ஸ்வாதயன் நிஹா சர்வேஷாம்
த்ரய்யந் தார்த்தம் ஸூ துர் க்ரஹம்
ஸ்தோத்ர யாமாஸ யோகீந்திர
தம் வந்தே யாமுநாஹ் வயம்-
ஸ்வாதயன்-அனுபவத்திக் கொண்டே –
யன் ப்ரத்யயம் -அனுபவிப்பித்து-
இஹ -இந்த காலத்தில் -இத்தைச் சொல்லும் பொழுது -இதில் –
சர்வேஷாம்-சர்வாதிகாரம் இந்த ஸ்தோத்ரம் -ஸ்ரத்தையே வேண்டுவது
ஸூ துர்க் ரஹம்–த்ரய்யந் தார்த்தம்-அறிவரிய வேதாந்தார்த்தங்களை
ஸ்தோத்ர யாமாஸ-ஸ்தோத்ர ரூபமாக வெளியிட்டு அருளினாரோ
யோகீந்திர-எந்த யோகி ஸ்ரேஷ்டர்–எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவனான ஆளவந்தார் –
————
நமோ நமோ யாமுநாயா யாமுநாய நமோ நம
நமோ நமோ யாமுநாயா யாமுநாய நமோ நம
நமோ நமோ யாமுநாயா-அஷ்டாக்ஷர மந்த்ரம் போல் இதுவே-
———————————————————
ஸ்ரீ மத யமுனா முனே நாத ஸஹாயேந -நாத முனி என்றும் பெருமாளே என்றும் -கூடியவராக -உள்ள ஆளவந்தரால்
அஹம் நாதம் உடையவராய் ஆனேன் -தேசிகன்
யஸ்ய வதன சந்த்ர உத்பன்ன புவன போக்கிய அம்ருதம்
அம்ருத கிரணங்கள் உடைய சந்திரன் -சகோர பஷி இத்தையே தாரகமாக கொள்ளுமே
ஸூ மனஸா-ஸ்ரீ வைஷ்ணவாம் போக்யம் -அமரர்கள் -பூ ஸூ ரர்களுக்கும் –
———————–
ஆளவந்தார் ஸ்தோத்ர ரத்னம் நாலாம் ச்லோகத்தின் பொருள் விரிக்கையில் ஸ்ரீ தேசிகன்
“மாதா பிதா”வுக்கு விளக்கம் அருள்வது காணீர் –
”அத பராசர ப்ரபந்தாதபி வேதாந்த ரஹஸ்ய வைசாத்யாதிசய ஹேதுபூதை: சாத்ய பரமாத்மனி சித்த ரஞ்சக தமை:
ஸர்வோபஜீவ்யை: மதுரகவி ப்ரப்ருதி ஸம்ப்ரதாய பரம்பரயா நாதமுநேரபி உபகர்த்தாரம் காலவிப்ரகர்ஷேபி
பரமபுருஷ ஸங்கல்பாத் கதாசித் ப்ராதுர்பூய ஸாக்ஷாதபி ஸார்வோபநிஷத் ஸாரோபதேசதரம் பராங்குசமுநிம் “
மாதா பிதா ப்ராதேத்யாதி உபநிஷத் ப்ரசித்த பகவத் ஸ்வபாவ த்ருஷ்ட்யா ப்ரணமதி மாதேதி”.
இங்கு ஸ்ரீ தேசிகன் வேத விஷயங்களை
ஆழ்வார் பராசராதி ரிஷிகளையுங்காட்டில் வெகு நன்றாக விளக்குவதாகக் காட்டியருளுகிறார்.
மேலும் ஆழ்வார் பாசுரங்கள் எல்லார்க்கும் ஏற்புடையனவாயும். ரசகனமாயும் உள்ளன.
ஆகவே எம்பெருமானைப் போன்றே ஆழ்வாரும் தாய், தந்தை என எல்லா உறவு முறையிலும் கொண்டாடப் படுகிறார்.
———————–
ஸ்லோகம் -10-
ஸ்தோத்ரம் செய்ய அல்ப சக்தனான தாமே தகுதியானவர் என்று அவனது ஸ்வாபாவிக வாத்சல்யம் வெளிப்பட்டது
அது அவன் இடம் திருப்பத்தில் எவ்விதமும் ஆச்சர்யம் அன்று என்று
ஒரு கைமுதிக நியாயத்தால் இந்த ஸ்லோகத்தில் ஸ்தாபிக்கிறார்
இது முதல் 12 ஸ்லோகங்களால்
நாராயண சப்தார்த்தம் ஸர்வ ஸ்மாத் பரத்வமும் ஸுலப்யமும் என்று பிரபஞ்சித்திக் கொண்டு
ஸ்ரீ ஆளவந்தார் அவனை நமஸ்கரிக்கிறார் என்பதே ஸ்ரீ தேசிகருடைய அவதாரிகை –
ஹே பிரபு உன்னுடைய சங்கல்பம் இல்லா விடில் விசித்ரமாகப் தென்படும் இப்பிரபஞ்சம் முழுவதும் உண்டாகிறதற்காவது –
ஸத்தை யுடன் கூடி இருக்கிற தற்காவது ஸமர்த்தம் அன்று
அப்படி இருக்கவே அசமர்த்தம் என்றால் ப்ரவ்ருத்தி அதுக்கு எவ்வாறு சம்பவிக்கும்
ஆக இப்படி ஸர்வ ஜந்துக்களும் ஸ்வாபா விக ஸூஹ்ருத்தாகிய உம் இடத்தில் ஆஸ்ரிதவாத்சல்யம் இருப்பது ஆச்சர்யம் அன்று
இவற்றை உண்டாக்கி -ஸத்தயைக் கொடுத்து
போக மோக்ஷம் அடைய கரண களே பரங்க ளையும் கொடுத்த ஸர்வ உபகாரகனுக்கு இல்லாமல்
வேறே யாருக்கு ஆஸ்ரித வாத்சல்யம் சம்பவிக்க முடியும்
நிகில காரணன்–
காரணத்வம் –நியந்த்ருத்வம் -ஸூஹ் ருத்வம் -ஸ்வாமித்வம் -வாத்சல்யம் —
ஐந்து கல்யாண குணங்கள் நிறைந்தவன் அவன் ஒருவனே
அவேஷணம் -ஸங்கல்பம் -அநுஹ்ரஹத்தை முன்னிட்டே செய்து அருளுகிறான்
ஞானம் பலம் இத்யாதி ஸ்வாபாவகிம் போல் ரக்ஷணமும் ஸ்வாபாவகிம் தான்
தன் இடம் த்வேஷம் பாரட்டி உள்ளார் இடம் கூட அவன் வாத்சல்யம் காட்டி அருளுகிறான்
கட வல்லி -ஜூகுப் ஸை இல்லாமல் அந்தர்யாமி -வாத்சல்யம் அடியாகவே
மழலைச் சொல்லை உகக்கும் தாய் போல் நம் பழிச் சொற்களையும் ஏற்கிறான்
———
ஈஸித்ருத்வம் -காரணத்வம் -ஸ்வாமித்வம் -இருக்கும் தன்மை விளக்கம் –11-ஸ்லோகத்தால்
ஹே நாராயணா வேதங்களை பிரமாணமாக ஒத்துக்க கொள்பவர்களின் எவர் தான்
ஸ்வ பாவ ஸித்தமாயும் அளவற்ற மகிமையும் உள்ள ஈஸீத்ருத்வத்தை உம்மிடத்தில் ஸஹிக்க மாட்டார்
ப்ரஹ்மாதிகள் முக்தர்கள் அனைவரதும் உமது மஹிமையில் ஒரு திவிலை ஸ்தானீயர்கள் ஆகிறார்கள் அன்றோ என்று அர்த்தம் –
அநந்ய அதீனம் அபரிமிதம் இவனது ஈஸித் ருத்வம்
மற்றவர்களது -ப்ரஹ்மாதிகளுக்கு
கர்மாதீனம் துக்க மிஸ்ரம் அநித்யம்
முக்தர்களுக்கு பரம அதீனம் -பரிச்சின்னம்
இவனே ஸர்வ அந்தராத்மா -ப்ரவர்த்தகன் -ஸர்வ ஸாக்ஷி -அனைத்துக்கும் ஆஸ்ரயம்
———-
ஸ்ரீ பிள்ளை அந்தாதி
உன் அருள் அன்றி எனக்கு ஒரு நல் துணை இன்மையால்
என் இரு வல்வினை நீயே விலக்கி ஹிதம் கருதி
மன்னிய நல் திரு மந்த்ரம் ஓதும் பொருள் நிலையே
பொன் அருளால் அருளாய் புகழ் தூப்பூல் குல விளக்கே –15-
விளக்காகி வேங்கட வெற்பினில் வாழும் விரை மலராள்
வளக் காதல் கொண்டு மறை மார்பன் திருத்தும் உனது அடியார்
துளக் காதல் இல்லவர் தங்கள் திறத்திலும் தூய்மை எண்ணிக்
களக்காதல் செய்யும் நிலை கடியாய் தூப்புல் காவலனே –16-
——–
வெள்ளப் பரிமுகர் தேசிகராய் விரகால் அடியோம்
உள்ளத்து எழுதியது ஓலையில் அட்டனம் யாம் இதற்கு என்
கொள்ளத் துணியின் இங்கு ஏது ஓன்று இகழினும் கூர் மதியீர்
எள்ளத்தனை யுகவாது இகழாது எம் எழில் மதியே —-அதிகார ஸங்க்ரகம் –56-
——————
பாத்ர பதமாஸ கத விஷ்ணு விமலர் ஷே
வேங்கட மஹீத் ரபதி தீர்த்த திந பூதே
ப்ராதுர பவஜ் ஜகதி தைத்ய ரிபு கண்டா ஹந்த
கவி தார்க்கிக ம்ருகேந்த்ர குரு மூர்த்யா –ஸப்ததி ரத்ன மாலிகா ஸ்லோகம்
திருமணி ஆழ்வாரே ஸ்வாமியாக திரு அவதாரம் என்கிறதே –
——————
வித்ராஸி நீ விபூதவைரி வரூதி நீ நாம்
பத்மாஸநேந பரிசார விதவ் ப்ரயுக்தா
உத் ப்ரேஷ்யதே புத ஜனைர் உப பத்தி பூம் நா
கண்டா ஹரே ஸமஜ நிஷ்ட யதாத்ம நேதி -சங்கல்ப ஸூர்யோதய ஸ்லோகம்
ப்ரஹ்மதேவன் ஆராதனத்துக்கு உபயோகித்த மணி –
இதன் நாதத்தாலே அசுரர்கள் பயந்து ஓடச் செய்ததே –
அவதாரமே நம் ஸ்வாமி -என்றவாறு
திரு ஆராதனத்துக்கு திருமலையில் கை மணி இதனாலே தான் சேவிக்க மாட்டார்கள் –
ஸ்வஸ்தி சுக்ல வர்ஷம் கதகலி 4370-கச்சி நகர் அனந்தாச்சார்யார் தோதார அம்மையாருக்கு
வரத வேங்கட பிரசாதமாக ஸ்வப்னத்தில் அருளிய படி
புரட்டாசி -11- ஞாயிற்றுக் கிழமை 11-28-சுக்ல ஏகாதசி -6 நாழி -19 வினாடிக்கு
திருவோணம் நக்ஷத்ரம் கன்யா லக்கினத்தில் திரு அவதாரம் -1268-
பேர் அருளாளனும் திருச்சின்னம் அருளினான்
இவர் முப்பது தடவை ஸ்ரீ பாஷ்யம் சாதித்து அருளியதை
த்ரிம் ஸத்வாரம் ஸ்ராவித சாரீரக பாஷ்யா -ஸ்லோகம் சங்கல்ப ஸூ ர்யோதயத்தில் அருளிச் செய்துள்ளார்
—————–
தேசம் எல்லாம் உகந்திடவே பெரும்பூதூரில் சித்திரையில் ஆதிரை நாள் தோன்றிக்
காசினி மேல் வாதியாரை வென்று அரங்கர் கதியாக வாழ்ந்து அருளும் எதிராசா முன்
பூ சுரர் கோன் திருவரங்கத்து அமுதனார் உன் பொன்னடி மேல் அந்தாதியாகப் போற்றிப்
பேசிய நற் கலித்துறை நூற்று எட்டுப் பாட்டும் பிழை அறவே எனக்கு அருள் செய் பேணி நீயே
பூ மகள் கோன் தென்னரங்கர் பூம் கழலுக்குப் பாதுகமாய்த்
தாம் மகிழும் செல்வர் சடகோபர் -தே மலர்த் தாட்க்கு
உய்ந்து இனிய பாதுகமாம் எந்தை இராமானுஜனை
வாய்ந்து எனது நெஞ்சமே வாழ் –
—————–
ஸ்ரீ கருட ஸ்தோத்ரம்
கருடாய நமஸ் துப்யம் நமஸ் தே பக்ஷிணாம் பதே
ந போக மாதி ராஜாய ஸூ பர்ணாய நமோ நம
விநதா தந்த ரூபாயா கஸ்யபஸ்ய ஸூதாய ச
அஹீ நாம் வைரிணே துப்யம் விஷ்ணு பத்ராய தே நம
ரக்த ரூபாய தே பஷின் ஸ்வேத மஸ்தக பூஜித
அம்ருதா ஹரணே ஹ்ருஷ்ட தஸ்மை தேவாய தே நம
அம்ருத கலச யுக்தம் காந்தி சம்பூர்ண காத்ரம்
சகல விபூத வந்த்யம் வேத ஸாஸ்த்ரர் அசிந்த்யம்
விவித விமல பஷைர் தூய மாநாண்ட கோளம்
ஸகல விஷவி நாஸம் சிந்த யேத் பக்ஷி ராஜம் –
——–
கருணாகரன் -தயா சதகம்
பயக்ருத் பய நாசன -அபீத ஸ்தவம்
வீர -மஹா வீர வைபவம்
ஸர்வ வாக் ஈஸ்வரேஸ்வர -ஹயக்ரீவ ஸ்தோத்ரம்
நைகமாய -தசாவதார ஸ்தோத்ரம்
யோக விதாம் நேத -பகவத் த்யான சோபனம்
ஸ்ரீ மான் -ஸ்ரீ ஸ்துதி
நரஸிம்ஹ வபு—காமாஸிகாஷ்டகம்
அச்யுத -அச்யுத சதகம்
விக்ரம -கருட தண்டகம் –கருட பஞ்சா சத்
வாமன பிராம்சு -தேஹ ளீச ஸ்துதி
வரத -வரதராஜ பஞ்சா ஸத்
ஸவ்ரி -கோபால விம்சதி
—————
வஞ்சப் பர சமயம் மாற்ற வந்தோன் வாழியே
மன்னு புகழ் பூதூரோன் மனம் உகப்போன் வாழியே
கஞ்சத் திரு மங்கை உகக்க வந்தோன் வாழியே
கலியன் உரை குடி கொண்ட கருத்துடையோன் வாழியே
செஞ்சொல் தமிழ் மறைகள் தெளிந்து உரைப்பான் வாழியே
திருமலை மால் திரு மணியாய்ச் சிறக்க வந்தோன் வாழியே
தஞ்சப் பர கதியைத் தந்து அருள்வோன் வாழியே
தண் தமிழ் தூப்புல் திரு வேங்கடவன் தாள் வாழியே –
————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply