ஸ்ரீ ப்ரஹ்ம வைவர்த்த புராணம்

ஸ்ரீ ப்ரஹ்ம வைவர்த்த புராணம்

பதினெண் புராணங்களில் பத்தாவது புராணமாகும். இந்த புராணம் பதினெட்டாயிரம் (18,000) ஸ்லோகங்களை உள்ளடக்கியது. இப்புராணம் பிரம்ம காண்டம், பிரகிருதி காண்டம், கணேச காண்டம், கிருஷ்ண காண்டம் என்று நான்கு காண்டங்களைக் கொண்டதாகும்.
வைவர்த்தம் என்ற சமஸ்கிருத சொல்லிற்கு பரிணாம வளர்ச்சி என்று பொருள். எனவே பிரம்மனின் பரிணாம வளர்ச்சியை விவரிக்கின்ற புராணமான இது பிரம்ம வைவர்த்த புராணம் என்று அழைக்கப்படுகிறது.
இக் காண்டத்தில் விநாயகரின் வரலாறும், பெருமைகளும் கூறப்படுகின்றன. பார்வதி கிருஷ்ண விருதம் இருந்து கிருஷ்ணனையே குழந்தையாக பெற்றார். அக் குழந்தை பிறந்த நாளில் கைலாசத்தில் பெரும் விழா நடந்தது. அதற்கு முனிவர்கள், தேவர்கள், யட்சர்கள் என அனைவரும் வந்தார்கள். அவர்களில் சூரியனின் குமாரனான சனியும் வந்தார். ஆனால் குழந்தையை காணாமல் இருந்தார். அதைக் கண்ட பார்வதி சனிபகவானை குழந்தையை காணும் படி கூறினார்.

சனியின் பார்வையால் குழந்தையின் தலை விழுந்தது. அதன் பிறகு கிருஷ்ணன் கருடனாக மாறி பூமியை வலம் வந்தார். அப்போது ஓர் ஆற்றங்கரையில் ஐராவதம் உறங்குவதை கண்டு அதன் தலையை சக்ராயுதத்தினால் கொய்தார். அதன் தலையை கைலாயத்தில் இருந்த தலையில்லா குழந்தையுடன் இணைத்தார்.

கஜானனன் , லம்போதரன் , ஏகதந்தன், விக்கினஹரன் என விநாயகரின் பல பெயர்களுக்கான காரணங்களை இப்புராணம் விளக்குகிறது இதனால்.

இப்புராணத்தின் முக்கியக் குறிக்கோள்,  ஸ்ரீ கிருஷ்ணனின் தெய்வீகமான உலகியல் கடந்த திருவிளையாடல்களைக் குறிப்பதும், ஸ்ரீ கிருஷ்ணரின் சக்தியாகிய ராதைக்கும்
கிருஷ்ணனுக்கும் உள்ள தொடர்பைக் குறிப்பதும் ஆகும். பிரம்ம வைவர்த்தம் என்ற பெயர் வந்ததே அனைத்தையும் கடந்து நிற்கின்றவன் – சக்தியாகிய ராதையோடு கூடிய ஸ்ரீ கிருஷ்ணன் அண்டங்கள் அனைத்திற்கும் தலைவனாவான் என்பதைக் குறிப்பிடுவதே ஆகும். “இந்த அண்டங்கள் முழுவதும் ஸ்ரீ கிருஷ்ணனே நிரம்பியுள்ளான் என்பதும், அவன் மனோ வாக்கு, காயம் கடந்த மெய்ப்பொருள் என்பதும், அவனுள் அண்ட சராசரங்கள் அனைத்தையும் காணலாம் என்பதும் உணரப்பட வேண்டும் என்று இப்புராணத்தி லுள்ள ஒரு பாடல் கூறுவதால், இப்பொருள் அனைத்தையும் உள்ளடக்கிப் பிரம்ம வைவர்த்தம் என்ற பெயரால் இப்புராணம் குறிப்பிடப்படுகின்றது.

“வாக்கு மனம் கடந்தவனும், நிர்க்குன பிரம்மத்தின் வடிவாக உள்ளவனும், எவ்வித மாற்றமும் இல்லாதவனும், எவனிடமிருந்து பிரகிருதி பிரம்மன், விஷ்ணு, சிவன் ஆகிய அனைவரும் தோன்றுகின்றனவோ அந்தக் கிருஷ்ணனை வணங்குகிறேன்” என்று இப்புராணத்தில் உள்ள மற்றொரு பாடல் அவனுடைய துணையாகிய ராதை என்பவள், துர்க்கை லட்சுமி, சரஸ்வதி சாவித்திரி, காளி ஆகிய பல்வேறு சக்திகளின் உறைவிடமாவாள் என்தையும் இப்புராணம் வலியுறுத்துகிறது. பல பெயரிட்டு அழைத்தாலும், தெய்வங்கள் அனைத்தும் ஒன்றே என்பதை வலியுறுத்துவது இப்புராணம், ஸ்ரீகிருஷ்ணன் மகாதேவரைப் புகழ்ந்து அவர்தாம் அனைத்தும் என்று சொல்வதும், மகாதேவர் கிருஷ்ணனைப் புகழ்ந்து அவர்தாம் அனைத்தும் என்று சொல்வதும் இப் புராணத்தில் பல இடங்களில் வருவதால் “ஏகம்சத் விப்ர பகுதாவதந்தி’’ என்ற வேத வாக்கியம் நிரூபிக்கப் படுகிறது. 

முன்னொரு காலத்தில் நைமிசாரண்ய வனத்தில் செளனகர் முதலிய முனிவர்கள் ஒய்வெடுத்துக் கொண் டிருந்தனர். அந்த நேரத்தில் மிக நீண்ட யாத்திரைக்குப் பிறகு லோமஹர்ஷனர் மகனாகிய செளதி முனிவர் அங்கு வந்து சேர்ந்தார். அவரைக் கண்டவுடன் செளனகரும் மற்ற முனிவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். “முனிவனே! ஞானத்தைப் பெற வேண்டும் என்ற ஆசையால் நாங்கள் துடித்துக் கொண்டிருக்கிறோம். எல்லாப் புராணங்களையும் அறிந்தவ ராகிய தாங்கள் எங்களுக்கு ஞான வழியைக் காட்டும் ஏதாவ தொன்றை அருளிச் செய்ய வேண்டும்” என்று வேண்டினர்.

செளதி முனிவர், “தங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். எல்லாப் புராணங்களையும் விட மிக உயர்ந்ததும், எல்லாப் புராணங்களின் சாரமாக இருப்பதும் ஆகிய பிரம்ம வைவர்த்த புராணத்தை உங்களுக்குச் சொல்லப் போகிறேன். இந்தப் புராணத்தைக் கேட்பவர்கள் உலக இன்பத்தை விரும்பினால் அதைத் தரும். மெய்ஞ்ஞான வழியை நாடுகின்றவர்கட்கு விடுதலையைத் தரும். இப்புராணம் வந்த வரலாற்றை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பிரம்மனுடைய வரலாற்றைக் கிருஷ்ணன் கூறி, அதை முதன்முதலில் பிரம்மனுக்கு உபதேசித்தார். பிரம்மன் இதைத் தர்மனுக்கு புஷ்கர நதிக்கரையில் கூறினார். தர்ம தேவதை நாராயணனுக்குக் கூற, நாராயணன் நாரதருக்குக் கூற, நாரதர் வேதவியாசருக்குக் கூறினார். வேதவியாசர் இப்புராணத்தைச் செளதி முனிவருக்குக் கூற, செளதி முனிவர் நைமிசாரண்ய வனத்தில், செளனக முனிவருக்கும், மற்றும் குழுமியிருந்த முனிவர்களுக்கும் கூற ஆரம்பித்தார்.

பிரம்ம வைவர்த்த புராணம் பதினெட்டுப் புராண வரிசையில் பத்தாவதாக இடம் பெற்றுள்ளது. இது தீவிரமான வைணவ புராணம் என்று சொல்லப்படுகிறது. இப்புராணம் நான்கு பிரிவுகளைக் கொண்டது. அவையாவன: 1. பிரம்ம காண்டம், 2. பிரகிருதி காண்டம், 3. கணபதி காண்டம், 4. ஸ்ரீ கிருஷ்ணஜன்ம காண்டம் முதலியன. நான்காவது காண்டம் பூர்வ உத்திர என்னும் இரு பிரிவுகளைக் கொண்டதாகும். 18000 பாடல்களையும் 266 அதிகாரங்களையும் கொண்டது.

இப்புராணத்தின் முக்கியக் குறிக்கோள்,  ஸ்ரீ கிருஷ்ணனின் தெய்வீகமான உலகியல் கடந்த திருவிளையாடல்களைக் குறிப்பதும், ஸ்ரீ கிருஷ்ணரின் சக்தியாகிய ராதைக்கும்
கிருஷ்ணனுக்கும் உள்ள தொடர்பைக் குறிப்பதும் ஆகும். பிரம்ம வைவர்த்தம் என்ற பெயர் வந்ததே அனைத்தையும் கடந்து நிற்கின்றவன் – சக்தியாகிய ராதையோடு கூடிய ஸ்ரீ கிருஷ்ணன் அண்டங்கள் அனைத்திற்கும் தலைவனாவான் என்பதைக் குறிப்பிடுவதே ஆகும். “இந்த அண்டங்கள் முழுவதும் ஸ்ரீ கிருஷ்ணனே நிரம்பியுள்ளான் என்பதும், அவன் மனோ வாக்கு, காயம் கடந்த மெய்ப்பொருள் என்பதும், அவனுள் அண்ட சராசரங்கள் அனைத்தையும் காணலாம் என்பதும் உணரப்பட வேண்டும் என்று இப்புராணத்தி லுள்ள ஒரு பாடல் கூறுவதால், இப்பொருள் அனைத்தையும் உள்ளடக்கிப் பிரம்ம வைவர்த்தம் என்ற பெயரால் இப்புராணம் குறிப்பிடப்படுகின்றது.

“வாக்கு மனம் கடந்தவனும், நிர்க்குன பிரம்மத்தின் வடிவாக உள்ளவனும், எவ்வித மாற்றமும் இல்லாதவனும், எவனிடமிருந்து பிரகிருதி பிரம்மன், விஷ்ணு, சிவன் ஆகிய அனைவரும் தோன்றுகின்றனவோ அந்தக் கிருஷ்ணனை வணங்குகிறேன்” என்று இப்புராணத்தில் உள்ள மற்றொரு பாடல் அவனுடைய துணையாகிய ராதை என்பவள், துர்க்கை லட்சுமி, சரஸ்வதி சாவித்திரி, காளி ஆகிய பல்வேறு சக்திகளின் உறைவிடமாவாள் என்தையும் இப்புராணம் வலியுறுத்துகிறது. பல பெயரிட்டு அழைத்தாலும், தெய்வங்கள் அனைத்தும் ஒன்றே என்பதை வலியுறுத்துவது இப்புராணம், ஸ்ரீகிருஷ்ணன் மகாதேவரைப் புகழ்ந்து அவர்தாம் அனைத்தும் என்று சொல்வதும், மகாதேவர் கிருஷ்ணனைப் புகழ்ந்து அவர்தாம் அனைத்தும் என்று சொல்வதும் இப் புராணத்தில் பல இடங்களில் வருவதால் “ஏகம்சத் விப்ர பகுதாவதந்தி’’ என்ற வேத வாக்கியம் நிரூபிக்கப் படுகிறது. 

முன்னொரு காலத்தில் நைமிசாரண்ய வனத்தில் செளனகர் முதலிய முனிவர்கள் ஒய்வெடுத்துக் கொண் டிருந்தனர். அந்த நேரத்தில் மிக நீண்ட யாத்திரைக்குப் பிறகு லோமஹர்ஷனர் மகனாகிய செளதி முனிவர் அங்கு வந்து சேர்ந்தார். அவரைக் கண்டவுடன் செளனகரும் மற்ற முனிவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். “முனிவனே! ஞானத்தைப் பெற வேண்டும் என்ற ஆசையால் நாங்கள் துடித்துக் கொண்டிருக்கிறோம். எல்லாப் புராணங்களையும் அறிந்தவ ராகிய தாங்கள் எங்களுக்கு ஞான வழியைக் காட்டும் ஏதாவ தொன்றை அருளிச் செய்ய வேண்டும்” என்று வேண்டினர்.

செளதி முனிவர், “தங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். எல்லாப் புராணங்களையும் விட மிக உயர்ந்ததும், எல்லாப் புராணங்களின் சாரமாக இருப்பதும் ஆகிய பிரம்ம வைவர்த்த புராணத்தை உங்களுக்குச் சொல்லப் போகிறேன். இந்தப் புராணத்தைக் கேட்பவர்கள் உலக இன்பத்தை விரும்பினால் அதைத் தரும். மெய்ஞ்ஞான வழியை நாடுகின்றவர்கட்கு விடுதலையைத் தரும். இப்புராணம் வந்த வரலாற்றை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பிரம்மனுடைய வரலாற்றைக் கிருஷ்ணன் கூறி, அதை முதன்முதலில் பிரம்மனுக்கு உபதேசித்தார். பிரம்மன் இதைத் தர்மனுக்கு புஷ்கர நதிக்கரையில் கூறினார். தர்ம தேவதை நாராயணனுக்குக் கூற, நாராயணன் நாரதருக்குக் கூற, நாரதர் வேதவியாசருக்குக் கூறினார். வேதவியாசர் இப்புராணத்தைச் செளதி முனிவருக்குக் கூற, செளதி முனிவர் நைமிசாரண்ய வனத்தில், செளனக முனிவருக்கும், மற்றும் குழுமியிருந்த முனிவர்களுக்கும் கூற ஆரம்பித்தார்.

இராதா வல்லப சம்பிரதாயம் மற்றும் அரிதாசி சம்பிரதாயத்தில், இராதை மட்டுமே பிரம்மமாக வணங்கப்படுகிறார்.மற்ற இடங்களில், நிம்பர்க சம்பிரதாயம், புஷ்டிமார்க்கம், மகாநாம சம்பிரதாயம், சுவாமிநாராயண் சம்பிரதாயம், வைணவ-சஹாஜியா, மணிப்பூரி வைணவம் மற்றும் சைதன்யருடன் தொடர்புடைய கௌடிய வைணவ இயக்கங்களில் கிருட்டிணனுடன் அவரது முக்கிய துணைவியாக இராதை வணங்கப்படுகிறார்.
இராதை விரஜபூமியில் வாழ்ந்த கோபியர்களின் தலைவியாக விவரிக்கப்படுகிறார். மற்ற கோபியர்கள் அனைவரும் வழக்கமாக ராதாவின் பணிப் பெண்களாகக் கருதப்படுகின்றனர். இவர் பல இலக்கியப் படைப்புகளுக்கு ஊக்கமளித்துள்ளார். மேலும் கிருட்டிணனுடன் இவரது இராசலீலை நடனம் பல வகையான கலை நிகழ்ச்சிகளுக்கு ஊக்கமளித்துள்ளது.
இந்து மதத்தின் வைணவ மரபுகளில் இராதை ஒரு முக்கியமான தெய்வம். இவருடைய குணாதிசயங்கள், வெளிப்பாடுகள், விளக்கங்கள் மற்றும் பாத்திரங்கள் பிராந்தியத்தின் அடிப்படையில் மாறுபடுகிறது. இராதை கிருட்டிணனுடன் உள்ளார்ந்தவர். ஆரம்பகால இந்திய இலக்கியங்களில், இவரைப் பற்றிய குறிப்புகள் பரவலாக காணப்படவில்லை. பதினாறாம் நூற்றாண்டில் பக்தி இயக்கத்தின் சகாப்தத்தில், கிருட்டிணன் மீதான இவரது அசாதாரணமான காதல் வெளிப்பட்டதால், இராதை மிகவும் பிரபலமானார்.
ஜெயதேவரின் 12ஆம் நூற்றாண்டு சமசுகிருத இலக்கியமான கீத கோவிந்தத்திலும் நிம்பர்காச்சாரியரின் தத்துவப் படைப்புகளிலும் இராதையின் முதல் முக்கிய தோற்றம் வெளிப்படுகிறது.

கிருட்டிணனுடன் இராதை இருப்பது போன்ற எம்.வி.துரந்தர் வரைந்த 1915 ஆம் ஆண்டு ஓவியம் .
இராதா, உத்தரப் பிரதேச மாநிலத்தின் மதுரா மாவட்டத்தில் அமைந்துள்ள கோகுலத்திற்கு அருகில் அமைந்துள்ள இராவல் என்ற சிறிய ஊரில் பர்சானாவின் யது குல ஆட்சியாளரான விருசபானுவுக்கும் அவரது மனைவி கீர்த்திதாவுக்கும் பிறந்தார்.ஆனால் இவர் பர்சானாவில் இவர் வளர்ந்ததாக கூறப்படுகிறது. பிரபலமான புராணத்தின்படி, யமுனை ஆற்றில் மிதந்து வந்த தாமரையில் இராதாவை விருசபானு கண்டுபிடித்தார். இராதை கிருட்டிணனை விட ஒன்பது மாதங்கள் மூத்தவர்.நாட்டுப்புறக் கதைகளின்படி, கிருட்டிணன் தன் முன் தோன்றும் வரை இராதா உலகத்தைப் பார்க்க கண்களைத் திறக்கவில்லை.

பிரம்ம வைவர்த்த புராணம் மற்றும் கர்க சம்கிதை ஆகியவை பிருந்தாவனத்தை விட்டு வெளியேறும் முன் கிருட்டிணன் பண்டீர்வன் காட்டில் பிரம்மனின் முன்னிலையில் இராதையை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார் என்று குறிப்பிடுகின்றன. பிருந்தாவனத்தின் புறநகரில் அமைந்துள்ள பண்டீர்வன், இராதா கிருஷ்ண திருமணத் தலம், இவர்களது திருமணம் நடந்த இடமாகக் கருதப்படுகிறது

இராதை இந்து மதத்தின் முக்கிய மற்றும் கொண்டாடப்படும் தெய்வங்களில் ஒருவராகும். இவருடன் தொடர்புடைய பண்டிகைகளின் பட்டியல் பின்வருமாறு –

இராதா ஜெயந்தி என்றும் அழைக்கப்படும் இராதாட்டமி, இராதை அவதரித்த ஆண்டு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்து நாட்காட்டியில், இவ்விழா ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் அனுசரிக்கப்படுகிறது. கிருட்டிண ஜெயந்திக்கு 15 நாட்களுக்குப் பிறகு, இராதா சமூக வாழ்க்கையை நிர்வகிக்கும் கலாச்சார-மத நம்பிக்கை அமைப்பின் ஒரு அம்சமாக இருப்பதைக் குறிக்கிறது. இவ்விழா குறிப்பாக விரஜபூமி பகுதியில் மிகுந்த உற்சாகத்துடனும் ஆரவாரத்துடனும் கொண்டாடப்படுகிறது. பர்சானா இராதையின் பிறப்பிடமாக கருதப்படுவதால் அங்குள்ள இராதா ராணி கோவிலில் இந்த விழா பிரம்மாண்டமாக நடத்தப்படுகிறது. பர்சானாவைத் தவிர, உலகெங்கிலும் உள்ள பிருந்தாவனம் மற்றும் அகில உலக கிருஷ்ண பக்திக் கழகம் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் இந்த விழா கொண்டாடப்படுகிறது. ஏனெனில் இது பல வைணவப் பிரிவினருக்கு முக்கிய திருவிழாவாகும்.

கோலி’ அல்லது ஹோலி அல்லது அரங்கபஞ்சமி என்று அழைக்கப்படும் பண்டிகை இந்து மதத்தின் பிரபலமான இளவேனிற்காலப் பண்டிகையாகும். இந்தப் பண்டிகை இந்தியா, நேபாளம், வங்கதேசம், போன்ற நாடுகளிலும் சுரிநாம், கயானா, தென்னாப்பிரிக்கா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, இங்கிலாந்து, மொரீசியசு மற்றும் பிஜி போன்ற இந்து மக்கள் பரவலாக வாழும் நாடுகளிலும் விரிவாகக் கொண்டாடப்படுகின்றது. இந்தியாவின் மேற்கு வங்காளம், வங்கதேசம் ஆகிய பகுதிகளில் தோல்யாத்திரை (தௌல் ஜாத்ரா) அல்லது வசந்த-உற்சவம் (“வசந்தகாலத் திருவிழா”) என அழைக்கப்படுகின்றது. இது பெரும்பாலும் விரஜ் சமூகத்தினரால் கிருட்டிணனுடன் தொடர்புடைய மதுரா, பிருந்தாவனம், நந்தகோன், பர்சானா ஆகிய நகரங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஹோலிப் பண்டிகை காலத்தில் அவை நடைபெறும் 16 நாட்களும் இந்த நகரங்கள் சுற்றுலாத்தளங்களாக இருக்கும்.

சரத் பூர்ணிமா என்பது இலையுதிர் காலத்தின் முழு நிலவைக் குறிக்கிறது. இந்த நாளில், பிருந்தாவனத்தின் பசு மேய்க்கும் பெண்களான ராதை மற்றும் கோபியர்களுடன் இராச லீலை என்ற அழகான நடனத்தை கிருட்டிணன் ஆடுவதை பக்தர்கள் கொண்டாடுகிறார்கள். இந்த நாளில், கோவில்களில் இராதா கிருட்டிணன் வெள்ளை நிற ஆடைகளை அணிந்து, மலர் மாலைகள் மற்றும் பளபளக்கும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்படுகிறார்.

வைணவ மதத்தில், கார்த்திகை பூர்ணிமா, இராதையை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாளாகக் கருதப்படுகிறது. பிரம்ம வைவர்த புராணத்தின் படி, கிருட்டிணனும் இந்த நாளில் இராதையை வணங்குவார் என நம்புகின்றனர். இராதா கிருட்டிணன் கோவில்களில், கார்த்திகை மாதம் முழுவதும் இது கடைபிடிக்கப்படுகிறது. மேலும் இந்த விழாவைக் கொண்டாடும் வகையில் இராசலீலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன

மிகவும் பிரபலமான இந்திய பாரம்பரிய நடனமான மணிப்புரி இராசலீலை முதன்முதலில் 1779 ஆம் ஆண்டில் மன்னர் பாக்யச்சந்திரன் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. மன்னன் இராதா கிருட்டிணனின் இராசாலீலையில் ஈர்க்கப்பட்டு, மகா இராசலீலை, குஞ்ச் இராசலீலை மற்றும் வசந்த ராசலீலை என நடனத்தின் மூன்று வடிவங்களை அறிமுகப்படுத்தினார். பின்னர் மணிப்பூரின் கலை மற்றும் கலாச்சாரத்தில் அடுத்தடுத்த மன்னர்களால் நித்ய ராசலீலை மற்றும் வேத ராசலீலை ஆகிய இரண்டு வகையான ரசங்கள் சேர்க்கப்பட்டன. இந்த நடன வடிவங்களில், நடனக் கலைஞர்கள் இராதை, கிருட்டிணன் மற்றும் கோபியர்களின் பாத்திரத்தை சித்தரிக்கின்றனர். இந்த நடன வடிவங்கள் மணிப்பூர் மாநிலத்தில் இன்றும் பரவலாக உள்ளன. மேலும் அவை மேடைகளிலும் கார்த்திகை பூர்ணிமா மற்றும் சரத் பூர்ணிமா (முழு நிலவு இரவுகள்) போன்ற மங்களகரமான நிகழ்வுகளிலும் நிகழ்த்தப்படுகின்றன.

மற்றொரு இந்திய பாரம்பரிய நடன வடிவமான கதகளியும் வைணவம் மற்றும் இராதா கிருட்டிணன் அடிப்படையிலான கீத கோவிந்த பாரம்பரியத்தின் தாக்கத்தால் இந்த நடன வடிவத்தின் பரிணாம வளர்ச்சியில் பங்களித்தது. வட இந்திய கதக் நடனத்தின் முக்கிய கருப்பொருள் இராதை மற்றும் கிருட்டிணனின் தோற்றம் மற்றும் நீண்ட கதைகளில் உள்ளது. கிருட்டிணன் மற்றும் அவரது பிரியமான இராதையின் புனிதமான காதல், கதக் நடனத்தின் அனைத்து அம்சங்களிலும் பிணைக்கப்பட்டுள்ளது. மேலும், இசை, உடைகள் மற்றும் இறுதியாக கதக் நடனக் கலைஞரின் பாத்திரம் பற்றிய விவாதங்களின் போது இவை தெளிவாகத் தெரியும்

இராசியா என்பது உத்தரபிரதேசத்தின் விரஜபூமி பிராந்தியத்தில் உள்ள பிரபலமான இந்திய நாட்டுப்புற இசை வகையாகும். இது பொதுவாக விரஜ் பகுதியின் கிராமங்கள் மற்றும் கோவில்களில் பண்டிகைகளின் போது நிகழ்த்தப்படுகிறது. இராசியாவின் பாரம்பரிய பாடல்கள் இராதை மற்றும் கிருட்டிணனின் தெய்வீக சித்தரிப்பு மற்றும் அன்பை அடிப்படையாகக் கொண்டவை. இவை அடிக்கடி இராதாவின் பெண் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டு கிருட்டிணனும் இராதாவும் ஊர்சுற்றுவதையும் சித்தரிக்கின்றன

சைதன்யர், வல்லபாச்சார்யர், சண்டிதாஸ் மற்றும் வைணவத்தின் பிற மரபுகளில் உள்ள கோவில்களின் மையமாக இராதா மற்றும் கிருட்டிணன் உள்ளனர். இராதா பொதுவாக கிருட்டிணனுக்கு அருகில் நிற்பதாகக் காட்டப்படுகிறது.

——————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேத வ்யாஸர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ராதா கிருஷ்ணன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading