Archive for October, 2024

ஸ்ரீ இராமாயண பாராயண தியான ஶ்லோகங்கள்- -ஶ்ரீ ராம ரக்ஷா ஸ்தோத்ரம்-ஸ்ரீ ராம மங்கள -ஶ்லோகங்கள் ஸ்ரீ மா முனிகள் —

October 14, 2024

ஸ்ரீ இராமாயண பாராயண தியான ஶ்லோகங்கள்

ஸ்ரீ விஷ்ணு தியானம்

ஶுக்லாம் பரதரம் விஷ்ணும் ஶஶி வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யயாயேத் ஸர்வ விக்ந உபஶாந்தயே

வெண்மையான வஸ்திரங்களை அணிந்தவரும்,
சந்திரனைப் போன்றவரும், நான்கு திருக் கரங்கள் கொண்டவரும்,
மலர்ந்த திரு முகம் கொண்டவரும் ஆகிய விஷ்ணுவை, நான் செய்யும் செயல்களில் இடையூறுகள் ஏற்படாமல் இருக்க தியானம் செய்கிறேன்.

——-

ஸ்ரீ வால்மீகி தியானம்

கூஜந்தம் ராம ராம இதி மதுரம் மதுர அக்ஷரம்
ஆரூஹ்ய கவிதா ஶாகாம் வந்தே வால்மீகி கோகிலம்

கவிதை என்னும் மரத்தின் கிளைகளில் ஏறி
அமர்ந்து, “ராமா ராமா” என்ற இனிமையான சொற்களை
எப்போதும் அழகாகக் கூவியபடி உள்ள வால்மீகி என்னும்
குயிலை நான் வணங்குகிறேன்.

வால்மீகே முநி ஸிம்ஹஸ்ய கவிதா வந சாரிண:
ஶ்ருண்வந் ராம கதா நாதம் கோந யாதி பராம் கதிம்

கவிதை என்னும் வனத்தில் உலவியபடி உள்ள
சிங்கத்தைப் போன்ற வால்மீகி முனிவருடைய (அல்லது
முனிவர்களில் சிங்கம் போன்று, கவிதை என்னும் வனத்தில் உலவியபடி உள்ள வால்மீகி முனிவருடைய) இராமனுடைய
கதையைக் கேட்கும் எந்த மனிதன் தான் உயர்ந்த கதியை அடைய மாட்டான்

——–

ஸ்ரீ ஹனுமான் தியானம்

கோஷ்பதீ க்ருத வாராஶிம் மஶகீ க்ருத ராக்ஷஸம்
ராமாயண மஹா மாலா ரத்னம் வந்தே அநிலாத்மஜம்

ஸமுத்திரத்தை, மாட்டுக் குளம்பால் உண்டான பள்ளத்தில் உள்ள நீர் போன்று கடந்தவரும், ராக்ஷஸர்களைக் கொசுவைப் போன்று நசுக்கியவரும், இராமாயணம் என்னும் உயர்ந்த மாலையில் இரத்தினம் போன்று விளங்குபவரும் ஆகிய வாயு புத்திரரை நான் வணங்குகிறேன்.-

அஞ்ஜநா நந்தநம் வீரம் ஜாநகீ ஶோக நாஶனம்
கபீஶம் அக்ஷ ஹந்தாரம் வந்தே லங்கா பயங்கரம்

அஞ்ஜனையின் புத்திரரும், வீரரும், ஜானகியின் சோகத்தை அழித்தவரும், அக்ஷ குமாரனைக் கொன்றவரும், இலங்கைக்கு அச்சத்தை உண்டாக்கியவரும் ஆகிய உயர்ந்த வானரரை வணங்குகிறேன்.

ய: பிபந் ஸததம் ராம சரித அம்ருத ஸாகரம்
அத்ருப்த: தம் முநி வந்தே ப்ராசேதஸம் அகல்மஷம்

யார் ஒருவர், இராமனுடைய சரிதம் என்னும்
அமிர்தக் கடலை எப்போதும் பருகியபடி இருந்தாலும், மன நிறைவு அடைய வில்லையோ, வருணனுடைய புத்திரரும், களங்கம் அற்றவரும் ஆகிய அந்த முனிவரை நான் வணங்குகிறேன்.

மநோ ஜவம் மாருத துல்ய வேகம்
ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வானர யூத முக்யம்
ஸ்ரீராம தூதம் ஶிரஸா நமாமி

மனதின் வேகம் போன்ற வேகம் கொண்டவரும்,
வாயுவிற்கு நிகரான வேகம் உள்ளவரும், இந்த்ரியங்களை
வென்றவரும், புத்தி உள்ளவர்களில் சிறந்தவரும், வாயுவின் புத்திரரும், வானரர்களுடைய தலைவர்களில் முக்கியமானவரும், ஸ்ரீராமனின் தூதனும் ஆகிய ஹனுமானை நான் எனது தலையால் வணங்குகிறேன்.

உல்லங்க்ய ஸிந்தோ : ஸலிலம் ஸலீலம்
ய: ஶோக வஹ்நிம் ஜனகாத் மஜாயா:
ஆதாய தேநைவ ததாஹ லங்காம் நமாமி
தம் ப்ராஞ்ஜலி: ஆஞ்ஜநேயம்

யார் ஒருவர், ஸமுத்திரத்தின் நீரை ஒரு
விளையாட்டாகவே தாண்டி, ஜனகருடைய புதல்வியின் சோகம் என்னும் அக்னியை எடுத்துக் கொண்டு, அந்த அக்னி மூலமாலவே இலங்கையை எரித்தாரோ, அந்த ஹனுமானை நான் கைகள் குவித்து வணங்குகிறேன்.

ஆஞ்ஜநேயம் அதிபாடலாநநம்
காஞ்சநாத்ரி கமநீய விக்ரஹம்
பாரிஜாத தரு மூல வாஸிநம்
பாவயாமி பவமாந நந்தனம்

அஞ்ஜனையின் புதல்வரும், மிகவும் சிவந்த முகத்தைக் கொண்டவரும், ஸ்வர்ணம் போன்ற அழகான திருமேனியைக் கொண்டவரும், பாரிஜாத மரத்தின் அடியில் வசிப்பவரும் ஆகிய வாயுவின் புத்திரனை நான் மனதால் தியானிக்கிறேன்.

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தநம் தத்ர தத்ர
க்ருதம் ஹஸ்தக அஞ்ஜலிம்
பாஷ்பவாரி பரிபூர்ண லோசநம் மாருதிம்
நமத ராக்ஷஸ அந்தகம்

எந்த இடங்களில் இராமனுடைய புகழானது கூறப்படுகிறதோ, அந்த இடங்களில் குவித்த கைகளுடனும், ஆனந்தக் கண்ணீர் நிறைந்த கண்களுடன் உள்ளாரோ-
ராக்ஷஸர்களுக்குக் காலனாக உள்ள அந்த வாயு புத்திரரை நான் வணங்குகிறேன்.

ஸர்வ அரிஷ்ட நிவாரகம் ஸுப கரம்
பிங்காக்ஷம் அக்ஷாபஹம்
ஸீதா அந்வேஷண தத் பரம் கபி வரம்
கோடி இந்து ஸூர்ய ப்ரபம்

லங்கா த்வீப பயங்கரம் ஸகல வதம்
ஸுக்ரீவ ஸம்மாநிதம்
தேவேந்திராதி ஸமஸ்த தேவ விநுதம்
காகுஸ்த்த தூதம் பஜே

அனைத்து விதமான துன்பங்களையும் முற்றிலும் விலக்கி, நன்மைகளை நல்குபவரும், மஞ்சள் நிறமான கண்கள் கொண்டவரும், வானரர்களில் உயர்ந்தவரும், ஸீதையைத் தேடிச் சென்றவரும், கோடி சந்திர சூரியன்களின் ஒளியைக் கொண்டவரும், இலங்கைக்கு அச்சத்தை உண்டாக்கியவரும், ராக்ஷஸர்கள் அனைவரையும் கொன்றவரும், ஸுக்ரீவனால்
கௌரவிக்கப் பட்டவரும், இந்திரன் உள்ளிட்ட அனைத்து தேவர்களாலும் போற்றப் படுபவரும் ஆகிய இராம தூதனை நான் வணங்குகிறேன்.

ஸ்ரீ இராமாயண தியானம்

ய: கர்ணணாஞ்ஜலி ஸம்புடைரஹரஹ: ஸம்யக் பிபத் யர்த்ததாத்
வால்மீகே: வதந அரவிந்த கலிதம் ராமாயணாக்யம் மது
ஜந்ம வ்யாதி ஜரா விபத்தி மரணை: அத்யந்த ஸ உபத்ரவம்
ஸம்ஸாரம் ஸ விஹாய கச்சதி புமாந்
விஷ்ணோ: பதம் ஶாஶ்வதம்

வால்மீகியின் தாமரை போன்ற முகத்திலிருந்து வெளிப்படும் இராமாயணம் என்னும் மதுவை, குவித்த கரங்களுடன் பருகுபவர்கள், “பிறப்பு, நோய், வயோதிகம், மரணம்” என்பதான ஸம்ஸாரம் மூலம் உண்டாகவல்ல உபத்திரவங்கள் நீங்கப் பெற்று, எப்போதும் உள்ளதான விஷ்ணுவின் பரம பதத்தை அடைகிறார்கள்.

வால்மீகி கிரி ஸம்பூத ராம ஸாகர காமிநீ
புநாது புவநம் புண்யா ராமாயணம் மஹாநதி

வால்மீகி என்ற மலையிலிருந்து உண்டானதும், இராமன் என்ற ஸமுத்திரத்தை அடைந்ததும், புண்ணியமானதும் ஆகிய இராமாயணம் என்ற பெரிய நதியானது, இந்த உலகத்தைத் தூய்மை செய்யட்டும்.

ஶ்லோக ஸார ஸமாகீர்ணம் ஸர்க கல்லோல ஸங்குலம்
காண்ட க்ராஹ மஹாமீனம் வந்ததே ராமாயண அர்ணவம்

ஸ்லோகங்களுடைய ஸாரமாக உள்ள நீரால் நிரம்பியதும், ஸர்க்கங்கள் என்னும் அலைகள் சேர்ந்திருப்பதும், காண்டங்கள் என்னும் முதலைகள் மற்றும் பெரிய மீன்கள் உள்ளதும் ஆகிய இராமாயணம் என்னும் ஸமுத்திரத்தை நான் வணங்குகிறேன்.

வேதத்தால் மட்டுமே அறியப் படக் கூடிய பரம புருஷன், தசரதருடைய புத்திரனாக அவதரித்தால்,வேதமானது வால்மீகியிடமிருந்து நேரடியாக இராமாயணம்
என்னும் ரூபத்தில் உண்டானது.

தத் உபகத ஸமாஸ ஸந்தி யோகம் ஸம
மதுரோ பநதார்த்த வாக்ய பத்தம்
ரகுவர சரிதம் முநி ப்ரணீதம் தஶ ஶிரஸஶ்ச
வதம் நிஶாமயத்வம்

நன்கு அமைந்துள்ள சொற்களின் சேர்க்கை (ஸமாஸம்) மற்றும் பிரிவு (ஸந்தி) ஆகியவற்றைக் கொண்டதும், ஒரே போன்று இனிமையான அர்த்தம் கொண்ட சொற்கள் நிறைந்த வாக்கியங்களால் கட்டப்பட்டதும், இராவணனுடைய வதம் குறித்துக் கூறுவதும், வால்மீகியால் செய்யப் பட்டதும் ஆகிய இராமனுடைய சரிதத்தைக் கேளுங்கள்.

ஸ்ரீ இராம தியானம்
ஸ்ரீராகவம் தசரதாத்மஜம் அப்ரமேயம்
ஸீதாபதிம் ரகுகுல அந்வய ரத்னதீபம்
ஆஜாநுபாஹும் அரவிந்த தலாய தாக்ஷம்
ராமம் நிசாசர விநாசகரம் நமாமி

ஸீதையின் நாதனும், தசரதருடைய புத்திரரும், அளவிட இயலாத தேஜஸ் கொண்டவரும், ரகு வம்சத்தில் வந்தவர்களுக்கு இரத்தின தீபம் போன்றவரும், தாமரை இதழ் போன்ற திருக்்கண்களைக் கொண்டவரும், ராக்ஷஸர்களுக்கு அழிவாக உள்ளவரும் ஆகிய இராமனை நமஸ்கரிக்கிறேன்.

ஜயது ஜயது ஸூர்யம் சப்த லோகைக தீபம் |
கிரண ஷமித பாப க்லேஷ துக்கஸ்ய நாஷம் ||
அருண கிரண கம்யம் ஆதிம் ஆதித்ய மூர்த்திம் |
சகல புவன வந்த்யம் பாஸ்கரம் தம் நமாமி ||–

வெற்றி வெற்றி (தரும்) கர்ம வீரமே (ஸூர்யம்), ஏழு உலகங்களின் தீபமே
ஒளிக்கதிர்களால் பாபங்களையும், கவலைகளையும் (உடல்வலி பற்றிய எண்ணங்களையும்), துக்கங்களையும் போக்குபவனே.
கிரணங்களால் ஆட் கொள்பவனே. ஆதி முதல்வனே. பரமாத்மனே
ஸகல உலகங்களாலும் வணங்க படுபவனே. ஒளி வீசுபவனே உனக்கு நமஸ்காரம்.

ஏழு உலகங்கள்- பூலோகம், புவர், ஸ்வர், மஹர, ஜனர், தபோ, ஸத்ய லோகம்

———

ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே

“ஸ்ரீ ராம்” என்று ஒரு முறை சொல்லப்படும் நாமம் ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் ஆயிரம் நாமங்களுக்கு நிகரானது.
எனவே ஒவ்வொரு நாளும் “ஸ்ரீ ராம்” என்று நாம் பாராயாணம் செய்யும் போது
அது முழு விஷ்ணு சஹஸ்ர நாமத்தையும் பாராயாணம் செய்வதற்கு நிகரானது.

————–

வைதேஹீ ஸஹிதம் ஸுர த்ரும
தலே ஹைமே மஹா மண்டபே
மத்யே புஷ்பகமாஸநே மணிமயே வீராஸநே ஸுஸ்திதம்
அக்ரே வாசயதி ப்ரபஞ்ஜந ஸுதே தத்வம் முநிப்ய: பரம்
வ்யாக்யாந்தம் பரதாதிபிர் : பரிவ்ருதம் ராமம் பஜே ஸ்யாமளம்

கற்பக மரத்தின் கீழே, சிவந்த ஸுவர்ணத்தால் செய்யப் பட்ட பெரிய மண்டபத்தில், புஷ்பக விமானத்தின் நடுவில், இரத்தின மயமான ஸிம்ஹாஸனத்தில், பத்ர பீடத்தில்,
வைதேகியுடன் நன்கு வீற்றுள்ளவரும்; தனக்கு முன்பாக வாயுவின் புத்திரர் உயர்ந் தத்வத்தைக் குறித்து வாசிக்க,
அதனை முனிவர்களுக்காக பொருள் விளக்கம் அளிப்பவரும்; பரதன் முதலானவர்களால் சூழப்பட்டவரும்; கறுமையான திருமேனியைக் கொண்டவரும் ஆகிய இராமனை நான்
வணங்குகிறேன்.

வாமே பூமி ஸுதா புரஶ்ச ஹனுமான்
பஶ்சாத் ஸுமித்ராஸுத:
ஶத்ருக்நோ பரதஶ் ச பார்ஶ்வ தளயோ:
வாய்வாதி கோணேஷு ச
ஸுக்ரீவஶ்ச விபீஷணஶ்ச யுவராட்
தாரா ஸுதோ ஜாம்பவாந்
மத்யே நீல ஸரோஜா கோமளருசிம்
ராமம் பஜே ஶ்யாமளம்

(பட்டாபிஷேக திருக் கோலம்)
இடது பக்கத்தில் பூமியின் புதல்வியாகிய ஸீதை,
முன் புறத்தில் ஹனுமான்,
பின் புறத்தில் ஸுமித்ரரையின் புதல்வனாகிய லஷஷ்மணன்,
வலப் பக்கம் மற்றும் இடப் பக்கத்தில் சத்ருக்நனும் பரதனும்,
நான்கு பக்கங்களிலும் வாயு முதலான திக் பாலர்கள் போன்று ஸுக்ரீவன், விபீஷணன், இளவரசனாகிய அங்கதன் மற்றும் ஜாம்பவான் ஆகியோர் சூழ்ந்திருக்க, நடுவில் தாமரை மலரின் மென்மையுடன் அமர்ந்திருக்கும், கருமையான நிறம் கொண்ட இராமனை வணங்குகிறேன்.

நம: அஸ்து ராமாய ஸ லக்ஷஷ்மணாய தேவ்யை
ச தஸ்யை ஜநகாத் மஜாயை
நம: அஸ்து ருத்ர இந்த்ர யம அநிலேப்யோ
நம: அஸ்து சந்த்ர அர்க மருத் கணேப்ய:

(ஹனுமான் கூறுதல்)
லஷ்மணனுடன் கூடிய இராமனுக்கு எனது நமஸ்காரம். ஜனகருடைய புத்திரியான ஸீதைக்கு எனது நமஸ்காரம். ருத்ரன், இந்திரன், யமன், வாயு ஆகியோருக்கு எனது நமஸ்காரம்.
சந்திரன், சூரியன், மருத் கணங்களுக்கு எனது நமஸ்காரம்.

பாராயணத்துக்குப் பின் அநுஸந்திக்கும் த்யான ஸ்லோகங்கள்

ஸ்வஸ்தி ப்ரஜாப்ய பரிபாலயந்தாம்
ந்யாயேன மார்கேண மஹீம் மஹீஶா:
கோ ப்ராஹ்மணேப்யோ ஶுபமஸ்து
நித்யம் லோகா: ஸமஸ்தா: ஸுகிநோ பவந்து

தனது நாட்டு மக்களை, நீதியின் வழியில், நன்றாகக் கவனித்துக் கொள்ளும் மன்னனுக்கு, மிக்க நன்மைகள் உண்டாகட்டும். பசுக்களும், அந்தணர்களும், மற்ற அனைவரும்
எப்போதும் இன்பமாக வாழ்வார்களாக. அனைத்து லோகங்களும் சுகமாக வாழட்டும்.

காலே வர்ஷது பர்ஜந்ய: ப்ருதிவீ ஸஸ்ய ஶாலிநீ
தேஶ: அயம் க்ஷோப ரஹிதா ஸஜ்ஜநா: ஸந்து நிர்பயா:

மழையானது சரியான காலங்களில் (சரியான அளவில்) பொழிய வேண்டும். பூமியானது பயிர்களால் நிறைந்து இருக்கட்டும். நாடானது சச்சரவு இன்றி இருக்கட்டும். ஸாதுக்கள் அச்சம் இன்றி இருக்கட்டும்.

அபுத்ர: புத்ரிண: ஸந்து புத்ரிண: ஸந்து பௌத்ரிண:
அதநா: ஸதநா: ஸந்து ஜீவந்து ஶரதாம் ஶதம்

குழந்தை அற்றவர்களுக்கு குழந்தை பிறக்கட்டும்.
குழந்தைகள் உள்ளவர்களுக்குப் பேரக் குழந்தைகள் பிறக்கட்டும்.
தனம் இல்லாதவர்களுக்குத் தனம் உண்டாகட்டும். நூறு ஆண்டு காலம் வாழட்டும்.

சரிதம் ரகுநாதஸ்ய ஶத கோடி ப்ரவிஸ்தரம்
ஏக ஏகம் அக்ஷரம் ப்ரோக்தம் மஹா பாதக நாஶநம்

இராம சரிதமானது, நூறு கோடி (சொற்களுக்கும் மேலாக) விரிவாக உள்ளதாகும். அதில் ஏதேனும் ஒரு எழுத்து மட்டுமே மிகவும் கொடிய பாபத்தையும் கூட அழிக்க வல்லதாகும்.

ஶ்ருண்வந் ராமாயணம் பக்த்யயா ய: பதம் பதம் ஏவ வா
ஸ யாதி ப்ரஹ்மண: ஸ்தானம் ப்ரஹ்மண பூஜ்யதே ஸதா

யார் ஒருவன் இராமாயணத்தை பக்தியுடன் கேட்கிறானோ அல்லது அதில் உள்ள ஒரு சொல்லையாவது பக்தியுடன் கேட்கிறானோ, அவனை நான்முகன் தனது இடத்திற்கு அழைத்துச் சென்று, எப்போதும் பூஜிக்கிறான்.

ராமாய ராமபத்ராய ராமச் சந்த்ரராய வேதஸே
ரகுநாதாய நாதாய ஸீதாயா: பதயே நம:

இராமன் என்றும், ராம பத்ரன் என்றும், ராம சந்த்ரன் என்றும், ரகு நாதன் என்றும் அழைக்கப்படும் ஸீதையின் நாதனுக்கு, வேதங்களில் கூறப்படுபவனுக்கு எனது நமஸ்காரங்கள்.

யத் மங்களம் ஸஹஸ்ர அக்ஷே ஸர்வ தேவ நமஸ்க்ருதே
வ்ருத்ர நாஶே ஸம பவத் தத் தே பவது மங்களம்

(இராமனிடம் கௌஸலை கூறுதல்)
வ்ருத்ரன் என்னும் ராக்ஷஸன் அழிக்கப் பட்ட போது, அனைத்து தேவர்களாலும்
வணங்கப் பட்டவனும், ஆயிரம் கண்கள் கொண்டவனும் ஆகிய இந்திரனுக்கு எத்தகைய மங்களம் உண்டானதோ, அத்தகைய மங்களம் உனக்கும் உண்டாகட்டும்.

யத் மங்களம் ஸுபர்ணஸ் ய விநாத அகல்பயத் புரா
அம்ருதம் ப்ரரார்த்த மாநஸ்ய தத் தே பவது மங்களம்

(இராமனிடம் கௌஸலை கூறுதல்)
முன்பு, அமிர்தத்தைத் தேடிச் சென்ற கருடனுக்கு, அவனுடைய தாயான வினதை எத்தகைய மங்களத்தை உண்டாக்கினாளோ, அத்தகைய மங்களம் உனக்கும் உண்டாகட்டும்.

அம்ருத உத்பாதநே தைத்யயாந் க்நதோ வஜ்ர தரஸ்ய யத்
அதிதி: மங்களம் ப்ராதாத் தத் தே பவது மங்களம்

(இராமனிடம் கௌஸலை கூறுதல்)
திருப்பாற் கடலில் அமிர்தம் உண்டான போது, அஸுரர்களை அழித்த இந்த்ரனுக்கு, அவனுடைய தாயான அதிதியானவள் எத்தகைய மங்களத்தை
உண்டாக்கினாளோ, அததகைய மங்்களம் உனக்கும் உண்டாகட்டும்.

த்ரீந் விக்ரமாந் ப்ரக்ரமத: விஷ்ணோ: அமித தேஜஸ:
யத் ஆஸீத் மங்களம் ராம தத் தே பவது மங்களம்

(இராமனிடம் கௌஸலை கூறுதல்)
இராமா! மூன்று காலடிகளை வைப்புகள் மூலம் (மூன்று லோகங்களை) அளந்தவரும், அளவற்ற தேஜஸ் கொண்டவரும் ஆகிய விஷ்ணுவிற்கு எத்தகைய மங்களம் உண்டானதோ, அத்தகைய மங்களம் உனக்கும் உண்டாகட்டும்.

ருதவ: ஸாகரா த்வீபா வேதா லோகா திஶ: ச தே
மங்களாநி மஹா பாஹோ திஶந்து தவ ஸர்வதா

அந்த ருதுக்கள், ஸமுத்ரங்கள், தீவுகள், வேதங்கள், லோகங்கள், திசைகள் ஆகிய அனைத்து உனக்கு எங்கும் மங்களங்கள் அளிக்கட்டும்.

ஸ்ரீராமசந்த்ர: ஶ்ரித பாரிஜாத: ஸமஸ்த
கல்யாண குண அபிராம:
ஸீதா முக அம்போருஹ ஸஞ்சரீக:
நிரந்தரம் மங்களம் ஆதநோது

தனது அடியார்களுக்கு வேண்டியதை அளிக்கும் பாரிஜாதமாக ஸ்ரீராமசந்திரன் உள்ளார். அனைத்து கல்யாண குணங்களையும் கொண்டு, அனைவரையும் கவர்கிறார். ஸீதை முகம் என்னும் தாமரையில் ஸஞ்சரிக்கும் வண்டாக உள்ளார்.-இப்படிப்பட்ட அவர் எப்போதும் மங்களங்களை அளிக்கட்டும்.

காயேந வாசா மந: இந்த்ரியை: வா
புத்தி ஆத்மாநா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத்
கரோமி யத் யத் ஸகலம் பரஸ்மை
நாராயணா இதி ஸமர்ப்பயாமி

எனது சரீரம், சொல், மனம், இந்த்ரியங்கள், புத்தி,ஆத்மா, இயல்பான குணம் ஆகியவற்றால் எவை எவைகளைச் செய்கிறேனோ, அவை அனைத்தையும் பரம புருஷனாகிய நாராயணனுக்கே ஸமர்ப்பணம் செய்கிறேன்.

குல தைவதம் அஸ்மாகம் கோதண்ட ஶர மண்டிதம்
இஷ்ட தைவதம் அஸ்மாகம் இக்ஷ்வாகு குல தைவதம்

(இதனை நான்கிலிருந்து பன்னிரண்டு முறைகள் ஜபிக்க வேண்டும்)
என்னுடைய குல தெய்வமாக உள்ளவர், கோதண்டம் என்னும் வில் மற்றும் அம்புகளால் அலங்கரிக்கப்பட்ட இராமனே ஆவார். எனது இஷ்டமான தெய்வமாக உள்ளவர்,
இக்ஷ்வாகு குலத்தின் தெய்வமாக உள்ள இராமனே ஆவார்.

————-

9 வரிகளை கொண்ட ஶ்ரீ ராமாயணம் ஸ்லோகம்

ஸ்ரீ ராமம் ரகுகுல திலகம்
சிவதனு சாக்ரிஹத சீதா ஹஸ்தகரம்
அங்குல்யா பரண சோபிதம்
சூடாமணி தர்சன கரம்
ஆஞ்சநேய மாஸ்ரயம்
வைதேஹி மனோ கரம்
வானர சைன்ய சேவிதம்
சர்வ மங்கள கார்யானுகூலம்
சததம் ஸ்ரீ ராமச் சந்திர பாலயமாம்

———————

ஏக ஸ்லோக ஶ்ரீ ராமாயணம்

ஆதெள ராம தபோ வனாதிகமனம்
ஹத்வா ம்ருகம் காஞ்சனம்
வைதேஹி ஹரணம் ஜடாயு மரணம் சுக்ரீவ சம்பாஷனம்
வாலீநிர்தலனம் சமுத்ர தரணம் லங்காபுரீ தாஹனம்
பஸ்சாத் ராவண கும்பகர்ண ஹனனம் ஏதத்தி ராமாயணம்

—————–

*ஶ்ரீ ராம ரக்ஷா ஸ்தோத்ரம்*

ஓம் அஸ்ய ஶ்ரீ ராமரக்ஷா ஸ்தோத்ரமம்த்ரஸ்ய புதகௌஶிக றுஷிஃ
ஶ்ரீ ஸீதாராம சம்த்ரோதேவதா
அனுஷ்டுப் சம்தஃ
ஸீதா ஶக்திஃ
ஶ்ரீமான் ஹனுமான் கீலகம்
ஶ்ரீராமசம்த்ர ப்ரீத்யர்தே ராமரக்ஷா ஸ்தோத்ரஜபே வினியோகஃ

த்யானம்
த்யாயேதாஜானுபாஹும் த்றுதஶர தனுஷம் பத்த பத்மாஸனஸ்தம்
பீதம் வாஸோவஸானம் னவகமல தளஸ்பர்தி னேத்ரம் ப்ரஸன்னம்
வாமாம்காரூட ஸீதாமுக கமல மிலல்லோசனம் னீரதாபம்
னானாலம்கார தீப்தம் தததமுரு ஜடாமம்டலம் ராமசம்த்ரம்

ஸ்தோத்ரம்
சரிதம் ரகுனாதஸ்ய ஶதகோடி ப்ரவிஸ்தரம்
ஏகைகமக்ஷரம் பும்ஸாம் மஹாபாதக னாஶனம்

த்யாத்வா னீலோத்பல ஶ்யாமம் ராமம் ராஜீவலோசனம்
ஜானகீ லக்ஷ்மணோபேதம் ஜடாமுகுட மம்டிதம்

ஸாஸிதூண தனுர்பாண பாணிம் னக்தம் சராம்தகம்
ஸ்வலீலயா ஜகத்ராது மாவிர்பூதமஜம் விபும்

ராமரக்ஷாம் படேத்ப்ராஜ்ஞஃ பாபக்னீம் ஸர்வகாமதாம்
ஶிரோ மே ராகவஃ பாதுபாலம் தஶரதாத்மஜஃ

கௌஸல்யேயோ த்றுஶௌபாது விஶ்வாமித்ர ப்ரியஃ ஶ்றுதீ
க்ராணம் பாது மகத்ராதா முகம் ஸௌமித்ரிவத்ஸலஃ

ஜிஹ்வாம் வித்யானிதிஃ பாது கம்டம் பரத வம்திதஃ
ஸ்கம்தௌ திவ்யாயுதஃ பாது புஜௌ பக்னேஶகார்முகஃ

கரௌ ஸீதாபதிஃ பாது ஹ்றுதயம் ஜாமதக்ன்யஜித்
மத்யம் பாது கரத்வம்ஸீ னாபிம் ஜாம்பவதாஶ்ரயஃ

ஸுக்ரீவேஶஃ கடீபாது ஸக்தினீ ஹனுமத்-ப்ரபுஃ
ஊரூ ரகூத்தமஃ பாது ரக்ஷகுல வினாஶக்றுத்

ஜானுனீ ஸேதுக்றுத் பாது ஜம்கே தஶமுகாம்தகஃ
பாதௌவிபீஷண ஶ்ரீதஃபாது ராமோ‌உகிலம் வபுஃ

ஏதாம் ராமபலோபேதாம் ரக்ஷாம் யஃ ஸுக்றுதீ படேத்
ஸசிராயுஃ ஸுகீ புத்ரீ விஜயீ வினயீ பவேத்

பாதாள பூதல வ்யோம சாரிணஶ்-சத்ம சாரிணஃ
ன த்ரஷ்டுமபி ஶக்தாஸ்தே ரக்ஷிதம் ராமனாமபிஃ

ராமேதி ராமபத்ரேதி ராமசம்த்ரேதி வாஸ்மரன்
னரோ னலிப்யதே பாபைர்புக்திம் முக்திம் ச விம்ததி

ஜகஜ்ஜைத்ரைக மம்த்ரேண ராமனாம்னாபி ரக்ஷிதம்
யஃ கம்டே தாரயேத்தஸ்ய கரஸ்தாஃ ஸர்வ ஸித்தயஃ

வஜ்ரபம்ஜர னாமேதம் யோ ராமகவசம் ஸ்மரேத்
அவ்யாஹதாஜ்ஞஃ ஸர்வத்ர லபதே ஜய மம்களம்

ஆதிஷ்டவான் யதாஸ்வப்னே ராம ரக்ஷா மிமாம் ஹரஃ
ததா லிகிதவான் ப்ராதஃ ப்ரபுத்தௌ புதகௌஶிகஃ

ஆராமஃ கல்பவ்றுக்ஷாணாம் விராமஃ ஸகலாபதாம்
அபிராம ஸ்த்ரிலோகானாம் ராமஃ ஶ்ரீமான்ஸனஃ ப்ரபுஃ

தருணௌ ரூபஸம்பன்னௌ ஸுகுமாரௌ மஹாபலௌ
பும்டரீக விஶாலாக்ஷௌ சீரக்றுஷ்ணா ஜினாம்பரௌ

பலமூலாஸினௌ தாம்தௌ தாபஸௌ ப்ரஹ்மசாரிணௌ
புத்ரௌ தஶரதஸ்யைதௌ ப்ராதரௌ ராமலக்ஷ்மணௌ

ஶரண்யௌ ஸர்வஸத்வானாம் ஶ்ரேஷ்டா ஸர்வ தனுஷ்மதாம்
ரக்ஷஃகுல னிஹம்தாரௌ த்ராயேதாம் னோ ரகூத்தமௌ

ஆத்த ஸஜ்ய தனுஷா விஷுஸ்ப்றுஶா வக்ஷயாஶுக னிஷம்க ஸம்கினௌ
ரக்ஷணாய மம ராமலக்ஷணாவக்ரதஃ பதிஸதைவ கச்சதாம்

ஸன்னத்தஃ கவசீ கட்கீ சாபபாணதரோ யுவா
கச்சன் மனோரதான்னஶ்ச ராமஃ பாது ஸ லக்ஷ்மணஃ

ராமோ தாஶரதி ஶ்ஶூரோ லக்ஷ்மணானுசரோ பலீ
காகுத்ஸஃ புருஷஃ பூர்ணஃ கௌஸல்யேயோ ரகூத்தமஃ

வேதாம்த வேத்யோ யஜ்ஞேஶஃ புராண புருஷோத்தமஃ
ஜானகீவல்லபஃ ஶ்ரீமானப்ரமேய பராக்ரமஃ

இத்யேதானி ஜபேன்னித்யம் மத்பக்தஃ ஶ்ரத்தயான்விதஃ
அஶ்வமேதாதிகம் புண்யம் ஸம்ப்ராப்னோதி னஸம்ஶயஃ

ராமம் தூர்வாதள ஶ்யாமம் பத்மாக்ஷம் பீதாவாஸஸம்
ஸ்துவம்தி னாபிர்-திவ்யைர்-னதே ஸம்ஸாரிணோ னராஃ

ராமம் லக்ஷ்மண பூர்வஜம் ரகுவரம் ஸீதாபதிம் ஸும்தரம்
காகுத்ஸம் கருணார்ணவம் குணனிதிம் விப்ரப்ரியம் தார்மிகம்

ராஜேம்த்ரம் ஸத்யஸம்தம் தஶரததனயம் ஶ்யாமலம் ஶாம்தமூர்திம்
வம்தேலோகாபிராமம் ரகுகுல திலகம் ராகவம் ராவணாரிம்

ராமாய ராமபத்ராய ராமசம்த்ராய வேதஸே
ரகுனாதாய னாதாய ஸீதாயாஃ பதயே னமஃ

ஶ்ரீராம ராம ரகுனம்தன ராம ராம
ஶ்ரீராம ராம பரதாக்ரஜ ராம ராம
ஶ்ரீராம ராம ரணகர்கஶ ராம ராம
ஶ்ரீராம ராம ஶரணம் பவ ராம ராம

ஶ்ரீராம சம்த்ர சரணௌ மனஸா ஸ்மராமி
ஶ்ரீராம சம்த்ர சரணௌ வசஸா க்றுஹ்ணாமி
ஶ்ரீராம சம்த்ர சரணௌ ஶிரஸா னமாமி
ஶ்ரீராம சம்த்ர சரணௌ ஶரணம் ப்ரபத்யே

மாதாராமோ மத்-பிதா ராமசம்த்ரஃ
ஸ்வாமீ ராமோ மத்-ஸகா ராமசம்த்ரஃ
ஸர்வஸ்வம் மே ராமசம்த்ரோ தயாளுஃ
னான்யம் ஜானே னைவ ன ஜானே

தக்ஷிணேலக்ஷ்மணோ யஸ்ய வாமே ச ஜனகாத்மஜா
புரதோமாருதிர்-யஸ்ய தம் வம்தே ரகுவம்தனம்

லோகாபிராமம் ரணரம்கதீரம்
ராஜீவனேத்ரம் ரகுவம்ஶனாதம்
காருண்யரூபம் கருணாகரம் தம்
ஶ்ரீராமசம்த்ரம் ஶரண்யம் ப்ரபத்யே

மனோஜவம் மாருத துல்ய வேகம்
ஜிதேம்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வானரயூத முக்யம்
ஶ்ரீராமதூதம் ஶரணம் ப்ரபத்யே

கூஜம்தம் ராமராமேதி மதுரம் மதுராக்ஷரம்
ஆருஹ்யகவிதா ஶாகாம் வம்தே வால்மீகி கோகிலம்

ஆபதாமபஹர்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
லோகாபிராமம் ஶ்ரீராமம் பூயோபூயோ னமாம்யஹம்

பர்ஜனம் பவபீஜானாமர்ஜனம் ஸுகஸம்பதாம்
தர்ஜனம் யமதூதானாம் ராம ராமேதி கர்ஜனம்

ராமோ ராஜமணிஃ ஸதா விஜயதே ராமம் ரமேஶம் பஜே
ராமேணாபிஹதா னிஶாசரசமூ ராமாய தஸ்மை னமஃ
ராமான்னாஸ்தி பராயணம் பரதரம் ராமஸ்ய தாஸோஸ்ம்யஹம்
ராமே சித்தலயஃ ஸதா பவது மே போ ராம மாமுத்தர

ஶ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ரனாம தத்துல்யம் ராம னாம வரானனே

இதி ஶ்ரீபுதகௌஶிகமுனி விரசிதம் ஶ்ரீராம ரக்ஷாஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்

———-

*ஶ்ரீ ராமாயண ஜெய மந்திரம்*

ஜயத்யதிபலோ ராமோ லக்ஷ்மணஶ்ச மஹாபலஃ
ராஜா ஜயதி ஸுக்ரீவோ ராகவேணாபிபாலிதஃ |

தாஸோஹம் கோஸலேம்த்ரஸ்ய ராமஸ்யாக்லிஷ்டகர்மணஃ
ஹனுமான் ஶத்ருஸைன்யானாம் னிஹம்தா மாருதாத்மஜஃ ||

ன ராவண ஸஹஸ்ரம் மே யுத்தே ப்ரதிபலம் பவேத்
ஶிலாபிஸ்து ப்ரஹரதஃ பாதபைஶ்ச ஸஹஸ்ரஶஃ |
அர்தயித்வா புரீம் லம்காமபிவாத்ய ச மைதிலீம்
ஸம்றுத்தார்தோ கமிஷ்யாமி மிஷதாம் ஸர்வரக்ஷஸாம் ||

———

ஸ்ரீ ராம மங்களம்

ஸகல சௌபாக்கியங்களையும் அளிக்கும் மந்திரம்.

மங்களம் கோஸலேந்த்ராய மஹநீய குணாப்தயே
சக்ரவர்த்தி தநூஜாய ஸார்வபௌமாய மங்களம்

வேதவேதாந்தவேத்யாய மேகஸ்யாமல மூர்த்தயே
பும்ஸாம் மோஹநரூபாய புண்யஸ்லோகாய மங்களம்

விஸ்வாமித்ராந்தரங்காய மிதிலா நகரீபதே:
பாக்யாநாம் பரிபாகாய பவ்யரூபாய மங்களம்

பித்ருபக்தாய ஸததம் ப்ராத்ருபி: ஸஹ ஸீதயா
நந்திதாகில லோகாய ராமபத்ராய மங்களம்

த்யக்த ஸாகேதவாஸாய சித்ரகூட விஹாரிணே
ஸேவ்யாய ஸர்வயமிநாம் தீரோதாராய மங்களம்

ஸௌமித்ரிணா ச ஜாநக்யா சாபபாணாஸி தாரிணே
ஸம்ஸேவ்யாய ஸதா பக்த்யா ஸ்வாமிநே மம மங்களம்

தண்டகாரண்ய வாஸாய கண்டிதாமர ஶத்ரவே
க்ருத்ரராஜாய பக்தாய முக்திதாயாஸ்(அ)ஸ்து மங்களம்

ஸாதரம் ஸபரீதத்த பலமூலாபிலாஷிணே
ஸௌலப்ய பரிபூர்ணாய ஸத்வோத்ரிக்தாய மங்களம்

ஹநூமத் ஸமவேதாய ஹரீஶாபீஷ்டதாயிநே
வாலிப்ரமதநாயா (அ)ஸ்து மஹாதீராய மங்களம்

ஸ்ரீமதே ரகுவீராய ஸேதூலங்கித ஸிந்தவே
ஜிதராக்ஷஸ ராஜாய ரணதீராய மங்களம்

ஆஸாத்ய நகரீம் திவ்யா மபிஷிக்தாய ஸீதயா
ராஜாதிராஜ ராஜாய ராமபத்ராய மங்களம்

மங்களாஶாஸந பரைர் மதாசார்ய புரோகமை:
ஸர்வைஸ்ச பூர்வைராசார்யை: ஸத்க்ருதாயாஸ்து மங்களம்

ஸ்ரீ ராம மங்களம் -ஸ்ரீ மா முனிகள் —

ஸ்ரீ ராமர் மந்திரம்

ஆபதாமபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம்

ஆர்த்தா நாமார்த்தி ஹந்தாரம் பீதானாம் பீதநாசனம்
த்விஷதாம் காலதண்டம் தம் ராமச்சந்த்ரம் நமாம்யஹம்

ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே ரகுநாதாய நாதாய ஸீதாய பதயே நம:

———

ஸ்ரீ ராம மங்கள ஸ்தோத்ரம்-ஸ்ரீ மா முனிகளே அருளிச் செய்த மங்கள ஸ்லோகங்கள் என்பர்

ஸ்ரீ ராம நாமமே தாரக மந்திரம் . ஸகல சௌபாக்கியங்களையும் அளிக்கும் மந்திரம்.
மோட்சத்திற்கு வழி காட்டி. இதை சொல்லும் போதெல்லாம் மங்களமே உண்டாகும்.

——-

மங்களம் கோசலேந்த்ராய மஹ.நீய குணாப்தயே
சக்ரவர்த்தி த.நுஜாய ஸார்வ பௌமாய ம்ங்களம் –1-

மங்களம்
கோசலேந்த்ராய -கோசல தேச அரசருக்கு
மஹ.நீய குணாப்தயே -கல்யாண குணக்கடலான பெருமாளுக்கு
சக்ரவர்த்தி த.நுஜாய -சக்ரவர்த்தி திருமகனுக்கு
ஸார்வ பௌமாய -ஸார்வ பவ்மனுக்கு
மங்களம்

வேத வேதாந்த வேத்யாய மேக ஸ்யாமல மூர்த்தயே
பும்ஸாம் மோஹந ரூபாய புண்ய ஸ்லோகாய மங்களம் -2-

வேத வேதாந்த வேத்யாய -வேதங்களாலும் உபநிஷத்துக்களாலும் அறியப்படத் தக்கவனாயும்
மேக ஸ்யாமல மூர்த்தயே -நீல மேக ஸ்யாமள திவ்ய மங்கள விக்ரஹ யுக்தனுக்கு
பும்ஸாம் மோஹந ரூபாய -கண்டவர் தம் மனம் வழங்கும் படி -ஸித்த அபஹாரியான வனுக்கு
புண்ய ஸ்லோகாய -புண்யம் அளிக்கும் ஸ்தோத்ர வாசயனுக்கு
மங்களம் –

———

விஸ்வாமித்ராங்காய மிதிலா நகரீபதே:
பாக்யாநாம் பரிபாகாய பவ்ய ரூபாய மங்களம் –3-

விஸ்வாமித்ராங்காய -விச்வாமித்ர மகரிஷிக்கு அந்தரங்க சிஷ்யனுக்கு
மிதிலா நகரீபதே: பாக்யாநாம் பரிபாகாய -மிதிலா தேச ஜனக மஹாராஜருக்கு பரிபாக பாக்யமானவருக்கு
பவ்ய ரூபாய -பவ்ய திவ்ய மங்கள விக்ரஹ யுக்தனுக்கு
மங்களம்

—————

பித்ரு பக்தாய ஸததம் ப்ராத்ருபி: ஸஹ ஸீதயா
நந்திதாகில லோகாய ராம பத்ராய மங்களம் –4-

பித்ரு பக்தாய ஸததம் -எப்பொழுதுமே சக்கரவர்த்திக்கு உகப்பாக நடப்பவனும்
ப்ராத்ருபி: ஸஹ ஸீதயா நந்திதாகில லோகாய -அகில உலகில் உள்ளோரையும் தனது
ஸஹோதர்களுடனும் பத்னியுடனும் ஆனந்திப்பவனுமான
ராம பத்ராய மங்களம் –

—————-

த்யக்த ஸாகேத வாஸாய சித்ர கூட விஹாரிணே
ஸேவ்யாய ஸர்வயமி நாம் தீரோதராய மங்களம் –5-

த்யக்த ஸாகேத வாஸாய -அயோத்யா வாஸத்தையே துறந்து
சித்ர கூட விஹாரிணே -மநோ ஹராமான சித்ரகூடத்திலே இஷ்டமாகத் திரிந்து
ஸேவ்யாய ஸர்வயமி நாம் -ஸர்வ ரிஷிகளுக்கும் ஸேவை புரிந்து மகிழ்பவனாயும்
தீரோதராய -உதார தீர ஸ்திரமாய் இருப்பவனுக்கு
மங்களம்

————

சௌமித்ரிணா ச ஜாநக்யா சாப பாணாஸி தாரிணே
ஸம் ஸேவ்யாய ஸதா பக்தாய ஸ்வாமிநே மம மங்களம் –6-

சௌமித்ரிணா ச ஜாநக்யா -இளைய பெருமாள் ஜானகிப்பிராட்டி யுடன்
சாப பாணாஸி தாரிணே -சார்ங்க பாணியாயும் -அஸி -என்னும் கட்கத்தையும் தரித்து உள்ளவனாயும்
ஸம் ஸேவ்யாய ஸதா பக்தாய -அகில ஜகத்தும் பக்தி செய்யும் ஸ்வாமியுமான
ஸ்வாமிநே மம -அஸ்மத் ஸ்வாமியுமான பெருமாளுக்கு
மங்களம்

———-

தண்ட காரண்ய வாஸாய கண்டிதாம் அமர சத்ரவே
க்ருத்ர ராஜாய பக்தாய முக்தி தாயாஸ்து மங்களம் –7-

தண்ட காரண்ய வாஸாய – தண்டகாரண்யத்தில் உகந்து வாஸம் செய்து அருளினவனாயும்
கண்டிதாமர சத்ரவே -தேவ சத்ருக்களை நிரஸித்து அருளினவனாயும்
க்ருத்ர ராஜாய பக்தாய முக்தி தாயாஸ்து -ஜடாயு பெரிய உடையோருக்கு கச்ச என்று மோக்ஷம் அருளினவனாயும்
மங்களம்

———–

ஸாதரம் சபரீ தத்த பல மூலாபிலாஷிணே
ஸௌலப்ய பரிபூர்ணாய ஸத்வோத்ரிக்தாய மங்களம் –8-

ஸாதரம் சபரீ தத்த பல மூலாபிலாஷிணே -சபரி தந்த கனிகளை ஆதாரம் அபிலாஷை யுடன்
அமுது செய்து அருளினவனாயும்
ஸௌலப்ய பரிபூர்ணாய -பரிபூர்ண சவ் சீலவானாயும்
ஸத்வோத்ரிக்தாய -உத்க்ருஷ்ட ஸூத்த ஸத்வ மயனானவனாயும்
மங்களம் –

—————-

ஹநுமத் ஸமவேதாய ஹரீசா பீஷ்டதாயிநே
வாலி ப்ரமதநாயாஸ்து மஹா தீராய மங்களம் –9-

ஹநுமத் ஸமவேதாய -திருவடியுடன் ஒன்றறக் கலந்து மகிழ்ந்தவனாயும்
ஹரீசா பீஷ்டதாயிநே-ஸூக்ரீவ மஹா ராஜருக்கு தயை அருளி அபீஷ்ட பல பிரதனானவனாயும்
வாலி ப்ரமதநாயாஸ்து -வாலிக்கு வீட்டு அரசு அருளியவனாயும்
மஹா தீராய -மஹா வீர தீர பலாக்ரமனாயும் உள்ள பெருமாளுக்கு
மங்களம் —

———-

ஸ்ரீமதே ரகுவீராய ஸேதுல்லங்கித ஸிந்தவே
ஜித ராக்ஷஸ ராஜாய ரண தீராய மங்களம் –10-

ஸ்ரீமதே ரகுவீராய -ரகுகுலச் செல்வனாயும்
ஸேதுல்லங்கித ஸிந்தவே -சேது கட்டச் செய்து அருளி கடலைக் கடந்தவனாயும்
ஜித ராக்ஷஸ ராஜாய -ராக்ஷஸ அரசனை வென்றவனாயும்
ரண தீராய-பாட் வீரனாயுமான பெருமாளுக்கு
மங்களம்

———–

ஆஸாத்ய நக்ரீம் திவ்யா மபிஷிக்தாய ஸீதயா
ராஜாதி ராஜ ராஜாய ராம பத்ராய மங்களம் –11-

ஆஸாத்ய நகரீம் திவ்யம் -திரு அயோத்யைக்கு மீண்டு எழுந்து அருளி
அபிஷிக்தாய ஸீதயா -பிராட்டி யுடன் திருமுடி சூடி
ராஜாதி ராஜ ராஜாய -ராஜாதி ராஜனான பெருமாளுக்கு
ராம பத்ராய
மங்களம்

————–

மங்களாசாஸந பரைர் மதாசார்ய புரோகமை:
ஸர்வைச்ச பூர்வைராசார்யை: ஸத்க்ருதாயாஸ்து மங்களம்–12-

மங்களாசாஸந பரைர் -மங்களா ஸாஸன பரர்களான பூர்வர்களாலும்
மதாசார்ய புரோகமை:-அஸ்மத் ஆச்சார்யர் தொடக்கமானவர்களாலும்
ஸர்வைச்ச பூர்வைராசார்யை: -ஸர்வ பூர்வர்களாலும்
ஸத்க்ருதாயாஸ்து மங்களம்-ஸர்வ ஸத் கிருத்துக்களாலும்
மங்களா சாஸனமே பரம புருஷார்த்தம் என்று கொள்ளப்பட்டு
அடியேனுக்கும் அவ்வாறே மங்களா சாசனம் செய்யப் பணித்தார்களே

————

ஸ்ரீமத் வால்மீகி ராமாயண பாராயணத்தின் மங்கள ஸ்லோகங்கள் —

ஸ்வஸ்தி ப்ரஜாப்⁴ய꞉ பரிபாலயந்தாம்ʼ ந்யாய்யேன மார்கே³ண மஹீம்ʼ மஹீஶா꞉ .
கோ³ப்³ராஹ்மணேப்⁴ய꞉ ஶுப⁴மஸ்து நித்யம்ʼ லோகா꞉ ஸமஸ்தா꞉ ஸுகி²னோ ப⁴வந்து .. 1 ..

காலே வர்ஷது பர்ஜன்ய꞉ ப்ருʼத்²வீ ஸஸ்யஶாலினீ .
தே³ஶோ(அ)யம்ʼ க்ஷோப⁴ரஹிதோ ப்³ராஹ்மணா꞉ ஸந்து நிர்ப⁴யா꞉ .. 2 ..

அபுத்ரா꞉ புத்ரிண꞉ ஸந்து புத்ரிண꞉ ஸந்து பௌத்ரிண꞉ .
அத⁴னா꞉ ஸத⁴னா꞉ ஸந்து ஜீவந்து ஶரதா³ம்ʼ ஶதம் .. 3 ..

சரிதம்ʼ ரகு⁴நாத²ஸ்ய ஶதகோடிப்ரவிஸ்தரம் .
ஏகைகமக்ஷரம்ʼ ப்ரோக்தம்ʼ மஹாபாதகனாஶனம் .. 4 ..

ஶ்ருʼண்வன் ராமாயணம்ʼ ப⁴க்த்யா ய꞉ பாத³ம்ʼ பத³மேவ வா .
ஸ யாதி ப்³ரஹ்மண꞉ ஸ்தா²னம்ʼ ப்³ரஹ்மணா பூஜ்யதே ஸதா³ .. 5 ..

ராமாய ராமப⁴த்³ராய ராமசந்த்³ராய வேத⁴ஸே .
ரகு⁴நாதா²ய நாதா²ய ஸீதாயா꞉ பதயே நம꞉ .. 6 ..

யன்மங்க³லம்ʼ ஸஹஸ்ராக்ஷே ஸர்வதே³வநமஸ்க்ருʼதே .
வ்ருʼத்ரநாஶே ஸமப⁴வத்தத்தே ப⁴வது மங்க³ளம் .. 7 ..

யன்மங்க³லம்ʼ ஸுபர்ணஸ்ய வினதா அகல்பயத் புரா .
அம்ருʼதம்ʼ ப்ரார்த²யானஸ்ய தத்தே ப⁴வது மங்க³ளம் .. 8 ..

மங்க³லம்ʼ கோஸலேந்த்³ராய மஹனீயகு³ணாப்³த⁴யே .
சக்ரவர்திதனூஜாய ஸார்வபௌ⁴மாய மங்க³ளம் .. 9 ..

அம்ருʼதோத்பாத³னே தை³த்யான் க்⁴னதோ வஜ்ரத⁴ரஸ்ய யத் .
அதி³திர்மங்க³லம்ʼ ப்ராதா³த்தத்தே ப⁴வது மங்க³ளம் .. 10 ..

த்ரீன் விக்ரமான் ப்ரக்ரமதோ விஷ்ணோரமிததேஜஸ꞉ .
யதா³ஸீன்மங்க³லம்ʼ ராம தத்தே ப⁴வது மங்க³ளம் .. 11 ..

ருʼதவ꞉ ஸாக³ரா த்³வீபா வேதா³ லோகா தி³ஶஶ்ச தே .
மங்க³லானி மஹாபா³ஹோ தி³ஶந்து ஶுப⁴மங்க³ளா: .. 12 ..

காயேன வாசா மனஸேந்த்³ரியைர்வா பு³த்³த்⁴யாத்மனா வா ப்ரக்ருʼதே꞉ ஸ்வபா⁴வாத் .
கரோமி யத்³யத் ஸகலம்ʼ பரஸ்மை நாராயணாயேதி ஸமர்பயாமி .. 13 ..

—————————–————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ தேசிகன் -சத அஷ்டோத்தரம்-ஸ்ரீ நயினாராச்சார்யர் அருளிச் செய்த ஸ்ரீ வேதாந்த தேசிக பிரபத்தி –ஸ்ரீ வேதாந்த தேசிக மங்களா சாசனம் –

October 12, 2024

ஸ்ரீமான் வேங்கடநாதார்ய: கவிதார்க்கிக கேசரீ |
வேதாந்தாசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

எதிர்த்து வாதாடும் பண்டிதர்களுக்குச் சிங்கம் போலவும், சிறந்த செல்வத்தைப் பெற்றவரும் (ஞானம், பக்தி, வைராக்கியம் மற்றும் பல), வேங்கடநாதன் என்ற திரு நாமம் உடையவரும் ஆகிய ஸ்ரீ வேதாந்தாசார்யர்  என்னுடைய மனதில் எப்பொழுதும் உறைவாராக.

ராமாநுஜ தயாபாத்ரம் க்ஞான வைராக்ய பூஷணம்

ஸ்ரீமத் வேங்கடநாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம்

சீரொன்று தூப்புற் றிருவேங் கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழமொழியுள் – ஓரொன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு

சீர் ஒன்று – சிறப்புப் பொருந்திய; தூப்புல் – தூப்புல் குடியில் அவதரித்த; திருவேங்கடம் உடையான் – வேதாந்த தேசிகர்; பார் ஒன்ற – பூமியில் நிலைத்திருக்கும்படி; சொன்ன – செய்தருளிய; பழமொழியுள்—பழமையான வேத ஸாரமாகிய நூல்களுள்; ஓரொன்றுதானே – ஒவ்வொரு கிரந்தமே; தாரணியில் வாழ்வார்க்கு – இப்பூமியில் வாழும் மனிதர்களுக்கு; வான் – வைகுந்த்த்தை; ஏறப்போம் அளவும் – ஏறியடையும் வரைக்கும்; வாழ்வு – வாழ்வாக; அமையாதோ? – பொருந்தாதோ? (பொருந்தும் என்றபடி)

ஸ்ரீ மல் லஷ்மண யோகீந்த்ர சித்தாந்த விஜய த்வஜம்
விஸ்வாமித்ர குலோத்பூதம் வரதார்யம் அஹம் பஜே –

——————-

சங்கல்ப ஸுர்யோதயத்தில் சொல்கிறார் ;–

யதி , சிஷ்யனுக்கு ஆசீர்வாதம் செய்கிறார்

ப்ரதிஷ்டாபித வேதாந்த : ப்ரதிக்ஷிப்த பஹிர்மத : |

பூயாஸ் த்ரைவித்யமாந்யஸ்த்வம் பூரி கல்யாண பாஜநம் ||

நடாதூர் அம்மாள், ஸ்வாமி தேசிகனைப் பால்ய வயதில் அனுக்ரஹித்த ச்லோகம் .

ஸ்வாமி தேசிகன் , சிறு ுழந்தையாகத் தன்னுடைய மாதுலர் ( மாமா) அப்புள்ளார் ( ஆத்ரேய ராமாநுஜர் )

கூடவே, நடாதூரம்மாளின் காலக்ஷேபத்துக்கு, கச்சிவாய்த்தான் மண்டபத்துக்குப் போனபோது,

நடாதூரம்மாள், குழந்தையான ஸ்வாமி தேசிகனின் திருமுக காந்தியை–முக விலக்ஷணத்தைக் கடாக்ஷித்து ,அநுக்ரஹித்து,-நீ பிற மதங்களைக் கண்டித்து விஸிஷ்டாத்வைத ஸித்தாந்தத்தை நிலை நிறுத்தி மூவுலகிலும் போற்றப்பட்டு ஸகல ஷேமங்களையும் அடைவாயாக -என்று வாழ்த்தி ஆசீர்வாதமாக அருளிய ஸ்லோகம் –

தான் இயற்றிய சங்கல்ப ஸுர்யோதய நாடகத்தில்,

ஸ்வாமி தேசிகன் , யதி (ராஜன் ) தனக்கு ( சிஷ்யன் ) ஆசீர்வாதமாகச் சொன்னதாக, ஒரு காக்ஷியை ஏற்படுத்துகிறார்.இது, ஸ்வாமி தேசிகனுக்கு, யதிராஜரிடம் உள்ள ஆழ்ந்த பக்தியை வெளிப்படுத்துகிறது.

ந்யாஸ திலகத்தில், யதிராஜருடைய ஸம்பந்தத்தால் ,செருக்கு வந்ததாகச் சொல்கிறார்.

உக்த்யா தனஞ்ஜய விபீஷண லக்ஷ்யயாதே

ப்ரத்யாய்ய லக்ஷ்மண முநேர் பவதா விதீர்ணம் |

ச்ருத்வா வரம் ததநுபந்த மதாவலிப்தே

நித்யம் ப்ரஸீத பகவந் மயி ரங்கநாத ||

பெருமைமிகு திருவரங்கச்செல்வனே ! அர்ஜுனனுக்குச் சொன்ன சரம ஸ்லோகத்தையும் ,

விபீஷணணுக்குச் சொன்ன சரம ஸ்லோகத்தையும் சொல்லி, நம்பச் செய்து,

ஸ்ரீ பாஷ்யகாரருக்கு உன்னால் அளிக்கப்பட்ட வரத்தைக் கேட்டு அறிந்து, அவரது ஸம்பந்தத்தால்

செருக்கு நிறைந்த எனக்கு, எப்போதும் வரம் தந்து அருள்வாயாக ! ( வரம் யாதெனில் )

ஸ்ரீ பாஷ்யகாரரின் திருவடிகளிலோ அவரது சிஷ்ய பரம்பரை ஆசார்யர்களிடமோ ,

ப்ரபத்தியாகிய பரண்யாஸத்தைச் செய்தவர்கள் எல்லாருக்கும், பரமபதம் அளிப்பதே ( இன்னும் பல )

———–

தத்வமுக்தா கலாபத்தில் , ஸ்வாமி தேசிகன் சொல்கிறார் ;–

காதா தாதாகதாநாம் களதி கமநிகா காபிலீ க்வாபி லீநா

க்ஷீணா காணாத வாணீ த்ருஹின ஹரதிர: ஸௌரபம் நாரபந்தே |

க்ஷாமா கௌமாரிலோக்திர் ஜகதி குருமதம் கௌரவாத் தூரவாந்தம்

காஸங்கா ஸங்கராதோர் பஜதி யதிபதௌ பத்ரவேதீம் த்ரிவேதீம் ||

யதிராஜர், வேதங்களாகிற பத்ரவேதியை அடைந்தபோது,

புத்த மதம் நழுவுகிறது ; கபில மதம் ஓடி ஒளிகிறது ;கணாமதம் அழிகிறது;

ப்ரஹ்மாவால் தோற்றுவிக்கப்பட்ட யோக மதமும், பசுபதி மதமும் மணம் அற்றதாகிறது;

குமாரில மதம் நசிக்கிறது;குருமதம் , பெருமைக்கு வெகு தொலைவில் எறியப்படுகிறது.

இப்படியிருக்க, சங்கரர் முதலானவர்களின் மதங்களின் நிலையைப் பற்றிச் சந்தேகம் தேவையா ?

—————–

ந்யாய பரிசுத்தியில் , ஸ்வாமி தேசிகன் யதிராஜரை நமஸ்கரிக்கிறார்

பத்யு ஸம்யமிநாம் ப்ரணம்ய சரணௌ தத்பாத கோடிரயோ

ஸம்பந்தேன ஸமித்யமாந விபவாந் தந்யாம்ஸ் ததாந்யாந்குருந் |

ஸுத்தம் ஸம்ஸ்ரித பாதராய ணதநோர் நாராயணஸ்யோக்திபி :

ஸ்ரீமாந் வேங்கடநாயக : ஸ்திதிபதம் நிர்மாதி நீதே :ஸுபம் ||

ஸ்ரீ யதிராஜரை நமஸ்கரித்து, அவருடைய திருமுடி சம்பந்தத்தாலும் திருவடி சம்பந்தத்தாலும் ,

பெருமைகளையும் பாக்யங்களையும் பெற்ற ஆசார்யர்களை நமஸ்கரித்து , பாதராயணராகிய

ஸ்ரீ வேத வ்யாஸரை சரீரமாகக் கொண்ட ஸ்ரீமந்நாராயணனுடைய ஸ்ரீஸுக்திகளைக் கொண்டு,

ஸ்ரீவேங்கடநாதன் ( ஸ்வாமி தேசிகன் ), ந்யாயபரிஸுத்தியை எழுதுகிறார் என்கிறார்.

————–

கத்ய பாஷ்யத்தில், ஸ்வாமி தேசிகன் அருள்கிறார்—-

லக்ஷ்மீ பதேர் யதி பதேஸ்ச தயைக தாம்நோ :

யோஸௌ புரா ஸமஜநிஷ்ட ஜகத்திதார்த்தம் |

ப்ராச்யம் ப்ரகாஸியது வ :பரமம் ரஹஸ்யம்

ஸம்வாத ஏஷ சரணாகதி மந்த்ர ஸார : ||

வாத்ஸல்ய குண பரனான லக்ஷ்மிபதிக்கும், யதிபதிக்கும்

( யதிராஜர் ) உலகத்தாருக்கு நன்மையை அளிக்கும் பொருட்டு,

எந்த ஸம்வாதம் முன்பு நடந்ததோ, த்வய மந்த்ரமான அந்த

ஸம்வாதம் , முன்னோர்கள் உபதேசித்த அந்தப் பரம ரஹஸ்யத்தை நமக்கு வெளிப்படுத்துவதாக———என்கிறார்.

( பங்குனி உத்ர நந்நாளில் யதிராஜர், திருவரங்கத்தில், திவ்ய தம்பதிகளிடம் சரணாகதிசெய்ததையும்,

அப்போது நடந்த ஸம்வாதத்தையும் குறிப்பிடுகிறார் )

—————

வித்ராஸிநீ விபூதவைரி வரூதிநீநாம் பத்மாஸநேந பரிசார விதவ் ப்ரயுக்த
உத் ப்ரேஷ்யதே புத ஜநை உபபத்தி பூம் நா கண்டா ஹரே ஸமஜ நிஷ்ட யதாத்ம நேதி –ஸங்கல்ப ஸூர்யோதய ஸ்லோகம்

நான்முகன் நாராயணனை ஆராதிக்க எந்த மணியை உபயோகித்தாரோ
எந்த மணியின் நாதமே அசுரர்களைப் பயந்து ஓடச்செய்ததோ அந்த மணியின் அவதாரமே இந்த நாடக ஆசிரியர் -தேசிகர்என்று ஞாநிகள் தகுந்த காரணங்களால் ஊகிக்கிறார்கள்

———-

ஸ்வாமி தேசிகன், எம்பெருமானாரின், அவதாரம் என்பதை, ஸ்வாமியின் திருக்குமாரரான ஸ்ரீ நயினாராசார்யர் —

ஸ்ரீமத் வேதாந்த தேசிக மங்களத்தில் புகழ்கிறார்

வேங்கடசாவதாரோயம் தத்கண்டாம் ஸோதவா பவேத் |

யதீந்த்ராம் ஸோதவேத்யேவம் விதர்க்யா யாஸ்து மங்களம் ||

ஸ்வாமி தேசிகன், திருவேங்கடமுடையானுடைய அவதாரமோ? அவரது

திருமணி ஆழ்வாரின் ( கண்டை–கண்டாமணி )அவதாரமோ?

அல்லது, எம்பெருமானார், இப்படி அவதரித்தாரா ? என்று, ஸ்வாமி தேசிகனைத் தரிசிப்போர்

பலபடியாக யூகித்துப் புகழும் ஸ்வாமி தேசிகனுக்கு மங்களம் —–என்கிறார்

———–

அடுத்த ச்லோகத்தில்,

ஸ்ரீ பாஷ்யகார : பந்தாந மாத்மநா தர்ஸிதம் புந : |

உத்தர்த்து மாகமதோ நூந மித்யுக்தாயாஸ்து மங்களம் ||

உலகுக்கு முன்பு வெளிப்படுத்திய விசிஷ்டாத்வைத

சித்தாந்தத்தை, மீண்டும் உலகில் தழைக்கச் செய்ய அவதரித்த

யதிராஜரோ இவர் என்று, வித்வான்களெல்லாம் வியந்து பாராட்டும் வேதாந்தாசார்யருக்கு மங்களம் —————-என்கிறார்

இப்படி, யதிராஜரே , கவிராஜராக –கவி ச்ரேஷ்டராக–ஸ்வாமி

தேசிகனாக அவதரித்தார் என்பது, பூர்வாசார்யர்கள் துணிபு. இந்த கவிராஜருக்கு, யதிராஜரிடம் , அளவில்லாத பக்தி.

———–

ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் அருளிய “ஸப்ததி ரத்ன மாலிகா’வில் ஸ்ரீ லக்ஷ்மிஹயக்ரீவன் கிருபையால், ஒரு ச்லோகம் ஸ்புரித்தது.

ஸ்ரீபாஷ்யம் விரசய்ய ஸம்ய மிவரோ ஜித்வா ஸ்வயம் வாதிந :

பாஹ்யாம்ஸ்சாபி குத்ருஷ்டிகாந் புவிபுந : பாஷ்ய ப்ரதிஷ்டாஸயா |

ஸ்ரீமத் வேங்கடநாத தேஸிகசிரோ ரத்நாத்மநா வீர்பபௌ

இத்யேவம் ச வதந்தி ஹந்த !க்ருதிந :த்ரைகாலிக ஜ்ஞாநி ந : ||-12-

ஸ்ரீ உடையவர், ஸ்ரீபாஷ்யத்தை அருளி அவைதிக மதங்களையும் , பிற மதங்களையும் வாதிட்டு வென்றார்.

இவ்வுலகில், ஸ்ரீபாஷ்யம் நிலைபெறவேண்டும் என்கிற க்ருபையால்,அந்த ஸ்ரீ எம்பெருமானாரே

மறுபடியும், ஸ்ரீ வேதாந்த தேசிகனாக அவதரித்தார் என்று, முக்காலத்தையும் உணர்ந்த ஞாநிகள் கூறுகிறார்கள்.

ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் , ஸப்ததிரத்ன மாலிகாவில்,

வேதே ஸஜ்ஜாதகேதே முநிஜனவசனே ப்ராப்த நித்யாவ மானே |

ஸங்கீர்ணே ஸர்வ வர்ணே ஸதி ததனுகுணே நிஷ்ப்ரமாணே புராணே ||

மாயாவாதே ஸமோதே கலிகலுஷ வசாச் சூன்ய வாதே அவிவாதே |

தர்மத்ராணாய யோதி பூத்ஸஜயதி பகவான் விஷ்ணு கண்டாவதார : ||

ஸ்வாமி தேசிகன் அவதரித்ததால், அழிந்த வேதங்கள் வளர்ந்தன;

புறக்கணிக்கப்பட்ட புராணங்கள் புத்துயிர் பெற்றன;

வர்ணாஸ்ரம தர்மங்கள் பழைய நிலைக்கு வந்தன;

பௌத்தம் போன்ற அவைதிக மதங்கள் ஒதுக்கப்பட்டன;

—————-

ஓம் கண்டவதாராய நம
ஓம் அநந்தார்ய தநயாய நம
ஓம் வேங்கடாதிபாய நம
ஸ்ரீ மல் லஷ்மண யோக்ய அம்ஸாய நம
ஓம் வரதாச்சார்ய வீஷிதாய நம
ஓம் ராமாநுஜார்ய ஸந் த்ருஷ்டாய நம
ஓம் ஸுபர்ண மநுசிந்தகாய நம
ஓம் தார்ஷ்ய தத்த வராய நம
ஓம் ஸூத்தாய நம
ஓம் ப்ரஸாதித ஹயாநநாய நம-10-

ஓம் அதீத சாங்க ஸகல ஸ்ருதயே நம
ஓம் ஸ்ம்ருதி விதே நம
ஓம் அக்ரண்யே நம
ஓம் இதிஹாஸ புராண ஜ்ஞாய நம
ஓம் ஸூ கவயே நம
ஓம் தர்க்க தத்விதே நம
ஓம் பாஷ்ய காராய நம
ஓம் பய ஹராய நம
ஓம் ஸூதாஸிநே நம
ஓம் துக்க ராஸி க்ருதே நம–20-

ஓம் ப்ரதாந பிரதிதந்தர ஜ்ஞாய நம
ஓம் தேவதா பாரமர்த்யவிதே நம
ஓம் ஸ்ருத வித்யாய நம
ஓம் ஸ்ரா வயித்ரே நம
ஓம் ஸ்ருத பாலாய நம
ஓம் ஸ்ருத ப்ரதாய நம
ஓம் ஸ்ரிதாய நம
ஓம் பாண்டித்ய தாத்ரே நம
ஓம் க்ருத க்ருத்யாய நம
ஓம் க்ருதிநே நம–30

ஓம் ஸூதியே நம
ஓம் நிரஸ்த சாங்க்யாய நம
ஓம் ப்ரத்யுக்த யோகாய நம
ஓம் காணாத பஞ்ஜநாய நம
ஓம் அசிச்சை தந்ய வாதாக்நாய நம
ஓம் க்ஷணி காணு மதார்த்த நாய நம
ஓம் ஸாகாரதீ நிராகர்த்ரே நம
ஓம் ஸூந்ய வாத தமோ நுதாய நம
ஓம் குத்ருஷ்ட் யுரக பஷீ ஸாய நம
ஓம் ஸப்த பங்கீ விலோப நாய நம-40

ஓம் பேத அபேத மதச்சேத்ரே நம
ஓம் தூத யாதவ கல்ப நாய நம
ஓம் அநீஸ வாதி தம் போளயே நம
ஓம் பாஷண்ட மத கண்டனாய நம
ஓம் ஸம் ரக்ஷிதாகமாய நம
ஓம் சங்க சக்ர தாரண ரஷித்ரே நம
ஓம் ஊர்த்வ புண்ட்ர அங்கநத்ராத்ரே நம
ஓம் ஸூத்த ஸத்வ மயாக்ருதே நம
ஓம் யத்யாசார ப்ரதிஷ்டாத்ரே நம
ஓம் ஸர்வ தந்த்ர ஸ்வ தந்த்ரதியே நம–50

ஓம் அவதார ரஹஸ்ய ஜ்ஞாய நம
ஓம் அர்ச்சா சவுந்தர்ய சக்ததியே நம
ஓம் அர்த்த பஞ்சக தத்வஜ் ஞாய நம
ஓம் தத்வ த்ரய விஸேஷ வித நம
ஓம் பக்தி யோக விரோதிக்நாய நம
ஓம் பக்தி மதே நம
ஓம் பகவத் ப்ரியாய நம
ஓம் ஞாந ஏக சாராய நம
ஓம் த்வய விதே நம
ஓம் விபக்தாதி க்ருதி த்ரயாய நம-60-

ஓம் சதுஸ்லோகி அர்த்த ஸாரஜ்ஞாய நம
ஓம் ஸம்யக் ஞாத அங்க பஞ்சகாய நம
ஓம் க்ஷட் அங்க யோக நிர்ணேத்ரே நம
ஓம் ஸப்த தந்து க்ருத உத்தமாய நம
ஓம் அஷ்டாக்ஷர ஏக நிராதாய நம
ஓம் நவமைக ரஸ ஆஸ்ரயாய நம
ஓம் தஸ தாத்பர்ய விஞ்ஞாத்ரே நம
ஓம் ஸத க்ருதே நம
ஓம் ஸஹஸ்ர விதே நம
ஓம் ஸ்தூல லக்ஷயா நம–70-

ஓம் அநேக நாநா கோடி அஜ்ஞாத நிவர்த்தகாய நம
ஓம் தர்ம சங்கவே நம
ஓம் ஸாது பிருந்த வந்தித அங்க்ரி ஸரோருஹாய நம
ஓம் பத்மாஷ அநந்த ஜநகாய நம
ஓம் அநந்த குணாகராய நம
ஓம் த்யாக ஸப்தார்த்த விதே நம
ஓம் தர்ம வேதிந நம
ஓம் விதி விசேஷ விதே நம
ஓம் உத்தம ஸ்லோக பாவஜ் ஞாய நம
ஓம் பஞ்ச கால பராயணாய நம–80-

ஓம் ஸூர ஸேவ்யாய நம
ஓம் பூர்ண மநஸே நம
ஓம் ஸூரீந்த்ர ப்ரதி ரூபகாய நம
ஓம் கவி தார்க்கிக பஞ்சாஸ்யாய நம
ஓம் நிகமாஞ்சல தேஸிகாய நம
ஓம் வைத்யாய நம
ஓம் முநீந்த்ராய நம
ஓம் ஸர்வ ஜ்ஞாய நம
ஓம் உப கர்த்ரே நம
ஓம் குரூத்தமாய நம –90-

ஓம் ஸத் ஸம்ப்ரதாய ஸ்திரதேய நம
ஓம் அநகாய நம
ஓம் ஸத்ய வாஸே நம
ஓம் ஸாது வ்ருத்தயே நம
ஓம் முக்த டம்பாய நம
ஓம் ஜிதாஷாய நம
ஓம் தீர்க்க பந்துமதே நம
ஓம் தயாளவே நம
ஓம் ஸாஸித்ரே நம
ஓம் ஸர்வ ஹிதா சரண தத் பராய நம –100-

ஓம் மஹா குரவே நம
ஓம் ஸ்வர்ண வர்ணாய நம
ஓம் ஸூ பாஹவே நம
ஓம் புண்டரீக த்ருஸே நம
ஓம் பவித்ர பாணயே நம
ஓம் வ்யாக்யாந முத்ராங்கித கராம்புஜாய நம
ஓம் ஸவ்ய பாணி தல ந்யஸ்த திவ்ய புஸ்தக பூஷணாய நம
ஓம் பர ஸீர்க்ஷ ந்யஸ்த வாம பாதாப்ஜ கடக உஜ்ஜ்வலாய நம -108-

—————–

ஸ்ரீ நயினாராச்சார்யர் அருளிச் செய்த ஸ்ரீ வேதாந்த தேசிக பிரபத்தி –

சீரார் தூப்புல் பிள்ளை யந்தாதி என்று செல்லும் தமிழால்
நேராக வேதாந்த தேசிகர் தாளிணைக் கீழ் மொழிந்தேன்
மறைப் பொருள் எல்லாம் எடுத்து இவ்வுலகு உயவே
சீராகிய வரதாரியன் பாதம் துணை நமக்கே –தனியன் –
ஸ்ரீ வரதாச்சார்யர் என்ற திருநாமம் பூண்ட ஸ்ரீ நயினாராச்சார்யர் திருவடிகளே நமக்கு துணை –

ஸ்ரீ மல் லஷ்மண யோகீந்த்ர சித்தாந்த விஜய த்வஜம்
விஸ்வாமித்ர குலோத்பூதம் வரதார்யம் அஹம் பஜே –

———————————————-

பத்து ஸ்லோகங்கள் கொண்ட -ஸ்வாமியின் திருவடிகளின் பெருமையை சொல்லும் பிரபந்தம் –

வித்வந் மதங்க ஜஸிகா பரணாய மானவ் விஸ்வாதி சாயி மஹி மாம்பு நிதான பூமவ்
வித்வேஷி வாதி மகுடீக்ருத குட்டநவ் தவ் வேதாந்த ஸூரி சரணவ் சரணம் பிரபத்யே -1-

வித்வான்களுக்கு சிரோபூஷணம் -ஓத்தார் மிக்கார் இலையாய பெருமைக்கடல் –
பரமதவாதிகள் தலைகளை குட்டும்-ஸ்வாமி திருவடிகளை சரணம் அடைகிறேன் –

விஸ்வம்பராம் அதிதராம் அபி பாசயந்தவ் வின்யாசதோ விவித ஸஜ்ஜன தானுபாவ்யவ்
விஸ்தார ஸம்ஸ்ருதி மஹார்ணவ கர்ண தாரவ் வேதாந்த ஸூரி சரணவ் சரணம் ப்ரபத்யே -2-

திருவடி ஸ்பர்சத்தாலே பூமிப்பரப்பு அனைத்தையும் புனிதமாயும் -நல்லோர்க்கு அனைத்து சுற்றமாயும் –
பிறவிக்கடல் கடத்தும் ஓடகாரன் போன்ற ஸ்வாமி திருவடிகளை சரணம் புகுகிறேன் –

விஸ்வ அந்தராந்த தமஸ ஷபண ப்ரவீணவ் வித்யோதமான நகரேந்து மயூகா ஜாலை
விக்யாத தாமரச சங்க ரதாங்க சின்கவ் வேதாந்த ஸூரி சரணவ் சரணம் ப்ரபத்யே –3-

திரு நகங்களில் தேஜஸ் அந்தகாரங்களைப் போக்குமதாய்-புருஷோத்தம லக்ஷணங்களான –
தாமரை சங்கு சக்கர லஞ்சனைகள் பொருந்திய திருவடிகளை சரணம் அடைகிறேன் –

வித்வேஷமான மத மத்சர வித்விஷவ் யவ் விஷ்ண்வாலயா அநுக மனோத்தம நித்ய க்ருத்யவ்
வேதாந்த வ்ருத்த விஹித அஞ்சலி கோசரவ் தவ் வேதாந்த ஸூரி சரணவ் சரணம் ப்ரபத்யே -4-

த்வேஷம் அஹங்காரம் குலப்பிறப்பால் வரும் கர்வம் அசூயை அனைத்தையும் போக்குமதாய் –
உகந்து அருளினை திவ்ய தேசங்களுக்கு போவதே கர்தவ்யமாக கொண்ட திருவடிகளை –
ஞானிகள் அனைவரும் வணங்கும் திருவடிகளை -அடியேன் சரணம் புகுகிறேன் –

விஷ்ண்வர் பிதாத் மஜன பாக்ய விபாக பூதவ் விப்ராஜமான நவகோக நாதனுகல்பவ்
வேஷாந்தரோ பகத பல்லவ தல்லஜவ் தவ் வேதாந்த ஸூரி சரணவ் சரணம் பிரபத்யே –5-

பர ந்யாஸம் பண்ணின பாக்யவான்களின் புண்யபலமாயும் -விளங்கும் செவ்விய ஆம்பலைப் போன்றதும் –
சிறந்த தளிர் வேற்று உருவம் கொண்டதாயும் உள்ள ஸ்வாமி திருவடிகளைத் தஞ்சம் என்று அடைகின்றேன் –

வேதோ முகைரபி ஸூரைஸ் விஹித பிராணாமவ் வேலாதி லங்கி ஸூஷூமா ஸூ குமார பாவவ்
விஸ்மேரே கேஸரே ல சந்ம்ருது ளாங்குலீ வேதாந்த ஸூரி சரணவ் சரணம் பிரபத்யே –6-

பிரம்மாதி தேவர்களும் தொழுமவையாய் -ஒப்பற்ற அழகு மார்த்வம் யுடையவையாய் –
அழகிய கேசரங்கள் போன்ற மெல்லிய விரல்களை யுடையவையாய் யுள்ள ஸ்வாமி திருவடிகளை சரணம் புகுகிறேன்

வித்ரா விதோத்பட விகார ரஜோ குணவ் தவ் விக்யாத பூரி விபவேன ரஜஸ் கணேன
விஸ்வோபகார கரணாய க்ருதாவதாரவ் வேதாந்த ஸூரி சரணவ் சரணம் பிரபத்யே –7-

திருவடித்த துகளாலே ரஜஸ் போக்கி ஜகாத் அனைத்தும் உய்யும்படி தோன்றிய
ஸ்வாமி திருவடிகளில் அடைக்கலம் புகுகிறேன் –

விஷ்ண்வங்க்ரி நிர்கத சரித் ப்ரவரானுபாவ்யவ் வித்யா வினீத ஜனிதைர் விமலைர் ஸ்வ தீர்த்தைர்
வ்யா நம்ர சிஷ்ய ஜன ரக்ஷண ஜாக ரூகவ் வேதாந்த ஸூரி சரணவ் சரணம் பிரபத்யே –8-

முக்குணம் அற்ற சிஷ்யர்களாலே சேர்க்கப்பட்ட ஸ்ரீ பாத தீர்த்தத்தால் -கங்கையில் புனிதமானவையும்
சிஷ்ய ரக்ஷணத்தில் கண்ணும் கருத்தமாயும் உள்ள ஸ்வாமி திருவடிகளே சரணம் –

வீதீ ஷு ரங்க நகரே க்ருத சங்க்ர மவ் தவ் விஷ்ணு உத்ஸவேஷூ விதி வாசவ ஸேவிதேஷூ
வித்யா வினீத ஜனதா விஹித அநு சாரவ் வேதாந்த ஸூரி சரணவ் சரணம் பிரபத்யே-9-

பிரம்மாதி தொழும் ஸ்ரீ ரெங்க நாதன் திரு வீதிகளில் எழுந்து அருளும் பொழுது அநு யாத்திரையாக எழுந்து அருளுவனவாயும்
முக்குறும்பு அறுத்த பாகவதர்களால் பின் தொடரப்படுமவையாயும் உள்ள ஸ்வாமி திருவடிகளை சரண் அடைகிறேன் –

விஸ்வாச விஷ்ணு பத பக்தி விரக்தி சூன்யம் விப்ரஷ்ட க்ருத்யமபி மாம் விஷயேஷு சக்தம்
வித்வத் சபா அநு கதி யோக்ய மிஹா ததானவ் வேதாந்த ஸூரி சரணவ் சரணம் பிரபத்யே -10-

மஹா விஸ்வாசம் பூர்வகமாக பக்தி வைராக்யம் இல்லாமல் -ஸாஸ்த்ர விஹத கர்மாக்களை செய்யாமல்
சப்தாதி விஷயங்களில் ஈடுபட்ட அடியேனையும் வித்வத் சபைக்கு யோக்யனாக ஆக்கி அருளும்
ஸ்வாமி திருவடிகளைச் சரணம் அடைகிறேன் –

——————————–

சர்வ தந்த்ர ஸ்வ தந்த்ராய ஸிம்ஹாய கவி வாதினாம் வேதாந்தாசார்ய வர்யாய வேங்கடேசாய மங்களம் –1-

நபஸ்ய மாசி ஸ்ரோணாயாம் அவதீர்ணாய ஸூரயே விச்வாமித்ர அந்வயா யாஸ்து வேங்கடேசாய மங்களம் –2-
புரட்டாசி திருவோணம் -விச்வாமித்ர கோத்ரம் –

பிதா யஸ்ய அநந்த ஸூரி புண்டரீகாக்ஷ யஜ்வன பவ்த்ரோ ய தநயா தோதாரம்பாயா தஸ்ய மங்களம் –3-
அநந்த சூரி -தோதாரம்பை தம்பதிகளின் திருப் புத்திரர் -புண்டரீகாக்ஷ சோமயாஜியின் பவ்த்ரர்-இவருக்கு மங்களம் –

வேங்கடேச அவதாரோயம் தத் கண்டாம் சோதவா பவேத் யதீந்த்ராம் சோத வேத்யேவம் விதர்க்யா யாஸ்து மங்களம் -4-
சாஷாத் திருவேங்கடமுடையான் அவதாரம்-திருமணியின் அம்சம் -யதிராஜர் அம்சம் -என்று
கொண்டாடப்படும் ஸ்வாமிக்கு மங்களம்

ஸ்ரீ பாஷ்யகார பந்தானம் ஆத்மனா தர்சிதம் புன உத்தர்தும் ஆகதோ நூனம் இத் யுக்தா யாஸ்து மங்களம் –5-
இராமானுஜ தர்சனத்தை புனர் உத்தாரணம் பண்ண வந்த ஸ்ரீ பாஷ்யக்காரரே இவர்

யோ பால்யே வரதார் யஸ்ய பிராசார்யஸ்ய பராம் தயாம் அவாப்ய வ்ருத்திம் கமித தஸ்மை யோக்யாய மங்களம் –6-
பிராசார்யரான ஸ்ரீ நடாதூர் அம்மாள் எனப்படும் ஸ்ரீ வாத்சல்ய வரதாசார்யர் திரு அருளுக்கு பால்யத்திலே இலக்காகி
ஸ்ரீ அப்புள்ளாராலே பின்பு அருளப்பட்ட ஸ்வாமிக்கு மங்களம் –

ராமாநுஜார்யா தாத்ரேயாத் மாதுலாத் சகலா கலா அவாப விம்சத்யப்தே ய தஸ்மை ப்ராஞ்ஞாயா மங்களம் –7-
அம்மானாகிய ஸ்ரீ கிடாம்பி அப்புள்ளார் இடம் -20-வயசுக்குள் அனைத்தையும் கற்ற ஸ்வாமி

ஸ்ருத பிரகாசிகா பூமவ் யே நாதவ் பரி ரக்ஷிதா ப்ரவர்த்திதா ச பாத்ரேஷு தஸ்மை ஷ்ரேஷ்டாய மங்களம் — 8-
ஸ்ருத பிரகாசிகை ரஷித்து-தக்கவர்கள் மூலம் பரவச செய்த ஸ்வாமி –

சாம்ஸ்க்ருதீபிர் த்ராமி டீபி பஹ்வீபி க்ருதபி ஜனான் ய சமுஜ் ஜீவயா மாச தஸ்மை சேவ்யாய மங்களம் -9-
வடமொழி தென்மொழி ஸ்ரீ ஸூக்திகளால் லோகத்தை உஜ்ஜீவித்தவர் –

யா க்யாதி லாப பூஜா ஸூ விமுகோ வைஷ்ணவே ஜனே க்ரயணீய தஸாம் ப்ராப்த தஸ்மை பவ்யாய மங்களம் –10-
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு -கேசவா புருஷோத்தமா கிளர் சோதியாய் குறளா என்று பேசுவார் அடியார்கள்
எம்தம்மை விற்கவும் பெறுவார்களே-என்றபடி கைங்கர்யம் செய்யும் ஸ்வாமிக்கு மங்களம் –

யஸ்மா தேவ மயா சர்வம் சாஸ்திரம் அக்ராஹி நாந்யத-தஸ்மை வேங்கட நாதாய மம நாதாய மங்களம் –11-
சகல சாஸ்திரங்களையும் ஸ்வாமி இடமே கற்றேன் –

பித்ரே ப்ரஹ்ம உபதேஷ்ட்ரே மே குரவே தைவதாய ச ப்ராப்யாய ப்ராபகா யாஸ்து வேங்கடாயாஸ்து மங்களம் –12-

ய க்ருதம் வரதார்யேண வேதாந்தாசார்ய மங்களம் ஆசாஸ்தே அனுதினம் ஸோபி பவேத் மங்கள பாஜனம்–13-

—————————————————-

இந்த குரு பரம்பரை
ஸ்ரீ ராமானுஜர்
கிடாம்பி ஆச்சான் -ப்ரணதார்த்தி ஹரர்
அவர் குமாரர் -ராமானுஜாச்சார்யார்
அவர் குமாரர் ரங்க ராமானுஜாச்சார்யார்
அவர் குமாரர் ராமானுஜாச்சார்யார் என்னும் அப்புள்ளார்
இவரே வாதி ஹம்ஸ அம்பு வாஹர் என்றும் காஞ்சி கடாம்பூ என்றும் சொல்லப்படுபவர்
இவர் ஸகோதரி -தோதாரம்பை -என்பவளை
அநந்த ஸூரி -என்பவரை திருமணம் செய்தவர்
அநந்த ஸூரி -காஞ்சியில் உள்ள புண்டரீகாக்ஷ ஸூரி யுடைய திருக்குமாரர் –
இந்த தம்பதிக்கே -வேதாந்தச்சார்யார் -திருக்கண்ட அம்சமாக அவதாரம்
அநந்த ஸூரி -74 சிம்ஹாசனாதிபதிகளில் ஒருவராக இருந்தும் தமது மாதுலரான அப்புள்ளார் இடம் ஆஸ்ரயிக்கச் செய்தார்
அப்புள்ளார் ஆச்சார்யரான நடாதூர் அம்மாளும் சிறிய வயதிலேயே அவரைக் கடாக்ஷித்து அருளினார்

தேசிகருக்குப் பின்
ப்ரஹ்ம தந்த்ர ஸ்வ தந்த்ர ஜீயர் -பரகால ஸ்வாமி மடத்துக்கு முதல் ப்ரவர்த்தகர்
தேசிகர் திருக்குமாரர் நாயனாச்சார்யர்
அவர்க்குப் பின்பு
கடிகாசலம் அம்மாள் -இவர் இடம் தான் அஹோபில மட ஸ்தாபகர் ஆதி வண் சடகோப ஸ்வாமி கால ஷேபாதிகள் பெற்றார்
கடிகாசல அம்மாள் திருக்குமாரர் வரத விஷ்ணு வாச்சாரியார்

பரத்வாதி பஞ்சகத்தில் நடாதூர் அம்மாள்
ஸ்ரீ ரெங்கஸ்தல வேங்கடாத்ரி கரிகிர் தயாதவ் சஷ்டோத்தரே
ஸ்தாநே க்ராம நிகேதனேஷு ச ஸதா ஸாந்நித்யமாஸே துஷே
அர்ச்சா ரூபிணாம் அர்ச்சக அபிமதிதஸ் ஸ்வீ குர்வதே விக்ரஹம்
பூஜாம் சாகில வாஞ்சிதான் விதரதே ஸ்ரீ ஸாய தஸ்மை நம
என்று அர்ச்சா மூர்த்திக்கு மங்களா ஸாஸனம் செய்துள்ளார்

வடக்கு திரு வீதிப்பிள்ளை சிஷ்யர் கிடாம்பி ஸ்ரீ ரெங்காச்சார்யார்
அவர் குமாரரும் சிஷ்யரும் கேசவாச்சார்யர்
அவர் குமாரரும் சிஷ்யரும் ஸ்ரீ நிவாஸாச்சார்யார்
அவர் குமாரரும் சிஷ்யரும் கேசவாச்சார்யர்
அவர் குமாரரும் சிஷ்யரும் ஸ்ரீநிவாஸாச்சார்யார்
இவர் திரு நாராயண புரத்தில் அவதாரம் -இவரே ஆதி வண் சடகோப யதீந்த்ர மஹா தேசிகன்
அஹோபில மட மூலஸ்தர் –
இவர் நடாதூர் அம்மாளின் திருப்பேரனான ஸ்ரீ வரத விஷ்ணு வாசர் இடம் கிரந்த காலஷேபம் பண்ணினார்
இவர் காலம் -கிபி 1379-1458-

—————-

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நயினாராச்சார்யர் சுவாமி திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பராங்குச பஞ்ச விம்சதி–ஒன்றான ஸ்ரீ கோயில் அண்ணன் ஸ்வாமிகளுடைய திருப் பேரானார் அருளிச் செய்த ஸ்லோகம்-

October 11, 2024

ஸகல வேதாந்த ஸாரார்த்த பூர்ணா ஷயம் விபுல வாதூல கோத்ர உத்பவாநாம் வரம்
ருசிர ஜாமாத்ரு யோகீந்திர பாதாஸ்ரயம் வரத நாராயணம் மத் குரும் ஸமாஸ்ரயே–ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் தனியன் –

ஸ்ரீரம்ய வரமௌநீந்த்ர ஸ்ரீபாதாப்ஜமதுவ்ரதம்
வ்ருஷபே மைத்ரபே ஜாதம் வரதார்யமஹம் பஜே

வாழி திருநாமம்
திருச்சேலை இடைவாழி திருநாபி வாழியே
தானமரு மலர்க்கண்கள் தனியுதரம் மார்பம்
தங்கு தொங்கும் உபவீதம் தடந்தோள்கள் வாழியே
மானபரன் மணவாள மாமுனி சீர் பேசும்
மலர்ப்பவளவாய் வாழி மணிமுறுவல் வாழியே
ஆனனமுந்திருநாமம் அணி நுதலும் வாழியே
அருள்வடிவன் கந்தாடை அண்ணன் என்றும் வாழியே

பேராத நம்பிறப்பைப் போக்க வல்லோன் வாழியே
பெரிய பெருமாள் அருளால் பெருமை பெற்றோன் வாழியே
ஏராரு நன்மதியின் ஏற்றமுள்ளோன் வாழியே
எதிராசன் தரிசனத்தை எடுத்துரைப்போன் வாழியே
பாரார நன்புகழைப் படைக்க வல்லோன் வாழியே
பகர்வசனபூடணத்தின் படியுடையோன் வாழியே
ஆராமஞ்சூழ்கோயில் அவதரித்தோன் வாழியே
அவனி தொழுங் கந்தாடை அண்ணன் என்றும் வாழியே

——

1-ஸ்ரீ வாதூல வரத நாராயண குரு ஸ்வாமிகள் -ஒண்ணான அண்ணன் ஸ்வாமி –
புரட்டாசி -கன்னி-உத்திரட்டாதி திரு அவதாரம் -1371-
ஸ்ரீ பரம பதம் -சித்திரை த்ருதீயை திதி

2–ஸ்ரீ கோயில் கந்தாடை ஆயன் -ஸ்ரீ ஸ்ரீநிவாஸாச்சார்யார் ஸ்வாமிகள் -மார்கழி உத்தரட்டாதி

3-ஸ்ரீ ஸ்வாமி கோயில் அண்ணன் -ஸ்ரீ வராச்சார்யர் ஸ்வாமிகள் -புரட்டாசி உத்தரட்டாதி

4–(11th Swami as per Chart )ஸ்ரீ குமார கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் -ஸ்ரீ ஸ்ரீநிவாஸாச்சார்யார் ஸ்வாமிகள் –ஆவணி மிருக சீர்ஷம் –
ஸ்ரீ பரம பதம் –பிலவங்க வருஷம் -1547-மார்கழி கிருஷ்ண சதுர்த்தசி திதி-

5-(12th Swami as per Chart)-ஸ்ரீ பெரிய கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் -பங்குனி ஆயில்யம்
ஸ்ரீ பரம பதம் -விச்வாவஸு -1605-மார்கழி சுக்ல பக்ஷ சப்தமி திதி-

6th (13th Swami as per Chart) ஸ்ரீ ஸ்வாமி குமார கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் -ஆடி சித்திரை
ஸ்ரீ பரம பதம் -சுக்ல வருஷம் -1629-மார்கழி -சுக்ல பக்ஷ தசமி திதி

7–(14th Swami as per Chart)ஸ்ரீ ஸ்வாமி வேதலப்பை அண்ணன் ஸ்வாமிகள் -ஸ்ரீ வரதாச்சார்யர் ஸ்வாமிகள் -ஆவணி திருவோணம்
ஸ்ரீ பரம பதம் -விளம்பி -1658-கார்த்திகை சுக்ல சதுர்தசி திதி

8-(15a Swami as per Chart)ஸ்ரீ ஸ்வாமி குமார அண்ணன் -ஸ்ரீ குமார வரதாச்சார்யர் ஸ்வாமிகள் -மாசி புனர்பூசம்

9-(15b Swami as per Chart)ஸ்ரீ ஸ்வாமி கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் -ஸ்ரீ ஸ்ரீநிவாஸாச்சார்யார் ஸ்வாமிகள் -ஐப்பசி ரோஹிணி
ஸ்ரீ பரம பதம் -பிங்கள -1677-ஆடி பவ்ர்ணமி திதி

10–(16a Swami as per Chart ) ஸ்ரீ கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் -ஸ்ரீ வரதாச்சார்யர் ஸ்வாமிகள் -ஆனி -சதயம் –
ஸ்ரீ பரமபதம் -ஸர்வஜித் –1707-வைகாசி -கிருஷ்ண பஞ்சமி திதி

11th- (17a Swami as per Chart)ஸ்ரீ ஸ்ரீநிவாஸாச்சார்யார் ஸ்வாமிகள் -ஐப்பசி உத்திராடம்

12th (17b Swami as per Chart) ஸ்ரீ குமார கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் -ஸ்ரீ வித்வத் வரதாச்சார்யர் ஸ்வாமிகள் -ஆவணி அனுஷம்
ஸ்ரீ பரமபதம் -சுக்ல வருஷம் –1749-ஆவணி சுக்ல திரயோதசி திதி –

13–(18th Swami as per Chart) ஸ்ரீ கோயில் அண்ணன் ஸ்ரீ ரெங்காச்சார்யார் ஸ்வாமிகள் -வைகாசி பூரம்
ஸ்ரீ பரமபதம் -விரோதி -1769-மார்கழி -கிருஷ்ண பஞ்சமி

14–(19th Swami as per Chart)-ஸ்ரீ பெரிய அண்ணன் ஸ்வாமிகள் -சித்திரை -ரோஹிணி
ஸ்ரீ பரமபதம் -யுவ -1815-மார்கழி -சுக்ல -துவாதசி -திதி

15–(20th Swami as per Chart) ஸ்ரீ அண்ணன் வரதாச்சார்யர் ஸ்வாமிகள் -மார்கழி பூராடம்
ஸ்ரீ பரமபதம் -ஈஸ்வர -1817-மார்கழி கிருஷ்ண த்ருதீயை திதி

16-(21st Swami as per Chart)ஸ்ரீ அண்ணன் ரெங்காச்சார்யார் ஸ்வாமிகள் -ஐப்பசி மூலம்

17 (22nd Swami as per Chart) ஸ்ரீ குமார அண்ணன் ஸ்வாமிகள் –ஸ்ரீ வரதாச்சார்ய ஸ்வாமிகள் -ஆங்கீரஸ வருஷம் பங்குனி ரேவதி
ஸ்ரீ பரமபதம் -சாதாரண வருஷம் -1850-ஆவணி சுக்ல தசமி திதி

18-(23rd Swami as per Chart) ஸ்ரீ அண்ணன் ரெங்காச்சார்யார் ஸ்வாமிகள் -ஸோப கிருது வருஷம் -வைகாசி கேட்டை –
ஸ்ரீ பரமபதம் -கர -1891–3rd nov -ஐப்பசி சுக்ல த்விதீயை திதி

19-(24th Swami as per Chart)-ஸ்ரீ அண்ணன் வரதாச்சார்யர் ஸ்வாமிகள் -பவ வருஷம் -ஆவணி பூசம் [20-Jun-1874]
ஸ்ரீ பரமபதம் -பரிதாபி -ஆனி -சுக்ல அஷ்டமி -[22-Jun-1912]

20 (25th Swami as per Chart) ஸ்ரீ அண்ணன் ரெங்காச்சார்யார் ஸ்வாமிகள் -சாதாரண வருஷம் -ஆனி சித்திரை -[17-Jun-1910]
ஸ்ரீ பரமபதம் -[04-Dec-1992]-ஆங்கீரச கார்த்திகை சுக்ல தசமி –

21 (26th Swami as per Chart) ஸ்ரீ அண்ணன் ஸ்ரீநிவாஸாச்சார்யார் ஸ்வாமிகள் -தாது வருஷம் மாசி திருவாதிரை -[20-Feb-1937]

22-(27th Swami as per Chart.)வர்த்தமான ஸ்வாமிகள் -ஸ்ரீ அண்ணன் திருவேங்கடாச்சார்யார் ஸ்வாமிகள் -விரோதி வருஷம்-ஐப்பசி -உத்ராடம் [28-Oct-1949]

—————

ஸ்ரீ பராங்குஸ நுதிம் ய ஆதநோத் தத் பாதாப்ஜ பிரபத்தி சோதித
தம் வாதூல குல பூஷணம் தயா வாரிதம் வரத தேசிகம் பஜே

ஸ்ரீ மந் பராங்குச நிரங்குச தத்த்வ போத வாத்ஸல்ய பூர்ண கருணா பரிணாஹ ரூப
ஸுசீல்ய சாகரம் அநந்த குணாகரம் த்வாம் ஸம்ஸார தாப ஹரணம் வ்ருணே அஹம் –1-

காஸார ஸம்யமி முகா கமலா ஸஹாய பக்தா ப்ரபத்தி பதவீ நியதா மஹாந்த
யஸ்யா பவந் அவயவா இவ பாரதந்தர்யாத் தஸ்மை நமோ வகுள பூஷண தேஸிகாய–2-

பொய்கையாழ்வார் முதலான ஶ்ரிய:பதியின் பக்தர்களும், ப்ரபத்தி மார்க்கத்தில் நிலைநின்றவர்களுமான மகான்களும், பாரதந்த்ர்யத்தாலே யாவர் நம்மாழ்வாருக்கு அவயவங்கள் போன்று இருந்தார்களோ, அந்த மகிழ்மாலை மார்பினரான சடகோபனுக்கே நான் உரியேனாவேன்

ஸ்ரீ ரங்கராஜ பத பங்கஜ ஸங்க ஸீலம் ஸ்ரேய பரம் மதுர பூர்வ கவேர பூர்வம்
நாதார்ய யாமுன யதீஸ்வர பாகதேயம் நாதம் குலஸ்ய மம நவ்மி பராங்குசார்யம் –3-

பாப க்ரியா ஸூ நிரதாஸ் ஸ்ருணு தாஸ் மதுக்தம் தாப த்ரயேண பவிந பரிதப்யமாநா
ஆபத் தநம் மதுரிபோர் பவ தாம வித்யா ஸ்வாப ப்ரஹாண நிபுணஸ் ஸரணம் ஸடாரி –4-

நித்யோத முக்த உததத் குணகோ முமுஷு வ்யாஸாதி வத் பகவதா கிமநு ப்ரவிஷ்ட
அத்ர்யாதி ஸூநுரிஹ வர்ண யுக க்ரமாத் கிம் ஆஸீத் புராண புருஷ ஸச வைரி யோகீ –5-

கர்மேதி கேஸித பரே மதிரித்ய தாந்யே பக்திம் பரே ப்ரபதநம் ப்ரவத ந்த்யுபாவம்
ஆம் நாய ஸார சதுராஸ் த்வமித அநு பாவம் த்வாமேவ யாந்தி ஸரணம் ஸடஜித் முநீந்த்ர –6-

பக்தாத் யுபாய ரஹித பதிதோபவாப் தவ் த்வத் பாத ஸேவ நரஸே அபி சதுர் பலோ அஹம்
இத்தம் ஸதீஹ ஸட கோப தயைக மூர்த்தே க்ருத்யம் கிமஸ்தி மம ஸம்ஸ்ருதி மோசநாய –7-

த்வத் திவ்ய ஸூக்தி பரி ஸீலந மாத்ர மேவ நிஸ்ரேய ஸாதி கமநே நிரபேஷ ஹேது
தச் சாஸ்தி மே ந ஸட வைரி குரோர் மஹாத்மந் உஜ்ஜீவநம் கதமஹோ மம ஜாக டீதி –8-

த்வந் நாம கீர்த்தந மக்ருத்ரிம மாதநோதி யஸ் தஸ்ய ஸம் ஸரண நிஸ் தரணம் கடேத
துர் வாஸநா கலுஷி தஸ்ய நமே அஸ்தி புத்தி தத்ராபி கேஸர விபூஷ கிமாத்ம நீநம் –9-

த்வத் கிங்கரத் வரஸிகாஸ்தவ தாஸ தாஸ தாஸ்ய ஏக ரஸ்ய முதி தாஸ் ச பஜந்தி முக்திம்
தத்ராப்யஹம் ஸகநவாந் ந ஸடாரி யோகிந் அத்யாஹிதம் கதமபைது பவோத்தி தம் மே -10-

த்வத் விக்ரஹே க்ஷண மதோ தவ ஸம் ஸ்ம்ருதிஸ் ச
முக்த்யை பவேதி திவ தந்தி பரங்குஸார்ய
நித்ரா ப்ரமாத மலி நீக்ருத மாந ஸஸ்ய
தத்ராபி ஸக்திரிஹ மே ந கதம்ப வேயம்–11

ஏவம் கதா சிதபி குத்ரசித ஸ்த்யுபாய
நைவாக நாசந விதவ் மமதாவ கஸ்ய
ஆகஸ்மிகீம் தவ க்ருபாமப ஹாய மாயா
கோலா ஹல ப்ரஸம நீம் குருகா புரீஸ –12-

அவ்யாஜ பந்தும் அவிஸேக்ஷம் அஸேஷ ஐந்தோ
உத்வேல வத்ஸல தயா க்ருபயா ச பூர்ணம்
த்வாமாம நந்தி ஸட வைரி முநே ததஸ் தே
ஹாதும் ந யுக்தம பராதி நமப்யஹோ மாம் –13-

யாவச் ச யச்ச துரிதம் ஸகலஸ்ய ஐந்தோ
தாவச் ச தத்தத திகம் ச மமாஸ்தி ஸத்யம்
ஏதத் வச கதமபூத் ஸததாந் ருதோக்தி
ஸீ லஸ்ய மே ஸட ரிபோ ததிதம் விசித்ரம் -14

ஸாஸ்த்ரேண யத் விஹித மா சரணீய மேதத்
ஸர்வைர் நிஷித்த மிஹ யத் ததுபேக்ஷணீயம்
இத்யாதி கம் ஸடரிபோ ஸதஸி ப்ரவீமி
ஹை ஸந்தநோமி ரஹஸி ஸ்வ வஸோ விருத்தம் –15-

ப்ரச்சந்ந பாதக ஸதா வ்ருத சேதஸோ மே
ஸம் ப்ரீணிதா ப்ரணதி பூமி கயாசித்
ஸத்கார மாதரப ரேண பரா வரஜ்ஞா
குர்வந்தி ஹந்த ஸட வைரி முநே ஹ தோஸ்மி –16-

பத்ப்யாம் ஸபே தவ ஸடாரி முநீந்த்ர யோ அபூத்
உத்தாம தோஷ கண நாந்திம கோடி நிஷ்ட
ஸோ அபி ப்ரக்ருஷ்ட விபவோ யத பேஷயா ஸ்யாத்
தஸ்மாச் ச பாப பரிதோ அஹமிதோ ந பாப –17-

பூர்வை ஸ்வ நைச்யம் அநு ஸம்ஹித மார்ய வர்யை
மாமேவ வீஷ்ய மஹதாம் ந ததஸ்தி தேஷாம்
நைச்யம் த்விதம் ஸடரிபோ மம ஸத்யமேவ
மத்தஸ் பரோ ந மலிநோ யத ஆவிரஸ்து –18-

உக்த்வா ஸ்வ தோஷ விஷயம் வசனம் த்வத க்ரே
ஸம்ஸாரா பீருரிவ தேந வஞ்சகோ அஹம்
ஸாமர்த்ய மேவ ஸட கோப விபாவ யாமி
ஸம் வீஷ்ய கம் குண மிஹாஸி மயி ப்ரசந்ந –19-

கிந்து க்ரியா ஸமபி ஹார க்ருதாபராத
ஹந்தாநு தப்ய புநரப்ய பராத காரீ
பத்மாஸ கஸ்ய பரிஹாஸ ரஸோசி தோ அஹம்
ஏதத் விலோக்ய ஸட கோப மயி ப்ரஸீத –20-

காம ப்ரமோஹ மத மத்ஸர மந்யுலோபை
பராம்பரீத உதிதை பரி பீட்யமாநம்
தைவாத் த்வதீ க்ஷண பதம் தயயா ஸடாரே
பாஹி ப்ரபந்ந மிமமுந்ந மதாக ஸம் மாம் –21-

கார்யா க்ருபா ஸூமதிபிர் கலு துக்கி தேஷு
துக்கீ மயா ந ஸத்ரு ஸோப்ருஸ துக்க பாஜாம்
தஸ்மாத் தவாகி லஜநேஷு சயா அநு கம்பா
மய்யே வதாம் ஸட ரிபோ நிப்ருதம் நிதே ஹி –22-

விஸ்வோ பகாரக மகார்ணவ தாரகம் த்வாம்
அப்ராப்ய ஹை ஸடரிபோ ஹத ஏவ பூர்வம்
அத்யத்வதீய க்ருபயா ப்ரதி லப்த ஸத்த்வ
த்வத் ஸேவ நாம் ருதர ஸேந ஸூகீ பவாநி –23

அத்ராப்ய முத்ர கரண த்ரிதய ப்ரவ்ருத்த்யா
த்வத் பாத பங்கஜ ஜூஷாம் விதுஷாம் ப்ரஸாதம்
நித்யம் லபே மஹி ந சாந்யத பேஷிதம் ந
ப்ரத்யக்ர கேஸர பரிஷ்கிருத காரி ஸூநோ –24-

வாதூல வேங்கட பதிம் வரதார்ய ஸூநும்
அஸ்மத் குரும் தவ பத ப்ரவணம் ஸமீஷ்ய
அஞ்ஞம் க்ருதாகஸம் அநாதம் அகிஞ்சநம் மாம்
த்வத் கிங்கரம் ஸட ரிபோ ஸததம் குருஷ்வ –25

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கோவில் கந்தாடை அண்ணன் -ஸ்ரீ வராச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள் அருளிச் செய்து அருளிய–ஸ்ரீ சதுஸ்லோகீ –ஸ்லோகம் 1 -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –ஸ்ரீ நிகமாந்த தேசிகன் ஸ்வாமிகள் அருளிச் செய்த வியாக்யானம் –ஸ்ரீ உ .வே. கார்ப்பங்காடு வரதாச்சார்யர் ஸ்வாமிகள் அருளிச் செய்த வியாக்யானம்-

October 11, 2024

ஸ்வாத யன்நிஹ ஸர்வேஷாம்
த்ரய்யந்தார்தம் ஸுதுர்க் ரஹம்
ஸ்தோத்ர யாமாஸ யோகீந்திர:
தம் வந்தே யாமுநாஹ்வயம்தனியன்

யத் பதாம்போருஹத்யாநவித்வஸ்தாசேஷ கல்மஷ:
வஸ்துதாமுபயா தோஹம் யாமுநேயம் நமாமிதம்

நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம
நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூநவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் சதா –

அவதாரிகை –
நம் தர்சனத்துக்கு பிரதானம்
ரஹஸ்ய த்ரயம் -என்றும்
ஸ்லோக த்வயம் -என்றும்
சதுஸ் ஸ்லோகீ –என்றும்
நம் ஆச்சார்யர்கள் அருளிச் செய்து போருவர்கள் –

இதில் திரு மந்த்ரத்தாலே ஸ்வரூபமும் ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தமும் பிரதிபாதிக்கப் படுகையாலே-
அந்த புருஷார்த்தத்துகு உபாய சிந்தை பண்ணுகிறது சதுஸ் ஸலோகியாலும் -ஸ்லோக த்வயத்தாலும் –

(ஸ்லோக த்வயம் என்றது ஸ்திதே மனசீ-என்று தொடங்கும் ஸ்ரீ வராஹ சரம ஸ்லோகம்
உபாயத்தை விளக்குவது இந்த ஸ்லோக த்வயமும் சதுஸ் ஸ்லோகியும் என்றவாறு )

இவ் விடத்தில் சதுஸ் ஸ்லோகியால் செய்கிறது என் என்றால் –
ஸ்ரீ நம்பெருமாளுக்கு தேவதாந்தரங்களில் காட்டில் வாசி
மோஷ ப்ரதத்வமும் ஜகத் காரணத்வம் -என்கிற இவை –
இவை தான் எத்தாலே வந்தது என்றால்
ஸ்ரீயபதித்தவ -ஸ்ரீ நாராயணத்வங்களாலே வந்த
பரத்வாதி குணங்களாலே -என்கை-

வேதார்த்தமாய் இருந்துள்ள அர்த்த பஞ்சகத்துக்கு விவரணமான ஸ்ரீ விஷ்ணு புராணத்திற்கு
பர்யாலோசனம் பண்ணி இருந்துள்ள
ஸ்ரீ ஆளவந்தார் ஸதோத்ரீ கரித்து
ஸ்ரீ யபதித்தவ நிபந்தனமான சௌலப்யாதி குணங்களை
அனுபவிக்கிறார் -ஸ்ரீ சதுஸ் ஸ்லோகியாலே-

இதில் முதல் ஸ்லோகத்தால் –
ஸ்ரீ பிராட்டியினுடைய –ஸ்ரீ நாராயண சம்பந்த நிபந்தனமான பரத்வம் பிரதிபாதிக்கப் படுகிறது –
இரண்டாம் ஸ்லோகத்தாலே-
அந்த பரத்வத்தை அனுபவித்துக் கொண்டு ஸ்ரீ பிராட்டி யுடைய புருஷகாரத்வம் சொல்லப் படுகிறது
மூன்றாம் ஸ்லோகத்தாலே
இப்படிக் கொத்த சௌலப்யாதி குணங்களை உடைய ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு
ஜகத் காரணத்வத்திலும் அந்தர் பாவம் உண்டு –
என்னும் இடத்தைச் சொல்லி உபாய கீர்த்தனம் பண்ணப் படுகிறது –
நாலாம் ஸ்லோகத்தாலே
கீழ் சொன்ன உபாய பல ஸ்வரூபம் நிரூபிக்கப் படுகிறது –

———————————————

காந்தஸ் தே புருஷோத்தம
பணி பதிஸ் சய்யா ஆசனம் வாஹனம்
வேதாத்மா விஹகேச்வரோ
யவ நிகா மாயா ஜகன் மோஹிநீ
ப்ரஹ்மே ஸாதி ஸூ ரவ் ரஜஸ்
சத யிதஸ் த்வத் தாஸ தாஸீ கண
ஸ்ரீரித் யேவ ச நாம தே பகவதி
ப்ரூம கதம் த்வாம் வயம்–1-

——–

பகவதி-கல்யாண குணங்களால் நிறைந்தவளே
புருஷோத்தம-புருஷோத்தமனான ஸ்ரீ பகவான்
தே காந்தஸ் உனக்கு பிரியமான கணவன்
பணி பதிஸ்-நாகங்களுக்கு அரசனான ஸ்ரீ ஆதிசேஷன்
சய்யா-படுக்கை
வேதாத்மா விஹகேஸ்வரோ–வேதத்தை சரீரமாக உடைய புள்ளரையனான ஸ்ரீ பெரிய திருவடி
ஆசனம் வாஹனம்-ஆசனமாகவும் வாகனமாகவும் இருப்பவன்
ஜகன் மோஹிநீ-உலகத்தை மோஹிக்கச் செய்வதான
மாயா -பிரகிருதி
யவ நிகா-உனக்கு முகத்திரையாய் இருக்கிறது –
சத யிதஸ்-தங்கள் மனைவிமார்களுடன் கூடிய
ப்ரஹ்மே ஸாதி ஸூரவ் ரஜஸ்-பிரமன் சிவன் முதலிய தேவ சமூகம்
த்வத் தாஸ தாஸீ கண-உன்னுடைய தாச கணமாயும் தாஸீ கணமாயும் இருக்கிறது
தே நாம ச -உன்னுடைய திரு நாமமும்
ஸ்ரீரித் யேவ -ஸ்ரீ என்பதே யாய் இருக்கிறது
த்வாம் வயம்-இப்படிப்பட்ட பெருமைகள் பொருந்திய உன்னை அறிவிலிகளான நாங்கள்
ப்ரூம கதம் –எப்படிச் சொல்லுவோம்

————

காந்தஸ் தே புருஷோத்தம –
ஸ்ரீ பிராட்டியை நிரூபிக்கும் போது ஸ்ரீ எம்பெருமான் உடைய சம்பந்த நிபந்தன நிரூபணம் பண்ண வேணும் –
இவனையும் இவளுடைய சம்பந்தத்தாலே என்றும் நிரூபிக்க வேண்டும்
அது எங்கனே -என்னில்

க ஸ்ரீ ஸ்ரீய–ஸ்தோத்ர ரத்னம் -12-என்றும்
ஸ்ரீ ய ஸ்ரீ யம் பக்த ஜனைக ஜீவிதம் -ஸ்தோத்ர ரத்னம் -45-என்றும் –
திருவுக்கும் திருவாகிய செல்வா தெய்வத்துக்கு அரசே -செய்ய கண்ணா உருவச் செஞ்சுடராழி வல்லானே உலகுண்ட ஒருவா திரு மார்பா–பெரிய திருமொழி -7-7-1- -என்றும்
என் திருமகள் சேர் மார்வனே என்னும் -திருவாய் மொழி -7-2-9-என்றும் சொல்லுகையாலே
ஸ்ரீ பிராட்டியை நிரூபிக்கும் போதும் காந்தஸ் தே புருஷோத்தம -என்னும் படியாய் இறே இருப்பது –

கஶ்ஶ்ரீ: ஶ்ரிய: பரமஸத்வ ஸமாஶ்ரய: க:
க: புண்டரீகநயந: புருஷோத்தம: க: |
கஸ்யாயுதாயுத ஶதைக கலாம்ஶகாம்ஶே
விஶ்வம் விசித்ர சிதசித் ப்ரவிபாக வ்ருத்தம்||-
ஸ்தோத்ர ரத்னம் -12

ஸ்ரீ: என்று சொல்லப்படும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் செல்வம் யார்? யாரிடத்தில் சுத்த ஸத்வம் உள்ளது?
யார் புண்டரீகாக்ஷன்? யார் புருஷோத்தமன் என்று சொல்லப்படுபவன்? யாருடைய ஸங்கல்பத்தின் ஒரு சிறு பகுதி,
பலவகைப்பட்ட சேதனர்கள் மற்றும் அசேதனப்பொருள்களாக விரிந்திருக்கும் இவ்வுலகத்தைத் தாங்குகிறது?

அசிந்த்ய திவ்யாத்புத நித்ய யௌவந
ஸ்வபாவ லாவண்யமயாம்ருதோததிம் |
ஶ்ரிய: ஶ்ரியம் பக்த ஜநைக ஜீவிதம்
ஸமர்த்தம் ஆபத்ஸகம் அர்த்தி கல்பகம் ||
–ஶ்லோகம் 45 –

எம்பெருமான் நினைவுக்கு அப்பாற்பட்ட, திவ்யமான, ஆச்சர்யமான, நித்யமான, இயற்கையான இளமையை உடையவன்;
அழகுக் கடலாக இருப்பவன்; ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கும் ஸ்ரீயாக (செல்வமாக) இருப்பவன்;
தன்னுடைய அடியார்களின் உயிராக இருப்பவன்; அறிவில் குறைந்தவர்களையும் படிப்படியாக உயர்த்தக்கூடியவன்,
ஆபத்துக் காலத்தில் நண்பனாக இருப்பவன், அவனை விரும்புபவர்களுக்கு கற்பக மரமாக இருப்பவன் –

திருவுக்கும் திருவாகிய செல்வா –ஸ்வ வ்யதிரிக்தருடைய சம்பத்துக்கு நிதான பூதையான பிராட்டிக்கு சம்பத் ஆனவனே –திரு மார்பா-உன்னைத் தளர்ந்தார் தாவளமாக்குமவளை திரு மார்விலே யுடையவனே(தளர்ந்தார் தாவளமாக்குமவளைஇவன் ரக்ஷகன் ஆக்குபவளே இவள் –இதில் புருஷகார பூதை என்கிறார் –கீழே பர ப்ரஹ்ம ஸ்வரூபம் சொல்லிற்று )என் திருமகள் சேர் மார்பனே என்னும் –
‘என் பேற்றுக்குப் புருஷகாரம் இல்லாமல் இழக்கிறேனோ?’ என்னும்.

‘என்’ என்பது திருமகளுக்கு அடைமொழி. மார்பனுக்கு அடைமொழி ஆக்கலாகாது.-அனந்தாழ்வான் தன் பெண் பிள்ளையை‘என் திருமகள்’ என்று திருநாமம் சாத்தினான்.

பட்டர், பெருமாளிடத்தில், ‘அடியேனை ‘ஸ்திரீ தனமாகப் பிராட்டிக்கு வந்தவன்’ என்று திருவுள்ளம் பற்றவும்;
நானும், ‘இவர் எங்கள் நாய்ச்சியார்க்கு நல்லர்’ என்று அவ்வழியே
‘அழகிய மணவாளப் பெருமாள்’ என்று நினைத்திருக்கவுமாக வேணும்,

நஞ்சீயரை அழைத்தருளித் தாம் அமுது
செய்யா நிற்கச் செய்தே இத்திருவாய்மொழி இயலைக் கேட்டருளாநிற்க, இப்பாட்டளவில் வந்தவாறே
‘என் திருமகள் சேர் மார்பனே! என்னும்; என்னுடைய ஆவியே என்னும்’ என்று இயலைச் சேர்த்து அருளிச் செய்ய,
அதனைக் கேட்டுக் கையை உதறி, ‘ஸ்ரீரங்கநாத’ என்று அணையிலே சாய்ந்தருளினார் பட்டர்’ என்று அருளிச் செய்வர்.
‘அப்போது திருமேனியிலே பிறந்த வேறுபாட்டினைக் கண்டு,
‘இவர்க்குப் பகவானை அடைவது அணித்தாகிறதோ?’ என்று அஞ்சியிருந்தேன்,’ என்று சீயர் அருளிச் செய்வார்.

இவர்க்குப் பிரமாணம் ஒரு காற்று விசேடம் அன்று: ஒரு மிதுநமாயிற்று.
‘திருமகள் சேர் மார்பனாய்க் கொண்டு எனக்குத் தாரகனானவனே!’ என்னும்.

பர்த்தா தே புருஷோத்தம -என்னாதே-
காந்தஸ் தே புருஷோத்தம -என்பான் என் என்னில் –
துல்ய சீல வயோ வ்ருத்தாம் துல்ய அபி ஜன லக்ஷணாம்
ராகவோ அர்ஹதி வைதேஹீம் தம் சேயம் அஸி தேஷணா
–சுந்தர -16-5-என்றும்
பகவன் நாராயண அபிமத அநுரூப ஸ்வரூப ரூப குண விபவ ஐஸ்வர்ய
சீலாத்ய அநவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குண கணாம்
-சரணாகதி கத்யம் -1- என்றும்
ஸ்ரீ வல்லப -சரணாகதி கத்யம் -6- என்றும் –
யத் ப்ரூபங்கா பிரமாணம் ஸதி ரச ரரசநா தாரதம்யே முராரே
வேதாந்தாஸ் தத்வ சிந்தாம் முரபிது ரசி யத் பாத சிஹ்னைச் தரந்தி
போகோ போத்காத கேளீ சுளகித பகவத் வைஸ்வ ருப்ய அநுபாவா
ஸா ந ஸ்ரீ ராஸ் த்ருணீ தாமம்ருத லஹரிதீ லங்கா நீ யைர பாங்கை
-ஸ்ரீ குணரத்ன கோசம் -4-என்றும்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -என்றும்
பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு -திரு நெடும் தாண்டகம் -18-என்றும்
பிரயோகம் பண்ணுகிறார்கள் இறே –

காந்தஸ் தே புருஷோத்தம—-
காந்தன் –
அனைத்து விதத்திலும் சேரும்படி உள்ளவன் என்றபடி -பிரியமாக உள்ளவன் –
தே -அனைத்து மங்களுக்கும் காரணமாக
ப்ரமாணங்களிலே கூறப்படும் உனக்கு
காந்தஸ் தே -இரண்டாலும் தேவ தேவ திவ்ய மஹிஷீம்-ஸ்ரீ சரணாகதி கத்யம் -என்றது கூறப்பட்டது

புருஷோத்தம –
த்வவ் இமவ் புருஷவ் லோகே
–ஸ்ரீ கீதை -15-16-என்றபடி இதர ஸமஸ்த விலக்ஷணன் என்பதால்
இந்த திருநாம பிரயோகம் –இங்கு பல சமாசங்கள் கொண்டு விளக்கலாம்
அவதாரத்திலும் நாரீணாம் உத்தம –ஸ்ரீ பாலா -1-27-
இவ்வாறு அவனது சம்பந்தம் மூலமாகவே இவளுக்கு உத்க்ருஷ்டம்

ஹரி என்னுதல் -விஷ்ணு -என்னுதல் -செய்யாதே புருஷோத்தம -என்பான் என் என்றால் –
தவாவி மௌ புருஷௌலோகே ஷரஸ் சாஷர ஏவ ச
ஷரஸ் சர்வாணி பூதாநி கூடஸ்தோ அஷர உச்யதே
உத்தம புருஷஸ் த்வன்ய பரமாத்மேத்யு தாஹ்ருத
யோ லோகத்ரயமா விஸய பிபர்த்யவ்யய ஈஸ்வர
யஸ்மாத் ஷரமதீ தோ அஹ்ம ஷராதபி சோத்தம
அதோ அஸ்மி லோகே வேதே ச ப்ரதின புருஷோத்தம
-ஸ்ரீ கீதை -15/16/17/18 –

த்வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரஸ் ச அக்ஷர ஏவ ச–
க்ஷர ஸர்வாணி பூதாநி கூடஸ்த அக்ஷர உச்யதே–৷৷15.16৷৷

லோகே -சாஸ்த்ரங்களில்(எந்த ஒன்றால் லோகத்தை அறிகிறோமே அதுவே இங்கு லோகே )
க்ஷர: ச அக்ஷர: ஏவ ச த்வாவிமௌ-த்வௌ இமௌ- புருஷௌ ஏவ -அழியும் இயல்வுள்ள அசேதனமான உடலோடு கூடி யிருக்கையால்) க்ஷர புருக்ஷன் எனப்படும் ப₃த்₃த₄ ஜீவனும், அழியும் இயல்வில்லாமையால் (அக்ஷரன்) எனப்படும் முக்த ஜீவனும் ஆகிய இரண்டு(வகையான ) இப் புருக்ஷர்களே (பிரஸித்தி பெற்றவர்கள்)
க்ஷர: – க்ஷர புருக்ஷன்
ஸர்வாணி பூ₄தாநி – எல்லா ப ₃த்₃த₄ ஜீவனுமாவான்
அக்ஷர: – அக்ஷர புருக்ஷன்
கூடஸ்த:₂ உச்யதே – (அசித் ஸம் ₃பந்த₄மற்ற ) முக்தாத்மா எனப் படுகிறான்.

உத்தம புருஷஸ் த்வந்ய பரமாத்மேத் யுதாஹ்ருத–
யோ லோக த்ரய மாவிஸ்ய பிபர்த் யவ்யய ஈஸ்வர–৷৷15.17৷৷

ய: து – எவன் ஓருவன்
லோக த்ரயம் – அசித், ப₃த்₃த₄ ஜீவன், முக்தாத்மா என்னும் மூன்று பொருள்களையும்(லோக்யதே -இதி லோகம் -அவலோகநம் -பார்க்கப்படும் பொருள்கள் -இந்த அத்தியாயத்தில் சொல்லப்பட்டவை -)
ஆவிஶ்ய – வியாபித்து(ப்ரவேஸம் ஆவேசம் உள்ளே புகுந்து வியாபித்து )
பி₃ப₄ர்த்தி – (அவற்தைத்) தாங்குகிறானோ
(அவன்)
அவ்யய: – அழிவற்றவனாய்
ஈஶ்வர: – (அனைத்தையும்) நியமிப்பவனாய்
பரமாத்மா இதி உதா₃ஹ்ருத:- பரமாத்மா என்று(ஆத்மா நாராயண பர இத்யாதி ஸ்ருதிகள்) ஶாஸ்த்ரங்களில் சொல்லப்படுபவனாய்
உத்தம: புருஷ: – (இக் காரணங்களால்) மிக மிக மேலான புருஷனாயிருப்பவன்-விலக்ஷண -அத்விதீயன்
அந்ய: – (முற்கூறிய க்ஷர அக்ஷர புருஷர்களைக் காட்டிலும்)வேறு பட்டவன்

யஸ்மாத் க்ஷரமதீதோஹம் அக்ஷராதபி சோத்தம–
அதோஸ்மி லோகே வேதே ச ப்ரதித புருஷோத்தம-–৷৷15.18৷৷

அஹம் – நான்
யஸ்மாத் – யாதொரு காரணத்தினால்
க்ஷரம் – க்ஷர புருஷனை-பத்த ஜீவாத்மாவைக் கூட்டிலும்
அதீத: – கடந்து நிற்கிறேனோ
அக்ஷராத் அபி – அக்ஷர புருஷனை -முக்தனைக் காட்டிலும்-கூட
உத்தம: ச – மேலானவனாய் இருக்கிறேனோ
அத: – அக் காரணத்தினாலேயே
வேதே ₃லோகே – ஶ்ருதியிலும், ஸ்ம்ருதியிலும்(அபி நிஷ்பத்ய ச உத்தம புருஷ சாந்தோக்யம்-லோகம் -பார்க்கும் கருவி இங்கு -ஸ்ம்ருதி )
புருஷோத்தம: – புருஷோத்தமன் என்று
ப்ரதி₂த: அஸ்மி –புகழ் பெற்றவனாய் இருக்கிறேன்

அசித்தானது -ஸ்வரூப அந்யதா பாவ யுக்தமாய் இருக்கும்
சித்தானது -ஸ்வ பாவ அந்யதா பாவ யுக்தமாய் இருக்கும் –
ஆக உபய அந்யதா பாவ ரஹிதன் ஈஸ்வரன் -என்று கொண்டு
தனக்கு விபூதி பூதமான சேதன அசேதன விலஷணன் என்று இட்டு – புருஷோத்தம -என்கிறது அன்றோ -என்கிறார் –

பணி பதிஸ் சய்யா –
ஒரு ராஜாவுக்கு அபிமதையாய் இருப்பாள் ஒருத்தி கண்ட போது ரசிப்பது இத்தனை ஒழிய
ஒரு படுக்கையிலே ஏறப் பெறாதே யாய்த்து இருப்பது
அங்கன் அன்றிக்கே
பகவன் நாராயண அபிமத அநுரூப ஸ்வரூப ரூப -என்றும்
உனக்கேற்கும் கோல மலர்ப் பாவை -என்றும்
ராகவோ அர்ஹதி வைதேஹீம் -என்றும்
இப்படி பிரமாணம் உண்டாகையாலே கேவலம் அபிமதையான மாத்ரம் அன்றிக்கே
அனுரூபையுமாய் இருக்கையாலே அவனுக்கான படுக்கை இவளுக்கும் பிராப்தம் -என்கிறார்

பணி பதி -என்கையாலே –
அகாரேணோச்யதே விஷ்ணுச் சர்வ லோக ஈஸ்வரோ ஹரி
உத்த்ருதா விஷ்ணு நா லஷ்மீ ருகாரேணோசயதே சதா
மகாரஸ்து தயோர் தாஸ இதி பிரணவ லஷணம் –
பவாம்ஸ்து சஹ வைதேஹ்யா கிரிசாநுஷூ ரம்ச்யதே
அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரதஸ் ஸ்வ பதஸ்ஸ தே
-அயோத்யா -31-25–என்றும்
சொல்லுகிற படியே ஆத்ம வஸ்துவுக்கு ஒரு மிதுன சேஷத்வம் பரம புருஷார்த்தம் ஆகையாலே
இங்கும் வாசூகி தஷக ப்ரப்ருதிகளான அஷ்ட மகா நாகங்களுக்கு- பர்ப்ருடனாய் -தலைவனாய் –
சேஷ பூதருக்கும் தலையாய் இருந்துள்ள திரு வநந்த ஆழ்வான்
இருக்கும் போது உன் திருப் படுக்கை -என்கிறார் –

ஆசனம் வாஹனம் -வேதாத்மா விஹகேஸ்வரோ-
ஸூபர்ணோ அஸி கருத்மான் த்ரிவ்ருத் தே சிரோ காயத்ரம் சஷூ ஸ்தோம ஆத்மா
சாம தே தநூர் வாமதேவ்யம் ப்ருஹத் ரதந்தரே
ப ஷௌ யஜ்ஞா யஜஞியம் புச்சம் சந்தாம் ச்யங்கா நி
திஷ்ணியா சபா யஜூம்ஷிநாம
– என்கிறபடியே
நாக ஜாதிகளுக்கு நாயகனான அனந்தன் திருப் படுக்கை ஆனால் போலே
இங்கும் வேத மயனாய் பறவைகளுக்கு ஆதாரனாய் இருந்துள்ள பெரிய திருவடி
இவளுக்கு ஆசன வாகனங்கள் -என்கிறார்

அபிமதை யானால் படுக்கையில் அணைக்க ப்ராப்தமாய் இருக்கும்
ஏக ஆசனத்தில் கொண்டு இருக்க யோக்யதை அன்றிக்கே ஆய்த்து இருப்பது
வைகுண்டே து பரே லோகே ஸ்ரீ யா ஸார்த்தம் ஜகத்பதி
ஆஸ்தே விஷ்ணுர சிந்த் யாத்மா பக்திர் பாகவதைச் சஹ
-என்கிறபடியே
இவள் அனுகூல ரூபாயாய் இருக்கையாலே இவனுக்கான ஆசனமும் வாகனமும் இவளுக்கும் பிராப்தம்
என்று அருளிச் செய்கிறார் –

பணி பதிஸ் சய்யா ஆசனம் வாஹனம் வேதாத்மா விஹகேச்வரோ
பணி பதிஸ் சய்யா–அவனுக்கு விபூதிகளால் வந்த மேன்மை இவளுக்கும் உண்டு என்பதால்
நித்ய ஸூரீகள் அனைவரும் இவளுக்கும் சேஷ பூதர்கள் என்கிறார்
பணி பதி என்பதன் மூலம் நறு மணம் மேன்மை குளிர்ச்சி விசாலம் உயர்த்தி -தன்மைகளைச் சொல்லி

கல்பாந்தே யஸ்ய வக்த்ரேப்ய விஷ அநல ஸிக உஜ்ஜ்வல –சங்கர்ஷண ஆத்மகோ ருத்ரோ நிஷ்கர்ம்ய அத்தி ஜகத் த்ரயம் –
ஆஸ்தே பாதாள மூலஸ்த சேஷ அசேஷ ஸூரார்ஜித-தஸ்ய வீர்யம் பிரபாவம் ச ஸ்வரூபம் ரூபம் ஏவ ச –
ந ஹி வர்ணயிதும் சக்யம் ஞாதும் வா த்ரிதசை அபி
-ஸ்ரீ விஷ்ணு புராணம் –2-5-21-

பிரளயத்தின் போது ஆதி சேஷன் வாயில் இருந்து விஷம் நிறைந்த அக்னி வெளிவர -அதன் ஜ்வாலையில் ஒளியில்
சங்கர்ஷண ரூபியான ருத்ரன் பிரகாசித்தபடி இருந்து மூன்று லோகங்களை விழுங்க –
இப்படி ஆதி சேஷன் பூ மண்டலங்களை சிரஸூக்கு அலங்காரமாக கொண்டு தேவர்கள் வணங்க பாதாளத்தின் அடியில் உள்ளான் –
அவனது வீர்யம் மேன்மை ஸ்வரூபம் ரூபம் இவற்றை தேவர்களால் அறிவதும் உரைப்பதும் அரிது என்றபடி

தயா ஸஹ ஆஸீநம் அநந்த போகிநீ -ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -39-
ஆசனம் வாஹனம்-இத்தை காகாஷி நியாயம் போலே இரண்டு இடங்களிலும் சேர்த்துக் கொள்ள வேண்டும்
போக ப்ரியா போகவதீ போகீந்த்ர சயன ஆசன என்றும்
அஜிதா ஆகர்ஷனி நீதி கருடா கருடாஸனா -ஸ்ரீ லஷ்மீ சஹஸ்ர நாமம் -என்று யாராலும் வெல்லப்படாத பகவானை
தன் வசம் கொண்டவள் -கருடை என்னும் திரு நாமம் கொண்டவள் -கருடனை இருக்கையாகக் கொண்டவள் – என்றும் உண்டே

வேதாத்மா விஹகேச்வரோ-வஹேயம் யஜ்ஜம் ப்ரவிசேயம் வேதாந் –என்கிறபடி
யஜ்ஜ்ங்களில் வஹித்து வேதங்களில் புகுந்து -வேதங்களுக்கு ஆதாரமாக -ஸ்வரூபமாக உள்ள திருவடி
இப்படி அனைத்து வேதங்களுக்கும் அபிமான தேவதை என்பதால் பெரிய திருவடியையே சர்வஞ்ஞன் –
அமிர்தத்தை கொண்டு வந்ததால் சர்வ சக்தி பலம் இத்யாதி குணங்கள் வெளிட்டு அருளினான்
விஹகேஸ்வர-என்றது
சத்ய ஸூபர்னோ கருட தார்க்ஷ யஸ்து விஹகேஸ்வர –ஸ்ரீ சாத்வத சம்ஹிதை -என்றபடி
பஞ்ச பிராணங்களுக்கும் அபிமான தேவதை -என்றவாறு

பணி பதி விஹகேஸ்வர
இத்தால் இருவரும் பரஸ்பர விரோதம் இல்லாமல் ஒரே நேரத்தில் வணங்கும்படி உள்ளவள்
கைமுதிக நியாயத்தால் இத்தால் முக்தர்களையும் சொல்லி அனைவரும் சாமரம் போன்று இருப்பார்கள் என்றதாயிற்று
சேஷ சேஷாசநாதி சர்வம் பரிஜனம் –ஸ்ரீ வைகுண்ட கத்யம் –
இத்தால் நித்ய விபூதி இவளுக்கு சேஷ பூதம் என்றதாயிற்று

ஆக -இப்படி கீழ்ச் சொன்ன யுக்திகளாலே பிராட்டிக்கு நித்ய விபூதி சம்பந்தம் சொல்லப் பட்டது –
இனி மேல் ஸ்லோக சேஷத்தாலே லீலா விபூதி யோகம் என்ன
தத் அந்தர் வர்த்திகளாய் இருந்துள்ள ப்ரஹ்ம ருத்ராதி தேவ கணங்கள் உடைய
சேஷத்வம் என்ன இவை சொல்லப் படுகிறது
அது எங்கனே என்றால் –

யவநிகா மாயா ஜகன் மோஹி நீ –
மாயாந்து ப்ரக்ருதிம் வித்யான் மாயி நந்து மகேஸ்வரம்–ஸ்வேதர -4-10– -என்றும் –
பிரகிருதி மாயை -அத்தை தூண்டுபவன் மகேஸ்வரன் –
இந்த்ரோ மாயாபி புரூரூப ஈயதே -ப்ருஹத் 4-5-19– இந்த்ரன் பிரகிருதி ஆகிற மாயையினால்
பல உருவங்களுடன் சஞ்சரிக்கிறான் -என்றும்
தைவி ஹ்யேஷா குண மயீ மம மாயா துரத்யயா
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயா மேதாம் தரந்திதே
-கீதை -7-14-என்றும்
இத்யாதிகளாலே பிரதிபாதிக்கப் பட்டு இருக்கிற பகவன் மாயை அன்றோ உனக்கு யவநிகை –
ஒரு திரையின் உள்ளிருக்கும் பேரைப் புறம்பில் அவர் காணாத படியாய்
புறம் இருக்கும் பேரை உள்ளிருக்கும் அவர்கள் காணாத படியாய் யாயிற்று இருப்பது
அங்கன் அன்றிக்கே –ஜகன் மோஹிநீ -என்று எம்பெருமானுக்குத் திரோதாயிகையாய் இருக்கை அன்றிக்கே
ஜகத்துக்குத் திரோதாயிகையாய் இருக்கும் -என்கிறார் –

யவ நிகா மாயா ஜகன் மோஹிநீ
லீலா விபூதியில் அசித் வர்க்கமும் இவளுக்கு சேஷ பூதம் என்றதாயிற்று
யவநிகா –திரை -பகவத் ஸ்வரூப திரேதாநகரீம் -ஸ்ரீ கத்யம் -திவ்ய தம்பதிகள் இருவரையும்
பிரகிருதி மறைத்து இருப்பத்தை அருளிச் செய்தபடி-

மாயா -என்றது
மாயாம் து ப்ரக்ருதிம் வித்யாத் –ஸ்வேதர -4-10-மாயை என்பதால் பிரக்ருதியைச் சொன்னவாறு

ஜகன் மோஹிநீ
பிரகிருதி பல விசித்திர ஸ்ருஷ்டிகளுக்கு சாதனமாக இருந்து வியக்க வைப்பதாலும்
ஜீவ பர தத்வம் பற்றி விபரீத ஞானத்துக்கு காரணம் என்பதும் சப்த்தாதிகளால் விசித்திரமாக
போக்ய புத்தியைப் பிறப்பிப்பதாலும் இவ்வாறு கூறப்பட்டது
இப்படி பிரக்ருதியால் மயங்கி கர்ம வசப்பட்டு உள்ள அனைவரும் ஸ்ரீ மஹா லஷ்மிக்கு சேஷ பூதர்களே
கைமுதிக நியாயத்தாலே அனைவரும் சேஷ பூதர் என்றதாயிற்று

ப்ரஹ்மேஸாதி ஸூரா வ்ரஜஸ் சத யிதஸ் த்வத் தாஸ தாஸீ கண-
பூலோகம் தொடங்கி சத்ய லோகம் பர்யந்தமாக மேல் உள்ள லோகங்கள் என்ன
அதல விதல ஸூதல பாதாளோத்தால ரஸாதல போகவதீ பர்யந்தமான கீழ் ஏழு லோகங்கள் என்ன
இவற்றில் காணப் பட்டு உடையராய் இருந்துள்ள தேவ கணங்கள் என்ன
இவர்களுக்கு கொத்து முதலிகளாய் இருந்துள்ள ப்ரஹ்ம ருத்ராதிகள்-என்ன
சரஸ்வதி ருத்ராணீ புலோ மஜாப் ப்ரப்ருதிகளாய் இருந்துள்ள தேவ ஸ்திரீகள் என்ன
அப்ஸரோ கணங்கள் என்ன
இவர்கள் எல்லாரும் ஆண் அடிமையும் பெண் அடிமையுமாய் இருக்கும் -என்கிறார்

ப்ரஹ்மே ஸாதி ஸூரா வ்ரஜஸ் சத யிதஸ் த்வத் தாஸ தாஸீ கண
ஏதவ் த்வவ் விபுதஸ்ரஷ்டவ்
–சாந்தி பர்வம் 350-10-என்று இருவருமே அவனிடம் இருந்தே உண்டானார்கள்-இவர்களும் அக்னி இந்திரன் போன்றவர்களே என்று உணர்த்தவே வ்ரஜகண -போன்ற பதங்கள் பிரயோகம்–சதயித-பத்னிகளுடன் என்று அருளிச் செய்தாலும்- தாஸீ -என்பதும் பத்தினிகள் என்றதே ஆகும் –

இவை எல்லாம் யதார்த்தம் யன்றோ –
ஸ்தோத்ரம் யன்றோ
இது எங்கனே கூடும்படி -என்றால்
ஸ்ரீரித் யேவ ச நாம தே –
ஸ்ரீ என்று அன்றோ உனக்குத் திரு நாமம் –

இத்தாலே இவளுக்கு சர்வ சேஷணீத்வமும் தெரிவிக்கப் பட்டதோ -என்றால்
ஸ்ரீங் சேவாயாம் -என்கிற தாதுவாலே தன்னை ஒழிந்த சேதன அசேதனங்களாலே
ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி களுக்காக ஆஸ்ரயிக்கப் படுகிறாள் என்று கொண்டு -ஸ்ரீ -என்கிறது –
அதுக்கு பிரமாணம் –
கந்தத்வாராம் துராதர்ஷாம் நித்ய புஷ்டாம் கரீஷிணிம் ஈஸ்வரீம் சர்வ பூதானாம்-ஸ்ரீ ஸூக்தம் -9- -என்றும்
அஸ்ய ஈசானா ஜகத விஷ்ணு பத்நீம் -ஸ்ரீ நீளா ஸூக்தம் -என்றும் -உண்டாகையாலே-
ஸ்ருணோதி ஸ்ராவயதி –கேட்டு கேட்விப்பிக்கிறாள்
ஸ்ருனாதி -குற்றம் நீக்கி சேர்க்கிறாள்

ஸ்ரீரித் யேவ ச நாம தே
இவை அனைத்தையும் உணர்த்த இவளுக்கே உரித்தான திரு நாமங்கள் போதும் என்றதாயிற்று

ஸ்ரயந்தீம் ஸ்ரியமாணாம் ச ஸ்ருண்வதீம் பகவதி ஸ்ருணதீம் –ஸ்ரீ அஹிர்புத்ன்ய சம்ஹிதை -21-8-என்று தான் சென்று அடைந்துள்ள மற்றவர்களால்
அடையப்படுகின்றதும் கேட்கப்படுவதும் ஆகிய பாபங்களை விலக்குகின்ற என்றும்

ஸ்ருணாதி நிகிலம் தோஷம் ஸ்ரீணாதி ச குணை ஜகத் ஸ்ரீயதே ச அகிலை நித்யம்
ஸ்ரேயதே ச பரம் பதம்
–அஹிர்புதன்ய சம்ஹிதை -51-62-என்று அனைத்து விதமான தோஷங்களையும் போக்குகிறாள் –தனது கல்யாண குணங்களால் லோகத்தை நிரப்புகிறாள் -அனைவராலும் எப்போதும் அந்தப்படுகிறாள் –எப்போதும் பகவானை அண்டி நிற்கிறாள் -என்னக் கடவது இறே-

நிஸ் சங்கல்பா நிராஸ்ரயா–ஸ்ரீ லஷ்மீ சஹஸ்ர நாமம் -18—சங்கல்பம் இல்லாதவள் -ஆதாரம் அற்றவள் போன்ற திரு நாமங்கள்
ஸ்ரயதே ச பரம் பதம் -அஹிர்புத்ந்ய சம்ஹிதை -51-62-என்று கூறப்பட்ட பிரமாணத்துக்கு விரோதம் ஏற்படாமல் இருப்பதற்காக அர்த்தம் கொள்ளப்படுவதாகும்

அகலங்கா அம்ருத தாரா -17-களங்கம் அற்றவள் -பகவானை ஆதாரமாகக் கொண்டவள் –
அம்ருத என்று பகவானையே சொன்னவாறு

இதனாலே அவன் ஸ்ரீ நிவாஸன் என்று ஸ்ரீ தரன் என்றும் கொண்டாடப்படுகிறான்

யத அஹம் ஆஸ்ரய ச அஸ்யா மூர்த்தி மம ததாத் மிகா –ஸ்ரீ ஸாத்வத சம்ஹிதை -என்று எந்த ஒரு காரணத்தால்-நான் இவளுக்கு ஏற்ற இடமாக உள்ளேனோ அதன் விளைவாக எனது இந்த திருமேனி அவளையே தனது ஸ்வரூபமாகக் கொண்டதாய் உள்ளது –
எந்த சொல்லைச் சேர்ப்பதன் மூலம் மற்ற அனைத்தைக் காட்டிலும் மிக உத்க்ருஷ்டமாக எண்ணுகிறோமோ அந்தச் சொல்லே எனது திரு நாமம் ஆகும் -என்ற கருத்தே –ஸ்ரீ இதி -ஏவ -என்பதால் கூறப்பட்டது

பகவதி –
துல்ய சீல வயோ வ்ருத்தாம் துல்ய அபிஜன லஷணாம்-ஸ்ரீ ஸூந்தர –16-5- -என்கிறபடியே
எம்பெருமானொடு ஒக்க ஹேய பிரதி படமாய் இருந்துள்ள கல்யாண குணைகதாநத்வம் சொல்லப் படுகிறது –

மைத்ரேய பகவச் சப்தஸ் சர்வ காரண காரனே
சம்பர்த்தேதி ததா பார்த்தா பகாரோ அர்த்தத் வ்யாந்வித
நேதா கமயிதா ஸ்ரஷ்டா ககாரார்த்தஸ் ததா முனே
ஐஸ்வர் யஸ்ய சமக் ரஸ்ய வீர்யச்ய யசசச் ஸ்ரீ ய
ஜ்ஞான வைராக்யயோஸ் சைவ ஷண்ணாம் பக இதீரணா
வஸந்தி தத்ர பூதானி பூதாத் மன்ய கிலாத்மனி
ச ச பூ தேஷ்வ சேஷ ஷூ வகாரார்த் தஸ் ததோ அவ்யய
ஜ்ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜாம் சயசேஷத
பகவச் சப்த வாச்யானி விநா ஹேயைர் குணாதிபி
ஏவ மேஷ மகா சப்தோ மைத்ரேய பகவா நிதி
பரம ப்ரஹ்ம பூதஸ்ய வாசுதேவச்ய நான்யக
தத்ர பூஜ்ய பதார்தோக்தி பரி பாஷா சமன்வித
சப்தோஸ்யம் நோபா சாரேண த்வன்யத்ர ஹ்யுபசாரத
– ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-72–78-

மைத்ரேயரே பகவான் என்கிற சப்தம் சர்வ காரணங்களுக்கும் காரண பூதனான சர்வேஸ்வரன் விஷயத்திலே
சொல்லப்படுகிறது -ப்ரக்ருதியை கார்ய தசையை அடையச் செய்பவன் -ஸ்வாமி என்னும் அர்த்தங்களுடன் கூடியது பகாரம் –
முனிவரே அப்படியே ரஷிப்பவன் சம்ஹரிப்பவன் ஸ்ருஷ்டிப்பவன் என்பது ககாரத்தின் அர்த்தம்
சம்பூர்ணமான ஐஸ்வர்யம் வீர்யம் யசஸ் செல்வம் ஞானம் வைராக்யம் இந்த ஆறு குணங்களுக்கும்
பக என்னும் பதம் வாசகமாய் இருக்கிறது –
பூதங்களை சரீரமாகக் கொண்டவனும் எல்லாவற்றுக்கும் ஆத்மாவாய் இருப்பவனுமான அவன் இடத்தில் பூதங்கள் வசிக்கின்றன –
அவனும் எல்லா பூதங்களிலும் வசிக்கிறான் -ஆகையால் அழிவற்றவனான பகவான் வகாரத்துக்கு அர்த்தம் ஆகிறான் –
கீழானவையான முக் குணங்கள் முதலியவற்றுடன் சேராத ஞானம் சக்தி பலம் ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ் -என்னும்
எல்லாக் குணங்களும் பகவான் என்னும் சப்தத்தினால்
சொல்லப்படுகின்றன –
மைத்ரேயரே இம்மாதிரியாக பகவான் என்னும் இந்த மஹா சப்தம் பர ப்ரஹ்மமான வாஸூ தேவனுக்கே உரித்தானது –
வேறு ஒருவரையும் குறிக்காது –பூஜிக்கத்தக்க பொருளைக் குறிப்பது என்னும் பரி பாஷையுடன் கூடிய இந்த சப்தம்
அவன் விஷயத்தில் உபசாரிகமாகச் சொல்லப்படுவது இல்லை –

மற்ற விஷயங்களில் அமுக்யமாக சொல்லப்படுகிறது -என்று சொல்லப்பட்டது அன்றோ-என்று கொண்டு பிரமாணம் உண்டு ஆகையாலே-ஸ்ரீய பதியை நிர்தேசிக்கும் போது

இதி விவித மஜஸ்ய யஸ்ய ரூபம் ப்ரக்ருதி பாராத்ம மயம் சனாத நஸ்ய
பிரதி சது பகவாந சேஷ பும்ஸாம் ஹரிர பஜன் மஜராதி காம் ச சித்திம்
—ஸ்ரீ விஷ்ணு புராணம்-6-8-64-
பிறப்பற்றவனும் பழமையான எந்த விஷ்ணுவுக்கு பலவிதமான ப்ரக்ருதி என்ன -அத்தைக்கு காட்டிலும் மேலான திவ்ய ஆத்ம ஸ்வரூபம் என்ன இவை இம்மாதிரியாக சரீரங்களாக இருக்கின்றனவோ அந்த பகவான் ஹரி எல்லா மனிதர்களுக்கும் பிறப்பு மூப்பு முதலியவைகளைப் போக்கடிக்கும் மோக்ஷ சித்தியை அருளுவானாக

மஹத்யா பதி ஸம்ப்ராப்தே ஸ்மர்த்தவ்யோ பகபான் ஹரி -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-8-64-என்றும்-பேர் ஆபத்து வந்த காலத்தில் பகவானாக ஹரி நினைக்கத் தக்கவன்

அநி யோஜ்யோ அப்ரமேயச்ச யஸ்து காம சரீரத் ருத்
மோததே பகவான் பூதைர் பால க்ரீடனகைரிவ
-சபா பர்வம் 40-78–என்றும்
ஏவப்படாதவனும் அறிய முடியாதவனும் இஷ்டப்பட்ட உருவங்களைத் தரிப்பவனுமான பகவான் சிறுவன் விளையாட்டுக் கருவிகளுடன் விளையாடுவது போலே பூதங்களுடன் விளையாடி சந்தோஷிக்கிறான்

பகவன் நாராயண -என்றும் –
இப்படி வ்யவஹரிக்க வடுப்பதாய் இறே இருப்பது
அவளை நிர்தேசிக்கும் போது -பகவதீம் ஸ்ரீயம் தேவீம் -என்றும்
ஸ்ரீரித்யேவ ச நாம தே பகவதி -என்னும் படியாய் இருக்கும்

ப்ரூம கதம் த்வாம் வயம்-
கதம் ப்ரூம எப்படி சொல்வோம் –
வயம் -அறிவிலிகளான நாங்கள் -த்வாம் -இப்படிப் பட்ட பெருமைகள் பொருந்திய உன்னை
ஈஸ்வர குணஸ்த்வம் பண்ணும் போது
அநந்தா வை வேதா -என்கிற வேதங்களும் அகப்பட
ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் பிபேதி குதஸ்நேதி
யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா சஹ
-என்று கொண்டு
அளவுகோல் முறிந்து மடங்கும் படியாய் இறே இருப்பது –
அவன் தன்னையும் அகப்பட
போகோ போத்காத கேளீ சுளகித பகவத் வைஸ்வ ரூப்யையாய் -( ஸ்ரீ குணரத்ன கோசம் )
பகவானுடைய விஸ்வரூப அனுபவத்தையும் தன்னுடைய போகாரம்பமாகிற விளையாட்டாலே கை அளவாக ஆக்குபவளான அந்த ஸ்ரீ தேவி –யாய் இருந்துள்ள உன்னை மந்த மதிகளுக்கு அக்ரேசரராய் இருந்துள்ள நாங்கள் என் சொல்லி வ்யவஹரிப்பது -என்று கொண்டு பிராட்டியினுடைய பரத்வத்தை பிரதிபாதிக்கிறார் -ஸ்ரீ ஆளவந்தார் -இதில்

பகவதி
எந்தவித தோஷங்களும் இல்லாமல் அனைத்து மங்களமான கல்யாண குணங்களுக்கு இருப்பிடம் என்பதை உணர்த்தவே –பகவதே -என்று ஸ்லோகத்தில் கூறப்பட்டது –

ப்ரூம கதம் த்வாம் வயம்–
இவ்விதமாக பல மேன்மைகளைக் கொண்ட இவளை உள்ளது உள்ளபடி ஸ்துதிக்க இயலாது என்கிறார் –

த்வாம்
கீழே உரைத்த படி ஸ்ரீ மஹா விஷ்ணுவுக்கு பத்னியாகவும் அவனைத் தவிர உள்ள மற்ற அனைவருக்கும் ஸ்வாமிநி யாயும் –
அவற்றுக்கு ஏற்ற படியான திரு நாமங்களைக் கொண்டவளாயும் பிரசித்தி பெற்றவளாக
ந தே வர்ணயிதும் சக்தா குணாந் ஜிஹ்வாபி வேதச –ஸ்ரீ விஷ்ணு புராணம்- 1-9-133-என்று
நான்முகனுடைய வாக்குகள் கூட சக்தி அற்றவை

வயம்
அளவுபடுத்தப்பட்ட ஞானம் மற்றும் சக்தி கொண்டவர்கள் –
ப்ரஹ்மாத்யா சகலதேவா முந யச்ச தபோதனா த்வாம் ஸ்தோதும் அபி நேகாநா -த்வத் பிரசாத லபம் விநா —
உனது அனுக்ரஹம் இன்றி உன்னை ஸ்துதிக்க சக்தி அற்றவர்கள் –
தாமும் இந்த கோஷ்ட்டி என்று உணர்த்தவே பன்மை பத பிரயோகம்

கதம் ப்ரூம
உன்னை முழுமையாக வர்ணிப்பது இயலாது
அளவுபட்டு உரைப்பதும் சரி இல்லை -என்று பொருள்

தே –த்வாம்
ஒரு சிலர் அனைத்தையும் ஸ்ருஷ்டிப்பவனாகிய பகவானால் அதிஷ்டானம் செய்யப்படும் பிரக்ருதியே
ஸ்ரீ மஹா லஷ்மி ஆவாள் -என்று கூறுகிறார்கள் –
வேறு சிலர் பகவானுடைய -இருப்பு -அஹங்காரம் -பிரகாரம் -சக்தி -வித்யை -இச்சை-மற்றும் அனைத்தையும்
அனுபவிக்கும் தன்மை ஆகியவையே ஸ்ரீ மஹா லஷ்மீ என்று கூறுகிறார்கள்

ஸ்ரீ சாஸ்திரங்களில் -ஸ்ரீ அஹிர்புத்ந்ய சம்ஹிதை ஸ்ரீ லஷ்மீ தந்திரம் -இவற்றில் இவ்வாறு கூறப்படுவதாக கூறுகிறார்கள்
அந்த சாஸ்த்ரங்களே ஸ்ரீ மஹா லஷ்மி சேதன வஸ்து ஆவாள் என்று முரண்பாடு
இன்றி உரைக்கப் பட்டதால் அவர்களும் அவர்களுடைய கருத்துக்களும் தள்ளப்படுகின்றன

ஸ்ரீ மஹா லஷ்மீ சேதன வஸ்துவே என்று காட்டவே
தே -உனக்கு என்றும்
த்வாம் உன்னை என்றும் பதங்கள் பிரயோகம்
அவனுடைய இருப்பாகவே இவள் உள்ளாள் என்பது போன்ற கருத்துக்கள்
இவளிடம் அவனுக்கு அந்தரங்கமான விசேஷம் உண்டு என்றும் இவள் விசேஷமாக உள்ளாள் என்பதாலும் கூறப்படுகின்றன

தே -யவனிகா -உனக்குத் திரை
இவள் பிரக்ருதியைக் காட்டிலும் வேறு பட்டவள் –
தே -யவனிகா -உனக்குத் திரை -என்பதன் மூலம் உணர்த்தப்பட்டது
பிரகிருதி என்ற சொல்லால் கூறப்பட்டாள்-என்பதால் மட்டுமே முக்குண பிரகிருதி இவளே ஆவாள் என்பது சரி இல்லை

வாஸூ தேவ பரா ப்ரக்ருதி -வாஸூ தேவனே உயர்ந்த பிரகிருதி என்றும்
ப்ரக்ருதிச் ச ப்ரதிஜ்ஞா த்ருஷ்டாந்த அநுப ரோதாத் –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -1-4-23– ப்ரஹ்மமே உபாதான காரணம் போன்று
பகவானையே இவ்வாறு கூறப்பட வேண்டியதாகும் என்பதால் ஸ்ரீ மஹா லஷ்மியே பிரகிருதி என்பது பொருத்தம் அல்ல-

ஆகவே -ஜகத் உத்பாதிகா சக்தி தவ ப்ரக்ருதி இத்யாதே ச ஏவ நாம ஸஹஸ்ரைஸ் து லஷ்மீ
ஸ்ரீ இதி கீர்த்யதே–ஸ்ரீ ஸநத்குமார சம்ஹிதை –
இந்த ஜகத்தை உத்பத்தி செய்யக் கூடிய உனது சக்தியே

இங்கு பிரகிருதி என்று கூறப்படுகிறது -ஆகவே பல நாமங்களாக ஸ்ரீ லஷ்மீ என்று கூறப்படுகிறது -என்றும்
மூல ப்ரக்ருதி ஈஸாநீ -ஸ்ரீ லஷ்மீ சஹஸ்ர நாமம் -55-அவளே மூல ப்ரக்ருதி அனைத்தையும் நியமிப்பவள் என்றும்
ப்ரக்ருதி புருஷாச்ச அந்ய த்ருதீயோ ந இவ வித்யதே –ஸ்ரீ ஸநத்குமார சம்ஹிதை -பிரகிருதி புருஷன் இருவரையும்
தவிர மூன்றாவது ஏதும் அறியப்பட வில்லை -என்றும் உள்ள நான்முகன் சொற்கள் அனைத்தும்
ஸ்ரீ மஹா லஷ்மீ மற்றும் ஸ்ரீ நாராயணன் இருவரும் பிரகிருதி மற்றும் புருஷன் என்பதான வெவ்வேறாக உள்ள
விபூதிகளுக்கு அபிமானி தேவதைகளாக உள்ளனர் என்கிற கருத்தில் சொல்லப்பட்டவை

ரஹஸ்ய ஆம்நயத்தில்-பிரகிருதி மற்றும் ஸ்ரீ லஷ்மீ ஆகிய இருவரிடம்
வித்யா என்கிற பதம் பயன்படுத்தப் பட்டுள்ளது -என்று கூறப்படுகிறது –

இதன் பின்னரும் இந்த இருவருக்கும் ஸ்வரூப ஐக்கியம் உண்டு என்று கூறுதல் கூடாது –
அதாவது சத்வ குணம் நன்கு வளர்ந்து அதன் மூலமாக வித்யைக்கு காரணமான சூழல் ஏற்படுவதால்
ப்ரக்ருதியைக் குறித்து வித்யா என்ற சொல் கூறப்பட்டது –
ஆனால் ஸ்ரீ மஹா லஷ்மீ வித்யையை அளிப்பவள் என்பதால் அவள் விஷயத்தில் இந்த சொல் பயன்படுத்தப் படுகிறது-

ஒரு சிலர் இருப்பு முதலியவற்றுடன் கூடியுள்ள பகவானே ஸ்ரீ லஷ்மீ என்று கூறப்படுகிறான் என்றும் –
ஒரு சிலர் ஸ்திரீயாக உள்ள நித்தியமான ஒரு சரீரம் கொண்ட பலவான் ஸ்ரீ லஷ்மீ என்று கூறப்படுகிறான் என்றும்
ஒரு சிலர் அசுரர்களை மயக்குவதற்காக மோகினி ரூபம் எடுத்தது போன்று தனது இன்பத்திற்காக ஒரு சில நேரங்களில்
அவன் பெண் வடிவை ஏற்கிறான் -அந்த ரூபத்துடன் உள்ள பகவானே ஸ்ரீ மஹா லஷ்மீ ஆவாள் என்றும் கூறுகிறார்கள்

இந்தக் கருத்துக்கள் அனைத்தும் ஸ்ரீ மஹா லஷ்மீயைக் காட்டிலும் வேறாக உள்ள ஜீவாத்மாக்கள் என்று கூறும்
அந்த சாஸ்த்ரங்களாலே தள்ளப்படுகின்றன

உத்தர நாராயண அநுவாகத்தில்-ஹ்ரீச்ச தே லஷ்மீச்ச பத்ந்யவ் -என்று
ஸ்ரீ பூமா தேவியும் ஸ்ரீ மஹா லஷ்மீயும் பத்னிகள் ஆவார்கள் என்பதாகக் கூறும் சுருதிகள்
பர்த்தா மற்றும் பத்னி ஆகிய இவருடைய ஸ்வரூபமும் வெவ்வேறு என்று கூறுகின்றன –
இங்குள்ள -காந்த –தே -என்பதிலும் பிரித்தே கூறப்பட்டது காணலாம் –

ஒரு சிலர் பகவானுடைய ஸ்வரூபத்தில் உள்ள ஒரு பகுதியே பரஸ்பரம் இன்பத்தை அனுபவிக்கும் விதமாக
தனியான ஒரு பெண் பாகத்தை அடைகிறது -இதுவே ஸ்ரீ லஷ்மீ என்ற சொல்லிற்கான பொருள் ஆகும் –
இவ்விதம் கூறுவதின் மூலம் பேத அபேத ஸ்ருதிகளை சமன்வயப் படுத்துவர் –

இந்தக் கருத்து ப்ரஹ்ம ஸ்வரூபம் பிரிக்க இயலாது என்பதால் தள்ளப்படும்

ஆனால் ஸ்ரீ ப்ரஹ்ம புராணத்தில் -நர நாரீ மயன் ஹரி -என்று
ஸ்ரீ ஹரி புருஷனாகவும் ஸ்திரீயாகவும் உள்ளான் என்று உள்ளதே என்னில்

ஸ்ரீ ஸநத்குமார சம்ஹிதையில் -ஜ்யோத்ஸ்நேவ ஹிம தீதே -சந்திரனுக்கு நிலவு போன்றது -ப்ரகாசத்துக்கு ஆதாரமாக உள்ள
வஸ்துவை ப்ரகாசமயமாக உள்ளது என்னுமா போலே ஸ்வரூபங்களில் பேதம் கொள்ள இடம் அளிக்காமல் பொருள் கொள்ள வேண்டும்

இதன் மூலம் விதையாக உள்ளவற்றின் முளைக்கக் கூடிய பகுதிகள் தனியாக வளர்கின்றன –
இதே போன்று காரியப் பொருள்களாக பரிணாமம் அடைவதற்கு உபாதான காரணமாக உள்ள உபாதான காரணமாக உள்ள
ப்ரஹ்ம ரூபத்தின் ஒரு பகுதியே -தனது ஸ்வ பாவத்தால் தனியாகப் பிரிந்து ஸ்ரீ லஷ்மீ என்றதாகிறது
என்று கூறப்படும் கருத்தும் தள்ளப்படுகிறது –

மேலும் ப்ரஹ்ம ஸ்வரூபத்தில் மாற்றம் ஏற்படுவது இல்லை என்று
ஸ்ரீ ப்ரஹ்ம ஸ்வரூபத்தில் நிரூபிக்கப் பட்டதால் இந்தக்கருத்து நிராகரிக்கப் பட்டது

ஒரு சிலர் கூறுவது -வேறு ஒரு காரணப் பொருளுடன் சேர்ந்துள்ள ஒரு பாகமானது முற்றிலுமாக வேறுபட்டு நிற்கிறது -என்பதாகும் –

ஒரு நதியில் இருந்து குடத்தின் மூலமாக எடுக்கப்பட்ட நீரை வேறு ஒரு இடத்துக்குப் பிரிக்கப்பட்டு எடுத்துச் செல்ல இயலும் –
அதற்கு தனிப்பெயர் கூறப்படுவது இல்லை –
ஆனால் குடத்துக்குள் காணப்படும் ஆகாசத்துக்கு குடாகாசம் -என்று தனிப்பெயரே வழங்கப் படுகிறது

அதனைப் போன்றே சரீரம் முதலான உபாதிகள் உள்ள போது -அவயவங்கள் அற்றதான ப்ரஹ்மத்தின் ஸ்வரூபத்தில்
உபாதியுடன் சேர்ந்த பாகங்கள் அல்லாமல் -மற்ற பகுதிகளானவை அந்த உபாதிகளுடன் சேரும் போது
முன்பு இன்பங்களை அனுபவித்த பாகம் இருப்பது இல்லை –

ஆகவே முன்பு அனுபவிக்கப்பட்ட இன்பங்களை அந்த பாகங்கள் எண்ணி இருப்பது பொருந்தாது –
ஆனால் அந்த பாகங்கள் அனைத்தும் ஒரே ஜாதியைச் சேர்ந்த அம்சங்கள் என்பதால் ஓர் அம்சத்தால் அனுபவிக்கப்பட்ட அனைத்தும்
மற்ற அம்சங்களுக்கும் பொருந்தும் அல்லவோ என்ற கேள்வி எழலாம் –

இவ்விதம் கொண்டால் பவ்தர்களுடைய கருத்து தொனிக்கும் என்பதால் நித்தியமான ஜீவாத்மா என்பதை ஏற்க இயலாமல் போய் விடும் –
இது மட்டும் அல்லாமல் பகவானுடைய அவதாரம் என்று கூறுபவர்களும்
ஸ்வரூபத்தை மாறுதல்கள் யாகும் என்று கூறுபவர்களும்

ஸ்ரீ லஷ்மிக்கு நித்தியமான திருமேனி உள்ளது என்று உரைக்கும் பிரமாணங்களால் தள்ளப்படுகிறார்கள் –
இவை அனைத்தும் இந்த ஸ்லோகத்தில் பிரித்து குறைக்கப்பட்டு இருப்பதால் வெளிப்படு கிறது
ஸ்ரீ வாக்ச நாரீணாம் –ஸ்ரீ கீதை -11-34-பெண்களில் கீர்த்தியும் ஸ்ரீ மஹா லஷ்மியும் வாக்கும் நானே ஆவேன் -என்றுள்ள
இடங்களில் சேர்த்துக் கூறப்பட்டது காணலாம்

இங்கும் முன்பு கூறப்பட்டது போன்று ஸ்வரூபம் வெவ்வேறாக உள்ள போதிலும் –
சேஷன் -சேஷி -என்கிற சம்பந்தத்தைக் காரணமாக் கொண்டு உரைக்கப் பட்டது என்று கருத்து

விஷ்ணோர் ஸ்ரீ அநபாயிநீ–ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-8-17- என்றுள்ள வாக்கியங்கள் மூலம் பேதம் வெளிப்பட்டது
இப்படிச் சொல்லும் போது ஸ்ரீ மஹா லஷ்மியும் கர்மவசப்பட்டவள் ஆகிறாள் என்று ஆகுமே என்னில் அது அப்படி அல்ல
ஆதித்யாநாம் அஹம்—ஸ்ரீ கீதை -10-21-
வ்ருஷ்ணீநாம் வா ஸூ தேவ -10-37-
அநந்தா அஸ்மி நாகாநாம் வைநயேதச்ச பஷீணாம் -10-29–இவ்வாறு பிரித்து உரைக்கலாமே ஒரே ஜாதியாக இருந்தாலும்
இத்தால் ஸ்ரீ மஹா லஷ்மி நித்யருக்குள் அதிகர் என்றும் சர்வேஸ்வரன் ஸ்வரூபம் வேறு பட்டது என்றும் தெளிவாகும்
அவனது ரூபத்தில் பாதி இவளது என்பதும் உண்டே

அடுத்து ஸ்ரீ விஷ்ணு வைபவ அதிகாரத்தில்
த்வம் யாத்ருச அஸி கமலாம் அபி தாத்ருசம் தே தாரா -வதந்தி யுவயோ ந து பேத கந்த மாயா விபக்த யுவதீ தநும்
ஏகம் ஏவ த்வாம் மாதரம் ச பிதரம் ச யுவா நாம் ஆஹு –நீ எவ்வாறு ஆகிறாயோ அதே போலே ஸ்ரீ மஹா லஷ்மியும்
உனது பத்நியாக ஆகிறாள் என்று கூறுகிறார்கள் –

உங்களுக்கு பேத வாசனை என்பது இல்லை -மாயையால் பிரிந்துள்ள பெண் சரீரத்தைக் கொண்ட இளமையாக உள்ள உன்னையே
தாய் மற்றும் தந்தை என்றும் கூறுகிறார்கள் –என்று கூறப்பட்டுள்ளதே என்று கேட்பதும் சரியில்லை –

அவர்கள் இவருடைய விருப்பம் காரணமாகவே சரீரத்தை மட்டுமே ஒன்றாக சேர்த்தபடி உள்ளது பொருந்தும் என்பதாலும்
ஆகவே ஸ்வரூபத்தில் ஒற்றுமை இல்லை என்றாலும் இது பொருந்தும் என்பதால்
ஒரே சரீரமாக உள்ளது என்பது ஸ்ருதிகளுக்கு முரணாக உள்ளது என்பதும் பொருந்தாது

ஆனால் ஒரே பரமாத்மாவே அனைத்தையும் செய்ய இயலும் என்று உள்ள போது வேறு ஒரு ஆத்மா உள்ளது என்று
ஏற்பதால் என்ன பயன் உள்ளது -என்று கேட்பதும் சரியில்லை

ஸ்ரீ விஷ்ணு ஸ்ம்ருதியானது -99-6-
ஆஸ்ரம்ய ஸர்வாந்து யதா திரிவோகீம் திஷ்டத் வயம் தேவ வர அஸிதாஷீ ததா ஸ்திதா த்வம் வரதே தாதாபி –என்று
சர்வ வ்யாபியான அவனைப் போலே சர்வ அபீஷ்டங்களையும் கொடுக்கும் அஸீ தேக்ஷிணையாய் உள்ள நீயும் உள்ளாய் –
என்பது போன்றும் உள்ளவை காணலாம்

ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-8-35-ந அநயோ வித்யதே பரம் -என்றும்
அஹிர் புத்ன்ய சம்ஹிதை 3-26–ஏக தத்வம் இவ உதிதவ் –என்று ஸ்ரீ பகவத் சாஸ்திரமான ஸ்ரீ பாஞ்சராத்திலும்
இவர்களுடைய ஸ்வரூபம் ஒன்றே என்ற வாதம் தள்ளுபடியாகும்
வசனங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டால் அனைத்து ஆத்மாக்களும் ஒன்றே எனக் கொள்ளலாம்

ஆனால் இவ்விதம் கொள்ளுதல் கூடாது அல்லவோ
ஜீவாத்மாக்கள் அனைவரும் வெவ்வேறு ஆனவர்களே ஆவர் என்பதை ஏற்காதவர்கள் ஸ்ரீ பாஷ்யாதிகளில் தள்ளப்பட்டனர்
இங்கும் திவ்ய தம்பதிகளுக்கும் ஒருவருக்கு ஒருவர் உள்ள பேதமும் நிலை நாட்டப்பட்டது –
இத்தால் லஷ்மி நாராயணன் இருவரும் ஒருவரே வாதமும் தள்ளப்பட்டது
பிராட்டி இடம் திருவடி சுக்ரீவனும் பெருமாளும் ஒன்றாகவே ஆனார் என்று சொல்லியது போலே உரைப்பர்
மேலும் நிர்விசேஷ சின் மாத்ர ப்ரஹ்மத்தின் ஸ்வரூபத்தை மறைத்துள்ள உண்மையற்ற மாயை என்பதான விசேஷத்தை
அடைந்ததாகவும் ப்ரஹ்மத்தின் பிரதிபிம்பத்தை கொண்டதாகவும் உள்ள வஸ்துவே லஷ்மி போன்ற வாதங்களும் தள்ளப்படும்

மேலும் நிர்விசேஷ சின்மாத்ர ப்ரஹ்மத்தின் ஸ்வரூபத்தை மறைத்துள்ள உண்மை அற்ற மாயை என்பதான
விசேஷத்தை அடைந்ததாகவும் ப்ரஹ்மத்தின் பிரதிபிம்பத்தைக் கொண்டதாகவும் உள்ள வஸ்துவே
லஷ்மீ என்று கூறப்படுகிறாள் என்பர் சிலர்
ஆனால் இப்படி மறைக்கப்பட்ட ஸ்வரூபம் கொண்ட ப்ரஹ்மம் -மற்றும் அதற்கு ஒரு மறைவு ஆகிய இரண்டுமே
தள்ளப்படுவதால் அந்தக்கருத்து நிரசனம்
மாயை மஹா லஷ்மி மற்றும் அவளுடைய நாயகன் இருவரையும் தவிர மற்ற அனைத்து லோகங்களையும்
மயக்கியபடி உள்ளது என்பதாலும் மேலே உள்ள கருத்து தள்ளப்பட்டது –

ஸ்ரீ மஹா லஷ்மியின் பார்வையை அவளுக்கு வசப்பட்ட செயல்களைக் கொண்ட ப்ரக்ருதி திரையைப் போலே
மறைக்கும் என்பது தப்பான வாதம் –
பாபங்கள் காரணமாகவே ஷேத்ரஞ்ஞர்கள் ப்ரக்ருதியான மாயையில் சிக்கி ஞான சுருக்கம் அடைகிறார்கள்
யுக கோடி சஹஸ்ராணி விஷ்ணும் ஆராத்ய பத்மபூ புந த்ரை லோக்ய தாத்ருத்வம் ப்ராப்த வாந் இதி சுச்ரும —
என்பதால் ப்ரஹ்மாதிகளும் கர்மவசப்பட்டவர்களே
அவர்கள் பத்னிகளும் கர்ம வசப்பட்டவர்கள் –
மஹா லஷ்மியும் அவர்களுடன் கூடி ஸஹ படிதமாக இருப்பதால் இவளுக்கும் ஞானம் சங்கோசம் என்பர் –
கீர் தேவதா இதி கருடத்வஜ வல்லப இதி –கனகதாரா ஸ்தோத்ரம் -10-என்று உள்ளதே –

இவ்வாறு கூறுவது பொருத்தம் அல்ல –
அவர்கள் மூவரையும் ஒன்றாகச் சேர்த்து சாமானாதி கரண்யமாகப் படித்தது ஏன் என்றால்
யத் தத் விபூதி சத்வம் –ஸ்ரீ கீதை -10-41-எது எது சிறப்பாக உள்ளதோ -விபூதி அத்தியாயத்தில் கூறப்பட்ட
நியாயம் மூலமே கொள்ள வேண்டும்

தாபநீய உபநிஷத்தில் க்ருத ஸூக்தத்தில் -மஹா லஷ்மியிடம் அந்த சொற்கள் அனைத்தும் அர்த்தத்தை
சிறப்புக்கள் மற்றும் அவற்றைத் தனது விபூதியாகக் கொண்டவன் என்ற காரணம் –
என்பதால் கூறப்பட்டதாக உரைக்கப் பட்டத்தைக் காணலாம்

காயத்ரீ கல்பத்தினைப் பொறுத்த வரை மஹா லஷ்மியின் செல்வமாகிய காயத்ரீ தேவதைக்கே
பல்வேறு ஸந்த்யைகளிலே வைஷ்ணவீ முதலானவர்களுக்குத் தகுந்த வாஹனம் ரூபம் போன்றவற்றை
ஏற்கும் சக்தி உள்ளது -என்று மேன்மையைக் கூறுவதில் கருத்து

த்ரு ஹிணாதிஷு கேஷாம் சித் ஈஸ்வர வ்யக்திதா பிரமாத் தத் பத்நீஷ்வபி லஷ்ம்யாம்ச வாதஸ் ஸ்ருத்யாதி பாதித–என்று
இவர்களே ஈஸ்வரர் என்ற பிரமம் உண்டாகி இவர்கள் பத்தினிகள் லஷ்மியின் அம்சம் உள்ளது –

இதனால் சுருதிகள் பாதிக்கப் படலாம் என்பதால் இக்கருத்தை சுருதிகள் தள்ளுகின்றன -என்ற கருத்து உண்டே
இவர்கள் இருவரும் மஹா லஷ்மிக்கு வசப்பட்டவர்களே

——————————————————-

ஹே பகவதி! மஹாலக்ஷ்மி! உன்னை நாம் எப்படிச் சொல்லுவோம்! உனக்குக் கணவன் புருஷர்களில் சிறந்த நாராயணன்; ஸர்ப்பங்களில் சிறந்த ஆதிசேஷனோ படுக்கை, ஆசனம்; வேத ஸ்வரூபியான கருடாழ்வான் வாஹனம்; உலகத்தை மோஹிக்கும் மாயை உன்னை அறியவொட்டாமல் தடுக்கும் திரை;  தேவர்கள் குழு உனக்கு கைங்கர்யம் செய்பவர்கள்; உனக்குப் பெயரோ ஸ்ரீ என்று எல்லாச் சொல்லுக்கும் மேன்மையைத் தெரிவித்துக்கொண்டு முன் நிற்பது. இப்படி இவ்வளவு மஹிமை உள்ள உன்னை எவ்வாறு சொல்லுவது, புகழ்வது?

————–

ஸ்வ சேஷ சேஷார்த்தோ நிரவதிக நிரப்பாத மஹிமா
பலாநாம் ததா ய பலம் அபி ச சரீரகமித
ஸ்ரியம் தத் சத்நிஸீம் தத் உபசதந த்ராச சமநீம்
அபிஷ்டவ்தி ஸ்துத்யாம் அவிதத மதிர் யாமுந முனி –

ஸ்ரீ யபதி -சர்வேஸ்வரன் -ஓத்தார் மிக்கார் இலாய மா மாயன் –
சர்வ பல ப்ரதன்-தானே பலத்தை அனுபவிப்பவன் –
சரீர சாஸ்த்ரத்தால் பிரதி பாதிக்கப்படுபவன் –

அவனை உபாசிப்பதில் அச்சத்தைப் போக்கி
அருளுபவளான ஸ்ரீ பெரிய பிராட்டியாரை –
க ஸ்ரீ ஸ்ரீய -என்றபடி
திருவுக்கும் திருவாகிய செல்வன் அன்றோ-

அந்தமில் பேர் இன்பத்து அடியாரோடு இருந்தமையை புருஷார்த்தம் –
அடியார் -பிராப்தம் -ஆச்சார்யரால் -அவர் மூலம் பிராட்டி -அவள் மூலம் அவன் –
ஸ்தோத்ர ரத்னம் நான்கு பேரையும் அருளி -இதில் -பிராட்டி பற்றி விவரணம் –

பகவானுக்கு பத்னி -என்பதால் அகில லோக ஸ்வாமினீ -நாயனார் ஆச்சான் பிள்ளை –
புருஷோத்தமா தே காந்த -உனக்கு நாயகன் அதனால் இவை உனக்கும் சொத்து -ஆச்சான் பிள்ளை
சேஷம் சொத்து -அவனுக்கு போலவே இவளுக்கும் -விநியோகம் கொள்ள தக்கவர் -தேசிகன் –

நிரவதிக நிரதிசய மஹிமா -அவனது -உபாசிப்பார்க்கு கிருபை -அவனே பலம் -நான்கு அத்யாய சுருக்கம் –

அவனுக்கு சமம் பிராட்டி -ஸமஸ்த பதார்த்தங்களும் சேஷம் -பக்தி பிரபத்தி செய்தால் இவளும் பலம் -இவளும் பல ரூபம் –
நான்கு வகை சிறப்புக்களும் இவளுக்கும் உண்டு –
தென்னாச்சார்யா சம்ப்ரதாயம் -பிராட்டிக்கு ஆதிக்யமும் சாம்யமும் கீழேயும்
கிருபாதிசயம் -கிருபையை கிளப்ப இவள் -இத்தை பார்த்தால் ஆதிக்யம்
கைங்கர்யம் பெற்று அவன் உகப்பது போலே இவளும் -பிரதி சம்பந்தி -இருவரும் – அத்தால் சாம்யம்
அடுத்த படி -ஜகத் காரணத்வாதிகள் அவனுக்கு மட்டுமே
அபிமதையாயும் அனுரூப மாயும் -பிராட்டி -பரிமளம் புஷ்பம் போலே –

ஸ்ரீயதே– ஸ்ரேயதே –இரண்டும் உண்டே -பர்த்தா -தாய் முறை இரண்டும் என்றபடி
அவனுக்கு சேஷம் அனைத்தும் -முதல் அத்யாயம் -அதே போலே இவளுக்கும் –

காந்தஸ் தே புருஷோத்தம
தே காந்த புருஷோத்தம –
புருஷோத்தம தே காந்த –
இப்படி இரண்டு யோஜனை –

ராமம் தசரதன் வித்தி –தசரதன் ராமம் வித்தி -இரண்டும் வியாக்யானம் தனி ஸ்லோகத்தில் –ராமன் இடம் பேர் அன்பு லஷ்மணா உனக்கு -சக்ரவர்த்தி இடம் பிதா போன்ற ப்ரீதி இல்லை -இங்கேயே இல்லை –
அங்கு நினைப்பாயோ -ராமனுக்கு பிரியம் என்பதாலாகிலும் எண்ணி நினைக்க வேண்டும்
கிழவன் காமி -என்று அன்றோ லஷ்மணன் கோபம் இங்கு -சுமந்திரன் வந்து சொன்ன வார்த்தை –
பிராதா பர்த்தா -சகலமும் -மம ராகவா -இப்படிச் சொன்னவன் தாய் தந்தை ஜென்ம பூமி விட்டு வந்த துக்கம் இருக்காதே

புருஷோத்தம தே காந்த -முதலில் சொல்லி -சப்த்தார்த்தம் அறிந்தால் -மறு பிறவி இல்லை
மூன்று வித சமாசம் –
ஷரம் -அக்ஷரம் -முக்தாத்மா -பிரவேசித்து தரித்து பணி உகந்து நியமித்து –ஸமஸ்த இதர வியாவ்ருத்தி
புருஷ — உத் புருஷ — உத்தர புருஷ –புருஷோத்தம —
அறிவுடையவன் புருஷன் -அசித்தை விட வேறுபட்டு -உத் புருஷ -சரீர சம்பந்த பத்தாத்மா -சம்சாரியில் வேறு பட்டு
உத்தர -முக்தாத்மாவில் வேறுபாட்டு -புருஷோத்தமன் நித்யரில் வேறுபட்டு-சிறப்புடைமை
அவன் தே காந்தா -பதி-
புரு சனாதி புருஷா
-அனைத்தையும் தருபவன் -தர்மம் அர்த்தம் காமம் -மோக்ஷம் –
மண்டோதரி பிரலாபம் -வியக்தம் -பரமாத்வாக அறிந்தேன் -பஹுவாக கொடுப்பவன் என்பதால் –
ரிஷிகளுக்கு தர்மம் -விபீஷணனுக்கு லங்கை ஐஸ்வர்யம் சுக்ரீவனுக்கு காமம் -ஜடாயு மோக்ஷம் –  தனக்கு கைவல்யம் –

ஐஸ்வர்யம் -அக்ஷரம் -மோக்ஷம் —லஜ்ஜை உதார பாவ -யதுகிரி நாயகி தாயார் -நித்யம் அனுசந்தானம் தீர்த்தம் சாதிக்கும் பொழுது
அஞ்சலிக்கு ஈடாக தர முடியவில்லையே மோக்ஷம் கொடுத்த பின்பும் -ராகவன் –அஸீ தேக்ஷிணா-தே காந்த புருஷோத்தம –
யஸ்ய ஜநகாத்மஜ அப்ரமேயம் -மாரீசன் -தே காந்தா புருஷோத்தம -உனக்கு காந்தன் இல்லையோ அதனால் புருஷோத்தமன்
ஸ்ரத்தா-லஷ்மி சம்பந்தம் பெற்றால் தானே –க ஸ்ரீ ஸ்ரீய-முதலில் சொல்லி புருஷோத்தம க அப்புறம் சொன்னது போலே —

காந்தஸ் தே புருஷோத்தம—-
காந்தன் -அனைத்து விதத்திலும் சேரும்படி உள்ளவன் என்றபடி -பிரியமாக உள்ளவன் –
தே -அனைத்து மங்களுக்கும் காரணமாக
ப்ரமாணங்களிலே கூறப்படும் உனக்கு
காந்தஸ் தே -இரண்டாலும் தேவ தேவ திவ்ய மஹிஷீம்-ஸ்ரீ சரணாகதி கத்யம் -என்றது கூறப்பட்டது

புருஷோத்தம –
த்வவ் இமவ் புருஷவ் லோகே
–ஸ்ரீ கீதை -15-16-என்றபடி இதர ஸமஸ்த விலக்ஷணன் என்பதால்
இந்த திருநாம பிரயோகம் –இங்கு பல சமாசங்கள் கொண்டு விளக்கலாம்
அவதாரத்திலும் நாரீணாம் உத்தம –ஸ்ரீ பால -1-27-
இவ்வாறு அவனது சம்பந்தம் மூலமாகவே இவளுக்கு உத்க்ருஷ்டம்

பணி பதிஸ் சய்யா ஆசனம் வாஹனம்-வேதாத்மா விஹகேச்வரோ-நித்ய விபூதி சேஷ பூதர்கள்
பதி பத்னி நியாயத்தாலே -தென்னாச்சார்யா சம்ப்ரதாயம்
புருஷோத்தமனுக்கு போன்று உமக்கும் -தேசிகன் சம்ப்ரதாயம் –
நான்கு விதத்திலும் சமம் ஸ்ரீ பாஷ்ய ப்ரக்ரியையாலே வியாக்யானம் –

பங்கயக் கண்ணன் என்கோ பவளச் செவ் வாயன் என்கோ -முதலில் திருக் கண்கள் -பின்பு திரு அதரம்
சம்சாரி போல உண்டியே உடையே -ருசியை மாற்றி -கண்களாலே குளிரக் கடாக்ஷித்து –
அந்த வலையிலே சிக்காமல் விலக–மந்த ஸ்மிதம் பண்ண -அதுக்கு விலக்க முடியாமல் சிக்கிக் கொண்டேன் –
என் முன்னே நின்றார் -கை வண்ணம் தாமரை -வசப்படாதவள் போலே இருக்க -மந்த ஸ்மிதம் பண்ண-அதுக்கும் மேலே –
தந்த பந்தி வாய் திறந்து-பரபாக வர்ணம் -வாய் கமலம் போலும் -கண் அரவிந்தம் -வலையிலே சிக்கிக் கொண்டேன் –
அடியும் அஃதே -திருவடிகளில் விழுந்தேன்
நிர்தேசம் -சப்த பிரயோகம் வைத்து -பாஞ்ச ராத்ர வசனங்கள் -ஜீவனைச் சொல்லி பரமாத்மாவைச் சொல்லும் -மாறியும் உண்டே
மச் சேஷ பூதா ஸர்வேஷாம் ஈஸ்வர –
கடகத்வம்- புருஷகாரத்வம் -இரண்டு ஸம்ப்ரதாயத்திலும் உண்டே –

காந்தஸ் தே -முதலில் -சொல்லி -இந்த பகவத் சம்பந்தம் பிரதானம் என்பதைக் காட்டி
பணி பதஸ் இத்யாதி -சேதன சம்பந்தம் அப்புறம்
தாய் -பிரியம் நோக்கு -தகப்பன் ஹிதம் -நோக்கு -லோகத்தில் -வத்ஸலையான மாதா —
மண் தின்ன விட்டு ப்ரத்ய ஒளஷதம் விடுவாள் -இசைந்து போலே காட்டி பரிகாரம் –
உசித உபாயம் -கொண்டு சேர்ப்பிப்பாள்-உத்தம ஸ்த்ரீ -இடம் வசப்பட்டவன் அவன் -எனவே பகவத் சம்பந்தம் பிரதானம்

திருமாலே நானும் உனக்கு பழ அடியேன் -இருவருக்கும் சேஷ பூதர்
பணி பதஸ்
–நித்யர் பலராய் இருக்க -இங்கு முதலில் -13-காரணங்கள் நாயனார் ஆச்சான் பிள்ளை –
அனுபவம் -போக்யத்தைச் சொல்லிச் சொல்லி அனுபவிக்க வேண்டுமே –
அனுபவ ஜெனித ப்ரீதி கார்ய கைங்கர்யம் -ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்களை அனுபவித்து –
வாயோர் ஈரைஞ்சூறு–ஆயிரம் வாயாலே -அனுபவித்து புகழ்ந்து பேசும் ரசிகர் –
நித்ய ஸூரிகளுக்கும் சரீரம் உண்டா – அத்வைதி -சரீரம் இல்லை
வியாசர் இரண்டும் -சுத்த சத்வமயம் –
பாரிப்புடன் கைங்கர்யம் –அஹம் சர்வம் கரிஷ்யாமி -சுற்றம் எல்லாம் பின் தொடர தொல் கானம் அடைந்தவன் –
ச ஏகதா பவதி -இத்யாதி -பல சரீரம் பரிக்ரஹம் –சென்றால் குடையாம்-இத்யாதி-
சக்கரவர்த்தி -கைகேயி இடம் கெஞ்சி -சரண் -பல வகையாக -கௌசல்யை இடம் செய்யாமல் கைகேயிடம் செய்தேன் -என் பாபம்
பத்னி- தாய் -உடன் பிறந்தவள் -சக்ரவர்த்தி உடன் கூட வரும் பெண்டிர்க்கு ஆலத்தி எடுத்து -பலவிதமாக கௌசல்யை –
இவனுக்கு ஞானம் சக்தி பாரிப்பு மிக்கு இருந்து கைங்கர்யம் செய்தமை சொல்ல வேண்டுமோ –
தாய் குழந்தை -பசு கன்று -போலே பகவானை அனுபவிக்க வேண்டுமே ப்ரீதியுடன் -பொங்கும் பரிவுடன் –
பெரியாழ்வாரும் நித்தியமாக செல்லுமே மங்களா சாசனம் –அங்கு ஆராவாரம் அது கேட்டு அழல் உமிழும் -அஸ்தானே பயசங்கை

பிராட்டி சம்பந்தம் திரு அநந்த ஆழ்வான் சம்பந்தம் ஓக்க -அருளிச் செய்தது -கடகத்வம் துல்யம் இருவருக்கும் –
ஆஜகாம -யஸ்ய சக லஷ்மணா -முன்னிட்டே ஆஸ்ரயம் -ஸ்ரீ விபீஷணன்
ஸ்வரூப நிரூபகம் இரண்டும்
சேர்த்தியில் -சொல்லி -கைங்கர்யம் செய்வதை அருளிச் சொல்லி -மிதுனம் கைங்கர்ய பிரதிசம்பந்தி –
ஸ்ரீ மதே நாராயண நம-அர்த்தம் -ஆனந்தம் நமக்கும் மிதுனத்துக்கும் சேர்த்தியிலே செய்தாலே தானே -முறை –
பாவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா-
கைங்கர்யம் சேர்த்தியில் -திருவாராதானமும் மனைவியும் புருஷனும் சேர்த்தியிலே -ஸ்ரத்தையுடன்
பத்னிமார்கள் கூட இருந்தே கைங்கர்யம் -பணி பத விஹகேஸ்வர -உப லக்ஷணை-யால் அர்த்தாத் சித்தம்
ஸஹ பதன்யா விசாலாஷ்யா நாராயணன் உபாஸ்மத்யே
லலிதை -பெண் எலி -சரித்திரம் -திரி நொந்திய புண்ணிய பலன் –
ஐகரஸ்யம் -ஸ்ரீ பூமி நீளா தேவிமார்கள் -அவயவ பாவம் –
ஆசனம் -திரு அநந்த ஆழ்வானுக்கும் பெரிய திருவடிக்கு –
அனந்தன் பாலும் கருடன் பாலும் -இந்த வகையிலே இங்கும் –
வேதாத்மா -வேதமயன் –

யவநிகா மாயா ஜகன் மோஹிநீ–மோகம் உண்டு பண்ணும் மாயா பிரகிருதி திரை
தேவரீருக்கு -ஜகத் சப்தம் பத்த ஜீவாத்மாக்களைச் சொன்னபடி
ஜீவ ஸ்வரூபம் பர ஸ்வரூபம் இரண்டையும் மறைக்கும்
மோகம் -அஞ்ஞானம் -ஞான சூன்யம் – -அந்யதா ஞானம் -விபரீத ஞானம் – -சரீரம் பிரகிருதி காரிய காரண சம்பந்தம் –
ஹேயப்ரத்ய நீகன்-ஹேயம் -போக்குபவன் -ஞான ஏக கல்யாண குணன்–நாராயணன் பரமாத்மா -உபய லிங்கம் –
யாதவ பிரகாசர் மதம் -இவர் திருப்புட் குழியில் இருந்த அவர் இல்லை -ப்ரஹ்மம் -மூல காரணம் –
பரிணாமம் அடைந்து -ப்ரஹ்மத்துக்கு விகாரம் உண்டு -ப்ரமாதி ஈஸ்வரர்கள்- ஜீவாத்மா அசித்துக்கள் -இதனால் –
நிர்விசேஷ சின் மாத்திரை ப்ரஹ்மம் பரமாத்மா -அத்வைதம் –
சரீரமே தேகம் -ஸ்வ தந்த்ர மோகம் -அன்யா சேஷத்வ மோகம் -ஜீவ ஸ்வரூப மோகம்
பிரகிருதி இன்பமாக இல்லா விட்டாலும் தோற்றும் மோகம் -ஆக மூன்றுக்கும் திரை
திரைக்கு உள்ளே இருப்பார்க்கும் வெளியில் இருப்பவரையும் மறைக்கும் –
பெரிய பிராட்டியாரை போலவே நாமும் என்பர் – பூர்வ பக்ஷம்
ஸ்ரீ பாகவதம் -மாயா சப்தம் ஜீவனுக்கும் பரமாத்மாவுக்கு சொல்லும் ஸ்லோகங்கள் உண்டே
ஜீவன் மாயா வஸ்யம் -என்று சொல்லும் -மாயையை அடக்கி ஆள்பவன் பரமாத்மா –
அத்வைதம் ப்ரஹ்மத்துக்கும் மாயா வஸ்யம் சொல்லும்
மாயைக்கு ஸ்வாமிநீ -நியாந்தா பெரிய பிராட்டியார் -மறைக்கும் சக்தி இல்லையே அவளுக்கு –
சிறைக்குள் உள்ள கைதியும் அரையனும் இருந்தாலும் -கட்டுப்படுத்துவது கைதியைத் தானே –
கர்ம சம்பந்தம் துக்க ஹேது -என்றவாறு-

ப்ரஹ்மே ஸாதி ஸூரா வ்ரஜஸ் சதயிதஸ் த்வத் தாஸ தாஸீ கண-
லீலா விபூதி சேஷ பூதர்கள் -தேவ கூட்டங்கள் என்ன அவர்கள் பத்னிகள் என்ன –
பிரகிருதி -ப்ரமாதிகளும் அறிய முடியாத படி அன்றோ -மாயா வஸ்யர்கள் இவர்களும் –
கிருஷ்ணன் ருக்மிணி தாயார் பிரளய கலக ரசம் ஸ்ரீ லஷ்மிக்கும் கிட்டாத ரசம் அல்லையோ –
உனக்கு உள்ள மஹிமை எனக்கு இல்லையே என்று சொல்லி உகந்த ருக்மிணி தாயார் -பாகவதம் கோஷிக்கும்
சரஸ்வதி ஸ்ருஷ்டித்து -பத்தினியாக -மரீஸாதி புத்திரர்கள் -இந்த விவாகம் கூடாது –
தனக்கு பிறந்த பெண்ணை -கல்யாணம் பண்ணக் கூடாதே -சரணாகதி பகவான் இடம் பண்ண
சிவன் பார்வதி -ஸ்தானம் -அரையில் வஸ்திரம் இல்லையே -யார் வந்தாலும் பெண்ணாக போவதாக சாபம் –
மோகினி ரூபம் காட்ட சிவன் பிரார்த்திக்க – அப்ராக்ருத திவ்ய ரூபம் –
சிரிக்க -பிராகிருத மோகினி -ஸ்ருஷ்டித்து அதுக்கு சிவன் வசப்படட சரித்திரம் பாகவதம் உண்டே –
அவர்களே வசப்பட்டு மோகிக்க நம் போல்வாரைச் சொல்லவும் வேண்டுமோ-

ஆகாசம் -பஞ்ச பூதங்களில் ஓன்று -இமானி தேவாநி ஜாயந்தே இத்யாதி -என்ற போது –
பர ப்ரஹ்மத்தைக் குறிக்கும் -ஆகாச தல் லிங்காத்-எங்கும் பிரகாசிக்கும் பொருள் என்ற அர்த்தத்தில் –
ருத்ர ஹிரண்ய கர்ப்ப திரு நாமங்கள் விஷ்ணு சஹஸ்ர நாமங்களில் உண்டே –
வாஸுதேவா பராயணா -சனகாதிகள் -ஸ்ருஷ்டிக்க உதவி செய்ய இசைய வில்லையே –
அப்புறம் ருத்ர ஸ்ருஷ்ட்டி -ரோதனம் -அழுவது -பிரளயத்தில் அழியும்படி செய்வதாலும் –
ஆஹ்லாத சீதா நேத்ரா -ஆனந்த பாஷ்யம் பண்ணும்படி ஆளும்படி விஷ்ணு ருத்ரன் அர்த்தம் -பாஷ்யத்தில் பட்டர் –
ஹிரண்ய கர்ப்பம்-ஸூந்தரமான பரமபதம் -பகவானைத் தாங்கும் பரமபதம் -என்றவாறு –
ஆதி -சப்தத்தால் இந்திரன் -இவன் தரமே அவர்களும் என்றவாறு –
கைமுத நியாய சித்தம்-அனைவரும் – இவர்களைச் சொன்ன போதே
இவர்கள் பத்னிமார்கள் -பெரிய பிராட்டியாருக்கு தாசீ -சித்தித்த அர்த்தம் –
பார்யை புத்ரன் தாசன் -இவர்கள் -ஸ்ரீ தனமாக உத்யோகம் மூலம் கார்யம் செய்து தனம் கொண்டு வந்தாலும் –
இவர்கள் சம்பாதிக்கவும் அவர்கள் ஸ்வாமிக்குத் தான் சொத்து

மாதா -பிதா- மாதவா -சேஷி தம்பதிகள் -பித்ருத்வம் -ஜகத் காரணத்தவம்
மாத்ருத்வம் பெரிய பிராட்டியாருக்கு –
பெரிய பிராட்டியாருக்கும் பொதுவானது தேசிக சம்ப்ரதாயம் –
ஸ்ரீ ஸ்தவம் – ஸ்ரீ குண ரத்ன கோசம்- ஸ்பஷ்டமாக இவற்றை அருளிக் செய்துள்ளார்கள்
அசேஷ ஜெகதாம் சர்கோ–ப்ரூவம் -இங்கீத பராதீன -ஜகம்

——–

ஸ்ரீ சதுஸ்ஸ்லோகி -ஸ்ரீ உ .வே. கார்ப்பங்காடு வரதாச்சார்யர் ஸ்வாமிகள்

அவதாரிகை –
மாத்ரு தேவோ பவ-பெரிய பிராட்டியாரை மாதாவாகவும் -எம்பெருமானை பிதாவாகவும் பஞ்ச சம்ஸ்காரம் பண்ணின ஆச்சர்யரையும்-ஸ்ரீ வைஷ்ணவர்களையும் -பாகவத உத்தமர்களையும் – அதிதியாகவும் –ஆத்ம க்ஷேமம் அடைய நால்வரும் உபகாரங்கள் செய்து அருளுகிறார்கள் அன்றோ –

ஸ்ரீ நாயனார் ஆச்சான் பிள்ளை -ஸ்ரீ -பெரியவாச்சான் பிள்ளை என்றும் சொல்வர் –

ஸ்ரீ தேசிகன் அருளிச் செய்த இரண்டு வியாக்கியானங்கள் உண்டு

சாஸ்வதம் –நிலை நின்ற புருஷார்த்தம் –பரம பதத்தில் சென்று சேர்ந்து இருப்பது மட்டும் புருஷார்த்தம் இல்லை –
அடியார் குழாங்களை உடன் கூடி அவர்கள் முக விலாசம் பண்ணும் படி கைங்கர்யம் செய்வதே புருஷார்த்தம்
அடியவர்களுக்கும்- பாகவத சேஷத்வமே -சரம பர்வ நிலை -உடன் கூடுவது என்று கொலோ என்று பாரிப்பதே முக்கியம் –

பாகவத சம்பந்தம் ஆச்சார்யராலே —
ஆச்சார்ய சம்பந்தம் எம்பெருமானாலே –
அவனை பெறுவது பிராட்டியாலே -ஆகையால் நால்வரையும் சொல்லிற்று

ஸ்ரீ சதுஸ் ஸ்லோகியும் ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னமும் -மூல ஸ்தோத்திரங்கள் -.

பரமாச்சார்யரான ஸ்ரீ ஆளவந்தார் காட்டி அருளிய படியே பின்பு வந்த ஸ்தோத்திரங்கள் –

ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னத்தில்–ஆச்சார்யர் -பிராட்டி -எம்பெருமான் -பாகவத உத்தமர்கள் நால்வரையும் ஸ்தோத்ரம் பண்ணி
ஸ்ரீ சதுஸ் ஸ்லோகியில் தனியாக பிராட்டி பற்றி நாம் அறிய அருளிச் செய்கிறார் -அனைவரும் கிரஹிக்கும் படி
ஸ்ரீ -போன்று சுருங்கியும் இல்லாமல்
ஸ்ரீ ராமாயணம் போன்று விரிவாகவும் இல்லாமல்
நான்கு ஸ்லோகங்களால் அருளிச் செய்கிறார் –

புருஷோத்தம
தான் மஹநீய விஷயம் -தன் இடம் ப்ரீதி பக்தி செய்ய வேண்டும் -எல்லாம் தன் சொத்து –
தான் ஸ்வாமி -ஆத்மாத்மீயங்கள் எல்லாம் அவனது அன்றோ –
தன்னை ஒழிந்த அனைத்துக்கும் தானே ஸ்வாமி –
அசையும் பொருள்களும் அசையாத பொருள்களும் எல்லாம் அவன் இட்ட வழக்கு

காந்தஸ்ய
பிராட்டியின் பெருமையை சொல்லி –
நித்ய ஸூரிகள் -திரு அநந்த ஆழ்வான் -பெரிய திருவடி
இவர்கள் அனைவரும் மிதுனத்துக்கு சேஷம் .

ஸ்ரீ
திரு நாமம்
ஸ்ரீ யதே
அனைவராலும் ஆஸ்ரயிக்க படுபவள் –
அவளும் அவனை ஆஸ்ரயித்து இருப்பவள் -பத்னி என்ற முறையால் –
அனைவரும் அனைத்தும் சொத்து இவளுக்கு பத்னி என்பதால் -உபய விபூதிகளுக்கும் ஸ்வாமிநி-அவன் ஸ்வாமி –
புருஷோத்தமன் நாயகன் என்பதால் -உபய விபூதியும் இவள் சொத்து என்றபடி

அனைவருக்கும் அவனுக்கு சொத்து -விவசாயி போலே ஸமஸ்த பதார்த்தங்களையும் உண்டாக்கி -அளித்து -அழிக்கிறான்-
எல்லாம் அவன் விருப்பத்துக்கு விநியோகம் -எல்லை அற்ற பெருமை -விரோதிகள் ஒன்றும் இல்லை –
அதே போலே பிராட்டிக்கும்

பக்தி பிரபத்தி போது -பல பிராப்தி இருவரும் அருளுகிறார்கள் -இதில் சாம்யம் –

தென் ஆச்சார்ய சம்பிரதாயத்தில்
ஆதிக்யமும் –
சாம்யமும் –
சேஷமும் உண்டு –

அவள் கிருபை போல் அவன் இடம் இல்லை என்பதால் ஆதிக்யமும் -ஏற்றமும் —
கிருபை கடலாக அவன் இருந்தாலும் கிளப்பி தருபவள் இவள் அன்றோ

கிட்டி கைங்கர்யம் செய்யும் பொழுது உகக்கிறார்கள் இருவரும் -இதில் சாம்யம் –

ஜகத் காரணம் போன்றவை அவனுக்கே தான் -இதில் அடுத்த படி தானே அவள்

தேசிகன் -நான்கு அத்தியாயத்தில் உள்ளது போலே சாம்யம் அனைத்திலும் என்பார் –
எல்லா வேதாந்த வாக்கியங்களும் ப்ரஹ்மம் இடம் சேரும் என்பது முதல் அத்தியாயத்தில் –
ப்ரஹ்மமே பலம் என்று சொல்லும் நான்காவது அத்யாயம்

அபிமதமாயும் அநு ரூபமாயும் இருப்பவள் பெரிய பிராட்டி –
பரிமளத்தால் புஷ்பத்துக்கு பெருமை போல இவளால் அவனுக்கு பெருமை –
உபய விபூதியும் சொத்து என்பதை முதல் ஸ்லோகத்தால் அருளுகிறார்-

தாய் முறையால் அனைவராலும் ஆஸ்ரயிக்கப் பட்டும் —
பத்னி என்பதால் தானே அவனை ஆஸ்ரயித்தும் இருக்கிறாள் -என்பதால் -ஸ்ரீ சப்தம் முதலில் –

சரிர மீமாம்சையில் ஸ்ரீ வேத வியாசர் முதல் அத்தியாயத்தில் அனைத்தும் அவனது சேஷ பொருள்கள் – அவன் விநியோகத்துக்குத் தான் –

ஸ்ரீ காந்தஸ்தே புருஷோத்தம –பணி பதே-சய்யா –ஆசனம் –வாஹனம் –வேதாத்மா -விஹஹேஸ்வரோ –மாயா -ஜெகன் மோஹிநீ-
ப்ரஹ்மே ஸாதி ஸூ ராவ் ரஜஸ்-சத யிதஸ் த்வத் தாஸ தாஸீ கண-ஸ்ரீரித் யேவ ச நாம தே பகவதி-ப்ரூம கதம் த்வாம் வயம்

ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோகம் -சுமத்ரா தேவி வாக்கியம் –
இளைய பெருமாள் இடம் பெருமாள் கூட —தசரதன் ராமம் வித்தி –

தே காந்த புருஷோத்தம -என்றும் –

காந்தஸ்தே புருஷோத்தம -என்றும் இரண்டு நிர்வாகங்கள் –

எங்கும் பெருமாள் இடம் தான் அன்பு உனக்கு –
சக்கரவர்த்தி இடம் அன்பு அவர்களுக்கு இல்லை -ப்ரீதி பிதா இடம் எங்கு இல்லை -பெருமாள் தான் சர்வம் –
காட்டுக்குப் போகும் போது சக்கரவர்த்தியை நினைக்கா விடிலும் -உனக்காக சக்கரவர்த்தி இடம் பிரியம் இல்லா விடிலும் –
பெருமாள் விரும்பும் சக்கரவர்த்தியை விரும்பு -என்று ஒரு கருத்து –

பிறந்த இடமான திரு அயோத்தியை -தாய் -தந்தை -மூவகை விருப்பம்
காட்டில் போகும் பொழுது ஜென்ம பூமியை பற்றியோ -தாய் தந்தையை பற்றியோ நினைத்து வருத்தம் ஏற்பாடாகி கூடும் –
அவனே எல்லாம் என்று கருத்து

ராமோ தசரதன் வித்தி -என்று ஸ்லோக க்ரமம் படி அர்த்தம் கொண்டு பெருமாளே சக்கரவர்த்தி என்று கொள் என்றுமாம் –

பெருமாளை காட்டுக்கு போக சொல்லும் போது இளைய பெருமாள் கோபம் கொண்டார் –
சுமந்திரன் தந்தைக்கு என்ன செய்து என்று கேட்டதும் –
மம ராகவ-சகல வித பந்து -எனக்கு ஜென்ம பூமி தாய் தந்தை -அனைத்தும் பெருமாளே –
இருக்கும் போதே தகப்பனாக நினைக்காதவன் -இப்போது சொல்வதில் வியப்பு இல்லையே

திராட்ச்சை தேனில் ஊறினது போலே ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்ரீ ராமாயணத்தில் ஆழ்ந்து வியாக்யானம் செய்து அருளுகிறார்

அதே போலே இங்கும் -புருஷோத்தம தே காந்த –

புருஷோத்தம வித்யை அறிந்தோம் ஆனால் புனர் ஜென்மம் பக்தி யோகனுக்கும் இல்லை என்கிறான் ஸ்ரீ கீதையில்
அக்ஷரம் –முக்தர் –ஷரம்–இவற்றோடு வேறுபட்டு
பிரவேசித்து -தரித்து -கைங்கர்யம் கொண்டு உகந்து
வேறுபட்டு -சிறந்த புருஷார்த்தம் -ப்ரீதி காரித கைங்கர்யம் தானே

புருஷன் –உத் புருஷன் –உத்தர புருஷன் -உத்தம புருஷன்
அறிவுடையவன் -அசித்தை விட வாஸி புருஷன்
உத் புருஷன் -சரிர சம்பந்தம் விட்ட முக்தர்
உத்தர புருஷன் -சரிர சம்பந்தம் இல்லாத நித்யர்
இவர்கள் அனைவரிலும் வேறுபட்ட ஸ்ரேஷ்டன் புருஷோத்தமன் –

அவன் தே காந்த : உனக்கு அன்பனான பதி என்கிறார் -ரூட் அர்த்தமாக –
புரு -தர்ம அர்த்த காமம் மோட்ஷம் -அனைத்தையும் வாரி வழங்குபவன்

மண்டோதரி வார்த்தை -பல பிரதானம் பண்ணி அருளும் புருஷோத்தமன் -பெருமாள் என்கிறாள்
ரிஷிகளை ரக்ஷணம் பண்ணி தர்மம்
ஸ்ரீ விபீஷணன் -சுக்ரீவ மஹாராஜர் இருவருக்கும் அரசு அருளி -அர்த்தம்
வாலி ஜடாயு -மோட்ஷம் அருளி
கைவல்யம் தன்னை தானே அனுபவிக்கும் படி எனக்கு அருளினார் என்கிறாள் மண்டோதரி

அந்த புருஷோத்தமன் உனக்கு காந்தன் –
ஸ்ரீ பட்டர் யதுகிரி நாச்சியார் பிரசாதத்துடன் வேதாந்தி யாய் இருந்த நஞ்சீயரை ஸம்ப்ராயத்துக்கு கொண்டு வந்தார் –

திரு முகத்தில் பிராட்டிக்கு லஜ்ஜையாம் -அனைத்தும் கொடுத்து இன்னும் கொடுக்க ஒன்றும் இல்லையே என்று
ஐஸ்வர்யம் அஞ்சலி பரம் அஸ்மின் லஜ்ஜியதி -ஸ்லோகம் -தினம் சொல்லி தீர்த்தம் பிரசாதம் வாங்கிக் கொள்கிறோம்

தே காந்த புருஷோத்தமன் -உனக்கு அன்பனான பதி என்பதால் தான் புருஷோத்தமன் ஆனான் என்று அர்த்தம்

மாரிசன் -இராவணன் சம்வாதம் ..தேஜஸ் அனுபவித்தவன் மாரிசன் ..
ப்ரஹ்மச்சாரி ராமனை முன்பு பார்த்தவன் ..சீதா பதி இப்போது ..அப்ரமேயம் -அளவுக்கு அப்பாற்பட்டது ..

பிராட்டி சம்பந்தத்தால் ..லட்சுமி சம்பந்தத்தால் தேவன் ..வரனுக்கு வது சம்பந்தம் ..
தேஜஸ் பார்க்கலாம் இப்போ கூட ..அரை ஒன்றாகும் கல்யாணத்துக்கு பின்பு ..
அழகிய மணவாள பெருமாள் நாயனார் என்ற திரு நாமமும் இவருக்கு ..

ஸ்தோத்திரங்கள் பல சேர்த்து தொடுத்து வ்யாக்யானம் ..
புருஷோத்தமன் கஹா போன்ற ஸ்தோத்ர ரத்ன ஸ்லோகத்தையும் எடுத்து காட்டுகிறார் .
பட்டர் உயர்ந்த தத்வம் கண்டு பிடிக்க சிரமம் பட்டாலும் முடியவில்லை ..
திரு மார்பில் பட்டு -லட்சுமி பத சம்பந்தத்தால் இவனே புருஷோத்தமன் என்று அறிந்ததாம் .

பணி பதே-சய்யா –ஆசனம் –வாஹனம் –வேதாத்மா -விஹஹேஸ்வரோ –ஆசனம் இருவருக்கும் சேர்த்து —
விருப்பத்திற்கு ஏற்ப சேஷ பூதர் நித்யர்கள்
மிதுனத்துக்கே சேஷம் வாஹனம் -அவனுக்கு போலவே இவளுக்கும் –

பகவன் நாராயண அபிமத அநு ரூப -கத்யத்திலும் -பட்ட மஹிஷி -திரு அநந்த ஆழ்வானும் மிதுனத்தில் பாதுகை .-
பகவத்  சம்பந்தம்  சொல்லி  ஜீவாத்ம  சம்பந்தம்  சொல்லுவார் ..
வேறு  சில  இடத்தில்  ஜீவாத்ம  சம்பந்தம்  சொல்லி  அவன்  சம்பந்தம் ..

பங்கய  கண்ணன்  என்கோ  பவள  செவ்வாயன்  என்கோ ..கண்ணை  பதி  சொல்லி  அதரம்    சொல்லுகிறார் . .
ஈட்டில்  நம்  பிள்ளை -சம்சாரிகளை  போல  இருக்கும் என்னை -ருசியை  மாத்தி  தன்  இடம்  ருசியை  மாத்த-
விஷய  ப்ராவண்யம்  விட்டு  விட்டு  தன்  மேல்  பெறுக  கடாஷித்தான்  

முதலில் ..அதிகாரியாக  ஆக்கினான் .. அந்த  வலையில்  சிக்கி  கொள்ள  வில்லை ..
ஆலோசித்து  மந்த ஸ்மிதம்   பண்ணி  வலை  படுத்துகிறான் ..
திரு  மங்கை  மன்னனும் -போக  பிச்சை  விரும்பி கை  வண்ணம்  தாமரை . கைகளை  காட்டி  
வேண்டி   கொண்ட  போது  வச  படாதவள் போல இருந்தார் .. மந்த  ஸ்மிதம்  பண்ணினான் –
வாய் திறந்து  பூர்ணமாக  சொல்லாமல்  வாய்  கமலம்  போலும் .. அந்த  வலையிலும்  சிக்கி  கொள்ளவில்லை ..
கண்  இணையும்  அரவிந்தம் -சிக்கி  கொண்டேன் ..அங்கு  கண்களைச்  சொல்லி  வாயை  சொல்ல
இவர்  உதடு  துடிக்க  வாய்  சொல்லி  கடாக்ஷித்து  வச  பட்டேன்-.  அடியும்     அஃதே   அடையாளம்    என்கிறார் .

பிராட்டி  ஜீவாத்மவை  பரமாத்மவிடம்  சேர்த்து  வைக்கிற  -கடகத்தவம் ..இரண்டு   இடத்திலும் சம்பந்தம் ..
ஈஸ்வரன்  சம்பந்தம்  சொல்லி  சேதன  சம்பந்தம்   சொல்லுவார்  சில  இடத்தில் ..
இரண்டில்  பிரதானம்  பரமாத்ம  சம்பந்தம் -காந்தஸ்தே  புருஷோத்தம :-என்பதில்  தெரிகிறது ..

ஹிதம் -தகப்பனின் நோக்கு  .. பிரியம் -தாய்  போல ..
வத்சலையான  மாதா  பிள்ளையை  பேஹணியாமல் மண்ணை  திண்ண  விட்டு  பின்பு   ஒளஷதம்  இடுவாள்  தாய் ..
அவனின்  நிக்ரஹம்க   மாத்தி  அனுக்கிரஹம்  செய்பவள்  அவள் ..தோஷம்  இல்லாதவன்  யார்  என்பாள்  தாயார் ..

தயை -வத்சல்யம் -க்ஷமை  குணங்களுக்கு  பிரயோஜனம்  வேணுமே -..உபய  விபூதியும்  பிராட்டிக்கும்  சேஷம் -தேசிகன் ..
திரு  மாலே  நானும்  உனக்கு  பழ   அடியேன் –திரு -பெரிய  பிராட்டிக்கும்  என்றும்   சொல்வதால்

ஜீவாத்மா   பலர்  இருக்க -நித்யரும்  பலரும்  இருக்க  திரு  அநந்த ஆழ்வானை  
முதலில்   அருளியது  14 காரணம்  காட்டுகிறார்  ஆச்சான் பிள்ளை  .
நித்யரில்  தலைவர் .. அனுபவிக்கிறார் ..ப்ரீதி  தருகிறார் ..
ஸ்வரூப -ரூப -குண -விபூதி-சேஷ்டிதங்கள் – அனுபவிக்கும்  போது  தித்திக்கிறது  
அந்த  அனுபவம் ..வாய் ஓர்  ஈர்  ஐநூறு ..அவையும்  போராது  அனுபவங்களின்  புகழை  சொல்ல ..
அதனால் -பணிபதி முதலில்  ..

சரீரம்  உண்டா  ? நித்யர்களுக்கு ..வியாசர்  ஹேய  சரீரம்  இல்லை சுத்த  சத்வ மய  சரீரம்  உண்டு  என்கிறார் ..
பல  சரீரங்கள்  கொண்டு  பல  வித  கைங்கர்யம்  செய்கிறார்கள் .பாரிப்பு  மிக  உண்டு ..
அஹம்  சர்வம்  கரிஷ்யாமி  என்கிறார்  லக்ஷ்மணன் ..
ஸ்ரீ குலசேகர பெருமாள்  அனுபவம் -மன்னு  புகழ்   திரு மொழி -சுற்றம்  எல்லாம்  பின்  தொடர  தொல்  கானம்  அடைந்தவனே -என்கிறார் ..
பொய்  இல்லாத  பாடல் -அனைவரின்  கைங்கர்யமும்  பண்ணினதால் -சுற்றம்  எல்லாம்   இவன்  தான்  ..
அது  போல  சென்றால்  குடையாம்  -பல  ரூபத்தால்  கைங்கர்யம்  என்பதால்  முதலில் ..

கௌசல்யை -தாய் -தமக்கை பாரியை  மட்டும்  இல்லை ..தசரதன்  வருத்த  பட  நம்  பிள்ளை  
இந்த  சுலோகத்துக்கு  அர்த்தம் -ஆலத்தி எடுப்பாளாம்   உடன்  பிறந்தவள்- போல  –
போன  இடத்தில்  ஒரு  பெண்ணை  கல்யாணம்  பண்ணி  கொண்டு  வந்தால்  கூட  என்பார் ..அவள்  இடம்  ப்ரீதி  காட்டாமல்  கைகேசி  இடம்  ப்ரீதி  செய்தான்   என்கிறார் ..

ஞானம்  -பலம்  ப்ரீதி  வுடன்  திரு அநந்த ஆழ்வான்  கைங்கர்யம்  செய்பவர் ..பணிபதி  செய்யாஸ்  ஆசனம் -அதனால்  முதலில்  .

தாய் -குழந்தை  போல  பசு -கன்று  போல  நாமும்  அவன்  இடம்  ப்ரீதி  காட்டணும்  என்கிறார் ..
பொங்கும்  பரிவால்  பட்டர்  பிரான்  பெற்றார்  பெரிய ஆழ்வார் ..சுத்தமான  பரிவு -தாய்  ஸ்தானத்தில் இருந்து ..

அங்கு  ஆரவாரம்  அது  கேட்டு  அழல்   உமிழும்  -திரு  மழிசை  ஆழ்வார் ..சாம  கானம்  கேட்டு –
அயோத்தியை -ஸ்ரீ  வைகுண்டம் -சற்றுக்கள்  பிரவேசிக்க  முடியாத இடத்திலும் .
பரம  பத  நாதனுக்கு  சாம   ஞானம்  ஆரவாரம்  என்று  நினைந்து அழல்  உமிழ்கிறார் -இவ்வளவு பரிவு -அதி சங்கை பண்ணி

விட்டு பிரியாத தர்மம் மிக முக்கியம் பிராட்டிக்கு ..இத்தாலே அவனை தெரிந்து கொள்ள கூடிய ஸ்வரூப நிரூபக தர்மம் -ஸ்ரீ யபத்வம் –
இவனுக்கே அசாதாரணம் -திரு இல்லா தேவர் –

ஸ்ரீ பாஷ்யம் மங்கள ஸ்லோகத்திலும் ஸ்ரீ நிவாஸே தீப்தே –
திருவரங்கம் என்றாலே மயலே பெருகும் ஸ்ரீ ராமானுஜர் -..

அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பன்
திருவனந்த ஆழ்வான்-சம்பந்தமும் ஸ்வரூப நிரூபிதா சம்பந்தம் -பாதுகை ஆசனம் -இத்யாதி –

உடையவன் எம்பெருமானே
அதனால் சேர்த்து அருளுகிறார் -ஸ்ரீ யப்பதி சம்பந்தத்தையும் பணிபதி சம்பந்தத்தையும்-கடகத்வம் இருவருக்கும் உண்டே –

நாகணை மீசை எம்பிரான் சரணே சரண் -என்பதால் இளைய பெருமாளை முன்னிட்டு சரணாகதி அடைந்தது போலே –
சேர்த்தி சொல்லி -சேர்த்தியில் பண்ணும் கைங்கர்யத்தையும் அருளிச் செய்கிறார்
இத்தாலே -த்வயம் போலே

திரு அனந்த ஆழ்வானுக்கும் பெரிய திருவடிக்கும் பத்னிமார்களும் உண்டே -சேர்ந்தே மிதுனத்துக்கு கைங்கர்யம் செய்கிறார்கள் –
ஞானம் அனுஷ்டானம் இரண்டுமே வேண்டுமே -பெருமாளும் சீதா பிராட்டியும் சேர்ந்தே பெரிய பெருமாள் திருவாராதனம் செய்து அருளினால் போலே
பிராட்டியின் அந்தபுரத்துக்குள் போக இவர்களின் பத்னிமார்களுக்கு தான் அதிகாரம்
பூமி நீளா தேவமார்களுக்கும் -இவர்கள் கூட சேந்து சேர்த்தியில் கைங்கர்யம் –
லலிதை சரித்திரம் -முன் ஜென்மத்தில் பெண் எலி பூனை சப்தத்தால் த்ரீ நொந்தப் பட்டு பிரகாசித்ததாம்
புஷ்பம் சந்தனம் போலே –தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே-கைங்கர்யத்தில் களை அறுகை

அனந்தன் பாலும் கருடன் பாலும் –சேர்ந்து இங்கும் அருளுகிறார் -..

யவனிகா மாயா ஜெகன் மோஹினி ..மூன்று வஹை மோகம் -மாய -பிரக்ருதிக்கு ..
தன்னை பற்றியும் -சித் பற்றியும் -ஈஸ்வரனையும் பற்றிய மோகம் ..அறிய ஒட்டாமல் மறைத்து விடும் –

அஞ்ஞானம் பல வகைகள் உண்டு -ஞானம் உதயமே இல்லாமல் -சம்சய விபரீத –
முத்து சிப்பியை வெள்ளி என்பது போலே -அந்யதா ஞானம் -….
அதனால் ஜெகன் மோஹினி என்று பிரக்ருத்யை சொல்கிறார் –

அகில ஹேய ப்ரத்ய நீகம்
தன் சம்பந்தத்தால் அனைவரின் ஹேயங்களை அழிக்கிறவன் ..உண்மையாக தெரிந்து கொள்வது தான் ஆத்மாவுக்கு க்ஷேமம் —
ஸ்ரீ யபதித்தவம்–அகில ஹேய ப்ரத்ய நீகம் -கல்யாண குணை ஏக -நாராயண பரமாத்மா நிச்சயமாக நான்கையும் தெரிந்து கொள்ள வேண்டுமே ..

யாதவ பிரகாச மதம் நிரசிக்கிறார் – ஸ்ரீ பாஷ்யத்தில் ..மூல பிரக்ருதியால் வந்தவை மூன்று தத்துவங்கள் என்பார் இவர் மதம் ..

அத்வைதி -பரமாத்ம ஒன்றே உண்டு –திருமேனி குணங்கள் இல்லை என்பர் -இவை போன்ற மோஹங்கள் பல

மாய  வஸ்யம் -ஜீவாத்ம ..பகவானை  சொல்லும்  போது மாயை  சக -அடக்கி  ஆளுபவன்  என்பார் -அத்வைதத்தில் ..  

ப்ரஹ்மதுக்கும்  மாய  வஸ்யம்  என்று  சொல்லுவார் ..ஸ்ரீ  ராம  நவமி  உத்சவம்

ஸ்வாமி ..காலஷேபம்   ஆன பின்பு -சங்கர  ஜெயந்தி ..மாயை  ப்ரஹ்மத்தை  சூழ்ந்து   கொண்டது  என்பார் ..

மாயைக்கு  ஸ்வாமினி நியாமினி  -பிராட்டி ..சிறைச்சாலையில்  குற்றம்   செய்தவரும்  ராஜாவும்  இருந்தாலும்  துக்கம்  யாருக்கு ..
அது  போல  மாயையில்  அகப்பட்டவன்   ஆவான் ..சரீரம் -சிறை  சாலை .. இருவரும்  இருக்கிறோம் .
அவனுக்கு  உகப்பு  ஜீவனுக்கு  துக்கம்  கர்மத்தால் ..பிராட்டிக்கும்   கர்ம சம்பந்தம்  இல்லை ..
பத்தினி  என்பதால்  அனைவரும்  அவளுக்கு  சொத்து ..

ப்ரஹமாதி   -தேவர்  கூட்டம்  அவர்களின்  பத்னிமார்களும்  தாச -தாசி கணா- .
திரை  பிரம்மா  போன்றோரையும்  மறைத்ததாம் ..மாய  வத்சர்  அனைவரும் ..
பிரகிருதி   மோகம்  இவர்களையும் விடாதாம் ..

வ்யாஸர்  அருளிய  ஸ்ரீ  பாகவதம் ..சுகர்  .பிரணய  கலகம்-ருக்மிணி -கண்ணன்  அழகாக   வெளி ஏற்று கிறார்  ..
பிரம்மா  சரஸ்வதியை  சிருஷ்டித்தார் —தான் ஸ்ருஷ்டித்த பெண்ணை திருமணம் பல இடங்களில்
சிவன் ப்ரஹ்மாதிகள் மோகம் உண்டே பாகவதத்தில் -யாருக்கும் யார்க்கும் வசப்படாதவர் விஷ்ணு ஒருவருமே —-
மாயை யால் ப்ரஹ்மாதிகளே மோகம் அடைய நம்மைப் பற்றிக் கேட்க வேண்டாமே

ஆகாசம் -பஞ்ச  பூதங்களில் ஓன்று ..ஆகாசம் -பரமாத்மாவையும்  சொல்லுமா  ?..
அனைத்துக்கும்  காரணம்  என்ற  ப்ரமாணங்களால் ஆகாசம் -ப்ரஹ்மம் ..அர்த்தம்  பிரசித்தம்  .. பிரசித்த  அர்த்தம் ..
லோக  அனுபவத்தை  வைத்து  கொண்ட  அர்த்தம்  பொருத்தம்  இல்லாத  போது .. ப்ரஹ்ம  சூத்திரத்தில்  விஸ்தாரம்  ..

எங்கும்  பிரகாசிக்கும்  பொருள் என்ற  விற்பதியை   சொல்லி பரமாத்மவைச்  சொல்லுகிறார் ..
அது  போல  ஹிரண்ய  கர்ப -ஜம்பு -ருத்ர  போன்ற வை   ஜகத்  காரணம்  என்று  சொல்வதால்  எம்பெருமானையே குறிக்கும் ..
ப்ரம்மனையும் சிவனையும்  குறிக்காது ..இதை  பட்டர்  விஷ்ணு  ஸஹஸ்ரநாம வியாக்யானத்தில்  அருளி  செயகிறார் ..

அஞ்ஞானம்   5 வகை   ப்ரஹ்மா  சிருஷ்டித்தார் ..ஜனகன்  ஜனகாதிகளை  உதவிக்கு  கூப்பிட  வரவில்லை ..
கோபம் . அடைந்தான்  ப்ரஹ்மா  … அப்பொழுது  தான்  ருத்ர  ஸ்ருஷ்டி  பண்ணுகிறான் ..

ஆனந்த  கண்  களால் அனுபவிக்க  பண்ணும்  விஷ்ணு -ருத்திரன்  ..
தன்  கல்யாண  குணங்களால்   ஈடு  பட்டதால் ..ருத்ர  அர்த்தம்  இப்படி  பட்டர்  பண்ணுகிறார் .. ஹிரண்ய -ஸ்வர்ணம் -தங்கம்  சுந்தரமான  பரம  பாதத்தைச்  சொல்லி

தன்  கர்பத்தில்  அவனை  தங்குவதால்  விஷ்ணுவே   ஹிரண்ய  கர்ப  என்கிறார் ..ப்ரஹ்மா  ஆதி -சப்தத்தால் …

சிவன்  இந்திரன்  போன்றாரையும்  சொல்லி ..இவர்களின்  பத்னிமார்களிலும்    அடிமை  செய்பவர்கள் ..

பார்யை புத்ரன் -தாசன் ..தனம்  தேடி  கொடுப்பவர்கள் ..கைங்கர்யம்  பெற்று  கொள்பவர்கள்  சேர்த்தியில் ..

மாதவ ..மாத -பிதாவாக  இருக்கும்  பெரிய  பிராட்டியாரும்  எம்பெருமானும் ..பித்ருத்வம் -ஜகத் காரணத்வம்..

சேர்த்தியில்  பதி -பத்தினி  சேர்ந்து  கைங்கர்யம்  பண்ண  வேணும் ..

ஜகத்  காரணத்வம்  பிராட்டிக்கு  இல்லை -தென்  கலை சம்ப்ரதாயம்  .

இருவருக்கும்  உண்டு -தேசிகர்  ஸம்ப்ர தாயம் ..

மாத்ருத்வம்  பெரிய  பிராட்டிக்கு -தென்  கலை ..ஸ்ரீ  ஸ்தவத்தில்  ஆழ்வான்  –
பட்டரும்   ஸ்ரீ  குண  ரத்ன  கோசத்தில் ..பிராட்டிக்கு  ஜகத்  காரணத்வம்  இல்லை  என்று  
ஸ்பஷ்டமாக  அருளி  செய்து  இருக்கிறார்கள் -..

———————————————————————–—————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ .வே. கார்ப்பங்காடு வரதாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நிகமாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள் அருளிச் செய்து அருளிய–ஸ்ரீ சதுஸ்லோகீ –

October 10, 2024

ஸ்வாத யன்நிஹ ஸர்வேஷாம்
த்ரய்யந்தார்தம் ஸுதுர்க் ரஹம்
ஸ்தோத்ர யாமாஸ யோகீந்திர:
தம் வந்தே யாமுநாஹ்வயம்தனியன்

யத் பதாம்போருஹத்யாநவித்வஸ்தாசேஷ கல்மஷ:
வஸ்துதாமுபயா தோஹம் யாமுநேயம் நமாமிதம்

நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம
நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம


காந்தஸ் தே புருஷோத்தம: பணிபதிச் சய்யாஸனம் வாஹநம்

வேதாத்மா விஹகேச்வரோ யவனிகா மாயா ஜகன்மோஹிநீ

ப்ரஹ்மேசாதி ஸுரவ்ரஜஸ் ஸதயிதஸ் த்வத் தாஸ தாஸீ கண:

ஸ்ரீரித்யேவ ச நாம தே பகவதி ப்ரூம: கதம் த்வாம் வயம்சது:ஶ்லோகீ – ஸ்லோகம் 1 

ஹே பகவதி! மஹாலக்ஷ்மி! உன்னை நாம் எப்படிச் சொல்லுவோம்! உனக்குக் கணவன் புருஷர்களில் சிறந்த நாராயணன்; ஸர்ப்பங்களில் சிறந்த ஆதிசேஷனோ படுக்கை, ஆசனம்; வேத ஸ்வரூபியான கருடாழ்வான் வாஹனம்; உலகத்தை மோஹிக்கும் மாயை உன்னை அறியவொட்டாமல் தடுக்கும் திரை;  தேவர்கள் குழு உனக்கு கைங்கர்யம் செய்பவர்கள்; உனக்குப் பெயரோ ஸ்ரீ என்று எல்லாச் சொல்லுக்கும் மேன்மையைத் தெரிவித்துக்கொண்டு முன் நிற்பது. இப்படி இவ்வளவு மஹிமை உள்ள உன்னை எவ்வாறு சொல்லுவது, புகழ்வது?

யஸ்யாஸ்தே மஹிமானமாத்மான இவ த்வத் வல்லபோபி ப்ரபு:

நாலம் மாதும் இயத்தயா நிரவதிம் நித்யாநுகூலம் ஸ்வத:

தாம் த்வாம் தாஸ இதி ப்ரபன்ன இதி ச ஸ்தோஷ்யாம்யஹம் நிர்பயோ

லோகைகேச்வரி லோகநாத தயிதே தாந்தே! தயாம் தே விதந்சது:ஶ்லோகீ – ஸ்லோகம் 2

“எந்த உன்னுடைய இயற்கையாகவே உனக்கு நித்யாநுகூலமாகவும் எல்லையில்லாததுமான விபவத்தைத் தனக்குப்போல் உன் அன்புக்குரியவனான ஈஸ்வரனும் இவ்வளவு என்று அளவிடுவதற்குத் திறமையற்றவனாகிறானோ அப்படிப்பட்ட உன்னை, ‘அடியேன் தாஸன்’ என்றும் ‘சரணாகதன்’ என்றும் சொல்லி நான் கொஞ்சமேனும் பயமற்றவனாகத் துதிக்கிறேன். உலகத்துக்கு ஒரே நாயகியாகவும் ஒரே நாதனான நாராயணனின் மார்பில் உறைபவளே! பொறுமையுள்ளவளே! உன் தயையை அறிந்து நான் இப்படிக் கூறுகிறேன்

ஈஷத் த்வத் கருணா நிரீக்ஷண

ஸுதா ஸந்துக்ஷணாத் ரக்ஷ்யதே 

நஷ்டம் ப்ராக் ததலாபதஸ் த்ரிபுவனம்

ஸம்ப்ரத்யனந்தோதயம் 

ச்ரேயோ ந ஹ்யரவிந்த லோசனமன:

காந்தா ப்ரஸாதாத்ருதே 

ஸம்ஸ்ருத்யக்ஷர வைஷ்ணவாத்

வஸுந்ருணாம் ஸம்பாவ்யதே கர்ஹிசித்“–சது:ஶ்லோகீ -ஸ்லோகம் 3

“இந்த மூவுலகும் கொஞ்சம் கருணையுடன் கூடிய உன் பார்வை என்னும் அம்ருதத்தினுடைய நனைப்பதால் இரட்சிக்கப் படுகிறது. அது கிடைக்காததால் முன்பு அழிந்தது. இப்போது பலவகையாகத் தோற்றமளிக்கிறது. ஐஹிகம், கைவல்யம், பரமபதம், என்கிற மூவகையான சுகங்களும் மனிதர்களுக்குத் தாமரைக் கண்ணனுடைய திருவுள்ளத்துக்கு இனியவளான உன் திருவருளல்லது மேன்மை ஒருபோதும் எதிர் பார்க்கப் படுவதில்லையன்றோ”

சாந்தானந்த மஹாவிபூதி பரமம் யத்ப்ரஹ்ம ரூபம் ஹரே:

மூர்த்தம் ப்ரஹ்ம ததோபி தத்ப்ரியதரம் ரூபம் யதத்யத்புதம்

யாந்யந்யானி யதாஸுகம் விஹரதோ ரூபாணி ஸர்வாணி தாநி

ஆஹுஸ்வைரநுரூபரூபவிபவைர் காடோப கூடாநி தேசது:ஶ்லோகீ – ஸ்லோகம் 4

“பகவானுடைய எல்லா வகையான உருவங்களிலும் உன் சம்பந்தம் உண்டென்பது இதில் பேசப்படுகிறது. அமைதியோடு முடிவில்லாத மகாவிபூதி என்னும் பரமபதத்தில் ஸ்ரீ மஹாவிஷ்ணுவுக்குத் திருமேனியாக உள்ள எந்த உருவமோ அதைவிட மிகவும் பிரியமான உருவம் எதுவோ, எது ஆச்சர்யமானதோ சுகத்துக்கேற்றவாறு அவ்வப்போது எடுக்கப்பட்ட லீலையாக எடுக்கின்ற வேறு பல உருவங்களோ அந்த எல்லா உருவங்களும் தனது தகுந்த உருவங்களுடன் பெருமையுடனும் அழுந்தி ஆலிங்கனம் செய்யப்பட்டவையே. இதனால் பகவானுடைய எல்லா நிலைகளிலும் பிராட்டியின் சேர்த்தி சொல்லப்பட்டது.”

ஆகாரத்ரய ஸம்பன்னாம் அரவிந்த நிவாஸிநீம் |
அசேஷ ஜகதீசித்ரீம் வந்தே வரத வல்லபாம் ||


சேஷத்வ பாரதந்த்ர்ய போக்யதைகளில் அவனையன்றி அறியாதமை என்று சொல்லக்கூடிய முப்பெருமை பெற்றவளும்,  தாமரையில் வசிப்பவளும், எல்லா உலகையும் நியமித்து நடத்துமவளுமான வரதனுடைய அன்புக்குரியவளை வணங்குகிறேன்.

—————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கிருஷ்ண அஷ்டக கவச ஸ்தோத்ரம்-இதி ஸ்ரீமச் ச²ங்கராசார்ய க்ருʼதம்ʼ

October 10, 2024

|| ஓம் க்லீம் கிருஷ்ணாய நமஹ ||

பக்தியின் மூலம் ஒருவர் பிரம்மத்தை அடைய முடியும் என்பது மஹா வேதாந்தியான ஆதி சங்கராச்சாரியார் நம்பிக்கை. அதன் விளைவு, அவரால் இயற்றப்பட்ட, விலை மதிக்க இயலாத அவரின் ஸ்தோத்ர ரத்னங்கள்.

ஸ்ரீமத் சங்கராச்சாரியார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணனை நோக்கித் தவமிருந்த போது, கிருஷ்ணனின் லீலா விநோதங்களை புகழ்ந்து போற்றும் இந்த கிருஷ்ண அஷ்டக கவசத்தை அருளினார். மகத்தான இந்த ஸ்தோத்ரத்தில் இருக்கும் ஸ்லோகங்களின் ஒவ்வொரு வார்த்தையும் தந்திர, மந்திர சக்தி வாய்ந்தது.

ஒவ்வொரு ஸ்லோகமும் உள்ளார்ந்த (ஆழமான) அர்த்தங்களை கொண்டது. கிருஷ்ண மந்திரத்துடன் சம்பூதிதமான (இணைந்த) இந்த ஸ்தோத்ரத்தின் ப்ரத்யேக ஸ்லோகம், பகவான் ஸ்ரீ கிருஷ்ணனின் அருளை வேண்டி செய்யப்படும் பிரார்த்தனையில் (சாதனா) பல்வேறு விதமாக பயன் தரவல்லது.

இக்கவச ஸ்தோத்ரத்தை விதிப்பூர்வமாக ப்ராணப்ரதிஷ்டை செய்து பாராயணம் செய்து வந்தால் மந்திரசித்தி அளிக்கவல்லது. க்ருஷ்ண மந்திரம், தேவ மந்திரம், குரு மந்திரம் இம்மூன்றும் நிலையானது மட்டுமல்லாமல் நியமத்துடன் ஜபம் செய்ய வேண்டும். விசேஷமான தருணங்களில் கவச, ஸ்தோத்ர பாராயணமும் செய்ய வேண்டும்.

ஸ்ரீ கிருஷ்ண அஷ்டக கவச ஸ்தோத்ரம். எட்டு ஸ்லோகங்கள் வாயிலாக கிருஷ்ணனின் லீலா விநோதங்களை புகழ்ந்து போற்றும் அரிய கவசம். இந்த ஸ்தோத்ரமானது இசைக்க உகந்ததாக இயற்றப்பட்டுள்ளதால், இதை பாராயணம் செய்வதை விட கீர்த்தனையாக பாடுவது மிகவும் நல்லது.

பகவான் மஹாவிஷ்ணு, நாரதரிடம் இந்த ஸ்தோத்ரத்தின் மஹிமையைப் பற்றி கூறும் பொழுது, “நாரதா எங்கெல்லாம் ஸ்ரீ கிருஷ்ண கவச ஸ்தோத்ரமானது பக்தர்களால் பாராயணம் செய்யப்படுகிறதோ அங்கெல்லாம் நான் தோன்றுகிறேன்.” என்று கூறுகிறார்.

ஸ்ரீ க்ருʼஷ்ணாஷ்டக – ஸ²ங்கர பகவத் பாத³

ப⁴ஜே வ்ரஜைகமண்ட³னம்ʼ ஸமஸ்த பாப க²ண்ட³னம்ʼ
ஸ்வ ப⁴க்த சித்தரஞ்ஜனம்ʼ ஸதை³வ நந்த³னந்த³னம்|
ஸுபிச்ச²கு³ச்ச²மஸ்தகம்ʼ ஸுனாத³வேணு ஹஸ்தகம்ʼ
அனங்க³ரங்க³ஸாக³ரம்ʼ நமாமி க்ருʼஷ்ணனாக³ரம் ||1||

1. கோகுலத்தின் (வ்ரஜ பூமி) (நந்தகுலத்தின்) சர்வ ஆபரணமாக விளங்கும் கிருஷ்ணா, பக்தர்களின் சகல பாபங்களையும் அழித்து ரட்சிப்பவனே, பக்தர்களின் சித்தத்தை ஆனந்தத்தில் ஆழ்த்தி மகிழ்விப்பவனே, உன்னை சதா சர்வ காலமும் வணங்குகிறேன்.
குழல் கற்றைகள் நெற்றியில் நடனமாட, மயிற்பீலி அசையும் கிரீடத்துடன், கைகளில் இனிய நாதம் எழுப்பும் புல்லாங்குழல் ஏந்தி காட்சி அருளுபவனே, ப்ரேமம் என்னும் காதல் சமுத்திரத்தின் (சாகரம்) உருக் கொண்டவனே, லீலா விநோதங்களால் மகிழ்விக்கும் கிருஷ்ணா, உன்னை நமஸ்கரிக்கிறேன்.

மனோஜ க³ர்வமோசனம்ʼ விஸா²ல லோல லோசனம்ʼ
விதூ⁴தகோ³பஸோ²சனம்ʼ நமாமி பத்³ம லோசனம் |
கராரவிந்த³பூ⁴த⁴ரம்ʼ ஸ்மிதாவலோக ஸுந்த³ரம்ʼ
மஹேந்த்³ரமான தா³ரணம்ʼ நமாமி க்ருʼஷ்ண வாரணம் ||2||

2. மன்மதனின் கர்வத்தை அடக்கியவனே, விசாலமான விழிகளைக் கொண்டவனே, நந்தகோபியர்களின் சோகத்தை அழித்தவனே, தாமரை மலரை ஒத்த நயனங்களைக் கொண்டவனே, உன்னை சதா சர்வ காலமும் வணங்குகிறேன்.
கோவர்த்தனகிரியை கரங்களில் தூக்கி விரலில் ஏந்தியவனே, காண்பவர் கவரும் காந்தப்பார்வையும், புன்னகையும் கொண்டவனே, இந்திரனின் கர்வத்தை அழித்தவனே, கஜராஜனின் உருக் கொண்ட ஸ்ரீ கிருஷ்ணா, உன்னை நமஸ்கரிக்கிறேன்.

கத³ம்ப³ ஸூன குண்ட³லம்ʼ ஸுசாரு க³ண்ட³ மண்ட³லம்ʼ
வ்ரஜாங்க³னைக வல்லப⁴ம்ʼ நமாமி க்ருʼஷ்ண து³ர் லப⁴ம் |
யஸோ²த³யா ஸமோத³யா ஸகோ³பயா ஸநந்த³யா
யுதம்ʼ ஸுகை²கதா³யகம்ʼ நமாமி கோ³ப நாயகம் ||3||

3. கதம்ப மலரினால் ஆன குண்டலங்களை காதில் அணிந்தவனே, அழகிய கன்னங்களைக் கொண்டவனே, கோகுலத்தில் வாழும் கோபிகைகளின் ப்ரேமையின் தலைவனே, ப்ரேம பக்தியை தவிர வேறெந்த மார்க்கத்தாலும் அடைய முடியாதவனே, உன்னை சதா சர்வ காலமும் வணங்குகிறேன்.
கோபர்கள், நந்தகோபர் மற்றும் அளவில்லாத மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் யசோதாவினால் எக்கணமும் சூழப்பட்டு இருப்பவனே, தனது பக்தர்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பவனே, கோபர்களின் பிரபுவான ஸ்ரீ கிருஷ்ணா, உன்னை நமஸ்கரிக்கிறேன்.

ஸதை³வ பாத³பங்கஜம்ʼ மதீ³ய மானஸே நிஜம்ʼ
த³தா⁴னமுக்தமாலகம்ʼ நமாமி நந்த³பா³லகம் |
ஸமஸ்த தோ³ஷ ஸோ²ஷணம்ʼ ஸமஸ்த லோக போஷணம்ʼ
ஸமஸ்தகோ³பமானஸம்ʼ நமாமி நந்த³லாலஸம் ||4||

4. தன் கமல பாதங்களை பக்தர்களின் சித்தத்தில் (மனஸ் என்னும் சரோவரில்) ஸ்தாபிதம் செய்பவனே, அழகிய சுருண்ட கேசத்தைக் கொண்டவனே, உன்னை சதா சர்வ காலமும் வணங்குகிறேன்.
சகல தோஷங்களையும் நீக்குபவனே, அனைத்து லோகங்களையும் காத்து ரட்சிப்பவனே, கோகுலத்தின் கோபர்களின் ஹ்ருதயத்தில் வசிப்பவனே, நந்தகோபனின் மைந்தனான சிவப்பு நிற திருமேனியையுடைய ஸ்ரீ கிருஷ்ண சந்த்ரா, உன்னை நமஸ்கரிக்கிறேன்.

பு⁴வோ ப⁴ராவதாரகம்ʼ ப⁴வாப்³தி⁴கர்ணதா⁴ரகம்ʼ
யஸோ²மதீகிஸோ²ரகம்ʼ நமாமி சித்த சோரகம் |
த்³ருʼக³ந்தகாந்தப⁴ங்கி³னம்ʼ ஸதா³ ஸதா³லிஸங்கி³னம்ʼ
தி³னே தி³னே நவம்ʼ நவம்ʼ நமாமி நந்த³ஸம்ப⁴வம் ||5||

5. கணக்கில்லா அரக்கர்களையும், தீயசக்திகளையும் அழித்து புவியின் பாரத்தை குறைப்பவனே, துக்கமயமான சம்சார சாகரத்தை கடக்க உதவுபவனே, யசோதையின் மைந்தனான நீ, அனைவரின் உள்ளங்களையும் கவருகின்றாய். உன்னை சதா சர்வ காலமும் வணங்குகிறேன்.
அருள் கடாக்ஷத்தை பொழியும் கவர்ச்சியான கண்களை கொண்டவனே, திவ்யமான தோழர்களால் (புனித பக்தர்களால்) சதா சூழப்பட்டு இருப்பவனே, நித்தம் நூதனமான லீலா விநோதங்களை நடத்தும் நந்தகுமாரா, (என்றும் புதிதாகத் தோன்றும் பரம்பொருளே!) ஸ்ரீ கிருஷ்ணா, உன்னை நமஸ்கரிக்கிறேன்.

கு³ணாகரம்ʼ ஸுகா²கரம்ʼ க்ருʼபாகரம்ʼ க்ருʼபாபரம்ʼ
ஸுரத்³விஷன்னிகந்த³னம்ʼ நமாமி கோ³பனந்த³னம் |
நவீன கோ³பனாக³ரம்ʼ நவீன கேலிலம்படம்ʼ
நமாமி மேக⁴ஸுந்த³ரம்ʼ தடி³த் ப்ரபா⁴ல ஸத் படம் ||6||

6. நற்குணங்கள், ஆனந்தம், கருணை இவற்றின் களஞ்சியமாக விளங்குபவனே, தேவர்களின் எதிரிகளை அழித்து கோபர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பவனே, உன்னை சதா சர்வ காலமும் வணங்குகிறேன்.
நித்தம் குறும்புத்தனமான லீலைகளை நூதனமாக புரிபவனே, லீலா விநோதங்களின் விளைவுகளில் மகிழ்ச்சி கொள்ளும் இடையர் தலைவனே, கருமேக நிறத்தை கொண்ட உள்ளம் கவர் அழகிய கள்வனே, மின்னல் ஒளியை போல் ஜொலிக்கும் மஞ்சள் பட்டு பீதாம்பரத்தை அணிந்தவனே, ஸ்ரீ கிருஷ்ணா, உன்னை நமஸ்கரிக்கிறேன்.

ஸமஸ்தகோ³பனந்த³னம்ʼ ஹ்ருʼதாம்பு³ஜைகமோத³னம்ʼ
நமாமி குஞ்ஜமத்⁴யக³ம்ʼ ப்ரஸன்னபா⁴னு ஸோ²ப⁴னம் |
நிகாமகாமதா³யகம்ʼ த்³ருʼக³ந்தசாரு ஸாயகம்ʼ
ரஸால வேணுகா³யகம்ʼ நமாமி குஞ்ஜனாயகம் ||7||

7. கோகுலத்தின் கோபியர் அனைவருக்கும் ஆனந்தம் அளிப்பவனே, பக்தர்களின் இதயக்கமலத்தை ஆனந்தத்தால் மலரச் செய்பவனே, உலகுக்கு ஒளியூட்டும் சூரியனைப் போன்று பிரகாசத்துடன், கவரும் புன்னகையுடன் தோன்றுபவனே, பிருந்தாவனம் என்னும் தோப்பின் மத்தியில் கோபியருடன் நடனமாடும் பிருந்தாவன கிருஷ்ணா, உன்னை சதா சர்வ காலமும் வணங்குகிறேன்.
பக்தர்களின் ஆசைகளை முற்றிலும் நிறைவேற்றுபவனே, அம்பை ஒத்த, பார்ப்பவர் மனதை கொள்ளை கொள்ளும் அழகிய பார்வையை கொண்டவனே, இனிய, மதுரமான கானத்தை புல்லாங்குழலில் இசைப்பவனே, ஸ்ரீகிருஷ்ணா, பிருந்தாவன நாயகா, உன்னை நமஸ்கரிக்கிறேன்.

வித³க்³த⁴கோ³பி காமனோ மனோஜ்ஞதல்ப ஸா²யினம்ʼ
நமாமி குஞ்ஜகானனே ப்ரவ்ரத்³த⁴வன்ஹிபாயினம் |
கிஸோ²ரகாந்திரஞ்ஜிதம்ʼ த்³ருʼக³ஞ்ஜனம்ʼ ஸுஸோ²பி⁴தம்ʼ
க³ஜேந்த்³ர மோக்ஷகாரிணம்ʼ நமாமி ஸ்ரீவிஹாரிணம் ||8||

8. நின்னை எக்கணமும் நினைத்து உருகும் சாதுர்யமான (புத்திசாலித்தனமான) கோபிகைகளின் மனதின் மென்மையான படுக்கையின் மீது உறங்குபவனே, பிருந்தாவனத்தில் (குஞ்ச்வன் – கொடிகளும், மரங்களும் நிறைந்த தோப்பு) கொழுந்து விட்டெரியும் அக்னியை (தாவானல்) விழுங்கி கோபர்களை காப்பவனே, உன்னை சதா சர்வ காலமும் வணங்குகிறேன்.
பிள்ளைப்பருவ கவர்ச்சிகரமான தோற்றத்தில் ஜொலிக்கும் ஒளி நிரம்பிய விழிகளை உடையவனே, அந்த விழிகளுக்கு மை (அஞ்சனம்) மேலும் அழகு ஊட்டுகிறது. கஜேந்திரன் என்னும் கஜராஜனை முதலையின் பிடியில் இருந்து விடுவித்ததோடு மோட்சமும் அளித்தவனே, ஸ்ரீ என்னும் மஹாலட்சுமியின் மணாளா, கிருஷ்ணசந்த்ரா, ஸ்ரீ கிருஷ்ணா, உன்னை நமஸ்கரிக்கிறேன்.

யதா³ ததா³ யதா² ததா² ததை²வ க்ருʼஷ்ண ஸத்கதா²
மயா ஸதை³வ கீ³யதாம்ʼ ததா² க்ருʼபா விதீ⁴யதாம் |
ப்ரமாணிகாஷ்டகத்³வயம்ʼ ஜபத்யதீ⁴த்ய ய​: புமான்
ப⁴வேத்ஸ நந்த³னந்த³னே ப⁴வே ப⁴வே ஸுப⁴க்திமான் ||9||

9. என் மீது உங்கள் கருணை என்றும் நிலைத்து இருக்க அருள் புரியுங்கள். நான் எந்நிலையில் இருப்பினும், தங்களின் லீலா விநோதங்களின் புகழை எப்போதும் பாடிக் கொண்டிருக்க என்னை ஆசீர்வதியுங்கள். எவர் ஒருவர் இந்த ஸ்ரீகிருஷ்ண அஷ்டகத்தை பாராயணம் அல்லது ஜபம் செய்கிறாரோ, அவர் தன் அனைத்துப் பிறப்புகளிலும், கிருஷ்ணனின் மீது பக்தியுடன் பிறப்பர்.

|| இதி ஸ்ரீமச்ச²ங்கராசார்யக்ருʼதம்ʼ ஸ்ரீக்ருʼஷ்ணாஷ்டகம்ʼ ஸம்பூர்ணம் ||
|| ஸ்ரீ க்ருʼஷ்ணார்பணமஸ்து||

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

॥ ஶ்ரீஹரிவாயுஸ்துதி: ॥॥ அத² ஶ்ரீநக²ஸ்துதி: ॥

October 10, 2024

ஸ்ரீ வாயு ஸ்துதி – -ஸ்ரீ வாயு கீதை

பாந்த்வஸ்மாந் புருஹூதவைரி ப³லவந்மாதங்க³ மாத்³யத்³க⁴டா
கும்போ⁴ச்சாத்³ரி விபாடநாதி⁴கபடு ப்ரத்யேக வஜ்ராயிதா: ।
ஶ்ரீமத்கண்டீ²ரவாஸ்ய ப்ரதத ஸுநக²ரா தா³ரிதாராதிதூ³ர
ப்ரத்³த்⁴வஸ்தத்⁴வாந்த ஶாந்த ப்ரவிதத மநஸா பா⁴விதாநாகிவ்ரு’ந்தை:³ ॥ 1॥
பா⁴விதா பூ⁴ரிபா⁴கை:³
லக்ஷ்மீகாந்த ஸமந்ததோऽபிகலயந் நைவேஶிதுஸ்தே ஸமம்
பஶ்யாம்யுத்தம வஸ்து தூ³ரதரதோபாஸ்தம் ரஸோயோऽஷ்டம: ।
யத்³ரோஶோத்கர த³க்ஷ நேத்ர குடில ப்ராந்தோத்தி²தாக்³நி ஸ்பு²ரத்
க²த்³யோதோபம விஸ்பு²லிங்க³ப⁴ஸிதா ப்³ரஹ்மேஶஶக்ரோத்கரா: ॥ 2॥
இதி ஶ்ரீமதா³நந்த³தீர்த²ப⁴க³வத்பாதா³சார்யவிரசிதா
ஶ்ரீந்ரு’ஸிம்ஹநக²ஸ்துதி: ஸம்புர்ணா ।
॥ அத² ஶ்ரீஹரிவாயுஸ்துதி: ॥
ஶ்ரீமத்³விஷ்ண்வங்க்⁴ரி நிஷ்டா² அதிகு³ணகு³ருதம ஶ்ரீமதா³நந்த³தீர்த²
த்ரைலோக்யாசார்ய பாதோ³ஜ்ஜ்வல ஜலஜலஸத் பாம்ஸவோऽஸ்மாந்புநந்து ।
வாசாம்யத்ரப்ரணேத்ரீத்ரிபு⁴வநமஹிதா ஶாரதா³ ஶாரதே³ந்து:³
ஜ்யோத்ஸ்நாப⁴த்³ரஸ்மித ஶ்ரீத⁴வளிதககு பா⁴ப்ரேமபா⁴ரம்ப³பா⁴ர ॥ 1॥
உத்கண்டா²குண்ட²கோலாஹலஜவவிதி³தாஜஸ்ரஸேவாநுவ்ரு’த்³த⁴
ப்ராஜ்ஞாத்மஜ்ஞாந தூ⁴தாந்த⁴தமஸஸுமநோ மௌலிரத்நாவளீநாம் ।
ப⁴க்த்யுத்³ரேகாவகா³ட⁴ ப்ரக⁴டநஸக⁴டாத்கார ஸங்க்⁴ரு’ஷ்யமாண
ப்ராந்தப்ராக்³ர்யாங்க்⁴ரி பீடோ²த்தி²த கநகரஜ: பிஞ்ஜராரஞ்ஜிதாஶா: ॥ 2॥
ஜந்மாதி⁴வ்யாத்⁴யுபாதி⁴ப்ரதிஹதிவிரஹப்ராபகாணாம் கு³ணாநாம்
அக்³ர்யாணாம் அர்பகாணாம் சிரமுதி³தசிதா³நந்த³ ஸந்தோ³ஹதா³நாம் ।

ஏதேஷாமேஶதோ³ஷ ப்ரமுஷிதமநஸாம் த்³வேஷிணாம் தூ³ஷகாணாம்
தை³த்யாநாமார்தி²மந்தே⁴ தமஸி வித³த⁴தாம் ஸம்ஸ்தவேநாஸ்மி ஶக்த: ॥ 3॥
அஸ்யாவிஷ்கர்துகாமம் கலிமலகலுஷேऽஸ்மிந்ஜநேஜ்ஞாநமார்க³ம்
வந்த்³யம் சந்த்³ரேந்த்³ரருத்³ர த்³யுமணிப²ணிவயோ: நாயகத்³யைரிஹாத்³ய ।
மத்⁴வாக்²யம் மந்த்ரஸித்³த⁴ம் கிமுதக்ரு’தவதோ மாருதஸ்யாவதாரம்
பாதாரம் பாரமேஷ்ட்யம் பத³மபவிபத:³ ப்ராப்துராபந்ந பும்ஸாம் ॥ 4॥

உத்³யத்³வித்³யுத்ப்ரசண்டா³ம் நிஜருசி நிகரவ்யாப்த லோகாவகாஶோ
பி³ப்⁴ரத்³பீ⁴மோ பு⁴ஜேயோऽப்⁴யுதி³த தி³நகராபா⁴ங்க³தா³ட்⁴ய ப்ரகாண்டே³ ।
வீர்யோத்³தா⁴ர்யாம் க³தா³க்³ர்யாமயமிஹ ஸுமதிம்வாயுதே³வோவித³த்⁴யாத்
அத்⁴யாத்மஜ்ஞாநநேதா யதிவரமஹிதோ பூ⁴மிபூ⁴ஷாமர்ணிமே ॥ 5॥

ஸ்ரீ வாயு தேவரின் காந்தி¸ எல்லா திக்குகளையும் பிரகாசப்படுத்துகிறது. அவர் பீமனாக அவதரித்துக் கையில் ஏந்திய கதை எப்படிப்பட்டது? மின்னும் மின்னலைப் போல உக்ரமானது. பலம் மிகுந்த பீமன் ஒருவரால் மட்டுமே அதைத் தூக்க முடியும். அதைத் தாங்கும் அவரது கையில் இருக்கும் கை-ஆபரணம் சூரியப் பிரகாசத்தைப் போல ஜொலிக்கின்றது. அவ்வளவு அழகு பொருந்திய கையில் அந்தச் சிறந்த கதையைத் தாங்கி நிற்கும் பீமாவதாரமான ஸ்ரீ வாயு பகவான் எனக்குச் சிறந்த ஞானத்தைக் கொடுத்து அனுக்ரஹிக்கட்டும்.

மேலும் அந்த வாயுதேவர்¸ மத்வராக அவதரித்தபோது¸ சிரேஷ்டமான ஸன்யாஸிகளெல்லாம் அவரைப் பூஜித்தனர். பரமாத்மாவின் உண்மையான ஞானத்தைப் பிரகாசப்படுத்த 37 நூல்களை இயற்றி¸ உலகத்திற்கு க்ஞான ஒளி வீசும் அலங்கார ரத்னமாகத் திகழ்ந்தார். அப்பேற்பட்ட மஹிமை பொருந்திய ஸ்ரீ வாயு பகவான் எனக்குத் தூயமான ஞானத்தை அளித்து என்னைக் காப்பாற்றட்டும்.


ஸம்ஸாரோத்தாபநித்யோபஶமத³ ஸத³ய ஸ்நேஹஹாஸாம்பு³பூர
ப்ரோத்³யத்³வித்³யாவநத்³ய த்³யுதிமணிகிரண ஶ்ரேணிஸம்பூரிதாஶ: ।
ஶ்ரீவத்ஸாங்காதி⁴ வாஸோசித தரஸரலஶ்ரீமதா³நந்த³தீர்த²
க்ஷீராம்போ⁴தி⁴ர்விபி⁴ந்த்³யாத்³ப⁴வத³நபி⁴மதம்பூ⁴ரிமேபூ⁴தி ஹேது: ॥ 6॥
மூர்த⁴ந்யேஷோऽந்ஜலிர்மே த்³ரு’ட⁴தரமிஹதே ப³த்⁴யதே ப³ந்த⁴பாஶ
க்ஷேத்ரேதா⁴த்ரே ஸுகா²நாம் ப⁴ஜதி பு⁴வி ப⁴விஷ்யத்³விதா⁴த்ரே த்³யுப⁴ர்த்ரே ।
அத்யந்தம் ஸந்ததம் த்வம் ப்ரதி³ஶ பத³யுகே³ ஹந்த ஸந்தாப பா⁴ஜாம்
அஸ்மாகம் ப⁴க்திமேகாம் ப⁴க³வத உததே மாத⁴வஸ்யாத² வாயோ: ॥ 7॥
ஸாப்⁴ரோஷ்ணாபீ⁴ஶு ஶுப்⁴ரப்ரப⁴மப⁴யநபோ⁴ பூ⁴ரிபூ⁴ப்⁴ரு’த்³விபூ⁴தி:
ப்⁴ராஜிஷ்ணுர்பூ⁴ர்ரு’பூ⁴ணாம் ப⁴வநமபி விபோ⁴ऽபே⁴தி³ப³ப்⁴ரேப³பூ⁴வே ।
யேநப்⁴ரோவிப்⁴ரமஸ்தே ப்⁴ரமயதுஸுப்⁴ரு’ஶம் ப³ப்⁴ருவத்³து³ர்ப்⁴ரு’தாஶாந்
ப்⁴ராந்திர்பே⁴தா³வ பா⁴ஸஸ்த்விதிப⁴யமபி⁴ போ⁴ர்பூ⁴க்ஷ்யதோமாயிபி⁴க்ஷூந் ॥ 8॥
யேऽமும்பா⁴வம்ப⁴ஜந்தே ஸுரமுக²ஸுஜநாராதி⁴தம் தே த்ரு’தீயம்
பா⁴ஸந்தே பா⁴ஸுரைஸ்தே ஸஹசரசலிதைஶ்சாமரைஶ்சாருவேஶா: ।
வைகுண்டே² கண்ட²லக்³ந ஸ்தி²ரஶுசி விலஸத்காந்தி தாருண்யலீலா
லாவண்யா பூர்ணகாந்தா குசப⁴ரஸுலபா⁴ஶ்லேஷஸம்மோத³ஸாந்த்³ரா: ॥ 9॥
ஆநந்தா³ந்மந்த³மந்தா³ த³த³தி ஹி மருத: குந்த³மந்தா³ரநந்த்³யாவர்தா
ऽமோதா³ந் த³தா⁴நாம் ம்ரு’து³பத³ முதி³தோத்³கீ³தகை: ஸுந்த³ரீணாம் ।
வ்ரு’ந்தை³ராவந்த்³ய முக்தேந்த்³வஹிமகு³ மத³நாஹீந்த்³ர தே³வேந்த்³ரஸேவ்யே
மௌகுந்தே³ மந்த³ரேऽஸ்மிந்நவிரதமுத³யந்மோதி³நாம் தே³வ தே³வ ॥ 10॥

உத்தப்தாத்யுத்கடத்விட் ப்ரகடகடகட த்⁴வாநஸங்க⁴ட்டநோத்³யத்³
வித்³யுத்³வ்யூட⁴ஸ்பு²லிங்க³ ப்ரகர விகிரணோத்க்வாதி²தே பா³தி⁴தாங்கா³ந் ।
உத்³கா³ட⁴ம்பாத்யமாநா தமஸி தத இத: கிங்கரை: பங்கிலேதே
பங்க்திர்க்³ராவ்ணாம் க³ரிம்ணாம் க்³லபயதி ஹி ப⁴வத்³வேஷிணோ வித்³வதா³த்³ய
॥ 11॥
அஸ்மிந்நஸ்மத்³கு³ரூணாம் ஹரிசரண சிரத்⁴யாந ஸந்மங்க³ளாநாம்
யுஷ்மாகம் பார்ஷ்வபூ⁴மிம் த்⁴ரு’தரணரணிக: ஸ்வர்கி³ஸேவ்யாம்ப்ரபந்ந: ।
யஸ்தூதா³ஸ்தே ஸ ஆஸ்தேऽதி⁴ப⁴வமஸுலப⁴ க்லேஶ நிர்மூகமஸ்த
ப்ராயாநந்த³ம் கத²ம் சிந்நவஸதி ஸததம் பஞ்சகஷ்டேऽதிகஷ்டே ॥ 12॥
க்ஷுத் க்ஷாமாந் ரூக்ஷரக்ஷோ ரத³க²ரநக²ர க்ஷுண்ணவிக்ஷோபி⁴தாக்ஷாந்
ஆமக்³நாநாந்த⁴கூபே க்ஷுரமுக²முக²ரை: பக்ஷிபி⁴ர்விக்ஷதாங்கா³ந் ।
பூயாஸ்ரு’ந்மூத்ர விஷ்டா² க்ரிமிகுலகலிலேதத்க்ஷணக்ஷிப்த ஶக்த்யாத்³யஸ்த்ர
வ்ராதார்தி³தாந் ஸ்த்வத்³விஷ உபஜிஹதே வஜ்ரகல்பா ஜலூகா: ॥ 13॥
மாதர்மேமாதரிஶ்வந் பிதரதுலகு³ரோ ப்⁴ராதரிஷ்டாப்தப³ந்தோ⁴
ஸ்வாமிந்ஸர்வாந்தராத்மந்நஜரஜரயித: ஜந்மம்ரு’த்யாமயாநாம் ।
கோ³விந்தே³ தே³ஹிப⁴க்திம் ப⁴வதிச ப⁴க³வந்நூர்ஜிதாம் நிர்நிமித்தாம்
நிர்வ்யாஜாம் நிஶ்சலாம் ஸத்³கு³ணக³ண ப்³ரு’ஹதீம் ஶாஶ்வதீமாஶுதே³வ ॥ 14॥
விஷ்ணோரத்த்யுத்தமத்வாத³கி²லகு³ணக³ணைஸ்தத்ர ப⁴க்திங்க³ரிஷ்டா²ம்
ஸம்ஶ்லிஷ்டே ஶ்ரீத⁴ராப்⁴யாமமுமத² பரிவாராத்மநா ஸேவகேஷு ।
ய: ஸந்த⁴த்தே விரிஞ்சி ஶ்வஸந விஹக³பாநந்த ருத்³ரேந்த்³ர பூர்வே
ஷ்வாத்⁴யாயம்ஸ்தாரதம்யம் ஸ்பு²டமவதி ஸதா³ வாயுரஸ்மத்³கு³ருஸ்தம் ॥ 15॥
தத்த்வஜ்ஞாந் முக்திபா⁴ஜ: ஸுக²யிஸி ஹி கு³ரோ யோக்³யதாதாரதம்யாத்
ஆத⁴த்ஸே மிஶ்ரபு³த்³தி⁴ம் ஸ்த்ரிதி³வநிரயபூ⁴கோ³சராந்நித்யப³த்³தா⁴ந் ।
தாமிஸ்ராந்தா⁴தி³காக்²யே தமஸிஸுப³ஹுலம் து:³க²யஸ்யந்யதா²ஜ்ஞாந்
விஷ்ணோராஜ்ஞாபி⁴ரித்த²ம் ஶ்ரு’தி ஶதமிதிஹாஸாதி³ சாகர்ணயாம: ॥ 16॥
வந்தே³ऽஹம் தம் ஹநூமாநிதி மஹிதமஹாபௌருஷோ பா³ஹுஶாலி
க்²யாதஸ்தேऽக்³ர்யோऽவதார: ஸஹித இஹ ப³ஹுப்³ரஹ்மசர்யாதி³ த⁴ர்மை: ।
ஸஸ்நேஹாநாம் ஸஹஸ்வாநஹரஹரஹிதம் நிர்த³ஹந் தே³ஹபா⁴ஜாம்
அம்ஹோமோஹாபஹோ ய: ஸ்ப்ரு’ஹயதி மஹதீம் ப⁴க்திமத்³யாபி ராமே ॥ 17॥

ப்ராக்பஞ்சாஶத்ஸஹஸ்ரைர்வ்யவஹிதமஹிதம் யோஜநை: பர்வதம் த்வம்
யாவத்ஸஞ்ஜீவநாத்³யௌஷத⁴ நிதி⁴மதி⁴கப்ராணலங்காமநைஷி: ।
அத்³ராக்ஷீது³த்பதந்தம் தத உத கி³ரிமுத்பாடயந்தம் க்³ரு’ஹீத்வா
யாந்தம் கே² ராக⁴வாங்க்⁴ரௌ ப்ரணதமபி ததை³கக்ஷணே த்வாம்ஹிலோக: ॥ 18॥
க்ஷிப்த: பஶ்சாத்ஸத்ஸலீலம் ஶதமதுலமதே யோஜநாநாம் ஸ
உச்சஸ்தாவத்³விஸ்தார வம்ஶ்ச்யாபி உபலலவைவ வ்யக்³ரபு³த்³த்⁴யா த்வயாத: ।
ஸ்வஸ்வஸ்தா²நஸ்தி²தாதி ஸ்தி²ரஶகல ஶிலாஜால ஸம்ஶ்லேஷ நஷ்ட
சே²தா³ங்க: ப்ராகி³வாபூ⁴த் கபிவரவபுஷஸ்தே நம: கௌஶலாய ॥ 19॥
த்³ரு’ஷ்ட்வா த்³ரு’ஷ்டாதி⁴போர: ஸ்பு²டிதகநக ஸத்³வர்ம க்⁴ரு’ஷ்டாஸ்தி²கூடம்
நிஷ்பிஷ்டம் ஹாடகாத்³ரி ப்ரகட தட தடாகாதி ஶங்கோ ஜநோऽபூ⁴த் ।
யேநாஜௌ ராவணாரிப்ரியநடநபடுர்முஷ்டிரிஷ்டம் ப்ரதே³ஷ்டும்
கிம்நேஷ்டே மே ஸ தேऽஷ்டாபத³கட கதடித்கோடி பா⁴ம்ரு’ஷ்ட காஷ்ட:² ॥ 20॥
தே³வ்யாதே³ஶ ப்ரணீதி த்³ரு’ஹிண ஹரவராவத்³ய ரக்ஷோ விகா⁴தா
ऽத்³யாஸேவோத்³யத்³த³யார்த்³ர: ஸஹபு⁴ஜமகரோத்³ராமநாமா முகுந்த:³ ।
து³ஷ்ப்ராபே பாரமேஷ்ட்²யே கரதலமதுலம் மூர்தி⁴விந்யஸ்ய த⁴ந்யம்
தந்வந்பூ⁴ய: ப்ரபூ⁴த ப்ரணய விகஸிதாப்³ஜேக்ஷணஸ்த்வேக்ஷமாண: ॥ 21॥
ஜக்⁴நேநிக்⁴நேநவிக்⁴நோ ப³ஹுலப³லப³கத்⁴வம்ஸ நாத்³யேநஶோசத்
விப்ராநுக்ரோஶ பாஶைரஸு வித்⁴ரு’தி ஸுக²ஸ்யைகசக்ராஜநாநாம் ।
தஸ்மைதேதே³வ குர்ம: குருகுலபதயே கர்மணாசப்ரணாமாந்
கிர்மீரம் து³ர்மதீநாம் ப்ரத²மம் அத² ச யோ நர்மணா நிர்மமாத² ॥ 22॥
நிர்ம்ரு’த்³நந்நத்ய யத்நம் விஜரவர ஜராஸந்த⁴ காயாஸ்தி²ஸந்தீ⁴ந்
யுத்³தே⁴ த்வம் ஸ்வத்⁴வரே வாபஶுமிவத³மயந் விஷ்ணு பக்ஷத்³விடீ³ஶம் ।
யாவத்ப்ரத்யக்ஷ பூ⁴தம் நிகி²லமக²பு⁴ஜம் தர்பயாமாஸிதா²ஸௌ
தாவத்யாயோஜி த்ரு’ப்த்யாகிமுவத³ ப⁴க⁴வந் ராஜஸூயாஶ்வமேதே⁴ ॥ 23॥
க்ஷ்வேலாக்ஷீணாட்டஹாஸஹம் தவரணமரிஹந்நுத்³க³தோ³த்³தா³மபா³ஹோ:
ப³ஹ்வக்ஷௌஹிண்ய நீகக்ஷபண ஸுநிபுணம் யஸ்ய ஸர்வோத்தமஸ்ய ।
ஶுஷ்ரூஶார்த²ம் சகர்த² ஸ்வயமயமத² ஸம்வக்துமாநந்த தீர்த²
ஶ்ரீமந்நாமந்ஸமர்த²ஸ்த்வமபி ஹி யுவயோ: பாத³பத்³மம் ப்ரபத்³யே ॥ 24॥
த்³ரு’ஹ்யந்தீம்ஹ்ரு’த்³ரு’ஹம் மாம் த்³ரு’தமநில ப³லாத்³ராவயந்தீமவித்³யா
நித்³ராம்வித்³ராவ்ய ஸத்³யோ ரசநபடுமதா²பாத்³யவித்³யாஸமுத்³ர ।

வாக்³தே³வீ ஸா ஸுவித்³யா த்³ரவிணத³ விதி³தா த்³ரௌபதீ³ ருத்³ரபத்ந்யாத்
உத்³ரிக்தாத்³ராக³ப⁴த்³ரா த்³ரஹயது த³யிதா பூர்வபீ⁴மாஜ்ஞயாதே ॥ 25॥
யாப்⁴யாம் ஶுஶ்ரூஷுராஸீ: குருகுல ஜநநே க்ஷத்ரவிப்ரோதி³தாப்⁴யாம்
ப்³ரஹ்மப்⁴யாம் ப்³ரு’ம்ஹிதாப்⁴யாம் சிதஸுக² வபுஷா க்ரு’ஷ்ணநாமாஸ்பதா³ப்⁴யாம்

நிர்பே⁴தா³ப்⁴யாம் விஶேஷாத்³விவசந விஶயாப்⁴யாமுபா⁴ப்⁴யாமமூப்⁴யாம்
துப்⁴யம் ச க்ஷேமதே³ப்⁴ய: ஸரிஸிஜவிலஸல்லோசநேப்⁴யோ நமோऽஸ்து ॥ 26॥
க³ச்ச²ந் ஸௌக³ந்தி⁴கார்த²ம் பதி² ஸ ஹநுமத: புச்ச²மச்ச²ஸ்ய
பீ⁴ம: ப்ரோத்³த⁴ர்தும் நாஶகத்ஸ த்வமுமுருவபுஷா பீ⁴ஷயாமாஸ சேதி ।
பூர்ணஜ்ஞாநௌஜஸோஸ்தே கு³ருதமவபுஷோ: ஶ்ரீமதா³நந்த³தீர்த²
க்ரீடா³மாத்ரம் ததே³தத் ப்ரமத³த³ ஸுதி⁴யாம் மோஹக த்³வேஷபா⁴ஜாம் ॥ 27॥
ப³ஹ்வீ: கோடீரடீக: குடலகடுமதீநுத்கடாடோப கோபாந்
த்³ராக்சத்வம் ஸத்வரத்வாச்சரணத³ க³த³யா போத²யாமாஸிதா²ரீந் ।
உந்மத்²யா தத்த்²ய மித்²யாத்வ வசந வசநாந் உத்பத²ஸ்தா²ம்ஸ்ததா²ऽயாந்
ப்ராயச்ச:² ஸ்வப்ரியாயை ப்ரியதம குஸுமம் ப்ராண தஸ்மை நமஸ்தே ॥ 28॥
தே³ஹாது³த்க்ராமிதாநாமதி⁴பதி ரஸதாமக்ரமாத்³வக்ரபு³த்³தி:⁴
க்ருத்³த:⁴ க்ரோதை⁴கவஶ்ய: க்ரிமிரிவ மணிமாந் து³ஷ்க்ரு’தீ நிஷ்க்ரியார்த²ம் ।
சக்ரே பூ⁴சக்ரமேத்ய க்ரகசமிவ ஸதாம் சேதஸ: கஷ்டஶாஸ்த்ரம்
து³ஸ்தர்கம் சக்ரபாணேர்கு³ணக³ண விரஹம் ஜீவதாம் சாதி⁴க்ரு’த்ய ॥ 29॥
தத்³து³த்ப்ரேக்ஷாநுஸாராத்கதிபய குநரைராத்³ரு’தோऽந்யைர்விஸ்ரு’ஷ்டோ
ப்³ரஹ்மாஹம் நிர்கு³ணோऽஹம் விதத²மித³மிதி ஹ்யேஷபாஶண்ட³வாத:³ ।
தத்³யுக்த்யாபா⁴ஸ ஜால ப்ரஸர விஷதரூத்³தா³ஹத³க்ஷப்ரமாண
ஜ்வாலாமாலாத⁴ரோऽக்³நி: பவந விஜயதே தேऽவதாரஸ்த்ரு’தீய: ॥ 30॥
ஆக்ரோஶந்தோநிராஶா ப⁴யப⁴ர விவஶஸ்வாஶயாச்சி²ந்நத³ர்பா
வாஶந்தோ தே³ஶநாஶஸ்விதி ப³த குதி⁴யாம் நாஶமாஶாத³ஶாऽஶு ।
தா⁴வந்தோऽஶ்லீலஶீலா விதத² ஶபத² ஶாபா ஶிவா: ஶாந்த ஶௌர்யா:
த்வத்³வ்யாக்²யா ஸிம்ஹநாதே³ ஸபதி³ த³த்³ரு’ஶிரே மாயி கோ³மாயவஸ்தே ॥ 31॥
த்ரிஷ்வப்யேவாவதாரேஷ்வரிபி⁴ரபக்⁴ரு’ணம் ஹிம்ஸிதோநிர்விகார:
ஸர்வஜ்ஞ: ஸர்வஶக்தி: ஸகலகு³ணக³ணாபூர்ண ரூபப்ரக³ல்ப:⁴ ।
ஸ்வச்ச:² ஸ்வச்ச²ந்த³ ம்ரு’த்யு: ஸுக²யஸி ஸுஜநம் தே³வகிம் சித்ரமத்ர த்ராதா யஸ்ய த்ரிதா⁴மா ஜக³து³தவஶக³ம் கிங்கரா: ஶங்கராத்³யா: ॥ 32॥
உத்³யந்மந்த³ஸ்மித ஶ்ரீர்ம்ரு’து³ மது⁴மது⁴ராலாப பீயூஷதா⁴ரா
பூராஸேகோபஶாந்தா ஸுக²ஸுஜந மநோலோசநா பீயமாநம் ।
ஸந்த்³ரக்ஷ்யேஸுந்த³ரம் ஸந்து³ஹதி³ஹ மஹதா³நந்த³ம் ஆநந்த³தீர்த²
ஶ்ரீமத்³வக்தேந்த்³ரு பி³ம்ப³ம் து³ரதநுது³தி³தம் நித்யதா³ஹம் கதா³நு ॥ 33॥
ப்ராசீநாசீர்ண புண்யோச்சய சதுரதராசாரதஶ்சாருசித்தாந்
அத்யுச்சாம் ரோசயந்தீம் ஶ்ரு’திசித வசநாம்ஶ்ராவ காம்ஶ்சோத்³யசுஞ்சூந் ।
வ்யாக்²யாமுத்கா²த து:³கா²ம் சிரமுசித மஹாசார்ய சிந்தாரதாம்ஸ்தே
சித்ராம் ஸச்சா²ஸ்த்ரகர்தாஶ்சரண பரிசராம் ச்²ராவயாஸ்மாம்ஶ்சகிஞ்சித் ॥ 34॥
பீடே²ரத்நோகபக்ல்ரு’ப்தே ருசிரருசிமணி ஜ்யோதிஷா ஸந்நிஷண்ணம்
ப்³ரஹ்மாணம் பா⁴விநம் த்வாம் ஜ்வலதி நிஜபதே³ வைதி³காத்³யா ஹி வித்³யா: ।
ஸேவந்தே மூர்திமத்ய: ஸுசரிதசரிதம் பா⁴தி க³ந்த⁴ர்வ கீ³தம்
ப்ரத்யேகம் தே³வஸம்ஸத்ஸ்வபி தவ ப⁴க⁴வந்நர்திதத்³த்³யோவதூ⁴ஷு ॥ 35॥
ஸாநுக்ரோஷைரஜஸ்ரம் ஜநிம்ரு’தி நிரயாத்³யூர்மிமாலாவிலேऽஸ்மிந்
ஸம்ஸாராப்³தௌ⁴நிமக்³நாம்ஶரணமஶரணாநிச்ச²தோ வீக்ஷ்யஜந்தூந் ।
யுஷ்மாபி:⁴ ப்ர்ராதி²த: ஸந் ஜலநிதி⁴ஶயந: ஸத்யவத்யாம் மஹர்ஷே:
வ்யக்தஶ்சிந்மாத்ர மூர்திநக²லு ப⁴க³வத: ப்ராக்ரு’தோ ஜாது தே³ஹ: ॥ 36॥
அஸ்தவ்யஸ்தம் ஸமஸ்தஶ்ரு’தி க³தமத⁴மை: ரத்நபூக³ம் யதா²ந்தை:⁴
அர்த²ம் லோகோபக்ரு’த்யை: கு³ணக³ணநிலய: ஸூத்ரயாமாஸ க்ரு’த்ஸ்நம் ।
யோऽஸௌ வ்யாஸாபி⁴தா⁴நஸ்தமஹமஹரஹ: ப⁴க்திதஸ்த்வத்ப்ரஸாதா³த்
ஸத்³யோ வித்³யோபலப்³த்⁴யை கு³ருதமமகு³ரும் தே³வதே³வம் நமாமி ॥ 37॥
ஆஜ்ஞாமந்யைரதா⁴ர்யாம் ஶிரஸி பரிஸரத்³ரஶ்மி கோடீரகோடௌ
க்ரு’ஷ்ணஸ்யாக்லிஷ்ட கர்மாத³த⁴த³நு ஸராணாத³ர்தி²தோ தே³வஸங்கை:⁴ ।
பூ⁴மாவாக³த்ய பூ⁴மந்நஸுகரமகரோர்ப்³ரஹ்மஸூத்ரஸ்ய பா⁴ஷ்யம்
து³ர்பா⁴ஷ்யம் வ்யாஸ்யத³ஸ்யோர்மணிமத உதி³தம் வேத³ஸத்³யுக்திபி⁴ஸ்த்வம் ॥
38॥
பூ⁴த்வாக்ஷேத்ரே விஶுத்³தே⁴ த்³விஜக³ணநிலயே ரௌப்யபீடா²பி⁴தா⁴நே
தத்ராபி ப்³ரஹ்மஜாதிஸ்த்ரிபு⁴வந விஶதே³ மத்⁴யகே³ஹாக்²ய கே³ஹே ।
பாரிவ்ராஜ்யாதி⁴ ராஜ: புநரபி ப³த³ரீம் ப்ராப்ய க்ரு’ஷ்ணம் ச நத்வா
க்ரு’த்வா பா⁴ஷ்யாணி ஸம்யக் வ்யதநுத ச ப⁴வாந் ப⁴ரதார்த²ப்ரகாஶம் ॥ 39॥

வந்தே³ தம் த்வாம் ஸுபூர்ண ப்ரமதிமநுதி³நா ஸேவிதம் தே³வவ்ரு’ந்தை:³
வந்தே³ வந்தா³ருமீஶே ஶ்ரிய உத நியதம் ஶ்ரீமதா³நந்த³தீர்த²ம் ।
வந்தே³ மந்தா³கிநீ ஸத்ஸரித³மல ஜலாஸேக ஸாதி⁴க்ய ஸங்க³ம்
வந்தே³ऽஹம் தே³வ ப⁴க்த்யா ப⁴வ ப⁴ய த³ஹநம் ஸஜ்ஜநாந்மோத³யந்தம் ॥ 40॥
ஸுப்³ரஹ்மண்யாக்²ய ஸூரே: ஸுத இதி ஸுப்⁴ரு’ஶம் கேஶவாநந்த³தீர்த²
ஶ்ரீமத்பாதா³ப்³ஜ ப⁴க்த: ஸ்துதிமக்ரு’த ஹரேர்வாயுதே³வஸ்ய சாஸ்ய ।
த்வத்பாதா³ர்சாத³ரேண க்³ரதி²த பத³ல ஸந்மாலயா த்வேதயாயே
ஸம்ராத்⁴யாமூநமந்தி ப்ரததமதிகு³ணா முக்திமேதே வ்ரஜந்தி ॥ 41॥
இதி ஶ்ரீத்ரிவிக்ரமபண்டி³தாசார்ய விரசிதம்
ஶ்ரீஹரிவாயுஸ்துதி: ஸம்பூர்ணம் ।

॥ அத² ஶ்ரீ நக²ஸ்துதி: ॥
பாந்த்வஸ்மாந் புருஹூதவைரி ப³லவந்மாதங்க³ மாத்³யத்³க⁴டா
கும்போ⁴ச்சாத்³ரி விபாடநாதி⁴கபடு ப்ரத்யேக வஜ்ராயிதா: ।
ஶ்ரீமத்கண்டீ²ரவாஸ்ய ப்ரதத ஸுநக²ரா தா³ரிதாராதிதூ³ர
ப்ரத்³த்⁴வஸ்தத்⁴வாந்த ஶாந்த ப்ரவிதத மநஸா பா⁴விதாநாகிவ்ரு’ந்தை:³ ॥ 1॥
லக்ஷ்மீகாந்த ஸமந்ததோऽபிகலயந் நைவேஶிதுஸ்தே ஸமம்
பஶ்யாம்யுத்தம வஸ்து தூ³ரதரதோபாஸ்தம் ரஸோயோऽஷ்டம: ।
யத்³ரோஶோத்கர த³க்ஷ நேத்ர குடில: ப்ராந்தோத்தி²தாக்³நி ஸ்பு²ரத்
க²த்³யோதோபம விஸ்பு²லிங்க³ப⁴ஸிதா ப்³ரஹ்மேஶஶக்ரோத்கரா: ॥ 2॥
இதி ஶ்ரீமதா³நந்த³தீர்த²ப⁴க³வத்பாதா³சார்யவிரசிதம்
ஶ்ரீந்ரு’ஸிம்ஹநக²ஸ்துதி: ஸம்புர்ணம் ।
॥ பா⁴ரதீரமணமுக்²யப்ராணாந்தர்க³த ஶ்ரீக்ரு’ஷ்ணார்பணமஸ்து ॥
வாயுர்பீ⁴மோ பீ⁴மநாதோ³ மஹூஜா: ஸர்வேஶாம் ச ப்ராணிநாம் ப்ராணபூ⁴த: ।
அநாவ்ரு’த்திர்தே³ஹிநாம் தே³ஹபாதே தஸ்மாத்³வாயுர ்தே³வதே³வோ விஶிஷ்ட: ॥ ॥
ஜ்ஞாநே விராகே³ ஹரிப⁴க்திபா⁴வே த்⁴ரு’திஸ்தி²திப்ராணப³லேஷி யோகே³ ।
பு³த்³தௌ⁴ ச நாந்யோ ஹநுமத்ஸமாந: புமாந் கதா³சித் க்வசகஶ்ச நைவ ॥ ॥
வாதேந குந்த்யாம் ப³லவாந் ஸ ஜாத: ஶூரஸ்தபஸ்வீ த்³விஷதாம் நிஹந்தா ।
ஸத்யே ச த⁴ர்மே ச ரத: ஸதை³வ பராக்ரமே ஶத்ருபி⁴ரப்ரத்⁴ரு’ஷ்ய: ॥ ॥

யோ விப்ரலம்ப⁴விபரீதமதிப்ரபூ⁴தாந் வாதா³ந்நிரஸ்த க்ரு’தவாந்பு⁴வி தத்த்வவாத³ம் ।
ஸர்வேஶ்வரோ ஹரிரிதி ப்ரதிபாத³யந்தமாநந்த³தீர்த² முநிவர்யமஹம் நமாமி ॥ ॥
யஸ்ய த்ரீண்யுதி³தாநி வேத³வசநே ரூபாணி தி³வ்யாந்யலம் ।
ப³ட் தத்³த³ர்ஶநமித்த²மேவ நிஹிதம் தே³வஸ்ய ப⁴ர்கோ³ மஹத் ।
வாயோ ராமவசோநயம் ப்ரத²மகம் ப்ரு’க்ஷோ த்³விதீயம் வபு: ।
மத்⁴வோ யத்து த்ரு’தீயமேதத³முநா க்³ரந்த:² க்ரு’த: கேஶவே ॥ ॥
மஹாவ்யாகரணாம்போ⁴தி⁴ மந்த²மாநஸமந்த³ரம் ।
கவயந்தம் ராமகீர்த்யா ஹநூமந்தமுபாஸ்மஹே ॥ ॥
ப்³ரஹ்மாந்தா கு³ரவ: ஸாக்ஷாதி³ஷ்டம் தை³வம் ஶ்ரிய: பதி: ।
ஆசார்யா: ஶ்ரீமதா³சார்யா: ஸந்து மே ஜந்ம ஜந்மநி ॥ ॥
ப்ரத²மோ ஹநுமாந்நாமா த்³விதீயோ பீ⁴ம ஏவ ச ।
பூர்ணப்ரஜ்ஞ த்ரு’தீயஸ்து ப⁴க³வத்கார்யஸாத⁴க: ॥ ॥
முக்²யப்ராணாய பீ⁴மாய நமோ யஸ்ய பு⁴ஜாந்தரம் ।
நாநா வீரஸுவர்ணாநாம் நிகஷாஶ்மாயிதம் ப³பௌ⁴ ॥ ॥
ஸ்வாந்தஸ்தா²நந்தஶையாய பூர்ணஜ்ஞாநரஸார்ணஸே ।
உத்துங்க³வாக்தரங்கா³ய மத்⁴வது³க்³தா⁴ப்³த⁴யே நம: ॥ ॥
யேநாஹம் இஹ து³ர்மார்கா³த் உத்³த்⁴ரு’த்யாதி³ நிவேஶித: ।
ஸம்யக் ஶ்ரீவைஷ்ணவே மார்கே³ பூர்ணப்ரஜ்ஞம் நமாமி தம் ॥ ॥
ஹநூமாநஞ்ஜநாஸூநு: வாயுபுத்ரோ மஹாப³ல: ।
ராமேஷ்ட: ப²ல்கு³ணஸக:² பிங்கா³க்ஷோऽமிதவிக்ரம: ॥ ॥
உத³தி⁴க்ரமணஶ்சைவ ஸீதாஸந்தே³ஶஹாரக: ।
லக்ஷ்மணப்ராணதா³தா ச த³ஶக்³ரீவஸ்ய த³ர்பஹா ॥ ॥
மாருதி: பாண்ட³வோ பீ⁴மோ க³தா³பாணிர்வ்ரு’கோத³ர: ।
கௌந்தேய: க்ரு’ஷ்ணதூ³தஶ்ச பீ⁴மஸேநோ மஹாப³ல: ॥ ॥
ஜராஸந்தா⁴ந்தகோ வீரோ து:³ஶாஸந விநாஶந: ।
பூர்ணப்ரஜ்ஞோ ஜ்ஞாநதா³தா மத்⁴வோ த்⁴வஸ்த து³ராக³ம: ॥ ॥
தத்த்வஜ்ஞோ வைஷ்ணவாசார்யோ வ்யாஸஶிஷ்யோ யதீஶ்வர: ॥ ॥
ஶுப⁴தீர்தா²பி⁴தா⁴நஶ்ச ஜிதாமித்ரோ ஜிதேந்த்³ரிய: ।

ஶ்ரீமதா³நந்த³ ஸந்நாம்நாமேவ த்³வாத³ஶகம் ஜபேத் ।
லப⁴தே வைஷ்ணவீம் ப⁴க்திம் கு³ருப⁴க்தி ஸமந்விதம் ॥ ॥
மநோஜவம் மாருததுல்யவேக³ம் ஜிதேந்த்³ரியம் பு³த்³தி⁴மதாம் வரிஷ்ட²ம் ।
வாதாத்மஜம் வாநரயூத²முக்²யம் ஶ்ரீராமதூ³தம் ஶிரஸா நமாமி ॥ ॥
பு³த்³தி⁴ர்ப³லம் யஶோ தை⁴ர்யம் நிர்ப⁴யத்த்வம் அரோக³தா ।
அஜாட்³யம் வாக்படுத்த்வம் ச ஹநூமத்ஸ்மரணத்³ப⁴வேத் ॥ ॥
ந மாத⁴வஸமோ தே³வோ ந ச மத்⁴வ ஸமோ கு³ரு: ।
ந தத்³வாக்யஸமம் ஶாஸ்த்ரம் ந ச தஸ்ய ஸம: புமாந் ॥ ॥
பீ⁴மஸேந ஸமோ நாஸ்தி ஸேநயோருப⁴யோரபி ।
பாண்டி³த்யேச படுத்வே ச ஶூரத்வே ச ப³லேபி ச ॥ ॥
ஆசார்ய: பவநோऽஸ்மாகம் ஆசார்யாணீ ச பா⁴ரதீ ।
தே³வோ நாராயண: ஶ்ரீஶ: தே³வீ மங்க³ள தே³வதா ॥ ॥
இதி த்ரிவிக்ரமபண்டி³தாசார்யவிரசிதா வாயுஸ்துதி: ஸமாப்தா ।

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ மஹாலக்ஷ்மீ சதுர்விம்ʼஶதி நாமாவலி-ஸ்ரீ வேங்கடேஶ அஷ்டோத்தர சத நாமாவளி-

October 9, 2024

ஶ்ரீவேங்கடேஶமஹிஷீ மஹலக்ஷ்மீ ப்ரீத்யர்த²ம்ʼ
ஶ்ரீவேங்கடேஶமஹிஷீமஹாலக்ஷ்மீ சதுர்விம்ʼஶதி நாமபி⁴꞉
ஶ்ரீவேங்ககடேஶமஹிஷீ மஹாலக்ஷ்ம்யர்சனம்ʼ கரிஷ்யே ||

அஸ்ய ஶ்ரீமஹலக்ஷ்மீ சதுர்விம்ʼஶதிநாம மந்த்ரஸ்ய ப்³ரஹ்மா ருʼஷி꞉ .
அனுஷ்டுப் ச²ந்த³꞉ . ஶ்ரீமஹாலக்ஷ்மீர்தே³வதா .
ஶ்ரீவேங்கடேஶமஹிஷீமஹாலக்ஷ்மீப்ரீத்யர்தே⁴ ஜபே விநியோக³꞉ .

த்⁴யானம் 

ஈஶானாம்ʼ ஜக³தோஸ்ய வேங்கடபதேர்விஷ்ணோ꞉ பராம்ʼ ப்ரேயஸீம்ʼ
தத்³வக்ஷஸ்த²லநித்யவாஸரஸிகாம்ʼ தத்க்ஷாந்திஸம்ʼவர்தி⁴னீம் .
பத்³மாலங்க்ருʼதபாணிபல்லவயுகா³ம்ʼ பத்³மாஸனஸ்தா²ம்ʼ ஶ்ரியம்ʼ
வாத்ஸல்யாதி³கு³ணோஜ்வலாம்ʼ ப⁴க³வதீம்ʼ வந்தே³ ஜக³ன்மாதரம் ..

  1. ௐ ஶ்ரியை நம꞉
  2. ௐ லோக தா⁴த்ர்யை நம꞉
  3. ௐ ப்³ரஹ்ம மாத்ரே நம꞉
  4. ௐ பத்³ம நேத்ராயை நம꞉
  5. ௐ பத்³ம முக்²யை நம꞉
  6. ௐ ப்ரஸன்ன முக² பத்³மாயை நம꞉
  7. ௐ பத்³ம காந்த்யை நம꞉
  8. ௐ பி³ல்வ வனஸ்தா²யை நம꞉
  9. ௐ விஷ்ணு பத்ன்யை நம꞉
  10. ௐ விசித்ர க்ஷௌமதா⁴ரிண்யை நம꞉
  11. ௐ ப்ருʼது² ஶ்ரோண்யை நம꞉
  12. ௐ பக்வ பி³ல்வ ப²லா பீன துங்க³ஸ்த²ன்யை நம꞉
  13. ௐ ஸுரக்த பத்³ம பத்ராப⁴கர பாத³தலாயை நம꞉
  14. ௐ ஶுபா⁴யை நம꞉
  15. ௐ ஸரத்னாங்க³த³ கேயூர காஞ்ஜீ நூபுர ஶோபி⁴தாயை நம꞉
  16. ௐ யக்ஷ கர்த³ம ஸம்ʼலிப்த ஸர்வாங்கா³யை நம꞉
  17. ௐ கடகோஜ்ஜ்வலாயை நம꞉
  18. ௐ மாங்க³ல்யாப⁴ரணைஶ் சித்ரைர் முக்தாஹாரைர் விபூ⁴ஷிதாயை நம꞉
  19. ௐ தாடங்கைரவதம்ʼஸைஶ்ச ஶோப⁴மான முகா²ம்பு³ஜாயை நம꞉
  20. ௐ பத்³ம ஹஸ்தாயை நம꞉
  21. ௐ ஹரி வல்லபா⁴யை நம꞉
  22. ௐ ருʼக்³ யஜுஸ் ஸாம ரூபாயை நம꞉
  23. ௐ வித்³யாயை நம꞉
  24. ௐ அப்³தி⁴ஜாயை நம꞉

ஏவம்ʼ சதுர்விம்ʼஶதிநாமபி⁴꞉ பி³ல்வபத்ரைர்லக்ஷ்ம்யர்சனம்ʼ குர்யாத் .
ஸர்வாபீ⁴ஷ்டஸித்³தி⁴ர்ப⁴வதி ..

இதி மஹாலக்ஷ்மீ சதுர்விம்ʼஶதி நாமாவலி꞉ ||

————

ஸ்ரீ வேங்கடேஶ அஷ்டோத்தர சத நாமாவளி-

சாஷாத் திருவானந்தாழ்வான் கபிலருக்கு உபதேசித்த நாமாவளி-

1-ஓம் வேங்கடேசாய ஸ்ரீ வேங்கடேசாய நம
2-ஓம் சேஷாத்ரி நிலயாய ஸ்ரீ வேங்கடேசாயா நம
3-வ்ருஷ த்ருக் கோசர ஸ்ரீ வேங்கடேசாயா நம —தர்மன் -மநு தவம் இருந்து வராஹப்பெருமாளை சாஷாத்காரித்த வ்ருத்தாந்தம்
4-ஓம் விஷ்ணவே ஸ்ரீ வேங்கடேசாய நம
5-ஓம் சதஞ்ஜந கிரீசாய ஸ்ரீ வேங்கடேசாயா நம
6-ஓம் வ்ருஷாத்ரி பதயே ஸ்ரீ வேங்கடேசாய நம
7-ஓம் மேரு புத்ர கிரீசாய ஸ்ரீ வேங்கடேசாய நம
8-ஓம் ஸரஸ் ஸ்வாமி தட்ஜூஜே ஸ்ரீ வேங்கடேசாய நம
9-குமார ஆகல்ப ஸேவ்யாயை ஸ்ரீ வேங்கடேசாயா நம -குமார தீர்த்தம்
10- வஜ்ரி த்ருக் விஷயா தயாய ஸ்ரீ வேங்கடேசாய நம

11-ஓம் ஸ்வர்க்லா ஸூ தந் யஸ்த ஸைநாபத்ய பராய ஸ்ரீ வேங்கடேசாய நம
12-ஓம் ஸ்ரீ ராமாய ஸ்ரீ வேங்கடேசாய நம
13-ஓம் பத்ம நாபாய ஸ்ரீ வேங்கடேசாயா நம
14-ஓம் ஸதா வாயுஸ் துதாய ஸ்ரீ வேங்கடேசாய நம
15-ஓம் த்யக்த வைகுண்ட லோகாய ஸ்ரீ வேங்கடேசாய நம
16-ஓம் கிரி குஞ்ஜ விஹாரிணே ஸ்ரீ வேங்கடேசாய நம
17- ஓம் ஹரி சந்தந கோத்ர ரேந்த்ர ஸ்வாமினே ஸ்ரீ வேங்கடேசாய நம
18-ஓம் சங்கரா ஜன்ய நேத்ர அப்ஜ விஷயாய ஸ்ரீ வேங்கடேசாய நம
19-ஓம் வஸூபரி சரத்ராத்ரே ஸ்ரீ வேங்கடேசாய நம
20-ஓம் கிருஷ்ணாய ஸ்ரீ வேங்கடேசாய நம

21-ஓம் அப்தி கந்யா பரிஷ்வக்த வக்ஷஸே ஸ்ரீ வேங்கடேசாய நம
22-ஓம் வேங்கடாய ஸ்ரீ வேங்கடேசாய நம
23-ஓம் ஸதகாதி மஹா யோகி பூஜிதாய ஸ்ரீ வேங்கடேசாய நம
24-ஓம் தேவஜித் ப்ரமுக அநந்த தைத்ய சங்க ப்ரணாஸிநே ஸ்ரீ வேங்கடேசாய நம
25-ஓம் ஸ்வேத த்வீப வசந் முக்த பூஜித அங்க்ரியாய ஸ்ரீ வேங்கடேசாய நம
26-ஓம் சேஷ பர்வத ரூபத்வ ப்ரகாஸந பராய ஸ்ரீ வேங்கடேசாய நம
27- ஓம் ஸாநுஸ்தாபித தார்ஷ்யாய ஸ்ரீ வேங்கடேசாய நம
28-ஓம் தார்ஷ்யாசல நிவாஸிநே ஸ்ரீ வேங்கடேசாய நம
29-ஓம் மாயாக டவிமாநாய ஸ்ரீ வேங்கடேசாய நம
30-ஓம் கருடஸ் கந்த வாஸிநே ஸ்ரீ வேங்கடேசாய நம

31-ஓம் அநந்த ஸிரஸே ஸ்ரீ வேங்கடேசாய நம
32-ஓம் அநந்தாஷ்யாய ஸ்ரீ வேங்கடேசாய நம
33-ஓம் அநந்த ஸரணாய ஸ்ரீ வேங்கடேசாய நம
34-ஓம் ஸ்ரீ ஸைல நிலயாய ஸ்ரீ வேங்கடேசாய நம
35-ஓம் தாமோதராய ஸ்ரீ வேங்கடேசாய நம
36-ஓம் நீல மேக நிபாய ஸ்ரீ வேங்கடேசாய நம
37-ஓம் ப்ரஹ்மாதி தேவ துர் தர்ச விஸ்வரூபாய ஸ்ரீ வேங்கடேசாய நம
38-ஓம் வைகுண்ட ஆகத ஸத்தேம விமாந அந்தர் கதாய ஸ்ரீ வேங்கடேசாய நம
39-ஓம் அகஸ்யாந் யர்த்திதா சேஷ ஜன த்ருக் கோஸராய ஸ்ரீ வேங்கடேசாய நம
40-ஓம் வாஸூ தேவாய ஸ்ரீ வேங்கடேசாய நம

41-ஓம் ஹரயே ஸ்ரீ வேங்கடேசாய நம
42-ஓம் தீர்த்த பஞ்சக வாஸிதே ஸ்ரீ வேங்கடேசாய நம
43-ஓம் வாம தேவ ப்ரியாய ஸ்ரீ வேங்கடேசாய நம
44-ஓம் ஜன கேஷ்ட ப்ரகாய ஸ்ரீ வேங்கடேசாய நம
45-ஓம் மார்க்கண்டேய மஹா நீர்த்த ஜாத புண்ய ப்ரதாய ஸ்ரீ வேங்கடேசாய நம
46-ஓம் வாக்பதி ப்ரஹ்ம தாத்ரே ஸ்ரீ வேங்கடேசாய நம
47-ஓம் சந்த்ர லாவண்ய தாயிநே ஸ்ரீ வேங்கடேசாய நம
48-ஓம் நாராயண நகேசாய ஸ்ரீ வேங்கடேசாய நம
49-ஓம் ப்ரஹ்ம க்ல்ப்தோத்ஸவாய ஸ்ரீ வேங்கடேசாய நம
50-ஓம் சங்க சக்ர வராநம் ரலஸத் கர தலாய ஸ்ரீ வேங்கடேசாய நம

51-ஓம் த்ரவங் குகமதா சக்த விக்ரஹாய ஸ்ரீ வேங்கடேசாய நம
52-ஓம் கோவாய ஸ்ரீ வேங்கடேசாய நம
53-ஓம் நித்ய யவ்வன மூர்த்தயே ஸ்ரீ வேங்கடேசாய நம
54-ஓம் அரர்த்தி தார்த ப்ரதாத்ரே ஸ்ரீ வேங்கடேசாய நம
55-ஓம் விஸ்வ நீரர்த்தாக ஹாரிணே ஸ்ரீ வேங்கடேசாய நம
56-ஓம் நீர்த்த ஸ்வாமி ஸரஸ் ஸ்நாத ஜநா பீஷ்ட ப்ரதாய ஸ்ரீ வேங்கடேசாய நம
57-ஓம் குமார தாரிகா வாஸஸ் கந்த அபீஷ்ட ப்ரதாய ஸ்ரீ வேங்கடேசாய நம
58-ஓம் ஜாநு தக்ந ஸம் பூத பேத்ரிண ஸ்ரீ வேங்கடேசாய நம
59-ஓம் கூர்ம மூர்த்யே ஸ்ரீ வேங்கடேசாய நம
60-ஓம் கிந் நரத்த்வ சபாந்த ப்ரதாத்ரே நம

61-ஓம் விமவே ஸ்ரீ வேங்கடேசாய நம
62-ஓம் வைகாநஸ முநி ஸ்ரேஷ்ட பூஜிதாயா ஸ்ரீ வேங்கடேசாய நம
63-ஓம் ஸிம்ஹாஸல நிவாஸாய ஸ்ரீ வேங்கடேசாய நம
64-ஓம் ஸ்ரீ மந் நாராயணாய ஸ்ரீ வேங்கடேசாய நம
65-ஓம் ஸத் பக்த நீல கண்டார்ஸயே ந்ருஸிம்ஹாய ஸ்ரீ வேங்கடேசாய நம
66-ஓம் குமுதா க்ஷண ஸ்ரேஷ்டஸை நாபத்ய ப்ரதாய ஸ்ரீ வேங்கடேசாய நம
67-ஓம் துர்மேத ப்ராண ஹர்த்ரே ஸ்ரீ வேங்கடேசாய நம
68-ஓம் ஸ்ரீ தராய ஸ்ரீ வேங்கடேசாய நம
69-ஓம் க்ஷத்ரியாந்த கராமாய ஸ்ரீ வேங்கடேசாய நம
70- ஓம் மத்ஸ்ய ரூபாய ஸ்ரீ வேங்கடேசாய நம

71-ஓம் பாண்ட வாரி ப்ரஹர்த்த்ரே ஸ்ரீ வேங்கடேசாய நம
72-ஓம் ஸ்ரீ கராய ஸ்ரீ வேங்கடேசாய நம
73-ஓம் உபத்யகா ப்ரதேசஸ்த சங்கரத் யாத மூர்த்யே ஸ்ரீ வேங்கடேசாய நம
74-ஓம் ருக்மா ரப்ஜ ஸரஸீ கூல லஷ்மீ க்ருத தபஸ்விநே ஸ்ரீ வேங்கடேசாய நம
75-ஓம் லஸல் லஷ்மீ கர அம்போஜகத் தகல் ஹரகஸ்ரஜே ஸ்ரீ வேங்கடேசாய நம
76-ஓம் ஸாளக்ராம நிவாஸாய ஸ்ரீ வேங்கடேசாய நம
77-ஓம் ஸூக த்ருக் கோஸராய ஸ்ரீ வேங்கடேசாய நம
78-ஓம் நாராயணாத்திதா சேஷ ஜன த்ருட் விஷயாய ஸ்ரீ வேங்கடேசாய நம
79-ஓம் ம்ருகயாரஸிகாய ஸ்ரீ வேங்கடேசாய நம
80-ஓம் வ்ருக்ஷ பாஸூர ஹாரிணே ஸ்ரீ வேங்கடேசாய நம

81-ஓம் அஞ்ஜநா கோத்ர பதயே ஸ்ரீ வேங்கடேசாய நம
82-ஓம் வ்ருஷபாசல வாஸிதே ஸ்ரீ வேங்கடேசாய நம
83-ஓம் அஞ்சநா ஸூத தாத்ரே ஸ்ரீ வேங்கடேசாய நம
84-ஓம் மாதவ யாக ஹாரிணே ஸ்ரீ வேங்கடேசாய நம
85-ஓம் ப்ரியங்கு ப்ரிய பஷயே ஸ்ரீ வேங்கடேசாய நம
86-ஓம் ஸ்வேத கேரல வராய ஸ்ரீ வேங்கடேசாய நம
87-ஓம் நீல தேனு பயோ தராஸே கதே ஹோத்பவாய ஸ்ரீ வேங்கடேசாய நம
88-ஓம் சங்கர ப்ரிய மித்ராய ஸ்ரீ வேங்கடேசாய நம
89-ஓம் சோள புத்ர ப்ரியாய ஸ்ரீ வேங்கடேசாய நம
90-ஓம் ஸூ தர்மிணீ ஸூ சைதந்ய ப்ரதாத்ரே ஸ்ரீ வேங்கடேசாய நம

91-ஓம் மதுகாதிதே ஸ்ரீ வேங்கடேசாய நம
92-ஓம் கிருஷ்ணக்ய விப்ர வேதாந்த தேசிகத்வ ப்ரதாய ஸ்ரீ வேங்கடேசாய நம
93-ஓம் வராஹாசல நாதாய ஸ்ரீ வேங்கடேசாய நம
94-ஓம் பல பத்ராய ஸ்ரீ வேங்கடேசாய நம
95-ஓம் த்ரிவிக்ரமாய ஸ்ரீ வேங்கடேசாய நம
96-ஓம் மஹதே ஸ்ரீ வேங்கடேசாய நம
97-ஓம் ஹ்ருஷீ கேஸாய ஸ்ரீ வேங்கடேசாய நம
98-ஓம் அச்சுதாய ஸ்ரீ வேங்கடேசாய நம
99-ஓம் நீலாத்ரி நிலயாய ஸ்ரீ வேங்கடேசாய நம
100-ஓம் ஷீராப்தி நாதாய ஸ்ரீ வேங்கடேசாய நம

101-ஓம் வைகுண்டாசல வாஸிநே ஸ்ரீ வேங்கடேசாய நம
102-ஓம் முகுந்தாய ஸ்ரீ வேங்கடேசாய நம
103-ஓம் அநந்தாய ஸ்ரீ வேங்கடேசாய நம
104-ஓம் விரிஞ்சப் யர்த்திதா நீத ஸுவ்ம்ய ரூபாய ஸ்ரீ வேங்கடேசாய நம
105-ஓம் ஸ்வர்ண முகரீஸ் நாத மநுஜ அபீஷ்ட தாயிநே ஸ்ரீ வேங்கடேசாய நம
106-ஓம் ஹலா யுத ஜகத் தீர்த்த ஸமஸ்த பல தாயிநே ஸ்ரீ வேங்கடேசாய நம
107-ஓம் கோவிந்தாய ஸ்ரீ வேங்கடேசாய நம
108-ஓம் ஸ்ரீ நிவாஸாய ஸ்ரீ வேங்கடேசாய நம

——————-

ஸ்ரீ வேங்கடேஶ அஷ்டோத்தர சத நாமாவளி-

ஓம் வேங்கடேஶ ஸ்ரீ வேங்கடேஶ நம

ஓம் பயநாஶநாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் யஜமாந ஸ்வரூபாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ஹஸ்தந்யஸ்த  ஸுதர்ஶநாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ரமாவதார மங்கேஶாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ணாகாரஜவ ஸுப்ரியாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் யஜ்ஞேஶாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் கதிதாத்ரே ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ஜகதீவல்லபாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் வராய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ரக்ஷஸ்ஸந்தோஹ ஸம்ஹர்த்ரே ஸ்ரீ வேங்கடேஶ நம: 20

ஓம் வர்சஸ்விநே ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ரகுபுங்கவாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் தாநதர்மபராய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் யாஜிநே ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் கநஶ்யாமள ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ஹராதி ஸர்வதேவேட்யாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ராமாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் யதுகுலாக்ரணயே ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ஸ்ரீநிவாஸாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் மஹாத்மநே ஸ்ரீ வேங்கடேஶ நம: 30

ஓம் தேஜஸ்விநே ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் தத்வ ஸந்நிதயே ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் த்வமர்த்த லக்ஸ்ரீ வேங்கடேஶ நம
ஓம் பாவநாய ஸ்ரீ வேங்கடேஶ நம
ஓம் ஸர்வேஶாய ஸ்ரீ வேங்கடேஶநம:
ஓம் கமலாகாந்தாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் லக்ஷ்மீ ஸல்லாப ஸம்முகாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் சதுர்முக ப்ரதிஷ்டாத்ரே ஸ்ரீ வேங்கடேஶ நம: 40

ஓம் ராஜராஜ வரப்ரதாய ஸ்ரீ வேங்கடேஶநம:
ஓம் சதுர்வேத ஶிரோரத்நாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ரமணாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் நித்யவைபவாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் தாஸவர்க்க பரித்ராத்ரே ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் நாரதாதி முநிஸ்துத்யாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் யாதவாசலவாஸிநே ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் கித்யத் பக்தார்தி பஞ்ஜநாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் லக்ஷ்மீப்ரஸாதகாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் விஷ்ணவே ஸ்ரீ வேங்கடேஶ நம: 50

ஓம் தேவேஶாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ரம்ய விக்ரஹாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் மாதவாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் லோகநாதாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் லாலிதாகில ஸேவகாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் யக்ஷகந்தர்வ வரதாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் குமாராய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் மாத்ருகார்ச்சிதாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ரட்த்பாலக போஷிணே ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ஶேஷஶைல க்ருதஸ்தலாய ஸ்ரீ வேங்கடேஶ நம: 60

ஓம் ஷாட்குண்ய பரிபூர்ணாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் த்வைததோஷ நிவாரணாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் திர்யக்ஜந்த் வர்ச்சிதாங்க்ரயே ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் நேத்ராநந்த கரோத்ஸவாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் த்வாதஶோத்தம லீலாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் தரித்ரஜந ரக்ஷகாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ஶத்ரு க்ருத்யாதி பீதிக்நாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் புஜங்கஸயந ப்ரியாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ஜாக்ரதே ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ரஹஸ்யாவாஸாய ஸ்ரீ வேங்கடேஶ நம: 70

ஓம் ஶிஷ்டபரிபாலகாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் வரேண்யாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் பூர்ணபோதாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ஜந்ம ஸம்ஸார பேஷஜாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் கார்த்திகேய வபுர்த்தாரிணே ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் யதிஶேகர பாவிதாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் நரகாதி பயத்வம்ஸிநே ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ரதோத்ஸவ கலாதராய ஸ்ரீ வேங்கடேஶநம:
ஓம் லோகார்ச்சா முக்யமூர்த்தயே ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் கேஶவாத் யவதாரவதே ஸ்ரீ வேங்கடேஶ நம: 80

ஓம் ஶாஸ்த்ர ஶ்ருதாநந்த லீலாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் யமஶிக்ஷா நிபர்ஹணாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் மாநஸம்ரக்ஷண பராய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் நேத்ரஹீநாக்ஷிதாயிநே ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் மதிஹீந மதிப்ரதாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ஹிரண்யதாந க்ராஹிணே ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் மோஹஜால நிக்ருந்தநாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ததிலாஜாக்ஷதார்ச்யாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் யாதுதாந  விநாஶநாய ஸ்ரீ வேங்கடேஶ நம: 90

ஓம் வேங்கடாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் தக்ஷிணாஸ்திதாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ஸாரபுஷ்கரிணிதீராய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ராத்ரௌ தேவகணார்ச்சிதாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் யத்நவத் பலஸந்த்தாத்ரே ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ஸ்ரீம்ஜபாத் தநவ்ருத்திக்ருதயாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் க்லீம்காரஜாபி காம்யார்த்த ப்ரதாந ஸதயாந்தராய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ஸ்வஸர்வசித்தி ஸந்தாக்ரே ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் நமஸ்கர்த்து ரபீஷ்டதாய ஸ்ரீ வேங்கடேஶ நம: 100

ஓம் மோஹிதாகில லோகாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் நாநாரூப வ்யவஸ்திதாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ராஜீவலோசநாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் யஜ்ஞவராஹாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் கணவேங்கடாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் தேஜோராஶீக்ஷணாய ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ஸ்வாமிநே ஸ்ரீ வேங்கடேஶ நம:
ஓம் ஹார்தா வித்யா நிவாரணாய ஸ்ரீ வேங்கடேஶ நம:  108

ஸ்ரீ வேங்கடேஶ அஷ்டோத்தர சத நாமாவளி சமாப்தம்:

————–

ஸ்ரீ வேங்கடேஶ அஷ்டோத்தர சத நாமாவளி

ஒவ்வொரு திருநாமத்திலும் ஸ்ரீ வேங்கடேசாய நம சேர்த்தே சொல்ல வேண்டுமாம்

ஓம் ஶ்ரீ வேங்கடேஶாய நம:
ஓம் ஶ்ரீனிவாஸாய நம:
ஓம் லக்ஷ்மீபதயே நம:
ஓம் அனாமயாய நம:
ஓம் அம்ருதாஶாய நம:
ஓம் ஜக³த்³வன்த்³யாய நம:
ஓம் கோ³வின்தா³ய நம:
ஓம் ஶாஶ்வதாய நம:
ஓம் ப்ரப⁴வே நம:
ஓம் ஶேஷாத்³ரினிலயாய நம: (1௦)

ஓம் தே³வாய நம:
ஓம் கேஶவாய நம:
ஓம் மது⁴ஸூத³னாய நம:
ஓம் அம்ருதாய நம:
ஓம் மாத⁴வாய நம:
ஓம் க்ருஷ்ணாய நம:
ஓம் ஶ்ரீஹரயே நம:
ஓம் ஜ்ஞானபஞ்ஜராய நம:
ஓம் ஶ்ரீவத்ஸவக்ஷஸே நம:
ஓம் ஸர்வேஶாய நம:

ஓம் கோ³பாலாய நம:
ஓம் புருஷோத்தமாய நம:
ஓம் கோ³பீஶ்வராய நம:
ஓம் பரஸ்மை ஜ்யோதிஷே நம:
ஓம் வ்தெகுண்ட² பதயே நம:
ஓம் அவ்யயாய நம:
ஓம் ஸுதா⁴தனவே நம:
ஓம் யாத³வேன்த்³ராய நம:
ஓம் நித்ய யௌவனரூபவதே நம:
ஓம் சதுர்வேதா³த்மகாய நம: (3௦)

ஓம் விஷ்ணவே நம:
ஓம் அச்யுதாய நம:
ஓம் பத்³மினீப்ரியாய நம:
ஓம் த⁴ராபதயே நம:
ஓம் ஸுரபதயே நம:
ஓம் நிர்மலாய நம:
ஓம் தே³வபூஜிதாய நம:
ஓம் சதுர்பு⁴ஜாய நம:
ஓம் சக்ரத⁴ராய நம:
ஓம் த்ரிதா⁴ம்னே நம: (4௦)

ஓம் த்ரிகு³ணாஶ்ரயாய நம:
ஓம் நிர்விகல்பாய நம:
ஓம் நிஷ்களங்காய நம:
ஓம் நிரான்தகாய நம:
ஓம் நிரஞ்ஜனாய நம:
ஓம் விராபா⁴ஸாய நம:
ஓம் நித்யத்ருப்தாய நம:
ஓம் நிர்கு³ணாய நம:
ஓம் நிருபத்³ரவாய நம:
ஓம் க³தா³த⁴ராய நம: (5௦)

ஓம் ஶார்-ங்க³பாணயே நம:
ஓம் நன்த³கினே நம:
ஓம் ஶங்க³தா⁴ரகாய நம:
ஓம் அனேகமூர்தயே நம:
ஓம் அவ்யக்தாய நம:
ஓம் கடிஹஸ்தாய நம:
ஓம் வரப்ரதா³ய நம:
ஓம் அனேகாத்மனே நம:
ஓம் தீ³னப³ன்த⁴வே நம:
ஓம் ஆர்தலோகாப⁴யப்ரதா³ய நம: (6௦)

ஓம் ஆகாஶராஜவரதா³ய நம:
ஓம் யோகி³ஹ்ருத்பத்³மமன்தி³ராய நம:
ஓம் தா³மோத³ராய நம:
ஓம் ஜக³த்பாலாய நம:
ஓம் பாபக்⁴னாய நம:
ஓம் ப⁴க்தவத்ஸலாய நம:
ஓம் த்ரிவிக்ரமாய நம:
ஓம் ஶிம்ஶுமாராய நம:
ஓம் ஜடாமகுட ஶோபி⁴தாய நம:
ஓம் ஶங்க³மத்³யோல்லஸ-ன்மஞ்ஜுகிங்கிண்யாட்⁴யகரண்ட³காய நம: (7௦)

ஓம் நீலமோக⁴ஶ்யாம தனவே நம:
ஓம் பி³ல்வபத்ரார்சன ப்ரியாய நம:
ஓம் ஜக³த்³வ்யாபினே நம:
ஓம் ஜக³த்கர்த்ரே நம:
ஓம் ஜக³த்ஸாக்ஷிணே நம:
ஓம் ஜக³த்பதயே நம:
ஓம் சின்திதார்த²ப்ரதா³ய நம:
ஓம் ஜிஷ்ணவே நம:
ஓம் தா³ஶார்ஹாய நம:
ஓம் த³ஶரூபவதே நம: (8௦)

ஓம் தே³வகீ நன்த³னாய நம:
ஓம் ஶௌரயே நம:
ஓம் ஹயக்³ரீவாய நம:
ஓம் ஜனார்த³னாய நம:
ஓம் கன்யாஶ்ரவணதாரேஜ்யாய நம:
ஓம் பீதாம்ப³ரத⁴ராய நம:
ஓம் அனகா⁴ய நம:
ஓம் வனமாலினே நம:
ஓம் பத்³மனாபா⁴ய நம:
ஓம் ம்ருக³யாஸக்த மானஸாய நம: (9௦)

ஓம் அஶ்வாரூடா⁴ய நம:
ஓம் க²ட்³க³தா⁴ரிணே நம:
ஓம் த⁴னார்ஜன ஸமுத்ஸுகாய நம:
ஓம் க⁴னஸார லஸன்மத்⁴யகஸ்தூரீ திலகோஜ்ஜ்வலாய நம:
ஓம் ஸச்சிதானந்த³ரூபாய நம:
ஓம் ஜக³ன்மங்கள³ தா³யகாய நம:
ஓம் யஜ்ஞரூபாய நம:
ஓம் யஜ்ஞபோ⁴க்த்ரே நம:
ஓம் சின்மயாய நம:
ஓம் பரமேஶ்வராய நம: (1௦௦)

ஓம் பரமார்த²ப்ரதா³யகாய நம:
ஓம் ஶான்தாய நம:
ஓம் ஶ்ரீமதே நம:
ஓம் தோ³ர்த³ண்ட³ விக்ரமாய நம:
ஓம் பராத்பராய நம:
ஓம் பரஸ்மை ப்³ரஹ்மணே நம:
ஓம் ஶ்ரீவிப⁴வே நம:
ஓம் ஜக³தீ³ஶ்வராய நம: (1௦8)

இதி ஶ்ரீவேங்கடேஶ்வராஷ்டோத்தர ஶதனாமாவளி: ஸம்பூர்ண:

———

ஸ்ரீ வேங்கடேஶ அஷ்டோத்தர சத நாமாவளி

ஒவ்வொரு திருநாமத்திலும் ஸ்ரீ வேங்கடேசாய நம சேர்த்தே சொல்ல வேண்டுமாம்

ஓம் ஓங்கார பரமார்த்தாய நம:  ஓம் நர நாராயணாத்மகாய நம:  ஓம் மோக்ஷலக்ஷ்மீ ப்ராணகாந்தாய நம:  ஓம் வேங்கடாஶல நாயகாய நம: ஓம் கருணாபூர்ண ஹ்ருதயாய நம: ஓம் டேங்காரஜப ஸௌக்யதாய நம:  ஓம் ஶாஸ்த்ர ப்ரமாண கம்யாய நம:  ஓம் யமாத்யஷ்டாங்க கோசராய நம:  ஓம் பக்தலோகைக வரதாய நம: ஓம் வரேண்யாய நம: 10

ஓம் பயநாஶநாய நம:  ஓம் யஜமாந ஸ்வரூபாய நம:  ஓம் ஹஸ்தந்யஸ்த  ஸுதர்ஶநாய நம:  ஓம் ரமாவதார மங்கேஶாய நம: ஓம் ணாகாரஜவ ஸுப்ரியாய நம: ஓம் யஜ்ஞேஶாய நம:  ஓம் கதிதாத்ரே நம:  ஓம் ஜகதீவல்லபாய நம:  ஓம் வராய நம: ஓம் ரக்ஷஸ்ஸந்தோஹ ஸம்ஹர்த்ரே நம: 20

ஓம் வர்சஸ்விநே நம:  ஓம் ரகுபுங்கவாய நம:  ஓம் தாநதர்மபராய நம:  ஓம் யாஜிநே நம: ஓம் கநஶ்யாமள நம: ஓம் ஹராதி ஸர்வதேவேட்யாய நம:  ஓம் ராமாய நம:  ஓம் யதுகுலாக்ரணயே நம:  ஓம் ஸ்ரீநிவாஸாய நம: ஓம் மஹாத்மநே நம: 30

ஓம் தேஜஸ்விநே நம:  ஓம் தத்வஸந்நிதயே நம:  ஓம் த்வமர்த்த லக்ஷ்ய ரூபாய  நம:  ஓம் ரூபவதே நம: ஓம் பாவநாய நம: ஓம் யஶஸே நம:  ஓம் ஸர்வேஶாய நம:  ஓம் கமலாகாந்தாய நம:  ஓம் லக்ஷ்மீ ஸல்லாப ஸம்முகாய நம: ஓம் சதுர்முக ப்ரதிஷ்டாத்ரே நம: 40

ஓம் ராஜராஜ வரப்ரதாய நம:  ஓம் சதுர்வேத ஶிரோரத்நாய நம:  ஓம் ரமணாய நம:  ஓம் நித்யவைபவாய நம: ஓம் தாஸவர்க்க பரித்ராத்ரே நம: ஓம் நாரதாதி முநிஸ்துத்யாய நம:  ஓம் யாதவாசலவாஸிநே நம:  ஓம் கித்யத் பக்தார்தி பஞ்ஜநாய நம:  ஓம் லக்ஷ்மீப்ரஸாதகாய நம: ஓம் விஷ்ணவே நம: 50

ஓம் தேவேஶாய நம:  ஓம் ரம்ய விக்ரஹாய நம:  ஓம் மாதவாய நம:  ஓம் லோகநாதாய நம: ஓம் லாலிதாகில ஸேவகாய நம: ஓம் யக்ஷகந்தர்வ வரதாய நம:  ஓம் குமாராய நம:  ஓம் மாத்ருகார்ச்சிதாய நம:  ஓம் ரட்த்பாலக போஷிணே நம: ஓம் ஶேஷஶைல க்ருதஸ்தலாய நம: 60

ஓம் ஷாட்குண்ய பரிபூர்ணாய நம:  ஓம் த்வைததோஷ நிவாரணாய நம:  ஓம் திர்யக்ஜந்த் வர்ச்சிதாங்க்ரயே நம:  ஓம் நேத்ராநந்த கரோத்ஸவாய நம: ஓம் த்வாதஶோத்தம லீலாய நம: ஓம் தரித்ரஜந ரக்ஷகாய நம:  ஓம் ஶத்ரு க்ருத்யாதி பீதிக்நாய நம:  ஓம் புஜங்கஸயந ப்ரியாய நம:  ஓம் ஜாக்ரதே நம: ஓம் ரஹஸ்யாவாஸாய நம: 70

ஓம் ஶிஷ்டபரிபாலகாய நம:  ஓம் வரேண்யாய நம:  ஓம் பூர்ணபோதாய நம:  ஓம் ஜந்ம ஸம்ஸார பேஷஜாய நம: ஓம் கார்த்திகேய வபுர்த்தாரிணே நம: ஓம் யதிஶேகர பாவிதாய நம:  ஓம் நரகாதி பயத்வம்ஸிநே நம:  ஓம் ரதோத்ஸவ கலாதராய நம:  ஓம் லோகார்ச்சா முக்யமூர்த்தயே நம: ஓம் கேஶவாத் யவதாரவதே நம: 80

ஓம் ஶாஸ்த்ர ஶ்ருதாநந்த லீலாய நம:  ஓம் யமஶிக்ஷா நிபர்ஹணாய நம:  ஓம் மாநஸம்ரக்ஷண பராய நம:  ஓம் இரிணாங்குர தாந்யதாய நம: ஓம் நேத்ரஹீநாக்ஷிதாயிநே நம: ஓம் மதிஹீந மதிப்ரதாய நம:  ஓம் ஹிரண்யதாந க்ராஹிணே நம:  ஓம் மோஹஜால நிக்ருந்தநாய நம:  ஓம் ததிலாஜாக்ஷதார்ச்யாய நம: ஓம் யாதுதாந  விநாஶநாய நம: 90

ஓம் யஜுர்வேத ஶிகாகம்யாய நம:  ஓம் வேங்கடாய நம:  ஓம் தக்ஷிணாஸ்திதாய நம:  ஓம் ஸாரபுஷ்கரிணிதீராய நம: ஓம் ராத்ரௌ தேவகணார்ச்சிதாய நம: ஓம் யத்நவத் பலஸந்த்தாத்ரே நம:  ஓம் ஸ்ரீம்ஜபாத் தநவ்ருத்திக்ருதயாய நம:  ஓம் க்லீம்காரஜாபி காம்யார்த்த ப்ரதாந ஸதயாந்தராய நம:  ஓம் ஸ்வஸர்வசித்தி ஸந்தாக்ரே நம: ஓம் நமஸ்கர்த்து ரபீஷ்டதாய நம: 100

ஓம் மோஹிதாகில லோகாய நம:  ஓம் நாநாரூப வ்யவஸ்திதாய நம:  ஓம் ராஜீவலோசநாய நம:  ஓம் யஜ்ஞவராஹாய நம: ஓம் கணவேங்கடாய நம: ஓம் தேஜோராஶீக்ஷணாய நம:  ஓம் ஸ்வாமிநே நம:  ஓம் ஹார்தா வித்யா நிவாரணாய நம:  108

ஸ்ரீ வேங்கடேஶ அஷ்டோத்தர சத நாமாவளி சமாப்தம்:

ஸ்ரீ வேங்கடேஶ அஷ்டோத்தரம்

ஸித்தா ஊசு:

பகவந் வேங்கடேஶஸ்ய நாம்நாமஷ்டோத்தரம் ஶதம்

அநுப்ரூஹி தயாஸிந்தோ க்ஷிப்ரஸித்திப்ரதம் ந்ருணாம்                                 1

நாரத உவாச:

ஸாவதாநேந மநஸா ஶ்ருண்வந்து ததிதம் ஶுபம்

ஜப்தம் வைகாநஶை: பூர்வம் ஸர்வ ஸௌபாக்ய வர்த்தநம்                            2

ஓங்கார பரமார்த்தஶ்ச நரநாராயணாத்மக:

மோக்ஷலக்ஷ்மீ ப்ராணகாந்தோ வேங்கடாசல நாயக:                                        3

கருணாபூர்ண ஹ்ருதய: டேங்காரஜப ஸௌக்யத:

ஶாஸ்த்ர ப்ரமாண கம்யஶ்ச யமாத்யஷ்டாங்க கோசர:                                               4

பக்த லோகைக வரதோ வரேண்யோ பயநாஶந:

யஜமாந ஸ்வரூபஶ்ச ஹஸ்தந்யஸ்த ஸுதர்ஶந:                                     5

ரமாவதார மங்கேஶோ ணாகாரஜப ஸுப்ரிய:

யஜ்ஞேஶோ கதிதாதா ச ஜகதீவல்லபோ வர:                                                        6

ரக்ஷஸ்ஸந்தோஹ ஸம்ஹர்தா வர்சஸ்வீ ரகுபுங்கவ:

தாந தர்மபரோ யாஜீ கநஶ்யாமள விக்ரஹ:                                                          7

ஹராதிஸர்வதேவேட்யோ ராமோ யதுகுலாக்ரணீ

ஸ்ரீநிவாஸோ மஹாத்ம ச தேஜஸ்வீ தத்வஸந்நிதி:                                              8

த்வமர்த்த லக்ஷ்யரூபஶ்ச ரூபவாந் பாவநோ யஶ:

ஸர்வேஶ: கமலாகாந்தோ லக்ஷ்மீஸல்லாப ஸம்முக:                                         9

சதுர்முக ப்ரதிஷ்ட்டாதா ராஜராஜ வரப்ரத:

சதுர்வேத ஶிரோரத்னம் ரமணோ நித்யவைபவ:                                                            10

தாஸவர்க பரித்ராதா நாரதாதி முநிஸ்துத:

யாதவாசலவாஸீ ச கித்யத் பக்தார்தி பஞ்ஜந:                                                      11

லக்ஷ்மீப்ரஸாதகோ விஷ்ணு: தேவேஶோ ரம்யவிக்ரஹ:

மாதவோ லோகநாதஶ்ச லாலி தாகில ஸேவக:                                                    12

யக்ஷகந்தர்வ வரத: குமாரோ மாத்ருகார்சித:

ரடத்பாலக போஷீ ச ஶேஷஶைல க்ருத ஸ்த்தல:                                     13

ஷாட்குண்ய பரிபூர்ணஶ்ச த்வைத தோஷ நிவாரண:

திர்யக்ஜந்த்வர் சிதாங்க்ரிஶ்ச நேத்ராநந்த கரோத்ஸவ:                                              14

த்வாதஶோத்தம லீலஶ்ச தரித்ர ஜநரக்ஷக:

ஶத்ருக்ருத்யாதி பீதிக்நோ புஜங்க ஶயநப்ரிய:                                                    15

ஜாக்ரத் ரஹஸ்யாவாஸஶ்ச ய்: ஶிஷ்ட பரிபாலக:

வரேண்ய: பூர்ணபோதஶ்ச ஜந்ம ஸம்ஸார பேஷஜம்                                         16

கார்த்திகேய வபுர்தாரீ யதிஶேகர பாவித:

நரகாதி பயத்வம்ஸீ ரதோத்ஸவ கலாதர:                                                               17

லோகார்சா முக்யமூர்திஶ்ச கேஶவாத்ய வதாரதாந்

ஶாஸ்த்ர ஶ்ருதாநந்த லீலோ யமஶிக்ஷா நிபர்ஹண:                                        18

மாநஶம்ரக்ஷணபர: இரிணாங்குர தாந்யத:

நேத்ரஹீநாக்ஷிதாயீ ச மதிஹீந மதிதப்ரத:                                                             19

ஹிரண்யதாந க்ராஹீச மோஹஜால நிக்ருந்தந:

ததிலாஜா க்ஷதார்ச்யஶ்ச யாதுதாந விநாஶந:                                                     20

யஜுர்வேத ஶிகா கம்யோ வேங்கடோ தக்ஷிணாஸ்த்தித:

ஸார புஷ்கரிணீ தீரோ ராத்ரௌ தேவகணார்ச்சித:                                           21

யத்நவத் பல ஸந்தாதா ஸ்ரீம்ஜபாத் தநவ்ருத்திக்ருத்

க்லீங்கார ஜாபீ காம்யார்த்த ப்ரதாந ஸதயாந்த்ர:                                                           22

ஸ்வ ஸர்வஸித்தி ஸந்தாதா நமஸ்கர்து ரபீஷ்டத:

மோஹிதாகில லோகஶ்ச நாநாரூப வ்யவஸ்த்தித:                                            23

ராஜீவ லோசநோ யஜ்ஞ வராஹோ கணவேங்கட:

தேஜோ ராஶீக்ஷணஸ் ஸ்வாமி ஹார்தாவித்யா நிவாரண:                              24

இதி ஸ்ரீவேங்கடேஶஸ்ய நாம்நா மஷ்டோத்தரம் ஶதம்

ப்ராத: ப்ராதஸ் ஸமுத்தாய ய: படேத் பக்திமாந் நர:                                           25

ஸர்வேஷ்டார்த்தா நவாப்னோதி வேங்கடேஶ ப்ரஸாதத:                                26

ஸ்ரீவேங்கடேஶ அஷ்டோத்தரம் ஸம்பூர்ணம்

—————

வ்ருஷசைலாதிப ஏவ தைவதம் ந

வ்ருஷபாத்ரீச்வர ஏவ தைவதம் ந
பணி சைலாதிப ஏவ தைவதம் ந

பகவான் வேங்கட ஏவ தைவதம் ந————————–11-

—————————————————-

வ்ருஷசைலம் -என்பதும்
வ்ருஷபாத்ரி -என்பதும்
பணி சைலம் -என்பதும்
பர்யாய நாமங்கள் ஆதலால்
எல்லாவற்றாலும்
திருமலை அப்பனே அடியேன் தொழும் தெய்வம்
என்றது ஆயிற்று

—————————————————————————————————————————————————————

ஸ்ரீ ஸ்ரீ நிவாச பர தைவதம் ந
ஸ்ரீ ஸ்ரீ நிவாச பரமம் தனம் ந
ஸ்ரீ ஸ்ரீ நிவாச குல தைவதம் ந
ஸ்ரீ ஸ்ரீனிவாச பரமா கதிர் ந—12

ஸ்ரீ ஸ்ரீநிவாசன
நமக்கு பர தேவதையும்
பெரும் செல்வமும்
குல தேவதையும்
பரம கதியும்
ஆவான் -என்கிறார் ஆயிற்று-

—————-

ஆழ்வார் பாடல்களிலும், “வேங்கடத்தான், வேங்கடவன், வேங்கட வாணன், வேங்கடத்துள்ளான், வேங்கடத்து உறைவான், வேங்கடத்து நின்றான், வேங்கடமுடையான், வேங்கட நாடன், வேங்கடக் கோன், வேங்கட மேயோன், வேங்கடப் பொருப்பன், வேங்கட வெற்பன், வேங்கடாத்தரி, வேங்கட வேதியன், வேங்கடத்து ஆயன், வேங்கடத்து எந்தை, வேங்கடத்து அண்ணல், நீள் வேங்கடத்து எந்தை, திருமலையான், வட மாமலை உச்சி, நெடுவரை உச்சி மேலோன், நெடியோன்” என்ற பெயர்களே ஆளப் படுகின்றன. அந்த மலையும் கூட ஆழ்வார் பாடல்களில் வேங்கடம், வடமலை, திருமலை, அண்ணல் மலை என்றே அழைக்கப் படுகிறது.

வேங்கடத்து உறைவாருக்கு நம என்னலாம்

மூலவர் திருவேங்கடத்தான் பெரிய பெருமாள்
உத்சவர் -மலையப்பன் -மலை குனிய நின்றான்
உக்ர ஸ்ரீநிவாசன் -கௌசிக துவாதசி அன்று மட்டும் காலையில் 5-மணிக்கு புறப்பாடு -8 மணிக்குள் கர்ப்பக்ருஹத்துக்குத் திரும்பி விடுவாராம்
இவரே முன்பு உத்சவராக இருந்தாராம் -உக்ரத்தால் தீ விபத்துக்கள் வந்ததால் மலையப்பன் உத்சவர் செய்து வைத்தார்களாம்
சாந்தமான ஸ்வரூபம் ரூபம் இவருக்கு
போக ஸ்ரீநிவாசன் -சயன பேரர்

கொலு ஸ்ரீநிவாசன்

———-

வேங்கடாத்ரி சமம் ஸ்தானம் பிரம்மாண்டே நாஸ்தி கிஞ்சன;
வேங்கடேச ஸமோ தேவோ ந பூதோ ந பவிஷ்யதி.

ச்ரிய: காந்தாய கல்யாண நிதயே நித யேர்த்தி நாம்

ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்                                        1

லக்ஷ்மீஸ விப்ரமாலோக ஸுப்ரு விப்ரம சக்ஷுஷே

சக்ஷு ஷே ஸர்வலோகாநாம் வேங்கடேசாய மங்களம்             2

ஸ்ரீவேங்கடாத்ரி  ச்ருங்காக்ர மங்களா பரணாங்க்ரியே

மங்களாநாம் நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்                                   3

ஸர்வாவயவ ஸௌந்தர்ய ஸம்பதா சர்வசேதஸாம்

ஸதா ஸம்மோஹ நாயாஸ்து வேங்கடேசாய மங்களம்             4

நித்யாய நிரவத்யாய ஸத்யா நந்தசிதாத்மநே

ஸர்வாந்த ராத்மநே ஸ்ரீமத் வேங்கடேசாய மங்களம்                              5

ஸ்வதஸ் ஸர்வவிதே ஸர்வசக்தயே ஸர்வசேஷிணே

ஸுலபாய ஸுசீலாய வேங்கடேசாய மங்களம்                                        6

ப்ரஸ்மை ப்ரஹ்மணே பூர்ணகாமாய பரமாத்மநே

ப்ரயுஞ்ஜே பரதத்வாய வேங்கடேசாய மங்களம்                                      7

ஆகாரதத்வ மச்ராந்த மாத்ம நாம நுபச்யதாம்

அத்ருப்த்யம்ருத ரூபாய வேங்கடேசாய மங்கலம்                                   8

ப்ராயஸ் ஸ்வ சரணௌ பும்ஸாம் சரண்யத்வேந பாணிநா

க்ருபாய திசதே ஸ்ரீமத் வேங்கடேசாய மங்களம்                                       9

தயாம்ருத்தரங்கிண்யாஸ் தரங்கைரிவ சீதலை:

அபாங்கை ஸிஞ்சதே விச்வம் வேங்கடேசாய மங்களம்                        10

ஸ்ரக்பூஷாம்பர ஹேதீதாம் ஸுஷமாவஹ மூர்த்தயே

ஸர்வார்த்தி ஸமநாயாஸ்து வேங்கடேசாய மங்களம்                            11

ஸ்ரீவைகுண்ட விரக்தாய ஸ்வாமி புஷ்கரிணீ தடே

ரமயா ரமமாணாய வேங்கடேசாய மங்களம்                                            12

ஸ்ரீமத் ஸுந்தரஜாமாத்ரு முநிமா நஸவாஸிநே

ஸர்வலோகநிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்                                       13

மங்களாசாஸ நபரைர் மதாசார்ய புரோகமை:

ஸர்வைச்ச பூர்வை ராசார்யைஸ் ஸத்க்ருதாயாஸ்து மங்களம்          14

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருமாலை (என்னும் திவ்ய ப்ரபந்தம்) அறியாதார், ஸ்ரீ திருமாலையே (ஸ்ரீ யபதியை ) அறியாதார்—35-37-

October 8, 2024

திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும்,  தொண்டரடிப்பொடிஆழ்வார்   எழுதிய  திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும்.

முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார்,  அடுத்த  பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லிய நழுவியபோது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின்” என்று எளிமையான கண்ணனையும், “உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான்” என்று சொல்லி நம்மை திருவரங்கனிடம் அழைத்து செல்கிறார்.

அப்படியும் மக்கள் எல்லோரும் எம்பெருமான் பக்கம் செல்லாமையால், ஆழ்வார் அவர்களை விட்டுவிட்டு, எம்பெருமான் திருவரங்கனாக, தனக்குச் செய்த மிகப் பெரிய உதவிகளை அடுத்த பத்து பாசுரங்களில் விவரிக்கிறார். எம்பெருமான், பரமாத்மாவில் உள்ள சந்தேகங்களை ஆழ்வாருக்கு தீர்த்து, அவரின் நெஞ்சில் வந்து புகுந்து, தனது கடினமான நெஞ்சத்தை கரைத்து, அவனது சேவையையும் அருளையும் கொடுத்து, பலகாலங்களாக சேவிக்காத இழப்பை சரி செய்து, கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக வைத்து, நான்கு திசைகளை படைத்து, அவற்றில் தன்னுடைய அங்கங்களை வைத்து, அவற்றைக் கொண்டு நாம் உய்வதற்கு வழிசெய்து கொடுத்து, அவனின் திரு அவயவங்களின் அழகும், தேஜஸும், அடியவர்களுக்காகவே என்று மகிழ வைத்து, அவனிடம் மஹாவிஸ்வாசம் இல்லாததால், இத்தனை நாள் இழந்த பகவதனுபவத்தை எண்ணி கலங்கி, நாம் சிரமப்பட்டு புதிதாகக் கண்டு பிடித்து எம்பெருமானின் பெருமைகளைப் பேச வேண்டியது இல்லை என்று அவரை பாட வைத்து, அவன் அழகினை திருவரங்கத்தில் காண்பித்து, அதனை மறந்து ஆழ்வாரை வாழமுடியாதபடி செய்து, சரணாகதிக்கு தேவையான தகுதி ஒன்றும் தனக்கு இல்லை என்று ஆழ்வாரை உணரச் செய்து, அதற்கு அவரை தயார் செய்த உதவிகளை சொல்கிறார்.

எம்பெருமான் தனக்கு கொடுத்த அனுபவத்தை சொல்வது (1-3), தன்னுடைய அனுபவத்தை கொண்டு உபதேசம் செய்வது (4-14), மற்றும் எம்பெருமான் தனக்கு செய்த நன்மைகளை நினைத்துக் கொள்ளுதல்(15-24) என்ற முதல் மூன்று உட்பிரிவுகளை பார்த்த பின் தன்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை என்று ஒரு ஐந்து பாடல்களிலும், எல்லா கெட்ட குணங்களும் உள்ளன என்று அடுத்த ஐந்து பாடல்களிலும் ஆழ்வார் சொல்லும் 25 முதல் 34 வரை உள்ள பத்து பாசுரங்கள் கொண்ட ஆழ்வாரின் நைச்சானுசந்தானம் என்ற இந்த நான்காவது பகுதியை அனுபவித்தோம்.

ஒரு நல்ல குணமும் இல்லை என்ற தலைப்பில் 25 முதல் 29 வரை உள்ள பாடல்கள்:

  • 25வது பாடலில்  (குளித்து மூன்று அனலை) ஆழ்வார் தனக்கு கர்ம, ஞான, பக்தி யோகங்கள் செய்வதற்கான தகுதி இல்லை என்றும் தகுதி முதல் எல்லாவற்றையும் அருள வேண்டும் என வேண்டுகிறார்.
  • அர்ச்சனை, துதி போன்றவற்றையும் தான் செய்வதில்லை என்று ஆழ்வார் சொல்வதாக அமைந்த போதெல்லாம் போது கொண்டு ( 26) பாசுரம்.
  • இராமாயண காலத்தில் குரங்குகளும், அணில்களும், நல்ல நெஞ்சத்தோடு செய்த கைங்கர்யம் போல் தான் எந்த கைங்கர்யமும் செய்தது இல்லை என்று குரங்குகள் மலையை நூக்க (27) வது பாசுரத்தில் சொல்கிறார்.
  • உம்பரால் அறியலாகா (28) என்ற பாடலில், எம்பெருமான் தன்னை காத்தருள வேண்டும் என்று கதறிய யானையின் சிந்தனையும் தனக்கு இல்லை என்று ஆழ்வார் வருந்துகிறார்.
  • ஊரிலேன் காணியில்லை (29) பாசுரத்தில், எம்பெருமான் உகந்து அருளின திவ்ய தேசங்களுடனும் தனக்கு சம்பந்தங்கள் இல்லை என்று ஆழ்வார் மறுக்கிறார்.

அடுத்த ஐந்து பாடல்களில், தன்னிடம் எல்லாவிதமான தீமைகளும் உண்டு அல்லது எல்லா கெட்ட குணங்களும் உண்டு என்று சொல்வதை பார்த்தோம்.

  • தன்னிடத்தில் இல்லாத தீமை, உலகத்திலேயே இல்லை என்றும், மற்றவர்கள் ஏற்றம் பெறுவதை பொறுக்காத தீயகுணம் தன்னிடம் உள்ளது என்றும் சொல்வது மனத்திலோர் தூய்மையில்லை (30) என்ற பாடல்.
  • தான், தவம் செய்பவர்கள் கூட்டத்திலும், அடியவர்களுக்கு நல்லது செய்ய பொருள் சேர்ப்பவர்களின் கூட்டத்திலும் இல்லை, தன்னால் சொந்தங்களுக்கு ஒரு பயனும் இல்லை, கூடி இருந்த பெண்களுக்கும் கள்வனாக மாறி தன்னுடைய இந்த பிறவி வீணானதை நினைத்து தவத்துளார் தம்மில் அல்லேன் என்ற 31வது பாடலில் வருந்துகிறார்.
  • எம்பெருமானை அடைவதற்கு ஒரு வழியும் அறியாதவனாய், மனிதரில் கள்வனாய், மனதிற்கு பிடித்தவற்றை விட முடியாதவனாக, மூடனாக, எம்பெருமான் முன் வந்து நின்றதை ஆழ்வார் ஆர்த்து வண்டு அலம்பும் சோலை என்ற 32வது பாடலில் தன்னுடைய மூடத்தனம் சொல்கிறார்.
  • தம்முடைய தாழ்வுகளைச் சொல்லி தனக்கு போக்கிடம் வேறு எதுவும் இல்லை என்று கதறி எம்பெருமானின் கருணையின் மேல் உள்ள ஆசையினால், அவன் முன் வந்ததாக ஆழ்வார் மெய் எல்லாம் போக விட்டு என்ற 33வது பாடலில் சொல்கிறார்.
  • உள்ளத்தே உறையும் மாலை என்ற 34 வது பாடலில், எம்பெருமானுக்கு அடிமை செய்பவன் போல வேஷங்களைப் போட்டு, அவன் எல்லோருடைய நெஞ்சத்தில் இருந்து, எல்லா நினைவுகளையும் அறிகின்றான் என்ற அவனது குணத்தை புகழும்போது, தன்னுடைய கள்ளவேஷம் கலைந்ததே என்று வெட்கமடைந்து தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டதை சொல்கிறார்.

இனி திருமாலையின் அடுத்த பகுதி.

இப்படி ஆழ்வார் தன்னை விட்டு விலகுவதை அறிந்த எம்பெருமான், ஆழ்வாரை தம்மிடமே இருக்க செய்ய, தான் எல்லோருக்கும் அவர்கள் கேட்காமலே செய்த நன்மைகளை விளக்கும் பகுதி.

இனி, இந்த பகுதியில் உள்ள முதல் பாசுரத்தைப் பார்ப்போம்.

தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்ட எந்தாய், சேவியேன் உன்னை அல்லால், சிக்கென செங்கண் மாலே ! ஆவியே ! அமுதே ! எந்தன் ஆருயிர் அனைய எந்தாய் ! பாவியேன் உன்னை அல்லால் பாவியேன் பாவியேனே (35)

ஆழ்வார் எம்பெருமானை விட்டு விலகுவதை உணர்ந்த எம்பெருமான், அவர் ஏன் விலகுகிறார் என்று வினவ, ஆழ்வார், எல்லாம் அறிந்த எம்பெருமான் முன் பொய்களை சொல்லி அணுகினதாகவும் அதனால் அவனுக்கு சிறுமை என்று முடிவு செய்து, பற்பல ஜென்மங்களாக, ஆழ்வாரைப் பற்றி ஒன்றும் அறியாத சாதாரண மக்களுடன் சேர்ந்து இருப்பதற்கு செல்வதாக பதில் உரைக்கிறார். எம்பெருமான், இந்த பாடலில், தாம் அடியவர்களின் எந்த குறையும் பார்ப்பதில்லை என்றும், சாதாரண மக்கள் எல்லா குறைகளையும் ஒன்று விடாமல் பார்ப்பார்கள் என்றும், தாம் அடியவர்களின் எல்லா குணங்களையும் ஒன்று விடாமல் கவனித்து கருத்தில் கொள்வதாகவும் கூறி, அவனை அணுகுவதே சரியானது என்கிறார். அதற்கு ஆழ்வார், அப்படி செய்ததற்கு ஏதாவது சரித்திரம் உண்டா என்று வினவ, த்ரிவிக்ரமனாக, மூவுலங்களையும் அளந்து, எல்லாருடைய தலைகளிலும் தன்னுடைய திருவடிகளை சாத்தி, அருள் செய்து, எல்லை இல்லாத நீர்மையை (எளிமையை) காட்டியதைச் சொல்லி, ஆழ்வார் இல்லாவிட்டால், தன்னால் இருக்க முடியாது என்று உரைக்கிறார்.

சென்ற பாசுரத்தில் சொன்னது போல், இந்த பாட்டும் நம்மாழ்வாரின், வளவெழு உலகின் என்ற திருவாய்மொழி முதல் பத்து, ஐந்தாம் பதிகத்தில் சொன்னதை நினைவு படுத்தும். நம்மாழ்வார் முதல் பத்து முதல் நான்கு பதிகங்களில் நிறைய செய்தும் எம்பெருமான் மனம் இரங்கவில்லை, அதற்கு ஆழ்வார் தன்னுடைய குற்றங்களே காரணம் என்று எண்ணி விலகப்பார்த்தார். இந்த பதிகத்தில் மூன்றாம் பாட்டில் “திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன்“என்று த்ரிவிக்ரம அவதாரத்தை காட்டி, தன் பால் மனம் வைக்கத் திருத்தி (திருவாய்மொழி, 1.5.10) அவரை விலகாமல் அவருடனே இருக்கும்படி செய்கிறார்.   இங்கும் அதே போல், தொண்டரடி பொடி ஆழ்வாருக்கும் த்ரிவிக்ரம அவதாரத்தை காட்டி அவரையும் அவனை விட்டு விலகாமல் பார்த்து கொள்கிறார்.

அதே போல், திருவாய்மொழி (7.10.10) என்ற பாசுரத்தில், ஆழ்வார், “சிந்தை மற்றொன்றின் திறத்தது அல்லாத் தன்மை தேவ பிரான் அறியும், சிந்தையினால் செய்வ தான் அறியாதன மாயங்கள் ஒன்றுமில்லை“என்று சொல்வதில் “தன் சிந்தையில் அவனை தவிர வேறு ஒன்றும் இல்லை என்பதை தேவபிரான் அறிவான் என்றும், சிந்தையினால் செய்யப்படுவனவற்றுள் அவன் அறியாதன ஒன்றும் இல்லையே” என்றும் சொல்வது தொண்டரடிப்பொடி ஆழ்வார் விலவர சிரித்திட்டேனே என்று சொல்லும் போது சொல்வதுடன் ஒப்பிட்டு கொள்ளலாம். அங்கே நம்மாழ்வார் எம்பெருமானை தவிர வேறு ஒன்றும் தன் சிந்தையில் இல்லை என்றும் அதனை அவனே அறிவான் என்றும் சொல்வதும், இங்கே தொண்டரடிப்பொடி ஆழ்வார், தன் சிந்தையில் அவனை தவிர மற்ற விஷயங்களே உள்ளன என்றும் அதனை அவரே அறிவார் என்றும் சொல்வதும் நினைவில் கொள்ளத்தக்கது.

“மஹாபலி எல்லா உலகங்களையும் அபகரித்த போது, எல்லா உலகங்களையும் கடந்து, எல்லாருடைய தலைகளிலும் தன்னுடைய திருவடி படும்படி வியாபித்த, என் ஸ்வாமியே, உன்னைத் தவிர, வேறு ஒரு பொருளையும் சேவிக்க மாட்டேன், சிவந்த திருக்கண்களை உடையவனே, அடியவர்களின் பக்கம் இருப்பவனே, எனக்கு உயிர் போன்றவனே, அமிர்தம் போன்றவேனே, என்னுடைய அருமருந்து போன்ற உயிர்க்கு அந்தராத்மாவாக இருக்கும் என் ஸ்வாமியே, பாவியாகிய நான், உன்னைத் தவிர, பிறரை நினைக்க மாட்டேன், நான் மிக்க பாவத்தை செய்தவனே’ என்று ஆழ்வார் சொல்வது இந்த பாடலின் பொழிப்புரை.

தாவி

முன்கூட்டியே அறிவித்துவிட்டால், பல காலங்களாக மனதில் உள்ள அகங்காரம் உள்ள சம்சாரிகள், அவன் திருவடிகளை தங்கள் தலைமீது வைக்க மறுத்து ஆணை இடுவார்கள். எப்படி திருவாய்மொழியில் (10.10.2) நம்மாழ்வார், அவன் மறுக்க முடியாதபடி, “திருவாணை, நின் ஆணை ” என்று சொன்னபடி அடியவர்கள், அவன் மறுக்க முடியாதபடி திருவடிகளை தலையில் ஏந்தி கொள்வார்களோ, அதே போல் இவர்கள் இவனது திருவடிகளை ஏற்க மறுப்பார்கள் என்று எம்பெருமான் யாரும் அறியாதபடி, யாருக்கும் களைப்பு ஏற்படாதபடி எல்லோர் தலைகளிலும் தன் திருவடி தீண்டும்படி தாவி வளர்ந்தான் என்கிறார்.

அன்று

க்ருத யுகத்தில் மஹாபலியால் மூன்று உலகங்களும் அபகரிக்கப்பட்டு, எம்பெருமானுடைய சேஷித்வமும், மக்களுடைய சேஷத்வமும் அழிந்து கிடந்த அன்று என்கிறார்.

உலகமெல்லாம்

மஹாபலியால் கவரப்பட்ட மூன்று உலகங்களை அளந்தது மட்டும் இல்லாமல், பிரம்மாவின் சத்ய லோகம் வரையில் உள்ள ஏழு உலகங்களையும் அளந்து, எல்லாவற்றிலும் உள்ள எல்லா ஜீவராசிகள் மீதும், உயர்ந்தவர்(வசிஷ்டர்), தாழ்ந்தவர் (சண்டாளர்கள்) என்ற பேதமில்லாமல், தன்னுடைய திருவடிகள் தீண்டும்படி வளர்ந்ததை காட்டுகிறார்.

தலைவிளாகக் கொண்ட

ஸஹஸ்ர ஸீர்ஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ : ஸஹஸ்ரபாத் , ஸ பூமிம், விஸ்வதோ வ்ருத்வா , அத்யதிஷ்டத் தசாங்குலம் (புருஷஸூக்தம் 1) என்றதன் படி, புருஷன் எனப்படும் நாராயணன், கணக்கற்ற தலைகளையும், அளவற்ற கண்களையும், அனந்தமான கால்களையும் உடையவர், அவர் பூமியை எல்லாப்புறமும் சூழ்ந்து, அதற்கு மேலும் எல்லையற்ற தூரம் வியாபிக்கிறார் என்று பொருள் ஆகும். அதனால், பூமியையும் மற்றும் நித்ய விபூதியான மேல் உலகங்களையும் வியாபிக்கிறார் என்று பொருள் வருவது போல், தலைவிளாக்கொண்ட என்பது, அளக்க வேண்டியதற்கு மேலே அளந்ததை காட்டுகிறது. அதே போல், காக்க வேண்டிய (ரக்ஷிக்க வேண்டிய) பொருட்களின் அளவினை விட எம்பெருமானின் காக்க வேண்டிய ஆசை (பாரிப்பு) மிக அதிகமா இருப்பதை காட்டுகிறது.

எந்தாய்

திருமங்கையாழ்வார், திருகுறுந்தாண்டகம், பாடல் 6ல் “அமரர் சென்னி பூவினை‘ என்று சொன்னபடி, நித்யஸூரிகள் தங்கள் தலையினால் தாங்கும் எம்பெருமானின் திருவடிகளை, அவற்றில் ஈடுபாடற்ற சம்சாரிகள் தலைகளிலும் எம்பெருமான் வைப்பதற்கு என்ன காரணம் என்றால், அது எம்பெருமானனுக்கு ஜீவாத்மாக்களுடன் உடன் உள்ள, விட முடியாத உறவே என்று சொல்வது கவனிக்கத்தக்கது. நம் சம்பிரதாயத்தில் நவவித சம்பந்தம் என்று பரமாத்மாவிற்கும் ஜீவாத்மாவிற்கும் உள்ள ஒன்பது விதமான சம்பந்தங்களை கூறுவார்கள்.

எம்பெருமானுடன் இருந்த இந்த உறவு, அன்று தெரியாமல் இருந்த குறை தீர, இப்போது, அவ்வுறவை அறிந்தபின்னர், ஆழ்வார் என்தந்தை என்று சொல்லாமல் எந்தாய் என்று சொல்லி, தன்னுடைய நன்றி கடனை செலுத்துகிறார். அன்று எம்பெருமான் தன் திருவடிகளால் தடவி காத்ததினால், அவனுடைய அந்த முயற்சியால் தான், இப்பொழுது திருந்தியது என்று உணர்ந்து எந்தாய் என்று அழைக்கிறார். திருப்பாவை 24ம் பாட்டில், “அன்று இவ் உலகம் அளந்தாய் அடிபோற்றி, சென்று அங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி, பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி, கன்று குணிலாய் வெறிந்தாய் கழல் போற்றி, குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி, வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி, என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான், இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.” என்று சொல்வதை இங்கே நினைவில் கொள்ளலாம். அன்று என்று அங்கு சொன்னது, முன்னொரு யுகத்தில், காலத்தில், என்று ஒவ்வொரு நிகழ்ச்சியையும் நினைவு கூர்ந்து, இன்று வந்ததை குறிப்பிடுகிறார்.

தாய் தன்னுடைய குழந்தையை கட்டி கொண்டு உறங்குவது போல், எம்பெருமான், எல்லோருடைய தலைகளையும், தான் பெற்ற பேறாக கருதி, தீண்டினான். சம்சாரிகள் இன்றும் அவனுடனான உறவை அறிந்து இருக்கவில்லை என்றாலும் அவர்களுக்கும் சேர்த்து ஆழ்வார் உகக்கிறார்.

சேவியேன் உன்னை அல்லால்

ஆழ்வார், இப்பொழுது எம்பெருமானின் எளிமையை அறிந்து, அவனை விட்டு அகன்று மற்றொன்றை பற்ற மாட்டேன் என்கிறார். எம்பெருமானை விட்டால், ஆழ்வார், தான், எவர் தயவும் இன்றி, சுதந்திரமாக இருக்க வேண்டும் (சுதந்திரன்), அல்லது இன்னொருவரை சார்ந்து அவருக்கு அடிமையாக இருக்க வேண்டும்(பாரதந்திரியன்), இந்த இரண்டு குறையும் தனக்கு வராது என்கிறார்.

திருமந்திரத்தின் முதல் பதத்தில், பாரதந்த்ரியம் எனப்படும் எவருக்கும் அடிமையாக இருப்பதை தவிர்ப்பதையும், இரண்டாவது பதத்தில், ஸ்வாதந்த்ரியம் எனப்படும், தனக்கு தானே ராஜாவாக இருக்கும் தன்மையை தவிர்ப்பதையும், ஆழ்வார் சேவியேன் உன்னை அல்லால் என்கிறார். எம்பெருமானை சேவிப்பது வழக்கம் ஆகிவிட்டதால், வெளிவிஷயங்களையும் சேவிக்க மாட்டேன் என்ற வார்த்தைகளையே உபயோகிக்கிறார்.

சிக்கென

மேலே சொன்ன விஷயம் எல்லா காலங்களிலும் இருக்கும், தன்னுடைய ஆத்மா உள்ளவரையிலும் இருக்கும், எப்பொழுதும் இருக்கும் என்பதை சிக்கென என்றதால் சொல்கிறார். நம்மாழ்வார் “உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கெனவே.” திருவாய்மொழி (2.6.1) சொல்வதை இங்கே நினைவில் கொள்ளலாம். அதே போல் தொண்டரடிப்பொடி ஆழ்வாரை இழந்து விடுவோமோ என்று கவலையுற்ற எம்பெருமானுக்கு ஆழ்வார் இந்த வார்த்தையால் உறுதி அளிக்கிறார்.

ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ, அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச: என்பது, பகவத் கீதையில், எம்பெருமான், ‘எல்லாவற்றையும் முழுமையாக விட்டுவிட்டு என்னை மட்டுமே கதியாக அடைவாய். நான் உன்னை எல்லா பாவங்களிலிருந்தும் விடுதலை செய்கிறேன். வருத்தம் வேண்டாம்’ என்று சரமச்லோகத்தில் ஜீவனை கவலைப்படாதே என்று சொன்ன எம்பெருமானுக்கு, இங்கே ஆழ்வார் அபயப்ரதானம் செய்கிறார்.

செங்கண்மாலே

இந்த வார்த்தைகள், எம்பெருமானுக்கு இயற்கையில் உள்ள சிவந்த திருக்கண்களை பற்றி சொல்வது அல்ல. ஆழ்வார் சிக்கென என்று சொன்னவுடன் எம்பெருமானின் திருக்கண்களில் பிறந்த ஒரு தனிச் சிவப்பினைக் குறிக்கிறது. சென்ற பாட்டில் (திருமாலை 34), ‘வெள்கிப் போய் ‘ என்றவுடன் கவலையுற்ற எம்பெருமான், இந்த பாட்டில், “‘சேவியேன் உன்னை அல்லால் சிக்கென “ என்று சொன்னதால் உண்டான பயம் தீர்ந்து, ஆழ்வாரின் மேல் உண்டான பெரும் காதல் உள் அடங்காமல் கண் வழியே புறப்பட்டு ஒளி வீசுவதை சொல்கிறார். செங்கண்மாலே என்பதால், பெருங்காதலால் இப்படி குதறி சிவந்த கண்களை உடையவனே என்று பொருள் கொள்ளலாம்.

கண்ணும் சிவந்து , பெரியவாய் வாயும் சிவந்து, (திருவாய்மொழி 8.8.1) என்ற பாடலிலும் ஸ்வாமி நம்மாழ்வார் கண்கள் சிவந்து என்று சொன்னது, எம்பெருமானது இயற்யான கண்ணழகை சொல்வது அன்று, ஆழ்வாரோடு சேர்ந்தபின் உண்டான பூரிப்பை சொல்கிறது.

இராமாயணம், யுத்த காண்டத்தில், விபீஷணன் இராவணனை பிரிந்து இராமனை தேடி வந்த போது, சுக்ரீவன், விபீஷணன் இராவணன் தம்பி என்பதால் அவனை கொல்ல வேண்டும் என்று சொன்னதும், பிறகு அனுமன் அவனை தங்களுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னதும் இங்கே மேற்கோள் காட்டப்படுகிறது.

“வத்யதாமேஷ தீவ்ரேண தண்டேந ஸசிவைஸ் ஸஹ, ராவணஸ்ய, ந்ருஶம்ஸஸ்ய ப்ராதா ஹ்யேஷ விபீஷண(யுத்த காண்டம், 17.29) என்பது, இந்த விபீஷணன் கொடூரமான ராவணனின் சகோதரன் என்பதால் அவனது மந்திரிகளுடன் சேர்ந்து தண்டனை கொடுத்துக் கொல்வோம் என்று சுக்ரீவன் ராமனிடம் சொன்னான். எம்பெருமானுக்கு ஆழ்வார் கூறிய ‘வெள்கி போய் ‘என்ற வார்த்தை, சுக்ரீவன் இராமனிடம் கூறிய வார்த்தைக்கு ஒப்புமை கூறி எம்பெருமான் திருவுள்ளம் பட்ட பாட்டை காண்பிக்கின்றது. பின்னர் இராமன் மற்றவர்கள் கருத்தினை கேட்ட போது, வாயுவின் புத்திரனான அனுமன் விபீஷணனை நம் சொந்த நபராக ஏற்றுக்கொள்ளலாம் (17.67) என்று சொன்ன வார்த்தைகள், வலிமை மிக்க இராமன் இதயத்தில் மிகவும் மகிழ்ச்சியடைய செய்து, தனது கருத்தைச் சொல்லத் தொடங்கினான் என்பது கீழ் வரும் ஸ்லோகத்தில் வருகிறது. அதராமःப்ரஸந்நாத்மா ஶ்ருத்வா வாயுஸுதஸ்ய ஹ, ப்ரத்ய பாஷத துர்த்தஷ ஶ்ருதவாநாத்ம நிஸ்திதம் (யுத்த காண்டம், 18.1). ராமாவதாரத்தில் அனுமன், ஸ்ரீராமனுக்கு வருந்தாதீர் என்று அபயம் அளித்ததாகவும், இங்கே தொண்டரடிப்பொடி ஆழ்வார் அர்ச்சாவதாரத்தில் உள்ள பெரியபெருமாளுக்கு அபயம் அளித்ததாகவும் உரையாசிரியர் சொல்கிறார். ஆழ்வார் சிக்கென என்று சொன்னபோது, எம்பெருமானுக்கு அவ்வாறே இருந்தது என்கிறார்.

செங்கண்மாலே, உன்னை அல்லால் சேவியேனே என்று சேர்த்து பார்த்தால், தன்னை பெற்றதால், பெரும் காதலால் முகம் மலரும்படி இருக்கும் எம்பெருமானத் தவிர வேறு எங்கு போவார் என்ற கருத்தை சொல்கிறது.

ஆவியே

தன்னுடைய உயிரை போன்று இருக்கும் எம்பெருமானை விட்டு எங்கே போவேன் என்கிறார் ஆழ்வார். ஆழ்வார் பிராணனை (உயிரினை), வாயுவின் ஒரு நிலையாக கருதவில்லை. திருவாய்மொழி (7.2.9) யில் சொன்னது போல், இந்த ஆழ்வார், ‘என் திருமகள் சேர் மார்வனே. என்னும் என்னுடைய ஆவியே என்னும்’ என்று ஸ்ரீமன் நாராயணனையே தன்னுடைய உயிராக நினைத்து இருப்பவர்.

அமுதே

ஆழ்வார் எம்பெருமானை வாழ்விற்கு தேவையான உயிர் போல் மட்டும் எண்ணாமல், மிகவும் இனிமையான தன்னுடைய உயிரினை சாவாமல் காக்கும் அருமருந்தமான அமுதம் என்று நினைக்கிறார்.

எந்தன் ஆருயிர் அனைய எந்தாய்

எம்பெருமான் தன்னுடைய ஆத்மாவாகவே இருக்கிறார் என்கிறார். ஆத்மாவான எம்பெருமானை விட்டு, வெறும் சரீரத்தை மட்டும் கொண்டு தான் வெளியில் வாழ முடியாது என்பது கருத்து.

அணுகத்தகாதவன் என்று எண்ணி எம்பெருமானை விட்டு அகல செல்ல நினைத்த ஆழ்வாரை, அகன்று, அழிந்து விடாதபடி, சேர்த்துக்கொண்ட சுவாமி என்பதை, இங்கே எந்தாய் என்பதால் தெரிவிக்கிறார்.

வாத்ஸல்யம் என்ற எம்பெருமானின் திருக்குணம் என்பது, குற்றம், குறைகளுடன் தம் அடியார்கள் இருந்த போதிலும் அவர்களை அப்படியே ஏற்றுக் கொள்வது, அதாவது, பிறந்த கன்றை, தாய்ப் பசு, அருவருப்பு இல்லாமல், ஆசையுடனும் பாசத்துடனும் நக்கிக் கொடுக்கும் அன்பையும் பாசத்தையும் போல எம்பெருமான் அடியவர்களிடம் அன்பையும் பாசத்தையும் பொழிபவர்.

இங்கே, எம்பெருமானின் வாத்ஸல்யம் அல்லது அடியவர்களிடம் பரிவு என்ற திருக்குணத்தை காட்டும் சிவந்த கண்களை உடைய செங்கண்மால் என்கிறார். ஆழ்வாருக்கு உயிராக இருப்பவனே, இத்துடன் மிக இனிமையான அமுதம் போன்றவனே, தனக்கு ஆத்மாவாக இருந்து அவரை நல்வழியில் நடத்தி செல்லும் ஆருயிர் அனைய எந்தாய் என்கிறார், இப்படி உள்ள பல பெருமைகளையும் கொண்ட எம்பெருமானை விட்டு எங்கேயும் வெளியே செல்ல இயலாது என்று ஆழ்வார் கூறுகிறார்.

பாவியேன் உன்னை அல்லால்

கீழ் பாசுரங்களில் ஐயனே அரங்கனே (33) என்றும், ‘என்னை ஆளுடைய கோவே ‘ என்றும் சொன்ன வார்த்தைகளும் பொய் தானோ என்று எம்பெருமானின் திருவுள்ளமாகுமோ என்று கவலையுற்று, எம்பெருமானை தவிர வேறு ஒன்றையும் நினைக்க மாட்டேன் என்பதை, ‘பாவியேன் உன்னை அல்லால் ‘ என்ற வார்த்தைகளால் சொல்கிறார்.

பாவியேன் பாவியேனே

பாபம் மிகுந்த சம்சாரிகளை விடாமல், எல்லோர் தலையிலும் தன்னுடைய திருவடிகளால் தீண்டிய எம்பெருமானை விட்டு ஆழ்வார் விலகி செல்ல நினைத்ததற்கு காரணம் அவரின் பாவங்களே என்று தன்னிலை விளக்கம் கொடுக்கிறார். இரண்டாவதாக சொன்ன ‘பாவியேனே ‘என்றது, உன்னை தவிர வேறு எதையும் நினைக்க மாட்டேன் என்று முன்பு சொன்னதை உறுதி செய்கிறார்.

பாவியேன் பாவியேனே என்று இரண்டு வார்த்தைகளிலும் பாவி என்ற சொல் வருவது, தான் செய்த அதிக அளவு பாவங்களை குறிப்பதற்காக என்றும் எடுத்துக் கொள்ளலாம். அடியார்களின் குற்றங்களை காண மாட்டாத அளவோடு இல்லாமல், எம்பெருமானை வெறுக்கும் சம்சாரிகளையும் வெறுக்காத எம்பெருமானை தான் அகல நினைத்ததற்கு காரணம், தான் செய்த மிக அதிக அளவிலான பாவங்களே என்ற கருத்தையும் சொல்வதாக கொள்ளலாம்.

இந்த இரண்டு பாவங்களில், முதல் பாவம், ஆழ்வார் எம்பெருமானை விட்டு விலகி தன்னை தானே அழித்து கொள்ள நினைத்தது. இரண்டாவது பாவமாவது, அனைவரும் வாழ்வதற்கு காரணமாக ஆவியாயிருக்கும் எம்பெருமானையும் தான் அகல்வதின் மூலம் அழித்து, அனைவரையும் அழிக்க முற்பட்ட பாவத்தை குறிப்பதாக அமையும் என்றும் கொள்ளலாம்.

தொண்டரடிப்பொடி ஆழ்வார் தன்னிடம் நல்ல குணங்கள் இல்லை என்றும் தீய குணங்கள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டவன் என்றும் இப்பாடலுடன் நைச்சாநுசந்தானம் என்ற நான்காம் பாகம் முடிகிறது. அடுத்த பகுதி ஆழ்வார் அருளிய திருமாலையின் மிக முக்கியமான மற்றும் சுவாரஸ்யமான பகுதிக்கு நம்மை அழைத்துச் செல்லும்.

———-

மழைக்கன்று வரைமுனேந்தும் மைந்தனே மதுர வாறே * உழைக்கன்றே போல நோக்கம் உடையவர் வலையுள் பட்டு * உழைக்கின்றேற் கென்னை நோக்கா தொழிவதே உன்னை யன்றே*அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி அரங்கமா நகருளானே. (திருமாலை 36)

இந்திரன் பசிக்கோபத்தாலே ஏழு நாள் விடாமல் மழை பெய்வித்த அந்த காலத்திலே பிருந்தாவனத்தில் பசு, கன்று மற்றும் அங்குள்ள அனைவரும் மழையினால் கஷ்டப் படுவதற்கு முன், மழையைத் தடுப்பதற்காக கோவர்த்தன மலையை தன்னுடைய திருக்கரத்தில் ஒரு குடையாக ஏந்திய பலம் பொருந்திய இளைஞனான எம்பெருமானை, இனிய ஆறுபோல், எல்லார்க்கும் விருப்பங்களையும் தீர்ப்பவனான எம்பெருமானை, மான் குட்டியின் விழிபோன்ற விழியையுடைய மாதர்களின் கண்களின் வலைகளில் அகப்பட்டு துடிக்கிற தனக்கு அருள் புரியாமல் இருக்கிறாரே, அந்த முழுமுதற் கடவுளை , அரங்கமா நகருளானை நோக்கியன்றோ தான் கூப்பிடுகிறேன் என்று ஆழ்வார் சொல்வது இந்த பாடலின் பொழிப்புரை.

சென்ற பாட்டில் ‘அணுகத்தகாதவன்’ என்று ஆழ்வார் விலக முடியாதபடி தன்னுடைய நீர்மையை (எளிமையை ) காட்டி, எம்பெருமான் தன்னுடன் சேர்த்துக் கொண்டார். அப்படி சேர்த்துக் கொண்டு பின்பு, எம்பெருமானை அடைய வேண்டும் என்ற அவா, ஆழ்வாருக்கு அதிகமாக, அப்படி அவா கொண்டவர்களை எம்பெருமான் அழைத்து செல்லும் பரமபதத்திற்கு தன்னையும் உடனே கொண்டு செல்ல வேண்டும் என்று ஆசைபட்டார். ஆனால் எம்பெருமான் ஆழ்வாருக்கு அஜீர்ணம் தீர்ந்து நன்றாக பசித்த பின், முழுமையாக உண்டு களிப்பது போல ஆழவாரும் தன்னை நன்றாக, முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்று ஆழ்வாரை காக்க வைக்க, ஆழ்வாரோ, விரோதி விஷயங்களை கண்டு பயந்தவராய், பெரியபெருமாள் நிம்மதியாக கண் வளரந்தருள முடியாதபடி, எல்லோரும் நீராய் உருகும்படி பெரும் குரலிட்டு கூப்பிடுகிறார்.

மழைக்கு

ஆழ்வார் கோஷ்டியில் ‘மழை ‘என்று குறிப்பிட்டால் அது எம்பெருமான் கோவர்த்தன மலையை தூக்கி கல் மழையில் இருந்து அனைவரையும் காப்பாற்றிய இந்திரனின் கல் மழையையே குறிக்கும். ஆனை என்று பொதுவாக சொன்னாலும் அது கஜேந்திர ஆழ்வானையே குறிப்பது போல் இதுவும் ஒன்று. ஆயர்கள், இந்திரனால் வந்த கல்மழை ஆபத்தினை தீர்த்த எம்பெருமானை தஞ்சம் அடைந்தது போல் தானும் தன்னுடைய சம்சார துக்கங்களில் இருந்து விடுபட எம்பெருமானிடம் தஞ்சம் புகுகிறார். பசியினால் வாடுபவர்கள் செல்வந்தர்களை பார்த்து யாசிப்பது போல், ஆபத்தினை போக்கும் எம்பெருமானை நோக்கி, தன்னுடைய ஆபத்தினை போக்குமாறு வேண்டுகிறார்.

அன்று ஆயர்களுக்கும், பசுக்களுக்கும், கன்றுகளுக்கும் கல்மழையினால் ஏற்பட்ட ஆபத்தினைப் போன்றதே இன்று ஆழ்வாருக்கு சம்சாரத்தினால் ஏற்பட்ட ஆபத்து, அதனால் தன்னையும் காக்க வேண்டும் என்கிறார்.

கல்மழையினால் ஏற்பட்ட ஆபத்தினால் பாதிக்கபட்டவர்களை மட்டும் தான் எம்பெருமான் காப்பாற்றுவாரா என்றும், துன்ப மழையில் கஷ்டப்படும் எல்லோரையும் காப்பாற்ற கூடாதா என்றும், ஒரு ஊராக உள்ள எல்லோரும் துன்பப்பட்டால் தான் காப்பாற்றுவாரா என்றும், ஒரு ஊர் பட்ட துன்பங்களை தான் ஒருவனே படுவதாகவும் தன்னை காக்க கூடாதா என்றும் ஆழ்வார் கேட்கிறார்.

வரை

இந்திரன் ஏவ, மேக கூட்டங்கள், திரண்டு மழையை தொடர்ந்து கொட்ட, பசிக் கோபத்தாலே இப்படி மழை பெய்விக்கிறான் என்று உணர்ந்த எம்பெருமான், சக்ரத்தாழ்வானை கூப்பிடக்கூட நேரம் இல்லாமல், உடனே கையில் கிடைக்கக்கூடிய மலையை கையில் எடுத்து காப்பாற்றுகிறான். இதனால் எம்பெருமானுக்கு இந்த பொருளை கொண்டுதான் இந்த ஆபத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற எந்த நியதியும் இல்லை என்பது விளங்கும். ஆகையால் ஆழ்வாரை ரக்ஷிப்பதற்கும் எந்த கருவியும் இல்லை என்ற குறையும் எம்பெருமான் சொல்லமுடியாது என்பது ஆழ்வாரின் எதிர்பார்ப்பு.

பசுக்களுக்கு மழையினால் துன்பம் ஏற்படுவதற்கு முன்னரே எம்பெருமான் காத்தான் என்பதை தெரிவிக்கவே முன்பு என்று கூறுகிறார். ஆயர்கள் முதலானோர் எம்பெருமானை தவிர வேறு ஒருவரை சார்ந்து இருப்பவர் இல்லாததால் அவர்களுக்கு ஆபத்து வரும் முன்னரே காப்பாற்றுகிறான் என்றும் ஆழ்வார் கூறுகிறார். இங்கு உரையாசிரியர் ஆளவந்தாரின் ஸ்தோத்திர ரத்தினத்தில் இருந்து 49வது ஸ்லோகத்தை எடுத்துக்காட்டுகிறார். அந்த ஸ்லோகத்தின்படி, ஞான, சக்தியாதி குணங்கள் நிறைந்தவரும், அடியவர்களை கை விடாதவனும் ஆன எம்பெருமானிடம், , விவேகம் இல்லாத மேகங்களால் இருள் அடைந்த திசைகள் உடைய இடத்தில், இடைவிடாமல் பொழிவதால், பலவிதமாக இன்னல்களை கொடுப்பதும் ஆகிய சம்சாரமாகிய இருள் மழையில் இருந்து வழி தவறிய அடியேனை காத்து அருள்வாயாக என்று ஆளவந்தார் வேண்டுகிறார். இந்த பாடலில் தொண்டரடிபொடி ஆழ்வார், தான் இப்படி சம்சார துன்ப மழையில் நனைந்து வருந்தி அழைத்த போதும், காப்பாற்ற வரவில்லையே என்று கதறுகிறார்.

ஏந்தும்

ஏழு வயதில் எளிதாக ஒரு பூ பந்தை தூக்குவது போல் தூக்குகிறார். ஆழ்வார் தன்னை காப்பாற்றுவதால் எம்பெருமானுக்கு ஒரு பாரமாக இருக்குமோ என்ற காரணத்தினால் தான் இன்னும் காப்பாற்ற படாமல் இருக்கிறோமோ என்று கவலை படுகிறார். நம்மாழ்வார் திருவிருத்தம் 21 பாடலில் சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி என்று கூறியதைப்போல், நித்ய சூரிகள் இவனுக்கு சாற்றுவதற்கு மாலைகளை ஏந்தி இருப்பது போல், எம்பெருமான் அடியவர்களை காப்பாற்றுவதற்காக ஒரு மலை ஏந்தி நிற்கிறான் என்று ஆழ்வார் கூறுகிறார்.

மைந்தனே

மலையை எளிதாக எடுப்பதற்கு தேவையான வலிமையை, மிடுக்கை, மைந்து என்ற சொல் காட்டுகிறது. மைந்தன் என்பது பாலகன் என்றும் தன்னை அண்டியவர்களை காப்பாற்றியதால் வயது குறைந்தவன் போல் ஆனான் என்றும் கொள்ளலாம். மனிதர்கள் தங்களுக்கு பிரியமான உணவு கிடைத்தவுடன் ஆனந்தம் அடைந்து வயது குறைந்தது போல் தோன்றுவது போல், எம்பெருமானுக்கு அடியார்களை ரக்ஷிப்பது மிகவும் பிரியமான ஒன்று ஆகும். அதனால் அவன் வயது குறைந்து இளையவன் ஆகிறான். இப்படி ஆழ்வாரான தன்னை காப்பது, எம்பெருமானுக்கு விருப்பானான ஒன்றாக இருந்தும், தான் இப்படி கூப்பிட்டும் வராமல் இருக்கிறானே என்று ஆழ்வார் வருந்துகிறார்.

மதுரவாரே

இனிமையான வடிவை எடுத்து நதியைப் போன்றவனே என்கிறார். முன்பு சொன்னது போல் காப்பவனாகவே இல்லாமல், அடித்து விழுங்குபவன் ஆனாலும் அவனை விட்டு செல்ல முடியாதபடி அவனுடைய வடிவழகு இருக்கிறது என்று ஆழ்வார் கூறுகிறார். மதுர கடலே என்று சொல்லாமல் மதுர ஆறே என்று ஆழ்வார் சொல்வதற்கு காரணம், கடல் நீர் உப்பு கலந்தது, குடிப்பதற்கு முடியாது, கடல், ஆறு போல் இருக்கும் இடத்தைத்தேடி ஓடி வராது; ஆறானது வெள்ளம் வந்தால், அணையை கடந்து அடித்து கொண்டு வருவது போல், ஆழ்வார் தன்னை பாவி என்று சொல்லி விலக நினைத்த போது, ஆழ்வார் விட்டு செல்ல முடியாமல் அவரை அணைத்து கொண்டதை சொல்கிறார். ஆறு பயன்படுத்துபவன் இருக்கும் இடம் தேடி செல்வது போல், இந்த மதுர ஆறும் பரமபதத்தில் தோன்றி, இடைச்சேரியில் இருக்கும் ஆழ்வாரை தேடி வருகிறது என்கிறார்.

உழைக்கன்றே போல நோக்கம் உடையவர் வலையுள் பட்டு, உழைக்கின்றேற்கு

இந்திரனால் பொழிந்த கல் மழையில் இருந்து வந்த ஆபத்தில் இருந்து அன்று காப்பாற்றியதாகவும் இன்று யாரிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று எம்பெருமான் திருவுள்ளம் ஆக அதற்கு ஆழ்வார் விடை தருகிறார். மான் குட்டியின் கண் போன்ற கண் அழகை உடைய பெண்களின் பார்வை ஆகின்ற வலையில் அகப்பட்டு துன்பப் படுகிறேன் என்கிறார். உள்ளே அன்பு ஒன்றும் இல்லாது இருந்தாலும், எல்லாம் இவனே என்பது போல், இவனை விட்டால் வேறு கதி இல்லாதவர்கள் போலவும், வெளி வேஷம் போட்டு, அழகிய மான் குட்டியின் பார்வையாகிய வலையில் சிக்கிய ஆழ்வாரை என்பதை, உழை என்பதால் மானையும், உழைக்கன்று என்பதால் மான் குட்டியையும் சொல்கிறார். வலையானது அகப்படுத்திக் கொள்வதாய், தப்பி போக முடியாததாக உள்ளதாய், அகப்பட்டவர்க்கு எந்த பலனும் தராததாய் இருப்பது போல் இந்த பெண்களின் கண் வலை, ஆழ்வார் எம்பெருமானை பற்றி ஈடுபட முடியாததாய், இனிமை இல்லாததாய், அதில் இருந்து தப்பி போவது அரிதாவதாக உள்ளதாய் இருக்கிறது என்கிறார்.

எனக்கு

கல் மழையின் போது காப்பாற்றப்பட்ட பசுக்களை போல் துன்பப்பட்டேன் என்று தெரிந்தும், இத்தகைய துன்பத்தில் இருந்து காப்பாற்ற வேண்டியவன் எம்பெருமான் மட்டுமே என்பதையும் உணர்ந்தும், நீயே என்னை காப்பாற்ற வேண்டும் என்று வேண்டியும் என்ற ‘என்னை‘ என்று ஆழ்வார் கூறுகிறார்.

நோக்காது ஓழிவதே

கல்லால் வந்த ஆபத்திற்கு கல்லை எடுத்து காப்பாற்றியது போல், கண்ணால் வந்த ஆபத்தை கண்ணால் அருள் புரிந்து காப்பாற்ற வேண்டாமா என்று ஆழ்வார் கேட்பது போல் உள்ளது. என்னை காப்பாற்றும் போது மலையை தூக்கி காப்பாற்றும் சிரமம் இருக்காது. ஆழ்வாரின் நெஞ்சம் குளிரும்படி நோக்கினால் போதும் என்று சொல்கிறார். நோக்க வேண்டும் என்று பிரார்த்திக்காமல், நோக்காமல் இருக்கிறாயே என்று கேள்வி கேட்பதன் காரணம், தனக்கும் அவனுக்கும் உள்ள உறவை எண்ணியும், அவனது உறுதியான எளிமையை மனதில் கொண்டும் இருக்கலாம்.

இப்போதும் எம்பெருமான் வராததின் காரணம், உடனே கொடுத்து விட்டால், தான் ஒரு அயோக்கியன் என்பதை மீண்டும் சொல்லி, ஆழ்வார் தன்னை விட்டு விலகி விடுவார் என்ற எண்ணத்தினால் தான். ஆகவே அஜீரணம் தீர்ந்து பசி ஏற்பட்ட நன்றாக உண்டு அனுபவிப்பது போல, பின்னர் அனுபவம் கொடுத்து ஆழ்வார் தம்மை நன்றாக அனுபவிக்கட்டும் என்று எம்பெருமான் இருந்தான். நோய் வாய்ப்பட்ட குழந்தை மீண்டும் பசி என்று அழைப்பது, எப்படி தாய்க்கு இன்பம் கொடுக்குமோ அதே போல் எம்பெருமானும் ஆழ்வாரின் இது பற்றிய குரல் கேட்க, காத்து கிடந்தான்.

உன்னை அன்றே அழைக்கின்றேன்

ஆழ்வார், தான் யாராவது தாழ்ந்தவர் முன்னே நின்று தன்னை காப்பாற்று என்று கதறுகின்றேனா, காப்பாற்றுவதற்கு யார் இருக்கிறார் என்று காத்து இருக்கும் பெரியபெருமாள் முன்னே தானே இருக்கிறேன், வேறு வேலை இருக்கிறது என்று சொல்ல முடியாதபடி இருக்கும் எம்பெருமானிடத்தில் தானே கேட்கிறேன் என்கிறார். ஆழ்வார் அழைத்தவுடன் வர வேண்டிய நிர்பந்தம் என்ன என்று, எம்பெருமான் திருவுள்ளமாக, அதற்கு ஆழ்வாரின் சமாதானம் ஆதிமூர்த்தி என்ற அடுத்த பதத்தில் கொடுக்கிறார்.

ஆதிமூர்த்தி

பிரளய காலத்தில் எல்லா ஜீவாத்மாக்களையும் ஒன்றாக தன்னுடைய திருவயிற்றில் வைத்து காப்பாற்றி பின் சங்கல்பத்தால் எல்லாவற்றையும் படைத்த எம்பெருமான் தானே காப்பாற்ற வேண்டும் என்கிறார். குழந்தையை காப்பாற்றும் பொறுப்பு பெற்றோருக்கு தானே உள்ளது, அழும் குழந்தை அம்மா என்று தானே கூப்பிடும் என்று ஆழ்வார் உரைக்கிறார்.

அரங்க மா நகருளானே

ஆழ்வாரை ரக்ஷிக்க பழைய கிணறுதனை தூர் வாருவது போல், உலகை படைத்த வரலாற்றை எல்லாம் சொல்ல வேண்டுமோ, பரமபதத்தில் இருந்து இந்த திருவரங்கத்தில் பள்ளி கொண்டு இருக்கின்ற காரணம் போதாதா என்று கேட்கிறார். இங்கே பள்ளி கொண்டு இருப்பதற்கு, ஜீவாத்மாக்களை காப்பாற்றுவது இல்லாமல் வேறு என்ன பலன் உள்ளது என்று பெரிய பெருமாளை கேட்கிறார். எல்லோரும் அவரவர் பாவ புண்ணியங்களை மட்டும் பொறுத்து உஜ்ஜீவனம் கொடுப்பதனால், பரமபதத்தில் இருந்தே செய்து இருக்கலாமே இங்கே வந்து பள்ளி கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லையே என்கிறார்.

அரங்க மா நகருளானே உன்னை அன்றே அழைக்கின்றேன் என்று சேர்த்து பார்த்தால், எம்பெருமான் பரமபதத்தில் இருந்து வந்து அழைக்க வல்லமை பெற்றவன் இல்லை என்றும், தனக்கு ருசி விளைவிக்க இங்கு, திருவரங்கத்தில், வந்து இருந்த பின், ருசி விளைந்த பின், தான் அதை இழப்பதோ என்கிறார். இப்படி கூப்பிட்ட பின்பும் எம்பெருமான் அருள் பாலிக்காமல் இருப்பது ஏன் என்றால், எம்பெருமானுக்கு பரமபதத்தில் உள்ளவர்கள் கூப்பிடுவதை தான் கேட்டு பழக்கம். சம்சாரிகள் குரல் உலக விஷயங்களுக்காகவே மட்டுமே எம்பெருமானை அழைப்பது என்று இது வரையில் இருந்தன. ஆனால் ஆழ்வார் ஒருவர் மட்டுமே, எம்பெருமான் முயற்சி செய்து தேடி பெற்றது, அதனால் இன்னும் கொஞ்சம் கேட்க வேண்டும் என்று எம்பெருமான் திருவுள்ளம் கொண்டதாக சொல்லி இந்த பாடலை முடிக்கிறார்.

———-

தெளிவிலாக் கலங்கல் நீர் சூழ் திருவரங்கங்கத்துள் ஓங்கும், * ஒளியுளார் தாமே அன்றே தந்தையும் தாயுமாவார், * எளியதோர் அருளுமன்றே, எந்திறத்து எம்பிரானார், * அளியன் நம் பையல் என்னார் அம்மவோ கொடிய வாறே. (திருமாலை 37)

தெளிவில்லாமல், கலங்கிய காவிரியால் சூழப்பட்டுள்ள திருவரங்கத்துள் பிரகாசிக்கும்படியான, தேஜஸ் உடைய பெரியபெருமாள் அன்றோ, நமக்கு தந்தையும் தாயும் ஆவார். என் விஷயத்தில் செய்ய வேண்டியது, சாமானியமான குளிர்ந்த பார்வை அன்றோ, எனக்கு உபகாரகரான அவர், ‘நம்முடைய பையல் ஆன இவன் நமது கருணைக்கு உரியவன்’ என்று ஒரு வார்த்தை சொல்லவில்லையே, ஐயோ, இவர் திருவுள்ளம் மிக கொடியதாக உள்ளதே என்பது இந்த பாடலின் பொருளுரை.

ஆழ்வார் இப்படி கதறிய போதும், பெரியபெருமாள் இரக்கம் கொண்டு, ‘வருந்தாதே’ என்று கூறாததால், ‘தம்மை தவிர வேறு யாராவது உதவி செய்பவர்கள் இருப்பார்களோ என்று எம்பெருமான் பேசாமல் இருக்கிறாரோ, ஸம்ஸாரத்தில் கட்டி வைக்கும் மற்ற பயன்களை விரும்பி இருக்கிறேன் என்று நினைக்கிறாரோ, நம்முடைய பையல் என்று சொன்னாலே உயிர் பிழைத்து விடுவேனே, என்கிறார். இதைக் கூட செய்யாமல், நாம் கதறுவதையும் கேட்டு கண் உறங்கும்படி இவன் திருவுள்ளம் இப்போது இவ்வளவு கொடியதாய் போனதே, என்று வெறுக்கிறார்.

தெளிவிலா கலங்கல்

நீர் வரத்து மாறினால் அன்றோ தெளிய இடம் உண்டு. அதற்கு இடம் இல்லாதபடி வெள்ளம் மேலும் மேலும் பெருகி வருகிற படியால் காவிரியில் கலக்கம் மாறாது இருக்கும். இந்த ஆழ்வாரும் காவிரி ஆற்றை போல் கலங்கியே இருப்பார். எம்பெருமானை பெறுவதற்கு முன்பு இவன் கிடைக்கவில்லையே என்று கலங்குவார். எம்பெருமான் கிடைத்த பின் காதலால் கலங்கி இருப்பார். அதே போல காவிரியும் திருவரங்கத்திற்கு மேற்கில் பெரிய பெருமாளை காணப் போகிறோம் என்ற கலக்கத்திலும், கிழக்கில் பிரிந்து போகிறோமே என்று வருத்தத்துடன் கலங்கி செல்லும். ஆகையால் உயிர் உள்ளவை, உயிர் அற்றவை என்று பேதம் இல்லாமல் கலங்கும் என்கிறார்.

நீர் சூழ்

அதனில் பெரிய என் அவாவர சூழ்ந்தாய்‘ (திருவாய்மொழி 10.10.10) என்று பெரியபெருமாள் ஆழ்வார்களை பெரும் காதலால் சூழ்ந்து கொள்வது போல, காவிரியும் பெரியபெருமாளிடத்தில் உள்ள காதலால் அவரை இந்த இடத்தில் சூழ்ந்து கொண்டபடியை சொல்கிறது.

திருப்பாற்கடல் தந்தை, அந்த கடலின் மனைவியான நான் தாய், இந்த ஸ்ரீரங்க நாயகியே மகள், இப்படிபட்ட இவர்கள் விஷயத்தில் என்ன தகுந்த சீர் செய்வேன் என்று காவிரி ஆறானது வருத்தம் அடைந்து, பிரகாசம் உடைய சாமரங்களையும், பச்சை கற்பூரத்தையும், சந்தன மரங்களையும், நல் முத்துக்களையும், மணிகளையும், அலைகளாகிய கைகளால் ஏந்தி வருகின்றாள்; அப்படிபட்ட காவிரி உங்களால் நீராடப் பட வேண்டும் என்று பாராசர பட்டாரால் அருளி செய்யபட்ட ஸ்லோகத்தை இங்கே நினைவில் கொள்ளலாம்.

உலகில் ஒவ்வொரு தாயும் தன்னுடைய மாப்பிள்ளை மகளுக்கு தகுந்த சீர் செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். இங்கே மகள், ரங்கநாச்சியார், செல்வங்களுக்கு எல்லாம் அதிதேவதை ஆன, ஐஸ்வர்யங்களுக்கு எல்லாம் அதிபதியான, ஸ்ரீதேவி பிராட்டியார். மாப்பிள்ளையோ எல்லோரையும் விட சிறந்த பரமாத்மாவான அழகிய மணவாளன்; பெண்ணின் தந்தையோ சிறந்த ரத்தினங்களுக்கு உறைவிடமான திருப்பாற்கடல் ஆகும்; பெண்ணை பெற்ற தாயோ, கடல் அரசியின் நாயகியான, கங்கையில் புனிதமாகிய காவிரியாகிய நான்; இப்படி எல்லாம் தலைசிறந்தவைகளாக இருக்கும் போது, தகுந்த சீர் என்ன செய்ய போகிறேன் என்று கலங்கி, காவிரி தாய், கற்பூரம், சந்தனம், முத்து மாணிக்கம் என்ற பல சீர்களை அலைக்களாகிய கைகளில் ஏந்தி, தயங்கி தயங்கி, மத யானை போல வருகிறாள் என்று பட்டர் சொல்கிறார்.

திருவரங்கங்கத்துள் ஓங்கும் ஒளிஉளார்

ஆற்று வெள்ளத்தை நீக்கி, அடித்தரையை கண்டு உள்ளே புக அரியதாக இருப்பது போல, பெரியபெருமாளின் மேல் உள்ள ஒளி வெள்ளத்தை நீக்கி, உள்ளே புகுந்து அதற்கு இருப்பிடமான வடிவழகு காண அரியதாக உள்ளது என்கிறார். திருவரங்கதிற்கு எழுந்தருளிய பின் பரமபதத்தில் பகல் விளக்கு என்றபடி ஒளி குன்றி காணப்படுவதாக சொல்கிறார். இரவில் ஒளி போல, ஸம்ஸாரிகளுக்கு உதவும் திருவரங்கதில் ஒளி கூடி இருப்பதை போல என்கிறார். நித்ய சூரிகளுக்கு இடையே பரமபத நாதன் இருப்பது, சூரியர்களுக்கு நடுவே சூரியன் நிற்பது போல இருக்கிறது என்றும், ஸம்ஸாரிகளுக்கு, தாபங்களால் வருந்துபவர்களுக்கு நடுவே அவர் ரக்ஷித்துக் கொண்டு இருப்பது, ஒளி மிகுந்து இருப்பது போல உள்ளது என்கிறார்.

ஒளியுளார் தாமே அன்றே தந்தையும் தாயுமாவார்

சுபாலோப உபநிஷத்தில்(16) கூறுவது போல, நாராயணன் தாயாகவும் தந்தையாகவும், தன்னுடன் பிறந்தவனாகவும், தங்கும் இடமாகவும், மோக்ஷத்திற்கு உபாயமாவும், நண்பனாகவும் மோக்ஷத்தில் அடையபடுபவனாகவும் இருப்பவன் என்று கூறியதை தாமே என்ற ஏகாரத்தாலே தெரிவிக்கிறார். இப்படி இங்கே சொல்லபட்ட நாராயணன், எல்லோருக்கும் பொதுவான பரமபத நாதன் இல்லை என்றும், சிலருக்கு பொதுவான வியூக, விபவங்களும் இல்லை என்றும், மற்றைய ஆழ்வார்களுக்கு பொதுவான மற்ற அர்ச்சாவதாரங்களும் இல்லை என்றும், எனக்கே உரிய தந்தையும் தாயும் ஆன பெரியபெருமாள் என்கிறார். இப்படி எனக்கு எல்லா உறவுகளுமாய் இவரே இருக்கும் போது இவரை தவிர எனக்கு வேறு ஒரு உறவு உண்டு என்று நினத்து எம்பெருமான் பேசாமல் இருக்கிறாரோ என்கிறார்.

இங்கே மகாபாரதத்தில் வரும் (192.56) ஸ்லோகத்தின் பொருளை நினைவில் கொள்ளலாம். தர்மன் வனவாசம் செய்யும் போது, ஆபத்து காலத்தில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணனும் சத்யபாமையும் எழுந்தருளிய போது, பாராசரர், மார்க்கண்டேயர் போன்ற பல மகரிஷிகள் வந்து பெரிய சபையாக இருக்க, தர்மன் அங்கு இருந்த மகரிஷிகளிடம், தான் எல்லா தர்மங்களையும் பின்பற்றுவதாகவும் தனக்கு துன்பங்களே வருவதாகவும், துரியோதனன் போன்றவவர் தர்மங்களை பின் பற்றுவதில்லை என்றாலும் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களே என்றும் கேட்க, பலர் மேலும் தர்மங்களை பின்பற்ற சொல்ல, மார்க்கண்டேயர் சொல்லும் இந்த ஸ்லோகம் தர்மருக்கு விளக்கம் கொடுக்கிறது. இதன் அர்த்தம், எல்லா உலகங்களுக்கும் தந்தையும் தாயும் ஆனவன், லக்ஷ்மி நாதனே சரணடையத் தகுந்தவன், இவனைச் சரண் அடையுங்கள் என்று சொல்வது. எல்லா அடியவர்களுக்கும் இயற்கையிலேயே உறவினனாக இருக்கும் மாதவனை சரண் அடைவதே உண்மையான சுகத்திற்கு உதவுவது ஆகும் என்கிறார். அவனை அல்லாமல் மற்றவற்றை செய்வது ஸம்ஸாரத்தில் உழல செய்யும் என்றும் சொல்கிறார்.

பாராசர பட்டரும் தன் தம்பியான சீராம பிள்ளைக்கு துன்பம் வந்த போதும் இந்த ஸ்லோகத்தையும் அதன் அர்த்ததையும் அருளி செய்கிறார். தந்தையும் தாயும் ஆவார் என்று சொன்னது, தாயை போல இனியதையும், தந்தையை போல நல்லதையும் செய்ய கூடியவர் பெரியபெருமாளே ஆவார் என்பதாகும்.

எளியதோர் அருளுமன்றே எந்திறத்து

என் விஷயத்தில் ஆயர்களுக்கு செய்தது போல கடினமான காரியங்கள் செய்து காக்க வேண்டியது இல்லை; உங்களை தவிர நான் வேறு பலன் வேண்டுகின்றேன், அதையே தகுந்த காலத்தில் கொடுத்து விடலாம் என்று பேசாமல் இருக்கிறீர்களா என்று கேட்கிறார். விபீஷணன் போன்றவர்களைக் காக்க, வில்லை எடுத்தது போலவோ, பாண்டவர்களை காப்பாற்ற கொல்லாமாக்கோல் எடுத்தது போலோ என்னை காக்க வேண்டும் என்று இருக்கிறாரோ என்கிறார். என் விஷயத்தில் ஒரு குளிர்ந்த பார்வை பார்த்தாலே போதும் என்கிறார்.

எம்பிரானார்

எமக்கு உபகாரராக இருப்பவர், என்னைக் குளிர நோக்க வில்லையே என்று வருந்துகிறார். ஏற்கனவே பெரிய பெருமாள் செய்த உதவிகளை ஆழ்வார் மறக்காதவர் ஆகையால், இன்னும் குளிர நோக்காத போதும், உபகாரகர் என்று சொல்கிறார். இந்த உபகாரத்தையும் செய்து அருள வேண்டும் என்று வேண்டுகிறார். பெரியபெருமாள் முன்பு செய்த உபகாரங்களில் சில : தமக்கும் பெரியபெருமாளுக்கும் உள்ள உறவை ஆழ்வாருக்கு உணர்த்தியது, அதற்கு மேல் மோக்ஷத்திற்கு உபாயமும், அடைய வேண்டியவனும் அவனே என்றும் உணர்த்தியவன்; இப்போதும் நம்முடைய கூக்குரல் கேட்டு அருகில் வந்து இருப்பவன் என்பவை.

அளியன் நம் பையல்

இனி செய்ய வேண்டிய உபகாரம் என்ன என்று கேட்டதற்கு ஆழ்வார் சொல்லும் பதில். அளி என்றால் அருள் என்றும் அளியன் என்றால் அருள் புரிய தகுந்தவன் என்றும் பொருள் தரும். இவனை நாம் கருணை செய்யலாம் என்னும்படி நன்மை உடையவன், நம்முடைய பையல் என்று பெரிய பெருமாள் அருளி செய்ய கேட்கிறார். ஆழ்வாருக்கு இப்போது நம் பையல் என்று பெரியபெருமாள் சொல்லாமல் ‘ஆழ்வீரே’ என்று சொல்வது வருத்தமாக இருக்கிறது. அவனுக்கு அடிமை பட்டிருக்கும் நம்மை, நம் பையல் என்று நினைத்தால் போதாதா, கூப்பிடவும் வேண்டுமோ, என்று கேட்டு கொண்டு, அவனும் அப்படி கூப்பிட்டு உறுதிப் படுத்தினால் தான் தன்னுடைய சேஷத்துவம் நிலை நிற்கும் என்று ஆழ்வார் கருதுகிறார்.

மணக்கால் நம்பி, கதவை சாத்திக் கொண்டு ரகஸ்யார்த்தம் உபதேசம் செய்து கொண்டு இருந்த போது, அவரது சிஷ்யரான திருமகிழ் மாலைமார்வன், வந்து கதவை தட்ட, மணக்கால் நம்பி, ‘நம் பிள்ளையான திரு மகிழ் மாலை மார்வனுக்கு கதவை திற ‘ என்று அருளி செய்ததையும், பிள்ளை, பிள்ளை ஆழ்வான் வாயாலேயே, ‘தம்பி அப்பிள்ளை ஆழ்வான், நம்பிள்ளை என்னப்பெற்றேன்’ என்று அப்பிள்ளை ஆழ்வான் அருளி செய்ததையும் அனுசந்திப்பார்.

அம்மவோ கொடிய வாறே

வருத்தத்தால் அழும் கூக்குரல் கேட்டால் எழுந்திருக்க வேண்டாமோ, அக்குரல் கேட்டதும் கண் உறங்குவதே, இவன் திருவுள்ளம் இப்படி கொடியதாய் இருக்கின்றதே, அம்ம, என்ன இவன் தன்மை என்று கூறுகிறார். இங்கே அம்ம என்பது, வருத்தத்தின் மிகுதியை குறிக்கும். இத்துடன் இந்த பாசுரம் நிறைவு பெறுகிறது.

மகாபாரதத்திற்கு கீதா சரம ஸ்லோகம் போல, இந்த பிரபந்தத்திற்கு அடுத்த பாடல் என்ற அளவிற்கு முக்கியமான பாடல், இந்த பிரபந்தத்தின் ரத்னம் போல் என்றும் சொல்லப்பட்டு உள்ளது.

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ வைணவ குரு பரம்பரை–

October 6, 2024

ஸ்ரீ வைணவ ஆசாரியர்கள்

ஸ்ரீ வைணவ சித்தாந்தத்தில் ஆழ்வார்கள், ஆசாரியர்கள் இவர்களின் வரலாறுகளே சிறந்த வழிகாட்டிகள். அவை சேதநனுக்கு ஞானத்தையும் காட்டக் கூடியவை. அவர்கள் பரம்பரையை நாளும் சிந்திப்பார் இராமாநுசரின் திருவருளுக்கு என்றும் இலக்காகி சதிராக வாழ்ந்திடுவர்.

நமது ஸ்ரீ வைஷ்ணவ குரு பரம்பரையானது
நவ ரத்ன ஹாரம் -எம்பெருமானார் நடுநாயகம் -முன்னும் பின்னும் நவ ஆச்சார்யர்கள் உண்டே

ஸ்ரீ பெரிய பெருமாள் , ஸ்ரீ பெரிய பிராட்டியார் தொடங்கி ஸ்ரீ.ஸேனை முதலியார் முதற்கொண்டு
ஸ்வாமி ஸ்ரீ. மணவாள மாமுனிகள் ஈறாக முற்றுப் பெரும். அவர்கள் க்ரமப்படி :-

பெரிய பெருமாள்
பெரிய பிராட்டியார்
விஷ்வக்ஸேனர் / ஸேனை முதலியார்
நம்மாழ்வார்
நாதமுனிகள்
உய்யக்கொண்டார்
மணக்கால் நம்பி
ஆளவந்தார்
பெரிய நம்பி
ராமாநுஜர்
எம்பார்
பட்டர்
நஞ்சீயர்
நம்பிள்ளை
வடக்குத் திருவீதிப் பிள்ளை
பிள்ளைலோகாச்சாரியார்
திருவாய்மொழிப் பிள்ளை
மணவாள மாமுனிகள்.

நவ கிரந்தங்கள் -உபநிஷத் ப்ரஹ்ம ஸூத்ரம் ஸம் ரக்ஷணம் -ஸ்ரீ பாஷ்ய காரர்
18 கிரந்தங்கள் -அருளிச் செயல்-ரஹஸ்ய கிரந்தங்கள் ஸம் ரக்ஷணம் -ஸ்ரீ மா முனிகள்
சீர் அருளுக்கு இலக்காகப் பெற்றோம் என்று மற்ற பூர்வர்கள் அருளுக்கு இலக்கு
இவருக்கு-மா முனிகளுக்கு சீர் அருள்
மன்னிய சீர் மாறன் காலை உணவாவாகப் பெற்றோம்
முன்னவராம் குரவர் மொழி உள்ளப்பெற்றோம்
முன்னவர் கிரந்தங்களை வாசித்தும் சொல்லியும் அர்த்த விசேஷங்களை எழுதியும் இருந்ததால்
இவரைக் கொண்டே ஈடு வியாக்யானம் கேட்டு அருளினான்
அம்புயர் கோன் தன் குருவின்-மா முலைகளின் – தாள் இணையில் அன்பு செய்யாமல்
தன்னிடம் செய்தாலும் விண்ணாடு அளிக்க மாட்டானே

—————————–

ஸ்ரீ நாத முனிகள் ( 824-924 AD )
உய்யக்கொண்டார் (புண்டரீகாக்ஷர்) ( 826-931AD )
மணக்கால் நம்பி (ராமமிச்ரர்) ( 832-937 AD )
ஆளவந்தார் (யாமுனாசர்யர்) ( 916-1041 AD )
கூரத்தாழ்வான் (1009-1133AD)
உடையவர் (ஸ்ரீ ராமாநுஜர்) (1017-1137 AD)
முதலி ஆண்டான் (1027-1132)
எம்பார் (1021-1140)
திருக்குருகைப் பிரான் பிள்ளான் (1026-1131 AD )
அனந்தாழ்வான் ( 1055-1205 AD)
கிடாம்பி ஆச்சான் (1057-1157AD )
பராசர பட்டர் ( b 1074 AD )
எங்கள் ஆழ்வான் (விஷ்ணு சித்தர்) (1106-1206 AD)
நஞ்சீயர் (1113-1208 AD)
நம்பிள்ளை (வரதாசார்யர்) (1147– 1252AD)
நடாதூர் அம்மாள்(வாத்ஸ்ய வரதர்) (1165-1275 AD )
பெரியவாச்சான் பிள்ளை (க்ருஷ்ண ஸூரி) (1167-1262 AD)
வடக்குத் திருவீதிப் பிள்ளை (க்ருஷ்ணபாத:) ( 1167-1264 AD )
பிள்ளை லோகாசார்யர் (1205-1311 AD)
வேதாந்த தேசிகன் ( வேங்கடநாதன்) (1268 – 1369 AD)
திருவாய்மொழிப் பிள்ளை (ஸ்ரீசைலேசர்) (1290-1410 AD)
ஸ்வாமி மணவாள மாமுனிகள் (1370-1443 AD)

——

1. பெரியபெருமாள் : (ஶ்ரீமந்நாராயணன் முதல் ஆசாரியர்) சீடர்கள் : பெரிய பிராட்டியார், பூமிப் பிராட்டியார், நீளாதேவி. திருநட்சத்திரம் – திருவோணம்.

ஸ்ரீ பெரிய பெருமாள் (பங்குனி ரேவதி)
ஸ்ரீ ஸ்தநாபரணம் தேஜ: ஸ்ரீரங்கேசயம் ஆச்ரயே |
சிந்தாமணிம் இவோத்வாந்தம் உத்ஸங்கே அநந்தபோகிந: ||

ஸ்வயம் ப்ரகாசமானவனும், ஸ்ரீ மஹாலக்ஷ்மித் தாயாரின் திருமார்பில் ஒளிரும் அணிகலன் போன்றவனும்,
ஸ்ரீ ஆதிசேஷன் உமிழ்ந்த மணி போல் ஜ்வலிப்பவனுமான ஸ்ரீரங்க விராமனான
ஸ்ரீரங்கநாதனை அடியேன் சரண் அடைகிறேன்.

ஸ்ரீ பெரிய பெருமாள் :-

ப்ரம்ம லோகத்தில், ப்ரம்மாவால் ஆராதிக்கப்பட்டு பின் அவர் மூலமாக இக்ஷ்வாகு குலத்தினருக்கு வழங்கப்பட்டு,
அக்குலத்தில் தோன்றிய பலராலும் காலம் காலமாக ஆராதிக்கப்பட்டு வந்தார் பெரிய பெருமாள்.
அக் குலத்தில் உதித்த தசரத சக்ரவர்த்தியினாலும்,
பின் எம்பெருமான் தானே அவதரித்த ஸ்ரீ ராமரும் அவரை வழிபட்டுவந்தார்கள்.
இந் நிலையில் இலங்கையில் போர் முடிந்து ஸ்ரீ ராமரும் அயோத்திக்கு எழுந்தருளி பட்டாபிஷேகம் கண்டருளினார்.
பட்டாபிஷேக வைபவத்திற்கு வந்திருந்த விபீஷணன், அங்கு எழுந்து அருளப்பட்ட இருக்கும் பெரிய பெருமாளைப் பார்த்து,
மிக ஆனந்தித்து தன்னிடம் அவரைக் கொடுத்தருளும்படி ராமரிடம் வேண்டினான்.
ஸ்ரீ ராமரும் உகந்து பெரிய பெருமாளை அவருக்கு அளித்து, பெருமாளுக்கு நித்ய கைங்கர்யங்கள் செய்வது பற்றி எடுத்துக் கூறினார்.

பெரிய பெருமாளுடன் அயோத்தியிலிருந்து புறப்பட்ட விபீஷணன் , இலங்கைக்குத் திரும்பும் வழியில் சாயரக்ஷை நேரத்தில்
மாலை சந்தியா வந்தனம் பண்ண வேண்டி, ஸ்ரீரங்கம் காவிரிக்கரையில் பெருமாளை ஏழப் பண்ணினான்.
நித்ய கர்மானுஷ்டானங்களை முடித்துக் கொண்டு மீண்டும் இலங்கைக்குக் கிளம்பும் வேளையில்,
அவனால் பெருமாளை அவ்விடத்திலிருந்து எழுந்தருளப் பண்ண முடியவில்லை.
எவ்வளவு முயற்சி செய்தும் முடியாத காரணத்தால் , எம்பெருமான் திருவுள்ளம் ஸ்ரீரங்கத்திலேயே இருக்க விரும்புகிறது
என்பதனை அறிந்து கொண்டு பெருமாளை அவ்விடத்திலேயே இருத்திவிட்டு அவன் இலங்கைக்கு சென்று விட்டான்.
அன்று முதல் பெரிய பெருமாள் யுகம் யுகங்களாக அங்கேயே பள்ளி கொண்டு,
பக்தர்களுக்கு பரவசமிக்க காட்சி கொடுத்துக் கொண்டும், அருள் பாலித்துக் கொண்டும் வருகிறார்.

பெரிய பெருமாள் ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளின நாளன்று நக்ஷத்திரம் ரேவதி.

திருமகளும் மண்மகளும் சிறக்க வந்தோன் வாழியே
செய்யவிடைத் தாய்மகளார் சேவிப்போன் வாழியே
இருவிசும்பில் வீற்றிருக்கும் இமையவர்கோன் வாழியே
இடர்கடியப் பாற்கடலை எய்தினான் வாழியே
அரிய தயரதன் மகனாய் அவதரித்தான் வாழியே
அந்தரியாமித்துமும் ஆயினான் வாழியே
பெருகிவரும் பொன்னிநடுப் பின்துயின்றான் வாழியே
பெரியபெருமாள் எங்கள் பிரானடிகள் வாழியே

————

2. பெரிய பிராட்டியார் : சீடர்கள்: திருவனந்தாழ்வான், (ஆதிசேடன்),பெரியதிருவடி, விஷ்வக்சேநர் (சேனை முதலியர்) ஆகிய நித்திய சூரிகள். திருநட்சத்திரம் – பங்குனி உத்தரம்.

ஸ்ரீ பெரிய பிராட்டியார் (பங்குனி உத்தரம்)
நம: ஸ்ரீரங்க நாயக்யை யத் ப்ரோ விப்ரம பேதத: |
ஈசேசிதவ்ய வைஷம்ய நிம்நோந்நதம் இதம் ஜகத் ||

எவளது புருவ நெறிப்பு ஜீவர்களின் நிலையைப் பாமரன் என்றோ பண்டிதன் என்றோ,
செல்வன் என்றோ தரித்ரன் என்றோ நிர்ணயிக்கிறதோ அந்த ஸ்ரீ ரங்க நாச்சியாரை வணங்குகிறேன்.

சமுத்திர ராஜனுக்கும் , காவிரித்தாய்க்கும் மகளாகப் பங்குனி மாதம் உத்திரம் நக்ஷத்திரத்தில் அவதரித்தார்.
பெரிய பெருமாளின் பத்தினியான பெரிய பிராட்டியாரான ஸ்ரீரங்க நாச்சியார்.
தன் தனிச் சன்னதி பிராகாரங்களை விட்டு வெளியில் வராத பத்தினித் தாயான இவர் மிகக் கருணை மிகுந்தவர்.
இவரின் கருணை சொல்லி மாளாது. ஸேவித்து அனுபவிப்பவர்களுக்குத்தான் தெரியும் தாயாரின் கருணைத் தன்மை.
தன்னை நம்பி வரும் பக்தர்களைக் காப்பதில் இவருக்கு இணையில்லை.
தாயாரை ஸேவிக்கும் பாக்கியம் கிடைக்கும் ஒவ்வொரு சமயமும் உடலும் உள்ளமும் சிலிர்க்கும்.

பங்கயப் பூவில் பிறந்த பாவை நல்லாள் வாழியே
பங்குனியில் உத்திரநாள் பார்உதித்தாள் வாழியே
மங்கையர்கள் திலதமென வந்தசெல்வி வாழியே
மாலரங்கர் மணிமார்பை மன்னுமவள் வாழியே
எங்கள் எழில் சேனைமன்னர்க்கு இதம்உரைத்தாள் வாழியே
இருபத்தஞ்சுட்பொருள் மால்இயம்புமவள் வாழியே
செங்கமலச் செய்யரங்கம் செழிக்க வந்தாள் வாழியே
சீரங்கநாயகியார் திருவடிகள் வாழியே

————

3. விஷ்வக்சேநர் : சீடர்கள் : ஆழ்வார்கள், திருநட்சத்திரம் – ஐப்பசி பூராடம்.

மதுரகவியாழ்வாரின் சீடர் பராங்குசதாசர். இவர் தந்த் குறிப்பினால்தான் நாதமுனிகள் ‘கண்ணிநுண் சிறுதாம்பை’ப் பன்னிராயிரம் உரு நியமத்தோடு அநுசந்தித்து அர்ச்சை நிலையைக் கடந்து வந்த நம்மாழ்வார் மூலம் நாலாயிரமும் பெற்றனர் என்பது வரலாறு.

(ஐப்பசி பூராடம்)
ஸ்ரீ ரங்க சந்த்ரமஸம் இந்திரயா விஹர்தும்
விந்யஸ்ய விச்வசித சிந்நயநாதிகாரம் |
யோ நிர்வஹத்ய நிஸமங்குளி முத்ரயைவ
ஸேநாந்யம் அந்ய விமுகாஸ் தமஸி ச்ரியாம ||

ஸ்ரீ ரங்க சந்த்ரர்களாகிய ஸ்ரீ பெரியபெருமாள் ஸ்ரீ பெரிய பிராட்டியார் லீலைகளைச் செய்து போர,
ஸ்ரீ எம்பெருமான் அனுமதித்த தம் திருவிரல் அசைவினாலேயே உயிர் உள்ளன மற்றும் உயிர் அல்லன அனைத்தையும்
நடத்தும் ஸ்ரீ விஷ்வக்சேனர் திருவடிகளையே ஒரே புகலாகப் பற்றுகிறோம்.

விக்ஷ்வக்ஸேனர் என அழைக்கப்பெரும் ஸேனை முதலியார், ஐப்பசி மாதம் பூராட நக்ஷத்திரத்திலே அவதரித்தவர்.
எப்படி ஒரு அரசனுக்கு தளபதி என்று ஒருவர் இருப்பாரோ அதைப் போல பெருமாளுக்கு தளபதியாக இருப்பவர் இவர்.
கூர்ம புராணத்தில் இவர் பெருமாளின் ஒரு அம்சமே என்று கூறப்பட்டுள்ளது.
மஹாவிஷ்ணுவைப் போலவே நான்கு கைகளுடனும், சங்கு, சக்கரம், கதை, தாமரையுடன் காட்சியளிப்பார்.
இவரின் மறு அவதாரமாக நம்மாழ்வார் கருதப்படுகிறார். ஸ்ரீ வைகுண்டத்தில் எம்பெருமானின் வாயில் காப்பானாக இருக்கிறார்.

அர்ச்சாவதார ரூபியாக எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் திருக்கோயில்களின் ப்ரம்மோற்சவங்களின் போது
அங்குரார்ப்பணத்தன்று விக்ஷ்வக்ஸேனர் மாட வீதிகளில் புறப்பாடு கண்டருளி, நகர சோதனை செய்கிறார்.
இதன் மூலம் இவர் எம்பெருமான் தளபதியாக கருதப்படுவது நமக்கு புலப்படுகின்றது.

முற்காலங்களில் திருநக்ஷத்திர தொடக்கம் இவர் அவதரித்த பூராட நக்ஷத்திரத்தில் தொடங்கி ,
குருபரம்பரையின் ஈடாக இருக்கும் ஸ்வாமி மணவாள மாமுனிகள் அவதார நக்ஷத்திரமான மூலத்துடன்
முடிவடைவதாக முன்னோர் கூறுவர்.
பிறகு தான் இது மாறி அஸ்வினி நக்ஷத்திரத்தில் தொடங்கி
ரேவதி நக்ஷத்திரத்தில் முடிவு பெருவதாகவும்
அதுதான் இப்பொழுதைய வழக்கமாகவும் தொடருகிறது.

ஓங்குதுலாப் பூராடத்து உதித்தசெல்வன் வாழியே
ஒண்டொடியாள் சூத்திரவதி உறைமார்பன் வாழியே
ஈங்குலகில் சடகோபற்கு இதமுரைத்தான் வாழியே
எழிற்பிரம்பின் செங்கோலை ஏந்துமவன் வாழியே
பாங்குடன் முப்பத்து மூவர் பணியுமவன் வாழியே
பங்கயத்தாள் திருவடியைப் பற்றினான் வாழியே
தேங்குபுகழ் அரங்கரையே சிந்தை செய்வோன் வாழியே
சேனையர் கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே

—————

ஸ்ரீ நம்மாழ்வார் (வைகாசி விசாகம்)
மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் ய தேவ நியமேன மத் அந்வயாநாம் |
ஆத்யஸ்யந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||

ஸ்ரீவைஷ்ணவ சந்தானத்தின் தலைவரும், ப்ரபந்நஜன கூடஸ்தரும் மகிழ மாலை அணிந்தவரும்
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ நிறைந்த திருவடிகளை உடையவரும், தாய் தந்தை மனைவி மக்கள் ஏய்ந்த பெருஞ்செல்வம்
எல்லாமும் ஆனவருமான ஸ்ரீ நம்மாழ்வாரை வணங்குகிறேன்.

நம்மாழ்வார் , ஆழ்வார்களின் தலைவராகப் போற்றப் படுகின்றார்.
திருநகரி நகரத்தில் உடைய நங்கைக்கும் காரிமாறனுக்கும் புத்திரனாக வைகாசி மாதம் விசாக நக்ஷத்திரத்தில் அவதரித்த இவர் ,
விக்ஷ்வக்ஸேனரின் மறு அவதாரம். இவரின் லக்னம் ஸ்ரீ ராமரின் ஜென்ம லக்னமான கடகம்.

நம்மாழ்வார் அவதரிப்பதற்கு முன்பு வரை திருநகரி என்று அழைக்கப்பட்ட இவ்வூர்,
ஆழ்வாரின் அவதாரத்திற்குப் பின் ஆழ்வார் திருநகரி என்று அழைக்கப்படுவது ஆழ்வாரின் மகிமையை பறைசாற்றுவதாக உள்ளது.
ஸ்வாமி நம்மாழ்வார் அவதரிப்பதற்கு முன்னமே திருநகரியில் புளிய மரமாக அனந்தாழ்வான் அவதரித்தார்.

நம்மாழ்வார் பிறந்த பொழுது அழவும் இன்றி, பால் பருகவும் இல்லாமல் அசைவற்று ஒரு பிண்டம் போல் இருந்தார்.
திருக்குருகூர் ஆதிப்பிரானிடம் இவர் பெற்றோர்கள் வேண்ட, ஸ்வாமி தானே மெள்ள தவழ்ந்து ஆதிப்பிரான் ஸன்னதியில் உள்ள ,
அனந்தாழ்வான் புளிய மரமாக அவதரித்த மரத்தின் அடியில் உள்ள ஒரு பொந்துக்குள், பத்மாஸனத்தில் அமர்ந்து கொண்டார்.
இவ்வாறாக சுமார் 16 ஆண்டுகள் இவ்விடத்திலே ஆழ்வார் வாசம் செய்தார்.

இவர் காலத்திலே வாழ்ந்த ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் அவர்கள் வட தேஸத்திலே இருந்த பொழுது,
தெற்கிலிருந்து வானத்தில் ஒரு ஒளி வட்டம் தென்பட அதனைத் தொடர்ந்து அவர் தெற்கு நோக்கி வந்து,
திருநகரியிலே புளிய மரத்தடியில் இருக்கும் நம்மாழ்வாரைக் காண்கிறார். கண்கள் மூடிய நிலையில் இருந்த ஆழ்வாரைக் கண்டதும்,
அவர் பெரிய ஞானியாக இருப்பார் என்ற எண்ணத்துடன், ஒரு பெரிய கல்லை எடுத்து வந்து
நம்மாழ்வார் அருகில் “தொப்பென்று ” போடுகிறார்.
சப்தத்தை கேட்ட ஆழ்வார் சற்றே கண் திறந்து மதுரகவிகளைப் பார்க்கிறார்.
நம்மாழ்வாரின் கண்களிலே ஒரு தேஜஸுடன் ஒளி வீசுவதைக் கண்டு, மதுரகவிகள்,
ஆழ்வாரிடம் “செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் , எத்தை தின்று எங்கே கிடக்கும்” என்று கேட்க,
ஸ்வாமி நம்மாழ்வாரும் முதன் முதலாக தன் திருவாயிலிருந்து அவர் கேட்ட கேள்விக்கு பதிலாக
” அத்தைத் தின்று அங்கேயே கிடக்கும் ” என்று அருளுகிறார்.
மதுரகவி ஆழ்வாரும், தான் முன்னமே நினைத்தபடி நம்மாழ்வார் பெரிய ஞானியாக இருப்பதை உணர்ந்து ,
அவரிடம் தன்னை அவர்தம் சிஷ்யராக ஏற்றுக் கொள்ளும்படி வேண்ட, ஆழ்வாரும் அதற்கு சம்மதிக்கிறார்.
அன்று முதல் மதுரகவி ஆழ்வார் தனக்கு நம்மாழ்வாரை தெய்வமாக வரிந்து அவரைத் தவிர ” தேவு மற்று அறியாதவராக ” இருந்தார்.

வட மொழியில் அமைந்த நான்கு வேதங்களையும் தமிழ் படுத்த வேண்டி, அவற்றைத் தான் சொல்லச் சொல்ல,
அதனை ஏடுபடுத்த மதுரகவி ஆழ்வாரை பணிக்கிறார். அதன்படி முதல் முதலாக நம்மாழ்வாரின் ஈரச் சொல்
வார்த்தையாக அருளப்பெற்ற முதல் பாசுரம் ” பொய் நின்ற ஞானமும், பொல்லா ஒழுக்கும் ” என்று தொடங்கும்
திருவிருத்த பாசுரங்களாக நூறு பாசுரங்களை அருளிச் செய்தார்.
பின் ஆழ்வார் திருவாசிரியத்தின் ஏழு பாசுரங்களையும், என்பத்தேழு பாசுரங்களுடன் கூடிய பெரிய திருவந்தாதியையும்,
முற்றாக ஆயிரத்து நூற்று இரண்டு பாசுரங்களுடன் திருவாய் மொழியையும் அருளிச் செய்து
இவ்வுலகோர் உய்ய வழி அமைத்துக் கொடுத்தார்.

ஆழ்வாரின் கடைசி பாசுரமான ” அவா அறச் சூழ் * அரியை அயனை அரனை அலற்றி ” பாசுரத்தை முடிக்கும் பொழுது,
எம்பெருமான் அவருக்குக் காட்சி அருளி, தன்னுடன் வைகுண்டத்திற்குச் அழைத்துச் சென்றார்.

நம்மாழ்வார் தனது பாசுரங்களில் 36 திவ்ய தேஸ எம்பெருமான்களை மங்களா ஸாஸனம் செய்துள்ளார்.
இத் திவ்ய தேஸ எம்பெருமான்கள் அனைவரும் இவர் அமர்ந்திருந்த புளிய மரத்தடிக்கே வந்து
இவரிடம் தங்களைப் பற்றிய பாசுரங்களை பெற்றுச் சென்றனர்.

இப்படியாக உலகமும், உலகோர்களும் உய்ய வழிகாட்டிய ஆழ்வார்களின் தலைவரான இவருக்கு
ஒரு சிறிய வருத்தமும் உண்டு என்று பெரியோர் கூறுவர். அதாவது ஸ்வாமி நம்மாழ்வார் அவதரித்தது கலியுகம் பிறந்து
சரியாக 43 வது நாளன்று. இன்னும் சிறிது காலத்திற்கு முன்பே – 43 நாள்களுக்கு முன்பாவது – அவதரித்திருந்தால்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் அவதரித்து வாழ்ந்த யுகத்திலே தாமும் பிறந்திருக்கலாம் என்றும்,
ஆனால் அது முடியாமல் போய் விட்டதே என்ற வருத்தம் கண்ணன் பால் மிகுந்த ஈடுபாடு கொண்ட
அவருக்கு உண்டு என்று கூறுவர் பூருவாச்சாரியர்கள்.

நாலாயிரத் திவ்ய ப்ரபந்தம் இன்று உலகோர்களால் ஸேவிக்கப் படுவதற்குக் காரணமும் இவரே.
ஆம். நாதமுனிகள் இவரிடம்” திருவாய்மொழி ” ப்ரபந்த பாசுரங்களை அருள வேண்டும் போது,
ஆழ்வார் நாதமுனிகளிடம் மற்ற ஆழ்வார்களும் அருளிச்செய்த திவ்யப் ப்ரபந்த பாசுரங்களையும் கொடுத்து அருளினார்.

ஆன திருவிருத்தம் நூறும் அருளினான் வாழியே
ஆசிரியம் ஏழுபாட்டும் அளித்தபிரான் வாழியே
ஈனமற அந்தாதி எண்பத்துஏழு ஈந்தான் வாழியே
இலகு திருவாய்மொழி ஆயிரத்தொரு நூற்றிரண்டு உரைத்தான் வாழியே
வானணியும் மாமாடக் குருகை மன்னன் வாழியே
வைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியே
சேனையர்கோன் அவதாரம் செய்த வள்ளல் வாழியே
திருக்குருகைச் சடகோபன் திருவடிகள் வாழியே

————

4. நாதமுனிகள் : (கி.பி. 823-903) கஜாவதாரம்சம். இவர் காட்டுமன்னார் கோயில் எனப்படும் வீரநாராயணபுரத்தில் (தென்ஆர்க்காடு மாவட்டம்) ஈசுவரபட்டர் என்பாருக்குத் திருமகனாக அவதரித்தார். அரங்கநாதர் என்பது இவரது பிள்ளைத் திருநாமம். வேறு திருப்பெயர்கள் : ‘அரங்கநாதமுனிகள், நாதப்பிரம்மர், தேவிகள், அரவிந்தப் பாவை, குமாரர். ஈசுவர முனிகள் மாமியார், வங்கிபுரத்து ஆய்ச்சி. ஆசாரியர் நம்மாழ்வார் (ஆழ்வாரை யோகத்தில் கண்டவர்). சீடர்கள் : உய்யக் கொண்டார், குருகைக் காவலப்பன், திருக்கண்ணமங்கையாண்டான், தெய்வநாயக ஆண்டான், நம்பி கருணாகரதாசர், ஏறு திருவுடையார், திருக்கண்ணமங்கையாண்டான், வானமாமலை தேவியாண்டான், உருப்பட்டுர் ஆச்சான் பிள்ளை,சோகத்துரர் ஆழ்வான்’ ஆகிய பதின்மர். திருநட்சத்திரம் – ஆனி அனுஷம். அருளிச் செயல்கள்; நியாச தத்துவம், புருஷ நிர்ணயம் முதலியன,

(ஆனி அனுஷம்)
நம: அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே |
நாதாய முநயே அகாத பகவத் பக்தி ஸிந்தவே ||

எப்போதும் பகவத் த்யானத்தில் ஆழ்ந்து பக்திக்கு கடலானவரும், அளப்பரிய ஞானம் நினைப்பரிய வைராக்யம்
ஆகியன பெற்றவருமான ஸ்ரீமந் நாதமுனிகளை வணங்குகிறேன்

ஆனி மாதம் அனுஷ நக்ஷத்திரத்தில் இன்று காட்டுமன்னார் கோயில் என்று அழைக்கப் படும்
அன்றைய வீர நாராயணபுரத்திலே அவதரித்தார். நாதமுனிகளும் இவர் திருத் தகப்பனார் ஈஸ்வர பட்டரும்
வீரநாராயணபுரத்திலே எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ மன்னாருக்கு நித்ய கைங்கர்யங்கள் செய்துகொண்டு வந்தனர்.
சில ஆண்டுகள் கழித்து இவர்கள் குடும்பத்தாருடன் திவ்ய ஸ்தல யாத்திரையாக வட நாடு சென்றனர்.
அவ்வமயம் அவர்கள் வாரணாசி, பூரி, அஹோபிலம், திருமலை, திருக்கோவலூர், திருவரங்கம் முதலிய
திவ்ய ஸ்தலங்களையும் ஸேவித்துவிட்டு, வீரநாராயணபுரம் திரும்பினர்.

ஒரு நாள் ஸ்ரீ மன்னார் ஸன்னதியில், திருநாராயணபுரத்திலே இருந்து வந்திருந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள்
சிலர் கோஷ்டியாக ” ஆராவமுதே அடியேன் உடலம் நின் பால் அன்பாயே ” என்ற திருவாய்மொழி பாசுரங்களை
ஸேவித்துக் கொண்டிருப்பதை கண்டும் , கேட்டும் மகிழ்ந்தனர்.
பிறகு அக் கோஷ்டியார் அப் பாசுரங்களின் கடைசி பாசுரத்தை ஸேவிக்கும் பொழுது அதில் வரும்
” ஆயிரத்துள் இப்பத்தும் ” என்ற வரியைக் கேட்டு, மற்ற ஆயிரம் பாசுரங்களையும் ஸேவிக்கும்படி வேண்டினர்.
ஆனால் அக்கோஷ்டியார் தங்களுக்கு இந்தப் பதினோறு பாசுரங்கள் மட்டுமே தெரியும் என்று கூறி,
மேலும் தகவல்கள் வேண்டுமென்றால் ஸ்வாமி சடகோபன் அவதரித்த திருக்குறுகூரிலே சென்று அதுபற்றி விசாரிக்கக் கூறினர்.

நாதமுனிகளும் திருக்குறுகூர் சென்று அங்கு இருந்தவர்களை விசாரித்தபோது அவர்கள்,
ஸ்ரீ மதுரகவி ஆழ்வாரின் சிஷ்ய வம்சத்திலே வந்த பராங்குசதாஸரை பார்க்கும்படி சொல்ல, நாதமுனிகளும் அவரைப் பார்த்தார்.
பராங்குசதாஸரிடம் , தான் மன்னார் ஸன்னதியில் கேட்ட பாசுரங்களைப் பற்றிக் கூறி,
ஆழ்வாரின் மேலும் ஆயிரம் பாசுரங்களைப் பற்றி வினவினார்.
பராங்குசதாஸரும், நாதமுனிகளுக்கு மதுரகவி ஆழ்வார் அருளிச்செய்த பாசுரங்களான ” கண்ணினுன் சிறுத்தாம்பு ”
பாசுரங்களைச் சொல்லி , ஸ்ரீ நம்மாழ்வார் வாசம் செய்த ஆதினாதன் ஸன்னதியிலே உள்ள
புளிய மரத்தடிக்கு சென்று அங்கே அவற்றை அனுஸந்திக்கச் சொன்னார்.

நாதமுனிகளும் நேராக புளியமரத்தடிக்கு வந்து, அங்கிருந்தபடியே ” கண்ணினுன் சிறுத்தாம்பு ” பதிகத்தின்
பதினோறு பாசுரங்களையும் மிகுந்த பக்தியுடன் பன்னிரண்டாயிரம் முறை ஸேவிக்க,
அப்பொழுது அவருக்கு ஸ்ரீ நம்மாழ்வாராகிய ஸ்ரீ சடகோபன் காட்சியளித்து, அவர் எதற்காக வந்திருக்கிறார் என்று கேட்க
நாதமுனிகளும் தான் வந்திருக்கும் காரணத்தைக் கூறி, ஆழ்வார் அருளிச் செய்துள்ள ஆயிரம் பாசுரங்களையும் கொடுத்தருள வேண்டினார்.
அப்பொழுது ஸ்ரீ நம்மாழ்வார் , தான் அருளிச்செய்த ப்ரபந்தங்களோடு, மற்றைய ஆழ்வார்கள் அனைவரும் அருளிச்செய்த
அனைத்துப் ப்ரபந்தங்களையும் பரிபூரணமாக அவரிடம் சொல்லி அருளினார்.

பின்னர் வீரநாராயணபுரம் திரும்பி, தான் அறிந்து கொண்ட ப்ரபந்தங்களை தம் மருமக்களான
கீழையகத்தாழ்வானையும், மேலயகத்தாழ்வானையும், திருக்கண்ணமங்கையாண்டானையும் அழைத்து அவர்களிடம்
இயல், இசையுடன் பாடி அருள அவர்களுடன் ஆழ்வார்களின் அனைத்து அருளிச் செயல்களும் பிரசித்தமாயின.
இன்றும் அரையர் ஸேவைகள் அபிநயத்துடன் திருவரங்கம் உட்பட சில திவ்யதேஸங்களில் ஸேவிக்கப்படுகின்றன.

ஒருநாள் அப்பிரதேஸத்து அரசன் வேட்டையாடிவிட்டு திரும்பும் பொழுது, நாதமுனிகளை ஸேவித்து ஆசி பெற்றுக் கொண்டு போனான்.
அங்கே சிறிது நேரத்தில் நாதமுனிகளின் திருமாளிகையிலிருந்து ஒரு பெண் வந்து, அவரிடம் தெண்டனிட்டு,
அவர் அகத்திற்கு சற்று நேரத்திற்கு முன்பு இரண்டு வில்லாளர்களும், ஒரு அழகிய ஸ்த்ரியும், ஒரு குரங்கும் வந்திருந்தனர் என்றும்,
அவர்கள் நாதமுனிகள் அகத்தில் எழுந்தருளியுள்ளாரா என்று வினவியதாகவும், பிறகு அவர் அங்கு இல்லை என்றவுடன் சென்றுவிட்டதாகவும்,
அவர்களை தேவரீர் வழியில் கண்டீர்களா என்று கேட்க, நாதமுனிகள் ஆச்சரியப்பட்டு அவ்வாறு வந்தவர்கள்
பெருமாளும் , பிராட்டியும், இளைய பெருமாளும் மற்றும் ஆஞ்சனேயரும்தான் என்று அறிந்து கொண்டு,
அவர்கள் சென்ற திசையிலேயே தாமும் சென்றார். வழியில் எதிரில் வந்தோரிடம் எல்லாம் அவர்களைப் பற்றி விசாரிக்க,
எல்லோரும் தங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று கூறினர். இதனால் மனம் மிகவும் ஏங்கி வழியிலேயே விழுந்து மோகித்தார்.

—————

5. உய்யக் கொண்டார்: (கி.பி. 826-931) ஐயத்தேனாம்சம். திருச்சி மாவட்டம் திருவெள்ளறையில் அவதரித்தார். திருநட்சத்திரம் சித்திரையில் கார்த்திகைவேறு திருநாமங்கள் பத்மாட்சர், புண்டரீகாட்சர். தேவிகள், ஆண்டாள், ஆசாரியர் நாதமுனிகள் சீடர்கள்: மணக்கால நம்பிகள், திருவல்லிக்கேணி பாண் பெருமாள் அரையர், சேட்டலூர் செண்டலங்காரதாசர் புண்டரீகதாசர், கோமடம் திருவிண்ணகரப்பன், உலகப் பெருமாள் நங்கை (நாதமுனிகளின் பேரர்- ஈசுவர முனிவர்களின்திருக்குமாரர்) நாதமுனிகளால் தம் திருப்பேரர் யமுனைத் துறைவருக்கு எல்லா இரகசியங்களை உபதேசிக்கவும், ஆழ்வார் தமக்குக் காட்டிக் கொடுத்த பவிஷ்யதாசார்ய விக்கிரகத்தைக் காட்டிக்கொடுத்து, இதையும் தாம் விரும்பிய பொருள் எனக் கூறித் தஞ்சமாகக் காட்டிக் கொடுக்கவும் நியமிக்கப்பட்டார்.

(சித்திரை கார்த்திகை)
நம: பங்கஜ நேத்ராய நாத: ஸ்ரீ பாத பங்கஜே |
ந்யஸ்த ஸர்வ பராய அஸ்மத் குல நாதாய தீமதே ||

ஸ்ரீமந் நாதமுனிகள் திருவடிகளில் தம் ஸர்வ பாரமும் விட்டுச் சரணடைந்த நம் குல நாதரான
ஸ்ரீ புண்டரீகாக்ஷரை வணங்குகிறேன்.

புண்டரிகாக்ஷன் என்ற பெயர் கொண்ட உய்யக்கொண்டார், சித்திரை மாதம் கார்த்திகை நக்ஷத்திரத்தில்
திருவெள்ளரையிலே அவதரித்தவர். ஆண்டாள் என்ற நங்கையை மணந்து கொண்ட இவருக்கு
இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர். நாதமுனிகளின் முக்கிய பத்து சிஷ்யர்களில் ப்ரதானமான இவர்,
திவ்யப் ப்ரபந்தம் முதலியவைகளை அவரிடம் கற்றார்.

ஒரு சமயம் நாதமுனிகள் இவரிடம் யோக ஸாஸ்த்திரத்தைக் கற்றுக் கொள்ளும்படி தெரிவித்தபொழுது,
ஆச்சாரியனின் க்ருபை உணர்ந்து ” பிணம் கிடக்க மணம் புணரலாமோ ” என்று வினவினார்.
அதாவது இப் பூவுலகிலே சம்ஸாரிகள் இறையுண்மை அறியாமல் உழன்று நடை பிணமாக தவிக்கும் போது,
தன்னுடைய நன்மைக்காக தான் மட்டும் எப்படி ” யோக ஸாஸ்திரம் ” கற்றுக் கொள்வது என்றும், அது தர்மமும் ஆகாது என்றும் கூறினார்.
உய்யக்கொண்டாரின் இந்த பதிலைக் கேட்ட நாதமுனிகள் மிகுந்த உவகை கொண்டு, உலகம் உய்யவும்,
லோக க்ஷேமத்திற்காகவும் வைணவ ஸாஸ்திரங்களை எங்கும் பரப்பவும் என்று கூறினார்.

சில காலம் கழித்து உய்யக்கொண்டாரின் திருமேனி தளர்வடைந்து, பின் திருநாட்டுக்கு எழுந்தருளும் நேரம் வந்தது.
அவர் தம் ஸிஷ்யரான மணக்கால் நம்பியையும் மற்ற ஸிஷ்யர்களையும் அழைத்து, மணக்கால் நம்பியே
நம் வைணவ தர்மத்தை உலகம் எங்கும் பரப்ப வழி செய்வார் என்று கூறி, நாதமுனிகள் முன்னம் தம்மிடம் அளித்திருந்த
பவிஷ்யதாசார்யர் விக்ரஹத்தை, அவரிடம் அளித்து ஒரு விவரத்தைக் கூறினார்.
பிற்காலத்தில் நாதமுனிகளின் புதல்வராகிய ஈஸ்வரமுனிக்கு ஒரு புதல்வன் பிறப்பார் என்றும்,
அவருக்கு ” யமுனைத்துறைவன் ” என்று பெயரிட்டு, அவர் மூலம் ஆழ்வார்களின் அருளிச்செயல்களையும்,
தர்ஸன ஸாஸ்திரங்களையும் வளர்க்கவும் என்று கூறிவிட்டு, நாதமுனிகளின் திருவடிகளைத் த்யானித்துக் கொண்டே
திருநாட்டுக்கு எழுந்தருளினார்.

வாலவெய்யோன்தனை வென்ற வடிவழகன் வாழியே
மால் மணக்கால் நம்பி தொழு‌ம் மலர்பதத்தோன் வாழியே
சீலமிகு நாதமுனி சீர் உரைப்போன் வாழியே
சித்திரையில் கார்த்திகை நாள் சிறக்க வந்தோன் வாழியே
நாலிரண்டும் ஐயைந்தும் நமக்கு உரைத்தான் வாழியே
நாலெட்டின் உட்பொருளை நடத்தினான் வாழியே
மால்அரங்க மணவாளர் வளம் உரைப்போன் வாழியே
வையம் உய்யக்கொண்டவர் தாள் வையகத்தில் வாழியே”

————

6. மணக்கால் நம்பி: (கி.பி.889-994) குமுதாம்சம் திருச்சி மாவட்டம் இலால்குடிக்கருகிலுள்ள (இது வட்டம்). மணக்கால் என்னும் சிற்றூரில் அவதரித்தார். திருநட்சத்திரம் – மாசிமகம். இவருக்கு இராமமிஸ்ரர் என்ற மற்றொரு திருப்பெயரும் உண்டு. ஆசாரியர் உய்யக்கொண்டார். சீடர்கள்: ‘யமுனைத் துறைவர் (ஆளவந்தார்), திருவரங்கப்பெருமாள் அரையர், தெய்வத்துக்கரசு நம்பி, பிள்ளையரசுநம்பி, சொட்டைநம்பி, சிறு புள்குருடையார் பிள்ளை,திருமாலிருஞ் சோலைதாசர், வங்கிபுரத்து ஆய்ச்சி’. ஆசாரியர் பெண்களைதம் முதுகில் சுமந்து சேற்று வழியைக் கடந்தவர். யமுனைத் துறைவருக்கு தூதுளங்கீரை பரிமாறி ஒருநாள் நிறுத்தி அவருக்கு இரகசியங்களை உபதேசித்தவர்.

(மாசி மகம்)
அயத்நதோ யாமுநம் ஆத்ம தாஸம் அலர்க்க பத்ரார்ப்பண நிஷ்க்ரயேண |
ய: க்ரீதவான் ஆஸ்தித யௌவராஜ்யம் நமாமிதம் ராமமேய ஸத்வம் ||

பட்டத்து இளவரசாகிய ஸ்ரீ யாமுனாசார்யரைத் தூதுவளை தந்து மிக எளிதாகத் திருத்திப் பணிகொண்ட
ஸ்ரீராம மிச்ரர் எனும் அளவிலா ஸாத்விகோத்தமரை வணங்குகிறேன்.

மணக்கால் நம்பி மாசி மாதம், மக நக்ஷத்திரத்தில் , ஸ்ரீரங்கத்துகு அருகிலே அமைந்துள்ள மணக்கால் என்னும்
சிறிய கிராமத்திலே அவதரித்தவர். இவருடைய இயற் பெயர் ராம மிஸ்ரர்.

உய்யக் கொண்டாரின் முதன்மை சிஷ்யரான இவர், அவருக்குப் பின் ஆச்சார்ய ஸ்தானத்தை ஏற்று,
வைஷ்ணவதர்மத்தை பிரச்சாரம் பண்ணினார். இளமைக் காலத்திலேயே தர்ம பத்தினியை இழந்த இவர்,
தன் ஆச்சாரியரான உய்யக் கொண்டாரின் திருமாளிகையிலேயே இருந்து , திருமாளிகை கைங்கர்யங்களை செய்து கொண்டிருந்தார்.
ஒரு நாள் உய்யக் கொண்டாரின் இரு மகள்களும், நதியில் நீராடிவிட்டு திரும்புகையில், வழியில்
ஒரு குறுகலான வாய்க்காலில் சேறு படிந்துள்ளதைக் கண்ட அப் பெண்கள், வாய்க்காலைக் கடக்காமல் தயங்கி நின்றனர்.
அப்பொழுது மணக்கால் நம்பி சற்றென்று அவ் வாய்க்காலில் உள்ள சேற்றின் மீது குறுக்கே படுத்துக் கொண்டு,
தம் மீது அவர்களை நடந்து போக வேண்டினார். பின்னர் இதனை அறிந்த உய்யக் கொண்டார்
அவ்வாறு செய்யலாமா என்று கேட்க, ஆச்சாரியன் பணிவிடையே தனக்கு பாக்கியமும், போக்கியமும் என்று பதிலளித்து,
தன் ஆச்சாரிய அபிமானத்தை வெளிப்படுத்தினார்.

காலம் செல்லச் செல்ல இவரின் திருமேனியும் தளர்வடைந்து போக, நாதமுனிகள் இவருடைய ஸ்வப்னத்தில் தோன்றி,
தான் மணக்கால் நம்பியிடம் அளித்து, பின் இவரிடம் அளிக்கப் பெற்ற
” பவிஷ்யாதாசார்யரின் ” விக்ரஹத்தை ஆளவந்தாரிடம் ஒப்படைக்கச் சொன்னார்.
மேலும் அவரை ஸ்ரீ ராமாநுஜரின் அவதாரத்தை எதிர் நோக்கி, அவரை நேரில் கண்டு,
ஸ்ரீ வைஷ்ணவ தர்மத்தை அவர் மூலம் வளர்க்க ஏற்பாடு செய்யும்படியும் உரைத்தார்.

பின்னர் மணக்கால் நம்பி, ஆளவந்தாரிடம் தான் ஸ்வப்னத்தில் கேட்ட விஷயத்தை சொல்லி,
கோயிலை நன்றாக பேணிக் காத்து, தீர்க்காயுசுடன் இருப்பாய் என்று ஆசிர்வதித்து,
தம் ஆச்சார்யர் உய்யக் கொண்டார் அவர்களின் திருவடிகளை த்யானித்து பரமபதம் அடைந்தார்.

———

7. யமுனைத்துறைவர் : (கி.பி.916-1041) இவர் ஆள வந்தார். சிம்மாசநாசம் அம்சம், இவர் வீரநாராயணபுரத்தில் நாதமுனிகளின் திருக்குமாரராகிய ஈசுவரமுனிகட்கு திருக்குமரராய் அவதரித்தார். திருத்தாயார், அரங்க நாயகி அம்மை. திருநட்சத்திரம் – ஆடி உத்திராடம். மாபாடியபட்டர் என்பாரை நாடி இலக்கணம் தருக்கம் முதலிய நூல்களைக் கற்றவர். அரசவைப் புலவர் ஆக்கியாழ்வானை வாதில் வென்றவர். வேறு திருப்பெயர்கள்: ‘யாமுனாசாரியர், யாமுநேயர்’. திருக்குமாரர்கள் :சொட்டை நம்பி, திருவரங்கப் பெருமாள் அரையர், தெய்வத்துக்கரசு நம்பி, பெரிய திருமலைநம்பி, பின்னை அரசுநம்பி, ஆசாரியர் மணக்கால்நம்பி. சீடர்கள்: ‘பெரிய நம்பி, பெரிய திருமலையாண்டான், திருமோகூரப்பன், மாறனேர் நம்பி, திருக்கச்சிநம்பி, அரசபத்தினி திருவரங்கத்தம்மன், திருவரங்கப் பெருமாளரையர், ஆளவந்தார் ஆழ்வான், வானமாமலை யாண்டான், தெய்வவாரி ஆண்டான், ஈசனாண்டான், சீயராண்டான், திருக்குருகூரப்பன், திருமோகூர் நின்றான்; தெய்வப்பெருமாள், வகுளாபரண சோமாசியார், திருமோகூர்தாசர், திருமாலிருஞ்சோலைதாசர், வடமதுரைப் பிறந்தான், ஆட்கொண்டி அம்மங்கி’ ஆக 20 திருநாமங்கள். இவருக்கு உடையவரையும் (இராமாநுசர்) சீடராகச் சொல்வர். இவர்தம் அருளிச் செயல்கள்: ‘சித்தித்திரயம் (ஆகம சித்தி ஸ்ம்வித்சித்தி, மோட்சசித்தி) திரயம் மூன்று, கீதார்த்தசங்கிரகம், ஆகமப்பிரமாண்யம் தோத்திரரத்னம் சதுஸ்லோகி, மகாபுருஷநிர்ணயம்’ என்ற ஆறு கிரந்தங்கள் –

(ஆடி உத்தராடம்)
யத் பதாம் போருஹ த்யாந வித்வஸ்தாசேஷ கல்மஷ: |
வஸ்துதாமுபயா தோஹம் யாமுநேயம் நமாமிதம் ||

அசத்தாய்க் கிடந்த எனக்கு ஆத்மாவைக் காட்டி, சத்தை தந்து எல்லா அஞ்ஞானங்களையும் த்வம்சம் செய்து
என்னை ஒரு பொருளாக உளவாக்கிய ஸ்ரீ யாமுனாசார்யரின் திருவடிகளை த்யாநிக்கிறேன்.

நாதமுனிகளின் குமாரர் ஈசுவரமுனிகளின் திருப்புதல்வனாக ஆடி மாதம், உத்தராட நக்ஷத்திரத்தில் அவதரித்தார்.
இச் சுபசெய்தியை மணக்கால் நம்பிக்கு தெரிவிக்க அவரும்,
வீரநாராயணபுரம் வந்து மிக்க மகிழ்ச்சியுடன் அக் குழந்தைக்கு ” யமுனைத்துறைவன் ” என்று பெயர் சூட்டினார்.

யமுனைத்துறைவன் அவருடைய ஆறாம் வயதில் குருகுல வாஸம் செய்து எல்லா ஸாஸ்திரங்களையும் கற்று
மிகச் சிறந்த வல்லுனராக விளங்கலானார். இச் சமயத்தில் அரச சபையில் ” ஆக்கியாழ்வான் ” என்ற
எல்லா ஸாஸ்திரங்களையும் நன்கு கற்ற ஒரு வித்வான் மிகுந்த கர்வத்துடனும், இறுமாப்புடனும் விளங்கினான்.
தன்னை வெல்ல ஒருவரும் இல்லை என்ற கர்வத்தில் இருந்த ஆக்கியாழ்வான், அரசனிடம் சொல்லி தன்னுடன்
வாதப் போர் செய்ய யாராவது வருகிறீர்களா என்று முறசறையச் சொன்னான். அரசரும் அவ்வாறே ஒப்புக்கொள்ள,
இதனைக் கேள்விப்பட்ட யுமுனைத்துறைவன் தான் அவனிடம் வாதம் செய்து அவனுடைய கர்வத்தை அடக்கத் தயார் என்று கூறினான்.
ஆச்சரியப்பட்ட அரசன் அவ்வாறு ஆக்கியாழ்வானை வாதப் போரில் வென்றால்
தன் நாட்டின் சரிபாதியை யமுனைதுறைவனுக்கு தருவதாக வாக்களித்தார்.

யமுனைத்துறைவனுக்கும், ஆக்கியாழ்வானுக்கும் தொடர்ந்து நடந்த வாதப் போரில் யமுனைத்துறைவன் வெற்றி பெற,
ஆக்கியாழ்வானும் தன் தோல்வியை ஒப்புக் கொண்டான். இதனால் மிகுந்த மகிழ்ச்சியுற்ற அரசனும்,
தான் வாக்களித்தபடியே தனது ராஜ்ஜியத்தின் பாதியை பகிர்ந்து யமுனைத்துறைவனுக்கு கொடுத்தார்.
ராஜ்ஜியத்தை ஆளவந்தவராகையால் , யமுனைத்துறைவன் அன்று முதல் ” ஆளவந்தார் ” என்று அழைக்கப்படலானார்.

ராஜ்ஜியத்தை ஆளவந்த ஆளவந்தாரும், ராஜ்ஜிய பரிபாலனத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருக்க ,
வைஷ்ணவ ஸாஸ்திரங்களையும், அருளிச் செயல் அருமைகளையும் அவர் வளர்க்க வேண்டி இருப்பதை மறந்த நிலையில்
அதனை அவருக்கு உணர்த்த விரும்பினார் மணக்கால் நம்பி. ஆளவந்தாருக்கு தூதுவளை கீரை மிகவும் விருப்பமான ஒன்று.
எனவே ஆளவந்தாரின் உணவுக்காக தினசரி தூதுவளை கீரையை , மணக்கால் நம்பி அனுப்பி வரலானார்.
திடீரென்று சில காலத்திற்கு பிறகு அக் கீரையை அனுப்புவதை நிறுத்திவிட்டார்.
தான் அருந்தும் உணவில் தூதுவளை கீரை இல்லாததைக் கண்ட ஆளவந்தார், பரிசாகரிடம் அதுபற்றி வினவ,
அவரும் ஒரு வயோதிக வைஷ்ணவர் தான் தினமும் தூதுவளை கீரையை சமைக்க கொண்டுவருவார் என்றும்,
ஆனல் சில நாட்களாக அவர் வரவில்லை என்று கூறி, அதனால் தான் சமையலில் அக்கீரையை சேர்க்கவில்லை என்றும் கூறினார்.
தூதுவளை கீரை இல்லாத உணவினை உண்ண ஆளவந்தாருக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.
அதனால் பரிசாரகரை அழைத்து, அந்த வயோதிக வைஷ்ணவர் மீண்டும் வந்தால் தன்னிடம் அழைத்து வரும்படி உத்தரவிட்டார்.
சில நாட்களில் மீண்டும் தூதுவளை கீரையுடன் வந்த மணக்கால் நம்பி அவர்களை , ஆளவந்தாரிடம் அந்தப் பரிசாரகன் அழைத்துச் சென்றான்.

மணக்கால் நம்பியை கண்ட ஆளவந்தார் , அவரிடம் அவரின் திருநாமம் மற்றும் அவர் எங்கிருந்து வருவதாகக் கேட்க,
அவரும் தான் மணக்கால் என்ற ஊரில் பிறந்தவராகையால் தனக்கு மணக்கால் நம்பி என்ற பெயரும்,
தான் ஆளவந்தாரின் பாட்டனாரான நாதமுனிகள் சம்பாதித்த செல்வங்களை அவரிடம் ஒப்படைக்க வந்திருப்பதாகவும் கூறினார்.
ஆளவந்தாரும் அச் செல்வம் எப்பேற்பட்டது என்று வினவ , மணக்கால் நம்பியும் அச் செல்வமானது காலத்தால் அழியாதது ,
இரு நதிகளுக்கு இடையேயும் , ஏழு ப்ராகாரங்களுக்கு நடுவிலும், ஒரு பாம்பினால் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று பதிலுரைத்தார்.
ஆளவந்தாரும் அச் செல்வத்தைப் பெற தனது படை பரிவாரங்களுடன் புறப்படத் தயாரானார்.
ஆனால் மணக்கால் நம்பி, அவரிடம், அவர் மட்டுமே தனியாக வர வேண்டும் என்று தெரிவிக்க,
ஆளவந்தாரும் அதற்கு உடன்பட்டு அவருடன் புறப்பட்டு திருவரங்கம் வந்தடைந்தார்.

திருவரங்கம் பெரிய கோவிலுனுள்ளே சென்ற ஆளவந்தார் அங்கு பாம்பணையிலே ஸயனித்திருக்கும் பெரிய பெருமாளைக் கண்டு,
மிக்க ஆனந்தித்து , அங்கேயே மணக்கால் நம்பியின் திருவடிகளிலே விழுந்து வணங்கி அவருடைய சிஷ்யரும் ஆனார்.
அதன் பின் மணக்கால் நம்பியின் உபதேசத்தின்படி, ஆளவந்தார் அரங்கனின் அந்தரங்கராகி,
திவ்யப் பிரபந்த ஸேவைகளையும், காலக்ஷேபங்களையும் செவ்வனே நடத்திக் கொண்டு,
நாதமுனிகள், மணக்கால் நம்பியின் மூலம் அளித்த ” பவிஷ்யதாச்சாரியர் ” விக்ரஹத்தையும் ஆராதித்து வரலானார்.

ஒரு சமயம் காஞ்சிபுரம் வந்த ஆளவந்தார், திருக்கச்சி நம்பிகளை நலம் விசாரித்து விட்டு , பேரருளாளனை ஸேவிக்க,
தேவப் பெருமாள் திருக் கோயிலுக்கு எழுந்தருளினார். அவ்வமயம் அங்கே யாதவப் பிரகாசர் தம்முடைய ஸிஷ்யர்களுடன் வந்திருந்தார்.
பெருமாளை ஸேவித்துவிட்டு, ப்ராகாரத்திலே வரும்பொழுது, அக் கோஷ்டியினரைக் கண்ட ஆளவந்தார்,
அக் கோஷ்டியிலே வருபவர்களில் இளையாழ்வார் யார் என்று திருக்கச்சி நம்பிகளிடம் கேட்க,
அவரும் சிவந்த முகத்துடனும், நெடியவராய், முழங்கால் அளவு நீண்ட கைகளை உடையவருமாக இருப்பவரே அவர் என்று கூற ,
அவரைப் பார்த்த மாத்திரத்திலே சந்தோஷத்துடன் தன் மனத்திற்குள்ளே ” ஆ முதல்வன் இவன் ” என்று கூறிக் கொண்டார்.
மனதிற்குள்ளேயே அவரை ஆசிர்வதித்தார்.

ஆளவந்தாருக்கு ஒரு சமயம் உடலிலே ” பிளவை ” நோய் ஏற்பட்டது.
அதன் காரணமாக அவரால் அரங்கனுக்கு நித்ய கைங்கர்யங்கள் செய்ய முடியாமலும்,
தினமும் காலக்ஷேபங்கள் நடத்த முடியாமலும் மிகவும் கஷ்டப்பட்டார். பெருமாள் கைங்கர்யம் பண்ண முடியவில்லையே என்று கலங்க,
அப்பொழுது அசரீரியாக ஒரு குரல் ” உமது கோஷ்டியிலே யாரேனும் இந்த நோயை வாங்கிக் கொள்வார்களா என்று பாருமே” என்று சொன்னது.
ஆளவந்தாரும் மறுநாள் தனது காலக்ஷேப கோஷ்டியினரிடம் , யாரேனும் சில காலத்திற்கு
தன் பிளவை நோயை வாங்கிக் கொள்ள முடியுமா என்று கேட்டார். ஆளவந்தாரின் காலக்ஷேப கோஷ்டியிலே
பல இனத்தவரும் இருந்தனர். அவ்வாறு இருந்தவர்களில் அக்காலங்களிலே தீண்டத்தகாத இனத்தவராகக் கருதப்பட்ட
இனத்தைச் சேர்ந்த ” மாறனேர் நம்பி ” என்பவரும் இருந்தார். மற்றையவர்கள் எல்லாம் ஆளவந்தார் கேட்டதற்கு
பதில் அளிக்க முடியாமல் திகைத்து தயங்கி நிற்க, அச் சமயம் மாறனேர் நம்பி சற்றும் தயங்காமல்
ஆளவந்தாரின் பிளவை நோயை, தான் பகவத் ப்ரஸாதமாக ஏற்றுக் கொள்வதாகக் கூறி,
உவந்து அந் நோயை அவரிடம் இருந்து பெற்றுக் கொண்டார். பிறகு ஆளவந்தாரிடம், அவரின் நோயை பெற்றுக் கொள்வதால் ,
அவரின் உடல் உபாதைகள் நீங்கி, பகவத் கைங்கர்யங்களை செவ்வனே மேற்கொள்ள முடியுமென்பதால்,
அது தனக்கு பாக்கியமே என்றும் கூறினார்.
இப்படியாக தனக்கு ஒரு பாகவதன் இருக்கிறான் என்று கண்டு, உள்ளம் பூரிப்படைந்தார்.
மாறனேர் நம்பியின் ஆச்சார்ய பக்தியைக் கண்டு வியந்து கொண்டிருந்த தன் ஸிஷ்யரான பெரிய நம்பியிடம்,
ஆளவந்தார், தம்மைப் போலவே மாறனேர் நம்பியையும் நினைத்துக் கொண்டு,
அவருக்கு சகல சிறப்புகளையும் செய்யும் என்று கட்டளையிட்டார்.

பிளவை நோய் நீங்கிய ஆளவந்தார் முன்பு போலவே பகவானுக்கு கைங்கர்யங்கள் செய்து கொண்டும்,
காலக்ஷேபங்கள் நடத்திக் கொண்டுமிருந்தார். பின் சிறிது காலத்தில் அவரின் உடல் தளர்வுற்ற நிலையில்,
தான் தினமும் ஆராதித்து வந்த “பவிஷ்யாதாச்சார்யர் ” விக்ரஹத்தை திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் கொடுத்து,
இந்த மூர்த்திதான் அந்த இளையாழ்வார் என்று அருளினார். இதன் பின் பத்மாஸனம் இட்டுக் கொண்டு,
தம்முடைய ஆச்சார்யரான மணக்கால் நம்பியின் திருவடி அருகிலே அமர்ந்து கொண்டு,
கபாலம் விரிந்து வழிவிட , திருநாட்டுக்கு எழுந்தருளினார்.

———

8. பெரியநம்பிகள் : (கி.பி. 997-1102); குமுதாம்சம். திருவரங்கத்தில் அவதரித்தார். திருநட்சத்திரம் – மார்கழி கேட்டை வேறு திருநாமங்கள்; பராங்குசதாசர், மகாபூர்ணர், பூர்வாசாரியர். குமரர் : புண்டரீகாட்சர். குமாரி அத்துழாய் அம்மாள். சீடர்கள் : ‘எம்பெருமானார், திருக்கச்சிநம்பி, மலைகுனிய நின்றார். சடகோபதாசர், அணிஅரங்கத்து அமுதனார் பிள்ளை, திருவாய்க்குலமுடையார் பட்டர்’ ஆகிய அறுவர். இவர் எம்பெருமானாரை மதுராந்தகத்தில் கண்டு பஞ்சசம்ஸ்காரம்[3] செய்தவர். இவர் மாறனேர் நம்பிக்கும் பணி விடைகள் செய்து பிரம்ம மேத சமஸ்காரம் பண்ணினார். அஷ்டதிக்கஜங்களில் ஒருவரான கந்தாடையண்ணன் முதலானவர்கள் மாறனேர் நம்பிக்கு பிரம்மசமஸ்காரம் செய்ததற்குப் பெரிய நம்பிகளைச் சமூகத்தினின்றும் நீக்கி வைத்தனர். பெருமாள் திருத்தேரில் அணி வீதியில் எழுந்தருளினபோது தேர்நின்றது. “பெரிய நம்பிகளை உனது திருத்தோளின்மேல் எழுந்தருளப் பண்ணி வாரும்” என்று கந்தாடை அண்ணனுக்கு பெருமாள் அர்ச்சகர் மூலமாக அருளிச் செய்ய, அப்படி அநுட்டித்துக் காட்டியபின்தான் திருத்தேர் நகர்ந்ததாம்.

(மார்கழி கேட்டை)
கமலாபதி கல்யாண குணாம்ருத நிஷேவயா |
பூர்ண காமாய ஸததம் பூர்ணாய மஹதே நம: ||

எப்போதும் கமலாபதியான ஸ்ரீமந் நாராயணனின் கல்யாண குணக் கடலில் ஆழ்ந்துள்ள
நிறைவுள்ள ஸ்ரீ மஹா பூர்ணரை வணங்குகிறேன்.

பெரிய நம்பி, மார்கழி மாதம் கேட்டை நக்ஷத்திரத்தில் , திருவரங்கத்திலே அவதரித்தவர் ஆவார்.
இவரது குமாரர் திருநாமம் புண்டரிகாக்ஷர், புதல்வி அத்துழாய். ஆளவந்தாரின் அடியார்களில்
பெரிய நம்பி, பெரிய திருமலை நம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி, திருவரங்கப் பெருமாள் அரயர்,
திருமாலையாண்டான், திருக்கச்சி நம்பி ஆகிய ஆறு பேருமே மிகச் சிறந்தவர்கள்.
ஸ்வாமி எம்பெருமானாரின் உயர்வுக்கு முக்கிய காரணகர்த்தர்கள். இவர்களில் முதலாவதாக இருப்பவர் பெரிய நம்பி.

ஸ்வாமி இராமாநுஜருக்கு பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து வைத்தவர் பெரிய நம்பிகள். ஆளவந்தாரின் அரிய பெருமைகளை
இராமாநுஜருக்கு சொல்லியவர். ஆளவந்தார் உடல் நலம் குன்றியிருந்தபொழுது, அவரை தரிசிக்க இராமாநுஜரைக்
காஞ்சியிலிருந்து அழைத்து வந்து கொண்டிருக்கும் போதே ஆளவந்தார் பரமபதித்து விட்டார்.
இது தெரிந்தவுடன் பெரிய நம்பிகள் மிகுந்த துயரமும், ஏமாற்றமும் அடைந்தார்.

ஒரு நாள் அத்துழாய் , அதிகாலையில் தீர்த்தமாட நதிக்குச் செல்லும் போது, துணைக்கு தன்னுடன் வரும்படி தன் மாமியாரை அழைத்தார்.
ஆனால் அவரோ ” உன் சீதன வெள்ளாட்டியை துணைக்கு அழைத்துக் கொண்டு போ ” என்று சொல்ல,
அத்துழாய் பெரிய நம்பியிடம் சென்று மாமியார் சொன்னதை வருத்தத்துடன் கூற,
அவர் இதனை உடையவரிடம் கேட்குமாறு சொல்லியனுப்பினார். அத்துழாயும் உடையவரை சந்தித்து
தன் தந்தையிடம் சொன்னதையும் அதனை அவர் உடையவரிடம் சொல்லும்படி கூறியதையும் சொல்ல,
உடையவரும் , முதலியாண்டானை அழைத்து, அத்துழாய்க்கு துணையாக ” சீதன வெள்ளாட்டியாகச் ” செல்லுமாறு பணித்தார்.

பெரிய நம்பியின் காலத்திலே சோழ தேஸத்தை ஆண்டு கொண்டிருந்தவன், அதி தீவிர சைவனான கிருமி கண்ட சோழன்.
இவன் நாலூரான் என்பவனின் தூண்டுதலால், சைவ சமயத்தை சாராத பலரிடமும்,
சிவனுக்கு மேம்பட்ட தெய்வம் எதுவும் இல்லை என்று மிரட்டி, கையொப்பம் பெற்று வருமாறு தனது வீரர்களுக்கு உத்தரவிட்டிருந்தான்.
அவ்வாறு கையொப்பம் பெற இராமாநுஜரையும் பணிக்க விரும்பினான்.இதனை அறிந்து கொண்ட கூரத்தாழ்வான்,
இராமானுஜருக்கு எந்தத் தீங்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்துடன், தான் இராமாநுஜரைப் போல
காவி வஸ்திரம் அணிந்து கொண்டு, தன்னுடன் பெரிய நம்பியையும் அழைத்துக் கொண்டு, அரண்மனைக்குச் சென்றார்.
அரசனின் ஆணைக்கு இணங்கி, கையொப்பமிட மறுத்த கூரத்தாழ்வான், பெரிய நம்பி இருவரின் கண்களையும் பிடுங்க ஆணையிட,
ஆனால் கூரத்தாழ்வான் தம் கண்களை தாமே பிடுங்கிக் கொள்ள,
பெரிய நம்பியின் கண்கள் மட்டும் பிடுங்கப் பட்டன. வயது முதிர்ச்சியின் காரணமாக வேதனை தாளமாட்டாமல்
பெரிய நம்பிகள் கீழே சாய்ந்து அவ்விடத்திலிருந்தே திருநாட்டுக்கு எழுந்தருளினார்.

————

9. இராமாநுசர் : (கி.பி. 1017-1137); சேஷாம்சம். திருப்பெரும்புதுரரில் கேசவ தீட்சிதருக்கும் காந்திமதி அம்மைக்கும் திருக்குமாரராய் அவதரித்தார். திருநட்சத்திரம் சித்திரை-திருவாதிரை குடிஆசூரிகுலம். இவரை பகவதாம்சம், இலக்குமி அம்சம், சேனை முதலியார் அம்சம், பஞ்சாயுத அம்சம் என்றும் சொல்வர். வேறு திருநாமங்கள் ‘இளையாழ்வார், உடையவர், யதிராசர், இலட்சுமணமுனி, சடகோபன், பொன்னடி, கோயிலண்ணன், பாஷ்யக்காரர், எம்பெருமானார், பூதபுரீசர், தேசிகேந்திரர், திருப்பாவை ஜீயர்’ என்பன. திருத்தமக்கையார் நாச்சியாரம்மாள் தேவிகள், தஞ்சமாம்பாள் திருவேங்கடமுடையானுக்கு இலட்சத்தலத்தில் அலர்மேல் மங்கை நாச்சியாரை எழுந்தருளப்பண்ணி திருவாழி திருச்சங்கு சாதித்தருளினார். இதனால் அவனுக்கு மாமனாரும் ஆசாரியருமானார். திருக்குறுங்குடி நம்பிக்குப் பஞ்சசம்ஸ்காரம் செய்து ‘இராமாதுசநம்பி’ என்ற தாசிய நாமம் சாத்தியருளினார். தில்லி பாட்சாவிடமிருந்த செல்வபிள்ளையை திரு நாராயணபுரத்தில் எழுந்தருளப் பண்ணினார். இவருக்கு ஆசாரியர்கள்: ‘பெரிய நம்பி, திருமாலையாண்டான், திருக்கோட்டியூர் நம்பி, திருவரங்கப்பெருமாளரையர், பெரியதிருமலைநம்பி, திருக்கச்சி நம்பி’ சீடர்கள்: எம்பார், முதலியாண்டான், கூரத்தாழ்வான், கந்தாடையாண்டான், புண்டரீகாட்சர், (பெரிய நம்பியின் திருக்குமாரர்), தெற்காழ்வான், (திருக்கோட்டியூர்நம்பியின் திருக்குமாரர்) சொட்டைநம்பி (ஆளவந்தாரின் திருமகனார்), அணியரங்கத் தமுதனார் பிள்ளை, கோவிந்த சீயர் (யாதவப் பிரகாசர்), பிள்ளை உறங்கா வில்லிதாசர், பொன்னாச்சியார் (வில்லிதாசரின் தேவிகள்) இன்னும் பல அம்மையார்கள், அருளாளப்பெருமாள் எம்பெருமானார் சீயர், வடுகநம்பி, சுந்தரத் தோளுடையார் (திருமலையாண்டான் குமாரர்), பிள்ளைத் திருமலைநம்பி (பெரியதிருமலை நம்பி குமாரர்), திருக்குருகைப் பிரான் பிள்ளான், இன்னும் ஆயிரம் சீடர்கள், 12000 ஏகாங்கள், 74சிம்மாசனாதிபதிகள், 700கீடர்கள் 300 கொத்தை யம்மைஷியகளும்,சாத்தின.சாத்தாத முதலிகளும்,மகாராசர்களும், திருநாராயணபுரத்தில் ஐம்பத்திருவரும் மற்றும் பலரும்.

இவருடைய திருமேனிகள் நான்கு (1) நம்மாழ்வார் நாதமுனிகளுக்குக் கொடுத்தருளிய ‘பவிஷியதாசார்யர் அணிக்கிரகம், (2) உடையவர்தானே திருநாராயணபுரத்தில் ஐம்பத்திருவர்க்காக ஏறியருளப் பண்ணியது; (3) கந்தாடையாண்டான் திருப்பெரும்புதூரில் நிறுவச் செய்து அதனை உடையவர் ஆலிங்கனம் செய்தது, (4) பின்பு கந்தாடை யாண்டான்நம்பெருமான் நியமனத்தினால் அருளப்பண்ணியது. கந்தாடையாண்டானும், பட்டரும் அவர் திருநட்சத்திரங்கள் தோறும் பெருவிழாவாக நடத்திக் கொண்டிருந்தனர். இவருக்குப் பாலமுதம் காய்ச்சும் கைங்கரிய பரர்கிடாம்பிப் பெருமாளும், வடுக நம்பியும், பிரசாதம் தயாரிக்கும் கிடாம்பியாச்சானும் திருமடைப்பள்ளித் தொண்டர்கள். இவர்தம் அருளிச் செயல்கள்; ‘ஸ்ரீபாஷ்யம், வேதாந்தசாரம், வேதாந்ததீபம்,வேதாந்த சங்கிரகம், கத்தியத்திரயம், நித்தியம், கீதாபாஷியம்’ ஆகிய ஒன்பது வயது 120.

(சித்திரை திருவாதிரை)
யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம
வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேநே |
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ:
ராமாநுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே ||

ஸ்ரீ அச்யுதனின் திருவடியில் பக்தியால் மற்றெல்லாவற்றையும் புல்லாக மதித்துத் தள்ளியவரும்,
அடியேன் குருவும், கருணைக் கடலே போல் வடிவெடுத்தவரும் ஆகிய ஸ்ரீ பகவத் ராமானுசரை அடி பணிகிறேன்.

ஸ்ரீ பெரும்பூதூரைச் சேர்ந்த கேசவசோமாயாஜி என்பவருக்கும், பெரிய திருமலை நம்பியின் மூத்த சகோதரியுமான காந்திமதிக்கும் புத்திரனாக ,
சித்திரை மாதம், திருவாதிரை நக்ஷத்திரத்திலே அவதரித்தார். இளம் வயதிலேயே குருவிடம், குரு உபதேஸங்களையும்,
வேத சாஸ்திரங்களையும் ஐயம் திரிபுற கற்று, எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
அவரின் 16 வது வயதிலே தஞ்சமாம்பாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

காஞ்சி ஸ்ரீ.தேவராஜ ஸ்வாமிக்கு நித்ய ஆலவட்ட கைங்கர்யம் பண்ணிக்கொண்டிருந்த திருக்கச்சி நம்பிகள்,
தினமும் பூவிருந்தவல்லியிலிருந்து, காஞ்சிபுரத்திற்கு, ஸ்ரீபெரும்பூதூர் வழியாகச் சென்று வந்து கொண்டிருந்தார்.
இதனைக் கண்ட இராமாநுஜருக்கு, திருக்கச்சிநம்பிகள் மீது மிகுந்த பற்றும்,
பக்தியும் ஏற்பட்டது. ஒரு நாள் திருக்கச்சி நம்பிகளை அடி பணிந்து, தம் இல்லத்திற்கு அழைத்துச் சென்று,
அவரை நன்கு உபசரித்து அனுப்பினார். இவ்வாறாக தினமும் அவர்கள் நட்பு வளர்ந்து கொண்டு வந்தது.
இராமாநுஜரின் முகப் பொலிவு, அறிவு, ஆழ்ந்த ஞானம், அதீத பண்பு முதலியன திருக்கச்சி நம்பிகளை மிகவும் கவர்ந்து,
அவரிடம் இவருக்கு ஒரு தெய்வீகப் பற்று ஏற்பட்டது. மிகப் பல ஆன்மீக விஷயங்களை இருவரும் அளவளாவி வந்தனர்.

யாதவப் பிரகாசர் என்னும் வித்வானிடம், இராமாநுஜரும், அவர் சிற்றன்னையின் மகனுமான கோவிந்தனும்
அத்வைத வேதாந்த பாடங்களை கற்று வந்தனர். மிகவும் சிரத்தையுடன் பாடங்களைக் கற்று வந்த இராமாநுஜர் ,
தனக்குத் தோன்றும் பல விஷயங்கள் பற்றி யாதவப் பிரகாசரிடம் எதிர் கேள்விகள் கேட்க,
இதனைக் கண்டு மகிழ்ச்சியடைய வேண்டிய யாதவப் பிரகாசர், அதற்குப் பதிலாக அவரிடம் பகைமை எண்ணம் கொள்ளலானார்.
அதன் காரணமாக இராமாநுஜரை வஞ்சனையால் மாய்த்துவிட முடிவு செய்தார்.
இதனை முன்னிட்டு தன்னுடைய சீடர்கள் பலருடன் இராமாநுஜரையும் அழைத்துக் கொண்டு, காசி யாத்திரை புறப்பட்டார்.
அங்கு இராமாநுஜர் தனிமையில் இருக்கும் பொழுது அவரைக் கொல்ல சதி செய்தார். இதனை அறிந்து கொண்ட கோவிந்தர்,
இராமாநுஜரிடம் விவரமாக எடுத்துக் கூறி, அங்கிருந்து அவரைத் தப்பி ஓடும்படி வேண்டிக் கொண்டார்.
அங்கிருந்து தப்பி வெளியேறிய இராமாநுஜர், காஞ்சி பேரருளாளன் க்ருபையால், வழி காட்டப்பட்டு காஞ்சி நகரை வந்தடைந்தார்.
காஞ்சிபுரத்திலே இருந்து கொண்டு, அங்குள்ள சாலைக் கிணற்றில் தீர்த்தம் எடுத்து,
தேவப் பெருமாளுக்கு தீர்த்த கைங்கர்யம் செய்து கொண்டு வந்தார்.

பின் இவரை ஸ்ரீரங்கத்தில் இருக்கும் ஆளவந்தாரிடம் அழைத்துச் செல்வதற்காக காஞ்சி வந்திருந்த பெரிய நம்பியுடன்,
இவரும் ஸ்ரீரங்கம் நோக்கிப் புறப்பட்டார். ஸ்ரீரங்கத்தை நெருங்கும் தருவாயில், ஆளவந்தார் பரமபதித்து விட்ட செய்தியினைக் கேள்விப் பட்டு,
ஆளவந்தாருடன் தனக்கு அளவளாவ கொடுத்து வைக்கவில்லையே என்று மிக்க துயரமுற்று கதறினார்.
ஓரளவிற்கு மனதை தேற்றிக் கொண்டு, அவரின் திருமேனியையாவது தரிசிக்கலாம் என்ற எண்ணத்துடன்
அவரின் பூத உடல் இருந்த இடம் வந்தடைந்தார். ஆளவந்தாரின் திருமேனியை காணும் போது,
அவரின் ஒரு கையில் மூன்று விரல்கள் மடக்கப்பட்டு இருந்த நிலையைக் கண்டு, அவரின் திருவுள்ளப் படி நிறைவேறாத
அவர் தம் மூன்று விருப்பங்களினால் தான் அவரின் மூன்று விரல்களும் மடங்கிய நிலையில் இருப்பதை உணர்ந்து கொண்டு,
அதனைப் பற்றி அங்கிருந்தவர்களிடம் வினவ அவர்களும் ஆளவந்தாரின் மூன்று விருப்பங்களையும் கூறினர். அவை :-

ஸம்பிரதாயத்திற்கு, வியாஸரும் , பராசர பட்டரும் ஆற்றியுள்ள கைங்கர்யத்திற்கு, உபகாரமாக அவர்களின் பெயர்களை
வருங்காலத்தில் பிறக்கப் போகும் பிள்ளைகளுக்கு சூட்ட வேண்டும்.

ஸ்வாமி நம்மாழ்வார் அருளிச்செயலான திருவாய் மொழிக்கு நல்ல உரை எழுதப்பட வேண்டும்.

வியாசரின் ப்ரம்மஸூத்ரத்திற்கு ஒரு பாஷ்யம் இயற்றப் பட வேண்டும்.

ஆளவந்தாரின் மேற்படியான விருப்பங்களை தான் நிறைவேற்றி வைப்பதாக இராமாநுஜர் சபதமெடுக்க,
உடனேயே ஆளவந்தாரின் மடங்கிய மூன்று விரல்களும் விரிந்தன.

இராமாநுஜருக்கு ஆறு ஆச்சாரியர்கள். அவர்களில் பெரிய நம்பிகளிடம் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து கொண்டார்.
பெரிய திருமலை நம்பியிடம் ( அவரின் மாமாவும் ஆவார் ) இராமாயணம், திருக்கோஷ்டியுர் நம்பியிடம் திருமந்த்ரார்த்தம்,
திருமாலையாண்டானிடம் திருவாய் மொழி, திருவரங்கப் பெருமாள் அரையரிடம் ( இவர் ஆளவந்தாரின் பேரன் )
அருளிச் செயலின் மற்ற மூன்று ஆயிரங்கள், இயல், கலை,
திருக்கச்சி நம்பிகளிடம் தேவப் பெருமாளின் ஆறு வார்த்தை அர்த்தம் ஆகியவைகளை கற்றுக் கொண்டார்.

திருக்கச்சி நம்பிகளிடம் மிகுந்த ஈடுபாடும் அன்பும் கொண்ட இராமாநுஜர் ஒரு நாள்,
அவரை தன் அகத்திற்கு விருந்துண்ண அழைத்திருந்தார். அவர் புசித்த பின் பாகவத சேஷம் உண்ண வேண்டும் என்பது இவர் விருப்பம்.
திருக்கச்சி நம்பிகள் இல்லத்திற்கு வந்த சமயம் , இராமாநுஜர் வெளியில் சென்று இருந்தார்.
ஆனால் வேறு பகவத் விஷயம் காரணமாக, அவசரமாக செல்ல வேண்டியிருந்ததால்,
இராமநுஜர் வரும் வரை காத்திருக்காமல் தனக்கு, அமுது சாதிக்க தஞ்சமாம்பாளை வேண்ட,
அவரும், நம்பியை அமரச் செய்து அங்கு அவருக்கு உணவிட்டு, அவர் சென்ற பின் ,
மீதமிருந்த அன்னங்களை வெளியில் எறிந்துவிட்டு, இல்லம் முழுவதும் சுத்தி செய்து, கழுவி,
இராமாநுஜருக்காக மீண்டும் சமைத்துக் கொண்டிருந்தார்.

இல்லம் திரும்பிய இராமாநுஜர் நடந்தவைகளை கேள்விப்பட்டு, தம் மனையாள் நடந்து கொண்ட விதம் பற்றியும்,
தமக்கு பாகவத சேஷம் கிடைக்கவில்லையே என்றும் மிகுந்த வருத்தமுற்றார். பின் திருக்கச்சி நம்பிகளை சந்தித்து
அவர் பாதம் பணிந்து மன்னிக்க வேண்டினார். இது போலவே பிறிதொரு சமயம்,
பெரிய நம்பிகளின் மனிவியுடன் கிணற்றில் நீர் எடுக்கும் போது வாக்குவாதம் ஏற்பட்டு, தம் குலத்தை விட
பெரிய நம்பியின் மனைவியின் குலம் தாழ்ந்தது என்று தஞ்சமாம்பாள் கூறினார்.
இதனால் மன உளைச்சலடைந்த பெரிய நம்பியின் மனைவி நடந்த சம்பவங்களை அவரிடம் தனிமையில் கூற,
பெரிய நம்பியும் இதனைக் கேள்விப்பட்டால் இராமாநுஜரின் மனம் மிகுந்த வருத்தமடையும் என்று எண்ணி
அவரிடம் சொல்லிக் கொள்ளாமல், மனைவியுடன் ஸ்ரீரங்கம் திரும்பி விட்டார். இவர்களை காணாது தவித்த
இராமநுஜர் பின் தம் மனைவியின் மூலம் நடந்தவைகளைக் கேள்வியுற்று, ஆச்சார்யருக்கு நேர்ந்த அபசாரத்தினால்
மிகுந்த மன வேதனை அடைந்து இல்லறத்தைத் துறந்து துறவறம் மேற்கொள்ள முடிவெடுத்தார்.

தாம் துறவறம் மேற்கொள்ளப் போவதை திருக்கச்சி நம்பிகளிடம் சொல்லி, காஞ்சி தேவப் பெருமாள் கோயில்
திருக்குளத்திலே தீர்த்தமாடி, தேவப் பெருமாள் துணையுடன், ஆளவந்தாரை ஆச்சார்யராக மனதில் நினைத்துக் கொண்டு,
காஷாயம் தரித்தும், திரிதண்டத்தை கையில் பிடித்துக் கொண்டும் ஸன்யாஸத்தை ஏற்றுக் கொண்டார்.
அவருடன் எப்பொழுதும் அவரது சீடர்களாக அவரின் சகோதரி கமலாம்பாளின் புதல்வரான முதலியாண்டானும், கூரத்தாழ்வானும் இருந்தனர்.
இராமாநுஜரின் திரிதண்டமாக முதலியாண்டானையும், பவித்திரமாக கூரத்தாழ்வனையும் முன்னோர்கள் கூறுவர்.

ஆளவந்தாரின் மறைவிற்குப் பிறகு ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தின் மூலத் தூணாகிய திருவரங்கத்தில் ,
சம்பிரதாயத்தை நிர்வகிக்கக் கூடியவர் இல்லாத காரணத்தினால், பெரிய நம்பிகளும், திருவரங்கப் பெருமாள் அரையர்
முதலானோர் இராமாநுஜரை திருவரங்கம் அழைத்து வர பெரு முயற்சிசெய்தனர். பெரிய நம்பிகள்,
பண் இசையில் திவ்யப் பிரபந்தத்தை இசைக்க வல்ல திருவரங்கப் பெருமாள் அரையரை காஞ்சிக்கு அனுப்பி
எப்பாடு பட்டாகிலும் இராமாநுஜரை திருவரங்கம் அழைத்துவர வேண்டினார்.
அரையரும் காஞ்சி தேவப் பெருமாள் ஸன்னதியில் பன்னுடன் திவ்யப் ப்ரபந்தத்தை இசைக்க ,
உள்ளம் மகிழ்வுற்ற காஞ்சி எம்பெருமான் அவருக்கு வரமளிக்க, அவ் வரத்தின் மூலம் பேரருளாளனின் ஒப்புதலுடன்
இராமாநுஜரை திருவரங்கத்திற்கு அழைத்து வந்தார்.
அவருடன் அவர் சீடர்களான முதலியாண்டான் மற்றும் கூரத்தாழ்வானும் திருவரங்கம் வந்தனர்.

திருவரங்கம் வந்து சேர்ந்த இராமாநுஜர் பெரிய பெருமாள் கோயில் கைங்கர்யத்தை ஏற்றுக் கொண்டு,
பல நிர்வாக சீர்திருத்தங்களை நடைமுறை படுத்தினார். இன் நடைமுறைகளே
ஸ்ரீரங்கம் திருக் கோயிலில் இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

திருக்கோஷ்டியூர் நம்பிகளிடத்திலே திருமந்திரத்தையும் அதன் விசேஷார்த்தங்களையும் அறிந்து வர வேண்டி,
இராமாநுஜர் பதினெட்டு தடவைகள் திருவரங்கத்திலே இருந்து திருக்கோஷ்டியூர் சென்று வந்தார்.
ஒவ்வொரு முறையும் மனம் தளராமல் சென்று, பதினெட்டாவது முறை சென்ற போது முற்றாக மந்த்ரார்த்தங்களை கற்றுக் கொண்டார் –
இவற்றை முதலியாண்டான், கூரத்தாழ்வான் தவிர வேறு எவரிடமும் தெரிவிக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன்.

மந்த்ரார்த்த உபதேஸங்களை கற்றுக் கொண்டு திரும்பிய இராமாநுஜரின் மனம் வேறு விதமாக சிந்தித்தது.
தாம் பட்ட கஷ்டம் இனி யாருக்குமே வேண்டாம் என்றும், மறுபிறவி வேண்டாமென்று ஆச்சாரியனை அனுகும் மக்களுக்கும்,
தாம் கற்றுக் கொண்ட திருமந்திரத்தை மற்ற எளியவர்களுக்கும் கூறினால்
அதன் பயனாக எல்லா மக்களுக்கும் நல்வழி அருள் கிடைக்குமே என்று சிந்தித்தார்.
திருக்கோஷ்டியூர் மக்களுக்கெல்லாம் தம் எண்ணத்தை கூறி, ஆன்ம நலம் வேண்டுபவர் எல்லோரையும்
திருக்கோயிலுக்கு திரண்டு வரச் சொன்னார். அவர்களிடத்திலே திருமந்திரத்தையும், மந்த்ரார்த்தங்களையும் உபதேசித்தார்.

இந் நிகழ்வினைக் கேள்விப்பட்ட திருக்கோஷ்டியூர் நம்பி, மிகுந்த கோபமுற்று, ஆச்சாரிய நிபந்தனையை மீறியவனுக்கு
நரகம் தான் கிடைக்குமென்று இராமாநுஜரிடம் கூற, அவரும் ஆச்சாரிய நிபந்தனைகளை மீறி எளிய மக்களுக்கு உபதேசித்ததின் மூலம்
அவர்களின் ஆன்மாக்கள் நலம் உய்ந்து, மிக்க பயனடைவார்கள் என்றும்,
இதன் காரணமாகவே, தான் அவர்களுக்கு உபதேஸம் அருளியதாகவும், இதனால் தான் நரகம் போக நேரிட்டாலும்
தனக்கு மகிழ்ச்சியே என்றும் பதிலுரைத்தார். இராமாநுஜரின் இந்த பதிலால் தனக்கு இப்படி ஒரு கருணை உள்ளம் உள்ள ஒருவர்
சீடனாக அமைந்தது கண்டு மகிழ்வுற்று, அவரை வாரி அனைத்து ஆசிர்வதித்தார்.

ஆளவந்தாருக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டி, கூரத்தாழ்வான் உதவியுடன் ஸ்ரீ பாஷ்யத்தை பட்டோலைப் படுத்தினார்.
நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு உரை எழுத திருக்குருகைப்பிரான் பிள்ளையைப் பணித்தார்.
ஸ்ரீரங்கனாதனின் அருளால் கூரத்தாழ்வானுக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளில் ஒருத்தருக்கு பராசர பட்டர் என்றும்,
மற்றொருவருக்கு வேத வியாஸ பட்டர் என்றும் திருநாமமிட்டு மூன்று வாக்குறுதிகளையும் நிறைவேற்றினார்.

இச் சமயத்திலே சோழ மன்னனான கிருமி கண்ட சோழன், சிவனுக்கு மேல் தெய்வமில்லை என்று இராமாநுஜரிடம்
கையொப்பம் பெற அவரை அரசபைக்கு அழைத்து வர ஆள் அனுப்பினார்.
ஆனால் கூரத்தாழ்வான், இராமாநுஜரைப் போல் காவி வஸ்திரம் தரித்துக் கொண்டு அரசவை செல்ல,
இராமாநுஜரோ , கூரத்தாழ்வானின் வெள்ளையுடையுடன் அங்கிருந்து தப்பி, மைசூர் சென்றடந்தார்.
அந் நாட்டை ஆண்டு கொண்டிருந்த பிட்டி தேவன் என்பவனின் மகளின் தீராத நோயைக் குணப்படுத்தி
அவனை ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தை தொடர வைத்தார். பின்னர் தில்லி சுல்தானின்
மகளிடம் இருந்த திருநாராயணபுரத்து இராமப் பிரியனின் விக்ரஹத்தைப் பெற வேண்டி தில்லி சென்றார்.
சுல்தானால் களவாடப்பட்ட , பல விக்கிரஹங்களில் ஒன்றாக அங்கிருந்த
திருநாராயணபுரத்து இராமப் பிரயனும் அங்கிருந்தார். சுல்தானும் எந்த விரஹம் இராமப் பிரியன் என்று தெரியாது என்று கூறி,
உம்மால் முடிந்தால் அவ் விக்ரஹத்தை கண்டுபிடித்து எடுத்துச் செல்லலாம் என்றான். உடனே இராமாநுஜரும் அங்கிருந்தபடியே
” வாரும் செல்வப் பிள்ளாய் ” என்று அழைக்க, இராமப் பிரியனின் திரு விக்ரஹம் தானே நேராக இராமாநுஜரிடம் நகர்ந்து வர,
அவரையும் பெற்றுக் கொண்டு திருநாராயணபுரம் வந்தார். அன்று முதல்
இராமப் பிரியன் ” செல்வப் பிள்ளை ” என்றே அழைக்கப்படலானார்.
மைசூர் ராஜ்ஜியத்திலே தங்கியிருந்த பொழுது, தொண்டனூர் ஏரியைக் கட்டி நிர்மாணித்தார்.

இராமாநுஜருக்கு ஆயிரக் கணக்கில் சிஸ்யர்கள் குவிந்தனர். ஆங்காங்கேயுள்ள திவ்ய தேஸங்களின் நிர்வாகப் பொருப்பை
அங்குள்ள தம் சிஸ்யர்களிடம் அளித்து ஸ்ரீ வைஷ்ணவ ஸம்பிரயதாயம் தழைதோங்கச் செய்ய 74 ஸிம்மாசனாதியதிகளை நியமித்தார்.
இன்று நம் ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரயதாயம் இவ்வளவு எழுச்சியுடன் இருப்பதற்கு ஸ்வாமி இராமாநுஜரே காரணமாவார்.

இவ்வாறாக எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்துவிட்டு, தம்முடைய 120 வயதில் வைகுந்த பதவியை அடைந்தார்.

ஸ்வாமி எம்பெருமானாரைப் பற்றி குறிப்பிடும்போது இங்கு
முதலியாண்டானையும், கூரத்தாழ்வானையும் பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது.
ஸ்வாமி எம்பெருமானார் ஸன்யாஸ்ரமத்தை ஏற்றுக் கொள்ளும் பொழுது அவர், முதலியாண்டானையும், கூரத்தாழ்வானையும்
மட்டும் துறக்கவில்லை என்று கூறி ஸன்யாசத்தை ஏற்றுக் கொண்டார்.
குருபரம்பரை ப்ரபாவம் கூறுவதாவது- ஸ்வாமி எம்பெருமானார் முதலியாண்டானை த்ரிதண்டமாகவும்,
கூரத்தாழ்வானை பவித்திரமாகவும் கருதினார் என்பதாகும். அந்தளவிற்கு யதிராஜருடன் ஐக்கியமானவர்கள் இவ்விருவரும்.

அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே
அருட்கச்சி நம்பியுரை ஆறு பெற்றோன் வாழியே
புத்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திடடான் வாழியே
பதின்மர்கலை உட்பொருளைப் பரிந்து கற்றான் வாழியே
சுத்தமகிழ் மாறன்அடி தொழுதுஉய்ந்தோன் வாழியே
தொல் பெரியநம்பி சரண் தோன்றினான் வாழியே
சித்திரையில் ஆதிரை நாள் சிறக்கவந்தோன் வாழியே
சீர்பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே

எண்டிசையெண் ணிளையாழ்வார் எதிராசன் வாழியே
எழுபத்து நால்வர்க்குஎண்ணான்கு உரைத்தான் வாழியே
பண்டைமறையைத் தெரிந்த பாடியத்தோன் வாழியே
பரகாலன் அடியிணையைப் பரவுமவன் வாழியே
தண்டமிழ்நூல் நம்மாழ்வார் சரணானான் வாழியே
தாரணியும் விண்ணுலகும் தானுடையோன் வாழியே
தெண்டிரைசூழ் பூதூர் எம்பெருமானார் வாழியே
சித்திரையில் செய்ய திருவாதிரையோன் வாழியே

———————-

(1). எம்பார் : (பிறப்பு. கி.பி. 1025); இராமாம்சம். திருப் பெரும்புதுரையடுத்த மழலை மங்கலத்தில் கமலநயனபட்டருக்கும், உடையவரின் சிறிய தாயாரான பெரிய பிராட்டியாருக்கும் திருக்குமாரராய் அவதரித்தார். தம் தாய்மாமனாகியபெரிய திருமலை நம்பியால் ‘கோவிந்தபட்டர்’ என்று திருநாமம் சாத்தப் பெற்றார். யாதவப்பிரகாசரிடம் உடையவருடன் வேதாந்தங்களைக் கற்று வந்தார். இவர் கங்கையில் நீராடும்போது ஒர் இலிங்கம் கையில் வந்து சேர ‘உள்ளங்கை கொணர்ந்த நாயனார்’ என்று திருநாமம் சாத்திக் காளத்தியில் வழிபாடு செய்து வந்தார். இவரைத் திருமலை நம்பி திருத்திப் பணி கொண்டார். இவரை ‘இராமாநுச பாதசாயை’ என்றும் சொல்லுவர். ஆசாரியர் ‘எம்பெருமானார்’ சீடர்கள் கூரத்தாழ்வான் குமாரர்களாகிய பெரிய பராசரபட்டரும், சீராமப்பிள்ளையும். வயது105.

(தை புனர்வஸு)
ராமானுஜ பதச் சாயா கோவிந்தாஹ்வ அநபாயிநீ |
ததா யத்த ஸ்வரூபா ஸா ஜீயாந் மத் விச்ரமஸ்தலீ ||

ஸ்ரீ ராமானுஜரின் திருவடித் தாமரை நிழல் போல் பிரியாதவரும், அடியேன் துயர்களை நீக்கி
இளைப்பாற்றும் நிழலுமான ஸ்ரீ கோவிந்தப் பெருமாளின் புகழ் ஓங்குக.

தை மாதம் புனர்வசு நக்ஷத்திரத்தில், த்யுதிமதி அம்மையாருக்கும், கமல நயன பட்டருக்கும் திருக்குமாரராக
அவதரித்தவர் எம்பார் அவர்கள். இவர் ஸ்வாமி இராமானுஜரின் தாய் வழி சிற்றன்னையின் திருமகனாவார்.
இவருடைய மாமா பெரிய திருமலை நம்பி இவருக்கு ” கோவிந்த பட்டர் ” என்று திருநாமம் சூட்டினார்.
இவருடைய உபனயனமும், விவாஹமும் இவர் பிறந்த ஊரான மதுரமங்கலத்தில் நடைபெற்றது.
இராமாநுஜர் , யாதவப் பிரகாசரிடம் வேதங்களைக் கற்றுக் கொள்வதை கேள்விப்பட்ட கோவிந்த பட்டர் ,
தாமும் அவருடன் சேர்ந்து வேதம் கற்றுக் கொள்ளச் சென்றார். அது முதல் அவருடன் இணை பிரியாமல் இருந்தார்.

இராமாநுஜருக்கு, அவர் குருவான யாதவப் பிரகாசரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக,
காசிக்குச் செல்லும் வழியில் அவரைக் கொல்ல சதி செய்த குருவின் சதிச் செயலை அறிந்து,
அவரிடமிருந்து இராமாநுஜரைக் காத்து, காஞ்ச்சிக்கு அனுப்பியதும் இவரே. ஒரு சம்யம் காசியில்,
கங்கை நதியில் குளித்துக் கொண்டிருக்கும் போது, இவர் கையில் ஒரு சிவலிங்கம் ஒட்டிக் கொண்டுவிட்டது.
இதனால் சிவ பக்தி ஏற்பட்டு அதன் காரணமாக காளஹஸ்தி சென்று அங்கு சிவனை வழிபடலானார்.
இவரை ” உள்ளங்கை குளிர்ந்த நாயானார் ” என்று பலர் அழைத்தனர்.

இராமாநுஜர் ஸன்னியாஸம் மேற்கொண்டு, ஸ்ரீரங்கத்தில் தங்கி இருந்த பொழுது,
கோவிந்த பட்டர் சிவ பக்தரானதைக் கேள்விப் பட்டு , மிக வருந்தி, அவரை மீண்டும் வைஷ்ணவத்திற்கு
திருப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். இதற்குப் பொருத்தமானவர் தங்கள் இருவருக்கும் மாமாவாகிய
பெரிய திருமலை நம்பி தான் என்று முடிவு செய்து அவருடன் மேலும் சில வைஷ்ணவர்களையும் காளஹஸ்திக்கு அனுப்பினார்.
கோவிந்த பட்டரைத் திருத்துவதற்கு பெரும் முயற்சியினை மேற்கொண்டார் பெரிய திருமலை நம்பி.
இவ்வாறு இரு முறைகள் முயன்று தோல்வியுற்ற நம்பிகள் மூன்றாம் முறையாக நம்மாழ்வாரின் திருவாய் மொழி
இரண்டாம் பத்தின், இரண்டாம் திருமொழியான
“திண்ணன் வீடு ” திருமொழியின் ” தேவும் எப்பொருளும் படைக்க * பூவில் நான்முகனைப் படைத்த
* தேவன் எம்பெருமானுக்கல்லால் * பூவும் பூசனையும் தகுமே * என்ற நான்காம் பாசுரத்தினை மீண்டும், மீண்டும்
கோவிந்த பட்டரின் செவியில் விழும்படி சொல்லிக் கொண்டிருக்க, அவரும் ” தகாது , தகாது ” என்று கூறிக்கொண்டே
பெரிய திருமலை நம்பியின் திருவடியில் விழுந்தார். பிறகு பெரிய திருமலை நம்பியும் , கோவிந்த பட்டரை ஆசிர்வதித்து,
அவரை திருமலைக்கு அழைத்துச் சென்று, வைஷ்ணவ சம்பிரதாயத்தைப் பற்றி பயிற்சி அளித்தார்.

பெரிய திருமலை நம்பியின் இராமாயண காலக்ஷேபத்தைக் கேட்க வந்திருந்த இராமாநுஜர்,
காலக்ஷேபம் முடிந்து புறப்படத் தயாரான பொழுது, அவருக்கு தாம் ஒன்றும் கொடுக்க வில்லையே என்று அவர் கூற,
அதற்கு இராமாநுஜர், தமக்கு கோவிந்த பட்டரை தந்தருள வேண்டும் என்று ப்ரார்திக்க,
அவர் விருப்பத்தை அப்படியே நிறைவேற்றினார் பெரிய திருமலை நம்பி அவர்கள்.

ஞான பக்தி, வைராக்கியத்துடன் இராமாநுஜரிடம் அதீத ஈடுபாடு கொண்ட, கோவிந்த பட்டர் சன்யாஸம் மேற்கொண்டு
எம்பார் என்ற திருநாமம் பெற்று, பின்னர் இராமாநுஜரின் அர்த்த விஷேஷங்களையும், தர்சனத்தையும் நிர்வகித்து
வாழ்ந்தருள வேண்டும் என்று மங்களா ஸாஸனம் செய்து பட்டர் திருக்கைகளில் காட்டிக் கொடுத்து,
இராமாநுஜரின் திருவடிகளை தியானித்துக் கொண்டு திருநாட்டுக்கு எழுந்தருளினார்.

———

(2). பட்டர் : (பிறப்பு. கி.பி. 1062); பராசாரம்சம். திருவரங்கத்தில் கூரத்தாழ்வானுக்கும், கூரத்தாண்டாளுக்கும் திருமகனாக அவதரித்தார். திருநட்சத்திரம்: வைகாசி அனுஷம் வேறு திருநாமங்கள் : ‘பெரிய பட்டர், பராசாபட்டர், வேதாந்தாசாரியர் பட்டர், திருவரங்கப்பெருமாள் பட்டர்’. ஆசாரியர், எம்பார். கூர்மையான அறிவுடைய இவரைப்பற்றிய குறிப்புகள் வைணவ உரைகளில் வருகின்றன. ‘பட்டர் நிர்வாகம்’ என்பது மிகுப்புகழ் பெற்றது. எம்பெருமானாரின் கட்டளைப்படி விஷ்ணு சகஸ்ரநாமத்திற்குப் பேருரை வகுத்த பெருமகனார். திருநெடுந்தாண்டகத்தின் ‘மைவண்ணநறுங்குஞ்சி’ (21) என்ற பாசுரத்திற்கு இவர் அருளிய வியாக்கியானம் தனிப்பெருஞ்சிறப்புடையது. ஆசாரியர், எம்பார் சீடர்கள்; ‘நஞ்சீயர், பிள்ளைப்பெருமாள் அய்யங்கார், செடியெடுத்த நல்லான், நம்பி கோவர்த்தனதாசர், பிள்ளை விழுப்பரையர், அம்மன் ஆழ்வான், நலந்திகழ் நாராயண சீயர், உத்தண்ட பட்டர் என்னும் நடுவில் திருவீதிப் பிள்ளைபட்டர், கடகத்துப் பிள்ளை, வாக்விசயபட்டர், வீரசிகாமணி வில்லவராயன், அழகிய மணவாளப்பட்டர், அவர் காலத்தவர் அழகிய மணவாளப் பெருமாளரையர், ஆப்பன், ஆப்பன் திருநறையூரரையர், ஆப்பன் திருவழுந்துரரையர், இவர் குமாரர் உத்தண்டபட்டர், இவர் குமாரர் சீரங்கப்பட்டர், இவர் குமாரர் சுதர்சனபட்டர், இவர் குமாரர் சீரங்கராசபட்டர்,இவர் குமாரர் திருவேங்கடபட்டர்’. இவர் திருநெடுந்தாண்டகப் பாசுரம் (21) ஒன்றிற்குப் பொருள் அருளிச் செய்யாநிற்க, அப்போது வைகுந்த நாதன் பெரிய திருவடி மேலே எழுந்தருளக் கண்டு அதைத் தம் திருப்பவளத்தாலே அருளிச் செய்து திருக் கண்களை மலர விழித்து, திருமேனிபுளகாங்கிதமாய் முறுவல் செய்து, திருமுடியிலே அஞ்சலி செய்து கொண்டு கிரக்க பாலம் வெடித்து திருநாட்டிற்கு எழுந்தருளினார். வயது 28. இவர்தம் அருளிச் செயல்கள் : ஸ்ரீ ரங்க ராஜஸ்தவம், ஸ்ரீ குணரத்ன கோசம், தத்துவதிரயசாரம், பிரவண விவரணம், இலட்சுமி கல்யாணம், விஷ்ணு சகஸ்ரநாம பாஷியம், கிரியாதீபம், அஷ்டசுலோகி, சதுலோகி, துவிசுலோகி, தனிசுலோகி, மைவண்ண நறுங்குஞ்சி வியாக்கியானம் ஆகியவை.

(வைகாசி அனுஷம்)
ஸ்ரீ பராஸர பட்டார்ய ஸ்ரீரங்கேச புரோஹித: |
ஸ்ரீவத்ஸாங்க ஸுத: ஸ்ரீமான் ச்ரேயஸே மேஸ்து பூயஸே ||

கைங்கர்ய ஸ்ரீ நிறைந்த புகழாளர், ஸ்ரீ ரங்கேசனின் புரோகிதர், ஸ்ரீவத்சாங்கர் ஸ்ரீ கூரத்தாழ்வானின் திருக்குமாரர்
ஸ்ரீ பராசர பட்டர் திருவருளால் அடியேனுக்கு சகல மங்களமும் ஆகுக.

பெரிய பெருமாளின் அருள் பிரசாதமாக , கூரத்தாழ்வானுக்கும், ஆண்டாளுக்கும் திருமகனாக
வைகாசி மாதம் அனுஷ நக்ஷத்திரத்தில் அவதரித்தவர் பட்டர்.
இவர் பிறந்த பன்னிரண்டாம் நாள், குழந்தையைப் பார்ப்பதற்காக இராமாநுஜரும், எம்பாரும் வந்தனர்.
அச் சமயம் எம்பார், திருமந்திரத்தை சொல்லிக் கொண்டே, குழந்தையை எடுத்து இராமாநுஜரிடம் கொடுக்க,
அவரும் ” நீரே இக் குழந்தைக்கு ஆச்சாரியனாக இரும் ” என்று சொல்லி, ஆளவந்தாருக்கு வாக்கு கொடுத்தபடி,
குழந்தைக்கு “பராசர பட்டர் ” என்னும் திருநாமத்தை சூட்டினார்.
ஸ்ரீரங்கனாதன் ஸன்னதியில், திருமணத் தூண் அருகில் தொட்டிலிட்டு, பெருமாளும், பிராட்டியுமாக குழந்தையை வளர்த்தனர்.

பட்டர் அவரது ஐந்து வயதில், வீதியில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது,
ஒரு பெரிய வித்வான் பல்லக்கில் வந்து கொண்டிருந்தார்.
கூட வந்த கட்டியக்காரன் “ஸர்வக்ஞர் ” ( எல்லாம் அறிந்தவர் என்று பொருள் ) வருகிறார் என்று
கட்டியம் கூறியதைக் கேட்ட பட்டர் , அவர் ஒரு பெரிய அஹங்காரராய் இருப்பார் என்று எண்ணி,
அவருடைய அகந்தையை அகற்ற எண்ணம் கொண்டார். தன் கையில் ஒரு கைப்பிடி மண்னை எடுத்துக் கொண்டு,
அந்த வித்வானிடம், தன் கையில் எவ்வளவு மண் இருக்கிறது என்று வினவ, பதில் சொல்ல முடியாமல் அந்த ஸர்வக்ஞன் முழித்தான்.
உடனே பட்டர் தன் கையில் இருப்பது ஒரு கைப்பிடி மண் என்று கூற, அந்த வித்வான் அஹங்காரம் அழிந்து தலை குனிந்து நின்றார்.

பட்டருக்கு உரிய பருவத்தில் உபநயனம் செய்துவைத்து, பாடசாலைக்கு அனுப்பி வைத்தனர் அவர் பெற்றோர்.
கேட்ட மாத்திரத்திலேயே தான் கற்றதை மனதில் பதிய வைத்துக் கொள்ளூம் ஆற்றல்
அவருக்கு இருப்பதைக் கண்டு எல்லோரும் வியந்தனர். ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாய நூல்களையும்,
ஆழ்வார்களின் ஈரச் சொல் பாசுரங்களையும், இதிகாச புராணங்களையும், மற்றைய தத்துவ நூல்களையும் கற்றார்.

ஒரு கைசிக துவாதசி அன்று, பட்டர் மிக அழகாக கைசிக புராணம்
வாசித்த நேர்த்தியைக் கேட்டு மகிழ்ந்த பெரிய பெருமாள் இவரிடம்
” பட்டரே உமக்கு பரம பதம் தந்தோம் ” என்று அருளினார்.
பட்டரும் மிகுந்த ஆனந்தத்துடன் இல்லம் திரும்பி, தம் தாயாரை தெண்டம் ஸமர்ப்பிக்க,
அவரும் ” நலமந்தமில்லதோர் நாடு புகுவீர் ” என்று வாழ்த்த, பட்டரும் ” அம்மா, அடியேன் வேண்டியது ஈதே ” என்று கூறினார்.
பிறகு பட்டர் திருநெடுந்தாண்டகம் உபன்யாசம் செய்ய தொடங்கி, விளக்கியருளும் போது,
பெரியாழ்வார் திருமொழியின் ஐந்தாம் பத்தின் நான்காம் திருமொழியின்
ஒரு பாசுரமான ” பறவியேறு பரம புருடா * நீ என்னைக் கைக் கொண்ட பின் * பிறவி என்னும் கடலும் வற்றி * பெரும் பதமாகின்றதால் ”
பாசுரத்தை அனுஸந்தித்து, இரு கரம் கூப்பிக் கொண்டிருக்கும் போதே திருநாட்டுக்கு எழுந்தருளினார்.

————-

(3). நஞ்சீயர் (பிறப்பு. கி.பி.1173); இவர் திருநாராயண புரத்தில் அவதரித்தவர். திருநட்சத்திரம்-பங்குனி உத்தரம் இவர் வேதாந்தி என்று முதலில் திருநாமம் பெற்றிருக்கையில் வாதபிட்சைக்கு வந்த பட்டரிடம் வாதிட்டுத் தோற்றவர். பின்னர் பட்டரின் திருவடிச் சம்பந்தம் பெற்று அவருடைய சீடரானார். ஒரு நாள் பிச்சைக்கு வந்த வைணவருக்குப் பிச்சையிட மறுத்த தேவியாரை வெறுத்துத் திரவியத்தைப் பகுத்து தேவியாருக்கு அளித்து, குருதட்சினை கொண்டு சந்நியாச ஆசிரமத்தை ஏற்றார். தம் ஆசாரியரைக் காணச் செல்லுகையில் பட்டர் நம்சீயர் வந்தார் என்று கூற அன்று முதல் நஞ்சீயர் என்ற பெயர் உண்டாயிற்று. இவருக்குச் ‘ஸ்ரீராங்கநாதர்’, வேதாந்த வேதியர் மாதவாசார்யிர் என்ற வேறு திருநாமங்களும் உண்டு. சீடர்கள்; நம்பிள்ளை யூனிசேனாபதிசீயர், குட்டிக்குறி இளையாழ்வார். இவர் அருளிச் செய்த கிரந்தங்கள்: திருவாய்மொழிக்கு ஒன்பதினாயிரப்படி, திருப்பாவைக்கு ‘ஈராயிரப்படி’ திருவந்தாதிகள், கண்ணிநுண் சிறுத்தாம்பு, திருப்பல்லாண்டு இவற்றிற்க்கு உரை. இவர் திருவாய்மொழியை நூறு உரு வியாக்கியானம் செய்தபடியால் திருவாய்மொழிக்குச் சதாபிஷேகம் பண்ணினர் என்ற புகழ் இவருக்கு உண்டு. பெற்றி என்பார் இவருக்கு அடிமைப்பட்டுச் சிறப்பான பொருளைக் கேட்டார். வயது 100,

(பங்குனி உத்தரம்)
நமோ வேதாந்த வேத்யாய ஜகந் மங்கள ஹேதவே
யஸ்ய வாகாம்ருதாஸார பூரிதம் புவந த்ரயம்

மூவுலகுக்கும் மங்களம் சேர வேதாந்த சாரமான தம் அமுத வாக்குகளைப் பொழியும் வேதாந்தி
ஸ்ரீ நஞ்சீயரை வணங்குகிறேன்.

திருநாராயணபுரத்தில் பங்குனி மாதம், உத்திர நக்ஷத்திரத்தில் அவதரித்த நஞ்சீயரின் இயற்பெயர் மாதவாச்சாரியார்.
வேதங்களில் கரைகண்டவரான வல்லவராக இருந்ததினால் இவர் வேதாந்தி என்றும் அழைக்கப்பட்டார்.

ஒரு அந்தணர் பெரும் வேதாந்தியாகத் திகழ்ந்த மாதவாச்சாரியாரை, பட்டரின் பெருமைகளை சொல்லி
அவரிடம் ஈடுபாடு கொள்ளும்படி வேண்ட, இவருக்கும் பட்டரை நேரில் காண ஆவல் எழுந்தது.
பட்டர் திருநாராயணபுரம் ஏள்ளியிருந்த பொழுது, பரிவாரங்களுடன் வேதாந்தி மணி பல்லக்கில் சென்று கொண்டிருந்தார்.
மற்ற பிற அந்தணர்கள் உணவு பறிமாறும் இடத்திற்குச் செல்ல, பட்டர் ஒரு எளிய அந்தனர் போல் ,
மாதவாச்சாரியார் இருந்த இடத்திற்கு வந்தார்.

இவரைக் கண்ட வேதாந்தி ” எதற்கு இங்கு வந்தீர் ” என்று வினவ,
” பிட்சைக்கு வந்தேன் ” என்று பட்டர் பதிலுரைக்க, அதற்கு வேதாந்தி ” உணவு பறிமாறும் இடத்திற்கு போவதுதானே ” என்று சொன்னார்.
ஆனால் பட்டரோ, தான் தர்க்க பிட்சைக்குத்தான் அங்கு வந்திருப்பதாகக் கூறினார்.
இவர் யாரென்று ஊகித்த வேதாந்தி, பட்டரிடம் ” நீர்தான் பட்டரோ ? ” என்று கேட்க, அவரும் ” ஆம் ” என்று சொல்ல,
இருவருக்கும் வாதம் நடந்தது. முடிவில் பட்டர் வேதாந்தியை வெற்றி கொள்ள, அவரும் ” விஷிஷ்டாத்வைத மதமே”
உயர்ந்தது என்பதனை ஒப்புக் கொண்டு, பட்டர் திருவடிகளில் சரணம் அடைந்தார்.
பட்டர் அவருக்கு ” பஞ்ச ஸமஸ்காரம் ” செய்து வைத்தார்.

பின்னாளில் வேதாந்தியாகிய , மாதவாச்சாரியார் துறவறம் பூண்டு, அத் துறவறக் கோலத்துடனே ஸ்ரீரங்கம் வந்து,
பட்டரின் திருவடியை சரணமடைந்தார்.
பட்டரும் , அவரை வாரி அணைத்துக் கொண்டு, அவருக்கு ” நஞ்சீயர் ” என்று திருநாமம் சூட்டினார்.
பட்டரிடம் அளவற்ற பக்தியும், பேரன்பும் கொண்டிருந்தார். ஸ்ரீரங்கத்திலே நூறு முறை திருவாய்மொழி காலக்ஷேபம் செய்துள்ளார்.
நஞ்சீயர் காலக்ஷேபங்களைக் கேட்ட, நம்பிள்ளை, பிற்காலத்தில், தாம் காலக்ஷேபம் செய்யும் போது,
நஞ்சீயரின் குண நல விஷேங்களை பூரிப்போடு கூறுவாராம்.

நஞ்சீயர் நோய்வாய்ப்பட்டிருந்த போது, அவர் மிகவும் விரும்பிய,
திருமங்கை ஆழ்வாரின் ” தூவிரிய மலருழக்கி ” பதிகத்தை அரையர் ஸேவிக்க,
அப்பாசுரத்தின் பொருளில் ஈடுபட்டு பரமபதம் அடைந்தார்.

———

(4).நம்பிள்ளை: (பிறப்பு:கிபி.1252); இவர் காவிரியின் தென்கரையிலுள்ள நம்பூரில் அவதரித்தார். இவருடைய பிள்ளைத் திருநாமம் ‘வரதராசர்’ என்பது. திருநட்சத்திரம் கார்த்திகையில் கார்த்திகை நஞ்சீயரால் நம்பிள்ளை எனத் திருநாமம் பெற்றவர். வேறு திருநாமங்கள் : ‘கலி வைரி, திருக்கலிகன்றிதாசர், லோகாசார்யர், பூர் சூக்தி சாகரர், உலகாரியன், அபயப்பிரதாசர். இவர் காலத்தவர் அப்பிள்ளை, அம்மங்கி பெரிய முதலியார், ஏறு திருவுடையதாசர், பெரிய கோயில் வள்ளலார் சீடர்கள். வடக்குத் திருவீதிப்பிள்ளை, கந்தாடை தோழப்பன், பின்பழகிய பெருமாள் சீயர், ஈயுண்ணி மாதவப்பெருமாள், வாதிகேசரி அழகிய மணவாளசீயர், நடுவில் திருவீதிப் பட்டர், வேல்வெட்டிப்பிள்ளை, பெரிய வாச்சான்பிள்ளை, ஏறுதிருவுடையதாசர், சீனிக்கரபிள்ளை இராமாநுசாசார்யர், வானமாமலைதாசர், திருக்குருகூர்தாசர். இவர் அருளிச் செய்த கிரந்தங்கள்: திருவாய்மொழிக்கு ஈடுமுப்பத்தாறாயிரப்படி, திருவிருத்தத்திற்கு ஈடு, கண்ணிநுண் சிறுத்தாம்புக்கு ஈடு, திருவாய்மொழிக்கு ‘இருபத்து நாலாயிரப்படி’ என்னும் வியாக்கியானம் வரையுமாறு பெரியவாச்சான் பிள்ளைக்குக் கட்டளையிட்டார். நம்பெருமாள் நம்பிள்ளையைக் கடாட்சித்து அவரைத் தம்முடைய திருமுடிப்பக்கத்திலிருந்து திருவாய்மொழியை நிர்வகிக்குமாறு நியமனம் செய்ய, நம்பிள்ளையும் “நாயினேன் தேவரீருடைய நியமனத்தைத் தப்பமுடியாது. ஆகிலும் அவ்விடம் முன்பு துரியோதனன்பற்றிய இடமாலையாலே, அடியார்க்குப் பற்றும் இடம் ஆகாது” என்று விண்ணப்பம் செய்ய பெருமாளும் உகந்து அதை ஆமோதிக்க, அது கண்டு அங்கிருந்தோர் அனைவரும் வியப்பெய்தினர்.

(கார்த்திகை கார்த்திகை)
வேதாந்த வேத்ய அம்ருத வாரிராசேர்
வேதார்த்த ஸார அம்ருத பூரமக்ர்யம் |
ஆதாய வர்ஷந்தம் அஹம் ப்ரபத்யே
காருண்ய பூர்ணம் கலிவைரி தாஸம் ||

நீர் நிறைந்த மேகம் போல் வேதாந்த ஞானம் செறிந்த ஸ்ரீ நஞ்சீயர் திருவாக்குகளைத் தம் கருணையால்
வேத வேதாந்தப் பொருள்களைச் சுவைப்படக் கூறும் பெருங்கருணையாளரான
ஸ்ரீ கலிவைரி தாசர் திருவடிகளைப் பற்றுகிறேன்.

திருமங்கை ஆழ்வாரின் அவதார மாதமும், நக்ஷத்திரமுமான, கார்த்திகை மாதம் , கார்த்திகை நக்ஷத்திரத்தில் அவதரித்தவர்
நம்பிள்ளை. இவரின் இயற்பெயர் வரதர். பட்டருடைய வியாக்யானங்களை தம் மனதில் ஆழமாகப் பதித்துக் கொண்டிருந்தார்.
நஞ்சீயர் திருவாய்மொழிக்கு, உரை எழுதிக்கொண்டிருந்தார்.
அதனை ஏடு படுத்த அழகான கையெழுத்துடன் எழுதக் கூடியவரை தேடிக் கொண்டிருக்கும் போது,
அவருக்கு அப்பொழுது அறிமுகமானவர் வரதர். நஞ்சீயருக்கு,வரதரின் கையெழுத்து பிடித்துப் போக அவரைத் தம் சீடராக்கிக்
கொண்டார். திருவாய்மொழி உரையை, வரதருக்குக் கற்றுக் கொடுத்து, தான் எழுதி வைத்திருந்த
ஓலைச் சுவடிக் கட்டையையும் வரதரிடம் கொடுத்து அதனை அவரின் கைவண்ணத்தில் ஏடுபடுத்திக் கொண்டுவரும்படி சொல்லி அனுப்பினார்.

வரதர் சுவடிகள் அடங்கிய கட்டையை எடுத்துக் கொண்டு, காவிரி ஆற்றினைக் கடந்து அக்கரையை அடைய ஆற்றில் இறங்கினார்.
அப்பொழுது திடீரென ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட, நன்கு நீந்த வல்லவரான வரதர்,
ஓலைக் கட்டையை தம் திருமுடியில் கட்டிக் கொண்டு நீந்தினார்.
ஆனால் வெள்ளப் பெருக்கின் ஓட்டத்தில் அவருடைய திருமுடியில் கட்டப்பட்டிருந்த அவ்வோலை கட்டைகள்,
ஆற்றில் விழுந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் மிக்க துயரமுற்ற வரதர், புலம்பியபடியே கரையை கடந்து மறு பக்கம் வந்தார்.
பிறகு தம் மனதைத் தேற்றிக் கொண்டு, ஆச்சாரியனிடம் தாம் கற்று, தம் மனதில் நிறுத்திக் கொண்டதை நினைவில் கொண்டு,
எம்பெருமானின் அருளினை வேண்டி, தாமே அவ்வுரைகளை எழுதி முடித்து அதனை நஞ்சீயரிடம் கொண்டு ஸேர்ப்பித்தார்.
இதனைப் படித்துப் பார்த்த நஞ்சீயர் தாம் கற்றுக் கொடுத்ததை விட மிகச் சிறப்பாக திருவாய்மொழி உரை இருப்பதைக் கண்டு,
மிகவும் பரவசப்பட்டு, மனம் குளிர்ந்து வரதரைப் பாராட்டினார். வரதரும் நடந்த சம்பவங்களை நஞ்சீயரிடம்
கூற, மிகப் பூரிப்புடன் ” நீர் நம்பிள்ளையோ ” என்று ஆரத் தழுவிக் கொண்டார்.

திருவரங்கத்தையே தனது இருப்பிடமாகக் கொண்டு, காலக்ஷேபங்கள் செய்து வந்த நம்பிள்ளை கோஷ்டியில் இடம் பெற்றிருந்த,
கூரத்தாழ்வானின் பேரனான நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர், திருவாய்மொழிக்கு நம்பிள்ளையின் விளக்க உரை கேட்டதைக் கொண்டு,
அதனை சுவடி படுத்திக் கொண்டு, ஆச்சாரியனிடம் சென்று காட்டினார். ஆனால் நம்பிள்ளையோ, தம்மிடம் இசைவு பெறாததாலும்,
அவர் எழுதிய உரையானது மிகவும் விஸ்தாரமாக இருந்ததாலும், ஆழ்பொருளை சரியான முறையில் தெரிவிக்காததாலும்,
கோபம் கொண்டு அச் சுவடிகளை கரையானுக்கு இரையாக்கிவிடுகிறார்.

திருவரங்கத்தில், நம் பெருமாள் ஸன்னதியில் நடக்கும் இவரின் காலக்ஷேப பேருரைகளைக் கேட்க ,
பெருமளவில் அலை மோதும் பக்தர்கள் கூட்டத்தைக் கண்டு ” இது நம்பெருமாள் கோஷ்டியோ, நம்பிள்ளை கோஷ்டியோ ” என்று
அக்காலத்தில் மக்கள் வியப்பார்களாம்.
இவருக்கு உலகாச்சாரியர் என்ற பட்டப் பெயரும் உண்டு. 95 ஆண்டுகள் வாழ்ந்து பரமபதமடைந்தார் நம்பிள்ளை.

——

(5).வடக்குத்திருவீதிப்பிள்ளை :(பிறப்பு. கி.பி.167-1285); ஐயாம்சம். திருவரங்கத்தில் பிள்ளை உலக ஆசிரியருக்கு திருமகனாய்த் திருவவதரித்தார். கோயில் வடக்குத் திருவீதியில் இவரது திருமாளிகை இருந்ததால் இப்பெயரால் வழங்கப் பெற்றவர். திருநட்சத்திரம்: ஆனி-சுவாதி. திருநாமங்கள் திராவிடவேதாந்த தேசிகர், ஸ்ரீகிருஷ்ணபாதர் தேவிகள், ஸ்ரீரங்கநாச்சியார். திருக்குமாரர்கள் : பிள்ளை உலக ஆசிரியர், (பாட்டன் பெயரை வைத்தனர் போலும்), அழகிய மணவாளப்பெருமாள் நாயனார். சீடர்கள் : தம் குமாரர்கள் இருவரும், ஈயுண்ணிமாதவர், பத்மநாமப் பெருமாள், பராங்குச சீயர், நாயனார் கூரகுலோத்தும் தாசர், வங்கிபுரம் சிரங்காசாரியர் வானமாமலை தாசர், அருளிச் செயல்கள்: திருவாய்மொழிக்கு ஈடு முப்பதாறாயிரப் படி (நம்பிள்ளை அருளியவற்றை மனத்திலிருந்து எழுதியவர்). வயது 97

(ஆனி ஸ்வாதி)
ஸ்ரீ க்ருஷ்ண பாத பாதாப்ஜே நமாமி சிரஸா ஸதா |
யத் ப்ரஸாதப் ப்ரபாவேந ஸர்வ ஸித்திரபூந்மம ||

ஸ்ரீ நம்பிள்ளையின் திருவடித் தாமரைகளில் அடியவரான ஸ்ரீ க்ருஷ்ணர் வடக்குத் திருவீதிப் பிள்ளை
திருவருளால் சகல ஸாரார்த்தமும் அறியப் பெறுகிறேன். இப்படிப்பட்ட ஸ்ரீ வடக்குத் திருவீதிப் பிள்ளையின்
திருவடிகளை எப்பொழுதும் வணங்குகிறேன்.

வடக்குத் திருவீதிப் பிள்ளை , ஸ்ரீரங்கத்தில் ஆனி மாதம், சுவாதி நக்ஷத்திரத்தில் அவதரித்தார்.
நம்பிள்ளையின் சிஷ்யர்களில் பிரபலமானவர்.

நம்பிள்ளையின் திருவாய்மொழி வியாக்யான காலக்ஷேப கோஷ்டியில் ஈடுபாடு கொண்டு,
அங்கு விவரிக்கப்பட்டவற்றை குறித்துக் கொள்ள விழைந்தார்.
நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டரின் பிரயத்தனத்தின் மேல் நம்பிள்ளைக்கு ஏற்பட்ட கோபத்தினை மனதில் இருத்திக் கொண்டு,
நம்பிள்ளையின் காலக்ஷேப வியாக்யானங்களை முழுவதுமாக குறிப்பெடுத்துக் கொள்வார்.
அவ்வாறு குறிப்பெடுத்துக் கொண்டதை ஓலைச் சுவடியில் எழுதி, தம் திருமாளிகையில் கோவிலாழ்வார் ஸன்னதியில்
சேர்த்து வைத்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் நம்பிள்ளையை தமது திருமாளைகைக்கு அமுது செய்விக்க விரும்பி ப்ரார்த்தித்தார்.

அவரும் ஒப்புக் கொண்டு ஒருநாள் திருமாளைகைக்கு எழுந்தருளி, அங்கு அன்று தாமே பெருமாளுக்கு திருவாராதனம் செய்வதாகக் கூறி,
கோவிலாழ்வார் கதவுகளைத் திறந்தார். உள்ளே இருந்த சுவடிகளைக் கண்டு அவற்றை எடுத்து வாசித்துப் பார்த்தார்.
தம்முடைய வியாக்யானங்களே அவை என்றுணர்ந்து, அவை மிகச் சிறப்பாக குறிப்பெடுக்கப்பட்டதைக் கண்டு திருப்தியுற்று,
” பிள்ளாய் இது என்ன செயல்? ” என்று வினவ, வடக்குத் திருவீதிப் பிள்ளையும் தாம் மறக்காமல் இருப்பதற்காகத் தான்
இவற்றை ஏடு படுத்தி வைத்திருப்பதாகச் சொன்னார்.

அலங்காரம் செய்யப்பட்ட யானை மிக கம்பீரமாக நடப்பதைப் போல, இந்தக் குறிப்புகள் இருப்பதாகக் கூறி,
வடக்குத் திருவீதிப் பிள்ளையை நன்றாக கடாக்ஷித்தார்.அந்த ஏடுகளை தாமே வைத்துக் கொள்வதாகக் கூறி, தம்முடன் எடுத்துச் சென்றார்.
பின்னர் அந்த ஈட்டை ஈயுண்ணி மாதவர்க்குக் கொடுத்தார். அவர் பின் அதனை தம் மகனான பத்மனாபனிடம் கொடுத்தார்.
பத்மனாபன் அதனை நாலூர் பிள்ளைக்குக் கொடுக்க, அவர் தம் மகனான நாலூராச்சான் பிள்ளைக்கு கொடுக்க,
பின் அவர் தம் சிஷ்யர்களான திருவாய்மொழிப் பிள்ளை, திருநாராயணபுரம் ஆய் என்கிற ஜனனாச்சாரியர், இளம்பிலிசை பிள்ளை மூவருக்கும் கொடுத்தார்.
திருவாய்மொழிப் பிள்ளை அதனை மணவாள மாமுனிக்குக் கொடுக்க, அவர் அதனை நம்பெருமாள் முன்பு பிரகடனப்படுத்தினார்.

வடக்குத் திருவீதிப் பிள்ளை, நம்பிள்ளையின் காலஷேபங்களிலே மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தமையால், இல்லறத்திலே
நாட்டமில்லாதவராக இருந்தார். இதனால் பிள்ளையின் தாயார் அம்மி கவலையடைந்து, நம்பிள்ளையிடம் தெரிவிக்க,
அவரும் பிள்ளையை அழைத்து தக்க வகையில் உபதேசித்தார். ஆச்சார்ய உபதேசத்தைப் பெற்ற வடக்குத் திருவீதிப் பிள்ளை,
திருமணம் செய்து கொண்டு, இல்லற வாழ்க்கை நடத்தி, இரண்டு ஆண் புத்திரர்களைப் பெற்றார்.
தம் ஆச்சாரியரான நம்பிள்ளையின் பட்டப் பெயரான உலகாச்சாரியர் என்று தம் ஒரு மகனுக்கு பெயரிட்டார்.
அவர்தான் பிள்ளைலோகாச்சாரியர் ஆவர். துலுக்கர்களின் படை எடுப்பின் போது நம்பெருமாளைக் காக்க வேண்டி,
அவரை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு ஜ்யோதிஷ்குடிக்கு சென்றார்.
மற்றொரு புதல்வனுக்கு அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் என்று திருநாமம் சூட்டினார்.
இவர் தான் ” ஆச்சார்ய ஹ்ருதயம் ” என்னும் மாபெரும் நூலை எழுதியவர்.
பிள்ளைலோகாச்சாரியர் மற்றும் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் என்று இரு மாபெரும் புதல்வர்களை
ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரயதாயத்திற்கு அளித்த வடக்குத் திருவீதிப் பிள்ளை 106 ஆண்டுகள் வாழ்ந்து பின் பரமபதம் அடைந்தார்.

ஆனிதனில் சோதிநாள் அவதரித்தான் வாழியே
ஆழ்வார்கள் கலைப்பொருளை ஆய்ந்துரைத்தோன் வாழியே
தான்உகந்த நம்பிள்ளை தாள் தொழுவோன் வாழியே
சடகோபன் தமிழ்க்கீடு சாற்றினான் வாழியே
நானிலத்தில் பாடியத்தை நடத்தினான் வாழியே
நல்ல உலகாரியனை நமக்குஅளித்தான் வாழியே
ஈனமற எமையாளும் இறைவனார் வாழியே
எங்கள் வடவீதிப்பிள்ளை இணையடிகள் வாழியே

—————

(6). பிள்ளை உலகஆசிரியர்: (பிறப்பு. கி.பி. 1300); தேவப்பெருமாள் அம்சம். திருவரங்கத்தில் வடக்குத் திருவீதிப் பிள்ளைக்கும், சீரங்க நாச்சியாருக்கும் திருக்குமாரராக அவதரித்தவர். திருநட்சத்திரம்: ஐப்பசி திருவோணம், திருநாமம், உலக ஆசிரியர். துருக்கர் காலத்தில் பெருமாள் நாச்சியாருடன் வெளியேறிய பொழுது அவர் பிரிவற்றாது தாமும் முதலிகளுடன் புறப்பட்டு ‘சோதிடக்குடி’ என்னும் சிற்றூரில் பெருமாளுடைய எல்லாச் சொத்துகளையும் கள்வர் அபகரித்ததைக் கேட்டுத் தாமும் தம்முடைய அனைத்தையும் பறிகொடுத்தார். சாதிவேறுபாடின்றி,பேதையரும் பெண்களும் உய்யக்கருதி அரிய பெரிய பதினெண்கிரந்தங்களை (அஷ்டதசா இரகசியங்களை; அஷ்டம்-எட்டு தசா-பத்து)வெளியிட்ட ஆசார்யர்களில் இவருக்கு ஒப்பாவார் ஒருவரும் இலர். இவை தவிர, ‘தத்துவ விவேகம், நாலுவார்த்தை’ என்பவையும் இவர்தம் அருளிச் செயல்கள். இவர் கருத்தைப் பின்பற்றி மணவாள மாமுனிகள் வரைந்த வியாக்கியானத்தின் பொருளமைப்பும், நடையழகும் ஒருவராலும் அளவிடக்கூடியதல்ல. இவருடைய திருவடிசம்பந்தம் பெற்றவர்கள்: திருவாய்மொழிப் பிள்ளை, வங்கிபுரம் சீரங்காசாரியர், கோட்டுரிலண்ணன், விளாஞ்சோலைப்பிள்ளை, வாதிகேசரி அழகிய மணவாளசீயர், கிடாம்பி இராமாதுசப்பிள்ளான், மணப்பாகத்தது நம்பி, சடகோப சீயர், நாலூர்பிள்ளையாச்சான் பிள்ளை, திருப்புட்குழி சீயர், நாலூர்பிள்ளை தாசர், கூரகுலோத்துமதாசர், திருவாய்மொழிப் பிள்ளை, தமப்பனாரண்ணர், திருவாய்மொழிப் பிள்ளை, திருத்தாயார், கொல்லிகாவல்தாசர், கோட்டுர் அழகிய மணவாளப்பிள்ளை, திகழக்கிடந்தாரண்ணன் ஈயுண்ணி அழகிய பெருமாள் நாயனார் ஆகியோர். வயது 105.

ஐப்பசி திருவோணம்)
லோகாசார்யாய குரவே க்ருஷ்ண பாதஸ்ய ஸூநவே |
ஸம்ஸார போகி ஸந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம: ||

ஸ்ரீ க்ருஷ்ணபாதர் ஆகிய ஸ்ரீ வடக்குத் திருவீதிப் பிள்ளை திருக்குமாரர், ஸம்ஸாரமாகிய பாம்புக் கடியிலிருந்து
ஜீவர்களுக்கு விடுதலை தரும் மருந்தான ஸ்ரீ பிள்ளை உலகாசிரியரை வணங்குகிறேன்.

ஐப்பசி மாதம் திருவோணம் நக்ஷத்திரத்தில், வடக்குத் திருவீதிப் பிள்ளைக்கும், ஸ்ரீ ரங்க நாச்சியார் என்பருக்கும் புத்திரராக,
ஸ்ரீரங்கத்தில் அவதரித்தார். நம்பிள்ளையின் பட்டப் பெயரான ” லோகாச்சாரியன் ” என்கிற பெயரோடு,
” பிள்ளை ” என்கிற அடைமொழியையும் சேர்த்து இவருக்கு ” பிள்ளை லோகாச்சாரியன் ”
என்று பெயரிட்டு அழைத்தனர். இவர் தம் தகப்பனாரிடம் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து கொண்டு, நைஷ்டிக பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தார்.
தகப்பனாரிடம் திருவாய் மொழி மற்றும் இதர பிரபந்தங்கள், ஈடு முதலான வ்யாக்யானங்கள், ஸ்ரீ பாஷ்யம்
ஆகியவற்றைக் கற்றுக் கொண்டு, பரந்த ஞானம் பெற்றார். சம்பிரதாய ரஹஸ்யங்கள் பற்றி காலஷேபங்கள் செய்து வந்தார்.

பிள்ளைலோகாச்சாரியார் , தம் சிஷ்யர்களை அழைத்துக் கொண்டு, ஸ்ரீரங்கத்திலே உள்ள காட்டு அழகிய ஸிங்கர் திருக்கோயில்
ஸன்னதியில் ரஹஸ்யார்த்தங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். மணப்பாக்கத்து நம்பி என்று ஒருவர்.
இவர் ஸ்வப்னத்திலே, காஞ்சி தேவப் பெருமாள் தோன்றி, விஷேஷார்தங்களை அருளிச் செய்து,
மேலும் இவரை ஸ்ரீரங்கத்தில் காட்டழகிய ஸிங்கர் ஸன்னதிக்கு வரச் சொல்லி அங்கே மேற்கொண்டு
இவ்வர்த்தங்களை விரிவாகச் சொல்வதாகச் சொன்னார்.

மணப்பாக்கத்து நம்பியும் காட்டழகிய ஸிங்கர் ஸன்னதிக்கு வந்த பொழுது, அங்கே பிள்ளைலோகாச்சாய்யாரின்
விஷேஷார்த்த காலஷேபத்தில் கலந்து கொண்டார். பிள்ளைலோகாச்சாரியார் அருளிய அர்த்தங்கள்,
காஞ்சி பேரருளாளன் அருளிச் செய்த அர்த்தங்களாகவே இருந்ததைக் கண்டு இவர்,
பிள்ளைலோகாச்சாய்யரிடம் சென்று ” அவரோ நீர் ? ” என்று ஆச்சரியத்துடன் சொல்லி, அவர்தம் திருவடிகளை சரணடைந்தார்.
பின்னர் பிள்ளைலோகாச்சாரியார் அவரை தம் சிஷ்யராக்கிக் கொண்டார்.

பிள்ளைலோகாச்சாரியார் , நம்பெருமாளுக்கு ஆற்றிய ஸேவை அளப்பறியது.
ஒரு சமயம் தில்லி பாதுஷாவான அலாவுதீன் கில்ஜி என்பவன் தன் தளபதியான மாலிக்காபூர் என்பவனை அழைத்து,
தமிழகத்தின் மீது படையெடுத்து, இங்கு திருக்கோயில்களில் உள்ள பொன்னையும், பொருள்களயும், களவாடி வரும்படி ஆனையிட,
அதன் பொருட்டு, வழியில் உள்ள பல சைவ , வைணவ திருத்தலங்களில் கொள்ளையடித்துக் கொண்டு,
ஸ்ரீரங்கத்தை நோக்கி அவன் படை பரிவாரங்களுடன் புறப்பட்டான்.

இதனை அறிந்து கொண்ட பிள்ளைலோகாச்சாரியார் இவர்களிடமிருந்து அரங்கனைக் காக்க விழைந்தார்.
பெரிய பெருமாள் ஸயனித்திருக்கும் ஸன்னதியை கற்சுவர் கொண்டு மூடிவிட்டு, நம்பெருமாளையும் அவர்
திருவாபரணங்களையும் ஒரு பல்லக்கில் எழுந்தருளப் பண்ணிக் கொண்டு, பல ஸ்ரீவைஷ்ணவர்களுடன் தெற்கு நோக்கி புறப்பட்டார்.
திருமாலிருஞ்சோலை, திருமோகூர் திவ்ய தேஸங்களுக்கு அருகிலே உள்ள ஜ்யோதிஷ்குடி என்னும் ஊரில்,
ஒரு மலை அடிவாரத்திலே , பெருமாளை எழுந்தருளப் பண்ணி, அங்கிருந்தபடியே அவருக்கு நித்ய கைங்கர்யங்கள் செய்து கொண்டு வந்தார்.
வயோதிக்கத்தின் காரணமாக நோவு சாற்றி, உடல் தளர்ந்த நிலையில், நம்பெருமாளைக் காக்க தம் சிஷ்யர்களிடம் அறிவுறுத்தி,
தம் 105 ஆம் வயதில் நம்பெருமாளை தியானித்துக் கொண்டே ஆச்சாரியன் திருவடி சேர்ந்தார்.

——

(7).திருவாய்மொழிப்பிள்ளை :(பிறப்பு:கிபி.1380), குந்தீ நகரத்தில் அவதரித்தார். இவர் தாய், பிள்ளை லோகாசாரியர் கோயிலை விட்டு வெளியேறியதனால், அதனைத் தரியாது. உயிர்விட, சிறிய தாயாரிடம் வளர்ந்தனர். திருநாமங்கள்: திருமலையாழ்வான், ஸ்ரீசைலேசர், சடகோபதாசர், காட்டு வெட்டிஐயன் ஆழ்வார் திருநகரில் நம்மாழ்வாரைப் பிரதிஷ்டை செய்வித்து சதுர்வேதிமங்கலம் என்னும் ஒர் ஊரை உண்டாக்கி உடையவருக்கு ஒரு கோயிலையும் கட்டிவைத்தார். திருவனந்தபுரத்தில் விளாஞ்சோலைப்பிள்ளை யிடத்து இரகசிய விசேடங்களைக் கேட்டு திருவாய்மொழியில் வல்லவராய் திருவாய்மொழிப்பிள்ளை என்ற திருநாமம் பெற்றார். ஆசாரியர்:பிள்ளை உலகஆசிரியர் சீடர்கள்:மணவாள மாமுனிகள், சடகோபசீயர் எம்பெருமானார் சீயர். வயது105

(வைகாசி விசாகம்)
நம ஸ்ரீசைலநாதாய குந்தீ நகர ஜந்மநே |
ப்ரஸாதலப்த பரம ப்ராப்ய கைங்கர்யஸாலிநே ||

ஸ்ரீ குந்தீ நகரில் அவதரித்தவர், ஆசார்ய கடாக்ஷத்தால் பரம ஸ்லாக்யமான கைங்கர்ய ஸ்ரீயை அடைந்தவரான
ஸ்ரீ திருமலை ஆழ்வார் என்கிற ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடியை வணங்குகிறேன்.

திருமலை ஆழ்வார் என்னும் இயற்பெயருடைய திருவாய்மொழிப் பிள்ளை, நம்மாழ்வாரின் அவதார மாதமான வைகாசி மாதத்தில்,
அவரின் அவதார நஷத்திரமான விசாக நஷத்திரத்தில் அவதரித்தார். அவரின் இளம் வயதிலேயே பிள்ளைலோகாச்சாரியரின் சிஷ்யராகி,
அவரிடம் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து கொண்டார். பாண்டிய மன்னனுக்கு ப்ரோஹிதராகவும் , பிரதான அமைச்சராகவும் இருந்து
அரசு பணி ஆற்றிக் கொண்டிருந்தார். எதிர்பாரா விதமாக பாண்டிய மன்னன் அகால மரணமடைய,
அரசனின் மகன் மிகவும் இளம் வயதினராக இருந்த காரணத்தால், ராணியார், திருமலை ஆழ்வாரை
ராஜப் பிரதிநிதியாக நியமித்தார். இவரும் மிக்க புகழுடனும், பாராட்டுகளும் பெற்று, ராஜ்யத்தை நல்லபடியாக பரிபாலனம் செய்து வந்தார்.

இந்த சமயத்தில் தான், பிள்ளைலோகாச்சாரியார், நம்பெருமாளை, துலுக்கர்களிடமிருந்து காப்பாற்றும் பொருட்டு,
அவருடன் ஜ்யோதிஷ்குடி எழுந்தருளியிருந்தார். அவர், தம் சிஷ்யர்களை அழைத்து, அவர்களை திருமலையாழ்வாருக்கு,
ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரதாய விஷயங்களை கற்பித்து, அவரை தர்ஸன ப்ரவர்த்தகராக ஆக்க வேண்டும் என்று பணித்தார்.
சிஷ்யர்களும் ஆச்சாரியன் ஆக்ஞைப்படி, திருமலை ஆழ்வாருக்கு, ஸத்விஷயங்களைக் கற்பித்து,
அவரை ஸம்பிரதாய விஷயங்களில் ஈடுபட வைத்தனர்.

நம்பெருமாளை பாதுகாப்பு கருதி, ஜ்யோதிஷ்குடியிலிருந்து மேலும் தெற்கு நோக்கி, மலையாள தேஸத்திலுள்ள கோழிக்கோடு
நகரத்திற்கு பிள்ளைலோகாச்சாரியரின் சிஷ்யர்கள் எழுந்தருளப் பண்ணியிருந்தனர். நம்பெருமாளைப் போலவே, பாதுகாப்புக் கருதி,
திருக்குருகூரிலிருந்து நம்மாழ்வாரையும் அங்கிருந்த பக்தர்கள்,
கோழிக்கோட்டிற்கு எழுந்தருளப் பண்ணியிருந்தனர். இவ்விருவரும் தேனைகிடம்பை என்ற ஊரிலே சிறிது காலம் எழுந்தருளியிருந்து,
பின் நம் பெருமாள், திருநாராயணபுரம் எழுந்தருள, நம்மாழ்வார், முந்திரிப்பு என்னும் ஊருக்கு எழுந்தருளப்பட்டார்.
அவ்வூரில் நிலவிய திருடர்கள் பயம் காரணமாக, ஆழ்வார் ஒரு பெட்டகத்தில் எழுந்தருளப்பட்டு,
அப்பெட்டகத்தை இரும்புச் சங்கிலியால் பிணைத்து , ஒரு மலைச்சரிவின் அடியில் பாதுகாக்கப்பட்டிருந்தார்.

துலுக்கர்கள் பயம் நீங்கிய நிலையில், நம்மாழ்வாரை மீண்டும் திருக்குறுகூருக்கு எழுந்தருளப் பண்ண விரும்பிய பக்தர்கள்,
மலைச் சரிவிலிருந்து, ஆழ்வாரை எழுந்தருளப்பண்ண உதவி வேண்டி, மதுரையில் ராஜப் பிரதிநிதியாக இருந்த
திருமலை ஆழ்வாரை, தோழப்பர் என்னும் அடியவர் மூலம் நாடினர். திருமலை ஆழ்வாரும் ,
கொச்சி அரசருக்கு தேவையான உதவிகள் செய்ய வேண்டி ஒரு கடிதம் கொடுக்க, அதனை தோழப்பர் கொச்சி அரசரிடம் சென்று சமர்ப்பித்தார்.
பின் அவர் மூலம் உதவிகள் பெறப்பட்டு, நம்மாழ்வாரை மீண்டும் இரும்பு சங்கிலி கொண்டு மலை சரிவிலிருந்து மேலே கொண்டுவர முயன்றனர்.
அப்பொழுது தோழப்பர் இரும்புக் கம்பிகளுடன் மலைச் சரிவில் இறங்கி, நம்மாழ்வாரை மேலே எழுந்தருளப் பண்ணினார்.
மீண்டும் கீழே இறக்கப் பட்ட அதே இரும்புக் கம்பியை பற்றி மேலே வர,
தோழப்பர் முயற்சிக்கையில் கம்பி அறுந்து விழ , அங்கேயே அவர் உயிர் நீத்தார்.

திருமலை ஆழ்வார் ராஜ்ய பரிபாலனங்களை தகுதியானவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, ஸம்பிரதாய விஷயங்களில் ஈடுபடலானார்.
நம்மாழ்வாரின் திருவாய்மொழி மீது அதீத ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்ததால்,
இவர் திருவாய்மொழிப் பிள்ளை என்ற திருநாமத்துடன் அழைக்கப்பட்டார். இவர் ஆழ்வார் திருநகரியில் இருந்த பொழுது,
திகழக்கிடந்தார் திருநாவீறுடைய தாஸரண்ணருக்கும், ஸ்ரீரங்க நாச்சியாருக்கும் பிறந்த குமாரரான
அழகிய மணவாளனை சிஷ்யராக்கிக் கொண்டார். அழகிய மணவாளனாகிய இவர் தான் ஸ்ரீ வைஷ்ணவ ஸம்பிரதாயம்,
இன்றும் தழைத்தோங்கி இருப்பதற்குக் காரணகர்த்தரான ஸ்வாமி மணவாள மாமுனிகள் ஆவார்.

திருவாய் மொழிப் பிள்ளை திருமேனி நோய் வாய்ப்பட்டு, சிரம திசையில் இருந்த பொழுது,
எம்பெருமானார் தர்ஸனத்தை காத்து, மென் மேலும் வளர்க்கப் போகிறவர் யார் என்று வினவ,
உடனே அழகிய மணவாளன் தாம் அதற்குத் தயாராக இருப்பதாகக் கூறினார்.
உடனே ஸமஸ்கிருத சாஸ்திரங்களிலே ஸ்ரீ பாஷ்யத்தைக் கேட்டும், திருவாய்மொழி முதலான அருளிச்செயல்களிலே
அநவரதம் ஈடுபடுத்திக் கொண்டும், பூர்வர்களைப் போலே பெருமாளுக்கு,
மங்களா ஸாஸன கைங்கர்யபரராய் இருந்து கொண்டும், கோயிலிலே நித்ய வாசராய் எழுந்தருளியிரும் என்று
அழகிய மணவாளனை, திருவாய்மொழிப் பிள்ளை உபதேசித்து, ஆசிர்வதித்தார்.
பிறகு தம் சிஷ்யர்களை அழைத்து, அழகிய மணவாளன் ஒரு அவதார விஷேஷமானவன் என்று
ஆராதித்து வாருங்கள் என்று தெரிவித்து, தமது 120 வது வயதில் திருநாட்டிற்கு எழுந்தருளினார்.

———

(8). மணவாள மாமுனிகள் : (பிறப்பு. கி.பி. 1371-1443); சேஷாம்சம். திருநட்சத்திரம்: ஐப்பசி-மூலம், பாண்டிநாட்டில் சிக்கில் கிடாரம் என்ற சிற்றூரில்அவதரித்தார்(திருக்குருகூரில் அவதரித்ததாகவும் கொள்வர் சிலர்). திருத்தந்தையார் திகழக்கிடந்தான் திரு நாவீறுடைய பிரான் தாசரண்ணர்; திருத்தாயார் ஸ்ரீரங்கநாச்சியார். பார்பனமரபினர் அழகிய மணவாளன் என்பது இவர் இயற்பெயர். வேறு திருநாமங்கள்; ‘யதீந்திரப்பிரவனர், திருமலை தந்த பெருமாள், முப்பத்தாறாயிரப் பெருக்கர், செளமிய ஜாமாத்ரு யோகிந்தரர், காந்தேபாயந்தர், வரவரமுனி, வரயோகி, இராமாதுசன் பொன்னடி, ருசிர ஜாமாத்ருயோகீந்தரர், அழகிய மணவாளசீயர், பெரியசியர், துப்பில் குலமுடையார்தாசர், சடகோபசீயர் திருக்குமாரர், சீயர் நாயனார் (இராமாதுசய்யன்). ஆசாரியர் திருவாய்மொழிப்பிள்ளை தாம் திருக்குருக்ரில் இராமாநுசருக்கு எடுப்பித்த குன்றம் அனைய திருக்கோயிலின் நிர்வாகத்தையும் தம் சீடராகிய இவரிடம் ஒப்படைத்தார். மேலும் அவர் வடமொழி கிரந்தங்களில் பலகாலும் கண் வையாமல், ஶ்ரீபாஷ்யத்தை ஒருகால் கேட்டு, தமக்கும் எம்பெருமானார்க்கும் பிரியமான திருவாய்மொழி முதலிய அருளிச் செயல்களை நாடோறும் ஒதிக்கொண்டு தென்னரங்கர் செல்வமுற்று அத்திருத்தலத்து மாறன் உரை செய்த தமிழ் மறையை வளர்த்து, இந்தலீலாவிபூதியை நித்திய விபூதியாக்கிக்கொண்டு திருவரங்கம் பெரிய கோயிலில் நித்திய வாசம் செய்யும்படி பணித்தார். ஆசாரியரின் ஆணையை அவ்வண்ணமே நிறைவேற்றினார் அருமைச் சீடர்.

பெரிய பெருமாள் ஆணைப்படி கோயிலின் பெரிய திருமண்டபத்தில் ஆழ்வாருடைய திருவாய்மொழிப்பொருளை ஈடு முப்பத்தாறாயிரப்படியுடன் ஒராண்டு முழுதும் காலட்சேபம் செய்து ‘முப்பத்தாறாயிரப்பெருக்கர்’ என்ற விருதையும் பெற்றார். சீடர்கள்: ‘வானமாமலை இராமாநுச சீயர், அப்பிள்ளை, அப்பிள்ளான், நம்மையதிராச ராமாநுசன், அழகிய மணவாளன் (நம்பெருமாள்), சிங்கரயர், கோயில் கந்தாடையண்ணன், பரவஸ்து பட்டர்பிரான் சீயர், பிரதிவாதி பயங்கரம் அண்ணன், வண்சடகோப சீயர் என்கின்ற திருவேங்கட சீயர், எறும்பியப்பா, மகாராஜாக்களும் சாத்தின சாத்தாத ஶ்ரீவைணவர்கட்குக் கணக்கில்லை.

இவர் திருவடிசம்பந்திவேட்டுர் சிங்கராசாரியார், மதுரை மகாபலிராயனுக்கு இரகசியங்களை உபதேசித்து முத்தரசு என்னும் கிராமம் பெற்று, அதற்கு அழகிய மணவாளபுரம் என்று பெயரிட்டார். இவர் இருந்தவிடத்தைச் சிலர் தீயிட்டுக் கொளுத்தி விட, இவர் பாம்புருக் கொண்டு வெளிவந்ததாக ஒரு வரலாறும் உண்டு. ஆசாரியருக்குத் தமது உண்மை உருவமான சேஷாவதாரத்தைக் காட்டியதாக மற்றொரு வரலாறும் உண்டு. சடகோபக்கொற்றி என்னும் ஒர் அம்மையார் பெரிய சீயர் திருக்காப்புச் சோத்துக் கொண்டு தனியான ஓரிடத்தில் பகவதநுபவத்தில் இருக்கும்போது கதவின்புரையில் இவரைத் திருவனந்தாழ்வானாகக் கண்டதாக இன்னொரு வரலாறும் உண்டு.

மகாபலி வாணராயன் என்னும் அரசன் ஒருநாள் இரவில் பெரிய சீயருக்குத் தெரியாமல் அவருக்குச் சீபாதம் தாங்கிக் கொண்டுசென்றான். மறுநாள் சீயர் இதனை அறிந்து ஆச்சரியப்பட்டருளினார். இவர் நியமித்த அஷ்டதிக் கஜங்களாகிய ‘வானமாமலை சீயர், பட்டர்பிரான் சீயர், திருவேங்கட சீயர், கோயில் கந்தாடையண்ணன், பிரதிவாதி பயங்கரம் அண்ணன், எறும்பியப்பா, அப்பிள்ளை, அப்பிள்ளான்’ ஆகியோர் இவர் திருவடிகளில் ஆச்ரயித்தவர்கள். கோயில் கந்தாடையண்ணன், உடையவருக்கு முதலியாண்டானைப் போலே இவருக்குப் பாதுகாவலராயிருப்பவர். எறும்பியப்பா வடுக நம்பியைப் போலே தேவுமற்றியாத அளவுக்கு மீறிய அன்பாயிருப்பவர். பிரதிவாதிபயங்கரம் அண்ணன் ஆழ்வானைப்போலே உசாத் துணையாயிருப்பவர். அப்பிள்ளார் மடத்தில் எல்லா நிகழ்ச்சி கட்கும் பொறுப்பாயிருப்பவர். வானமாமலை சீயர் பிரியாது அடிமை செய்பவர். பட்டர் பிரான் சீயர் எம்பாரைப் போலே பாதச்சாயாப்பன்னராயிருப்பவர். இறுதிக் காலத்தில் ஸ்ரீசடகோபர் சீயர் மூலம் இவர்துறவறத்தை (துரியாசிரமத்தை) மேற்கொண்டு அழகிய மாமுனிகள் என்ற திருப்பெயருடன் திகழ்ந்தார்.

அருளிச் செயல்கள்: தத்துவத்திரயம், இரகசியத்திரயம், பூர்வசனபூஷணம், ஆசாரிய ஹிருதயம், ஞானசாரம், பிரமேயசாரம், சப்தகாதை, ஏழு பாட்டு, பெரியாழ்வார் திருமொழி (401 பாசுரங்கள்), இராமாதுச நூற்றந்தாதி ஆகிய பத்து பிரபந்தங்கட்கு வியாக்கியானம் இட்டருளினார். திருவாய்மொழி, நூற்றந்தாதி, உபதேசரத்னமாலை, ஈட்டுக்கு பிரமாணத்திரட்டு, தத்துவத் திரயத்திற்குப் பிரமானத்திரட்டு, பூர்வசனபூஷணபிரமாணத்திரட்டு, ஆர்த்திப்பிரபந்தம், தேவ ராசமங்களம், எதிராச விம்சதி, திருவாராதானக் கிரமம், இயல் சாத்து முதலியன. மேலும் அவ்வப்பொழுது பாடிய தனிப்பாடல்களும், விடுதிச் சுலோகங்களும் உண்டு. இவர் வாழ்ந்த காலம் 74 ஆண்டுகள். –

(ஐப்பசித் திருமூலம்)
ஸ்ரீசைலேச தயா பாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம் |
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம் ||

ஸ்ரீ திருமலை ஆழ்வார் கருணைக்குப் பாத்திரரும், ஞானம் பக்தி முதலிய குணங்கள் கடல் போல் நிரம்பியவரும்
ஸ்ரீ யதீந்த்ரர் ஸ்ரீ ராமாநுசரை எப்போதும் அனுசரித்திருப்பவருமான ஸ்ரீ அழகிய மணவாள மாமுனிகளை வணங்குகிறேன்.

ஐப்பசி மாதம் , மூல நக்ஷத்திரத்தில் ஆழ்வார் திருநகரியிலே,
திகழக்கிடந்தார் திருநாவீருடைய தாஸரண்ணருக்கும், ஸ்ரீரங்க நாச்சியாருக்கும் திருமகனாக அவதரித்தார் மணவாள மாமுனிகள்.
இவர் தம் இயற் பெயர் அழகிய மணவாளப் பெருமாள் என்பதாகும்.

சிறுவயதிலேயே சௌளம், உபநயனம் நடந்தேறியது. தம் திருத்தகப்பானாரிடத்திலே, அருளிச் செயல்களையும்,
வேத சாஸ்திரங்களையும் கற்றுக் கொண்டார். திருவாய்மொழிப் பிள்ளை தமக்குப் பின் எம்பெருமானார் தர்ஸனத்தை காத்து,
வளர்க்கப் போகிறவர் யாரென்று வினவ, அழகிய மணவாளப் பெருமாள்” அடியேன் அதற்குத் தயார் ” என்று கூறினார்.
திருவாய்மொழிப் பிள்ளையும் இவருக்கு அருளிச் செயல்களையும் மேலும் தத்துவார்த்தங்களையும் கற்பித்தார்.
திருவாய்மொழிப் பிள்ளை, இவரின் அருமை, பெருமைகளை தம் ஞான திருஷ்டியால் அறிந்து கொண்டு இவரை
ஸ்ரீரங்கம் சென்று அங்கு அழகிய மணவாளனுக்கு கைங்கர்யம் செய்யப் பணித்தார்.
ஸ்வாமி இராமாநுஜரின் மறு அவதாரமே, அழகிய மணவாளப் பெருமாள் எனபதனையும் உணர்ந்து,
அவரின் அவதார மகிமையை போற்றிக் காத்து, அவருக்கு துணை நிற்கவும் தம் எல்லா சிஷ்யர்களையும் பணித்தார்.

அழகிய மணவாளப் பெருமாளை உடையவர் ஸன்னதி கைங்கர்யத்தில் ஈடுபடுத்தினார் திருவாய்மொழிப் பிள்ளை.
உடையவர் பெயரில் மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டதால் இவருக்கு” யதீந்த்ரப்ரவனர் ” என்றும் திருநாமமிட்டார்.
எம்பெருமானார், பிள்ளைலோகாச்சார்யார் இவர்களின் வைபவங்களை நினைத்துக் கொண்டும்,
அவர்கள் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்திற்கு ஆற்றிய அளப்பரிய செயல்களை வியந்து கொண்டும்,
அவர்கள் எழுந்தருளியிருந்த இடங்களைக் கண்டும் பரம திருப்தி அடைந்தார்.

பிள்ளைலோகாச்சாரியாரின் திருமாளிகை வாசலில் கீழே விழுந்து வணங்கி,மண் புழுதியிலே புரண்டு “இது ரகசியம் விளைவித்த மண்”
என்று பெருமையுடன் மனம் மகிழ்வார். சிதிலம் அடைந்த ஓலைச் சுவடிகளை மீண்டும் ஏடுபடுத்தினார்.
இவருக்கு பிறந்த மகனுக்கு” ராமாநுஜப் பிள்ளை ” என்று ஆச்சாரியரின் ஆக்ஞைப்படி பெயரிட்டார்.
பின்னர் இவர் இல்லற வாழ்க்கையை விடுத்து, துறவற வாழ்க்கையான சன்யாசத்தை மேற்கொண்டார்.
பெரிய மங்களா ஸாஸனம் செய்து, பல்லவராயன் மடத்திற்கு எழுந்தருளினார். அதுவே அவருடைய ஆஸ்தான மணபம் ஆயிற்று.
அது முதற் கொண்டு அழகிய மணவாளப் பெருமாள், மணவாள மாமுனிகள் என்று அழைக்கப்படலானார்.

மாமுனிகளின் பெருமையும் அவரின் வளர்ச்சியையும் பிடிக்காத சிலர், அவர் எழுந்தருளியிருந்த மடத்திற்கு
நடு நிசியில் தீ வைத்து, மடத்தை எரித்தனர். மாமுனிகள் ” திருவநந்தாழ்வான் ” வடிவம் கொண்டு,
திருமால் அடியார்களின் பக்கம் வந்து சேர்ந்தார். தீயிட்டுக் கொளுத்தியவர்களுக்கு, அரசன் தண்டனை அளித்த போது,
மாமுனிகள் கருணை உள்ளத்துடன் மனமுவந்து அவர்களை மன்னித்து அருளினார்.

காஞ்சிபுரம், திருப்புட்குழி, திருக்கடிகை, எறும்பி, எம்பெருமான்களை ஸேவித்துக் கொண்டு
திருப்பதி, திருமலை எம்பெருமான்களை மங்களா ஸாஸனம் செய்தார்.
அங்கு அரசனின் உத்தரவு பெற்று ஒரு ஜீயரை நியமித்தார்.
அவரே எம்பெருமானார் ஜீயர் என்றும் சின்ன ஜீயர் என்றும் அழைக்கபடுபவர் ஆவார்.

திருவாய்மொழி ஈடு முப்பத்தாறாயிரப் படிக்கு மேற்கோள்களின் திரட்டு, உபதேஸ ரத்தின மாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி,
யதிராஜ விம்ஸதி, ஆர்த்தி ப்ரபந்தம், தேவராஜ மங்களம், கோபால விம்சதி உட்பட பன்னிரண்டு நூல்கள் இயற்றினார்.
மேலும் ஸ்ரீவசனபூஷணம், மும்முஷூப்படி, ஆசார்ய ஹ்ருதயம் உட்பட எட்டு ரஹஸ்ய க்ரந்தங்களுக்கு வ்யாக்யானங்கள் அருளினார்.
இவை தவிர மேலும் பல நூலகளையும், உரைகளையும் அருளிச்செய்தார்.

தென்னாட்டு திவ்ய தேஸங்கள் அனைத்தையும் ஸேவித்துக் கொண்ட ஸ்வாமி மணவாள மாமுனிகளுக்கு,
வட நாட்டு திவய தேஸங்களை ஸேவிக்க இயலவில்லையே என்று வருந்தினார்.
அப்பொழுது ராமாநுஜ தாஸர் என்பவர், தாம் வடநாட்டு திவ்ய தேஸங்களுக்கு சென்று, அங்கு மாமுனிகளின் திருநாமத்தை ஓதி,
எம்பெருமான்களையும் ஸேவித்து, திருத்துழாய் பிரசாதத்தை அவரிடம் ஸமர்ப்பிப்பதாகக் கூறி, அவரின் சம்மதத்தைப் பெற்றார்.
ராமாநுஜரும் அவ்வண்ணமே பத்ரி, பிருந்தாவனம், அயோத்தி, ஹரித்வார், புஷ்கரம் உட்பட பல திவ்ய தேஸங்களையும் ஸேவித்துக் கொண்டு,
கங்கை, யமுனை, சரயு நதிகளில் தீர்த்தமாடி, அபய ஹஸ்தம், திருத்துழாய் பிரசாதங்களுடன் திரும்பி வந்து மாமுனிகளிடம் ஸமர்ப்பித்தார்.
மணவாள மாமுனிகளும் அப்பிரஸாதங்களைப் பெற்றுக் கொண்டு வட நாட்டு திவ்ய தேஸங்களை ஸேவித்த உணர்வை அடைந்தார்.

ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தை பரப்பவும், அருளிச் செயல்களின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கவும் ,
மிகவும் ப்ரஸித்தி பெற்ற வேத விற்பன்னர்களைக் கொண்டு , அஷ்டதிக்கஜங்களை நியமித்தார்.
அவர்கள் வானமாமலை ஜீயர், பட்டர்பிரான் ஜீயர், திருவேங்கட ராமாநுஜ ஜீயர், கோவிலண்ணன்,
பிரதிவாதி பயங்கரம் அண்ணா, எறும்பியப்பா, அப்பிள்ளை மற்றும் அப்பிள்ளார் ஆவர்.

கால வெள்ளத்தில் திருமேனியில் நோவு கண்டு, அரங்கனுக்கு நேரில் சென்று கைங்கர்யங்கள் செய்ய முடியவில்லையே என்றும்,
மேலும் பெருமாளையும் நேரில் ஸேவிக்க இயலவில்லையே என்றும் வருத்தமுற்றார்.
ஒரு நாள் அரங்கன் வீதி உலா வரும் பொழுது நேரில் கண்ணாரக் கண்டு ,சேவித்து மிகுந்த ஆனந்தமடைந்தார்.
74 ஆண்டுகள் இப்பூவுலகில் வாழ்ந்து எம்பெருமானார் தர்ஸனத்தை நிலைநிறுத்தி, கைங்கர்யங்கள் சிறப்பாக நடைபெற
ஏற்பாடுகள் செய்வித்து, ஆழ்வார், ஆச்சார்யர்களின் அருளிச் செயல்களை மக்களிடையே பரப்பினார்.

இப்படியாக ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தை தலைமேற் கொண்டு செவ்வனே நியமனப்படுத்திய ஸ்வாமி மணவாள மாமுனிகள்,
மாசி மாதம், க்ருஷ்ணபக்ஷ துவாதசியன்று, எம்பெருமானார், பிள்ளைலோகாச்சாரியார், திருவாய்மொழிப் பிள்ளை, இவர்களின்
திருவடிகளை நினைத்து கொண்டே திருநாட்டிற்கு எழுந்தருளினார்.

இன்றும், என்றும் நம் ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரதாயம் தழைத்தோங்கி
வளரச் செய்த நம் ஸ்வாமியை ” மணவாள மாமுனியே இன்னும் ஒரு நூற்றாண்டிரும் ” என்று வேண்டிக் கொள்கிறோமே —

இப்புவியில் அரங்கேசர்க்கு ஈடளித்தான் வாழியே
எழில் திருவாய்மொழிப்பிள்ளை இணையடியோன் வாழியே
ஐப்பசியில் திருமூலத்து அவதரித்தான் வாழியே
அரவரசப் பெருஞ்சோதி அனந்தன்என்றும் வாழியே
இப்புவியும் ஸ்ரீசைலம் ஏத்த வந்தோன் வாழியே
ஏராரும் எதிராசர் எனஉதித்தான் வாழியே
முப்புரிநூல் மணிவடம் முக்கோல் தரித்தான் வாழியே
மூதரிய மணவாள மாமுனிவன் வாழியே

————

ஓராண் வழி ஆசார்ய பரம்பரையில் வாராத ஆசார்யர்களும் (மேலும் பலர் உள்ளனர்):

ஸ்ரீ காவலப்பன் (தை விசாகம்)
நாதமௌநி பதாஸக்தம் ஜ்ஞானயோகாதி ஸம்பதம் |
குருகாதிப யோகீந்த்ரம் நமாமி சிரஸா ஸதா ||

ஸ்ரீ நாதமுனிகள் திருவடித் தாமரைகளில் மிக்க பக்தி கொண்டவர், ஞான யோக பக்தி யோகங்களில் நிறை செல்வர்,
யோகிகளில் சிறந்தவரான ஸ்ரீ குருகைக் காவலப்பன் திருவடித் தாமரைகளில் எப்போதும் வணங்குகிறேன்

ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையர் (வைகாசி கேட்டை)
ஸ்ரீராமமிச்ர பத பங்கஜ ஸஞ்சரீகம் ஸ்ரீயாமுனார்ய வர புத்ரம் அஹம் குணாப்யம் |
ஸ்ரீரங்கராஜ கருணா பரிணாம தத்தம் ஸ்ரீபாஷ்யகார சரணம் வரரங்கமீடே ||

ஸ்ரீ யாமுனாசார்யர் திருக்குமாரர், ஸாத்விக குணபூர்ணர், ஸ்ரீ மணக்கால் நம்பிகளின் திருவடித் தாமரைகளில்
வண்டு போன்றவர், ஸ்ரீ பாஷ்யகாரரைத் தம் சிஷ்யராகப் பெற்றவரான ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையரைப் போற்றுகிறேன்.

ஸ்ரீ திருக்கோஷ்டியூர் நம்பி (வைகாசி ரோஹிணி )
ஸ்ரீவல்லப பதாம்போஜ தீபக்த்யம்ருத ஸாகரம் |
ஸ்ரீமத்கோஷ்டீபுரீபூர்ணம் தேசிகேந்த்ரம் பஜாமஹே ||

ஸ்ரீ மஹாலக்ஷ்மி நாதன் நாராயணன் திருவடிகளில் ஞானாம்ருத பக்தி அம்ருதக் கடல் போன்றவர்,
ஆசார்யர்களில் சிரேஷ்டரான ஸ்ரீ திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் சரண் அடைகிறோம்.

ஸ்ரீ பெரிய திருமலை நம்பி (வைகாசி ஸ்வாதி)
பிதாமஹஸ்யாபி பிதாமஹாய ப்ராசேதஸாதேசபலப்ரதாய |
ஸ்ரீபாஷ்யகாரோத்தம தேசிகாய ஸ்ரீசைலபூர்ணாய நமோ நம: ஸ்தாத் ||

ஸ்ரீ திருமலை யப்பனாலேயே தன் தகப்பனாராகக் கொண்டாடப்பட்டவர், அதனால் அவன் மகனாகிய
சதுர்முக பிதாமஹனுக்கே பிதாமஹரானவர், ஸ்ரீ பாஷ்யகாரருக்கு ஸ்ரீமத் வாலமீகி ராமாயணம் உபதேசித்த
உத்தம தேசிகரான ஸ்ரீ திருமலை நம்பிகளை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்.

ஸ்ரீ திருமாலை ஆண்டான் (மாசி மகம்)
ராமாநுஜ முநீந்த்ராய த்ராமிடீ ஸம்ஹிதார்த்ததம் |
மாலாதர குரும் வந்தே வாவதூகம் விபஸ்சிதம் ||

த்ராவிட வேதமான ஸ்ரீ திருவாய்மொழியைத் தம் வாக்கு வன்மையால் ஸ்ரீ ராமானுஜ முனிவர்க்கு உபதேசித்தவரான
மஹா மேதாவி ஸ்ரீ திருமாலை ஆண்டான் எனும் ஸ்ரீமாலாதரரைப் பூசிக்கிறேன்.

ஸ்ரீ திருக்கச்சி நம்பிகள் (மாசி ம்ருகசீர்ஷம்)
தேவராஜ தயாபாத்ரம் ஸ்ரீ காஞ்சி பூர்ணம் உத்தமம் |
ராமாநுஜ முநேர் மாந்யம் வந்தேஹம் ஸஜ்ஜநாச்ரயம் ||

ஸ்ரீ தேவராஜனின் கருணைக்குப் பாத்ரபூதர், உத்தமரான ஸ்ரீ காஞ்சிபூர்ணர்,
ஸ்ரீ ராமானுசரால் மிகவும் போற்றப் பட்டவர்,
ஸ்ரீ வைஷ்ணவர்களால் சூழப்பட்ட திருக்கச்சி நம்பிகளை வணங்குகிறேன்.

ஸ்ரீ மாறனேரி நம்பி (ஆனி ஆயில்யம்)
யாமுநாசார்ய ஸச்சிஷ்யம் ரங்கஸ்தலநிவாஸிநம் |
ஜ்ஞாநபக்த்யாதிஜலதிம் மாறனேரிகுரும் பஜே ||

ஸ்ரீ யாமுனாசார்யரின் ப்ரிய சிஷ்யர், ஸ்ரீரங்கம் பெரியகோயில் நித்ய வாசி,
ஞான பக்திக் கடல் ஆகிய ஸ்ரீ மாறனேரி நம்பியை பஜிக்கிறேன்.

ஸ்ரீ கூரத்தாழ்வான் (தை ஹஸ்தம்)
ஸ்ரீவத்ஸ சிந்ந மிச்ரேப்யோ நம உக்திம தீமஹே: |
யதுக்தயஸ் த்ரயி கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம்: ||

ஸ்ரீ நாராயண பரத்வமாகிய மங்கல நாண் பூண்டவள் வேத மாதா எனத் தம் ஸ்தோத்ரங்களால்
காட்டி யருளிய ஸ்ரீ கூரத்தாழ்வானுக்கு நம் வணக்கங்கள்.

ஸ்ரீ முதலியாண்டான் (சித்திரை புனர்வஸு )
பாதுகே யதிராஜஸ்ய கதயந்தி யதாக்யயா |
தஸ்ய தாஸரதே: பாதௌ சிரஸா தாரயாம்யஹம் ||

ஸ்ரீ தாசரதி என்று திருநாமம் உள்ளவர், ஸ்ரீ எம்பெருமானாரின் திருவடி நிலைகளாகப் போற்றப் பெறுபவர்,
ஸ்ரீ முதலியாண்டானின் திருவடிகளைத் தலையால் தாங்குகிறேன்.

ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார் (கார்த்திகை பரணி)
ராமானுஜார்ய ஸச்சிஷ்யம் வேதசாஸ்த்ரார்த்த ஸம்பதம் |
சதுர்த்தாச்ரம ஸம்பந்நம் தேவராஜ முநிம் பஜே ||

ஸ்ரீ எம்பெருமானாரின் ப்ரிய ஸிஷ்யர், வேதங்கள் சாஸ்த்ரங்களை உட்பொருளுணர்ந்து கற்றவர்,
ஸந்யாஸாச்ரமம் மேற்கொண்டவர் ஆகிய ஸ்ரீ தேவராஜ முனிவர் எனும்
ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானாரை அடியேன் சரண் புகுகிறேன்.

ஸ்ரீ கோயில் கோமாண்டூர் இளையவில்லி ஆச்சான் (சித்திரை ஆயில்யம்)
ஸ்ரீ கௌசிகாந்வய மஹாம்புதி பூர்ணசந்த்ரம்
ஸ்ரீ பாஷ்யகார ஜநநீ ஸஹஜா தநுஜம் |
ஸ்ரீசைலபூர்ண பத பங்கஜ சக்த சித்தம்
ஸ்ரீபாலதந்வி குருவர்யம் அஹம் பஜாமி ||

கௌசிக குல சமுத்ரத்துப் பூர்ண சந்திரன் போன்றவர், ஸ்ரீ பாஷ்யகாரரின் திருத்தாயாரின் ஸஹோதரி குமாரர்,
ஸ்ரீ சைலபூர்ணரின் திருவடிகளில் ஆழ்ந்த பக்தர் ஆகிய பால தன்வி மஹா குருவை வணங்குகிறேன்.

ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் (சித்திரை ஹஸ்தம்)
ராமானுஜ பதாம்போஜயுகளீ யஸ்ய தீமத: |
ப்ராப்யம் ச ப்ராபகம் வந்தே ப்ரணதார்த்திஹரம் குரும் ||

மஹாமேதாவி, தம் ஆசாரயர் ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே ப்ராப்யமும் ப்ராபகமும் என்று உறுதியானவர்
ஆகிய ஸ்ரீ ப்ரணதார்த்திஹர குரு ஸ்ரீ கிடாம்பி ஆச்சானைத் தொழுகிறேன்.

ஸ்ரீ வடுக நம்பி (சித்திரை அஸ்வினி)
ராமானுஜார்ய ஸச்சிஷ்யம் ஸாளக்ராம நிவாஸிநம் |
பஞ்சமோபாய ஸம்பந்நம் ஸாளக்ராமார்யம் ஆச்ரயே ||

ஸ்ரீ ராமானுஜரின் சச்சிஷ்யர், சாளக்ராமத்தில் வசிப்பவர், ஆசார்ய நிஷ்டையாகிய பஞ்சமாபாயத்தில்
நிலை நின்றவர் ஆகிய ஸ்ரீ சாலக்ராமாசார்யர் ஸ்ரீ வடுக நம்பியைத் தொழுகிறேன்.

ஸ்ரீ வங்கிபுரத்து நம்பி
பாரத்வாஜ குலோத்பூதம் லக்ஷ்மணார்ய பதாச்ரிதம் |
வந்தே வங்கிபுராதீஸம் ஸம்பூர்ணாயம் க்ருபாநிதிம் ||

ஸ்ரீ பாரத்வாஜ குலத்திலகர், ஸ்ரீ எம்பெருமானார் திருவடியில் ஆச்ரயித்தவர்,
ஸ்ரீ வங்கிபுரத் தலைவர் க்ருபா நிதியாகிய ஸ்ரீ வங்கிபுரத்து நம்பியைத் தொழுகிறேன்.

ஸ்ரீ சோமாசியாண்டான் (சித்திரை திருவாதிரை)
நௌமி லக்ஷ்மண யோகீந்த்ர பாதஸேவைக தாரகம் |
ஸ்ரீராமக்ரதுநாதார்யம் ஸ்ரீபாஷ்யாம்ருத ஸாகரம் ||

ஸ்ரீ எம்பெருமானார்க்குக் குற்றேவல்கள் பெருங்களிப்போடு செய்தவர், ஸ்ரீபாஷ்ய அமுதக் கடல் என்னலாம்படி
அதைக் கற்றறிந்தவர், ஸ்ரீ ராமர் எனும் திரு நாமம் பூண்ட ஸ்ரீ சோமாசி ஆண்டானைத் தொழுகிறேன்.

ஸ்ரீ பிள்ளை உறங்கா வில்லி தாசர் (மாசி ஆயில்யம்)
ஜாகரூக தநுஷ்பாணிம் பாணௌ கட்கஸமந்விதம்
ராமானுஜஸ்பர்சவேதிம் ராத்தாந்தார்த்த ப்ரகாசகம் |
பாகிநேயத்வயயுதம் பாஷ்யகார பரம்வஹம்
ரங்கேசமங்களகரம் தநுர்தாஸம் அஹம் பஜே ||

எப்போதும் உறங்காத விழிப்புள்ள ஸ்ரீ உறங்காவில்லி தாசர், ஒருகையில் வில்லும் மற்றொன்றில் கத்தியும் ஏந்தி
ஸ்ரீ நம்பெருமாளைக் காப்பவர், ஸ்ரீ ராமாநுசர்க்கு ஸ்பர்சவேதி, ரஹஸ்ய புருஷார்த்தங்களைத் தம் வாழ்வில்
வெளிப்படுத்தியவர், இரு மருமகன்களை உடையவர், ஸ்ரீ எம்பெருமானார் மடத்தை நடத்தியவர், நித்தியமாக
ஸ்ரீ பெரிய பெருமாளை மங்களாசாசனம் செய்தவருடைய திருவடிகளை புகலாக அடைகிறேன்.

ஸ்ரீ திருக்குருகைப் பிரான் பிள்ளான் (ஐப்பசி புனர்வஸு )
த்ராவிடாகம ஸாரக்யம் ராமாநுஜ பதாச்ரிதம் |
ஸுதியம் குருகேசார்யம் நமாமி சிரஸாந்ஹவம் ||

த்ராவிட வேதத்தின் உட்பொருள் நன்கு உணர்ந்தவர், ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகலில் சரணம் புக்கவர்,
மஹா மேதாவியான ஸ்ரீ குருகேசாசார்யரை தினமும் தொழுகிறேன்.

ஸ்ரீ எங்களாழ்வான் (சித்திரை ரோஹிணி)
ஸ்ரீவிஷ்ணுசித்த பத பங்கஜ ஸம்ச்ரயாய சேதோ மம ஸ்ப்ருஹயதே கிமத: பரேண |
நோசேந் மமாபி யதிஸேகரபாரதீனாம் பாவ: கதம் பவிதுமர்ஹதி வாக்விதேய: ||

ஸ்ரீ விஷ்ணு சித்தரை அடைந்திருக்க அடியேன் மனம் விரும்புகிறது. அவர் திருவடிகளைத் தவிர வேறு எது பயனுள்ளது?
அவர் திருவடிகளைச் சார்ந்திரேனாகில் அடியேன் எவ்வாறு ஸ்ரீ எம்பெருமானார் அருளிய திவ்யார்த்தங்களைக் கற்றிருக்க முடியும்?

ஸ்ரீ அநந்தாழ்வான் (சித்திரை சித்திரை)
அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம் |
ஆச்ரிதாநாம் ஸுசரணம் வந்தே அநந்தார்ய தேசிகம் ||

அனைத்துக் கல்யாண குணங்களின் இருப்பிடம், அஞ்ஞான இருளை ஒழிப்பவர்,
தம்மைச் சரண் புக்கோர்க்கு ஒப்பிலா அரண் ஆகிய ஸ்ரீ அநந்தாழ்வானை வணங்குகிறேன்.

ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார் (பங்குனி ஹஸ்தம்)
ஸ்ரீரங்கே மீநஹஸ்தே ச ஜாதம் ரங்கார்யநந்தநம் |
ராமாநுஜபதாஸ்கந்தம் ரங்கநாதகுரும் பஜே ||

கைங்கார்யருக்குப் புதல்வராகப் பங்குனி ஹஸ்தத்தில் அவதரித்த, ஸ்ரீ ராமானுஜரின் திருவடி பக்தர்,
ஸ்ரீ ரங்கநாதர் எனும் திருநாமம் கொண்ட ஸ்ரீ திருவரங்கத்து அமுதத்தனாரிடம் புகல் அடைகிறேன்.

ஸ்ரீ நடாதூரம்மாள் (சித்திரை சித்திரை)
வந்தேஹம் வரதார்யம் தம் வத்ஸாபி ஜநபூஷணம் |
பாஷ்யாம்ருத ப்ரதாநாத்ய ஸஞ்ஜீவயதி மாமபி ||

அடியேனுக்கு ஸ்ரீ பாஷ்யத் தேன் அமுது ஊட்டிய ஸ்ரீவத்ஸ குல திலகர்
ஸ்ரீ நடாதூர் அம்மாள் எனும் ஸ்ரீ வரதாசார்யரை வணங்குகிறேன்.

ஸ்ரீ வேத வ்யாஸ பட்டர்(வைகாசி அனுஷம்)
பௌத்ரம் ஸ்ரீராமமிச்ரஸ்ய ஸ்ரீவத்ஸாங்கஸ்ய நந்தநம்
ராமஸூரிம் பஜே பட்டபராசரவராநுஜம்

ஸ்ரீ ராம மிச்ரர் (ஸ்ரீ கூரத்தாழ்வானின் திருத்தகப்பனார், கூரத்து ஆழ்வார்) திருப்பேரனாரும்,
ஸ்ரீ ஆழ்வானின் திருக்குமாரரும், ஸ்ரீ பராசர பட்டரின் இளைய சஹோதரருமான ஸ்ரீ ராமப் பிள்ளை எனும்
ஸ்ரீ வேத வ்யாஸ பட்டரை அடியேனுக்குப் புகலாக அடைகிறேன்.

ஸ்ரீ கூரநாராயண ஜீயர் (மார்கழி கேட்டை)
ஸ்ரீபராசரபட்டார்ய சிஷ்யம் ஸ்ரீரங்கபாலகம்
நாராயணமுநிம் வந்தே ஜ்ஞாநாதிகுணஸாகரம்

ஸ்ரீ பராசர பட்டர் சிஷ்யரும், ஸ்ரீ ரங்கத்தின் பாது காவலரும் ஞான, பக்திக்கடலுமான
ஸ்ரீ நாராயண முனியைத் தொழுகிறேன்..

ஸ்ரீ ச்ருத ப்ரகாசிகா பட்டர்
யதீந்த்ர க்ருத பாஷ்யார்த்தா யத் வ்யாக்யாநேந தர்சிதா: |
வரம் ஸுதர்சநார்யம் தம் வந்தே கூர குலாதிபம் ||

எவரது ஸ்ரீ ச்ருதப்ரகாசிகா வ்யாக்யானத்தில் ஸ்ரீ யதிராஜரின் ஸ்ரீ பாஷ்யம் நன்கு விளக்கப் பட்டுள்ளதோ,
அந்த ஸ்ரீ கூர குலத்தோன்றல், மஹா ஞானி ஸ்ரீ சுதர்சனாசார்யரை வணங்குகிறேன்.

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை (ஆவணி ரோஹிணி)
ஸ்ரீமத் க்ருஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுந ஸூநவே |
யத் கடாக்ஷைக லக்ஷ்யாணாம் ஸுலப: ஸ்ரீதரஸ் ஸதா ||

ஸ்ரீ யாமுனாசார்யர் குமாரரும், எவர் க்ருபையினால் ஸ்ரீ எம்பெருமானை எளிதில் அடைய முடியுமோ
அந்த ஸ்ரீ கிருஷ்ணர் எனும் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையைத் துதிக்கிறேன்.

ஈயுண்ணி மாதவப் பெருமாள் (கார்த்திகை பரணி)
லோகாசார்ய பதாம்போஜ ஸம்ச்ரயம் கருணாம்புதிம் |
வேதாந்த த்வய ஸம்பந்நம் மாதவார்யம் அஹம் பஜே ||

ஸ்ரீ நம்பிள்ளை லோகாசார்யர் திருவடிகளில் சரண் புக்கவரும், கருணா சாகரரும் ஸம்ஸ்க்ருத த்ராவிட (உபய)
வேதாந்தங்களில் கரை கண்டவருமான ஸ்ரீ ஈயுண்ணி மாதவப் பெருமாளை சரண் அடைகிறேன்.

ஈயுண்ணி பத்மநாபப் பெருமாள் (ஸ்வாதி)
மாதவாசார்ய ஸத்புத்ரம் தத்பாதகமலாச்ரிதம் |
வாத்ஸல்யாதி குணைர் யுக்தம் பத்மநாப குரும் பஜே ||

ஸ்ரீ மாதவாசார்யர் ஸத்புத்ரர், அவரது சிஷ்யர், வாத்சல்யாதி கல்யாண குணக் கடல் ஆகிய
ஸ்ரீ ஈயுண்ணி பத்மநாபப் பெருமாளை சரண் அடைகிறேன்.

நாலூர்ப் பிள்ளை (பூசம்)
சதுர்க்ராம குலோத்பூதம் த்ராவிட ப்ரஹ்ம வேதிநம் |
யஜ்ஞார்ய வம்சதிலகம் ஸ்ரீவராஹமஹம் பஜே ||

ஸ்ரீ கூரத்தாழ்வான் சிஷ்யர் நாலூரான் வம்சத்தவர், ஸ்ரீ எம்பெருமானார் சிஷ்யரான ஸ்ரீ எச்சான் வம்சத் திலகர்,
திராவிட வேத பாரங்கதர் ஆகிய ஸ்ரீ வராஹர் எனும் ஸ்ரீ நாலூர்ப் பிள்ளையை வணங்குகிறேன்.

நாலூர் ஆச்சான் பிள்ளை (மார்கழி பரணி)
நமோஸ்து தேவராஜாய சதுர்க்ராம நிவாஸிநே |
ராமானுஜார்ய தாஸஸ்ய ஸுதாய குணசாலிநே ||

ஸ்ரீ நாலூர்ப் பிள்ளை எனும் ஸ்ரீ ராமாநுஜாசார்யர் குமாரர், சதுர்க்ராமம் எனும் நாளூரில் வசிப்பவர்
ஸ்ரீ தேவராஜ குரு ஆகிய மஹா குணசாலி ஸ்ரீ நாலூர் ஆச்சான் பிள்ளையைத் தொழுகிறேன்.

ஸ்ரீ நடுவில் திருவீதி பிள்ளை பட்டர் (ஐப்பசி அவிட்டம்)
லோகாசார்ய பதாஸக்தம் மத்யவீதி நிவாஸிநம் |
ஸ்ரீவத்ஸசிஹ்நவம்சாப்திஸோமம் பட்டார்யமாச்ரயே ||

ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளில் ஆழ்ந்த பக்தர், ஸ்ரீரங்கம் நடுவில் திருவீதியில் வாழ்ந்தவர்,
ஸ்ரீ கூரத்தாழ்வானின் வம்சத்துக்கு முழு நிலவு போன்றவரான
ஸ்ரீ நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டரைச் சரண் அடைகிறேன்.

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் (ஐப்பசி சதயம்)
ஜ்ஞாந வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத் ஸுந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத் குரும் பஜே ||

திராவிட வேதமாகிய ஸ்ரீ திருவாய்மொழியை விளக்கியவர், ஞானமும் வைராக்யமும் மிக்கவரான
எனது ஆசார்யர் ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயரைத் தொழுகிறேன்.

ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் (மார்கழி அவிட்டம்)
த்ராவிடாம்நாய ஹ்ருதயம் குருபர்வக்ரமாகதம் |
ரம்யஜாமாத்ருதேவேந தர்சிதம் க்ருஷ்ணஸூநுநா ||

குருபரம்பராகதமான த்ராவிடவேதம் ஸ்ரீ திருவாய்மொழியின் பொருளை நமக்கு நன்கு உரைத்தருளியவர்
ஸ்ரீ கிருஷ்ணர் எனும் ஸ்ரீ வடக்குத் திருவீதி பிள்ளையின் குமாரர் ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்.

ஸ்ரீ நாயனார் ஆச்சான் பிள்ளை (ஆவணி ரோஹிணி)
ச்ருத்யர்த்தஸாரஜநகம் ஸ்ம்ருதிபாலமித்ரம்
பத்மோல்லஸத் பகவதங்க்ரி புராணபந்தும் |
ஜ்ஞாநாதிராஜம் அபயப்ரதராஜ ஸூநும்
அஸ்மத் குரும் பரமகாருணிகம் நமாமி ||

ச்ருதிப் பொருளை அமுதமாய்ப் பொழிபவர், ஸ்ம்ருதிப் பொருளைத் தாமரையை அலர்த்தும்
கதிரவன் போல் விளங்கச் செய்பவர், ஸ்ரீ எம்பெருமானின் தாமரைத் திருவடிகளில் பழவடியார், ஞானப் பேரரசர்,
அபயப்ரத ராஜர் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையின் திருக்குமாரரான என் ஆசார்யர் பரம காருணிகர்
ஸ்ரீ நாயனார் ஆச்சான் பிள்ளையை வணங்குகிறேன்.

ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் (ஆனி ஸ்வாதி)
ஸுந்தரஜாமாத்ருமுநே: ப்ரபத்யே சரணாம்புஜம் |
ஸம்ஸாரார்ணவ ஸம்மக்ந ஜந்து ஸந்தாரபோதகம் ||

சம்சாரக் கடலில் மூழ்கும் மக்களுக்கு நல்ல படகாகும் ஸ்ரீ அழகிய மணவாள முனியின்
திருவடித் தாமரைகளை பணிகிறேன்.

ஸ்ரீ கூர குலோத்தம தாசர் (ஐப்பசி திருவாதிரை)
லோகாசார்ய க்ருபாபாத்ரம் கௌண்டிந்ய குல பூஷணம் |
ஸமஸ்தாத்ம குணாவாஸம் வந்தே கூர குலோத்தமம் ||

ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் பரிபூர்ண க்ருபைக்குப் பாத்ரர், கௌண்டிந்ய குலத்தின் அணிகலன்,
ஸகல குண ஸம்பன்னரான ஸ்ரீ கூர குலோத்தம தாஸரைத் தொழுகிறேன்.

ஸ்ரீ விளாஞ்சோலைப் பிள்ளை (ஐப்பசி உத்தரட்டாதி)
துலாஹிர்புத்ந்யஸம்பூதம் ஸ்ரீலோகார்ய பதாச்ரிதம் |
ஸப்தகாதா ப்ரவக்தாரம் நாராயணமஹம் பஜே ||

ஐப்பசி உத்தரட்டாதியில் அவதரித்தவர், ஸ்ரீ பிள்ளை லோகாசார்யரைச் சரண் புக்கவர்,
ஸ்ரீவசன பூஷண சாரமான சப்த காதையை அருளிச் செய்தவரான
ஸ்ரீ விளாஞ்சோலைப் பிள்ளையை வணங்குகிறேன்.

ஸ்ரீ வேதாந்தாசார்யர் (புரட்டாசி திருவோணம்)
ஸ்ரீமான் வேங்கடநாதார்ய: கவிதார்க்கிக கேசரீ |
வேதாந்தாசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

எதிர்க்கும் கவிகளுக்கும் தார்க்கிகர்க்கும் வெல்ல ஒண்ணாத சிங்கம், வேதாந்த ஞானக் கடலான
ஸ்ரீமான் வேங்கட நாதார்யரை எப்போதும் என் இதயத்தில் எழுந்தருளப் பண்ணுகிறேன்.

ஸ்ரீ திருநாராயண புரத்து ஆய் ஜநன்யாசார்யர் (ஐப்பசி பூராடம்)
ஆசார்ய ஹ்ருதயஸ்யார்த்தா: ஸகலா யேந தர்சிதா: |
ஸ்ரீஸாநுதாஸம் அமலம் தேவராஜம் தமாச்ரயே ||

ஸ்ரீசானு தாஸர் என்றும் தேவராஜர் என்றும் புகழ் மிக்கவர், களங்கமற்றவர், ஸ்ரீ ஆசார்ய ஹ்ருதய பொருளை
விரித்துரைத்தவர் ஸ்ரீ ஆய் ஜனந்யாசார்யர் திருவடிகளைப் புகலாய் அடைகிறேன்.

—————————-

ஸ்ரீ மாமுனிகளின் அஷ்ட திக் கஜங்கள்

ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் (புரட்டாசி புனர்வஸு)
ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாதரேகா மயம் ஸதா |
ததா யத்தாத்ம ஸத்தாதிம் ராமானுஜ முநிம் பஜே ||

ஸ்ரீ மாமுனிகளை எப்போதும் ஆஸ்ச்ரயித்தவரும், அவர் திருவடி ரேகைகள் போன்றவரும்,
அவரையே தம் சத்தையாகக் கொண்டவருமான ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரைப் போற்றுகிறேன்.

ஸ்ரீ பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர் (கார்த்திகை புனர்வஸு)
ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாத ஸேவைக தாரகம் |
பட்டநாத முநிம் வந்தே வாத்ஸல்யாதி குணார்ணவம் ||

ஸ்ரீ மாமுனிகள் திருவடித் தாமரைகளையே எப்போதும் புருஷார்த்தமாக உடையவர், சகல குணங்களும் நிறைந்தவர்,
வாத்சல்யம் மிக்கவரான ஸ்ரீ பட்டநாத முனிவரை வணங்குகிறேன்.

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் (புரட்டாசி பூரட்டாதி)
ஸகல வேதாந்த ஸாரார்த்த பூர்ணாசயம்
விபுல வாதூல கோத்ரோத்பவாநாம் வரம் |
ருசிர ஜாமாத்ரு யோகீந்த்ர பாதாச்ரயம்
வரத நாராயணம் மத் குரும் ஸம்ச்ரயே ||

சகல வேதாந்த தாத்பர்யங்களைக் கற்ற அறிவுக் கடல், புகழ் மிக்க வாதூல கோத்ரர், ஸ்ரீ மணவாள மாமுனிகளின்
திருவடிகளில் சரண் புக்கவரான ஸ்ரீ வரத நாராயண குரு எனும் ஸ்ரீ கோயில் அண்ணனை நான் சரண் அடைகிறேன்.

ஸ்ரீ ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் (ஆடி பூசம்)
வேதாந்த தேசிக கடாக்ஷ விவ்ருத்தபோதம்
காந்தோபயந்த்ரு யமிந: கருணைக பாத்ரம் |
வத்ஸாந்வவாயமநவத்ய குணைருபேதம்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம் ||

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கடாக்ஷத்தால் விரிந்து விகஸித்த ஞானமுள்ளவர், ஸ்ரீ மணவாள மாமுனிகள் கருணைக்குப்
பூர்ண பாத்ரர் ஸ்ரீவத்ச குல விளக்கு, கல்யாண குணசாலியான ஸ்ரீ ப்ரதிவாதி பயங்கரம் அண்ணனை பக்தியோடு பஜிக்கிறேன்.

ஸ்ரீ எறும்பி அப்பா (ஐப்பசி ரேவதி)
ஸௌம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர சரணாம்புஜ ஷட்பதம் |
தேவராஜ குரும் வந்தே திவ்ய ஜ்ஞான ப்ரதம் சுபம் ||

ஸ்ரீ மாமுனிகளின் திருவடித் தாமரைகளில் வண்டு போன்றவர், நம்மை ஞானம் தந்து காக்கும்
மங்கள ஸ்வபாவருமான ஸ்ரீ தேவராஜ குரு என்கிற ஸ்ரீ எறும்பி அப்பாவை வணங்குகிறேன்.

ஸ்ரீ அப்பிள்ளை
காந்தோபயந்த்ரு யோகீந்த்ர சரணாம்புஜ ஷட்பதம் |
வத்ஸாந்வயபவம் வந்தே ப்ரணதார்த்திஹரம் குரும் ||

ஸ்ரீ மணவாள மாமுனிகள் திருவடித் தாமரைகளில் வண்டு போன்ற, ஸ்ரீவத்ச குல திலகர்
ஸ்ரீ ப்ரணதார்த்திஹர குரு என்கிற ஸ்ரீ அப்பிள்ளையை வணங்குகிறேன்.

ஸ்ரீ அப்பிள்ளார்
காந்தோபயந்த்ரு யோகீந்த்ர ஸர்வ கைங்கர்யதூர்வஹம் |
ததேக தைவதம் ஸௌம்யம் ராமாநுஜ குரும் பஜே ||

ஸ்ரீ மாமுனிகள் ஒருவரையே தம் தேவனாகக் கருதி அவருக்கே எல்லாப் பணிவிடைகள் செய்த
ஸ்ரீ ராமானுஜ குரு என்கிற ஸ்ரீ அப்பிள்ளாரை வணங்குகிறேன்.

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் (புரட்டாசி மகம்)
வரதகுரு சரணம் வரவரமுநிவர்ய கநக்ருபா பாத்ரம் |
ப்ரவரகுண ரத்ந ஜலதிம் ப்ரணமாமி ஸ்ரீநிவாஸ குருவர்யம் ||

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் திருவடிகளையே பற்றினவரும், ஸ்ரீ மாமுனிகள் கருணையைப் பெற்றவரும்
குண ரத்நக் கடலுமான ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் என்கிற ஸ்ரீனிவாச குருவை வணங்குகிறேன்.

ஸ்ரீபெரும்புதூர் ஆதி யதிராஜ ஜீயர்(ஐப்பசிப்பூசம்)
ஸ்ரீமத் ராமாநுஜாங்க்ரி ப்ரவண வரமுநே: பாதுகம் ஜாதப்ருங்கம்
ஸ்ரீமத் வாநாத்ரி ராமாநுஜ கணகுரு ஸத்வைபவ ஸ்தோத்ர தீக்ஷம் |
வாதூல ஸ்ரீநிவாஸார்ய சரணசரணம் தத் க்ருபா லப்த பாஷ்யம்
வந்தே ப்ராஜ்ஞம் யதீந்த்ரம் வரவரதகுரோ: ப்ராப்த பக்தாம்ருதார்த்தம் ||

ஸ்ரீ மாமுனிகள் திருவடித் தாமரைகளில் வண்டு போன்றவர்,
ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரை போற்றிக் கொண்டே இருந்தவர்,
ஸ்ரீ வாதூல ஸ்ரீநிவாஸாசார்யரிடம் ஸ்ரீ பாஷ்யம் பயின்றவரான ஸ்ரீ பெரும்பூதூர் யதிராஜ ஜீயரை வணங்குகிறேன்.

ஸ்ரீ அப்பாச்சியார் அண்ணா (ஆவணி ஹஸ்தம்)
ஸ்ரீமத் வாநமஹாசைல ராமாநுஜ முநிப்ரியம் |
வாதூல வரதாசார்யம் வந்தே வாத்ஸல்ய ஸாகரம் ||

ஸ்ரீ வானமாமலை ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயரின் ப்ரியத்துக்குரியவர், வாத்சல்யக் கடல் போன்றவர்,
ஸ்ரீ வாதூல வரதாசார்யர் என்கிற ஸ்ரீ அப்பாச்சியார் அண்ணாவை வணங்குகிறேன்.

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் (சித்திரை திருவோணம்)
ஸ்ரீசடாரி குரோர்திவ்ய ஸ்ரீபாதாப்ஜ மதுவ்ரதம் |
ஸ்ரீமத்யதீந்த்ரப்ரவணம் ஸ்ரீ லோகார்ய முநிம் பஜே ||

ஸ்ரீ நம்மாழ்வார் திருவடிகளில் வண்டு போன்றவர், ஸ்ரீ மாமுனிகளிடம் பரம பக்தர்,
ஸ்ரீ யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம் திவ்ய கிரந்தம் அருளிச் செய்தவர்,
ஸ்ரீ லோகார்ய முனி என்கிற ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயரை வணங்குகிறேன்..

ஸ்ரீ திருமழிசை அண்ணா அப்பங்கார் (ஆனி அவிட்டம்)
ஸ்ரீமத் வாதுல நரஸிம்ஹ குரோஸ்தநூஜம்
ஸ்ரீமத் ததீய பதபங்கஜ ப்ருங்கராஜம்
ஸ்ரீரங்கராஜ வரதார்ய க்ருபாத்த பாஷ்யம்
ஸேவே ஸதா ரகுவரார்யம் உதாரசர்யம்

ஸ்ரீ வாதூல நரசிம்மச்சார்யர் குமாரர், அவரடி பணிந்தவர், அவர் திருவடித் தாமரைகளில் வண்டு போன்றவர்,
அவரிடமும் ஸ்ரீ ரங்கராஜாசார்யரிடமும் ஸ்ரீ பாஷ்யம் பயின்றவர், ஸ்ரீ வாதூல வீரராகவர் என்றும்
ஸ்ரீ அண்ணா அப்பங்கார் என்றும் பிரசித்தி பெற்ற ரகுவராயரை வணங்குகிறேன்.
.
ஸ்ரீ அப்பன் திருவேங்கட ராமானுஜ எம்பார் ஜீயர் (ஆவணி ரோஹிணி)
ஸ்ரீவாதூல ரமாப்ரவாள ருசிர ஸ்ரக்ஸைந்ய நாதாம்சஜ
ஸ்ரீகுர்வீந்த்ரம் மஹார்ய லப்த நிஜஸத் ஸத்தம் ச்ருதா பீஷ்டதம்
ஸ்ரீராமாநுஜ முக்ய தேசிகலஸத் கைங்கர்ய ஸம்ஸ்தாபகம்
ஸ்ரீமத்வேங்கடலக்ஷ்மணார்ய யமிநம் தம்ஸத்குணம் பாவயே

ஸ்ரீ வாதூல குலாசார்யர்களில் நல்முத்துப் போன்றவர், ஸ்ரீ சேனை முதலியார் அம்சர்,
அண்டி வந்தோர் விரும்பியதைத் தந்தவர், திருவாதிரை உத்சவம் போன்றவற்றில்
கட்டிய கைங்கர்யம் போன்றவற்றை ஏற்படுத்தியவர், ஸ்ரீமத் வேங்கட லக்ஷ்மணார்ய யதி என்கிற
ஸ்ரீ எம்பார் ஜீயர் திருவடிகளை வணங்குகிறேன்.

——————

—————–

வடகலை ஆசாரிய பரம்பரை

(1). திருக்குருகைப்பிரான் பிள்ளான் : (பிறப்பு. கி.பி. 1068) பிரசண்டாம்சம். திருமலையில் இவர் பெரிய திருமலை நம்பியின் திருமகனாக அவதரித்தவர், ‘பிள்ளான்’ என்றே வழங்குவர். உடையவருக்கு திருவடிசம்பந்தி, ஞானபுத்திரரும் ஆவார். உடையவரின் நியமனப்படி திருவாய்மொழிக்கு ஆறாயிரப்படி என்ற முதல் வியாக்கியானம் அருளிய அருட் செல்வர். இவர் அருளிச் செய்த மற்றொரு நூல் ‘திருக்குருகைப் பிரான் பிள்ளான் பரமரகசியம்’ என்பது.

(2). எங்களாழ்வான் : (பிறப்பு கி.பி.108): விஜயாம்சம். இவர் திருவெள்ளறையில் சோழியர் குடியில் அவதரித்தவர். திருநட்சத்திரம் ஆனி – சுவாதி. எம்பெருமனார் நியமனத்தால் விஷ்ணுபுராணத்திற்கு விசிட்டாத்வைதபரமாக பரிபாவியத்திற்கிணங்க வியாக்கியானம் செய்தருளினார். திருக்குருகைப்பிரான் பிள்ளானிடம் ஸ்ரீபாஷ்யம் சேவித்தவர். நாடாதுரம்மாளைச் சுவீகரித்து பாஷ்யம் முதலிய கிரந்தங்களைச் சொல்லி வைத்தவர். ‘சாரார்த்த சதுஷ்டம்’, ‘சங்கதிமாலை இவர்தம் அருளிச் செயல்கள்.

(3). நடாதூரம்மாள் : (பிறப்பு கி.பி.1165), சுபத்திராம்சம். இவர் (பெண் அல்லர்) காஞ்சியில் தேவராசப்பெருமாள் என்பாருக்கு வரதகுரு என்று அவதரித்தார். திருநட்சத்திரம் : சித்திரையில் சித்திரை. இவர் உடையவரின் மருமகனாரான நடாதூர் ஆழ்வானுக்கு திருப்பேரர். வேறு திருநாமம் : வரதாச்சாரியார், ஆசாரியர், எங்காழ்வான். சீடர்கள் : சுருதப் பிரகாசிக பட்டர், வாதி ஹம்சம்பு, தாராசாரியர், கிடாம்பி அப்புள்ளார், ‘ஸ்ரீகிருஷ்ணபாதர்’ என்ற வடக்குத் திருவீதிப் பிள்ளை’. இவர் எங்களாழ்வானிடம் ஸ்ரீபாஷ்யம் சேவிக்க விரும்பித் தந்தையாரின் கட்டளைப்படி எங்காழ்வானின் திருமாளிகையில் வாயிற்கதவினைத் திறக்க ஆழ்வான் ‘யார்?’ என்றனர். வரதகுரு மறுமொழியாக ‘நான்தான்’ என்றனர். இதைச்செவியுற்ற எங்களாழ்வான் “நான் செத்தபிறகு வருக” என்று கூறி அனுப்பினார். வரதகுரு நடந்ததைத் தந்தையாரிடம் தெரிவிக்க, தந்தையாரும் “ஆசாரியரிடம் நான் என்னும் அகங்காரத்தையொழித்து ‘அடியேன்’ என்று கூறிச் செல்க” என்று அறிவுறுத்தித் திரும்பவும் அனுப்பினார். வரதகுரு மீண்டும் சென்று அடியேன் இராமாதுசதாசன் என்று கூறித் தண்டன் சமர்ப்பித்தார். ஆசாரியரும் களிப்பு மிகுதியினால் புத்திரன்மீது கொள்ளும் பாசத்தைப்போல் அன்புடையராய் “எனக்கும் கொள்ளியிட்டு இறுதிச் சடங்கு செய்வதாய் வாக்குறுதி செய்து தருவீராகில் ரீபாஷ்யம் சேவிக்கலாம்” என்று கூறினார். வரதகுருவும் தந்தையாரின் அனுமதி பெற்று ஸ்ரீபாஷ்யம் படியைக் கையில் வைத்துக் கொண்டு வாக்குறுதி செய்து கொடுத்து ஸ்ரீபாஷ்யம் முதலிய கிரந்தங்களை ஐயம் திரிபு அறச் சேவித்தார்.

ஒருநாள் பெருமாளுக்குப் பாலமுது சமர்ப்பிக்கையில் பால் அதிக வெப்பமாய் இருப்பது கண்டு எம்பெருமானிடத்துப் பரிவாலே சாத்திர நியமத்தையும் கடந்து அப்பாலமுதை வாயிட்டு ஊதிப் ஆற்றப்புக பெருமாளும் மகனிடத்து மாதாவுக்கு உண்டான அன்பு தம் விஷமாக இவருக்கு உண்டானது கண்டு”எனக்கு நீர் அம்மாவோ’என்று உகந்தருளினான். அதுமுதல் இவருக்கு “அம்மாள்” என்ற திருநாமம் வந்து “நடாதூரம்மாள்” என வழங்கப்பெற்றார். மற்றொரு நாள் இவர் காட்டுவழியே திருவேங்கடத்தை நோக்கிச் செல்லுகையில் வழியில் பெருமாளுக்குப் பிரசாதம் அமுது செய்விக்கத் தகுந்த இடம் வாய்க்காமல் இருந்தது. இதனால் இவர் பெருமாளுக்குத் திருவாராதானம் செய்ய முடியாமல் உபவாசமாக இருந்தார்.திருவேங்கடமுடையானே ஒரு வேதியன் வடிவில் பிரசாதம் கொணர்ந்து ‘இது பெருமாளுக்கு ஆராதனம் செய்தது’ என்று சொல்லிக் கொடுக்க அதே அம்மாள் அமுது செய்ததும் வேதியனாக வந்த வேங்கடமுடையான் மறைந்தருளினான்.

(4). கிடாம்பிஅப்புள்ளார்: (பிறப்பு. கி.பி.1221), இவருக்கு ஆத்ரேய இராமாநுசர் என்ற பெயரும் உண்டு இராமாநுசருக்கு மடைப்பள்ளி கைங்கரியம் புரிந்து வந்த கிடாம்பி ஆச்சானின் கொள்ளுப் பேரர். வாத்சய வரதாசாரியரின் சீடர். ‘நித்தியகுலிசம்’ என்ற வாதத்திற்குரிய நூலின் ஆசிரியர். மாற்றுக் கருத்துக் குரியவர்கள் இவரைக் காணவே அஞ்சுவர்.அவ்வளவு வேகமாக வாதிடுவர்.

(5).வேதாந்ததேசிகர்:(பிறப்பு:கிபி.1268.1369)கண்டாம்சம். அவதாரத் தலம் காஞ்சி. துப்புல். திருத்தந்தையார் ஆனந்த சூரியர். திருத்தாயார் தோதாத்திரி அம்மை. திருக்குமாரர் நயினாராசாரியர். வேறு திருநாமங்கள் : ‘வேங்கடநாதன், கவிதார்க்கிக கேசரி, சர்வதந்திரசுவதந்திரர், துப்புல் பிள்ளை’ முதலியன. ஆசாரியர், நடாதூர் அம்மாளின் சீடரும், தம் மாதுலரும் உடையவர் திருவடி சம்பந்தியும் சுப்பிரதிஷ்டாம்சரான கிடாம்பி அப்புள்ளார். சீடர்கள்: நயினாராசாரியர் (தம் குமாரர்), பிரம்மதந்திரசுவதந்திர சீயர். திருவாராதனப் பெருமாள் : திருவேங்கடமுடையான், திருப்பாணாழ்வார். ஹயக்ரீவ உபாசகர். இவர் திருவடிகளை ஆச்ரயித்தவர்கள் : கந்தாடை எம்பார், குமாண்டுர் அப்பை, குமாண்டுர் பிள்ளை. இவர் திருவடிச் சம்பந்திகள் : கிடாம்பிப்பிள்ளை, குஞ்சம்பூர் இராமாநுசாசாரியர் துப்புல் அப்பை. அருளிச்செயல்கள். தேசிகப்பிரபந்தம் (தமிழ்ப்பிரபந்தங்களின் திரட்டு) இது தவிர மணிப்பிரவாளநடையில் அமைந்த ஸ்ரீமத்ரகசியதிரயசாரம் மிகுபுகழ் வாய்ந்தது. மற்றும் வடமொழியில் ஸ்தோத்ர கிரந்தங்கள் 28; காவிய கிரந்தங்கள் 4; நாடகக்கிரந்தம் 1; வேதாந்த கிரந்தங்கள் 14 வியாக்கியானகிரந்தங்கள் 8: அநுட்டானகிரந்தங்கள்2; இரகசிய கிரந்தங்கள் 32. இவர் அருளிச் செயல்கள் மொத்தம் 121 கிரந்தங்கள்.

(6)நயினாராச்சான்பிள்ளை: (பிறப்புகி.பி. 1316)வேதாந்த தேசிகரின் திருக்குமாரர். திருநட்சத்திரம் – ஆவணி-ரோகிணி. ஆசாரியர், தந்தையார் வேதாந்த தேசிகர். திருநாமங்கள்; குமார வேதாந்தாசாரியர், குமார வரதாசாரியர். சீடர், பிரதிவாதி பயங்கரம் அண்ணன். இவரும் தந்தையைப்போல் வாதத்தில் வல்லவர். திருவடி சம்பந்திகள் : எம்பெருமானாரப்பன், குமாண்டுர் ஆச்சான், பேராளிப்பாக்கம் நயனார். அருளிச் செயல்கள்: ‘பிள்ளை அந்தாதி, இது தவிர அதிரவச நீயகண்டம், விரோதி பரிகாரம் ஆசாரிய மங்களம்’ முதலியன.இவருடன் வடகலை ஆசாரியர் பரம்பரை முற்றுப் பெறுகின்றது.

ஸ்ரீ வாழித் திருநாமப் பாசுரங்கள் —

ஸ்ரீ பெரிய பெருமாள் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: ரேவதி (சித்திரை மாதம்)

திருமகளும் மண்மகளும் சிறக்க வந்தோன் வாழியே
செய்யவிடைத் தாய்மகளார் சேவிப்போன் வாழியே
இருவிசும்பில் வீற்றிருக்கும் இமையவர்கோன் வாழியே
இடர்கடியப் பாற்கடலை எய்தினான் வாழியே
அரிய தயரதன் மகனாய் அவதரித்தான் வாழியே
அந்தரியாமித்துமும் ஆயினான் வாழியே
பெருகிவரும் பொன்னிநடுப் பின்துயின்றான் வாழியே
பெரியபெருமாள் எங்கள் பிரானடிகள் வாழியே

ஸ்ரீ பெரிய பிராட்டியார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: உத்திரம் (பங்குனி மாதம்)

பங்கயப் பூவில் பிறந்த பாவை நல்லாள் வாழியே
பங்குனியில் உத்திரநாள் பார்உதித்தாள் வாழியே
மங்கையர்கள் திலதமென வந்தசெல்வி வாழியே
மாலரங்கர் மணிமார்பை மன்னுமவள் வாழியே
எங்கள் எழில் சேனைமன்னர்க்கு இதம்உரைத்தாள் வாழியே
இருபத்தஞ்சுட்பொருள் மால்இயம்புமவள் வாழியே
செங்கமலச் செய்யரங்கம் செழிக்க வந்தாள் வாழியே
சீரங்கநாயகியார் திருவடிகள் வாழியே

ஸ்ரீ சேனை முதலியார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: பூராடம் (ஐப்பசி)
ஓங்குதுலாப் பூராடத்து உதித்தசெல்வன் வாழியே
ஒண்டொடியாள் சூத்திரவதி உறைமார்பன் வாழியே
ஈங்குலகில் சடகோபற்கு இதமுரைத்தான் வாழியே
எழிற்பிரம்பின் செங்கோலை ஏந்துமவன் வாழியே
பாங்குடன் முப்பத்து மூவர் பணியுமவன் வாழியே
பங்கயத்தாள் திருவடியைப் பற்றினான் வாழியே
தேங்குபுகழ் அரங்கரையே சிந்தை செய்வோன் வாழியே
சேனையர் கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே

ஸ்ரீ நம்மாழ்வார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: விசாகம் (வைகாசி)

ஆன திருவிருத்தம் நூறும் அருளினான் வாழியே
ஆசிரியம் ஏழுபாட்டும் அளித்தபிரான் வாழியே
ஈனமற அந்தாதி எண்பத்துஏழு ஈந்தான் வாழியே
இலகு திருவாய்மொழி ஆயிரத்தொரு நூற்றிரண்டு உரைத்தான் வாழியே
வானணியும் மாமாடக் குருகை மன்னன் வாழியே
வைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியே
சேனையர்கோன் அவதாரம் செய்த வள்ளல் வாழியே
திருக்குருகைச் சடகோபன் திருவடிகள் வாழியே

ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: சித்திரை (சித்திரை)

சித்திரையில் சித்திரை நாள் சிறக்க வந்தோன் வாழியே
திருக்கோளூர் அவதரித்த செல்வனார் வாழியே
உத்தர கங்காதீரத் துயர் தவத்தோன் வாழியே
ஒளிகதிரோன் தெற்குஉதிக்க உகந்து வந்தோன் வாழியே
பத்தியொடு பதினொன்றும் பாடினான் வாழியே
பராங்குசனே பரன்என்று பற்றினான் வாழியே
மத்திமாம் பதப்பொருளை வாழ்வித்தான் வாழியே
மதுரகவி திருவடிகள் வாழிவாழி வாழியே

ஸ்ரீ பொய்கையாழ்வார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: திருவோணம் (ஐப்பசி)

செய்யதுலாவோணத்தில் செகத்துதித்தான் வாழியே
திருக்கச்சி மாநகரம் செழிக்க வந்தோன் வாழியே
வையந்தகளி நூறும் வகுத்துரைத்தான் வாழியே
வனசமலர்க் கருவதனில் வந்தமைந்தான் வாழியே
வெய்ய கதிரோன் தன்னை விளக்கிட்டான் வாழியே
வேங்கடவர் திருமலையை விரும்புமவன் வாழியே
பொய்கை முனி வடிவழகும் பொற்பதமும் வாழியே
பொன்முடியும் திருமுகமும் பூதலத்தில் வாழியே

ஸ்ரீ பூதத்தாழ்வார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: அவிட்டம் (ஐப்பசி)

அன்பே தகளி நூறும் அருளினான் வாழியே
ஐப்பசியில் அவிட்டத்தில் அவதரித்தான் வாழியே
நன்புகழ்சேர் குருக்கத்தி நாண்மலரோன் வாழியே
நல்ல திருக்கடல்மல்லை நாதனார் வாழியே
இன்புருகு சிந்தை திரி யிட்டபிரான் வாழியே
எழில் ஞானச் சுடர்விளக்கை ஏற்றினான் வாழியே
பொன்புரையும் திருவரங்கர் புகழ்உரைப்போன் வாழியே
பூதத்தார் தாளிணை இப்பூதலத்தில் வாழியே

ஸ்ரீ பேயாழ்வார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: சதயம் (ஐப்பசி)

திருக்கண்டேன்என நூறும் செப்பினான் வாழியே
சிறந்த ஐப்பசியில் சதயம் சனித்தவள்ளல் வாழியே
மருக்கமழும் மயிலைநகர் வாழவந்தோன் வாழியே
மலர்க்கரிய நெய்தல்தனில் வந்துதித்தான் வாழியே
நெருக்கிடவே இடைகழியில் நின்ற செல்வன் வாழியே
நேமிசங்கன் வடிவழகை நெஞ்சில்வைப்போன் வாழியே
பெருக்கமுடன் திருமழிசைப் பிரான் தொழுவோன் வாழியே
பேயாழ்வார் தாளிணை இப்பெருநிலத்தில் வாழியே

ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: மகம் (தை)

அன்புடன் அந்தாதி தொண்ணுற்றாறு உரைத்தான் வாழியே
அழகாரும் திருமழிசை அமர்ந்த பிரான் வாழியே
இன்பமிகு தையில் மகத்து இங்குஉதித்தான் வாழியே
எழிற் சந்தவிருத்தம் நூற்றிருபது ஈந்தான் வாழியே
முன்புகத்தில் வந்துதித்த முனிவர்கோன் வாழியே
முழுப்பொன்னிப் பெருக்கெதிர் செல்முதிர் கவியோன் வாழியே
நன்புவியில் நாலாயிரத்து எழுநூறிருந்தான் வாழியே
நங்கள் பத்திசாரர் இருநற்பதங்கள் வாழியே

ஸ்ரீ குலசேராழ்வார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: புனர்பூசம் (மாசி)

அஞ்சனமா மலைப்பிறவி ஆதரித்தோன் வாழியே
அணியரங்கர் மணத்தூணை அடைந்துய்ந்தோன் வாழியே
வஞ்சிநகரம் தன்னில் வாழவந்தோன் வாழியே
மாசிதன்னில் புனர்பூசம் வந்துதித்தான் வாழியே
அஞ்சலெனக் குடப்பாம்பில் அங்கையிடடான் வாழியே
அநவரதம் ராமகதை அருளுமவன் வாழியே
செஞ்சொல்மொழி நூற்றஞ்சும் செப்பினான் வாழியே
சேரலர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே

ஸ்ரீ பெரியாழ்வார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: ஸ்வாதி (ஆனி)

நல்ல திருப்பல்லாண்டு நான்மூன்றோன் வாழியே
நானூற்று பத்தொன்றும் நமக்கு உரைத்தான் வாழியே
சொல்லரிய வானிதனில் சோதி வந்தான் வாழியே
தொடை சூடிக்கொடுத்தவள் தன் தொழும்அப்பன் வாழியே
செல்வநம்பி தனைப்போலச் சிறப்புற்றான் வாழியே
சென்று கிழியறுத்து மால் தெய்வம்என்றான் வாழியே
வில்லிபுத்தூர் நகரத்தை விளங்க வைத்தான் வாழியே
வேதியர்கோன் பட்டர்பிரான் மேதினியில் வாழியே

ஸ்ரீ ஆண்டாள் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: பூரம் (ஆடி)

திருவாடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே
உயர் அரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே
வண்புதுவைநகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே

ஸ்ரீ தொண்டரடிப்பொடி ஆழ்வார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: கேட்டை (மார்கழி)

மண்டங்குடியதனில் வாழ வந்தோன் வாழியே
மார்கழியில் கேட்டை நாள் வந்துதித்தோன் வாழியே
தெண்டிரைசூழ் அரங்கரையே தெய்வமென்றான் வாழியே
திருமாலை ஒன்பதஞ்சும் செப்பினான் வாழியே
பண்டு திருப்பள்ளியெழுச்சி பத்துரைத்தான் வாழியே
பாவையர்கள் கலவிதனைப்பழித்த செல்வன் வாழியே
தொண்டு செய்து துளபத்தால் துலங்கினான் வாழியே
தொண்டரடிப்பொடியாழ்வார் துணைப்பதங்கள் வாழியே

ஸ்ரீ திருப்பாணாழ்வார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: ரோகிணி (கார்த்திகை)

உம்பர் தொழும் மெய்ஞானத்து உறையூரான் வாழியே
உரோகிணி நாள் கார்த்திகையில் உதித்த வள்ளல் வாழியே
வம்பவிழ்தார் முனிதோளில் வந்தபிரான் வாழியே
மலர்க்கண்ணை வேறொன்றில் வையாதான் வாழியே
அம்புவியில் மதிளரங்கர் அகம்புகுந்தான் வாழியே
அமலனாதிபிரான் பத்தும் அருளினான் வாழியே
செம்பொனடி முடியளவும் சேவிப்போன் வாழியே
திருப்பாணன் பொற்பதங்கள் செகதலத்தில் வாழியே

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: கார்த்திகை (கார்த்திகை)

கலந்த திருக்கார்த்திகையில் கார்த்திகை வந்தோன் வாழியே
காசினியில் குறையலூர்க் காவலோன் வாழியே
நலந்திகழ் ஆயிரத்தெண்பத்து நாலுரைத்தான் வாழியே
நாலைந்தும் ஆறைந்தும் நமக்கு உரைத்தான் வாழியே
இலங்கெழு கூற்றிருக்கை இருமடல் ஈந்தான் வாழியே
இம்மூன்றில் இருநூற்றிருபத்துஏழிந்தான் வாழியே
வலந்திகழும் குமுதவல்லி மணவாளன் வாழியே
வாட்கலியன் பரகாலன் மங்கையர்கோன் வாழியே

சித்திரையில் கார்த்திகை – ஸ்ரீ உய்யக்கொண்டாரின் திரு அவதார திருநக்ஷத்ரம்

ஸ்ரீ புண்டரீகாக்ஷர் என்னும் ஸ்ரீ உய்யக்கொண்டார் -திருக்குருகூர்

ஸ்ரீ உய்யக்கொண்டாரின் வாழித்திருநாமம்–
“வாலவெய்யோன்தனை வென்ற வடிவழகன் வாழியே
மால் மணக்கால் நம்பி தொழு‌ம் மலர்பதத்தோன் வாழியே
சீலமிகு நாதமுனி சீர் உரைப்போன் வாழியே
சித்திரையில் கார்த்திகை நாள் சிறக்க வந்தோன் வாழியே
நாலிரண்டும் ஐயைந்தும் நமக்கு உரைத்தான் வாழியே
நாலெட்டின் உட்பொருளை நடத்தினான் வாழியே
மால்அரங்க மணவாளர் வளம் உரைப்போன் வாழியே
வையம் உய்யக்கொண்டவர் தாள் வையகத்தில் வாழியே”

ஸ்ரீ எம்பெருமானார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: திருவாதிரை (சித்திரை மாதம்)

அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே
அருட்கச்சி நம்பியுரை ஆறு பெற்றோன் வாழியே
புத்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திடடான் வாழியே
பதின்மர்கலை உட்பொருளைப் பரிந்து கற்றான் வாழியே
சுத்தமகிழ் மாறன்அடி தொழுதுஉய்ந்தோன் வாழியே
தொல் பெரியநம்பி சரண் தோன்றினான் வாழியே
சித்திரையில் ஆதிரை நாள் சிறக்கவந்தோன் வாழியே
சீர்பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே

எண்டிசையெண் ணிளையாழ்வார் எதிராசன் வாழியே
எழுபத்து நால்வர்க்குஎண்ணான்கு உரைத்தான் வாழியே
பண்டைமறையைத் தெரிந்த பாடியத்தோன் வாழியே
பரகாலன் அடியிணையைப் பரவுமவன் வாழியே
தண்டமிழ்நூல் நம்மாழ்வார் சரணானான் வாழியே
தாரணியும் விண்ணுலகும் தானுடையோன் வாழியே
தெண்டிரைசூழ் பூதூர் எம்பெருமானார் வாழியே
சித்திரையில் செய்ய திருவாதிரையோன் வாழியே

ஸ்ரீ கூரத்தாழ்வான் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: ஹஸ்தம் (தை மாதம் )

சீராரும் திருப்பதிகள் சிறக்கவந்தோன் வாழியே
தென்னரங்கர் சீரருளைச் சேருமவன் வாழியே
பாராரும் எதிராசர் பதம் பணிந்தோன் வாழியே
பாடியத்தின் உட்பொருளைப் பகருமவன் வாழியே
நாராயணன் சமயம் நாட்டினான் வாழியே
நாலூரான் தனக்கு முத்தி நல்கினான் வாழியே
ஏராரும் தையில் அத்தத்து இங்கு வந்தான் வாழியே
எழில் கூரத்தாழ்வான்தன் இணையடிகள் வாழியே

ஸ்ரீ திருவரங்கத்தமுதனார் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: ஹஸ்தம் (பங்குனி)

எந்தாதை கூரேசர் இணையடியோன் வாழியே
எழில் மூங்கில் குடிவிளங்க இங்குவந்தோன் வாழியே
நந்தாமல் எதிராசர் நலம்புகழ்வோன் வாழியே
நம் மதுரகவி நிலையை நண்ணினான் வாழியே
பைந்தாம அரங்கர்பதம் பற்றினான் வாழியே
பங்குனியில் அத்தநாள் பாருதித்தோன் வாழியே
அந்தாதி நூற்றெட்டும் அருளினான் வாழியே
அணியரங்கத் தமுதனார் அடியிணைகள் வாழியே
ஸ்ரீ வடுகநம்பி வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: அஸ்வினி (சித்திரை மாதம்)

ஏராரும் சித்திரையில் அசுவதீ வந்தான் வாழியே
எழில் சாளக்கிராம நகரத்தில் அவதரித்தான் வாழியே
சரம பர்வ நிஷ்டையில் ஊன்றினான் வாழியே
எம்பெருமானாரே தெய்வம் என்று அனுஷ்டித்தான் வாழியே
அனவரதம் ஆசார்ய கைங்கர்யமே பொழுது போக்கும் என்றான் வாழியே
ஆசார்யனை அல்லாது வேறு தெய்வம் அறியான் வாழியே
ஸ்வாசார்யர் அஷ்டோத்தர சத நாமங்களை அருளினான் வாழியே
ஸ்ரீராமானுஜர் வைபவமே நிரந்தரம் அநுஸந்தித்தான் வாழியே
ஆசார்ய பாத தீர்த்தமே பரம போக்யம் என்று எண்ணினான் வாழியே
ஸ்ரீ வடுஹ நம்பி திருவடிகள் வாழி வாழி வாழியே

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: ரோகிணி (ஆவணி)

தண்மை சிங்கம் ரோகிணிநாள் தழைக்க வந்தோன் வாழியே
தாரணியில் சங்கநல்லூர் தானுடையோன் வாழியே
புன்மை தவிர் திருவரங்கர் புகழுரைப்போன் வாழியே
பூதூர் எதிராசர் தாள் புகழுமவன் வாழியே
மண்புகழ் சேர் சடகோபர் வளமுரைப்போன் வாழியே
மறைநாலின் பொருள் தன்னைப் பகுத்து உரைப்போன் வாழியே
அன்புடன் உலகாரியர்தம் அடியிணையோன் வாழியே
அபயப்ரதராசர் தாள் அனவரதம் வாழியே

ஸ்ரீ பெரியதிருமலை நம்பி வாழித்திருநாமம்
திருநக்ஷத்ரம்: ஸ்வாதி (வைகாசி)

வைகாசிச் சோதிநாள் வந்துதித்தான் வாழியே
வண் திருவேங்கடமுடையான் வரபுத்திரன் வாழியே
அய்யன் ஸ்ரீ ஆளவந்தார் அடிதொழுவோன் வாழியே
அனவரதம் மலைகுனியர்க்கு அடிமை செய்வோன் வாழியே
மெய்யன் இராமானுசாரியன் விரும்புமவன் வாழியே
மிக்க திருமலையார்க்கெல்லாம் மேலாவான் வாழியே
செய்யதமிழ் வேதத்தின் சிறப்புஅறிந்தோன் வாழியே
திருமலை நம்பிகள் உபயதிருவடிகள் வாழியே

ஸ்ரீ வடக்குத்திருவீதிப்பிள்ளை வாழித்திருநாமம்
திருநக்ஷத்ரம்: ஸ்வாதி (ஆனி மாதம்)

ஆனிதனில் சோதிநாள் அவதரித்தான் வாழியே
ஆழ்வார்கள் கலைப்பொருளை ஆய்ந்துரைத்தோன் வாழியே
தான்உகந்த நம்பிள்ளை தாள் தொழுவோன் வாழியே
சடகோபன் தமிழ்க்கீடு சாற்றினான் வாழியே
நானிலத்தில் பாடியத்தை நடத்தினான் வாழியே
நல்ல உலகாரியனை நமக்குஅளித்தான் வாழியே
ஈனமற எமையாளும் இறைவனார் வாழியே
எங்கள் வடவீதிப்பிள்ளை இணையடிகள் வாழியே

ஸ்ரீ கூர குலோத்தம தாஸர் வாழித்திருநாமம்
திருநக்ஷத்ரம் : திருவாதிரை (ஐப்பசி)

சந்தமும் ஆழ்வார்கள் தமிழ் வளர்த்தோன் வாழியே
தாரணியில் சிறுநல்லூர் தானுடையோன் வாழியே
எந்தை உலகாரியனை இறைஞ்சுமவன் வாழியே
உலகுதுலா வாதிரையில் இங்கு உதித்தான் வாழியே
இந்த உலகத்தோர்க்கு இதமுறைத்தோன் வாழியே
எழில்வசன பூடணத்துக்கு இனிமை செய்தான் வாழியே
குந்திநகர்ச் சிந்தை கொண்ட செல்வனார் வாழியே
கூரகுலோத்தம தாசர் குரைகழல் வாழியே

ஸ்ரீ மணவாளமாமுனிகள் வாழித்திருநாமம்

திருநக்ஷத்ரம்: திருமூலம் (ஐப்பசி)
இப்புவியில் அரங்கேசர்க்கு ஈடளித்தான் வாழியே
எழில் திருவாய்மொழிப்பிள்ளை இணையடியோன் வாழியே
ஐப்பசியில் திருமூலத்து அவதரித்தான் வாழியே
அரவரசப் பெருஞ்சோதி அனந்தன்என்றும் வாழியே
இப்புவியும் ஸ்ரீசைலம் ஏத்த வந்தோன் வாழியே
ஏராரும் எதிராசர் எனஉதித்தான் வாழியே
முப்புரிநூல் மணிவடம் முக்கோல் தரித்தான் வாழியே
மூதரிய மணவாள மாமுனிவன் வாழியே

———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஸமேத ஸ்ரீ பெரிய பெருமாள் பொது நின்ற பொன்னம் கழலே சரணம்
ஸ்ரீ பத்மாவதித் தாயார் ஸமேத ஸ்ரீ வேங்கடேஸ்வரர் பூவார் கழல்களே சரணம்
ஸ்ரீ பெரும் தேவித் தாயார் ஸமேத ஸ்ரீ பேர் அருளாளன் துயர் அறு சுடர் அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்