ஸ்ரீ ஆறாயிரப்படி –6-3-4-
புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவென்று இவையாய்
எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மையாய் அல்லனாய்
திண்ண மாடங்கள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
கண்ணன் இன்னருளே கண்டு கொண்மின்கள் கைதவமே.–6-3-4-
புண்ணிய பாப தத் பல பூத அபிமத விஷய சம்ச்லேஷ விஸ்லேஷ ஸ்மரண விஸ்மரண பாவ அபாவாதி சகல பதார்த்த அந்தர்யாமி தயா
வ்யாப்தனாய் இருந்து வைத்தே தத் கத தோஷைர் அசம்ப்ருஷ்டனாய் இருந்த திண்ண மாடங்கள் சூழ் திரு விண்ணகர்
சேர்ந்த பிரானுடைய கிருபையால் சகல புருஷார்த்த சாதன பூத கரண களேபர ப்ரப்ருதி சர்வ பதார்த்தங்களும் ஸ்ப்ருஷ்டமான
இவ்வர்த்தம் திரு விண்ணகரிலே ப்ரத்யஷிக்கலாம் என்கிறார் –
——
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –6-3-4-
புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவென்று இவையாய்
எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மையாய் அல்லனாய்
திண்ண மாடங்கள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
கண்ணன் இன்னருளே கண்டு கொண்மின்கள் கைதவமே.–6-3-4-
புண்ய பாப ரூபாதியால் எம்பெருமானுக்கு விசேஷணத் வேன தோற்றுகிற விபூதி எல்லாம் அவன் கிருபையால் உண்டாயிற்று -இது பொய்யல்லாமை ஆராய்ந்து பார்த்து கொள்ளுங்கோள் -என்கிறார் –
புணர்ச்சி பிரிவு -புண்ய பாப பல ரூபமான சம்ச்லேஷ விஸ்லேஷன்கள்-/ அல்லனாய்-புண்ய பாபாதிகளுக்கு நியாமகனாய் அவற்றுக்கு வஸ்யன் அன்றிக்கே இருக்கும் என்கிறது –இன்னருள் என்கிறது -ஒரு காரணம் அறப் பண்ணும் கிருபை –
————
ஸ்ரீ பன்னீராயிரப்படி –6-3-4-
அநந்தரம் கீழ்ச் சொன்ன புகர் கொள் கீர்த்தியானது புண்ய பாப அநு பந்தி பதார்த்த விபூதிகனான
ஸ்ரீ கிருஷ்ணனுடைய நிர்ஹேதுக கிருபை என்கிறார் –
புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவென்று இவையாய்
எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மையாய் அல்லனாய்
திண்ண மாடங்கள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
கண்ணன் இன்னருளே கண்டு கொண்மின்கள் கைதவமே.–6-3-4-
புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவென்று இவையாய்–இஷ்ட அநிஷ்ட ஹேதுவான புண்ய பாபங்கள் –
தத் க்ருதமான தத் தத் சம்ச்லேஷ விஸ்லேஷன்கள் எண்டு இவையாய்
எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மையாய் அல்லனாய்-சம்ச்லேஷ விஸ்லேஷ கணநையும் விஸ்மரணு மாய் –
தத் தத் அநு ரூப வஸ்துக்களுடைய ஸத்பாவை அஸத்பாவங்களாய் வைத்து தத் தத் கர்மவஸ்யன் இன்றியே இருப்பானாய்
திண்ண மாடங்கள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்–ஸ்த்திறமான மாடங்கள் சூழ்ந்த திரு விண்ணகரிலே சேர்ந்த சர்வாதிகனான
கண்ணன் இன்னருளே கண்டு கொண்மின்கள் கைதவமே.–ஸ்ரீ கிருஷ்ணனுடைய அதிசயித போக்யமாம்படி
அநந்ய ப்ரயோஜனமான கிருபையையே கீழ்ச் சொன்ன உத்தார கீர்த்தியாகக் கண்டு கொள்ளுங்கோள்
-இது கைதவமோ -பரமார்த்தம் என்று கருத்து –
————
ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -6-3-4-
இவ்விபூதி யடங்க அவன் கிருபையால் உண்டாயிற்று –இது பொய்யல்லாமை பார்த்துக் கொள்ளுங்கோள் என்கிறார் –
புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவென்று இவையாய்
எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மையாய் அல்லனாய்
திண்ண மாடங்கள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
கண்ணன் இன்னருளே கண்டு கொண்மின்கள் கைதவமே.–6-3-4-
புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவென்று இவையாய்
ஸூ க துக்க ஹேதுவான புண்ய பாபங்களும் -தத் பல பூதமான அபிமத சம்ச்லேஷ விஸ்லேஷன்களும்–
எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மையாய்
அநு கூல விஷயமான எண்ணமும் -பிரதி கூல விஷயமான விஸ்ம்ருதியும் -ஸத்பாவ அஸத் பாவங்களுமாய் –
அல்லனாய்-புண்ய பாவங்களை அனுபவியா நிற்க செய்தே தான் அகர்ம வஸ்யனாய்
திண்ண மாடங்கள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்-கண்ணன்
பிரளயத்திலும் அழியாத மாடங்கள் -அவ்வவதாரத்துக்கு பிற்பட்ட என்னைப் பெறுகைக்காக திரு விண்ணகரிலே வந்து நிற்கிற கிருஷ்ணனான உபகாரகன்
இன்னருளே கண்டு கொண்மின்கள் கைதவமே.–
தன் பேறாகப் பண்ணும் கிருபையால் இது அடங்க உண்டாயிற்று –கைதவமே.–-இதில் அர்த்தவாதம் உண்டோ -இல்லை இ றே – -ஆராய்ந்து கொள்ளுங்கோள்-
——
ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –6-3-4-
புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவென்று இவையாய்
எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மையாய் அல்லனாய்
திண்ண மாடங்கள் சூழ் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
கண்ணன் இன்னருளே கண்டு கொண்மின்கள் கைதவமே.–6-3-4-
புகர் கொள் கீர்த்தி -புண்ய பாப அனு பந்தி பதார்த்திக விபூதிமான் -அவன் அனுக்ரகத்தால்
புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவென்று இவையாய்-தத் தத் சம்ஸ்லேஷ விஸ்லேஷங்கள்
எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மையாய் அல்லனாய்-மற்றவை இரட்டை -உள்ளனாய் இல்லை
புண்யம் சம்ச்லேஷம் -நினைவு -சத்பாவம் -இன்மை அசத்பாவம் -உளது இலது –
அல்லனாய் -தத் தத் கர்ம வச்யனாய் இல்லாமல் இருப்பதால் –
திண்ண மாடங்கள் சூழ் திரு விண்ணகர்ச் சேர்ந்தபிரான்-ஸ்திரமான மாடங்கள்
கண்ணன் இன்னருளே கண்டு கொண்மின்கள் கைதவமே.-கிரித்ரமம் இல்லை பிரிநிலை எவகாரம் -அதிசயித போக்யதமான
அருள் கிருபையையே -கீழ் சொன்ன உத்தார கீர்த்தி -பரமார்த்தம் இதுவே
புண்ணியம் என்ன, பாவம் என்ன; புணர்ச்சி என்ன, பிரிவு என்ன; ஆகிய இவையாகியும், நினைவு ஆகியும், மறப்பு ஆகியும்,
உண்மையாகியும், இன்மையாகியும், கர்மங்கட்குக் கட்டுப்படாதவனாகியும், திண்ணிய மாடங்கள் சூழ்ந்த திரு விண்ணகரம் என்னும்
திவ்விய தேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற பிரானாகிய ஸ்ரீ கிருஷ்ணனுடைய இனிய திருவருளையே உய்வு பெறுதற்குரிய
புண்ணியமாகக் கண்டு கொள்ளுங்கள்; யான் கூறும் இது கைதவம் அன்று.
ஆய் ஆய் ஆய் ஆய் ஆய் ஆய் சேர்ந்த பிரான் இன்னருளே கண்டு கொண்மின் என்க.
‘கைதவமே’ என்றதிலுள்ள ஏகாரம், எதிர்மறைக் கண் வந்தது. கைதவம் – வஞ்சனை. ஈண்டு, பொய்யைக் காட்டுகிறது.
புண்ணியம் பாவம் முதலானவைகளாய் எம்பெருமானுக்கு விசேடணமாகத் தோற்றுகிற விபூதிகள்
எல்லாம் அவன் கிருபையாலே உண்டாயின என்கிறார்.
புண்ணியம் பாவம் –
இன்பத்திற்குக் காரணமான புண்ணியம், துன்பத்திற்குக் காரணமான பாவம்.
புணர்ச்சி பிரிவு –
புண்ணியத்தின் பலமான கலவி, பாவத்தின் பலமான பிரிவு.
எண்ணமாய் மறப்பாய் –
விருப்பமுள்ள பொருளில் நினைவு, விருப்பம் இல்லாத பொருளில் மறதி.
உண்மையாய் இன்மையாய் –
உள்ளது என்ற சொல்லின் பொருளுமாய், இல்லது என்ற சொல்லின் பொருளுமாய். என்றது,
சேதன அசேதனங்களுமாய் என்றபடி.
அன்றிக்கே,
உண்மை இன்மை என்னுதல்.
(இல்லத்தும் உள்ளதும் அல்லது அவன் உரு -முன்பு பார்த்தோம் –
இல்லது அல்லது அவன் உரு என்றதே உள்ளது அவன் உரு
வ்யதிரேகம்-அங்கு நேராக இங்கே )
அல்லனாய் –
புண்ணிய பாவங்கட்கு நியாமகனாய்,
அவற்றுக்குக் கட்டுப்பட்டவன் அன்றிக்கே இருப்பவனாய்.
திண்ண பாடங்கள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் –
“ஸ்ரீ கிருஷ்ண பகவானுடைய திரு மாளிகை ஒன்றனை மாத்திரம் கடல் அழிக்க வில்லை” –
“வாசுதேவ க்ருஹம் து ஏகம் நப்லாவயதி ஸாகர.”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 38 : 9.-என்கிறபடியே,
பிரளய காலத்துக்கும் அழியாதபடி திண்ணிதான மாடங்களாலே சூழப்பட்ட திரு விண்ணகரிலே
சேர்ந்து நிற்கிற உபகாரகனான ஸ்ரீ கிருஷ்ணன்.
இன்னருளே –
புண்ணியம் பாவம் முதலாயினவைகளாய்க் கொண்டு அவனுக்கு விபூதிகளாகத் தோற்றுகிறவை யெல்லாம்
அவனுடைய கிருபையாலே உண்டாயின.
பாவமும் அவன் கிருபையாலேயோ? என்னில், அதுவும் அப்படியே.
சேதனனுடைய முற் பிறவியின் கர்மங்களுக்குத் தகுதியாக நடத்துவிக்கின்ற காரணத்தாலே –
சாபேஷ்த்வாத் -கர்மம் எதிர்பார்த்தே செய்பவன்
அதுவும் அவன் கிருபையாலே யாமத்தனை.
நன்று; எல்லாம் செய்தாலும் தீமை அவன் கிருபையாலே வரக் கூடுமோ? என்னில்,
தீயதனைக் காட்டி வெதுப்பி நல் வழி போக்கு கையினாலே கூடும் அன்றோ.-
அதுவும் அவனது இன்னருளே –
இன் அருள் –
நிர்ஹேதுக விஷயீ காரம்
காரணம் இல்லாமலே செய்யப்படுகின்ற அருள்.
கைதவமே –
நான் சொல்லுகிற இதில் அர்த்தவாதம் இல்லை.
கண்டு கொண்மின்கள் –
நீங்களும் எல்லாம் சாஸ்திரங்களிலே கண்டு கொள்ளுங்கோள்.
அன்றிக்கே,
கைதவமே – என்பதற்கு,
க்ருதகம் -செய்யப்பட்டவை என்றபடியாய்,
செய்யப்பட்டவை அடங்கலும் அவனுடைய காரணமில்லாமலே செய்யப்படுகின்ற
இனிய திருவருளாலே உண்டாயின என்னுதல்.
பூ புவ சுவ -மூன்று லோகங்கள் -க்ருதகம் -அவன் இன் அருளால் படைக்கப் பட்டன என்றபடி
——————————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –