ஸ்ரீ அருளிச் செயல்களில் விளக்கு பத பிரயோகங்களும் வியாக்கியான ஸ்ரீ ஸூக்திகளும் —

ஆயர்பாடிக்கு அணி விளக்கே அமர்ந்து வந்து என் முலை உணாயே – -2-2-5-நாலாயி:132/4-

திரு வாய்ப்பாடிக்கு ஒரு மங்கள தீபம் ஆனவனே –-அணி-அழகு-இவ் ஊரில் உள்ள எல்லாரும் உன்னையே காணும்படி அழகிதான தீபம் போலேயான சௌந்த்ர்யாதி குணங்களாலே பிரகாசிதன் ஆனவனே –(ஆயர் குலத்தில் தோன்றிய அணி விளக்கே இவர் திருமகளார் )-விளக்குக்கு அழகு தூண்டாமையும் நந்தாமையும் –-இப்படி இருப்பதொரு விளக்கு யுண்டோ என்னில் ப்ரதீதியில் ப்ரத்யஷ மாத்ரத்தாலே யுண்டு என்னவுமாம் –
அனுமானம் ப்ரத்யஷ சாபேஷம் ஆனாலும் ப்ரத்யஷம் அனுமானம் சாபேஷம் ஆகாது
ஆயிருக்க இரண்டும் ஸ்மாரக தர்சனத்தாலே ஏக ஆஸ்ரயத்திலே காண்கையாலே
இவை நிரூபியாமல் கண்ட மாத்ரமே கொண்டு –-அணி விளக்கு -என்னுதல்-அன்றியிலே
அபூதம்  என்னுதல்   –(இல் பொருள் உவமை அணி )

————-

உரு காட்டும் அந்தி விளக்கு இன்று ஒளி கொள்ள ஏற்றுகேன் வாராய் –2-8-9- நாலாயி:200/4

உன் திரு மேனியைக் காட்டும் திரு அந்திக் காப்பு ஏற்றுவார் ஏற்றி இறே எடுப்பது
(ஸ்தோத்ரம் பண்ணியே அன்றோ எடுப்பது ) நிரதிசய போக்யமான திரு மேனி காண்கை புருஷார்த்தமாக இறே-ஆகையால் உருக் காட்டும் என்கிறது-(பிரதிபந்தகங்களைப் போக்கியே புருஷார்த்தம் அடைய முடியும்
நம -பின்பு தானே நாராயணாயா –-த்ருஷ்ட்டி தோஷம் -அகற்றி விட்டுத் தானே காண வேண்டும் –-காண்பதற்காக விளக்கு ஏற்ற வில்லை-கண் எச்சில் போக்கவே இது –
நிரதிசய போக்யமாகையாலே
–-இதனால் தான் ஹாரத்தி தட்டை கண்ணில் ஒத்திக் கொள்வது நம் சம்ப்ரதாயம் அல்ல )-இப்பொழுது ஒளியை உடைத்தாம் படி ஏற்றா நின்றேன் –இத்தைக் கண்டு அருளும்படி கடுக வாராய் –திருக் காப்பு நான் உன்னைச் சாத்த -உருக்காட்டும் அந்தி விளக்கு – இன்று ஒளி கொள்ள ஏற்றுகிறேன் வாராய் -என்று அந்வயம்-ரத்நாதிகளுடைய தேஜஸ்ஸை அதிக்ரமித்து இறே இவன் -(தீப -)தேஜஸ்ஸூ இருப்பது-இன்று -என்றது இப்போது என்றபடி –திருவந்திக் காப்பு ஏற்றுவார் ஏற்றி எடுப்பது
நிரதிசய போக்யமான திருமேனி காண்கை புருஷார்த்தமாக இறே-அது இறே அவனுக்கு ரக்ஷை ஆவது-

———-

எண் திசைக்கும் விளக்கு ஆகி நிற்பார் இணையடி என் தலை மேலனவே – நாலாயி:212/4

கோவிந்தன் தன் அடியார்களாகி-மூன்று எழுத்துடைய கோவிந்தன் தன் அடியார்களாகி-எண் திசைக்கும் விளக்காகி நிற்பார்
1-எட்டுத் திக்கு என்னுதல்
2-எண்ணப் பட்ட தசா விசேஷங்கள் என்னுதல்
3-எட்டு அர்த்தத்தை பிரகாசிப்பதான வியாபக மந்த்ர விசேஷ பிரதானம் என்னுதல்
(ஜகத் காரணம்– சேஷி– ரக்ஷகம் –அநந்யார்ஹம்– ததீய சேஷத்வம் -சகல வித பந்து -ஸமஸ்த கைங்கர்யம் )-விளக்காகி நிற்பார் -எத் தசைகளுக்கும் ப்ரகாசகராய் இருப்பார்-இணை அடி என் தலை மேலனவே-ஒன்றுக்கு ஓன்று ஒப்பான திருவடிகள்-என் தலை மேலாரே -என்னுமா போலே அனுசந்திக்கிறார்-இவருடைய பயிலும் சுடர் ஒளி
நெடுமாற்க்கு அடிமையும் இது தான் இறே-அந்தத் திருவடிகளுக்கு வஸ்தவ்ய பூமி தம் திரு முடி –
என்கிறார் –

————-

விட்டு விளங்க வீற்றிருந்த விமலன் மலை – நாலாயி:347/2

விட்டு விளங்க –மிகவும் பிரகாசிக்க-அதாவது-பார்த்த பார்த்த இடம் எங்கும் இவர்களுடைய திரளின் பிரகாசமேயாய் இருக்கை-வீற்று இருந்த –(இருந்த-இறந்த காலம்
ஆஸ்தே இருக்கும் என்று இருந்தால் ஸ்ரீ வைகுண்டம் -அர்ச்சா ரூபம் ஆகும் )
இவர்கள் நடுவே தன் வ்யாவர்த்தி தோற்றும்படி ஸ்ரீமத் த்வாரகையில் எழுந்து அருளி இருந்த-அதாவது இத்தனை யாரோடும் பரிமாறுகிற இடத்தில் ஒரோருவரே -என்னை ஒழிய அறியான்-என்னை ஒழிய அறியான் -என்னும்படி பரிமாறுகையால் வந்த வீறு  உடைமை தோற்ற இருந்தவன் -என்கை-விமலன்-இப்படி பரிமாறின இதில்-தன் ஸ்வார்த்த பிரபத்தி யாகிற தோஷம் இல்லாதவன் -என்கை-இவனுடைய சமஸ்த வியாபாரங்களும்
ஆஸ்ரிதரை ரசிப்பிக்கைக்காக உறுப்பாய் இறே இருப்பது –இப்படி இருந்துள்ள பாரதந்த்ர்யம் தான் பிரணயித்வ பிரயுக்தம் ஆகையால் இவன் தனக்கு ஏற்றத்துக்கு உடலாம் இத்தனை -இறே-மலை-– 4-2 -10-ஏவம் பூதனான இந்த ஸ்வாபம் எல்லாம் பிரகாசிக்கும்படி வர்த்திக்கிற மலை-வீற்று இருந்த விமலன் மலை-வேறுபாடு தோன்ற இருந்த விமலன்-ஒருவனுக்கு பகவத் ஸம்ருத்தி உண்டானால் அத்தால் வந்த ஸம்ருத்தி
ஆஸ்ரிதர் எல்லாருக்கும் வேணும் என்று இருந்த போது இறே தனக்கு ஸ்ரீ வைஷ்ணத்வம் உண்டு என்று அறியலாவது-விமலன் -ஸ்வார்த்த பிரதிபத்தி இல்லாமையால் விமலத்வமான வேறுபாடு தோன்ற இருந்தவன் என்கிறது-இப்படி இருக்கிறவன் நித்ய வாஸம் செய்கிற திருமலை

———–

மேல் இருந்த விளக்கை விட்டுசித்தன் விரித்தனனே – நாலாயி:359/4

வேதாந்த விழுப் பொருளின் மேலிருந்த விளக்கை-4-3-11-அந்தணர் மாட்டு அந்தி வைத்த மந்த்ரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழுதியேல் -( திரு நெடும் தாண்டகம் )
இத்தால் பிரணவத்தைச் சொல்லுகிறது-மேலிருந்த விளக்கை-வேதாந்தத்தில் ஸர்வ ஸ்மாத் பரன் என்று ப்ரகாசகன் ஆனவனை-அதாவது அகாரார்த்தம் ஆனவனை–விட்டு சித்தன் விரித்தனவே-பகவத் ஸ்வரூப குணங்களிலே வியாபித்த திரு உள்ளத்தை யுடைய ஆழ்வார் இப் பிரபந்தத்திலே வெளியிட்டு அருளினார்

வேதாந்த விழுப் பொருளின் மேலிருந்த விளக்கை – வேதாந்த பிரதிபாத்யங்களான-சீரிய அர்த்தங்களுக்கு எல்லாம் மேலாய் இருந்துள்ள ஸ்வயம் பிரகாச வஸ்து வானவனை –வேதாந்த பிரதிபாத்யங்களான-சீரிய அர்த்தங்கள் ஆவன –
போக்தா போக்யம் ப்ரேரிதாரஞ்ச மத்வா -ஸ்வேதாஸ்வரம்
ஷரம் ப்ரதானம் அம்ர்த  அஷரம்    ஹர ஷராத்மாநா வீசதே தேவ ஏக –
பிரதான ஷேத்ரஜ்ஞ பதிர் குணேச –இத்யாதிகளாலே சொல்லப் படுகிற தத்வ த்ரயமும்-மேல் இருந்த என்றது – இந்த தத்வ த்ரயத்திலும் வைத்துக் கொண்டு- மேலாய் இருந்துள்ள என்றபடி-அதாவது சேதன அசேதனங்கள் இரண்டும் பிரகாரமாக -தான் பிரகாரியாய் –
நதத் சமஸ் அப்யதிகச்ச தர்ச்யதே    -என்னும்படி சர்வ ஸ்மாத் பரனாய் -இருக்கைவிட்டு சித்தன் விரித்தனவே –இப்படி இருக்கிறவனை –அரவத்தமளிப் -படியே – திரு உள்ளத்தில் வைத்துக் கொண்டு இருக்கையாலே – விஷ்ணு சித்தன் -என்னும் திரு நாமத்தை உடைய
பெரியாழ்வார் விஸ்த்ரேண அருளிச் செய்தவை

————

சித்தர்களும் தொழுது இறைஞ்ச திசை விளக்காய் நிற்கின்ற திருவரங்கமே – நாலாயி:417/4

நித்ய விபூதியிலே ஆநந்த நிர்பரராய் இருக்கும்     நித்ய முக்தரும்-முமுஷுக்களை சொல்லவுமாம்(நிலத் தேவர் விண்ணுள்ளாரிலும் சீரியர் அன்றோ )–அஞ்சலி பிரணமாதிகளை பண்ணும் படியாக–பக்தாஞ்சலி புடாஹ்ருஷ்டா நம இத்யே வாதிந -என்று
அஞ்சலி பூர்வகமாக ப்ரணாமத்தைப் பண்ண -சர்வ திக்குகளுக்கும் பிரகாசமாய் கொண்டு நிற்கிற ஏதேனும் ஓர் இடத்தில் இருந்தாலும் அத் திக்கை நோக்கி வணங்கும் படி இறே
இதனுடைய பிரகாசம் இருப்பது-தேசாந்தர கதோவாபி த்வீபாந்தர கதோபிவா ஸ்ரீ ரெங்க
அபிமுகோ பூத்வா ப்ரணி  பத்ய ந சீததி-
(ஸ்ரீ ரெங்க மஹாத்ம்யம் )என்னக் கடவது இறே-திருவரங்கமே-இப்படி இருந்துள்ள ஸ்ரீ திருவரங்கமே –-4 9-6- உயிர் ஆளன் உறையும் ஸ்ரீ கோயில்-திக்குக்கள் தோறும் பிரகாசகமான கோயில் என்னுதல்-சேதனருக்கு ஞான பிரகாசகம் (ப்ரணவாகார விமானமன்றோ )என்னுதல்-இது வாய்த்து உயிராளன் உறையும் கோயில் –

———-

ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை தாயை குடல்_விளக்கம் செய்த தாமோதரனை – நாலாயி:478/3,4

பரம பதத்தில் காட்டில் குணங்கள்-இடைச் சேரியிலே அத்யுஜ்ஜ்வலம் ஆனபடி
அந்த காரத்தில் தீபம் போலே-தோன்றும் – கர்ப்பத்தில் தொற்று இல்லாமை-
கீழைத் திக்குக்கு ஆதித்யனோடு உள்ள சம்பந்தம் இவளோடு அவனுக்கு உள்ளது –
ஸ்ரீ மதுரையிலே திரு அவதரித்து இருக்க செய்தே- திரு அவதார பிரகாசம் திரு ஆய்ப்பாடியிலே சென்றது என்றுமாம் –அணி விளக்கை- திரு ஆய்ப்பாடிக்கு மங்கள தீபம் என்றுமாம் –ஆயர் குலத்தினில் தோன்றும் –-பிறவாத பரம பதத்தோ பாதி ஸ்ரீ மதுரையில் பிறப்பும் – முலைப்பால் குடித்து அழுத இடம் இறே பிறந்த இடமாவது-தோன்றும் –
ஆவீர் பூதம் மஹாத்மநா – கிழக்கே உதிக்கிற ஆதித்யனுக்கு ஸ்பர்சம் உண்டாகில் இவள் வயிற்றில் ஸ்பர்சம் உண்டாவது என்றான் ரிஷி – பிறந்தது குணமாகைக்காக –பிறந்தவாறு -என்று ஈடுபட்டார் ஆழ்வார்-“தேவகீ பூர்வ ஸந்த்யாயா மாவிர்ப்பூதம் மஹாத்மநா,” என்ற புராண நடையை அடி யொற்றி யென்க:அணி விளக்கை –-ஸ்ரீ வைகுண்டத்திலும்
ஸ்ரீ மதுரையிலும் அனுஜ்ஜ்வலனாய் போலே இருப்பது-இவர்களுக்கு கண் காட்டியாய் இருக்கை – அந்தகாரத்தில் தீபம் போலே தாழ்ந்தார் பக்கலில் இறே குணம் பிரகாசிப்பது –
பிறப்பாய் ஒளி வரு முழு நலம் ( 1-3-2 )இறே (ஸு ஸ்ரேயான் பவதி ஜாயமான )-மணி விளக்கு என்ற போது – இங்கே புகுந்த பின்பு பரமபதத்தில் அழுக்கற்ற படி
(மாயன் அங்கு இங்கு வந்து விளக்கு ஆனான் அவன் அழுக்கு போந்ததாம் )பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட வப்பாங்கினால்” என்றபடி தான் பன்னிரண்டு மாதம் கர்ப்ப வாஸம் பண்ணுகையாலும், பெற்ற தாய்க்கு முலை சுரக்கையாலும், முலை பெறாவிடில் இவன் தான் நோவுபடுகையாலும், தன்னைக் கட்டவு மடிக்கவுமாம்படி எளியனாக்கி வைக்கையாலும் அங்ஙன் கூறப்படுகின்றதெனக் கொள்க.

———

தூமணி மாடத்து சுற்றும் விளக்கு எரிய – நாலாயி:482/1

துவளில் மா மணி மாடம் -என்று குற்றம் எடுத்துக் கழிக்க வேண்டாத- நன்மையை உடைய மணியாலே செய்த மாடம் – சம்சார கந்தம் உண்டாய் கழிந்த முக்தருக்கும் அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்யருக்கும் உண்டான வாசி-போந்து இருக்கை –நிர் தோஷங்களான ரத்னங்களாலே செய்த மாடம் –அது ஜீவாத்மாவினுடைய அபஹத பாப்மாதிகளைப் போலே –இது பரமாத்வானுடைய அபஹத பாப்மாதிகளைப் போலே –இவ்வூரில் கழிந்த ரத்தினங்கள் கொண்டு போலே காணும் திருத் துலை வில்லி மங்கலத்தில் மாளிகைகள் செய்தது –ராஜாக்கள் அந்தப்புரத்தில் கழித்தவை கொண்டு இறே தங்களுக்கு மாளிகைகள் செய்வது— இவர்கள் விரஹ தாபம் தீர சுபாஸ்ரயமாக அனுசந்திக்கிறார்கள் –ஆழ்வான் –ஹிதாம்சத்துக்கு ஒரு வைஷ்ணவனுடைய க்ருஹ யாத்திரையை அனுசந்திக்க அமையும் -என்றால் போலே இவர்களும் இவளுடைய மாளிகையின் அழகை அனுபவிக்கிறார்கள்-சுற்றும் விளக்கெரியத் – மாணிக்கத்தின் ஒளியாலே பகல் விளக்கு பட்டிருக்கச் செய்தே-
மங்களார்த்தமாக விளக்கு எரிகிறது –கிருஷ்ணன் வந்தால் தன் கையைப் பிடித்து உலாவும் இடம் அடைய- படுக்கையும் விளக்கும் ஆக்கி வைத்தபடி – புறம்பு நிற்கிறவர்களுக்கு உள்ளே விளக்கு எரிந்தது தெரிகிறபடி எங்கனே என்னில்- மாணிக்கக் குப்பி போலே புறம்பே நிற்க உள்ளுள்ளது எல்லாம் தோற்றா நிற்கும்-இது ஒரு சம்பத்தே -ஒரு கோடி விளக்கு இறே புறம்பே நின்று புகைகிறது – புறம்பு நிற்கிற நம்முடைய ஹிருத்யங்கள் இருண்டு கிடக்க உள்ளுக்கு விளக்கு எரிகிறது வெறுமனே அன்று இறே கிருஷ்ணன் சன்னிஹிதனாக வேணும் இறே – திருச் சித்ர கூட பரிசரத்திலே-பிராட்டியைக் கைப் பிடித்துக் கொண்டு பெருமாள் உலாவினால் போலே இவள் கையைப் பிடித்துக் கொண்டு கிருஷ்ணன் உலாவும் இடம் இறே – அவ்வோபாதி இடம் எங்கும் படுக்கைகளும் விளக்குமாய் கிடக்கிற படி-(தானாக நடந்து போகும் விளக்கு போல் -சேர்த்திக்கு மட்டும் விளக்கு -சர விளக்கு தொங்கும் விளக்குகள் போல் அல்லவே இங்கு)-சர்வதோ முகமாக ஜ்ஞான தீபம் பிரகாசிக்க-

———-

கோல விளக்கே கொடியே விதானமே -499/7

அழகிய விளக்கு -அதாவது மங்கள தீபம் -பாடுவார் எங்கள் முகத்திலே விழித்து
நாங்கள் அவர்கள் முகத்தில் விழித்துக் கொண்டு போம்படி தர்ச நீயமாய் இருபத்தொரு மங்கள தீபம் வேணும் –ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு குல பிரதீபம்பகவத் அனன்யார்ஹ சேஷத்வத்தை அவனுக்கு அத்யந்தம் மனோஹர்ரம் ஆக்குகிற–பாகவத சேஷத்வ ஞானமும் வேணும் –மங்கள தீபத்துக்கு உபய (தன்னையும் அவனையும் )பிரகாசகையான நப்பின்னைப் பிராட்டியையும் கொடுத்தான்

—————-

தை ஒரு திங்களும் தரை விளக்கி தண் மண்டலம் இட்டு மாசி முன்னாள் – நாலாயி:504/1

செங்கண் மால் எங்கள் மால் என்ற நாள் எந்நாளும் நாளாகும் -மூன்றாம் திரு -17-என்று
சர்வேஸ்வரன் நம் பக்கலிலே ஆபிமுக்யம் பண்ணினான் என்று அறிவது ஒரு நாள் உண்டாகில் கால த்ரயமும் அடிக் கழஞ்சு பெற்று செல்லா நிற்கும் இறே-இப்படி ஒரு நாளை யானுகூல்யம் மிகை -என்று இருக்கும் விஷயத்தை பற்றி வைத்து இறே இவன் காலிலே ஒரு மாசமாக துவளப் பார்க்கிறது –தரை விளக்கித் திருக் கண்ணமங்கை ஆண்டானைப் போலே இது தானே பிரயோஜனமாகச் செல்லுகிற படி – சர்வேஸ்வரனுக்கு அசாதாரணமான ஸ்தலங்களில் புக்கு பரிசர்யை பண்ணிப் போரும் குடியிலே பிறந்தவள் இறே – பகவத் கைங்கர்யம் பண்ணுகைக்கு ஸ்தல ஸூத்தி பண்ணுகிற படி இறே இது

——–

வித்தகன் வேங்கட_வாணன் என்னும் விளக்கினில் புக என்னை விதிக்கிற்றியே – நாலாயி:506/4-

பரம பதத்தில் நித்ய ஸூரிகள் ஓலக்கம் கொடுக்க இருக்க கடவ -அவன் அவ்விருப்பை விட்டு- கானமும் வானரமும் வேடரும் -நான் முகன் -47- ஓலக்கம் கொடுக்கத் திருமலையிலே வந்து நிற்கிற விஸ்மய நீயன் – மிகு மதத்தேன் விண்ட மலர் கொண்டு விறல் வேங்கடவனையே கண்டு வணங்கும் களிறு -மூன்றாம் திரு -70-என்றும் –
வைப்பன் மணி விளக்கா மா மதியை மாலுக்கு -நான்முகன் -46-என்று எப்பொழுதும் கை நீட்டும் யானையை -என்றும் திரு விளக்கு இடுவதும் -திரு வாராதனம் பண்ணுவனவும் இவை இறே –சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி விண்ணோர்கள் நன்னீராட்டி அந்தூபம் தரா நிற்கவே அங்கு -திருவிருத்தம் -21- அதில் காட்டில் இது போக்யமாய் இறே இங்கு வந்து அவன் நிற்கிறது-பரம பதத்தில் ஸ்வரூபம் மைத்துப் போலே இருப்பது – திருமலையிலே வந்து நின்ற பின்பாய்த்து- ஸ்வரூப குணங்களுக்கு பிரகாசம் உண்டாய்த்து –
குன்றத்தில் இட்ட விளக்காய்த்தே-வேடார் திருவேங்கடம் மேய விளக்கு -பெரிய திரு -4-7-5-இறே – திருமலையிலே பொருந்தின பின்பு உஜ்ஜ்வலனாய்த்து-அந்த விளக்கில் புகும்படி என்னை நியமிக்க வேணும் என்கிறாள் –

——-

அல்லல் விளைத்த பெருமானை ஆயர்பாடிக்கு அணி விளக்கை வில்லி புதுவை நகர் நம்பி விட்டுசித்தன் வியன் கோதை – நாலாயி:636/1,2

பஹவோ ந்ருப கல்யாண குணகணா புத்ரச்ய சந்தி தே--அயோத்யா -2-26-என்று
திரு அயோ த்யை ராம குணங்களிலே கையடியுண்டு -ஈடுபட்டு – மற்று ஓன்று அறியாது இருக்குமா போலே யாய்த்து திரு வாய்ப்பாடியில் உள்ளார் கிருஷ்ணன் தீம்பிலே கையடி யுண்டார்களாய் இருக்கும் படி-ஊரை மூலையடியே நடந்து -வெண்ணெய் பெண்கள் இவை களவு போய்த்து-என்றும்-பாலும் பதின் குடம் கண்டிலேன் –பெரிய திரு -10-7-2-என்று
சொல்லும் படி பெரிய ஆரவாரத்தைப் பண்ணி யாய்த்து வார்த்திப்பது –ஆயர்பாடிக்கு அணி விளக்கை-இவன் தீம்புக்கு இலக்காகாத போது ஊராக இருண்டாய்த்து கிடப்பது
ராம குணங்கள் வேம்பாய் இவன் தீம்புகள் கரும்பாய் -பிரகாசத்தையும் பண்ண யாய்த்து திரிவது

———

அம் கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும் அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதிவெம் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய் தோன்றி விண் முழுதும் உய கொண்ட வீரன்-தன்னை – நாலாயி:–10-1- நாலாயி:741/1-2-

போக்ய போக உபகரண போக ஸ்தானங்களை உடைத்தாய் ஆகாச அவகாசம் எல்லாம் தானேயாம்படி நிமிர்ந்த மதிளாலே சூழப் பட்ட ஸ்ரீ அயோத்யை- அபராஜிதை என்று சொல்லுகிற ஸ்ரீ பரமபதம் போலே சத்ருக்களுக்கு கணிசிக்க ஒண்ணாத ஊர்
என்னும் –ஸ்ரீ பரம பதம் போல் சிலர் அறிந்து சிலர் அறியாதாய் இருக்கை யன்றிக்கே-அலங்காரங்களால் குறைவற்ற ஊர் -என்னுதல்- சர்வ லோகங்களையும் தன் தேஜஸ்ஸாலே –நாராயண பரஞ்சோதி -என்கிறபடியே பரஞ்ஜோதிஸ்ஸாய் உள்ளது-ஜகத்தில் அந்தகாரம் எல்லாம் நீக்கக் கடவ ஆதித்யன் வம்சத்திலே -அவனைப் போலே இரவு கலவாத அத்விதீயமான தேஜஸ்ஸாய் வந்து உதித்து –தன் வீர்ய குணத்தாலே தேவ ஜாதியடைய உஜ்ஜீவிப்பித்தவனை-

———

நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் நர நாரணனே கரு மா முகில் போல் –3-8-1- நாலாயி:1218/1

சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -நந்தா விளக்கே ! அளத்தற்கு அரியாய் -மெய் மதிக் கடலே -ஸ்வரூப நிரூபகம் –விச்சேதியாத விளக்கு-பிரபா பிரபாவான்களாய் இருக்கை இறே-விளக்காகிறது -நித்யமாய் ஸுயம் பிரகாசமாய் – ஜ்ஞானத்தை ஸ்வரூபமாக உடையவன் -என்ற படி –ஞானத்தை–குணமாகவும் ஸ்வரூபமாகவும் கூட்டுவது – -ஞான ஸ்வரூபன் ஞான குணகன் – அவனே ஞானமாகவும் உள்ளான் ஞானம் உடையவனாயும் இருப்பான் -தர்மி ஞானம் தர்ம பூத ஞானம் இரண்டும் உண்டே-ஆத்மாவும் இதே போலவே -ஆனால் கர்மத்தால் மழுங்கும் தர்ம பூத ஞானம்-

————–

மின் திகழ் குடுமி வேங்கட மலை மேல் மேவிய வேத நல் விளக்கை தென் திசை திலதம் அனையவர் நாங்கை செம்பொன்செய்கோயிலின் உள்ளே –4-3-8- நாலாயி:1275/2,3-

தன் பேரனோடு பகைத்த பாணனுடைய ஆயிரம் தோள்களும் கழியும்படி
அன்று திரு வாழியை ஸ்பர்சித்தவனை-இன்னமும் பாணன் போல்வார் விரோதிகள் வந்து முளைக்கில் செய்வது என் என்று மின் விளங்கா நின்றுள்ள சிகரத்தை உடைத்தான திருமலையில் நித்ய வாசம் பண்ணுகிற வேதைக சமதி கம்யனாய் ஸ்வயம் பிரகாசமான ஸ்வரூபத்தை உடையனாய் உள்ளவனை-பாலோடு சக்கரை சேர்த்து பருகுவாரைப் போலே
கிருஷ்ண அவதாரத்துடன் திருவேம்கடமுடையானை சேர்த்து அனுபவிக்கிறார்

————

வேடு ஆர் திருவேங்கடம் மேய விளக்கே நாடு ஆர் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர் – 4-7-5-நாலாயி:–1312/1,2

பரிவுக்கும் ஆண் பிள்ளைத் தனத்துக்கும் குறைவற்று திருமலையில் நின்றும் பூமியிலே இழயில் குடிப் பழியாய் இருக்கும்-திரு வேடுவராலே நிறையப் பெற்ற திருமலையிலே மேவின விளக்கே-தன் ஸ்வரூப ரூப குணங்களுக்கு  தானே பிரகாசன் ஆனவனே

————

நந்தா விளக்கின் சுடரே நறையூர் நின்ற நம்பீ என் எந்தாய் இந்தளூராய் -4-9-2– நாலாயி:-1329/3

ஒரு விச்சேதம் இல்லாத தீபத்தில் திரியும் எண்ணையும் புகையுமான அழுக்கு இன்றிக்கே
புகர் தானே ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கிற ஸ்வரூபத்தை உடையவனே –திரு நறையூரில் வந்து சந்நிஹிதனாய் ஆஸ்ரயநீய வஸ்துவுக்கு இன்னம் ஓன்று கூட்டுப் பெற்றது இல்லை என்னும் குறை தீரும்படி இருக்கிற பூரணன் ஆனவனே-என் எந்தாய் இந்தளூராய் – திரு இந்தளூரிலே வந்து சந்நிதி பண்ணி எனக்கு சம்பந்த ஞானத்தைப் பிறப்பித்தவனே-திருவாலி யானைக் கைப்பிடித்து-திரு நறையூர் நம்பியானை உபாய பூதனாகவும் -நண்ணு நறையூர் நான் தொழுதும் எழு நெஞ்சமே திரு இந்தளூரானை சேஷித்வ சம்பந்த ஞானம் அறிவிப்பித்தவன்

——–

முனியே திருமூழிக்களத்து விளக்கே இனியாய் தொண்டரோம் பருகும் இன் அமுது ஆய – நாலாயி:1553/2,3

இச் சேதனர் அறியாது இருக்கச் செய்தே-எப்போதும் ஒக்க இவர்களுக்கு-ஹிதத்தை அனுசந்திக்குமவனே –திரு மூழிக் களத்திலே வந்து உன்னுடைய ஸ்வரூப ரூப குணங்களுக்கு நீயே பிரகாசகனாய்க் கொண்டு நிற்கிறவனே –இனிமைக்கு பிரகாசத்தைப் பண்ணுகை-அன்றிக்கே இனிமை தானேயாய் இருக்கை –தேவர்கள் பருகும் அமிர்தம் போல் அன்றிக்கே கைங்கர்ய ருசி உடையராய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் பருகும் அம்ருதமாய் –அப்போதே எடுத்து நுகரலாம் படி கனி போலே இருக்கிறவனே –காணப் பெறாமையாலே அசந்நேவ-என்கிறபடியே உரு மாய்ந்த நான் கண்டு -உஜ்ஜீவிக்கப் பெற்றேன் –

——–

விண்ணினை விளங்கும் சுடர் சோதியை வேள்வியை விளக்கின் ஒளி-தன்னை – நாலாயி:1646/2

த்ரிபாத்விபூதி -என்னலாம்படியான பரப்பை உடைய நித்ய விபூதி உக்தன் ஆனவனை –விளங்கும் சுடர்ச் சோதியை -அங்கே நிரவதிக தேஜோ ரூபமான திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையவனாய் நிற்கிறவனை –வேள்வியை-அத் தேசத்தை பிராபிக்கைக்கு சாதனமான கர்மங்களாய் நிற்கிறவனை –விளக்கின் ஒளி தன்னை – ஸ்வ ஆயத்தமான தேஜஸ்சை உடையவனை – (தன்னிலே தான் சார்ந்து இருப்பவன் )

———

மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள் புக்கானை புகழ் சேர் பொலிகின்ற பொன் மலையை- -–8-9-4–நாலாயி:1731/1

சர்வாதிகனை –-வேறு ஒன்றால் காண வேண்டாதே-தனக்குத் தானே பிரகாசகமாய் இருப்பது –-பிரமாணங்களால் அறியப் பார்க்கும் அன்று-அவற்றாலே பிரகாசிக்கிற மேன்மைக்கு எல்லை அன்றிக்கே இருப்பது –என் ஹிருதயத்திலே தானே புகுந்தவனை –புகழ் சேர் பொலிகின்ற பொன் மலையை- ஒரு சம்சாரி சேதனன் உடைய ஹிருதயத்திலே
அவனுக்கு அபேஷை இன்றிக்கே இருக்க தானே போய் புகுவதே – இது ஒரு நீர்மை இருக்கும்படியே -என்று இருந்ததே குடியாக எல்லாரும் ஒக்கச் சொல்லுகையாலே வந்த
மிக்க புகழை உடையனாய்க் கொண்டு உஜ்ஜ்வலனாய் இருக்கிறவனை  –மறையாயும் பரவிய விளக்காகவும் -தன்னைத் தானே விளக்கி -மற்றவற்றையும் விளங்குபவர்
வேதத்தால் சொல்லப் படுபவரை தானே விளங்குபவர் என்னலாமோ என்னில்
ஸப்த பிரமாணம் பரிச்சேதிக்க ஒண்ணாதே -ஆகவே விரிந்த விளக்கே என்கிறார் –
எல்லை காண முடியாமல் இருப்பவன் என்று காட்டும் ப்ரமாணமே வேதம்

——————

அளப்பில் ஆரமுதை அமரர்க்கு அருள் விளக்கினை சென்று வெள்ளறை காண்டுமே –10-1-4- நாலாயி:1851/4

அபரிச்சேத்யமான போக்யதையை உடையனாய் அத்தை அயர்வறும் அமரர்களுக்கு அனுபவிக்கக் கொடுத்து அத்தாலே உஜ்ஜ்வலனானவனை –நித்ய ஸூரிகளுக்கு பிரகாசமாய் இருப்பதோர் அருளாய் இருக்கிறவனை-அளப்பில் ஆரமுதை
அளப்பில் அருள்–அருள் ஆகிய விளக்கு-விளக்கான அளப்பில் அருள் -என்று இரண்டும்-திரு வெள்ளறையிலே காணக் கடவோம் –

——-

தோன்றலும் சுடர் விட்டு விளக்கினை விதியின் காண்பார் மெய்ம்மையை காண்கிற்பாரே – 18-நாலாயி:2049/4

சுடர் விட்டு தோன்றலும் –இப்படி சுடர் விட்டு தோன்றும் ஜ்ஞானத்தாலே –வேத விளக்கினைவேதங்களாலே ஜோதி ரூபனாக பிரதிபாதிக்கப் பட்ட விளக்கை-சாஸ்த்ரங்களில் விதித்தபடியே உபாசித்து அவனைக் காண்பார் –என்றும் உளனாய் இருக்கிற சர்வேஸ்வரனை காண வல்லரே -காண -மாட்டார் -என்றபடி –அதவா – இப்படி யோக சாஸ்த்ரத்தில் சொல்லுகிறபடியே உபாசித்துக் காண்பாருக்கு காணலாம் -என்றுமாம் –அங்க பிரபத்தி இல்லாமல் காண மாட்டார் என்றபடி-

————-

மின் உருவாய் முன் உருவில் வேதம் நான்காய் விளக்கு ஒளியாய் முளைத்து எழுந்த திங்கள் தானாய்-1- – நாலாயி:2052/1

இந்த சாஸ்திர ஜன்யமான ஜ்ஞானத்தையும் எனக்கு உண்டாக்கினான் -என்கிறார் –
விளக்கொளியாய் – விளக்கு ஒளியின் ஸ்வபாவத்தை உடைத்தாய் ஆகையாலே –
விளக்கொளி -என்றது சாஸ்திர ஜன்ய ஜ்ஞானத்தைச் சொல்கிறது –
அதாகிறது -தீபமாகிறது அந்தகாரத்தைப் போக்கி பதார்த்தங்களைப் பிரகாசிப்பிக்குமா போலே அஞ்ஞானத்தைப் போக்கி ஸ்வரூபத்தை பிரகாசிப்பிக்கக் கடவதாய் இருக்கை –
அந்தம் தம இவா ஜ்ஞானம் தீபவஸ் சேந்த்ரிய உத்பவம் -(ஸ்ரீ விஷ்ணு புராணம் )என்று
ஸ்ரவண ஜ்ஞானத்தை தீபமாகச் சொல்லக் கடவது இறே –ஹர்த்தும் தமஸ் சதஸ தீவ விவேகத்து மீசோ மாநம் பிரதீபமிவ காருணிகோ ததாதி-என்னக் கடவது இறே-
இத்தால் -ஸ்ரோதவ்ய -என்று சொல்லுகிற ஸ்ரவணத்தை சொல்லிற்றாய் யாய்த்து –விளக்கு ஒளியாய் திங்கள் தானாய் -என்கிற இத்தால் ஸ்ரவண மனன நிதித்யசங்களாலே பரமாத்மாவைக் காணுமா போலே இவற்றால் இங்கே ஜீவாத்மாவைக் காணும் படி சொல்கிறது-ஸ்வயம் பிரகாசம் -ஆனந்த மயம் -அவன் அருளால் அறியப் பெற்றேன் –

————

விளக்கு ஒளியை மரகதத்தை திருத்தண்காவில் வெஃகாவில் திருமாலை பாட கேட்டு – 14-நாலாயி:2065/3-

தன் வடிவு அழகைக் காட்டி அஹங்காரத்தையும் விஷயாந்த்ர ப்ராவண்யத்தையும் போக்கி விடுகை அன்றியே நெஞ்சிலே புகுந்து முறை உணர்தினவனை-விளக்கொளியை-
பிரகாசமானவனை – அதாகிறது – ஸ்வ ஸ்வரூப -பர ஸ்வரூபங்களையும்-தத் விரோதி ஸ்வ ரூபத்தையும்-விரோதி நிவர்த்தி பூர்வகமாக புருஷார்த்தம் சித்திக்கும் படியான-உபாய ஸ்வ ரூபத்தையும் பிரகாசிப்பிக்கை -என்கை –மேலே ‘திருத்தண்கா‘ என வருகையாலே
இங்கு விளக்கொளியென்றது அத்தலத்து எம்பெருமானாகிய ஸ்ரீ தீப ப்ரகாசனை என்றுங் கொள்ளலாம்;-ஸ்ரீ திருத்தண்கா ‘விளக்கொளி கோயில்‘ என்றே வழங்கப் பெறும்.
இத் தலத்துப் பெருமான் பண்டைக் காலத்தில் சயன திருக்கோலமாக எழுந்தருளி யிருந்ததாக ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தினாலும் அரும்பதவுரை யினாலும் மற்றும் சில சாதனங்களாலும் விளங்குகின்றது

———-

வெய்ய கதிரோன் விளக்கு ஆக செய்ய – நாலாயி:2082/2

ஆதித்யன் ஆயிற்று தீபமாகப் புக்கு அன்வயித்தான் – தன்னையும் காட்டி -பதார்த்தங்களையும் காட்ட வற்றாகை-யதா சூர்யஸ் ததா ஜ்ஞானம் –இனித் தான் இருபத்து ஒன்பதிலே அஸ்தமித்தல் முப்பத்தொன்று என்ற அளவும் நிற்றல் செய்ய மாட்டாதே
முப்பது வடம் இருந்த இடத்திலே இருக்க மாட்டாதே வருகையினாலே இவனும் ஒருவன் உடைய ஆஞ்ஞா அநு வர்த்தனம் பண்ணுகிறான் -யென்று தோற்றுகிறது-பீஷாஸ்மாத் வாதப் பவதே,-பீஷோ தேதி ஸூர்யபீஷாஸ் மாதக் நிஸ் சேந்த்ரஸ் ஸ ம்ருத்யும் தாவதி பஞ்சம தைத்ரிய உபநிஷத் –என்னக் கடவது இறே-

————-

புகை விளக்கும் பூம் புனலும் ஏந்தி திசைதிசையின் – -37-நாலாயி:2118/2

இனி ஸ்ரவண விஷயமாக ஒரு கர்த்தவ்யம் இல்லை இறே-அனந்தரம்-வ்ருத்தியிலே அந்வயிக்கும் இத்தனை இறே-பிராப்ய பிராபகங்கள் இரண்டும் அவனே என்று அத்யவசித்த பின்பு தொட்டதும் தீண்டினதும் கைங்கர்யமாம் இத்தனை இறே-அது தான் போக ரூபமாய் இருக்கையாலே எப்போதும் சமாராதன உப கரணங்களைத் தரித்துக் கொண்டு –

———–

புணை ஆம் மணி விளக்கு ஆம் பூம் பட்டு ஆம் புல்கும் – நாலாயி:2134/3

மங்கள தீபம்-அணி விளக்கு -என்று பாடமான போது அழகிய தீபம் -என்னவுமாம்-ஒரு விளக்காலே ஒரு பதார்த்தத்தை காண வேணும் என்னும் போது மங்கள தீபமாய் இருக்கும்-ஒரு வல்லித் தாமரையாள் சென்று ஒன்றிய சீர் மார்வனுமாய் திருவல்லிக் கேணி யானுமானவன் எந்தை –அந்தி விளக்கும் அணி விளக்காம் திருவல்லிக் கேணியான்

—————-

உய்த்து உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கு ஏற்றி –94- நாலாயி:2375/1

உணர்வாகிற தைல வர்த்திகளால் உண்டான வழுக்கின்றிக்கே தினுங்கின தேஜஸ் சை உடைத்தான விளக்கை ஏற்றி –

————–

வைப்பன் மணி விளக்கா மா மதியை மாலுக்கு என்று – நாலாயி:2427/1

பெரிய சந்த்ரனை அழகிய விளக்காக வைப்ப திருவேங்கடமுடையானுக்கு என்றே
எப்போதும்-வாங்குகைக்குக் கை  நீட்டா நின்றுள்ள யானையை எங்கும் வேடு சூழ்ந்து கொள்ள அவர்களோடு எதிர்த்துக் குறவர் வில்லெடுக்கும் திரு மலையை-ஸ்லாக்யமான சந்திரனை ஸர்வேஸ்வரனுக்கு மங்கள தீபமாக வைப்பேன் என்று எப்போதும் தும்பிக்கையை நீட்டிக் கொண்டு இருக்கிற யானையை-சந்தரன் அணியனாய் இருக்கையாலே- சர்வேஸ்வரனுக்கு திரு நந்தா விளக்காக வைப்பன்-என்று ஒரு கால் நீட்டிக் கிடைக்காது ஒழிந்தால் மீள அறியாதே – எப்போதும் கை நீட்டின படியே-அந்ய பரமாய் நிற்கிற யானையை- வேடர் எங்கும் போக ஒட்டாமல் சுற்றிக் கொள்ள அத்தைக் கண்டு குறவர் வில்லை எடுக்கிற திருமலையையே நாட்டார் எல்லாம் ப்ரதக்ஷிணம் பண்ணிக் கூத்தாடினால் நலமாய் இருக்கும் —

———–

உற உயர் ஞான சுடர் விளக்காய் நின்றது அன்றி ஒன்றும் – நாலாயி:2521/3

மிகவுயர்ந்த (தமது) ஞானமாகிற தீபத்தால் சிறிது விளக்கத்தைப் பெற்று நின்ற தொழிய-தரும மார்க்கத்தால் முயன்று பெற்ற ஞானத்தை யுடைய வைதிக ஸம்ப்ரதாயஸ்தர்கள் (ஒருவாறு பிறர்க்குச்) சொன்னாலும். (அவர்கள்)-எம்பெருமானுடைய (ஒப்புயர்வற்ற) மஹிமையை ஒரு வகை யாலும் முற்றும் அளவிட்டுக் கூறப் பெறும்படி முயற்சி செய்தார்களில்லை.–விசாரிக்க விசாரிக்க அஞ்ஞாத அம்சமே மேல் மேல் விஞ்சி
விபூதி த்வய நித்ய வ்யாப்த ஞான ப்ரப ஆஸ்ரய ஞான ஸ்வரூபமாய் பர ப்ரகாசமுமாய் ப்ரகாசாந்தர நிரபேஷ ப்ரகாசமாய் நிலைக்கு நின்றது அன்றி–இதம் இத்தம் என்று பரிச்சேதிக்க யத்னப்படுவார்-என்றும்-எங்கும்-இல்லையே–தன் அருளாலே எனக்கு விஷயமாக்கின உபகாரனுடைய பெருமையை ஒருத்தரும் கிட்டும்படி முயன்றார் இல்லை

————–

உழறு அலர் ஞான சுடர் விளக்காய் உயர்ந்தோரை இல்லா – நாலாயி:2535/3

உழன்று சஞ்சரிப்பதால்-அலர்ந்து-விகஸிதமான-ஞானமாகிய சுடருக்கு ஆஸ்ரயமான விளக்காய்-இத்தாலே ஈஸ்வரனுடைய ஞானமும்-அஃதே கொண்டு எல்லாக் கருமங்களை செய் –திருவாய் -4-1-8-என்கிற கணக்கிலே ஸகல வியாபார மூலமாய் ஸர்வத்ர விகஸிதமாய் இருக்கும் என்றும் ஆஸ்ரயமான ஸ்வரூபமும் ஸ்வயம் ப்ரகாசமாய் இருக்கும் என்றும் சொல்லிற்று ஆயிற்று-

————

துன்னிய தாரகையின் பேர் ஒளி சேர் ஆகாசம் என்னும் விதானத்தின் கீழால் இரு சுடரை மன்னும் விளக்காக வேற்றி

நெருங்கி இருக்கிற நஷத்ர தாரா கணங்களின் உடைய மிக்க தேஜச்சை யுடைத்தாய் இருந்துள்ள ஆகாசம் போலே இருக்கிற திரு முத்தின் பந்தற் கீழே -என்னுதல்-
ஆகாசம் ஆகிற திரு முத்தின் பந்தற் கீழே -என்னுதல்
ஆகாசம் போலே என்ற பொதி கட்டின – என்று தோற்றி இருக்கிற படி ஆகாசத்தை திருஷ்டாந்தமாகச் சொல்லிற்று அச்சமாய் இருக்கையாலே –இரு  சுடரை மன்னும் விளக்காக வேற்றி – இவன் போன இடம்  எங்கும்  கூடப் போமவர்கள் இ றே ஆழ்வார்கள் –
ஆகையாலே திரு வாழி ஆழ்வானையும் -ஸ்ரீ பாஞ்ச ஜன்ய ஆழ்வானையும் நித்யமான விளக்காக ஏற்றி
அங்கன் அன்றிக்கே-சந்திர ஸூ ர்யர்களைச் சொல்லிற்று ஆகவுமாம்-
ஏகார்ணததிலே  சிருஷ்டி உன்முகனாய்க் கண்  வளர்ந்து அருளுகிற போதாகக் கார்ய பூதரான இவர்கள் உளரோ எப்போதும் -என்னில் அதுக்காக இ றே முற்பட ஒரு பொருள் சொல்லிற்று
அன்றியே-கவி பாடுகிற இவர் தாம் பிற்பட்ட காலத்தில் உள்ளார் ஒருவராகையாலே தமக்கு முற்பட்டாரைச் சொல்லத் தட்டில்லை இறே –

————

மன்னும் மணி விளக்கை மாட்டி மழை கண்ணார் – நாலாயி:2726/3

மாணிக்கத்தின் அழுக்கை கழற்றி-நிலை விளக்காக வைத்து –அடுத்து ஒரு கால் பார்க்க-கால தத்வம் உள்ளதனையும் வவ்வலிடும்படி பண்ணும்

—————-

முன்னவனை மூழிக்களத்து விளக்கினை அன்னவனை ஆதனூர் ஆண்டு அளக்கும் ஐயனை – நாலாயி:2781/1,2

சர்வ ஸ்வாபகாரம் பண்ணிப் பூர்ணனாய் இருக்கிறவனை –நித்ய சூரிகளுக்கும் கூட அனுபவித்து முடிய ஒண்ணாத படி இருக்கிறவனைஎதோ வாசோ நிவர்த்தந்தே –பூர்வோ யோ தேவேப்ய –உஜ்ஜ்வலனாய் இருக்கிறவனை-பல பிறப்பாய் ஒளி வரும் -திருவாய் -1-3-2–ஸ்ரேயான் பவதி ஜாயமான –

————–

நிறை விளக்கு ஏற்றிய பூத திருவடி தாள்கள் நெஞ்சத்து – 9-நாலாயி:–2799 /2

பர ஞானம் ஆகிற பரிபூர்ண தீபத்தை-அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடு திரியா நன்புருகி ஞான சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு -என்று தம்முடைய பக்தியை தகளியாக பண்ணி -அபிநிவேச அதிசயத்தை நெய்யாக்கி
பகவத் அனுபவ ஆனந்தத்தாலே உருகிக் கிடக்கிற மனசை திரியாக்கி –நாராயணனுக்கு பர ஞானம் ஆகிற பரி பூர்ண தீபத்தை ஏற்றினேன் நான் –என்று தொடங்கி -தாம் இட்டு அருளின
திவ்ய ப்ரபந்தம் ஆகிற பரி பூர்ண தீபத்தை ஏற்றி -சர்வர்க்கும் உபகாரமாகும்படி பிரகாசிப்பித்த-பூதத் தாழ்வார் என்கிற ஸ்வாமி களுடைய திருவடிகள் –அம் தமிழால் நற் கலைகள் ஆய்ந்து உரைத்த ஆழ்வார்கள் இவ் உலகு இருள் நீங்க வந்து உதித்த –என்று ஜீயர் அருளிச் செய்தார் இறே –நிறை விளக்கு– நேரே பொருள்களை தெளியக் காட்டுவது போலப் பர ஞானமும் –ஜீவ பரமான்ம தத்துவங்களை–நேரே தெளியக் காட்டுகின்றது என்க-ஆன்மாவைப் பற்றிய அறியாமையை ஒழித்த பர ஞானம் கதிரவன் போலப் புலனாம் பொருளை முழுதும் உள்ளபடி காட்டுகிறது -என்னும் பொருள் கொண்ட-ஜ்ஞானே நது ததஜ்ஞானம் ஏஷாம் நாசித மாத்மன-தேஷாமாதித் யாவத் ஞானம் பிரகாசயதி தத்பரம் -என்னும் கீதா ஸ்லோகம் இங்கு நினைவுக்கு வருகிறது –பர ஞானம் ஆவது சுருக்கம் இன்றி ஞானம் விரிந்து கிடத்தலால் பொருளைக் காட்டுவதில்-அளவு படாமை -என்பது கீதா பாஷ்ய சந்த்ரிகை –ஞான சுடர் விளக்கு ஏற்றினேன் -என்னும் பூதத்தாழ்வார் திரு வாக்கை –ஞானம் என்னும் நிறை விளக்கு ஏற்றிய –என்று அமுதனார் பொருளோடு அச் சொல்லாலே பொன்னே போல் போற்றிக் கையாளுகிறார் –சுடர் விளக்கு -என்பதை நிறை விளக்கு –என்கிறார் –விளக்கு ஏற்றுதல்-இரண்டாம் திருவந்தாதி திவ்ய ப்ரபந்தம் அருளி செய்தல் –திருவடி–பெரியோர்களைத் திருவடிகள் என்று மதிப்பு தோன்றக் கூருவதுமரபு-

————–

விடுவேனோ என் விளக்கை என் ஆவியை – நாலாயி:2969/1

ஸ்வ விஷயமான அஞ்ஞான அந்தகாரம் போம்படி – அறிவின்மையாகிற இருள் போகும்படி-
நிர்ஹேதுகமாக – என்னிடத்து ஒரு விதக் காரணமும் இன்றி,- தன்னுடைய ஸ்வரூபம் உருவம் குணம் உலகம் முதலான விபூதிகளை எனக்கு விளங்கச் செய்தவனை.
விளக்காவது, தன்னையுங் காட்டிப் பொருள்களையுங் காட்டுவது ஒன்று அன்றோ?
அது போன்று, இறைவனும் இவர்க்குத் தன்னையும் காட்டி, ஆத்தும ஸ்வரூபத்தையும் விரோதி ஸ்வரூபத்தையும் காட்டித் தந்தானாதலின், ‘விளக்கு’ என்கிறார்.
என் விளக்கை என்பான் என்? அல்லாதார்க்கும் ஒவ்வாதோ?’ என்னில்  இவரைப் போன்று மற்றையோர்க்குப் பத்தி-ஸ்நேஹம்- இல்லையே?-ஸ்நேஹம்–பத்தி உண்டாகில் அன்றோ இவ் விளக்குப் பிரகாசிப்பது? ஆதலால், ‘என் விளக்கை’ என்கிறார்.

————

நந்தா விளக்கமே நீயும் அளியத்தாய் – நாலாயி:-3017/2

கெடாத விளக்கே! ‘ஒன்றன் பின் ஒன்று மாறிக்கொண்டே அழிகின்ற ஜ்வாலையை ‘நந்தா விளக்கே’ என்றது என்னை?’ எனின், விச்சேதம் இல்லாத விளக்கு -நந்துதல் -சிந்துதல்
தான் மயக்கம் கொண்டவள் ஆதலின், மிக நுண்ணியதாக ஆய்ந்து அறியக்கூடிய ஜ்வாலையினுடைய வேறுபாட்டினை -பேதத்தை -அனுமானித்து -பார்க்கின்றாள் அல்லள்;
ஜ்வாலையானது கெடுதல் இன்றித் தொடர்ந்து வந்துகொண்டே இருப்பது போலத்-சந்தான விச்சேதம் இன்றிக்கே – தோற்றுதலின், அதனைப் பார்த்து, ‘நந்தா விளக்கே’ என்கிறாள்.-நாட்டுக்குக் கண் காட்டியான அருமந்த நீயும்.-பதார்த்த தர்சன சாதனமான கண்ணுக்கு விஷயங்களைக் காட்டுகிற -என்றபடி-

——————-

மிக்க ஞான வெள்ள சுடர் விளக்காய் துளக்கு அற்று அமுதமாய் எங்கும் —2-6-2- நாலாயி:3065/3

புகுந்ததன் பின் மிக்க ஞானச் சுடர்விளக்காய்த் துளக்கு அற்று –இவரோடே வந்து கலந்து, அக்கலவியில் அதிசங்கையும் தீர்ந்த பின்பாயிற்று,விகஸித ஸஹஜ ஸார்வஜ்ஞனுமாய் விஜ்வரனும் ஆயிற்றது. என்றது,தனக்கு நித்திய தர்மமான ஞானத்தை யுடைத்தான ஆத்ம வஸ்து, கர்மம் காரணமாக ஒரு சரீரத்தை பரிக்ரஹித்து – மேற்கொண்டு இந்திரியங்களாகிய வழியை விரும்பிக்கொண்டு சஞ்சரிக்க வேண்டும்படி போந்தது,ஒரு நாள் வரையிலே பகவானுடைய திருவருளும் பிறந்து ஞானக் குறைவும் கழியக் கடவதாய் இருக்கும் அன்றே?அங்ஙனம் ஓர் ஹேதுவும் இன்றிக்கே இருக்கிற சர்வேஸ்வரனும் இவரோடே வந்து கலப்பதற்கு முன்பு-சங்குசித- குறைவுபட்ட ஞானத்தை உடையவனாய் இவரோடே கலந்த பின்பு-விகசிதமான- மலர்ந்த ஞான வெள்ளத்தையும் உடையவன் ஆனான்;திவ்விய மங்கள விக்கிரஹமும் புகர் பெற்றது இப்போது என்றபடி.துளக்கு அறுதலாவது,ஆடி ஆடி’ என்ற திருவாய்மொழியில் உண்டான ஆற்றாமையால் வந்த உள் நடுக்கமும் தீர்தல்-விஜ்வர ‘நடுக்கமற்றவனானான்’ என்றார் ஸ்ரீ வால்மீகி.இனி, துளக்கு அறுதலாவது,‘இவர் நம்மை விடின் செய்வது என்?’ என்கிற உள் நடுக்கமும் தீர்ந்தான் இப்போது என்று கூறலுமாம்.

————–

மிக்க ஞானமூர்த்தி ஆய வேத விளக்கினை என் – நாலாயி:3306/3

நிறைந்த ஞானத்தையே சொரூபமாக உடையவனான.வேத விளக்கினை – வேதமாகிற விளக்காலே காணப்படுமவனை.-அன்றிக்கே, ‘வேதத்தைப் பிரகாசிக்கச் செய்கின்றவனை’ என்னலும் ஆம்; என்றது,’ வேதத்திற்கு விளக்காய் இருப்பவன்’ என்றபடி.
வேத விளக்கினை’ என்பதற்கு இரண்டு பொருள் அருளிச்செய்கிறார்:
முதலது, ‘வேதத்தைத் தனக்கு விளக்காகவுடையவன்’ என்பது; ‘வேதத்தாலே பிரதிபாதிக்கப்படுகின்றவன்’ என்றபடி.-இரண்டாவது, ‘வேதத்துக்கு விளக்கு’

————-

பூவில் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து – -5-2-9-நாலாயி:3360/3

ஞானவிதி பிழையாமே- பக்தியினாலே தூண்டப்பட்டுச் செய்கின்ற காரியங்களில் ஒன்றும் தப்பாமல்.-ஞானம்’ என்கிறது, ஞான விசேஷமான பக்தியை.பூவின் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து – பூவோடே கூடின புகை தொடக்கமான சமாராதந உபகரணங்களை மிகுத்துக் கொண்டு.

—————

வெள்ள நீர் சடையானும் நின்னிடை வேறு அலாமை விளங்க நின்றதும் –-5-10-4- நாலாயி:-3443/3

“பிரஹ்ம ருத்திரர்கள் நடுவே நின்றது ஒரு முதல் களவு உண்டு, அதனைச் சொல்லுகிறது” என்று ஆளவந்தார் அருளிச் செய்ததாகத் திருமாலையாண்டாள் பணிப்பர். என்றது, -மத்யே விரிஞ்சக்ரீசம் பிரதம -விஷ்ணு அவதாரம் – சிவனையும் தன்னையும் சமமாகச் சொல்லலாம்படி திரிமூர்த்தி மத்திய நிலையைச் சொல்லுகிறது என்றபடி.
இதனை எம்பெருமானார் கேட்டருளி, “அழகிது, அத்தனை தூரம் தேடிப் போக வேணுமோ,
இவன் தன் விஷயத்திலே, முன்பு செய்த உபகாரத்துக்கு ஓர் அளவு உண்டோ,-இதுதானே அமையாதோ” என்று அருளிச் செய்தார்.

———–

மாட்டிய வல் விளக்கின் சுடராய் நிற்கும் வாலியதே – 7-7-2- நாலாயி:3628/4

மாட்டிய –‘சுடர் வெட்டிய’ என்னுதல்:-‘ஏற்றிய’ என்னுதல்,-வல் விளக்கின் சுடராய்-பெரிய விளக்காய் – விரக தாபத்தாலே அவியாத விளாக்காயிற்று.
‘‘ஏற்றிய பெரு விளக்கு’ என்று ஒரு தமிழ் புலவன் இட்டு வைத்தான்’ என்று அருளிச் செய்வர்.-நிற்கும் வாலியதே –வலிதாய் நின்று நலியா நிற்கும்.-விளக்காகிறது-தான் சிறிது நேரம் இருப்பதுமாய்-ஓர் இடத்திலே இருப்பதுமாய் அன்றோ இருப்பது?-இது அங்ஙன் அன்றிக்கே,-எப்போதுமாய் எங்கும் உண்டாய் இரா நின்றது:-பாதகத்துவத்தில் உறைப்பை நினைத்துச் சொல்லுகிற வார்த்தை அன்றோ இது?

————

புகையால் விளக்கால் புது மலரால் நீரால் –10-4-10- நாலாயி:3933/2

கால வரையறை இல்லாமலே-ஆராதிப்பதற்கு உரிய பொருள்களுக்கும் வரையறை இல்லாமலே- தங்களுக்கு கிடைத்த பொருள்களைக் கொண்டு-அக்ரமமாக சொல்லி -நீரால் சொல்லி தானே ஆரம்பித்து இருக்க வேண்டும் – பெரிய திரு நாளுக்கு எல்லா திசைகளிலும் உள்ள மக்கள் வந்து ஏறுமாறு போலே- பிரமன் முதலான தேவர்கள் வந்து அடையும் படியான தன்மையை உடையவனுடைய திருவடிகள் –

—————

நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும் மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே -10-9-10- நாலாயி:3988/3,4

அவ்வளவிலே பகவானுக்கு தொண்டு செய்கிறவர்கள் வந்து-எதிர் நிற்ப்பார்கள்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு செல்வமான திருவடி நிலைகளையும் திருச் சுண்ணப் பிரசாதத்தையும் நிறை குபங்களையும்-மங்கள தீபங்களையும் -ஏந்தி –வேறு தேசத்திற்கு போன பிள்ளைகள் வந்தால்-தாய் முகம் குளிர்ந்து இருக்குமா போலே உவகையாலே பூர்ண சந்தரனைப் போலே இருக்கிற முகங்களை உடையவர்கள் வந்து எதிர் கொண்டார்கள் —

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading