் –

April 2, 2025

சத்ருக்கனன் விஷ்வக்சேனர் அம்சம்-கோவிந்தராஜன் -பரதன் கருட அம்சம் –

சத்ருக்கனன் சக்கரத்தாழ்வார் அம்சம் –பாஞ்ச ஜன்ய அம்சம் கம்பர்

தனது பாதுகையைத் தானே ஆராதிக்க தனது அம்சமாக பரதன்

தர்ம அனுஷ்டானங்களுக்கு நால்வர்

———-

1-ஸ்ரீ ராம அவதாரம்
2-தாடகா வதம்
3-விச்வா மித்ரா யாக ரக்ஷணம்
4-ஸூபாஹூ வதம்
5-ஸ்ரீ சீதா விவாஹம்
6-வன கமனம்
7-குஹ ஸஹ்யம்
8-பரத கமனம்
9-ஸ்ரீ பாதுகா பிரதானம்
10-காகாஸூர பங்கம்
11-விராத வதம்
12-சூர்பணகா பங்கம்
13-கர தூஷண வதம்
14-மாரீச வதம்
15-சீதா வியோகம்
16-ஜடாயு மோக்ஷம்
17-கபந்த வதம்
18-சீதா அசோகா வன வாசம்
19-ஹனுமத் சமாகாமம்
20-சுக்ரீவ சக்யம்
21-மராமரம் எய்தல்
22-வாலி வதம்
23-அங்குலீய பிரதானம்
24-அசோக வன பங்கம்
25-சமுத்திர சரணாகதி
26-சமுத்திர ராஜனைக் கோபித்தல்
27-சேது பந்தம்
28-விபீஷண உபதேசம்
29-லங்கா பங்கம்
30-கும்ப கர்ண வதம்
31-ராக்ஷஸ வதம்
32-இந்திரஜித் வதம்
33-ராவண வதம்
34-ராக்ஷஸ ஸ்தோத்ரம்
35-ஸ்ரீ விபீஷண பட்டாபிஷேகம்
36-ராக்ஷஸ சரணாகதி
37-ராக்ஷஸ வதம்
38-பாதாள கத ராக்ஷஸ வதம்
39-ஸ்ரீ ராம பட்டாபிஷேகம்
40-குச லவ காநம்
41-லவண வதம்
42-லஷ்மண வியோகம்
43-ஸ்ரீ ராம பரமபத கமனம்

—————————————————
தழும்பிருந்த சார்ங்க நாண் தோய்ந்த –பொய்கையார் -23-
சார்ங்க பாணி யல்லையே–திருச்சந்த –15-
குரங்கை ஆளுகந்த வெந்தை –21-
கொங்கு மலி கரும் குழலாள் கௌசலை தன் குல மதலையாய் தனக்கு பெரும் புகழ் சனகன் திரு மருகா தாசரதீ –பெருமாள் திரு –8–3-
தயரதன் தன் மா மதலாய் மைதிலி தன் மணவாளா –8–4-
சிலை வலவா–சேவகனே –சீராமா –8–8-
ஏவரி வெஞ்சிலை வலவா இராகவனே—8–10-
எல்லையில் சீர் தயரதன் தன் மகனாய்த் தோன்றிற்று –10–11-
கதிர் ஆயிரம் இரவி கலந்து எரித்தால் ஓக்க நீண் முடியன் –இராமன் –பெரியாழ்வார் –4–1–1-
நாந்தகம் சங்கு தண்டு நாண் ஒலிச் சார்ங்கத் திருச் சக்கரம் ஏந்து பெருமை இராமனை இருக்குமிடம் நாடுதிரேல் —4–1–2-
மன்னுடைய விபீடணற்கா மதில் இலங்கைத் திசை நோக்கி மலர்க்கண் வைத்த என்னுடைய
திருவரங்கற்கு அன்றியும் மற்று ஒருவர்க்கு ஆளாவரே–4–9–2-
கணை நாணில் ஆவாத் தொழில் சார்ங்கம் தொல் சீரை நல் நெஞ்சே ஓவாத ஊணாக உண்–பெரிய திருவந்தாதி -78-
நீள் கடல் சூழ் இலங்கைக் கோன் தோள்கள் தலை துணி செய்தான் தாள்கள் தலையில் வணங்கி —1–6–7-
தொழுமின் அவனைத் தொழுதால் வழி நின்ற வல்வினை மாள்வித்து அழிவின்றி ஆக்கம் தருமே —1–6–8-
தயரதற்கு மகன் தன்னை யன்றி மற்றிலேன் தஞ்சமாகவே –3–6–8-
காயும் கடும் சிலை காகுத்தன் வாரானால் -5–4–3-
நின்றவாறும் இருந்தவாறும் கிடந்தவாறும் நினைப்பரியன —ஸ்ரீ ராம / ஸ்ரீ கிருஷ்ண அவதாரங்களிலும் காணலாமே –5–10–6-
காண் பெரும் தோற்றத்து எம் காகுத்த நம்பிக்கு –6–6–9-
உலகத்தை அலைக்கும் அசுரர் வாணாள் மேல் தீவாய் வாளி மழை பொழிந்த சிலையா திரு மா மகள் கேள்வா தேவா –6–10–4-
திணரார் சார்ங்கத்து உன பாதம் சேர்வது அடியேன் என்னாளே –6–10–5-
காகுத்தா கண்ணனே –7–2–3-
கற்பார் இராமபிரானை யல்லால் மற்றும் கற்பரோ –7–5–1-
என்னாருயிர்க் காகுத்தன் —கூட்டுண்டு நீங்கினான் –9–5–6-
மை வண்ண நறும் குஞ்சிக் குழல் பின் தாழ இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் –திரு நெடும் தாண் –21-
சிலையாளா –கலியன் –3–6–9-
ஏதவன் தொல் பிறப்பு இளையவன் வளையூதி—3–7–4-
வன் துணை வானவர்க்காய் வரம் சேற்று –3–7–6-
தாசாரதியாய தட மார்வன் –8–4–7-
வாள் அரக்கர் காலன் –8–4–8-
வையம் எல்லாம் உடன் வணங்க வணங்கா மன்னனாய்த் தோன்றி வெய்ய சீற்றக் கடியிலங்கை குடி கொண்டோட வெஞ்சமத்துச் செய்ய வெம்போர் நம்பரனை –8-8-7-
தெய்வச் சிலையாற்கு என் சிந்தை நோய் செப்புமினே –9–4–3-
இராக்கதர் வாழ் இலங்கை பாழாளாகப் படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே –திருப்பல்லாண்டு -3-
இராவணன் தலை பத்து என எம்பெருமான் பிரம்மாவுக்கு காட்டிக் கொடுத்தது -ஆமே –பொய்கையார் -45-/ஆய்ந்த -பேயார் -77-/ கொண்டு -நான்முகன் -44-
—————————————————-
தாடகை வதம்
திண் திறளாள் தாடகை தன் உரமுருவச் சிலை வளைத்தாய் –பெருமாள் திரு –8–2-
வந்து எதிர்ந்த தாடகை தன்னுரைத்தைக் கீறி –10–2-
முன் வில் வலித்து முது பெண்ணுயிர் உண்டான் தன் வில்லின் வன்மையைப் பாடிப் பற –பெரியாழ்வார் –3–9–2-
வாய்த்த மலை போலும் தன்னிகர் ஓன்று இல்லாத தாடகையை மா முனிக்காத் தென்னுலகம் ஏற்றுவித்த திண் திறலும் –பெரிய திரு மடல்
வல்லாள் அரக்கர் குலப்பாவை வாட–கலியன் –8–6–3-
சுடு சரமடு சிலைத் துரந்து நீர்மையிலாத தாடகை மாள நினைத்தவர் –9–8–4-
———————————
விச்வாமித்ரர் வேள்வி காத்தல்
மா முனி வேள்வியைக் காத்து –திருப்பள்ளி எழுச்சி -4-
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து –பெருமாள் திரு -10–2-
முனிவன் வேள்வியை கல்விச் சிலையால் காத்தான் –கலியன் -8–6–2-
————————-
ஸூபாஹூ வதம்
வல்லரக்கர் உயிருண்ட மைந்தன் –பெருமாள் திரு –10–2-
———————-
ஸ்ரீ சீதா விவாஹம்
சிலை ஓன்று இறுத்தாய் –பெரியாழ்வார் –2–3–7-
செறிந்த மணி முடிச் சனகன் சிலை இறுத்து நினைக் கொணர்ந்து —-3–10–1-
காந்தள் முகிழ் விறல் சீதைக்காகிக் கடும் சிலை சென்று இறுக்க வேந்தர் தலைவன் சனகராசன் தன் வேள்வியில் கண்டார் உளர் –4- -1–2-
சிற்றாயர் சிங்கமே சீதை மணாளா –பெரியாழ்வார் –3–3–5-
சீதை வாய் அமுதம் உண்டாய் –நாச்சியார் -2–10-
வேய் போலும் எழில் தோளி தன் பொருட்டா விடையோன் தன் வில்லைச் செற்றாய் –பெருமாள் திருமொழி –9–4-
வெவ்வரி நல் கரு நெடும் கண் சீதைக்காகிச் சின விடையோன் சிலை இறுத்து —10–3-
வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்றும் –திரு நெடும் தாண் -13-
விரை கமழ்ந்த மென் கரும் குழல் காரணம் வில்லிறுத்து –கலியன் —3–1–8-
வாராரும் இளம் கொங்கை மைதிலியை மணம் புணர்வான் காரார் திண் சிலை இறுத்த தனிக் காளை கருதுமிடம்–4- -1–8-
உடனாய வில்லென்ன வல்லேயதனை இறுத்திட்டு அவள் இன்பம் அன்போடு அணைந்திட்டு —10–6–8-
கூனி கூனை நிமிர்த்தல்
கூனகம் புகத் தெறிந்த சொற்ற வில்லி யல்லையே –திருச்சந்த –30-
கொண்டை கொண்ட கோதை மீது தேனுலாவு கூனி கூன் உண்டை கொண்ட ரங்க வோட்டி உள் மகிழ்ந்த நாதனூர்-49-
ஒரு கால் நின்று உண்டை கொண்டோட்டி வன் கூன் நிமிர நினைத்த பெருமான் –கலியன் –10–6–2-
கூனே சிதைய யுண்டை வில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா –திருவாய் –1–5–5-
———————–
வனம் புகுதல்
பின்னின்று தாய் இரப்பக் கேளான் சொல் நின்ற தோள் நலந்தான் நேரில்லாதத் தோன்றல் –பூதத்தார் -79-
பாராளும் படர் செல்வம் பரத நம்பிக்கே யருளி ஆரா யன்பின் இளையனோடு யரும் கானம் அடைந்தவன் –பெருமாள் திரு –8–5-
சுற்றம் எல்லாம் பின் தொடரத் தொல் கானம் அடைந்தவனே—8–6-
சிற்றவை தன் சொல் கொண்ட சீ ராமா –8–6-
வன் தாளிணை வணங்கி வள நகரம் தொழுது ஏத்த மன்னனாவான் நின்றாயை அரியணை மேல் இருந்தாயை நெடும் கானம் படரப் போகு
நேரிழையும் இளம் கோவும் பின்பு போக எவ்வாறு நடந்தனை எம்மிராமாவோ –9-2-
மெல்லணை மேல் முன் துயின்றாய் இனிப் போய் வியன் கான மரத்தின் நீழல் கல்லணை மேல் கண் துயிலக் கற்றனையோ –9–3-
காகுத்தா கரிய கோவே வா போகு வா இன்னம் வந்தொருகால் கண்டு போ மலராள் கூந்தல்
வேய் போலும் எழில் தோளி தன் பொருட்டா விடையோன் தன் வில்லைச் செற்றாய் –9–4-
இன்று பெரும் பாவியேன் மகனே போகின்றாய் கேகயர் கோன் மகளாய்ப் பெற்ற யரும் பாவி சொல் கேட்ட வருவினையேன் என் செய்கேன் யந்தோ யானே -9-5-
அம்மா வென்று உகந்து அழைக்கும் ஆர்வச் சொல் கேளாதே யணி சேர் மார்வம் என் மார்வத்திடை யழுந்தத் தழுவாதே முழுசாதே மோவாதுச்சி
கைம்மாவின் நடையன்ன மென்னடையும் கமலம் போலே முகமும் காணாது யெம்மானை என் மகனை இகழ்ந்திட்ட இழிதகையேன் இருக்கின்றேனே –9–6-
பூ மருவி நறுங்குஞ்சி புன்சடையாப் புனைந்து பூந்துகில் சேர் அல்குல் காமர் எழில் விழல் உடுத்துக் கலன் அணியாது அங்கங்கள் அழகு மாறி
ஏமரு தோள் என் புதல்வன் யான் இன்று செலத் தக்க வனம் தான் சேர்த்தல் தூ மறை ஈரிது தகவோ சுமந்திரனே வசிட்டனே சொல் நீரே –9–7-
பொன் பெற்றார் எழில் வேதப் புதல்வனையும் தம்பியையும் பூவை போலும் மின் பற்றா நுண் மருங்குல் மெல்லியல் என் மருகியையும் வனத்தில் போக்கி
நின் பற்றா நின் மகன் மேல் பழி விளைத்திட்டு என்னையும் நீள் வானில் போக்க என் பெற்றாய் கைகேசீ இரு நிலத்தில் இனிதாக இருக்கின்றாயே–9–8-
முன்னொரு நாள் மழுவாளி சிலை வாங்கி அவன் தவத்தை முற்றும் செற்றாய் உன்னையும் உண் அருமையும்
உன் மோயின் வருத்தமும் ஒன்றாகக் கொள்ளாது என்னையும் என் மெய் யுரையும் மெய்யாகக் கொண்டு
வனம் புக்க வெந்தாய் நின்னையே மகனாகப் பெறப் பெறுவேன் ஏழ்பிறப்பும் நெடுந்தோள் வேந்தே –9-9-
தேனகு மா மலர்க்கூந்தல் கௌசலையும் சுமத்திரையும் சிந்தை நோவ கூனுருவின் கொடும் கொழுத்தை சொல் கேட்ட கொடியவள் தன் சொல் கொண்டு
இன்று கானகமே மிக விரும்பி நீ துறந்த வள நகரைத் துறந்து நானும் வானகமே மிக விரும்பிப் போகின்றேன் மனு குலத்தோர் தங்கள் கோவே –9–10-
ஏரார்ந்த கரு நெடுமால் இராமனாய் வனம் புக்க அதனுக்கு ஆற்றாத் தாரார்ந்த தடவரைத்தோள் தயரதன் தாம் புலம்பிய அப்புலம்பல் தன்னை
கூரார்ந்த வேல் வலவன் கோழியர் கோன் குடைக் குலசேகரன் சொல் செய்த சீரார்ந்த தமிழ் மாலை இவை வல்லார் தீ நெறிக் கண் செல்லார் தாமே —9–11-
தொத்தலர் பூஞ்சுரி குழல் கைகேசி சொல்லால் தொன்னகரம் துறந்து துறைக் கங்கை தன்னை வனம் போய்ப் புக்கு –10–4-
கொங்கை வன் கூனி சொல் கொண்டு குவலயத் துங்கக் கரியும் புரியும் இராச்சியமும் எங்கும் பரதற்கு அருளி வன் கானடை— பெரியாழ்வார் –2–1—8-
மாற்றுத் தாய் சென்று வானம் போகே என்றிட -ஈற்றுத் தாய் பின் தொடர்ந்து எம்பிரான் என்று அழக்
கூற்றுத் தாய் சொல்லக் கொடிய வனம் போன சீற்றம் இலாதானைப் பாடிப் பற —3–9–4-
தார்க்கிளம் தம்பிக்கு அரசீந்து தண்டகம் நூற்றவள் சொல் கொண்டு போகி –3–9–8-
கலக்கிய மா மனத்தனளாய்க் கைகேயி வரம் வேண்ட மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மறாது ஒழிய
குலக்குமரா காடுறையப் போ வென்று விடை கொடுப்ப இலக்குமணன் தன்னோடும் அங்கு ஏகியதும் –3–10–3-
கூன் தொழுத்தை சிதை குரைப்பக் கொடியவள் வாய் கடிய சொல் கேட்டு ஈன்று எடுத்த தாயரையும்
இராச்சியமும் ஆங்கு ஒழிய கான் தொடுத்த நெறி போகிக் கண்டா அசுரரைக் களைந்தான் –4–8–4-
போர்வேந்தன் தன்னுடைய தாதை பணியால் அரசு ஒழிந்து பொன்னகரம் பின்னே புலம்ப வலம் கொண்டு மின்னும் வள நாடு கை விட்டு —
கொன்னவிலும் வெம் கானாத்தூடு –மன்னன் இராமன் பின் வைதேவி –அன்ன நடையை வணங்கு நடந்திலளே –பெரிய திருமடல் –
சிற்றவை பணியால் முடி துறந்தானை –கலியன் –2–3-1-
கூனுலாவிய மடந்தை தன் கொடும் சொலின் –திறத்து இளம் கொடியோடும் கானுலாவிய கரு முகில் திரு நிறத்தவன் —3–1–6-
தம்பியோடு தாமொருவர் தன் துணைவி காதல் துணையாக முன நாள் வெம்பி எரி கானகம் உலாவுமவர் தாம் இனிது மேவு நகர் தான் –5–10–6-
வில்லேர் நுதல் வேல் நெடும் கண்ணியும் நீயும் கல்லார் கடும் கானம் திரிந்த களிறே –7–1–5-
மானமரு மென்னொக்கி வைதேவி இன் துணையாக் கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்தான் —11–5–1-
————————————–
குகன் தோழமை
பக்தியுடைக் குகன் கடத்த வனம் போய்ப் புக்கு —பெருமாள் –10–4-
கூரணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கை தன்னில் சீரணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம் –பெரியாழ்வார் –3–10–4-
ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்றவற்கு இன்னருள் சுரந்து —
உகந்து தோழன் நீ எனக்கு இங்கு இங்கு ஒழி என்ற சொற்கள் —கலியன் —5–8–1-
—————————————–
பரதன் வருதல்
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த காலத்து தேனமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து இருப்ப
பான் மொழியாய் பரத நம்பி பணிந்ததும் ஓர் அடையாளம் —பெரியாழ்வார் –3–10–5-
——————————
ஸ்ரீ பாதுகை அளித்தல் –
பரதனுக்குப் பாதுகமும் அரசுமீந்து –பெருமாள் –10–4-
முடி ஒன்றி மூ உலகங்களும் ஆண்டு உன் அடியேற்கு அருள் என்று அவன் பின் தொடர்ந்த படியில்
குணத்துப் பரதநம்பிக்கு அன்று அடி நிலை ஈந்தானைப் பாடிப் பற –பெரியாழ்வார் –3–9–6-
மரவடியைத் தம்பிக்கு வான் பணையம் வைத்துப் போய் வானோர் வாழ —4–9–1-
———————————
பூ மாலையால் பெருமாளை பிராட்டி கட்டியது
அல்லியம்பூ மலர்க் கோதாய்–மல்லிகை மா மாலை கொண்டு அங்கு ஆர்த்ததும் ஓர் அடையாளம் –பெரியாழ்வார் –3–10–2-
———————-
காகாசுர பங்கம்
பொன் திகழ் சித்திரக் கூடப் பொருப்பினில் உற்ற வடிவில் ஒரு கண்ணும் கொண்ட அக் கற்றைக் குழலன் –பெரியாழ்வார் –2–6–7-
சித்திர கூடத்து இருப்பச் சிறு காக்கை முலை தீண்ட அத்திரமே கொண்டு எறிய அனைத்து உலகும் திரிந்து ஓடி
வித்தகனே இராமா ஓ நின் அபயம் என்று அழைப்ப அத்திரமே அதன் கண்ணை அறுத்ததும் ஓர் அடையாளம் -3–10–6-
——————————
விராத வதம்
வலி வணக்கு வரை நெடும் தோள் விராதைக் கொன்று வண் தமிழ் மா முனி கொடுத்த வரிவில் வாங்கி –பெருமாள் -10–5-
திண் கை வெங்கண் விறல் விராதன் உக வில் குனித்த விண்ணவர் கோன் —கலியன் –3–4–6-
———————————
சூர்பணகா பங்கம்
கலை வணக்கு நோக்கு அரக்கி மூக்கை நோக்கி —பெருமாள் –10–5-
கள்ள வரக்கியை மூக்கொடு–பெரியாழ்வார் –2–7–5-
சூர்பணாகாவைச் செவியோடு மூக்கு அவள் ஆர்க்க அரிந்தானைப் பாடிப் பற —3- -9–8-
தங்கை பொல்லாத மூக்கும் போக்குவித்தான் –4–2–2-
தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடித்த எம் தாசாரதி –பெரியாழ்வார் –4–7–1-
கொல்லை யரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார் சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமை பொய்யன்றே–நாச்சியார் –10–4-
அன்று திருச் செய்ய நேமியான் தீ யரக்கி மூக்கும் பருச் செவியும் ஈர்த்த பரன் –பெரிய திருவந்தாதி –63-
தன் சீதைக்கு நேராவான் என்றோர் நிசாசரி தான் வந்தாளைக் கூரார்ந்த வாளால் கொடி மூக்கும் காது இரண்டும் ஈரா விடுத்து –சிறிய திருமடல் —
அரக்கர் குலப் பாவை –ராவணன் தன் நல் தங்கை –பொன்னிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால்
தன்னை நயந்தாளைத் தான் முனிந்து மூக்கரிந்து மன்னிய திண் எனவும் —பெரிய திருமடல் —
அரக்கியை மூக்கு ஈர்ந்தாயை அடியேன் அடைந்தேன் –திருவாய் –2- 3-6-
அடுத்து ஆர்ந்து எழுந்தாள் பிலவாய் விட்டு அலற அவள் மூக்கு அயில் வாளால் விடுத்தான் –கலியன் –1–5–5-
அரக்கர் குலப் பாவை தன்னை வெஞ்சின மூக்கரிந்த விறலோன்–3–7–3-
கலையிலங்கும் அகல் அல்குல் அரக்கர் குலக் கொடியைக் காதொடு மூக்குடன் அரியக் கதறி அவளோடி–
தலையில் அங்கை வைத்து மலையிலங்கை புகச் செய்த தடம் தோளன்–3–9–4-
கருமகள் இலங்கையாட்டி பிலம் கொள் வாய் திறந்து தன் மேல் வருமவள்செவியும் மூக்கும் வாளினால் தடித்த வெந்தை —4–5–5-
மீதோடி வாள் எயிறு மின்னிலக முன்விலகும் உருவினாளை–காதொடு கொடி மூக்கு அன்று உடன் அறுத்த கைத்தலத்தா–7- -4–3-
மலை போல் உருவத்தோர் இராக்கதி மூக்கு அரிந்திட்டவன் காண்மின் —10–6–9-
————————————-
கர தூஷணாதி வதம்
கடுங்க வந்தன் வக்கரன் கரன் முரன் சிரமவை இடந்து கூறு செய்த பல் படைத் தடக்கை மாயனே –திருச்சந்த –104-
கரனோடு தூடணன் தன்னுயிரை வாங்கி –பெருமாள் –10–5-
கூடலர் சேனை பொருது அழிய —பெரியாழ்வார் -4–1–3-
அவளுக்கு மூத்தோனை வெந்நரகம் சேரா வகையே சிலை குனித்தான் —
புகழும் பொரு படை ஏந்திப் போர் புக்க சுரரைப் பொன்றுவித்தான் –திருவாய் –8-9-3-
கறை வளர் வேல் கரன் முதலா -கணை ஒன்றினால் மடிய –கலியன் –2–10–5-
அன்று நேர்ந்த நிசாசரரைக் கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் –அமலனாதி –2-
—————————————
மாரீச வதம்
மேலொரு நாள் மான் மாய எய்தான் வரை –பொய்கையார் -82-
அன்று பிரிந்தது சீதையை மான் பின் போய் –பூதத்தார் -15-
எய்தான் அம்மான் மறியை ஏந்திழைக்காய் –பேயார் -52-
சிலை வணக்கி மான் மரிய வெய்தான் –பெருமாள் -10–5-
பொன்னொத்த மான் ஓன்று புகுந்து இனிது விளையாட நின்னன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏகப்
பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓர் அடையாளம் –பெரியாழ்வார் –3–10–7-
கரந்துருவின் அம்மானை அந்நான்று பின் தொடர்ந்த ஆழி யங்கை அம்மானை ஏத்தாது
அயர்த்து வாளா இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் -பெரிய திருவந்தாதி -82-
மாய மான் மாயச் செற்று –திருக் குறும் தாண் -16-
கானிடை யுருவைச் சுடு சரம் துரந்து கண்டு –கலியன் –1–4–2-
மான் முனிந்தொரு கால் வரிசிலை வளைத்த –1–4–8-
கிளர் பொறிய மறி திரிய வதனின் பின் படர்ந்தானை —2–5- -6-
துள்ளா வரு மான் வீழ வாளி துரந்தான் –6–7–3-
கலை மாச்சிலையால் எய்தானூர் —8- -6–7-
இலை மலி பள்ளி எய்தி இது மாயம் என்ன இனமாய மான் பின் எழில் சேர் அலை மலி வேல் கணாளை
அகல்விப்பதற்கு ஓருருவாய மானை யமையா –11- 4-7-
———————————
பிராட்டி பிரிவு
தனமருவு வைதேகி பிரியலுற்று தளர்வு எய்தி –பெருமாள் –10–6-
தாண்ட காரணியம் புகுந்து அன்று தையலைத தகவிலி எம் கோமான் கொண்டு போந்து கேட்டான் –கலியன் –10–2–3-
செம்பொன் நீண் முடி எங்கள் இராவணன் சீதை என்பதோர் தெய்வம் கொணர்ந்து –10–2–5-
——————————–
ஜடாயு மோக்ஷம்
ஜடாயுவை வைகுந்தத்து ஏற்றி
—————–
கபந்தன் வதம்
கடும் கவந்தன் வக்கரன் கரன் முரன் சிரமவை இடந்து கூறு செய்த –திருச்சந்த –104-
கறை வளர் வேல் கரன் முதலா க் கவந்தன் கணை ஒன்றினால் —கலியன் –2–10–5-
படர் வனத்து கவர்ந்தனோடும் –உகவில் குனித்த —3–4–6-
————————–
சீதை சிறை வாசம்
தளிர் நிறத்தால் குறைவில்லாத தனிச் சிறையில் விளப்புற்ற கிளி மொழியாள்—திருவாய் –4–8–5-
வம்புலாம் கடிகாவில் சிறையா வைத்ததே குற்றமாயிற்றுக் காணீர்–கலியன் –10–2–5-
பூனம் கொள் மென் மயிலைச் சிறை வைத்த -10–2–8-
————————–
ஹனுமான் தோழமை
வாத மா மகன் மற்கடம் விலங்கு மற்றோர் சாதி என்று ஒழிந்திலை –கோதில் வாய்மையினையோடும் உடனே
உண்பன் நான் என்ற ஒண் பொருள் –கலியன் –5–8-2-
————————
சுக்கிரீவ சக்யம் மராமரம் ஏழு எய்தது
சிலையால் மராமரம் ஏழ் செற்று –பொய்கையார் –27-
எய்தான் மராமரம் ஏழும் இராமனாய் –பேயார் -52-
மரம் பொதச் சரம் துரந்து –திருச்சந்த –73-
கடைந்து மிடைந்த வேழ் மரங்களும் அடங்க எய்து உடைந்த வாலி தந்தனுக்கு உதவ வந்த இராமனாய் –திருச்சந்த –81-
சுடர் வாளியால் நீடு மா மரம் செற்றதும் —பெருமாள் –2-2-
வனமருவு கவியரசன் காதல் கொண்டு —10–6-
நின்ற மராமரம் சாய்த்தாய் –பெரியாழ்வார் –2-4-2-
சிலையால் மராமரம் எய்த தேவனை சிக்கென நாடுதிரேல் –4–1–3-
மரம் ஏழ் அன்று எத்தனை –பெரிய திருவந்தாதி -64-
சினையேய் தழைய மராமரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா –திருவாய் — 1–5–9 –
மராமரம் எய்த மாயவன் –1–7–6-
தேம்பணைய சோலை மராமரம் ஏழு எய்ததுவும் –2–5–7-
மராமரம் பைந்தாள் ஏழுருவ ஒரு வாளி கோத்த வலவா –2–6–9-
புணரா நின்ற மரம் ஏழ் அன்று எய்த ஒரு வில் வலவாவோ -6–10–5-
கணை ஒன்றாலே ஏழ் மரமும் எய்த எம் கார் முகிலை -9–1–2-
மராமரம் எழும் எய்த வலத்தினான் –கலியன்–1–8–5-
மராமரம் எய்த மா முனிவா –3–5–5-
மரம் எய்த திறலாளா–3–6–9-
மராமரம் ஏழு எய்த வென்றிச் சிலையாளன் –5–5–2-
மரம் ஏழு எய்த மைந்தனை –7–3–1-
ஏழு மா மரம் துளை படச் சிலை வளைத்து –8–5–5-
வரிந்திட்ட வில்லால் மரம் ஏழும் எய்து –10–6–9-
பொருந்து மராமரம் ஏழும் எய்த புனிதனார் –11–2–4-
——————————
வாலிவதம்
இது விலங்கு வாலியை வீழ்த்தது –நான்முகன் -28-
கழி சினத்த வில்லாளன்
வாலி வீழ முன்னொரு நாள் –திருச்சந்த -73-
வெந்தவர்க்கும் வந்துனை எய்தலாகும் என்பர் -111-
வாலியைக் கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே –பெருமாள் -8–7-
வாலியைக் கொன்று -10–6-
வாலி மா வலத்தொருவன் உடல் கெட வரிசிலை வளைவித்து அன்று ஏல நாறு தண் தடம் பொழில் இடம் பெற இருந்த நல்லிமயத்துள் –1–2–1-
முன் கொடும் தொழில் உரவோன் ஊனுடை அகலத்து அடு கணை குளிப்ப உயிர் கவர்ந்து உகந்த எம்பெருமான் –1–4–2-
கறை வளர் வேல் கரன் வாலி கணை ஒன்றினால் மடிய –2- -10–5-
பைங்கண் விறல் செம்முகத்து வாலி மாள -3–4–6-
உருத்தெழு வாலி மார்பில் ஒரு கணை யுருவ ஓட்டி கருத்துடைத் தம்பிக்கு இன்பாக் கதிர் முடி அரசு அளித்தாய் -4–6–3-
பெரும் தகைக்கு இரங்கி வாலியை முனிந்த பெருமை கொலோ –10–9–8-
———————————————
அங்குளீய பிரதானம்
ஒத்த புகழ் வானரக் கோன் உடனிருந்து நினைத்தேட அத்தகு சீர் அயோத்தியார் கோன் அடையாளம் இவை
மொழிந்தான் இத்தகையால் அடையாளம் ஈதவன் கை மோதிரமே –பெரியாழ்வார் -3–10–8-
——————————–
அசோகவன பங்கம்
உயர் கொள் மா கடி காவை இறுத்து –கலியன் –10–2-6-
———————
சமுத்திர சரணாகதி
கிடந்து–திருவாய் -2–8–7-
கிடந்து –4–5–10-
கிடந்தவாறும் –5–10–6-
—————————–
கடல் அரசனிடம் பெருமாள் சீற்றம்
வேலை வேவ வில் வளைத்த வெல் சினத்த வீர –திருச்சந்த –31-
வெண் திரைக் கருங்கடல் சிவந்து வேவ –50-
பரந்திட்டு நின்ற படுகடல் தன்னை –கரந்திட்டு நின்ற கடலைக் கலங்க சரந்தொட்ட கைகளால் சப்பாணி –பெரியாழ்வார் -1–6–7-
முரியும் வெண் திரை முது கயம் தீப்பட முழங்கழல் எரி அம்பின் வரி கொள் வெஞ்சிலை வளைவித்த மைந்தனும் வந்திலன் –கலியன் –8–5–6-
மல்லை முந்நீர் அதர்பட வரி வெஞ்சிலை கால் வளைவைத்து கொல்லை விலங்கு பணி செய்யக் கொடியோன் இலங்கை புகலுற்று –8-6-4-
—————————————–
சேது பந்தனம்
அன்று அது அடைத்து உடைத்துகே கண் படுத்த வாழி–பொய்கையார் -2-
பின்னடைத்தாய் மா கடலை –பூதத்தார் –30-
இது இலங்கை ஈடழியக் கட்டிய சேது –நான்முகன் –28-
தடம் கடலை கல் கொண்டு தூர்த்த கடல் வண்ணன் –77-
படைத்த பவ்வ நீர் அடைத்து –திருச்சந்த –28-
குரக்கினப் படை கொடு குரை கடலின் மீது போய் -32-
வெற்பெடுத்து வேலை நீர் வரம்பு கட்டி –39-
படைத்து அடைத்து அதில் கிடந்து –92-
துள்ளு நீர் வரம்பு செய்த –102-
ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து –திருமாலை -11-
குரங்குகள் மலையை நூக்கக் குளித்து தாம் புரண்டிட்டு ஓடி தரங்க நீர் அடைக்கலுற்ற சலமிலா அணிலும் போலேன்-27-
மலையதனால் அணை கட்டி –பெருமாள் –8–8-
குரை கடலை அடல் அம்பால் மறுக வெய்து குலை கட்டி மறு கரையை அதனாலே ஏறி –10–7-
குரக்கினத்தாலே குரை கடல் தன்னை நெருக்கி அணை கட்டி –பெரியாழ்வார் —1–6–8-
தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று தடவரை கொண்டு அடைப்ப –4–1–3-
சேது பந்தனம் திருத்தினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே –நாச்சியார் –2–7-
வண்ணம் போல் அன்ன கடலை மலை இட்டு அணை கட்டி –பெரிய திருமடல்
கிடந்து –திருவாய் –2–8–7-
உண்டும் –கிடந்தும் –4–5–10-
பெரிய நீர் படைத்து –அடைத்து —8–1–5-
அலை கடலைக் கடைந்து அடைத்த –திரு நெடும் தாண் –29-
கலங்க மாக் கடல் அரி குலம் பணி செய்ய அருவரை அணை கட்டி -கலியன் -1–2–2-
மலை கொண்டு அலை நீர் அணை கட்டி –1–5–1-
மாலும் கடலார மலைக்கு வடிட்டு அணை கட்டி –கோலா மதிளாய இலங்கை கெட –2–4–5-
குடைத் திறல் மன்னவனாய் ஒரு கால் குரங்கைப் படையா மலையால் கடலை யடைத்தவன் எந்தை பிரான் —2–9–8-
நெய்வாய் அழல் அம்பு துரந்து முந்நீர் துணியப் பணி கொண்டு –3–2–6-
கம்பமா கடலை யடைத்து —4–2–1-
மல்லை மா முந்நீர் அதர் பட மலையால் அணை செய்து மகிழ்ந்தவன் –4–2–6-
கல்லால் கடலை அணை கட்டி யுகந்தாய் –4–7–6-
அலை கடலை அடைத்திட்டு –4–10–2-
இலங்கை பாழ் படுப்பதற்கு எண்ணி வரிசிலை வளைய வடு சரம் துரந்து மறி கடல் நெறி பட மலையால்
அரி குலம் பணி கொண்டு அலை கடலை அடைத்தான் –5–7–7-
விலங்கலால் கடலை யடைத்து விளங்கிழை பொருட்டு –5–9–6-
வாள் அரக்கன் நகர் பாழ் படச் சூழ் கடல் சிறை வைத்து –கலியன் –7–3–9-
கலங்கா மா கடல் கடைந்து அடைத்து –8–5–7-
கொல்லை விலங்கு பணி செய்யக் கொடியோன் இலங்கை புகல் உற்று தொல்லை மரங்கள் புகப் பெய்து
துவலை நிமிர்ந்து வான் அணவக் கல்லால் கடலை அடைத்தானூர் –8–6–4-
விலங்கல் உறப் படையால் ஆழி தட்ட -8–9–3-
ஓத மா கடலைக் கடந்தேறி –10–2–6-
தாழமின்றி முந்நீரை அஞ்ஞான்று தகைந்ததே கண்டு -10–2–7-
கல்லின் முந்நீர் மாற்றி வந்து காவல் கடந்து -10–3–6-
தெளியா வரக்கர் திறல் போயவிய மிடைத்திட்டு எழுந்த குரங்கைப் படையா
விலங்கல் புகப் பாய்ச்சி விம்ம –கடலை அடைத்திட்டவன் காண்மின் –10–6–7-
துளங்காத முந்நீர் செறித்திட்டு –10–6–8-
—————–
விபீஷணன் உபதேசம்
நஞ்சு தான் அரக்கர் குடிக்கு என்று நங்கையை அவன் தம்பியே சொன்னான் —கலியன் -10–2–4-
——————-
இலங்கை பாழ் செய்தது
தென்னிலங்கை நீறாக எய்து அழித்தாய் நீ –பூதத்தார் -29-
இலங்கா புரம் எரித்தான் எய்து –பெயர் -51-
குலை கொண்ட யீரைந்த்தலையான் இலங்கை ஈடழித்த கூரம்பன் –நான்முகன் -8-
கல்லாதவர் இலங்கை கட்டழித்த காகுத்தன் அல்லால் ஒரு தெய்வம் யானிலேன் –53-
வெற்பெடுத்த விஞ்சி சூழ் இலங்கை கட்டழித்த நீ –திருச்சந்த –39-
இலைத் தலைச் சரந்துரந்து இலங்கை கட்டு அவிழ்த்தவன் -54-
இரும்பரங்க வெஞ்சரம் துரந்த வில்லி இராமனே -93-
பண்ணுலாவு –எண்ணிலா வரக்கரை நெருப்பினால் நெருக்கினாய்–91-
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவனாவான் –திருமாலை -7-
இலங்கையர் குலத்தை வாட்டிய வரிசிலை வானவர் என்றே –திருப் பள்ளி எழுச்சி –4-
அன்று நேர்ந்த நிசாசரரைக் கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் –அமலனாதி –2-
வளைய வொரு சிலையதனால் மதிள் இலங்கை அழித்தவன் –பெருமாள் –8–9-
இலங்கை நகர் அரக்கர் கோமான் சினம் அடங்க மாருதியால் சுடுவித்தான் –10–6-
இலங்கை பாழாளாகப் படை பொருதானுக்கு–திருப்பல்லாண்டு -3-
இலங்கை அரக்கர் அவிய அடு கணையால் நெருக்கிய கைகளால் சப்பாணி –பெரியாழ்வார் –1–6–8-
வல்லாள் இலங்கை மலங்கச் சரந்துரந்த வில்லாளனை -2–1–10-
அடங்கச் சென்று இலங்கையை ஈடழித்த அனுமன் புகழப்பாடி ததன்குட்டங்களை –3–5–7-
கனங்குழையாள் பொருட்டாக் கணை பாரித்து அரக்கர் தங்கள் இனம் கழுவேற்றுவித்த எழில் தோள் எம்மிராமன் –4–3–7-
தென்னிலங்கை கோமானைச் செற்ற –திருப்பாவை -12-
சென்று அங்கு தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி -24-
கடலை யடைத்து அரக்கர் குலங்களை முற்றவும் செற்று இலங்கையை பூசலாக்கிய சேவகர் –நாச்சியார் –2–6-
வில்லால் இலங்கை அழித்தாய்–3–3-
இரக்கமேல் ஒன்றும் இலாதாய் இலங்கை அழித்த பிரானே -3–4-
இலங்கைக் குழாம் நெடுமாடம் இடித்த பிரானார் கொடுமைகள் –திருச்சந்த —36-
தென்பால் இலங்கை வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார் –77-
பேணலம் இல்லா வரக்கர் முன்னீர பெரும் பதிவாய் நீணகர் நீள் எரி வைத்து அருளாய் என்று
நின்னை விண்ணோர் தாள் நிலம் தோய்ந்து தொழுவர் –92-
மும் மதிள் இலங்கை இருக்கால் வளைய ஒரு சிலை ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் வாளியில் அட்டனை –திரு எழுக் கூற்று இருக்கை
ஆரால் இலங்கை பொடி பொடியா வீழ்ந்தது –சிறிய திரு மடல் –
தீ முற்றத் தென்னிலங்கை ஊட்டினான் –திருவாய் –2–1-3-
இரக்கம் எழீர் இதற்கு என் செய்கேன் அரக்கர் நீள் இலங்கை செற்றீருக்கே –2–4–3-
இலங்கை செற்றவனே என்னும் –கை தொழும் நின்று இவளே –2–4–4-
கிளர் வாழ்வை வேவ இலங்கை செற்றீர் -2–4–10-
இலங்கை செற்றாய் -2–6–9-
இலங்கை அரக்கர் குலம் குருடு தீர்த்த பிரான் –2–7–10-
ஏர் கொள் இலங்கையை நீறே செய்த நெடும் சுடர் சோதி -2–9–10-
தேவ தேவனைத் தென்னிலங்கை எரி எழச் செற்ற வில்லியை -3–6–3-
கொம்பு போல் சீதை பொருட்டு இலங்கை நகர் அம்பு எரி உய்த்தவர் -4–2–8-
தனிச் சிறையில் விளப்புற்ற கிளி மொழியாள் காரணமாக் கிளர் அரக்கன் நகர் எரித்த –4–8–5-
இலங்கை செற்றேனே என்னும் –5–6–9-
இலங்கை செற்ற அம்மானே –5–7–2-
மாறில் போரரக்கன் மதிள் நீர் எழச் செற்று உகந்த ஏறு சேவகனார்க்கு –6–1–10-
மன்னுடை இலங்கை அரண் காய்ந்த மாயவனே-6–2–1-
சூழ் கடல் தென்னிலங்கை செற்ற பிரான் வந்து வீற்று இருந்த –7–3–7-
மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள் இன நூறு பிணம் மலை போல் புரள கடல் ஆறு மடுத்து
உதிரப் புனலா அப்பன் நீறு பட இலங்கை செற்ற நேரே –7–4–7-
நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு நாட்டை அளித்து –7–5–2-
பெயர்கள் ஆயிரமுடைய வல்லரக்கர் புக்கு அழுந்தத் தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே -10–1–8-
அசுரரை என்றும் துணிக்கும் வல்லரட்டன்–10–1–9-
புகல் நின்ற புள்ளூர்தி போரரக்கர் குலம் கெடுத்தான் –10–6–9-
கடி மதிள் இலங்கை செற்ற ஏற்றினை –திருக் குறும் தாண் -2-
முன்பொலா இராவணன் தன் முது மதிள் இலங்கை வேவித்து –15-
தேராளும் வாளராக்கன் செல்வம் மாளத் தென்னிலங்கை முன் மலங்கச் செந்தீ ஒல்கி –திரு நெடும் தாண் –20-
இலங்கை மா நகர் பொடி செய்த வடிகள் தாம் இருந்த நல்லிமயத்து –கலியன் –1–2–2-
இலங்கையும் கடலும் அடல் யரும் துப்பின் இரு நிதிக்கு இறைவனும் அரக்கர் குலங்களும் கெட -1–4–3-
கடம் சூழ் கரியும் பரிமாவும் ஒலி மா தேரும் காலாளும் உடன் சூழ்ந்து எழுந்த கடி இலங்கை பொடியா வடிவாய்ச் சரம் துரந்தான் —1–5–2-
ஒரு கால் இரு கால் சிலை வளையத் தேரா வரக்கர் தேர் வெள்ளம் செற்றான் –1–5–4-
காசையாடை மூடியோடிக் காதல் செய்தானவனூர் நாசமாக நம்ப வல்ல நம்பி நம் பெருமான் —2–2–1-
அரக்கன் மன்னூர் தன்னை வாளியினால் மாள முனிந்து –2—2 –3-
விண்டாரை வென்றாவி விலங்குண்ண மெல்லியலார் கொண்டாடும் அல்லகலம் அழல் ஏற வெஞ்சமத்துக் கண்டாரை –2- -6–4-
தடம் கடல் நுடங்கெயில் இலங்கை வன் குடி மடங்க வாளமர் தொலைத்த வார்த்தை கேட்டின்புறும் மயங்கும் —2–7–6-
இலங்கை தன்னுள் பிறை எயிற்று வாளரக்கர் சேனை எல்லாம் பெரும் தகையோடு உடன் துணித்த பெம்மான் தன்னை –2–10–5-
எய்யச் சிதைந்தது இலங்கை —3–3–6-
இலங்கை பொடி செய்த -3–9–5-
கல்லின் மீதியன்ற கடி மதிள் இலங்கை கலங்க ஓர் வாளி தொட்டானை—4- 3–6-
இலங்கை வவ்விய இடும்பை கூரக் கடும் கணை துரந்த வெந்தை —4–5–2-
மல்லை முந்நீர் தட்டிலங்கை கட்டழித்த மாயன் –4–8–4-
ஆழ் கடல் சூழ் இலங்கை செற்ற குரக்கரசன் கோல வில்லி –4–8–5-
அலை கடலை அடைத்திட்டு அரக்கர் தஞ்சிரங்களை யுருட்டி —4–10–2-
கடல் அரக்கர் தம் சேனை கூற்றிடைச் செல்லக் கொடுங்கணை துரந்த கோல வில்லி ராமன் தன் கோயில் —4–10–6-
மேவா வரக்கர் தென்னிலங்கை வேந்தன் வீயச் சரந்துரந்து –5–1–3-
விளைத்த வெம்போர் விறல் வாளரக்கன் நகர் பாழ் பட வளைத்த வல்வில் தடக்கையவனுக்கு இடம் –5–4–4-
அன்று அரக்கனூர் அழலாலுண்டானைக் கண்டார் பின் காணாமே –5–6–5-
இலங்கை மலங்க வன்று அடு சரம் துரந்த –5- 7–8-
மல்லலஞ்சீர் மதிள் நீரிலங்கை யழித்த வில்லா –6–2–6-
தொன்னீர் இலங்கை மலங்க விலங்கு எரி ஊட்டினான் –6–4–6-
ஆனைப் புரவி தேரோடு காலாள் அணி கொண்ட சேனைத் தொகையைச் சாடி இலங்கை செற்றானூர் –6–5–3-
எறிஞர் அரண் அழிய கடந்த நம்பி கடியார் இலங்கை -6–10–1-
தென்னிலங்கை அடையா வரக்கர் வீயப் பொருது மேவி வெங்கூற்றம் நடையா யுண்ணக் கண்டான் –6–10–5-
கான வெண்கும் குரங்கும் முசுவும் படையா அடல் அரக்கர் மானம் அழித்து நின்ற வென்றி யம்மான் –6–10–6-
சினவில் செங்கண் ஆருயிர் அரக்கர் மாளச் செற்ற வில்லி என்று –7–3–1-
ஆழி சூழ் இலங்கை மலங்கச் சென்று சரங்கள் ஆண்ட –7–3–4-
தேரா ளும் வாளரக்கன் தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழ போராளும் சிலையதனால் பொரு கணைகள் போக்குவித்தாய் -7–4–4-
அடையார் தென்னிலங்கை யழித்தானை–7–6–3-
வாளரக்கர் காலன் –8–4–8-
இலங்கையை மலங்குவித்த ஆழியான் –8–5–5-
துளங்கா வரக்கர் துளங்க முன் திண் தோள் நிமிரச் சிலை வளையச் சிறிதே முனைந்த திரு மார்பன் –8–6–1-
முன் திருந்தா வரக்கர் தென்னிலங்கை செந்தீ யுண்ணச் சிவந்து ஒரு நாள் –8–6–6-
விண்ட
சிலையினால் இலங்கை தீ எழச் செற்ற திருக்கண்ணங்குடியுள் நின்றானை –9–2–10-
வில்லால் இலங்கை மலங்கச் சரந்துரந்த வல்லாளன் —9-4–5-
செற்றவன் தென்னிலங்கை மலங்கத் தேவர் பிரான் –9–5–10-
சிலையால் இலங்கை செற்றான் –9–6–10-
கடி இலங்கை மலங்க எரித்து –10–2–6-
அணி இலங்கை அழித்தவன் தன்னை —10–2–10-
இலங்கை அல்லல் செய்தான் உங்கள் கோமான் —10–3–6-
இலங்கை ஒள்ளெரி மண்டி யுண்ணப் பணித்த ஊக்கமதனை நினைந்தோ —10–9–1-
அரக்கரை வென்ற வில்லியார் வீரமே கொலோ —11–1–1-
சென்று வார்சிலை வளைத்து இலங்கையை வென்ற வில்லியார் வீரமே கொலோ –11–1–6-
பொரு கடல் சூழ் தென்னிலங்கை ஈடழித்த -11–3–1-
கொலை மலி எய்துவித்த கொடியோன் இலங்கை பொடியாக வென்றி யமருள்
சிலை மலி ஏசஞ்சரங்கள் செல வுய்த்த நாங்கள் திருமால் நமக்கு ஓர் அரணே–11–4–7-
கொடியோன் இலங்கை பொடியாச் சிலை கெழு செஞ்சரங்கள் செல வுய்த்த நங்கள் திருமாலை —11–4–10-
—————————–
கும்ப கர்ணன் வதம்
மிகப் புருவம் ஒன்றுக்கு ஓன்று ஓசனையான் வீழ ஒரு கணை
பண்டொரு நாள் கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகர்ணனும் –திருப்பாவை –10-
நம்பி அனுமா சுக்ரீவா அங்கதனே நலனே கும்ப கர்ணன் பட்டுப் போனான் –கலியன் -10–3–2-
—————————
ராவண யுத்தத்தில் மற்றப் பேர் வதம்
காதல் மக்களும் சுற்றமும் கொன்று கடி இலங்கை மலங்க எரித்து -10–2–6-
——————————
இந்திரஜித் வதம்
எம்பிரானே என்னை ஆள்வாய் என்று என்று அலத்தாதே அம்பின் வாய்ப்பட்டு ஆற்றகில்லாது இந்திரசித்து அழிந்தான் –கலியன் –10–3–2-
———————-
இராவண வதம்
ஆறிய வன்பில் யடியார் தம் ஆர்வத்தால் கூறிய குற்றமாக் கொள்ளல் நீ தேறி நேடியோய் யடியடை
தற்கென்றே ஈரைந்து முடியான் படைத்த முரண் –பொய்கையார் -35-
நுடங்கிடையை முன்னிலங்கை வைத்தான் முரண் அழிய முன்னொரு நாள் தன் வில் அங்கை வைத்தான்
தோள் இரண்டு எட்டு ஏழு மூன்றும் முடி யனைத்தும் தாள் இரண்டும் வீழச் சரம் துரந்தான் –43-
தென்னிலங்கை கோன் வீழ –பேயார் –52-
இது விலங்கை தான் ஒடுங்க வில் நுடங்கத் தண் தார் இராவணனை ஊன் ஒடுங்க வெய்தான் உகப்பு –நான்முகன் -28-
குரக்கினப் படை கொடு குரை கடலின் மீது போய் அரக்க ரங்க ரங்க வெஞ்சரம் துரந்த வாதி நீ –திருச்சந்த –32-
மின்னிறத்து எயிற்று அரக்கன் வீழ வெஞ்சரம் துரந்து –33-
சரங்களைத் துரந்து வில் வளைத்து இலங்கை மன்னவன் சிரங்கள் பத்து அறுத்து உதிர்த்த செல்வர் –51-
இலங்கை மன்னன் ஐந்தொடைந்து பைந்தலை நிலத்துகக் கலங்க வன்று சென்று கொன்று வென்றி கொண்ட வீரனே -56-
அங்கம் மங்க வன்று சென்று அடர்த்து எறிந்த வாழியான்-57-
மாறு செய்த வாளரக்கன் நாலுளப்ப அன்று இலங்கை நீறு செய்து சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார் -61-
ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் –செருவிலே அரக்கர் கோனைச் செற்ற –திருமாலை -11-
சதுர மா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து உதிரவோட்டி ஓர் வெங்கணை உய்த்தவன் –அமலன் -4-
எரி நெடு வேல் அரக்கரோடும் இலங்கை வேந்தன் இன்னுயிர் கொண்டு –10–7-
மின்னிடை சீதை பொருட்டா இலங்கையர் மன்னன் மணி முடி பத்துமுடன் வீழ –பெரியாழ்வார் –2–6–8-
தென்னிலங்கை மன்னன் சிரம் தோள் துணி செய்து –2–6–9-
கள்ள வரக்கியை மூக்கொடு காவலனைத் தலை கொண்டாய் -2–7–5-
காரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு ஓராதான்
வல்லாளன் தோளும் வாளரக்கன் முடியும் தங்கை பொல்லாத மூக்கும் போக்குவித்தான் பொருந்தும் மலை –4–2–2-
எரி சிதறும் சரத்தால் இலங்கையினை தன்னுடைய வரிசிலை வாயில் பெய்து
வாய்க் கோட்டம் தவிர்ந்து உகந்த அரையன் அமரும் மலை –4–3–8-
தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடித்த எம் தாசரதி –4–7–1-
பெரு வரங்களவை பற்றிப் பிழக்குடைய விராவணனை உருவரங்கப் பொருது அழித்து இவ்வுலகினைக் கண் பெறுத்தானூர்–4- 8 -5-
பருவரங்களவை பற்றிப் படை யாலித்து எழுந்தானை செருவரங்கப் பொருது அழித்த திருவாளன் –4–8–10-
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற –திருப்பாவை –12-
பொல்லா வரக்கனைக் கிள்ளிக் களைந்தானை –13-
மாதலி தேர் முன்பு கோல் கொள்ள மாய விராவணன் மேல் சரமாரிதாய் தலை யற்று யற்று வீழத் தொடுத்த தலைவன் -நாச்சியார் -5–3-
போர் காலத்து எழுந்து அருளிப் பொருதவனூர் பேர் சொல்லி —8–8-
நாழால் அமர் முயன்ற வல்லரக்கன் இன்னுயிரை வாழா வகை வலிதல் நின் வலியே –பெரிய திருவந்தாதி –11-
சூழ்ந்து எங்கும் வாள் வரைகள் போல் அரக்கன் வன் தலைகள் தாம் இடியத் தாள் வரை வில் ஏந்தினார் தாம் –17-
சூட்டாய நேமியான் தொல்லரக்கன் இன்னுயிரை மாட்டே துயர் இழைத்த மாயவனை
ஈட்ட வெறி கொண்ட தண் துழாய் வேதியனை நெஞ்சே அறி கண்டாய் சொன்னேன் அது-66-
வைதேவி காரணமா ஏரார் தடம் தோள் இராவணனை ஈரைந்து சீரார் சிரம் அறுத்துச் செற்றுகந்த செங்கண் மால் –சிறிய திருமடல்
மன்னன் இராவணனை மா மண்டு வெஞ்சமத்துப் பொன் முடிகள் பத்தும் புரளச் சரந்துரந்து –பெரிய திருமடல்
நீள் கடல் சூழ் இலங்கைக் கோன் தோள்கள் தலை துணி செய்தான் –திருவாய் –1–6–7-
குழாங்கொள் பேரரக்கன் குலம் வீய முனிந்தவனை –2–3–11-
இலங்கை யரக்கர் குலம் முருடு தீர்த்த பிரான் –2–7–10-
தண்ணிலங்கைக்கு இறையைச் செற்ற நஞ்சனே –3–8–2-
மதிள் இலங்கைக் கோவை வீயச் சிலை குனித்தாய் -4–3–1-
கடிய வினையே முயலும் ஆண்டிறல் மீளி மொய்ம்பின் அரக்கன் குலத்தை தடிந்து மீண்டுமவன் தம்பிக்கே
விரி நீர் இலங்கை யருளி ஆண்டு தன் சோதி புக்க அமரர் அரி ஏற்றினையே —7–6–9-
தேராளும் வாளரக்கன் செல்வம் மாள –திரு நெடும் தாண் -20-
தென்னிலங்கை யரண் சிதறி யவுணன் மாளச் சென்று -28-
குன்றாத வலி யரக்கர் கோனை மாளக் கொடுஞ்சிலை –வாய்ச் சரந்துரந்து குலங்களைந்து வென்றானை -29-
தானவன் ஆகம் தரணியில் புரளத் தடம் சிலை குனித்த என் தலைவன் –1–4–1-
இரு நிதிக்கு இறைவனும் அரக்கர் குலங்களும் கெட முன் கொடும் தொழில் புரிந்த கொற்றவன் –1–4–3-
மதிள் நீர் இலங்கை வாளரக்கர் தலைவன் தலை பத்து அறுத்து உகந்தான் –1–5–1-
கண்ணார் கடல் சூழ் இலங்கைக்கு இறைவன் தன் திண்ணாகம் பிளக்கச் சரம் செல வுய்த்தாய் -1–10–1-
தையலாள் மேல் காதல் செய்தானவன் வாளரக்கன் பொய்யில்லாத பொன் முடிகள் ஒன்பதோடு ஒன்றும்
அன்று செய்த வெம்போர் தன்னில் அங்கோர் செஞ்சரத்தால் உருள –2–2–2-
பரதனும் தம்பி சத்ருக்கனனும் இலக்குமனோடு மைதிலியும் இரவு நன்பகலும் துதி செய்ய நின்ற இராவணாந்தகனை எம்மானை –2–3–7-
கதிர் நீண் முடி பத்தும் அறுத்து அமரும் நீல முகில் வண்ணன் –2–4–5-
தென்னிலங்கை அரக்கர் வேந்தை விலங்குண்ண வலங்கை வாய்ச் சரங்கள் ஆண்டு –2- -5–9-
மின்னின் நுண்ணிடை மடக்கொடி காரணம் விலங்கலின் மிசை இலங்கை மன்னன் நீண் முடி பொடி செய்த மைந்தன் –3–1–7-
பொருவில் வலம் புரி யரக்கன் முடிகள் பத்தும் புற்றும் அறிந்தன போலப் புவி மேல் சிந்தச் செருவில் வலம் புரி சிலைக்கை மலைத்தோள் வேந்தன் –3–4–7-
மின்னனைய நுண் மருங்குல் மெல்லியற்கா இலங்கை வேந்தன் முடி ஒருபதும் தோள் இருப்பதும்
போயுதிரத் தான் நெடுங்கண் சிலை வளைத்த தயரதன் சேய்-3–10–6-
கம்பமா கடல் அடைத்து இலங்கைக்கு மன் கதிர் முடியவை பத்தும் அம்பினால் அறுத்து –4–2–1-
தான் போலும் என்று எழுந்தான் தரணியாளன் –கோன் போலும் என்று எழுந்தான் குன்றம் அன்ன இருபது தோளுடன் துணித்த ஒருவன் கண்டீர் –4–4–6-
முனை முகத்து அரக்கன் மாள முடிகள் பத்து அறுத்து வீழ்த்து அங்கனையவர்க்கு இளையவர்க்கே அரசு அளித்து அருளினான் —4–6–4-
விறல் வாளரக்கர் தலைவன் தன் வற்பார் திரள் தோள் ஐ ந் நான்கும் துணித்த வல் விலி இராமன் —5–1–4-
ஆறினோடு ஒரு நான்குடை நெடு முடி யரக்கன் தன் சிரம் எல்லாம் வேறு வேறாக வில்லது வளைத்தவனே –5–3–7-
வம்புலாம் கூந்தல் மண்டோதரி காதலன் வான் புக அம்பு தன்னால் முனிந்த அழகனிடம் —5–4–5 –
சுரி குழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த கொடுமையில் கடு விசை அரக்கன் எரி விழித்து இலங்கு மணி முடி பொடி செய்து –5–7–7-
விளங்கிழை பொருட்டு வில்லால் இலங்கை மா நகர்க்கு இறைவன் இருபது புயம் துணித்தான் —-5–9–6-
வற்றா நீள் கடல் இலங்கை இராவணனைச் செற்றாய் –6–3–5-
கல்லார் மதிள் சூழ் கடி இலங்கை கார் அரக்கன் வல்லாகம் கீள வலி வெஞ்சரம் துரந்த வில்லனை -6- 8-5-
பழி யாரும் விறல் அரக்கன் பரு முடிகள் அவை சிதற அழலாறும் சரம் துரந்தான் –6–9–2-
இலங்கைக் கோன் வல்லாள் ஆகம் வில்லால் முனிந்த வெந்தை-6–10–4-
செம்பொன் மதிள் சூழ் தென்னிலங்கைக்கு இறைவன் சிரங்கள் ஐயிரண்டும் உம்பர் வாளிக்கு இலக்காக உதிர்த்த வுரவோன் –7–5–3-
பந்தணைந்த மெல் விரலாள் சீதைக்காகிப் பகலவன் மீதியங்காத இலங்கை வேந்தன் —
அந்தமில் திண் கரம் சிரங்கள் புரண்டு வீழ அடு கணையால் எய்து உகந்த வம்மான் —7–8–7-
தோன்றல் வாளரக்கன் கெடத் தோன்றிய நஞ்சினை —7–10–8-
இலங்கையர் கோனது வரையாகம் மலங்க வெஞ்சமத்து அடு சரம் துரந்த எம்மடிகளும் —8–5–7-
வல்லி யிடையாள் பொருட்டாக மதிள் நீர் இலங்கையார் கோவை அல்லல் செய்து வெஞ்சமத்துள் ஆற்றல் மிகுத்த ஆற்றலான்–8–6–3-
நெடும் புணரி சேம மதிள் சூழ் இலங்கைக் கோன் சிரமும் கரமும் துணித்து —8–6–5-
வானுளாரவரை வலிமையால் நலியும் மறி கடல் இலங்கையார் கோனைப் பானு நேர் சரத்தால் பனங்கனி போலப் பருமுடி யுதிர வில் வளைத்தோன் -9–1–7-
சிரம் முன் ஐந்தும் ஐந்தும் சிந்தச் சென்று அரக்கன் உரமும் கரமும் துணித்த உரவோன் –9–6–4-
வணங்கலில் அரக்கன் செருக்களத்து அவிய மணி முடி ஒருபதும் புரள அணங்கு எழுந்தவன் தன் கவந்தம் நின்றாட –9–8–5-
காவலன் இலங்கைக்கு இறை கலங்கச் சரம் செல உய்த்து மற்றவன் ஏவலம் தவிர்த்தான் –9–10–6-
இராவணன் பட்டனன் -10–2-1-
இலங்கைக்கு இறை தன்னை எங்களை ஒழியக் கொலை அவனைச் சூழுமா நினை —10–2–7-
புன்மையாளன் நெஞ்சில் புக எய்த –10–2–8-
ஞாலம் ஆளும் உங்கள் கோமான் எங்கள் இராவணற்கு காலனாகி வந்த வா கண்டு அஞ்சி –10–3–3-
——————————–
அரக்கர் லடசுமனைத் துதித்தல்
மணங்கள் நாறும் வார் குழலார் மாதர்கள் ஆதரத்தை புணர்ந்த சிந்தைப் புன்மையாளன் போன்ற வரி சிலையால் கணங்கள்
யுண்ண வாளி யாண்ட காவலனுக்கு இளையோன் குணங்கள் பாடி யாடுகின்றோம் குழ மணி தூரமே -10–3–4-
இலங்கை மலங்க வரக்கன் செழு நீண் முடி தோளோடு தாள் துணிய அறுத்திட்டவன் காண்மின் –10–6–8-
அரக்கியர் ஆகம் புல்லென வில்லால் அணி மதிள் இலங்கையர் கோனைச் செருக்கு அழித்து அமரர் பணிய முன்னின்ற சேவகமோ செய்ததின்று -10–9–6-
———————————————————–
விபீஷணனுக்கு அரசு
அவன் தம்பிக்கு அரசுமீந்து –பெருமாள் –10–7-
மின்னிலங்கு பூண் விபீடண நம்பிக்கு என்னிலங்கு
நேராவான் தம்பிக்கே நீள் அரசு ஈந்த ஆராவமுதனை -3–9–10-
அரசவன் தம்பிக்கு அளித்தவன்–4–2–1-
இளையவர்க்கே அரசளித்து–கலியன் –4–6–4-
செல்வ விபீடணற்கு வேறாக நல்லானை –6–8–5-
விபீடணற்கு நல்லான் –6–10–5-
அலை நீர் இலங்கை தசக்ரீவர்க்கு இளையோருக்கு அரசை அருளி —8–6–7-
———————————————-
இராக்கதர் சுக்ரீவாதிகள் இடம் சரணம் புகுதல்
சாம்பவானுடன் நிற்கத் தொழுதோம் இலங்கு வெங்கதிரோன் தன் சிறுவா குரங்குகட்க்கு அரசே எம்மைக் கொல்லேல்—கலியன் –10–2–9-
ஏத்துகின்றோம் நாத்தழும்ப இராமன் திரு நாமம் சோத்த நம்பீ சுக்க்ரீவா உம்மைத் தொழுகின்றோம் எம்மை
உங்கள் வானரம் கொல்லாமே வார்த்தை பேசீர் -10–3–1-
நீலன் வாழ்க சுடேணன் வாழ்க அங்கதன் வாழ்க –10–3–3-
காவலனுக்கு இளையோன் குணங்கள் பாடி –10–3–4-
எம்பெருமான் தமர்காள் வென்றி தந்தோம் நீர் எம்மைக் கொல்லாதே–10–3–5-
வெங்கதிரோன் சிறுவா –கொல்ல வேண்டா –10–3–6-
சீற்றம் நும்மேல் தீர வேண்டில் சேவகம் பேசாதே ஆற்றல் சான்ற தொல் பிறப்பில் அனுமனை வாழ்க வென்று கூற்றமன்னார் காண ஆடீர் குழ மணி தூரமே –10-3-7-
கவள யானை பாய புரவி தேரோடு அரக்கர் எல்லாம் துவள வென்ற வென்றியாளன் தான தமர் கொல்லாமே தவள மாட நீள்
அயோத்திக் காவலன் தன் சிறுவன் குவளை வண்ணன் காண வாடீர் குழ மணி தூரமே –10–3–8-
எங்கள் இராவணனார் ஓடிப் போனார் நாங்கள் எய்த்தோம் உய்வதோர் காரணத்தால் சூடிப் போந்தோம் உங்கள் கோமான்
ஆணை தொடரேன்மின் கூடிக் கூடி யாடுகின்றோம் குழ மணி தூரமே
———————————
அரக்கர் வதம்
அலம்பா வெருட்டாக் கொன்று திரியும் அரக்கரைக் குலம் பாழ் படுத்துக் குல விளக்காய் நின்ற கோன் மலை –பெரியாழ்வார் –4–2–1-
செருக்கெடுத்தன்று திகைத்த வரக்கரை உருக்கெட வாளி பொழிந்த ஒருவனே –திருவாய் —8–6–2-
ஒருவர் இருவர் ஓர் மூவர் என நின்று உருவு கரந்து —8–6–3-
வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே –திரு நெடும் தாண்-16-
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி அவர் உயிர் செகுத்த எம் அண்ணல் –கலியன் –1–1–6-
பேணாத வலி யரக்கர் மெலிய வன்று பெரு வரைத் தோள் இற நெரித்து அன்று -2–5–7-
தீ மனத்து அரக்கர் திறல் அழித்தவனே என்று சென்று அடைந்தவர் தமக்கு தாய் மனத்து இரங்கி
அருளினைக் கொடுக்கும் தயரதன் மதலையை சயமே –4–3–5-
பிறையின் ஓளி எயிறு இலக முறுகி எதிர் பொருதும் என வந்த அசுரர் இறைகள் அவை நெறு நெறு என
வெறிய யவர் வயிறு அழல நின்ற பெருமான் –5–10–4-
முளவெரி சிந்தி முனிவெய்தி அமர் செய்தும் என வந்த அசுரர் தோளும் அவர் தாளும் முடியோடு பொடியாக நொடியாம் அளவு எய்தான் — -5–10–5-
விண்ட நிசாசரைத் தோளும் தலையும் துணிவு எய்தச் சுடு வெஞ்சிலை வாய்ச் சரம் துரந்தான் –6–7–1-
—————————————
பாதாள அரக்கர் வதம்
மிடைத்த மாலி மாலியான் விலங்கு காலனூர் புக –திருச்சந்த –28-
உலகில் வன்மையுடைய வரக்கர் வசுரரை மாளப் படை பொருத நன்மை யுடையவன் சீர் பரவப் பெற்ற நான் ஓர் குறைவிலனே –திருவாய் -3–10–1-
குலம் குலமா அசுரர்களை நீராகும்படியாக நிருமித்துப் படை தொட்ட மாறாளன்–4–8–1-
உடம்பினால் குறைவில்லா உயிர் பிரிந்த மலைத் துண்டம் கிடந்தன போல் துணி பலவா அசுரர் குழாம் துணித்து உகந்த –4–8–10-
ஆளியைக் காண்பரியாய் அரி காண் நரியாய் அரக்கர் ஊளை இட்டு அன்று இலங்கை கடந்து பிலம் புக்கு ஒளிப்ப
மீளியம் புள்ளைக் கடாய் விறல் மாலியைக் கொன்று பின்னும் ஆளுயர் குன்றங்கள் செய்து அடர்த்தான் –7–6–8-
மாசின மாலி மாலிமான் என்று அங்கவர் பட கனன்று முன்னின்ற –9–2–6-
இலங்கைப் பதிக்கு அன்று இறையாய அரக்கர் குலம் கேட்டவர் மாளக் கொடிப் புள் திரித்தாய் –கலியன் -1–10–2-
தாங்கரும் போர் மாலி படப் பறையூர்ந்து தராதலத்தோர் குறை முடித்த தன்மையானை –2–10–4-
சிறையார் அவணப் புள் ஓன்று ஏறி–கரையார் நெடு வேல் அரக்கர் மடிய -3- 8-4-
பொருந்தா வரக்கர் வெஞ்சமத்து பொன்ற வன்று புள்ளூர்ந்து பெரும் தோள் மாலி தலை புரளப் பேர்ந்த வரக்கர் தென்னிலங்கை இருந்தார்
தம்மை யுடன் கொண்டு அங்கு எழிலார் பிலத்து புக்கொப்ப கருத்தால் சிலைக் கைக் கொண்டானூர் -8–6–2-
————————————
பட்டாபிஷேகம்
கொண்ட கோலத்தோடு வீற்று இருந்தும் மணம் கூடியும் கண்டவாற்றால் தனதே யுலகு என்று நின்றான் தன்னை வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே –திருவாய் -4–5–10-
அம்பொனோடு மணி மாட அயோத்தி எய்தி அரசு எய்தி –பெருமாள் –10–8-
—————————————–
பெருமாள் கேட்ட உபன்யாசம்
அகத்தியன் வாய்த் தான் முன் கொன்றான் தன் பெரும் தொல் கதை கேட்டு மிதிலைச் செல்வி உலகு உய்யத் திரு வயிறு
வாய்த்த மக்கள் செம்பவளத் திரள் வாய்த் தன் சரிதை கேட்டான் –பெருமாள் –10–8-
————————————-
லவணாசுர வதம்
இலவணன் தன்னைத் தம்பியால் வான் ஏற்றி –பெருமாள் -10- -9-
———————-
இலக்குமனைப் பிரிதல்
முனிவன் வேண்ட திறல் விளங்கும் இலக்குமனைப் பிரிந்தான் — -10–9-
—————————-
தன்னுடைச் சோதி எழுந்து அருளுதல்
அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி –இலங்கு மணி நெடும் தோள் நான்கும் தோன்ற –தன் தாமம் மேவி –இனிது வீற்றிருந்த அம்மான் –10–10-


ஸ்ரீ உ வே காஞ்சி ஸ்வாமிகள் தொகுத்து அருளிய -ஆழ்வார்கள் உகந்த ஸ்ரீ ராமன் –

-திருப்பல்லாண்டு –
1-இராக்கதர் வாழ் இலங்கை பாழ் ஆளாகப் படை பொருதான்–3 –
பெரியாழ்வார் திருமொழி –
2-பரந்திட்டு நின்ற படுகடல் தன்னை இரந்திட்ட கைம்மேல் எறி திரை மோதக் கரந்திட்டு நின்ற கடலைக் கலங்கச் சரம் தொட்ட கையான் -1–6–7-
3-குரக்கினத்தாலே குரை கடல் தன்னை நெருக்கி அணை கட்டி நீள் நீர் இலங்கை அரக்கர் அவிய அடு கணையாலே நெருக்கிய கையான் -1-6–8-
4-கொங்கை வன் கூனி சொல் கொண்டு குவலயத் துங்கக் கரியும் புரியும் இராச்சியமும் எங்கும் பரதற்கு அருளி வான் கானடை அம் கண்ணன் –2 –1–8-
5-வல்லாள் இலங்கை மலங்க சரம் துரந்த வில்லாளன் -2-1-10-
6-சிலை ஓன்று இறுத்தான்-2-3-7-
7-நின்ற மராமரம் சாய்த்தான் -2–4–2-
8-பொன் திகழ் சித்ர கூடப் பொருப்பினில் உற்ற வடிவில் ஒரு கண்ணும் கொண்ட அக்கற்றைக் குழலன் -2-6–7-
9-மின்னிடைச் சீதை பொருட்டா இலங்கையர் மன்னன் மணி முடி பத்துமுடன் வீழத் தன்னிகர் ஓன்று இல்லாச் சிலை கால் வளைத்திட்ட மின்னு முடியன்-2-6–8-
10-தென்னிலங்கை மன்னன் சிரம் தோள் துணி செய்து மின்னிலங்கு பூண் விபீடண நம்பிக்கு என்னிலங்கு நாமத்து அளவு மரசென்ற மின் அலங்காரன் -2-6-9-
11-கள்ள வரக்கியை மூக்கொடு காவலனைத் தலை கொண்டான் -2–7–5-
12-என் வில் வலி கண்டு போ என்று எதிர் வந்தான் தன் வில்லினோடும் தவத்தை எதிர் வாங்கி முன் வில் வலித்து முது பெண் உயிர் உண்டான் -3–9–2-
13-மாற்றுத் தாய் சென்று வானம் போகே என்றிட யீற்றுக் தாய் பின் தொடர்ந்து எம்பிரான் என்று அழக்
கூற்றுத் தாய் சொல்லக் கொடிய வனம் போன சீற்றமிலாத சீதை மணாளன் -3-9-4-
14-முடி ஒன்றி மூ உலகங்களும் ஆண்டு உன் அடியேற்கு அருள் என்று அவன் பின் தொடர்ந்த படியில் குணத்துப் பரத நம்பிக்கு அன்று அடி நிலை ஈந்தான் -3-9-6-
15-தார்க் கிளம் தம்பிக்கு அரசீந்து தண்டகம் நூற்றவள் சொல் கொண்டு போகி நுடங்கிடைச் சூர்ப்பணாகாவைச் செவியொடு மூக்கு அவள் ஆர்க்க ஆர்ந்தான்-3- 9-8-
16-காரார் கடலை யடைத்திட்டு இலங்கை புக்கு ஓராதான் பொன் முடி ஒன்பதோடு ஒன்றையும் நேரா அவன் தம்பிக்கே நீள் அரசு ஈந்த ஆராவமுதன் -3-9-10-
17-செறிந்த மணி முடிச்சசனகன் சிலை இறுத்துச் சீதையை கொணர்ந்தது அறிந்து அரசு களைகட்ட
அரும் தவத்தோன் இடை விலங்கச் செறிந்த சிலை கொடு தவத்தைச் சிதைத்தான் -3-10-1-
18-எல்லியம் போது இனிது இருத்தல் இருந்ததோர் இட வகையில் மல்லிகை மா மாலை கொண்டு அங்கார்க்க இருந்தான் -3-10-2 –
19-குலக்குமரா காடுறையப் போ என்று விடை கொடுப்ப இலக்குமணன் தன்னொடும் அங்கு ஏகினான் — 3-10-3-
20-கூரணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கை தன்னில் சீரணிந்த தோழமை கொண்டான் -3- 10–4-
21-தேன் அமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து இருப்பப் பரத நம்பி பணிய நின்றான் -3–10–5-
22-அனைத்து உலகும் திரிந்தோடி வித்தகனே இராமா ஓ நின் அபயம் என்று அழைப்ப அத்திரமே அதன் கண்ணை அறுத்தான் -3-10-6-
23-பொன்னொத்த மான் ஓன்று புகுந்து இனிது விளையாடச் சிலை பிடித்து எம்பிரான் ஏகப் பின்னே இலக்குமணன் பிரிய நின்றான் -3–10–7-
24-அடையாளம் மொழிந்த அத்தகு சீர் அயோத்தியார் கோன்-3-10-8-
25-திக்கு நிறை புகழாளன் தீ வேள்விச் சென்ற நாள் மிக்க பெரும் சபை நடுவே வில்லிறுத்தான்-3-10–9-
26-கதிர் ஆயிரம் இரவி கலந்து எரித்தால் ஒத்த நீண் முடியன் எதிரில் பெருமை இராமன் -4-1-1 –
27- நாந்தகம் சங்கு தண்டு நாண் ஒலிச் சார்ங்கம் திருச் சக்கரம் எனது பெருமை இராமன் காந்தள் முகிழ் விரல் சீதைக்காக
கடும் சிலை நின்று இறுக்க வேந்தர் தலைவன் சனகராசன் தன் வேள்வியில் காண நின்றான் -4- 1-2-
28-சிலையால் மராமரம் எய்த தேவன் –தலையால் குரக்கினம் தங்கிச் சென்று தடவரை கொண்டு அடைப்ப அலையார் கடற்கரை வீற்று இருந்தான் -4-1-3-
29-அலம்பா வெருட்டாக் கொன்று திரியும் அரக்கரைக் குலம் பாழ் படுத்துக் குல விளக்காய் நின்ற கோன் -4–2–1-
30-வல்லாளன் தோளும் வாள் அரக்கன் முடியும் தங்கை பொல்லாத மூக்கும் போக்குவித்தான் -4–2–2-
31-கனம் குழையாள் பொருட்டாக் கணை பாரித்து அரக்கர் தங்கள் இனம் கழு ஏற்றுவித்த எழில் தோள் எம்மிராமன் -4-3-7-
32-எரி சிதறும் சரத்தால் இலங்கையனைத் தன்னுடைய வரி சிலை வாயில் பெய்து வாய்க்கோட்டம் தவிர்த்துகந்த அரையன் -4-3-8-
33-தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடித்த எம் தாசரதி-4-7-1-
34-ஈன்று எடுத்த தாயாரையும் இராச்சியமும் அங்கு ஒழியக் கான் தொடுத்த நெறி போகிக் கண்ட கரைக் களைந்தான் –4-8-4-
35-பெரு வரங்கள் அவை பற்றிப் பிழக்குடைய இராவணனை உருவரங்கப் பொருது அழித்து இவ்வுலகினைக் கண் பெறுத்தான் -4- 8–5-
36-கீழ் உலகில் அசுரர்களைக் கிழங்கிருந்து கிளராமே ஆழி விடுத்தவருடைய கரு அழித்த அழிப்பன்-4-8-6-
37-அசுரர்களை பிணம் படுத்த பெருமான் -4-8-7-
38-பருவரங்களவை பற்றிப் படையாலித்து எழுந்தானைச் செருவரங்கப் பொருது அழித்த திருவாளன்–4- 8-10-
39-மரவடியைத் தம்பிக்கு வான் பணயம் வைத்துப் போய் வானோர் வாழச் செருவுடைய திசைக் கருமம் திருத்தி வந்து உலகாண்ட திரு மால் -4-9-1-
40-மன்னுடைய விபீடணற்காய் மதிள் இலங்கைத் திசை நோக்கி மலர் கண் வைத்தான் -4–9–2-

———————-

திருப்பாவை –
41-சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கு இனியான் –12-
42-பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தான் –13-
43-சென்று அங்குத் தென்னிலங்கை செற்றான் -24-
நாச்சியார் திருமொழி
44-கடலை அடைத்து அரக்கர் குலங்களை முற்றவும் செற்று இலங்கையை பூசலாக்கிய சேவகன் -2-6-
45-சேது பந்தம் திருத்தினான் -2-7-
46-சீதை வாய் அமுதம் உண்டான் -2-10-
47-வில்லால் இலங்கை அழித்தான் –3-3-
48-இலங்கை அழித்த பிரான் -3-4-
49-மாதலி தேர் முன்பு கோல் கொள்ள மாயன் இராவணன் மேல் சரமாரி தாய் தலை அற்று அற்று வீழத் தொடுத்த தலைவன் -3-3-
50-கொல்லை அரக்கியை மூக்கு அரிந்திட்ட குமரனார் -10–4-

——————————-

பெருமாள் திருமொழி –
51-சுடர் வாளியால் நீடு மா மரம் செற்றவன் -2–2 –
52-முன்னிராமனாய் மாறடர்த்தான்-2–3-
53-மன்னு புகழ் கௌசலை தன் மணி வயிறு வாய்த்தவன் தென்னிலங்கைக் கோன் முடிகள் சிந்துவித்தான் -8-1-
54-திண் திறளால் தாடகை தன் உரமுருவச் சிரம் வளைத்தான் -8-2-
55-கொங்கு மலி கரும் குழலாள் கௌசலை தன் குல மதலை தனக்கு பெரும் புகழ்ச் சனகன் திரு மருகன் தாசாரதி -8-2-
56-தயரதன் தன் மா மதலை மைதிலி தன் மணவாளன் ஏமரு வெஞ்சிலை வலவன் -8–4-
57-பாராளும் படர் செல்வம் பரத நம்பிக்கே அருளி ஆராவன்பு இளையவனோடு அரும் கானம் அடைந்தவன் -8–5-
58-சுற்றம் எல்லாம் பின் தொடரத் தொல் கானம் அடைந்தவன் அயோத்தி நகருக்கு அதிபதி சிற்றவை தன் சொல் கொண்ட சீராமன் -8–6-
59-வாலியைக் கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவன் -8–7-
60-மலையதனால் அணை கட்டி மதிள் இலங்கை அழித்தவன் சிலை வலவன் சேவகன் சீராமன் -8- 8-
61-தளையவிழு நறுங்குஞ்சித் தயரதன் தன் குல மதலை வளைய ஒரு சிலை யதனால் மதிள் இலங்கை அழித்தவன் இளையவர்கட்க்கு அருளுடையான் -8-9-
62-ஏவரி வெஞ்சிலை வலவன் இராகவன் -8-10-
63-வன் தாள் இணை வணங்கி வள நகரம் தொழுது ஏத்த மன்னனாவான் நின்றான் –அரியணை மேல் இருந்தானாய் நெடும் கானம் படரப் போக நின்றான் -9-1-
64-இரு நிலத்தை வேண்டாதே விரைந்து வென்றிமைவாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து மா ஒழிந்து வனமே மேவி
நெய்வாய வேல் நெடும் கண் நேரிழையும் இளங்கோவும் பின்பு போக நடந்தான் -9-2-
65-கொல்லணை வேல் வரி நெடும் கண் கௌசலை தன் குல மதலை குனி வில் ஏந்தும் மால் அணைந்த வரைத் தோழன்
வியன் கான மரத்தின் நீழல் கல்லணை மேல் கண் துயிலா கற்ற காகுத்தன் -9—3-
66-வேய் போலும் எழில் தோளி தன் பொருட்டா விடையோன் தன் வில்லைச் செற்றான் -9-4-
67-பொருந்தார் கை வேல் நிதி போலே பரல் பாய மெல்லடிக்கள் குருதி சோர விரும்பாத கான் விரும்பி வெயில் உறைப்ப வெம்பசி நோய் கூரப் போனவன் -9–5-
68-பூ மருவு நறுங்குஞ்சி புன் சடையாய் புனைந்து பூந்துகில் சேர் அல்குல் காமர் எழில் விழல் உடுத்துக் கலன் அணியாது
அங்கங்கள் அழகு மாறி ஏமரு தோள் புதல்வன் வனம் சென்றான் -9-7-
69/70-பொன் பெற்றார் எழில் வேதப் புதல்வன் முன் ஒரு நாள் மழு வாளி சிலை வாங்கி அவன் தவத்தை முற்றும் செற்றான் -9- 8-
71-தேனகுமா மலர்க கூந்தல் கௌசல்யையும் சுமித்ரையும் சிந்தை நோவக் கூனுருவில் கொடுந்தொழுத்தை சொல் கேட்ட
கொடியவள் தன் சொல் கொண்டு கானகமே மிக விரும்பி வன நகரைத் துறந்தான் -9–10-
72-ஏரார்ந்த கரு நெடுமால் இராமன் -9–11-
73-அங்கண் நெடு மதிள் புடை சூழ் அயோத்தி என்னும் அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி வெங்கதிரோன்
குலத்துக்கோர் விளக்காய்த் தோன்றி விண் முழுதும் உய்யக் கொண்ட வீரன் செங்கண் நெடும் கரு முகில் இராமன் -10-1-
74-வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தைக் கீறி வரு குருதி பொழி தர வன் கணை ஓன்று ஏவ
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து வல்லரக்கர் உயிர் உண்ட மைந்தன் -10- 2-
75-வெவ்வரி நல் கரு நெடும் கண் சீதைக்காகிச் சின விடையோன் சிலை இறுத்து மழு வாள் ஏந்தி வெவ்வரி நல் சிலை வாங்கி
வென்றி கொண்டு வேல் வேந்தர் பகை தடிந்த வீரன் எவ்வரி வெஞ்சிலை தடக்கை இராமன் -10–3-
76-தொத்தலர் பூஞ்சுரி குழல் கைகேசி சொல்லால் தொல் நகரம் துறந்து துறைக் கங்கை தன்னைப் பக்தியுடை குகன் கடத்த
வனம் போய் புக்குப் பரதனுக்கு பாதுகமும் அரசும் ஈந்து சித்ர கூடத்து இருந்தான் -10-4-
77-வலி வணக்கு வரை நெடும் தோள் விராதைக் கொன்று வண் தமிழ் மா முனி கொடுத்த வரி வில் வாங்கிக் கலை வணக்கு நோக்கு
அரக்கி மூக்கை நீக்கிக் கரனோடு தூடணன் தன் உயிரை வாங்கிச் சிலை வணக்கி மான் மரியா எய்தான் -10–5-
78-தனமருவு வைதேகி பிரியல் உற்றுத் தளர்வு எய்திச் சடாயுவை வைகுந்தத்து ஏற்றி வனமருவு கவியரசன் காதல் கொண்டு
வாலியைக் கொன்று இலங்கை நகர் அரக்கர் கோமான் சினம் அடங்க மாருதியால் சுடுவித்தான் -10–6-
79-குரை கடலை அடல் அம்பால் மறுக எய்து குலை கட்டி மறு கரையை அதனாலே ஏறி எரி நெடு வேல் அரக்கரோடும்
இலங்கை வேந்தன் இன்னுயிர் கொண்டு அவன் தம்பிக்கு அரசும் ஈந்து திரு மகளோடு இனிது அமர்ந்த செல்வன் -10–7-
80-அம்பொனெடு மணி மாட அயோத்தி எய்து அரசு எய்து அகத்தியன் வாய்த் தான் முன் கொன்றான் தன் பெரும் தொல் கதை கேட்டு
மிதிலைச் செல்வி உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள் செம்பவளத் திரள் வாய்த் தன் சரிதை கேட்டான் -10- 8-
81-செறி தவச் சம்புகன் தன்னைச் சென்று கொன்று செழு மறையோன் உயிர் மீட்டுத் தவத்தோன் ஈந்த நிறை மணிப் பூண்
அணியும் கொண்டு இலவணன் தன்னைத் தம்பியால் வான் ஏற்றி முனிவன் வேண்டத் திறல் விளங்கும் இலக்குமனைப் பிரிந்தான் -10-9-
82-அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி அடல் அரவப் பகை ஏறி அசுரர் தம்மை வென்று இலங்கு மணி நெடும் தோள் நான்கும்
தோன்ற விண் முழுதும் எதிர் வரத் தன் தாமம் மேவிச் சென்று இனிது வீற்று இருந்த அம்மான் -10–10-
83-தில்லை நகர்த் திருச் சித்ர கூடம் தன்னுள் திறல் விளங்கு மருதியோடு அமர்ந்தான் எல்லையில் சீர்த் தயரதன் தன் மகன் -10–11-

—————————————————————-

திருச்சந்த விருத்தம்
84-குரங்கை ஆள் உகந்த வெந்தை -21-
85-கூனகம் புகத்து எறித்த கொற்ற வில்லி -30-
86-வேலை வேவ வில் வளைத்த வெல் சினத்தை வீரன் -31-
87-குரக்கினப் படை கொடு குரை கடலின் மீது போய் அரக்கர் அங்கரங்க வெஞ்சரம் துரந்த வாதி -32-
88-மின்னிறத்து எயிற்று அரக்கன் வீழ வெஞ்சரம் துரந்து பின்னவற்கு அருள் புரிந்து அரசளித்த பெற்றியோன் -33-
89-வெற்பு எடுத்து வேலை நீர் வரம்பு கட்டினான் -39-
90-வெற்பு எடுத்த விஞ்சி சூழ் இலங்கை கட்டு அழித்தான் -39-
91-கொண்டை கொண்ட கோதை மீது தேனுலாவு கூனி கூன் உண்டை கொண்டரங்க வோட்டி உள் மகிழ்ந்த நாதன் -49-
92-வெண் திரைக் கருங்கடல் சிவந்து வேவ முன்னோர் நாள் திண் திறல் சிலைக்கை வாளி விட்ட வீரர் -50-
93-சரங்களைத் துரந்து வில் வளைத்து இலங்கை மன்னன் சிரங்கள் பத்து அறுத்து உதிர்த்த செல்வர் -51-
94-இலைத் தலைச் சரம் துரந்து இலங்கை கட்டு அழித்தவன் –54-
95-இலங்கை மன்னன் ஐந்தொடு ஐந்து பைந்தலை நிலத்து உகக் கலங்க வன்று சென்று கொன்று வென்றி கொண்ட வீரன் -56-
96-மரம் பொதச் சரந்துரந்து வாலி வீழ முன்னோர் நாள் உரம் பொதச் சரந்துரந்த உம்பராளி எம்பிரான் -73-
97-உடைந்த வாலி தந்தனுக்கு உதவ வந்து இராமனாய் மிடைந்த வேழ் மரங்களும் அடங்க எய்தான் -81-
98-பண்ணுலாவு மென் மொழிப் படைத் தடங்காணாள் பொருட்டு எண்ணிலா வரக்கரை நெருப்பினால் நெருங்கினான் -91-
99-இரும்பரங்க வெஞ்சரம் துரந்த வில்லி ராமன் -93-
100-குன்றினால் துள்ளு நீர் வரம்பு செய்த தோன்றல் -102 —
101-கடுங்கவந்தன் வக்கரன் கரன் முரன் சிரமவை இடந்து கூறு செய்த பல் படைத் தடக்கை மாயன் -104-
102-மாறு செய்த வாள் அரக்கன் நாள் உலப்ப அன்று இலங்கை நீறு செய்து சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார் -116-

———————————————

திருமாலை –
103-சிலையினை இலங்கை செற்ற தேவன் -7-
104-ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து உலகங்கள் உய்யச் செருவிலே அரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார் –11 –
திருப்பள்ளி எழுச்சி –
105-இலங்கையர் குலத்தை வாட்டிய வரிசிலை வானவர் ஏறு மா முனி வேள்வியைக் காத்து அவபிரதமாட்டிய அடு திறல் அயோத்தி எம்மரசு -4-

———————————–

அமலனாதி பிரான் –
106-அன்று நேர்ந்த நிசாராரைக் கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் -2-
107-சதுரமா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து உத்திர வோட்டி ஓர் வெங்கணை உய்த்தவன் -4-

——————————————

பெரிய திருமொழி –
108-வாலி மா வலத்து ஒருவனது உடல் கெட வரிசிலை வளைவித்தான் -1–2–1-
109-கலங்க மாக் கடல் அரி குலம் பணி செய்ய அருவரை அணை கட்டி இலங்கை மா நகர் பொடி செய்த அடிகள் -1-2–2–
110-தானவனாகம் தரணியில் புரளத் தடம் சிலை குனித்த என் தலைவன் -1–4–1-
111-கானிடை உருவைச் சுடு சரம் துரந்து கண்டு முன் கொடும் தொழில் உரவோன் ஊனுடை யகலத்து
அடு கணை குளிப்ப உயிர் கவர்ந்து உகந்த எம் ஒருவன் -1-4-2-
112-இலங்கையும் கடலும் –அரக்கர் குலங்களும் கெட முன் கொடும் தொழில் புரிந்த கொற்றவன் -1-4-3-
113-மான் முனிந்து ஒரு கால் வரி சிலை வளைத்த மன்னவன் -1–4-8-
114-கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய்ச் சிலையும் கணையும் துணையாக சென்றான்
-மலை கொண்டு அலை நீர் அணை கட்டி மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர் தலைவன் தலை பத்து அறுத்து உகந்தான் -1–5–1-
115-கடம் சூழ் கரியும் பரிமாவும் ஒலி மாந்தேரும் காலாளும் உடன் சூழ்ந்து எழுந்த கடி இலங்கை பொடியா வடிவாய்ச் சரந்துரந்தான்-1–5-2-
116-ஒரு கால் இரு கால் சிலை வளையத் தேரா வரக்கர் தேர் வெள்ளம் செற்றான் -1–5–4-
117-அடுத்து ஆர்த்து எழுந்தாள் பில வாய் விட்டு அலற அவள் மூக்கு வாயில் விடுத்தான் -1–5–5-
118-மராமரம் ஏழும் எய்த வலத்தினான்-1-8–5-
119-கண்ணார் கடல் சூழ் இலங்கைக்கு இறைவன் தன் திண்ணாகம் பிளக்கச் சரம் செல உய்த்தான் -1-10–1-
120-இலங்கைப் பதிக்கு அன்று இறையாக அரக்கர் குலம் கெட்டு அவர் மாளக் கொடிப் புள் தெரித்தான் -1-10-2-
121-காசை யாடை மூடி யோடிக் காதல் செய்தானாவனூர் நாசமாக நம்ப வல்ல நம்பி நம் பெருமான் –2–2–1-
122-தையலாள் மேல் காதல் செய்த தானவன் வாள் அரக்கன் பொய்யில்லாத பொன் முடிகள் ஒன்பதோடு ஒன்றும்
அன்று செய்த வெம்போர் தன்னில் இங்கோர் செஞ்சரத்தால் உருள எய்த வெந்தை எம்பெருமான் -2–2–2-
123-முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து அரக்கன் மன்னூர் தன்னை வாளியினால் மாள முனைந்தான் -2–2–3–
124-சிற்றவை பணியால் முடி துறந்தான் -2–3–1-
125-பரதனும் தம்பி சத்ருக்கனனும் இலக்குமனோடு மைதிலியும் இரவு நன் பகலும் துதி செய்ய நின்ற இராவணாந்தகன் -2–3–7-
126-அயன் வாளியினால் கதிர் நீண் முடி பத்தும் அறுத்து அமரும் நீல முகில் வண்ணன் -2- 4–5-
127-கிளர் பொறிய மறி அதனின் பின்னே படர்ந்தான் -2-5-6-
128-தென்னிலங்கை யரக்கர் வெந்தை விலங்குண்ண வலங்கை வாய்ச் சரங்கள் யாண்டான் -2-5-9-
129-விண்டாரை வென்று ஆவி விலங்குண்ண மெல்லியலார் கொண்டாடும் மல்லகலம் அழல் ஏற வெஞ்சமத்துக் கண்டார் -2-6-4-
130-தடங்கடல் நுடங்கெயில் இலங்கை வன் குடி மடங்க வாள் அமர் தொலைத்தான் -2–7–6-
131-குடைத்திறல் மன்னவனாய் ஒரு கால் குரங்கைப் படையா மலையால் கடலை படைத்தவன் எந்தை பிரான் -2–9–8-
132-தாங்கரும் போர் மாலி படப் பறவை யூர்நது தராதலத்தோர் குறை முடித்த தன்மையான்–2–10–4-
133-கறை வளர் வேல் கரன் முதலாக் கவந்தன் மாலி கணை ஒன்றினால் மடிய இலங்கை தன்னுள்
பிறை எயிற்று வாள் அரக்கர் சேனை எல்லாம் பெரும் தகையோடு உடன் துணித்த பெம்மான் -2–10–5-
134-கூனுலாவிய மடந்தை தன் கொடும் சொலின் திறத்து இளங்கொடி யோடும் கானுலாவிய கருமுகில் திரு நிறத்தவன் -3-1–6-
135-மின்னின் நுண்ணிடை மடக் கொடி காரணம் விலங்கலின் மிசை யிலங்கை மன்னன் நீண் முடி பொடி செய்த மைந்தன் -3–1–7-
136-நெய் வாய் அழல் அம்பு துரந்து முந்நீர் துணியப் பணி கொண்டு அணி யார்நது இலங்குமையார் மணி வண்ணன் -3-2-6-
பைங்கண் விறல் செம்முகத்து வாலி மாளப் படர் வனத்துக் கவந்தனொடும் படையார்
137-திண் கை வெங்கண் விறல் விராதன் உக வில் குனித்த விண்ணவர் கோன் -3–4–6-
138-பொருவில் வலம்புரி யரக்கன் முடிகள் பத்தும் புற்றும் அறிந்த போலேப் புவி மேல் சிந்தச் செருவில் வலம்புரி சிலைக்கை மலைத் தோள் வேந்தன் -3–4–7-
139-மரம் எய்த மா முனிவன் -3-5–5-
140-அரக்கர் குலப்பாவை தன்னை வெஞ்சின மூக்கரிந்த விறலோன்– 3-7-3-
141-சிறையார் அவணப் புள் ஓன்று ஏறி அன்று திசை நான்கு நான்கும் இரியச் செருவில்
கறையார் நெடு வேல் அரக்கர் மடியக் கடல் சூழ் இலங்கை கடந்தான் -3–8–4-
142-கலையிலங்கு மகலல்குல் அரக்கர் குலக் கொடியை காதோடு மூக்குடன் அரியக் கதறி அவள் ஓடித்
தலையில் அங்கை வைத்து மலையிலங்கு புகச் செய்த தடம் தோளான் -3-9-4-
143-மின்னனைய நுண் மருங்குல் மெல்லியற்கா இலங்கை வேந்தன் முடி ஒருபதும் தோள் இருபதும் போயுதிரத்
தன்னிகரில் சிலை வளைத்து அன்று இலங்கை பொடி செய்த தடம் தோளான் -3-9-5-
144-வாள் நெடும் கண் மலர்க் கூந்தல் மைதிலிக்கா இலங்கை மன்னன் முடி ஒருபதும்
தோள் இருபதும் போய் உதிரத் தாள் நெடும் திண் சிலை வளைத்த தயரதன் சேய்-3-10-6-
145-வாராரும் இளம் கொங்கை மைதிலியை மணம் புணர்வான் காரார் திண் சிலை இறுத்த தனிக் காளை -4-1-8-
146-கம்பமா கடல் அடைத்து இலங்கை மன் கதிர் முடி அவை பத்தும் அம்பினால் அறுத்து அரசு அவன் தம்பிக்கு அளித்தவன்-4-2-1-
147-தீ மனத்து அரக்கர் திறல் அழித்தவனே என்று சென்று அடைந்தவர் தமக்குத் தாய் மனத்து இரங்கி அருளினைக் கொடுக்கும் தயரதன் மதலை -4-3-5-
148-மல்லை மா முந்நீர் அதர் பட மலையால் அணை செய்து மகிழ்ந்தவன் கல்லின் மீதியன்ற கடி மதிள் இலங்கை கலங்க ஓர் வாளி தொட்டான் -4-3-6-
149-தான் போலும் என்று எழுந்தான் தரணியாளன் அது கண்டு தரித்து இருப்பான் அரக்கர் தங்கள்
கோன் போலும் என்று எழுந்தான் குன்றம் அன்ன இருப்பது தோளுடன் துணித்த ஒருவன் –4 -4 -6 –
150-இலங்கை வவ்விய விடும்படி தீரக் கடும் கணை துரந்த வெந்தை -4-5-2-
151-கருமகள் இலங்கையாட்டி பிலங்கொள் வாய் திறந்து தன் மேல் வருமவள் செவியும் மூக்கும் வாளியினால் தடித்த வெந்தை -4-5-5-
152-உருத்தெழு வாலி மார்பில் ஒரு கணை உருவ ஒட்டிக் கருத்துடைத் தம்பிக்கு இன்பக் கதிர் முடி அரசு அழித்தான் -4–6–3-
153-முனை முகத்து அரக்கன் மாள முடிகள் பத்து அறுத்து வீழ்த்து அங்கு அனையவர்க்கு இளையவர்க்கே அரசு அளித்து அருளினான் -4-6-4-
154-கல்லால் கடலை அணை கட்டி உகந்தான் -4-7-6-
155-மல்லை முந்நீர் தட்டிலங்கை கட்டழித்த மாயன் -4- 8-4-
156-அரக்கர் ஆவி மாள அன்று ஆழ் கடல் சூழ் இலங்கை செற்ற குரக்கரசன் கோல வில்லி -4-8-5-
157-அலை கடல் அடைத்திட்டு அரக்கர் தஞ்சிரங்களை உருட்டினான் -4-10-2-
158-காற்றிடைப் பீளை கரந்தன வரந்தை யுறக் கடல் அரக்கர் தம் சேனை கூற்றிடை செல்லக் கொடும் கணை துரந்த கோல வில்லி ராமன் -4–10–6-
159-மேவா வரக்கர் தென்னிலங்கை வேந்தன் வீயச் சரம் துரந்தான் -5-1-3-
160-விறல் வாள் அரக்கர் தலைவன் தன் வற்பார் திரள் தோள் ஐ நான்கும் துணித்த வல் விலி ராமன் -5-1-4-
161-ஆறினோடு ஒரு நான்குடை நெடு முடி அரக்கன் தன் சிரம் எல்லாம் வேறு வேறாக வில்லது வளைத்தவன் -5-3-7-
162-விளைத்த வெம்போர் விறல் வாள் அரக்கன் நகர் பாழ் பட வளைத்த வல் வில் தடக்கையவன் – 5-4-4-
163-வம்புலாம் கூந்தல் மண்டோதரி காதலன் வான் புக அம்பு தன்னால் முனிந்த அழகன் -5- 4-5-
164-மராமரம் ஏழு எய்த வென்றிச் சிலை யாளன் -5-5-2-
165-சுரி குழல் கனிவாய்த் திருவினைப் பிரித்த கொடுமையில் கடு விசை அரக்கன் எரி விழித்து இலங்கு மணி முடி பொடி செய்து இலங்கை பாழ்
படுப்பதற்கு எண்ணி வரி சிலை விளைய வடு சரம் துரந்து மறி கடல் நெறி பட மலையால் அரிகுலம் பணி கொண்டலை கடலை அடைத்தான் -5-7-7-
166-இலங்கை மலங்க வன்றடு சரம் துரந்தான் -5- 7-8-
167-ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்று அவர்க்கு இன்னருள் சுரந்து மாழை மான் மட நோக்கி
யுன் தோழி உம்பி எம்பி என்று உகந்து தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்றான் -5-8-1-
168-வாத மா மகன் மற்கடம் விலங்கு மற்றோர் சாதி என்று ஒழியாது உகந்து காதல் ஆதாரம் கடலினும் பெருகச் செய்த
தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று கோதில் வாய்மையினோடும் உடனே உண்பான் நான் என்றான் -5-8-2-
169-விலங்கலால் கடல் அடைத்து விளங்கு இழை பொருட்டு வில்லால் இலங்கை மா நகருக்கு இறைவன் இருபது புயம் துணித்தான்-5- 9-6-
170-பிறையின் ஒளி எயிறு இலக முறுகி எதிர் பொருதும் என வந்த அசுரர் இறைகள் அவை நெறு நெறு என வெறியவர் வயிறு அழல நின்ற பெருமான் -5-10-4-
171-மூள எரி சிந்தி முனிவு எய்தி அமர் செய்தும் என வந்த வசுரர் தோளும் அவர் தாளும் முடி யோடு பொடியாக நொடியாம் அளவு எய்தான் -5–10-5-
172-தம்பியொடு தாம் ஒருவர் தன் துணைவி காதல் துணையாக முன்ன நாள் வெம்பி எரி கானகம் உலாவுமவர் -5-10-6-
173-வற்றா நீள் கடல் சூழ் இலங்கை இராவணனைச் செற்றான் -6–3–5-
174-தொன்னீர் இலங்கை மலங்க விலங்கு எரி யூட்டினான் -6-4-6-
175-ஆனைப் புரவி தேரொடு கால் ஆள் அணி கொண்ட சேனைத் தொகையைச் சாடி இலங்கை செற்றான் -6–5–3-
176-விண்ட நிசாசரரைத் தோளும் தலையும் துணி வெய்தச் சுடு வெஞ்சிலை வாய்ச் சரம் துரந்தான் -6–7–1-
177-துள்ளா வருமான் விழ வாளி துரந்தான் -6-7-3-
178-கல்லார் மதிள் சூழ் கடி இலங்கைக் கார் அரக்கன் வல்லாகம் கீள வரி வெஞ்சரம் துரந்த வில்லன் –செல்வ விபீடணற்கு வேறாக நல்லான் -6-8-5-
179-பழியாரும் விறல் அரக்கன் பரு முடிகளவை சிதற அழலாரும் சரம் துரந்தான் -6-9-2-
180-எறிஞர் அரண் அழியக் கடியார் இலங்கை கடந்த நம்பி -6-10-11-
181-இலங்கைக் கோன் வல்லாள் ஆகம் வில்லால் முனிந்த வெந்தை விபீடணற்கு நல்லான் -6-10-4-
182-தென்னிலங்கை அடையா வரக்கர் வீயப் பொருது மேவி வெங்கூற்றம் நடையா உண்ணக் கண்டான் -6-10-5-
183-கான வெண்கும் குரங்கும் முசுவும் படையா அடல் அரக்கர் மானம் அழித்து நின்ற வென்றி யம்மான் -6-10-6-
184-வில்லேர் நுதல் வேல் நெடும் கண்ணியுடன் கல்லார் கடும் கானம் திரிந்த களிறு -7- 1-5-
185-சினவில் செங்கண் அரக்கர் உயிர் மாளச் செற்ற வில்லி –மரம் ஏழு எய்த மைந்தன் -7–3–1-
186-ஆழி சூழ் இலங்கை மலங்கச் சென்று சரங்கள் ஆண்ட தண் தாமரைக் கண்ணன் -7-3-4-
187-தழலே புரை மின் செய் வாள் அரக்கன் நகர் பாழ் படச் சூழ் கடல் சிறை வைத்தான் -7-3-9-
188-மீதோடி வாள் எயிறு மின்னிலக முன் விலகும் உருவினாளைக் காதோடு கொடி மூக்கு அன்று உடன் அறுத்த கைத் தலத்தனன் -7-4-3-
189-தேராளும் வாள் அரக்கன் தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழப் போராளும் சிலையதனால் பொரு கணைகள் போக்குவித்தான் -7-4-4-
190-செம்பொன் மதிள் சூழ் தென் இலங்கைக்கு இறைவன் சிரங்கள் ஐ இரண்டும் உம்பர் வாளிக்கு இலக்காக உதிர்த்த உரவோன் -7-5-3-
191-அடையார் தென்னிலங்கை அழித்தான் -7-6-3-
192-பந்து அணைந்த மெல் விரலாள் சீதைக்காகிப் பகலவன் மீது இயங்காத இலங்கை வேந்தன் அந்தமில்
திண் கரம் சிரங்கள் புரண்டு வீழ அடு கணையால் எய்து உகந்த அம்மான் -7-8-7-
193-தார் மன்னு தாசாரதி –வாள் அரக்கர் காலன் -8-4-7-
194-ஏழு மா மரம் துளை படச் சிலை வளைத்து இலங்கையை மலங்குவித்த ஆழியான் -8-5-5-
195-முரியும் வெண் திரை முது கயம் தீப்பட்ட முழங்கு அழல் எரி அம்பின் வரி கொள் வெஞ்சிலை வளைவித்த மைந்தன் -8-5-6-
196-கலங்க மாக்கடல் கடைந்து அடைத்து இலங்கையர் கோனது வரையாகம் மலங்க வெஞ்சமத்து அடு சரம் துரந்த எம்மடிகள் -8-5-7-
197-துளங்கா வரக்கர் துளங்க முன் திண் தோள் நிமிரச் சிலை வளையச் சிறிதே முனிந்த திரு மார்பன் -8-6-1-
198-பொருந்தா வரக்கர் வெஞ்சமத்து பொன்ற வன்று புள்ளூர்ந்து பெரும் தோள் மாலி தலை புரளப் போந்த வரக்கர்
தென்னிலங்கை இருந்தார் தம்மை யுடன் கொண்டு அங்கு எழிலார் பிலத்துப் புக்கு ஒலிப்ப கரும் தாள் சிலைக் கைக் கொண்டான் -8- 6-2-
199-வல்லியிடையாள் பொருட்டாக மதிள் நீர் இலங்கையார் கோவை அல்லல் செய்து வெஞ்சமத்துள் ஆற்றல் மிகுத்த
ஆற்றலான் வல்லாள் அரக்கர் குலப் பாவை வாட முனி தன் வேள்வியைக் கல்விச் சிலையால் காத்தான் -8-6-3-
200-மல்லை முந்நீர் அதர் பட வரி வெஞ்சிலை கால் வளைவித்துக் கொல்லை விலங்கு பணி செய்யக் கொடியோன் இலங்கை புகலுற்றுத்
தொல்லை மரங்கள் புகப் பெய்து துவலை நிமிர்ந்து வான் அணவக் கல்லால் கடலை அடைத்தான் -8-6-4-
201-சேம மதிள் சூழ் இலங்கைக் கோன் சிரமும் கரமும் துணித்தான் -8-6-5-
202-திருந்தா வரக்கர் தென்னிலங்கை செந்தீ உண்ணச் சிவந்தான்-8- 6-6-
203-அலை நீர் இலங்கைத் தசக் க்ரீவற்கு இளையோருக்கு அரசை அருளி முன் கலை மாச் சிலையால் எய்தான் -8-6-7-
204-விண்டவர் பட மதிள் இலங்கை முன் எரி எழக் கண்டவர் -8-7-5-
205-வையம் எல்லாம் உடன் வணங்க வணங்கா மன்னனாய் தோன்றி வெய்ய சீற்றக் கடி இலங்கை குடி கொண்டோட
வெஞ்சமத்துச் செய்த வெம்போர் நம் பரன் -8-8-7-
206-வானுளாரவரை வலிமையால் நலியும் மறி கடல் இலங்கையார் கோனைப் பானு நேர்
சரத்தால் பனங்கனி போலே பரு முடி யுத்திர வில் வளைத்தோன் -9-1-7-
207-கலையுலா வல்குல் காரிகை திறத்துக் கடல் பெரும் படை யோடும் சென்று சிலையினால் இலங்கை தீ எழச் செற்றான் -9-1-10-
208-வில்லால் இலங்கை மலங்கச் சரந்துரந்த வல்லாளன் -9-4-5-
209-தென்னிலங்கை மலங்கச் செற்றான் -9-5-10-
210-சிரமுனைந்தும் ஐந்தும் சிந்தச் சென்று அரக்கன் உரமும் கரமும் துணித்த உரவோன் -9–6–4-
211-சிலையால் இலங்கை செற்றான் -9-6-10-
212-சுடு சரமடு சிலைத் துரந்து நீர்மையிலாத தாடகை மாள நினைத்தவர் -9- 8-4-
213-வணங்கலில் அரக்கன் செருக்களத்து அவிய மணி முடி ஒருபதும் புரள அணங்கு எழுந்து அவன் தன் கவந்தம் நின்றாட அமர் செய்த அடிகள் -9–8–5-
214-காவலன் இலங்கைக்கு இறை கலங்கச் சரம் செல உய்த்து மற்றவன் ஏவலம் தவிர்த்தான் -9-10-6-
215-அங்கு வானவர்க்கு ஆகுலம் தீர அணி இலங்கை அழித்தவன் -10-2-10-
216-இராவணற்கு காலன் -10–3–3-
217-மணங்கள் நாறும் வார் குழலார் மாதர்கள் ஆதரத்தைப் புணர்ந்த சிந்தைப் புன்மையாளன் பொன்ற
வரி சிலையால் கணங்கள் உண்ண வாளி யாண்ட காவலன் -10-3–4-
218-கல்லின் முந்நீர் மாற்றி வந்து காவல் கடந்து இலங்கை அல்லல் செய்தான் -10–3–6-
219-கவள யானைப் பாய் புரவித் தேரொடு அரக்கர் எல்லாம் துவள நின்ற வென்றி யாளன் தவள மாட நீடு அயோத்திக் காவலன் தன் சிறுவன் -10–3–8-
220-ஏடொத்து ஏந்தும் நீள் இலை வேல் இறைவனார் ஓடிப் போகா நின்றார் -10–3–9-
221-தெளியா வரக்கர் திரள் போய் அவிய மிடைத்திட்டு எழுந்த குரங்கைப் படையா விலங்கல் புகப் பாய்ச்சி விம்மக் கடலை அடைத்திட்டவன் -10–6–7-
222-நெறித்திட்ட மென்குழை நல் நேரிழையோடு உடனாய வில்லென்ன வல்லேயதனை இறுத்திட்டு அவள் இன்பம் அன்போடு அணைந்திட்டு
இளம் கொற்றவனாய் துளங்காத முந்நீர் செறித்திட்டு இலங்கை மலங்க அரக்கன் செழு நீண் முடி தோளோடு தாள் துணிய வறுத்திட்டவன்-10–6–8-
223-வரிந்திட்ட வில்லால் மரம் ஏழும் எய்து மலை போல் உருவத் தோர் இராக்கதி மூக்கு அரிந்திட்டவன்-10-6-9-
224-இலங்கை ஒள் எரி மண்டு யுண்ணப் பணித்த ஊக்கம் உடையான் -10–9–1-
225-அரக்கியர் ஆகம் புல்லென வில்லால் அணி மதிள் இலங்கையார் கோனைச் செருக்கு அழித்து அமரர் பணிய முன்னின்ற சேவகன் -10-9-6-
226-பெரும் தொகைக்கு இரங்கி வாலியை முனிந்த பெருமையான்-10-9-8-
227-அரக்கரை வென்ற வில்லியார் -11-1-1-
228-வென்று வார் சிலை வளைத்து இலங்கையை வென்ற வில்லியார் -11-1–6-
229-பொருந்து மா மரம் ஏழும் எய்த புனிதனார் -11–2–4-
230-இலை மலி பள்ளி எய்தி இது மாயம் என்ன இனமாய மான்பின் எழில் சேர் அலை மலி வேல் கணாளை யகல்விப்பதற்கு ஓர் உருவாய் மானை யமையாக்
கொலை மலி வெய்துவித்த கொடியோன் இலங்கை பொடியாக வென்றி அமருள் சிலை மலி வெஞ்சரங்கள் செல உய்த்த நங்கள் திருமால் -11- 4-7-
231-கொடியோன் இலங்கை பொடியாச் சிலை கெழு செஞ்சரங்கள் செல உய்த்த நாங்கள் திருமால் -11-4-10-
232-மானமரு மென் நோக்கி வைதேவி இன் துணையாக் கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்தான் -11-5-1-

————————————

திருக் குறும் தாண்டகம்
233-கடி மதிள் இலங்கை செற்ற ஏறு -2-
234-முன்பொலா இராவணன் தன் முது மதிள் இலங்கை வேவித்து அன்பினால் அனுமன் வந்து அங்கு அங்கு அடி இணை பணிய நின்றான் -15-
235-மாயமான் மாயச் செற்றான் -16-

—————————

திரு நெடும் தாண்டகம் –
236-வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தான் -13-
237-வென்று அசுரர் குலம் களைந்த வேந்தன் -16-
238-தேராளும் வாள் அரக்கன் செல்வமாளத் தென்னிலங்கை முன் மலங்கச் செந்தீ ஒல்கிப் போராளன் -20-
239-தென்னிலங்கை அரண் சிதறி அவுணன் மாளச் சென்றான் -28-
240-அலை கடலைக் கடந்து அடைத்த அம்மான் குன்றாத வலி யரக்கர் கோனை மாளக் கொடும் சிலை வாய்ச் சரந்துரந்து குலம் களைந்து வென்றான் -29-

———————————–

முதல் திருவந்தாதி –
241-சிலையால் மராமரம் ஏழ் செற்றான் -27-
242-பூ மேய மாதவத்தோன் தாள் பணிந்த வாள் அரக்கன் நீள் முடியைப் பாதமத்தால் எண்ணினான் -45-
243-நுடங்கிடையை முன்னிலங்கை வைத்தான் முரண் அழிய முன்னொரு நாள் தன் வில் அங்கை வைத்தான் -59-
244-மேலொரு நாள் மான்மாய வெய்தான் -82-

————————–

இரண்டாம் திருவந்தாதி —
245-சீதையை மான்பின் போய் அன்று பிரிந்தான் -15-
246-இலங்கை மேல் வெவ்வே தன் சீற்றத்தால் சென்று இராவணனைக் கொன்றான் -25-
247-தென்னிலங்கை நீறாக எய்து அழித்தான் -29-
248-அன்று காரோதம் பின்னடைந்தான் -30-
249-தோள் இரண்டு எட்டு ஏழும் மூன்றும் முடி அனைத்தும் தாள் இரண்டும் வீழச் சரம் துணிந்தான் -43-

——————————

மூன்றாம் திருவந்தாதி –
250-இலங்கா புரம் எய்து எரித்தான் -51-
251-எய்தான் மரா மரம் ஏழும் இராமனாய் எய்தான் அம் மான் மறியை ஏந்திழைக்காய் தென்னிலங்கைக் கோன் வீழ எய்தான் -52-
252-வாள் அரக்கன் ஏய்ந்த முடிப் போது மூன்று ஏழு என்று எண்ணினான் -77-

——————————

நான்முகன் திருவந்தாதி –
253-ஈசனை வென்ற சிலை கொண்ட செங்கண் மால் சேராக் குலை கொண்ட ஈரைந்து தலையான் இலங்கையை ஈடு அழித்த கூரம்பன் -8-
254-தண் தார் இராவணனை ஊன் ஒடுங்க எய்தான் -28-
255-மிகப் புருவம் ஒன்றுக்கு ஓன்று ஓசனையான் வீழ ஒரு கணை எய்தான் -29-
256-தண்ட வரக்கன் தலை தாளால் பண்டு எண்ணிப் போங்குமரன்-44-
257-கல்லாதவர் இலங்கை கட்டழித்த காகுத்தன் -53-
258-தடம் கடலைக் கல் கொண்டு தூரத்தை கடல் வண்ணன் -77-
259-கழி சினத்த வல்லாளன் வானரக் கோன் வாளி மதன் அழித்த வில்லாளன் -85-

———————————–

திரு விருத்தம் –
260-இலங்கைக் குழாம் நெடு மாடம் இடித்த பிரானார் -36-
261-தென்பால் இலங்கை வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார் -77-
262-பேணலம் இல்லா வரக்கர் முந்நீர் பெரும்பதி வாய் நீள் நகர் நீள் எரி வைத்து அருளாய் என்று விண்ணோர் தாள் நிலம் தோய்ந்து தொழு மூர்த்தி -92-

————————–

பெரிய திருவந்தாதி –
263-சூழ்ந்து எங்கும் வாள் வரைகள் போல் அரக்கன் வன் தலைகள் தாம் இடியத் தாள் வரை வில் ஏந்தினார் -17-
264-அன்று திருச் செய்ய நேமியான் தீ யரக்கி மூக்கும் பருச் செவியும் ஈர்த்த பரன் -63-
265-மரம் ஏழு அன்று எய்தான் -64-
266-சூட்டாய நேமியான் தொல்லரக்கன் இன்னுயிரை மாட்டே துயர் இழைத்த மாயவன் -66-
267-கணை நாணில் ஓவாத் தொழில் சார்ங்கன் –78-

——————————-

திரு எழு கூற்று இருக்கை
268-ஒரு முறை இரு சுடர் மீதினில் இயங்கா மும் மதிள் இலங்கை இருகால் வளைய ஒரு சிலை ஒன்றிய வீர் எயிற்று அழல் வாய் வாளியில் அட்டான் -268-

—————————————-

சிறிய திருமடல்
269-இலங்கை பொடி பொடியா வீழ்த்தவன் —
270-தன் சீதைக்கு நேராவன் என்று ஓர் நிசாசரி தான் வந்தாளைக் கூரார்ந்த வாளால் கொடு மூக்கும் காது இரண்டும் ஈரா விடுத்து அவட்கு மூத்தோனை
வெந்நகரம் சேரா வகையே சிலை குனித்தான் -செந்துவர் வாய் வாரார் வன முலையாள் வைதேவி காரணமா ஏரார்
தடம் தோள் இராவணனை ஈரைந்து சீரார் சிரம் அறுத்து செற்று உகந்த செங்கண் மால் –

———————————-

பெரிய திரு மடல் –
271-போர் வேந்தன் தன்னுடைய தாதை பணியால் அரசு ஒழிந்து பொன்னகரம் பின்னே புலம்ப வலம் கொண்டு மன்னும் வளநாடு கை விட்டுக்
கொன்னவிலும் வெங்கானத்தூடு கொடும் கதிரோன் துன்னு வெயில் வறுத்த வெம் பரல் மேல் பஞ்சடியால் வைதேவி
என்று உரைக்கும் அன்னம் நடைய வணங்குடன் நடந்த மன்னன் இராமன் —
272-வண்ணம் போல் அன்ன கடலை மலை இட்டு அணை கட்டி மன்னன் இராவணனை மா மண்டு வெஞ்சமத்துப்
பொன் முடிகள் பத்தும் புரளச் சரம் துரந்து தென்னுலகம் ஏற்றுவித்த சேவகன் –
273-தென்னிலங்கை யாட்டி வராகர் குலப்பாவை மன்னன் இராவணன் தன் நல் தங்கை வாள் எயிற்றுத் துன்னு சுடு சினத்துச் சூர்ப்பணகாச்
சோர்வு எய்திப் பொன்னிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால் தன்னை நயந்தாளைத் தான் முனிந்து மூக்கு அரிந்தான்
வாய்த்த மலை போலும் தன்னிகர் ஓன்று இல்லாத தாடகையை மா முனிக்காகத் தென்னுலகம் ஏற்றுவித்த திண் திறலோன் —

——————–

திருவாய் மொழி
274-கூனி சிதைய உண்டை வில் நிறத்தில் தெரித்தான் -1-5-5-
275-சினையேய் தழைய மரா மரங்கள் ஏழும் எய்த சிரீதரன் -1- -5–6-
276-நீள் கடல் சூழ் இலங்கைக கோன் தோள்கள் தலை துணி செய்தான் -1–6–7-
277-மராமரம் எய்த மாயவன் -1-7-6-
278-தீ முற்றத் தென்னிலங்கை யூட்டினான் -2–1–3-
279-அரக்கியை மூக்கீர்ந்தான் -2–3–6-
280-குழாங்கொள் பேர் அரக்கன் குலம் வீய முனிந்தவன் -2-3-11-
281-அரக்கன் இலங்கை செற்றான் -2–4–3-/-2–4–4-
282-கிளர் வாழ்வை வேவ விலங்கை செற்றான் -2–4–10-
283-தேம் பணைய சோலை மராமரம் ஏழும் எய்தான் -2–5–7-
284-பாறிப் பாறி அசுரர் தம் பல் குழாங்கள் நீர் எழப் பாய் பறவை ஓன்று ஏறி வீற்று இருந்தான் -2–6–8-
285-இலங்கை செற்றான் மரா மரம் பைந்தாள் ஏழ் உருவ ஒரு வாளி கோத்த வில்லான்-2- 6-9-
286-இலங்கை அரக்கர் குலம் முருடு தீர்த்த பிரான் -2-9-10-
287-ஏர் கொள் இலங்கை நீரே செய்த நெடும் சுடர் ஜோதி -2-7-10-
288-தென்னிலங்கை எரி எழச் செற்ற வில்லி -3-6-2-
289-தயரதற்கு மகன் -3-6-8-
290-தண் இலங்கைக்கு இறையைச் செற்ற நஞ்சன்-3–8–2-
291-சன்மம் பல பல செய்து வெளிப்பட்டுச் சாங்கோடு சக்கரம் வில் உண்மை யுடைய யுலக்கை ஒள் வாள் தண்டு கொண்டு
புள்ளூர்ந்து உலகில் வன்மையுடைய வரக்கர் வசுரரை மாளப் படை பொருத நன்மை யுடையவன் -3–10-1-
292-கொம்பு போல் சீதை பொருட்டு இலங்கை நகர் அம்பு எரி உய்த்தவர் -4–2–8-
293-மதிள் இலங்கைக கோவை வீயச் சிலை குனித்தான் -4-3-1-
294-கிடந்து நின்றும் கொண்ட கோலத்தோடு வீற்று இருந்த மணம் கூடியும் கண்ட வாற்றால் தனதே யுலகு என நின்றான் -4–5–10-
295-குலங்குலமா வசுரர்களை நீறாகும் படி நிருமித்திப் படை தொட்ட மாறாளன் -4- 8-1-
296-தளிர் நிறத்தால் குறைவில்லாத் தனிச் சிறையில் விளப்புற்ற கிளி மொழியாள் காரணமாக்
கிளர் அரக்கன் நகர் எரித்த களி மலர்த் துழாய் அலங்கல் கமழ் முடியன் -4- 8-5-
297–காயும் கடும் சிலை என் காகுத்தன் -5-4–3-
298–கொடியான் இலங்கை செற்றான் -5–6–9-
299–இலங்கை செற்ற வம்மான் -5–7–3-
300–மாறில போர் அரக்கன் மதிள் நீர் எழச் செற்று உகந்த ஏறு சேவகனார் –6–1–10-
301–மன்னுடை இலங்கை யரண் காய்ந்த மாயவன் –6–2–1-
302 — காண் பெரும் தோற்றத்துக் காகுத்த நம்பி –6–6–9-
303–ஆவா வென்னாது உலகத்தை யலைக்கும் யசுரர் வாழ் நாள் மேல் தீவாய் வாளி மழை பொழிந்த சிலையான் -6–10–4-
304–புணரா நின்ற மரம் ஏழு அன்று எய்த ஒரு வில் வலவன்-6–10–5-
305–அடல் ஆழி ஏந்தி அசுரர் வன் குலம் வேர் மருங்கு அறுத்தான் -7–1–5-
306–காகுத்தன் -7–2–3-
307–பேர் எயில் சூழ் கடல் தென்னிலங்கை செற்ற பிரான்
308–மாறு நிரைத்து இறைக்கும் சரங்கள் இன நூறு பிணம் மலை போல் புரளக் கடல் ஆறு மடுத்து உதிரப் புனலா நீறு பட இலங்கை செற்ற வப்பன்-7–4–7-
309—புற்பா முதலாப் புல் எறும்பாதி ஓன்று இன்றியே நற் பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும் நற் பாலுக்கு உய்த்த விராம பிரான் –7–5–1-
310–நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு நாட்டை அளித்து உய்யச் செய்தான் -7–5–2-
311— ஆளியைக் காண் பரியாய் அரி காண் நரியாய் அரக்கரூளை இட்டு அன்று இலங்கை கடந்து புலம்புக்கு ஒளிப்ப
மீளி யம் புள்ளைக் கடாய் விறல் மாலியைக் கொன்று பின்னும் ஆளுயர் குன்றங்கள் செய்து அடர்த்தான் -7–6–8-
312–ஆண் திறல் மீளி மொய்ம்பின் அரக்கன் குலத்தைத் தடித்து மீண்டும் அவன் தம்பிக்கே விரி நீர்
இலங்கை அருளி ஆண்டு தன் சோதி புக்க வரர் அரி ஏறு -7–6–9-
313–அமரது பண்ணி அகலிடம் புடை சூழ் அடு படை அவித்த வம்மான்
314– செருக்கடுத்து அன்று திகைத்த அரக்கரை யுருக்கெட வாளி பொழிந்த ஒருவன் -8–6–2-
315—-புகழும் பொரு படை ஏந்திப் போர் புக்கு அசுரரைப் பொன்றுவித்தான் -8–9–3-
316–கணை ஒன்றாலே ஏழ் மரமும் எய்த எம் கார் முகில் -9–1–2-
317—காய்ச்சின பறவை யூர்நது பொன் மலையின் மீமிசைக் கார் முகில் போல் மாசின மாலி மாலி மான் என்று
அங்கு அவர் படக் கனன்று முன்னின்ற காய் சின்ன வேந்தன் -9–2–6-
318—கூற்றமாய் வசுரர் குல முதல் அரிந்த கொடு வினைப் படைகள் வல்லான் -9- 2–9-
319—என் ஆர் உயிர்க் காகுத்தன் -9–5–6-
320—பெயர்கள் ஆயிரம் யுடைய வல்லரக்கர் புக்கு அழுந்தத் தயரதன் பெற்ற மரகத மணித் தடம் -10- 1-8-

———————————————–———————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஹனுமத் பரத சத்ருக்ந லஷ்மண ஸீதாப் பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கம்ப நாடார் அருளிச் செய்த ஸ்ரீ ஏர் எழுபது –

April 1, 2025

பாயிரமும், வாழ்த்தும் நீங்கலாக -70 பாடல்கள் இந்த நூலில் உள்ளன.-இதனை இயற்றிய ஆசிரியர் கம்ப நாடர்-கம்பராமாயணம் இயற்றிய கம்பர் தம் இளமைக்காலத்தில் இதனைப் பாடியிருக்கலாம்.-அல்லது இந்தக் கம்ப நாடர் பிற்காலத்தவராக இருக்கலாம்-கம்பராமாயணம் போன்ற செறிவோ, திண்மொழியோ, குழப்பமான சொற்றொடர் அடுக்குப் பெருக்கமோ இதில் இல்லை-உழவுத் தொழிலின் மேன்மையை இந்த நூல் போற்றுகிறது 

பாயிரம்

கங்கை பெறுங் காராளர் கருவிஎழு பதும்உரைக்க
அங்கை பெறும் வளைத்தழும்பும் முலைத் தழும்பும் அணிய, மலை
மங்கை பெறும் திருவுருவாய் வந்துறைந்தார் தமை, வலஞ்செய்
கங்கை பெறும் தடவிகடக் களிற்றானைக் கழல்பணிவாம். 1

கார் மேகத்தால் வாழ்பவர் காராளர் -உழவர் -அவர்களைப் போற்றும் கருவியாக இந்த 70 பாடல்களும் பாடப்படுகின்றன. 
இதனை உரைக்க ஆனைமுகன் தாள்களைப் பணிவோம் -உமை தழுவும்போது அவளது வளையல் தழும்பும், முலைத் தழும்பும் பெற்றவன் சிவன். 
அவன் மங்கை மங்கை உருவமும் சேர்ந்து அமையும் அம்மையப்பராக இருக்கிறார். 
அவரை வலம் செய்தவன் இந்த ஆனைமுகன் -அவர் நீர்த் துறையில் அமர்ந்திருக்கிறார் -அகன்ற உருவில் இருக்கிறார் -விகடம் – நல்ல மதம் -அறிவு நீர் தந்து கொண்டிருக்கிறார்

நிறைக்குரிய அந்தணர்கள் நெறிபரவ, மநுவிளங்க,
தறைக்குரிய காராளர் தமதுவரம்பு இனிதோங்க,
மறைக்குரிய பூமனையும், வண்டுளபத் தாமனையும்,
பிறைக்குரிய நெடுஞ்சடிலப் பெம்மானை யும், பணிவாம். 2

அந்தணர் நெறியைப் போற்றவும் மனுநெறி விளங்கவும் வாழ்பவர் காராளர்
இவர்களின் எல்லை இனிதே ஓங்க, மறை ஓதும் பூமன் -பிரமன்-துளசி மாலையன் – திருமால் -தலையில் பிறை சூடியவன் -சிவன் மூவரையும் பணிவாம்

திங்களின்மும் மாரிபெய்யஞ், செகத்திலுயிர் செழித்தோங்கக்,
கங்கைகுலா திபர்வயலிற் கருவீறத், தொழுகுலத்தோர்
துங்கமக, மநுநீதி துலங்கிடவை யம்படைத்த
பங்கயன்றன் நாவிலுறை பாமடந்தை பதந்தொழுவாம்.-3-

மாதந்தோறும் 3 மழை பெய்ய,
உயிரினங்கள் செழித்து ஓங்க
காராளர் கரு வீறு பெற
அவரைத் தொழும் குலத்தோர் மனுநெறி துலங்க
வையம் படைத்த பிரமன் நாவில் உறையும் நாமடந்தையைத் தொழுவாம்

ஈழமண்டல முதலென, உலகத் தெண்ணு மண்டலத் தெறிபடை வேந்தர்தாழு மண்டலக்கும், செம்பியன் மரபினோர் தாமெலாம் பிறந் தினியபல் வளத்தின்வாழு மண்டலங், கனகமு மமணிகளும் வரம்பில் காவிரி குரம்பினிற் கொழிக்குஞ்சோழ மண்டலம், இதற்கிணை யாம்எனச் சொல்லு மண்டலஞ் சொல்வதற் கிலையே-4- 

ஈழ மண்டலம் முதல் எண்ணப்படும் எல்லா வேந்தரும்  தாழும் மண்டலம்  செம்பியன் மரபினோர் காக்கும் காவிரி வளம் கொழிக்கும் சோழ மண்டலம்  இதற்கு இணையாகச் சொல்ல எந்த மண்டலமும் இல்லை –

முடியுடைய மன்னவரின் மூவுலகும் படைத் துடையகொடி யுடைய மன்னவரிற் குலவுமுதற் பெயரு டையான்,இடியுடைய வொலிகெழு நீர் எழுபத் தொன் பதுநாட்டுக்குடியுடையான், சென்னி பிறர் என்னு டையார் கூறீரே? -5-

மூவுலகிலும் உள்ள முடி மன்னர்  கொடிமன்னர்  அனைவரும் குலவும் முதன்மையான பேர் உடையவன்  79 நாட்டுக் குடிகளை உடையவன் சென்னி  பிறர் என்ன உடையார்?

மந்திரம் அனைய திண்டோள் மணிமுடி வளவன், சேரன்,சுந்தர பாண்டி யன்றன் சுடர்மணி மகுடஞ் சூட,அந்தணர் குலமும் எல்லா அறங்களும் விளங்க, வந்தஇந்திரன் ஓலக் கம்போல் இருந்தது, பெரிய நாடே. -6-

மலை போன்ற தோள் கொண்ட மணிமுடி அரசர்களான வளவன், சேரன், பாண்டியன் ஆகியோர் முடி சூட,  அந்தணர் அறம் விளங்க,  இந்திர ஓலக்கம் போல இருந்தது, பொன்னிநாடு என்னும் பெரிய நாடு.

ஆழித் தேவர் கடலானார், அல்லாத் தேவர் அம்பலத்தார்ஊழித் தேவர் தாங்கூடி உலகங் காக்க வல்லாரோ?வாழித் தேவர் திருமக்கள், வையம் புரக்கும் பெருக்காளர்மேழித் தேவர் பெருமைக்கு வேறு தேவர் கூறேனே! -7-

கையில் சக்கரத்தை உடைய தேவர் கடலில் உறங்குகிறார்.  அவர் அல்லாத தேவர்கள் அம்பலக் கோயிலில் கிடக்கின்றனர்  இவர்களா ஒன்று கூடி உலகத்தைக் காக்க வல்லவர்?  காப்பவர் மேழித் தேவர் அன்றோ!  இவர் பெருமைக்கு வேறு தேவரைக் கூறமாட்டேன். 

தொழுங் குலத்திற் பிறந்தாலென், சுடர்முடிமன் னவராகிஎழுங்குலத்திற் பிறந்தாலென், இவர்க்குப்பின் வசியரெனுஞ்செழுங் குலத்திற் பிறந்தாராய்ச் சிறப்புடையா ராய் வாய்மைஉழுங் குலத்தில் பிறந்தாரே உலகுய்யப் பிறந்தாரே !  -8

தொழும் தேவர் குலத்தில் பிறந்தால் என்ன  முடி சூடும் மன்னர் குலத்தில் பிறந்தால் என்ன  இவர்களுக்குப் பின் வைசியர் குலத்தில் பிறந்தால் என்ன  உங்கு உய்யப் பிறந்தவர் உழுங்குலத்தில் பிறந்தவரே ஆவர். 

எழுங்குலத்திற் பிறந்தாலென் இவர்க்குப்பின் வணிகரெனும்செழுங்குலத்திற் பிறந்தாலென் சிறப்புடையர் ஆனால் என்அழுங்குழவிக் கன்புடைய தாயேபோல் அனைத்துயிர்க்கும்எழுங்கருணைப் பெருக்காளர், எளியரோ யாம்பகழ!உழுங்கொழுவிற் கருவீறி உலகமுதற் கருவாகச்செழுங்கமலத் தயனிவரைச் செய்துலகஞ் செய்வானேல்!-8

அழும் குழந்தையிடம் அன்பு காட்டும் தாய் போல்  அனைத்து உயிர்களுக்கும் கருணை காட்டி எழும் கருணைப் பெருக்காளர்  யாம் புகழும் அளவுக்கு எளியரோ  உழும் கொழுக்கருவே உலக முதலாகிய கரு. 

வேதியர்தம் உயர்குலமும், விறல்வேந்தர் பெருங்குலமும், நீதிவளம் படைத்துடைய நிதிவளத்துத் திருக்குலமும், சாதிவளம் படைத்துடைய தாயனைய காராளர் கோதில்குலம் தனக்கு நிகர் உண்டாகிற் கூறீரே.  -9-

வேதியர் குலம்  வேந்தர் குலம்  நிதியர் குலம் – ஆகியவை  காராளர் குலத்துக்கு நிகர் இல்லை 

வேதியர்தம் உயர்குலமும், விறல்வேந்தர் பெருங்குலமும்,நீதிவளந் தருமுறையான் நிலநிறையு நிதிவளனும்சாதிவளம் படைத்துடைய தாயனைய காராளர்கோ தில்குலந் தனக்கு நிகர் உண்டாகிற் கூறீரே  -9-வேறு பாடம்

(பாயிரம் முடிந்தது)

1 உழவு நாட்கோடல்

சீர் மங்க லம் பொழியும், தெண்டிரைநீர்க் கடல்சூழ்ந்தபார்மங்க லம்பொழியும், பல்லுயிருஞ் செழித்தோங்கும்,கார்மங்க லம்பொழியும் பருவத்தே காராளர்ஏர்மங்க லம்பொழிய இனிதுழநாட் கொண்டிடினே.-1-

கார்மேகம் சிறந்து மழை பொழிந்த பருவத்தில்  உழவர் ஏர் பூட்டும் நன்னாள் கொள்வர்.  கொண்டதும்  உலகே சீர் பெற்றுச் சிறக்கும் பல உயிர்களும் செழித்து ஓங்கும் 

2 உழவுச் சிறப்பு

நீர்விழாக் கொளவளர்ந்த நிலமெல்லாந், தம்முடையசீர்விழாக் கொளவிளங்கும் திருவிழாப் பெருக்காளர்,ஏர்விழாக் கொளினன்றி, எறுழ்க்கரிதேர் மாப்படையாற்போர்விழாக் கொளமாட்டார், போர்வேந்த ரானோரே. -2-

நிலம் நீர் ஊறி விழாக் கொள்ளும் காலத்தில் திருவிழா பெருக்குபவர் உலகம் சிறக்கும் சீர்விழாக் கொள்வர்  இவர்கள் இப்படி ஏர் விழாக் கொள்ளாவிட்டால்  வேந்தர் கரி, பரி, மா படைகளைக் கொண்டு போர்விழா கொள்ள முடியாது

3 அலப்படையின் சிறப்பு

குடையாளும் முடிவேந்தர் கொலையானை தேர்புரவிபடையாளும் இவைநான்கும் படைத்துடைய ரானாலென்,மடைவாளை வரும்பொன்னி வளநாடர் தங்கள்அலப்படைவாளைக் கொண்டன்றிப் பகையறுக்க மாட்டாரே -3-

அலம் என்னும் கலப்பைப் படை கொண்டு உழுது பயிரிட்டு,  பொன்னி நாட்டு உழவர் போரடிக்காவிட்டால்,  வேந்தர் நாற்படை கொண்டிருப்பதால் என்ன பயன்?

4 மேழிச் சிறப்பு  

வாழிநான் மறையோர்கள் வளர்க்கின்ற வேள்விகளும்,ஆழியால் உலகளிக்கும் அடல்வேந்தர் பெருந்திருவும்,ஊழிபே ரினும் பெயரா உரையுடைய பெருக்காளர்மேழியால் விளைவதல்லால் வேறொன்றால் விளையாவே. -4-

நானமறையாளர் வளர்க்கும் வேள்வி வாழி ஆணைச்சக்கரத்தால் உலகளிக்கும் வேந்தர் செல்வம் வாழி இவை உலகுக்கு உணவளிக்கும் உழவரின் மேழியால் விளைவது அல்லாமல்  வேறொன்றால் விளையாது 

நீற்றோனும் மலரோனும் நெடியோனும் என்கின்றதோற்றாளர் இவராலே தொல்லுலகம் நிலைபெறுமோ?மாற்றாத காவேரி வளநாடர் உழுங்கலப்பைஊற்றாணி உளதாயின் உலகுநிலை குலையாதே! -5-

சிவன், பிரமன், மால் – இவர்கள் தோற்றத்தால் உலகம் நிலைபெறுமா  காவிரி நாட்டு உழவர் ஊற்றாணியால் அன்றோ  உலகை நிலைகுலையாமல் இருக்கச் செய்கிறது  ஊற்றாணி என்பது கலப்பைக் கொழு  “உழுவார் உலகத்தார்க்கு ஆணி” – திருக்குறள் 

ஆற்றாணி வேணியர்பால் அம்மையிருந்து அனைத்துலகும்போற்றாணி யாம் கச்சிப் புறமெல்லாம் அறம்வளர்க்கச்சேற்றாணிக் கரமொதுக்கும் செல்வரணி ஏர்க்காலின்ஊற்றாணி உறுதியினால் உலகுறுதி யானதுவே.-6-

காஞ்சிபுர ஆற்றுமணலில் கரையாத ஆணியாக இருப்பவர் ஏகாம்பரர் -அவர்பால் இருப்பவர் அம்மை காமாட்சி -இவள் அறம் வளர்க்கிறாள் -வளர்க்க உதவுபவர் சேற்றில் நடவு நடும் உழவர் -இதுதான் ஏர்க்கால் ஊற்று 

உரையேற்ற செங்கதிரோன் ஒளிநெடுந்தேர் பூண்டநுகம்திரையேற்ற கடலுலகில் செறியிருளை மாற்றுவதுவிரையேற்ற இருநிலத்தோர் வறுமையொடு வீழாமேகரையேற்றும் நுகமன்றோ காராளர் உழுநுகமே! -6-வேறு பதிப்பு

கதிரோன் தேரை இழுக்கும் 7 குதிரைகளுக்குப் பூட்டிய நுகம்  உலகின் இருளைப் போக்குகிறது  காராளர் ஏரில் பூட்டிய நுகம்  உலகின் வறுமையைப் போக்குகிறது 

வளைத்த திரைக் கடல் சூழ்ந்த வையகத்தோர் எல்லோர்க்கும் தொளைத்த தொளை பசும் பொன்னின் அணி கிடக்கும் துணைத்தல்லால் திளைத்து வருஞ் செழும் பொன்னித் திருநாடர் உழுநுகத்தில் தொளைத்த தொளை போலுதவும் தொளை யுளதோ சொல்லீரே! -7-

காதி போட்ட துளையில் அணிகலன் கிடக்கிறது  இது அவருக்கு அழகு தருகிறது  உழவர் நுகத்தில் போட்ட துளைகளில் எருதுகள் பூட்டப்பட்டுள்ளது  இது நிலத்தை உழுது உலகைக் காக்கிறது 

ஓராணித் தேரினுக்கும், உலகங்கள் அனைத்தினுக்கும் பேராணிப் பெருக்காளர் பெருமைக்கு நிகருண்டோ! காராணிக் காவேரி வள நாடர் உழுநுகத்தின் சீராணிக்கு ஒப்பதொரு சிறந்தாணி செப்பீரே! -8-

சூரியன் தேர் அச்சில் இருக்கும் கடையாணி  அந்தத் தேரைக் கழலாமல் ஓடச் செய்கிறது  உழவர் நுகத்தில் பூட்டிய கடைமுளை எருதுகளை நேர் வழியில் நடத்தி உழச்செய்து உலகைக் காக்கிறது 

நாட்டுகின்ற சோதிடத்தின் நாண்பொருத்தம் நாட்பொருத்தம்காட்டுகின்ற கயிறிரண்டும் கயிறல்ல; கடைப்புவியில்தீட்டுப்புகழ்ப் பெருக்காளர் செழுநுகத்தோடு உழும்பகடுபூட்டுகின்ற கயிறிரண்டும் புவிமகள்மங் கலக்கயிறே! 

மங்கல நாண் பூட்டும் நாளை தாலி கட்டும் நாளை சோதிடத்தால் நாண் அணிவிக்கும் ஆண் பெண் பொருத்தம் நாள் பொருத்தம் ஆகியவற்றைப் பார்க்கும் சோதிடக் கயிறு கயிறு அல்ல உழவர் நுகத்தடியில் எருதினைப் பூட்டும் கயிறே உலகினைக் கட்டிக் காக்கும் கயிறு.

தடுத்த நெடு வரையாலும் தடவரைகள் எட்டாலும் உடுத்த திரைக் கடலாலும் உலகினிலை வலியாமோ?எடுத்த புகழ்ப் பெருக்காளர் எழு நுகத்தோடு இணைப்பகடு தொடுத்த தொடை நெகிழாதேல் உலகு தொடை நெகிழாதோ! -10-

8 மலையரணாலும்  கடல் அரணாலும்  உலகினைக் காப்பாற்ற முடியாது  உழவர் எருதினை நுகத்தில் பூட்டும் தொடை அவிழாமல் இருந்தால் மட்டுமே  உலகினைக் காப்பாற்ற முடியும். 

வேதநூல் முதலாகி விளங்குகின்ற கலை யனைத்தும் ஓதுவார் எல்லாரும் உழுவார் தம் தலைக் கடைக்கே!கோதைவேன் மன்னவர் தம் குடை வளமும் கொழு வளமே ஆதலால் அவர் பெருமை யாருரைக்க வல்லாரே! -11-

வேதநூல் முதலானவை கலைகள் -அத்தகைய கலைகள் பலவற்றையும் ஓதுவார் எல்லாரும்  உழுவார் தலைக் கடை வாயிலுக்கு வந்தாக வேண்டும் -மன்னர் வெண்ணஃகொற்றக் குடைக் கீழ் இருக்ககும் வளமும் கொழு நிலத்தை உழுவதால் பெற்றிருக்கும் வளமே -அதனால் உழவர் பெருமையை எடுத்துரைக்க யாரால் முடியும்

செழுவான மழை வாரித் திங்கடொறும் பொழிந்தாலும்,கெழுவார நில மடந்தை கீழ் நீர் கொண் டெழுந்தாலும்,வழுவாத காவேரி வளநாடர் உழுங்கலப்பைக் கொழுவாணி கொண்டன்றிக் குவலயஞ்சீர் நிரம்பாவே. -12-

திங்கள் மும்மாரி பொழிந்தாலும் நிலத்தில் ஊற்று சுரந்தாலும் காவிரி நாட்டார் கலப்பைக் கொழுவாகிய ஆணி கொண்டு உழவுத் தொழில் செய்யா விட்டால் உலகம் சிறப்புப் பெறாது

வெங்கோபக் கலிகடந்த வேளாளர் விளைவயலுள் பைங்கோல முடிதிருந்தப் பார்வேந்தர் முடிதிருந்தும், பொங்கோதை கடற்றானைப் போர்வேந்தர் நடத்துபெருஞ்
செங்கோலை நடத்துங்கோல் ஏரடிக்கும் சிறுகோலே
–13-

பஞ்சம் போக்குபவர் வேளாளர் -அவர் வயலில் நாற்று முடி நட்டுத் திருந்தினால்
வேந்தர் முடி திருந்தும் -வேந்தரின் செங்கோலை நடத்தும் கோல் -ஏர் மண்ணைத் தள்ளும் தாற்றுக்கோலே

வானமழை பொழிந்தாலும் வளம்படுவ தெவராலே? ஞான மறையவர் வேள்வி நலம் பெறுவ தெவராலே? சேனை கொடு பொரு மன்னர் செருக் களத்தில், செருக்குமத யானை வலி எவராலே? இவர் எருதின் வலியாலே!-14-

வானம் பொழிந்தாலும் வளம் பெருகுவது எதனால் மறையவர் வேள்வி எதனால்
மன்னர் போர்க் களத்தில் போர் யானையின் வலிமை எதனால் உழவு செய்யும் எருதுகளின் வலிமையால்

கண்ணுதலோன் தனது திருக் கண்டத்திற் படிந்த கறை,
விண்ணவரை அமுதூட்டி விளங்குகின்ற கறை யென்பார்;
மண்ணவரை அமுதூட்டி வானுலகம் காப்பதுவும்,
எண்ணருஞ் சீர்ப் பெருக்காளர் எருது சுவல் இடு கறையே
!-15-

சிவன் கருத்தில் இருக்கும் கறை விண்ணவர்க்கு அமுதம் ஊட்டிற்று என்பர்
மண்ணில் வாழும் மக்களுக்கு அமுதம் ஊட்டுவது மாட்டின் கழுத்தில் ஏர் நுகம் தாங்கு இழுத்ததால் உண்டான தழும்புக் கறை.

ஊட்டுவார் பிறருளரோ? உலகு தனில் உழு பகடு
பூட்டுவார் புகழன்றிப் பிறர் புகழும் புகழாமோ?
நாட்டுவார் சயத்துவசம் நயப்பாரை இவர்க்கு நிகர்
காட்டுவார் யார் கொல்? இந்தக் கடல் சூழ்ந்த வையகத்தே!
-16-

உணவு ஊட்டுவார் உழவரைத் தவிர வேறு யார் உண்டு ஏரில் பகடு பூட்டுவார் புகழ் அல்லாமல் வேறு எந்தப் புகழால் பிறருக்குப் பயன் வெற்றியில் மேம்பட்டவராக இவரை அல்லாமல் வேறு யாரைக் காட்டுவது

பார் பூட்டும் திசை யனைத்தும் பகடுகளும் பரம்பூணா
போர் பூட்டும் காமனுந்தன் பொரு சிலை மேற் சரம் பூட்டான்
கார் பூட்டும் கொடைத் தடக் கைக் காவேரி வள நாடர்
ஏர் பூட்டின் அல்லது மற்(று) இரவியும் தேர் பூட்டானே! –
-17-

பகடு ஏர் பாரம் இழுத்தால் அல்லாமல் விளைச்சல் இல்லை -விளைச்சல் உண்ணும் மக்கள் உடலில் தெம்பு இல்லை எனவே பகடு பூட்டாவிட்டால் -காமன் அம்பு பூட்டான் ஏர் பூட்டா விட்டால் சூரியன் தேர் வருவதால் என்ன பயன்

கார் நடக்கும் படி நடக்கும் காராளர் தம்முடைய
ஏர் நடக்கும் எனிற் புகழ்சால் இயலிசை நாடகம் நடக்கும்
சீர் நடக்கும் திறன் நடக்கும் திரு வறத்தின் செயல் நடக்கும்
பார் நடக்கும் படை நடக்கும் பசி நடக்க மாட்டாதே! -18-

கார்மேகம் நடக்கும் காராளர் ஏர் நடக்கும் எனில், இயல் இசை நாடகம் நடக்கும்
சீர், திறன், அறத்தின் செயல், உலகியல் – நடக்கும் பசி மட்டும் நடக்காது

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற் றெல்லாரும்
தொழுதுண்டு பின் செல்வர் என்றே யித் தொல்லுலகில்
எழுதுண்ட மறை சொன்னால் இவர் ஏவன் மள்ளர்க்கும்
பழுதுண்டோ? பார் வேந்தர் படை மன்னர் ஒப்பாரோ?
-19-

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற் றெல்லாரும் தொழுதுண்டு பின் செல்வர்
என்று திருவள்ளுவர் மறை எழுதிச் சொல்கிறது -இந்த மள்ளருக்குப் பழுது உண்டோ வேந்தர் இவருக்கு ஒப்பு ஆவாரோ

அலகிலா மறை விளங்கும், அந்தணர் ஆகுதி விளங்கும்
பல கலையாம் தொகை விளங்கும், பாவலர் தம் பா விளங்கும்,
மலர் குலாந் திரு விளங்கும், மழை விளங்கும், மனு விளங்கும்,
உலகெலாம் ஒளி விளங்கும், உழவர் உழும் உழவாலே!
-20-

உழவர் உழும் உழவால் வேதம் விளங்கும் வேள்வி விளங்கும் கலைகள் விளங்கும்
பாவலர் பாடல் விளங்கும் திரு விளங்கும் மழை விளங்கும் மனுநெறி விளங்கும்
உலகின் புகழ் விளங்கும்

பழுதுசால் வகையறியாப் பழமறையோர் பெருவேள்விக்(கு)
உழுதுசால் வதுகலப்பை உயர்வான(து) என்றக்கால்,
எழுதுசால் பெருங்கீர்த்தி ஏராளும் பெருக்காளர்,
உழுதசால் வழியன்றி உலகுவழி அறியாதே! – 21

பழமையான மறை வழியில் வேள்வி செய்வாரை விட உழும் கலப்பை உயர்வானது -உழவர் பெருஞ் சிறப்புக்கு உரியவர் இவர்கள் நிலத்தை உழுத மண் பள்ளமாகிய ‘படைச்சால்’ வழியில் உலகம் செல்லும். -படைச்சாலில் விதை இடுவர் அது விளையும் விளைவைப் பெற வழிச் செல்வர்

மட்டிருக்கும் திரு மாதும், மகிழ்ந்திருக்கும் புவி மாதும்,
முட்டிருக்கும் சய மாதும், முன்னிருப்பார் முது நிலத்து
விட்டிருக்கும் கலி தொலைத்த விறல் தடக் கை வேளாளர்,
கொட்டிருக்க ஒரு நாளும் குறை யிருக்க மாட்டாதே!
– 22

திருமகள் புவிமகள் வெற்றிச் செல்வி உழவர்க்குத் துணையாக முன் வந்து நிற்பர் பஞ்சம் போக்கும் வேளாளர் முன் வந்து நிற்பர் -அவர்கள் கையில் தொத்தும் மண் வெட்டி இருக்கும் போது அவர்களுக்கு ஒரு குறையும் இருக்க முடியாது-

மேடு வெட்டி வளப் படுத்தி மெய் வரம்பு நிலை நிறுத்திக்
கோடு வெட்டிக் காராளர் குவலயத்தைக் காத்திலரேல்,
பாடு வெட்டிக் குறும்படக்கப் படை வேந்தர் அவர் விளைத்த
காடு வெட்டிப் பகை யறுத்துக் கலி களைய மாட்டாரே
.–23

மேட்டை வெட்டிச் சமநிலமாக வளப்படுத்தி வரப்பு கட்டி, கங்கு வெட்டி, பயிரிட்டு,
வேளாளர் உலகைக் காப்பாற்றா விட்டால் வேந்தர் பகைவரைச் சாய்த்து பஞ்சம் போக்குவது எப்படி?

எழுதொணா மறை விளங்கும், இயல் இசை நாடகம் விளங்கும்,
பழுதிலா அறம்விளங்கும், பார் வேந்தர் முடி விளங்கும்,
உழுதுசால் பல போக்கி உழவருழக் கிய வெங்கால்
புழுதியால் விளையாத பொருள் உளவோ புகலீரே!
–24-

மறை விளங்கும் இயல் இசை நாடகம் விளங்கும் அறம் விளங்கும் வேந்தர் சூடும் முடி விளங்கும் உழவர் உழுது உழக்கிய புழுதியால் விளையாத பொருள் என்ன இருக்கிறது?

மெய் வரம்பா நிற்கின்ற வேத நூல் நெறி வரம்பாம்,
இவ் வரம்பும் அவ் வரம்பும் இப் புவிக்கு வரம்பாமோ?
பொய் வரம்பு தவிர்த்தருளும் புவி மடந்தை திருமைந்தர்
செய் வரம்பு திருத்தாரேல் திசை வரம்பு திருந்தாதே!
–25-

வேத நூல் நெறி மக்கள் வாழ்க்கைக்கு வரம்பு என்பர் மற்றும் அந்த வரம்பு, இந்த வரம்பு என்று கூறுவர் இவையெல்லாம் பொய்யான வரம்புகள் உழவர் வயலில் நிறுத்தக் கட்டும் வரம்பே (வரப்பே) உதவும் வரம்பு.

அடுத்திரக்காக் கொடை சீர்த்தித் தாளாளர் அணி வயலில்
எடுத்து எருக் கொண்(டு) எழில்வளர இசையாரேல், இவ் வுலகில்
தொடுத்திருக்கும் அறத் துறையும், தொழுமிருக்குமகத் துறையும்,
படுத்திருக்கும் அவை யல்லால் பரிந்திருக்க மாட்டாவே!
-26-

தாளாளர் வயலில் எரு போடா விட்டால் இந்த உலகில் அறத் துறை எங்கே
அகத் துறை எங்கே இவை படுத்திருக்கும் அல்லவா பரிவுடன் இருக்க மாட்டா

அடுத்திறக்கிப் பெருங் கூடை அளவு படவே எருவை
எடுத்திறக்கித் தலை மேலே கொண்டவர் தாம் இடை யிடையே
கொடுத்திறக்கி நில மகளைக் கும்பிட்டு வணங்காரேல்
படுத்திறக்கித் திரிவார் தம் பழி மறுக்க மாட்டாரே!
– 27

எருவைப் பெரிய கூடையில் தூக்கி வருவர் -தலையிலுள்ள கூடையை இரு கைகளாலும் இறுக்கிப் பிடித்துக் கொண்டு எரு அளவாகப் பரந்து நிலத்தில் இறங்கும்படி உடலை விரைவாக எவ்விச் சுழற்றுவர் கொஞ்சமாக இருக்கும் போது இறக்கிக் குனிந்து கையால் விசிறுவர் -எரு விழுந்த நிலத்தைத் தொழுவர். – பிறர் பழித்தால் ஏற்றுக் கொள்வர்.

வெறுப்ப தெல்லாம் பொய்யினையே, வேளாளர் மெய்யாக
ஒறுப்ப தெல்லாம் கலியினையே, உள்ளத்தால் வெள்ளத்தால்
செறுப்பதெல்லாம் புல்லினையே, செய்யின் வளம் அறிந்தறிந்து
மறிப்ப தெல்லாம் சேற்றினையே, வளம் படுத்தற் பொருட்டாலே
! 27 (வேறு)

வேளாளர் வெறுப்பது பொய் -தண்டிப்பது பஞ்சம் -அழிப்பது பயிரிடையில் முளைக்கும் புல் -புறட்டிப் போடுவது சேறு -இவை வயலையும், மக்களையும் வளப் படுத்துவதற்காக.

வரம்படிக்க மலர் பரப்பி வயலடிக்க வரம்பு தொறுங்
குரம்படிக்க மணி கொழிக்கும் குலப் பொன்னித் திரு நாடர்,
பரம்படிக்க உடைந்தளைந்த பழனச் சேற்(று) உரமன்றி
உரம்படிக்க பிறிதுண்டோ உண்டாயின் உரையீரே!
– 28

வரம்பு அடிக்க வயலை அடிப்பர் -குரம்பு அடிக்க நென் மணி கொழிக்கும் -பரம்பு அடிக்க சேறு சமமாகும்-எரு உரம்பு அடிக்க எல்லா நலமும் உண்டாகும்

பத்தி விளைத்து இருந்தெய்வம் பணிவார்க்கும், தற் பரமாம்
முத்தி விளைத்திடும் ஞான முதல்வருக்கும், இன்னமுதம்
வைத்து விளைத்திடுவார்க்கும், வல்லவர்க்கும், பெருக்காளர்
வித்து விளைத்திடிலன்றி வேண்டுவன விளையாவே
. -29-

பத்தி விளைய உரையாற்றுவோர்-தெய்வம் பணிவார் -முத்தி விளையத் தவம் செய்வோர் -ஞான முதல்வர் -உணவு தருவோர் வல்லவர் ஆகியோர் தரும் விளைச்சல்கள் எல்லாமே உழவர் விளைச்சல் இல்லாவிட்டால் விளையாது

மறை மயங்காது, அருள் விளங்கும் மதி மயங்காது, திறல் வேந்தர்
இறை மயங்கா, மனு நெறியும் இன மயங்கா, யாவர்க்கும்
நிறை மயங்காது, ஒரு நாளும் நிலை மயங்காது, உலகமெல்லாம்
முறை மயங்கா, அவர் வயலின் முளை மயங்காத் திறத்தாலே
.-30-

உழவர் விதைத்த பயிர் முளைகள் நெருக்கமாக மயங்காமல் வளர்ந்தால்
மறைகள், அருள் தரும் எண்ணம், இறை வழங்கும் நிலை, மனுநெறி, மக்களின் நிறையுடைமை, உலக முறைமை எதுவும் மயக்கம் இல்லாமல் இருக்கும்

ஏறு வளர்த்திடும் முகிலும் இசை வளர்க்கும் எனுரைப்பின்
ஆறு வளர்த்திடுவது சென்(று) அலை கடலைத் தானன்றோ!
வேறு வளர்பபன கிடப்ப வேளாளர் விளை வயலின்
நாறு வளர்த்திடிலன்றி ஞாலமுயிர் வளராதே!
-31-

முகில் இடியை வளர்க்கும் -ஆறு கடலை வளர்க்கும் -வயலில் நாற்று வளர்ந்தால் அன்றி ஞாலம் வளராது

வெறுத்த மீன் சனி புகிலென், வெள்ளி தெற்கே யாயிடிலென்,
குறித்த நாள் வரம்பழியாக் குலப் பொன்னித் திரு நாடர்,
மறித்து நாட்டிட நின்ற வள வயலினிடை நாற்றைப்
பறித்து நாட் கொண்டதற்பின் பார் பசிக்க மாட்டாதே!
–32-

எந்த மீன் -நட்சத்திரம் சனிக்குள் புகுந்தால் என்ன -வெள்ளி தெற்கே போனால் என்ன
வயலில் நாற்றைப் பறித்து நடவு செய்யா விட்டால் மக்கள் பசி தீராது

மாணிக்கம் முதலாய மணி யழுத்தித் தொழில் சமைத்த
ஆணிப் பொன் முடி வேந்தர் அணி முடியும் முடியாமோ?
பேணிப் பைங் கோல முடிப் பெருக்காளர் சுமவாரேல்
சேணுக்கும் திசைப் புறத்தும் செங்கோன்மை செல்லாதே! –
-33-

வேந்தர் அணியும் மாணிக்கம் பதித்த முடி முடி ஆகுமா உழவர் சுமக்கும் பயிர் முடி இல்லா விட்டால் அரசர் செங்கோல் செல்லாது

தென்னன் முடி சேரன் முடி தேங்கு பொன்னி நாடன் முடி
கன்னன் முடி கடல் சூழ்ந்த காசினியோர் தங்கள் முடி
இன்ன முடி அன்றியும் மற்று எடுத்துரைத்த முடிகள் எல்லாம்
மன்னு முடி வேளாளர் வயலின் முடி கொண்டன்றோ
–34-

தென்னன் சேரன் சோழன் கன்னன் மற்றும் உலகிலுள்ளோர் சூடும் முடிகள் எல்லாமே வேளாளர் வயலில் பயிர் முடி நட்டால் தான் சிறக்கும்

வெய்ய கலி வலி தொலைக்கும் வேளாளர் விளை வயலில்
செய்யின் முடி விளம்பாரேல் விளம்புவன சில உளவோ?
மையறு மந்தணர் விளம்பார் மறை மனு மன்னவர் விளம்பார்
ஐயமறு புலவோரும் அருந் தமிழ் நூல் விளம்பாரே.
-35-

பஞ்சம் போக்குபவர் வேளாளர் அவர் நாற்று முடி தடவு செய்யா விட்டால் அந்தணர் மறை சொல்லார் மன்னவர் மனு நெறி இல்லை புலவர் தமிழ் பாட மாட்டார்

மெய்ப் பாங்கு படக் கிடந்த வேத நூல் கற்றாலென்?
பொய்ப் பாங்கு படப் பிறரைப் புகழு நூல் கற்றாலென்?
செய்ப் பாங்கு படக் கிடந்த செழுஞ் சாலி நன்னாற்றைக்
கைப் பாங்கு பகுத்து நடக் கற்றாரே கற்றாரே! –
36-

வேத நுல் கற்றால் என்ன பயன் -பிறரைப் புகழ்ந்து பாடும் தமிழ்நூல் கற்றால் என்ன பயன் -நெல் நாற்று நடக் கற்கா விட்டால் பயனில்லை

உலகத்தில் பகடுழக்கும் ஓங்கு முடித் திறல் வேந்தர்
அலறத்தின் பகடுழக்கும் அதுவுமொரு முனையாமோ?
உலகத்தில் பகடுழக்கும் உயர் முடி கொள் வேளாளர்
சிலவருழச் சிலவர் நடும் அவை யன்றோ திரு முனையே
! -37

வேந்தர் யானை நடக்கும் போர் முனை ஒரு முனை ஆகுமா -வேளாளர் சிலர் உழ, சிலர் நடவு செய்யும் வயல் முனைவு அன்றோ முனை

ஏராலே சேறாக்கி எருவாலே கருவாக்கி
நீராலே பைங் கூழை நிலைப்பிப்பார் தமை யன்றிக்
காராலே காவேரி நதியாலே காசினியில்
ஆராலே பசி தீர்வார் அகலிடத்தில் பிறந்தோரே?
-38-

ஏர் உழுது சேறாக்கி எரு இட்டுப் பயிர் விளைவிப்பார் இல்லாமல் மழையாலோ, காவிரி ஆற்றாலோ பசியைப் போக்க முடியுமா

அந்தணர்க்கு வேத முதல். அரசர்க்கு வெற்றி முதல்,
முந்திய சீர் வசியருக்கு முதலுழவாம், மூதுலகில்
வந்த வுயிர் தமக்கெல்லாம் மருந்தாக வைத்த முதல்
செந் தமிழ்க்கு முதலாம் அத் திருவாளர் செய் முதலே!
-39-

அந்தணர்க்கு வேதம் முதல் -அரசர்க்கு வெற்றி முதல் -வணிகர்க்கு உழவு முதல்
உலகுக்கு நெல் மருந்து முதல் -செந்தமிழ் வளர்க்கும் முதலும் வேளாளர் நடும் நெல் முதலே

சீர் வளரும், மறை வளரும், திறல் வேந்தர் முடி வளரும்,
பேர் வளரும் வாணி பத்தும் பெரு நிதியம் மிக வளரும்,
ஏர் வளரும், திரு வளரும், இசை வளரும், கடல் சூழ்ந்த
பார் வளரும், காராளர் பயிர் வளரும் திறத்தாலே!
–40-

பயிர் வளரும் திறத்தால் -சீர் வளரும் மறை வளரும் -வேந்தர் முடி வளரும்
வணிகம் வளரும் திரு வளரும் இசை வளரும்

காற்று மேல் வருகின்ற கார் விடினும், கடல் சுவறி,
யாற்று நீர் அற வெள்ளி அரசனும் தெற்காயிடினும்,
ஏற்றமே கொடு நாளும் இறைத் துலகம் விளைவித்தும்
காத்துமே உயிர் வளர்த்தல் காராளர் தங்கடனே-
41-

காற்று வந்து கார் மேகம் பெய்யாமல் போனாலும் ஆற்று நீர் வறண்டு போனாலும் ஏற்றம் கொண்டு நீர் இறைத்து பயிர் வளர்த்து உயிர் காத்தல் காராளர் கடமை

கலை யிட்ட மறை வேந்தர் கனல்வேள்வி வளர்ப்பதுவும்,
மலை யிட்ட புயத் தரசர் மணி மகுடம் சூட்டுவதும்,
தலை யிட்ட பொருள் நான்கும் தலை நீட்டப் படுவதுவும்,
நிலை யிட்ட வேளாளர் துலையிட்ட நீராலே
-42-.

மறையோர் வேள்வி செய்வதும் அரசர் முடி சூடுவதும் அறம், பொருள், இன்பம், வீடு – நான்கும் தலை காட்டுவதும் ஏற்றத் துலையில் இறைக்கும் நீரால் தான்

கெட்டாரைத் தாங்குதலால், கேடு படாத் தொழிற் குலத்தோர்
ஒட்டாரென்(று) ஒருவரையும் வரையாத உயர் நலத்தோர்
பட்டாங்கு பகர்ந்தோங்கும் பசிய கலப் பைங்கூழை
நட்டாரே வையமெல்லாம் நலந் திகழ நட்டாரே!
-43-

கெட்டாரைத் தாங்குவர் யாருக்கும் கெடுதி செய்யாத தொழில் புரிபவர் தன்னோடு ஒட்டாதவர் என்று யாரையும் கொள்ளாத உயர் நலம் கொண்டவர் உலகியல் பசியைப் போக்குவதே இதற்காகவே பயிர் நடுவார் இதனால் உலக மக்களை நட்டவர் உழவர்களே

கார் தாங்கும் காவேரி நதி தாங்கும் காராளர்
ஏர் தாங்கு வாரன்றி யாவரே தாங்க வல்லார்?
பார் தாங்கு மன்னுயிரின் பசி தாங்கும் பைங்கூழின்
நீர் தாங்கு வாரலரோ நிலந் தாங்கு கின்றாரே!
–44-

காவேரியைத் தாங்குவது கார் பொழியும் மழை காவேரி தாங்குவது காராளரை. -இவர் ஏர் தாங்குவார் இவரன்றி உலகைத் தாங்க வல்லலார் யார் உயிரின் பசியைப் தாங்குவது பயிர் பயிரின் பசிக்கு நீர் தருபவர் காராளர்

வளைகளையும், மணிகளையும், மலர்களையும், வரும் பலவின்
சுளைகளையும் கொடு கரைக்கே சொரி பொன்னித் திரு நாடர்,
விளை களையுள் செஞ்சாலி வேரூன்றிக் கோடு கொள்ளக்
களை களையா விடில் வேந்தர் கலி களைய மாட்டாரே.
–45-

வளை, மணி, மலர், பலவின் சுளை முதலானவற்றைக் கரையில் சேர்க்கும் ஆறு பொன்னி -பொன்னி நாட்டில் களை களைந்து நெல்லம் பயிர் வேரூன்றாவிட்டால் வேந்தர் பஞ்சம் போக்க முடியாது

திருவடையும், திறலடையும், சீரடையும், செறிவடையும்,
உருவடையும், உயர்வடையும், உலகெலாம் உயர்ந்தோங்கும்,
தருவடையும் கொடையாளர் தண் வயலில் செஞ்சாலி
கருவடையில் பூதலத்தில் கலி யடைய மாட்டாதே!
-46-

திரு, திறல், சீர், செறிவு, உரு, உயர்வு அடைய வயலில் நெல் கருப் பிடிக்கா விட்டால் பஞ்சம் போக்க முடியாது

ஏற்றேறும் அரன் சிறப்புக்(கு) எழிலேறும் மகத்து அழல்கள்
மாற்றேறும் அரசர் முடி வளர்ந்தேறும் வளமை மிகும்
ஊற்றேறும் குலப் பொன்னி உறைநாடர் இடும் சாலி
ஈற்றேறும் போது கலி ஈடேற மாட்டாதே
.-47

பொன்னி நாட்டு உழவர் வயலில் விதைத்த நெல் ஈடேறும் -அதனால் பஞ்சம் நீங்கும் அரசன் முடி வளம் பெறும் சிவனுக்கு வேள்வி சிறக்கும்

முதிராத பருவத்தும், முற்றிய நல் பருவத்தும்,
கதிராகி உயிர் வளர்ப்ப(து) இவர் வளர்க்கும் கதிரன்றோ!
எதிராக வருகின்ற எரி கதிரும், குளிர் கதிரும்
கதிராகி உயிர் வளர்ப்ப(து) உண்டாயிற் காட்டீரே! –
48-

நாம் முதிராத பருவத்திலும் முதிர்ந்த பருவத்திலும் நெல் கதிராக மாறி நம் உயிரை வளர்க்கும்-எரி கதிரோ குளிர் கதிரோ உணவாகி நம் உயிரை வளர்க்க முடியுமா

அலை வளையும், புவி வேந்தர் அங்கையில் தங்கிய வீரச்
சிலை வளையும், மதன் கருப்புச் சிலை வளையும், கொடுங் கலியின்
தலை வளையும், காராளர் தண் வயலில் செஞ்சாலிக்
குலை வளையும் பொழுதினிற் செங் கோல் வளைய மாட்டாதே!
–49-

வேந்தர் வில் வளையும் -மன்மதன் கரும்பு வில் வளையும் -கலி என்னும் பஞ்சத்தின் தலை வளையும் எதனால் வேளாளர் வயலில் நெல்லங்குலை வளையவதால்-இதனால் செங்கோல் மட்டும் வளையாது

அறங் காணும், புகழ் காணும், அருமறையின் ஆகமத்தின்
திறங் காணும், செயங் காணும், திரு வளர்க்கும் நிதி காணும்,
மறங் காணும், கருங் கலியின் வலி தொலைத்த காராளர்
புறங் காணுஞ் சோறிட்டுப் புறங் காணப் புகுந்திடினே-
-50-

நெல் விளைந்து சோறிடக் கண்டால் மேலே சொன்ன அனைத்தும் காணலாம்

மாயனார் வடிவாளும், மகபதிவச் சிரவாளும்,
தாயனார் அரிவாளின் தகைமை பெறுந் தன்மையவேல்,
தூயனார் அவர் வழியோர் சுடரரிவாட் கிணையென்ன
வாயினாற் புகலுதும் யாம் மன்னரொரு வாளினையே.
–51-

வடிவாள் கூர்மையா ஒளி -இதனால் மாயவனுக்குச் சிறப்பு -சிரவாள் தலை ஒளி
சிவன் தலையில் கங்கை, நிலவு சூடிச் சிறப்பினைப் பெற்றார் -அரிவாள்-அரியப்பட்ட ஒளி பிரமன் தலை ஒன்று அரியப்பட்டுச் சிறப்பினைப் பெற்றார் -மன்னன் கையில் போர் வாள் ஏந்திச் சிறப்பினைப் பெற்றான் -இவை யெல்லாம் தூயனார் உழவர் கையில் இருக்கும் நெல் அறுக்கும் அரிவாளுக்கு இணை ஆமோ வாயைத் திறந்து சொல்லுங்கள்

தோட்டியல் பூங் குழற் பெரிய பிராட்டிக்கு ஈராழிச் சொல்
பாட்டியல் சீர் பெற வளித்த பரமருவப் புற முன்னோர்
காட்டிய நென் முளை யறுத்தார் கிளை யறுத்தார்
ஊட்டியறுத் தார் மரபோர் ஊட்டவறுத் தாருலகே. –
-52-

உழத்தி பெரிய பிராட்டி ஈர நெல் அறுக்கிறாள் -திருமகள் பெரிய பிராட்டி பாற்கடலில் இருக்கிறாள் -பாட்டியல் சீர் பெறும் உழத்தி நெல் அறுக்கிறாள் -பாட்டியல் சீர் பெறும் உமை பரமன் பக்கம் இருக்கிறாள் -முளை நெல்லை அறுத்தவர் தம் கிளைஞரை அறுப்பர் -ஊட்டி அறுக்கும் மரபு அரச மரபு அரசர்க்கு ஊட்ட உழத்தியர் நெல் அறுத்தனர்

அருவுண்ட பொற் கதிரை நெற் கதிர் நேர் ஆதுலர்க்குப்
பரிவுண்ட பெரு வார்த்தை புதிதன்று பழமைத்தே!
விரிவுண்ட கடற் படியும் மேகங்கள் மறுத்தாலும்,
திரிவுண்டோ காராளர் செயலினுக்குச் செப்பீரே!
–53-

அறுத்த நெல்லை உழவர் ஆதுலர்க்கு (கேட்போர்க்கு) வழங்குவர் கடல் படியும் மேகம் பெய்ய மறுத்தாலும் உழவர் வழங்க மறுப்பதில்லை

கோடு வரம் பிடை யுலவும் குலப் பொன்னித் திரு நாடர்
நீடு பெரும் புகழ் வளரும் நில மடந்தைத் திரு மக்கள்
பீடு வரம் பிடை வயலில் பிறை வாளில் கடிகின்ற
சூடு வரம் பெறாதேல் சுருதி வரம் பேறாதே!-
54-

பொன்னி நீர் வரப்புள்ள வயலில் பாயும் உழவர் நிலமடந்தையின் திருமக்கள் அவர் வயலில் நெற்கட்டுகள் (சூடு) இல்லை என்றால் அந்தணர் சுருதி ஓதுதல் நடைபெறாது

சீரான விறல் வேந்தர் செரு விளைத்துச் செல்வதுவும்,
பேரான மநு நீதி பிறழாது விளங்குவதும்,
நீராலே செஞ்சாலி விளைவித்து நெறி நடத்தும்
காராளர் விளை வயலிற் வளம் பண்ணும் பொருட்டாலே
. –55-

வேந்தர் போரிடுவதும் மனுநீதி பிறழாமல் ஆள்வதும் உழவர் நீர் பாய்ச்சி, நெல் விளைவித்து, வயல்வளம் பெருக்குவதற்காகவே

கடி சூட்டு மலர் வாளிக் காமனடல் சூடுவதும்,
கொடி சூட்டு மணி மாடக் கோபுரம் பொன் சூடுவதும்,
முடி சூட்டி வய வேந்தர் மூவுலகும் இறைஞ்சு புகழ்
படி சூட்டி யிருப்பதெல்லாம் படு சூட்டின் வலியாலே,
–56-

காமன் மலர் அம்பு எய்வது கோயில் கோபுர மணிமாடம் பொன்னால் வேயப்படுவது வேந்தர் முடி சூட்டிக் கொள்வது இவை யெல்லாம் உணவுக்குப் படி யளக்கும் நெல் கட்டுச் சூடு வயலில் பெருகுவதனாலேயே

முருட்டின் மிகு வெம் பகைவர் முரண் கெடுத்திவ் வுலக மெல்லாம்
தெருட்டி நெறி செல்கின்ற செங்கோன்மை செலுத்துங்கோல்,
வெருட்டின் மிகுங் கருங் கலியை வேரோடும் அகற்றுங் கோல்,
சுருட்டி மிகத் தடிந்து செந்நெற் சூடுமி தித் திடுங்கோலே
. –57

முரண் பகை கெடுத்து செங்கோல் செலுத்தும் கோல் எது -கலி என்னும் வறுமையைப் போக்கும் கோல் எது -நெல்லைச் சுருட்டிப் பிடித்து அறுத்து அதன் சூட்டை அடித்து உதறி மாடு விட்டு மிதிக்கும் கோல்

காராளும் கரி யினமும் பரி யினமும் கை வகுத்துப்
போராளும் முடி வேந்தர் போர்க் கோலம் எந் நாளும்
சீராளும் செழும் பொன்னித் திரு நாடர் புகழ் விளக்கும்
ஏராளும் காராளர் இவர் செய்யும் போராலே ! –
-58-

வேந்தர் யானை, குதிரை நடத்தி, போர் புரிவது எதனால் ஏர் நடத்தி, காராளர் நெல் அடிக்கும் போரால்

பார் வேந்தர் பெருஞ் செல்வம் பழுது படாது ஒரு நாளும்
ஏர் வேந்தர் பெருஞ் செல்வம் அழிவு படா திருத்தலினால்
தேர் வேந்தர் போர் களத்துச் சிலர் வெல்வர் சிலர் தோற்பர்
ஏர் வேந்தர் போர்க் களத்துள் இரப்பவரும் தோலாரே
–59-

பார் வேந்தர் செல்வம் பழுது படாமல் இருப்பது ஏர் வேந்தர் செல்வம் அழியாமல் இருப்பதால் தான் தேர் வேந்தர் போர் களத்தில் சிலர் வெல்வர். சிலர் தோற்பர் ஏர் வேந்தர் போர்க் களத்தில் இரந்து கேட்போரும் தோற்பதில்லை

வளம் பாடும் குடை மன்னர் மத யானை படப் பொருத
களம் பாடும் பெருஞ் செல்வங் காசினியிற் சிறந்தன்று!
தளம் பாடும் தாரகலத் தாளாளர் தம்முடைய
களம் பாடும் பெருஞ் செல்வங் காசினியிற் சிறப்புடைத்தே! —
60-

யானைப் போர்க்களத்தைப் பாடுவதை விட காராளர் போர்களத்தைப் பாடுவது சிறப்புடையது

நாவலோ நாவலென நாடறிய முறை யிட்ட
ஏவலோர் போர்க் களத்தில் எதிர் நிற்பர் முத் தமிழ் தேர்
பாவலோர் இசை வல்லோர் பற்றுடைய பதினெண்மர்
காவலோர் எல்லோரும் கை யேற்கும் பொருட்டாலே! –6
1-

“நாவலோ நாவல்” நெல் அடிக்கத் தொடங்கும் போது உழவர் இவ்வாறு குரவை ஒலி எழுப்புவர் -அதனைக் கேட்டதும் போர் மறவர் முத்தமிழ்ப் பாவலர் இசை வல்லோர் 18 கணத்தவர் அனைவரும் கை யேந்தி நிற்பர் உழவர் நெல் வழங்குவர்

எடுத்த போர்க் களத்தரசர் இனைப் பகடு சில நடத்திப்
படுத்த போர் பயந்ததனால் பார் தாங்கி வாழ்வதெல்லாம்
எடுத்த போர் உழவளரும் இனைப் பகடு சில நடத்திப்
படுத்த போர் வையகத்தில் விளங்குகின்ற பயனாலே!
–62-

உழவர் பகடு (எருது) பிணையல் நடத்தி நெல் அடிப்பர் -அதன் வளத்தால் மன்னரின் பகடு (யானை) போர்க்களத்தில் நடக்கும்

விற் பொலியும் பெருங் கீர்த்தி வேளாளர் விளை வயலில்
நெற் பொலி யுண்டாமாகின் நில மகளும் பொலிவுண்டாம்
பொற் பொலி வுண் டாமுலகம் புகழ்ப் பொலி வுண் டாம் புலவோர்
சொற் பொலி வுண் டாங் கலியின் துயர் பொலிய மாட்டாதே.-
-63-

ஒளி பொலியும் பெருஞ்சிறப்பபு கொண்டவர் வேளாளர் -அவர் வயலில் நெல் பொலியுமாயின் நிலமகள் பொலிவாள் உலகில் பொன் பொலியும் புலவர் சொல் பொலியும் கலி என்னும் வறுமை பொலியாது

தன்னிகரொன் றொவ்வாத தலம் வளர்க்கும் பெருக்காளர்
மன்னு பெருங் களத்தினிடை மாருதத்தில் தூற்றி விடும்
செந் நெல்லைப் பொலிவாலே செம் பொன் மலை எனக்குவித்தே
அந் நெல்லின் பொலிவாலே அவனியுயிர் வளர்ப்பாரே! –
64-

உழவர் நிகரில்லாத் தலம் வளர்ப்பவர் அவர் களத்தில் காற்றில் நெல் தூற்றுவர் தூற்றிய நெல்மலை குவியும் அந்தக் குவியல் நெல்லால் உலகின் உயிரினங்களை வளர்ப்பர்

ஆடையா பரணங்கள் அணிந்து முடி சுமந்திடலும்
ஓடையா னை யினெருத்தம் உயர்ந்துலகம் தாங்குதலும்
பேடையோ டன நீங்காப் பெருங் கழனிப் பெருக்காளர்
கூடையா னது கையிற் கொண்டு களம் புகுந்திடினே. —
65-

அன்னம் நீங்காக் கழனி -கழனி உழவர் உழவர் களத்தில் ஏற்போர் கூடை கூடை கொண்டு களத்தில் புகுந்து உலகோர் நெல்லைப் பெற்றுக்கொள்வதால் அரசன் ஆடை அணி பொலிய முடி சூடிக்கொள்வான் அவன் யானைக்கு ஓடை பொலியும்

வலி யாற்று மன்னவர்க்கும், மறையவர்க்கும், தேவருக்கும்,
ஒலி யாற்றும் பேருலகில் உய்ய வமு திடுங் கூடை,
கலி மாற்றி நயந்த புகழ்க் காராளர் தம்முடைய
பொலி தூற்றுங் கூடைக்குப் போதுவதோ புகலீரே!
–66-

மன்னவர் மறையவர் தேவர் பொலிவு பெற உழவர் அமுது தருவர் இவர் நெற்பொலி தூற்றும் கூடைக்கு நிகர் உண்டா

சீற்றங் கொள் கருங் கலியைச் செறுக்குங் கோல், செக தலத்துக்
கூற்றங் கொள் மனு நெறியை உண்டாக்கி வளர்க்குங் கோல்
ஏற்றங் கொள் வய வேந்தர்க்கு எப் பொருளும் கொடுத்துலகம்
போற்றுஞ் சொற் பெருக்காளர் பூங் கையினிற் பொலி கோலே.
–67-

உழவர் கைகள் நெல்பொலி தூற்றும் கோலே கலியின் செறுக்கை அறுக்கும் கோல் மனு நெறி உண்டாக்கி வளர்க்கும் கோல் வேந்தர்க்கு எல்லாம் கொடுத்துப் போற்றும் கோல்

திருத் தோட்டுப் பிரமாவாற் செனிக்கின்ற உயிர்களுக்கும்
உருத் தோட்டுப் புகழுக்கும் உரிமை முறை வளர்க்கின்ற
வரைக் கோட்டுத் திணி புயத்து வளர் பொன்னித் திரு நாடர்
விரைக் கோட்டை கொண்டன்றோ வேந்தரிடுங் கோட்டைகளே!
–68-

உழவரின் நெல்விதைக் கோட்டையால் வேந்தர் கோட்டை இருக்கிறது பிரமன் உண்டாக்கும் உயிர்கள் வாழ்கின்றன

தளர்ந்துயிர் அத்தனைக்கும், தாளாளர், எண்டிசையும்,
வளர்ந்த புகழ் பெருக்காளர், வலிமையார் உரைப்பாரே?
அளந்துலகம் அனைத்தாளும் அரசர் வேதியர் புலவர்
களந்துவைக்க வையுகுத்த கல்லறைகள் உண்பாரேல்.
–69-

உழவர் உயிர்களுக்குத் தாளாளர் எங்கும் புகழை வளர்ப்பவர் இவர் வலிமையைச் சொல்ல வல்லார் ஆர் அரசர் அந்தணர் புலவர் எல்லாரும் சேரும் கல்லறை உழவர் களமே

அரியாதனத்தின் மேலிருந்தே அம் பொற் குடைக் கீழ் அரசியற்றும்
பெரியார் பக்கல் பெறும் பேறும் பேறே யல்ல பெருக்காளர்
சொரியா நிற்பச் சிலர் அளந்து தூற்றா நிற்பச் சிலர் அளந்து
புரியா நிற்பப் பெறும் பேற்றுக்(கு) அது நேரொக்கப் போதாதே! —
70-

அரசர் பக்கத்தில் இருந்து கொண்டு ஆணை செலுத்தும் பேறு பேறு அன்று -உழவர் களத்தில் நெல் தூற்றவும் நெல் அளக்கவும் பெறும் பேறே பெரும் பேறு

பார் வாழி! நான்மறை நூற் பருணிதராகுதி வாழி!
கார் வாழி! வளவர் பிரான் காவேரி நதி வாழி!
பேர் வாழி! பெருக்காளர் பெருஞ் செல்வக் கிளை வாழி!
ஏர் வாழி! இசை வாழி! எழுபத் தொன் பது நாடே!
–வாழ்த்து

பார் நான்மறை ஆகுதி கார் மழை வளவர் பிரான் காவேரி யாறு உழவர் கிளைஞர் உழவரின் ஏர் உழவரின் இசை 79 நாடுகள் -எல்லாம் வாழ்க

ஏர் எழுபது முற்றும்

————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –