Archive for October, 2024

ஸ்ரீ அனந்தனுக்கு ஆயிரம் திரு நாமங்கள்–ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ் ஸ்வாமிகள்– 503-557-திரு நாமங்கள்–

October 6, 2024

(495-வது திருநாமம் குரு முதல் 502-வது திருநாமம் போக்தா வரை – ஹயக்ரீவ அவதாரத்தின் பெருமைகள்)

(503-வது திருநாமம் கபீந்த்ர முதல் 512-வது திருநாமம் ஸத்யஸந்த வரை – தருமத்தின் வடிவமாக இருக்கும் ஸ்ரீராமனின் பெருமைகள்)

(திருநாமங்கள் 520-523 பாதாள லோகத்தில் இருந்தபடி மொத்தப் பிரபஞ்சத்தையும் தாங்கிக் கொண்டிருக்கும் கூர்ம மூர்த்தியின் பெருமைகள்)

(529 – 538 – கபில அவதாரம்)

538-வது திருநாமம் முதல் அடுத்த சில திருநாமங்கள் வராக அவதார வைபவம்

(திருநாமங்கள் 544 முதல் 568 வரை 25 திருநாமங்கள், வைகுண்டநாதனுடைய திருமேனி அழகின் வர்ணனை)

—————

503. கபீந்த்ராய நமஹ (Kapeendhraaya namaha)

ஹயக்ரீவராகத் தான் உபதேசித்த வேத தருமங்களைத் தானே ராமனாக அவதரித்துத் திருமால் பின்பற்றிக் காட்டினார் என்பதை உணர்த்தவே மீண்டும் ஒருமுறை ராமனின் பெருமைகள் இங்கே ஹயக்ரீவரைத் தொடர்ந்து சொல்லப்படுகின்றன.கம்பராமாயணம் பால காண்டத்தில் வரும் காட்சி. தேவர்கள் அனைவரும் மேரு மலையில் உள்ள ஒரு மண்டபத்திலே ஒன்று கூடினார்கள். பிரம்மாவைப் பார்த்து, பிரம்மதேவரே ராவணன் போன்ற அரக்கர்களாலே நாங்கள் மிகவும் துன்புறுகிறோம்.

அவர்களிடம் இருந்து எங்களை நீங்கள் தான் காக்க வேண்டும் என்று வேண்டினார்கள். அப்போது பிரம்மா, நம் அனைவரையும் அரக்கர்களிடம் இருந்து காக்க வேண்டும் என்றால் அது திருமாலால் தான் முடியும். வாருங்கள், திருமாலைத் தியானிப்போம் என்றார். அதன்படி எல்லோரும் திருமாலைத் தியானிக்க, கருட வாகனத்தில் திருமால் அவர்கள் முன்னே தோன்றினார்.

கருமுகில் தாமரை நல்காடு பூத்து நீடு
இருசுடர் இருபுறத்து ஏந்தி ஏந்தலர்த்
திருவொடும் பொலிய ஓர் செம்பொன்
குன்றின்மேல் வருவதுபோல் கலுழன்மேல் வந்து தோன்றினான்–
என்று வர்ணிக்கிறார் கம்பர்.

நீருண்ட கார்மேகத்தில் தாமரைக் காடு பூத்து, அம்மேகம் சூரிய சந்திரர்களை ஏந்தியபடி மின்னலை உள்ளடக்கி, தங்கமலை மேல் வந்தால் எப்படி இருக்குமோ அதுபோல் திருமால் தோன்றினார் என்கிறார் கம்பர்.அதாவது, திருமாலின் கார்வண்ணத் திருமேனி கார்மேகம். அவரது திருக்கண்கள் திருக்கைகள் திருவடிகள் தாமரைக் காடு போல் விளங்குகின்றன. அவர் ஏந்தியிருக்கும் சங்கு சக்கரங்கள் சந்திர சூரியர்களைப் போல் இருக்கின்றன. திருமார்பில் உள்ள பிராட்டி மின்னலாய் ஒளிவீசுகிறாள். வாகனமான கருடன் பொன்மலை போல் விளங்குகிறார்.

இக்காட்சி வால்மீகி ராமாயணத்தில் வேறுமாதிரி இருக்கிறதே என்ற சிந்தனையில் ஆழ்ந்து விட்டால், இந்த அரிய காட்சியில் உள்ள இறைவனின் அழகையும் இலக்கியச் சுவையையும் இழக்க நேரிடும் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.இப்படித் தோன்றிய திருமாலிடம் தேவர்கள் ராவணன் போன்ற அரக்கர்களிடம் இருந்து தங்களைக் காக்குமாறு வேண்டினார்கள். அப்போது அவர்களிடம் திருமால், நீங்கள் அஞ்சவேண்டாம், நான் பூமியில் அவதாரம் செய்து ராவணனையும் அவனது அரக்கர் கூட்டத்தையும் கூண்டோடு அழிப்பேன் என்று வாக்களித்தார்.

மேலும், தேவனாலோ யட்சனாலோ கந்தருவனாலோ சித்தனாலோ சாரணனாலோ கிம்புருஷனாலோ அசுரனாலோ அரக்கனாலோ தனக்கு மரணம் வரக்கூடாது என்று வரம்பெற்ற ராவணன், மனிதன் மிருகம் இருவரையும் அலட்சியத்தால் விட்டுவிட்டான். ராவணனின் மரணத்துக்குக் குரங்குகளும் ஒரு காரணமாகும் என்று நந்தி சாபம் கொடுத்திருக்கிறார்.

எனவே, தேவர்களே, நான் தசரதன் மகனாக – மனிதனாக – அவதரிக்கிறேன். என் படுக்கையான ஆதிசேஷன் லட்சுமணனாகவும், சக்கரம் பரதனாகவும், சங்கு சத்ருக்கனனாகவும் தோன்றுவார்கள். வானவர்களான நீங்கள் வானரங்களாக வந்து பூமியில் பிறப்பீர்களாக. ராவணனை முடித்து விடலாம் என்றார் திருமால். அதன்படி, தேவர்களுள் இந்திரன் வாலியாகவும் அங்கதனாகவும் தோன்றினான். சூரியன் சுக்ரீவனாகவும், அக்னி நீலனாகவும், வாயுவும் சிவனும் அனுமனாகவும் தோன்றினார்கள்.

அச்வினி தேவர்கள் மைந்தன் துவிவிதன் என்ற வானரர்களாகத் தோன்றினார்கள். திருமாலின் அவதாரமாகிய ஸ்ரீராமன், இந்த வானரர்களுக்கு எல்லாம் தலைவனாக இருந்து அவர்களை வழிநடத்திச் சென்று ராவணனை வதைத்து, அவர்களுக்கு விடுதலை அளித்தான்.
 
ராவண வதம் நிறைவடைந்தவாறே, தேவர்கள் எல்லோரும் வானில் தோன்றி ராமனைத் துதித்தார்கள். அப்போது,


ஸர்வலோகேச்வரஸ் ஸாக்ஷாத் லோகானாம் ஹிதகாம்யயா

ஸர்வை: பரிவ்ருதோ தேவைர் வானரத்வம் உபாகதை:–என்று பிரம்மா துதிப்பதாக வால்மீகி தெரிவிக்கிறார்.

அனைத்துலகையும் ஆளும் திருமாலே, வானர வடிவில் தேவர்கள் புடைசூழ வந்து நீங்கள் அரக்கர்களை அழித்தொழித்தீர்கள் என்று துதிக்கிறார் பிரம்மா. இப்படி வானரர்களாக வந்த வானரர்களுக்குத் தலைவராக ராமன் விளங்குவதாலே, கபீந்த்ர: என்று ராமன் அழைக்கப்படுகிறார். கபி என்றால் வானரம் அல்லது குரங்கு. இந்த்ர என்றால் தலைவர். கபீந்த்ர: என்றால் வானரங்களின் தலைவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 503-வது திருநாமம்.கபீந்த்ராய நமஹ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் எல்லாக் குறைகளையும் ராமன் போக்கி அருள்வார்.

——————

504. பூரிதஷிணாய நமஹ (Bhoori Dhakshinaaya namaha)

(503-வது திருநாமம் கபீந்த்ர முதல் 512-வது திருநாமம் ஸத்யஸந்த வரை – தருமத்தின் வடிவமாக இருக்கும் ஸ்ரீராமனின் பெருமைகள்)

சிருங்கேரி மகா சன்னிதானம் ஒரு கதை சொல்வார். ஓர் ஊரிலே ஒரு புடலங்காய் வியாபாரி இருந்தாராம். அவர் ஒவ்வொரு நாளும் யாராவது ஒருவருக்கு ஒரு புடலங்காய் வீதம் தானம் செய்து வந்தாராம். இப்படித் தன் வாழ்நாள் முழுவதும் தானம் செய்து வந்தாராம், அந்தப் புடலங்காய் வியாபாரி. இந்த தானத்தின் விளைவாக, அடுத்த பிறவியில் அவர் ஒரு பெரிய அரசனின் மகனாகப் பிறந்தார்.

தந்தைக்குப் பின், தான் முடிசூடிக் கொண்டு சிறந்த அரசனாக ஆட்சி புரிந்தார். அந்தப் பிறவியில் மிகவும் மன நிறைவுடன் வாழ்ந்து வந்தார் அவ்வரசன். அவர் ஒரு ஜோதிடரைச் சந்தித்துத் தான் இவ்வளவு மன நிறைவுடன் வாழ என்ன காரணம் என்று கேட்டார்.அவரது ஜாதகத்தை அலசி ஆராய்ந்த ஜோதிடர், கடந்த பிறவியில் ஒரு நாளைக்கு ஒரு புடலங்காய் வீதம் நீங்கள் தானம் செய்துள்ளீர்கள். இந்த பிறவியில் நீங்கள் பெற்றுள்ள நிம்மதியான வாழ்வுக்கு அந்த தானமே காரணம் எனச் சொன்னார்.

இதைக் கேட்ட அந்த அரசன், ஒரு நாளைக்கு ஒரு புடலங்காய் தானம் செய்ததற்கே இவ்வளவு பலன் என்றால், இனி நாம் இந்தப் பிறவியில் பலப்பல புடலங்காய்களாகப் பலப்பல நபர்களுக்குத் தானம் செய்தால் நமக்கு எவ்வளவு நன்மை கிடைக்கும் என யோசித்தார்.அடுத்த நாள் முதல், அந்த நாட்டில் உள்ள மக்கள் யாராலும் புடலங்காய் வாங்கவே முடியவில்லை. ஊரில் உள்ள அனைத்துப் புடலங்காய்களையும் அரண்மனைப் பணியாட்களை அனுப்பி வாங்கி வரச் செய்தார் அரசன். அந்தப் புடலங்காய்களை எல்லாம் பலப்பல நபர்களுக்குத் தினந்தோறும் தானமாக வழங்கி வந்தார். அந்தப் பிறவி முடிந்தது.

அடுத்த பிறவியில் அந்த அரசர் மொத்த வியாபாரம் செய்யும் ஒரு புடலங்காய் வியாபாரியாக ஆனார். அந்த பிறவியிலும் ஒரு ஜோதிடரைப் பார்த்தார். அந்த ஜோதிடர், நீ முன் ஒரு பிறவியில் ஒரு நாளைக்கு ஒரு புடலங்காய் வீதம் தானம் செய்தாய். அதனால் அரசனாக பிறந்தாய். அந்த பிறவியில் அரசனாகி பலப்பலப் நபர்களுக்குப் பலப்பலப் புடலங்காய்களாகத் தானம் செய்ததால், இந்த பிறவியில் பெரிய புடலங்காய் வியாபாரியாய்ப் பிறவி பெற்றாய் என்றார்.

அந்த வியாபாரிக்கு இப்பொழுது ஒரு சந்தேகம் வந்தது. பலர்க்குப் பலப்பலப் புடலங்காய்கள் தானம் செய்ததற்குப் பலனாக நான் இன்னும் பெரிய சக்கரவர்த்தியாக அல்லவோ ஆகி இருக்க வேண்டும். இப்படிப் புடலங்காய் வியாபாரியாக ஏன் பிறந்தேன் என்று கேட்டார் வியாபாரி.ஒரு புடலங்காய் வியாபாரியின் நிலைக்கு, ஒரு நாளைக்கு ஒரு புடலங்காய் தானம் செய்வது என்பது உயர்ந்தது. ஆனால் அரசன் தானம் செய்தால் அவன் தகுதிக்கு ஏற்றபடித் தங்கம், வைரம் என்றல்லவா தானம் செய்திருக்க வேண்டும்! அதை விட்டுவிட்டுப் புடலங்காயையே தானம் செய்தால், எண்ணம் போல்தான் பிறவி கிடைக்கும் என்றார் ஜோதிடர். அதன்பின் அந்த வியாபாரி தானத்தின் பெருமையை முழுமையாக உணர்ந்து கொண்டாராம்.

தானம் என்றால் ராமனைப் போல் செய்ய வேண்டும். ராமன் நூறு அஸ்வமேத யாகங்கள் செய்தார். அப்பொழுது ரிஷிகள், சான்றோர்கள், வேதம் வல்லார் என அனைவர்க்கும் அள்ளிக் கொடுத்தார் ஸ்ரீராமன். இவ்வாறு கணக்கே பாராமல், அவரவருக்குரிய தட்சிணையையும், சம்மானத்தையும் அள்ளிக் கொடுத்து, தானம் எப்படிச் செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு நல்ல முன்மாதிரியாக விளங்கியதால், ஸ்ரீராமனுக்கு பூரிதஷிண: என்று திருநாமமே ஏற்பட்டது.

யாகங்கள், தானங்கள் போன்றவற்றைச் செய்வதால், இறைவனாகிய ஸ்ரீராமனுக்குப் புதிதாக எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை. நாம் எல்லோரும் அவனைப் பின்பற்றி, நிறைய தானம் செய்ய வேண்டும் என்பதற்காக ராமன், தானம் செய்து காட்டியிருக்கிறார். பல யாகங்கள் செய்து அதற்கு தட்சிணையாக நிறைய தானம் செய்ததால் பூரிதக்ஷிண: என்று ஸ்ரீராமன் அழைக்கப்பெற்றார். பூரி என்றால் தாராளமாக, தக்ஷிணை என்றால் சம்மானம். பூரிதக்ஷிண: என்பது ஸஹஸ்ரநாமத்தின் 504-வது திருநாமம்.பூரிதக்ஷிணாய நமஹ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் அனைவருக்கும் பரந்த உள்ளம் ஏற்படும்படி ஸ்ரீராமன் அருள்புரிவார்.

—————–

505. ஸோமபாய நமஹ (Somapahaya namaha)

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருநாளை ஒட்டி, வடுவூர் என்ற திருத்தலத்தில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமிக்குப் பவித்தோற்சவம் நடைபெறும்.அதே சமயத்தில், அதே ஊரில், புராணத் தெருவில் ராமரின் பக்தரான வில்லுர் ஸ்ரீநிதி சுவாமிகளின் அவதார உற்சவமும் ஐந்து நாட்கள் நடைபெறும். வில்லூர் ஸ்ரீநிதி சுவாமிகளும் கார்த்திகை தீபத் திருநாளன்றே அவதாரம் செய்தார். எனவே இறைவனின் உற்சவமும் அடியவரின் உற்சவமும் ஒன்றாக நடக்கும் வைபவத்தை அங்கே அந்த சமயத்தில் காணலாம்.

வில்லூர் ஸ்ரீநிதி சுவாமி, வடுவூர் ராமனின் புன்னகையை அனுபவித்துப் “புன்னகை ராமாயணம்’’ என்றொரு ராமாயணமே இயற்றியுள்ளார். அந்த உற்சவக் காலத்தில், அடியேனின் குருவான ஸ்ரீ.உ.வே.கருணாகராச்சாரிய மகாதேசிக சுவாமியும், அடியேனும், வடுவூர் ராமன் முன் புன்னகை ராமாயணத்தைப் பாராயணம் செய்வோம். அதை ஆனந்தமாக கேட்டு அருள்வான் ராமன். இந்த உற்சவத்தின் நடுவே ஒவ்வொரு ஆண்டும், ஒருநாள் ஏகாதசி வந்துவிடும்.

அந்த சமயம், அடியேனின் குருவான ஸ்ரீ.உ.வே. கருணாகராச்சாரியார் சுவாமி ஏகாதசி அன்று முழுமையாக விரதம் இருந்து உற்சவத்தில் பங்கேற்பார். இதை ஒவ்வொரு ஆண்டும் அடியேனும் கவனித்து வந்தேன்.இரண்டு வருடங்களுக்கு முன்பு அடியேன், கருணாகராச்சாரியார் சுவாமிகளிடம், “சுவாமி, ஏகாதசி அன்று தண்ணீர்கூட உட்கொள்ளாமல் விரதம் மேற்கொண்டு உற்சவத்திலும் பங்கேற்பது எளிதன்று. உங்கள் வயதையும், உங்களுக்கு இருக்கும் நீரிழிவு நோயையும் கருத்தில் கொண்டு ஏதாவது உணவு எடுத்துக் கொள்ளலாமே’’ என்று கேட்டேன்.

அதற்குக் கருணாகராச்சாரியார் சுவாமி, “என் ஆச்சாரியனும் தந்தையுமான வில்லூர் ஸ்ரீநிதி சுவாமிகளின் உற்சவம் இது. அவரது இஷ்டதெய்வமான ராமனின் உற்சவம் இது. ராமனும் ஆசானும் துணைநிற்க, எனக்கு எந்த ஒரு பாதிப்பும் நேராது. உண்ணாமல் இருந்தால், சர்க்கரையின் அளவு குறையும் என்றுதான் மருத்துவனான நீ சொல்வாய். இது தவிர வேறு என்ன ஆகிவிடும் எனக் கேட்டார்.ஒரு மருத்துவனாக அடியேன், சர்க்கரையின் அளவு அதிகமாகவும் வாய்ப்பு இருக்கிறது சுவாமி. அதற்கு ஸோமோகி விளைவு எனப் பெயர். ஸோமோகி என்ற விஞ்ஞானி இதைக் கண்டுபிடித்தார். சர்க்கரையின் அளவு குறையும் பொழுது, நம் உடம்பில் சில ஊக்கிகள் (Hormones) உருவாகிச் சர்க்கரை அளவைச் சமன் செய்ய முயலும். அப்பொழுது அதன் எதிர்விளைவாகச் சர்க்கரையின் அளவு கூடவும் வாய்ப்புள்ளது எனச் சொன்னேன்.

ஏகாதசி விரதம் முடிந்து, துவாதசி உணவு உட்கொண்ட பின் சர்க்கரையின் அளவு கூடுகிறதா குறைகிறதா என்று பார் என்று கருணாகராச்சாரியார் சுவாமி தெரிவித்தார். துவாதசி அன்று அவர் உணவு உட்கொண்டு முடித்தபின், ஒன்றரை மணிநேரம் கழித்துச் சர்க்கரையின் அளவைப் பரிசோதித்தேன். சரியாக 140 mg/dl என்று இருந்தது.அடடா ஸோமோகி விளைவு எடுபடவில்லையோ என்றேன். ஆச்சாரியனோ, இது ஸோமோகி விளைவன்று, இது ஸோமயாஜீ விளைவு. ஸோமயாகம் செய்பவர்களை ஸோமயாஜீ என்பர். ஸோமயாகம் செய்கையில் பல நாட்கள் விரதம் இருக்க வேண்டும். நமது முன்னோர்கள் பலர் ஸோம யாகம் செய்துள்ளனர். அவர்களின் அருள் நமக்கு நிச்சயமாக உண்டு.

மேலும் நமக்கு வழிகாட்டுவதற்காகத் தான் ராமனே பல ஸோம யாகங்கள் செய்து, யாகம் செய்கையில் விரதமும் அனுசரித்தான். ராமனை விடச் சிறந்த ஸோமயாஜீ உண்டா. அந்த ராமனின் திருத்தலத்தில் நாம் இருக்க, முன்னோர்களின் அருள் இருக்க, ஸோமயாஜீ விளைவு துணையிருக்க, ஸோமோகி விளைவு என்ன செய்யும் என்று பெருமிதத்துடன் சொன்னார் கருணாகராச்சாரியார் சுவாமி.

இப்படிப் பல ஸோம யாகங்கள் செய்து, அவ்யாகங்களில் இருந்து வரும் ஸோம பானத்தைப் பருகினான் ராமன். ஸோமம் என்னும் செடியிலிருந்து வருவதால் ஸோமரசம், ஸோமபானம் என்று அது சொல்லப்படுகிறது. இதை யாகத்தில் நாராயணனுகு அர்ப்பணித்துப் பிரசாதமாக உட்கொள்வர். இன்றைய காலத்தில் சிலர் ஸோமபானத்துக்குத் தவறான பொருள் சொல்லி வருவதை நாம் காணமுடிகிறது. ஆனால் வேத நூல்களில் சொன்ன விளக்கத்தை ஏற்பதே என்றும் சாலச் சிறந்தது.

நாம் விரதம் இருந்து யாகம் உள்ளிட்ட வழிபாடுகளைச் செய்ய வேண்டும் என்பதற்காக, ஸ்ரீராமன் முன்னோடியாக விரதம் இருந்து யாகம் செய்து ஸோம ரசத்தை உட்கொண்டு நமக்கு வழிகாட்டியுள்ளார். நம் சக்திக்கு ஏற்றவாறு நாமும் ஏகாதசி போன்ற விரதங்களை மேற்கொள்ள வேண்டும் என்று உணர்த்துகிறார் ஸ்ரீராமன். அசுவமேத யாகம், ஸோம யாகம் போன்ற யாகங்கள் செய்து அதிலிருந்து பிரசாதமாகப் பெறப்படும் ஸோம பானத்தை உட்கொள்வதால் ராமன் ஸோமப: என அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 505-வது திருநாமம். ஸோமபாய நமஹ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு அறநெறிகளைப் பின்பற்றி நடக்கக் கூடிய வலிமையை ஸ்ரீராமன் தந்தருள்வான்.

—————–

506. அம்ருதபாய நமஹ (Amruthapaaya namaha)

(503-வது திருநாமம் கபீந்த்ர முதல் 512-வது திருநாமம் ஸத்யஸந்த வரை – தருமத்தின் வடிவமாக இருக்கும் ராமனின் பெருமைகள்)

ஸ்ரீராம பட்டாபிஷேகம் அயோத்தியில் இனிதே நிறைவு பெற்றது. தேவர்களும் முனிவர்களும் ராமனையும் சீதையையும் வாழ்த்தினார்கள். தேவர்கள் குறிப்பாக லட்சுமணனை வாழ்த்தினார்கள். பலப்பல வரங்களைப் பெற்றவனும், பல்வகை மாயா ஜாலங்கள் செய்ய வல்லவனுமான இந்திரஜித்தை வதைப்பது சாதாரண காரியம் அன்று எனச் சொல்லி லட்சுமணனின் சாகசத்தை முனிவர்கள் கொண்டாடினார்கள். அவ்வாறே அனுமனின் தொண்டையும் பாராட்டினார்கள்.

இதைக் கவனித்த ராமன், முனிவர்களே, லட்சுமணனின் மனைவி ஊர்மிளையை யாருமே கொண்டாடவில்லையே. கைங்கரியச் செம்மல் என்று லட்சுமணன் விளங்குவதன் பின்னணியில் ஊர்மிளை தன் கணவனைப் பிரிந்திருந்த தியாகம் இருக்கிறதே. அவளது தியாகத்தை நாம் அவசியம் போற்றவேண்டும். கணவனைப் பிரிந்ததால் ஏற்பட்ட பெரும் துயரத்தையும் பொருட்படுத்தாமல் இருந்த ஊர்மிளைக்கு நான் வரம் தரப்போகிறேன் என்றான் ராமன்.ஊர்மிளையை அழைத்து அவள் விரும்பும் வரம் என்ன என்று கேட்டான் ராமன். ராமனைக் கைகூப்பி வணங்கிவிட்டு ஊர்மிளை, சுவாமி, நான் ஏதும் பெரிதாகத் தியாகம் எல்லாம் செய்யவில்லை.

எது நடந்தாலும் அது உங்களது அருள் அன்றி வேறு எதனாலும் சாத்தியமில்லை. எனவே எனக்காகக் கோயில் கட்டுவது, என்னைக் கொண்டாடுவது, என்னைப் போற்றிப் பாராட்டுவது உள்ளிட்ட எதுவுமே இனி உலகில் இருக்க வேண்டாம். எல்லாப் புகழும் உங்களுக்கு மட்டுமே, அது தான் சரி. அடியேன் நீங்கள் அமுதுசெய்த பிரசாதத்தைப் பெற விரும்புகிறேன். அதைத் தந்தருள வேண்டும் என்று வேண்டினாள்.

அதற்கு ராமன், ஊர்மிளா, இனி நான் பல யாகங்கள் செய்யப் போகிறேன். அந்தந்த வேள்விகள் தோறும் அவற்றிலிருந்து வரும் ஒரு பிரசாதத்தை உனக்கு நான் தருவேன் என்றான். அதற்கு ஊர்மிளை, அடியேன் யாகத்தில் அர்ப்பணிக்கப் படும் பிரசாதத்தைக் கேட்கவில்லையே. நீங்கள் அமுதுசெய்த பிரசாதத்தைத் தானே அடியேன் கேட்டேன் என்றாள். ராமன், ஊர்மிளா, எந்த யாகத்தில் எந்தப் பொருளை அக்னியில் சமர்ப்பித்தாலும், அந்தப் பொருளை அக்னிதேவன் அமுதம் ஆக்கி, அதைத் திருமாலுக்குச் சமர்ப்பித்து விட்டு அதன் பின் திருமாலின் பிரசாதமாகத் தான் மற்ற தேவர்களிடம் அக்னி சேர்க்கிறான்.

நான் திருமாலின் அவதாரம் என்பது இப்போது வந்த ரிஷிகளின் வாக்கின் மூலம் நீ அறிந்திருப்பாய். எனவே அந்த வேள்விகளால் ஆராதிக்கப்படுபவன் நானே. அதில் வரும் பிரசாதம் எனது பிரசாதமே. அதை உனக்குத் தருகிறேன் என்று விடையளித்தான்.யாகத்தில் வந்த ராமனின் அமுதமயமான பிரசாதத்தைத் தொடர்ந்து உண்டு வந்த ஊர்மிளை அமுதமயமாகவே மாறிவிட்டாள். அதனால் அவளே பூரி ஜகந்நாதர் க்ஷேத்திரத்தில் உள்ள அமுதமயமான பிரசாதமாக ஆகிவிட்டாள் என்கிறது பூரி க்ஷேத்திர மாஹாத்மியம்.

எனக்குக் கோயில் வேண்டாம், வழிபாடு வேண்டாம், கொண்டாட்டம் வேண்டாம், உங்கள் பிரசாதத்தை உண்ணும் பேறு மட்டும் வேண்டும் என்று கேட்ட ஊர்மிளையைப் பிரசாதமாகவே ஆக்கி அருள்புரிந்து விட்டான் ஸ்ரீராமன்.இன்றும் பூரியில் ஜகந்நாதரின் மஹாபிரசாதம் அமுதத்துக்கு நிகரானதாகக் கொண்டாடப் படுகிறது. அது அம்ருத நிலையாகிய முக்தி வரை நம்மைச் சேர்க்க வல்லது என்று தல வரலாறு சொல்கிறது.

ஊர்மிளை இப்படி மஹா பிரசாதமாக ஆனதற்கு, யாகத்தின் அமுதமயமான பிரசாதத்தை ஊர்மிளை பெற்றதே காரணம். ராமன் நடத்திய அனைத்து வேள்விகளிலும் அவன் சமர்ப்பித்த ஹவிர்பாகம் என்னும் உணவு யாவும், அக்னிதேவனால் அமுத வடிவில் மீண்டும் ராமனிடமே சேர்க்கப்பட்டன. அதை ராமன் பருகிப் பின் தன் பிரசாதமாகப் பிறர்க்கு வழங்கி இருக்கிறான். எனவே ராமன் யாகம் செய்தவன் மட்டும் அல்லன், யாகத்தில் அர்ப்பணிக்கப் படும் பொருளை அமுது செய்யும் இறைவனும் அந்த ராமனே. அதனால் தான் அம்ருதப: என்று ராமன் அழைக்கப்படுகிறார்.

அம்ருதம் என்பது யாகத்தில் அர்ப்பணிக்கப்படும் ஹவிர்பாகத்தைக் குறிக்கிறது. அம்ருதப: என்றால் யாகத்தில் அர்ப்பணிக்கப்படும் அமுதைப் பருகுபவர் – அதாவது, யாகத்தால் ஆராதிக்கப்படுபவர் என்று தாத்பரியம். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 506-வது திருநாமம்.அம்ருதபாய நமஹ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு அமுத நிலையாகிய வைகுண்ட வாழ்ச்சியை ஸ்ரீராமன் அருள்வார்.

——————–

507. ஸோமாய நமஹ (Somaaya namaha)

(503-வது திருநாமம் கபீந்த்ர முதல் 512-வது திருநாமம் ஸத்யஸந்த வரை – தருமத்தின் வடிவமாக இருக்கும்ஸ்ரீராமனின் பெருமைகள்)

வனவாசம் செல்லும் ராமபிரானின் வடிவழகைக் கவிச்சக்கரவர்த்தி கம்பர் வர்ணித்து ஒரு பாடல் பாடியுள்ளார்.

வெய்யோன் ஒளி தன் மேனியின் விரிசோதியில் மறையப்
பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் போனான்
மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ

ஐயோ இவன் வடிவென்பதொர் அழியா அழகுடையான்
 

கருமை நிறம் கொண்ட ராமபிரானின் திருமேனி அழகுக்கு என்ன உவமை சொல்லலாம் என்று சிந்தித்துப் பார்த்தார் கம்பர். கறுப்பு நிறம் கொண்ட மையைச் சொல்லலாமோ எனச் சிந்தித்து, மையோ என்றார்.

ஆனால் மையில் கருமை இருந்தாலும் ராமனுக்கு இருக்கும் பளபளப்பையோ பொலிவையோ மையில் காணமுடியவில்லை. அதனால் மை பொருத்தமான உவமையாக ஆகாது. ஒளியும் பளபளப்பும் மிக்க மரகதக் கல்லைச் சொல்லிப் பார்க்கலாம் என்று யோசித்த கம்பர், மரகதமோ என்று அடுத்த உவமையை அடுக்கினார். ஆனால் மரகதக்கல்லில் ஒளி இருந்தாலும் குளிர்ச்சி இல்லை, ராமனின் திருமேனியில் மிகுந்த குளிர்ச்சி உள்ளதே. அப்படியிருக்க, மரகதக் கல் எப்படிப் பொருத்தமான உவமையாகும் எனக் கருதி, அடுத்த உவமையைச் சிந்தித்தார். குளிர்ந்த கடல்நீரை உவமையாகச் சொல்லலாமோ எனக் கருதி, நீலவண்ணம், குளிர்ச்சி யாவும் நிறைந்த மறிகடலோ என்றார் கம்பர். ஆனால் கடல்நீர் உப்பு கரிக்குமே.

ராமன் அமுதம் போல் அல்லவோ இருக்கிறான். எனவே உப்பு நிறைந்த கடல்நீரை ராமனுக்கு உவமையாக்க முடியாது எனக் கருதி அதற்கு அடுத்த உவமையைச் சிந்தித்தார். தூய நீரை மழையாகப் பொழியும் கார்மேகத்தை உவமையாகச் சொல்வோம் என்று முடிவெடுத்த கம்பர், அடுத்து மழைமுகிலோ என்றார். ஆனால் கார்மேகத்தில் கருமை குளிர்ச்சி தூய்மை யாவும் இருந்தாலும் கூட, மழை பொழிந்து முடித்து விட்டால், வெளுத்துப் போகிறது.

ராமனோ எவ்வளவு அருள்மழை பொழிந்தாலும் வெளுக்காமல் அப்படியே கருமையோடு இருக்கிறானே. அப்படியானால் மேகமும் அவனுக்கு உவமையாகாது. இப்படி எந்தப் பொருளை உவமையாக்க முயன்றும் ராமனின் அழகுக்கு நிகரான உவமையைச் சொல்ல முடியவில்லை. திடப்பொருளான மரகதக்கல், திரவப் பொருளான கடல்நீர், இரண்டுக்கும் இடைப்பட்ட மை, வாயுப்பொருளான மேகம் என எதுவுமே ராமனின் அழகுக்கு நிகராகாத நிலையில், இனி என்ன வார்த்தை சொல்லி ராமனை அழைப்பது என்று சிந்தித்தார். கவிச்சக்கரவர்த்திக்கே வேறு வார்த்தைகள் கிடைக்கவில்லை. என்னிடம் இனி வார்த்தைகளே இல்லையே என்று தெரிவிக்கும் விதமாக, ஐயோ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார் கம்பர்.

செய்ய வாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே
நீல மேனி ஐயோ நிறைகொண்டது என் நெஞ்சினையே

 
என்று திருப்பாணாழ்வாரும் அரங்கனின் அழகை அனுபவிக்கையில், ஐயோ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது இங்கே ஒப்பிட்டு நோக்கத் தக்கது.

இப்படி வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பேரழகோடு திகழ்ந்து, தன்னை அனுபவிக்கும் அடியார்களுக்கு அமுதமாக இனிப்பதால், ஸ்ரீராமன் ஸோம: என்று அழைக்கப்படுகிறார். இவ்விடத்தில் ஸோம என்பதற்கு அமுதம் என்று பொருள். அனுபவிப்போர்க்கு அமுதமாக இனிப்பவர் ஸோம:  அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 507-வது திருநாமம். ஸோமாய நமஹ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்நாளில் எந்நாளும் இனிமையான நாளாக அமையும்படி ஸ்ரீராமன் அருள்புரிவார்.

————–

508. புருஜிதே நமஹ (Purujithey namaha)

(503-வது திருநாமம் கபீந்த்ர முதல் 512-வது திருநாமம் ஸத்யஸந்த வரை – தருமத்தின் வடிவமாக இருக்கும் ஸ்ரீராமனின் பெருமைகள்)

தசரதன் தனக்குப் பிறந்த நான்கு குழந்தை களான ராமன், லட்சுமணன், பரதன்சத்ருக்னன் ஆகியோரை வசிஷ்டரிடம் கல்வி பயிலச்செய்தார். அப்போது லட்சு மணன் எந்நேரமும் ராமனை விட்டுப் பிரியாமல் கூடவே இருந்து பணிவிடைகள் செய்து வந்தான். சத்ருக்னன் அவ்வாறே ராம பக்தனான பரதனைவிட்டுப் பிரியாது உடனிருந்து பரதனுக்கு அனைத்துவிதப் பணிவிடைகளும் செய்துவந்தான்.

அந்த நாட்களில் காலை நேரங்களில்ராமனும், லட்சுமணனும் சோலைகளுக்குச் சென்று அங்கே தவத்திலும் இறை வழிபாட்டிலும் ஈடுபட்டு வரும் முனிவர்களை அடிபணிவார்களாம். அந்த முனிவர்கள் கூறும் நல் வார்த்தைகளையும், அறிவுரைகளையும் கேட்டு, அவர்களுக்குத் தங்களால் இயன்ற பணிவிடைகளையும் ராம, லட்சுமணர்கள் செய்வார்கள்.அதன்பின் பகல் முழுவதும் வசிஷ்டரின் குருகுலத்தில் வித்தைகளைப் பயில்வார்கள். தங்கள் குலகுருவான வசிஷ்டரிடம் மிகுந்த பக்தியும் மரியாதையும் கொண்டவர்களாய், அவரையே தெய்வமாக எண்ணி வழிபட்டுவந்தார்கள்.

மாலைப்பொழுது வந்தவாறே, ராம லட்சு மணர்களும் அயோத்தி நகர்ப் புறத்துக்கு வருவார்களாம். அச்சமயம் எதிரில் வரக் கூடிய பொதுமக்கள் ஒவ்வொருவரையும் பார்த்து, நீங்கள் நலமாக உள்ளீர்களா, உங்கள் வீட்டில் எல்லோரும் நலமா என்றெல்லாம் பலவாறு விசாரிப்பார்களாம். அவ்வாறு ராம லட்சுமணர்கள் பேசும் இனிய வார்த்தைகளைக் கேட்ட மக்கள், கார்முகில் பொழியும் மழையைக் கண்டு மகிழும் பயிர்களைப்போல் என பெருமகிழ்ச்சி அடைவார்களாம்.

இதைக் கம்பர் பால காண்டத்தில், திருஅவதாரப் படலத்தில்,

வீரனும் இளைஞனும் விரிபொழில்களின் வாய்
ஈரமோடு உறைதரு முனிவரர் இடைபோய்
சோர்பொழுது அணிநகர் துறுகுவர் எதிர்வார்
கார்வர அலர்பயிர் பொருவுவர் களியால்

மேலும், ஏழையர் யாவது உதவி என்று கேட்டுவந்தால், அவர்களுக்குத் தேவையான உதவிகளை எல்லாம் உடனே செய்து விடுவானாம் ராமன். அதனால் குடிமக்கள் யாவரும் ராமனை உளமார வாழ்த்திவந்தார்கள்.ராமனுடைய நன்னடத்தை, பணிவு, நற்பண்புகள் உள்ளிட்டவற்றைக் கண்டு வியந்து வசிஷ்டரும் ராமன் மீது மிகுந்த அபிமானம் கொண்டிருந்தாராம். எல்லாவற்றுக்கும் மேலாக, அயோத்திமக்கள் ராமன், லட்சுமணன், பரதன், சத்ருக்னன் ஆகிய நான்கு இளவரசர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனையோடு அயோத்தியில் உள்ள அனைத்துக் கோயில்களுக்கும் சென்று தினசரி வழிபாடு செய்து விட்டு வருவார்களாம். இதையும் கம்பர்,

ஏழையர் அனைவரும் இவர்தட முலைதோய்
கேழ்கிளர் மதுகையர் கிளைகளும் இளையார்
வாழிய என அவர் மனன் உறு கடவுள்
தாழ்குவர் கவுசலை தயரதன் எனவே

இவ்விடத்தில் கம்பர், கௌசல்யாவும் தசரதனும் ராமனை எவ்வளவு வாழ்த்துவார்களோ அவ்வளவு தூரம் நாட்டு மக்கள் அத்தனை பேருமே ராமனிடம் அன்பு காட்டி அவனை வாழ்த்தினார்கள் என்கிறார். இப்படி பலதரப் பட்ட மக்களும் ராமனைப் போற்றிக் கொண்டாட என்ன காரணம் என்று பார்த்தால், அதை ஒரே ஸ்லோகத்தில் வால்மீகி தெரிவிக்கிறார்;

ஸத்யேன லோகான் ஜயதி, தீனான் தானேன ராகவ:
குரூன் சுச்ரூஷயா தீமான், தனுஷா யுதி சாத்ரவான்

தான் கடைப்பிடிக்கும் சத்தியத்தால் உலகங்களையே வென்றான் ராமன். தானத்தால் ஏழைகளின் மனங்களை வென்றான் ராமன். தனது பணிவிடைகளால் குருமார்களின் மனங்களை வென்றான். வில் எடுத்துப் போர்புரியும் தன் மிடுக்கால் எதிரிகளின் மனங்களைக் கூட வென்றுவிட்டான் ராமன். அதனால்தான் எல்லாரும் ஒன்று போல் ராமனை எப்போதும் வாழ்த்துகிறார்கள்.

இப்படி அனைவரின் மனங்களையும் வென்ற ராமன், புருஜித் என்று அழைக்கப்படுகிறார்.புருஜித் என்றால் பலரின் மனங்களை வென்றவர். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 508 – வது திருநாமம்.
“புருஜிதே நமஹ’’ என்று தினமும் சொல்லி வந்தால் நம் மனங்களையும் ராமன் தன்பால் ஈர்த்து, தூயபக்தி வளர அருள்புரிவார்.

—————–

512. ஸத்யஸந்தாய நமஹ (Sathya-Sandhaaya namaha)

(503-வது திருநாமம் கபீந்த்ர முதல் 512-வது திருநாமம் ஸத்யஸந்த வரை – தருமத்தின் வடிவமாக இருக்கும் ஸ்ரீராமனின் பெருமைகள்)ராவணன் சீதையை அபகரித்துச் சென்றவாறே, சீதையைத் தேடிக் கொண்டு ராமனும், லட்சுமணனும் சென்றார்கள். வழியிலே ராவணனால் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் அடிபட்டுக் கிடந்த ஜடாயுவைக் கண்டார்கள். ஜடாயு ராமனைப் பார்த்து, “ராமா, நான் ஒரு அதிர்ச்சிச் செய்தியைச் சொல்லப் போகிறேன், நீ பல்லாண்டு வாழ்க’’ என்று ராமனை வாழ்த்தி விட்டுப் பேசத் தொடங்கினார்.

யாம் ஓஷதீம் இவ ஆயுஷ்மன் அன்வேஷஸி மஹாவனே
ஸா தேவீ மம ச ப்ராணா ராவணேன உபயம் ஹ்ருதம்

என்று ரத்தினச் சுருக்கமாக அனைத்தையும் சொல்லி முடித்துவிட்டார் ஜடாயு. “ராமா, எந்த சீதையைத் தேடிக் கொண்டு நீ இங்கே அலைகிறாயோ, அந்த சீதையையும் எனது உயிரையும் ராவணன் கொண்டு சென்றுவிட்டான்’’ என்றார். சொல்ல வந்த செய்தியை இதை விடச் சுருக்கமாகவும், தெளிவாகவும் சொல்ல முடியுமா? அத்துடன் நில்லாமல் ராமனுக்கு ஆறுதல் வார்த்தையும் சொன்னார் ஜடாயு.

விந்தோ நாம முஹூர்த்தோஸௌ ஸ ச காகுத்ஸ்த நாபுதத்

“ராமா, ராவணன் சீதையை அபகரித்த நேரம் விந்தம் என்று அழைக்கப்படும் முகூர்த்தம் ஆகும். அந்தச் சமயத்தில் எந்தப் பொருள் பறிபோனாலும் போனபடி அப்படியே திரும்ப வந்துவிடும் என்று பெரியோர்கள் சொல்வார்கள். எனவே சீதையும் பாதுகாப்பாகவும், தூய்மையாகவும் உன்னிடம் திரும்ப வந்துவிடுவாள் என்று ஆறுதல் சொல்லிவிட்டு உயிர் நீத்தார் ஜடாயு.

ஆஹா, நாட்டில் ஒரு தந்தை என்னைப் பிரிந்த துயரால் இறந்தார். காட்டில் கிடைத்த இந்தத் தந்தையும் எனக்கு உதவி செய்யப் போய் உயிர் நீத்து விட்டாரே என்று பலவாறு வருந்தினான் ராமன். அதன்பின், தசரதனுக்குத்தான் நேரடியாக ஈமக்கிரியை செய்ய முடியாத குறை தீர, ஜடாயுவைத் தந்தையின் ஸ்தானத்தில் வைத்து ஈமக் கிரியை செய்ய முடிவெடுத்தான் ராமன். அப்போது ஜடாயுவைப் பார்த்து, “மயா த்வம் ஸமநுஜ்ஞாதோ கச்ச லோகான் அநுத்தமான்’’ `நான் சொல்கிறேன், ஜடாயுவே, நீங்கள் வைகுண்ட லோகத்தைச் சென்று அடைவீராக’ என்றான் ராமன். அடுத்த நொடியே, ஜடாயுவின் உடலில் இருந்த ஜீவாத்மா புறப்பட்டு வைகுண்ட லோகத்தை அடைந்துவிட்டது. இதைக் கீழத் திருப்பதியில் புளியமரத்தடியில் அமர்ந்தபடி திருமலை நம்பிகள் ராமானுஜருக்கு விளக்கியபோது, அனைத்தும் அறிந்த ராமானுஜர், ஆசார்யன் வாயால் ரகசியத்தைப் பெறுவதற்காக ஒரு கேள்வி கேட்டார்.

ராமன், தனது இறைத் தன்மையை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மனிதனாகத் தானே தன்னைப் பாவித்துக் கொள்வான். அந்த ராமன் எப்படித் தன் வாயால் ஜடாயுவை வைகுண்டம் போகுமாறு ஏவினான் என்பதைச் சற்றே விளக்க வேண்டும் என்று கேட்டார் ராமானுஜர்.அதற்குத் திருமலை நம்பிகள், ராமன் தனது இறைத் தன்மையை வெளிப்படுத்தாமல் தசரதன் மகனாக இருந்துகொண்டே ஜடாயுவுக்கு முக்தி அளித்துவிட்டான் என்றார்.

அது எப்படி என்று ராமானுஜர் வினவ, “ஸத்யேன லோகான் ஜயதி’’ என்ற வால்மீகியின் வரிகளை மேற்கோள் காட்டிய திருமலை நம்பிகள், தனது சத்தியத்தால் அனைத்து உலகங்களையும் வென்றிருந்தான் ராமன். யார் ஒருவன் சத்தியத்தைக் கடைபிடிக்கிறானோ, அவனுக்கு அனைத்து உலகங்களும் கட்டுப்படும். சத்தியசந்தனான ஒரு நபர் ஒரு வார்த்தை சொன்னால், பரமனும் பஞ்ச பூதங்களும் அனைத்து உலகங்களும் சேர்ந்து அதை மெய்ப்பித்து விடுவார்கள். எனவே சத்தியசந்தனான ராமன் ஜடாயுவைப் பார்த்து, “நீ வைகுண்டம் போ’’ என்றவாறே, வைகுண்டத்துக்கு வழியான அர்ச்சிராதி மார்க்கம், தானே வழிவிட்டது.

வைகுண்டநாதன் ஜடாயுவை வரவேற்றார். வைகுண்டத்தை அடைந்துவிட்டார் ஜடாயு என்று விளக்கினார். வடமொழியில் `ஸந்தா’ என்றால் உறுதிமொழி என்று பொருள். தான் அளிக்கும் ஸந்தா என்னும் உறுதிமொழிகள் அனைத்தையும் சத்தியமாக ஆக்குவதால் – மெய்ப்பித்துக் காட்டுவதால், உறுதிமொழிகளை மெய்ப்பித்துக் காட்டுபவர் – ஸத்யஸந்த என்று ராமன் அழைக்கப்படுகிறார்.

ஜடாயுவைப் பார்த்து, “வைகுண்டம் போ..’’ என்றான் ராமன். தான் அதுவரை கடைபிடித்த சத்தியத்தாலேயே அந்த வாக்கை மெய்ப்பித்துக் காட்டவும் செய்தான். `ஸத்யஸந்த’ என்றால் உறுதிமொழிகளை மெய்ப்பித்துக் காட்டுபவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 512-வது திருநாமம். “ஸத்யஸந்தாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் சத்தியத்தில் இருந்து விலகாதிருக்கும் படி ஸ்ரீராமன் காத்தருள்வார்.

—————

513. தாசார்ஹாய நமஹ (Dhaashaarhaaya namaha)

நாரதர் பூமியில் இருந்து மூன்று மன்னர்களை அழைத்துக் கொண்டு தேவலோகத்துக்குள் நுழைந்தார். “நாராயண… நாராயண…’’ என்ற நாரதரின் குரலைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தான் இந்திரன். அவருடன் வந்திருக்கும் மூன்று மன்னர்களைக் கவனித்தான். யார் இவர்கள் என்று நாரதரிடம் வினவினான். நாரதர், “இந்திரா உன்னோடு சேர்ந்து இந்திர லோகத்தில் மகிழ்ந்திருக்க விரும்பி இந்த மூன்று மன்னர்கள் வந்திருக்கிறார்கள். சுவர்க்கத்தை அடைய விரும்பிப் பூமியிலே பற்பல தானங்கள் எல்லாம் செய்த கொடை வள்ளல்கள் இம்மூவரும் என்றார். அவர்களுக்குத் தன் உலகில் இடம் கொடுக்க இந்திரனுக்கு மனமில்லை. அதனால் இந்திரன் நாரதரிடம், “நாரதரே, நம் சுவர்க்க லோகத்தில் மூவருக்கு இடமில்லை.

யாராவது ஒருவரைப் பூமிக்கு அனுப்பி வைத்து விடுங்கள் என்றான். யாரை அனுப்புவது என்று கேட்டார் நாரதர். அதற்கு இந்திரன், “அந்த மூன்றாவது மன்னன் இருக்கிறானே, அவனிடம் நானே ஓர் ஏழை வடிவில் தானம் வாங்கப் போயிருந்தேன். அவனது தங்க ரதத்தை எனக்குத் தானமாக வழங்குமாறு வேண்டினேன். ஆனால், தங்கரதம் தராமல் மரத்தால் ஆன ரதத்தைத் தான் தந்தான். இரண்டாம் முறை சென்று கேட்டேன், சந்தன மர ரதத்தைத் தந்தான்.

மூன்றாம் முறை சென்று கேட்டேன், தேக்கு மர ரதம் தந்தான். கடைசி வரை தங்க ரதம் தரவே இல்லை. அவனைப் பூமிக்கு அனுப்புங்கள் என்றான். நாரதரும் அவனை அனுப்பி வைத்தார். “இந்த இருவரையும் உள்ளே அனுமதிக்கலாமா’’? என்று கேட்டார் நாரதர். அதற்கு இந்திரன், “இருங்கள் நாரதரே, அந்த இரண்டாவது மன்னன் இருக்கிறானே, அவன் நான்கு குதிரைகள் பூட்டிய தேரில் பயணித்த போது, நான் மாறுவேடத்தில் எதிரே சென்று, ஒரு குதிரையை எனக்குத் தானம் தருமாறு கேட்டான், அவனும் தந்தான்.

இரண்டாம் குதிரையைக் கேட்டேன், அதையும் தந்தான். மூன்றாம் குதிரையையும் கேட்டபோது, அதையும் கூடத் தந்தான். ஆனால், நான்காம் குதிரையைக் கேட்டபோது, அதை வைத்துக் கொண்டு நீ என்ன செய்யப் போகிறாய், நான் தேரில் பயணிக்க ஒரு குதிரையாவது வேண்டும் என்று சொல்லி விட்டான். நான்குக்கு மூன்று தந்த இவனை இங்கே சேர்க்க மாட்டேன். அவர் பூமிக்குச் செல்லட்டும் என்றான் இந்திரன். அவரும் பூமிக்கு வந்தார்.

மீதமுள்ள ஒரு மன்னரையாவது உள்ளே அழைத்துக் கொள்வான் இந்திரன் என்று எல்லாரும் எதிர்பார்த்த நிலையில், இந்திரன், “இந்த மன்னனிடம் முன்னொரு சமயம் நான் மாறு வேடத்தில் கோதானம் வாங்கப் போனேன். நூறு பசுக்களை அவன் தானம் செய்தான். தானம் செய்துவிட்டு, நான் நூறு பசுக்களைத் தானம் செய்தேன் என்று தன் நண்பனிடம் சொன்னான். இன்னொருவருக்குக் கொடுத்துவிட்டால், அதன்பின் அப்பொருள் நமது அன்று. ஆனால், நான் கொடுத்தேன் என்று தானம் செய்த பின், ஒருவன் சொல்கிறான் என்றால் அது தோஷமுள்ள தானம். அவனுக்கும் சுவர்க்கத்தில் இடமில்லை, போகலாம் என்று சொல்லிவிட்டான்.

மூன்று மன்னர்களும் பூமிக்கு வந்துவிட்டார்கள். நாரதர் அவர்களைத் தேடி வர, தங்களது மனவருத்தத்தை நாரதரிடம் சொல்லி அழுதார்கள். நாரதரோ, “மன்னர்களே, இந்திரனின் மனம் எப்படிப்பட்டது என்று உங்களுக்கு உணர்த்தவே நான் உங்களைச் சுவர்க்கத்துக்கு அழைத்துச் சென்றேன். நீங்கள் நூறு நல்லது செய்தாலும் அதில் உள்ள தோஷத்தைத் தான் பார்ப்பான் இந்திரன். ஆனால் நீங்கள் ஆயிரம் தவறுகள் செய்தாலும், அதிலும் ஒரு நல்லதைப் பார்க்கும் ஒருவன் இருக்கிறான் என்றார் நாரதர். யார் அவன் என்று மன்னர்கள் கேட்க, அவர்களை ஆயர்ப்பாடிக்கு அழைத்துச் சென்றார் நாரதர். ஆயர்ப்பாடியில் ஒரு சடலம் எரிந்து கொண்டிருந்தது. அதிலிருந்து அகர் வாசனை எழுந்தது.

மூன்று மன்னர்களும் நாரதரிடம், “யோகிகளின் உடலை எரித்தால் தானே இத்தகைய வாசனை வரும், யோகி யாராவது மரணம் அடைந்திருக்கிறாரா’’? என்று கேட்டார்கள். அதற்கு நாரதர், “யோகியும் இல்லை, முனிவரும் இல்லை, பூதனை என்ற பேய்யின் சடலத்தை எரிக்கிறார்கள். அதிலிருந்து அகர்வாசனை வருகிறது என்றார். “அது எப்படிச் சாத்தியம்?’’ என்று மன்னர்கள் கேட்டார்கள்.

பூதனை கண்ணனுக்கென்றே விஷப்பால் சமர்ப்பித்தாள் அல்லவா, அந்த விஷப்பாலையே தனக்குச் சமர்ப்பித்த காணிக்கையாகக் கருணையுடன் கண்ணன் ஏற்றுக் கொண்டான். அவளுக்கு முக்தி அளித்துவிட்டான். அதனால்தான், அவளது சடலம் மணக்கிறது என்றார் நாரதர். அப்படியானால் இவன், தான் குற்றம் காணாமல் குணத்தைக் கொள்பவன் என்று அறிந்து கண்ணனின் திருவடிகளைப் பற்றி மூன்று மன்னர்களும் வைகுண்டமாகிய முக்தியையே பெற்றுவிட்டார்களாம்.

நாம் என்ன சமர்ப்பித்தாலும், அதை எளிமையோடும் கருணையோடும் குற்றம் காணாமல் யார் ஒருவர் ஏற்றுக் கொள்கிறாரோ, அவருக்குத் தானே நாம் பரிசுகளைச் சமர்ப்பிக்க வேண்டும். எனவேதான் திருமால் “தாசார்ஹ’’ என்று அழைக்கப்படுகிறார். `தாச’ என்பது நாம் காணிக்கையாக்கும் பரிசுகளைக் குறிக்கிறது. அதை எளிமையோடு ஏற்பதால், காணிக்கைகளைப் பெறுவதற்குத் தகுதியானவர் – தாசார்ஹ என்று திருமால் அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 513-வது திருநாமம்.“தாசார்ஹாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள், சமர்ப்பிக்கும் அனைத்துக் காணிக்கைகளையும் திருமால் மகிழ்ச்சியோடு ஏற்று அருள்புரிவார்.

514. ஸாத்வதாம் பத்யை நமஹ (Saathvathaam Pathyai namaha)

திருநெல்வேலியில் இருந்து திருவேங்கடநாதபுரம் செல்லும் வழியில் சங்காணி என்ற ஊர் உள்ளது. அங்கே வரதராஜப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. தென்காஞ்சி என்றே அந்தக் கோயில் வழங்கப் படுகிறது. நாயக்க மன்னர்கள் மதுரையை ஆண்டு வந்த காலத்தில், நாயக்க மன்னர் வரதராஜர் கோயில் அர்ச்சகருக்கு ஓர் ஓலை அனுப்பி வைத்தார். வரதராஜப் பெருமாளைத் தரிசிப்பதற்காகத் திருக்கோயிலுக்கு மன்னர் வர உள்ளதாக அந்த ஓலையிலே எழுதப் பட்டிருந்தது. அதைக் கண்ட அர்ச்சகர், மறுநாள் பெருமாளுக்குச் சிறப்பு பூஜைகள் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார். மன்னருக்கு வழங்குவதற்குரிய பிரசாதங்களைத் தயாரிக்கப் பொருள்களை வாங்கினார்.

பெரிய பூமாலைகள் பெருமாளுக்குச் சமர்ப்பிக்க ஆவன செய்தார்.மாலைப் பொழுது வந்தது, அர்ச்சகருக்குக் கடும் காய்ச்சல் ஏற்பட்டது. அந்தக் காய்ச்சலோடேயே அர்த்த ஜாம பூஜையைச் செய்துவிட்டு வீடு திரும்பினார் அர்ச்சகர். கடும் உடல் வலியாலும் காய்ச்சலாலும் துன்புற்ற அவர், வரதராஜப் பெருமாளிடம் மனமுருகி, வரதராஜா நாளை மன்னர் கோயிலுக்கு வர உள்ளார்.
நான் காய்ச்சல் என்ற காரணத்தால் நாளை வராமல் இருந்தால், நான் தினந்தோறுமே பூஜை செய்யவில்லையோ என்று மன்னர் சந்தேகப்பட வாய்ப்புள்ளது. பகவானே, நீதான் வழிகாட்ட வேண்டும் என்று வேண்டியபடியே அசந்து உறங்கிவிட்டார்.

உறங்கிய அர்ச்சகர், அடுத்த நாள் மாலைதான் கண் விழித்தார். மாலைப் பொழுது வந்ததை அறிந்து அலறி அடித்துக் கொண்டு கோயிலை நோக்கி ஓடினார் அர்ச்சகர். திருக்கோயிலிலே மக்கள் கூடி இருப்பதைக் கண்டார் அர்ச்சகர். மன்னர் வந்து விட்டாரா என்று விசாரித்தார் அர்ச்சகர். என்ன இப்படிக் கேட்கிறீர்கள், காலையில் மன்னர் வந்த போது நீங்கள் தானே அவரை முறைப்படி வரவேற்று, அவருக்குப் பெருமாளின் ஆள் உயர மாலையைச் சாற்றி, பெருமாளின் சிறப்புப் பிரசாதங்களை எல்லாம் வழங்கி, நன்கு கௌரவித்து அனுப்பி வைத்தீர்கள் என்றார்கள்.

இதோ மன்னர்கூட உங்களுக்கு வழங்கச் சொல்லி ஒரு பெட்டி நிறைய தங்கக் காசுகளை வைத்து விட்டுப் போயிருக்கிறார் பாருங்கள் என்று ஒரு பெட்டியையும் மக்கள் காட்டினார்கள். நாம் கோயிலுக்கே வராமல் எப்படி மன்னருக்கு இத்தனை மரியாதைகள் நடைபெற்றன என்று சிந்தித்தார். இந்தச் சிந்தனையோடு நீராடி விட்டு, தமது அனுஷ்டானங்களை முடித்துவிட்டு, மாலை பூஜைகளைச் செய்யத் திருக்கோயிலுக்குள்ளே சென்றார் அர்ச்சகர்.

வரதராஜப்பெருமாள் அர்ச்ச கரைப் பார்த்து, “காய்ச்சல் குணமாகி விட்டதா?’’ என்று கேட்டார். அப்போதுதான் தனக்குக் காய்ச்சல் ஏற்பட்டது என்ற நினைவே அர்ச்சகருக்கு வந்தது. “ஆஹா, என் நோயைப் போக்கியதோடு இல்லாமல் நோயைப் பற்றிய எண்ணத்தையே பகவான் போக்கிவிட்டானே!’’ என்று அப்போதுதான் உணர்ந்தார் அர்ச்சகர்.

வரதராஜப் பெருமாள், “அர்ச்சகரே, காய்ச்சலோடு நீங்கள் ஏன் சிரமப் பட வேண்டும் என்று கருதி உங்களைப் பகல் முழுவதும் ஓய்வெடுக்க வைத்தேன். உங்கள் வடிவில் நானே வந்து மன்னருக்குச் செய்ய வேண்டிய மரியாதைகளைச் செய்து முடித்துவிட்டேன் என்று கூறினார். “பகவானே, எனக்காக நீ இத்தனையும் செய்ய வேண்டுமா?’’ என்று கேட்டார் அர்ச்சகர். “என்னை அண்டி இருப்போருக்கு நான் செய்யாமல் வேறு யார் செய்வார்கள்’’ என்று கேட்டார் வரதராஜப் பெருமாள். “இந்தப் பெட்டி நிறைய மன்னர் தந்த தங்க நாணயங்கள் உள்ளன, அவை என் பரிசாக உங்களுக்கு வந்தன என்று கருதி நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்’’ என்றும் கூறினாராம் பெருமாள்.

இப்படித் தன்னை அண்டியிருக்கும் அடியார்களுக்குத் தலைவனாக இருந்து அவர்களைக் காப்பதால், திருமால் ஸாத்வதாம்பதி என்று அழைக்கப்படுகிறார். ஸாத்வதர் என்ற சொல், சத்துவ குணமே வடிவெடுத்த திருமால் அடியார் களைக் குறிக்கிறது. அந்த ஸாத்வதர்களுக்குப் பதியாக – தலைவனாக இருப்பதால், திருமால் ஸாத்வதாம்பதி என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 514-வது திருநாமம்.“ஸாத்வதாம் பத்யை நமஹ’’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களை ஆபத்பாந்தவராக இருந்து திருமால் காத்தருள்வார்.

——————–


515. ஜீவாய நமஹ(Jeevaaya namaha)

பூமியில் கலியுகம் தொடங்கிய வேளையில், மகாலட்சுமித் தாயார் திருமாலிடம், “சுவாமி, பார்த்தீர்களா, பூமியில் கலியுகம் தொடங்கி விட்டது. மூன்று வித தாபங்களால் நம் குழந்தைகள் துன்புறுகிறார்கள். ஆத்யாத்மிகம் எனப்படும் உடல்ரீதியாக வரும் நோய்கள் போன்ற துன்பங்கள், ஆதிபௌதிகம் எனப்படும் மற்ற உயிர்களால் வரும் துன்பங்கள், ஆதிதைவிகம் எனப்படும் இயற்கைச் சீற்றங்களால் வரும் துன்பங்கள் என மூன்றும் சுட்டெரிக்கத் துன்புறும் நம் குழந்தைகளை உங்களை விட்டால் வேறு யார் காப்பார்கள்”? என்று கேட்டாள்.

அதற்குத் திருமால், “நான் காப்பதற்குத் தயாராக இருக்கிறேனே. ஆனால், என்னைத் தியானிக்கச் சொல். என்னைக் குறித்துத் தவம் புரியச் சொல். நானே கதி என்று என்னைச் சரண் அடையச் சொல். வைகுண்டத்துக்கு வர முடியாவிட்டால், பாற்கடலுக்கு வந்து என்னைத் தரிசிக்கட்டும், அல்லது அவரவர் உள்ளங்களிலேயே நான் இருக்கிறேனே, அங்கிருக்கும் என்னை வழிபடட்டும், காக்கிறேன்’’ என்று பதிலளித்தார்.திருமகளோ, “சுவாமி, கலியுகத்தில் வாழும் மனிதர்களுக்குப் பக்தி, ஞானம், இறைநம்பிக்கை, தவம் அனைத்துமே குறைவு.

அவர்கள் வைகுண்டத்தையும் பாற்கடலையும் நம்புவார்களா என்றே சொல்ல முடியாது. மேலும், இதயத்துக்குள் நீங்கள் இருந்தாலும், உங்களைக் காணவல்ல யோகசக்தி அவர்களிடம் இல்லையே என்றாள். நான் என்ன செய்ய வேண்டும் என்று திருமால் கேட்க, திருமகள், “நீங்கள் விக்கிரக வடிவில் திருக்கோயில்களிலே எழுந்தருள வேண்டும். அதுதான் கலியுகத்தில் உள்ள மக்களைக் காக்க ஒரே வழி’’ என்று கூறினாள். நம்மைக் காக்க எப்படித் திருமால் ராமனாகவும், கண்ணனாகவும், நரசிம்மனாகவும் அவதாரம் செய்தாரோ, அதுபோல், கலியுகத்தில் மூவகை வெப்பங்களில் இருந்தும் நம்மைக் காக்கும் பொருட்டு, திருவரங்கநாதனாக, திருமலையப்பனாக, காஞ்சி வரதராஜனாக இப்படிப் பல வடிவங்களில் கோயில் கொள்வது என்று முடிவெடுத்தார் திருமால்.

முடிவெடுத்தபின் திருமகளிடம் திருமால், “தேவி, இப்போது பிருகு முனிவர் வந்து கொண்டிருக்கிறார். என் லீலைக்குக் கொஞ்சம் நீயும் ஒத்துழைக்க வேண்டும்’’ என்றார். அப்படியே ஆகட்டும் என்றாள் திருமகள். மும்மூர்த்திகளுக்குப் பரீட்சை வைக்க நினைத்த பிருகு முனிவர், திருமாலின் திருமார்பில் உதைக்க, அதைச் சாக்காக வைத்துக் கொண்டு பூமிக்குப் புறப்பட்டு வந்தாள் மகாலட்சுமி.

மகாலட்சுமியைத் தேடுவதைச் சாக்காக வைத்துக் கொண்டு பூமிக்கு வந்தார் திருமால். திருவேங்கடமலையில் ஸ்ரீநிவாசனாக எழுந்தருளினார். பூமியில் ஓரிடத்தில் கோயில் கொண்டால் போதாது, இன்னும் பல இடங்களில் கோயில் கொள்ள வேண்டும் அல்லவா, அதனால் ஒரு மலை உச்சியில் எழுந்தருளினால் அங்கிருந்த படி இன்னும் எங்கெங்கெல்லாம் கோயில் கொள்ளலாம் என்று கழுகுப் பார்வை போல் பார்த்துத் திருத்தலங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்பதால்தான், திருவேங்கட மலையை முதலில் தேர்ந்தெடுத்தாராம்.

பிராட்டி பெருமாளிடம், நீங்கள் எடுத்துக் கொள்ளும் திருமேனி கரிய நீருண்ட மேகம் போல் நன்றாகக் கருத்திருக்க வேண்டும். அப்போதுதான் மூவகை வெப்பங்களில் தவிக்கும் மக்களைக் குளிர்வித்து அருள வசதியாக இருக்கும் என்றும் கூறினாளாம். அதனால்தான் கார்மேனியோடு திருமலையில் கோயில் கொண்டு, திருமலையோடு நில்லாமல், மேலும் பல திருத்தலங்களைத் தேர்ந்தெடுத்து அங்கெல்லாம் கார்மேனியோடு கோயில் கொண்டு, இன்றளவும் நம்மை அருள்மழையில் நனைத்து அருள்புரிந்து வருகிறார்.

க்ருபே விகதவேலயா க்ருத ஸமக்ரபோஷைஸ் த்வயா
கலிஜ்வலந துர்கதே ஜகதி காளமேகாயிதம்
வ்ருஷ க்ஷிதி தராதிஷு ஸ்திதிபதேஷு ஸாநுப்லவைர்
வ்ருஷாதிபதிவிக்ரஹைர் வ்யபகதாகிலாவக்ரஹை:

என்று இக்கருத்தை ஸ்வாமி வேதாந்த தேசிகன் “தயா சதகம்’’ என்ற துதியிலே தெரிவிக்கிறார்.இப்படிக் கலி நாளுக்கு இரங்கிக் கல்லிலே இறங்கி நிலையாகக் கோயிலில் நின்று நம்மை வாழ்விப்பதால், திருமால் ஜீவ என்று அழைக்கப்படுகிறார். ஜீவ என்றால் வாழ வைப்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 515-வது திருநாமம்.“ஜீவாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களை, அனைத்து ஆபத்துகளில் இருந்தும் காத்துத் தனக்குத் தொண்டு செய்ய வைத்து வாழ்வை அருள்வார்.

—————————-

516. விநயித்ரே நமஹ (Vinayithrey namaha)

 
காஞ்சீபுரத்தைச் சேர்ந்த நடாதூர் அம்மாள் என்ற மகானும் அவரது சீடர்களும் திருவேங்கட மலையை நோக்கி யாத்திரையாகச் சென்றார்கள். அது கோடைக்காலமாக இருந்தபடியால் வெயிலில் பயணித்த அவர்களுக்குக் களைப்பும் அதீதப் பசியும் ஏற்பட்டது. வழியில் எங்காவது தூய்மையான, இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட உணவு கிடைக்குமா என்று தேடினார்கள். எங்கு தேடியும் உணவு கிடைக்கவில்லை.

இப்படி அடியார்களின் கோஷ்டி பசியால் வாடிக் கொண்டிருந்த நிலையில், திடீரென ஒரு வெள்ளி கங்காளத்தோடு ஒரு சிறுவன் அங்கே வந்தான். அந்தச் சிறுவன் தன் உடலெங்கும் பன்னிரண்டு திருமண் காப்புகளை அணிந்திருந்தான். அவன் நடாதூர் அம்மாளை வணங்கி விட்டுப் பணிவோடு நின்றான்.

யார் அப்பா நீ என்று விசாரித்தார் நடாதூர் அம்மாள். சுவாமி நான் திருவேங்கட மலையில் இருந்து வருகிறேன். திருமலையில் பெருமாளுக்குக் கைங்கரியம் செய்து வரும் ராமாநுஜரின் சீடரான அனந்தாழ்வானின் சீடன் நான். நீங்கள் இத்தனை பேரும் பசியோடு வருவீர்கள் என்பதால் அனந்தாழ்வான் உங்களுக்கு உணவளித்துவிட்டு வரச் சொன்னார் என்று பதில் அளித்தான் சிறுவன்.

நாங்கள் வருகிறோம் என்று அனந்தாழ்வானுக்குச் செய்தி அனுப்பவே இல்லையே அவர் எப்படி அறிந்துகொண்டு உணவு கொடுத்து அனுப்பினார் என்று நடாதூர் அம்மாள் வினவ, அதெல்லாம் எனக்குத் தெரியாது சுவாமி. எனது குரு அனுப்பி வைத்தார், அடியேன் உணவு கொண்டு வந்தேன். அவ்வளவு தான் என்று விடையளித்தான் சிறுவன்.

சற்று யோசித்த நடாதூர் அம்மாளுக்குச் சிறுவன் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவன் உண்மையிலேயே அனந்தாழ்வானின் சீடன்தானா, அல்லது தூய்மையற்ற, கெடுதல் விளைவிக்கக்கூடிய உணவை வேறு யாராவது இவன் மூலம் கொடுத்து, அதை அடியார்கள் எல்லோரும் சாப்பிட்டுப் பெரும் தீங்கு நேர்ந்தால் என்ன செய்வது என்று பலவாறு சிந்திக்கத் தொடங்கினார் நடாதூர் அம்மாள்.

சிறுவனைப் பார்த்து, நீ அனந்தாழ்வானின் சீடன் என்றால், உன் குருவை வணங்கும் விதமாக நீ தினமும் கூறும் தனியன் சுலோகத்தைச் சொல் என்றார் நடாதூர் அம்மாள். சற்றும் தயங்காமல்,

அகிலாத்ம குணாவாஸம் அஞ்ஞான திமிராபஹம்
ஆச்ரிதானாம் ஸுசரணம் வந்தே அனந்தார்ய தேசிகம்

– என்று ஸ்லோகத்தைச் சொல்லி, இதுவே அனந்தாழ்வானின் தனியன் என்றான் சிறுவன்.

அதன்பின் அவன்மீது நம்பிக்கை கொண்ட நடாதூர் அம்மாள், அவன் கொண்டு வந்த வெள்ளி கங்காளத்தில் உள்ள உணவைத் தன்னுடன் வந்த அடியார்க்குப் பகிர்ந்தளித்துத் தாமும் உண்டார். அவர்கள் உண்டபின், கங்காளத்தை நீங்களே மலைக்கு மேல் கொடுத்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டுச் சிறுவன் சென்று விட்டான்.

கங்களாத்தோடு நடாதூர் அம்மாளும் சீடர்களும் திருமலை மீது ஏறிச் சென்றார்கள். அதே நேரம் திருவேங்கடமலையில் ஒரே கூச்சல், குழப்பம். திருமலையப்பனின் வெள்ளிக் கங்காளத்தைக் காணவில்லை என்று ஒரே பரபரப்பு. கங்காளத்தோடு வரும் நடாதூர் அம்மாள் கோஷ்டியைப் பார்த்தவாறே, அனந்தாழ்வான் அவரிடம் விரைந்தோடி வந்து, இந்த கங்காளம் உங்களிடம் எப்படிக் கிடைத்தது என்று கேட்டார். நடந்தவற்றை எல்லாம் விளக்கினார் நடாதூர் அம்மாள்.

நான் எந்த ஒரு சீடனையும் அனுப்பவில்லை, நீங்கள் சொல்வது போல் என்னைக் குறித்துத் தனியனும் கிடையாது, அப்படி ஒரு சீடனும் எனக்குக் கிடையாது என்றார் அனந்தாழ்வான். அப்படியானால் இவை அனைத்தும் மலையப்பனின் லீலை. ஆஹா அனந்தாழ்வானே உங்கள் சீடனாக அந்த பகவானே வந்து எங்களுக்கு அருள்புரிந்து எங்கள் பசியைப் போக்கி உள்ளான், என்றார்.

இதைக் கேட்டவாறே மலையப்பனிடம் ஓடிய அனந்தாழ்வான், இறைவா என்னைக் குறித்த ஒரு தனியன் சுலோகத்தை நீயே இயற்றி உன் திருவாயால் சொன்னாயா என்று உருகினார். அதற்குப் பதில் அளித்த மலையப்பன், என் பக்தர்களை ராஜகுமாரர்கள் போல் வைத்துப் பாதுகாப்பவன் நான். ராஜகுமாரன் பசியோடு இருப்பதை ராஜா வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பாரா அதனால்தான் கங்காளத்தோடு நானே ஓடினேன் என்றார் மலையப்பன்.

இப்படி ராஜகுமாரர்களைப் போல் தனது அடியார்களைக் கருதி அவர்களைப் பேணிக் காப்பதால் வினயிதா என்று திருமால் அழைக்கப்படுகிறார். வினயிதா என்றால் பேணிக்காப்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 516-வது திருநாமம்.வினயித்ரே நமஹ என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களை ராஜகுமாரர்கள் போல் வாழவைத்து மலையப்பன் காத்தருள்வார்.

——————

517. ஸாக்ஷிணே நமஹ (Saakshiney namaha)

ஓர் ஊரில் ஓர் அண்ணனும் தங்கையும் வாழ்ந்துவந்தார்கள். இருவரும் சகோதர-சகோதரி பாசத்துக்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ்ந்தார்கள். தங்கைக்குத் திருமண வயது வந்தவாறே அவளுக்கு ஏற்ற மணமகனைத் தேடும் பணியில் அண்ணன் ஈடுபட்டார். ஆனால் தங்கையோ வேறொரு நபரை விரும்பினாள், அதைத் தன் அண்ணனிடம் சொல்லவும் தயங்கினாள். இந்நிலையில் அண்ணன் தனது தங்கைக்குத் திருமண ஏற்பாடுகளை எல்லாம் செய்து கொண்டிருக்க, அண்ணனுக்குத் தெரியாமல் தான் விரும்பிய அந்த நபரை மணந்து கொள்ள ஊரை விட்டுச் சென்று விட்டாள் தங்கை. விரும்பியவரை மணக்கவும் செய்தாள். தங்கையின் செயலால் அண்ணன் வேதனையுற்றாலும் கூட, தன்னைத் தேற்றிக் கொண்டு அவள் இருப்பிடத்தை அறிந்து அவளைக் காணச் சென்றார் அண்ணன்.

ஆனால் அங்கே போய்ப் பார்க்கையில், தங்கை தேர்ந்தெடுத்த வாழ்க்கை சிறப்பானதாக இல்லை என்பதை அறிந்தார் அண்ணன். அவளது கணவரின் வியாபாரத்தில் பல சிக்கல்களும் கடன் தொல்லைகளும் இருந்தன. இருவரும் கடுந்துயரத்தில் இருப்பதை அறிந்துகொண்டார் அண்ணன். தங்கையின் உயிருக்கும் அவளது கணவரின் உயிருக்கும் சிலரால் ஆபத்து இருப்பதையும் உணர்ந்தார் அண்ணன்.

இந்தச் சூழலில்தான் நேரடியாகத் தங்கைக்கு உதவினால் அது தங்கைக்குக் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துமோ என்று சிந்தித்தார் அண்ணன். தங்கை நன்றாக வாழவேண்டும் என்பது தானே நமது லட்சியம். நாம் செய்கிறோம் என்பதை வெளிக்காட்டாமல் தங்கையையும் அவள் குடும்பத்தையும் காக்கலாமே என்று தீர்மானித்தார் அண்ணன்.தங்கையை யாரேனும் தாக்க வந்தால் மறைமுகமாக அண்ணன் அவர்களுடன் சண்டையிட்டு வீழ்த்தினார். தங்கைக்கு நீதிமன்றத்தில் வழக்கு வந்தால் மறைமுகமாக வழக்குரைஞரை வைத்து வாதாடி வெற்றிபெற்றுத் தந்தார் அண்ணன். இப்படிப் பல வகைகளில் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தங்கையைக் காப்பாற்றி வந்தார் அண்ணன்.

எல்லாம் தானே நடக்கிறது என்று நினைத்திருந்த தங்கை, ஒரு சூழலில் யாரோ ஒருவர் நமக்கே தெரியாமல் நம்மிடம் எதையுமே எதிர்பாராமல் நமக்குத் துணைநிற்கிறார் என்று புரிந்துகொண்டாள். இப்படி உதவி செய்யக் கூடியவர் என் அண்ணனாகத் தான் இருக்க வேண்டும் என்று சிந்தித்து, அண்ணா என்று அழைத்தாள் தங்கை. அண்ணன் எதிரே வந்தார். தங்கை தனது கண்ணீரால் அண்ணனின் பாதங்களைக் கழுவினாள். அண்ணனும் அவளை ஏற்றார்.

ஸஹஸ்ரநாமத்தில் எதற்காகத் திரைக்கதை வந்தது என்று உங்களுக்குத் தோன்றலாம். இது திரைக்கதை அன்று, நம் வாழ்க்கைக் கதை. அந்தத் தங்கையை அண்ணன் வளர்த்து ஆளாக்கிப் படிக்க வைத்தது போல் இறைவன் நமக்குப் பிறவியும் ஞானமும் தந்து அந்த அறிவை வளர்க்கவும் செய்கிறார். தங்கையின் திருமணத்துக்காக அண்ணன் பல முயற்சிகள் எடுத்ததுபோலே நாம் முக்தி அடைவதற்காக ஒவ்வொரு நொடியும் இறைவன் முயல்கிறான்.

ஆனால் தங்கை தனது வாழ்வைத் தானே தேர்ந்தெடுக்க முடிவெடுத்துப் பிரிந்து சென்றது போல், நாமும் இறைவனின் கையை எதிர்பாராமல் என்னை நானே பார்த்துக் கொள்கிறேன் என்ற செருக்கோடு வாழ்கிறோம். ஆனாலும் தங்கையை அண்ணன் தேடிச் சென்றது போல், நம்மை விடாமல் பின்தொடர்ந்து வருகிறான் இறைவன்.ஒரு பிறவியில் உள்ள அண்ணன்-தங்கை உறவுக்கே இவ்வளவு பாசம் என்றால், என்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் நமக்கு அனைத்து வித உறவுமாகவும் இருக்கும் இறைவன் நம்மீது எவ்வளவு அன்பு கொண்டிருப்பான்.

தங்கைக்கு ஆபத்து ஏற்படும் போதெல்லாம் மறைமுகமாக அண்ணன் காப்பாற்றியது போல் நமக்கு ஏற்படும் எத்தனையோ ஆபத்துகளில் இருந்து தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் காத்துக்கொண்டே இருக்கிறான். ஆனால் என்றோ ஒரு நாள் இறைவன் தான் நமக்கு இத்தனை பேருதவிகளும் செய்தான் என்ற புரிதல் ஏற்படும் போது, இறைவா என்று அவன் திருவடிகளை நாம் பற்றினால், நம்மை நிச்சயம் அங்கீகரித்து ஏற்று முக்தி என்ற பேரின்பப் பெருவாழ்வைத் தந்தருள்வான் என்பதில் ஐயமில்லை.

இப்படி நம்மைக் காக்கவேண்டும் என்பதற்காக எந்நேரமும் நம்மைக் கண்காணித்துக்கொண்டே இருப்பதால் திருமால் ஸாக்ஷீ என்று அழைக்கப்படுகிறார். ஸாக்ஷீ என்றால் அனைவரையும் கண்காணிப்பவர் என்று பொருள். பிரபஞ்சத்தின் மிகப்பெரிய கண்காணிப்புப் புகைப்படக் கருவியாக விளங்கும் திருமாலை ஸாக்ஷீ என்று ஸஹஸ்ரநாமத்தின் 517-வது திருநாமம் சொல்கிறது.ஸாக்ஷிணே நமஹ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களை எப்போதும் திருமால் துணைநின்று காத்தருள்வார்.

—————————–

518. முகுந்தாய நமஹ (Mukundhaaya namaha)

நம்மாழ்வார் முக்தி அடையும் தருணம் வந்தது. அழகர் மலையில் எழுந்தருளியிருக்கும் கள்ளழகர் நம்மாழ்வார் முன்னே தோன்றி, நீங்கள் இந்த சரீரத்துடன் வைகுண்டம் வாருங்கள் என்று அழைத்தார். இறைவா என்ன சொல்கிறாய் இந்த சரீரத்தில் பற்று வைக்கக் கூடாது என்று தேறி அடியேன் முக்திக்கு வரப் பார்க்கிறேன். நீயோ இந்த சரீரத்துடன் வைகுண்டத்துக்கு வரச் சொல்கிறாயே என்று கேட்டார் நம்மாழ்வார்.

அதற்கு கள்ளழகர், ஆழ்வீர் உடல் என்பது தள்ளத் தக்கது தான். அதில் பற்று வைக்கக் கூடாதுதான். ஆனால் அந்தச் சட்டம் மனிதர்களுக்குத் தான் பொருந்தும். நான் இறைவன். எனது அடியாரான உங்களது திருமேனியில் எனக்கு மிகுந்த அன்பு உண்டு. மற்றைய மனிதர்களின் உடல் போல் சாதாரண உணவுப் பண்டங்களை உண்டு வளர்ந்த உடல் அன்றே உங்களது திருமேனி. என்னையே உண்ணும் சோறாகவும் பருகும் நீராகவும் தின்னும் வெற்றிலையாகவும் உட்கொண்ட தெய்வீகத் திருமேனி ஆயிற்றே. அதனால் உங்களைப் போன்ற மகான்களின் உடலை நான் வெறுத்துத் தள்ள மாட்டேன், விரும்பி அனுபவிப்பேன் என்றார் அழகர்.

இப்படித் தனது திருமேனியில் திருமால் செலுத்திய அன்பை நம்மாழ்வார் திருவாய்மொழியில்,

திருமாலிருஞ்சோலை மலையே திருப்பாற்கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண்திருவேங்கடமே எனது உடலே
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே

– என்று பாடுகிறார். திருமாலிருஞ்சோலை என்னும் அழகர் மலையை விடவும், திருப்பாற்கடலை விடவும் நம்மாழ்வாரின் தலையில் அதிக விருப்பம் கொண்டிருக்கிறார் திருமால். வைகுண்ட லோகத்தை விடவும், திருவேங்கட மலையை விடவும் நம்மாழ்வாரின் திருமேனியை அதிகமாக விரும்புகிறார் திருமால். இன்னதென்று சொல்ல முடியாதபடி நம்மாழ்வாரின் உயிர், மனம், மொழி, மெய் ஆகியவற்றை விரும்புகிறார் திருமால்.

அதனால் ஆழ்வாரை ஒருநொடியும் பிரியாமல் அவரோடேயே திருமால் திகழ்கிறார் என்பது பாசுரத்தின் கருத்து. இந்நிலையில் நம்மாழ்வார் திருமாலுக்கு அறிவுரை சொன்னார். இறைவா நீ தானே சாஸ்திரங்களில் சரீரத்தை விட்டு விட்டுத் தான் முக்தி அடைய முடியும் என்று விதித்திருக்கிறாய். நீ விதித்த விதியை நீயே மீறிக் கெட்ட பெயர் வாங்கிக்கொள்ளாதே என்றெல்லாம் சொன்னார் நம்மாழ்வார்.

அதற்கு திருமால், தலையிலே வாசனைக்காக வேர் சூடிக்கொள்ளும் பெண்கள் அந்த வேரில் ஒட்டிக் கொண்டிருக்கும் மண்ணையும் சேர்த்து அணிவார்கள் தெரியுமா வேருடன் மண்பற்று சேர்ந்திருந்தால் தானே முழுமையான நறுமணம் இருக்கும் அவ்வாறே உங்களைப் போன்ற ஞானிகளின் சரீரமும் ஏற்றம் மிக்கது. அந்த சரீரத்தோடு உங்களை ஏற்றுக் கொண்டால்தான் நான் பரம ரசிகன் என்று அர்த்தம் என்றார்.

என் மீது உனக்கு இவ்வளவு அன்பு இருக்கிறது என்றால் ஏன் இத்தனை நாள்கள் நான் பிரார்த்தித்தும் எனக்கு முக்தி அளிக்காதிருந்தாய் என்று கேட்டார் நம்மாழ்வார். அதற்கு அழகர், நீங்கள் முதல் பாட்டு பாடியதுமே நான் முக்தி அளித்திருந்தால், நான்கு வேத சாரமான நான்கு பிரபந்தங்கள் உங்கள் திருவாயில் இருந்து எப்படித் தோன்றியிருக்கும் உங்களைக் கொண்டு உலகைத் திருத்தவே இத்தனை காலம் உங்களை உலகில் வைத்தேன் என்று விடையளித்தார்.

அப்படி என்னைக் கொண்டு உலகை நீ திருத்த நினைத்தால், நான் மற்றவர்க்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். எனவே தள்ளத் தக்க எனது உடலை விட்டு விட்டுத் தான் உன்னிடம் வருவேன் என்றார் நம்மாழ்வார். அதைத் திருமாலும் ஏற்று நம்மாழ்வாருக்கு முக்தி அளிக்க,

சூழ்விசும்பு அணிமுகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரை கையெடுத்து ஆடின
ஏழ்பொழிலும் வளம் ஏந்திய என்
அப்பன்வாழ்புகழ் நாரணன் தமரைக் கண்டு உகந்தே

– என்று பாடியபடி நம்மாழ்வாரை சரீரத்தை விட்டு வைகுண்டலோகத்தை அடைந்தார்.

முக்தியை விரும்பித் தன் திருவடிகளைத் தஞ்சமாகப் பற்றிய நம்மாழ்வாரைப் போன்ற அடியார்களுக்கு முக்தி அளிப்பதால், திருமால் முகுந்த என்று அழைக்கப்படுகிறார். முகுந்த என்றால் முக்தி அளிப்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 518-வது திருநாமம்.முகுந்தாய நமஹ என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களுக்கு வைகுண்டப் பெருவாழ்வைத் திருமால் தந்தருள்வார்.

————————-

519. அமித விக்ரமாய நமஹ (Amitha Vikramaaya namaha)

ராவணனின் தாயான கைகசிக்குக் கும்பீநசி என்றொரு தங்கை இருந்தாள். அவளும் ராவணனின் தந்தையான விச்ரவஸ் முனிவரையே மணந்தாள். கும்பீநசிக்கும் விச்ரவஸ்ஸுக்கும் பிறந்த மகன் கரன் என்ற அரக்கன். கரன் ராவணனுக்குத் தம்பி முறை உறவினன்.தன் தங்கை சூர்ப்பணகையைத் தண்டகாரண்யத்தில் உள்ள ஜனஸ்தானம் என்னும் பகுதியில் வசிக்கச் செய்த ராவணன், அவளுக்குப் பாதுகாப்பாகக் கரனை நியமித்து வைத்தான். சூர்ப்பணகை கட்டளை இட்டபடி நடக்க வேண்டும் என்று கரனுக்கு உத்தரவிட்டிருந்தான் ராவணன். அதன்படி சூர்ப்பணகையின் காவலனாக ஜனஸ்தானத்தில் பதினான்காயிரம் அரக்கர்களோடு வசித்துவந்தான் கரன்.

ஒருநாள் திடீரெனக் காதும் மூக்கும் அறுபட்ட நிலையில் கரனிடம் ஓடி வந்தாள் சூர்ப்பணகை. என்ன ஆயிற்று என்று பதறிப் போய்க் கேட்டான் கரன். அதற்கு சூர்ப்பணகை, வனத்துக்கு வந்த இரண்டு மனிதர்களோடு ஒரு கட்டழகி நின்றிருந்தாள். அவளை ராவணனுக்காக நான் எடுத்துச் செல்ல முயன்றேன். அப்போது அவர்கள் என்னை இப்படிச் செய்துவிட்டார்கள் என்று கூறினாள்.

அதைக் கேட்டுக் கடும் கோபம் கொண்ட கரன் போருக்கு எழுந்தான். அவனிடம் இருந்த பதினான்கு அரக்க வீரர்கள் அவனுக்கு முன் எழுந்து, இதற்காக நீங்கள் போக வேண்டாம் இப்பணியை எங்களிடம் தாருங்கள் அந்த மனிதர்களை நாங்கள் அழித்துவிட்டு வருகிறோம் என்று சொல்லிப் புறப்பட்டார்கள்.அந்தப் பதினான்கு பேரும் ராமனுடன் போரிட்டு மாண்டுபோனார்கள். இந்தச் செய்தி கரனின் காதுக்கு எட்டியவாறே, தூஷணன் திரிசிரஸ் உள்ளிட்ட தனது சேனாபதிகளோடு கூடிய பெரும் சேனையைத் திரட்டிக் கொண்டு ராமனை எதிர்த்துப் போர் புரியப் புறப்பட்டு வந்தான் கரன்.

தீய சகுனங்கள் தென்படுவதாக அகம்பனன் என்ற அரக்கன் எச்சரித்த போதும், அதைப் புறக்கணித்து விட்டுப் பதினான்காயிரம் அரக்கர்களை உள்ளடக்கிய மாபெரும் சேனையோடு ராமனைத் தாக்க அவன் இருப்பிடத்துக்கு வந்தான் கரன்.

அரக்கர் சேனை வருவதைப் பார்த்த ராமன், லக்ஷ்மணனைச் சீதைக்குக் காவலாக வைத்துவிட்டுத் தனி ஒருவனாகப் போருக்குப் புறப்பட்டான். சிங்கத்தைப் பல யானைகள் சூழ்வது போல் அரக்கர் சேனை ராமனைச் சூழ்ந்துகொண்டது. அரக்கர் சேனை தன்னைச்சுற்றி வளைத்தவாறே, ராமன் தனது வில்லை வளைத்தான்.அந்த நொடி முதல் ராமனின் வில்லில் இருந்து அம்புமழை புறப்படத் தொடங்கியது.

வானத்தன கடலின்புற வயலத்தன மதிசூழ்
மீனத்தன மிளிர்குண்டல வதனத்தன மிடல்வெங்
கானத்தன மலையத்தன திசைமுற்றிய கரியின்
தானத்தன காகுத்தன சரமுந்திய சிரமே

மேலுள்ள வரிகள் போல் அரக்கர்களின் தலைகள் வானிலும் கடலிலும் நட்சத்திர மண்டலத்திலும் காடுகளிலும் மலைகளிலும் அஷ்ட திக் கஜங்களிடமும் போய் விழும்படி ராமன் பாணங்கள் வீசி, தனி ஒருவனாக அத்தனை அரக்கர்களையும் அழித்தொழித்தான்.கடைசியில் கரன் ஒருவன் மட்டுமே மீதம் இருந்தான். அவன் மாயப்போர் புரிந்து தனது பாணங்களால் ராமனின் திருமேனியையே மறைத் விட்டான். ஆனால் ராமனோ தளராமல், தன் கையைப் பின்னே நீட்டினான். ராமன் வருணனிடம் கொடுத்து வைத்திருந்த விஷ்ணு தனுஸ்சை வருணன் ராமனிடம் கொண்டு வந்து சமர்ப்பித்தான்.

அதில் பாணத்தைப் பூட்டிக் கரனைத் தாக்கினான் ராமன். ராவணனின் வலக்கரம் அறுந்து கீழே விழுவது போல் கரன் கீழே விழுந்து மாண்டு போனான். வெற்றி வாகை சூடியவனாக, விஜயராகவனாக ராமன் திரும்ப வர, சீதாதேவி ஓடிப்போய் ராமனை ஆரத் தழுவி அவனது வெற்றியைக் கொண்டாடினாள்.இப்படி ஆயிரக்கணக்கில் அரக்கர்கள் வந்தாலும் தனி ஒருவனாக இருந்து அவர்களை அழிக்கும் அளவுக்கு, அந்த வீரத்தை நாம் ரசித்து, படித்து, கேட்டு, சொல்லி, மகிழ்ந்து கொண்டாடும் அளவுக்கு, எல்லையில்லாத சக்தி படைத்தவராகத் திருமால் விளங்குவதால், அவர் அமிதவிக்ரம என்று அழைக்கப்படுகிறார். அமித என்றால் அளவில்லாத, விக்ரம என்றால் சக்தி. அமிதவிக்ரம என்றால் அளவில்லாத சக்தி படைத்தவர். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 519-வது திருநாமம். அமிதவிக்ரமாய நமஹ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் திருமால் சக்தி கொடுத்து அருள்வார்.

————————–

520. அம்போநிதயே நமஹ (Ambho Nidhaye namaha)

(திருநாமங்கள் 520-523 பாதாள லோகத்தில் இருந்தபடி மொத்தப் பிரபஞ்சத்தையும் தாங்கிக் கொண்டிருக்கும் கூர்ம மூர்த்தியின் பெருமைகள்) வீர சிகாமணி பல்லவராயன் என்ற மன்னன், ஸ்ரீபராசர பட்டர் என்ற ஆசார்யரை வந்து அடிபணிந்தான். சுவாமி, நான் ஒரு மன்னனாக இருக்கிறேன். பல ராஜ்ஜியப் பணிகளைக் கவனிக்க வேண்டியுள்ளது. இயந்திரத்தனமாக வாழும் அடியேனுக்கு இறைவனை நினைக்கவே நேரம் இல்லை.

இறைவனை நான் நினைப்பதற்கோ, இறைவன் என்னைக் காப்பதற்கோ எளிமையான வழி இருந்தால் சொல்லுங்கள் என்று வேண்டினான் பல்லவராயன். அதற்குப் பராசர பட்டர், கடற்கரை வெளியை நினைத்திரும் என்று பதில் அளித்தார். பராசர பட்டரின் பதிலால் அதிர்ச்சி அடைந்த பல்லவராயன், கடற்கரையை நினைப்பதால் என்ன பலன் என்று கேட்டான். அப்போது பராசர பட்டர் கீழ்க்காணும் வரலாற்றைச் சொல்லத் தொடங்கினார்.

ராமனும் லட்சுமணனும் வானரச் சேனையோடு இலங்கை நோக்கிப் புறப்பட்டுச் சேதுக்கரையை வந்தடைந்தார்கள். இனி கடலைக் கடப்பதற்கு என்ன வழி என்பதை நாளை சிந்திப்போம் என்று முடிவெடுத்து விட்டு அன்றிரவு எல்லோரும் உறங்கச் சென்று விட்டார்கள்.அச்சமயம் வானர வீரர்கள் ராம லக்ஷ்மணர்களிடம், நீங்கள் இருவரும் நன்றாக உறங்குங்கள். நாங்கள் விழித்திருந்து இரவு முழுவதும் காவல் காக்கிறோம் என்று சொல்லி இருந்தார்கள். ஆனால் நடந்தது என்னவென்றால், நடந்து வந்த களைப்பில் மொத்த வானரச் சேனையும் உறங்கி விட்டது. அத்தனை பேரும் உறங்கினாலும் கூட, இரவு முழுவதும் ராமனும் லக்ஷ்மணனும் கண் விழித்திருந்து வில்லும் கையுமாக வானரச் சேனையைச் சுற்றிச் சுற்றி வந்து எழுபது வெள்ளம் வானரச் சேனையையும் பாதுகாத்தார்கள்.

அனுமன் நடுவில் சற்றே விழித்துக் கொண்டு ராமனிடம், நீங்கள் ஏன் இப்படி விழித்திருந்து சிரமப்பட வேண்டும் என்று கேட்டார். அதற்கு ராமன், எப்போது இந்த வானரச் சேனை என்னை நம்பி வந்து விட்டதோ இனி அவர்களைக் காக்கும் முழு பொறுப்பும் என்னுடையது என்று பதில் அளித்தான்.இச்சம்பவத்தை நினைவுகூர்ந்த பராசர பட்டர், பல்லவராயனிடம், அந்தச் சேதுக் கடற்கரையைத் தான் நினைக்குமாறு உன்னை அறிவுறுத்தினேன். வானரர்கள் தாங்கள் ராமனைப் பாதுகாக்கப் போவதாக நினைத்துக் கொண்டு வந்தார்கள். ஆனால் அவர்கள் உறங்கிய போதும் அவர்களைக் காத்து நின்றவன் ராமன் என்பதே உண்மை. அதுபோலத் தான் நீயும் விழித்திருக்கும் நேரத்தில் எதையேனும் நினைத்து இறைவனின் அருளை நாடலாம் என நினைக்கிறாய். ஆனால் நீ உறங்கிக் கொண்டிருக்கும் போது கூட இறைவன் உன் கூடவே தான் இருக்கிறான், உன்னைக் காத்துக் கொண்டு தான் இருக்கிறான்.

மேலும், ராஜ்ஜியப் பணிகள் நிறைய இருப்பதாகச் சொன்னாயே. அவற்றுள் எதையுமே நீ செய்யவில்லை. உன்னைக் கருவியாகக் கொண்டு திருவரங்கநாதன் தான் அத்தனையும் செய்து கொண்டிருக்கிறான். உனக்கு மேல் ஒரு சக்கரவர்த்தி இருந்து உன்னைத் தாங்குகிறார். அவனுக்கு மேல் இந்திரன் இருந்து கொண்டு மூவுலகை ஆள்கிறான். அந்த இந்திரனுக்கும் மேல் பிரம்மா இருந்து கொண்டு இந்திரனுக்கு ஆணைகள் இடுகிறார்.

அந்த பிரம்மாவோடு சேர்த்துப் பதினான்கு உலகங்களையும் ஆதிசேஷன் தாங்குகிறார் என்று சாஸ்திரங்கள் மூலம் நாம் அறிகிறோம்.அப்படியானால் ஆதிசேஷன் தாங்கும் பிரபஞ்சத்தில் பூலோகத்தில் பாரததேசத்தில் பேரரசனுக்கு உட்பட்ட உனது சிற்றரசு என்பது எம்மாத்திரம் என்று நினைத்துப் பார். உன் கடமையைச் செய்யாமல் சோம்பேறியாக இருக்கச் சொல்லவில்லை. ஆனால் நான் பெரியவன் என்ற கர்வம் மட்டும் வந்துவிடவே கூடாது. அனைத்தையும் தாங்குபவர் ஆதிசேஷன் என்றால், அந்த ஆதிசேஷனுக்கும் கீழே திருமால் கூர்ம மூர்த்தியாக இருந்து, ஆதிசேஷனோடு சேர்த்து மொத்தப் பிரபஞ்சத்தையும் இயக்கி வருகிறார் தெரியுமா. அவரால் தாங்கப்பட்டு நீ செயல்படுகிறாய் என்பதைப் புரிந்துகொள் என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

இன்றும் பெருமாள் கோவில்களில் உள்ள சேஷவாகனங்களின் கீழே கூர்ம மூர்த்தி ஆமை வடிவில் எழுந்தருளி இருப்பதைத் தரிசிக்கலாம். இப்படிப் பாதாள ஜலத்தில் தன்னை இருத்திக் கொண்டு ஆதிசேஷனோடு உலகங்களைத் தாங்கும் கூர்ம மூர்த்தி அம்போநிதி என்று அழைக்கப்படுகிறார். அம்பஸ் என்றால் தண்ணீர், அதாவது பாதாளஜலம். நிதி என்றால் இவ்விடத்தில் தன்னை இருத்தியவர் என்று பொருள். அம்போநிதி என்றால் பாதாள ஜலத்தில் தன்னை இருத்திய கூர்ம மூர்த்தி என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 520-வது திருநாமம்.
`அம்போநிதயே நமஹ’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களைத் திருமால் தாங்கிப் பிடித்துக் காத்தருள்வார்.

————————

521. அனந்தாத்மனே நமஹ (Ananthaathmaney namaha)

1000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் அவதரித்த ஆதிசேஷனின் அம்சமான ராமாநுஜர், அனைவரும் இறைவனை அடையலாம் என்ற உயர்ந்த நெறியை உலகுக்கு உணர்த்தினார். ராமாநுஜர் திவ்ய தேச யாத்திரைக்குச் சென்ற போது, தமிழகத்தின் தென்கோடியில் உள்ள திருக்குறுங்குடி என்ற திவ்ய தேசத்தை அடைந்தார்.

அந்தத் திருக்குறுங்குடியில் கோவில் கொண்டுள்ள திருக்குறுங்குடி நம்பிபெருமாள், ராமாநுஜரைத் தன் திருக்கோவிலுக்கு வரவேற்று, அவரைப் பார்த்து, ராமாநுஜரே, நான் பல அவதாரங்கள் எடுத்து, உபதேசங்கள் செய்து, நடந்து காட்டி, பல முயற்சிகளை எடுத்தும் மக்கள் யாரும் திருந்துவதாகத் தெரியவில்லை. ஆனால் நீங்கள் வந்து பூமியில் அவதாரம் செய்து வெகு விரைவில் எல்லாரையும் திருத்திவிட்டீர்களே, உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன என்று கேட்டார்.

பகவானே, நீ அறியாததில்லை. எல்லாம் அறிந்தும் லீலைக்காக என்னிடம் நீ கேட்கிறாய். அப்படியானால் உன் லீலையில் நானும் பங்கேற்கிறேன். ரகசியத்தை அறிய வேண்டும் என்றால் இப்படிப் போகிற போக்கில் கேட்கலாமா. எனக்கு ஆசாரியன் என்ற ஸ்தானத்தைத் தந்து விட்டு நீ சிஷ்யனாக அமர்ந்துகொண்டால், அந்த ரகசியத்தைச் சொல்கிறேன் என்று விடையளித்தார் ராமாநுஜர்.

உடனே திருக்குறுங்குடி நம்பி ஆசார்ய சிம்மாசனத்தை ராமாநுஜருக்கு அளித்தார். தான் சிஷ்யனாகக் கீழே நின்று கொண்டார். தனது ஆசார்யனான பெரிய நம்பிகள் அந்த ஆசனத்தில் அமர்ந்திருப்பதாக எண்ணி அந்த ஆசனத்தை விழுந்து வணங்கினார் ராமாநுஜர். அதன்பின் தான் அந்த ஆசனத்தில் பணிவோடு ஏறி அமர்ந்து கொண்டார். பகவானே, இப்போது அதே கேள்வியைக் கேள், பதில் சொல்கிறேன் என்றார் ராமாநுஜர். திருக்குறுங்குடி நம்பியும் கேட்க, திருமந்திரம் என்னும் எட்டெழுத்து மந்திரத்தையும், த்வயம் எனப்படும் இரண்டு வரிகள் கொண்ட மந்திரத்தையும் ஆசார்ய ஸ்தானத்தில் இருந்தபடிப் பெருமாளுக்கு ராமாநுஜர் உபதேசம் செய்தார். அதைத் தொடர்ந்து ராமாநுஜர், இந்த இரண்டு மந்திரங்களையும் உபதேசம் செய்து தான் மக்களைத் திருத்தினேன் என்று பெருமாளிடம் கூறினார்.

நான் இதைச் சொல்லிப் பார்த்தேன், ஆனால் மக்கள் திருந்தவில்லையே என்று பெருமாள் கேட்க, ராமாநுஜர், பகவானே, நீ சொல்வதற்கும் அடியேன் சொல்வதற்கும் வேறுபாடு உள்ளது. நீ பெரியவன் என்பது தான் உண்மை. ஆனால் நீயே உன் வாயால் நான் பெரியவன் என்று சொன்னால் அதை இந்தக் கலியுக மக்கள் ஏற்க மாட்டார்கள். நான் உபதேசிக்கும் போது, அவன் பெரியவன் என்று உன்னைப் பற்றிச் சொன்ன போது மக்கள் ஏற்று விட்டார்கள். தானே தன் பெருமையைப் பேசுவதை விட, வேறொரு நபர் பேசுவது தானே பொருத்தமாக இருக்கும் என்று விளக்கினார்.

ஆஹா என்று ராமாநுஜரின் விளக்கத்தைப் பாராட்டினார் திருக்குறுங்குடி நம்பி. அந்தப் பெருமாளைத் தனது சிஷ்யராக அங்கீகரித்த ராமாநுஜர், வைஷ்ணவ நம்பி என்ற திருநாமத்தையும் அந்தப் பெருமாளுக்கு வழங்கினார் என்பது வரலாறு.எல்லாம் ஆனபின் சிம்மாசனத்தில் இருந்து கீழே இறங்கிய ராமாநுஜர், இறைவா இப்போது உனக்குத் திருப்தி ஏற்பட்டிருக்கும் என நம்புகிறேன். என்னை ஆசார்ய சிம்மாசனத்தில் அமர்த்தி அழகு பார்க்க நினைத்தாய். உன் ஆசைக்காக அடியேனும் செய்தேன். இனி என் கருத்தைச் சொல்கிறேன் கேள். எட்டெழுத்து மந்திரம், த்வய மந்திரம் ஆகியவற்றை உலகுக்கு உரைத்தவன் நீ. உபதேசம் செய்வதற்குரிய ஞானத்தை அடியேனுக்குத் தந்தவன் நீ.

அடியேனை ஒரு கருவியாகப் பயன்படுத்தி அடியேன் மூலம் பல செயல்களை நிகழ்த்தியவன் நீ. உள்ளிருந்து நீ கொடுத்த சக்தி, ஞானம் உள்ளிட்டவற்றைக் கொண்டு நீயே எல்லாம் நிகழ்த்தி விட்டு, ஏதோ நானே செய்தது போல் என்னைக் கொண்டாடுகிறாயே, உன் எளிமையையும் லீலையையும் என்னவென்று சொல்வேன் என்று நம்பியிடம் சொன்னார்.

அதற்கு நம்பி, அப்படியில்லை, நீங்களே ஆதிசேஷன் தானே. உங்களுக்கு இல்லாத ஆற்றலா என்று ராமாநுஜரிடம் கேட்டார். ராமாநுஜரோ, பகவானே சரியான உதாரணம் சொன்னாய். நான் ஆதிசேஷனாக இருந்து 14 உலகங்களைத் தாங்குகிறேன் என்றால், அந்த ஆதிசேஷனுக்குள்ளும் அந்தர்யாமியாக இருந்து சக்தி தருபவன் நீ தானே. ஆதிசேஷனுக்குக் கீழே கூர்ம மூர்த்தியாக இருந்து தாங்கிக் கொண்டிருப்பவன் நீ. எனவே அனைத்துக்கும் நீயே காரணம் என்றார்.

இப்படி ஆதிசேஷனுக்குள்ளும் ஆத்மாவாக இருந்து அவரோடு சேர்த்து அவர் சுமக்கும் பிரபஞ்சத்தையும் தாங்கும் கூர்ம மூர்த்தி அனந்தாத்மா என்று அழைக்கப்படுகிறார். அனந்தன் என்பது ஆதிசேஷனின் திருநாமங்களுக்குள்ளும் ஒன்று. அனந்தாத்மா என்றால் ஆதிசேஷனுக்கு ஆத்மாவாக இருந்து தாங்குபவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின்
521-வது திருநாமம்.

`அனந்தாத்மனே நமஹ’ என்று தினமும் சொல்லி வந்தால், நமக்குச் செருக்கு, கர்வம் ஏற்படாதபடிக் கூர்ம மூர்த்தி நம்மைத் தாங்கிப் பிடித்துச் சரியான வழியில் வழிநடத்துவார்.

—————————-

522. மஹோததிசயாய நமஹ (Mahodhadhishayaaya namaha)

வடுவூர் ஸ்ரீராமன் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள் 1930களில் வடுவூரில் வசித்துவந்தார். அவரது தந்தை வாங்கி இருந்த பல கடன்கள் அடைக்கப்படாமல் இருந்தபடியால், அவரது ஒரே மகன் என்ற முறையில் வடுவூரில் இருந்த வீடு, தோட்டம் என அனைத்தையும் விற்றுக் கடன்களை அடைத்து விட்டார் ஸ்ரீ நிதி சுவாமிகள். இனி வடுவூரிலிருந்து இடம்பெயர்ந்து செல்ல வேண்டும். அவருக்கோ வடுவூர் ராமனை விட்டுப் பிரிந்து போக மனமேயில்லை. வேறு வழியில்லாமல், கடனை அடைப்பதற்காக வீட்டை விற்க நேரிட்டு விட்டது. ராமனிடம் இருந்து விடைபெற்றுச் செல்வதற்காகத் திருக்கோவிலுக்குள் சென்றார் ஸ்ரீ நிதி சுவாமிகள்.ராமனைப் பார்த்து ஒரு ஸ்லோகம் இயற்றி அதை விண்ணப்பித்தார்.

க்ருஹ க்ஷேத்ர ஆராமா ஜனக சரண ஸ்பர்ச ஸுபகா:
த்வயா மத்தோ நீதா மனுகுல பதே கிம் மம தத:
த்ரிபங்கீ ஸம்ஸேவ்யம் மதுர மதுரம் தே வபுரிதம்
மதந்தஸ் ஸம்ஸக்தம் ந கலு பரிஹர்த்தும் ப்ரபவஸி

ராமா, என்னிடம் இருந்து எல்லாவற்றையும் பறித்து விட்டாயே. என் தந்தையின் திருவடி ஸ்பரிசம் பட்ட வீடு, நிலம், தோட்டம் எல்லாம் என்னை விட்டுச் சென்று விட்டன. ஆனாலும் இதற்காக எல்லாம் நான் கவலைப் படப் போவதில்லை. ஏனென்றால் இங்கே வடுவூரில் அழகாக வளைந்தபடி எழுந்தருளியிருக்கும் உனது இந்த வடிவம் என் நெஞ்சை விட்டு நீங்காமல் என்னிடம் இருந்து கொண்டே இருக்கிறது. ராமா, உன்னிடம் ஒரு சவால் விடுகிறேன்.

என்னிடமிருந்து வீட்டையும் நிலத்தையும் தோட்டத்தையும் பறித்த நீ, முடிந்தால் என் உள்ளத்தில் இருக்கும் உன் உருவத்தைப் பறித்துக் கொள் பார்க்கலாம். நீயே நினைத்தாலும் என் மனதிலிருந்து உனது வடிவம் நீங்காது என்று சவால் விட்டு விட்டு வடுவூரில் இருந்து புறப்பட்டார். சுமார் நாற்பது ஐம்பது வருடங்கள் கடந்தன. ஸ்ரீ நிதி சுவாமிகளின் மகன்கள் நன்றாக வளர்ந்து, வசதி வாய்ப்பு பெற்றவாறே, 1986-ம் ஆண்டு வடுவூரில் விற்ற வீட்டை மீண்டும் வாங்க முயன்றார்கள். இத்தனை வருடங்கள் ஆகியும் அந்த வீடு மாறாமல் அப்படியே இருந்தது. வீட்டின் சொந்தக்காரரும் ஸ்ரீநிதி சுவாமிகளுக்கே வீட்டை விற்கச் சம்மதம் தெரிவித்தார்.

அதன்பின் அவ்வீட்டை வாங்கி, வடுவூர் ராமர்கோவிலுக்கு மிக அருகில் இருக்கும் அதே வீட்டுக்குக் குடிவந்து, தினந்தோறும் வடுவூர் ராமனின் புன்னகையிலும் அழகிலும் ஈடுபட்டுப் புன்னகை ராமாயணம் இயற்றினார் ஸ்ரீநிதி சுவாமிகள். இதில் வியப்பு என்னவென்றால் இத்தனை வருடங்கள் வீட்டைப் பாதுகாத்து மீண்டும் ஸ்ரீ நிதி சுவாமிகளிடமே வழங்கியவர் பெயர் திரு.கோதண்டராமன்.

இந்த லீலையின் வாயிலாக மற்ற செல்வங்கள் வரும், போகும். ஆனால் இறைவன் தான் நிரந்தரமான செல்வம், அவன் என்றுமே தன் அடியார்களை விட்டுப் போவதில்லை என்பதை வடுவூர் ராமன் உணர்த்தி விட்டான். அதுபோலத்தான் பிரளயக் காலத்திலும் கூட, மொத்தப் பிரபஞ்சமும் பிரளய வெள்ளத்தில் மூழ்கிவிடும். பிரபஞ்சமே அழிந்த பின்னும் கூட, அதைக் கீழே இருந்து தாங்கும் ஆதிசேஷனும் கூர்ம மூர்த்தியும் நிரந்தரமாக இருப்பார்கள். அந்த ஊழி வெள்ளத்தில் ஆதிசேஷனைப் படுக்கையாக்கி அவர் மீது பள்ளி கொண்டிருப்பாராம் கூர்ம மூர்த்தி. மொத்தப் பிரபஞ்சமும் அழிந்தாலும், தனது படுக்கையான ஆதிசேஷனும், கூர்ம மூர்த்தியான தானும் அழிவதில்லை என்று பகவான் இதன்மூலம் உணர்த்துகிறார்.

இப்படி ஊழி வெள்ளத்தில் ஆதிசேஷப் படுக்கையில் பள்ளிகொண்டிருக்கும் கூர்ம மூர்த்தி மஹோததிசய என்று அழைக்கப்படுகிறார். மஹோததி என்றால் ஊழிக்கடல். சய என்றால் சயனித்திருப்பவர். மஹோததிசய என்றால் பிரளயக் கடலில் பள்ளி கொண்டிருப்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 522-வது திருநாமம். `மஹோததிசயாய நமஹ’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு பக்தி, ஞானம், வைராக்கியம் உள்ளிட்ட நீங்காத செல்வங்கள் நிறையும்படித் திருமால் அருள்புரிவார்.

——————————

523. அந்தகாய நமஹ (Anthakaaya namaha)

ஓர் ஊரில் ஒரு விவசாயி வாழ்ந்து வந்தார். அவருக்கு ஒரே மகன். அந்த மகன் பொறுப்பில்லாமல் கேளிக்கைகளிலேயே ஈடுபட்டு வந்தான். விவசாயத் தொழிலின் பெருமைகளை எல்லாம் தந்தை எடுத்துச் சொல்லி அறிவுறுத்தினாலும் கூட அதையெல்லாம் மகன் கேட்பதாக இல்லை. ஒருநாள் தந்தை மகன் கையில் கலப்பை, கதிர் அரிவாள் போன்ற கருவிகளைத் தந்து வயலுக்கு அனுப்பி வைத்தார். ஆனால் மகன் கதிர் அரிவாளைக் கொண்டு கையில் வெட்டுக் காயம் ஏற்படுத்திக் கொண்டு வந்தானாம் மகன். கதிரை அறுக்க அரிவாள் தந்தால் கையிலே காயம் ஏற்படுத்திக் கொள்கிறாயே என்று தந்தை அவனுக்கு அறிவுரை வழங்கினார். ஆனாலும் மகன் அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை.

மறுநாள் தந்தை மகனை வயலுக்கு அனுப்பி வைத்தால், கலப்பையைக் காலில் போட்டுக் கொண்டு காலிலே காயத்தோடு வீடு வந்து சேர்ந்தான். நிலத்தை உழுவதற்குக் கலப்பையைப் பயன்படுத்தாமல் இப்படிக் காலில் போட்டுக் கொள்வதா என்றெல்லாம் தந்தை புலம்பினார். மகன் அதையும் கண்டுகொள்ளவில்லை. ஒருநிலையில் தந்தை மகனின் மனம் மாற ஒரு வருட காலம் அவகாசம் தருவோம் என்று கருதி, அவனிடமிருந்து கலப்பையையும் அரிவாளையும் வாங்கி வைத்து விட்டார். மீண்டும் ஊர்சுற்றத் தொடங்கினான் மகன். யாராவது விவசாயத் தொழில் பார்க்கவில்லையா என்று அவனிடம் விசாரித்தால், என் தந்தை இரக்கமில்லாதவர். என்னிடமிருந்து கதிர் அரிவாளையும் கலப்பையையும் பிடுங்கி வைத்துக்கொண்டார். அதனால்தான் என்னால் வேளாண்மைப் பணிக்குச் செல்ல முடியவில்லை என்று சொல்வானாம் அந்த மகன்.

இது நியாயமா, இவனிடம் கலப்பையைத் தந்தால் காலைக் காயப்படுத்திக் கொள்கிறான். அரிவாளைத் தந்தால் கையைக் காயப் படுத்திக் கொள்கிறான். அதனால்தானே இதற்கு ஓர் ஓய்வு தரும்விதமாகத் தந்தை இவற்றை வாங்கி வைத்தார். கொஞ்ச காலம் கழித்து மகனின் மனம் மாறினால், மீண்டும் அவனிடம் அதை அவர் வழங்கத்தானே போகிறார். அதுபோலத் தான் இறைவனும்.

கலப்பை, கதிர் அரிவாள் போல், நம்மிடமும் உடல், புலன்கள், ஞானம் உள்ளிட்ட கருவிகளைத் தந்து இந்த பூலோகம் என்னும் நிலத்துக்கு நம் தந்தையான திருமால் நம்மை அனுப்பி வைக்கிறார். நாம் உடல், புலன்கள், ஞானம் உள்ளிட்ட கருவிகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு முக்தி என்ற பயிரை அறுவடை செய்வோம் என்ற எதிர்பார்ப்புடன் நம்மை அனுப்பி வைக்கிறார் திருமால்.

ஆனால் நாமோ அந்த மகனைப் போலவே தவறான வழியில் கருவிகளைப் பயன்படுத்தி விடுகிறோம். இந்த உடலையும் புலன்களையும் அறிவையும் கொண்டு செய்யக் கூடாத செயல்களில் நாம் ஈடுபடுகிறோம். அதனால் தான் ஒருநிலையில், நாம் செய்யும் பாபங்களுக்குத் தற்காலிகமாகவாவது ஓர் ஓய்வு அளிப்பதற்காகப் பிரளயத்தை ஏற்படுத்துகிறார் இறைவன். அந்த விவசாயி கருவிகளை மகனிடமிருந்து பறித்து வைத்தது போல், பிரளயத்தில் நம் உடல் ஞானம் புலன்கள் எல்லாவற்றையும் தற்காலிகமாக நம்மிடமிருந்து பறித்து வைக்கிறார் திருமால். அதன்பின் மீண்டும் இந்த உடலையும் புலன்களையும் ஞானத்தையும் தந்து மீண்டும் உலகைப் படைக்கிறார் திருமால்.

இப்படி நாம் பாபங்கள் செய்வதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்காகப் பிரளயத்தை ஏற்படுத்துகிறார் பாதாள லோகத்தின் கீழே எழுந்தருளியிருக்கும் கூர்ம ரூபியான திருமால். எனவேதான் அவர் அந்தக என்று அழைக்கப்படுகிறார். அந்தக என்றால் முடிவை ஏற்படுத்துபவர். இந்தப் படைப்புச் சுழற்சிக்குப் பிரளயம் என்ற தற்காலிக முடிவை ஏற்படுத்தும் கூர்மமூர்த்தி அந்தக. அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 523-வது திருநாமம்.`அந்தகாய நமஹ’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் தம் உடல், புலன்கள், அறிவு ஆகியவற்றை நல்வழியில் செலுத்தும்படிக் கூர்ம மூர்த்தி வழிகாட்டுவார்.

————————–

  1. அஜாய நமஹ (Ajaaya namaha)

ஒரு பெரிய பட்டிமன்றம். பள்ளி ஆசிரியருக்கு இறையருள் கிட்டுமா, கல்லூரிப் பேராசிரியருக்கு இறையருள் கிட்டுமா என்பதே தலைப்பு. இரு தரப்புகளிலும் மாறி மாறிப் பல வாதங்களை முன்வைத்து வருகிறார்கள்.அப்போது பள்ளி ஆசிரியர் தரப்பில் பேச வந்தவர் ஸ்ரீமந் நாராயணீயத்தில் அஜாமிளன் சரிதத்தில் இடம்பெற்றுள்ள,

ந்ருணாம் அபுத்த்யாபி முகுந்த கீர்த்தனம்
தஹதி அகௌகான் மஹிமா அஸ்ய தாத்ருச:

என்ற சுலோகத்தை மேற்கோள் காட்டி, பகவானின் திருநாமத்தைத் தெரிந்து சொன்னாலும் பலன் உண்டு. தெரியாமல் சொன்னாலும் பலன் உண்டு. நாங்கள் பள்ளியில் வருகைப் பதிவேட்டில் உள்ள மாணவர்களின் பெயர்களைப் படிக்கும் போதெல்லாம் எத்தனையோ முறை கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா என்று மாணாக்கரின் பெயர்களைச் சொல்லி அழைத்திருப்போம். அல்லது லக்ஷ்மி, கமலா, மைதிலி, ருக்மிணி என்று மாணவியரின் பெயர்களைச் சொல்லி அழைத்திருப்போம். அவற்றை எல்லாம் திருமகளும் திருமாலும் தங்களைக் குறித்துச் செய்யப்பட்ட நாம சங்கீர்த்தனமாக எண்ணி அருள்புரிவார்கள்.

ஆனால் கல்லூரி ஆசிரியருக்கு இந்தப் பாக்கியம் கிட்டாது. ஏனெனில் வருகைப் பதிவேட்டைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டு, ஒன்று, இரண்டு, மூன்று என்ற எண்ணிக்கையைப் படித்துத் தான் மாணவர்களின் வருகையைப் பதிவிடுவாரே ஒழிய பெயர்களைப் படிக்கும் வழக்கம் கல்லூரியில் இல்லையே. அதனால் பள்ளி ஆசிரியரே இறையருளுக்குப் பாத்திரம் ஆவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் என்று பேசி விட்டு அமர்ந்து கொண்டார்.

அடுத்துப் பேச வந்த கல்லூரிப் பேராசிரியர், பள்ளி ஆசிரியரின் கருத்தை முழுமையாக ஏற்கிறேன். வருகைப் பதிவேட்டில் அவர்கள் தான் மாணவ-மாணவியரின் பெயர்களைப் படிக்கிறார்கள். கல்லூரிப் பேராசிரியர்களான நாங்கள் எண்ணிக்கைகளைத் தான் வாசிப்போம். ஆனால் எண்ணிக்கைகளை வாசிப்பதால் இறையருள் கிட்டாது என்று அவர் எப்படிச் சொல்ல முடியும். எண்ணிக்கைகளைச் சொன்னாலும் இறையருள் கிட்டும்.

நம்மாழ்வார் திருவாய்மொழியில்,

கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
எண்ணிலும் வரும் என் இனி வேண்டுவம்

என்று பாடியுள்ளாரே. ஆகவே நான் ஒன்று என்று சொன்னால், ஒப்பற்ற ஒருவனான தன்னைச் சொன்னதாகவும், இரண்டு என்றால், பிராட்டியோடு இருவராய் விளங்கும் தன்னைச் சொன்னதாகவும், மூன்று என்றால் மூன்று ரகசிய மந்திரங்களால் போற்றப்படும் தன்னைச் சொன்னதாகவும், நான்கு என்றால் நான்கு வேதங்களால் போற்றப்படும் தன்னைச் சொன்னதாகவும், ஐந்து என்றால் ஐந்து நிலைகளில் எழுந்தருளியிருக்கும் தன்னைச் சொன்னதாகவும், ஆறு என்றால் ஆறு குணங்கள் நிறைந்த தன்னைச் சொன்னதாகவும், ஏழு என்றால் ஏழு மலைகளுக்கு மீது மேவும் தன்னைச் சொன்னதாகவும், பத்து என்றால் பத்து அவதாரங்கள் எடுத்த தன்னைச் சொன்னதாகவும், பன்னிரண்டு என்றால் பன்னிரு ஆழ்வார்களால் போற்றப்பட்ட தன்னைச் சொன்னதாகவும் எடுத்துக் கொண்டு அருள்புரிவார். எனவே எங்களுக்கும் நிச்சயமாக இறையருள் கிட்டும் என்று பேசி விட்டு அமர்ந்தார்.நடுவர் தீர்ப்பளிக்க வேண்டிய நேரம். நடுவர் தீர்ப்பு வழங்குகிறார். அகாரார்த்தோ விஷ்ணு: என்பார்கள். அ என்ற எழுத்து திருமாலைக் குறிக்கும்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
என்றார் வள்ளுவர். எழுத்துகளுக்கு

அகரம் ஆதியாக இருப்பது போல், அகிலத்துக்கெல்லாம் ஆதியாக இருப்பவர் பகவான். எனவே முதன்முதலில் விஜயதசமி நாளில் மாணவனாகப் பலகையில் என்றைக்கு நீங்கள் அ என்று எழுதினீர்களோ, அப்போதே உங்கள் இருவருக்கும் திருமால் அருள்புரிந்து விட்டார் என்று சொல்லிப் பட்டிமன்றத்தை முடித்து வைத்தாராம். ஆக, அ என்ற எழுத்து திருமாலைக் குறிக்கிறது. அ என்ற எழுத்தால் குறிக்கப்படுவதால், அஜ என்று திருமால் அழைக்கப்படுகிறார். முன்பு இரு முறை வந்த அஜ என்ற திருநாமத்துக்கு வேறு விதமாகப் பொருள்கொள்ளப்பட்டது. 524-ம் திருநாமமான அஜ என்பதற்கு, அ எனும் எழுத்தால் குறிப்பிடப்படுபவர் என்று பொருள். அஜாய நமஹ என்று தினமும் சொல்லி வரும் அடியார்களின் நாவில் எப்போதும் தனது நாமங்கள் நிறைந்திருக்கத் திருமால் அருள்புரிவார்.

——————————–

  1. மஹார்ஹாய நமஹ (Mahaarhaaya namaha)

முண்டக உபநிஷத்தில் வரும் வரலாறு. பிரம்மதேவன் தனக்கு மகனாகத் தோன்றிய அதர்வா என்னும் முனிவருக்கு மிக உயர்ந்த பரமாத்மாவைப் பற்றிய ஞானத்தை உபதேசம் செய்தார். அதன் பின் அதர்வா முனிவர் அங்கிரர் என்னும் தனது சிஷ்யருக்கு அதை உபதேசம் செய்தார். அங்கிரர் சத்தியவாகருக்கு உபதேசம் செய்தார். சத்தியவாகர் ஆங்கிரஸ் என்னும் முனிவருக்கு உபதேசம் செய்தார். அந்த ஆங்கிரஸ் முனிவரை சௌனக முனிவர் அடிபணிந்து ஒரு கேள்வி கேட்டார்.

எந்த ஓன்றை அறிந்து கொண்டால் அனைத்தையும் அறிந்ததாக ஆகுமோ அதை அறிந்துக்கொள்ள விரும்புகிறேன் என்றார் சௌனக முனிவர். ஆங்கிரஸ் முனிவர் பதில் கூறுகிறார்: பகவான் ஸ்ரீமன் நாராயணனை அறிந்துகொண்டால் அனைத்தையும் அறிந்ததாக ஆகும். அவரைப்பற்றி அறிந்துகொள்ள அபரா வித்யை, பரா வித்யை என இரண்டு வித்யைகள் உதவுகின்றன. அபரா வித்யா என்றால் வேதங்கள், உபநிடதங்கள், வேதத்தின் அங்கங்கள் இவைகளைப் படித்தலாகும். இவற்றைப் படித்தபின், அதன்படிப் பரமாத்மாவைத் தியானிக்க வேண்டும்.

அப்படித் தியானிப்பதைப் பரா வித்யை என்பர். இவை இரண்டையும் பின்பற்றினால் பரமாத்மாவை அறியலாம்.

இந்த உலகத்துக்கே மூல காரணமாக பகவான் இருக்கிறான். இந்த உலகத்துக்கே வித்தாகவும் பகவான் இருக்கிறான். அவன் ஒருவனை அறிந்தால், அவனது மேன்மைக்காக இருக்கும் அவன் சொத்தாகிய இந்த மொத்த உலகத்தையும் அறிந்து கொள்ளலாம்.

முதலில் ஆச்சாரியர் மூலமாகவும், பின் பகவானை இடைவிடாது தியானித்தும் பகவானின் அருளாலே பகவானை சென்று அடையலாம். பகவான் தான் உன் இலக்கு, உன் உபாசனைக்கும் அவன் தான் இலக்கு என்றார் ஆங்கிரஸ்.அந்த உபாசனையை எப்படி செய்ய வேண்டும் என சௌனகர் கேட்டார். ஆங்கிரஸ் முனிவர் ஓர் உவமை சொல்லி விளக்குகிறார்…. வில்லிலே அம்பு பூட்டிப் பாணம் போட வேண்டும் என்றார். ஒம்காரம் ஆகிய பிரணவம்தான் வில்லாக இருக்கிறது. அதில் சரமாக, அம்பாக ஜீவாத்மாவைப் பூட்ட வேண்டும். பிரணவத்தை வில்லாக வைத்து ஜீவாத்மாவை அம்பாக பூட்டி, இலக்காகப் பரமாத்மாவை வைக்க வேண்டும்.

கவனம் எங்கும் சிதறாமல் பகவானிடம் மட்டுமே சிந்தனையை வைத்து பகவானை உபாசிக்க வேண்டும். அப்படி ஜீவாத்மாவை பகவானை நோக்கிச் செலுத்தினால், ஜீவாத்மா பகாவானின் திருவடியை அடைந்துவிடும். பகவானை விட்டுத் தனித்திருக்க முடியாதவன் தான் என்ற புரிதல் பெற்று, பகவத் கைங்கரியத்திலும் பகவத் அனுபவத்திலுமே ஜீவாத்மா ஈடுபட்டிருக்கும் என்பது ஆங்கிரஸ் தந்த விளக்கமாகும்.

இதன்மூலம் அவர் உணர்த்தும் விஷயம் யாதெனில் இறைவனுக்கு நாம் நம்மையே காணிக்கையாக அர்ப்பணிக்க வேண்டும். நாம் மற்ற பொருள்களை இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் மற்ற பொருள்களை மட்டும் அர்ப்பணித்து விட்டு, நம்மை அவன் திருவடிகளில் அர்ப்பணிக்காது போய்விடக் கூடாது. எனவே முக்கியமாக நம்மையே – நமது நான் என்ற எண்ணத்தை – முழுமையாக அவனுக்கே காணிக்கையாக்கி விடவேண்டும்.

எனவேதான் நம்மாழ்வார்,

பூசும் சாந்து என் நெஞ்சமே புனையும் கண்ணி எனதுடைய
வாசகம் செய் மாலையே வான் பட்டாடையும் அஃதே
தேசமான அணிகலனும் என் கைகூப்புச் செய்கையே
ஈசன் ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே

என்று பாடுகிறார். இறைவனுக்கு என் நெஞ்சையே சந்தனமாகவும், பா மாலைகளையே மாலை மற்றும் ஆடைகளாகவும், கை கூப்புதல் என்னும் செயலையே ஆபரணங்களாகவும் அர்ப்பணித்து என்னையே காணிக்கை ஆக்குகிறேன் என்பது இப்பாடலின் கருத்தாகும். இப்படி பகவானுக்குச் செய்யும் திருவாராதனத்தில் நம்மையே அர்பணிக்க வேண்டும் என்னும்படி ஏற்றம் மிக்கவராக விளங்குகிறார் திருமால். அப்படி ஆத்மாவை அர்ப்பணித்தல் தான் இறைவனுக்குச் செய்யும் சிறந்த பூஜை. மஹா என்றால் மிகச்சிறந்த பூஜை, அர்ஹ என்றால் தகுதி படைத்தவர். மஹார்ஹ என்றால் ஆத்மாவை அர்ப்பணித்தல் என்னும் மிகச்சிறந்த பூஜைக்கு உரியவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 525-வது திருநாமம்.மஹார்ஹாய நமஹ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் அத்திகிரி அருளாளர் நிலையிலக்கில் அம்பு போல் அமிழ்ந்து அனுபவிக்கும் பேற்றைப் பெறுவார்கள்.

———————

  1. ஸ்வாபாவ்யாய நமஹ (Swaabhavyaaya namaha)

நான்கு போட்டியாளர்களுக்கு இடையே யார் சிறந்தவர் என்று ஒரு கடும் போட்டி நடக்கிறது. முதல் போட்டியாளர் நமது சரிரம். இரண்டாவதாக, நம் சரிரத்துக்குள் இருக்கும் ஜீவாத்மா. முன்றாவதாக பகவானுடய சுத்தசத்துவ மயமான திருமேனி. நான்காவதாக பகவானுடைய எங்கும் பரந்த திவ்ய ஆத்ம ஸ்வரூபம். முதலில் நமது சரீரமும் பகவானின் திருமேனியும் களம் காண்கின்றன.

நமது கர்மாதீனமான சரீரத்துக்கும் பகவானுடைய திவ்ய மங்களத் திருமேனிக்கும் போட்டி நடந்தால், சந்தேகமே இல்லாமல் பகாவனுடய திருமேனி தான் வெல்லும். இரண்டையுமே தியானிப்பது எளிது தான் என்றாலும், நமது சரிரத்தைத் தியானிப்பதால் பலன் எதுவும் கிடையாது. மீண்டும் மீண்டும் பிறவிச் சுழற்சிதான் கிட்டும். அதுவே பகாவானின் திருமேனியைத் தியானித்தால் இனிமையும் கிடைக்கும், மோக்ஷமும் கிடைக்கும். எனவே முதல் போட்டியிலே பகாவானின் திருமேனியே ஜெயிக்கும்.

இரண்டாவது போட்டி எங்கும் பரவி இருக்கும் பரமாத்மாவின் ஸ்வரூபத்திற்கும், நுண்ணியதாக இருக்கும் நமது ஜீவாத்ம ஸ்வரூபத்திற்கும் இடை நடக்கிறது. இவை இரண்டையுமே தியானிப்பது எளிதன்று. ஜீவாத்மாவைத் தியானிப்பதால் ஆத்மாவையே அனுபவித்தல் என்ற கைவல்ய நிலை கிடைக்குமே தவிர பகவானை அடைதல் என்பது முடியாது. எங்கும் பரவி இருக்கும் பரமாத்மாவின் ஸ்வரூபத்தைத் தியானித்தால் நாம் பகவானை அடைந்து பகவானுக்கு கைங்கர்யம் செய்யலாம். அதனால் இந்தப் போட்டியில் பரமாத்மாவின் ஸ்வரூபமே வெற்றி பெறும்.

மூன்றாவதாகப் பராமாத்மாவின் ஸ்வரூபத்திற்கும் பரமாத்மாவின் திவ்ய மங்களத் திருமேனிக்கும் போட்டி நடந்தது. பகாவானின் திருமேனியை தியானிப்பது எளிது, அது மோட்சமும் தருகிறது. அதுவே பகாவானின் ஆத்ம ஸ்வரூபம் மோட்சம் தரும் என்றாலும் அதைத் தியானிப்பது கடினம்.பகவானின் ஆத்ம ஸ்வருபம் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. வேதங்களால் கூட அதை முழுமையாக கூற முடியாது. ஆனால் பகவானின் திருமேனியையோ அர்ச்சாவதார ரூபத்தில் நம்மால் எளிதில் தியானிக்க முடியும். ஆதனால் பகவானின் திருமேனியே இப்போட்டியில் வெற்றி பெறும்.

இதைத் தான் ஸ்வாமி வேதாந்த தேசிகன் ரஹஸ்ய த்ரய சாரத்தில்,

பராவர ஸுக க்ராஹ்யம் ப்ரேம போத ப்ரஸாவகம்
ஸ்வரூபாத் ஸ்வாமினோ ரூபம் உபாதேய தமம் விது:

என்று தெரிவிக்கிறார். தியானிக்கவும் எளிதாக இருக்க வேண்டும், தியானிப்பவருக்கு முக்தியும் தரவேண்டும் என்றால், அது பெருமாளின் திருமேனி ஒன்றுக்கே சாத்தியமானது என்பது இதன் கருத்து. அதனால் தான் இறைவனை அடைய விரும்பும் அடியார்கள் எப்போதும் அவனது திவ்ய மங்கல விக்ரஹமாகிய திரு மேனியையே தியானித்து, பாவித்து வழிபடுகிறார்கள்.

திருமங்கை ஆழ்வார்,

காவியே வென்ற கண்ணார் கலவியே கருதி நாளும்
பாவியேனாக எண்ணி அதனுளே பழுத்தொழிந்தேன்
தூவிசேர் அன்னம் மன்னும் சூழ்புனல் குடந்தையானைப்
பாவியேன் பாவியாது பாவியேன் ஆயினேனே

என்று திருக்குறுந்தாண்டகத்தில் பாடுகிறார். பாவித்தல் என்றால் வழிபடுதல் என்று பொருள். பாவ்ய என்றால் வழிபடத் தக்கவர். ஸ்வம் என்றால் சொத்து, இங்கே ஸ்வம் என்பது பகவானின் சொத்தாக இருக்கும் அவர்களின் அடியார்களைக் குறிக்கிறது. ஸ்வம் எனப்படும் அடியார்களால், பாவ்ய – வழிபடத் தக்க திருமேனியோடு பகவான் விளங்குவதால், ஸ்வாபாவ்ய – அடியார்களால் வழிபடத் தக்கவர் என்று திருமால் அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 526-வது திருநாமம். ஸ்வாபாவ்யாய நமஹ என்று தினமும் சொல்லி வந்தால், எப்போதும் இறைவனைத் தியானித்து வாழும் பேற்றை நமக்கு அவர் அருள்வார்.

———————

  1. ஜிதாமித்ராய நமஹ (Jitamithraya namaha)

குருக்ஷேத்ரப் போர்களத்தில் 7 அக்ஷௌஹிணி பாண்டவர் சேனையும், 11 அக்ஷௌஹிணி கௌரவ சேனையும் அணிவகுத்து நிற்கிறார்கள். கிருஷ்ணன் பார்த்தசாரதியாகத் தேரோட்ட, அர்ஜுனன் போர்க்களத்தில் நுழைகிறான். அர்ஜுனன் கண்ணனிடம் இரண்டு சேனைகளுக்கும் மத்தியில் தேரை நிறுத்தியருள வேண்டும். என் பக்கம் யார் இருக்கிறார்கள், எதிர்ப் பக்கம் யார் இருக்கிறார்கள் எனக் காண விரும்புகிறேன் என்று பிரார்த்தித்தான்.

கண்ணனும் அவ்வாறே இரு சேனைகளுக்கும் மத்தியில் தேரை நிறுத்த, இரு சேனைகளையும் பார்வையிட்டான் அர்ஜுனன். அங்கே தன் கூட்டாளிகளோ அல்லது எதிரிகளையோ அவன் காணவில்லை. மாறாகத் தன் உறவினர்கள், நண்பர்கள், ஆச்சாரியர்கள், சகோதரர்கள், பாட்டன்மார்கள், பிஷ்மர், துரோணர் போன்ற மகான்கள் ஆகியோரைக் காண்கிறான். இவர்களைப் பார்த்ததும் அர்ஜுனன் கலங்கி, கண்ணா என் காண்டீவம் கையில் இருந்து நழுவி விழுகிறது, என்னால் நிற்கக் கூட முடியவில்லை என்று அப்படியே தேரில் கலங்கிப்போய் அமர்ந்துவிட்டான்.

கண்ணா எனக்கு எது நல்லது எது தீயது என்று தெரியவில்லை, பீஷ்ம துரோணர்கள் பூஜிக்கத் தக்கவர்கள். கௌரவர்கள் என் பங்காளிகள். இவர்களை எதிர்த்து எப்படிப் போர் புரிவது. நீயே நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல் என்றான் அர்ஜுனன்.கண்ணன் இந்த இடத்தில் அர்ஜுனன் ஒருவனின் கலக்கத்தை மட்டும் பார்க்கவில்லை. நம் அனைவரின் மனக் கலக்கத்தையும் பார்த்தான். நம் அனைவர்க்கும் சேர்த்துப் பதில் கூற விழைகிறான் கண்ணன். அதுதான் கீதை உபதேசம்.

கீதோபதேசம் எப்படித் தொடங்குகிறது என்றால், பகவானுக்குச் செய்யும் பூஜையாக நினைத்துக் கடமையைச் சரியாகச் செய்ய வேண்டும். அதனால் வரும் உலகியல் பலனின் மீது பற்று வைக்கக்கூடாது என கர்ம யோகத்தில் தொடங்குகிறது. பின் பக்தி யோகத்தில் ஈடுபட்டு எப்படி மோக்ஷத்தை அடைவது என்பது வரை கீதையில் உபதேசம் செய்தான் கண்ணன்.

அர்ஜுனனுக்குப் போர் புரிவது கடமை. அந்த கடமையைப் பலனை எதிர்பார்க்காமல் செய் என்று அவனுக்கு வழிகாட்டினான். இது உணர்த்தும் தத்துவம் யாதெனில், நம் மனம் தான் குருக்ஷேத்திரப் போர்க்களம். அதில் 7 அக்ஷௌஹிணி பாண்டவர் சேனைகள் தான் நம் மனத்தில் உள்ள நல்ல எண்ணங்கள். 11 அக்ஷௌஹிணி கௌரவ சேனைகள் தான் தீய எண்ணங்கள். நல்ல எண்ணங்களை விடத் தீய எண்ணங்களே பெரும்பாலும் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கின்றன.

அர்ஜுனன்தான் ஜீவாத்மா. இந்த ஜீவாத்மா 7 அக்ஷௌஹிணி பாண்டவர் சேனையான நல் எண்ணங்களின் துணை கொண்டு 11 அக்ஷௌஹிணி கௌரவ சேனைகளான தீய எண்ணங்களை அழிக்க வேண்டும். ஆனால் அந்த நேரத்தில் போய், தீய எண்ணங்களின் மீது பற்று வைத்து விடுகிறது ஜீவாத்மா. அதனால் நம் மனதில் பெரும் மனப் போராட்டம் எழுகிறது. நம் மனதில் உள்ள தீய எண்ணங்களை அழித்து நாம் போர்புரிய வேண்டும். அதற்கான வழியாகத் தான் கர்ம யோகத்தை பகவான் தருகிறான். இந்தக் கர்ம யோகத்தை பின் பற்றினால் நல்ல எண்ணங்கள் நம் மனதில் வளரும்.

அதைக்கொண்டு ஜீவாத்மா பக்குவப்படும். அதன்பின் பரமாத்மாவின் துணையோடு தீய எண்ணங்களை வீழ்த்திப் பக்தி யோகத்தில் ஈடுபட்டுப் பரமாத்மாவை அடையலாம்.
இப்படி நம் மனதில் உள்ள தீய எண்ணங்களாகிய எதிரிகளை நம் சார்பில் பகவானே வென்று, அவைகளை வீழ்த்தி நாம் ஆன்மீக முன்னேற்றம் அடைவதற்கு வழிகாட்டுவதால், திருமால் ஜிதாமித்ர என்று அழைக்கப்படுகிறார்.

அமித்ர என்றால் எதிரிகள். ஜித என்றால் வெல்லப்பட்ட. நம் உள் எதிரிகளாகிய தீய குணங்களைத் திருமால் வென்று தருவதால், அவர் ஜிதாமித்ர என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 527-வது திருநாமம்.ஜிதாமித்ராய நமஹ என்று தினமும் சொல்லி வந்தால், தீய எண்ணங்கள் நம் உள்ளத்தில் எழாமல் திருமால் அருள்புரிவார்.

—————————–

  1. ப்ரமோதனாய நமஹ(Pramodhanaaya namaha)

ஆயர்ப்பாடியில் கோமதி என்றொரு கோபிகை வாழ்ந்து வந்தாள். அவளிடம் ஒரே ஒரு பசுமாடுதான் இருந்ததாம். அந்தப் பசுமாட்டுக்கு அவள் தினந்தோறும் புண்ணாக்கு, வைக்கோல் ஆகிய அனைத்தும் அளித்தாலும், அது சரியாகவே பால் சுரக்கவில்லை. எத்தனையோ கால்நடை மருத்துவர்களின் உதவியை நாடியும் மாடு பால் கறப்பதாகவே தெரியவில்லை. ஒருநாள், தங்கள் குலகுருவான கர்காச்சாரியாரை வணங்கச் சென்றாள் கோமதி. அவரிடம் தன் நிலையைச் சொல்லி பசு, பால் கறப்பதற்கு ஏதேனும் ஆலோசனை சொல்லுமாறு வேண்டினாள். அதற்கு கர்காச்சாரியார், நம் யசோதையின் மகன் கண்ணன் இருக்கிறானே, அவனுக்கு எதிரே கொஞ்ச நேரம் உன் மாட்டை நிறுத்தி வை. அதன்பின் நடப்பதைப் பார் என்று ஆலோசனை வழங்கினார்.

அடடா, கண்ணனா, அவன் இருக்கும் பாலையும் வெண்ணெயையுமே திருடிச் சென்று விடுவானே, மாட்டை வேறு அவன் எதிரே கொண்டுபோய் நிறுத்துவதா என்று சற்றே யோசித்தாள், கோமதி. இருந்தாலும், குருவின் வார்த்தையில் அர்த்தம் இருக்கும் என்ற நம்பிக்கையில் யசோதையின் வீட்டு வாசலுக்குச் சென்றாள்.கண்ணனை வெளியே அழைத்தாள். கண்ணனின் பார்வை தனது பசுவின் மீது படும்படி அதை நிறுத்தினாள். திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல் அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் என்று ஆண்டாள் பாடியபடி, கண்ணனும் தனது இரு கண் களாலும் அந்தப் பசுவை ஆசையுடன் நோக்கினான். சரி, கண்ணனின் பார்வை பட்டுவிட்டது.

இனி மாட்டை வீட்டுக்கு அழைத்துச் செல்வோம் என்று இழுத்தாள் கோமதி. பசுமாடு அவளுடன் வர மறுத்துவிட்டது. கண்ணனின் கண்ணெதிரிலேயே இருக்க விரும்பியது அந்த மாடு. மிகுந்த போராட்டத்துக்குப் பின் எப்படியோ அந்த மாட்டை வீடு வரை ஓட்டிச் சென்று மாட்டுத் தொழுவத்தில் கட்டினாள் கோமதி.

மறுநாள் காலை எழுந்தாள் கோமதி. மாட்டைக் கறக்கத் தொடங்கினாள். பார்த்தால் இருபத்தைந்து லிட்டருக்கும் மேல் பால் கறந்தது அந்த மாடு. கோமதிக்கு ஒரே சந்தோஷம். வீட்டுத் தேவைகளுக்கு ஒரு லிட்டர் பாலை மட்டும் உபயோகித்து விட்டு, மீதமுள்ள பாலில் தயிரை விட்டு உறைகுத்தி வைத்தாள். அடுத்த நாள் காலையில் பார்த்த போது, இருபத்தைந்து லிட்டர் தயிர் அப்பாத்திரத்தில் இருந்ததாம். நாம் கொஞ்சம் பாலை எடுத்துப் பயன்படுத்திய பின்னும் எப்படி 25 லிட்டர் தயிர் கிடைத்தது என்று வியந்தாள் கோமதி.

அடுத்து தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்த போது, 25 லிட்டர் தயிரிலிருந்து 25 லிட்டர் வெண்ணெய் கிடைத்தது. இது இன்னும் கோமதியை வியப்பில் ஆழ்த்தியது. 25 லிட்டர் வெண்ணெயைக் காய்ச்சிய போது, அதிலிருந்து 25 லிட்டர் நெய்யும் கிடைத்தது.வியப்பின் உச்சத்தை அடைந்த கோமதி, 5 லிட்டர் நெய்யை எடுத்துக் கொண்டு கர்காச்சாரியாரின் ஆசிரமத்துக்குச் சென்றாள். உங்கள் ஹோமத்துக்குப் பயன்படுத்தக் காணிக்கையாக இந்த நெய்யைக் கொண்டு வந்தேன் என்றாள். உன் மாடுதான் பாலே கறப்பதில்லையே, உனக்கு ஏது இவ்வளவு நெய் என்று கேட்டார் கர்காச்சாரியார்.

சுவாமி, நீங்கள் சொன்னபடி மாட்டைக் கண்ணன் முன்னே நிறுத்தினேன். அதன்பின் மாடு ஒருநாளைக்கு 25 லிட்டர் பால் கறக்கிறது. அதைத் தோய்த்தால் 25 லிட்டர் தயிரும், அதைக் கடைந்தால் 25 லிட்டர் வெண்ணெயும், அதைக் காய்ச்சினால் 25 லிட்டர் நெய்யும் கிடைக்கின்றன. எல்லாம் உங்கள் மகிமை என்றாள்.

அதற்கு கர்காச்சாரியார், எல்லாம் கண்ணனின் மகிமை. கண்ணனின் திருமேனியைத் தரிசிக்கும்போது உள்ளார்ந்த பேரானந்தம் பார்ப்பவர்க்கு ஏற்படும். நமது கஷ்டங்களைப் போக்கிப் பேரானந்தத்தைத் தரவல்லது அவனது திருமேனி. கண்ணனின் திருமேனியைச் சேவித்ததால் உன் மாடு மிகவும் மகிழ்ந்து விட்டது. மாட்டின் மனம் மகிழ்ந்தால் பால் நிறைய சுரக்கும். உண்மையான மனமகிழ்ச்சி என்பதில் இறை அனுபவத்தில்தான் கிடைக்கும் என்று விளக்கினார்.

அதன்படி கோமதி தனது பசுவைத் தினந்தோறும் கண்ணன் முன்னே நிறுத்த, நாளுக்கு நாள் கறவை மாடான அது, கன்றுக்குட்டி போல் இளமையாகிக் கொண்டே போனதாம். ஆண்டாளும் திருப்பாவையில் கற்றுக்கறவை – கன்றுபோல் இளமையாக இருக்கும் கறவை என்று சொன்னது இங்கே நோக்கத்தக்கது.

இப்படி ஆன்மீகப் பேரானந்தத்தைத் தந்து அடியார்களை மகிழ்விப்பதால், திருமால் ப்ரமோதன என்று அழைக்கப்படுகிறார். ப்ரமோதன என்றால் அடியார்களை மகிழ்விப்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 528-வது திருநாமம்.

“ப்ரமோதனாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் எந்நாளும் திருநாளாக மகிழ்ச்சியுடன் விளங்கும்படித் திருமால் அருள்புரிவார்.

—————

  1. ஆனந்தாய நமஹ(Aanandaya Namaha)

(529 – 538 – கபில அவதாரம்)

உலகம் படைக்கப்பட்ட காலத்தில் மக்கள் தொகையை அதிகரிக்கும் பொருட்டு, பிரம்மாவாலே நியமிக்கப் பட்டவர்கள் பிரஜாபதிகள் ஆவர். அந்தப் பிரஜாபதிகளுள் முக்கியமானவர் கர்தமப் பிரஜாபதி. அவர் பிரம்மாவிடம், தருமத்துக்காகப் பிள்ளைகளைப் பெறுவது உயர்ந்ததா, அதைவிட உயர்ந்த ஆனந்தம் வேறேதும் உண்டா என்று வினவினார். அதற்குப் பிரம்மா, கர்தமா, என்னை நாராயணன் தன் உந்தித் தாமரையில் படைத்தார்.

எனக்கு வேதங்களை உபதேசித்தார். அந்த வேதங்களுள் ஒரு பகுதியாக ஆனந்தவல்லி என்ற பகுதி வருகிறது. அப்பகுதி ஆனந்தத்தின் அளவுகோல்களை விளக்குகிறது. நல்லவனாக, கற்றவனாக, ஆசீர்வதிக்கப்பட்டவனாக, மன உறுதிமிக்கவனாக, உடல்வலிமை மிக்கவனாக, உலகமே கொண்டாடும்படியாக இருக்கும் ஓர் இளைஞனின் ஆனந்தம் ஓர் அலகு மனித ஆனந்தம் ஆகும்.

அதைப் போல், நூறு மடங்கு மனித கந்தர்வர்களின் ஆனந்தம்.
அதைப்போல் நூறு மடங்கு தேவ கந்தர்வர்களின் ஆனந்தம்.
அதைப் போல் நூறு மடங்கு பித்ருக்களின் ஆனந்தம்.
அதைப் போல் நூறு மடங்கு தேவர்களின் ஆனந்தம்.
அதைப் போல் நூறு மடங்கு தேவர்களின் தலைவனான இந்திரனின் ஆனந்தம்.
அதைப் போல் நூறு மடங்கு தேவ குருவான பிருஹஸ்பதியின் ஆனந்தம்.
அதைப் போல் நூறு மடங்கு பிரம்மாவின் ஆனந்தம்.
அதைப் போல் நூறு மடங்கு நாராயணனின் ஆனந்தம்.
இது வேதம் காட்டிய அளவு.

அதாவது, திருமாலின் ஆனந்தம் இவ்வளவுதான் என்று நம்மால் கணக்கிடவே முடியாது என்பதையே வேதம் இவ்வாறு தெரிவிக்கிறது. அவர் ஆனந்தமே வடிவெடுத்தவர். எனவே அவர்தான் உயர்ந்த ஆனந்தம் என்று விளக்கினார் பிரம்மா. அப்படியானால் இல்லற வாழ்வில் நாம் ஈடுபட வேண்டாம். பகவானையே தியானித்துக் கொண்டு வாழ்ந்து விடுவோம் என்று முடிவெடுத்தார் கர்தமப் பிரஜாபதி. பத்தாயிரம் வருடங்கள் திருமாலைக் குறித்துக் கடுந்தவம் புரிந்தார் கர்தமர். அந்தத் தவத்துக்கு உகந்து திருமால் கருட வாகனத்தில் அவருக்குக் காட்சி அளித்தார்.

கழுத்திலே வெள்ளை மற்றும் நீலத் தாமரைகளால் ஆன மாலைகளுடனும், அழகிய திருக்குழல் கற்றைகளுடனும், தூய மஞ்சள் பட்டாடையோடும், நான்கு திருக்கரங்களோடும், சங்கு சக்கரம் உள்ளிட்ட திவ்ய ஆயுதங்களோடும், முகத்தில் மெல்லிய புன்னகையோடும் தோன்றினார் திருமால். அவர் திருமார்பில் திருமகள் திகழ்கிறாள். அவரது திருவடிகளைக் கருடனின் தோள்களின் மேல் பதித்திருக்கிறார். இந்த உயர்ந்த அழகை ரசித்த கர்தமர், நான் எதை அடைய வேண்டும் என நினைத்துத் தவம் புரிந்தனோ அந்தப் பேரானந்தத்தை அடைந்துவிட்டேன் என்று கூறி பகவானைத் துதித்தார்.

கர்தமர், பகவான்தான் உண்மையான பேரானந்தம் என்று பிரம்மா மூலம் புரிந்துகொண்டு, பகவானை நோக்கித் தவம் புரிந்து நாராயணனைக் கருட வாகனத்தில் சேவித்து அந்த உண்மையான ஆனந்தத்தை அடையவும் செய்தார். பின், இந்தக் கர்தமர்க்கு வரமளிக்கும் விதமாக அவருக்கு மகனாகப் பிறந்து பேரானந்தத்தைத் தரப்போவதாக நாராயணன் அவருக்கு வாக்களித்தார்.

அதன்படி கர்தமரின் மகனாகக் கபில வாசுதேவராகப் பின்னர் திருமால் திரு அவதாரம் செய்தார். பேரானந்தம் பெற்றுய்ந்தார் கர்தமர். இப்படி ஆனந்தமே வடிவெடுத்தவராக இருந்து, அடியார்க்குப் பேரானந்தம் தருவதால், கபில வாசுதேவர் ஆனந்த என்று அழைக்கப் படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 529-வது திருநாமம்.

“ஆனந்தாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் பேரானந்தத்தைத் திருமால் தந்தருள்வார்.

————–

  1. நந்தனாய நமஹ(Nandanaaya Namaha)

திருமாலைக் குறித்துத் தவம் புரிந்த கர்தமப் பிரஜாபதிக்குத் திருமால் கருட வாகனத்தில் காட்சி தந்தார் என்பதைக் கடந்த திருநாம விளக்கத்தில் பார்த்தோம். அவ்வாறு தன்முன்னே தோன்றிய திருமாலைத் தரிசித்த கர்தமர், இறைவா, உன் கருணையை என்னவென்று போற்றுவேன்’ என்று துதிக்கத் தொடங்கினார்.நாங்கள் உன்னைக் குறித்துச் செய்யும் பக்தியோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், அதை விடப் பன்மடங்காக நீ அருள்புரிகிறாயே. நீ செய்யும் அருளையும் நீ தரும் பலனையும் பார்க்கும் போது, நாங்கள் செய்யும் பக்தியோ வழிபாடோ பூஜ்ஜியம் என்று தான் சொல்ல வேண்டும்’ என்று பகவானிடம் கர்தமர் சொன்னார்.

அதன்பின் திருமால் கர்தமரைப் பார்த்து, என் அடியார்களின் நலனை நான் பேணாமல் வேறு யார் பேணுவார்கள்! அது இருக்கட்டும். உங்களுக்கு என்ன வரம் வேண்டும் என்று சொல்லுங்கள். தருகிறேன்’ என்று கூறினார்.அதற்கு கர்தமர்,இறைவா, பிரம்மா என்னை மக்கள் தொகையை அதிகரிக்கும் பொருட்டுப் பிரஜாபதி என்ற பதவியில் அமர்த்தி உள்ளார். ஆனால் நானோ அவர் தந்த கடமையை விட்டு நீயே கதி என்று தவத்தில் ஈடுபட்டு விட்டேன். இனி மேற்கொண்டு நான் பிரம்மாவின் கட்டளைப் படி தருமப்படி இல்வாழ்க்கை வாழ்ந்து, என் கடமையை நிறைவேற்ற அருள்புரிய வேண்டும்’ என்று வேண்டினார்.

மேலும், இறைவா நீ தரும் இல்வாழ்க்கை நான் உன்னை வந்தடைவதற்குத் தடையாக ஆகிவிடக்கூடாது. அந்த உலகியல் சுகம் உன்னை நான் மறப்பதற்குக் காரணமாக ஆகிவிடக் கூடாது. அதற்கு நீயே அருள்புரிய வேண்டும் என்று கோரினார் கர்தமர்.அதற்கு திருமால்,கர்தமரே, நீங்கள் கவலைப் படவேண்டாம். என்னைக் குறித்துச் செய்த எந்த ஒரு வழிபாடும் வீண்போகாது. அதில் நம்பிக்கை வையுங்கள். உங்களுக்கு நல்ல இல்வாழ்க்கையும் அமையும். சுவாயம்புவ மனு தனது மகளான தேவஹூதியை உங்களுக்கு மணம் முடித்துத் தருவார். நாரதர் மூலம் உங்கள் பெருமையை மனுவுக்கு நான் உணர்த்திவிட்டேன். தேவஹூதியை மணந்து, இல்வாழ்க்கை தருமங்களை நன்றாகப் பின்பற்றுங்கள்.

உங்களுக்கு ஒன்பது பெண் குழந்தைகள் பிறப்பார்கள். அவர்களுக்கு ஏற்ற மாப்பிள்ளைகளும் உரிய காலத்தில் கிடைப்பார்கள். இல்வாழ்க்கை வாழும் காலத்தில் எனது நினைவும் உங்கள் மனதில் இருந்துகொண்டேதான் இருக்கும்.எல்லாவற்றுக்கும் மேலாக, நானே உங்களுக்கு மகனாக, பத்தாவது குழந்தையாக வந்து பிறப்பேன். அந்த அவதாரத்தில் எனக்குக் “கபில வாசுதேவன்’’ என்ற பெயர் ஏற்படும்.

எனது அந்த வடிவை நீங்கள் தியானித்து வாருங்கள். உரிய காலத்தில் உங்களுக்கு முக்தியையும் நானே தருவேன்’’ என்று கூறினார். இதைக் கேட்ட கர்தமர், பகவானின் கருணையை நினைத்து நினைத்து உருகினார். பேரானந்தம் தருபவர், பேரானந்தமே வடிவெடுத்தவர் என்றெல்லாம் பிரம்மா திருமாலைப் பற்றிச் சொன்னார். ஆனால் அவர் எத்தகைய அருளைப் புரிந்து எத்தகைய ஆனந்தம் தருவார் என்று இப்போதுதான் அறிந்தேன் என்று பரவசப்பட்டார் கர்தமர். அந்தப் பரவசத்தால் ஆனந்தக் கண்ணீர் சிந்தினார் கர்தமர். அந்தக் கண்ணீர்தான் “பிந்து சரஸ்’’ என்ற பொய்கையாக உருவானது. இப்படிப் பொய்கையாக உருவாகும் அளவுக்கு ஆனந்தக்கண்ணீர் வடிக்கும்படி அடியார்களுக்குப் பேரானந்தம் அருள்வதால், திருமால் நந்தன என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 530-வது திருநாமம்.

“நந்தனாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களைத் திருமால் ஆனந்தக் கண்ணீர் சிந்த வைத்து மகிழ்விப்பார்.

—————-

  1. நந்தாய நமஹ (Nandhaaya Namaha)

கர்தமருக்குக் காட்சி அளித்த திருமால், உங்களுக்கு வரப்போகும் மனைவியை அவளது தந்தையே உங்களிடம் அழைத்துக் கொண்டு வந்து சேர்ப்பார் எனச் சொல்லி இருந்தார். தானே மகனாகப் பிறப்பதாகவும் வாக்கு அளித்திருந்தார். இதையெல்லாம் கேட்டு மகிழ்ந்த கர்தமப் பிரஜாபதி, இறையருளை நினைத்து, தான் சிந்திய ஆனந்தக் கண்ணீரின் திரளான பிந்து சரஸ் கரையில் பகவானைத் தியானித்தபடி வாழ்ந்து வந்தார்.

அதே சமயம், நாரதர் சுவாயம்புவ மனுவைச் சந்தித்து, உங்கள் மகள் தேவஹூதிக்குத் தகுந்த வரன் கர்தமப் பிரஜாபதி ஆவார். அவரை பிந்து சரஸ் கரையில் சந்தியுங்கள் எனக் கூறினார். அழுக்கு படிந்த ரத்தினக் கல் போல் ஆசிரமத்தில் ஆழ்ந்த தவத்தில் இருந்த அருமா மனிதரான கர்தமரைச் சந்தித்தார் சுவாயம்புவ மனு.

கர்தமரை அணுகித் தனது மகளைத் திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டார் மனு. கர்தமரும் பகவானின் வாக்குப்படி இசைந்தார். திருமணம் நடந்தது. மிகச்சிறந்த அடியாரான கர்தமருக்குப் பணிவிடை செய்வது தன் பாக்கியம் என்று கருதிய தேவஹூதியும், அடியார்க்கு அடியாராகத் தன்னை நினைத்து கர்தமருக்கு அனைத்துப் பணிவிடைகளும் செய்து வந்தாள்.

காலங்கள் கடந்தன. ஒரு நாள், கர்தமர் தியானத்தில் இருந்து கண் விழித்து, தேவஹூதியைப் பார்த்தார். தேவஹூதி மிகவும் வயதான நிலையில் இருப்பதைக் கவனித்தார். நமக்குச் சேவை செய்தே இவளுடைய இளமைக் காலம் கழிந்துவிட்டதே. இவளுக்காக நாம் ஒன்றுமே செய்யவில்லையே என வருந்தினார் கர்தமர். `உனது இளமை முழுவதும் என் பணிவிடையிலேயே கழிந்து விட்டதா’? என்று அவளிடம் கேட்டார்.

உங்களுக்குப் பணிவிடை செய்ததே எனக்கு ஆனந்தம்’ எனக் கூறினாள் தேவஹூதி. கர்தமர், தேவஹூதியை பிந்து சரஸில் நீராடச் சொன்னார்.நீராடியதும் தேவஹூதிக்கு இளமை திரும்பியது. வெளியே வந்து பார்த்தபோது, கர்தமரும் இளமையாகக் காட்சி அளித்தார்.இருவரும் திவ்வியமான விமானத்தில் ஏறி 100 வருடங்கள் உலகத்தைச் சுற்றினர். தேவஹூதி கர்தமரிடம்,எப்படி நமக்கு இளமையும், இளமைக் காலத்தில் கிடைக்கும் அனைத்து இன்பங்களும் இப்போது கிடக்கின்றன’ எனக் கேட்டாள். அதற்குக் கர்தமர், `நாராயணன் தர்மத்துக்கு விரோதமில்லாமல் அனைத்து இன்பங்களும் எனக்குக் கிடைக்கும் என வரம் கொடுத்தார். மேலும், அவரே மகனாக பிறப்பதாகவும் வரம் கொடுத்துள்ளார்’ எனக் கூறினார். பகவானிடம் அனைத்து இன்பங்களுக்கு உரிய கருவிகளும் இருக்கின்றன. அவனே நமக்கு எது நல்லதோ அதைக் கொடுப்பான்.

நாம் அவன் அருள் மட்டும் போதும் என மனதார வேண்டினால் நமக்குத் தேவையான உலகியல் இன்பமும் கொடுத்து மோட்சத்துக்கான வழியும் தருவான் என்றும் கூறினார் கர்தமர். இப்படி அடியார்கள் இன்பம் துய்ப்பதற்குத் தேவையான அனைத்து உபகரணங்களையும் தன்னகத்தே கொண்டவராக விளங்கி, உரிய நேரத்தில் அவற்றை அடியார்களுக்கும் தந்து அனுபவிக்கச் செய்வதால், திருமால் `நந்த’ என்று அழைக்கப் படுகிறார். நந்த என்றால் இன்பத்துக்குரிய கருவிகள் அனைத்தையும் தன்னகத்தே உடையவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 531-வது திருநாமம்.

“நந்தாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வருவோர்க்கு வாழ்வில் குறையில்லா மகிழ்ச்சி நிறையும்படித் திருமால் அருள்புரிவார்.

————

532. ஸத்யதர்மணே நமஹ (Sathyadharmaney Namaha)

தன்னைக் குறித்துத் தவம் செய்த கர்தமப் பிரஜாபதிக்குக் காட்சி அளித்த திருமால், அவருக்கு இல்வாழ்க்கையும் நன்றாக அமையும், முக்தியும் நிச்சயம் கிட்டும் என்று வாக்களித்து இருந்தார். அதன்படித் திருமாலின் அருளால், கர்தமப் பிரஜாபதியும், அவரது மனைவியான தேவஹூதியும் தங்கள் இல்வாழ்வை ஆனந்தமாக வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு ஒன்பது பெண் குழந்தைகள் பிறந்தனர். முன்பே திருமால் வாக்களித்து இருந்ததற்கேற்ப, அந்த ஒன்பது பெண்களுக்கும் ஏற்ற மாப்பிள்ளைகள் அமைந்தார்கள். அந்தந்த மாப்பிள்ளைகளுக்கு அவர்களை மணமுடித்து வைத்தார் கர்தமப் பிரஜாபதி.

இப்படிக் குடும்பப் பொறுப்புகள் அனைத்தையும் நிறைவேற்றிய பின், துறவறம் மேற்கொள்வது குறித்துச் சிந்திக்கலானார் கர்தமர்.அப்போது தேவஹூதி கர்தமரிடம், “சுவாமி, நீங்கள் துறவறம் போக முடிவெடுப்பது போல் தெரிகிறது. நீங்கள் மட்டும் இறைவனை அறிந்து அவன் பாதங்களை அடைந்தால் போதுமா. அடியேனுக்கும் அந்த ஆசை இல்லையா. அதனால் அடியேனுக்கும் நீங்கள் இறைவனைக் குறித்து உபதேசம் செய்தருள வேண்டும். அதன்பின் துறவறம் பற்றிச் சிந்தியுங்கள்’’ என்று வேண்டிக்கொண்டாள்.

அதைக் கேட்ட கர்தமப் பிரஜாபதி, “நான் துறவறம் பற்றிச் சிந்தித்தது உண்மைதான். ஆனால், இப்பொழுது உடனே நான் துறவறம் மேற்கொள்ளப் போவதில்லை. பகவானின் வாக்குப்படி நமக்கு ஒரு பத்தாவது குழந்தை பிறக்கப் போகிறது. நமக்கொரு மகன் பிறப்பான். அவன் பகவானின் அம்சமாக பிறப்பான். இறைவனே வந்து நமக்கு மகனாகப் பிறக்கவுள்ள நிலையில், அவரைத் தரிசிக்காமல் நான் துறவறம் போக மாட்டேன். நமது மகனாக பிறக்கப் போகும் பகவானின் அம்சமான கபில வாசுதேவர், இப்போது உன் கருவில் உள்ளார். இறைவனை அடைவதற்குரிய வழிகளுள் ஒன்றான சாங்கிய யோக முறையை அந்தக் கபில வாசுதேவர் உலகத்துக்கே உபதேசிப்பார். அவரே உனக்கும் பகவானைப் பற்றி உபதேசிப்பார். அவர் உபதேசிக்கும் வரை காத்திரு’’ என்று சொன்னார்.

அவ்வாறே கருவுற்றிருந்த தேவஹூதிக்கு உரிய காலத்தில் அழகான ஓர் ஆண்குழந்தை பிறந்தது. அக்குழந்தை திருமாலின் அவதாரமான கபில வாசுதேவர் என்று உணர்ந்த கர்தமர், கபிலரை வணங்கிவிட்டு அதன்பின் துறவறம் சென்றார். காட்டில் இடைவிடாது திருமாலின் வடிவமான கபிலரைத் தியானித்த கர்தமர், உரிய காலத்தில் முக்தி அடைந்துவிட்டார். தேவஹூதிக்குக் கபில வாசுதேவர், ஆத்மா – பரமாத்மாவைக் குறித்த உபதேசமாகிய சாங்கிய யோகத்தை உபதேசித்துத் தேவஹூதி முக்தி பெறுவதற்கும் வழிகாட்டினார்.

அவளும் அவ்வாறே நற்கதி பெற்றாள். அதன்பின் கபில வாசுதேவர் உலகெங்கும் சாங்கிய சாஸ்திரத்தைப் பிரச்சாரம் செய்தார் என்கிறது ஸ்ரீமத் பாகவத புராணம். கர்தமருக்குத் திருமால் செய்த அனுக்கிரகங்கள் என்னென்ன என்று சற்றே யோசித்தால்,

* தேவஹூதி என்ற நல்ல மனைவி
* அவளுடன் கூடிய நல்ல இல்வாழ்க்கை
* ஒன்பது பெண் குழந்தைகள்
* அந்த ஒன்பது பெண்குழந்தைகளுக்கும் ஏற்ற மணமகன்கள்
* பத்தாவது குழந்தையாகத் திருமாலே அவதாரம்
* அவரே தேவஹூதிக்குச் செய்த ஞான உபதேசம்
* அவரது அருளால் கர்தம-தேவஹூதி தம்பதியருக்கு முக்தி.

ஆக, இவ்வுலகில் வாழும் நல்ல இல்வாழ்க்கை தொடக்கமாக, அவ்வுலகப் பெருவாழ்வாகிய முக்தி வரை தன் பக்தருக்கு என்னென்னவெல்லாம் தருவதாகத் திருமால் வாக்களித்தாரோ, அவை அனைத்தையும் குறைவின்றி அருளியிருக்கிறார் என்பதை இதன்மூலம் அறியமுடிகிறது. கர்தமருக்கு, தான் கொடுத்த அனைத்து வாக்குகளையும் நிறைவேற்றியதால், கபில வாசுதேவர் ஸத்யதர்மா என அழைக்கப்படுகிறார்.

ஸத்யதர்மா என்றால் தன் செயல்களிலே நேர்மையாக இருந்து கொடுத்த வாக்கு அனைத்தையும் நிறைவேற்றுபவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 532-வது திருநாமம்.

`ஸத்யதர்மணே நமஹ’ என்று தினமும் சொல்லி வந்தால் நாமும் நேர்மையுடன் வாழ்ந்து கொடுத்த வாக்கை நிறைவேற்றும் ஆற்றல் மிக்கவர்களாக விளங்கத் திருமால் அருள் புரிவார்.

——————-

533. த்ரிவிக்ரமாய நமஹ (Trivikramaaya Namaha)

கர்தமப் பிரஜாபதிக்கும் தேவஹூதிக்கும் மகனாகத் திருமால், கபில வாசுதேவர் என்ற திருநாமத்துடன் அவதரித்தார். இறைவனே தங்களுக்கு மகனாக வந்தமையை எண்ணி, கர்தமரும் தேவஹூதியும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். கபிலரின் திருமேனி ஒளியாலே கர்தமரின் ஆசிரமம் ஒளிபெற்று விளங்கியது. அவர்களின் முகத்திலும் புன்னகை ஒளிவீசியது. இப்படி அவர்கள் கபிலரின் அவதாரத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது, கபில மூர்த்தியைத் தரிசிக்க விரும்பிய பிரம்மா, கர்தமரின் ஆசிரமத்திற்கு வந்தார். தனது மகனான கர்தமரிடம் பிரம்மா, “தந்தை சொல்வதைக் கேட்டு நடப்பதுதான் மகனுக்கு முதல் கடமை. உன் தந்தையான எனது பேச்சைக் கேட்டு நீ நடந்து, என் வாக்கை நீ நிறைவேற்றியதில் எனக்கு மகிழ்ச்சி’’ எனக் கூறினார்.

ஏனெனில், கர்தமருக்கு முக்தி அடைவதில்தான் விருப்பம் இருந்தது. ஆனால், தந்தையான பிரம்மா, பிரஜாபதி ஸதானத்தில் கர்தமரை அமர்த்தினார். உலகில் பிரஜைகளை உற்பத்தி செய்யும் பொறுப்பைக் கர்தமருக்கு அளித்தார். தந்தையின் கட்டளையையும் மீறாமல், அதே நேரம் முக்திக்கான வழியும் பாதிக்கப்படாமல் வாழ வேண்டும் என்ற விருப்பத்தில் பகவானை நோக்கித் தவம் புரிந்தார் கர்தமர்.

அந்த எண்ணத்தைப் பாராட்டும் விதமாகத்தான், பகவான் கர்தமருக்குக் காட்சி கொடுத்துத் தானே மகனாகப் பிறப்பதாகவும் வாக்கு கொடுத்தார். இதையெல்லாம் மனதில் கொண்டுதான், பிரம்மா கர்தமரைப் பாராட்டினார். மேலும், கர்தமனே உனக்கு மகனாகப் பிறந்திருப்பது பகவான் நாராயணன்தான். பொன்போன்ற குழல்கற்றைகளோடும், தாமரைக் கண்களோடும், திருவடியில் தாமரை முத்திரையோடும் இருக்கும் இந்தக் குழந்தையின் தோற்றத்தைப் பார். திருமாலுக்குரிய அடையாளங்களோடேயே இக்குழந்தை வந்து பிறந்துள்ளது. இவர்தான், உலகுக்கே `சாங்கிய யோகம்’ என்ற பெயரில் ஆத்ம-பரமாத்ம தத்துவங்களை உபதேசிக்கப் போகிறார். உன் தவத்துக்குப் பரிசாகவும், உன் பக்திக்கான வெகுமதியாகவும், உன் எண்ணத்துக்கான கௌரவமாகவும்தான், திருமாலுக்கே தந்தையாகும் பேறு உனக்குக் கிட்டியுள்ளது என்றார் பிரம்மா.

மேலும், கர்தமர் – தேவஹூதி இருவரையும் பார்த்து, இவர் உலகிலே சித்த புருஷர்களாலும், ஞானிகளாலும், சான்றோர்களாலும் போற்றப்படுபவராக விளங்கப் போகிறார். ரிக்வேதம், யஜுர்வேதம், ஸாமவேதம் ஆகிய மூன்று வேதங்களுக்குள்ளே யார் ஒருவன் நிறைந்துள்ளானோ, அந்த இறைவனேதான் உங்களுக்கு மகனாக வந்திருக்கிறான் என்று புரிந்துகொள்ள வேண்டும் என்று பிரம்மதேவர் கூறினார்.

பொதுவாக, நான்கு வேதங்கள் இருந்தாலும்கூட, ரிக்வேதம், யஜுர்வேதம், ஸாமவேதம் ஆகிய மூன்றைப் பிரதானமாக எடுத்து, அவற்றை `த்ரயீ’ என்றும் மூன்றுவேதம் என்றும் சொல்வது வழக்கம். தந்தையின் வாக்கை நிறைவேற்றும் ஒவ்வொரு தனயனையும், தான் விரும்பி ஆதரிப்பேன் என்று உணர்த்தவே திருமால் தந்தை சொல்லில் நிலைநிற்கும் கர்தமருக்கு மகனாகத் திருமால் தோன்றினார்.

ஸம்ஸ்க்ருதத்தில், `த்ரி’ என்றால் மூன்று, `விக்ரம’ என்றால் நிறைந்திருப்பவர். `த்ரிவிக்ரம’ என்றால் மூன்று வேதங்களிலும் நிறைந்திருப்பவர். மூன்று வேதங்களில் நிறைந்த திருமாலே கபில மூர்த்தியாக வந்தபடியால், த்ரிவிக்ரம என்று கபிலருக்குத் திருநாமம். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 533-வது திருநாமம்.

`த்ரிவிக்ரமாய நமஹ’ என்று தினமும் சொல்லி வந்தால், வேதங்களின் பொருளை உணரும் பக்குவத்தை நமக்குத் திருமால் தந்தருள்வார்.

——————–

534. மஹர்ஷயே நமஹ(Maharshaye Namaha)

கர்தமர் தமக்கு மகனாகத் தோன்றிய கபில வாசுதேவரைத் தரிசித்து, அவரைத் துதித்துவிட்டு, துறவறம் சென்றார். முன்பே தேவஹூதி தன் கணவரான கர்தமரிடம் ஆத்ம தத்துவம் குறித்த உபதேசம் செய்யுமாறு பிரார்த்தித்திருந்த போது, நம் மகனாகிய கபில வாசுதேவர், உனக்கு உபதேசிப்பார் என்று முன்பே கர்தமர் கூறியிருந்தார். அந்த அடிப்படையில், தனது மகன் கபிலரிடம் தனக்கு உபதேசம் செய்தருளுமாறு தேவஹூதி பிரார்த்தித்தாள். கபில வாசுதேவர் இறைவனை அடையும் வழியாகிய பக்தியோகத்தை உள்ளடக்கிய சாங்கிய சாஸ்திரத்தைத் தேவஹூதிக்கு உபதேசித்தார். அவ்வாறு பக்தியிலே ஈடுபடுபவன் ஆத்மாவைக் குறித்த ஞானத்தோடும், உலகியல் விஷயங்களில் வைராகியத்தோடும் திகழ வேண்டும் என்றெல்லாம் உபதேசம் செய்துள்ளார். கருவிலே குழந்தை உருவாகி வருவதை விஞ்ஞானப் பூர்வமாகத் தேவஹூதிக்கு உபதேசிக்கிறார் கபிலர். கருவில் இருக்கும் குழந்தைக்கு முதல் மாதத்தில் தலை உருவாகிறது.

இரண்டாம் மாதத்தில் கை கால்கள் வேறுபட்டுத் தெரியத் தொடங்குகின்றன. மூன்றாம் மாதத்தில் நகங்கள் ரோமங்கள், எலும்புகள், தோல் உருவாகின்றன. மூன்று மாதம் நிறைவடைந்தவாறே ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்பது தெளிவாகிறது.நான்காம் மாதத்தில் ரத்தம், மாமிசம் ஆகிய அனைத்துமே நன்றாக உருவாகிவிடுகின்றன. ஐந்தாம் மாதத்தில் பசி தாகத்தை நன்றாக உணர்கிறது குழந்தை.

ஆறாம் மாதத்தில் குழந்தை நன்றாக அசையத் தொடங்குகிறது. ஆறு மாதக் குழந்தையாக சிசு இருக்கும் போது, பகவான் அதற்கு ஒரு காணொலிக் காட்சியைக் காட்டுகிறார். இதுவரை அந்த ஜீவாத்மா எடுத்து பிறவிகள், அவற்றில் செய்த பாபங்கள், அதற்காகப் பெற்ற தண்டனைகள் ஆகியவற்றைக் காணொலியில் காட்டுகிறார் இறைவன். அதைப் பார்க்கும் அக்குழந்தை, இப்பிறவியையாவது வீணடிக்காமல் இறைவனை நோக்கி மனதைச் செலுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை மேற்கொள்கிறது. அதன்பின் பத்து மாதம் நிறைவடையும் வேளையில், `ஸூதி மாருதம்’ என்ற ஒரு காற்று குழந்தையை வந்து பீடித்துக் கொள்கிறது.

அதுதான் குழந்தையின் தலையைக் கீழ் நோக்கித் திருப்பி, பிரசவத்துக்கு வழிவகை செய்கிறது. ஆனால் அந்தக் காற்றால் பீடிக்கப்பட்டவாறே, குழந்தை கருவுக்குள், தான் மேற்கொண்ட தீர்மானங்களை எல்லாம் மறந்துவிடுகிறது. பக்தியில் ஈடுபடவேண்டும் என்பதை மறந்து, எல்லாரையும் போலே உலகியல் விஷயங்களிலே ஈடுபடத் தொடங்கிவிடுகிறது.

எனவே அப்படியெல்லாம் மனதை அலையவிடாது, மனதை இறைவனின் திருவடிகளில் ஈடுபடுத்தி, முக்தி அடைவதற்கான வழியில் நிலைநிற்க வேண்டும் என்று பலவாறு உபதேசம் செய்தார் கபில வாசுதேவர். ரிஷி என்றால் சாமானியரின் கண்களுக்குத் தெரியாத விஷயங்களையும், காணவல்ல நுண்ணிய பார்வை உடையவர் என்றும் பொருள். சாமானியரால் காணமுடியாத குழந்தையின் உற்பத்தி, கருவின் வளர்ச்சி போன்ற விஷயங்களில் இருந்து தொடங்கி, ஆத்மா முக்தி அடைவது வரை அனைத்து சூட்சுமமான விஷயங்களையும் பிரத்தியட்சமாகக் கண்டு அவற்றை உபதேசமும் செய்தபடியால், கபில வாசுதேவர் `மஹர்ஷி’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 534-வது திருநாமம்.

`மஹர்ஷயே நமஹ’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நல்ல நுண்ணிய பார்வை கிட்டும்படித் திருமால் அருள்புரிவார்.

—————

535. கபிலாசார்யாய நமஹ (Kapilaachaaryaaya Namaha)

கபில வாசுதேவர் தேவஹூதிக்குப் பல நுண்ணிய விஷயங்களை உபதேசம் செய்தருளினார். அவற்றுள் பகவானின் திருவடிகளை அடைய வேண்டும் என்றால் நாம் பக்தி யோகத்தில் ஈடுபடவேண்டும் என்று அவர் செய்த உபதேசம் மிகவும் முக்கியமானதாகும். காதலோடு இறைவனைத் தியானிப்பதற்குத் தான் பக்தி யோகம் எனப் பெயர். இதற்கு ஞானம், வைராக்கியம் என இரண்டு அங்கங்கள் உள்ளன. ஞானம் என்றால் பகவானைப் பற்றிய புரிதல். வைராக்கியம் என்றால் உலகியல் விஷயங்களில் பற்று வைக்காமல், பகவானிடத்தில் ஈடுபடுதல். இவற்றோடு கூடிய பக்தி யோகத்தில் ஈடுபட்டால் பகவானை அடையலாம் என தேவஹூதிக்கு உபதேசம் செய்தார் கபிலர்.

உபதேசத்தைப் பெற்றுக் கொண்டு பெருமகிழ்ச்சி அடைந்தாள் தேவஹூதி. மிகப்பெரிய ஞானப் பொருளைத் தனக்கு உபதேசித்தருளிய கபிலருக்குக் கைம்மாறு அறியாது மௌனத்தில் ஆழ்ந்தாள். கபிலரோ, புன்னகையோடும் கையில் உபதேச முத்திரையோடும் பிரசன்னமாக அவள் முன்னே விளங்கினார்.இந்த நிலையில், கபிலர் தேவஹூதியிடம், “தாயே உங்களுக்கு நான் உபதேசித்த இந்த சாங்கிய யோகத்தை, இனி உலகிற்கு உபதேசம் செய்யப் போகிறேன். அதனால், எனக்கு விடைகொடுங்கள் என்றார். தன் மகனைப் பிரியப் போகிறோமோ என்று எண்ணித் தேவஹூதி மிகவும் வருந்தினாள்.

ஆனால், கபிலர் தனது நிலையையும் தனக்கு அடுத்திருக்கும் அவதார நோக்கத்தையும் தேவஹூதிக்குச் சூட்சுமமாக உணர்த்தி அருளினார். அதனால் தேவஹூதியும் ஆறி இருந்தாள். தாயிடம் விடைபெற்றுக் கொண்டு கபிலர், உலகில் சாங்கிய யோகப் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அதே நேரம் கர்தமரின் ஆசிரமத்தில் தங்கி இருந்த தேவஹூதி, தன் மகனான கபில வாசுதேவரின் வடிவத்தை இடைவிடாது தியானித்தபடி பக்தி யோகத்தில் ஈடுபட்டாள்.

அந்த பக்தியோகத்தில், சித்தி பெற்றவாறே உரிய காலத்தில் மோட்சமாகிய வைகுண்டத்தை அடைந்தாள் தேவஹூதி.தேவஹூதி சித்தி அடைந்த இடம் சித்தபதம் எனப் பெயர் பெற்றது. அவள் சரீரம் ஒரு நதியாக மாறியது. எத்தனை மனிதர்கள் வந்தாலும் போனாலும் நதி என்பது இடைவிடாமல் ஓடிக் கொண்டே இருப்பது போல், தனது ஞானமும் நதிபோல ஓடிக் கொண்டே இருக்கும் என்பதன் அடையாளமாக நதியாகவே ஓடத் தொடங்கினாள் தேவஹூதி.

இப்படித் தனது தாய்க்குக் குருவாக இருந்து அவளை மோட்சத்தில் சேர்த்தார் கபில வாசுதேவர். அதன்பின் உலகுக்கே குருவாக இருந்து உலகத்தோர் அனைவருக்கும் நல் உபதேசங்களை அருளினார். கபில என்ற சொல் பழுப்பு நிறத்தைக் குறிக்கும். ஆசார்யர் என்றால் குரு. பழுப்பு நிறம் கொண்டவராகத் தோன்றி, சிறந்த ஆசார்யராகத் திகழ்ந்து, தேவஹூதி உள்ளிட்ட பலரை பக்தியோகத்தில் நிலைநிறுத்தி அவர்களின் முக்திக்கு வழிகாட்டியதால், கபில மூர்த்தி, `கபிலாசார்யா’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 535-வது திருநாமம்.

`கபிலாசார்யாய நமஹ’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குக் குருவருளும், திருவருளும் நிறையும்.

———-

————————

537. மேதினீபதயே நமஹ (Medhineepathaye Namaha)

துருவ மகாராஜாவின் வம்சத்திலே அங்கன் என்ற மகாராஜா தோன்றினார். அவர் துருவனைப் போலவே நல்லொழுக்கம் கொண்டவராகவும், மிகவும் புகழ் பெற்றவராகவும் விளங்கினார். அவருக்கு சுனீதா என்ற மனைவி இருந்தாள். அங்கனுக்கும் சுனீதாவுக்கும் வேனன் என்ற மகன் பிறந்தான். இந்த வேனன் இளமைக்காலம் முதலே தீய ஒழுக்கம் கொண்டவனாக இருந்தான், நல்லோர்களைத் துன்புறுத்திவந்தான். இப்படித் தவறு செய்துவந்த தன் மகன் அங்கனைப் பார்த்து வேனன், நம் குல முன்னோர்கள் எவ்வளவு உயர்ந்த நல்லொழுக்கத்தையும் நன்னெறிகளையும் கடைப்பிடித்து வந்தார்கள். அவர்களின் பெருமைக்கு இழுக்கு நேரும்படி நீ இப்படித் தவறுகள் செய்யலாமா, வேண்டாம். திருந்தி வாழ்வாயாக என்றெல்லாம் அறிவுரை கூறினான். ஆனால் வேனன் இவற்றை எல்லாம் கேட்பதாகத் தெரியவில்லை.

மகனை நினைத்து மனம் வருந்திய அங்க மகாராஜா, காட்டுக்குச் சென்று துறவறம் மேற்கொண்டார். இப்பொழுது நாட்டை ஆள மன்னரே இல்லாமல் போனது. பிருகு முனிவர் உட்பட மற்ற முனிவர்களும் மகாராணி சுனீதாவைச் சந்தித்தனர். காட்டுக்குச் சென்ற அங்க மகாராஜாவின் மனநிலை எங்களுக்குப் புரிகிறது, ஆனால் நாட்டுக்கு ஒரு ராஜா வேண்டும், உங்களுக்கு இருப்பது ஒரே ஒரு மகன் தான். ஆதலால் வேனனுக்குப் பட்டாபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அறிவுரை கூறினார்கள்.

மகாராணி சுனீதாவும் அதற்கு இசைந்தாள். வேனனுக்குப் பட்டாபிஷேகம் நடைபெற்றது. ஆட்சியில் அமர்ந்த வேனன், அப்பாவி மக்களுக்கு வரி விதித்தான், இயற்கை வளங்களைச் சுரண்டினான், முனிவர்களைத் துன்புறுத்தினான், வேதம் சொல்லத் தடை விதித்தான், தீயவர்களை நன்றாக வாழ வைத்தான். இப்படி பூமிக்குப் பலவிதத்திலே தொல்லை கொடுத்தான் வேன ராஜா.

பொறுமைக்குப் பெயர் போன பூமிதேவியே ஒரு கட்டத்தில் தன்னிடம் உள்ள கனிம வளங்கள், இயற்கை வளங்கள், நிலவளம், நீர் வளங்களை மறைத்துக்கொண்டாள். இப்பொழுது முனிவர்கள் அனைவரும் கோபம்கொண்டு தங்களின் தவ சக்தி என்னும் தீயை வேனன் மீது ஏவினார்கள். அந்த அக்னியில் எரிந்து வேனன் மாண்டுபோனான்.இப்பொழுது அடுத்த ராஜா யார் என்ற கேள்வி வந்தது. முனிவர்கள் பிரம்மாவின் உதவியை நாடினார்கள். அப்போது பிரம்மா அவர்களுக்கு வழி சொன்னார் – முனிவர்களே, லோக ஷேமத்துக்காகப் பாதாள லோகத்தில் கபில வாசுதேவர் தவம் புரிகிறார். கபிலரின் உதவியை நாடுங்கள். அவர் வழி சொல்வார் என்று பிரம்மாஅறிவுறுத்தினார்.

கபிலரின் உதவியை முனிவர்கள் நாட, நீங்கள் வேனனின் உடலை அவன் தாயிடம் இருந்து வாங்கி அவனது கையைக் கடையுங்கள். அதிலிருந்து பகவானின் அம்சாவதாரமாக ப்ருது என்பவரும் மஹாலட்சுமியும் அம்சமாக அர்சிஸ் என்பவளும் தோன்றுவார்கள் எனக் கூறினார்.அவ்வாறே முனிவர்களும் வேனனின் உடலைக் கடைய, ப்ருது சக்ரவர்த்தியும் அர்சிஸ்ஸும் தோன்றினார்கள். வேனனின் கொடுங்கோல் ஆட்சியால் கோபம்கொண்ட பூமிதேவி, பசு வடிவில் ஒளிந்திருந்தாள். அவளிடம் சென்ற ப்ருது சக்கரவர்த்தி, மீண்டும் வளங்களைச் சுரக்க வேண்டும் என்று கேட்டார். பகவானே கேட்பதால் பூமியால் மறுக்க முடியவில்லை.

நான் மீண்டும் வளங்களைச் சுரக்கிறேன், ஆனால் இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும். அதனை யாரும் அழிக்கவோ, சுரண்டவோ கூடாது, அதனை அழித்தால் என்ன ஆகும் எனக் காண்பிக்கவே நான் வளங்களை மறைத்துக் கொண்டேன் என்று சொன்னாள் பூமிதேவி. பின் பசு வடிவில் இருந்த பூமியிடம் இருந்து வளங்களை எல்லாம் கறந்தார் ப்ருது. ப்ருது சக்கரவர்த்தி பூமியிடம் இருந்து வளங்களைக் கடைந்து எடுத்ததால் தான் பூமி தேவி ப்ருத்வீ எனப் பெயர் பெற்றாள்.

இப்படிப் பூமியில் எல்லா வளங்களும் நிறைய வேண்டும் எனப் பாதாளத்தில் உலக நன்மைக்காக தவம் புரிந்தும், அறிவுரைகளை வழங்கியும் உலகத்தைப் பாதுகாக்கும் கபில வாசுதேவர் மேதினீபதி என அழைக்கப்படுகிறார். மேதினீ – பூமி, பதி – தலைவர், மேதினீபதி – பூமிக்குத் தலைவர்.

அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 537-வது திருநாமம்.“மேதினீபதயே நமஹ’’ என்று தினமும் சொல்லி வருவோர்க்கு எல்லா வளங்களும் நிறையும்படித் திருமால் அருள்புரிவார்.

————

538. த்ரிபதாய நமஹ (Tripadhaaya Namaha)

(538-வது திருநாமம் முதல் அடுத்த சில திருநாமங்கள் வராக அவதார வைபவம்)பிரளயக் காலத்தில் பிரளயக் கடல் இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் சூழ்ந்து விடும். அந்தப் பிரளயக் கடலுக்குள் பூமியை மறைத்து வைத்து விட்டான் ஹிரண்யாட்சன் என்ற அசுரன். பிரளயக் கடலுக்குள் பூமி சிக்குண்டு விட்டதால், பிரம்மாவால் மேற்கொண்டு உலகில் உயிர்களைப் படைக்க முடியாத நிலை ஏற்பட்டது. திருமாலே நாராயணா நீதான் பூமியை மீட்டுத் தர வேண்டும் என்று திருமாலிடம் வேண்டினார் பிரம்மா.

பிரம்மாவின் மூக்குத் துவாரத்தில் இருந்து ஒரு பன்றி வெளியே வந்து குதித்தது. அந்தப் பன்றி வேறுயாரும் அன்று, சாட்சாத் திருமாலே உலகைக் காப்பதற்காகப் பன்றி வடிவம் எடுத்து வராக மூர்த்தியாகத் தோன்றியுள்ளார். அந்த வராகப் பெருமாள் கிடுகிடுவென மலையளவு வளர்ந்து மஹாவராகனாக விளங்கினார். அந்த வராக மூர்த்தியின் திருமேனியிலேயே வேள்விகள், யாகங்கள், வேதப் பகுதிகள் அனைத்தும் இருந்தன. அதனால், அவரை யக்ஞ வராகன் என்று முனிவர்கள் அழைத்தனர். வராகப் பெருமாள் பிரளயக் கடலுக்குள் சென்று ஒரு பன்றி எப்படி தனது கோரைப் பற்களால் கிழங்கை கொத்தி எடுக்குமோ அதைப்போல் பூமியை மீட்டு வந்தார். அவரைத் தடுக்கப் பார்த்த ஹிரண்யாட்சனையும் அழித்தொழித்தார். அதன்பின் பிரம்மா பழையபடி உலகின் படைப்புத் தொழிலைநடத்தத் தொடங்கினார்.

இப்படிப் பூமியை மீட்டுத் தந்த வராகப் பெருமானுக்கு ரிஷிகள் எல்லாரும் பல்லாண்டு பாடினர். மூன்று வேதங்களையும், யாக யக்ஞங்களையும் உன் சரீரமாகக் கொண்டிருப்பவனே, உனக்குப் பல்லாண்டு என்று பாடினர் முனிவர்கள். வேதங்களின் எந்தெந்தப் பகுதிகள் வராகனின் திருமேனியில் எந்தெந்த அங்கங்களாக இருந்தன என்பதை ஸ்ரீமத் பாகவத புராணத்தில் சுகமுனிவர் வர்ணித்துள்ளார்.

வராகப் பெருமானின் தோளாக காயத்ரி மந்திரம் இருக்கிறது, ரோமங்களாகத் தர்பைப் புல் இருக்கிறது, கண்களாக நெய் இருக்கிறது, அவரின் உதடாக சிருக் என்னும் யாகப் பாத்திரம் இருக்கிறது, மூக்காக சிரவம் என்னும் யாகப் பாத்திரம் இருக்கிறது, இடா என்னும் பாத்திரம் அவரின் வயிறாக இருக்கிறது, சமசம் என்னும் பாத்திரம் அவரின் காதுகளாக இருக்கிறது, அவரின் நாவிலே சோம பாத்திரம் இருக்கிறது, பலப்பல யாகங்களே அவருக்குப் பற்களாக இருக்கிறது, கோரைப் பல்லாக யாகத்தின் யூபஸ்தம்பம் இருக்கிறது. வராகப் பெருமாள் நாக்கை வெளியே நீட்டினால் யாகத்தின் அக்னி ஜுவாலை வெளியே வரும்.

இத்தகைய திருமேனி படைத்த வராகப் பெருமானின் முதுகிலே மூன்று திமில்கள் உண்டு. அந்தத் திமில்கள் ஓம்காரமாகிய பிரணவத்தில் இருக்கும் மூன்று எழுத்துக்களைக் குறிக்கின்றன. ஓம் என்னும் பிரணவத்தை அ, உ, ம என்று மூன்று எழுத்துகளாகப் பிரிப்பார்கள்.அவற்றுள் அ என்பது பராமாத்வைக் குறிக்கிறது, ம என்பது ஜீவாத்மாவைக் குறிக்கிறது, உ என்பது பரமாத்மாவுக்கே ஜீவாத்மா தொண்டன் எனக் காட்டுகிறது.

இத்தத்துவத்தை உணர்த்தும் ஓம் என்னும் பிரணவம் வேதங்களிலும், வேள்விகளிலும் முக்கியப் பங்கு வகிப்பதால், அந்த வேதங்களையும் யாகங்களையும் தனது திருமேனியாகக் கொண்டிருக்கும் வராகப் பெருமாள், பிரணவத்தை தனது முதுகில் மூன்று திமில்களாகக் கொண்டிருக்கிறார்.த்ரிபத என்றால் மூன்று திமில்களை உடையவர் என்று பொருள். பிரணவத்தில் உள்ள மூன்று எழுத்துக்களைக் குறிக்கும் மூன்று திமில்களை முதுகிலே கொண்டிருக்கும் வராகப் பெருமாள் த்ரிபத என்று அழைக்கப்படுகிறார்.

அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 538-வது திருநாமம்“த்ரிபதாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வந்தால் பிரணவத்தின் ஆழ்பொருளை உணரும் ஞானநிலையை ஞானப் பிரானாகிய வராகமூர்த்தி நமக்குத் தந்தருள்வார்.

——–

538.(A). த்ரிபதாய நமஹ(Tripadhaaya Namaha)

சுமார் ஏழு வருடங்களுக்கு முன்பு அடியேனும் அடியேனின் சில நண்பர்களும் அடியேனின் வீட்டில் அமர்ந்து, மடிக்கணினியில் கிரிக்கெட் விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தோம். EA Sports cricket 07 விளையாட்டைப் பெருமாபாலும் பல இளைஞர்கள் அறிவார்கள். அச்சமயம் அடியேனின் ஆசார்யனான டாக்டர் ஸ்ரீஉ.வே. கருணாகராச்சாரியார் ஸ்வாமி, அடியேனின் இல்லத்துக்கு எழுந்தருளினார். கிரிக்கெட்டில் ஆர்வம் மிக்கவரான கருணாகராச்சாரியார் அடியேனைப் பார்த்து என்ன விளையாடுகிறாய் என்று கேட்டார். மடிக்கணினியில் விளையாடும் மட்டைப்பந்து ஆட்டம் என்று அதைப் பற்றி அவரிடம் சொன்னேன். நானும் பார்க்கிறேன், நீங்கள் தொடர்ந்து விளையாடுங்கள் என்று சொல்லிவிட்டு, ஸ்வாமியும் அமர்ந்து பார்க்கத் தொடங்கினார்.

கொஞ்ச நேரத்தில், ஆஹா இந்த மடிக்கணினி கிரிக்கெட் விளையாட்டு தத்வ த்ரயத்தை எவ்வளவு அழகாகச் சொல்கிறது என்று வியந்து சொன்னார். பெரியோர்கள் எதைப் பார்த்தாலும் இறைவனோடு தொடர்பு படுத்திப் பார்ப்பார்கள் என்று கேள்விப் பட்டுள்ளேன். நீங்கள் எப்படி விளையாட்டில் கூடத் தத்வ த்ரயத்தைக் காண்கிறீர்கள் என்று அடியேன் வியப்போடு சுவாமியிடம் கேட்டேன். அதற்கு அவர் விடையளித்தார்; உலகிலுள்ள அறிவில்லாத ஜடப் பொருள்களுக்கு அசேதனம் என்று பெயர். அறிவுள்ள ஜீவாத்மாக்களான நமக்கு சேதனம் என்று பெயர்.

இந்த அசேதனங்களையும் சேதனர்களையும் ஆளும் இறைவனுக்கு, ஈச்வரன் என்று பெயர். அசேதனம், சேதனம், ஈச்வரன் ஆகிய மூவிதத் தத்துவங்களையே “தத்வ த்ரயம்’’ என்று குறிப்பிடுகிறோம். இங்கே உன் விளையாட்டை எடுத்துக் கொண்டால், உனது மடிக்கணினிதான் ஜடப்பொருளாகிய அசேதனம். அதற்கு ஞானம் என்பது கிடையாது. அந்த மடிக்கணினியில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களே உலகில் நாம் காணும் ஜீவாத்மாக்களாகிய சேதனர்கள் ஆவார்கள். ஜாய்ஸ்டிக்கைக் கையில் வைத்துக் கொண்டு மடிக்கணினியையும் அதன் திரையில் தோன்றும் வீரர்களையும் இயக்கும் நபர் ஈச்வரனின் ஸ்தானத்தில் உள்ளார்.

நாம் ஜாய்ஸ்டிக்கைக் கையில் வைத்துக் கொண்டு கணினியையும் அதில் தெரியும் வீரர்களையும் இயக்குவது போலே, இறைவன் தன் சங்கல்பத்தால் உலகையும் அதில் வாழும் உயிர்களையும் இயக்கிக்கொண்டிருக்கிறார். ஆனால், உணர்ச்சிவசப் பட்டுப் பார்ப்பவர் ஏதோ நிஜமாகவே ஒரு நபர் திரையில் இருந்து சிக்ஸர் அடிப்பதாக நினைக்கக் கூடும். அப்படித்தான் நாமெல்லோரும் ஏதோ நாமே நம் முயற்சியால் செயல்படுவதாக எண்ணுகிறோம்.

ஆனால், உண்மையில் இறைவன்தான் நம்மை இயக்குகிறான் என்பதை ஞானிகளே அறிவார்கள் என்று அழகாக விளக்கினார். இந்தக் கருத்தையே கபில முனிவரும் தமது சாங்கிய யோகத்தில் உபதேசம் செய்தார். போக்தா என்பது உலகிலுள்ள இன்பங்களை அனுபவிக்கும் ஜீவாத்மாக்களைக் குறிக்கும். போக்யம் என்பது இவ்வுலகில் நம்மால் அனுபவிக்கப்படும் ஜடப்பொருள்களைக் குறிக்கும். நியந்தா என்பது இவர்களை இயக்கி ஆளும் இறைவனைக் குறிக்கும். இந்த மூன்று தத்துவங்களையும் தமது உபதேசங்கள் மூலம் தெளிவாக விளக்கியதால், கபில வாசுதேவர் த்ரிபத – மூன்று தத்துவங்களை விளக்கியவர் என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 538-A திருநாமம்.

இதே திருநாமம் வராகப் பெருமாளின் பெருமையைச் சொல்வதாகவும் அமைந்துள்ளது. அதை அடுத்த விளக்கத்தில் காண்போம்.

“த்ரிபதாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வந்தால், நமக்கும் மூன்று தத்துவங்களைப் பற்றிய தெளிந்த ஞானம் திருமாலின் திருவருளால் உண்டாகும்.

————–

538.(B) த்ரிபதாய நமஹ (Tripadhaaya Namaha)

538-வது திருநாமம் முதல் அடுத்த சில திருநாமங்கள் வராக அவதார வைபவம்பிரளயக் காலத்தில் பிரளயக் கடல் இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் சூழ்ந்து விடும். அந்தப் பிரளயக் கடலுக்குள் பூமியை மறைத்து வைத்துவிட்டான் ஹிரண்யாட்சன் என்ற அசுரன். பிரளயக் கடலுக்குள் பூமி சிக்குண்டுவிட்டதால், பிரம்மாவால் மேற்கொண்டு உலகில் உயிர்களைப் படைக்க முடியாத நிலை ஏற்பட்டது. “திருமாலே நாராயணா நீதான் பூமியை மீட்டுத் தர வேண்டும்’’ என்று திருமாலிடம் வேண்டினார் பிரம்மா. பிரம்மாவின் மூக்குத் துவாரத்தில் இருந்து ஒரு பன்றி வெளியே வந்து குதித்தது. அந்தப் பன்றி வேறுயாரும் அன்று, சாட்சாத் திருமாலே உலகைக் காப்பதற்காகப் பன்றி வடிவம் எடுத்து வராக மூர்த்தியாகத் தோன்றியுள்ளார். அந்த வராகப் பெருமாள் கிடுகிடுவென மலையளவு வளர்ந்து மஹாவராகனாக விளங்கினார்.

அந்த வராக மூர்த்தியின் திருமேனியிலேயே வேள்விகள், யாகங்கள், வேதப் பகுதிகள் அனைத்தும் இருந்தன. அதனால் அவரை யக்ஞ வராகன் என்று முனிவர்கள் அழைத்தனர். வராகப் பெருமாள் பிரளயக் கடலுக்குள் சென்று ஒரு பன்றி எப்படி தனது கோரைப் பற்களால் கிழங்கை கொத்தி எடுக்குமோ அதைப்போல் பூமியை மீட்டு வந்தார். அவரைத் தடுக்கப் பார்த்த ஹிரண்யாட்சனையும் அழித்தொழித்தார்.

அதன்பின் பிரம்மா பழையபடிஉலகின் படைப்புத் தொழிலை நடத்தத் தொடங்கினார். இப்படிப் பூமியை மீட்டுத் தந்த வராகப் பெருமானுக்கு ரிஷிகள் எல்லாரும் பல்லாண்டு பாடினர். மூன்று வேதங்களையும், யாக யக்ஞங்களையும் உன் சரீரமாகக் கொண்டிருப்பவனே, உனக்குப் பல்லாண்டு என்று பாடினர் முனிவர்கள். வேதங்களின் எந்தெந்தப் பகுதிகள் வராகனின் திருமேனியில் எந்தெந்த அங்கங்களாக இருந்தன என்பதை ஸ்ரீமத் பாகவத புராணத்தில் சுகமுனிவர் வர்ணித்துள்ளார்.

வராகப்பெருமானின் தோளாக காயத்ரி மந்திரம் இருக்கிறது, ரோமங்களாகத் தர்பைப் புல் இருக்கிறது, கண்களாக நெய் இருக்கிறது, அவரின் உதடாக சிருக் என்னும் யாகப் பாத்திரம் இருக்கிறது, மூக்காக சிரவம் என்னும் யாகப் பாத்திரம் இருக்கிறது, இடா என்னும் பாத்திரம் அவரின் வயிறாக இருக்கிறது, சமசம் என்னும் பாத்திரம் அவரின் காதுகளாக இருக்கிறது, அவரின் நாவிலே சோம பாத்திரம் இருக்கிறது, பலப்பல யாகங்களே அவருக்குப் பற்களாக இருக்கிறது, கோரைப் பல்லாக யாகத்தின் யூபஸ்தம்பம் இருக்கிறது.

வராகப் பெருமாள் நாக்கை வெளியே நீட்டினால் யாகத்தின் அக்னி ஜுவாலை வெளியே வரும். இத்தகைய திருமேனி படைத்த வராகப் பெருமானின் முதுகிலே மூன்று திமில்கள் உண்டு. அந்தத் திமில்கள் ஓம்காரமாகிய பிரணவத்தில் இருக்கும் மூன்று எழுத்துக்களைக் குறிக்கின்றன. `ஓம்’ என்னும் பிரணவத்தை அ, உ, ம என்று மூன்று எழுத்துகளாகப் பிரிப்பார்கள். அவற்றுள் `அ’ என்பது பரமாத்மாவைக் குறிக்கிறது, `ம’ என்பது ஜீவாத்மாவைக் குறிக்கிறது, `உ’ என்பது பரமாத்மாவுக்கே ஜீவாத்மா தொண்டன் எனக் காட்டுகிறது. இத்தத்துவத்தை உணர்த்தும் ஓம் என்னும் பிரணவம் வேதங்களிலும், வேள்விகளிலும் முக்கியப் பங்கு வகிப்பதால், அந்த வேதங்களையும் யாகங்களையும் தனது திருமேனியாகக் கொண்டிருக்கும் வராகப் பெருமாள், பிரணவத்தை தனது முதுகில் மூன்று திமில்களாகக் கொண்டிருக்கிறார்.

`த்ரிபத’ என்றால் மூன்று திமில்களை உடையவர் என்று பொருள். பிரணவத்தில் உள்ள மூன்று எழுத்துகளைக் குறிக்கும் மூன்று திமில்களை முதுகிலே கொண்டிருக்கும் வராகப் பெருமாள் த்ரிபத என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 538-வது திருநாமம் (B).

“த்ரிபதாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வந்தால், பிரணவத்தின் ஆழ்பொருளை உணரும் ஞானநிலையை ஞானப் பிரானாகிய வராகமூர்த்தி நமக்குத் தந்தருள்வார்.

————-

539. த்ரிதசாத்யக்ஷாய நமஹ (Thridhashaadhyakshaaya Namaha)

படைப்புக் கடவுள் என்னும் ஸ்தானத்தில் திருமாலாலே அமர்த்தப்பட்ட பிரம்ம தேவர், தேவர்கள் முனிவர்கள் ஆகிய ஒவ்வொரு குழுவையும் படைத்து வந்தார். அதைத் தொடர்ந்து மனிதர்களைப் படைக்க முற்பட்டார் பிரம்மா. முதற்கண் தனது உடலில் இருந்து சுவாயம்புவ மனு என்ற ஆணையும் சதரூபா என்ற பெண்ணையும் உருவாக்கினார். ஆனால், அந்த சுவாயம்புவ மனுவும் சதரூபாவும் வசிப்பதற்குரிய இடமே இல்லை.

மனிதர்கள் வாழ வேண்டிய மொத்த பூமியின் நிலப்பரப்பையும் ஊழிக் கடலுக்குள்ளே ஒளித்து வைத்து விட்டான் ஹிரண்யாட்சன் என்ற அசுரன். நாங்கள் வாழ்வதற்குரிய இடத்தைக் காட்டுங்கள் என்று சுவாயம்புவ மனுவும் சதரூபாவும் பிரம்மாவிடம் வேண்டினார்கள்.

அப்போது பிரம்மா, இந்நிலையில் என்னைப் படைத்த என் தந்தையான நாராயணன் ஒருவனால்தான் நம்மைக் காக்க முடியும் என்று சொல்லி விட்டு, மனதாரத் திருமாலை வேண்டினார். அப்போது கட்டை விரல் அளவுள்ள பன்றி ஒன்று பிரம்மாவின் மூக்கு துவாரத்தில் இருந்து வெளியே வந்து குதித்தது. அதுதான் திருமாலின் பன்றி வடிவிலான வராக அவதாரம். அதன் பின் பேருருவம் தாங்கிய வராகப் பெருமான், ஊழி வெள்ளத்துக்கு உள்ளே சென்று, ஹிரண்யாட்சனை அழித்து பூமியை மீட்டுத் தந்தார்.அதைக் கண்ட தேவர்கள், வராகனை வழிபட்டு வராகனுக்குத் தங்கள் நன்றியைத் தெரிவித்தார்கள்.

தேவர்களுக்கு யாகத்தில் ஹவிர்பாகம் கிடைக்க வேண்டும் என்றால், பூமியிலே யாக யஜ்ஞங்கள் நிறைய நடக்க வேண்டும். அதற்கு அடிப்படையில் பூமி நன்றாக நிலைநிற்க வேண்டுமல்லவா. எனவே வராகர் பூமியை மீட்டுத் தந்தமையால்தான் தேவர்கள் அத்தனை பேரும் க்ஷேமம் அடைந்தார்கள். வேத கோஷம் என்றென்றும் பூமியில் ஒலிக்கும்படி வராகர் அருள் செய்தமையால் ரிஷிகள் க்ஷேமம் அடைந்தார்கள். தன் திருமேனியிலேயே யாக யஜ்ஞங்களைக் கொண்டவராக வராகர் விளங்கியதால், பெரிதாக வேத அறிவில்லாத நம் போன்றோரும் அவர் வடிவைக் காணும் போதே வேதங்களைப் பற்றியும் யாகங்களைப் பற்றியும் அறியும்படிச் செய்கிறார் வராகப் பெருமான். இப்படி தேவர்களுக்கு ஆபத்து ஏற்படும்போது உடனே அவர்களை வந்து காப்பதால், வராகர் `த்ரிதசாத்யக்ஷ’ என்று அழைக்கப்படுகிறார்.

அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 539-வது திருநாமம். த்ரிதச என்ற சொல் தேவர்களைக் குறிக்கிறது. தச என்றால் பத்து, த்ரி என்றால் மூன்று, த்ரிதச என்றால் முப்பது என்று பொருள். மொத்தம் முப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தாலும், அந்த 33 கோடி என்ற எண்ணிக்கையைச் சுருக்கமாக 30 என்று குறிப்பிட்டு த்ரிதச என்று சொல்வது வழக்கம்.

அத்யக்ஷ என்றால் பொதுவாகத் தலைவர் என்று பொருள். இங்கே ஆபத்தில் உதவுபவர் அத்யக்ஷ என்று பொருள்படுகிறது. அந்த வகையில் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு ஆபத்து ஏற்படும் போதெல்லாம் உடனே வந்துதவும் தலைவராக விளங்கும் வராகப் பெருமாள் த்ரிதசாத்யக்ஷ என்று அழைக்கப்படுகிறார்.

“த்ரிதசாத்யக்ஷாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களை வராகப் பெருமாள் அனைத்து ஆபத்துகளில் இருந்தும் காத்தருள்வார்.

—————

540. மஹாச்ருங்காய நமஹ (Mahaashrungaaya Namaha)

ஆழ்வார்களுள் முதல் ஆழ்வாரான பொய்கை ஆழ்வார் பகவானைப் பார்த்து, உன்னுடய அவதாரங்களிலேயே வராக அவதாரம் அளவில் பெரியதா அல்லது திரிவிக்கிரம அவதாரம் அளவில் பெரியதா எனக் கேட்டார். பகவான் ஆழ்வாரிடம், தாங்கள் தலைசிறந்த பக்தரல்லவோ. பக்தரான நீங்கள் உங்கள் அனுபவத்திலிருந்து இதற்கான விடையை எனக்குக் கூறுங்கள் என்றார். ஆழ்வாரோ, பகவானே இப்போதே அந்த இரண்டு அவதாரங்களின் அனுபவத்தையும் எனக்குத் தந்தால், நான் ஒப்பிட்டுப் பார்த்து இதற்கான விடையைத் தருகிறேன் எனக் கூறினார். பெருமாள் வராகனாக பூமியை குடைந்தெடுக்கும் காட்சியைப் பொய்கை ஆழ்வாருக்குக் காண்பித்தார். மேலும், ஓங்கி உலகளந்த உத்தமனாகவும் காட்சி அளித்தார்.

பொய்கை ஆழ்வார் இரண்டு அவதாரங்களையும் சேவித்தார். இப்போது தமது பாட்டில் இதற்கான விடையைச் சொல்கிறார் பொய்கையாழ்வார். பொய்கை ஆழ்வார் அருளிய முதல் திருவந்தாதியின் 9-வது பாசுரமாக இது அமைந்துள்ளது.

பொருகோட்டு ஓர் ஏனமாய்ப் புக்கிடந் தாய்க்கு அன்று உன்
ஒருகோட்டின் மேல்கிடந்தது அன்றே – விரிதோட்ட
சேவடியை நீட்டித் திசைநடுங்க விண்துலங்க
மாவடிவின் நீயளந்த மண்

ஓங்கி உலகளந்த பொழுது உன் திருவடி அளவிற்கு இந்த மண்னுலகம் இருந்தது. அதனால் உன் ஒரு திருவடியால் இந்த மண்ணுலகத்தை அளந்தாய். அதே சமயம் நீ வராகனாக அவதரித்து இந்த பூமியை மீட்கும் பொழுது உன் கோரைப் பற்களுக்கு நடுவே ஒரு சிறிய மணி இருப்பது போல்தான் பூமி இருந்தது. திரிவிக்கிரமனாக அவதரித்த பொழுது உன் முழுப் பாத அளவிற்கு இருந்த பூமி, வராகனாக அவதரித்த பொழுது கோரைப் பற்களுக்கு நடுவே சிறுமணி இருப்பது போல் சிறியதாகக் காட்சி அளித்தது.

இதன் மூலம் வராகப் பெருமாளாக அவதரித்த வடிவே பெரியது என்று பாட்டில் கூறினார். இப்படிப் பூமியின் அளவை வைத்துப் பெருமாளின் வடிவைக் கணக்கிட்டார் பொய்கை ஆழ்வார். ஏன் வராக பெருமாள் இவ்வளவு பெரிய வடிவை எடுத்தார் என்பதற்குப் பெரியவாச்சான் பிள்ளை சுவையான விளக்கம் அளித்துள்ளார். பல தானங்கள் செய்யும் பெரிய செல்வந்தர், தன் வீட்டுக்கு நான்கு நபர்கள் சாப்பிட வந்தால்கூட நாற்பது நபர்கள் சாப்பிடும் அளவிற்கு உணவு தயாரிப்பாராம். அது போல வராக பெருமாள் கருணையே வடிவானவர்.

தனது திருமேனியின் அழகையே அடியார்களுக்கு விருந்தாகக் கொடுக்க வேண்டும் என்று நினைத்து அவதரித்தவர். அதனால்தான் அடியார்கள் நன்றாக அனுபவிக்கட்டும் என்று கருதி மிகப் பெரிய வடிவத்தை எடுத்தார். வராகப் பெருமாளின் ஒரு பல் மொத்த பூமியைத் தாங்குகிறது என்றால் எவ்வளவு பெரிய வடிவம். ஆக, பூமியின் வடிவைக் கருத்தில் கொள்ளாமல், பூமியை மீட்க இந்த வடிவம் போதும் என்று கணக்கிடாமல், தன் அளவற்ற கருணையின் அளவைக் கருத்தில் கொண்டு பூமியே தன் பற்களில் சிறுமணி போல் இருக்கும்படித் தோன்றியதால், வராகப் பெருமாள் மஹாச்ருங்க என்று அழைக்கப்படுகிறார். மஹாச்ருங்க என்றால் பெரிய கோரைப் பல்லை உடையவர் என்று பொருள்.

மஹா என்றால் பெரிய, ச்ருங்க என்றால் கோரைப்பல். அதுவே ஸஹஸ்ர நாமத்தின் 540-வது திருநாமம்.

“மஹாச்ருங்காய நமஹ’’ என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களுக்குத் தனது அருள் பன்மடங்கு கிட்டும்படித் திருமால் அருள்புரிவார்.

—————

541 (A). க்ருதாந்த க்ருதே நமஹ (Kruthaantha Kruthey Namaha)

கச்யப முனிவரின் மனைவிகளுள் ஒருத்தியான திதி தேவி, ஒரு பிரதோஷ நாளில் மாலை வேளையில் தன் கணவரான கச்யபரிடம் வந்தாள். எனக்குக் குழந்தை பாக்கியம் வேண்டும், அந்தக் குழந்தையை இப்போதே எனக்கு அருள வேண்டும் என்று கச்யபரிடம் வேண்டினாள் திதி. இது பிரதோஷ காலம். சம்ஹார மூர்த்தியான சிவபெருமான் நாட்டியம் ஆடும் நேரம். இச்சமயத்தில் நாம் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும். அந்திப் பொழுது இதற்கேற்ற பொழுதன்று. இரவுப் பொழுது வந்தபின் உன் விருப்பத்தைப் பூர்த்தி செய்கிறேன் என்று சொன்னார் கச்யப முனிவர். ஆனால் ஆசையின் மேலீட்டால் அதைப் பொருட்படுத்தாமல் தனது கோரிக்கையில் உறுதியாக நின்றாள் திதி. கச்யபர் தனது அனுஷ்டானங்களையும் அக்னி காரியங்களையும் செய்ய முடியாத படி அவருக்கு இடையூறு செய்யும் வகையில் அவரிடம் மீண்டும் மீண்டும் தன் ஆசையைத் தெரிவித்துவந்தாள்.

வேறு வழியே இல்லாமல் திதி கேட்டபடி பிள்ளை வரத்தை அவளுக்கு அருளினார் கச்யபர். அதன்பின் கச்யபர் நீராடி விட்டு, பிராணாயாமம் செய்து மேற்கொண்டு தனது அனுஷ்டானங்களைச் செய்யப் போனார்.இந்த நிலையில்தான் தனது தவறை உணர்ந்தாள் திதி. சிறிது காலம்தானே நம் கணவர் பொறுத்திருக்கச் சொன்னார். அந்த அளவு கூட பொறுமை இல்லாது இப்படி ஆசைக்கு அடிமை ஆகிவிட்டேனே என்று வருந்தினாள். கணவர் கச்யபரின் பாதங்களில் வந்து விழுந்தாள்.

சுவாமி, ஏதோ ஆசையின் மேலீட்டால் தவறு செய்துவிட்டேன். அடியேனை மன்னிக்க வேண்டும் என்று வேண்டினாள் திதி. ஆனால் கச்யபரோ, நான் எவ்வளவு அறிவுரை சொல்லியும் நீ கேட்கவில்லை. இனி வருந்தி என்ன பயன். உனக்கு இரண்டு மகன்கள் பிறப்பார்கள். இருவரும் உலகையே கதறச் செய்து அச்சுறுத்துவார்கள், இதை மாற்ற முடியாது என்று சபித்துவிட்டார். அழுது கதறிக் கொண்டு கச்யபரின் பாதங்களில் விழுந்தாள் திதி. அடியேனை மன்னிக்க வேண்டும் என்று மீண்டும் வேண்டினாள். அதனால் மனம் இரங்கிய கச்யபர், அவள்மீது கருணை கொண்டார். கொடுத்த சாபத்தை மாற்ற இயலாது. எனினும், பிள்ளைகள் தீயவர்களாகப் பிறந்த போதும், உனக்கு ஒரு பேரன் பிறப்பான். அவனை உலகமே கொண்டாடும் என்றார்.

இதன் விளைவாகவே, இரணியகசிபு, இரணியாட்சன் என்ற இரண்டு அசுரப் பிள்ளைகள் திதியின் வயிற்றில் பிறந்தார்கள். திருமாலின் வாயில்காப்பாளர்களாய் ஜயன்-விஜயன் என்ற பெயரோடு முன்பு இருந்த அவர்கள், சனத்குமார சாபத்தால் பூமியில் பிறக்க நேரிட்டது. அவ்விருவரும் திதியின் கருவை அடைந்தார்கள். அவர்களுள் ஒருவனான இரணியகசிபுவின் மகனான பிரகலாதன் தான் கச்யபர் சொன்ன படி உலகமே கொண்டாடும் பிள்ளையாக விளங்கினான்.

இரணியகசிபுவும் இரணியாட்சனும் பிறக்கும் நேரத்தில் மலைகள் நடுங்கின, திசைகள் எரிந்தன, வானிலிருந்து கொள்ளிக் கட்டைகள் விழுந்தன, வால் நட்சத்திரம் தோன்றியது, காற்றில் மரங்கள் பறந்தன, மேகங்கள் சூரியனை மறைத்தன, கடல் கொந்தளித்தது, நதிகளில் பெருவெள்ளம் ஓடியது, ஆந்தைகள் அலறின, பசுக்கள் பயந்து ஒளிந்துகொண்டன, கிரகங்கள் வக்கிரமாகச் சுழன்றன. இத்தகைய சூழலில் தான் இருவரும் பிறந்தார்கள்.அந்த இரணியாட்சன் மொத்த உலகையும் பிரளயக் கடலுக்கு உள்ளே ஒளித்து வைத்தான். திருமால் பன்றி வடிவத்துடன் வராகராகத் தோன்றி அந்த இரணியாட்சனை அழித்துப் பூமியை மீட்டார்.

இரணியாட்சன் எமனுக்கு நிகராகக் கருதப் படுபவன். பூமியில் உள்ள உயிர்களை அழிப்பவன் எமன் என்றால், மொத்த பூமியையும் அழிக்கப் பார்க்கும் எமனாக இருந்தான் இரணியாட்சன். அந்த எமனாகிய இரணியாட்சனைச் சக்கராயுதத்தாலே வெட்டிச் சாய்த்தபடியால் வராகப் பெருமாள் க்ருதாந்தக்ருத் என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 541-வது திருநாமம். க்ருதாந்த என்றால் எமன். க்ருத் என்றால் வெட்டி வீழ்த்தியவர். க்ருதாந்தக்ருத் என்றால் எமன் போன்றவனை வெட்டிச் சாய்த்தவர்.

க்ருதாந்தக்ருதே நமஹ என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களின் அனைத்துத் துன்பங்களையும் தன் சக்ராயுதத்தால் வெட்டி வீழ்த்துவார் திருமால்.

————–

541 (B). க்ருதாந்த க்ருதே நமஹ (Kruthaantha Kruthey Namaha)

பிரளயக்கடலில் இருந்து வராகப் பெருமாள் பூமிதேவியை மீட்டபோது, பூமிதேவி வராகனிடம், இந்தப் பிரளயக் கடலில் இருந்து என்னைக் காத்தது ஒருபுறம் இருக்கட்டும். இதை விடக் கொடுமையான, கடுமையான பிறவிப் பெருங்கடலில் நம் குழந்தைகளான ஜீவாத்மாக்கள் அத்தனை பேரும் துன்புற்றுக் கிடக்கிறார்களே. அவர்களைக் காக்க ஒரு வழி சொல்லுங்கள் என்று கேட்டாள்.

அப்போது வராகப் பெருமாள், பூமியிடம் ஒரு சரம சுலோகத்தைச் சொன்னார்

ஸ்திதே மனஸி ஸுஸ்வஸ்தே சரீரே ஸதி யோ நர:
தாதுஸாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விச்வரூபம் சமாம் அஜம்
ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்டபாஷாண ஸந்நிபம்
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம்

இளமைக்காலத்தில் ஒருவன் என்னைத் தியானித்து, நானே கதி என்று சரண் அடைந்து விட்டால், முதுமைக் காலத்தில், உயிர்பிரியும் தறுவாயில், அந்த பக்தன் என்னை மறந்து விட்டாலும் கூட, அந்த பக்தனை நினைவில் கொண்டு நான் மறவாமல் அவனைக் காப்பேன்.

இளமைக் காலத்தில் தன்னை நினைப்பதற்கு எளிமையான இரண்டு வழிகளை வராகப் பெருமாள் கூறினார்.

1.வாசனையுள்ள பூச்செடிகளை வளர்த்து, அந்தப் பூக்களைப் பறித்து, தானே நாரில் மாலையாகத் தொடுத்து இறைவனுக்குச் சமர்ப்பித்தால் இறைவனின் மனம் மிகவும் மகிழும்.

2. இறைவனின் திருநாமங்களைப் பாமாலையாகப் பாடுதல்.

இந்த இரண்டையும் இளமைக் காலத்தில் ஒருவன் செய்துவந்தால், அவனது மனம் மெல்ல மெல்லப் பக்குவப்பட்டு சரணாகதி நிஷ்டையை அடைந்து விடுவான். இதுவே வராகர் செய்த உபதேசம்.இப்படி பக்தி என்பது இளமைக் காலத்தில் செய்ய வேண்டியது என்பதை உணர்த்தி, அந்த இளமைப் பருவத்திலேயே சரணாகதி செய்திட வேண்டும் என்பதையும் விளக்கி, அந்த பக்தனைத் தான் என்றும் மறக்காமல் காப்பேன் என்ற தன் சித்தாந்தத்தைத் தெளிவாக உரைத்தவர் வராகப் பெருமாள்.கண்ணன் கீதையில் சொன்ன சரம சுலோகத்தில் – மற்ற எல்லா வழிகளையும் விட்டு நானே கதி என்று என்னிடம் சரணாகதி செய்தால், எல்லாப் பாபங்களையும் போக்கி முக்தி அளிக்கிறேன் என்றார்.

ஸ்ரீராமன் ராமாயணத்தில் சொன்ன சரம சுலோகத்தில் – சரணம் என்று சொல்லிக் கொண்டு என் பாதங்களில் விழுந்தால், நிச்சயமாக அபயம் அளித்தே தீருவேன் என்றார். வராகப் பெருமாள் ஒருபடி மேலே போய், தனது சரம சுலோகத்தில் – என்னைச் சரணடைந்த பக்தன் என்னை மறந்தே போனாலும் கூட, நான் அவனை மறவாமல் நினைவில் கொண்டு காத்தே தீருவேன் என்று கூறியுள்ளார்.

இத்தகைய தனது அற்புதமான சித்தாந்தத்தை வழங்கியதாலே வராகப் பெருமாள் க்ருதாந்தக்ருத் என்று அழைக்கப்படுகிறார். க்ருதாந்தம் என்றால் சித்தாந்தம், க்ருத் என்றால் வழங்கியவர். தனது உபதேசத்தின் மூலமாகவும், வராக புராணத்தின் வாயிலாகவும் தனது சித்தாந்தத்தைத் தெளிவாக வழங்கியபடியால் வராகப் பெருமாள் க்ருதாந்தக்ருத் என்று அழைக்கப்படுகிறார்.அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 541-வது திருநாமம்.க்ருதாந்தக்ருதே நமஹ என்று தினமும் சொல்லி வந்தால் நமக்கும் வாழ்வில் சித்தாந்தத் தெளிவு ஏற்படும்படி வராகர் அருள்புரிவார்.

——————-

544. ஸுஷேணாய நமஹ: (Sushenaaya Namaha)

(திருநாமங்கள் 544 முதல் 568 வரை 25 திருநாமங்கள், வைகுண்ட நாதனுடைய திருமேனி அழகின் வர்ணனை)

திருவரங்கத்தில் அரையர் சேவை என்பது பிரசித்தமாக, இன்றளவும் நடைபெற்று வருகிறது. மார்கழி மாதத்தில் நடக்கும் அத்யயன உற்சவத்தின் ஒரு பகுதியாக அரையர் சுவாமிகள் என்று அழைக்கப்படும் மகான்கள், ஆழ்வார் பாசுரங்களை இசைத்து, அபிநயம் பிடித்துக் காட்டுவார்கள். அதை அரையர் சேவை என்று அழைப்பார்கள். ராமாநுஜர் காலத்தில் இப்படி ஒரு முறை அரையர் சேவை நடைபெற்று வந்த சமயம். அப்போது அரையர் சுவாமி நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருந்து ஒரு பாசுரத்தை எடுத்து அபிநயம் பிடித்துக் காட்டினார்.

அன்னைஎன் செய்யில்என்? ஊர்என் சொல்லில்என்? தோழிமீர்!
என்னைஇனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்
முன்னை அமரர் முதல்வன் வண்துவராபதி
மன்னன் மணிவண்ணன் வாசுதேவன் வலையுளே.– என்பது நம்மாழ்வாரின் பாசுரம்.

நம்மாழ்வார், பராங்குச நாயகி என்னும் பெண் பாவத்தில் இப்பாசுரத்தைப் பாடியுள்ளார். கண்ணன் மீதான காதலாலே பிச்சேறிய நிலையை அடைந்த பராங்குச நாயகி, கண்ணனைக் குறித்து மடல் எடுப்பது என்ற முடிவுக்கு வருகிறாள். மடல் எடுத்தல் என்பது என்னவென்றால், தலைவனைப் பிரிந்த தலைவி, தலைவன் தன்னைத் தேடி வந்து தன்னை மணக்க வேண்டும் என்பதற்காக, தலைவனின் படத்தைக் கையில் வைத்துக் கொண்டு, பனை மட்டையால் செய்யப்பட்ட குதிரையில் அமர்ந்த படி, ஊரெங்கும் சென்று ஊராரிடம் தலைவனிடம் தன்னைச் சேர்த்து வைக்குமாறு வேண்டுவாள். இதற்கு மடல் எடுத்தல் அல்லது மடல் ஊர்தல் என்று பெயர்.

தன் காதலனான கண்ணன் வராமையால், பராங்குச நாயகி இப்போது அவ்வாறு மடல் எடுக்கும் முடிவுக்கு வருகிறாள். அப்போது அவளது தோழி பராங்குச நாயகியைத் தடுத்தாள். கடலன்ன காமத்தர் ஆகிலும் மாதர் மடல் ஊரார் மற்றையர் மேல் என்ற பழமொழியை நினைவு கூர்ந்த தோழி, சமஸ்கிருத இலக்கியங்களில் பெண்கள் மடல் ஊரும் வழக்கம் உண்டு. ஆனால், தமிழ்ப் பெண்கள் மடல் ஊர்ந்ததாகத் தமிழ் இலக்கியங்களில் வழக்கமில்லை. எனவே இந்த முடிவை மாற்றிக் கொள் என்றுஅறிவுரை சொன்னாள் தோழி.

மேலும், உன் தாயும் மற்ற உறவினர்களும் நம் வீட்டுப் பெண் இப்படி வரம்பு கடந்து போய் மடல் ஊர்கிறாளே என்று வருந்த மாட்டார்களா, அவர்களுக்காகவாவது உன் முடிவைக் கை விடு என்றாள் தோழி.அதற்குப் பராங்குச நாயகி பதில் அளிக்கிறாள் – தாய் என்ன செய்தாலும், ஊர் என்ன சொன்னாலும், அதைப் பற்றி எல்லாம் எனக்குக் கவலை இல்லை. தோழிகளே நீங்களும் என்மீது இனி பற்று வைக்காதீர்கள். வண்துவராபதி எனப்படும் மன்னார்குடியில் எழுந்தருளியிருக்கும் ராஜகோபாலன் எனக்கு வலைவீசினான். அந்த வாசுதேவனின் வலையில் நான் சிக்குண்டு கிடக்கிறேன். இனி என்னை நீங்கள் மறந்துவிடுங்கள். இத்தகைய கருத்துள்ள பாசுரத்துக்கு அபிநயம் பிடிக்கும் அரையர் சுவாமிகள், மீனவர் வலைவீசுவது போல் அபிநயம் பிடித்து, அந்த வாசுதேவன் வலையுள் பராங்குச நாயகி அகப்பட்டதாகச் சித்தரித்துக் காட்டினார்.

அதை ரசித்துக் கொண்டிருந்த ராமாநுஜர், தம் கைகளால் இரு கண்களையும் காட்டினார். அதைக் கவனித்த அரையர் சுவாமிகள், அபிநயத்தை மாற்றி, தம்முடைய இரு கண்களையும் காட்டி வாசுதேவன் வலையுளே என்று அபிநயம் பிடித்தாராம்.அதாவது, ஜீவாத்மாக்களைத் தன் பால் ஈர்க்க விரும்பும் திருமால், நூலால் ஆன வலையை விரித்துப் பிடிப்பதில்லை. தன் கண்ணழகையே வலையாக விரிக்கிறார்.

அதில் மயங்கி ஜீவாத்மாக்கள் அவர் திருவடியில் வந்து சேர்கிறார்கள் என்பது இதன் தாத்பரியம். நம்மாழ்வார் போன்ற மகான்கள் தொடங்கி, நம் போன்ற சாமானியர் வரை, தன் திருமேனி அழகையே வலையாக வீசிப் பிடிக்கிறார் திருமால். `ஸுஷேண’ என்றால் அழகான சேனையை உடையவர் என்று பொருள். ஜீவாத்மாக்களாகிய நம்மை வென்றெடுக்கும் சேனையாகத் தன் திருமேனி அழகையே படையாகப் பயன்படுத்துகிறார் திருமால். `ஸு’ என்றால் அழகிய, `ஸுஷேண’ என்றால் தனது அழகான திருமேனியைப் படையாக்கி அதன் மூலம் எல்லா ஜீவாத்மாக்களையும் வெல்பவர். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 544-வது திருநாமம்.“ஸுஷேணாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வந்தால் நாமும் அவரது வலையில் சரியாக மாட்டிக் கொண்டு, மற்ற வலைகளில் சிக்காதபடி நமக்கு அருள்புரிவார்.

———–

545. கனகாங்கதினே நமஹ: (Kanakaangadhiney Namaha)

திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் திருமாலைத் தரிசிக்கப் பிரகலாதனின் மகனான விரோசனன் வந்தான். பக்தப் பிரகலாதனின் மகனான போதும், அவனிடம் அசுரத் தன்மை மேலோங்கி இருந்தது. அவனது நிலையை நாம் நமது சந்தேகத்துக்கு விஷயம் ஆக்காமல், நம் மனதில் அத்தகைய அசுரத் தன்மைகள் இல்லாதிருக்க இறைவனை இறைஞ்சி நிற்பதே உத்தமம். இத்தகைய விரோசனன் பாற்கடலுக்கு வந்தான். திருமால் ஆதிசேஷப் படுக்கையில் யோக நித்திரையில் இருக்க, அவர் அணிந்திருந்த வைரக் கிரீடத்தைத் திருடிச் சென்றுவிட்டான் விரோசனன். உறங்குவான் போல் யோகு செய்த திருமால் விழித்துக் கொண்டு கருடனை அழைத்தார்.

விரோசனனிடம் இருந்து கிரீடத்தை மீட்டு வருமாறு கருடனுக்கு ஆணையிட்டார். பாதாள லோகம் வரை சென்ற விரோசனனைத் துரத்திப் பிடித்து அவனுடன் போரிட்டார் கருடன். அவனிடம் இருந்து திருமாலின் வைரக் கிரீடத்தை மீட்டார். மீட்டெடுத்த கிரீடத்தை எடுத்துக் கொண்டு பாதாளத்தில் இருந்து திருப்பாற்கடல் நோக்கிப் பறந்து வந்தார் கருடன்.வழியில் பிருந்தாவனத்தில் ஓர் அழகிய குழந்தையைப் பார்த்தார் கருடன். அக்குழந்தை நீலமேகம் போல் வண்ணம் கொண்டதாக, குழல் ஊதிக் கொண்டு மாடுகளை மேய்த்துக் கொண்டு இருந்தது. ஆஹா… இந்தக் குழந்தைக்குத்தான் இக்கிரீடம் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது என்று கருதிய கருடன், கிரீடத்தை அக்குழந்தையின் தலையில் வைத்துவிட்டார்.

அந்தக் குழந்தை கண்ணன் என்பதை வாசகர்களான நீங்கள் அறிவீர்கள். அந்தக் கிரீடமும் கண்ணனின் தலைக்குச் சரியாகப் பொருந்திவிட்டது. இளைஞன் வடிவில் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாள் அணியும் கிரீடம், குழந்தை கண்ணன் தலைக்கும் பொருந்தியது. திருப்பாற்கடலுக்குத் திரும்ப வந்தார் கருடன். கிரீடம் எங்கே என்று திருமால் கேட்க, வழியில் கண்ட அழகான குழந்தைக்கு வைத்துவிட்டதாகப் பதில் அளித்துவிட்டாராம் கருடன்.

இந்த நிலையில் வைரக் கிரீடத்துடன் வீடு திரும்பினான் கண்ணன். அதைக் கண்டு வியந்த யசோதை, ஏது இந்தக் கிரீடம் என்று கேட்டாள். ஏதோ ஒரு கழுகு பறந்து வந்து என் தலையில் கிரீடத்தை வைத்துவிட்டுச் சென்றுவிட்டது என்றான் கண்ணன். கண்ணா, ஏற்கனவே பல அசுரர்களால் உனக்கு ஆபத்து ஏற்படுகிறது. இதில் வைரக் கிரீடத்தை நீ தலையில் அணிந்தால், அதைத் திருடுவதற்காக வேறு யாரேனும் அசுரர்கள் வரக்கூடும். இதை நம் ஊர் பெருமாளுக்குச் சமர்ப்பித்துவிடலாம் என்றாள் யசோதை.

இப்போது திருநாராயணபுரம் எனப்படும் மேல்கோட்டையில் உள்ள ராமப்ரியன் என்ற பெருமாள்தான் அப்போது, ஆயர்பாடியில் எழுந்தருளி இருந்தார். அந்தப் பெருமாளுக்குச் சமர்ப்பித்தாள் யசோதை. கிரீடத்தை அர்ச்சகர் சாற்றியபோது, அவர் திருமேனிக்கும் அது சரியாகப் பொருந்திவிட்டது. பின்னாளில் அப்பெருமாள் திருநாராயணபுரத்துக்கு எழுந்தருளிய பின்னும், இந்த வைரக் கிரீடத்தின் நினைவாக, வைரமுடி உற்சவம் நடைபெற்று வருவதைக் காணலாம்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், திருப்பாற்கடல் பெருமாள் அணியும் கிரீடத்தை, பாலகனான கண்ணன் அணிந்தாலும், விக்கிரக வடிவில் உள்ள ராமப்ரியப் பெருமாள் அணிந்தாலும், அவர்களுக்கும் சரியாகப்பொருந்துகிறது. எப்படி மூன்று வெவ்வேறு பெருமாள்களுக்கு ஒரே கிரீடம் பொருந்தும் என்னில், அதுதான் பெருமாளின் திரு ஆபரணங்களின் சிறப்பு. அவை பகவானை விட்டுப் பிரியாமல், அவர் எடுத்துக் கொள்ளும் வடிவத்துக்கு ஏற்றபடி தங்களையும் அமைத்துக் கொள்ளும்.

திருமால் விஸ்வரூபம் எடுத்தால், அவரோடு சேர்ந்து அவரது ஆபரணங்களும் வளரும். சிறு வடிவம் கொண்டால், அவைகளும் சிறுத்துவிடும். இப்படி உலகியலுக்கு அப்பாற்பட்ட திவ்யமான ஆபரணங்களை அணிந்திருப்பதால், திருமால் `கனகாங்கதீ’ என்று அழைக்கப்படுகிறார். `அங்கத’ என்றால் தோள்வளை என்று பொருள், இங்கே அது அனைத்து ஆபரணங்களுக்கும் ஆகுபெயராகும். `கனக’ என்றால் பொதுவாக தங்கம் என்று பொருள், இங்கே அது திவ்யமான என்ற பொருளில் வருகிறது. கனகாங்கதீ என்றால் திவ்யமான திருவாபரணங்களை எப்போதும் தரித்தவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 545-வது திருநாமம்.“கனகாங்கதினே நமஹ’’ என்றுதினமும் சொல்லி வந்தால், திருமாலோடு எப்போதும் கூடி இருக்கும்

———

546. குஹ்யாய நமஹ (Guhyaaya Namaha)

ஒரு ஊரில், ஒரு குருவும் சிஷ்யனும் வாழ்ந்து வந்தார்கள். அந்த சிஷ்யனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. “ஏன் கடவுளைக் கண்களால் பார்க்க முடிவதில்லை, அப்படிப் பார்க்க முடிந்தால் அனைவரும் கடவுளை ஏற்பார்கள் அல்லவா! கடவுளை ஏற்பவர், மறுப்பவர் என இரு பிரிவுகளே இருக்காதே’’ எனக் குருவிடமே கேட்டார் அந்த சிஷ்யன். அதற்கு விடையளித்த குரு, “பூவின் வாசனையை உன்னால் கண்களால் பார்க்க முடியுமா, உன்னால் நுகர மட்டுமே முடியும். மூக்கைத் தவிர வேறு எந்த புலனாலும் பூவின் வாசனையை உறுதி செய்ய முடியாது. இருந்தும், பூக்களுக்கு வாசனை இருக்கிறது என நம்புகிறாய் அல்லவா. இதற்கு மற்றொரு உதாரணம் சொல்கிறேன், ஓர் இசையைக் கேட்க மட்டுமே முடியும். இசையைத் தொடவோ, நுகரவோ முடியாது. இருந்தும், காது கொடுத்துக் கேட்பதை வைத்தே இசையை நம்மால் அனுபவிக்க முடிகிறது.

ஐம்புலன்களில் ஏதேனும் ஒரு புலனை வைத்தே, ஒரு பொருளின் இருப்பை உறுதி செய்து, அது இருப்பதாக ஏற்கிறோம். இந்த நிலையில், ஐம்புலன்களைக் கொண்டு நம்மால் ஒன்றை அறிய முடியவில்லை என்பதால் மட்டுமே, அது இல்லை எனக் கூறவும் முடியாது’’ எனச் சொன்னார் குரு. சிஷ்யனோ, “இறைவனை ஐம்புலன்களாலும் உணர முடியவில்லையே, இதை எப்படிப் புரிந்துகொள்வது’’ எனக் கேட்டார். குரு, “இதற்கும் சில உதாரணம் உள்ளது’’ எனக் கூறினார்.

நம் கண்களால் குறிப்பிட்ட அளவு தான் பார்க்க முடியும். VIBGYOR என்ற ஒளிக் கற்றைகள் வரை மட்டுமே பார்க்க முடியும். அதைக் கடந்து Infra-Red Rays, Ultra Violet Rays ஆகியவற்றை எல்லாம் நம் கண்களால் பார்க்க முடியாது. அதற்காக இது எல்லாம் இல்லை எனக் கூற முடியுமா. அதற்கான கருவியைக் கொண்டு நம்மால் பார்க்க முடியும் அல்லவா.

நம் கண்களுக்குப் புலப்படவில்லை என்பதால், நம்மால் எதையும் மறுக்கவும் முடியாது. நம் காதுகளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு சத்தத்தை மட்டுமே கேட்க முடியும், அதற்காக அதற்கு மிகுந்த ஒலி எதுவுமே இல்லை எனக் கூற முடியாது. நம் ஐம்புலன்கள் ஓரளவுக்கு உட்பட்டவை, அதை கடந்து நம்மால் உணர முடியாது. பகவானின் திருமேனி சுத்த சத்வ மயமானது. உலகியலுக்கு அப்பாற்பட்டது, பஞ்ச உபநிஷத் மயமானது. நமது உடல் பஞ்ச பூதங்களால் உருவாக்கப்பட்டது. பகவானை நம் கண்களால் பார்க்க முடியுமா, இறைவனைக் காண நம் கண்களுக்கு சக்தி இல்லை.

இறைவனைக் காண என்ன வழி எனக் கேட்டால், பகவத் கீதையில் அர்ஜுனனுக்கு கண்ணபிரான் விஸ்வரூபம் எடுத்துக் காட்டினான். ஆனால் அர்ஜுனனால் அதை உடனே பார்க்க முடியவில்லை. திவ்யமான தெய்வீகமான பார்வையைத் தருகிறேன், அதைக் கொண்டு என் திருமேனியைப் பார் எனக் கூறினான் கண்ணபிரான். பின்தான் அவனால் பகவானைத் தரிசிக்க முடிந்தது.

ஒரு Virus-ஐ நம் கண்களால் பார்க்க முடியாது, ஒரு விஞ்ஞானி தன் கருவியின் துணை கொண்டு பார்த்து உறுதி செய்தால் நாம் ஏற்கிறோம் அல்லவா, அதைப்போல பகவானைக் காண உபநிஷத், வேதங்களைக் கற்றுத் தேறிய மகான்களான ரிஷிகள், ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள் தங்கள் தெய்வீகக் கண்களால் இறைவனைக் கண்டு இப்படித்தான் இறைவன் இருக்கிறான் எனக் கூறினால், அதைக்கொண்டு நாம் பகவானை ஏற்கவேண்டும்.

அவர்கள் காட்டிய வழியில் பகவானை நாம் வணங்கினால், வைகுண்டம் சென்று தெய்வீகக் கண்களைப் பகவானிடமே பெற்று நேரே பரவாசுதேவனைத் தரிசிக்கலாம்.எனவே இப்படிச் சாதாரணக் கண்களால் காண முடியாதபடி மறைந்திருப்பதால் திருமால் குஹ்ய என்று அழைக்கப் படுகிறார். அதுவே சஹஸ்ரநாமத்தின் 546-வது திருநாமம்.“குஹ்யாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வந்தால், புரியாத புதிர்களுக்கும் நமக்கு விடை கிடைக்கும்படி திருமால் அருள்புரிவார்.

—————-

547. கபீராய நமஹ (Gabheeraya Namaha)

ஒரு ஊரில் ஒரு சிறுவன் வாழ்ந்து வந்தான். அவனது தந்தை நல்ல ஆசார சீலர். அவர் தனது துணிகளைத் தானே துவைத்து ஆகாசக் கொடியில் காய வைத்து மறு நாள் மடி வஸ்திரமாக உடுத்துவார். ஒரு நாள் சிறுவன் மடித் துணி மீது விழுப்புத் துணியை போட்டுவிட்டான். தந்தையோ இப்படி மடி வஸ்திரம் முழுவதும் விழுப்பாக மாறிவிட்டதே என வருந்தினார். இதைச் சிறுவனும் கவனித்துக் கொண்டிருந்தான்.

மறுநாள் விழுப்புத் துணி மீது மடி வஸ்திரத்தைப் போட்ட சிறுவன், இப்பொழுது அனைத்தும் மடி வஸ்திரமாக மாறிவிட்டதே, இனிமேல் வருத்தப்படத் தேவையில்லை தந்தையே எனக் கூறினான். இதைக் கேட்ட தந்தை, தூய பொருள் மீது தூய்மையில்லாத பொருள் பட்டால், தூய பொருள் தான் தூய்மை குறைந்து போகும். தூய்மையற்ற பொருள் தூய்மை பெறாது. விழுப்புத் துணியை எதன் மீது போட்டாலும் விழுப்பாகத் தான் போகுமே தவிர அது மடி ஆக முடியாது எனக் கூறினார்.

சிறுவன் அது எப்படி எனக்கு புரியவில்லையே எனக் கூறினான். இதைக் கவனித்த ஓரு பெரியவர், தூய்மையான பொருள் மீது தூய்மையில்லாத பொருள் பட்டால், தூய்மையில்லாத பொருளில் இருக்கும் தீய குணம் தான் எளிதாக பரவும். அதனால் தூய்மை குறைந்து தான் போகும். தீய குணங்கள் மற்றும் தீய எண்ணங்கள் பரவும் வேகத்தில் நல்லது பரவாது. இது தான் உலக இயல்பு என்றார். பாலுடன் விஷத்தைக் கலந்தாலும், விஷத்துடன் பாலைக் கலந்தாலும், அனைத்தும் விஷமாகத் தானே ஆகும் என்றார்.

சிறுவனோ, எப்படித்தான் ஓரு பொருளைத் தூய்மை படுத்துவது என வினவினான். தேய்த்தாங்கொட்டை போன்ற பொருள்களைக் கொண்டு இன்னொரு பொருளைத் தூய்மைப் படுத்தமுடியும். ஆனால் தூய்மைப் படுத்தும் பொருள் மாற்றம் அடைந்துவிடும் என்றார் பெரியவர்.தன் நிலையை மாற்றிக் கொள்ளாமல் ஒரு பொருளை தூய்மைப் படுத்துவது என்பது சாத்தியமா எனக் கேட்டான். ஒரே ஒருவனுக்கு மட்டும் இது சாத்தியம். அவன் தான் பகவான் நாராயணன், அவனும் அவனது அடியார்களும் தங்களைப் போலவே மற்றவர்களையும் தூய்மையாக்க வல்லவர்கள் என்றார் பெரியவர்.

பல பாபங்கள், தோஷங்கள் கொண்ட நாம் பகவானிடம் வருகிறோம். நமது தோஷங்கள் அவனைத் தீண்டுவதில்லை, மாறாக அவனது தூய்மை நம்மிடமும் வந்து சேர்ந்து விடுகிறது. தன் பாதுகையான சடாரியை நம் தலையில் வைத்து மீண்டும் தன் திருவடியில் சேர்த்துக் கொள்கிறான். ஆனால் சடாரியின் தூய்மை இதனால் என்றும் குறைவதில்லை. மாறாக நமக்கு சடாரியின் மூலமாகத் தூய்மையைத் தருகிறான். இதுதான் தான் பகவானின் இயல்பு என்று விளக்கினார்.இப்படித் தான் மாறுதல் அடையாமல் நம்மைத் தூய்மைப் படுத்தும்படி காம்பீரியம் மிக்கவராக இருக்கும் திருமால் கபீர என்று அழைக்கப்படுகிறார். அதுவே சஹஸ்ரநாமத்தின் 547-வது திருநாமம்.“கபீராய நமஹ’’ என்று தினமும் சொல்லி வந்தால், நாம் எப்போதும் தூய்மையாக இருக்கும்படி திருமால் அருள்புரிவார்.

———

548. கஹனாய நமஹ (Gahanaaya Namaha)

நான்கு நண்பர்கள் காட்டு மார்க்கமாகப் பயணித்தார்கள். நடுவில் ஒரு கல் பாறை அவர்களை தடுப்பது போல ஒரு உணர்வு ஏற்பட்டது. அது என்னவாக இருக்கும் என அவர்களுக்கு ஆர்வம். ஆனால், இருட்டில் அடர்ந்த காட்டில் எதுவும் தெளிவாகத் தெரியவில்லை.முதல் நண்பர் மெதுவாகப் பாறையைத் தடவிப் பார்த்து இது தூணாக இருக்கும் எனக் கூறினார். இரண்டாவது நண்பர் பக்கவாட்டில் தடவிப் பார்த்து இது முறம், முறத்திற்குச் சிலை வைத்துள்ளனர் எனக் கூறினார்.

முன்றாவது நபரோ இது கல் பாறை எனப் புரிந்துக் கொள்கிறேன் என்றார். நான்காவது நபரோ ஏதோ குச்சி நட்டு வைத்துள்ளனர் என்றார். இப்படியே நால்வர்க்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. காலை விடிந்த பிறகு இது என்ன என்பதை உறுதி செய்துவிட்டுப் பயணத்தைத் தொடர்வது என முடிவு செய்தனர்.

சூரிய ஒளி வந்தவுடன் அங்கே ஒரு யானை சிலை தென்பட்டது. முதல் நபர் தும்பிக்கையைத் தடவிப் பார்த்துள்ளார். இரண்டாவது நபர் யானையின் காதுப் பகுதியைத் தடவிப் பார்த்துள்ளார். முன்றாவது நபர் யானையின் உடல் பகுதியைத் தடவிப் பார்த்துள்ளார். நான்காவது நபர் வால் பகுதியை தடவிப் பார்த்துள்ளார். அதனால் அவர்களுக்கு முறையே தூண், முறம், பாறை, குச்சி என வெவ்வெறாகத் தெரிந்துள்ளது.

நால்வரும் அவர்கள் பார்வையிலிருந்து சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் சொன்னதுதான் சரி என வாதிட்டதுதான் இங்கே தவறு. இதே போல் பகவானை இவர் தான் பகவான் என வரையறுக்க முடியாது. அவர் எண்ணில் அடங்காத மங்கல குணங்களைக் கொண்டவர். ராமாநுஜர் கத்ய த்ரயத்தில் எண்ணில் அடங்காத மங்கல குணக் கூட்டங்களின் கடல் என்று பெருமாளைக் குறிப்பிடுகிறார்.

இத்தனைக் குணங்களையும் நம்மால் அனுபவிக்க முடியாது. எதேனும் ஒரு குணத்தையோ ஒரு சில குணங்களையோ மட்டும் அனுபவித்து, அவ்வளவு தான் பகவான் என நம்மால் அவரை ஓர் எல்லைக்குள் சுருக்கி விட முடியாது. நேதி நேதி என்ற பிருகதாரண்யக உபநிஷத் வாக்கியம், இதுவரை நான் சொன்னது மட்டும் தான் இறைவனின் பெருமை என்று நினைத்து விடாதே, இன்னமும் அவனிடம் எவ்வளவோ பெருமைகள் உள்ளன என்று சொல்கிறது என்று ராமாநுஜர் பாஷ்யத்தில் விளக்குகிறார்.

நமக்கு எப்படி பகவானை அனுபவிக்க பகவான் வழி காண்பித்துள்ளானோ அதன்படி நாம் பகவானை அடைவதற்கான வழியில் செல்ல வேண்டும். மற்றவரையோ, மற்ற மத்தையோ நாம் தவறு என சொல்ல நமக்கு உரிமை இல்லை. ஏனெனில், அவரவரின் பக்குவத்துக்கு ஏற்றபடித் தன்னை ஒவ்வொருவருக்கும் பகவான் வெளிப்படுத்திக் காட்டுவார். ஆனால், இவ்வளவு தான் என்ற ஒரு வரையறைக்குள்ளே அவர் என்றுமே அடங்காதவர்.

அதனால்தான் திருமால் கஹன என்று அழைக்கப்படுகிறார். கஹன என்றால் இவ்வளவுதான் என அறிய முடியாதவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 548-வது திருநாமம்.
கடலின் ஆழத்தில் நமக்குச் சில செடிகள் தெரியும். அதற்காக அவ்வளவு தான் கடலின் ஆழம் எனக் கூற முடியாது. அதுபோல் இறைவனின் பெருமையின் ஆழத்துக்கும் எல்லையே இல்லை.
கஹனாய நமஹ என்று தினமும் சொல்லி வந்தால், புரியாத பல விஷயங்களிலும் நமக்குத் தெளிவு ஏற்படும்படி திருமால் அருள்புரிவார்.

—————-

549. குப்தாய நமஹ (Gupthaaya Namaha)

எட்டெழுத்து மந்திரமாகிய திருமந்திரம், இரண்டு வரி மந்திரமாகிய துவயம், கண்ணன் கீதையில் சொன்ன சரம ஸ்லோகம் ஆகிய மூன்று ரகசியங்களின் ஆழ்பொருளைத் திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் அறிய விழைந்தார் ராமாநுஜர்.இவ்வரும்பொருளை அறிவதற்காகப் பல முறை திருக்கோஷ்டியூருக்கு ராமாநுஜர் சென்ற போதும், அவருக்குத் திருக்கோஷ்டியூர் நம்பி அவ்வளவு எளிதில் உபதேசிப்பதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி ராமாநுஜரைத் திருப்பி அனுப்பிக் கொண்டே இருந்தார்.

இதைத் திருக்கோஷ்டியூரில் உள்ள சில அடியார்கள் கவனித்தார்கள். ராமாநுஜரிடம் சென்று, சுவாமி, உங்களுக்கே இது கிடைப்பது இவ்வளவு கஷ்டமாக இருக்கிறது என்றால், இந்த அர்த்தங்களை நாங்கள் எப்படி அறிந்து உய்வது என்று வருந்திச் சொன்னார்கள்.அதற்கு ராமாநுஜர், ஆசார்யன் கருணை உள்ளவர். எப்படியும் உபதேசம் செய்யாமல் இருக்க மாட்டார். அதற்கு முன் அடியேனின் தகுதியை நன்கு ஆராய விழைகிறார். எனவே நாம் அதற்கு உட்பட்டுத் தான் ஆகவேண்டும். எனினும், அடியேனுக்கு அந்த அர்த்தம் கிடைத்தால் அவசியம் உங்களுக்கும் உபதேசம் செய்து விடுகிறேன் என்று வாக்களித்தார்.

பலமுறை திருவரங்கத்துக்கும் திருக்கோஷ்டியூருக்கும் நடந்த ராமாநுஜருக்கு, பதினெட்டாவது முறை திருக்கோஷ்டியூர் நம்பி உபதேசம் செய்தார். முக்கியமாக, கீதையின் சரம ஸ்லோகமான – ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ, அஹம்த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச: – என்ற ஸ்லோகத்தின் ஆழ்பொருளை உபதேசித்தார். இறைவனை அடைவதற்கு வேறு எதுவுமே வழி இல்லை என்று உணர்ந்து இறைவனின் திருவடிகளையே தஞ்சமாகப் பற்ற வேண்டும். அப்படி சரணாகதி செய்தவரின் அனைத்துப் பாபங்களையும் இறைவனே போக்கி அவர்களுக்கு முக்தி அளிப்பார் என்பது இதன் ஆழ்பொருள்.

மேற்கூறிய மந்திரங்களின் உபதேசம் எல்லாம் முன்பே மதுராந்தகத்தில் பெரிய நம்பிகளிடம் ராமாநுஜர் பெற்றதால், பிரபலமாக இதுகுறித்துச் சொல்லி வரப்படும் கதை அவ்வளவு தூரம் பொருத்தமாக இல்லை. அதிகாரப் பூர்வமான குரு பரம்பரை நூல்களில் சொல்லப்பட்ட விஷயமே இங்கு எடுத்தாளப்பட்டுள்ளது. இப்பொருளைப் பெற்ற ராமாநுஜர், திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் கோயிலில் உள்ள தெற்காழ்வான் சந்நதிக்கு வந்தார். சில அடியவர்களுக்கு ரகசியப் பொருளை உபதேசிப்பதாகச் சொல்லி இருந்தார் அல்லவா, அதன்படி அவர்களுக்கு உபதேசமும் செய்து விட்டார் ராமாநுஜர்.

இச்செய்தியைக் கேள்விப்பட்ட திருக்கோஷ்டியூர் நம்பி, குருவின் வாக்கை மீறி நீ தகுதி இல்லாதவர்களுக்கு எல்லாம் அர்த்தங்களைச் சொல்லி விட்டாய் ராமாநுஜா. உனக்கு இனி நரகம் தான் என்று சொன்னார்.அதற்கு ராமாநுஜர் பணிவோடு, சுவாமி, அடியேன் தகுதி இல்லாதவர்க்குச் சொல்ல விரும்பவில்லை. ஆனால் குலம், பாலினம், ஞானம் போன்றவற்றைத் தகுதியாகக் கருதாமல், ஆசையையே தகுதியாகக் கொண்டு உபதேசம் செய்தேன். மேலும், அடியேன் ஒருவன் நரகம் போனாலும் பரவாயில்லை. நீங்கள் சொன்ன அர்த்தங்களைக் கேட்டு இவர்கள் அத்தனை பேரும் முக்தி பெறப் போகிறார்களே. இத்தனை பேர் முக்தி பெறுவதற்காக நான் ஒருவன் நரகம் போனாலும் பரவாயில்லை என்றார்.

ராமாநுஜரின் கருணையைக் கொண்டாடிய திருக்கோஷ்டியூர் நம்பி, எம்பெருமானாரே என்று அவரை அழைத்து ராமாநுஜரின் பரந்த மனதைப் பாராட்டினார்.இப்படி ஆசை உடையோர் அனைவருக்கும் உபதேசித்தாலும், இறைவன் மீது பொறாமை கொண்டோர், அதர்மச் செயல்களில் ஈடுபடுவோர், இறைவனைப் பழித்துப் பேசுவோர் போன்றோருக்கு உபதேசிக்கக் கூடாது என்பது ராமாநுஜரின் கருத்தாகும். ஆசை என்ற தகுதி இல்லாதவர்களிடமிருந்து இறைவனைப் பற்றிய விஷயங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப் பட வேண்டும் என்பது ராமாநுஜர் வழிவந்த ஆசார்யர்களின் கொள்கை.

இப்படி பூர்வாசார்யர்களாலே பாதுகாக்கப்பட்டு வைத்திருக்கும் திருமால் குப்த என்று அழைக்கப்படுகிறார். குப்த என்றால் தகுதி இல்லாதோரிடம் இருந்து பாதுகாக்கப் பட்டவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 549-வது திருநாமம்.குப்தாய நமஹ என்று தினமும் சொல்லி வந்தால், இறைவன் மீது நமக்கு ஆசை பெருகும்படி அவரே நமக்கு அருள்புரிவார்.

————–

550. சக்ரகதாதராய நமஹ (Chakragadaadharaaya Namaha)

சீதையைத் தேடி இலங்கைக்குச் சென்ற அனுமான், அசோகவனத்தில் சீதையைக் கண்டார். ராமாயணம் பாடியும், ராமனின் அங்க அடையாளங்களைச் சொல்லியும், சீதா – ராமர்களுக்கு மட்டுமே தெரிந்த சில நிகழ்வுகளை விவரித்தும், மேலும் ராமனின் கணையாழியைச் சீதையிடம் கொடுத்தும், தான் ராமதூதன் என்பதை உணர்த்தினார் அனுமான். சீதையிடம், உங்களைச் சந்தித்ததற்குச் சான்றாக ஏதேனும் அடையாளங்களைத் தாருங்கள் என்று பிரார்த்தித்தார் அனுமான்.

தனது சூடாமணியை அடையாளமாகத் தந்த சீதை, மேலும் சீதா ராமர்களுக்கு மட்டுமே தெரிந்த சில நிகழ்வுகளை அனுமானிடம் அடையாளமாகச் சொன்னாள். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வுதான் காகாசுரனின் கதை.சித்திரகூடத்தில் மந்தாகினி நதிக்கரையிலே சீதாராமர்கள் ஆச்சர்யமாக விளையாடினர். பின், சீதை மடியில் தலை வைத்து ராமபிரான் பள்ளிகொண்டார். அப்பொழுது இந்திரனின் மகன் காகாசுரன் சீதையின் திருமார்பில் கொத்தினான். சீதைக்கோ உறங்கிக் கொண்டிருக்கும் ராமனை எழுப்ப மனமில்லை.ஆனால், ராமனின் முகத்தில் சீதையின் திருமார்பிலிருந்து வழியும் ரத்தம் தெறித்தது. ரத்தம் பட்டு விழித்தெழுந்த ராமன், சீதையின் திருமார்பு புண்பட்டிருப்பதைக்கண்டார்.

இதற்கு யார் காரணம் என்று ராமன் தேடியபோது, ராமனிடம் அழகு காட்டிக் கொண்டு ஒரு மரக்கிளையில் அமர்ந்திருந்தான் காகாசுரன். ராமன், தான் சயனித் திருந்த தர்ப்பைப் பாயிலிருந்து ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்து பிரம்மாஸ்தரத்தை ஜபித்து, அதைக் காகாசுரன் மீது ஏவினான். காகாசுரனிடம் அஸ்திரம் நெருங்கி வரும் பொழுது, அஸ்திரத்தின் வெப்பம் தாங்க முடியாமல் காகாசுரன் ஓடத் தொடங்கினான்.

அவன் ஓடினால் அஸ்திரம் துரத்துகிறது, அவன் நின்றால் அஸ்திரமும் நிற்கிறது. முதலில் தன் தந்தையான இந்திரனின் உதவியை நாடினான் காகாசுரன். ஆனால், இந்திரன் அடைக்கலம் தரமுடியாது என்று மறுத்துவிட்டான். இதுபோல், ராம பாணத்தின் பெருமையை உணர்ந்து மூவுலகில் உள்ள தேவர்கள், முனிவர்கள், மனிதர்கள், பறவைகள் உள்ளிட்ட எவருமே காகாசுரனுக்கு அடைக்கலம் தர முன்வரவில்லை. இறுதியில், ராமனிடமே வந்து சரணாகதி செய்தான் காகாசுரன்.

இவ்விடத்தில், வால்மீகி ராமாயணத்தில் உள்ளபடி மட்டும் நாம் எழுதினால், காகாசுரன் காலை நீட்டிக்கொண்டு விழுந்து, அதன் பின் சீதை அவன் தலை ராமன் திருவடியில் படும் படி கிடத்தினாள் என்ற செய்தி உள்ளதே, அதை நீங்கள் விட்டுவிட்டீர்களே என்று வாசகர்கள் கேள்வி கேட்பார்கள். எனவே பத்மபுராணத்தில் சொல்லப்பட்ட அந்த விஷயத்தையும் இணைத்து ரசித்துக்கொள்வோம். காகாசுரன் எப்படி சரணாகதி செய்வது என்று கூடத் தெரியாமல், இரண்டு கால்களையும் ராமன் முன் நீட்டிக் கொண்டு விழுந்தான். சீதாபிராட்டி கருணையோடு அவன் தலை ராமன் திருவடியில் படும் படி அவனைக் கிடத்தி, அவனைக் காப்பாற்றுமாறு ராமனிடம் பிரார்த்தித்தாள்.

காகாசுரனைக் காப்பது என்று ராமன் முடிவெடுத்தான். ஆனால், ஏவிய பிரம்மாஸ்திரத்துக்கு ஏதேனும் இலக்கு தர வேண்டும். அதனால், காகாசுரனின் கண்ணை அந்த பாணம் பறிக்குமாறு செய்தான் ராமன். பகவான் தன் கையால் ஒரு அஸ்திரத்தைத் தொட்டு ஏவினாலே அந்த அஸ்திரம் சுத்த சத்துவமயமாக மாறிவிடுகிறது. பகவான் என்ன மனதில் கொள்கிறாரோ, அதைத் தான் அது செய்யும். இதை நம் ஆச்சாரியர்கள், பகவான் எந்த ஆயுதத்தை உபயோகம் பண்ணினாலும், அதில் சக்கரத்தாழ்வாரின் அம்சம் இருக்கும் என்கிறார்கள். இந்த தர்ப்பைப் புல்லிலும் சக்கரத்தாழ்வார் ஆவேசம் செய்த படியால்தான் ராமனின் திருவுள்ளம் அறிந்து செயல்பட்டது அந்த தர்ப்பை.

காகாசுரன் ஓடினால் துரத்தியது, நின்றால் தானும் நின்றது. அவன் கண்ணைப் பறிக்கட்டும் என்று ராமன் தீர்மானித்த போது, கண்ணை மட்டும் பறித்தது. ஸ்ரீவைகுண்டத்தில் இத்தகைய பல ஆயுதங்களை பகவான் ஏந்தியுள்ளான். அத்தனை ஆயுதங்களும் நித்தியசூரிகள். அவர்கள் ஆயுதங்களாக இருந்து பகவானுக்குக் கைங்கரியம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுள் சக்கரமாக ஸுதர்சனாழ்வார், சங்காக ஸ்ரீபாஞ்சஜன்யாழ்வார் ஆகியோர் இருக்கிறார்கள். இருவரையும் எப்போதும் தரித்திருப்பதால், திருமால் சங்குசக்ரகதாதர என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 550-வது திருநாமம்.“சக்ரகதாதராய நமஹ’’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களைத் தன் திவ்யாயுதங்களால் திருமால் காத்தருள்வார்.

————–

551. வேதஸே நமஹ (Vedhasey Namaha)

சாந்தோக்ய உபநிஷத்தில் 8-வது அத்தியாயத்தில் தஹர வித்யையின் அங்கமாகப் பிரஜாபதி வித்யை வருகிறது. அதில் பிரம்மா உபன்யாசம் செய்ய, அதைத் தேவர்களின் தலைவனான இந்திரனும், அசுரர்களின் தலைவனான விரோசனனும் அமர்ந்து கேட்கிறார்கள். ஜீவாத்மாவின் தன்மை மற்றும் ஜீவாத்மா முக்தி பெற்றுவிட்டால் எப்படி இருக்கும் என்பதை எல்லாம் பிரம்மா விளக்குகிறார். ஒரு ஜீவாத்மா முக்தி அடைந்துவிட்டால், பாவங்களால் தீண்டப்படாமலும், மூப்பு, மரணம், பசி, தாகம், சோகம் என்பதெல்லாம் இல்லாமலும், பகவானுக்குக் கைங்கரியம் செய்வதற்கு ஏதுவான இருப்பிடத்தோடும், தருமத்துக்கு விரோதமில்லாமல் ஆசைப்படும் அனைத்தும் நிறைவேறும் தன்மையோடும் இருக்கும் என்று விளக்கினார் பிரம்மா.

இந்திரனும், விரோசனனும் அப்படிப்பட்ட ஜீவாத்மாவை அறிய விரும்புகிறோம் என்று பிரம்மாவிடம் கேட்டார்கள். பிரம்மா அதை அவ்வளவு எளிதில் உபதேசிக்க முடியாது. நீங்கள் இருவரும் 32 வருடம் பிரம்ம சரிய விரதம் அனுஷ்டிக்க வேண்டும் என்றார். இந்திரனும் விரோசனனும் 32 வருட விரதத்ததைப் பூர்த்திச்செய்தனர். பிரம்மா அவர்களுக்கு உபதேசம் செய்யத்
தொடங்கினார்.

உங்கள் கண்களால் கண்ணாடியில் எதைப் பார்க்கிறீர்களோ, அதுதான் ஜீவாத்மா. கண்களால் பார்க்கும் பிரதிபிம்பம்தான் ஜீவாத்மா என்றார். பிரம்மா இவ்வாறு சொல்லி இருவரையும் சோதனைதான் செய்தார். உண்மையில் அதுவல்ல ஜீவாத்மா. இதைக் கேட்ட இருவரும் தங்களின் பிரதிபிம்பத்தைக் கண்ணாடியில் பார்த்தார்கள். விரோசனன், இதுதான் ஜீவாத்மா எனில், நாம் நம் சரீரத்துக்கு நன்கு அலங்காரம் செய்ய வேண்டும் என நினைத்தான். இந்த உபதேசத்தை ஏற்றுக் கொண்டு, விரோசனன் பிரம்மாவிடம் விடைபெற்றான். இந்திரனுக்கு இது அவ்வளவாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால், இன்னும் கொஞ்சம் விளக்குமாறு பிரம்மாவிடம் பிரார்த்தித்தான்.

பிரம்மா, அதற்கு இன்னும் 32 வருடம் பிரம்மசரிய விரதம் இருக்குமாறு சொன்னார். அதன்பின் இந்திரனிடம் பிரம்மா கனவில், நம்மைப் போலவே ஒரு வடிவம் வருகிறதே, அவன்தான் ஜீவாத்மா என்றார். இந்த முறையும் இந்திரனால் அது ஜீவாத்மா என ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கனவில் வரும் பிம்பமும் பல உணர்வுகளை அனுபவிக்குமே, அது எப்படி ஜீவாத்மாவாக இருக்க முடியும் என யோசித்தான்.

இந்திரனிடம், பிரம்மா இதைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள மீண்டும் 32 வருடம் பிரம்மசரிய விரதத்தைக் கடைப்பிடிக்கச் சொன்னார். இந்த முறை பிரம்மா, ஆழ்ந்த தூக்க நிலையில் இருப்பவன்தான் ஜீவாத்மா என்றார் இந்திரனிடம். கனவுகளையும் கடந்து தூங்குபவன்தான் ஜீவாத்மா என்றார். இந்திரன் யோசித்தான், தூங்குபவன் நினைவில்லாமல் இருப்பான். அவன் எப்படி ஆனந்தமே வடிவாக இன்பத்தை அனுபவிக்க முடியும் என யோசித்தான்.

ஜீவாத்மா பற்றி பூர்த்தியாக அறிய மேலும், 5 வருடம் பிரம்மசரிய விரதம் மேற்கொள்ள வேண்டும் என்றார் பிரம்மா. இப்படி மொத்தம் 101 வருடம் முழுமையாக பிரம்மசரிய விரதத்தை முடித்த பின்னர், பிரம்மா இந்திரனுக்கு ஜீவாத்மா பற்றி முழுமையாக விளக்குகிறார்.`யார் ஒருவன் இந்த சரீரத்துக்குள் இருந்தால் கண்கள் பார்க்குமோ, அவன்தான் ஜீவாத்மா. யார் ஒருவன் இருந்தால் காது கேட்குமோ, அவன்தான் ஜீவாத்மா. யார் ஒருவன் உள்ளே இருந்தால் மூக்கு நுகருமோ, அவன்தான் ஜீவாத்மா.

யார் ஒருவன் உள்ளே இருந்தால் மனம் சிந்திக்குமோ, அவன்தான் ஜீவாத்மா. யார் ஒருவன் உள்ளே இருந்தால் நாக்கு சுவைக்குமோ, அவன்தான் ஜீவாத்மா. இதை எல்லாம் உள்ளே அடக்கி, “நான்’’ என்ற ஒரு உணர்வு இருக்கிறதே, அதுதான் ஜீவாத்மா. இன்று பிறவிப்பிணியில் கட்டுண்டு இருப்பதால், உனக்கு அதன் பெருமை தெரியவில்லை. ஜீவாத்மாவை உள்ளபடி புரிந்துகொண்டால், அதன்பின் முக்தி பெறலாம். பகவானை அடையலாம்’ என்றார் பிரம்மா.இந்திரனுக்கு ஓர் ஐயம் எழுந்தது.

பகவானை அடையவேண்டும் என்றால், அவரைப்பற்றி உபதேசம் செய்து இருக்கலாமே, எதற்கு ஜீவாத்மாவைப் பற்றிச் சொல்ல வேண்டும் எனக் கேட்டார். அதற்கு பிரம்மா, இந்த ஜீவாத்மாவைத் தன் சொத்தாக, அடிமையாகக் கொண்டவன்தான் பரமாத்மா. இந்த ஜீவாத்மாவுக்கே இவ்வளவு பெருமை என்றால், இதற்கு தலைவனாக இருக்கும் பகவானுக்கு எவ்வளவு பெருமை என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இது போல், எத்தனை எத்தனை ஜீவாத்மாக்களுக்குத் தலைவனாக இருக்கிறான் பகவான். ஒரு ஜீவாத்மாவை அறிந்து கொள்ள 101 வருடம் பிரம்மசரிய விரதம் இருக்கச் சொல்கிறார் பிரம்மா. எண்ணிலடங்கா ஜீவாத்மாக்களை தன் சொத்தாகக் கொண்டு, அவற்றுக்குத் தலைவனாக இருப்பவனின் பெருமையை நாம் உணர வேண்டும். ஜீவாத்மாவுக்கும் கல்யாணக் குணங்கள் இருக்கிறது.ஆனால், பகவான் கல்யாணக் குண கூட்டங்களின் கடலாக இருக்கிறான் என விளக்கினார். இந்திரன், முக்தி பெற்றால் என்ன கிடைக்கும் எனக் கேட்டான்.

பிரம்மா, அந்த உத்தம புருஷனை அடைவாய் என்றார். வைகுண்டத்துக்கு வரும் ஒவ்வொரு ஜீவாத்மாவுக்கும் தன் அத்தனை ஆனந்தங்களையும் பகிர்வார் பெருமாள். அதனால்தான் பகவான் `வேதாஹா’ எனக் அழைக்கப்படுகிறான். தன்னிடம் உள்ள மகிமைகளைத் தன் அடியார்க்கும் தருபவர் வேதாஹா. அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 551-வது திருநாமம். பல வகைப்பட்ட, எல்லையில்லாத, மிகப்பெரிய, தனது பெருமைகளையெல்லாம் தன் அடியார்களுக்கு எப்பொழுதும் வழங்குபவர் என்று பொருள்.“வேதஸே நமஹ’’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு, ஆத்மாவைவிட மேம்பட்ட பரமாத்மா விஷயமான ஞானம் ஏற்படும் படி திருமால் அருள்புரிவார்.

———————

552. ஸ்வாங்காய நமஹ (Swaangaya Namaha)

திருக்கச்சி நம்பி என்ற மகான், பூவிருந்தவல்லி என்னும் க்ஷேத்திரத்தில் வாழ்ந்து வந்தார். சிறுவயது முதலே பகவானிடம் மிகுந்த பற்று வைத்திருந்தார். நீண்ட நாட்களாகப் பெருமாளுக்கு விசிறி வீசிக் கைங்கரியம் செய்ய வேண்டும் என்ற ஆசை இவருக்கு இருந்தது. 108 திவ்ய தேசத்துக்கும் தலைமையிடமாகக் கருதப்படும் திருவரங்கம் வந்து, அரங்கனைப் பணிந்தார் திருக்கச்சி நம்பி. தனக்கு ஆலவட்ட (விசிறி வீசுதல்) கைங்கரியம் தந்தருளுமாறு பிரார்த்தித்தார் நம்பி. உபய காவிரிக்கு மத்தியில் குளிர்ச்சியாக நான் இருக்கிறேன். இந்தக் கைங்கரியத்தை மலைக்கு மேல் இருக்கும் திருமலையப் பனிடம் பிரார்த்தித்துப் பாருங்கள் என்றார் அரங்கன்.

திருக்கச்சி நம்பி திருமலைக்குச் சென்றார். அங்கே மலையப்பனிடம் கைங்கரியத்துக்குப் பிராத்தித்தார். மலையப்பனோ, இது `குளிர் அருவி வேங்கடம்’ என ஆழ்வார்களே பாடியுள்ளனர். மலைமேல் அருவிகளுக்கு மத்தியில் நான் குளிர்ச்சியாகத் தான் இருக்கிறேன். நீங்கள் இந்த கைங்கரியத்தைக் காஞ்சி வரதரிடம் பிரார்த்தியுங்கள். அவர்தான் யாகத்தில் தோன்றியவர் என்றார். திருக்கச்சி நம்பி அத்திகிரிவரதரிடம் அடிபணிந்தார். அத்திவரதர், ஆலவட்டக் கைங்கரியத்தை ஏற்கிறேன்.

ஆனால், ஒரு கேள்விக்கு பதில் அளித்தபின் கைங்கரியத்தை ஏற்கிறேன் என்றார். அரங்கனும், மலையப்பனும் ஆலவட்டக் கைங்கரியத்தை மறுத்த பின்னும், என்னிடம் கைங்கரியத்திற்குப் பிரார்த்தித்து இங்கு வந்துள்ளீர்களே, நான் உங்கள் கைங்கரியத்தை ஏற்பேன் என்ற எண்ணம் எதனால் உங்கள் மனதில் உண்டானது எனக் கேட்டார். வரதன் என்றால் வரத்தை அருளுபவன் என்று பொருள்.கேட்கும் அனைத்து வரங்களையும் அடியார்க்குத் தர வல்லவனான நீ, உனக்குத் தொண்டு செய்யும் பேற்றைக் கேட்டால் தராமல் இருக்க மாட்டாய். அதனால்தான் உன்னிடம்
வந்தேன் என்றார்.

ஒரு சாதாரண மன்னனுக்குக்கூட அவரின் பணியாள்கள் இரண்டு பக்கமும் சாமரம் வீசிப் பணிவிடை செய்து, அவர்தான் தங்களை ஆளும் மன்னர் என்ற பெருமையை உலகறியச் செய்கிறார்கள். அதுபோல், சர்வலோகச் சக்கரவர்த்தியான வரதருக்கு ஆலவட்டக் கைங்கரியம் போன்ற உபசாரங்களைச் செய்து உன் பெருமையை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்று அடியேனின் விருப்பம்.

இந்தக் கைங்கரியத்தால் பகவானான உனக்குப் புதிதாக பெருமை வரப்போவதில்லை. ஒரு குடை பிடித்து அடியார்கள் பகவானுக்கு உபசாரம் செய்வது போல், பகவான் தன் திருவடி நிழலை அடியார்களுக்கு தருகிறான். அதில்தான் நாம் அடைக்கலம் பெற்று உய்யமுடியும். கோவர்த்தன கிரிதாரியாக ஆயர்களைக் கண்ணன் ரட்சித்த வரலாற்றை நாம் அறிவோம். நம்மைப் பிறவிப் பிணியிலிருந்து மீட்டு அருளுபவனுக்கு ஒரு சிறு கைம்மாறு போல்தான் ஆலவட்டம் வீசுதல், சாமரம் வீசுதல் போன்றவை.

இந்தக் கைங்கரியங்கள் பகவானான உனக்கு மட்டுமே உரித்தானவை என்றார் திருக்கச்சி நம்பி. எனவே, அடியார்கள் பகவானுக்குச் சாமரம் வீசுதல் போன்றவை எல்லாம் பகவானின் இறையாண்மைக்கான அடையாளங்களாகும். இத்தகைய இறையாண்மைக்கான அடையாளங்களை கொண்டிருப்பதால், திருமால் `ஸ்வாங்க’ என்று அழைக்கப்படுகிறார்.

வைகுண்டத்தில் தனது இறையாண்மைக்கு உரிய அத்தனை அடையாளங்களுடனும் காட்சியளிப்பவர் திருமால். தனக்கே உரித்தான உலகை ஆளும் சர்வசக்தியை உடையவன் என்னும் அடையாளங்களுடன் காட்சி அளிப்பவர் ஸ்வாங்க. அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 552-வது திருநாமம்.“ஸ்வாங்காய நமஹ’’ என்று தினமும் சொல்லி வந்தால், நாமும் உலகில் நல்ல அடையாளங்களோடு நேர்மையாக வாழ திருமால் அருள்புரிவார்.

————

553. அஜிதாய நமஹ (Ajithaaya Namaha)

அயோத்தியைப் புரஞ்ஜயன் என்னும் மன்னர் ஆட்சி செய்து வந்தார். அவர் ராமபிரானுக்குக் குல முன்னோர், ஈக்ஷ்வாகு குலத்தில் தோன்றியவர். அந்தச் சமயம் தேவ லோகத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே கடும் யுத்தம் நடந்து வந்தது. அந்தப் போரிலே அசுரர்களின் கை ஓங்கி விட்டது. இந்திரன் திருப்பாற்கடல் நோக்கி ஓடி வந்து, நாராயணனைஅடி பணிந்தான். தான் வெற்றி பெற அருள்புரியுமாறு திருமாலிடம் வேண்டினான்.

திருமாலோ இந்திரனிடம் அயோத்தியை ஆண்டு வரும் புரஞ்ஜய மன்னரிடம் உதவி கேட்கச் சொன்னார். இந்திரன் பூமிக்கு வந்து புரஞ்ஜயனைச் சந்தித்தான். தேவலோகத்துக்கு வந்து, தேவர்களுக்காகப் போர் புரிந்து அசுரர்களை வீழ்த்தி, தேவர்களின் ஆட்சியை மீட்டுத் தருமாறு வேண்டினான் புரஞ்ஜயனிடம் வேண்டினான் இந்திரன்.

அதைக் கேட்ட புரஞ்ஜயன், தனது தலைநகரான அயோத்தியில் அப்போது கோவில் கொண்டிருந்த திருவரங்கநாதனைச் சென்று வணங்கினான். பெருமாள் சந்நிதி முன் நின்ற புரஞ்ஜயன், இறைவா, இந்திரன் வந்து என்னைப் போர் புரிய அழைக்கிறான். அசுரர்களை எதிர்த்துப் போர் புரியுமாறு கேட்கிறான். இது எனக்கு சாத்தியமா, மனிதனாக இருக்கும் நான் எப்படி தேவர்களுக்கு உதவ முடியும் என்று பெருமாளிடம் பிராத்தித்தான்.

திருமால் திருவாய் மலர்ந்து, அது உனக்கு சாத்தியமே, உன் ஊரின் பெயர் அயோத்தியா. அயோத்தியா என்றால் யாராளும் கைப்பற்ற முடியாத ஊர் என அர்த்தம். நான் இங்கே வசிப்பதால், என் இருப்பிடத்தை யாராலும் கைப்பற்ற முடியாது. அதனால் தான் இந்த ஊருக்கு இப்படி ஒரு திருநாமம் ஏற்பட்டது. நான் இந்த க்ஷேத்திரத்தில் மட்டுமல்ல உன் உள்ளத்திலும் குடிகொண்டிருக்கிறேன். புரஞ்ஜயனுக்கு இதைக் கேட்டதும் நம்பிக்கை வந்தது. போர் புரிய தேவ லோகத்துக்குச் சென்றான்.

புரஞ்ஜயன் தேவலோகத்தில் போர் புரிய வாகனம் வேண்டுமென இந்திரனிடம் கேட்டான். அந்தச் சமயத்தில் தேவர்களிடம் ஒரு வாகனம் கூட இல்லை. அனைத்தையும் இழந்த நிலையில் இருந்தார்கள் தேவர்கள். இந்திரன் தானே வாகனமாக வருகிறேன் எனக் கூறிக் காளை மாடாக வடிவம் கொண்டான். அந்தக் காளை மாட்டின் திமில் மீது ஏறி அமர்ந்து போரிட்டு, அசுரர்களை வென்றான் புரஞ்ஜயன்.

ககுத் என்றால் மாட்டுத் திமில். திமில் மீது ஏறி அமர்ந்து போரிட்டதாலே புரஞ்ஜயன் ககுத்ஸ்தன் எனப் பெயர் பெற்றான். அவன் வம்சத்தில் வந்ததாலே ராம பிரான் காகுத்ஸ்தன் எனப் பெயர் பெற்றான். ககுத்ஸ்தன் வெற்றி பெற்றுத் தந்ததால், இந்திரன் மிகவும் மகிழ்ந்து ஒரு பாராட்டு விழா எடுப்பதாகச் சொன்னான். ககுத்ஸ்தனோ, எல்லாம் நாராயணன் செயல், அவன் என்னுள் குடிக் கொண்டு வெற்றியடையச் செய்தான், அதனால் இந்த வெற்றிக்கான நன்றியை நீ திருமாலிடம் தான் கூற வேண்டும் என்று சொல்லி விட்டுச் சென்று விட்டான்.

பகவான் ஓர் இடத்தில் குடி கொண்டால், அந்த இடத்தை யாராலும் கைப்பற்ற முடியாது. ககுத்ஸ்தனுக்குள் திருமால் எழுந்தருளி இருந்தபடியால் தான் அவனை யாராலும் வெல்ல முடியவில்லை. அவ்வாறே பகவானின் இருப்பிடமான வைகுண்டமும். அங்கே எப்போதும் பகவான் எழுந்தருளி இருப்பதால் வைகுண்டத்தை யாராலும் வெல்ல முடியாது. அதனால் தான் வைகுண்டத்துக்கு அயோத்யா என்ற பெயரே உண்டு – யாராலும் வெல்ல முடியாத லோகம் என்று பொருள்.

வைகுண்டத்தைக் காலத்தாலோ, படைப்பு அழிப்பு போன்றவற்றாலோ கைப்பற்ற முடியாது, அதாவது தங்கள் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்த முடியாது. வைகுண்டத்தில் இருக்கும் பகவான், பகவானின் தொண்டர்கள், நித்யசூரிகள் அனைவரும் எந்த மாற்றத்துக்கும் உட்படாதவர்கள். அதனால் வைகுண்டத்துக்கு அஜித என்னும் திருநாமம் ஏற்பட்டது.

அஜிதா என்றால் எதனாலும் அழிக்கமுடியாதது, யாராலும் கைப்பற்ற முடியாதது என்று பொருள். எதனாலும் அழிக்க முடியாத வைகுண்டமாகிய அஜிதாவை இருப்பிடமாகக் கொண்டிருப்பதால், நாராயணன் அஜித எனப் பெயர் பெற்றார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 553வது திருநாமம்.
அஜிதாய நமஹ என்று தினமும் சொல்லி வருவோர்க்கு வாழ்வில் என்றும் வெற்றி ஏற்படும்படி திருமால் அருள்புரிவார்.

——————

554. க்ருஷ்ணாய நமஹ (Krishnaaya Namaha)

சுவாமி வேதாந்த தேசிகன், திருவரங்கநாதனின் பாதுகையை வர்ணித்து இயற்றிய பாதுகா சஹஸ்ரத்தின் 732வது ஸ்லோகத்தில் கவிநயத்துடன் அழகாக ஒரு வர்ணனையை அளிக்கிறார்.

மதுஜித் தனு காந்தி தஸ்கராணாம்
ஜலதானாம் அபயம் விதாதுகாமா
சபலேவ ததங்க்ரிம் ஆச்ரயந்தீ
பவதி காஞ்சன பாதுகே விபாதி

கார்மேகத்துக்கும் அரங்கனுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன.

1.அரங்கன் கருனை மழை பொழிகிறார், கார்மேகமோ தண்ணீரை மழையாகப் பொழிகிறது. மழை பொழிதலில் ஒற்றுமை.

2.அரங்கன் மின்னல் போன்ற பிராட்டியின் இசைவைப் பார்த்தபின் தான் அனுக்கிரகம் செய்கிறார். கருமேகமும் மின்னல் வெட்டிய பின்தான் மழை கொடுக்கும். மின்னலை மேகத்தின் மனைவியாகச் சொல்லக் கூடிய வழக்கமும் உண்டு.

3.அரங்கன் எப்படி எப்பொழுது அனுக்கிரகம் பண்ணுவார் என்பதைக் கணிக்கவே முடியாது. கார்மேகத்தையும் கணிக்க முடிவதில்லை, எவ்வளவு அறிவியல் உதவி இருப்பினும் எப்படி, எந்த அளவில் மழைப் பொழிவு இருக்கும் என்பதைத் துல்லியமாகக் கணிக்க முடிவதில்லை.

4.அரங்கன் அனுக்கிரகம் செய்யும் போது ஏற்றத்தாழ்வு பார்ப்பதே கிடையாது. அனைத்து பக்தர்களுக்கும் சமமாகவே அருள்புரிகிறார். கார்மேகத்திற்கும் எந்த ஏற்றத்தாழ்வும் கிடையாது. காடு, மலை, ஏழை பணக்காரர் அனைவருக்கும் ஒரே மழை தான்.

5.ரங்கநாதனைச் சேவித்தால் பக்தர்கள் ஆடிப்பாடி மகிழ்கிறார்கள், அதே போல் கார்மேகத்தைப் பார்த்தால் மயில்கள் ஆடும்.

6.ரங்கநாதனுடைய அனுக்கிரகம் ஆழ்வார்களின் வாக்கில் விழுந்தால் முத்தான பாசுரங்களாக வருகிறது. கார்மேகத்திலிருந்து மழைத் துளி சிப்பிக்குள் விழுந்தால் அது முத்தாக மாறுகிறது.

இவ்வளவு ஒற்றுமைகளை இருவரும் கொண்டுள்ளதால், அரங்கனுடைய கருப்பு நிறத்தைத் தான் மேகங்கள் திருடிவிட்டன என்று நினைக்கிறேன் என்றார் தேசிகர். நிறத்தை மட்டுமில்லாமல் குணங்களையும் அரங்கனைப் போலவே கொண்டிருப்பதால் இவ்வாறு கூறுகிறேன் என்றார். இந்நிலையில் கார்மேகத்தின் மனைவியாக மின்னல் சிந்தித்ததாம். நம் கணவர் இப்படித் திருமாலிடம் இருந்தே நிறத்தைத் திருடி விட்டாரே. அவர் நம் கணவரைத் தண்டித்து விடுவாரோ என்று அஞ்சியதாம்.

அதனால் தான் கார்மேகத்தின் மனைவியான மின்னல் அரங்கனின் திருவடியில் சரணாகதி செய்து விட்டது. சரணாகதி செய்ததன் அடையாளம் தான் அந்த மின்னலே அரங்கன் திருவடியில் பாதுகையாக வடிவெடுத்து இருக்கிறது என்பது இந்த ஸ்லோகத்தின் கருத்தாகும். பாதுகைகள் மின்னலைப் போல ஒளி விசிக்கொண்டு இருப்பதால் இவ்வாறு மின்னலே பாதுகையாக வந்ததாக உருவகப் படுத்துகிறார் தேசிகன். இதில் வேதாந்தக் கருத்துகளும் உள்ளன. மேகம் ரங்கநாதனிடமிருந்த நிறத்தை திருடிவிட்டது, இருப்பினும் மேகத்திற்காக அதன் மனைவி மின்னல் சரணாகதி செய்கிறது. அதையும் ஏற்கிறார் ரங்கநாதர்.

அதுபோலே நாம் செய்த தவறுக்காக இன்னொருவர் சரணாகதி செய்தாலும் பெருமாள் ஏற்கிறார். பகவானின் கருணை அவ்வளவு பெரியது என்பதை எடுத்துக் காட்டுகிறார். மனதில் கார்மேகம் போல் குளிர்ச்சியைத் தருகின்ற கருமை நிறம் படைத்தவர் திருமால். வைகுண்டத்தில் உள்ள பரவாசுதேவனும் கார்மேக வண்ணனாகவே காட்சி தருகிறார். அதனால் தான் திருமாலுக்கு க்ருஷ்ண என்று திருநாமம். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 554வது திருநாமம். கிருஷ்ணாய நமஹ என்று தினமும் சொல்லி வந்தால் நமது பிழைகளையும் கருணைக் கடலான திருமால் மன்னித்து அருள்வார்.


———–

557. அச்யுதாய நமஹ (Achyuthaaya Namaha)

விருத்திராசுரன் என்ற அசுரனை அழித்தான் இந்திரன். இனி தன்னை வெல்ல யாருமே இல்லை என்ற அளவுக்குக் கர்வத்தை அடைந்தான் இந்திரன். நானே தேவலோகத்தின் ராஜா, தேவர்கள் ரிஷிகள் அனைவரும் தினமும் வந்து என்னை வணங்க வேண்டும், என்னைக் குறித்து முகத்துதி பாட வேண்டும் என்றெல்லாம் பலவாறு சட்டங்கள் போட்டான் இந்திரன்.

ஒருநாள் இந்திரன் தேவலோகச் சிற்பியான விஸ்வகர்மாவை அழைத்து, எனக்குப் பெரிய அரண்மனை ஒன்றை அமைத்துத் தர வேண்டும். இதுவரை யாருமே அவ்வளவு பெரிய அரண்மனையில் வாழ்ந்திருக்கக் கூடாது. அத்தகைய பிரம்மாண்டமான அரண்மனையாக அது இருக்க வேண்டும் என்றான் இந்திரன். விஸ்வகர்மாவும் அப்படியே செய்யத் தொடங்கினார்.இதை எல்லாம் கவனித்த தேவர்களும் முனிவர்களும், திருமால் மற்றும் சிவனின் உதவியை நாடினார்கள். இந்திரனுக்கு எப்படியாவது பாடம் புகட்ட வேண்டும் என்று அவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று திருமாலும் சிவனும் கூறி விட்டார்கள்.

விஸ்வகர்மா இந்திரனுக்காகக் கட்டிக் கொண்டிருந்த அரண்மனை வாசலில் ஒரு சிறுவன் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அதைக் கவனித்த இந்திரன், அந்தச் சிறுவனிடம், என்ன சிறுவனே, அரண்மனை எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கிறது பார்த்தாயா என்று கர்வத்துடன் கேட்டான்.அதற்கு அந்தச் சிறுவன், ஆம் இந்திரரே, இதுவரை இருந்த எந்த ஒரு இந்திரனும் இவ்வளவு பெரிய அரண்மனையில் இருந்ததில்லை என்றான்.

அதைக் கேட்ட இந்திரன், இதுவரை யார் இந்திரனாக இருந்தார்கள் என்று கேட்டான். அதற்கு அச்சிறுவன், ஆம் உங்களுக்கு முன்பும் இந்திரன் என்ற பதவியில் பலர் இருந்துள்ளார்கள். இப்போது நீங்கள் இருக்கிறீர்கள். உங்களுக்கு முன் உங்கள் பதவியில் இருந்த யாரும் இத்தகைய அரண்மனையில் வாழ்ந்ததில்லை என்று நான் சொன்னேன் என்று விளக்கம் தந்தான்.

அப்படியானால் எனக்கு முன்பு இப்பதவியில் இருந்த இந்திரர்கள் யாவரும் என்ன ஆனார்கள் என்று கேட்டான் இந்திரன். அந்தச் சிறுவன் இந்திரனின் கையைப் பிடித்து ஒரு கரையான் புற்றுக்கு அழைத்துச் சென்றான். அதிலிருந்து வெளிவரும் எறும்புகளைக் காட்டி, இவர்கள் அனைவருமே இதற்கு முன் இந்திரர்களாக இருந்தார்கள். பதவியில் இருக்கும் சமயத்தில் கர்வம் அதிகரித்துச் செருக்குடன் செயல்பட்டதால், அவர்கள் பதவியை இழந்து எறும்பாகப் பிறந்து விட்டார்கள். அப்படி எறும்பாகப் பிறந்தால் தான், உலகம் எவ்வளவு பெரியது, நாம் எவ்வளவு சிறியவர் என்பதைப் புரிந்து கொண்டு பணிவை வளர்த்துக் கொள்ள முடியும் என்று கூறினான் சிறுவன்.

அந்தச் சிறுவனைப் பார்த்துக் கைகூப்பி, நீங்கள் யார் என்று கேட்டான் இந்திரன். கொஞ்ச நேரத்தில் இங்கே ஒரு துறவி வருவார். அவர் நான் யார் என்று சொல்வார் என்று சொல்லி விட்டுச் சிறுவன் மறைந்து விட்டான். அவ்வாறே ஒரு துறவி அவ்வழியே வந்தார். அவரிடம் இச்சிறுவன் யார் என்று கேட்டான் இந்திரன்.

அதற்கு அந்தத் துறவி, என் மார்பில் உள்ள ரோமங்கள் உதிர்ந்து கொண்டே வரும். மொத்தமும் உதிர்ந்தால் அப்போது உள்ள இந்திரன் தனது பதவியை இழந்து விடுவான். மீண்டும் எனக்கு ரோமங்கள் முளைக்கும். அவை உதிர்ந்தவுடன் அடுத்த இந்திரன் பதவி இழப்பான். இதை நீ அறிவாயா என்று கேட்டார். இன்னும் கலங்கிப் போன இந்திரன், அப்படியானால் நீங்கள் யார் என்று கேட்டான். அப்போது அந்தத் துறவி, நான் தான் சிவன், அந்தச் சிறுவன் வடிவில் வந்தவர் திருமால். உனக்குப் பாடம் புகட்டவே நாங்கள் இப்படி வேடமிட்டு வந்தோம். இனியாவது கர்வத்தை விடு என்று உபதேசித்து விட்டுச் சென்றார்.

இப்படி இந்திரன் உள்ளிட்ட பதவிகள் எதுவுமே நிரந்தரம் கிடையாது. ஆனால் திருமால் தனது பதவியில் எப்போதும் நழுவாமல் நிலைபெற்று இருப்பார். ஏனெனில் அவர்கள் பாப-புண்ணியங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர். பரமாத்மாவாக விளங்குபவர். அதனால் தான் அச்யுத – தன் நிலையில் இருந்து என்றுமே விலகாதவர் என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 557-வது திருநாமம்.அச்யுதாய நமஹ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குப் பணிவும் பொறுமையும் வளரும்படி திருமால் அருள் புரிவார்.

—————

 

 

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ வில்லூர் ஆசு கவி ஸ்ரீ நிதி ஸ்வாமிகள் அருளிச் செய்த – ஸ்ரீ மந்த ஸ்மித ஸ்ரீ ராமாயணம்-யுத்த ஸ்கந்தம்- -ஸ்ரீ உ வே வெங்கடேஷ் ஸ்வாமிகள் விளக்கம் –

October 6, 2024

1-2-கடல் தாண்டுதல் பற்றி வானரங்கள்-சொல்வதும் ராம லஷ்மணர் முதலிகளை ரக்ஷிப்பதும்
3-5 விபீஷணன் சரணாகதி
6-7-8-சேது பாலம் நிர்மாணம்
9-22- ராம ராவண யுத்த வர்ணனை
23-27- சீதா ராமன் சேர்த்தி
28-32-அயோத்திக்கு திரும்புதல்
33-37-பட்டாபிஷேகம்

————

த்ருஷ்ட்வா தோய நிதிம் பயானக மஹா வீசி சயைஸ் தாத்ருஷம்
கம்பீரம் விபுலம் கடீ ஸூத முனே ராஹ்வா நமஸ் யாத ச
பானம் தேன ஸமுத்ர ஜோக்ஷண மதோ பத்ப்யாம் ச யாத்ரா ஸ்தலே
சேத்தம் த்வத் பட வாக்யதோ யத பவத் தத்வா கிமேத் ஸ்மிதம் –
-1-

த்ருஷ்ட்வா தோய நிதிம் பயானக மஹா வீசி சயைஸ் தாத்ருஷம் -அச்சம் தரும் அலைகள் மோதும்
கம்பீரம் விபுலம் -கடல்
கடீ ஸூத முனே ராஹ்வா நமஸ் யாத ச –குட முனிவர் -அகஸ்தியர் கூட்டி வந்து கடலைத் தாண்டலாமே
பானம் தேன ஸமுத்ர ஜோக்ஷண மதோ -இந்தக்கடலையும் குடித்தால் கடலை வற்றலாமே
பத்ப்யாம் ச யாத்ரா ஸ்தலே -காலாலே நடந்து போகலாமே
சேத்தம் த்வத் பட வாக்யதோ யத பவத் தத்வா கிமேத் ஸ்மிதம் –வானவர்கள் இவ்வாறு சொல்ல வளர்ந்த புன்னகை

வானரங்களும் வேதம் அறிந்ததை நினைத்து புன்னகை
மூர்த்தி சிறியதாய் இருந்தாலும் கீர்த்தி மிக்கு குறு முனிவர்
தடைகள் நீக்கும் ஸ்லோகம்

——–

நித்ரா யாதம் குமாரவ் ஸூகமிஹ நிஷி வாம் ரக்ஷணே ஜாக ராமே
த்யேவம் ஸ்ரீ ஜூர வாதான் ப்ரஹரண ஸஹிதான் வாநரான் மத்ய ராத்ரே
நிக்ராக் ராந்தான வம்ஸ்த்வம் த்ருத கவச தநுர் லஷ்மணே னானுயாத
வேலாயாம் சாரிவப்ரஸ் ஸ்மித மித மதனோர்த்யேய மேதத் ஸதா ந
-2-

நித்ரா யாதம் குமாரவ் ஸூகமிஹ நிஷி -ராஜகுமாரர்கள்
வாம் ரக்ஷணே ஜாக ராமே -நாங்கள் விழித்து இருந்து ரக்ஷிக்கிறோம்
த்யேவம் ஸ்ரீ ஜூர வாதான் ப்ரஹரண ஸஹிதான் வாநரான் மத்ய ராத்ரே -இivarkalஇவர்கள் தூங்க
நிக்ராக் ராந்தான வம்ஸ்த்வம் த்ருத கவச தநுர் லஷ்மணே னானுயாத -நீங்கள் இருவரும் -உறங்கா வில்லியும் நீயும் ரக்ஷித்து
வேலாயாம் சாரிவப்ரஸ் ஸ்மித மித மதனோர்த்யேய மேதத் ஸதா ந -இருந்த புன்னகை-கடற்கரை வெளியை நினைத்து த்யானிக்கவே பேறு கிட்டும் அன்றோ

இலங்கையை அழித்த கூர் அம்பன் அல்லால் இலை துணை
நடமாடும் மதிள் சுவர் போல் ரக்ஷிக்கும் பெருமாள்-

———-

ஆயாதே தக்ஷ கந்தரஸ்ய ஸஹஜே ரஷா ப்ரதீஷே ஸ்திதே
த்யக்த்வா ப்ராதரம் ஆகதோ விபூதி யஸ் தஸ்மின் கதம் விஸ்வஸே
இத்யேவம் த்ரித ஜோதி தத்வ குணத ப்ரத்யூஹ வாக்யம் ரவே
ஸூனோர் ஹந்த நிஷம்ய தே யத பவத் தத்வா கிமேதத் ஸ்மிதம்
–3-

ஆயாதே தக்ஷ கந்தரஸ்ய ஸஹஜே -உன்னைத் தேடி விபீஷணன் வர
ரஷா ப்ரதீஷே ஸ்திதே -காக்க ப்ரார்த்தனை
த்யக்த்வா ப்ராதரம் ஆகதோ -அண்ணனை கை விட்டு வந்தவன்
விபூதி யஸ் தஸ்மின் கதம் விஸ்வஸே -நம்பலாமா
இத்யேவம் த்ரித ஜோதி தத்வ குணத ப்ரத்யூஹ வாக்யம் ரவே -இவ்வாறு ஸூக்ரீவன் சொன்னதைக் கேட்டு புன்னகை -தேவர்கள் குணம் கொண்டவன் -இந்திரன் தவம் கலைப்பவன் தானே
ஸூனோர் ஹந்த நிஷம்ய தே யத பவத் தத்வா கிமேதத் ஸ்மிதம் –ஸூர்யன் -அம்சம் ஸூக்ரீவன் -இதனாலே தான் பக்தனை ஏற்றுக் கொள்ளாமல் -இருக்க பரிந்துரை
எவ்வளவு தடை பண்ணினாலும் ரக்ஷிக்காமல் விட மாட்டேன்
உறுதியின் வெளிப்பாடே புன்னகை

——–

ஸாதூ ராவண ஸோதரோ ரகுபதே தஸ்மாத் ஸ பால்யோ ஹி நஸ்
சேத்தம் வாதினி மாருதஸ்ய கமணேர் வித்யா ஜனிம் யாம் ஸூதே
ஈத்ருக் துஷ்ட நிதானதோ நயபதே ஸாத்யம் கதம் சாதயேத்
நிர் துஷ்டம் கபி ரித்ய பூத்தவ ததா வக்த்ரே கிமேதத் ஸ்மிதம்
–4-

ஸாதூ
ராவண ஸோதரோ ரகுபதே
தஸ்மாத் ஸ பால்யோ ஹி
நஸ் சேத்தம் வாதினி மாருதஸ்ய கமணேர்-இவ்வாறு திருவடி சொன்னவாறே
வித்யா ஜனிம் யாம் ஸூதே ஈத்ருக் துஷ்ட நிதானதோ நயபதே ஸாத்யம் கதம் –தப்பான முறையில் கணக்கு போட்டாலும் விடை சரி யானதே
நிர் துஷ்டம் கபி ரித்ய பூத்தவ ததா வக்த்ரே கிமேதத் ஸ்மிதம் -இதனால் வளரத்த புன்னகை -சரணாகதனை ஏற்க வேண்டும் –

———-

த்யாஜ்ய பஹ்யோ ஹி ஷத்ரோர் தஷ முக ஸஹஜ ஸோ அயமித் யுக்தி யுக்தஸ்
ஸூக்ரீவ ஸூர ஸூநு சகலமபி க்ருஹே ராக்ஷஸானாம் ஸமூஹம்
குர்வன் அஸ்தீதி வாயோ ஸூதவதன பவாம் பாரதீம் ஸ்லேக்ஷ ஸுவ்ம்யாம்
ஸ்ருத்வா யத்தே முகாப்ஜே ஸ்மித மபவ தஹோ மந்த மே தத்த தேவ
-5-

த்யாஜ்ய பஹ்யோ ஹி ஷத்ரோர் -ஒற்றனாக இருக்கலாம் -கைவிடத் தக்கவனே
தஷ முக ஸஹஜ ஸோ அயமித் யுக்தி யுக்தஸ் -ராவணன் தம்பி வேறே
ஸூக்ரீவ ஸூர ஸூநு -ஸூர்யனின் மகன் ஸுக்ரீவன் –
சகலமபி க்ருஹே ராக்ஷஸானாம் ஸமூஹம் -ராக்ஷஸர்களையும்- வைவஸ்த்தன் யமனும் சூரியனின் மகன் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்
தனது வீட்டுக்கு வர முரண்பட்டு சொன்னானே
குர்வன் அஸ்தீதி வாயோ ஸூதவதன பவாம் பாரதீம் ஸ்லேக்ஷ ஸுவ்ம்யாம் -சிலேடையாக திருவடி சொன்னதைக்
ஸ்ருத்வா யத்தே முகாப்ஜே ஸ்மித மபவ தஹோ மந்த மே தத்த தேவ -கேட்டு வளர்ந்த புன்னகை
யாராக இருந்தாலும் ரஷிப்பான் –
ஆனை காத்து ஆனை வென்று —அத்தானைக் காத்து அத்தானைக் கொன்றான் -பக்தி உடன் இருந்தால் யாரானாலும் கைவிடமாட்டான்-

———-

அப்திம் தர்தும் உபாய மேகம் உசிதம் ப்ரூயா மமேதி த்வயா
ப்ருஷ்டோ ராக்ஷஸ ராஜ தாமதிகதோ தத்தா பயோ அயம் ப்ரபோ
கச்சேஸ் த்வம் ஷரணம் ஸமுத்ரமிதி யத்த்வா மாஹ வாக்யம் ததா
முக்தத்வம் ச விசிந்த்ய தஸ்ய யத பூத் தத்வா கிமேதத் ஸ்மிதம்–
6-

அப்திம் தர்தும் உபாய மேகம் உசிதம் -கடலைக் கடக்க நல்ல வழி யைச் சொல்லு
ப்ரூயா மமேதி த்வயா -விபீஷணனிடம் கேட்க
ப்ருஷ்டோ ராக்ஷஸ ராஜ தாமதிகதோ தத்தா பயோ அயம் ப்ரபோ -உன்னாலே அபயம் அளிக்கப்பட்ட -பட்டாபிஷேகம் பண்ணப்பட்டவன்
கச்சேஸ் த்வம் ஷரணம் ஸமுத்ரமிதி யத்த்வா மாஹ வாக்யம் ததா -கடல் அரசன் இடம் சரண் அடையச் சொல்ல
முக்தத்வம் ச விசிந்த்ய தஸ்ய யத பூத் தத்வா கிமேதத் ஸ்மிதம் -கேட்டதும் -சிறு பிள்ளை வார்த்தை -என்று நினைத்து புன்னகை
எருது கெடுத்தாருக்கும் ஏழு கடுக்காய் வைத்யம்-கருணைக் கடல் கருங்கடலை நோக்கி சரண் -தர்ப்ப சயனப் பெருமாள்-

————

கங்கா மங்கல ஸூத்ர மேவ பவதஸ் சஷுஷ் பதே ந்யஸ்ய தத்
வார்திஸ் த்வாம் சரணம் ஜகாம பகவன் கோ அத்ர ப்ரபன்னோ அந்தத
தண்டோ அஸ்மா இதி கல்பிதோ அஸ்ய ரிபுஷு ப்ராப்தாஸ் பதோ அபூத் ததா
லீலாம் சிந்தயதஸ்த வேதி பகவன் வக்த்ரே கிமேதத் ஸ்மிதம் —
7-

கங்கா மங்கல ஸூத்ர மேவ பவதஸ் சஷுஷ் பதே ந்யஸ்ய தத்–சமுத்ர ராஜன் மனைவிகள் கங்கை போன்ற நதிகள் மனைவிகள் -உடன் ஸரணாகதி
கங்கை -பகீரதன் கொண்டு வந்ததால் பாகீரதி -இவன் தாசராதி -கொள்ளுப் பாட்டி ராமனுக்கு கங்கை
திருமாங்கல்யம் பார்வையில் படும்படி முன் நிறுத்தி வந்தான்
வார்திஸ் த்வாம் சரணம் ஜகாம பகவன் கோ அத்ர ப்ரபன்னோ அந்தத -இவ்வாறு சரண் அடைந்த பின்பு உண்மையான சரணாகதன் யார்
தண்டோ அஸ்மா இதி கல்பிதோ அஸ்ய ரிபுஷு ப்ராப்தாஸ் பதோ அபூத் ததா–கையில் பானம் அமோகமாக இருக்க -எதிரிகள் யார் என்று கேட்டு –
லீலாம் சிந்தயதஸ்த வேதி பகவன் வக்த்ரே கிமேதத் ஸ்மிதம் –இப்படி லீலை செய்ததால் வளர்ந்த புன்னகை –
தடைக் கற்கள் எல்லாம் படிக் கற்கள் ஆகும்-

த்யக்த்வா ஹார மபூத்து தர்ப சயநே கஸ்ரத்யம் ராகவ
க்லுப்தஸ் ஸேது ரஸவ் ந யாவதி பவேத் தாவன்ன புங்க்தே ப்ரபு
தஸ்மாச் ச த்வரயாஸ்து ஸேது ரஸநே த்யேவம் ம்ருதாம் தூனனம்
காயாத் காஷ்ட பிடால கஸ்ய பகவன் த்ருஷ்ட்வா கிமேதத் ஸ்மிதம்
–8-

த்யக்த்வா ஹாரமபூத்து தர்ப சயநே கஸ்ரத்யம் ராகவ –ஆகாரம் இல்லாமல் கடலை நோக்கி கருணைக் கடல் கிடக்க
க்லுப்தஸ் ஸேது ரஸவ் ந யாவதி பவேத் தாவன்ன புங்க்தே ப்ரபு -சேது பாலம் பூர்த்தியாக முடிந்தால் தான் உண்ணுவேன் என்றும் சபதமும் செய்தான்
தஸ்மாச் ச த்வரயாஸ்து ஸேது ரஸநே த்யேவம் ம்ருதாம் தூனனம் -ஆகையால் அணில் சீக்கிரம் கட்ட வேண்டும் என்று த்வரித்து
காயாத் காஷ்ட பிடால கஸ்ய பகவன் த்ருஷ்ட்வா கிமேதத் ஸ்மிதம் -உடம்பு நோவ நனைத்து மணல் ஒட்டும்படி புரள -கைங்கர்யம் நினைத்து வளர்ந்த புன்னகை
மேஸ்த்ரி வேலை -குரங்குகள் சிற்றாள் வேலை

குரங்குகள் மலையை  நூக்கக் குளித்து தாம் புரண்டிட்டு ஓடித்
தரங்க நீர் அடிக்கல் உற்ற சலமிலா வணிலம் போலேன்
மரங்கள் போல் வலிய நெஞ்சம் வஞ்சனேன் நெஞ்சு தன்னால்
அரங்கனார்கு ஆட்செய்யாதே அளியத்தேன் அயர்க்கின்றேனே –27-

———

ஸர்ப அஸ்தரஸ் லதநம் ஹிரண்மய வபுஸ் தாத்ருஷனாஸா ததா
பூஷா பன்னக கல்பிதா ஸ்ருதி மயோ நாதஸ் ச பஷோத்தித
ஸ்வீயாப் ஜாங்க்ரி கிணாங்கிதம் கர யுகம் த்ருஷ்ட்வாபி ஸர்வம் ததா
ப்ருச்சன் கஸ்த்வமிதி த்விஜேஸ் வர மதா யத்தத் கிமேத் ஸ்மிதம்
-9-

ஸர்ப அஸ்தரஸ் லதநம் -பார்த்ததும் பாம்புகள் அஞ்சி ஓட
ஹிரண்மய வபுஸ் -பொன்மய திருமேனி
தாத்ருஷனாஸாததா =அசாதாரணம் மூக்கு
பூஷா பன்னக கல்பிதா -நாகாபரணங்கள் சூட்டிக் கொண்டு
ஸ்ருதி மயோ நாதஸ் ச பஷோத்தித –ரேகைகsaamavethamசாமவேத கோஷம் -வேதாத்மா விஹஹேஸ்வர
ஸ்வீயாப் ஜாங்க்ரி கிணாங்கிதம் கர யுகம் –கைகளில் திருவடி ரேகைகள் பதிந்தவையாய் இருக்க i
த்ருஷ்ட்வாபி ஸர்வம் ததா –பார்த்ததும்
ப்ருச்சன் கஸ்த்வமிதி த்விஜேஸ் வர மதா யத்தத் கிமேத் ஸ்மிதம் -நீங்கள் யார் என்று கேட்டதும் -புள்ளரையன் என்று ஒவ்வொரு அடையாளமும் ஸ்பஷ்டமாகத் தெரிந்தாலும் –கேட்டாயே -உனக்கே சிரிப்பு வந்ததே -அதே புன்னகை
மானுஷ்ய பாவம் -கட்டுண்டது போல் நடிக்க –
மனத்தெளிவு உண்டாக்கும் ஸ்லோகம்

————–

ஹஸ்தான் விம்சதி முத்தரன் பயமபி ப்ராணே ததத் ஸர்வத
கர்வாடோ தசமஸ்த கேஷ்வபி ததா ஹித்வா ச சஸ்த்ராண் யபி
பவ்லஸ்த்யஸ் பதா சசார ச விபோ த்ருஷ்ட்வா ததீயாம் தஸாம்
த்ருப்தம் தேவ கணம் ஸமீஷ்ய பவதா க்லுப்தம் கிமேதத் ஸ்மிதம்
–10-

ஹஸ்தான் விம்சதி முத்தரன்-20 கைகளையும் மேல் தூக்கி -ஆயுதங்கள் இழந்தன
பயமபி ப்ராணே ததத் ஸர்வத-எங்கு பார்த்தும் பயந்து -மேல் தேவர்கள் இகழ்வார்களே
கர்வாடோ தசமஸ்த கேஷ்வபி ததா –பத்து முகங்களும் -மகுட பங்கம் -சவரம் பண்ணினது போல் ஆகவே -அஹங்காரங்கள் அழிந்து
ஹித்வா ச சஸ்த்ராண் யபி –ஆயுதங்கள் எல்லாம் உடை பட்டன
பவ்லஸ்த்யஸ் பதா சசார ச விபோ -தேரும் உடைய திரும்பி நடந்தே போனான்
த்ருஷ்ட்வா ததீயாம் தஸாம்-இந்த நிலையைப் பார்த்து
த்ருப்தம் தேவ கணம் -திருப்தி அடைந்தார்கள்
ஸமீஷ்ய பவதா க்லுப்தம் கிமேதத் ஸ்மிதம் -இத்தைப் பார்த்து வளர்ந்த புன்னகை

வாரணம் பொருத மார்பும், வரையினை எடுத்த தோளும்,
நாரத முனிவற்கு ஏற்ப நயம் பட உரைத்த நாவும்,
தார் அணி மவுலி பத்தும், சங்கரன் கொடுத்த வாளும்,
வீரமும், களத்தே போட்டு, வெறுங் கையே மீண்டு போனான்-

ஈஸ்வரன் அவதரித்து செய்த ஆனைத் தொழில் கள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமையாலே -நஞ்சீயர்-

———–

பவ்லஸ்த்யம் நனு மத்யமம் த்ருஷ்ட்வா த்ருதஸ் தாத்ருசம்
யந்த்ரம் தன்னஹி ராக்ஷஸஸ் த்விதி வதத் ப்ரா துர் த்ருதிம் தாத்ரு ஸ்ரீம்
பூர்வம் தாம் கில கானனே அஸ்ய ச தஸாம் சங்கே கபந்தஸ்ய ச
ஸ்ம் ருத்வா கிம் ரகு புங்கவோதி தம பூதே தத் ஸ்மிதம் நஸ் ப்ரபோ
–11-

பவ்லஸ்த்யம் நனு மத்யமம் -நடுப்பிள்ளையான கும்ப கர்ணனைப் பார்த்தவாறே
த்ருஷ்ட்வா த்ருதஸ் தாத்ருசம் -முதலிகள் பயந்தவாறே
யந்த்ரம் தன்னஹி ராக்ஷஸஸ் -அரக்கன் அல்ல யந்த்ரமே -robo -தான்
த்விதி வதத் ப்ரா துர் த்ருதிம் தாத்ரு ஸ்ரீம் -இப்படி லஷ்மணன் உறுதியுடன் சொல்ல
பூர்வம் தாம் கில கானனே அஸ்ய ச தஸாம் சங்கே கபந்தஸ்ய ச -கீழே கபந்தன் பிடிக்க பயந்த இளவல் பெருமாள் கலங்க வில்லை -பொங்கும் பரிவால் இளவல் கலங்கினான் அங்கு –
ஸ்ம் ருத்வா கிம் ரகு புங்கவோதி தம பூதே தத் ஸ்மிதம் நஸ் ப்ரபோ–லஷ்மணன் வீரத்தை நினைத்து வளர்ந்த புன்னகை -நல்ல மன உறுதி வளரும்

————

விந்த்யோ அயம் கிமு ஸஞ்சரன்னிதி ததா சிந்தான் விதோ பாஸ்கர
ஸ்ரீ மன் நைஜ ஸூதம் ச மஸ்த கயம் தம் கும்ப கர்ணஸ்ய து
தத் பாணா வத கர்youயோர் யுகல மப்யா லோக்ய கர்ண த்வினிம்
சக்ரே த்வாபரமே யிவான் கிம கரோ ருத்வா தமேதத் ஸ்மிதம்
–12-

விந்த்யோ அயம் கிமு ஸஞ்சரன்னிதி ததா சிந்தான் விதோ பாஸ்கர -சூர்யன் கும்பகர்ணன் மயங்கிய சுக்ரீவனைத் தூக்கிச் செல்வதைப் பார்த்து விந்திய மலையே நடப்பது போல் இருக்க
ஸ்ரீ மன் நைஜ ஸூதம் ச மஸ்த கயம் தம் கும்ப கர்ணஸ்ய து -தனது மகனுக்கு என்ன நேருமோ என்று பதட்டம் அடைய
தத் பாணா வத கர்ண யோர் யுகல மப்யா லோக்ய கர்ண த்வினிம் -சுக்ரீவன் மயக்கம் தெளிந்து கும்பகர்ணனுடைய காதுகளைக் கொய்து எடுத்தானாம்
சக்ரே த்வாபரமே யிவான் கிம கரோ ருத்வா தமேதத் ஸ்மிதம் –இதைப் பார்த்ததும் -த்வாபர யுகத்துக்குப் போனது போல் -இதே போல் ஸூர்யன் மகனாக கர்ணன் பிறப்பான் -அவனை அழிக்கும் பொழுது இதே ஸூர்யன் கர்ணன் கர்ணன் என்று கத்துவான் -அதற்கு முன்னோட்டமாக இப்பொழுது -இத்தை நினைத்து புன்னகை-

————

ஸூக்ரீவஸ் தனயம் பிதுஸ் சமுசிதம் தம் கும்ப கர்ணம் ததா
தேனே விஸ்ர வஸம் ஸ்வ ஸூஸ் சமுசிதம் நாஸா விஹீ நம் ததா
இத்யேவம் பவனாத்மஜே கதயதி ஸ்ரீ ராம பத்ர ப்ரபோ
சவ்மித்ரிம் தவ பஸ்யத சமுசிதம்மந்தஸ்மிதம் பாது மாம்
–13-

ஸூக்ரீவஸ் தனயம் பிதுஸ் சமுசிதம் தம் கும்ப கர்ணம் ததா
தேனே விஸ்ர வஸம்-தந்தைyentraஏற்ற மகனாக்கி -காது இல்லாதவனாக்கி – விஸ்ர வஸ்கும்பகர்ணனின் தந்தை
ஸ்வ ஸூஸ் சமுசிதம் நாஸா விஹீ நம் ததா -தங்கைக்கு அண்ணனாக்கி -சூர்பனகைக்கு மூக்கு இல்லை -அதே போல் இவன் மூக்கையும் அறுத்து
இத்யேவம் பவனாத்மஜே கதயதி ஸ்ரீ ராம பத்ர ப்ரபோ -இவ்வாறு -சொல்லின் செல்வனான -திருவடி சாதுர்யமாகச் சொல்ல
சவ்மித்ரிம் தவ பஸ்யத சமுசிதம் மந்தஸ்மிதம் பாது மாம் –லஷ்மணனையும் பார்த்தபடி வளர்ந்த புன்னகை நம்மை ரக்ஷிக்கட்டும்-

———

ராஜா குப்யதி கிம் நிதானம் அதுனா கோபஸ்ய தஸ்யே ஸிது
மத் வாக்யம் கிமிதி த்வயா தவ படை ஸர்வம் ததானுஷ்டிதம்
ரஷோ வீர ஸ்ரீரம் அஞ்ஐன மிதம் வார்தவ் ரிபோ கிங்கரா
லாபான் வானர வர்ணிதானிதி விபோ ஸ்ருத்வா கிமேதத் ஸ்மிதம்
-14-

ராஜா குப்யதி -ராவணன் கோபமாக உள்ளார்
கிம் நிதானம் அதுனா கோபஸ்ய தஸ்யே ஸிது -நம் மேல் தான் கோபமாக உள்ளார்
மத் வாக்யம் கிமிதி த்வயா தவ படை ஸர்வம் ததானுஷ்டிதம் -நான் சொன்னதை அப்படியே செய்வீர்களா என்று கோபம்
ரஷோ வீர ஸ்ரீரம் அஞ்ஐன மிதம் வார்தவ் -இறந்த அரக்கர்களை கடலில் போட்டதுக்காக
சஞ்சீவ கரணி சந்தான காரணி போன்ற -மூலிகை வாசனையால் வானரர்கள் உயிர் எழ
கடலில் போட்டதுக்காக அரக்கர்கள் உயிர் பெற வில்லையே
ரிபோ கிங்கரா -எதிரியான ராவணனுடைய கிங்கரர்கள் இவ்வாறு பேச
லாபான் வானர வர்ணிதானிதி விபோ ஸ்ருத்வா கிமேதத் ஸ்மிதம் -இத்தை வானர முதலிகள் கேட்டு வளர்ந்த புன்னகை-

———-

மாயே வாஸ்தி விதேஹ ராஜ தனயா தேவஸ்ய ஸா நிர்மிதா
வஹ்யந்தீதி முனீஸ்வரா மய ஸூதா ஸூனோஸ் மாயா க்ருதா
ஸீதேயம் நிஹதா அத்ய தேவ விஜயஸ் தத் ஸூஸ்யதே மாஸூச
த்வம் தேவே தி விபீஷணஸ்ய வசனம் ஸ்ம்ருத்வா கிமேதத் ஸ்மிதம்
-15-

மாயே வாஸ்தி விதேஹ ராஜ தனயா தேவஸ்ய ஸா நிர்மிதா வஹ்யந்தீதி முனீஸ்வரா –தேவ மாயை -நாரதர் சீதையை வர்ணிப்பார் -அத்ப்புத சக்தி
மய ஸூதா ஸூனோஸ் மாயா க்ருதா -மயனின் பேரன் இந்திரஜித் -அரக்க மாயை
ஸீதேயம் நிஹதா அத்ய தேவ விஜயஸ் தத் ஸூஸ்யதே மாஸூச -தேவ மாயையான சீதை நலமாக இருக்க அரக்கர் மாயை அழிந்து –
இத்தால் நடக்கப்போகும் தோல்வியையே காட்டுகிறான்
த்வம் தேவே தி விபீஷணஸ்ய வசனம் ஸ்ம்ருத்வா கிமேதத் ஸ்மிதம் -நீயே அந்த தேவன்-அத் புத சக்தி வெல்லப் போவதையே இது காட்டும் – -விபீஷணன் சொல்ல வளர்ந்த புன்னகை-

இந்த்ர அஸ்த்ரேண ஹதோ பபூவ சமரே சேந்த்ரஸ்ய ஜேதா ஆசர
த்விந்தரோ அயம் கில ராகவே நனு மதே ராமாநுஜஸ்யேதி தத்
ஸாஷா தித்யத ஜைமினீய வசனம் வ்ருத்தாந்த தஸ் ஸூசய
த்வால்மீகே கில பாட வேன பகவன் வக்த்ரே தவேதம் ஸ்மிதம்-
16-

இந்த்ர அஸ்த்ரேண ஹதோ பபூவ சமரே சேந்த்ரஸ்ய ஜேதா ஆசர -இந்த்ராஸ்த்ரம் கொண்டு -இந்ரஜித்தை வென்ற -மேக நாதன் -இயல் பெயர் இந்திரனை வென்றதால் இந்திரஜித் பெயர்
த்விந்தரோ அயம் கில ராகவே நனு மதே ராமாநுஜஸ்யேதி தத் -ராமானுஜ சித்தாந்தத்தில் உண்டே
வைச்வாதிகரணம் -1-2 -இந்த்ரோயம் பெருமாளையே காட்டும் பதம் -ஆளும் -ஆள்கின்ற திருவரங்க செல்வனார் –
அக்னி ஒளி காட்டி முன்னே அழைத்துச் செல்லும் நாராயணனன்
ஆனந்த கண்ணீர் வரவழைப்பதால் இவனே ருத்ரன்
ப்ருஹஸ்பதி -ஆழ்வார் வாக்கை மீட்டுக் கொடுத்த ஆராவமுதன் –
ஸாஷா தித்யத ஜைமினீய வசனம் வ்ருத்தாந்த தஸ் ஸூசய -ஜைமினி இவ்வாறு ஸாஷாத்தாக காட்டும் -என்று அருளிச் செய்தார்
த்வால்மீகே கில பாட வேன பகவன் வக்த்ரே தவேதம் ஸ்மிதம் –வால்மீகி இந்த அர்த்தை அருளியதால் -ராமன் பெயரைச் சொல்லி இந்திர அஸ்திரம் இத்தை நினைத்து புன்னகை

எல்லாவற்றிலும் இறைவனைக் காணக்கூடிய உயர்ந்த பக்தி நிலையை அருள்வார்-

———

த்ருஷ்டேத் யாஹ வச தவேத வதனம் தேவ ரிபோ அன்வேஷணே
கும்பீ ஸூநுப தோத்தரஸ்யமதுபா சத்தே பலம் தாத்ருசம்
நஷ்டத் யாஹ வசஸ்ததேவ வதனம் மாயா ரயோக்தி ஸ்ருதே
ஏவம் ஸேஸ்வர வைபவே ஹி விபுதா இத்யஸ்தி கிம் வா ஸ்மிதம்
-17-

த்ருஷ்டேத் யாஹ வச தவேத வதனம் -கண்டேன் ஸீதையை
தேவ ரிபோ அன்வேஷணே -பார்த்ததும் சொன்ன
கும்பீ ஸூநுப தோத்தரஸ்ய -தெற்கில் இருந்து வந்து
மதுபா சத்தே பலம் தாத்ருசம் -மதுவைப்பருகி ஆலிங்கனமும் பெற்று
தெற்கில் உதித்த ஆழ்வார்கள் அருளிச் செயல்களை அறிந்து பகவத் குண அனுபவம் செய்து ஆலிங்கனம் பெறுகிறார்கள்
நஷ்டத் யாஹ வசஸ்ததேவ வதனம் மாயா ரயோக்தி ஸ்ருதே -மாயா ஸீதையை கண்டு ஸீதையே இல்லை என்றார் போல்
ஏவம் ஸேஸ்வர வைபவே ஹி விபுதா இத்யஸ்தி கிம் வா ஸ்மிதம் -மாயாவாதிகள் ஒன்றுமே இல்லையே -குணம் விபூதி இல்லை -இந்திரஜித் தொடர்பால் ஆவது போல் ப்ரக்ருதி மாயையால் -பிதற்றுகிறார்கள் -வேதாந்த அர்த்தம் அருளிச் செய்கிறார்-இத்தை நினைத்து வளர்ந்த புன்னகை-

——————-

ஊர் கேஷா மயி வா ஷடர்த்த நயனே சேத் யுக்திதோ அயம் ஜன
ஸாம்யம் வாம் மனுதாம் தத கிமிதி தத் வாக்யம் ச ராமாயணே
மைவம் மூட ஸூ யோதனோ அபி படிதா ஹ்யாத்மான மேனம் ஸரம்
கைலாஸஸ்தி ததம்ப தீவச இதம் ஸ்ம்ருத்வா கிமேதத் ஸ்மிதம்-
-18-

ஊர் கேஷா மயி வா ஷடர்த்த நயனே சேத் யுக்திதோ அயம் ஜன ஸாம்யம் வாம் மனுதாம் தத கிமிதி தத் வாக்யம் ச ராமாயணே -சிவனும் நானும் ஸாம்யம் -என்று மூல பலத்தை அழிக்க ஸஹ காரி இல்லாமல் செல்லும் பொழுது சொன்னான்
இது எவ்வாறு என்று பார்வதி சிவனிடம் கேட்க
மைவம் மூட ஸூ யோதனோ அபி படிதா ஹ்யாத்மான மேனம் ஸரம் -திரியோதனன்ன மூடனும் முப்புரம் எரித்த வ்ருத்தாந்தம் சொல்கிறான் -அம்பாக ஸாஷாத் நாராயணனே -சிவனுக்கும் ஆத்மாவாக நாராயணன் -தெளிவாக சொன்னான்
கைலாஸஸ்தி ததம்ப தீவச இதம் ஸ்ம்ருத்வா கிமேதத் – சரீர சரீரீ பாவத்தால் ஸாம்யம் சொல்லலாமே -உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்-ஸர்வம் கல்விதம் ப்ரஹ்மம்-
ஸ்மிதம் -இத்தைக் கேட்டு வளர்ந்த புன்னகை

——–

ஸீதான் வேஷ ஸோக தாவ தஹனே தேவா ந ஸக்ருர் தயாம்
பஷீந்த் ரஸ்து ஜடாயுரேவ ஜனகோ ஜ்ஞாநீ சமம் மே ததா
ஏத்ர் ஹ்யேக்ஷ ரதம் ததாதி மகவா த்ருஷ்ட்வா ஜயம் மே ஸ்வயம்
ஜேதாரம் பஜதே ஹி லோக இதி வா ஸ்ம்ருத்வா கிமேதத் ஸ்மிதம்-
19-

ஸீதான் வேஷ ஸோக தாவ தஹனே -பிராட்டியைத் தேடி விthavirnthதவித்த பொழுது a
தேவா ந ஸக்ருர் தயாம் -எந்த தேவர்களும் நேராக உதவவில்லையே
பஷீந்த் ரஸ்து ஜடாயுரேவ ஜனகோ ஜ்ஞாநீ சமம் மே ததா –பெரிய உடையார் -ஆத்மாவாக உதவினாரே -ஆயுஷ்மன் பல்லாண்டு பாடினார் -இந்தன் முஹூர்த்தம் -கடத்திப் போந்தான்
ஏத்ர் ஹ்யேக்ஷ ரதம் ததாதி மகவா த்ருஷ்ட்வா ஜயம் மே ஸ்வயம் -இப்பொழுது வெல்லப்போகும் சமயத்தில் மாதலியும் தேரையும் கொடுக்கிறான் இந்த்ரன்
ஜேதாரம் பஜதே ஹி லோக இதி வா ஸ்ம்ருத்வா கிமேதத் ஸ்மிதம் -உலகமே ஜெயிப்பவர் பக்கம் இருப்பதே இயற்கை என்று நினைத்து வளர்ந்த புன்னகை-வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும். அவமானம் எல்லாம் வெகுமானமாக மாறும்-

———–

யுத்தே விம்சதி வீக்ஷணைஸ் தவ முகம் ஸம் வீஷ்ய ரக்ஷ பதி
திங் மாம் ஸ்ரீ ஜநகாத்மஜா முக மிதோ அயுக்தம் வியுக்தாம் வ்யதாம்
தன்மத்கான் யபி விக்ரமேண ஹரது ஸ்வாங்க்ரவ் விதத்தாம் ச மாம்
இத்யந்த்ய ஸ்ம்ருதி ராப்ய சைத்ய நிருபதாம் ஆபாத்மனோ வாஞ்சிதம்-
-20-

யுத்தே விம்சதி வீக்ஷணைஸ் தவ முகம் ஸம் வீஷ்ய ரக்ஷ பதி -20 கண்களாலும் உனது திரு முகத்தைப் பார்த்து
திங் மாம் ஸ்ரீ ஜநகாத்மஜா முக மிதோ அயுக்தம் வியுக்தாம் வ்யதாம் –இந்த அழகிய திருமுகத்தில் நின்றும் சீதையைப் பிரித்தேனே –
தன்மத்கான் யபி விக்ரமேண ஹரது ஸ்வாங்க்ரவ் விதத்தாம் ச மாம் -எனது பத்து தலைகளையும் வெட்டி தனது திருவடிகளில் சேர்த்துக் கொள்ளட்டும்
இத்யந்த்ய ஸ்ம்ருதி ராப்ய சைத்ய நிருபதாம் ஆபாத்மனோ வாஞ்சிதம் -இவ்வாறு நினைத்துக் கொண்டே சிசு பாலனாக அடுத்த ஜென்மத்தில் கிருஷ்ணனையே நினைத்துக் கொண்டு இருந்தானே-

———

மந்தாகினீ மஸ்த கலாலி தஸ்ய
மந்தோ தரீ நாயக மஸ்த பேத்து
மந்தஸ்மிதம் மானவவம்ஸ னேதுர்
மந்தே தரம் மங்கல மாத னோது
–21-

மந்தாகினீ மஸ்த கலாலி தஸ்ய-மந்தாகினி யாகிய கங்கையை தலையில் ஏந்திய சிவன் ஸ்துதிக்கப்படும் ராமன்
மந்தோ தரீ நாயக மஸ்த பேத்து -மண்டோதரி கணவனான ராவணனுடைய தலையை அறுத்துத் தள்ளிய
மந்தஸ்மிதம் மானவவம்ஸ னேதுர் -மநு குல திலகமான உனது புன்னகை
மந்தே தரம் மங்கல மாத னோது -உயர்ந்த மங்கள பெருக வைக்கட்டும்-

——-

புத்ரோ விஸ்ர வஸோ அபி மத் விரஹி தாம் த்வாமேவ தேவ்யை ஹத
புத்ரீ விஸ்ர வஸோ அபி ஹந்த ரஹிதாம் மாம் ஸா த்வயா ஜானகி
ஆர்ஷம் ராக்ஷஸ யோநி சங்கத மிதம் நஷ்டம் குலம் பஸ்ய தோ
ஆலம்போ அத்ர விபீஷண ஸ்திவிதி முதா மந்தஸ்மிதம் ஜ்ரும்பதே–
22-

புத்ரோ விஸ்ர வஸோ அபி -விஸ்வரஸ் பிள்ளை ராவணன்
மத் விரஹி தாம் த்வாமேவ தேவ்யை ஹத -நான் இல்லாத பிராட்டி மேல் காமம் கொண்டு அழிந்தான்
புத்ரீ விஸ்ர வஸோ அபி ஹந்த ரஹிதாம் மாம் ஸா த்வயா ஜானகி -சீதா இல்லாத என்னை மட்டும் ஆசைப்பட்டு காது மூக்கு அறுபட்டாள்
ஆர்ஷம் ராக்ஷஸ யோநி சங்கத மிதம் -தந்தை முனிவராய் இருந்தாலும் தாயார் குணம் சேர்ந்ததால்
நஷ்டம் குலம் பஸ்ய தோ -குலம் அழிய காரணமானார்கள்
ஆலம்போ அத்ர விபீஷண ஸ்திவிதி முதா மந்தஸ்மிதம் ஜ்ரும்பதே -அதே குலத்தில் சிரஞ்சீவியாக விபீஷணன் -இருவரையும் சேர்த்து வைத்ததை நினைத்து -மானஸீகமாகப் பிராட்டியைக் கண்டு புன்னகை-

———-

ஸஜ்ஜா கிம் கிமயம் விலம்ப இதி வா ப்ருச்சா ந காசித் க்ருதா
ஸா க்லாந்தி விரஹோத்த ஸோக வசனம் தச்சாஸ் தமேதம் கதம்
இத்தம் மாருத நந்தனே பஹு விதாம் சிந்தாம் ததேன ததா
மாயாவின் ரகுநாத வக்த்ர கமலே யத்தே ஸ்மிதம் கிம்ந்விதம்
–23-

ஸஜ்ஜா கிம் -பிராட்டி உடன் வந்து விட்டாளா
கிமயம் விலம்ப இதி -ஏன் தாமதம்
வா ப்ருச்சா ந காசித் க்ருதா -இப் பொழுது எப்படி இருக்கிறாள்
ஸா க்லாந்தி விரஹோத்த ஸோக வசனம் தச்சாஸ் தமேதம் கதம் -இப்படி எல்லாம் கேட்க்காமல் -முன்பு அநித்ர இத்யாதி -தூங்காமல் கதறிக் கொண்டு இருந்த இவரா அவர்
இத்தம் மாருத நந்தனே பஹு விதாம் சிந்தாம் ததேன ததா -இவ்வாறு பலவிதமாக திருவடி மனத்தால் சிந்திக்க
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிபவன் ஆகையாலே
மாயாவின் ரகுநாத வக்த்ர கமலே யத்தே ஸ்மிதம் கிம்ந்விதம் -புன்னகையாலேயே பதில் சொல்லி -மாயாவி -திருவடியும் புரிந்து கொண்டார்
அவன் செயல்களை நமது புத்தியால் அறிந்து கொள்ள முடியாதே–மேல் அக்னி பிரவேசம் பண்ணைச் சொல்லப் போகிறான் -மற்றவர்கள் பழிச் சொல் சொல்ல முடியாமல் செய்த செயல் -தனது மேல் பழி வரும்படி யும் -அக்னி தேவதையும் இவளது புனிதத் தன்மையும் காட்டும் படி செயல் அன்றோ –
அக்னிக்குள் இருந்து வந்த ஸீதையையே அபகரித்து இப்பொழுது மீண்டும் அக்னிக்குள் போக வைக்கிறான்
புன்னகைக்குள்ளே பல அர்த்தங்கள் உள்ளன-

————–

ஸ்ருத்வா மத் பருஷம் சிதாம் குரு மமேத் யாஹ ஸ்வயம் ஜாநகீ
சவ்மித்ரே ஹ்ய கரோஸ்ததைவ ஸஹஸா நாவாரயத் கோ அபி மாம்
பீத்யா கிம் ஜடதேதி புஷ்பக கதா காலே கபிஸ் கஸ்சிதா
லங்கா தாஹ கதேதி மந்த மவதத் தஸ்மை கிமேதத் ஸ்மிதம்-
-24-

ஸ்ருத்வா மத் பருஷம் -கடும் சொல் பேச
சிதாம் குரு மமேத் யாஹ ஸ்வயம் ஜாநகீ -கேட்டு காதைப் பொத்திக் கொண்டு
சவ்மித்ரே ஹ்ய கரோஸ்ததைவ ஸஹஸா -அக்னி மூட்டச் சொல்ல இவனும் மூட்ட -பாகவத அபசாரத்துக்கு பலன் -இவன் கையாலே மூட்ட லீலை
நாவாரயத் கோ அபி மாம் –வானர முதலிகளும் ஒன்றும் சொல்லாமல் இருக்க
பீத்யா கிம் ஜடதேதி புஷ்பக கதா காலே கபிஸ் கஸ்சிதா -உங்களுக்கு என்னைப் பார்த்து அவ்வளவு பயமா கேட்க
லங்கா தாஹ கதேதி –இலங்கையை எரித்த வரலாறு -ஒரே குரங்கு பதில்
ஸீதை பண்ணிய ஆசீர்வாதத்தால் திருவடிக்கு குளிர -அசோகவனத்தையும் சுட வில்லை
ஸீதையின் கற்பு அத்தையும் சுடுமே
மந்த மவதத் தஸ்மை கிமேதத்–இத்தைக் கேட்டதும் வளர்ந்த புன்னகை

பகலோனுமே விளக்கு போல் ஆவானே இவன் தேஜஸ்ஸால்

————–

விஷ்ணோ லோக முபேஹி ராவண ஸடோ நிர்மூல முன்மூலித
சேத்தம் தேவ கணே ஸ்வ கார்யமுதிதே நாட்யம் பரம் தன்வதி
தாதோ அயம் தவ ராகவேதி பவதோ தத்தவோபதாம் பார்ஸ்வகே
சம்பவ் நாம்நி ரதே ப்ரஸாதாபி ஸூநம் மந்தஸ்மிதம் சோபதே
–25-

விஷ்ணோ லோக முபேஹி ராவண ஸடோ நிர்மூல முன்மூலித -விஷ்ணுவே எங்கள் கார்யம் செய்தாயே
சேத்தம் தேவ கணே ஸ்வ கார்யமுதிதே நாட்யம் பரம் தன்வதி -தங்கள் கார்யம் ஆனதே நாட்டியம் -ராமனுக்கு நன்றியும் மங்களா சாசனமும் செய்யாமல் இருக்க
தாதோ அயம் தவ ராகவேதி பவதோ தத்தவோபதாம் பார்ஸ்வகே-சிவன் மட்டும் சக்ரவர்த்தியை வரவழைத்து பெருமாளை மகிழ்விக்க
ராம நாம சங்கீர்த்தன பலனே இது
சம்பவ் நாம்நி ரதே ப்ரஸாதாபி ஸூநம் மந்தஸ்மிதம் சோபதே -என்று நினைத்து வளர்ந்த புன்னகை

பார்யா ப்ரீதி பரோ யதாஹம பஜம் கஷ்டம் ததா த்வம் ஸூதா
பூமவ் மே சமதா குணைரிதி ஐநா ஸர்வே வதந்தி ஸ்வயம்
க்ருத்வாஹம் சமதாம் பஜேய தவ ஹே வஹ்னவ் ப்ரவிஷ்டாம் சடாம்
கைகேயீ மிதிவாதினம் த ரதம் த்ருஷ்ட்வா கிமேதத் ஸ்மிதம்
–26-

பார்யா ப்ரீதி பரோ யதாஹம பஜம் கஷ்டம் ததா த்வம் ஸூதா –கைகேயி எது சொன்னாலும் செய்த எனது குணமும் உனக்கும் வந்ததா
பூமவ் மே சமதா குணைரிதி ஐநா ஸர்வே வதந்தி ஸ்வயம் –மானைப் பிடிக்க சொல்ல நீயும் செல்ல -அனைத்தும் நடக்கும் படி ஆனதே
க்ருத்வாஹம் சமதாம் பஜேய தவ ஹே வஹ்னவ் ப்ரவிஷ்டாம் சடாம் கைகேயீ மிதிவாதினம் -கைகேயியை நெருப்பில் தள்ளி இருக்க வேண்டும்
த ரதம் த்ருஷ்ட்வா கிமேதத் ஸ்மிதம் -செய்யக்கூடாது என்று சொல்லும்படி வளர்ந்த புன்னகை
ராமாயணம் வளர அவள் தானே காரணம் -அவளையும் பரதாழ்வானையும் ஏற்றுக் கொள்ள பிரார்த்தித்தான் அன்றோ -புன்னகை இவற்றைக் காட்டும்
அவள் போல் இவனும் இரண்டு வரங்களைக் கேட்டு பிரிந்த உறவுகளைச் சேர்த்து அருளினான் அன்றோ –

———–

ஸர்வே கிம் கபயோ ல சந்தி கணனா ஸம்யக் க்ருதா கிம் த்வயா
தேவைகம் து வினா ஸமே யம புரே ஸ்வர்க்கே அபி நாஸ்த்யேவ ச
கிஷ்கிந்தா நகரே ச குத்ர ஸ கதோ த்ருஷ்டோ அத்ய யந்த்ரோதரே
ஷிப்தே அப்தா விதி ஸம் ப்ரமேண பவதோ மந்தஸ்மிதம் கிம் முகே
–27-

ஸர்வே கிம் கபயோ ல சந்தி -எல்லா வானரங்களும் மீண்டும் உயிர் பெற்று வந்தார்களா
கணனா ஸம்யக் க்ருதா கிம் த்வயா தேவைகம் து வினா ஸமே -ஒருவர் மட்டும் வர இல்லை -வசந்தன் என்கிற வானரம் இல்லை
யம புரே ஸ்வர்க்கே அபி நாஸ்த்யேவ ச கிஷ்கிந்தா நகரே ச -யமபுரத்திலும் சுவர்க்கத்தில் கிஷ்கிந்தையிலும் இல்லை குத்ர ஸ கதோ -எங்கே போனான்
த்ருஷ்டோ அத்ய யந்த்ரோதரே -ரோபோ வயிற்றுக்குள் உள்ளான் -முன்பே கும்பகர்ணனை ரோபோ என்று விபீஷணன் சொல்லி முதலைகளை போர் புரியச் சொன்னான்
ஷிப்தே அப்தா விதி ஸம் ப்ரமேண பவதோ மந்தஸ்மிதம் கிம் முகே -கும்பகர்ணனை கடலில் தள்ளி இருந்தார்கள் -அவன் வயிற்றுக்குள் இருந்து மீட்டு வந்தார்களாம்
ஆனந்த புன்னகை-

————

கிஷ்கிந்தா ரமணீர் விதாய ரமணீ ஸீதா விமானே ததா
மோதம் ப்ராப ததைவ தத்ர மஹிதா தாஸ் ஸாபி ஸர்வா ஸ்த்ரிய
புச்சம் நாஸ்தி கதம் நு ஸூந்தர வபுஸ் ஸீதேதி வாஸம் வினா
யத் ப்ரோசுர் பகவன் ததேததிஹ தே பீஜம் ஸ்மிதம் ப்ரபோ
–28-

கிஷ்கிந்தா ரமணீர் விதாய ரமணீ ஸீதா விமானே ததா -வானர பெண்கள்
மோதம் ப்ராப ததைவ தத்ர மஹிதா தாஸ் ஸாபி ஸர்வா ஸ்த்ரிய -உதார மனம் கொண்ட பிராட்டி -உருவம் நன்றாக இல்லையே
புச்சம் நாஸ்தி -வால் கூட இல்லையே
கதம் நு ஸூந்தர வபுஸ் ஸீதேதி வாஸம் வினா -ஆகவே உருவம் அழகாய் இல்லையே
யத் ப்ரோசுர் பகவன் ததேததிஹ தே பீஜம் ஸ்மிதம் ப்ரபோ -இத்தைக் கேட்டு வளர்ந்த புன்னகை-

ருமா -ஸூ க்ரீவன் மனைவியும் சீதாப்பிராட்டியும் பேசிக் கொண்டவை

கந்தவ்யம் த்வரயா ருமே –யதி ந கிம் -வஹ்னவ் பதிஷ் யத் யஹோ
ப்ராதா ஸ்ரீ பரத பதத்த்விஹ யதா ஸ த்வம் ததா ஜீவது
நைவம் தத்ர பதிஷ்யதி ப்ரபுர சவ் –இத்யேவ ஸீதா ருமா
ஸம்லாபேன மிதம் ஸ்மிதம் ரகுபதே ஜாதம் தரீத் ருஸ்யதே-
-29-

கந்தவ்யம் த்வரயா ருமே –சீக்கிரம் போக வேண்டும்
யதி ந கிம் -எதனால் த்வரை
வஹ்னவ் பதிஷ் யத் யஹோ -அவன் நெருப்பில் குதித்து விடுவானே
ப்ராதா ஸ்ரீ பரத பதத்த்விஹ யதா ஸ த்வம் ததா ஜீவது -குதித்தாலும் நீ வெளியே வந்தால் போல் வெளியே வருவான்-ராமன் அருளால்
நைவம் தத்ர பதிஷ்யதி ப்ரபுர சவ் –ஆனால் இத்தைக் கேள்விப்பட்டால் ராமன் தானே அக்னியில் குதித்து விடுவானே -யார் ரக்ஷிப்பார்
இத்யேவ ஸீதா ருமா ஸம்லாபேன மிதம் ஸ்மிதம் ரகுபதே ஜாதம் தரீத் ருஸ்யதே -இவ்வாறு பேசிக் கொண்டதைக் கேட்டு வளர்ந்த புன்னகை-

———–

பாரத்வாஜ க்ருஹே ஸமர்பித மஹா போக்யான்ன ஜக்தவ் ததா
கந்தம் காததி பாஸ்கரஸ்ய தனயே ஹஸ்தாச் யுதம் தத் ப்லுதம்
தத் த்ருஷ்ட்வா ஸ கபீஸ்வரோ அபி பகவன் தாம் சானு ஸர்வே அத தே
தத் த்ருஷ்ட்வா வதனார விந்த கடிதம் மந்தஸ்மிதம் கிம்ந்விதம்
-30-

பாரத்வாஜ க்ருஹே ஸமர்பித மஹா போக்யான்ன ஜக்தவ் ததா –உணவுகளை வானரர்கள் உண்டு கொண்டு இருக்க
கந்தம் காததி பாஸ்கரஸ்ய தனயே ஹஸ்தாச் யுதம் தத் ப்லுதம் -ஸூர்யன் மகனான சுக்ரீவன் சேப்பங்கிழங்கை கையால் பிடிக்க வழுகிப் போக -ஸுக்ரீவனும் குதிக்க
தத் த்ருஷ்ட்வா ஸ கபீஸ்வரோ அபி பகவன் தாம் சானு ஸர்வே அத தே -அதைப் பார்த்து -குரங்குகள் குதிக்க –
தத் த்ருஷ்ட்வா வதனார விந்த கடிதம் மந்தஸ்மிதம் கிம்ந்விதம் -அதைப் பார்த்து வளர்ந்த புன்னகை இங்கும் காட்டி அருளுகிறாய்-

——–

ஸீதாயை பவதே நமோ நம இதம் ப்ராத்ரே ச ராம ப்ரபோ
யா தேன மம வால வஹ்னிம் அநகா ஸூதம் ஸூதம் ஸோரபி
யோ ராஜ்யம் வ்யவதூய தே பதரத ஸ்ரீ பாதுகே வாபபவ்
இத்யா கர்ண்ய ஹநூ மதோ கிரமஹ மந்தம் விதத்ஸே ஸ்மிதம்
–31-

ஸீதாயை பவதே நமோ நம இதம் ப்ராத்ரே ச ராம ப்ரபோ -பிராட்டிக்கு பெருமாளுக்கும் பரதாழ்வானுக்கும் நமஸ்காரம் -திருவடி சொல்ல
யா தேன மம வால வஹ்னிம் அநகா ஸூதம் ஸூதம் ஸோரபி -வாலில் நெருப்பை சந்திரன் போல் குளிர வைத்து அருளினாளே அதற்காக முதலில் பிராட்டிக்கும்
இவ்வாறு தனியாக சந்திக்க வைத்து அருளி பரத பக்தியைக் கண்டு ஆலிங்கனம் பண்ணும்படி வைத்த பெருமாளுக்கும் நமஸ்காரம் l
யோ ராஜ்யம் வ்யவதூய தே பதரத ஸ்ரீ பாதுகே வாபபவ்–ராஜ்யத்தை பாதுகா தேவிக்கு ஸமர்ப்பித்து -ஆராதித்து பாதுகையாகவே ஆனான் அன்றோ அவனுக்கும் நமஸ்காரம்
இத்யா கர்ண்ய ஹநூ மதோ கிரமஹ மந்தம் விதத்ஸே ஸ்மிதம் -நந்தி க்ராமத்தில் இவ்வாறு திருவடி சொல்ல பிரயாகையில் இருந்தவாறே அத்தைக் கேட்டு வளர்ந்த புன்னகை-பக்தனுக்கு மற்றொரு பக்தனை சந்திப்பது ஆனந்தம்-

———–

பரத பவதோ பக்த்யா நித்யம் வ்ரதை பரி பூஐனை
பவதி ஸூமநா தேவோ விஷ்ணு ஸ ந குல தைவதம்
விபதி பதிதான் லங்கா யுத்தே ரரக்ஷ தராம் சமான்
இதி ஜநக ஜாவாசா ராமா பவன்னு மிதம் ஸ்மிதம்
-32-

பரத பவதோ பக்த்யா நித்யம் வ்ரதை பரி பூஐனை -பக்தியுடன் இருந்து விரதமும் இருந்து திருவாராதனம் நன்றாக நடக்கும் படி செய்து அருளினீர்
பவதி ஸூமநா தேவோ விஷ்ணு ஸ ந குல தைவதம் -திரு உள்ளம் உகந்தான் -இதற்காகவே ராமனுக்கும் சீதைக்கும் அருள் புரிந்தான்
விபதி பதிதான் -பல விரோதிகளை அழிக்க அருள் புரிந்தான்
லங்கா யுத்தே ரரக்ஷ தராம் சமான் -இலங்கை யுத்தம் நாக பாசம் கருடன் மூலம் அருளி –இந்திரஜித் ப்ரஹ்மாஸ்திரத்தால் கட்டுப்பட சஞ்சீவ கரணி
இதி ஜநக ஜாவாசா ராமா பவன்னு மிதம் ஸ்மிதம் -இவ்வாறு சீதாப் பிராட்டி பரதனைப் பார்த்து கொண்டாட வளர்ந்த புன்னகை-ஸ்லோகத்தை சொல்வோருக்கு குலதெய்வ பெருமாளின் அனுக்ரஹம் கிட்டும்-

———

கௌஸல்யா மயி சாதரா மம ஷிரஸ் ஸன் மண்டனம் நிர் மமே
புச்சம் குத்ர கதம் ததத்ர பவிதா நைவாத்ய நாரீதனவ்
புச்சம் மஸ்த கதம் தவேதி வசஸா பர்துர் ஹ்ரியா அவாங் முகீம்
த்ருஷ்ட்வா ராம ரகூத்த மாச வதனே யத்த ஸ்மிதம் தன்ன்விதம்
–33-

கௌஸல்யா மயி சாதரா மம ஷிரஸ் ஸன் மண்டனம் நிர் மமே -எங்களுக்கும் தாய் -வானர முதலிகளின் மனைவிகள் சொல்ல -மனித வடிவம் எடுக்கச் சொல்ல தலையை வாரி விட்டு
புச்சம் குத்ர கதம் ததத்ர பவிதா நைவாத்ய நாரீதனவ் -நாரி வடிவம் வால் தலைக்குப் பின்னால் -கிண்டல் பண்ண
புச்சம் மஸ்த கதம் தவேதி வசஸா பர்துர் ஹ்ரியா அவாங் முகீம் -இவ்வாறு பேசிக் கொள்ள -வெட்கத்துடன் தலை குனிய
த்ருஷ்ட்வா ராம ரகூத்த மாச வதனே யத்த ஸ்மிதம் தன்ன்விதம் -இத்தைக் கேட்டு வளர்ந்த புன்னகை -இந்த ஸ்லோகத்தை சொல்வோருக்கு, குறைகள்கூட நிறைகளாக மாறும்-

————

குப்ஜே த்வம் பவனே பவாத்ர கலஹோ மா பூத் புனஸ்தே அதுனா
மைவம் ராகவ வைபவம் மம த்ருசோ ப்ரீத்யை கதம் நோ பவேத்
ஆஸ்யே மே விஷமஸ்தி தத்ர நிபிடம் கந்தாக்ருதம் கந்தகம்
ந்யாஸ் யாமீ தி வஸோ நிஷம்ய பகவன் தத்ஸே ஸ்மிதம் கிமந்விதம்-
-34-

குப்ஜே
த்வம் பவனே பவாத்ர கலஹோ மா பூத் புனஸ்தே அதுனா -நீ இங்கே இருக்கக் கூடாது -இன்னும் ஒரு கலஹம் பண்ணக் கூடாது
மைவம் ராகவ வைபவம் மம த்ருசோ ப்ரீத்யை கதம் நோ பவேத்-மாட்டேன் -கண்ணாலே பட்டாபிஷேகம் சேவிக்க எனக்கும் ஆசை இருக்கிறது
ஆஸ்யே மே விஷமஸ்தி தத்ர நிபிடம் கந்தாக்ருதம் கந்தகம் -நாக்கில் விஷம் -துணியை அடைத்துக் கொள்கிறேன் -பேசாமல் இருக்கிறேன் -அனுமதி தர வேண்டும் -அவளாலே அவளது வாயைக் காக்க முடியாது என்ற எண்ணம் -யா காவாரானாலும் நா காக்க -இத்யாதி
இரண்டு கண் இரண்டு காது இரண்டு மூக்குத் துவாராம்-ஒரே வேலை இவற்றுக்கு –ஒரே வாய் இரண்டு வேலைகள்
ந்யாஸ் யாமீ தி வஸோ நிஷம்ய பகவன் தத்ஸே ஸ்மிதம் கிம–இத்தைக் கேட்டு வளர்ந்த புன்னகை-

நையக்ரோ தகடேன ஜன்ய கலித பட்டாபிஷேகோ பவேத்
ஏஹி ஸ்ரீ குஹ ஹேதி லஷ்மண வச ருத்வா குஹே ப்ரேமத
ஆரா தேத்ய புரைவ ராம தஸ்ய அபிஷேகோ அபவத்
க்லுப் தஸ்தே கலிதா ஜடேதி வததி ப்ரீத்யா கிமேதத் ஸ்மிதம்
–35-

நையக்ரோ தகடேன -ஆலமரக் குடத்தால்
ஜன்ய கலித பட்டாபிஷேகோ பவேத் -ராஜ ஸூய யாகம் -பண்ணும் பொழுது
ஏஹி ஸ்ரீ குஹ ஹேதி லஷ்மண வச ருத்வா குஹே ப்ரேமத -அபிஷேகம் நண்பன் பண்ண வேண்டும்
ஆலமரப்பால் முன்பு கொண்டு வந்து ஜடையைத் தரிக்க வைத்தான் முன்பு
மணிமுடி தரிக்க இப்பொழுது-ஆலமரப்பானையால் அபிஷேகம் -பாக்யம்
ஆரா தேத்ய புரைவ ராம தஸ்ய அபிஷேகோ அபவத்
க்லுப் தஸ்தே கலிதா ஜடேதி வததி ப்ரீத்யா கிமேதத் ஸ்மிதம் -கேட்டு வளர்ந்த புன்னகை
இந்த நிலை மாறும் என்ற நம்பிக்கை நமக்கு வரவேண்டும்-

——–

புச்சம் சேஷ ஸமாந மஸ்ய ச தனுர்த்யாம் வ்யாப்ய பீமா ஸ்திதா
ஸோ அயம் மர்கட ஏவ கே கிரிரதோ ஹஸ்தே மஹானைஷ்யத
வவ்ராஜாத ச தக்ஷிணாம் திச மஸவ் நம்ரோ அதி ரம்யோ அது னா
ஸா கேதீய வசஸ் த்விதம் கில விபோ ஸூதே ஸ்ம மந்த ஸ்மிதம்
–யுத்த -36-

புச்சம் சேஷ ஸமாந மஸ்ய -ஆதி சேஷன் போல் வாழ்
ச தனுர்த்யாம் வ்யாப்ய பீமா ஸ்திதா -திருமேனி வானத்தையே ஆக்ரமித்து
ஸோ அயம் மர்கட ஏவ -அதே திரு முகம்
கே கிரி ரதோ ஹஸ்தே மஹானைஷ்யத -மருந்து மலையையே கையிலே சுமந்து
வவ்ராஜாத ச தக்ஷிணாம் திச மஸவ்
நம்ரோ அதி ரம்யோ அதுனா -சிறிய அழகிய வடிவுடன் அவரே இவர் -மூர்த்தி சிறியதாய் இருந்தாலும் கீர்த்தி மிகப் பெரியது -பெருமாள் பட்டாபிஷேகம் போது சிறிய வடிவுடன் விநயமே வடிவாக எழுந்து அருளி
ஸா கேதீய வசஸ் த்விதம் கில விபோ ஸூதே ஸ்ம மந்த ஸ்மிதம் –அயோத்யை மக்கள் பேச்சைக் கேட்டு புன்னகை
இந்த ஸ்லோகம் கேட்ட நமக்கும் திருவடி போல் கைங்கர்ய ஸாம்ராஜ்யம் கிட்டும்

————

அக்ரே பாதுகயா தயாப் யதிகயா பார்ஸ்வே அபி பூமீ புவா
வாயோர் ஆத்ம புவா பதாம் புஜ யுகீம் ஸங்க்ரஹணதா சாதரம்
சத்ர சாமர யோர் யுகம் ச வஹதா ப்ராத்ருத்ரயேணா வ்ருதா
ஸர்வத்ரா அபி ஸூஹ்ருத் கணைஸ்த்வ மதநோ கின்ன் வேவமேவ ஸ்மிதம்
-யுத்த -37-

அக்ரே பாதுகயா -முன்னே ஸ்ரீ பாதுகா தேவி
தயாப் யதிகயா -கருணையில் பெருமாளை மிக்கு இருப்பவள்
பார்ஸ்வே அபி பூமீ புவா -இடப்புறம் ஸீதாப்பிராட்டி
வாயோர் ஆத்ம புவா பதாம் புஜ யுகீம் ஸங்க்ரஹணதா சாதரம்–வாயு புத்ரன் -திருவடி ஆதரத்துடன் திருவடித் தாமரைகளைத் தாங்க
சத்ர சாமர யோர் யுகம் ச வஹதா ப்ராத்ரு த்ரயேணா வ்ருதா–மூன்று சகோதரர்களும் சத்ர சாமர கைங்கர்யங்கள் செய்ய
ஸர்வத்ரா அபி ஸூஹ்ருத் கணைஸ்–அனைவரும் சூழ்ந்து -எட்டு முனிவர்கள் புனித நீர் வர்ஷிக்க
த்வ மதநோ கின்ன் வேவமேவ ஸ்மிதம் -அந்தப் புன்னகையுடன் இங்கே எழுந்து அருள

அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்த
பரதன் வெண்குடை கவிக்க இருவரும் கவரி வீச
விரைசெறி கமலத்தாள் சேர் வெண்ணையூர் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி-


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வில்லூர் ஆசு கவி ஸ்ரீ நிதி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதா பிராட்டி சமேத ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ வேங்கடேச ஸூப்ரபாதம்–ஸ்தோத்திரம்–பிரபத்தி–மங்களாசாசனம்–மூலமும் பொருளும் —ஸ்ரீ வேங்கடேஶ அஷ்டோத்தர சத நாமாவளி-

October 4, 2024

ஸ்ரீ வேங்கடேச ஸூப்ரபாதம் (29 பாடல்கள்),
ஸ்ரீ வேங்கடேச ஸ்தோத்திரம் (11 பாடல்கள்),
ஸ்ரீ வேங்கடேச பிரபத்தி (16 பாடல்கள்),
ஸ்ரீ வேங்கடேச மங்களாசாசனம் (14 பாடல்கள்)
ஆகிய நான்கு பகுதிகள்

———–

பா எனில் வெளிச்சம். ப்ரபாதம் எனில் காலைப் பொழுது. சுப்ரபாதம் என்றால் இனிய காலைப் பொழுது என்று பொருள் படும். வடமொழியில் ஸூ எனும் எழுத்து ஒரு சொல்லுக்கு முன்னர் சேர்க்கப்பட்டால் உயர்ந்த பொருளைக் குறிக்கும்.
பாக்ஷிதம் – வார்த்தைகள், சுபாக்ஷிதம் – நல் வார்த்தைகள். கன்யா – பெண், சுகன்யா – நல்லப் பெண். இதுபோன்று சுப்ரபாதம் என்பது நல்ல இனிய காலைப் பொழுது என பொருள்படுகிறது.

கௌசல்யா ஸூப்ரஜா ராமாபூர்வா சந்த்யா ப்ரவத்தது’’ என்ற இந்த முதல் வரிகள் வால்மீகி ராமாயணத்திலிருந்து உருவப்பட்டது. அதாவது விஸ்வாமித்ரர் ராமனை எழுப்புகிறார்.

“கௌசல்யை புண்ணியம் செய்து பெற்ற ராமா அங்கே காட்டுப் பக்கம் அரக்கர்கள் அடாவடி செய்து தவ முனிவர்களுக்கு இடைஞ்சல் செய்கிறார்கள். நீ வந்து அவர்களை வீழ்த்து’ என ராமனை எழுப்பி அழைக்கிறார் விஸ்வாமித்ரர்.

முதலில் ராமனாக எழுப்பி
அடுத்து கோவிந்தன் கண்ணனாக பலதடவை எழுப்பி
மூன்றாவதாக பிராட்டியை எழுப்பி
அவளுடன் சேர்ந்து 4-29- ஸ்லோகங்கள்-

ஸ்ரீ வேங்கடேச ஸூப்ரபாதம்

கௌசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்–1-

உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த
உத்திஷ்ட கருடத்வஜ
உத்திஷ்ட கமலா காந்தா
த்ரைலோக்யம் மங்களம் குரு–2-

மாதஸ் சமஸ்த ஜகதாம் மது கைடபாரே
வக்ஷோ விஹாரிணி மனோகர திவ்ய மூர்த்தே
ஸ்ரீ ஸ்வாமினி, ச்ரிதஜன ப்ரிய தான சீலே
ஸ்ரீ வேங்கடேச தயிதே தவ சுப்ரபாதம்-3-

தவ சுப்ரபாதம் அரவிந்த லோசனே
பவது பிரசன்ன முக சந்திர மண்டலே
விதி சங்கரேந்திர வனிதாபிர் அர்ச்சிதே
விருஷ சைலநாத தயிதே தயாநிதே-4-

அத்ரிஆதி சப்தரிஷய சமுபாஸ்ய சந்த்யாம்
ஆகாச சிந்து கமலானி மனோகரானி
ஆதாய பாதயுகம் அர்ச்சயிதும் ப்ரபந்நா
சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்–5-

பஞ்சானன ஆப்ஜபவ சண்முக வாசவாத்யா
த்ரைவிக்ரமாதி சரிதம் விபுதா ச்துவந்தி
பாஷாபதி படதி வாசர சுத்திமாராத்
சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்–6-

ஈஷத் ப்ரபுல்ல சரசீருஹ நாரிகேள
பூகத்ருமாதி சு மநோகர பாலிகாநாம்
ஆவாதி மந்த மநிலஸ் சக திவ்யகந்தை
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–7-

உந்மீல்ய நேத்ர யுக முத்தம பஞ்ஜரஸ்தா
பாத்ரா வசிஷ்ட கதலீபல பாயசாநி
புக்த்வா சலீலமத கேளிசுகா: படந்தி
சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்–8-

தந்த்ரீ ப்ரகர்ஷ மதுர ஸ்வநயா விபஞ்ச்யா
காயத்ய நந்த சரிதம் தவ நாரதோபி
பாஷாச மக்ர அசக்ருத் கரசார ரம்யம்
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–9-

ப்ருங்காவலீ ச மகரந்த ரஸா நுவித்த
ஜங்கார கீத நிநதைஸ் சக சேவநாய
நிர்யாத்யு பாந்த சரஸீ கமலோ தரேப்ய
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–10-

யோஷா கணேன வரதத்னி விமத்ய மானே
கோசால யேஷூ ததி மந்தன தீவ்ர கோஷா
ரோஷாத் கலிம் விததே ககுபஸ்ச கும்பா
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–11-

பத்மேச மித்ர சதபத்ர கதாலி வர்க்கா
ஹர்த்தும் ச்ரியம் குவலயஸ்ய நிஜாங்க லக்ஷ்ம்யா
பேரீ நிநாத மிவ பீப்ரதி தீவ்ர நாதம்
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்–12-

ஸ்ரீ மந் அபீஷ்ட வரதாகில லோக பந்தோ
ஸ்ரீ ஸ்ரீநிவாச ஜகதேக தயைக சிந்தோ
ஸ்ரீ தேவதா க்ருஹ புஜாந்தர திவ்ய மூர்த்தே
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்–13–

ஸ்ரீ சுவாமி புஷ்கரிணி- காப்லவ நிர்மலாங்கா
ச்ரேயோர் திநோ, ஹர விரிஞ்சி சனந்தன ஆத்யா
த்வாரே வசந்தி வரவேத்ர ஹதோத்த மாங்கா:
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்-14–

ஸ்ரீ சேஷசைல கருடாசல வேங்கடாத்ரி
நாராயணாத்ரி வ்ருஷபாத்ரி வ்ருஷாத்ரி முக்யாம்
ஆக்யாம் த்வதீய வசதே ரநிசம் வதந்தி
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–15–

சேவாபரா: சிவ சுரேஷ க்ருசானு தர்ம
ரக்ஷோம்பு நாத பவமான தனாதி நாதா
பத்தாஞ்ஜலி ப்ரவிலசந் நிஐ சீர்ஷ தேசா:
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்-16-

தாடீஷூதே விஹக ராஜ மிருகாதி ராஜ
நாகாதி ராஜ கஜ ராஜ ஹயாதி ராஜா
ஸ்வஸ்வ அதிகார மஹி மாதிகம் அர்தயந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–17–

ஸூர்யேந்து பவ்ம புத வாக்பதி காவ்ய சவ்ரி
ஸ்வர்பாநு கேது த்விஷத் பரிஷத் ப்ரதாநா
த்வத் தாஸ தாஸ சரமாவதி தாஸ தாஸ
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–18–

த்வத் பாத தூளி, பரித ஸ்புரித உத்தமாங்கா
சுவர்கா அபவர்க நிரபேக்ஷ, நிஜாந்த ரங்கா!
கல்ப ஆகம ஆகலநயா ஆகுலதாம் லபந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–19-

த்வத் கோபுர ஆக்ர சிகராணி, நிரீக்ஷ மாணா
ஸ்வர்கா அபவர்க பதவீம், பரமாம் ச்ரயந்த!
மர்த்யா மநுஷ்ய புவனே, மதி மாச்ரயந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்!–20-

ஸ்ரீ பூமி நாயக தயாதி குண அம்ருத ஆப்தே
தேவாதி தேவ ஜகத் ஏக சரண்ய மூர்த்தே
ஸ்ரீமந் அனந்த கருடாதிபிர் அர்ச்சி தாங்க்ரே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–21-

ஸ்ரீ பத்மநாப புரு÷ஷாத்தம வாசுதேவ
வைகுண்ட மாதவ ஜனார்த்தன சக்ர பாணே
ஸ்ரீ வத்ஸ சிஹ்ன சரணாகத பாரிஜாத
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்-22–

கந்தர்ப்ப தர்ப்ப ஹர சுந்தர திவ்ய மூர்த்தே
காந்தா குசாம் புருஹ குட்மல லோல த்ருஷ்டே
கல்யாண நிர்மல குணாகர திவ்ய கீர்த்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்-23–

மீனாக்ருதே- கமட- கோல- ந்ருசிம்ம- வர்ணிந்
ஸ்வாமிந்- பரஸ்வத தபோதன- ராமசந்திர-
சேஷாம்ச ராம- யது நந்தன- கல்கி ரூப-
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–24–

ஏலா லவங்க கனசார சுகந்தி தீர்த்தம்
திவ்யம் வியத்சரிதி ஹேம கடேஷூ பூர்ணம்
த்ருத் வாத்ய வைதிக சிகாமணய ப்ருஹ்ருஷ்டா
திஷ்டந்தி வேங்கட பதே தவ சுப்ரபாதம்–25–

பாஸ்வான் உதேதி விகசாநி சரோருகானி
சம்பூர யந்தி நினதை ககுபோ விகங்கா
ஸ்ரீவைஷ்ணவா சததம் அர்த்தித மங்களாஸ்தே
தாமாச்ரயந்தி தவ வேங்கட சுப்ரபாதம்–26–

பிரம்மா ஆதய சுரவரா ச மகர்ஷ யஸ்தே
சந்தஸ் சனந்தன முகாஸ் தவ யோகி வர்யா
தாமாந்திகே தவஹி மங்கள வஸ்து ஹஸ்தா
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–27–

லஷ்மீ நிவாச நிரவத்ய குணைக சிந்தோ
சம்சார சாகர சமுத்தர அநைக சேதோ
வேதாந்த வேத்ய நிஜ வைபவ பக்த போக்ய
ஸ்ரீவேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்–28–

இத்தம் விருஷாசல பதே, இக சுப்ரபாதம்
யே மானவா, ப்ரதி தினம் படிதும் ப்ர-விருத்தா
தேஷாம் பிரபாத சமயே, ஸ்மிருதி ரங்க பாஜாம்
பிரஜ்ஞாம், பர ஆர்த்த சுலபாம், பரமாம் ப்ரசுதே–29-

***

கமலா குசசூசுக குங்குமதோ நியதாருணிதாதுல நீலதநோ

கமலாயத லோசன லோகபதே விஜயீபவ வேங்கட சை’லபதே                       1

ஸ சதுர்முக ஷண்முக பஞ்சமுக ப்ரமுகாகில தைவத மௌளிமணே

ச’ரணாகத வத்ஸல ஸாரநிதே பரிபாலயமாம் வ்ருஷ சை’லபதே                 2

அதிவேலதயா தவதுர்விஷஹை: அனுவேல க்ருதை ரபராத ச’தை

பரிதம் த்வரிதம் வ்ருஷ சை’லபதே பரயா க்ருபயா பரிபாஹி ஹரே           3

அதிவேங்கட சை’லமுதாரமதே: ஜனதா பிமதாதிக தான தராத்

பரதேவதய கதிதாந்நிகமை: கமலாதயிதான ந பரம் கலயே                           4

கலவேணுரவாச’ கோபவதூ ச’தகோடி வ்ருதாத ஸ்மரகோடி ஸமாத்

ப்ரதிவல்லவிகாபிமதாத் ஸுகதாத் வஸுதேவஸுதாந் ந பரம் கலயே       5

அபிராம குணாகர தாச’ரதே ஜகதேக தநுர்தர தீரமதே

ரகுநாயக ராம ரமேச’ விபோ வரதோ பல தேவ தயாஜலதே                           6

அவநீதநயாகம நீயகரம் ரஜநீகரசாரு முகாம்புருஹம்

ரஜனீசரராஜ தமோமிஹிரம் மஹநீயமகம் ரகுராமமயே                                  7

ஸுமுகம் ஸுஹ்ருதம் ஸுலபம் ஸுகதம் ஸ்வநுஜஞ்ஞ ஸுகாய அமோகசரம்

அபஹாய ரகூத்வஹமன்யமஹம் ந கதஞ்சன கஞ்சன ஜாது பஜே                8

விநா வேங்கடேச’ம் ந நாதோ ந நாத: ஸதா வேங்கடேச’ம் ஸ்மராமி ஸ்மராமி –

ஹரே வேங்கடேச’ ப்ரஸீத ப்ரஸீத ப்ரியம் வேங்கடேச’ ப்ரயச்ச ப்ரயச்ச      –9

அஹம்தூரதஸ்தே பதாம்போஜயுக்ம ப்ரணாமேச்சயா (ஆ)கத்யஸேவாம் கரோமி —

ஸக்ருத்ஸேவயா  நித்யஸேவாபலம் த்வம் ப்ரயச்ச ப்ரயச்ச ப்ரபோ வேங்கடேச’        -10

அஜ்ஞாநினா மயா தோஷான் அசேஷான் விஹிதான் ஹரே–11

க்ஷமஸ்வ த்வம் க்ஷமஸ்வ த்வம் சே’ஷசை’ல சி’காமணே

***

ஶ்ரீ வேங்கடேஶ்வர ப்ரபத்தி

ஈஶாநாம் ஜக³தோ(அ)ஸ்ய வேங்கடபதேர்விஷ்ணோ꞉ பராம் ப்ரேயஸீம்
தத்³வக்ஷ꞉ஸ்த²லநித்யவாஸரஸிகாம் தத்க்ஷாந்திஸம்வர்தி⁴நீம் ।
பத்³மாலங்க்ருதபாணிபல்லவயுகா³ம் பத்³மாஸநஸ்தா²ம் ஶ்ரியம்
வாத்ஸல்யாதி³கு³ணோஜ்ஜ்வலாம் ப⁴க³வதீம் வந்தே³ ஜக³ந்மாதரம் ॥ 1 ॥

ஶ்ரீமந் க்ருபாஜலநிதே⁴ க்ருதஸர்வலோக
ஸர்வஜ்ஞ ஶக்த நதவத்ஸல ஸர்வஶேஷிந் ।
ஸ்வாமிந் ஸுஶீல ஸுலபா⁴ஶ்ரிதபாரிஜாத
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 2 ॥

ஆநூபுரார்பிதஸுஜாதஸுக³ந்தி⁴புஷ்ப-
-ஸௌரப்⁴யஸௌரப⁴கரௌ ஸமஸந்நிவேஶௌ ।
ஸௌம்யௌ ஸதா³நுப⁴வநே(அ)பி நவாநுபா⁴வ்யௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 3 ॥

ஸத்³யோவிகாஸிஸமுதி³த்வரஸாந்த்³ரராக³-
-ஸௌரப்⁴யநிர்ப⁴ரஸரோருஹஸாம்யவார்தாம் ।
ஸம்யக்ஷு ஸாஹஸபதே³ஷு விளேக²யந்தௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 4 ॥

ரேகா²மயத்⁴வஜஸுதா⁴கலஶாதபத்ர-
-வஜ்ராங்குஶாம்பு³ருஹகல்பகஶங்க²சக்ரை꞉ ।
ப⁴வ்யைரளங்க்ருததலௌ பரதத்த்வசிஹ்நை꞉
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 5 ॥

தாம்ரோத³ரத்³யுதிபராஜிதபத்³மராகௌ³
பா³ஹ்யைர்மஹோபி⁴ரபி⁴பூ⁴தமஹேந்த்³ரநீலௌ ।
உத்³யந்நகா²ம்ஶுபி⁴ருத³ஸ்தஶஶாங்கபா⁴ஸௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 6 ॥

ஸப்ரேமபீ⁴தி கமலாகரபல்லவாப்⁴யாம்
ஸம்வாஹநே(அ)பி ஸபதி³ க்லமமாத³தா⁴நௌ ।
காந்தாவவாங்மநஸகோ³சரஸௌகுமார்யௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 7 ॥

லக்ஷ்மீமஹீதத³நுரூபநிஜாநுபா⁴வ-
நீலாதி³தி³வ்யமஹிஷீகரபல்லவாநாம் ।
ஆருண்யஸங்க்ரமணத꞉ கில ஸாந்த்³ரராகௌ³
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 8 ॥

நித்யாந்நமத்³விதி⁴ஶிவாதி³கிரீடகோடி-
-ப்ரத்யுப்ததீ³ப்தநவரத்நமஹ꞉ப்ரரோஹை꞉ ।
நீராஜநாவிதி⁴முதா³ரமுபாத³தா⁴நௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 9 ॥

விஷ்ணோ꞉ பதே³ பரம இத்யுதி³த ப்ரஶம்ஸௌ
யௌ மத்⁴வ உத்ஸ இதி போ⁴க்³யதயா(அ)ப்யுபாத்தௌ ।
பூ⁴யஸ்ததே²தி தவ பாணிதலப்ரதி³ஷ்டௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 10 ॥

பார்தா²ய தத்ஸத்³ருஶஸாரதி²நா த்வயைவ
யௌ த³ர்ஶிதௌ ஸ்வசரணௌ ஶரணம் வ்ரஜேதி ।
பூ⁴யோ(அ)பி மஹ்யமிஹ தௌ கரத³ர்ஶிதௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 11 ॥

மந்மூர்த்⁴நி காளியப²ணே விகடாடவீஷு
ஶ்ரீவேங்கடாத்³ரிஶிக²ரே ஶிரஸி ஶ்ருதீநாம் ।
சித்தே(அ)ப்யநந்யமநஸாம் ஸமமாஹிதௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 12 ॥

அம்லாநஹ்ருஷ்யத³வநீதலகீர்ணபுஷ்பௌ
ஶ்ரீவேங்கடாத்³ரிஶிக²ராப⁴ரணாயமாநௌ ।
ஆநந்தி³தாகி²லமநோநயநௌ தவைதௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 13 ॥

ப்ராய꞉ ப்ரபந்நஜநதாப்ரத²மாவகா³ஹ்யௌ
மாது꞉ ஸ்தநாவிவ ஶிஶோரம்ருதாயமாநௌ ।
ப்ராப்தௌ பரஸ்பரதுலாமதுலாந்தரௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 14 ॥

ஸத்த்வோத்தரை꞉ ஸததஸேவ்யபதா³ம்பு³ஜேந
ஸம்ஸாரதாரகத³யார்த்³ரத்³ருக³ஞ்சலேந ।
ஸௌம்யோபயந்த்ருமுநிநா மம த³ர்ஶிதௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 15 ॥

ஶ்ரீஶ ஶ்ரியா க⁴டிகயா த்வது³பாயபா⁴வே
ப்ராப்யே த்வயி ஸ்வயமுபேயதயா ஸ்பு²ரந்த்யா ।
நித்யாஶ்ரிதாய நிரவத்³யகு³ணாய துப்⁴யம்
ஸ்யாம் கிங்கரோ வ்ருஷகி³ரீஶ ந ஜாது மஹ்யம் ॥ 16 ॥

இட் ஶ்ரீ வேங்கடேஶ்வர ப்ரபத்தி ||

***

ஸ்ரீ வேங்கடேச மங்களாசாஸனம்

ஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நித யேர்த்தி நாம்

ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்                                        1

லக்ஷ்மீஸ விப்ரமாலோக ஸுப்ரு விப்ரம சக்ஷுஷே

சக்ஷு ஷே ஸர்வலோகாநாம் வேங்கடேசாய மங்களம்             2

ஸ்ரீவேங்கடாத்ரி  ச்ருங்காக்ர மங்களா பரணாங்க்ரியே

மங்களாநாம் நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்                                   3

ஸர்வாவயவ ஸௌந்தர்ய ஸம்பதா சர்வசேதஸாம்

ஸதா ஸம்மோஹ நாயாஸ்து வேங்கடேசாய மங்களம்             4

நித்யாய நிரவத்யாய ஸத்யா நந்தசிதாத்மநே

ஸர்வாந்த ராத்மநே ஸ்ரீமத் வேங்கடேசாய மங்களம்                              5

ஸ்வதஸ் ஸர்வவிதே ஸர்வசக்தயே ஸர்வசேஷிணே

ஸுலபாய ஸுசீலாய வேங்கடேசாய மங்களம்                                        6

ப்ரஸ்மை ப்ரஹ்மணே பூர்ணகாமாய பரமாத்மநே

ப்ரயுஞ்ஜே பரதத்வாய வேங்கடேசாய மங்களம்                                      7

ஆகால தத்வ மச்ராந்த மாத்ம நாம நுபச்யதாம்

அத்ருப்த்யம்ருத ரூபாய வேங்கடேசாய மங்கலம்                                   8

ப்ராயஸ் ஸ்வ சரணௌ பும்ஸாம் சரண்யத்வேந பாணிநா

க்ருபாய திசதே ஸ்ரீமத் வேங்கடேசாய மங்களம்                                       9

தயாம்ருத்தரங்கிண்யாஸ் தரங்கைரிவ சீதலை:

அபாங்கை ஸிஞ்சதே விச்வம் வேங்கடேசாய மங்களம்                        10

ஸ்ரக்பூஷாம்பர ஹேதீதாம் ஸுஷமாவஹ மூர்த்தயே

ஸர்வார்த்தி ஸமநாயாஸ்து வேங்கடேசாய மங்களம்                            11

ஸ்ரீவைகுண்ட விரக்தாய ஸ்வாமி புஷ்கரிணீ தடே

ரமயா ரமமாணாய வேங்கடேசாய மங்களம்                                            12

ஸ்ரீமத் ஸுந்தரஜாமாத்ரு முநிமா நஸவாஸிநே

ஸர்வலோகநிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்                                       13

மங்களாசாஸ நபரைர் மதாசார்ய புரோகமை:

ஸர்வைச்ச பூர்வை ராசார்யைஸ் ஸத்க்ருதாயாஸ்து மங்களம்          14

***

————-

ஸ்ரீ வேங்கடேஸ்வர சுப்ரபாதம் – 1
| கெளசல்யா சுப்ரஜா ராமா |
விடிகாலை சுமார் 3:00 மணி. கூட்டம் அதிகம் இல்லை!
குளிர் தென்றல் வீசுகிறது! சில பக்தர்கள் அங்கப் பிரதட்சிணம் செய்து முடிக்கிறார்கள்; இப்போது நாம் நிற்கும் இடம் திருமாமணி மண்டபம்!
இரண்டு பெரிய காண்டா மணிகள் வாசலுக்கு அருகே!
கருடன் நிற்கிறான். அவனுடன் சேர்ந்து நாமும் நிற்கிறோம்.
துவார பாலகர்கள் (ஜய விஜயர்கள்) இருபுறமும் காத்து நிற்கும் தங்க வாயில் (தெலுங்கில்: பங்காரு வாகிலி) மூடப்பட்டு உள்ளது.
அர்ச்சகரும், ஜீயரும் பூட்டின் சாவியை, துவார பாலகர்கள் அருகில் வைத்து, கதவைத் திறக்க அனுமதி பெறுகின்றனர்.
அன்னமாச்சார்யரின் பூபாள ராகப்பாடல் தெலுங்கில் இசைக்கப்படுகிறது; பின்னர் ஆழ்வாரின் ஈரத் தமிழில் திருப்பள்ளியெழுச்சி;
சுப்ரபாதம் எல்லாம் அப்பறம் தான்!
மணிகள் ஒலிக்கின்றன; பேரிகையும் ஊதுகோலும் சேர்ந்தே ஒலிக்கின்றன;
திருக்கதவம் திறக்கப்படுகிறது!
இருப்பினும் திரை போடப்பட்டுள்ளது!!
கோபூஜை முடிந்து, பசுவுடன், இடையனுக்குத் தான் முதல் தரிசனம் தருகிறான் வேங்கடவன்! அந்தணருக்கு அல்ல!
உள்ளே சயன மண்டபத்தில், தொட்டிலில் தூங்கும் போகஸ்ரீநிவாசனை எழுப்புகிறார்கள்;
அன்றைய நாளின் முதல் தரிசனமாக, சுப்ரபாத சேவை
என்கிற விஸ்வரூப தரிசனம்!
வெள்ளை ஆடையும், துளசி மாலை மட்டும் உடுத்தி இறைவன்!
மிகவும் எளியவனாக, கள்ளச் சிரிப்போடு காட்சி தருகிறான்.
தமிழில் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருப்பள்ளி
எழுச்சியும் பாடப்படுகிறது!
அனுதினமும்,
(மார்கழி மாதம் தவிர)
திருமாமணி மண்டபத்தில், துவார பாலகர்கள் முன்னே சுப்ரபாதம் ஓதப்படுகிறது.
எல்லா நாளுமே திருப்பாவை உண்டு தான்!
ஆனால், பிற நாட்களில், பூசையின் போது, தமிழ்/ வடமொழி, இரண்டுமே ஓதப்படும்!
மார்கழியில், வடமொழி தவிர்த்து, தமிழ் மட்டுமே! அதுவும் முதன் முதலிலேயே!
வாருங்கள் எல்லாரும் சொல்லத் தொடங்கலாம்…”கெளசல்யா சுப்ரஜா ராமா பூர்வா…”
கெளசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்

(இரண்டு முறை)
கோசலை குமரா ஸ்ரீராமா பொழுது புலர்கின்றதே
தெய்வீகத் திருச்சடங்குகள் செய்ய எழுந்தருள் புருடோத்தமா…

கெளசல்யா சுப்ரஜா = கோசலை பெற்றெடுத்த திருமகனே!
விசுவாமித்திரரின் யாகத்தைக் காக்க இராமனும், இலக்குவனும் சென்ற போது, இள வயது; தாய் தந்தையரை முதல் முறையாகப் பிரிந்திருக்கும் நிலை; அதனால் தான் முதலில் தசரதன் அனுப்பத் தயங்கினான்; இதையெல்லாம் மனத்தில் நினைத்தார் முனிவர்; என்ன தோன்றியதோ அந்தக் கோபக்கார முனிவருக்கு! தாய் அன்பு காட்டத் தொடங்கி விட்டார்!
மிக்க வாஞ்சையுடன் ஒரு தாய் எழுப்புவது போல எழுப்புகிறார்;
ஆதி கவியான வால்மீகியின் இந்த ராமாயண சொற்றொடரைத் தான், பெரும்பாலும் எல்லாப் பெருமாள் சுப்ரபாதங்களுக்கும் பயன்படுத்துகிறார்கள்!

ராம = ராமா
ராம என்பது சர்வ மங்களத்தைக் குறிக்கும் சொல்; ஈசனும் இந்த “ராம” என்பதையே மனத்துள் ஜபிப்பதாக சகஸ்ரநாமம் சொல்கிறது; (ஸ்ரீ ராம ராம ராமேதி…);
காசியில் மரிப்போர் காதுகளில் ஈசன் இதையே ஓதி நல்லுலகம் சேர்ப்பதாக ஐதீகம்.
“சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம என்ற இரண்டு எழுத்தினால்”, என்று கம்பரும் பேசுகிறார்.

பூர்வா ஸந்த்யா = அதிகாலை, சிற்றஞ் சிறுகாலை
பிரம்ம முகூர்த்த வேளை என்பார்கள்; சூர்யோதயத்துக்கு இரண்டரை நாழிகை முன்பாக!
Approx 3:30-4:00; ஆன்மிகப் பணிகளுக்கு மிகவும் உன்னதமான வேளை இது!
ப்ரவர்த்ததே = தொடங்குகின்றதே
உத்திஷ்ட = எழுந்திரு
நர ஸார்தூல = நரர்களில் (மனிதர்களில்), புலியைப் போன்றவனே
ராமன் மனிதனாய் வாழ்ந்து காட்டிச் சென்றான்; சர்வ சக்தியுள்ள கடவுளாகத் தன்னை வெளிக் காட்டவில்லை.
கர்த்தவ்யம் = உன் கடமைகள்
தைவ மாஹ்நிகம் = தெய்வீகமானவை, அணிகலனாய் அமைபவை
உன் நித்யக் கடமைகள் நின்றால் உலகம் என்னவாகும்? அதனால் கடமையைக் காட்டி எழுப்புகிறார்!

——–

உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த
உத்திஷ்ட கருடத்வஜ
உத்திஷ்ட கமலா காந்தா
த்ரைலோக்யம் மங்களம் குரு

(இரண்டு முறை)
எழுந்தருள் எழுந்தருள் கருடக்கொடி
ஏந்தும் கோவிந்தனே
எழுந்தருள் திருமகள் தலைவா
மூவுலகும் செழித்தோங்கவே
உத்திஷ்டோ உத்திஷ்ட = எழுந்திரு எழுந்திரு
சிறு பிள்ளை அல்லவா; அதான் இத்தனை முறை “உத்திஷ்ட” என்று சொல்ல வேண்டியுள்ளது போலும்! 🙂

கோவிந்த = கோவிந்தா
கோ+விந்தன்=உயிர்களாகிய பசுக்களைக் காப்பவன்; பெருமாளின் மிக முக்கியமான நாமங்களாவன: அச்சுதா, அனந்தா, கோவிந்தா!!
உத்திஷ்ட = எழுந்திரு
கருட த்வஜ = கருடக் கொடி உடையவனே
எம்பெருமானின் கொடியில் கூட கருடன் தான்; திருமலை பிரம்மோற்சவப் பதிவில் தான் பார்த்தோமே இந்தக் கொடியேற்றத்தை;
உத்திஷ்ட = எழுந்திரு
அட, மொத்தம் ஐந்து “உத்திஷ்ட”!
இன்னுமா எழவில்லை?

(நாம தான் கேள்வி நல்லா கேப்போமே; நாம் எழும் போது தானே கஷ்டம் தெரியும் :-)வீட்டில் அம்மா நம்மை எழுப்பும் போது “எழுந்திரு, எழுந்திரு” என்று எத்தனை முறை எழுப்புகிறார்கள்? நாம் எத்தனை முறை புரண்டு புரண்டு படுக்கிறோம்? நம் ராமன் எப்படி?
குழந்தைகள் பெரும்பாலும் எழுந்திருந்தாலும், மீண்டும் மீண்டும் கொஞ்சி அழைப்பதை விரும்புகிறார்கள்.
கமலா காந்தா = தாமரை மலரில் உள்ளவள் விரும்பும் நாயகனே
தாமரை மீது மலர்ந்து அருளும் அன்னை ஸ்ரீமகாலக்ஷ்மி! அலை மகளைக் காந்தம் போல் தன் பால் ஈர்ப்பவன் ஆயிற்றே! லட்சுமி காந்தன் என்று தானே அவன் பெயர்!
த்ரை லோக்யம் = மூன்று உலகுக்கும்(பூலோகம், புவர்லோகம், சுவர்கலோகம்)
மங்களம் குரு = மங்களம் கொடுக்க
ராம=மங்களம் என்று பார்த்தோம். அந்த மங்களத்தை, மகிழ்ச்சியை, ஆனந்தத்தை உலகுக்கு அளிப்பதே அவன் கடமை;
அதனால் தான் தனக்காக, தன் படிப்புக்காக எழச்சொல்லாது, உலக நலனுக்காக எழச் சொல்கிறார்.
இப்படிச் சொன்னால், அவனால் எழாமல்
இருக்க முடியாதல்லவா?:-)
தயா சிந்து நாயகா, வேங்கடவா, திருக்கண் மலர்க!

————

இப்போ அன்னையை எழுப்புவோம்!
அவள் எழுந்தவுடன் பாருங்கள், அவனும் கிடுகிடு என்று எழுந்து விடுவான்!
ஒரு வீட்டுக்கு மட்டும் அம்மாவான நம் தாயாருக்கே அவ்வளவு வேலைன்னா,
சகல உலகங்களுக்கும் அம்மா, ஜகன்மாதா எனப்படுபவள், அன்னை அலைமகளுக்கு எவ்வளவு வேலை இருக்கும்!
உலகக் குடும்பத்தின் ஆனந்தமே அவள் கையில் தானே உள்ளது!
மாத சமஸ்த ஜகதாம் மது கைடபாரே
வக்ஷோ விஹாரிணி மனோகர திவ்ய மூர்த்தே
ஸ்ரீ ஸ்வாமினி, ச்ரிதஜன ப்ரிய தான சீலே
ஸ்ரீ வேங்கடேச தயிதே தவ சுப்ரபாதம்

மாத சமஸ்த ஜகதாம் = சகல உலகங்களுக்கும் தாயே, ஸ்ரீ மகா லக்ஷ்மி!
சமஸ்த ஜகங்களுக்கும் மாதா = ஜகன் மாதா! பூவுலக உயிர்கள், மனிதர் மட்டும் இல்லை; தேவர், கின்னரர், கிம்புருடர், நாகர், பாதாள உலகினர், அசுரர் என்று அனைத்து தரப்பினருக்கும் அவளே அன்னை; நரகாசுரனின் அன்னையும் அவள் தானே! குழந்தைகள் செய்யும் தவற்றை எல்லாம் பொறுத்தருள எம்பெருமானிடம் சதா சர்வ காலமும் முறையிட்டு, அவன் சினம் தணிக்கும் அன்புத் தாய் ஆயிற்றே! (என்ன செய்வது சில சமயம், அவளுக்கும் தர்மசங்கடங்கள், நம் போன்ற பிள்ளைகளால்:-)
மது கைடபாரே = மது, கைடபன் என்ற கொடியவரை அழித்து, (வேதம் மீட்ட) பெருமாள்
முன்னொரு நாள், பிரம்மனிடம் இருந்து வேதங்களைக் களவாடினர் மது மற்றும் கைடபன் என்ற அரக்கர்கள்; ஹயக்ரீவனாய் தோன்றி அவர்களை வதைத்து, உலகுக்கே ஞானத்தை மீட்டுத் தந்தான் இறைவன்; “ஞான ஆனந்த மயம் தேவம்” என்று கல்விக்கு அரசனாய் இன்றும் வணங்கப்படுகிறான் ஹயக்ரீவன்!
வக்ஷோ விஹாரிணி = அவன் திருமார்பில்(வக்ஷ ஸ்தலத்தில்) கொலு இருப்பவளே!
அந்த ஞான குருவான பெருமாளின், திருமார்பை அலங்கரிப்பவளே! அவனை விட்டு ஒரு நொடிப் பொழுதும் பிரியாதவளே! “அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பன்”, என்று முதலில் உன்னைச் சொல்லி விட்டுப், பின்னர் தானே அவனைச் சொல்கிறார்கள்! அவன் மார்பில் ஸ்ரீவத்ச மச்சமாய் இருக்கும் தாயே!
(வசந்த விகார் என்று சொல்வது போல, வக்ஷ விகார் = மார்பில் உறைபவள்)
மனோகர திவ்ய மூர்த்தே = அழகும் ஐசுவரியமும் நிறைந்தவளே!
மனோகரம் = மனத்தை லயிக்கச் செய்யும் அழகு! அழகு மட்டுமா? திவ்ய மூர்த்தி = திவ்யமான ஐசுவரியமும், குணநலன்களும் உடையவள் நம் அன்னை! சும்மாவா சொல்கிறார்கள், “அவள் மகாலட்சுமி போல” என்று!
ஸ்ரீ ஸ்வாமினி = சுவாமியின் இல்லத் தலைவியே!
தர்மன் ஒருவன் என்றால் உடன் சக தர்மினி; “பகவானே! பகவதியே!” என்று சொல்வது போல், சுவாமிக்கு சுவாமினி!வேங்கட வீட்டின் இல்லத்தரசி!
ச்ரித ஜன, ப்ரிய தான சீலே = நாடி வரும் அன்பருக்கு, அவர்கள் விரும்புவதை வாரி அளிக்கும் தூயவளே!
ச்ரித ஜனங்கள் = நாடி வரும் அன்பர்கள்; இவர்கள், தாயிடம் ஒடி வரும் குழந்தைகள் போல; பசுவிடம் ஒடி வரும் கன்றைப் போல!
ப்ரிய = விருப்பப்பட்டதெல்லாம்; தான சீல = வாரி வாரி தானம் கொடுக்கும் வள்ளல் போல!
தொலை தூரத்தில் கன்றைக் கண்ட பசுவுக்கு எப்படி பால் தானாக வழிகிறதோ, அதே போல் நாங்கள் உன் அருகில் வருவதற்கு முன்பே, எங்களுக்கு அருள் கொடுக்க எண்ணும் தாயே!
ஸ்ரீ வேங்கடேச தயிதே = திருவேங்கட நாதனின் தர்ம பத்தினியே
தவ சுப்ரபாதம் = இனிய பொழுதாய் விடிய,எங்கள் அம்மா, நீ கண் மலர்க

———

இரண்டு பாடல்கள், ஜகன் மாதா ஸ்ரீ மகாலக்ஷ்மியின் மீது!
தவ சுப்ரபாதம் அரவிந்த லோசனே
பவது பிரசன்ன முக சந்திர மண்டலே |
விதி சங்கரேந்திர வனிதாபிர் அர்ச்சிதே
விருஷ சைலநாத தயிதே தயாநிதே ||

தவ சுப்ரபாதம் = மங்களமான காலைப் பொழுதாக மலரட்டும்!
சுப்ரபாதம்=சு+பிரபாதம்=சுகமான காலை
அரவிந்த லோசனே = தாமரை போன்று
சிவந்த, குளிர்ந்த கண்களைக் கொண்டவளே
அரவிந்தம்=தாமரை; லோசனம்=கண்
தாமரையை எதற்குக் கண்களுக்குச் சொல்கிறார்கள்? காலையில் திறந்து இரவில் மூடிக்கொள்வதாலா? இருக்கலாம்!
ஆனால் இங்கு அன்னையின் கண்கள் தாமரைப்பூ போல் மெல்லிய சிகப்பு (pink) ; குளிர்ச்சி! தாமரைக்குப் பூங்கொத்து தேவையில்லை! ஒரு பூ போதும்.
அவ்வளவு தெய்வீக அழகு!
பவது பிரசன்ன முக = உன் முகம், எப்போதும் சிரித்த முகமாய் இருக்கும்
சந்திர மண்டலே = சந்திரனைப் போல் முகம் கொண்டவளே
“வதனமே சந்திர பிம்பமோ” என்று தானே ஒரு பிரபலமான பாடல்; சந்திரன் அமைதியாக ஒளிர்வான்; அது போல் அன்னையும் அடக்கமாக, அமைதியாக, இதழ்க் கோட்டோரம் ஒரு மெல்லிய புன்னகை பூத்து, சிரித்த முகமாய் இருக்கிறாள்!
அது சரி, அதான் காலை புலர்கின்றதே! இன்னும் சிறிது நேரத்தில் நிலவு போய் விடும் அல்லவா? கவலை வேண்டாம்! சூரியன் வந்தாலும் இந்த நிலா மறையாது! அன்னையின் முக நிலாவுக்கு தேய்வு தான் உண்டோ?
விதி சங்கர் இந்திர வனிதாபிர் = பிரம்மா (விதி), சங்கரன் (சிவபெருமான்), இந்திரன்
ஆகியோரின் மனைவியர் எல்லாம்
வனிதா=பெண்
விதியைத் தலையில் எழுதும் கடவுள் = பிரம்மன்; இவர் மனைவியான கலைமகளும் (சரஸ்வதியும்),
சங்கரன் = சிவபிரான்; ஈசனின் அன்பு மனைவி, அன்னை மலைமகளும் (பார்வதியும்),
இந்திரன் மனைவியான சசிதேவியும் (இந்திராணி),
அர்ச்சிதே = (உன்னை) அர்ச்சிக்கிறார்கள்.
அன்னைக்கும், மற்ற தெய்வங்களின் மனைவியருக்கும் அவ்வளவு தோழமை பாருங்கள்; விரும்பி நன்மொழிகளால் அர்ச்சனை செய்கிறார்கள்! அதுவும் நம் அன்னை யார்?
அண்ணனின் மனைவி என்பதால்,
பார்வதிக்கு அண்ணி;
கணவரின் (பிரம்மா) அம்மா என்பதால், சரஸ்வதிக்கு மாமி;
கணவரின் (இந்திரன்) தலைவர் என்பதால், சசிதேவிக்குத் தலைவி;
இப்படிப் பிறந்த வீடும், புகுந்த வீடும், எல்லாரும் அன்னை மகாலக்ஷ்மியிடம் அன்பு பாராட்டுகிறார்கள்!
விருஷ சைல நாத= விருஷபாசலம் என்னும் திருமலைக்கு நாதன்

மாத; சமஸ்த ஜகதாம்! கருணைக் கடல் அல்லவா அவள்!!
தயிதே, தயா நிதே = அவனின் விருப்பமான மனைவியே! தயா நிதியே!
தயிதே = Beloved; பெருமாளின் அன்பே ஆருயிரே! தயா+நிதி = கருணை+செல்வம். அன்னை கருணைச் செல்வமானவள்!
அவள் தானே எல்லாச் செல்வத்துக்கு அதிபதி! அவளே ஒரு செல்வமா?
ஆமாம்! காருண்ய லக்ஷ்மி! அஷ்ட லட்சுமிகளில் ஒருவள் காருண்ய லக்ஷ்மி.
எத்தனை செல்வம் வந்தாலும் போனாலும், இந்தக் காருண்யம் மட்டும் என்றும் நிலைத்து நிற்கும்!

————-

அத்ரிஆதி சப்தரிஷய சமுபாஸ்ய சந்த்யாம்
ஆகாச சிந்து கமலானி மனோகரானி
ஆதாய பாதயுகம் அர்ச்சயிதும் ப்ரபந்நா
சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்

அத்ரி ஆதி சப்த ரிஷய = அத்ரி முதலான சப்த (ஏழு) ரிஷிகள்
பால் வெளியில் (Milky Way), துருவ நட்சத்திரத்தைச் சுற்றி இருப்பது சப்த ரிஷி மண்டலம் (Ursa Major).
சப்த ரிஷிகள், உலகின் ஆதி தாய் தந்தையர்கள் ஆவார்கள்.
இறைவனின் மூத்த குழந்தைகள் என்றும் சொல்லுவர். அந்த ஏழு பேர் யார் யார் என்ற பட்டியல் சில சமயம் மாறுபட்டாலும், பொதுவாக இவர்களே:
அத்ரி, பரத்வாஜர், கெளதமர், ஜமதக்னி, காஸ்யபர், வசிஷ்டர், விஸ்வாமித்ரர்
(அத்ரியும், வசிஷ்டரும் பெரும்பாலும் எல்லாப் பட்டியல்களிலும் இருப்பர்; வசிஷ்டரின் மனைவி அருந்ததியும் வான மண்டலத்தில் அவருடன் இருப்பதாக ஐதீகம். “அம்மி மிதித்து அருந்ததி பார்த்து” என்ற வழக்கமும் வந்தது)

சமுபாஸ்ய சந்த்யாம் = வரப்போகும், சந்தியா வந்தன பூசைகளுக்காக
அதிகாலை கொஞ்சம் கொஞ்சமாக புலரத் தொடங்குகிறது; சந்தி செய்யும் வேளையும் வந்து விட்டது.

ஆகாச சிந்து = ஆகாச கங்கை நீர்வீழ்ச்சி, தீர்த்தத்தில் இருந்து
ஆகாச கங்கை என்ற நீர்வீழ்ச்சி நீர் பாப விநாச தீர்த்தம் போலவே புனிதமானது; எம்பெருமான் தொடுத்த வில் அம்பினால் உருவானது;

கமலானி மனோகரானி = அழகான தாமரைப் பூக்களைக் கொண்டு வந்து உள்ளனர்
ஆகாச கங்கையில் மலர்ந்த அழகிய (மனோகரமான) தாமரைப் (கமலம்) பூக்களைக் கொண்டு வந்து உள்ளனர்

ஆதாய பாத யுகம் அர்ச்சயிதும் = (அவர்கள் கொண்டு வந்த மலர்களுடன்) பாதம் இரண்டையும் அர்ச்சிக்க
பாத யுகம் = இணை அடிகள் = இரண்டு திருப்பாதங்கள்.
மலர்ப் பாதங்களை, மலர்களால் அர்ச்சிக்க வந்துள்ளனர்;
இறைவனின் இணை அடிகளை பாத பத்மம் என்று சொல்லுவார்கள். ஏன்? தாமரை நீரில் மூழ்கவே மூழ்காது; நீரின் அளவுக்கு ஏற்ப அதுவும் உயர்ந்து கொண்டே இருக்கும். “நீர்அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்”; “வெள்ளத்து அனைய மலர் நீட்டம்” என்பன தமிழ்ப் பாடல்கள்.

அது போல் நாம் நம் புண்ணிய பாவக் கணக்குகளைக் கூட்டினாலும் சரி, குறைத்தாலும் சரி! அதற்காக அவன் பாதங்களை மறைத்து வைக்க மாட்டான்; புண்ணியமோ பாவமோ, எதைச் செய்தாலும் நம்மைக் கடைத்தேற்றுவதற்கு ஒரே வழி! எப்போதும் நன்கு தெரியும்படி, அடைக்கலம் புகும்படி, பாதங்களை மட்டுமாவது காட்டிக் கொண்டே இருப்பான்!
பற்றுவதும் பற்றாததும் நம் கையில் தான் இருக்கிறது! பெரும்பாலும் புண்ணியர்கள் பற்றிக் கொள்கிறார்கள்; பாவம் செய்தோர், காட்டினாலும் பற்ற மறுக்கிறார்கள்!

மற்ற திரு அவயங்கள் வேண்டுமானால் பக்திக்கு ஏற்றவாறு தோன்றும், மறையும்! கரங்கள் காக்கவும் செய்யும்; அம்பைத் தொடுத்து அழிக்கவும் செய்யும்!
ஆனால் திருப்பாதங்கள் அப்படி இல்லை! வாமன அவதாரத்தில் கூட சம்காரம்/அழிவு என்று இல்லாமல், மகாபலி தலை மேல் வைத்து காத்தது! ராமாவதாரத்தில் ராமனே உதவ முடியாமல் போன போது கூட, அவன் திருவடிப் பாதுகைகள் பரதனுக்கு உதவின! இந்தக் காலத்தில் நமக்கும் கோவில்களில் தலை மேல் சடாரியாக வைத்துக் காக்கப்படுகிறது!

பாதுகா சகஸ்ரம் என்ற ஒராயிரம் பாடல்கள் இந்தப் பாதுகைகள் மேல் உள்ளன! அவ்வளவு பெருமை மிக்க பாதங்களைத் தான் தினமும் திருநாமமாக நெற்றியில் அணிகின்றனர்!
இதற்கு ஊர்த்துவ புண்ட்ரம் என்று வடமொழிப் பெயர்! (புண்ட்ரம்/புண்டரீகம் = தாமரை)!
கொஞ்சு தமிழில் திருமண் காப்பு! இப்போது புரிகிறது அல்லவா ஏன் திருப்பாதங்களைத் தாமரையாகச் சொல்கிறார்கள் என்று!

ப்ரபந்நா = சரணம் அடைந்து, வந்துள்ளனர்.
அப்பேர்ப்பட்ட திருவடிகளில் சரணம் புக சப்த ரிஷிகளும் வந்துள்ளனர். ப்ரபத்தி என்றால் சரணாகதி; ப்ரபந்நன் என்றால் சரணாகதி செய்த ஜீவன். . “புகல் ஒன்று இல்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே”, என்பது ஆழ்வார் செய்யும் சரணாகதி!
அது போல ப்ரபந்நர்களான சப்த ரிஷிகளும் இங்கு பெருமாளைச் சேவிக்க வந்துள்ளார்

சேஷாத்ரி சேகர விபோ = சேஷ மலைச் சிகரத்துக்கு அரசனே

சேஷன்= ஆதிசேஷன் என்ற பாம்பு! அத்ரி=மலை;
சேகரம்=உச்சி; விபோ = அரசன்;
சேஷ மலைச் சிகரத்துக்கு அரசன் திருவேங்கடநாதன்!
இனி வரும் ஒவ்வொரு சுலோகமும் இப்படித் தான் முடியப் போகிறது! ஏன்?
அப்படி என்ன சேஷனுக்கும், பெருமாளுக்கும் அவ்வளவு அன்னோன்யம்? பெருமாள் எங்கு சென்றாலும், அவனோடு திருமகள் நீங்காது இருக்கிறாள், சரி! ஒத்துக் கொள்ளலாம்!
இந்தத் சேஷன் தொண்டன் தானே! ஏன் எங்கு போனாலும் கூடவே ஒட்டிக் கொள்கிறான்?

திருமலையின் ஏழு முடிகளும் சேஷனின் தலைகள்; அந்த மலையே சேஷனின் உருவம் தான்! வளைந்து நெளிந்து பாம்பைப் போலவே தான் உள்ளது! அந்த சேஷ மலை, பக்தியாலும் பணிவாலும் குனிந்து நிற்க, அதன் மேல்
மலை குனிய நின்றான் பெருமாள்
என்று பெயர் பெற்று விளங்குகிறான் இந்தக் கலியுகத் தெய்வம்!
கல்வெட்டுகளிலும் மற்றும் பழந்தமிழ்ப் பாடல்களிலும் இந்தப் பெயர் சிறப்பாக வருகிறது!

தவ சுப்ரபாதம் = இனிய காலை வணக்கங்கள்!
இப்படி சேஷ மலையின் மீது சேஷாத்ரி நாதனாக நிற்கும் மலையப்பா! ….சுப்ரபாதம் = சு+ப்ரபாதம் = உனக்கும், அதனால் எங்களுக்கும் சுகமான காலைப் பொழுதாக மலரட்டும்.

—————

பஞ்சானன ஆப்ஜபவ சண்முக வாசவாத்யா
த்ரைவிக்ரமாதி சரிதம் விபுதா ச்துவந்தி
பாஷாபதி படதி வாசர சுத்திமாராத்

சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்

பஞ்சானன = ஐந்து முகங்கள் கொண்ட சிவ பெருமான்
சிவனாருக்கு வெளியில் தெரியக்கூடிய ஐந்து முகங்கள்; ஆறாம் முகம் யோக காலங்களில் மட்டும் வெளிப்படும். பெருமாளின் இருதயத்தில் “அஜபா” என்ற நடனம் புரிபவன் ஈசன். அந்த இதயலிங்கத்துக்குத் தான் இன்று திருவாரூர் ஆலயத்தில் வழிபாடு நடக்கிறது.

ஆப்ஜ பவ = தாமரை மேல் உள்ள பிரம்மா
ஆப்ஜ=தாமரை; தாமரைத் தலைவன் பிரம்மன் என்று பொருள்.
ஈசனைப் பஞ்சமுகன் என்று சொன்னது போல், இவரை நான்முகன் என்று சொல்லவில்லை பாருங்கள். ஏன்?
முகக் கணக்கால் விளைந்த பிணக்கால் – இவருக்கு ஐந்து முகம் போய் நான்முகம் ஆனது தனிக்கதை. அதனால் தான் செருக்கின் மூலமே வேண்டாம் என்று தாமரை நாயகன் என்று சொல்லிவிட்டார்.
தத்துவம் என்னவென்றால்: உயர் பொறுப்பில் உள்ளவர்கள், அந்தப் பொறுப்போடு கூடவே வரும் பெரும் அதிகாரம். அந்தப் போதையில் மூழ்கி விடாமல், தாமரை இலை மேல் நீராய் இருக்க வேண்டும் என்பதே.

சண்முக = ஆறுமுகக் கடவுள், முருகப் பெருமான்
முருகப்பெருமானுக்கும் எம்பெருமானுக்கும் அப்படி ஒரு உறவு, அன்னோன்யம் மால் மருகன் என்று பல இடங்களில் கொண்டாடப் படுகிறான்.

திருச்செந்தூரில் அசுர வதம் முடிந்து, சிவபெருமானை நோக்கித் தவக் கோலம் கொண்டான் முருகன். போர்க்கோலம் போய் இப்போது தவக்கோலம்.
எஞ்சியுள்ள சில அசுரர்களோ, அவர்கள் உறவினரோ, பழி வாங்கப் புறப்பட்டால்?
பார்த்தார் பெருமாள்! தியானத்தில் உள்ள மருகனைக் காக்கத் தானே கடலுக்கும் அவனுக்கும் நடுவில் பள்ளி கொண்டு விட்டார்!
குலசேகரப்பட்டினம் என்ற ஊர், திருச்செந்தூருக்கு மிக அருகில்! செந்தூர் ஆலயத்திலேயே பெருமாளுக்குத் தனிச் சந்நிதி இதனால் தான்!

வாசவ ஆத்யா = அமரர் தலைவன் இந்திரன் – இவர்கள் எல்லாரும்
(வாசவன்=இந்திரன்)

எல்லாம் சரி, இவர்கள் எல்லாரும் ஏன் ஒரே கூட்டமாக, இங்கு வந்துள்ளார்கள்?

த்ரைவிக்ரமாதி = திரிவிக்ரமன் – வாமனன் – உலகளந்த பெருமாள்!
திருக்கோவிலூர் -உலகளந்த பெருமாள் திருக்கோலம்.
அவதாரங்களிலேயே நடுநாயகமான அவதாரம். இதுவரை உள்ள ஒன்பதில், ஐந்தாம் அவதாரம் இந்த வாமன-திரிவிக்ரம அவதாரம்.
இதற்கு முன்பு விலங்குகள். இதற்குப் பின்பு மனிதர்கள் என்று பகுத்துக் காட்டும் அவதாரம்.
அப்படி நடுவிலே நின்ற நாயகன் திரிவிக்ரமப் பெருமாள்.

அழிவு, சம்காரம் என்பதே இல்லாத ஒரே அவதாரம் இது ஒன்று தான்!

திருக்குறளப்பன், இந்த முறை, திருவை மறைத்து விட்டு,
வெறும் குறளப்பனாக வந்தான்.
“தீக்குறளை சென்றோதோம்” என்று சொல் ஒரு சொல் பதிவில் வருகிறதே – அந்தக் “குறளை” அல்ல இது! இது குள்ள உருவாய் வந்த குறள்.
இந்த அவதாரத்தில் தான் பூமிக்கும் பல நன்மைகள் நடந்தன. அதில் மிக முக்கியமான ஒன்று, கங்கை ஆறு தோன்றியது!

முதல் பத்தில் = ஓங்கி உளகளந்த உத்தமன் பேர் பாடி
இரண்டாம் பத்தில் = அம்பரம் ஊடுஅறுத்து ஒங்கி உலகளந்த
மூன்றாம் பத்தில் = அன்றிவ் வுலகம் அளந்தாய் அடி போற்றி

என்று ஆண்டாளும் இவ்வாறே மூன்று முறை அவிர்ப்பாகம் அளிக்கின்றாள், வாமன மூர்த்திக்கு!

சரிதம் விபுதா ஸ்துவந்தி = அந்த வாமனச் சரிதத்தைச் சொல்லித், துயில் எழுப்ப வந்துள்ளனர்.
எப்பேர்ப்பட்ட பாவமாக இருந்தாலும் சரி, மனம் திருந்தும் எண்ணம் வந்தாலே போதும்! வாய் விட்டுக் கூறக்கூட வேண்டாம்! திருத்தி ஆட்கொள்ள திரிபுவனமும் கடந்து வருவான் என்பதைக் காட்டும் வாமன அவதாரம்.
அதனால் தான் பாவங்களை எரிக்கும் (வேங்+கடம்) மலை மேல் நிற்பவனுக்கு, இந்த அவதாரக் குறிப்பைச் சொல்லித் துயில் எழுப்புகின்றனர் சிவன், பிரம்மா, முருகன், இந்திரன் எல்லாரும்.

வாசர சுத்திமாராத் = அன்றைய நாள் கணக்கான பஞ்சாங்கத்தை
வாசரம்=நாள்; சோமவாசரம் என்றால் திங்கட்கிழமை. ஒவ்வொரு நாள் காலையிலும் அந்த நாளின் வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் என்று ஐந்து அங்கங்கள்.
இதை இறைவன் முன்னிலையில் ஒரு weather report (வானிலை அறிக்கை) போலப் படிப்பது இன்றும் திருமலையில் வழக்கம். பஞ்சாங்க சிரவணம் என்று பெயர்.

பாஷாபதி படதி = பல மொழிகளில் வல்லவரான பிரகஸ்பதி, படிக்கிறார்
பொதுவாக நாம் பேசும் போது கூட, “இவரு என்ன பெரிய பிரகஸ்பதியா?” என்று கேட்போம். அப்படி கல்வி கேள்விகளில் சிறந்தவர் இவர். அதனால் அவர் பாஷா பதி (மொழியின் பதி). தேவர்களின் குரு. இந்திரனுக்குத் தர்மத்தைச் சொல்லி அவனை நல்வழிப்படுத்துபவர்.

இப்படி எல்லாத் தெய்வங்களும் உன் சந்நிதிக்கு வந்துள்ளார்கள்.
சேஷாத்ரி சேகர விபோ = சேஷ மலைச் சிகரத்துக்கு அரசனே, திருவேங்கடநாதா

தவ சுப்ரபாதம் = இனிய காலை வணக்கங்கள்!திருப்பள்ளி எழுவாயாக!!
சு+ப்ரபாதம் = உனக்கும், அதனால் எங்களுக்கும் சுகமான காலைப் பொழுதாக மலரட்டும்

—————–

ஈஷத் ப்ரபுல்ல சரசீருஹ நாரிகேள
பூகத்ருமாதி சு மநோகர பாலிகாநாம்
ஆவாதி மந்த மநிலஸ் சக திவ்யகந்தை
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்

ஈஷத் ப்ரபுல்ல சரசீருஹ = அழகாக மலரத் துவங்கியுள்ள தாமரை
இன்னும் சூரியன் உதிக்க வில்லை. இருப்பினும் தாமரை சற்றே மலரத் துவங்கியுள்ளது!
இது எப்படி?
இறைவன் திருமுகம் கோடி சூர்யப் பிரகாசம் அல்லவா? அவன் இன்னும் அரைகுறைத் தூக்கத்தில் உள்ளான்…அரைகுறை விழிப்பிலும் உள்ளான்.
அதனால் அவன் முகச் சூரியனைக் கண்டு, தாமரையும் அரைகுறை மலர்ச்சியில் உள்ளது! 🙂

நாரிகேள = தென்னை மரம்
பூ கத்ருமாதி சு மநோகர = மலையில் நீண்டு நிற்கும் அழகான
பாலிகாநாம் = பாளைக் கமுகு என்னும் பாக்கு மரங்கள்

ஆவாதி மந்த மநிலஸ் = இப்படி மெல்லிய தென்றல், இந்த மரங்களில் புகுந்து வீச
சக திவ்ய கந்தை = திவ்யமான நறு மணம், காலையில் எழும்புகின்றதே!

கமுகு, தென்னம் பாளைகள் பார்த்துள்ளீர்களா…?
இல்லை மலையாளத்து நண்பர் யாராவது இருந்தால் தெரியும்!
அந்தப் பாளைகளை விரித்தால், வீசும் பாருங்க ஒரு வாசம்….அவ்வளவு சுகந்தமா இருக்கும்.

தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருப்பள்ளி எழுச்சியில் வருவதை,
இங்கு அப்படியே காட்டுகிறார்,
சுடரொளி பரந்தன சூழ்திசை யெல்லாம்
….
பாயிருள் அகன்றது பைம்பொழில் கமுகின்
மடலிடைக் கீறி வண் பாளைகள் நாற
வைகறை கூர்ந்தது மாருதம்
 இதுவோ?

சேஷாத்ரி சேகரவிபோ = சேஷ மலைச் சிகரத்துக்கு அரசனே!
தவ சுப்ரபாதம் = இனிய காலை வணக்கங்கள்!திருப்பள்ளி எழுவாயாக!!

—————–

உந்மீல்ய நேத்ர யுக முத்தம பஞ்ஜரஸ்தா
பாத்ரா வசிஷ்ட கதலீபல பாயசாநி
புக்த்வா சலீலமத கேளிசுகா: படந்தி
சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்

உந்மீல்ய நேத்ர = (நேத்ரம்=கண்); தங்கள் குட்டிக் கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு
யுக முத்தம பஞ்ஜரஸ்தா = (பஞ்ஜரம்=கூண்டு); தங்கள் ஜோடிகளுடன், உயரமான கிளிக் கூண்டுக்குள்ளே அமர்ந்து கொண்டு……
தியாகராஜரும் “ஓங்கார பஞ்சர கீ” என்று முதல் பஞ்சரத்னக் கீர்த்தனையில் (ஜகதா என்று தொடங்கும் கீர்த்தனை) பாடுகிறார்.
நம் மனம் என்னும் கிளி, ஓங்காரக் கூண்டிலே ஒடுங்குவதாகப் பாடுகிறார்.

பாத்ரா வசிஷ்ட = பாத்திரங்களில் மீதி வைக்கப்பட்டுள்ள
கதலீ பல பாயசாநி = வாழைப் பழம் கொண்டு செய்யப்பட்ட பாயசத்தை புக்த்வா = சாப்பிடுகின்றன
ஒவ்வொரு நாள் இரவும், சுவாமிக்கு ஏகாந்த சேவை ஆகும் போது, வாழைப்பழங்கள்/முந்திரிகள் கலந்த பால் பாயசம் நிவேதனம் செய்வார்கள்.
பின்னரே போக ஸ்ரீநிவாசனை, சயன மண்டபத்தில், கட்டிலில் கிடத்தி, தூங்கப் பண்ணுவார்கள்.
திரை போட்ட பின்னர், அந்தக் கெட்டியான பாயசத்தை, நமக்கும் பிரசாதமாகத் தருவார்கள்…..இதையே கிளிகள் மறுநாள் காலையில் உண்கின்றன.
உடுத்துக் களைந்த பீதக ஆடை போல…அவன் உண்ட மிச்சத்தை, அவை உண்கின்றன!
சேஷத்தை (மிச்சத்தை) உண்டு, சேஷத்வம் பெறுகின்றன!

சலீலமத கேளி சுகா = (சுகம்=கிளி); மிக இன்பமாக விளையாடும் பச்சைக் கிளிகள்
படந்தி = உன் நாமங்களை பாடுகின்றன!
“கோவிந்தா, கோவிந்தா” என்று மதுரமாக கிளிகள் எல்லாம் கீச்கீச் என்று கொஞ்சினால் எப்படி இருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்!
வரிசையில் நிற்கும் அடியார்களுக்கு இதைக் கண்டால் கால்களும் கடுக்குமோ?

சேஷாத்ரி சேகரவிபோ = சேஷ மலைச் சிகரத்துக்கு அரசனே!
தவ சுப்ரபாதம் = இனிய காலை வணக்கங்கள்!திருப்பள்ளி எழுவாயாக!!
சு+ப்ரபாதம் = உனக்கும், அதனால் எங்களுக்கும் சுகமான காலைப் பொழுதாக மலரட்டும்.

———————–

தந்த்ரீ ப்ரகர்ஷ மதுர ஸ்வநயா விபஞ்ச்யா
காயத்ய நந்த சரிதம் தவ நாரதோபி
பாஷாச மக்ர அசக்ருத் கரசார ரம்யம்
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்

தந்த்ரீ= தந்தி;ப்ரகர்ஷ = அடர்ந்து நீண்ட
நாரதர் தோளில் எப்போதும் தொங்குமே, அது ஒரு விசேட வீணை. அதற்கு மஹதி என்று பெயர்.
அப்போதே எளிதில் எங்கும் எடுத்துச் செல்லக் கூடிய (மொபைல்) வீணையைக் கையாண்டுள்ளார் பாருங்கள்! ஏன் ஊர் ஊராக எடுத்துச் செல்ல வேண்டும்?
எங்கும் ஒரு இடத்தில் நிலையாக இல்லாது……திரிந்து கொண்டே இருப்பது அவர் பெற்ற சாபம். அது தனிக் கதை! அதற்கு ஏற்றவாறு ஒரு இசைக் கருவி மஹதி!
இன்று நாம் கச்சேரிகளில் காணும் வீணையைத் தோளில் தொங்க விட்டுக் கொண்டு, நடமாட முடியுமா என்று கற்பனை செய்து பாருங்கள்! 🙂
அடர்ந்து நீண்ட தந்தி உடைய அந்த வீணையில்…

மதுர ஸ்வநயா விபஞ்ச்யா = மதுரமான உன் நாமங்களை சொல்லிக் கொண்டு
பெருமாள் அழகன் என்பது அனைவரும் அறிந்ததே! அவன் திருநாமம் அவனை விடவும் அழகு, இனிமை! அதனால் தான் அது மதுரமான நாம சங்கீர்த்தனம்…
“நாராயண நாராயண ஜெய கோவிந்த ஹரே!” என்று தான் நாரதர் பொதுவாக மீட்டுவாராம்!

நாராயணா என்ற பெயரைக் கேட்டாலே எரிந்து விழும் இரணியகசிபு கூட, இதன் ராகத்தில் மயங்கினானாம்! நாராயண நாமத்தை வாய் விட்டுப் பாடினால் தானே அவன் வம்பு செய்வான்! பாடாமல், மீட்டினால்?
பாவம், நாரதர் தன் எதிரியின் திவ்ய மங்களத் திருநாமங்களைத் தான் பாடுகிறார் என்று அவனுக்கு தெரியாமால், ஆகா ஓகோ என்று ரசித்தானாம்:-)

காயத்ய நந்த சரிதம் =உன் சரிதத்தை, நந்த கிருஷ்ண சரிதத்தைக், கானம் பாடுகிறார்

தவ நாரதோபி= தவ ஒழுக்கத்தில் சிறந்த நாரத முனி!
நாரதர் சார்பு நிலைகள் எதுவும் அற்றவர். தேவர், அசுரர் என்று எல்லாரும் அவரை வரவேற்று உபசரிப்பார்கள்! தர்மம் தழைக்க, இறைவனின் திருவுள்ளப்படி காரியம் ஆற்றுபவர்!
கலகப் பிரியர் என்று உலகம் பழித்தாலும் புகழ்ந்தாலும், அந்தச் சாபத்தையும் வரமாக ஆக்கிக் கொண்டவர்! நாரதர் கலகம் நன்மையில் தானே முடியும்!

நாரதர் சிறந்த முருக பக்தர் என்பது உங்களுக்குத் தெரியுமா?
வள்ளித் திருமணத்தில் பெரும் பங்கு வகிப்பவர்! முருகனுக்கே அறிவுரை சொல்லி, காதல் திருமணம் தான் என்றாலும், வள்ளியின் பெற்றோருடைய ஆசி திருமணத்துக்குத் தேவை என்று வலியுறுத்துவார்.

அப்பேர்பட்ட மகரிஷி, கர்நாடக இசையின் ஆதி குரு,
இதோ…….திருமலையில், எம்பெருமான் சந்நிதி முன்பு, பங்காரு வாகிலி (தங்க வாயில்) நின்று கொண்டு, பூபாள ராகத்தில் கீர்த்தனை மீட்டி, திருப்பள்ளி எழுச்சி பாடுகிறார்!

பாஷா சமக்ரம் அசக்ருத் = முழு வாக்கியங்களை ஒரு முறை மட்டும் பாடி நிறுத்தி விடாது, தொடர்ந்து பாடி
தொடர்ந்து பாடுவது என்பது ஒரு cycle, சுழற்சி! ஓம் நமோ வேங்கடேசாய, என்று ஜபிப்பது போல!
காலையில் நம்மை எழுப்ப, நம் அம்மாவும், “எழுந்துருடா” என்று ஒரு முறை சொன்னால் வேலைக்கு ஆகுதா? தொடந்து ஜபம் செய்கிறார்களே, அது போலத் தான்! 🙂

கரசார ரம்யம் = இனிமையான, ரம்மியமான நாரத சங்கீர்த்தனம் கேட்கிறதே!

சேஷாத்ரி சேகரவிபோ = சேஷ மலைச் சிகரத்துக்கு அரசனே!
தவ சுப்ரபாதம் = இனிய காலை வணக்கங்கள்!திருப்பள்ளி எழுவாயாக!!

—————-

ப்ருங்காவலீ ச மகரந்த ரஸா நுவித்த
ஜங்கார கீத நிநதைஸ் சக சேவநாய
நிர்யாத்யு பாந்த சரஸீ கமலோ தரேப்ய
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்

ப்ருங்காவலீ ச மகரந்த ரஸா நுவித்த = மகரந்த ரசத்தை அனுபவிக்கும் வண்டுகள் சிறைபட்டுக் கிடக்கின்றன
தாமரைப் பூ எவ்வளவு உத்தமமான காதலி! மாலை வேளை ஆனதும், சூரியக் காதலன் போய் விடுவான் என்று தெரிந்து, தானும் தன் இதழ்களை மூடிக் கொள்கிறாள்!
பாவம், இவர்கள் காதலின் ஆழத்தை அறியாத வண்டுகள்,
இன்பமாக தேன் குடித்துக் கொண்டு போதையில் இருக்கின்றன. தாமரை கூம்பிக் கொள்கிறது. உள்ளேயே மாட்டிக் கொண்டன வண்டுகள்!

இன்பம் என்று நினைத்த தேனே எமனாய் ஆகிவிட்டது வண்டுக்கு! இரவெல்லாம் தாமரைச் சிறைவாசம்!………………………………
அதே இன்பத் தேன் இப்போது கசக்க ஆரம்பித்து விட்டதோ வண்டுக்கு?
எப்போதடா பகல் வேளை வரும், எப்போது தாமரை விரியும், எப்போது மீண்டு வரலாம் என்று கணக்கு போடத் துவங்கி விட்டது வண்டு! – நம் ஆன்மாவும் இப்படித் தானோ?

ஜங்கார கீத நிநதைஸ், சக சேவநாய = ரீங்கார சப்தத்தை இனிய கீதம் போல் எழுப்புகின்றன. உன்னைச் சேவிக்கின்றன!
சிறைவாசத்தால் சித்தம் தெளிந்த வண்டு, உன்னை மனத்துக்குள்ளேயே சேவித்து, ரீங்கார கீதம் பாட….அதற்கும் ஒரு விடியல் பிறக்கிறது!

நிர்யாத்யு பாந்த சரஸீ கமலோ தரேப்ய = அந்தக் குளத்தில் (சரஸ்) இருக்கும் தாமரை (கமலம்), இதோ விரிகிறது….ஆன்மா விடுகிறது!
விடியல் கிடைக்கிறது, தாமரை விரிகிறது, சிறை ஒழிகிறது, வண்டு பறக்கிறது!

சேஷாத்ரி சேகரவிபோ = சேஷ மலைச் சிகரத்துக்கு அரசனே!
தவ சுப்ரபாதம் = இனிய காலை வணக்கங்கள்!திருப்பள்ளி எழுவாயாக!!
சு+ப்ரபாதம் = உனக்கும், அதனால் எங்களுக்கும் சுகமான காலைப் பொழுதாக மலரட்டும்

————

யோஷா கணேன வரதத்னி விமத்ய மானே
கோசால யேஷூ ததி மந்தன தீவ்ர கோஷா
ரோஷாத் கலிம் விததே ககுபஸ்ச கும்பா
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்

யோஷா கணேன = இளமையான பெண்கள் கூட்டம்;

கோசால யேஷூ, ததி மந்தன = கோ சாலை – பசுக்கள் வாழும் இடைச்சேரியில்  தங்கள் கை வளையல்கள் குலுங்கத் தயிர் கடைகிறார்கள்!
கடைவது பாலை! அப்படிக் கடைந்தால் வருவது தயிர்!
அப்படியிருக்க தயிர் கடைகிறார்கள் என்று எப்படிச் சொல்லலாம்?
பால் கடைகிறார்கள் என்று அல்லவா சொல்ல வேண்டும்? – இதற்கு ஒரு இலக்கணக் குறிப்பு கூட இருக்கு தமிழில்!

பெரிய கடலைக் கடைந்த போதே தாங்கி நின்ற பரம்பொருள், இன்று ஆயர் சேரியில், சிறிய தயிரைக் கடையும் போதும், தாங்கி நிற்கிறான்!

தீவ்ர கோஷா = தீவிரமான கோஷம் – தயிர் கடையும் பெரும் சப்தம் எழுகிறது!
சாதாரண தயிர் கடையும் விஷயம் – அது எப்படிப் பெரும் சத்தம் எழும்?
ஆய்ச்சியர் மத்தினால், ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?” என்ற ஆண்டாளின் பாசுரத்தை நினைவிற் கொள்ளுங்கள்!
விடியற் காலை; திருமலை மீது;
அப்போதெல்லாம் மலை மேல் ஆள் அரவம் அதிகம் இல்லை போலும்! அதனால் தான் தயிர் அரவம் அதிகம் கேட்கிறது!

கிராமத்தில் பெரிய பானைகளில் கடைவதைப் பார்த்திருந்தாலோ, கேட்டிருந்தாலோ தெரியும்! பெரிய பானையைத் தூணை ஒட்டி வைத்து,
தூணில் பெரிய மத்தை நாணல் கயிற்றினால் கட்டி, அதைக் கடையும் போது,
கர்..கர்…கர்ர்ர்….கர்ர்ர்ர் என்று பெரும் சத்தம் எழும்பும்…கேட்டு மகிழ்ந்துள்ளீர்களா?
(மிக்சியில் விப்பிங் ப்ளேடு போடு, விப் செய்தால் இதை விடச் சத்தம் கூடுதலாக வரும் என்று யாரோ சொல்வது காதில் விழுகிறதே:-)

ரோஷாத் கலிம் விததே = இந்தப் பெரும் ஒலி, எங்கும் பரவி எதிரொலிக்கிறது!
ககுபஸ்ச கும்பா = பானையின் ஒலி, மலையின் மேல் முழங்குகிறது!
பெருமாளே! இதைக் கேட்டுமா, நீ இன்னும் எழாமல் இருக்கிறாய்?

சேஷாத்ரி சேகரவிபோ = சேஷ மலைச் சிகரத்துக்கு அரசனே!
தவ சுப்ரபாதம் = இனிய காலை வணக்கங்கள்!திருப்பள்ளி எழுவாயாக!!

————–

பத்மேச மித்ர சதபத்ர கதாலி வர்க்கா
ஹர்த்தும் ச்ரியம் குவலயஸ்ய நிஜாங்க லக்ஷ்ம்யா
பேரீ நிநாத மிவ பீப்ரதி தீவ்ர நாதம்
சேஷாத்ரி சேகர விபோ தவ சுப்ரபாதம்

பத்மேச மித்ர = தாமரைப் பூவின் (பத்மம்) நட்புக்குப் பாத்திரமான வண்டு

குவலயஸ்ய = குவளைப் பூ
கருநீல நிறத்தில் இருக்கும் குவளை மலர்! பார்ப்பதற்கு அதுவும் வண்டின் நிறம் போலவே உள்ளது! அதைப் பார்த்து வண்டு பொறாமை கொள்கிறது. பகைமை கொள்கிறது!
“எனக்குப் போட்டியாக, அதே நீலமா?” என்ற முணுமுணுப்பு…சிறிது நேரத்திலேயே ரீங்கார ஒலியாகி…பெரும் சப்தம்!

பேரீ நிநாத மிவ = பேரிகை (முரசு) கொட்டுவது போல
பீப்ரதி தீவ்ர நாதம் = பெரும் ஓசை, தீவிரமான நாத சத்தம்
வண்டுகள் எல்லாம் தங்கள் நீலமே, குவளையின் நீலத்தை விட அழகாக இருக்கிறது என்று பொறாமைக் கீதங்கள் பாடுகின்றன.
அடே நீல வண்ணா! பாவம் அவற்றுக்குத் தெரியவில்லை போலும்,
உன் நீலம் ஒன்றும் உலகத்தில் உள்ளது என்று! அந்த நீல மேக சியாமளத்தின் முன் வேறு எந்த நீலமும் நிற்க முடியுமா என்ன?

பெருமாளே! இன்னுமா எழவில்லை?
இனித் தான் எழுந்திராய்…ஈதென்ன பேர் உறக்கம்?
வண்டுகளுக்கும், தாமரைப் பூக்களுக்கும் நடக்கும் இந்த ஊடலைத் தீர்த்து வைக்கவாவது…சீக்கிரம் எழுந்திருப்பாயாக!

சேஷாத்ரி சேகரவிபோ = சேஷ மலைச் சிகரத்துக்கு அரசனே!
தவ சுப்ரபாதம் = இனிய காலை வணக்கங்கள்!திருப்பள்ளி எழுவாயாக!!
சு+ப்ரபாதம் = உனக்கும், அதனால் எங்களுக்கும் சுகமான காலைப் பொழுதாக மலரட்டும்.

—————

ஸ்ரீ மந் அபீஷ்ட வரதாகில லோக பந்தோ
ஸ்ரீ ஸ்ரீநிவாச ஜகதேக தயைக சிந்தோ
ஸ்ரீ தேவதா க்ருஹ புஜாந்தர திவ்ய மூர்த்தே
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்

ஸ்ரீ மந் = ஸ்ரீ(மகாலக்ஷ்மி); அவளின் மனத்துக்கு இனியவனே!
Sweet Heart-ன்னு கேள்விப்பட்டு இருக்கீங்களா? அதான் ஸ்ரீமன் 🙂
இந்த Sweet Heart-க்கு அப்படியே நேரான தமிழ்ப் பதத்தை ஆண்டாள் -மனத்துக்கு இனியான் என்கிறாள்-

அபீஷ்ட வரத = விருப்பங்களை நிறைவேற்றுபவனே!
அபீஷ்டம்=விருப்பம். நியாயமான நல்ல விருப்பங்கள். மற்றை நம் காமங்கள் அல்லாத விருப்பங்கள்…
இப்படி நம் ஆசை, விருப்பம், எண்ணங்களை எல்லாம் நிறைவேற்றி வைப்பவன் – வரம் தரும் வரதன் – நாம் வந்த காரியம் ஆராய்ந்து அருளுபவன்!

அகில லோக பந்தோ = எல்லா உலகத்துக்கும் உறவுக்காரனே
எல்லா உலகம் என்று ஏன் சொல்ல வேண்டும்?
தேவர்-அசுரர் என்றோ, மேலோர்-கீழோர் என்றோ, பணக்காரன்-ஏழை என்றோ, படித்தவர்-பாமரர் என்றோ, சாதி-மதம் என்றோ எந்தவொரு வேற்றுமையும் அவனுக்குக் கிடையாது!
வேற்றுமை நம்மிடத்தில் தான்! நாம் பார்க்கும் பார்வையில் தான்!
அவனோ கண்ணாடி போல!
எதுவாகப் பார்க்கிறோமோ, அதுவாகவே தெரிகிறான்! அகலில் அகலும்…அணுகில் அணுகும்…

ஸ்ரீ ஸ்ரீநிவாச = திரு-மாலே! ஸ்ரீநிவாசா
ஸ்ரீநிவாசன் என்பது மிகவும் முக்கியமான திருநாமம்..
பொதுவா அம்மாவுக்கு ஒரு பெயர் இருக்கும். அப்பாவுக்கு ஒரு பெயர் இருக்கும்! அம்மையப்பன் இருவருக்கும் சேர்த்து ஒரே பெயராக இருக்குமா? இருக்கே! அதுவே திரு-மால்! ஸ்ரீ-நிவாசன்!

“பிரம்மநி ஸ்ரீநிவாசே” என்பது இராமானுசரின் ஸ்ரீபாஷ்யம்!
பரப்பிரும்மம் (பரம்பொருள்) யார் என்றால், அது ஸ்ரீநிவாசன் தான் என்று அவர் நிர்ணயம் செய்கிறார்! அவர் மட்டுமில்லை!
ஆதிசங்கரர், மத்வர், வல்லபர் போன்ற பலப்பல ஆச்சாரியர்களும் வேறு வேறு மார்க்கங்களைக் காட்டினாலும், நாராயணனே பரப்பிரும்மம் என்று ஒருமுகமாகச் சொல்கிறார்கள்!
“நாராயண பரோ வக்யாத்” என்று தான் ஆதிசங்கரரின் பாஷ்யமே தொடங்குகிறது! “நாரயணஹ, பரஹ” என்று முத்தாய்ப்பாகச் சொல்கிறார்!

ஜகத் ஏக தயைக சிந்தோ = அனைத்து உலகுக்கும் கருணை சிந்துபவன் நீ ஒருவனே!
தயை=கருணை! தயா சிந்து=கருணைக் கடல்!
உலகத்துக்குக் கடல் தான் காப்பு! கடலில் நடக்கும் நிகழ்வுகளால் தான் உலகம் ஒரே சீராக இயங்குகிறது!
நீராரும் கடல் உடுத்த நில மடந்தை! விரிதிரை முந்நீர் உலகம் என்பதெல்லாம் தமிழ் இலக்கியம்! அதனால் தான் இறைவனைக் கடலாக உருவகிக்கிறோம்!
கடலில் இருந்து தோன்றியது எல்லாம் இறுதியில் கடலில் போய்த் தான் கலக்கிறது.
இறைவனோ கருணைக்கடல்! இருப்பதோ பாற்கடல்!

ஸ்ரீ தேவதா க்ருஹ புஜாந்தர = “ஸ்ரீ” என்று போற்றப்படும், அன்னை மகாலக்ஷ்மி உன் திருமார்பில் வசிக்கிறாள்

ஸ்ரீ மகாலக்ஷ்மிக்கு வீடு (க்ருஹம்) எது?
உன் திருமார்பே அவள் வீடு! வலப்பக்க மார்புக்கு வக்ஷ ஸ்தலம் என்றே பெயர்! அதில் அவள் நீங்காது நித்ய வாசம் செய்கின்றாள்!
ஒரு நொடிப் பொழுதும் உன்னை விட்டுப் பிரிய மாட்டாள்! மஞ்சள் குங்கும பூஷிதையாக, நித்ய சுமங்கலியாக இருக்கிறாள்! அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா!

அவள் எதற்கு திருமார்பில் போய் இருக்க வேன்டும்? அவளுக்கு வேறு இடம் கிடைக்க வில்லையா என்ன?
அடியவர்கள் வரும் போது, அவர்கள் புண்ணிய பாபக் கணக்குகளை இறைவன் பார்க்கத் தொடங்கினால் யாரேனும் மிஞ்சுவமா? அதனால் தான் அவன் இதயத்துக்கு அருகில் போய் உட்கார்ந்து கொண்டாள். நாம் அவனிடம் செல்லும் போது, நம் தவறுகள் எல்லாம் அவன் மனத்தில் உதிக்காதவாறு, அவனைக் குளிர்விக்கிறாள்!

திவ்ய மூர்த்தே = திவ்யமான அழகை உடைய தலைவா!
எத்தனையோ மூர்த்திகள் உலகில்! ராம மூர்த்தி, கிருஷ்ண மூர்த்தி, சுந்தர மூர்த்தி!
ஆனால் இவனோ திவ்ய மூர்த்தி! அழகே வெட்கப்படும் அழகன்!

ஸ்ரீ வேங்கடாசல பதே = அப்பா, திருவேங்கட மலைக்கு அதிபதியே
தவ சுப்ரபாதம் = இனிய காலை வணக்கங்கள்!திருப்பள்ளி எழுக!!

—————-

ஸ்ரீ சுவாமி புஷ்கரிணி- காப்லவ நிர்மலாங்கா
ச்ரேயோர் திநோ, ஹர விரிஞ்சி சனந்தன ஆத்யா
த்வாரே வசந்தி வரவேத்ர ஹதோத்த மாங்கா:
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்

ஸ்ரீ சுவாமி புஷ்கரிணி = ஸ்ரீ சுவாமியின் திருக் குளத்தில்
புஷ்கரிணி = குளம்; திருவேங்கடமுடையான் ஆலயத் திருக்குளத்துக்கு சுவாமி புஷ்கரிணி என்று பெயர். இதைக் குலசேகர ஆழ்வார் எவ்வளவு அழகா தமிழில் ஆக்குகிறார் பாருங்கள்!
சுவாமி+புஷ்கரிணி = கோன்+ஏரி = கோனேரி
கோனேரி ராஜபுரம் என்ற ஊர், தமிழ்நாட்டில் உண்டு.

பொதுவா வடமொழிச் சொற்களைத் தமிழில் ஆக்கும் போது, தமிழ்ப் பெயர் சற்று நீண்டு விடும் என்று சிலர் குறைபட்டுக் கொள்வார்கள்.
ஆனா இங்க பாருங்க…வடமொழியில் நீளமான பெயர்…ஆனால் தமிழில் ரத்தினச் சுருக்கமா “கோனேரி”.
வடமொழி-தமிழ் ஆக்கும் போது, நிறைய சொற்களுக்குக் கடினப்படுகிறீர்களா?
கவலைய விடுங்க! ஆழ்வார்களிடமும், குறிப்பா ஆண்டாளிடமும் தேடினாலே பாதிச் சொற்கள் கிடைத்து விடும்!

கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே என்பது ஆழ்வார் பாசுரம்.
அதாச்சும் இறைவன் திருக்குளத்துக்கு அருகிலேயே வாழும் ஒரு கொக்காய் பிறந்தால் கூட பேரின்பம் தான் என்கிறார் ஆழ்வார்!
வைகுண்டத்தில் உள்ள விரஜா நதியே கோனேரி ஆனது என்பது தாத்பர்யம்.

கா அப்பு லவ, நிர்மலா அங்கா = கோனேரி நீரைத் தெளித்துக் கொண்டு, அகமும் புறமும் தூய்மை அடைந்து
அப்பு=நீர், லவ=கொஞ்சமாக
மலம் = குற்றம்/அழுக்கு; நிர்மலம் = குற்றமின்மை
அது சரி, கோயிலுக்குப் போகணும்னா கட்டாயம் குளிச்சிட்டுத் தான் போகணுமா?

பண்டரிபுரம் பாண்டுரங்கன் ஆலயத்துக்குப் போனீங்கனா தெரியும். வடக்கத்திக்காரர்கள் அதுவும் குறிப்பா தாக்கூர்கள் கோயிலுக்குள் திபுதிபு-ன்னு ஒடி வருவாய்ங்க! சில பேர் கிட்ட வந்தா நாறும்! என்னைக்குக் குளிச்சானோ என்னமோ? 🙂
ஆனாப் பாருங்க! கோயிலில் வேற எந்த ஒரு வார்த்தையும் பேச மாட்டாங்க!
ஹே பாண்டுரங்கா, ஹே விட்டலா…ன்னு ஓடி வந்து பாண்டுரங்கன் காலில் விழுந்திடுவான்.

தீட்டு தீட்டு-ன்னு சொல்றாங்களே! அப்பிடி-ன்னா என்ன? – நம் ஐயன் வள்ளுவரும் சொல்கிறார்! கன்னடத்துக் கவி புரந்தரதாசரும் சொல்கிறார்!
குளிக்காம கோவிலுக்குப் போனா தீட்டு! – அது சரின்னே இப்போதைக்கு வைத்துக் கொள்வோம்! சரி, அங்கே போயி, கோவிலில் வம்பு பேசினா? – அதைக் காட்டிலும் இது தீட்டு! 🙂
கோவிலுக்கு மடியா போகணும் மடியாப் போகணும்-னு சொல்லிட்டு, அங்கு போய் வம்பு பேசினா? மடி மடின்னு, மடியே மடிந்து விடுகிறது! 🙂

சரி தீட்டாயிடிச்சு!…இதுக்கு எப்படி தீட்டு கழிக்கறது?
சும்மா தண்ணியில் ரெண்டு முக்கி முக்கி எழுந்துட்டா தீட்டு போயிடுமா? – இல்லவே இல்லை!
சிறப்புக் குளியல் செய்யணும்! அது என்ன சிறப்புக் குளியல்?
கோவிலில் அந்நிய வார்த்தைகளை விடுவது தான் சிறப்புக் குளியல்! உயர்ந்த ஸ்நானம், எல்லாம்!

அதைத் தான் புரந்தரதாசர், “தனுவு நீர் ஓளகத்தி பளவேனு, மனதல்லி திட பக்தி இல்லாத மனுஜனு!” என்கிறார். நம் ஐயன் வள்ளுவர் ஒரு படி மேலே போய் விடுகிறார்.
புறத்தூய்மை நீரால் அமையும் அகத்தூய்மை
வாய்மையால் காணப் படும்.
திருக்குளத்தில், கங்கையில், காவிரியில், குமரியில், எங்கு குளித்தாலும்… குளிக்கும் போது புறத்தை மட்டும் தூய்மை செய்யாமல், அகத்தையும் சேர்த்துத் தான் தூய்மை செய்ய வேண்டும்!

சரி, புறத்துக்கு சோப்பு/ஷாம்பூ போடலாம்; சில பேர் பால், பயத்தமாவு கூட பயன்படுத்தறாங்க!
ஆனா அகத்துக்கு எது சோப்பு? – இறைவனின் திருநாமம் தான் அழுக்கு நாசினி, கிருமி நாசினி, எல்லாம்!
விடியற் காலை அங்கப் பிரதிட்சணம் செய்தவர்களுக்கும், மொட்டை போட்டுக் கொள்பவர்களுக்கும் இது நல்லாத் தெரியும்!
அதிகாலைக் குளிரில் நடுங்கிக் கொண்டே, திருமலைக் குளத்தில் ஒரு முங்கு, முங்கி எழுங்க!
அதுவும் மனதாரக் “கோவிந்தா கோவிந்தா” என்று சொல்லிக் கொண்டே எழுங்க!
குளிரில் உடம்பும் நடுங்கி,
உள்ளே உள்ள பாவங்களும் நடுங்கி விடாதா என்ன?

ச்ரேய ஆர்த்திநோ = பரிபூர்ணமான நலமுடன் வாழ வேண்டிக் கொண்டு ஆனந்தமும் நலமும் கிடைக்க வேண்டிக் கொண்டு,
ஆனந்த நிலையத்தில், யார் யார் எல்லாம் காத்திருக்கிறார்கள்?

ஹர, விரிஞ்சி, சனந்தன ஆத்யா = சிவன், பிரம்மன், சனந்தனர் முதலான மகரிஷிகள்
ஹரன் = சிவபெருமான்
விரிஞ்சி = பிரம்மன் (ஜனனி ஜனனி பாடலில் கூட ஹரி ஹர விரிஞ்சி-ன்னு ஒரு வரி வரும்) சனந்தன ஆத்யா = சனகாதி முனிவர்கள்;
சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்ற நால்வரும் வயதில் இளைய ரிஷிகள். ஆனால் பக்தியும் ஞானமும் ஒருங்கே கைவரப் பெற்றவர்கள்!
இதில் சனத்குமாரர் கார்த்திகேயனான முருகப் பெருமானின் அம்சம் என்றும் சொல்லுவார்கள்.
இந்த 4 பேரால் தான்…நமக்கு 4 அவதாரங்கள் கிடைத்தது.

த்வாரே வசந்தி, = மகா துவாரம் என்னும் உன் ஆலய வாசலிலே நிற்கிறார்கள்.
(அப்போது சேனை முதலியாரின் தொண்டர்கள், தங்கள் கையில் உள்ள பொற் பிரம்பால், அனைவர் தலையின் மேலும், மெல்லிதாய் வைத்து, அனுகிரகம் செய்ய)

வர வேத்ர ஹத= பொற் பிரம்பால் தட்டி முறைப்படுத்த,

உத்தம அங்கா = அதனால் இன்னும் தூய்மை அடைகிறார்கள்!

வேத்ரம்=பிரம்பு; வர வேத்ரம்=பொற் பிரம்பு
அந்தக் காலத்தில் ஆசிரியர் என்றால் கையில என்ன இருக்கும்? – பிரம்பு!
யாராச்சும் பார்த்து இருக்கீங்களா? இல்லை அடி வாங்கித் தான் இருக்கீங்களா? 🙂
மாணவர்களை அவர் அடிக்கிறாரோ இல்லையோ, ஆனால் கையில் பிரம்புடன், வேட்டி-கோட்-தலைப்பாகை-குடை; வாயில் கணீரென்று தமிழ்ச் செய்யுள்…ஆகா! ஆகா!

பெருமாளின் படைகளுக்கு பிரதான தளபதியாய் இருப்பவர் விஷ்வக்சேனர்.
தமிழில் சேனை முதலியார் என்று போற்றுவார்கள்! விநாயகரைப் போலவே, வைணவ பூசைகளில் முதல் பூசை இவருக்குத் தான்! – இவர் தான் வைணவ சம்பிரதாயத்தில் முதல் ஆசிரியர்!
பெருமாள் தாயாருக்கு உபதேசிக்க, தாயார் நம் மீது உள்ள கருணையால் இவருக்கு உபதேசம் செய்து வைத்தார்! – இவரே தலைமை ஆசிரியர்! நம்மாழ்வாரின் குரு!

அந்தக் குருவின் கையில் பொற் பிரம்பு!
அந்தப் பிரம்பில் இருந்து எழும் இனிய நாதம்!…
என்னது பிரம்பில் இருந்து இசையா? நம்ப முடிய வில்லையா? பிரம்பைக் காற்றில் வீசிப் பாருங்க…தெரியும்! 🙂
மெல்லிசைக் கச்சேரிகளில், வாத்தியங்களுக்கு முன்பு நின்று கொண்டு ஒரு மனுஷர் கையில் பிரம்பை வைத்து அப்படியும் இப்படியும் ஆட்டுவார்! – music conductor

நாம் நினைப்போம் – இந்த மனுஷன் ஒன்னுமே செய்யாம, சும்மா பந்தா கட்டுகிறாரே என்று! ஆனால் அத்தனை வாத்தியங்களின் நாதமும் ஒருங்கே சுருதி சேர்ந்து ஒன்றாய் ஒலிக்கிறது என்றால், அதற்கு இவரே காரணம்.
அதே போலத் தான், உயிர்கள் எல்லாம் பல பாதைகளில் சென்றாலும்,
எம்பெருமானின் திருநாமம் என்னும் நாத இன்பத்தை எல்லா உயிர்களும் ஒருங்கே அடைய, பிரம்பை வீசுகிறார் விஷ்வக்சேனர்!

அவருடைய சேனைகள் கையிலும் பொற்பிரம்பு இருக்கிறது!….எதற்கு?
கோயிலுக்கு வருபவர்களை எல்லாம் அடித்து விளாசவா? இல்லையில்லை! 🙂

வானவர்களை எல்லாம் தலையில் பொற்பிரம்பால் தொட்டு, தரிசனத்துக்கு, ஒவ்வொருவராக அனுப்பி வைக்கிறார்கள்! அப்படி பிரம்போசையால் ஏற்படும் ஓங்காரம், யார் எந்த மன நிலையில் இருந்தாலும், அதை எல்லாம் விலக்கி,
பரம்பொருள் ஒருவனையே நெஞ்சில் நிறைத்து விடுகிறது! – ஆனாப் பாருங்க, வானவர்களுக்கு மட்டும் தான் இந்த “அடி”! நமக்கு இல்லை – ஏன் இப்படி? 🙂

தானம் தவம் செய்த முனிவர்கள், வானவர்கள் எல்லாரையும் கீழே இறக்குகிறார் பெருமாள்!
பாவங்கள் புரியும் நம்மையோ மேலே ஏற்றுகிறார்!

மேலோர் எல்லாரும் அவரவர் நிலையில் இருந்து கீழிறங்கி திருமலைக்கு வருகிறார்கள், பெருமாளின் திருமேனி செளந்தர்யம் என்னும் வடிவழகைச் சேவிக்க!
நாமோ, ஒன்றுமே செய்யாமல், மேலேறிச் செல்கிறோம், மேல்நிலையை அடைய! – இது தான் இறைவனின் கேழில் பரங்கருணை!

இப்பேர்ப்பட்ட எம்பெருமானைப் பார்த்துப் பார்த்து அனுபவிக்க வந்துள்ளார்கள்…
கயிலை நாதன் சிவபெருமான்
சத்யலோக நாதன் பிரம்மா
தமிழ்வேள் முருகப் பெருமான்
சனகாதி முனிவர்கள்
….
எல்லாரும் வந்து, பங்காரு வாகிலியில் உன்னைச் சேவிக்க நிற்கிறார்கள்!
ஆவல் மிகுதியால் எட்டி எட்டிப் பார்க்கிறார்கள்…
பெருமாளின் வடிவழகைக் அப்படியே கண்களால் உறிஞ்சிப் பருகுவதற்கு!

துவார பாலகர்கள், இவர்கள் ஆவலை எல்லாம் முறைப்படுத்தி,
ஓங்காரப் பிரம்போசையால் மனம் ஒன்றச் செய்து, தரிசனத்துக்கு வழிவகை செய்து வைக்க…
என் அப்பனே, திருவேங்கடமுடையானே…
சிவபெருமானின் அன்பை பெற்றுக் கொள்ளவும்,
சண்முகனின் அன்பைப் பெற்றுக் கொள்ளவும்,
பிரம்ம சனகாதிகள் அன்பைப் பெற்றுக் கொள்ளவும்…..சீக்கிரமாகத் திருப்பள்ளி எழுவாயே!

ஸ்ரீ வேங்கடாசல பதே = அப்பா, திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = இனிய காலை வணக்கங்கள்!திருப்பள்ளி எழுக!!

————–

ஸ்ரீ சேஷசைல கருடாசல வேங்கடாத்ரி
நாராயணாத்ரி வ்ருஷபாத்ரி வ்ருஷாத்ரி முக்யாம்
ஆக்யாம் த்வதீய வசதே ரநிசம் வதந்தி
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

1. சேஷாசலம்
2. கருடாசலம்
3. வேங்கட மலை – வேங்கடாசலம் (அசலம்=மலை)
4. நாராயணாத்ரி (அத்ரி=மலை)
5. விருஷபாத்ரி
6. விருஷாத்ரி என்னும் வேதாத்ரி
7. அஞ்சனாத்ரி

ஸ்ரீ சேஷசைல கருடாசல வேங்கடாத்ரி
நாராயணாத்ரி வ்ருஷபாத்ரி வ்ருஷாத்ரி முக்யாம்
= என்ற இந்த ஏழு மலைகளில்

1. சேஷாசலம் = ஆதிசேஷனே மலை ரூபமாய் பெருமாளைத் தாங்குவதாக ஐதீகம். அவன் ஏழு தலைகளே (ஏழு படங்களே) ஏழு மலைகள்.
அவன் உடல்=அகோபிலம்- நரசிம்மர் ஆலயம், வால்=ஸ்ரீசைலம்- மல்லிகார்ஜூன சிவாலயம்.
சேஷனையும் பெருமாளையும் பிரிக்கவே முடியாது. அப்படி ஒரு பந்தம்!
நின்றால் குடையாம், இருந்தால் சிங்காதனமாம், நடந்தால் மரவடியாம் என்பார்கள். தாயாரையும் பெருமாளையும் அப்படி ஒரு தாங்கு தாங்குபவன்.
அவனுக்குத் தெரியாமல், பெருமாளும் தாயாரும் தனித்துப் பேசக்கூட முடியுமோ என்னவோ? 🙂

குன்றின் மேல் கல்லாக நிற்கின்றாய் கண்ணா என்று பாடலில் வருமே! அது போல், கல்லாய் மாறிக், கலியுக வரதனாய் வேங்கடத்தில் நிற்க திருவுள்ளம் கொண்டான் இறைவன். அவன் குறிப்பறிந்து ஆதிசேடனும் உடனே கல்லாய், மலையாய் மாறிவிட்டான்.
எள் என்று நினைத்தான் பரமன். ஆனால் எண்ணெயாய் வந்து நின்றான் தொண்டன். இது தான் கைங்கர்ய லட்சணம் என்பார்கள் ஆசாரியர்கள்!

கைங்கர்யம் (தொண்டு) எப்படி செய்ய வேண்டும் என்றால் ஆதிசேடனைத் தான் கேட்க வேண்டும். அவன் தானே இளைய ஆழ்வாராய் (இலக்குவனாய்) வந்தது! அது போதாதென்று, கைங்கர்ய லட்சுமி முகத்தில் தவழ, இராமானுசராகவும், மணவாள மாமுனிகளாகவும் வந்தது!
திருமலையைப் பொறுத்தவரை பெருமாளுக்கும், ஏன் வராக சுவாமிக்கும் கூட சீனியர் நம்ம ஆதிசேடன்!

அதனால் தான் எல்லா வாகனங்களுக்கும் முதல் வாகனம் சேஷ வாகனம்! (பெத்த சேஷ வாகனம்). ஆழ்வார்கள் தங்கள் பாதம் சேஷன் மேல் பட்டு, மலை ஏறவும் அஞ்சினார்கள். “வெறும்” மலையைத் தொழுதாலே “பெரும்” பாவங்களும் தீரும் என்றார்கள்!
சேஷாசலம், சேஷமலை, சேஷாத்ரி, சேஷகிரி எல்லாமே நம்ம சேஷன் தான்!

2. கருடாசலம் = பெரிய திருவடி கருடன்! கருடனைப் பற்றி! அவன் பெயரில் உள்ள மலை தான் கருடாசலம், கருடாத்ரி, கருடமலை!
கருடன் தான் இந்த சேஷாசலத்தை, வைகுண்டத்தில் இருந்து திருமலையில் இறக்கியதாகத் தலபுராணம் பேசும்.

மேலும் கோவிலின் அருகில் உள்ள கோனேரியை (திருக்குளத்தை), கருடன் தான் வைகுண்டத்து விரஜா நதியில் இருந்து உருவாக்கினான்! பிரம்மோற்சவத்திலும் கருடனின் கொடி தான் முதலில் ஏற்றப்படுகிறது! கொடிமரத்தையும் (துவஜ ஸ்தம்பம்), கருட கம்பம் என்றே சொல்கிறார்கள்.

கருடனும், சேஷனும் உலகத்தைப் பொறுத்தவரை எதிரெதிர் நிலைகள் (Pair of Opposites) !
ஆனால் பாருங்கள், இறைவனிடத்தில் இருவரும் ஒன்றாக இணைந்து விடுகிறார்கள். இது தான் பெருமாளின் செளந்தர்ய செளபாக்கிய லட்சணம்.

குணங்களை எல்லாம் கடந்தவன், எதிரெதிர் குணங்களையும் எப்படி ஒன்றாக இணைத்துக் கொள்கிறான் பாருங்கள்! இது கண்ணனுக்குக் கை வந்த கலை அல்லவா?
(ஓரே டீமில் ஒரே மேலாளரின் கீழ், Tester-Developer / கணக்காளர்-தணிக்கையாளர், என்று oppositeகள் இருக்கும் சங்கடம், பாவம் அந்தந்த மேலாளர்களுக்குத் தான் தெரியும் 🙂
கண்ணன் தான் உலகத்தின் தலை சிறந்த மேலாளன் அல்லவா?

3. வேங்கடாசலம் – பிறவிக் கடன்களைத் தீர்க்கும் மலை வேங்கட மலை! இறைவனுக்கே இந்த மலையின் பெயரைத் தான் வழங்குகிறார்கள்! வேங்கடாசலபதி, வேங்கடமுடையான், வேங்கடேஸ்வரன், வேங்கடத்துறைவார், வேங்கடத்து அண்ணல்!
சென்று சேர் திரு வேங்கட மாமலை,
ஒன்றுமே தொழ நம் வினை ஒயுமே!
இந்த மலையின் மேல் தான், நாம் காணும் ஆலயம் அமைந்துள்ளது! ஆனந்த நிலைய விமானம் அமைந்துள்ள மலை என்பதால் ஆனந்தாத்ரி என்றும் வழங்கப்படும்!

4. நாராயணாத்ரி = அஷ்டாட்சரம் என்னும் திருவெட்டு எழுத்து “ஓம் நமோ நாராயணாய”!
அதன் பொருள் மிகவும் ஆழமானது. குருவின் வார்த்தையை மீறி, இராமானுசர் ஊருக்கே உபதேசம் செய்து வைத்தது! , பிரணவத்தை இந்த மந்திரத்தில் இருந்து பிரிக்கவே முடியாது! அப்படி ஓங்கார ஸ்வரூபமாக இருப்பது! மந்திரங்களுக்கு எல்லாம் மகா மந்திரம், மந்திர ராஜ பதம் = திருவெட்டெழுத்து!

இதை விளக்கி நிற்கும் கோலம் தான், திருமலை மேல் நாம் எல்லாரும் பார்த்து மனம் பறிகொடுக்கும் கோலம்! 
ஓம் நமோ நாராயணாய என்பதற்கு விளக்கமாகத் தான் வேங்கடவன் நிற்கிறான்!
அதனால் மலைக்கு ஒரு பெயர் நாராயணாத்ரி. நாராயண மலை!

5. விருஷபாத்ரி = விருஷபாசுரன் என்னும் அரக்கனுக்கு மாட்டுத் தலை. பாவம், ஆணவக் கொம்பும் முளைத்து விட்டது. அவன் பெருமாள், ஈஸ்வரன் இருவருக்குமே பக்தன் தான்! ஆனால் எல்லாரையும் அடக்கியவனுக்கு, இனி மேல் அடக்க யாரும் இல்லையே என்ற கவலை! நாரதர் தூண்டி விட, பெருமாளையே போருக்கு அழைக்கிறான்.

தான் வணங்கிய தெய்வம் என்பதைக் கூட மறக்கும் அளவுக்கு அதிகாரப் பேராசை, தோள் தினவு எடுக்கிறது! மல்லாண்ட திண் தோள் மணிவண்ணன் என்பதை மறந்து அகலக்கால் வைத்து விட்டான். அடிபட்டு மாண்டான்!
அணைத்துத் திருத்துதல் சரிவராத போது, அடித்துத் திருத்தும் தாய் போல், பழைய பக்தனை அடித்து வீட்டுக்குள் சேர்த்துக் கொண்டார். அவன் வேண்டுகோளுக்கு இணங்க, அவன் பெயரே அமைந்து விட்டது மலைக்கு! இது தான் நாம் தற்காலத்தில் முதலில் ஏறும் மலை!

6. விருஷாத்ரி = விருஷம் என்பதற்கு தர்மம் என்றும் பொருள் உண்டு! விருஷபம் (காளை) என்றும் பொருள் உண்டு. ஏற்கனவே விருஷபாத்ரியைப் பார்த்து விட்டோம்.
அதனால் இது விருஷாத்ரி தான்! மேலும் இதற்கு வேதாத்ரி என்ற இன்னொரு பெயரும் உண்டு! தர்மத்தைப் போதிக்கும் வேதங்கள் ஒலிக்கும் மலை. ஆதலால் இது தர்மாத்ரி, வேதாத்ரி, விருஷாத்ரி!

7. அஞ்சனாத்ரி = இந்த சுலோகத்தில், இம்மலை பற்றி நேரடியாகக் குறிப்பில்லை! ஆனால் “முக்யாம்” என்று வருகிறது! முக்யாம் என்றால் யார்? முக்யப் பிராணன் என்று கன்னடர்கள் ஒரு தெய்வத்துக்கு ஊரெங்கும் கோவில் கட்டுவார்கள்! முக்ய மந்திரியாய் இருப்பவன்!
யார் என்று தெரிகிறதா? – அனுமன்!

அவன் திருமலையில் தான் அஞ்சனைக்கும்-கேசரிவர்மனுக்கும், வாயுவின் அம்சமாகப் பிறந்தான்! அஞ்சனையின் புதல்வன் ஆஞ்சநேயன்! அஞ்சனாத்ரி! அஞ்சனை மலை!
அனுமனின் சொந்த ஊர் திருமலை திருப்பதி!

இப்படிக் கருடாத்ரி-அஞ்சனாத்ரி என்று பெரிய திருவடி-சிறிய திருவடி இருவருமே, திருமலையில் உள்ளார்கள்! பொதுவாக கருடன் சிலை மட்டும் தான் பெருமாளின் முன் கைகூப்பி இருக்கும்! இங்கு இருவருமே கைகூப்பி உள்ளார்கள்!
கோபுரத்துக்கு வெளியே “பெடி ஆஞ்சனேயர்” சன்னிதி உள்ளது. பெத்த ஆஞ்சநேயர் என்றும் அழைக்கிறார்கள். இவரும் கைகள் குவித்து கருடனைப் போலவே நிற்கிறார்.

அவர் கைகளில் பெடி என்னும் சங்கிலிக் கயிறு கட்டப்பட்டுள்ளது! தெய்வத்தை வணங்காமல், விளையாட்டும் துடுக்குமாய் திரிகிறானே என்று நினைத்தாள் அஞ்சனா தேவி; குழந்தையின் கைகளை வணங்குவது போல் குவிக்கச் சொல்லி, கட்டி விடுகிறாள்! அதுவே நாம் காணும் திருக்கோலம்!
நைவேத்தியம் கூட முதலில் வராகருக்கும், பின்னர் பெருமாளுக்கும் நடக்கிறது. அதன் பின், “குழந்தை” அனுமன் என்பதால் இவருக்கு எடுத்துக் கொண்டு ஓடி வருகிறார்கள். அதன் பின்னர் தான் பெருமாளுக்கே சாத்துமுறை, மற்ற பரிவாரத் தெய்வங்களுக்கு எல்லாம் நைவேத்தியம் நடக்கிறது!

ஆக்யாம் த்வதீய = உன்(த்வ) பாடல்களைப் பாடிக்கொண்டும், கதைகளைச் சொல்லிக் கொண்டும்

வசதே ரநிசம் வதந்தி = ஆங்காங்கு தங்கி, இளைப்பாறி, உன்னைப் பற்றியே பேசிக்கொண்டு மலையேறுகிறார்கள்

மலை ஏறும் போது, எப்படி ஏற வேண்டும் என்பதைச் சொல்லாமல் சொல்லுறாங்க இந்தச் சுலோகத்தில்! பெருமாள் சன்னிதானத்தில் சினிமாக் கதைகள் பேசுவோமா? அதே போன்ற உணர்வுடன் தான் மலையும் ஏற வேண்டுமாம்!
வெறும் மலையாய் இருந்தால் வீட்டுக் கதைகள் பேசிக் கொண்டும், வம்பிழுத்துக் கொண்டும் ஏறலாம்! ஆனால் இது சாதாரணக் கல் மலையா? சாளக்கிராம மலை அல்லவா! பல யோகிகளும் சித்தர்களும் காவல் தெய்வங்களும் மலைமேல் யோக நிஷ்டையில் இருப்பதாக ஐதீகம்! அதான் இப்படி!

எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே என்கிறார் ஆழ்வார்!
இந்த மலையில் ஏதாச்சும் ஒன்னாய் நான் ஆக மாட்டேனா? என்று உருகுகிறார் என்றால், அது என்ன சும்மானாங்காட்டியும் மலையா? ஆதிசேஷனே ஆன மலை அல்லவா?
அதான் இத்தனை நியமங்கள்! இத்தனை விதிகள்!
வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்து, உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ என்று ஆங்காங்கு தங்கி, இளைப்பாறி மலை ஏற வேண்டும்! அதுவே யாத்திரை!

நம் வீட்டுக்கு ஒரு அன்பானவர் வருகிறார் என்றால் வழக்கத்தை விடக் கொஞ்சம் சீக்கிரம் எழுந்து கொள்ள மாட்டோமா? அது போல் உன் அன்பான பக்தர்கள் எல்லாம் “ஆபத் பாந்தவா, அனாத ரட்சகா, கோவிந்தா கோவிந்தா” என்று பாடிக் கொண்டு வருகிறார்கள்! இன்னும் சற்று நேரத்தில் வந்து விடுவார்களே தரிசனத்துக்கு! இன்னுமா உறக்கம்? எழுந்திரப்பா ஸ்ரீநிவாசா!

ஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!

————

சேவாபரா: சிவ சுரேஷ க்ருசானு தர்ம
ரக்ஷோம்பு நாத பவமான தனாதி நாதா
பத்தாஞ்ஜலி ப்ரவிலசந் நிஐ சீர்ஷ தேசா:
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

சேவாபரா = கைங்கர்ய செய்யும் சேவாபாரர்கள் எல்லாம் உன் சேவைக்கு காத்துள்ளனர்!
– யாரெல்லாம் காத்துள்ளனர்?
அஷ்ட திக் பாலகர்கள் என்று சொல்லப்படும் எண் திசைக் காவலர்கள்! இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திசை! வாஸ்து சாஸ்திரத்தில் மிகவும் காணப்படும் இவர்களைப் பற்றிய குறிப்புகள்!
திருமலைக் கோவிலில் அமைந்தது போன்று வாஸ்து, உலகில் வேறு யார்க்கும் அமையுமா தெரியாது! அவ்வளவு கச்சிதம்!
பெருமாள் கலியுக வரதனாக, பூலோகத்தில் மலைக் குனிய நிற்கப் போகிறார் என்று ஆனது! உடனே, திசைக் காவலர்கள் எல்லாம் அவருடன் வந்து அந்தந்த இடங்களில் நின்று விட்டார்கள்! இப்படித் தெய்வங்களே வந்து திசையில் நின்று விட்டால் சொல்லவும் வேண்டுமோ?

உண்டியல் இருக்கும் இடம் = குபேர மூலை, வடக்கு!
மடப்பள்ளி = அக்னி மூலை, தென் கிழக்கு
திருமஞ்சனக் கிணறு = மேற்கு, வருண மூலை
குரு ராமானுசர் சன்னிதி = தெற்கு பார்த்து, குரு பகவான் ரூபமாய் உள்ளது!
ஆலயம் = கிழக்கு பார்த்து உள்ளது, இந்திர மூலை!
பெருமாளின் காலடியில் சந்திர கலை = சோதிடத்தில் சந்திர தோஷப் பரிகாரத் தலம்!
இப்படிப் பல பொருத்தங்கள் கச்சிதமாய் அமைந்து விட்டன.

சிவ = ஈசானன்
சுரேஷ = இந்திரன் (சுரர்களின்/தேவர்களின் ஈசன் = சுரேஷன்)
க்ருசானு =அக்னி
தர்ம ரக்ஷோ = யம தர்ம ராஜன்
அம்பு நாத = வருண தேவன் (அம்பு/அப்பு=நீர்)
பவமான = வாயு தேவன்
தனாதி நாதா = தனங்களின் தலைவன், குபேரன்

இந்திரன் = கிழக்கு
அக்னி = தென் கிழக்கு
யமன் = தெற்கு
நிருதி = தென் மேற்கு
வருணன் = மேற்கு
வாயு = வட மேற்கு
குபேரன் = வடக்கு
ஈசானன் = வட கிழக்கு

இப்படி எண் திசைக் காவலர்களும் நிற்கிறார்கள். ஆலயத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இந்த எட்டு பேருக்கும் அந்தந்த திசையில் பலி பீடங்கள் உள்ளன. சுவாமிக்கு நிவேதனம் செய்த பின்னர், இந்த அஷ்ட திக் பாலகருக்கும் அன்ன பலி சார்த்தப்படுகிறது! ஒவ்வொரு வீதியுலாவின் போதும் பெருமாள் அந்தந்த திசைகளில் (மொத்தம் எட்டு இடத்தில்) நிற்பார். அப்போது அவர்களுக்கும் சேர்த்தே ஆரத்தி காட்டப்படுகிறது! – இப்படி தன் பரிவாரங்களையும் அன்போடு அரவணைத்து நடத்தும் பேரரசனாக விளங்குகிறார் மலையப்பன்!

பத்தாஞ்ஜலி = கூப்பிய கரங்களை எடுக்காது, கூப்பியபடியே, அஞ்சலி செய்து கொண்டு
ப்ரவிலசந் = மிகவும் ஆனந்தமாக
நிஐ சீர்ஷ தேசா = பெருமைக்குரிய திசை/தேச அதிபதிகள் உன்னைச் சேவித்து மகிழக் காத்துள்ளனர். திசைகள் மட்டுமா சேவிக்கின்றன? நாட்டின் பலப்பல திசைகளில் இருந்து பல தரப்பட்ட மக்களும் அல்லவா குவிகிறார்கள், அவனின் திருமேனியைப் பருகவும், தரிசன செளபாக்கியத்தில் உருகவும் சதா சர்வ காலமும் வந்து கொண்டே இருக்கிறார்களே!
பஞ்சாபிலும் இருந்து வருவார்கள், அசாமிலும் இருந்து வருவார்கள்!
காஷ்மீரம், தில்லி என்று வடக்கும், கல்லிடைக்குறிச்சி தெற்கும் சமன்படும் இடம் அல்லவா திருமலை! வடக்கும் வாழ்கிறது; தெற்கும் வாழ்கிறது!!

ஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!

—————-

தாடீஷூதே விஹக ராஜ மிருகாதி ராஜ
நாகாதி ராஜ கஜ ராஜ ஹயாதி ராஜா
ஸ்வஸ்வ அதிகார மஹி மாதிகம் அர்தயந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

தாடீ ஷூதே = கோவிலின் வழித் தடத்தில் (ராஜ வீதிகளில்)
திசைக் காவலர்கள் போலவே, ஒவ்வொரு உயிரினத்தின் தலைமையும் அல்லவா தலைவனை வழிபடுகிறது!

விஹக ராஜ = பட்சி ராஜனாகிய கருடன்
மிருகாதி ராஜ = மிருக ராஜனாகிய சிங்கம்
நாகாதி ராஜ = நாக ராஜனாகிய சேஷன்
கஜ ராஜ = கஜ ராஜனாகிய கஜேந்திரன் (ஐராவதம்)
ஹயாதி ராஜ = குதிரை ராஜனாகிய உச்சைசிரவஸ்

இந்த ஐந்தும் பிரம்மோற்சவத்தில் வாகனங்களும் கூட!
பொதுவாக நடை அழகு, வடை அழகு, குடை அழகு என்பார்கள்!
திருவரங்கத்தில் நடை அழகும், திருப்பதியில் வடை அழகும், காஞ்சிபுரத்தில் குடை அழகும் பிரசித்தம்!

அது என்ன நடை அழகு?
சுவாமியை வாகனத்தில் எழுந்தருளப் பண்ணி, அவனைச் சுமந்து வருவோர்க்கு ஸ்ரீபாதம் தாங்கிகள் என்று பெயர்! இவர்கள் அந்தணர் குலம் மட்டும் அலலாது, பல குலமும் சேர்ந்தவர்கள்.
இவர்கள் பாதங்களை வீதிகளில் பெண்கள் நீரூற்றுவார்கள்! மலர் இடுவார்கள்!
திருவரங்கத்தில் இராமானுசர் கட்டளைப்படி, அர்ச்சகர் இவர்கள் அனைவரையும் வணங்கி, மாலை பரிவட்ட மரியாதைகள் செய்ய வேண்டும்! – இப்படியாக, பெருமாள் கோவில்களில் சாதிப் பாகுபாடுகள் என்பது காண்தலே அரிது!

இவ்வாறு பெருமாளைத் தூக்கி வரும் போது, ஒவ்வொரு சமயத்துக்கும் ஒரு நடை உள்ளது. அதற்கு ஏற்றாற் போல் தமிழ்ப் பாடல்களும், ராகங்களும் உள்ளன! அதை நாதசுரத்தில் வாசிக்கும் போது, அதுவும் மல்லாரியாக வாசிக்கும் போது, நாத்திகனும் நடனம் ஆடுவான்! அப்படி ஒரு இசை!

கருட சேவையின் போதும், ஆஸ்தானத்தின் போதும் கருட நடை – கருடத்வனி ராகம்! அப்படியே தொம் தொம் தொம்மென்று குதித்து பறப்பது போலவே இருக்கும்! மாலை ஆட, மலை ஆட, குடை ஆட, குணவன் ஆட…..அழகோ அழகு!
சுவாமிக்கும் தாயாருக்கும் நடக்கும் மட்டையடி ஊடல் சண்டையில் – சர்ப்ப நடை. பாம்பு ஊர்வது போல் சத்தமே இல்லாமல் போவான் கள்ளன்!

சித்திரை விழாக்களில் கம்பீரச் சிம்ம நடை! சிங்க நடை போட்டு, திருமலைச் சிகரத்தில் ஏறு!
மாலை உலாக்களில் கஜ நடை! எதையும் லேசாக எடுத்துக் கொள்ளும் யானையின் ஒய்யாரம்!
தேரின் போது அஸ்வ (குதிரை) நடை! ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் என்பது போல் டொக் டொக் என்று துள்ளல் நடை.

உன்றன் இந்த நடையழகைக் கண்டு, உன்னை உற்சவத்தில் அழகாகத் தூக்கிச் செல்லும் உரிமையை இன்னும் இன்னும் வேண்டுகிறார்கள்!
ஸ்வஸ்வ அதிகார = தங்கள் தங்கள் அதிகாரம், உரிமையை
மஹிமா அதிகம் = அதன் மகிமை அறிந்து, இன்னும் அதிகமாக
அர்தயந்தே = விரும்புகிறார்கள்
பட்சி, நாக, சிம்ம, கஜ, அஸ்வ ராஜர்கள்!
சிங்கத்துக்குத் தன் நடையே மறந்து போய், உன் நடையில் தன் நடையைக் கற்றுக் கொள்ள வந்துள்ளது! அதே போலத் தான் மற்ற மிருகங்களும்!
இப்படி நாலறிவு ஐந்தறிவு மிருகமெல்லாம் உன் வழி நடக்க முனையும் போது,
ஆறறிவு மனிதன் என்று தான் உன் வழியில் நடக்க கற்றுக்கொள்வானோ? – கருணை செய்யடா, கார்முகில் வண்ணா!

ஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!

————-

சூர்யேந்து பெளம புத வாக்பதி காவ்ய செளரி
ச்வர்பானு கேது திவிஷத் பரிஷத் ப்ரதானா
த்வத் தாச தாச சரமாவதி தாச தாசா
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்

நவக்கிரகங்கள் = ஒன்பது கோள்கள் முதலில் பட்டியல் போடுறாங்க
சூர்ய = சூர்யன் (ஞாயிறு)
இந்து = சந்திரன் (திங்கள்)
பெளம = செவ்வாய்
புத = புதன்
வாக்பதி = வாக்குக்கு அதிபதி பிரகஸ்பதி; அதாவது குரு (வியாழன்)
காவ்ய = காவியக் கவிதை வல்லுநர்; அதாவது சுக்கிரன் (வெள்ளி)
செளரி = சனி பகவான்
ச்வர்பானு = ராகு
கேது = கேது

திருமலையில் பெருமாளின் காலடியில் சந்திர கலை உள்ளது = சோதிடத்தில் சந்திர தோஷப் பரிகாரத் தலமாகத் திருப்பதி விளங்குகிறது!

பொதுவாக வைணவ ஆலயங்களில், நவக்கிரகங்களுக்குத் தனியாகச் சன்னிதி கிடையாது! (மதுரை கூடலழகர் ஆலயம், மற்றும் சில ஆலயங்கள் தவிர); இதனால் பெருமாள் கோவில்களில் நவக்கிரகங்களுக்கு மதிப்பில்லை என்று பொருளாகி விடாது! அங்கும் நவக்கிரகங்களைக் குறித்து பூசைகள் – பஞ்சாங்க ஸ்ரவணம், ஹோமம் எல்லாம் உண்டு தான்! சுதர்சனம் என்னும் சக்கரத்தாழ்வார் பூசையிலேயே நவக்கிரகங்களும் இடம் பெற்று விடும்!

வைணவத்தில் தாயாருக்கும் பெருமாளுக்கும் மட்டுமே பெரும் இடம் தரப்பட்டிருக்கும்!
பரிவார தேவதைகள், நித்ய சூரிகள் – இவர்களுக்கு எல்லாம் தனியாகச் சன்னிதி கிடையாது! இவர்கள் எல்லாம் பெருமாளின் இடத்திலேயே இருந்து கொண்டு, அவரை அரூபியாகச் சேவித்து இருப்பதாக ஐதீகம்! அவ்வளவு ஏன்? படைத்தலைவர் விஷ்வக்சேனர் (சேனை முதலியார்) க்குக் கூட எத்தனை ஆலயங்களில் தனியாகச் சன்னிதி இருக்கு?

ஆனால் அடியார்களுக்கும், ஆழ்வார் ஆசார்யர்களுக்கு மட்டும் சன்னிதி இருக்கும்! – இதுவே அடியவர் பெருமை!
பெருமாளின் அதிகாரிகளைக் காட்டிலும் அடியவர்களுக்கே களம் அமைத்துத் தரப்படுகிறது! ஏன்?
அதிகாரிகளை முன்னிறுத்தினால் சக்தியும் வலுவும் முன்னிறுத்தப்படும்! அடியவரை முன்னிறுத்தினால் அன்பும் பக்தியும் தானே வளரும்! – அதனால் தான் இது போன்றதொரு அமைப்பு!
பெருமாள் ஆலயங்களின் அமைப்பு ஒரு குடும்பம் வாழும் வீட்டைப் போன்றது! அங்கே தாய் தந்தை குழந்தைகளைத் தான் பிரதானமாகப் பார்க்கலாம்!

நவக்கிரகங்களும் இறைவனின் அதிகாரிகள்; அவரவர் கர்ம பலனை வழங்கும் அதிகாரிகள்!
அவர்களுக்கு உண்டான மரியாதையும், மதிப்பும், பூசனையும் உண்டு! ஆனால் வெளிப்படையாக முன்னிறுத்தப்படுவதில்லை! அவர்களுக்கும் சேர்த்து அவர்களையும் ஆண்டளக்கும் பெருமாளே முன்னிறுத்தப்படுகிறார்.
அவர் உருவத்திலேயே, இவர்களும் அடங்கி விடுகிறார்கள்! அவதாரங்களில் கூட, நவக்கிரக அம்சங்கள் உண்டு!
சூர்யன் = இராமன்
சந்திரன் = கண்ணன்
செவ்வாய் = நரசிம்மர்
புதன் = கல்கி
வியாழன் = வாமானர்
வெள்ளி = பரசுராமர்
சனி = கூர்மம்
ராகு = வராகம்
கேது = மச்சம்

அதே போல், 108 திவ்யதேசங்களில், ஒன்பது திவ்யதேசங்கள், நவக்கிரகத் தலங்களாகச் சொல்லப்படுகின்றன (திருநெல்வேலி-தூத்துக்குடியைச் சுற்றியுள்ள நவ திருப்பதிகள்)
சூர்யன் = திருவைகுண்டம்
சந்திரன் = திருவரகுணமங்கை
செவ்வாய் = திருக்கோளூர்
புதன் = திருப்புளிங்குடி
வியாழன் = திருக்குருகூர் (ஆழ்வார் திருநகரி)
வெள்ளி = திருப்பேறை
சனி = திருக்குளந்தை
ராகு = திருத்துலைவில்லி மங்கலம் (இரட்டைத் திருப்பதி)
கேது =திருத்துலைவில்லி மங்கலம் (இரட்டைத் திருப்பதி)

திவிஷத் பரிஷத் = தேவர்கள் கூட்டத்துக்கே
ப்ரதானா = முக்கியமாய், (அவர்களையே அடக்கும் சக்தி வாய்ந்த நவக்கிரகங்கள்)

தேவர்கள் கூட்டத்தில் ஒரு பகுதியாய் நவக்கிரகங்கள் இருந்தாலும், அவர்கள் பணி நிமித்தம் அந்த மாதிரி! கர்ம பலன்களைக் கொண்டு சென்று சேர்க்கும் அதிகாரிகளாக இருப்பதால் அவர்களுக்குப் பாரபட்சம் கிடையாது.
தேவர்களையே அடக்கும் வல்லமை பெற்றவர்கள். அதே சமயம், அசுரர்கள் எதிரிகளாக இருப்பதால், அவர்களுக்குப் பாரபட்சம் எல்லாம் காட்ட மாட்டார்கள் இந்த ஒன்பது பேரும்!

அப்பேர்பட்ட நவக்கிரகங்கள்,
த்வத் தாச தாச = உன்னுடைய அடியார்க்கு அடியார்களிடம்
சரமாவதி தாச தாசா = அடியார்களாக இருந்து சேவை செய்கிறார்கள்

இங்கு தான் அடியார்களின் பெருமை மின்னுகிறது!
இறைவனுக்குத் தானே அடியார்கள்? அடியார்களுக்கே எப்படி அடியார் இருப்பார்கள்?
அதாவது பழுத்த தொண்டர்கள், இறைவனைச் சக தொண்டர்களிட”மும்” காண்பது!
அப்படிக் காண்பதால் அடியார்க்கு அடியார் ஆவது! தொண்டர் அடிப்பொடி!
கைங்கர்யம் என்னும் திருத்தொண்டில், தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!

இறைவரோ தொண்டர் தம் உள்ளத்து ஒடுக்கம்
தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே!

இப்படி இறைவனே தொண்டர்களின் உள்ளத்தில் ஒடுங்கி விடுவதால், தொண்டர்களுக்குத் தொண்டர்கள் ஆகின்றன நவக்கிரகங்கள்.
சரமாவதி தாஸ்யம் என்பார்கள்; அதனால் தான் சரமாவதி தாச தாசா என்கிறது ஸ்லோகம்.
நவக்கிரகங்களும் அடியார்களின் கர்ம பலனைக் கொடுக்கும் போதும், அவர்களின் பற்றற்ற நிலையினைப் பார்த்து, “பரிவுடனே” கொடுக்கின்றன!
எப்படிக் கொடுக்கின்றன? – சரமாவதி தாச தாசா என்று கொடுக்கின்றன.
ஒரு தாசன் எப்படிப் பணிந்து பக்தியுடன் கொடுப்பானோ, அப்படிக் கொடுக்கின்றன!
அடியார்க்கு அடியாராய், அவை நல்ல நல்ல நல்ல, என்று கொடுக்கின்றன!

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பு இரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

என்ற சம்பந்தரின் கோளறு பதிகத்தையும், இந்த சுப்ரபாத ஸ்லோகத்தோடு எண்ணிப் பாருங்கள்!

ஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!

—————–

த்வத் பாத தூளி, பரித ஸ்புரித உத்தமாங்கா
சுவர்கா அபவர்க நிரபேக்ஷ, நிஜாந்த ரங்கா!
கல்ப ஆகம ஆகலநயா ஆகுலதாம் லபந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

த்வத் பாத தூளி = உன் பாத தூளியை (திருமண்)
இறைவனின் பாத தூளி பற்றி பக்தி இலக்கியங்கள் பல கதைகளைப் பேசும்!
எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வச்சோம்…அப்படின்னு இந்தக் காலத்துல கூட பாட்டு போடறாங்க! 🙂
கடவுள் வாழ்த்து பற்றிச் சொல்ல வந்த திருவள்ளுவர் கூட, இறைவனை விட்டு விட்டு இறைவனின் பாதங்களைத் தான் பற்றிக் கொள்கிறார். முதல் அதிகாரத்திலேயே திருவடிகள் தான் எங்கும் நிறைந்திருக்கு!

வாலறிவன் “நற்றாள்” தொழாஅர் எனின்
மலர்மிசை ஏகினான் “மாணடி” சேர்ந்தார்
வேண்டுதல் வேண்டாமை “இலானடி” சேர்ந்தார்க்கு
தனக்குவமை இல்லாதான் “தாள்”சேர்ந்தார்க் கல்லால்
அறவாழி அந்தணன் “தாள்”சேர்ந்தார்க் கல்லால்
எண்குணத்தான் “தாளை” வணங்காத் தலை
நீந்தார் இறைவன் “அடி” சேராதார்.
……என்று திருக்குறளில் கூட எங்கு பார்த்தாலும் “திருவடிகள்” தான்!

வைணவத்தில் திருவடிகளுக்கு மிகப் பெரிய இடம் உண்டு. பல தத்துவங்களும் கதைகளும் உண்டு! பாதுகை ஏன் நாட்டை ஆண்டது என்பதற்கும் விளக்கம் உண்டு!
மற்ற சமயங்களிலும் இலக்கியங்களிலும் கூட இறைவனின் இணையடிகள் ஏத்தப்படுகிறது. ஈசன் எந்தை இணையடி நீழலே என்று அப்பர் சுவாமிகள் உருகுகிறார்!
ஆனால் அவை பெரும்பாலும் பாட்டோடும் கருத்தோடும் நின்று விடும்! – மக்களிடம் நேரடியாகச் சென்றடையும் வழிபாட்டு முறைகளில் திருவடிகள் வெளிப்படையாகத் தெரிவதில்லை!

ஆனால் வைணவத்தில் திருவடிகள், மக்களிடம் நேரடியாக முன்னிறுத்தப்படுகின்றன.
நெற்றியில் இட்டுக் கொள்ளும் நாமம் = திருவடி
கோவிலில் தலை மேல் வைக்கும் சடாரி = திருவடி
கருடன் = பெரிய திருவடி
அனுமன் = சிறிய திருவடி
திருவடி சம்பந்தம், பாதுகா சகஸ்ரம், பாத பூசை என்று திருவடி இல்லாத இடமே கிடையாது!

அது ஏன் திருவடிக்கு மட்டும் இவ்வளவு பெருமை?
கையைச் சொல்லலாமே! அது தானே அபயம் கொடுக்கிறது? – முகத்தைச் சொல்லலாமே! அது தானே நம்மைப் பார்த்துச் சிரிக்கிறது?
எதுக்குக் காலைச் சொல்லணும்? 

அந்தத் திருவடியின் அடியில் உள்ள கோடானுகோடி துகள்களில், ஒரு துகளாக இருக்க மாட்டோமா என்று எல்லாச் சமயத்து அன்பர்களுமே விரும்புகின்றார்கள்.
அந்தத் திருவடித் துகளைத் தான், அடியவர்கள் தங்கள் தலையின் மேல் சூடிக் கொள்கிறார்கள்! திருமண் என்று சிலாகித்துப் பேசுகிறார்கள்!

பரித ஸ்புரிதோ = தாங்கிக் கொண்டு, புல்லரித்துப் போய் நிற்கிறார்கள், அடியவர்கள்!
உத்தமாங்கா=
 உத்தம+அங்கா=உன் திருவடித் துகள் ஒன்றே அவர்கள் அங்கங்களை எல்லாம் சுத்தம் செய்து விட்டது!
பொதுவா மண்ணுன்னா அழுக்கு; நீருன்னா சுத்தம். ஆனாப் பாருங்க, திருவடித் துகளே அங்கங்களைச் சுத்தம் செய்து விட்டதாம்!
சைவத்திலும் கூட, குளிக்காமலேயே திருநீறு தரிக்கலாம் என்ற விதி இருக்கு!

சுவர்கா, அபவர்க நிரபேக்ஷ = சொர்க்கப் பதவி, மோட்ச நிலை – இவற்றில் கூட ஆசையில்லாமல்
நிஜா அந்தரங்கா = அந்தரங்க சுத்தியுடன் உன்னையே விரும்புகிறார்கள்
சேக்கிழார் சுவாமிகள் மிக அருமையாகச் சொல்லுவார் பெரிய புராணத்தில்! அது தான் அடியவர்களின் உண்மையான லட்சணம்!
கூடும் அன்பினால் கும்பிடலே அன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்!

அடியார்கள் சொர்க்கம், மோட்சம் இதன் மேல் கூட ரொம்ப விருப்பம் வைக்காமல், அவனையே விரும்பி நிற்கிறார்கள்!
அவனின் திருவுள்ள உகப்பிற்கு மட்டும் தான் தாங்கள் இருக்கிறோம் என்ற அன்பு நிலை அது! அதனால் அவர்கள் மோட்சம், பிறவா வரம் என்று தனியாக விரும்புவது எல்லாம் ஒன்றும் இல்லை!

சொர்க்கம்-நரகம் = அவரவர் செயல் வினைகளில், அவ்வப்போதே இன்ப துன்பங்கள் விளைந்து விடுகின்றன!
மோட்சம் = பிறவிச் சுழல்களில் சிக்காமல் பரமபதம் என்னும் மோட்சம் அடைந்து விட்டால், மீண்டும் வரவேண்டாம் அல்லவா?
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே! என்கிறார் நம்மாழ்வார்!
அப்பிடின்னா என்ன அர்த்தம்?

தேவர்களாகப் பிறந்தாலும் கூட, வைகுந்தம் செல்ல வேண்டும் என்றால், மனிதப் பிறவி எடுத்துத் தான் செல்ல முடியும்!
சரி, அப்படிச் சென்று விட்டால், மீண்டும் வராமல், ஜாலியா அங்கேயே இருக்கலாம் அல்லவா? – இப்படி எல்லாம் கணக்கு போடமாட்டார்களாம் அடியவர்கள்!
அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் அவனின் திருவுள்ள உகப்பு ஒன்று தான்!

ஆழ்வார் ஏற்கனவே மோட்சம் அடைந்து வைகுந்தத்தில் தான் இருக்கிறார். ஆனால் இனி பிறவி இல்லை என்று அவர் கணக்கு போட்டுக்கொண்டு இருக்கிறாரா?
ஆதிசேஷன் பரமபதத்தில் நித்ய வாசம் செய்பவர். அவர் இராமானுசர், மணவாள மாமுனிகள் என்று அவதாரம் செய்து, மாறி மாறிப் பூமிக்கு வரவில்லையா?

மற்ற மண்ணுலக மக்கள் எல்லாரும் கடைத்தேறும் பொருட்டு, அடியவர்களை பூமிக்கு அனுப்பி அவதரி்ப்பிக்கின்றான் இறைவன்!
அடப் போங்க பெருமாளே, நானே படாத பாடுபட்டு மோட்ச பதவி வாங்கிக் கொண்டு வந்திருக்கேன்….என்னைப் போயி திரும்பிப் போகச் சொல்லுறீங்களேன்னு முரண்டு செய்வார்களா என்ன? 🙂

மற்ற அடியவர்களும், உயிர்களும் கடைத்தேறும் பொருட்டு, இறைவன் அனுப்பினால், அதுவும் அவர்களுக்கு மோட்சமே!
அதான் கூடும் அன்பினால், வீடும் வேண்டா விறலின் விளங்கினார்! – இறைத் தொண்டில் தன்னல தர்மத்தைக் காட்டிலும் பொதுநல தர்மம் தான் முன்னிற்கும்!

மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய் என்ற திருப்பாவை வாசகம் தான், இதன் பின்னே மறைந்துள்ள பொக்கிஷம்!
முப்பது நாளும் நோன்பு நோற்றுவிட்டு, கடைசி நாளில் மோட்சம் வேண்டாம் என்று சொல்லும் பைத்தியக்காரப் பெண்ணா ஆண்டாள்?
இற்றைப் பறை கொள்வாம் அன்று! காண் கோவிந்தா என்று ஆண்டாள் பறை வேண்டாம் என்று சொல்லி விடுகிறாள்! – பின்ன, என்ன தான் வேணுமாம்?

குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது – உன் பணிகளுக்கு எங்களை ஆட்படுத்திக் கொள்!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும், உற்றோமே ஆவோம் – பிறவிகள் பிறந்தாலும், உன் உள்ளத்து உகப்புக்கு மட்டும் நாங்க இருந்தாப் போதும் என்ற காதல் நெஞ்சம் தான்! அதுவே உண்மையான பக்தியின் சிகரம்! – நின் அருளே புரிந்து இருந்தேன், இனி என்ன திருக்குறிப்பே?

கல்ப ஆகம, ஆகலநயா = கல்பம் (யுகம்) ; ஒவ்வொரு நொடியும் ஒரு கல்பமாய் கழிகிறது அடியார்களுக்கு!
இறைவனை “எப்போதும்” கூடி இருக்க முடியவில்லையே என்ற ஏக்கம் வாட்ட
ஆகுலதாம் லபந்தே = துன்பப்பட்டு இருக்கின்றார்கள்!

கல்பம்=4,320,000 ஆண்டுகள்! 4 யுகம் = 1 கல்பம்!
Time between creation and deluge…

இப்போது தெரிகிறது அல்லவா, தேவர்களைக் காட்டிலும், எதுக்கு அடியவர்களை உயர்வாகச் சொல்லுறாங்க-ன்னு! திருவேங்கடமுடையான் ஆலயத்தில் பெருமாளின் தரிசனத்துக்கு, நின்று கொண்டு இருக்காங்க! அடியார் இவர்களுக்கு அன்பு காட்டிட, வேங்கடவா எழுந்தருள்வாய்!

ஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!

————

த்வத் கோபுர ஆக்ர சிகராணி, நிரீக்ஷ மாணா
ஸ்வர்கா அபவர்க பதவீம், பரமாம் ச்ரயந்த!
மர்த்யா மநுஷ்ய புவனே, மதி மாச்ரயந்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்!

த்வத் கோபுராக்ர சிகராணி = உன் ஆலய கோபுரத்தின் சிகரத்தைக்
நிரீக்ஷ மாணா = கண்ணாரக் கண்டு

கோபுர தரிசனம், பாப விமோசனம்-னு சொல்லுவாங்க!
அப்படின்னா நான் கூடத் தான் தினப்படி கோபுரத்த பாக்கறேன். என் நண்பர் ஒருத்தர் நடத்தும் மதுபானக் கடை, கோபுரத்துக்கு எதுத்தாப்புல தான் இருக்கு! 🙂
அவருக்கும், எனக்கும் பாவ விமோசனம் ஆயிடுச்சா என்ன? – அதான் “கண்ணாரக் கண்டு” ன்னு சொல்லுறாங்க – கோபுரத்தைக் கோவிந்தனா பாக்கும் போது பாப விமோசனம்!

ஸ்வர்கா அபவர்க பதவீம் = சொர்க்கம் மற்றும் மோட்சப் பதவியைக் கூட விரும்பாமல்!
பரமாம் ச்ரயந்த= உத்தமமான உன் சேவையில், திருத் தொண்டில் மட்டும் ஈடுபாடு கொண்டுள்ளார்கள்!
சென்ற சுலோகத்திலேயே, இதுக்கு விளக்கம், பார்த்து விட்டோம்! தவத்தினால் அடைந்த பதவிகளைக் கூட இறைவனுக்காக உதறித் தள்ள தயாராய் இருப்பவர்கள் அடியார்கள்! சேவித்து இருப்பதுவே செவ்வடியார் செழுங்குணம்!

மர்த்யா மநுஷ்ய = அழியும் மானிடப் பிறவிகள் வாழும்
புவனே = பூவுலகில், பிறக்கத் தான்
மதிம் ஆச்ரயந்தே = அவர்கள் எண்ணம் போகின்றது

இப்படித் தொண்டு ஒன்றில் மட்டும் கருத்துடைய அடியவர்கள், உன் முகம் காண வந்திருக்காங்கப்பா! தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே! சீக்கிரம் எழுந்து, உன் குளிர்முகம் காட்டு!

ஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!

—————

ஸ்ரீ பூமி நாயக தயாதி குண அம்ருத ஆப்தே
தேவாதி தேவ ஜகத் ஏக சரண்ய மூர்த்தே
ஸ்ரீமந் அனந்த கருடாதிபிர் அர்ச்சி தாங்க்ரே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

ஸ்ரீ பூமி நாயக = ஸ்ரீதேவியான திருமகளுக்கும், பூமிதேவியான மண்மகளுக்கும் நாயகனே!

தயாதி குண = கருணை (தயா) முதலிய சகல கல்யாண குணங்கள்
அம்ருத ஆப்தே = கொண்ட அமுதக் கடலே

திருவேங்கடமுடையான் சன்னிதியில் அவன் தனித்து நிற்பதாகத் தானே நம் கண்களுக்குத் தெரிகிறது? தாயார் சன்னிதியோ கீழ்த் திருப்பதியில் தானே உள்ளது! அப்படி இருக்க, எப்படி இப்படிப் பாடி வைத்தார்கள்?
கவனித்துப் பார்த்தால் தெரியும், அவன் திருமார்பில், ஸ்ரீ-பூமி தேவிகளும் எழுந்தருளி உள்ளார்கள். அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா!

தயா தேவியும் உள்ளாள்! யார் இந்த தயா தேவி?
இறைவனின் கருணையை, தயைத் தான் இவ்வாறு உருவகித்துப் பாடுகிறார் வேதாந்த தேசிகர் என்னும் ஆசாரியர்!
இறைவன் எண்ண முடியாத குணங்களைக் கொண்டவன் தான் என்றாலும், அவனுக்குப் பொதுவாக எட்டு குணங்களைச் சொல்லுவார்கள்!
எண்குணத்தான் தாளை வணங்காத் தலை என்று வள்ளுவரும் எண்குணத்தைச் சொல்லுகிறார்!

அந்த எண் குணங்களில் மிகவும் தலையாயது உயிர்களிடத்தில் பரம கருணை; தயை என்ற குணம்! தயா சிந்து என்று மோவாய்க் கட்டையில் உள்ள வடு
முத்தமிழால் வைதாரையும் வாழ வைப்பவன் தமிழ்க் கடவுள் முருகன் என்றால்
தன்னை அடித்தாலும், அரவணைத்துக் காப்பவன் தான் தமிழ்க் கடவுள் திருமாலும்!!!
பக்தன் அடித்த வடுவை, மானம் போகுமே என்று மறைத்துக் கொள்ளாது, அன்புக்குச் சாட்சியாக இன்றும் மோவாயில் காட்டிக் கொண்டு நிற்கிறான் இறைவன்!
அதனால் தான் அவன் சிந்தும் தயையை அமுதக் கடல் என்று சொல்கிறார்!

தேவாதி தேவ = தேவாதி தேவனே! இமையோர் தலைவனே!
தேவர்களுக்கும் ஆதி அவன்! ஆதியாய் அநாதியாய் நின்றவன்! தேவர்களையும் கடந்தவன்! அசுரர்களையும் கடந்தவன்! அதனால் தேவ-ஆதிதேவன்!
இந்த சுலோகம் அப்படியே ஆழ்வார் பாசுரம்
திருமகள் தலைவனை, தேவதேவனை
இருபத முளரிகள் இறைஞ்சி ஏத்துவாம்!

ஜகத் ஏக “சரண்ய மூர்த்தே = உலகம் முழுமைக்கும் நீ ஒருவனே சரண்யன் (ரட்சகன்)
சரண்யன் என்றால் என்ன-ன்னு முன்னரே பார்த்தோம்! உலகம் முழுமைக்கும் அவன் ஒருவனே சரண்யன்! ஒருவன்”ஏ” என்பதில் அந்த ஏகாரம் மிகவும் முக்கியமானது!
மாம் “ஏகம்” சரணம் வரஜ என்பது தான் கீதை காட்டும் சரம சுலோகம்! – அனைத்துக்கும் அவன் ஒருவனே சரண்யன்!
அசுரருக்கும் அவனே சரண்யன், தேவருக்கும் அவனே சரண்யன்!
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே என்பது வள்ளலார் வாக்கு!

ஸ்ரீமந் = லக்ஷ்மீகரமானவனே
அவன் பெருமையைச் சொல்லணும்னா கூட, அன்னையைத் தான் சொல்ல வேண்டி இருக்கு பாத்தீங்களா?
அழகானவனே-ன்னு சொல்லணும்னா லக்ஷ்மீகரமானவனே சொல்லணும்! கருணை உடையவனே-ன்னு சொல்லணும்னா கூட லக்ஷ்மீகரமானவனே தான் சொல்லணும்!

அனந்த கருடாதிபிர் அர்ச்சி தாங்க்ரே = அனந்தன், கருடன் முதல் அனைவரும் உன் திருவடிகளை அர்ச்சிக்கிறார்கள்!
அவனை பரமபதம் என்று அழைக்கப்படும் வைகுண்டத்திலே, நித்ய வாசம் செய்யும் நித்ய சூரிகள் எல்லாம் சேவித்து இருக்கிறார்கள்!
அனந்தன் என்ற நாக வடிவானவனும், கருடன் என்ற பறவை வடிவானவனும் ஒருசேர அர்ச்சிக்கிறார்கள்!
இங்கு தான் சூட்சுமம்! நாகமும் கருடனும் ஒன்றொக்கொன்று எதிர் இயல்பு!

ஆனால் எப்படி இருவரும் பரமனுக்குப் பிரியமாய் அவன் திருத்தொண்டில் ஈடுபடுகிறார்கள்?
Pair of Opposites Concept is deeply rooted in Vaishnavite Mysticsm.
நாகன்-கருடன், சக்கரம்(ஒளி)-சங்கு(ஒலி), மனிதன்-மிருகம்…இன்னும் நிறைய எதிரெதிர் நிலைகள், இறைவன் முன்னிலையில் ஒன்றி விடுகின்றன!
அதே போல் தேவர்,அசுரர் பாகுபாடு எல்லாம் இறைவன் முன் நிற்காது! பக்தி ஒன்றே நிற்கும்!

ஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!

————–

ஸ்ரீ பத்மநாப புருஷோத்தம வாசுதேவ
வைகுண்ட மாதவ ஜனார்த்தன சக்ர பாணே
ஸ்ரீ வத்ஸ சிஹ்ன சரணாகத பாரிஜாத
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

ஸ்ரீ பத்மநாப = நாபிக் கமலம் (தொப்புள் கொடியில்) தாமரைக் கொடியை உடையவனே, பத்மநாபா!

புருஷோத்தம = புருஷர்களில் உத்தமனே! புருடோத்தமா!
வாசுதேவ = வாசுதேவனே!

பத்மநாபன் = இது படைப்புத் தத்துவம்! இறைவன் தொப்புள் கொடியில் பிரம்மன் தோன்றி, அவன் வாயிலாக உயிர்கள் தோன்றின!
ஆக பெருமாளுக்கும் நமக்கும் தொப்புள் கொடி உறவு!
அந்தி போல் நிறத்தாடையும் அதன்மேல் அயனைப் படைத்ததோர் எழில்
உந்தி மேலது அன்றோ அடியேன் உள்ளத்தின் உயிரே
என்பது திருப்பாணாழ்வார் வாக்கு!

புருஷோத்தமன் = ஆண்களில் எவனாச்சும் ஒருத்தன் உத்தமனா? வீட்டில் கேட்டுப் பாருங்க! இல்லைன்னு பதில் ஸ்ட்ராங்கா வரும்! 🙂 ஒரே ஒருவன் தான் உத்தமன்! யார் அவன்?
ஓங்கி உலகளந்த உத்தமன் – அவனே புருஷோத்தமன்!

வாசுதேவன் = பொதுவாக கண்ணனைத் தான் வாசுதேவ கிருஷ்ணன் என்று அறிவோம்! ஆனால் இந்த வாசுதேவன் என்னும் சொல், அவதாரங்களுக்கு எல்லாம் முனனரே, பரம்பொருளைக் குறிக்கும் சொல்! பரவாசுதேவன் என்று குறிப்பார்கள்!
எங்கும் வியாபித்து வாசம் செய்பவன் வாசுதேவன்!
ஸ்ரீ வாசுதேவ நமோஸ்துதே ஓம் நம இதி-ன்னு விஷ்ணு சகஸ்ரநாமத்திலும் பயின்று வரும்!
செங்கட் கருமேனி வாசு தேவனுடய,
அங்கைத் தலமேறி அன்ன வசஞ்செய்யும்,
சங்கரையா. உஞ்செல்வம் சாலவ ழகியதே
– என்று வாசுதேவனை ஆண்டாளும் அழைக்கிறாள்!

வைகுண்ட = வைகுண்ட நாதா
மாதவ = மாதவா
ஜனார்த்தன = ஜனார்த்தனா
சக்ர பாணே = சக்கரத்தை ஏந்தியவனே

ஜனார்த்தன = ஜன + அர்த்தன = ஜனங்களால் தேடப்படும் அர்த்தம்/செல்வம்; அதாவது அனைத்து உலகங்களும் அடைய விரும்பும் ஒரே பொருள்! அதுவே ஜனார்த்தனம்!
சக்ர பாணி = சுதர்சனம் என்னும் சக்கரப் படையை ஏந்தியவனே!
வடிவார் சோதி வலத்து உறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு என்று பெரியாழ்வார் சக்கரத்தை வாழ்த்துகிறார்!

ஸ்ரீ வத்ஸ சிஹ்ன = ஸ்ரீவத்சம் என்ற மச்சத்தை வல மார்பில் உடையவனே!
பெருமாளின் வலத் திருமார்பில் இருக்கும் மச்சத்துக்கு ஸ்ரீவத்சம் என்று பெயர்! தமிழில் திருமறு!
திருமறு மார்பன்! அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா என்று சொன்னார்களே? இராமன் குழந்தையாய் இருக்கும் போது, சீதை எப்படி அவனுடன் ஓட்டி இருக்க முடியும்?
அது என்ன சும்மா வாய் வார்த்தைக்குச் சொல்லப்பட்டதா? இல்லையில்லை!

மகாலக்ஷ்மியாகிய திருமகளின் அம்சமாய் என்றும் அவனுடன் ஒட்டி இருப்பது இந்த மச்சம்!
அவதார காலங்களில், குழந்தையாய் இருக்கும் போதும் கூட, அவனுடன் ஒட்டி இருப்பது இந்த திருமறு தான்!
வாமன அவதாரத்தில் இந்த மச்சம் யார் கண்ணிலும் பட்டு விடக் கூடாதே என்று மான்தோலை இழுத்துப் போர்த்திக் கொண்டு வந்தான் வாமனன்!
இப்ப சொல்லுங்க! பெருமாளு மச்சம் உள்ள ஆளு தானே! 🙂
அவனை விட்டு ஒரு நொடிப்பொழுதும் பிரியாமல் இருக்கவே இப்படி ஒரு மச்சம்!! நல்ல பொண்டாட்டி, நல்ல புருஷன் போங்க! 🙂

சரணாகத பாரிஜாத= சரணம் அடைந்தார்க்கு பாரிஜாத மலர் போல் அருள் பொழிந்து குளிர்விப்பவனே!

ஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!

————-

கந்தர்ப்ப தர்ப்ப ஹர சுந்தர திவ்ய மூர்த்தே
காந்தா குசாம் புருஹ குட்மல லோல த்ருஷ்டே
கல்யாண நிர்மல குணாகர திவ்ய கீர்த்தே
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

கந்தர்ப்ப = காதலின் தேவன், மன்மதன்
தர்ப்ப = அவனின் தற்பெருமையை
ஹர = விரட்டிடும்
சுந்தர திவ்ய மூர்த்தே = அழகும், புனிதமும் கொண்ட மூர்த்தியே, பெருமாளே!

மன்மதனை எரித்தவன் சிவபிரான்! அப்படிச் சிவனாரின் தவத்தையே கலைக்கும் அளவுக்கு தொழில் புரிந்த மன்மதன், தன் தொழிலையே மறந்து மயங்குகிறான் என்றால்?
எவரையும் தன் கரும்பு வில் பாணத்தால் மயங்கச் செய்பவன் என்ற அவனுடைய தற்பெருமை…ஒன்றுமில்லாமல் போகிறது! எதைப் பார்த்து?

திவ்ய தம்பதிகள் இருவரைப் பார்த்து!
அவர்களின் காதலும், அன்பும் கண்டு அவனே வெட்கி நிற்கிறான்!
மன்மத பாணம் பாய்ந்தால். கொஞ்ச நேரம் தான் மோகம் இருக்கும்!
ஆனால் இங்கு அவன் பாணத்தின் சக்தி, தூய்மையான காதல் முன் தலைகுனிந்து நிற்கிறது! ஏனாம்?
பெருமாள் உறக்கம் கலையாமல், தன் மனத்துக்கினிய மனையாள், மகாலக்ஷ்மியை அணைத்துக் கொண்டு, உறங்கிய வண்ணமே இருக்கிறான்!

இவர்கள் உறங்கும் அழகு,
கண்கள் மூடினாலும், ஒருவரை ஒருவர் உறக்கத்திலும் பார்த்துக் கொண்டிருக்கும் அழகு,
எனக்கு நீ, உனக்கு நான் என்னும் காதலின் அழகு,
சம்சார சாகரத்தைக் காதலினால் கடக்கலாம் என்று காட்டும் அழகு!

குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்!

இவர்கள் அன்பைக் கண்டு மன்மதனே வாயடைத்துப் போய் நிற்கிறான்!
இப்படியும் ஒரு ஈடுபாடா? பின்னிப் பிணைதலா?
இது அன்பா? இல்லை மாரன் அம்பா?
மன்மத அம்பும் கூர் மழுங்கிப் போய் நிற்கும் மகோன்னத அன்பு!

காந்தா = மனத்துக்கினியவள், மகாலக்ஷ்மி தாயாரின்
குச = திருமார்போடு
ஆம்புருஹ குட்மல = தாமரைத் தண்டு போல
அணைத்துக் கொண்டு, இன்னும் உறக்கமா?

மைத்தடங் கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவாற்றகு இல்லாயால்
தத்துவம் அன்று தகவேலோ ரெம்பாவாய்!
உங்கள் காதலைப் பிறகு வைத்துக் கொள்ளுங்கள்! உங்க குழந்தைகள் எல்லாரும் கோவிலுக்கு வந்திருக்கோம்! முதலில் எங்களைக் கவனிங்க, என்று செல்லமாகச் சிணுங்கித் துயில் எழுப்புகிறார்கள்!

லோல த்ருஷ்டே = சிரிக்கும் குறும்புப் பார்வை கொண்டவனே

கல்யாண = மங்களகரமானவனே
நிர்மல = குறையொன்றும் இல்லாத கோவிந்தா
குணாகர = குணங்களின் உறைவிடமே
திவ்ய, கீர்த்தே = புனிதமானவனே, புகழ் ஓங்குபவனே!
துயில் களைக! எங்கள் துயர் களைக

ஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!

—————

மீனாக்ருதே- கமட- கோல- ந்ருசிம்ம- வர்ணிந்
ஸ்வாமிந்- பரஸ்வத தபோதன- ராமசந்திர-
சேஷாம்ச ராம- யது நந்தன- கல்கி ரூப-
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

1. மீன ஆக்ருதே = மீன வடிவம் – மச்சாவதாரம்
2. கமட = ஆமை – கூர்மாவதாரம்
3. கோல = பன்றி – வராக அவதாரம்
4. ந்ருசிம்ம = நரசிம்ம அவதாரம்
5. வர்ணிந் ஸ்வாமிந் = பிரம்மச்சாரி, பெரும் சுவாமியாய் – வாமன/திருவிக்ரம அவதாரம்

6. பரஸ் வத தபோதன = பரசு தாங்கும் தவமுனி – ப்ரசுராம அவதாரம்
7. ராமசந்திர = ராமாவதாரம்
8. சேஷாம்ச ராம = சேஷனின் அம்சமாய் ராமன் – பலராம அவதாரம்
9. யது-நந்தன = யது குலத் தோன்றல் – கிருஷ்ணாவதாரம்
10. கல்கி ரூப = கல்கி அவதாரம்

பத்து அவதாரங்களும் இந்த ஒரே சுலோகத்தில் வருகிறது! இப்படி அத்தனை அவதாரங்களின் சாரமாக நிற்கிறான் திருவேங்கட மாமலையில்!

ஒவ்வொரு அவதாரத்திலும் நோக்கம் என்ன? – தர்ம பரிபாலனம்! அறம் காத்தல்!
தன்னை வந்தடையும் வழியை உயிர்களுக்கு எளிதாகப் புரியுமாறு காட்டி அருளல்!
இதைத் தான் திருவேங்கடமுடையான் காட்டிக் கொண்டு நிற்கிறான்!


ஆலயத்தில் தரிசனம் செய்யும் போது பார்த்தால், அந்தச் சின்முத்திரைக் கோலம் புலப்படும்!

அதனால் தான் சுலோகத்தில் தசாவதாரங்களின் தொகுப்பாகத் திருமலை நாதனைச் சொல்கிறார்! கலியுக வைகுந்தம் என்று திருமலையும் போற்றப்படுகிறது!
இன்றும், ஆலயத்தில் தசாவதார ஆரத்தி பெருமாளுக்கு உண்டு! தசாவதாரங்களும் பொறித்த பெரிய தாம்பாளத் தட்டில் இந்த ஆரத்தியை எடுக்கிறார்கள்!

தசாவதாரத் தத்துவமே,
ஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!

———–

ஏலா லவங்க கனசார சுகந்தி தீர்த்தம்
திவ்யம் வியத்சரிதி ஹேம கடேஷூ பூர்ணம்
த்ருத் வாத்ய வைதிக சிகாமணய ப்ருஹ்ருஷ்டா
திஷ்டந்தி வேங்கட பதே தவ சுப்ரபாதம்

ஏலா லவங்க கனசார = ஏலக்காய், லவங்கம், பச்சைக் கர்ப்பூரம்
சுகந்தி தீர்த்தம் = இவற்றால் நறுமணம் கமழும் நன்னீர் (தீர்த்தம்)
தீர்த்தங்களில் பெரும்பாலும் இடப்படும் பொருட்கள்:
பச்சைக் கர்ப்பூரம்
ஏலக்காய், இலவங்கம்
ஜாதிக்காய், வெட்டிவேர்
மருத்துவ மரப்பட்டைகள்
சிறிது மஞ்சள்
எல்லாவற்றுக்கும் மேலாக, துளசி! – இவற்றினால் உண்டாகும் வாசம், நாத்திகரையும் தீர்த்தம் பருக வைக்கும்! 🙂
வாழாட்பட்டு நின்றீர் ஊள்ளீரேல், வந்து மண்ணும் மணமும் கொள்மின் என்கிறார் பெரியாழ்வார்! நீராட்டிய நீர் மட்டும் தான் தீர்த்தம் என்றில்லை! நீராட்டம் இல்லாத ஆலயங்களிலும் கூட வெறும் நீரைச் சேமித்து வைத்து தீர்த்தம் தருவது உண்டு!

எம்பெருமானுடைய திருமேனி சம்பந்தத்தால், வாசனை நீர், வாசவன் நீராக ஆகிறது.
தினமும் திருமஞ்சனம் நடக்காத கோயில்களில் கூட, சுவாமியின் திருப்பாதங்களுக்கு நீராட்டு உண்டு! அதை ஸ்ரீ பாத தீர்த்தம்-னு சொல்லுவாங்க!
மேலும் திருமஞ்சனம் செய்த பின், சுவாமியின் திருமேனியில் உள்ள ஈர ஆடையைக் களைந்து, கைகளில் சுற்றிக் கொண்டு, ஒவ்வொருவருக்கும் ஈரவாடைத் தீர்த்தம் தருவது வழக்கம்! உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை-ன்னு பெரியாழ்வார் பாசுரம்!

திவ்யம் வியத் சரிதி = அழகாக ஓடும் ஆற்று நீரை (ஆகாச கங்கை நீர் வீழ்ச்சியில் இருந்து)
ஹேம கடேஷூ பூர்ணம் = தங்கக் குடங்களில் முழுமையாக நிரப்பி,

ஆகாச கங்கை என்னும் அருவியில் இருந்து தான், திருவேங்கடமுடையானுக்கு திருமஞ்சன நீர் எடுக்கப்பட்டது!
இந்த நீர்க் கைங்கர்யம் செய்யுமாறு பெரிய திருமலை நம்பிகளை வேண்டிக் கேட்டுக் கொண்டார் இராமானுசர். மலர் கைங்கர்யத்துக்கு அனந்தாழ்வானை நியமித்து அருளினார்!

மிகவும் வயதான திருமலை நம்பிகளின் உடல் நலம் கருதி, இறைவனே வந்து திருவிளையாடல் செய்தான். பாபவிநாசம் என்னும் இன்னொரு தீர்த்தத்தைக் கோவிலுக்கு அருகிலேயே உண்டாக்கினான். இப்போது இங்கிருந்து தான் தீர்த்தம் எடுக்கிறார்கள்!
இன்றும் திருமலை நம்பிகளின் வம்சத்தவர், (தோழப்பர் என்று அழைக்கப்படுபவர்கள்) ஆண்டுக்கு ஒரு முறை தண்ணீர் அமுது உற்சவத்தின் போது, பழைய ஆகாச கங்கையில் இருந்து நீர் கொணர்ந்து சமர்ப்பணம் செய்கிறார்கள்!

அது தவிர, மோசமான வானிலை போன்ற சூழ்நிலைகளில், கோவிலின் உள்ளேயே உள்ள பொற்கிணற்றில் (பங்காரு பாவி) நீர் சேந்திக் கொள்வதுண்டு. Water Management என்னும் நீர் மேலாண்மை மாதிரி தான்! இந்தக் கிணற்றைத், தரிசனம் முடித்து விமானப் பிரகாரத்துக்கு வந்தவுடனேயே எதிரில் காணலாம்!

த்ருத் வாத்ய = வேகமாக எடுத்து வருகிறார்கள்
வைதிக சிகாமணய = வேத ஓதும் விற்பன்னர்கள்!
ப்ருஹ்ருஷ்டா = மகிழ்ச்சியுடன் (வந்து உன் சன்னிதியில் நிற்கும் அவர்களுக்கு)
திஷ்டந்தி = காத்திருந்து அருள் புரிவாய்!

இவ்வாறு பொற்குடங்களில் நீர் எடுத்து வரும் விற்பன்னர்கள், ஆலய வாசலுக்கு வேகமாக ஓடி வருகிறார்கள்! மலை இறக்கம் வேறு அல்லவா? தானாகவே அவர்களைத் தள்ளுகிறது!
அன்று முழுதும் அடியார்க்கு நல்லபடி தரிசனம் கிடைக்க வேண்டுமே! அதற்கு காலம் தாமதிக்காது, தீர்த்தம் கொணர்ந்தால் தானே முடியும்! அதனால் தான் இந்த ஓட்டமும் நடையும்!
வாய் நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால், கதிரொளித் தீபம் கலசமுடன் ஏந்தி, கோவில் வாசலுக்கு குறித்த நேரத்தில் வந்து நிற்கின்றனர்!

அப்பா பெருமாளே, அவர்கள் வரத் தாமதம் ஆனாலும் ஆகலாம்; அதனால் இன்னும் கொஞ்ச நேரம் தூங்குகிறேன் என்று நீயும் சின்னக் குழந்தையைப் போலச் சேட்டை செய்யாதே!
அவர்கள் சொன்ன வண்ணம் சொன்ன நேரத்துக்கு வந்து விடுவார்கள்! போதும் தூக்கம்!
அவர்கள் வருகைக்காக நீ எழுந்து காத்திரு! – தீர்த்தம் வந்த அடுத்த விநாடி ஒரு கணமும் தாமதியாது, எழுந்து தயராகி விடு!
நாளெல்லாம் உன்னைக் காண அடியார்கள் கால் கடுத்து நிற்கிறார்கள்! நீ தாமதிக்கலாமா? தத்துவம் அன்று! தகவேலோ ரெம்பாவாய்!

வேங்கட பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!

———

பாஸ்வான் உதேதி விகசாநி சரோருகானி
சம்பூர யந்தி நினதை ககுபோ விகங்கா
ஸ்ரீவைஷ்ணவா சததம் அர்த்தித மங்களாஸ்தே
தாமாச்ரயந்தி தவ வேங்கட சுப்ரபாதம்

பாஸ்வான் உதேதி = கதிரவன் உதித்து விட்டான்!
விகசாநி சரோருகானி = மலர்ந்து விட்டன தாமரைகள்!

சம்பூரயந்தி நினதை = முழுமையாக ஒலிக்கத் தொடங்கிவிட்டது
ககுபோ விகங்கா = மலைப் பறவைகளின் ஒலி!
கீசு கீசு என்றும் ஆனைச்சாத்தன் கலந்து…
புள்ளும் சிலம்பின காண், புள்ளரையன் கோவிலில்…என்ற திருப்பாவை வரிகள் அப்படியே நினைவுக்கு வருகின்றன!

ஸ்ரீவைஷ்ணவா = வைணவ அடியவர்கள்
சததம் அர்த்தித = என்றும் உன்னையே விரும்பிக் கொண்டு
மங்களா அஸ்தே = மங்களப் பொருட்களைக் கையில் தாங்கி நிற்கிறார்கள்!

தாமா ச்ரயந்தி = விடாப்பிடியாக இன்னும் தூக்கமா?
தவ வேங்கட சுப்ரபாதம் = திருவேங்கடமுடையானே, உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!

———–

பிரம்மா ஆதய சுரவரா ச மகர்ஷ யஸ்தே
சந்தஸ் சனந்தன முகாஸ் தவ யோகி வர்யா
தாமாந்திகே தவஹி மங்கள வஸ்து ஹஸ்தா
ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

பிரம்மா ஆதய = பிரம்மன் முதலான
சுரவரா = அமரர்கள்
ச மகர்ஷ யஸ்தே = இவர்களுடன் மகரிஷிகள்

சந்தஸ் சனந்தன = சந்தையாக வந்துள்ளனர், சனந்தனர் முதலான முனிவர்கள்
முகாஸ், தவ யோகி வர்யா = உன் கோயில் முகத் துவாரத்திலே, தவ யோகிகள் நிரம்பி உள்ளனர்!

தாமாந்திகே தவஹி = மின்னுகின்ற உயர்ந்த
மங்கள வஸ்து = மங்களப் பொருட்களை,
ஹஸ்தா = கையில் ஏந்தியுள்ளனர்.

எவை அந்த மங்கலப் பொருட்கள்? – நீர்க்குடம், தீபம், சாமரம், கண்ணாடி, வெண் துவராடை, துளசிதளம்!
காலையில் எழுந்தவுடன் மங்கலப் பொருட்களைப் பார்க்கும் வழக்கம் விஷூக் கனி என்று மலையாள மக்கள் கொண்டாடுவாங்க! ஆனா அது தமிழ் நாட்டு வழக்கம் தான்! எப்படி அதை நாம் தொலைத்தோம்-ன்னு தான் தெரியலை! 🙂

வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
மாநிதி கபிலை ஒண் “கண்ணாடி” முதலா
எம்பெருமான் படிமக்கலம் காண்டற்கு
ஏற்பனவாயின கொண்டு நன் முனிவர்
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ? – என்று இது அப்படியே திருப்பள்ளி எழுச்சியிலும் வருகிறது!

ஸ்ரீ வேங்கடாசல பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!

———–

லஷ்மீ நிவாச நிரவத்ய குணைக சிந்தோ
சம்சார சாகர சமுத்தர அநைக சேதோ
வேதாந்த வேத்ய நிஜ வைபவ பக்த போக்ய
ஸ்ரீவேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்

லஷ்மீ நிவாச = திருமகள் வசிக்கும் பெருமானே
(அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல்மங்கை உறைபவனே!)

நிர வத்ய குணைக சிந்தோ = குறையொன்றும் இல்லாத குணக் கடலே
(சிந்து=கடல்; நிர வத்ய குணக் கடல் = குறையொன்றுமில்லாத கல்யாண குணங்களின் கடல்! – இது அப்படியே ஒரு பாசுரம்! என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்!)

சம்சார சாகர சமுத்தர = வாழ்க்கைப் பெருங் கடலில் (சம்சார சாகரம்)
அநைக சேதோ = (எங்களைக் கரையேற்றி விடும்) ஒரே அணை நீ தான்!


வேதாந்த வேத்ய = வேதாந்தங்களும் அறிய விரும்பும் ஞானப்பொருள், நீ!
நிஜ வைபவ = உண்மையான குணங்களைக் கொண்டவன் நீ! (எண்குணத்தான் – கல்யாண குணங்கள் கொண்டவன்)

பக்த போக்ய = பக்தர்களுக்குப் போகமாக இருப்பவன் நீ! அடியார்கள் இன்புற்று இருப்பது ஒன்றிலேயே இன்புற்று இருப்பவன் நீ!

ஸ்ரீ வேங்கடாசல பதே = திரு வேங்கடம் உடையானே,
தவ சுப்ரபாதம் = உனக்கும் அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!

———-

இத்தம் விருஷாசல பதே, இக சுப்ரபாதம்
யே மானவா, ப்ரதி தினம் படிதும் ப்ர-விருத்தா
தேஷாம் பிரபாத சமயே, ஸ்மிருதி ரங்க பாஜாம்
பிரஜ்ஞாம், பர ஆர்த்த சுலபாம், பரமாம் ப்ரசுதே

இத்தம் = இப்படியாக
விருஷா சல பதே = விருஷ மலை எனப்படும் திருமலைக்கு அதிபதியான
திருவேங்கடமுடையான்
இக சுப்ரபாதம் = அவனின் இந்த சுப்ரபாதம்

யே மானவா = அனைத்து மக்களும்
ப்ரதி தினம் படிதும் = தினமும் படித்து
ப்ர-வ்ருத்தா = ஒழுகுவார்களே ஆனால்

தேஷாம் பிரபாத சமயே = தினமும் வைகறைப் பொழுதில்,
ஸ்மிருதி ரங்க பாஜாம் = எம்பெருமான் முன்னர், நினைந்து (ஸ்மிருதி), ஓதுவார் தமக்கு

பிரஜ்ஞாம் = சிதறாத மனம் (பிரக்ஞை) சித்திக்கும்!
பர ஆர்த்த சுலபாம் = உயர்ந்த செல்வமான (நித்ய விபூதி = வீடுபேறு), சுலபமாய்க் கிட்டும்!
பரமாம் பிரசுதே = பரமபதம் வாய்க்கும்! பரமபதம் வாய்க்கும்!

————-————-

கமலா குசசூசுக குங்குமதோ நியதாருணிதாதுல நீலதநோ

கமலாயத லோசன லோகபதே விஜயீபவ வேங்கட சை’லபதே –  1

கமலா குச சூசுக குங்குமதோ நியதாருணி தாதுல நீலத நோ-
பெரிய பிராட்டியார் யுடைய திரு முலைத் தடங்களில் அணிந்த குங்குமக்
குழம்பினால் எப்போதும் சிவப்புப் பெற்று ஒப்பற்று விளங்கா நின்ற நீல மேனியை யுடையாய் –
கொவ்வை வாய் மகளிர் கொங்கை குங்குமம் கழுவிப் போந்த தெய்வ நீர் கமழு நாங்கூர்

அகலகில்லேன் இறையும் என்று
அலர் மேல் மங்கை யுறை மார்பா –

இவளோடு கூடியே வஸ்துவிநிடைய உண்மை –
ஈஸ்வர ஸ்வா தந்த்ர்யத்தையும்
சேதனனுடைய அபராதத்தையும்
கண்டு அகல மாட்டாள் –
முமுஷுப்படி ஸ்ரீ ஸூ க்தி-அனுசந்தேயம் –

கமலாய தலோசன லோகபதே விஜயீ பவ வேங்கட சைலபதே –
கமலம் போன்றவையையும் ஆயதங்களையும் இருக்கும் திருக் கண்கள்
அரவிந்தம் போன்று நீண்ட கண்ணினாய்
உலகங்கட்கே எல்லாம் இறைவனே
திருவேங்கடமலைக்கு இறைவனே
நித்ய ஸ்ரீர்
நித்ய மங்களமாக விளங்குவாயாக –

——

ஸ சதுர்முக ஷண்முக பஞ்சமுக ப்ரமுகாகில தைவத மௌளிமணே

ச’ரணாகத வத்ஸல ஸாரநிதே பரிபாலயமாம் வ்ருஷ சை’லபதே   2

ஸ சதுர்முக ஷண்முக பஞ்ச முக பிரமுகாகில தைவத மௌலிமணே –
நான்முகக் கடவுளோடு கூடிய
ஸூ ப்ரம்மண்யன் சிவன் முதலான
சகல தெய்வங்களுக்கும் சிரோ பூஷணமாக விளங்குமவனே-
யாம் கடவுள் என்று இருக்கும் எவ்வுலகில் கடவுளர்க்கும்
ஆம் கடவுள் நீ –
ஷண்முக பஞ்ச முகர்களை சதுர்முகனோடு கூடி இருப்பவர்களாக சொன்னது சமுச்சய தாத்பர்யகம்
நோலாதாற்றேன் உனபாதம் காண வென்று நுண் உணர்வின் நீலார் கண்டத்து அம்மானும் நிறை நான்முகனும்
இந்திரனும்
சேலேய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திரு வேங்கடத்தானே

சரணாகத வத்சல
அடி பணிந்தவர்கள் பக்கலிலே
வாத்சல்யம் யுடையவனே –
வாத்சல்யமே -நிகரில் புகழாய் -என்றதில் சூசகம் –
ஆஸ்ரயண சௌகர்ய ஆபாதகங்கள் -குணங்கள்
வாத்சல்யம் – ஸ்வாமித்வம் -சௌசீல்யம் -சௌலப்யம்
ஆஸ்ரித கார்ய ஆபாதன்கள் -குணங்கள் –
ஞான பல சக்தி யாதிகள் –
ஆஸ்ரித வாத்சல்யைக ஜலதே -தனிப்பட கத்யத்தில் காட்டி அருளினார் –

சார நிதே
சிறந்த நிதி போன்றவனே –
சிறந்த நிதி
சாரமான குணங்களை கொண்டவன்

அள்ள அள்ள குறை இல்லாமல் அஷயமாய் இருக்குமே
மேல் மேலும் பெருகுமே
நிதியே திரு நீர் மலை நித்திலத் தொத்தே –
நிதியினைப் பவளத் தூணை
வைத்த மா நிதியம் மது சூதனன்
நிதி கண்ணுக்கு புலப்படாத படி போலே
இவனும் -இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய்
கரந்து எங்கும் பரந்துளன் –
கண் காண நிற்கில் ஆணை இட்டு விலக்குவார்கள் என்று கண்ணுக்குத் தோற்றாத படி நின்று
என்று -ஸ்ரீ வசன பூஷன ஸூக்தி
கட்கிலியாய் இருப்பான் –
சில பாக்ய சாலிகளுக்கு புலப்படுவான் –
யானே தவம் செய்தேன்
கோர மா தவம் செய்தனன் கொல் அறியேன்
சித்த அஞ்சனம் அணிந்து கொண்டு பார்ப்பவர்களுக்கு நிதி தோன்றுமே

பரிபாலய மாம் வருஷ சைலபதே –
வ்ருஷபகிரி -என்னப் படுகிற திரு மலைக்கு இறைவனே
அடியேனைக் காத்து அருள வேணும்

———–

அதிவேலதயா தவதுர்விஷஹை: அனுவேல க்ருதை ரபராத ச’தை

பரிதம் த்வரிதம் வ்ருஷ சை’லபதே பரயா க்ருபயா பரிபாஹி ஹரே   3

திருமலை அப்பனே
கங்கு கரை இல்லாமையினாலே
தேவரீருக்கு சஹிக்க கூடாதவைகளையும்
ஷணம் தோறும் செய்யப் பட்டவையாயும் இருக்கின்ற
நூற்றுக் கணக்கான குற்றங்களினால் நிறைந்து இருக்கின்ற
அடியேனை பரம கிருபையாலே விரைந்து காத்தருள வேணும் –

வேலை -கரை – அநு வேலம் -ஷணம் தோறும்
பாப பூயிஷ்டதையைச் சொல்லிக் கொண்டு புகவே பரிஹாரம் பெறலாம்
அஸ்மத் தாதிகளின் அனுசந்தானத்திற்கு இறே பூர்வர்கள்
இங்கனே பணித்து வைத்தது –

———

அதிவேங்கட சை’லமுதாரமதே: ஜனதா பிமதாதிக தான தராத்

பரதேவதய கதிதாந்நிகமை: கமலாதயிதான ந பரம் கலயே     4

ஔதார்யம் மிக்க திரு உள்ளம் உடையவரும்
அவரவர்கள் விரும்புவதைக் காட்டிலும் அதிகமாக அளித்து அருள வல்ல
வேதங்களால் பர தெய்வமாக ஓதப்பட்ட ஸ்ரீ லஷ்மீ பதியை
காட்டிலும் வேறு ஒரு வஸ்துவை எண்ணு கின்றிலேன்

மற்றோர் தெய்வம் மதிக்கிலேன்
உதாரன் –என்னாமல் –உதார மதி -என்றது
இன்னமும் கொடுக்க வேணும் என்று இருக்கும் ஹிருதய வைசால்யத்தைப் பற்றி –
ஓன்று உண்டு செங்கண் மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ

ஜனத அபிமத அதிக தான ரதான்-என்றது
அர்த்தி தாரத்த பரி தான தீஷிதரான தேவப் பெருமாளில் காட்டில் வாசி சொன்னபடி –
நிகமை-வேதாந்தங்கள் என்ற விவஷையால்-

——————

கல வேணுரவாச’ கோபவதூ ச’தகோடி வ்ருதாத ஸ்மரகோடி ஸமாத்

ப்ரதிவல்லவிகாபிமதாத் ஸுகதாத் வஸுதேவஸுதாந் ந பரம் கலயே    5

இந்த ஸ்லோஹம் முதல் நான்கு ஸ்லோஹகங்களினால்
திருவேங்கடமுடையானை
கண்ணபிரானாகவும் இராமபிரானாகவும் கொண்டு ஏத்துகிறார்
இதல் கண்ண பிரானாக ஸ்துதிக்கிறார்
பொங்கு புள்ளின் வாய் பிளந்த புராணர் தம்மிடம் திருவேங்கடம்
கன்றிமாரி பொழிந்திடக் கடிதா நிரைக்கு இடர் நீக்குவான் சென்று குன்றம் எடுத்தவன் திருவேங்கடம் -போலே
குரவை கோத்த குழகனை -சாஷாத் மன்மத அழகை முற்றூட்டாக கொடுத்த படி -சொல்கிறது ஸ்மர கோடி சமாத் -என்று

அதி மதுரமான வேணு நாதத்துக்கு பரவசப்பட்ட
ஆய்ச்சிகளின் திரளால் சூழப் பட்டவனும்
கோடிக் கணக்கான மன்மதர்களை ஒத்தவனும்
ஒவ் ஒரு ஆய்ச்சியும் நமக்கே கணவன் என்று அபிமானித்து இருக்கப் பெற்றவனும்
சாஷாத் தர்மியுமான
வாஸூ தேவனில் காட்டிலும்
வேறு ஒருவரை எண்ணு கின்றிலேன்

கருமலர்க் கூந்தல் ஒருத்தி தன்னைக் கடைக் கணித்து ஆங்கே ஒருத்தி தன்பால் மருவி மனம் வைத்து
மற்று ஒருத்திக்கு உரைத்து
ஒரு பேதைக்குப் பொய் குறித்து
புரிகுழல் மங்கை ஒருத்தி தன்னை புணர்த்தி –
என்பதையே பிரதி வல்லபி ச் அபிமதாத் –

ஸூஹ்ருதாத்
க்ருஷ்ணம் தர்மம் சனாதனம்
தர்மமே வடிவு எடுதவனாக
தர்ம ஸ்தாபனம் பண்ணப் பிறந்தவன்
தானே சர்வவ தர்மங்களையும் விட்டு
என்னைப் பற்று என்கையாலே
சாஷாத் தர்மம் தானே -என்கிறது -முமுஷூப்படி ஸ்ரீ ஸூ க்தி-

————————

அபிராம குணாகர தாச’ரதே ஜகதேக தநுர்தர தீரமதே

ரகுநாயக ராம ரமேச’ விபோ வரதோ பல தேவ தயாஜலதே      6

இந்த ஸ்லோஹம் முதல் மூன்று
ஸ்லோஹங்களாலும் சக்கரவர்த்தி திரு மகனாக அனுபவிக்கிறார் –
அபிராம குணாகர
திருக் கல்யாண குணங்களுக்கு பிறப்பிடம் ஆனவனே –
சூர்பணகை-தாரை -மண்டோதரி -போல்வாரும் புகழும்படி

தாசரதே
தசரதாத் மஜானாகத் தோன்றினவனே –
மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன் மகனாம்
ஆத்மானம் மானுஷம் ராமம் தசரதாத் மாசம் –

ஜகத் ஏக தநுர்தர
உலகில் அத்விதீயனான வில்லாளியாய் விழங்கி-
புணரா நின்ற மரம் ஏழ் அன்று எய்த ஒரு வில் வலவா ஒ –

தீரமதே
துணிவு வாய்ந்த திரு உள்ளம் யுடையவனே –
சலிப்பிக்க ஒண்ணாத ஆஸ்ரித ரஷண த்தில் உறைப்பைச் சொல்கிறது –
அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் த்வாம் வா சீதே
ஸ லஷ்மணாம் ந ஹி பிரதிஜ்ஞ்ஞாம் சம்ஸ்ருத்ய ப்ரஹ்மனேப்யோ விசேஷத -என்றும்
மித்ரா பாவென சம்ப்ராப்தம் ந த்யஜெயம் கதஞ்சன -என்றும் காட்டி அருளினாரே

ரகுநாயக ராம ரமா ஈச விபோ வரதோ பவ தேவ தயா ஜலதே-
ரகுகுல திலகனே
இராமபிரானே
ஸ்ரீ லஷ்மீ பதியே
கருணைக் கடலே
திருவேங்கடமுடையானே
நீ
அடியேனுடைய அபேஷிதங்களை அளித்து அருள்பவனாக ஆக வேணும்-

—————————

அவநீதநயா கம நீயகரம் ரஜநீ கரசாரு முகாம்புருஹம்

ரஜனீசரராஜ தமோமிஹிரம் மஹநீயமகம் ரகுராமமயே        7

அவனி தனயா = பூமியின் மகள் (சீதை)
கமநீய கரம் = (அவள்) விரும்பும் கரங்களை உடையவனே!
ரஜநீ கர சாரு = (அவன்) கருத்த, கவர்ச்சியான
முக அம்புருஹம் = முகம் தாமரை போல இருக்கு!

ரஜநீ சர ராஜ = இருளில் நடமாடுபவர்களின் (அரக்கர்களின்) அரசன் (இராவணன்)
தமோ மிகிரம் = அவன் தமோ குணத்தைப் (கீழ்க் குணத்தை) போக்கியவன்!
மகநீயம் = மிகச் சிறந்தவன்!
அகம் ரகு-ராம மயே = என் இதயமே அந்த ரகு-ராகு-ராகவ மயமாய் இருக்கு!

அவநீ தனா கமநீயவரம்
பூமிப் பிராட்டியின் புதல்வியான சீதா பிராட்டி விரும்பத் தக்க மணவாளப் பிள்ளையும் –

ரஜநீ கர சாரு முக அப்ம்புருஹம்
அழகிய முகாரவிந்தத்தை யுடையவனும் –
சுற்றும் ஒளி வட்டம் சூழ்ந்து சோதி பரந்து எங்கும் எத்தனை செய்யிலும்
என் மகன் முகம் நேர் ஒவ்வாய் –

ரஜநீ சர ராஜ தமோ மிஹிரம்
ராஷ சேஸ்வரனான ராவணன் ஆகிற இருளை அகற்றும் ஸூர்யனும்
குன்றாத வலி யரக்கர் கோனை மாளக் கொடும் சிலை வாய்ச் சரந்துறந்து குலம் களைந்து வென்றானை –

கமநீ யம் ரகுராமம் அஹம் அயே
விரும்பத் தக்க வடிவு படைத்தவனும்
ஆன ஸ்ரீ ராமபிரானை -திருவேங்கடமுடையானை
நான் அடைகிறேன்

அயே -அய பய கதௌ-என்ற தாதுவில் தேறின ரூபம் இது-

———————

ஸுமுகம் ஸுஹ்ருதம் ஸுலபம் ஸுகதம் ஸ்வநுஜஞ்ஞ ஸுகாய அமோகசரம்

அபஹாய ரகூத்வஹமன்யமஹம் ந கதஞ்சன கஞ்சன ஜாது பஜே      8

ஸூ முகம் –
தன்னளிவே வடிவு எடுத்தவனும்

ஸூஹ்ருதம் –
சர்வ பூத ஹூஹ்ருத்தானவனும்

ஸூலபம்-
நீசர்க்கும் எளியனானவனும்

ஸூகதம் –
இன்பம் அழிப்பவனும்

ஸூகுணம் –
நற் குணங்கள் அமைந்தவனும்

ச ஸூ ஜாய-
நல்ல தேவியை யுடையவனும் –

மமோக சரம் –
பழுது படாத அம்புகளை யுடையவனும்

அபஹாய ரகூத்வம் அநயம் அஹம் ந கதஞ்சன கதஞ்சன ஜாது பஜே
இராம பிரானைத் தவிர
வேறு எந்த தேவனையும்
ஒரு விதமாகவும்
ஒரு காலும்
சேவிக்க கில்லேன்

தயரதற்கு மகன் தன்னை அன்றி மற்றிலேன் தஞ்சமாகவே -என்றும்
கற்பார் இராமபிரானை யல்லால் மற்றும் கற்பரோ -என்றும்
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவனாவான் -என்றும்
உள்ள பாசுரங்களை அடி ஒற்றி அருளிச் செய்த ஸ்லோஹம்-

———————

விநா வேங்கடேச’ம் ந நாதோ ந நாத: ஸதா வேங்கடேச’ம் ஸ்மராமி ஸ்மராமி –

ஹரே வேங்கடேச’ ப்ரஸீத ப்ரஸீத ப்ரியம் வேங்கடேச’ ப்ரயச்ச ப்ரயச்ச      –9

விநா வேங்கடேசம் ந நாதோ ந நாதோ
வேங்கடேசம் விநா நாதா ந நாத ந –
திருவேங்கடமுடையானைத் தவிர்ந்து
வேறொரு நாதன் இல்லை எனபது
சத்யம்

சதா வேங்கடேசம் ஸ்மராமி ஸ்மராமி –
திருவேங்கடமுடையானை
அனவரதமும்
நினைத்தபடியே இருக்கின்றேன் –

ஹரே வேங்கடேசம் ப்ரசீத பிரசீத-
சகல தாபங்களையும் ஹரிக்க வல்ல அப்பனே
திரு உள்ளம் மிகவும் உகந்து அருள வேணும் –

ப்ரியம் வேங்கடேச ப்ரயச்ச ப்ரயச்ச
வேங்கடேச -ப்ரியம்-ப்ரயச்ச ப்ரயச்ச –
திருவேங்கடத்தானே
நன்மையைப் பயந்து அருளின படியே
இருக்க வேணும்

ஒவ் ஒரு பாதத்திலும் த்வ்ருத்திகள்
ஆதராதிசயத்தால் ஆனவை-

——————

அஹம்தூரதஸ்தே பதாம்போஜயுக்ம ப்ரணாமேச்சயா (ஆ)கத்யஸேவாம் கரோமி —

ஸக்ருத்ஸேவயா  நித்யஸேவாபலம் த்வம் ப்ரயச்ச ப்ரயச்ச ப்ரபோ வேங்கடேச’        -10

பிரபோ வேங்கடேச
வேங்கடேச பிரபோ –
திருவேங்கடத்து எம்பெருமானே

அஹம் தூரதஸ் தே பதாம் போஜ யுகம ப்ரணாம இச்சயா ஆகத்ய சேவாம் கரோமி –
அஹம் தே பதாம் போஜ யுகம ப்ரணாம இச்சயா தூறத ஆகத்ய சேவாம் கரோமி –
அடியேன் உன்னுடைய இணைத் தாமரை அடிகளை
வணங்கும் விருப்பத்தினால்
தூர தேசத்தில் இருந்து வந்து
அத் திருவடிகளில் சேவை செய்கின்றேன் –

சக்ருத் சேவயா நித்ய சேவா பலம் தவம் ப்ரயச்ச ப்ரயச்ச
ஏதோ ஒருகால் செய்யும் சேவையினால்
நித்யமும் செவிப்பதனா ஆகும்
பலனை
நீ அவசியம் கொடுக்க வேணும்

அநந்ய பிரயோஜனமாக சேவிக்கும் அதிகாரிகள்
நித்ய சேவா பலம் ப்ரயச்ச -என்று
பலனை விரும்பக் கூடுமோ என்னில்
அத்தலையில் திரு உள்ள வுகப்பே யாயிற்று இங்கு பலனாக கருதப்படுவது

கதாஹ மைகாந்திக நித்ய கிங்கர ப்ரஹர்ஷயிஷ்யாமி சனாத ஜீவித -ஆளவந்தார்
ப்ரஹர்ஷயிஷ்யாமி -உயிரான ஸ்ரீ ஸூக்தியாகுமே-

—————————

அஜ்ஞாநினா மயா தோஷான் அசேஷான் விஹிதான் ஹரே–

க்ஷமஸ்வ த்வம் க்ஷமஸ்வ த்வம் சே’ஷசை’ல சி’காமணே–11

சேஷசைலம் ஆகிற
திருவேங்கட மலை யுச்சியிலே
நீல மணி போல் விளங்கும்
எம்பெருமானே
அவிவேகியான அடியேன் செய்த குற்றங்களை எல்லாம்
நிர்ஹேதுக கிருபையினால்
ஷமித்து அருள வேண்டும் என்று
பிரார்த்திக்கிறார் ஆயிற்று-

***

ஶ்ரீ வேங்கடேஶ்வர ப்ரபத்தி

ஈஶாநாம் ஜக³தோ(அ)ஸ்ய வேங்கடபதேர்விஷ்ணோ꞉ பராம் ப்ரேயஸீம்
தத்³வக்ஷ꞉ஸ்த²லநித்யவாஸரஸிகாம் தத்க்ஷாந்திஸம்வர்தி⁴நீம் ।
பத்³மாலங்க்ருதபாணிபல்லவயுகா³ம் பத்³மாஸநஸ்தா²ம் ஶ்ரியம்
வாத்ஸல்யாதி³கு³ணோஜ்ஜ்வலாம் ப⁴க³வதீம் வந்தே³ ஜக³ந்மாதரம் ॥ 1 ॥

ஈசாநாம் ஜகதோச்ய வேங்கட பதேர்விஷ்ணோ பராம் ப்ரேயசீம்-

இவ் வுலகுக்கு எல்லாம் ஈஸ்வரியாகவும்
திருமலை யப்பானுக்கு பிராண வல்லபை யாயும் –
அஸ்யேசா நா ஜகதோ விஷ்ணு பத்நீ -ஸ்ருதி சாயையில் பணித்தது

தத் வஷஸ் ஸ்தல நித்ய வாச ரசிகாம் தத் ஷாந்தி சம்வர்த்திநீம் –
அவனது திரு மார்பிலேயே நித்ய வாசம் செய்வதில்
விருப்பம் யுடையவளாயும்
அவன் மார்பை விட்டுப் பரியில் இவ் வஷரம் விட்டுப் பிரிவது -ஸ்ரீ ஸூக்திக்கு சேர பணித்தது
அப்பெருமானுடைய ஷமா குணத்தை வளரச் செய்பவளாயும் –
புருஷகார பலத்தாலே ஸ்வா தந்த்ர்யம் தலை சாய்ந்தால்
தலை எடுக்கும் குணங்களை சொல்லுகிறது நாராயண பதம் -முமுஷூப்படி
அஸ்தி கர்மார்ஹா பலதே பத்யௌ க்ருத்யத்வயம் சரிய
நிக்ரகுஅத்வ வாரணம் காலே சத்துஷணம் அனுக்ரஹே -ஸ்ரீ தேசிகன் ஸ்ரீ ஸூ க்தி

பத்ம அலங்க்ருத பாணி பல்லவ யுகாம் பத்மாஸ நஸ்தாம் ஸ்ரியம்
தாமரை மலரால் அலங்கரிக்கப் பட்டு
பல்லவம் போன்ற இரண்டு திருக் கைகளை யுடையவளாயும்
தாமரைத் தவிசில் வீற்று இருப்பவளாயும்
பத்ம பரியே பத்மிநி பத்மஹஸ்தே -இத்யாதிகளும் அனுசந்தேயம்

வாத்சல்யாதி குண உஜ்ஜ்வலாம் பகவதீம் வந்தே ஜகன் மாதரம்
வாத்சல்யம் முதலிய குணங்களால் திகழா நின்றவளாயும்
பரம பூஜ்யையாயும்
உலகுக்கு எல்லாம் தாயாயும்
இருக்கின்ற
அலர்மேல் மங்கைப் பிராட்டியை
அடியேன் வணங்குகின்றேன் –

சஹதர்ம சரிம் சௌ ரேஸ் சம்மந்த்ரித்த ஜகத்திதாம்
அனுக்ரஹ மயீம் வந்தே நித்யம் அஜ்ஞ்ஞாத நிக்ரஹாம் -ஸ்ரீ தேசிகன் ஸ்ரீ ஸூக்தி

ஆக
இப்படிப் பட்ட பெருமை வாய்ந்த பிராட்டியைத்
தொழுகின்றமை கூறி
ஸ்தோத்ரத்தை
தலைக் கட்டினார் ஆயிற்று –

அலர்மேல் மங்கை உறை மார்பன் அடி இணைகள் வாழியே

——–

ஶ்ரீமந் க்ருபாஜலநிதே⁴ க்ருதஸர்வலோக
ஸர்வஜ்ஞ ஶக்த நதவத்ஸல ஸர்வஶேஷிந் ।
ஸ்வாமிந் ஸுஶீல ஸுலபா⁴ஶ்ரிதபாரிஜாத
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 2 ॥

நாராயணனின் கல்யாண குணங்களை அடுக்கி அருளுகிறார் நேராக இதில்
சரண் அடைந்தவர் இடம் வாத்சல்ல்யம் வினத -நத வத்சல -தலை வணங்கியவர் அனைவருக்கும் ஸ்வாமித்வம் படைத்தவன்

சுலபன் திருவேம்கடத்தான்-பாரி ஜாதம் போல் கேட்பது அனைத்தையும் கொடுக்கும் –

எட்டு குணங்கள் -அடுக்குகிறார்-
ஆஸ்ரித சௌகர்யமான குணம் நான்கு -வாத்சல்யம் ஸ்வாமித்வம் சௌசீல்யம் சௌலப்யம் —

ஞான சக்தி பிராப்தி பூர்த்தி கார்யம் பண்ண -ஆக எட்டும்-

பயம் நீங்க -ஐயம் நீங்க -உயர்ந்தவன் அவன் தாழ்ந்தவன் நாம் –
குற்றமே குணமாக கொள்பவன்-வாத்சல்யன்-எதிர் குணம் பொறாமை-குணம் குற்றமாக கொள்வது அசூயை-அனசூயை-
அவளை பார்த்து பொறாமை பட முடியாத குணம் கொண்டவள் –வசிஷ்டர் நம்மை விட ஞானி சொல்லுவாமோ

செய்த குற்றம் நாற்றமாக கொள்ளும் -அச்சம் தவிர்க்க வாத்சல்யம் -அச்சம் போன பின்பு ஐயம் வர

சம்பந்தம் உணர்த்த -ஸவாமி–

ஸவாபம் ரசிக்க -நெருப்பு சுடுவது போல தண்ணீர் குளிர்வது போல் குற்றம் பொறுத்து ரஷிகிறான் கண்ணன் பதில் அர்ஜுனனுக்கு

ஸ்வாமி-சொத்து பாவம் – சொத்தை இழக்க மாட்டான் ஸ்வாமி –நாம் சொத்து ஆக இருக்க வேண்டும் -இதற்க்கு சம்மதித்தால் போதும்

ஸ்வாமி தன ஆச்சார்யர் பிள்ளைகளை திருத்திய ஐதீகம் போல்–இவரே தூர்த்த கோஷ்ட்டி நோக்கி காஷாய வேஷத்துடன் போக –

நீர் நம்மை விட்டாலும் நாம் விடேன் -காரேய் கருணை -அனைத்து உலகும் உய்ய வந்த எதிராஜர் –ஐயம் தவிர்த்து

அதிருப்தி பட -தேவ தேவனுக்கு பண்ணுவார்-
யானை மேல் சவாரி செய்பவர் யானைமேல் இருப்பவரை தான் ரஷிப்பார்-
தாழ்ந்தவர் இடம் கலக்க தேடி வருகிறான் சௌசீல்யம் –
ஏழை எதலன் கீழ் மகன் என்னாது –திருப்தியாக –
ஈசன் வானவர்க்கு என்றால் அது தேசமோ திரு வேம்கடத்தானுக்கு நீசனேன் நிறை ஒன்றும் இலேன்
என் கண் பாசம் வைத்த பரம் சுடர் –அவர்களுக்கு தலைவன் –
ஆழ்வார் இடம் பாசம் -கிடைக்க அரியவன் அருமை-இழந்தவர்க்கு இன்று கண்கள் காண்பதற்கு அரியனாய் –
இன்று அர்ச்சையாக -ஆட்சியில் தொடர்ச்சி நன்று -அறிக்கை விட்டு-அவதரித்து நாம் சொத்து –
சொல்லி கொண்டு-சரம ஸ்லோகம் சொல்லி -சௌலப்யம் காட்டி சேர்த்து கொள்கிறான்

ஆஸ்ரித சொவ்கர்யமான குணம் இவை நான்கும்

கார்யம் பண்ண ஞானம் -ஸ்ரீ வைகுந்தம் கொடுக்க சர்வக்ஜன் பாபம் தொலைத்து –

சக்தியும் வேண்டுமே சர்வ சக்தன்-அதீத ஞானமும் சக்தியும்

தொடர்பு -பிராப்தி -நமக்கு என்று -தாய் முலை பால் கொடுக்கும் -கன்று குட்டி தன பசுமாடு நோக்கி போகுமே அது போல்

பூர்த்தி இருக்கிறது -அடைய வேண்டியது ஒன்றும் இல்லாத பூரணன் -எதையும் எதிர் பார்க்காதவன்

ஐயோ ஏங்கும் கருணையும் உண்டே –க்ருபா சமுத்ரம்

ஆக ஒன்பது குணங்கள்

கிருபா ஜலநிதே /வாத்சல்யம்/ஸ்வாமின் /சுசீலா/சுலப /நான்கும் சொல்லி சரண் அடைந்து

ஸர்வஞ்ஞன்  சக்தி ஆஸ்ரித பாரிஜாத -வாரி வழங்குபவன்-பூர்த்தி சர்வ சேஷி-பிராப்தி உண்டு

அஞ்சேல் என்று தாங்கும் தாமரை அன்ன பொன்னார் அடிகள்- ஆங்கு வென் நகரத்து அழுந்தும் பொழுது —

சரித சர்வ லோக -அனைத்தையும் படைத்தவன்

ஸ்ரீமன் -பிராட்டி ஆனந்தத்துக்கு படைத்தவன்– மயில் தோகை –திரு முகம் தலை அசைத்து அங்கீகாரம்

அவள் தூண்டுதலின் பேரில் அவள் ஆனந்தத்துக்கு

ஜகம் சிருஷ்டிக்க சரணா கதியே பயன் -அதனால் இதை சொல்கிறார் இங்கு

சர்வ சேஷின்-கைங்கர்யம் கொள்

முகப்பே கூவி பணி கொள் –தாவி அளந்தான்-அவன் ஆனததுக்கு –
அவரே தீண்டி கேட்காமாலே -நன்றி அறிவிக்காமல் காலை தட்டி விட்டாலும் –
குழந்தை தாய் போல் –உறங்கும் பிரஜை முதுகில் கட்டி கொண்டு ஆனந்த படும் தாய் போல்

மோட்ஷம் கொடுப்பதும் அவனே -அதுவும் அவனது இன் அருளே –
சரண் சொல்ல வைப்பதுமட்டுமே நாம் செய்வதும் -அவன் அனுக்ரகத்தாலே

உன் ஆனந்ததுக்காகா  உன்னால் படைக்க பட்ட -உன் சொத்தை –
உன்னால் கொடுக்க பட்ட ஞானத்தால் உன்னால் கொடுக்க பட்ட நாவால் சரண் சொல்ல வைத்து —
உன் ஆனந்தத்துக்கு நீயே மோஷம் கொடுத்து உன் திரு அடிகளில் சேர்த்து கொண்டு-உலகம் சிருஷ்டிக்க இதுவே பலன்

படைப்புக்கும் பிராட்டி-சரணாகதி -கைங்கர்யம் மூன்றுக்கும் சம்பந்தம்

சரண் சகல பலனுக்கும் -கைங்கர்யம் தான் கேட்க வேண்டும்-ஏற்று கொள்ள வேண்டுமே

சர்வ சேஷி-அனைவரும் காத்து இருக்க –கொள்ளுகிற பாக்கியம் கிட்ட வேண்டும்

கிருபை கொண்டே படைக்கிறான் -ஈடு பிரவேசமும்

ஸ்ரீ ய பதியாய் –அவாப்த சமஸ்த காமனாய் -பூரணன்-எதையும் எதிர் பார்க்காமல்-
சமஸ்த கல்யாண குண பூரணன்/சர்வேஸ்வரன்-சம்பந்தம் நான்கும் சொல்லி –அது போல் இங்கும் —

கண்ணாய் ஏழு உலகுக்கு உயிராய எம் கார் வண்ணனை

விண்ணோர் தாம் பரவும் பொழில் வேம்கட வேதியனை

திண்ணார் மாடங்கள் சூழ் திரு மங்கையர் கோன் கலியன்

பண்ணார் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே

அடிக் கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்று என்று அருள் கொடுக்கும்

படிக் கேழ் இல்லா பெருமானை பழனக் குருகூர் சடகோபன்

முடிப்பான் சொன்ன ஆயிரத்து திரு வேம்கடத்துக்கு இவை பத்தும்

பிடித்தார் பிடித்தார் வீற்று இருந்து பெரிய வானுள் நிலாவுவரே

அடியீர் வாழ்மின் கைங்கர்யம் ஏற்று கொள்கிறான்

——-

ஆநூபுரார்பிதஸுஜாதஸுக³ந்தி⁴புஷ்ப-
ஸௌரப்⁴யஸௌரப⁴கரௌ ஸமஸந்நிவேஶௌ ।
ஸௌம்யௌ ஸதா³நுப⁴வநே(அ)பி நவாநுபா⁴வ்யௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 3 ॥

திரு அடி பெருமை அடுத்து சொல்கிறார் இதில்

தோள்கள் இருந்து தொங்கும் திரு மாலை திரு முடி திரு தோள்கள் திரு அடி வரை உறவாடும் புஷ்ப மாலை

என்றும் என்றும் புதிதாக -சதா அனுபவத்துக்கு —
நூபுர கங்கை போல்-ஆ சேது ஹிமாசலம் வரை போல் ஆ நூபுர -ஜாதி மணம் கொண்ட புஷ்பம்

தோமாலை சேவை முக்கியம் திரு மலையில் —

குளிக்கிற ஆசார்யம் -பூப்புனை கன்னி புனிதன்-காப்பு நான் கட்ட -தீர்த்தம் ஆடி வந்தான்

தோள்களில் இருந்து தொங்கும் மாலை –மணம் ஆக இருக்க ஆசை கொண்டு தொங்குகிரதாம்–
சர்வ கந்தன் -அவன்-பரிமளம் கொடுக்கவும்–இரவல் வாங்கி கொள்கிறதாம் மணத்தை திரு அடிகளில் இருந்து -இணை தாமரை அடிகள்-சம சந்நிவேசம் -ஒன்றுக்கு ஓன்று இணை –திரு அடி சேவை கிடைப்பதே துர்லபம் –
நிஜ பாத சேவை-தன் உடைய பாத சேவை-மென்மை பரிமளம் உசத்தி போட்டி ஆசன பத்மதுக்கும் திரு அடி தாமரைக்கும் போட்டி
ஆள் கண்ட சமுத்ரம் -திரு அடி மலர்ந்து -தோத்தவர் ஜெயதிதவர் தாங்கி இருக்கும் –
மங்கள கரமான எப் பொழுதும் அனுபவிக்க -அப் பொழுதைக்கு அப் பொழுது ஆரா அமுதன் –சதா அனுபவம்-நவ அனுபவம் –

புஷ்ப கைங்கர்யம் சிந்து பூ மகிழும் திரு வேம்கடம் –ஸூத்ரவதி உடன் வானவர் கோன் வந்து சேவை–
சிந்திக் கொண்டே இருக்கும் பூ-தானே விழுமாம் கூடையில்-சுமந்து மா மலர் நீர் சுமந்து —
வேம்கட வானர்க்கு  என்னை உய்த்திடுமின் -மத்தறு மலர் குறுக்க மலர்
செண்பக மல்லிகை உடன் என்பகர் பூ -செண்பகமாய் இருக்கும் நிலை ஆசை கொண்டார்

————-

ஸத்³யோவிகாஸிஸமுதி³த்வரஸாந்த்³ரராக³-
-ஸௌரப்⁴யநிர்ப⁴ரஸரோருஹஸாம்யவார்தாம் ।
ஸம்யக்ஷு ஸாஹஸபதே³ஷு விளேக²யந்தௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 4 ॥

சாகச செயல்-சத்யா விகாசம்-அப் பொழுதே மலர்ந்த சமு தித்வர -மேலும் மேலும் மலரும்

சிவந்த -மணம் நிறைந்த மலரோடு-அடை மொழி இவை எல்லாம் –மென்மை யான /நறு மணம் உடைய -அப் பொழுதே அலர்ந்த –

ஒப்புமை இட ஆசை கொண்டு–அடை மொழி சேர்த்து பிரயத்தனம்-அடாத செயல்-
சாகாச செயல்-சாம்ய வார்த்தை-பேச ஆரம்பித்ததும்

மிக உயர்ந்த சாகச பதேஷு-எழுதி வைத்து விலேகயந்தவ் -முரட்டு தனமான எழுத்து எழுத போனது
கட்டுரைக்கில் தாமரை-நன் பொன் உன் திரு மேனி ஒளி ஒவ்வாது

பொன்–நன் பொன் -சுட்டு உரைத்த -அடை மொழி ஏற்றி -சொல்லி ஒவ்வாது —
அது போல் தாமரைக்கு -இல்லாத உவமை உவமையாக சொல்வது

திரு அடி மோஷம் கொடுக்கும் -தாமரை கொடுக்காதே –
கைங்கர்யம் கொள்ளாது தாவி உலகம் அளக்காதே –முரட்டு உபமானம்

திரு கமல பாதம் பாவனம் போக்கியம் இரண்டும் –தாமரைக்கு இல்லை-
கண்டேன் கமல மலர் பாதம் கண்டேன் விண்டே ஒழிந்தன வினை –
காலை மாலை கமல மலர் இட்டு -திருஅடி சிவந்து போனதாம் மலர் இட்டதும்-மென்மை–
ஆயிரம் நாக்கு வாங்கி கொண்டு உன் பெருமை பாட முடியாது சொல்ல -பட்டர் —

———–

ரேகா²மயத்⁴வஜஸுதா⁴கலஶாதபத்ர-
-வஜ்ராங்குஶாம்பு³ருஹகல்பகஶங்க²சக்ரை꞉ ।
ப⁴வ்யைரளங்க்ருததலௌ பரதத்த்வசிஹ்நை꞉
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 5 ॥

இலச்சினை -லஷணம் சொல்கிறார்-

ஆள வந்தார் கதா புன  வஜ்ரா லாஞ்சனம் -ஸ்லோஹம் போல்

படிக்கு அளவாக நிமிர்ந்த பாத பங்கயமே தலைக்கு அணியாய்-

ரேகை வடிவான–ஒன்பது சொல்கிறார்-
கொடி-அமிர்த கலசம்-குடை-வஜ்ரம்-அம்குசம் -சங்கு -சக்கரம் -கல்பக

ஒரு காலில் சங்கு  ஒரு காலில் சக்கரம் -இலச்சினை பட நடந்து –

பரம புருஷன் அடையாளம் பரதத்வ சிஹ்நை-அலங்க்ருதம்-பவை-பவித்ரம்

கையினார் சுரி சங்கு அனல் ஆழியார்-பெரிய பெருமாளுக்கு இரண்டு திரு கைகள்-
காட்டவே கண்டார் -ரேகை சொல்கிறார் தேசிகன்

அதிதி தேவி-போல் கௌசல்யை சந்தோஷித்தாள்-வாமனனை பெற்றது போல் ராமனை பெற்று-
வஜ்ர பாணி-இந்த்ரனை சொல்லாமல் ரேகை பொருந்திய திரு கைகள்

————–

தாம்ரோத³ரத்³யுதிபராஜிதபத்³மராகௌ³
பா³ஹ்யைர்மஹோபி⁴ரபி⁴பூ⁴தமஹேந்த்³ரநீலௌ ।
உத்³யந்நகா²ம்ஶுபி⁴ருத³ஸ்தஶஶாங்கபா⁴ஸௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 6 ॥

சத்வம் ரஜஸ் தமஸ் தாண்டி வெளி திரு அடி நீல கல்லை வெல்லும் உள் திரு அடி தாமரையை வெல்லும்
நகம் -வரிசை-சந்த்ரனை வெல்லும் மூன்றையும் வெல்லும் திரு அடிகள் -தாம்ரம்-சிவந்த உதர -உள்
பாஹ்யர் -வெளி- இந்திர நீல ரத்னம் வென்றது

அகம் அம்சுபி -ஒளி சசாங்கம் சந்தரன் ஒளி தோற்றது —

சத்வம் வெள்ளை   வென்றது

கரு நீலம்

சிகப்பு

பிராக்ருத ரஜஸ் தமோ சத்வம் வென்றது –பூர்ண சந்தரன் -கருப்பு -இருக்கும் -களங்கம் இன்றி நகம்

சுத்த சத்வ மாயம் அப்ராக்ருத

கருப்பு கடல் நுரை போல் நக கணுக்கள்

பார் கடல் வெளுப்பு நீல கடல் போல் -திரு மேனி-

——————

ஸப்ரேமபீ⁴தி கமலாகரபல்லவாப்⁴யாம்
ஸம்வாஹநே(அ)பி ஸபதி³ க்லமமாத³தா⁴நௌ ।
காந்தாவவாங்மநஸகோ³சரஸௌகுமார்யௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 7 ॥

சாஸ்திரம்–சிஷ்டாசாரம் -பிரபத்யே -மனசில் உறுதி பாடு

உப அயதே சமீபத்தில் அழைத்து செல்லுவது-பலத்துக்கு அருகில் -உபாயம்

பல பிரத்வம் வேறு-பலம் கொடுப்பவன் பகவான் ஒருவனே

சித்த உபாயம் –நம் முயற்சி இன்றி -சித்தமாக இருக்கிறான் -உபாயமும் பிராப்யமும் அவன் திரு அடிகள்

மாம் ஏகம்-என் ஒருவனையே பற்ற அவன் சொல்ல திரு அடிகளை பற்றுகிறோம்  -இதுவே அனுஷ்டானம்

ஈஸ்வரேனே கை விட்டாலும் திண் கழலாக இவை கொடுக்கும் –
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் ஏக சிந்தனையாய்

வந்து உன் அடி இணை அடைந்தேன் –
துத் சரனாரவிந்தே -துத் பாதாரவிந்த -அடி இணை வந்து அடைந்தேன் -அடிக் கீழ் அமர்ந்து

உலகம் அளந்த பொன் அடியே அடைந்து உய்ந்தேன்

லோக விக்ராந்தவ் சரணவ் சரணம்

அவன் திரு உள்ளம் படி அனுஷ்டானம்

காலில் விழ சொல்ல மாட்டான்

மித்திரன் போல் கை பிடி -நண்பன் என்று பிராட்டி அருளியது போல்

பிரிந்த தசையிலும் உபதேசிகிறாள் -அரச மரியாதை -பெருமாள் திரு உள்ளம் அறிந்து உபதேசம்

அழைக்கின்ற அடி நாயேன் -உள்ளம் குழையும்-ஆழ்வார்

கோவில் மகா ஜனம் பட்டரை-லகு சம்ப்ரோஷனம் ஐதீகம்   திரு அடி பிடிக்க கூட யோக்யதை இல்லை

மாம் ஏகம்-திரு மார்பை காட்டி கண்ணன் சொல்கிறான்

பிரார்த்தனா மதி சரணாகதி —

குழந்தை தாய் முலையில் வாய் வைப்பது போல் திரு அடி பற்றி சரண்

சந்தரன் -சசாங்கம்-கருப்பு திட்டு முயல் வடிவில்-சச =முயல்-இதனால் அடையாளம்

களங்கம் தீர பத்து விரல்களில் கைங்கர்யம் -நிஷ் களங்கமாக –

திரு வேம்கடம்-மதி தவழ குடுமி மால் இரும் சோலை –

வைப்பன் மணி விளக்காம் மா மதியை-பூர்ண சந்த்ரனை-ஆகாசத்தில் மதி –
இங்கு மா மதி -மாலுக்கு என்று எப் பொழுதும் கை நீட்டும் யானை

வேடர்கள் இவற்றை பார்த்து -வில் எடுக்கும் மலை வேம்கடம்

பகர் அல்லை பகல் செய்-இரவை பகல் ஆக்கும் –

திருஅடி  நிச்சலும் பிடித்து விட பிராட்டி ஆசை –
சொரூபம் பார்த்து ஆசை –
குணம் பார்த்து அச்சம் -இரண்டும்

சேஷத்வம் பார்த்து -அவனுக்கு பெருமை சேர்க்க – பரகத அதிசய ஆதன –சு பிரயோஜன நிவ்ருத்தி சேஷத்வ பலன் –
அவன் ஆனந்தத்துக்கு மட்டுமே பேசி செய்து நினைத்து –பயம் நீங்கும் –
இதனால் -நடந்த கால்கள் நொந்தவோ-பேசி வாழி கேசனே –கூசி பிடிக்கும் மெல் அடிகள் –

பாரதந்த்ர்யம்

திரு கைகளால் பிடித்தால் கன்னி சிவக்குமே அச்சம்-ஆசை வென்று-பிடிக்க –
சிகப்பே நம் சம்சாரம் கழித்து கொடுக்கும்

ச பிரேம பீதி-கமலா கர பல்லவம்-முகிழ் கொழுந்து போன்ற திரு கைகள் –காந்தி-ஈர்க்கும்

வாக்குக்கும் மனசுக்கும் எட்டாமல் இருக்கும் சொவ்குமார்யம் –

ரஷகன்-பார்த்து எழுப்ப -சொவ்குமார்யம் பார்த்து – அம கண் மா ஞாலம் கடாஷம் கேட்ட பின்பு ஆண்டாள்

மாரி மலை –இங்கனே போந்து அருளி–போற்றி அருளுகிறாள் அடுத்து —
வந்த திருஅடிகள் நொந்தனவோ அது போல்

அங்கும் இங்கும் வானவர் -உன்னை வேலை வாங்க -வருவார் செல்வார் –
சங்கு சுமந்து -மற்று அடியேன் உளன் ஆழ்வார்

சொரூப ரூபகுணம் வகை –மார்த்வம் சொவ்குமார்யம் இரண்டிலும் –
உள்ளத்திலும் உடம்பிலும் –விட்டு கொடுக்க மாட்டான்

சரண் அடைந்த நீசனான என்னையும் கொள்வான் -மறை முக அர்த்தம் –
பிரிந்து பல ஜன்மம் இருக்கிறோமே -கோடி காட்டினால் புரிந்து கொள்வான்

பிரிந்து கடினமாக ஆகுமே திரு அடியும் திரு உள்ளமும்

திரு ஆபரணம் பிராட்டிக்கு எங்கு சாத்தலாம் என்று தோழிமார் பார்த்தாலே கன்னி போகும் திரு மேனி சீதை பிராட்டிக்கு

நடந்து போனாலே பொன் துகள்கள் சிந்தி கொண்டே போகுமாம்

அவள் பெருமாளை தொட்டால் சிவக்கும் படியான மெல் அடிகள்

திரு காட்கரை -மருவிய மாயன்-ஆள் கொள்வான் ஒத்து என் உயிர்–ஆர் உயிர் பட்டது என் ஆர் உயிர் பட்டது –

ஆள் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயன்

தெளிந்த என் சிந்தை -காய்சின வேந்தே -கூப்பிடு தூரம் –
ராமானுஜர் கேட்டு வியந்த ஐதீகம் –கூவுதல் வருவுதல் செய்யாயே அடியேன் பிடிக்க

பூமி பாலன் திரு அடிகளை தாயார் பிடித்து விட –
கொடு வினையேனும் மெல் அடியை பிடிக்க கூப்பாடு போடா கூடாதா -ஆழ்வார் கேட்கிறார்

திரு காட்கரையில் கொடுக்கிறேன் என்றான்-

வந்தான்-ஆழ்வாரை அமர சொன்னான்

நம் ஆசை ஆணை

முகம் கன்னி போக கூடாது என்று அமர

திருஅடி பற்றி விட

பாரதந்த்ர்யம் நினைவு வர -அவனுக்கு பிடித்த படி இருக்க வேண்டுமே

அடிமை  தனம் விட அவன் திருஉள்ளம் படி நடப்பதே முக்கியம்

அடுத்த காலை நீட்ட -மலர்ந்த திரு கண்கள்-கப்யாசம் புண்டரீக அஷணீ–

தேவரீர் சொத்து -அடியேனால் அடியேன் ஆத்மா சமர்பிக்க -அதுவும் உன் சொத்தே

பதக்கம் எடுத்து நாமே சமர்ப்பித்தது போல் –

இப்படி என்ன பண்ணுவது என்ற படி-தோள் களை ஆர தழுவி -அகவிலை செய்தனை —
சம்சாரம் கண்டு பயந்து பரந்யாசம் அதுவும் அவனது செய்ய வேண்டாம் எத்தை கொண்டு சமர்பித்து –
உணர்வினுள்ளே இருதினினே அதுவும் அவனது இன் அருளே –அதுபோல் பிராட்டியும் பிரீதி பீதி இரண்டும் கொண்டு –தயிர் கடையோசை நட்டுவாங்கம் கொண்டு கண்ணன் தாண்டவம் ஆட –
கீசு கீசு என்று -மத்தினால் ஓசை -கேட்டே -ஆடி ஆடி-சிவந்த திரு அடிகள் பிராட்டி திரு கைகளால் ஆசுவாச படத்த –
பட்டர்–பெருமாள் பிராட்டி  பெருமை மாறி மாறி  பேசுவது போல்–

தளிர் புரையும் திரு அடி என் தலை மேல் –
மின் உரு பொன் உரு பின் உரு -மூன்று தத்வமும் அவன் தானே ஆழ்வாரை கொண்டதும்
சருகாக இருந்த திரு அடி தளிர் விட -பக்த ஸ்பர்சத்தால் -புஷ்ப ஹாச மலர்ந்த திருஅடிகள்–
அபிலோசன உற்று நோக்கினாலே முத்தரை குத்தினால் போல் -சந்தனம் பூசி கொண்ட கண்ணனை பார்த்த
மதுரை பெண்களின் வேல் விழி கயல் விழி  மான் விழி திரு மார்பில் பதிந்தது போல்  —
கோபால  சூடா மணி –அழியாமல் சாந்தணி தோள் சதுரன் மலை– மல்லரை மாட்டிய தேவாதி தேவன் –
கொடுத்த பரிசு மாறாமல் இருந்தான் –

———-

லக்ஷ்மீமஹீதத³நுரூபநிஜாநுபா⁴வ-
நீலாதி³தி³வ்யமஹிஷீகரபல்லவாநாம் ।
ஆருண்யஸங்க்ரமணத꞉ கில ஸாந்த்³ரராகௌ³
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 8 ॥

மூன்று தேவிமாரை பற்றி இதில் அருளுகிறார்

மகா லஷ்மி மஹீ பூமி தேவி- நீளா தேவி -திரு மகள் மண் மகள் ஆய மகள்-சிகப்பு பச்சை ஊதா நிறம்

மூவரிந்தளிர் போன்ற திரு கைகள் -ஆருன்ய சிகப்பு -அருணோதயம் –
மகர சங்கராந்தி-சங்கரமணம் -ஒன்றுடன் ஓன்று சேர்ந்து –

இதன் சிகப்பு வீசி-கரு நீல திரு அடிகள் -சிகப்பு தொற்றி கொண்டு மாற சாந்த்ர ராகவ்-சிகப்பு ஏறி-

மையார் கரும் கண்ணி கமல மலர் மேல் செய்யாள் —
மதம் கொண்டு சிகப்ப-ஐஸ்வர்யா செருக்கால் குதறி சிவக்க -ராகம்-அடியார் பற்றுவார் என்ற ஆசை உடன் -கரிய வாகி புடை பெயர்ந்து  மிளிர்ந்து –நேர் எதிர் -கருப்பு திரு மேனி கண் சிவந்து இவருக்கு
அவளுக்கு சிவந்த திரு மேனி கரிய திரு கண்கள் –எதனால்-நடந்தது –
அது போல்–கண்களால்பார்க்க இவன் திரு மேனியில் ஏற இவன் சிவந்த கண்களால் பார்க்க அவள் திரு மேனி சிவப்பு –
அதற்க்கு இது இதற்க்கு அது –மாறுதலும் நித்யம்-அபிமத அநுரூப தாம்பத்யம் -திரு மகள் மண் மகள் ஆயர்மதா மகள் என்று இவர் மூவர் —
கூந்தல் மலர் மங்கைக்கும்  மண் மடந்தைக்கும் குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் —
வார்த்தை பார்த்து -மங்கை மடந்தை கொழுந்து -பெதும்பை பேர் இளம் பெண் மங்கை-பருவ நிலைகள்-

பின்னை கொல் நில மா  மகள் கொல் திரு மகள் கொல் பிறந்திட்டாள் —
ஆழ்வாருக்கு ஒப்பு சொல்லு -கடி மா மலர் உடன் உள்ள சாம்யம்

அவளும் நின் ஆகத்து –இவளை சொல்லு-சாம்யம்-சொல்ல இவளுக்கு ஏற்றம்-
பூ மேல் இருக்கும் திரு -அத் திரு அவனை பற்றும் இத் திரு இருவரை பற்றும் –நடுவாக வீற்று இருக்கும் நாரணன் -ஸ்ரீ ரெங்க நேதா-தலைவன்-திரு அடி சிவக்க –
மௌலி சக்கரவர்த்தி கிரீட ரத்ன ஒளியாலா –அடியார் திரு உள்ளம் ஆசனமாக அமர்ந்ததாலா
ஆசையால் சிவந்த திரு உள்ளம்–கமலா கரேப்யே -மூன்றும் பட்டர் அருளியது போல் —

————

நித்யாந்நமத்³விதி⁴ஶிவாதி³கிரீடகோடி-
-ப்ரத்யுப்ததீ³ப்தநவரத்நமஹ꞉ப்ரரோஹை꞉ ।
நீராஜநாவிதி⁴முதா³ரமுபாத³தா⁴நௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 9 ॥

நித்யானவதி விதி பிரம்மா சிவன் இந்த்ரன் -போல்வார் கிரீடம் பட -ரத்னம் -தனுஷ்கோடி-ஒளி- கிரீட நுனி-ரத்ன கல்

கிரீடம் -மகுட -ஸூடவதம்சே மும் முடிக்கு பேர் அரசு–ஆதி ராஜ்ய ஜல்பிதா -பிதற்றுகிறதாம்-
யார் தலையில் உட்கார்ந்து இருக்கிறேனோ அவன் தான் ஜகத்துக்கு அதிபதி என்று சொல்லி கொண்டு—நீல கரு மேக சியாமளன் போல் உதய கிரிக்கு மேல் ஸூர்யன் போல் கிரீடம் -கோள் சொல்லி கொடுக்கும் அவனை —
எளியவன் வேஷம் போட்டு தேவாதி ராஜன் ஹஸ்த கிரிக்கு வர -கிரீடம் பராத் பரன் காட்டி கொடுக்கும் —
முத்து குடை தங்க குடை ரத்ன மேல் மூடி இருக்கும் -அபிமான பங்கமாய் சங்கம் இருப்பார் போல்-ஒளி மலர-திரு அடியில் பட்டு வளருமாம்-திரு அடிக்கு ஹாரத்தி காட்டுமாம் இந்த ஒளியால்-நீராஞ்சனம்-ஹாரத்தி-
வைகாசி விசாகம் தீர்த்தவாரி-ஆழ்வாரே இறங்கி-
மனோ ரதம் நிறைவேற்றுவார் நீராஞ்சனம் சேவித்து பெறலாம் -200  தேங்காய் மூடி விளக்காக இருக்கும் —
ஆழ்வார் மட்டும் குளிர்ந்து-பைம் கமலா தன் தெரியல்-ஆழ்வார் மாலை குளிர்ந்து இருக்கும்-அகிலாண்ட கோடி பிரம்மாண்ட கண் எச்சில் படாமல் ஹாரத்தி-திரு அந்தி காப்பு-திரு வெள்ளறை காப்பு இட்டார் பெரியாழ்வார்-
உபாதா தானவ்-ஏற்று கொள்ளும் திரு அடிகள் -மனு குல அரசர் -இஷ்வாகு திலீபன் தசரதன் பெருமாள்-பரம்பரை திரு ஆராதனம்
கிரீடம் -ராமனுக்கு சூட்டி பட்டாபிஷேகம்–நவ ரத்ன ஒளி பெரிய பெருமாள் திரு அடியில் காணலாம் இன்றும்-
அது போல் இவன் நின்று பெற்றார் அடியரோர்க்கு அகலாமோ –கிடந்ததோர் கிடந்த அழகுக்கு ஹாரத்தி

பெண் மீன் உருவம் பதிந்து இருக்குமாம்-கண் கிரீடத்தில் இருப்பது

அடுத்து அருளுகிறார்

உள் திருஅடி சேவை கிடைப்பது துர் லபம்

திரு கோளூரில் ஜன்னல் வழியாக சேவிக்கலாம்

————–

விஷ்ணோ꞉ பதே³ பரம இத்யுதி³த ப்ரஶம்ஸௌ
யௌ மத்⁴வ உத்ஸ இதி போ⁴க்³யதயா(அ)ப்யுபாத்தௌ ।
பூ⁴யஸ்ததே²தி தவ பாணிதலப்ரதி³ஷ்டௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 10 ॥

யாரும் பார்க்க முடியாத பரம பதம்-மாக வைகுந்தம் தெளி விசும்பு திரு நாடு-காண்பதற்கு
என் மகம் ஏக எண்ணும் ஆகம் சேர் நரசிங்கம் அதாகி ஓர் ஆகம் வள உகிரால் பிளந்தான் உறை
மா வைகுந்தம் காண மனம் ஏக எண்ணும் –

கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்-

புண்ணில் புலி பெய்தால் போல் திரு அடியில் மது தாரை பொழியும் என்பர்–
அதை எங்கும் தேடி போக வேண்டாம் -இங்கே அழுந்த இருக்க திரு கை காட்டி காட்டுகிறான்

எந்த திரு அடிகளில் உயர்ந்த வேதாந்த புகழும் -மது பெருகும்-போக்யதை உள்ள திரு அடி-அனுபவ தக்க –
பெருமை இனிமை இரண்டும் உண்டு–பரம போக்கியம் –ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவதே
இங்கேயே இருகிறதே வலது திரு கைகளால் காட்டுகிறேர் -சரணம்-பிராப்யம் –
அனுபவிக்க தான் திரு அடி -உபாயமாக நாம் ஆக்கி கொண்டோம் -கரு முகை மாலையை சும்மாடு போல் உபயோகித்தோம் —
அனுபவிக்க கொடுத்ததை -விதி அற்று உபாயமாக ஆக்கி கொண்டோம்.-

———–

அடுத்து பார்தந்தன் தேர் முன் நின்று அருளியதை அபிநயம் காட்டிக் கொண்டு இருக்கிறீர்

பார்தா²ய தத்ஸத்³ருஶஸாரதி²நா த்வயைவ
யௌ த³ர்ஶிதௌ ஸ்வசரணௌ ஶரணம் வ்ரஜேதி ।
பூ⁴யோ(அ)பி மஹ்யமிஹ தௌ கரத³ர்ஶிதௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 11 ॥

ஏற்ற சாரதி-பிடித்த -தேர் பாகன்-மாம் ஏகம் சரணம் விரஜ -என்று அருளியதை-

காலில் விழுந்தவரையும் கை பிடிக்கும் ஓங்கி உலகு அளந்த உத்தமன்-மறு படியும் திரு கைகளால் காட்ட பட்டன –
வலது திரு கையால் காட்டி கொண்டு இருகிறாய் –ஆர் எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய்-
சுட்டி காட்டுகிறாய் இது தான் என்று –தொட்டு காட்டுகிறார் –மாம்–மற்றவை விட்டு தன்னை

திரு மேனியில் எது -அதில் திரு அடி காட்டி மற்றவை விட்டு காட்டுகிறார்

சத்ருச சாரதி இவர் தான் -பார்த்த சாரதி-பார்த்தன் தன் தேரை ஊன்றான் –
தாழ்ந்த தஞ்சயனுக்கு -கர்மம் அறியாத -ஆகி-பஷ பாதமாக ஆகி –
மணி தின் தேர் உஊர்ந்தவன் -நர நாராயணனே அருஜுனன் கண்ணன்–ஆச்சர்ய சிஷ்ய பாவம் மாறி இருந்தார்கள்–

கருணனுக்கு பிடிக்காத சாரதி சத்யன்

சாமான்ய விசேஷ நியாயம்-மாம்-திரு அடி -காட்டி கொண்டு-
சேஷி பக்கல் சேஷ பூதன் இழியும் இடம் திரு அடி காட்டி கொண்டு இருக்கிறான்

———————

மந்மூர்த்⁴நி காளியப²ணே விகடாடவீஷு
ஶ்ரீவேங்கடாத்³ரிஶிக²ரே ஶிரஸி ஶ்ருதீநாம் ।
சித்தே(அ)ப்யநந்யமநஸாம் ஸமமாஹிதௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 12 ॥

சௌசீல்யம் -கூராளும்–தனி உடம்பன்-விஸ்வ ரூபத்தில் அனைத்தையும் காட்டி

உயர்வு தாழ்வு இன்றி ஸ்ரீ வைகுண்ட விரக்தாய -உயர்வு தாழ்வு பாராமல் -அனைவருக்கும்-சேவை சாதிகிறாய்–

பரம பக்தர் பர வேதாந்தி பரம பாமரன்-அனைவர் தலையிலும் -லோக விக்ராந்த  சரணவ் –
உலகம் அளந்த பொன் அடி-

தாள் பரப்பி மண தாவிய ஈசன் இவனே–தாவி அன்று உலகம் எல்லாம் தளவிலா கொண்ட எந்தாய்

ஆவியே அமுதே -தொண்டர் அடி பொடி ஆழ்வார்

நீசன் விலகி போக -வெள்கி போய் விலவர சிரித்திட்டேனே-உள்ளுவார் உள்ளத்து எல்லாம் உறைகின்ற —
கோவர்த்தன கிரி கீழும் அனைவரும் பண்டித பாமர விவேகம் அற–

மன் மூர்த்னி- என் தலையில்– நீசன்-வேதாந்தம் மேலும் விளங்கி –
ஆனால் அவனோ தளிர் புரையும் திரு அடி ஆழ்வார் தலையை தீண்டிய பின்பு –

அவன் வைக்கும் இடம் ஏற்றம் பெறுகிறது-பண்பும் அவன் சம்பந்தம் பெற்று நல்ல பண்பாகும் ..
அடியேன் தலையில்-காளிங்கன் பாம்பின் தலையில்/தொல் கானம்-அடர்ந்த காட்டில்-ஸ்ரீ வேம்கடாத்ரி சிகரம்-ஸ்ருதி தலை வேதாந்தம் தலையில்-அநந்ய மனச படைத்தவர் அவனையே அவனுக்காகா நினைப்பவர் –
இங்கு எல்லாம் திரு அடி வைத்தவன் ஆறு இடங்கள்-துவய சப்தம் ஆறு என்பதால் –
என் தலை தொடக்கி அநந்ய சித்தம் -நீச நிலை தொடக்கி உயர்ந்த இடம் வரை-கூரத் ஆழ்வான் வரதராஜ ஸ்தவத்தில் அருளியது போல் –வேழ மலை மேல் இருப்பதா –  –
பக்தர் ஹிருதயம்-வேத சிரஸ் -கமல- தாமரை மேல் -நம் ஆழ்வார் திரு உள்ளத்திலா –
மந்த ஸ்மிதம்-ரோம ஹர்ஷம் வேழ மலை அழகால்-புது பொலிவால் –ராச கிரீடை கோபிகள் பூமி பார்த்து கேட்டார்கள் —
முதல் அடி பூ-கவிழ்த்து அலர்த்தி –ஒரு திருஅடி கீழும் ஓன்று மேலும் –

சௌசீல்யம்-அனைவரையும் சமம் –வாத மா மகன் மர்கடம்- விலங்கு மற்று ஓர் சாதி உற்றதும் உன் அடியார்க்கு அடிமை –
திரு கண்ண புரம் திரு நறையூர் இரண்டுக்கும் நூறு பாசுரம் திரு அரங்கம் மட்டுமே ஒரே ஐம்பது பாசுரம் அருளி
திரு மங்கை ஆழ்வார் அத்வதீயம் திரு அரங்கம் காட்டி-வேருவாதால் வாய் வேறுவி வேம்கடமே வேங்கடமே என்கின்ற –
வாயு குமாரன்-மனிதன் மற்று ஓர் ஜாதி மர்கடம் சொல்லி-செருக்கு உள்ள குரங்கு என்பதால் வாய் குமரன் சொன்னார்

முலையோ முழு முற்றும் பொந்தில -கலையோ அறை இல்லை நாவோ குளறும் மிளிரும் கண்   –
கடல் வண்ணன் என்றோ விலையோ-சிறு பிராயம் அனைவரையும் சமமாக பார்க்கும் —

சைதன்யம் இருந்தும் தப்பு பண்ணி-இரு கால் மாடு போல்-அதனால் காளிங்கன் தேவலை —
ஸ்ரீ பாஷ்யம் கேட்டு தரை தட்டி இது போன்று புரிந்து கொண்டேன் சொன்ன ஐதீகம்-
அடுத்து வெம் கானம்-காலின்கனுக்கு சில அறிவு உண்டே -அதனால்-வெப்பம் குற்றம் இல்லை-
அடுத்து உயர்ந்த வேம்கடம்-உசத்தி- வேதாந்தம் முடியில்-திரு வேம்கடம் உயர்ந்தது என்று சொல்லியதால் —
அடுத்து அநந்ய மனச-சிஷ்ட பரிக்ரகம் பூர்வர் அனுஷ்டானம் வேண்டுமே -சகஸ்ர நாமம் ஏற்றம் –
வேதாந்தம்-பீஷ்மர் அறிந்த தர்மம்/வியாசர் -போல் இங்கும் அநந்ய மனஸ் ஏற்றம்

ஆழ்வார் திரு உள்ளம்-என் உச்சி உளானே–வந்து என் உச்சி உளானே–
முதலில் திரு வேம்கடம் வந்து-நின்று இருந்தால் கிளம்ப போகிறான்-மாரி மாறாத தன் அம் மலை-
தாமர பரணி நதி ஓடும்-கருணை வர்ஷம்–கமல கண்ணன் என் கண்ணின் உளான்–
திரு முடி தர்சனம் அங்கு தான்-பொலிந்து நின்ற பிரான் ஆழ்வார் திரு முடி மேல்-ஆதி  பிரான் நின்ற பெருமான்-
இருவரையும் மங்களாசாசனம் ஆழ்வார் பண்ணி கொண்டு –பட்டயம் வாசிப்பார்கள் உமக்காக தந்தோம்–கொண்ட கோவலன் விஷ்ணு சித்தன் மனத்தில் –பருபதத்து  கயல் பதித்த பாண்டியன் -மீன கொடி நாட்டியது போல்-
மலை கேட்காமல் மன்னன் வைத்தது போல்–காளியின் உச்சியில் நடனம் –பூத்த நீள் கடம்பேறி –
அவன் திரு அடி பட்டதும் பசக் பசக் பசுமை பெற்றதாம் -குரவை கூத்து குட கூத்து ராச கிரீடை –
பல வித நடனம்-போர் களமாக நிருத்தம் செய்தான் -காலால் காளியன் தலையில் மிதித்தது முதலா

பரல் கல் மேல் புளிதி சோர பெருமாள் நடந்தான் –மெல் அடி –
ஆழி அம் கையானை அம்மானை-அம்மனை தொடர்ந்து ஏத்தாமல் –ஆழ்வார் –
ராமானுஜர் அந்த இடத்தில் பக்கம் இருந்து தலையால் திரு அடி தாங்கி இருக்காமல் போனோமே

வியன் காண மரத்தின் நீழல்-கல் ஆணை மேல் துயில கற்றாயே காகுத்தா

காடு நடந்த பொன் அடி

கண்ணன் ஐந்து வயசில் மாடு மேய்க்க போனானே

குடையும் செருப்பும் கொடாமே காதில் திரி இட்டு தாமோதரனை –பசு மாடு தூசி படித்த குழல்-
பொன் தடுவுவது போல் -ப்ருந்தாவனந்த பண்டிதன்

நமக்கு நாதன் உடையவராக ஆக்குமே செடி கொடிகள் –வெம் கானம் போக்கினேனே

வேம்கட திரு மலை-க்ரீடாத்ரி விளையாட்டு மலை-ஸ்ரீ வைகுண்டமே ஆனந்த நிலைய விமானம் ஸ்வாமி புஷ்கரணி

வேம்கடத்து உச்சியில் கண்டு போய்-முதலில் திருஅடி பதிந்த இடம் சேவிக்க வேண்டும்

—————–

அம்லாந ஹ்ருஷ்ய த³வநீதல கீர்ணபுஷ்பௌ
ஶ்ரீவேங்கடாத்³ரி ஶிக²ராப⁴ரணாயமாநௌ ।
ஆநந்தி³தாகி²ல மநோநயநௌ தவைதௌ
ஶ்ரீவேங்கடேஶ சரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 13 ॥

ஸ்ரீ வேங்கடேசா -வாடா மலர்களாகத் தரை மேல் கிடக்கும் மற்ற மலர்களின் இடையே காணப்படுகின்றவையும்
திருவேங்கட மலைச்சிகரம் பெற்ற சிறந்த அணிகலன்களாக விளங்குபவையும்
சகல ஜீவன்களுடைய கண்களையும் மனங்களையும் களிப்படையச் செய்கின்றவையுமான
இந்த உன்னுடைய திருவடிகளே சரணம் என்று அடைகிறேன்

————

ப்ராய꞉ ப்ரபந்ந ஜநதா ப்ரத²மாவகா³ஹ்யௌ
மாது꞉ ஸ்தநாவிவ ஶிஶோரம்ருதாயமாநௌ ।
ப்ராப்தௌ பரஸ்பரதுலாமதுலாந்தரௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 14 ॥

ஸ்ரீ வேங்கடேசா -உன்னை வந்து அடைக்கலம் வந்து புகுந்த அநேகம் ஜனங்களுக்கு
முக்கியமாக அனுபவிக்கத்தக்க சொத்துப் போலே உள்ளவையும்
குழந்தைகளுக்குத் தாயின் மார்பகம் போல் அமுதாகின்றவையும்
ஒன்றுடன் ஓன்று இணையாக அமையப்பெற்றவையும்
தனக்கு நிகராக வேறே ஓன்று இல்லாதவையுமான
உனது திருவடிகளே சரண் என்று அடைகிறேன் –

—————

ஸத்த்வோத்தரை꞉ ஸததஸேவ்யபதா³ம்பு³ஜேந
ஸம்ஸாரதாரகத³யார்த்³ரத்³ருக³ஞ்சலேந ।
ஸௌம்யோபயந்த்ருமுநிநா மம த³ர்ஶிதௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 15 ॥

ஸ்ரீ வேங்கடேசா நற்குணம் நிறைந்தவர்களால் ஸதா காலம் வணங்கத் தக்க பாத கமலங்களை யுடையவரும்
பிறவிக்கடலைத் தாண்ட உதவும் கருணையால் குளிர்ந்த
திருக்கண்களை யுடையவருமான
ஸ்ரீ மணவாள மா முனிகளால் எனக்கு காண்பிக்கப்பட்ட
எனது திருவடிகளே சரணாக அடைகிறேன் –

———

ஶ்ரீஶ ஶ்ரியா க⁴டிகயா த்வது³பாயபா⁴வே
ப்ராப்யே த்வயி ஸ்வயமுபேயதயா ஸ்பு²ரந்த்யா ।
நித்யாஶ்ரிதாய நிரவத்³யகு³ணாய துப்⁴யம்
ஸ்யாம் கிங்கரோ வ்ருஷகி³ரீஶ ந ஜாது மஹ்யம் ॥ 16 ॥

ஸ்ரீ விருக்ஷ மலைக்கு இறைவனே
ஸ்ரீ யப்பதியே
நீ இறங்கும் பொழுது நின் திருவருள் கிடைக்கும்படி செய்து அருளுபவளும்
பிறவிக்கடல் கடந்து நான் அடையத்தக்க பயனாக நீ மாறும் காலத்து உன்னுடன் சேர்த்து
வைத்தும் அருள்பவளுமான திருமகளால் அடையப்பட்டவனும்
குற்றமற்ற குணங்களை உடையவனுமான உனக்கு நான் பணி செய்வதையே விரும்புபவனே தவிர
என்னையே நான் பெரிது என்று எண்ணி எனக்கு -என்னுடைய ஆனந்துக்காகவே
பணி செய்வேனாக இருக்க மாட்டேன் –

இட் ஶ்ரீ வேங்கடேஶ்வர ப்ரபத்தி ||

***

ஸ்ரீ வேங்கடேச மங்களாசாஸனம்

ஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நித யேர்த்தி நாம்

ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்     -1-

திருமகள் விரும்பும் நாதனும்
ஸர்வ மக்களுக்கும் நிதி போன்றவனும்
யாசிப்பவர்களுக்கு வரையாது வழங்கும் பொற் குவை போன்றவனும்
திருவேங்கட திருமலையில் நித்ய வாஸம் செய்து அருளுபனுமான
ஸ்ரீ நிவாஸப் பெருமாளுக்கு ஸர்வ மங்களங்களும் உண்டாகட்டும்

———

லக்ஷ்மீஸ விப்ரமாலோக ஸுப்ரு விப்ரம சக்ஷுஷே

சக்ஷு ஷே ஸர்வலோகாநாம் வேங்கடேசாய மங்களம்             2

திருமகளும் வியந்து நோக்கத்தக்க அழகிய புருவங்கள் இணைந்து விளங்கும் திருக்கண்கள் யுடையவனும்
கண்ணாவான் மண்ணோர் விண்ணோர்க்கும் என்றபடியே
ஸகல லோகங்களுக்கும் கண் போன்றவனுமாகிய
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்

———-

ஸ்ரீவேங்கடாத்ரி  ச்ருங்காக்ர மங்களா பரணாங்க்ரியே

மங்களாநாம் நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்    3-

திரு வேங்கட மலைச் சிகரத்துக்கு மங்கள திரு ஆபரணமாக விளங்குகின்ற திருவடிகளை யுடையவனும்
ஸர்வ மங்களங்களுக்கும் இருப்பிடமானவனுமான
ஸ்ரீ நிவாஸப் பெருமாளுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்

———–

ஸர்வாவயவ ஸௌந்தர்ய ஸம்பதா சர்வசேதஸாம்

ஸதா ஸம்மோஹ நாயாஸ்து வேங்கடேசாய மங்களம்             4

அங்கங்கள் யாவுமே அழகு என்னும் செல்வத்தால் அனைவருடைய உள்ளங்களையும்
எப்பொழுதுமே மயங்கிப்போய் இருக்கும்படிச் செய்யக் கூடிய அழகிய
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்

———————

நித்யாய நிரவத்யாய ஸத்யா நந்தசிதாத்மநே

ஸர்வாந்த ராத்மநே ஸ்ரீமத் வேங்கடேசாய மங்களம்   5-

அழிவற்றவனும்
அழுக்கு அற்றவனும்
ஆனந்த ஸ்வரூபனும்
ஞான ஸ்வரூபனுமாக
எல்லார் உள்ளத்திலும் உயிராக விளங்கும்
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்

————-

ஸ்வதஸ் ஸர்வவிதே ஸர்வசக்தயே ஸர்வசேஷிணே

ஸுலபாய ஸுசீலாய வேங்கடேசாய மங்களம்        –6-

தானாகவே எல்லாமும் அறிந்தவனுக்கு
ஸர்வ சக்திகளும் பெற்றவனும்
ஸமஸ்த இதர வைலக்ஷணம் கொண்டவனும்
நல்ல ஒழுக்கம் உடையவனும்
எளிதில் சென்று அடையும்படி பின்னானார் வணங்கும் ஜோதியுமுமானவனுமான
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்

————–

ப்ரஸ்மை ப்ரஹ்மணே பூர்ணகாமாய பரமாத்மநே

ப்ரயுஞ்ஜே பரதத்வாய வேங்கடேசாய மங்களம்      -7-

எங்கும் நிறைந்த பரம் பொருளும்
எண்ணியவை யாவையும் நிறைவேற்றி வைக்கக் கூடியவனுமான
பரமாத்மாவாகவும்
எல்லாமே தம் தம் பணிகளில் இயங்கக் காரணமாய் இருப்பவனுமான
பரதத்வ உண்மைப் பொருள் அனைத்திலும் உயர்ந்தவனுமான
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

———–

ஆகால தத்வ மச்ராந்த மாத்ம நாம நுபச்யதாம்

அத்ருப்த்யம்ருத ரூபாய வேங்கடேசாய மங்கலம்    -8

காலம் உள்ளவரை அயராமல் ஸேவிக்கும் பக்தர்களுக்குத் திருப்தி அளிக்கக் கூடிய
ஆரா வமுதமாய் இருக்கக் கூடிய
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

————-

ப்ராயஸ் ஸ்வ சரணௌ பும்ஸாம் சரண்யத்வேந பாணிநா

க்ருபாய திசதே ஸ்ரீமத் வேங்கடேசாய மங்களம்     –9-

தனது திருவடிகளே சரணம் என்று சகல ஜீவன்களுக்கும்
தனது திருக்கரத்தால் அன்புடன் காட்டிக் கொடுத்து அருளும்
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

————

தயாம்ருத் தரங்கிண்யாஸ் தரங்கைரிவ சீதலை:

அபாங்கை ஸிஞ்சதே விச்வம் வேங்கடேசாய மங்களம்     -10-

கருணை என்னும் அமுதக்கடலினுடைய அலைகளைப் போலே
குளிர்ந்த திருக் கடைக் கண்களால் உலகத்தை நினைக்கின்ற
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

—————

ஸ்ரக்பூஷாம் பர ஹேதீதாம் ஸுஷமாவஹ மூர்த்தயே

ஸர்வார்த்தி ஸமநாயாஸ்து வேங்கடேசாய மங்களம்    –11

தான் அணியும் மாலைக்கும்
அணி மணிகள் உடை ஆயுதம் இவைகளுக்கும்
அழகை யுண்டு பண்ணி அருளும் திவ்ய மங்கள விக்ரஹம் உடையவனும்
சகல துக்கங்களையும் போக்கி அருள் செய்பவனுமான
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

—————

ஸ்ரீவைகுண்ட விரக்தாய ஸ்வாமி புஷ்கரிணீ தடே

ரமயா ரமமாணாய வேங்கடேசாய மங்களம்    12-

ஸ்ரீ வைகுண்டத்தில் பற்று நீங்கி
ஸ்ரீ ஸ்வாமி புஷ்கரணி தடாகத்தின் கரையில்
திருமகளோடு விளையாடி அருளும்
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

——–

ஸ்ரீமத் ஸுந்தர ஜாமாத்ரு முநி மாநஸ வாஸிநே

ஸர்வலோக நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்     –13

ஸ்ரீ மணவாள மா முனிகள் போன்ற பக்தர்களின் திரு உள்ளங்களில் நித்ய வாஸம் செய்து அருள்பவனும்
எல்லா உலகங்களில் எல்லாப் பொருள்களிலும் கன்னுக்குத் தெரியாமல்
கரந்து எங்கும் பரந்துள்ளவனுமான
ஸ்ரீ நிவாஸப் பெருமாளுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

———–

மங்களாசாஸ நபரைர் மதாசார்ய புரோகமை:

ஸர்வைச்ச பூர்வை ராசார்யைஸ் ஸத்க்ருதாயாஸ்து மங்களம்    -14-

எம்பெருமானுக்கு மங்களங்கள் உண்டாகட்டும் என்று
என்னுடைய ஆச்சார்யர்களாலும்
மற்றும் உள்ள ஆச்சார்யர்களாலும்
பூஜிக்கப் பட்டவருமான
ஸ்ரீ திருவேங்கட நாதனுக்கு மங்களங்கள் உண்டாகட்டும்-

***

ஸ்ரீ வேங்கடேஶ அஷ்டோத்தர சத நாமாவளி

ஓம் ஓங்கார பரமார்த்தாய நம:
ஓம் நர நாராயணாத்மகாய நம:
ஓம் மோக்ஷலக்ஷ்மீ ப்ராணகாந்தாய நம:
ஓம் வேங்கடாஶல நாயகாய நம:
ஓம் கருணாபூர்ண ஹ்ருதயாய நம:
ஓம் டேங்காரஜப ஸௌக்யதாய நம:
ஓம் ஶாஸ்த்ர ப்ரமாண கம்யாய நம:
ஓம் யமாத்யஷ்டாங்க கோசராய நம:
ஓம் பக்தலோகைக வரதாய நம:
ஓம் வரேண்யாய நம: 10

ஓம் பயநாஶநாய நம:
ஓம் யஜமாந ஸ்வரூபாய நம:
ஓம் ஹஸ்தந்யஸ்த  ஸுதர்ஶநாய நம:
ஓம் ரமாவதார மங்கேஶாய நம:
ஓம் ணாகாரஜவ ஸுப்ரியாய நம:
ஓம் யஜ்ஞேஶாய நம:
ஓம் கதிதாத்ரே நம:
ஓம் ஜகதீவல்லபாய நம:
ஓம் வராய நம:
ஓம் ரக்ஷஸ்ஸந்தோஹ ஸம்ஹர்த்ரே நம: 20

ஓம் வர்சஸ்விநே நம:
ஓம் ரகுபுங்கவாய நம:
ஓம் தாநதர்மபராய நம:
ஓம் யாஜிநே நம:
ஓம் கநஶ்யாமள நம:
ஓம் ஹராதி ஸர்வதேவேட்யாய நம:
ஓம் ராமாய நம:
ஓம் யதுகுலாக்ரணயே நம:
ஓம் ஸ்ரீநிவாஸாய நம:
ஓம் மஹாத்மநே நம: 30

ஓம் தேஜஸ்விநே நம:
ஓம் தத்வஸந்நிதயே நம:
ஓம் த்வமர்த்த லக்
ஓம் பாவநாய நம
ஓம் ஸர்வேஶாய நம:
ஓம் கமலாகாந்தாய நம:
ஓம் லக்ஷ்மீ ஸல்லாப ஸம்முகாய நம:
ஓம் சதுர்முக ப்ரதிஷ்டாத்ரே நம: 40

ஓம் ராஜராஜ வரப்ரதாய நம:
ஓம் சதுர்வேத ஶிரோரத்நாய நம:
ஓம் ரமணாய நம:
ஓம் நித்யவைபவாய நம:
ஓம் தாஸவர்க்க பரித்ராத்ரே நம:
ஓம் நாரதாதி முநிஸ்துத்யாய நம:
ஓம் யாதவாசலவாஸிநே நம:
ஓம் கித்யத் பக்தார்தி பஞ்ஜநாய நம:
ஓம் லக்ஷ்மீப்ரஸாதகாய நம:
ஓம் விஷ்ணவே நம: 50

ஓம் தேவேஶாய நம:
ஓம் ரம்ய விக்ரஹாய நம:
ஓம் மாதவாய நம:
ஓம் லோகநாதாய நம:
ஓம் லாலிதாகில ஸேவகாய நம:
ஓம் யக்ஷகந்தர்வ வரதாய நம:
ஓம் குமாராய நம:
ஓம் மாத்ருகார்ச்சிதாய நம:
ஓம் ரட்த்பாலக போஷிணே நம:
ஓம் ஶேஷஶைல க்ருதஸ்தலாய நம: 60

ஓம் ஷாட்குண்ய பரிபூர்ணாய நம:
ஓம் த்வைததோஷ நிவாரணாய நம:
ஓம் திர்யக்ஜந்த் வர்ச்சிதாங்க்ரயே நம:
ஓம் நேத்ராநந்த கரோத்ஸவாய நம:
ஓம் த்வாதஶோத்தம லீலாய நம:
ஓம் தரித்ரஜந ரக்ஷகாய நம:
ஓம் ஶத்ரு க்ருத்யாதி பீதிக்நாய நம:
ஓம் புஜங்கஸயந ப்ரியாய நம:
ஓம் ஜாக்ரதே நம:
ஓம் ரஹஸ்யாவாஸாய நம: 70

ஓம் ஶிஷ்டபரிபாலகாய நம:
ஓம் வரேண்யாய நம:
ஓம் பூர்ணபோதாய நம:
ஓம் ஜந்ம ஸம்ஸார பேஷஜாய நம:
ஓம் கார்த்திகேய வபுர்த்தாரிணே நம:
ஓம் யதிஶேகர பாவிதாய நம:
ஓம் நரகாதி பயத்வம்ஸிநே நம:
ஓம் ரதோத்ஸவ கலாதராய நம:
ஓம் லோகார்ச்சா முக்யமூர்த்தயே நம:
ஓம் கேஶவாத் யவதாரவதே நம: 80

ஓம் ஶாஸ்த்ர ஶ்ருதாநந்த லீலாய நம:
ஓம் யமஶிக்ஷா நிபர்ஹணாய நம:
ஓம் மாநஸம்ரக்ஷண பராய நம:
ஓம் நேத்ரஹீநாக்ஷிதாயிநே நம:
ஓம் மதிஹீந மதிப்ரதாய நம:
ஓம் ஹிரண்யதாந க்ராஹிணே நம:
ஓம் மோஹஜால நிக்ருந்தநாய நம:
ஓம் ததிலாஜாக்ஷதார்ச்யாய நம:
ஓம் யாதுதாந  விநாஶநாய நம: 90

ஓம் வேங்கடாய நம:
ஓம் தக்ஷிணாஸ்திதாய நம:
ஓம் ஸாரபுஷ்கரிணிதீராய நம:
ஓம் ராத்ரௌ தேவகணார்ச்சிதாய நம:
ஓம் யத்நவத் பலஸந்த்தாத்ரே நம:
ஓம் ஸ்ரீம்ஜபாத் தநவ்ருத்திக்ருதயாய நம:
ஓம் க்லீம்காரஜாபி காம்யார்த்த ப்ரதாந ஸதயாந்தராய நம:
ஓம் ஸ்வஸர்வசித்தி ஸந்தாக்ரே நம:
ஓம் நமஸ்கர்த்து ரபீஷ்டதாய நம: 100

ஓம் மோஹிதாகில லோகாய நம:
ஓம் நாநாரூப வ்யவஸ்திதாய நம:
ஓம் ராஜீவலோசநாய நம:
ஓம் யஜ்ஞவராஹாய நம:
ஓம் கணவேங்கடாய நம:
ஓம் தேஜோராஶீக்ஷணாய நம:
ஓம் ஸ்வாமிநே நம:
ஓம் ஹார்தா வித்யா நிவாரணாய நம:  108

ஸ்ரீ வேங்கடேஶ அஷ்டோத்தர சத நாமாவளி சமாப்தம்:

————–

வ்ருஷசைலாதிப ஏவ தைவதம் ந

வ்ருஷபாத்ரீச்வர ஏவ தைவதம் ந
பணி சைலாதிப ஏவ தைவதம் ந

பகவான் வேங்கட ஏவ தைவதம் ந————————–11-

—————————————————-

வ்ருஷசைலம் -என்பதும்
வ்ருஷபாத்ரி -என்பதும்
பணி சைலம் -என்பதும்
பர்யாய நாமங்கள் ஆதலால்
எல்லாவற்றாலும்
திருமலை அப்பனே அடியேன் தொழும் தெய்வம்
என்றது ஆயிற்று

—————————————————————————————————————————————————————

ஸ்ரீ ஸ்ரீ நிவாச பர தைவதம் ந
ஸ்ரீ ஸ்ரீ நிவாச பரமம் தனம் ந
ஸ்ரீ ஸ்ரீ நிவாச குல தைவதம் ந
ஸ்ரீ ஸ்ரீனிவாச பரமா கதிர் ந—12

ஸ்ரீ ஸ்ரீநிவாசன
நமக்கு பர தேவதையும்
பெரும் செல்வமும்
குல தேவதையும்
பரம கதியும்
ஆவான் -என்கிறார் ஆயிற்று-

—————-

ஸ்ரீ   வேங்கடேச  ஸுப்ரபாதம் —தமிழில்

வந்துதித்தாய் ஸ்ரீ ராமா நீ கோசலை தன்  திருமகனாய்
சிந்து மொழிச் சிறுகாலை திசையெங்கும் புலர்கிறது
மந்திரங்கள் வாய்மொழிந்து வந்தனைகள் புரிந்தருளைச்
செந்திருக்கண்  அருள்பொழிய வேங்கடவா எழுந்தருள்வாய்  [2] 1

எழுந்தருள்வாய் வெண்கருடக்  கொடியுடையாய்  எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் திருக்கமலை விழைமார்பா எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் மூவுலகும் காத்தருள எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் கோவிந்தா வேங்கடவா எழுந்தருள்வாய்  [2]  2

போர்புரிந்து  மதுகைடைத் தமையழித்தான் உளத்துணியே
பாரனைத்தும் காத்தளிக்கும் பேரழகின் அருள் உருவே
பாரகத்தார் விழைந்தேத்தும் சீர்சீலப் பெருந்தாயே
கார்வண்ண வேங்கடத்தான் திருத்தேவி எழுந்தருள்வாய் [2]  3

திங்கள் மொழி திருமுகத்தில் பொங்கும் அருள் புரிபவளே
இங்குக்கலை வாணியுடன் இந்திராணி அம்பிகையாம்
மங்கையர்கள் தொழுதேத்தும்  மாண்புடைய தனித்தலைவி
செங்கமல வேங்கடத்தான்  திருத்தேவி  எழுந்தருள்வாய்   4

தொலைவிடத்தும் பலவிடத்தும் சுழன்று திரி ஏழ்முனிவர்
சலித்தறியாத் தவமியற்றிச்  சந்தியா  வந்தனம் முடித்து
நிலைபெறு  நின் புகழ் சொல்லி நின்பாதம்  சேவிக்க
மலையடைந்து  காத்துளர்  காண் வேங்கடவா  எழுந்தருள்வாய்  5

ஆங்கந்த பிரம்மாவும் அறுமுகனும்  தேவர்களும்
ஓங்கி உலகங்களந்த உயர் கதைகள் பாடுகின்றார்
ஈங்கிந்த   யாழமுனி   பஞ்சாங்கம்   ஓதுகின்றார்
தீங்கவிகள்  செவிமடுக்க  வேங்கடவா  எழுந்தருள்வாய்   6

நன்  கமுகு  தென்னைகளில்  பாளை  மனம் மிகுந்தனவால்
பல்  வண்ண மொட்டுகள்  தாம் பணித்தேனோடு  அலர்ந்தனவால்
புல்லரிக்கும் மெல்லீர பூந்தென்றல் தவழ்கிறதால் 
எல்லாமும் அணிந்தருள  வேங்கடவா  எழுந்தருள்வாய்  7
நின் திருப்பேர்  பல கேட்டு  நின்னடியார்  மெய்மறக்க
நின் கோயில்  பைங்கிளிகள் தீங்கனியாம்  அமுதருந்தி
நின் திருப்பேர்   ஆயிரத்தால்  நெடும்  புகழை  விளக்கிடுமாய்
நின் செவியால் தீர்த்தருள  வேங்கடவா  எழுந்தருள்வாய்   8

எவ்விடத்தும்   நிலையாக  நின்றறியா    நாரதரும்
இவ்விடத்தும்   பெருமைகள்  தாம்  ஈர்ப்பதனால்   நிலைகொண்டார்
செவ்விய  தன்   வீணையில்  உன்  திருச்  சரிதை  மீட்டுகின்றார்
அவ்விசையை   கேட்டருள   வேங்கடவா   எழுந்தருள்வாய்    9

வெண்கமல  ஒன்மலர்கள்   விளைத்த  மது  மிக   அருந்தி
கண்  மயங்கி  மலர்  முகட்டுள்   காலைவரை  சிறைகிடந்த
வண்டினங்கள்   ரீங்கரித்தே   வந்தனவா   நினைத்  தொழவே
தண்ணருளால்   சேவைதர    வேங்கடவா    எழுந்தருள்வாய்   10

கனதனங்கள்    நிமிர்ந்த   செயற்   கைவலைகள்   ஒலியெழுப்ப
மன   மகிழ்ந்து  தயிர்கடையும்  மத்தொலியும்   திசை  ஒலியும்
சிறந்தனபோல்  எதிர்  ஒலிக்க   நெடுந்துதிகள்   முழங்கிடுமால்
நினைத்துவிதாம்   கேட்டிலையோ   வேங்கடவா   எழுந்தருள்வாய்   11

பெருமாள்   நின் திருநிறத்தை   பெற்றுளதாய்  குவளை   சொலும்
கருங்குவளை    காட்டிடையே   களித்துலவும்   வண்டுகள்  தாம்
பெருமாள்  நின் திருநிறத்தை    பெற்றுளம்   யாம்   பெறிதெனுமே
வருதரும்   பேர்   பகை   தவிர்க்க    வேங்கடவா   எழுந்தருள்வாய்   12

வேண்டுபவர்   வேண்டுவன   விழைந்தருளும்   பெருவரதா

மாண்புடையாள்   மலரமர்ந்தாள்   மகிழ்ந்துறையும்   திருமார்பா

ஈண்டுலக   மனைத்தினொடும்   இழைந்தமைந்த   உறவுளயோய்

காண்பரிய   கருணையனே   வேங்கடவா   எழுந்தருள்வாய்   [2]    13

மின்  தவழும்   சடையானும்   பிரம்மாவும்   சனந்தனரும்

இன்றுனது   கோலேறி   திருநீர்த்தம்  தலை  மூழ்கி

நின்னருளைப்   பெற  விழைந்தே   நெடுவாயில்   நிலைநின்றார்

நின்றவர்க்கும்   அருள்   பொழிய  வேங்கடவா   எழுந்தருள்வாய்   14

திருமலையாய்   சேடத்தாய்   கருடத்தாய்   வேங்கடத்தாய் 

திரு   நாராயண  மலையாய்  விருடபத்தாய்  இருடத்தாய் 

பெருமானே   எனப்புகழ்ந்து   தேவரெலாம்   திரண்டனர்காண் 

திரண்டுளரைப்  புரந்தருள  வேங்கடவா   எழுந்தருள்வாய்          15

அருளிடு  நின்  செயல்  முடிப்பான்   அட்டதிக்கு  பாலர்களாம் 

பெருநெறிய  அரன்   இந்திரன்  அக்னியான்  பேரியமன் 

வருணனொடு   நைருதியான்  வாயுவோடு   குபேரனும் 

நின்   திருவடிக்கு   காத்துளராய்  வேங்கடவா  எழுதருள்வாய்   16

திருமலைவாழ்   பெருமானே  திருஉலாவுக்கு  எழுகையில்  நின் 

கருட  நடை  சிம்ம  நடை   நாத  நடை  முதலாய  

திருநடைகள்   சிறப்புணர்ந்து   திருத்தமுற   கற்பதற்கு 

கருட  சிம்ம  நா  தருளான்  வேங்கடவா  எழுதருள்வாய்     17

சூரியனார்   சந்திரனார்   செவ்வாய்   புதன்   வியாழ

சீர்மிகுந்த   சுக்கிரனார்  சனி  ராகு   கேது  இவர்கள் 

ஆர்வமுடன்  நின்  தொண்டர்க்கு  அடித்தொண்டு  புரிந்துனது 

பேரருளைப்  பெற  நின்றார்  வேங்கடவா   எழுதருள்வாய்      18

நின்  முக்தி   விழையாமல்   நின்னையொன்றே   மிகவிழைந்து 

நின்  பாத  தூளிகலைத்  தம்  தலையில்   தான்  தரித்தோம் 

சென்றிடுவாய்   கலிமுடிந்தால்  இங்கிருந்தும்   பரமபதம் 

என்பதற்கே   அஞ்சினர்காண்   வேங்கடவா   எழுந்தருள்வாய்   19

எண்ணரிய   தவமியற்றிய   இன்சொர்க்கம்   முக்திபெறும் 

புண்ணியர்கள்  செல்வழி நின்புகழ்க்   கோயில்  கலசங்கள் 

கண்டனரே  நின்  கோயில்  காட்சிக்கே  பிறப்பெடுப்பார்  

புண்ணியனே  அவர்க்கருள   வேங்கடவா  எழுந்தருள்வாய்      20

மண்மகளின்   திருக்கேள்வா  மாக்கருணை  புனைக்  கடலே 

தின்புயத்துக்  கருடனுடன்   நாதனுமே   சரண்புகுந்தார் 

எண்ணரிய  தேவர்களின்  ஈடு  இணையில்  பெருந்தேவா 

மண்ணுலகோ  தனிப்  புகழே   வேங்கடவா  எழுந்தருள்வாய்   21

பத்மநாபா   புருடோத்தமா  வாசுதேவா  வைக்குண்டா 

சத்தியனே  மாதவனே  ஜனார்தனனே  சக்ரபாணி
வத்சலனே   பாரிஜாதப்   பெருமலர்   போலருல்பவனே
உத்தமனே   நித்தியனே  வேங்கடவா  எழுந்தருள்வாய்       22


திருமகள்  தன்   திருயணைப்பில்   திருத்துயில்  கொள்  திருஅழகா
திருவிழியால்  பெரு  உலகில்  அருள்  பொழியும்  பெருவரதா
திருவுடையாய்  தீக்குணத்தாய்   திருத்தூயாய்  திருப்புகழாய்
பெருவயிரத்  திருமுடியாய்   வேங்கடவா  எழுந்தருள்வாய்             23


மச்சநாதா   கூர்மநாதா   வராக  நாதா  நரசிம்ஹா
நச்சி வந்த  வாமனனே  பரசுராமா  ரகுராமா
மெச்சு  புகழ்  பலராமா  திருக்கண்ணா  கல்கியணே
இச்சகத்து   வைகுந்தா   வேங்கடவா  எழுந்தருள்வாய்       24


ஏல  முது  நடு   லவங்க   கணசார   மணங்கமழும்
சீலமிகு  தெய்வீக  திருதீர்த்தம்   தலை  சுமந்து
ஞாலமுய்ய   வேதமொழி  நவற்றுணர்ந்த வேதியர்கள்
கோலமிகு   கோயிலுற்றார்   வேங்கடவா  எழுந்தருள்வாய்     25


அருணனுந்தான்   வந்துதித்தான்   அலர்ந்தனவால்  தாமரைகள்
பெருவியப்பால்  புல்லினங்கள்   பெயர்ந்தெழுந்து   சிலம்பினகாண்
திருமார்பா   வைணவர்கள்   மங்கலங்கள்  நிற  மொழிந்தார்
அருள்  திருவே  அருள்விருந்தே   வேங்கடவா   எழுந்தருள்வாய்   26


நாமகள்தன்   நாயகனும்    தேவர்களும்   மங்கலமாம்
காமரியைக்    கண்ணாடித்   தாமரைகள்   சாமரங்கள்
பூமருது   பொன்  விளக்குப்  புகழ்  கொடிகள்   ஏந்தினர்காண்
தே  மரு   மலர்  மார்பா    வேங்கடவா  எழுந்தருள்வாய்             27


திருமார்பா  பெருங்குணங்கள்   சிறந்தோங்கப்   பொலிபவனே
பெரும்பிறவிக்   கருங்கடலின்   கரைபுனர்க்கும்  சேர்க்கும்  இணையே
ஒரு  வேதத்துட்  பொருளே  மயர்வு  அறியா   மதி   நலத்தார்
திரு  தீர்ப்புக்கு   உரியவனே  வேங்கடவா  எழுந்தருள்வாய்                    28


விழித்து  எழுந்தக்  காலையில்  இத்திருப்பள்ளியெழுச்சிதனை
விழைந்துணர்ந்து   படிப்பவரை  கேட்பவரை  நினைப்பவரை
வழுத்துகின்றார்   எவரவர்க்கு   வரங்களொடு  முக்தி  தர
எழுந்தருள்வாய்  எழுந்தருள்வாய்  வேங்கடவா  எழுந்தருள்வாய் [2]     29



                        ஸ்ரீ   வேங்கடேச   ஸ்தோத்ரம் 

மலர்  மேல்  உறை   மாதவி   மார்பகத்தே
குலவும்  ஒரு  குங்கும  நீலவனே
மலர்  தாமரை  கண்ணுடை  நாயகனே
நலமே பெற  காத்தருள்  வேங்கடவா  [2]    1

மறை   நான்முக   ஐமுக    ஆறுமுகப்
பெரியோர்களின்  சீர்மிகு   தலைமணியே
சரணாகதி  யென்பவர்க்க   ன்புறவே
பெரும்பேர்  நிதி  காத்தருள்  வேங்கடவா    2

பொது  எல்லைகள்  தாண்டிய  பாவமதை
நிதமே  புரிந்தின்னமும்  புரிவதிலே
அதிவேகமே  கொண்டுள   எங்களையே
இதமாகவே  காத்தருள்  வேங்கடவா           3

அருள்  நீ  வதில்   ஆர்வமாய்  நின்னடியார்
வரம்  வேண்டியதை  விட  ஈபவனே
பெரும்  நான்மறை  ஓதிடும்   ஓர்  பொருளே
திருமார்பனே   காத்தருள்  வேங்கடவா         4

நயம் சேர்  இசைக்குங்   குழல்  இன்னமுதால்
வயமாயிடு  கோபியர்  சூழ்பவனே
மயல்   காமனின்  பேரெழில்  கோடி  பெரும்
முயல்வே  யெமைக்  காத்தருள்   வேங்கடவா     5

பலர்   போற்றிடும்   பேரருள்  மூர்த்தியனே
நலமே  புனர்  சீதையின்  நாயகனே
தளிர்  மேனியனே  ஒரு  வில்லவனே
ஒளியே  எமைக்  காத்தருள்  வேங்கடவா      6

இருதாமரை  பூத்திடும்  சந்திரனாய்
திரு  சீதையின்  கேள்வனை  இன்றவனே
இருள்  ராவணனுக்கொரு  சூரியனே
சரணா  இனும்  காத்தருள்  வேங்கடவா    7

நெறியாரடையின்   உரை   எளியவனே
திருத்தாயினை   தேவியர்  பெற்றவனே
பிறர்  யாருடை  தாளையும்   வணங்கிலமே
பெரியோர்  ெயமைக்   காத்தருள்  வேங்கடவா   8

திருவேங்கடேசா   நாதனே    நாதன்   நீ
ஒரு  வேங்கடேசா    உன்னையே  எண்ணினும்
பெருவேங்கடேசா    நின்னையே  நின்னையே
அருள்  வேங்கடேசா  அருள்  வேங்கடவா  [2]     9

நெடுநாள்  வரை  யாம்  உனை   தொழுவதற்கே
முடியாமையால்  இன்றுனைத்  தொழப்  புரிந்தோம்
அடி  போற்றிடும்  நித்தியர்க்கருள்வது   போல்
அடியே  எமையும்   காத்தருள்  வேங்கடவா          10

அறியாமையால்  புரி  தீவினை  புரியாதுளத்  தர  நீக்கிடு
பொறுத்தே  அருள்  பொறுத்தே  அருள்  பெருமாமணி
                                      வேங்கடவா  [2]                 11



                ஸ்ரீ   வேங்கடேச   ப்ரபத்தி 


வேங்கடத்தான்  விரிமார்பில்   விழைந்தமர்ந்த  கருணையளே
பூங்கமலத்   தனிகரத்தாள்   பொறுமை  வளர்  பூதேவி
ஓங்கிய  சீர்  குணம்  ஒளிரும்  உயர்தனிப்பேர்   தவத்தாயே
வேங்கடத்தான்  திருத்தேவி  நின் பாதம்  சரண்  புகுந்தோம்  [2]      1

கருணையெனும்   திருக்கடலே  காத்தளிக்கப்  படைத்தவனே
பெருந்   தாயைப்பிரிந்தறியாப்   பெரியோனே  வல்லவனே
ஒரு முதல்வா  பாரிஜாத   உயர்மலரே  துயர்களையும்
திருவடிகள்   பற்றி  உய்ய   வேங்கடவா  சரண்  புகுந்தோம் [2]        2

ஒன்றுடனொன்று  ஒத்திணைந்த  ஒப்புயர்வில்  அடியவர்நான்
அன்று  முதல்  இன்று  வரை  அருளமுதாய்த்  தொழத்  தகுந்த
நன்மணங்கள்  வாய்  அவிழ்ந்த  நறுமலர்கள்  மிக  நிறைந்த
நின்னடிகள்   தஞ்சமென  வேங்கடவா  சரண்  புகுந்தோம்  [2]          3

அன்றலர்ந்த   மிகச்  சிவந்த   அருங்குலத்தில்  பறிபடாது
நின்றிருக்கும்  தாமரை  நின்  திருவடிக்கு  நிகராகும்
என்றுரைக்கும்  உறையும்  ஒரு  மிக  முரட்டு  கல்லுரையாய்
தென்படுமாறு   உளதடியை  வேங்கடவா  சரண்  புகுந்தோம்          4

கொடி  அமிர்த  திருகலசம்  கற்பதரு    தாமரைப்   பூ
நெடிய  குடை  சங்கு  சக்கரம்  வஜ்ரத்தோடு  அங்குசமாம்
அடையாள  ரேகைகள்  தான்  படர்ந்தமைந்த  நினது  திரு
அடியிணைகள்  பற்றி  நின்றே  வேங்கடவா  சரண்  புகுந்தோம்     5

உள்ளங்கால்  பேரொளிக்கு  பத்மராக  ரத்தினங்கள்
ஒல்லிய  சீர்  புரவடி  போல்  இந்த்ர   நீல  ரத்தினங்கள்
வெள்ளிய  நல்  நகங்களுக்கு   வெண்மதிகள்  தோற்றோட
உள்ளிவந்தோம்   நின்னடியை  வேங்கடவா  சரண்  புகுந்தோம்      6

வாக்கிற்கும்  மனத்திற்கும்  எட்டரிய  திருவடியை
பூக்கமலத்  திருத்  தேவி  தளிர்கரத்தால்   ஆசையுடன்
ஏற்புற்றே  வருடிடவும்  வாட்டமுறும்  மெல்லடியை
நோக்க  அருள்  பொழியடியை   வேங்கடவா  சரண்  புகுந்தோம்     7

மன  மகிழ்ந்து  திருமகளும்   மண்மகளும்   நப்பினையும்
நினைவிழந்து  துளிர்  தளிர்க்கும்  தன்  ரோஜா  திருக்கரத்தால்
தினம்வருட   அவர்   கரத்து   திருச்  சிவப்பு  தொற்றியதோ
எனச்  சிவந்த  நினதடியை   வேங்கடவா  சரண்  புகுந்தோம்          8

நினை  வணங்கு   சிவ   பெருமார்   நெடுமடியில்  நவரத்ன
மணிகளிடை    விதை   முளைபோல்   கதிர்  ஒளிகள்   கிளர்ந்தெழுமே
கணங்களென   கற்பூர  ஆர்த்தியென   மணி   ஒளியைத்
தினமேற்கும்  நினதடியை  வேங்கடவா  சரண்  புகுந்தோம்       9

எவ்வடிகள்   வேதமெலாம்   மிகப்   புகழும்   திருவடிகள்
எவ்வடிகள்   ஞானியர்க்கு  தேன்   பெருக்கும்   செவ்வடிகள்
எவ்வடிகள்  புகல்   என  நின்   மரக்கரந்தான்   கஷ்டடிகள்
அவ்வடியை   அடைந்துய்ய   வேங்கடவா  சரண்  புகுந்தோம்      10

தேர்  தட்டில்   பார்த்தனுக்குச்  சரண்   புகுவாய்   என  உரைத்து
நேர்த்தி  மிகக்  காட்டிய   எத்திருவடியோ    அவ்வடியே
கீர்த்திமிகு  வேங்கடத்தில்  வலக்  கரந்தான்  காட்டடிகாள்
பார்த்தனைப்   போல்   பயன்  பெறவே  வேங்கடவா  சரண்  புகுந்தோம்  11

உனை  நினைத்தே   உன்னிடத்தே   ஆள்பவர்  தம்   மனத்திடத்தும்
தினமலர்  தம்   போற்றுமறை  முடியிடத்தும்   வேங்கடத்தும்
எனது  பெரும்   தலையிடத்தும்  காளிங்கன்    தலையிடத்தும்
மனத்திடத்தும்  புகுமடியை   வேங்கடவா  சரண்  புகுந்தோம்            12

வாட்டமின்றி   தரை  நிறைய  மனமலர்கள்   சூழ்ந்தமய
நேட்டிய   பல  சிகரத்து   வேங்கடத்தின்  அணியாகி
நாட்டமுறு   மனமீர்த்து  நல்லடியார்க்கின்புணர்ந்து
வீட்டின்பம் தருமடியை  வேங்கடவா  சரண்  புகுந்தோம்         13

சரண்  புகுவார்  முதன்  முதலில்  அறிந்தறியக்   கற்றனவாய்
ஒரு  சிறுபை  குழவிக்கு  தாயருள்  போல்  அமைந்தனவாய்
பெரும்  அமுதாய்  வேறெதெற்கும்  ஒப்புமையை  ஒழித்தணவாய்
இருந்திருள்  நின்  அடிகளினை  வேங்கடவா  சரண்  புகுந்தோம்    14

தூய்மனத்துப்  பெருந்தகையோர்  தொழுதேத்தும்லர்தாளாய்
வாய்த்துளையிற்   பிறவியெனும்  பெருங்கடலைத்  தாண்ட  வைப்போர்
தாயனைய  மாமுனிவர்  எமக்குணர்த்தி    சரண்புகுவீர்
போய்  நின்ற  நினதடியை   வேங்கடவா  சரண்  புகுந்தோம்       15

சரண்   புகு   நின்   அடியவர்தம்   குறை  மறைத்து  நீயருளப்
பெருந்  துணைகள்  பல  புரிந்து  குற்றேவல்  கொண்டருளும்
திருத்தாய்வாள்   அருள்  மார்பா  உமக்கே  யாம்  ஆட்படுவோம்
திருவடிக்கே  பணிந்துய்வோம்  வேங்கடவா  சரண்  புகுந்தோம் [2]   16



                    ஸ்ரீ     வேங்கடேச   மங்களாசாஸனம் 

திருக்கேள்வா   மங்களங்கள்  பொழிபவனே   பொலிபவனே
பெரு   நெறியே  சீனிவாசா   வேங்கடவா   மங்களங்கள்  [2]     1

பெருந்தவத்தாய்    மைய்யலுறப்   பேருலகைப்   புரந்தருளும்
திருப்புருவ  அருள்  கண்ணா  வேங்கடவா  மங்களங்கள்             2

வேங்கடத்து   மலைப்பொலி  சேர்   விழையணியாம்  திருத்தாளாய்
ஓங்கிய  சீர்  மங்களத்தாய்    வேங்கடவா  மங்களங்கள்               3

எல்லோர்க்கும்   எப்பொழுதும்   எழில்  மயக்கும்   பணித்தருளும்
நல்லழகு   பெருமானே   வேங்கடவா  மங்களங்கள்                      4

அறிவறியாய்   குற்றமில்லாய்   மாற்றமில்லாய்   நிறைமகிழ்வே
எழில்   ஞான  உயிர்  முதலே   வேங்கடவா  மங்களங்கள்              5

எல்லாமும்  அறிந்தவனே  படைத்தவனே   ஆள்பவனே
நல்குணனே   எளிமையனே   வேங்கடவா  மங்களங்கள்             6

பரப்ரம்மா   பரமாத்மா   விழைந்தனர்கள்  பெற  அருளும்
பரம்  பொருளே   பரதத்வா   வேங்கடவா  மங்களங்கள்             7

தவமேனி   தனியழகைச்   சலிப்பின்றி   தியானிப்போர்
தெவிட்டாது   தூய்த்துணரும்   வேங்கடவா  மங்களங்கள்         8

சரண்  புகுவார்  மோட்சநிதி  தனதடியை  எனது   வலது
கரத்தானே   காட்டியருள்   வேங்கடவா  மங்களங்கள்                9

பெருங்   கருணைப்  பேரமுதப்   பெயராற்றின்   அலைகளெனும்
திருவிழியால்  துயர்  நீக்கும்   வேங்கடவா  மங்களங்கள்              10

திருமாலை  பட்டாடை   திரு  அணிகள்   பெருமை  பெற
வரு  பெறுவன்   துயர்  தணிக்கும்  வேங்கடவா  மங்களங்கள்       11

அருள்  பொழிய  வைகுந்தம்   தவிர்ந்தருளி  கோனேறி
திருக்  கரையில்  புணர்  தாடும்  வேங்கடவா  மங்களங்கள்   [2]     12

மணவாள   மாமுனிகள்   உளத்திருந்து   பேருலகக்
கணம்  புரந்து   களித்தருளும்  வேங்கடவா  மங்களங்கள்          13

ஈங்கெங்கள்   குருமுதலோர்   இயம்பியவள்   மங்களத்தாய்
ஓங்கி   உயர்   வேங்கடவா   உனக்கென்றும்   மங்களங்கள்       14

————

வேங்கடாத்ரி சமம் ஸ்தானம் பிரம்மாண்டே நாஸ்தி கிஞ்சன;
வேங்கடேச ஸமோ தேவோ ந பூதோ ந பவிஷ்யதி.

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ வில்லூர் ஆசு கவி ஸ்ரீ நிதி ஸ்வாமிகள் அருளிச் செய்த – ஸ்ரீ மந்த ஸ்மித ஸ்ரீ ராமாயணம்–ஸூ ந்தர ஸ்கந்தம்- -ஸ்ரீ உ வே வெங்கடேஷ் ஸ்வாமிகள் விளக்கம் –

October 3, 2024

63 ஸ்லோகங்கள் இதில்
முதல் மூன்று -திரும்ப வந்து கண்டேன் ஸீதை -கேட்டு மந்த ஸ்மிதம்
போன வ்ருத்தாந்தம் கேட்டதுக்குப் பதில் -4-7- ஸ்லோகங்கள் -சுருக்கமாக அருளிச் செய்து
8-63 வரை -விரிவாக அருளிச் செய்து -பட்டாபிஷேகம் முடிந்த பின்பு சீதாப் பிராட்டியிடம் பெருமாள் கேட்டு -மகிழ்ந்து மந்த ஸ்மிதம் பூத்தது
இப்படி மூன்று பகுதிகள்
ஒவ்வொரு ஸ்லோகமும் திருவடியின் குணங்களை பறை சாற்றும்

————

ஆயாதா மது பக்ஷயந்தி விபிநே தத் பாலகைர் வாரிதா
தாநே தான் நிதரம் ப்ரஹ்ருத்ய முதிதா ஷீபா ஸ்திதாஸ்தே வநே
தச் ச்ருத்வா “ஹநுமான் விதேஹ தநயாம் த்ருஷ்ட்வா ஆகதஸ் ஸ்யா ” திதி
ஸ்ரீ ஸூக்ரீவ கிரா பவத் வதநதோ மந்தஸ்மிதம் வர்ததே
-1-

ஆயாதா -வந்து விட்டார்கள்
மது பக்ஷயந்தி விபிநே தத் பாலகைர் வாரிதா தாநே தான் நிதரம் ப்ரஹ்ருத்ய முதிதா ஷீபா ஸ்திதாஸ்தே வநே -ததிமுகன் முதலிகள் கூத்தாடிய முதலிகள் பற்றிச் சொன்னதும்
தச் ச்ருத்வா -கேட்ட ஸூக்ரீவன்
“ஹநுமான் விதேஹ தநயாம் த்ருஷ்ட்வா ஆகதஸ் ஸ்யா ” திதி -பிராட்டியைக் கண்டு மீண்டான் என்று
நல்ல செய்தியுடன் ஆரம்பம்
ஸ்ரீ ஸூக்ரீவ கிரா பவத் வதநதோ மந்தஸ்மிதம் வர்ததே -வளர்ந்து கொண்டே இருக்கும் மந்தஸ்மிதம் இதில்

புலன்களை வென்ற திருவடி முதலிகளின் ஆனந்தம் -கட்டுப்படுத்தி ராம லஷ்மணர்களின் முதுகோடு போவதைத் தடுத்த புத்தி ஸாமர்த்யம் இத்தால் வெளிப் படுத்துகிறார்
புத்திர் பலம் –இத்யாதி
நமக்கும் வாழ்வில் நல்ல செய்தி கிட்டும் பலன் -இந்த ஸ்லோகம் சொல்வதால் கிட்டும் –

——–

ஆயாதேஷு ஸமேஷு தேஷு கபிஷு ஸ்ரீமத்ஸூ தைரக்ரத
ஸா நந்தாஸ் ருபிருத் ஸூகை ரதிதராம் ஆப்தம் விலோக்யாநதம்
ஸ்ரீமந் மாருத ஸம் பவம் நிஜமுகே வித்யோத மாந ஸ்ரீயம்
யத்தே ராம முகாம்புஜே ஸமபவத் மந்தஸ்மிதம் தத் புர
-2

ஆயாதேஷு ஸமேஷு தேஷு கபிஷு -வானர முதலிகள் அனைவரும்
ஸ்ரீமத்ஸூ தைரக்ரத-மிக்க தேஜஸுடன்
ஸா நந்தாஸ் ருபிருத் ஸூகை ரதிதராம் -ஆனந்தக் கண்ணீர் சொரிய வந்தார்கள்
ஆப்தம் விலோக்யாநதம்–பெருமாள் திருமுகம் பார்தார்கள்
ஸ்ரீமந் மாருத ஸம் பவம் நிஜமுகே வித்யோத மாந ஸ்ரீயம்–பெருமாளோ திருவடியைப் பார்த்து -தனி தேஜஸ் தெரிந்ததே
திருவடியோ கண்டேன் ஸீதையை முதலில் சொல்லாமல் -தெற்குத் திக்கைப் பார்த்து பிராட்டியை சேவித்தாராம் –அவர் திருவடி ராமரை நோக்கி நீட்டி இருந்ததாம் –
பிராட்டி காணப்பட்டாள் -தொழும் நிலையில் இருக்கிறாள்-என்று காட்டவே –
யத்தே ராம முகாம்புஜே ஸமபவத் மந்தஸ்மிதம் தத் புர-அத்தைக் கண்டவுடன் பெருமாள் புன்னகை இதில் –

திருவடி தனது தேஜஸ்ஸாலும் குறிப்பாலும் உணர்த்தினார்
ஒளி மயமான எதிர்காலம் அமையும் பலன்

————

த்ருஷ்ட்வா கா அபி பதி வ்ரதா குல மணீ ராமோத்தமா ராம தே
மூர்திம் மானஸ பங்கஜே விதததீ ஸ்ரீ ராம ராமேதி ச
நாம ஸ்வாநந பங்கஜே திஸ்ரீ தவ ஸ்ரீ நேத்ர பத்மே ஸதே
த்யுக்த்யா வாயுஸூ தஸ்ய ஜாதமயி தே மந்தஸ்மிதம் த்யோததே
-3-

த்ருஷ்ட்வா -கண்டனன்
கா அபி பதி வ்ரதா -கற்புற்கு அணியை
குல மணீ -இற் பிறப்பு –பொறை -கற்பு மூன்றும் -களி நடம் புரியக் கண்டேன்
ராமோத்தமா -உத்தம ஸ்த்ரீ -மங்கையர் திலகம்
காண நோக்கிலேன் அவன் கமலக் கண்ணால் –
ராம தே மூர்திம் மானஸ பங்கஜே -உள்ளத் தாமரையில் உன்னைக் கண்டேன்
விதததீ ஸ்ரீ ராம ராமேதி ச நாம ஸ்வாநந பங்கஜே –ராம ராம திருநாமங்களை வாயால் சொல்லி
திஸ்ரீ தவ ஸ்ரீ நேத்ர பத்மே ஸதே-நீலத்தாமரைக் கண்களால் வடதிசை நோக்கி வரவைப் பார்த்து இருந்தால் -கண்களில் திசை தெரிகிறதே
த்யுக்த்யா வாயுஸூ தஸ்ய ஜாதமயி தே மந்தஸ்மிதம் த்யோததே -கேட்டு மகிழ்ந்து புன்னகை

பேச்சு ஆற்றல் –

கண்டனென், கற்பினுக்கு அணியை, கண்களால்,
தெண் திரை அலைகடல் இலங்கைத் தென் நகர்;
அண்டர் நாயக !இனி, துறத்தி, ஐயமும்
பண்டு உள துயரும்’என்று, அனுமன் பன்னுவான்;

விற் பெருந் தடந் தோள் வீர ! வீங்கு நீர் இலங்கை வெற்பில்,
நற் பெருந்தவத்தள் ஆய நங்கையைக் கண்டேன் அல்லேன்;
இற் பிறப்புஎன்பது ஒன்றும், இரும் பொறை என்பது ஒன்றும்,
கற்பு எனும் பெயரது ஒன்றும், களி நடம் புரியக் கண்டேன்

————-

இதோ யாதுர் மார்கே கிம பவததோ யாது கணத
புரே வா ஸா த்ருஷ்டா கதமிவ கிமா ஹாத மதுரா
இதி த்வத் ப்ருச்சாதோ ஹனுமதி ததா ஆஸீந் முக ருசி
ததஸ் ஸ்வாமின் வக்த்ரே தவ ச மதுரம் மந்தஸ்மிதம்
–4-

இதோ யாதுர் மார்கே -தென் திசை நோக்கி சென்றாயே -சகோதரன் யமன் திசை சுக்ரீவன் -வாயு தென்றல் காற்று –
கிம பவததோ யாது கணத -அரக்கர் மூலம் ஏதாவது ஆபத்து வந்ததா -பக்த வாத்சல்யம்
புரே வா ஸா த்ருஷ்டா கதமிவ -எவ்வாறு கண்டாய்
கிமா ஹாத மதுரா -இனியவள் என்ன சொன்னாள்
இதி த்வத் ப்ருச்சாதோ -இவ்வாறு கேட்க
ஹனுமதி ததா ஆஸீந் முக ருசி -பதில் சொல்லும் முன்பு மெய் சிலிர்த்து கண்ண நீர் தாரை பெறுக -தேஜஸ் மிக்க
ததஸ் ஸ்வாமின் வக்த்ரே தவ ச மதுரம் மந்தஸ்மிதம் -அத்தைப் பார்த்து புன்னகை

பக்தியின் ஏற்றம் அறிகிறோம்-

—-

தனது பெருமையைத் தனது வாயால் சொல்லிக் கொள்ளுபவர் இல்லையே
அங்கதன் பெருமையை இதில் அருளிச் செய்கிறார்

பவத் த்ருஷ்ட்யா ஹ்ருஷ்டோ விபி நபுவ மாலோக்ய நிகிலாம்
ஸூ பார்ஸ்வம் த்வாம் கர்தும் ஐநக ஸூதயா வாலி தநய
ஸூ பார்ஸ்வம் மாம் ஸாதம் கர ஹத கபோலம் ஸம வதீத்
இதி ஸ்ருத்வா வாசம் தவ ஹநுமதோ மந்த ஹஸிதம்
–5-

வாலி தநய -அங்கதன்
பவத் த்ருஷ்ட்யா ஹ்ருஷ்டோ -உமது கடாக்ஷ பலத்தாலே
விபி நபுவ மாலோக்ய நிகிலாம் -எங்கும் சென்று
ஸூ பார்ஸ்வம் த்வாம் கர்தும் ஐநக ஸூதயாஸூ பார்ஸ்வம் மாம் ஸாதம் கர ஹத கபோலம் ஸம வதீத் -ஸூ பார்ஸ்வ அரக்கனை கையாலே வதம் செய்து -ஸூ பார்ஸ்வம் நல்ல பக்கம் -ஸீதாப்பிராட்டி அருகில் இருந்தால் தானே ஸூ பார்ஸ்வம் ஆவான் –
சொல்லின் செல்வனின் சொல் அல்லவா
இதி ஸ்ருத்வா வாசம் தவ ஹநுமதோ மந்த ஹஸிதம் -இத்தைக் கேட்டு புன்னகை
விநய ஆஞ்சநேயர் -தற் பெருமை பேசாமல் –
வீரத்தை பழித்தாலும் அழிப்பேன் அர்ஜுனன் சபதம் செய்ய
தர்ம புத்ரன் பழிக்க
தர்ம புத்ரனை அவமதித்துப் பேசி கொன்றதுக்கு சமம்
பழித்தாலும் கொல்வேன் சபதம் செய்துள்ளேன்
நான் வீரன் விஜயன் -போன்ற பெருமைகளைத் தானே சொல்லி தற் கொலைக்குச் சமம்

நான் அஹந்தை குறைந்து சேஷத்வம் வரும் பலன்

மைநாகோ கிரிராட் பயோ நிதி ஜலாத் உத்பத்ய மாம் ஆதராத்
ஸ்ரீ ராம ப்ரிய தூத வாதபவ ஹே விஸ்ரம்ய கிஞ்சித் வ்ரஜ
இத்யுச் சைரவதத் ப்ரபோ ரகுபதே நாதேதி வாசா கபே
யந் மந்தஸ்மிதம் ஆநேந தவ பபவ் தன்மே விதத்தாம் ஸூகம்-
-6-

மை நாகோ கிரிராட் பயோ நிதி ஜலாத் உத்பத்ய -ரெக்கை கட்டிப் பறந்து வர -கடலுக்கு அடியில் வாயு இவனைச் சேர்த்து பாதுகாக்க -இவன் பார்வதி மகன் –
மாம் ஆதராத் -பெரிய ஆதாரத்துடன்
ஸ்ரீ ராம ப்ரிய தூத
வாதபவ -வாயு குமாரனே
ஹே விஸ்ரம்ய கிஞ்சித் வ்ரஜ -கிஞ்சித் ஒய்வு எடுத்துக் கொண்டு என்று சொல்ல
இத்யுச் சைரவதத் ப்ரபோ ரகுபதே நாதேதி வாசா கபே இவ்வாறு சொன்னவாறே
யந் மந்தஸ்மிதம் ஆநேந தவ பபவ் தன்மே விதத்தாம் ஸூகம் -கேட்டுப் புன்னகை

தனது பெருமையை தானே சொல்ல மாட்டாரே
தனக்காக இல்லாமல் ராம கைங்கர்யமாக இடம் கொடுத்தத்தைச் சொல்லி
அப்பாவின் பெருமையால் பெற்ற பேறு
நமது பெருமைகள் எல்லாம் ஆச்சார்யர் கிருபை அடியாகவே எண்ண வேண்டுமே

தடைகளை நீக்கி ஆனந்தம் அளிக்கும் பலன்

———-

மாதா நாக குலஸ்ய ஸா அத ஸூரஸா நாம்நீ ஸூரை ப்ரேரிதா
த்வா மாஸ் யாந்தரயே நிதாய ஸூ பகம் ஸ்ரீ ராம தூதம் மநாக்
விஸ்ராந்தம் விஸ்ருஜாமி ஹே த்யுபகதே த்யுக்த்யா முதா பாவநே
யந் மந்தஸ்மித மாஸ தே ரகுபதே தந்மே விதத்தாம் முதம்-
-7-

மாதா நாக குலஸ்ய ஸா அத ஸூரஸா நாம்நீ -வாயை பெருக்கி -ப்ரம்மா வரப்படி வாய்க்கு உள்ளே புகுந்து செல்ல வேண்டும்
ஸூரை ப்ரேரிதா -தேவர்கள் அனுப்பிய -புத்தி கூர்மை பரிஷை பண்ண -கொசு போல் சிறிய வடிவம் கொண்டு வாயுக்குள் மட்டும் புகுந்து வயிற்றுக்குள் செல்லாமல் வெளியில் வந்தார்
த்வா மாஸ் யாந்தரயே நிதாய ஸூ பகம் ஸ்ரீ ராம தூதம் மநாக் -கொஞ்சம் நேரம் தாங்கிக் கொள்ள ஆசைப்பட்டாள் -ராம தூதனாக இருப்பதால்
விஸ்ராந்தம் விஸ்ருஜாமி -கொஞ்சம் நேரம் ஒய்வு எடுத்து கொண்டேன்
ஹே த்யுபகதே த்யுக்த்யா முதா பாவநே யந் மந்தஸ்மித மாஸ தே ரகுபதே தந்மே விதத்தாம் முதம்-பவனம்-வாயுவின் பிள்ளை சொல்ல -புன்னகை -அது நமக்கு மகிழ்ச்சி கொடுக்கட்டும்

பணிவைப் பார்த்து புன்னகை
தோஷம் குற்றம் யார் மேலும் சொல்லக் கூடாது -விழுங்கப் பார்த்தாள் சொல்ல வில்லையே
அபாரமான ஆனந்தத்தை அளிக்கும் ஸ்லோகம்

அயம் வக்தா ந ஸ்யான் நிஜர சித கார்யஸ்ய நியதம்
ததஸ் தத் ஸ்வார் சாயாம் விஹித வடுவூர் கேஹ வஸதி
ஸ்ருணோமி ஸ்ரீ வாஸா ஜனக தநயாயா அஹமிமாம்
விதா யாங்கே ஹேதி ஸ்வயம ரஸயோ மந்த ஹஸிதம்-8-

அயம் வக்தா ந ஸ்யா நிஜர சித கார்யஸ்ய நியதம்-பெருமையை திருவடி சொல்ல மாட்டார்
ததஸ் தத் ஸ்வார் சாயாம் விஹித வடுவூர் கேஹ வஸதி -அதுக்காகவே அர்ச்சாவதாரம் வடுவூரில் எடுத்து
ஸ்ருணோமி ஸ்ரீ வாஸா ஜனக தநயாயா அஹமிமாம் -ஸீதாப்பிராட்டி திருவாக்கால்
விதா யாங்கே ஹேதி ஸ்வயம ரஸயோ மந்த ஹஸிதம் -திருமடியில் அமர்ந்து சொல்ல -அத்தை நினைத்துப் பார்க்க மந்தஸ்மிதம் –

திருவடியின் பெருமையை ஸூ ந்த்ர காண்டம் சீதா பிராட்டி திரு வாயால்
தில்லை வளாகம் -விநய திருவடி சேவை
பணிவு கிட்டும் பலம்

—–

ஸ்வாமிந்நேஷ பராக்ரமம் நிஜ மநா த்ருஷ்யம் பரைர் வர்ணிதம்
நைவ ஸ்வீயகிரா வதேத் விநயவான் ஸ்வ உத்கர்ஷ வாதே ஜடஸ்
ஸா அஹம் வஸ்மி ததார்ய புத்ர பகவன் நித் யாத்ம காந்தா கிர
யத்தே ராகவ மந்த மாத ஹஸிதம் தந் மஞ்ஜுலம் பாதுமாம்
–9-

ஸ்வாமிந்நேஷ பராக்ரமம் நிஜ மநா த்ருஷ்யம் பரைர் வர்ணிதம் நைவ ஸ்வீயகிரா வதேத் -யாராலும் அசைக்க முடியாத வீர aதீர பராக்ரமம் உடையவன்
விநயவான் ஸ்வ உத்கர்ஷ வாதே -தனது பெருமையைப் பேச மாட்டானே
ஸா அஹம் வஸ்மி ததார்ய புத்ர பகவன் -நான் சொல்லுகிறேன்-கேளும் என்றதும்
நித் யாத்ம காந்தா கிர -யத்தே ராகவ மந்த மாத ஹஸிதம் தந் மஞ்ஜுலம் பாதுமாம்—கேட்டு ஆனந்தம் பெறவே ஏகாந்தமாக வடுவூருக்கு வர -மந்தஸ்மிதம் சேவிக்க திருவடியும் வர
இந்த மந்த ஸ்மிதம் நம்மைக் காத்து அருளட்டும்

நன்றாக விவரித்துச் சொல்ல சீதாப் பிராட்டியே தயாரான பின்பு மந்தஸ்மிதம் வர சொல்லவும் வேண்டுமோ
வர்ணிக்க முடியாத பெருமை திருவடிக்கு உண்டே
புன்னகையே ரக்ஷை

————-

ததா வாஸம் க்ருத்வா ஸூப க வடுவூர் தேஸ ஸதநே
ஹநூ மத்ய க்ரஸ்தே ஜனக தனயா மஞ்ஜூ வஸஸா
ஹநூ மத் கார்யாணாம் கதிமயி நிஸம்யாதி மஹதாம்
முகே மந்த ஹாஸம் கலயஸி ரகூத் தம்ஸ கிமதம் –
-10-

ததா வாஸம் க்ருத்வா -இதற்காகவே வாஸம்
ஸூப க வடுவூர் தேஸ ஸதநே–ஏகாந்தமாக
ஹநூ மத் யக்ரஸ்தே
ஜனக தனயா மஞ்ஜூ வஸஸா -இனிமையாக பேச -ஜனகன் வேதாந்தி -பரம ஞானி
ஹநூ மத் கார்யாணாம் கதிமயி நிஸம்யாதி மஹதாம் -திருவடியுடைய மஹத்தான செயல்கள் அனைத்தையும் கேட்டு
முகே மந்த ஹாஸம் கலயஸி ரகூத் தம்ஸ கிமதம் –மெல்லிய புன்னகை -திருவடியைப் பார்த்து
இன்றும் வடுவூரில் உத்சவர் சேவை இதே போல்
பெருமை எல்லாம் ராமர் அனுக்ரஹம் என்றே நினைப்பவர்
ராமாயண பாராயணம் எங்கு செய்தாலும் அங்கு திருவடி இருந்து கேட்டு ஆனந்திப்பார் அன்றோ
வீரம் மனவுறுதி வலிமை கிட்டும் பலன் –

————-

கிம் த்ருஷ்டும் கதிதும் பவத் யதிதராம் உத் கண்டிதா வர்ததே
நோ த்ருஷ்டம் ஸ்ருதம் ஆப்ததோ நிஜமநஸ் தர்கேண சாவேஷிதம்
இத் யுக்தி ப்ரதி வாக் விஹார பவயா ஸ்ரீ ஜாநகீ ஸத் கிரா
ஜாதம் தே முக பங்கஜே விஜயதே மந்தஸ்மிதம் மஞ்ஜு லம்
–11-

கிம் த்ருஷ்டும் கதிதும் பவத் யதிதராம் உத் கண்டிதா –கண்ணால் பார்த்ததா -ஆப்தர்கள் சொல்ல காதால் கேட்டததா -ஊகித்ததா
நோ த்ருஷ்டம் ஸ்ருதம் ஆப்ததோ நிஜமநஸ் தர்கேண சாவேஷிதம் -மூன்றையும் கொண்டு சொல்கிறேன்
முன்பு நடந்ததை ஊகித்தும் -கண்டதையும் -பின்பு நடந்தத்தைக் கேட்டும்
இத் யுக்தி ப்ரதி வாக் விஹார பவயா ஸ்ரீ ஜாநகீ ஸத் கிரா -இவ்வாறு பிராட்டி சொன்னவாறே
ஜாதம் தே முக பங்கஜே விஜயதே மந்தஸ்மிதம் மஞ்ஜு லம் –கேட்ட பின்பு புன்னகை
மூன்று வித ப்ரமாணங்களும் -சொல்கிறாளே -என்று புன்னகை

அடியார் பெருமை மஹிமை ப்ரத்யஷிக்கலாமே -பெருமாளை விட மஹத்வம்
வேதாந்த ஞானம் பெருவோம் -பலன்

——–

நாயம் ஜானகி கேவலம் கபிரஹோ த்வத் ஸம்ப தர்தம் திவ
பூமவ் நாம க்ருதாவதார விபவ ஸ்ரீ விஷ்ணு ரேவ ஸ்வயம்
இத்யேவம் ஸரமா ஸகீ மம தாதா ஸா ஆஹேதி ஸீதா கிரா
ராம த்வத் வதநே யதே தத பவத் மந்தஸ்மிதம் பாது மாம்
–12-

நாயம் ஜானகி கேவலம் கபிரஹோ –வெறும் வானரம் இல்லை
த்வத் ஸம்ப தர்தம் திவ -உம்மை அனுக்ரஹித்து அருளவே விண்ணுலகத்தில் இருந்து
பூமவ் நாம க்ருதாவதார விபவ ஸ்ரீ விஷ்ணு ரேவ ஸ்வயம் -பூமியில் நாராயணனே வந்துள்ளார்
ஸரமா சீதாபிராட்டி சாஷாத் மஹா லஷ்மியே என்று அறியாதவள் -நல்ல பெண் மணி என்றே அறிந்தவள்
இத்யேவம் ஸரமா ஸகீ மம தாதா ஸா ஆஹேதி ஸீதா கிரா –இவ்வாறு சீதாபிராட்டி சொல்ல
ராம த்வத் வதநே யதே தத பவத் மந்தஸ்மிதம் பாது மாம் -ப்ரபாவம் அறிந்து மகிழ்ந்து புன்னகை
அதுவே நம்மை ரக்ஷிக்கட்டும்

பக்தனின் ஏற்றம் கேட்டு மகிழ்பவன்
ராமனையே தியானித்து அவரைப் போல் ஸாம்யம் பெற்ற திருவடி -நிரஞ்சன் பரமம் ஸாம்யம் -சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே-

——-

மைநாகேந கிரீஸ் வரேண மஹிதஸ் ஸோ அயம் ஹநுமான் கபி
மத்யே மார்க்கம் அநந்த விக்ரம நிதிர் யாதோ கிரா மைதிலி
ஆகத் யாத்ர தவா நநே முத மதா தித்யாஹ ஸா மே ஸகீ
ஸ்வாமின் நித்யவநீ ஸூதா முக கிரா மந்தஸ்மிதம் பாதி தே
–13-

மைநாகேந கிரீஸ் வரேண மஹிதஸ் ஸோ அயம் ஹநுமான் கபி –கிரீஸ்வரனால் கொண்டாடப்பட்டுள்ளவன்
மத்யே மார்க்கம் அநந்த விக்ரம நிதிர்
யாதோ கிரா மைதிலி –கிர் -வார்த்தை -இவனது வாக்கு கிர் ஈஸ்வரனாகி
ஆகத் யாத்ர தவா நநே முதா –உனக்கு மங்களம் கொடுத்து
தித்யாஹ ஸா மே ஸகீ
ஸ்வாமின் நித்யவநீ ஸூதா முக கிரா மந்தஸ்மிதம் பாதி தே-இவ்வாறு சொன்னதால் புன்னகை

சொல்லின் செல்வன் -அன்றோ – -வாக்மீ ஸ்ரீ மான்
தகுதிக்கு ஏற்ற பாராட்டு கிட்டும்

——–

ஆகச்சன் பதி வேகதஸ் ஸூரஸயா ருத்தோ மஹா வக்த்ரயா
ஹ்ரஸ்வஸ்வன் நிதராம் ப்ரவியஸ் வதநம் தஸ்யா பஹிர் நிர்கத
தேநா தீவ முதா ப்ரஸஸ்ய விஜயீ ஸ்யா இத்யயம் ப்ரேஷித
ஸீதே ஹேதி கிரா விதேஹ நிருபதே புத்ர்யா தவேதம் ஸ்மிதம்
–14-

ஆகச்சன் பதி வேகதஸ் -வேகமாக வர
ஸூரஸயா ருத்தோ -நாகமாதா வழி மறித்து
மஹா வக்த்ரயா -வாயைப் பெருக்கி -பிரமன் வரம்
ஹ்ரஸ்வஸ்வன் நிதராம் ப்ரவியஸ் வதநம் -சிறிய வடிவம் கொண்டு புகுந்து
தஸ்யா பஹிர் நிர்கததேநா தீவ முதா ப்ரஸஸ்ய –சோதிக்க வந்தவள்
விஜயீ ஸ்யா இத்யயம் ப்ரேஷித -வெற்றி உண்டாக ஆசீர்வாதம்
ஸீதே ஹேதி கிரா விதேஹ நிருபதே புத்ர்யா தவேதம் ஸ்மிதம் –இவ்வாறு சொன்னதை சீதாபிராட்டி சொல்ல புன்னகை

புத்திக் கூர்மை அறிந்து புன்னகை
கடலே 100 யோஜனையாயே இருக்க பெரியதாக வாயைக் கூட்டிச் சென்றது இடைச் செருகல் -திருமலை நம்பி காட்டி அருளினார்
உடனே சிறிய வடிவம் எடுத்து உள்ளே சென்று திரும்பினார்
ஸமயோஜித புத்தி கிட்டும் பலன் –

பாராவார பயோ விஹார நிரதா கோராக்ருதிஸ் ஸிம்ஹிகா
ஸர்வாவத்ய தநுஸ் ஸமஸ்த ஜநதா பீதேஸ் ஸதா வர்தநீ
யா ஸா அநேந ஹதா விசித்ரமிதி யச்சம் சந்தி ஸித்தாஸ் ஸமே
தேவீ த்யாஹ ஸகீத் யுதார வஸசா மந்தஸ்மிதம் தே பபவ்–
15-

பாராவார பயோ விஹார நிரதா -கடலில் வசிப்பவன்
கோராக்ருதிஸ் ஸிம் ஹிகா –கோரமானவள் -ராகுவின் அம்மா
ஸர்வாவத்ய தநுஸ் ஸமஸ்த ஜநதா பீதேஸ் ஸதா வர்தநீ -பயம் தருபவள் -சாயாக்ராஹி இவள்
யா ஸா அநேந ஹதா -வதம் செய்தார்
விசித்ரமிதி யச்சம் சந்தி ஸித்தாஸ் ஸமே -சித்தர்கள் மகிழ வாழ்த்த
தேவீ த்யாஹ ஸகீத் யுதார வஸசா மந்தஸ்மிதம் தே பபவ் -கேட்டு புன்னகை

அன்பால் வந்த தடையை அன்பால் வென்றார்
அமரர்கள் அறிவு கூர்மையால் வென்றார்
உண்மையான தடையை வலிமையால் வீரத்தால் வென்றார்
ஸிம்ஹிகா வயிற்றை கிளித்தார்
திரிவிக்ரமன் -வாமனன் நரஸிம்ஹர் போல் இவர் செயல்கள்
வடைமாலை -குடலை மாலையாகப் போட்டதால் proteen ப்ரதிநிதி
ராகு தோஷம் நெருங்காது

——–

லங்கை வாமித விக்ரமா ஹநுமதா ஸா அநேந கோராக்ருதி
தத் சந்தாடந ரோஷிதேந ததபி ஸ்த்ரீ சேதி லக்வாஹதா
பூமவ் ஸம் பதிதா ஜிதா அஸ்மி விசதத் ஸர்வம் ஜயேத்ய ப்ரவீத்
இத்யேவம் ஸரமா அகதீதிதி புவ புத்ர்யா கிரா கிம் ஸ்மிதம்
–16-

லங்கை வாமித விக்ரமா -லங்கிணி
ஹநுமதா ஸா அநேந கோராக்ருதி தத் சந்தாடந ரோஷிதேந -தாக்கி தடுக்க
ததபி ஸ்த்ரீ சேதி லக்வாஹதா -ஓங்கி அடிக்காமல் கையால் தட்ட
பூமவ் ஸம் பதிதா ஜிதா அஸ்மி விசதத் ஸர்வம் ஜயேத் யப்ரவீத் -பூமியில் விழ -வாயு புத்ரனா -கேட்டு -உனக்கு எல்லாமே ஜெயமாகும் வாழ்த்த
இத்யேவம் ஸரமா அகதீதிதி புவ புத்ர்யா கிரா கிம் ஸ்மிதம் –இப்படி சொன்னதை சொல்ல புன்னகை
மோதிரக் கையால் குட்டுப் பட்டாள் –பழ மொழி உருவாக்கியதை நினைத்து நினைத்து புன்னகை
மோதுகின்ற கை
மெலிந்தவர்களை லகுவாக தாக்கும் குணம்
முயற்சிகளில் வெற்றி கிட்டும் பலம்

————–

ராத்ரா வேஷ ஸமஸ்த மேவ நகரம் ஸம்யக் விசித்யாகத
ப்ராதர் மைதிலி தாவகம் வநமிதம் தத்ரா அபி தம் ராவணம்
த்ருஷ்ட்வா தர்ஜன தத் பரம் ததநு தே வ்ருத்தம் ரகூணாம் ஜகவ்
இத்யேவம் ஸரமா அப்ரவீதிதி கிரா புத்ர்யா புவோ அபூத் ஸ்மிதம்
–17-

ராத்ரா வேஷ ஸமஸ்த மேவ நகரம் –இரவில் தேடி
ஸம்யக் விசித்யாகத -முழுவதும்
ப்ராதர் மைதிலி தாவகம் வநமிதம் -ப்ரஹ்ம முஹூர்த்தம் பிராட்டியைக் கண்டு
தத்ரா அபி தம் ராவணம் த்ருஷ்ட்வா தர்ஜன தத் பரம் —ராவணன் வந்து மிரட்டியதையும் பார்த்து
ததநு தே வ்ருத்தம் ரகூணாம் -உன்னை மகிழ்விக்க ஸ்ரீ ராமாயணம் பாடி
இத்யேவம் ஸரமா அப்ரவீதிதி கிரா புத்ர்யா புவோ அபூத் ஸ்மிதம் –கேட்டு புன்னகை

தன்னைக் கண்டதை தனது திரு வாயால் கேட்டுப் புன்னகை
இரவு முழுதும் தேடி -அஸாத்ய ஸாத்யம் -கார்ய ஸித்தி பலன்

———-

ராஜா அபூத் ரத வாஜி குஞ்ஜர யுகித் யாரப்ய கர்ணாம்ருதம்
ஸ்ரீ மாநேக்ஷ வவர்ஷ மாருத ஸூதோ யுஷ்மச் சரித்ரம் ஸூபம்
இத்தம் ஸ்ரீ ஜனகாத்மஜா ஸமுதிதம் ஸ்ருத்வா வசஸ் தே முகே
யன் மந்தஸ்மிதம் உத்திதம் ஸூ மதுரம் தத் பாது மாம் பாபத
–18-

ராஜா அபூத் ரத வாஜி குஞ்ஜர யுகித் யாரப்ய கர்ணாம்ருதம் -தசரத சக்ரவர்த்தி ஆரம்பம் -காதுக்கு அம்ருதம்
ஸ்ரீ மாநேக்ஷ வவர்ஷ மாருத ஸூதோ யுஷ்மச் சரித்ரம் ஸூபம் -உங்களுடைய சரித்திர மழை பொழிய
இத்தம் ஸ்ரீ ஜனகாத்மஜா ஸமுதிதம் ஸ்ருத்வா வசஸ் தே முகே -இவ்வாறு பிராட்டி அருளிச் செய்ய
யன் மந்தஸ்மிதம் உத்திதம் ஸூ மதுரம் தத் பாது மாம் பாபத –கேட்டு புன்னகை

உயிரையே காத்த குணம்
புத்தி சாதுர்யம்
புன்னகையே ரக்ஷகம்

———-

ஸோ அயம் ஸாகா வலம்பீ தவ கலு சரிதம் பக்திமான் ரஞ்ஜயன் மாம்
ஸங்ஷிப்தம் ஷிப்த தோஷம் ஸ்ருதி யுக ஸூகதம் பாவநம் பாவமாநி
ஸாநந்தம் ப்ராஹ மந்த்ரம் ஸ்ம்ருதமபி ஜனயத் யந்தரா நந்த ப்ருந்தம்
ஸீதா வாசேதி ஜாதோ ஜயதி தவ முகே மந்த ஹாஸோ மநோஜ்ஞ-
-19-

ஸோ அயம் ஸாகா வலம்பீ தவ கலு சரிதம் பக்திமான் ரஞ்ஜயன் மாம்-மரக்கிளையில் அமர்ந்து உமது சரித்திரம் பக்தியுடன் சொல்லி ஆனந்தம் கொடுத்தான்
ஸங்ஷிப்தம் ஷிப்த தோஷம் ஸ்ருதி யுக ஸூகதம் பாவநம் பாவமாநி-சுருக்கமாகவும் தோஷமும் இல்லாமலும் இரண்டு காதுகளுக்கும் அம்ருதமாயும் தூய்மையானதுமான ஸ்ரீ ராமாயணம்
ஸாநந்தம் ப்ராஹ மந்த்ரம்-ஆனந்தமாக பாடி
ஸ்ம்ருதமபி ஜனயத் யந்தரா நந்த ப்ருந்தம்–கேட்ட பொழுது மட்டும் இல்லாமல் நினைக்கும் தோறும் பேர் ஆனந்தம் கொடுக்கும்
ஸீதா வாசேதி ஜாதோ ஜயதி தவ முகே மந்த ஹாஸோ மநோஜ்ஞ-இவ்வாறு சொன்னதைக் கேட்டு புன்னகை

குச லவர்கள் பாட தன் சரிதை கேட்டு ஆனந்தம் -ஸீதாயா சரித்திரம் -ஸீதைப் பிராட்டியே சொல்ல
பக்தியுடன் சுருக்கமாக திருவடி சொன்னத்தை நினைந்து இன்பம் தருவதை –
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராம–ஆனந்தம் வாழ்வில் அளிக்கும்-

————

ஸ்ருத்வாப்யேவ மதீவ பக்தி ஸஹிதம் த்ருஷ்ட்வா அபி பத்தாஞ்ஜலிம்
சங்கா மே ஸ தஸாஸ்ய ஏவ கபிதாம் ஏவம் வஹந் நாகத
இத்யா ஸீதத தாம் வ்யபோஹ்ய வசநை முத்ராமிமாம் ஸந்ததவ்
இத்யேவம் ஜநகாத்மஜா வசநதோ மந்தஸ்மிதம் தே பபவ்
–20-

ஸ்ருத்வாப்யேவ மதீவ பக்தி ஸஹிதம் த்ருஷ்ட்வா அபி பத்தாஞ்ஜலிம் –பக்தியுடன் கூடி கைகூப்பி இருந்தாலும்
சங்கா மே ஸ தஸாஸ்ய ஏவ கபிதாம் ஏவம் வஹந் நாகத -ராவணனும் குரங்கு வேஷம் போட வல்லவன் தானே
இத்யா ஸீதத தாம் வ்யபோஹ்ய வசநை –ஏகாந்த விஷயங்களைச் சொல்லி சங்கையைப் போக்கினான்
முத்ராமிமாம் ஸந்ததவ் -கணையாழியையும் கொடுத்து –ஈது அவன் மோதிரமே
இத்யேவம் ஜநகாத்மஜா வசநதோ மந்தஸ்மிதம் தே பபவ் —
இவற்றைக்கேட்டு புன்னகை

புத்தி சாதுர்யமும் பேசசு வன்மையும்
நாடிய பொருள் கைகூடும் பலன் –

அயோத்தி தன்னில் ஓர்,இடவகையில்  எல்லி அம்போது இனிது இருக்க மல்லிகை மா மாலை கொண்டு அங்கு ஆர்த்ததுவும்; கலக்கிய மா மனத்தினளாய் கைகேயி வரம் வேண்ட மலக்கிய மா மனத்தினனாய் மன்னவனும் மறாதொழியக் குலக்குமரா! காடு உறையப்போ  என்று விடை கொடுப்ப இலக்குமணன் தன்னோடு அங்கு ஏகியதும்

கங்கை தன்னில் கூர் அணிந்த  வேல் வலவன் குகனோடு சீர்  அணிந்த தோழமை கொண்டதுவும்; சித்திர கூடத்து இருப்பப் பரத நம்பி பணிந்ததுவும்;

சிறு காக்கை முலை தீண்ட அனைத்துலகம் திரிந்து ஓடி‘வித்தகனே !ராமவோ ! நின்அபயம் ! ‘ என்ன அத்திரமேஅதன்கண்ணைஅறுத்ததுவும்;

பொன் ஒத்த  மான் ஒன்று புகுந்து இனிது விளையாடநின் அன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏகப்பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததுவும்‘அயோத்தியர் கோன் உரைத்த அடையாளம்;-3-10-10-ஆறு அடையாளங்கள் சொல்லும் பொருளும்

‘ஈது அவன் கை மோதிரமே’என்று அடையாளம்  தெரிந்து உரைக்க,
மலர்க் குழளால் சீதையும்,வில் இறுத்தான் மோதிரம் கண்டு அனுமான் அடையாளம் ஒக்கும் என்று உச்சி மேல் வைத்து உகக்க,

——–

முத்ராம் தத்வா த்வதீ யாம் மம கலு வதநே முத்ரிதம் ஹந்த ஹாஸம்
ஸத்யோ ஜாதம் விதேநே நயன யுக கதம் ஸோக பாஷ்யம் ச சித்ரம்
தாத்ருஷ ஆனந்த பாஷ்பம் மம தயித ததேத் யுப்ரவீத் ஜாநகீ யத்
தஸ்மாஜ் ஜாதம் ஸ்மிதம் தே ஜயதி ரகு பதே மந்தமே தன்ம நோஞ்ஞம்
–21-

முத்ராம் தத்வா த்வதீ யாம் மம கலு வதநே முத்ரிதம் ஹந்த ஹாஸம் –கையும் மோதிரமும் முகத்துக்கு புன்னகையும் கொடுத்து–நேரில் பார்த்தாலும் பெறாத பேர் ஆனந்தம் அன்றோ –
இது அன்றோ முன்பு சேர்த்து வைத்தது –
ஸத்யோ ஜாதம் விதேநே நயன யுக கதம் ஸோக பாஷ்யம் ச சித்ரம் -கண்ணீரில் சோக பாஷ்யம் இருக்க
தாத்ருஷ ஆனந்த பாஷ்பம் மம தயித ததேத் யுப்ரவீத் ஜாநகீ யத் -ஒரு நொடியில் ஆனந்த கண்ணீர் வரவழைத்து -சொல்ல
தஸ்மாஜ் ஜாதம் ஸ்மிதம் தே ஜயதி ரகு பதே மந்தமே தன்ம நோஞ்ஞம் -கேட்டு புன்னகை

க்ருஹீத்வா -மோதிரம் -ஆனந்தக் கண்ணீரால் அபிஷேகம் செய்தாள்
கண்களில் வைத்து உச்சி மேல் வைத்து -மோதிர விரல் கை தோள் திருமேனி கண்டாள்

பெருமாள் முன்பு சேர்த்து வைத்ததை நினைத்து புன்னகை
முதலில் கணையாழி கொடுக்காமல் -மாயா ஸீதையை உருவாக்க வல்லவன்
ராமாயணம் பாடி -ஏகாந்த அடையாளங்களைச் சொல்லி-ஆர்வம் வளர்த்த பின்பு கணையாழி கொடுத்த சாதுர்ய குணம்
ஆனந்தக்கண்ணீர் பெருகும் பலன்

“க்ருஹீத்வா ப்ரேக்ஷமாணா ஸா பர் து: கர விபூஷணம்  பர்தாரமிவ ஸம்ப்ராப்தா ஜாநகீ முதிதாபவத்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 36 : 4. – ‘இராவணன் மாயையாலே வந்ததோ’ என்னும் பயத்தாலே முற்படக் கண்வைக்கமாட்டாதே இருந்தாள்; ‘அத் தலையாலே வந்தது’ என்று தெளிந்த பின்பு கண் மாறவைக்க அரிதாம்படி இருந்தாள். ஸா – ப்ரேக்ஷமாணா – 2“பஸ்யதேவி – தேவியே! பார்க்க்” என்றுகொண்டு முன்பு பார்வைக்குக் கிருஷி பண்ணவேண்டும்படி இருந்தவள் தானே, கண் மாற வைக்கைக்குக் கிருஷி பண்ணவேண்டும்படியாய் இருந்தாள். பர்த்து: கரவிபூஷணம் – முதல் கைப்பிடிக்கிறபோது உறுத்தினபடியை நினைத்தாள். கரவிபூஷணம் – அணி மிகு தாமரைக்கை யன்றோ. ஆபரணத்துக்கு ஆபரணங் காணும். பர்த்தாரம் இவ-3இவன் இத்தைத் திருக்கையில் கொடுத்தவாறே, இதனோடே சேர்ந்த விரலையும் தோளையும் நினைத்தாள்; அந் நினைவுதான், தான் இக்கரையில் ஆளாகவும், அவர் அக்கரையில் ஆளாகவும், கடல் இடையிலே கிடக்கிற தாகவும் அறிந்திலள்; ஒருபடுக்கையிலே கூட இருந்ததாக நினைத்தாள்; ஒரு 1சூது சதுரங்கங்களிலே தோற்றுத் தன்கையில் இருந்ததாக நினைத்தாள். 2“இவ” என்கிறான் இருடி, 3உலகமாதா என்ற கருத்தாலே. இவள் உணர்ந்தால் என்படக் கடவள் என்று. ஜாநகீ-இன்ப துன்பங்களுக்கு இளையாத குடியிலே பிறந்தவள். முதிதாபவத்- உவகையளானாள்.

————–

ப்ருஷ்டஸ் ஸோ அயம் ஹனுமான் கதய ரகுபதேர் அங்க ஸுந்தர்ய லஷ்மீம்
ஸுமித்ரேர் அப்யுதாரேத்ய கதயது திதம் மோதபாஷ்பம் விகீரிய
பூமிம் ஸீதாம் விதன்வன்னபி மம ஜநநீம் தாப ஹீனா மிதீ மாம்
வாணீம் ருத்வா ப்ரியாயாஸ் தவ
முக கமலே மந்த ஹாஸஸ் ஸமிந்தே –22-

ப்ருஷ்டஸ் ஸோ அயம் ஹனுமான் கதய ரகுபதேர் அங்க ஸுந்தர்ய லஷ்மீம்-திருமேனி அழகு ஒளி
ஸுமித்ரேர் அப்யுதாரேத்ய கதயது திதம் -லஷ்மணனின் அடையாளமும் சொல்லச் சொல்லி
மோதபாஷ்பம் விகீரிய -ஆனந்தக் கண்ணீர் பெருக
ராமன் கமல பத்ராஷ -ஒவ்வொன்றையும் உபமானமாகச் சொல்லி
மையோ மரகதமோ -இத்யாதி -சிவந்த கடைக் கண்கள் -மூன்று ரேகைகள் கழுத்திலும் வயிற்றிலும் -நான்கு ரேகைகள் நெற்றியிலும் கட்டை விரலிலும்-ஸிம்ஹ நடை-லஷ்மணனும் இவ்வாறே
பூமிம் ஸீதாம் விதன்வன்னபி மம ஜநநீம் தாப ஹீனா மிதீ மாம் -பூமியைக் குளிர வைத்ததே ஆனந்தக் கண்ணீர்-என்னுடைய அம்மா -பூமா தேவியைக் குளிர வைத்தான்
வாணீம் ருத்வா ப்ரியாயாஸ் தவ முக கமலே மந்த ஹாஸஸ் ஸமிந்தே –கேட்டு திருமுகத் தாமரையில் மலர்ந்த புன்னகை
ஆராவமுத ஆழ்வார் -தனது அழகை தானே அனுபவித்து எட்டிப் பார்த்து முன் அழகைக் பார்க்க -வாழி கேசனே –
பக்தி பாரவஸ்யம்
மனத் தெளிவு ஏற்படும் பலன் –

——-

ராம பத்ம ஸமாந லோசந யுக கண்டத்வ யாதர்வான்
நாஸா நிர்ஜித சம்பகோ அதி மதுரம் பிம்பா தரம் ஸம் வஹன்
ஏதாம் அங்குலி முத்ரிகாம் மம கரே க்ருத்வா அவதத் ஸ்வ க்ஷரம்
வைதேஹீ தி கிரா ப்ரியா முக ஐயா மந்தஸ்மிதம் தே அபவத் –
-23-

ராம பத்ம ஸமாந லோசந யுக -தாமரைக் கண்ணன்
கண்டத்வ யாதர்வான் -கண்ணாடிக் கன்னங்கள்
நாஸா நிர்ஜித சம்பகோ -செண்பகப்பூ மூக்கு
அதி மதுரம் பிம்பா தரம் -கோவைப் பழம் இதழ்கள்
ஸம் வஹன்
ஏதாம் அங்குலி முத்ரிகாம் மம கரே க்ருத்வா அவதத் ஸ்வ க்ஷரம் -நல்ல வார்த்தையும் சொல்லி
வைதேஹீ தி கிரா -விதேஹனான ஜனக குமாரி -தந்தை போல் அழைத்து
ப்ரியா முக ஐயா மந்தஸ்மிதம் தே அபவத் –கேட்டு புன்னகை

அருள் பெற்ற திருவடி -தாமரைக் கண்ணன் -காட்டவே கண்டார் -யாதவ ப்ரகாஸர் -கப்யாஸம் விவரணம்
திருமேனியாகிய தடாகத்தில் பூத்த தாமரைக் கண்கள் அன்றோ –
தந்தை போல் பாசம் காட்டிய திருவடி
ஸூர்ய சிஷ்யர் யாஜ்ஜய வல்க்யர் சிஷ்யர் ஜனகன்-திருவடியும் ஆச்சயர்யர் ஸ்தானம்
தெளிவான சமயோசித புத்தி ஏற்படும் -பலன்-

————-

ஐஷ்யத் யத்ர கதம் ஸ மே ப்ரிய தமோ -மத் ப்ருஷ்டத தே பரே
மத் தஸ்தே மஹிதாஸ் ஸமே அபி யதஹம் தத்ராவர ப்ரேஷித
இத்யேவம் மம சாஸ்ய சாப்ய பவதாம் உக்தீ ப்ரபோ ராம போ
இத் யுக்த்யா ஜநகாத்மஜா முக ஐயா ஜாதம் தவேதம் ஸ்மிதம்
–24-

ஐஷ்யத் யத்ர கதம் ஸ மே ப்ரிய தமோ -ஆசைக் கணவர் எப்படி இங்கு வருவார்
மத் ப்ருஷ்டத –எனது தோளில் ஏறி வரலாமே -ராம நாமம் ராமரை விட ஸ்ரேஷ்டம்
தே பரே -மற்றவர்கள்
மத் தஸ்தே மஹிதாஸ் ஸமே அபி யதஹம் தத்ராவர ப்ரேஷித –கோஷ்டியில் தாழ்ந்தவன் நானே -விநய பாவம் -தூதுவனாக அனுப்ப நானே அதிகாரி –
இத்யேவம் மம சாஸ்ய சாப்ய பவதாம் உக்தீ ப்ரபோ ராம போ –இவன் பெருமையை நான் நன்றாக அறிந்தேன் -இப்படி பேசினானே
இத் யுக்த்யா ஜநகாத்மஜா முக ஐயா ஜாதம் தவேதம் ஸ்மிதம் –கேட்டு புன்னகை மலர்ந்தான்

நைச்ய அநுஸந்தானம் –
கருவியாக இருக்க வேண்டுமே கர்வியாக இருக்கக் கூடாதே
பணிவு பண்பு வளரும்
பெரிய திருமலை நம்பி உடையவராய் தானாகவே வந்து வரவேற்ற ஐதிக்யம்-

த்வாம் நேஷ்யாமி ததந் நிகம் ஜனகஜே ப்ருஷ்டம் ஸமாருஹ்யதாம்
மைவம் ஸர்வ நிஸா சரன் நிஜ சரைஸ் ஹத்வா நயதேஷ மாம்
இத் யுக்தே மம சாரவித் புலகிதோ ஜாதோ ஹனூமா நிதி
ஸ்ரீ ஸீதா வசநேந ஜாதமயி தே மந்தஸ்மிதம் ஸோபதே
–25-

த்வாம் நேஷ்யாமி ததந் நிகம் ஜனகஜே -நானே அழைத்து செல்கிறேன்
ப்ருஷ்டம் ஸமாருஹ்யதாம் -தோளில் ஏறப் பண்ணி
மைவம் ஸர்வ நிஸா சரன் நிஜ சரைஸ் ஹத்வா நயதேஷ மாம் -பெருமாள் -தூயவன் அம்புக்கு மாசு ஆகுமே
தத் ஸத்ருஸ்ய பவேத் -என்று இருக்குமவள் அன்றோ
இத் யுக்தே மம சாரவித் புலகிதோ ஜாதோ ஹனூமா நிதி -இத்தைக் கேட்டதும் திருவடி -புலகாங்கிதம் அடைந்து
ஸ்ரீ ஸீதா வசநேந ஜாதமயி தே மந்தஸ்மிதம் ஸோபதே –கேட்டு புன்னகை-

சரணாகதனுடைய நிஷ்டையை அனுஷ்டித்துக் காட்டினாள்
மஹா விஸ்வாஸம் வேண்டுமே
என் நான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய் உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
ஒரு மாதம் அவகாசம் பெறவே இவ்வாறு திருவடி சொல்லி –
விரைவாக அபீஷ்ட பலம் பெறுவோம் -பலன்

————

தூத கோபி கபிர் மஹான் ரகுபதே ராகத்ய ஸீதா முதம்
ரக்ஷஸ் சங்கவதம் விதாஸ்யதி ததா வஹ்நிம் ச லங்கா புரே
இத்யேவம் த்ரிஜடா யதாஹ பகவன் ஸ்வப்நம் விலோக் யாத்புதம்
ஜாதம் தச்ச ததேதி தார வசநாத் ஜாதம் நு மந்தஸ்மிதம்
–26-

தூத கோபி கபிர் மஹான் ரகுபதே -ராமதூதன் வருவான்
ராகத்ய ஸீதா முதம் -உமக்கு ஆனந்தம் தருவான்
ரக்ஷஸ் சங்கவதம் விதாஸ்யதி ததா வஹ்நிம் ச லங்கா புரே -ராக்ஷஸர்களை அழிப்பான் -இலங்கைக்கு தீயும் வைப்பான்
இத்யேவம் த்ரிஜடா யதாஹ பகவன் ஸ்வப்நம் விலோக் யாத்புதம் -கனவில் கண்டதை நேராக நடப்பதை கண்டோம்
ஜாதம் தச்ச ததேதி தார வசநாத் ஜாதம் நு மந்தஸ்மிதம் –இத்தைக் கேட்டு புன்னகை
கனவை நனவாக்கி அருளியதால் புன்னகை
ஸஹாய நிரபேஷமாகவே அனைத்தையும் சாதித்து அருளினார் திருவடி
ஆசை கனவுகளை நனவாக்கும் பலன்
ஹனுமத் பஞ்சாசத் -ஒப்பற்றவர்-தன்னைப் போல் இரண்டாவது இல்லாதவர் -மூன்று வேதங்களையும் அறிந்தவர் -நான்முகன் அருள் பெற்றவர் -பஞ்சத்வமாகிய
மரணம் இல்லாதவர் சிரஞ்சீவி -ஞான பலாதி ஷட் குணங்கள் நிறைந்தவர் -ஏழு குதிரைகள் பூட்டிய தேர் கொண்ட ஸூர்யனுக்கு சிஷ்யர் -அஷ்டாங்க யோகங்களில் வல்லவர் -நவ வ்யாக்ர பண்டிதர் -பத்து தலை ராவணனுக்கு ஸிம்ஹ ஸ்வப்னமாக இருப்பவர்

ஸரமா -விபீஷணன் மனைவி சொல்லி ஸீதாப்பிராட்டி அருளிச் செய்தவற்றை கீழே பார்த்தோம்
இதில் த்ரிஜடை விபீஷணன் மகள் ஸ்வப்னம் கண்டு அருளிச் செய்தவற்றை ஸீதாப் பிராட்டி அருளிச் செய்கிறாள்

————-

ஸர்வா உக்ர வசோ விஹாய சரணம் யாசத்வ மேதாம் ஸதீம்
ஸீதா மித் யுதிதேந மாம் பர வஸாம் சக்ரே ததா மத் ஸகீ
மான்யா ஸ்ரீ த்ரிஜடே தி தார வஸசா மந்தஸ்மிதம் யத் ப்ரபோ
ஸஞ்ஜாதம் வதநே ததேத தநகம் ஸர்வாம் ததாது ஸ்ரியம் –
-27-

ஸர்வா உக்ர வசோ விஹாய சரணம் யாசத்வ மேதாம் ஸதீம் -திருவடி யின் வீர தீர பராக்ரமங்களைச் சொல்லி-ராக்ஷஸிகளுக்கு சரணம் அடைய உபதேசிக்கிறாள்
ஸீதா மித் யுதிதேந மாம் பர வஸாம் சக்ரே ததா மத் ஸகீ
மான்யா ஸ்ரீ த்ரிஜடே தி –பிரபாவம் அறிந்து ஒரு நொடியில் இதுவே வாழ்வு என்று நினைக்க -சரணம் சொல்லாமலேயே கடன் பட்டவள் தான் என்று சொன்னதை
தார வஸசா மந்தஸ்மிதம் யத் ப்ரபோ -ஸஞ்ஜாதம் வதநே ததேத தநகம் ஸர்வாம் ததாது ஸ்ரியம் -கேட்டு புன்னகை

ஸரணாகதி ஸாஸ்த்ரம் -லகுதரா ராமஸ்ய கோஷ்ட்டி
திருவடி பராக்ரமத்தால் அரக்கிகளும் சரணம் அடைவதை நினைக்கும் படி பண்ணும்
செல்வம் தரும் பலன்

————

தேநைவாஹ மஹோ ததோ ஹநுமதஸ் தாஸாம் வதம் காங்க்ஷத
தாஸ் ஸர்வா அபி ரக்ஷிதா க இவா நோ நைவா பராத்தா ஐந
ஸ்வாமின் ஸாஹமபி ப்ரபோ தநு ததா ரீ லஷ்மணஸ் யாந்திகே
நாதே த்யேவம வேத்ய தாரஹ்ருதயம் ஸாகூத மந்தஸ்மிதம்
–28-

தேநைவாஹ மஹோ ததோ ஹநுமதஸ் தாஸாம் வதம் கா–யுத்த காண்டத்தில் இருந்தாலும் சேர்ந்த வ்ருத்தாந்தம் தானே
தாஸ் ஸர்வா அபி ரக்ஷிதா க இவா நோ நைவா பராத்தா ஐந -குற்றம் இல்லாதவர் யார் –
ஸ்வாமின் ஸாஹமபி ப்ரபோ தநு ததா ரீ லஷ்மணஸ் யாந்திகே -லஷ்மணனை சுடு சொல் சொன்னேன் –
நாதே த்யேவம வேத்ய தாரஹ்ருதயம் ஸாகூத மந்தஸ்மிதம் —தான் மன்னித்ததும் திருவடி பிரபாவத்தை த்ரிஜடை சொல்ல -சரணாகதி பண்ணலாமா என்று அரக்கிகளையும் நினைக்க வைத்ததே -கேட்டு புன்னகை

‘பாபாநாம் வா சுபாநாம் வா வதார்ஹாணாம்  ப்லவங்கம } கார்யம் கருணமார்யேன  ந  கஸ்சிந்நாபராத்யதி

பெருமாள் பிராட்டி திருவடி அருள் கிட்டும் பலன்-

———

ப்ராஞ்ஜோ அயம் ஹனுமான் மயா ஹ்யபிஹிதம் ஸ்ருத்வா விஹாயாத்மந
ஸத்ய கோப மவாரணீ யமபவத் காமம் ப்ரஸன்னாஸய
ஏவம் யே த்விஷ தந்திகே அபி ஸூஹ்ருதஸ் தே மாநநீயா இதி
ஸ்ரீ ஸீதா வசநேந தே ஸமுதிதம் மந்தஸ்மிதம் பாது மாம்
–29-

ப்ராஞ்ஜோ அயம் ஹனுமான் -பண்டிதன்
மயா ஹ்யபிஹிதம் ஸ்ருத்வா விஹாயாத்மந
ஸத்ய கோப மவாரணீ யமபவத் காமம் ப்ரஸன்னாஸய–கோபம் எளிதில் விட முடியாதே -அரக்கிகள் மீது உள்ள கோபம் விட்டார் -ப்ரஸன்னமாக மாறினார்
ஏவம் யே த்விஷ தந்திகே அபி ஸூஹ்ருதஸ் தே மாநநீயா இதி -எதிரிகளின் மீது கோபம் விட்ட மஹானைக் கொண்டாட வேண்டும்
ஸ்ரீ ஸீதா வசநேந தே ஸமுதிதம் மந்தஸ்மிதம் பாது மாம் –கேட்டு புன்னகை
திருவடியை கௌரவிக்க புன்னகை -நம்மை ரக்ஷிக்கட்டும்

——–

அல்பீ யாநஸி வோடு மிச்சஸி ச மாம் தத்தே கபித்வம் ஸ்புடம்
மா மா பஸ்ய ததத்ய ராம தயிதே மத்கம் மஹத்த்வம் புர
இத் யுக்த்வா கிரி ஸந்நிபோ அயமபவத் ஸ்ரீ மான் ஹநுமானிதி
ஸ்ரீ ஸீதா வசநேந மந்தமிஹ தே ஜாதம் ஸ்மிதம் ஸோபதே
–30-

அல்பீ யாநஸி வோடு மிச்சஸி ச மாம் தத்தே கபித்வம் ஸ்புடம் -சிறிய வடிவுடன் என்னைத் தூக்கி போகப் போகிறாயா
மா மா பஸ்ய ததத்ய ராம தயிதே மத்கம் மஹத்த்வம் புர-இவ்வாறு சொன்னதும் விஸ்வரூபம் காட்டினான்
இத் யுக்த்வா கிரி ஸந்நிபோ அயமபவத் ஸ்ரீ மான் ஹநுமானிதி -மலை போல் உயர்ந்து காட்டினான்
ஸ்ரீ ஸீதா வசநேந மந்தமிஹ தே ஜாதம் ஸ்மிதம் ஸோபதே -கேட்டதும் புன்னகை -பக்தனின் பெருமையை நினைத்து புன்னகை -பெரிய விஷயங்களையும் சாதிக்க அருள் புரிவார் –

———–

மந்தோ ஹாஸஸ் தவ ச ஹநுமான் த்வவ் ஸமாவேவ ஸத்யம்
மந்தோ அமந்தோ பவதி தநுதோ மாநநீயோ ஹனுமான்
ஏவம் வாசா ஜனக தனயா ஜாதயா ஜாயமாந
மந்தோ ஹாஸஸ் தவ ரகுபதே மாம மந்தம் விதத்தாம்
–31-

மந்தோ ஹாஸஸ் தவ ச ஹநுமான் த்வவ் ஸமாவேவ ஸத்யம் -தேவரீருடைய புன்னகையும் -திருவடியும் சமம் -இது ஸத்யம்
மந்தோ அமந்தோ பவதி தநுதோ -சிறியதாக இருக்க வேண்டிய இடத்தில் சிறியனாகவும் பெரியவனாக இருக்க வேண்டிய இடங்களில் அமந்தமாகவும்
மாநநீயோ ஹனுமான் -இரண்டுமே போற்றப் படுபவையே
ஏவம் வாசா ஜனக தனயா ஜாதயா ஜாயமாந
மந்தோ ஹாஸஸ் தவ ரகுபதே மாம மந்தம் விதத்தாம் –இவ்வாறு சொல்லக் கேட்டு வளர்ந்து வரும் புன்னகை -ஞானம் கொடுக்கட்டும் -மந்த புத்தியை அகற்றட்டும்

————–

மந்தோ ஹாஸ மநுகுல பதேர் அஞ்ஜநாயா குமார
யேந ஸ்ரீ மான் பவதி ஹநுமான் தர்சநீயோ ஜநாநாம்
தத்தே லீலா பவந ஸவிதே தேந ஸம் ஸ்ப்ருஷ்ட காத்ர
பூயோ யோ அயம் ஜனக தனயா ஆனந்த ஸந்தோஹ தாயீ
–32-

மந்தோ ஹாஸ மநுகுல பதேர் அஞ்ஜநாயா குமார
யேந ஸ்ரீ மான் பவதி ஹநுமான் தர்சநீயோ ஜநாநாம் -மக்களை கவருவதில் ஸாம்யம்
தத்தே லீலா பவந ஸவிதே தேந ஸம் ஸ்ப்ருஷ்ட காத்ர -வாயுவுடன் தொடர்பு இருவரும்-வாயு புத்ரன் -மூச்சுக் காற்று புன்னகையைத் தடவிக் கொடுக்கும்
பூயோ யோ அயம் ஜனக தனயா ஆனந்த ஸந்தோஹ தாயீ- இருவருமே பிராட்டிக்கு ஆனந்தம்

———

இத்தம் ராமோ வஹதி வதநே வாத ஜாதம் வரேண்யம்
ராமோ ராமோ விபுரிதி முகே வாத ஜாதஸ் ச ராமம்
அந்யோன்யம் தாவி திக்ருதமதீ ப்ரீதி மந்தவ் மஹாந்தவ்
அந்தஸ் ஸக்தா வநுபமதமவ் சம்பதம் ஸன்னி ஸேதாம்
–33-

இத்தம் ராமோ வஹதி வதநே வாத ஜாதம் வரேண்யம் -இப்படி ராமன் புன்னகையால் திருவடியை சுமக்கிறார் -உதவிக்கு கைம்மாறாக
ராமோ ராமோ விபுரிதி முகே வாத ஜாதஸ் ச ராமம் -திருவடியும் தனது வாயால் ராம ராம நாமம் சொல்லி ராமரையே வாயில் வைத்துள்ளார்
அந்யோன்யம் தாவி திக்ருதமதீ ப்ரீதி மந்தவ் மஹாந்தவ்
அந்தஸ் ஸக்தா வநுபமதமவ் சம்பதம் ஸன்னி ஸேதாம் –இவ்வாறு அந்யோன்யம் ஒப்பற்ற இருவரும் -நம்மை ரக்ஷிக்கட்டும் -அபீஷ்ட பலன்கள் அருளட்டும்-

———-

மந்தோ ஹாஸோ மநு குல பதே மாருதஸ் யாத்ம ஜாத
மாநா தீதஸ்வர ஸலலித மாந நீயோ மஹத்பி
மந்தம் குர்வன் ஸபதி ரஜநீ சாரிணம் நீல யோகாத்
மஹ்யம் பத்ரம் திசது ஸததம் மங்களா நாம் நிதாநம்
–34-

மந்தோ ஹாஸோ மநு குல பதே மாருதஸ் யாத்ம ஜாத -மேலும் பல ஒற்றுமைகள்
மாநா தீதஸ்வர ஸலலித -இனிமை அழகு மிக்கவை -ஸூந்தரர் திருவடி
மாந நீயோ மஹத்பி -மஹான்களால் கொண்டாடப்படுபவர்
மந்தம் குர்வன் ஸபதி ரஜநீ சாரிணம் -அரசர்களை அழிப்பார்கள் -புன்னகை மயக்கி நல்லவர்கள் ஆக்கும்
நீல யோகாத் –நீலனுடன் சம்பந்தம் -அக்னி புத்ரன் -நீல நிறம்
மஹ்யம் பத்ரம் திசது ஸததம் மங்களா நாம் நிதாநம் –நமக்கு மங்களங்கள் அருளட்டும்

————–

மந்தோ ஹாஸஸ் தவ ரகுபதே கோ அபி ஸூக்ல படோ அயம்
ஸோணோ பாந்தைர் ஜயதி மதுர ஸேவிதோ அயம் ப்ரஸூதே
ஸ்லாக்யம் திஷு ப்ரஸ்ருத மபித ஸோபநம் பாஸ மாநம்
சித்ரம் வஸ்த்ரம் யஸ இதி மஹத் ஸம் பதம் தச்ச ஸூதே
–35-

மந்தோ ஹாஸஸ் தவ ரகுபதே
கோ அபி ஸூக்ல படோ அயம்-வெளுத்த பட்டாடை போல் புன்னகை
ஸோணோ பா–sirappukkalaசிகப்புக்கரை திரு அ தரம் சிவந்து
மதுர -மென்மையானவை இனிமை
ஸேவிதோ அயம் ப்ரஸூதேஸ்லாக்யம் திஷு -புகழ் கொடுப்பவை
ப்ரஸ்ருத மபித ஸோபநம் -அழகாக உள்ளவை
பாஸ மாநம்-ஒளி வீசும்
சித்ரம் வஸ்த்ரம் யஸ இதி மஹத் ஸம் பதம் தச்ச ஸூதே-திருவடி ஆச்சார்யர் ஸ்தானம்
வெள்ளைப் பட்டு சிகப்புக்கரை போட்டது சமர்ப்பிக்க வேண்டுமே
மந்தஹாஸமே இது என்கிறார்

—————

ஸூ மித்ரா புத்ர கிம் ஸூஹ்ருத திதராம் ப்ராதரி ரத
விதத்தே ரூஸ் ரூஷாம் மம ச யததே மார்கண விதவ்
இதி ஸ்வாமின் ப்ருஷ்ட பவந தநயோ அபூதிதி கிரா
ப்ரியா யாஸ்தே மந்தஸ்மித மவது ஜாதம் ரகுபதே
–36-

ஸூ மித்ரா புத்ர கிம் ஸூஹ்ருத திதராம் ப்ராதரி ரத -இளைய பெருமாள் -நல்ல எண்ணம் -பாசம் கொண்டவன்
விதத்தே ரூஸ் ரூஷாம்- மம ச யததே மார்கண விதவ் -கைங்கர்யம் நிதனன் -என்னைத் தேடுவதில் கைங்கர்யம் செய்கிறானா
இதி ஸ்வாமின் ப்ருஷ்ட பவந தநயோ அபூதிதி கிரா ப்ரியா யாஸ்தே மந்தஸ்மித மவது ஜாதம் ரகுபதே –என்று கேட்டதும் புன்னகை

அது நம்மை ரக்ஷிக்கட்டும்
லஷ்மணன் மீது நல்ல எண்ணம் கொண்டவள் என்று அறிந்து புன்னகை
கீழ் பண்ணிய பாகவத அபசாரம்
ஸூஹ்ருத் -பெருமாள் இடம் மிகுந்த அன்பு பக்தி கொண்டவன் –
சுடு சொல் சொன்னதை பொருள் படுத்தாமல் கைங்கர்யம் செய்து கொண்டு இருந்தவன்
பாகவத அபசாரம் மிக்க குரூரம் காட்டவே இவ்வாறு அபிநயம் செய்தாள்

———–

ஸ்பந்தோ யஸ்ய ப்ரதிஸதி முதம் மைதிலீ மாந சாந்தே
ஸம் மோஹம் தம் சரஸ மதுரோ மேதுரோ பாவ வர்கை
குந்தோ தந்தம் பரிபவ பதம் யோ விதத்தே நிதாந்தம்
மந்தோ ஹாஸோ ஜயதி ஸூதராம் மைதலீ வல்லபஸ்ய
–37-

ஸ்பந்தோ யஸ்ய ப்ரதிஸதி முதம் மைதிலீ மாந சாந்தே –உதடுகளின் அசைவு ஸீதா பிராட்டியின் உள்ளத்துக்கு ஆனந்தம் கொடுக்க -பதில் புன்னகை செய்ய
ஸம் மோஹம் தம் -மயக்கமும் தந்து
சரஸ மதுரோ -இனியது சுவை மிக்க புன்னகை
மேதுரோ பாவ வர்கை –பொருள் பொதிந்த புன்னகை
குந்தோ தந்தம் பரிபவ பதம் யோ விதத்தே நிதாந்தம் –முல் லைப் வெளுத்து மலர்ந்தாலும் நாணும் படியாக அழகான புன்னகை
மந்தோ ஹாஸோ ஜயதி ஸூதராம் மைதலீ வல்லபஸ்ய –அப்படிப்பட்ட புன்னகை-கீழ் சொன்னதால் மலர்ந்த புன்னகைக்கு தனி ஸ்லோகம் வேண்டிற்றே
உண்டான மகிழ்ச்சி தொடர்ந்து நிலைக்கும் படி பெருமாள் அனுக்ரஹம் இருக்குமே-

——-

ஸாகே தாத் கிம் மம ஸ பரதோ தேவரஸ் சத்த்வ மூர்தி
ஸேநாம் பீநாம் கஜ ஹய முகை ப்ரேஷ் யிஷ் யத்தே நந்தாம்
ஏவம் ப்ருஷ்ட பவந தநயோ அபூன் மயேத் யத்ர வாசா
ப்ரேயஸ் யாஸ்தே ஸமுதித மிதம் பாது மந்தஸ்மிதம் மாம்-
-38-

ஸாகே தாத் கிம் மம ஸ பரதோ தேவரஸ் சத்த்வ மூர்தி -அயோத்யையில் பரதன் -மிக்க பலசாலி
ஸேநாம் பீநாம் கஜ ஹய முகை -படைகள் மிக்கு
ப்ரேஷ் யிஷ் யத்தே நந்தாம் -உன்னை மீட்டுப் போக வந்தாரே -என்னை மீட்டுப் போக வருவாரா
ஏவம் ப்ருஷ்ட பவந தநயோ அபூன் மயேத் யத்ர வாசா
ப்ரேயஸ் யாஸ்தே ஸமுதித மிதம் பாது மந்தஸ்மிதம் மாம் என்று விசாரித்த செய்து கேட்டு கேட்டு புன்னகை பரத நம்பி பற்றிக் கேட்ட ஆனந்தம்-அவப்பெயர்கள் அனைத்தும் நீங்கும் பலன்-

———-

நந்திக்ராமே ரதிமுபகத ப்ராத்ரு சத்ருக்ந ஹ்ருதய
ஸூத்தஸ் ஸூத்தம் த்விஜ குல மலம் பாலயன் நந்த ரங்கம்
கைகேய் யந்தஸ் ஸ்ம்ருதி முபகதோ ஹாநு தாபம் விதன்வந்
மந்தோ ஹாஸோ ஜயதி பரதோ மைதிலீ வல்லபஸ்ய
–39-

நந்தி க்ராமே ரதிமுபகத -இருவரும் நந்திக்ராமத்தில் உள்ளார்கள் -நந்தி ஆனந்த அடியார் உள்ள இடம் பார்த்து புன்னகை
ப்ராத்ரு சத்ருக்ந ஹ்ருதய -பரதனும் புன்னகையும் சத்ருனனுக்கு இனியவர்
ஸூத்தஸ் ஸூத்தம் -இருவரும் மஹா தூய்மை
த்விஜ குல மலம் பாலயன் நந்த ரங்கம் -இருவரும் வேத குலம் ரக்ஷகர் -பல்லுக்கும் த்விஜம் -திருவாயில் உள்ள பற்களைக் காக்கும் புன்னகை
கைகேய் யந்தஸ் ஸ்ம்ருதி முபகதோ ஹாநு தாபம் விதன்வந் -இருவரும் நினைக்க கைகேயி மனம் உறுத்துமே -அப்போது அலர்ந்த செந்தாமரையை வென்றது போல் போக இவள் மனம் உறுத்திற்றே -அநு தாபம் உண்டு பண்ணுவதில் ஒற்றுமை –
இவ்வாறு ஐந்து ஒற்றுமைகள்
மந்தோ ஹாஸோ ஜயதி பரதோ மைதிலீ வல்லபஸ்ய -உங்கள் புன்னகையே பரதாழ்வான்
வாழ் நாளில் இன்பம் எப்போதும் கைகூடும் பலன்-

——

மயா தத்தம் சூடா மணிம் அயம் அபிஞ்ஞா நம கரோத்
ஸ்வ வஸ்த்ராந்தே பத்தம் பரமத ச கர்ணே விநிஹிதம்
இதி ஸ்ரீ ஸீதாயா சர ஸமதி சித்ரம் ச வசநம்
ஸ்வ கர்ணே தே கர்து ஜயதி மதுரம் மந்த ஹஸிதம்
–40-

மயா தத்தம் சூடா மணிம்
அயம் அபிஞ்ஞா நம கரோத்-அடையாளமாக தருவதை அறிந்து கொண்டு
ஸ்வ வஸ்த்ராந்தே பத்தம் பரமத ச கர்ணே விநிஹிதம் -வஸ்த்ரத்தில் அத்தையும் அருளிச் செய்த அடையாளங்களையும் காதிலும் கொண்டான்
காகாசூரன் சரித்திரமும் -திலகம் அழிய செங்கல் பொடியால் அணிவித்த சரித்திரம் இரண்டையும் –
இதி ஸ்ரீ ஸீதாயா சர ஸமதி சித்ரம் ச வசநம் -ஸ்வ கர்ணே தே கர்து ஜயதி மதுரம் மந்த ஹஸிதம் –கேட்டவாறே பிறந்த புன்னகை
திருவடியின் ஸாமர்த்யம்
புத்தி கூர்மையும் சாதுர்யமும் நமக்கும் கிட்டும்

———-

நேத்ரே சூடா மணிம் அபி ததா கர்ணயோ காகவார்தாம்
மவ்லவ் க்ருத்வ அஞ்சலிம் அபி நத பிரஸ்தித பாவமாநி
பங்க்த்வா வ்ருஷான் வநமபி ததா சைத்ய சவ்தம் ஜகர் ஜே
த்யேவம் ஸீதா வசந ஜனிதோ ராஜதே ராம ஹாஸ–
41-

நேத்ரே சூடா மணி-கீழே வஸ்த்ரத்தில் —இங்கு கண்ணில் சீதாபிராட்டி பிரஸாதம் கண்ணில் நின்றதே –
ததா கர்ணயோ காகவார்தாம் -அதே போல் காகாசுரன் சரித்திரம் காதில் நிலை நின்றதே
மவ்லவ் க்ருத்வ அஞ்சலிம் அபி -தலைக்கு மேல் அஞ்சலி முத்ரை -ஜலம் போல் உருக வைக்கும்
நத பிரஸ்தித பாவமாநி -வணங்கிக் கொண்டு நின்றான்
இடைப்பட்ட காலத்தில்
பங்க்த்வா வ்ருஷான் வநமபி ததா சைத்ய சவ்தம் ஜகர் ஜே-மரங்களை பிடுங்கி -அசோக வனம் மண்டபம் அனைத்தையும் அழித்து
த்யேவம் ஸீதா வசந ஜனிதோ ராஜதே ராம ஹாஸ -அப்போது பிறந்த புன்னகை
வேகமும் பணிவும் அறிகிறோம் -நமக்கும் இவை கிட்டும்-

———–

சந்த்ரஸ்தே வதனம் த்ருதம் ஹி யதிதம் ஸ்ரீ நீல கண்டேந யத்
தாம்ரம் தத் ஸததம் விபாத்ய தரதஸ் தஸ்யோ தயஸ் ஸர்வதா
தஸ்மிந் காஸந சந்திரிகா விஜயதே மந்தஸ்மிதாக்யா ஸதீ
யா மே ஸம் ஸ்ருதி தாமஸீமபி பராம் ஸூத்தாம் விதத்தே நவாம்
–42-

சந்த்ரஸ்தே வதனம்
த்ருதம் ஹி யதிதம் ஸ்ரீ நீல கண்டேந யத் –நீல கண்டன் தாங்குகிறார் -பிறை சூடி -நீலக்கழுத்து தாங்குகிறது
தாம்ரம் தத் ஸததம் விபாத்ய- சந்த்ர -க்ரஹணத்தில் சிவந்து இருக்கும் -உதடுகள் சிவந்து இருக்கும்
தரதஸ் தஸ்யோ தயஸ் ஸர்வ–ஒரு நாளைக்கு ஒரு முறை உதயம் -புன்னகை கூடிக்கொண்டே இருக்கும் நித்ய சந்த்ரோயதயம்
தஸ்மிந் காஸந சந்திரிகா விஜயதே மந்தஸ்மிதாக்யா ஸதீ -ஒளியால் பெருமை புன்னகையால் பெருமை
யா மே ஸம் ஸ்ருதி தாமஸீமபி பராம் ஸூத்தாம் விதத்தே நவாம் –நில ஒளி இருளைப் போக்கும்-புன்னகை அறியாமையைப் போக்கும்

பணிவைக் கேட்டு பூத்த புன்னகையை ஒப்பிட்டு இங்கு

————

ஸ்வாமிந் வாதம் ஷிதோ கதம் ஹி பகவன் ஸ்ரீர் தஷிணஸ் யோதிதா
த்வன் மந்தஸ்மித ஸந்த்ரிகா ச ஸூபகா தத் ரோதிதா ஷோபதே
அஸ்மின் ஸ்ரீ வடுவூர் வநே ஸூப வநே க்ரீடா பராயாஸ் த்வயா
கோ அப்யா நந்த பயோ நிதிர் மநஸி மே ஸம் வர்ததே ஸாம்ப்ரதம்
–43-

ஸ்வாமிந் வாதம் ஷிதோ கதம் ஹி பகவன் ஸ்ரீர் தஷிணஸ் யோதிதா –தென்றல் -தெற்கு திசை காற்று -மாலைத் தென்றல் -மல்லிகைப் பூ பூக்கும் -ஸந்த்ரோதயமும் ஆகும்
காற்றின் மகன் தென் திசை யில் இருmeenduமீண்டு ராமனை நோக்கி வர
த்வன் மந்தஸ்மித ஸந்த்ரிகா ச ஸூபகா -அழகு -மல்லிகைப்பூ -நிலவு ஒளி -புன்னகை வடிவில் –
தத் ரோதிதா ஷோபதே -ஒளி மிக்கு -பற்கள் தெரிய
அஸ்மின் ஸ்ரீ வடுவூர் வநே ஸூப வநே க்ரீடா பராயாஸ் த்வயா -இங்கும் ஆனந்தமாக விளையாட வர இங்கும் தென்றல் மல்லிகைப்பூ
கோ அப்யா நந்த பயோ நிதிர் மநஸி மே ஸம் வர்ததே ஸாம்ப்ரதம் -ஆனந்தக் கடல் பொங்குகிறது -நம் உள்ளத்திலும் ஆனந்தம் பொங்கட்டும்

———-

ஸீதே தே கபிநா ஹதா ஹி பஹவோ ராத்ரிஞ்சரா துர் ஐயா
ஹந்தாஷோ அபிஹதஸ் ததேக்ஷ தபஸா ஸத்யம் த்வயா நிர்மித
இத்யா கத்ய ம மாந்திகே ஸமவதன் ரக்ஷஸ் த்ரியஸ் தாஸ் ஸமா
இத்யா கர்ண்ய விதேஹஜா கிரம பூத் மந்தஸ்மிதம் ராம தே
–44-

ஸீதே தே கபிநா
ஹதா ஹி பஹவோ ராத்ரிஞ்சரா துர் ஐயா -அரக்கர்களை எல்லாம் ஒரே ஆளாக வென்று
ஹந்தாஷோ அபிஹதஸ் ததேக்ஷ தபஸா ஸத்யம் த்வயா நிர்மித -அக்ஷ குமாரனையும் ஐயோ கொல்லப்பட்டான் –
உன்னுடைய கற்பு என்னும் தபஸ்ஸால் உருவான குரங்கே இது
இத்யா கத்ய ம மாந்திகே ஸமவதன் ரக்ஷஸ் த்ரியஸ் தாஸ் ஸமா -இவ்வாறு சொல்லக்கேட்டு
இத்யா கர்ண்ய விதேஹஜா கிரம பூத் மந்தஸ்மிதம் ராம தே –புன்னகையை இங்கே காட்டி அருள்கிறாய்
பராக்ரமம் நினைத்து புன்னகை
பிராட்டி அனுக்ரஹம் விஜய லஷ்மீ வீரலஷ்மீ கடாக்ஷ பலனால் நமக்கும் உடல் வலிமையையும் ஆரோக்யமும் கிட்டும்

———

நீதஸ்த் விந்த்ரஜிதா தஸாஸ்ய ஸமிதம் பத்த்வா ததீயே அனல
வாலே ஹா நிஹிதஷ் ச ராக்ஷஸ கணைஸ் தேநாபி ரஷோ க்ருஹே
சித்ரம் ஜானகி ஜாநகீதி வசஸா காவ்யந்தி ரக்ஷஸ் த்ரிய
இத்தம் தாரகிரா முகே தவ பபவ் மந்தஸ்மிதம் ராகவ
–45-

நீதஸ்த் விந்த்ரஜிதா தஸாஸ்ய ஸமிதம் பத்த்வா -ப்ரஹ்மாஸ்த்ரம் கொண்டு ராவணனிடம் இடம் கூட்டிச் செல்ல
ததீயே அனல -வர பலம் விட சர பல பெரியது -சொல்ல கெடுக்காமல் நெருப்பு வைக்க
வாலே ஹா நிஹிதஷ் ச ராக்ஷஸ கணைஸ் தேநாபி ரஷோ க்ருஹே -அதே நெருப்பால் வீடுகளுக்கு மாற்றி வைக்க
சித்ரம் ஜானகி ஜாநகீதி வசஸா காவ்யந்தி ரக்ஷஸ் த்ரிய –ஆச்சர்யம் சொல்ல
இத்தம் தாரகிரா முகே தவ பபவ் மந்தஸ்மிதம் ராகவ -கேட்டு வளர்ந்த புன்னகை
பராக்ரமம் நினைத்து புன்னகை
அணுகும் வழியாலே பலன் அளிப்பார் திருவடி
பக்தர்களை எல்லா ஆபத்தில் இருந்து ரக்ஷித்து அருள்வார்

———

மேல் இரண்டு ஸ்லோகங்கள் திருவடியே நேராக அருளிச் செய்தவை

ஸீதாம் பாதும் நிஷி சர புரே தத் வ்ருத்தாம்ஷ் ச தக்தும்
கல்யாணோ வோ மம பித்ரு ஸக க்லுப்த ஸித்தி கிலாஸீத்
இத்யந்தஷ் ஸ்ரீ பவன தனய ஸ்ரீ கிரா மந்த ஹாஸ
ஸ்ரீ மன் ஜாதோ மநு குல மணே மாநஸம் மே திநோதி
-46-

ஸீதாம் பாதும் -பிராட்டியைக் காக்கவும்
நிஷி சர புரே தத் வ்ருத்தாம்ஷ் ச தக்தும் -எதிரிகளை அழிக்கவும்
கல்யாணோ வோ மம பித்ரு ஸக -தந்தையின் நண்பன் அக்னியின் செயலே இது
சோகத் தீயை இலங்கையில் சேர்க்க தூதுவன் செயல் -என்னுடைய பராக்ரமம் இல்லை இது
க்லுப்த ஸித்தி கிலாஸீத்
இத்யந்தஷ் ஸ்ரீ பவன தனய ஸ்ரீ கிரா மந்த ஹாஸ இவ்வாறு சொன்னவாறே புன்னகை
ஸ்ரீ மன் ஜாதோ மநு குல மணே மாநஸம் மே திநோதி -இதுவே என்னுள்ளத்துக்கு ஆனந்தம்
உல்லங்க்ய ஸிந்தோ: ஸலிலம் ய: சோகவஹ்னிம் ஜனகாத்மஜாயா:
ஆதாய தேனைவ ததாஹ லங்காம் நமாமி தம் ப்ராஞ்ஜலி ராஞ்சனேயம்– ஸ்லோகம் இதன் அடியாகவே வந்தது-விநயம் எண்ணி புன்னகை -நமக்கும் பணிவு வளரும்-

—-

தக்தா ஸா மிதிலா புரா கலு ததா தக்தம் ந மே கிஞ்சந
த்யாஹ ஸ்ரீ ஜனகைஸ் ததைவ பகவான் ஸ்ரீ யாஜ்ஞ வல்க்யோ அவதத்
ஏவம் த்வய் யபி ஸாதரேஷு பவிதேத் யேவம் ஹநூமத் கிரா
ஜாதம் தே ரகுநாத மந்த ஹஸிதம் மஞ்ஜூ ப்ரபம் பாஸதே
–47-

தக்தா ஸா மிதிலா புரா கலு ததா தக்தம் ந மே கிஞ்சந த்யாஹ ஸ்ரீ ஜனகைஸ் –இலங்கை எரிய அசோகவனத்தில் ஸீதை இருக்கும் இடம் குளிர்ந்தே இருந்ததே -இதுக்கு உதாரணம் காட்டுகிறார் மேல்
ததைவ பகவான் ஸ்ரீ யாஜ்ஞ வல்க்யோ அவதத் –
ஏவம் த்வய் யபி ஸாதரேஷு பவிதேத் யேவம் ஹநூமத் கிரா -பகவானிடம் ஈடுபட்டுள்ளவர் எரிய மாட்டார்கள்
ஜாதம் தே ரகுநாத மந்த ஹஸிதம் மஞ்ஜூ ப்ரபம் பாஸதே —
இத்தைக் கேட்டு வளர்ந்த புன்னகை –
இந்த நிகழ்ச்சியை ஸீதாப்பிராட்டி தானே அருளிச் செய்ய மாட்டாளே
திருவடி அதனால் அருளிச் செய்கிறார்
கற்பின் பெருமை ராம ஸ்மரணத்தின் பெருமை
சம நிலையில் இருந்து நழுவாமல் இருக்கும் மனப்பக்குவம் ஏற்படும் –

——–

ப்ரஸாதாநாம் புவி நிபததாம் அக்னிநா கோர லீலே
நாராம் ஆந்தே ஜடிதி பததாம் வ்ருக்ஷ ஷாகா கணாநாம்
ஆராத் கஸ்தத் விஜகுலகதா யா அவிரா ஸீத வஸ்தா
ஸா மே அத்யாபி ஸ்ம்ருதிம் உபகதா சேதஸ் சவ்தி கம்பம்
–48-

ப்ரஸாதாநாம் புவி நிபததாம் அக்னிநா கோர லீலே -கோரமாக -வீடுகள் விழ
நாராம் ஆந்தே ஜடிதி பததாம் வ்ருக்ஷ ஷாகா கணாநாம் -மரங்களும் விழ
ஆராத் கஸ்தத் விஜகுலகதா யா அவிரா ஸீத வஸ்தா –வானத்தில் பறக்கும் பறவைகள் மேலே பறக்க
ஸா மே அத்யாபி ஸ்ம்ருதிம் உபகதா சேதஸ் சவ்தி கம்பம் –இன்றும் நினைத்தாலும் நடுக்கம் ஏற்படுகிறதே

ஸர்வத் ரைவம் ஸகல பயதே ஸம் ப்ரம ஜாக ரூகே
சித்ரம் மத்கம் பதமபி மநாக் அக்னி நா நாபி பூதம்
இத்தம் தேவ்யா பயபிஷுநயா சித்ரவத்யா கிரா தே
ஜாதம் மந்தஸ்மிதம் அவது மாம் ஆநநே ராம பத்ர
–49-

ஸர்வத் ரைவம் -எங்கும் எல்லாரும்
ஸகல பயதே -அஞ்சி இருக்க
ஸம் ப்ரம ஜாக ரூகே -இப்படிப்பட்ட நிலையில்
சித்ரம் மத்கம் பதமபி மநாக் அக்னி நா நாபி பூதம் -இருந்தாலும் வியப்பாக நான் இருக்கும் இடம் மட்டும் குளிர்ந்து இருக்க
இத்தம் தேவ்யா பயபிஷுநயா சித்ரவத்யா கிரா தே -இவ்வாறு பயம் கலந்த நகைச்சுவையுடன் அருளிச் செய்ய
ஜாதம் மந்தஸ்மிதம் அவது மாம் ஆநநே ராம பத்ர –கேட்டு வளர்ந்த புன்னகை -ரக்ஷிக்கட்டும்
எனது ப்ரபாவம் அல்ல -சொல்லிக் கொள்ள வேண்டுமே-

———

ஸோ அயம் மாருத நந்தநோ தஷமுகே ஸிம்ஹாஸ நஸ்தே புர
வாலே நைவ க்ருதா ஸநஸ் ததுபரி ப்ராப்த ஸ்திதிஸ் சம்பவ்
இத்யேவம் ஸரமா ஸகீ சமவதத் ஸேதி ஸ்வ ஜாயா கிரா
யன் மந்தஸ்மிதம் ஆநேந ரகுபதே தத்தே தராம் த்யோததே
–50-

ஸோ அயம் மாருத நந்தநோ-திருவடி வாயு தேவனின் புத்ரன் என்று அறிந்தவள் ஸரமா
தஷமுகே ஸிம்ஹாஸ நஸ்தே புர -ராவணன் ஸிம்ஹாஸனத்தில் அமர்ந்து இருக்க
வாலே நைவ க்ருதா–வாலைக் கொண்டே ஸிம்ஹாஸனம் உருவாக்கி
ததுபரி ப்ராப்த ஸ்திதிஸ் சம்பவ் -அதற்கு மேல் அமர்ந்து -திருவடியின் திருவடி ராவணன் தலை மேல் இருக்கும் படி அமர்ந்தார்
இத்யேவம் ஸரமா ஸகீ சமவதத் ஸேதி ஸ்வ ஜாயா கிரா -இவ்வாறு ஸரமா சொன்னதை பிராட்டி சொல்ல
யன் மந்தஸ்மிதம் ஆநேந ரகுபதே தத்தே தராம் த்யோததே –கேட்டு வளர்ந்த புன்னகை

ராம தூதன் -ராமனின் பெருமைக்குத் தக்க படி இருக்க வேண்டும் என்றும் சொந்த முயற்சியால் உயர வேண்டும் என்றும் காட்டும் ஸ்லோகம்-உயர் பதவிகள் நம்மைத் தேடி வரும்

———–

ராஞ்ஜோ ந புரத கிமேவமிதி தைஸ் சந்தர்ஜிதோ வாலதிம்
விஸ்தீர் யாத தஷாந நாஸ நமசவ் தம் சாஸகர்ஷ அத்புதம்
இத்யேவம் ஸரமா ஹஸந்த்யதித ராமாஹே தி ஸீதா கிரா
ஸஞ்ஜாதம் தவ ராம மந்த ஹஸிதம் ரஷத் வவஞ்ஜா விஷாத்
–51-

ராஞ்ஜோ ந புரத -முன் ராவணன் இருக்க
கிமேவமிதி தைஸ் சந்தர்ஜிதோ வாலதிம் -இவ்வாறு அவமதிப்பதா என்று அரக்கர்கள் கத்த
விஸ்தீர் யாத தஷாந நாஸ நமசவ் -ஸிம்ஹாஸனம் நோக்கி வாலானது வளர்ந்து போக
தம் சாஸகர்ஷ அத்புதம் -சுற்றிக்கொண்டு இழுக்க -ராவணன் விழ-வாலை வைத்தே ஆட்டம் காட்டிய வ்ருத்தாந்தத்தை
இத்யேவம் ஸரமா ஹஸந்த்யதித ராமாஹே தி ஸீதா கிரா -இவ்வாறு ஸரமா சொன்னதை பிராட்டி சொல்ல
ஸஞ்ஜாதம் தவ ராம மந்த ஹஸிதம் ரஷத் வவஞ்ஜா விஷாத் -வளர்ந்த புன்னகை நம்மை பிறர் அவமானப்படுத்தாமல் ரக்ஷிக்கட்டும்-

———–

மா மைவம் ரஜநீ சராதிப மிமம் குர்யா ஸ்திதாஸ்தே வயம்
வாசைவம் கில மந்த்ரிணாம் அத ச தான் ஆக்ருஷட வான் வாலதஸ்
இத்யேவம் ஸரமா அத்புதை கவிவஷா பிராஹே தி ஸீதா கிரா
யன் மந்தஸ்மித மாநநே தவ பபவ் ராமாஸ்து தன்மே ஷ்ரியை
–52-

மா மைவம் இப்படி பண்ணாதே
ரஜநீ சராதிப மிமம் குர்யா ஸ்திதாஸ்தே வயம்
வாசைவம் கில மந்த்ரிணாம்
அத ச தான் ஆக்ருஷட வான் வாலதஸ் -அரக்கர்களையும் சேர்த்து வாலால் கட்டி
இத்யேவம் ஸரமா அத்புதை கவிவஷா பிராஹே தி ஸீதா கிரா -இவ்வாறு நடந்தவற்றை ஸரமா சொல்லக்கேட்டு ஸீதா பிராட்டி சொல்ல
யன் மந்தஸ்மித மாநநே தவ பபவ் ராமாஸ்து தன்மே ஷ்ரியை -வளர்ந்த புன்னகை நமக்கு கைங்கர்ய செல்வங்களை அளிக்கட்டும்-ராமனின் பெருமையை உணர்த்தவே திருவடி செய்த செயல்கள்-

————-

தான் ஸர்வா நபி ராக்ஷஸான் அபி ஸபாஸ் தம்பான் சமாம்ஷ் சேதரான்
பவ்லஸ்த்யம் ச பபந்த ஹந்த நிபிடம் வாலேந வாதாத் மஜ
இத்யேவம் ஸரமா மமாஹ விவஷா ஸாஸ்ரா ஸஹாஸா ஸகீ
ஸே தி ஸ்ரீதயிதா கிரா விஜயதே மந்தஸ்மிதம் தே முகே
–53-

தான் ஸர்வா நபி ராக்ஷஸான் அபி ஸபாஸ் தம்பான் சமாம்ஷ் சேதரான் –தூண்களுடன் அரக்கர்களைக் கட்டி
பவ்லஸ்த்யம் ச பபந்த ஹந்த -ராவணனையும் கட்ட -ஆஹா -வியப்பு –
நிபிடம் வாலேந வாதாத் மஜ –
இத்யேவம் ஸரமா மமாஹ விவஷா ஸாஸ்ரா ஸஹாஸா ஸகீ -கண்ண நீருடனும் புன்னகையுடனும் ஸரமா சொல்ல –
ஸே தி ஸ்ரீதயிதா கிரா விஜயதே மந்தஸ்மிதம் தே முகே -கேட்டவாறே வளர்ந்த புன்னகை-

———-

ஏதத் தத்ர புநஷ் ச கிஞ்சந மஹாஷ் சர்யம் யதா ஸீத்ததா
வாலே வேஷ்ட்டிது மம்பராணி நிகிலான் யாசன் ந சாலம் புந
ஆநீயாத பபந்துரர் தமத நைவா ஸீத்தஷாப் யேகிகா
வாகேவம் ஸரமா பவே தி தயிதா வாசா கரோஷி ஸ்மிதம்
–54-

ஏதத் தத்ர புநஷ் ச கிஞ்சந மஹாஷ் சர்யம் யதா ஸீத்ததா-இன்னும் பெரிய ஆச்சார்யம்
வாலே வேஷ்ட்டிது மம்பராணி நிகிலான் -வாலைச் சுற்ற அம்பரங்கள் போதவில்லையே
யாசன் ந சாலம் புநஆநீயாத பபந்துரர் தமத நைவா ஸீத்தஷாப் யேகிகா-நூல் கயிறு அனைத்தையும் கொண்டு வந்தார்கள் -பாதி கூட மூடப் போதவில்லை
வாகேவம் ஸரமா பவே தி தயிதா வாசா கரோஷி ஸ்மிதம்-இவ்வாறு சொன்னதை பிராட்டி சொல்ல வளர்ந்த புன்னகை –
திருவடியின் பெருமைக்கு எல்லை யில்லையே-தடைகள் அனைத்தும் நீங்கி வாழ்வில் வெற்றியை தரும் ஸ்லோகம்

———-

ஷ்வ கிம் குர்யுரமீ திகம்பர தஷை வாஸீ தஹோ ரக்ஷஸாம்
லஞ்ஞாம் லாந நிஜா நநா ந பஹிரத்ரைதே சரேயுர்திவா
தஸ்மா தேவ நிஷா சரா இதி ஸகீ வாஸா அத வாஸா ச தே
ஜாநாக்யா வதநே யதாஸ ஹஸிதம் மந்தம்
ததே தத் ஸ்புடம் –55-

ஷ்வ கிம் குர்யுரமீ திகம்பர தஷை வாஸீ தஹோ ரக்ஷஸாம் -நாளைக்கு அணிய ஆடைகளே இல்லையே -என்ன செய்வார்கள் l
லஞ்ஞாம் லாந நிஜா நநா ந பஹிரத்ரைதே சரேயுர்திவா –வெட்கப்பட்டு பகலில் வராமல்
தஸ்மா தேவ நிஷா சரா இதி ஸகீ வாஸா அத வாஸா ச தே-இரவில் நடமாடுபவர்கள் என்றே ஸ்வரூப நிரூபகம் வர திருவடியே காரணம்
இருள் துஷ்ட ஆத்மாக்களின் காலம்
ஜாநாக்யா வதநே யதாஸ ஹஸிதம் மந்தம் ததே தத் ஸ்புடம் –இவ்வாறு சொன்னதை பிராட்டி சொல்ல வளர்ந்த புன்னகை ஸ்பஷ்டமாக வடுவூரில் காட்டி அருளுகிறாய்
திருவடி போன்ற பாகவத அபசாரப் பலன் ஆடையைக் கூட இழக்க வைக்குமே -பயம் நீங்கும் ஸ்லோகம்

———

ஏதச்சாபி ந யத்ர நாம ந நிஷா ஸம் ராஜதே அஸ்மின் புரே
வாலாக்நேர் ஜ்வல நேந ஹந்த ஸததம் த்ருஷ்யம் திவைவா பவத்
இத்யேவம் ஸரமா கிரா மம மதிர் மக்நா முதாம் சாகரே
ஸீதாயா இதி தே முகே கில கிரா மந்தஸ்மிதம் வர்ததே
–56-

ஏதச்சாபி -இதையும் கேள்
ந யத்ர நாம ந நிஷா ஸம் ராஜதே அஸ்மின் புரே -இரவே இல்லாமல் பகலாகவே ஆக்கும் படி எரியுமே
வாலாக்நேர் ஜ்வல நேந ஹந்த ஸததம் -இலங்கைக்கு நெருப்பை மாற்றி
த்ருஷ்யம் திவைவா பவத் -ஸூர்ய ஒளியை விஞ்சும் படி ஆனதே –
இத்யேவம் ஸரமா கிரா மம மதிர் மக்நா முதாம் சாகரே -இவ்வாறு சொன்னதைக் கேட்டு உள்ளம் ஆனந்தக் கடலில் மூழ்கிற்றே
ஸீதாயா இதி தே முகே கில கிரா மந்தஸ்மிதம் வர்ததே –இவ்வாறு சொல்லக் கேட்டு வளரும் புன்னகை
இலங்கை அரக்கர் பூமியாய் இருப்பதை மாற்றி அருளினார் –
இருளுக்கே ஒளி தருபவர் திருவடி -நந்தா விளக்கு -நல்ல ஞானம் வளரும்

————–

ஸீதா த்வம் ப்ருத்வீ பவா ககந வத் ஸூஷ்மம் ச மத்யம் பரம்
தேஹே நைவ ஸமேந கந்த வஹதாம் தத்ஸே ரஸாநாம் நிதி
ஏவம் வால ஹுதா நேந விநதா ஸா அஸீதி மத்கா ஸகீ
ப்ரோ வாசேதி விதேஹ ஜாகந கிரா மந்தஸ்மிதம் பாது மாம்
–57-

ஸீதா த்வம் ப்ருத்வீ பவா -பூமா பிராட்டி தேவரீர்
ககந வத் ஸூஷ்மம் ச மத்யம் பரம் -இடுப்பு ஸூஷ்மம் –
தேஹே நைவ ஸமேந கந்த வஹதாம் –திருமேனி காற்றுள்ள நல்ல வாசனை
தத்ஸே ரஸாநாம் –சுவை குணத்தில் -நீர் போல்
இவ்வாறு பஞ்ச பூதங்களில் நாலும் –
ஏவம் வால ஹுதா நேந விநதா ஸா அஸீதி மத்கா ஸகீ -இதனாலேயே அக்னி கொண்டு வணங்க திருவடி கைங்கர்யம் பாக்யம் அளித்தார்
ப்ரோ வாசே தி விதேஹ ஜாகந கிரா மந்தஸ்மிதம் பாது மாம் –இவ்வாறு சொல்லக் கேட்டு சொன்னதைக் கேட்டு வளர்ந்த புன்னகை-பஞ்ச பூதங்களால் வரும் ஆபத்தை போக்கி அருளும் திருவடி

அஞ்சிலே ஒன்று பெற்றான்; அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்; அவன் எம்மை அளித்துக் காப்பான்

வாயுதேவன் பெற்ற மகன்,  நிலமகளை காண, ஆகாயத்தின் வழியாக, நீரை தாண்டி, இலங்கைக்கு வந்து தீ வைத்தான்  என்று நயமாக ஐந்து பூதங்களையும் ஒரே சொல்லின் மூலம் “அஞ்சிலே ஒன்று ” என்ற ஒரு வாக்கியம் கொண்டு விளக்குகிறார் கம்பர்.

————-

ஹாஸ்யம் ஸீதே ஸ்ருணு பரமிதம் ராக்ஷஸா பாலகன் ஸ்வான்
சேஷ்டா சக்தான் நிஜ வஜக தான் கர்து மேதம் வதந்தி
அப்ரூ தைவம் மம கில ஸகீ ஸேதி ஸீதா கிரா தே
வக்த்ரே மந்தஸ்மித மிதம பூத் ராம ராமாபி ராமம்
–58-

ஹாஸ்யம் ஸீதே -ஹாஸ்ய ரஸம்
ஸ்ருணு பரமிதம் ராக்ஷஸா பாலகன் ஸ்வான் -அரக்கர்களின் பிள்ளைகள்
சேஷ்டா சக்தான் நிஜ வஜக தான் கர்து மேதம் வதந்தி -அடக்கி வைக்க திருவடியிடம் பிடித்துக் கொடுப்பேன் என்பார்களாம் -பூச்சாண்டி இடம் கொடுப்பது போல்
அப்ரூ தைவம் மம கில ஸகீ ஸேதி ஸீதா கிரா தே -இவ்வாறு சொல்லக்கேட்டுச் சொல்ல
வக்த்ரே மந்தஸ்மித மிதம பூத் ராம ராமாபி ராமம் -அழகுக்கு எல்லாம் சிறந்த அழகான புன்னகை அன்றோ
சோதனைகளையும் சாதனைகளாக்கும் திருவடி -அஸாத்ய ஸாத்யமாக்கும் -கருணைக் கடல்

———

வாலா நலோ வா பதி பக்தி யுக்த
பாலா நலோ வா தஹதி ஸ்ம லங்காம்
காலா நலோ அயம் ஹி பலாஷி நாத
கோலா ஹலோ வேதி நிஷா சராணாம்
–59-

வாலா நலோ வா -வாலில் இருந்து வந்ததா
பதி பக்தி யுக்த பாலா நலோ வா -கற்புக்கரசி இடம் இருந்து வந்த நெருப்பா
தஹதி ஸ்ம லங்காம் -முழுவதுமான லங்கையையும் அழித்ததே
காலா நலோ அயம் ஹி பலாஷி நாத -பிரளய கால நெருப்பா
கோலா ஹலோ வேதி நிஷா சராணாம் -அரக்கர்கள் கத்துவது

——–

வர்ணா வலிர் வாசி சமுத்கதேயம்
கர்ணா வலிம் ப்ரைதி தஷாந நஸ்ய
ஸம் வர்ண யந்தீதி ஸகீ தி ஸீதா
சவ் வர்ண தஸ் கிம் ஹஸஸீதி மந்தம்
–60-

வர்ணா வலிர் வாசி சமுத்கதேயம் –வார்த்தை அடுக்கு மொழியாக பேசி
கர்ணா வலிம் ப்ரைதி தஷாந நஸ்ய -ராவணனுடைய காதுகளின் வரிசைகளுக்குள் நுழைய -20 காதுகளையும் கொண்டதுக்கு பலன்
ஸம் வர்ண யந்தீதி ஸகீ தி ஸீதா -கலங்கிப் போனதை சொல்லக் கேட்டு
சவ் வர்ண தஸ் கிம் ஹஸஸீதி மந்தம் -இனிய வார்த்தைகளால் வளர்ந்த புன்னகை

காதுக்குள் விரலை விட்டு ஆட்டிய பராக்ரமம்
வாழ்வில் வரும் சங்கடங்கள் சோகங்கள் அனைத்தும் நீங்கும்

——————-

ஸதா கதிதநூபவ மம முதா கதேர் உத்தமம்
நிதாநம பவத் ததா தவ பாதாப்ஜ ஸக்தா க்ஷய
விதாரித நிஷா சரோ நய விதாமாஸா வக்ரணீ
ததாஹ நகரீம் ச தாம் இஹ ஸதா க்ஷதா க்ஷம்வித
–61-

ஸதா கதி தநூபவ -வாயு -ஸதா கதி-மைந்தன்
பாதாப்ஜ ஸக்தா க்ஷய -திருவடியில் பக்தன்
விதாரித நிஷா சரோ நய விதாமாஸா வக்ரணீ -ஞானவானில் முதல்வன்
ததாஹ நகரீம் ச தாம் -நகரை அழித்தவன்
இஹ ஸதா க்ஷதா க்ஷம்வித –ஸரமா த்ரிஜடை போல்வார் புகழ்வார்கள்
மம முதா கதேர் உத்தமம் நிதாநம பவத் ததா தவ -எனக்கு ஆனந்தம் அருளினவன்

இதி ப்ரியாயா ப்ரதி பாந் விதாயா
அதி ப்ரியாபிஸ் ஸ்ருதி மாஞ்ஜூ லாபி
ரதிம் ப்ரபந்நஸ்ய சதி ஸ்வ வக்த்ரே
ஸ்மிதம் ததேத் ப்ரதிபாதி கீர்பிஸ்
–62-

இதி ப்ரியாயா ப்ரதி பாந் விதாயா -ஞானத்துடன் உனது பிரியமான பிராட்டி
அதி ப்ரியாபிஸ் ஸ்ருதி மாஞ்ஜூ லாபி-அதிகம் பிடித்த செவிக்கு இனிய வார்த்தைகள் சொல்ல
ரதிம் ப்ரபந்நஸ்ய சதி ஸ்வ வக்த்ரே -அகத்தின் ஆனந்தம் திருமுகத்தில் வர
ஸ்மிதம் ததேத் ப்ரதிபாதி கீர்பிஸ் -வளர்ந்த புன்னகை

பிராட்டிக்கு மகிழ்ச்சி கொடுத்த திருவடி
நம்பியவர்க்கு மகிழ்ச்சி தரும் ஆச்சார்யர் திருவடி
இழந்த மகிழ்ச்சியை மீண்டும் பெற வைக்கும் ஸ்லோகங்கள்

———

அபாங்கதஸ் சாதரம் ஆஞ்சநேயம்
ஸம் பஷ்யதோ வல்கு வசஸ் ப்ரியாயா
தத் ஸ்ருணு வதஸ் ஸோதர சந்நு தஸ்ய
மந்தஸ்மிதம் பாதி ரகூத்த மஸ்ய
–63-

அபாங்கதஸ் சாதரம் ஆஞ்சநேயம் ஸம் பஷ்யதோ -அழகிய பார்வையாலே -கடாக்ஷித்து நீராட்டி
வல்கு வசஸ் ப்ரியாயா தத் ஸ்ருணு வதஸ் -பிராட்டி இனிய வார்த்தைகளால் சொல்ல காதால் கேட்டு
ஸோதர சந்நு தஸ்ய –லஷ்மணனும் கூட இருக்க -வடுவூர் சன்னிவேசம்
மந்தஸ்மிதம் பாதி ரகூத்த மஸ்ய -புன்னகை ஒளி வீச –
ஸூந்தர காண்டம் கேட்டு புன்னகை
நமக்கும் ஸூந்த்தர காண்டம் பாராயணம் பண்ணிய பலன் கிட்டும்


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வில்லூர் ஆசு கவி ஸ்ரீ நிதி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சீதா பிராட்டி சமேத ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-