Archive for August, 2021

ஸ்ரீ பெருமாள் திருமொழி -1–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை –

August 6, 2021

இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி
இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த
அரவரச பெரும் சோதி அனந்தன் என்னும்
அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி
திரு அரங்க பெரு நகருள் தெண்ணீர் பொன்னி
திரை கையால் அடி வருட பள்ளி கொள்ளும்
கருமணியை கோமளத்தை  கண்டு கொண்டு என்
கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாளே–1-1-

பதவுரை

திரு அரங்கம்–ஸ்ரீரங்கமென்கிற
பெரு நகருள்–பெரிய நகரத்திலே
இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும்–இருளானது சிதறி யொழியும் படி ஒளி விடுகின்ற மணிகள் விளங்கா நிற்கப் பெற்ற
நெற்றி–நெற்றியையும்
இனம் துத்தி–சிறந்த புள்ளியையும்
அணி–அழகாக உடைய–
ஆயிரம் பணங்கள் ஆர்ந்த–ஆயிரம் படங்களை உடையவனாய்
அரவு அரசன்–நாகங்களுக்குத் தலைவனாய்
பெரு சோதி–மிக்க தேஜஸ்ஸை யுடையனான
அனந்தன் என்னும்–திருவனந்தாழ்வானாகிற
அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை–அழகு மிக்கு உயர்த்தியை யுடைய வெண்ணிறமான திருப் படுக்கையிலே
மேவி–பொருந்தி
தெள் நீர் பொன்னி–தெளிந்த தீர்த்தத்தையுடைய காவிரி யானது
திரை கையால் அடி வருட–அலைகளாகிற கைகளாலே திருவடிகளைப் பிடிக்க
பள்ளி கொள்ளும்–திருக் கண் வளர்ந்தருளா நின்ற
கரு மணியை–நீல மணி போன்றவராய்
கோமளத்தை–ளெஸகுமார்யமே வடிவெடுத்தவரான பெரிய பெருமாளை
என் கண் இணைகள்–என் கண்களானவை
கண்டு கொண்டு–ஸேவிக்கப் பெற்று
களிக்கும் நாள்–ஆநந்தடையும் நாள்
என்று கொல்–எந்நாளோ!

திருவரங்கம் பெரிய கோயிலில் உபய காவேரீ மத்யத்தில் திருவனந்தாழ்வான் மீது
திருக் கண் வளர்ந்திருளா நின்ற அழகிய மணவாளனை அடியேன் கண்ணாரக் கண்டு
களிக்கும் பாக்கியம் என்றைக்கு வாய்க்குமோ! என்கிறார்.

ஆயிரம் பைந்தலைய அனந்தனாகையால்
ஒவ்வொரு தலையிலும் ஒவ்வொரு மாணிக்க மணி உண்டாகையால் மணிகள் எனப்பட்டது.
ஒரு மணியின் சுடரே இருளனைத்தையும் ஒழிக்கவற்றாயிருக்க,
ஆயிரம் மணிகளின் சுடரால் இருளிரியச் சொல்ல வேண்டாவே.

இமைத்தல்-விழித்தல் அதாவது இங்கு, விளங்குதல்.
துத்தி-படத்தின் மேலுள்ள பொறி.
மேவி என்ற வினையெச்சம் பள்ளி கொள்ளும் வினையைக் கொண்டு முடியும்.
பொன்னி-பொன்களைக் கொழிக்கையாலே காவிரிக்குப் பொன்னி யென்று பெயராயிற்று.
“பொன்னி திரைக் கையாலடி வருட” என்றது-காவிரியின் அலைகள் இனிதாக மோதிக் குளிர்ச்சி பெற்றுள்ள
கரையிலே பரமஸூகமாகக் கண் வளர்ந்தருள்கின்றமையைக் கூறியவாறு.

கோமளம்-வடசொல்,
கண்ணால் துகைக்க வொண்ணாத ஸௌகுமார்ய முடையவனை”என்பது வியாக்கியானம்.

————–

வாயோர் ஈர் ரைஞ்சூறு துதங்கள் ஆர்ந்த
வளை வுடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செந்தீ
வீயாத மலர் சென்னி விதானமே போல்
மேன்மேலும் மிக எங்கும் பரந்ததன் கீழ்
காயாம்பூ மலர் பிறங்கல் அன்ன மாலைக்
கடி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
மாயோனை மணத் தூணே பற்றி நின்று என்
வாயார என்று கொலோ வாழ்த்தும் நாளே ?–1-2-

பதவுரை

கடி அரங்கத்து-நறு மணம் மிக்க கோயிலிலே
ஓர் ஈர் ஐ நூறு வாய்–ஓராயிரம் வாய்களிலே
துதங்கள் ஆர்ந்த–ஸ்தோத்ர வாக்கியங்கள் நிறைந்திருக்கப் பெற்றவனாய்
வளை உடம்பின்–வெளுத்த உடம்பை யுடையவனாய்
அழல்–(எதிரிக்ள வந்து கிட்ட வொண்ணாதபடி) அழலை உமிழா நிற்பவனான
நாகம்–ஆதி சேக்ஷன்
உமிழ்ந்த–(தன் வாயினின்று) வெளிக் கக்கிய
செம் தீ–செந் நிறமான ஆகநி ஜ்வாலையானது
சென்னி–தலையின் மேலே
வீயாத மலர்–அழிவில்லாத புஷ்பங்களாற் சமைத்த தொரு மேற் கட்டி போல
எங்கும் மேல் மேலும் பரந்து மிக–மேற்புறமெங்கும் விஸ்தரித்து விளங்க
அதன் கீழ்–(ஆதிசேக்ஷன் உமிழ்ந்த அக்நி ஜ்வாலையாகிற) அந்தப் புஷ்ப விதாநத்தின் கீழே)
அரவு அணையில்–சேஷ சயநத்திலே
பள்ளி கொள்ளும்–கண் வளர்ந்தருளா நிற்பவனும்
காயா பூ மலர் பிறங்கல் அன்ன– காயாவின் அழகிய பூக்களாலே தொடுக்கப்பட்ட நீலமாலை போன்றவனாய்
மாலை–பெருமை பொருந்தியவனாய்
மாயோனை–ஆச்சர்யனான ஸ்ரீரங்கநாதனை (அடியேன்)
மனம் தூண் பற்றி நின்று– திருமணத் தூண்களிரண்டையும் அவலம்பாகப் பற்றிக்கொண்டு நின்று
என் வாய் ஆர வாழ்த்தும் நாள் என்று கொல்–என் வாய்த்தினவு தீர ஸ்துதி செய்யுங்காலம் என்றைக்கு வாய்க்குமோ?.

ஆயிரம் வாய்களாலும் ஆயிர நாமங்களைச சொல்லி எம்பெருமானைத் துதிப்பவனும்,
‘சுத்த ஸத்வகுணமுடையவன்’ என்பது நன்கு விளங்குமாறு பால்போல
வெளுத்த உடலையுடையவனுமான ஆதிசேஷன்,
எம்பெருமானிடத்திலுள்ள பரிவின் மிகுதியாலே அஸ்நாதத்திலும் பயத்தை மங்கிப்பவனாதலால்
கொடிய அரக்கரசுரர்கள் விபவாவதாரங்களிற் போல அர்ச்சையிலும் வந்து நலிவர்களோ என்னும்
அதி சங்கையினால் அவர்கள் அணுக முடியாதபடி எப்போதும் அழலை வாயில் நின்று கக்கிக் கொண்டிருப்பதனால்
செந்நிறமான அந்த அக்நி ஜ்வாலையானது அவனுடைய தலைகளின் மேற் கிளம்பி விசேஷமாகப் பரவி

‘சண்பகம் முதலிய செம் மலர்களாலே ஒரு மேற் கட்டி அமைக்கப்பட்டுள்ளதோ’ என்று
உத்பரேக்ஷிக்கத் தக்கதாய் விளங்க, அத்தகைய மேற்கட்டியின் கீழே
அரவணையின் மீது பள்ளி கொண்டருளா நின்ற பெரியபெருமாளை ஸேவித்த மாத்திரத்திலேயே

“காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும்” என்றபடி சைதில்யம பிறந்து தரித்து நிற்க முடியாத அவஸ்தை விளையுங்கால்
அவ் வழகிய மணவாளனுடைய திருக் கண்ணோக்கத்திலே நிலாவுகின்ற இரண்டு திருமணத் தூண்களை
அவலம்பமாகப் பற்றிக் கொண்டு தரித்து நின்று, வெகு நாளாக இழந்த இழவு தீர ஸ்தோத்ரம் பண்ணும்படியான
பாக்கியம் என்றைக்கு வாய்க்குமோ? என்கிறார்.

(மணத் தூணே பற்றிநின்று) அழகிய மணவாளன் ஸந்நிதியில் அண்மை யிலிருக்கும்
இரண்டு தூண்களுக்குத் “திரு மணத் தூண்” என்பது ஸம்ப்ராதாயத் திரு நாமம்.
. “மணத்தூணருகில் நின்று கொண்டு” என்னாமல்
“பற்றி நின்று” என்றதன் உட்கருத்தை ஸ்ரீரங்க ராஜஸ்த்தில் படடர் வெளியிட்டருளினார்.

அழகிய மணவாளனுடைய திருக்கண்ணோக்கமாகிற அமுதவாற்றின் பெரு வெள்ளமானது
அநுபவிக்க இழிந்தவர்களை ஒருமித்து நிலை நின்று அநுபவிக்க வொணணாதபடி தூக்கித் தள்ளி அசைக்குமளவில்,
அவர்கள் அவலம்பமாகப் பற்றிக் கொண்டு நிற்பதற்காக நாட்டப் பட்டுள்ளவை போன்ற
திருமணத் தூண்களைப் பற்றுவோம் என்பது இந்த ச்லோகத்தின் கருத்து.

அழகிய மணவாளனது திரு மேனியின் பரிமளம் இரண்டு தூணாகப் பரிணமித்து
உருவெடுத்து நிற்பதால் “திருமணத்தூண்” என்று திருநாமமாயிற்று என்பர்.

————-

எம் மாண்பின் அயன் நான்கு நாவினாலும்
எடுத்தேத்தி ஈர் இரண்டு முகமும் கொண்டு
எம்மாடும் எழில் கண்கள் எட்டினோடும்
தொழுது ஏத்தி இனிது இறைஞ்ச நின்ற செம்பொன்
அம்மான் தன் மலர் கமல கொப்பூழ் தோன்ற
அணி அரங்கத்து அர வணையில் பள்ளி கொள்ளும்
அம்மான் தன் அடி இணை கீழ் அலர்கள் இட்டு அங்கு
அடியவரோடு என்று கொலோ அணுகும் நாளே–1-3-

பதவுரை

எம் மாண்பின் அயன்–ஸர்வ விதத்தாலுமுண்டான மாட்சிமையை யுடைய நான்முகன்
நான்கு நாவினாலும் (தனது)–நாலு நாக்கினாலும்
எடுத்து–சொற்களை யெடுத்து
ஏத்தி–துதித்து
ஈர் இரண்டு முகமும் கொண்டு–நான்கு முகங்களாலும்
இனிது ஏத்தி–இனிமையாக (வேதங்களாலே) ஸ்தோத்திரம் பண்ணி
எழில் கண்கள் எட்டினோடும்–அழகிய எட்டு கண்களினாலே
எம் மாடும்–எல்லாப் பக்கங்களிலும்
தொழுது இறைஞ்ச நின்ற–நன்றாக ஸேவிக்கும்படி அமைந்த
செம் பொன்–செவ்விய பொன் போல் (விரும்பத்தக்க வடிவுடைய) ஸ்வாமியான தன்னுடைய
கமலம் மலர் கொப்பூழ்–தாமரைப் பூவை யுடைய திருநாபி யானது
தோன்ற–விளங்கும்படி
அணி அரங்கத்து அரவு அணையில்
பள்ளி கொள்ளும்;
அம்மான் தன்–பெரிய பெருமாளுடைய
அடிஇணை கீழ்-திருவடிகளின் கீழே
அலர்கள் இட்டு- புஷ்பங்களை ஸமர்ப்பித்து
அங்கு அடியவரோடு–அங்குள்ள கைங்கர்ய பரர்களோடு கூட
அணுகும் நாள் என்று கொல்-நெருங்கி வாழ்வது என்றைக்கோ?

பிரமன் வாயார வாழ்த்திக் கண்ணாரக் கண்டு களிக்கும் படியாவும்,
ஸகல லோகங்களினுடையவும் ஆவிர்ப்பாவத்துக்குக் காரணமாகிய திருநாபிக் கமலம் நன்கு விளங்கும்படியாகவும்
திருவனந்தாழ்வான் மீது சாய்ந்தருளா நின்ற பெரிய பெருமாளை ஆராதிக்கின்ற அடியார்களோடு கூட
அடியேனும் ஆராதிக்கும்படி அந்த திவ்ய ஸந்நிதானத்திற்குப் போய்ச் சேரும் பாக்கியம் என்றைக்கு வாய்க்குமோ? என்கிறார்.

எம் மாண்பின்-துதிப்பதற்கு உறுப்பான வாக்தேவியை எப்போதும் தன் வசமாகக் கைக் கொண்டிருக்கும்
அதிசயத்தை யுடையவன் என்பது உட் கருத்து.

————

மாவினை வாய் பிளந்து உகந்த மாலை வேலை
வண்ணனை என் கண்ணனை வன் குன்றம் ஏந்தி
ஆவினை அன்று உய்ய கொண்ட ஆயர் ஏற்றை
அமரர்கள் தம் தலைவனை அம் தமிழ் இன்ப
பாவினை அவ் வடமொழியை பற்றற்றார்கள்
பயில் அரங்கத்து அரவு அணை பள்ளி கொள்ளும்
கோவினை நாவுற வழுத்தி என் தன் கைகள்
கொய்ம் மலர் தூ என்று கொலோ கூப்பும் நாளே—-1-4-

பதவுரை

மாவினை வாய் பிளந்து உகந்த மாலை–குதிரை வடிவங்கொண்டு வந்த கேசியினுடைய வாயைக் கிழித்து மகிழ்ந்த பெருமானாய்
வேலை வண்ணணை–கடல் போன்ற வடிவை யுடையவனாய்
என் கண்ணணை–என்னுடையவன்’ என்று அபிமானிக்கக் கூடிய (ஸூலபனான) க்ருஷ்ணனாய்’
அன்று–(இந்திரன் கல் மழை பெய்வித்த) அக் காலத்திலே
வன் குன்றம் ஏந்தி–வலிய (கோவர்த்தன) மலையை (க்குடையாக)த் தூக்கி
ஆவினை உய்யக் கொண்ட–பசுக்களைக் காப்பாற்றி யருளின
ஆயர் ஏற்றை–இடையர் தலைவனாய்
அமரர்கள் தம் தலைவனை–நித்யஸூரிகளுக்கு ஸ்வாமியாய்,
அம் தமிழ் இன்ப பாவினை–அழகிய தமிழ்ப் பாஷையாலாகிய ஆநந்த மயமான அருளிச் செயல் போல் யோக்கியனாய்
அ வடமொழியை–அழகிய ஸம்ஸ்க்ருத பாஷையாலாகிய ராமாயணாதிகள் போல் யோக்யனாய்
பற்று அற்றார்கள் பயில் அரங்கத்து–ஸம்ஸார பந்தம் அற்றவர்களான விரக்தர்கள் நித்திய வாஸம் செய்கிற கோயிலிலே
அரவு அணையில் பள்ளி கொள்ளும்,
கோவினை–ஸ்வாமியான ஸ்ரீரங்கநாதனை
நா உற–நாக்குத் தடிக்கும்படி
வழுத்தி–துதித்து
என் தன் கைகள்–என்னுடைய கைகளானவை
கொய் மலர் தூய்–(காலத்தில்) பறிக்கப்பட்ட புஷ்பங்களை பணிமாறி
கூப்பும் நாள் என்று கொல்–அஞ்ஜலி பண்ணும் நாள் எதுவோ!

குதிரை வடிவங்கொண்டு தன்னைக் கவளங்கொள்ள வந்த கேசியென்னு மசுரனைக் கொன்று
தன்னை நித்யாநுபாவ்யனாக உபகரித்தருளினவனும்,
கடலைக் கண்டாற் போலே வடிவைக் கண்ட போதே தாப த்ரயமும் தீரும்படியிருப்பவனும்,
அரியன செய்து ஆச்ரிதரைக் காப்பாற்றினவனும்
பரம யோக்யனுமான ஸ்ரீரங்கநாதனை
நாத்தழும் பெழத் துதித்து நன்மலர்களைக் கொணர்ந்து ஸமர்ப்பித்து
‘அடியேனை ஆட்கொள்ள வேணும்’ என்கிற ப்ரார்த்தனை தோற்றக் கைகூப்பி நிற்கும்படியான பாக்கியம்
என்றைக்கு வாய்க்குமோ என்கிறார்.

எம்பெருமானுடைய ஒப்புயர்வற்ற போக்யதைக்கு அவனுடைய திவ்ய குணங்களை ப்ரதிபாதிக்கின்ற
திருவாய்மொழி முதலிய திவ்ய ப்ரபந்தங்களும் ஸ்ரீராமாயணம் முதலிய இதிஹாஸ புராணங்களுந் தவிர
வேறொன்றும் ஒப்புச்சொல்லத் தகாமையால் “அந்தமிழினின் பப்பாவினை அவ்வடமொழியை” என்றார்.

(பற்றற்றார்கள் பயிலரங்கம்)
“சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டரொன்றினர்,
அற்ற பற்றர் சுற்றிவாழு மந்தணீரரங்கமே” என்றார் திருமழிசைப்பிரானும்.

———

இணை இல்லா இன் இசை யாழ் கெழுமி இன்பத்
தும்புருவும் நாரதனும் இறைஞ்சி ஏத்த
துணை இல்லா தொன் மறை நூல் தோத்திரத்தால்
தொன் மலர் கண் அயன் வணங்கி யோவாது ஏத்த
மணி மாட மாளிகைகள் மல்கு செல்வ
மதிள் அரங்கத்து அர வணையில் பள்ளி கொள்ளும்
மணி வண்ணன் அம்மானை கண்டு கொண்டு என்
மலர் சென்னி என்று கொலோ வணங்கும் நாளே ?—1-5-

பதவுரை

இன்பம்–(வீணா கானத்தாலே) இன்பந்தருகின்ற
தும்புருவும்–தும்புரு மஹரிஷியும்
நாரதனும்–நாரத முனிவனும்
இணை இல்லா இன் இசை–ஒப்பற்றதும் போக்யமுமான இசையை
யாழ்–வீணையிலே
கெழுமி–நிறைத்து
(வீணா கானத்தைப் பண்ணிக் கொண்டு)
இறைஞ்சி ஏத்த–திருவடிகளிலே விழுந்து) வணங்கித் துதிக்கவும்
தொல் மலர்க் கண் அயன்–நித்யமான நாபீ கமலத்தி லுதித்த நான்முகனானவன்
வணங்கி–நமஸ்கரித்து
துணை இல்லா–ஒப்பு இல்லாததும்
தொல்–அநாதியுமான
மறை நூல் தோத்திரத்தால்–வேதசாஸ்த்ரங்களாகிற ஸ்தோத்ரங்களால்
ஓவாது ஏத்த–இடைவிடாமல் துதிக்கவும்
மணி மாடம் மாளிகைகள்–மணி மயமான மாட மாளிகைகளையும்
மல்கு செல்வம்–பூர்ணமான ஸம்பத்தையும்
மதிள்–ஸப்த ப்ராகாரங்களையுமுடைய
அரங்கத்து–கோயிலிலே
அரவு அணையில் பள்ளிகொள்ளும்;
மணி வண்ணன் அம்மானை–நீல மணி போன்ற திருநிறத்தை யுடையனான எம்பெருமானை
கண்டு கொண்டு–ஸேவித்து
என் மலர் சென்னி–என்னுடைய பூமாலை யணிந்த தலையானது
வணங்கும் நாள் என்று கொல்–(அவன் திருவடிகளில்) நமஸ்கரிப்பது என்றைக்கோ!

தும்புரு நாரதர் முதலிய முனிவர்கள் பகவத் குணங்களை இனிய இசையுடன் வீணையிலே யிட்டுப் பாடிக் கொண்டும்,
நான்முகன் முகங்களாலும் நான்கு வேதங்களை ஓதிக் கொண்டும் வணங்கப்
பள்ளி கொண்டருளா நின்ற பெரிய பெருமாளை நான் ஸேவிக்கப் பெறுவதும்,
அரசாட்சிக்கு ஏற்பப் பூ முடி சூடிக் கிடக்கின்ற என் தலை அவனுடைய திருவடியை முடிசூடப் பெறுதலும்
என்றைக்கு வாய்க்குமோ? என்கிறார்.

இன் இசை யாழ் கெழுமி-இனிய இசையையுடைத்தான வீணையை அப்யஸித்து என்றுமாம்

———

அளி மலர் மேல் அயன் அரன் இந்திரனோடு ஏனை
அமரர்கள் தம் குழுவும் அரம்பையரும் மற்றும்
தெளி மதி சேர் முனிவர்கள் தம் குழுவும் முந்தி
திசை திசையில் மலர் தூவி சென்று சேரும்
களி மலர் சேர் பொழில் அரங்கத்து உரகம் ஏறி
கண் வளரும் கடல் வண்ணர் கமல கண்ணும்
ஒளி மதி சேர் திரு முகமும் கண்டு கொண்டு என்
உள்ளம் மிக என்று கொலோ வுருகும் நாளே—1-6-

பதவுரை

அளி மலர் மேல் அயன்–(மதுபானத்துக்காக) வண்டுகள் படிந்திருக்கிற தாமரைப் பூவில் தோன்றிய பிரமனும் சிவனும்
அரன்–சிவனும்
இந்திரனோடு ஏனை அமரர்கள் தம் குழுவும்–இந்திரனோடு கூட மற்றைத் தேவர்களின் திரளும்
அரம்பையரும்–ரம்பை முதலிய தேவ மாதரும்
மற்றும்–மற்றுமுள்ள
தெளி மதி சேர் முனிவர்கள் தம் குழுவும்–தெளிந்த ஞானத்தை யுடைய (ஸநகாதி) மஹர்ஷிகளின் ஸமூஹமும்
உந்தி–ஒருவர்க்கொருவர் நெருக்கித் தள்ளி
திசை திசையில்–பார்த்த பார்த்தவிடமெங்கும்
மலர் தூவி–புஷ்பங்களை இறைத்துக் கொண்டு
சென்று சேரும்–வந்து சேர்தற்கு இடமான
களிமலர் சேர் பொழில் அரங்கத்து–தேன் மிக்க மலர்களை யுடைய சோலைகளை யுடைத்தான கோயிலிலே
உரகம் ஏறி–திருவனந்தாழ்வான் மீது பள்ளி கொண்டு
கண் வளரும்–திருக்கண் வளர்ந்தருளா நின்ற
கடல் வண்ணர்–கடல் போன்ற வடிவை யுடையரான பெரிய பெருமாளை யுடைய
கமலம் கண்ணும்–செந்தாமரை போன்ற திருக் கண்களையும்
ஒளி மதி சேர் திரு முகமும்–ஒளியை யுடைய சந்திரன் போன்ற திருமுக மண்டலத்தையும்
கண்டு கொண்டு–ஸேவிக்கப் பெற்று
என் உள்ளம்–என்னுடைய மனமானது
மிக உருகும் நாள் என்று கொல்–மிகவும் உருகுங்காலம் என்றைக்கோ?

தேவர்களும் தேவ மாதர்களும் முனிவர்களும் ஆராதந உப கரணங்களைக் கோண்டு வந்து,
திரள் மிகுதியாலே ஒருவரை யொருவர் நெருக்கி தள்ளிப் புகும்படியான கோயிலிலே கண் வளர்ந்தருளாகின்ற
பெரிய பெருமாளையுடைய செந்தாமரைக் கண்ணையும் முக சந்த்ர மண்டலத்தையும் ஸேவிக்கப்பெற்று,
‘பாவியேனுக்கும் இப் பேறு வாய்த்த அதிசயம் என் கொல்! என்று
நெஞ்சுருகும் படியான நாளும் வரப் போகிறதோ! என்கிறார்.

———

மறம் திகழும் மனம் ஒழித்து வஞ்சம் மாற்றி
ஐம்புலன்கள் அடக்கி இடர் பார துன்பம்
துறந்து இரு முப் பொழுது ஏத்தி எல்லை இல்லா
தொன் நெறி கண் நிலை நின்ற தொண்டரான
அறம் திகழும்  மனத்தவர் தம் கதியை பொன்னி
அணி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
நிறம் திகழும் மாயோனை கண்டு என் கண்கள்
நீர் மல்க என்று கொலோ நிற்கும் நாளே ?—-1-7-

பதவுரை

மறம் நிகழும் மனம் ஒழித்து–கொடுமையால் விளங்கா நின்றுள்ள மனத்தை ஒழித்து
வஞ்சம் மாற்றி–வஞ்சனைகளைப் போக்கி
வல் புலன்கள் அடக்கி–கொடிய இந்திரியங்களை அடக்கி
இடர் பாரம் துன்பம் துறந்து–(மேன் மேலும்) துக்கத்தை விளைப்பனவாய்ப்
பெருஞ்சுமையா யிராநின்ற பழ வினைகளை வேரறுத்து
இரு முப்பொழுது ஏத்தி–பஞ்ச காலங்களிலும் துதித்து
எல்லை இல்லா தொல் நெறிக் கண் நிலை நின்ற–அளவிறந்த பழைய மர்யாதையிலே நிலை நின்ற
தொண்டர் ஆன–தாஸ பூதர்களான
அறம் திகழும் மனத்தவர் தம்–தர்ம சிந்தையே விளங்கும் மனமுடையரான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு
கதியை–பரம ப்ராப்யனாய்
பொன்னி அணி அரங்கத்து–காவிரியால் அழகு பெற்ற கோயிலிலே
அரவு அணையில் பள்ளி கொள்ளும்:
நிறம் திகழும்–அழகு விளங்கா நின்றுள்ள
மாயோனை–ஆச்சரியனான எம்பெருமானை
என் கண்கள்–எனது கண்களானவை
கண்டு–ஸேவிக்கப் பெற்று
நீர் மல்க நிற்கும் நாள் என்று கொல்–ஆநந்தக் கண்ணீர் ததும்பும்படி நிற்பது என்றைக்கோ?

முன்னடிகளிரண்டும் ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணங்கூறுவன.
“திகழும் மனம் மறம் ஒழித்து” என்று அந்வயித்து,
விளாங்கா நின்ற மனத்தில் நின்றும் கொடுமையை நீக்கி என்றுரைத்தலுமாம்.
மறம்-கொலை, கோபம், கொடுமை.
இடர்ப் பாரத் துன்பம் துறந்து-“பாரமாய பழவினை பற்றறுத்து” என்கை.
மஹத்தான துக்கத்தை விளைவிக்கக் கூடியதும்,
மனிதனைக் கீழே அமுக்குவதில் தலைச் சுமை போன்றதுமான பழையவினையை வேரோடு களைந்து என்றபடி.

(இருமுப் பொழுதேத்தி.) இரண்டும் மூன்றும் ஐந்து; பஞ்ச காலபராயணர்களாய் என்றபடி.
இதனைச் சிறிது விவரிப்போம்; –
ஒரு தினத்தின் பகற்பொழுதை ப்ராத:காலம், ஸங்கவகாலம், மத்யாஹ்நகாலம், அபராஹ்காலம், ஸாயங்காலம் என்று ஐந்தாகப் பகுத்து,
ஸூர்யோதயம் முதல் அவ்வாறு நாழிகை இவற்றிற்கு முறையே உரியவை என்று வரையறுத்து,
அபிகமநம், உபாதாநம், இஜ்யா, ஸ்வாத்யாயம், யோகம் என்ற ஐந்து ஒழுக்கங்களையும் முறையே
அந்த (ப்ராத:காலம் முதலிய) ஐந்து சிறுபொழுதிலும் அநுஷ்டிக்கும்படி பாஞ்சராத்ரம் முதலிய ஆகமங்கள் கூறும்.

இரவில் ஆசரிக்க வேண்டுவதும் யோகாநுஷ்டாநமே இவற்றின் விவரம் வருமாறு:-

முதலாறு நாழிகையாகிய ப்ராத:காலத்திலே, ஸ்நாநம் ஸந்த்யாவந்தனம் ஜபம முதலிய காலைக் கடன்களைச் செய்து முடித்துத்
தாம் ஆராதிக்கவேண்டிய எம் பெருமானுடைய ஸந்நிதியிற்சென்று ப்ரதக்ஷிண நமஸ்கார ஸ்தோத்ரம்
முதலியவற்றால் எம் பெருமானை உகப்பிக்க வேண்டும்; இஃது அபிகமநகால நியமம்.

அதற்கு அடுத்த ஸங்கவகாலத்திலே, பகவதாராதநத்துக்கு வேண்டிய சுத்த தீர்த்தம் சந்தனம் புஷ்பம் தூப தீப த்ரவ்யங்கள்
முதலியவற்றையும், எம்பெருமானுக்கு அமுது செய்விப்பதற்கு வேண்டிய பால் தயிர் நெய் தேன் முதலிய வற்றையும்
எம்பெருமானுக்கு அமுது செய்விப்பதற்கு வேண்டிய அரிசி பருப்பு கறியமுது சர்க்கரை நெய் தயிர் பழம் முதலிய
போஜநோபகரணங்களையும் ஸம்பாதித்துத் தொகுத்து ஸித்தஞ் செய்யவேண்டும். இஃது உபாதாநகால நியமம்.

மூன்றாவதான மத்யாஹ்ந காலத்திலே, மாத்யாஹ்நிகஸநாநமும் மாத்யாஹ்நிகச் சடங்கும் செய்து
விதிமுறை வழுவாது பகவானுக்குத் திருவாராதநம் பண்ணிப் பக்குவமான உணவுகளை அமுது செய்வித்து
அங்ஙனம் நிவேதித்த உணவுகளை அதிதிகளோடு புஜிக்க வேண்டும். இஃது இஜ்யாகால நியமம்.

அதற்கு அடுத்ததான அபராஹ்ந காலத்திலே, மோக்ஷமார்க்கத்துக்கு உரிய வேத வேதாந்த வேதாந்தங்களையும்
இதிஹாஸ புராணங்களையும் மற்றும் உரிய நுர்ல்களையும் தாம் கற்றலும் கற்பித்தலும் வேண்டும். இது ஸ்வாத்யாயகாலநியமம்.

ஈற்றதான ஸாயங்காலத்திலே, மாலைக் கடனாகிய ஸந்த்யா வந்தனத்தைச் செய்யத் தொடங்கி
ஸூர்யாஸ்தமனமான பின்பு ஜபத்தைப் பூர்த்திசெய்து இரவு போஜநாநந்தரம் ஏகாந்தமாக இருந்து
ஐம்பொறிகளை யடக்கி ப்ராணாமஞ்செய்து மனத்தைப் பரமாத்மாவினிடத்தே நிலை நிறுத்தி
பகவத்குணாநு ஸந்தானத்தோடு பள்ளி கொள்ள வேண்டும். இது யோகாகாலநியமம்.

இவ்வாறு அநுஷ்டிக்கும் பாகவதர் பஞ்சகாலபராயணர் எனப்படுவர்.

————

கோலார்ந்த நெடும் சார்ங்கம் கூன் நல் சங்கம்
கொலை ஆழி கொடும் தண்டு கொற்ற ஒள் வாள்
காலார்ந்த கதி கருடன் என்னும் வென்றி
கடும் பறவை இவை அனைத்தும் புறம் சூழ் காப்ப
சேலார்ந்த நெடும் கழனி சோலை சூழ்ந்த
திரு வரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
மாலோனை கண்டு இன்ப கலவி எய்தி
வல் வினையேன் என்று கொலோ வாழும் நாளே ?–1-8-

பதவுரை

கோல் ஆர்ந்த–அம்புகளோடு கூடிய
நெடு சார்ங்கம்–பெரியதான ஸ்ரீ சார்ங்க மென்னும் வில்லும்
கூன் நல் சங்கம்–வளைந்து விலக்ஷணமான ஸ்ரீ பாஞ்சஜந்யமென்னும சங்கமும்
கொலை ஆழி–(எதிரிகளைக்) கொலை செய்ய வல்ல ஸூதர்சநமும்
கொடும் தண்டு–(பகைவர்களுக்குக்) கொடுந்தொழில் புரிகின்ற கௌமோதகி யென்னும் கதையும்
கொற்றம் ஒள் வாள்–வெற்றி பெற்று ஒளி மிக்க நந்தகமென்னும் வாளும்
கால் ஆர்ந்த கடும் கதி–வாயு வேகம் போன்ற மிகவும் விரைந்த நடையை யுடைய
கருடன் என்னும்–பெரிய திருவடி யென்னும் பேரை யுடைய
வென்றி பறவை இவை அனைத்தும்–ஐய சீலமான பக்ஷிராஜனும் (ஆகிய) இவை யெல்லாம்
புறம் சூழ் காப்ப–நாற் புறமும் சூழ்ந்து கொண்டு ரக்ஷையிட
சேல் ஆர்ந்த நெடு கழனி–(நீர் வளத்தால்) மீன்கள் நிரம்பிய விசாலமான
கழனிகளாலும்
சோலை சூழ்ந்த–சோலைகளாலும் சூழப்பட்ட
திரு அரங்கத்து அரவு அணையில்
பள்ளி கொள்ளும்;
மாலோனை–ஸர்வாதிகனான எம்பெருமானை
வல் வினையேன்–மஹா பாபியான அடியேன்
கண்டு–ஸேவிக்கப் பெற்று
இன்பம் கல்வி எய்தி–ஆநந்த மயமான ஸம்ச்லேஷத்தையும் பெற்று
வாழும் நாள் என்று கொல்–வாழ்வது என்றைக்கோ?

பஞ்சாயுதங்களும், திருவடி விஷ்வகஸேநன் முதலிய நித்யஸூரி வர்க்கங்களும்
‘அழகிய மணவாளனுக்கு எந்த ஸமயத்தில் என்ன தீங்கு நேரிடுமோ? என்று அதி சங்கை பண்ணி
எப்போதும் நாற்புறமும் சூழ்ந்து காவலாயிருக்கத் திருவனந்தாழ்வான் மீது திருக்கண் வளர்ந்தருளா நின்ற பெரிய பெருமாளை,
ஸாம்ஸாரிக ஸூகாபாஸங்களிலேயே ருசி கண்டிருக்குமபடி மஹா பாபத்தைப் பண்ணி
நித்ய கைங்கரியத்தை இழந்து கிடக்கிற அடியேன் என்றைக்கு ஸேவித்து வாழப் போகிறேன் என்கிறார்.
இப் பாசுரத்தை அடியொற்றியே ஆழ்வான் ஸ்ரீவைகுண்ட ஸ்தவத்தில் அருளிச் செய்தமையும் காண்க

—————

தூராத மனக் காதல் தொண்டர் தங்கள்
குழாம் குழுமி திரு புகழ்கள் பலவும் பாடி
ஆராத மனக் களிப்போடு அழுத கண்ணீர்
மழை சோர நினைந்து உருகி ஏத்தி நாளும்
சீர் ஆர்ந்த முழ வோசை பரவை காட்டும்
திரு வரங்கத்து  அரவணையில் பள்ளி கொள்ளும்
போராழி அம்மானை கண்டு துள்ளி
பூதலத்தில் என்று கொலோ புரளும் நாளே?—-1-9-

பதவுரை

தூராத காதல் மனம்–ஒரு நாளும் த்ருப்தி பெறாத ஆசை கொண்ட மனத்தை யுடையவரான
தொண்டர் தங்கள் குழாம்–ஸ்ரீ வைஷ்ணவர்களின் கோஷ்டியிலே
குழுமி–கூடி
திரு புகழ்கள் பலவும் பாடி–(எம்பெருமானது) கீர்த்திகளெல்லாவற்றையும் (வாயாரப்) பாடி
ஆராத மனம் களிப்போடு–(அவ்வளவிலும்) த்ருப்தி பெறாத மநஸ்ஸிலுள்ள ஆனந்தத்தோடே
அழுத கண் நீர்–அழுத கண்களிலுண்டான நீர்த் துளிகள்
மழை சோர–மழை போல் பெருகி வர
நினைந்து உருகி ஏந்தி–(எம்பெருமானை) நினைத்து (அத்தாலே) மனமுருகி ஸ்தோத்திரம் பண்ணி,
நாளும்–எப்போதும்
சீர் ஆர்ந்த முழவு ஓசை–நல்ல வாத்யங்களின் கோஷமானது
பரவை காட்டும்–கடலோசை போல் முழங்கப் பெற்ற
திரு அரங்கத்து ஸ்ரீரங்கத்திலே அரவு அணையில் பள்ளி கொள்ளும்
போர் ஆழி–(பகைவரோடு) யுத்தஞ்செய்வதையே தொழிலாக வுடைய
திருவாழி யாழ்வானை யுடையவரான
அம்மானை–எம்பெருமானை
கண்டு–ஸேவிக்கப் பெற்று
துள்ளி–ஆநந்தத்துக்குப் போக்கு வீடாகத்) தலை கால் தெரியாமல் கூத்தாடி
பூதலத்திலே–பூமியிலே
புரளும் நாள் என்று கொல்–(உடம்பு தெரியாமல்) புரள்வது என்றைக்கோ!.

“இன் கனி தனி யருந்தான்” (நல்ல பொருள்களைத் தனியே அநுபவிக்கலாகாது) என்றாற்போல,
பகவத் குணங்களைத் தனியே அநுபவிக்கக் கூடாதாகையால்,
அக் குணங்களை வாய் விட்டுக் கதறினாலன்றி த்ருப்தி பெற முடியாதபடி கரை புரண்ட காதலை யுடைய
பாகவதர்களின் கோஷ்டியிலே கலந்து அவர்களுடன் எம்பெருமானது கீர்த்திகளை வாயாரப் பாடி
அதனால் ஆநந்தக் கண்ணீர் பெருகப் பெற்று ‘நமக்குமன்றோ இவ்வநுபவம் கிடைத்தது!’ என்கிற
உள்ளடங்காத பேரின்பப் பெருமையாலே
“மொய்ம்மாம் பூம்பொழிற் பொய்கை” என்கிற திருவாய் மொழியிற்படி
தலை கால் தெரியாமல் துள்ளிக் கூத்தாடி, இப்போது ஸிம்ஹாஸநத்திலே மார்பு நெறித்திருக்கு மிருப்புத் தவிர்ந்து
ஆநந்த மிகுதியாலே நிலத்தில் வீழ்ந்து புரளும்படியான பாக்கியம் வாய்ப்பது என்றைக்கோ? என்கிறார்.

தூராத மனக் காதல் சப்தாதி விஷயங்களை எவ்வளவு அநுபவித்தாலும் எத்தனை நாள் அநுபவித்தாலும்
சிறிதும் த்ருப்தி அடையாத இந்திரியங்களை யுடையவர்களின் கோஷ்டியில் நின்றும் விலகி,
எம்பெருமானை எவ்வளவு அநுபவித்தாலும் பர்யாப்தி பெறாத மெய்யடியார்கள் திரளிலே புக விரும்புகிறபடி.

பரவை காட்டும் என்றது-
கடலின் அலைகளின் கோஷத்துக்கு ஓய்வு இல்லாதாப் போலே
கோயிலில் வாத்யங்களின் முழக்கத்துக்கு ஓய்வு இல்லாமையால் கடலை ஒத்திருக்கின்ற என்றவாறு.
பரவை-கடல் பரவியது: ஐ-கருத்தாய்ப் பொருள் விகுதி.

————-

வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய
மண் உய்ய மண் உலகில் மனிசர் உய்ய
துன்பம் மிகு துயர் அகல அயர் ஒன்றில்லா
சுகம் வளர அக மகிழும் தொண்டர் வாழ
அன்போடு தென் திசை நோக்கி பள்ளி கொள்ளும்
அணி அரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள்
இன்ப மிகு பெரும் குழுவு கண்டு யானும்
இசைந்த உடனே என்று கொலோ விருக்கும் நாளே ?—1-10-

பதவுரை

வன்–(நைமித்திக ப்ரளயத்தில்) அழியாதிருக்கக் கடவதும
பெரு–பெருமை தங்கியதுமான
வானகம்–ஸ்வர்க்கம் முதலிய மேலுலகங்கள்
உய்ய–உஜ்ஜீவிக்கவும்
அமரர்–தேவர்கள்
உய்ய–உஜ்ஜீவிக்கவும்
மண் உய்ய–பூலோகம் உஜ்ஜீவிக்கவும்
மண் உலகில் மனிசர் உய்ய–பூலோகத்திலுள்ள மனிதர்களெல்லாம் உஜ்ஜீவிக்கவும்
மிகு துன்பம் துயர் அகல–மிக்க துக்கத்தை விளைப்பதான பாவங்கள் நீங்கவும்
அயர்வு ஒன்று இல்லா சுகம் வளர–துக்கம் கலசாத சுகம் வளரவும்
அகம் மகிழும்–(எப்போதும்) மனதில் ஆனந்தத்தை யுடையரான
தொண்டர்–ஸ்ரீவைஷ்ணவர்கள்
வாழ–உஜ்ஜீவிக்கவும்
அன்போடு–திருவுள்ளத்தில் உகப்போடு
தென் திசை நோக்கி–தெற்குத் திக்குக்கு அபிமுகமாக
பள்ளி கொள்ளும்–பள்ளி கொண்டிரா நின்ற
அணி அரங்கன்–ஸ்ரீரங்கநாதனுடைய
திரு முற்றத்து–ஸந்நிதியுள் திரு முற்றத்திலே
அடியார் தங்கள்–ஸ்ரீவைஷ்ணவர்களுடைய
இன்பம் மிகு பெரு குழுவு கண்டு–ஆநந்தம் நிரம்பிய பெரிய கோஷ்டியை சேவித்து
யானும்–அடியேனும்
இசைந்து–(அவர்களுள் ஒருவனாக) மனம் பொருந்தி
உடனே–அவர்களோடு கூட
இருக்கும் நாள் என்று கொல்–வாழ்ந்திருக்குங்காலம் எப்போது (வாய்க்குமோ?).

தேவர்களும் மநுஷயர்களும் விலக்ஷண ஸ்ரீவைஷ்ணவர்களும் வாழவும்
பாவங்கள் நீங்கிப் புண்ணியங்கள் செழிக்கவுமாகக்
குட திசை முடியை வைத்துக் குண திசை பாதம் நீட்டி வட திசை பின்பு காட்டித் தென் திசை இலங்கை
பாகவதர்களை யுடைய கோஷ்டியிலே சேர்ந்து
அடியேனும் அவர்களைப் போலே திளைத்து வாழ்வது என்றோ! என்கிறார்.

————–

திடர் விளங்கு கரை பொன்னி நடுவு பாட்டு
திரு வரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்
கடல் விளங்கு கரு மேனி அம்மான் தன்னை
கண்ணார கண்டு உகக்கும் காதல் தன்னால்
குடை விளங்கு விறல் தானை கொற்ற ஒள் வாள்
கூடலர் கோன் கொடை குலசேகரன் சொல் செய்த
நடை விளங்கு தமிழ் மாலை பத்தும் வல்லார்
நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே—1-11-

பதவுரை

திடர் விளங்கு கரை–மணற்குன்றுகள் விளங்கா நின்ற கரையை யுடைத்தான
பொன்னி நடுவு பாடு–காவிரியின் நடுவிடத்து
திரு அரங்கத்து அரவு அணையில் பள்ளி கொள்ளும்:
கடல் விளங்கு–கடல் போல் விளங்குகின்ற
கரு மேனி–கரிய திருமேனியை யுடைய
அம்மான் தன்னை–பெரிய பெருமாளை
கண் ஆர கண்டு உகக்கும் காதல் தன்னால்–கண்கள் த்ருப்தி யடையும்படி
ஸேவித்து ஆநந்திக்க வேணும்’ என்று உண்டான ஆசையினால்
குடை விளங்கு–(அரசாட்சிக்கு ஏற்ப) வெண் கொற்றக் குடையுடன் விளங்கா நிற்பவரும்
விறல் தானை–பராக்கிரமம் மிக்க ஸேஸனைகளை யுடையவரும்
கொற்றம் ஒள் வாள்–வெற்றியும் ஒளியும் பொருந்திய வாளை யுடையவரும்
கூடலர் கோன்–மதுரையிலுள்ளவர்களுக்குத் தலைவரும்
கொடை–ஔதார்யத்தையே இயற்கையாக வுடையவருமான
குலசேகரன்–குலசேகரப் பெருமாள்
சொற்செய்த–அருளிச் செய்த
நடை விளங்கு–தமிழ் நடையானது நன்கு விளங்கா நின்ற
தமிழ் மாலை பத்தும்–தமிழ்ப் பிரபந்தரூபமான இப் பத்துப் பாசரங்களையும்;
வல்லார்–ஓத வல்லார்கள்
நலம் திகழ் நாரணன்–கல்யாண குண சாலியான ஸ்ரீமந் நாராயணனுடைய
அடி கீழ் நண்ணுவார்–திருவடிகளில் சேரப் பெறுவர்.

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான்  பிள்ளை  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ குலேசேகரர்    ஆழ்வார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள்  ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்- -ஸ்ரீ வேதாந்த தேசிகன் பாஷ்யம்/ -அருள் தரும் ஸ்ரீ ஆரண தேசிகன் —

August 6, 2021

ஸ்வாதயன் நிஹா சர்வேஷாம்
த்ரய்யந் தார்த்தம் ஸூ துர் க்ரஹம்
ஸ்தோத்ர யாமாஸ யோகீந்திர
தம் வந்தே யாமுநாஹ் வயம்-

ஸ்வாதயன்-அனுபவத்திக் கொண்டே –
யன் ப்ரத்யயம் -அனுபவிப்பித்து-
இஹ -இந்த காலத்தில் -இத்தைச் சொல்லும் பொழுது -இதில் –
சர்வேஷாம்-சர்வாதிகாரம் இந்த ஸ்தோத்ரம் -ஸ்ரத்தையே வேண்டுவது
ஸூ துர்க் ரஹம்–த்ரய்யந் தார்த்தம்-அறிவரிய வேதாந்தார்த்தங்களை
ஸ்தோத்ர யாமாஸ-ஸ்தோத்ர ரூபமாக வெளியிட்டு அருளினாரோ
யோகீந்திர-எந்த யோகி ஸ்ரேஷ்டர்–எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவனான ஆளவந்தார் –

————

நமோ நமோ யாமுநாயா யாமுநாய நமோ நம
நமோ நமோ யாமுநாயா யாமுநாய நமோ நம

நமோ நமோ யாமுநாயா-அஷ்டாக்ஷர மந்த்ரம் போல் இதுவே-

———————————————————

ஸ்ரீ மத யமுனா முனே நாத ஸஹாயேந -நாத முனி என்றும் பெருமாளே என்றும் -கூடியவராக -உள்ள ஆளவந்தரால்
அஹம் நாதம் உடையவராய் ஆனேன் -தேசிகன்
யஸ்ய வதன சந்த்ர உத்பன்ன புவன போக்கிய அம்ருதம்
அம்ருத கிரணங்கள் உடைய சந்திரன் -சகோர பஷி இத்தையே தாரகமாக கொள்ளுமே
ஸூ மனஸா-ஸ்ரீ வைஷ்ணவாம் போக்யம் -அமரர்கள் -பூ ஸூ ரர்களுக்கும் –

———————–

ஆளவந்தார் ஸ்தோத்ர ரத்னம் நாலாம் ச்லோகத்தின் பொருள் விரிக்கையில் ஸ்ரீ தேசிகன்
“மாதா பிதா”வுக்கு விளக்கம் அருள்வது காணீர் –
”அத பராசர ப்ரபந்தாதபி வேதாந்த ரஹஸ்ய வைசாத்யாதிசய ஹேதுபூதை: சாத்ய பரமாத்மனி சித்த ரஞ்சக தமை:
ஸர்வோபஜீவ்யை: மதுரகவி ப்ரப்ருதி ஸம்ப்ரதாய பரம்பரயா நாதமுநேரபி உபகர்த்தாரம் காலவிப்ரகர்ஷேபி
பரமபுருஷ ஸங்கல்பாத் கதாசித் ப்ராதுர்பூய ஸாக்ஷாதபி ஸார்வோபநிஷத் ஸாரோபதேசதரம் பராங்குசமுநிம் “
மாதா பிதா ப்ராதேத்யாதி உபநிஷத் ப்ரசித்த பகவத் ஸ்வபாவ த்ருஷ்ட்யா ப்ரணமதி மாதேதி”.

இங்கு ஸ்ரீ தேசிகன் வேத விஷயங்களை
ஆழ்வார் பராசராதி ரிஷிகளையுங்காட்டில் வெகு நன்றாக விளக்குவதாகக் காட்டியருளுகிறார்.
மேலும் ஆழ்வார் பாசுரங்கள் எல்லார்க்கும் ஏற்புடையனவாயும். ரசகனமாயும் உள்ளன.
ஆகவே எம்பெருமானைப் போன்றே ஆழ்வாரும் தாய், தந்தை என எல்லா உறவு முறையிலும் கொண்டாடப் படுகிறார்.

———————–

ஸ்லோகம் -10-
ஸ்தோத்ரம் செய்ய அல்ப சக்தனான தாமே தகுதியானவர் என்று அவனது ஸ்வாபாவிக வாத்சல்யம் வெளிப்பட்டது
அது அவன் இடம் திருப்பத்தில் எவ்விதமும் ஆச்சர்யம் அன்று என்று
ஒரு கைமுதிக நியாயத்தால் இந்த ஸ்லோகத்தில் ஸ்தாபிக்கிறார்
இது முதல் 12 ஸ்லோகங்களால்
நாராயண சப்தார்த்தம் ஸர்வ ஸ்மாத் பரத்வமும் ஸுலப்யமும் என்று பிரபஞ்சித்திக் கொண்டு
ஸ்ரீ ஆளவந்தார் அவனை நமஸ்கரிக்கிறார் என்பதே ஸ்ரீ தேசிகருடைய அவதாரிகை –

ஹே பிரபு உன்னுடைய சங்கல்பம் இல்லா விடில் விசித்ரமாகப் தென்படும் இப்பிரபஞ்சம் முழுவதும் உண்டாகிறதற்காவது –
ஸத்தை யுடன் கூடி இருக்கிற தற்காவது ஸமர்த்தம் அன்று
அப்படி இருக்கவே அசமர்த்தம் என்றால் ப்ரவ்ருத்தி அதுக்கு எவ்வாறு சம்பவிக்கும்
ஆக இப்படி ஸர்வ ஜந்துக்களும் ஸ்வாபா விக ஸூஹ்ருத்தாகிய உம் இடத்தில் ஆஸ்ரிதவாத்சல்யம் இருப்பது ஆச்சர்யம் அன்று
இவற்றை உண்டாக்கி -ஸத்தயைக் கொடுத்து
போக மோக்ஷம் அடைய கரண களே பரங்க ளையும் கொடுத்த ஸர்வ உபகாரகனுக்கு இல்லாமல்
வேறே யாருக்கு ஆஸ்ரித வாத்சல்யம் சம்பவிக்க முடியும்

நிகில காரணன்–
காரணத்வம் –நியந்த்ருத்வம் -ஸூஹ் ருத்வம் -ஸ்வாமித்வம் -வாத்சல்யம் —
ஐந்து கல்யாண குணங்கள் நிறைந்தவன் அவன் ஒருவனே

அவேஷணம் -ஸங்கல்பம் -அநுஹ்ரஹத்தை முன்னிட்டே செய்து அருளுகிறான்
ஞானம் பலம் இத்யாதி ஸ்வாபாவகிம் போல் ரக்ஷணமும் ஸ்வாபாவகிம் தான்
தன் இடம் த்வேஷம் பாரட்டி உள்ளார் இடம் கூட அவன் வாத்சல்யம் காட்டி அருளுகிறான்

கட வல்லி -ஜூகுப் ஸை இல்லாமல் அந்தர்யாமி -வாத்சல்யம் அடியாகவே
மழலைச் சொல்லை உகக்கும் தாய் போல் நம் பழிச் சொற்களையும் ஏற்கிறான்

———

ஈஸித்ருத்வம் -காரணத்வம் -ஸ்வாமித்வம் -இருக்கும் தன்மை விளக்கம் –11-ஸ்லோகத்தால்

ஹே நாராயணா வேதங்களை பிரமாணமாக ஒத்துக்க கொள்பவர்களின் எவர் தான்
ஸ்வ பாவ ஸித்தமாயும் அளவற்ற மகிமையும் உள்ள ஈஸீத்ருத்வத்தை உம்மிடத்தில் ஸஹிக்க மாட்டார்
ப்ரஹ்மாதிகள் முக்தர்கள் அனைவரதும் உமது மஹிமையில் ஒரு திவிலை ஸ்தானீயர்கள் ஆகிறார்கள் அன்றோ என்று அர்த்தம் –

அநந்ய அதீனம் அபரிமிதம் இவனது ஈஸித் ருத்வம்
மற்றவர்களது -ப்ரஹ்மாதிகளுக்கு
கர்மாதீனம் துக்க மிஸ்ரம் அநித்யம்
முக்தர்களுக்கு பரம அதீனம் -பரிச்சின்னம்
இவனே ஸர்வ அந்தராத்மா -ப்ரவர்த்தகன் -ஸர்வ ஸாக்ஷி -அனைத்துக்கும் ஆஸ்ரயம்

———-

ஸ்ரீ பிள்ளை அந்தாதி
உன் அருள் அன்றி எனக்கு ஒரு நல் துணை இன்மையால்
என் இரு வல்வினை நீயே விலக்கி ஹிதம் கருதி
மன்னிய நல் திரு மந்த்ரம் ஓதும் பொருள் நிலையே
பொன் அருளால் அருளாய் புகழ் தூப்பூல் குல விளக்கே –15-

விளக்காகி வேங்கட வெற்பினில் வாழும் விரை மலராள்
வளக் காதல் கொண்டு மறை மார்பன் திருத்தும் உனது அடியார்
துளக் காதல் இல்லவர் தங்கள் திறத்திலும் தூய்மை எண்ணிக்
களக்காதல் செய்யும் நிலை கடியாய் தூப்புல் காவலனே –16-

——–

வெள்ளப் பரிமுகர் தேசிகராய் விரகால் அடியோம்
உள்ளத்து எழுதியது ஓலையில் அட்டனம் யாம் இதற்கு என்
கொள்ளத் துணியின் இங்கு ஏது ஓன்று இகழினும் கூர் மதியீர்
எள்ளத்தனை யுகவாது இகழாது எம் எழில் மதியே —-அதிகார ஸங்க்ரகம் –56-

——————

பாத்ர பதமாஸ கத விஷ்ணு விமலர் ஷே
வேங்கட மஹீத் ரபதி தீர்த்த திந பூதே
ப்ராதுர பவஜ் ஜகதி தைத்ய ரிபு கண்டா ஹந்த
கவி தார்க்கிக ம்ருகேந்த்ர குரு மூர்த்யா –ஸப்ததி ரத்ன மாலிகா ஸ்லோகம்
திருமணி ஆழ்வாரே ஸ்வாமியாக திரு அவதாரம் என்கிறதே –

——————

வித்ராஸி நீ விபூதவைரி வரூதி நீ நாம்
பத்மாஸநேந பரிசார விதவ் ப்ரயுக்தா
உத் ப்ரேஷ்யதே புத ஜனைர் உப பத்தி பூம் நா
கண்டா ஹரே ஸமஜ நிஷ்ட யதாத்ம நேதி -சங்கல்ப ஸூர்யோதய ஸ்லோகம்

ப்ரஹ்மதேவன் ஆராதனத்துக்கு உபயோகித்த மணி –
இதன் நாதத்தாலே அசுரர்கள் பயந்து ஓடச் செய்ததே –
அவதாரமே நம் ஸ்வாமி -என்றவாறு
திரு ஆராதனத்துக்கு திருமலையில் கை மணி இதனாலே தான் சேவிக்க மாட்டார்கள் –

ஸ்வஸ்தி சுக்ல வர்ஷம் கதகலி 4370-கச்சி நகர் அனந்தாச்சார்யார் தோதார அம்மையாருக்கு
வரத வேங்கட பிரசாதமாக ஸ்வப்னத்தில் அருளிய படி
புரட்டாசி -11- ஞாயிற்றுக் கிழமை 11-28-சுக்ல ஏகாதசி -6 நாழி -19 வினாடிக்கு
திருவோணம் நக்ஷத்ரம் கன்யா லக்கினத்தில் திரு அவதாரம் -1268-
பேர் அருளாளனும் திருச்சின்னம் அருளினான்

இவர் முப்பது தடவை ஸ்ரீ பாஷ்யம் சாதித்து அருளியதை
த்ரிம் ஸத்வாரம் ஸ்ராவித சாரீரக பாஷ்யா -ஸ்லோகம் சங்கல்ப ஸூ ர்யோதயத்தில் அருளிச் செய்துள்ளார்

—————–

தேசம் எல்லாம் உகந்திடவே பெரும்பூதூரில் சித்திரையில் ஆதிரை நாள் தோன்றிக்
காசினி மேல் வாதியாரை வென்று அரங்கர் கதியாக வாழ்ந்து அருளும் எதிராசா முன்
பூ சுரர் கோன் திருவரங்கத்து அமுதனார் உன் பொன்னடி மேல் அந்தாதியாகப் போற்றிப்
பேசிய நற் கலித்துறை நூற்று எட்டுப் பாட்டும் பிழை அறவே எனக்கு அருள் செய் பேணி நீயே

பூ மகள் கோன் தென்னரங்கர் பூம் கழலுக்குப் பாதுகமாய்த்
தாம் மகிழும் செல்வர் சடகோபர் -தே மலர்த் தாட்க்கு
உய்ந்து இனிய பாதுகமாம் எந்தை இராமானுஜனை
வாய்ந்து எனது நெஞ்சமே வாழ் –

—————–

ஸ்ரீ கருட ஸ்தோத்ரம்
கருடாய நமஸ் துப்யம் நமஸ் தே பக்ஷிணாம் பதே
ந போக மாதி ராஜாய ஸூ பர்ணாய நமோ நம
விநதா தந்த ரூபாயா கஸ்யபஸ்ய ஸூதாய ச
அஹீ நாம் வைரிணே துப்யம் விஷ்ணு பத்ராய தே நம
ரக்த ரூபாய தே பஷின் ஸ்வேத மஸ்தக பூஜித
அம்ருதா ஹரணே ஹ்ருஷ்ட தஸ்மை தேவாய தே நம

அம்ருத கலச யுக்தம் காந்தி சம்பூர்ண காத்ரம்
சகல விபூத வந்த்யம் வேத ஸாஸ்த்ரர் அசிந்த்யம்
விவித விமல பஷைர் தூய மாநாண்ட கோளம்
ஸகல விஷவி நாஸம் சிந்த யேத் பக்ஷி ராஜம் –

——–

கருணாகரன் -தயா சதகம்
பயக்ருத் பய நாசன -அபீத ஸ்தவம்
வீர -மஹா வீர வைபவம்
ஸர்வ வாக் ஈஸ்வரேஸ்வர -ஹயக்ரீவ ஸ்தோத்ரம்
நைகமாய -தசாவதார ஸ்தோத்ரம்
யோக விதாம் நேத -பகவத் த்யான சோபனம்
ஸ்ரீ மான் -ஸ்ரீ ஸ்துதி
நரஸிம்ஹ வபு—காமாஸிகாஷ்டகம்
அச்யுத -அச்யுத சதகம்
விக்ரம -கருட தண்டகம் –கருட பஞ்சா சத்
வாமன பிராம்சு -தேஹ ளீச ஸ்துதி
வரத -வரதராஜ பஞ்சா ஸத்
ஸவ்ரி -கோபால விம்சதி

—————

வஞ்சப் பர சமயம் மாற்ற வந்தோன் வாழியே
மன்னு புகழ் பூதூரோன் மனம் உகப்போன் வாழியே
கஞ்சத் திரு மங்கை உகக்க வந்தோன் வாழியே
கலியன் உரை குடி கொண்ட கருத்துடையோன் வாழியே
செஞ்சொல் தமிழ் மறைகள் தெளிந்து உரைப்பான் வாழியே
திருமலை மால் திரு மணியாய்ச் சிறக்க வந்தோன் வாழியே
தஞ்சப் பர கதியைத் தந்து அருள்வோன் வாழியே
தண் தமிழ் தூப்புல் திரு வேங்கடவன் தாள் வாழியே –

————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ நியாய மீமாம்ச வேதாந்த பாடங்கள்–ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்– — மீமாம்ச சாஸ்த்ரம்– பாடம் -41–

August 5, 2021

பாடம் -41-மீமாம்ச சாஸ்த்ர சுருக்கங்கள் பார்த்து –
அவை வேதாந்த பாடத்துக்கு உதவு மவற்றைப் பார்த்து நிகமிப்போம் –

————-

மீமாம்ஸா -ஞாதும் இச்சா -அறிய வேண்டும் ஆசை -பூஜ்ய விஷய ஆராய்ச்சி –
அறிய ஆசை உடையவர்கள் செய்யும் கார்யம் -வேத விசாரம்
ஒன்றைச் செய்ய செயல் முறை -இதி கர்தவ்யா –
தர்ம ஞானம் பெறவே மீமாம்ஸா ஸாஸ்த்ரம் கொண்டு வேத விசாரம் செய்து பெறுவதற்காக –

மகா ரிஷி ஜைமினி -மீமாம்ஸா ஸாஸ்த்ர ஸூத்ரங்கள் -சாம வேதம் பிரசாரம் செய்ய இவர் வேத வியாசர் சிஷ்யர்
சபரர் -சபர பாஷ்யம்
குமாரில பட்டர் -பாட்ட மதம் -ஸ்லோக வார்திகம் -தந்த்ர வார்த்திகம– டுப்டீகா
பிரபாகரர் -பிரபாகர் மதம் -லக்வீ -ப்ருஹதீ –
முராரி மிஸ்ரர் -மிஸ்ர மதம் -அங்கத்வ நிருக்தி

ஜைமினி மகரிஷி நமது நன்மைக்காக ஸூத்ரங்கள் தந்து அருளி உள்ளார்
12 அத்தியாயங்கள் -60 பாதங்கள் –907 அதிகரணங்கள் -2745 ஸூத்ரங்கள்

இதுக்கும் மேல் -சங்கர்ஷ காண்டம் தேவதா மீமாம்ஸா -நான்கு அத்தியாயங்கள் –
பூர்வ மீமாம்ஸா ஸாஸ்த்ரம் இதுவே
உத்தர மீமாம்ஸா -வேதாந்த விசாரம்
ப்ரஹ்ம காண்டத்துக்கு வேத வியாசர் ஸூத்ரங்கள் -நான்கு அத்தியாயங்கள் இதிலும் -பாதராயணர் இவரே –
இரண்டும் ஒரே ஸாஸ்த்ரம்

முதல் அத்யாயம் –
முதல் பாதம் -8 அதிகரணங்கள்
இரண்டாம் பாதம் -4 அதிகரணங்கள்
மூன்றாம்பாதம் -10-அதிகரணங்கள்
நான்காம் பாதம் -20-அதிகரணங்கள்

இரண்டாம் அத்யாயம் –
முதல் பாதம் -18 அதிகரணங்கள்
இரண்டாம் பாதம் -13 அதிகரணங்கள்
மூன்றாம்பாதம் -14-அதிகரணங்கள்
நான்காம் பாதம் -2-அதிகரணங்கள்

மூன்றாம் அத்யாயம் –
முதல் பாதம் -15 அதிகரணங்கள்
இரண்டாம் பாதம் -19 அதிகரணங்கள்
மூன்றாம்பாதம் -20-அதிகரணங்கள்
நான்காம் பாதம் -21-அதிகரணங்கள்
ஐந்தாம் பாதம் –20 அதிகரணங்கள்
ஆறாம் பாதம் -16 அதிகரணங்கள்
ஏழாம் பாதம் -23-அதிகரணங்கள்
எட்டாம் பாதம் -23-அதிகரணங்கள்

நான்காம் அத்யாயம் –
முதல் பாதம் -17 அதிகரணங்கள்
இரண்டாம் பாதம் -13 அதிகரணங்கள்
மூன்றாம்பாதம் -20-அதிகரணங்கள்
நான்காம் பாதம் -13-அதிகரணங்கள்

ஐந்தாம் அத்யாயம் –
முதல் பாதம் -18 அதிகரணங்கள்
இரண்டாம் பாதம் -12அதிகரணங்கள்
மூன்றாம்பாதம் -15-அதிகரணங்கள்
நான்காம் பாதம் -9-அதிகரணங்கள்

ஆறாம் அத்யாயம் –
முதல் பாதம் -13 அதிகரணங்கள்
இரண்டாம் பாதம் -11 அதிகரணங்கள்
மூன்றாம்பாதம் -21-அதிகரணங்கள்
நான்காம் பாதம் -14-அதிகரணங்கள்
ஐந்தாம் பாதம் –21 அதிகரணங்கள்
ஆறாம் பாதம் -7 அதிகரணங்கள்
ஏழாம் பாதம் -13-அதிகரணங்கள்
எட்டாம் பாதம் -19-அதிகரணங்கள்

ஏழாம் அத்யாயம் –
முதல் பாதம் -5 அதிகரணங்கள்
இரண்டாம் பாதம் -1அதிகரணங்கள்
மூன்றாம்பாதம் -14-அதிகரணங்கள்
நான்காம் பாதம் -3-அதிகரணங்கள்

எட்டாம் அத்யாயம் –
முதல் பாதம் -19அதிகரணங்கள்
இரண்டாம் பாதம் -6 அதிகரணங்கள்
மூன்றாம்பாதம் -8-அதிகரணங்கள்
நான்காம் பாதம் -4-அதிகரணங்கள்

ஒன்பதாம் அத்யாயம் –
முதல் பாதம் -18 அதிகரணங்கள்
இரண்டாம் பாதம் -20 அதிகரணங்கள்
மூன்றாம்பாதம் -14-அதிகரணங்கள்
நான்காம் பாதம் -15-அதிகரணங்கள்

பத்தாம் அத்யாயம் –
முதல் பாதம் -11 அதிகரணங்கள்
இரண்டாம் பாதம் -34 அதிகரணங்கள்
மூன்றாம்பாதம் -30-அதிகரணங்கள்
நான்காம் பாதம் -27-அதிகரணங்கள்
ஐந்தாம் பாதம் –26 அதிகரணங்கள்
ஆறாம் பாதம் -22 அதிகரணங்கள்
ஏழாம் பாதம் -20-அதிகரணங்கள்
எட்டாம் பாதம் -19-அதிகரணங்கள்

பதினொன்றாம் அத்யாயம் –
முதல் பாதம் -11அதிகரணங்கள்
இரண்டாம் பாதம் -16 அதிகரணங்கள்
மூன்றாம்பாதம் -16-அதிகரணங்கள்
நான்காம் பாதம் -21-அதிகரணங்கள்

பன்னிரண்டாம் அத்யாயம் –
முதல் பாதம் -21 அதிகரணங்கள்
இரண்டாம் பாதம் -15 அதிகரணங்கள்
மூன்றாம்பாதம் -16-அதிகரணங்கள்
நான்காம் பாதம் -16-அதிகரணங்கள்

ஸூத்ரம்
குறைந்த எழுத்துக்கள் கொண்டது
சந்தேகத்துக்கு இடம் இல்லாதது
ஆழ்ந்த பொருளை யுடையது
பல இடங்களிலும் பயன்படுத்தப் படுவது
பயன் அற்ற எழுத்துக்கள் இல்லாதது
பிழை இல்லாதது

ஸூத்ரங்கள்
எளிதாயும்
பல பொருள்களைக் கோடி காட்டுவதாகவும்
குறைந்த எழுத்துக்களையும் சொற்களையும் யுடையதாகவும்
ரசமாகவும் இருப்பதையே ஸூத்ரங்கள்

அதிகரணம்
ஒரே விஷயத்தை ஆராயும் ஸூத்ரங்களின் கூட்டங்கள் கொண்டது அதிகரணம்
இதில் ஐந்து பகுதிகள் உண்டு
1-விஷயம் -ஆராயப்படும் வேத வாக்கியம்
2-விஷயம் -அந்த வாக்கியத்தின் பொருளில் உள்ள சந்தேகம்
3-பூர்வ பக்ஷம் -எதிராளி கூறும் யுக்திகள்
4-சித்தாந்தம் -நாம் சொல்லும் யுக்திகளை முடிவும்
5-சங்கதி -முன் அதிகரணத்துடன் இந்த அதிகரணத்துக்குத் தொடர்பு

12 அத்தியாயங்களின் ஒரே பொருள் தர்மம் -அதில் –
சோதனா ச உபதேச ச அர்த்த -கட்டளை வாக்கியம் நன்மை ஏற்படுத்தும் -லக்ஷணம்

1-பிரமாணம் -தர்மங்களை அறியும் பிரமாணங்களை பற்றியது
2-பேதம் -தர்மங்களுக்குள் உள்ள வேறுபாட்டை அறியும் முறைகள்
3-சேஷத்வம் -ஒரு பொருள் மற்ற ஒன்றுக்கு அங்கமாக துணையாக உறுப்பாக ஆகுதல்
யாகம் -தியாகம் -ஒரு தேவதையைக் குறித்து ஒரு த்ரவ்யத்தை சமர்ப்பித்தல் தான் –
மானஸ வியாபாரம் தான் இது -மற்றவை எல்லாம் அங்கங்கள்
4-ப்ரயுக்தம் -பல இடங்களில் உபயோகப்படுத்தும் ஒரு பொருளின் முக்கியமான கார்யம் எது என்று நிரூபித்தால்
5-க்ரமம் -வைதிகச் செயல்களை செய்யும் வரிசை
6-அதிகாரம் -வைதிகச் செயல்களை செய்யத் தகுதிகள்
7-ஸாமான்ய அதி தேசம் -ஓர் இடத்தில் உபதேசிக்கப்பட்ட செயல் முறையை மற்றவர் இடத்தில் ஏறிடுதல்
8-விசேஷ அதி தேசம் -எங்கிருந்து எங்கு ஏறிட வேண்டும்
9-ஊஹம் -ஏறிடும் பொழுது செய்ய வேண்டிய சிறிய மாற்றங்கள்
10-பாதம்-ஏறிடும் பொழுது தவிர்க்கப்பட வேண்டியவை -நிறுத்தப்பட வேண்டியவை
11-தந்திரம் -பலவற்றுக்காக உபயோகப்படும் ஒரு செயலை அனைத்துக்காகவும் ஒரே முறை செய்தல்
12-பிரசங்கம் -ஒன்றுக்காகச் செய்யப்பட செயலால் மற்ற ஓன்று பயன் பெற்ற படியால் அதற்காகத் தனியாக செய்ய வேண்டாமை

அத்யாயம் -1- தர்மத்தைப் போதிக்கும் பிரமாணங்கள் எட்டும் முதல் அத்தியாயத்தில் சொல்லப்பட்டு உள்ளன
1-விதி -வேதத்தில் இருக்கும் நேரடியான கட்டளைகள்
2-அர்த்த வாதம் -செய்ய வேண்டிய செயலைப் போற்றுவதன் மூலம் செயலில் தூண்டும் சொல் தொடர்கள்
3-மந்த்ரம் -அடுத்து அடுத்து செய்ய வேண்டிய செயல்களை நினைவூட்டும் சொல் தொடர்கள்
4-ஸ்ம்ருதி -வேதத்தை அறிந்த ரிஷிகளின் நூல்கள்
5-ஆசாரம் -வேதத்தை அறிந்து அதன்படி நடப்பவர்கள் நடத்தை
6-நாமதேயம் -வைதிகச் செயல்களுக்கு கொடுக்கப் பட்ட செயல்கள்
7-வாக்ய சேஷம் -ஒரு கட்டளையை தொடர்ந்து வரும் மற்ற சொல் தொடர்கள்
8-சாமர்த்தியம் -கட்டளை இடப்படும் செயலின் தன்மை திறமை –

அத்யாயம் -2- கர்ம பேதத்தைக் காட்டும் ஆறு பிரமாணங்கள் இரண்டாம் அத்தியாயத்தில் உள்ளன
1-ஸப்தாந்தரம் -வெவ்வேறு வினைச் சொற்களால் குறிக்கப்படும் செயல்கள் வெவ்வேறு கர்மங்கள் தான்
2-அப்யாஸம் -ஒரு கட்டளையை வேறே எந்த பிரயோஜனம் இல்லா விட்டாலும் திரும்ப திரும்ப வேதம் சொன்னால்
அது வெவ்வேறு கர்மங்களை விதிக்கிறது என்றே கொள்ள வேண்டும்
3-சம்க்யா -வேதமே சில கர்மங்களின் எண்ணிக்கையை சொல்லி விடும் –
அப்போது தெளிவாக அறியலாம் இவை வெவ்வேறு கர்மங்கள் என்று –
4-ஸம்ஜ்ஞா -பெயர் மாறினால் கர்மம் மாறும் -பெயர் -நாமதேயம் -என்பது
ஒரு யாகத்தை ஸூ லபமாகக் குறிப்பிட என்று பார்த்தோம்
ஆகையால் ஒரு கர்மத்துக்கு ஒரு பெயர் போதுமானது
5-குணம் -ஒரு யாகத்தில் ஒரு த்ரவ்யம் தான் உபயோகிக்கப்பட முடியும் –
ஆகையால் முன்னமே த்ரவ்யம் விதிக்கப்பட்ட ஒரு யாகத்தில் மற்ற ஒரு த்ரவ்யத்தை நுழைக்க முடியாத படியால்
அது வேறொரு யாகத்தில் தான் பயன் பயன் படுத்தப்பட வேண்டும்
ஆகையால் கர்மங்களுக்குள் வேறுபாடு த்ரவ்யங்களைக் கொண்டும் ஏற்படலாம்
6-ப்ரகாரணாந்தரம்–ஒரு கர்மத்தை ஒரு பிரகரணத்தில் நூலின் ஒரு பகுதியில் – விதித்து விட்டு
மற்ற ஒரு ப்ரகரணத்தில் அதே பெயரை யுடைய ஒரு கர்மத்தை விதித்தாலும் அவை ஒன்றாக மாட்டா
ஏன் என்றால் பிரகரணம் மாறி விட்ட படியால் முன் கர்மத்தின் நினைவு சடக்கென ஏற்படாது –

அத்யாயம் -3- அங்கத்தவத்தைக் காட்டும் ஆறு பிரமாணங்கள்-ஸ்ருதி
மூன்றாம் அத்தியாயத்தில் சொல்லப் பட்டுள்ளன
1-ஸ்ருதி -நேரடியாக வேதமே சொற்களால் சொல்லுதல்
2-லிங்கம் -ஸப்த ஸாமர்த்யம் -ஒரு சொல்லின் திறமை –சொல்லுக்கு இருக்கும் ஸாமர்த்யம் –
தன் பொருளை அறிவிக்கும் ஸாமர்த்யம்
3-வாக்யம் -ஸமபி வ்யாஹார -இரண்டாம் வேற்றுமை முதலான ஸ்ருதி பிரமாணம் இல்லாத போது
இரண்டு பொருள்களுக்கு இருக்கும் சேர்ந்த உச்சரிப்பு
4-ப்ரகரணம் -உபய ஆகாங்ஷா -இரண்டு கர்மங்களுக்கு இடையில் -பரஸ்பரம் ஒன்றுக்கு ஓன்று இருக்கும் எதிர்பார்ப்பு
5-ஸ்தானம் -தேச ஸாமான்யம் -இடத்தில் ஒற்றுமை
6-ஸமாக்யா -யவ்கிக ஸப்த -காரணப்பெயர் –

அத்யாயம் -4-ப்ரயோஜகத்வம்
ஒரு செயல்பொருள் பலவற்றுக்கு அங்கமாக இருக்கலாம் –
அந்த அங்கிகளுக்குள் ஏதோ ஓன்று தான் அந்தக் கர்மத்துக்கு ப்ரயோஜகமாக இருக்கும்
அதாவது அனுஷ்டாபகமாக-முக்கிய பயனாக இருக்கும்
யாகங்களில் ஒரே பொருள் செயல் பலவற்றுக்கு அங்கமாக இருக்கலாம் ஆனால் அவற்றுள் ஓன்று தான்
அதற்கு பிரயோஜகமாக செய்விப்பதாக இருக்கும் -அதற்குத் தான் பிரயோஜகம் என்று பெயர் –
இந்த கர்மத்துக்கு பிரயோஜ்யம் என்று பெயர் –
எடுத்துக் காட்டு
தர்ச பூர்ண மாசம் என்ற யாகத்தில் புரோடாசம் -தோசை என்ற த்ரவ்யத்தை தேவதைக்கு சமர்ப்பிக்க வேண்டும்
அதற்காக அதை சமைப்பதற்கு கபாலம் என்ற சுட்ட மண் தகடுகளை பயன்படுத்த வேண்டும்
இதை வேதம் -கபாலங்களில் புரோடாசத்தை சமைக்க வேண்டும் -என்ற விதியில் சொல்லுகிறது
அதே கபாலங்களைக் கொண்டு தான் நெல்லில் இருந்து பிரிந்து விழுந்த உமியை நீக்க வேண்டும் என்று வேதம் கூறுகிறது –
புரோடாசத்திற்கான கபாலத்தால் துஷங்களை நீக்க வேண்டும் -என்ற கட்டளையால்
கபாலத்தைச் செய்வது புரோடாசத்தை சமைக்கத் தான் -அதே கபாலம் உமியை நீக்கவும் பயன்படுத்தப்படுகிறது அவ்வளவே
ஆகையால் புரோடாசம் செய்வது ப்ரயோஜகமும் அங்கியும்
கபாலம் பிரயோஜ்யமும் அங்கமும்
கபாலத்துக்கு உமியை நீக்குதல் என்ற செயல் அங்கி ஆகுமே தவிர ப்ரயோஜகம் ஆகாது –

அத்யாயம் -5- க்ரமம் -பூர்வ அபவ்ர்யம் -முன் பின் தன்மை -இந்தச்செயலுக்கு அடுத்து இந்தச்செயல் -க்ரமம் -வரிசை
1-ஸ்ருதி – நேரடியாக வேதமே செயல்களின் வரிசையைச் சொல்லுதல்
2-அர்த்தம் -ஒரு செயலின் ப்ரயோஜனத்தைக் கருதி அதைச் செய்ய வேண்டிய காலத்தை நிர்ணயித்தல்
3-பாடம் -வேதத்தில் செயல்களில் படிக்கப்பட்ட வரிசையிலேயே அவற்றைச் செய்தல்
4-ஸ்தானம் -வெவ்வேறு காலங்களில் செய்யப்பட வேண்டிய பல செயல்களை சில காரணங்களால்
சேர்ந்து செய்யும் பொழுது எந்தச் செயலின் இடத்திலாவற்றைச் சேர்த்து செய்கிறோமோ
அச்செயலை முதலில் செய்து விட்டு பின்னால் மற்றவற்றைச் செய்ய வேண்டும் –
5-முக்யம் -பல பிரதான கர்மங்களும் அவற்றின் அங்கங்களும் செய்யப்படும் பொழுது பிரதான கர்மங்களை
எந்த வரிசையில் செய்யப் போகிறோமோ அதே வரிசையில் தான் அங்கங்களை செய்ய வேண்டும்
6-ப்ரவ்ருத்தி -பல பிரதான கர்மங்களுக்காக ஒரே அங்கங்களைத் திரும்ப திரும்ப செய்யும் பொழுது
அவற்றுள் முதல் அங்கத்தை எந்த வரிசையில் செய்தோமோ அதே வரிசையில் தான் பின்பு உள்ளவையும் செய்ய வேண்டும் –

அத்யாயம் -6-அதிகாரம்
வைதிக கர்மங்களை செய்ய மூன்று அடிப்படைத் தேவைகள் –
இவை நேரடியாக விதி வாக்கியங்களில் சொல்லப்படா விட்டாலும் இவை இல்லாமல் கர்மங்களை
செய்ய முடியாத படியால் இவை அதிகாரத்தில் சேர்கின்றன
1-வித்யை -அத்யயனம் செய்து வேதங்களையும் அவற்றின் பொருளையும் கற்று இருக்க வேண்டும்
இது இருந்தால் தான் அடுத்து அடுத்து என்ன செயல் செய்ய வேண்டும்
என்பதையும் சொல்ல வேண்டிய மந்திரங்களையும் அறிய முடியும்
2-அக்னி -யாகம் ஹோமம் முதலியவற்றில் ஒரு த்ரவ்யத்தை அக்னியில் சேர்க்க வேண்டும் என்பதால்
அதற்காக ஆதாநம் என்ற கர்மத்தைச் செய்து
கார்ஹபத்யம் ஆஹவ நீயம் தஷிணாக்னி என்ற மூன்று அக்னிகளும் ஒருவன் இடத்தில் இருந்தால் தான்
அவன் யாகம் முதலானவற்றைச் செய்ய முடியும்
3-சாமர்த்தியம் –யாகம் முதலியவற்றை செய்யும் திறமையும் பண வசதியும் -உடல் ஆரோக்யமும்
நன்கு செயல்படக்கூடிய புலன்களும் இருந்தால் தான் ஒருவனால் யாகம் செய்ய முடியும்
ஆகையால் பார்க்க முடியாதவர்கள் பேச முடியாதவர்கள் நடக்க முடியாதவர்கள் ஆகியவர்களுக்கு
யாகம் முதலான வற்றில் அதிகாரம் கிடையாது
ஆணுக்கும் யாகம் முதலானவற்றில் அதிகாரம் உண்டு -பெண்ணுக்கும் உண்டு
ஆனால் அவர்களுக்குத் தனித்தனியே யாகம் செய்யும் உரிமை கிடையாது
இருவரும் சேர்ந்து தான் ஒரு யாகத்தைச் செய்ய வேண்டும் –

அத்யாயம் 7-8-அதி தேசம்
அதி என்றால் மீதூர்ந்து -கடந்து -தாண்டி என்று பொருள்
தேசம் என்றால் போதித்தல் அறிவித்தல்
அதி தேசம் -கடந்து போதித்தல்
ப்ரக்ருதிக்கு அங்கமாக விதிக்கப்பட்ட ஒரு கர்மத்தை அதைக் கடந்து மற்ற விக்ருதி யாகங்களும்
அங்கமாக போதிக்கும் சொல் தொடருக்குத் தான் அதி தேசம் என்று பெயர்

வேறொரு இடத்தில் சொல்லப்பட்ட காரியக்கூட்டம் -இதி கர்தவ்யதா -செயல்முறை –
தான் செய்யும் உபகாரத்தை மூலமாக வேறு இடங்களுக்குச் சென்று அடைவது தான் அதிதேசம் ஆகும்

எந்த ஒரு சொல் தொடரால் ப்ரக்ருதி என்று அழைக்கப்படும் கர்மத்தில் இருந்து அதோடு ஒத்த
ஸத்ருசமான -ஒற்றுமை யுடைய மற்ற கர்மங்களுக்கு அங்கங்கள் சென்று அடைகின்றனவோ
அந்த சொல் தொடர் அதி தேசம் என்று அழைக்கப்படுகிறது –

அத்யாயம் –9-ஊஹம்
ப்ரக்ருதி யாகத்தில் ஒன்றைக் குறித்து செய்யப்பட ஒரு செயல் விக்ருதி யாகத்தில்
வேறு ஒன்றைக் குறித்து செய்யப்படுவதற்கு ஊஹம் என்று பெயர்
ப்ரக்ருதி யாகத்தில் இருந்து ஒரு அங்கத்தை விக்ருதி யாகத்துக்கு அதி தேசம் செய்யும் பொழுது
அந்த அங்கம் விக்ருதியில் வேறொரு பொருளைக் குறித்தும் செய்யப்படலாம்
இதற்கு ஊஹம் என்று பெயர்

ஸம்ஸ்காரத்தில் ஊஹம்
மந்திரத்தில் ஊஹம்
சாமத்தின் ஊஹம்
என்று மூன்று வகைகள் உண்டு

அத்யாயம் -10-பாதம் –
ப்ரக்ருதி யாகத்துக்கு அங்கமான ஒரு செயல் விக்ருதி யாகத்துக்கு அங்கமாக இல்லாமல் போவதற்கு பாதம் என்று பெயர்
அதி தேசம் செய்யப்படும் செயலை சிறு மாற்றத்தோடு செய்வது ஊஹம்
அந்தச் செயலை முழுவதுமாக விடுவது பாதம் –
இது மூன்று காரணங்களால் ஏற்படலாம்
ப்ரத்யாம் நாநம் -முரண் பட்ட வேறே ஒரு கட்டளை
அர்த்த லோபம் -பிரயோஜனம் இன்மை
ப்ரதி ஷேதம் -செய்யாதே என்ற கட்டளை

அத்யாயம் -11- தந்திரம் -பிரயோகத்தைப் பற்றிய விசாரம்
தந்திரம் என்றால் பலவற்றைக் குறித்து ஒரு முறை அனுஷ்டித்தல்
பிரயோக விதியானது அங்கங்களையும் பிரதானங்களையும் சேர்த்து விதிக்கிறபடியால் அதிலிருந்து நமக்கு ஒரு சேர்க்கை தோற்றுகிறது
அச்சேர்க்கை ஒரே க்ஷணத்தில் அவை அனைத்தையும் செய்தால் தான் ஏற்படும் ஆனால் எங்கு அது இயலாதோ
அங்கு இடைவிடாமல் அடுத்து அடுத்து அனுஷ்டானம் செய்ய வேண்டும் என்று வேதமே கூறுகிறது
ஆனால் எங்கு எங்கு முடியுமோ அங்கெ சேர்த்தே அனுஷ்ட்டிக்க வேண்டும்
இதுவே தந்திரம்
1-பிரதான யாகங்களில் தந்திரம் -வெவ்வேறு தேவதைகளைக் குறித்து செய்யும் யாகங்களில் ஒரே நொடியிலே சேர்த்து செய்ய முடியா விட்டாலும்
ஒரே தேவதைக்காகச் செய்யப்படும் பல யாகங்களை ஒரே க்ஷணத்தில் சேர்த்து செய்யலாம் இது தந்திரம் ஆகும்
2-அங்கங்களுக்குள் தந்திரம் -பல யாகங்களை அங்கமாக ஒரே செயல் இருக்கும் பொழுது அவற்றுள்
காலத்தாலோ தேசத்தாலோ எந்த வேறுபாட்டையும் வேதம் காட்டா விட்டால் வேறுபாடு அறியாத படியாலே
அந்த செயலை ஒரே முறை செய்வதன் மூலம் அனைத்து யாகங்களும் உதவலாம்
இது அங்கங்களில் தந்த்ரம் ஆகும் –

அத்யாயம் -12–ப்ரஸங்கம்
ஒரு யாகத்துக்கு தன் அங்கம் ஒன்றில் இருந்து கிடைக்க வேண்டிய உதவி
வேறே ஒரு வழியில் கிடைத்து விட்டால் அந்த அங்கத்தைச் செய்யாமல் இருப்பது
எடுத்துக்காட்டு –
அக்னீ ஷோ மீயம் யாகம் -தர்ச பூர்ண மாசத்தில் இந்திரனுக்காகச் செய்யப்படும் தயிர் யாகத்தின் விக்ருதி ஆகும்
அந்த அக்னீ ஷோ மீயம் யாகத்துக்கு அங்கமாக புரோடாச யாகம் உள்ளது
அதுவும் தர்ச பூர்ண மாசத்தின் விக்ருதி தான்
தர்ச பூர்ண மாசங்களுக்கு எல்லாம் ப்ரயாஜங்கள் என்ற அங்கம் இருக்கிறபடியால் அதி தேசத்தின் மூலம்
இந்த அக்னீ ஷோ மீயத்துக்கும் புரோடாச யாகத்துக்கு கூட ப்ரயாஜங்கள் அங்கமாகின்றன –

பாட்ட மீமாம்சையில் ஆறு பிரமாணங்கள்
1-ப்ரத்யக்ஷம் -புலன்களுக்கும் பியருள்களுக்கும் உள்ள தொடர்பால் ஏற்படும் ஞானம்
2–அனுமானம் -ஒரு பொருள் மற்ற ஒரு பொருளை விட்டுப் பிரியாமல் இருந்தால் அதுக்கு வியாப்தி என்று பெயர்
இப்படி வியாப்தி உடைய பொருளை நாம் ஓர் இடத்தில் கண்டால் மற்ற ஒரு பொருள் இருப்பதை ஊஹித்து அறிகிறோம் –
புகை நெருப்பு மலைமேல் போல்
3- சப்தம் -சொற்களுக்கும் பொருளுக்கும் உள்ள தொடர்பு -சக்தி -பதார்த்த ஸ்மரணம்–வாக்யார்த்த ஞானம் –
4-உப மானம் -சத்ருஸ்ய ஞானம்
5-அர்த்தா பத்தி – பொருந்தாத இரண்டு பிரமாணங்களை பொருந்த வைக்க ஒரு விஷயத்தை கல்பித்து தான் அர்த்தா பத்தி
எது பொருந்தாமல் இருக்கிறதோ அது உப பாத்யம்
அதை பொருந்த வைக்க எது கல்பிக்கப் படுகிறதோ அது உப பாதகம்
6-அநுப லப்தி -முதல் ஐந்து பிரமாணங்களால் அறியப்பட முடிந்த ஒரு பொருளை பற்றின அறிவு ஓர் இடத்தில்
நமக்கு ஏற்பட வில்லை என்றால் அவ்விடத்தில் அந்தப் பொருள் இல்லை என்று அறிகிறோம்
உப லப்தி -என்றால் அறிவு
அநுப லப்தி என்றால் அறிவு தோன்றாமை
ஆகவே அறியக்கூடிய ஒரு பொருளை பற்றின அறிவு தோன்றாமல் இருப்பதே அநுப லப்தி

பாட்ட மீமாம்சையில் ஐந்து பதார்த்தங்கள்
1- த்ரவ்யம் –
ப்ருத்வீ ஜலம் தேஜஸ் வாயு ஆகாசம் காலம் திக்கு ஆத்மா மனஸ் தமஸ் ஸப்தம் என்ற 11 த்ரவ்யங்கள்
தேஜஸ் அபாவம் தமஸ் நியாய மதத்தில்
சப்தம் ஆகாச குணம் நியாய மாதத்தில்
இவர்கள் இத்தை த்ரவ்யம் என்கிறார்கள்
ஒன்பது த்ரவ்யங்கள் நியாய மாதத்தில்

2-ஜாதி சாமான்யம் என்ற பொதுத் தன்மை -குடத் தன்மை மாட்டுத் தன்மை போல்வன

3-குணம் என்ற பண்புகள் -இவர்களும் 24
நியாய -தர்மம் அதர்மம் சப்தம் மூன்றையும் விட்டு
மீதி 21 இவர்கள் கொண்டு
இவற்றுக்குப் பதில்
ப்ராகாட்யம்
த்வனி
சக்தி

மீமாம்ஸா தகர்சனத்தில் 24 குணங்கள்
1-ரூபம் -நிறம்
2-ரஸம் -சுவை
3-கந்தம் -மணம்
4-ஸ்பர்சம் -குளிர்த்தி வெப்பம் இரண்டும் இல்லாமை என்ற தொடு உணர்ச்சி
5-சம்க்யா-எண்ணிக்கை
6-பரிமாணம் -அணு மஹத் விபு போன்ற அளவுகள்
7-பிருத்தக்த்வம் -வேறுபாடு
8-சம்யோகம் -சேர்க்கை
9-விபாகம் -பிரிவு
10-பரத்வம் -தொலைவு முதுமை
11-அபரத்வம் -அருகில் இளைமை
12-குருத்வம் -எடை
13-த்ரவத்வம் -நீர்மை
14-ஸ்நேகம் -பசைத்தன்மை
15-புத்தி -அறிவு
இது நியாய மதத்தில் ப்ரத்யக்ஷம்-மனசால் அறியப்படுவது
மீமாம்சையில் இதை அனுமானம் தான் செய்யலாம்
16-ஸூகம் -ஐஹிகம் -ஆமுஷ் மிகம் -ஸ்வர்க்கம் -அப வர்கம் -மூ வகைப்பட்டது
17- துக்கம் – ஐஹிகம் -ஆமுஷ் மிகம்-நரகம் -இரண்டு வகைப்பட்டது
18-இச்சை -ஆசை
19-த்வேஷம் -வெறுப்பு
20-பிரயத்தனம் -முயற்சி
21-சம்ஸ்காரம் -வேகம் பாவனை ஸ்திதி ஸ்தாபனம் என்று மூன்று வகைப்படும்
22-த்வனி இது வாயுவின் குணம் -நம் தொண்டை வாயின் வியாபாரத்தால் வாயுவில்
இந்த குணம் ஏற்பட்டு இது தான் சப்தத்தை வெளிப்படுத்து கிறது
23-ப்ராகட்யம் -ஒரு பொருளில் உள்ள அறியப்படுதல் -பயின்ற குணம் –
இதைக் கண்டு தான் நமக்கு அறிவு ஏற்படுவதை நாம் அனுமானம் செய்யலாம்
24-திறமை -இது இரண்டு வகைப்படும்
லௌகிக சக்தி -நெருப்புக்கு எரிக்கும் சக்தி நீருக்கு நெருப்பை அணைக்கும் சக்தி போல்வன
வைதிக சக்தி ஜ்யோதிஷ்டோமம் முதலானவற்றுக்கு ஸ்வர்க்கம் கொடுக்கும் சக்தி போல் வன

4-கிரியை என்ற செயல்
கர்மம் கிரியை செயல்
இது விபு அல்லாத த்ரவ்யங்களில் மட்டும் இருக்கும்
விபு த்ரவ்யங்களால் நகர முடியாதே
இது புலன்களால் க்ரஹிக்கக் கூடியது
உத்ஷேபநம் மேலே செல்லுதல் போல்வன -நியாய மதம் போலவே
சம்யோகத்துக்கும் விபாகத்துக்கும் காரணமானது –

5-அபாவம் என்ற இன்மை
ப்ராபகரர்கள் அபாவம் ஏற்க வில்லை

ப்ராக் அபாவம்
ப்ரத்வம்ஸா அபாவம்
அத்யந்த அபாவம்
அந்யோன்ய அபாவம்

இது பிரபாகர் மீமாம்சகரால் எபிற்கப்படுவது இல்லை
பாட்ட மீமாம்ஸகர்கள் அநுப லப்தி ப்ரமாணத்தால் இது அறியப்படுகிறது -க்ரஹிக்கப் படுகிறது – என்பர்

நியாய மதத்தில் ஏற்கப்பட்ட
விசேஷம்
சமவாயம்
பதார்த்தங்களை இவர்கள் ஏற்க வில்லை –

—————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கணாதர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாசர் -பாதராயணர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நியாய மீமாம்ச வேதாந்த பாடங்கள்–ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்– — நியாய சாஸ்த்ரம்– பாடம் -40–

August 5, 2021

பாடம் -40-நியாய சாஸ்த்ர சுருக்கங்கள் பார்த்து –
அவை வேதாந்த பாடத்துக்கு உதவு மவற்றைப் பார்த்து நிகமிப்போம் –

அறிவின்மை இருளைப் போக்கவே வேதம் -மானம் ப்ரதீதி
த்யாஜ்ய உபாதேய விபாகம் பெறுவதற்கு உதவும்
ஸாஸனாத் -ஸாஸ்த்ரம்
18-வித்யா ஸ்தானங்கள் -நான்கு வேதங்கள் -ஆறு அங்கங்கள் -எட்டு உப அங்கங்கள்

நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களும்
ருக் யஜுஸ் சாமம் அதர்வணம்
வேதத்தின் சொற்களை காக்க
1-சிஷா -எழுத்துக்களின் உருவாக்கம் உச்சரிப்பு கற்க
2-சந்தஸ் -செய்யுள்களின் எழுத்துக்களின் அளவு மற்றும் தன்மைகளை பயில

வேதத்தின் பொருளைக் காக்க
3-வியாகரணம் -சொல்லின் பகுதிகளையும் அவற்றின் பொருள்களையும் அறிய
4-நிருக்தம் -வேதத்தில் கடினமான பதங்களுக்குப் பொருள் தெரிய

வைதிக கர்மங்களின் பிரயோகத்தைக் காக்க
5-கல்பம் -வைதிக கர்மங்களை செய்யும் முறையைப் புரிய
6-ஜ்யோதிஷம் -வைதிக கர்மங்களை செய்யும் காலத்தை நிர்ணயிக்க

வேதங்களின் எட்டு உப அங்கங்கள்
1-புராணங்கள் -நற் பண்புகளை வளர்க்க
2-நியாயம் -பொருள்களின் தன்மைகளை அறிய -தர்க்க சாஸ்திரம் என்றும் இதற்கு பெயர்
3-மீமாம்ஸை -வேதங்களை ஆராய
4-தர்ம சாஸ்திரம் -ஆசாரம் கடைப்பிடிக்க
5-ஆயுர் வேதம் -உடலைப் பராமரிக்க
6-தனுர் வேதம் -அரசர்கள் நாட்டைக் காக்க
7-காந்தர்வ வேதம் -சங்கீத சாஸ்திரம் -மனசை சாந்தமாக்க
8–அர்த்த ஸாஸ்த்ரம் -அரசர்கள் ராஜ்ஜியம் செய்ய –

நியாயத்தின் முக்யத்வம்
காணாதாம் பாணி நீயம் ச ஸர்வ ஸாஸ்த்ர உபகாரகம்

நியாமமும் வியாகாரணமும் அனைத்து சாஸ்திரங்களுக்கும் உதவுகின்றன

ஆர்ஷம் தர்ம உபதேசம் ச வேத ஸாஸ்த்ர அவிரோதி நா
யஸ் தர்கேண அநு சந்தத்தே ச தர்மம் வேத ந இதர -மனு ஸ்ம்ருதி -2-106-

ஆர்ஷம் என்னும் வேதத்தையும் -ஸ்ருதிகளையும்-
தர்ம உபதேசம் என்னும் ஸ்ம்ருதிகளையும்
வேதத்தோடு முரண்படாத தர்க்கத்தைக் கொண்டு எவன் ஆராய்கிறானோ அவன் தான் தர்மத்தை அறிகிறான்
மற்றவன் அறிவது இல்லை

வைசேஷிக மதம்
ப்ராஸீன நியாய மதம்
மற்றும் நவீன நியாய மதம்

வைசேஷிக மதம்
கணாத மகரிஷி -வைசேஷிக ஸூத்ரங்கள்
ப்ரசஸ்தா பாதர் -பதார்த்த தர்ம ஸங்க்ரஹம்

ப்ராஸீன நியாய மதம்
கௌதம மகரிஷி -நியாய ஸூத்ரங்கள்
வாத்ஸ்யாயனர் -நியாய பாஷ்யம்
உத்யோதகரர் -நியாய வார்த்திகம்
வாசஸ்பதி மிஸ்ரர் -நியாய வார்திக தாத்பர்ய டீகா
உதயநாச்சார்யர் -நியாய வார்திக தாத்பர்ய டீகா பரிசுத்தி

நவீன நியாய மதம்
கங்கேச உபாத்யாயர் –தத்வ சிந்தாமணி
ரகுநாத சிரோமணி -தத்வ சிந்தாமணி தீதிதி
ஜகதீச தர்க்க அலங்காரர் -ஜகதீச
கதாதர பட்டாச்சார்யார் -தீதிதி பிரகாசிகை

நியாய சாஸ்திரத்தின் செயல்முறை
பொருள்களை பிரித்து ஆராய்வதன் பயிற்சி
அதன் படிகள்
1-உத்தேசம் -பெயராலே பொருள்களைக் குறிப்பிடுதல்
2- லக்ஷணம் -பொருள்களின் லக்ஷணத்தை -தனித் தன்மையை உரைத்தல் -அசாதாரணம் –
3–பரீஷா –பொருள்களையும் அவற்றின் தனித் தன்மையையும் சோதித்து நிலை நாட்டுதல்

ஒரு பொருளின் தனித் தன்மையை அதன் லக்ஷணம் ஆகிறது
லக்ஷணம் என்பதில்
அசம்பவம்
அவ்யாப்தி அதிவ்யாப்தி -மூன்று தோஷங்களும் இல்லாமல் இருக்க வேண்டும்

அசம்பவம் -ஒரு பொருளின் லக்ஷணம் அந்தப் பொருளில் இல்லாமை
அவ்யாப்தி –ஒரு பொருளின் லக்ஷணமாக அந்தப் பொருளின் சில எடுத்துக் காட்டுக்களில் இருந்து சிலவற்றில் இல்லாமை
அதிவ்யாப்தி -ஒரு பொருளின் லக்ஷணம் அந்தப் பொருளிலும் இருந்து வேற பொருள்களில் இருத்தல்

ஏழு பதார்த்தங்கள்
பதார்த்தம் என்னும் சொல் உலகில் உள்ள அனைத்தையும் கூறும்
ஒரு சொல்லின் பொருளாக இருத்தல் -ஒரு சொல்லாலே குறிப்பிடுதல் தான் உலகில் உள்ள அனைத்துக்கும் -பதார்த்தத்துக்கு -லக்ஷணம் –

பதார்த்தங்கள் ஏழு வகைப்படும்
1-த்ரவ்யங்கள் -நாம் காணும் கல் மண் போன்ற வஸ்துக்கள்
2- குணம் -நிறம் சுவை மணம் போன்ற பண்புகள்
3-கர்ம -செயல்கள்
4-சாமான்யம் -பொதுத்தன்மை -பலபொருள்களில் மாடு குடம் என்று ஒரே மாதிரியான புத்தி ஏற்படக் காரணமாய் இருப்பது
5- விசேஷம் –சிறப்பு -தனித்துவம் -வேறு எந்த முறையிலும் பிரித்து அறிய முடியாத பரம அணுக்களுக்குள் வேறு பாட்டைக் காட்டுவது
6-சமவாயம் -த்ரவ்யம் குணம் கர்ம சாமான்யம் விசேஷம் ஆகியவை ஒரு த்ரவ்யத்தை அண்டி இருக்கும் போது அவற்றுக்குள் இருக்கும் தொடர்பு
7-அபாவம் -இன்மை இல்லாமை

1-த்ரவ்யங்கள் ஒன்பது வகைப்படும்
1-பிருத்வீ -நிலம் -கந்தவதி பிருத்வி -மணம் உள்ளது
2-அப்பு -நீர் -குளிர்ந்த ஸ்பர்சம் இதுக்கு லக்ஷணம்
3-தேஜஸ்ஸூ -நெருப்பு -வெப்பமாக- உஷ்ண ஸ்பர்சவத் இருப்பதே லக்ஷணம் –
4-வாயு -காற்று -நிறம் அற்றதாக(இத்தால் கீழ் சொன்ன மூன்றும் தள்ளுபடி ) ஸ்பர்சம் உள்ளதாக இருப்பது –
5-ஆகாசம் -ஆகாயம் -விபு என்பர் இத்தை -அணுக்கள் கிடையாது -ஸப்த குணகம் ஆகாசம் -பிரிக்க முடியாதது
6-காலம் -காலம் -அதீத வியவஹார ஹேது -அனைத்துக்கும் ஆதாரம் இது
மாலையில் சென்னையில் ராமன் இருந்தான் -ஏழாம் வேற்றுமை -அனைத்தையும் தாங்கும் -அதிகரணம் தேசம் போல் காலமும் –
7-திக்கு -திசை
8-ஆத்மா -ஆன்மா -ஞானம் உடையவர் -ஞான அதிகரணம் ஆத்ம லக்ஷணம் -அறிவின் அளவில் வாசி இருக்கும்
9-மனஸ் -மனது -மனசால் நினைக்கிறேன் -கருவி அந்தக்கரணம் –

பரமாணு காரணத்வாதிகள் இவர்கள் -பிருத்வீ -நிலம் மண் செடி பஞ்சு -பூமியில் வந்த அனைத்தும்
இவை சேர்ந்து த்வி -மூன்று த்ரி -சேர்ந்து கண்ணால் பார்க்கும் பொருள்கள் உண்டாக்கப்படுகிறது
நியாயம் படி பரமாணுக்கள் நித்யம் -அழிவோ உத்பத்தியோ இல்லை –
ஆக பரமாணு -கார்ய த்ரவ்யங்கள் இரண்டும் இவற்றுக்கு உண்டு

2-குணங்களின் வகைகள் –24-வகைப்படும்
1-ரூபம் -நிறம் -பிருத்வி அப்பு தேஜஸ் மூன்றுக்கும்
2-ரஸம் -சுவை -ஆறு சுவை -பிருத்வி -நீர் மட்டுக்கும்-மதுர ரசம் நீருக்கு
3-கந்தம் -மணம் -பிருத்வி மட்டுக்கும்
4-ஸ்பர்சம் -தொடு உணர்வு -உஷ்ணம் தேஜஸ் சீதம் ஜலத்துக்கு நடுநிலை பிருத்விக்கும் வாயுவுக்கும்
5-சம்க்யா -எண்ணிக்கை
6-பரிமாணம் -அளவு
7-ப்ருதக்த்வம் -வேறுபாடு
8-ஸம்யோகம் -சேர்க்கை -மோதிரம் கையில் –
9-விபாகம் -பிரிவு
10-பரத்வம் -தொலைவு -வயசாலும் பழைமை
11-அபரத்வம் -அருகாமை
12-குருத்வம் -எடை -பிருத்விக்கும் ஜலத்துக்கும் மட்டும் –
13-த்ரவத்வம் -த்ரவத் தன்மை
14-ஸ்நேஹம் -பசைத் தன்மை
15-ஸப்தம் -ஒலி -ஆகாச தன்மை -வர்ணாத்மகம் எழுத்து –அவர்ணாத்மகம் -கை தட்டும் ஓசை இரண்டு வகை
16-புத்தி -அறிவு
17-ஸூகம் -இன்பம்
18-துக்கம் -துன்பம்
19-இச்சா -ஆசை
20-த்வேஷம் -வெறுப்பு
21-பிரயத்தனம் -முயற்சி
22-தர்மம் -நல் வினை
23-அதர்மம் -தீ வினை
24-சம்ஸ்காரம் -பதிவு

3-கர்மங்களின் வகைகள் -ஐந்து
1-உத்க்ஷேபணம்–மேலே செல்லுதல்
2-அப ஷேபணம்–கீழே செல்லுதல்
3-ஆகுஞ்சனம் -மடித்தல்
4-ப்ரசாரணம் -விரித்தல்
5-கமநம் -பக்கவாட்டில் செல்லுதல்

4-சாமான்யம் -பொதுத்தன்மை
பல பொருள்களில் ஒரே மாதிரியான புத்தியானது அந்தப்பொருள்களில் பொதுவான ஒரு தன்மை இல்லாமல் ஏற்படாது
கருப்பான மாடு -கருப்பான ஆடு என்னும் அறிவு கருமை என்னும் பண்பு மாட்டிலும் ஆட்டிலும் இல்லாவிடில் ஏற்படாது

பண்புகளால் வேறுபட்ட பல பொருள்களில் ஒரே மாதிரியான அறிவு ஏற்படுவதைப் பார்க்கிறோம்
இது கருப்பான மாடு வெள்ளையான மாடு -இரண்டிலும் பொதுவான -மாட்டுத்தன்மை -என்று
ஓன்று இல்லாமல் இந்த அறிவு ஏற்படாது
ஆகவே மாட்டுத் தன்மை என்னும் ஸாமான்யத்தை -ஜாதியை கல்பிக்கிறோம் -அனுமானிக்கிறோம் –

குடத்தன்மை –இதுக்கும் மேல் -நிலத் தன்மை –இதுக்கும் மேல் த்ரவ்யத்வம் –

5-விசேஷம்
பரமாணு போன்ற எந்த த்ரவ்யத்துக்கு பகுதிகள் -அவயவங்கள் இல்லையோ –
அதை மற்ற த்ரவ்யங்களில் இருந்து வேறுபடுத்த வேறு வழி இல்லாத படியால்
அந்த த்ரவ்யத்தில் விசேஷம் என்ற ஒரு பதார்த்தம் கல்பிக்கப் படுகிறது

அப்படி அவயவங்கள் இல்லாத த்ரவ்யங்கள் எவை
நித்தியமான த்ரவ்யங்கள் தான்

நித்யம் என்றால் எப்போதும் இருப்பது -அதாவது உண்டாக்குவதும் அழிவும் இல்லாதது –

பகுதிகள் அவயவங்கள் கொண்ட ஒரு த்ரவ்யம் கட்டாயம் ஒரு நாள் அவற்றின் சேர்க்கையால் உண்டாகி இருக்கும் –
வேறே ஒரு நாள் அவற்றின் பிரிவால் அழிந்து போகும்

ஆகவே நித்யமான பொருள்கள் தான் -பகுதிகள் அவயவங்கள் இல்லாமல் இருக்கும்
ஆகவே விசேஷம் என்பது நித்ய த்ரவ்யங்களில் மட்டும் இருக்கும் என்று அறியலாம் –

6-சமவாயம்
ஒரு த்ரவ்யத்துக்கும் -அதில் இருக்கும் த்ரவ்யம் குணம் செயல் சாமான்யம் விசேஷம் ஆகியவற்றுக்கும்
உள்ள சம்பந்தம் சம்யோகமாக இருக்க முடியாது -த்ரவ்யங்களுக்கு இடையில் மட்டுமே சம்யோகம் இருக்கிற படியால்
மேலும் ஸம்யோகத்தால் சேர்ந்த இரு பொருள்களை பிரிக்க முடியும்
ஆனால் குணமோ செயலோ சாமான்யமோ விசேஷமோ அவற்றின் இருப்பிடமான த்ரவ்யத்தின் இடம் இருந்து பிரிக்க முடியாது
ஆகையால் சாமான்யம் என்ற ஒரு புதிய தொடர்பைக் கல்பிக்கிறோம் –

அபாவம்
த்ரவ்யம் குணம் செயல் சாமான்யங்களைப் பார்ப்பது போல் இன்மையையும்
இங்கு குடம் இல்லை த்ரவ்ய அபாவம்
இது சிவப்பாக இல்லை -குண அபாவம்
இது நகரவில்லை -செயல் அபாவம்
இதில் மாட்டுத்தன்மை இல்லை -சாமான்ய அபாவம்
குடத்தில் விசேஷம் இல்லை -விசேஷ அபாவம்
இரு த்ரவ்யங்களுக்கும் சமவாயம் இல்லை -சமவாய அபாவம்
ஆகையால் அபாவம் என்று ஏழாவது பதார்த்தம் கல்பிக்கப்படுகிறது

இது நான்கு வகைப்படும்
1-ப்ராக் அபாவம்
2-ப்ரத்வம்ஸ அபாவம்
3-அத்யந்த அபாவம்
4-அந்யோன்ய அபாவம்

ஞானத்தின் வகைகள் இரண்டு
1-ஸ்ம்ருதி நினைவு
2-அனுபவம்
ஒரு பொருளை பார்க்கும் பொழுது கேட்க்கும் பொழுது ஆத்மாவில் சம்ஸ்காரம் பதிவு ஏற்படுத்தி விட்டுச் செல்கிறது
அதனுடன் தொடர்வு உள்ள வேறே ஒன்றைக் கண்டால் கேட்டால் இந்த ஸம்ஸ்காரத்தால் தூண்டப்பட்டு நினைவு ஏற்படுகிறது
அனுபவம் புதிதாக ஒரு பொருளை காண்பது கேட்பது

இது இரண்டு வகை
யதார்த்தம்
அயதார்த்தம்

ஒரு தன்மையை உண்மையாகவே யுடைய ஒரு பொருளை அந்தத் தன்மையை யுடையதாக அறியும் அனுபவம்
குடத்தைப் பார்த்து குடம் என்று அறிதல்
ஒரு தன்மை இல்லாத ஒரு பொருளை அந்தத்தன்மை யுடையதாக அறிவது அயதார்த்தம்
ஒரு கயிற்றைப் பார்த்து பாம்பு என்று அறிதல் –

யதார்த்த அறிவு நான்கு வகை
1-ப்ரத்யக்ஷம் புலன்களால் அறிவது
2-அநு மிதி -ஊகத்தால் ஏற்படும் ஞானம்
3-உப மிதி -சொல்லுக்கும் பொருளுக்கும் உள்ள தொடர்பு
4-சாப்த போதம் -சொல் தொடரைக் கேட்டவுடன் ஏற்படும் அறிவு

அயதார்த்தம் மூன்று வகை
1-சம்சயம்
2-விபர்யயம்
3-தர்க்கம்

யதார்த்த அனுபவம் ப்ரமா என்றும் சொல்லுகிறோம்
அறிவுக்கு விஷயம் ப்ரமேயம்
ஞானம் உடைய ஆத்மா ப்ரமாதா
அறிவுக்கு -ப்ரமாவுக்கு காரணம் பிரமாணம்
கரணம் அறிய காரணம் அறிய வேண்டும் -காரணம் அறிய காரியம் அறிய வேண்டும் –

ப்ரத்யக்ஷம் -பிரதி முன்னால் -அக்ஷம் -கண் -புலன்களால் ஏற்படும் அறிவு -ப்ரத்யக்ஷ ப்ரமா
இந்த்ரியத்துக்கும் க்ரஹிக்கப்படும் பொருளுக்கும் -அர்த்தத்துக்கும் -இடையில் உள்ள தொடர்பால் ஏற்படும் ஞானம்
அப்படிப்பட்ட ப்ரத்யக்ஷம் என்ற ப்ரமாவுக்கு -ஞானத்துக்கு அஸாதிகாரணமான காரணம் இந்திரியங்கள்
அவற்றுக்கும் ப்ரத்யக்ஷ பிரமாணம் என்று பெயர்

அநு மிதிக்கு காரணம் அனுமானம்
அடுப்பு விளக்கு இவற்றைப் பார்த்து-நெருப்பையும் புகையும் சேந்து இருப்பதை பார்த்து
எங்கு எங்கு புகை உள்ளதோ அங்கு நெருப்பு இருக்க வேண்டும்
பின்பு மலையில் புகையைப் பார்த்து நெருப்பு இருக்க வேண்டும் என்று -முன்பு அறிந்து வைத்த தகவல் நினைவுக்கு வர
நெருப்பை விட்டு பிரியாத புகை உடையது இந்த மலை என்ற அறிவு ஏற்படுமே இதுவே பரமார்சம்
இந்த மலையில் கண்டிப்பாக நெருப்பு உள்ளதே என்று அறிவதே அநு மிதி ஆகும் –

அனுமானம் முக்கியம் இந்த நியாய சாஸ்திரத்தில் ஆன்மிஷிகி -என்றே இதற்குப் பெயர்

உப மிதிக்கு -காரணம் உப மானம்
நாட்டில் கோ என்ற மாட்டைப் போல் உள்ளதே காட்டில் உள்ள கவயம் என்பது போல்
ஸாத்ருஸ்யத்தைக் கண்ணால் கண்டு அறியும் அறிவு

ஸப்த பிரமாணம்
ஆப்த வாக்யம் ஸப்த -என்பதே லக்ஷணம் ஆப்தனால் சொல்லப்பட்ட சொல் தொடரே ஸப்தம்
உள்ளபடி அறியாதவர் நன்மையைச் செய்ய முடியாது
உள்ளபடி அறிந்து இருந்தாலும் வஞ்சனையுடன் இருந்தாலும் நன்மை ஏற்படாதே
பொருளை உள்ளபடியே அறிந்து அப்படியே கூறுபவர் ஆப்தர்

வாக்கியம் -பத ஸமூஹம் -சொல் தொடர்
சக்தம் பதம் -சக்தியை யுடைய ஒன்றே சக்தம்
பொருளை போதிக்கும் சக்தியை திறனை உடைய சொல்லுக்குப் பதம் என்று பெயர்
சொல் தொடர் ஒலிகளின் வரிசை -ஒலிகள் ஆகாசம் மூலம் பரவி நம் காதை அடைகின்றன –
காது இந்திரியம் ஒலியை கிரஹிக்கும் அறிவு ப்ரத்யக்ஷம்
ஒவ்வொரு சொல்லின் பொருளையும் ஸ்மரணம் ஸ்ம்ருதி

ராமன் மாரீசனைக் கொன்றான்
ராமன் மாரீசன் கொலை கடந்த காலம் ஒருமை ஆண் பால் என்ற நினைவு ஏற்படவே
சப்தத்துக்கும் அர்த்தத்துக்கும் உள்ள தொடர்பை சக்தியை அறிந்து இருக்க வேண்டும்
இவற்றின் பொருளையும் இவற்றின் சம்பந்த ஞானமும்-பற்றிய அறிவே
வாக்யார்த்த ஞானம் சாப்த போதம் ஆகும் –

இது ஏற்பட தேவைகள்
1-ஆகாங்ஷை -எதிர்பார்ப்பு -எந்த பதங்களோடு சேர்ந்தால் மட்டும் விஷயத்தைப் போதிக்குமோ
அந்த ஆகாங்ஷையை அறிந்தால் தான் சாப்த போதம் ஏற்படும்
2- யோக்யதா -சொல் தொடரின் அர்த்தம் சாத்தியமாக இருக்க வேண்டுமே
நெருப்பால் நனைகிறான் சொல் தொடரில் சாப்த போதம் ஏற்படாதே – நனைதல் என்ற செயலில்
கருவியாக நெருப்பு ஆகாதே என்ற புரிதல் ஏற்படுகிற படியால்
3-சந்நிதி -சொற்களில் இடைவெளி இல்லாத உச்சரிப்பு
சொற்கள் அடுத்து அடுத்து உச்சரிக்கப்பட்டு ஒரே சமயத்திற்க்கேட்பவரின் மனதில் இருக்க வேண்டும்
4-தாத்பர்யம் -பேசுபவரின் இச்சை கருத்து -ஒரே சொல்லுக்குப்பல பொருள்கள் இருக்கக் கூடுமாகையால்
பேசுபரின் கருத்தை அறிந்தால் தான் சொல் தொடரின் பொருளை அறிய முடியும் –

அயதார்த்த அனுபவம்
1-சம்சயம் -கயிறா பாம்பா -கிளிஞ்சலா வெள்ளியா -சந்தேகம்
2-விபர்யயம் -மஞ்சக் காமாலையால் வெள்ளையான சங்கை மஞ்சள் என்று ட்தப்பாக தீர்மானித்தல்
3- தர்கம்-பொருள்களின் தன்மைகளை பார்த்து இந்தப்
பொருள் இப்படிப்பட்டதாக இருந்து இருந்தால் கண்டிப்பாக
அதற்கு அந்தத் தன்மையும் இருந்து இருக்கும் என்ற வாதம் செய்வதே தர்கம் என்று பெயர் –

இந்த ப்ரமாணங்களால் -அறிவின்மை போக்கி –ஆசை வெறுப்பு கழிந்து -பாபம் புண்யம் கழிந்து –
மறு ஜென்மம் இல்லாமல் – துக்க நிவ்ருத்தி -முத்தி அடையலாம் என்பர் நியாய ஸாஸ்த்ரத்தில் –

—————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கணாதர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாசர் -பாதராயணர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நியாய மீமாம்ச வேதாந்த பாடங்கள்–ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்–பகுதி -3 –வேதாந்த சாஸ்த்ரம்– பாடங்கள் -31-39 —

August 5, 2021

பாடம் -31–பரமாத்மா யார்

தத்வம் புருஷார்த்தம் ஹிதம் -மூன்றையும்
வஸ்துக்கள் உண்மைப்பொருள்கள் இலக்கு வழி-அறிய வேண்டும்
ஞான த்ரயம் உபாதேயம் -ஸ்வ ஞானம் ப்ராப்ய ஞானம் ப்ராபக ஞானம் -மூன்றையும் அறிய வேண்டுமே –
தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு
கடல் நதிகளுக்கு இலக்கு -பூ கதிரவனையே நோக்கும் -உயிர் எம தர்ம ராஜனையே நோக்கும் –

ஜீவாத்மா தன்னுடைய ஞானத்தைக் கொண்டு அறிய வேண்டிய பொருள்களில் முக்கியமானவர் பரமாத்மா
அவரை அறிவதே அறிவின் பயன் என்று ஸாஸ்திரங்கள் கூறுகின்றன
பரமாத்மா என்று ஒருவரை ஏற்பதையும் ஏற்காததையும் வைத்து
ஆஸ்திக தர்சனங்கள் என்றும் நாஸ்திக தர்சனங்கள் என்றும் பிரிக்கப் படுகின்றன
பரமாத்மாவை ஏற்கும் தர்சனங்களிலும் கூட அவரைப் பற்றி பலவிதமான கருத்துக்கள் உள்ளன –

சாங்க்யர்கள்
பரமாத்மா என்பவர் ஸ்ருஷ்டிக்கு காரணமாய் எட்டு ஸித்திகளையும் பெற்றவர் என்கிறார்கள்
அணிமா –ஈஸித்வம்-வஸித்வம் -அஷ்ட மஹா சித்திகள்

யோக மதத்தைச் சேர்ந்தவர்கள் –
பரமாத்மா -அவித்யா அஸ்மிதா ராகம் த்வேஷம் அபி நிவேசம் என்ற ஐந்து கிலேசங்களும்
கர்மங்கள் பிறப்பு ஆயுஸ் போகம் என்ற மூன்று விபாகங்களும்
பாப புண்யங்கள் என்ற ஆசயங்களும்-
அற்றவர் பரமாத்மா
அவரே வேதத்தை இயற்றி அதை உலகுக்குக் கொடுத்தார் என்று கூறுகிறார்கள் –

பாசுபத மதம் -ருத்ரன்

புராண -நான்முகன்

புத்தர்கள்
உலகம் க்ஷணிகம் என்றும் பொய்யானது என்றும் அறிந்தவரே ஈஸ்வரன் என்கிறார்கள்

ஜைனம் -தர்மங்கள் அதர்மங்கள் உடல் மூன்றும் ஆவரணங்கள் மூடி
மேல் நோக்கி பிரயாணம் ஜீவாத்மா இயற்கையில்

சாருவாகர்கள் -மிகுந்த யுக புருஷர்கள் -ராஜாக்கள் -வடிவில் கடவுள் என்பர்

நியாய மாதத்தில்
ஜடமாய்-அளவற்ற ஞானம் உடையவராய்-ஸூகம் துக்கம் பாபம் புண்ணியம் அற்றவராய்
உலகைப் படைப்பவர் பரமாத்மா என்கிறார்கள்

மீமாம்ஸையில் யாகங்களில் உச்சரிக்கப்படும் மந்திரங்களே கடவுள்
யஜ்ஜை ரூபியே ஈஸ்வரன் என்றும் சிலர் மீமாம்ஸா

அத்வைத மதத்தின் படி
குற்றம் அற்றவராய் ஞானம் ஆனந்த வடிவமாய் இருப்பவர் பரமாத்மா –
சச்சிதானந்த ஸ்வரூபன் நிர்மலன் -ஸத் -சித் -ஆனந்தம் —
அவித்யையால் மறைக்கப்பட்டு ப்ரஹ்மத்துக்கே பிரமம்
ஆச்சாத்தான சக்தி மறைக்கும்

விசிஷ்டாத்வைத ஸ்ரீ வைஷ்ணவ சித்தாந்தத்தின் படியே
இவனே புருஷோத்தமன்
அகில ஹேய ப்ரத்ய நீகன் -கல்யாணை ஏக –
ஸர்வஞ்ஞன் -சர்வ சக்தன் -சர்வ அந்தர்யாமி –
ஞான பல இத்யாதி
அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டன்
ஸூ பாஸ்ரயம்
ஸ்ரீ யபதி
ஞான ஆனந்த வடிவமாய்
உலகைக் காத்து படைத்து அழிப்பவராய்
உலகத்தில் உள்ள அனைத்துப் பொருள்களுக்கும் இருப்பவராய்
குற்றங்களே அற்றவராய்
கணக்கற்ற கல்யாண குணங்களை யுடைய ஸ்ரீ மன் நாராயணன் பரமாத்மா —

ப்ரஹ்மம் என்றால் என்ன
வேதங்களில் பரம் பொருளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட சொற்களில் முக்கியமானது ப்ரஹ்மம் என்கிற சொல்
எந்தச் சொல்லும் ஒரு தன்மையை முதலில் உணர்த்தி பின் அந்தத் தன்மையை யுடைய பொருளைக் குறிக்கும்
அதே போல் ப்ரஹ்மம் என்ற சொல் -உயர்வு அல்லது பெரிதாய் இருத்தல் – என்ற தன்மையை யுடைய பொருளையே குறிக்கும்
இந்தச் சொல் பிரகிருதி -முக்த ஆத்மா மற்றும் பரமாத்மா-மூவரையும் குறிக்கவும் வேதத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளது
இவை மூன்றுக்குமே ஒவ்வொரு படியால் உயர்வு உள்ள படியாலேயோ அவை பெரியதாய் இருக்கும் படியாலேயோ அது பொருந்தும்
ஆனால் இவற்றுள் முக்கியமான பொருள் எது என்று அறிய வேண்டும்

ஒரு சொல்லால் உணர்த்தப்படும் தன்மை பல பொருள்களில் இருந்தால் அவை அனைத்துமே அந்தச் சொல்லின் பொருள் ஆகும் –
ஆனால் அந்தத்தன்மை எந்தப்பொருளில் முழுமையாக -அதிகமாக -உள்ளதோ -அதுவே அந்தச் சொல்லின் முக்கிய பொருள் ஆகும்
அந்த முறையில் பார்த்தால் ஸ்வரூபத்தாலும் தன்னுடைய குணங்களாலும் பரமாத்மா தான் மற்ற இரண்டையும் காட்டிலும் மிக மிக உயர்ந்தவர்
எனவே ப்ரஹ்மம் என்ற சொல்லுக்கு பரமாத்மாவே முக்கிய பொருள் ஆவார் –
பகவான் -சப்த பிரயோகம் போல் -ஆறு குணங்களும் பூர்ணம் -அவனுக்கு -மற்றவர்களுக்கு கௌணம் போல் ப்ரஹ்மம் சப்தமும் –
எனவே ப்ரக்ருதி அல்லது முக்தாத்மாவைக் குறிக்க ப்ரஹ்மம் என்ற சொல்லை உபயோகித்தால் அது தவறு அல்ல
ஆனால் அது இரண்டாம் பக்ஷ பொருள் தான் -முக்கியம் அல்ல -இதுக்கு அமுக்யம் கௌணம் என்று பெயர் –

ப்ரஹ்மத்தின் லக்ஷணம் என்ன
லக்ஷணம் -தனித்தன்மை -பலவும் பரமாத்மாவுக்குச் சொல்லலாம்
ஸர்வேஸ்வரத்வம் -அனைத்தையும் இயக்குதல்
ஸர்வ சேஷித்வம் -அனைத்துக்கும் ஸ்வாமி
ஸர்வ கர்ம ஸமாராதித்யம் -எல்லா வைதிக செயல்கஜலாலும் பூஜிக்கப்படுத்தல்
ஸர்வ கர்ம பல பிரதத்வம்
ஸர்வ ஆதாரத்வம்
ஸர்வ ஸரீரத்வம் –போன்ற பலவும் சொல்லலாம் –

லக்ஷணங்கள் இரண்டு வகைப்படும்
ஸ்வரூப லக்ஷணம் -தன்மைகளை வைத்தே லக்ஷணம் சொல்லுதல் –
தடஸ்த லக்ஷணம் -வேறே ஒரு பொருளைக் கொண்டு வேறே ஒரு பொருளுக்கு லக்ஷணம் சொல்லுதல்
கரையில் நின்று நதியைக் காட்டுவது போல் –

ப்ரஹ்மத்தின் தடஸ்த லக்ஷணம்
உலகு அனைத்தையும் காத்து படைத்து அழிப்பவர்
இங்கு உலகம் என்ற வேறே ஒரு பொருளைக் கொண்டு ப்ரஹ்ம லக்ஷணம்
தைத்ரியம் -வருணன் தன் பிள்ளைக்கு உபதேசம்
ஜென்மாதிகரணம் –
ஸ்ரீ விஷ்ணு புராணம் -இத்தையே சொல்லும் –

ஸ்வரூப லக்ஷணம்
ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம்
என்றுமே மாறாமல் ஒரே மாதிரி உள்ளபடியால் பிரக்ருதியைக் காட்டிலும் வேறுபட்டதாகவும்
என்றுமே குறைவில்லாத ஞானம் யுடையவர் -பக்த முக்த வ்யாவ்ருத்தம்
தேச கால வஸ்து–த்ரிவித அபரிச்சேத்யம்-அளக்க முடியாத படியால் நித்யர்களில் வேறுபாடு –
இந்த மூன்று தன்மைகளின் சேர்க்கையே ப்ரஹ்மத்தின் ஸ்வரூப லக்ஷணம் –

———-

பாடம் -32-பரமாத்ம ஸ்வரூபம்
ஸ்ரீ சரணாகதி கத்யத்தில் ஸ்ரீ ராமானுஜர் -பகவத் ஸ்வரூபம் –
இன்றியமையாத தன்மைகள் என்ன என்று அருளிச் செய்கிறார் –

அகில ஹேய ப்ரத்ய நீக -கல்யாண ஏக ஸ்தான –ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணன் –
அநந்த -ஞான ஆனந்த ஏக ஸ்வரூப –

இவையே ஸ்வரூப நிரூபக தர்மங்கள் –

1- அகில ஹேய ப்ரத்ய நீக
எல்லாவித தோஷங்களுக்கும் எதிர்த் தட்டானவர்
அசேதனங்களுக்கு விகாரம் என்கிற தோஷமும்
பத்தர்களுக்கு சம்சார சம்பந்த தோஷமும் -துக்க அஞ்ஞானம் மலம் –தோஷங்கள் பிரகிருதி சம்பந்தத்தால் -விஷ்ணு புராணம்
முக்தர்களுக்கு முன்பு ஒரு நாள் சம்சார சம்பந்தம் இருந்தது என்கிற தோஷமும்
நித்யர்களுக்கு பரிச்சேத -அளவுபட்டு இருத்தல் -வேறே ஒருவருக்கு ஆள்பட்டு இருத்தல் போன்ற தோஷங்கள் உண்டே
இவை எவையும் பரமாத்மாவிடம் இருக்க முடியாதே –
இருட்டுக்கு தேஜஸ்ஸூ விரோதியாய் இருக்குமா போலே இந்த தோஷங்களுக்கு பரமாத்மா எதிரி என்றவாறு –

தத்வ த்ரயம் -சர்ப்பத்துக்கு கருடன் போலவும் -தமஸூக்கு தேஜஸ்ஸூ போலவும் -அகில ஹேய ப்ரத்ய நீக –
ஆஸ்ரயிப்பார் விகாராதி தோஷங்கள் வரவிடாமல் செய்பவர் என்றுமாம் –
சர்வ பூத ப்ரக்ருதிம் -விகாரான் -அபஹத பாப்மா -வி ஜர -வி மிருத்யு -வி சோக -இத்யாதி –
நித்யம் -அஜம்–பிறப்பிலி -அஷயம்- அவ்யயம் ஏக ஸ்வரூபம் -நிர்மலம் -பவித்ரானாம் பவித்ரம்

2–கல்யாண ஏக ஸ்தான
தன்னோடு தொடர்பு பட்டவர்களுக்கு நன்மையைக் கொடுக்கக் கூடிய மங்களமான குணங்கள்
அனைத்துக்கும் ஒரே இருப்பிடம் பரமாத்மா –
ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவ ஸ்லோகம் இவற்றை விளக்கும் –
பரமாத்மாவின் குணங்கள் நித்யங்கள் -என்றுமே அழியாதவை
நிஸ் ஸீமங்கள் -எல்லை அற்றவை -உயர்வற உயர் நலம் உடையவன் –
நிஸ் சங்க்யங்கள் -எண்ணிக்கை அற்றவை -எண்ணில் தொல் புகழ் வானவர் ஈசன்
நிருபாதிகங்கள்–இயற்கையானவை
நிர்தோஷம் -தோஷங்களோடே சேர்ந்து ஓர் இடத்தில் இருக்காமல் -தோஷத்தின் சேர்க்கையே இல்லாமல் -இருப்பவை
ஸமான அதிக ரஹிதங்கள் -தனக்கு நிகராகவோ உயர்ந்தோ இல்லாத குணங்கள்

ஞானம் பலம் ஐஸ்வர்யம் வீர்யம் சக்தி தேஜஸ் மூலமான கல்யாண குணங்கள்
கருணை ஞான வடிவம் போல் -அனைத்தும் இந்த ஆறு குணங்களுக்குள் அடங்கும் –
வஸீ -இத்யாதி ஸ்தோத்ர ரத்னம் -கத்ய த்ரயம் இந்த குணங்கள் பட்டியல் காட்டும் –
நிரலேபம் -தோஷ சம்பந்தம் இல்லாமல்
உபதா -உபாதை மூலம் இல்லாமல்
இயற்கையாக
நிகரற்ற ஸ்ரீ விஷ்ணு புராணம் சொல்லும் –

3–ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணன்
இப்படி தோஷங்களுக்கு எல்லாம் எதிர்த்தட்டாய் இருத்தல்
கல்யாண குணங்களுக்கு எல்லாம் ஒரே இருப்பிடமாக இருத்தல்
என்ற இரண்டு அறிகுறிகளால் -உபய லிங்கங்களால் பரமாத்மா
தன்னைத் தவிர்ந்த அனைத்துப் பொருள்களைக் காட்டிலும் உயர்ந்தவராக உள்ளார்
ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் -ஆழ்வார் –

உபய லிங்க அதிகரணம்–3-2-11-
வ்யாப்த கத தோஷம் தட்டாத ப்ரஹ்மம்
ந ஸ்தான தோபி பரஸ்ய -உபய லிங்கம் -சர்வ சுருதி சொல்வதால் –

4-அநந்த
அந்தம் என்றால் முடிவு -எல்லை -அளவு
அநந்தன் -என்றால் -எல்லை அற்றவர் -என்று பொருள்
பரமாத்மாவை எந்த வகையாலும் அளவுபடுத்த இயலாது
அவர் நித்யமான படியால் அவரைக் காலத்தால் அளவுபடுத்த முடியாது
அவர் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறபடியால் அவர் விபு ஆவார்
அவர் இல்லாத இடமே கிடையாது
எனவே தேசத்தாலும் அளவு படுத்த முடியாது
அவருக்கு இணையான எந்தப்பொருளும் உலகில் இல்லாத படியால் –
பரமாத்மா இந்தப் பொருளைப் போன்றவர் என்று சொல்ல ஒரு பொருள் இல்லாத படியால்
அவர் பொருளாலும் அளவு படாதவர்
மேலும் அவரே உலகம் அனைத்துமாக இருக்கிற படியால் -இந்தப்பொருள் பரமாத்மா அல்ல –
என்று சொல்ல முடியாதே
ப்ரஹ்மாத்மகம் இல்லாத பொருளே இல்லையே
இதனால் எந்த வஸ்துவாலும் அளவு படாதவர்
இப்படி காலம் தேசம் வஸ்து -மூன்று அளவுகளும் அற்றவர்
த்ரிவித பரிச்சேத ரஹிதன் என்றவாறு –

ஒரு பொருளை உபமானம் சொல்லி –வஸ்துவால் அளவுபடுத்துதல் இல்லாமல் என்றும்–
கட்டுரைக்குள் தாமரை -கண் ஒவ்வா –சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனிக்கு ஒவ்வா -ஒட்டு உரைத்து
உலகு எல்லாம் உன்னை புகழ்வது எல்லாம் –கட்டுரையாய் –
வஸ்துவில் அளவு படுத்த முடியாதவன் என்றும் -இது குடம் துணி இல்லை என்பது போல் சொல்ல முடியாதே
அந்தர்யாமித்வம் மேலே பார்ப்போம் –

5-ஞான ஆனந்த ஏக ஸ்வரூபம்
ஞானமே வடிவானவர்
ஆனந்தமே வடிவானவர்
ஆனந்தம் என்பது அனுகூலமான ஞானம் -அதாவது நமக்குத் பிடித்ததாக ஏற்பனதாக ஞானம்
பரமாத்மா ஞானமே வடிவானவர் -அந்த ஞானத்துக்குத் தான் மட்டுமே விஷயம் –
தான் தனக்குப் பிடித்தவர் ஆகையாலே தன்னைப் பற்றிய ஞானமும் தனக்குப் பிடித்ததே
ஆகையால் பரமாத்மா என்கிற ஞானம் இயற்கையாகவே பிடித்த விஷயத்தைப் பற்றின
ஞானமே யாகையாலே அதுவே ஆனந்தமும் ஆகிறது –
எனவே பரமாத்மா ஆனந்த வடிவமான ஞானம் ஆகிறார் –
தத்வ த்ரயம் -ஆனந்த ரூப ஞான வடிவாய் இருக்கும் –
கட்டடங்க ஞானம் பிரகாசம்-கட்டடங்க அனுகூலம் –
ஜீவாத்மாவும் ஞான ஸ்வரூபம் -ஞானம் த்ரவ்யம் –

நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் -சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம்
ஸூ த்தம் பரம் நிர்மலம் ஏக ரூபம்
ப்ரஹ்மம் அறிவதே ஞானம்

——

பாடம் –33-சரீர ஆத்ம பாவம் –
நம் சம்ப்ரதாயம் -பிரதான பிரதிதந்தரம் -இதுவே

அபேத பேத கடக ஸ்ருதிகள்
வேதங்களில் –ஸர்வம் கலு இதம் ப்ரஹ்ம (சாண்டில்ய வித்யை )-இந்த உலகம் அனைத்தும் ப்ரஹ்மமே -போன்ற இடங்களில்
பரமாத்வாவும் கல் போன்ற அசேதனப் பொருள்களும் ஒன்றே என்று சொல்லப்படுகிறது

அதே போன்று அஹம் ப்ரஹ்மாஸ்மி –தத் த்வம் அஸி -போன்ற இடங்களில்
பரமாத்மாவும் ஜீவாத்மா-சேதனப் பொருள்களும் ஒன்றே கூறப்படுகிறது –
இவற்றுக்கு அபேத ஸ்ருதிகள் என்று பெயர்
பேதம் -வேறுபாடு -வேறுபாடு இல்லை யுரன்கிறபடியால் இவை அபேத ஸ்ருதிகள்

போக்தா போக்யம் ப்ரேரிதாரம் ச மத்த்வா
ஷரம் பிரதானம் அம்ருத அக்ஷரம் பர –ஈசத தேவ ஏக
பிரதான ஷேத்ரஞ்ஞன் பதி குணே ஸஹ -முதலானவற்றில் தெளிவாக
சேதன அசேதன ஈஸ்வர -மூன்றையும் வேதம் சொல்வதால் இவை பேத ஸ்ருதிகள் ஆகும்

இந்த முரண்பாட்டைத் தீர்க்க கடக ஸ்ருதிகள் –
கடகம் -சேர்த்து வைக்கும் -முரண்பட்டவை போன்ற ஸ்ருதி வாக்யங்களை சேர்த்து வைக்கும்
யஸ்ய ப்ருத்வீ சரீரம்
யஸ்ய ஆத்மா சரீரம் -அந்தர்யாமி ப்ராஹ்மணம் -ப்ருஹதாரண்யம்
ஏஷ ஸர்வ பூத அந்தராத்மா அபஹத பாப்மா –இத்யாதி
அந்த ப்ரவிஷ்டா ஸாஸ்தா ஜனா நாம் ஸர்வாத்ம-
இந்த கடக ஸ்ருதிகள் அனைத்தும் சரீர ஆத்ம பாவம் சொல்லும்
உலகம் அனைத்தும் சரீரம் உடல் – உடல் உயிர் தொடர்பு இருக்கிறபடியால் அவை
வெவ் வேறாக இருந்தாலும் ஒன்றே என்றும் சொல்லப் படலாம் –

சரீரம் என்றால் என்ன
ஸ்ரீ பாஷ்யத்தில் ஸ்ரீ ராமானுஜர்
யஸ்ய சேதனஸ்ய யத் த்ரவ்யம் ஸர்வாத்மநா ஸ்வார்த்தும் நியந்தும் தாரயிதும் ச சக்யம்
தத் சேஷதைக ஸ்வரூபஞ்ச ச தத் தஸ்ய சரீரம் -என்று -மூன்று

எந்த ஒரு அறிவாளியாலே எந்த ஒரு த்ரவ்யம் அது இருக்கும் வரை
எப்பொழுதும் தாங்கப்படுவதற்கும்
அதுக்கு இயன்ற செயல்களிலே செலுத்தப்படுவதற்கும்
தகுதி யுடையதோ
மேலும்
அவருடைய மேன்மைக்காகவே உள்ளதோ
அந்த த்ரவ்யம் அந்த அறிவாளியின் சரீரம் -அந்த அறிவாளி தான் ஆத்மா –

இதை நம் உடல் நாம் என்கிற ஜீவாத்மா இடம் பொருத்திப் பார்ப்போம்
நாம் அறிவாளி -இந்த மாம்ச பிண்டம் த்ரவ்யம்
இந்த மாம்ச பிண்டம் நான் என்கிற அறிவாளியால் தங்கப்படுவதற்கும் செலுத்தப் படுவதற்கும் தகுதியானது தான்
நான் என்கிற ஆத்மா வெளியே சென்று விட்டால் இந்த மாம்ச பிண்டம் எழுந்து நிற்காது -எந்தச் செயலும் செய்யாது –
இந்த மாம்ச பிண்டம் என்னுடைய நன்மைக்காகவே உள்ளது
இத்தை சரீரம் என்றும் -நம்மை ஆத்மா என்றும் கூறுகிறோம் –

இதே போலே ஸமஸ்த சேதன அசேதனங்கள் அனைத்துமே ப்ரஹ்மத்துக்கு உடல் ஆகும் -பகவான் அறிவாளி –
இவை அனைத்தும் அவராலேயே தாங்கப்படுகின்றன -இயக்கப்படுகின்றன –
அவருடைய மேன்மைக்காகவே இவை அனைத்தும் உள்ளன
எனவே உலகையே சரீரம் என்றும் ப்ரஹ்மத்தை ஆத்மா என்றும் கூறலாம் –

திட விசும்பு –முழுவதுமாய் அவை அவை தோறும்
உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் -சுடர் மிகு சுருதி -ஆழ்வார்

ஒரு ஆத்மா அதன் உடலுக்குச் செய்யும் உதவிகள் இரண்டு
1- சத்தா ஹேதுத்வம்
அந்த உடல் சத்தை -இருப்பு பெறுவதற்கு ஆத்மா தான் காரணம்
அதாவது ஆத்மா உள்ளே இல்லாவிட்டால் அதன் பெயரே மாறி விடும்
சரீரத்தின் சத்தை ஆத்மாவின் சத்தையைப் பொறுத்தது -இதற்கு ஆத்மா விழித்து இருக்க வேண்டும்
தன் அறிவைக் கொண்டு ஒன்றும் செய்யத் தேவை இல்லை உள்ளே ஆத்மா இருந்தால் மட்டுமே போதுமானது

2-உடல் இயங்குவதற்கும் காரணமாக ஆத்மா இருக்கிறார் —
இது அறிவால் செய்யக் கூடிய செயல் —
எனவே ஆத்மா விழித்து இருக்கும் பொழுது தான் இதை ஆத்மா செய்வதை நாம் உலகில் பார்க்கிறோம்

இந்த இரண்டு செயல்களையும் பரமாத்மா
தன்னுடைய சரீரமான உலகு அனைத்தைக்கும் செய்கிறார்

1- பரமாத்மா விபு -எல்லாவற்றையும் விட மிகப் பெரியவராக எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கிறார் –
அப்படி இருந்து கொண்டு அனைத்தையும் தாங்குகிறார்
பூமி அனைத்தையும் தாங்குவது போலே அவர் உலகம் அனைத்தையும் தாங்குகிறார்
ஏஷ சேது விதுரண
ஏதத் ஸர்வம் ப்ரஞ்ஞானே ப்ரதிஷ்டிதம் –
யதா ரத –நாபி -குச்சி -இத்யாதி –போன்ற
ஸ்ருதி வாக்கியங்கள் இத்தைக் காட்டும்
வாஸூதேவ வீர்யேண விதுர் தாணி -சங்கல்ப ஸஹஸ்ர ஏக தேசத்தாலே தாங்குகிறான் –
அவர் ஆசைப்பட்டு -விபுவான ஸ்வரூபத்தால் தாங்குகிறேன் -என்பதால்
சங்கல்பம் ஸ்வரூபம் இரண்டும் தாங்கும் என்பதில் தவறு இல்லை
தார்யமாகைவது -ஸ்வரூப சங்கல்பம் ஒழிந்த போது தன் சத்தை இல்லாத படி இருக்கை –தத்வ த்ரயம் 39-

2-பெரியதாக அனைத்தும் தாங்குவதைத் தவிர மிகச் சிறியவராகவும் இருந்து அனைத்து ஜீவாத்மாக்குள்ளும் இருக்கிறார் –
அங்கு இருந்து கொண்டு அனைத்து செயல்களையும் அனுமதித்து இயக்குகிறார் –
இப்படி உள்ளே புகுந்து இயக்குகிற படியால் அந்தராத்மா -என்றும் பெயர்
அந்த ப்ரவிஷ்டா ஸாஸ்தா ஜனா நாம் ஸர்வாத்ம -ஸ்ருதி இத்தைக் காட்டும் –
நியாம்கை யாவது -புத்தி அதீனமாக எல்லா வியாபாரங்களும் உண்டாம்படி இருக்கை –தத்வ த்ரயம் 38-

தர்ம பூத ஞானம் -அறிவைக் கொண்டே -ஸுபரி -50 சரீரங்களையும் – இயக்கினார் அது போல் இல்லை இல்லாமல்
ப்ரஹ்மம் -உள்ளே இருந்து -அகடி கட நா சாமர்த்தியம் -ஒன்றும் குறையாமல் இங்கும்
சேஷத்வம்–பரகத அதிசய ஆதேய -அவனுக்காகவே -இதுவே இயற்க்கை –
ஆத்மா தாஸ்யம்-ப்ரஹ்மம் ஸ்வாமி – தாஸ்ய பூதா ஸ்வத-இங்கும் அங்கும் –

—–

பாடம் –34-ஜகத் காரணத்வம்

யன் மய ஜகத் ஸர்வம் -கேள்வி ஸ்ரீ விஷ்ணு புராணம்
யதஸ்ய ஏதஸ்ய சராசரம் யார் இடம் இருந்து வந்தது
எங்கே லயித்தது
விஷ்ணு உத்ப்பூதம் -அவன் இடமே ஒன்றி -ஸ்திதி ஸம்யமம் -காத்து -இயக்குகிறார் –
ஜகத் ச ஸஹ -அவரே ஜகத்தாக உள்ளார் -பராசரர்
கீழே அந்தர்யாத்மாவாக இருந்து இயக்குகிறார் பார்த்தோம்
ஸர்வ ஸப்த வாஸ்யன் -பர்யவசானாம்
ஜகத் ஜன்மாதி காரணம் -லக்ஷணம் ப்ரஹ்மதுக்கு

புத்த ஜைன தர்க்க மதம் மூன்றிலும் நுண்ணிய பரம அணுக்கள் சேர்ந்தே உலகில் காணும் பொருள்கள் உண்டாகின்றன
பரம அணுக்களே காரணம் என்பர்
தார்க்கிகர் -வைசேஷிக நியாய மதம் -கொஞ்சம் வாசி இரண்டுக்கும் உண்டு
இவர்களே தார்க்கிகர்
இவர்கள் பரமாத்மாவை ஒத்துக் கொண்டு பரம அணுக்களை உலகமாக உருவாக்குகிறார் -குயவன் ஸ்தானத்தில் –

ஆனால் இது சரி இல்லை
சுருதி விரோதம் –
புலன்களுக்கு அப்பால் பட்ட பரம அணு இருக்க பிரமாணமே இல்லையே
பிரகிருதி மிகப்பெரியது
2-2-தர்க்க பாதம்

சாங்க்ய மதத்தில்
முக்குண -வசத்தில் உள்ள பிரக்ருதியே உலகமாக என்பர்
ஆனால் இது சுதந்திரமாக தானாகவே ஸ்ருஷ்டிக்கும் என்பர்
சேதனன் துணை வேண்டாம் என்பர்
பால் தயிராக தானாகவே மாறுவது போல் என்பர்
காரணத்துக்கும் காரியத்துக்கும் ஒற்றுமை இருக்க வேண்டுமே
உலகில் முக்குண மய பொருள்களைப் பார்ப்பதால் இப்படி சொல்வர்

இதுவும் சரி இல்லை -அறிவற்ற ஒன்றால் இது முடியாதே -அறிவுள்ள சேதனன் வேண்டும்
தானாகவே செய்யும் என்றால் எப்பொழுதும் ஸ்ருஷ்ட்டி அல்லது எப்பொழுதும் பிரளயமாக ஆய்க்கொண்டே இருக்க வேண்டும்
ஸ்ருஷ்ட்டி சம்ஹார வியவஸ்தை கூடாதே
இத்தையே பிள்ளை லோகாசசார்யார் தத்வ த்ரயத்தில் காட்டி அருளுகிறார் –
ஈஸ்வரன் அதிஷ்டானம் இல்லாமல் இது கூடாதே
இது என்னுடையது என்று பயன் படுத்தா விட்டால் பரிமாணம் அடையாதே

ஆகவே பிரகிருதி பிரதானம் தானாகவே மாற முடியாதே
வேதம் ஸ்பஷ்டமாக இத்தைக் காட்டும்

சிலர் நான்முகன் போல் சிறந்த புண்ணியம் செய்த ஆத்மாவே காரணம் என்பர்
இதுவும் கூடாதே
கர்மவசப்பட்டவர் -துக்கப்படுபவர் 0ஆகவே இதுவும் சரியில்லை –

உபநிஷத்துக்கள்
ஸத் -இருக்கும் பொருளே காரணம்
சதேவ சோம்ய-இதம் அக்ரே-சதேவ ஆஸீத் –
சிலர் உண்டாவதும் முன்பு அபாவம் -அஸத் கார்ய வாத நிராசனத்துக்கு சொன்னதே

மேலும் உபநிஷத் ப்ரஹ்மம் காரணம் -ஆத்மா காரணம் -என்றும் சொல்லும்
இவற்றுக்கு முரண்பட்டு இல்லை
சாமான்ய விசேஷ நியாயம்
விலங்கைக் கூட்டி வா மாட்டைக் கூட்டி வா -இரண்டுக்கும் வாசடி இல்லாதது போல்
பொதுவாக சொல்லி பின்பு விசேஷித்து சொல்லலாமே

அதே போல்
இருக்கும் பொருளே காரணம் -ஸத்
பெரிய பொருளே காரணம் -ப்ரஹ்மம்
ப்ரஹ்மம் ஏக அக்ர ஆஸீத்
அதுக்கும் மேலே அறிவுடைய பொருளே காரணம் என்றும் சொல்லும்
ஆத்மா வா இதம் ஏகமே வ அக்ர ஆஸீத்
ஏகோ வை நாராயணா ஆஸீத்
பின்பு நாராயணனே ஒருவராக முன்பு இருந்தார் என்றது –

நிமித்த காரணம் ப்ரஹ்மம் என்னும் இதில் பல கேள்விகள் எழும்
1-உலகில் ஒரு பொருளை படைக்கும் போது –
அவித்யை அறிவின்மை -கர்மம் பாபம் புண்யம் -பர நியோகம் பிறரால் ஏவப்பட்டு படைக்கிறார்கள்
பரமாத்மாவும் அப்படியேயோ

பதில் -ப்ரஹ்மம் நிர் அவத்யம் -நிரஞ்சனம் -அறிவின்மை அற்றவர்
அபஹத பாப்மா -கர்மங்கள் அற்றவர்
ந தஸ்ய ஈசே கச்சன் -யாராலும் ஏவப்படாதவர்
தன்னுடைய இச்சை ஆசையாலேயே ஸ்ருஷ்டிக்கிறார் –

2- இவ்வளவு பெரிய உலகைப் படைக்க சிரமமோ களைப்போ அடைவாரா

சங்கல்ப ஏக தேசத்தாலே படைக்கிறார் -நிஜ இச்சையால் மட்டுமே
நினைத்த எல்லாப் பொருள்களுக்கும் வித்தாய் -முதலில் சிதையாமே -தனக்கு மாறுபாடு விகாரம் இல்லாமல்
மனம் செய் ஞானத்து உன் பெருமை -ஆழ்வார் –

3-அவாப்த ஸமஸ்த காமனாய் இருந்தும் எந்த ப்ரயோஜனத்துக்காகப் படிக்கிறார்
ஜீவர்கள் உலகில் படும் துன்பங்களைக் கண்டால் அவர்கள் நன்மைக்காகப் படைக்கிறார் என்று சொல்ல முடியாதே

லீலை -அச்சமய போகத்துக்காகவே -வேறே பலனை
எதிர்பார்க்காமல்
அரசன் தோட்டத்தில் பந்து விளையாடி வேறே பலனுக்காக இல்லாமல் மகிழ்வது போல்
ந ப்ரயோஜனத்வாத் -ப்ரஹ்ம ஸூத்ரம்
லோகவத் லீலா கைகைவல்யம் –2-1-32-
பாலன க்ரீடநகைரிவ–வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன்
பல பல மாய மயக்குகளால் இன்புறும் இவ்விளையாட்டு உடையான்

4-முக்தி பெற படைக்கிறார் என்றால் எப்படி இது லீலை ஆகும்

உண்மையே தான்
வெகு சிலரே முக்தர் ஆவதால்
லீலையே அதிகமாக கிடைக்கும் பலன்

ஒரு பொருள் எதற்க்காக படைக்கப்பட்டது அதுக்காக இல்லாமல் இருந்தால் சிரிப்பு வருமே
நன்றாக செய்தால் அது போகமாக இருக்கும்
சிரிக்கும் பொழுது கேட்க சொன்ன கதை
எண்ணெய் வாங்க கோணிப்பை எடுக்க சிரிக்க
ஊதியம் உயர்வு கேட்டான்
ஆழ்வாராதிகளைக் கண்டால் போக ரசம் பெறுவான்

லீலா கைவல்யம் -லீலையே பிரயோஜனம்
நின்று நின்று பல நாள் உய்க்கும் இவுடல் நீங்கிப் போய் சென்று சென்று ஆகிலும் கண்டு
உண்டியே உடையே உக்காந்து போகிறவன் எப்பொழுதாவது
ஜென்மம் கழிப்பான் என்று எண்ணி சோம்பாது ஒன்றி ஒன்றி உலகம் படைக்கிறான் -உத்ஸாகத்துடன் –

பிரதானம்-முக்கியம் வேறே –
பிரசுரம் அதிகம் வேறே –
இரண்டு பிரயோஜனங்களும் உண்டு -இரண்டுக்கும் பிரமாணங்கள் உண்டு
முக்தனாக்குவதே பிரதானம் –
ஆசைப்பட்டது எல்லாம் கிடைக்காதே
பிரசுரம் மிகுதி லீலா ரசம் -தான் அடைகிறான் –

5-உலகை அழிப்பது எப்படி லீலை ஆகும்

குழந்தை மண் வீடு கட்டி அழிப்பது போல்

6-ஏற்றத் தாழ்வுகள் காண்கிறோம்
வைஷம்யம் -பாகுபாடு
நைர் க்ருண்யம் -கருணை இன்மை வாராதோ

சா பேஷத்வாத் -தானாகவே செய்ய வில்லையே -கர்மம் அடியாகவே ஏற்றத்தாழ்வுகள்
தவறு செய்யும் குழந்தையை தாய் அடித்துத் திருத்துவது போல்
ஸமோகம் ஸர்வ பூதேஷு அவன் –
கர்மம் அடியாக செய்வதாலும் மண் தின்னும் பிரஜை -நாக்கில் குறி இட்டு அஞ்சப் பண்ணும் மாதாவைப் போல்
ஹித பரன் –
பிரதான காரணம் ஜீவர்களுடைய கர்மங்கள் தான்
நிமித்த காரணம் -பொதுவான காரணம் ப்ரஹ்மம்
குற்றங்கள் வராதே

———–

பாடம் -35-அபின்ன நிமித்த காரணம்
உபாதானமாகவும் ப்ரஹ்மம்
இத்தை மேலே பார்ப்போம்

த்ரிவித–மூன்று வித – காரணங்கள்
1-உபாதான காரணம்
நிலை மாறி கார்யமாவது
உருண்டை வடிவில் இருக்கும் மண் குடம் ஆவது போல் –
மண் உருண்டையை குடத்துக்கு உபாதான காரணம் ஆகும்

சமவாய காரணம் -இத்தை நியாய மதம் சொல்லுவார்
ஸத் கார்ய வாதம் வேதாந்தம்
ப்ராக் பாவம் அபாவம் -நியாய மதஸ்தர்

ஜீவாத்மா நித்யம் -அதுக்கு உபாதானம் என்ன கேட்க வேண்டாமே
அசித் தான் பரிமாணம் அடையும் –

2-நிமித்த காரணம் -யார் ஒருவர் உபாதான காரணத்தை மாற்றுகிறாரோ அவர் –
குயவன் தானே மண்ணை குடம் ஆக்குகிறார்

3-ஸஹ காரி காரணம் -கார்யம் பண்ண உதவும் கருவிகள் -சக்கரம் போல்வன

ப்ரஹ்மமே நிமித்த காரணம் முன்பு பார்த்தோம்

உலகில் நாம் காணும் அனைத்தும் முக்குண வசமாய் இருப்பதால்
உபாதான காரணமும் அப்படியே தானே இருக்க வேண்டும் என்று தோன்றும்
மூலப் பிரக்ருதியே மஹான் இத்யாதிகளாக ஆகிறது என்றும் ஸ்ருதிகள் சொல்லும்
எனவே பிரக்ருதியே தான் உலகுக்கு உபாதான காரணம் என்று சொல்லத் தோன்றும்
ஆனால் வேத வியாசர் இத்தை ஏற்க வில்லை

ப்ரக்ருதிச் ச ப்ரதிஞ்ஞா த்ருஷ்டாந்த அநு பரோ தாத் —1-4-23-

ப்ரக்ருதி ச -உபாதான காரணமும் அவனே
முன்பே நிமித்த காரணம் முடிவானதால்
ப்ரதிஞ்ஞா த்ருஷ்டாந்த-இரண்டு காரணங்களாலும்
இரண்டுடன் முரண்பாடு இல்லாமல் இருக்கும்

கீழே நிமித்த காரணமாக சொன்ன பரமாத்மாவே உபாதான காரணமாக உள்ளார்
அப்பொழுது தான் ப்ரதிஞ்ஜை யோடும் –
எடுத்துக் காட்டும் முரண்பாடு இல்லாமல் இருக்கும்

சாந்தோக்யம் -ஆறாவது அத்யாயம் ஸத் வித்யை –
உத்தாலகர் தனது பிள்ளை ஸ்வேதகேதுவுக்கு உபதேசம்

ஏக விஞ்ஞானம் ஸர்வ விஞ்ஞானம் –ப்ரதிஞ்ஜை-
ஆதேசம் -உலகு அனைத்தையும் இயக்கம் அவனை அறிந்தாயா –
இவனை அறிந்தால் அனைத்தையும் அறிந்தவனாக ஆவாய்
இவனைப் பற்றி கேட்டாயானால் அனைத்தையும் கேட்டதாக ஆகும்

உலகை இயக்கக் கூடிய ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்தது ஆகும் -எடுத்துக் காட்டு-
மண் உருண்டையை அறிந்தால் அதில் இருந்து உண்டாகும் அனைத்தையும் அறிந்தால் போலே
அதே போல் ப்ரஹ்மத்தை அறிந்தால் அனைத்தையும் அறிந்தது ஆகும் என்றால்
ப்ரஹ்மமே உபாதான காரணம் என்றதாகும் –

காலையில் குயவன் வீட்டில் மண் உருண்டையைப் பார்த்து
பின்னால் மதியம் அங்கு இருக்கும் குடம் மடக்கு போன்றவற்றைப் பார்த்து
இவை அனைத்தும் காலையில் பார்த்த மண் உருண்டையை என்று கூறுவதால்
மண் உருண்டையை உபாதான காரணம் என்றதாயிற்று
மேலும் தங்க காசு ஆபரணங்கள் எடுத்துக் காட்டுகளும் சொன்னார்

அதே போல் மரம் கல் துணி நீர் -போன்ற பல பெயர்களோடும் வடிவங்களோடும்
இருக்கும் உலகம் அனைத்தும்
முன்பு ஸத் -ப்ரஹ்மம் -ஆத்மா -நாராயணன் -என்று சொல்லப்படும்
பரமாத்மாவே -வேறே யாரும் முன்பு இல்லை
எனவே அவரே உபாதான காரணமாகவும் நிமித்த காரணமாகவும் உள்ளார் என்று கிடைக்கிறது

ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம்

இதம் அக்ர ஆஸீத்-இவை அனைத்தும் முன் ஸ்ருஷ்டிக்கு முன்னால் –
மண் உருண்டையாகவே இருந்தது போல் இங்கும் -ஸதேவ -ஸத் -பரமாத்மாவேயாக இருந்தன

ஏகமேவ -ஒன்றாகவே இருந்தது -உபாதான காரணம் இதுவே -குடம் தட்டு இவை எல்லாம்
காலையில் மண் உருண்டை பெயர் வடிவத்துடன் இருந்தது போல் -நாம ரூப வேறுபாடுகள் இல்லாமல் –

அத்விதீயம் -இரண்டாவது இல்லாமல் இருந்தது –
மண்ணை அறிந்தால் மண்ணால் உண்டான அனைத்தையும் அறியலாம் -குயவனை அறிய முடியாதே
அது போல் இல்லை
மாற்ற குயவன் போல் தனியாக வேறே ஒருவர் நிமித்த காரணம் இல்லை
இவரைத் தவிர வேறே இல்லை
அபின்ன நிமித்த ப்ரஹ்மம் என்றவாறு

மேலும் குயவன் இந்த மண் உருண்டையை குடம் மடக்கு போன்றவாறாக மாற்றுவேன்
என்று சங்கல்பம் கொள்வான்
பரமாத்மாவோ
நான் பலவாக ஆகப் போகிறேன் -அதற்காக படைக்கப் போகிறேன் -என்று
சங்கல்பம் செய்து கொள்வான் என்று மகன் இடம் கூறினார்

தத் ஐஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேய
நான் இந்த மூலப்பிரக்ருதியைக் கொண்டு பலவற்றையும் ஸ்ருஷ்ட்டிக்கப் போகிறேன் என்று சொல்லாமல்
அந்த பரமாத்மா நானே பலவாக ஆகக் கடவேன் அதுக்காக ஸ்ருஷ்ட்டி செய்யக் கடவேன் -என்றவாறு

தானே -ஸ்வயம் -நிமித்தம்
தன்னை -ஆத்மநாம் -உபாதானம்
தானே தன்னை உலகமாக ஸ்ருஷ்டித்துக் கொள்கிறார்

முதல் தனி வித்தேயோ முழு மூ உலகாதிக்கு எல்லாம் -திருவாய் -10-10-
வித்து
முதல் வித்து
தனி வித்து

உபாதான காரணம் காரியமாக உரு மாற வேண்டுமே
பரமாத்மாவோ அவிகாராயா -விகாரம் மாறுபாடு அற்றவர் அன்றோ
அவிகாராய விகாராய ஸூத்தாயா நித்யாய
நிரஞ்சனம்
அகில ஹேய ப்ரத்யநீகன் -பரிணாமம் அற்றவன்
எவ்வாறு உபாதான காரணம் ஆக முடியும்
இதுக்குப் பதிலாக சிலவற்றைப் பார்ப்போம்

1-மண் உருண்டை குடமாக உரு வாகிறது

2-சிறுவன் முதிர்ந்தவர் ஆகிறான்
சிறியவனாக இருந்த நானே முதிர்ந்தவனாக உள்ளேன் என்பான்
உருவ வேறுபாடு உடலிலே தானே
உள்ளே இருக்கும் ஜீவாத்மாவின் உருவ வேறு பாடு இல்லையே
நிலை வேறுபாடு மட்டுமே உள்ளது
பால்ய அவஸ்தை கொண்ட சரீர விஸிஷ்ட ஜீவாத்மாவே –
யுவா அவஸ்தை கொண்ட சரீர விஸிஷ்ட ஜீவாத்மாக ஆனேன்
ஸ்வரூப மாற்றம் இல்லை -ஸ்வபாவ மாற்றமே

3-ப்ரஹ்மமும் -ஏஷ சர்வ பூத அந்தராத்மா –
இந்த உலகம் அனைத்துமே
பரமாத்மாவால் தாங்கப்பட்டு
இயக்கப்பட்டு
அவருடைய மேன்மைக்காகவே இருக்கிறபடியால்
அவருடைய உடலாகும் என்று பார்த்தோம்

பிரகிருதி மஹானாக ஆகும் பொழுது
ப்ரக்ருதிக்கு அந்தர் ஆத்மாவான ப்ரஹ்மமே மஹானுக்கும் அந்தர் ஆத்மாவான ப்ரஹ்மம் ஆகிறார் -அன்றோ
இதே போல் ஒவ்வொன்றுக்கும் கொள்ள வேண்டும்
காரணமும் காரியமும் ப்ரஹ்மமே
இது தான் சரீர ஆத்ம பாவ ஆச்சார்யம்

எனவே பரமாத்மாவே உலகமாக ஆகிறார் என்றால்
ஸூஷ்ம சேதன அசேதன விஸிஷ்ட ப்ரஹ்மம் —
ஸூஷ்ம சேதன அசேதனங்களை உடலாகக் கொண்ட ப்ரஹ்மமே
ஸ்தூல சேதன அசேதன விஸிஷ்ட ப்ரஹ்மம் –
ஸ்தூல சேதன சேதனங்களை உடலாகக் கொண்ட ப்ரஹ்மம் ஆகிறார் -என்று பொருள்

இங்கு உருவ வேறுபாடு அசேதனப் பொருள்களுக்கே
பரமாத்மாவுக்கு நிலை மட்டுமே வேறுபாடு
உபாதான காரணமாக இருந்தாலும் அவர் அவிகாராயா -விகாரமும் உருவ வேறுபாடும்
இல்லாமலேயே இருக்கிறார் -என்று தெளிவு –

ப்ரஹ்மமே -அபின்ன நிமித்த காரணம் -ஒருவரே உபாதானமாகவும் நிமித்தமாகவும் உள்ளார்
1– யதா ஊர்ண நாபி ஸ்ருஜதே க்ருஹ்ணதே ச (முண்டக உபநிஷத் சொல்லும் )
சிலந்திப் பூச்சி வலை கட்டுகிறது
தானே சங்கல்பித்து முடிவு செய்து பின்னுகிறபடியால் -செய்வதால் நிமித்த காரணம்
அதன் எச்சிலே வலையாக மாறுவதால் அதுவே உபாதான காரணம்

2-பராசர பட்டர் காட்டும் உதாரணம்
ஆண் மயில் பெண் மயிலை மகிழ்விக்க தானே முடிவு செய்து தனது-சரீர ஏக தேசம் -தோகை விரித்து ஆடுகிறது
விளையாட்டு முடிந்த பின் தோகையைச் சுருக்கிக் கொள்கிறது
விரிந்த தோகைக்கு மயிலே நிமித்த உபாதான காரணம்

இதே போல்
ஸ்வம் சரீர ஏவ தேசம் -ஸ்வ இச்சையால் விஸ்திருத –
பரமாத்மாவும் பிராட்டி மகிழ்ச்சிக்காக தானே முடிவு செய்து விளையாட்டாகப் படைத்து –
விளையாட்டு முடிந்ததும் பிரளயம் -தன்னிடமே லயம் அடையச் செய்கிறார் –

ஆக
1-சேதன அசேதன பொருள்களை உடலாகக் கொண்ட –
சேதன அசேதன விஸிஷ்ட பரமாத்மாவே உபாதான காரணம் ஆவார்
2-சங்கல்ப விசிஷ்ட ப்ரஹ்மமே நிமித்த காரணம் ஆவார்
3-ஞான சக்த்யாதி குண விசிஷ்டா ப்ரஹ்மமே ஸஹ காரி காரணம் ஆவார்

————

பாடம் –36- பரமாத்மாவின் பெருமைகள்

யஸ்மாத் பரம் ந பரம் அஸ்தி கிஞ்சித் -அசையாத மரம் போல் ஸ்ரீ வைகுண்டத்தில்
உயர்வு அற -மற்றவர்களின் உயர்வு அறும் படி என்றுமாம்
உலகம் பூர்ணமாக வியாபிக்கப்படுகிறது
விபு ஸ்வரூபம் –
ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன்
ஸ்வரூபம் விபு
அனைத்தையும் தாங்கி
அளவுபட்டு ஆத்மாவுக்குள்ளும் அந்தர்யாமி யாகவும் பூர்ணனாக ஒன்றுமே குறையாமல் வியாபிக்கிறார்
இவரே ஜகத் காரணம் -முன்பு பார்த்தோம்

அகில ஹேய ப்ரத்ய நீக -கல்யாணை ஏக தாமம் -ஸமஸ்த இதர வஸ்து விலக்ஷணன்
விசிஷ்டம் என்றால் சேர்ந்தது
அத்வைதம் -இரண்டாவது இன்மை
சேதன அசேதன விஸிஷ்ட ப்ரஹ்மம்
ப்ரஹ்மத்தைக் காட்டிலும் வேறே உயர்ந்த பொருள் உண்டு என்கிற அதிசங்கை -ப்ரஹ்ம ஸூத்ரத்தில் விசாரம்
ப்ரஹ்மத்தை சேது என்பதாலும்
அவருக்கு அளவுண்டு என்பதாலும்
அம்ருதம் எனப்படும் பரமாத்மாவை அடைய ப்ரஹ்மமே வழி என்பதாலும்
உயர்த்தத்தைக் காட்டிலும் உயர்ந்தவர் என்பதாலும்
ப்ரஹ்மம் வேறே பரமாத்மா வேறே என்று அதிசங்கை வருமே

பராதிகரணம் –3-1-விசாரம்
3-1-30- நான்கு காரணங்களையும் காட்டும்
ப்ரஹ்மம் சேது என்பது பாலம் என்ற பொருளில் இல்லை
உலகம் அனைத்தையும் அதன் அதன் இடத்தில் நிலை நிறுத்தி வைப்பவர் என்கிற பொருளில் வந்ததே
அணை -நதிகளை -இரண்டு புறத்திலும் உள்ளவற்றை கலக்காமல் இருப்பது போல்
ஸமஸ்த வஸ்துக்களும் அவை அவை நிற்க காரணமே இவனே -யேஷாம் லோகான் அசம்பாவத
ப்ரஹ்ம் அளவுபட்டு தன்னை அமைத்துக் கொள்வது தியானத்துக்கு உதவுவதற்கே
உன்மானம் -நான்கு கால் -16 கலைகள் -இத்யாதி இதற்காகவே
புத்யர்த்தா பாதவத் –த்ரிபாத் விபூதி -லீலா விபூதி சொல்வது போல் –
ஐஸ்வர்யம் சொல்லவே வந்தது
சம்பந்தம் –அம்ருதம் -இவர் சேது வழி
அம்ருதஸ்ய ஏஷ சேது -தன்னை அடைய தானே வழி என்கிறது
வழி என்பதால் மட்டும் அடையப்படும் வஸ்து வேறே என்பது இல்லை
பேத அபேதம் சொல்ல வந்தது இல்லை
பராத்பரன் -புருஷன் உபைதி
அனைத்தையும் காட்டிலும் உயர்ந்தவர்

சர்வ கர்ம ஸமாராத்யாம்
பரமாத்மாவை மகிழ்விக்கவே அனைத்தும் –
அனைத்து தேவதைகளுக்கும் அந்தராத்மாவாக இருந்து
வாசனைக்கு ஏற்ப –கர்மம் அடியாக -லௌகிக விஷயங்களில் செல்ல -பசு மாடு வீடு வாசல் சுவர்க்கம் ஆசை –காம்ய கர்மங்கள்
அந்த அந்த தேவதையை ஆராதனம் செய்து அல்ப பலன்கள் பெறுகிறார்கள்
அவற்றுக்கு அந்தர்யாமியாக பரமாத்மா இருப்பதை அறிந்து த்யானத்தில் முக்தர் ஆகிறார்கள்
அஹம் ஹி சர்வ யஞ்ஞானாம் போக்தா ச பிரபுரேவ ச
அனைத்து யாகங்களாலும் இவனே பூஜிக்கப்படுகிறான் -இவனே பலன்களையும் அளிக்கிறான்
பலம் அத உப பத்தே –3-2-37-
அனைத்து பலன்களையும் ப்ரஹ்மமான பரமாத்மாவே வழங்குகிறார் -என்கிறார் வேத வியாசர் –
சர்வ தேவ நமஸ்கராம் கேசவன் கச்சதி -நதிகள் கடலில் சேருவது போல்
3-2-40-சேது வியாபதேசாத் –
வாயு தேவதை வேகமாக பலன் கொடுக்கிறார் வேதம் சொல்லும்
அபூர்வம் மட்டும் பலன் என்ன கூடாது
அந்தர்யாமியாக இருக்கும் ப்ரஹ்மமே பலன் அளிப்பார் இந்த்ராதிகள் அல்ப ஆயுஸ் -அன்றோ –
புண்யம் அபுண்யம் அவனது ப்ரீதியும் அப்ரீதியும்

ப்ரஹ்மம் நிர்குணம் என்றும்
ச குணம் -ஸர்வஞ்ஞன்
ஞான பல ஐஸ்வர்யா வீர்ய சக்தி தேஜஸ் கருணை உதாரம் சவ்ஸீல்யாதி குணங்கள் உண்டு என்றும் ஸ்ருதிகள் கூறும்
சமுச்சயமாக கொள்ளக் கூடாது இவை இரண்டையும்
விகல்பம் -என்றும் கொள்ள முடியாது
பொய் சொல்லக்கூடாது
கல்யாணத்துக்கு பொய் சொல்லலாம்
ஓன்று விதி -உத்சர்க்கம்
மற்ற ஓன்று அபவாதம் -விதி விலக்கு
கல்யாணம் போன்ற இடங்களில் தவிர பொய் சொல்லக்கூடாது என்றே கொள்ள வேண்டும்
உத்சர்க்க அபவாத நியாயம்
அதே போல் தீய குணங்கள் கிடையாது -நிர்குணம் -அபஹத பாப்மா -இத்யாதிகள்
ஆனந்தம் வள்ளல் தன்மை இத்யாதி இருந்தால் தானே பலன்களைக் கொடுக்க முடியும்

திவ்ய மங்கள விக்ரஹம் உண்டு
ஹிரண்மயம் -கப்யாஸம் புண்டரீக அக்ஷிணீ
ஸ்வரூப ரூப குணங்களைக் காட்டிலும் அத்யந்த அபிமதமாய் இருக்குமே -பிள்ளை லோகாச்சார்யார்
கருணை- -ஆத்ம குணம்
ஸ்வ அனுரூபமாய்
நித்தியமாய் ஏக ரூபமாய் ஸூத்த ஸத்வமாய்
சேதன தேகம் போலே ஞான மயமான ஸ்வரூபத்தை மறைக்கை அன்றிக்கே
மாணிக்கச் செப்பிலே பொன்னை இட்டு வைத்தால் போலே இருக்க
பொன்னுருவமான திவ்யாத்ம ஸ்வரூபத்துக்கு ப்ரகாசமாய்
நிரவதிக தேஜோ ரூபமாய்
ஸுகுமார்யாதி கல்யாண குண கண நிதியாய்
யோகி த்யேயமாய்
சகல ஜன மோஹனமாய் -பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரமாய்
ஸமஸ்த போக வைராக்ய ஜனகமாய் -சிற்றின்பம் நீயும் அவளும் நிற்க கண்ட சதிர் கண்டு ஒழிந்தேன்
ருசி ஜனக விபவ லாவண்யம்
நித்ய முக்த அனுபாவ்யமாய்
வாசத்தடம் போலே சகல தாப ஹரமாய் -ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்த –
அநந்த அவதார கந்தமாய்
ஸர்வ ரக்ஷகமாய்
சர்வ ஆஸ்ரயமாய்
அஸ்திர பூஷண பூஷிதமாய் இருக்கும் –

இதில் ஐந்து நிலைகள் உண்டே
1-பரத்வம் -ஸ்ரீ வைகுண்டத்தில் -தர்மாதி பீடம் -வீற்று இருந்த -திரு மேனி -பாட்டு கேட்க்கும் இடம் – நாராயண ஸ்ரீ மான்

2-வ்யூஹம் -திருப்பாற்கடலில் ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹாரம்
வாசுதேவன் -சங்கர்ஷணன் -ப்ரத்யும்னன் -அநிருத்தனன் -தன்னையே வ்யூஹித்து பிரித்து ஸேவை
உந்தித்தாமரையில் நான்முகனைப்படைத்து -கூப்பீடு கேட்க்கும் இடம் -ஷீராப்தி நிகேதன

3-விபவம் -ராமர் கிருஷ்ணன் -ஆகாதா மதுராம் புரீம் -அவதார ரஹஸ்யம் —
இச்சா க்ருஹீத -அப்ராக்ருதம் -சம்பவாமி யுகே யுகே -பூதானாம் ஈஸ்வரோபிசன் –
பரித்ராணாம் ஸாதூ நாம் –தொழும் காதல் களிறு அளிப்பான்
விநாசாய துஷ்க்ருதாம்
தர்ம சமஸ்தானநார்த்தம் -தானே தர்மம் -என்று காட்டி அருளி -கிருஷ்ணம் தர்மம் சனாதனம் -ராமோ விக்ரஹவான் தர்ம –
ஜென்ம கர்ம மே திவ்யம்

4-அந்தர்யாமி
உதாசீனம் -அனுமதி -சர்வ நியந்தா –
இரண்டு வகை
த்யானிப்பவர் -எளிதில் தியானிக்க சின்னவடிவில் ஹ்ருதய புண்டரீகாக்ஷம்
அங்குஷ்ட மாத்ர புருஷ
அகம்படி வந்து புகுந்து
கருட உத்சவம் நம்மாழ்வார் உள்ளத்தில்
த்யானம் மனிதர்களுக்குள் சிலருக்கு மட்டுமே

5-அந்தர்யாமி -சத்தை நியாந்தாவாக அனைத்திலும் உருவம் இல்லாமல்
இப்படி இரண்டு வகை
அர்ச்சை –
கோயில்களிலும் க்ருஹங்களிலும்
அர்ச்சனை பராதீனன்
ப்ரதிமா அப்ரதிபத்தி -சம தர்சனம் -ஒவ்வொரு ஜீவர்களுக்குள்ளும் பரமாத்மா இருப்பதை உணர்வார்கள் இல்லாதாருக்காக
பரதவ ஸுலப்யம் இரண்டிலும் எல்லை அர்ச்சையிலே

———

பத்து அத்ரவ்யங்கள் -மேல் பார்ப்போம்
உண்மை பொருள்கள் ஆறு வகை த்ரவ்யங்கள் இவை தான்
தத்வம் அறிந்து
புருஷார்த்தம் நிஷ்கர்ஷித்து
ஹிதம் பார்த்து
வேதாந்தம் நிகமிப்போம்

———

பாடம் -37-அத்ரவ்யங்கள்
இது வரை ஆறு த்ரவ்யங்கள்
1-ப்ரக்ருதி
2-ஸூத்த ஸத்வம்
3-காலம்
4-ஜீவாத்மா
5-பரமாத்மா
6-இருவடைய தர்ம பூத ஞானம் -பார்த்தோம்
முக்காலத்திலும் உள்ளவற்றை – யுகபத் -ஸர்வ -ஸூத இயற்கையாக அறியும்
ஸர்வஞ்ஞன்-பரமாத்மாவுக்கு தர்ம பூத ஞானம் உண்டே

இனி அத்ரவ்யங்கள் -த்ரவ்யம் அல்லாதவை
நியாய மாதத்தில் இவற்றையே குணங்கள் என்று -சொல்கிறார்கள்
குணமானது த்ரவ்யத்தை விட வேறு பட்டது என்பர் அவர்கள்
வேதாந்தத்தில் அப்படி அல்ல
குணமானது எப்பொழுதும் வேறே ஒரு பொருளை அண்டியே இருக்கும் –
ஆஸ்ரயத்து பிரிக்க முடியாமல் இருக்கும் –
அது த்ரவ்யமாகவோ அத்ரவ்யமாகவோ இருக்கலாம்
தர்ம பூத ஞானம் த்ரவ்யமாக இருந்தாலும் ஆத்மாவை ஆஸ்ரயித்து இருக்கும்
ஸத்வாதி முக்குணங்கள் -அத்ரவ்யங்கள் -பிரக்ருதியை ஆஸ்ரயித்து இருக்கும்

விசிஷ்டாத்வைத மதத்தில் 10 அத்ரவ்யங்கள்
1-ஸத்வம்
2-ரஜஸ்
3-தமஸ்
4-ஸப்தம் -ஒலி
5-ஸ்பர்சம் -வெப்பம்
6-ரூபம் -நிறம்
7-ரஸம் -சுவை
8-கந்தம் -மணம்
9-ஸம்யோகம் -சேர்க்கை
10-சக்தி -திறன்-potency -ஆகியவை இவை –

பிரகிருதியின் பண்புகள்
1-ஸத்வம்
ஞானம் ஸூகம் பாரமின்மை ஆகிய தன்மைகளுக்குக் காரணமான –
புலன்களுக்கு அப்பால் பட்ட – சக்தியைக் காட்டிலும் வேறுபட்ட ஒரு அத்ரவ்யம் தான் ஸத்வம்
ப்ரகாஸம் -ஸூகம் -லாகவம் -மூன்றுக்கும் காரணம் —அதீந்த்ரியம் -திறமை -சக்தி -அத்தை விட வேறு பட்ட -அத்ரவ்யமாய் இருக்கும்
மனஸூக்கும் இவை ஒத்து வரும் -ஆகவே அத்ரவ்யமாக என்று லக்ஷணம்
இது ஸூத்த ஸத்வம் என்னும் அசேதனப் பொருளில் தனியாக இருக்கும்
மிஸ்ர தத்வம் -ப்ரக்ருதி -என்ற அசேதனப் பொருளில் ரஜோ தமோ குணங்கள் உடன் கூடி இருக்கும் –

2- ரஜஸ் –
ராக த்ருஷ்ணா ப்ரவ்ருத்தி -ஆசை பற்று முயற்சி -மற்றும் பேராசை முதலானவற்றுக்குக் காரணமாயும்
புலன்களுக்கு அப்பால் பட்ட சக்தியைக் காட்டிலும் வேறுபட்ட ஒரு த்ரவ்யம் தான் ரஜஸ்

3- தமஸ்
பிரமாத மோஹாதி நிதானம் -கவனமின்மை சோம்பல் தூக்கம் முதலானவற்றுக்குக் காரணமாயும்
புலன்களுக்கு அப்பால் பட்ட சக்தியைக் காட்டிலும் வேறுபட்ட ஒரு த்ரவ்யம் தான் தமஸ்

இவை மூன்றும் பிரகிருதியின் குணங்கள் -ப்ரக்ருதியுடன் தொடர்பு கொண்ட ஆத்மாவையும் தாக்கக் கூடியவை
இவை -ப்ரவாஹதோ நித்யம் -அழியக் கூடியவையாக இருந்தாலும் தொடர்ச்சியாக எல்லாப் பொருள்களிலும் இவை இருக்கும்
பிரளயத்தில் ஸமமான திசையிலும்
ஸ்ருஷ்டியில் ஏற்றத் தாழ்வுகளுடன் இருக்கும் –

சாங்க்ய மாதத்தில் இவை த்ரவ்யங்கள்
நம் சித்தாந்தத்தில் இவை அத்ரவ்யங்கள் -பிரகிருதியின் பண்புகள் தான்

பஞ்ச பூதங்களின் பண்புகள்
4-ஸப்தம் -நம் காதால் கேட்கப்படும் அத்ரவ்யம்
இது ஆகாசத்தில் குணம்
பஞ்சீ கரணத்தால் மற்றவற்றிலும் உள்ளது
ஆகாசத்தோடு தோன்றி மறையும் பொருள்

நித்யர்களுக்கு அப்படி அல்லவே
ஆகவே அஸ்மதாதி நம் போல்வாருடைய காதால் கேட்கப்படும் என்று லக்ஷணம்
ஸப்தம் நித்ய விபூதியிலும் உண்டு -அப்ராக்ருத பஞ்ச உபநிஷத் –
இங்கு இருப்பவரால் க்ரஹிக்கப்படும் சப்தத்வம்
வேறு பட்டத்தைக் காட்டிலும் வேறுபட்டது -விஜாதீயம் -ரூபாதிகளை காட்டிலும் வேறு பட்டதாய் அங்குள்ள ஸப்தம்
விஜாதீய வ்யாவ்ருத்தம் –என்று லக்ஷணம்

இது இரண்டு வகைப்படும்
வர்ணம் -எழுத்தாக இருக்கும் ஒலி
அவர்ணம் -எழுத்து அல்லாத ஒலி -மிருதங்க ஒலி போல்வன –
தொலைவில் உள்ள ஒலியை காது சென்று க்ரஹிக்கிறது என்றும்
அவ்வொலி வாயு மூலம் பயணித்து நம் காதை அடைகிறது என்றும் இரண்டு கருத்துக்கள் உள்ளன –
தொலைவில் ஒலி கேட்க்கிறது -அருகில் -கிழக்கில் இருந்து ஒலி வருகிறது என்கிறோம் –
ஸ்ரோத்ரிய இந்திரியம் பிரயாணித்து அறிகிறது என்றே கொள்ள வேண்டும் –

5-ஸ்பர்சம் -நமது ஸ்பர்ச இந்த்ரியத்தால் -தோலால் -அறியப்படும் அத்ரவ்யம்
இங்கும் விஜாதீய வ்யாவ்ருத்தம் என்பதை அப்ராக்ருத ஸ்பர்சம் சொல்ல லக்ஷணம் –
வெப்பம் என்ற ஸ்பர்சம் நெருப்பிலும்
குளிர்ச்சி என்ற ஸ்பர்சம் நீரிலும்
நடுவான ஸ்பர்சம் பிருத்வியிலும் வாயுவிலும் இருக்கும்
மென்மை -கடினத் தன்மை -ஆகியவையும் ஸ்பர்சத்தின் வகைகள் தான்
நியாய மதத்தில் -கடினம் மென்மை- ஸம்யோகம் என்பர் -சேர்க்கையும் சேர்க்கை இன்மையுமே என்பர்
பிருத்வியாலான பொருள்களில் வெப்பத்தின் தாக்கத்தால் ஸ்பர்சம் மாறக்கூடும் -இதற்கு பாகம் -என்று பெயர் –
மாங்காய் அரிசிக்குள் வைத்தால் மாம்பழம் ஆவது போல் -பால் தயிர் ஆவது போலவும் –

6-ரூபம் -நம் கண்ணால் மட்டும் அறியப்படும் அத்ரவ்யம்
இங்கும் விஜாதீய வ்யாவ்ருத்தம் என்பதை அப்ராக்ருத ரூபம் சொல்ல லக்ஷணம்
வெளுப்பு கருப்பு சிவப்பு மஞ்சள் -என்று நான்கு நிறங்கள் உண்டு
மஞ்சள் சிவப்பின் ஒரு வகை என்பாரும் உண்டு –
த்ரிவிக்கரணம் -என்பதால் இம் மூன்றும் -வெளுப்பு கருப்பு சிவப்பு –
மேலும் ஒளி விடக்கூடியது -ஒளி விடாதது -என்றும் பாகுபாடு உண்டு
நெருப்பில் ஒளி விடும் –lustrous -சிவப்பு
நீரில் ஒளி விடும் வெள்ளை
பிருத்வியில் ஒளி விடாத நான்கு (மூன்று)நிறங்களும் இருக்கும்
சித்ர ரூபம் -கலந்த நிறம் நியாய மாதத்தில் உண்டு என்பர்

7-ரஸம்-நமது ரசன இந்த்ரியத்தால் -நாக்கால் -அறியப்படும் அத்ரவ்யம்
இங்கும் விஜாதீய வ்யாவ்ருத்தம் என்பதை அப்ராக்ருத ரஸம் சொல்ல லக்ஷணம்
இனிப்பு புளிப்பு உவர்ப்பு கார்ப்பு துவர்ப்பு கசப்பு -என்று ஆறு வகைகள்
இது பிருத்வீ ஜலம் இரண்டிலும் இருக்கும் –

8-கந்தம் -நம் க்ராண இந்த்ரியத்தால் அறியப்படும் அத்ரவ்யம்
இங்கும் விஜாதீய வ்யாவ்ருத்தம் என்பதை அப்ராக்ருத கந்தம் சொல்ல லக்ஷணம்
ஸூரபி-நறு மணம் -துர் நாற்றம் என்று இரண்டு வகைகள்
இது பிருத்வியில் மட்டும் இருக்கும் –

பஞ்சீ கரணத்தால் எல்லாவற்றிலும் எல்லாமும் பார்க்கிறோம்

அனைத்து த்ரவ்யங்களின் பண்புகள்
9-ஸம்யோகம்
இரண்டு த்ரவ்யங்களின் இடையில் இருக்கும் சேர்க்கை
சம்யுக்த ப்ரயுக்த நிமித்தம் -ஸம்யோகம்
இது
1-உண்டாகக் கூடியது
இரண்டு அளவு பட்ட பொருள்கள் அல்லது
ஒரு அளவு பட்ட பொருள் மற்ற ஒரு அளவு படாத பொருள் –
இடையே இருக்கும் தொடர்பு –
காலம் -எங்கும் உள்ளது -இங்கு ஸம்யோகம் -நான் நகர்ந்து -அங்கு ஸம்யோகம்
ஒரு நாள் உண்டாகும் -ஒரு நாள் அழியும்
2-உண்டாகாதது
இரண்டு அளவற்ற பொருள்களுக்கு இடையே தொடர்பு -என்பது எப்பொழுதும் இருக்கும்
பரமாத்மா காலம் ஸம்யோகம் நித்யம்

உண்டாகக் கூடிய ஸம்யோகம் இரண்டு வகைப்படும்
1-இருவரின் செயலால் உண்டானது -உபய க்ரியா ஜன்ய ஸம்யோகம்
இரண்டு மிருகங்கள் மோதிக் கொள்ளும் போது ஏற்படும் சேர்க்கை போல்வன
2-ஒருவர் செயலால் உண்டாவது
பறவை பறந்து வந்து ஒரு தூணில் அமர்ந்தால் ஏற்படும் ஸம்யோகம்

ஸம்யோகம் என்பது அனைத்து விதமான த்ரவ்யங்களிலும் உண்டு –
ஸம்யோகம் இல்லாத ஒரு பொருள் த்ரவ்யமாகவே இருக்க முடியாது
அத்ரவ்ய லக்ஷணமே ஸம்யோகம் இல்லாத பொருள்
நிறம் பொருளில் தொடுவது வேறே– இரண்டு த்ரவ்யங்கள் சேர்க்கை வேறே தானே

10-சக்தி
ஒரு பொருளுக்கு -காரணத்துக்கு -மற்ற ஒரு பொருளை -காரியத்தை -உண்டாக்கும் திறன் தான் சக்தி
ஸர்வ காரணத்வம் -மல்லிகைப் பூ மணம் -போல் ஒவ் ஒன்றிலும் சக்தி உண்டு
இது தர்க்கத்தாலும் வேதத்தாலும் நிரூபிக்கப் படுகிறது

நெருப்பு காகிதத்தை எரிக்கும்
சந்த்ர காந்த மணியை அருகில் எடுத்து வந்தால் நெருப்பால் காகிதத்தை எரிக்க முடியாமல் போகும்
நெருப்பில் இருந்த அந்த எரிக்கும் சக்தி திறன் சந்த்ர காந்த மணியால் அழிக்கப் படுகிறது
இப்படி தர்க்கத்தால் சக்தி என்று ஓன்று உண்டு என்று அறியலாம்
ஸாஸ்த்ரங்களும்
சக்த்ய ஸர்வ பாவாநாம் அசிந்த்ய ஞான கோசரா –
அனைத்துப் பொருள்களுக்கும் சக்தி என்கிற விசித்ர தன்மை -நம்மால் எண்ணிப் பார்க்க முடியாததாய் உள்ளது

நியாய மதம் –மணி பிரதிபந்தகம் தடை தான் சக்தி என்று ஒன்றைக் கொள்ள வேண்டாம் என்பர்
சுருதி சொல்வதால் நாம் ஒத்துக் கொள்கிறோம்
இது அதீந்த்ரியம் -கார்யம் பார்த்து சக்தி இருப்பதை அனுமானிக்க வேணும்

இது த்ரவ்யங்களில் மட்டும் அல்லாமல்
அத்ரவ்யங்களிலும் கூட இருக்கும்
அவையும் ஏதோ ஒரு கார்யத்தைச் செய்கிறபடியால் –

நியாய மாதத்தில் 24 குணங்கள் உண்டு என்று முன்பு பார்த்தோம்
இவை அனைத்தையும் இந்த ஆறு த்ரவ்யங்கள் பத்து அத்ரவ்யங்களில் அடக்கலாம்

புத்தி -ஸூகம் -துக்கம் -இச்சா -த்வேஷம் -ப்ரயத்னம் -தர்மம் -அதர்மம் -ஸம்ஸ்காரங்கள் —
ஆகிய எட்டும் ஞானம் என்ற த்ரவ்யத்தின் வெவ்வேறு நிலைகள்
புத்தி -ஸூகம் -துக்கம் -இச்சா -த்வேஷம் -ப்ரயத்னம்-ஆத்மாவின் தர்மபூத ஞான வகை
தர்மம் -அதர்மம்-ப்ரீதி கோபம் -அவனது ஞானம் வகை
ஸம்ஸ்காரங்கள்-பாவனா -பதிவு -வேகம்-ஸ்திதி ஸ்தாபனம் elasticity -ஸம்யோகம் -சேர்க்கையின் தன்மை தானே

விபாகம் ப்ருதக்த்வம் -இவை ஸம்யோகத்தின் இன்மை தான்

பரத்வம் அபரத்வம் இரண்டுமே ஒரு பொருளுக்கு காலத்தோடும் தேசத்தோடும் உள்ள தொடர்பு -ஸம்யோகம் -தவிர வேறு இல்லை

சம்க்யை -எண்ணிக்கை -பரிமாணம் -அளவு -த்ரவத்வம் -த்ரவத்தன்மை -ஸ்நேஹம் பசைத்தன்மை பிசுபிசுப்பு ஆகியவை
அந்த அந்தப் பொருள்கள் தான் தவிர தனியாக அத்ரவ்யங்கள் அல்ல

குருத்வம் -எடை -என்பது சக்தியின் ஒரு வகை தான்

ரூபம் ரஸம் கந்தம் ஸ்பர்சம் ஸப்தம் ஸம்யோகம் ஆகியவை அப்படியே ஏற்கப் பட்டுள்ளன

———-

பாடம் –38-புருஷார்த்தங்கள்

தத்வம் ஒன்றாகவும் ஏகோ மஹா யோகி –
தத்வ த்ரயம் – விஸிஷ்ட அத்வைதம் –
அவனையே ஆஸ்ரயத்து ப்ரஹ்மாத்மகமாக சேதன அசேதனங்கள்
தத்வம் பற்றி முன்பு பார்த்தோம்

புருஷன் எனப்படும் ஜீவாத்மாவால் -ஆசைப்பட்டு -வேண்டப்பட்டு -பெறப்படுவது
புருஷார்த்தம் என்று சொல்லப் படுகிறது
அர்த்தம் பிரயோஜனம் என்றுமாம் –
இவை தர்மம் அர்த்தம் காமம் மோக்ஷம் என்று நான்கு வகைப்படும்

தர்மமாவது –
தர்மம் -வேதம் சொன்னபடி -செய்வது -யாகம்-செயல் தானே அதுவே பயனாகுமோ -என்னில்
பிராணிகளின் ரக்ஷணத்துக்காகப் பண்ணும் செயல்கள் தர்மமாவது-
குளம் வெட்டுவது அன்னதானம் போல்வன –
தார்மிகர்
தன்னைப் பற்றி நினைக்காமல் பிராணி ரக்ஷணம் -அதுவே பிரயோஜனம்
கியாதி லாபமாக கருதாமல் தர்மமே பயனாக செய்பவர் –
அறம் -என்றாலே தனக்குச் செய்வது இல்லையே

அர்த்தமாவது –
பொருள் -தனம் -அத்தைக் கொண்டு தானே அனுபவிப்பத்தைச் சொல்ல வில்லை –
அவரவர் வர்ணாஸ்ரம தர்மத்துக்கு ஏற்ப செல்வம் தான்யம் முதலான வற்றைக்
நியாயமான முறையிலே ஈட்டி -தேவதைகளுக்கோ பித்ருக்களுக்கோ பிராணிகளுக்கோ
உத்க்ருஷ்டமான தேச கால பாத்ரங்களை அறிந்து -தர்ம புத்யா –
நன்மை செய்யும் வகையில் தர்ம புத்தியுடன் செலவிடுகை

காமமாவது
ஐஹ லௌகிகம் என்றும் பார லௌகிகம்-என்றும் இரண்டு வகைப்படும் –

இஹ லோகத்தில் காமமாவது –
தந்தை தாய் ரத்னம் செல்வம் தான்யம் வஸ்த்ரம் உணவு மக்கள் நண்பர்கள்
மனைவி மாடு வீடு நிலம் சந்தனம் வெற்றிலை மலர்கள் முதலான பொருள்களைக் கொண்டு
ஸப்தம் ஸ்பர்சம் ரூபம் ரஸம் கந்தம் ஆகியவற்றை அனுபவித்து ஸூகப்படுகை –

பர லோகத்தில் காமமாவது –
இதில் விலக்ஷணமாய் -தேஜோ ரூபமான –
ஸ்வர்க்காதி லோகங்களுக்குச் சென்று பசி தாகம் சோகம் மோஹம் மூப்பு மரணம் முதலானவை இல்லாமல்
சேர்த்து வைத்த புண்யத்துக்கு ஈடாக ஸப்தம் முதலான விஷயங்களை அனுப்பவிக்கை

மோக்ஷம் -விடுபடுதல்
உடல் -சம்சாரம் -பிரகிருதி -கர்மங்கள் -பிறவி சுழலில் இருந்து
அடையும் இடத்தைப் பொறுத்து இரண்டாக
கைவல்ய ப்ராப்யம்
பகவத் ப்ராப்யம்
ஆக ஐந்து புருஷார்த்தங்கள் என்றும் சொல்லலாம் –

ஆத்ம அனுபவமாவது –
ஸம்ஸாரத்தைத் தொலைத்து-துக்க நிவ்ருத்த மாத்ரமான –
ஸூக வசிவமான ஆத்மா தன்னைத் தானே அனுபவித்துக் கொண்டு
தனிமையில் உடல் கூட இல்லாமல் என்றும் இருத்தல்

பகவத் அனுபவம் என்று சொல்லப்படும் உயர்ந்த புருஷார்த்தமான மோக்ஷமானது
கர்மங்கள் ஸம்ஸாரம் முதலானவற்றை துறந்து லீலா விபூதியைக் கடந்து நித்ய விபூதிக்குச் சென்று
அங்கு ஸ்ரீ வைகுண்டம் என்ற இடத்தில் ஸ்ரீ மன் நாராயணனை அனுபவித்துக் கைங்கர்யம் செய்வது –

ஜீவனம் salvation -மட்டுமே
உஜ்ஜீவனமே நமக்கு -பரம புருஷார்த்தம்
திரு நாராயணன் தாள் காலம் பெற சிந்தித்து இருமின்

மோக்ஷம் இஷா முமுஷு
ப்ராப்யம் ப்ராபகம் -பயன் -வழி -பேறும் ஆறும் -விருந்தும் மருந்தும்
பயனை அறிந்த பின்பே வழிகளை அறிய வேண்டும் –

மோக்ஷம் அடையும் முறை
ஜீவன் ஏதோ ஒரு உபாயத்தைப் பற்றி மோக்ஷம் அடைய முயற்சிக்கும் பொழுது
அவனுடைய பாபங்கள் பகவானால் நீக்கப் படுகின்றன

4-1-13-தத் அதிகமே -உத்தர அக பூர்வ அக யோகோ அஸ்லேஷ விநாச

தத் அதிகமே-உபாயம் கைகூடி விட்டால்

நாம் செய்த புண்ய பாபங்களில்
பயன் கொடுக்கவே தொடங்காதவற்றுக்கு ஸஞ்சித கர்மம் -என்றும் பெயர்
இந்த மூட்டையில் இருந்து சிலவற்றை -ஆரப்தம் -தொடங்கப்பட்டவை –
பலன் கொடுக்கத் தொடக்கி விட்டதை பிராரப்த கர்மம் என்றும் –

இவற்றில் தீயில் இட்ட பஞ்சு போலே -சஞ்சித கர்மத்தை -பூர்வ அகத்தை -பகவான் அழிக்கிறார்

உபாயம் செய்த பிறகு மேல் உள்ள காலத்தில் இவன் செய்யும் பாபங்களை -உத்தர அகத்தை
அந்த ஜீவனிடம் ஒட்டாதபடி செய்கிறார் –

பிராரப்த கர்மத்தை அவர் அழிப்பது இல்லை –
பல பிறவிகள் ஆனாலும் அதன் பயனை அந்த ஜீவன் அனுபவித்தே முடிக்க வேண்டும் –

அடுத்த ஸூ த்ரம் –இதர பாதே து –புண்யங்களையும் போக்கி அருளுகிறார்
மோக்ஷத்துக்கு விலக்கு -பொன் விலங்கு இவையும் முமுஷுக்கு

அநாரப்த கார்யே -சஞ்சித ஒன்றுமே
போகேந -அனுபவித்தே போக்க வேண்டும் பிராரப்த கர்மாக்களை
ஒரு பிறவியே பலவோ-பக்தி யோக நிஷ்டனுக்கு
பிராரப்த கர்மம் இருந்தால் தான் -மரணம் அடைந்தால் முக்தி -மரணம் அடைவித்து முக்தி இல்லையே

அந்த ஜீவனிடம் இருந்து விலகுகிற சஞ்சித கர்மாவில்
புண்யங்களை இவனுடன் பிரியத்தோடு அனுகூலராய் இருப்பவர்களையும்
பாபத்தை இவனை வெறுப்பவர்கள் -பிரதிகூலராய் இருப்பவர்களையும் அடையும்
3-3-26-இத்தைச் சொல்லும் –

எப்பொழுது போகும் –
குதிரை சிலிர்த்து மயிர்களை தள்ளி
ராகு இடம் பிடிப்பில் இருந்து சந்த்ர ஸூர்ய விடுபடுவது போல்
உடல் நீங்கும் பொழுது பாப புண்யங்கள் போகும் என்றும்
விரஜையில் நீராடிய பின்பே அனைத்தும் நீங்கும்
இரண்டும் சுருதியில் உண்டே

கடைசி உடல் எப்பொழுது விழுகிறதோ அப்பொழுது தான் அனைத்து கர்மங்களும் தொலைக்கப் படுகின்றன
அதற்குப் பிறகு இந்த உலகத்தைக் கடந்து முக்தி அடைய இந்த ஜீவாத்மா உபயோகிக்கும்
ஸூஷ்ம சரீரம் -நுண்ணிய உடல் – இவன் செய்த பக்தி -சரணாகதியின் பெருமையால் ஏற்பட்டதே தவிர கர்மத்தால் அல்ல

ஜீவாத்மா புறப்பட வேண்டிய வேளையிலே இவன் செய்த உபாயத்தால் சந்தோஷம் அடைந்த பரமாத்மா
இருதயத்தில் இருந்து கொண்டு இருட்டான ஹிருதயத்தில் இந்த ஜீவாத்மா செல்ல வேண்டிய பாதையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்
4-2-14-லோக அக்ர ஜ்வலனம் -ஹார்த்தமான பகவத் அனுக்ரஹம் –
உடலில் இருக்கும் 101-நாடியான ஸூஷ்ம்நா நாடி மூலமாக தலையின் உச்சி வழியே ஜீவாத்மா வெளியே புறப்பட்டு
அர்ச்சிராதி கதி -மார்கம் -மூலமாகப் பரம பதத்தை நோக்கிச் செல்கிறார் –

ஒளி உலகம் -பகல் உலகம் -வளர்பிறை உலகம் -உத்தராயண உலகம் -ஆண்டு உலகம் -ஸூர்ய உலகம் -சந்த்ர உலகம் –மின்னல் உலகம் –
முதலானவற்றைக் கடந்து -அங்கு இருக்கும் தேவர்களால் வழி நடத்தப்பட்டு
லீலா விபூதிக்கும் நித்ய விபூதிக்கும் இடையில் உள்ள விராஜா நதியில் நீராடி -அதுவரை இருந்த ஸூஷ்ம உடலையும் தொலைத்து
நித்ய விபூதிக்குள் புகுந்து அங்கே திவ்யமான அழகிய திருமேனியைப் பெறுகிறான் –

இதுவரை சம்சாரத்தாலும் கர்மங்களாலும் ஜீவாத்மாவின் இயற்கையான பல குணங்கள் மூடப்பட்டு இருந்தன
அவை இப்பொழுது விளங்குகின்றன –
ஸ்வேன ரூபேண அவி நிஷ்பத்யதே -சேற்றில் விழுந்த வைரம் போல் கீழே ப்ரக்ருதி விஸிஷ்ட ஆத்மா –
ஸ்வரூப ஆவிர்பாவம் -ஸூ ர்யன் கிழக்கு திக்கில் தோன்றுவது போல் –
எனவே ஜீவாத்மாவும் அக் குணங்களில் பரமாத்வாவுக்கு நிகராகிறார் –

அந்த முக்தன் தான் ஆசைப் பட்டத்தைச் செய்ய முடியும் -அஸ்ய சங்கல்ப ஏவ -ஸத்ய ஸங்கல்பம் -ஸத்ய காமத்வம் -உண்டே –
தன் பித்ருக்களைக் காண வேண்டும் என்று நினைத்தாலே உடனே அவர்கள் அங்கேயே தோன்றுவார்கள் –

முக்தி அடைந்த ஜீவன் எட்டு கல்யாண குணங்களிலும் ஆனந்தத்தில் மட்டுமே பரமாத்மாவுக்கு நிகராவார்
ஜகத் வியாபார வர்ஜம் -ப்ரகரணாத் அசந்நிஹித்வாத்
போக மாத்ர சாம்யா லிங்காத் -நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி
ஜகத்தைப் படைப்பது காப்பது அழிப்பது முதலான தொழில்கள் பரமாத்மாவுக்கே உண்டு

ப்ரஹ்ம அலங்காரம் சதம் மாலா அஞ்சன ஹஸ்தா இத்யாதி -திரு மா மணி மண்டபம்
நடுவாக வீற்று இருக்கும் -அஹம் அன்னம் –அஹம் அந்நாத –அநா வ்ருத்தி சப்தாத்-4-4-22 -நச புந ஆவர்த்ததே

ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து கொண்டு மற்ற முக்தர்களோடும் நித்யர்களோடும் சேர்ந்து பகவானை அனுபவித்து
அந்த ஆனந்தத்தால் அவருக்கு கைங்கர்யம் செய்து கொண்டு இருப்பதே மிகச் சிறந்த புருஷார்த்தமான பகவத் ப்ராப்தி ஆகும்

இப்படி முக்தி அடைந்த ஜீவன் என்றும் திரும்பி வருவதே கிடையாது -நச புந ஆவர்த்ததே -என்று வேதங்கள் கூறுகின்றன –

இந்த வுடல் விட்டு இரவி மண்டலத்தூடு ஏகி
இவ்வண்டம் கழித்து இடையில் ஆவரணம் ஏழ் போய்
அந்தமில் பாழ் கடந்து அழகார் விரசை தனில் குளித்து அங்கு
அமானவனால் ஒளிக் கொண்ட சோதியும் பெற்று அமரர்
வந்து எதிர் கொண்டு அலங்கரித்து வாழ்த்தி வழி நடத்த
வைகுந்தம் புக்கு மணி மண்டபத்துச் சென்று
நம் திருமால் அடியார்கள் குழாங்களுடன் கூடும்
நாள் எனக்குக் குறுகும் வகை நல்கு என் எதிராசா–23-

சரீர பாத சமே து கேவலம் மதீயயைவ தய்யா அதிபர புத்த
மாமேவா வலோகயன் அப்ரச்யுத
பூர்வ சம்ஸ்கார மநோரத
ஜீர்ண மிவ வஸ்த்ரம் ஸூ கேன இமாம் ப்ரக்ருதிம்
ஸ்தூல ஸூ ஷ்ம ரூபாம் விஸ்ருஜ்ய
ததா நீமேவ மத பிரசாத லப்த
மச் சரணார விந்த யுகளை
காந்திகாத் யந்திக பரபக்தி பரஜ்ஞான பரம பக்தி க்ருத
பரி பூர்ண அநவரத நித்ய விசததம
அநந்ய பிரயோஜன அநவதிக அதிசய ப்ரிய
மத் அனுபவ ஸ்தவம்
ததாவித மத் அனுபவ ஜனித
அநவதிக அதிசய ப்ரீதி காரிதா
அசேஷ அவஸ்த உசித
சேஷ சேஷ தைக ரதி ரூபா
நித்ய கிங்கரோ ப விஷ்யசி–ஸ்ரீ சரணாகதி கத்யம்—சூரணை -20-21-22-23

————-

உபாயம் வழி ஹிதம் பார்த்து
நியாய மீமாம்ஸ சுருக்கங்கள் பார்த்து –
அவை வேதாந்த பாடத்துக்கு உதவு மவற்றைப் பார்த்து நிகமிப்போம் –

பாடம் -39—மோக்ஷ உபாயங்கள் –

முமுஷு க்களுக்கு மட்டும் அல்லாமல் அனைவருக்கும்
ஸூவ ஞானம் ப்ராப்ய ஞானம் ப்ராபக ஞானம் -மூன்றும் அறிய வேண்டும்
தன்னைப் பற்றிய அறிவு -பிரகிருதி உடலை விட வேறுபட்ட -அறிவுடைய -சேஷ பூதன் –
ஆத்மாவைப் பற்றி முன்பே பார்த்தோம் –

ப்ராப்யம் -புருஷார்த்தங்கள் முன்பு பார்த்தோம் –
தர்மம் அர்த்தம் காமம் மோக்ஷம் -நான்குக்கும் வழிகள்
உத்புத யாகம் பசு அடைய
செழிப்புக்கு வாயு தேவதை
ப்ரஹ்ம தேஜஸ்ஸூ ஸுர்ய தேவதை பற்றி யாகம் –
ஜ்யோதிஷ்டோம ஹோமம் ஸ்வர்க்கம் –
இவை அனைத்துக்கும் உபாயங்களை ஸ்ருதி சொல்லும் –

பரம புருஷார்த்த லக்ஷணத்துக்கு உபாயம்
பலத்துக்கு அருகில் அழைத்துச் செல்லப்படுவதே உபாயம் –

உபாயங்கள் வேறு -பல பிரதம் -ப்ரஹ்மமே -ரக்ஷகம் –
ஆசைப்படும் பலனை அறிந்து கொடுக்க பரம சேதனன் வேண்டுமே –

பக்த்யா ப்ரபத்யா -மஹா முனே–வேறே வழி இல்லை -கைங்கர்யம் செய்ய -ஸம்ஹிதை சொல்லும்
ப்ரஹ்ம வித் ஆப் நோதி பரம் -தைத்ரியம்
ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி -சாம்யா பத்தி கீழே பார்த்தோம் –

விஞ்ஞாய -அறிந்து பிரஞ்ஞாம் அறிந்து கொண்டு -அறிந்து அறிந்து தேறி தேறி -பல நிலைகள் உண்டே

ஸ்ருதி உபாயம் பற்றித் தெளிவாக
ப்ரஹ்மத்தை அறிந்தால் அவரை அடையலாம் -என்று சொல்லும்
அறிதல் இங்கு ஓர் இரண்டு முறை அறிவது அல்ல
ஸ்ருதியே -ப்ரஹ்மத்தைத் தியானிக்க வேண்டும் -என்றும் சொல்லும்
ஆக அறிதல் -இடைவிடாமல் தியானித்தல் என்றபடி
தைல தாராவத் -அவிச்சின்ன ஸ்ம்ருதி சந்தான ரூபம்

ஆத்மா அரே த்ரஷ்டவ்யா -ஸ்ரோதவ்யா-மந்தவய-நிதித்யாஸி தவ்ய –
மேலும் அந்த த்யானம் நீடிக்க நீடிக்க -நேரே காண்பது போல் த்யானிக்கப் பெறுவோம்
இது தான் தர்சன சமானா கார த்யானம்
தர்சனமே புருஷார்த்தம் -அந்த அளவுக்கு தெளிவாக த்யானம் வேண்டுமே –

இது சாதாரணம் அல்ல -தன் இடம் பக்தி உள்ளோருக்கு மட்டும் தானே தன்னைக் காட்டிக் கொடுக்கிறார் என்றும் ஸ்ருதி சொல்லும்
நாயமாத்மா ஸ்ருதி –பேசியோ -கேட்டோ ஆலோசனையாலோ த்யானத்தாலோ அறிய முடியாது
யாரைத் தேர்ந்து எடுக்கிறானோ அவனே காண்பான்
விஸ்வரூபம் காண திவ்ய சஷுஸ் கொடுத்து காணும் படி அனுக்ரஹித்தால் போல்

நான் ஞானிகளுக்கு பிரியமாக இருக்கிறேன் -அப்படிப்பட்ட ஞானிகளை நானும் விருன்புக்கிறேன் -கீதை
ப்ரியதம வரணம் -ஸ்=வயம் வரம் போல் -தேர்ந்து எடுப்பது பக்தர்களையே
தேர்ந்து எடுத்துக் காட்டிக் கொடுத்து -அவர்களே தனக்கு ஆத்மா -மே மதம் –
வேதனம்–உபாசனம் -த்யானம் -நிதித்யா சனம் -இவை அனைத்தும் – ஸ்நேக பூர்வ அநு த்யானம்

கீதார்த்த ஸங்க்ரஹம் முதல் ஸ்லோகம் —ஸூவ தர்மம் –ஞானம் -வைராக்யம் -சாத்ய பக்தி ஏக கோசர
பக்தி யோகம் வேறே -பக்தி வேறே -நியமத்துடன் செய்வது -அங்கங்கள் உடன்
வேதார்த்த ஸங்க்ரஹம் –ஜீவ பர யாதாத்மா ஞான பூர்வக -வர்ணாஸ்ரம கர்மங்களை செய்து -த்யான -அர்ச்சன -ப்ரணாம –
ஸ்மரணம் கீர்த்தனம் பாத சேவகம் அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் -அஷ்ட வித பக்தி

எனவே தியானத்தை பக்தியுடன் செய்ய வேண்டும் -இதுவே பக்தி யோகம் ஆகும் –
பக்தி யோகம் ஏற்பட வேண்டுமானால் அதற்கு முன் கர்ம யோகமும் ஞான யோகமும் கை கூட வேண்டும் –

கர்ம யோகம்
ஜீவாத்மா பரமாத்மா இருவரையும் உண்மையாக அறிந்து
மூன்று வித த்யாகங்களுடன் -வர்ணாஸ்ரம தர்மத்தை பகவத் ஆராதனமாகவே நினைத்து செய்தல்

அந்த மூன்று வித தியாகங்கள்
1- கர்த்ருத்வ புத்தி தியாகம் -நான் தான் இந்தச் செயலைச் செய்கிறேன் -என்ற எண்ணத்தை விடுதல்
2- மமதா தியாகம் -இது என்னுடைய கர்மம் என்ற எண்ணத்தை விடுதல்
3-பல சங்க தியாகம் -அந்த கர்ம பலன்களில் ஆசையை விடுதல்

தபஸ்ஸூக்கள் -தீர்த்த யாத்திரை -தானம் யஜ்ஞம் -முதலியவற்றைச் செய்தல் எல்லாமே கர்ம யோகம் ஆகும்
கீதார்த்த ஸங்க்ரஹ ஸ்லோகம் இவற்றைக் காட்டும்

இப்படி கர்மயோகம் செய்து கொண்டே வந்தால்
அந்தக் கர்மங்கள் அவன் சேர்த்து வைத்து இருக்கும் பழைய பாபங்களை எல்லாம் போக்கும்
அவை குறைந்தால் மனசில் ஸத்வ குணம் வளரும்
அதன் மூலம் மனத்தை ஒருமித்து ஒரு விஷயத்தைத் த்யானிக்கத் தகுதி உடையதாகும்

இந்த கர்ம யோகம் ஞான யோகம் மூலமாகவும் பக்தி யோகத்தை ஏற்படுத்தும்

ஜனக மஹாராஜர் போல்வார் கர்ம யோகத்தாலேயே நேராக பக்தி யோகம் போவதையும் கீதையில் உண்டு

1-யஜமான சம்ஹ்யா -ஆமை போல் விஷயங்களில் இருந்து இந்திரியங்களை திருப்பி
2-வியதிரேக சம்ஹ்யா
3-ஏகேந்த்ரிய சம்ஹ்யா-மனசைக் கட்டுப்படுத்துதல்
4-வசீகர சம்ஹ்யா
இப்படி வைராக்யம் வளர வேண்டும்

ஞான யோகம்
மனதைக் கட்டுப்படுத்தி -புலன்களையும் கட்டுப்பாட்டில் வைத்து -ப்ரக்ருதியில் காட்டில் விலக்ஷணமான
பரமாத்மாவின் உடலான -சேவகனான ஜீவாத்மாவை தியானித்தல் –

பக்தி யோகம்
அன்போடு நேரே காண்பது போல் தெளிவாக அறியும் அளவுக்கு பகவானை இடைவிடாமல் தியானித்தல்
பக்திஸ் ச ஞான விசேஷ -ஞானம் கனிந்த நலமே பக்தி

இதற்கு -சாதன ஸப்தகம் -ஏழு காரணங்கள் உண்டு
1-விவேகம் -குற்றமற்ற உணவால் உடலை ஸூத்தமாக வைத்துக் கொள்ளுதல் -ஆகார ஸூத்தி -ஸத்வ சித்தி
ஜாதி- வெங்காயம் போல்வன – ஆஸ்ரய -யார் பொருள் -நிமித்த-தலை முடி விழுந்த – துஷ்டங்கள் இல்லாமல் –
2-விமோகம் -எந்தப் பொருளிலும் அதிகமாக ஆசை வையாது இருத்தல்
3-அப்யாஸம் -பகவானின் திருமேனியை எப்பொழுதும் -எந்தத் தொழில்களை செய்து கொண்டு இருந்தாலும் நினைக்கை
த்யானம் -யோக காலம் -அவனை தியானிப்பது போல் மற்ற சமயங்களிலும் நினைக்க வேண்டும் ஸூபாஸ்ரயம் -அன்றோ
த்யானம் போல் ஆசன நியமாதிகள் வேண்டாம் -ஆலம்பநம்
4-க்ரியா -வர்ணாஸ்ரம தர்மங்களை இயன்ற அளவும் செய்கை
5-கல்யாணம் -உண்மை பேசுதல் நேர்மை தயை தானம் அஹிம்சை போன்ற குணங்கள்
சத்யம் ஆர்ஜவம் தயா தானம் அஹிம்சை போன்ற குணங்கள்
6-அந வாஸம் -எந்தக் காரணத்துக்காகவும் மிகவும் வருந்தாமை
7-அநுத் தர்சம் -எந்தக் காரணத்துக்காகவும் மிகவும் மகிழ்ச்சி அடையாமை –
ஸூக துக்க சாம்ய புத்தி வேண்டுமே –

இந்த பக்தி யோகத்தில் மூன்று நிலைகள் உண்டு
1-பர பக்தி -பகவானைக் காண வேண்டும் என்ற ஆசை மிகுந்து அவரை தியானித்தல்
2-பர ஞானம் -நேரே காண்பது போல் பகவானை தியானிக்கும் நிலை
3-பரம பக்தி -பகவானைக் காண வேண்டும் என்ற ஆசை மிகுந்து அவரை தியானித்தல் –

பர ஏகாந்த ப்ரீத்யா –
ஞானம் தர்சனம் பிராப்தி நிலைகள் இவை-

பக்தி யோகம் கொண்டு ஐஸ்வர்யமும் கைவல்யமும் -பகவத் ப்ராப்தி-மூன்றும் பெறலாம்
உண்மையான ஸ்வரூபம் அறிந்து முமுஷுவான பின்பு பகவத் பிராப்தி –
அனுபவ ஜனித்த ப்ரீதி கார்ய கைங்கர்யம் ஒன்றையே பிரார்த்திப்பார்கள் அன்றோ –

சாதன பக்தி
ஸாத்ய பக்தி
ஸஹஜ பக்தி -இவையும் உண்டே

சரணாகதி
பக்தி யோகம் செய்ய சக்தி இல்லாதவர்களுக்கு சரணாகதி
சக்தி இருந்தாலும் கூட -பிராப்தி -ஜீவாத்மாவின் உண்மையை தெளிவாக அறிந்து –
பக்தி யோகம் செய்வது கூடாது என்று சரணாகதி செய்வார் நம் பூர்வாச்சார்யர்கள்
ஜீவாத்மா பகவானுக்கு அடிமை -சொத்து -என்று புரியப் புரிய
ஸூய யத்னம் ஒன்றும் இல்லாமல் அவனே நம்மைக் கைக்கொள்ளுவார் என்று மஹா விச்வாஸமும்
அவன் நம்மைக் கைக்கொள்ளும் போது அவனை விலக்காமையும் போதும் என்கிற
புரிதல் வந்தபின்பு பக்தி யோகம் செய்வது தவறு என்று உணர்ந்து சரணாகதியை ஒரே வழி என்று அறிகிறோம் –

நான் ஆசைப்படும் பொருளை அடைய வேறே வழிகள் இல்லாத போது –
ஒருவர் இடம் மஹா விஸ்வாஸம் வைத்து வேண்டுதல் தான் சரணாகதி என்று சாஸ்திரங்கள் கூறும்

எனவே சரணாகதி என்பது
பரமாத்மாவே நமக்கு முக்தி அடைய உபாயம் என்ற உறுதி மட்டுமே –
அதற்குள் நாம் பரமாத்மாவிடம் வைக்கும் பிரார்த்தனையும் அடங்கி இருக்கும்

அநந்ய சாத்யே –மஹா விஸ்வாஸ பூர்வகம்– ததேக உபாய தயா யாஸ்மிதா —
இதி -ப்ரார்த்தனா கர்ப்பமான மதி சரணாகதி –
அவனே உபாயம் -மாம் ஏகம் அர்த்தம் -குஹ்ய தமம்

ஒருவன் சரணாகதி செய்து விட்டால்
அவனுக்குத் தானாகவே ஏற்படும் சில ஸ்வ பாவங்கள் உள்ளன -அவகாத ஸ்வேதம் போல் –
1-அனுகூல்ய சங்கல்பம் -பரமாத்மாவுக்கு பிடித்தத்தை மட்டுமே செய்வேன்
2-பிராதி கூல்ய வர்ஜம் -அவருக்குப் பிடிக்காததை தவிர்த்தல்
3-ரஷிஸ்யதி விஸ்வாச -அவர் கண்டிப்பாக காப்பாற்றுவார் என்ற உறுதி
4-கோப்த்ருத்வ வரணம் ததா -அவரே காக்க வேண்டும் என்று தேர்ந்து எடுத்தல்
5-கார்ப்பண்யம் -கர்வம் இன்மை
6-ஆத்ம நிஷேபம் -ஆத்மாவைக் காக்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைப்பது –

ஆச்சார்ய அபிமானம் -நம் சம்பிரதாய -விசிஷ்டாத்வைத அசாதாரணம் இது

(ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் அருளிச் செய்த அர்த்த பஞ்சகம் –
ஆச்சார்ய அபிமானம் ஆவது -இவை ஒன்றுக்கும் சக்தன் இன்றிக்கே ஒருவனைக் குறித்து –
இவனுடைய இழவையும் -இவனைப் பெற்றால் ஈஸ்வரனுக்கு யுண்டான ப்ரீதியையும் அனுசந்தித்து
ஸ்த நந்த்ய பிரஜைக்கு வியாதி யுண்டானால் அது தன் குறையாக நினைத்து
ஔஷத சேவை பண்ணும் மாதாவைப் போலே இவனுக்காகத் தான்
உபாய அனுஷ்டானம் பண்ணி ரஷிக்க வல்ல பரம தயாளுவான மஹா பாகவதன் அபிமானத்திலே ஒதுங்கி
வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டும் -நாச்சியார் -10-10-என்று சொல்லுகிறபடியே –
சகல ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளையும் அவனிட்ட வழக்காக்குகை –
எம்பெருமான் தனித்து நித்ய சித்த ப்ராப்யனாகா நிற்கச் செய்தே
சகல தேவதாந்த்ர்யாமியாயாய்க் கொண்டு ப்ராப்யன் ஆகிறாப்
இவ்வாச்சார்ய அபிமானமும் தனியே உபாயமாகா நிற்கச் செய்தேயும்
எல்லா உபாயங்களுக்கும் சஹ காரியுமாய் ஸ்வ தந்த்ரமுமாய் இருக்கும் )

சரணாகதி செய்யும் பொழுது பகவான் கண்டிப்பாக ரக்ஷிப்பார் என்கிற மஹா விச்வாஸம் வேண்டுமே
அது ஏற்படுவது மிகவும் துர்லபம்
நாம் சேர்த்து வைத்து இருக்கும் பாபங்கள் கனத்தைப் பார்த்தாலும்
ஈஸ்வரன் நிரங்குச ஸ்வ தந்த்ரர் என்பதைப் பார்த்தாலும்
ஒரு வேளை கைக் கொள்ளாமல் போவாரோ என்கிற சந்தேகம் ஏற்படலாம்
அதனால் சரணாகதி செய்ய சக்தி இல்லாதவர் களுக்காக உள்ள ஒரே உபாயம் தான் ஆச்சார்ய அபிமானம்

நம்முடைய இயலாமையைக் கண்ட ஒரு பக்தர்
நம்மை அடைந்தால் பகவான் பெரும் ஆனந்தமே ஹேதுவாக திரு உள்ளம் பற்றி
நம்மால் செய்ய முடியாத சரணாகதியை நமக்காக அவர் செய்கிறார்
பால் குடிக்கும் குழந்தைக்கு உடல் நிலை சரி இல்லை என்றால் தாய் தானே மருந்தைக் குடிப்பது போலே
நம் இயலாமையால் அவர் நமக்காக பகவான் இடம் சரணாகதி செய்கிறார்

அப்படி தயையுடைய பக்தரின் நிழலில் ஒதுங்கி
அவருடைய அபிமானத்துக்கு இலக்காகி
நாம் இருப்பதே ஆச்சார்ய அபிமானம் ஆகும்
அவர் உபதேசித்தபடி வாழ்க்கையை அமைத்துக் கொண்டு –
அவர் இட்ட வழக்காக நாம் வாழ்ந்து வந்தால்
அதற்காகவே பகவான் உகந்து நமக்கு முக்தி அளிக்கிறார் என்று ஸாஸ்த்ரங்கள் கூறும்

பசுர் மனுஷ்ய பஷீ வா யே ச வைஷ்ணவ சம்ஸ்ரயா
தேநை வ தே ப்ரயாஸ் யந்தி தத் விஷ்ணோ பரமம் பதம்
அதாவது
விலங்கோ மனிதனோ பறவையோ ஒரு ஸ்ரீ வைஷ்ணவனை அண்டி வாழ்ந்து வந்தால் –
அதனாலேயே அவர்கள் பரமபதத்தை அடையலாம்
அளியல் நம் பையல் என்று அபிமானம் ஒன்றே வேண்டுவது –

இதுவே நாம் அனைவருக்காகவும் பகவான் ஏற்படுத்தியுள்ள சிறந்த எளிய நெறி ஆகும் –

—————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கணாதர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாசர் -பாதராயணர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நியாய மீமாம்ச வேதாந்த பாடங்கள்–ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்–பகுதி -3 –வேதாந்த சாஸ்த்ரம்– பாடங்கள் -21-30 —

August 5, 2021

பாடம் -21-ஆத்மா –
ஆத்மா பொதுச்சொல்லை அறிந்து பின்பு ஜீவாத்மா பரமாத்மா பாகுபாட்டை அறிவோம் –
ஆத்மா -நான் என்கிற அறிவுக்கும் பேச்சுக்கும் விஷயமாக இருப்பவர் -இலக்காக இருப்பவர் –
நான் என்கிற அறிவும் சொல்லும் ஆத்மாவைக் குறிக்கும் –நம் உடலை அல்ல
தேக ஆத்மா விபாகம் விரிவாக பின்பு பார்ப்போம்
ஆத்மா ஞானம் என்ற பொருளால் ஆக்கப்பட்டது —
மண்ணால் குடங்களும் -தங்கத்தால் ஆபரணங்களும் -பஞ்சால் துணிகளும் -ஆக்கப்பட்டவை போலே ஆத்மா ஞானத்தாலேயே ஆக்கப்பட்டது –
உப்புக்குக் கட்டி எங்குமே உப்பு மயமாக இருப்பது போல் ஆத்மாவும் முழுவதுமே ஞான மயமாகவே இருக்கும் –
நியாய மதத்தின் படி ஞானம் குணமே-தன்மையே தவிர – த்ரவ்யம்-பொருள் – அல்ல –
ஆனால் வேதாந்தப்படி ஞானம் தனியாக த்ரவ்யம்
ஞானம் – ஞானம் நகரு கிறது -விரிகிறது சுருங்குகிறது –இது போல் செயல்கள் த்ரவ்யத்துக்குத் தானே இருக்க முடியும்
தன்மை குணத்துக்கு கூடாதே –ஆகவே மண் தங்கம் பஞ்சு போல் இதுவும் த்ரவ்யமே
ஆத்மாக்கள் கோடிக்கணக்கானவை –
தங்க துகள்கள் தங்கத்தாலே ஆனது போல் ஆத்மா ஞானத்தால் ஆன ஸூஷ்மமான -நுண்ணியதாக பொருள் –

ஆத்மா ஸ்வயம் ப்ரகாஸம் ஆனவர் –
ஜடம் -தானாக பிரகாசிக்காது
அஜடம் -தானாகப் பிரகாசிக்கக் கூடியது -இதுவே ஸ்வயம் பிரகாசம் –
இங்கு பிரகாசம் -ஒளி விடுதல் என்கிற பொருளில் இல்லை -தோற்றுதல் என்கிற பொருளில் உண்டு –
குருவின் உபதேசத்தால் எனக்கு அர்த்தம் பிரகாசிக்கிறது தோற்றுகிறது -என்னுமா போலே -தெளிவாக தோற்றுகிறது என்று பொருள்
தோற்றுதல் -வ்யவஹார யோக்யத்வம் -தகுதி உடையதாக இருத்தல் -வியவஹாரம் பேச்சு செயல் –
குடத்தைப் பற்றி வ்யவஹாரம் செய்கிறேன் என்றது குடத்தைப் பற்றி பேசுகிறேன் -அல்லது குடத்தை கையிலே வைத்து உள்ளேன் போல் –
அறியாத பொருளைப் பற்றி வியவஹாரம் செய்ய முடியாதே –
அறியப் படுவதாவது -அறிவுக்கு விஷயமாதல் -இலக்கு ஆதல் –
ஆக
1- ஒரு பொருள் முதலில் அறிவுக்கு விஷயம் ஆகிறது
2- இதனால் அது பிரகாசம் அடைகிறது -தோற்றுகிறது -வியவஹாரம் செய்ய தகுதி யாகிறது –
3- அந்த வியவஹாரம் செய்யப்படுகிறது -பேசப்படுகிறது -கையாளப் படுகிறது –

எனவே ஒரு பொருள் பிரகாசிக்க -அது முதலில் அறியப்பட வேண்டும் –
ஒரு குடம் அறியப்பட வேண்டும் என்றால் ஒரு ஜீவாத்மா தன்னுடைய ஞானத்தை
கண் மூலமாக வெளியே செல்ல வைத்து –
வெளிச்சத்தின் உதவியோடு அத்தை அறிய வேண்டும் –
ஆகவே ஒரு குடத்துகை அறிய கண் வெளிச்சம் ஞானம் போன்றவற்றின் உதவி தேவை
ஆகவே குடம் ஜடம் -தானாகாத் தோற்றாத த்ரவ்யம் -பொருள்
உலகப் பொருள்கள் அனைத்துமே இப்படி ஜடம் -தானாகாத் தோற்றாதவை –

இப்பொழுது ஞானம் -என்ற த்ரவ்யத்தை எடுத்துக் கொண்டால்
அறிவைப்பற்றிய வ்யவஹாரம் -எனக்கு இந்த அறிவு ஏற்படுகிறது -நான் இதை அறிகிறேன் போன்ற பேச்சு வர
அறிவு முதலில் பிரகாசிக்க தோற்ற வேண்டும் –
அறிவு அறியப்பட வேறே ஒரு பொருளின் உதவி வேண்டாம் -அறிவு தோன்றும் போது அத்துத்தானாகவே தன்னையும் அறிவிக்கிறது
விளக்கு இருட்டையும் போக்கி -தன்னைத்தானே பிரகாசிப்பது போல் -அறிவும் மற்றப் பொருள்களையும் பிரகாசப்படுத்தி தானும் பிரகாசிக்கும் –
ஆகவே அறிவு அஜடம் -ஸ்வயம் பிரகாசம் -தானாகவே தோற்றுவது –
ஆத்மாவும் ஞானத்தால் ஆக்கப்பட்ட பொருள் ஆதலால் -ஸ்வயம் பிரகாசம் -அஜடம் –

ஆத்மா ப்ரத்யக்
உலகப்பொருள்கள் ப்ரத்யக் பராக் இரண்டு வகைப்படும் –
பராக் -வேறே ஒருவருக்குத் தோற்றம் அளிக்கும் பொருள்
ப்ரத்யக் -தனக்குத் தானே தோற்றம் அளிக்கும் பொருள் –
குடம் துணி போன்றவற்றை அறிவைக் கொண்டே ஆத்மா அறிகிறார் -குடம் தன்னைத்தானே குடம் என்று அறியாது –
ஆத்மா தன்னைத்தானே அறிகிறார் -நான் -நாம் -சொல்வதால் =நம்மை நாம் அறிகிறோம் -என்பது விளங்கும் –
ஆகவே ஆத்மா ப்ரத்யக் –
ஒரு பொருள் பேசப்பட வேண்டும் என்றால் அது அறியப்பட வேண்டும் –அறிவுக்கு விஷயமாக வேண்டும் –
நான் நாம் சொல்லும் பொழுது -நம்மைப் பற்றியே பேசுகிறோம் –
இதற்கு முன் ஆத்மா என்ற ஆத்மா அறிவுக்கு விஷயமாக ஆகி இருக்க வேண்டும் —
அது வேறே ஒரு அறிவு அல்ல -ஆத்மா என்ற அறிவு தான்
ஆத்மாவே அறிவு வடிவமானவர் –
ஞானம் என்றால் அதற்கு விஷயம் இருக்க வேண்டும்
ஆத்மா என்ற ஞானத்துக்கு எது விஷயம் என்றால் தான் மட்டுமே தான் விஷயமாக ஆகிறது –

ஆத்மா சேதனர் –
சைதன்யம் என்றால் அறிவு -ஞானம் என்று பொருள்
சைதன்யம் உடைய பொருள் சேதனம் என்று சொல்லப்படுகிறது –
ஆத்மா ஞானமே வடிவானவர் என்று பார்த்தோம் -இனி ஆத்மா ஞானத்தையும் உடையவர் என்பதையும் பார்ப்போம் –
பஞ்ச பூதங்களில் தேஜஸ்ஸூ ஓன்று -நெருப்பு தீபம் -போன்றவை தேஜஸ்ஸால் ஆனவை –
தீபம் ஓர் இடத்தில் இருந்தாலும் -ஒளி சுற்றும் பரவுகிறது –
ஒளி விளக்கின் குணம் என்று சொல்ல முடியாதே – குணம் ஓர் இடத்தை விட்டு நகராதே –
சுற்றி இருக்கும் ஒளி -பிரபா -அதுவும் தேஜஸ்ஸாலே ஆன த்ரவ்யம் –
எனவே தீபம் பிரபை -இரண்டு த்ரவ்யங்கள் -இரண்டுமே தேஜஸ்ஸாலேயே ஆனவை –
பிரபை எப்பொழுதும் தீபத்தையே அண்டி இருக்கும் -தனியாக இருக்க முடியாது –
தீபம் அழிந்தால் சுற்றி இருக்கும் பிரபையும் அழிந்து விடுமே –
அதே போல் இங்கும் ஞானம் -என்று ஒருவகையான த்ரவ்யம் -அதனால் ஆக்கப்பட்ட இரண்டு பொருள்கள் –
முதல் பொருள் தீபத்தை தனது ஸ்தானத்தில் கொண்ட ஆத்மா -அணுவாக ஓர் இடத்தில் இருப்பார் –
தீபத்தை அண்டி இருக்கும் பிரபை போலே ஆத்மாவையே ஆஸ்ரயித்து இருக்கும் – மற்றை ஓரு ஞானப் பொருள் –
அது தான் தர்ம பூத ஞானம் –ஆத்மாவின் அறிவு -சைதன்யம் –
இந்த அறிவு த்ரவ்யமாக இருந்தாலும் ஆத்மாவினுடையபிரிக்க முடியாத தன்மை ஆகும்
ஞானமே வடிவான ஜீவாத்மா ஞானத்தையும் உடையவராகவும் இருக்கிறார் –

அறிவு -தர்ம பூத ஞானம் -சைதன்யம் -ஞானம் வடிவு -ஸ்வயம் பிரகாசம் -பராக் -அசேதனம் –
ஆத்மா -ஞானமே வடிவானவர் -அதனாலே -ஸ்வயம் பிரகாசம் -ப்ரத்யக் –சேதனம் –
ஆத்மா ஞானத்தை உடையவர் –அதனால் சேதனம் –
தன்னைத்தானே அறிபவர் -ஆகவே ப்ரத்யக்
அறிவு என்பதும் ஞானமே வடிவானது -எனவே இதுவும் ஸ்வயம் பிரகாசம் –
அது ஞானத்தை உடையது அல்ல -எனவே அசேதனம்
அறிவு தானே அறியாது-ஆத்மாவுக்கு அறிவிக்கும் -ஆகவே பராக்
குடம் ஞான வடிவம் ஆனது அல்ல -எனவே அஸ்வயம் பிரகாசம் –
அது ஞானத்தை உடையது அல்ல –எனவே அசேதனம் –
குடம் தான் தன்னை அறியாது – ஆத்மாவால் தான் அறியப்படும் -ஆகவே பராக் –

ஆத்மாவின் லக்ஷணம்
இப்படிப்பட்ட ஆத்மாவின் லக்ஷணங்கள்
1-ப்ரத்யக்காய் இருத்தல் -தன்னைத்தானே அறிதல்
2-சேதனனாய் இருத்தல் -அறிவுடைய பொருளாக இருத்தல்
3-சரீரத்வம் -உடலைக் கொண்டதாக இருத்தல்

இந்த லக்ஷணங்கள் அனைத்துக்கும் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கு பொதுவானவை –

ஜீவாத்மாவின் தனிப்பட்ட லக்ஷணம் என்ன என்றால்
1- அணுவாக இருந்து கொண்டு சேதனமாய் இருத்தல் -அணுத்வே சதி சேதனத்வம்
பரமாத்மா அணு அல்ல -விபு -உலகில் அனைத்து இடங்களிலும் இருக்கக் கூடியவர் -எனவே அவருக்கு இது பொருந்தாது –
2- இயற்கையான அடிமையாக இருந்து கொண்டு சேதனமாய் இருத்தல் -ஸ்வாபாவிக சேஷத்வே சதி சேதனத்வம் –
பரமாத்மா தன்னிடம் அதிகமான பக்தி உடையவர்களுக்குத் தான் ஆசைப்பட்டு அடிமை செய்கிறான்
ஆனால் அது பக்தியால் வந்த அடிமைத்தனமே தவிற இயற்கையானது அல்ல –

எனவே இயற்கையான அடிமைத் தனத்தை உடைய அறிவாளி ஜீவாத்மா மட்டுமே –

————-

பாடம் –22- ஜீவாத்மாவின் தனித்தன்மை

ஸ்வாமி ஆளவந்தார் ஸ்ரீ ஸித்தி த்ரயத்தில் ஆத்மாவின் தனித் தன்மையை விளக்கி அருளுகிறார்

சித்தி த்ரயம் -ஜீவாத்மா -ஞானம் -ஈஸ்வரன் மூன்றையும் ஆத்ம சம்வித் ஈஸ்வர-காட்டி அருளும்
ஆத்ம சித்தியில் -ஸங்க்ரஹ ஸ்லோகம்
தேக இந்திரிய மன பிராண தீ–அந்நிய
அநந்ய சாதன

அறிவால் ஆக்கப்பட்ட ஆத்மாவே தானே
தீ -ஸம்விக் -இரண்டு வகை ஞானம்
விளக்கு பிரபை போல்
ஆத்மா -தர்மி ஞானம் தர்ம பூத ஞானம்
ஞானமும் ஒரு த்ரவ்யம் தகானே வேதாந்தத்தில்

நான் -என்று குறிக்கப் படுபவர் ஜீவாத்மா என்பதில் சந்தேகம் இல்லை –
அவர் எப்படிப்பட்டவர் என்பதிலே பல விவாதங்கள் உண்டு
உடலே ஜீவாத்மா
புலன்களே ஜீவாத்மா –
மனதே ஜீவாத்மா
பிராண வாயுவே ஜீவாத்மா
உலகப் பொருள்களின் அறிவே ஜாவாத்மா
இந்த வாதங்களை முறி அடித்து அருளவே ஸ்வ இதர விலக்ஷணன் ஜீவாத்மா என்கிறார் ஸ்ரீ ஆளவந்தார்
தேகம் என்றால் உடல்
இது என்னுடைய உடல் என்பதால் உடலை விட்டு வேறுபாடு தெளிவு
பிராணன் என்பது நம்முடைய மூச்சுக் காற்று -ஆகவே ஆத்மா பிராணனை விட பிராணனை விட வேறுபட்டது என்பது தெளிவு
நான் கண்ணால் காண்கிறேன் மூக்கால் முகர்கிறேன் என்பதால் புலன்களில் இருந்து வேறுபட்டது என்பது தெளிவு –
தீ -என்றால் அறிவு -நான் அறிவு என்று சொல்லாமல் -அறிவுடையவன் நான் என்கிறோம் -ஆகவே அறிவும் ஜீவாத்மாவும் வேறு

அடுத்து -அநந்ய சாதன -என்கிறார்
அந்நியம் -என்றால் வேறே ஓன்று
அநந்யம் -என்றால் வேறே அல்லாதது -அதாவது தானே -என்று பொருள் –
சாதன -என்றால் அதனால் பிரகாசிப்பது
எனவே அநந்ய சாதன -என்றால் வேறே ஒரு பொருளின் உதவி இல்லாமல் தானாகவே பிரகாசிக்கக் கூடிய வஸ்து -என்றதாயிற்று
இத்தையே ஸ்வயம் பிரகாசம் -அஜடம் -என்கிறோம் –
ஒரு குடம் அறியப் பட வேண்டும் என்றால்
அறிவு -கண் -வெளிச்சம் இவை அனைத்தும் தேவை -ஆகவே அது ஜடம்-தானாகப் பிரகாசிப்பது இல்லை
ஆனால் ஆத்மா அப்படி அல்ல
தானாகவே பிரகாசிக்கிறார்
நான் நான் என்று தோற்றிக் கொண்டே இருக்கிறார் -ஆகவே ஆத்மா தோற்ற எந்தப் பொருள்களின் உதவியும் தேவை இல்லை –
இதை அறிய பல பிரமாணங்கள் உள்ளன
1-ப்ரத்யக்ஷம் –
நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் பொழுது உள் புலன்களோ வெளிப்புலன்களோ இயங்காது
அப்போதும் நான் நான் என்று தோற்றிக் கொண்டே இருப்பார்
2-ஸாஸ்த்ரம்
அத்ர அயம் புருஷ ஸ்வயம் ஜ்யோதி என்று வேதம் கூறும்
ஸ்வயம் ஜ்யோதி என்றால் தானாகவே பிரகாசிக்கும் என்றதாயிற்று –
3-அநு மானம்
ஆத்மா ஸ்வயம் ப்ரகாசமானவர் -ஞானமான படியால் -நம் அறிவைப் போலே -என்கிற
அனுமானத்தாலும் இத்தை அறியலாம்
ஸ்வாமி வேதாந்த தேசிகன் ஸ்லோகம்
தத்வ முக்த கலாபம்
கிஞ்ச வேதாந்த த்ருஷ்ட்யா ஞானத்வாத் ஏஷ தீ வத்– ஸ்வ விஷய த்ருஷ்ணா
நிரபேஷ ஸ்வ ஸித்தி –அறிவு பிரகாசம் -வியவஹாரத்துக்கு தகுதி ஆவதே
தன்னைப் பற்றிய அறிவு தானாகவே வெளிக்காட்டும்
இரண்டு ஞானங்கள் உண்டே –
வேதாந்த ஸாஸ்த்ரத்தில் ஞானம் என்று வழங்கப் படுபவை எல்லாம் ஸ்வயம் ப்ரகாசங்கள்
ஆத்மாவும் ஞானம் எனப்படுகிறார்
ஆகவே அவரும் அப்படியே —

——-

பாடம் –23- ஜீவாத்மாவின் பண்புகள்

நியாய கலாபம் -ப்ரஹ்ம ஸூ த்ரம் -நியாயக் கூட்டம் -வேத வியாசர் –தீர்ப்பை எங்குமே கொள்ளலாமே –
சகல உபநிஷத்துக்களையும் பொருத்தி பார்த்து -சம்யக் நியாய க்லாபேண மஹதா பாரதம் –
உப ப்ரும்ஹத வேத வேதார்த்த விஷயீ கரணம்

ஆத்மா நித்யமானவர்
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ சித்தி த்ரய ஸ்லோகம் முதல் பாதி கீழே பார்த்தோம் –
தேக இந்திரிய மன பிராண தீ–அந்நிய
அநந்ய சாதன (ஸ்வயம் பிரகாசம் -)

இரண்டாம் பாதியில் ஆத்மாவின் குணங்களை அருளிச் செய்கிறார்

நித்யோ வ்யாபி பிரதி க்ஷேத்ரம் பிரதி சரீரம் பின்ன ஸ்வத ஸூகீ–

புத்த மதத்தில் ஆத்மா க்ஷணிகமான -ஒரு நொடியில் அழிந்து விடக்கூடிய அறிவுகளின் தொடர் தான் ஆத்மா என்பர்
ஆகவே இதுவும் அழியக் கூடியது என்பர்
இத்தை மறுக்கவே -ஆத்மா நித்யம் -பிறப்பு இறப்பு அற்றவர் என்கிறார் ஸ்ரீ ஸ்வாமி ஆளவந்தார்
முதலில் ஆத்மா க்ஷணிகம் அல்ல -நிலையானது என்பதற்கு பிரமாணம் பார்ப்போம்
நேற்று குடத்தைப் பார்த்த நானே இன்று அதைத் தொடுகிறேன் -என்கிற அறிவு ஏற்படுகிறது –
ப்ரத்யபிஞ்ஞா என்கிற இந்த அறிவால் நேற்று பார்த்தவருக்கு இன்று தொடுபவரும் ஒருவரே -என்று அறிகிறோம்
ஆகவே ஆத்மா நிலைத்து நிற்கும் ஒரு பொருளே என்பது தெளிவு –

ஸ்ரீ வேத வியாசர் ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரத்தில் –ஆத்ம அதிகரணம் இது –
ந ஆத்மா ஸ்ருதே –நித்யத் வாச்ச தாப்ய–2-3-18-
ந ஆத்மா-ஆத்மா உண்டாவது இல்லை —
ஸ்ருதே–அவ்வாறு ஸ்ருதி சொல்லுகிறபடியால் —
நித்யத் வாச்ச தாப்ய–ஸ்ருதிகளில் இருந்து ஆத்மா நித்தியமான படியாலும் –

ஆத்மா உண்டாவது இல்லை என்று வேதம் நேராக நேரடியாகக் கூறுகிறது –
ந ஜாயதே ம்ரியதே வா விபஸ்சித்
ஞாஜ்ஜ்வ த்வவ் அஜவ் -முதலிய இடங்களில் -(அறிவு உள்ளார் அறிவு குறைவாளர் இருவரையும் பிறப்பிலிகள் )
ஸ்ரீ கீதையில் இதே போல் வாக்கியம் உண்டே –
ந ஜாயதே ம்ரியதே கதாசித்–நாயம் பூத்வா –அஜ நித்ய ஸாஸ்வத புராண –புரா அபி நவ- இத்யாதி
ஸத் கார்ய வாதம் -அவஸ்தா பேதங்கள் உண்டே அசேதனங்களுக்கு

மேலும் ஆத்மா நித்யமானவர் என்றும் கூறுகிறது –
நித்யோ நித்யாநாம்
அஜ நித்ய ஸாஸ்வத அயம் புராண -போன்ற சுருதி வாக்கியங்கள் மூலம் ஆத்மா உண்டாவது இல்லை என்று அறியலாம் –
உடலோடு தொடர்பு படுவதே பிறப்பு -அதை விட்டுப் பிரிவதே இறப்பு என்று உலகில் சொல்லுகிறோம் –

ஆத்மா அணுவானவர்
குடம் புத்தகம் போல் நடுவாக அளவாகக் கொண்டால் அது பகுதிகளால் ஆக்கப்பட்டு இருக்க வேண்டும் –
எனவே அழிந்தே தீரும்
இது ஒவ்வாத படியால் ஆத்மா நடுவாக அளவு கொண்டது இல்லையே –

உத் க்ராதி-கதி -ஆகதிநாம் –2-3-20—ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் –ஆத்மா இவ்வுடலில் இருந்து புறப்படுகிறார் என்பதை
தேந ப்ரத்யோ தேந ஏஷ ஆத்மா நிஷ் க்ராமதி -என்றும்
வேறு உலகங்களுக்குச் செல்கிறார் என்பதை
யே வை கே ச அஸ்மாத் லோகாத் ப்ரயந்தி சந்த்ர மசமேவ தே ஸர்வே கச்சந்தி -என்றும்
அங்கு இருந்து மறுபடியும் திரும்பி வருகிறார் என்பதை
தஸ்மாத் லோகாத் புந ஏதி அஸ்மை லோகாய கர்மணே என்றும் வேதம் கூறுகிற படியால்
புறப்படுதல் செல்லுதல் வருதல் ஆகியவை விபுவான -எங்கும் பரந்துள்ள -பொருளுக்குக் கூடாத படியால் ஆத்மா விபு அல்ல

மேலும்
ஸ்வ ஸப்த உன் மாநாப்யாம் –2-3-23-ஸூத்ரத்தில் கோருகிறார்

வேதம் நேரடியாக ஜீவாத்மா அணு என்று கூறுகிறது
ஏஷ அணு ஆத்மா
ஸ்வரூபம் அணு மாத்ரம் ஸ்யாத் –முதலானவற்றில்

மேலும்
ஆராக்ர மாத்ரோ ஹ்யவரோபி த்ருஷ்ட
வாலாக்ர சத பாகஸ்ய சததா கல்பிதஸ்ய ச பாகோ ஜீவஸ் ஸ விஜ்ஜேய -என்பனவற்றில்
தலைமுடியின் நுனி ஊசியின் நுனி –முதலியவற்றுக்கு சிறியது ஆத்மா என்கிறது –

அவிரோத சந்தனவத்
சந்தானம் ஒரு இடத்தில் பூச உடம்பு முழுவதும் குளிர்வது போல்
இது நம் சித்தாந்தம் அல்ல
வேறே ஒருவர் சித்தாந்தம்
நம் சித்தாந்தம்-
குணாத்வா ஆலோக வத் –2-3-26- அணுவான ஆத்மா உடலில் ஓர் இடத்தில் இருந்தாலும்
அவருடைய தர்ம பூத ஞானம் உடல் முழுவதும் பரவி இருக்கிற படியால் உடல் முழுவதும் உள்ள இன்ப துன்பங்களை அறிகிறார்
ஆபாசத்துக்கு ஸுவ்ரி –50 உடல்களை கொண்டாரே –
இதே போல் முக்தி அடைந்த ஆத்மாவின் அறிவும் உலகம் முழுவதும் பரவி இருந்து அனைத்தையும் அறிகிற படியால்
ச ச அநந்த -அளவற்ற தர்ம பூத ஞானம் விரியும் –
ஸ்ரீ ஸ்வாமி ஆளவந்தார் ஸ்லோகத்தில் -வ்யாபி -என்று அருளிச் செய்கிறார்
விளக்கு ஓர் இடத்திலே இருந்து கொண்டு தன் ஒளியாலே வியாபித்து போலே
ஆத்மா அணுவாக இருந்தாலும் தன் அறிவால் வியாபிக்கிறார் —

ஆத்மாக்கள் பலர்
அடுத்து ஸ்லோகத்தில் பிரதி சரீரம் பின்ன -என்பதாக
ஆத்மாக்கள் பலர் உள்ளனர் -உலகில் ஆத்மா ஒன்றே என்று சொல்ல முடியாது
வேதம் -தேவ திர்யக் மனுஷ்யேஷு புமான் ஏக வ்யவஸ்தித –என்று
தேவ உடலிலும் மனுஷ்ய உடலிலும் மிருக உடலிலும் ஒரே ஆத்மா உள்ளார் -என்பதின் பொருளை உள்ளபடி அறிய வேண்டும்
எந்த உடலில் எந்த ஜீவாத்மா இருந்தாலும் -அவர்
ஞான வடிவாகவும்
நித்யமாகவும்
அணுவாகவும்
ஸ்வயம் ப்ரகாசராயும் இருப்பர்
சமமான ஒத்தவராக வேறு பாடு இன்றி இருப்பதால் ஒரே ஆத்மா உள்ளார் என்கிறது –
அரிசி மண்டியில் பல வகை மூட்டைகள் அரிசி இருக்க இது ஒரு அரிசி 52 ரூபாய் இது ஒரு அரிசி -60 ரூபாய் –
ஒரே தரத்தோடும் தன்மையோடும் உள்ளதால் ஒரே அரிசி என்கிறோம்
அதே போல் அனைத்து உடல்களிலும் உள்ள ஆத்மாவும் ஒரே தன்மை களைக் கொண்டவையே
தேஷாம் ஆதித்யவத் ஞானம் ப்ரகாசயதி தத் பரம் -முதலான வற்றால் முக்தர்களை பன்மையில் கூறும் –
ஆகவே ஆத்மா பலர் என்பது ஸித்தம்
ஸ்லோகத்தில் பிரதி சரீரம் பின்ன என்பதால் சரீரம் தோறும் வேறு பட்டவர் -என்றதாயிற்று –
அனைத்து சரீரங்களிலும் ஒரே ஆத்மா இருந்தால் அவரே உலகில் இருக்கும்
அனைத்து இன்ப துன்பங்களை எல்லாம் அனுபவிக்க நேரிடும் –

ஆத்மா ஆனந்த வடிவானவர்
ஸ்லோகத்தில் கடைசியில் ஸ்வத ஸூகீ -இயற்கையாகவே ஆனந்தமாகவே இருப்பவர் -என்று பொருள்
ஆத்மா ஞானமே வடிவானவர் என்று பார்த்தோம்
ஞானம் என்று ஓன்று இருந்தால் அதுக்கு விஷயமாக ஓன்று இருக்க வேண்டும்
அது பிடித்ததாக இருந்தால் அந்த ஞானம் ஸூகம்
பிடிக்காததாக இருந்தால் அதுவே துக்கம்
அதே போல் பயம் வெட்கம் கோபம் சந்தேகம் உறுதி போண்டாவை ஞானத்தின் வெவ்வேறு நிலைகள் தான்
எனவே ஆத்மா என்பவர் ஞானமே வடிவானவர் என்றால் அந்த ஞானத்துக்கு ஏதாவது ஒரு விஷயம் இருக்க வேண்டும் –
ஆத்மா என்கிற ஞானத்துக்கு உலகப் பொருள்கள் விஷயம் ஆக மாட்டா -அதுக்கு தான் மட்டுமே விஷயமாக இருக்கும்
எனவே ஆத்மா என்பது தன்னையே எப்பொழுதும் அறியக்கூடிய ஒரு ஞானம் என்று சொல்ல வேண்டும்
தான் தனக்கு எப்பொழுதும் விரும்பக் கூடியவராக அனுகூலராகவே இருப்பார்
யாரும் தன்னையே வெறுப்பது இல்லையே
எனவே ஆத்மா என்பது தன்னைப் பற்றிய ஒரு ஞானம் -தான் தனக்கு எப்பொழுதும் விருப்பமானவர் –
ஆகவே ஆத்மா என்பது விரும்பப்படும் பொருளை பற்றிய ஞானம்
இதுவே ஸூ கம் -ஆனந்தம்
எனவே ஆத்மா ஆனந்தமே வடிவானவர் என்கிறோம்
நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் பொழுது எந்தப் பியருளையும் அறிவது இல்லை
ஆனால் விழித்ததும் ஸூகமாகத் தூங்கினேன் என்கிறோம்
தூங்கும் பொழுது எந்த ஸூகத்தை அனுபவித்து இருக்க முடியும் –ஆத்மா என்கிற ஸூகத்தை மட்டும் தான் –
அதனால் தான் ஆத்மா இயற்கையிலே ஸூகமாய் இருப்பவர் என்று சொல்கிறார்
துக்கம் எல்லாம் சம்சாரத்தால் தான் வருகிறது –

———

பாடம் -24—ஜீவாத்மாவின் ஞாத்ருத்வம்

ஞானமே வடிவானவர் என்றும் ஞானம் -அறிவுடையவர் என்றும் பார்த்தோம் -அந்தர் ஜோதி புருஷ –
சாங்க்யர் -கபிலர் -புத்தர் -இருவரும் ஞானம் வடிவானவர் மட்டும் தான் என்பர் -ஞானம் என்ற பண்பு கிடையாது என்பர்
நியாய மதத்தின் படி ஞான வடிவானவர் அல்ல
கல் கட்டை போல் ஜடமான பொருள் தான் -ஆனால் ஞானம் என்ற பண்பு-குணம் -உண்டு என்பர் –
இவை இரண்டுமே தவறு -ஆத்மா ஞான வடிவானவரும் ஞானம் உடையவருமாகவே உள்ளார் என்று
வேத வியாசர் ப்ரஹ்ம ஸூத்ரத்தில் கூறுகிறார்
ஞா அத ஏவ –2-3-19-(ஞாதி கரணம் -இந்த ஸூத்ரம் -பெயரால் இந்த அதிகரணம் )
எந்த வேதத்தின் அடிப்படையில் நித்யமானவர் என்று கூறப்படுகிறாரோ அதே வேத அடிப்படையில்
ஆத்மா அறிவாளி அறிவுடையவர் ஞாதா

1-அத யோ வேத இதம் ஜிக்ராணி இதி ஸ ஆத்மா-
எவன் நான் நுகர்கிறேன் என்று அறிகிறானோ அவன் ஆத்மா
2-ய அயம் விஞ்ஞான மய ப்ராணேஷூ ஹ்ருதி அந்தர் ஜ்யோதி புருஷ
ஆத்மா ஞானம் என்ற குணத்தை யுடையவராய் ஹ்ருதயத்தில் உள்ளே ஞான வடிவாகவே இருக்கிறார் –
ஜ்யோதி என்று ஸ்வயம் பிரகாசம்
இவை போன்ற வேத வாக்கியங்கள் ஆத்மா அறிவுடையார் – என்று கூறுகின்றன
உலக வாழ்விலும் நான் அறிவுடையான் என்று தானே அறிகிறோம் –

இந்த பிரமாணங்கள்
ஞானம் வேறு -ஆத்மா வேறு -ஞானத்தை யுடையவர் ஆத்மா என்று ஸ்பஷ்டமாகக் கூற வில்லை –
எனவே ஞானமே ஆத்மா என்று சிலர் கேள்வி எழுப்பலாம் –
அதற்கு பதில் உரைக்கிறார் வேத வியாசர்
வியதிரேக கந்தவத் ததா ச தர்சயதி–2-3-27-
மணம் உடையது ப்ருத்வீ என்று சொல்லும் பொழுது
ஆறாம் வேற்றுமை மணத்துக்கும் பிருத்வீயுக்கும் உள்ள தொடர்பைக் காட்டுகிறது –
அதே போல்
ஞாநாதி ஏவ அயம் புருஷ–முதலான வேத வாக்கியங்களில் ஞானம் யுடையவர் ஆத்மா – என்று சொல்லுகிற படியால்
ஞானம் வேறு என்றும் ஆத்மா வேறு என்றும் ஞானத்தை யுடையவர் ஆத்மா என்றும் அறிகிறோம் –

இதே போல் ப்ரஹ்மம் ஆனந்த மயன் என்றும் வேதம் சொல்லும் ப்ரஹ்மத்தின் ஆனந்தம் அளவிட முடியாதே –

இங்கே பராசர பட்டர் —
நான் அறிவுடையவன் என்னும் பொழுது ஆத்மாவும் அறிவும் வெவ்வேறாகவே தோற்றினாலும் இரண்டே ஒன்றே என்று கொண்டால்
குடத்தை நான் அறிகிறேன் -என்னும் பொழுது நானும் குடமும் ஒன்றே-வேறுபோராடு தோற்றம் பொய்யானது என்றும் சொல்லலாமே –
ஆகவே ஆத்மாவுக்கும் அறிவுக்கும் உள்ள வேறுபாட்டை ஏற்றுக் கொள்ளவே வேண்டும்

இதுவும் ஸ்பஷ்டமாக இல்லை என்று நினைத்தால் -மேலும் வேத வியாசர் கூறுகிறார்
ப்ருதக் உபதேசாத் –2-3-28-
நேரடியாகத் தன் சொல்லைப் பயன்படுத்தியே அறிவானது ஆத்மாவைக் காட்டிலும் வேறுபட்டதாகச் சொல்லப் பட்டுள்ளது வேதத்தில்
ந விஞ்ஞாது விஞ்ஞாதே விபரி லோபோ வித்யதே
அறிவு வடிவமான ஆத்மாவினுடைய அறிவுக்கு அழிவே கிடையாது என்று இதற்குப் பொருள் –

இங்கு ஒரு கேள்வி எழலாம்
ஆத்மா அறிவுடையவராக இருந்தால் ஆத்மாவை அறிவு என்றே பல இடங்களில் கூறுவது எதனால் –
யோ விஞ்ஞானே திஷ்டன்
ஞானம் எனப்படும் ஆத்மாவின் மேல் எந்த பரமாத்மா இருக்கிறாரோ -என்றும்
விஞ்ஞானம் யஜ்ஜம் தநுதே
ஞானம் யாகத்தைச் செய்கிறது
போன்ற இடங்கள் உண்டே —
ஞான ஸ்வரூபம் ஆத்மா விஷ்ணு புராணமும் சொல்லுமே
இங்கு அறிவு என்றே -அறிவாளி -என்று சொல்லாமல் உள்ளதே –

இதற்கு வேத வியாசர் பதில் உரைக்கிறார் –
தத் குண சாரத்வாத் து தத் வியபதேச ப்ராஞ்ஞ வத் –2-3-29-
ஞானத்தை சாரமான குணமாக ஆத்மா கொண்டு இருக்கிறபடியால் ஆத்மாவை ஞானம் என்றே கூறலாம் –
தவறு இல்லை என்றவாறு –

ஒருவருக்கு ஸாரமான குணம் எதுவோ அவரை அக் குணம் என்றே உலகில் சொல்கிறோமே
நம்மாழ்வாரை கிருஷ்ண பக்தர் என்று சொல்லாமல் க்ருஷ்ண த்ருஷ்ண தத்வம் -கிருஷ்ண பக்தியே உருவானவர் –
அதே போலவே இங்கும் ஆத்மாவை அறிவே என்பதில் தவறு இல்லை
இங்கே ஸாஸ்த்ரீயமான எடுத்துக்காட்டு காட்டுகிறார் வேத வியாசர்
ப்ராஞ்ஞவத்–என்று பரமாத்வையே
பிரகர்ஷேண ஞானம் -சர்வஞ்ஞன்-அவனையே ப்ராஞ்ஞ என்று வேதம் சொல்லும் –
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் சொல்லும் சுருதி -அறிவுடையார் என்று சொல்லாமல் ஞானம் என்றே சொல்லும்
ஆனந்த வல்லி -மேலே மேலே சொல்லி திரும்பிற்றே –
ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் -ப்ரஹ்மத்தினுடைய ஆனந்தை என்று -எவ்வளவு என்று அறிய முடியாதோ
என்று அறிபவன் -ஸ்பஷ்டமாக தன்மை வேறே ப்ரஹ்மம் வேறே என்றும் சொல்லும்
அவன் ஆனந்தம் உடையவராக இருந்தாலும் அவனை ஆனந்தம் என்றே வேதம் பல இடங்களில் கூறும் –
அதே போல் ஞானம் உடையவராக இருந்தாலும் ஞானம் என்றே கூறும்
அவ்விடங்களில் போல் இங்கும் ஸாரமான குணத்தைக் கொண்டே அழைக்கப் படுகிறது –

இங்கு இன்னும் ஒரு கேள்வி எழும்
தூங்கும் பொழுது ஆத்மாவுக்கு ஞானம் இல்லையே -எவ்வாறு இது ஸாரம் என்று சொல்ல முடியும் –
இதுக்கு வேத வியாசர் பதில் அளிக்கிறார்
யாவதாத்ம பாவித்வாத் ச ந தோஷ தத் தர்ச நாத் –2-3-30-என்று
ஆத்மாவிடம் ஞானம் எப்பொழுதும் உண்டு
விழித்து இருக்கும் பொழுது உலகப் பொருள்களை அறிய அது உதவுகிறது தானும் அறியப்படுகிறது

நாம் தூங்கும் பொழுது இந்திரியங்கள் செயல் படாமையால் நாம் வெளிப்பொருள்களை அறிவது இல்லை –
அக்காலத்தில் நம்மிடம் இருக்கும் அறிவு தொற்றுவது இல்லை –
இதற்கு ஒரு எடுத்துக் காட்டு வேத வியாசர் காட்டுகிறார்
பும்ஸ்த்வாதிவத் து அஸ்ய சத அபி வியக்தி யோகாத் –2-3-31-
என்று எப்படி பிறந்த குழந்தை இடமே ஆண் தன்மை பெண் தன்மை இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட வயசிலே
தான் வெளித் தோன்றுகின்றனவோ
அதே போல் ஆத்மாவிடம் எப்பொழுதுமே இருக்கும் ஞானம் நாம் விழித்து இருந்து மற்றப் பொருள்களை
அறியும் பொழுது மட்டும் தான் தோற்றுகிறது
மற்றப் பொழுதில் தோற்றுவது இல்லை -ஆகவே ஸாரமான குணம் என்று சொல்லத் தட்டில்லை

முன் சொன்ன ஸூத்ரத்தில் –ச -என்ற சொல் –
இது மட்டும் சமாதானம் இல்லை -வேறே ஒன்றும் உண்டு அது என்ன என்றால்
ஆத்மா அறிவுடையவனாக இருந்தால் ஆத்மாவை அறிவு என்றே எதனால் சொல்ல வேண்டும் என்ற கேள்விக்கு
இப்படி சுற்றி வந்து சமாதானம் சொல்லத் தேவை இல்லை –
ஆத்மா அறிவுடையவராக இருந்து கொண்டு -தானும் ஞானமே வடிவுடையவராக இருக்கிற படியால்
வேதம் அப்படிச் சொல்கிறது என்று எளிமையாக சமாதானமும் சொல்லலாம் -என்று காட்டும் –

—–

பாடம் –25- ஜீவாத்மாவின் கர்தவ்யம் –

ஞாத்ருத்வம் வந்தாலே
கர்த்ருத்வமும்
போக்த்ருத்வமும் வருமே
ஹேய உபாதேய ஞான மூலம் -தத் கர்த்ருத்வ – சிகீர்ஷா -செய்வதில் ஆசை
ஞானம் இச்சா க்ருதி–மூன்றும் உண்டே

கர்த்ருத்வம் -செயல்களை செய்பவராக இருக்கும் தன்மை
போக்த்ருத்வம் -செயல்களின் பயனை அனுபவிப்பராக இருக்கும் தன்மை
முதலில் ஒரு பொருளை அறிகிறோம்
அறிந்து அதில் ஆசையோ வெறுப்போ தோன்றி -பெறுவதற்கோ பிளாக்குவதற்கோ முயல்கிறோம் –
அடுத்து அம் முயற்சியின் பயனை அனுபவிக்கிறோம்
ஆத்மா அறிவுடையவராய் இருப்பதால் கொள்ளத்தக்கது என்றோ தள்ளத்தக்கதோ என்றோ அறிகிறார்
அவரே கர்த்தாவான படியால் பிடித்ததை அடையவும் பிடிக்காதத்தை விலக்கவும் முடியும் –
ஆகவே ஆத்மா -ஞாதா -கர்த்தா -போக்தா என்பதே நம் சம்பிரதாய சித்தாந்தம் –

பூர்வ பக்ஷம் ஆத்மா கர்த்தா அல்ல
கபிலர் -சாங்க்ய மதம் -ஆத்மா கர்த்தா அல்ல -போக்தா மட்டும் தான் –
முக்குணங்களால் ஆக்கப்பட்ட பிரக்ருதியே அனைத்து செயல்களும் செய்கிறது
குணங்களே கார்யங்களை செய்கின்றன என்றும் சொல்வர்
சாங்க்ய மதத்தில் முக்குணம் என்று கொள்ளாமல் -மூன்று த்ரவ்யங்களே -தன்மை அல்ல
ப்ரக்ருதி த்ரவ்யமே மூன்று த்ரவ்யங்களின் கலவை என்பர் –
அவர்கள் வாதங்கள் பின்வருமாறு –

ஹந்தா சேத் மந்யதே ஹந்தும் ஹத: சேத் மந்யதே ஹதம் |
உபவ் தௌ ந விஜாநீத: நாயம் ஹந்தி ந ஹந்யதே ||(கட உப நிஷத் 2 – 19)
இதன் பொருள் – “கொலை செய்யும் ஒருவர் தன்னைக்
கொலை காரன் என்று நினைத்தாலோ கொலை செய்யப்படும் ஒருவர்
தன்னைக் கொல்லப்பட்டவராக நினைத்தாலோ , அவர்கள் ஆத்மாவின் தன்மையைப் புரிந்து கொள்ளவில்லை
என்று பொருள் ஏன் என்னில் ஆத்மா கொள்வதும் கிடையாது கொல்லப்படுவதும் கிடையாது –
இதிலிருந்து ஆத்மா எந்தச் செயல்களையும் செய்வது இல்லை என்று தேருகிறது

ப்ரக்ருதே க்ரிய மாணாநி குணை கர்மணி ஸர்வஸ
அஹங்கார விமுடாத்மா கர்த்தா அஹம் இதி மன்யதே –ஸ்ரீ கீதை –3-27-
இதன் பொருள் -பிரகிருதியின் குணங்களால் செய்யப்படும் செயல்களை தானே செய்கிறான்
என்று நினைப்பவன் அஹங்காரத்தால் மூடப்பட்டு மயங்குகிறான்

கார்ய காரண கர்த்ருத்வே ஹேது ப்ரக்ருதே உச்யதே
புருஷ ஸூக துக்கா நாம் போக்த்ருத்வே ஹேதுர் உச்யதே –13-20-
உடலும் இந்திரியங்களும் செயல்படுவதற்கு பிரகிருதி காரணமாகும்
ஸூக துக்கங்கள் அனுபவிக்க ஆத்மா காரணம் ஆவார் –

இப்படி பல பிரமாணங்களால் ஆத்மா கர்த்தா அல்ல பிரகிருதி தான் கர்த்தா என்றும்
ஆத்மா போக்தா மட்டுமே என்றும்
கூறப்பட்டுள்ள படியால் இதுவே சரியானது என்று சாங்க்ய மதம் –

இனி சித்தாந்தம்
இதற்கு பதில் உரைக்கிறார் வேத வியாசர்
கர்த்தா சாஸ்த்ரார்த்த வத்த்வாத் –2-3-33–(கர்த் அதிகரணம் )
ஆத்மா தான் கர்த்தா -ஸாஸ்த்ரம் என்று சொல்லப்படும் வேதங்கள் பயன் உடையவை ஆவதற்காக –
அறிதல் -செயல் படுதல் -பயனை அனுபவித்தல் -இவை மூன்றும் ஒருவர் இடம் தான் இருக்க முடியும்
என்பதை வைத்து சாங்க்ய மத நிரஸனம் செய்கிறார்
சுவர்க்கத்தில் ஆசை இருப்பவன் ஜ்யோதிஷ்டோம ஹோமம் செய்ய வேண்டும்
முக்தியை ஆசை இருப்பவன் ப்ரஹ்மத்தை தியானிக்க வேண்டும்
போன்ற கட்டளைகள் போக்தாவே கர்த்தா என்பதைக் காட்டும்
ஆத்மா போக்தா என்பதை அனைவரும் ஒத்துக் கொள்கிறார்கள்
எனவே வேதம் பயன் உள்ளதாக வேண்டும் என்றால் போக்தாவான ஆத்மாவே கர்த்தாவாகவும் இருக்க வேண்டும் –
ஸாஸனாத் ஸாஸ்த்ரம் –கட்டளை இடுவதால் இந்தப்பெயர் -ஒரு செயலில் மூட்டுதல் -ஈடுபடுத்துதல் –
எவர் அறிவுள்ளவரோ அவரைத்தான் வேதம் இத்தைச் செய் இதம் குரு இத்தைச் செய்யாதே -என்று கட்டளை இட வேண்டும்
பிரகிருதி அறிவுடையது அல்ல -எனவே அறிவுடைய ஆத்மா தான் கர்த்தாவாகவும் இருக்க வேண்டும் –

தத்வ த்ரயம் -யதீந்த்ர மத தீபிகை போன்றவை இவற்றை சொல்லும்
கர்த்ருத்வம் இல்லை என்றால் இவனுக்கு சஸ்த்ர வஸ்யத்தையும் போக்த்ருத்வமும் குலையும்
சக்தி விபர்யதயாத் –2-3-37- என்றும் இத்தையே சொல்லும் –

பூர்வ பஷத்துக்கு சமாதானம்

ஹந்தா சேத் மந்யதே ஹந்தும் ஹத: சேத் மந்யதே ஹதம் |
உபவ் தௌ ந விஜாநீத: நாயம் ஹந்தி ந ஹந்யதே ||(கட உப நிஷத் 2 – 19)
இதில் ஆத்மா எந்தச் செயலையும் செய்வது இல்லை என்ற கருத்தில் சொன்னது அல்ல
ஆத்மா நித்யமானவர் –அவரை யாராலும் அழிக்க முடியாது
கொல்வது உடலை மாத்திரம் தான் -கொலை செய்பவர் உடலைத்தான் அழிக்கிறார் ஆத்மாவை அல்ல
கொல்லப்படுபவரின் உடல் தான் அழிகிறது ஆத்மா அல்ல -என்பதே இதன் பொருள் –

ப்ரக்ருதே க்ரிய மாணாநி குணை கர்மணி ஸர்வஸ
அஹங்கார விமுடாத்மா கர்த்தா அஹம் இதி மன்யதே –ஸ்ரீ கீதை –3-27-
இதிலும் கண்ணன் சொல்ல வருவது ஆத்மா கர்த்தாவே அல்ல என்பது அல்ல
ஆத்மா தான் கர்த்தா -ஆனால் சம்சாரத்தில் நாம் செய்யும் தினசரி செயல்களுக்கு எல்லாம்
ஆத்மா இயற்கையாக கர்த்தா அல்ல செயற்கையாகத் தான் இவற்றை எல்லாம் செய்கிறார் என்றே இதற்குப் பொருள் –
ஏன் என்றால் இயற்கையாக பாப புண்யங்கள் இல்லாமல் உடல் இல்லாமல் இருக்கும் ஆத்மாவுக்கு
பசி தாகம் துக்கம் போன்றவை இல்லையே -ஆகவே இந்தச் செயல்களைச் செய்யத் தேவை இல்லை
ஒரு உடலை எடுத்துக் கொண்டு முக்குண சேர்க்கை ஏற்படும் பொழுது தான் இவற்றைச் செய்கிறார் என்பதைக் காட்டவே இந்த ஸ்லோகம்

கார்ய காரண கர்த்ருத்வே ஹேது ப்ரக்ருதே உச்யதே
புருஷ ஸூக துக்கா நாம் போக்த்ருத்வே ஹேதுர் உச்யதே –13-20-
இங்கும் உடலும் புலன்களும் செயல்பட ப்ரக்ருதியுடன் தொடர்புடைய ஆத்மாவே காரணம் –
இயற்கை நிலையில் இருக்கும் ஆத்மா அல்ல

ஆத்மா ஸ்வ தந்த்ரரா -பர தந்த்ரரா –
தன் இச்சையால் செயல்படுகிறாரா -வேறே ஒருவருக்கு கட்டுப்பட்டு செயல் படுகிறாரா –

பூர்வ பக்ஷம்
தானாக யோசித்து -தன் இச்சையால் முடிவு எடுத்து செயல் படுபவர்க்குத் தான் ஸாஸ்த்ரம் கட்டளை இட முடியும்
வேதம் பயன் உள்ளவையாக இருக்க வேண்டும் என்றால் ஆத்மா ஸ்வ தந்த்ரராகவே இருக்க வேண்டும் –

ஸித்தாந்தம்
இதற்கு வேத வியாஸர் பதில் அளிக்கிறார்
பராத் து தத் ஸ்ருதே –2-3-40-(பராயத்தா அதிகரணம் )
ஜீவாத்மாவின் கர்த்ருத்வம் -செயல்பாடும் தன்மை பரமாத்மாவுக்குக் கட்டுப் பட்டதே -வேதம் கூறுகிறபடியால்

அந்த ப்ரவிஷ்ட ஸாஸ்தா ஜநாநாம் ஸர்வாத்மா
பரமாத்மா ஜீவாத்மாக்குள் புகுந்து அவரை நியமிக்கிறார் -இயக்குகிறார்
சாஸ்தா விஷ்ணு அசேஷ ஜகத் -உன்னைக் கேட்க செய்தவனும்
என்னை திரு நாமம் சொல்லக் செய்தவனும் அவனே -பிரகலாதன் –

ய ஆத்மநி திஷ்டன் ஆத்மந அந்தர -யம் ஆத்மா ந வேத
யஸ்ய ஆத்மா சரீரம் ய ஆத்மாநம் அந்தர யமயதி
எவர் ஆத்மாவின் மேல் உள்ளாரோ -எவர் ஆத்மாவுக்குள் உள்ளாரோ -எவரை ஆத்மா அறிவது இல்லையோ –
ஆத்மா யாருக்கு சரீரமோ -எவர் ஆத்மாவை உள் இருந்து இயக்குகிறாரோ அந்த பரமாத்மா

இவை போன்ற பல வேத வாக்கியங்கள் ஜீவாத்மாவுக்குள் பரமாத்மா இருக்கிறார் என்றும் –
அவரே ஜீவாத்மாவை இயக்குகிறார் என்றும் -சொல்லப்பட்டுள்ள படியால்
ஜீவாத்மா ஸ்வ தந்த்ரர் அல்ல பர தந்த்ரரே –
தனது இச்சையாக செயல்படுவது இல்லை –
பரமாத்மாவுக்கு கட்டுப்பட்டு அவரால் இயக்கப்பட்டு தான் செயல்படுகிறார் என்பது தெளிவு –

மனதில் எழும் கேள்விகள்
இப்படி பரமாத்மாவே இயக்குகிறார் என்றால் பல சங்கைகள் எழுமே
1–தன் இச்சையால் செயல்படாத ஜீவாத்மாவுக்கு எதனால் வேதங்கள் உபதேசிக்க வேண்டும் —
எதையும் முடிவு செய்து செயல் பட முடியாதே -வேதங்களுக்கு பிரோயோஜனம் இல்லாமல் போகுமே —

2- பரமாத்மா தூண்டுவாராகில் அந்தச் செயலின் பயனையும் அவரே அனுபவிப்பாரா –
பாப புண்யங்களும் அவருக்குத் தானே சேர வேண்டும் –
ஜீவாத்மாவுக்கு கர்மங்கள் எப்படி ஏற்படுகின்றன

3-தீய செயல்களை செய்விப்பான் ஆகில் -அதனால் துன்பப்பட வைப்பான் ஆகில் அவனுக்கு கருணை இல்லையா

4-ஒரு சிலரை நல்ல செயல்களில் தூண்டி புண்யம் பெற வைத்து –
ஒரு சிலரை தீய செயல்களில் தூண்டி பாபம் பெற வைப்பான் ஆகில்
ஒரு தலைப் பக்ஷ செயல் ஆகாதா -ஏன் இந்தப்பாகுபாடு -இது பரமாத்மாவுக்குப் பொருந்துமா

5-இப்படி பரமாத்மாவே இயக்குகிறார் என்றால் தானாகவே யோசித்து மாறுவதற்கு வாய்ப்பே இல்லையா
எனக்கு உள்ள அறிவு வீணாகப் போகுமே

இவை அனைத்துக்கும் பதில் அளிக்கவே அடுத்த ஸூத்ரம்
க்ருத ப்ரயத்ன அபேஷஸ்து விஹித ப்ரதி ஷித்த அவை யர்த்யாதிப்ய –2-3-41–

இதற்கு ஸ்ரீ பாஷ்யத்தில் ஸ்வாமி ராமானுஜர்
எல்லாச் செயல்களிலும் ஜீவாத்மா எடுக்கும் முதல் முயற்சியை எதிர்பார்த்து தான் அந்தர்யாமியாய் இருக்கும்
பரமாத்மா தனது அனுமதியை வழங்குவதில் மூலம் அச்செயலில் நம்மை மூட்டுகிறார் –
இந்த ஒரு ஸ்ரீ ஸூ க்தி நமது அனைத்து சங்கைகளையும் தீர்க்கும் –

ஜீவாத்மா கர்மம் அடிப்படையில் ஒரு உடலை எடுக்கிறார் –
அப்பிறவியில் எத்தனையோ பொருள்களைப் பார்க்கிறார்
முன் பிறவியில் அனுபவித்த விஷயங்களை பொறுத்து அவருக்கு ருசி -விருப்பு வெறுப்புக்கள் -உள்ளன –
அதன் அடிப்படியில் விருப்பமோ வெறுப்போ அடைகிறார்
அடையவோ விலக்கவோ முயற்சி செய்கிறார்
பின்பு அடுத்து அடுத்த முயற்சிகளில் செயல்களில் ஈடுபடுகிறார் –

இந்தச் சங்கிலியில் ஒவ்வொரு இலக்கையும் குறித்து முயல் முயற்சியில் -அந்தர்யாமியாக இருந்து
உதாசீனனாக -அலட்சியமாக இருந்து விடுகிறார்
அடுத்த நொடியில் அது ண்பல்ல செயலா தீய செயலா என்று பார்க்காமல் அதைத் தான் அனுமதிக்கிறார்
அவர் அனுமதி இல்லாமல் எந்தச் செயலும் நடக்க முடியாதே –
இந்த இரண்டாவது நிலை -அநுமந்த்ருத்வம் -அனுமதி கொடுத்தல் –

நம் சங்கைகளுக்கு பதில்கள் —
பதில்-1-முடிவு எடுத்து செயல் படும் ஸ்வா தந்தர்யம் நமக்கு உண்டு –
எனவே வேதங்கள் நமக்கு கட்டளை இடுவது சரியே -வீணாகாது

பதில்-2-இருவருக்குப் பொதுவாக ஒரு சொத்து உள்ளது -அதில் ஒருவர் அந்தச் சொத்தில் இருந்து ஒரு பகுதியை எடுத்து
மற்ற ஒரு உரிமையாளரின் அனுமதியைப் பெற்று -அந்த நாட்டின் அரசருக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார்
அந்த அரசர் மகிழ்ந்து பல நன்மைகளை செய்தார் -அதை அனுபவிக்கும் உரிமை முயற்சி எடுத்தவருக்கே உண்டு –
அனுமதி கொடுத்தவருக்கு கிடையாதே –
அதே போல் செயலைச் செய்ய முடிவு செய்த ஜீவாத்மாவுக்கு கர்மங்கள் சேரும்
அனுமதி கொடுத்த மற்ற ஒருவருக்கு கிட்டாதே –பரமாத்மாவுக்கு ஒரு குற்றமும் வராதே –

பதில் -3-தீய செயலை செய்யவும் அனுமதி கொடுப்பதால் கருணை அற்றவர் ஆக மாட்டார் –
ஜீவாத்மா தவறான செயலில் ஈடுபட்டது ஸாஸ்த்ர விரோதமாக உள்ளதால் தண்டனை வழங்க வேண்டுமே –
தண்டனை வழங்கும் முறையில் தான் அனுமதி வழங்குகிறார்

பதில் 4-பக்ஷபாதி என்று பரமாத்மாவை சொல்ல முடியாது
ஜீவாத்மா அவரவர் சுதந்திரத்தைப் பயன்படுத்தி முடிவு எடுத்து செய்யும் எந்தச் செயலையும் அனுமதிக்கிறார்
இவரே எந்தச் செயலிலும் மூட்டவில்லையே

பதில் 5–சுதந்திரமாக முடிவு எடுத்து செயல்படும் சக்தி ஜீவாத்மாவுக்கு இருப்பதால்
அவர் அறிவு யுடையவராய் இருக்கும் தன்மை வீண் ஆகாது –

ஆகவே பகவான் அனைத்தையும் இயக்குகிறார் என்பதற்குப் பொருள்
ஜீவாத்மா ஸ்வ தந்திரமாக முடிவு எடுத்து செயல் படத் தொடங்கும் வரை அவர் உதாஸீனமாக அலட்சியமாக இருந்து
அதற்குப் பின் தான் அனுமந்தாவாக -அனுமதி அளிப்பவராகவே இருக்கிறார் என்பதே —

1-பரமாத்மா அனைத்துக்கும் காரணம் –
2-ஜீவாத்மா முதல் முயற்சி செய்ய ஸ்வாதந்தர்யம்
3-அனுமதிப்பதால் பலன் அவனைத் தீண்டாதே
4-பார பக்ஷம் காடடாதவன்
5-காருண்யம் மிக்கவனே -நிர்தயத்வம் அல்லவே -அனைத்துமே பொருந்துமே

இதற்கு விதி விலக்கும் உண்டு –
ஏஷ ஏவ சாது கர்ம காரயதி தம் யம் ஏப்ய-லோகேப்ய உந்நிநீஷதி
ஏஷ ஏவ அசாது கர்ம காரயதி தம் யம் அதோ நிநீஷதி -என்று கூறும்
யாரை மேலே உயர்த்த பகவான் ஆசைப்படுகிறாரோ அவர்களை நல்ல செயல்களை பண்ணும்படி தூண்டுகிறார் –
யாரைத் தாழ்வடைய வைக்க ஆசைப்படுகிறாரோ அவர்களை தீய செயல்களை செய்யும் படி தூண்டுகிறார் –

இங்கு கீழ் போல் அனுமதி மட்டும் அல்ல -தூண்டுதலும் உண்டு
இது ஒரு சிலருக்கே -ஸ்ரீ கீதையில் இத்தை தெளிவாக்க காட்டி அருளுகிறார்
யார் எல்லாம் என்னிடத்தே மிகுந்த பக்தியுடன் என்னை அடைய விரும்புகிறார்களோ அவர்களை நற் செயல்களில் தூண்டுகிறேன்
யார் எல்லாம் என்னை வெறுக்கிறார்களோ அவர்களை வேறே வழி இல்லாமல் தாழ்ந்த பிறவிகளில் தள்ளுகிறேன்
எனவே ப்ரயோஜகத்வம் -மறைமுகமாகத் தூண்டுதல் – என்ற மூன்றாவது நிலையில் பகவான் இருப்பது
பொதுவான நிலை அல்ல -ஒரு சிலருக்குத் தான் –

ததாமி புத்தி யோகம் -என்றும்
ஷிபாமி –ந க்ஷமாமி–ஆஸூர யோனியில் தள்ளுகிறேன் -என்றும் கீதையில் உண்டே
அதிமாத்ர அனுகூலர்களுக்கும் -தேஷாம் சததி யுக்தானாம் -ப்ரீதி உந்த இருப்பர்களுக்கு –
அதிமாத்ர பிரதி கூலர்களுக்கும்

———

பாடம் -26- ஜீவாத்மாவின் வகைப்பாடு –

ஜீவாத்மா -மூன்று வகை -பத்தர்கள் -முக்தர்கள் -நித்யர்கள் –
பத்தர்கள் -பாப புண்ய -கர்மங்களில் கட்டுப்பட்டு -பந்தப்பட்டு -இந்த அண்டத்துக்குள்ளே ஏதோ ஒரு இடத்தில்
இருந்து துன்பப்பட்டுக் கொண்டே இருக்கும் ஜீவாத்மா
அஜோகி ஏக பிறக்காத நித்தியமான ஆத்மா ப்ரக்ருதி சம்பந்தத்தால் -பந்தம் -கட்டுப்பட்டு -ஆசை உடன் -சேர்ந்து
போகம் அனுபவித்து – -ஜகாதி- வெறுத்து முக்தன் ஆக

இவர்கள் நான்கு வகைப்பட்ட பிறவி கொண்டவர்கள்
தேவர்கள் -மனிதர்கள் -விலங்குகள் -ஸ்தாவரங்கள் –
அசுரர்கள் கிங்கரர்கள் கந்தர்வர்கள் இவர்கள் தேவர்கள் சப்தத்தில் அடங்கும் -33 கோடி -ஒரு வகை பிறவி இது
திதி அதிதி -பிள்ளைகள் -கஸ்யபர்
ராக்ஷசர் மனிதரில் ஒரு வகை போல்
தேவர்களுக்குள்ளும் மனிதர்களுக்கும் யோனிஜர் அயோனிஜர் உண்டே -நான் முகன் அஜன் அயன்
ஸ்வேதர் வியர்வை மூலம் வந்தவர் போல் உண்டு

செடி கொடிகளும் சில செயல்களைச் செய்வதால் அவற்றுக்குள்ளும் ஜீவர்கள் உண்டு –
கண்ணன் திருவடி பெற்ற கதம்ப மரம் புண்ணியம் நமக்கு இல்லையே –
இவற்றுள் விலங்குகளும் ஸ்தாவரங்களும் ஸாஸ்த்ரத்துக்குக் கட்டுப் பட்டவை அல்ல —
அதாவது -அவர்களுக்கு ஸாஸ்த்ரம் எதையும் -விதிக்காது
அவை ஸாஸ்த்ரம் சொல்லியதை செய்யா விட்டாலும் பாபம் இல்லை
தேவர்கள் மனிதர்கள் -ஸாஸ்த்ர வஸ்யர் -அதன் படியே நடக்க வேண்டும் –

இவர்களில் –
புபுஷுக்கள் முமுஷுக்கள் -இரண்டு வகையாகப் பிரிக்கலாம்
ஸம்ஸாரத்திலே இருந்து ஸூக துக்கங்களையே அனுபவிக்க ஆசைப்பட்டவர்கள் புபுஷுக்கள்
போகம் ஸூ க துக்க அனுபவம் -இதையே உண்ண ஆசைப்பட்டவர்கள் புபுஷு –
ஸம்ஸாரத்தில் இருந்து விடுபட ஆசைப்படுபவர்கள் முமுஷுக்கள் –

புபுஷுக்களை
அர்த்த காம பரர்கள் என்றும்
தர்ம பரர்கள் -என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம்

அர்த்த காம பரர்கள்
உடலையே ஆத்மா என்று நினைத்தும் வேறே உலகங்கள் இல்லை என்று நினைத்தும்
இவ்வுலக போகங்களையும் செல்வங்களையும் ஆசைப்படுபவர்கள்

தர்ம பரர்கள் –
உடலைக் காட்டிலும் ஆத்மா வேறுபட்டவர் என்று உணர்ந்து ஸாஸ்த்ரம் படி செயலைச் செய்து
புண்யம் சேர்த்து வேறே லோகங்களை அடைந்து ஸூகப்படலாம்
ஐஹிக ஆமுஷ்மிக ஸூகங்கள் -இவ்வுலக இவ்வுலக இன்பங்கள் —
என்று உணர்ந்து யாகம் தானம் தபஸூக்கள் செய்பவர்கள்
இவர்கள் பரமாத்மாவை அறியாமல் நிலையான ஸூகத்தை அடைய மாட்டாதவர்கள் என்று ஸ்ரீ கீதையில் உண்டே –

இந்த தர்ம பரர்களை
தேவதாந்த்ர பரர்கள்
பகவத் பரர்கள் என்றும் இரண்டு வகை பட்டவர்கள் –

தேவதாந்த்ர பரர்கள் –
இதர தேவர்களைக் குறித்து -பரமாத்மா இவர்களுக்கும் ஆத்மா– நியாந்தா என்று அறியாமல்
மேலோட்டமாக கர்மங்களை செய்து பலன்களைப் பெறுவார்கள் –
பூ போல் பேசி -காயோ பழமோ தராது -வேத வாத ரதர்கள் -ஸ்வர்க்க பரர்கள் கிரியா விசேஷ பஹுளாம் —
என்கிறார் கீதாச்சார்யர் –

பகவத் பரர்கள் –
எந்த பலன்களைப் பெற வேண்டிலும் பரமாத்மாவையே பற்றி அடைபவர்கள்
ஆனால் செல்வம் போகங்களையே விரும்பி பெறுவதால் இவர்களும் புபுஷுக்கள் தான் –

அர்த்தார்த்திகள் அபூர்வ ஐஸ்வர்ய காமன்
இழந்த அர்த்தம் பெறவும் –
அண்டக்குலத்துக்கு அதிபதி -பாசுரத்தியல் இருவரையும் குறித்து —
அண்டாதிபதி -ராக்ஷஸர்கள் அசுரர்களை-இண்டக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகேசன் –
இவர்களையும் உதாரர் என்று கொண்டாடுகிறான் கீதாச்சார்யர் —

முமுஷுக்கள் இரண்டு வகை
கைவல்ய பரர்கள்
பகவத் பிராப்தி பரர்கள்

கைவல்ய பரர்கள் –
சம்சாரத்தில் இருந்து விடுபட்டு -உடல் இல்லாத நிலையில் -ஆனந்தமாக இருக்க –
ஆனந்த வடிவமான ஆத்மாவையே அனுபவித்துக் கொண்டு –
பரமாத்மாவை அடைய ஆசைப்படாமல் இருந்து இழந்து போகிறவர்கள் –

பகவத் பிராப்தி பரர்கள் –
சேஷத்வ ஞானம் அறிந்து பரமாத்மாவையே அடைந்து ப்ரீதி கார்ய கைங்கர்யம்
ஒன்றே உயர்ந்த புருஷார்த்தம் என்று அறிந்து அதற்கு ஆசைப்படுபவர்கள் –
இவர்களை
பக்தர்கள் -உபாசகர்கள்
சரணாகதர்கள் -ப்ரபன்னர்கள் -என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம் –

பக்தர்கள் -மிகுந்த அன்புடன் பகவானை இடைவிடாமல் த்யானம் செய்து அதன் மூலம் முக்தி அடைபவர்கள்
சரணாகதர்கள் -தங்கள் முயற்சி ஒன்றுமே இல்லாமல் -அவன் திருவடிகளையே பற்றி அவரே நம்மை
அவருடன் சேர்த்துக் கொள்வார் என்று மஹா விச்வாஸத்துடன் இருப்பவர்கள் –

இவர்களையும்
ஏகாந்திகள்
பரம ஏகாந்திகள் -என்று இரண்டாக பிரிக்கலாம்
ஏகாந்திகள் -அவனை சரண் அடைந்து அவரை அடைய ஆசைப்படுவதோடு
இவ்வுலக இன்பங்களையும் அவர் இடம் பிரார்த்திப்பவர்கள்
பரம ஏகாந்திகள் -வேறே பயன்களை ஒன்றுமே எதிர்பார்க்காமல் அவனையே அடைந்து
கைங்கர்யம் செய்வதே பரம புருஷார்த்தகம் என்று இருப்பவர்கள் –

பரம ஏகாந்திகளும் இரண்டு வகை
ஆர்த்தர்கள்
திருப்தர்கள்
ஆர்த்தர்கள் சம்சாரத்தில் வெறுப்பால் இனி இங்கே சிறுது நேரமும் இருக்க முடியாமல்
உடனே அவனை அடைந்து கைங்கர்யம் செய்ய பார்க்கும் ஆழ்வார்கள் போல்வார்

திருப்தர்கள் -சரணாகதி செய்த பிறவி எப்பொழுது முடிகிறதோ அப்பொழுது இனி மறு
பிறவி எடுக்காமல் அவனை அடைந்து கைங்கர்யம் செய்ய ஆசைப்படும் நம் போல்வார் –

——–

பாடம் -27-
சம்சாரத்தின் காரணம்
ப்ரம்மா தொடங்கி பீபிலி வரை அனைத்தும் கர்மம் அடியாகவே சம்சாரத்தில் கட்டுப்பட்டு உள்ளன
ஆத்மா இயற்கையிலே ஞானமே வடிவானவர் -ஆனந்தமே வடிவானவர் -குற்றங்கள் அற்றவர் –
பிரகிருதி இயற்கையிலே துக்கமாயும் குற்றம் உடையதாகவும் ஞானத்துக்கு எதிராகவும் உள்ளது
அதில் கட்டுப்பட்டு ஆத்மாவும் செயற் கையாக அஞ்ஞானம் குற்றங்கள் துக்கங்கள் அனுபவிக்கிறது –
என்று ஸ்ரீ விஷ்ணு புராணம் சொல்கிறது –
ஆகவே சம்சாரத்துக்கு மூலம் கர்மம் -கர்மம் என்றால் நாம் செய்த செயல்களால் ஏற்படும் பாப புண்யங்கள் –
பல பிறவிகளில் சேர்த்து வைத்துள்ளோம் இப்போதும் சேர்த்துக் கொண்டே இருக்கிறோம்
அனுபவித்தே கழிக்க வேண்டும் என்பதால் மேலும் பல பிறவிகளை எடுக்கிறோம் –
பாபங்கள் தீய பிறவிகளில் பிறப்பித்து சம்சாரத்தில் கட்டுப்பட வைக்கின்றன
புண்யங்கள் நல்ல பிறவியில் பிறப்பித்து சம்சாரத்தில் கட்டுப்படுத்துகின்றன –

கர்மத்தின் காரணம்
நாம் பாப புண்யங்களை சேர்ப்பதற்கு காரணம் அவித்யை தான் -அவித்யை என்றால் அறிவின்மை -தவறான அறிவு
அதன் வடிவத்தை ஸ்ரீ பராசர முனிவர் ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் கூறுகிறார்
வேதார்த்த ஸங்க்ரஹம் -பவ பயம் -கோரம் ஸம்ஸாரம் -அநாதி அவித்யா சஞ்சிதா –
அநாத்மனி ஆத்ம புத்தியே அஹங்காரம்
நான் என்பது ஆத்மாவையே குறிக்கும்-உடலில் நின்றும் வேறு பட்டவர் – -இத்தை அறியாமல் உடலே நான் என்று நினைத்து
ஆத்மாவைக் காட்டிலும் வேறே ஒரு பொருளை ஆத்மா என்று நினைக்கிறோம் –
இதுவே தேக ஆத்ம ப்ரமம் -என்றும் அஹங்காரம் என்றும் பெயர்
இது அவித்யையின் ஒரு வடிவம்
இவ்வுலகம் அனைத்தும் பகவானால் படைக்கப்பட்டு ரக்ஷிக்கப்பட்டு -அவரது சொத்தாகவே உள்ளது
நான் தவறாக சில பொருள்களை நம்மது என்று நினைத்தால் அதற்கு மமகாரம் என்று பெயர்
இது அவித்யையின் இன்னொரு வடிவம்
ஆத்மா ஸ்வதந்த்ரன் என்ற நினைவும் அவித்யையின் ஒரு வடிவமே –
இவ்வாறு பிறவி எடுத்த ஒருவர் அஹங்கார மமகார -இரண்டு வித அவித்யைகளால் -மயங்கி செயல்களை செய்து –
அதன் பலனாக பாப புண்யங்களை அடைகிறார்
அவற்றைக் கழிப்பதற்கு மறுபடியும் பிறவி எடுக்கிறார் —

ஸம்ஸார சக்கரம்
இப்படி ஒரு சமயத்தில் அவித்யை இருந்து கர்மங்களை சேர்த்து இப்போது பிறவி எடுக்கிறோம் என்பதோடு நிற்க வில்லை
அப்படி எடுக்கும் பிறவிகளில் மறுபடியும் கர்மங்களை சேர்க்கிறோம் -அதனால் மறுபடியும் பிறவி எடுக்கிறோம்
எனவே சம்சாரம் என்பது அவித்யையும் கர்மமும் மாறி மாறி வரும் சக்கரம் ஆகும்
கர்மம் அடியாக எடுத்த பிறவியில் மீண்டும் எதனால் கர்மங்கள் சேர்க்கிறோம் என்றால் அதுக்கு அடி வாசனைகளும் ருசிகளும் –
நான் செய்யும் செயல்களால் பாப புண்யங்கள் ஏற்படுவது போலவே வாசனையும் ருசியும் ஏற்படுகின்றன –
வாசனை என்றால்
முன் செய்த செயல்களால் நம்மிடம் உண்டான பதிவுகள்
நான் எந்தச் செயலை அடிக்கடி செய்கிறோமோ அவற்றைப் பற்றிய பதிவுகள் நம்மிடம் அடிக்கடி ஏற்படும் –
எனவே மறுபடியும் அந்தச் செயலை செய்வது எளியதாக இருக்கும் –
அதே போல் பிறவியை எடுத்த பின்பு உலகப் பொருள்களை அனுபவிப்பதே நமக்குத் பழக்கப் பட்டது என்பதால்
மறுபடியும் மனஸூ அதிலேயே செல்லும் –
பரமாத்மாவை பற்றிய சிந்தனையில் ஈடுபடாது -அதனால் மறுபடியும் அவித்யையே ஏற்படுகிறது
ருசி என்றால்
முன் ஜென்மங்களில் ஏற்பட்ட அனுபவங்களால் இயற்கையாக ஏற்படும் விருப்பு வெறுப்புகள்
அவற்றின் அடிப்படையில் தான் இப்பிறவியில் நமக்கு இயற்கையாக எது பிடித்து இருக்கும் என்பது முடிவாகிறது
அதனால் உலகப் பொருள்களின் மேல் ஈடுபாடு இயற்கையாகவே ஏற்படும் -பரமாத்மா இடம் அல்ல –
இதனாலும் மேலும் அவித்யையே ஏற்படுகிறது –

ப்ரவாஹ அநாதித்வம் -பீஜாங்குர நியாயம் –

பிறவியின் ஏற்றத் தாழ்வுகள்
நாம் எடுக்கும் பிறவிகளில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன
அவனே ஸ்ருஷ்டிக்கிறார் -கர்மம் அடியாகப் பிறக்கிறோம்
ஏற்றத்தாழ்வுகளை இவர்களில் யார் காரணம்
ஸ்ரீ விஷ்ணு பூரணம்சொல்லும் -அவன் நிமித்த மாத்ரமாகவே உள்ளான் -பொதுவான காரணம் ஆகிறார்
பிறவிகளுக்கு விசேஷ முக்ய காரணம் அந்த அந்த ஜீவனின் பாபமும் புண்ணியமும் தான்
ப்ரஹ்ம ஸூத்ரத்தில்
வைஷம்ய நைர் க்ருண்யே ந சாபேஷாத் வாத் –2-1-34-
அவனுக்கு பாகுபாடு பார்ப்பது என்னும் குற்றமோ கருணை இன்மை என்னும் குற்றமோ வாராது –
அவன் ஸ்ருஷ்டிக்கும் பொழுது அந்த அந்த ஜீவனின் கர்மத்தை எதிர்பார்த்து அதன் அடிப்படையிலே
ஸ்ருஷ்டிப்பதால் -என்கிறார் வேத வியாசர் இதில் –

முக்தர்களும் நித்ய ஸூரிகளும்
முக்தர்கள் -ஜீவாத்மாகில் இரண்டாவது வகை –
பல நாள்கள் சம்சாரத்திலே கட்டுப்பட்டு இருந்து –
பகவானின் அருளால் -பக்தி சரணாகதி -முதலான உபாயங்களில் ஒன்றை அனுஷ்ட்டித்து –
அதன் மூலம் கர்மங்களைத் தொலைத்து
சம்சாரத்தை நீத்து
தங்கள் இயற்கையான தன்மைகளை விளங்கப் பெற்று
பகவானை அடைந்து -அனுபவித்து -அதனால் ஏற்படும் மகிழ்ச்சி உந்த கைங்கர்யம் செய்பவர்கள்

நித்யர்கள்
என்றுமே பாப புண்யங்களின் தொடர்பே இல்லாமல்
அதனால் சம்சாரத்தில் என்றுமே கர்மம் அடியாகப் பிறக்காமல்
பரமபதத்தில் அவனுடன் எப்போதும் சேர்ந்தே இருந்து
என்றுமே அடிமைத்தனத்தைப் புரிந்து கொண்டு -அதற்கு ஏற்ப தொண்டு செய்து கொண்டு இருக்கும்
ஆதி சேஷன் கருடன் விஷ்வக்ஸேனர் போல்வார் –

———

ப்ரக்ருதி நித்ய விபூதி காலம் ஜீவாத்மா
பரமாத்மா தர்ம பூத ஞானம் மேலே பார்த்து த்ரவ்யங்கள் பார்த்து முடிப்போம்
மேலே அத்ரவ்யங்கள் பார்த்து முடிப்போம் –

பாடம் -28- தர்ம பூத ஞானம்

இவர் குணசாலி -குணம் இவர் இடம் உள்ளது -அறிவாளி -அறிவு என்பதே தர்ம பூத ஞானம் –

ஐந்தாவது த்ரவ்யம்
இதன் லக்ஷணம்
ஸ்வயம் ப்ரகாஸமாகவும் –அசேதனமாகவும் –விஷயம் உடையதாகவும் -இருக்கும் த்ரவ்யம்
ஸ்வயம் பிரகாசம் -என்பதால் ப்ரக்ருதி -காலம் -இவற்றில் இருந்து வேறுபாடு காட்டப் பட்டது
அசேதனம் என்பதால் ஜீவாத்மா பரமாத்மா இவற்றில் இருந்து வேறுபாடு காட்டப்பட்டது –
விஷயம் உடையது என்பதால் நித்ய விபூதியில் இருந்து வேறுபாடு ஸித்தம்
மற்ற ஒரு லக்ஷணம்
அர்த்த ப்ரகாஸத்வம்
அதாவது பொருள்களை ஆத்மாவுக்குக் காட்டிக் கொடுத்தல் –
ஆத்மா வேறு –அவர் இடம் உள்ள அறிவு வேறு –
ஆத்மா அணுவாக தனக்குத் தான் தோற்றம் அளிப்பவராக -தன்னை மட்டுமே விஷயமாகக் கொண்டு உருவம் மாறாமல் இருக்கும்
தர்ம பூத ஞானம் விபுவாக தனக்குத் தானே தோற்றம் அளிக்காமல் -ஆத்மாவுக்கே தோற்றம் அளிப்பதாய் –
உலகப் பொருள்களையும் விஷயமாகக் கொண்டு தன் உருவம் மாறாக் கூடியதாகவும் இருக்கும்
நான் அறிகிறேன் என்று உலகில் அனைவரும் உணருவதாலும்
வேதங்களிலும் ஆத்மாவை விஞ்ஞாதா -சேதனன் -என்று எல்லாம் சொல்லுகிறபடியாலும்
விஞ்ஞாதா -அறிவாளி -அறிவு உடையவன் –
ஆத்மாவைத் தவிர அவருடைய அறிவு என்று வேறு ஓன்று என்று தனியாக இருப்பது தெரிகிறது –

தர்மம் பொது சொல்- குணம் நிறம் செயல் த்ரவ்யம் இவற்றைச் சொல்லும் -இவை -தர்மியை அண்டி இருக்கும் –
தர்மி ஞானம் தர்ம ஞானம் -இரண்டும் அறிவு -இது ஆத்மாவை அண்டி இருக்கும்-
தர்மி ஞானம் -ஆத்மாவைச் -சேதனனைச் சொல்லி– தர்ம பூத ஞானம் சேதனன் இடம் உள்ள சைதன்யத்தைச் சொல்லும் –

தர்ம பூத ஞானத்தின் செயல்பாடு
ப்ரஞ்ஞா ச தஸ்மாத் ப்ரஸ்ருதா புராணீ -முதலான பல இடங்களில் சாஸ்திரங்களில் சொல்லப்படுகிற படியால்
ஆத்மாவின் தர்ம பூத ஞானம் பரவத் தொடங்கும்
ப்ரஸ்ருதா-ஓடுகிறது -ப்ரவாஹம் போல் ஞானம் ஓடும்-
ஒரு இந்திரியம் ஓடினால் -அதன் மூலம் அறிவு வெளியே ஓடும் -அனைத்தையும் கட்டுப்படுத்து -கீதாச்சார்யர்
கண் முதலான இந்திரியங்கள் மூலம் உடலில் இருந்து வெளியே சென்று வெளியில் உள்ள பொருள்களை அடைந்து
அவற்றை ஆத்மாவுக்குக் காட்டிக் கொடுக்கிறது –
ஒரு ஜீவாத்மா விழித்து இருக்கும் பொழுது அதன் ஞானம் புறப்பட்டு வெளியே சென்று பொருள்களைக் காட்டும்
ஜீவாத்மா தூங்கும் பொழுது இந்திரியங்கள் இயங்காத படியாலும்
தமோ குணம் அதிகமான படியாலும் தர்ம பூத ஞானம் வெளியே செல்ல இயலாது –

அதனால் நாம் பொருள்களை அறிவது இல்லை –
இந்திரியம் மட்டும் செல்வது இல்லை -அறிவும் செல்கிறது —
இதனால் தான் தூக்கம் ஸ்வப்னம் அவஸ்தைகள் -மனஸ் மட்டும் வேலை -ஆழ்ந்த உறக்கம் மனசும் வேலை செய்யாமல் –
சங்கோசம் விகாசம் அறிவுக்கு -உண்டே
இப்படிக் கட்டுப்படுத்துவதே தமோ குணம் -ஞானம் இயற்கையாகவே பரவக்கூடியது –

இப்படி விரிதல் சுருங்குதல் முதலான நிலைகளையும் -வெளியே செல்லுதல் முதலான செயல்களையும் கொண்டபடியால்
தர்மபூத ஞானம் ஒரு த்ரவ்யமாகவே கொள்ளப் படுகிறது –
நியாய சாஸ்திரத்தில் ஞானம் -புத்தி -என்பது ஆத்மாவின் ஒரு குணம் மட்டுமே -த்ரவ்யம் அல்ல என்று சொல்லுகிறார்கள்
நம் விஸிஷ்டாத்வைத சித்தாந்தத்தில் ஞானம் ஒரு த்ரவ்யம் ஆகும்
ஒரு பொருள் எப்பொழுதும் மற்ற ஒரு பொருளையே அண்டி இருந்தால் அது அதற்கு குணம் என்று சொல்லப்படுகிறது –
எனவே ஞானம் த்ரவ்யமாக இருந்தாலும் அத்தை ஆத்மாவின் குணம் என்று சொல்வதிலும் ஒரு தவறும் இல்லை
தீபம் என்னும் தேஜஸ்ஸூ த்ரவ்யத்தை பிரபை என்னும் தேஜஸ்ஸூ த்ரவ்யம் அண்டி இருப்பது போல்
ஜீவாத்மா என்ற ஞான த்ரவ்யத்தை தர்ம பூத ஞானம் என்னும் ஞான த்ரவ்யம் அண்டி உள்ளது –

நான் உயரமாக இருக்கிறேன் மோதிரம் அணிந்து இருக்கிறேன்
அண்டியே இருப்பதே குணம் -த்ரவ்யமாகவும் இருக்கலாம்
நடத்தல் செயல் நடப்பவனை அண்டியே இருக்கும் -செயல் குணம்
வெண்மை நிறம் வேஷ்ட்டிக்கு குணம்
மோதிரம் கழற்றி விடலாம்
ஆத்மாவுக்கும் தர்ம பூத ஞானத்துக்கும் விட்டுப் பிரியாத -அப்ருதக் ஸித்த விசேஷணம் –
எனவே குணம் என்றும் த்ரவ்யம் என்றும் சொல்லலாமே
ஆத்மாவை -ஆஸ்ரயம் -விட்டு பிரியாமல் -வெளியில் போயும் இருக்கும் தர்ம பூத ஞானம் –
இதனால் குண பூத ஞானம் என்று சொல்லாமல் -தர்ம பூத ஞானம் – என்கிறோம் –

தர்ம பூத ஞானத்தின் தன்மைகள்
ஆத்மா எப்படி நித்யமானவரோ அதே போலே ஆத்மாவின் தன்மையான தர்ம பூத ஞானமும் நித்யம் என்று வேதம்
ந விஞ்ஞாது விஞ்ஞாதே விபரி லோபோ வித்யதே
ததா ஹேய குண த்வம்சாத் அவ போதய குண ப்ரகாஸந்தே ந ஜன்யந்தே நித்யா ஏவ ஆத்மநோ ஹி தே -என்ற இடத்திலும்
(ப்ரகாஸந்தே ந ஜன்யந்தே-விளங்குகின்றன ஒழிய பிறப்பது இல்லை-நித்யா ஏவ-நித்யமாகவே இருக்கும் )
ஒரு ஜீவாத்மா முக்தி அடையும் பொழுது அவருக்கு புதிதாக அறிவு உண்டாவது இல்லை –
இயற்கையாக அவரிடம் உள்ள அறிவு முழுவதுமாக வெளிப்படுகிறது அவ்வளவே என்று சொல்லப் படுகிறது –
எனக்கு அறிவு உண்டானது -அறிவு நஷ்டமானது என்று உலகில் நாம் சொல்வது எல்லாம் உண்மையில்
தர்ம பூத ஞானத்தின் உத்பத்தியையோ அழிவையோ குறிக்கவில்லை
தர்மபூத ஞானம் உடலில் இருந்து பரவி வெளியே வந்து ஒவ்வொரு பொருளின் தொடர்பை அடைந்து
அதைக் காட்டிக் கொடுக்கும் பொழுது அந்தப் பொருளைப் பற்றின ஞானம் உண்டானது என்று சொல்கிறோம் –
உண்மையில் தொடர்பு மட்டுமே புதிதாக உண்டாகியது
இந்த ஞானம் இயற்கையாக விபுவாக -உலகு எங்கும் பரவியதாக -இருக்க வேண்டும்
நித்ய ஸூரிகளுக்கும் முக்தர்களுக்கும் அப்படித்தான் இருக்கும் –
பத்தர்களான சம்சாரிகளுக்கு மட்டும் அவர்கள் செய்த பாப புண்யங்களைப் பொருத்து அதனுடைய பரவும் தன்மை தடுக்கப்படும்
கல்லுக்குள் உள்ள தர்ம பூத ஞானம் வெளியே வர முடியாது –செடி கொடிகளில் சிறிது வரலாம் –
மனிதனாக இருந்தால் அதிகமாக வரலாம் -தேவர்களுக்கு இன்னும் அதிகம் –

தர்ம பூத ஞானத்தின் நிலைகள்
தர்ம பூத ஞானம் தான் -ஞானம் -சைதன்யம் -மதி -ப்ரஞ்ஞா- ஸம்வித் -திஷணா -தீ -மநீஷா –சேமுஷீ –மேதா –புத்தி –
முதலான சொற்களால் வழங்கப்படுகிறது
நியாய சாஸ்திரத்தின் படி நமக்குத் பிடித்த பொருளைப் பற்றின அனுபவம் ஏற்பட்டால் அதனால்
ஸூகம் என்ற தனி குணம் ஆத்மாவுக்கு உண்டாகும் -அது அனுபவிக்கப்படும் –
ஆனால் இப்படி தனியாக ஒரு குணத்தை நம் ஸித்தாந்தத்தில் ஏற்க வில்லை
ஸூகம் என்பது ஞானத்தைக் காட்டிலும் வேறான பொருள் இல்லை –
இஷ்டமான விஷயத்தின் அனுபவம் என்கிற ஞானம் தான் ஸூகம் ஆகும் –
பிடிக்காத விஷயத்தின் அனுபவம் என்கிற ஞானம் தான் துக்கம் ஆகும்
காமம் ஆசை -சங்கல்பம் முடிவு -விசிகித்சா சந்தேகம் -ஸ்ரத்தை -அஸ்ரத்தை -உறுதி உறுதியின்மை -வெட்கம் -அறிவு -பயம்
முதலான அனைத்துமே மனத்தின் மாறுபாடுகளே என்று ஸாஸ்த்ரம் சொல்லும்
அதன் பொருள் யாது என்னில் இவை எல்லாம் மனத்தின் தாக்கத்தால் தர்ம பூத ஞானத்தின் மாறுபாடுகள் என்பதே –
ஞானத்தின் வேறுபாடுகள் தான் -மனசின் துணையால் தர்ம பூத ஞானம் இத்தனை மாற்றங்கள் என்றபடி –

தர்ம பூத ஞானம் பற்றி பல மதஸ்தர்கள் உடைய க்யாதி வாதம் மேலே பார்ப்போம்

———

பாடம் –29-க்யாதி வாதம்

எந்த தரிசனமாக இருந்தாலும் உலகத்தின் உண்டாக்கும் அழிவு பிராணிகளின் பிறப்பு இறப்பு
முதலானவை எப்படி நடக்கின்றன என்பதை ஆராய்வது போல்
அறிவு என்றால் என்ன
நாம் அறிவு பெறுவது எப்படி
ஒரு அறிவு சரியாதனதா தவறானதா என்று எப்படி அறியலாம்
முதலான கேள்விகளுக்கும் பதில் உரைக்க வேண்டும் –
இதற்குத் தான் க்யாதி வாதம் என்று பெயர்

கியாதி என்றால் அறிவு
வாதம் -ஆராய்ச்சி

தன்மைகளையும் சேர்த்தே அறிகிறோம் -வெண்மை அளவு சுவை செயல் இவற்றைச் சேர்த்தே பொருளை –
ச விசேஷ -இது என்றாலே அருகில் -அது -உது-போல் – அறிகிறோம் –
பொருள் பதார்த்தம் -என்றே அறிகிறோம் -ஒரு ஏகத்துவம் அறிகிறோம் —
இங்கு ஒரு பொருள் உள்ளது -சத்தை உடன் இருப்பதையே சுருக்கமாக இது ஒரு பொருள் என்கிறோம் –
இது பொருள் தன்மை -விசேஷணங்கள் -இரண்டையும் அறிந்து வேறே ஒன்றில் இருந்து வேறுபடுத்திக் காட்டும்
விசேஷ்யம்–பிரகாரம் விசேஷணம் இவற்றை அறிகிறோம் –

அதில் முக்கியமாக பிரமம் -தவறான அறிவு ஏற்ப்படி ஏற்படுகிறது என்பதே முக்யமாகப் பேசப்படுகிறது –
அந்த முறையில் நம் விசிஷ்டாந்த சித்தாந்தத்தில் ஏற்ப்படி என்று பார்ப்போம்

அதற்கு முன்பு மற்ற தரிசனத்தில் எப்படி என்பதை முதலில் பார்ப்போம் –
ஸ்லோகம் ஐந்து கியாதி வாதங்களை சொல்லும்
1- ஆத்ம க்யாதி -புத்தர்களால் முன் வைக்கப்படுகிறது
2-அஸத் க்யாதி -சாருவாகர்களால் தழுவப்பட்டது
3-அக்யாதி -மீமாம்ஸகர்களில் ஒரு பிரிவினரான ப்ரபாகரர்களால் சொல்லப்படுகிறது
4-அந்யதா க்யாதி -நியாய மாதத்தில் ஒப்புக் கொள்ளப்படுகிறது
5-அநர்வசநீய க்யாதி -அத்வைத மதத்தால் ஏற்கப் படுகிறது
6-யதார்த்த கியாதி -விசிஷ்டாத்வ மதத்தில் ஏற்கப் படுகிறது –

ஆத்ம க்யாதி
புத்தர்கள் -யோகாச்சார்கள் -ஞானமே வடிவான ஆத்மாவைத் தவிர உலகில் எதுவுமே உண்மை அல்ல என்பர் –
குடம் சுவர் கயிறு போன்ற பொருள்கள் உலகில் இல்லை -எல்லாம் அறிவின் வெவ்வேறு வடிவங்களே
அந்த அறிவே தான் ஆத்மா
எனவே ஞான வடிவமான ஆத்மாவே கூடமாகவும் சுவராகவும் துணி யாகவும் அறியப்படுகிறார் –
இதுவே ஆத்ம க்யாதி
அவிபாகோபி புத்தயாத்மா விபர்யாசித தர்வநை
க்ராஹ்ய க்ராஹக ஸம் வித்தி பேதவாந் இவ லஷ்யதே –என்பதே அவர்கள் கூற்று –
கிரஹணம் க்ரஹீதா க்ராஹ்யம் -மூன்றும் -அறிவும் அறிவாளியும் அறியும் பொருளும் ஒன்றே –
ஞானத்தொடர் ஆத்மா க்ஷணிகம் அனைத்தும் -வேறு பாடு இருப்பது போல் தோற்றும் என்பர் –
சேர்ந்தே தோற்றம் அளிக்கிறது -அறிவு தான் பொருள் -ஸஹ ஆலம்பநம் –
உண்மையில் ஞானம் மட்டுமே உள்ளது –
அதுவே தான் நம் தோஷங்களின் காரணமாக
அறியப்படும் பொருள் என்றும் —
அறிவு என்றும் –
அறிபவன் என்றும் மூன்றாகத் தோற்றுகிறது என்பதே அவர்கள் மதம் –

அஸத் க்யாதி
இது சாருவாகர்கள் சொல்வது
இவர்கள் ப்ரத்யக்ஷம் என்கிற ஒரே பிரமாணத்தை ஏற்கிறார்கள் –
புலன்களால் அறியப்படுவது மட்டும் உண்மை என்பர்
கயிற்றைப் பார்த்து பாம்பு என்று பிரமிக்கும் பொழுது இல்லாத பாம்பு தான் தோற்றம் அளிக்கிறது
எனவே பிரமம் ஏற்படும் இடங்களில் -அஸத் -இல்லாத பொருள் தான் தோற்றம் அளிக்கிறது என்பது அவர்கள் மதம் –

அந்யதா க்யாதி -இது நியாய மாதத்தில் சொல்லப்படுவது -மீமாம்சை -பாட்ட மதம் -இதே போல்–
சில சந்தர்ப்பங்களில் கண் முன்னாள் இருக்கும் கிளிஞ்சல் நமக்கு வெள்ளியாகத் தோற்றும்
அங்கு கண்ணுக்கும் கிளிஞ்சலுக்கும் தொடர்பு ஏற்படுகிறது –
ஆனால் கண்ணில் இருக்கும் தோஷத்தால் அது கிளிஞ்சல் என்று அறியவில்லை
பளபளப்பான ஏதோ ஒரு பொருள் உள்ளது என்று மட்டும் அறிகிறேன் –
உடனே கடையில் என்றோ பார்த்த வெள்ளியின் நினைவு ஏற்பட்டு அதே போன்ற வெள்ளி தான்
நம் கண் முன் இருக்கிறது என்று நினைக்கிறேன்
அதனால் ஒரு பொருள் மற்ற ஒரு பொருளாக அறியப்படுகிறது –
இதுவே அந்யதா -வேறு மாதிரியான க்யாதி அறிவு எனப்படுகிறது –

அக்யாதி -இது மீமாம்சை ப்ரபாகர மதத்தில் சொல்லப்படுகிறது –
இவர்களும் கண் கிளிஞ்சலைப் என்றும் -அது கிளிஞ்சல் என்று தெரியவில்லை என்றும்
பளபளப்பாக இருப்பதைக் கண்டு வெள்ளியின் நினைவு ஏற்படுகிறது என்றும் ஒப்புக் கொள்கிறார்கள்
ஆனால் அதற்குப் பிறகு கிளிஞ்சலை வெள்ளி என்று கிரஹிக்கும் ஓர் அறிவு ஏற்படுகிறது என்று அவர்கள் ஏற்க வில்லை
கண் முன் இருக்கும் பொருளுக்கும் நினைவுக்கு வந்த வெள்ளிக்கும் உள்ள வேறுபாட்டை அறியாத படியால் தான் பிரமம் ஏற்படுகிறது
இரண்டும் ஓன்று என்று அறியத் தேவையில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்
ஆகவே இரண்டும் ஒன்றே என்ற அறிவு தோன்றுவதாகக் கொண்டால் அது அந்யதா க்யாதி
அவை வேறு என்ற அறியாமை மட்டுமே போதுமானது என்று சொன்னால் அக்யாதி –
அசம்சர்க்க அக்ரஹா தொடர்பு இல்லாமை அறியாமை இது –
ஞானம் உண்மையாகவே இருக்கும் -தவறாகவே இருக்காது என்பர் –
வெள்ளியும் கிளிஞ்சாலும் வேறே வேறே என்று அறியாமல் போனேன் என்பர் –

அநிர்வசநீய க்யாதி -இது அத்வைதிகளால் சொல்லப்படுவது -உலகமே பொய்யானது என்பர் –
பரமாத்மாவையே அவித்யை மூடிக் கொண்டு இருப்பதால் உலகம் தோற்றுகிறது
நாம் ஒரு கிளிஞ்சலை வெள்ளி என்று நினைக்கும் இடத்தில் அங்கு இருக்கும் அவித்யை என்ற பொருள்
உருமாறி வெள்ளியின் வடிவத்தை அடைகிறது –
அந்த வெள்ளிக்கு அநிர்வசநீயமான வெள்ளி என்று பெயர் -ஏன் என்றால் அது இருக்கும் பொருள் என்று சொல்ல முடியாது –
பின் ஒரு காலத்தில் பொய் என்று அறியப்படுகிற படியால் இல்லாத பொருள் என்றும் சொல்லப்பட முடியாது
தோற்றம் அளிக்கிற படியால் -அநிர்வசநீயம் -சொல்லப்பட முடியாதது என்றே அது சொல்லப்படுகிறது –

வேதாந்த பரிபாஷை -கிளிஞ்சல் வடிவில் அவித்யை
பளபளப்பை கண்டு -வெள்ளி நினைவு -பதிவு ஆத்மா இடம் உள்ளது
ஸாதர்சம் -தூண்டப்பட்டு -கண்ணில் காமாலை தோஷம் -அறியாமல் -அவித்யையே வெள்ளியாக உருவம் –
பார்க்கும் பொழுது தான் இது தோன்றும் -இந்தவித வெள்ளி உண்டாகிறது –
அவித்யையே வெள்ளியாக -ஸத் என்றும் அஸத் என்றும் சொல்ல முடியாதே இதை –

யதார்த்த க்யாதி –இது நமது விசிஷ்டாத்வைத சித்தாந்தம் -இதன் படி அனைத்து பரிவும் சரியானது தான்
தவறான அறிவு என்று ஒன்றே கிடையாது
கிளிஞ்சலை வெள்ளி என்று காட்டும் அறிவும் கூட இல்லாத பொருள் எதையும் காட்டவில்லை –
ஸ்ருஷ்டியின் தொடக்கத்தில் பகவான் பஞ்சீ கரணம் செய்து பஞ்ச பூதங்களையும் கலந்த படியால்
ப்ருத்வியாலான கிளிஞ்சலிலும் வெள்ளியை உருவாக்கும் தேஜஸ்ஸின் சிறு அவயவங்கள் உள்ளன
எனவே நாம் அந்த வெள்ளியின் அவயவங்களை அதிகமாகவும் கிளிஞ்சலின் அவயவங்களை குறைவாகவும் அறிந்தால்
அது வெள்ளி என்று சொல்லி விடுகிறோம் –
அந்த அறிவு தவறானது அல்ல -இல்லாத எந்தப் பொருளையும் க்ரஹிக்க வில்லை -யதார்த்தம் சர்வஞ்ஞாம் –
உண்மையை முழுமையாகக் கிரஹிக்க வில்லை என்பது மட்டுமே –
அது அறிவின் தோஷம் ஆகாது -இப்படி ஒரு அறிவு ஏற்பட்டால் அதனால் ஏற்படும் செயல் வீணாகப் போகும் –
முழுமையான உண்மையை அறிந்தால் அதனால் ஏற்படும் செயல் பயன் உள்ளதாகும் என்பதே வேறுபாடு –

பிரதி நியதி நியாயம்
நெல் இல்லா விட்டால் சத்ருசமாக வ்ருஹீ கொள்ளலாம் -நீவாரங்கள் கொண்டு யாகம் செய்யலாம் –
ததேவ சத்ருசம் தஸ்ய -த்ரவ்ய -ஏக தேச பாவாத் -சில அவயவங்கள் அதிலும் இருக்குமே –
கானல் நீர் மணலிலும் நீரின் அவயவங்கள் உண்டே -பஞ்சீ கரணத்தால் –
கயிறு பாம்பு -இங்கு இரண்டுமே பிருத்வியாலே ஆனவையே -இங்கு பிரதி நியாயம் -உண்டே
சர்வம் ஞானம் யதார்த்தம் இதனாலே -செயல் வீணாக போனால் தானே பிரமம் ஆகும் –

——————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கணாதர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாசர் -பாதராயணர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நியாய மீமாம்ச வேதாந்த பாடங்கள்–ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்–பகுதி -3 –வேதாந்த சாஸ்த்ரம்– பாடங்கள் -13-20 —

August 5, 2021

பாடம் -13-ஸத்வம் -ரஜஸ் -தமஸ்

ஸத்த்வம் ரஜஸ் தம இதி குணா: ப்ரக்ருதி ஸம்பவா:
நிபத்நந்தி மஹா பாஹோ தேஹே தேஹிநமவ்யயம் -ஸ்ரீ பகவத்கீதை-14-5-

மஹாபாஹோ-பெருந்தோளாய்,
ஸத்த்வம் ரஜ: தம இதி-சத்வம், ரஜஸ், தமஸ் இந்த குணங்கள்,
ப்ரக்ருதிஸம்பவா: குணா:-பிரகிருதியில் எழுவன,
தேஹே-இவை உடம்பில்,
அவ்யயம் தேஹிநம்-அழிவற்ற ஆத்மாவைப்,
நிபத்நந்தி-பிணைக்கின்றன.

சத்வம், ரஜஸ், தமஸ் இந்த குணங்கள் பிரகிருதியில் எழுவன. பெருந்தோளாய்,
இவை உடம்பில் அழிவற்ற ஆத்மாவைப் பிணிக்கின்றன.

ஸத்வம் -ரஜஸ் -தமஸ் -என்ற முக்குணங்களும் ப்ரக்ருதி என்று அழைக்கப்படும் அசேதனப் பொருளில் இருந்து உண்டாகக் கூடியவை –
அவை ப்ரக்ருதி என்கிற த்ரவ்யத்தின் தன்மைகளே -இவை மூன்றும் சம்சாரத்தில் உடலோடு இருக்கும் ஜீவாத்மாவை உடலோடு காட்டுகின்றன -அதாவது
மேலும் மேலும் சம்சாரத்தில்பிறவிகளை எடுக்க வைத்து சம்சாரத்திலேயே கட்டுப்படுத்துகின்றன –

சத்வம் லகு ப்ரகாசகம் இஷ்டம் -மேல் நோக்கி செல்லும் நெருப்பு வாயுவில் இவை இருக்கும் –
லகுத்த்வம் -உண்டே இவற்றுக்கு -அறிவை ஏற்படுத்தும் -நியாய சாஸ்திரம் சொல்லும்
வேதாந்த வ்ருத்தமானவையாக இருந்தால் இவையும் உபா தேயம்

ஸத்வ குணமானது லகு -லேசாக இருக்கும் தன்மையைக் கொடுக்கும் –
அதனால் நம்முடைய இந்திரியங்கள் எளிதில் வெளியே சென்று பொருள்களை கிரஹித்து வர முடியும்
அதனால் ஸத்வ குணம் -ப்ரகாஸகம் -ஞானத்தை ஏற்படுத்தும் எனப்படுகிறது

உபஷடம்பகம் சலம் -ரஜஸ் -உத்ஸாகம் பண்ண வைக்கும்
ரஜஸ் குணமானது -சலம் -எப்பொழுதும் நிலையாக நில்லாமல் நகர்ந்து கொண்டே இருக்கும் தன்மையைக் கொடுக்கிறது –
இதனால் இது உபஷ்டம்பகம் -ஸத்வ குணத்தையும் தமோ குணத்தையும் ஊக்குவித்து அதனதன் கார்யங்களை செய்விக்கிறது –

குரு வரணகம் ஏவ தமஸ் -குருத்வம் -24 குணங்களில் ஒன்றாக நியாய சாஸ்திரத்தில் பார்த்தோம் –
ஆவரணம் மூடி -மறைக்க தடுக்கக் கூடியவை –
மனஸ் பாரமாய் இருக்கு சொல்வது போல் களைப்பு போன்றவற்றை சொல்லும் -எடை கூடுவதை சொல்ல வில்லை –
தமோ குணம் -குரு -பாரமாய் இருக்கும் தன்மையைக் கொடுக்கும்
அதனால் வரணகம் -இந்திரியங்கள் எளிதில் வெளியே செல்ல விடாமல் தடுத்து மூடி விடும் –

முரண்பட்ட ஸ்வ பாவங்கள் -மூன்றுக்கும் -ப்ரதீப வச்ச அர்த்ததோ வ்ருத்தி –
புருஷார்த்தம் குறித்து மூன்றும் செயல்படும் -இதுக்கு த்ருஷ்டாந்தம் –
த்ரி -எண்ணெய் -நெருப்பு
வாதம் -பித்தம் -ஸ்லேஷ்மம் -போல்
இம் மூன்று குணங்களும் வேறுபட்டாலும் சேர்ந்தே செயல்படுகின்றன –

பிரகாசம் -பிரவிருத்தி -நியமனம் இம்மூன்றும் முறையே ஸத்வ -ரஜோ -தமோ -குண கார்யங்கள்

முக் குணங்கள் செயல்பாடு
ப்ரீதி -என்கிற ஸூகத்துக்குக் காரணம் ஸத்வம்
அப்ரீதி என்கிற துக்கத்துக்கு காரணம் ரஜஸ்
விஷாதம் என்கிற மயக்கத்திற்கு காரணம் தமஸ்

ஸத்வ குணம் அறிவை உண்டாக்கும்
ரஜோ குணம் செயலை உண்டாக்கும்
தமோ குணம் அவற்றைக் கட்டுப்படுத்தும்

அந்யோன்ய அபிபவ வ்ருத்ய –
இவற்றில் ஒவ்வொரு குணமும் மற்ற இரண்டு குணங்களையும்
அழுத்திக் கொண்டு -அபி பவம் -செய்து தான் வளரும்

அந்யோன்ய ஆஸ்ரய ஜனன வ்ருத்ய –
ஒவ்வொரு குணமும் மற்ற இரண்டின் செயலை எதிர்பார்த்துத் தான் தன் கார்யத்தைச் செய்யும்
ஸத்வ குணம் அறிவை ஏற்படுத்த வேண்டும் என்றால் ரஜோ குணத்தால் உந்தப்பட வேண்டும்
அதே போல் தான் தமோ குணமும் -ரஜோ குணத்தின் காரியமே மற்ற இரண்டின் குணங்களை ஊக்குவிப்பது என்கிறபடியால்
அது மற்ற இரண்டின் குணங்களை எதிர்பார்க்கிறது –

அந்யோன்ய மிதுன வ்ருத்ய –
பிரக்ருதியிலும் அதன் காரியங்களிலும் இந்த முக் குணங்கள் என்றுமே பிரியாமல் சேர்ந்தே இருக்கும் –

சாங்க்ய மத காரிகை இது
விட்டுப்பிரியாமல் இருப்பது இங்கே பிராகிருத மண்டலத்தில் தானே
அவர்கள் நித்ய விபூதியை ஒத்துக் கொள்வது இல்லை
ஆகவே நாம் இவற்றை லீலா விபூதிக்கே கொள்ள வேண்டும் –

முக் குணங்களால் நாம் கட்டுப்படுத்தல்
தத்ர ஸத்த்வம் நிர்மலத்வாத் ப்ரகாஸகம் அநாமயம்
ஸுக ஸங்கேந பத்நாதி ஜ்ஞாந ஸங்கேந சாநக–14-6-

அநக-பாவமற்றவனே,
தத்ர ஸத்த்வம் நிர்மலத்வாத் ப்ரகாஸகம்-அவற்றுள்ளே சத்வம், நிர்மலத் தன்மையால் ஒளி கொண்டது,
அநாமயம்-நோவற்றது,ரோகங்கள் வாராமல் தடுக்கும் –
ந சத்வாத் ஆரோக்யம் -தேசிகன்
ஸுக ஸங்கேந-அது இன்பச் சேர்க்கையாலும்,
ஜ்ஞாந ஸங்கேந ச-ஞானச் சேர்க்கையாலும்,
பத்நாதி-கட்டுப்படுத்துவது.

அவற்றுள்ளே சத்வம், நிர்மலத் தன்மையால் ஒளிகொண்டது; நோவற்றது, பாவமற்றோய் அது
இன்பச் சேர்க்கையாலும் ஞானச் சேர்க்கையாலும் கட்டுப்படுத்துவது.
சத்வ குணமானது –
குற்றம் கலக்கம் அற்றபடியால் ப்ரகாஸம் என்கிற அறிவை ஏற்படுத்துகிறது — உடலில் நோய்கள் வராமல் தடுக்கிறது
அது மேலும் மேலும் அறிவையும் ஸூகத்தையும் அடைய வேண்டும் என்கிற ஆசையை ஏற்படுத்தி –
அதற்காக பல செயல்களில் ஈடுபட வைத்தும் -அதன் மூலம் நம்மை உடலோடு கட்டுகிறது –

ரஜோ ராகாத்மகம் வித்தி த்ருஷ்ணா ஸங்க ஸமுத்பவம்
தந்நி பத்நாதி கௌந்தேய கர்ம ஸங்கேந தேஹிநம்–14-7-

கௌந்தேய-குந்தி மகனே,
ராகாத்மகம் ரஜ:-விருப்ப இயல்புடையது ரஜோகுணம்,
த்ருஷ்ணா ஸங்க ஸமுத்பவம் வித்தி-அவாவின் சேர்க்கையால் பிறப்பது என்று அறிந்து கொள்,
தத் தேஹிநம் கர்மஸங்கேந-அது ஆத்மாவைத் தொழிற் சேர்க்கையால்,
நிபத்நாதி-கட்டுகிறது.
ராகம் த்ருஷ்ணா சங்கம் -மூன்றும் -இந்த ஸ்லோகத்தில் ஆசைக்கு பத பிரயோகம் –
ஆண் பெண் சேர்க்கை ஆசை ராகம்
த்ருஷ்ணா -பொருள்களின் மேல் ஆசை -அவர்களுக்கு பிடித்தவற்றின் மேல் -கண்டு –ஐம்கருவி இன்பம்
சங்கம் -அபிமானத்தால் வரும் ஆசை

ரஜோ குணம் விருப்ப இயல்புடையது; அவாவின் சேர்க்கையால் பிறப்பது. குந்தி மகனே,
அது ஆத்மாவைத் தொழிற் சேர்க்கையால் கட்டுகிறது.

ரஜோ குணம் ராகம் எனப்படும் காம ஸூகத்தில் இருந்து தோன்றுகிறது –
உலக விஷயங்களில் -த்ருஷ்ணா -ஆசை -மற்றும்
நம்முடையவர்களாக அபிமானிக்கப்பட்ட மக்கள் இடம் உண்டான ஆசை-சங்கம் -என்ற இரண்டையும் இது ஏற்படுத்துகிறது –
அதற்காக நம்மை செயல்களில் ஈடுபடுத்தி -அதன் மூலமே நம்மை உடலோடு கட்டுகிறது –

தமஸ்த்வ அஜ்ஞாநஜம் வித்தி மோஹநம் ஸர்வ தேஹிநாம்
ப்ரமாதா லஸ்ய நித்ராபிஸ் தந்நி பத்நாதி பாரத–14-8-

பாரத-பாரதா!
ஸர்வதேஹிநாம் மோஹநம் தம:-உடற்பற்றுடைய எல்லாரையும் மயக்கக் கூடிய தமோ குணமோ,
அஜ்ஞாநஜம் வித்தி-அஞ்ஞானத்திலிருந்து உண்டாவதாக தெரிந்து கொள்,
தத் ப்ரமாத ஆலஸ்ய நித்ராபி-அது தவறுதலாலும் சோம்பலாலும் உறக்கத்தாலும்,
நிபத்நாதி-கட்டுப் படுத்துகிறது.

தமோ குணம் அஞ்ஞானத்தில் பிறப்பதென்றுணர். இதுவே எல்லா ஜீவர்களையும் மயங்கச் செய்வது.
தவறுதலாலும் சோம்பலாலும் உறக்கத்தாலும் அது கட்டுப்படுத்துகிறது. பாரதா!

தமோ குணம் அஞ்ஞானம் என்கிற அறிவின்மையால் தோன்றுகிறது -அது மேலும் மயக்கத்தை நமக்கு ஏற்படுத்துகிறது –
கவனம் இன்மை -பிரமாதம் -சோம்பேறித்தனம் -ஆலஸ்யம் -தூக்கம் -நித்ரா –
ஆகிய இவற்றின் மூலம் நம்மைக் – கட்டுப் படுத்துகிறது

ஸத்த்வாத்ஸஞ்ஜாயதே ஜ்ஞாநம் ரஜஸோ லோப ஏவ ச
ப்ரமாதமோஹௌ தமஸோ பவதோऽஜ்ஞாநமேவ ச-14-17-

ஸத்த்வாத் ஜ்ஞாநம் ஸஞ்ஜாயதே-சத்வத்திலிருந்து ஞானம் பிறக்கிறது,
ரஜஸ: லோப ஏவ ச-ரஜோ குணத்தினின்றும் அவாவும்,
தமஸ: ப்ரமாத மோஹௌ ச-தமோ குணத்திலிருந்து தவறுதலும், மயக்கமும்,
அஜ்ஞாநம் ஏவ பவத:-அஞ்ஞானமும் தோன்றுகின்றன.

சத்வத்திலிருந்து ஞானம் பிறக்கிறது; ரஜோ குணத்தினின்றும் அவாவும், தமோ குணத்திலிருந்து தவறுதலும்,
மயக்கமும், அஞ்ஞானமும் தோன்றுகின்றன.

ஸத்வ குணத்தில் இருந்து அறிவும்
ரஜோ குணத்தில் இருந்து பேராசையும்
தமோ குணத்தில் இருந்து கவனம் இன்மை -மயக்கம் -அறிவின்மை -ஆகிடாவையும் தோன்றுகின்றன –
மூன்று குணங்களும் ஏதோ ஒரு வகையில் நம்மை சம்சாரத்தில் கட்டுப் படுத்து கின்றன –

முக்குணங்களைப் புரிந்து கொள்ளுதல் –

ப்ரக்ருதே: க்ரியமாணாநி குணை: கர்மாணி ஸர்வஸ:
அஹங்கார விமூடாத்மா கர்த்தா அஹமிதி மந்யதே–3-27-

ப்ரக்ருதே: குணை: ஸர்வஸ:-இயற்கையின் குணங்களால் எங்கும்,
கர்மாணி க்ரியமாணாநி-தொழில்கள் செய்யப்படுகின்றன,
அஹங்கார விமூடாத்மா-அகங்காரத்தால் மயங்கியவன்,
கர்தா அஹம் இதி மந்யதே-“நான் செய்கிறேன்” என்று நினைக்கிறான்.

தத்த்வ வித்து மஹா பாஹோ குண கர்ம விபாகயோ:
குணா குணேஷு வர்தந்த இதி மத்வா ந ஸஜ்ஜதே-3-28-

து மஹா பாஹோ-ஆனால் பெருந்தோளாய்!
குண கர்ம விபாகயோ:-குணம், செய்கை இவற்றினுடைய பிரிவுகளின்,
தத்த்வவித்-உண்மையறிந்தோன்,
குணா குணேஷு வர்தந்த-குணங்கள் குணங்களில் செயல்படுகின்றன,
இதி மத்வா ந ஸஜ்ஜதே-என்று கருதி பற்றற்றிருப்பான்.

குணம், செய்கை இவற்றினுடைய பிரிவுகளின் உண்மை யறிந்தோன், குணங்கள்
குணங்களில் இயலுகின்றன’ என்று கருதி பற்றற்றிருப்பான்.
எங்கும் தொழில்கள் இயற்கையின் குணங்களால் செய்யப்படுகின்றன.
அகங்காரத்தால் மயங்கியவன், “நான் செய்கிறேன்” என்று நினைக்கிறான்.

இப்படி பிரகிருதியின் தன்மைகளான இந்த முக் குணங்களும் நம்மை எத்தனையோ செயல்களில் ஈடுபடுத்துகின்றன –
ஜீவாத்மா இயற்கையாகவே மிகத் தூய்மை யானவர் -குறைகள் அற்றவர் –
அவர்க்கு பசி தாகம் துக்கம் வியாதி கிழட்டுத்தன்மை முதலான அனைத்துமே இந்த உடலோடு தொடர்பு உள்ள படியால் தான் ஏற்படுகின்றது –
அதற்காக நாம் உண்ணுதல் -உறங்குதல் -சம்பாதித்தல் -தர்ம கார்யங்களைச் செய்தல் போன்ற எத்தனையோ செயல்களைச் செய்கிறோம் –
ஆனால் இவை நமக்கு இயற்கையானவை அல்ல -பிரகிருதியின் தொடர்பால் தவிர்க்க முடியாமல் வந்து சேர்ந்தவை என்று புரிந்து கொள்ள வேண்டும் –
இது புரிந்து விட்டால் அந்தச்செயல்களில் பற்று இல்லாமல் நாம் வாழலாம் –

ஆனால் நானே தான் உடல் என்று தவறாக நினைத்தால் அதற்கு அஹங்காரம் என்று பெயர் –
அப்படி ஒரு மயக்கத்தில் இருக்கும் ஆத்மா இந்த முக்குணங்கள் தன்னுடைய இயற்கையான குணங்கள் என்று நினைத்து –
அவற்றால் தான் செய்யும் செயல்கள் தான் தன்னுடைய இயற்கையான செயல்கள் என்று நினைத்து –
எனவே தானே அவற்றைச் செய்கிறேன் என்று தவறாக நினைத்து விடுகிறான்
எவன் முக்குணங்களைப் பற்றிய உண்மையை அறிகிறானோ அவன் -குணங்கள் தான் இந்தச் செயல்களைச் செய்கின்றன –
இதில் நான் செய்ய என்ன உள்ளது என்று பற்று அற்று இருந்து முக்தி அடைகிறான் –

முக்குணங்களைக் கட்டுப்படுத்துதல் –

த்ரை குண்ய விஷயா வேதா நிஸ்த்ரை குண்யோ பவார்ஜுந
நிர் த்வந்த்வோ நித்ய ஸத்த்வஸ்தோ நிர் யோக÷க்ஷம ஆத்மவாந்–2-45-

வேதா-வேதங்கள்,
த்ரை குண்ய விஷயா-மூன்று குணங்களுக்குட்பட்டன,
நிஸ்த்ரை குண்யோ-மூன்று குணங்களையும் கடந்தோனாக,
நிர் த்வந்த்வ-இருமைகளற்று,
நித்ய ஸத்த்வஸ்த-எப்போதும் உண்மையில் நின்று,
நிர்யோக÷க்ஷம-யோக ஷேமங்களைக் கருதாமல்
ஆத்மவாந் பவ-ஆத்மாவை வசப் படுத்தியவனாகுக.

மூன்று குணங்களுக்குட்பட்டன வற்றைக் குறித்து வேதங்கள் பேசுகின்றன. அர்ஜுனா, நீ மூன்று குணங்களையும் கடந்தோனாகுக.
இருமைகளற்று, எப்போதும் உண்மையில் நின்று, யோக ÷க்ஷமங்களைக் கருதாமல், ஆத்மாவை வசப் படுத்தியவனாகுக.
முக் குணத்தில் இரண்டு அவை அகற்றி ஒன்றினில் ஒன்றி நின்று

வேதங்கள் அனைவருக்கும் பொதுவானது –
ஸத்வ குணம் அதிகமாக இருப்பவர்கள் ஆசைப்படுவதையும் வேதம் உபதேசிக்கும் –
ரஜோ குணம் மிகுதியாக இருப்பவர்களுக்காகவும் பல செயல்களை உபதேசிக்கும் –
தமோ குணம் மிக்கவர்களுக்கும் உபதேசிக்கும் –
அனைவரையும் ஆஸ்திகர்கள் ஆக்கிப் படிப்படியாகப் பக்தர்கள் ஆக்குவதே வேதத்தின் நோக்கமாகும்
ஆனால் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளவை என்ற ஒரே காரணத்துக்காக நாம் அந்தக் கர்மங்கள் அனைத்தையுமே செய்யத் தேவையில்லை –
நாம் ரஜோ குணத்தையும் தமோ குணத்தையும் குறைத்து – ஸத்வ குணத்தையே வளர்த்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும் –
அது தான் நமது உஜ்ஜீவனத்துக்கு வழி வகுக்கும் –

———–

பாடம் –14- ஸ்ருஷ்ட்டி –படைப்பு –

ஸ்ருஷ்டியின் தொடக்கம்
ப்ரக்ருதி என்ற த்ரவ்யம் முக்குணங்களை உடையது என்று பார்த்தோம் –
அந்தப் பிரக்ருதியைக் கொண்டு தான் உலகம் படைக்கப் படுகிறது -மண்ணைக் கொண்டு குடம் செய்வது போலே –
ஆனால் பிரக்ருதிக்கும் இவ்வுலகுக்கு வேறுபாடு உண்டு –
இவ்வுலகத்தில் உள்ள பொருள்களில் ஸத்வம் ரஜஸ்ஸூ தமஸ்ஸூ என்ற இவை ஏற்றத் தாழ்வுகளோடே இருக்கும்
ஆனால் பிரகிருதி என்ற பொருளில் முக்குணங்களும் சமமான நிலையில் எந்த மாறுபாடுகளும் இல்லாமல் இருக்கும்
பிரளய காலத்தில் அந்த ப்ரக்ருதி என்ற பொருள் மட்டும் தான் இருக்கும் -நாம் இப்போது பார்க்கும் பொருள்கள் அனைத்துமே
தன் தன் காரணப் பொருளில் ஒன்றாக கடைசியாக ப்ரக்ருதி என்ற நிலையில் தான் மிஞ்சி நிற்கும் –
பிரளய காலம் முடிந்து ஸ்ருஷ்ட்டியைத் தொடங்கும் பொழுது முதலில் ப்ரக்ருதி என்கிற த்ரவ்யத்தில்
குணங்கள் மாறுபட்டு ஏற்றத் தாழ்வுகள் அடைகின்றன -இந்த நிலைக்கு அவ்யக்தம் என்று பெயர் –
மேலே மேலே உலகம் முழுவதும் உண்டாவதற்கு முன்னால் அக்கார்யத்தை எதிர் நோக்கித் தயாராக இருக்கும்
பொருள் தான் அவ்யக்தம் என்று பொருள் -கார்ய உன்முக அவஸ்தை –

மஹான் என்ற தத்வம்
அடுத்து அவ்யக்தத்தில் இருந்து முதலில் மஹான் என்ற தத்வம் படைக்கப்படுகிறது -இதற்கு புத்தி தத்வம் என்ற பெயரும் உண்டு –
பிரகிருதி அவ்யக்தமாகி -அவ்யக்தம் மஹானாக ஆகும் பொழுது அந்த அந்தப்பொருள் முழுவதுமாக மாறி விடாது –
ஒரு பகுதியே மஹான் என்ற நிலையை அடையும் என்று கருத்தில் கொள்ள வேண்டும் –
எனவே அவ்யக்தம் என்ற பொருளை சுற்றிலும் மூடிக் கொண்டு ப்ரக்ருதி என்ற தத்வம் இப்பொழுதும் உள்ளது –
மஹான் என்ற தத்துவத்தை சுற்றிலும் மூடிக் கொண்டு தான் அவ்யக்தம் என்கிற தத்வம் உள்ளது –

உலகில் முதலில் ஒரு பொருளை அறிகிறோம் -இதற்கு ஆலோசநம் -என்று பெயர்
அடுத்து இது என்னுடையது -நான் இத்தை அடைய வேண்டும் -என்ற எண்ணம் ஏற்படுகிறது -இதற்கு அபிமானம் என்று பெயர்
கடைசியாக இந்தப் பொருளை அடைய நான் இந்தச் செயலைச் செய்யப் போகிறேன் என்ற உறுதி பிறக்கும் -இதற்கு அத்யவசாயம் என்று பெயர் –
நம் மனதைக் கொண்டு நாம் அத்யவசாயத்தை -உறுதியை -எடுக்க வேண்டும் என்றால் -அதற்கு இந்த மஹான் உதவுகிறது –

பொருளை மனசால் அறிந்து கொள்வது -முதல் நிலை –
அதிக்ருதி -அபிமானம் -இத்தை அடைய -அதிகார ஞானம் -அடுத்த நிலை –
இத்தை அடைய அத்யவசாயம் உறுதி -கண்டிப்பாக செய்வது -மஹான் புத்தி தத்வம் இதுக்கு துணையாகிறது –

மஹான் செய்யும் செயல்கள்
மஹான் என்ற தத்வத்தை சாத்வீகம் ராஜஸம் தாமஸம் என்ற பாகுபாடு உண்டு -சாத்வீகமான பகுதியின் தன்மைகள்
தர்ம -நாம் தர்மம் செய்ய எடுக்கும் முயற்சிகளில் உதவுகிறது
ஞானம் -ஜீவாத்மா வேறு ப்ரக்ருதி வேறு என்ற பகுத்தறிவை ஏற்படுத்த உதவுகிறது
விராகம் -உலக விஷயங்களில் பற்றின்மை -வைராக்யம் -ஏற்பட உதவுகின்றது –
ஐஸ்வர்யம் –யமம் நியமம் ஆசனம் இத்யாதி அஷ்ட-கொண்டு அடையும் அஷ்ட மஹா ஸித்திகளையும் நாம் பெற உதவுகிறது -அவை
அணிமா -மிகச் சிறியதாக ஆகும் சக்தி –
லகுமா -மிகச் லேசாக ஆகும் சக்தி
மஹிமா -மிகப் பெரியதாக ஆகும் சக்தி
பிராப்தி -எவ்விடத்தையும் அடையும் சக்தி
ப்ராகம்யம் -கல் சுவர் முதலானவற்றில் மோதாமை
வஸித்வம் -உலகப் பொருள்களை இயக்குவது
ஈஸித்வம் -உலகப் பொருள்களைப் படைத்து அழிப்பது
காம அவாஸாயித்வம் –நினைத்தத்தை எல்லாம் ஸாதித்தல் -ஸத்ய ஸங்கல்பத்வம் என்று வேதாந்தம் சொல்வது இத்தையே –

தாமஸமான பகுதி இதற்கு முரண்பட்ட தன்மைகள் அனைத்தையும் கொண்டு இருக்கும்

அஹங்காரம் என்ற தத்வம்
மஹான் என்பதில் இருந்து அஹங்காரம் என்ற தத்வம் உண்டாகிறது —
ஆவரணம் என்று இத்தையே சொல்லும் -ஒரு பகுதி தான் மாறும் -ஆவரணம் என்று மூடி போல் –
அஹங்காரம் -கர்வம் -நான் என்கிற புத்தி -அறிவுக்கு இலக்கு -அஞ்ஞானம் என்றும் உண்டு –
இங்கு ஒரு த்ரவ்யத்தைக் குறிக்கிறது
அதின் முக்கியமான செயல் கீழ் சொல்லப்பட்ட அபிமானம் என்கிற புத்தியை ஏற்படுத்த இது -உதவும்
உடலையே ஆத்மா என்று நினைத்தல் -ஆத்மாவை ஸ்வ தந்த்ரன் என்று நினைத்தல் போன்ற
தவறான புரிதல்களும் இந்த அஹங்காரம் காரணம் ஆகும் –
இந்த அஹங்காரமும் ஸாத்விகம் ராஜஸம் தாமஸம் என்ற மூவகைப்படும் –

சாத்வீகமான அஹங்காரத்துக்கு -வைகாரிகம் -என்று பெயர் -அதில் இருந்து தான் -11- இந்திரியங்களும் தோன்றுகின்றன –
ராஜஸமான அஹங்காரத்துக்கு தைஜஸம் என்று பெயர் -இதற்கு தனியாக எந்த செயலும் கிடையாது –
ஸாத்விக அஹங்காரமும் தாமஸ அஹங்காரமும் தங்கள் தங்கள் செயல்களை செய்வதற்கு உதவுவதே இதன் வேலை –
தாமஸமான அஹங்காரத்துக்கு பூதாதி என்று பெயர் -அதில் இருந்து தான் ஐந்து தன்மாத்திரைகளும் பஞ்ச பூதங்களும் தோன்றுகின்றன –

நியாய மதம் படி-ஐந்து பூதங்களில் இருந்து தோன்றும் –பவ்திகம் இவை என்பர் -ஆனால் நாம்
வேதாந்தத்தில் அஹங்காரத்தில் இருந்து தோன்றுபவை இவை என்கிறோம் –

இந்திரியங்கள்
ஞான இந்திரியங்கள் -அறிவை ஏற்படுத்தும் புலன்கள் -அவை
சஷுஸ் -நிறத்தைக் காண கண்ணில் உள்ளது
க்ராணம்-மணத்தை அறிய மூக்கில் உள்ளது
ரஸனம் -சுவையை அறிய நாக்கில் உள்ளது
த்வக் -ஸ்பர்சத்தை அறிய தோலில் உள்ளது
ஸ்ரோத்ரம் -ஒலியை அறிய காதில் உள்ளது
கர்ம இந்திரியங்கள் -செயல்கள் செய்வதற்கான புலன்கள் அவை –
வாக் -பேசுவதற்கான இந்திரியம் நாக்கில் உள்ளது
பாணி -பொருள்களைக் கையாள கைகளில் உள்ளது
பாதம் -எங்கும் திரிய கால்களில் உள்ளது
பாயு -மலம் கழிக்கும் இந்திரியம்
உபஸ்தம் -ஜலம் கழிக்கும் இந்திரியம்
மனது -மேல் சொன்ன இந்திரியங்களை எல்லாம் இயக்கும் புலன் –சிந்திப்பதற்கும் -ஆசைப்படுவதற்கும் -முடிவு எடுக்கவும் உதவுகிறது

மனதையே -புத்திக்கு எட்டுகிறது என்றும் -அஹங்காரம் -நான் என்ற நினைவு -சித்தம் -என்றும் சொல்லுகிறோம்
வெவ்வேறே வகார்யங்களை செய்வதால்
ஆலோசனை சிந்தனம் -சித்தம்
அபிமானிக்கும் பொழுது அஹங்காரம் என்கிறோம் – அகங்கார த்ரவ்யம் தத்வம் துணை கொண்டு
அத்யவசாயம் செய்யும் பொழுது மஹான் துணை கொண்டு முயடிவு எடுக்கும் பொழுது புத்தி
மனசு சஞ்சலம் -புத்தி உறுதி -புத்திமான் -மனோவான் சொல்லுவது இல்லையே –

இந்திரியங்கள் அனைத்துமே அணுவானவை -நுண்ணியவை -கண்ணுக்குத் தெரிய மாட்டா –
ஒரு ஜீவன் ஒரு சரீரத்தில் இருந்து மற்ற ஒரு சரீரத்துக்கு போகும் பொழுது –
இந்த 11 இந்திரியங்களை அழைத்துக் கொண்டு செல்கிறான் என்று வேதம் கூறுகிறது –
பிராண வாயு -இந்திரியங்கள் -இவை அனைத்தும் ஜீவாத்மா உடனே செல்லும் -வாயு மணத்தை எடுத்துச் செல்லுமா போல் –

பிரகிருதி -கார்யம் -மூல பிரகிருதி -அவிக்ருதி
பிரகிருதி விக்ருதிகள் ஏழு -காரணமாயும் காரியமாகவும் -மஹான் -அஹங்காரம் -தன்மாத்ரங்கள் -இவை நாடு நிலை
விக்ருதி – -16–ஷோடச -விகாரம் மட்டும் -11- ஐந்து பூதங்கள் -காரியப் பொருள்களாகவே இருக்கும் —
25 தத்வங்கள் -சாங்க்யம் -நிரீஸ்வர சாங்க்ய மதம் –
ந பிரகிருதி ந விக்ருதி ஜீவ தத்வம்
26 தத்வம் ஈஸ்வரன் -வேதாந்தம்
முரண்பாடு இல்லாத சாங்க்ய கொள்கைகளை கொள்ளுவோம் –

————-

பாடம் -15- ஐந்து பூதங்கள்

ப்ரக்ருதியில் முக்குணங்களும் சமமாக இருக்கும்
தார தாம்யம் -அவ்யக்தம் -மஹான் அஹங்காரம் -ஸூஷ்மம் -புலன்களுக்கு தென்படாதவை –
நுண்ணியவை அல்ல -அளவால் பெரியதாக இருந்தாலும்
ஆகாசம் போல் -பெரியதாக இருந்தாலும் புலன்களுக்கு அப்பால் பட்டவை -இவை-
நியாய மதம் போல் வேறே த்ரவ்யம் என்பது இல்லை
ஒரே த்ரவ்யம் -நிலை அவஸ்தைகள் மாறும் –
தத்வம் என்பது உண்மைப் பொருள் என்றவாறு –
தன்மைகள் மாறுவதால் 24-தத்வங்கள் -வகையாக அவஸ்தா பேதம் -என்றவாறு –

பூதங்களும் தன் மாத்ரங்களும்
பிரக்ருதியில் இருந்து மஹான் தோன்றி -அதில் இருந்து அஹங்காரம் தோன்றுகிறது –
ஸாத்விகமான அஹங்காரத்தில் இருந்து 11 இந்த்ரியங்கள் உண்டாகிறது என்று பார்த்தோம்
தைஜஸம் என்கிற ராஷஸ அஹங்காரம் தனியாக எந்தக் காரியத்தையும் செய்யாது –
ஸாத்விக தாமஸ அஹங்காரங்கள் தம் தம் கார்யங்களைச் செய்ய உதவும்

தாமஸ அஹங்காரம் -பூதாதி என்று அழைக்கப்படும் –
இதில் இருந்தே பஞ்ச பூதங்களும் பஞ்ச தன் மாத்தரங்களும் தோன்றுகின்றன –
பூதங்கள் -என்றால் விசிஷ்ட ஸப்தாதி விஷய அதி கரணம்-அதாவது
சிறப்பு வாய்ந்த ஸப்தம் – ரூபம் -ரஸம் -கந்தம் -என்ற விஷயங்களை உடையது எதுவோ அதுவே பூதம் –

ஸப்தம் முதலானவற்றுக்கு சிறப்பு ஆவது எது என்றால்-
1-ஸத்வ ரஜஸ் தமஸ் குணங்களால் வரும் -ஸாந்தத்வம் -ஆனந்தம் அளித்தல் -கோரத்வம் -துக்கம் அளித்தல்-மூடத்தவம் -மயக்குதல் –
ஆகிய தன்மைகள் ஸப்தங்கள் முதலானவற்றில் உண்டு –
2- நமது புலன்களால் அறியப்படுவதும் அடுத்த சிறப்பு –ஸப்தாதி குணங்களையும் அவற்றின் தன்மைகளான
சாந்தத்வம் இத்யாதிகளை நாம் புலன்களைக் கொண்டு அறியலாம் –

தன் மாத்ரம் -என்றால் அது மட்டும் -என்று பொருள் -அதாவது எந்தப் பொருள்களில் ஸப்தம் முதலான குணங்கள் மட்டுமே இருக்குமோ –
ஆனால் அவற்றில் உள்ள ஸாந்தத்வம் கோரத்வம் மூடத்தவம் என்ற சிறப்புகள் இருக்காதோ
அதே போல் எந்தப் பொருள்களில் இருக்கும் ஸப்தம் முதலானவற்றை நம்மால் புலன்களைக் கொண்டு அறிய இயலாதோ
அவை தன் மாத்ரங்கள் ஆகின்றன –

தத்வ முக்த கலாபத்தில் இப்படி தன் மாத்ரைகள் பூதங்கள் ஸ்ருஷ்ட்டி பற்றி ஸ்லோகம் அருளிச் செய்கிறார்

பூதங்களின் ஸ்ருஷ்ட்டி
இந்தப் பூதங்களும் தன் மாத்ரங்களும் ஸமமாக ஒரே காலத்தில் தாமஸ அஹங்காரத்தில் இருந்து தோன்றுபவை அல்ல
அவற்றில் வரிசை உள்ளது
முதலில் -தாமஸ அஹங்காரத்தில் இருந்து -ஸப்த தன் மாத்ரம் தோன்றும் -அதில் ஸப்தம் என்ற குணம் இருக்கும்
ஆனால் முன் சொன்ன விசேஷம் இல்லாமல் –

அந்த ஸப்த தன் மாத்திரத்தில் இருந்து ஆகாசம் என்ற முதல் பூதம் தோன்றும் —
அதில் ஸப்தம் இருக்கும் -முன் சொன்ன விசேஷங்களும் இருக்கும் அந்த ஸப்தத்தை நம்மால் காதால் கேட்கவும் முடியும் –

அடுத்து ஆகாசத்தில் இருந்து ஸ்பர்ச தன் மாத்ரம் தோன்றும் -ஆகாசத்தில் இல்லாத குணமான ஸ்பர்சம் அதில் இருக்கும் –
ஆனால் வெளிப்படாமல் இருக்கும்

அடுத்து ஸ்பர்ச தன் மாத்திரத்தில் இருந்து வாயு தோன்றும் -அதில் இருக்கும் ஸ்பரிசத்தை நாம் தோல் என்ற புலனைக் கொண்டு அறிகிறோம் –

அடுத்து வாயுவில் இருந்து ரூப தன் மாத்ரம் தோன்றும் -இதில் புதிதாக ரூபம் -நிறம் -என்ற குணம் இருக்கும் —
ஆனால் வெளிப்படாமல் இருக்கும் -நம்மால் அறிய முடியாது –

ரூப தன் மாத்ரத்தில் இருந்து தேஜஸ் தோன்றும் -அதன் நிறத்தை நாம் அறியலாம்

தேஜஸ்ஸில் இருந்து ரஸ தன் மாத்ரம் பிறக்கும் -அதில் புதிதாக ரஸம் என்ற குணம் இருக்கும் –
ஆனால் முன் சொன்ன எந்தச் சிறப்பும் இல்லாமலே இருக்கும் –

ரஸ தன் மாத்ரத்தில் இருந்து நீர் தோன்றும் -அதில் உள்ள ரஸத்தை நாம் அறியலாம்
நீரில் இருந்து கந்த தன் மாத்ரம் பிறக்கும் -அதில் புதிதாக கந்தம் -மணம் -என்ற குணம் இருக்கும் –
ஆனால் அதில் சிறப்புகள் இல்லாத படியால் நம்மால் அறிய முடியாது –

கடைசியாக அந்த கந்த தன் மாத்திரத்தில் இருந்து பிருத்வீ தோன்றும் –
அதில் இருக்கும் கந்தத்தை -மண் வாசனையை நாம் புலன்களால் அறிகிறோம்
இதுவே தன் மாத்ரங்களும் பூதங்களும் தோற்றும் வரிசை –

பூதங்களின் தன்மைகள்
பால் தயிராக மாறும் பொழுது நடுவில் பாலாவும் தயிராகவும் இல்லாமல் -கலவமாக -இருப்பது போல்
ஒவ்வொரு பூதமும் தன் காரணத்தில் இருந்து உண்டாகும் பொழுது நடுவில் உள்ள நிலையே தன் மாத்ரங்கள் –

ஆகாசம் -ஸப்தம் மட்டும் உடையது –
ஸ்பர்சம் இல்லாததாயும் சிறப்பு வாய்ந்த ஸப்தம் உடையதாயும் இருப்பதே ஆகாசம் என்று அதன் லக்ஷணம்
இது மற்றப் பொருள்களுக்கும் தன்னுள் இடம் அளிக்கும் –
நியாய மதத்தில் சொல்வது போல் இது நித்தியமானது அல்ல -உண்டாகி அழியக் கூடியது தான் –

வாயு -ஸப்தமும் ஸ்பர்சமும் உடையது -ரூபம் அற்றதாயும் சிறப்பு வாய்ந்த ஸ்பர்சம் உடையதாயும் இருப்பதே இதன் லக்ஷணம்
நம் உடலை இயக்க உதவும் பிராண வாயுக்களும்-சரீர தாரண ஹேதுவான – ஒரு வகை வாயுவே தான் –
வாயுவை புலன்களால் அறிகிறோம்

தேஜஸ் -ஸப்தம் -ஸ்பர்சம் -ரூபம் -உடையது –
வெப்பமான ஸ்பர்சத்தை உடையது -ஒளி விடும் நிறத்தை உடையது –
ரஸம் அற்றதாயும் சிறப்பு வாய்ந்த ஸ்பர்சம் உடையது என்று பல லக்ஷணங்கள் சொல்லலாம்

இது நான்கு வகைப்படும்
1-பவ்மம் -பிருத்வியை எரி பொருளாகக் கொண்டது
2-திவ்யம் -நீரை எரி பொருளாகக் கொண்டது –மின்னல் போல்வன –
3-உதர்யம் -நீரையும் நிலத்தையும் எரி பொருளாகக் கொண்டு நம் வயிற்றில் இருக்கும் நெருப்பு -ஜாடராக்னி –
4-ஆகரஜம்-எரி பொருளே இல்லாமல் சுரங்கத்தில் தோன்றும் தேஜஸ்

இது மேலும் ப்ரபா -வெளிச்சம் -என்றும்-ப்ரபாவான் -வெளிச்சத்தை உடையது என்று இருவகைப் படும் –
தீபத்தின் ஜ்வாலை ப்ரபாவான் -அதன் வெளிச்சம் பிரபா

தீபம் -வெளிச்சம் -ப்ரபாவான் -பிரபா –
தடை இருக்கும் வரை-பரவிக் கொண்டே விரிந்து கொண்டே இருக்கும் – –
ஜ்வாலை -வெளிச்சம் -குணம் த்ரவ்யத்தை விட்டு இருக்காதே –
இந்த த்ருஷ்டாந்தம் முக்கியம் -இவை இரண்டும் வேறே வேறே த்ரவ்யங்கள்
தீபத்தை விட்டு வெளிச்சம் பிரியாதே – ரத்னம் ஒளி -பிராட்டி பெருமாள் -போல்

நீர் -ஸப்தம் ஸ்பர்சம் ரூபம் ரஸம் உடையது -மணம் அற்றதாயும் சிறப்பு வாய்ந்த கந்தத்தை உடையதாயும் இருப்பதே இதன் லக்ஷணம்

நிலம் -ஸப்தம் ஸ்பர்சம் ரூபம் ரஸம் கந்தம் உடையது -சிறப்பு வாய்ந்த கந்தத்தை உடையதாய் இருப்பதே இதன் லக்ஷணம் –
நறு மணம் இயற்கை –
தமஸ் -நெருப்பின் அபாவம் -தனி த்ரவ்யம் மீமாம்ஸையில்
நியாய மாதத்தில் தரவ்யம் அல்ல
வேதாந்தத்தில் -தனி த்ரவ்யம் அல்ல பிருத்வியில் ஒரு வகை என்கிறோம்

——————

பாடம் –16- அண்டங்களின் ஸ்ருஷ்ட்டி
தாமஸ அஹங்காரத்தில் இருந்து ஐந்து பூதங்கள் ஸ்ருஷ்ட்டிக்கப் படுவதைக் கீழே பார்த்தோம் –
இந்த பஞ்ச பூதங்களைக் கொண்டே பகவான் இவ்வுலகங்களை எல்லாம் ஸ்ருஷ்டிக்கிறார் –
ஆனால் இவற்றைக் கொண்டு நேரடியாக ஸ்ருஷ்டிக்க இயலாது –
மண் மணல் தண்ணீர் இவற்றை தனித்தனியாகப் படுத்தி சுவர் கட்ட முடியாதே -மூன்றையும் கலந்தே சுவர் எழுப்ப முடியும் –
அதே போல் பஞ்சீ கரணம் செய்தே ஸ்ருஷ்டிக்க முடியும் –
ஒவ்வொரு பூதத்திலும் ஒரு பாதியை விட்டுவிட்டு மீதம் உள்ள பாதியை நான்கு பங்காக்கி
ஒவ்வொரு அரைக்கால் பகுதியையும் ஒவ்வொரு பூதத்தில் கலந்து
இவ்வாறு பஞ்சீ கரணத்துக்குப் பின்னர் பிருத்வீ பூதத்தில் பாதி பிருத்வீயிலும்
அரைக்கால் பிருத்வீ பகுதி நீர் நெருப்பு காற்று ஆகாசம் -இருக்கும் ‘
இவ்வாறு ஒரு பூதத்தின் குணனும் மற்றவற்றில் தோன்றும்
இதனாலே தான் ஆகாசத்துக்கு இயற்கையாகவே நிறம் இல்லை என்றாலும் பிருத்வீ கலந்து இருக்கிற படியாலேயே –
நீலமான ஆகாசம் கண்ணில் படுகிறது –
உபநிஷத்துக்களில் சில இடங்களில் பிருத்வீ -நீர் -தேஜஸ் -மூன்றையும் கொண்டு த்ரீவித் கரணம்
சில இடங்களில் பஞ்ச பூதங்களையும் கொண்டு பஞ்சீ கரணமும்
இவற்றுடன் மஹான் அஹங்காரம் இவற்றையும் சேர்த்து சப்தீ கரணமும் சொல்லப்படுகின்றன
இவற்றில் விரோதம் எதுவும் இல்லை -அவர் ஏழு தத்வங்களையுமே கலக்குகிறார் –

பூ மண்டலம் -14 லோகங்கள் -ஏழு கடல்கள் -ஏழு தீவுகள் ஒன்றுக்கு ஓன்று சூழ்ந்து கொண்டு உள்ளன
இது தாமரை வடிவில் இருக்கும் -நடுவில் மேரு மலை –
அத்தைச் சுற்றி முதலில் உள்ள நிலம் ஜம் பூத் வீபம் -அதில் ஒன்பது நிலப்பகுதிகள் -வர்ஷங்கள் -உள்ளன

மேருவுக்குத்
தெற்கில் நாம் இருக்கும் பாரத வர்ஷம் -கிம்புருஷ வர்ஷம் -மற்றும் ஹரி வர்ஷம் மூன்றும்
வடக்கில் ரம்யகம் -ஹிரண்யகம் குரு மூன்றும்
கிழக்கே பத்ராஸ்வ வர்ஷம்
மேற்கே கேதுமால வர்ஷம்
நடுவில் இலாவ்ருத வர்ஷம்

இதில் இருக்கும் தீவுகளும் கடல்களும்
1- ஐம்பூத்வீபம் -1- உப்புத் தண்ணீர்க் கடல்
2-ப்லஷ வர்ஷம் -2- கரும்புச்சாருக் கடல்
3-சால்மலி த்வீபம் –3-கள் கடல்
4-குச த்வீபம் 4- நெய்க்கடல்
5-கிரௌஞ்ச த்வீபம் –5-தயிர்க்கடல்
6-சாக த்வீபம் –6-பால் கடல்
7-புஷ்கர த்வீபம் –7-ஸூ த்தமான நீர்க்கடல்

முதல் தீவும் கடலும் ஒரே அளவாய் இருக்கும் -அடுத்த தீவும் இவற்றில் இரண்டு மடங்கு இருக்கும்
ஏழாவது கடலைத் தாண்டினால் தமஸ் ஸூ -இருள் -இருக்கும்
பின்பு கர்த்தோதகம் -என்ற நீர் இருக்கும்
பின்பு அண்ட கடாஹம் என்ற அண்டச் சுவர் இருக்கும் –

கீழ் உலகங்கள்
அதலம்-விதலம் -நிதலம் -தலா தலம் என்கிற கபஸ்திமத் -மஹா தலம் -ஸூ தலம் -பாதாலம்
இவை வெள்ளை கருப்பு அருண நிறம் மஞ்சள் மணல் பாரங்கல் தங்கம் இவற்றால் ஆனவை
இவற்றில் தானவர்கள் கிங்கரர்கள் சர்ப்பங்கள் வாழுகிறார்கள்
இவற்றிலும் மாளிகைகள் மண்டபங்கள் கோபுரங்கள் உண்டு
இவற்றைத் தாண்டி -21 -நரக உலகங்கள்
அதற்குப் பின் தமஸ் இருட்டு
அதைத் தாண்டி கர்த்தோதகம் நீர்
கடைசியில் அண்டச்சுவர் இருக்கும்

மேல் உலகங்கள்
பூ மண்டலத்துக்கு மேல் ஆறு உலகங்கள்
1-புவ லோகம் -ஒரு லக்ஷம் யோஜனை உயரம் -நமக்கும் ஸூர்யனுக்கும் இடைப்பட்ட பகுதி -கந்தர்வர்கள் வாழும் இடம் –
2-ஸூவ லோகம் -இந்திரன் வருணன் அக்னி குபேரன் போன்ற ஆதி காரிக புருஷர்கள் வாழும் இடம் –
3-மஹ லோகம் -அதிகாரத்தில் இருந்து நீங்கி அடுத்த பதவியை எதிர்பார்த்து இருப்பவர் வாழும் இடம் -ஒரு கோடி யோஜனை உயரம்
4-ஜன-சனகன் ஸனத் குமாரன் -யோகிகள் வாழும் இடம் -2 யோஜனை உயரம்
5-தப லோகம் -ப்ரஜாபதிகள் வாழும் இடம் 8 கோடி யோஜனை உயரம்
6- ஸத்ய லோகம் -ப்ரம்மா விஷ்ணு சிவன் -அவர்களை உபாசித்தவர்கள் வாழும் இடம் -48-
இவற்றுக்கும் மேல்
தமஸ் என்ற இருளும் -அதைத் தாண்டி கர்த்தோதகம் நீர்
கடைசியில் அண்டச்சுவர் இருக்கும்

விளாம் பழத்தை ஓடு மூடிக் கொண்டு இருப்பது போல் இந்த அண்டத்தை 1 கோடி யோஜனை பருமனான அண்டச்சுவர் மூடிக் கொண்டு இருக்கும்
இந்த அண்டத்தை ஜலம் நெருப்பு வாயு ஆகாசம் அஹங்காரம் மஹான் அவ்யக்தம் என்கிற ஏழு தத்வங்கள் அடுத்தடுத்து சூழ்த்துக் கொண்டு உள்ளன
முன் தத்வத்தைக் காட்டிலும் அடுத்த தத்வம் பத்து மடங்கு பெரியதாய் இருக்கும் –
பத்து பத்து மடங்கு ஒவ்வொன்றும்
மஹானை சுற்றி முடிவில்லாத -சூழ்ந்து -முடிவில் பெரும் பாழ் -சூழ்ந்து ஆழ்ந்து அகன்று உயர்ந்து பரந்த -பல dimentions
சஹஸ்ராணாம் -அநந்த அண்டங்கள் இப்படி உண்டே –
அண்டங்கள் அனைத்தும் ஒரே சமயத்தில் ஸ்ருஷ்டிக்கப்பட்டு அழிக்கப் படுகின்றன – வரிசையில் அல்ல

சமஷ்டி ஸ்ருஷ்ட்டி தானே நேராகச் செய்து அருளி
நான்முகனைக் கொண்டு வியஷ்ட்டி ஸ்ருஷ்ட்டி
காலம் நித்யவிபூதி ஞானம் ஜீவன் பரமாத்மா –ஆறு த்ரவ்யங்களையும்
அத்ரவ்யங்களையும் மேலே பார்ப்போம்

———-

பாடம் -17-காலம் –
ஆறு த்ரவ்யங்களுக்குள் முதலான ப்ரக்ருதியைப் பார்த்தோம்
ஸ்ருஷ்டிக்க வேண்டிய பொழுதை உணர்த்துவது காலம் –
ஆறு -த்ரவ்யங்கள் -நித்ய விபூதி -பரமாத்மா ஜீவாத்மா -அவர்களுடைய ஞானம் இவை மற்ற நான்கு த்ரவ்யங்கள்
அஜடமான ஸ்வயம் ப்ரகாசமானவை இவை நான்கும்
மற்றவை அத்ரவ்யங்கள்

காலத்தின் லக்ஷணம் –
முக் குணங்கள் அற்றதான ஜட த்ரவ்யம் காலம் -குண த்ரய ரஹித -ஜட த்ரவ்ய விசேஷ –
அஸ்வயம் பிரகாசம் -ஜடம் –
வெறுமனே முக்குணங்கள் அற்றதான என்று மட்டும் சொன்னால் அது ஜீவாத்மா பரமாத்மா இவர்களுக்கும் பொருந்தும் -ஆகையால் அதி வியாப்தி வரும் –
ஜட த்ரவ்யம் மட்டும் சொன்னால் அது பிரக்ருதிக்கும் பொருந்தும் -எனவே முக் குணங்கள் அற்ற ஜட த்ரவ்யம் என்றே சொல்ல வேண்டும் –
காலம் -நித்யம் -அநாதி -விபு -எல்லா இடங்களிலும் இருக்கக் கூடியது —
மாறிக் கொண்டே இருக்கும் -காலமே இல்லாத காலமே இல்லையே
பிரளயத்தில் அழியாதே -ஸ்ருஷ்டிக்க காலமே உணர்த்தும் -காலே ஸம்சயதி யோக்யதே -பராசர பட்டர் –
லீலா விபூதி நித்ய விபூதி முழுவதும் பரந்து விரிந்து உள்ளது –
உலகில் உள்ள அனைத்துப் பொருள்களுக்கும் காலம் ஒரு காரணம் ஆகும்
அது தான் வினாடி நிமிஷம் நாழிகை பகல் இரவு நாள் பக்ஷம் மாஸம் அயனம் வருஷம் என்று பல பிரிவுகளைக் கொண்டது –

உருவத்தில் மாறு பாடு அல்ல
அவஸ்தா பேதம் இல்லை -குடம் மண் போல் அல்ல
காலம் அனைத்துக்கும் அதிகரணம் -தேசம் இடம் போல் –

காலக் கணக்கு
அனைவருக்கும் ஒரே மாதிரி நிகருவது இல்லை
மனிதர் -பித்ருக்கள் -தேவர் -நான்முகன் -போல் வெவ்வேறே காலக் கணக்குகள் உண்டு
நம்முடைய மாதம் -பித்ருக்களின் ஒரு நாள் -அமாவாசை -அவர்களது மதியம் -உச்சிக் காலம் -பவுர்ணமி நடு ராத்திரி –
நம்முடைய வருஷம் தேவர்களுக்கு ஒரு நாள்
உத்தராயணம் -தை முதல் ஆனி -அவர்களுக்குப் பகல்
தஷிணாயினம் -அவர்களுக்கு இரவு –
தேவ வருஷம் -நமது -365 வருஷங்கள்
சதா யுவர்வை புருஷ அனைவருக்கும் -அவரவர் கணக்குகள் படி
அவர்கள் ஆயுஸ்ஸூ -அவர்கள் வருஷப் படியே 100-நம் கணக்கில் 36500 வருஷங்கள் –

தேவர்கள் கணக்குப்படி 12000 வருஷங்கள் ஒரு சதுர் யுகம்
க்ருத யுகம் -4000-வருஷங்கள் -பூர்வ சந்தி -400 வருஷங்கள் -உத்தர சந்தி -400 வருஷங்கள்
த்ரேதா யுகம் -3000 வருஷங்கள் -பூர்வ சந்தி -300 வருஷங்கள் -உத்தர சந்தி -300 வருஷங்கள்
த்வாபர யுகம் –2000 வருஷங்கள் -பூர்வ சந்தி -200 வருஷங்கள் -உத்தர சந்தி -200 வருஷங்கள்
கலியுகம் -1000 வருஷங்கள் -பூர்வ சந்தி -100 வருஷங்கள் -உத்தர சந்தி -100 வருஷங்கள்

உத்தர சந்தி காலமும் பூர்வ சந்தி காலமும் -இடைப்பட்ட காலம்
க்ருத யுக த்ரேதா யுக இடைப்பட்ட சந்தி காலம் -700 வருஷங்கள்

இப்படி 1000 சதுர் யுகங்கள் முடிந்தால் நான்முகனுக்கு ஒரு பகல் -அதே கால அளவுக்கு இரவு –
அப்பொழுது அண்டத்தில் மஹ லோகத்துக்கு கீழ் உள்ள 10 லோகங்களும் அழியும் -பிதுவே நைமித்திக பிரளயம்
அந்த நான்முகன் வருஷ கணக்குப்படி அவனுக்கு 100 வருஷம் ஆயுஸ்ஸூ முடிந்த பின்பு
அனைத்து உலகங்களையும் பகவான் அழித்து விடுவார் -இதுவே பிராகிருத பிரளயம்
தினமும் பிராணிகள் மரிப்பது நித்ய பிரளயம்
கர்மங்கள் விடுபட்டு முக்தி அடைவது ஆத்யந்திக பிரளயம் –

பிரளயம் -காரியப் பொருளில் லயம் அடைவது என்று பெயர்
14 மனுக்கள் படைக்கிறார் நான்முகன் -ஒரு மனுவுக்கு 71 சதுர்யுகம் -ஆட்சிக் காலம்

தர்மத்துக்கு நான்கு கால்கள்
தபஸ் -உடலை வறுத்திச் செய்யும் செயல்கள்
சவுசம் -தூய்மை
தயை -இரக்கம்
சத்யம் -உண்மை
க்ருத யுகத்தில் தர்மத்துக்கு நான்கு கால்களும் இருக்கும்
அடுத்த அடுத்த யுகத்தில் ஒவ்வொன்றாகக் குறைந்து கலி யுகத்தில் சத்யம் என்ற ஒரே காலோடு இருக்கும்
அத்தையும் கலி திருடப் பார்க்கும் -என்கிறது ஸ்ரீ மத் பாகவத புராணம் –
காலம் நித்ய விபூதியிலும் உண்டு -ஆனால் இங்கு போல் அங்கு -ஆட்சி செய்வது இல்லை –
ந கால தத்ரைவ பிரபு
காலத்தைக் கணிசியாமல் இஷ்டப்படி கைங்கர்யங்கள் செய்யலாம்

காலம் தமோ குணம் அதிகமான மஹான் என்ற தத்வம் தான் என்பர் சிலர் -அது பொருந்தாது –
ஸ்ருஷ்ட்டி நிகழ்ந்தால் தான் மஹான் தத்வம் உண்டாகும்-காலமோ ஸ்ருஷ்டிக்கு முன்பே உள்ளது என்று வேதங்கள் கூறும்
காலத்தை புலன்களைக் கொண்டு அறிகிறோம் -இப்பொழுது வருகிறார் -இங்கு குடம் உள்ளது போன்ற
பேச்சுக்கள் அறிவுகள் அனைத்தும் காலத்தையே காட்டுகின்றன -எனவே காலம் புலன்களால் அறியப்படுவதே –

——–

பாடம் -18- நித்ய விபூதி –
ஸூத்த ஸத்வம்
வேதாந்தத்தில் பொருள்களை எல்லாம் த்ரவ்யம் என்றும் அத்ரவ்யம் என்றும் இரண்டாக்கப் பிரித்து
த்ரவ்யம் லக்ஷணம் -அவஸ்த்தா நிலைகளை அடைவது –
குணம் -இத்யாதிகள் அத்ரவ்யம்
அவற்றில் ஆறு த்ரவ்யங்கள் -ப்ரக்ருதி -காலம் -நித்ய விபூதி -ஜீவாத்மா -பரமாத்மா -ஞானம் —

பிரகிருதி -முக்குண மயம் -மிஸ்ர ஸத்வமானது –

காலம் -மூன்று குணங்களும் இல்லாத பொருள்
நியாயம் -மீமாம்சை வேதாந்தம் மூன்றிலும் இத்தை த்ரவ்யமாகவே கொண்டு உள்ளார்
எங்கும் பரந்து இருக்கும்
ஆகாசமும் பரந்து இருக்கும் -ஆனால் -லீலா விபூதியில் மட்டுமே –இங்கும் பிரகிருதி மஹான் இருக்கும் இடங்களில் இல்லை- –

நித்ய விபூதி -ஸத்வ குணம் ஒன்றுமே உள்ள பொருள் –மண்ணால் வீடு ஆக்கப் படுவது போல் –
ஸூத்த ஸத்வ குணம் ஒன்றாலேயே ஆக்கப்பட்டது –
எனவே இதன்-ஸூத்த ஸத்வத்தின் – லக்ஷணம் -முக்குண மயமான ப்ரக்ருதியில் இருந்து வேறு பட்டதாயும் –
ஆனால் காலம் ஜீவாத்மாவின் இருந்து வேறுபடுத்த – ஸத்வ குணம் மட்டுமே உடையதாய் இருக்கும் –

நித்ய விபூதியின் லக்ஷணம் -மிச்சம் இல்லாமல் அவித்யை என்னும் கர்மம் தொலையும் பூமி என்று சொல்லப் படுகிறது –
அசேஷ -நிஸ் சேஷ அவித்யா நிவ்ருத்தி தேஸம் -அவித்யா இங்கு கர்மம் என்ற பொருள்
மாயா அவித்யை பிரக்ருதிக்கும்
தேக ஆத்மா அபிமானத்துக்கும் அவித்யா -அஞ்ஞானம் என்று பெயர்
ஒருவன் முக்தி அடைந்து நித்ய விபூதியை அடைந்த போது தான் அனைத்துக் கர்மங்களையும் தொலைக்கிறான் –
தத்வஞ்ஞர்கள்-முஸ்யந்தே சர்வ கில்மிஷங்கள் –

தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி ஸூரயா -விஷ்ணுவின் அந்த உயர்ந்த இடத்தை
நித்ய ஸூரிகள் எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள் -என்பதால்
முக்தி அடைபவன் ஒரு இடத்தை -பகவானை மட்டும் அல்ல –
நியாய மதத்தில் கல் போல் இருப்பதே முக்தி –
பகவானை அடைவது -ஸ்ரீ வைகுண்டம் அடைவது -கர்மங்கள் போக்கி -மூன்றாலும் பரமபதம் அடைவது சொன்னாலும் –
விஷ்ணு வாகிய ஸ்தானம் இல்லை -விஷ்ணுவுடைய ஸ்தானம் என்கிறது –

நித்ய விபூதியின் தன்மைகள் –
ஸூத்த ஸத்வத்தால் ஆக்கப் பட்டுள்ளது -பஞ்ச உபநிஷத் மயம் -பஞ்ச சக்தி மயம் –
உபநிஷத் என்றால் இங்கு ரஹஸ்யம் என்று பொருள் –
வேதங்களில் பரமேஷ்டீ -புமான் -விச்வ-நிவ்ருத்தி -ஸர்வ -என்று ஐந்து ரஹஸ்யமான பொருள்கள் –
ஐந்து அப்ராக்ருத பூதங்கள் -என்பதால் பஞ்ச உபநிஷத் மயம் –
அந்த அப்ராக்ருதமான ஐம் பூதங்களுக்கும் சக்திகள் என்றும் பெயர் -ஆகவே பஞ்ச சக்தி மயம் என்றும் சொல்வர் –
லீலா விபூதியில் நீர் நிலம் தீ காற்று ஆகாயம் -பஞ்ச பூதங்கள் போல் அவை அங்கு –
ஸப்தம் ஸ்பர்சம் ரூபம் ரஸம் கந்தம் -இவை போன்ற குணங்களும் அங்கும் உண்டு -ஆனால் அவை திவ்யம் —
இங்கு போல் சாதாரணம் ஆனவை அல்ல –
இங்கு ஸூத்த ஸத்வமே இருக்கிற படியால் -ஞானத்தையும் ஆனந்தத்தையும் வளர்க்கும் என்பதால்
இந்த உலகமே ஞானத்தையும் ஆனந்தத்தையும் கொடுக்கும் உலகம் என்றும் சொல்லப்படுகிறது –

நித்ய விபூதி பஞ்ச சக்தி மயே -திவ்யே -ஸூத்த சத்வே -ஸூகா தரே-ஸூகத்துக்கு இருப்பிடம் – –
ஞானமும் ஆனந்தமும் வளர்க்கும் –
ஞான ஆனந்த மயா லோகாகா இருப்பிடங்கள் -பாஞ்ச ராத்ர சாஸ்திரம் சொல்லும் –

நித்ய விபூதியின் இடமும் அளவும் –
இந்த நித்ய விபூதி அளவற்றது என்று உபநிஷத்துக்கள் கூறுகின்றன
நமது லீலா விபூதியும் அளவற்றது என்றும் பல இடங்களில் சொல்லப் பட்டுள்ளது –
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில் பெரும் பாழ் –
தமஸ் என்ற ப்ரக்ருதிக்கு மேலே நித்ய விபூதி உள்ளது -தமச பரஸ்தாத் –
நித்ய விபூதிக்கு மேலேயும் பக்க வாட்டிலும் அளவே கிடையாது -முடிவில்லாமல் போகும் -ஆனால் அதன் கீழ் எல்லை லீலா விபூதி யாகும் –
லீலா விபூதிக்கு கீழேயும் பக்க வாட்டிலும் அளவே கிடையாது -ஆனால் அதன் மேல் எல்லை நித்ய விபூதி யாகும் –

பாத அஸ்ய விச்வா பூதாநி -கால் பகுதி
திரிபாதி அம்ருதம் திவி -முக்கால் பகுதி
இந்த லீலா விபூதி பகவானின் சொத்தில் கால் பகுதி –பாதோஸ்ய நித்ய விபூதி மூன்று பங்கு -த்ரிபாத் விபூதி
ஆகவே அளவற்றதாக இருந்தாலும் லீலா விபூதி மிகச் சிறியது -நித்ய விபூதி மிகப் பெரியது என்பதைக் காட்டவே
இவ்வாறு சொல்லப்படுகிறது -மும்மடங்கு என்பது அல்ல –

மண்ணும் தங்கமும் பிருத்வி தான்
மண்ணால் ஆக்கப் பட்ட பொருள்களும் எண்ணிறந்தவை
தங்கத்தால் ஆக்கப்பட்ட பொருள்களும் எண்ணிறந்தவை
மண்ணால் ஆக்கப் பட்டவை காட்டிலும் பிருத்வியால் ஆக்கப் பட்டவை அதிகம் தானே –
மண் தங்கம் பஞ்சு எல்லாம் இத்தில் அடங்கும் -அதே போல் தான் இங்கும் இது சிறியது அது பெரியது என்றவாறு –

இந்த நித்ய விபூதி ஆயிரம் ஆயிரம் ஸூர்யன்களை விட மிகுந்த தேஜஸ்ஸூ கொண்டது –
நிரவதிக தேஜோ ரூபம் —துஷ் ப்ரேஷ்யம் தேவ தானவ —
ஆகவே தேவர்கள் அசுரர்கள் காண முடியாத விபூதி -என்று வேதம் கூறுகிறது –

யத் வைஷ்ணவம் ஹி பரமம் பதம் ஆம நந்தி
கம் வா யதேவ பரமம் தமஸ பரஸ்தாத்
தேஜோ மயம் பரம சத்வ மயம் த்ருவம் யத்
ஆனந்த கந்தம் அதி ஸூந்தரம் அத்புதம் யத் -ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் –41-

———

பாடம் -19-நித்ய விபூதி

காலாதீதம் -காலத்தால் வரை அறுக்க முடியாதது
அநாதி அந்தம் –ஆதி அந்தம் இல்லாமல் என்றுமே இருக்கும்
அப்ராக்ருதம் -திவ்யம் –
ஸூத்த ஸத்வ மயம்
அ சஞ்சலம்
ப்ராப்யம்
அர்ச்சிராதி மூலம் –
அவன் திரு உள்ளத்தால் நித்தியமாக உள்ளது –

ஸூத்த ஸத்வ மயம் -நித்தியமானது -உண்டாகி அழிவது இல்லை -ப்ரக்ருதியைக் காட்டிலும் வேறுபட்டு -குறையாமலும் அசையாமலும்
சரணாகதர்களால் மட்டுமே அர்ச்சிராதி கதி மூலம் அடையப் படுகிறது –
லீலா விபூதி -அவனது விளையாட்டுக்காக -உண்டாக்கப்பட்டு அழிக்கப் பட்டு இருக்கும் –
நித்ய விபூதியோ அவனுக்கு போகத்துக்கு மட்டுமே -அழியாமல் நித்தியமாக இருப்பது –
நித்யம் என்பதால் மாறுபாடுகள் அல்ல என்று சொல்ல முடியாது -நித்ய முக்தர்கள் பகவானுக்கு ஆசைக்கு இணங்க
பல பல உருவங்களை எடுத்துக் கொண்டு கைங்கர்யம் செய்கிறார்கள்

கூர்மாதீன் திவ்ய லோகான் -போக ஸ்தானம்
இச்சா க்ருஹீதாம்
தத் அனு மணி மயம் மண்டபம்
தத்ர சேஷம்
தர்மாதி பீடம்
ததுபரி கமலேசம்
சாமர க்ராஹணீச் ச விஷ்ணும் தேவிஹி விபூஷா ஆயுத கணம்
ச ஏகதா பவதி இத்யாதி -பல உடல்களை ஆசைப்படும் படி கொள்ளலாம் –
உடல் இருக்கும் வரை சுக துக்கம் வரும் -சரீரம் இல்லை என்பர் சிலர் -இது கர்மத்தால் வந்த சரீரம் பற்றியே
அங்கு அழுக்கு உடம்பு இல்லையே
திவ்ய மங்கள விக்ரஹம் -பல பரிணாமங்கள் அங்கும் உண்டே -இச்சாதீனம் –

ஆனந்தம் அனுபவிக்க -அனுபவிக்கப்படும் பொருள் -போக்யம் -அனுபவத்துக்கு கருவி -போக உபகரணம் –
அனுபவிக்கும் இடம் போக ஸ்தானம் -மூன்றுமே வேண்டுமே –
பரம பதத்தில் போக்யம் பகவானின் திரு மேனி
போக உபகரணங்கள் சந்தனம் மாலை போல்வன
போக ஸ்தானங்கள் கோபுரம் பிரகாரங்கள் தோட்டங்கள் போல்வன
இவை நம் ஆசைக்கு ஏற்ப நித்ய விபூதியில் தோன்றுகின்றன என்று வேதங்கள் கூறுகின்றன –
முக்தி அடைந்த ஆத்மாவும் வேண்டிய சரீரம் எடுத்துக் கொண்டு கைங்கர்யம் செய்யலாம் –
அந்த உடலும் ஸூத்த ஸத்வ மயம்-கர்ம வஸ்யம் அல்ல
கர்மத்தால் வந்த உடல் தான் தள்ளத் தக்கது -கைங்கர்யத்துக்காக எடுத்துக் கொள்ளும் சரீரம் கொள்ளத் தக்கதே –

பிரக்ருதியில் இருந்து –24 தத்வங்கள் மாறுவதை கீழே பார்த்தோம்
லீலா விபூதியில் இவை இருந்தாலும் ஒரே தத்வமாகவே கொள்ள வேண்டும் -இவை அனைத்தும் நித்யம் –
ஒன்றில் இருந்து மற்ற ஓன்று உண்டாவது இல்லையே –

இந்த நித்ய விபூதி -த்ரிபாத் விபூதி -பரம வ்யோமம் -பரம ஆகாசம் -பரம பதம் -அம்ருதம் —
நாகம்-துக்கம் இல்லாத இடம் -அப்ராக்ருத லோகம்
ஸ்ரீ வைகுண்டம் -அயோத்யா -அபராஜிதா -ஜெயிக்க முடியாத ஸ்தானம் –
போன்ற பல பெயர்களால் அழைக்கப்படும் –

இந்த ஸூத்த ஸத்வ த்ரவ்யம் -அஜடமா -தானாகாத் தோற்றக் கூடியதா -ஜடமா -மற்றவற்றில் உதவியால் அறியப் படுகிறதா
சிலர் இது ஜடம் -தானாகாத் தோற்றாது -ஜீவாத்மா தன்னுடைய ஞானத்தைக் கொண்டே அறிய வேண்டும் என்பர்
ஆனால் உண்மையில் இது அஜடம் -அதாவது ஸ்வயம் ப்ரகாஸம் -வேறே ஒன்றை எதிர் பார்க்காமல் தானே தோற்றும் –
நான்-தன்னை அறிய ஞானம் வேண்டாமே -என்னுடைய அறிவு -கொண்டு பாஹ்ய விஷயம் அறிய
தர்ம பூத ஞானம் -தர்மி ஞானம் இரண்டும் உண்டே –
ஆத்மா தன்னைத்தானே அறிந்து கொள்ள எப்படி அறிவை எதிர்பார்க்காமல் தானாகாத் தோற்றுகிறாரோ
அதே போலவே நித்ய விபூதியை அறியவும் தன்னுடைய ஞானத்தை உபயோகிக்கத் தேவை இல்லை –
தானாகவே அறியலாம்
ஸ்வ சத்தா பாஸகம் -இருப்பதாலேயே தோன்றிக் கொண்டே இருக்கும்-ஸ்வயம் பிரகாசம்-

ஆனால் இப்பொழுது நமக்கு ஏன் தோன்ற வில்லை என்னில்
அது முக்தி அடைந்தவர்களுக்குத் தானாகவே தோற்றும் -சம்சாரிகளுக்கு அல்ல –

நான் என்கிற ஆத்மா எனக்கு ஸ்வயம் பிரகாசம்
மற்றவர் ஜீவாத்மாவை அறிய வில்லையே -நாம் ஸ்வயம் பிரகாசமாக இருந்தாலும் –
தான் தனக்கு மட்டுமே ஸ்வயம் பிரகாசம் –
அனுமானம் மூலம் அறிகிறோம் -உடலை இயக்கம் ஆத்மா இருக்க வேண்டும் -அறிவு மூலமே அறிகிறோம்
ஆகவே ஸ்வயம் பிரகாஸம் என்றால் எல்லாருக்கும் எப்பொழுதும் அறிய வேண்டும் என்பது இல்லையே –

மிஸ்ர தத்வம் -காலம் -ஸூத்த சத்வம் -இது இது என்று தோற்றம் அளிக்கும்
ஜீவாத்மா –நான் நான் என்று தோற்றம் அளிக்கும் –
அறிவு -என்ற தன்மை -குடத்தை அறிய ஞானம் மூலம் –
தன்னுடைய ஞானத்தை -அறிய இதுவும் ஸ்வயம் பிரகாசம்
பரமாத்மா –
ஞானம் -இதுவும் ஸ்வயம் பிரகாச வஸ்து -அதுவே பல பொருள்களாக ஆகாது
ஆனால் ஸூ த்த சத்வம் பலவாக அங்கு -ஆகவே இது வேறே
ஸப்தாதி குணங்களும் ஞானத்துக்கு இல்லை –
அறிவு ஒளியை கிரகிக்கும் –
ஸூத்த சத்வம் இதனாலும் வேறு பட்டது
ஆறு த்ரவ்யங்கள் –

தத்வ த்ரயம் -யதீந்த்ர தீபிகா –நியாய சித்தாஞ்சம் -இவற்றை விரிக்கும் –
சம்வித்யா நிரவத்ய ஞான ஆனந்தமே வடிவானது -நிஷ் க்ருஷ்ட சத்வம் -அவன் இச்சையால் போகத்துக்காக –
சிந்தா தூரதயா மனசுக்கு எட்டாதது -சாஸ்திரம் கொண்டே அறிய முடியும்
கர்மங்கள் முழுவதும் போனாலே அறிய முடியும் —

————–

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கணாதர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாசர் -பாதராயணர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நியாய மீமாம்ச வேதாந்த பாடங்கள்–ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்–பகுதி -3 –வேதாந்த சாஸ்த்ரம்– பாடங்கள் -1-12 —

August 5, 2021

பாடம் -1- வேதாந்தத்தின் முக்யத்வத்ம்

அநந்தா ஹை வேதா –பரத்வாஜர் -இந்திரன் -மூன்று மலைகள் -கற்றது கைப்பிடி அளவு –
நான் மறை -நான்கு -என்றாலும் த்ரை வேதா -வகைகளில் மூன்று -ருக் யஜுர் ஸாம –
அபூர்வம்-முன்னால் நமக்குத் தெரியாத – உண்மையையே வேதம் சொல்லும் –
ஸ்நாத்வா புஞ்சீத -குளித்தே சாப்பிட வேண்டும் –
வேதையதி வேதம் -விளக்கும்
மறை -குதர்க்க வாதிகளுக்கு மறைக்கும்
தெய்வீகத் தன்மை –
பூர்வ மீமாம்ஸை -ஆராதன முறை -வேதம் -கர்ம காண்டம் -12 அத்தியாயங்கள்
தேவதா காண்டம் -நான்கு அத்தியாயங்கள்
உத்தர மீமாம்ஸை -ஆராத்யனைப் பற்றி சொல்லும் -ப்ரஹ்ம காண்டம் -நான்கு அத்தியாயங்கள்
வேத வியாசர் -பாதராயணர் -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்
அதாதோ -ஆதாலால் அதற்குப் பின் – கர்ம விஜ்ஜாசா – ப்ரஹ்ம விஜ்ஜாசா -தொடங்கும்

கர்மங்களை அனுஷ்ட்டிக்க வேண்டும் -கேட்டு அதன்படி இருக்க வேண்டும்
திரோதானம் -பிரமம் -விபரீதம் -அநித்யங்களை நித்யமாகக் காட்டும் -அசத்யங்களை சத்யமாகவும் –
அபோக்யங்களை போக்யமாகவும் காட்டும்
சரீரம் உடன் தொடர்பால் மாற்றி அறிய வைக்கும்
இத்தை புரிந்து ஆத்மா வேறே -நித்யம் -அறிய -கர்மங்கள் செய்ய செய்ய பாபங்களைப் போக்கி –
ஆராதனம் பண்ண பண்ண தான் அபூர்வங்களை அறிய விருப்பமும் -தகுதியும் வரும்
ஆகவே வேத புருஷன் -பூர்வ காண்டம் பூர்வ மீமாம்சை -பின்பு உத்தர காண்டம் -உத்தர மீமாம்ஸை
நித்ய கர்மங்களைச் செய்யச் செய்ய அநாதி கால கர்மங்கள் -வினைகள் -போகும் –

பிரமம் -மயக்கம் விப்ரலம்பம் வஞ்சனை இல்லாமல் -பிரமாதம் -கவனக்குறைவு இல்லாமல்
உண்மை பாரமார்த்திகம் ஒன்றையே சொல்லும்
த்ரிவித பரிச்சேதம் இல்லாமல் -அநாதி -அபவ்ருஷேயம்
சர்வ கர்ம சமாராத்யானாய் -எல்லா கர்மங்களால் ஆராதிக்கப்படுபவர் ப்ரஹ்மம் -முதல் -12 அத்தியாயங்கள் –
ஆகாசாத் பதிதம் தோயம் –கேசவம் பிரதி கச்சதி- சர்வ தேவதா அந்தராத்மாவாய் -ப்ரஹ்மம் -அடுத்த நான்கு அத்தியாயங்கள் –
ப்ரஹ்ம ஸப்த வாஸ்யனாய் ப்ரஹ்மம் -இறுதி நான்கு அத்தியாயங்கள்
வேதமே ஸாஸ்த்ரம் -ஸாஸனாத் -இதம் குறு -இதம் ஆகார்ஷி –
செய்ய வேண்டியவற்றையும் செய்ய வேண்டாதவற்றையும் -ஆத்ம உஜ்ஜீவனத்துக்கு காட்டும் –
த்ரை குண்ய விஷய வேதா -புள்ளு பிள்ளைக்கு இரை தேடி கொடுத்து மேலே மேலே கூட்டிச் செல்லும் –

வேதம் செய்யச் சொல்வதே தர்மம் -செய்யாத வற்றை அதர்மம் -இதனால் அவன் திரு உள்ளத்தில் –
புண்யம் பாபம் ஈஸ்வர ப்ரீதி கோபம் –
இப்படியே அழகான தொடர்பு –
ஸ்ருதி ஸ்ம்ருதி மம ஆஜ்ஜை –

————–

பாடம் -2- வேதாந்தத்தை யார் கற்க வேண்டும் –
வேதம் -விவர்த்தி சர்வ பூதா நாம் -வேத சாஸ்திரம் ஸனாதனம் -வேத்ய இதி வேதம் –
தஸ்மாத் ஏதத் பரம் அந்நிய -ஸஹஸ்ர மாதா போல் வத்சல்ய தமம்
தொன்மையான வேதங்கள் தான் உலகில் அனைத்து உயிர் இனங்களையும் தாங்குகிறது
உலகில் ஒருவன் தனது இலக்கை அடைய நியாயமான வழியைக் கூறும் வேதங்கள் தான் சிறந்த பிரமாணங்கள் என்று மநு பகவான்
வேதத்தை விட வேறே ஒரு சாஸ்திரமே கிடையாது -அங்கங்கள் உப அங்கங்கள் ஸ்ம்ருதிகள் அனைத்துமே வேதத்தில் இருந்தே தோன்றியவை
வேதமே அவற்றின் மூலம்
தத்தவங்களைப் பாதிப்பதால் வேதம் என்று பெயர் பெற்றது
வேதத்தில் கர்ம காண்டம் நாம் செய்ய வேண்டிய கர்மங்களைப் பற்றியும் உபநிஷத் என்னும் ஞான காண்டம் ப்ரஹ்மத்தைப் பற்றியும் கூறும்
குருவுக்கு அருகில் அமர்ந்து ரஹஸ்யமாக கேட்க்கும் படியால் உப நிஷத் எனப்படுகின்றன -உப அருகில் நிஷத்ய அமர்ந்து
சம்சார தாபம் தீர்க்கும் ஞானத்தைக் கொடுக்கிறபடியாலும் உப நிஷத் -நிஸ் சேஷ தாப த்ரய விசரணம் ஞானம் -ஆதி சங்கரர் –
ப்ரஹ்மத்தை நேரடியாகக் கூறும் வேதப்பகுதி தான் உபநிஷத் -அத்வாரக ப்ரஹ்ம ப்ரதிபாத்யம் உப நிஷத் –
ஸூதர்சன ஸூரி -ப்ரஹ்மத்துக்கு மிக அருகில் இருந்து நம்மை அருகில் கூட்டிச் செல்லும்
தச உபநிஷத்துக்கள் பிரசித்தம் –

வேதக் கல்வி
ஒவ்வொருவரும் தங்கள் குலத்தில் பயிலப்படும் வேதப்பகுதியை தவறாமல் கற்க வேண்டும் என்று வேதமே சொல்கிறது –
ஸ்வாத்யாயம் அத்யே தவ்ய –
அப்படிக் கற்பவன் வேதத்தை மட்டும் கற்காமல் அவற்றின் அங்கங்களான
சிஷா வியாகரணம் சந்தஸ் ந்ருத்தம் ஜ்யோதிஷம் கல்பம் ஆகியவற்றையும் கற்க வேண்டும்
இப்படிக் கற்கும் பொழுது அவற்றைப் படிக்கும் பொழுதே மேலோட்டமாக அதன் பொருள் புரியத் தொடங்கும்
இதற்கு ஆபாத ப்ரதீதி மேலோட்டமான அர்த்தம் என்று பெயர்
இதில் சந்தேகங்களோ தவறான புரிதல்களோ ஏற்படும்

இந்த ஆபாத ப்ரதீதி எவ்வாறு இருக்கும் என்றால்
கர்மங்களின் பலன்களான ஸ்வர்க்கம் பசு குழந்தைகள் செல்வம் உணவு இவை எல்லாமே அழியக் கூடியவை என்றே தோன்றும்
சாதுர்மாஸ யாகத்தைச் செய்தால் -அக்ஷயம் -அழியாத புண்ணியம் கிட்டும் –
அபாம ஸோமம் அம்ருத -ஸோம ரஸத்தைப் பருகி மரணம் அற்றவர்கள் ஆகலாம் போன்ற சொல் தொடர்களைப் பார்த்து
சில கர்மங்களுக்கு நிரந்தரமான பலம் கிட்டும் என்றும் தோன்றும்
ப்ரஹ்ம வித் ஆப் நோதி பரம் -என்றும் –
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி-முதலான சொல் தொடர்களைப் பார்த்தால்
பரமாத்மாவை த்யானம் செய்து நித்தியமான பலம் பெறலாம் என்று தோற்றும்
இந்த மேலோட்டமான தோற்றங்களை உறுதி செய்யத் தான் ஒருவன் மீமாம்ஸா ஸாஸ்த்ரத்தில் -வேத விசாரத்தில் இழிகிறான்
விதியால் அல்ல -ஆசையால் இழிகிறான் – பூஜ்யம் -மதிக்கத்தக்க உயர்ந்த விஷய விசாரமே -மீமாம்ஸா ஸாஸ்த்ரம்
கர்ம மீமாம்ஸையில் கர்ம விசாரங்களைப் பற்றி விசாரித்து முடித்ததும் –
கர்மங்களால் ஒரு ஸ்திரமான அழியாத பலன் கிட்டாது என்ற நிச்சயம் ஏற்படும் – ஓட்டை ஓடங்கள் போல் கர்மங்கள் –
அந்தவத் -முடிவை உடையதாகவே இருக்கும் –
12 அத்தியாயங்கள் கர்ம விசாரம்
தேவதா காண்டம் -அல்லது சங்கர்ஷண காண்டம் என்று -நான்கு அத்தியாயங்களும் ஜைமினி பண்ணி உள்ளார் –
பரீஷ்ய லோகான் -ப்ராஹ்மணன் நிர்வேதம் -இவற்றை அறிந்து விசாரித்து –
வேதம் கற்பவன் வெறுப்பை அடையக் கடவன் -வேதமே சொல்லுமே

வேதாந்தக் கல்வியில் நுழைவு
இவ்வாறு கர்மங்களுக்கு ஸ்திரமான பலன் கிட்டாது என்ற நிச்சயமும் –
ப்ரஹ்ம தியானமே ஸ்திரமான பலம் கொடுக்க வல்லது என்றும்
இவ்வாறு மேலோட்டமான புரிதலும் -ஆபாத ப்ரதீதியும் -உடையவன் தான்
வேதாந்த சாஸ்திரம் -ப்ரஹ்ம மீமாம்ஸை -கற்க சரியான அதிகாரி ஆவார் –
வேதத்தைக் கற்றவன் கர்மங்களால் அடையயப்படும் பலன்களை ஆராய்ந்து –
இவற்றால் நிரந்தரமான பலன்களை அடைய முடியாது என்ற உறுதியான நிச்சயம் பெற்றதால்
கர்மங்களில் நிர்வேதம் -வெறுப்பு ஏற்பட்டவனாக மேலே உபநிஷத்துக்களில் சொல்லப்பட்ட ப்ரஹ்மத்தை அறிவதற்காக
ஒரு குருவை கண்டிப்பாக அணுக வேண்டும் –
அந்த குரு அவனை சோதித்துப் பார்த்து ப்ரஹ்ம வித்யையை உபதேசிப்பார் -என்று உபநிஷத் சொல்கிறது

இவ்விடத்தில் அவன் குருவை அணுக வேண்டும் என்பது நியம விதி ஆகும் –
ஒரு பயனை அடைய பல வழிகள் இருக்கும் பொழுது -அவற்றில் ஒன்றைக் கட்டளை இட்டு
மற்றவற்றைத் தவிர்க்கச் சொல்லும் விதி நியம விதி ஆகும் –
இங்கும் ப்ரஹ்மத்தைப் பற்றி அறிய பல வழிகள் இருந்தாலும் குருவை அணுகியே அறிய வேண்டும் என்ற நியமம் சொல்லப் படுகிறது
ஸ்வ குரு ரேவ அதிகச்சதி -நியம கதி
அபூர்வ விதி -நியம விதி வகைகளை கீழேயே பார்த்தோமே
த்ரஷ்டவ்ய-ஸ்ரோதவ்ய -மந்தவ்ய -நிதித்யாசி தவ்ய -அர்த்த க்ரமம் -பிரயோஜனம் வைத்து மாற்றிக் கொள்ள வேண்டுமே
பரமாத்மாவைப் பார்க்க வேண்டும் கேட்க வேண்டும் ஆலோசனை செய்ய வேண்டும் த்யானம் செய்ய வேண்டும் என்று உபநிஷத் கூறுகிறது
இங்கு படிக்கப்பட்ட வரிசையை விட்டு -ப்ரயோஜனத்தைக் கருதி -அர்த்த க்ரமத்தின் படி
கேட்க வேண்டும் -சிந்திக்க -ஆலோசனை செய்ய வேண்டும் த்யானம் செய்ய வேண்டும் -காண வேண்டும் என்று மாற்றிக் கொள்ள வேண்டும் –

நம் நிலை
இவ்வாறு அங்கங்களோடு சேர்ந்த வேதத்தைக் கற்று மேலோட்டமான அறிவைப் பெற்று
கர்ம விசாரித்தால் அவற்றின் தன்மைகளை நிச்சயித்து பிறகு தான் ஒருவன் ப்ரஹ்ம மீமாம்ஸா ஸாஸ்த்ரத்துக்கு
வர வேண்டும் என்றால் நாம் அனைவரும் எவ்வாறு கற்பது என்ற ஐயம் எழும்
இதற்கான விடையை ஸ்ரீ வேதாந்த தேசிகர் தம்முடைய அதிகரண சாராவளி கிரந்தத்தில் கீழில் படி அருளிச் செய்கிறார்

முன் யுகங்களில் ஆயூஸ்ஸூ உடல் வலிமை புத்திக்கு கூர்மை இவை தடங்கல்கள் குறைவாகவும் இருந்த படியால் முறைப்படியே பயின்றார்கள்
இங்கு கலியுகத்தில் நாம் ஆயூஸ்ஸூ உடல் வலிமை புத்திக்கு கூர்மை இவை குறைவாகவும் இடையூறுகள் அதிகமாகவும் இருக்கிறபடியால்
காலத்தை விரயம் செய்ய முடியாத காரணத்தால் சில பாக்கியசாலிகள் நேரடியாக வேதாந்த ஸாஸ்த்ரத்தை கற்று மகிழ்கிறார்கள் –
அப்பொழுது நியாய சாஸ்திரம் பூர்வ மீமாம்ஸா ஸாஸ்த்ரங்கள் தேவை இல்லையா -அப்படிப் பொருள் அல்ல –
முழுவதுமாக அந்த ஸாஸ்த்ரங்களைப் பயில இயலா விட்டாலும் தேவையான அளவாக வாகிலும் அவற்றைக் கற்று
பெரும்பாலும் வேதாந்த ஸாஸ்த்ரத்திலே பொழுது போக்க வேண்டும் -என்று தான் பொருள்
ஏன் என்றால் நியாயம் மீமாம்ஸை வியாகரணம் -இவற்றை பயிலாமல் வேதாந்தத்தைக் கற்க இயலாது –

————

பாடம் -3-வேதாந்தத்தின் வரலாறு
தயா சதகம் -அவனது கருணை வெள்ளத்தில் -சேர்ந்த நதி போல் -குரு பரம்பரை குளிர்ந்து –
தீர்த்த பஹுளாம் -உபதேசங்ககளில் ஆழ்ந்து உஜ்ஜீவிக்க வேண்டும்
எல்லா சம்பிரதாயங்களில் குரு பரம்பரை உண்டே –
ப்ரஹ்மம் -அஃறிணைச் சொல் சமஸ்க்ருதத்தில் பரமாத்மாவையே சொல்லும்
அனைத்து மதங்களும் இவன் மூலமே தொடங்கும்

விசிஷ்டாத்வைதம்
1-நாராயணன் -ப்ரம்மா -வசிஷ்டர் -சக்தி
2-பராசரர் -ஸ்ரீ விஷ்ணு புராணம்
3-வேத வியாஸர் -ப்ரஹ்ம ஸூத்ரம் (நியாய கலாபம் -545-ஸூத்ரங்கள் -நம் சம்பிரதாயப்படி )-மஹா பாரதம் (பஞ்சம வேதம் -இதிகாசம் )
4-போதாயனர் -ப்ரஹ்ம ஸூத்ர வ்ருத்தி (வியாக்யானம் -வ்ருத்தி வார்திகம் பாஷ்யம் போன்ற பல வகைகள் உண்டே )

5-டங்கர் -ப்ரஹ்ம நந்தி என்ற பெயரும் உண்டு -சாந்தோக்ய உபநிஷத்துக்கு வாக்கியம்
6-த்ராமிடாச்சார்யார் -சாந்தோக்ய உபநிஷத்துக்கு பாஷ்ய காரர்
7-குஹ தேவர் -கபர்தி -பாரதி -போல்வார் (வேதார்த்த ஸங்க்ரஹத்தில் இந்த பரம்பரையைக் காட்டி அருளுகிறார் )

8-ஸ்ரீ மன் நாத முனிகள் -நியாய தத்வம் -புருஷ நிர்ணயம் -யோக ரஹஸ்யம்
(யோ வேத்தி ப்ரத்யக்ஷமாக முக்காலத்தில் உள்ளவற்றை எப்பொழுதும் அறிபவன் ஸர்வஞ்ஞன் –
இவர் நியாய தத்வத்தில் காட்டி அருளிய ஸ்லோகம் கிடைக்கப் பெறுகிறோம் )

9-ஸ்ரீ யாமுனாச்சார்யர் -சித்தி த்ரயம் (ஸம்வித் -ஆத்ம -ஈஸ்வர த்ரயங்கள் ) –
ஆகம பிராமாண்யம் (பாஞ்சராத்ரம் கொள்ளத் தக்கதே என்று காட்டி அருளவே )
கீதார்த்த ஸங்க்ரஹம் (32-ஸ்லோகங்களில் )- ஸ்தோத்ர ரத்னம் -சதுஸ் ஸ்லோஹி
(த்ராயந்தார்த்தம் ஸூ ஹ்ருதமாக ஸூ லபமாகக் காட்டி அருளிய ஸ்லோக கிரந்தங்கள் இவையே முதலில் வந்தவை )

10-பகவத் ராமானுஜர் -ஸ்ரீ பாஷ்யம் -வேதாந்த தீபம் -வேதாந்த சாரம் -வேதாந்த ஸங்க்ரஹம் -கீதா பாஷ்யம் -கத்ய த்ரயம் -நித்ய கிரந்தம்
ஸ்ரீ பாஷ்யம் -வேதாந்த தீபம் -வேதாந்த சாரம்-இவை மூன்றும் ப்ரஹ்ம ஸூத்ர வியாக்கியானங்கள்
ப்ரஸ்தான த்ரயம் -உபநிஷத் -ப்ரஹ்ம ஸூத்ரம் -கீதா மூன்று -படித்துறைகள்
வேதார்த்த ஸங்க்ரஹம் -உபநிஷத்துக்களில் பிறக்கும் சங்கைகளை தீர்த்து அருளுகிறார்

(தத்வ ரத்நாகாரம் -பட்டர் எழுதியது நமக்கு கிடைக்க வில்லை )

11-வரத நாராயண பட்டாரகர் -நியாய தர்சனம் -ஸ்ரீ பாஷ்ய வியாக்யானம் -ப்ராஞ்ஞா பரித்ராணம்–
12-மேக நாதாரி ஸூரி -நயப்பிரகாசம் என்றும் ஸ்ரீ பாஷ்ய பாவ போதநம் என்றும் இரண்டு உரைகள் -நயத்யுமணி -தனி கிரந்தம்
(மேக நாதன் இந்த்ரஜித்துக்கு அரி எதிரி -லஷ்மணன் என்றவாறு -லஷ்மண ஸூரி )

13-விஷ்ணு சித்தர் -எங்கள் ஆழ்வான் -ப்ரமேய ஸங்க்ரஹம் -சங்கதி மாலை -விஷ்ணு புராணத்துக்கு விஷ்ணு சித்தீயம் என்ற வியாக்யானம்
14-வாத்ஸ்ய வரதாச்சார்யார் -நடாதூர் அம்மாள்-(1165-1275-) ப்ரமேய மாலை -தத்துவ நிர்ணயம் -தத்வ சாரம் -(முக்கிய கிரந்தம் இது )
15-ஸூ தர்சன ஸூரி (வேத வ்யாஸ பட்டர் வம்சம் )—ஸ்ரீ பாஷ்யத்துக்கு ஸ்ருதி ப்ரகாசிகா- ஸ்ருத ப்ரதீபிகா -ஆகிய இரண்டு வியாக்யானங்களும் –
வேதார்த்த ஸங்க்ரஹத்துக்கு தாத்பர்ய தீபிகா உறையும் – ஸ்ரீ மத் பாகவத புராணத்துக்கு ஸூக பஷீயம் என்ற உரையும் அருளிச் செய்தவர் –
16–ஆத்ரேய ராமானுஜர் -(அப்புள்ளார் சம்பிரதாய பெயர் -தேசிகர் தாய் சகோதரர் )-நியாய குலிசம்

17-வேதாந்த தேசிகர் –சேஸ்வர மீமாம்ஸை –மீமாம்ஸா பாதுகா ( ஜைமினி ஸூத்ர வியாக்கியானங்கள் இவை )
ஸ்ரீ பாஷ்யத்துக்கு தத்வ டீகை உரை -அதிகரண சாராவலீ -(156 அதிகரணங்கள் -ஒவ் ஒன்றுக்கும் ஸ்லோகம் அருளி )
தத்வ முக்த கலாபம் (பிரமாண ப்ரமேய விசாரங்கள் -ஸ்லோக வடிவில் -ஸர்வார்த்த சித்தி -இதுக்கு வியாக்யானம் இவரே எழுதி )
நியாய பரிசுத்தி (கத்யம் ) -நியாய ஸித்தாஞ்சனம் -( கத்யம் )
சத தூஷணீ -(அத்வைத குற்றங்கள் -100-இதுக்கு பதில் சத பூஷணி -அதுக்கும் பதில் கிரந்தம் உண்டே )
கீதா பாஷ்ய தாத்பர்ய சந்த்ரிகா
ஈஸா வாஸ்ய உபநிஷத் பாஷ்யம் —
சதுஸ் ஸ்லோஹி -ஸ்தோத்ர ரத்னம் -கீதார்த்த ஸங்க்ரஹம் (v)- இவற்றுக்கும் வியாக்கியானங்கள்

18-மஹா சார்யர் -(தொட்டாச்சார்யார் 1543-)-பாராசர்ய விஜயம் -சண்ட மாருதம் (சத தூஷணி ஆபேஷங்களுக்கு பதில் )
ப்ரஹ்ம வித்யா -ஸத் வித்யா -அத்வைத வித்யா -குரூப ஸித்தி மற்றும் பரிகர விஜயங்கள்
19-ரெங்க ராமானுஜ முனி -10 உபநிஷத் பாஷ்யம்-
மூல ப்ரகாசிகை-பாவ ப்ரகாசிகை (ஸ்ரீ பாஷ்யத்துக்கும் ஸூத பிரகாசிகைக்கும் இவை இரண்டும் )
விஷய வாக்ய தீபிகை -சாரீரிக ஸாஸ்த்ர ஸங்க்ரஹம் -ஸித்தாஞ்சன டீகை
20-ஸ்ரீ நிவாஸாச்சார்யார் -ஸ்ரீ மஹாச்சாருடைய சிஷ்யர் -யதீந்த்ர மத தீபிகை -ப்ரகரண கிரந்தம்
21-அனந்தாச்சார்யார் ( மேல் கோட்டையில் இருந்தவர் )-நியாய பாஸ்கர -வேதாந்த வாதா வளி

அத்வைதம்
1- நாராயணன் -ப்ரம்மா -வசிஷ்டர் -சக்தி -பராசரர் -வேத வியாசர் -ஸூகர்
2-கௌடபாதர் (7 நூற்றாண்டு )-மாண்டூக்ய காரிகை -கௌடபாத காரிகை –
3-கோவிந்த பகவத் பாதர் (சந்த்ர சர்மா பூர்வாஸ்ரமம் -நர்மதா கரையில் ஆதி சங்கரர் ஆச்சார்யர் )
4-ஆதி சங்கர பகவத் பாதர் -பத்து உபநிஷத்துக்களுக்கும் -பகவத் கீதைக்கும் -ப்ரஹ்ம ஸூத்ரங்களுக்கும் உரை
விவேக சூடா மணி -உபதேச சாஹஸ்ரி

5-பத்ம பாதர் -சதுஸ் ஸூத்ரி பாஷ்ய விவரணமான பஞ்ச பாதிகா –
6- ஹஸ்தா மலகர் -ஹஸ்தா மலக ஸ்தோத்ரம் -12-ஸ்தோத்ரங்கள்
7-தோடகர்-தோடகாஷ்டகம் -8-ஸ்லோகங்கள் -ஸ்ருதி சார சமுத்தரணம் -179- ஸ்லோகங்கள்
8-ஸூரேஸ்வரர் -ஆதி சங்கருடைய ப்ரஹதாரண்ய உபநிஷத் பாஷ்யத்துக்கும் தைத்ரிய உபநிஷத் பாஷ்யத்துக்கும்
வார்திகம் எனப்படும் உரை -நைஷ்கர்ம்ய ஸித்தி

9-வாசஸ்பதி மிஸ்ரர் -ஆதி சங்கர ப்ரஹ்ம ஸூத்ர பாஷ்யத்துக்கு பாபதி (பாமதி என்றும் சொல்வர் ) என்ற உரை
10-ப்ரகாசாத்மன் -பஞ்ச பாதிகா விவரணம் –
11-ஸ்ரீ ஹர்சர் -கண்டன கண்ட காத்யம் (நியாய சாஸ்த்ரா தவறுகளைக் காட்டி )
12-சித் ஸூகர் -தத்வ ப்ரதீகை

13-அமலா நந்தர் -பாமதிக்கு வியாக்யானமான கல்ப தரு
14-வித்யாரண்யர் -விவரண ப்ரமேய ஸங்க்ரஹம் -த்ருக் த்ருஸ்ய விவேகம் – ஜீவன் முக்தி விவேகம்
(ஹரிகரன் புக்கர் இவர்களின் ஆச்சார்யர் இவர் )
15-அப்பய்ய தீக்ஷிதர் -வாசஸ்பதி மிஸ்ரர் எழுதிய பாமதிக்கு அமலா நந்தர் எழுதிய
கல்ப தரு வியாக்யானத்துக்கு வியாக்யானமான பரிமளம் -நியாய ரஷா மணி -ஸித்தாந்த கால்பதிலகா –

(மது ஸூதன ஸரஸ்வதி-இவரும் பல கிரந்தங்கள் அருளிச் செய்கிறார் )

17-தர்ம ராஜ அத்வரீந்த்ரர்-வேதாந்த பரிவாஷா -அத்வைத கருத்துக்கு இது ப்ரகரண க்ரந்தம்

த்வைதம்
1-நாராயணன் -ப்ரம்மா -சனகர் –சநந்தர் -சனத்குமாரர் -ஸனாதனர் -துர்வாசர் -ஞானநிதி தீர்த்தர் –
கருட வாஹனர் -கைவல்ய தீர்த்தர் -ஞானேச தீர்த்தர் -பர தீர்த்தர் -ஸத்ய பிராஜ்ஞ தீர்த்தர் -அச்யுத ப்ரேஷ்ய ஆச்சார்யர் –

2- மத்வாச்சார்யார் -(வாசுதேவன் என்ற இயற் பெயர் -1238 அவதாரம் -இவருக்கே ஆனந்த தீர்த்தர் பூர்ண ப்ரஞ்ஞர் )
அநு வியாக்யானம் -அநு பாஷ்யம் -மஹா பாரத தாத்பர்ய நிர்ணயம் –
விஷ்ணு தத்வ வி நிர்ணயம் -பிராமண லக்ஷணம் -உபாதி கண்டனம் -கதா லக்ஷணம் -மித்யாத்வ அநு மான கண்டனம் –

3-அஷோப்ய தீர்த்தர் -வித்யாரண்யர் வேதாந்த தேசிகர் சம காலத்தவர் –

ஜெய தீர்த்தர் -22 கிரந்தங்கள் -நியாய ஸூ தா
வியாச தீர்த்தர் -பல கிரந்தங்கள்
ராகவேந்திரர் நியாய முக்தாவளி -தச பிரகாரணி
ரகோத்தம தீர்த்தர் பாவ போதகங்கள் -நியாய ரத்ன தீபிகா –

——————

பாடம் -4- ஒரே சாஸ்தம் -ஒரே நூல்
ப்ரஸ்தான த்ரயம் -ப்ரஸ்தானம் -படித்துறை போல் –
வேத வியாசர் நமக்காக செய்து கொடுத்தவை மூன்று –
வேத உபநிஷத் புராணங்கள் -இவற்றைப் பிரித்து முறைப்படுத்திக் கொடுத்தார்
பஞ்சம வேதமான ஸ்ரீ மஹா பாரதத்தையும் அதனுள் அடங்கிய ஸ்ரீ பகவத் கீதையையும் கொடுத்தார்
ப்ரஹ்ம ஸூத்ரத்தையும் கொடுத்தார்
உபநிஷத்துக்கள் ஸ்ரீ கீதை ப்ரஹ்ம ஸூ த்ரம் -மூன்றுமே ப்ரஹ்மத்தைப் பற்றி அறிய வழிகள் -இவையே ப்ரஸ்தான த்ரயம்
உபநிஷத் ஸ்ருதி பிரஸ்தானம் -கீதை ஸ்ம்ருதி ப்ரஸ்தானம் -ப்ரஹ்ம ஸூ த்ரம் -ஸூ த்ர ப்ரஸ்தானம்
உபநிஷத்துக்கள் பல -தச உபநிஷத் ப்ரஸித்தம்
ஈசாவாஸ்ய -கேன -கட -ப்ரச்ன -முண்டக -மாண்டூக்ய -தைத்ரிய -ஐத்ரேய -சாந்தோக்ய -ப்ரஹ்தாரண்யம்
கீதை பகவான் கிருஷ்ணனே அருளிச் செய்தது -18 அத்தியாயங்கள் கொண்டது
ப்ரஹ்ம ஸூத்ரம் -நான்கு அத்தியாயங்கள் -சமன்வய- அவிரோத- சாதன- பல அத்தியாயங்கள் -ஒவ் ஒன்றிலும் நான்கு பாதங்கள்
விஷய வாக்கியம் -சம்சயம் -பூர்வ பக்ஷம் -சித்தாந்தம் -பிரயோஜனம் -சங்கதி இவை அனைத்தும் அங்கங்கள் அதிகரணத்துக்கு –
மொத்தம் 156 அதிகரணங்கள் -545-ஸூத்ரங்கள் –
அத்வைதப்படி -189 அதிகரணங்கள் -555-ஸூத்ரங்கள் –

முதல் ஸூத்ரம் -அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா
மூன்று சொற்கள் -அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா

அத -இச் சொல்லுக்கு அடுத்து -என்ற பொருளை அத்வைதிகளும் விசிஷ்டாத்வைதிகளும் கொள்கிறார்கள்
ஆனால் எதுக்கு அடுத்து என்பதில் வேறுபாடு உள்ளது
அத்வைதிகள் சொல்வது -சாதன சதுஷ்ட்யங்களுக்கு அடுத்து
சாதன சதுஷ்ட்யமாவது
நித்ய அநித்ய வஸ்து விவேகம் -பகுத்தறிவு
சமதாதி சாதன ஸம்பத் -புலன் அடக்கம்
இஹாமுத்ரா பல போக விராகம் -பற்றின்மை
முமுஷுத்வம் -மோக்ஷத்தில் இச்சை
விசிஷ்டாத்வைதிகள் சொல்வது -கர்ம விசாரத்துக்கு அடுத்து -வேத அத்யயனம் செய்த ஒருவனுக்கு
மேலோட்டமான பொருள் தான் தெரியும் –
அத்தை உறுதி செய்ய தானாகவே கர்ம விசாரம் செய்து -கர்மங்களால்
அல்ப அஸ்திர பலன்களைத் தான் பெறலாம் என்று உறுதிபட அறிந்து ப்ரஹ்ம விசாரத்துக்கு வருகிறான்
த்வைதிகள் சொல்வது -அத -மங்களமான சொல் -பரமாத்மாவைச் சொல்லும் –
மங்களா சரண சொல் என்பதால் முதலில் சொல்லப்படுகிறது –

அத-இந்த சொல்லுக்கு ஆகையால் என்று பொருள்
அத்வைதிகள் சொல்வது -கர்மங்களால் நிரந்தரமான பலன்களை அடைய முடியாது –
ப்ரஹ்ம ஞானத்தால் மட்டுமே அது முடியும் என்பதால்
விசிஷ்டாத்வைதிகள் சொல்வது -கர்ம விசாரத்தால் கர்மங்களுக்கு நிரந்தரமான பலன் கிட்டாது என்ற முடிவும்
உபநிஷத்துக்களை அத்யயனம் செய்தால் ப்ரஹ்ம ஞானத்தால் அளவற்ற இன்பத்தைப் பெறலாம்
என்கிற மேலோட்டமான புரிதலும் உள்ளபடியால் -என்று
த்வைதிகள் சொல்வது -துக்கங்களை போக்கி அளவற்ற ஸூ கத்தை அடைய வேண்டும் என்கிற ஆசை இருக்கிறபடியால்

ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா-ப்ரஹ்மத்தைப் பற்றின விசாரம் என்று பொருள் –
ப்ரஹ்மம் -என்றால் மிகப்பெரியது என்று பொருள் -பரமாத்மா ஸ்வரூப ரூப குணங்களால் மிகப் பெரியவராயும்
தன்னை அண்டினார்களையும் மிகப் பெரியவராக ஆக்குபவர் –
ஆகையால்
இந்த ஸூ த்ரத்தின் பொருள் –
கர்ம விசாரத்தை முடித்த பிறகு -கர்மங்கள் நிரந்தரமான பலனை அளிக்காது என்ற உறுதி ஏற்பட்ட படியால்
ப்ரஹ்ம விசாரம் செய்யப்பட வேண்டும் என்பதாகும் –
இதைத் தான் போதாயன மகரிஷியும் -வ்ருத்தி கிரந்தத்தில்
வ்ருத்தாத் கர்மாத்திகமாத் அநந்தரம் ப்ரஹ்ம விதிஷா -என்று கூறுகிறார்
முடிக்கப்பட்ட கர்ம விசாரத்துக்குப் பிறகு ப்ரஹ்மத்தை அறிய ஆசை பிறக்கிறது -என்று இதற்குப் பொருள் –

ஏன் முதலில் கர்ம விசாரம்
வேதத்தைக் கற்ற ஒருவனுக்குத் தானாகவே அதன் பொருள் மேலோட்டமாகத் தோற்றுமாயின்
அவன் ஏன் முதலிலேயே ப்ரஹ்ம விசாரம் செய்யாமல் கர்ம விசாகம் செய்கிறான் –
இந்தக் கேள்வியின் விடையைத் தான் ஸ்ரீ வேதாந்த தேசிகன் தன்னுடைய அதிகரண சாராவளீ நூலில் அருளிச் செய்கிறார் –

க்ரமம் -மீமாம்சை ஐந்தாம் அத்யாயம் பார்த்தோம் –ஆறு வகைகள் பார்த்தோம்
1-சுருதி -நேராக வேதத்தில் சொல்லும்
2-அர்த்தம் -பிரயோஜனம் பார்த்து முடிவு செய்கிறோம் -அக்னி ஹோத்ரம் யாவகு சமைக்க வேண்டும் –
3-பாடம் -படிக்கப்பட்ட வரிசையில்
4-முக்கியம் -பிரதான கர்மங்களில் போல் அங்கங்கள் செய்ய வேண்டும் -ஆக்னேய தயிர் இத்யாதி
5-ஸ்தான கிரமம்-முன் செய்த வழக்கம் படி
6- ப்ரவ்ருத்தி -பல ஸம்ஸ்காரங்களுக்கு -பலவற்றுக்கு செய்யும் –
கர்ம விசாரம் பின்பே ப்ரஹ்ம விசாரம் -ஸ்ருதி சொல்லுமே அஸ்திர பலம் உணர்ந்து -ஆச்சார்யர் இடம் சென்று கற்க சொல்லுமே
ப்ராவண்யம் ப்ராக் த்ரி வர்க்கம் –முதல் மூன்று புருஷார்த்தங்களில் ஆசை கொண்ட வாசனை பதிவுகள் இருக்குமே –
ப்ரஹ்மம் அறிய உபாசனம் வேண்டும் -உபாசனத்துக்கு அங்கமாக கர்மங்கள் வேண்டுமே -அறிந்து அனுஷ்ட்டிக்க வேணுமே –
அங்கி அங்கம் பாவத்துக்காகவும் இப்படி கர்ம மீமாம்ஸா -முதலில் -பின்பு ப்ரஹ்ம மீமாம்ஸா
முக்கிய கிரமம் -வேதம் அர்த்தம் அறுதி விடுவதே பலன் -இரண்டுக்கும் பொதுவான நோக்கு இதுவே
மூலம் படியே வியாக்யானம் செய்ய வேண்டுமே
இன்னும் இரண்டு காரணங்கள் -பூர்வ மீமாம்ஸா கற்றவற்றை ஆதாரமாகக் கொண்டே இதன் விசாரம் அறிவோம்
வேதம் அத்யயனம் -சொல்வதன் மூலமும் யாகம் யஜ்ஜம் தானம் ஹோமம் இவற்றால் உபாசனம் செய்து
ப்ரஹ்மம் அறிய வேண்டும் -சொல் தொடர் அறிய சொல்லின் பொருள்களை அறிய வேண்டுமே
சொல்லின் பொருள் அறிய கர்ம விசாரம் -சொல் தொடரின் பொருள் அறிய ப்ரஹ்ம விசாரம் –

1-எண்ணற்றப் பிறவிகளில் நாம் தர்மம் அர்த்தம் காமம் மூன்று புருஷார்த்தங்களையே ஆசைப்பட்டதால்
இப்பொழுதும் அவற்றைச் சொல்லும் கர்ம விசாரத்தில் தான் இயற்கையாக ஆசை ஏற்படும்
முக்தியைச் சொல்லும் ப்ரஹ்ம விசாரம் பழக்கம் இல்லாத படியால் ஈற்காது
2- உபாசனம் என்ற தியானத்துக்கு கர்மங்கள் அங்கமான படியால் அங்கங்களை அறிந்த பிறகு தான்
அங்கியை அறிய வேண்டும் என்பதால்
3- வேதம் என்ற ஒரே நூலுக்கு கர்ம மீமாம்ஸையும் ப்ரஹ்ம மீமாம்ஸையும் உரை நூல்களாக இருக்கிற படியாலும் –
மூலத்தில் எந்த வரிசையில் உள்ளனவோ அதே வரிசையில் தான் உரைகளைப் படிக்க வேண்டும் –
4-பூர்வ மீமாம்ஸையில் விசாரிக்கப் பட்ட பிரமாணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ப்ரஹ்ம மீமாம்ஸையில் செய்யப் படுகிற படியாலும்
5-ஒரு சொல் தொடரின் பொருளை அறிய வேண்டும் என்றால் அதற்கு முன் அதில் இருக்கும் சொல்லின் பொருளை அறிய வேண்டும் என்பதால்
யோகத்தால் –ப்ரஹ்மத்தை உபாசிக்கிறார்கள் -என்ற சொல் தொடரை புரிவதற்கு யாகத்தை முதலில் அறிந்து இருக்க வேண்டும் –
6-பூர்வ மீமாம்ஸையில் சொன்ன விஷயங்களை எடுத்துக் காட்டாக ஆக்கி உத்தர மீமாம்ஸையில் சொல்லுகிற படியால்
முதலில் எடுத்துக் காட்டை அறிய வேண்டும் என்பதாலும் கர்ம விசாரம் தான் முதலில் செய்ய வேண்டும் –

ஐக சாஸ்திர்யம்
இப்படி ஜைமினி மகரிஷி இயற்றின பூர்வ மீமாம்ஸா ஸாஸ்த்ரமும் -வ்யாஸ மகரிஷி எழுதின உத்தர மீமாம்ஸையும்
ஒரே நூலான வேதத்தின் இரண்டு பகுதிகளைத் தான் விளக்குகின்றன –
ஆகையால் இவை இரண்டும் சேர்ந்து ஒரே சாஸ்திரம் தான்
அதாவது நியாய சாஸ்திரம் -மீமாம்ஸா ஸாஸ்த்ரம் -என்று பிரித்து எண்ணுவது போல்
பூர்வ மீமாம்ஸை வேறு உத்தர மீமாம்ஸை வேறு என்று என்று பிரித்து எண்ணக் கூடாது –
இரண்டும் சேர்ந்து மீமாம்ஸா என்கிற ஒரே சாஸ்திரம் தான்
இதைச் சொல்லும் போதாயன மகரிஷி
ஸம்ஹிதம் ஏதத் ஸாரீரிகம் ஜைமினீ யேந ஷோடச லக்ஷணேந இதி ஸாஸ்த்ர ஏகத்வ ஸித்தி –என்று தெரிவிக்கிறார் –
அதாவது ஸாரீரிகம் என்று அழைக்கப்படும் இந்த உத்தர மீமாம்ஸா சாஸ்திரம்
ஜைமினி மகரிஷி எழுதிய பூர்வ மீமாம்ஸை உடன் ஒரே சாஸ்திரம் -என்கிறார்
ஒரே சாஸ்திரமாக் இருந்தால் -எதற்கு இருவரும் தனித்தனியாக -நான் தர்மத்தைப் பற்றிச் சொல்கிறேன் –
நான் ப்ரஹ்மத்தைப் பற்றிச் சொல்கிறேன் என்று ப்ரதிஜ்ஜை செய்கிறார்கள் என்ற கேள்வி எழும்
1-உத்தர மீமாம்ஸையில் மூன்றாம் அத்யாயம் -நான்காம் பாதத்தில் -கர்மங்களைப் பற்றி விசாரம் செய்து இருக்க வேண்டும்
அது மிகப் பெரிய விசாரமான படியால் அத்தை ஜைமினி மகரிஷி முன்பே தனியாக எழுதினார் –
2- அவரவர் இயற்றிய பகுதிக்கு அந்த அந்த ப்ரதிஜ்ஜை பொருந்தும்
முழுவதுமான மீமாம்ஸா சாஸ்திரத்துக்கு -வேதாந்த விசாரம் செய்யப்பட வேண்டும் என்ற ஒரு ப்ரதிஜ்ஜையைத் தருவித்திக் கொள்ளலாம்
3- தர்ம விசாரம் செய்யப்பட வேண்டும் என்று ஜைமினி செய்த ப்ரதிஜ்ஜை உத்தர மீமாம்சைக்கும் பொதுவானது
ப்ரஹ்மம் என்ற பரமாத்மாவே ஸாஷாத் தர்மம் தானே -நாம் ஆசைப்படும் சகலத்தையும் பெற்றுத் தந்து அருளுவதால் –

ஐக பிரபந்த்யம்
பூர்வ மீமாம்ஸையும் உத்தர மீமாம்ஸையும் ஒரே ஸாஸ்த்ரம் என்பதோடு நம் ஆச்சார்யர்கள் நிறுத்த வில்லை –
இரண்டும் சேர்ந்து ஒரே நூல் என்றே தெரிவிக்கிறார்கள் –
சொல் தொடர்களின் கூட்டமே ஒரு நூல் என்பது
அவற்றுக்குள் ஒன்றுக்கு ஓன்று தொடர்பும் எதிர்பார்ப்பும் இருக்கும் பொழுது தான் –
ஒரு வரியைப் படித்த உடன் வரும் ஐயத்தை அடுத்த வரி போக்கினால் தான் அது ஒரே நூல் ஆகும் –
அதே போல் மீமாம்ஸா ஸாஸ்த்ரமும் –
ஜைமினியின் முதல் ஸூ த்ரத்தை படிக்கும் பொழுது தோன்றும் ஐயத்தை அடுத்த ஸூத்ரம் விலக்கும்
இதே போல் கடைசி ஸூ த்ரம் வரை தொடரும் –
ஜைமினியின் கடைசி ஸூ த்ரத்தைப் படித்த உடன் கர்மங்கள் அல்ப பலன்களையே கொடுக்கும் என்ற புரிதல்
ஏற்பட்டு பின்பு நித்தியமான ஸூ கத்தை ஏற்படுத்துவது எவ்வாறு என்ற எதிர்பார்ப்பு வருமே –
வியாஸரின் முதல் ஸூத்ரமானது -அதற்காகத் தான் ப்ரஹ்ம விசாரம் செய்ய வேண்டும் -என்று தொடங்கி
ப்ரஹ்மத்தைப் பற்றிச் சொல்கிறது –
ஆகையால் இரண்டு பகுதிகளுக்கும் இடையில் சங்கிலித் தொடர்பும் எதிர்பார்ப்பும் இருக்கிற படியால்
இரண்டும் ஒரே நூல் தானே

வேதாந்த தேசிகர் ஸ்லோகத்தில் அருளிச் செய்கிறார் –
வித்யா ஸ்தான ஐக்யம்
க்ரம நியதி -ஆகாங்ஷை -எதிர்பார்ப்பும் பதிலும் ஒன்றுக்கு ஓன்று இருக்கிறதே
அவாந்தர விஷயம் உள் பிரிவு இருக்கலாமே
ஜைமினி வியாசர் கருத்துக்களில் விரோதம் இல்லை -மேலோட்டமாக இருப்பது போல் இருந்தாலும் –
சொல்லப்பட்ட விஷயம் -பயன் -எழுதியவர் -முதலானவை மாறு பட்டாலும் தவறு இல்லை –
ஒரே நூலாக ஆக முடியும் என்பதையும் காட்டுகிறார் –

————-

பாடம் -5- ஸாஸ்த்ர ஆரம்பம்
சதுஸ் ஸூத்ரீ -முதல் நான்கும் பிரசித்தமாக உள்ளவை -வேதாந்த ஸாஸ்த்ர முன்னுரை –
ப்ரஹ்ம விசாரம் ஆரம்பிக்கக் கூடாது என்ற ஆஷேபம் எழ அவற்றுக்கு பதிலாக இந்த நான்கும் உள்ளன
1-ஸித்தமான வஸ்துவைப் பற்றி வ்யுத்பத்தி ஏற்பட முடியாது
2-ப்ரஹ்மத்தை லக்ஷணம் கொண்டு அறிய இயலாது
3-அனுமானத்தால் அறியப்படும் ப்ரஹ்மத்தை ஸாஸ்த்ரம் சொல்வது வீண் —
4-ப்ரஹ்ம ஞானத்தால் பிரயோஜனம் பலன் இல்லை

அறிய முடியாது -ஆஷேபம் முதல் இரண்டாலும் நிவர்த்தகம்
அறிந்தால் பிரயோஜனம் இல்லை ஆஷேபம் அடுத்த இரண்டாலும் நிவர்த்தகம்

இந்த நான்கு காரணங்களால் உபநிஷத்துக்கள் ப்ரஹ்ம ஞானம் போதிக்கும் என்று ஏற்க முடியாது என்று ஆஷேபம்
இதனால் இந்த வேதாந்த விசாரம் ஸ்தம்பித்துப் போகிறது
இதுக்கு பதில் உரைத்து வேதாந்த விசார ஸாஸ்த்ரம் ஆரம்பிக்க வேண்டியது தான் என்று இந்த சதுஸ் ஸூத்ரீ ஸ்தாபிக்கின்றது –

ஜிஜ்ஜாஸ அதி கரணம்
அதேதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா –

பூர்வ பக்ஷம்
சொல் தொடரின் பொருளை அறிய சொற்களின் பொருள் தெரிந்து இருக்க வேண்டும் —
சொல்லும் பொருளுக்கும் உள்ள தொடர்பு தான் சக்தி –
ஆகையால் சொல்லின் சக்தியைப் பற்றின ஞானம் கண்டிப்பாகத் தேவை –
அந்த அறிவு வ்ருத்த வ்யவஹாரம் என்ற முறையில் தான் ஏற்படும் –
சக்தி கிரஹணம் அஷ்ட வகை நியாய சாஸ்திரத்தில் பார்த்தோம் -அதில் ஒரு வகை வ்ருத்த வ்யவஹாரம் –
ஒருவர் ஏவி மற்ற ஒருவர் செய்வதைக் காணும் சிறுவனுக்கு இந்தச் சொல்லுக்கு இது பொருள் என்ற அறிவு ஏற்படுகிறது –
ஆகையால் செய்யப்பட வேண்டிய ஒரு செயலைச் சொல்லும் சொல் தொடரில் இருந்து மட்டும் தான் சக்தி ஞானம் ஏற்படும் –
உபநிஷத்துக்களோ -முன்னமே இருக்கக் கூடிய -ஸித்தமான -ப்ரஹ்மத்தைப் பற்றி மட்டுமே கூறுகின்றன –
ஆகையால் உபநிஷத்துக்களால் -ஸித்தமான -முன்னமே இருக்கக் கூடிய ப்ரஹ்மத்தைப் பற்றிய சக்தி ஞானம் உண்டாக்க முடியாது

சித்தாந்தம்
வ்ருத்த வ்யவஹாரத்தால் தான் சக்தி ஞானம் என்பது தவறு
ஒருவர் விரலைக் காட்டி அப்பா என்று சொல்வதால் ஒரு குழந்தையும்
இதற்கு காக்கை என்று பெயர் என்ற உபதேசத்தால் ஒரு சிறுவனும் ஒருவர் செய்கை செய்ததையும்
அதை மற்ற ஒருவர் சொற்களால் சொல்வதைக் கேட்டு அனைவரும் சக்தி ஞானத்தைப் பெறுகிறோம்
இந்த இடங்களிலே எங்குமே செய்யப்பட வேண்டிய செயலே இல்லா விட்டாலும் சக்தி ஞானம் ஏற்படுகிறது
ஆகையால் உபநிஷத்துக்களில் இருந்தும் ஸித்தமான ப்ரஹ்மத்தைப் பற்றிய சக்தி ஞானம் ஏற்படலாம் –

ஜந்மாத் யதி கரணம்
ஜந்மாத் யஸ்ய யத

பூர்வ பக்ஷம்
விசேஷணம் என்றால் -ஒரு பொருளின் பகுதியாய் இருந்து -அதை மற்றவற்றில் இருந்து வேறுபடுத்தும் ஓன்று
உப லக்ஷணம் என்றால் ஒரு பொருளைக் காட்டிலும் தனியாக இருந்தாலும் அதை மற்றவற்றில் இருந்தும் வேறுபடுத்தும் ஓன்று
உலகைப் படைத்து அழித்துக் காப்பது ப்ரஹ்மம் -என்ற லக்ஷணம் பொருந்தாத படியால் ப்ரஹ்மத்தை அறிய முடியாது –
இந்தத் தன்மைகள் விசேஷணங்கள் என்று கருதினால் மூன்று விசேஷணங்கள் உள்ள படியால்
மூன்று ப்ரஹ்மங்கள் என்று சொல்ல நேரிடும்
உப லக்ஷணம் என்று கொண்டால் அந்தப்பொருளை ப்ரஹ்மம் என்று அறிவதற்கு முன்னால்
எவ்விதமாகவும் அறியமுடியாதே -என்று கேள்வி வரும்

ஸித்தாந்தம்
இவற்றை விசேஷணமாகக் கொள்ளலாம்
வெவ்வேறு காலத்தில் இவற்றை ப்ரஹ்மம் பரமாத்மா செய்கிறபடியால் இவற்றுக்கு இடையே
முரண்பாடே இல்லாத படியால் பல ப்ரஹ்மங்கள் என்று நேரிடாது
இவற்றை உப லக்ஷணமாகவும் சொல்லலாம்
உலகுக்கு உபாதான காரணமாயும் நிமித்த காரணமாயும் முன்னமே அறியப்பட்ட பொருளை
உலகைப் படைத்து அழித்துக் காப்பதால் இதுவே ப்ரஹ்மம் -உலகிலேயே மிகப் பெரிய பொருள் என்று தெரிந்து கொள்கிறோம்

ஆக முன்னால் அறியப்பட்ட வடிவம் ஒன்றும்
உப லக்ஷணம் ஒன்றும்
பின்னால் அறியப்படும் வடிவம் ஒன்றும் கிடைக்கின்றன –
ஆகவே இவை உப லக்ஷணமாகவும் குறை இல்லை –

வீடு என்பதை அறிந்து காக்கை உட்க்கார்ந்து உள்ள என்ற விசேஷணம் கொண்டு அது வராஹ ஸ்வாமி உடைய வீடு என்று அறிகிறோம்
அதே போல் ப்ரஹ்ம லக்ஷணம் கொண்டு -ஜென்மாதி -ஜென்மம் ஸ்திதி ஸம்ஹாரம் -விசேஷணமாகவும் உப லக்ஷணமாகவும் கொள்ளலாம்
உப லக்ஷணம் என்றால் முன்பே அறிந்து இருக்க வேண்டுமே -யார் ஜகத்தை படைத்தாரோ -யார் யார் என்று முன்பே அறிந்த ஒன்றை –
யார் அறிய சதேவ சோம்ய ஏகமேவ அத்விதீயம் -சாந்தோக்யம் -அபின்ன நிமித்த காரணம் ப்ரஹ்மமே –
மூவகை காரணமாக உள்ளவன் ப்ரஹ்மம் என்று சொல்லுமே –

ஸாஸ்த்ர யோனித் வாத் அதி கரணம்
ஸாஸ்த்ர யோனித் வாத்

பூர்வ பக்ஷம்
அப்ராப்தே ஹி சாஸ்திரம் அர்த்த வத்-என்கிற நியாயத்தாலே -வேறே ஒரு பிரமாணத்தால்
அறியப் படாத பொருளை ஸாஸ்த்ரம் போதித்தால் தான் அதுக்கு பிரயோஜனம் உண்டு –
படைக்கப்படும் எந்தப்பொருளுக்கும் ஒரு படைப்பாளி வேண்டுகிறபடியால் படைக்கப்படும் இவ் உலகத்துக்கும்
ஒரு படைப்பாளி தேவைப்படும் -என்ற அனுமானத்தாலே அறியப்படும் ப்ரஹ்மம்
ஆகையால் சாஸ்திரம் பரமாத்மாவை போதிப்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை என்று நியாய மதஸ்தர் கூறுவார்கள்

சித்தாந்தம்
ப்ரஹ்மம் ஸாஸ்திரத்தாலே மட்டுமே அறியப்படும் தத்வம் தத்வம் ஆகும்
அனுமானத்தால் அறியலாம் என்பது தவறு -நீங்கள் சொல்லும் அனுமானத்தின் படி
இன்று ஒரு மூளையைப் படைக்கும் ப்ரஹ்மமும் நாளை ஒரு பூவைப் படைக்கும் ப்ரஹ்மமும்
நாளை மறு நாள் ஒரு பழத்தைப் படைக்கும் ப்ரஹ்மமும் வெவ்வேறாகக் கூட இருக்கலாம்
அனைத்தையும் படைத்தவர் ஒருவரே என்பதற்கு எந்தப் பிரமாணமும் இல்லை
மேலும் அதிகமான புண்ணியம் உடைய ஒரு ஜீவாத்மாவே உலகைப் படைக்கிறார் என்று சொன்னாலும்
தவறு இல்லை என்றாகி விடும் -சொல்லப்பட்ட அனுமானத்திலும் பற்பல தோஷங்கள் உள்ளன
ஆகையால் ஸாஸ்திரத்தாலேயே மட்டுமே உலகைப் படைத்து அழித்துக் காக்கும் பரமாத்மாவை உள்ளபடி
அறிய வேண்டும் என்பதால் உபநிஷத்துக்களுக்கு பிரயோஜனம் உள்ளது –

ஸமன்வய அதி கரணம்
தத் து சமன்வயாத்

பூர்வ பக்ஷம்
உபநிஷத்துக்களால் ப்ரஹ்மத்தைப் பற்றின அறிவு ஏற்பட்டாலும் -அதனால் நமக்கு
ஒரு முயற்சி -ப்ரவ்ருத்தி -அல்லது -ஒரு விலக்கு-ஒரு நிவ்ருத்தி -ஏற்படாத படியால்
ப்ரஹ்மத்தைப் பற்றின அறிவு பயன் அற்றது ஆகையால் ஸாஸ்த்ரத்தைத் தொடங்கக் கூடாது –

ஸித்தாந்தம்
ப்ரஹ்மம் மிக உயர்ந்த புருஷார்த்தமாக உப நிஷத்துக்களால் சொல்லப் படுகிற படியால்
வேதாந்தத்தால் ஏற்படும் அறிவுக்கு பயன் உண்டு –
எந்த ஸாஸ்த்ரத்தால் முயற்சி -ப்ரவ்ருத்தி -விலக்கு -நிவ்ருத்தி -ஏற்படுகிறதோ அது மட்டுமே
பிரயோஜனம் உடையது என்று சொல்வது தவறு –
உன் வீட்டின் கீழ் புதையல் உள்ளது -என்ற சொல் தொடரைக் கேட்டவுடன் ஒரு ஆனந்தம் ஏற்படுவதாலேயே
அந்த சொல் தொடர் பயன் உடையதாக ஆவது போல் காட்டில் தொலைந்து போய் வேடுவனாக வளர்ந்த ராஜ குமாரன்
உயர்ந்தவரான சக்கரவர்த்தி தான் தன தந்தை என்று அறிந்ததால் மட்டுமே ஆனந்தம் அடைவதால் மட்டுமே
அதை அறிவிக்கும் சொல் தொடர் பயன் உடையதாகுவது போலேவும்
சொல்ல ஒண்ணாத பெருமைகளை உடைய பரமாத்மா என்று ஒருவர் இருக்கிறார் என்று போதிக்கும்
சொல் தொடரும் -ஆனந்தத்தை விளைவிப்பதன் மூலம் மட்டுமே கூட பிரயோஜனம் உடையது தான் –

சாரீரிக சாஸ்திரம் -ஸமஸ்தமும் சரீரமாக கொண்ட ப்ரஹ்ம விசாரம் தொடங்குவோம்

——————

பாடம் -6–வேதாந்தத்தில் பிரமாணங்கள்
யதா வஸ்தித வ்யவஹார அநு குணம் ஞானம் ப்ரமா-
ஒரு பொருளைத் தகுந்தபடி வியவஹாரம் செய்யக் காரணமான ஞானம் ப்ரமா ஆகும்
வியவஹாரம் -என்பது சப்த பிரயோகம் -அதைப் பற்றிச் சொல்லுதல் -மற்றும் அதை எடுத்தல் வைத்தல் முதலான செயல்களும்
தகுந்தபடி வியவஹாரம் செய்ய-என்று சொன்னபடியால் சம்சயம் விபரீத ஞானம் அந்யதா ஞானம் ஆகியவை ப்ரமா ஆக மாட்டா
சம்சயம் -சந்தேகம் -கயிறா பாம்பா என்பது போல் –
விபரீத ஞானம் -ஒன்றை மற்ற ஒன்றாக நினைப்பது -கயிற்றைப் பார்த்து இது பாம்பு என்று நினைத்தல்
அந்யதா ஞானம் -ஒரு பொருளின் தன்மையைத் தவறாக நினைத்தல்-
பித்தம் அதிகமாக உள்ளவன் வெண்மையான சங்கைப் பார்த்து இது மஞ்சளான சங்கு என்று நினைத்தல் –
அப்படிப்பட்ட ப்ரமாவுக்கு காரணமான -உண்டாக்கும் கருவியாக -இருப்பதற்கு பிரமாணம் என்று பெயர்
விசிஷ்டாத்வைத -வேதாந்த -தரிசனத்தின் படி பிரமாணங்கள் -ப்ரத்யக்ஷம் -அனுமானம் – சப்தம் என்று மூன்றும் –
(மீமாம்ஸாவில் பாட்ட மதம் போல் அத்வைதிகள் ஆறு பிரமாணங்கள் -உபமானம் அர்த்தா பத்தி மற்றும் )

ப்ரத்யக்ஷம் –
சாஷாத்காரி ஞானம் ப்ரத்யக்ஷம்
சாஷாத்காரி என்றால் விசதமாக -தெளிவாக ஒரு பொருளைக் காட்டிக் கொடுத்தல் –
நாம் கண் மூக்கு போன்ற புலன்களால் பொருள்களை அறிகிறோமே -அதுவே ப்ரத்யக்ஷம் ஆகும்
விசத அபவாசம் -நெருப்பு சுடும் படித்து அறிவது போல் இல்லாமல் தொட்டுத் தெரிந்து கொள்வதே ப்ரத்யக்ஷம்
சந் மாத்ர க்ராஹி ப்ரத்யக்ஷம் -அத்வைதி -ப்ரஹ்மம் ஒன்றையே பார்ப்பது -பண்புகள் இல்லாமல் –
விசிஷ்டாத்வைதம் -அப்படி அல்ல பண்புகள் உடனே ப்ரத்யக்ஷம்

ப்ரத்யக்ஷம் இரண்டு வகைப்படும் -நிர்விகல்பகம் -ச விகல்பகம் –
நிர்விகல்பகம் -ஒரு பொருளையும் -அதில் இருக்கும் பண்புகள் -சாமான்யம் -செயல்கள் முதலானவற்றையும் –
முதன்முறை கிரஹிக்கப்படும் அறிவு –
மாடு -என்ற அறிவு -மாடு என்ற உடலையும் அதில் இருக்கும் மாட்டுத்தன்மை என்ற சாமான்யத்தையும் க்ரஹிக்கிறது
ச விகல்பகம் -ஒரு பொருளையும் அதில் இருக்கும் பண்புகள் முதலானவற்றையும் -அவை வேறு சில இடங்களில் இருப்பதையும்
கிரஹிக்கும் ஞானம் ச விகல்பகம் ஆகும் –
மாடு என்னும் அறிவு -மாடு -மாட்டுத் தன்மை என்ற இரண்டுக்கும் மேலாக
இந்த மாட்டுத்தன்மை முன் மாட்டிலும் இருந்தது பின் மாட்டிலும் உள்ளது என்ற அநு விருத்தியையும் -தொடர்ச்சியையும்
கிரஹிப்பது ச விகல்பகம் ஆகும் –

(சிகப்பான தடியைப் பிடித்த மனிதர் வருகிறார் -தத் பிரகாரம் -விசேஷணம் உடனே அறிவது –
பிரித்து அறியாமல் மொத்தமாக அறிவது -சம்யுக்தா ஆகார மீமாம்சையில்
குண ஸம்ஸ்தான பதார்த்த கிரஹணம்
நிர்விகல்பகம் -ச விகல்பகம் -பெயர்கள் நியாய மீமாம்ஸா வேதாந்தம் ஒன்றாக இருந்தாலும் அவற்றின் அர்த்தங்கள் மாறு படும்
இது மாடு -இதுவும் மாடு -அநு வ்ருத்தி
இது அறியும் இடமே ச விகல்பகம்
பிரதம பிண்ட கிரஹணம் நிர் விகல்பகம்
அப்புறம் கிரஹித்து ச விகல்பகம் )

ப்ரத்யக்ஷத்தின் வகைகள்
1-அநர் வாஸீ நம் -2-அர் வாஸீ நம் –
அநர் வாஸீ நம் -உண்டாகாதது -இது நித்ய ஸூரிகளுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ளது
அர் வாஸீ நம் – உண்டாகக் கூடியது
இது இரண்டு வகைப்படும் –
1-இந்த்ரிய சா பேஷம் –2- இந்த்ரிய நிரபேஷம்
இந்த்ரிய சா பேஷம் என்றால் –இந்த்ரியங்களில் தேவையை உடைய ப்ரத்யக்ஷம் -இது நம் போன்றவர்களினுடையது –

ஆறு ஸந்நிகர்ஷம் நியாய மாதத்தில் பார்த்தோம் –
வேதாந்தத்தில் இரண்டே ஸந்நிகர்ஷங்கள் ஏற்கப் படுகின்றன -1-ஸம்யோகம் -2-ஸம்யுக்த ஆஸ்ரயணம் –
த்ரவ்யங்களைக் க்ரஹிக்க ஸம்யோகம் என்ற சந்நிகர்ஷமும் –
அதில் இருக்கும் பண்புகள் முதலானவற்றைக் கிரஹிக்க ஸம்யுக்த ஆஸ்ரயணம் என்ற சந்நிகர்ஷமும் உதவுகின்றன –

இந்த்ரிய நிரபேஷம் என்றால் -இந்திரியங்களின் தேவையே இல்லாமல் ஏற்படும் ப்ரத்யக்ஷம் -இது மேலும் இரண்டு வகைப்படும்
1-ஸ்வயம் ஸித்தம் -2-திவ்யம் –
ஸ்வயம் ஸித்தம் என்றால் -தன் முயற்சியால் அடையப்பட்டது —
யோகிகள் தங்கள் யோக வலிமையால் எங்கும் உள்ள பொருள்களைக் காண்பது இந்த ப்ரத்யக்ஷத்தால் தான் –
திவ்யம் என்றால் தேவனான பரமாத்மாவால் கொடுக்கப் பட்டது
அர்ஜுனன் விஸ்வரூபம் காண்பதற்கு கண்ணனால் கொடுக்கப்பட்ட அது –

ப்ரத்யக்ஷத்தில் சேர்ந்தவை
ஸ்ம்ருதி -என்றால் நினைவு -முன்னால் ஏற்பட்ட அனுபவத்தால் -பதிவுகள் நம்மிடம் இருக்கும் –
அவை எப்பொழுது தூண்டப் படுகின்றனவோ அப்பொழுது அந்த விஷயம் நினைவுக்கு வருகிறது –
அந்தத் தூண்டுதலுக்குக் காரணம் –
1-அந்த விஷயத்துக்கு ஒப்பான மற்றறொரு பொருளைக் காணுதல்
2-அத்ருஷ்டம்
3-சங்கிலித் தொடரான நினைவு
4-அதை விட்டுப் பிரியாத ஒரு பொருளின் நினைவு -ஆகியவை –
ஆகையால் ஸ்ம்ருதி என்பதைத் தனி பிரமாணமாக எண்ணாமல்
அதற்குக் காரணமாக ப்ரத்யக்ஷத்திலேயே சேர்த்து விடலாம்

(உத்போதம் -தூண்டப்பட்ட சம்ஸ்காரம் -யானைப்பாகன் -யானை -அதன் மணி போல் சங்கிலித் தொடர் –
வயசு ஆக சம்ஸ்காரம் மறைந்து நினைவு வராமல்
ஸத்ருச அத்ருஷ்ட சிந்தை -ஆதி -சேர்ந்தே இருக்கும் தன்மைகள்-நெருப்பு புகை போல் விட்டுப்பிரியாமல் )

ப்ரத்யவிஞ்ஞா -என்பது -அந்த தேவதத்தன் தான் இவன் -என்பது போல் முன்பு அறியப் பட்ட பொருளாக
தற்போது கண் முன் இருக்கும் பொருளை அறிதல் –
இதுவும் ப்ரத்யக்ஷத்தில் தான் அடங்கும் –

அபாவங்களைப் பற்றின அறிவும் ப்ரத்யக்ஷம் தான் –
அபாவம் என்று தனியாக ஓன்று கிடையாது –
ஒரு பொருளின் அபாவம்- இன்மை என்பது – மற்ற ஒரு பொருளின் இருப்பு தான் –
தங்க வளையலின் அழிவு என்பது தங்கக் காசின் உத்பத்தி தான் –
தங்கக் காசின் அழிவு என்பது தான் தங்க மோதிரத்தின் உத்பத்தி —
ஆகையால் அபாவங்களை க்ரஹிப்பதும் புலன்களால் தான் என்பதால்
அதுவும் ப்ரத்யக்ஷம் தானே –

——————–

பாடம் -7-அனுமான பிரமாணம்

அர்த்த பஞ்சகம் சொல்லவே வேதங்களும் இதிஹாச புராணங்களும் -ஸப்த பிரமாணம்
இத்தை சரியாக அறிந்து கொள்ளவே ப்ரத்யக்ஷம் அனுமானம் -தர்க்கமும் அறிய வேண்டும் –

ஒரு பொருள் மற்ற ஒன்றுக்கு வியாப்யமானது -அதாவது -தவறாமல் -அப்பொருளோடே சேர்ந்தே இருக்கக் கூடியது -என்பதை ஆலோசிப்பதால்
இப்பொருளைப் பார்த்ததும் அப்பொருளைப் பற்றிய ஞானம் அநு மிதி ஆகும்
அதுக்குக் கருவியாக இருக்கும் ஞானம் -அதாவது இப்பொருள் அப்பொருளுக்கு வியாப்யமானது என்ற ஞானம் அநு மானம் –

எடுத்துக்காட்டு –
ஓர் இடத்தில் புகை இருந்தால் அங்கு தவறாமல் நெருப்பு இருக்கும் என்பதை நாம் காண்கிறோம் –
இதற்கு வியாப்தி என்று பெயர் -நியத ஸாஹ சர்யம்
ஆகையால் ஒரு மலையின் மேல் நாம் புகையைக் கண்டால் அங்கு கண்டிப்பாக நெருப்பு உள்ளது என்று அறிகிறோம் அதுவே அனுமானம் –

வியாப்யம் என்றால் -அதிகமான இடங்களில் இல்லாதது என்று பொருள் –
நெருப்பு இல்லாத இடத்தில் புகை இருந்தால் -அது நெருப்பைக் காட்டிலும் அதிகமான இடங்களில் உள்ளது என்று சொல்லலாம் –
ஆனால் புகை அப்படி இருக்காது –ஆகையால் நெருப்பை விட அதிகமான இடங்களில் இல்லாதது புகை -அநதிக தேச கால வ்ருத்தித்வம்
அதாவது நெருப்புக்கு வியாப்யமானது புகை என்று சொல்கிறோம் –

வியாபகம் என்றால் குறைவான இடங்களில் இல்லாதது என்று பொருள் -புகை இருக்கும் சில இடங்களிலே
நெருப்பு இல்லாமல் போனால் புகை இருக்கும் இடங்களில் எல்லாம் நெருப்பு இருக்கும் என்ற வியாப்தி பொய்த்துப் போகும் —
அதனால் வியாபகமான நெருப்பானது வியாப்யமான புகை இருக்கும் அனைத்து இடங்களிலும் இருக்க வேண்டும் –
அதை விடக் குறைவான இடங்களில் இருக்கக் கூடாது –
வியாப்தி என்பது பூயோ தர்சனத்தால் அறியப் படுகிறது -அதாவது
பல இடங்களில் பல முறை புகையையும் நெருப்பையும் சேர்ந்தே காண்பதால் ஏற்படுகிறது –

ஹேதுவின் வகைகள்
மலையில் நெருப்பு உள்ளது புகை உள்ளபடியால் -என்ற அனுமானத்தின்
மலை பக்ஷம் –
நெருப்பு சாத்யம் -சாதிக்கப் பட வேண்டியது
புகை ஹேது -சாதித்துக் கொடுப்பது –

ஹேதுவுக்கும் சாத்யத்துக்கும் உள்ள வியாப்தி இரண்டு வகை –
1- கேவல அந்வய வியாப்தி
எங்கு எங்கு புகை உள்ளதோ அங்கு அங்கு நெருப்பு உள்ளது என்று இரண்டின் இருப்பை வைத்துச் சொல்வது
2-கேவல வியதிரேக வியாப்தி
வியதிரேகம் -அபாவம் -இன்மை -எங்கு எங்கு சாத்யம் இல்லையோ அங்கு அங்கு ஹேது இல்லை
அந்வய வ்யதிரேக வியாப்தி —
சில இடங்களில் இரண்டு வகையான வியாப்திகளையும் சொல்ல முடியும்
புகை என்ற ஹேது இருக்கும் இடத்தில் நெருப்பு இருக்கும் –
நெருப்பு இல்லாத இடத்தில் புகை இருக்காது – என்ற இரண்டு வியாப்தியையும் காணலாம்
சில இடங்களில் அந்வய வியாப்தி மட்டுமே சொல்லலாம் படி இருக்கும் –
வியதிரேக வியாப்தியை அறியவோ சொல்லவோ முடியாமல் இருக்கும் –
அப்படிப்பட்ட வியாப்தி கேவல அந்வய வியாப்தி –
இந்தக் குடம் சொல்லால் குறிக்கப் படுவது -த்ரவ்யமான படியால் –
எது எது த்ரவ்யமோ அது அது சொல்லால் குறிக்கப் படும் என்ற அந்வய வியாப்தியை அறியலாம் ஒழிய
எது சொல்லால் குறிக்கப் படுவது இல்லையோ அது த்ரவ்யம் அல்ல என்ற வியதிரேக வியாப்தியை அறிய முடியாது
ஏன் என்றால் சொல்லால் குறிக்கப் படாத பொருள் என்ற ஓன்று உலகில் இல்லையே

நியாய மாதத்தில் ஏற்கப்பட்ட 3-கேவல வியதி ரேகி என்ற மூன்றாம் வகை ஹேது வேதாந்தத்தில் ஏற்கப்படுவது இல்லை –

அவயவங்களும் ஹேது ஆபாசங்களும்
தான் அனுமானத்தால் அறிந்த விஷயத்தை மற்றவரும் அறிய வேண்டும் என்றால் அதற்காக சில சொல் தொடர்களை சொல்ல வேண்டும் –
1-ப்ரதிஜ்ஜா -மலையில் நெருப்பு உள்ளது
2- ஹேது -புகை இருக்கிற படியால் –
உதாஹரணம் -எங்கு எங்கு புகை உள்ளதோ அங்கு அங்கு எல்லாம் நெருப்பு இருக்கும் -அடிப்படியில் போல்
4-உப நயம் -அப்படி நெருப்புக்கு வியாப்யமான புகையை உடையது இந்த மலை
5-நிகமனம் -ஆகையால் நெருப்பை உடையது இந்த மலை –

நியாய மதத்தில் இந்த இந்த ஐந்து சொல் தொடர்களும் வேண்டும்
மீமாம்ஸா மதத்தில் முதல் மூன்றோ இறுதி மூன்றோ போதும்
வேதாந்தத்தில் இத்தனையும் சொல்ல வேண்டும் என்கிற நியமம் இல்லை –
உதாஹரணம் உப நயம் என்ற இரண்டும் வேண்டும் –
அவை தான் நெருப்புக்கு வியாப்யமானது புகை என்றும் -புகை மலையில் உள்ளது என்றும் சொல்லும்
மற்றவை கேட்பவர்க்குத் தேவைப்பட்டால் சொல்லலாம் –

ஹேது ஆபாசங்கள் முன்பு நியாய சாஸ்திரத்தில் பார்த்தவையே வேதாந்தத்தில் கொள்ளப்படுகின்றன –

உபமானமும் அர்த்தா பத்தியும்
மீமாம்ஸா போல்வேரே சில தர்சனங்களிலும் இவை இரண்டையும் தனி ப்ரமாணங்களாகக் கொள்வர்
வேதாந்தத்தில் இவை அனுமானத்திலேயே அடங்கும் –

உபமானம்
மாட்டைப் போல் இருப்பது கவ்யம் என்று ஒருவர் சொல்வதைக் கேட்ட பின்பு –
நேரடியாக மாட்டைப் போல் இருக்கும் விலங்கைப் பார்க்கும் பொழுது
இதுவே கவ்யம் என்ற சொல்லால் குறிக்கப்படுகிறது என்ற அறிவு ஏற்படும் -அது தான் உபமிதி
அதற்கு காரணமான -இந்த விலங்கு மாட்டைப் போல் உள்ளது -என்ற ஸத்ருச ஞானம் தான் உபமானம்-என்பது நியாய மதம் –
இது ஒரு தனி பிரமாணம் அல்ல -சொல் தொடர் சப்த பிரமாணம் -நேரே காணுதல் ப்ரத்யக்ஷம் –
அவற்றின் சேர்க்கையே இந்த அறிவு -தனியான பிரமாணம் அல்ல என்பதே வேதாந்தக் கொள்கை –

அர்த்தா பத்தி
ஒவ்வாத ஒரு விஷயத்தைப் பொருந்த வைப்பதற்காக ஏற்படும் ஞானம் அர்த்தா பத்தி
குண்டாக இருக்கும் தேவதத்தன் பகலில் உண்பது இல்லை -என்பதைப் பொருந்த வைக்க –
தேவதத்தன் இரவில் உண்கிறான் -என்று கற்ப்பிப்பதே அர்த்தா பத்தி யாகும் –
இது தனியான பிரமாணம் என்பர் சிலர் -வேதாந்தத்தில் இது தனியான பிரமாணம் அல்ல -அனுமானத்திலேயே அடங்கும் –

ஸப்த பிரமாணம்
ஆப்தரால் சொல்லப்பட்ட சொல் தொடர் தான் ஸப்த பிரமாணம் -என்பர் நியாய மதத்தர்
ஆப்தர் -பொருளை உள்ளபடி அறிந்து அப்படியே உறைபவர்
வேதம் என்ற ஸப்த பிரமாணம் ஸர்வேஸ்வரனால் சொல்லப்பட்டது தான் என்று
அவர்கள் ஏற்கிற படியால் இந்த வேதத்துக்கும் பொருந்துகிறது –

ஆனால் வேதாந்த தரிசனத்தில்
வேதம் சர்வேஸ்வரனால் சொல்லப் பட்டதாகக் கொள்ள வில்லை –
வேதம் நித்யம் -ஆதி அந்தம் இல்லாதது –
ஆகவே ஆப்தனால் சொல்லப்பட்டது ஸப்த பிரமாணம் என்னும் லக்ஷணம் வேதத்துக்குப் பொருந்தாது –
ஒவ்வொரு சொல்லும் ஒலியும் அழியக் கூடியதாக இருந்தாலும் வேதம் நித்யமே –
ஏன் என்றால் வேதத்தில் இருக்கும் எழுத்துக்கள் சொற்கள் ஒலிகள் உச்சரிக்கப்படும் வரிசை மாறாமல் என்றும் ஒரே மாதிரியாகவே உள்ளது –
இதற்கு ஆனு பூர்வீ என்று பெயர்

ஆகவே என்றும் மாறாத நித்யமான ஆனு பூர்வீ வேதத்துக்கும்கு இருப்பதால் வேதமும் நித்யமாகவே சொல்லப் படுகிறது
ஆகவே வேதாந்த தரிசனத்தில் வேதத்துக்கும் பொருந்தும் படி ஸப்த லக்ஷணம் –
அநாப்தரால் சொல்லப்படாத சொல் தொடர் ஸப்த பிரமாணம் –
வேதம் யாராலும் சொல்லப்படாததாலும் அநாப்தரால் சொல்லப்படாததே ஆகும் –

வேதத்தைத் தழுவின நூல்கள்
சிஷை வியாகரணம் சந்தஸ் நிருத்தம் ஜ்யோதிஷம் கல்பம் ஆறும் வேத அங்கங்கள்
புராணங்கள் ஸ்ம்ருதிகள் இதிகாசங்கள் நியாய மீமாம்ஸா தர்ம ஸாஸ்த்ரங்கள்
ஆயுர் வேதம் தநுர் வேதம் காந்தர்வ வேதம் பரத -நாட்டிய சாஸ்திரம் அர்த்த -பொருளைப் பற்றிய சாஸ்திரம்
இவை அனைத்தும் வேதத்தைத் தழுவிய நூல்களே

இவற்றில் வேதத்துக்கு முரனாகச் சொல்லப்பட்ட விஷயங்களைத் தவிர மற்றவை பிரமாணங்கள் ஆகும்
அவற்றை இயற்றிய ரிஷிகளின் குறையால் இப்படி சில முரண்பாடுகள் இவற்றில் இருக்கலாம்
பாஞ்ச ராத்ரம் வைகானஸம் முதலிய ஆகம நூல்கள் முழுவதுமே பிரமாணங்கள் -இவற்றில் வேத வ்ருத்தமாக எதுவும் இல்லை –
மேல் சொன்னவற்றை விட ஆழ்வார்கள் அருளிச் செய்த திவ்ய பிரபந்தங்கள் உயர்ந்த பிரமாணங்கள் ஆகும் –
மிகத் தெளிவாக அர்த்தங்களை போதிக்கும் நம் பூர்வாச்சார்யர்கள் ஸ்ரீ ஸூ க்திகளும் மிகச்
சிறந்த ப்ரமாணங்களாகக் கருதப்படுகின்றன –

——-

பாடம் -8- ப்ரமேயங்கள்

மா என்றால் அறிவு -மேயம் -என்றால் அறியப் படும் பொருள்
ப்ரமா-என்றால் சிறந்த அறிவு -உண்மையான அறிவு –
ப்ரமேயம் என்றால் சரியான அறிவால் அறியப்படும் பொருள் -உண்மையான பொருள் –

வேதாந்த தரிசனத்தில் இரண்டு ப்ரமேயங்களையே ஒத்துக் கொள்ளப்படுகின்றன –
த்ரவ்யம் -என்றும் அத்ரவ்யம் என்றும்
நியாய மாதத்தில் த்ரவ்யம் குணம் கர்மம் ஸாமாந்யம் விசேஷம் ஸமவாயம் அபாவம் என்ற ஏழும் ஒப்புக் கொள்ளப் பட்டன
அவற்றுள் த்ரவ்யங்களும் குணங்களும் வேதாந்தத்தில் த்ரவ்யம் என்றும் அத்ரவ்யம் என்றும் ஏற்கப் பட்டவை
மற்றவை ஏற்கப் படாதவை
குணங்களிலும் -24 -நியாய மாதத்தில் உண்டு -அவை அனைத்தும் வேதாந்தத்தில் ஒத்துக் கொள்ளப் பட வில்லை –

கர்மம் தேவையில்லை
நியாய மதத்தில் கர்மம் என்று ஒரு பதார்த்தம் உண்டு -கர்மம் -என்றால் செயல்
ஆனால் நம் கண்ணுக்குக் கர்மம் என்ற ஓன்று தெரியவதே இல்லை -ஒரு பொருள் நகரும் பொழுது
ஓர் இடத்தை விட்டு மற்ற ஓர் இடத்தோடே தொடர்பு ஏற்படுகிறது என்பதையே கண்ணால் பார்க்கிறோம்
ஸம்யோகம் என்ற குணத்தைத் தவிர கர்மம் -செயல் என்ற பொருளை ஏற்கத் தேவையில்லை –
மேலே செல்லுதல் -கீழே செல்லுதல் -அருகில் வருதல் -தொடர்பு வைத்து ஐந்தாக சொல்லுவதால் –
ஸம்யோகம் ஒன்றையே கொள்ளலாமே

சாமான்யம் தேவை யில்லை
பல பொருள்களில் ஒரே மாதிரியான அறிவு ஏற்படும் இடங்களில் அவற்றுள் உள்ள பொதுத் தன்மை –
சாமான்யம் என்று நியாய மாதத்தில் பார்த்தோம் -அநு கத ப்ரதீதி நியாமகம் தானே சாமான்யம் –
ஆனால் நம் கண்ணுக்கு சாமான்யம் என்ற ஒரு பொருள் புலப்படுவது இல்லை –
ஒரு பொருளின் சமஸ்தானம் ஆக்ருதி மட்டும் தான் கண்ணுக்குப் புலப்படும் –
ஆகையால் வேதாந்த தர்சனத்தின் படி சமஸ்தானம் என்பது தான் ஒரு பொருளின் ஜாதி சாமான்யம் ஆகும் –தனியான ஒரு பொருள் அல்ல –
மாட்டினுடைய மாட்டுத் தன்மை என்பது கொம்பு குளம்பு வால் சாஸ்னா முதலியவற்றைக் கொண்டிருத்தல் தான்
மாடு குதிரை மேஜை போன்ற அவயவங்களுடைய பொருள்களாக இருந்தால் அவற்றின் அவயவங்கள் அமைப்பே ஸம்ஸ்தானம்
ஆத்மா ஆகாசம் போன்ற அவயவங்கள் அற்ற பொருள்களாக இருந்தால் அதன் தனித் தன்மையை தான் அதன் சமஸ்தானம் ஆகும்-
சாஸ்னாதிமத்வம் -அவயவ த்ரவ்யங்களின் கூட்டமே போதுமே -வஸ்து ஸம்ஸ்தானம் -வியக்தி மட்டுமே –

விசேஷம் தேவை யில்லை –
நித்தியமான த்ரவ்யங்களான பரம அணுக்கள் முதலானவற்றை வேறு படுத்திக் காட்ட
வேறே எந்த தன்மையும் இல்லாத படியால் விசேஷம் என்ற ஓன்று ஏற்கப்பட்டது நியாய மாதத்தில்
வேதாந்தத்தில் பரமாத்மா -விபு ஜீவாத்மா அணு -ப்ரக்ருதி முக் குண மாயம் -என்று
வேறு படுத்திக் காட்டுவதால் விசேஷம் தேவை இல்லை –

ஸமவாயம் தேவை யில்லை
பிரிக்க முடியாமல் சேர்ந்தே இருக்கும் பொருள்களுக்கு இடையில் இருக்கும் சம்பந்தம் சமவாயம் என்று நியாய மதத்தில் பார்த்தோம்
இத்தை வேதாந்தத்தில் ஏற்கவில்லை
ஒரு குடத்துக்கும் நிறத்துக்கும் உள்ள தொடர்பு -சமவாயம் என்றால்
அந்த சமவாயத்துக்கும் குடத்துக்கும் உள்ள தொடர்பு எது என்று கேள்வி எழும்
அது மற்ற ஒரு சமவாயம் என்று சொன்னால் அதன் விஷயத்தில் மறுபடியும் இதே ஒரு கேள்வி வரும் —
இப்படி முடிவு இல்லாமல் சமவாயங்களைக் கல்பிக்க வேண்டும் –
அந்த தொடர்பு வேறே ஒரு சமவாயம் அல்ல -இயற்கையாகவே வேறே ஒரு தொடர்பு தேவை இல்லாமல்
அவை தொடர்பு பட்டுள்ளன என்று சொன்னால்
அந்தத் தன்மை நிறத்துக்கும் குடத்துக்கும் இடையிலே ஒப்புக் கொண்டு –
அப்ருதக் சித்த விசேஷணம் -பிரிக்கப் பட முடியாத விசேஷணம் -ஒப்புக் கொண்டு –
சமவாயம் என்ற ஒரு பதார்த்தம் தேவை இல்லை என்பதே வேதாந்த சித்தாந்தம் –

அபாவம் தேவையில்லை –
அபாவம் -பொருளின் இன்மை –
பொருள் உண்டாவதும் முன்னால் இருக்கும் அபாவம் ப்ராக் அபாவம்
அதன் அழிவுக்கு பின்பு அபாவம் த்வம்ஸம்
எக்காலத்திலும் ஓர் இடத்தில் ஒரு பொருள் இருக்காது என்றால் அத்யந்த அபாவம்
ஒரு பொருளுக்கும் மற்ற ஒரு பொருளுக்கும் வேறுபாடு அந்யோன்ய அபாவம்-முன்பு பார்த்தோம்

வேதாந்தத்தில் அபாவம் ஏற்கப்படுவது இல்லை –
குடம் உண்டாவதும் முன்னால் குடத்தின் அபாவம் கன்னுக்குத் தெரியாதே -மண் உருண்டை தானே தெரியும் –
குடம் அழிந்த பின்பும் த்வம்ஸ அபாவம் கண்ணுக்குத் தெரியாதே -துகள்களே தெரியும் –
ஆகவே ஒரு பொருளின் அபாவம் -இன்மையே -மற்ற ஒரு பொருளின் பாவம் இருப்பு – தான் என்பதே வேதாந்த மதம்
குடத்தின் ப்ராக் அபாயம் மண் உருண்டை
குடத்தின் அழிவே கபாலங்கள்
வாயுவில் நிறம் -ரூபம் -இல்லாமை -அத்யந்த அபாவமும் தனியான ஒரு அபாவம் அல்ல –
வாயுவின் இயற்கையான தனித் தன்மையை தான்
மாட்டின் இடம் குதிரையைக் காட்டிலும் வேறுபாடு என்று தனியான அந்யோன்ய அபாவம் கிடையாது –
மாட்டுத் தன்மை தான் மாட்டின் இடம் இருக்கும் – குதிரையைக் காட்டிலும் வேறுபாடு –

அதவா வஸ்து சமஸ்தான ரூப ஜாதியாதி லக்ஷண பேதம் -மூன்றும் ஒன்றே –

———-

பாடம் -9- த்ரவ்யங்கள் –

வேதாந்த தரிசனத்தில் ப்ரமேயங்களை த்ரவ்யங்கள் என்றும் அத்ரவ்யங்கள் என்றும் பிரிக்கிறோம்
த்ரவ்யங்களைப் பற்றிப் பார்ப்போம்
உபா தாநம் -த்ரவ்யம் -என்பது த்ரவ்யத்தின் லக்ஷணம் -எது ஓன்று உபா தானமாக உள்ளதோ அதுவே த்ரவ்யம் –
உபாதானமாய் இருப்பதே த்ரவ்யத்தின் லக்ஷணம் என்றதாயிற்று –
உபாதாநம் என்பது நியாய மாதத்தில் சமவாயி காரணம் என்று சொல்லப் பட்ட தற்கு நிகரான பொருள்
வேதாந்தத்தில் சமவாயம் என்ற ஒரு பதார்த்தத்தை ஏற்காத படியால் அது உபாதானம் என்று சொல்லப் படுகிறது –
பிற்காலத்தில் வேறே ஒரு அவஸ்தையை அடையப்போகும் வஸ்து முன் அவஸ்தையோடு கூடி இருக்கும் பொழுது
அது உபாதானம் என்று சொல்லப் படுகிறது –
அவஸ்தை என்றால் நிலை என்று பொருள் -ஆகந்துகமான அப்ருதக் ஸித்தமான தர்மமே அவஸ்தை என்று சொல்லப் படுகிறது –
ஆகந்துகம் என்றால் நித்தியமாக இல்லாமல் குறிப்பட்ட காலத்துக்கு மட்டுமே இருக்கும் ஒரு தன்மை
அப்ருதக் ஸித்தமான தர்மம் என்றால் தான் இருக்கும் பொழுது தன்னுடைய இருப்பிடத்தில் இருந்து பிரிக்க முடியாத தன்மை –
எடுத்துக் காட்டு
மண் உருண்டையில் இருந்து உருண்டை என்னும் தன்மை-என்பதைப் பிரிக்க முடியாதே –
அத்தன்மை நித்தியமாக இல்லாமல் -தொடக்கமும் முடிவும் உடையதாகவும் உள்ளது –
எனவே உருண்டைத் தன்மை என்பது மண்ணின் ஒரு நிலை -அதே போல் குடமாய் இருத்தல் என்பதும் மண்ணின் மற்ற ஒரு நிலை –
மாலையில் குடமாக மாறப் போகும் மண் காலையில் உருண்டை என்ற நிலையோடு -அவஸ்தையோடு -கூடி இருக்கிறது –
எனவே மண் தான் குடத்துக்கு உபா தானம் என்று சொல்லப் படுகிறது –

ஸத் கார்ய வாதம்
த்ரவ்யங்களுக்குச் சொல்லப்பட்ட இந்த லக்ஷணம் -வேதாந்தத்தில் மிக முக்கியமான ஸத் கார்ய வாதம் என்பதையே அடி ஒற்றியது –
நியாய மதத்தில் அஸத்ய கார்ய வாதம் -ஓன்று உண்டு –அஸத் -அபாவம் -கார்யம் என்றால் உண்டாகும் பொருள்
ஒரு பொருள் ஒரு அபாவத்தில் இருந்து தான் உண்டாகிறது என்பது அவர்கள் சித்தாந்தம் –
ஒரு பொருள் உண்டாவதற்கு முன்னால் அதனுடைய அபாவம் -ப்ராக பாவம் -தான் இருந்தது –
உண்டாக்கக் கூடிய பொருள் அதன் அவயவங்களைக் காட்டிலும் முற்றிலும் வேறு பட்டது –
ஏன் என்றால் அறிவு சொல் அளவு எண்ணிக்கை சக்தி வடிவம் முதலான அனைத்துமே காரியத்துக்கும் காரணத்துக்கும் வேறாக உள்ளன –
ஆனால் வேதாந்தத்தில் இந்த அஸத் கார்ய வாதம் ஏற்கப் படுவது இல்லை –
நூல்கள் சேர்ந்து ஒரு துணி உண்டாகும் பொழுது நூல் என்பது வேறே ஒரு த்ரவ்யம் –
துணி என்பது முற்றிலும் யதிதான வேறே ஒரு த்ரவ்யம் என்று நியாய மதத்தில் சொல்வது சரியில்லை என்பதே வேதாந்த கொள்கை –
ஸத் என்றால் இருக்கும் பொருள் -எனவே இருக்கக் கூடிய ஒரு பொருள் தான் கார்யமாக மாறுகிறது –
அபாவத்தில் இருந்து கார்யம் தோன்றவில்லை -என்பதே ஸத் கார்ய வாதம் -ஆகும் –
காலையில் உருண்டையாய் இருந்த மண் தான் இப்பொழுது குடமாக மாறி உள்ளது என்று நமக்கு அறிவு ஏற்படுவதைக் காண்கிறோம் –
இதற்குப் ப்ரத்யபிஞ்ஞா என்று பெயர் –
இந்த அறிவைக் கொண்டே நாம் புரிந்து கொள்ளலாம் -மண் என்பதும் குடம் என்பதும் ஒரே த்ரவ்யம் தான் என்று –
பிறகு அளவு எண்ணிக்கை அறிவு சொல் முதலானவை ஏன் மாறுகின்றன என்றால் –
அந்த த்ரவ்யத்தின் அவஸ்தை நிலை -மாறி விட்ட படியால் மாறுகின்றன –

உபநிஷத்தில் ஸத் கார்ய வாதம்
சாந்தோக்யம் ஆறாவது ப்ரபாடகம் -ஸத் வித்யா ப்ரகரணம்
வாசா ஆரம்பணம் விகார நாம தேயம் ம்ருத்திகா இத்யேவ சத்யம்
விகாரம் -உரு மாற்றங்கள்
நாம தேயம் -பெயர்கள்
ஆரம்பணம் -அடையப்படுகின்றன
ஒரே மண் என்ற த்ரவ்யத்தால் வெவ்வேறு உருவங்களும் வெவ்வேறு பெயர்களும் அடையப் படுகின்றன என்று சொல்லும்
இதன் பிரயோஜனம் என்ன என்றால்
வாசா -வாக் முதலான வியவஹாரங்களுக்காக
வாயால் ஒரு பொருளைப் பற்றிச் சொல்வது -அதைக் கையால் எடுப்பது முதலானவை தான் வியவஹாரங்கள் –
வெவ்வேறு வியவஹாரங்கள் ஏற்படுத்துவதற்குத் தான் ஒரே மண் த்ரவ்யம்
வெவ்வேறு உருவங்களையும் பெயர்களையும் அடைகிறது என்று அழகாக ஸத் கார்ய வாதத்தைச் சொல்கிறது –
மேலும்
ம்ருத்திகா இத்யேவ சத்யம்
எந்த நிலையை அடைந்தாலும் அது மண் தான் என்பதே உண்மையாகும் -ப்ரமாணங்களால் அறியப் படுவதாகும் –
வேறே ஒரு த்ரவ்யம் உண்டாகிறது என்று சொல்ல இயலாது –

மேலும் ஸ்பஷ்டமாக அஸத் கார்ய வாதத்தைத் தவறு என்றும் கூறுகிறது –
சிலர் கூறுகிறார்கள் -ஒரு பொருள் உண்டாவதற்கு முன்னால் -அசத்தாக -அபாவமாக -இருந்தது –
அதில் இருந்து தான் ஸத் என்கிற உத்பத்தி ஏற்படுகிறது -என்று
எந்தப் ப்ரமாணத்தைக் கொண்டும் அவ்வாறு சொல்ல இயலாது
எப்படி அபாயத்தில் இருந்து உண்டாக்கும் ஏற்பட முடியும் என்று -பொருள் –

———

பாடம் -10-த்ரவ்யங்களின் வகைகள்
ப்ரமேயங்களை த்ரவ்யங்கள் என்றும் அத்ரவ்யங்கள் என்றும் இரண்டாகப் பிரிக்கலாம்
அவஸ்தை என்கிற நிலைகளுக்கு இருப்பிடமானவை த்ரவ்யங்கள்
ஸப்தம் ஸ்பர்சம் முதலான தன்மைகள் மட்டும் போதுமே -அவற்றை உடைய த்ரவ்யம் என்ற பொருள்
ஏன் ஏற்கப் பட வேண்டும் யென்று சிலர் சொல்வது சரி இல்லை –
ரூபத்தை மட்டும் க்ரஹிப்பதாக கண்ணும் ஸ்பர்சத்தை மட்டும் க்ரஹிப்பதாக தோலும் இருக்கும் பொழுது
நேற்றுப் பார்த்தத்தையே இன்று தொடுகிறேன் என்று ஏற்படும் ப்ரத்யவிஜ்ஜை யானது அவை இரண்டுக்கும்
பொதுவான இருப்பிடமாக ஒரு த்ரவ்யம் இருக்க வேண்டும் என்று காட்டுகிறது –

அதே போல் த்ரவ்யம் மட்டுமே போதுமே அதற்குத் தன்மைகள் எதற்கு என்று கூறுவதுவும் சரியில்லை
ஒரே த்ரவ்யத்தில் ஒவ்வொரு காலத்தில் வெவ்வேறு மாதிரி நாம் அறிவதால் த்ரவ்யம் அறியப் பட்ட போதும்
அதில் இருக்கும் தன்மைகள் நம்மால் அறியப்பட வில்லை என்றே சொல்ல வேண்டும்
எனவே த்ரவ்யத்தில் ரூபம் ரஸம் முதலான தன்மைகள் உள்ளன என்று அவசியம் ஒப்புக் கொள்ள வேண்டும் –

புத்த மதத்திலே த்ரவ்யங்கள் அனைத்தும் க்ஷணிகங்கள் —
அதாவது ஒரே வினாடியில் அழியக் கூடியவை என்று சொல்லப் படுகிறது -அதுவும் தவறானது
காலை பார்த்த கூடத்தை இப்பொழுது தொடுகிறேன் என்பது போன்ற ப்ரத்யபிஜ்ஜை
அனைவருக்கும் ஏற்படுகிறபடியால் நீண்ட காலத்துக்கு ஒரே த்ரவ்யம் இருக்கிறது என்றதாயிற்று
இந்த அறிவு அனைவருக்கும் தவறாக ஏற்படுகிறது என்னவும் ஒண்ணாது

த்ரவ்யங்களின் வகைகள்
ஆறாக பிரிக்கலாம் -ப்ரக்ருதி -காலம் -பரமபதம் -ஜீவாத்மா -பரமாத்மா -இவர்களுக்கு ஏற்படும் ஞானம் –
இவற்றை பலவகைகளாகப் பிரிக்கலாம்

ஜடம் -அஜடம் -பாகுபாடு
ஜடம் -ஸ்வயம் ப்ரகாஸம் அல்லாதவை
ப்ரக்ருதி காலம் இவை இரண்டும் என்றுமே தானாகப் பிரகாசிக்காதவை
இவற்றை அறிய வெளிச்சம் புலன்கள் போன்ற வேறு பொருள்களின் உதவி தேவை –
அஜடம் ஸ்வயம் ப்ரகாஸம் ஆனவை –
நித்ய விபூதி -ஜீவாத்மா -பரமாத்மா -இவர்களின் ஞானம் என்ற நான்கும்
வேறே ஒரு பொருளின் உதவி தேவைப்படாமல் தானாகவே பிரகாசிக்கக் கூடியவை

ப்ரத்யக் பராக் என்கிற வேறுபாடு
ப்ரத்யக்-ஜீவாத்மா பரமாத்மா -இருவரும் தாங்களே பிரகாசிக்கிற படியால் ப்ரத்யக் என்று அழைக்கப் படுகின்றன
பராக் -மற்ற நான்கும் -மற்றவர்களுக்குத் தான் தோற்றம் அளிக்கக் கூடியவை -தான் தன்னை அறியாது -இவை பராக்

சித் -அசித் -பாகுபாடு
சித் -அறிவுடையவர்களான ஜீவாத்மாவும் பரமாத்மாவும்
அவன் பரம சேதனன் -ஆகவே தத்வ த்ரயம்
அசித் -அறிவற்றவையான மற்ற நான்கு பொருட்களும் –

——–

பாடம் -11- பிரகிருதி

ஆறு வகையான த்ரவ்யங்களில் ஓன்று பிரகிருதி
அஜாம் -ஏகாம் – லோஹிதம் சுக்லம் க்ருஷ்ணாம் – வஸ்தூம் ப்ரஜாம் ஜநயந்தி சரூபா -ப்ரக்ருதி
ஸ்ருஷ்டிக்கு மூலப் பொருள்
ஸத் கார்ய வாதம் -நித்யம் -அழிவதோ உண்டாவதோ கிடையாது -அவஸ்தா மாற்றமே
ஸ்ருஷ்டியில் பிரக்ருதியே உலகமாக மாறி -பிரளயத்தின் பொது இயல்பு நிலைக்கு மாறும் –
எனவே பிரக்ருதியை அஜா -பிறவாதது என்றும் சொல்வர்
இது முக்குண மயம் -ஸத்வம் ரஜஸ்ஸூ தமஸ்ஸூ
இதுவே அனைத்து உலகப் பொருள்களாக மாறுவதால் அவை ப்ராக்ருதங்கள் என்று அழைக்கப்படும்
அவை அனைத்துமே முக்குணங்கள் உடையவையே
இதுவே பேர் ஆனந்தம் என்று பிரமித்து நித்ய சம்சாரிகளாக மாறி மாறி பல பிறப்புகளில் ஆழ்ந்து போகிறார்கள் பலரும்
வெகு சிலரே இவற்றை வெறுத்து முமுஷுக்களாகி முக்தர் ஆகிறார்கள் –

பிரகிருதியின் செயல்கள்
மம மாயா துரத்யயா -மாம் ஏவ -இத்யாதி
இந்த முக்குண மய பிரகிருதி என்னாலேயே இயக்கப் பட்டு என்னுடைய லீலைக்காக உள்ளது –
இந்த பிரக்ருதியான மாயையை யாராலும் எளிதில் தாண்ட இயலாது
யார் என்னையே சரணாகப் பற்றுகிறார்களோ அவர்கள் தான் இத்தைக் கடக்கிறார்கள் –

பிரகிருதி பாப புண்ணியங்களின் அடிப்படையில் நம்மைத் தளைப்படுத்துகிறது –
கர்மங்கள் நீங்கி விட்டால் ப்ரக்ருதியோடே நமக்கு இருக்கும் தொடர்பு நீங்கி விடும்
ப்ரக்ருதி பகவானை அறிய முடியாதபடி செய்து -நம்மையும் கூட நாம் சரியாகப் புரிந்து கொள்ளாத படி பண்ணி
இந்த உடலே நான் -என்கிற தேகாத்ம அபிமானத்துக்கும்
நான் ஸ்வ தந்த்ரன் என்று நினைக்கும் ஸ்வ தந்த்ர அபிமானத்துக்கும் காரணமாக உள்ளது
ப்ரக்ருதி தன்னுடைய வெவ்வேறே வடிவங்களான பிராகிருத பதார்த்தங்களில் ஆசையை வளர்த்து
அவையே மிகவும் சிறந்தவை என்று எண்ண வைக்கிறது –
உடல் புலன்கள் உலகப் பொருள்கள் -நுண்ணிய வடிவங்களில் உள்ளது
முக்குணங்களை உடையது
பகவானாலே செலுத்தப்படுவது –

ப்ரக்ருதிக்குப் பல பெயர்கள் உண்டு
1- ப்ரக்ருதி -இந்த உலகில் எல்லாப் பொருள்களும் இதில் இருந்து தோன்றுகிற படியால் இது பிரகிருதி என்னப் படுகிறது
2-அவித்யை -வித்யை என்னும் அறிவைக் கெடுக்கிற படியால்
3-தமஸ் ஸூ -வெளிச்சத்துக்கு நிகரான அறிவுக்கு எதிராக உள்ளபடியால் இருட்டு
4-பிரதானம் -முக்கியமான பொருள் -அனைத்தும் இதில் இருந்து மாறுவதால்
5-மாயா -விசித்திரமான ஆச்சர்யமான பொருள்களை உண்டாக்குகிற படியால்
பொய் என்ற பொருளில் அல்ல -நமக்குத் புரியாதபடி ஆச்சர்யமாக உள்ளது-

பரமாத்மா ஜீவாத்மா -அறிவுடைமை ஒற்றுமை
ஜீவாத்மா ப்ரக்ருதி -இரண்டும் சொத்து ஸ்வாமிக்கு
பரமாத்மாவுக்கு ப்ரக்ருதிக்கும் -ஒற்றுமை -தன்னோடே சேர்ந்தவர்களைத் தன்னைப் போல் ஆக்கும் –
சமதர்ம முக்தி அவன் தருவான் –
தன்னளவுக்கு கீழே இழுத்துச் செல்லுமே -பிரக்ருதியும்

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கணாதர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாசர் -பாதராயணர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ சடகோபர் அந்தாதி-91-100- -ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் —

August 5, 2021

பிரிவாற்றாது வருந்தும் தலைவி நிலை கண்டு பாங்கி இரங்குதல்

பருகின்றது இருள் போகின்றது வண்ணம் பூவை கண்ணீர்
உருகின்ற தென்று உயிர் ஓய்கின்றதால் உலகு ஏழுமுய்யத்
தொகுகின்ற ஆயிரம் சொன்னோன் குருகைச் சொல்லால் விளங்கத்
தகுகின்றனர் அல்லர் மேன் மேலும் காதல் தருமவரே. 91–

பருகின்றது இருள் -இருட்டோ வந்து நிறைகின்றது
போகின்றது வண்ணம் பூவை -இவளது நல்ல நிறமோ நீங்குகின்றதே
கண்ணீர் உருகின்றது -கண்ண நீரும் பெருகுகின்றதே
தென்று உயிர் ஓய்கின்றதால்-இக் காரணங்களால் எனது உயிர் சோர்வடைகின்றது
மேன் மேலும் காதல் தருமவரே–அபிநிவேசத்தை வளர்த்து அருளும் அவரே
உலகு ஏழுமுய்யத் தொகுகின்ற ஆயிரம் சொன்னோன்–தொண்டர்க்கு அமுதால அருளிச் செய்த ஆழ்வார்
குருகைச் சொல்லால் விளங்கத் தகுகின்றனர் அல்லர் -கீர்த்தியால் விளங்கத் தக்கவர் அல்லர்

இன்னமும் பூர்ண கடாக்ஷம் பெறாத குறையால் அலற்றுகிறார்

———

தருமமும் காமமும் தாவில் அரும் பொருளுந் தணவாக்
கருமமும் ஆகிய காரணம் கண்ட அக் காரணத்தின்
பெருமையும் மாயப் பிணக்கும் தவிர்ந்துறு பேதம் செய்யம்
இருமையும் தீர்ந்த பிரான் சட கோபன் தன் இன்னருளே. 92–

தருமமும் காமமும் தாவில் அரும் பொருளும் -தர்மம் அர்த்தம் காமம்
தணவாக் கருமமும் ஆகிய -அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யமும்
காரணம் கண்ட அக் காரணத்தின்–அந்த பர ப்ரஹ்மம் போலவே
பெருமையும் மாயப் பிணக்கும் தவிர்ந்து–அனைத்திலும் பெரிய மஹா மாயை என்னும்
பிரகிருதி சம்பந்தமும் அதனால் வரும் மாறுபாடும் இல்லாமல்
உறு பேதம் செய்யம் இருமையும் தீர்ந்த –இருவித கர்மங்களையும் தொடரப் பெறாத
பிரான் சட கோபன் தன் இன்னருளே.–ஆழ்வாரது பரம காருண்யமே காரணம் –
இவை பத்தும் வல்லார் உலகில் எனது பெரும் செல்வராய்த் திருமால் அடியார்களை பூசிக்க நோற்றார்களே

———–

இருளுக்கு ஆற்றாத தலைவியைக் குறித்துத் தோழி இரங்குதல் –

அருளில் சில மகிழா யிழைக்கு ஈவர் கொல் அந்தி வந்த
இருளில் பிறிது துயரும் உண்டோ இயலோடு இசையின்
பொருளில் சிறந்த அலங்கார வல்லியின் போக்கில் உள்ளம்
தெருளின் கரும்பு ஒக்கும் ஆயிரம் பாப் பண்டு செய்தவரே. 93–

இயலோடு இசையின் பொருளில் சிறந்த -இயல் தமிழ் பொருள் அமைதியிலும் இசைத்தமிழ் பொருள் அமைதியிலும் சிறப்புற்ற
குருகையர் கோன் யாழினிசை வேதத்து இயல் –
அலங்கார வல்லியின் -அலங்காரங்கள் அமைந்த பூங்கொடி போலும் படி
கடவல்லி ப்ரஹ்ம வல்லி ஆனந்த வல்லி போல் அலங்கார வல்லி
போக்கில் உள்ளம் தெருளின் கரும்பு ஒக்கும் ஆயிரம் பாப் பண்டு செய்தவரே. –நம்மாழ்வார்
ஆயிழைக்கு —ஆழ்வார் திரு உள்ளம் மகிழும்படி ஆத்ம குணம் நிறைந்த தலை மகளுக்கு –
அருளில் சில மகிழா ஈவர் கொல் -கருணையால் மகிழம் பூவைத் தந்து அருளுவாரோ –
அந்தி வந்த இருளில் பிறிது துயரும் உண்டோ -மாலைப் பொழுதில் இருள் போல் வேறே ஓன்று உண்டோ -இல்லை என்றபடி –

———-

அவரே அயற்கும் அரற்கும் அல்லா அமரர்க்கும் எல்லாம்
பவரே கை யுற்று என் பணி கொள்ளுமோ படர் நீரின் இட்ட
நவ ரேகை யுட் கொள்ளச் செய்ததல்லால் நம்பி மாறனைப் போல்
எவரே திரு வாயிரம் மோக்க மாலை இசைத்தவரே. 94–

அயற்கும் அரற்கும் அல்லா அமரர்க்கும் எல்லாம்-ப்ரஹ்மாதிகளுக்கும் மற்ற தேவர்களுக்கும்
பவரே கை யுற்று என் -பிறப்பு வகை நேர்ந்து என்ன பயன்
படர் நீரின் இட்ட நவ ரேகை யுட் கொள்ளச் செய்ததல்லால் -நீரில் மேல் எடுத்திய புது எழுத்துக்கள் போல்
நிலை இல்லாத பிரபஞ்ச விஷயங்களை மனம் கொள்ளும்படி செய்தது அல்லால்
பணி கொள்ளுமோ -நித்ய கைங்கர்யம் செய்தலைப் பெறுமோ
அவர் எவரே -அவர்களில் எவர் தாம்
நம்பி மாறனைப் போல் திரு வாயிரம் மோக்க மாலை இசைத்தவரே-நம்மாழ்வார் போல்
மோக்ஷ ஸாஸ்த்ரம் அருளிச் செய்தவர் யாரும் இல்லையே –

———-

தவம் செய்வதும் தழல் வேள்வி முடிப்பதும் தம்மை ஒறுத்து
எவன் செய்யும் மெய்யன் குருகைப் பிரான் எம்மை இன்னம்ஒரு
பவம் செய்கை மாற்றிய பண்டிதன் வண் தமிழ்ப் பாவம் உண்டே
அவம் செய்கை மாற்றச் செவி யுண்டு நா வுண்டு அறிவுமுண்டே. 95–

தம்மை ஒறுத்து-தங்களை வருத்தி
தவம் செய்வதும்
தழல் வேள்வி முடிப்பதும்
எவன் செய்யும் -இது நல்ல பயனைக் கொடுக்கும்
அவம் செய்கை மாற்றச்–கொடிய கர்மங்களை ஒழிக்க
மெய்யன் குருகைப் பிரான் -உண்மைப் பொருளை உண்மையாக அறிந்த ஆழ்வார்
எம்மை இன்னம் ஒரு பவம் செய்கை மாற்றிய பண்டிதன் -இனி சம்சாரத்தில் இருக்க ஒட்டாமல் இருக்க
வண் தமிழ்ப் பாவம் உண்டே-திவ்ய ப்ரபந்தகளும் இருக்கின்றனவே
செவி யுண்டு நா வுண்டு அறிவுமுண்டே. –காதுகளும் நாக்கும் அர்த்த பஞ்சகம் அறிய அறிவும் உண்டே –

நா வாயில் உண்டே நமோ நாரணா என்று ஓவாது உரைக்கும் உறையுண்டு
மூவாத மாக்கதிக் கண் செல்லும் வகை யுண்டே என் ஒருவன்
தீக்கதிக் கண் செல்லும் திறம் –பொய்கையார்

———-

தலைவன் தலைவியின் நோக்கினாலாய வருத்தம் கூறுதல் –

உண்டாட் டியலும் திருமால் உருவை உயர்த் துலகைத்
தொண்டாட்டிய வந்து தோன்றிய தோன்றல் துறைக் குருகூர்
நண்டாட்டிய நங்கை நாட்டங் களால் இந்த நாட்டை யெல்லாம்
திண்டாட்டிய கண்கள் போல் செய்யுமோ கயல் தீங்குகளே. 96–

உண்டாட் டியலும் திருமால் –திரு விளையாடல்களை யுடைய ஸ்ரீ யபதி யுடைய –
அலகிலா விளையாட்டுடைய தலைவருடைய
அகில புவன ஜென்ம ஸ்தேம பங்காதி லீலே
உருவை -திவ்ய மங்கள விக்ரஹங்களை
உயர்த்து-மோக்ஷ சாதனம் என்று வெளியிட்டு அருளி
உலகைத் தொண்டாட்டிய -கைங்கர்யங்களிலே உலகோரை மூட்ட
வந்து தோன்றிய தோன்றல் -திரு அவதரித்த ஆழ்வார்
துறைக் குருகூர்-திருச்சங்கு அணித் துறையிலே
நண்டாட்டிய நங்கை -திருக்கை வளையல்களை ஓசை எழுப்பி வரும் இவளது
நாட்டங் களால் இந்த நாட்டை யெல்லாம் திண்டாட்டிய கண்கள் போல் -திருக்கண்கள் போல் –
ஞான விசேஷங்களையே திருக்கண்கள் என்பரே
செய்யுமோ கயல் தீங்குகளே.-கயல் மீன்கள் வருந்தச் செய்ய வல்லவே –

———-

பிரிவு ஆற்றாது வருந்தும் தலைவி இரங்கல் –

தீயைக் கிழித்தொரு திங்கள் கொழுந்தெனச் செய்த தல்லால்
பேயைக் கிழித்தென அன்றில் பனை பிளவார் உளவாம்
நோயைக் கிழிக்கும் வகுள் நல்கார் இந்த நுண் பிறவி
மாயைக் கிழியைக் கிழித்தெம்மை வாங்கிட வல்லவரே. 97–

இந்த நுண் பிறவி-இந்த எளிய பிறப்பாகிய
மாயைக் கிழியைக்-மாயா ரூபமான ஆடை எமது உயிரைப் போர்த்து உள்ளதை
கிழித்தெம்மை வாங்கிட வல்லவரே–திருவடிகளில் சேர்த்துக் கொள்ள வல்ல ஆழ்வார்
தீயைக் கிழித்தொரு திங்கள் கொழுந்தெனச் செய்த தல்லால்-நெருப்பைப் பிளந்து ஒரு பிறைச்சந்திரனாக செய்தது அல்லாமல்
அன்றில் பனை-அன்றில் பறவைக்கு இடம் கொடுக்கும் பனை மரத்தை
பேயைக் கிழித்தென பிளவார்-பேயைக் கிழிப்பது போல் பிளந்தார் இல்லையே
உளவாம் நோயைக் கிழிக்கும் வகுளம் நல்கார் -பிரேம நோயைப் போக்கும் மகிழம் பூ மாலையையும் தர மாட்டார்

——–

இதுவும் அது –

வல்லம் புலி முக வாயில் கரும்பின் மறு பிறப்பைக்
கொல்லம் புலியோர் வகுளம் கொடார் கொடுங்கோகு கட்டிச்
சல்லம் புலி யிட்டெதிரிடப் பாய்வது தாயென்றிங்கோர்
இல்லம் புலியும் உண்டு அம்புலி மீள எழுகின்றதே. 98–

அம் புலி முக -நீரில் பொருந்திய தாமரை திரு முகத்தில் உள்ள
வாயில் கரும்பின் -திருவாய் மொழியாகிய அம்ருதம் கொண்டு
வல் மறு பிறப்பைக்-விரைவிலே மறு பிறப்பை ஒழித்திட்ட
அம்புலி -அழகிய ஸிம்ஹம் போன்ற ஆழ்வார்
யோர் வகுளம் கொடார்- அத்விதீயமான மகிழம் பூ கொடுக்க மாட்டார்
கொடுங்கோகு உகட்டிச்-கொடுமையான முறை கேடு தலைக்கு ஏறி -அக்கிரமம் விஞ்சி
சல்லம் புலி யிட்டெதிரிடப் பாய்வது –முள்ளம் பன்றி போல் எதிர்த்துப் பாய்வதாகிய
தாயென்றிங்கோர் இல்லம் புலியும்-வீட்டுப்புலியும்
இங்கு உண்டு -இவ்விடத்தில் என்னை வருத்திக் கொண்டு உள்ளது
இதற்கும் மேல்
கொல்லம் புலி மீள எழுகின்றதே–வானத்திலும் ஓர் அம்புலி என்னை வறுத்த மீள தோன்றுகிறது
சந்த்ர உதயம் அலாப தசையில் விவேகமும் பாதகமான படி –

———

எழுதிய நாளும் வினையும் தொகுத்தெம்மை இப்பிறவிப்
புழுதியில் நாற்றிட்டு வைப்பரிதால் புகழ் மெய்ப் புலவோர்
தொழுதியல் நாயகன் ஓதும் கனல் துறை நீர்ப் பொருநை
வழுதி நன்னாடன் திருவாய் மொழி எம் மனத்தனவே. 99–

புகழ் மெய்ப் புலவோர்-தத்வ ஞானிகள்
தொழுதியல் –வணங்கி அடியார்களாகி
நாயகன் -தலைவன் -ப்ரபந்ந ஜன கூடஸ்தர்
ஓதும் கனல் துறை நீர்ப் பொருநை வழுதி நன்னாடன் –அக்னி கார்யம் விடாத நீர் வளம் மிக்க
திருக்குருகூரிலே திரு அவதரித்த ஆழ்வார் அருளிச் செய்த
திருவாய் மொழி எம் மனத்தனவே.–திருவாய் மொழியை மனத்திலே நிலை கொண்டு
ஆதலால்
எழுதிய நாளும் வினையும் தொகுத்தெம்மை இப்பிறவிப்
புழுதியில் நாற்றிட்டு வைப்பரிதால் -பிரமன் எழுதிய ஆயுஸ்ஸூ காலமும்
அநாதி கால கர்மங்களும் அடியேனை பிறவிச் சூழலில் சிக்க வைக்க மாட்டாவே
ஏதமிழ் ஆயிரத்து இப்பத்து ஓத வல்லார் பிறவாறே
இப்பத்து அரு வினை நீறு செய்யுமே

———

மனையும் பெருஞ் செல்வமும் மக்களும் மற்றை வாழ்வும் தன்னை
நினையும் பதம் என நின்ற பிரான் குருகூர் நிமலன்
புனையும் தமிழ்க் கவியால் இருள் நீங்கிப் பொருள் விளங்கி
வினையும் திரி வுற்றன குற்றம் நீங்கின வேதங்கள். 100–

மனையும் பெருஞ் செல்வமும் மக்களும் மற்றை வாழ்வும் தன்னை-ஆகிய இவை எல்லாம்
நினையும் பதம் என -ஆழ்வாரை நினைக்கும் அது ஒன்றே ஆகும்
நின்ற பிரான் குருகூர் நிமலன்-ப்ரபந்ந ஜன கூடஸ்தராக நிற்கும் ஆழ்வார்
புனையும் தமிழ்க் கவியால் இருள் நீங்கிப் -அஞ்ஞான அந்தகாரங்களைப் போக்கும் படியாகவும்
பொருள் விளங்கி-யதார்த்த தத்வ அர்த்தங்கள் விளங்கும் படியாகவும்
வினையும் திரி வுற்றன -கர்ம சமூகங்களும் அழியும் படியாகவும்
குற்றம் நீங்கின வேதங்கள்.-தெளியாத மறை நிலங்கையும் தெளியும் படியாகவும் அமைந்தனவே –

சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும்
மீலாத் தாய் தந்தையும் அவரே இனி யாவாரே

மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதிஸ் ஸர்வம் யதேவ நியமேன மத அந்வயாநாம்
ஆத்யஸ்யன குல பதேர் வகுளாபிராமம் ஸ்ரீ மத் தத் அங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா –

உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செந்தமிழ் ஆரணமே என்று இன் நீண் நிலத்தோர்
அறி தர நின்ற இராமானுசன்

———

மன்றே புகழும் திரு வழுந்தூர் வள்ளல் மாறனை முன்
சென்றே மதுர கவிப் பெருமாள் தென் தமிழ் தொடையில்
ஒன்றே பதிகம் யுரைத்தவன் பொன்னடி உற்று நின்றான்
என்றே பதிகம் பதிகம் அதாக இசைத்தனனே –

இது திரு நாமப்பாட்டு –
மார்க்க தர்ஸீ மஹ ரிஷி –
இப்பாடலைப் பாடினவர்களும் ஓதினவர்களும் ஆழ்வாரது
பொன்னடி பேற்றைப் பெறுவார் என்று பலம் சொல்லித் தலைக் கட்டுகிறார் –

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ சடகோபர் அந்தாதி-81-90- -ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் —

August 5, 2021

இட்டத்திலும் தம் தம் உள்ளத்திலும் எண்ணிலும் இருப்பின்
கிட்டத்திலும் வலியாரும் உருகுவர் கேணியிலும்
பட்டத்திலும் பைந் தடத்திலும் ஓடைப் பழனத்திலும்
குட்டத்திலும் கயல் பாய் குரு கூரர் குணங்களுக்கே. 81–

கேணியிலும்-கிணறுகளிலும்
பட்டத்திலும்-பெருக்குக் காலத்தில் நீர் ஏறிப் பாயும் பட்டக் கால்களிலும்
பைந் தடத்திலும் -பசுமையான தடாகங்களிலும்
ஓடைப் பழனத்திலும்-நீரோடை சூழ்ந்த வயல்களிலும்
குட்டத்திலும் -ஆழமான குட்டை களிலும்
கயல் பாய் -நீர் வளத்தால் கயல் மீன்கள் பாய்ந்து குதிக்கப் பெற்ற
குரு கூரர் குணங்களுக்கே. -நம்மாழ்வாருடைய கல்யாண குணங்களுக்காகவே
இருப்பின் கிட்டத்திலும் வலியாரும்-இரும்பு உருக்கிய உருக்குக் கிட்டத்தை விட வலிய கல் நெஞ்சு உடையவரும்
இட்டத்திலும் தம் தம் உள்ளத்திலும் எண்ணிலும் உருகுவர் -தம் தம்முடைய மனம் புத்தி சித்தம் என்னும்
அகக் கரணங்களில் கரைவார்கள் –

இரும்பு போல் வலிய நெஞ்சம் இறை இறை உருகும் வண்ணம்
இரும்பாகில் அக்னியாலே நிமிர்த்துக் கொள்ளலாம்
இது ஒருபடியாலும் திருத்த ஒண்ணாது என்கை

கடின ஸ்தலத்தில் வர்ஷித்தால் காடின்யம் அடங்க நெகிழிச்சிக்கு -உறுப்பு ஆமாப் போலே
விஷயாந்தரத்தாலே மனஸூ அதி கடினமானாலும் சிதிலமாம்படி வயிர உருக்காய் இறே
பகவத் ப்ரபாவம் இருப்பது –

ஆழ்வாரது திரு அருள் பெருக்கால் -இடையறாத நீர்ப்பெருக்கால் மேடு பள்ளம் வாசி இன்றி
எங்கும் ஒக்கக் கயல் பாய்தல் போலே
வலிய நெஞ்சினாரும் மெல் நெஞ்சினாரும் வாசி அற உருகுவார்களே –

———

குணம் வேண்டுமே நற் குலம் வேண்டுமே யக்குலத் தொழுக் காம்
பிணம் வேண்டுமே செல்வப் பேய் வேண்டுமே பெருந் தண் வகுள
மணம் வேண்டுந் தண் தெரியல் பெருமான் செய்யுள் மா மணியின்
கணம் வேண்டும் என்றறிவாரைக் கண்டால் சென்று கைத் தொழுமே. 82–

பெருந் தண் வகுள மணம் வேண்டும் –மகிழ மலர்களின் வாசனை -அனைவராலும் விரும்பப்படுகிற
தண் தெரியல் பெருமான் செய்யுள் –ஆழ்வாரது திவ்ய பிரபங்தங்கள் ஆகிய
மா மணியின் கணம் வேண்டும் என்றறிவாரைக் -ரத்னக் கூட்டங்களை தமக்கு இன்றியமையாதவை என்று அறிந்து ஓதி உணர்பவர்களை
கண்டால் சென்று கைத் தொழுமே–நீங்கள் எங்கே கண்டாலும்-உடனே அருகில் சென்று கை கூப்பி வணங்குங்கோள்

தொழும் -பன்மை ஏவல்
குணம் வேண்டுமே -நல்ல குணங்கள் வேண்டுமோ
நற் குலம் வேண்டுமே -நல்ல குலங்களில் பிறக்க வேண்டுமோ
யக்குலத் தொழுக் காம் பிணம் வேண்டுமே -அதுக்குத் தக்க ஆசாரமாகிய பிணம் வேண்டுமோ
செல்வப் பேய் வேண்டுமே -செல்வப் பொருளாகிய பேய் வேண்டுமோ
ஒன்றுமே வேண்டாம் என்றவாறு

அவாவில் அந்தாதி இப் பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே –
இப் பத்து அறிந்தார் தொண்டர் வாழ்வது சூழ் பொன் விசும்பே -என்றவாறு

———-

தொழும் பாக்கிய வினைத் தொல்லைப் பிறவிச் சுழியிடை நின்று
எழும் பாக்கியமுடைத் தாக்கவும் தென்னிய லோடிசைந்து
கெழும் பாக் கெழுமிய கீர்த்தியை நாளும் கிளத்தி யென்னாத்
தழும்பாக்கவும் வல்ல கோ சட கோபன் தயா பரனே–83-

தொழும் பாக்கிய -உயிரைத் தனக்கு அடிமையாகச் செய்த
வினைத் தொல்லைப் பிறவிச் சுழியிடை நின்று -அநாதியான -பிறவிச் சூழல் நடுவில் இருந்து
எழும் பாக்கியமுடைத் தாக்கவும் –மீண்டு உய்யும் படியான அத்ருஷ்டத்தை யுடையதாம் படி செய்யவும்
தென்னிய லோடிசைந்து கெழும் பாக்–அழகிய இலக்கணங்களோடே கூடிய திவ்யப் ப்ரபந்தங்களிலே
கெழுமிய கீர்த்தியை -எம்பெருமானுடைய புகழை
நாளும் கிளத்தி யென் நாத் தழும்பாக் கவும் -நாளும் சொல்லிச் சொல்லி நாவில் தழும்பு ஏறும்படி செய்யவும்
வல்ல கோ சட கோபன் தயா பரனே-திறமை கொண்ட ஸ்வாமி -கருணையே வடிவானவர்

தயா பரன் -பரம தயாளு
முக்திக்கு மூலம் குருகைப் பிரான் சொன்ன ஆயிரம் என்றாரே முன்னமே
செவிகளால் ஆர நின் கீர்த்திக் கனி என்னும் கவிகளே காலப் பண் தேன் உறைப்பத்துற்று
அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய பேரும் தார்களுமே பிதற்றி

—————-

நல் தாய்க்கு செவிலி அறத்தொடு நிற்றல்

பரந்தலைக்கும் பொருநைக் குரு கூரென்னில் கண் பனிக்கும்
கரம் தலைக் கொள்ளும் உள்ளும் உருகும் கவியால் உலகைப்
புரந்தலைக்கும் வினை தீர்த்தான் புனை மகிழ் பூவுமன்றி
மரந்தலைக் கொள்ளவும் போது நங்காய் உன் மகள் கருத்தே.–84-

நங்காய்
பரந்தலைக்கும் பொருநைக் குரு கூரென்னில் –யாரேனும் தலைவனது ஊர்ப் பெயரைச் சொன்ன மாத்திரத்திலே
நின் மகள்
கண் பனிக்கும்-கண்ணீர் பெருக்குகின்றாள்
கரம் தலைக் கொள்ளும் -கைகளைக் கூப்பித் தொழுகிறாள்
உள்ளும் உருகும் -மனமும் கரைந்து நீராகுகிறாள்
கவியால் உலகைப் புரந்து –திவ்ய ப்ரபந்தங்களால் உலகை ரக்ஷித்து
அலைக்கும் வினை தீர்த்தான் -கருமங்களைப் போக்கி அருளும் தலைமகனது
புனை மகிழ் பூவுமன்றி– மகிழ மலர்களை சூடிக் கொள்ளுவது மட்டும் அல்லாமல்
மரந்தலைக் கொள்ளவும் போது -மகிழ மரத்தைச் சார்ந்து அத்தையும் தலை மேல் கொள்ளச் செல்கிறாள்
உன் மகள் கருத்தே.

தாராயினும் தழை யதாயினும் தண் கொம்பதாயினும் கீழ் வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே
ஆழ்வார் சம்பந்தத்தை நேராகவோ அடியார்கள் மூலமாகவோ பெற ஆசை விஞ்சி உள்ளபடி
ஆழ்வார் அடியார்கள் வாழும் இடங்களையும் தலை மேல் கொள்ளுகிறார் என்றபடி –

—————

தலைவனை நோக்கித் தோழி தலை மகளை உடன் கொண்டு போகச் சொல்லுதல் –

கருத்தில் கருணை வைத்தேகும் இதுவும் கலை மறையோர்
திருத்திற்று ஒரு மணம் தீரும் தின மயல் நீரின் நிறை
முருத்தின் செருந்து அயலே இவளோடு முயற்கரும்பின்
குருத்தில் பிரசம் வைக்கும் குருகூர் சென்று கூடுமினே. 85–

கருத்தில் கருணை வைத்து -திரு உள்ளத்தில் பேர் அன்பு கொண்டு
ஏகும் இவளோடு-இம்மங்கை யுடன் செல்லக் கடவீர்
இதுவும் -இவ்வாறு இவளைக் கைப் பற்றுவதும்
கலை மறையோர் திருத்திற்று ஒரு மணம் -ஸாஸ்த்ரம் வல்லவர் அமைத்த விவாஹங்களில் ஒரு வகை
அன்றியும்
தீரும் தின மயல் -நாள் தோறும் இருவருக்கும் உள்ள மயக்கமும் நீர் இவளைக் கொண்டு போக நீங்கி விடுமே
நீரின் நிறை-நீர் வளத்தால் நீர் அருகில் முளைத்து நிறைந்துள்ள
முருத்தின் செருந்து -வெண்மையாக அடிக் குருத்துக்கள் உடைய செருந்தி கோரைகள்
அயலே கரும்பின் குருத்தில் -அருகில் உள்ள கரும்பின் குருத்துக்களில்
முயல் பிரசம் வைக்கும் -முயல் கூடான சந்த்ர மண்டலம் போல் தேன் கூடு கட்டப் பெற்ற
குருகூர் சென்று கூடுமினே–இவளை அழைத்துக் கொண்டு போவீராக —

கரும்பினிடைத்தேறல் -கலியன்

சாஸ்திரம் அஷ்ட வித மணங்களைச் சொல்லும்
ப்ராமம் -பிரஜா பத்த்யம் -ஆர்ஷம் -தேவம் -காந்தர்வம் -ஆசுரம் ராஷாஸம் -பைசாஸம்

சேஷி பேற்றுக்கு உகப்பானும் அவனே -ஆகவே இவருடைய முயலும் தீருமே –

———-

கூட்டங்கள் தோறும் குருகைப் பிரான் குணம் கூறுமன்பர்
ஈட்டங்கள் தோறும் இருக்கப் பெற்றேம் இருந்து எம்முடைய
நாட்டங்கள் தோறும் புனல் வந்து நாலப் பெற்றேம் இனி மேல்
வீட்டு எங்கள் தோழர்க்கு என்றே பெரும் போகம் விளைகின்றதே. 86–

கூட்டங்கள் தோறும் -தாம் கூடும் பொழுது எல்லாம்
குருகைப் பிரான் குணம் கூறுமன்பர்-ஆழ்வாருடைய திவ்ய குணங்களையே கூறும் அடியார்கள்
ஈட்டங்கள் தோறும் -கூட்டங்களில் எல்லாம்
இருக்கப் பெற்றேம் -கூடி இருக்கப் பெற்றோம்
இருந்து -இவ்வாறு அடியார் கூட்டங்களில் கூடி இருந்து
எம்முடைய
நாட்டங்கள் தோறும் புனல் வந்து நாலப் பெற்றேம் -ஆனந்தக் கண்ணீர் பெருகப் பெற்றோம்
இனி மேல்-இவ்வாறு ஆன பின்பு
வீட்டு எங்கள் தோழர்க்கு என்றே -பரமபதத்தில் எங்களை சார்ந்தவர்களுக்கு
பெரும் போகம் விளைகின்றதே–பேர் இன்பம் நலம் நிகழா நின்றது –
விண்ணுளாரிலும் சீரியர் அன்றோ –

————

பகல் குறியில் தலைமகனுடன் தலை மகளைச் சேர்த்து வைத்த தோழி
பின்பு தலைவன் சிறைப்புறமாக அவன் செவிப்படுமாறு தினையோடே வெறுத்து வரைவு கடாதல்

விளையா தொழிய மருந்தும் உண்டே எம் விளை தினையின்
கிளையாக் கிளர விளைகின்றதால் கிளையாம் பிறவித்
தளை யாசழியத் தடுத்துத் தென் பாலை வழி தடுத்துக்
களை ஆசறத் தடுத் தாண்டான் குருகையின் காப் புனமே. 87–

கிளையாம் பிறவித்-மேலே மேலே தொடரும் பிறவி சூழலில்
தளை யாசழியத் -பந்தமாகிய குற்றம் போகும்படி
தடுத்துத் -போக்கி
தென் பாலை வழி தடுத்துக் – தெற்குத் திக்கில் -பாலை நில வழியையும் தவிர்த்து
களை ஆசறத் தடுத்து -களைகளை முற்றும் போக்கி
ஆண்டான் குருகையின் காப் புனமே.–ஆழ்வாருடைய திருக்குருகூரைச் சேர்ந்த தினை புலமே
தினையின் கிளையாக் கிளர விளைகின்றதால் -தினைப் பயிர்கள் மிகைத்து வளர்ந்து கதிர் முற்றிப் போகின்றதே
விளையா தொழிய மருந்தும் உண்டே -இப்படி முற்றாமல் கதிர் பரிந்தபடியே இருக்க ஏதேனும் மருந்து உண்டோ
நித்ய விபூதி அனுபவம் தந்து அருள வேண்டும் என்றவாறு –

————–

தலைவன் வரும் புனல் கண்டு வருந்துதல்

புனல் பாழ் படுத்துப் புகழ் பாழ் படுத்தல்லால் புகுந்தென்
மனம் பாழ் படுத்தனை வாழ்தி யன்றே வழுவா நரகத்
தினம் பாழ் படுத்த பிரான் சட கோபன் இன்னாக் கலியின்
சினம் பாழ் படுத்த நின்றான் குன்று சூழ்கின்ற செந்தினையே. 88–

வழுவா நரகத் தினம் பாழ் படுத்த –நரபலி அடியார்களுக்கு இல்லாத படி செய்து அருளும்
பிரான் சட கோபன் இன்னாக் கலியின் சினம் பாழ் படுத்த நின்றான்–உபகாரகர் -காளி கோலாகலம் அடக்கி அருளிய ஆழ்வார்
குன்று சூழ்கின்ற செந்தினையே.-பொதிகை மலை சார்ந்து விளைந்த சிவந்த தினையே
புனல் பாழ் படுத்துப் -கதிர் கொய்து விட்டதால் -கொல்லையைப் பாழாக்கி
புகழ் பாழ் படுத்தல்லால் -உனது கீர்த்தியையும் பாழாக்கி
அத்தோடு நில்லாமல்
புகுந்தென் மனம் பாழ் படுத்தனை வாழ்தி யன்றே -எனது மனத்தையும் சார்ந்து பாழாக்கினாயே -வாழி
கம்பத்து அந்தரங்கம் சிவந்த தினை-
தூராத மனக்காதல் –பலவும் பாடி ஆறாத மனக்களிப்போடே -இருந்தமை

———-

பிரிவு ஆற்றாத தலைவி அன்றிலின் குரல் கேட்டு அயர்தல்–

தினை ஒன்றிய குற்றம் அற்றுணர்ந்தோர் மகிழின் திறத்தின்
மனை ஒன்றிய கொடியாள் துயின்றாலும் தன் வாய் அடங்கா
வினை ஒன்றிய அன்றிலுக்கு இடம் காட்ட விரிதலைய
பனை யன்றியும் உளதோ தமியேற்குப் பழம் பகையே. 89–

மனை ஒன்றிய கொடியாள் துயின்றாலும் — தன்னை நிஷேதித்த கொடியவளான திருத்தாயார் உறங்கினாலும்
தன் வாய் அடங்கா வினை ஒன்றிய அன்றிலுக்கு –அன்றில் பறவைக்கு
இடம் காட்ட விரிதலைய பனை யன்றியும் உளதோ -தங்க இடம் கொடுத்த விரிந்த தலையை யுடைய பனை மரமும்
தமியேற்குப் -தலைவனைப் பிரிந்து தனித்து இருக்கும் எனக்கு
தினை ஒன்றிய குற்றம் அற்றுணர்ந்தோர் மகிழின் திறத்தின்-ஆழ்வாரின் மேல் உள்ள காதலால்
பழம் பகையே–வேறே பழைய பகை இல்லையே

———

பகையாய் வருகின்ற மூன்றையும் வேரினோடும் பறித்து
வகையாய் வருவன யாவையும் மாற்றி இவ் வையமுய்யத்
தொகை யாயிரங்கவி சொன்னோன் பெயர் சொல்லச் சூழ் பனியின்
புகையாம் இருள் பின்னை எந்நாள் கழியப் புகுகின்றதே. 90–

பகையாய் வருகின்ற மூன்றையும் வேரினோடும் பறித்து-காமம் கோபம் மயக்கம் மூன்றையும் அடியோடு ஒழித்து
வகையாய் வருவன யாவையும் மாற்றி -இதன் மூலம் வரும் கர்மங்கள் பிறவிகளை இவற்றை தமக்கும் உலகோருக்கும் போக்கி அருளி
சஞ்சிதம் ப்ராரப்தம் ஆகாமியம்-என்று வகை வகையாக வருமே இவற்றின் அடியாகவே
இவ் வையமுய்யத் தொகை யாயிரங்கவி சொன்னோன் பெயர் சொல்லச் –ஆழ்வாரது திரு நாமம் சொல்லவே
சூழ் பனியின் புகையாம் இருள் பின்னை எந்நாள் கழியப் புகுகின்றதே.–அஞ்ஞானம் இருள் சவாசனமாகப் போகும் நாளும் என்று வருமோ
இருள் தரும் மா ஞாலத்தில் பிரிவாற்றாமையால் ஆற்றாமை விஞ்சி வாய் விட்டுக் கூறி அலற்றுகிறார் –

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்