Archive for November, 2016

ஸ்ரீ புருஷ ஸூக்தம் —

November 19, 2016

ஸ்ரீ புருஷ ஸூ க்தம் –விஷ்ணு புராணம் –பகவத் கீதை -மனு தர்ம சாஸ்திரம்
ப்ரஹ்ம யஜ்ஜே த்விஜ ஸூ க்தம் புருஷம் சிந்தையன் ஹரிம்-
ச சர்வான் ஜபதே வேதான் சாங்க உபாங்கான் த்விஜோத்தம —
ஹரியை நினைத்து புருஷ ஸூக்தம் படிக்கும் ப்ராஹ்மணன் எல்லா வேதங்களையும் ஜபித்தவன் ஆகிறான் –

அர்ச்சிதம் ஸ்யாத் ஜெகதிதம் –சகல லோகங்களையும் ஆராதனம் செய்யப் பட்டதாகும்

ஸோஸ் நுதே சர்வான் காமான் ஸஹ ப்ராஹ்மண விபச்சிதா –பரமானந்தம் அடைகிறான் –

ஸ்ரீ புருஷ ஸூக்தம் –
ஸூ உக்தம் -நன்றாக பேசப்பட்டது –
புருஷ -பொது சொல் -புருஷனே பேசினது என்றும் -புருஷனைப் பற்றியது என்றும்
பெருமாள் திரு மொழி -பெருமாள் அருளிச் செய்த பெருமாளை பற்றி அருளிச் செய்யப் பற்ற –
நாராயண பெயர் சொல் -ஸூ க்தம் –

18 மந்த்ரங்கள் -18 அர்த்தங்கள்

1–பூர்ணாத்-புருஷ -கல்யாண குணங்களால் பூர்ணன் –
ஸ்வரூப ரூப விபவ குணங்கள் -விஸ்வம் -கல்யாண குணங்களால் பூர்ணன்
உயர்வற உயர் நலம் உடையவன் -சுந்தர பூர்ணன் நம்பி /நங்காய் –

2-ச யது பூர்வஸ்மாத்- பூர்வத்தில் இருந்த படியால் –
சர்வ காரணன் —
யதோ வா சர்வம் -இத்யாதி –அத்புத காரணாய -நிஷ் காராணாய அகில காராணாயா

3— சர்வ பாபங்கள் போக்குபவன் –
சர்வ ஸ்மாத் பாப்யோ ஒளஷதி –
துயர் அறு சுடர் அடி –
சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி
அகில ஹேய ப்ரத்ய நீகம் -வி ஜுவ்ரா -பிரமோத-தம்பி அரசு ஏற்றுக் கொள்வானோ -கவலை போனதே –

4- பூ புரம் பட்டணம் ஆவிசயது –
நுழைந்து சயனித்து –
நெஞ்சமே நீள் நகராக இருந்த தஞ்சனே –
சர்வாந்தர்யாமி

5- புரு சனாதி கொடுக்கிறவன் –
வரம் ததாதி வரத-
அலம் புரிந்த நெடும் தடக்கை –
வாங்கிக் கொள்பவன் உதாரன் தானே கொடுப்பவன் –
சகல பல ப்ரத்வம் –

புருஷன் சங்கல்பித்தான் –பொதுவாக சொல்லி மேலே –
நாராயணன் –
பிரசித்த அர்த்தம் -நாராயணனுக்கு –
ஏகோ கைவ நாராயண ஆஸீத் –
ரூடி -யவ்கிகம்
சந்தி எழுத்தும் எழுத்தும் சேர்ந்தால் -ஸமாஸம் சொல்லும் சொல்லும் சேர்ந்து -பாணினி ஸூத்ரம்
சர்வ வேதாந்த பிரத்யயம் நியாயம் -சாமான விசேஷ நியாயம் -பொதுவான சொற்கள் நாராயணன் இடம் பர்யவசிக்குமே –
ஜாயமான புருஷன் –மது சூதன் கடாக்ஷம் -புருஷ சப்தம் ஜீவாத்மாவையும் காட்டுமே -இதில் –
பிரகிருதி புருஷன் இரண்டும் அநாதி -இதிலும் புருஷ ஜீவாத்மா –

————–

புருஷ ஸூக்தம்

ஓம் தச்ச²ம்॒ யோராவ்ரு॑ணீமஹே । கா॒³தும் ய॒ஜ்ஞாய॑ । கா॒³தும் ய॒ஜ்ஞப॑தயே । தை³வீ᳚ ஸ்வ॒ஸ்திர॑ஸ்து ந: । ஸ்வ॒ஸ்திர்மானு॑ஷேப்⁴ய: । ஊ॒ர்த்⁴வம் ஜி॑கா³து பே⁴ஷ॒ஜம் । ஶம் நோ॑ அஸ்து த்³வி॒பதே᳚³ । ஶம் சது॑ஷ்பதே³ । ஓம் ஶான்தி:॒ ஶான்தி:॒ ஶான்தி:॑ ॥

ஸ॒ஹஸ்ர॑ஶீர்​ஷா॒ புரு॑ஷ: । ஸ॒ஹ॒ஸ்ரா॒க்ஷ: ஸ॒ஹஸ்ர॑பாத் । ஸ பூ⁴மிம்॑ வி॒ஶ்வதோ॑ வ்ரு॒த்வா । அத்ய॑திஷ்ட²த்³த³ஶாங்கு॒³லம் ॥

புரு॑ஷ ஏ॒வேத³க்³ம் ஸர்வம்᳚ । யத்³பூ॒⁴தம் யச்ச॒ ப⁴வ்யம்᳚ । உ॒தாம்ரு॑த॒த்வ ஸ்யேஶா॑ன: । யத³ன்னே॑னாதி॒ரோஹ॑தி ॥

ஏ॒தாவா॑னஸ்ய மஹி॒மா । அதோ॒ ஜ்யாயாக்॑³ஶ்ச॒ பூரு॑ஷ: । பாதோ᳚³ஸ்ய॒ விஶ்வா॑ பூ॒⁴தானி॑ । த்ரி॒பாத॑³ஸ்யா॒ம்ருதம்॑ தி॒³வி ॥

த்ரி॒பாதூ॒³ர்த்⁴வ உதை॒³த்புரு॑ஷ: । பாதோ᳚³ஸ்யே॒ஹாப॑⁴வா॒த்புன:॑ । ததோ॒ விஷ்வ॒ங்​வ்ய॑க்ராமத் । ஸா॒ஶ॒னா॒ன॒ஶ॒னே அ॒பி⁴ ॥

தஸ்மா᳚த்³வி॒ராட॑³ஜாயத । வி॒ராஜோ॒ அதி॒⁴ பூரு॑ஷ: । ஸ ஜா॒தோ அத்ய॑ரிச்யத । ப॒ஶ்சாத்³பூ⁴மி॒மதோ॑² பு॒ர: ॥

யத்புரு॑ஷேண ஹ॒விஷா᳚ । தே॒³வா ய॒ஜ்ஞமத॑ன்வத । வ॒ஸ॒ன்தோ அ॑ஸ்யாஸீ॒தா³ஜ்யம்᳚ । க்³ரீ॒ஷ்ம இ॒த்⁴மஶ்ஶ॒ரத்⁴த॒⁴வி: ॥

ஸ॒ப்தாஸ்யா॑ஸன்பரி॒த⁴ய:॑ । த்ரி: ஸ॒ப்த ஸ॒மித:॑⁴ க்ரு॒தா: । தே॒³வா யத்³ய॒ஜ்ஞம் த॑ன்வா॒னா: । அப॑³த்⁴ன॒ன்-புரு॑ஷம் ப॒ஶும் ॥

தம் ய॒ஜ்ஞம் ப॒³ர்॒ஹிஷி॒ ப்ரௌக்ஷன்॑ । புரு॑ஷம் ஜா॒தம॑க்³ர॒த: । தேன॑ தே॒³வா அய॑ஜன்த । ஸா॒த்⁴யா ருஷ॑யஶ்ச॒ யே ॥

தஸ்மா᳚த்³ய॒ஜ்ஞாத்²ஸ॑ர்வ॒ஹுத:॑ । ஸம்ப்⁴ரு॑தம் ப்ருஷதா॒³ஜ்யம் । ப॒ஶூக்³க்³-ஸ்தாக்³க்³-ஶ்ச॑க்ரே வாய॒வ்யான்॑ । ஆ॒ர॒ண்யான்-க்³ரா॒ம்யாஶ்ச॒ யே ॥

தஸ்மா᳚த்³ய॒ஜ்ஞாத்²ஸ॑ர்வ॒ஹுத:॑ । ருச:॒ ஸாமா॑னி ஜஜ்ஞிரே । ச²ன்தா³க்³ம்॑ஸி ஜஜ்ஞிரே॒ தஸ்மா᳚த் । யஜு॒ஸ்தஸ்மா॑தஜ³ாயத ॥

தஸ்மா॒த³ஶ்வா॑ அஜாயன்த । யே கே சோ॑ப॒⁴யாத॑³த: । கா³வோ॑ ஹ ஜஜ்ஞிரே॒ தஸ்மா᳚த் । தஸ்மா᳚ஜ்ஜா॒தா அ॑ஜா॒வய:॑ ॥

யத்புரு॑ஷம்॒ வ்ய॑த³து⁴: । க॒தி॒தா² வ்ய॑கல்பயன்ன் । முக²ம்॒ கிம॑ஸ்ய॒ கௌ பா॒³ஹூ । காவூ॒ரூ பாதா॑³வுச்யேதே ॥

ப்³ரா॒ஹ்ம॒ணோ᳚ஸ்ய॒ முக॑²மாஸீத் । பா॒³ஹூ ரா॑ஜ॒ன்ய:॑ க்ரு॒த: । ஊ॒ரூ தத॑³ஸ்ய॒ யத்³வைஶ்ய:॑ । ப॒த்³ப்⁴யாக்³ம் ஶூ॒த்³ரோ அ॑ஜாயத: ॥

ச॒ன்த்³ரமா॒ மன॑ஸோ ஜா॒த: । சக்ஷோ:॒ ஸூர்யோ॑ அஜாயத । முகா॒²தி³ன்த்³ர॑ஶ்சா॒க்³னிஶ்ச॑ । ப்ரா॒ணாத்³வா॒யுர॑ஜாயத ॥

நாப்⁴யா॑ ஆஸீத॒³ன்தரி॑க்ஷம் । ஶீ॒ர்​ஷ்ணோ த்³யௌ: ஸம॑வர்தத । ப॒த்³ப்⁴யாம் பூ⁴மி॒ர்தி³ஶ:॒ ஶ்ரோத்ரா᳚த் । ததா॑² லோ॒காக்³ம் அ॑கல்பயன்ன் ॥

வேதா॒³ஹமே॒தம் புரு॑ஷம் ம॒ஹான்தம்᳚ । ஆ॒தி॒³த்யவ॑ர்ணம்॒ தம॑ஸ॒ஸ்து பா॒ரே । ஸர்வா॑ணி ரூ॒பாணி॑ வி॒சித்ய॒ தீ⁴ர:॑ । நாமா॑னி க்ரு॒த்வாபி॒⁴வத॒³ன்॒, யதா³ஸ்தே᳚ ॥

தா॒⁴தா பு॒ரஸ்தா॒த்³யமு॑தா³ஜ॒ஹார॑ । ஶ॒க்ர: ப்ரவி॒த்³வா-ன்ப்ர॒தி³ஶ॒ஶ்சத॑ஸ்ர: । தமே॒வம் வி॒த்³வான॒ம்ருத॑ இ॒ஹ ப॑⁴வதி । நான்ய: பன்தா॒² அய॑னாய வித்³யதே ॥

ய॒ஜ்ஞேன॑ ய॒ஜ்ஞம॑யஜன்த தே॒³வா: । தானி॒ த⁴ர்மா॑ணி ப்ரத॒²மான்யா॑ஸன்ன் । தே ஹ॒ நாகம்॑ மஹி॒மான:॑ ஸசன்தே । யத்ர॒ பூர்வே॑ ஸா॒த்⁴யா: ஸன்தி॑ தே॒³வா: ॥

அ॒த்³ப்⁴ய: ஸம்பூ॑⁴த: ப்ருதி॒²வ்யை ரஸா᳚ச்ச । வி॒ஶ்வக॑ர்மண:॒ ஸம॑வர்த॒தாதி॑⁴ । தஸ்ய॒ த்வஷ்டா॑ வி॒த³த॑⁴த்³ரூ॒பமே॑தி । தத்புரு॑ஷஸ்ய॒ விஶ்வ॒மாஜா॑ன॒மக்³ரே᳚ ॥

வேதா॒³ஹமே॒தம் புரு॑ஷம் ம॒ஹான்தம்᳚ । ஆ॒தி॒³த்யவ॑ர்ணம்॒ தம॑ஸ:॒ பர॑ஸ்தாத் । தமே॒வம் வி॒த்³வான॒ம்ருத॑ இ॒ஹ ப॑⁴வதி । நான்ய: பன்தா॑² வித்³ய॒தேய॑னாய ॥

ப்ர॒ஜாப॑திஶ்சரதி॒ க³ர்பே॑⁴ அ॒ன்த: । அ॒ஜாய॑மானோ ப³ஹு॒தா⁴ விஜா॑யதே । தஸ்ய॒ தீ⁴ரா:॒ பரி॑ஜானந்தி॒ யோனிம்᳚ । மரீ॑சீனாம் ப॒த³மி॑ச்ச²ன்தி வே॒த⁴ஸ:॑ ॥

யோ தே॒³வேப்⁴ய॒ ஆத॑பதி । யோ தே॒³வானாம்᳚ பு॒ரோஹி॑த: । பூர்வோ॒ யோ தே॒³வேப்⁴யோ॑ ஜா॒த: । நமோ॑ ரு॒சாய॒ ப்³ராஹ்ம॑யே ॥

ருசம்॑ ப்³ரா॒ஹ்மம் ஜ॒னய॑ன்த: । தே॒³வா அக்³ரே॒ தத॑³ப்³ருவன்ன் । யஸ்த்வை॒வம் ப்³ரா᳚ஹ்ம॒ணோ வி॒த்³யாத் । தஸ்ய॑ தே॒³வா அஸ॒ன் வஶே᳚ ॥

ஹ்ரீஶ்ச॑ தே ல॒க்ஷ்மீஶ்ச॒ பத்ன்யௌ᳚ । அ॒ஹோ॒ரா॒த்ரே பா॒ர்​ஶ்வே । நக்ஷ॑த்ராணி ரூ॒பம் । அ॒ஶ்வினௌ॒ வ்யாத்தம்᳚ । இ॒ஷ்டம் ம॑னிஷாண । அ॒மும் ம॑னிஷாண । ஸர்வம்॑ மனிஷாண ॥

தச்ச²ம்॒ யோராவ்ரு॑ணீமஹே । கா॒³தும் ய॒ஜ்ஞாய॑ । கா॒³தும் ய॒ஜ்ஞப॑தயே । தை³வீ᳚ ஸ்வ॒ஸ்திர॑ஸ்து ந: । ஸ்வ॒ஸ்திர்மானு॑ஷேப்⁴ய: । ஊ॒ர்த்⁴வம் ஜி॑கா³து பே⁴ஷ॒ஜம் । ஶம் நோ॑ அஸ்து த்³வி॒பதே᳚³ । ஶம் சது॑ஷ்பதே³ । ஓம் ஶான்தி:॒ ஶான்தி:॒ ஶான்தி:॑ ॥

———

ஸ॒ஹஸ்ர॑ஶீர்​ஷா॒ புரு॑ஷ: । ஸ॒ஹ॒ஸ்ரா॒க்ஷ: ஸ॒ஹஸ்ர॑பாத் ।
ஸ பூ⁴மிம்॑ வி॒ஶ்வதோ॑ வ்ரு॒த்வா । அத்ய॑திஷ்ட²த்³த³ஶாங்கு॒³லம் ॥

இறைவன் ஆயிரக்கணக்கான தலைகள் உடையவர். ஆயிரக் கணக்கான கண்களை உடையவர். ஆயிரக் கணக்கான பாதங்களை உடையவர். அவர் பூமியை எங்கும் வியாபித்து, பத்து அங்குலம் ஓங்கி நிற்கிறார். (தியானவேளையில் இதயவெளியில்).

சகஸ்ர சீர்ஷா புருஷ -சர்வ வியாபகத்வம் அந்தர்யாமித்வம் -ஜீவன் இடம் சேராதே
1- சகஸ்ர சீர்ஷா —
சகஸ்ர அநந்தம்-சீர்ஷா -தலை உத்தம அங்கம் -பிரதானம் –
லோக -பிரதான புருஷ ஈஸ்வரன் -பிரகிருதி ஆத்மா அனைத்துக்கும் நியாமகன்
சர்வஞ்ஞத்வம்-சர்வ சக்தித்வம் -வ்யாபகத்வம் -சகஸ்ர பாத் -ஞானம் பலம் -இத்யாதியிலும்
முதலில் ஞானம் சொன்னால் போலே
வேத விளக்கு -நந்தா விளக்கு –
பரா அஸ்ய சக்தி விவித-
ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் –
ஞான இந்திரியங்கள் எல்லாம் முகத்திலே உண்டே

சகஸ்ர சீர்ஷா ஞான இந்திரியங்கள் சொல்லி

சகஸ்ர பாத் -கரமேந்திரியங்கள் உப லக்ஷணம் சொல்லி

அத்தை விளக்க சகஸ்ராஷா -அதில் இது சர்வ இந்த்ரியானாம் நயனம் பிரதானம் –

ஆயிரம் -சேதன அசேதனங்கள்
சர்வம் கல்விதம் ப்ரஹ்மம் –
பரன் திறன் அன்றி பல்லுலகீர் தெய்வம் மாற்று இல்லை
அங்கயன்யா தேவதா -ஜகதாகாரத்வம் -விராட் ஸ்வரூபம் த்யானம் –
நீராய் நிலனாய் –இத்யாதி

ரிஷிகேசன் -நம் இந்திரியங்களை வசப்படுத்த –
என் நெஞ்சுனாரும் அங்கே ஒழிந்தார் —
கண்ணும் மனமும் ஓடி திருவடிகளில் அடைய
பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரினாம் –
கண்டவர் தம் மனம் வழங்கும் –
வாய் அவனை அல்லாது வாழ்த்தாது -தோள்கள் ஆயிரத்தாய்

புருஷ -ச ஏவ வாஸூ தேவ -புருஷோத்தமன் -மற்றவர்கள் ஸ்த்ரீ பிராயர்கள் –
ச பூமிம்-பரந்த பூமி அம் கண் ஞாலம் -விசுவதோ-

தசாங்குலம்-தாண்டி -சத்ய லோகம் தாண்டி -சப்த ஆவரணம் –
ஒவ் ஒன்றும் அத்தை விட 10 மடங்கு பெரியது
பிருத்வி அப்பு அக்னி வாய் ஆகாசம் அஹங்காரம் மஹான் -முடிவில் பெரும் பாழ்-தச குணிதம் –

ஹிருதயம் 10 அங்குலம் -அத் யுதிஷ்டத்து -படுகாடு கிடக்கிறார் அங்குஷ்ட மாத்ர புருஷருக்குள் அனுபிரவேசம்
தசாங்குலம் -எண்ணில் அடங்காதவை என்றுமாம் –
விசிஷ்டாத்வைதம் போதித்த ஸ்லோகம் -பூமி உண்மை -பரத்வம் எப்படி உள்ளார் –
திவ்ய விக்ரஹம் குணவான் -விபூதிவான் –
தர்சனம் பேத ஏவ ச –
தேசத்தால் வரம்பு இல்ல்லாதவன் -என்றபடி –
தாமரை -படி என்றும் சொல்லும்படி இல்லாதவன் அன்றோ
சாகஸ்ய நியாயம் பசு நான்கு கால் பிராணி -வெள்ளாடு -பொதுச் சொல் சிறப்பு சொல்லில்
சர்வ நாம சப்தம் -பொது சொல் -புருஷ -நாராயணனை குறிக்கும் -காதி அனந்தாச்சார்யார் -50 இடங்களில் காட்டி -சங்க ஸ்ம்ருதி
யேஷவை புருஷ விஷ்ணு வ்யக்தன் அவ்யக்தன் ச நாதன் –பிரசித்தம் வை -சப்தம் -விஷ்ணு தானே

தாமரைக் கண் படைத்தவன் புருஷன் ராமாயணம் -கப்யாசம் —
கரியவாகி –மிளிர்ந்து -பிரசன்ன சீதா -குளிர்ந்த கடாக்ஷம் -ரஷ்யத்தின் அளவில்லாமல் பெரியவாகி நீண்ட –
ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கு 2 போதுமே -சகல அங்கங்களும் இங்கே கண்ணாக நாடு பிடிக்க -கருணா ரசவாக வீக்ஷணை

யஜுவ்ர் வேதம் -18 ஸ்லோகங்கள் – ரிக் 16 ஆபூர்வ அநுராகம்

———

புரு॑ஷ ஏ॒வேத³க்³ம் ஸர்வம்᳚ । யத்³பூ॒⁴தம் யச்ச॒ ப⁴வ்யம்᳚ ।
உ॒தாம்ரு॑த॒த்வ ஸ்யேஶா॑ன: । யத³ன்னே॑னாதி॒ரோஹ॑தி ॥

முன்பு எது இருந்ததோ, எது இனி வரப் போகிறதோ, இப்பொழுது எது காணப் படுகிறதோ எல்லாம் இறைவனே. மரணமிலா பெருநிலைக்குத் தலைவராக இருப்பவரும் அவரே. ஏனெனில் அவர் இந்த ஜடவுலகைக் கடந்தவர்,

2- புருஷ
காலங்களை கடந்து நிற்பவன் என்கிறார் இதில் -அந்த புருஷன் –அவன் மட்டும் சொல்லாமல் –
புருஷ ஏவேதகம் சர்வம் -மீண்டும் சொல்லி உறுதி படுத்தி -அதனால் புருஷ ஸூக்தம் –
யத் பூதம் -யச்ச பவ்யம் —எது எல்லாம் முக்காலத்தில் இருந்த எல்லாம் -இதம் சர்வம் -சுட்டு பொருள் —புருஷ ஏவ
சேதன அசேதனங்கள் எல்லாம் புருஷனே –தேச கால -வஸ்து -த்ரிவித -பரிச்சேத ரஹிதன் –

இஹ ந நாநா அஸ்தி —
யூத -அம்ருதாத் வஸ்ய –
பால் என்கோ –சாதி வைரம் என்கோ –வஸ்து பரிச்சேத்யன் -தேச காலம் பரிச்சேதயம் ஆத்மாவுக்கும் உண்டே
யூத அமிருதத்வம் மோக்ஷ சாம்ராஜ்யம் சொத்தாக உடையவன் -ஈசானா -யத் -அன்னேனே ரோஹதி-அனுபவத்தால் நாசம் அடையாமல் இருக்கிறது
தர்மம் அர்த்தம் காமங்கள் மோக்ஷம் குறைவில்லாமல் கொடுக்கும் புரு சமயோதி புருஷ

போகின்ற காலங்கள் போய காலம் –ஒருங்காக அளிப்பாய் -சேம நல் வீடும் –இத்யாதி –

சகல பல ப்ரதோகீ -தனி மா தெய்வம் -மோக்ஷம் தனி தட்டு மீளாத புருஷார்த்தம் பிரித்து சொன்னதே –
வஸ்திரம் -முதலை -கர்ப்பம் காக்க -ராஜ்ஜியம் கிடைக்க -கைங்கர்யம் கிட்ட -சரணாகதர்கள் பலம் பல உண்டே

நீலோ கடம் -மண் குடம் -அத்வைத வாதம் அல்லவே சர்வம் கல்விதம் ப்ரஹ்ம-
விசிஷ்ட அத்வைதம் –நீராய் நிலனாய் -சமா நாதி கரண்யம்-பின்ன பிவ்ருத்தி -நிமித்தானாம் சப்தானாம்

ஏகஸ்மின் அர்த்தே விருத்தி -சாமா நாதி கரண்யம் -நீலம் வாயும் வயிறுமான மண்ணால் குடம் -போன்றவை அந்வயிப்பது போலே –
ப்ரஹ்ம சரீரம் ஆகாரத்தால் எல்லாம் ஓன்று -யாவரும் ஒருவர் -சாதி ஓன்று ஒழிய வேறு இல்லை -பகவத் சேஷ பூதர்

ஒன்றே என்னில் ஒன்றேயாம் –பல என்று உரைக்கில் போலவே யாம் —
உளன் எனில் உளன் அவ்வுருவம் -இவ் வுருவுகள் -உளன்அலன் எனில் இவ்வருவம் அவ்வருவுகள் –
இதம் சர்வம் ப்ரஹ்மம் ஏவ –
எங்கும் வியாபித்து பரந்து இருக்கும் -அவன் நாம் கண் காண வந்து -அனந்தன் மடியிலே- அநந்த போகி-
அளவுக்கு உட்படும் தோற்றம் -நமக்காக சுருக்கிக் கொண்டு சேவை சாதிக்கிறான் –

அம்ருதம் -மோக்ஷத்தை -முகுந்தன் -மு மோக்ஷம் கு பூமி ததாதி -வைகுந்தம் கொடுக்கும் பிரான்
சரண்ய முகுந்தத்வம் உத்பலா விமான திருக் கண்ண புரம்
இதம் புருஷன் -உண்மை மித்யை இல்லை -காலமும் உண்மை -மோக்ஷம் தனி இடம் -அனைத்தும் சொல்லுமே இது-
மேலே உள்ள நான்கு ஸ்லோகங்களும் இது பீடிகை

————

ஏ॒தாவா॑னஸ்ய மஹி॒மா । அதோ॒ ஜ்யாயாக்॑³ஶ்ச॒ பூரு॑ஷ: ।
பாதோ᳚³ஸ்ய॒ விஶ்வா॑ பூ॒⁴தானி॑ । த்ரி॒பாத॑³ஸ்யா॒ம்ருதம்॑ தி॒³வி ॥

இங்கு காணப்படுவதெல்லாம் இறைவனின் மகிமையே. ஆனால் அந்த இறைவன் இவற்றைவிடச் சிறப்பு மிக்கவர். தோன்றியவை எல்ல்லம் அவருடைய கால்பங்கு மட்டுமே. அவரது முக்கால் பங்கு அழிவற்ற தான விண்ணில் இருக்கிறது

3- ஏதாவான் அஸ்ய மஹிமா-அத ஜாயா -புருஷ -மிகவும் உயர்ந்தவன் -புருஷோத்தமன் இவன் என்ற வாறு
பூர்வ சேஷம் அந்திம -13/14/15 அத்யாயம் -இருவர் புருஷர்கள் ஷர அக்ஷரா -பத்த முக்தர் ஆத்மாக்கள் -வேறு பட்ட புருஷோத்தமன் நான் –
அபுருஷன் -புருஷன் -உத்தர புருஷன்-உத்தம புருஷோத்தமன் -ஐந்து விரல்கள் –
பாதோஸ்ய–பாதம் கால் அர்த்தம் பாதி பகுதி விச்வா பூதாநி -லீலா விபூதி கால் மடங்கு -த்ரிபாத் -அம்ருதம் -தஸ்ய -த்வி பரமபதம் முக்கால் பங்கு
அபரிச்சேதயம் -நித்ய விபூதி என்பதால் -எங்கு உள்ளது என்று ப்ரஹ்மாதிகளும் காண முடியாதே
இவ்வளவு தானோ இவன் மஹிமை -ஏதாவான் அஸ்ய மஹிமா -சொல்லி முடிக்க முடியாதே -தனக்கும் தன் தன்மை அறிவரியான்-

———–

த்ரி॒பாதூ॒³ர்த்⁴வ உதை॒³த்புரு॑ஷ: । பாதோ᳚³ஸ்யே॒ஹாப॑⁴வா॒த்புன:॑ ।
ததோ॒ விஷ்வ॒ங்​வ்ய॑க்ராமத் । ஸா॒ஶ॒னா॒ன॒ஶ॒னே அ॒பி⁴ ॥

பரம்பொருளின் முக்கால் பங்கு மேலே விளங்கிகிறது, எஞ்சிய கால்பங்கு மீண்டும் இந்தப் பிரபஞ்சமாகத் தோன்றியது. பிறகு அவர் உயிர்கள் மற்றும் ஜடப்பொருள்களில் எல்லாம் ஊடுருவிப் பரந்தார்.

4- த்ரிபாத் –
நான்காக பிரித்து –வாஸூ தேவ -சங்கர்ஷ -அநிருத்தன ப்ரத்யும்னன் -வ்யூஹ நாராயணன் -புவனா பாத அபவாத் ஒரு கால் பிறந்தது
ரக்ஷணத்துக்கா அநிருத்தனன்- நால் புறமும் சூழ்ந்து -விபவ -அவதரித்து –அர்ச்சையாலும் வியாபித்து -பின்னானார் வணங்கும் சோதி
அதற்கும் மேலே -சாசனம் அநசனே அபி –தேவாதி ஸ்தாவர ஜங்கமம் -உண்ணும் தேவ மனுஷ்யர் -உண்ணாத கல் -அந்தர்யாமி
ஐந்தையும் ஒரே ஸ்லோகம் சொல்லும் -அஜாயமான மான பஹுதா விஜயா –

————–

தஸ்மா᳚த்³வி॒ராட॑³ஜாயத । வி॒ராஜோ॒ அதி॒⁴ பூரு॑ஷ: ।
ஸ ஜா॒தோ அத்ய॑ரிச்யத । ப॒ஶ்சாத்³பூ⁴மி॒மதோ॑² பு॒ர: ॥

அந்த ஆதி புருஷனிடமிருந்து பிரம்மாண்டம் உண்டாயிற்று. பிரம்மாண்டத்தைத் தொடர்ந்து பிரம்மா உண்டாகி எங்கும் வியாபித்தார். பிறகு அவர் பூமியைப் படைத்தார். அதன்பிறகு உயிர்களுக்கு உடலைப் படைத்தார்.

5-த்ரிபாத் விபூதி உதைத் புருஷா
ஸ்ருஷ்ட்டி பத்தி -நாராயணனே ஸ்ருஷ்டிக்கு கர்த்தா -இவனே உபாதான காரணம் -நான்காக பிரித்த -பெருமாள் -போலே வ்யூஹமும் நான்காக –
சதுராத்மா –ஸஹிஷ்ணு –தன் ஸ்வரூபம் தானே தியானம் நித்யோதித்த தசை –லீலா விபூதி உருவாக்க –
சங்கர்ஷணன் -சம்ஹாரம் முதலில் -படைத்து -பிரத்யும்னன் -காத்து அநிருத்தன் —
கர்மாதீனமாக -உடலை கொடுத்து -பிரகிருதி பிராக்ருதமாக மாறி சரீரம் கொடுத்து –

——-

யத்புரு॑ஷேண ஹ॒விஷா᳚ । தே॒³வா ய॒ஜ்ஞமத॑ன்வத ।
வ॒ஸ॒ன்தோ அ॑ஸ்யாஸீ॒தா³ஜ்யம்᳚ । க்³ரீ॒ஷ்ம இ॒த்⁴மஶ்ஶ॒ரத்⁴த॒⁴வி: ॥

இறைவனை ஆஹுதிப் பொருளாகக் கொண்டு தேவர்கள் செய்த வேள்விக்கு வசந்த காலம் நெய்யாகவும், கோடைக்காலம் விறகு ஆகவும், சரத்காலம் நைவேத்தியமாகவும் ஆயிற்று.

6- தஸ்மாத் விராட ஜாயாத –காலம் தூண்ட ஸ்ருஷ்ட்டி –
சமஷ்டி ஸ்ருஷ்ட்டி –அண்ட கடாகம் -நான்முகன் -பஸ்ஸாத் –
தேவனுக்கு பூஜை யாகம் -த்ரவ்யம் சேர்த்து ஹோமம் -நித்ய ஸூரிகள் ஸ்ருஷ்ட்டி யாகம் ஹோமம் -நான்முகனை பசுவாக வைத்து
த்ருஷ்ட்டி விதி தியானம் நடப்பது போலே நினைத்து செய்தல் –
வசந்தம் ருது -க்ரீஷ்மம் -சரத் -ருது -கால தத்வம் உணர்த்தி ஸ்ருஷ்ட்டி ஆரம்பம் அதற்காக யஜ்ஜம்
நெய் -சமித்து -புரோடாசம் -அவி-புருஷனை இங்கே நான்முகனை சொல்லி யத் புருஷேண –தேவர்கள் யஜ்ஜம்
நான் முகனே உருவாக்க இல்லையே அதனால் இதில் விஷ்வக் சேனர் பிரம்பு கொண்டு
யத்ர பூர்வே சாத்திய ஸந்த்யா தேவா -கடைசியிலும்
மாவால் ஆன பசு ஆடு கொண்டு -மானஸ த்யானம் -இங்கும் -முக்தருக்கும் ஸ்ருஷ்ட்டி சக்தி உண்டு
பல சரீரம் கொள்ளும் சக்தியும் உண்டு கைங்கர்யம் பண்ண –
ஜகத் வியாபாரம் வர்ஜம் -சக்தி இருந்தாலும் பிராப்தி இல்லையாம் செய்ய மாட்டார்
விஷ்வக் ஸ்ருஜ விஷ்வக் சேனரை கூப்பிடுகிறார்கள் –

————-

ஸ॒ப்தாஸ்யா॑ஸன்பரி॒த⁴ய:॑ । த்ரி: ஸ॒ப்த ஸ॒மித:॑⁴ க்ரு॒தா: ।
தே॒³வா யத்³ய॒ஜ்ஞம் த॑ன்வா॒னா: । அப॑³த்⁴ன॒ன்-புரு॑ஷம் ப॒ஶும் ॥

இந்த வேள்விக்கு பஞ்ச பூதங்கள், இரவு, பகல், ஆகிய ஏழும் பரிதிகள் ஆயின. இருபத்தொரு தத்துவங்கள் விறகுகள் ஆயின. தேவர்கள் யாகத்தை ஆரம்பித்து, பிரம்மாவை ஹோமப் பசுவாகக் கட்டினார்கள்,

7-சப்தாதி –புருஷன் பசும்
க்யூபா ஸ்தம்பத்தில் பசு கட்டி -நான்முகன் தான் இங்கே பசு -யூபம் பிரகிருதி -எல்லாம் த்ருஷ்ட்டி விதி-பிரகிருதி வேண்டுமே சரீரம்
நாமும் கட்டுப் படுகிறோம் நான்முகனும் கட்டுப் படுகிறான் -7 வஸ்துக்கள் பரிதி -த்ரி சப்த -21 சமித்துக்கள் -உபகரணங்கள் கொண்டு யஜ்ஜம் செய்து –
அக்னி உத்தர வேதி -பரிதி -அக்னிக்கு மூன்று பக்கம் உத்தர வேதி மூன்று கிழக்கு 1
இங்கு ஐம் பூதங்கள் அஹங்காரம் மஹான் -இந்த 7 பரிதிகள் –
21-சமித்துக்கள் -24 தத்வங்கள் பிரகிருதி மஹான் அஹங்காரம் இல்லாமல் 21-
இவை ஸ்ருஷ்ட்டி க்கு சாமக்கிரியைகள் -கீழே காலம் சொல்லி -1000 சதுர் யுகங்கள் கழித்து -பழைய வாசனை போக்க –

————-

தம் ய॒ஜ்ஞம் ப॒³ர்॒ஹிஷி॒ ப்ரௌக்ஷன்॑ । புரு॑ஷம் ஜா॒தம॑க்³ர॒த: ।
தேன॑ தே॒³வா அய॑ஜன்த । ஸா॒த்⁴யா ருஷ॑யஶ்ச॒ யே ॥

முதலில் உண்டான அந்த யஜ்ஞபுருஷனான பிரம்மாவின்மீது தண்ணீர் தெளித்தார்கள். அதன்பிறகு சாத்தியர்களும் தேவர்களும் ரிஷிகளும் இன்னும் யார்யார் உண்டோ அவர்களும் யாகத்தை நடத்தினார்கள்.

8-தம் –தேனை தேவா -ஸாத்யா ரிஷப -நித்யர்கள் -முக்தர்கள் பரிஹிஷி பிரக்ருதியில் நான்முகனை கட்டு
ப்ரோஷித்தார்கள்-ஆஹுதி கொடுக்கும் வஸ்துவை சம்ஸ்காரம் பண்ணி -பஞ்ச சம்ஸ்காரம் இதே போலே ஆத்மாவுக்கு –
புருஷன் ஜாதம் அக்ரத-முன்பே பிறந்த -ஆத்மவர்க்கத்துக்கு முன்னே என்றவாறு –

ஸாத்யா -நித்யர்கள் -ரிஷயா -முத்தர்கள் மந்த்ர த்ரஷ்டா ரிஷி திருமந்திரம் அறிந்து மோக்ஷம் வந்ததால் –

—————

தஸ்மா᳚த்³ய॒ஜ்ஞாத்²ஸ॑ர்வ॒ஹுத:॑ । ஸம்ப்⁴ரு॑தம் ப்ருஷதா॒³ஜ்யம் ।
ப॒ஶூக்³க்³-ஸ்தாக்³க்³-ஶ்ச॑க்ரே வாய॒வ்யான்॑ । ஆ॒ர॒ண்யான்-க்³ரா॒ம்யாஶ்ச॒ யே ॥

பிரபஞ்ச வேள்வியாகிய அந்த யாகத்திலிருந்து தயிர் கலந்த நெய் உண்டாயிற்று. பறவைகளையும், மான், புலி போன்ற காட்டு விலங்குகளையும், பசு போன்ற வீட்டு மிருகங்களையும் பிரம்மா படைத்தார்.

9-தஸ்மாத் –ஆரண்யன் -புருஷத் ராஜ்யம் தயிரும் நெய்யும் சேர்ந்து -தயிர் கலந்த நெய் யை கொண்டு
ஸ்ருஷ்டிக்கு வீர்யம் சக்தி -உருவாக்க –
பக்ஷிகள் மிருகங்கள் —ஊர்ஜா-சக்தி -தயிர் நெய் இரண்டுமே கவ்யம் -பஞ்ச கவ்யம் பால் மூத்திரம் சாணி சேர்த்து –
பஞ்ச தன்மாத்திரைகள் நடுவில் பூதங்கள் கடைசியில் அதே போலே தயிர் நெய் பாலில் இருந்து
10-16- தச வித ஸ்ருஷ்ட்டி சொல்லப்படுகிறது -3 ஸ்கந்தம் 8 அத்யாயம் பாகவதம் ஸ்ருஷ்ட்டியை விளக்கும் -விதுரர்க்கு மைத்ரேயர்

—–

தஸ்மா᳚த்³ய॒ஜ்ஞாத்²ஸ॑ர்வ॒ஹுத:॑ । ருச:॒ ஸாமா॑னி ஜஜ்ஞிரே ।
ச²ன்தா³க்³ம்॑ஸி ஜஜ்ஞிரே॒ தஸ்மா᳚த் । யஜு॒ஸ்தஸ்மா॑தஜ³ாயத ॥

பிரபஞ்ச வேள்வியாகிய அந்த யாகத்திலிருந்து ரிக் வேத மந்திரங்களும், சாம வேத மந்திரங்களும், காயத்ரீ முதலான சந்தஸ்களும் உண்டாயின. அதிலிருந்தே யஜுர்வேதம் உண்டாயிற்று.

10-தஸ்மாத் தச வித ஸ்ருஷ்ட்டி -வேதங்கள் இதிகாசங்கள் புராணங்கள் சந்தஸுக்கள் -தஸ்மாத் -சர்வஹூதா -உருவாயின

ரிக் சாமம் -நித்யம் தான் -வாக்கிலே வந்தது இல்லையே -சரீரம் கொண்டதை ஆத்மாவுக்கு பிறப்பு என்கிறோம்
இவர் மூலம் வேதங்கள் பிரகாசப் படுத்தப் படுகின்றன
திரையீ மயன் -வேதங்களை சரீரமாக வேதம் கொடுத்தவன் -வேதம் நான்காய் –பகுதிகள் மூன்று -ருக்கு மந்த்ரங்கள் சாமம் யஜுஸ்
ப்ரஹ்ம வித் ஆப்னோதி பரம் -பாதம் முடிந்து -அர்த்தமும் ப்ரஹ்மம் அறிந்தவன் ப்ரஹ்மத்தை அடைகிறான் –
சத்யம் ஞானம் அநந்தம் -அடையாளம் -யவன் ஒருத்தன் -அறிந்து கொள்கிறானோ -பாதம் முடியாமல் -அவன் கல்யாண குணங்களை அறிந்து
ருக்கு முடிந்தது -ரஜோ ஸ் முடியாதவை -இசை கூட்டி சாமம் -மூன்றின் கலவை அதர்வணம் -ரிக் வேதத்தில் நான்கும் இருக்கலாம் –
சந்தசுக்களும் தோன்றின -சப்த சந்தசு -புரவி ஏழும் ஒரு கால் உடைய தேர் ஆதித்யன் –
அனுஷ்டுப் சந்தஸ் 8 எழுத்து ஒரு பாதம் -கால் பகுதி என்றவாறு –

———–

தஸ்மா॒த³ஶ்வா॑ அஜாயன்த । யே கே சோ॑ப॒⁴யாத॑³த: ।
கா³வோ॑ ஹ ஜஜ்ஞிரே॒ தஸ்மா᳚த் । தஸ்மா᳚ஜ்ஜா॒தா அ॑ஜா॒வய:॑ ॥

அதிலிருந்தே குதிரைகளும், இருவரிசைப் பற்கள் உடைய மிருகங்களும், பசுக்களும், வெள்ளாடுகளும், செம்மறியாடுகளும் தோன்றின.

11-தஸ்மாத் –திர்யக்குகள் -அஸ்வர்/ஒரு குழம்பு பற்கள் எருமை மாடு -கழுதை போன்றன -பசு மாடுகள் -அஜம் ஆடு –
பசு தனியாக -விஷ்ணுவுக்கு பிரதானம் என்பதால் தனியாக சொல்லப் பட்டன -விஸ்வரூபம் சேவை –

———–

யத்புரு॑ஷம்॒ வ்ய॑த³து⁴: । க॒தி॒தா² வ்ய॑கல்பயன்ன் ।
முக²ம்॒ கிம॑ஸ்ய॒ கௌ பா॒³ஹூ । காவூ॒ரூ பாதா॑³வுச்யேதே ॥

ப்³ரா॒ஹ்ம॒ணோ᳚ஸ்ய॒ முக॑²மாஸீத் । பா॒³ஹூ ரா॑ஜ॒ன்ய:॑ க்ரு॒த: ।
ஊ॒ரூ தத॑³ஸ்ய॒ யத்³வைஶ்ய:॑ । ப॒த்³ப்⁴யாக்³ம் ஶூ॒த்³ரோ அ॑ஜாயத: ॥

ப்ரம்மாவை தேவர்கள் பலியிட்டபோது அவரை எந்தெந்த வடிவாக ஆக்கினார்கள்? அவரது முகம் எதுவாக ஆயிற்று ? கைகளாக எது சொல்லப்படுகிறது ? தொடைகளாகவும் பாதங்களாகவும் எது கூறப் படுகிறது ?

 

அவரது முகம் ப்ராமணனாக ஆயிற்று. கைகள் க்ஷத்ரியனாக ஆயின. தொடைகள் வைசியனாக ஆயின. அவரது பாதங்களிலிருந்து சூத்திரன் தோன்றினான்.

 

12-கேள்வி 13-பதில் -படைக்கப் பட்டவர்களில் யஜ்ஜம் பண்ணுபவர்களை படைப்பார்களோ -எத்தனை விதமாக -கதிதா விகல்பியன்

முகம் எது -எது தோள்கள் –எது தொடை கை திருத் தோள்கள் –
ப்ராஹ்மணர் அஸ்ய முகம் ஆஸீத் -சாதுர்வர்ணயம் -இத்தை மூலமாக கொண்டே கீதையில் -க்ஷத்ரியர் -தோள்களில் –
பாஹு ராஜன் க்ருத்யா -ரக்ஷிக்கும் ஸ்தத்ரியன் திருமால் அம்சம் -கார்த்த வீர்ய அர்ஜுனன் -கதை -வைசியர் -தொடைகளில் –சூத்திரர் -பாத கமலங்கள் –
தேனே மலரும் திருவடித் தாமரைகள் -அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே –
தமிழ் முகம் இல்லா பாஷை சமஸ்க்ருதம் வாய் இல்லா பாஷை என்பர் -முகத்துக்கு தமிழில் சொல் இல்லையே
வர்ணம் -குணம் அடிப்படையில் -ஜாதி குதிரை ஜாதி புஷபம் போலே -உயர்வு தாழ்வு கல்பித்தால் தான் குற்றம் -வேறுபாடு இருக்கலாமே -குண கர்ம விபாகம் –
ஜாதி -ஸ்திரி -சொத்து -விசுவாமித்திரர் பரசுராமர் பிறப்பு நடத்தை மாறாடி –
பசுபதி ஆக்கம் -ப்ராஹ்மணர் மட்டுமே மோக்ஷம் -அதனால் மற்றவர் நடத்தையால் ப்ராஹ்மணர் ஆகி மோக்ஷம்
நம் சம்ப்ரதாயம் எல்லாரும் இருந்த நிலையிலே மோக்ஷம் போகலாம் –

————

ச॒ன்த்³ரமா॒ மன॑ஸோ ஜா॒த: । சக்ஷோ:॒ ஸூர்யோ॑ அஜாயத ।
முகா॒²தி³ன்த்³ர॑ஶ்சா॒க்³னிஶ்ச॑ । ப்ரா॒ணாத்³வா॒யுர॑ஜாயத ॥

மனத்திலிருந்து சந்திரன் தோன்றினான். கண்ணிலிருந்து சூரியன் தோன்றினான். முகத்திலிருந்து இந்திரனும் அக்கினியும் தோன்றினர். பிராணனிலிருந்து வாயு உண்டாயிற்று.

14 சந்த்ரமா மனசோ ஜாத -சஷூ சூர்யா –முகம் இந்திரன் அக்னி பிராணன் -வாயு
லோகத்துக்கு உபகாரமாக பல ஸ்ருஷ்டிகள் -இதில் —
சதி ஆஹ்லாதே குளிர்ச்சி -திரு உள்ளம் குளிர்ந்த சந்திரன் –கண் பார்வைக்கு -கதிர் மதியம் போல் முகத்தான் –
சூர்ய நமஸ்காரம் கண் பார்வைக்கு -தாமரை அலரும் -தாமரைக் கண் -பக்தர்களால் அலரும்-அவன் திருக் கண்கள் -கமலக் கண்ணன் என் கண்ணில் உள்ளான் –
அதிபதி பிரதானம் முகம் பிரதானம் -இந்திரன் -தேவதைகள் முகம் அக்னி -என்பர் -ஹனுமான் முக்கிய பிராண தேவதை -மாத்வர்

————–

நாப்⁴யா॑ ஆஸீத॒³ன்தரி॑க்ஷம் । ஶீ॒ர்​ஷ்ணோ த்³யௌ: ஸம॑வர்தத ।
ப॒த்³ப்⁴யாம் பூ⁴மி॒ர்தி³ஶ:॒ ஶ்ரோத்ரா᳚த் । ததா॑² லோ॒காக்³ம் அ॑கல்பயன்ன் ॥

தொப்புளிலிருந்து வானவெளி தோன்றியது. தலையிலிருந்து சொர்க்கம் தோன்றியது. பாதங்களிலிருந்து பூமியும் காதிலிருந்து திசைகளும் தோன்றின. அவ்வாறே எல்லா உலகங்களும் உருவாக்கப் பட்டன.

15- நாபிப்யாம்–அந்தரிக்ஷம் –
தலையில் இருந்து சுவர்க்கம் -ஆகாசம் -பூமி திக்குகள் காதுகளில் இருந்து -பொருவில் சீர் பூமி என்கோ திருவடியில் இருந்து உருவாகி
நின்று அளந்து –கிடந்தது உண்டு உமிழ்ந்து கிடந்தது – -பார் என்னும் மடந்தையை மால் செய்யும் மால் –அரவாகி சுமத்தியால் -விராடன் ஸ்தோத்ரம் –
16/17/18-பக்தி ரூபா பன்ன ஞானத்தால் மோக்ஷம் -ஹரி வைபவம் சொல்லும்

———

வேதா॒³ஹமே॒தம் புரு॑ஷம் ம॒ஹான்தம்᳚ । ஆ॒தி॒³த்யவ॑ர்ணம்॒ தம॑ஸ॒ஸ்து பா॒ரே ।
ஸர்வா॑ணி ரூ॒பாணி॑ வி॒சித்ய॒ தீ⁴ர:॑ । நாமா॑னி க்ரு॒த்வாபி॒⁴வத॒³ன்॒, யதா³ஸ்தே᳚ ॥

எல்லா உருவங்களையும் தோற்றுவித்து, பெயர்களையும் அமைத்து, எந்த இறைவன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறாரோ, மகிமை பொருந்தியவரும் சூரியனைப் போல் ஒளிர்பவரும் இருளுக்கு அப்பாற்பட்டவருமான அந்த இறைவனை நாம் அறிவேன்.

16 வேதாஹ மேதம்–
வேர் முதல் வித்தாய் -சர்வ காரணத்வம்-சொல்லி -அத்தை நீ அறிந்து கொண்டு -பக்தி செய் என்கிறது –
உபாசனத்தாலே அடைய வேண்டும் என்கிறது –
காம் வேத -நான் இவனை அறிந்து கொண்டேன் -வேத புருஷன் -வேதம் அநாதி -சுடர் மிகு சுருதி -துல்யமான அர்த்தம் –

சர்வாணி ரூபாணி –எல்லாம் படைத்து எல்களா ரூபங்களை கொடுத்து –நாமானி க்ருத்வா -நாமங்களை சூட்டி –
அபிவதன் -திரும்ப உச்சரித்து கொண்டு -சங்கல்பத்தால் -நினைவே ப்ரஹ்மத்துக்கு முக்கியம் அடங்குவார் இல்லாதா ஸ்வா தந்தர்யம் சங்கல்ப சக்தி
தீரன் -நிர்விகார தத்வம் என்றபடி -சரீரம் பிரகாரம் பரிணாமமே ஸ்ருஷ்ட்டி -சதா ஏக ரூபன் —
தீரன் -நிர்விகாரன் -என்றவாறு -உபாதான காரணமாக இருந்தாலும் -ஸ்வரூபம் விகாரம் இல்லை -சரீரம் தானே ஜகத்
சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்மம் -சத்யம் -நித்யம் -நிர்விகாத்வம் -நந்தா விளக்கே அளத்தர்க்கு அரியாய்
இப்படிப் பட்ட ப்ரஹ்மத்தை அயம் வேத -அறிந்து கொண்டேன் -என்றவாறு –

புருஷம்-மஹாந்தம் -பிரகிருதி தண்டு -தாமஸ் அசத்து பாரே -தாண்டி -ஆதித்ய வர்ணம் -இப்படிப் பட்ட புருஷன்
அஹம் வேதமி-வேதம் -அருளிச் செயல் சரம -அர்ச்சை சிரமம் -ப்ரஹ்மா ருத்ரன் இந்திரன் வந்தாலும் திருவடி
அசாஹாய சூரன் -சொல்ல தேவை இல்லையே ப்ரஹ்மா சொன்னதும் -ச ப்ரஹ்ம ச சிவா சேந்த்ர -வேத வாக்கியம் படியே வால்மீகி –
புருஷம் -பூர்ணத்வத்தால் -ஏதம் ஸுலப்யம் மஹாந்தம் பரத்வம் -மூன்றும் சொல்லி -சரணாகதி பண்ண -இதே போலே
சர்வ லோக சரண்யாய ராகவாய -க்ஷிப்ரம் நிவேதயதே-ஏதம் போலே ராகவன் எளிமை வாசகம் -மஹாத்மா -சர்வ லோக சரண்யன் –
வேதனம் -அறிந்து தியானித்தல் -மீன் -கங்கை த்ரி விக்ரமன் ஸ்ரீ பாத தீர்த்தம் -அறிவுடன் நீராடினால் தானே பலம் கிட்டும் –
அதே போலே காரணத்வம் அறிந்து உபாசித்து -பலம்

ம்ருத்யு -சொல்லால் சொல்லும் சம்சாரம் தாண்ட இதுவே வழி -ஞானான் மோக்ஷம் -ஞானமே பக்தி -காய் பழம் போலே –
பக்தி ரூபாபன்ன ஞானம் -பக்குவம் பட்டு -கேவல ஞானம் காய் -பக்திசா ஞான விசேஷம் –
அறிவு முதல் நிலை /நினைவு -அத்தை நினைத்து /முதிர்ந்து -அடிக்கடி நினைத்து -அடைய ஆசை பெருத்து தியானம் –
வேதனம் ஸ்மரணம் த்யானம் -இடை விடாமலும் -இடை யூறுகள் இன்றி த்யானம் -/
அன்பு தெளித்து ஸ்னேஹ பூர்வம் அநு த்யானம்- இதுவே பக்தி -வேதந சப்தம் இத்தையே சொல்லும்
புருஷ-கல்யாண குணங்கள் -மஹா -கீழே உள்ளார் -ஆதித்ய வர்ணம் ரூபம் திருமேனி -தாமஸ் அஸ்து பாரே

ஸ்ரீ வைகுண்டம் தேச விசேஷம் -சர்வாணி ரூபாணி விசித்திய பஹு வசனம் -அத்தனையும் உண்மை -விசிஷ்டாத்வாய்த்த தத்வங்கள் எல்லாம் இதிலே

————-

தா॒⁴தா பு॒ரஸ்தா॒த்³யமு॑தா³ஜ॒ஹார॑ । ஶ॒க்ர: ப்ரவி॒த்³வா-ன்ப்ர॒தி³ஶ॒ஶ்சத॑ஸ்ர: ।
தமே॒வம் வி॒த்³வான॒ம்ருத॑ இ॒ஹ ப॑⁴வதி । நான்ய: பன்தா॒² அய॑னாய வித்³யதே ॥

எந்த இறைவனை பிரம்மா ஆதியில் பரமாத்மா என்று கண்டு கூறினாரோ, இந்திரன் நான்கு திசைகளிலும் எங்கும் நன்றாகக் கண்டானோ அவரை இவ்வாறு அறிபவன் இங்கேயே அதாவது இந்தப் பிறவியிலேயே முக்தனாக ஆகிறான். மோட்சத்திற்கு வேறு வழியே இல்லை.

17–தாதா ப்ரஸ்தாத் –நான் அந்நிய பந்த அயனாயா –
வித்வான் -நிராமம் ஸ்வாமி அறிந்து -அம்ருதம் இஹ பவதி -அமிருதம் போன்ற பரம பதம் அடைந்து -பிரம்மன் தியானித்து யுக கோடி சகஸ்ரம் –
சக்ர -100 யாகம் செய்த இந்திரன் -பிரதி திசைச்ச நான்கு திக்குகள் விதிக்குகள் எட்டு திக் பாலரும் யாரை த்யானித்தார்களோ
அவனையே வித்வான் -அறிந்து உபாசித்தவன் இந்த பிறவியில் முக்தி அடைகிறான்
தமேவ வித்வான் -ப்ரஹ்ம வேத ப்ரஹ்ம ஏவ பவதி போலே இரண்டு உண்டே -எட்டு கல்யாண குணங்கள் அடைகிறான் -வேறு வழி இல்லை என்றவாறு

கள்வா –கழல் பணிந்து வெள்ளெறேன் நான் முகன் இந்திரன் கழல் பணிந்து -பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன்-வேறே வழி இல்லையே
வித்வான் -அறிவு -அறிபவன் -அறியப்படும் பொருள் மூன்றும் உண்டே -வாக்யார்த்தா ஞானம் மட்டும் மோக்ஷம் இல்லை என்றதாயிற்று

———–

ய॒ஜ்ஞேன॑ ய॒ஜ்ஞம॑யஜன்த தே॒³வா: । தானி॒ த⁴ர்மா॑ணி ப்ரத॒²மான்யா॑ஸன்ன் ।
தே ஹ॒ நாகம்॑ மஹி॒மான:॑ ஸசன்தே । யத்ர॒ பூர்வே॑ ஸா॒த்⁴யா: ஸன்தி॑ தே॒³வா: ॥

தேவர்கள் இந்த வேள்வியால் இறைவனை வழிபட்டார்கள். அவை முதன்மையான தர்மங்கள் ஆயின. எங்கே ஆரம்பத்தில் வேள்வியால் இறைவனை வழிபட்ட சாத்தியர்களும் தேவர்களும் இருக்கிறார்களோ, தர்மங்களைக் கடைப்பிடிக்கின்ற மகான்கள் அந்த மேலான உலகை அடிவார்கள்.

18- யஜ்ஜென ப்ரஹ்மா -நான் முகனை கொண்டு ஸ்ருஷ்ட்டி எஜ்ஜம் செய்து -தர்மம் முதன்மை பெற்றது
தானி -யத்ர பூர்வே ஸாத்யா சந்தி தேவா –அறிந்து -நாகம் வைகுண்டம் அடைந்து -மஹிமா -அஞ்ஞானம் அற்று
ஸ்வரூபம் விளக்கம் பெற்று -ஸநாதர்கள் நித்யர் -வித்வான் வேதனம் தியானம் உபாசனம் பக்தி -ஒன்றே வழி
சாஸ்திரம் பக்தி -பிரபத்தியாலோ பக்தியாலோ அடையலாம் -ஸ்வரூப விரோதி என்று –
ப்ரீதி தலைமண்டி கைங்கர்யம் செய்ய வேண்டும் –

———-

உத்தர அநுவாகம் 6 மந்த்ரங்கள்

அ॒த்³ப்⁴ய: ஸம்பூ॑⁴த: ப்ருதி॒²வ்யை ரஸா᳚ச்ச । வி॒ஶ்வக॑ர்மண:॒ ஸம॑வர்த॒தாதி॑⁴ ।
தஸ்ய॒ த்வஷ்டா॑ வி॒த³த॑⁴த்³ரூ॒பமே॑தி । தத்புரு॑ஷஸ்ய॒ விஶ்வ॒மாஜா॑ன॒மக்³ரே᳚ ॥

தண்ணீரிலிருந்தும் சாரமான அம்சத்திலிருந்தும் பிரபஞ்சம் உண்டாயிற்று. பிரபஞ்சத்தை உருவாக்கிய இறைவனிடமிருந்து சிறந்தவரான பிரம்மா தோன்றினார். இறைவன் அந்த பிரம்மாவின் (பதினான்கு உலகங்களும் நிறைந்ததான) உருவை உருவாக்கி அதில் வியாபித்திருக்கிறார். பிரம்மாவின் இந்தப் பிரபஞ்ச வடிவம் படைப்பின் தொடக்கத்தில் உண்டாயிற்று.

1-சேஷத்வம் -பர கத அதிசயம் -ஆ தேனை -சரீரம் ஆத்மாவுக்கு போலே
தத் புருஷஸ்ய –விஸ்வம் -அக்ரே ஆஜாநாம் -அறிந்தேன் -பழைய காலத்தில் -திருமாலே நானும் உனக்கு பழ வடியேன்-
அடிமைத் தனம் -சேஷத்வம் -பழைமை – நல் தமிழால் நூல் செய்த பெற்றிமையோர் –
அத்ய ஸம்பூதா -முதலில் தண்ணீர் -பிருதிவியை ரஸாச்சா– உண்டான பிருதிவியில் அன்னம் ரசம் உருவாகி போஷிக்க
விஸ்வ கர்மா -தேவ தச்சன் -மயன் அசுரர் தச்சன் -விஸ்வ கர்த்தா -சமாவார்த்தாதி -ஸ்ருஷ்ட்டிக்கப் பட்டத்தை சொல்லி
தண்ணீருக்கும் அனைத்துக்கும் பர ப்ரஹ்மமே காரணம் –
தஸ்ய த்வரஷ்டா–விதத்தி ரூபமேத்தி -தரிக்கிறான் வியாபிக்கிறான் -தானே திருமேனியால் தரித்து -ஆதாரம்
வியாபித்து உள்ளே புகுந்து நியமிக்கிறார் -அந்தராத்மா -சரீர ஆத்ம பாவம் -அந்தர்யாமி -நியமனம் -யமயத்தி -நியந்தரு நியாமிய பாவம்
தத் புருஷஸ்ய -இப்படி பட்ட பரமாத்மாவுக்கு விஸ்வம் -ஆத்மாக்கள் சேஷ பூதர் என்றவாறு –யானே நீ என் உடைமையும் நீயே

நாமும் நம் சரீரமும் அவனுக்கு சரீரம் என்றவாறு
பிரகாரம் -அப்ருதக் சித்த விசேஷணம் -பிரியாமல் -இருப்பதாய் -சார்ந்து இருப்பது பிரகாரம் -கருணை பிந்த்ரா குணங்கள் போலே
குணம் தர்மம் -குணி தர்மி -குண்டலி புருஷன் -தண்டீ புருஷன் -பிரிக்கலாம் -சுக்ல பட -வெள்ளை துணி -வெண்மை பிரிக்க முடியாதே –
குணம் த்ரவ்யம் சார்ந்து இருக்கும் -ஜீவாத்மா குணம் இல்லை த்ரவ்யம் -பரமாத்மாவும் த்ரவ்யம் -மேஜை புஸ்தகம் போலே
சார்ந்தே இருக்கும் த்ரவ்யங்கள் போலே -பிரகார அத்வைதம் -ஆத்மா அநேகர் உண்டே -பலர் -உண்டே என்னில் —
அனைவரும் ஒரே ஆகாரம் -ஞான மயம் -ஞான குணம் – ஆனந்த மயம் -சேஷத்வம் -போது தானே -ஒரே ஜாதி என்றவாறு –
பிரகாரி அத்வைதம் -தன் ஒப்பார் இல்லாத அப்பன் -இதில் இரண்டாவது இல்லை —
மேலே சரீராத்மா பாவம் -குணம் பிரகாரம் -பிரகாரம் ஆவது சரீரம் ஆகாது -சரீரமானவை எல்லாம் பிரகாரம் -சார்ந்தே பிரியாமல் இருக்குமே
யஸ்ய சேதனஸ்ய -யது த்ரயவ்யம் -சார்வார்த்தமனா- ஸ்வார்த்தே -தாராயத்வம் நியந்தும் சக்தே
அவன் பொருட்டே அவனாலே தாங்கி ஆட்சி செய்யப் படுவதே சரீரம் என்றவாறு
த்வேஷிடா ரூபமேத்தி -தஸ்ய புருஷஸ்ய விஸ்வம் -தரித்து நியமிப்பதால் விஸ்வம் சேஷம் என்றவாறு –

லலாடா -நெற்றியில் ஸ்வேதா -தண்ணீர் -வேர்வை -ஹிரண்மய அண்டம் உருவானது -அப ஏவ சதர்ஜ ஆதவ் -முதலில் தண்ணீர்
நாரம் தண்ணீர் அயன ஆஸ்ரயம் நாராயணன் -அந்நாத் பவதி –கர்மம் சக்கரம் -கர்மம் அடியாக உயர்வு தாழ்வு
தத் புருஷஸ்ய விஸ்வம் -கிருஷ்ண ஏவ கி லாலே -உத்பத்தி லயம் காரணம் -இன்புறும் இவ்விளையாட்டு உடையவன்
வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் -சிற்றிலோடு எங்கள் சிந்தை -சிதைக்கக் தடவையோ கோவிந்தா -அநந்ய பிரயோஜனர் –

——

வேதா॒³ஹமே॒தம் புரு॑ஷம் ம॒ஹான்தம்᳚ । ஆ॒தி॒³த்யவ॑ர்ணம்॒ தம॑ஸ:॒ பர॑ஸ்தாத் ।
தமே॒வம் வி॒த்³வான॒ம்ருத॑ இ॒ஹ ப॑⁴வதி । நான்ய: பன்தா॑² வித்³ய॒தேய॑னாய ॥

மகிமை பொருந்தியவரும், சூரியனைப் போல் ஒளிர்பவரும், இருளுக்கு அப்பாலும் இருப்பவருமாகிய இந்த இறைவனை நான் அறிவேன். அவரை இவ்வாறு அறிபவன் இங்கே இந்தப் பிறவியிலேயே முக்தனாக ஆகிறான், முக்திக்கு வேறு வழி இல்லை.

2-வேதகா மேதம்–மீண்டும் -அஹம் புருஷம் வேத -ஏதம் ஸூ லாபான் மஹாந்தம் -ஆதித்ய வர்ணம் -தமஸை தாண்டி -அன்யா பந்தா –உபாயம் அயனம் பிராப்யம்

———-

ப்ர॒ஜாப॑திஶ்சரதி॒ க³ர்பே॑⁴ அ॒ன்த: । அ॒ஜாய॑மானோ ப³ஹு॒தா⁴ விஜா॑யதே ।
தஸ்ய॒ தீ⁴ரா:॒ பரி॑ஜானந்தி॒ யோனிம்᳚ । மரீ॑சீனாம் ப॒த³மி॑ச்ச²ன்தி வே॒த⁴ஸ:॑ ॥

இறைவன் பிரபஞ்சத்தில் செயல்படுகிறார். பிறக்காதவராக இருந்தும் அவர் பல்வேறு வடிவங்களில் தோன்றுகிறார். அவரது உண்மையான வடிவத்தை மகான்கள் நன்றாக அறிகிறார்கள். பிரம்மா போன்றவர்கள் கூட மரீசி முதலிய மகான்களின் பதவியை விரும்புகிறார்கள்.

3- அவதார சீர்மை சொல்லும் மந்த்ரம் –பிரஜாபதி -ஸ்ரீ மன் நாராயணன் -இங்கே குறிக்கும் -சரதி கர்ப்பே -அடியவர் ஹிருதய கண்ணுக்கு விஷயம்
அஜாயமான பஹு தா விஜாயதே -கடுகில் காணுமாறு அருளாய் -ஒருத்தி மகனாய் பிறந்து -பிறப்பில் பல் பிறவி பெருமான்
உண்ணாத நீ உண்ணும் குலத்தில் பிறந்தாய் -மரம் இரண்டு பறவை -உணவு உண்ணாமல் ஜோதிஸ் மிக்கு –

தஸ்ய தீரா -ஞானிகள் அறிவார்கள் அவதார ரகஸ்யம் -நித்ய சூரிகள் உள்ள நாட்டை அடைய ஆசைப் படுவான் –
தான் ஏற நாள் பார்த்து இருக்கும் –
ராஜாதி ராஜ ஸர்வேஷாம் -விஷ்ணு -ப்ரஹ்மம் -மஹான் -ஈஸ்வரனை அறிந்து கொள்கிறோம் ச பிதா ச பிரஜாபதி
ஸ்வாமி ரக்ஷகர் பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரீம்- –அஜாயமான பஹுதா -விஜாயதே விசேஷனா ஜாயதே 12 பன்னிரு திங்கள்
நாட்டில் பிறந்து படைத்தன பட்டு -நாம் பிறக்க வேண்டிய தேவை இல்லாத படி என்பதால் -விசேஷ ஜாயதே -அர்ச்சையும் அவதாரமே
அஜன் -பிறப்பிலி -தூணில் இருந்து -மற்றவர் போலே பிறக்க வில்லையே
ஜானி ஜரா சகல துரிதம் -போக்க கிருபாதீனம் -கூபத்தில் விழும் குளவி எடுக்க குதித்து -எந்நின்ற யோனியுமாய் பிறந்து –
வானவர்கள் நாடு -நம்புவார் பத்தி வைகுந்தம் காண்மினே இதனால் தான் -இங்கே ஈரரசு பட்டு இருக்கும் –

————

யோ தே॒³வேப்⁴ய॒ ஆத॑பதி । யோ தே॒³வானாம்᳚ பு॒ரோஹி॑த: ।
பூர்வோ॒ யோ தே॒³வேப்⁴யோ॑ ஜா॒த: । நமோ॑ ரு॒சாய॒ ப்³ராஹ்ம॑யே ॥

யார் தேவர்களிடம் தேஜஸாக விளங்குகிறாரோ, தேவர்களின் குருவாக இருக்கிறாரோ, தேவர்களுக்கு முன்பே தோன்றியவரோ அந்த ஒளிமயமான பரம்பொருளுக்கு  நமஸ்காரம்.

4–யோ தேவேப்யோ ஆதாபி –புரோ ஹித –பூர்வம் -முதல்வன் -நமோ ருசாயா ப்ரஹ்மம் -பர ப்ரஹ்மம் ஸ்வரூபி
தேவ சப்தம் நித்ய ஸூ ரிகள் -அவர்களுக்காக -ஓளி மிக்கு -கைங்கர்யம் கொள்வதே -ஹிதம் பண்ணி -பக்தாநாம் -சகலம் -அழகிய திருமேனி –

———–

ருசம்॑ ப்³ரா॒ஹ்மம் ஜ॒னய॑ன்த: । தே॒³வா அக்³ரே॒ தத॑³ப்³ருவன்ன் ।
யஸ்த்வை॒வம் ப்³ரா᳚ஹ்ம॒ணோ வி॒த்³யாத் । தஸ்ய॑ தே॒³வா அஸ॒ன் வஶே᳚ ॥

பரம்பொருளைப் பற்றிய உண்மைகளை அளிக்கும்போது தேவர்கள் ஆதியில் அதைப்பற்றி “ யாராக இருந்தாலும் பரம்பொருளை நாடுபவன் இவ்வாறு அறிவானானால் அவனுக்கு தேவர்கள் வசமாக இருப்பார்கள்“ என்று கூறினார்கள்.

5- எல்லாம் ப்ரஹ்மம் ஆனந்தத்துக்காக என்கிறது -ப்ரஹ்மம் ரிஸம் ஜநயன்தா -ப்ரீதி அடைய -அக்ரே தத் அப்ரூவன் நம சொன்னார்கள்
தத் அத்தை சொன்னார்கள் நம என்பதை -இதுவே வசப்படுத்தும் அஞ்சலி -பரம முத்திரை –

——-

ஹ்ரீஶ்ச॑ தே ல॒க்ஷ்மீஶ்ச॒ பத்ன்யௌ᳚ । அ॒ஹோ॒ரா॒த்ரே பா॒ர்​ஶ்வே ।
நக்ஷ॑த்ராணி ரூ॒பம் । அ॒ஶ்வினௌ॒ வ்யாத்தம்᳚ ।
இ॒ஷ்டம் ம॑னிஷாண । அ॒மும் ம॑னிஷாண । ஸர்வம்॑ மனிஷாண ॥

நாணத்தின் தலைவியாகிய ஹ்ரீ தேவியும், செல்வத்தின் தலைவி யாகிய லட்சுமி தேவியும் உமது மனைவியர். பகலும் இரவும் உமது பக்கங்கள். நட்சத்திரங்கள் உமது திருவுருவம். அசுவினி தேவர்கள் உமது மலர்ந்த திருவாய்.

எம்பெருமானே நாங்கள் விரும்புவதைக் கொடுத்தருள்வாய். இவ்வுலக இன்பத்தைக் கொடுத்தருள்வாய். இகத்திலும் பரத்திலும் அனைத்தையும் தந்தருள்வாய்.

6-ஹீரஸ்ஸதே லஷ்மீ பத்னி -கீழே சொன்ன வைபவம் விட -ஸ்ரீ யபதி- ஹ்ரீ -பூமி பிராட்டி -சகாரம் இரட்டித்து மூவரும் -தே பத்நயவ் –
அஹோராத்ரி பார்ஸ்வே நஸ்த்ராணி -அஸ்வினி -தேவதை போலே முகம் அழகு -பிரார்த்தனை உடன் நிறுத்தி –
பிராட்டி சம்பந்தம் இருப்பதால் இஷ்டம் -ஐஸ்வர்யம் அக்ஷரம் கொடுத்து கொடுக்க ஒன்றும் இல்லையே கலங்கி வெட்க்கி –
திருவுக்கும் திருவாகிய செல்வா– கஸ் ஸ்ரீ ஸ்ரீ -சம்பத்து -விளையும் பூமி -அனுபவம் நீளா தேவி -மூவரும் -பொறுமையே வடிவம்
பூமியை முதலில் சொல்லி பின்பு ஸ்ரீ தேவி -அரவாகி சுமத்தியால் –பார் என்னும் மடந்தையை மால் செய்யும் மால்
இடந்து உண்டு உமிழ்ந்து நடந்து அளந்து -அன்றோ -குணம் இவளுக்கு மணம் அவளுக்கு -புகழ் இவளுக்கு அழகு அவளுக்கு -ஆதரவு ஆதாரம்
இங்கித -புருவ நெறித்து-இதுவே பிரமாணம் இத்தை கொண்டு நடத்தி -நம்மையும் சேர்த்து வைக்கும் -அநபாயினி
கிரியதாம் இதை மாம் வைத்த -சேர்த்தியில் கைங்கர்யம் -என் அடியார் அது செய்யார் –
நக்ஷத்ராணி ரூபம் திரு மேனி –சூரியன் வெப்பம் எரிச்சல் இங்கு அழகு –அம்ருத தடாகம்
ஏஷா வைஷ்ணவி நாம –புருஷ ஸூ க்தம் உயர்ந்த மந்த்ரம் என்றவாறு

தச்ச²ம்॒ யோராவ்ரு॑ணீமஹே । கா॒³தும் ய॒ஜ்ஞாய॑ । கா॒³தும் ய॒ஜ்ஞப॑தயே । தை³வீ᳚ ஸ்வ॒ஸ்திர॑ஸ்து ந: । ஸ்வ॒ஸ்திர்மானு॑ஷேப்⁴ய: । ஊ॒ர்த்⁴வம் ஜி॑கா³து பே⁴ஷ॒ஜம் । ஶம் நோ॑ அஸ்து த்³வி॒பதே᳚³ । ஶம் சது॑ஷ்பதே³ ।
ஓம் ஶான்தி:॒ ஶான்தி:॒ ஶான்தி:॑ ॥

—————————————————————————————————–

சகஸ்ர சீர்ஷா புருஷா சஹஸ்ராக்ஷ சஹஸ்ரபாத் –
சபூமிம் விஸ்வதோ வ்ருத்வா அத்ய திஷ்டத் தசாங்குலம் –1 –

புருஷன் எனப்படும் ஸ்ரீ மன் நாராயணன் ஆனந்தமான திருத் தலைகள் திருக் கண்கள் திருப் பாதங்கள் கொண்டு
எங்கும் வியாபித்து அநந்த யோஜனா பிரமாணமான ப்ரஹ்மாண்டத்தை வியாபித்து உள்ளார்

சகஸ்ர சீர்ஷா –இத்யத்ர சகஸ்ர அநந்த வாசக
அநந்த யோஜனம் ப்ராஹ தசாங்குல வசஸ்ததா
தஸ்ய ப்ரதமயா விஷ்ணோர் தேசதோ வ்யாப்திருச்யதே

சீர்ஷ பதம் -ஞான இந்திரியங்கள் —
போதன மனன ஸ்ரவண ஸ்பர்சன தர்சன ரசன க்ராண ஞானாதி ஸ்ருதானி பாவந்தீத்யத சிர-
அபரிமித ஞானம் -அனந்தன் -சர்வ இந்த்ரியானாம் நயனம் பிரதானம்

சகஸ்ர பாத் –கர்ம இந்திரியங்கள் -நிரவதிக சக்தன் -அச்சுதன் –

பராஸ்ய சக்திர் விவிதை வஸ்ரூயதே ஸ்வ பாவிகீ ஞான பல க்ரியா ச —
சகஸ்ர சீர்ஷா -அனைவரும் பிரகாரங்கள் என்பதால் -அனைவர் தலைகளும் இவனது தானே

ஹ்ருஷீகேசன் அன்றோ -இந்திரியங்களை நியமிப்பவன்
வாய் புத்தி கண் செவி தலை எல்லாம் அவனை வணங்கி பாடி நினைத்து கேட்டு கைங்கர்யம் செய்யவே அன்றோ –

வாய் அவனை அல்லது வாழ்த்தாது -கை உலகம் தாயவனை யல்லது தாம் தொழா-பேய் முலை நஞ்சு
ஊணாக உண்டான் உருவோடு பேர் அல்லால் காணா கண் கேளா செவி —

அர்ஜுனனுக்கு காட்டி அருளிய விஸ்வரூபம் அன்றோ இத்தால் சொல்லுகிறது

தோள்கள் ஆயிரத்தாய் -முடிகள் ஆயிரத்தாய் -துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் தாள்கள் ஆயிரத்தாய்

பகவான் இதி சப்தோயம் ததா புருஷ இத்யபி -நிருபாதீச வரத்தேதே வாஸூ தேவே ச நாதநே
ச ஏவ வாஸூதேவோ சவ் சாஷாத் புருஷ உச்யதே –ஸ்த்ரீ ப்ராயம் இதரத் சர்வம் ஜகத் ப்ரஹ்ம புரஸ் சரம் –
யஸ்மாத் ஷரம் தீதோஹம் அக்ஷராதபி சோத்தம -தஸ்மாத் வேத ச லோகே ச பிரதித புருஷோத்தம –என்பான் ஸ்ரீ கீதாச்சார்யானும்

ச பூமி -பதினாலு புவனங்களும் சொல்லப் பட்டன

விஸ்வதோ வ்ருத்வா -எங்கும் வியாபித்து -ப்ரஹ்மாண்டம் அவன் ஸ்வரூபத்தில் ஒரு மூலையில் அடங்கும் படி
தசாங்குலம் –நாபிக்கு மேல் -10- அங்குலம் அளவுடைய ஹிருதயத்தில் அந்தர்யாமி என்றும் பத்து திக்குகளிலும் வியாபித்து -என்றும் –
விசதீதி விஷ்ணு -அசாதாரண அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டன் –என்றதாயிற்று –

————

புருஷ ஏவேதம் சர்வம் யத் பூதம் யச்ச பவ்யம் –
உதாம்ருதத் வஸ்ய ஈஸாந யத் அந்நேன அதி ரோஹதி -2-

எந்த ஜகம் முன் கல்பத்தில் இருந்ததோ –
பின் கல்பத்தில் உண்டாகப் போகிறதோ -இந்த கல்பத்தில் இருக்கிறதோ –
அன்னத்தினால் மறையாமல் இருக்கிறதோ -இந்த ஸமஸ்த ஜகத்தும் புருஷன் ஆகிற ஸ்ரீ மன் நாராயணனே –
மேலும் மோக்ஷத்துக்கு பிரபுவும் ஸ்ரீ மன் நாராயணனே —

த்விதீயயா சாஸ்ய விஷ்ணோ காலதோ வ்யாப்திருச்யதே –சர்வ கால வியாப்தி இரண்டாம் மந்திரத்தால் –

போகின்ற காலங்கள் போய காலங்கள் போகு காலங்கள் –யத் பூதம் பவ்யம் –கால பர்ச்சேதய ரஹிதன்

முன் மந்திரத்தால் வியாபகம் சொல்லி
இத்தால் -இதம் சர்வம் -அனைத்தும் சரீரம் -வாஸ்து பரிச்சேத்யன் ரஹிதன் என்றுமாம்

சர்வம் விஷ்ணு மயம் ஜகத் –
சர்வம் ஸமாப் நோஷி ததோசி சர்வ –
அவனே மற்று எல்லாம் அறிந்ததினமே-
வரும் காலம் நிகழ் காலம் கழி காலமாய் உலகை ஒருங்காக அளிப்பாய்

யத் அந்நேன அதி ரோஹதி–
அன்னத்தினால் அழியாமல் -அன்னம் -இந்த்ரியங்களால் அனுபவிக்கும் விஷயாந்தரங்கள் –

காக்கும் இயல்வினன் கண்ணன் -தர்மார்த்த காமன்கள் இஹ லோக புருஷார்த்தங்களையும் அளிப்பவன்
உதாம்ருதத் வஸ்ய ஈஸாந –
மோக்ஷ புருஷார்த்தத்தையும் அளிப்பவன் -அம்ருதத்வம் அஸ்நுதே
புருஷோ நாராயண பூதம் பவ்யம் பவிஷ்யச்ச ஆஸீத் -ச ஏஷ ஸர்வேஷாம் மோக்ஷ தச்ச ஆஸீத் -என்பர்களே –

———–

ஏதா வான் அஸ்ய மஹிமா அதோ ஜ்யாயாம்ச்ச பூருஷ —
பாதோஸ்ய விச்வா பூதாநி த்ரி பாதஸ் யாம்ருதம் திவி –3-

ஏதாவான் -இதி வைபவ கதிதம் ஹரே –அவன் மஹிமை சொல்லப்பட்டது
ஏதா வான் அஸ்ய மஹிமா-இவ்வளவு மட்டுமா அவன் மஹிமை –

ஸோ அங்க வேத யதிவா நவேத-தனக்கும் தன் தன்மை அறிவரியான்
த்ரி பாத் -மூன்று -அநந்தம் அர்த்தம் -லீலா விபூதியை காட்டிலும் பன் மடங்கு -என்றவாறு

நச புன ராவர்த்ததே –புணைக் கொடுக்கிலும் போகல் ஒட்டான்-
அம்ருதம் -கனியைக் கரும்பினின் சாற்றை கட்டியை தேனை அமுதை -சோஸ்நுதே சர்வான் காமான்
திவி-அத்யர்கா நலதீப்தம் தத் ஸ்தானம் விஷ்ணோர் மஹாத்மன
ச ச சர்வஸ் மான் மஹிம் நோ ஜ்யாயான் -தஸ்மான்நகோபி ஜ்யாயான் –
ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன்

———–

த்ரிபா தூர்த்வ உதைத் புருஷ பாதோஸ் யே ஹாபவாதபுந–
ததோ விஷ்வங்வ்யாக்ராமத் சாஸ நா நச நே அபி –4–

அநிருத்தஸ்ய வைபவம்
உதைத் –ரஷிக்கக் கட வேன்
அஸ்ய பாத் -அவதாரமான அநிருத்தன் –

இஹ அபவாத்புந-மறுபடியும் இங்கு விஷ்ணுவாக திருப் பாற் கடலில் அவதரித்தார்
ததோ விஷ்வங்வ்யாக்ராமத்–அதன் பின் அயோத்தியை துவாரகை ராம கிருஷ்ணாதி அவதாரங்கள்

அர்ச்சா மூர்த்தி -திவ்ய தேசங்கள் க்ருஹங்கள் -விஷ்வக் -எண்ணிறந்த -வ்யாக்ரமத் –

முதலில் ஸ்வரூப வியாப்தி சொல்லி
இங்கு அவதார முகேன வியாப்தி

சாஸ நா நச நே அபி –சேதன அசேதனங்களை ரக்ஷிப்பதற்கே –
உயிர் அளிப்பான் எந்நின்ற யோனியுமாய் பிறந்தாய் இமையோர் தலைவா
அஜாயமாநோ பஹுதா விஜாயதே –புற்பா முதலாப் புல் எறும்பாதி ஓன்று இன்றியே –

————

தஸ்மாத் விராட ஜாயதே விராஜோ அதி பூருஷ —
ச ஜாதோ அத்யரிச்யதே பச்சாத் பூமி மதோ புர–5-

விஷ்ணுவிடம் இருந்து ப்ரஹ்மாண்டம் உண்டாகி பிரமன் உண்டாகி கீழும் மேலும் பக்கங்களிலும் ஆக்ரமித்தனன்
பச்சாத் -த்வீபங்கள் –அத -பாதாளம் –புர –ஸ்வர்க்காதி -இவய் என்றும்
பிரமனின் தர்ம பூத ஞானம் பரவ -நான் முகன் அநு ஜீவன் தானே

—————————————————————–

யத் புருஷேண ஹவிஷா தேவா யஜ்ஜம் அதன்வத
வசந்தோஸ் யா ஸீ தாஜ்யம் க்ரீஷ்ம இதமச் சரத்தவி -6-

த்யான ரூபமான யாகத்துக்கு வசந்த ருது நெய்-கரீஷ்ம ருது -ஸமித்-சரத் ருது புரொடசம் -ஹவிஸ்
நான் முகன் ஆத்ம சமர்ப்பணம் செய்து யாகம் செய்து ஸ்ருஷ்டி சக்தி பெற்றார் –
பஹுஸ் யாம் பிரஜா யே ய–சமஷ்டி சிருஷ்ட்டி –
இங்கு வியஷ்ட்டி சிருஷ்ட்டியை சொல்கிறது –

——————————————————————

ஸப்தாஸ் யாசன் பரிதய தரிஸ் சப்த சமித க்ருதா –
தேவா யத் யஜ்ஜம் தன்வாநா ஆபத் நன் புருஷம் பசும் –7-

ஏழு வஸ்துக்கள் பரிதி -பிருத்வி ஜலம் -அக்னி வாய் ஆகாசம் -அஹங்காரம் மஹான் –
21-வஸ்துக்கள் சமித்து –பஞ்ச பூதங்கள்- பஞ்ச தன்மாத்திரைகள்-பஞ்ச ஞான இந்திரியங்கள் –
பஞ்ச கர்ம இந்திரியங்கள்-மனஸ் – ஆகியவை
தேவர்கள் நான்முகனை பசுவாக வைத்து -பிரமனை பிரக்ருதியாகிய யூக ஸ்தம்பத்தில் பசுவாக கட்டினார்கள் –

——————————————————–

தம் யஜ்ஜம் பர்ஹிஷி ப்ரவ்க்ஷன் புருஷம் ஜாதம் அக்ரத-
தேன தேவா அயஜந்த ஸாத்யா ருஷயச்சயே -8-

பர்ஹிஷி –மூல பிரகிருதி
ப்ரவ்க்ஷன்-ப்ரோஷித்தார்கள்-
புருஷம் ஜாதம் அக்ரத–முன்னாள் பிறந்த அந்த பிரமனை –

ப்ரஹ்மா தேவா நாம் பிரதமஸ் சம்பபூவ-என்னக் கடவது இறே —

தேன அயஜந்த-அந்த பிரமானைப் பசுவாகக் கொண்டு யாகம் செய்தார்கள்
தேவா-ஸாத்யா–சாத்யர்கள் என்று பிரசித்தரான நித்யர்கள் -யத்ர பூர்வே ஸாத்யாஸ் சந்தி தேவா –

ருஷயச்சயே-முக்தர்களும் இந்த யாகத்தில் கலந்து கொண்டார்கள்

பரம புருஷனை உண்ணும் சோறு இத்யாதிகாகக் கொண்டு தியானம் பண்ணும் மனன சீலர்கள் முக்தர்கள் என்றபடி –

———————————————-

தஸ்மாத் யஞ்ஞாத் சர்வ ஹூத சம்ப்ருதம் ப்ருஷ தாஜ்யம் –
பகும்ஸ்தாம்ஸ் சக்ரே வாயவ்யன் ஆரண்யான் க்ராமயாச்சயே -9-

இது முதல் ஏழு மந்திரங்களில் ஜகத் ஸ்ருஷ்டி சொல்லப்படுகிறது –
ஹோமம் செய்யப்பட அந்த பிரம்மனிடம் இருந்து –
சம்ப்ருதம் ப்ருஷ தாஜ்யம் -தயிர் உடன் கூடிய நெய் -ஜகாத் ஸ்ருஷ்டிக்கு வீர்யம் –

பகும்ஸ்தாம்ஸ் சக்ரே வாயவ்யன் ஆரண்யான் க்ராமயாச்சயே-
வாயு சஞ்சரிக்கும் படி யான ஆகாசத்தில் பறக்கும் பஷிகளையும்
காட்டில் சஞ்சரிக்கும் புலி கரடி -கிராமங்களில் திரியும் பூனை முதலியவற்றை நான்முகன் ஸ்ருஷ்டித்தார் –

————————————————-

தஸ்மாத் யஞ்ஞாத் சர்வ ஹுத ருசஸ் சாமாநி ஜஜிஞிரே –
சந்தாம்ஸி ஜஜிஞிரே தஸ்மாத் யஜுஸ் தஸ்மாதஜாயத -10-

ருக் யஜுஸ் சாம வேதங்கள் காயத்ரி சந்தஸ் ஸூக்களும் உண்டாயின –
யோ ப்ராஹ்மணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ச்ச ப்ரஹினோதி தஸ்மை –
பகவானுடைய மூச்சுக்கு காற்றுகள் வேதங்கள் -என்று தஸ்ய ஹா வா ஏதஸ்ய மஹதோ பூதஸ்ய நிஸ்வசிதம்
ஏதத் ருக்வேதோ யஜுர் வேதஸ் ஸாமவேதா-என்னக் கடவது இறே-

——————————————————————

தஸ்மாத் அச்வா அஜாயந்த ஏகே சோபயாதத —
காவோ ஹா ஜஜிஞிரே தஸ்மாத் தஸ்மாத் ஜாதா அஜா வய -11-

குதிரைகள் -ஒரு பக்கத்தில் பற்களை யுடைய பிராணிகள்
காவோ ஹா -என்று இவைகளும்
அவற்றில் அடக்கினாலும் கௌரவம் குறித்து தனியாக சொல்லப்பட்ட்ன –

—————————————————————

யத் புருஷம் வ்யதது கதிதா வ்யகல்பயன் –
முகம் கிமஸ்ய கவ்பாஹு காவூரு பாதவுச்யேதே -12-

நித்ய ஸூரிகள் பிரமனை பசுவாக கற்ப்பித்த போது-அவன் அவயவங்கள் எவ்வாறு என்றும்
அவற்றில் இருந்து யார் தோன்றினார்கள் என்றும் இதில் கேட்டு அடுத்த மந்திரத்தில் பதில் –

—————————————————-

ப்ரஹ்மணோஸ்ய முகமாசீத் பாஹு ராஜன்ய க்ருத –
ஊரூ ததஸ்ய யத் வைஸ்ய பத்ப்யாம் சூத்ரோ அஜாயதே -13-

ப்ராஹ்மணன் முகம்-ஞான இந்திரியங்கள் உடையது அன்றோ
ஸர்வேந்த்ரியானாம் நயனாம் பிரதானம் –ப்ராஹ்மணர்கள் தீர்க்க தர்சிகள் –
சப்த ராசியான வேதமும் கர்ண பரம்பரையாக ஸ்ருதி -பஹு நா ஸ்ருதேன

ஞான இந்திரியங்களை ப்ரஹ்மத்திடம் செலுத்துபவர்கள் ப்ராஹ்மணர்கள் -போதனம்-இவர்கள் கர்தவ்யம்

கைகள் -ஷத்ரியன் -தோள் வலிமை கை வலிமை வேண்டுமே -அரசர்கள் திருமாலின் அம்சம் அன்றோ -ரக்ஷணம் இவர்கள் கர்தவ்யம்

துடைகள் -வைசியன் -உழுதல் வியாபாரம் பலம் கொடுக்க -பாஷாணம் இவர்கள் கர்தவ்யம்

திருவடிகள் சூத்ரன் -முதல் மூன்று வர்ணத்தார்கள் ஏவல்களைச் செய்ய கால் வலிமை வேண்டுமே -சேவகம் இவர்கள் கர்தவ்யம்

பிரமனை சரீரமாகக் கொண்ட புருஷத்தோமன்-நாராயணன் இடம் ஒரே சமயத்தில் நான்கு வர்ணங்களும் –

சாதுர் வர்ணயம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஸ -ஸ்ரீ கீதை –

——————————————

சந்த்ரமா மனசோ ஜாத சஷோஸ் ஸூ ர்ய அஜாயத
முகாதிந்தரச் சாக்னிச்ச ப்ராணாத் வாயுர ஜாயத-14-

மனசில் இருந்து சந்திரன் –
சந்தோசம் குளிர்ச்சி –
அத்வேஷம் உண்டாக்கி ஆபிமுக்யம் வளர்த்து -ஞானப் பயிரை

விளைவிக்கிறான் -சந்திரன் -மனசுக்கு அதிதேவதை
கண்ணில் இருந்து ஸூ ர்யன்
த்யேயஸ் சதா ஸவித்ரு மண்டல மத்திய வர்த்தீ நாராயண
தஸ்யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ
முகத்தில் இருந்து இந்திரனும் அக்னியும் -தேஜஸ் -அக்னி முகாவை தேவதா –
பிராணனிலிருந்து வாயு –

—————————————————————–

நாப்யா ஆஸீ தந்தரிக்ஷம் சீர்ஷ்னோத்யவ்ஸ் சமவர்த்தத
பத்ப்யாம் பூமிர் திஸஸ் ஸ்ரோத்ராத் ததா லோகான் அகல்பயன் -15-

நாபியில் இருந்து அந்தரிக்ஷம் —
தேகத்தில் நடுப்பகுதி நாபி -பூமிக்கும் மேல் லோகங்களுக்கும் நடுப்பகுதி ஆகாசம்
தலையில் இருந்து – மேல் ஏழு உலகங்கள்
பாதங்களில் இருந்து பூமி –கீழ் ஏழு உலகங்களும் —
பொருவில் சீர்ப் பூமி -தேஹத்தை தாங்கும் திருவடி
தரணி அனைவரையும் தாங்கும் -கேசவ நம்பியைக் கால் பிடிக்கும் பேற்றுக்கு பிறந்தவள் ஸ்ரீ பூமா தேவி அன்றோ

கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ்ப் புக்கு இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும் தடம் பெரும் தோள் ஆரத் தழுவும்
பார் என்னும் மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பாரே-

அரவாகிச் சுமத்தியால் ஆயில் எயிற்றின் ஏந்துதியால் ஓர் வாயின் விழுங்குதியால் ஓட அடியால் ஒளித்தியால் திருவான நிலமகளை

காதில் இருந்து திக்குகள் -சப்தத்துக்கு ஆதாரமான திக்குகள்

ததா -அப்படியே அண்டத்தில் உள்ள மற்ற லோகங்களையும் பரந்தாமனை அந்தர்யாமியாகக் கொண்ட நான்முகன் படைத்தான் –

———————————————-

வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமஸஸ்து பாரே –
சர்வானி ரூபாணி விசித்ய தீர நாமானி க்ருதவாபி வதன்ய தாஸ்தே -16-

இதுவும் அடுத்த மந்த்ரமும் அவன் வைபவம் வெளியிடும் –
அஹம் வேத்மி மஹாத்மானம் ராமம் ஸத்ய பராக்ரமம்

எல்லா சரீரங்களையும் படைத்து பெயர்களைக் கொடுத்து உச்சரித்துக் கொண்டு –
விகாரம் அற்று -ஸூர்யன் போன்ற வர்ணம் கொண்டு
பிரகிருதி மண்டலத்துக்கு அப்பால் -பராத்பரன் மேம்பட்ட இந்த பரப்ரஹ்மத்தை வேத புருஷன் ஆகிய நான் அறிகிறேன்

ப்ரக்ருதே பரஸ்தாத் ஜ்யோதி மஹா புருஷம் தமேவ நாராயணம் விதித்வா ம்ருத்யு சப்தம் சம்சாரம் அதிக்ரமாதி –
இவனை அறிந்தே சம்சாரம் தாண்டுவோம் –

பரமாத்மாவை அறிந்து பிறருக்கு அறிவிப்பதாலே வேதம் -நித்யம் -அபவ்ருஷேயம் -வேதனம் -உபாசனம்

ந சஷூஷா க்ருஹ்யதே –மனசா து விசுத்தேன-

என்றேனும் கட்கண்ணால் காணாத அவ்வுருவை நெஞ்சு என்னும் உட்கண்ணால் காணும் உணர்வு –

நேதி நேதி –க இத்தா வேத யத்ரச

ப்ரஹ்ம ருத்ர இந்திர பூதானாம் மனசா மப்ய கோசரம் –
நான்முகன் செஞ்சடையான் என்று இவர்கள் எம்பெருமான் தன்மையை யார் அறிகிற்பார்
ஸோ அங்க வேதயதி வா நவேத–தனக்கும் தன் தன்மை அறிவரியானை

யஸ்யாமதம் தஸ்ய மதம் –

புரி சேத -புருஷன் -ஆதி சேஷன் மேல் பள்ளி கொண்டு அருளுபவர் –

ஏதம் புருஷம் -அங்குஷ்ட மாத்ரம் புருஷ அந்தராத்மா சதா ஜனானாம் ஹ்ருதயே சந்நிவிஷ்ட

மஹாந்தம் -யஸ்மாத் பரம் நாபர மஸ்தி கிஞ்சித்

நதத்சமச்ச அப்யதிகச்ச த்ருச்யதே

தமீஸ்வரனாம் பரமம் மஹேஸ்வரம் தம் தேவதா நாம் பரமம் ஸ தைவதம்
ய ஏஷ அந்தராத்திய ஹிரண்மய புருஷ –ஸவிதுர் வரேண்யம் -மலர்க் கதிரின் சுடர் உடம்பாய்

தமச பரமோ தாதா சங்க சக்ர கதா தரா

————————————————–

தா தா புரஸ்தாத் யமுதா ஜஹார-சக்ர பிரவித்வான் ப்ராதிசச் சதஸ்ர-
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி -நான்ய பந்தா அயனாய வித்யதே -17-

பிரமன் இந்திரன் எட்டு திக்பல ரிஷிகள் எவரை த்யானம் செய்தார்களோ –
அந்த புருஷனை இம்மாதிரியான அறிபவன்
இந்த ஜென்மத்தில் முக்தி அடைகிறான் -மோக்ஷத்துக்கு வேறே வழி இல்லை –

யுக கோடி சஹஸ்ராணி விஷ்ணும் ஆராத்ய பத்மபூ –
புனைஸ் த்ரை லோக்யதாத் ருத்வம் ப்ராப்த வா நிதி சுச்ரும –

கள்வா எம்மையும் ஏழ் உலகும் நின் உள்ளே தோற்றிய இறைவ என்று
வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர் புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவரே –

நாயமாத்மா ப்ரவசநேந லப்ய –நமேதயா நபஹு நா ஸ்ருதேன யமேவைஷ வ்ருணுதே தேன லப்ய –
தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம் -ஸ் வேதார உபநிஷத்

ந கர்மணா ந ப்ரஜயா த நேந த்யாகேன ஏகேன அம்ருதத்வ மாநசு
நாஹம் வேதைர் ந தபஸா நதா நேந நசேஜ்யயா சக்ய ஏவம் வைத்தோ த்ரஷ்டும் த்ருஷ்ட்வா
நசிமாம் யதா பக்த்யா த்வன் அந்யயா சாக்ய அஹமேவம் விதோர்ஜுன -ஸ்ரீ கீதை –

——————————————————————

யஜ்ஜேன யஜ்ஞமயஜந்த தேவா —
தானி தர்மாணி பிரதமா ந்யாஸன்–
தேஹ நாகம் மஹிமா நஸ் ஸ சந்தே –
யத்ர பூர்வே ஸாத்யாஸ் சந்தி தேவா -18-

சாத்ய தேவர் -ப்ராப்யர் -நித்ய சூரிகள்
அர்த்தத்துடன் அனுசந்திப்பர்வர்கள் நித்ய ஸூரிகள் உடன் ஒரு கோவையாக ஸ்ரீ வைகுண்டம் அடைவார்கள் –
ஒளிக் கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ –
அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே-

ஸஹ யஜ்ஜை ப்ரஜாஸ் ஸ்ருஷ்ட்வா புரோவாச பிரஜாபதி –
அநேந ப்ரச விஷ்யத்வம் ஏஷ வோஸ்த்விஷ்ட காமதுக் -ஸ்ரீ கீதை –

——————————————————–

உத்தர அனுவாகம்

அத்யப்யஸ் ஸம்பூத ப்ருதிவ்யை ரசாச்ச-விஸ்வ கர்மணஸ் சமவர்த்ததாதி –
தஸ்ய த்வஷ்டா விததத் ரூபமேதி-தத் புருஷஸ்ய விஸ்வமாஜா நமக்ரே–1-

உலகம் ஜலத்தின் நின்றும் உண்டாயிற்று –
அன்ன ரசத்தினால் விருத்தி அடைகிறது –
பரம புருஷன் இடத்தில் இருந்து உண்டாயிற்று

புருஷோத்தமன் அத்தை தரித்துக் கொண்டு வியாபிக்கிறான் –
ஆகையால் அனைத்தும் அவனுக்கு சேஷம் என்று அறிந்தேன்

அத புநரேவ நாராயணஸ் சோன்யம் காமம் மனஸா த்யாயீதா –
தஸ்ய த்யா நாந்தஸ் தஸ்ய லலாடத் ஸ்வேதோ பதத்தா

இமா ஆப தத் ஹிரண்மய மண்ட மபவத்–மஹா உபநிஷத்

சங்கல்பம் செய்து -நெற்றி நீர்வை நீராக -அதில் இருந்து அண்டங்கள் உண்டாயின –

இதுவே அப ஏவ சசர்ஜா தவ் –ததண்ட மபவத் ஹைமன் -மனு ஸ்ம்ருதி –
தானோர் பெரு நீர் தன்னுள்ளே தோற்றி –

கிருஷ்ணஸ்ய ஹி க்ருதே பூதமிதம் விஸ்வம் சராசரம் –ஸ்ம்ருதி

விசிஷ்டாத்வைதம் வேதாந்தம் உட் பொருள்-என்றதாயிற்று –

——————————————————–

வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத்
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா வித்யதேவ நாய–2-

அவனே ப்ராப்யம்
ப்ராபகம்-
ரகஸ்யார்த்தம் மீண்டும் கோஷிக்கிறது ஆதராதிசயத்தாலே

————————————————-

பிரஜா பதிச் சாதி கர்ப்பே அந்த அஜாய மாநோ பஹுதா விஜாயதே –
தஸ்ய தீரா பரிஜா நந்தி யோநிம்-மரீசீ நாம் பதமிச்சந்தி வேதச —

புருஷோத்தமன் -அந்தர்யாமி -இச்சையால் திருவவதரிக்கிறான் –
அவதார ரகஸ்யம் அறிந்தார்
நித்ய ஸூரிகள் உடன் கோவையாக இப் பிறவியில் அடைகிறார்கள்
ஸுலப்யம் காட்டி அருளினான் அன்றோ –

ஹசிதம் பாஷிதம் சைவ –
பாவோ நான்யத்ர கச்சதி –
ஸம்ஸ்ப்ருஸ் யாக்ருஷ்ய ஸ ப்ரீத்தியா ஸூ காடம் பரிஷஸ் வஜே

அஜாயமானோ பஹுதா விஜாயதே –அஜோபிசன் –சம்பவாமி –
பிறப்பில் பல் பிறவிப் பெருமான் -ஜனி ஜராதி சகல துரித தூர –
ஜன்மம் பல பல செய்து -விசேஷமாக -ஆதியம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்த –

ஆவிர்ப்பூதம் மஹாத்மனா –ஜென்ம கர்ம ஸ மே திவ்யம் -ஏவம் யோ வேத்தி தத்த்வத

த்யக்த்வா தேஹம் புனர் ஜென்ம நைதி மா மேதி சோர்ஜுனா–ஸ்ரீ கீதை –

ராஜாதி ராஜஸ் ஸர்வேஷாம் விஷ்ணுர் ப்ரஹ்ம மயோ மஹான் ஈஸ்வரம் தம் விஜா நீம ஸ பிதா ஸ பிரஜாபதி –
எத்திறம் -மோஹிப்பர் –
பிறந்தவாறும் இத்யாதி –
அறிந்தவர்கள் தீரர்கள் -அறியாதார் மூடர்கள்
வானவர் நாடு குடி இருப்பாரோபாதி யாயிற்று அங்கு அவனுக்கு இருப்பு –
நித்ய ஸூரிகள் இட்ட வழக்காய் இருக்கும் –

——————————————

யோ தேவேப்ய ஆதபதி யோ தேவாநாம் புரோஹித –
பூர்வோ யோ தேவேப்யோ ஜாத நமோ ருசாய ப்ராஹ்மயே -4-

நித்யர்களுக்கு பிரகாசிப்பவர் –
பரப்ரஹ்ம ஸ்வரூபி –
அயர்வரும் அமரர்கள் அதிபதி –
இமையோர் தலைவா –
வானவர் அதிபதி என்கோ-வானவர் தெய்வம் என்கோ -வானவர் போகம் என்கோ -வானவர் முற்றும் என்கோ –
பக்தானாம் த்வம் ப்ரகாஸசே–
ஒளி மணி வண்ணன் –

——————————————————————

ருசம் ப்ராஹ்மம் ஜநயந்த தேவா அக்ரே ததப்ருவன்-
யஸ் வைவம் ப்ராஹ்மணோ வித்யாத் தஸ்ய தேவா அசந்வசே -5-

ப்ரஹ்ம ஞானிகள் அவனை அறிந்து நம-
அநந்ய பிரயோஜனர்கள் –
ப்ரஹ்மாதி தேவர்கள் இவர்கள் வசம் –
அவனது முகோலாசத்துக்காக கைங்கர்யம் –

ஸ்வ புருஷம் அபி வீஷ்யே பாச ஹஸ்தம் வததி யம கில தஸ்ய கர்ண மூல –பரிஹர மது ஸூதன
ப்ரபந்நான் பிரபுரஹம் அந்நிய ந்ருணாம் நவைஷ்ணவா நாம் –

நமனும் தான் தூதுவரை கூவிச் செவிக்கு -நாவலிட்டுழி தருகின்றோம் நமன் தமர் தலைகள் மீதே
வள்ளலே உன் தமர்க்கு என்றும் நமன் தமர் கள்ளர் போல் -என் தமர் நமன் தமரால் ஆராயப்படார் காண்-
நமன் தமர் என் தமரை வினவப் பெறுவர் அலர் –
பிஞ்சகன் தன்னோடும் எதிர்வன் அவன் எனக்கு நேரான்-

————————————————————————-

ஹ்ரீச்ச தே லஷ்மீச்ச பத்ன்யவ் அஹோராத்ரே பார்ச்வே நக்ஷத்ராணி ரூபம்
அஸ்வினவ் வ்யாத்தம் -இஷ்டம் அநிஷாண அமும் மநிஷாண சர்வம் அநிஷாண -6-

கைங்கர்யம் மிதுனத்துக்கு இறே-பிராட்டிமார் கொண்டே அவனுக்கு நிரூபகம்

வேதாந்தா தத்வ சிந்தாம் முரபி துரசி யத் பாத சின்ஹைஸ் தரந்தி–ஸ்ரீ பராசர பட்டர்

திருவின் நாயகன் -நிலமகள் நண்பன் -ஆயர் மடமகள் அன்பன் –
குழல் கோவலர் மடப்பாவையும் மன் மகளும் திருவும் –
குற்றத்தை பொறுப்பிக்கும் பெரிய பிராட்டி –
பொறுப்பான் என் என்று இருக்கும் பூமி பிராட்டி –
ஷமையே வடிவான நீளா தேவி

பெரிய பிராட்டி அவனுக்கு சம்பத் –
பூமி பிராட்டி அது விளையும் ஸ்தலம் –
அதனை அனுபவிக்கும் போக்தா நீளா தேவி -நப்பின்னை பிராட்டி

ந கச்சின் ந அபராத்யதி -என்னும் ஸ்ரீ தேவி
குற்றமே இல்லையே காணா கண் இட்டு இருக்கும் பூமா தேவி
ஷமயா ப்ருத்வீ சம

யஸ்யா வீஷ்யா முகம் தத் இங்கித பராதீநோ விதத்தேகிலம் –ஸ்ரீ கூரத் தாழ்வான்

உடன் அமர் காதல் மகளிர் திருமகள் மண் மகள் ஆயர் மட மகள் என்று இவர் மூவர் -நிழல் போல்வனர்-

தேவிமாரவர் திருமகள் பூமி ஏவ மாற்று அமரர் ஆட் செய்வார்

தேவ்யா காருண்ய ரூப்யா-

இஷ்டம் மநிஷாண –கைங்கர்ய பிரார்த்தனை –

——————————————————–

புருஷஸ்ய ஹரேஸ் ஸூக்தம் ஸ்வர்க்யம் தன்யம் யசஸ்கரம்–
ஸ்ருதிஷூ பிரபலா மந்த்ராஸ் தேஷ்வப்யத் யாத்ம வாதிந-
தத்ராபி பவ்ருக்ஷம் ஸூக்தம் ந தஸ்மாத் வித்யதே பரம் –
ந விஷ்ணுவா ராதநாத் புண்யம் வித்யதே கர்ம வைதிகம் –
தஸ்மாத் அநாதி மத்யாந்தம் நித்யம் ஆராதயேத் ஹரிம்
தத் விஷ்ணோர் இதி மந்த்ரேண ஸூக்தேன பவ்ருஷேண
ஸ நை தஸ்ய சத்ருஸோ மந்த்ர வேதேஷூக்தச் சதுர்ஷ்வபி-

————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திவ்ய தேச அனுபவம் –பாண்டிய நாடு -வட நாடு -திரு நாடு -ஸ்தல மாஹாத்ம்ய விளக்கம் –ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் —

November 19, 2016

78-திருக் குறுங்குடி
மூலவர் -வைஷ்ணவ நம்பி -குறுங்குடி நம்பி -நின்ற திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -குறுங்குடி வல்லி நாச்சியார்
விமானம் -பஞ்சகேதாக விமானம்
தீர்த்தம் -திருப் பாற் கடல்
மங்களா சாசனம் -திரு மழிசை ஆழ்வார் -நம்மாழ்வார் -பெரியாழ்வார் -திருமங்கை ஆழ்வார் –

மகேந்திர கிரி —ஏழு சிகரங்கள் உடன் கூடிய இது வாமன க்ஷேத்ரம் -குறுகியவனுடைய குடில் –ஆகியபடியால் குறுங்குடி –
மிகப் பிரசித்தமான நம் பாடுவான் சரித்திரம் கைசிக ஏகாதசி அன்று இந்த ஷேத்ரத்தில் நடை பெற்றது –
இன்றும் நம் பாடுவானின் வம்சஸ்தவர்களால் அந்த சரித்திரம் கைசிக ஏகாதசி அன்று இரவு பெருமானின் முன்னிலையில் அரங்கேற்றப் படுகிறது –
உடைய நங்கையார் திருக் குறுங்குடி நம்பியைப் பிரார்த்தித்துப் பெருமாளையே நம்மாழ்வாராகப் பெற்றவர் –
திரு மங்கை ஆழ்வார் இந்த ஷேத்ரத்தில் இருந்து பரமபதத்து எழுந்து அருளினார் -அவரின் திரு வரசு இங்கு உள்ளது –
திருக் குறுங்குடி நம்பி ஐந்து நம்பிகளாக சேவை சாதிக்கிறார் -ஸ்ரீ ராமானுஜர் இடம் இருந்து உபதேசம் பெற்ற படியால்
அவருக்கு கர்ப்பக்கிருகத்தில் சிறப்பாக ஒரு சிங்காசனம் உள்ளது
அனைத்து பகவான்களும் விஷ்ணு என்று போற்றப்பட இவர் மட்டுமே ஸ்ரீ வைஷ்ணவ நம்பி -என்று அழைக்கப் படுகிறார் -வட்ட பாறை –
அண்ணல் ராமா னுசன் வந்து தோன்ற அப்பொழுதே –ஆளாயினர் –
லாவண்யம் –நம்பியை நான் கண்ட பின் –நெஞ்சம் நிறைந்ததே -பக்கம் நின்றார் -சிவ பெருமான் அருகில் –
நம்பி ஆறு -ஓடுகிறது – தக்ஷிண சிந்து -திருப் பாற் கடல் –
அறிய கற்று வல்லவர் வைஷ்ணவர் ஆவார் ஆழ் கடல் ஞாலத்துள்ளே –

———————————————————————————————-

79-ஸ்ரீ வர மங்கை –வானமா மலை
மூலவர் — தோத்தாத்ரி நாதன் -வீற்று இருந்த திருக் கோலம் / கிழக்கே திரு முக மண்டலம்
உத்சவர் -தெய்வ நாயகன்
தாயார் -ஸ்ரீவர மங்கை
விமானம் -நந்த வர்த்தக விமானம்
தீர்த்தம் -இந்த்ர புஷ்கரிணி -சேற்றுத் தாமரைக் குளம்
மங்களா சாசனம் -நம்மாழ்வார்

ஸ்ரீ வர மங்கை -வான மா மலை -நான்கு நேரி -தோத்தாத்ரி -பழ பெயர்கள் உண்டு
ஸ்ரீ வர மங்கை த் தாயார் பெயராலே தான் இந்த க்ஷேத்ரம் விளங்குகிறது
ஸ்ரீ வைகுண்டத்தில் எழுந்து அருளி இருப்பது போலே பகவான் இங்கும் ஸ்ரீ தேவி பூ தேவி சமேதராக
வீற்று இருந்த திருக் கோலத்தில் ரோமச முனிவர்க்கு காட்சி அளித்தார்
ஏழு ஸ்வயம் வ்யக்த க்ஷத்ரங்களில் இதுவும் ஓன்று –
பொன்னடிக்கால் ஜீயர் -ஒண்ணாம் ஜீயர் -1447 -கனு பொடி -நாச்சியார் -ஜீயர் மேடம் எழுந்து அருளுவார்
துததி —போக்கி -விடுகிறார் -தோத்தாத்தாரி
எண்ணெய் கிணறு பிரசித்தம் -மிளகாய் கூடாதே -மிளகு தான் -ஒரு கோட்டை எண்ணெய் காப்பு உத்சவம்
திரு விதாங்கூர் ராஜா -எறும்புகள் காட்டி -புனர் நிர்மாணம் –
அப்பொழுது தலையில் காயம் பட -எண்ணெய் வைக்க ஆரம்பம்
தாயார் திரு மலையில் இருந்து பொன்னடிக்கு கால் ஜீயர் மூலம் இங்கே வந்தார்
சூர்ய சந்திரர் நித்யர்
பிருகு மார்க்கண்டேயர் ஸ்ரீ தேவி பூ தேவி இருவரும்
தொடை ஊர்வசி திலோத்தமை -போட்டி சாமர கைங்கர்யம் இருவரும் செய்ய
உதார குணம் – -ஆறு எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய் –

————————————————————————————

80-நவ திருப்பதிகள் –ஸ்ரீ வைகுண்டம் –
மூலவர் -கள்ளப் பிரான் –ஸ்ரீ வைகுண்ட நாதன் -நின்ற திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -வைகுண்ட வல்லி -பூ தேவி
விமானம் -சந்த்ர விமானம்
தீர்த்தம் -ப்ருகு தீர்த்தம் -தாமிர பரணி நதி
மங்களா சாசன -நம்மாழ்வார்

நின்ற திருக் கோலம் -ஆதி சேஷன் குடை பிடிக்க சேவை சாதிக்கிறார்
சோமகன் அசுரன் பிரமன் இடம் ஸ்ருஷ்டி ரகஸ்யம் திருடிக் கொண்டு போக பிரமன் இங்கே வந்து நீண்ட த்வம் இயற்றி
மீண்டும் பகவான் இடம் இருந்து ஸ்ருஷ்டி ரகசியங்களை பெற்றார்
கால தூஷகன் என்ற திருடன் தான் திருடிய பொருள்களின் பாதியை இந்தப் பெருமாளுக்கு சமர்ப்பிப்பான்
அரண்மனையில் திருடும் பொழுது பிடிபட்டு கள்ளப் பிரான் என்ற திரு நாமம் பெற்றார் –
நின்ற திருக் கோலம் -ஆதி சேஷன் பீடம் –புளிங்குடி கிடந்தது –இருந்து -வைகுந்தத்தில் நின்று தெளிந்த என் சிந்தை-

—————————————————————————————

81- திருவர குண மங்கை
மூலவர் -விஜயாசனர் -வீற்று இருந்த திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -வர குண வல்லி த் தாயார்
விமானம் -விஜய கோடி விமானம்
தீர்த்தம் -அக்னி தீர்த்தம் -தேவ புஷ்காரிணி
மங்களா சாசனம் -நம்மாழ்வார்

ஆஹ்வான ஹஸ்தம்
எம் இடர் கடிவான்
புண்ய கோச ஊரைச் சேர்ந்த வேதவித் என்னும் அந்தணன்
இங்கு இருந்து மந்த்ர ஜபம் செய்ய அவர் பிரார்த்தனை படி பெருமாள் அமர்ந்த திருக் கோல சேவை
ரோமசர் முனிவர் -சத்யவான் -பாம்பு கடித்து வைகுண்டம் போக -மீன் பிடிப்பவனாக இருந்தாலும் -திவ்ய தேச மஹிமை
நத்தம் -பெயர் பிரசித்தம் இதற்கு –

——————————————————————————

82-திருப் புளிங்குடி
மூலவர் -காய்ச்சின வேந்தன் / புஜங்க சயனம் -கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -மலர் மகள் நாச்சியார்
விமானம் -வேத சார விமானம்
தீர்த்தம் -வருண தீர்த்தம்
மங்களா சாசனம் -நம்மாழ்வார் –

இந்திரனுக்கு ப்ரஹ்ம ஹத்தி தோஷம் ஏற்பட்டு இங்கு வந்து தோஷம் நீங்கி ஒரு யாகம் புரிந்தார் –
அதே சமயம் வசிஷ்டர் திருக் குமாரர் – சக்தி என்னும் ரிஷியால் சபிக்கப்பட்ட யஜ்ஜ சர்மா அந்த யாகத்தை அரக்கர் உருவில் தடுக்க முற்பட்டான் –
பெருமாள் அரக்கனை அழிக்க இருவருக்கும் காட்சி கொடுத்தார் -காயும் சினம் என்றுமாம்
புளிங்குடி கிடந்தது வரகுண மங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று -மங்களா சாசனம் –
பூமி பாலன் -/ திருவடி -பிரகாரத்தில் சாளரம் வழியே சேவை -பிடிக்க ஒரு நாள் கூவுதல் வருதல் செய்யாயே
கூப்பிடும் தூரம் -கூவுதல் வருதல் -எம்பெருமானார் -ஆழ்வார் பாசுரம் வைத்து வழி சொன்ன சிறுமி
போக்ய பாக த்வரை –அஹம் அன்னம் -பக்வமாவதை எதிர்பார்த்து நின்று இருந்து கிடந்தும்

—————————————————————————————

83-திருத் தொலை வில்லி மங்கலம்–இரட்டைத் திருப்பதி
மூலவர் -அரவிந்த லோசனன் -செந்தாமரைக் கண்ணன் / வீற்று இருந்த திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -கருந்தடங்கண்ணி நாச்சியார்
விமானம் -குமுதா விமானம்
தீர்த்தம் -வருண தீர்த்தம் –தாமிரபரணி ஆறு
மங்களா சாசனம் -நம்மாழ்வார்

மூலவர் -தேவபிரான் / ஸ்ரீ நிவாஸன் / நின்ற திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -உபய நாச்சிமார்
விமானம் -குமுதா விமானம்
தீர்த்தம் -வருண தீர்த்தம் -தாமிரபரணி ஆறு
மங்களாசாசனம் -நம்மாழ்வார்

ஸூப்ரபர் -என்ற முனிவர் யாக சாலை ஏற்படுத்தி அதைச் சோதிக்கும் பொழுது அவ்விடத்தில் மிகவும்
பிரகாசமான தராசும் வில்லும் கண்டு எடுத்தார்
தராசு ஒரு பெண்ணாகவும் -வில் ஒரு புருஷனாகவும் உருமாறினார் –
குபேரன் சாபத்தில் இருந்து விடுபட்ட துலை -தராசும் வில்லும் முக்தி அடைந்ததால் துலை வில்லி மங்கலம் என்ற
பெயர் ஏற்பட்டதாக ஸ்தல வரலாறு கூறும்
அஸ்வினி தேவதைகள் இங்கு த்வம் இருந்து அருள் பெற்றார்கள் -நவ திருப்பதிகள் கணக்கில் இவை இரண்டாக கொள்ளப்படும் –
திருக் கண்ண புரம் திருமங்கை ஆழ்வாருக்கு போலே இந்த திவ்ய தேசம் நம்மாழ்வாருக்கு –
அப்பன் கோயில் -அவதாரம் –
வித்யாதரனும் மனைவியும் சாபத்தால் தராஸாகவும் வில்லாகவும் -கலப்பையால் தீண்டி சாப விமோசனம் –

சிந்தையாலும் சொல்லாலும் செயலாலும் தேவ பிரானையே தந்தை தாயாக அடைந்த –
இருந்து இருந்து அரவிந்த லோசன் என்றே நைந்து நைந்து -இரங்குமே
ஸூ ப்ரவர் பூ பறிக்க -பெருமாளும் பின் தொடர்ந்து உதவ -திருக்கை பூவா திருக்கண் பூவா –
கருணை பொழியாதே -தாமரை –
அஸ்வினி தேவைதைகள் -மருத்துவர்கள் —
5 திருநாள் நவ கருட சேவை -6 நாள் காலையில் பிரியா விடை -கண் பார்வை மறையும் வரை குறுக்கே யாரும் வராமல் இன்றும் –
தொழும் அத்திசை உற்று நோக்கியே –
மாசி அத்யயயன உத்சவம் –பாசுரம் தொடக்கம் ஆழ்வார் எழுந்து அருளி –

———————————————————————————–

84-திருக் குளந்தை -பெருங்குளம்
மூலவர் -சோர நாதன் -நின்ற திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம்
உத்சவர் -நாயக் கூத்தன்
தாயார் -குளந்தை வல்லி
விமானம் -ஆனந்த நிலைய விமானம்
தீர்த்தம் -பெருங்குள தீர்த்தம்
மங்களா சாசனம் -நம்மாழ்வார் –

வேத சாரனுக்கும் குமுத வல்லிக்கும் கமலாவதி பெண் பிறக்க -பெருமாள் அவளைத் திரு மணம் புரிந்தார் –
ஒரு முறை குமுத வல்லியை அஸ்மாசுரன் என்ற அசுரன் சிறை பிடிக்க பகவான் அவனை வாதம் செய்து அவன் மேல்
நர்த்தனம் ஆடியபடியால் மாயக் கூத்தன் எனப் பெயர் ஏற்பட்டது –
தை பூசம் -திருவவதாரம் -கருடன் உத்சவ மூர்த்தி -பெருமாள் வர்ண கலாபம் திருமேனி

——————————————————————————————-
85-திருக் கோளூர்
மூலவர் -வைத்த மா நிதி -நிஷேபவித்தன்-புஜங்க சயனம் –கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -குமுத வல்லி –கோளூர் வல்லி
விமானம் -ஸ்ரீ கர விமானம் –லஷ்மி சம்பத் விமானம் –
தீர்த்தம் -குபேர தீர்த்தம் -தாமிர பரணி ஆறு
மங்களா சாசனம் -நம்மாழ்வார் –

மதுரகவி ஆழ்வார் திருவவதார ஸ்தலம் -குபேரன் பார்வதி தேவியைத் தவறான பார்வையில் பார்க்க பார்வதி தேவி
அவனிடம் இருக்கும் நவ நிதிகளும் காணாமல் போகட்டும் என்றும் -உருவத்தில் விகாரம் ஏற்படட்டும் என்றும் சபித்தாள்
-குபேரன் தபஸ் செய்து தொலைத்த நவ நிதியையும் பெற்றான் -இதனாலே நிஷேபவித்தன் -என்ற பெயர் –
தர்ம சமஸ்தானம் பண்ண பிரார்த்திக்க இங்கே ஆவிர்பவித்தான் என்றவாறு
ஸூ ரஷித்தமாக வைத்த மா நிதி -நித்தியமாக வைத்த மா நிதி -பக்தி குறையாமல் -அருளுவார்
மாசு சுக்ல பக்ஷ துவாதசி ஆவிர்பாவம் -உண்ணும் சோறு –எல்லாம் கண்ணன் –
திருக் கோளூர் பெண் பிள்ளை வார்த்தை 81 – வார்த்தைகள் -ரகஸ்யம் -எம்பெருமானார் அமுது செய்தார் இவள் க்ருஹத்தில்

————————————————————————————-
86-தென் திருப்பேரை
மூலவர் -மகர நெடும் குழைக் காதன் -நிகரில் முகில் வண்ணன் -வீற்று இருந்த திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -குழைக் காத வல்லி –திருப் பேரை நாச்சியார்
விமானம் -பத்ர விமானம்
தீர்த்தம் -சுக்ர புஷ்கரிணி -சங்க தீர்த்தம்
மங்களா சாசனம் -நம்மாழ்வார்

பகவான் பூ தேவியிடம் மிகவும் அன்பு காட்டுவதாக ஸ்ரீ தேவி வருந்த -அவளைச் சமாதானப் படுத்த நினைத்தார் துர்வாசர் –
ஒரு முறை பூ தேவி துர்வாசரை சரியாக கௌரவிக்காதலால் அவர் சபிக்க பூ தேவி தன் நிறத்தை இழந்தார்
தன் சாபம் தீர பூ தேவி இந்த ஷேத்ரத்தில் த்வம் புரிய தாமிரபரணி ஆற்றில் அழகான மகர -மீன் குண்டலங்கள்
மிதந்து வர அதை பகவானுக்கு சமர்ப்பித்து சாபம் தீர பெற்றார் –
இதனாலே -பெருமாளுக்கு –மகர நெடும் குழைக் காதன்-என்ற திரு நாமம் –
கோயில் அடி வட திருப்பேர் நகர் -இது தென் திருப்பேர்
மஹா லஷ்மி சரீரம் -என்றவாறு -செய்யாள் –இவள் கரும் பச்சை -மாறி இவளையும் செய்யாள் ஆக்கி -தபஸ் பண்ணி -மீண்டும் –
மஹா லஷ்மி வர்ணம் கொண்டு தபஸ் பண்ணினதால் இந்த பெயர்
வருண ஜபம் முக்கியம் -நிகரில் முகில் வண்ணன் -வருணனும் இங்கு வந்து வரம் பெற்றார்
கருட சந்நிதி ஒதுங்கி -விளையாட்டு ஒலி அறா திருப் பேர் நகர்
திருக் குறுங்குடியில் நம் பாடுவானுக்காக ஒதுங்கி
ஏசல் -கருட சேவை பிரசித்தம் -ஆழ்வார் திரு உள்ளத்தில்-
108 ஸ்ரீ வைஷ்ணவனாக பெருமாளே வந்து அரசன் ததீயாராதனம் ஏற்ற பெருமாள்

———————————————————————————————————–

87-திருக் குருகூர் –ஆழ்வார் திருநகரி
மூலவர் -ஆதி நாதர் -ஆதி பிரான் -நின்ற திருக் கோலம் -கிழக்கே திருமுக மண்டலம்
உத்சவர் -பொலிந்து நின்ற பிரான்
தாயார்- ஆதி நாத வல்லி -குருகூர் வல்லி
விமானம் -கோவிந்த விமானம்
தீர்த்தம் -பிரம்ம தீர்த்தம் -தாமிர பரணி ஆறு –
ஸ்தல வ்ருக்ஷம் –திருப் புளி யாழ்வார்
மங்களா சாசனம் -நம்மாழ்வார்

நம்மாழ்வார் திருவவதார ஸ்தலம் –பிரமனுக்கு சிறந்த த்வம் செய்யும் இடமாக திருமால் இந்த திவ்ய க்ஷேத்ரத்தைக் காட்டினார்
பிரமனுக்கு மதர்ச்சனம் குரு -என்று குரு தூண்டிய படியால் குருகூர் ஆயிற்று –
ஆதி சேஷன் திருப் புளியமரம் -விஷ்வக் சேனரே ஆழ்வாராக திருவவதாரம்
மதுரகவி ஆழ்வார் ஆழ்வாரின் அர்ச்சா திரு மேனி வேண்ட அவருக்கு தாமிரபரணி தீர்த்தத்தை காய்ச்சுமாறு ஆழ்வார் பணிக்க
-பவிஷ்யதாசார்ய விக்ரஹம் தோன்றிற்று
பின்பு தான் இன்று நாம் சேவிக்கும் நம்மாழ்வார் அர்ச்சா திரு மூர்த்தி தோன்றிற்று –
எச்சில் இலை உண்ட நாய் -யோகி -கண்டு -நாய்க்கும் பரம பதம் அளித்தாய்-பேய்க்கும் அளிக்க கூடாதோ
உத்சவருக்கும் மங்களா சாசனம் –
குருகன் மன்னன் ஆண்ட ஸ்தலம்
தாந்தன்–க்ஷேத்ரம் –அவன் அப்பன் கோயில் சென்று ஆராதனம்
5117 வருஷமாக புளிய மரம்
அப்பன் கோயில் சங்கு பால் அமுது -வெண்ணெய் உண்ணும் திருக் கோலம் -தவழ்ந்து வந்து
பராங்குசன் –பரர்களுக்கும் பரனுக்கும் / சடகோபன் -சதா வாயுவை கோபித்து கொண்டவர்
மாறன் உலக இயல்பில் மாறி -யுக வர்ண க்ரமம் -அத்ரி -தத்தாத்ரேயர் முதலில் -பின்பு ஷத்ரிய வைசியர் –
ராமன் கண்ண
செத்தத்தில் வயிற்றிலே சிறியது பிறந்தால் எத்தை தின்னு எங்கே கிடக்கும் -அத்தை தின்று அங்கே கிடக்கும் –
திருச் சங்கு அணித்துறை-தீர்த்தவாரி -கடலில் இருந்து நதியில் எதிர்த்து வந்து சேவித்து திரும்பி –
கொசித் கொசித் –இவர் ஆவிர்பாவம் ஸ்ரீ மத் பாகவதம் ஸூ சிதம்
திருவாயமொழிப் பிள்ளை புனர் நிர்மாணம் -மணவாள மா முனிகள் திரு அவதார ஸ்தலம்

—————————————————————————-

88-ஸ்ரீ வில்லி புத்தூர்
மூலவர் -வடபத்ரசாயி -புஜங்க சயனம் -கிழக்கே திருமுக மண்டலம்
உத்சவர் -ரெங்க மன்னார்
தாயார் -ஆண்டாள்
விமானம் -சாம்சன் விமானம்
தீர்த்தம் -திரு முக்குலம்
மங்களாசானம் -பெரியாழ்வார் ஆண்டாள்

பெரியாழ்வார் ஆண்டாள் திருவவதார ஸ்தலம் –
ஆண்டாள் ரெங்க மன்னார் திருக் கல்யாணக் கோல சேவை
ஆண்டாள் பெருமாள் பெரிய திருவடி சேவை –
வடபத்ர சாயி ஆதிசேஷன் மேலே பள்ளி கொண்டு அருளுகிறார்
வில்லி கண்டன் -இருவர் வேட்டையாடச் செல்ல – கண்டன் மறித்து விட -வில்லி பெருமாளை வருத்தத்துடன் வேண்ட
பகவான் அவனை இந்த க்ஷேத்ரத்தை நிர்மாணிக்கச் சொல்லி
இது அவன் பெயரிலேயே ஸ்ரீ வில்லி புத்தூர் -என்று அழைக்கப் படும் என அருளினார் –
ஆண்டாள் கண்டு எடுக்கப்பட்ட திருத் துளசிச் சோலையின் அருகில் ஆண்டாள் சந்நிதியும்-
-வட பத்ர சாயி கோயிலிலே பெருமாள் சந்நிதியும் உள்ளது –
வண்டு அன்னம் -பெரியாழ்வார் ஆண்டாள் இருவரும் -மங்களா சாசனம் பாசுரம்
காட்டு அழகர் சூதபா முனிவர் மண்டூகம் சாபம்
கங்கா யமுனா சரஸ்வதி -மூவரும் -நீராட்ட உத்சவம் திரு முக்குளம்
தமிழ் அரசு சின்னம் திருக் கோபுரம் -பெரிய -தேர் பிரசித்தம்
நூறு தடா வெண்ணெய் அக்கார அடிசில் -ஐ திக்யம் – கோயில் அண்ணன் –
———————————————————————————————————-

89-திருத் தங்கல்
மூலவர் -நின்ற நாராயணன் -நின்ற திருக் கோலம் -கிழக்கே திருமுக மண்டலம் -வர்ண கலாபம்
உத்சவர் -திருத் தங்கல் அப்பன்
தாயார் -செங்கமலத் தாயார் –ஜாம்பவதி -தாயார் நின்ற திருக் கோலம் —
விமானம் -தேவச் சந்த்ர விமானம்
தீர்த்தம் -பாப விநாச தீர்த்தம் -பாஸ்கர சங்க தீர்த்தம் –
மங்களா சாசனம் -பூதத்தாழ்வார் -திருமங்கை யாழ்வார்

சிறு குன்று திருக் கோயில் -ஸ்ரீ தேவி -பூ தேவி -நீளா தேவி –ஜாம்பவதி –செங்கமலத் தாயார் -ஐந்து பேர் உடன் நின்ற நாராயணன் சந்நிதி –
தாயார் இங்கு தங்கி த்வம் இருந்து திருமாலை அடைந்த படியால் -திருத் தங்கல் –தங்கால மலை -என்று அழைக்கப் படுகிறது –
அநிருத்தனுக்கும் பாணாசுரனுக்கும் பெண்ணான உஷாவிற்கும் திரு மணம் நடந்த இடம் –
பள்ளி கொண்ட பெருமாள் கீழே சேவை –
சத்ரஜித் -சத்யவதி -ஜாம்பவான் -ஜாம்பவதி -ஜமந்தக மணி தேடி இருவரையும் பெற்றான் கண்ணன்
ஆலிலைக்கும் ஆதி சேஷனுக்கும் போட்டி -தபஸ் -ஆதி சேஷனுக்கு சாம்யம் பெற்றது –

—————————————————————————————-

90-திருக் கூடல் -மதுரை
மூலவர் -கூடல் அழகர் -வீற்று இருந்த திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம்
உத்சவர் -வ்யூஹ ஸூந்தர ராஜப் பெருமாள்
தாயார் -மதுர வல்லி –வகுள வல்லி
விமானம் -அஷ்டாங்க விமானம்
தீர்த்தம் -ஹேம புஷ்கரிணி / சக்ர தீர்த்தம் -/ க்ருதமாலா மற்றும் வைகை நதிகள்
மங்களா சாசனம் -திரு மங்கை யாழ்வார் / பொய்கை ஆழ்வார்

க்ருத யுகத்தில் பிரமனின் புதல்வனாலும் -த்ரேதா யுகத்தில் -ப்ருது மஹா ராஜாவால் –தபார யுகத்தில் அம்பரீஷனாலும் –
கலி யுகத்தில் ப்ரூருவ மன்னராலும் ஆராதிக்கப் பட்டவர் –
பாண்டிய மன்னன் -பர தெய்வம் யார் என்று -கேட்க -வல்லப தேவன் -பரத்வ நிர்ணயம் -செல்வ நம்பி அமைச்சர் –
பொற் கிழி கீழே தாழ்ந்தது
பெரியாழ்வாரை மன்னன் யானை மேலே ஏற்றி ஊர்வலம் போக ஆகாயத்தில் பகவான் தோன்றினார் –
யானை மேல் இருக்கும் மணியை எடுத்து -பல்லாண்டு அருளிச் செய்தார்
திருப் பல்லாண்டு திருவவதரித்த திவ்ய க்ஷேத்ரம் இது –
வையை -ஆகாசத்தில் இருந்து இங்கே வந்து -வைகை –
-மாலையாக வட்டமாக ஓடுவதால் க்ருதமாலா
விஸ்வகர்மா நிர்மாணித்த திருக் கோயில்
இந்த்ராஜுத்மன்னன் –மலையதமன்னன் -மீன் கொடி -மூன்று தளம் அஷ்ட அங்கம் –

—————————————————————————

91 – திருமாலிருஞ்சோலை மலை
மூலவர் – கள்ளழகர் -ஸூந்தர ராஜப் பெருமாள் -பரம ஸ்வாமி -நின்ற திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -ஸூந்தர வல்லி
விமானம் -சோம ஸூந்தர விமானம்
தீர்த்தம் -நூபுர கங்கை -சிலம்பாறு –
ஸ்தல வ்ருக்ஷம் -சந்தன வ்ருக்ஷம்
மங்களா சாசனம் -பூதத்தாழ்வார் -பேயாழ்வார் -நம்மாழ்வார் -பெரியாழ்வார் -ஆண்டாள் -திரு மங்கையாழ்வார்

மூலவரும் உத்சவரும் பஞ்ச திவ்ய ஆயுதங்கள் உடன் சேவை -எம தர்ம ராஜன் இங்கு த்வம் இயற்றிய படியால்
-வ்ருஷபாத்ரி -என்ற பெயரும் உண்டு -யமனுக்கு பெருமாள் ஸூந்தர ராஜனாகக் காட்சி அளித்தார் –
உத்சவர் திரு மேனி சொக்கத்த தங்கத்தினால் ஆக்கப்பட்டது -பாராஞ்சி -அபராஞ்சி –
-கண்ணை சுமட்டி விசில் அழைத்து கூப்பிடும் உத்சவர் என்பர் கூரத் ஆழ்வான்
நூபுர கங்கை தீர்த்தம் கொண்டே திரு மஞ்சனம் –
த்ரி விக்ரமனாக உலகு அளந்த பொழுது பிரமனின் கமண்டல தீர்த்த துளி பெருமாள் -தண்டை நூபுரம் மேல் விழ
-அதுவே நூபுர கங்கை -சிலம்பாறு -வனகிரி பரிபாடல் சொல்லும் –
18 படி கருப்பண்ண ஸ்வாமி காவல் தெய்வம் -மலையாளி தந்த்ரிகள் மயக்க –
ஐப்பசி சுக்ல பக்ஷம் துவாதசி தொட்டி திரு மஞ்சனம் பிரசித்தம் –
சித்ரா பவ்ரணமி வைகை ஆற்றில் இறங்கும் உத்சவம் பிரசித்தம் -மீனாட்சி கல்யாணம் -மாசி மாதம் முன்பு
-இப்பொழுது ஒன்றாக நடக்கிறது சைவ வைஷ்ணவ ஒற்றுமைக்கு
பிரயோக சக்கரம் மூலவர் –உத்சவர் தான ஹஸ்தம் –சுந்தர தோளுடையான்-

———————————————————————————————————–

92–திருமோகூர்
மூலவர் -காளமேகப் பெருமாள் / நின்ற திருக் கோலம் /கிழக்கே திருமுக மண்டலம்
உத்சவர் -திரு மோகூர் ஆத்தன்
தாயார் -மோகூர் வல்லி -மோகன வல்லி
விமானம் -கேதகி விமானம்
தீர்த்தம் -ஷீராப்தி புஷ்கரணி
மங்களாசாசனம் -நம்மாழ்வார்-10-1- -திருமங்கை ஆழ்வார் -காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் –

மோஹினி அவதாரம் எடுத்து அமிருதம் கொடுத்த வூர் -மோஹன புரி -மோஹன க்ஷேத்ரம் -மோகூர் –
புலஸ்திய மகரிஷி த்வாபர யுகத்தில் இங்கிருந்து த்வம் புரிந்து பில்லை பேறு பெற்றார்
நம்மாழ்வார் வழித்துணை பெருமாள் -என்பர் -பஞ்சாயுதங்கள் உடன் சேவை –
சக்கரத்தாழ்வார் 16 திய்வய ஆயுதங்கள் தாங்கி 16 திருக் கரங்களுடன் சேவை -பிரசித்தம் –

——————————————————————————-

93-திருக் கோட்டியூர்
மூலவர் -உரக மெல்லணையான் -சவும்ய நாராயணன் / புஜங்க சயனம் -கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -திரு மா மகள் நாச்சியார்
விமானம் -அஷ்டாங்க விமானம்
தீர்த்தம் -தேவ புஷ்கரிணி
மங்களா சாசனம் -பூதத்தாழ்வார் -பேயாழ்வார் -திருமழிசை யாழ்வார் -பெரியாழ்வார் -திருமங்கை யாழ்வார்

கதம்ப மகரிஷி ஆஸ்ரமத்தில் தேவர்கள் கூடி ஹிரண்ய கசிபுவை அளிக்க ஆலோசனை -பண்ண கோசடியாக வந்ததால் கோஷ்டீ புரம் –
திருமந்த்ராரார்த்தம் உபதேசம் பெற ஸ்வாமி எம்பெருமானார் 18 தடவை எழுந்து அருளி உபதேசம் பெற்றார் –
அஷ்டாங்க விமானம் மீது எறி ஆசை யுடையவர்களுக்கு எல்லாம் திரு மந்த்ரம் உபதேசித்து எம்பெருமானார் ஆனார் –
மூன்று தளம் -இங்கும் /- உத்சவர் வெள்ளியில் –

————————————————————————————-

94-திருப் புல்லாணி
மூலவர் -கல்யாண ஜகந்நாதன் / வீற்று இருந்த திருக் கோலம் கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -கல்யாண வல்லி -பத்மாசனித் தாயார்
விமானம் -கல்யாண விமானம்
தீர்த்தம் -ஹேம -சக்ர தீர்த்தம் -ரத்நாகர சமுத்திரம்
ஸ்தல வ்ருக்ஷம் -அஸ்வத்த வ்ருக்ஷம்
மங்களா சாசனம் -திரு மங்கையாழ்வார்

ஆதி ஜெகந்நாத க்ஷேத்ரம் -புல்லாரண்ய க்ஷேத்ரம் -தர்ப்பை புள் நிறையா விளையும் க்ஷேத்ரம் –
புல்லவர்-காவலர்- கண்வர் ஆகிய ரிஷிகளின் தவத்திற்காகப் பெருமாள் அஸ்வத்த மரமாகத் தோன்றினார்
இன்றும் ஒரு பெரிய அஸ்வத்த மரம் சந்நிதிக்குப் பின் இருக்கிறது -அஸ்வத்த நாராயணர் சந்நிதி
தர்ப்ப சயனப் பெருமாள் -தயாரித்த சக்ரவர்த்தி ஜெகந்நாதப் பெருமாளை வேண்டியே ராமனைப் பெற்றார் –
தை அம்மாவாசை சேது சமுத்திர கூட்டம் மிக்கு -இருக்கும் -புல்லாணி எம்பெருமான் பொய் கேட்டு இருந்தேனே
உத்சவர் – தெய்வச்சிலையார் நின்ற திருக் கோலம் –

—————————————————————————————-

95-திரு மெய்யம்
மூலவர் -ஸத்ய கிரி நாதன் -ஸத்ய மூர்த்தி -நின்ற திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம்
உத்சவர் -மெய்யப்பன்
தாயார் -உய்ய வந்த நாச்சியார்
விமானம் -ஸத்ய கிரி விமானம்
தீர்த்தம் -கதம்ப புஷ்கரிணி -ஸத்ய தீர்த்தம்
ஸ்தல வ்ருக்ஷம் -பலா மரம்
மங்களா சாசனம் -திருமங்கை ஆழ்வார் –

ஆதிசேஷன் -கருடன் -சந்திரன் -புரூரவஸ் ஸத்ய ரிஷி ஆகியோர் த்வம் புரிந்த இடம்
ஆதி சேஷன் தனக்கு சத்வ குணம் மட்டும் வளர வேண்டும் என்று தன் நீண்ட திரு மேனியைச் சுருக்கிக் கொண்டு
பூமிக்குள் இருந்து இவ்விடத்தில் வெளியே வந்தார் –
அவரால் ஏற்படுத்தப் பட்ட நதி சர்ப்ப நதி -பாம்பாறு –
இரண்டு கர்ப்ப க்ருஹங்கள் -ஒன்றில் ஸத்ய நாதனும் -மற்று ஒன்றில் மிகப் பெரிய
ஆதி சேஷ பர்யங்கத்தில் சயனத் திருக் கோலம் சேவை –
ஹிமவானில் த்வம் புரிந்த ஸத்ய ரிஷியை இங்கே அழைத்து வந்து ஸத்ய மூர்த்தியாகவே
பெருமாள் காட்சி கொடுத்து அருளினார் -இது ஒரு குடை வரைக் கோயில் –
புஷ்ப்ப பத்ரா பத்ர வடம் சித்ர சாலா -மூன்றுமே இங்கு வந்தது என்பர்

————————————————————————————

வட நாட்டுத் திருப்பதிகள் -12 –

96-திரு அயோத்தி
மூலவர் -ஸ்ரீ ராமன் -சக்கரவர்த்தி திருமகன் -ராகு நாயகன் -வீற்று இருந்த திருக் கோலம் -வடக்கே திரு முக மண்டலம்
தாயார் -சீதா பிராட்டி
விமானம் -புஷ்கல விமானம்
தீர்த்தம் -பரம பத ஸத்ய புஷ்கரிணி -சரயூ நதி
மங்களா சாசனம் -நம்மாழ்வார் -குலசேகராழ்வார் -பெரியாழ்வார் -தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -திரு மங்கை ஆழ்வார்

ஸ்ரீ ராமர் திரு வவதாரம் -அயோத்யா -அபராஜிதா -முக்தி தரும் க்ஷேத்ரம் –
ஸ்ரீ வைகுண்ட அம்சமான ஒரு சிறு பகுதியை பகவான் பிரமனுக்குக் கொடுக்க -அவன் ஸ்வாயம்புவ மனுவுக்குக் கொடுத்தார்
அதை சரயூ நதியின் தெற்குக் கரையில் எழுந்து அருள பண்ணினார் -சரஸ் யூ –பிரமனின் மனமே உருகி பெரிய நதியாக மாறியது –
ஸ்ரீ ராம ஜென்ம பூமி -கனகசரயு நதி கரையில் கோ தானம் பிரசித்தம்
ராம ஜென்ம பூமி -கனக பவன் -சீதா ராமர் அந்தப்புரம் -பாரத பவன் -குப்தார்காட் -லஷ்மண் காட் சேவிக்க வேண்டம்
பஜரேன்பாலி ஹனுமான் காவல் தெய்வம்
வால்மீகி பவன் -௨௪௦௦௦ ஸ்லோகங்கள் கல் வெட்டு -லவ குசர்
அம்மாஜீ மந்திர்
நந்தி கிராமம் -பரதன் இருந்த இடம்

——————————————————————————————-

97-திரு-நைமிசாரண்யம் –
மூலவர் -தேவராஜன் -நின்ற திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -புண்டரீக வல்லி
விமானம் -ஸ்ரீ ஹரி விமானம்
தீர்த்தம் -சக்ர தீர்த்தம் -கோமுகி நதி
ஸ்தல வ்ருக்ஷம் -தபோவனம்
மங்களாசாசனம் -திரு மங்கையாழ்வார்

கோமதி நதி -மற்றும் சக்ர தீர்த்தத்தின் கரையில் -பெருமாள் காடு ரூபத்தில் காட்சி கொடுக்கிறார்
-நேமி -சக்கரத்தின் விட்டம் -அது சுற்றி வந்து இக்காட்டில் நின்று ரிஷிகளின் தவத்திற்குச் சிறந்த இடம்
எனத் தேர்ந்து எடுத்த படியால் நைமிசாரண்யம் ஆயிற்று –
ஸ்ரீ மத் பாகவதம் உபதேசிக்கப்பட்ட இடம் -ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரம் –
ப்ரஹ்ம வனம் -ப்ரஹ்ம வ்ருக்ஷம் ஆஸீத் -இயற்கையே பெருமாள் -அனைத்துக்குள்ளும் வியாபித்து -சனாதன -மதம் –
தீர்க்க சத்ர யாகம் லோக க்ஷேமம் -நிமிச புல்லுக்கு காடு -தர்ப்பைகள் என்றுமாம் –
வியாசர் சுகர் நைமிசார்யர் -உபதேசித்த இடம் – சதை ரூபை -தபஸ் -ஸ்வயம்பூ மனு கல்யாணம்
ஹனுமான் பெரிய ரூபம் / வியாசர் சந்நிதி ஓலைச் சுவடி வேதங்கள் புராணங்கள் இதிகாசங்கள் –

———————————————————————————————
98-திருப் பிரிதி-ஜோஷிமட்
மூலவர் -பரம புருஷன் / புஜங்க சயனம் / கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -பரிமள வல்லி நாச்சியார்
விமானம் -கோவர்த்தன விமானம்
தீர்த்தம் -இந்த்ர -கோவர்த்தன தீர்த்தம் -மானஸ சரோவரம் ஏரி
மங்களா சாசனம் -திரு மங்கையாழ்வார்

பத்ரீகாஸ்ரமத்திற்குச் செல்லும் வழியில் இருக்கும் திவ்ய தேசம்
-அமர்ந்த திருக் கோலத்தில் நரசிம்ஹப் பெருமாள் எழுந்து அருளி இருக்கிறார் –
திருமங்கை ஆழ்வார் திரு வாக்கில் முதலில் வந்த திவ்ய தேசம் இதுவே -இன்று ஜோஷிமட் என்று வழக்கத்தில் உள்ளது –
ஆழ்வார் திரு வாக்கில் பரம புருஷன் புஜங்க சயனம் -ஆழ்வார் அருளிச் செய்தது இன்று
திபெத் நாட்டில் இருக்கும் மானசரோவர் க்ஷேத்ரமாக இருக்கலாம் –
பல காலும் பெரியோர்கள் ஜோஷிமட் தான் திருப் பிரிதி என்கிறார்கள் –
கோவிந்தா கீதா கங்கா காயத்ரி –நான்கும் புனிதம் -பள்ளி கொள் பரமா -திருமங்கை ஆழ்வார் –
——————————————————————————

99-திரு கண்டம் என்னும் கடி நகர் -தேவ பிரயாகை –
மூலவர் -நீல மேகப் பெருமாள் -புருஷோத்தமன் -நின்ற திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -புண்டரீக வல்லித் தாயார்
விமானம் -மங்கள விமானம்
தீர்த்தம் -மங்கள தீர்த்தம் -கங்கை நதி
மங்களா சாசனம் -பெரியாழ்வார்

கடி நகர் -பரிமளம் மிக்கு உள்ள பிரதேசம் -கண்டம் -பகுதி -பூ மண்டத்தில் முக்கிய பகுதி ஹிமாசலம் –
அதில் முக்கிய திவ்ய க்ஷேத்ரம் -அழகா நந்தாவும் -பாகீரதியும் கலக்கிற படியால் இது பிரயாகை –
ஸ்ரீ ராமன் ப்ரம்மா ஹத்தி தோஷம் நீங்க இங்கே த்வம் புரிந்தார் -அவர் த்வம் செய்த பாறையை இன்றும் சேவிக்கலாம் –
ஸ்ரீ ராமபிரான் வில்லும் அம்பும் ஏந்தி சீதா லஷ்மண ஹனுமத் சமேதராய் எழுந்து அருளி உள்ளார் –
70 mile தேவ பிரயாக் -முதலில் -புருடோத்தமன் இருக்கை -பச்சை வர்ணம் பாகீரதி நதி -அலக்நந்தா சிகப்பு -கலப்பதை பார்க்கலாம் -வேகமாக ஓடி வரும்
உத்சவர் -ராமர் அமர்ந்த திண்ணையில் எழுந்து 10 நாள் உத்சவம்
கங்கையின் -திருமால் கழல் இணைப் கீழ் -குளித்து இருந்த கணக்கே பதிகம் பலன்
மந்தாகினி ருத்ர பிரயாக் —நந்த பிரயாக்
விஷ்ணு பிரயாக் மேலே
பிந்து சரஸ் -பளிங்கு பாறை –

————————————————————————————–

101-திருவதரி -ஸ்ரீ பத்ரிநாத்
மூலவர் -பத்ரீ நாராயணன் -வீற்று இருந்த திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -அம்ருத வல்லி
விமானம் -தப்பித்த காஞ்சனா விமானம்
தீர்த்தம் -தப்பித்த குண்டம்
ஸ்தல வ்ருக்ஷம் -பத்ரீ மரம் -இலந்தை மரம்
மங்களா சாசனம் -பெரியாழ்வார் -திருமங்கை ஆழ்வார்

பத்தரிக்கா -இலந்தை -இந்த மறைத்து அடியில் நான்கு திருக் கரங்களோடு பத்மாசனத்தில்
யோகத்தில் பத்ரீ நாராயணப் பெருமாள் எழுந்து அருளி இருக்கிறார் –
நர நாராயண பர்வதத்தில் திருமால் தானே சிஷ்யனான நரனாகவும் -ஆச்சர்யனான நாராயணனாகவும்
-அஷ்டாக்ஷர திரு மந்த்ரத்தை உபதேசித்த இடம் –
கயா ஸ்ரார்த்தம் இங்கு ப்ரஹ்ம கபாலத்தில் பிண்ட பிரதானம் செய்வது மரபு -இது ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரம் –
பத்ரி -நர நாராயணன் -23210 அடி உயரம்
நீல கண்ட பர்வம் -ஐ ராவதம் குத்த -நர நாராயண மலையாக பிரிய –
நர நாராயணன் அர்ஜுனன் கிருஷ்ணன் -3 நாள் இருந்து சேவை /
தப்த குண்டம் -நாரத சிலா -ஆதி சங்கரர் தேடி எடுத்து பிரதிஷ்டை பத்ரி நாராயணனை என்பர்
நம்பூதிரிகள் நாரதர் உத்தவர் குபேரன் -கருடன் -நர நாராயணர் 7 பெரும் சேவை
-கருடன் தனி சந்நிதி வெளியில் –
ப்ரஹ்ம கபாலம் -தனி இடம் -கோயில் பிரசாதம் -௧௬ பிண்டம் 2 பிதாவுக்கு 14 மாதாவுக்கு -மந்த்ரம் சொல்லி க்ஷமை பிரார்த்தித்து

—————————————————————————————-

101-திரு-சாளக்கிராமம்
மூலவர் -ஸ்ரீ மூர்த்தி — வீற்று இருந்த திருக் கோலம் / வடக்கே திரு முக மண்டலம்
தாயார் -ஸ்ரீ தேவி நாச்சியார்
விமானம் -ககன விமானம்
தீர்த்தம் -சக்ர தீர்த்தம் -கண்டகி நதி
மங்களா சாசனம் -பெரியாழ்வார் -திருமங்கை ஆழ்வார்

முக்தி நாத் -நேபாள தேசம் -கண்டகி நதி பெருமாள் இடம் த்வம் புரிந்து அவர் தன் கர்ப்பத்தில் இருக்க பிரார்த்தித்தாள்-
-பகவான் நான் சாளக்ராம ரூபத்தில் உன் மடி யிலே இருப்பேன் என்று வரம் அளித்தார்
அன்னபூர்ணா -மற்றும் தவ்லகிரி மலைத் தொடர்க ளுக்கு நடுவில் உள்ள திருத்தலம் -இதுவும் ஸ்வயம் வியக்த க்ஷேத்ரம் –
போஹ்ரா ஜவம்சம் வழியாக -உலகில் ஆழமான பள்ளத்தாக்கு கண்டகி நதி ஓடும் -சாளக்கிராமம் அடை நெஞ்சே –

—————————————————————————————————

102-திரு-வடமதுரை -மதுரா
மூலவர் –கோவர்த்த நேசன் -பால கிருஷ்ணன் / நின்ற திருக் கோலம் / கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -ஸத்ய பாமா
விமானம் -கோவர்த்தன விமானம்
தீர்த்தம் -சக்ர தீர்த்தம் -கோவர்த்தன தீர்த்தம் -யமுனா நதி
மங்களா சாசனம் -நம்மாழ்வார் -குலசேகர ஆழ்வார் -பெரியாழ்வார் -ஆண்டாள் -தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -திருமங்கை ஆழ்வார்

முக்தி தரும் க்ஷேத்ரம் -மதுரா நாம நாகரீ புண்யா பாப ஹரே ஸூ பா -நினைத்தாலே அனைத்து பாபங்களும் விலகி விடும்
கண்ணனின் திரு அவதார ஸ்தலம் -நான்கு யுகங்களிலும் பகவத் சம்பந்தம் உண்டே
க்ருத யுகம் -வாம ஆஸ்ரமம் / த்ரேதா யுக -சத்ருக்நனால் ஆளப்பட்ட பூமி
த்வாபர யுகத்தில் கண்ணனின் அவதார ஸ்தலம் -யமுனைக் கரையில் உள்ளது
-பிருந்தாவனம் 10 கி மீ தொலைவிலும் -கோவர்த்தன கிரி 12 கி மீ தொலைவிலும் உள்ளன –
ஜென்ம கர்ம மே திவ்யம் -மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
மது பிள்ளை லவணாசுரனை -செம்புகன் தன்னை -லவணன் தன்னை தம்பியால் வான் ஏற்றி –
விராஜா கானகம் பாடி உலவி உலவி -யமுனை -பாபம் சேராது -ராசா க்ரீடை -நாக தீர்த்தம் –கண்ணனை கூட்டிப் போன இடம்
அக்ரூர காட் / கேசாவ்ஜி மந்திர் / போத்ரா குண்டம் / விஸ்ராம் காட் -நிறைய -வனங்கள் –

———————————————————————————————————

103-திரு ஆய்ப்பாடி –கோகுலம்
மூலவர் -நவ மோஹன கிருஷ்ணன் / நின்ற திருக் கோலம் /கிழக்கே திருமுக மண்டலம்
தாயார் -ருக்மிணீ -சத்யபாமா தாயார்
விமானம் -ஹேம கூட விமானம்
தீர்த்தம் -யமுனா நதி
மங்களா சாசனம் -பெரியாழ்வார் -ஆண்டாள் -திருமங்கையாழ்வார்

யமுனையின் மறு கரையில் இருக்கும் கோகுலம் -கண்ணன் 10 ஆண்டுகள் வளர்ந்த ஸ்தலம் –
-இங்கு ஒவ்வொரு அடி பொழியும் கண்ணன் தொடர்பு கொண்டது –
நந்தகிராமம் -கோவர்த்தனம் -பிருந்தாவனம் –ஆகிய அனைத்தும் கோகுலத்தில் அடங்கும் –

ப்ரஹ்மாண்ட காட் -மண் பிரசாதம் / உள் பந்தன் குரலையும் சேவிக்கலாம் / நந்தன் பவன் தொட்டில் நாமும் ஆட்டலாம் /
உருண்டு மண் சம்பந்தம் / ரமன் ரேடி/ கூசும் சரோவர் நாரதர் வனம் / மான்சீ கங்கா /
கோவிந்தன் -உதவ ஷீலா -ஜிஹ்வா ஷீலா / ரெங்கோஜி மந்திர் -/ காம்யவனம் ராஜஸ்தான் -/ சரண் பகடி/ லுகாலுக்க குண்டம் /கயா குண்டம் /

——————————————————————————

104-திருத் துவாரகை
மூலவர் -கல்யாண நாராயணன் -துவாரகா தீசன் -நின்ற திருக் கோலம் -மேற்கே திருமுக மண்டலம் –
தாயார் -கல்யாண நாச்சியார்
விமானம் -ஹேம கூட விமானம்
மங்களா சாசனம் -திருமழிசை ஆழ்வார் -நம்மாழ்வார் -பெரியாழ்வார் -ஆண்டாள் -திருமங்கை ஆழ்வார் –

மேற்கு கடல் கரை ஓரம் -மோக்ஷம் அடைய வழி -துவாரத்தை காட்டும் இடம் -முக்தி தரும் ஏழு க்ஷேத்ரங்களில் ஓன்று –
மதுரையார் மன்னன் -துவாரகா தீசன் -ஆசை யுடன் கொள்ளும் திரு நாமம் –
கோமதி நதி மேற்கு நோக்கி ஓடி கடலுக்குள் சங்கமிக்கும் இடம் -கோமதி துவாரகா –
ரைவதர் என்னும் ராஜா குஷங்களை-தர்ப்பங்களை -பரப்பி த்வம் செய்த படியால் இவ்விடம் குதஸ்தாலி -என்றும் அழைக்கப்படும்
இந்த ஷேத்ரத்தில் டாகூர் –கோமதி –பேட்–மூல –ஸ்ரீ நாத துவாரகா என்ற ஐந்து த்வாரகைகள் உள்ளன –

5 மைல் கோமதி அங்கேயே உருவாக்கி அங்கே கடலில் கலக்கும்
காங்க்ரோலி த்வாராக சேர்த்து ஆறாவது துவாரகை
போடானா ஸ்வாமி இங்கு உள்ள மூர்த்தியை டாகூர்த்வாரகையில் எழுந்து அருள
வஜ்ரநாபன் பிரதிஷ்டை செய்த மூர்த்தி இங்கு –
ருக்மிணி கோயில் தனி -ருக்மிணி பிராட்டி ஆராதித்த திரு மூர்த்தி இன்று இங்கே
த்ரி விக்ரமன் -தனி சந்நிதி -சனகாதிகளுக்கு -தனி சந்நிதி
56 படிக்கட்டுக்கள் 56 கோடி யாதவர்கள்
சார் தாம் -நான்கு
7 நிலைகள்
52 -கஜம் கொடி மாற்றும் உத்சவம்
பேட் துவாரகா பிராட்டிமார்க்கு தனி சந்நிதி -குசேலர் சந்தித்த இடம் -12 மைல் தூரம் படகில் போக வேண்டும்
ராணா சோடராய் யுத்த பூமியில் இருந்து ஓடியவன் தாகூர் துவாரகை –
முசுகுந்தன் –காலயவனன்–சாம்பலானவன் –
ஸ்ரீ நாத -துவாரகா – மீரா பிரதிஷ்டை -ராஜஸ்தான் -உதய்பூர் வடக்கே

———————————————————————————————-

105-சிங்க வேள் குன்றம் -அஹோபிலம்
மூலவர் -ப்ரஹ்லாத வரதன் -லஷ்மி நரசிம்மன் -வீற்று இருந்த திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம்
உத்சவர் -காபில நரஸிம்ஹர்
தாயார் -அம்ருத வல்லி -செஞ்சு வல்லி
விமானம் -குகை விமானம்
தீர்த்தம் -பாப விநாசினி
மங்களா சாசனம் -திரு மங்கை ஆழ்வார்

நவ நரசிம்ஹ க்ஷேத்ரம் –ஆஹா பலம் -என்று பகவானின் பலத்தையும் -அஹோ பிலம் -என்று மலையின் திடத் தன்மையையும் –
கருடன் பிரார்த்திக்க நரசிம்ஹப் பெருமாள் ஹிரண்ய கசிபுவை அழித்த தோற்றத்துடன் உக்ர ஸ்தம்பம் என்ற இடத்தில் சேவை
இவ்விடத்தில் தான் தூணைப் பிளந்து கொண்டு நரசிம்ஹப் பெருமாள் தோன்றினார் -மாலோலனாய்ப் பெருமாள் எழுந்து அருளி இருக்கிறார் –
மேல் இருந்து ஸேவித்தாள் கருட வடிவில் திருமலையை சேவிக்கலாம் -கருடனை தார்ஷ்யன் -என்று சொல்லுவார் -ஆகவே இது தாரஷ்யாத்ரி –
அஹோபில — வராஹ –பாவனா –கராஞ்ச –சத்ரவட –பார்கவ –ஜ்வாலா –மாலோல –யோகானந்த -நரசிம்ஹர்கள் சேவை சாதிக்கிறார்கள் –
ஜ்வாலா பாவனா நரஸிம்ஹர் மேலே சேவிக்க கொஞ்சம் சிரமம் -அஹோபில ஜீயர் நன்றாக சேவிக்க ஏற்பாடு –
அள்ளி மாதர் புல்க நின்ற –சிங்க வே ழ் குன்றம்

————————————————————————————-

106-திருவேங்கடம்
மூலவர் -திருவேங்கடமுடையான் -ஸ்ரீ நிவாஸன் -நின்ற திருக் கோலம் –கிழக்கே திரு முகமண்டலம்
தாயார் -அலர் மேல் மங்கை -பத்மாவதித் தாயார்
விமானம் –ஆனந்த நிலய விமானம்
தீர்த்தம் -நித்ய புஷ்கரிணி -ஸ்வாமி புஷ்கரிணி -கோனேரி தீர்த்தம் –பாப விநாசினி –ஆகாச கங்கை –
மங்களா சாசனம் -பொய்கையாழ்வார் –பூதத்தார் –பேயார் –திரு மழிசையாழ்வார் –நம்மாழ்வார் –குலசேகராழ்வார்
–பெரியாழ்வார் –ஆண்டாள் –திருப் பாண் ஆழ்வார் –திரு மங்கை ஆழ்வார்

வராஹப் பெருமாள் ஹிரண்யாக்ஷனை முடித்து இங்கு ஒய்வு எடுத்த படியால் -இது ஆதி வராஹ க்ஷேத்ரம் –
ப்ருகு முனிவர் பெருமானைத் திரு மார்பில் உதைக்க லஷ்மி கோபப்பட்டு கோல்ஹா பூரில் த்வம் செய்யச் சென்றாள்-
திருமால் லஷ்மியை அடைய இங்கு வந்து த்வம் புரிந்தார் –
ஸ்வயம் வியக்த க்ஷேத்ரம் –
வ்ருஷாத்ரி –முதல் யுகம் /அஞ்சனாத்ரி / சேஷாத்ரி –வாயு -ஆதி சேஷன் / க்ரீடாத்ரி -விளையாட்டு
-நாராயணாத்ரி -கருடாத்ரி -/ வேங்கடாத்ரி -கலி யுகம்
ஆகாச ராஜன் சகோதரர் தொண்டைமான் சக்கரவர்த்தி
தாரிணி தேவி -ஆகாச ராஜன் மனைவி -பெயர் –
வகுள மாலிகை – இன்றும் மடப்பள்ளி நாச்சியார்
சுகாச்சார்யார் -திருச் சுகவனூர் –
10 புராணங்களில் ஸ்ரீ நிவாஸன் மஹாத்ம்யம் உண்டே

————————————————————————————–

107-திருப் பாற் கடல்
மூலவர் -ஷீராப்தி நாதன் -ஆதி சேஷ சயனம் –தெற்கே திரு முக மண்டலம்
தாயார் -கடல் மகள் நாச்சியார் -ஸ்ரீ பூமா தேவி
விமானம் -அஷ்டாங்க விமானம்
தீர்த்தம் -அம்ருத தீர்த்தம் -திருப் பாற் கடல்
மங்களா சாசனம் -பொய்கையார் -பூதத்தார் -பேயார் -திரு மழிசையாழ்வார் -நம்மாழ்வார் -குலசேகராழ்வார்
-பெரியாழ்வார் -ஆண்டாள் -தொண்டர் அடிப் பொடிகள் -திருமங்கை ஆழ்வார் –

ஸ்ரீ வைகுண்ட நாதன் இறங்கி வந்து வா ஸூ தேவ சங்கர்ஷண -ப்ரத்யும்ன – அநிருத்தர்கள் -நான்காக வ்யூஹித்து
ஆதி சேஷ பர்யங்கத்தில் சயனம் –சங்கர்ஷணன் சம்ஹாரத்தையும் ப்ரத்யும்னன் ஸ்ருஷ்ட்டியையும் -அநிருத்தன் -ரக்ஷணத்தையும் –
கேசவாதி பன்னிரு திரு நாமங்களை இந்த நால்வருக்கும் –
கூப்பீடு கேட்க்கும் இடம் -விபவங்கள்- இங்கே இருந்து தான் நடக்கும்

————————————————————————————

-திரு நாராயண புரம்- மேல்கோட்டை
ராம பிரியன் உத்சவர்
திரு நாராயண பெருமாள் -மூலவர் -செல்வ நாராயணன்
குசன் -கனக மாலிகா -யாதவாத்ரி
யாதவாத்ரி ராமனாலும் -கண்ணானாலும் ஆராதனம்
ஸ்ரீ சைல தீபம்
மேலே ஸ்ரீ நரஸிம்ஹர் சேவை

—————————————————————————————–

108-பரமபதம் -திரு நாடு
மூலவர் -பரமபத நாதன் -வீற்று இருந்த திருக் கோலம் -தெற்கே திரு முக மண்டலம்
தாயார் -பெரிய பிராட்டியார்
தீர்த்தம் -ஜரம்மத புஷ்கரிணி -விராஜா நதி
மங்களா சாசனம் -பொய்கையார் -பேயார் -திருமழிசை ஆழ்வார் -நம்மாழ்வார் -குலசேகராழ்வார்
பெரியாழ்வார் -ஆண்டாள் -தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -திருப் பாண் ஆழ்வார் -திரு மங்கை ஆழ்வார்

ஸ்ரீ வைகுண்டம் –நித்ய விபூதி –பரமாகாசம் -பரம வ்யோமம் -தெளி விசும்பு திரு நாடு -நலமந்தம் இல்லாத நாடு
விராஜா நதி நித்ய விபூதிக்கும் லீலா விபூதிக்கு நடுவில்
ஞானம்பக்தி குறை இல்லாமல் -கர்மம் தீண்டாமல் -ஆனந்தமே மிக்கு இருக்கும்
ஸ்வரூப விகாசம் அடைந்த ஆத்மாக்கள் ஸ்ரீ யபதியை அனுபவித்து -அபஹத பாப்மாதி குணங்களில் சாம்யம்
நசப்புனராவர்த்ததே-திக்குகள் இல்லாத தேசம் -வைகுந்தம் புகுவது மன்னவர் விதியே –

——————————————————————————————————

பரத அக்ரூர மாருதியை ஆலிங்கனம் செய்த திருமார்பால் ஆலிங்கனம் செய்யப் பட்டு திரு மடியில்
-அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத–அம்ருத சாகர ஆனந்த சாகரத்தில் ஆழ்வோம்
இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் –பூத புரீசன் -ஆதி கேசவ பெருமாள் -குடி கொண்ட கோயில் -ஸ்வாமி சேவிக்க அனைவரையும் சேவிப்போமே –
நல் தாதை தம் புதல்வன் -சொத்து நமக்காக சரணாகதி –
மணவாள மா முனி ஜீயர் திருவடிகளே சரணம்
ஆழ்வார்கள் வாழி –செய்ய மறை தன்னுடனே சேர்ந்து
ஆச்சார்யர் திருவடிகளே சரணம்
நித்ய ஸ்ரீ நித்ய மங்களம்-

—————————————————————————————–

ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
பூர்வாச்சார்யர் திருவடிகளே சரணம்
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திவ்ய தேச அனுபவம் –நடு நாடு -/ தொண்டை நாடு / மலை நாட்டு -ஸ்தல மாஹாத்ம்ய விளக்கம் –ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் —

November 19, 2016

41-திருவஹீந்திர புரம்
மூலவர் -தெய்வ நாயகன் / தேவ நாதன் / நின்ற திருக் கோலம் / கிழக்கே திரு முக மண்டலம் –
தாயார் -வைகுண்ட வல்லி -ஹேமாம் புஜ வல்லி
விமானம் -சுத்த சத்வ விமானம்
தீர்த்தம் -சேஷ தீர்த்தம் -கருட நதி –
மங்களா சாசனம் -திரு மங்கை ஆழ்வார் -3-1-

அஹி-பாம்பு -ஆதி சேஷனால் ஏற்படுத்தப் பட்ட க்ஷேத்ரம் -தாஸ சத்யன் -அடியார்க்கு மெய்யன்
ஓவ்ஷாத்ரி திருமலை -ஹயக்ரீவ பெருமாள் –
ஆதிசேஷன் பெரிய திருவடி -போட்டி -ஆதி சேஷன் வாளால் ஓங்கி அடித்து பாதாள கங்கை -சேஷ தீர்த்தம் –
பெரிய திருவடி விராஜா தீர்த்தம் -அதுவே கருட நதியாக ப்ரவஹிக்கிறது -மருவி கடில நதி -யானது
திரிசூலம் வீச -சக்கரத்தாழ்வார் மேலே பட -மூவராகிய காட்சி ருத்ரனுக்கு காட்சி –
ஸ்ரீ தேசிகனுக்கு பிரத்யக்ஷம் -பரிமுகத்தால் —தபஸால் பெரிய திருவடி -அருள -கருட பஞ்சாசத்-
ஹயக்ரீவ ஸ்தோத்ரம் -74 படிக்கட்டுகள் 74 சிம்ஹாசனபதிகள் நினைவூட்ட –
அச்சுயத சதகம் –

———————————————————————————-

42-திருக் கோவலூர்
மூலவர் -தேஹளீசன் -த்ரி விக்ரமன் -நின்ற திருக் கோலம் -கிழக்கே திருமுக மண்டலம்
உத்சவர் -ஆயன்
தாயார் -பூங்கோவல் நாச்சியார் புஷ்ப வல்லித் தாயார்
விமானம் -ஸ்ரீ கர விமானம்
தீர்த்தம் -தக்ஷிண பிநாகினி–தென் பெண்ணை ஆறு –கிருஷ்ண -சக்ர தீர்த்தங்கள்
மங்களா சாசனம் -பொய்கையை ஆழ்வார் -பூதத்தாழ்வார் -திரு மங்கை ஆழ்வார்

மிருகண்டு மகரிஷிக்கு -த்ரிவிக்ரமனாக சேவை -அவர் ஆஸ்ரம இடை கழியே கர்ப்ப க்ருஹமானது
வலது திருப் பாதம் தூக்கி -இடது திருப்பாதம் கீழே ஊன்றி சேவை
வலது திருக்கையில் திருச் சங்கும் இடது திருக்கையில் திருச் சக்கரம் -சேவை
விஷ்ணு தூக்கை சேவையும் உண்டே பிரகாரத்தில்
முதல் ஆழ்வார்கள் நெருக்கு உகந்த பெருமாள் -கரும்பு சாறு போலே மூன்று திருவந்தாதிகள்-நீங்கரும்பு கோவலன்
பஞ்ச கிருஷ்ண க்ஷேத்ரம் -இன்றும் முதல் சன்னதி -கண்ணனுக்கு வூராக -உலகமான- தீண்டிய இரண்டு அவதாரங்கள்
சங்கு சக்கரம் மாறி -திருவடிகளும் மாறி இங்கே சேவை –
வர்ண கலாபத்துடன் சேவை

———————————————————————————————-

43-திருக் கச்சி -அத்திகிரி –
மூலவர் – பேர் அருளாளன் -தேவாதி ராஜன் -தேவைப் பெருமாள் -நின்ற திருக் கோலம் / மேற்கே திரு முக மண்டலம்
தாயார் -பெரும் தேவித் தாயார் -மஹா தேவி -தேவ தேவிகா
விமானம் -புண்ய கோடி விமானம் –
தீர்த்தம் -அநந்த சரஸ் -சேஷ தீர்த்தம் –
மங்களா சாசனம் -பூதத்தாழ்வார் -பேயாழ்வார் -திருமங்கை ஆழ்வார் –

பெருமாள் கோயில் ஸத்ய வரத க்ஷேத்ரம் –
க்ருத யுகத்தில் பிரம்மதேவனாலும் –த்ரேதா யுகத்தில் கஜேந்த்ரனாலும் -த்வாபர யுகத்தில் ப்ருஹஸ்பதியாலும்
-கலி யுகத்தில் அனந்தநாளும் ஆராதிக்கப் பட்டார்
அஸ்வமேத யாகம் -வேள்வியில் பட்ட வடுக்கள் உடன் திரு முக மண்டலா சேவை –
புண்ய கோடி விமானத்துடன் ஹவிர் பாகம் பெற்றுக் கொள்ள எழுந்து அருளினார்
இங்கு செய்யும் புண்ய கார்ய பலங்கள் ஒரு கொடு மடங்காகப் பலன் தரும் –

முதல் ஆழ்வார்கள் திருமழிசை ஆழ்வார்கள் -நால்வரும் -ராமானுஜர் தொடக்கமான பல ஆச்சார்யர்கள் /15 காஞ்சியிலே /
தியாக ராஜன் -உழைத்து -பலம் அரங்கன் அனுபவிக்க –
9 ஷேத்ரங்கள் பெரிய காஞ்சி / 6 சின்ன காஞ்சி
நகரேஷூ காக்கி –நீண்ட திரு வீதிகள்-
வையம் பிரசித்த வைகாசி கருட சேவை -தினமே 7 மைல் புறப்பாடு –
அத் திகிரி –காண் தகு தோள் அண்ணல் –அத்தி கிரி வேல மலை -குடை கொடை சேவை அழகு பிரசித்தம் இங்கு
ஸ்ரீ நிதிம் ஸ்ரீம் அபார அர்த்தினாம்
புஷ்கரம்-நீர் நைமிசாரண்யம் வன ரூபம் பிரமன் -முதலில் போக -இங்கு சாவித்ரி தேவி வைத்து யாகம் பண்ண
இருள் -தீப பிரகாசர் தூப்புல் திருத் தன் கா —
பூதம் ஏவ -அஷ்ட புஜ / யானைகள் ஓட்ட வேளுக்கை ஆளரி / வேகவதி ஆறாக தானே வர -தடுக்க
வெஃகா சேது -திரு வெஃகா -பள்ளி கொண்டு தடுக்க –
இறுதியில் சித்திரம் ஹஸ்தம் தேவ பெருமாள்
இரட்டைப் புறப்பாடு பிரசித்தம்
அத்தி வரதர் -40 வருஷம் -புஷ்கரிணியில் இருந்து -இவரே மூல மூர்த்தியாக முன்னால் இருந்தாராம் –
ஆ முதல்வன் -சம்ப்ரதாயம் -திரு மங்கை ஆழ்வாருக்கு வேகவதி மண்ணையே பொன்னாக அளந்து /
வேடன் வேடுவிச்சி -சாலைக் கிணறு -தீர்த்த கைங்கர்யம் –
கஜேந்திர தாசர் திருக் கச்சி நம்பி ஆலவட்டம் கைங்கர்யம் -மாசி மிருக சீர்ஷம் -ஆறு வார்த்தை –
கூரத் ஆழ்வான் -வராத ராஜ ஸ்த்வம் -கண் பார்வை -பெருமாளையும் ராமாநுஜரையும் மட்டும் பார்க்க –

————————————————————————-

44-அட்ட புயகரம் -அஷ்ட புஜம்
மூலவர் -ஆதி கேசவப் பெருமாள் -கஜேந்திர வரதன் -நின்ற திருக் கோலம் -மேற்கே திரு முக மண்டலம்
தாயார் -அலர்மேல் மங்கை — பத்மாசினி
விமானம் -ககநாக்ருதி விமானம்
தீர்த்தம் -கஜேந்திர புஷ்கரிணி
மங்களா சாசனம் -பேயாழ்வார் -திரு மங்கை யாழ்வார் -வாய் திறந்து ஓன்று பணித்தது உண்டு

ஆதி கேசவ பெருமாள் முதலில் இருந்தார் -மகா சந்தன் -தபஸ் -செய்ய இந்திரன் கலைக்க ஆண்யானை பெண் யானை ஏவி விட
இவரும் பெண் உருக் கொண்டு–புலன்கள் ஏவ அலைய மிருகண்டு மகரிஷி மூலம் நல்ல வழி திரும்பி
14000 புஷபங்கள் கொண்டு அர்ச்சித்து –
பிரமன் வேள்வியைத்தடுக்க -சரஸ்வதி யானைகளை ஏவ –
-பெருமாள்-வலது திருக்கையில் -சக்கரம் -கத்தி -அம்பு-தாமரை மலர்
– இடது திருக் கையில் -சங்கு- வில் -கேடயம்- கதை -7 திவ்வியாயுதங்களால் விரோதிகளை போக்கி இஷ்ட பிராப்திக்கு தாமரை
இங்கு மட்டுமே பரமபத வாசல் உண்டு -கோயில் வாசலும் -வைகுண்ட வாசலும் ஒரே நேர் கோட்டில்-
சித்திரை ரோஹிணி -திரு வவதாரம் —
பரமசிவன் செய்யும் யாகத்தை சரபம் தடுக்க -அதுவும் பகவானைக் கண்டு பயந்து சரண் அடைந்ததாக ஐதீகம்

—————————————————————————–

45-திருத் தண்கா
மூலவர் -தீப பிரகாசர் -விளக்கொளிப் பெருமாள் / நின்ற திருக் கோலம் -மேற்கே திருமுக மண்டலம்
தாயார் -மரகதவல்லி
விமானம் -ஸ்ரீ கர விமானம்
தீர்த்தம் -சரஸ்வதி தீர்த்தம்
மங்களா சாசனம் -திருமங்கை ஆழ்வார்

சரஸ்வதி பிரமனின் வேள்வியைத் தடுக்க உலகை இருளால் மூழ்கடிக்க -பகவான் தானே ஒளியாக இருந்து ரக்ஷித்து அருளினார்
உலகுக்கு பிரகாசமாக -போற்றப்படுகிறார் –
தூய்மையான தர்ப்பம் வளர்வதால் தூப்புல் -திரு தேசிகன் அவதார ஸ்தலம் -ஓலைச்சுவடி -உடன் தேசிகன் சேவை
-விளக்கொளியை -மடக்கிளியை கை கூப்பி வணங்கினாளே
சித்திரை ரேவதி திருவவதாரம் –குளிர்ந்த இடம் -அஞ்ஞானம் போக்கி அருளுவார்

——————————————————————————————–

46 – திரு வேளுக்கை
மூலவர் -வேளுக்கை ஆளரி -முகுந்த நாயகன் -நரசிங்கப் பெருமாள் / அமர்ந்த திருக் கோலம் / கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் –வேளுக்கை வல்லி -அம்ருத வல்லி
விமானம் -கனக விமானம் –
தீர்த்தம் –ஹேம சரஸ் தீர்த்தம்
மங்களா சாசனம் -பேயாழ்வார் –திருமங்கை யாழ்வார் –

ஹிரண்ய கசிபுவை வாதம் செய்த பின்பு அமைதியான இடம் தேடி ஐந்தே வந்தார்
பிருகு மகரிஷி தபஸ் செய்து அவர்க்கு பிரத்யக்ஷம்
வேளுக்கை ஆளரி -பிரசித்தமான திரு நாமம்
தொண்டை நாட்டில் இங்கும்-திரு நீரகம் -திருப்பாடகம் – மட்டுமே கிழக்கே திரு முக மண்டலம் –
வேள்-அரசன் -நரசிம்ஹ ராஜா -இருக்கும் ஆசைப்படும் தேசம் –
சித்திரை ஸ்வாமி திருவவதாரம் -காமாஷிகா அஷ்டகம் தேசிகன் -அருளிச் செய்தார் –
பிள்ளைப் பெருமாள் ஐ யங்கார் –உனக்கு உரியனான மைந்தன் உய்ந்தான் –உன் தாளுக்கு ஆகாதவர் -தானவர் கோன் கேட்டான் –

———————————————————————————————–

47 – திரு நீரகம் –
மூலவர் -நீர் வண்ணன் / நின்ற திருக் கோலம் / கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -நில மங்கை வல்லி
விமானம் -ஜெகதீஸ்வர விமானம்
தீர்த்தம் -அக்ரூர தீர்த்தம்
மங்களா சாசனம் -திருமங்கை ஆழ்வார்

உலகு அளந்த பெருமாள் சந்நிதிக்குள் இருக்கும் சந்நிதி -இங்கு நீர்மை எளிமையைக் காட்டுகிறார் –
நீரிடை மீனாக திருவாவதரித்து -பிரளய காலத்தில் ஆலிலை கண்ணனாக துயின்றவனையே
நீரகத்தான் என்று மங்களா சாசனம் செய்துள்ளார் –
நீரகத்தாய் —கார் வானத்து உள்ளாய் கள்வா -உலகம் ஏத்தும் காரகத்தாய் –கள்வா –திரு நெடும் தாண்டகம் –
திரு விக்ரமன் குணங்களை -வெளிப்படுத்தும் பெருமாள் பிரகாரங்களில் -நீர்மை –தாயகம் -நீராக உருகி –
நாராயணன் -தண்ணீரை இருப்பிடம் ஆபோ நாராயண —

—————————————————————————————–

48 -திருப் பாடகம்
மூலவர் -பாண்டவ தூதர் -வீற்று இருந்த திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம் –
தாயார் -ருக்மிணி -ஸத்ய பாமா
விமானம் -பத்ர விமானம்
தீர்த்தம் -மத்ஸ்ய தீர்த்தம்
மங்களா சாசனம் -பூதத்தாழ்வார் -பேயாழ்வார் –திருமழிசை ஆழ்வார் -நம்மாழ்வார் -திரு மங்கை யாழ்வார் –

பாண்டவ தூதர் சந்நிதி -பிரசித்தம் -27 அடி உயரத்தில் வீற்று இருந்த திருக் கோலம் –
ஜனமேஜய மஹா ராஜாவுக்கு வைசம்பாயனர் -மஹா பாரதம் கதை யில் விஸ்வரூபம் -கேட்ட பின்பு அப்படியே
தரிசிக்க வேண்டும் என்று ராஜா ஆசைப்பட ரிஷி யாகம் செய்யக் கூறினார்
மஹா ராஜாவும் இந்த ஷேத்ரத்தில் அஸ்வமேத யாகம் செய்ய கண்ணன் இப்பொழுது எழுந்து அருளி இருக்கும் விதத்தில் தர்சனம் கொடுத்தார் –
அருளாலே பெருமாள் எம்பெருமானார் -பிரதிஷ்டை இங்கு –
பாடு அகம் -பெரிய இடம் -சகா தேவன் –உன்னை சிறை வைத்தால் சண்டை நடக்காதே –அடியேற்குத் தெரியும் ஓ ஆதி மூர்த்தி –

—————————————————————————————————–

49-திரு நிலாத் திங்கள் துண்டம்
மூலவர் -நிலாத் திங்கள் துண்டத்தான் -சந்த்ர சூடப் பெருமாள் / நின்ற திருக் கோலம் -மேற்கே திரு முக மண்டலம்
தாயார் -நிலாத் திங்கள் துண்டத் தாயார் / நேர் ஒருவர் இல்லா வல்லி –
விமானம் -புருஷ ஸூ க்த விமானம்
தீர்த்தம் -சந்த்ர தீர்த்தம்
மங்களாசாசனம் -திரு மங்கை யாழ்வார் –

பார்வதி தேவி ஒரு மா மரத்தின் கீழ் பரமசிவனை அடையத் த்வம் செய்து கொண்டு இருக்க சிவன் அவளை
சோதிக்க எண்ணி மா மரத்தை எரிக்கிறார் -பார்வதி தேவி பகவானைப் பிரார்த்திக்க பகவான் நிலவின் ஒளி போன்ற
அம்ருத கிரணங்கள் கொண்டு மா மரத்தைத் தழைக்கச் செய்தார் –
ஆதலால் நிலாத் திண் கல் துண்டத்தான் -என்று பெயர் பெற்றார் -தாப த்ரயம் தீர்க்கும் பெருமாள் –
ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குள் உள்ளே / திங்கள் நிலா –சந்திரன் –பூர்ண சந்திரன் / துண்டம் -சின்ன இடத்தில் சேவை –

————————————————————————————————–

50-திரு ஊரகம்
மூலவர் -ஊரகத்தான்-உலகு அளந்த பெருமாள் -நின்ற திருக் கோலம் -மேற்கே திரு முக மண்டலம்
தாயார் -அமுத வல்லி நாச்சியார் –
விமானம் -சார ஸ்ரீ கர விமானம்
தீர்த்தம் -சேஷ தீர்த்தம்
மங்களா சாசனம் -பேயாழ்வார் -திரு மழிசை ஆழ்வார் -நம்மாழ்வார் -திரு மங்கை ஆழ்வார் -காமரு கச்சி ஊரகத்தாய் –

மஹா பலி த்ரி விக்ரம அவதாரம் செய்த பொழுது திருவடியின் கீழ் இருந்ததால் அந்த திருக் கோலத்தை சேவிக்க முடிய வில்லை –
அவனுடைய பிரார்த்தனைக்கு இணங்க சத்யவ்ரத க்ஷேத்ரம் இங்கே காட்டி அருளினான் –
பெரிய திரு உருவத்தை நிமிர்ந்து சேவிக்க முடியாததால் மஹா பலிக்காக ஆதி சேஷனாயத் திருக் கோலம்
கொண்டு சேவை சாதித்து அருளுகிறார் -உரகம்- சேஷன் –பாயாசம் அமுது செய்து -இடர் பாடுகள் நீங்கும் –

—————————————————————————————————–

51-திரு வெஃகா –
மூலவர் -சொன்ன வண்ணம் செய்த பெருமாள் / யதோத்த காரி / புஜங்க சயனம் / மேற்கே திரு முக மண்டலம்
தாயார் -கோமள வல்லி
விமானம் -வேத சார விமானம்
தீர்த்தம் -பொய்கை புஷ்கரிணி
மங்களா சாசனம் -பொய்கை ஆழ்வார் – பேயாழ்வார் -திரு மழிசை ஆழ்வார் -நம்மாழ்வார் – திரு மங்கை ஆழ்வார் –

பொய்கை ஆழ்வார் திருவவதார ஸ்தலம் –பிரமனின் யாகத்தை தடுக்க சரஸ்வதி தேவி வேகவதி ஆறாக வேகமாக ஓடி வர
பகவான் ஆற்றின் குறுக்கே அணையாக சயனித்து யக்ஞ வாடிக்கையைக் காப்பாற்றினார் –
இங்கு மட்டுமே திருக் காஞ்சியில் சயன திருக் கோலம் -பிரமன் சொன்ன வண்ணம் செய்ததால் இப்பெயர் பெற்றார் –
பின்பு திரு மழிசை ஆழ்வார் சொன்ன வண்ணம் செய்து அப்பெயர் நிலை நிறுத்தப் பட்டது -மாறிய சயனம் -திருவடி -திரு முடி -ஓரிருக்கை —
கனி கண்ணன் -செந்நாப் புலவன் -பைந்நாகப்பாய் சுருட்டி -ஓர் இரவு இருக்கை —
வேகா சேது ஸ்தோத்ரம் -தேசிகன்–திரு வெஃகா –வேகவதிக்கு அணை-
சித்திரை புனர்வசு நக்ஷத்ரம் –
—————————————————————————–

52-திருக் காரகம்

மூலவர் – கருணாகர பெருமாள் / நின்ற திருக் கோலம் / தெற்கே திருமுக மண்டலம் –
தாயார் -ரமாமணி நாச்சியார் / பத்மா மணி நாச்சியார்
விமானம் -வாமன விமானம்
தீர்த்தம் -அக்ராய தீர்த்தம்
மங்களா சாசனம் -திரு மங்கை யாழ்வார்

கார்ஹ ரிஷிக்குப் பெருமாள் அருளிய படியால் திருக் காரகம் -என்று பெயர் –
இன்னார் இணையார் பாராமல் கருணை பொழிபவன் -மேகங்கள் மேடு பள்ளம் பார்க்காமல் மழை பொழிவது போல் –

——————————————————————————

53-திருக் கார் வானம்
மூலவர் -கள்வர் -கார் வானப் பெருமாள் / நின்ற திருக் கோலம் -மேற்கே திரு முக மண்டலம்
தாயார் -கமல வல்லி நாச்சியார்
விமானம் -புஷ்கல விமானம்
தீர்த்தம் -கௌரி தடாகம்
மங்களா சாசனம் -திருமங்கை ஆழ்வார்

தண்ணீர் தங்கும் இடம் -மேகம் தங்கும் இடம் -மேகம் மழை பொழிந்தால் வெளுத்து விடும் –
பகவான் எத்தனை கருணை பொலிந்த பின்பும் வெளுக்காமல் கறுப்பாகவே நிலைத்து இருப்பர் –
தண்ணீர் -தண்ணீர் தங்கும் மேகம் -மேகம் தங்கும் வானம் -திரு விக்ரமன் ஸ்வ பாவம் -மூன்றும் சேவிக்கலாம்
கார் வானத்துளாய் கள்வா -பாசுரம் –

——————————————————————————————

54-திருக் கள்வனூர்
மூலவர் -ஆதி வராஹப் பெருமாள் / நின்ற திருக் கோலம் / மேற்கே திருமுக மண்டலம் –
தாயார் -அஞ்சிலை வல்லி நாச்சியார்
விமானம் -வாமன விமானம்
தீர்த்தம் – நித்ய புஷ்கரிணி
மங்களா சாசனம் -திருமங்கை ஆழ்வார்

தசரதர் புத்திர பாக்யம் வேண்டி யாகம் நடத்தும் முன்பு இப்பெருமாளை வணங்கிச் சென்றார் –
தனது ராம அவதாரத்துக்கு தன்னிடமே வந்து தசரதரை வெண்டைச் செய்த பெருமாள் இவர்
பார்வதி தேவியும் மகா லஷ்மித் தாயாரும் உரையாடிக் கொண்டு இருப்பதை பெருமாள் ஒளிந்து இருந்து
கேட்ட படியால் பார்வதி அவரைக் கள்வா -என்று அழைத்தார் –
அவளின் வேண்டுகோளுக்கு இணங்க பகவான் நின்றான் இருந்தான் கி
பண்டே உன் தொண்டாம் பழ உயிரை என்னது -சோரேண ஆத்ம அபஹாரம்-கச்சி கள்வா என்று ஓதுவது என் கொண்டு

——————————————————————————-

55-பவள வண்ணம்
மூலவர் -பவள வண்ணர் -ப்ரவாளேஸர் / நின்ற திருக் கோலம் -மேற்கே திரு முக மண்டலம்
தாயார் -பவள வல்லித் தாயார்
விமானம் -ப்ரவாள விமானம்
தீர்த்தம் -சக்ர தீர்த்தம்
மங்களா சாசனம் -திருமங்கை ஆழ்வார் –

பெருமாள் இங்கு ப்ரவாள வர்ணம் -சிகப்பு -வர்ணத்தில் எழுந்து அருளி இருக்கிறார்
நான்கு யுகங்களில் -க்ருத யுகம் -வெள்ளை /த்ரேதா யுகம் -சிகப்பு -த்வாபர யுகம் -மாந்தளிர் பச்சை வர்ணம் /
கலி யுகம் -தனக்கே உரித்தான கரு நீல வர்ணம் -இப்படி நான்கு வர்ணங்களில் காட்சி அளிக்கிறார்
ப்ருகு முனிவருக்கும் அஸ்வினி தேவர்களுக்கும் ப்ரத்யக்ஷம் –
வைகாசி 5 திருநாள் -தேவராஜன் எழுந்து அருளுகிறார்
ஸ்ரீ யந்த்ரம் -பீடம் -தாயார் உத்சவர் எழுந்து அருளி
பவள வண்ணா எங்குற்றாய் –இங்கனே உழி தருகின்றேன்
இந்த சந்நிதிக்கு எதிரே பச்சை வண்ணர் சந்நிதி பிரசித்தம் –

——————————————————————————————

56- பரமேஸ்வர விண்ணகரம் –
மூலவர் -பரம பாத நாதன் -வைகுண்ட நாதன் -வீற்று இருந்த திருக் கோலம் -மேற்கே திருமுக மண்டலம்
தாயார் -வைகுண்ட வல்லி
விமானம் -முகுந்த விமானம்
தீர்த்தம் -ஜரம்மத தீர்த்தம்
மங்களா சாசனம் -திரு மங்கை யாழ்வார்

பரத்வாஜர் முனிவருக்கும் ஒரு கந்தர்வப் பெண்ணுக்கும் குழந்தை பிறக்க -அங்கேயே விட்டுச் சென்றனர்
பகவானும் மஹா லஷ்மியும் வேடர்கள் போலே வேடம் இட்டு குழந்தையை வளர்த்தனர்
அவனே பரமேஸ்வர பல்லவ அரசன் ஆனான்
மூன்று அடுக்கு சந்நிதியையோ நிர்மாணித்தான் -கீழே அமர்ந்த திருக் கோலம்
/நடுவில் கிடந்த திருக் கோலம் / மேல் தலத்தில் நின்ற திருக் கோலம் சேவை –
தொல் பொருள் ஆராய்ச்சி பராமரிக்கும் திரு கோயில் -நிறைய அழகிய சிற்பங்கள் உண்டு –
இருந்து ஆய கலைகள் உபதேசித்து -நின்று ஆசீர்வதித்து -ஆராதிக்க கிடந்தது சேவை –
வைகுண்ட பெருமாள் -கீழே வீற்று இருந்து / வரம் தரும் மா மணி வண்ணன் உத்சவர்
யுவான் சுவான் இங்கே வந்த குறிப்புகளும் சிற்பங்கள்

—————————————————————————————-

57-திருப் புட் குழி
மூலவர் -விஜய ராகவப் பெருமாள் / வீற்று இருந்த திருக் கோலம் / கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -மரகத வல்லி
விமானம் – விஜய கோடி விமானம்
தீர்த்தம் -ஜடாயு தீர்த்தம்
மங்களா சாசனம் -திரு மங்கை ஆழ்வார்

ஜடாயு மஹா ராஜருக்கு ஈமச்ச சடங்குகளை செய்து அருளிய திருத் தலம் -புள் -பறவை –
அவருக்காக குழி தோன்றிச் சடங்கு செய்த இடம் –
வெப்பம் தாங்காமல் பிராட்டி பின்னே சேவை -ஸ்ரீ தேவி பூ தேவி மாறி – சேவை-
க்ருத்ர புஷ்கரிணி நீராடி வயிற்றில் பச்சை பயிறு –காலையில்- முளைக்க வைக்கும் தாயார் குழந்தை பேறு அளிப்பார் –
குதிரை வாகனம் -கீல் குதிரை -பிரசித்தம் –
பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவவதார ஸ்தலம்
யாதவ பிரகாசர் இடம் ராமானுஜர் பயின்ற தேசம்

——————————————————————————-

58-திரு நின்றவூர்
மூலவர் -பக்த வத்சலப் பெருமாள் / நின்ற திருக் கோலம் / கிழக்கே திரு முக மண்டலம்
உத்சவர் -பத்தராவிப் பெருமாள்
தாயார் -என்னைப் பெற்றத் தாயார் / ஸூதா வல்லி –
விமானம் -உத்பல விமானம்
தீர்த்தம் -வருண புஷ்கரிணி தீர்த்தம் –
மங்களா சாசனம் -திரு மழிசை ஆழ்வார்
திருக் கடல் மல்லை –நின்ற வூர் நித்திலத் தொத்தினை –கண்டது நான் கடல் மல்லை தல சயனத்தே
நின்றவூர் நின்ற நித்திலத்தொத்தினை –திருக்கண்ண மங்கையில் கண்டு கொண்டேனே –தொத்து -சொத்து
இரண்டு இடத்திலும் சென்று பெற்ற பாசுரங்கள் –

திருவாகிய மஹா லஷ்மி தனி சிறப்புடன் தங்கிய வூர் –
சமுத்திர ராஜன் இடம் சீற்றம் கொண்ட மஹா லஷ்மி அங்கு இருந்து இந்த ஷேத்ரத்தில் தங்கி விட்டாள்
பிரமானால் தூண்டப்பட்ட சமுத்திர ராஜன் இங்கு வந்துத் தாயாரை -என்னைப் பெற்ற தாயே -என்று
மனம் உருகி வேண்ட தாயாரும் மனம் கனிந்து இங்கேயே தங்கி அருள் புரிகிறார் –
திருமலை திருப்பதி பெரிய ஜீயர் அதீனம் -இந்த திவ்ய தேசம் —
வருணன் சமுத்திர ராஜன் இருவருக்கும் பிரத்யக்ஷம் –

———————————————————————————————

59-திரு எவ்வுள் –
மூலவர் -வைத்ய வீர ராகவன் – புஜங்க சயனம் -கிழக்கே திரு முக மண்டலம்
உத்சவர் -வீர ராகவன்
தாயார் -கனக வல்லித் தாயார் -வசுமதி
விமானம் -விஜய கோடி விமானம் -புண்யா ஆவரத்தக விமானம்
தீர்த்தம் -ஹ்ருத்தாப நாசினி தீர்த்தம்
மங்களா சாசனம் -திரு மழிசை ஆழ்வார் –திரு மங்கை ஆழ்வார்

வீஷாரண்ய க்ஷேத்ரம் -சாலி ஹோத்ர முனிவர் -சாலி எனப்படும் நெல் மணிகளால் புத்திர பெயர் வேண்டி யஜ்ஜம்-செய்தார் –
அவர் இவ்வூரில் பர்ண சாலை அமைத்து அதிதி ஸத்காரம் செய்து வந்தார் –
பெருமாளே இங்கு வந்து இவரிடம் உண்டு -நான் ஒய்வு எடுப்பதற்கு எவ்வுள் என்று கேட்டு அவ்விடத்திலேயே சயனித்துக் கொண்டார் –
திரு எவ்வுள் -பெயர் மருவி திரு வள்ளூர்-ஆக அழைக்கப் படுகிறது –
தை அம்மாவாசை -பிரசித்தம் / மது கைடபர்களை அழித்த வீரம் -வீர ராகவன் –
புஷ்கரிணி வெல்லம் கரைத்து -நோய்கள் தீரும் -கிங்க்ருஹேச ஸ்தோத்ரம் தேசிகன் -தர்ம சேனா புரம் அருகில் –அரசன் திரு மகள் -தாயார் –

———————————————————————————————-

60 -திரு வல்லிக்கேணி
மூலவர் -வேங்கடகிருஷ்ணன் / நின்ற திருக் கோலம் / கிழக்கே திரு முக மண்டலம்
உத்சவர் -ஸ்ரீ பார்த்த சாரதி
தாயார் -ருக்மிணித் தாயார்
விமானம் -ஆனந்த விமானம்
தீர்த்தம் -கைரவிணி புஷ்கரிணி
மங்களா சாசனம் -பேயாழ்வார் திருமழிசை ஆழ்வார் திருமங்கை ஆழ்வார்

சுமதி மஹாராஜர் -திரு வேங்கடமுடையானை இரண்டு திருக் கரங்கள் உடன் சேவை சாதிக்க வேண்ட –
அவரை க் கைரவிணி புஷ்கரிணிக் கரையிலே த்வம் செய்யப் பணித்தார் –
அவ்வண்ணமே வியாசருக்கு சுமதி ராஜாவுக்கும் இங்கே வேங்கட கிருஷ்ணனாக சேவை சாதித்தார்
ருக்மிணி பல ராமன் ப்ரத்யும்னன் அநிருத்தனன் உடன் கண்ணன் சேவை சாதிக்கிறார் -சாத்விகி தேரோட்டி உடன்
பீஷ்மர் விட்ட அமுக்ககால் துளைக்கப் பட்ட திரு முக வடுக்கள் உடன் உத்சவர் பார்த்த சாரதி சேவை சாதிக்கிறார் –
அருகே மயிலாப்பூரில் பேயாழ்வார் அவதார ஸ்தலம் –
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தான் பிறந்தவன் -ஐவருக்குக்கும் மங்களாசானம்
ஒப்பவர் இல்லா மாதர் வாழும் மாட மா மயிலைத் திரு வல்லிக் கேணி –
ப்ருந்தாரண்யம் துளசிக்காடு –வியாசரால் -ஆர்த்த்ரேயருக்கு -கொடுத்த மூல விக்ரஹம் –
மன்னாத பெருமாள் ஸ்தல பெருமாள் / தெள்ளிய சிங்கர் /
துர்வாசர் தபஸ் -விஸ்வகர்மா தேர் நிழல் -சாபம் தீர
முத்கலர்-தபஸ் -மீன் கூடாது என்பதால் -புஷ்காரிணியில் மீன்களே இல்லை
ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்பன் -பேயாழ்வார் தெரு -தனி சந்நிதி –
-வாளா கிடந்தது –வாய் திறவான் -ஐந்தலை நாகத்து அணையான் -திரு மழிசை ஆழ்வார் –
இங்கே தபஸ் நெடு நாள் திரு மழிசை ஆழ்வார் -என்னை ஆளுடைய அப்பன் பிரசாதம்
-தனிக் கோவில் நாச்சியார் -வேத வல்லி தாயார் -ப்ருகு மகரிஷி திருக் குமாரி / நான்கு திருக்கரங்கள் மன்னாத பெருமாள் –
தெளிய சிங்க பெருமாள் வீதி /சப்த ரோமருக்காக கஜேந்திர வரதன் -7 நாள் தெப்ப உத்சவம் –

———————————————————————————————-

61-திரு நீர் மலை -தோயாத்ரி –
மலை அடிவாரக் கோயில் –
மூலவர் -நீர் வண்ணன் -ரெங்க நாதர் -நின்றான் நின்ற திருக் கோலம் / கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -அணி மா மலர் மங்கை -ரெங்க நாயகி
விமானம் -தோய கிரி விமானம்
தீர்த்தம் – மணி கர்ணிகா -ஸ்வர்ண -ஷீர -காருண்ய -சித்த புஷ்கரிணிகள்
மங்களா சாசனம் -பூதத்தாழ்வார் -திருமங்கை ஆழ்வார்
மலை மேல் கோயில் –
மூலவர் -சாந்த நரஸிம்ஹர் -இருந்தான் -வீற்று இருந்த திரு முக மண்டலம் – கிழக்கே திரு முக மண்டலம்
ரெங்க நாதர் -கிடந்தான் -மாணிக்க சயனம் -தெற்கே திரு முக மண்டலம்
தாயார் -ரெங்க நாயகி –
மூலவர் -த்ரிவிக்ரமன் -நடந்தான் / நின்ற திருக் கோலம் / கிழக்கே திருமுக மண்டலம்
காண்டவ வானம் -முனிவர்கள் -600 வருடங்கள் -த்வம் செய்து நீர்மையை சேவிக்க பிரார்த்தித்தனர் –
அவர்களுக்கு கருணையை உணர்த்தி இந்த க்ஷேத்ரத்தையே நீர் மலையாக உருவாக்கினார்
வால்மீகி முனிவர் இங்கு மலை மேல் பெருமாளை சேவித்துக் கீழே இறங்கி புஷ்கரிணியில் தீர்த்தமாட
-நீர் வண்ண பெருமாள் அவருக்கு சீதா லஷ்மண பரத சத்ருக்ந ஹனுமத் ஸஹிதமாக இராமனாக புஷ்காரிணியிலே சேவை சாதித்தார்
கோபுர துவாரம் -நேராக ராமர் சந்நிதியே -த்வஜ ஸ்தம்பம் தள்ளியே இருக்கும் –
திரு மங்கை ஆழ்வார் இப்பெருமாளை மங்களா சாசனம் செய்ய எழுந்து அருளிய போது இவ்விடத்தை சுற்றி
நீர் சூழ்ந்து கொண்டு இருக்க ஆறு மாத காலம் காத்து இருந்து பகவானை மங்களா சாசனம் செய்தார் –
இதனாலே திரு நீர் மலை -பெயர் பெற்றது -ஆழ்வார் தங்கி இருந்த இடம் இப்பொழுதும் திரு மங்கை யாழ்வார் புரம் -என்று அழைக்கப் படுகிறது –
திருக் கோவல் நகர் திரு வாலி குடந்தை புனல்நறையூர் –நீர் வண்ணன் -நரஸிம்ஹர் -உலக அளந்த பெருமாள் -ரெங்கன் -நான்கு புஷ்கரணிகள் நால்வருக்கும்
நீர் மலை -உறக்கமும் உறுதியும் -ரக்ஷணம் தீக்ஷை -ஸுலப்யம் -பரத்வம் –

———————————————————————————————

62-திரு இடவெந்தை
மூலவர் -லஷ்மீ வராஹப் பெருமாள் / நின்ற திருக் கோலம் / கிழக்கே திரு முக மண்டலம்
உத்சவர் -நித்ய கல்யாணப் பெருமாள்
தாயார் -அகில வல்லி நாச்சியார் -கோமள வல்லித் தாயார் –
விமானம் -கல்யாண விமானம்
தீர்த்தம் -கல்யாண தீர்த்தம் -வராஹ தீர்த்தம்
மங்களா சாசனம் -திருமங்கை யாழ்வார் -2-7-

மேக நாதன் பிள்ளை -பலி அரசனுக்கு அருள் புரிய வராஹப் பெருமாள் பூமி பிராட்டியை இடது மடியில் இருத்திக் கொண்டு சேவை சாதித்தார் –
காலவ மகரிஷிக்கு 360 பெண்கள் பிறக்க -ரிஷி வேண்ட பகவான் தினமும் ஒவ்வொரு பெண்ணாகத் திருமணம் செய்தார்
இறுதியில் அவர்கள் அனைவரையும் ஒரே பெண்ணாக அகில வல்லி நாச்சியாராக ஆக்கி அவள் உடன் சேவை சாதிக்கிறார் –
திரு வல வெந்தை -திருக் கடல் மல்லை / புருஷோத்தமன் -ஜீவாத்மா அனைவரும் அவன் இடம் சேர வேண்டுமே
–இதுவே நித்ய கல்யாண பெருமாள் காட்டி அருளுகிறார்
கன்னத்தில் மை தீட்டி சேவை
ஆதி சேஷன் -வாசுகி -திருவடியின் கீழே -சேவை –

——————————————————————————————

63-திருக் கடல் மல்லை –
மூலவர் -ஸ்தல சயனப் பெருமாள் /புஜங்க சயனம் / கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -நில மங்கைத் தாயார் –
விமானம் -காக நாக்ருதி விமானம்
தீர்த்தம் -புண்டரீக புஷ்கரிணி -கருட நிதி
மங்களா சாசனம் -பூதத்தாழ்வார் -திருமங்கை யாழ்வார் -2-7-

புண்டரீக மகரிஷி -கடலில் சயனித்து இருக்கும் பெருமாளை சேவிக்க -ஆசை கொண்டு பக்தி பாரவசியத்தாலே தன்னிலை மறந்து
கைகளால் கடல் நீரை வாரி இறைக்க முற்பட்டார் –
ரிஷியின் பக்தியை மெச்சிய பரமன் தனது ஆதி சேஷன் படுக்கையும் துறந்து கரைக்கு ஓடு வந்து நிலத்திலேயே சயனித்த க்ஷேத்ரம்
பூதத்தாழ்வார் திரு வவதார ஸ்தலம் –
முன்பு 7 கோயில்கள் இருந்ததாம் –கடல் அரிக்க–
இடது திருக் கை ஆஹ்வானம் —

———————————————————————————–

64- திருக் கடிகை -சோளிங்கர்
மூலவர் -யோக நரஸிம்ஹர் -அக்காராக கனி / வீற்று இருந்த திருக் கோலம் /கிழக்கே திரு முக மண்டலம்
உத்சவர் -பக்தோசிதான் -தக்காண
தாயார் -அம்ருத பல வல்லித் தாயார்
விமானம் -சிம்ம கோஷ்டாக்ருதி விமானம்
தீர்த்தம் -அம்ருத தீர்த்தம் / தக்கான் குளம்
மங்களா சாசனம் -பேயாழ்வார் -திரு மங்கை ஆழ்வார் -மிக்கானை –அக்காராக கனியை அடைந்து உய்ந்து போனேனே –

சப்த ரிஷிகள் -தவத்தை -காலன்-கேயன் – அரக்கர்கள் கெடுக்க -அவர்கள் அரசனை வேண்டிக் கொள்ள
-அவன் ஸ்ரீ ராமரைப் பிரார்த்திக்க -அவர் திருவடியை அனுப்பினார்
அவர் நரசிம்ஹ பெருமாள் கடாஷத்தோடே அவர் கொடுத்து அருளிய சக்ராயுதத்தால் அரக்கர்களை வென்றார்
யோக நரஸிம்ஹர் பெரிய மாலையிலும் திருவடி சங்கு சக்கரங்கள் நான்கு திருத் தோள்கள் உடன் சின்ன மாலையிலும் சேவை சாதிக்கின்றனர்
கடி -ஒரு நாழிகை -24 நிமிஷங்கள் -இந்த மலையில் ஒரு கடி பொழுது இருந்தோமேயானால் பாவங்கள் கழிந்து பரம பதம் கிடைக்கும் –
மலை அடிவார திருக் கோயிலும்- வூரும் ஸ்வாமி தொட்டாச்சார்யரால் ஸ்தாபிக்கப் பட்டவை –
ஸ்ரீ நிவாஸ மஹா குரு -தொட்டாச்சார்யார் ஸ்வாமி –
1543-1607 இருந்தவர் –கோவிந்த ராஜர் -பிரதிஷ்டை பண்ணினவரும் இவரே –
யோகம் -கை வந்தவர் -வாதூல குல தெய்வதிம் -நிதிம்-
தாயார் நவராத்ரி கீழே எழுந்து அருளி 2 மாதம் கீழே இருந்து சேவை —

———————————————————————————————————-

ஆதி கேசவ பெருமாள் -பேயாழ்வார் திருவவதாரம்
திரு மழிசை ஆழ்வார் -சாரமான க்ஷேத்ரம் -ஜெகந்நாத பெருமாள் –

——————————————————————————————

65-திரு நாவாய் –
மூலவர் -நாவாய் முகுந்தன் -நாராயணன் -நின்ற திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -மலர் மங்கை நாச்சியார் ‘
விமானம் -வேத விமானம்
தீர்த்தம் -கமல தடாகம்
மங்களா சாசனம் -நம்மாழ்வார் -9-8-/ திருமங்கை ஆழ்வார் –

ஒன்பது யோகிகள் -பெருமாளை சேவிக்க ஆசைப்பட்டார்கள் -நவ யோகி -மருவி நாவாய் ஆகியது –
பாரதப் புழா-நதிக்கரையில் அமைந்துள்ள திவ்ய தேசம் –
மலையாள திவ்ய தேசங்களில் இங்கு மட்டுமே தனி சந்நிதி தாயாருக்கு உண்டு –
யோகிகள் பகவானை பிரதிஷடை செய்து மறு நாள் வந்து பார்க்கும் பொழுது அங்கு விக்ரஹம் மாயமாகி இருந்தது
தொடர்ந்து அடுத்த எட்டு நாட்கள் நடந்தது இந்தச் சம்பவம் –
9 நாள் கடைசி யோகி ப்ரதிஷ்டை பகவான் பூமிக்குள் புதைந்து கொண்டு இருக்க யோகி அவரை -அப்படியே
நிறுத்த முழங்காலுக்கு மேலே இன்றும் சேவை சாதிக்கிறார்
குட்டிபுரம் ரயில் நிலையத்தில் இருந்து 7 கி மி தூரம் –
பட்டாம்பி -அருகில் – வடக்கு கேரளா -/ காசி யில் செய்யும் பலன் இங்கே
-சங்க சக்ர கதா பத்ம -நான்கு திருக் கைகளிலும் ஏந்தி -நவ யோகி ஸ்தலம்
விஷ்ணு போத ஆன்ரு சம்சயம் –

—————————————————————————————

66-திரு வித்துவக் கோடு
மூலவர் -உய்ய வந்த பெருமாள் -அபய ப்ரதன் / நின்ற திருக் கோலம் -தெற்கே திரு முக மண்டலம்
தாயார் -வித்துவக்கோட்டு வல்லி
விமானம் -தத்வ காஞ்சனா விமானம்
தீர்த்தம் -சக்ர தீர்த்தம்
மங்களா சாசனம் -குலசேகராழ்வார்

அம்பரீஷன் வெகுகாலம் இங்கே த்வம் புரிந்து முக்தி பெற்றதாக ஸ்தல வரலாறு –
திருமாலே இந்திரன் வடிவில் வந்து அம்பரீஷனை சோதித்த பொழுது -அவனது வைக்ராயத்தாலே மகிழ்ந்து
ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ள தன் அப்ராக்ருத ரூபத்துடன் சேவை சாதித்தார்
பர வாஸூதேவனை சேவித்த பின் வ்யூஹ அவதாரத்தை அனுக்ரஹிக்க வேண்ட -நான்கு திருக் கோலம் கொண்டு இங்கே எழுந்து அருளி இருக்கிறார்
கோயிலில் முதலில் சிவன் சந்நிதியும் அதன் பின் பெருமாள் சந்நிதியும் உள்ளது –
பஞ்ச பாண்டவர்கள் ஐவரும் சேர்ந்து த்வம் இருந்து இந்த நான்கு மூர்த்திகளைப் பிரதிஷ்டை செய்தார்கள் –
திரு மிற்றக் கோடு -நான்கு மூர்த்தி பெருமாள் –
காசி விஸ்வ நாதர் காட்சி -இங்கு பிரதிஷ்டை –

——————————————————————————————

67-திருக் காட்கரை –
மூலவர் -காட்கரை யப்பன் / நின்ற திருக் கோலம் -தெற்கே திரு முக மண்டலம்
தாயார் -பெரும் செல்வ நாயகி -வாத்சல்ய வல்லி
விமானம் -புஷ்கல விமானம்
தீர்த்தம் -கபில தீர்த்தம்
மங்களா சாசனம் -நம்மாழ்வார்

இங்கு எழுந்து அருளி இருக்கும் வாமன மூர்த்தியின் அருளால் பலி சக்கரவர்த்தி ஆண்டு தோறும் ஆவணி திருவோணம் அன்று
தன் மக்களைப் பார்க்கப் பாதாளத்தில் இருந்து வருகிறார் –
இந்த நாளே ஓணம் பண்டிகை –
ஒரு வியாபாரி தன் வாழைத் தோட்டத்தில் வாழை குலை தள்ளாமல் அழிவது கண்டு அப்பெருமானுக்குத் தங்க வாழைக் குலை சமர்ப்பித்தார்
பின்பு பெருமாள் நேத்ர கடாக்ஷத்தால் வாழை மரங்கள் செழித்து -நேத்ர பழம்—நேந்த்ர பழம் —
திருவஞ்சிக் குளம் -திருக் குலசேகர புரம் -அருகில் -கொடுங்களூர் அருகில் –
எர்ணாகுளம் -அருகில் / கபிலர் தபஸ் -புரிந்து -பிரத்யக்ஷம் -வாமனன் சேவை –
கர்ப்ப க்ருஹத்தில் இன்றும் வாழை குலை சேவிக்கலாம் –
ஸுசீல்யம் -9 -6 – உருகுமால் நெஞ்சம் -என்னில் முன்னம் பாரித்து என்னை முற்றும் பருகினான் -போகத்தில் தட்டு மாறும் சீலம்
ப்ரஹ்ம ரஜஸ் பிரகாரத்தில் -சாந்தம் படுத்த யஜ்ஜி -காவல் தெய்வம் –

—————————————————————————————–
68-திரு மூழிக் களம் –
மூலவர் -திரு மூழிக் களத்தான்–ஸ்ரீ ஸூக்தி நாதன் -நின்ற திருக் கோலம் கிழக்கே திரு முக மண்டலம் –
தாயார் -மதுர வேணி நாச்சியார்
விமானம் -ஸுந்தர்ய விமானம்
தீர்த்தம் -பெரும் குளம் -சங்க தீர்த்தம்
மங்களா சாசனம் -நம்மாழ்வார் -திரு மங்கை ஆழ்வார்

ஹாரீத மஹரிஷியின் பெரும் தவத்தால் பகவான் பிரத்யக்ஷமாகி -அவரை வர்ணாஸ்ரம தர்மம்
யோக சாஸ்திரம் மற்றும் திரு மந்த்ரம் ஆகிய நூல்களை இயற்றச் செய்தார்
இவைகள் பகவான் உடைய ஸ்ரீ ஸூக்திகள் -திரு மொழி -வெளியாகிற படியால் -ஸ்ரீ ஸூக்தி நாதன் –திரு மொழிக் களம் -ஆயிற்று
-அதுவே மருவி -திரு மூழிக் களம் –ஆனது
லஷ்மணன் பரதன் இடம் பட்ட அபசாரத்தைப் போக்கிக் கொள்ள இங்கே த்வம் புரிந்து பெருமாளை மீண்டும் பிரதிஷ்டை பண்ணினான் என்பர் –
மஹாத்மாக்களை விரஹம் சஹியாத மார்த்வம் வளத்தின் குளத்திலே கூடு பூரிக்கும் -தூது விடும் பதிகம் –
நிறைய தூண்கள் வேலைப்பாடுகளுடன் –நீண்ட பிரகாரம் -ஸ்ரீ பலி -ஸ்ரீ வேலி -லக்ஷ தீபம் -பிரசித்தம் –

————————————————————————————

திரு வல்ல வாழ்
மூலவர் — கோலப் பிரான் -ஸ்ரீ வல்லபன் -நின்ற திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -செல்வா திருக் கொழுந்து நாச்சியார் -வாத்சல்ய தேவி
விமானம் -சதுரங்க கோலா விமானம்
தீர்த்தம் -கண்ட கர்ணன் தீர்த்தம் -பம்பா நதி
மங்களா சாசனம் -நம்மாழ்வார் -திரு மங்கை ஆழ்வார்

மங்கலத்தம்மாள்-என்ற பெண்மணி ஏகாதசி விரதம் இருந்து துவாதசி அன்று பிரம்மசாரிக்குப் பாரணம் செய்வித்து பின்பு தான் விரதத்தை முடிப்பாள்-
தோலாகாசுரன் என்ற அரக்கன் இதற்கு இடையூறு விளைவிக்க -அவள் பகவானைப் பிரார்த்தித்தாள்-
பிரம்மச்சாரியாக வந்த பகவான் அசுரனை முடித்து துவாதசி பாரணத்திற்கு வரும் பொழுது அவருடைய மான் தோல் விலக
அப்பெண்மணி திரு மார்பு லஷ்மியை ஸேவித்தாள்-
ஆகவே இன்றும் திரு வாழ் மார்பனாகவே சேவை சாதிக்கிறார் -கண்டா கர்ணனுக்கு மோக்ஷம் அளித்த இடம்
திரு வல்லா என்றும் அழைக்கப் படுகிறது -திரு வல்லப -மருவி –
செங்கணாஞ்சேரி அருகில் ஆறு திவ்ய தேசங்கள் –
கிருபை குணம் காட்டி அருளி –மெலிவிலும் சேமம் -5-9 — சரணாகதி இங்கு பெண் நிலையில் –
உப்பு மாங்காய் திதியோதனம் -பிரசாதம் –
சுதர்சன-தனி சந்நிதி
50 -அடி உயரம் கருட கொடி -கீழும் அத்தே அளவாம் -பறக்கும் திருக் கோலம்
விஸ்வ கர்மா -ஸ்தாபித்த கோயில்
12000 வாழை பழம் சமர்ப்பித்து ஆண்டுக்கு ஒரு நாள் உத்சவம்

———————————————————————————————-

70-திருக் கடித் தானம்
மூலவர் -அற்புத நாராயணன் / நின்ற திருக் கோலம் / கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -கற்பக வல்லி
விமானம் -புண்ய கோடி விமானம்
தீர்த்தம் -பூமி தீர்த்தம்
மங்களா சாசனம் -நம்மாழ்வார் –

கடி -பரிமளம் / பரிமளம் மிக்க சோலைகள் நிறைந்த வூர் –
கடி -நாழிகை -24 நிமிடம் – இந்த க்ஷேத்ரம் இருந்தால் நம் பாவங்கள் கழிக்கப் படுகின்றன
நாரதர் ருக்மாங்கதன் என்ற ஸூ ர்ய வம்சத்து அரசனுடைய ஆஸ்தானத்திற்கு வந்த பொழுது அவரை ராஜா
இந்த ஷேத்ரத்தின் பரிமளம் மிக்க புஷபமாலையோடு கௌரவித்தான் –
அதனுடன் நாரதர் இந்த்ர லோகத்திற்கு செல்ல இந்திரன் அந்த மலர்களைக் கொண்டு வர தேவர்களை அனுப்பினான் –
அவர்கள் ரகசியமாகக் கொண்டு வரும் பொழுது ருக்மாங்கதன் பார்த்து விட்டான் -அவர் பார்த்த படியால் அவர்களால்
மீண்டும் சொர்க்கத்திற்கு செல்ல முடியவில்லை –
ராஜா ஒரு மூதாட்டி இருக்கும் ஏகாதசி விரதத்தின் மகிமையால் அவர்களை மீண்டும் சுவர்க்கத்திற்கு அனுப்பினார்
சகாதேவன் இங்கு பெருமாளை ப்ரதிஷ்டை செய்தார் – பாண்டு மஹா ராஜா மரித்த இடம் –
கதி ஸ்தானம் -வித்யா ஸ்தானம் என்றுமாம் –
8-6 – எல்லியும் காலையும் -க்ருதஞ்ஞாதா கந்தம் –தபஸ் பண்ணி திரு உள்ளம் பெற்று –
தீபக் களா -பாண்டுவை எரியூட்டும் உத்சவம் நடக்கும்

————————————————————————————————–

71-திருச் சிற்றாறு திருச் செங்குன்றூர்
மூலவர் -இம்யவரப்பன் -நின்ற திருக் கோலம் -மேற்கே திருமுக மண்டலம்
தாயார் -செங்கமல வல்லி
விமானம் -ஜகத் ஜ்யோதி விமானம்
தீர்த்தம் -சங்கு தீர்த்தம்
மங்களா சாசனம் -நம்மாழ்வார்

தர்ம புத்திரர் -தம் குருவான துரோணரை கொன்றதால் குருபாதக தோஷம் -வர -பஞ்ச பாண்டவர்கள் அனைவரும் இங்கு வந்து
சந்நிதியை ஜீர்ணோத்தாரணம் செய்து திருச் சிற்றாற்றில் தீர்த்தம் ஆடிப் பாவத்தைப் போக்கிக் கொண்டனர் –
தர்ம புத்திரர் இந்தப் பெருமாளை ப்ரதிஷ்டை செய்தார்
பெருமாள் இங்கு சங்கு சக்கரம் கை மாற்றி வலது திருக் கையிலே சங்கும் இடது திருக் கையிலே சக்கரமும் தரித்து இருப்பார் –
பாம்பை நதி கிளை நதி சிற்றாறு –
ஸுர்யம் காட்டிய குணம் –வார் கெடா அருவி –பரிய வேண்டாம்-8-4-

—————————————————————————————

72-திருப் புலியூர் –குட்ட நாட்டு திருப் புலியூர்
மூலவர் -மாய பிரான் / நின்ற திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம் –
தாயார் – பொற் கொடி நாச்சியார் –
விமானம் -புருஷோத்தம விமானம் –
தீர்த்தம் -ப்ரஜ்ஜா சரஸ் –பூஞ்சுனை தீர்த்தம்
மங்களா சாசனம் -நம்மாழ்வார் -திருமங்கை ஆழ்வார்

வ்ருஷா தர்பி அரசவைக்கு சப்த ரிஷிகள் வந்தனர் -நாட்டில் பஞ்சம் தலை விரித்த படியால் ரிஷிகள் தானம் வாங்க மறுத்தனர்
-அரசனும் அவர்களுக்குத் தெரியாமல் வாழை பழத்தில் தங்கம் வைத்துக் கொடுத்தார் -அதனை அறிந்த ரிஷிகள் அவற்றை
ஏற்றுக் கொள்ள மறுக்க கோபம் கொண்ட அரசன் க்ருத்யை என்ற பெண் பிசாசை ஏவினான்
-இந்திரன் புலி வடத்தில் அவளைக் கொன்றான் -புலி வடத்தில் வந்த படியால் திருப் புலியூர் என்ற பெயர்
– பகவான் சப்த ரிஷிகளுக்கும் இந்திரனுக்கும் மாயப் பிரானாகக் காட்சி கொடுத்தார் –
இத்திருத் தலம் பீம சேனனால் புனர் நிர்மாணம் செய்யப் பட்டது –
நாயக லக்ஷணம் காட்டிய குணம் -மாயப்பிரான் –/ தோழி -திரு மணம் ஆனது போலே உள்ளதே –
இவள் நேர் பட்டது -அம் தண் துழாய் கமழ்கிறாள்
12 பகுதிகள் குட நாடு இத்யாதி –
————————————————————————————————-

73-திருவாறன் விளை–ஆரம் முளா
மூலவர் -திருக் குறள் அப்பன் -பார்த்த சாரதி / நின்ற திருக் கோலம் / கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -பத்மாசனி நாச்சியார்
விமானம் -வாமன விமானம்
தீர்த்தம் -வேத வியாச சரஸ் -பம்பா தீர்த்தம்
மங்களா சாசனம் -நம்மாழ்வார்

மது கைடபர்களை அழித்து திரு மால் பிரமனுக்கு ஸ்ருஷ்டி ரஹஸ்யத்தை அளித்ததும் –
அர்ஜுனனால் புனர் நிர்மாணம் செய்யப் பட்ட திருத் தலமுமாகும்-
நிலக்கண் என்ற இடத்தில் இருந்து நாராயணப் பெருமாள் இந்த ஷேத்ரதிற்கு வர வேண்டும் என்ற ஆசையில்
ஒரு பிரம்மசாரி வடிவை எடுத்துக் கொண்டு அங்கு இருந்து ஒரு படகில் இங்கு வந்தார்
பம்பை ஆற்றின் கரையில் உள்ள ஸ்தலம் –
ஆனந்த விருத்தி -காட்டிய குணம் -பலர் அடியார் முன்பு –பாம்பணையான் -7-10- இன்பம் பயக்க —
பாம்பை ஆறு அருகில் -படகு போட்டி – இடை -கடை -ஆறு கழிகளால் வேயப்பட்ட படகு -இன்றும் படகு போட்டி பிரசித்தம் –
மாங்காட்டு நாம்பூதிரி -திரு ஓணம் வந்து அதிதி –பெருமாளை சேவித்து விருந்தோம்பல் செய்ததால் தொடங்கிற்று

———————————————————————————————

திரு வண் வண்டூர் –
மூலவர் -பாம்பணை அப்பன் / கமல நாதன் / நின்ற திருக் கோலம் / மேற்கே திரு முக மண்டலம்
தாயார் -கமல வல்லி நாச்சியார்
விமானம் -வேதாலயா விமானம்
தீர்த்தம் -பாப விநாச தீர்த்தம் -பாம்பை ஆறு

பிரமானால் சபிக்கப்பட்ட நாரதர் இவ்விடத்திற்கு வந்து த்வம் புரிந்து பெருமாளின் அருளால் இங்கு இருந்து
பல்லாயிரம் ஸ்லோகங்களைக் கொண்ட -நாரதீய புராணம் மற்றும் பல நூல்களை இயற்றினார்
-நகுலனால் புனர் நிர்மாணம் செய்யப் பட்ட வூர்
திருப் பாண்டவனூர் -என்பதே மருவி -திரு வண் வண்டூர் –ஆகியது
மார்க்கண்டேயர் பெருமாளின் மூக்கு வழியே உள் புகுந்து அனைத்து உலகங்களைக் கண்டதும் இங்கு தான் நடந்தது

பம்பை ஆற்றின் வடகரையில்
ரக்ஷண ஸ்தர்யம் ரஷித்தே தீருவார் –6-1-வைகல் பூங்கழிவாய்
திருவன் உண்டு -மருவி -இந்த பெயர் –
பாம்பணை அப்பன் -பம்பா அணைந்த அப்பன் -நின்ற திருக் கோலம்
சனகாதிகள் -ப்ரஹ்மம் –நாரதர் மேலே சதுர்முகன் சாபம் –

———————————————————————————————————

75-திருவனந்த புரம்
மூலவர் -அநந்த பத்ம நாபன் -புஜங்க சயனம் -கிழக்கே திரு முக மண்டலம் –
தாயார் -ஸ்ரீ ஹரி லஷ்மி
விமானம் -ஹேம கூட விமானம்
தீர்த்தம் -மத்ஸ்ய வராஹ பத்ம தீர்த்தங்கள்
மங்களா சாசனம் -நம்மாழ்வார் -10-2-

ஸ்யானந்தூர புரம் -என்று மற்றொரு பெயரிலும் வழங்கப் படுகிறது -திவாகர யோகி ஆராதனம் செய்யும் மூர்த்தியை
பகவான் சிறுவன் வடிவத்தில் எடுத்துக் கொண்டு ஓட யோகி துரத்தி வந்தார் -காட்டுக்குள் தேடிப் போன போது
ஒரு மரம் விழுந்து பழ காத தூரம் பெறுத்த சயனத் திருக் கோலத்தில் சேவை சாதித்தார் -பின்னர் யோகியின் பிரார்த்தனைப் படி
அவர் கையில் பிடித்து இருந்த தண்டத்தின் அளவு சுருக்கிக் கொண்டு இன்று இருக்கும் வடிவத்தில் சயனித்தார் –
இவருடைய திருவடி திரு நாபி திரு முக மண்டலம் மூன்று வாசல்களில் தான் சேவிக்க வேண்டும் –
1688- ஆண்டில் கோயிலில் பெரும் தீ விபத்து ஏற்பட ராஜா மார்த்தாண்ட வர்மன் சாளக்ராமத்தாலேயே ஆன புதிய திரு மேனியை
நிர்மாணம் செய்து 1726 -ஆண்டு ஸம்ப்ரோக்ஷணம் செய்தார் –
அரச வம்சத்தினர் இன்று அளவும் பத்ம நாபா தாசர்கள் -என்றே அழைக்கப் படுகின்றனர் –
சாம்யம் -குணம் காட்டி -சாமியார் -5 மைல் நீளம் இலுப்ப மரம் –
18 அடியாக சுருக்கி -அந்தமாக சுருக்கிக் கொண்ட அனந்தன் -உப்பு மாங்காய் -அரிசி கஞ்சி பிரசாதம்
பில்வ மங்கள ரிஷி திவாகர ரிஷி –
யானையில் 1200 சாளக்கிராமம் / 1200 சாளக்கிராமம் இன்னும் வைத்து -நேபாள் மூலம் யானை கொண்டு வந்ததாம் –
பங்குனி ஐப்பசி –ஆறாட்டு உத்சவம் தீர்த்த வாரி
பள்ளி வேட்டை -அம்பு போடுவது போலே -ராஜா மனு போடுவாராம் பெருமாள் சார்பில் –வேதங்கள் ஓதி
முர ஜபம் -பத்ர தீப லக்ஷ தீப உத்சவம்
வெண்ணெய் சாத்தி சேவை சாதிக்கும்- ஆஞ்சநேயர்
நரசிங்ஹர் -உக்ரம் குறைக்க நித்யம் ஸ்ரீ ராமாயணம் பாராயணம்

————————————————————————————————-

76-திரு வாட்டாற்று
மூலவர் -ஆதி கேசவப் பெருமாள் -புஜங்க சயனம் -மேற்கே திரு முக மண்டலம் –
தாயார் -மரகத வல்லி நாச்சியார்
விமானம் -அஷ்டாங்க -அஷ்டாக்ஷர விமானம்
தீர்த்தம் -கடல் வாய் தீர்த்தம் -வாட்டாறு –

திரு வனந்த புரம் போலே இவருடைய திருவடி திரு நாபி திரு முக மண்டலம் -மூன்று வாசல்களில் சேவிக்க வேண்டும் –
கேசி அசுரனை வாதம் செய்து துறையில் தள்ளி பெருமாள் அவன் மேல் படுத்துக்க கொள்ள கணவனைக் காப்பதற்கு கேசியின் மனைவி
நதி வடிவத்தில் ஓடி வந்து பகவானை தள்ள முற்பட்டாள்-பெருமானைக் காக்க பூமா தேவி அவர் சயனித்து இருந்த பூமியை உயர்த்த
ஆறு வட்ட வடிவமாக ஓடி திரு வாட்டாற்று ஆனது –
இது ஒரு மலை மடக் கோயில் -16008 சாளக்ராம மூர்த்திகள் சேர்த்து உருவாக்கப் பட்ட மூலவர் திரு மேனி –
பரலி கோதா இரண்டு ஆறு வட்டமாக ஓட
10-6 – அருள் தருவான் அமைகுன்றான் –வாட்டாற்றான் அடி வணங்கி
பிரணத பாரதந்தர்யம் -அதுவும் நம் விதி வகையே –
22 அடி நீளம் -நாபியில் நான் முகன் இல்லை -இங்கே -ஆதி கேசவ பெருமாள் -செண்பக வானம்
16008 சாளக்கிராமம் -கொண்டே திருமேனி
சாஹோதா மகரிஹிக்கு பிரத்யக்ஷம்
திரு விதாங்கூர் ராஜா தொடர்பு –
ஓண வில் சமர்ப்பிப்பார்கள் –

—————————————————————————————-

77-திரு வண் பரிசாரம் –திருப்பதி சாரம்
மூலவர் -திருக் குறள் அப்பன் -திரு வாழ் மார்பன் –வீற்று இருந்த திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -கமல வல்லி நாச்சியார்
விமானம் -இந்த்ர கல்யாண விமானம்
தீர்த்தம் -லஷ்மி தார்த்தம்
மங்களா சாசனம் -நம்மாழ்வார் -8-3-ஒரே பாசுரம் — ஸுகுமார்யம் -கொடை தன்மை -ஆழ்வாரையே கொடுத்து அருளினார் –

சப்த ரிஷிகள் அத்ரியை முன்னிட்டு பகவானைப் பிரார்த்திக்க அவர்களுக்கு சேவை சாதித்து அருளினார்
ஹிரண்ய கசிபுவைக் கொன்ற நரசிங்கப் பெருமாள் கோபம் தீர்ந்து லஷ்மியைத் தன் திரு மார்பில் சேர்த்துக் கொண்ட இடம்
நம்மாழ்வாரின் தாயார் உடைய நங்கையாரின் திரு வவதார ஸ்தலம் -சோமா தீர்த்தக் கரையில் –
அகஸ்தியர் -குலசேகர மகரிஷி -ராமர் லஷ்மணர் சீதா ஆஞ்சநேயர் விபீஷணன் பிரகாரத்தில் சேவை

—————————————————————————————————-

திரு வஞ்சிக்களம்– மாசி -புனர்பூசம் -நல்லவர் கொண்டாடும் நாள் -திருக் குலசேகர புரம் / சேர குல வல்லி நாச்சியார் –

—————————————————————————————————–

ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
பூர்வாச்சார்யர் திருவடிகளே சரணம்
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திவ்ய தேச அனுபவம் –சோழ நாடு –ஸ்தல மாஹாத்ம்ய விளக்கம் –ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் —

November 19, 2016

1-திருவரங்கம் -ஸ்ரீ பூ லோக வைகுண்டம் -பதின்மர் பாடும் பெருமாள்
-காவேரி விராஜா -பர வாசு தேவன்-ப்ரத்யக்ஷம் பரம பதம் -தென்னாடும் வடநாடும் தொழ நின்ற திருக் கோயில் –
பெரிய பெருமாள் -பெரிய பிராட்டியார் -பெரிய திருநாள் -பெரிய அவசரம் –
மூலவர் -பெரிய பெருமாள் / ஸ்ரீ ரெங்க நாதர் -புஜங்க சயனம் -தெற்கே திரு முக மண்டலம் –
உத்சவர் -நம்பெருமாள் -அழகிய மணவாளன் –
தாயார் -ஸ்ரீ ரெங்க நாயகி
விமானம் -ப்ரணவாகார விமானம் –
தீர்த்தம் -சந்த்ர புஷ்காரிணி -கொள்ளிடம் -காவேரி
ஸ்தல வருஷம் -புன்னை மரம்
மங்களா சாசனம் -10 ஆழ்வார்களும் ஆண்டாளும் –

ப்ரணவாகார விமானத்தில் திருப் பாற் கடலில் தோன்றிப் பிரமனால் ஸத்ய லோகத்தில் ஆராதிக்கப் பட்ட பெருமாள் –
இஷுவாகு மன்னரால் சரயூ நதியின் தென் கரையில் அயோத்தியில் ஸ்தாபிக்கப் பட்டு ஸ்ரீ ராமர் வரை அனைத்து மன்னர்களாலும் ஆராதிக்கப் பட்டார்
ஸ்ரீ ராமனால் விபீஷணனுக்கு இவ்விமானமும் பெருமாளும் பரிசாகக் கொடுக்கப் பட்டு இலங்கையை நோக்கி
பிராயணப் பட்ட போது வழியில் 2 காவேரிகளுக்கு நடுவில் ஸ்ரீ ரெங்கத்தில் பிரதிஷ்டை செய்யப் பட்டார்
ஆகவே விபீஷணன் இருக்கும் இலங்கையை -தென் திசையை -நோக்கி சயனம்
ஐப்பசி மாதத்தில் முப்பத்து முக்கோடி புண்ய தீர்த்தங்களும் காவேரியில் கலக்கிற படியால் துலா காவேரி ஸ்நானம் சிறப்பானது –
இத் திருத் தலத்தில் அனைத்து மரபுகளும் ஸ்ரீ ராமானுஜரால் ஏற்படுத்தப் பட்டன –
இது ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரங்களில் ஓன்று –

வடதிருக் காவேரி -கொள்ளிடம் -ஆர்ஷம் ரிஷிகளால்
நான்கு நேரி /ஸ்ரீ ரெங்கம் /ஸ்ரீ முஷ்ணம்/ திருமலை /நைமிசாரண்யம் /புஷ்கரம் /பதரிகாச்ரமம் /சாளக்கிராமம் -ஸ்வயம் வியக்தம்
அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா த்வாரக -முக்தி
கோயில் திருமலை பெருமாள் கோயில் திரு நாராயண புரம்
தர்மவர்மன் சோழ ராஜன்
-இதம் ஹி ரெங்கம் -ஆதி சங்கரர் -இங்கே பிறந்தால் வேறு பிறவி இல்லை
ராஜ தானி -எல்லா ஆச்சார்யர்களும் வாழ்ந்து கைங்கர்யம் செய்த திய்வய தேசம்
54 சந்நிதிகள் -நடை அழகு -கஜ சிம்ம புலி ஏறு சர்ப்பம் -1323 -1378 -வெளியே சென்று -திருமலையிலே ஸ்ரீ ரெங்க மண்டபம் –
பங்குனி உத்தரம் சேர்த்தி -சேர குல வாலி சேர்த்தி -ஸ்ரீ ராம நவமி -உறையூர் சேர்த்தி -மூன்றும் உண்டே –

——————————————————————————-

2- திருக் கோழி–உறையூர் -நிகிளா புரி
மூலவர் -ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் -நின்ற திருக் கோலம் -வடக்கே திரு முக மண்டலம்
தாயார் -ஸ்ரீ கமல வல்லி நாச்சியார் உறையூர் வல்லி /க -பரமாத்மா ம ஜீவாத்மா -சேர்த்து வைக்கும் பாலம் கமலா-இளமை தோன்றும் திரு முக மண்டலம்
விமானம் -கல்யாண விமானம்
தீர்த்தம் -கல்யாண தீர்த்தம் -ஸூர்ய புஷ்கரிணி -குடமுருட்டி நதி
மங்களா சாசனம் -திரு மங்கை ஆழ்வார்

நந்த சோழன் -உறையூரை தலை நகராக கொண்டு ஆண்டான் -தாமரை ஓடையில் ஓர் தாமரை மலரில் கிடைத்த பெண் குழந்தையே ஸ்ரீ கமலவல்லி நாச்சியார் –
அவளை அழகிய மணவாளன் திருக் கல்யாணம் செய்து கொண்டார் -இருவரையும் பிரதிஷ்டை செய்து நந்த சோழன் சிறப்பான கோயிலைக் காட்டினார் –
பங்குனி ப்ரம்மோத்சவத்தில் ஆறாம் நாள் அன்று நம் பெருமாளுக்கும் ஸ்ரீ கமல வல்லி நாச்சியாருக்கு திருக் கல்யாணம் நடை பெறுகிறது -ஆயில்ய நக்ஷத்ரம் –
இது திருப் பாண் ஆழ்வார் திருவவதார ஸ்தலம் – கார்த்திகை ரோகிணி –
கோழியும் கூடலும் -பெரிய திருமொழி –ராஜ தானி சோழர்களுக்கு -சோழ மன்னன் யானை ஒட்டின கோழி -ருத்ரன் அனுக்கிரகத்தால் -என்பர்
நாச்சியார் தங்கி உறையும் திவ்ய தேசம்
பிள்ளை உறங்கா வல்லி தாசர் பொன்னாச்சி வாசம் செய்த திவ்ய தேசம் –

———————————————————————-

3- திருக் கரம்பனூர் —
மூலவர் -ஸ்ரீ புருஷோத்தமன்- புஜங்க சயனம் -கிழக்கே திருமுக மண்டலம்
தாயார் —ஸ்ரீ பூர்வா தேவி- பூர்ண வல்லி
விமானம் — உத்யோக விமானம்
தீர்த்தம் -கதம்ப தீர்த்தம்
ஸ்தல வருஷம் -வாழை மரம்
மங்களா சாசனம் -திரு மங்கை ஆழ்வார்

தாயார் கடாக்ஷத்தால் கபால சாபம் தீர்ந்த இடம் –
இங்கு மும் மூர்த்திகளும் அவரவர் தேவரிமார்களுடன் சேவை சாதிக்கின்றனர் –
பகவான் கதம்ப மரமாக இருந்த போது பிரமன் திரு மஞ்சனம் செய்ய உடனே புருஷோத்தமனாக சேவை சாதித்தார் –
கதம்ப மரமாக இருந்து கதம்ப ரிஷிக்கு சேவை சாதித்த படியால் கதம்பானூர் என்ற பெயர் பெற்று -பின்னாளில் கரம்பனூர் ஆகியது –

கரம்பனூர் உத்தமனை -கலியன் –
சரஸ்வதி இருப்பதால் -கல்விக்கு பிள்ளைகள் கூட்டமாக வந்து சேவிப்பார்கள்
அன்னம் பூர்ணமாக அருளும் தாயார் -கைப்பிடி அன்னம் இட்டு கபால விமோசனம் -பிஷாண்டார் கோயில்
கார்த்திகை திரு நாள் -பெருமாள் ருத்ரன் சேர்ந்து எழுந்து அருளுவார் –
திருக் கண்ண புரத்தில் சிவன் திருக் கோலம் சாத்தி கொள்வார்
ஆழ்வார் பட்டவர்த்தி -அருகில் -இங்கே இருந்து திரு மங்கை ஆழ்வார் திரு மதிள் கைங்கர்யம்

————————————————————————————————–

4-திரு வெள்ளறை
மூலவர் -ஸ்ரீ புண்டரீகாக்ஷன் -நின்ற திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம் –
தாயார் -ஸ்ரீ பங்கயச் செல்வி -செண்பக வல்லி –
விமானம் -விமலாக்ருதி விமானம்
தீர்த்தம் -குசா மணி கர்ணிகா சக்ர புஷ்கல வராஹ கந்த ஷீர பத்ம -ஆகிய 7 தீர்த்தங்கள்
மங்களா சாசனம் -பெரியாழ்வார் -திருமங்கை ஆழ்வார்

ஸ்ரீ தேவி நாச்சியாருக்கு ஏற்றம் தரும் இடம் -சிபி சக்கரவர்த்தி படையுடன் இங்கு தண்டு இறங்க -பகவான் ஒரு
வெள்ளைப் பன்றி வடிவத்தில் போக்கு காட்டி புற்றுக்குள் மறந்தார் –
மார்க்கண்டேய ரிஷி சொன்ன படி சிபி சக்கரவர்த்தி பாலால் அபிஷேகம் செய்ய புற்றுக்குள் இருந்து ஸ்ரீ புண்டரீகாக்ஷப் பெருமாள் வெளிப்பட்டார் –
இங்கு இருக்கும் பூங்கிணற்றில் தாயார் தவம் இருந்து பெருமாளைத் திருக் கல்யாணம் பண்ணிக் கொண்டார் –
இங்கு தஷிணாயணம் உத்தராயணம் இரண்டு வாசல்கள் உண்டு -இங்குள்ள ஸ்வஸ்திகா குளம் மிகவும் சிறப்பு வாய்ந்தது
திருச்சி துறையூர் மார்க்கத்தில் திருச்சியில் இருந்து 20 கிமி தூரம் –

ஸ்வேத கிரி –மலைக்கட்டு க்ஷேத்ரம் / நாச்சியார் பல்லக்கு முன்னே -/ திரு வீதி தட்டு பிரசாதமும் இவளுக்கு /
பூம் கிணற்றில் தவம் இருந்த போர் கொடி வாழியே
கர்ப்ப க்ருஹத்தில் ஆதி சேஷன் கருடன் ஸூர்ய சந்திரர்கள் சேவை
உய்யக் கொண்டார் எங்கள் ஆழ்வான் அவதாரம் இங்கே
3700 பக்தர்கள் குடி ஏற்றி -ஒருவர் குறைய -பெருமாளே உருவம் கொண்டு பக்தர்களில் ஒருவன்
பலி பீடத்தில் திரு மஞ்சனம் பிரசித்தம்
காப்பிட்டார் பெரியாழ்வார் -இந்த திவ்ய தேச மங்களா சாசனம் —
7 புண்ய தீர்த்தம் கோயிலுக்கு உள்ளே –
ஸ் வஸ்திகா குளம் வெளியில் சேவிக்க வேண்டும்

——————————————————————————–

5-திரு அன்பில்
மூலவர் -வடிவு அழகிய நம்பி -புஜங்க சயனம் -கிழக்கே திருமுக மண்டலம்
உத்சவர் -ஸ்ரீ ஸூ ந்தர ராஜன்
தாயார் -ஸ்ரீ அழகிய வல்லி நாச்சியார்
விமானம் -தாரக விமானம்
தீர்த்தம் -மண்டூக புஷ்கரிணி
மங்களாசானம் -திரு மழிசை ஆழ்வார்

மண்டூக மஹர்ஷி இங்கு இருக்கும் தீர்த்தத்தில் நீராடி சாபத்தில் இருந்து விடுதலை பெற்றார் –
இவர் பெயரிலே புஷ்கரிணி –
இங்கு தாயார் நின்ற நிலையிலும் -ஆண்டாள் அமர்ந்த திருக் கோலத்திலும் சேவை சாதிப்பது சிறப்பு –
லால்குடிக்கு கிழக்கே 8 கி மி தொலைவில் உள்ள தேசம் –
அப்பக்குடத்தான் சந்நிதியில் இருந்து கொள்ளிடம் கடந்தும் செல்லலாம் –

அன்பை இல்லமாக கொண்டவர் -அன்பே இருப்பிடம் -என்றவாறு
மாசி பவ் ரணமி -கொள்ளிடக் கரைக்கு எழுந்து அருளுவார் –நம் பெருமாளும் எழுந்து அருளுவார் –
அநிருத்த மூர்த்தி இவர் என்பர் -ரஷிக்கும் பொழுது பேர் அழகன் –
மண்டூக -ஜலத்துக்கு உள்ளே இருந்து தபஸ் -துர்வாசர் சாபத்தால் மண்டூகம் ஆனார் –
சிவன் ப்ரம்மா ஊர்வசி மூவருக்கும் ப்ரத்யக்ஷம் –
சம்சாரம் தூண்டுவிக்கும் விமானம் -அதனால் தாரக விமானம் –

—————————————————————————————————–

6 -திருப் பேர் நகர் -கோவிலடி -அப்பக்குடத்தான் -புஜங்க சயனம் -மேற்கே திரு முக மண்டலம்
தாயார் -இந்திரா தேவி –கமலவல்லி
விமானம் -இந்த்ர விமானம்
தீர்த்தம் -இந்த்ர தீர்த்தம்
மங்களா சாசனம் -திரு மழிசை ஆழ்வார் /நம்மாழ்வார் / பெரியாழ்வார் /திருமங்கை ஆழ்வார்

துர்வாசர் சாபத்திற்கு ஆளான உபமன்யு அரசர் இங்கு வந்து அதை போக்கிக் கொள்ள தினமும் ததீயாராதனம் செய்து வந்தார் –
ஒரு நாள் பகவான் தானே வந்து அனைவரின் பிரசாதத்தை உண்டும் பசி ஆறாமல் அப்பத்தைக் கேட்டு வாங்கி அந்த குடத்துடன் சயனித்து விட்டார் –
அரசனும் சாபம் நீங்கப் பெற்றார் -அன்றிலிருந்து தினமும் மாலை வேளையில் பெருமாளுக்கு அப்பம் அமுது செய்யப் படுகிறது
-நம்மாழ்வார் கடையாக பதிகம் அருளிச் செய்த திருத் தலம் –
திருச்சியில் இருந்து 20 கி மி தூரம் /கல்லணையில் இருந்து 7 கி மி தூரம் –
சாபம் கொடுக்க கொடுக்க துர்வாசர் தப வலிமை அதிகம் ஆகுமே
ஸ்வாமித்வம் -வெளிப்படுத்தி அருளினார் – பேரேன் என்று திரு உள்ளம் நிறைந்து அருளும் பெருமாள்
பிடித்தேன் -பிணி சாரேன் பிறவித துயர் எழுந்தேன் -உன பாதம் உகந்து பெற்றேன்
ஆதி ரெங்கம் -ஸ்ரீ ரெங்க பட்டணம் -அப்பால ரெங்கன் -ஸ்ரீ ரெங்கன் –பரிமள ரெங்கன் –

————————————————————————————————-

7– திருக் கண்டியூர்
மூலவர் -ஹரசாப விமோசனப் பெருமாள் -நின்ற திருக் கோலம் –கிழக்கு திரு முக மண்டலம் –
உத்சவர் -கமல நாதன்
தாயார் -கமல வல்லி
விமானம் -கமலாக்ருதி விமானம்
தீர்த்தம் -பத்ம தீர்த்தம் -குடமுருட்டி நதி -கபால மோக்ஷ புஷ்கரிணி
மங்களா சாசனம் -திரு மங்கை ஆழ்வார் -மண்டினார்க்கு உய்யல் அல்லால் மற்று யாருக்கு உய்யலாகுமே

பரமசிவன் தன்னுடைய சாபம் இங்கு நீங்கப் பெற்றார் -நீல கண்டன் சாபத்தைப் போக்கிய படியால் கண்டியூர் -என்று அழைக்கப் படுகிறது –
இந்த ஷேத்ரத்தில் -கமல நாதன் –கமல வல்லித் தாயார் –கமல புஷ்கரிணி –கமலாக்ருதி விமானம் –
-கமல தீர்த்தம் -இருக்கிற படியால் இதனைப் பஞ்ச கமல க்ஷேத்ரம் என்றும் அழைப்பார்கள் –
தஞ்சை திருவையூறு சாலையில் -தஞ்சையில் இருந்து 10 கிமி தூரம் –
பலி நாத பெருமாள் –மஹா பலி வணங்கிய பெருமாள் -நரஸிம்ஹர் / சுதர்சனர் -சேவை பிரசித்தம்

——————————————————————————————

8- திருக் கூடலூர்
மூலவர் -வையம் காத்த பெருமாள் / ஜகத் ரக்ஷகன் /நின்ற திருக் கோலம் /கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -பத்மாசனி -புஷப வல்லி
விமானம் -சுத்த சத்வ விமானம் –
தீர்த்தம் -சக்ர தீர்த்தம்
மங்களாசாசனம் –திரு மங்கை ஆழ்வார் -5-2-பதிகம்

ஹிரண்யாக்ஷன் இடம் இருந்து பூமா தேவியை காக்க வராஹப் பெருமாள் -இங்கு கோரைப் பற்களால் உள்ளே புகுந்து
ஸ்ரீ முஷ்ணத்தில் வெளியே வந்தார் — கடல் மலைகள் – அருந்தும் பெருமாள் -ஸ்ரீ வராஹர் புகுந்த இடம் -இது-பிரயோக சக்கரத்துடன் சேவை
அம்பரீஷ மஹா ராஜர் இப் பெருமாள் அருள் பெற்று பல கைங்கர்யங்களைச் செய்துள்ளார் –
பிற்காலத்தில் ஸ்வப்னத்தில் சாதித்து – -காவேரி வெள்ளத்தால் அடித்துப் போக்கப்பட்டு இராணி மங்கம்மாள் புனர் நிர்மாணம் செய்துள்ளார் –
இங்கு நர்த்தன ஆஞ்சநேயர் பிரசித்தம் -கூத்தாடும் திருக் கோலம் -உத்சவம் கண்டு வசம் இழந்து நர்த்தனம் செய்தாராம்
திருவையாறில் இருந்து 11 கி மி தூரம் –

————————————————————————————-

9- திருக் கவித்தலம் -பஞ்ச கிருஷ்ண க்ஷேத்ரங்களில் ஓன்று
மூலவர் -கஜேந்திரன் / புஜங்க சயனம் / கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -ரமாமணி வல்லி / பொற்றாமரையாள்
விமானம் -காகா நாக்ருதி விமானம்
தீர்த்தம் -கஜேந்திர புஷ்கரிணி -கபில தீர்த்தம்
மங்களா சாசனம் -திரு மழிசை ஆழ்வார்

கஜேந்திர மோக்ஷத்தை சேவிக்க வேண்டும் என்று ஆஞ்சநேயர் பிரார்த்திக்க பெருமாள் இந்த ஷேத்ரத்தில் தவம் இயற்றும் படிக் கூறினார்
கபியான ஆஞ்சநேயரின் கோரிக்கைக்கு இணங்க இங்கு கஜேந்திர வரனாக சேவை சாதித்து அருள்கிறார்
இதனால் கபித்தலம் என்ற பெயர் ஏற்பட்டது -இந்த்ரத்யும்ன மஹா ராஜாவுக்கும் பகவான் இதே காட்சியை அளித்ததாகக் கூறப் பட்டது –
ஆற்றங்கரைக்கு கிடக்கும் கண்ணன் –ஏகாந்த ஸ்தலம் -உரை கிடக்கும் உள்ளம் எனக்கு -சரம ஸ்லோகம் உள்ளத்தில் இருக்க கூற்றம் சாராதே
கொள்ளிடம் காவேரி நடுவில் இதுவும்
பாக்ஸர் -சோனிபூர் -பீகார் அருகில் நடந்தது -கிருத யுக கஜேந்திர விருத்தாந்தம் காண திருவடி ஆசைப்பட -சேவை சாதித்து அருளி –

—————————————————————————————-

10–திருப் புள்ளம் பூதங்குடி
மூலவர் -வாழ்வில் இராமன் / புஜங்க சயனம் /கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -பொற்றாமரையாள்
விமானம் -சோபனா விமானம்
தீர்த்தம் -ஜடாயு தீர்த்தம் / க்ருத்ர புஷ்கரிணி
மங்களா சாசனம் -திரு மங்கை ஆழ்வார்

இராவணன் இடம் நடந்த போரில் ஜடாயு மஹா ராஜா அடிபட்டு மரணம் அடைய -ஈமக்கி கடன்களை செய்து பெருமாள்
ஜடாயுவை மோக்ஷ சாம்ராஜ்யத்துக்கு அனுப்பி வைத்து இக்காட்சிகளை இங்கே பக்தர்களுக்கு காட்டி அருளினார்
சோமுகன் என்னும் அரக்கன் பிரமன் இடம் இருந்து வேதங்களை திருட -இங்கே பகவான் பிரமனுக்கு மீண்டும் வேதங்களை உபதேசித்தார் –
திரு மண்டங்குடி இதன் அருகில் -உள்ளது –
தாக்கீது -நாசிக் பஞ்சவடி அருகில் நடந்தது –திருப் புட் குழியிலும் சேவை இங்கே போலே
அஹோபில மேடம் அதீனம் -தேசிகர் சந்நிதி பிரசித்தம் –
ஜடாயு ஹனுமான் லஷ்மணன் பூமி தேவி கர்ப்ப க்ருஹத்துக்குள் சேவை
இரண்டு திருக்கரங்கள் –கண்டு மங்களா சாசனம் பண்ணாமல் போக -சங்கு சக்கரத்துடன் சேவை சாதித்து பாடல் பெற்றாராம்
சயன திருக்கோலம் இங்கும் திருப்புல்லாணியிலும் -இராமனை சேவிக்கலாம் – கம்பரும் பாடி -இவனாகும் அவ்வல் வில் ராமன்

——————————————————————————————–

11-திரு ஆதனூர்
மூலவர் -ஆண்டளக்கும் ஐயன் -/ புஜங்க சயனம் / கிழக்கே திரு முக மண்டலம்
உத்சவர் -அழகிய மணவாளன் -ஸ்ரீ ரெங்கம் போலவே –
தாயார் -ஸ்ரீ ரங்க நாயகி –பார்க்கவி என்றும் திரு நாமம்
விமானம் -ப்ரணவாரா விமானம்
தீர்த்தம் -ஸூ ர்ய புஷ்கரிணி
ஸ்தல வ்ருக்ஷம்–பாடலை வ்ருக்ஷம்
மங்களா சாசனம் –திரு மங்கை ஆழ்வார் –

ஆ -பசு -காம தேனு -இந்த ஷேத்ரத்தில் தவம் பெற்று சிறந்த கதி பெற்றதால் -ஆதனூர் -பெயர்
திருமங்கை ஆழ்வார் திருவரங்கத்தில் மதில் கட்டிய கடனுக்கு இப்பெருமாள் செல்வம் அளந்து கொடுத்து
கணக்கும் எழுதிய படியால் -மரக்கால் ஓலைச் சுவடி யுடன் எழுந்து அருளி இருக்கிறார் –
மண்ணை அளந்து கொள்ளக் கொடுக்க -சரியாக வேலை செய்தால் தங்கமாக தெரியும் -இல்லை என்றால் மண்ணாக தெரியும்
கணக்கும் வைக்க எழுத்து கோல்
ஆதனூர் ஆண்டு அளக்கும் ஐயன் -அரசனாக ஆண்டு அன்னம் அளக்கும் -அளிக்கும் -ரக்ஷகன் –
பெருமாள் தலைக்குக் கீழ் ஒரு மரக்கால் படியை வைத்து இருக்கிறார்
அக்னி பகவானுக்கும் தன் சாபம் தீராத தவம் புரிந்த க்ஷேத்ரம் -கொள்ளிடம் காவேரி நடுவில் சேவை இங்கும் –
இந்திரனும் ஸ்ரீ மஹா லஷ்மி மாலையை மரியாதை குறைவுடன் நடத்திய சாபம்–துர்வாசர் பிருகு சாபம் -இரண்டும் சொல்வர்
இங்கே தவம் இருந்து தாயாரின் அருளை பெற்று தீர பெற்றான் –
ஸ்வாமி மலையில் இருந்து 3 கி மி தூரம் –

—————————————————————————————-

12-திருக் குடந்தை
மூலவர் -ஸ்ரீ -சார்ங்க பாணி / ஆராவமுதன் /அபர்யாப்தாம்ருதன் /உத்யோக சயனம் / கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -கோமள வல்லி
விமானம் -வைதிக விமானம்
தீர்த்தம் -ஹேம புஷ்கரிணி
மங்களாசாசனம் -பூதத்தாழ்வார் / பேயாழ்வார் / திரு மழிசை ஆழ்வார் /நம்மாழ்வார் / பெரியாழ்வார் /ஆண்டாள் / திரு மங்கை ஆழ்வார் –
திருமங்கை ஆழ்வார் 6 திவ்ய பிரபந்தங்கள் அனைத்திலும் மங்களா சாசனம் –

பிரமன் ஸ்ருஷ்டிக்கு தேவையான வித்துக்களை ஒரு குடத்தில் -கும்பத்தில் வைத்தான் –
அந்த கும்பம் இமயமலையில் இருந்து கங்கா யமுனா கோதாவரி கிருஷ்ணா -பாலாற்றின் வழியாகக் காவிரியை அடைந்தது
இங்கு கும்பத்தின் கோணத்தில் -மூலையில் -இருந்து வித்துக்கள் கீழே விழுந்த படியால் கும்ப கோணம் என்ற பெயர் பெற்றது –
ஹேம மஹர்ஷிக்கு திருமகளாக பிராட்டி பிறக்க -அவளைத் தேருடன் எழுந்து அருளி மகர சங்கராந்தி அன்று
ஸ்ரீ சாரங்க பாணி திருக் கல்யாணம் செய்து கொண்டார்
கர்ப்பகிரகம் தேர் வடிவில் இருக்கும் –
உத்யோக சயனம் -உத்தான சயனம் –கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு வாழி கேசனே -திரு மழிசை பிரான் -ஆராவமுத ஆழ்வார் –
தாயார் -பெருமாள் மாற்றி திருக் கோலம் -குத்து விளக்கு எரிய-அன்று -சேவை யுண்டே –
ஸ்ரீ சார்ங்க பாணி -ஸ்ரீ சக்ர பாணி -ஸ்ரீ ராம ஸ்வாமி திருக் கோயில்கள் பிரசித்தம்
தஷிணாயணம் உத்தராயணம் -இரண்டு வாசல்கள் உள்ளன –
நாலாயிரம் மீண்டும் கிடைக்க ஆராவமுதனே அருள் புரிந்தார் -திராவிட ஸ்ருதி தர்சகாய நம -நாமாவளி –
கோல்ஹா பூரில்-தாயார் –திருமலை -பத்மாவதி –பாதாள ஸ்ரீனிவாசர் கோயில் –
மகா மகம் பிரசித்தம் –பாஸ்கர க்ஷேத்ரம் -ஸூ ர்யனால் பிரசித்தம் -சக்கர படித்துறை பிரசித்தம் –
சுதர்சன வல்லி விஜய வல்லி –ஐஸ்வர்யம் ஆயுசு ஆரோக்யம் -திரு மழிசை -திருச் சக்கர அம்சம் –
தக்ஷிண அயோத்தியை -அதனால் தான் ஸ்ரீ ராமர் கோயில் -அமர்ந்த திருக் கோலம் ஆஞ்சநேயர் -தம்பூரா ஸ்ரீ ராமாயணம் திருக் கைகளில் உடன் சேவை
பட்டாபிஷேகம் திருக் கோலம் -லஷ்மணன் இரண்டு வில்லுடன் சேவை –

————————————————————————————————————-

13 -திரு விண்ணகர்
மூலவர் -ஸ்ரீ நிவாஸன் /ஒப்பிலியப்பன் / நின்ற திருக் கோலம் / கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -பூமா தேவி
விமானம் -சுத்த ஆனந்த விமானம்
தீர்த்தம் -அஹோ ராத்ர புஷ்காரிணி
மங்களாசாசனம் -பேயாழ்வார் -நம்மாழ்வார் –திருமங்கை யாழ்வார்

ம்ருகண்டு முனிவர் -திருமகள் -உப்பையே விட்டு திருக் கல்யாணம் -பிரசாத்தின் உப்பு சேர்ப்பதில்லை –
திருவோணம் ஸ்ரவண தீபம் பிரசித்தம் –
உப்பிலி அப்பன் /ஒப்பிலி அப்பன் /பொன்னப்பன் / முனியப்பன் /முத்தப்பன்/ -என் அப்பன் –
-ஐந்து அப்பன் -திரு நாமங்களுடன் சேவை சாதிக்கிறார் –
ஸ்ரீனிவாசனுக்கு அண்ணன் என்பர் –சுத்த ஆனந்தம் -விமானம் –
மகா லஷ்மி தாயாரே பூமி தேவியாக சேவை இங்கு
பங்குனி ஏகாதசி திருவோணம் –தோன்றி -பேச்சு வார்த்தை -ஐப்பசி திருவோணம் திருக் கல்யாணம் –

—————————————————————————-

14-திரு நறையூர்
மூலவர் -திரு நறையூர் நம்பி – / ஸ்ரீ நிவாஸன் / -நின்ற திருக் கோலம் / கிழக்கே திரு முக மண்டலம் –
உத்சவர் -நறையூர் நின்ற நம்பி –
தாயார் -வஞ்சுள வல்லித் தாயார் / நம்பிக்கை நாச்சியார்
விமானம் –ஹேம விமானம்
தீர்த்தம் -மணி முக்தா நதி
மங்களா சாசனம் -திருமங்கை ஆழ்வார்

நீளா தேவிக்கு சிறப்பு –வஞ்சுள மரத்தின் அடியில் திரு வவதரித்த தாயார் மேதாவி மஹர்ஷியால் வளர்க்கப் பட்டாள்-
நறை-நறுமணம் -மிக்க பூஞ்சோலைகள் நிறைந்த வூர் -நறையூர்
திருமங்கை ஆழ்வாருக்கு ஸமாச்ரயணம் செய்த படியால் பகவான் இங்கு சங்கு சக்கரங்களை முன்னோக்கிப் பிடித்து இருப்பார்
கல் கருட சேவை மிகவும் பிரசித்தம் –
பங்குனி -உத்தரம் -வெள்ளி -தாயார் தோற்றம் -நேராக கர்ப்ப க்ருஹ சேவை தாயாருக்கு –
சங்கர்ஷணன் பிரதியும்நன் அநிருத்தினன் புருஷோத்தமன் சேவை -பிரமன் -நித்ய பூஜை இங்கு —
மடல் எடுத்ததும் இங்கு –சங்கு சக்கர பொறி ஒற்றிக் கொண்டதால் -இடம் வலம் மாறி முன்னால் வைத்து சேவை
கோ செங்கணான் சோழன்
கருடன் -9 சர்ப்பங்கள் உடன் சேவை -அமிருத கலசம் -அமுது செய்கிறார் —

—————————————————————————————-

15-திருச்சேறை
மூலவர் –சார நாதன் / நின்ற திருக் கோலம் / கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -சார நாயகி
விமானம் -சார விமானம்
தீர்த்தம் -சார புஷ்கரணி
மங்களா சாசனம் -திரு மங்கை யாழ்வார்

இங்கு ஸ்ரீ தேவி . பூ தேவி / நீளா தேவி / சார நாயகி /மஹா லஷ்மி -ஐந்து நாய்ச்சிமார்கள் -ஐந்து தாயார் சேர்த்தி உத்சவம் பிரசித்தம் –
பிரளய காலத்தில் வித்துக்களை சேமிக்கச் செய்யப்படட குடத்தின் மண் இந்த ஷேத்ரத்தில் இருந்து எடுக்கப் பட்டது
வித்யா பர்வத அடியில் 7 நதிகள் தவம் செய்ய ஒரு கந்தர்வ ராஜா பொதுவாக நமஸ்கரிக்க –
காவேரிக்கு கங்கைக்கும் இது யாருக்கு என்ற போட்டி வர பிரமன் கங்கைக்கு தான் இந்த மரியாதை என்ன
-சினம் கொண்ட காவேரி இங்கே தவம் புரிய அவளுக்கு முதலில் குழந்தை வடிவத்திலும் -மா மதலை பெருமாள் —
பின்பு ஸ்ரீ சார நாதனாகவும் காட்சி அளித்தான் பகவான் -மார்க்கண்டேய ரிஷி காவேரி தாயார் கர்ப்ப க்ருஹத்தில் சேவை –

குட வாசல் -கும்ப கோணம் -வயிற்று பகுத்து திருச் சேறை-
மூலவர் கையில் புஷபத்துடன் சேவை
வன வாச ராமர் -சடை முடியுடன் சேவை –

———————————————————————————

16-திருக் கண்ண மங்கை -ஸ்ரீ கிருஷ்ண மங்கள க்ஷேத்ரம்
மூலவர் -பக்த வத்சலப் பெருமாள் -பத்தராவிப் பெருமாள் /நின்ற திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -அபிஷேக வல்லி
விமானம் -உத்பல விமானம்
தீர்த்தம் -தர்சன புஷ்கரிணி –பார்த்தாலே பலம் கிட்டும் –
மங்களா சாசனம் -திரு மங்கை ஆழ்வார் -கண்ண -கற்கலாம் பொருள் தானே –நம்பிள்ளை -பெரியவாச்சான் பிள்ளை –

கருடன் -கட்டம் போட்ட புடைவை சாத்துவார் -வர பிரசாதி
கடலுக்கு வெளியே வந்த படியால் -பகவானுக்குப் பெரும் புறக் கடல் என்ற பிரசித்தமான திரு நாமம் –
பாற் கடலில் தோன்றிய ஸ்ரீ மஃகா லஷ்மி மணம் புரிவதைக் காண முப்பத்து முக்கோடி தேவர்களும் வர –
வெட்கமுற்ற திருமகள் இங்கே வந்து மணம் புரிந்தாள்-
தேவர்களும் தேனீக்கள் வடிவில் மறைந்து திருமணத்தைக் கண்டனர் -தாயார் சந்நிதியில் தேன் கூடு இன்றும் உண்டு
அன்னம் -கிளி வண்டு காதலிக்கு பிடிக்குமே –
இங்கு க்ஷேத்ரம் /விமானம் /மண்டபம் /அரண்யம் /சரஸ் /க்ஷேத்ரம் /ஆறு /நகரம் -ஏழும் அமுதமயம் -சப்தாம்ருத க்ஷேத்ரம் -பெயரும் உண்டு
திருக் கண்ண மங்கை ஆண்டான் -தனி சந்நிதி -நாய் சண்டை -கதை -நாத முனிகள் சிஷ்யர் –ஸூ வியாபாரத்தை விட்டாரே –

——————————————————————————

17-திருக் கண்ண புரம் – -ஸ்ரீ கிருஷ்ண ஆரண்ய க்ஷேத்ரம்
மூலவர் -நீல மேகப் பெருமாள் / நின்ற திருக் கோலம் /கிழக்கே திரு முக மண்டலம் -பிரயோக சக்கரத்துடன் மூலவர் சேவை –
உத்சவர் –சவ்ரி ராஜன் -மை வண்ண நறும் குஞ்சி –
தாயார் -கண்ண புர நாயகி
விமானம் -உத்பலாவதக விமானம்
தீர்த்தம் -நித்ய புஷ்கரிணி
மங்களா சாசனம் -நம்மாழ்வார் / குலசேகர ஆழ்வார் / பெரியாழ்வார் / ஆண்டாள் /திருமங்கை ஆழ்வார்

உபரிசரவசு -ராஜா இங்கே வர -ரிஷிகள் மிகவும் மெலிந்து தவம் செய்து கொண்டு இருக்க
அவர்கள் சாமாக் கதிர்கள் போலே தோற்றம் அழிக்க -ராஜா வாளால் வெட்ட ஆரம்பித்தான்
ரிஷிகள் பகவானை வேண்ட அவர் சிறு பாலகனாய் த் தொன்று ராஜாவுக்கு தண்டனை கொடுத்து இங்கேயே காட்சி கொடுத்தார்
இங்கு விமானம் முக்தி அழித்தது -ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்காக அமாவாசை தோறும் பெருமாளுக்கு திருக் கைது தள சேவை உண்டு
திருமங்கை ஆழ்வாருக்கு அஷ்டாக்ஷர திருமந்த்ரார்த்தம் உபதேசித்த திருத் தலம் –
சரண்ய முகுந்தத்வம் -பலம் -மாம்சம் — -உத்பலாவதக -உடலில் ஆசை இல்லாதவர்க்கு முக்தி அளிக்கும் பெருமாள்
கீழ வீடு -இது சம்பிரதாயத்தில் மாசி மகம் தீர்த்தவாரி -மாப்பிள்ளை ஸ்வாமி -பிரசித்தம் -திரு மலை ராயன் பட்டணம் -2.5 நாள் உத்சவம்
திரு அஷ்டாக்ஷர க்ஷேத்ரம் -தெப்பம் உத்சவம் பிரசித்தம் –
விமானம் -மாட வீதி திரு மங்கை ஆழ்வார் சந்நிதியில் இருந்து சேவிக்கலாம் –
அரையர் -தாளம் -அடி பட்டு வடு இன்றும் சேவிக்கலாம் -முனி யதரையன் பொங்கல் பிரசித்தம் –

————————————————————————

18-திருக் கண்ணங்குடி -ஸ்ரீ கிருஷ்ண ஆரண்ய க்ஷேத்ரம் –
மூலவர் –சியாமா மா மேனியன் லோக நாதன் / நின்ற திருக் கோலம் / கிழக்கே திரு முக மண்டலம்
உத்சவர் -தாமோதர நாராயணன்
தாயார் -லோக நாயகி அரவிந்த வல்லி
விமானம் -உத்பல விமானம்
தீர்த்தம் -ஸ்ரவண புஷ்கரிணி –கேட்டாலே பாபம் தொல்லைக்கு –
ஸ்தல வ்ருக்ஷம் -மகிழ மரம்
மங்களா சாசனம் -திருமங்கை ஆழ்வார்

வசிஷ்டர் -வெண்ணெயால் கண்ணன் உருவம் ஆராதனம்பண்ணிக் கொண்டு இருந்த மூர்த்தியை பாலகன் வடிவில் வந்த
பெருமாள் எடுத்துக் கொண்டு போக- ரிஷிகள் பாலகனைப் பிடித்துக் காட்டினார் –
இடுப்பில் தாம்பால் கட்டுப்பட்டவன் முதலில் தாமோதரனாகவும் பின்பு நாராயணனாகவும் ரிஷிகளுக்கு காட்சி கொடுத்தான்
உறங்காப்புளி – தோலா வழக்கு -ஊராக் கிணறு -காயா மகிழ்–திருமங்கை ஆழ்வார் சரித்திரத்தில் -இங்கு பிரசித்தம் –
நாகை ஸ்வர்ண சிலை மறைத்த இடம் -உறங்கா புளி/ நிலம் -தோலா வழக்கு -தீராத வழக்கு திருக் கண்ணங்குடி
நீர் கொடுக்காததால் சபிக்க ஊராக் கிணறு -இளமையான மகிழ் மரம்
நாகை -திருவாரூர் மார்க்கம் -ஆழியூருக்கு அருகில் –

————————————————————————————

19-திரு நாகை
மூலவர் -நீல மேக்கப் பெருமாள் / நின்ற திருக் கோலம் / கிழக்கே திரு முக மண்டலம்
உத்சவர் -ஸுந்த்ரராஜன்
தாயார் -ஸுந்த்ர வல்லி
உத்சவர் -கஜ லஷ்மி
விமானம் -ஸுந்தர்ய விமானம்
தீர்த்தம் -சார புஷ்கரணி
மங்களா சாசனம் -திரு மங்கை ஆழ்வார் -அச்சோ ஒருவர் அழகிய வா –

க்ருத யுகத்தில் ஆதி சேஷனாலும் –த்ரேதா யுகத்தில் பூமி தேவியாலும் –த்வாபர யுகத்தில் மார்கண்டேயராலும்
கலி யுகத்தில் சாலிசுகன் என்ற அரசனால் ஆராதிக்கப் பட்டவர்
நாக ராஜா வான ஆதி சேஷன் ஆராதித்த படியால் நாகப் பட்டினம் ஆயிற்று –
பெருமாள் இங்கு பேர் அழகுடன் விளங்குகிற படியால் -நாகை அழகியார் -என்றும் அழைக்கப் படுகிறார் –
துருபனுக்கு அருளிய ஸ்தலம் – ராஜா இடுப்பில் சாவிக் கோத்து / காதில் நீலா கல் தனியாக தொங்கும் –

——————————————————————————-

20-தஞ்சை மா மாணிக் கோயில்
மூலவர் -நீல மேகப் பெருமாள் / மணிக் குன்றப் பெருமாள் / நர சிம்ஹப் பெருமாள் / வீற்று இருந்த திருக் கோலம் / கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -செங்கமல வல்லி / அம்புஜ வல்லி / தஞ்சை நாயகி
விமானம் -ஸுந்தர்ய விமானம் / மணிக் கூட விமானம் / வேத ஸூ ந்தர விமானம்
தீர்த்தம் -அம்ருத நதி -ஸ்ரீ ராம தீர்த்தம் -ஸூ ர்ய புஷ்கரணி
மங்களா சாசனம் -பூதத்தாழ்வார் திரு மங்கை ஆழ்வார்

க்ருத யுகத்தில் தஞ்சகன் -கஜமுகன் -தண்டகன் -எனும் அசுரர்கள் தவம் செய்து பராசர மஹர்ஷிக்கு இடையூறு செய்தனர்
பகவான் தோன்றி தஞ்சகனை அளித்ததால் அவன் பெயராலேயே தஞ்சை என்றாகியது –
அடுத்தது கஜமுகனை சிங்க முகத்தோடு பகவான் அழிக்கிறார்-அவரே தஞ்சை ஆளி-
விண் ஆறு -வெண்ணாற்றங்கரை -விராஜையே-என்பர் –
வர்ண கலாபம் நரஸிம்ஹர் -தஞ்சை ஆளி பெருமாள் –
தண்டக வனம் பெயர் –
மணியே குன்றமாக -பச்சை மா மலை போலே மேனி –

———————————————————————————————

21-நந்தி புர விண்ணகரம் -நாதன் கோயில் –ஜகந்நாதன் —
மூலவர் -ஜகந்நாதன் – விண்ணகரப் பெருமாள் -வீற்று இருந்த திருக் கோலம் -மேற்கே திரு முக மண்டலம்
தாயார் -செண்பக வல்லி
விமானம் -மந்தார விமானம்
தீர்த்தம் -நந்தி தீர்த்தம்
மங்களா சாசனம் -திருமங்கை ஆழ்வார்

தாயார் பகவானுடைய திரு மார்பில் என்றும் இருக்க வேண்டும் என்பதற்காகத் தவம் கிழக்கே நோக்கி –புரிந்த க்ஷேத்ரம் –
நந்தி கேஸ்வரர் இங்கு தவம் புரிந்து சாபம் தீர பெற்றார் -ஆதலால் -நந்தி புர விண்ணகரம் -பெயர்
சிபி சக்கரவர்த்தி புறாவின் உயிரைக் காப்பாற்றத் தன்னுடைய மாம்சத்தைக் கொடுத்த தலம் –
நித்ய ஹோமம் -வான மா மலை ஜீயர் அதீனம் –

—————————————————————————————-

22-திரு வெள்ளியங்குடி
மூலவர் –கோலா வல்லி இராமன் / புஜங்க சயனம் /கிழக்கே திரு முக மண்டலம் –
உத்சவர் -சிருங்கார ஸூந்தரன்
தாயார் -மரகத வல்லி
விமானம் -புஷ்கலா வர்த்தக விமானம்
தீர்த்தம் -சுக்ர தீர்த்தம் / பிரம்ம தீர்த்தம் / இந்த்ர தீர்த்தம்
ஸ்தல வ்ருக்ஷம் -கதலி -வாழை வ்ருக்ஷம் -செவ்வாழை -மரம்

கண்ணை இழந்த சுக்ராச்சாரியார் -வெள்ளி -இங்கே தவம் செய்து கண்ணைப் பெற்றார் –
க்ருத யுகத்தில் ப்ரஹ்ம புத்ரம் -த்ரேதா யுகத்தில் பிரச்சாரம் -த்வாபர யுகத்தில் இந்த்ர நகரம் -கலி யுகத்தில் பார்க்கவ புரம்
என்ற பெயர்களோடு இந்த க்ஷேத்ரம் விளங்குகிறது –
அலங்கார பிரியன் -கோல வில் ராமன் -சயன திருக் கோலம் -விஸ்வ கர்ம -தேவர் தச்சன் நிரைய கோயில்கள் –
/ மயன் அசுரர் தச்சன் -பிரார்த்தித்து -நிர்மாணித்த திருக் கோயில் என்பர் –
கருடன் நான்கு திருக் கைகள் உடன் சேவை -சங்கு சக்கரத்துடன் சேவை –
பெரியவாச்சான் பிள்ளை திருவவதார ஸ்தலம் சேங்கனூர் மிக அருகில் உள்ளது –

————————————————————————————-

23-தேரழுந்தூர்
மூலவர் -தேவாதிராஜன் / நின்ற திருக் கோலம் / கிழக்கே திருமுக மண்டலம்
உத்சவர் -ஆ மருவியப்பன் / கோஸகன்
தாயார் -செங்கமல வல்லித் தாயார்
விமானம் -கருட விமானம்
தீர்த்தம் -தர்சன புஷ்காரிணி -காவேரி தீர்த்தம்
மங்களா சாசனம் –திரு மங்கை ஆழ்வார்

உபரிசரவசு -அரசனின் ஆகாயத்தில் பறக்கும் தேர் இங்கு பூமியில் அழுந்தின படியால் தேரழுந்தூர் ஆயிற்று –
கோகுலத்தில் பிரமன் கவர்ந்து சென்ற மாடு கன்றுகளைத் தேடிக் கொண்டு கண்ணன் இங்கு வந்து கோசகனாகக் காட்சி கொடுத்தார் –
பெரிய திருவடி பிரஹலாதன் -கர்ப்ப க்ருஹ சேவை பெருமாள் உடன்
கவி சக்கரவர்த்தி கம்பர் -பிறந்த -கோயிலுக்குள்ளே கம்பர் மனைவியுடன் –
பெரிய திருவடி சமர்ப்பித்த விமானம் இங்கு -திரு முடி -வைர முடி சேவை திரு நாராயண புரத்தில் –

————————————————————————————–

24-சிறு புலியூர்
மூலவர் -அருமா கடல் அமுதன் / புஜங்க சயனம் / தெற்கே திரு முக மண்டலம்
உத்சவர் -க்ருபா சமுத்ரன்
தாயார் -திரு மா மகள் நாச்சியார் -தயா நாயகி –
விமானம் -நந்த வர்த்தக விமானம்
தீர்த்தம் -மானஸ புஷ்கரணி -அநந்த சரஸ்
மங்களா சாசனம் -திரு மங்கை ஆழ்வார்

சிறிய உருவம் -பால சயனம் / புலி போன்ற பாதங்களை யுடைய வ்யாக்ர பாதர் என்ற ரிஷி ருத்ரன் இடம் மோக்ஷம் வேண்டி தவம் செய்ய
அவன் ரிஷியை சிறு புலியூருக்கு அழைத்து வந்தார் -ரிஷி பகவான் இடம் வேண்டி மோக்ஷ சாம்ராஜ்யத்தைப் பெற்றார் –
கொல்லு மாங்குடி அருகில் –
ஆதி சேஷன் தனி சந்நிதி உண்டு / நாக தோஷம் -பால் பாயாசம் அமுது செய்வார் -புஷ்கரிணியில் சந்நிதி
வியாசர் வியாக்ரபாதர் பிரத்யக்ஷம்

——————————————————————————–

25-திருத் தலைச் சங்க நாண் மதியம்
மூலவர் -நாண் மத்திய பெருமாள் -நின்ற திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம்
உத்சவர் -வெண் சுடர்ப் பெருமாள்
தாயார் -தலைச் சங்க நாச்சியார்
உத்சவர் -செங்கமல வல்லித் தாயார்
விமானம் -சந்த்ர விமானம்
தீர்த்தம் -சந்த்ர புஷ்கரிணி
மங்களா சாசனம் -திருமங்கை ஆழ்வார்

சந்திரன் இந்த புஷ்கரிணியில் நீராடி தவம் புரிந்து சாபம் நீங்கப் பெற்றார் –
சந்திரனைப் போன்ற குளிர்ந்த ஒளியுடன் பெருமாள் அனைவருக்கும் காட்சி அளிக்கிறார்
மாயவரம் -ஆக்கூர் -சீர்காழி -மார்க்கம் -ஆக்கூரில் இருந்து 3 கிமி தூரம் –
பூம்புகார் அருகில் -காவேரி பூம் பட்டணம் -பழைய பெயர் -கடலில் கலக்கும் இடம் –
ரோஹிணி மட்டும் ஆசை -அதனால் சாபம் -தீர்க்கப் பெற்ற ஸ்தலம்
சங்கு வியாபாரம் -தலைமையான இடம்

——————————————————————————-

26-திரு இந்தளூர்
மூலவர் -பரிமள ரங்க நாதர் –ஸூகந்த வன நாதன் -வீர சயனம் -கிழக்கே திரு முக மண்டலம்
சயன திருக் கோலத்துடன் -சங்கு சக்கரம் தாங்கி வீர சயனம் –
தாயார் -பரிமள ரங்க நாயகி -ஸூகந்த வன நாச்சியார் -சந்த்ர சாப விமோசன வல்லி தாயார்
விமானம் -வேத ஆமோத விமானம் –வேதத்துக்கு ஆனந்தம் கொடுக்கும்
தீர்த்தம் -இந்து புஷ்கரிணி
மங்களா சாசனம் -திருமங்கை ஆழ்வார்

மது கைடபர் கள் வேதத்தை பிரமன் இடம் இருந்து அபகரித்துக் கொண்டு ஒழித்து வைக்க அது நாற்றம் பிடித்தது
பிரமன் பரிமள ரங்க நாதரின் திருவருளால் வேதத்தின் நாற்றத்தைப் போக்கினார்
சந்திரன் -இந்து -புஷ்கரிணியில் நீராடி சாபம் தீர்ந்தார் –
ஆண் பாவனையில் உடல் திருமங்கை ஆழ்வார்
தலைப் பக்கம் ஸூரியன் கங்கை -திருவடி சந்திரன் -காவேரி
ஐப்பசி மாசம் முழுவதும் உத்சவம் -கங்கை காவேரியில் வந்து பவித்ரம் அடைவாள்

————————————————————————————-

27-திருக் காவளம் பாடி
மூலவர் -கோபால கிருஷ்ணன் / ராஜ கோபாலன் ருக்மிணி ஸத்ய பாமையுடன் / நின்ற திருக் கோலம் / கிழக்கே திருமுக மண்டலம்
தாயார் -செங்கமல நாச்சியார் / மடவரல் மங்கை
விமானம் -வேத ஆமோத விமானம்
தீர்த்தம் -தடா மலர்ப் பொய்கை –
மங்களா சாசனம் -திரு மங்கை ஆழ்வார் -4-6-

காவளம்-என்றால் பொழில் -சோலை / நரகாசூரனை இந்திரனுக்காக அழித்த பின்பு ஸத்யபாமா கண்ணனிடம்
தேவ லோகத்தில் இருக்கும் பாரி ஜாத புஷபம் வேண்டும் எனக் கேட்டாள்-இந்திரன் பொழிலை அழித்து
தனக்கு வேண்டிய காவளம் கொண்டு வந்து இந்த ஷேத்ரத்தில் அமைத்தார் -இதனால் இந்த பெயர் –
துவாரகா தீசனான கண்ணனே இங்கு எழுந்து அருளி இருப்பதாகக் கூறப்படுகிறது –
திரு நாங்கூர் -11 -திவ்ய தேசங்கள் -தக்ஷன் யஜ்ஜம் -ருத்ரன் -11 மூவரும் -ஏகாதச ருத்ரர்கள் -கோபம் அடக்க –
தை அம்மாவாசை கருட சேவை -பிரசித்தம் –

———————————————————————————-

28-காழிச் சீராம விண்ணகரம் –சீர்காழி
மூலவர் -தாடாளன் -நின்ற திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம்
உத்சவர் -த்ரிவிக்ரமன்
தாயார் -லோக நாயகி
உத்சவர் -மட்ட விழும் குழலி
விமானம் -புஷ்காலா வர்த்தக விமானம்
தீர்த்தம் -சங்க புஷ்கரிணி -சங்க தீர்த்தம்
மங்களா சாசனம் -திருமங்கை ஆழ்வார்

ராம லஷ்மணர்கள் தாடகையை வாதம் செய்து சித்தாசமரத்தில் இருந்தனர் –
அந்த இடத்திற்கும் இந்த ஷேத்ரத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால் இந்த திரு நாமம் –
பிரமன் தன்னுடைய ஆயுளை நினைத்து செருக்குடன் இருந்தான் -அவன் கர்வத்தை ரோமச முனிவர் இந்த இடத்தில் அடக்கினார்
பாடலீகா வானம் உத்தம க்ஷேத்ரம் -என்றும் இவ்விடம் அழைக்கப் படுகிறது –
தவிட்டுப் பானை தாடாளன் –பாட ஆராதனை செய்ய பெருமாள் வேண்டுமே –தாடாளா வா வெண்ணெய் உண்ட தாடாளா வா
-தவிட்டுப் பானை தாடாளா வா -பாட -வந்தானே –
திருமங்கை ஆழ்வார் இங்கு திரு ஞான சம்பந்தரை வாதப் போரில் வென்று அவர் இடம் இருந்த வேலைத் தன் வசம் ஆக்கினார் –
வினைகள் கழிந்து சீர் பெறுக -காழிச் சீர் –சீர் காழி -விண்ணகரம் -இடது திருவடி மேலே -இடது கை மேலே –

———————————————————————————————

29-திரு அரிமேய விண்ணகரம்
மூலவர் -குடமாடு கூத்தர் -வீற்று இருந்த திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம்
உத்சவர் -சதுர் புஜ கோபாலன்
தாயார் -அம்ருத கட வல்லி
விமானம் -உச்ச்சச்ருங்க விமானம்
தீர்த்தம் -கோடி தீர்த்தம் -அம்ருத தீர்த்தம் –
மங்களா சாசனம் -திருமங்கை ஆழ்வார் –

அரி என்றால் -திருடுபவர் அல்லது அபஹரிப்பவர் –இந்தப் பெருமாள் நம் பாபங்களைத் திருடி உள்ளங்களை அபஹரிப்பவர் –
கோவர்த்தன கிரி தாரியே இங்கு எழுந்து அருளி இருக்கிறார் –
சதுர் புஜங்களுடன் கண்ணன் எழுந்து அருளி இருப்பது சிறப்பாம்சம் ஆகும் –
உதங்க மகரிஷிக்கு இந்த திருக் கோலத்தில் காட்சி கொடுத்தார் என்று ஸ்ரீ பாகவதம் சொல்லுமே –

———————————————————————————–

30-திரு வண் புருடோத்தமம்
மூலவர் -புருஷோத்தமன் -நின்ற திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -புருஷோத்தம நாயகி
விமானம் -சஞ்சீவ விக்ரஹ விமானம்
தீர்த்தம் – திருப் பாற் கடல் தீர்த்தம்
மங்களா சாசனம் -திரு மங்கை ஆழ்வார் –4-2-

வியாக்ரபாத முனிவர் தன் குழந்தையான உபமன்யுவைத் தனியே விட்டு புஷபம் பறிக்கப் போக -அக் குழந்தை அல்லது தொடங்கிற்று
இதை பார்த்த தாயார் பெருமாளை ஏவி திருப் பாற் கடலையே பாலாகக் கொடுத்தாள் -என்று ஸ்தல புராணம் சொல்லும்
இவ்விதமாகவே திருப் பாற் கடல் தீர்த்தம் உண்டாயிற்று
அயோத்யையில் இருக்கும் மாரியாத்தா புருஷோத்தமன் ஸ்ரீ ராமரே இங்கு வந்து காட்சி கொடுத்து அருளுகிறார் –

——————————————————————————————–

31-திருச் செம்பொன் செய் கோயில்
மூலவர் -பேர் அருளாளன் -நின்ற திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம்
உத்சவர் -ஹேம அரங்கன் -செம் பொன் அரங்கர்
தாயார் -அள்ளி மா மலர் தாயார்
விமானம் -கனக விமானம்
தீர்த்தம் -ஹேம புஷ்கரிணி -கனக தீர்த்தம்
மங்களா சாசனம் -திருமங்கை ஆழ்வார் –4-3-

இராவண வதத்தால் நேர்ந்த ப்ரஹ்ம ஹத்தி தோஷம் போக்கிக் கொள்ள த்ருட நேத்ரர் முனிவர் இடம் வேண்டிக் கொள்ள
1000 பாரம் தங்க பசுவைச் செய்து அதில் நான்கு நாட்கள் ஸ்ரீ ராமர் உட்க்கார்ந்து பிறகு அதில் இருந்து வெளியே வந்தார் -கோ பிரசவம் –
அந்த தங்க பசுவை ரிஷிக்கு தானமாக கொடுத்தார் –
இவற்றை வைத்துக் கொண்டு த்ருட நேத்ர முனிவர் இக் கோயிலை எழுப்பினார்
பொன்னை தானமாக வாங்கிக் கட்டப் பட்ட கோயில் ஆதலால் செம் பொன் கோயில் பெயர் பெற்றது –
உறையூர் அழகிய மணவாள பெருமாளே இங்கு சேவை -ராமனால் ஆராதிக்கப் பட்ட நம் பெருமாளே -என்பர் –

—————————————————————————-

33-வைகுண்ட விண்ணகரம்
மூலவர் -வைகுண்ட நாதன் -வீற்று இருந்த திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -வைகுண்ட வல்லி -தனிக் கோயில் நாச்சியார் கர்ப்ப க்ரஹத்திலே சேவை
விமானம் -அநந்த ஸத்ய வர்த்தக விமானம்
தீர்த்தம் -லஷ்மி புஷ்கரிணி –உதங்க புஷ்கரிணி –விரஜா
மங்களா சாசனம் -திரு மங்கை ஆழ்வார் –3-9-

ஸ்வேத கேது என்ற மஹா ராஜா கார்ய வைகுண்டம் அடைந்த பின்பும் அவருக்குப் பசி எடுத்தது –
தான தர்மங்களில் குறை இருப்பதால் பூ லோகம் சென்று அதை நிவர்த்தி செய்து கொள்ள நாரதர் கூறினார்
அதன் படி அரசன் இங்கு வர அவருக்குத் திருமால் ஸ்ரீ வைகுண்டத்தில் இருக்கும் படிக்கே காட்சி கொடுத்து அருளினார் –

———————————————————————————————————

34-திருவாலி -திரு நகரி -நாச்சியார் பிறந்த புகுந்த தேசங்கள்
திருவாலி –
மூலவர் -ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் / வீற்று இருந்த திருக் கோலம் / மேற்கே திரு முக மண்டலம்
உத்சவர் -திருவாலி நகராளன்
தாயார் -அம்ருத கட வல்லி
விமானம் -அஷ்டாக்ஷர விமானம்
தீர்த்தம் -லாஷண புஷ்கரிணி
மங்களா சாசனம் -திரு மங்கை ஆழ்வார்
திரு நகரி –
மூலவர் -தேவ ராஜன் -வீற்று இருந்த திருக் கோலம் -மேற்கே திரு முக மண்டலம்
உத்சவர் -கல்யாண ரங்க நாதர் -வயலாலி மணவாளன் –
தாயார் -அம்ருத வல்லி
விமானம் -அஷ்டாக்ஷர விமானம்
தீர்த்தம் -லாஷண புஷ்கரிணி
மங்களா சாசனம் -குலசேகர ஆழ்வார் -திருமங்கை ஆழ்வார்

பஞ்ச நரசிம்ஹ க்ஷேத்ரம் -திரு வாலியில் -ஸ்ரீ லஷ்மி நரஸிம்ஹர்-திருக் குறையலூரில் உக்ர நரசிம்ஹர் -மங்கை மடத்தில் வீர நரஸிம்ஹர்
திரு நகரியில் -யோக நரஸிம்ஹர் மற்றும் ஹிரண்ய நரஸிம்ஹர்
சாந்தம் அடைய தாயார் வலது மடியில் எழுந்து அருளி இருக்கிறார் -பல தேசங்களில் இடது மடியில் சேவை உண்டே
திருவை ஆலிங்கனம் செய்த சேவை என்பதால் திருவாலி -திரு வேடுபரி உத்சவம் -பிரசித்தம் —
திரு மணம் கொல்லை–கலியன் -பட்டம் -மிடுக்கு கண்டு –மந்த்ரம் போட்டாயா -நீலன் -கலியன் -திருமங்கை ஆழ்வார்
அரசமரம்– ஆலி நாட்டு அரசு –தெய்வங்களில் அரசன் வயலாலி மணவாளன் -அருளிய
-மந்த்ர அரசு திரு மந்த்ரம் -வாடினேன் வாடி பிறக்கும் உத்சவம்
-சிந்தனைக்கு இனியான்–பரக்கத் நிஷ்டை –குமுத வல்லி நாச்சியார் உடன் புறப்பாடு -தூது-நான்கே பாசுரங்கள் -கள்வன் கொல்-திருக் கோலம் –
பங்குனி உத்தரம் முந்திய நாள் -நீர் மேல் நடப்பான்– நிழலில் ஒதுங்குவான் –தாளூதுவான் –தோலா வழக்கன்-நான்கு சிஷ்யர்கள் -ஆலி நாடன்
பூர்ண மஹரிஷியின் பெண்ணாக அம்ருத வல்லி தாயார் திருவவதாரம் செய்து திருக் கல்யாணம் செய்து கொண்ட ஸ்தலம் –
திருமங்கை ஆழ்வார் -அணைத்த வேலும் —தஞ்சமான தாளிணை –ஸ்ரீ ராமானுஜர் திருவடியில் சேவை
குறையல் பிரான் அடிக் கீழ் விள்ளாத அன்பன்
கலியன் திருக் கோலம் கண்ணின் நின்றும் அகலாதே -கலியன் மேல் ஆணை
விதைக்கோட்டை மேலே கல்யாண ரெங்க நாதர் சேவை –
ஏவலம் வெஞ்சிலை பெருமாள் சேவை –நீணிலா முற்றம் -திருக் கண்ண புரம் -காண்பாள் -பாணனார் திண்ணம் இருக்க இனி இவள் நாணுமோ-

————————————————————————————–

35-திருத்தேவனார் தொகை –
மூலவர் -தெய்வ நாயகன் -நின்ற திருக் கோலம் –கிழக்கே திரு முக மண்டலம்
உத்சவர் -மாதவப் பெருமாள்
தாயார் -கடல் மகள் நாச்சியார்
உத்சவர் -மாதவ நாயகி –இருவரால் இருவருக்கும் பெருமை
விமானம் -சோபன விமானம்
தீர்த்தம் -சோபன புஷ்கரிணி
மங்களா சாசனம் –திருமங்கை ஆழ்வார் -4-1-

கடல் கடைந்த போது தோன்றிய நாச்சியார் இங்கு வர பெருமாள் இங்கு எழுந்து அருளி திருமணம் புரிந்தார்
தேவர்கள் திரண்டு வந்து நின்ற இடமாதலால் இந்த பெயர் –
கீழச் சாலை மாதவப் பெருமாள் கோயில் என்ற பெயரும் உள்ளது

————————————————————————————————————-

36-திருத் தெற்றியம்பலம்
மூலவர் -செங்கண் மால் -ரெங்க நாதர் -புஜங்க சயனம் -கிழக்கே திரு முக மண்டலம் -நான்கு புஜத்துடன் சயனம்
தாயார் -செங்கமல வல்லி
விமானம் -வேத விமானம்
தீர்த்தம் -ஸூர்ய புஷ்கரிணி
மங்களா சாசனம் – -திருமங்கை ஆழ்வார்

அம்பலம் — இடம் / தெற்றி-மேடு –/ நிலத்தில் இருந்து உயரத்தில் இருக்கும் திவ்ய க்ஷேத்ரம்
பள்ளி கொண்ட பெருமாள் –என்பர் -படுக்கைக்கு மேடு வேண்டும் -மணல் மேட்டில் அரங்கன் அங்கே போலே –
ராஹு –கேதுவைக் கண்டு ஸூரியன் பயந்து குளத்தில் மறைந்து இருக்க -காட்சி கொடுத்து பயம் போக்கி அருளிய பெருமாள் –

—————————————————————————————-

37-திரு மணிக் கூடம் –
மூலவர் -மணிக் கூட நாயகன் / வரத ராஜன் / புஜங்க சயனம் / கிழக்கே திரு முக மண்டலம் -கஜேந்திர வரதராஜன் –
தாயார் -திரு மகள் நாச்சியார்
விமானம் -கனக விமானம்
தீர்த்தம் -சந்த்ர புஷ்கரிணி — ப்ரஹ்ம தீர்த்தம்
மங்களா சாசனம் -திருமங்கை ஆழ்வார்

மோஹினி அவதாரம் -ராஹு கேதுக்களை ஸூர்ய சந்திரர் காட்டிய பின்பு பட்டணத்து குளத்தில் ஒளிந்து கொள்ள
அவர்கள் பயத்தை போக்கி -காட்சி கொடுத்து அருள் பாலித்த பெருமாள் –

—————————————————————————————-

38-திரு வெள்ள குளம் -அண்ணன் கோயில்
மூலவர் -ஸ்ரீ நிவாஸன் / அண்ணன் பெருமாள் / நின்ற திருக் கோலம் / கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -அலர் மேல் மங்கை
உத்சவர் -பத்மாவதி -பூவார் திரு மகள்
விமானம் -தத்வத்யோதக விமானம்
தீர்த்தம் -ஸ்வேத புஷ்கரிணி — வெள்ள குள தீர்த்தம்
மங்களா சாசனம் -திரு மங்கை ஆழ்வார் –

துந்துமாற ராஜாவின் பிள்ளையான ஸ்வேதன் 9 வயசில் அகால மரணம் அடைவான் என்று சொல்ல -குல குரு
வசிஷ்டர் இங்கு வந்து தவம் புரிய சொல்ல -கார்த்திகை சுக்ல ஏகாதசி என்று கடாக்ஷித்து நீண்ட ஆயுளை வழங்கினார்
ஸ்ரீ நிவாஸ பெருமாளுக்கே அண்ணனாக கொண்டாடப் படுகிறார் –
குமுத வல்லி நாச்சியார் -தெய்வப் பெண் -மருத்துவர் வளர்க்க -திரு மங்கை ஆழ்வார் முதலில் கண்டு –
கருட சேவைக்கு அடுத்த நாள் திருமங்கை ஆழ்வார் இங்கே எழுந்து அருளுகிறார் –
மஞ்சள் கொல்லை –உத்சவம் –அன்று இரவு 11 கருட சேவை –

—————————————————————————————-

39-திருப் பார்த்தன் பள்ளி
மூலவர் -தாமரையாள் கேள்வன் / நின்ற திருக் கோலம் / மேற்கே திருமுக மண்டலம்
உத்சவர் -பார்த்த சாரதி
தாயார் -தாமரை நாயகி
விமானம் -நாராயண விமானம்
தீர்த்தம் -கட்க புஷ்கரிணி -வாளால் கீறி வந்த தீர்த்தம் –
மங்களா சாசனம் -திருமங்கை ஆழ்வார்

அர்ஜுனன் ஷேத்ராடனத்திற்காக தெற்கு நோக்கி -வரும் பொழுது தீர்த்த தாகம் எடுக்க
அகஸ்திய கமண்டலம் தீர்த்தமும் தீர்ந்து போக -கண்ணனை பிரார்த்திக்க சொல்லி -ப்ரத்யக்ஷம் ஆகி –
-நீண்ட வாளை கைகொடுக்க அத்தாலே பூமியைக் கீற தீர்த்தம் வந்தது
நான்கு தோள்களுடன் கூடிய பார்த்த சாரதி பெருமாள் அர்ஜுனனுக்கும் அகஸ்திய முனிவருக்கும் காட்சி கொடுத்து அருளினான்
அர்ஜுனன் கண்ணன் சேர்ந்து சேவை தனியாக இங்கு உண்டு
கோல வில்லி ராமன் -கண்ணன் இதன் ஒரே ஆசனம் கர்ப்ப க்ருஹத்தில் —

——————————————————————————————

40-திருச் சித்ர கூடம் -சிதம்பரம் –
மூலவர் -கோவிந்தராஜன் -போக சயனம் -கிழக்கே திரு முக மண்டலம்
7 பணங்கள்-இங்கும் சப்த கிரி போலே -நான்கு புஜத்துடன் சயனம் –
உத்சவர் -தேவாதி ராஜன் -பார்த்த சாரதி -கடிவாளம் பிடித்து சேவை
கோவிந்தா கூப்பிட உதவின பார்த்த சாரதி அன்றோ –
தாயார் -புண்டரீக வல்லி
விமானம் -சாத்விக விமானம்
தீர்த்தம் -புண்டரீக புஷ்கரிணி
மங்களா சாசனம் -குலசேகர ஆழ்வார் -திரு மங்கை ஆழ்வார்

தேவதச்சன் விஸ்வகர்மாவால் நிர்மாணிக்கப் பட்ட அழகான சித்ர கூடம் -பார்வதி பரம சிவன் -யார் சிறந்த நாட்டியம் ஸ்ரீ மன் நாராயணன் தீர்ப்பு வழங்க
தஞ்சகன் கஜமுகன் தண்டகன் -மூவரையும் பகவான் அழித்த பின்பு -அவர்கள் சகோதரி தில்லி -காந்தார வ்ருக்ஷமாக விரிந்து அதன் கீழே சயனம்
-தில்லி சில்லி -இருவரும் இங்கும் ஸ்ரீ முஷ்ணத்திலும் என்பர்
உத்சவர் தான் கோவிந்த ராஜர் திருப்பதியில் இன்றும் சேவை -தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் புதிதாக உத்சவர் இங்கே ஏற்பாடு செய்து அருளினார் என்பர் –
காட்டு மன்னார் கோயில் அருகில்-
——————————————————————————————–

மன்னார் குடி –
ராஜ மன்னார் -வாஸூ தேவ பெருமாள் மூலவர்
ஸ்ரீ வித்யா ராஜ கோபாலன்
தோடு -ஒரு காதிலும் மற்று ஒன்றில் குண்டலம்–யசோதை நந்த கோபாலன் -இருவர்க்கும் ஆபரணங்கள்
-பெண் ஜாடை உடன் கண்ணன் -சாமுத்ரா லக்ஷணம் -கோபிகை ஜெயிக்க தோடு என்றுமாம் – -மாடு கன்றுக்குட்டி
32 வித்யைகள் -கண்ணன் காட்டி அருள
உன்னித்து –வண் துவராபதி மன்னனை ஏத்துமின் – மா முனிகள் -சமர்ப்பித்து அருளினார்
ஹரித்ரா புஷ்கரிணி -நதி போலவே
கோபால சமுத்திரம் வீதி பெயர்கள்
18 நாள் ப்ரஹ்ம உத்சவம் –

——————————————————————————————–

திரு மண்டங்குடி
தொண்டர் அடி பொடி வன மாலை அம்சம் -மார்கழி கேட்டை
பூக் குடலை யுடன் சேவை
அரங்கன் -ஸ்ரீ நிவாஸன் -அழகர் -மூவரும் சேவை –

———————————————————————————————–

ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
பூர்வாச்சார்யர் திருவடிகளே சரணம்
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருவாய்மொழி இருபத்து நாலாயிரப்படி -1-6-

November 19, 2016

அவாப்த சமஸ்த காமனாய் -பரிபூர்ணனான -ஸ்ரீ யபதியாய் இருக்கிற ஈஸ்வரனை ஷூத்ரனும் ஷூத்ர உபகரணனுமாய் இருக்கிறவன்
ஆஸ்ரயிக்கைக்கு உபாயம் உண்டோ -என்னில்
இவன் இட்டது கொண்டு வயிறு நிறைய வேண்டும்படி குறை இல்லாமையாலே அந்த பூர்த்தியும் ஸ்வா ராததைக்கு உறுப்பு
ஸ்ரீ யபதித்வமும் தாழ்ந்தாருக்கு முகம் கொடுக்கும் சீலாதிகளுக்கு அடியாகையாலே அதுவும் ஸ்வா ராததைக்கு உடலாகக் கடவது
வித்த அவ்யய ஆயாசங்கள் இல்லாமையாலும் -பிரத்யவாய பிரசங்கம் இல்லாமையாலும் – -த்ரவ்யாதி கார்யங்கள் யுடைய விசேஷநியதி இல்லாமையாலும்
த்வத் அங்க்ரி முத்திச்ய —யா க்ரியா-பத்ரம் புஷ்பம் -அந்ய பூர்ணாத் -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே ஆஸ்ராயணம் ஸூகரம் என்கிறார் –

———————————————————————————————–

ஆஸ்ரயிப்பார்க்கு த்ரவ்ய நியதி இல்லை என்கிறார் –

பரிவதில் ஈசனைப் பாடி –விரிவது மேவலுறுவீர்
பிரிவகையின்றி நன்னீர்த் தூயப் –புரிவதும் புகை பூவே –1-6-1-

பரிவதில் ஈசனைப்
ஹேய ப்ரத்ய நீகனான சர்வேஸ்வரனை
பரிவு என்று துக்கமாதல் -பஷபாதம் ஆதல் –
உபாசகனுக்கு துக்கேன ஆஸ்ரயிக்க வேண்டியிருக்குமதுவும் -ஆஸ்ரய ணீ யனுக்கு ஹீயம்-
குருவாக ஆஸ்ரயித்தன் பக்கலிலே பஷபதித்து -லகுவாக ஆஸ்ரயித்தன் பக்கலிலே நெகிழ்ந்து இருத்தல் செய்யுமதுவும் ஆஸ்ரயணீய வஸ்துவுக்கு ஹேயம்-
இவை இல்லாமையாலே ஹேய ப்ரத்ய நீகன்-என்கை-
ஹேய ப்ரத்ய நீகதை புக்க விடத்தே கல்யாண குணங்களும் புகக் கடவதாகையாலே இது அதுக்கும் உப லஷணம்
ஈசனை –
இவன் இடுவதில் குறையுள்ளது தன் குறையாம் படி இருக்கிற சம்பந்தத்தைச் சொல்லுகிறது –
இழவு பேறு தன்னதாம் படி இருக்கும் சம்பந்தத்தை யுடையவனை
ஆஸ்ரயணீயனும் ப்ராப்யனும் ஆகையிறே-உபய வாக்யத்திலும் நாராயண சப்த பிரயோகம் பண்ணிற்று
அல்லாதார் துராராதர் ஆகையாலே அநாஸ்ரயணீயர் –

பாடி –விரிவது மேவலுறுவீர்
சம்சாரான் முக்தராய் சமஸ்த கல்யாண குணாத்மகனை அனுபவிக்கையாலே -அவ்வனுபவத்துக்குப் போக்குவீடாக
எதத் சாம காயன் நாஸ்தே -என்கிறபடியே பாடி விஸ்ருதராகை யாகிற சம்பத்தை பெற வேண்டி இருப்பீர்
இந்த கனத்த பேற்றுக்குச் செய்ய வேண்டும் கிருஷி என் என்னில்
பிரிவகையின்றி
பிரிவாகிற வகை இன்றி
நினைந்து நைந்து -சூட்டு நன் மாலைகள் -என்கிறபடியே விலஷணர் ஆஸ்ரயிக்கும் அவனை நாம் ஆஸ்ரயிக்கை யாவது என் -என்று
அகலுகைக்கு ஒரு வகையிட்டுக் கொண்டு அகலாதே
நன்னீர்த்
ஒரு கந்தத்தாலும் உபஸ்கரியாத வெறும் நீர்
தூயப் –
அக்ரமாகப் பிரயோகித்து
-புரிவதும்
நீங்கள் அருள் கொடையாகக் கொடுக்குமதுவும்
புகை பூவே
அகில் புகை -கரு முகைப் பூ என்று விசேஷியாமையாலே ஏதேனும் புகையும் ஏதேனும் புஷ்பமும் அமையும்
இது ஸ்வாராததையைப் பற்றிச் சொல்லிற்று
இவனைப் பார்த்தால் -எண்டிசையும் உள்ள பூக்களைக் கொண்டும் -என்றும் -நாடாத மலர் நாடி –
தூய நல் விரை மலர்கள் துவளற வாய்ந்து கொண்டு -என்றும் சொல்லக் கடவது இ றே
அவனைப் பார்த்தால் -கள்ளார் துளாயும்-இத்யாதிகளில் சொல்லுகிற மாத்ரமே அமையும்
ந கண்ட காரிகா புஷ்பம் தேவாய வி நிவேதயத் -என்கிற விதியாலே தவிருகிறதும் -ப்ரேம பரவசனாய்ச் சென்று
பறிக்கிறவன் கையில் முள் பாயாமைக்காக என்று பட்டர் அருளிச் செய்வர்
ஸ்ரீ வராஹ புராணத்திலே ஸ்ரீ வராஹ நாயனாருக்கு முத்தக்காசை அமுதுபடியாக சொல்லிற்று –

———————————————————

த்ரவ்ய நியதி இல்லாமையே அன்று -அதிகாரி நியமும் இல்லை என்கிறார் –

மதுவார் தண்ணம் துழாயான் –முது வேத முதல்வனுக்கு
எதுவேது என் பணி என்னாது அதுவே ஆட்செய்யுமீடே –1-6-2-

மதுவார் தண்ணம் துழாயான் –
பூவே -என்றது கீழ் -மதுவார் -என்று தொடங்கிற்று இதில் -அந்தாதிக்கு சேரும்படி என் என்னில் –
பூவாகில் மதுவோடு கூடி இருக்கையாலே சேரும் -என்று சொல்லுவர் தமிழர் –
ஐஸ்வர்ய ஸூசகமாய் திருக் குழலின் ஸ்பர்சத்தாலே மதுஸ் யந்தியான திருத் துழாயை யுடையவன் –
சர்வேஸ்வரத்வ லஷணம் இது வி றே
ஐஸ்வர் யமும் போக்யதையும் இருக்கிற படி
-முது வேத முதல்வனுக்கு
இவ்வொப்பனை அழகை அனுபவித்து ஏத்தப் புக்கு ஷமர் அன்றிக்கே -இவ்விஷயத்தை பேசும் போது
அபௌரு ஷேயம் ஆகையாலே நித்தியமான வேதமே யாக வேண்டாவோ -என்கிறார் –
வேத முதல்வன் ஆகையாவது -சாஸ்திர யோநித்வாத் -என்கிறபடியே வேத பிரதிபாத்யன் என்கை
திருத் துழாய் மாலையாலே அலங்கருதன் என்கைக்கு மேல் இல்லை சர்வாதிகன் என்கைக்கு
அதுக்கு மேலே ஓன்று இ றே வேதைக சமதிகன்யன் என்னுமது

எதுவேது என் பணி என்னாது அதுவே
வேத முதல்வனுக்கு பணி எது -என் பணி ஏது-என்னாததுவே
நித்ய ஸூ ரிகள் அன்றோ அவனுக்கு சத்ருசர் -நாம் செய்யுமது ஏது -என்று கை வாங்காது ஒழிகை
அந்தரங்க வ்ருத்தியோடு பஹிரங்க வ்ருத்தியோடே வாசி இன்றிக்கே அஹம் சர்வம் கரிஷ்யாமி என்று இருக்கை என்னவுமாம்
ஆட்செய்யுமீடே
ஆட்செய்கைக்கு அதிகாரம் –

——————————————————–

கீழ் இரண்டு பாட்டிலும் சொன்ன குணங்களை அனுசந்தித்து -தாம் அதிகரித்த கார்யத்தை மறந்து அவன் பக்கல் தம்முடைய
மநோ வாக் காயங்கள் ப்ரவணமாய் இருக்கிறபடியை அருளிச் செய்கிறார்

ஈடும் யெடுப்புமிலீசன் -மாடு விடாது என் மனனே
பாடும் என் நா அவன் பாடல் ஆடும் என் அங்கம் அணங்கே –1-6-3-

ஈடும் யெடுப்புமிலீசன் –
ஜன்ம வ்ருத்தாதிகளால் உத்க்ருஷ்டன் என்று ச்வீகரித்தல் -அபக்ருஷ்டன் என்று உபேஷித்தல் செய்யாத சர்வேஸ்வரன்
ஜாத்யாதிகள் பார்க்க விறகு இல்லையே
சம்பந்தம் சாதாரணம் ஆனபின்பு ஆரை விடுவது
மாடு விடாது என் மனனே
அவன் பரிசரத்தை விடுகிறது இல்லை என் மனஸ்சானது
பிரயோஜனத்தைப் பற்றிக் கிட்டிற்று ஆகில் இ றே பலத்து அளவிலே மீளுவது
நான் அதிகரித்த காரியத்துக்கு நெஞ்சு ஒழிகிறது இல்லை
உம்முடைய அஹ்ருதமான உக்தியே அமையாதோ எங்கள் ஹிததுக்கு என்ன
பாடும் என் நா அவன் பாடல்
என்னுடைய வாக்கானது அவனுடைய குண பிரதிபாதிதமான காதா விசேஷங்களைப் பாடா நின்றது
உம்முடைய ஹஸ்த முத்ரையே அமையாதோ எங்களுக்கு அர்த்த நிச்சயம் பண்ணுகைக்கு என்ன
ஆடும் என் அங்கம் அணங்கே
என்னுடைய சரீரமும் தைவாவிஷ்டரைப் போலே ஆடா நின்றது
தம்முடைய கரணங்கள் தனித் தனியே மேல் விழக் கண்ட ப்ரீதியாலே -என் மனன் -என் நா -என் அங்கம் -என்று உகக்கிறார் –

———————————————————————

கீழ்ச் சொன்ன ப்ராவண்யம் காதாசித்கம் அன்றிக்கே நித்யமாய்ச் செல்லா நின்றது என்கிறார் –

அணங்கு என ஆடும் என் அங்கம் -வணங்கி வழி படும் ஈசன்
பிணங்கி யமரர் பிதற்றும் -குணங்கெழு கொள்கையினானே –1-6-4-

அணங்கு என ஆடும் என் அங்கம் வணங்கி வழி படும்-
கீழ் அணங்கு என்றதுக்கு அர்த்தம் இங்கே தெரிவித்தார் இ றே
தைவாவிஷ்டரைப் போலே ஆடா நிற்கிற என் சரீரம் அவன் பக்கலிலே வணங்கி வழி படா நின்றது
வழி படுகையாவது -அதுவே யாத்ரையாகச் செல்லுகை-

ஈசன் பிணங்கி யமரர் பிதற்றும் –
அமரர் என்கிறது -நித்ய ஸூ ரிகளை -ஏக ரசர் ஆனவர்களை விபிரதிபத்தி உண்டோ என்னில்
தாம்தாம் அனுபவித்த குணங்களில் ஏற்றத்தை -நான் முந்துறச் சொல்ல -நான் முந்துறச் சொல்ல -என்று
ஒருவருக்கு ஒருவர் பிணங்கா நிற்பார்கள்
பிதற்றும் –
ஜ்வர சந்நிபரைப் போலே கூப்பிடா நிற்கை

குணங்கெழு கொள்கையினானே-ஈசன்
ரத்நாகரம் போலே ஏவம் விதமான குணங்கள் வந்து சேருகைக்கு ஆஸ்ரயமாய் உள்ளான் என்னுதல்-
இக்குணங்கள் வந்து கெழுமுகையை ஸ்வ பாவமாக யுடையான் என்னுதல்

பிணங்கி யமரர் பிதற்றும் -குணங்கெழு கொள்கையினானே-ஈசனைக் கண்டு -அணங்கு என ஆடும் என் அங்கம்
-வணங்கி வழி படும்பிணங்கி யமரர் பிதற்றும் -குணங்கெழு கொள்கையினான் கிடீர் என்கிறார் –
நித்ய ஸூ ரிகளுடைய யாத்ரையே தம்முடைய கரணங்களுக்கும் யாத்ரையாய் செல்லா நின்றது என்கிறார் –

——————————————————-

திரியவும் தாம் அதிகரித்த கார்யத்தே போந்து -அவன் அநந்ய பிரயோஜனருக்கு நிரதிசய போக்யனாம் என்கிறார் –

கொள்கை கொளாமை இலாதான் எள்கல் இராகம் இலாதான் –
-விள்கை விள்ளாமை விரும்பி –உள் கலந்தார்க்கு ஓர் அமுதே —1-6-5-

கொள்கை கொளாமை இலாதான்-
ஆஸ்ரிதரோடு பரிமாறும் இடத்தில் அவர்கள் பக்கல் தாரதம்யம் பாராதவன்
அதாவது -இவன் உத்க்ருஷ்டன் -அந்தரங்க வ்ருத்தியைக் கொள்வோம்
இவன் அபக்ருஷ்டன் -புறத் தொழிலைக் கொள்ளுவோம் -என்னுமவை இல்லாதவன் –
எள்கல் இராகம் இலாதான் –
அடிமை கொள்ளும் இடத்தில் வாசி இல்லையே யாகிலும் அவ்வாசியை நினைத்து இருக்குமோ -என்னில்
ராக த்வேஷ விபாகம் இன்றிக்கே எல்லார்க்கும் ஒக்க வத்சலனாய் இருக்கும்
ஆனால் இவன் தன்னைக் கிட்டினார் பக்கல் பார்க்குமது ஏது என்னில்
-விள்கை விள்ளாமை விரும்பி –
விள்கை -பிரயோஜநாந்தரங்களைக் கொண்டு விடுகை –
விள்ளாமை -அநந்ய பிரயோஜனனாகை
விரும்பி -ஆதரித்துப் பார்த்து
-உள் கலந்தார்க்கு ஓர் அமுதே-
அநந்ய பிரயோஜ நற்கு நிரதிசய போக்யனாய் இருக்கும் –

————————————————————–

நிரதிசய போக்யனான அவனை உபாயமாகப் பற்றி ப்ரயோஜ நாந்தரங்களை கொண்டு அகலுகிறவர்களை நிந்திக்கிறார்

அமுதம் அமரர்கட்கு ஈந்த -நிமிர் சுடராழி நெடுமால்
அமுதிலும் ஆற்ற இனியன் நிமிர் திரை நீள் கடலானே –1-6-6-

அமுதம் அமரர்கட்கு ஈந்த –
சாவாமைக்கு பரிஹாரம் பண்ணித் தர அமையும் -என்று இருக்கிறவர்களுக்கு –
ஷூத்ரத்தை அபேஷித்தார்கள்-என்று இகழாதே கடலைக் கடைந்து அம்ருதத்தை கொடுத்த பரம உதாரன்
நிமிர் சுடராழி நெடுமால்
நால் தோள் அமுது -என்றும் -அமுது என்றும் தேன் என்றும் -தம்முடைய அம்ருதம் இருக்கிறபடி
மிக்க தேஜஸ்சை யுடைத்தான திரு வாழியை யுடைய சர்வேஸ்வரன்
இவர்கள் அபேஷித்தத்தை தலைக் கட்டிக் கொடுத்த ப்ரீதியால் வந்த புகர்திரு வாழி யிலே தோற்றி இருக்கை-
பிரயோஜ நாந்தரமே யாகிலும் நம்மைக் கொண்டு பெறப் பெற்றோமே -என்று இவர்கள் பக்கல் வ்யாமோஹத்தை யுடையவன் என்னவுமாம்

அமுதிலும் ஆற்ற இனியன்
இவர்கள் போக்யம் என்று இருக்கிற அம்ருதத்தில் காட்டில் நிரதிசய போக்யன் ஆனவன்
வாசி அறிவார்கள் ஆகில் அவனையே கிடீர் பற்ற அடுப்பது என்கை -பிள்ளை திருவழுதி நாடு தாசர் வார்த்தை –
அற்ற இனியன்
மிகவும் இனியன்
நிமிர் திரை நீள் கடலானே
அவ்வம்ருதம் படும் கடலிலே கிடீர் அவன் சாய்ந்து அருளுகிறது
தன் வாசி அறியாதே இருப்பார்க்கும் எழுப்பிக் கடைவித்துக் கொள்ளலாம் படி கண் வளர்ந்து அருளுகிறவன்
நிமிர் திரை
அவனோட்டை ஸ்பர்சத்தாலே கொந்தளித்த திரை
நீள் கடல்
தாளும் தோளும் முடிகளும் -என்கிறபடியே அசங்குசிதமாக கண் வளர்ந்து அருளுகைக்கு இடம் போந்து இருக்கை –

—————————————————–

அவன் போக்யதை நெஞ்சில் பட்டால் -பிராப்தி அளவும் செல்ல
சக்கரவர்த்தி திருமகனுடைய வீர சரிதத்தை அனுசந்தித்து காலத்தைப் போக்குங்கோள் என்கிறார்

நீள் கடல் சூழ் இலங்கைக் கோன்-தோள்கள் தலை துணி செய்தான்
தாள்கள் தலையில் வணங்கி நாள் கடலைக் கழிமினே –1-6-7-

நீள் கடல் சூழ் இலங்கைக் கோன்
சத யோஜன விச்தீர்ணமான கடல் -அகழ்-
அது மிகை என்னும்படி அரண் மிக்க ஊர் –
அவை மிகை என்னும்படி ராஷசன் ஆனவன் மிடுக்கு
-தோள்கள் தலை துணி செய்தான்
அகப்பட்டான் இ றே -என்று கொன்று விடாதே தோள்களைக் கழித்து -தலைகளை க்ரமத்தில் அறுத்து
அவன் இளைத்து நின்ற அளவிலே -நீ இளைத்தாய்-இன்று போய்ப் பின்னை வா -என்று போது போக்காகக் கொன்ற படி –
தாள்கள் தலையில் வணங்கி-
திருவடிகளிலே நிர்மமனாய் வணங்கி
நாள் கடலைக் கழிமினே –
ஜ்ஞானம் பிறந்தால் ப்ராப்தி அளவும் -ஒரு பகல் ஆயிரம் ஊழி-என்னுமா போலே கால ஷேபம் அரிதாய் இ றே இருப்பது
திருவடியைப் போலே தசரதாத் மஜனுடைய வீர சரிதத்தை அனுசந்தித்துக் காலத்தைப் போக்குவது
அன்றிக்கே
சக்கரவர்த்தி திருமகனை ஆஸ்ரயித்து சம்சார ஆர்ணவத்தை மாற்றிக் கொள்ள பாருங்கோள் என்கிறார் என்றுமாம்
நாழ் -குற்றம்

———————————————————-

சக்கரவர்த்தி திருமுகனை ஆஸ்ரயித்து விஷய ப்ராவண்யத்தைத் தவிரவே
ப்ராப்தி பிரதிபந்தகங்களை போக்கி நித்ய கைங்கர்யத்தை தரும் என்கிறார் –

கழிமின் தொண்டீர்காள் கழித்துத் தொழுமின் அவனைத் தொழுதால்
வழி நின்ற வல்வினை மாள்வித்து அழிவின்றி யாக்கம் தருமே –1-6-8-

கழிமின் தொண்டீர்காள்
பகவத் விஷயத்தில் நசையுடையீர் –
விஷயங்களில் ருசியைக் கழியுங்கோள்
கழித்துத் தொழுமின்
இந்த விஷயங்களில் ருசியைக் கழித்து அந்தச் சக்கரவர்த்தி திருமகனைத் தொழும்கோள்
கழித்து என்கிற அநு பாஷணத்தாலே-விஷய விரக்தி தானே பிரயோஜனமாக போரும் என்கை
கழிக்கை யாவது -இது பொல்லாது என்று இருக்கை
அவனைத் தொழுதால்
கரும்பு தின்னக் கூலி போலே தொழுகை தானே பிரயோஜனம் என்கை
வழி நின்ற வல்வினை மாள்வித்து –
ஸ்வயம் பிரயோஜனமான ஆஸ்ரயணத்துக்கு பலம் இருக்கிற படி –
இவ்வாத்மாவுக்கு ஸ்வரூப அனுபந்தியோ -என்னும் படி இருக்கிற பிரபல கர்மங்களை சவாசனமாகப் போக்கி
நடுவே நின்று பிராப்தியை விரோதிக்கிற கர்மம் என்னவுமாம்
அழிவின்றி யாக்கம் தருமே
அபுநாவ்ருத்தி லஷண மோஷமான-நிரவதிக சம்பத்தைத் தரும் -அதாவது -கைங்கர்யம் தரும் -இவ்வர்த்தத்தில் சம்சயம் இல்லை –

—————————————————————-

தன்னைப் பற்றின மாத்ரத்தில் இது எல்லாம் செய்து அருளக் கூடுமோ -என்னில்
-ந கச்சின் ந அபராத்யதி -என்னுமவள் அருகே இருந்து தருவிக்கும் என்கிறார் –

தரும வரும பயனாய -திருமகளார் தனிக் கேள்வன்
பெருமையுடை பிரானார் -இருமை வினை கடிவாரே–1-6-9-

உபநிஷத்துக்களிலே பரம பிரயோஜனமாக பிரசித்தமானவற்றை தரும் திருமகளார் –
தர்மத்தினுடைய பரம பிரயோசனமான திருமகளார் -என்றுமாம்
அத்விதீயனான வல்லபன்
ஸ்ரீ யபதித்வ நிபந்தனமான பெருமையை யுடையவர்
ஆஸ்ரித அனுக்ரஹமே ஸ்வரூபமாய் உள்ளவர் –
புண்ய பாப ரூபமான கர்மங்களைப் போக்குவர் –

——————————————————–

அவள் பொறுப்பிக்க பொறுக்கும் இடத்தில் விளம்பம் இல்லை -அரை ஷணத்தில் பொறுப்பர் -என்கிறார் –

கடிவார் தீய வினைகள் -நொடியாரும் அளவைக் கண்
கொடியாவடு புள்ளுயர்த்த-வடிவார் மாதவனாரே –1-6-10–

தன்னால் போக்கிக் கொள்ள ஒண்ணாத கொடிய பாபங்களைப் போக்கும் ஸ்வபாவர் –
நொடி நிறையும் அளவிடத்திலே ஷண மாத்ரத்திலே என்றபடி –
ப்ரதிபஷ நிரசன ஸ்வ பாவனான பெரிய திருவடியைக் கொடியாக எடுக்கையை ஸ்வபாவமாக யுடையவர் –
இன்று ஆஸ்ரயித்தவனையும் நித்ய ஆஸ்ரிதரோடு ஒக்க விஷயீ கரிக்கும் என்னும் இடத்துக்கு ஸூசகம் என்றுமாம் –
வடிவார் என்று தனியேயாய்-அழகிய வடிவை யுடையவர் என்றுமாம்
பிராட்டி அருகே இருந்து போக்குவிக்க வாயிற்று வினை போக்குவது –

——————————————————–

நிகமத்தில் -இத்திருவாய்மொழி கற்றார் பகவத் அனுபவத்துக்கு மேட்டு மடையான சம்சாரத்தில் பிறவார் என்கிறார் —

மாதவன் பால் சடகோபன் தீதவம் இன்றி யுரைத்த
ஏதமில் ஆயிரத்து இப்பத்து ஓத வல்லார் பிறவாரே –1-6-11-

தீதாவது -தன் மேன்மையைப் பார்த்து எழ நிற்கை
அவமாவது -ஆஸ்ரயிக்கிறவனுடைய சிறுமை பார்த்து கையிடுகை –
இன்றியுரைத்த -இரண்டு குற்றமும் இல்லாமையைச் சொன்ன –
ஏதமில் ஆயிரம் -லஷண ஹாநியால் வரும் குற்றம் இன்றிக்கே இருக்கை
ஆயிரத்திலும் வைத்துக் கொண்டு இப்பத்தையும் அப்யசிக்க வல்லார்
பிறவார் -பிறக்கை இ றே -மாத்ரு சுஸ்ருஷணம் அழகிது -என்னுமோ பாதி -பகவத் சமாஸ்ரயணம் எளிது என்று உபதேசிக்க வேண்டுகிறது
உபதேச நிரபேஷமாக ஜன்ம சம்பந்தம் அற்று பகவத் ஏக போகராகப் பெறுவார்
தீது அவம் ஏதம் -என்று கர்த்தாவுக்கும் -கவிக்கும் -பாட்டு உண்கிறவனுக்கும் உள்ள மூன்று குற்றத்தையும் சொல்லுகிறது -என்றும் சொல்லுவர் –

———————————————————–

கந்தாடை    அப்பன் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

இரண்டாம் திருவந்தாதி- பாசுரங்கள் -91-100 -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை-

November 16, 2016

நான்கு பாசுரங்கள் பர உபதேசம் -இதில் அநிஷ்ட நிவ்ருத்திக்கும் அடுத்ததில் இஷ்ட ப்ராப்திக்கும் உபதேசம்

இவை இரண்டும் ஆஸ்திக புத்தி உள்ளவர்
அடுத்ததில் நாஸ்திகர் சாரு வாகர் -லோகாயுதம் -உபதேசம்
அடுத்ததில் தம்மை ஒத்த முமுஷுக்களுக்கு உபதேசம்

அடுத்த ஆறும் தான் பெற்ற பேற்றைச் சொல்லி நிகமிக்கிறார்

————–

பிரகிருதி வஸ்யரான பின்பு சரீர விஸ்லேஷ சமனந்தரம் நரகம் ஒரு வகை தப்பாது –
ஆன பின்பு அவன் திருவடிகளை வணங்கப் பாருங்கோள் என்கிறார்-

பின்னால் அரு நரகம் சேராமல் பேதுறுவீர்
முன்னால் வணங்க முயல்மினோ -பன்னூல்
அளந்தான் இக்கார் கடல் சூழ் ஞாலத்தை எல்லாம்
அளந்தான் அவன் சேவடி –91-

பதவுரை

பின்னால்–சரீரம் விழுந்த பின்பு
அரு நகரம்–கடினமான நரகத்தை
சேராமல்–அடையாமலிருக்கும் படிக்கு
பேதுறுவீர்–மனங்கலங்கியிருக்கும் மனிசர்களே!-இதனால் ஆஸ்திக புத்தி உள்ளவர்களே என்றவாறு
பல் நூல்–பலவகைப்பட்ட சாஸ்த்ரங்களினால்
அளந்தானை–நிச்சயிக்கப்படுபவனும்-வேதைக சமைதி கம்யன் அன்றோ
கார் கடல்சூழ் ஞாலத்தை எல்லாம் அளந்தானவன்–கரிய கடல் சூழப்பட்ட பூமியை யெல்லாம்
அளந்து கொண்டவனுமான எம்பெருமானுடைய
சே அடி–செவ்விய திருவடிகளை
முன்னால்–இப்போதே
வணங்க–வணங்குமாறு
முயல்மின்–முயற்சி செய்யுங்கள்.-உலகம் அளந்த பொன்னடியே அடைந்து உய்மின் என்றவாறு

ஸ்ருதி ஸ்ம்ருதி யாதிகளான பல வகைப் பட்ட சாஸ்த்ரங்களாலும் யதாவாக அறுதியிடப் பட்டு இருக்குமவனாய்
கறுத்த கடலாலே சூழப் பட்டு இருக்கிற இந்த பூமியை எல்லாம் அளந்து கொண்ட ஸுலப்யத்தை யுடையவனுடைய
சிவந்த திருவடிகளை சரீர விஸ்லேஷத்துக்கு பின்பு பொறுக்க ஒண்ணாத நரகங்களில் சென்று கிட்டாத படி யாக
பாப பலமான நரகம் வரில் செய்வது என் -என்று அஞ்சி அறிவு கலங்குகிற நீங்கள் பின்னைச் செய்கிறோம் என்று
ஆறி இராமல் ஒரு க்ஷணம் ஆகிலும் முற்பட ஆஸ்ரயிக்க உத்ஸாஹியுங்கோள்-

(பரம காருணிகர் ஆகையாலே ஸம்ஸாரிகள் இழந்து போகலாகாது என்று நான்கு பாட்டால அவர்களுக்கு உபதேசிக்கிறார்
அளந்தான் –யாதோ வாஸோ நிவர்த்தந்தே -ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்களால் ஒரு மிடறாக அளத்ததற்கு அரியவன் என்று அளக்கப்பட்டவன்
யஸ்யா மதம் தஸ்ய மதம்
வேதா ஹமேதம் புருஷம் மஹாந்தம்
ச பூமிம் விஸ்வதோ வ்ருத்வா
இவனை வணங்குவதே தக்கது என்று உபதேசிக்கிறார் இதில் -)

————————————————————————————————

சேவடி வணங்கி அநிஷ்ட நிவ்ருத்தி கீழ்
இதில் திரு நாமம் ஏத்தி இஷ்ட பிராப்தி பெற உபதேசம்

அநிஷ்ட நிவ்ருத்திக்கும் -இஷ்ட ப்ராப்திக்கும் இது தானே –ரக்ஷணத்துக்கும்- இதற்காகவே கொடி கட்டி சேவை சாதிக்கிறான்

திரு நாம சங்கீர்த்தனம் -உபாயமாக சொல்லி ப்ரயோஜனாந்தரங்களைப் பெற சாமான்ய ஆஸ்ரிதர்களைக் கூட்டி மேலே உயர்த்தி
மேல் 94- பாசுரத்தில் தம்மைப் போன்றவர்களுக்கு உபதேசம்

அவனை ஆஸ்ரயிக்க உங்களுக்கு அபேக்ஷிதமான புருஷார்த்தங்கள் எல்லாம் கிடைக்கும் –
ஆஸ்ரயிங்கோள் -என்கிறார்-

அடியால் முன் கஞ்சனைச் செற்று அமரர் ஏத்தும்
படியான் கொடி மேல் புள் கொண்டான் நெடியான் தன்
நாமமே ஏத்துமின்கள் ஏத்தினால் தாம் வேண்டும்
காமமே காட்டும் கடிது–92-

பதவுரை

முன்–முன்னே
அடியால்–திருவடியினால்
கஞசனே–கம்ஸனை
செற்று–உதைத்துக் கொன்றதனாலே
அமரர் ஏத்தும் படியான்–தேவர்கள் துதிக்கும் படியாக வுள்ளவனும்
கொடிமேல் புள் கொண்டான்–த்வஜத்திலே கருடபக்ஷியையுடைய வனுமான
நெடியான் தன்–ஸர்வேஸ்வரனுடைய
நாமமே–திருநாமங்களையே கொண்டு
ஏத்துமின்கள்–ஸ்தோத்ரம் பண்ணுங்கள்
ஏத்தினால்–அப்படி ஸ்தோத்ரம் பண்ணினால்
தாம் வேண்டும் காமம்–தாங்கள் அபேக்ஷிக்கும் புருஷார்த்தத்தை
கடிது–விரைவாக
காட்டும்–(அத்திருநாமம்) பெறுவிக்கும்

பாத பங்கயமே தலைக்கு அணியாய்-என்று
என் போல்வார் பிரார்த்திக்குக் கிடக்குமதாய்-நிரதிசய ஸூ குமாரமான திருவடிகளாலே(பிராட்டிமாரும் கூசிப் பிடிக்கும் மெல்லடிகளாலே )
அவன் நினைத்த வஞ்சனம் அவனோடேயாம்படி ஏற்கவே கம்சனை உதைத்து முடித்து அந்த ஸ்வ பாவத்துக்குத் தோற்று
ப்ரஹ்மாதி தேவர்கள் -தேவராலே எங்கள் குடியிருப்புப் பெற்றோம் -என்று
வாய் விட்டுப் புகழும் படியான ஸ்வ பாவத்தை யுடையனாய்

ரக்ஷணத்துக்கு கட்டின கொடி மேல் -கருடத்வஜன் என்னும் படி எடுக்கப் பட்ட பெரிய திருவடியை யுடையனாய்
தன் பக்கல் ஓரடி வர நின்றவர்களை நெடுக நினைத்து நினைத்து கொண்டு இருக்கும்
ஸ்வபாவனுடைய திரு நாமங்களையே சொல்லி வாய் விட்டுப் புகழுங்கோள் –

இப்படி புகழ்ந்தால் தம் தாமுக்கு அபேக்ஷிதமான ஐஸ்வர்ய கைவல்ய பகவல் லாபங்கள் ஆகிற
சகல புருஷார்த்தங்களையும் ஏத்தின வாய் மூடுவதுக்கு முன்னே சீக்கிரமாக கைப்படும் படி காட்டித் தரும் –

(படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய் -திருவாய் -9-2-2-
அநிஷ்ட நிவ்ருத்தியையும் இஷ்ட ப்ராப்தியையும் அளித்து ரக்ஷிப்பவன் இவனே என்று
ஸூ பர்ணோ அஸி கருத்மான் -வேதாத்மா விஹகேஸ்வரனை கொடி கட்டிக் கொண்டு இருப்பவன்
சேவல் அம் கொடியோய்
செவ்வாய் உவணத்து உயர் கொடியோனே
புள்ளின் நிவந்து ஓங்கி உயர் கொடிச் சேவலோய்
அவிழ் துழாய் மலர் தரு செல்வத்துப் புள் மிசைக் கொடியோனும்–என்று பரிபாடல் கோஷிக்குமே
ஆசிய ஜா நந்தோ நாம சித்த விவக்தந
த்ருவாஸோ அஸ்ய கீரயோ ஜனாஸ
ஐஹ லௌகிகம் ஐஸ்வர்யம் ஸ்வர்க்காத்யம் பார லௌகிகம்
கைவல்யம் பகவந்தம் ச மந்த்ரோயம் சாதயிஷ்யதி
ப்ரயோஜனாந்தர பரர்களும் இவனையே ஸ்துதிக்க வேண்டும் என்கிறார் ஆயிற்று–)

—————————————————————————————————–

கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று இருக்கிறோம் நீங்கள் நம்பினாலும் இல்லா விட்டாலும்
உண்மை நிலை -நரகமும் போவீர்கள் -அங்கு யமபடர் நலிவர்கள் என்ன
எங்களுக்கோ -பிரதிபந்தகங்கள் மிக்கு உள்ளனவே என்ன
அவற்றைப் போக்க பரிகரம் உள்ளவன் –
முன்னமே சிறு பாலகனாய் இருக்கச் செய்தே பூதனா தொடக்கமாக கேசி பர்யந்தமாக
ஸமஸ்த விரோதிகளை போக்கி அருளினவன் அன்றோ
அவனை ஏத்துங்கோள் -என்று உபதேசிக்கிறார் இதில்

குரூரமான நரகம் வந்து கிட்டுவதுக்கு முன்னே –
நிரதிசய போக்யனாய் -பிரதிகூல ஹந்தாவானவனை விரும்பி ஏத்துங்கோள் -என்கிறார் –

கடிது கொடு நரகம் பிற்காலும் செய்கை
கொடிது என்றது கூடா முன்னம் -வடி சங்கம்
கொண்டானைக் கூந்தல் வாய் கீண்டானைக் கொங்கை நஞ்சு
உண்டானை ஏத்துமினோ உற்று–93-

பதவுரை

கொடு நரகம்-க்ரூரமான நரகமானது
கடிது–கண் கொண்டு காண வொண்ணாதபடி கோரமாயிருக்கும்
பிற்காலும்–அதற்கு மேலும்
செய்கை–(அங்கு யம படர்கள் செய்யும் யாதனைச்) செயல்கள்
கொடிது–பொறுக்க முடியாதனவாயிருக்கும்,
என்று–என்று தெரிந்து கொண்டு
அது கூடா முன்னம்–அந்த நரக வேதனை நேராதபடி
வடி சங்கம் கொண்டானை–கூர்மையான த்வநியை யுடைய சங்கைத் திருக் கையிலே உடையவனும்
கூந்தல் வாய் கீண்டானை–கேசியின் வாயைக் கீண்டொழித் தவனும்
கொங்கை நஞ்சு உண்டானை–(பேய்ச்சின்) மூலையில் தடவி யிருந்த விஷத்தை உண்டவனுமான எம்பெருமானை
உற்று–பொருந்தி
ஏத்துமின்–ஸ்தோத்திரம் பண்ணுங்கள்

குரூரமான நரகம் முதலிலே கண் கொண்டு காண ஒண்ணாத படி சால வெவ்விதாக இருக்கும் –
பின்னும் கர்ம அனுகுணமாக -சேவதக்குவார் போலே புகுந்து -என்கிறபடியே –
யம படர் பண்ணைக் கடவ நெளிவுகள் மிகவும் துஸ் ஸஹமாய் இருக்கும் -என்று
அவற்றை அனுசந்தித்து நரக தரிசனமும் -அவர்கள் பண்ணும் நலிவும் வந்து கிட்டு வதுக்கு முன்னே எதிரிகளை முடிக்கும்
கூரிய த்வனியை யுடைய ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை யுடையனாய்

கேசியினுடைய வாயைக் கிழித்துப் பொகட்டவனாய்
பூதனையினுடைய முலையில் நச்சுப் பாலை யுண்டு அவளை முடித்துப் பொகட்டவனை -மேல் எழ அன்றிக்கே
ச மனசமாக உறைத்து நின்று ஸ்தோத்ரம் பண்ணுங்கோள்

வடி சங்கம் -அழகிய சங்கம் -என்றுமாம் –

(தென்னவன் தமர் செப்பம் இலாதார் சேவதக்குவார்(சே தாக்குவார் -காளைக்கு காயடிப்பார் ) போலப் புகுந்து பின்னும்
வன் கயிற்றால் பிணித்து எற்றிப் பின் முன்னாக இழுப்பதன் முன்னம் -பெரியாழ்வார் -4-5-7-
நமன் தமர் செய்யும் வேதனைக்கு ஒடுங்கி நடுங்கினேன் -பெரிய திருமொழி -1-6-3-
நமன் தமர் பற்றி எற்றி வைத்து எரி எழுகின்ற செம்பினால் இயன்ற பாவையைப் பாவீ தழுவு என மொழிவதற்கு அங்கி -1-6-4-
ச கோஷா தார்த்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயாணி வ்யதாரயத்
வரி வளையால் குறைவில்லாப் பெரு முழக்கால் அடங்காரை எரி அழலம் புக ஊதி இரு நிலம் முன் துயர் தவிர்த்த –விரி புகழான் -திருவாய் -4-8-8-
கூந்தல் -கேசி
கூந்தல் எரி சினம் கொன்றாய் –பரிபாடல்
மேவார் விடுத்தந்த கூந்தற் குதிரையை வாய் படுத்திட்டு -கலித்தொகை
கூந்தன் மா கொன்று குடமாடிக் கோவலனாய் -முத்தொள்ளாயிரம்
இப்படி விரோதிகளை நிரஸனம் பண்ணி அருளியது போல் உங்கள் நரக பயத்தையும் போக்க வல்லவன் அவன் ஒருவனே என்கிறார்
நாஸ்திகர்கள் பகவத் சமாஸ்ரயணம் பண்ணுவதற்கு உபாயம் நரக பயத்தை அனுசந்திக்கை என்றபடி -)

——————————————————————————————–

தம் போல்வார் -அர்ச்சாவதாரங்களில் மண்டி இருப்பதற்குத் தக்க
திருப்பாடகம் ஸ்வயம் பிரயோஜனமாக ஏத்தி இருப்பவர்கள் அன்றோ
பாடு பெருமை -அகம் -பெருமை தோற்ற வீற்று இருப்பவன் –
இவர் படியைக் காட்டி முமுஷுக்களுக்கு உபதேசம்

என்னுடைய நெஞ்சு கண்டீர்களே ஏத்துகிற படி -அப்படியே நீங்களும் ஜகத் ரக்ஷண ஸ்வபாவனாய்
நிரதிசய போக்யனானவனை ஏத்துங்கோள் -என்கிறார் –

உற்று வணங்கித் தொழுமின் உலகு ஏழும்
முற்றும் விழுங்கும் முகில் வண்ணன் -பற்றிப்
பொருந்தா தான் மார்பிடந்து பூம் பாடகத்துள்
இருந்தானை ஏத்தும் என் நெஞ்சு–94-

பதவுரை

உலகு எழும் முற்றும் விழுங்கும்–உலகங்களை யெல்லாம் (பிரளயங்கொள்ளாதபடி) அமுது செய்தவனும்
முகில் வண்ணன்–மேகம் போன்ற வடிவையுடையவனும்
பொருந்தா தான்–(ப்ரஹ்லாதனுக்கு) சத்ருவான் இரணியனுடைய
மார்பு–மார்வை
பற்றி–பிடித்து
இடந்து–கிழித்தவனும்
பூ பாடகத்துள் இருந்தானை–அழகிய திருப்பாடகமென்னுந் திருப்பதியில் வீற்றிருப்பவனுமான எம்பெருமானை
என் நெஞ்சு–என் மனமானது
ஏத்தும்–துதிக்கும் (நீங்களும் இப்படியே)
உற்று வணங்கி தொழுமின்–பொருந்தி வணங்கி ஆஸ்ரயியுங்கோள்.

பூமியாதிகளான சகல லோகங்களையும் ஒன்றும் பிரி கதிர் படாத படி திரு வயிற்றிலே வைத்து நோக்கும் ஸ்வ பாவனாய்
அத்தாலே வந்த ஹர்ஷம் நிழலிட்டுத் தோற்றும் படி இருக்கிற வர்ஷூகவலாஹகம் போன்ற வடிவை யுடையவனாய்
பிடித்த பிடியே பிணமாம் படி பிடித்துத் தன்னுடன் பொருந்தாத ஹிரண்யனுடைய மார்பை இரண்டு கூறாகப் பிளந்து பொகட்டு
பின்னும் ஆஸ்ரித விரோதிகளைப் போக்குகைக்காக நிரதிசய போக்யமான (பூம்)திருப் பாடகத்திலே சிறுக்கனுக்கு உதவினபடியை
(இந்திரன் சிறுவன் அன்றோ )எல்லாரும் காண வேணும் என்று எழுந்து அருளி இருந்த சர்வேஸ்வரனை என்னுடைய நெஞ்சானது
இவ்வோ ஸ்வ பாவங்களைச் சொல்லி புகழா நிற்கும் -இப்படியே நீங்களும் உங்கள் யோக்யதை நினைத்து பிற்காலியாதே
கிட்டி நின்று பஃன அபிமானராய்த் திருவடிகளிலே விழுந்து அஞ்சலி பந்தத்தைப் பண்ணி ஆஸ்ரயியுங்கோள் –

(தான் நமஸ்கரித்துக் காட்டிக் குழந்தைகளை பழக்கி வைக்கும் தாய் போல் முமுஷுக்களாய் இருப்பவருக்கு நமஸ்கரித்துக் காட்டி அருளுகிறார் –
வள வேழ் உலகில் போல் அகலாமல் தொழுமின்
ஒரு பொருள் புறப்பாடு இன்றி திரு வயிற்றில் வைத்து ரஷித்த சர்வாதிகன் இவனே
உளம் தொட்டு –பெரியாழ்வார் -1-6-9- அவனுக்கும் நெஞ்சில் ஈரப்பசை உண்டோ என்று தேடுமவன் –
பாடகம் –பாடு அகம் -பெருமை தோற்ற வீற்று இருக்கும் திவ்ய தேசம்
பூம் பாடகம் -இனிமை
உலகு ஏழும் முற்றும் விழுங்கும் முகில் வண்ணன் -ஸர்வ ரக்ஷகத்வம்
பொருந்தாதான் மார்பு இடந்து -ஸ்வா பாவிக -ஆஸ்ரித விரோதி நிரசன சீலன் )

—————————————————————————————————

ஜகத் காரண பூதனாய் -சர்வ லோக சரண்யன் ஆனவன் -திரு வத்தியூரிலே நின்று அருளி –
என்னுடைய சர்வ அவயவங்களிலும் வந்து புகுந்தான் -என்கிறார் –

என் நெஞ்சமேயான் என் சென்னியான் தானவனை
வன்னெஞ்சம் கீண்ட மணி வண்ணன் -முன்னம் சேய்
ஊழியான் ஊழி பெயர்த்தான் உலகு ஏத்தும்
ஆழியான் அத்தி ஊரான் -95-

பதவுரை

தானவனை–இரணியனாகிற அகரனுடைய
வல் நெஞ்சம்-வலிய மார்வை
கீண்ட–கிழித்தொழித்தவனும்
மணி வண்ணன்–நீல மணி போன்ற நிறத்தை யுடையவனும்
முன்னம் சேய் ஊழியான்–நெடுங்காலமாக வுள்ளவனும்-கால உபலஷிதமான சகல -சேதன அசேதனங்களை ஸூஷ்ம மாகக் கொண்டவன்
ஊழி பெயர்த்தான்–காலம் முதலிய ஸகல வஸ்துக்களையும் உண்டாக்கினவனும்
உலகு ஏத்தும் ஆழியான்–உலகத்தவரால் துதிக்கப்பட்டவனாய்க் கொண்டு திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பவனும்
அத்தியூரான்–ஹஸ்தி கிரியில் எழுந்தருளியிருப்பவனுமான எம்பெருமான்
என் நெஞசம் மேயான்–என்னுடைய நெஞ்சிலே பொருந்தியிரா நின்றான்-பூதத்தாழ்வார் இன்றும் இவ்வாறே சேவை காஞ்சியில்
என் சென்னியான்–என்னுடைய தலையிலே உள்ளான்.

முன்னம் சேய் ஊழியான்
ஊழி பெயர்த்தான்
உலகு ஏத்தும் ஆழியான்
தானவனை வன்னெஞ்சம் கீண்ட மணி வண்ணன்
அத்தி ஊரான்
என் நெஞ்சமேயான் –
என் சென்னியான் -என்று அந்வய க்ரமம்

சதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் –என்கிறபடியே
ஸ்ருஷ்டே பூர்வ காலத்தில் அழிந்த ஜகத்தை ஸ்ருஷ்டிக்கைக்காகக் கால உபலஷிதமான
ஸூஷ்ம சித் அசித் வஸ்துக்களை சரீரமாகக் கொண்டு நின்றவனாய் இப்படி ஸ்ருஷ்டித்த அளவிலே
தன்னை வழி படாதே இவை அதி பிரவ்ருத்தமானவாறே கால சேஷமாம் படி இவற்றை சம்ஹரித்தவனாய்
(பெரியவாச்சான் பிள்ளை ஸ்ருஷ்ட்டி பரமாக மட்டுமே அருளிச் செய்கிறார்)

ஸ்ருஷ்டமான ஜகத்தை ரஷிக்கைக்காக -லோகத்தில் உள்ளவர்கள் இருந்ததே குடியாக ஏத்தி ஆஸ்ரயிக்கும் படி –

திருப் பாற் கடலிலே அநிருத்த ரூபியாய்க் கொண்டு கண் வளர்ந்து அருளினவனாய் -அங்கு நின்றும்
நரசிம்ஹ ரூபியாய் வந்து அவதரித்து -ஆஸூர பிரக்ருதியான ஹிரண்யனுடைய -தன் உக்ரமான வடிவைக் கண்டும் இளகாத படி
கடினமான ஹிருதயத்தைக் கிழித்துப் பொகட்டவனாய் -சிறுக்கன் விரோதி போகப் பெறுகையாலே -நீல மணி போலே இருந்து
குளிர்ந்த வடிவை யுடையனாய் –

அக் காலத்தின் பிற்பாடாரையும் ரஷிக்கைக்காகத் திருவத்தி யூரிலே வந்து நின்று அருளின
நீர்மையில் ஏற்றத்தை யுடையவன் —

(தென் அத்தியூரர் கழல் இணைக் கீழ் அன்பு பூண்ட ராமானுஜன் அடியார்களான நம் போல்வாரை அருளவே )

இடவகைகள் இகழ்ந்திட்டு என்கிறபடியே
இந்தத் திருப் பாற் கடல் திரு வத்தியூர் ஆகிற இடங்களை உபேக்ஷித்து –
ஸுபரி போகார்த்தமாக பல வடிவு எடுத்தால் போலே என்னை அனுபவிக்கைக்காகப் பல வடிவு எடுத்துக் கொண்டு
நிலை பேரன் என் நெஞ்சத்து -என்னும் படி என்னுடைய ஹிருதயத்திலே பொருந்தி நித்ய வாசம் பண்ணா நின்றான்
தலை மேல் தாளிணைகள் என்னும் படி
என்னுடைய உத்தம அங்கத்திலும் விரும்பி வர்த்தியா நின்றான்
ஒருவன் அபிநிவேசம் இருக்கிறபடியே -என்று விஸ்மிதர் ஆகிறார் –

(ஸ்வஸ்தி ஹஸ்தி கிரி மஸ்த சேகர சந்த நோது மயி சந்ததம் ஹரி
நிஸ் சமாப்யதிக மப்ய தத்த யம் தேவம் ஓவ்பநிஷதீ ஸரஸ்வதீ–ஸ்ரீ வரத ராஜ ஸ்தவம்–1-

ஓவ்பநிஷதீ ஸரஸ்வதீ–ஒவ்பநிஷத்துக்களின் வாக்கானது
யம் தேவம் -யாவன் ஒரு எம்பெருமானை
நிஸ் சம அப்யதிகம் அப்ய தத்த -ஓத்தாரும் மிக்காணும் இல்லாதவனாக ஓதிற்றோ
ஹஸ்தி கிரி மஸ்த சேகர-ஸ்ரீ ஹஸ்திகிரி சிகரத்தின் ஆபரணமாய் உள்ள
ஸ ஹரி -அந்த ப்ரணதார்த்தி ஹர ஸ்ரீ வரதன்
மயி-அடியேன் மீது
சந்ததம்-எப்போதும்
ஸ்வஸ்தி சந்த நோது -நன்மையை நிரம்பச் செய்ய வேணும்)

(சதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத்
ஏகோ ஹவை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா ந ஈஸாந
பஹுஸ்யாம் ப்ரஜாயேயத்
த்ரி பாதூர்த்வ உதைத் புருஷ பாதோஸ் யேஹாபவாத் புந
ததோ விஷ்வங் வயக்ராமத் சாஸநா நஸேந அபி
ந ச ராக்ஷஸ சேஷ்டித
அனந்தன் பாலும் கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து என்
மனந்தனுள்ளே வந்து வைகி வாழ செய்தாய் எம்பிரான்
நினைந்து என்னுள்ளே நின்று நெக்கு கண்கள் அசும்பு ஒழுக
நினைந்து இருந்தே சிரமம் தீர்த்தேன் நேமி நெடியவனே – 5-4 -8-

பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என்
மனக்கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ
தனிக்கடலே தனிச் சுடரே தனி உலகே என்று என்று
உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினையே -5- 4-9 –

தட வரை வாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடும் கொடி போலே
சுடர் ஒளியாய் நெஞ்சின் உள்ளே தோன்றும் என் சோதி நம்பீ
வட தடமும் வைகுந்தமும் மதிள் த்வராவதியும்
இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே -5 -4-10 –

கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும்
புல்லென்று ஒழிந்தன கொல் ஏ பாவம் வெல்ல
நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான்
அடியேனது உள்ளத் தகம்–-பெரிய திருவந்தாதி -68-

தலை மேலே தாளிணைகள் –நிலை பேரான் என் நெஞ்சத்து -திருவாய் -10-6-6-
இவையும் அவையும் -திருவாய் -1-9- சாத்மிக்க சாத்மிக்க போகத்தை அளிப்பவன் கிருஷி பண்ணி பரம புருஷார்த்தம் பெறப் பெற்றானே
இத்தகைய பராத் பரன் மிகத் தாழ்ந்த என் பக்கலிலே காட்டி அருளும் அபிநிவேச அதிசயம் இருந்த படி என் என்று விஸ்மிதர் ஆகிறார் -)

ஆழ்வார் திருவடி என்று அனுசந்திக்கவே நம்முள்ளும் இருப்பதை உணர்வோம் -அவன் வியாப்தி எங்கும் உண்டே –

அத்தை நாம் உணர்ந்து ஆஸ்ரயிக்கவே நமக்கும் பேறு ஸித்தம் என்று

——————————————————————————————————

உபய விபூதி உக்தனானவனை பெரிய மேன்மையை யுடையவன் கிடீர்
என்னை இப்படி விரும்புகிறான் என்கிறார் –

அத்தி யூரான் புள்ளை யூர்வான் அணி மணியின்
துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் -முத்தீ
மறையாவான் மா கடல் நஞ்சுண்டான் தனக்கும்
இறையாவான் எங்கள் பிரான் –96-

பதவுரை

புள்ளை ஊர்வான்–பெரிய திருவடியை வாஹனமாகக் கொண்டு நடந்து மவனும்
அணி மணியின் துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான்–அழகிய மாணிக்கங்களோடு கூடினவனாய்
படப் பொறிகளை யுடையனான ஆதிசேஷன் மேல் பள்ளி கொள்பவனும்
முத்தீ ஆவான்–மூன்று அக்நிகளாலே ஆராதிக்கப்படுகிறவனும்
மறை ஆவான்–வேதங்களால் பிரதிபாதிக்கப்படுகிறவனும்
மா கடல் நஞ்சு உண்டான் தனக்கும் இறை ஆவான்–பெரிய கடலில் நின்று உண்டான விஷத்தை
உட்கொண்டவனான ருத்ரனுக்கும் ஸ்வாமியாயிருப்பவனுமான
எங்கள் பிரான்–எம்பெருமான்
அத்தியூரான்–ஸ்ரீஹஸ்திகிரியிலே எழுந்தருளி யிருக்கிறான்.

(எங்கள் பிரான் ஆகைக்காக அவன் சாதிக்கும் பட்டியல்
மா கடல் நஞ்சு உண்டான் தனக்கும் இறை ஆவான்– தேவாதி தேவன் ஆனவன்
முத்தீ மறையாவான் -வேதைக சமைதி காம்யன் ஆனான்
அணி மணியின் துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் -வ்யூஹ வாஸூ தேவன் ஆனான்
புள்ளை யூர்வான் -கருட வாஹனானான்
அத்தி யூரான் -திவ்ய தேசங்கள் தோறும் சேவை சாதிக்கிறான்
தத் -அவ்வளவு பெரியவன்
த்வம் -இவ்வளவு எளியன்
அஸி -ஆகிறான்
ஸ்ரீ ரெங்க நாதன் மம நாதன்
அரங்கமாளி என்னை ஆளி
ஆஸி)

பெரிய திருவடியை -மேற்கொண்டு -நடத்துமவனாய் -அணிய பட்ட மாணிக்கங்களும்-அழகிய பொறிகளும் சேர்ந்து இருக்கிற
திரு வனந்த ஆழ்வான் மேலே பள்ளி கொண்டு அருளுமவனாய் -மோக்ஷ ப்ரதிபாதங்களான வேதாந்த பாகங்களாலே
பிரதி பாதிக்கப் படுமவனாய் -பெரிய கடலில் பிறந்த விஷத்தைப் பானம் பண்ணி அந்த சக்தி யோகத்தாலே தன்னை
ஈஸ்வரனாக அபிமானித்து இருக்கிற ருத்ரனுக்கும் ஈஸ்வரனான எம்பருமான் இப்படி உபய விபூதி உக்தனாய்
வேதாந்த வேத்யனான தன் பெருமை பாராதே எங்களுக்கு உபகாரம் பண்ணுமவனாய்க் கொண்டு திருவத்தியூரிலே வந்து அருளினான் –

(முத்தீ மறை -கர்ம காண்டம் சர்வ கர்ம ஆராதணீயன் –
வேதாந்தம் -முத்தி மறை -மோக்ஷ பிரதன் வேதாந்த சித்தம் அன்றோ
ஆக இரண்டையும் சொன்னவாறு -இரண்டும் சேர்ந்தே வேதங்கள்)

(கால் இல்லா யானை மேல் பறந்து காட்டி விரோதிகளை நிரசித்த ஐதிக்யம் –
ஏகாம்பரர் கோயிலில் முன்பே -இன்றும் யானை வாகன ஏசல் கண்டு அருளுகிறார்
யானை வாஹனத்துக்கு கால் இல்லை இங்கு )

ஸூரிகளில் தலைவரான திரு வனந்த ஆள்வானைச் சொல்லுகையாலே நித்ய விபூதி யோகம் சொல்லிற்று
சம்சாரிகளில் தலைவனான ருத்ரனைச் சொல்லுகையாலே லீலா விபூதி யோகம் சொல்லிற்று -என்கை

முத்தீ மறையாவான் -என்ற பாடமான போது
த்ரேதாக்னியைப் பிரதிபாதிக்கிற வேதத்தாலே
ஸமாராத்யத்தயா ப்ரதிபாதிக்கப் படுமவன் என்று பொருளாகக் கடவது –

(ஆதி ராஜ்யம் அதிகம் புவநாநாம் ஈஸதே பிஸூ நயன் கில மௌளி -ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் -25-
ஓடும் புள்ளேறி -திருவாய் -1-8-1-
நாகத்தின் மேல் துயில்வான் -அமி தவ்ஜா பர்யங்க தஸ்மிந் ப்ரஹ்ம ஆஸ்தே –கௌஷீதகி
முத்தீ மறை யாவான் -என்று முத்தி மறையாவான் என்றும் –
வேதத்து மறை நீ -பரிபாடல்
கேஸீ விஷஸ்ய பாத்ரேண யத் ருத்ரேண அபிபத் ஸஹ -ருக் மண்டலம் -இவன் உள்ளே இருந்ததாலே நீல கண்டன் ஆலஹால விஷம் உண்ண முடிந்தது பாத்திரம் போல் அன்றோ ருத்ரனும் –
எங்கள் பிரான் அத்தியூரான் -எங்கள் என்று -கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு ஏழு பிறப்பும் -2-7-1- -சம்பந்த சம்பந்திகளையும் கூட்டிச் சொல்கிறார்
அனைவரையும் உபகரித்து அருளவே ஸ்ரீ ஹஸ்தகிரியில் நித்ய வாஸம் செய்து அருளுகிறார் என்கிறார் – )

———————————————————————————————–

என்னை விஷயீ கரிக்கைக்காகத் திரு குடந்தையில் ஸூலபனாய் வந்து பள்ளி கொண்டு அருளினாய் -என்கிறார் –

(எங்கள் பிரான் ஆவதற்காகவே -நின்ற திருக்கோலம் –
பரத்வமும் சயன திருக்கோலம் -ஆஸ்ரித பாரதந்தர்யம் ஸுலப்ய சவுந்தர்யங்களையும் காட்டி
சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரேன் என்று உள்ளான்-

அங்கு நின்று எழுதி வாங்கிக் கொண்டு அத்தை திடப்படுத்த இங்கே சயனம் என்றுமாம் )

எங்கள் பெருமான் இமையோர் தலைமகன் நீ
செங்கண் நெடுமால் திரு மார்பா -பொங்கு
பட மூக்கின் ஆயிர வாய்ப் பாம்பணை மேல் சேர்ந்தாய்
குட மூக்கில் கோயிலாகக் கொண்டு–97-

பதவுரை

செம் கண் நெடுமால்–சிவந்த திருக்கண்களையுடைய ஸர்வேச்வரனே!
திருமார்பா-பிராட்டியைத் திருமார்பிலுடையவனே!
இமையோர் தலை மகன் நீ–நித்யஸூரிகளுக்குத் தலைவனான நீ
எங்கள் பெருமான்–எங்களுக்கு ரக்ஷகனாய்க் கொண்டு
குடமூக்கு இல்–கும்பகோண க்ஷேத்ரத்தை
கோயில் ஆ கொண்டு–கோயிலாகத் திருவுள்ளம்பற்றி
பொங்கு படம் மூக்கின்–விகஸித்தபடங்களையும் மூக்கையுமுடையவனும்
ஆயிரம் வாய்–ஆயிரம் வாயையுடையவனுமான
பாம்பு–ஆதிசேஷனாகிற
அணை மேல்–படுக்கையின் மீது
சேர்ந்தாய்–பள்ளி கொண்டருளினாய்.

எங்களை அடிமை கொள்ளுகைக்கு அடியான பெரிய பிராட்டியாரைத் திரு மார்பிலே யுடையவனே –
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் -அவர்களுக்கு போக்யமான சிவந்த திருக் கண்களை யுடைய சர்வாதிகனான சர்வேஸ்வரனாய்
ஆஸ்திரிதரான எங்களுக்கு ஸ்வாமி யான நீ -எங்களை அங்கீ கரிக்கைக்காகத் திருக் குடந்தையைக் கோயிலாகக் கொண்டு
திரு மேனி ஸ்பர்சத்தாலே விகசிதமான பணங்களையும்-திரு மூக்கையும் யுடையவனாய் அனுபவ ஜெனித ஹர்ஷத்துக்கு போக்குவிட்டு
ஏத்துகைக்கு ஆயிரம் வாயையும் யுடையனுமான திரு வனந்த ஆழ்வான் ஆகிற படுக்கையின் மேலே பள்ளி கொண்டு அருளினாய் –

(நீ ஒவ்வொன்றிலும் சேர்த்து வியாக்யானம்
எங்கள் பெருமான்நீ
இமையோர் தலைமகன் நீ
செங்கண் நெடுமால் நீ
திரு மார்பா நீ –
பொங்கு பட மூக்கின் ஆயிர வாய்ப் பாம்பணை மேல் சேர்ந்தாய் நீ
குட மூக்கில் கோயிலாகக் கொண்டாய் நீ

(திருமார்பா-பரத்வ ஸுலப்யங்களுக்கு நிதானம் -புருஷகாரம் நமக்கு உபாய உபேயங்களுக்கு -நித்ய முக்தர்களுக்கு கைங்கர்ய விருத்திக்கே)

(எங்கள் பிரான் ஆவதற்காகவே திருவத்தியூரில் நின்றதோடு நில்லாமல்
சம்சாரத்தை கிழங்கு எடுத்தால் அல்லது எழுந்து இருக்க மாட்டேன் என்பவன் போல்
திருக்குடந்தை போன்ற திவ்ய தேசங்களிலும் படுக்கையை விரித்துப் பள்ளி கொண்டும் அருளுகிறார் அன்றோ
திரு மார்பா -வேதாந்தாஸ் தத்வ சிந்தாம் முரபிதுரஸி யத் பாத சிஹ்நைஸ் தரந்தி -ஸ்ரீ குணரத்ன கோசம் -44-
ஹ்ரீஸ் ஸ தே லஷ்மீஸ் ச பத்ன்யவ்
தத் விஷ்ணோ பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய
தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ )

——————————————————————————————————-

தம்மை விஷயீ கரித்த சர்வேஸ்வரனுடைய அகடி தகடனா சாமர்த்தியம் -குடக் கூத்தாடுகை
முதலான திவ்ய சேஷ்டிதங்களை அனுபவிக்கிறார் –

(அர்ச்சை நிலைகளால் அடிமை கொண்டது கீழ் இரண்டு பாசுரங்களில்
விபவ சேஷ்டிதங்களைக் காட்டி அடிமை கொண்டான் என்கிறார் இதில்)

கொண்டு வளர்க்கக் குழவியாய் தான் வளர்ந்தது
உண்டது உலகு ஏழும் உள் ஒடுங்கக் கொண்டு
குடமாடிக் கோவலனாய் மேவி என்நெஞ்சம்
இடமாகக் கொண்டவிறை-98-

பதவுரை

கோவலன் ஆய்–இடையனாய் வந்து பிறந்து
குடம் கொண்டு ஆடி–குடங்களைக் கையிலே கொண்டு கூத்தாடி (அதனாலுண்டான ஆயாஸம் தீர)
என் நெஞசம் மேவி–என்னுடைய ஹ்ருதயத்திலே பொருந்தி
இடம் ஆக கொண்ட இறை–(எனது நெஞ்சையெ) நித்ய வாஸ ஸ்த்தாநமாகக் கொண்ட ஸ்வாமி
கொண்டு வளர்க்க–சிலர் கையிலெடுத்துச் சீராட்டி வளர்க்க வேண்டும் படியான
குழவி ஆய்–சிறு குழந்தையாய்
தான் வளர்ந்தது–தான் வளர்ந்த அப்படிப் பட்ட மிகச் சிறிய பருவத்திலே
உலகு ஏழும்–ஸப்த லோகங்களும்
உள் ஓடுங்க–தன்னுள்ளே ஒடுங்கும்படி
உண்டது!–உட் கொண்டது (என்ன ஆச்சரியம்)

இடையனாய் வந்து பிறந்து அருளி -ஜாதி உசிதமாக ஐஸ்வர்ய செருக்காலே குடம் எடுத்துக் கூத்தாடி –
அந்தக் குடக் கூத்தாடின சுவடோடே இடைவெளி அறப் பொருந்திக் கொண்டு
என் ஹிருதயத்தைத் தனக்கு இருப்பிடமாகக் கொண்ட சர்வ ஸ்வாமியான சர்வேஸ்வரன் –
சிலர் எடுத்துக் கொண்டு சீராட்டி வளர்க்க வேண்டி இருக்கிற முக்த சிஸூவான வடிவை யுடையனாய்க் கொண்டு
தான் வளர்ந்து -அத் தசையிலே திரு வயிற்றுக்கு உள்ளே ஒரு புடையில் அடங்கும் படி அமுது செய்தது சகல லோகங்களையும் –
கொண்ட வடிவின் சிறுமையையும் -உண்ட லோகத்தின் பெருமையையும் -அது தான் திரு வயிற்றிலே
ஒரு புடையில் அடங்கின படியையும் -இது ஒரு ஆச்சர்யம் இருக்கும் படியே என்று விஸ்மிதராய் அனுபவிக்கிறார் –

(ந அஹம் தேவோ ந கந்தர்வோ ந யஷோ ந ச ராக்ஷஸ
அஹம் வோ பாந்தவ ஜாத நைதச் சிந்த யமிதோன்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-13-
பாலனாய் ஏழு உலகுண்டு பரிவின்றி ஆலிலை அன்ன வசம் செய்யும் அண்ணலார் -திருவாய் -4-2-1-
அடியார்ந்த வையமுண்டு ஆலிலை அன்ன வசம் செய்யும் படி யாதுமில் குழவி -8-7-10-
பாலன் றனதுருவாய் யேழுலகுண்டு ஆலிலையின்
மேலன்று நீ வளர்ந்த மெய்யன்பர் ஆலன்று
வேலைநீ ருள்ளதோ விண்ணதோ மண்ணதோ
சோலை சூழ் குன்றெடுத்தாய் சொல்லு —முதல் திருவந்தாதி –69-)

——————————————————————————————-

பிரயோஜனாந்த பரரான தேவர்களுக்குக் கார்யம் செய்யும் படியை அருளிச் செய்கிறார் –

(ப்ரயோஜனாந்தர பரர்களுக்கும் கார்யம் செய்து -இவற்றை பெற்று பின் ஒரு காலமாவது
அநந்ய ப்ரயோஜனர் ஆவார் என்னும் நப்பாசையில் அன்றோ செய்து அருளுகிறார்)

இறை எம்பெருமான் அருள் என்று இமையோர்
முறை நின்று மொய் மலர்கள் தூவ -அறை கழல
சேவடியான் செங்கண் நெடியான் குறளுருவாய்
மாவலியை மண் கொண்டான் மால் –99-

பதவுரை

இமையோர்–(பிரமன் முதலான) தேவர்கள்
எம்பெருமான்–‘எம்பெருமானே!‘ (எங்கள் விஷயத்தில்)
இறை–கொஞ்சம்
அருள் என்று–கிருபை பண்ண வேணும் என்று சொல்லி
முறை நின்று–சேஷத்வ ஞானத்தால் -அடிமைக்கு ஏற்ப நின்று
மொய் மலர்கள்–அழகிய புஷ்பங்களை
தூவ–பணிமாறும் படியாக,(வாசிகம் -காயிகம் இரண்டாலும் )
அறை கழல சே அடியான்–ஒலிக்கின்ற வீரக் கழலை யுடைய திருவடிகளை யுடையவனும்
செம் கண்–செந்தாமரைக் கண்ணனும்
நெடியான்–எல்லாரிலும் மேம்பட்டவனுமான
மால்–திருமால்
குறள் உரு ஆய்–(மாவலி பக்கல்) வாமந ரூபியான் வந்து தோன்றி
மா வடிவின்–பெரிய வடிவினாலே
மண் கொண்டான்–பூமியை அளந்து கொண்டான்.

ஈஸ்வரோஹம் என்று காளமூதித் திரிகிற துர்மானிகளான ப்ரஹ்மாதி தேவர்கள் தாங்கள் துர்மானத்தையும் –
ஊதின காளத்தையும் பொகட்டு – எங்களுக்கு வகுத்த ஸ்வாமியான ஸர்வேஸ்வரனே –
எங்கள் பக்கல் கிருபை பண்ணி அருள வேணும் -என்று அர்த்தித்துக் கொண்டு
அவன் சேஷியாயும் தங்கள் சேஷ பூதருமான முறையிலே நின்று –
அழகிய புஷ்பங்களை அக்ரமமாகப் பணி மாறிக் கொண்டு ஆஸ்ரயிக்க –

த்வனியா நின்றுள்ள வீரக் கழலை யுடைத்தான சிவந்த திருவடிகளை யுடையனாய் -ஐஸ்வர்ய ஸூசகமான
சிவந்த திருக் கண்களை யுடையனான சர்வாதிகனான சர்வேஸ்வரன் –

அந்த தேவர்கள் விஷயத்தை மதகு திறந்து பாய்கிற வியாமோஹத்தை யுடையனாய்க் கொண்டு –
ஸ்ரீ வாமன ரூபியாய் வந்து திரு அவதரித்து அருளி லோகம் அடங்க விழுங்கும் படி
முசிவற வளர்ந்த வடிவை யுடையனாய்க் கொண்டு பூமியை அளந்து கொண்டான் —

முறை நின்று –
பர்யாயமாய் நின்று என்றுமாம் –

(இந்திரன் இடம் மால் -மகாபலி இடமும் மால் நம் அனைவர் இடமும் மால் -எங்கும் மால்

இதனால் தான் அடுத்த பாசுரத்தில் -என் தன் அளவன்றால் யானுடைய வன்பு –அவன் அன்பால் இவர் அன்பு பெருக்கெடுக்குமே –
வ்யாமோஹம் -தப்புக்களைப் பார்க்காமல் ஓத்தே இல்லாத அதிகாரிகள் கொண்ட காதல்)

(அகில ஜகத் ஸ்வாமிந் -அஸ்மத் ஸ்வாமின்
கள்வா எம்மையும் ஏழு உலகும் நின் உள்ளே தோற்றிய இறைவா–வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர் –திருவாய் -2-2-10-
ஈஸ்வரோஹம் –
தமீஸ்வராணாம் பரமம் மஹேஸ்வரம் தம் தேவதா நாம்
பரமஞ்ச தைவதம் -ஸ்வேதாஸ்வர –
மா வலியை மண் கொண்டான் மால் என்று கொண்டு தாழ விட்டு வாத்சல்யம் காட்டி அருளினான் என்று ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையும்
மா வடிவில் மண் கொண்டான் என்று கொண்டு மிகப்பெரிய வடிவைக் கொண்டு உலகு அனைத்தையும் தீண்டினான் என்பர் ஸ்ரீ அப்பிள்ளை
சுருக்குவாரை இன்றியே சுருங்கினாய் சுருங்கியும் பெருக்குவாரை இன்றியே பெரும்மம் எய்து பெற்றியோய் -திருச்சந்த -109-)

———————————————————————————–

(சுருக்குவாரை இன்றி சுருக்கினாயே –
ஓங்கி உலகு அளந்தவன் போல் மிகப் பெரியதான அன்பை
வாமன் போல் சுருக்கி அருள வேணும் என்கிறார்)

பிரயோஜனாந்தர பரர் நம்மை ஆஸ்ரயிக்கும் படி சொன்னீர் -உமக்குச் செய்யும் படி சொல்லீர் என்ன –
கொள் கொம்பு மூடப் படர்ந்த அன்பை ஆஸ்ரயித்து அளவாக்கித் தர வேணும் -என்கிறார் –

மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு
மேலா வியன் துழாய்க் கண்ணியனே -மேலாய்
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன்
அளவன்றால் யானுடைய வன்பு –100-

பதவுரை

மாலே–(அடியாரிடத்தில்) வியாமோஹ முள்ளவனே!
நெடியோனே–ஸர்வ ஸ்மாத் பரனே!
கண்ணனே–ஸ்ரீக்ருஷ்ணனே!
விண்ணவர்க்கு மேலா–நித்ய ஸூரிகளுக்குத் தலைவனே!
வியன் துழாய் கண்ணியனே–அழகிய திருத் துழாய் மாலையை அணிந்துள்ளவனே!
மேலால்–முன்னொரு காலத்தில்
விளவின்காய்–விளங்காயை
கன்றினால்–ஒரு கன்றைக் கொண்டு
வீழ்த்தவனே–உதிர்த்துத் தள்ளினவனே!,
யான் உடை– (உன்னிடத்தில்) அடியேன் வைத்திருக்கிற
அன்பு–அன்பானது
என்தன் அளவு அன்று–என்னளவில் அடங்கி நிற்பதன்று.

ஸ்வரூப ரூப குணங்களால் வந்த பெருமையை உடையனாய் -விபூதி யோகத்தால் வந்த வைபவத்தை யுடையனாய் –
ஸ்வ வியதிரிக்த ஸமஸ்த வஸ்துக்களும் நிர்வாஹகனாய்(கண்ணன் ரக்ஷகன் )-

பரமபத வாசிகளான நித்ய ஸூ ரிகளுக்கு அவ்வருகு பட்ட இருக்குமவனாய் –
அவர்கள் உகக்கும்படி அத்யாச்சர்யமான திருத் துழாய் மாலையாலே அழகு பெற ஒப்பித்துக் கொண்டு இருக்குமவனாய் –

இப்படி இருந்து வைத்து ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரித்து
அஸூரா விஷ்டமாய் நின்ற விளாவின் காயை அஸூரமயமான கன்றாலே விழ விட்டவனே

உன் பக்கல் நான் உடையேனான ப்ரேமம் ஆச்சர்ய பூதனான என்னளவில் அடங்கி நிற்பது ஓன்று அன்று
தர்மி அழியாத படி அத்தை அகஞ்சுரிப் படுத்தித் தந்து அருள வேணும் –

(இது வரை ஆறும் பரத்வ பரமான வியாக்யானம்
இனி ஆறும் ஸுலப்ய பரமான வியாக்யானம்)

அதவா
ஆஸ்ரித வியாமுக்தனாய் -அந்த வியாமுக்தத்துக்கு எல்லை இல்லாதபடி இருக்குமவனாய் –
அந்த வியாமோஹம் ப்ரேரிக்க ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரித்து ஆஸ்ரிதற்கு பவ்யனாய் இருக்குமவனாய்

இந்நிலையில் நித்ய ஸூ ரிகளுக்கும் அவ்வருகான பெருமையை யுடையனாய் –
ஐஸ்வர்ய ஸூ சகமான திருத்துழாய் மாலையாலே அலங்க்ருதனாய்
விளாவாய் நின்ற அசுரனை கன்றாய் நின்ற அசுரானாலே யறிந்து விழ விட்ட -இரண்டையும் முறித்துப் பொகட்டால் போலே
என் விரோதியைப் போக்கினவனே –
எனக்கு உன் பக்கல் ப்ரேமம் என்னளவு அன்று –
இத்தை அமைத்து அருள வேணும் -என்கிறாராகவுமாம் –

(விபுவான ஆத்மாவின் தர்ம பூத ஞானத்தையும் விஞ்சிற்று)

(பிரார்த்தனை அவ்யக்தம் -பிரார்த்தனா கர்ப்ப பிரபத்தி
தேவரீர் அடியேனுக்கு உபாயமாக இருக்க வேண்டும் -திருமந்திரம் ஓம் நமோ நாராயனுக்காக -மட்டுமே உள்ளது
பிரார்த்தனாய சதுர்த்தி போல் இங்கும்)

(கொள் கொம்பு மூடப் படர்ந்தது போலே என்னுடைய அன்பானது என் ஸ்வரூபத்தையும் விஞ்சி பெருகி
தளர்ச்சியை யுண்டாக்கி உன்னை அனுபவிக்க ஒட்டாமல் தடுக்கிறதே
அவ்வன்பை அடியேன் பொறுக்கும் அளவு சுருக்கி அருள வேண்டும் -என்கிறார் –
அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே -10-10-10-
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு -1-8-3-
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே கண்ணனே -என்றும் அந்வயம் கொள்ளலாம்
தம்மை விஷயீ கரித்து அருளிய நீர்மைக்கு ஆறு விளிகள்-ஆறும் பரத்வமாகவும் ஸுலப்யமாகவும் கொண்டு வியாக்யானம்
மாலே -நெடியோனே -கண்ணனே -விண்ணோர்க்கு மேலா – வியன் துழாய் கண்ணியனே -மேலால் விளவின் காய் குன்றினால் வீழ்த்தவனே -என்தன் அளவன்றால் யானுடைய வன்பு -என்பதை ஒவ்வொன்றிலும் சேர்க்க வேண்டும்-

இமையோர் தமக்கும் நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே -திரு விருத்தம் -98-
ரக்ஷணத்துக்கு அசாதாரண தனி மாலை சாத்திக்கொண்டு இருப்பானே
காலாழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -பெரிய திருவந்தாதி -34-
சித்தமும் செவ்வை நில்லாது–பத்திமைக்கு அன்பு யுடையனாவதே பணியாய் எந்தாய் -திருக்குறும் தாண்டகம் -10-

ஆக அன்பே தகளியாக -என்று தொடங்கி
மேன் மேலாகப் பெருகி வந்த அன்பை அளவு படுத்தித் தந்து
அனுபவிப்பிக்க அருள வேண்டும் என்ற பிரார்த்தனை யுடன் தலைக் கட்டி அருளுகிறார் -)

——————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

இரண்டாம் திருவந்தாதி- பாசுரங்கள் -81-90- -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை-

November 16, 2016

பண்டு அவனைக் கண்டு அனுபவிக்கப் பெற்றவர்கள் -என் பட்டார்கள் -என்று
பழங்கிணறு வாருகிறது என் –
இப்போது அவனைக் கண்டு நான் தான் படுகிற பாட்டைப் பார்க்க மாட்டீர்களோ -என்கிறார் –

பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில்
மிகக் கண்டேன் மீண்டவனை மெய்யே -மிகக் கண்டேன்
ஊன் திகழும் நேமி யொளி திகழும் சேவடியான்
வான் திகழும் சோதி வடிவு -81-

பதவுரை

பகல் கண்டேன்–இராக்காலம் கலசாமல் ஒரே பகற் போதாய்ச் செல்லுகிற நல் விடிவைக் கண்டேன். (அதாவது என்ன வென்றால்)
நாரணனை கண்டேன்–ஸ்ரீமந் நாராயணனாகிற என்று மஸ்தமியாத ஆதித்யனைக் கண்டேன்,
மீண்டு–இன்னமும்,
கனவில்–மாநஸ ஸாக்ஷாத் காரத்திற் காட்டிலும்
மிக மெய்யே–மிகவும் ப்ரத்யக்ஷமாக
ஊன் திகழும் நேமி–திருமேனியில் விளங்குகின்ற திருவாழியை யுடையவனும்
ஒளி திகழும் சே அடியான்–பிரகாசம் மிக்க திருவடிகளை யுடையவனுமான அப்பெருமானுடைய
வான் திகழும்–பரமபதத்திலே விளங்குகின்ற
சோதி வடிவு–சோதி மயமான வடிவத்தை
மிக கண்டேன்-(இங்கே) நன்று ஸேவிக்கப் பெற்றேன்.

இது நெடுங்காலம் பகல் விரவாத சம்சார காள ராத்திரியிலே கண் கெட்டு முன்னடி தோற்றாதே திரிந்த நான் –
இப்போது -ஸூப்ரபாதா ச மே நிசா –என்னும்படி –
இரவு விரவாத பகலாய்ச் செல்லும் படியான தொரு நல் விடிவைக் கண்டேன் –
பகவத் ஆஜ்ஜைக்கு பயப்பட்டு முப்பத்து வட்டத்தில் போவது வருவதாய்த் திரிகிற ப்ராதேசிகனான ஆதித்யன் அன்றிக்கே –
ஒரு காலத்திலும் போக்கு வரத்து அன்றிக்கே -சாஸ்தா ஜனா நாம் -என்னும் படி
சர்வத்தையும் நியமித்துக் கொண்டு
உபய விபூதி உக்தன் ஆகையால் சார்வத்ரிகனான நாராயணன் ஆகிற ஆதித்யனைக் கண்டேன் –

இந்திரியங்கள் துணை செய்யக் காண்கிற காட்சி அன்றிக்கே -ஸ்வப்ன தீ கம்யம் -என்னும் படி நேர் கோடு நேரே நெஞ்சாலே
காணப்படும் ஸ்வப்ன அவஸ்தையிலும் காட்டிலும் விசதமாய்-ப்ரத்யக்ஷ சாமானகாரமான மானஸ ஞானத்தால்
இந்திரியங்கள் கலக்க ஒண்ணாத படி அழகிதாக மீண்டு அவனைக் கண்டேன் –

வடிவு அழகு விளங்கா நின்றுள்ள திரு வாழி யையும் புகர் விளங்கா நின்றுள்ள சிவந்த திருவடிகளையும் யுடைய சர்வேஸ்வரனுடைய
பரம ஆகாச சப்த வாஸ்யமான பரம பதத்திலே விளங்கா நின்றுள்ள தேஜஸ்ஸை யுடைத்தான
வடிவு அழகை ப்ரத்யபி ஜ்ஞார்ஹமாம் படி அழகிதாகக் கண்டேன்

வான் திகழும் -என்றது
மேகத்தோடு ஓக்க விளங்கா நின்றுள்ள திரு மேனி என்னவுமாம் –

ஊன் திகழும் என்றது
சர்வேஸ்வரன் திரு மேனியில் விளங்கா நின்றுள்ள திரு வாழி என்னவுமாம் —
சத்ரு சரீரத்தில் விளங்கும் என்னுதல் –

(ஸூ ப்ரபாதா ச மே நிசா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-17-2–
பீஷோ தேதி ஸூர்யா -தைத்ரியம் ஆனந்த வல்லி
அந்தப் ப்ரவிஷ்டஸ் ஸாஸ்தா ஐநா நாம் ஸர்வாத்ம -தைத்ரியம் -3-11-
ஸ்வப்ன தீ கம்யம் -மனு -12-122-
கண்டேன் திருமேனி யான் கனவில் ஆங்கு அவன் கைக்
கண்டேன் கனலும் சுடர் ஆழி -கண்டேன்
உறு நோய் வினை இரண்டும் ஓட்டுவித்துப பின்னும்
மறு நோய் செறுவான் வலி-67-

கண்டேன் திரு மேனி யான் கனவில் -67-கனவில் மீண்டு அவனை மிகக் கண்டேன் -இதில்
அங்கு அவன் கைக் கண்டேன் கனலும் சுடராழி -67-இதில் ஊன் திகழும் நேமி –
ஊன் -என்று அழகு என்றும் திருமேனியைச் சொல்லி அதில் திகழும் ஆழி
வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு —
அன்றிக்கே சத்ருக்களின் சரீரங்களில் விளையாடும் சுடர் ஆழி என்றுமாம்
வான் -பரமே வ்யோமன் -மேகம் போல் விளங்கா நிற்கும் நீல மேனி -முகில் வண்ணன் -)

—————————————————————————————-

வெறும் நாரணனைக் கண்ட மாத்திரம் அன்றிக்கே
ஸ்ரீ மானான நாரணனைக் காணப் பெற்றேன் -என்கிறார் –

(அபரிச்சேதய அழகு என்றும் -அவயவ பூதை என்றும் -புருஷகார பலம் என்றும் மூன்று நிர்வாகங்கள்)

வடிக்கோல வாள் நெடுங்கண் மா மலராள் செவ்விப்
படிக்கோலம் கண்டு அகலாள் பன்னாள்-அடிக்கோலி
ஞாலத்தாள் பின்னும் நலம் புரிந்தது என் கொலோ
கோலத்தால் இல்லை குறை–82-

பதவுரை

வடி கோலம்–வடிக் கட்டின அழகை யுடையவளும்
வாள் நெடுங்கண்–ஒளி பொருந்திய நீண்ட திருக் கண்களை யுடையவளும்
மா மலராள்–சிறந்த தாமரை மலரில் பிறந்தவளுமான பெரிய பிராட்டியார்
செவ்விப் படிகோலம்–இயல்பான தக்க சிறப்புற்ற (அவனது) திருமேனியின் அழகை கண்ணால் அநுபவித்து
பல் நாள் அகலாள்–க்ஷண காலமும் விட்டுப் பிரியாமல் எப்போதும் கூடியே யிருக்கின்றாள்
பின்னும்–எம்பெருமானுடைய அழகிலே பிராட்டி ஆழங்காற்பட்டு அழுந்துகிற படியைக் கண்டு வைத்தும்
ஞாலத்தாள்–பூமிப் பிராட்டியானவள்
அடிக் கோலி–பாரித்துக் கொண்டு
நலம் புரிந்தது என் கொலோ–அப் பெருமானிடத்தில் ஆசையைப் பெருக்கிக் கொண்டிருப்பது என்னோ
கோலத்தால் குறை இல்லை–(எத்தனை பேர்கள் அநுபவித்தாலும் ஏற்றி யிருக்கும் படியான அழகினால் குறை யில்லை யன்றோ.
அழகு அ ஆசைப்பட நேர்கின்றது (அளவற்றிருப்பதானல் பலரும் எம்பெருமானிடத்தில்)

(அடிக் கோலி–இலை அகலப்படுத்தி -ஏடு இல்லாமல் பெரிய நுனி இலைகள் வைத்து_

நாட்டில் அழகு அடங்க லும் கோதாம்படி-அழகு படைத்த அவன் அழகு ஆகிற கோது கலவாத வடித்த அழகையும் –
வடிவிலே வடிவாய் ஒளி பெற்று போக்தாக்கு அளவிட ஒண்ணாத மிக்க யோக்யதையை யுடைத்தான திருக் கண்களையும் யுடையளாய்

(கோலம் அவனுக்கு கண் இவளுக்கு -அஸி தேஷிணீ அன்றோ
நாட்டில் அழகு கோது என்னலாம்படி அவன் அழகு
அதுவே கோது என்னலாம் படி இவள் அழகு)

ஸ்லாக்யமான தாமரைப் பூவைப் பிறப்பிடமாக யுடையளாகை யாலே -ஸுகந்த்ய ஸுகுமார்யங்களைக் குறைவற உடையளுமான
பெரிய பிராட்டியாரும் -அரும்பினை அலரை-என்கிறபடியே
செவ்விய ஸ்வபாவமான அவன் வடிவு அழகைக் கண்டு
அனுபவித்துக் கண்ணை மாற வைத்தல் கால் வாங்குதல் செய்ய மாட்டாதே –

அவ் வழகு வெள்ளத்திலே ஆழம் கால் பட்டு
இறையும் அகலகில்லேன் -என்னும் படி
கால தத்வம் உள்ளதனையும் -க்ஷண காலமும் விஸ்லேஷிக்க க்ஷமை அன்றிக்கே இரா நின்றாள்-

ஷமையே வடிவான ஸ்ரீ பூமிப் பிராட்டி யானவள் -தலை நீர்ப் பாட்டிலே அனுபவிக்க இட்டுப் பிறந்த பேர் அளவு யுடையளான
அவள் ஆழம் கால் பட்டு அழுந்து கிறபடியைக் கண்டு இருக்கச் செய்தேயும்
அவளும் அவனுமான சேர்த்தியைக் கண் அழிவு அற அனுபவிக்கைக்கு அநு குணமாக –
இலை அகலப் படுத்துப் பாரித்து ஆசையைப் பண்ணிக் கொண்டு செல்லுகிற இது ஏதாய் இருக்கிறதோ

(மிதுனமாகையால் விஷய பூயஸ்தம் -அப்ரமேயம் தத் தேஜஸ் யஸ்ய ஜனகாத்மஜா
நாராயணனை அனுபவிக்க ஏடு -மிதுனத்தை அனுபவிக்க இலை அகலப்படுத்த வேணுமே)

இதுக்கு அடி -இருவருக்கும் பாத்தம் போராமல் சீறு பாறு என்ன வேண்டும் படி
போக்யதை அளவு பட்டு இருக்கிற ஷூத்ர விஷயங்கள் போல் அன்றிக்கே
திரள் திரளாக இழிந்தாலும் குமிழ் நீர் உண்ணும் படி அழகால் குறை வற்று இருக்கை இறே –

(அம்ருத சகார ஆனந்த நிமக்ந-அளப்பரிய ஆரமுதில் அந்தர் நிமக்ந-மாகும் படி பூர்த்தி உண்டே)

(வடிக்கோலம் -உலகின் அழகு கோது என்னலாம் படி அவன் அழகு -அதுவே கோது என்னலாம் படி அவளது அழகு -இப்படி வடித்து எடுத்த அழகு –
யுவா குமார
அரும்பினை அலரை
செவ்விப் படிக் கோலம்
பருவத்தை இயல்வாகக் கொண்ட வடிவு அழகு கோலம்
பருவத்தையும் இயல்வான வடிவு அழகையும் கண்டு
பருவத்தை யுடைய திருமேனியின் அழகைக் கண்டு -என்று மூன்றுமாம்
போகோ போத்காத கேளீ சுளகித பகவத் வைஸ்வ ரூப்ய அநு பாவா -ஸ்ரீ குணரத்ன கோசம் –
அப்ரமேயம் ஹி தத் தேஜஸ் யஸ்ய சா ஜனகாத்மஜா -ஆரண்ய -37-18–
தயா ஸ ராஹர்ஷி ஸூத அபி ராமயா உபே யிவான் உத்தம ராஜ கன்யா
அதீவ ராம ஸூ ஸூபே அதி காமயா விபுஸ் ஸ்ரீ யா விஷ்ணுர் இவாமரேஸ்வர -பால –77-36-
திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும் திகழ்கின்ற திருமாலார் –10-6-9-
வடிவார் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு –

உத்ப் புல்ல பங்கஜ தடாகம் இவ உபயாநி ஸ்ரீ ரெங்க ராஜம் இஹ தக்ஷிண சவ்ய ஸீம்நோ
விஹார ரசிகாம் இவ ராஜ ஹம்ஸீம் ச்சாயாம் இவ அப்யுதயிநீம் அவநீம் ச தஸ்யா –ஸ்ரீ ரெங்கராஜா ஸ்தவம் -1-63-

இஹ –இந்த கர்ப்ப க்ருஹத்தில்
உபயாநி ஸ்ரீ ரெங்கராஜம்–ஸ்ரீ ரெங்க நாதனை ஆஸ்ரயிக்கக் கடவேன்-
இஹ தக்ஷிண சவ்ய ஸீம்நோ –வலவருகிலும் இடவருகிலும்
விஹார ரசிகாம் இவ ராஜ ஹம்ஸீம்-லஷ்மீம்–விளையாட வல்ல அன்னப் பேடை போன்றுள்ள திரு மகளையும்
ச்சாயாம் இவ அப்யுதயிநீம் அவநீம் ச தஸ்யா –அவளுடைய மேன்மேலும் வளர்த்தியை யுடைத்தான நிழல் போன்ற ஸ்ரீ பூமிப் பிராட்டியையும் அடையக் கடவேன் –

போக்யா வாமபி நாந்தரீயகதயா புஷ்ப அங்கராகைஸ் ஸமம்
நிர்வ்ருத்த ப்ரணய அதிவாஹந விதௌ நீதா: பரீவாஹதாம்
தேவி த்வாம் அநு நீளயாஸஹ மஹீ தேவ்ய: ஸஹஸ்ரம் ததா
யாபி: த்வம் ஸ்தந பாஹு த்ருஷ்டி பிரிவ ஸ்வாபி: ப்ரியம் ச்லாகஸே.–ஸ்ரீ குணரத்ன கோசம் -26-

தேவீ! ஸ்ரீரங்கநாயகீ! மனம் ஒருமித்த தம்பதிகளின் இனிமையை சாந்து, சந்தனம், மலர்கள் ஆகியவை அதிகரிக்கும் அன்றோ?
அது போல நீயும் நம்பெருமாளும் இணைந்துள்ளபோது, உங்கள் இன்பத்தை மேலும் அதிகரிக்கும்படியாக
நீளாதேவியும், பூதேவியும் மற்றும் ஆயிரக்கணக்கான தேவிகளும் உள்ளனர்.
ஒரு குளத்தில் நிரம்பியுள்ள நீரை வெளியேற்றினால் அன்றோ குளம் பெருமையும் பயனும் பெற்று நிற்கும்.
இதுபோல இவர்கள் அனைவரும் உங்கள் இருவரின் காதலைத் தங்கள் வழியாக அனைவருக்கும் வெளிப்படுத்துகின்றனர்.
இப்படியாக உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் மற்ற தேவியருடன் உள்ளபோதும் நீ மகிழ்ந்தே உள்ளாய்.
அவர்கள் உனது நாயகனை அணைத்துக் கொள்ளும்போது, உனது உடல் உறுப்புகளாக மாறியே
இவர்கள் அணைத்துக் கொள்கின்றனர் என்று நீ நினைக்கிறாய் அல்லவோ?
அவர்கள் உனது கைகள் போன்றும், ஸ்தனங்கள் போன்றும், கண்கள் போன்றும் விளங்க –
இப்படியாக நீ உனது ப்ரியமான நம்பெருமாளை மகிழ்விக்கிறாயா?)

——————————————————————————————-

பெரும் தமிழன் நல்லேன் பெருகு -என்று அவனுக்குக் கவி பாடப் பெற்ற பெரு மதிப்பாலே
முன்பு (74-பாசுரத்தில் )செருக்கி வார்த்தை சொன்னவர் –
இப்போது நாய்ச்சிமாரும் தானும் சேர்ந்து இருக்கிற பெரிய மேன்மையைக் கண்டு கூசி –
நாம் இவ் விஷயத்தையோ கவி பாடப் பெரு மதிப்பாலே இழந்தது -என்ன சாஹாசிகனோ-என்று
கீழ்ச் செய்த செயலுக்கு அனுதபிக்கிறார் –

குறையாக வெம் சொற்கள் கூறினேன் கூறி
மறை யாங்கு என உரைத்த மாலை -இறையேனும்
ஈயுங்கொல் என்றே இருந்தேன்  எனைப் பகலும்
மாயன் கண் சென்ற வரம் -83-

பதவுரை

மறை–வேதங்களும்
ஆங்கு என உரைத்த மாலை–ப்ரத்யக்ஷித்துச் சொல்ல மாட்டாமல் பரோக்ஷமாகவே சொன்ன எம்பெருமான (அல்பஜ்ஞனான நான்)

ந இதி ந இதி என்றே வேதம் சொல்லும் அஸ்தி என்பதே அஸ்தமிக்காமல் -இது இல்லை இது இல்லை என்றே வேதம் சொல்லும்
மாயன் கண் சென்ற வரம்–அப்பெருமானிடத்தில் தங்கியிருக்கின்ற அநுக்ரஹமானது.
இறையேனும்–ஸ்வல்பமான பலனையாகிலும்
குறை ஆக–குறையுண்டாம்படி
வெம் சொற்கள்–செவிசுடும்படியான சொற்களால்
கூறினேன்–பேசினேன்
கூறி–அப்படி பேசினது மல்லாமல்
ஈயும் கொல் என்றே–(நமக்குக்) கொடுக்குமோ என்று (பலனையும் எதிர்பார்த்துக் கொண்டு)
எனைப் பகலும்–வெகுகாலமாக
இருந்தேன்–இருக்கின்றேன்.

அவன் படிகளை உள்ளபடி தறை கண்டு பேச ஒருப்பட்ட வேதங்களானவை -அது என்று சொல்லும் அத்தனை போக்கி
(யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ )இதம் இத்தம் என்று பரிச்சேதித்துச் சொல்ல மாட்டாத பெருமையை யுடைய சர்வேஸ்வரனை

அபரி பூர்ணானமாம் படியாக ப்ரேமம் வழிந்த -செவிக்கு இனிய செஞ்சொல் அன்றிக்கே –
கேட்டார் செவி வெடிக்கும் படி இருக்கிற வெட்டிய சொற்களால் சொன்னேன் –
இப்படிச் சொல்லி விஷய வைபவத்தைப் பார்த்ததும் அனுதபிக்க வேண்டி இருக்க –

அது செய்யாத அளவன்றிக்கே-
ஆச்சர்யமான குண சேஷ்டிதங்களை யுடையனானவன் இடத்தில் நின்றும் உண்டாய் வரக் கடவதான பிரசாதமானது
பண்டு கவி பாடினவர்களுக்கு அவன் கொடுத்துப் போரும் படியை நினைத்து –
நான் பாடின கவிக்கு பரிசிலாக ஏதேனும் சிறிதாகிலும் தாராதோ -என்று
அநேக நாள் எல்லாம் பிரதியுபகாரமாக நிரீக்ஷித்துக் கொண்டே இருந்தேன் –

1-விஷய கௌரவத்தையும்-2- சொல்லின் பொல்லாங்கையும் -3-பச்சையை நச்ச இருந்த படியையும் நினைத்து
என்ன மூர்க்கனோ -என்று அனுதாபிக்கிறார் –

பின்னை இவர் ஒரு பிரயோஜனத்துக்குக் கவி பாடினவரோ -என்னில் –
இக் கவி பாட்டுக்காக அவன் ஒரு கால் ஏறிட்டுக் கடாஷிக்குமாகில் –
அதுவும் ஸ்வரூபத்துக்குச் சேர்ந்த பெரிய பேறு என்று இருப்பார் ஒருத்தர் இறே -அத்தாலே குறை இல்லை –

சென்ற வரம் –
அவன் பக்கல் சென்று பிறக்கக் கடவ வார்த்தை (அருள் கீழ் இங்கு சிறப்பான சொல் மா ஸூச வார்த்தை )- அவன் இறை யேனும் ஈயும் கொல்-என்று இருந்தேன் -என்றுமாம் –
மறை யாங்கு என உரைத்த மாலை—வாக் விக்ருதாஸ ச வேதா -என்கிறபடியே
சொல்லுகிற வார்த்தை எல்லாம் மறை என்னும் படி சொல்லுமவன் என்னவுமாம்

இத்தால்
அகச் செறிவில் பொல்லாங்கு அறியான் ஒருவனைச் சொல்லப் பெற்றதோ –
சர்வஜ்ஞனை இறே நான் மருட்டிச் சொல்லிற்று என்கை –

(பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர்–திருவாய் -1-5-11-
இன் கவி பாடும் பரம கவிகள் –7-9-6-
அங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து அன்பு கூரும் அடியவர் -பெரிய திருமொழி -2-10-4-
யதோ வாஸோ நிவர்த்தந்தே -தத் விஷ்ணோ பரமம் பதம் -யஸ்யா மதம் தஸ்ய மதம் –
வாக் விவ்ருதாஸ் ச வேதா –
பாடவும் செய்து-இளைய என் புன் கவிதைக்கு – பிரதியுதவியையும் எதிர்பார்த்து – பரிசும் வேண்டி இருந்தேனே -மூர்க்கனேன் மூர்க்கனேனே –
ப்ரயோஜனாந்தரங்களை எதிர்பார்த்தார் அல்ல -அனுதபிக்கவும் குறையில்லை –
மாயோன் கண் சென்ற வரம் -மாயோனான அவன் இடத்திலே பொருந்தி இருக்கும் சிறந்த அருள் என்றும்
வரம் -வார்த்தை என்றும் -சிறந்த வார்த்தைச் சிறிதேனும் நமக்கு அருள்வானோ என்று எதிர்பார்த்து இருக்கிறேன் என்றுமாம் -)

——————————————————————————–

விஷய வைபவம் சொல்லில் -பொல்லாங்கு முதலானவை எல்லாம் கிடக்கிடீர் -விஷயத்தினுடைய
ரஸ்யத்தையைப் பார்த்தால் சொல்லி அல்லது நிற்கப் போமோ -என்கிறார் –

வரம் கருதி தன்னை வணங்காத வன்மை
உரம் கருது மூர்க்கத்தவனை -நரம் கலந்த
சிங்கமாய்க் கீண்ட திருவன் அடி இணையே
அங்கண் மா ஞாலத்து அமுது–84-

பதவுரை

வரம் கருதி–(தேவர்களிடத்துப் பெற்ற) வரத்தை மதித்து
தன்னை வணங்காத–(ஸர்வேஸ்வரனான) தன்னை வணங்காதிருந்தவனும்
வன்மை உரம் கருதி–(தன்னுடைய) மன வலிமையையும் நினைத்து
மூர்க்க தவனை–மூர்க்கத்தனம் கொண்டிருந்தவனுமான இரணியனை

மூர்க்கத்தவனை-மூகத்தவனை -அஹங்காரம் -பிடிவாதம் கொண்டவனை
நரம் கலந்த சிங்கம் ஆய் கீண்ட–நரசிங்க வுருக் கொண்டு பிளந்தொழிந்த
திருவன்–அழகனுடைய
அடி இணையே-உபய பாதமே
அம் கண் மா ஞாலத்து–அழகிய இடமுடைத் தான இம் மா நிலத்தில்
அமுது–(போக்யமான) அம்ருதமாகும்.

தேவர்கள் பக்கல் பெற்ற வரத்தைத் தனக்கு உறுதியாக நினைத்து –
அந்த தேவர்களுக்கும் அடியான பெருமையுடையனான தன்னை
ந நமேயம் என்னும் படி வணங்காதே போந்தவனாய் –
அந்த தேவர்கள் வரத்தால் வந்த மிடுக்கையும் -தன் தோளாலே எறிந்து கொண்ட
மிடுக்கையும் தனக்கு உபகரணமாக உண்டு என்று கருதி –
அத்தால் வந்த மேனாணிப்பை யுடையனான ஹிரண்யனை –

சேராச் சேர்த்தியான நரத்வ ஸிமஹத்வங்களோடே கூடின வடிவை யுடையனாய்க் கொண்டு கிழித்துப் பொகட்டவனாய் –
பரஸ்பர விருத்தமான இரண்டு வடிவை எடுத்துக் கொண்ட அளவில் பொல்லாதாய் இருக்கை அன்றிக்கே –
சேர் பாலும் கண்ட சக்கரையும் கலந்தால் போலே அத்யந்த ரசாவஹமான அழகை யுடையவனுடைய
சேர்த்தி அழகை உடைத்தான திருவடிகளே -அழகிய இடமுடைத்தான மஹா பிருத்வியிலே
அநந்ய பிரயோஜனர்க்கு புஜிக்கலாம் படி நிரதிசய போக்யமான அம்ருதம் –

மூர்க்கத்தவனை என்ற பாடமான போது –
மூர்க்கனான ஹிரண்யனை -என்றபடி –

(த்விதா பஜ்யேயம் அப் யேவம் ந நமேயம் து கஸ்ய சித் -யுத்த -36-11-
ம்ருகோ ந பீம -ருக் -1-21-154-
நார ஸிம்ஹ வபுஸ் ஸ்ரீ மான்
அழகியான் தானே அரி யுருவன் தானே -நான்முகன் -22-
குறையாக வெஞ்சொற்கள் சொன்னேனே என்று கை வங்காத் தொடங்கின என்னை கவி பாட வைத்ததே இந்த ஆரா அமுதனுடைய அழகே என்கிறார் – )

——————————————————————————————-

அவனுடைய ரஸ்யத்தையை அனுசந்தித்தவாறே -அமுதன்ன சொன் மாலை ஏத்தித் தொழுதேன் -என்கிறார் –

அமுதென்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்
அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் -அமுதன்ன
சொன் மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட
நன் மாலை ஏத்தி நவின்று –85-

பதவுரை

அமுது என்றும்–அமிருதம் போன்றவனென்றும்
தேன் என்றும்–தேன் போன்றவனென்றும்
ஆழியான் என்றும்–திரு வாழியை யுடையவனென்றும்
அன்று அமுது கொண்டு உகந்தான் என்றும்–முற்காலத்தில் (கடல் கடைந்து) அமுதமெடுத்தளித்து மகிழ்ந்தவனென்றும்-அமுதினில் வரும் பெண்ணமுது கொண்டான் என்றுமாம்
சொல்லப் பட்ட–சொல்லப் பட்டிருக்கின்ற
நல் மாலை–விலக்ஷணனான எம்பெருமானை
அமுது அன்ன சொல் மாலை–அம்ருதம் போன்ற இப் பாசுரங்களினால்
ஏத்தி  நவின்று தொழுதேன்–பலகாலும் துதித்துச் சொல்லி வணங்கினேன்.

ஏத்தி நவின்று என்பதை அமுது தேன் ஆழியான் -அமுது கொண்டு உகந்தான் என்றும் ஒவ்வொன்றிலும் சேர்த்துக் கொள்ள வேண்டும்

நித்ய போக்யமான அம்ருதம் என்றும் –
சர்வ ரஸ சமவாயமான தேன் என்றும் –
நிரதிசய போக்யமான திரு வாழியை யுடையவன் என்றும் –
அஸூர பய வீதராய் தேவர்கள் சரணம் புக்க வன்று -கடலில் சாரமான அம்ருதத்தை
அந்தக் கடலைக் கடைந்து வாங்கிக் கொண்டு கொடுத்து
இதுக்காக வாகிலும் நம்மை வந்து அர்த்திக்கப் பெற்றோமே என்றும் ப்ரீதனானான் என்றும் –
ரஸோ வை ச -என்றும் -சர்வ ரஸ -என்றும்
மத்வ உத்ஸ -என்றும் -த்ருத சங்க சக்ர -என்றும் -சொல்லும் ஸ்ருதி சாஸ்த்ரங்களாலே சொல்லப் பட்ட விலஷணனான சர்வேஸ்வரனை

ஆதாரதிசயம் தோற்றப் புகழ்ந்து சொல்லி -எல்லா போக்யத்தையும் -தன் போக்யத்தையிலே பொதிந்து இருக்கையாலே
அமுது என்று சொல்லப்படுகிற அவனையும் பொதிந்து கொண்டு இருக்கையாலே அம்ருதம் போலே நிரதிசய போக்யமாய்
இருந்துள்ள சப்த சந்தர்ப்பங்களாலே புகழ்ந்து திருவடிகளிலே நிர் மமனாய் விழுந்தேன் –

(அமுது அவனைச் சொல்லி –
அமுது கொண்டு உகந்தான் என்று அவளை சொல்லி
அமுது அன்ன சொன்மாலை மிதுனம் பற்றிய இவர் பிரபந்தம் –
இப்படி மூன்று அமுதன்கள் இதில் உண்டே)

(ஸர்வ ரஸ
ப்ரயோஜனாந்தர பரர்களும் தம்மை இதற்க்காகவாவது ஆஸ்ரயிக்கிறார்களே என்று உகக்குமவன் அன்றோ
உதாரா ஸர்வ ஏவைதே -ஸ்ரீ கீதை -7-18-
விண்ணவர் அமுதுண அமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே -பெரிய திருமொழி -6-1-2-
குறையாக வெஞ்சொற்கள் கூறினேன் -என்றவாறே
இப்பொழுது-ரஸோ வை ஸ-என்றும் ஸர்வ ரஸ என்றும் -சொல்லப்படும் அவ்விஷயத்தின் இனிமையை அனுசந்தித்த உடன்
அமுதன்ன சொன் மாலை என்கிறார்
விஷ்ணோ பதே பரமே மத்வ உத்ஸ-ருக் -1-21-124-
த்ருத சங்கு சக்ர
சங்க சக்ர கதா தர
யஸ்மின் அக்ருத்ரிம கிராம் கதிரேக ஏக கண்டா -பிரமம் பிரமாதம் விப்ரலிப்ஸை போன்ற தோஷங்கள் அற்ற ப்ரமாணங்களால்
ஸாஸ்த்ரங்களால் ஒரு மிடறாகக் கோஷிக்கப் படும் திருமால் அன்றோ – )

——————————————————————————————

அவன் தானே காட்டக் கண்ட என்னோடு ஒப்பர்களோ –
சாதன அனுஷ்டானம் -பண்ணிக் கண்டவர்கள் -என்கிறார் –

நவின்றுரைத்த நாவலர்கள் நாண் மலர் கொண்டு ஆங்கே
பயின்றதனால் பெற்ற பயன் என் கொல் -பயின்றார் தம்
மெய்த் தவத்தால் காண்பரிய மேக மணி வண்ணனை யான்
எத் தவத்தால் காண்பன் கொல் இன்று –86-

பதவுரை

நவின்று உரைத்த–சாதன புத்தியால் (அவனது திரு நாமங்களைப்) பலகாலுஞ் சொல்லுகின்ற
நாவலர்கள்–கவிகள்-சொல் ஏறு உழவர்கள்
நாள் மலர் கொண்டு–அப்போதலர்ந்த புஷ்பங்களைக் கொண்டு
ஆங்கே பயின்று–அந்த ஸர்வேஸ்வரனிடத்தில் நெருங்கி யாஸ்ரயித்து
அதனால் பெற்ற பயன் என் கொல்–அதனால் (அவர்கள்) பெற்ற பிரயோஜநம் என்னோ
(எம்பெருமான் தானே நிர்ஹேதுகமாக அநுக்ரஹித்தாலன்றி, இவர்களுடைய ஸ்வ ப்ரயத்நத்தால் என்ன பேறு பெற முடியும் என்கை.)
பயின்றார் தம்–நெருங்கி ஸாதநாநுஷ்டாநம் பண்ணுமவர்களுடைய
மெய் தவத்தால்–சரீரம் நொந்து செய்கிற தபஸ்ஸினால்
காண்பு அரிய–காண முடியாதவனும்
மேகம் மணி வண்ணனை–மேகத்தையும் நீல மணியையும் போன்ற நிறத்தை யுடையனுமான எம்பெருமானை
யான்–அடியேன்
இன்று–இப்போது
எத் தவத்தால் கொல் காண்பன்–எந்தத் தபஸ்ஸினால் காணப் பெற்றேன்?
(அவனே காட்டிக் கொடுக்கக் கண்டேனே யொழிய, ஒரு தவஞ்செய்து கண்டவனல்லேனென்கை

அவனே தவம் செய்து என்னை அடைய இருக்க நான் செய்ய வேண்டுமோ )

அவன் திரு நாமங்களை ஆதாரம் தோற்றப் பல காலும் சொல்லிக் கொண்டு –
சப்தார்த்த சம்பந்தம் அறிந்து கவி பாட வல்ல பிரயோஜனாந்தர பரரான கவிகள் –
செவ்விப் பூக்களை சம்பாதித்திக் கொண்டு அந்த சர்வேஸ்வரன் இடத்தில் நெருங்கி ஆஸ்ரயிக்க
அத்தால் பெற்ற பிரயோஜனம் ஏதோ –

இப்படி நெருங்கி சாதன அனுஷ்டானம் பண்ணினாருடைய சரீரத்தை ஒறுத்துப் பண்ணின
தபஸ்ஸாலே காண அரியனாய் -மேகம் போலேயும் -நீல மணி போலேயும்
ஸ்ரமஹரமான வடிவை யுடையனுமான சர்வேஸ்வரனை
அதி ஸூத்ரனான நான் இன்று எந்தத் தபஸ்ஸாலே கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –
அவன் காட்டக் கண்டேன் இத்தனை இறே என்று கருத்து –

தே நைவ பல ப்ராப்ய பலம் அபி தேநைவ நாராயண -ப்ராப்யமும் பிராப்பகமும் அவனே -மாதா பிதா சரணம் ஸூஹ்ருத கதி நாராயணனே

(நா வலர் -நா வன்மை யுடையவர் என்றும்
நா வாகிற அலத்தை -ஹலத்தை -யுடைய சொல் ஏறு உழவர்
மெய்த்தவம் -மெய் சரீரம் -சரீரத்தை வருத்திச் செய்யும் சாதன அனுஷ்டானம் –
யான் இன்று ஏத்தவத்தால் காண்பன் கொல்-தானே தன்னைக் காட்டி அருளினான் என்கிறார்
யாவர் நிகர் அகல் வானத்தே -4-5-8-
வானைக்கோனை கவி சொல்ல வல்லேற்க்கு இனி மாறுண்டே -4-5-9-என்பது போலே
அவனைக் கொண்டே அவனைக் கண்ட தனது ஒப்பற்ற பெருமையை உணர்த்துகிறார் இதில் -)

—————————————————————————————

உம்முடைய பேற்றுக்கு ஏற்றம் என் என்னில் –
நான் கர்ப்ப ஸ்தானான காலமே தொடங்கி அடிமைச் சுவட்டோடு கூட
அவன் படிகளை அனுபவிக்கப் பெற்றவன் அன்றோ என்கிறார் –

இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அளந்த திருவடியை -அன்று
கருக் கோட்டியுள் கிடந்தது கை தொழுதேன் கண்டேன்
திருக் கோட்டி எந்தை திறம் -87-

பதவுரை

அன்று கரு கோட்டியுன் கிடந்து–முன்பு கர்ப்ப ஸ்தானத்துக்குள்ளே கிடந்து-பூவும் பிரகிருதி பதார்த்தம் தானே
திருக் கோட்டி எந்தை திறம்–திருக் கோட்டியூர்ப் பெருமானுடைய தன்மைகளை-ஸ்வரூப ரூப குண விபவங்களை
கண்டேன்–கண்டு அநுபவிக்கப் பெற்றேன்
கை தொழுதேன்–அனுபவத்துக்குப் போக்கு வீடாக  கை தொழவும் பெற்றேன், (ஆன பின்பு)
இரு நிலத்தை–விசாலமான இந் நிலத்தை
ஆங்கு சென்று அளந்த திரு அடியை–அங்கங்கே தானே வியாபித்து முழுதும் அளந்து கொண்ட திருவடியை
இன்றா அறிகின்றேன் அல்லேன்–இன்றைக்குத் தான் அறிந்து கொண்டே னென்பதில்லை. (கர்ப்ப வாஸமே தொடங்கி அறிவேன்)

கீழ் பாசுரத்தில் அவனே காட்டக் கண்டதுக்கு இதுவே திருஷ்டாந்தம்

ஒரு சாதனத்தை அறிந்து அனுஷ்டிக்கைக்கு யோக்கியதையும் கூட இல்லாத அன்று கர்ப்ப ஸ்தானத்துக்கு உள்ளே கிடந்து
நீர்மைக்கு எல்லை நிலமான திருக் கோட்டியூரிலே சந்நிஹிதனாய் –
கர்ப்ப ஸ்தானான என்னுடைய தய நீய தசையைக் கண்டு
நிர் ஹேதுகமாக விஷயீ கரித்த என் ஸ்வாமி யுடைய குண சேஷ்டிதாதிகள் ஆகிற பிரகாரத்தைக் கண்டு அனுபவிக்கப் பெற்றேன்

அனுபவத்துக்கு போக்கு வீடாகக் கை தொழுகை முதலான அடிமைத் தொழிலும் அந்வயிக்கப் பெற்றேன்
ஆன பின்பு பரப்பை யுடைத்தான பூமியை ஒருவர் இரக்க அன்றிக்கே -அங்கே தானே சென்று
அளந்து கொண்ட திருவடியை இன்றாக அறிகிறேன் அல்லேன்-

ஸுலப்ய காஷ்டை -உலகளந்த காலத்துக்குப் பின்னானாரும் வணங்கும் ஜோதி அன்றோ

கை தொழுவதற்காகப் பெற்ற பலன் இல்லையே -அதுவும் இவனே செய்வித்தான் அன்றோ

(கண்டாயே நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்று ஓர்
எண் தானும் இன்றியே வந்து இயலுமாறு
உண்டானை உலகேழும் ஓர் மூவடி
கொண்டானைக் கண்டு கொண்டானை நீயுமே –திருவாய் -1-10-5-
அறியாக் காலத்துள்ளே -2-3-8-
ஸூ குமார தநுர் கர்ப்பே -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-10-
இவர் அயோனிஜர் என்று ப்ரஸித்தம் இறே -குருக்கத்தி மலரே இவருக்கு கர்ப்ப ஸ்தானம் –
அயோநிஜரான முதல் ஆழ்வாரும்
அன்று கருவரங்கத்துள் கிடந்து கை தொழுதேன் கண்டேன் திருவரங்க மேயான் திசை -6- பாசுரத்தை அடி ஒற்றியே இப்பாசுரமும் –
ஜாயமானம் ஹி புருஷம் யம் பஸ்யேன் மது ஸூதன
ஸாத்விகஸ் ஸ து விஜ்ஜேய ச வை மோஷார்த்த சிந்தக -சாந்தி பர்வம் -358-73-
பரமபத நாதனோ என்னைக் கடாக்ஷித்தது
நீர்மைக்கு எல்லை நீளமான திருக்கோட்டியூரான் அன்றோ எனக்கு ஜாயமான கடாக்ஷத்தை அருளினான்
அதனாலேயே இன்று அளவும் அவனை மறவாமல் இருக்கும் படியும் அருளினான் -)

——————————————————————————————–

அவன் தானே விஷயீகரித்தார்க்கு அவனைக் கிடைக்கும் அத்தனை —
வேறு சிலர்க்கு கிடையாது -என்கிறார் -(ஞானீ ஆத்மைவ மே மதம் பிரிய தமனை அவனே வரிப்பானே )

திறம்பிற்று இனி அறிந்தேன் தென்னரங்கத்து எந்தை
திறம்பா வழி சென்றார்க்கு அல்லால் -திறம்பாச்
செடி நரகை நீக்கித் தான் செல்வதன் முன் வானோர்
கடி நகர வாசற் கதவு–88-

பதவுரை

தென் அரங்கத்து எந்தை–தென்னரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கு மெம்பெருமானுடைய-ஸ்வாமி ஆகிற
திறம்பா வழி–அவ்யஹித உபாயமான -பிசகாத மார்க்கத்திலே (அவனே உபாயோபேயம் என்னும் நெறியிலே)
சென்றார்க்கு அல்லால்–நிற்பவர்களுக்குத் தவிர (மற்றை யோர்க்கு)
தாம்–தாமாகவே
திறம்பா செடி நரகை நீக்கி–அறுக்க முடியாத புதர் போன்ற ஸம்ஸார பந்தங்களை அறுத்துக் கொண்டு
செல்வதன் முன்–போவதற்குள்ளே
வானோர்–நித்ய ஸூரிகளுடையதும்
கடி–அரணை யுடையதானதுமான
நகரம்–வைகுந்தமா நகரத்தினுடைய
வாசல் கதவு–வாசற் கதவானது
திறம் பிற்று–மூடிக் கொண்டதாகும்
இனி அறிந்தேன்–(இதை) இப்போது அறிந்து கொண்டேன்

திருத் தேர்த் தட்டிலே அர்ஜுனன் ஒருவனுக்கும் -ஒரு கால் மாமேகம் -என்று சொன்ன தம்முடைய நிரபேஷ உபாயத்தை
சர்வ காலத்திலும் சர்வர்க்கும் கிரயம் செலுத்திக் கொண்டு
அழகிய கோயிலிலே அர்ச்சாவதார ஸூ லபனாய்க் கொண்டு பள்ளி கொண்டு அருளுகிற
என் ஸ்வாமி யான பெரிய பெருமாளுடைய

(கொண்டல் வண்ணன் கோவலனாய் -இத்யாதி அவனே இங்கு பின்னானார் வணங்கும் ஜோதி அன்றோ இவன்
ஸம்ஸாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரேன் என்று கிடக்குமவன் அன்றோ)

மற்று ஒன்றால் -சலிப்பிக்க ஒண்ணாத நிரபேஷ உபாய பாவம் ஆகிற மஹா மார்க்கத்தைப் பற்றி நடக்கும் அவர்களுக்கு ஒழிய
அனுபவத்தாலும் தொலைக்க ஒண்ணாத படியான அவிஸால்யமாய் -அடித் தலை கண்டு அறுக்க ஒண்ணாத படி
தூறு மண்டிக் கிடக்கிற சம்சாரம் ஆகிற நரகத்தைத் தாங்கள் சாதன அனுஷ்டானத்தாலே போக்கித் தாங்கள் சென்று
கிட்டுவதுக்கு முன்னே நித்ய ஸூரிகள் நித்ய அனுபவம் பண்ணி வாழுகிற ஸ்தலமாய்-ஸ்வ யத்னம் சாத்தியம் அல்லாத
அரணை யுடைத்தான கலங்காப் பெரு நகரின் வாசலில் கதவு தப்பிற்று -இப்போது இத்தை நிரூபித்து அறிந்தேன்

(நடந்தே தீரும் என்பதால் திறம்பிற்று இறந்த கால பத பிரயோகம்)

கடி என்று பரிமளமாய்-போக்யதை விஞ்சின நகரம் என்றுமாம் –
இத்தால்
பகவத் ப்ரீதி சாத்தியம் பரம பதம் -ஸ்வ யத்ன சாதனம் அன்று என்ற படி –

(மாம் ஏகம் என்ற கண்ணனைக் காட்டிலும் விஞ்சி நிற்கும் ஸுசீல்யன்
சரணம் நாராயணம்
நாராயணன் பாராயணம்
உபாய உபேயத்வே ததிஹ தவ தத்த்வம் நது குணவ் -ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -2-87-
அயோத்யா -அபராஜிதா -வானோர் நகர் -மரீசீநாம் பதம் -நித்ய ஸூரிகள் இட்ட வழக்காய் அன்றோ வைத்து அருளுகிறான்
அவனையே உபாயமாகக் கொண்டு அவனை அடைந்து அனுபவிக்கலாம் என்கிறார் ஆயிற்று – )

—————————————————————————————————-

நீர் இப்படி சொல்லுகைக்கு நம்மைப் பற்றினார்க்கு நாம் எங்கே உதவக் கண்டீர் என்ன -விரோதியைப் போக்கியும்
விரகாலே ஆஸ்ரிதர் கார்யம் செய்யும் படியும் சொல்லி இதுவன்றோ உன் படி -என்கிறார் –

கதவிக் கதஞ்சிறந்த கஞ்சனை முன் காய்ந்து
அதவிப் போர் யானை ஒசித்துப -பதவியாய்
பாணியால் நீரேற்றுப் பண்டு ஒரு நாள் மாவலியை
மாணியாய் கொண்டிலையே மண்–89-கதஞ்சிறந்து -பாட பேதம்

பதவுரை

முன்–முற் காலத்தில்
கதம் சிறந்த–கோபம் மிகுந்த
கஞ்சனை–கம்ஸனை
கதவி காய்ந்து–கோபித்து முடித்து
போர் யானை–போர் செய்வதாக எதிர்த்து வந்த குவலயாபீடமென்னும் யானையை
ஒசித்து–கொம்பு முறித்து
அதவி–கொன்று,
பண்டு ஒரு கால்–முன்னொரு காலத்தில்
பதவியாய்–நீர்மையை யுடையனாயக்கொண்டு-பதவி -நீர்மை என்றும் -வழி என்றும்
மாணி ஆய்–பிரமசாரியாகி
மாவலியை–மஹாபலியினிடத்திலே
பாணியால்–கையினாலே
நீர் ஏற்று–தானம் வாங்கி
மண் கொண்டிலையே–பூமியைப் பெற்றாயல்லையோ?

மிக்க சீற்றத்தை யுடையனான கம்சனைச் சீறி அவன் ஸந்நிதியில் தன் கொலை தானே காணும்படி முடித்து
தப்பிப் பிழைக்க இடம் அறும் படி அடர்த்து யுத்த உன்முகமான குவலயா பீடத்தை அநாயாசேன முறித்து விழ விட்டு

இப்படி மிடுக்குக் கொண்டு வியாபாரிக்க ஒண்ணாத படி உதாரம் என்பதொரு குண லேசம் (குண லேசம் என்றது இது இவன் சொத்து அல்லவே )கிடக்கையாலே நீர்மையை
யுடைமையாய்க் கொண்டு கொடுத்து வளர்ந்த கையாலே உதக ஜலத்தை ஏற்று வாங்கி முன்பு ஒரு காலத்தில் கொடுக்கையில்
தீஷித்து இருந்த மஹா பலியை இரப்பிலே தகண் ஏறின ப்ரஹ்மச்சாரியாய்க் கொண்டு பூமியை அவன் பக்கலில்
நின்றும் வாங்கிக் கொண்டிலையோ –

உன்னை ஆஸ்ரயித்த வாஸூதேவர் -தேவகியார் -இந்திரன் இவர்களுக்கு விரோதியைப் போக்கிக்
கார்யம் செய்து கொடுத்திலையோ -என்றபாடு –

கதவுகை -சீறுகை
அதவுகை – நெருக்குகை –

கதவிக் கதஞ்சிறந்து -என்ற பாடமான போது –
கோபத்தால் சிறந்து அழகியனாய் -என்ற பொருளாகக் கடவது

பதவி என்றது –
பதவி என்று வழியாய்
கம்சனைக் கொன்றால் போலே மூலை அடியே யன்றிக்கே வழி கொடு வழி என்னவுமாம் –

(சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு
ஆதி யஞ்சோதி யுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த வேத முதல்வன் -3-5-5-
ஈஸ்வரன் அவதரித்துப் பண்ணின ஆனைத் தொழில்கள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமை
ஆறா மதயானை அடர்த்தவன் தன்னை -9-4-11-
குல நல் யானை மருப்பு ஓசித்தாய் –4-3-1-
பாணியால் நீர் ஏற்று
அலம் புரிந்த நெடும் தடக்கை -அலம் அலம் போதும் போதும் என்னும்படி கொடுத்து நீண்ட திருக்கையால் நீர் ஏற்று
கிருஷ்ணா ஜினேந ஸம் வ்ருண்வன் வதூம் வக்ஷஸ் ஸ்தலா லயாம்
ஆஸ்ரிதர்களுடைய தடைகளைப் போக்கி நீ செய்து அருளிய கார்யங்கள் லோக ப்ரஸித்தம் அன்றோ
உன்னாலும் மறைக்கப் போகாதே என்கிறார் – )

———————————————————————————————–

நாம் ஆஸ்ரிதற்குச் செய்த கார்யங்களை வகையிட்டுச் சொல்லுகிறது என் -உமக்குப்பெற வேண்டுவது
சொல்லீர் என்ன -உன்னை ஆஸ்ரயித்த போதே எல்லாப் புருஷார்த்தங்களும் பெற்றேன் அன்றோ -என்கிறார்

மண்ணுலகம் ஆளேனே வானவர்க்கும் வானவனாய்
விண்ணுலகம் தன்னகத்து மேவேனே -நண்ணித்
திருமாலை செங்கண் நெடியானை எங்கள்
பெருமானைக் கை தொழுத பின்-90-

பதவுரை

திருமாலை–பிராட்டியின் இடத்தில் வியாமோஹமுடவனும்
செம் கண்–செந்தாமரை போன்ற திருக்கண்களை யுடையவனும்
நெடியானை–ஸர்வேஸ்வரனுமான
எங்கள் பெருமானை–எம்பெருமானை
நண்ணி–கிட்டி
கை தொழுத பின்–அஞ்ஜலி பண்ணி ஆஸ்ரயித்த பின்பு
மண் உலகம் ஆளேளே–இவ்விபூதியை நானிட்ட வழக்காக நிர்வஹிக்க மாட்டேனோ?
வானவர்க்கும் வானவன் ஆய்–தேவாதி தேவனாய்க் கொண்டு
விண் உலகம் தன் அகத்து–நித்ய விபூதியிலே
மேவேனே–நித்யாநந்த மநுபவிக்க மாட்டேனோ?

(திருமால் -மிதுனம் இல்லாமல் இழக்கிறேனோ
செம் கண் வாத்சல்யாதிகள் இல்லாமல் இழக்கிறேனோ
நெடியானை -புருஷோத்தமத்வம் இல்லாமல் இழக்கிறேனோ
எங்கள் பெருமானை -ஸ்வாமி இழக்கிறேனோ
நண்ணி -கிட்டாமல் இழக்கிறேனோ
கை தொழுத பின்–அஞ்ஜலி பண்ணி ஆஸ்ரயிக்காமல் இழக்கிறேனோ

அவனைப் பெற்றால் பொன்னுலகம் ஆளீரோ புவனா எல்லாம் ஆளீரோ என்று கொடுக்க வல்லவன் ஆவேனே )

ஸ்ரீ யபதியாய் -வாத்சல்ய அம்ருத வர்ஷியான சிவந்த திருக் கண்களையும் யுடையனாய் –
ருணம் ப்ரவ்ருத்தம் -என்னும் படி
ஆஸ்ரித விஷயத்தில் -எல்லாம் செய்தாலும் ஒன்றும் செய்யப் பெற்றிலோம் என்று உருகி நெஞ்சு பதண் பதண் என்று
இருக்குமவனாய் எங்களுக்கு ஸ்வாமி யானவனைக் கிட்டி –

அஞ்சலி பந்தத்தைப் பண்ணி ஆஸ்ரயித்த பின்பு
பூமி யுப லஷிதையான லீலா விபூதியை நான் இட்ட வழக்காக நிர்வஹியேனோ –

நித்ய ஸூரிகளுக்கும் அவ்வருகான பெருமையை உடையனாய்க் கொண்டு பரம பதத்தில்
கால தத்வம் உள்ளதனையும் ஸூ கோத்தரனாய் பொருந்தி இரேனோ-

உன்னளவில் அல்ப அனுகூல்யம் பண்ணினால் மண்ணோடு விண்ணும் ஆளுகை பெரிய படியோ என்றபடி –

(தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ –தஸ்ய உதிதி நாம
கோவிந்த்தேதி யதா க்ரந்தத் க்ருஷ்ணா மாம் தூர நம்
ருணம் ப்ரவ்ருத்தமிவ மே ஹ்ருதயான் நாபஸர்ப்பதி

த்வதங்க்ரிம் உத்திஶ்ய கதா’பி கேநசித்
யதா ததா வா’பி ஸக்ருத்க்ருதோ’ஞ்ஜலி |
ததைவ முஷ்ணாத்யஶுபாந்யஶேஷத:
ஶுபாநி புஷ்ணாதி நஜாது ஹீயதே ||-ஸ்தோத்ர ரத்னம் -28-

காயிக சரணாகதியைக் குறிக்கும் ஒரு அஞ்சலியை யார் எச் சமயத்தில் எவ்வாறு செய்தாலும்,
அது எல்லாப் பாபங்களையும் அடியோடு உடனே போக்கி விடும்; மங்களங்களை வளர்க்கும்;
அந்த மங்களங்கள் அழியாமல் இருக்கும்.

அர்த்த தஸ் ச மயா ப்ராப்தா தேவ ராஜ்யா தயோ குணா
ஹத ஸத்ரும் விஜயினம் ராமம் பஸ்யாமி ஸூஸ் திதம் –யுத்த -116-24-

அடங்கெழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன்
அடங்கெழில் அஃதென்று அடங்குக உள்ளே -1-2-7-
அவனுடைய சம்பத்து என்னும் அனுசந்தானத்தால் லீலா விபூதியும் உத்தேஸ்யமாகுமே -)

—————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

இரண்டாம் திருவந்தாதி- பாசுரங்கள் -71-80- -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை-

November 16, 2016

சர்வேஸ்வரன் ஆஸ்ரித அர்த்தமாகத் திரு உலகு அளந்து அருளின தசையில் அனுசந்தித்து
நித்ய ஸூரிகள் அஸ்தானே பய சங்கை பண்ணிப் படும் பாடு சொல்லுகிறார் –

இடங்கை வலம்புரி நின்றார்ப்ப எரி கான்று
அடங்கார் ஒடுங்குவித்த தாழி-விடம்காலும்
தீவாய் அரவணை மேல் தோன்றல் திசை யளப்பான்
பூவாரடி நிமிர்த்த போது–71-

பதவுரை

விடம் காலும்–விஷத்தைக் கக்குகின்ற-காலுதல் உமிழ்தல்
தீ வாய்–பயங்கரமான வாயை யுடைய
அரவு–திருவனந்தாழ்வானாகிய
அணை மேல்–சயனத்தின் மீது (பள்ளி கொண்டிருக்கின்ற)
தோன்றல்–ஸர்வேஸ்வரன்
வலம் புரி–சங்கானது
இடங்கை–இடத் திருக் கையில்
நின்று–இருந்து கொண்டு
ஆர்ப்ப–முழங்க
ஆழி–திருவாழி யானது
திசை–எல்லாவிடங்களையும்
அளப்பான்–அளந்து கொள்வதற்காக
பூ ஆர் அடி–பூப்போன்ற திருவடியை
நிமிர்த்த போது–உயரத் தூக்கி யருளின காலத்து
எரி கான்று–நெருப்பை உமிழா நின்று கொண்டு
அடங்கார்–எதிரிகளாய் நின்ற நமுசி முதலானவர்களை
ஒடுங்குவித்து–வாய் மாளப் பண்ணிற்று

பரிவின் கனத்தாலே ப்ரிதி கூலர் மேலே விஷத்தை உமிழா நின்றுள்ள பயங்கரமான வாயை யுடைய திரு வனந்த ஆழ்வான்
மேலே சாய்ந்து அருளக் கடவ ஸுகுமார்யத்தில் பிரதானனானவன் –

காடுமோடையுமான திக்குகளோடு கூடின பூமியை அளக்கைக்காகப் புஷப ஹாஸ ஸூ குமாரமான திருவடிகளை
வளர்த்து அருளின காலத்தில்

இடது திருக் கையிலே ஸ்ரீ பாஞ்ச ஜன்யமானது அப்போதை போது பிறந்த
விஜயத்தை அனுசந்தித்த ஹர்ஷத்திலே பிரதி கூலர் மண்ணுண்ணவும்-
அனுகூலர் கொந்தளிக்கவும் ஒருபடிப் பட்டு நின்று முழங்க –

திரு வாழி யானது அங்கன் ஆர்த்துக் கொள்ள அவசரம் அற்று நெருப்பை உமிழா நின்று கொண்டு
சத்ருக்களான நமுசி பிரபிருதிகளை வாய் வாய் என்று முடங்கப் பண்ணிற்று –

(ஆழி எழ சங்கும் வில்லும் எழ திசை
வாழி எழ தண்டும் வாளும் எழ அண்டம்
மோளை எழ முடி பாதம் எழ அப்பன்
ஊழி எழ உலகம் கொண்டவாறே –7-4-1)

(இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி
இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த
அரவரச பெரும் சோதி அனந்தன் என்னும்
அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி
திரு அரங்க பெரு நகருள் தெண்ணீர் பொன்னி
திரைக் கையால் அடி வருட பள்ளி கொள்ளும்
கருமணியை கோமளத்தை கண்டு கொண்டு என்
கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாளே–ஸ்ரீ பெருமாள் திருமொழி -1-1-)

(பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கொலியும்–தலைப்பெய்வது எஞ்ஞான்று கொலோ -நாச்சியார் -9-9- என்ற ஒலியைக் கேட்டு
ஜிதம் பகவதா ஜகத் -என்று மகிழ்ந்து பறை சாற்றி
ஸ கோஷோ தார்த்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயாநி வ்யதாரயத் -1-19- என்றால் போல்
என் இது மாயம் என் அப்பன் அறிந்திலன் முன்னைய வண்ணமே கொண்டு அளவாய் -பெரியாழ்வார் -1-8-8-என்ற நமுசி பிரக்ருதிகள்
அழியும்படி நிலை நின்று பாஞ்சஜன்யம் முழங்கிற்றே
அங்கு ஆரவாரம் அது கேட்டு அழல் உமிழும் பூங்கார் அரவணை -அஸ்தான பயஸங்கை பண்ணும் திரு அனந்தாழ்வான்
வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து அதன் மேல் கள்ள நித்திரை கொள்கின்ற -பெரியாழ்வார் -5-1-7-என்கிறபடி
புஷ்ப்ப ஹாஸ -சஹஸ்ர நாமம் -922-ஸூ குமாரமான அவனுக்கு என் வருகிறதோ என்று நித்ய ஸூரிகள் படும் பாடு அன்றோ
தத் விஷ்ணோ பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய -விப்ராஸோ விபன்யவோ ஜாக்ருவாம்ச சமிந்ததே-ருக் அஷ்டகம் -1-2-7-
அடி நிமிர்த்த போது இடங்கை வலம் புரி நின்று ஆர்ப்ப
ஆழி எரி கான்று அடங்கார் ஒடுங்குவித்தது -என்று அந்வயம் -)

————————————————————————————

அளவுடையரான நித்ய ஸூரிகளும் இப்படி படுகிற விஷயத்தை -நமக்குச் சென்று ஆஸ்ரயிக்கப் போமோ -என்று
பிற்காலிக்கிற திரு உள்ளத்தைக் குறித்து –
திர்யக்குகளும் ஆஸ்ரயிக்கலாம் படி ஸூலபனான பின்பு நீயும் அதிலே ஒருப்படு -என்கிறார் –

(அறிந்து-மாநஸம் –புக்கு-காயிகம் -ஏத்தும்-வாசிகம்
வாயினால் பாடி -மனத்தினால் சிந்தித்து -பூக்களை சமர்ப்பித்து ஆஸ்ரயிக்கும்)

போதறிந்து வானரங்கள் பூஞ்சுனை புக்கு ஆங்கு அலர்ந்த
போதரிந்து கொண்டேத்தும் போது உள்ளம் -போது
மணி வேங்கடவன் மலரடிக்கே செல்ல
அணி வேங்கடவன் பேராய்ந்து-72-

பதவுரை

வானரங்கள்–குரங்குகளானவை
போது அறிந்து–விடியற்கால முணர்ந்து (எழுந்து போய்)
பூ சுனை புக்கு–புஷ்பித்த நீர் நிலைகளிலே புகுந்து (நீராடி)
ஏத்தும்–தோத்திரஞ் செய்யா நின்றன
உள்ளம்–மனமே!
போது–(நீயும் அப்படி செய்ய) வா
அணி வேங்கடவன்–உலகுக்கு ஆபரணம் போன்ற  அழகிய திருமலையிலுள்ள பெருமானுடைய
பேர்–திருநாமங்களை
ஆங்கு அலர்ந்த–அப்போதே மலர்ந்த-அவ்விடத்தே என்றுமாம்
போது–புஷ்பங்களை
அரிந்து கொண்டு–பறித்துக் கொண்டு வந்து ஸமர்ப்பித்து
ஆய்ந்து–அநுஸந்தித்துக் கொண்டு
வேங்கடன் மலர் அடிக்கே செல்ல–அத்திருவேங்கட முடையானுடைய திருவடி தாமரைகட்கே சென்று சேரும்படியாக
போதும்–புஷ்பங்களையும்
அணி–ஸமர்ப்பிக்கக் கடவர்

குரங்குகளானவை -ரிஷிகள் ப்ரஹ்ம முஹூர்த்தத்திலே உணருமா போலே காலம் அறிந்து உணர்ந்து போய்ப்
பரப்பு மாறாப் பூத்த சுனைகளிலே -ரிஷிகள் அகமர்ஷணம் பண்ணுமா போலே சென்று புக்கு

(தலை முழுகி ஸ்நானம் கால் தரையில் இருக்க வேண்டும்)

அவ்விடத்தில் கழிய அலருதல் கடு மொட்டாதல் அன்றிக்கே –
அப்போது அலர்ந்த செவ்விப் பூக்களைப் பறித்துக் கொண்டு ஜாதி உசிதமாக ஏதேனும் ஒன்றைச் சொல்லி
ஸ்துதிக்குக் கொண்டு ஆஸ்ரயியா நிற்கும் –

மனஸ்ஸே நீயும் பிற்காலியாதே போது -போந்த அநந்தரம்
திரு வேங்கடமுடையானுடைய சீலாதி குணங்களுக்கு வாசகமான-திரு நாமங்களை அனுசந்தித்துக் கொண்டு –
நீல ரத்னம் போலே ஸ்ரமஹரமான வடிவை யுடையனான திரு வேங்கடமுடையானுடைய பூப் போலே
அது ஸூ குமாரமான திருவடிகளுக்கே சென்று கிட்டும் படி
செவ்விப் பூக்களை அழகு பெறச் சாத்தி ஆஸ்ரயிக்கப் பார்–(மணி வேங்கடம் மோனைக்குச் சேரும் )

அன்றிக்கே
சம்சாரத்துக்கு ஆபரணமான திருவேங்கடமுடையான் என்றாய் -(அணி வேங்கடம்)
வேங்கடவன் மலர் அடிக்கே செல்லப் போதும் அணி என்றுமாம் -(போதும் அணி புஷ்ப்பம் சமர்ப்பிப்பாய் )

(ப்ராஹ்மே முஹூர்த்தே சோத்தாய சிந்தயே தாத்மநோ ஹிதம்
ஹரிர் ஹரிர் ஹரிர் இதி வ்யாஹரேத் வைஷ்ணவா புமான்
வெள்ளத்தரவில் துயில் அமர்ந்த வித்தினை
உள்ளத்துக்கு கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேர் அரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்து –
திவ்ய தேச ப்ரபாவத்தாலே இங்கு திர்யக்குகளும் காலத்தை அறிந்து பகவத் கைங்கர்யம் செய்கின்றன –

வைப்பன் மணி விளக்காம் மா மதியை மாலுக்கு என்று
எப்பொழுதும் கை நீட்டும் யானையை -எப்பாடும்
வேடு வளைக்கக் குறவர் வில் எடுக்கும் வேங்கடமே
நாடு வளைத்தாடுது மேல் நன்று –நான்முகன் -46-

அறிந்து என்று இவற்றின் மநோ வ்ருத்தியைச் சொல்லி மேலே காயிக வாசிக கைங்கர்யங்களைச் சொல்லுகிறார் –
ஏத்தும் பக்திக்குப் போக்கு வீடாக தனது ஜாதிக்கு உரிய ஏதேனும் ஒரு சப்தத்தை எழுப்பி ஸ்துதிக்கும்
மந்தி பாய் வட வேங்கடமா மலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான் -என்றபடி
நித்யர்களின் ஸாம கானத்தையும்
குரங்குகளின் கூக்குரலையும்
அவற்றில் உள்ள அன்பு அபிநிவேசம் ஒன்றையே பார்த்து வாசியற ஏற்றுக் கொள்பவன் அன்றோ –
மணி வேங்கடவன் என்றுமாம் -நீல மணி போல் கண்டார் களைப்பை ஆற்றும் திருவேங்கட முடையான் அன்றோ -_

————————————————————————————————

சர்வ ஸமாஸ்ரயணீயன் (தேவர்கள் அரசர்கள் திர்யக்குகள் மூன்று பாசுரங்களில் )ஆனவன் நிலையை அனுசந்தித்து அவன் திருவடிகளிலே தாம்
நித்ய கைங்கர்யம் பண்ணுவதாக அத்யவசித்த படியை அருளிச் செய்கிறார் –

(துணிந்த யான்-ஒழி வில் காலம் -வழுவிலா அடிமை செய்யப் பிரார்த்தனை இதில்)

(துணிந்த-மாநஸம் –தூவி-காயிகம் -உரைப்பன்-வாசிகம்)

ஆய்ந்து உரைப்பன் ஆயிரம் பேர் ஆதி நடு அந்திவாய்
வாய்ந்த மலர் தூவி வைகலும் -ஏய்ந்த
பிறை கோட்டுச் செங்கண் கரி விடுத்த பெம்மான்
இறைக்கு ஆட்பட துணிந்த யான் –73-

பதவுரை

பிறை ஏய்ந்த கோடு–சந்திரகலை போன்ற தந்தத்தையும்
செம் கண்–சிவந்த கண்களையுமுடைய
கரி–கஜேந்திராழ்வானை
விடுத்த–முதலை வாயில் நினறு விடுவித்தருளின-குவலயா பீடத்தை முடித்த என்றுமாம்
பெம்மான்–ஸர்வேஸ்வரனான
இறைக்கு–ஸ்ரீமந் நாராயணனுக்கு
ஆள்பட–அடிமை செய்ய
துணிந்த யான்–உறுதிகொண்ட யான்
ஆதி நடு அந்திவாய் கைகலும்–காலை பகல் மாலை முதலிய எல்லா காலங்கள் எல்லா காலங்களிலும்
வாய்ந்த மலர்–கிடைத்த புஷ்பங்களை
ஆயிரம் பேர்–ஸஹஸ்ர பேரைகளை
ஆய்ந்து உரைப்பான்–ஆராய்ந்து

பிறையோடு ஒத்து இருந்துள்ள கொம்புகளையும்-அழகிய கண்களையும் யுடைத்தான -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை –
தறையில் ஒரு பூ விழாத படி முதலை வாயிலே நின்றும் மெள்ள விடுவித்து அருளின
சர்வேஸ்வரனான என் நாயகனானுக்கு(பாகவதரின் அவயவங்களும் உத்தேச்யம் )

அடிமை செய்கையிலே அத்யவசித்த நான் முதலும் -நடுவும் -அந்தியுமான -சர்வ காலங்களிலும் ஏதேனுமாகக் கிட்டின பூக்களை
அடைவு கெடப் பணிமாறி இன்ன திரு நாமம் என்ற ஒரு நியதி அற குண சேஷ்டிதாதிகளுக்கு வாசகமான
ஆயிரம் திரு நாமத்தையும் அனுசந்தித்துக் கொண்டு சொல்லி நிற்பன் –

(அத்யவசித்த-மாநஸம் –பணிமாறி-காயிகம் -அனுசந்தித்து-வாசிகம்0

அன்றிக்கே
சேர்ந்த பிறை போலே இருந்துள்ள கொம்புகளையும்-சிவந்த கண்களையும் யுடைத்தான குவலயா பீடத்தை
நிரசித்த படியாகவுமாம் –
அப்போது நம் விரோதியை நிரசித்த படிக்கு த்ருஷ்டாந்தம்

மற்றப் போது மற்றுள்ள ஆஸ்ரித விஷயத்தில் வத்சலனாய் –
அவர்கள் ஆபத்தை நீக்கும் படிக்கு த்ருஷ்டாந்தம் –

(ஒழி வில் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திரு வேங்கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே -போல் நித்ய கைங்கர்ய பிரார்த்தனை இதில்
பேரும் ஓர் ஆயிரம் பிற பலவுடைய எம்பெருமான் -ஆயிரம் பேர் என்றது மற்ற அனைத்துக்கும் உப லக்ஷணம் –
கழிவதோர் காதல் உற்றாருக்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே -திரு விருத்தம் -97-
வைகல் இரவும் பகலும் என்றும் எல்லாக் காலத்தையும் –
ஆதி நாடி அந்தி -எல்லாக் காலத்தையும் என்றும் -எல்லா நிலைகளையும் என்றுமாம்
ஆஸீநா வா சயாநா வா திஷ்டந்தோ யத்ர குத்ர வா
நமோ நாராயணாயேதி மந்த்ர ஏக சரணா வயம்

ஸாங்கேதயம் பாரிஹாஸ்யம் வா ஸ்தோபம் ஹேளநமேவ வா
வைகுண்ட நாம க்ரஹண சேஷாக ஹரம் விது
திரு நாமம் சொல்ல கால தேச அவஸ்தை பிரகார அதிகாரி நியமம் இல்லையே -விஷய நியமமே உள்ளது
அத்யந்த பக்தி யுக்தஸ்ய ந சாஸ்திரம் நைவ ச க்ரம
மதுவார் தண்ணம் துழாயான் முது வேத முதல்வனுக்கு எதுவெது என் பணி என்னாது அதுவே ஆட் செய்யுமீடே –1-6-2- என்றபடி துணிவும் கைங்கர்யமே யாகும் –
கைங்கர்ய விரோதிகளை அழித்து அருளி என்னை எழுதிக் கொண்டவன் -என்கிறார்)

————————————————————————————————-

இப்படி கைங்கர்யம் பண்ணுகையால் வந்த ஹர்ஷத்தாலே அவனுக்கு
சத்ருசமாகக் கவி படும்படியான ஸூ ஹ்ருதம் பண்ணினேன் நானே என்கிறார் -(ஸூஹ்ருத தேவதை நம்பெருமாளே தானே )

யானே தவம் செய்தேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
யானே தவம் உடையேன் எம்பெருமான் -யானே
இரும் தமிழ் நன்மாலை இணை யடிக்கே சொன்னேன்
பெரும் தமிழன் அல்லேன் பெரிது-74-

பதவுரை

எம்பெருமான்–ஸர்வ ஸ்வாமிந்!
ஏழ் பிறப்பும்–எல்லா ஜன்மங்களிலும்
எப்பொழுதும்–எல்லா அவஸ்தைகளிலும்
தவம் செய்தேன்–தவம் புரிந்தவன்
யானே–நானே
தவம் உடையேன் யானே–அந்தத் தபஸ்ஸின் பலனைப் பெற்றவனும் யானே
இரும் தமிழ் நல் மாலை–சிறந்த தமிழ்ப் பாஷையினாலாகிய நல்ல சொல் மாலைகளை
இணை அடிக்கே–(உனது) உபய பாதங்களிலே
சொன்னேன்–விஜ்ஞாபித்தவனாய்
பெரும் தமிழன்–பெரிய தமிழ்க் கலையில் வல்லவனாய்
பெரிது–மிகவும்
நல்லேன்–உனக்கு நல்லவனாயிருப்பவன்
யானே–அடியேனே

(ப்ராப்த விஷயம் -இல்லை எனக்கு எதிர் இல்லை -அஹங்காரம் இதில் உத்தேச்யமே-கேட்டு ஆரார் வானவர் செவிக்கு இனிய செஞ்சொல்லே )

இவ்வாத்மாவை ஸ்வரூப அனுரூபமாகத் திருவடிகளிலே அடிமை கொள்ளுகைக்கு உரிய என்னுடைய நிருபாதிக சேஷி யானவனே –
சகல ஜென்மங்களிலும் -அது தன்னில் -எல்லா அவஸ்தைகளிலும் உன் திருவடிகளிலே வாசிக கைங்கர்யம் பண்ணுகை யாகிற
இப் பேற்றுக்கு அடியான தபஸ்ஸைப் பண்ணினேன் நானே –

பண்ணின அந்த தபஸ்ஸாலே பலிக்கும் பலத்தைப் பெற்றுடையேனும் நானே —
அந்த தபஸ் பலமாக வந்த லக்ஷண லஷ்யங்களில் குறைவற்று இருக்கும் பெருமையை யுடையதாய் –
சர்வாதிகாரமாய் –
அத்யந்த விலக்ஷணமான திராவிட சந்தர்ப்பங்களை
சேர்த்தி அழகை யுடைத்தான தேவர் திருவடிகளுக்கே சொல்லப் பெற்றேன் நானே –

திராவிட சாஸ்திரத்தில் என் தன்னை அவகாஹித்தார் இல்லை என்னும் படி அதில் தேசிகனாய் இருப்பான் ஒருத்தன் –
அவ்வளவு இன்றிக்கே –
ஏதத் சாம காயன் ஆஸ்தே-என்று
பாங்கான நிலத்திலே இருந்து பாடி யாடி அடிமை செய்யக் கடவ நித்ய முக்தரைப் போலே அன்றிக்கே
இங்கே இருந்து கவி பாடப் பெறுகையாலே அவர்களிலும் மிகவும் நல்லனாய் இருப்பான் ஒருவன் –

(வீற்று இருந்து ஏழு உலகம் -திருவாய் -4-5- இப் பாசுர விவரணமாய் இருக்கும்
இங்கு தவமாவது
ஜன்மாந்தர ஸஹஸ்ரேஷு தபோ ஞான சமாதிபி
நராணாம் ஷீண பாபாநாம் கிருஷ்ணே பக்தி ப்ரஜாயதே –
விதி சூழ்ந்ததால் -திருவாய் -2-7-6-
சொல் மாலைகள் நன்று சூட்டும் விதி எய்தினம் -4-5-7- என்று பகவத் கிருபையையே அருளிச் செய்கிறார் என்றுமாம்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய -செஞ்சொல்லே– 10-6-11-
விதி ப்ரயுக்தாம் பூஜாம் ச க்ருஹ்ணாதி சிரஸா ஸ்வயம்
சொல் மாலைகள் ஏற்ற நோற்றேர்க்கு -4-5-1-
ஏதத் ஸாம காயன் ஆஸ்தே -என்று அங்குள்ளாரைப் போல் அன்றிக்கே
இங்கேயே இவ்வுடம்புடனே இப்பொழுதே
யாவர் நிகர் அகல் வானத்தே -4-5-8-
இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிரே –
பகவத் பாகவத சம்பந்தத்தால் வந்த அபிமானம் உத்தேச்யமே )

(மன்னிய பேரிருள் மாண்ட பின் கோவலுள் மா மலராள்
தன்னோடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன்
பொன்னடி போற்றும் இராமானுசற்கு அன்பு பூண்டவர் தாள்
சென்னியில் சூடும் திரு உடையார் என்றும் சீரியரே – ஸ்ரீ ராமாநுசன் நூற்றந்தாதி -10-)

———————————————————————————————–

பெரும் நல்லன் -என்று கொண்டாடிச் சொன்னீர் -இப்படிப் பெரு மதிப்பராய் இருக்கிற நீர் தாம்
ஒரு கவி சொல்லிக் காணீர் -என்ன -அப்போது விண்ணப்பம் செய்த கவி தன்னைச் சொல்லுகிறார் –

(ஸ்ரீ ராமானுஜர் சிஷ்யர்களுக்கு த்வய மஹா மந்த்ரம் -அருகில் உள்ள திருமந்திரம் சரம ஸ்லோகார்த்தங்கள் கலந்து
அருளிச் செய்ததாக ஸ்ரீ அனந்தாழ்வான் அருளிச் செய்வார்-ஸாரமானவற்றை நமக்கு-நாம் அநாதரித்து இருந்தாலும் -காரேய் கருணையால் அருளியவர் அன்றோ )

(கரை செய் மாக்கடல் கிடந்தவன் கனை கழல் அமரர்கள் தொழுது ஏத்த
அரை செய் மேகலை யலர் மகள் அவளோடும் அமர்ந்த நல்லிமயத்து
வரை செய் மாக்களிர் இள வெதிர் வளர்முளை அளை மிகு தேன் தோய்த்து
பிரச வாரி தன்னிளம் பிடிக்கருள் செய்யும் பிரிதி சென்று அடை நெஞ்சே -பெரிய திருமொழி –1-2-5-இப் பாசுரம் அடியாகவே அருளிச் செய்கிறார்)

பெருகு மத வேழம் மாப்பிடிக்கு முன்னின்று
இரு கண் இள மூங்கில் வாங்கி -அருகிருந்த
தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர்
வான் கலந்த வண்ணன் வரை-75-

பதவுரை

பெருகும்–பெருகுகின்ற
மதம்–மத நீரை யுடைத்தான
வேழம்–யானை யானது
மா பிடிக்கு முன் நின்று–(தனது) சிறந்த பேடையின் முன்னே நின்று
இரு கண் இள மூங்கில் வாங்கி–இரண்டு கணுக்களை யுடைத்தாய் இளையதான மூங்கில் குருத்தைப் பிடுங்கி
அருகு இருந்த தேன் கலந்து–(அந்த மூங்கிற் குருத்தை) ஸமீபத்திலுள்ள தேனிலே தோய்த்து
நீட்டும்–(பேடைக்குக்) கொடுப்பதாகக் கையை நீட்டப் பெற்ற
திருவேங்கடம் கண்டீர்–திருமலை யன்றோ
வான் கலந்த வண்ணன் வரை–மேகத்தோடொத்த நிறத்தனான பெருமானுடைய (வாஸஸ்தானமான) பர்வதம்.

திருமலையிலே திரு அருவிகள் பெருக்கு எடுக்குமா போல மேன்மேல் எனப் பெருகா நின்றுள்ள மதத்தை யுடைத்தான ஆனையானது
எல்லா அளவிலும் தன்னை ஏவிக் கார்யம் கொள்ள வல்ல ஸ்லாக்யமான பிடிக்கு –
நான் இங்குத்தைக்குச் செய்யக் கடவ பணிவிடைகளைக் கற்பிக்க லாகாதோ -என்று
விநயம் தோற்ற முன்னே வந்து நின்று

இரண்டு கண்ணேறி அதுக்குத் தக்க முற்றனவும் இன்றிக்கே இளையதாய் இருக்கிற மூங்கில் குருத்தைச்
செவ்வி குன்றாத படி -சாவதானமாக வாங்கி அருகில் மலை முழைஞ்சுகளில் கூட்டிலே
நிறைந்து இருக்கிற தேனில் மூங்கில் குறுத்தும் தேனும் தன்னிலே ஒன்றி ஒரு நீராம்படி தோய்த்து
உனக்கு வேண்டுவார்க்குக் கொடாய்-என்று அது அநாதரித்து நிற்க –

இத்தனையும் அங்கீ கரிக்க வேணும் என்று சாதாரமாகக் கொடுக்கும் சிறப்பை யுடைத்தான திருவேங்கடம் -கிடீர் –
மேகத்தோடு சத்ருசமாகச் சேர்ந்த வடிவை யுடையவன் வர்த்திக்கிற மலை –

(இப்பாசுரத்தின் சிறப்பை நோக்கி நாலு கவிப்பெருமாள்
வரை செய் மாக்களிறு இளவெதிர் வளர் முளை அளை மிகு தேன் தோய்த்துப் பிரசவாரி தன் இளம் பிடிக்கு அருள் செய்யும் -1-2-5- என்று விரித்து அருள் செய்கிறார் –
யானையே திருமலை தொடரிலே ஒரு கரு மலை போலே உள்ளது –
இளவெதிர் -இளையதான மூங்கில் -முளைத்த போதே அண்ட புத்தியில் சென்று தட்டும் படி -வளர்ந்து இருக்குமாயிற்று –
சர்க்கோ பசர்க்க ஸ்திதீ ஸ்வர்க்கம் துர்க்கதி மாப வர்க்கிக பதம் ஸர்வம் ச குர்வன் ஹரி
யஸ்யா வீஷ்யா முகம் தத் இங்கித பராதீநோ விதத்தே அகிலம் -ஸ்ரீ ஸ்தவம்
அவளுக்கு அவன் வசப்பட்டே அனைத்தும் செய்வது போல் -யானையும் பிடியின் நியமனம் எதிர்பார்த்தே இருக்கும்
நீட்டும் -பிரணய ரோஷத்தால்
அழகியார் இவ்வுலகம் மூன்றுக்கும் தேவிமை தகுவார் பலர் உளர் கழகம் ஏறேல் நம்பீ -6-2-6-என்பது போல் அநாதரித்து நிற்க
புரிந்து மத வேழம் மாப்பிடியோடு ஊடித் திரிந்து சினத்தால் பொருது –
விரிந்த சீர் வெண் கோட்டு முத்து உதிர்க்கும் வேங்கடமே -மூன்றாம் திரு -45என்று
ஊடல் முற்றிய நிலையை அருளிச் செய்தார்
இவ்வாழ்வார் இங்கு அது நீங்கிய நிலையை அருளிச் செய்கிறார் –
தன் இளம் பிடிக்கு அருள் செய்யும் -என்றார் திருமங்கை மன்னனும்
தேன் கலந்த மூங்கிலைப் பிடியின் வாயிலே பிழியுமாம் –
பருக்கை -சக்கை -தட்டுமாகில் மிடற்றுக்குக் கீழே இழிச்ச மாட்டாதாயிற்று
அதுக்கு அடி இளம் பிடியாகை
தேனில் ரஸம் பெறுகைக்காக அதிலே தோய்த்துப் பின்னை அதில் கந்தல் யுண்டு -கோது -அது தட்டாதபடி பிழியும்
அதில் யுண்டான பருக்கையும் கூடப் பொறாத படியாய் யாயிற்று இதனுடைய ப்ரக்ருதி மார்த்வம் இருக்கிற படி –
திர்யக்குகளுக்கும் தம்முடைய ரஷ்யத்தினுடைய ரக்ஷணமே யாத்ரையாய் இருக்குமாயிற்று –
வான் கலந்த என்கையாலே மேகமாகிற உபமானமும் மேக வண்ணனாய உபமேயமும் மிக்கு ஒத்து இருப்பதை உணர்த்துகிறார்
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு -திருவாய் -1-8-3- என்று
உபய விபூதியில் உள்ளோரை எல்லாம் ரக்ஷிக்குமவனைப் போலவே
திர்யக்குகளுக்கும் ரஷ்யத்தின் ரக்ஷணமே யாத்ரையாய் இருக்குமாயிற்று –
பெரிய பிராட்டியாரும் தானுமாய் ஸம்ஸ்லேஷித்து இன்புற்று இருக்குமவன் அந்த சம்ஸ்லேஷத்துக்கு பின்பு
மதுபான கோஷ்டியாய் செல்லுமத்துக்கு இது உப லக்ஷணம் – )

——————————————————————————————————

இப்படி வாசகமாகக் கவி பாடி உகப்பித்த அளவின்றிக்கே -அடிமைக்கு ஈடான உப கரணங்களைத் தேடிக் கொண்டு
வகுத்த சேஷியான அவன் திருவடிகளிலே அடிமை செய்வதுவே இவ் வாத்மாவுக்கு ஹிதம் என்கிறார் –

(கீழே வாசா கைங்கர்யம் சொல்லி இதில் காயிக கைங்கர்யம்
ஆத்ம ஸ்வரூப அனுரூபம் த்ரிவித கரணங்களால் கைங்கர்யம் அன்றோ)

வரைச் சந்தன குழம்பும் வான் கலனும் பட்டும்
விரைப் பொலிந்த வெண் மல்லிகையும் -நிறைத்துக் கொண்டு
ஆதிக்கண் நின்ற வறிவன் அடி இணையே
ஓதிப் பணிவது உறும் —76-

பதவுரை

வரை சந்தனம் குழம்பும்–(மலய) பர்வதத்தினின்று முண்டான சந்தனத்தின் குழம்பையும்
வான் கலனும்–சிறந்த ஆபரணங்களையும்
பட்டும்–பட்டுப் பீதாம்பரங்களையும்
விரை பொலிந்த–பரிமளம் விஞ்சி யிருக்கப் பெற்ற
வெண் மல்லிகையும்–வெளுத்த மல்லிகை மலர்களையும்
நிறைத்துக் கொண்டு–சேகரித்துக் கொண்டு
ஆதிக் கண் நின்ற அறிவன்–ஸகல ஜகத் காரண பூதனாய் ஸர்வஜ்ஞனான பெருமானுடைய
அடி இணையே–உபய பாதங்களையே
ஓதி–வாயாரத் துதித்து
பணிவது–தலையார வணங்குவது
உறும்–ஸ்வரூபத்துக்குச் சேரும்.

நல்ல ஆகரத்தில் உண்டான சந்தனக் குழம்பும் அங்குத்தைக்கு சத்ருசமாம் படி அடைவே எடுத்து பெரு விலையனான
ஆபரணங்களும் திரு வரைக்குத் தகுதியான நல்ல பரிவட்டங்களும் -பரிமளம் மிக்கு இருப்பதாய் -கண்ணுக்கு ஆகர்ஷகமான
வெளுத்த நிறத்தை உடைத்தான மல்லிகையும் ஆகிற இவற்றை தர்ச நீயமாம் படி நிரைய அடைவே எடுத்துக் கொண்டு

இவை அழிந்து கிடக்கிற ஆதி காலத்திலே காரணமாய்க் கொண்டு நின்றவனாய் –
தன் பக்கல் இவன் பண்ணின அல்ப ஆனுகூல்யத்தை சர்வ காலமும் நினைத்து இருக்கும் சர்வஞ்ஞனானவனுடைய
ஒன்றுக்கு ஓன்று ஒப்பான திருவடிகளையே
வாயார ஸ்தோத்ரம் பண்ணி
தலையார வணங்குவது இவ்வாத்மாவுக்கு மிகவும் சீரியது-

(ஸூ கந்த மேதத் ராஜர்ஹம் ருசிரம் ருசிராநநே
ஆவயோர் காத்ர ஸத்ருசம் தீயதாம் அநு லேபநம்
எத்தை இட்டாலும் நற் சாந்தாகவே கொள்ளுமவனானாலும் அவனது ஸுகுமார்ய திருமேனிக்கு ஸத்ருசமாக இடுகையை இவன் ஸ்வரூபத்துக்குத் தக்கது –
பூவை வீயா நீர் தூவிப் போதால் வணங்கேனேலும் நின் பூவை வீயாம் மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே -4-3-1- என்றபடி
அவனையே உபாய உபேயமாகக் கொள்ளும் நெஞ்சே நற் சாந்து ஆகும்
தேசமான அணிகலனும் என் கை கூப்புச் செயகையே –மாடி ஏற்காதவர் கை கூப்புச் செய்கையே அவனுக்கு அணி கலனாகும்
படிச்சோதி ஆடையொடும் பல் கலனாய் நின் பைம்பொன் கடிச்சோதி கலந்ததுவோ -3-1-1- என்றபடி
திருவரையே பூத்தால் போல் உள்ள திரு பீதாம்பரமும்
புனையும் கண்ணி என்னுடை வாசகம் செய் மாலையே வான் பட்டாடையும் அஃதே -4-3-2-என்றும்
கண்ணி எனது உயிர் காதல் கனகச் சோதி முடி முதலா எண்ணில் பல் கலன்களும் ஏலும் ஆடையும் அஃதே என்றும் அருளிச் செய்த படியே
பூ மாலையே -உயிர் என்றும்
வான் கலன் -காதல் என்றும்
பட்டு -நற் பா மாலை
நெஞ்சையே பூசும் சாந்து என்னலாம் படி ஆக்கிக் கொண்டு அருளுபவன் அன்றோ
ஆதிக்கண் நின்ற
ந ப்ரஹ்மா நேஸாந நே மே த்யா வா ப்ருத்வீ ந நக்ஷத்ராணீ
ஏகோ ஹவை நாராயண ஆஸீத்
காரணம் து த்யேய
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் –முமுஷுர்வை சரணம் அஹம் ப்ரபத்யே
ஸஹஸ்ராம் ஸூ -நமது லவ லேச நன்மையை பத்து நூறு ஆயிரமாக்கி கணக்கிட்டு நினைத்து இருக்கும் ஸர்வஞ்ஞன்
ஓதி வாய் படைத்த பயன்
பணிந்து தலை படைத்த பயனாக வணங்கி –
உறும் -இதுவே இவ் வாத்மாவுக்கு தக்கது -)

—————————————————————————————–

இப்படி ஆஸ்ரயணத்திலே ஒருப்பட்டவர்-அது தமக்கு இனிதாய் இருக்கையாலே -அனுபவ தசையில் காட்டிலும்
சாதன தசையில் பிறக்கும் ரஸமே அமையும் கிடாய் -நெஞ்சே -என்கிறார்

உறும் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் நல் பாதம்
உறும் கண்டாய் ஒண் கமலம் தன்னால் -உறும் கண்டாய்
ஏத்திப் பணிந்தவன் பேர் ஈர் ஐந்நூறு எப்பொழுதும்
சாத்தி உரைத்தல் தவம்-77-

பதவுரை

நல் நெஞ்சே–நல்ல மனமே!
உத்தமன்–புருஷோத்தமனுடைய
நல் பாதம்–சிறந்த திருவடிகள்
உறும் கண்டாய்–நமக்கு ப்ராப்த மானவை காண்க (அப்படிப்பட்ட திருவடிகளை)
ஓண் கமலம் தன்னால்–அழகிய தாமரை மலர்களினால் (ஆராதிப்பதானது)
உறும் கண்டாய்–நமக்கு உரியது காண்
சாத்தி–(அத் தாமரை மலர்களை) ஸமர்ப்பித்து
ஏத்தி–துதித்து
பணிந்து–நமஸ்கரித்து
அவன் பேர் ஈர் ஐந்நூறு–அவனது ஸஹஸ்ர நாமங்களையும்
எப்பொழுதும்–அநவரதமும் ஸங்கீர்த்தனம் பண்ணுகையாகிற
தவம்–தபஸ்ஸானது
உறும் கண்டாய்–உரியது காண்.

எனக்கு முன்னே பதறி விழுகிற நல்ல நெஞ்சே -நாம் விமுகரான திசையிலும் நம்மை நோக்கி இப்போது தன்னது பேறாக
அடிமை கொள்ளக் கடவ புருஷோத்தமனுடைய யோக்யர் அயோக்யர் என்று தரம் வையாதே எல்லாருக்கும் பற்றலாம் படியான
நன்மையை யுடைய திருவடிகள் சாலச் சீரியது ஓன்று கிடாய் –

(திண் கழல் சேரே -அவனும் அவளும் கை விட்டாலும் ஆழ்வாராதிகள் ஆச்சார்யர்கள்
நீ என்னை கை விட்டாலும் நான் உன்னை விடேன் என்று
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொண்டு அருளுவார்கள் அன்றோ)

வாயாலே ஸ்துதித்து தலையாலே வணங்கி
அவனுடைய குண சேஷ்டிதாதிகளுக்கு வாசகமான ஆயிரம் திரு நாமங்களையும்
சர்வ காலத்திலும் எங்கும் பிரசித்தமாம் படி சொல்லுகை யாகிற தபஸ்ஸூ –
ஸூ ஸூகம் கர்த்தும்-என்னும் படி அத்யந்தம் சரசமாய் இருப்பது ஓன்று ஆகையால் மிகவும் சீரியது கிடாய் –

திரு நாமம் சொல்லுகையைத் தவம் என்கிறது ஈஸ்வரன் கருத்தாலே-

(ராஜ வித்யா ராஜ குஹ்யம் பவித்ரம் இதம் உத்தமம்
ப்ரத்யக்ஷ அவாகமம் தர்ம்யம் ஸூஸூகம் கர்த்தும் அவ்யயம் –9-2-

இந்த பக்தி யோகம் வித்யைகளுக்குள் சிறந்ததாய் ரஹஸ்யங்களுக்குள் சிறந்ததாய் –
பாபங்களைப் போக்கடிப்பவற்றுள் உயர்ந்ததாய் -என்னை -நேரில் காட்டுவதாய்
என்னை அடைவிக்கும் சாதனமாயும் இருப்பதாய் -அனுஷ்டிப்பதற்கு மிகவும் இனியதாய் –
பலத்தைக் கொடுத்த பின்பும் அழியாததாய் இருப்பது –)

(அனுபவ வேளையில் காட்டிலும் ஆஸ்ரயண வேளையில் பிறக்கும் இன்பமே போதுமானது –
நன்னெஞ்சே
முந்துற்ற நெஞ்சே
என்னை நெகிழ்க்கிலும் என்னுடைய நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி -1-7-8 என்றும்
விபரீத லக்ஷனையாகவுமாம்
உத்தமன் நற் பாதம்
அனைவரையும் திருத்தி உஜ்ஜீவிக்க வல்லவன்
பல பல நாழஞ்சொல்லி கேட்பார் செவி சுடும் கீழ்மை வசவுகளே வைத சிசுபாலனுக்கும் அந்திம காலத்தில்
அலவலைமை தவிர்த்த அழகன் -பெரியாழ்வார் -4-3-5-
திருவடி தாட் பால் அடைந்த -7-5-3-
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே -1-2-10-
பிராட்டியும் அவனும் விடிலும் திருவடிகள் விடாமல் திண் கழலாய் இருக்கும் அன்றோ
நின்னில் சிறந்த நின் தாளிணை அவை -பரிபாடல் -3-
ஸூ ஸூகம் கர்த்தும் -அனுஷ்ட்டிக்கும் போதே இனிதாய் இருக்குமே )

———————————————————————————————-

இப்படி இருக்கிற தபஸ்ஸை அனுஷ்ட்டித்து (த்ரிவித கரணங்களால் ஆஸ்ரயித்து )சர்வேஸ்வரன் திருவடிகளை வருத்தமற
லபிக்கப் பெற்றான் சதுர் முகன் ஒருவனுமே கிடீர் -என்கிறார் –

தவம் செய்து நான்முகனே பெற்றான் தரணி
நிவர்ந்து அளப்ப நீட்டிய பொற்  பாதம் -சிவந்த தன்
கை யனைத்தும் ஆரக் கழுவினான் கங்கை நீர்
பெய்தனைத்துப பேர் மொழிந்து பின்-78-

பதவுரை

தரணி–பூமியை
அளப்ப நிவர்ந்து–தாவி யளப்பதாகத் தொடங்கின த்ரிவிக்ரமாவதார காலத்தலே
நீட்டிய–பரப்பின
பொன் பாதம்–அழகிய திருவடியை
கங்கை நீர் பெய்து–கங்கா தீர்த்தமாகப் பெருகின கமண்டல தீர்த்தத்தைப் பணி மாறி
அனைத்து பேர் மொழிந்து–(பரமனுடைய) எல்லாத் திரு நாமங்களையும் வாயாரச் சொல்லி
பின்–பிறகு
தன் சிவந்த கை அனைத்தும் ஆர–தனது அழகிய கைகளெல்லாம் ஸபலமாகும்படி
கழுவினான்–திருவடி விளக்கியவனான
நான் முகனே–பிரமனொருவனெ
தவம் செய்து பெற்றான்–தவப் பயன் பெற்றவனாயினான்.(மஹா கல்பம் முடிவில் மோக்ஷம் பெற்றான் என்றபடி )

(அர்ச்சிராதி மார்க்கம் போனவர் திரும்ப மாட்டார்கள்
திரும்பாத மோக்ஷம் பெற்றவர்கள் எல்லாருமே அர்ச்சிராதி மார்க்கத்தில் போனவர்கள் என்று இருக்க வேண்டாமே
நான்முகன் ஸத்ய லோகத்தில் இருந்தே போகலாமே)

உறும் கண்டாய் -வாசிக காயிக மானஸ மூன்றுக்கும் மூன்று தடவை அருளிச் செய்கிறார்

பூமியை வளர்ந்து அளக்கைக்காக நீட்டின ஸ்லாக்யமான திருவடிகளை –
க்ருஹீத்வா தர்ம பாநீயம்–என்கிறபடியே
பகவத் பக்தியாலே உருகி விழுந்த தர்ம மயமான கங்கா ஜலத்தைப் பணி மாறி –
அவனுடைய எல்லாத் திரு நாமங்களையும் வாய் படைத்த பிரயோஜனம் பெறச் சொல்லித்
தன்னுடைய சிவந்த அழகிய கைகள் அடங்கலும் உத்பத்தி பிரயோஜனம் பெற்றுப் பூர்ணமாம் படி யாக விளக்கினான் –

திருவடிகளை விளக்கப் பெற்ற பின்பு பகவன் நாம சங்கீர்த்தம் ஆகிற இனிய தபஸ்ஸைக் குறைவற அனுஷ்ட்டித்துச்
சதுர்முகன் ஒருவனுமே அது பலத்தோடே வியாப்தமாகப் பெற்றான் –

இவன் இனியது செய்ய அவன் தவம் என்று இருக்கும் –
வணக்குடைத் தவ நெறி -என்னக் கடவது இறே –

(உலகு அளந்த போது இந்திரன் பெற்றது கோதான த்ரை லோக்ய ராஜ்ஜியம்
பிரமன் திருவடிகளைக் காணப் பெற்றான்
இப்படித் தவம் செய்தார் யாரும் இல்லையே -இப்படிப் பயன் பெற்றாரும் இல்லையே –
பொற் பாதத்தைப் பெற்ற பின் காயிக வாசிக கைங்கர்யங்களையும் செய்யப் பெற்றானே
த்ரவீ பூதஸ் ததா தர்மோ ஹரி பக்த்யா மஹா முநே
க்ருஹீத்வா தர்ம பாநீயம் பதம் நாதஸ்ய துஷ்டயே
ஷாளிதம் பரயா பக்த்யா பாத்ய அர்க்யாதி பிரர்ச்சிதம்
ததமபு பதிதம் த்ருஷ்ட்வா ததார சிரஸா ஹர
பாவநார்த்தம் ஜடா மத்யே யோக்யோஸ் மீத்ய வதாரணாத்
வர்ஷா யுதான் யத பஹுன் ந முமோச ததா ஹர –ஈஸ்வர ஸம்ஹிதை
வணக்குடை தவநெறி -திருவாய் -1-3-சேதனன் ஸ்வயம் ப்ரயோஜனமாகச் செய்தாலும்
சர்வேஸ்வரன் அத்தையே தவமாகக் கொண்டு பயன் அளித்து அருள்கிறான் -என்கிறார் ஆழ்வார் )

———————————————————————————————-

ஜகத்தை அளந்து கொண்ட செயலை உடையனான -ஸ்ரீ வாமனனுடைய-வ்ருத்தாந்தமானது -தாயார் அபேக்ஷிக்க
மறுத்துக் காடு ஏறப் போன சக்கரவர்த்தித் திரு மகனுடைய இத் தன்மைக்கு ஒக்கும் என்கிறார் –

(மென்மையான திருவடிகளுக்கும் -சேஷ்டிதங்களுக்கும் ஸாம்யம்
அவதாரிகை சங்கதி சொல்வதில் நோக்கம் -ஆகவே முதலில் திரு உலகு அளந்ததைச் சொல்லி பின்பு ராமாவதாரம்

திரிவிக்ரமன் விட வாமனன் என்று சொன்னால் தானே மென்மைக்கு ஒப்பாகும்
அதிதி -இந்திரன் -போல் கௌசல்யை பெருமாளைப் பெற்று -ஸந்தோஷம் -உபேந்த்ரன் சொல்ல முடியாமல் வஜ்ர பாணி இருப்பதால்
வஜ்ர லாஞ்சனம் உண்டே -சொல்லலாமே –
அங்கும் பெருமாளுக்கும் வாமனனுக்கும் ஸாம்யம் சொல்லிற்றே )

பின்னின்று தாய் இரப்பக் கேளான் பெரும் பணைத் தோள்
முன்னின்று தான் இரப்பாள் மொய்ம்மலராள் -சொல் நின்ற
தோள் நலந்தான் நேரில்லாத் தோன்றல் அவன் அளந்த
நீள் நிலம் தான் அனைத்துக்கும் நேர்-79-

பதவுரை

தாய்–மாதாவான கௌஸல்யை
பின் நின்று–பின் தொடர்ந்து
இரப்ப–(என்னை விட்டு நீ காட்டுக்குப் போகலாகாது) என்று பிரார்த்திக்கவும்
கேளான்–அதனை ஏற்றுக் கொள்ளளாதவனாயும்
பெரு பணை தோள்–சிறந்த முங்கில் போன்ற திருத் தோள்களை யுடையளாய்
சொல் நின்ற-தந்தையின் நியமனமாகிய சொல் ஒன்றிலேயே தீவ்ரமாக நின்ற
தோள் நலத்தான்–புஜ பலத்தை யுடையனும்
நேர் இல்லா தோன்றல்–ஒப்பற்ற ஸ்வாமியுமான இராம பிரானுடைய
மொய் மலராள் தான்—பத்மாலய-அழகிய தாமரைப்பூவில் பிறந்தவளான பிராட்டியின் அம்சமான ஸீதையானவள்
முன் நின்று–முன்னை நின்று
இரப்பாள்–(இந்த ஸுகுமாரமான திருமேனியைக் கொண்டு காட்டுக்குப் போவது வேண்டா என்று) பிரார்த்தித்த வளவிலும்
அத்தனைக்கும்–(காட்டின் கொடுமையைப் பாராமல் தைரியமாகக் காட்டுக்கு எழுந்தருளின்) அப்படிப்பட்ட செயலுக்கு
அவன் அளந்த நீள் நீலம் தான் நேர்–அப் பெருமான் மிகப் பெரிய இவ்வுலகத்தை அளந்த செயல் ஒன்றே ஒத்தது.

தாயாரான ஸ்ரீ கௌசல்யையார் பின் தொடர்ந்து நின்று -ஏக புத்ரையான நான் உன்னைப் பிறந்தால் -தரித்து இருக்க வல்லேனோ –
நீ காட்டுக்குப் போக வேண்டா -என்று அர்த்திக்க-அத்தைக் கேளானுமாய் –

அதுக்கு மேலே நீண்டு சுற்றுடைத்தான தோளை யுடையாளாய் –
அழகிய பூவை இருப்பிடமாக யுடையாள் ஆகையால் நிரதிசய ஸூ குமாரையான பிராட்டியானவள் தான்
அக்ரதஸ் தே கமிஷ்யாமி -என்கிறபடியே
முற்பட்டு நின்று -கரு முகை மாலையைச் செவ்வி பெறுத்த வென்று நெருப்பிலே இடுமா போலே
இந்த அதி ஸூகுமாரமான திரு மேனி கொண்டு காடு ஏறப் போகிற இன்று உம்மைப் பிரிந்து இருக்க மாட்டேன் –
உமக்கு முன்னே போகக் கடவேன் -என்று பிரார்த்தியா நிற்க–அத்தையும் கேளாதானாய் –

தானோ என்றால் -ஸ்ரீ ராமாயணம் என்கிற பிரபந்தத்துக்கு நேரே பிரதிபாத்யனாய்க் கொண்டு நின்று-தோளை யுடையனாய் –

ஸுகுமார்யத்தில் வந்தால் தன்னை எண்ணினால் -பின்னை இரண்டாம் விரலுக்கு ஆள் இல்லாத படி-பிரதானனுமாய் இருக்க –

இவை இத்தனையும் (மூன்றையும்)பாராமல் -காட்டில் மிறுக்கையும் கடைக் கணியாமல்-காடு ஏறப் போன
சக்கரவர்த்தி திருமகனுடைய அந்த ஸ்வ பாவம் எல்லா வற்றுக்கும் ஸ்ரீ மானனானவன்-

தான் அளந்து கொண்ட பரப்பை யுடையதான பூமி ஒப்பாகப் போரும் –
அதாவது
1-மாத்ரு வசனத்தை மறுத்துப் -2-பிராட்டி இரப்பைத் திரஸ்கரித்து -3-தன் ஸுகுமார்யத்தை புரிந்து பாராமல்-
4-போகிற காட்டில் மிறுக்கைக் கடைக் கணியாமல் -பித்ரு வசன பரிபாலனத்தையே புரஸ்கரித்து –
மன்னும் வளநாடு கை விட்டுக் காட்டை உகந்த சக்கரவர்த்தி திரு மகன் செயல்களுக்கு

இடங்கை வலம் புரி நின்றார்ப்ப -இத்யாதிப் படியே
1-அனுகூல அக்ரேசரரான ஸூ ரிகள் வயிற்று எரிச்சலையும்
2-தன் திருவடிகள் ஸுகுமார்யத்தையும் -3-காடுமோடையுமான அளக்கிற பூமியினுடைய கொடுமையையும் –
4-ஆஸூர ப்ரக்ருதிகளான நமுசி ப்ரப்ருதிகள் அலைச்சலையும் பாராமல்
ஆஸ்ரிதரான இந்திரன் பிரார்த்தனனையைத் தலைக் கட்டுகைக்காகக்(இதிலும் சாம்யம் -வேண்டித் தேவர்கள் இரக்க செய்த செயல்கள் )
கல்லும் கரடுமான வான்மா வையத்தை அளந்து கொண்ட
ஸ்ரீ வாமனனுடைய செயலானது சத்ருசமாம் அத்தனை -என்கை –

(சாமான்ய தர்மம்-குரு -பிதா -ராஜா -வ்ருத்தம் -நான்குக்கும் பிரதிசம்பந்தி –
விசேஷ தர்மம்-அபய பிரதானம் –
சாஷாத் தர்மம் -தானேயாக
இப்படி மூன்றுமாக அன்றோ பெருமாள்)

(தோளும் தாளும் -ராமனுக்கு தோள் -வலிமையால் ராவண நிரஸனம் -வாமனன் திரு விக்ரமன் தாள் வலிமையால் நமுசி ப்ரக்ருதிகள் நிரஸனம்
தர்ம ரக்ஷணம் -சாது ரக்ஷணம் -இரண்டிலும்)

(த்வயி ஸந்நிஹிதே அப்யேவம் அஹமாஸம் நிராக்ருதா
கிம் புந ப்ரோஷிதே தாத த்ருவம் மரணமேவ மே -அயோத்யா -20-41-
யதைவ தே புத்ர பிதா ததா அஹம் குருஸ் ஸ்வ தர்மேண ஸூ ஹ்ருத் தயா ச
ந த்வா நுஜாநாமி ந மாம் விஹாய ஸூ துக்கிதாம் அர்ஹஸி கந்து மேவம் -அயோத்யா -21-52-
குருஸ் ச ராஜா ச பிதா ச வ்ருத்த க்ரோதாத் ப்ரஹர்ஷாத் யதி வா அபி காமாத்
யத் வ்யாதி சேத் கார்யம வேஷ்ய தர்மம் கஸ்தம் ந குர்யாத ந்ருசம்ஸ வ்ருத்தி
ஸ வை ந சக்னோமி பிதுர் ப்ரதிஞ்ஞாம் இமாமகர்த்தும் சகலாம் யதாவத்
ச ஹ்யா வயோஸ் தாத குருர் நியோகே தேவ்யாஸ் ச பர்த்தா ச கதி ச தர்ம -அயோத்யா -21- 59-60-
கௌசல்யா தேவி வார்த்தைக்கும் பதில் அளித்து அருளி தர்மத்தை நிலை நாட்டி அருளினார் அன்றோ பெருமாள் –

பின்பு பிராட்டி
பாதா ருந்துத மேவ பங்கஜ ரஜ -தாமரைப் பொடியும் உறுத்தும் மென்மை யுடையவள்
யதி த்வம் பிரஸ்திதா துர்க்கம் வன மத்யைவ ராகவ
அக்ர தஸ்தே கமிஷ்யாமி ம்ருத் நதீ குச கண்டகான் -அயோத்யா -27-6- என்று பிரார்த்திக்க
தர்மத்தோடே ஒத்து இருக்கையாலே அன்றோ பெருமாள் அதற்கு இணங்கினார்
மன்னும் வள நாடு கை விட்டுக் காட்டை உகந்த சக்ரவர்த்தி திருமகன் செயல்கள் வாமணனுடைய செயல்களுக்கு ஒப்பாகுமே
ஸ்ரீ பெருமாளுடைய தர்ம ரக்ஷண உறுதிக்கு ஸ்ரீ வாமனனுடைய ஆஸ்ரித ரக்ஷண உறுதி ஒத்து இருக்கும் என்று கருத்து -)

————————————————————————————–

இப்படிப் பட்டுள்ள அவன் திருவடிகளிலே அடிமை ருசித்து ஸ்ம்ருதி மாத்திரத்தாலே நான் அங்கே ப்ரவணம் ஆன படியைக் கண்டால்
பண்டு அவனைக் கண்டு அனுபவிக்கப் பெற்றவர்கள் அப்போது என் பட்டார்களோ என்கிறார் –

(தனக்கும் பிறருக்கும் ஒப்புமை
தன்னையும் தன்னையும் கால வேற்றுமையால் ஒப்பு
திருவடி வெளிக் காட்டியதுக்கும் ஆபரணங்களால் மறைக்கப் பட்டதுக்கும் ஒப்பு
இப்படி மூன்று அர்த்தங்கள்
படி கோலம் -இயற்கையான அலங்காரம்)

நேர்ந்தேன் அடிமை நினைந்தேன் அது ஒண் கமலம்
ஆர்ந்தேன் உன் சேவடி மேல் அன்பாய் -ஆர்ந்த
அடிக் கோலம் கண்டவர்க்கு என் கொலோ முன்னைப்
படிக் கோலம் கண்ட பகல் -80-

பதவுரை

அடிமை நேர்ந்தேன்–உனது திருவடிகளில் கைங்கரியம் பண்ண நேர் பட்டேன்
ஒரு கண் மலம் அது நினைந்தேன்–அழகிய தாமரைப் பூப்போன்ற அத் திருவடிகளைச் சிந்தித்தேன்
உன் சே அடிமேல்–உனது அத்திருவடிகள் விஷயத்திலே
அன்பு ஆய் ஆர்ந்தேன்–அன்பே வடிவெடுத்தவனாகப் பொருந்தினேன்
ஆர்ந்த–பரிபூர்ணமான
அடி கோலம்–திருவடிகளினழகை
கண்டவர்க்கு– ஸேவிக்கப் பெற்றவர்கட்கு
படி கோலம் கண்ட முன்னைப் பகல் என் கொல்–திருமேனியின் அழகை ஸேவிக்கப் பெற்ற முற் காலம் சிறந்த தாகுமோ?
(திருமேனி ஸேவையிற் காட்டிலும் திருவடி ஸேவையே யன்றோ மிகச் சிறந்தது)

தேவர் திருவடிகளிலே ஸ்வரூப அனுரூபமாகப் பண்ணக் கடவ கைங்கர்யத்தில் அத்யாவசாய புரஸ்சரமாக (அடிமைத்தனம் இவ்வளவு வியாக்யானம் )நேர் பட்டேன் –
அந்தக் கைங்கர்யத்துக்கு பிரதி சம்பந்தியாய் -அழகிய தாமரைப் பூ போலே நிரதிசய போக்யமாய் இருக்கிற
அந்த திருவடிகளை மனஸ்ஸாலே அனுசந்தித்தேன் –

நினைத்த மாத்திரத்திலே பெருகி வருகிற ப்ரேமத்தை யுடையேனாய்
வகுத்த சேஷியான தேவருடைய சிவந்த திருவடிகளின் மேலே பிரிக்க ஒண்ணாத படி பொருந்தினேன் –

(நினைந்தேன் முதலில் சொல்லி -அது -என்று சொல்லும் படி -ஒண் கமலம் –மறைத்து சொன்னால் தானே ஆர்வம் தூண்டப்பண்ணும் –
பின்பு சேவடி மேல் அன்பாய் என்கிறார்
அன்போடு நினைத்தேன் அல்ல
க்ரம பிராப்தி -நிர்ஹேதுக கடாக்ஷம்
நினைத்ததால் அன்பு பெருகிற்று)

பூர்ணமான திருவடிகளின் அழகைக் கண்டு அனுபவித்தவர்களுக்கு -இதுக்கும் அடியான வடிவு அழகை ஓன்று ஒழியாத படி
முழு நோக்குச் செய்து அனுபவிக்கப் பெற்ற போது என்னாய்த்தோ-என் பட்டார்களோ -என்கை –

அன்றிக்கே –
ஆர்ந்த அடிக் கோலம் கண்டவர் ஆகிறார் சேஷ பூதரான தாமாய் -நான் திருவடிகளின் அழகைக் கண்டு ஈடுபட்டபடி கண்டால்
முன்பு இவ் வடிவு அழகைக் கண்டு அனுபவிக்கப் பெற்றார்கள் என் பட்டார்களோ -என்றுமாம் –

ஆர்ந்த வடிக் கோலம் -இத்யாதி –
திரு உலகு அளந்து அருளின திருவடிகளைக் கண்டவர்களுக்கு முன்பு
ஸ்வாபாவிகமான ஒப்பனை கண்ட காலம் என்னோ என்றுமாம் –

ஆர்ந்தேன் உன் சேவடி மேல் அன்பாய் -என்று
திருவடிகளிலே ஸ்நேஹத்தை யுடையனாய் அத்தாலே பரி பூர்ணன் ஆனேன் என்னவுமாம் –

(குட்ட நாட்டுத் திருப்புலியூர் நின்ற மாயப்பிரான் திருவருளாம் இவள் நேர்பட்டதே -அன்றி மற்றோர் உபாயம் என் -8-9-10-
மூ வுலகுக்கும் நாயகன் தன்னடிமை நேர்பட்ட –8-9-11-
ஆபரணஸ்ய ஆபரணம்
ஆபரணத்துக்கும் அழகு கொடுக்கும் பெருமாள்
ஸர்வ பூஷண பூஷார்ஹா -)

———————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

இரண்டாம் திருவந்தாதி- பாசுரங்கள் -61-70– -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை-

November 15, 2016

கீழ்ச் சொன்ன ஆஸ்ரித பாரதந்தர்யம் தன்னை அனுஷ்டித்துக் காட்டின படியைச் சொல்லுகிறார் –

(ஸ்வரூபமும் ரூபமும் ஆஸ்ரித பாரதந்த்ரம் என்றார் கீழ்
இதில் சேஷ்டிதங்களும் அடியார்களுக்காகவே என்கிறார்)

நின்றதோர் பாதம் நிலம் புதைப்ப நீண்ட தோள்
சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் -அன்று
கரு மாணியாய் இரந்த கள்வனை உன்னைப்
பிரமாணித்தார் பெற்ற பேறு —61-

பதவுரை

அன்று கருமாணி ஆய்–முன்பொரு காலத்திலே கரிய கோலப் பிரமசாரியாய்ச் சென்று
இரந்த–(மாவலி பக்கல் மூவடி மண்) யாசித்த
கள்வனே–க்ருத்ரிமனான பெருமானே!
நின்றது ஓர் பாதம்–(பூமியை அளப்பதாக நின்ற ஒரு திருவடியானது
நிலம்–பூ மண்டலத்தை
புதைப்ப–ஆக்ரமித்துக் கொள்ள (அதன் பிறகு)
நீண்ட தோள்–விம்ம வளர்ந்த திருத்தோளானது
திசை எல்லாம் சென்று–திக்குக்களெல்லாவற்றிலும் வியாபித்து
அளந்தது என்பர்–(மேலுலகத்தை) அளந்துகொண்ட தென்று (பெரியோர் செல்லுகின்றனர்) (இப்படி நீ காரியஞ் செய்தவிது)
உன்னை பிரமாணிக்கார் பெற்ற பேறு–உன்னை நம்பினவர்கள் எல்லாரும் பெற்ற புருஷார்த்தமாகும்

ஒரு நினைவற்று இருக்கச் செய்தே நின்றதொரு திருவடிகள் பூமிப பரப்பை அடங்கலும் புறம் தோற்றாதே தன் கீழே
அடங்கும் படி அளந்து கொள்ள -அபிமதம் பெற்ற ப்ரீதி பிரகர்ஷத்தாலே முசிவற வளர்ந்த திருத் தோளானது
திக்குகள் எல்லா வற்றையும் சென்று அளந்து கொண்டது என்று விவஷிதர் சொல்லா நின்றார்கள்-

இந்திரன் கண்ணும் கண்ண நீருமாய்க் கொண்டு திருவடிகளில் வந்து விழுந்த அன்று
ஸ்ரமஹரமான கருத்த நிறமும் இரப்பிலே தகண்
ஏறின ப்ரஹ்மச்சாரி வேஷமும் உடையனாய்க் கொண்டு மகாபலியை சர்வ ஸ்வ அபகாரம் பண்ணின கிருத்ரிமனே
உன்னை அழிய மாறி மஹா பாலி பக்கலிலே கிடந்த பூமியை மீட்டுக் கொண்ட செயல் உன்னிடத்தில் தங்கள் பரத்தைப் பொகட்டு நியஸ்த பரராய் உன்னை விஸ்வசித்து இருந்த ஆஸ்ரிதர் ஆணவர்னர்கள் நிர்ப்பரராய் மார்பிலே கை வைத்து உறங்கும்படி பெற்ற பேறு அன்று
அவர்களுக்கு வைத்த தண்ணீர் பந்தல் என்றபடி
த்ரிவிக்ரம வடிவுடன் செய்த செயல் இது
தன்னது என்ன -அவன் பக்கலிலே இரந்ததாயாய்-வஞ்சித்தாயாய்ச செய்தது
இந்திரன் ஒருத்தனுக்குச் செய்ததேயோ –

ஆஸ்ரித விஷயத்தில் தன்னை அழிய மாறி வஞ்சிக்கும் -தூது போம் -சாரத்யம் பண்ணும் –
எல்லாம் செய்து ரஷிக்கும் என்று
உன்னை பிரமாணித்தவர்கள் மார்விலே கை வைத்து உறங்கும் படி பண்ணினாய் அத்தனை அன்றோ –

(கரே நிபதிதே தோயே வாமனோ பூத் அவாமன -கையிலே மாவலியின் தான நீர் விழுந்த உடனே வாமனன் நெடியோன் ஆனான் –
அடியாருக்காகவே தனது ஸ்வரூபத்தையும் தாழ்த்திக் கொண்டு யாசிப்பதையும் -வஞ்சிப்பதையும்
தூது போவதையும் தேர் ஓட்டுவதையும் மற்றும் பல இழி தொழில்களையும் செய்து அவர்களை ரக்ஷிப்பவன்
என்று மார்பிலே கை வைத்து உறங்கலாம் படி பெற்ற பயன் அன்றோ –
அனைவருக்கும் வைத்த தண்ணீர்ப் பந்தல் அன்றோ இந்தச் செயல் என்கிறார் -)

——————————————————————————————————

இப்படி ஆஸ்ரித பரதந்த்ரனானவனே என் பிரதிபந்தகங்களைப் போக்கி அபேக்ஷிதத்தையும்
தருவான் என்று அவனைப் பற்றினேன் என்கிறார் –

பேறு ஓன்று முன்னறியேன் பெற்றறியேன் பேதமையால்
மாறென்று சொல்லி வணங்கினேன் -ஏறின்
பெருத்த எருத்தம் கோடோசிய பெண் நசையின் பின் போய்
எருத்து இறுத்த நல் ஆயர் ஏறு–62-

பதவுரை

பெண் நசையின் பின் போய்–நப்பின்னைப் பிராட்டி விஷயத்திலுண்டான ஆசைக்கு வசப்பட்டு,
ஏறின்–விருஷபங்களினுடைய
பெருத்த எருத்தம்–பெருத்த முசுப்புகளும்
கோடு–கொம்புகளும்
ஓசிய–முறியும்படியாக
எருத்து–(அந்த ரிஷபங்களின்) கழுத்தை
இறுத்த–முறித்த
நல் ஆயர் ஏறு–விலக்ஷணனான கோபால கிருஷ்ணன்
மாறு–(நமது பாபங்களுக்கெல்லாம்) சத்துருவானவன்.
என்று சொல்லி–என்றெண்ணி
வணங்கினேன்–அவனை ஆஸ்ரயித்தேன்
முன்–இதற்கு முன்பு
பேறு ஒன்றும் அறியேன்–இப்படிப்பட்ட புருஷார்த்தத்தைச் சிறிதும் அறியாதவனாயிருந்தேன்
பேதைமையால்–அப்படி அறியாதிருந்ததனால்
பெற்று அறியேன்–அதனைப் பொறாதும் இழந்தொழிந்தேன்.

ருஷபங்களுடைய வளர்ந்த கழுத்துக்களும் கொம்புகளும் முறியும்படிக்கு ஈடாக நப்பின்னை பிராட்டி பக்கலிலே உண்டான
ஆசையைப் பின் சென்று -அந்த ருஷபங்களுடைய கழுத்தைத் திருத்திப் பொகட்டவனாய் தன்னோடு ஒத்த நல்ல பருவத்தை யுடைய
இடைப் பிள்ளைகளுக்கு எல்லாம் தலைவனாகையாலே வந்த செருக்கை யுடையவனான கிருஷ்ணன்
நம்முடைய பிராப்தி பிரதிபந்தகமான கர்மங்களுக்கு சத்ருவாய் இருக்குமவன் என்று ஆஸ்ரயித்தேன் –

இதுக்கு முன்பு இப்படி இருப்பது ஒரு புருஷார்த்தம் அறியவும் பெற்றிலேன் –
அத்தாலே இப்புருஷார்த்தைப் பெற்று அனுபவிக்கப் பெறாமல் இழந்து போனேன் –
இதுக்கு அடி என் அறிவு கேடு ஐயோ அறிவு கேடு என் படுத்தாது தான் –

(ஸஹஜ ஸ்த்ரீகள் நாம் யாவரும் -அவன் ஒருவனே புருஷோத்தமன்)

(ஞானான் மோக்ஷ அஞ்ஞானாத் ஸம்ஸார —
குண மயீ மம மாயா துரத்யயா -மாமேவ யே ப்ரபத்யந்தே மாயா மேதாம் தரந்திதே -கீதை -7-14-
கச்ச த்வமே நம் சரணம் -என்று உபதேசிக்க
நமஸ் சக்ருர் ஜனார்த்தனம் -என்பதால் வணக்கமே சரணாகதி யாகுமே –
நமக்கு பிரபலமான புருஷகார பலம் -நப்பின்னை -உண்டாய் இருக்க நம் பாபங்களைக் கண்டு சீறி இவனால் உதற முடியாதே
நின் அன்பின் வழி நின்று -பெரியாழ்வார் -3-10-7-ப்ரேம பரதந்த்ரன் அன்றோ)

———————————————————————————————–

அபிமானியான ருத்ரனுடைய சாபத்தைப் போக்குகையாலும் அவனே ஆஸ்ரயணீயன் -என்கிறார் –

ஏறு எழும் வென்று அடர்த்த வெந்தை எரி உருவத்து
ஏறேறி பட்ட விடு சாபம் -பாறேறி
யுண்ட தலை வாய் நிறையக் கோட்டங்கை யொண் குருதி
கண்ட பொருள் சொல்லில் கதை–63-

பதவுரை

ஏறு ஏழும்–ரிஷபங்களேழையும்
வென்று–ஜயித்து
அடர்த்த–தொலைத்த
எந்தை–ஸ்வாமியான கண்ணபிரான்
எரி உருவத்து ஏறு ஏறி பட்ட–நெருப்புப் போன்ற உருவத்தை யுடையவனும் வ்ருஷப வாஹநனுமான ருத்ரன் அநுபவித்த
விடு சாபம்–எல்லாரும் கைவிடும் படியான சாபத்தை (ப்போக்குதற்காக)
பாறு ஏறி உண்ட தலை வாய் நிறைய–பருந்துக்கள் ஏறி யிருந்து உண்ணுதற்குரிய கபாலம் வாய் நிரம்பும்படியாக
கோடு–குவிந்த
அம் கை–அழகிய திருக் கையாலே கீறியெடுத்து அளித்த–

ஒண் குருதி -அழகிய ரத்தத்தாலே–

கண்ட பொருள் அக்கபாலம் கையினின்று கழன்று விழக் கண்ட விஷயத்தை
சொல்லில்–சொல்லத் தொடங்கினால்
கதை–பெரியதொரு பாரத கதையாக முடியும்.

ருஷபங்கள் ஏழையும் ஜெயித்துப் திருகிப் பொகட்ட என் ஸ்வாமியான கிருஷ்ணன் –
நெருப்புப் போலே ஏறிட்டுப் பார்க்க ஒண்ணாத வடிவை யுடையனாய் –
செருக்குப் போக்கு வீடாக ருஷபத்தை மேற்கொண்டு நடத்தக் கடவனுமான ருத்ரன் முன்பு
தலை யறுக்கிற இடத்தில் அனுமதி பண்ணி இருந்து
பின்பு குபிதனாய்க் கொண்டு ப்ரஹ்மா -கபாலீ த்வம் பவிஷ்யசீ –என்று சபிக்க

சாப உபஹதனாய்க் கையும் தலையோடுமாய்க் கொண்டு இரந்து திரியும்படி மறுபாடு உருவப்பட்ட வந்தேறியான சாபத்தை
கழுகும் பருந்தும் பாறு -என்கிற பஷி விசேஷமான அவை மேல் விழுந்து ஜீவித்த தலையோடு வாயளவும் நிறைந்து
ஸ்புடிதம் பஹுதா யாதம்-என்னும்படி –
சில்லுச் சில்லாக வெடித்துப் போம் படி குவிந்த அழகிய திருக் கையாலே
திரு மேனியில் ஒரு பிரதேசத்தைக் கீறி வாங்கித் தெறித்த -அழகிய ரத்தத்தால் கையில் நின்றும் தவிழ்ந்து போம்படி கண்ட
இவ்வர்த்தத்தைச் சொல்ல இழி யில் ஒரு மஹா பாரதத்தோடு ஒக்கும் –

ஈஸ்வரனாகவும் வேண்டா -பாதகியாகவும் வேண்டா –
அங்கை என்றது பாதகத்தைப் போக்க வல்ல அழகிய கை என்றபடி –

ஒண் குருதி -என்றது
அவதாரத்தின் மெய்ப்பாட்டாலே அப்ராக்ருதமான திரு மேனியில் நின்றும்
உண்டானதாகையாலே அடிக் கழஞ்சு பெற்ற குருதி -என்றபடி –

(ஓன்று மா கடல் உருவம் ஓன்று செந்தீ -திரு நெடும் தாண்டகம் -2-
தழல் நிற வண்ணன் குழல் நிற வண்ண -பெரிய திரு -6-1-2-
உருவம் கார் உருவம் எரி -முதல் திரு -5-
வேறு இசைந்த செக்கர் மேனி நீறணிந்த புன் சடைக்
கீறு திங்கள் வைத்தவன் கை வைத்தவன் கபால மிசை
ஊறு செங்குருதியால் நிறைத்த காரணம் தன்னை
ஏறு சென்று அடர்த்த வீச பேசு கூசம் இன்றியே –திருச்சந்த விருத்தம் -42-
கபாலீத்வம் பவிஷ்யஸி -மாத்ஸ்ய புராணம் -சாபத்தால் பீடிக்கப்பட்டு கையும் மண்டை ஓடுமாயத் திரிந்து யாசித்து
வெண் தலைப் புலன் கலங்க உண்ட பாதகத்தன் வன் துயர் -திருச்சந்த -113-
ஸ்புடிதம் பஹுதா யாதம் -மாத்ஸ்ய புராணம் –
ஊறு செங்குருதி-என்றும்
அலங்கல் மார்பில் வாச நீர் -திருச்சந்த -113–
தலை அறுப்புண்டவனும்
தலை அறுத்து சாபம் பெற்றவனும் பரம் பொருள் அல்லரே
அந்த சாபத்தைப் போக்கி அருளினவனே பரம் பொருள்
மாத்ஸ்ய புராணம் -182-அத்யாயம் இந்த வ்ருத்தாந்தம் விவரிக்குமே-
தேவீம் ப்ரதி ருத்ர
தத க்ரோத பரீதேந ஸம் ரக்த நயநேந ச
வாம அங்குஷ்ட நகாக்ரேண சின்னம் தஸ்ய ஸிரோ மயா
ப்ரஹ்மா
யஸ்மாதநபரா தஸ்ய சிரஸ் சின்னம் த்வயா மம
தஸ்மாச் சாப ஸமா விஷ்ட கபாலீத்வம் பவிஷ்யஸி
ருத்ர
ப்ரஹ்ம ஹாஸ் அஸகுலிதோ பூத்வா சரன் தீர்த்தாநி பூதலே
ததோ அஹம் கதவான் தேவி ஹிமவந்தம் சிலோச்சயம்

தத்ர நாராயணஸ ஸ்ரீ மான் மயா பிஷாம் பிரயாசித
ததஸ்தேந ஸ்வகம் பார்ஸ்வம் நகாக்ரேண விதாரிதம்

மஹதீ ஸ்ரவதீ தாரா தஸ்ய ரக்தஸ்ய நிஸ் ஸ்ருதா

விஷ்ணு ப்ரஸாதாத் ஸூ ஸ்ரோணி கபாலம் தத் ஸஹஸ்ரதா
ஸ்புடிதம் பஹுதா யாதம் ஸ்வப்ந லப்தம் தனம் யதா –இவை அங்குள்ள சாரமான ஸ்லோகங்கள்)

———————————————————————————————

இப்படி ஈஸ்வர அபிமானிகளுக்கும் கார்யம் செய்யக் கடவ நீ உன்னால் அல்லது செல்லாத நான்
உன் திரு நாமங்களைச் சொல்லி முழு மிடறு செய்து அனுபவிக்கும் படி
பண்ணி அருள வேணும் என்கிறார் –

(கதை -என்றதும் இதிஹாஸ புராண பெரும் பொருளான  தாத்பர்யமான திரு நாம சங்கீர்த்தனம் பற்றி அருளிச் செய்கிறார்-கலவ் கேஸவ கீர்த்தனம் –
அருகில் சேவிக்க முடியாதவன் திரு நாமங்கள் மூலம் அனுபவித்து மகிழ்வான் அன்றோ-இதற்கும் அவன் திரு உள்ளம் பற்ற வேண்டுமே )

கதையின் பெரும் பொருளும் கண்ணா நின் பேரே
இதையம் இருந்தவையே ஏத்தில்-கதையும்
திருமொழி யாய் நின்ற திருமாலே உன்னைப்
பரு மொழியால் காணப் பணி–64-

பதவுரை

கண்ணா–கண்ண பிரானே!
கதையும்–இதிஹாஸ புராணங்களும்
பெரும் பொருளும்–அவற்றின் சிறந்த அர்த்தங்களும்
இதயம்–அவற்றின் தாற்பரியமும்
இருந்த வையே–உள்ளது உள்ளபடியே
ஏத்தில்–அறிந்து துதித்தால்
நின் பேரே–(அவை யெல்லாம்) உன்னுடைய திரு நாமங்களேயாம்
கதையின் திருமொழி ஆய்நின்ற திருமாலே–இதிஹாஸ புராணங்களின் ஸ்ரீஸூக்தி வடிவமாக நிற்கிற திருமானே!
உன்னை–உன்னை
பரு மொழியால் காண–பரிபூர்ண சப்தங்களாலே கண்டு அது பவிக்கும்படி
பணி–திரு வுள்ளம் பற்ற வேணும்-

சர்வ ஸூலபனான கிருஷ்ணனே -த்வத் வைபவத்தைக் கதை போலே வகை இட்டுப் பரக்கச் சொல்லுகிற அர்த்தங்களும்
அந்த இதிஹாசங்களின் தாத்பர்ய அம்சமும் இருந்தபடியே அறிந்து கொண்டு ஸ்துதிக்கில் –
உன்னுடைய குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான திரு நாமங்களேயாய் இருக்கும் –

உபநிஷத் ஸித்தமான வித்யா விசேஷங்களில் கதை போலே அவன்
குண சேஷ்டிதங்களை விஸ்தரித்துச் சொல்லுகிற அழகிய சப்தங்களுக்கு
உள்ளீடான பொருளாய்க் கொண்டு நின்ற ஸ்ரீ யபதியானவனே-

இப்படி ஸ்ருதி ஸ்ம்ருதி யுப ப்ரும்ஹணங்களாலே பிரதி பாதிக்கப் பட்ட ஸ்ரீ யபதியான உன்னை
இப்படி சப்த த்வாரா காண்கை அன்றிக்கே
ஒரு தேச விசேஷத்திலே வந்து பரிபூர்ணமாக -சதா பஸ்யந்தி -என்று அனுபவித்து –
அனுபவ ஜெனித ப்ரீதிக்கு போக்கு விட்டு
அஹம் அன்னம் அஹம் அன்னம் என்று முழு மிடறு செய்து பேசுகிற பரிபூர்ண சப்தங்களாலே கண்டு
அனுபவிக்கும் படி -திரு உள்ளமாய் அருள வேணும் –

கதையும் திரு மொழியுமாய் நின்ற என்கிற இடத்தில்
கதை என்று இதிஹாசாதிகளையே சொல்லிற்று ஆகவுமாம் –

(கோது கழித்து -கங்கா காங்கேய –எச்சில் வாய் -அசாரம்-சாரம் -சார தரம்-சார தமம்–
தேவதாந்த்ர -உபாயாந்தர -உபயாந்தர -பிரபத்தி மஹா விஸ்வாஸம்-குலையுமே -திரு நாம சங்கீர்த்தனம் தான் தாத்பர்யம்)

(ஸர்வே வேதா கிருஷ்ண
வேதைஸ் ச ஸர்வைர் அஹமேவ வேத்ய -15-15-
ஸத்யம் சத்யம் புநஸ் ஸத்யம் உத்த்ருத்ய புஜ முச்யுதே -வேதாஸ் ஸாஸ்த்ரம் பரம் நாஸ்தி –
த்வம் ஆஸீர் மாத ஸ்ரீ கமி துரித மித்தந்தவ விபவ தத் அந்தர் பாவாத் த்வாம் ந ப்ருத கபி தத்தே ஸ்ருதிரபி –ஸ்ரீ குணரத்ன கோசம் -28-
காணப் பணி
இது போல் ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் கேட்டால் போதாது
தத் விஷ்ணோ பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய -என்று அங்கு கண்டு அனுபவித்து
ஹாவு ஹாவு ஹாவு அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத காம் அந்நாத -என்னவும் பண்ணி அருள வேணும் –
இப் பேற்றை நிர்ஹேதுக கிருபையால் பண்ணி அருள வேணும் என்கிறார் )

—————————————————————————————————–

இப்போது உமக்குச் செய்ய வேண்டுவது ஓன்று உண்டோ –
நீர் எல்லாம் பெற்றீரே காணும் -என்ன
அந்த லாபத்தை அனுசந்தித்துத் தத் அனுரூபமாகப் பரிமாறுகிறார் –

(இங்கேயே இருந்து திவ்ய தேச கைங்கர்யம் என்றும்
அங்கு சென்றும் இதே போல் கைங்கர்யம் தொடர வேண்டும் என்றும்
இரண்டு நிர்வாகங்கள்
மாம் நமஸ்க்ரு பணிந்தேன்)

பணிந்தேன் திரு மேனி பைங்கமலம் கையால்
அணிந்தேன் உன் சேவடி மேல் அன்பாய்த் துணிந்தேன்
புரிந்து ஏத்தி யுன்னைப் புகலிடம் பார்த்து ஆங்கே
இருந்து ஏத்தி வாழும் இது–65-

பதவுரை

திருமேனி–உனது திருமேனியை
பணிந்தேன்–ஸேவித்தேன்-கண்டு பணிந்தேன் -கண்டேன் என்று சொல்ல மாட்டாரே -அஹங்கார கர்ப்பமாக இருக்குமே
உன் சே அடி மேல்–உனது செவ்விய திருவடிகளின் மேல்
பை கமலம்–அழகிய தாமரை மலர்களை
அன்பு ஆய்–அன்பு கொண்டு
கையால் அணிந்தேன்–கையால் ஸமர்ப்பித்தேன்
உன்னை–உன்னை
புரிந்து ஏத்தி–விரும்பித் துதித்து
புகல் இடம் பார்த்து–பரமபதத்திலிருக்குமிருப்பை நோக்கி-இங்கு புறப்பாடு முடிந்து திருக் கோயிலுக்குள்ளே புகும் இடம்  பார்த்து என்றுமாம்
ஆங்கே இருந்து ஏத்தி வாழும் இது துணிந்தேன்–அவ்விடத்திலேயே இருந்து கொண்டு மங்களாசாஸநம் பண்ணி
வாழும் வாழ்ச்சியே உரிய தென்று அத்ய வஸாயங்கொண்டேன்.

ந நமேயம் (வணங்க லில் அரக்கர் )என்னும் படி -ஸ்வாதந்தர்யத்தால் -தலை வணக்கம் அற்ற நான் உன்னுடைய அழகிய திருமேனியைக் கண்டு
ஆழம் கால் பட்டு வேறு அற்ற மரம் போலே (சேஷத்வ )ஸ்வரூப அனுரூபமாக விழுந்தேன் –

அடிமை செய்யா விடில் தரிக்க ஒண்ணாத ப்ரேமத்தை உடையனாய்க் கொண்டு வகுத்த சேஷியான உன்னுடைய சிவந்த
திருவடிகளின் மேலே எடுத்துக் கை நீட்டக் கண்ட கையாலே அழகிய தாமரைப் பூக்களை அழகு பெறச் சாத்தினேன் –

எழுந்து அருளா நின்றால்-முன்னே சேவித்து -முன்புள்ள அழகைக் கண்டு களித்து
உன்னை ஸ்தோத்ரம் பண்ணிப் புக்கு அருளுகிற இடத்திலே
பின்புள்ள அழகைக் கண்டு கால் வாங்க மாட்டாதே அவ்விடம் தன்னிலே இருந்து தேவருடைய ஸம்ருத்தி இப்படி மாறாதே
செல்ல வேணும் என்று புகழ்ந்து மங்களா சாசனம் பண்ணி
இப்படி அனுபவித்து வாழுகை ஆகிற இப்புருஷார்த்தத்தில் வியவஸ்த்தினன் ஆனேன் –

(வா போகு வா -சக்ரவர்த்தி பெருமாள் இடம் -இவர் நம்பெருமாள் இடம்)

அங்கன் இன்றிக்கே –
புகலிடம் -என்கிறது –
அவதார சமாப்தியிலே போய்ப் புக்கருளும் ஸ்ரீ வைகுண்டத்தையாய்
அங்கே சூழ்ந்து இருந்து ஏத்துவார் -என்கிறபடியே –
அவர்கள் நடுவே புக்கு இருந்து ஏத்தி வாழ வேணும் -என்னுமதிலே அத்யவசித்தேன் என்னவுமாம் –
இது திரு மலை நம்பி நிர்வாஹம்-

(த்விதா பஜ்யேய மப் யேவம் ந நமேயம் து கஸ்ய சித்
ஏஷ மே ஸஹஜோ தோஷ ஸ்வ பாவோ துரதிக்ரம -யுத்த –36-11-என்று
வணக்கம் அற்று இருந்த என்னை திருமேனியைக் காட்டி ஐயப்பாடு அறுத்து மேலும் ஆதாரம் பெறுக வைத்தாய்
அகிஞ்சித் கரஸ்ய சேஷத்வ அநு பபத்தி
ஸ்வயம் ப்ரயோஜனமாகவே சாத்தினேன்
கஜ ஸிம்ஹ கதீ வீரவ் ஸார்த்தூலவ் ருஷபோபமவ் -நடை அழகு
பூர்வாங்கா ததிகா பராங்க கலஹம் -முன்னிலும் பின்பு அழகிய பெருமாள்-

இங்கே இருந்து அர்ச்சா ஸ்தலங்களில் பல்லாண்டு பாடி வாழ வேண்டும் பட்டர் நிர்வாகம்

வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே -10-10-9-
ந ச புந ராவர்த்ததே
புணை கொடுக்கிலும் போக ஒட்டார் -பெரியாழ்வார் -4-5-2-
தத் விப்ராஸோ விபன்யவோ ஜாக்ருவாம்ஸ சமிந்ததே
சூழ்ந்து இருந்து ஏத்துவார் பல்லாண்டே
அங்கு புக்கு பல்லாண்டு ஏத்தி வாழ வேணும் -என்பதே திருமலை நம்பி நிர்வாஹம் -)

————————————————————————————————

பகவத் ப்ராவண்யம் பெற்ற அளவு அமையும் -(அன்பால் பைங்கமலம் திருவடிகளில் சாத்தினேன் -என்றாரே கீழே )
அத்தை விட அநர்த்தா வஹமான விஷயாந்தரங்களில் -தோஷத்தை அனுசந்தித்து அருசி பிறக்கையே வேண்டுவது என்கிறார் –

(ருசி பிறந்தமை கீழ் அருளிச் செய்து
ஸாம்ஸாரிக தண்மை -தோஷ தர்சனம் -பண்ணி அருசியும் வளர வேண்டுமே)

இது கண்டாய் நல் நெஞ்சே இப்பிறவி யாவது
இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது -இது கண்டாய்
நாரணன் பேரோதி நரகத்தருகு அணையாக்
காரணமும் வல்லையேல் காண்–66-

பதவுரை

நல் நெஞ்சே–நல்ல மனமே!
இப் பிறவி ஆவது இது கண்டாய்–இந்த ஸம்ஸாரத்தின் கொடுமை இப்படிப் பட்டது காண்.
நாம் உற்றது எல்லாம் இது கண்டாய்–(இந்த ஸம்ஸாரத்தில்) நாம் அநுபவித்த துக்கங்களெல்லாம் இப்படிப் பட்டவை காண்
நாரணன்–ஸ்ரீமந் நாராயணனுடைய
பேர்–திரு நாமங்களை
ஓதி–ஸங்கீர்த்தனம் பண்ணி
நரகத்து–ஸம்ஸாரமாகிற நரகத்தினுடைய
அருகு–ஸமீபத்திலும்
அணையா காரணமும்–நாம் நிற்கலாகாது என்று வெறுப்பதற்குக் காரணமும்
இது கண்டாய்– இந்த ஸம்ஸாரத்தின் தோஷமே காண்;
(இப்படி ஒவ்வொன்றையும் நான் எடுத்து உரைக்க வேண்டாதபடி)
வல்லை ஏல்–நீயே தெரிந்து கொள்ளக் கடவையாகில்
காண்–எல்லாம் தெரிந்து கொள்.

*நல் நெஞ்சே கீழே சொல்லி -வல்லையேல் -இங்கு ஸம்ஸாரத்தின் தண்மை உன்னையும் படுத்தும் அன்றோ)

சம்சாரம் பொல்லாது என்றால் -அதுக்கு இசைந்து என்னோடே ஒரு மிடறான நல்ல நெஞ்சே –
இது நிலை நிற்கும் –
போக்யமாய் இருக்கும் -என்று நாட்டார் பிரமிக்கிற ஆகாரம் இன்றிக்கே –
பகவத் பிரசாதத்தாலே தரிசிக்கும் அளவில் அத்ருஷ்ட தோஷ துஷ்டமான இந்த சம்சாரம் ஆகிறது –
அல்ப அஸ்திரத்தவாதி தோஷ தூஷிதமான இவ்வாகாரத்தோடே கூடின இதுவே கிடாய்

முன்பு அநாதியான காலம் எல்லாம் நன்றாய்த் தோற்றுகிற ஆகாரத்தாலே
நாம் மாறுபாடுருவ துக்க அனுபவம் பண்ணிப் போந்தது இது கிடாய் –

வகுத்த சேஷியான நாராயணனுடைய குணாதிகளுக்கு (ஆதி -சேஷ்டிதங்கள் )வாசகமான திரு நாமங்களை -நிரந்தரமாகச் சொல்லி
சம்சாரம் ஆகிற நரகத்தினுடைய பர்யந்தத்திலும் பிரவேசியாமைக்கு காரணமும்
அஸ்திரத்தவாதி (ஆதி அல்பம் )தோஷங்களால் த்யாஜ்யம் என்னும் ஆகாரம் பிரத்யஷிக்கலாம் படி இருக்கிற இஜ் ஜன்ம சம்பந்தம் கிடாய் –

மேல் எழத் தோற்றுகின்ற நன்மையில் பசை இல்லை –
தோஷமே வேஷம் என்று இத்தைத் தப்பாத படி காண வல்லை யாகில்
நாம் சொன்னது ஒக்கும் என்னும் இடத்தைக் கண்டு கொள்ளு –

(மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷாய
பந்தாயா விஷயா சங்கி
முக்த்யை நிர்விஷயம் மன -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-28-)

————————————————————————————–

இவர் திரு உள்ளத்தைக் குறித்து -சம்சார தோஷத்தைக் காண் -என்ற அநந்தரம் -அவன் நிர்ஹேதுகமாக
தன்னைக் கொண்டு வந்து காட்ட -அதிலே தாம் கண்ட அம்சத்தை அருளிச் செய்கிறார் –

(நம் பெருமையைப் பாராமல் ஸம்ஸார தண்மையையே பார்க்க வேணும் என்று இவர் உபதேசிக்க
பதறி -தோஷமே கண்ணில் படாமல் நம் சொத்தை
பரம விமல திருமேனி -ஆழ்வாரது –
வேறே ஒன்றைக் காண முடியாமல் மானஸ அனுபவம் -கனவில் போல் –
கண்டேன் இங்கேயே –
பின்பு திருக்கண்டேன் அடுத்த ஆழ்வார்
பொன்னாழி கை கண்டேன் அவர்
இவரும் கனலும் சுடர் ஆழி -கண்டேன்)

கண்டேன் திருமேனி யான் கனவில் ஆங்கு அவன் கைக்
கண்டேன் கனலும் சுடர் ஆழி -கண்டேன்
உறு நோய் வினை இரண்டும் ஓட்டுவித்துப பின்னும்
மறு நோய் செறுவான் வலி-67-

பதவுரை

யான்–அடியேன்
கனவில்–ஸ்வப்நம் போன்ற ஸ்வாநுபவத்திலே
திருமேனி–திவ்ய மங்கள விக்ரஹத்தை
கண்டேன்–ஸேவிக்கப் பெற்றேன்
ஆங்கு–அப்போது
அவன் கை–அவனது திருக் கையிலே
கனலும் சுடர் ஆழி கண்டேன்–ஜ்வலிக்கிற சுடர் மயமான திருவாழியைக் கண்டேன்
உறு நோய் வினை இரண்டும்–வந்தேறியாய் இருக்கச் செய்தேயும் ஒன்றி -அனுபவித்தே அற வேண்டிய  மிக்க நோய்களுக்குக் காரணமான புண்ய பாபங்களென்கிற இரண்டு கருமங்களையும்
ஒட்டுவித்து–தொலைத்திட்டு
பின்னும்–பின்னையும்
மறு நோய் செறுவான்–மறு கிளை கிளர்ந்து வரக் கூடிய வாஸநா ருசிகளையும் தொலைத்தருளுமாவனான எம்பெருமானுடைய
வலி–மிடுக்கையும்
கண்டேன்–காணப் பெற்றேன்.

நிர்ஹேதுகமாக அவனாலே அங்கீ க்ருதனான நான் இந்திரிய த்வாரா விட்டு நீட்டிக் காண்கை யன்றிக்கே
ஸ்வப்ன கல்பமாய் –
அதிலும் விசத தமமான ஸ்வ அனுபவ தசையில்
அழகிய திரு மேனியைக் கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –

அப்படிப்பட்ட அழகை யுடையவன் திருக் கையிலே பிரதி பக்ஷத்தின் மேலே சீறு பாறு என்னா நின்றுள்ள
தேஜோ ரூபமான திரு வாழியைக் கண்டேன் –

துறக்க ஒண்ணாத படி ஆத்மாவோடு கூடி துக்க அவஹமான புண்ய பாப ரூப கர்மங்கள் இரண்டையும்
துரத்தி விட்டுப் பின்னையும் மறு கிளை கிளர்ந்து வரக் கடவதாய் –
துக்க ஹேதுவான வாஸனா ருசிகளையும் செறுத்து முடிக்குமவன் மிடுக்கையும் காணப் பெற்றேன் –

(ருக்மாபம் ஸ்வப்ன தீ கம்யம் -மநு ஸ்ம்ருதி -12-122-மானஸ ஸாஷாத் காரம்
ஸூ பாஸ் ரயமான திவ்ய மங்கள விக்ரஹத்தைக் காட்டி அருளி வாஸனா ருசியையும் போக்கி அருளியவனுடைய பலத்தைக் கண்டேன்
தானி ஸர்வாணி ஸம் யம்ய யுக்த ஆஸீத மத் பர -என்று இவ் வர்த்தம் கீதையில் காட்டப்பட்டுள்ளது அன்றோ)

——————————————————————————————-

பிரயோஜனாந்தர பரரே யாகிலும் -தன்னை வந்து அர்த்தித்தால் வருந்தியும் –
அவர்கள் அபேக்ஷித சம்விதானம் பண்ணும் என்கிறார் –

வலி மிக்க வாள் எயிற்று வாள் அவுணர் மாள
வலிமிக்க வாள் வரை மத்தாக -வலி மிக்க
வாணாகம் சுற்றி மறுகக் கடல் கடைந்தான்
கோணாகம் கொம்பு ஒசித்த கோ–68-

பதவுரை

வலி மிக்க–மஹா பலசாலிகளாய்
வாள் எயிற்று–வாள் போன்ற கோரப் பற்களை யுடையராய்
வாள்–வாட் படையை யுடையரான
அவுணர்–ஆஸுர ப்ரக்ருதிகள்
மாள–முடிந்து போவதற்காக
வலி மிக்க வாள் வரை மத்து ஆக–மிக்க வலிவுள்ளதாய் ஒளியை யுடைத்தான மந்தர மலையை மத்தாகக் கொண்ட
வலி மிக்க வாள் நாகம்–அதிகமான சக்தியையும் ஒளியையுமுடைய வாஸுகி நாகத்தை
சுற்றி–கடை கயிறாகச் சுற்றி
கடல் மறுக கடைந்தான்–கடல் குழம்பும்படி கடைந்தருளினவன் (எவனென்றால்)
கோள் நாகம்–மிடுக்கை யுடைய குவலயாபீடமென்னும் மத யானையினது
கொம்பு–கொம்புகளை
ஒசித்த–முறித்தொழித்த
கோ–ஸ்வாமியாவன்

பெரு மிடுக்கராய்-ஒளி விடுகிற எயிற்றை உடையருமாய் சாயுதருமான ஆசூர பிரக்ருதிகள் நசிக்கும் படியாகவும்
தான் நெருங்கின இடத்திலும் பிரிந்து-திரிந்து – போகாத படி கடி நோத்தரமாய்-ஒளி விடுகிற மந்த்ர பர்வதம் மத்தாகவும்
நெடும் போது இடவாய் வலவாய் சுற்றிக் கடைகிற அளவிலும் -அற்றுப் போகாதபடியான மிடுக்கையும்
மலையோடு தேய்ப் புண்கையாலே வந்த ஒளியையும் உடைய வாஸூகியாகிற பாம்பைக் கடை கயிறாகச் சுற்றிக்
கீழ் மண் கொண்டு மேல் மண் எறியும்படியாக கடலைக் கடைந்து அருளினவன் சர்வர்க்கும் வேர்ப் பற்றான

தன் திறத்தில் நலிய வந்த மிடுக்கை யுடைய குவலயா பீடத்தின் கொம்பை அநாயாசேன முறித்துப் பொகட்ட
சர்வ சேஷி கிடீர் –

இத்தால் தம் விரோதியைப் போக்கித் தம்மை எழுதிக் கொண்ட படி சொல்லுகிறது –

(ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான் -பெரிய திரு -5-7-4-
இப்பாசுரத்தால் தமது விரோதிகளை போக்கித் தம்மை தோற்பித்துக் கொண்டான் சர்வேஸ்வரன் என்கிறார்)

——————————————————————————————————-

ஸ்வர்க்கத்தில் தேவர்கள் இவனைப் பற்றி தங்கள் பிரயோஜனம் பெற்ற அளவன்றிக்கே -பூ லோகத்தில்
ராஜாக்களும் இவனைப் பற்றியே தம் தாம் பதம் பெற்றுப் போகா நின்றார்கள் கிடீர் -என்கிறார் –

கோவாகி மாநிலம் காத்து நம் கண் முகப்பே
மாவேகிச செல்கின்ற மன்னவரும் -பூ மேவும்
செங்கமல நாபியான் சேவடிக்கே ஏழ பிறப்பும்
தண் கமலம் ஏய்ந்தார் தமர் –69-

பதவுரை

கோ ஆகி–ராஜாதி ராஜர்களாய்
மா நிலம் காத்து–பரந்த பூ மண்டலத்தை அரசாட்சி புரிந்து
நம் கண் முகப்பே–நம் கண்ணெதிரே
மா ஏகி செல்கின்ற–குதிரை யேறித் திரிகின்ற
மன்னவரும்–அரசர்களும்,
செம் கமலப் பூ மேவும்–செந்தாமரை மலர் பொருந்தி யிருக்கப் பெற்ற
நாபியான்–திரு நாபியை யுடைய பெருமானுடைய
சே அடிக்கே–திருவடிகளுக்கு
ஏழ் பிறப்பும்–பல பல ஜன்மங்களிலே
தண் கமலம்–அழகிய தாமரைப் பூக்களை
ஏய்ந்தார்–ஸமர்ப்பித்தவர்களான
தமர்–பக்தர்களாவர்

சர்வத்துக்கும் ஸ்வாமி களாக முடி சூடி -பரப்பை யுடைத்தான பூமியை -சிறியதை பெரியது நலியாத படி ரக்ஷித்து
நம் கண் வட்டத்தில் குதிரை முதுகே படை வீடாக நடத்திச் செல்கின்ற ராஜாக்களும் -போக்யதை பொருந்தி இருந்துள்ள சிவந்த
தாமரைப் பூவைத் திரு நாபியிலே யுடையனாய் -(பூ புஷ்ப்பம் என்றும் இனிமை -போக்யதை என்றும் )

அத்தாலே சர்வ காரண பூதனான சர்வேஸ்வரனுடைய சிவந்த திருவடிகளிலே
ஜென்மங்கள் தோறும் குளிர்ந்த தாமரைப் பூ முதலான புஷபங்களைச் சாத்தி ஆராதித்த
ஆஸ்ரிதர் கிடீர் -ஏய்ந்தாருடைய (ப்ரஹ்மாதிகளுடைய )தமர் கிடீர் -என்னுதல் –
செங்கமலப் பூ மேவும் நாபியான் -என்னவுமாம் –

பூ வேகும் செங்கமல நாபியான் -என்று பாடமான போது -(எதுகைக்கு இது பொருந்தும் )
பூக்கள் தள்ளும் படியான (வெட்கப்பட்டு ஒதுங்கும் படி )செவ்வியை யுடைய
கமலத்தை நாபியிலே உடையவன் என்று பொருளாகக் கடவது –

முதலாம் திருவுருவம் மூன்று என்பர் ஒன்றே
முதலாகும் மூன்றுக்கும் என்பர் முதல்வா
நிகரிலகு காருருவா நின்னகத்தன்றே
புகரிலகு தாமரையின் பூ –-பெரிய திருவந்தாதி -72-

(ஏய்ந்தார் தமர் -இவனை ஆஸ்ரயித்தவர்களே சக்கரவர்த்திகள் ஆவார் என்றும்
ஏய்ந்தாருடைய தமர் என்று இவரை ஆஸ்ரயித்த ப்ரஹ்மாதிகளை ஆஸ்ரயித்தவர்களும் சக்கரவர்த்திகள் ஆவார் என்றும் கொள்ளலாம் -)

——————————————————————————————————–

இப்படி பிரயோஜனாந்தர பரராய் ஆஸ்ரயிக்கை அன்றிக்கே –
அநந்ய பிரயோஜனராய் தன்னை ஆஸ்ரயித்தவர்களுடைய திரு உள்ளத்தை உகந்து –
அருளின திருப்பதிகள் எல்லாம் ஒரு தட்டும் இது ஒரு தட்டும் என்னும் படி
ஓக்க விரும்பி அவன் பரிமாறும் படியை அருளிச் செய்கிறார் –

(ஆழ்வார் திரு உள்ளத்துக்கு எட்டு திவ்ய தேச வாசமும் ஒவ்வாது -எட்டைச் சொன்னது அனைத்துக்கும் உப லக்ஷணம்
பக்தானாம் -அடியார் உள்ளமே -அவனுக்கு பரம புருஷார்த்தம்

சோழ நாட்டு இரண்டும் -தலை அடை மொழி -தொண்டை நாட்டு -தண் கால் –
தமர் உள்ளும் -திருவேங்கட யாத்திரை மநோ ரதம் -தண் பொருப்பு
வேலை -திருப்பாற்கடல்
தமர் உள்ளும் புண்டரீகர் போல்வார் சிந்திக்கும் திருக்கடல் மல்லை
திருக்கோவில் -இவர்கள் மூவரும்
மதிள் திருக்குடந்தை -இங்கு தானே சாரங்க பாணி -ஸூ ரஷிதம் -திராவிட ஆம்னாய பெருமாள் அன்றோ

இதிஹாச புராணம் -அத்தாலே அது முற்பட்டது -அச்சு எழுத்து குறைவான புராணம் முதலில் சொல்லாமல்
அப்யஹிதம் பொருள் உயர்ந்த ஒன்றை முதலில் சொல்ல வேண்டும்
அதே போல் இங்கும் -அர்த்த கௌரவத்தாலே
வந்தே கோவிந்த தாதவ் -பட்டர் எம்பாரைச் சொல்லி பின்பே கூரத்தாழ்வானை அருளிச் செய்தது போல் இங்கும்
தமர் உள்ளமே அவனுக்கு பரம புருஷார்த்தம் )

தமருள்ளும் தஞ்சை தலை யரங்கம் தண் கால்
தமருள்ளும் தண் பொருப்பு வேலை -தமருள்ளும்
மா மல்லை கோவல் மதிள் குடந்தை என்பரே
ஏவல்ல வெந்தைக்கு இடம் –70-

பதவுரை

தமர் உள்ளம்–பக்தர்களுடைய ஹ்ருதயம்
தஞ்சை–தஞ்சை மா மணிக் கோயில்
தலை அரங்கம்–சிறந்ததான திருவரங்கம்
தண் கால்–திருத் தண் கால்
தமர் உள்ளும்–பக்தர்கள் தியானிக்கிற
தண் பொருப்பு–அழகிய திருமலை
வேலை–திருப்பாற்கடல்
தமர் உள்ளம்–பக்தர்கள் சிந்திக்கிற
மா மல்லை–திருக்கடன்மல்லை
கோவல்–திருக்கோவலூர்
மதிள் குடந்தை–திருமதிள்களோடு கூடிய திருக்குடந்தை (ஆகிய இத்தலங்களெல்லாம்)
ஏவல்ல எந்தைக்கு இடம் என்பர்–எதிரிகளை முடிக்க வல்லவனான எம்பெருமானுக்கு -பெருமாள் கோதண்ட பாணி சக்ரவர்த்தி திரு மகன் –இருப்பிட மென்பர்.

மேல் சொல்லுகிற திருப்பதிகள் எல்லா வற்றிலும் பிரதம உத்தேசியமான ஆஸ்ரிதருடைய ஹிருத்யங்கள் —
தஞ்சை மா மாணிக் கோயில் -திருப்பதிகள் எல்லா வற்றிலும் பிரதானமான பரம பதத்தோடே கூட என்னலாம் படியான கோவில்
திருத் தண் கால் -ஸ்ரீ வைஷ்ணவர் தங்களுக்கு சர்வ ஸ்வம்மாக அனுசந்தித்து இருக்கும் ஸ்ரமஹரமான திருமலை
எல்லா வற்றுக்கும் அடியான திருப் பாற் கடல் -ஆஸ்ரிதரான புண்டரீகாதிகள் தங்களுக்கு உத்தேச்யமாக அனுசந்தித்து இருக்கும்
தறைக் கிடைக் கிடக்கும் திருக் கடல் மல்லை -எங்கள் மூவரோடும் ஓக்க நெருங்கின திருக் கோவலூர்
அரணான மதில்களை யுடைத்தாய் திரு மழிசைப் பிரான் உகந்த திருக் குடந்தை –

ஆகிற இவ்வோ திவ்ய தேசங்கள் எல்லாம்
பிரதி பக்ஷத்தை எய்து விழ விட வல்ல என் ஸ்வாமி யான தசாரதாத் மஜனுக்கு வாசஸ் ஸ்தானமாக
அறிவுடையார் சொல்லா நின்றார்கள்-

ஏ வல்ல வெந்தை-
எய்க்கைக்கு வல்லனான என் ஸ்வாமி -என்றபடி –

(தமர் உள்ளம் -அப்யர் ஹிதம் பூர்வம் -சிறந்த ஒன்றை முதலில் சொல்வதே நியாயம் –
ஹ்ருதயம் தத் விஜா நீயாத் விஸ்வஸ்ய ஆயதனம் மஹத் -என்றும்
நெஞ்சமே நீள் நகர் -திருவாய் -3-8-2-என்கிறபடியே
பெரும் கோயிலை முதலில் சொல்லி
வெள்ளத்து இளம் கோயில் -இரண்டாம் திரு -54-என்றபடியே -ஆராமம் சூழ்ந்த அரங்கம் போன்ற திவ்ய தேசங்களாக இளம் கோயில்கள் எல்லாம்
பிரதிபக்ஷத்தை எய்த்து விழ விட வல்ல தசரதாத்மஜனுக்கு வாசஸ்தானம் என்பர் அறிவுடையோர் என்கிறார்
ஏ வல்ல எந்தை -எய்தற்கு வல்லனான என் ஸ்வாமி என்றபடி -)

——————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

இரண்டாம் திருவந்தாதி- பாசுரங்கள் -51-60– -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை-

November 15, 2016

இப்படி அவன் திரு நாமத்தை சொல்லுகைக்குத் தம் ஈடுபாட்டை அனுசந்தித்தவர் –
நெஞ்சே நீ முந்துற முன்னம் என்னைப் போல் கலங்கி தளராதே
அவன் ஸுந்தரியாதிகளைத் தனித் தனியே தரித்து நின்று அனுபவிக்கப் பார் என்கிறார்-

மதிக் கண்டாய் நெஞ்சே மணி வண்ணன் பாதம்
மதிக் கண்டாய் மற்றவன் பேர் தன்னை -மதிக் கண்டாய்
பேராழி நின்று பெயர்ந்து கடல் கடைந்த
நீராழி வண்ணன் நிறம்———51–

பதவுரை

நெஞ்சே–மனமே!
மணி வண்ணன் பாதம்–நீல மணி வண்ணனான எம்பெருமானது திருவடிகளை
மதி கண்டாய்–அநுஸந்திக்கக் கடவாய்-லாவண்யம் ஸூவுந்தர்யங்களை சொன்னவாறு –
பேர் ஆழி நின்று பெயர்ந்து–பெரிய திருப் பாற் கடலில் நின்றும் துயில் விட்டெழுந்து
கடல் கடைந்த–தேவர்களுக்கு அமுதங்கொடுக்க அக் கடலைக் கடைந்த
மதிக் கண்டாய்–சிந்திக்கக் கடவாய்
மற்று–இன்னமும்
அவன் பேர் தன்னை–அப் பெருமானது திருநாமங்களை
நீராழி வண்ணன் நிறம்–கடல் வண்ணனான அப் பெருமானுடைய திருமேனி நிறத்தை
மதிக் கண்டாய்–நினைக்கக் கடவாய்-

நெஞ்சே நீல மணி போலே இருந்து குளிர்ந்த வடிவை யுடையவன் திருவடிகளை புத்தி பண்ணு கிடாய் –
அதுக்கு மேலே அந்த சர்வேஸ்வரனுடைய அவ்வடிவழகுக்கு வாசகமான திரு நாமங்களை புத்தி பண்ணு கிடாய் –

தன் படுக்கையான பெரிய திருப் பாற் கடலில் நின்றும் பெயர்ந்து எழுந்து இருந்து நின்று –
பிரயோஜனாந்தர பரருக்கு அபேக்ஷித சம் விதானம் பண்ணுகைக்காக அந்தக் கடலைக் கடைந்தவனாய் –
அப்போது ஒரு வெண் கடலைக் கருங்கடல் கடைந்தால் போலே ஆகர்ஷகமாய் தோற்றுகிற
நிறைந்த நீரை யுடைய கடல் போன்ற வடிவை யுடையவன்
திரு நிறத்தை தேவர்களைப் போலே உப்புச் சாற்றை நச்சாதே
புத்தி பண்ணி அனுபவிக்கப் பார் கிடாய் –

(கண்டாய் -ஒவ்வொன்றையும் நன்றாக அனுபவித்து அனுசந்திக்க -சாத் மிக்க சாத் மிக்க-மீண்டும் மீண்டும் அருளிச் செய்கிறார் -)

(தாளும் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பி -விஸ்தாரமான திருமேனியோடே கண் வளரலாம் படியான பெரிய திருப்பாற் கடல்
கடல் கடையும் போதைக்கு ஒரு வெண் கடலை ஒரு கரும் கடல் கடைந்தால் போல் ரமணீயமாய்
கடல் போன்ற திரு நிறமுடையவனது அழகை பொறுக்கப் பொறுக்க அனுபவிக்கப் பாராய் என்கிறார் -)

——————————————————————————————————–

திரு உள்ளத்துக்கு உபதேசிக்க வல்லரான தம்மைக் கலங்கப் பண்ணின ஸ்ரீ யபதி யுடைய வடிவு அழகையும்
பிராட்டி சம்பத்தால் வந்த மிக்க கிருபையையும் அனுசந்தித்து
இது ஓருவருக்கும் நிலம் அல்ல கிடீர் -என்கிறார்

(அகல்விக்கத் தானும் கில்லான் -ஆழ்வாரை விட அவர் திரு உள்ளம் ஸ்ரேஷ்டம்
அத்தை யுடையவர் ஆகையால் ஆழ்வாருக்கும் ஸ்ரேஷ்டம்
மிதுன -சேர்த்தி –அவளாலேயே தர்மம் சாஸ்தாபனம் -இங்கே தர்மம்-ஆன்ரு சம்சயம் கிருபை –
கிருபையையும் அழகையம் -அளவிட்டு அறிய யாவராலும் முடியாதே-தானும் தன் தன்மை அரியான்)

நிறம் கரியன் செய்ய நெடு மலராள் மார்வன்
அறம் பெரியனார் அது அறிவார் -மறம் புரிந்த
வாள் அரக்கன் போல்வானை வானவர் கோன் தானத்து
நீள் இருக்கைக்கு உய்த்தான் நெறி —52–

பதவுரை

நிறம் கரியன்–(காளமேகம் போல்) கருநிறமுள்ளவனும்
செய்ய நெடு மலராள் மார்வன்–சிவந்த நிறத்தையுடையளாய்ப் பெரிய தாமரைப் பூவை யிருப்பிடமாக வுடையளான
பெரிய பிராட்டியாரைத் திரு மார்விலே யுடையனுமான எம்பெருமான்
அறம் பெரியன்–அருளில் பெருத்தவன்

ந்ருஸம் -கருணை இல்லாதவன் -ஆளவந்தார் நைச்யம் பாவித்து அருளிச் செய்துள்ளார் அன்றோ
ஆன்ரு சம்சயம் -தர்மம் -கருணை அதிசயம் –
மறம் புரிந்த வாள்–பகை பாராட்டின
அரக்கன் போல்வானை–வாட் கையனான இராவணன் போன்ற மஹா பலியை
(இராவனைப் போலவே தலை யறுக்க வேண்டியிருந்தும் அது செய்யாமல்)
வானவர் கோன் தானத்து–தேவேந்திரனுடைய லோகமான ஸ்வர்க்கம் போலே விலக்ஷணமான பாதாள லோகத்தில்
நீள் இருக்கைக்கு–நீண்ட காலம் வாழும்படியாக
உய்த்தான்–செலுத்தின அப் பெருமானுடைய
நெறி அது–அவ் வருள் வகையை
ஆர் அறிவார்–யார் தெரிந்து கொள்ள வல்லர்?-

(இந்திர லோகம் போல் பயப்பட வேண்டாத படி நீள் இருக்கையான பாதாள லோகம் என்றுமாம்

யார் அறிவார் -என்பதை ஒவ்வொன்றிலும் சேர்த்து அந்வயம்-அவனது கருணையின் பெருமை யார் அறியார்
அவளால் தான் இது என்பதை என்பதை யார் அறிவார்
மிதுனத்தில் அழகை யார் அறிவார் )

ஆஸ்ரிதருடைய சகல தாபங்களும் போம் படி ஸ்ரமஹரமான கறுத்த நிறத்தை யுடையவனாய் –
அந்நிறத்துக்கு பரபாகமான -சிவந்த நிறத்தை யுடையவளாய் -பெரிய தாமரைப் பூவை இருப்பிடமாக உடையளான
பெரிய பிராட்டியாரைத் திரு மார்விலே யுடையவனாய் -அவளோட்டைத் தோயல் வாசியாலே ஆன்ரு சம்சயம் மிக்கு இருப்பவனாய்

திருவினைப் பிரிக்கை யாகிற குரூரமான செயலைச் செய்த சாயுதனான ராவணனோடு ஒத்து இருந்துள்ள மஹா பலியை
அழியச் செய்யாமல் அவனுடைய உதார குணமே பற்றாசாக -ராஜ்ய ஸ்ரத்தை பண்ணினவன் இழக்கிறது என் என்று

தன்னுடைய ஆன்ரு சம்சயத்தாலே தேவர்களுக்கு நிர்வாஹகனான இந்திரனுடைய ஸ்வர்க்கம் போலே விலக்ஷணமாய் இருக்கும்
பாதாள லோகத்தில் -அவனைப் போலே பரி கொடுத்து கண் பிசைய வேண்டாத படி –
நெடும் காலம் இருக்கைக்குப் பண்ணிக் கொடுத்த சர்வேஸ்வரனுடைய அந்த கிருபா பிரகாரத்தை –
ஆர் தான் அறிவார் -ஒருவராலும் அறியப் போகாது -என்று கருத்து –

(மிதுனச் சேர்த்தி அழகு –
நீல தோயத மத்யஸ்தா வித்யுல்லேகேவ பாஸ்வரா
நீலமுண்ட மின்னன்ன மேனிப்பெருமான் -திரு விருத்தம் -29-
தயா ஸ ராஜ ரிஷி ஸூத அபி ராமயா ஸமேயிவான் உத்தம ராஜ கன்யா
அதீவ ராம ஸூ ஸூபே அதி காமயா விபுஸ் ஸ்ரீ யா விஷ்ணுர் இவாம் அரேஸ்வர -பால -77-80-
ஆன்ரு சம்ஸயம் பரோ தர்ம -ஸூ ந்தர -38-41-
அவள் சம்பந்த்தாலேயே பேர் அருளாளன் ஆகிறான் –
த்வத்த ஏவ மயா ஸ்ருத -ஸூ ந்தர -38-41- அவளுக்கும் அவன் உபதேசித்து அருளுவான்

அருளின் பெருமைக்கு உதாஹரணம் மேல் –

சுரி குழல் கனிவாய்த் திரு வினைப் பிரித்த கொடுமையில் கடுவிசை அரக்கன் -பெரிய திருமொழி -5-7-7-
கோபம் ஆஹாரயத் தீவ்ரம் -ஆரண்ய -24-34-
கோபஸ்ய வஸமே யிவான் -யுத்த -59-136-

யத்ராம்பு விந்யஸ்ய பலீர் மநோ ஜ்ஞாந் அவாப போகான் வஸூதாதலஸ்த
ததா மரத்வம் த்ரித ஸாதி பத்யம் மந்வந்தரம் பூர்ணம பேத ஸத்ரு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-7-30-
தான நீர் வார்த்ததாலேயே இவ்வுலகக போகங்களை அடைத்து மேலே ஒரு மன்வந்தர காலம் எதிரிகளே அற்றவனாய் மூ வுலகையும் ஆளும் தேவேந்திர பதவியும் பெற்றானே
நெறி என்று ஸ்வர்க்கம் போல் சிறந்த பாதாள உலகையும் அருளையும் காட்டும் )

———————————————————————————————————–

இப்படி ஆசூர பிரக்ருதிகள் அளவிலும் அனுக்ரஹ சீலனானவன் சர்வருக்கும் கண்ணாலே காணலாம் படி
வந்து நித்ய வாசம் பண்ணுகிற திருமலை கிடீர் நாங்கள் ஆதரிப்பது -என்கிறார் –

(கா மறு சீர் அவுணன் -அசுரர்களில் தாழ்ந்த நமக்காக அன்றோ திருவேங்கடத்தில் நித்ய வாஸம் செய்து அருளிகிறான்

நெறியார்-இதுவே நிரூபகம் கோயில் காப்பான் வாசல் காப்பான் போல் -இவர்களுக்கு -எம்பெருமான் பொன் மலையில் ஏதேனும் ஆவேனே போல் பாகவத உத்தமர்கள் வழியிலேயே ஊன்றி இருப்பார்களே)

நெறியார் குழல் கற்றை முன்னின்று பின் தாழ்ந்து
அறியாது இளங்கரி என்று எண்ணிப் -பிரியாது
பூங்கொடிகள் வைகும் பொரு புனல் குன்று என்னும்
வேங்கடமே யாம் விரும்பும் வெற்பு –53–

பதவுரை

நெறியார்–திருமலை வழியிலேயே ஊன்றி யிருப்பவர்களுடைய
சூழல் கற்றை முன் நின்று பின் தாழ்ந்து அறியாது–கேச பாச மானது முன்னே முளைத்துப் பின்னே
தொங்கிக் கொண்டிருக்கவும் இது மநுஷ்ய வ்யக்தியென்று தெரிந்து கொள்ளாமல்
இள கிரி என்று எண்ணி–இது ஒரு சிறுமலை யென்று எண்ணிக் கொண்டு
பூங்கொடிகள்–பூங்கொடிகளானவை
பிரியாது–அவ்விடம் விட்டு நீங்காமல்
வைகும்–நித்ய வாஸம் பண்ணப் பெற்றதாய்
பொரு புனல் குன்று என்னும்–அலை யெறிகின்ற ஜல ஸம்ருத்தியை யுடைத்தான திருமலை யென்று ப்ரஸித்தமான
வேங்கடமே–திருவேங்கடமே
யாம் விரும்பும்–நாம் ஆசைப்பட வுரிய
வெற்பு–திருமலையாகும்.

திருமலை ஆழ்வார் உத்தேச்யமாக அனுசந்தித்து -மற்று ஓன்று அறியாதே (சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே -ஏவகாரம் -அவனும் வேண்டாம் )-வழி பட நெடும் காலம் ஆஸ்ரயிக்கிறவர்களுடைய
குழல் கற்றையிலே முன்னே முளைத்துப் பின்னளவும் வர வளர்ந்து -தாழ விழுந்து –
மூச்சு விடுதல் உடம்பு அசைத்தல் செய்யாதே இருக்கிற இருப்பைக் கொண்டு –
சில சேதனர் என்று அறியாதே சிறு மலைகளாய் இருக்கும் என்று புத்தி பண்ணி
அவ்விடத்தை விட்டு நீங்காதே -கண்ட இடம் எங்கும் பரந்து பூத்த கொடிகளானவை -நித்ய வாசம் பண்ணும் ஸ்தலமாய்
தன்னில் தான் திரை பொரா நின்றுள்ள (பொரு புனல் வேங்கடம் )ஜல ஸம்ருத்தியை யுடைத்தாய் அதி பிரசித்தமான
திருமலையே நாங்கள் பிராப்யமாகப் பற்றி இருக்கும் மலை-

(வெறியார் தண் சோலைத் திருவேங்கட மலை மேல் நெறியாய்க் கிடக்கும் நிலை யுடையேனாவேனே -பெருமாள் -4-8-
இதுவே உத்தேச்யம் என்று நெறியைக் கொண்டே இவர்கள் நிரூபகம் -)

—————————————————————————————————–

இப்படி தாம் அவன் உகந்து வர்த்திக்கும் திருமலை அளவும் விரும்புகையாலே
இவனும் தான் உகந்து வர்த்திக்கிற இரண்டு திருமலைகளில் பண்ணும் விருப்பத்தைத்
தம் திரு உள்ளத்தில் ஒன்றிலும் பண்ணிக் கொண்டு மேலே விழுகிற படியை அருளிச் செய்கிறார் –

(திருக் கடித்தானமும் என்னுடைச் சிந்தையும் –ஏறி வந்த ஏணி போல் -க்ருத்தஞ்ஞா கந்தம்)

வெற்பு என்று இரும் சோலை வேங்கடம் என்று இவ்விரண்டும்
நிற்பென்று நீ மதிக்கும் நீர்மை போல் -நிற்பென்று
உளம் கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன் வெள்ளத்து
இளம் கோயில் கை விடேல் என்று –54-

பதவுரை

வெற்பு என்ற–(தெற்கு) திருமலை யென்னப்படுகிற
இருஞ்சோலை–திருமாலிருஞ் சோலை யென்ன
வேங்கடம்–திருவேங்கடமென்ன
என்ன இவ் இரண்டும்–ஆகிய இத் திருமலைகளிரண்டும்
நிற்பு என்று–நாம் உகந்து வாழுமிடமென்று
நீ மதிக்கும் நீர்மை போல்–நீ திருவுள்ளம் பற்றி யிருக்குந் தன்மையை உடைத்தாயிருப்பது போலவே
உளம் கோயில்–(என்னுடைய) ஹ்ருதயமாகிற கோயிலும்
நிற்பு என்று–நீ உகந்து வாழுமிடமென்று
உள்ளம் வைத்து–பிரதிபத்தி பண்ணி
வெள்ளத்து இளம் கோவில்–திருப் பாற்கடலாகிற பாலாலயத்தை
கை விடேல் என்று–கைவிட வேண்டா என்ற
உள்ளினேன்–பிரார்த்திக்கின்றேன்.

(உள்ளினேன்-உள்ளம் வைத்ததாய் என்பதை நான் நினைத்தேன் என்றும்
கை விடேல் என்றும் உள்ளினேன்)

திருமால் இருஞ்சோலை மலை என்றும் திரு வேங்கடம் என்றும் திரு நாமத்தை யுடைத்தான
பெரிய திருமலை என்றும் சொல்லப் படுகிற இரண்டு ஸ்தானமும்
நாம் உகந்து வர்த்திக்கிற வாசஸ் ஸ்தானம் என்று நீ புத்தி பண்ணும் ஆதரிக்கும் ஸ்வ பாவம் போலே –

என்னுடைய ஹ்ருதயம் என்கிற வாசஸ் ஸ்தானமும் நீ உகந்து நித்ய வாசம் பண்ணும் ஸ்தானம் என்று
புத்தி பண்ணி என்னுடைய ஹிருதயத்தில் பண்ணுகிற அபிநிவேச அதிசயம் இருந்த படியால் அவ்வவ திருமலைகளில்
நிலை நிற்கும் படியும் -என் ஹிருதயம் திருந்தும் அளவும் வாசஸ் ஸ்தானமாக கர்ப்பித்ததான திருப் பாற் கடலாகிற
பாலாலயத்தையும் விடாத தேடுகிறாயோ என்று நினைத்து –

என் பக்கல் வருகைக்கு கிருஷி பண்ணின அவ்விடத்தை
க்ருதஜ்ஜத்தை தோற்றவும்-உன் உகப்பைப் பற்றவும் –
பிரானே கை விடாது ஒழிய வேணும் -என்று பிரார்த்தித்தேன் –

(மதுர கவி ஆழ்வார் கரிய கோலத் திருக் கோயில் காண்பது ஆழ்வார் திரு உள்ளம் உகப்புக்காக
ஆழ்வார் திரு உள்ளம் உகப்பதால் பெருமாளையும் இவற்றைக் கைவிடக் கூடாது என்கிறார்
மதுரகவி நிஷ்டையை அவனும் உகப்பானே)

(திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே–10-7-8-

தலை மேல் புனைந்தேன் சரணங்கள் ஆலின்
இலைமேல் துயின்றான் இமையோர் வணங்க
மலைமேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை
நிலை பேர்க்கல் ஆகாமை நிச்சித்து இருந்தேனே–10-4-4-

கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும்
புல்லென்று ஒழிந்தன கொல் ஏ பாவம் வெல்ல
நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான்
அடியேனது உள்ளத் தகம்–-பெரிய திருவந்தாதி –68-

நாகத்தணைக் குடந்தை வெக்கா திரு எவ்வுள்
நாகத்தணை யரங்கம் பேரன்பில் –நாகத்
தணைப் பாற் கடல் கிடக்கும் ஆதி நெடுமால்
அணைப்பார் கருத்தானாவான்–நான்முகன் திரு -36-

பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என்
மனக்கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ
தனிக்கடலே தனிச் சுடரே தனி உலகே என்று என்று
உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினையே –பெரியாழ்வார் –5- 4-9 –

ஹ்ருதயம் தத் விஜா நீயாத் விஸ்வஸ்ய ஆயதனம் மஹத் –

திருமாலிரும் சோலை மலையே–என்கிறபடியே -உகந்து அருளினை நிலங்கள் எல்லாவற்றிலும் பண்ணும் விருப்பத்தை இவனுடைய சரீர ஏக தேசத்திலே பண்ணும் –ஸ்ரீ வசன பூஷணம் –ஸ்ரீ வசன பூஷணம் -சூர்ணிகை -170-

அங்குத்தை வாசம் சாதனம் –இங்குத்தை வாசம் சாத்யம் –சூர்ணிகை-171-

கல்லும் கனை கடலும் –பெரிய திருவந்தாதி – 68-என்கிறபடியே-இது சித்தித்தால் –அவற்றில் ஆதாரம் மட்டமாய் இருக்கும் –சூரணை -174-

இளம் கோவில் கை விடேல் –இரண்டாம் திருவந்தாதி -54-என்று இவன் பிரார்த்திக்க வேண்டும் படியாய் இருக்கும் –சூரணை -173-

ப்ராப்ய ப்ரீதி விஷயத் வத்தாலும்–க்ருதஞ்சதையாலும்–பின்பு அவை அபிமதங்களாய் இருக்கும் —சூரணை -174-)

—————————————————————————————–

இப்படி தேவர் என் பக்கல் விருப்பத்தைப் பண்ணுகையாலே ஞான லாபத்தில் குறைவற்றேன்
தத் பலமான ப்ராப்தியால் வரும் அனுபவத்தையும் தேவர் தாமே பண்ணித் தந்து அருள வேணும் -என்கிறார் –

(ஞானம் -மதி நலம் அருளினாய் -ஞப்த்தி பல முக்தி தலை சேர வேண்டாமோ -அதுக்குப் பலமாக பரம புருஷார்த்தமும் அருள வேண்டாமோ
இன்பக் கடலாழி நீ யருளிக் காண்–55–உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் -நம்மாழ்வார் இந்த பாசுரம் அடியாகவே அருளிச் செய்கிறார்
ஏழு பிறப்பும் -அதிலும் எப்பொழுதும் -எல்லா நிலைகளிலும் ஸ்திரமாக -நின்று அருளிய படியால்
என்றும் மறந்து அறியேன் –இந்த அவஸ்தை உண்டாக்கி கூப்பிட வைத்து அருளினாய்)

(பிராட்டி சொல்ல ஸ்ரோத்வயா கேட்டுக்கொண்டு
மனனம் பண்ணி
யாதானும் பற்றி நீங்கும் விரதம் கொண்ட தப்பி ஒடம்ப பார்க்க
நிதித்யாசித்வய
ஏழு பிறப்பும் நினைத்தீர்
எப்பொழுதும் நினைத்தீர்
நிலை நின்று நினைத்தீர்
ஆக ஆத்மா கேட்டு மனனம் பண்ணி நிதித்யாஸவ்ய-பண்ணும் க்ருத்யம் நீயே ஏறிட்டுக் கொண்டாயே)

என்றும் மறந்து அறியேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
நின்று நினைப்பு ஒழியா நீர்மையால் -வென்றி
அடல் ஆழி கொண்ட வறிவனே இன்பக்
கடலாழி நீ யருளிக் காண்–55-

பதவுரை

வென்றி–ஜய சீலமாய்
அடல்–தீக்ஷணமான
ஆழி–சக்கரத்தை
அறிவனே–ஸர்வஜ்ஞனான பெருமானே!
ஏழ் பிறப்பும்–இப்படியிருக்கிற நீ எல்லா ஜன்மங்களிலும்
எப்பொழுதும்–எல்லா அவஸ்தைகளிலும்
நின்று நினைப்பு ஒழியா நீர்மையால்–ஒரு படிப்பட நின்று என்னைப் பற்றின நினைவு தப்பாமலிருந்ததனால்
என்றும் மறந்தறியேன்–உன்னை ஒருநாளும் மறப் பனல்லேன்
இன்பம் கடல் ஆழி–ஆநந்த ஸாகரத்தையும்
அருளிக் காண்–எனக்கு அருள வேணும்.

பிரபல பிரதிபந்தகங்களை அநாயாசேன போக்குகையாலே –
வரும் வெற்றி பெற்று யுடையனாய் யுத்த உன்முகனான திரு வாழியை -விரோதி நிரசன தவரையால்
எப்போதும் கையிலே கொண்டு இருக்குமவனாய் –
அஞ்ஞான அசக்தியாதிகளுக்கு கொள்கலமான என்னால் உன்னைப் பெற ஒண்ணாது –

ஞான சக்தி யாதிகளாலே குறைவற்ற உன்னாலே
உன்னைப் பெற வேணும் என்னும் இடத்தை பத்தும் பத்தாக அறிந்து இருக்கும் சர்வஞ்ஞனே–
இப்படி இருக்கிற நீ எல்லா ஜென்மங்களிலும்
எல்லா அவஸ்தைகளிலும் எதிர் சூழல் புக்கு இவன் நம்மை மறவாமல் பெற்றிடுவானுக்கு –

என்று நினைக்கும் நினைவு ஒருநாளும் மாறாதே
போருகிற ஸ்வ பாவத்தால் சர்வ காலத்திலும் தேவரீரை மறந்து அறியேன் —
இப்படி பேற்றுக்கு உறுப்பான ஞானத்தில் கண் அழிவு அறுத்துத் தந்த நீ
ஞான பலமாக ஒரு தேச விசேஷத்திலே போந்து பரி பூர்ணமாக உன்னை அனுபவித்து விளையக் கடவ
அபரிச்சின்னமான ஆனந்த சமுத்திரத்தை தந்து அருள வேணும் காண் —

கடல் என்றும் ஆழி என்றும்
மீ மிசைச் சொல்லாய்
மிகவும் நிரதிசய ஆனந்தத்தைச் சொன்னபடி –

(எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய -திருவாய் -2-7-6-என்கிறபடியே
எல்லாக் காலத்திலும் என்னைப் பற்றிய நிலையான நினைவு தன்மை உனக்கு இருக்கையாலே
நான் இப்பிறவியிலே உன்னை என்றும் அறியாத பெருமை பெற்றேன் –
என்னை நியமிக்க வல்ல உன்னாலே பெற்ற பேறு அன்றோ இது –
ஏழு பிறப்பு என்றது எக் காலத்தையும்
எப்பொழுதும் -எல்லா அவஸ்தைகளிலும் நிலைகளிலும் என்றவாறு
என்றும் மறந்து அறியேன் -என்னும்படியான ஞானத்தை விளைத்த நீயே அதன் பலனாக மோக்ஷத்தையும் தந்து அருள வேணும் –
உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் -என்னுமா போலே –
இன்பக் கடல் ஆழி -பேர் இன்பம் -ஏஷ ஹ்யேவ ஆனந்தயாதி-தைத்ரியம் -7-1- இவனே ஆனந்தம் அடைவிக்கிறான் )

—————————————————————————————————————-

இப்படி பேறு அவனாலே என்று நிச்சயித்த பின்பு அருள் (அருளுவாய் )என்று கொண்டு வடிம்பிட்டு (மடி பிடித்து )நிர்பந்திக்கக் கடவதோ என்ன
ப்ரேமம் அடியாக வந்த இருட்சி (நமக்கோ அஞ்ஞானம் அடியாக வந்த இருட்சி )உடையாருக்கு பற்றாசும் அங்கே உண்டாய் இருக்க ஆறி இருக்கப் போமோ -என்கிறார் –

காணக் கழி காதல் கை மிக்குக் காட்டினால்
நாணப் படும் என்றால் நாணுமே –பேணிக்
கருமாலைப் பொன் மேனி காட்டா முன் காட்டும்
திருமாலை நாங்கள் திரு —56-

திருமாலை காண கழி காதல்–எம்பெருமானை ஸேவிக்க வேணுமென்று மிகுந்த விருப்பம்
கை மிக்கு காட்டினால் நாணப்பம என்றால்–மேன்மேலும் அதிகரித்தால்
அடங்கியிருக்க வேணுமென்றால் அடங்கி யிருக்க முடியுமோ?கருமாலை–கரிய திருமாலாகிய அப்பெருமானை
பொன் மேனி காட்டா முன்–அவனது அழகிய திருமேனி தானே காட்டிக் கொடுப்பதற்கு முன்னே-குணம் ஸ்வரூபம் காண முடியாதே -திருமேனி மூலமாகவே அறியலாம்
நாங்கள் திரு–நமக்குப் புருஷகார பூதையான் பிராட்டி
பேணி–விரும்பி
காட்டும்–காட்டிக் கொடுப்பள்-உக்கமும் தட்டொளியும் உன் மணாளனையும் தந்து -பிரார்த்திக்கும் படி உண்டே

காணக் காண பழைய நிலை கழிந்து மேன்மேல் என வளர்ந்து வருகிற ப்ரேமமானது என்னால் அமைக்க ஒண்ணாதபடி
கை கழிந்து விட்டால் -அவனே வந்து மேல் விழும் அளவும் நாம் பதறுகை ஸ்வரூப ஹானி என்று லஜ்ஜித்து
ஓர் இடத்தில் ஒதுங்கி இருக்க வேணும் என்று விசாரித்தால் –

அப்படி முறை (ஸ்வரூபம்)பார்த்து -தத் தஸ்ய சத்ருசம் பவேத் –என்று ஆறி இருக்கப் போமோ –

அதுக்கு மேலே ஸ்ரமஹரமான கறுத்த நிறத்தை யுடைய சர்வாதிகனாய் ஸ்ரீயபதியானவனை-
அத்யுஜ்ஜ்வலமாய் -ஸ்ப்ருஹணீயமான வடிவு காட்டுவதுக்கு முன்னே

நமக்கு ஸ்வாமி நியான பெரிய பிராட்டியார் -ஆதரித்துக் கொண்டு வந்து காட்டும் –

நகச்சின் நபராத்யதி -என்று மேல் விழுந்து சேர்க்கும் பிரபல புருஷ காரம் உண்டான பின்பு –
முறைக்குச் சேராது பதறுகை -என்று லஜ்ஜித்து ஆறி இருக்கப் போமோ -என்கிறபடி –

கண்டு அல்லது கழியாத காதல் -என்னவுமாம் –

(திருமேனி உபாயம் -உபாய பாவத்தை அவன் காட்டும் முன்பு பிராட்டி புருஷகாரம் பண்ண வேண்டுமே
திருமேனி உபாயம் என்பதுக்கு சிந்தயந்தி உதாஹரணம் -மானஸ ப்ரத்யக்ஷம் ஒன்றாலே பேறு பெற்றாள்
மாலாகாரர் -திரு மேனி காட்ட வந்தாயே -ஸூவுந்தர்ய ஸுசீல்ய குண ஆவிஷ்காரத்தால் அக்ரூர மாலாகார்களை பரம பாகவதர்களாக ஆக்கி அருளினாய் -கீதா பாஷ்யம் -)

(கழிய மிக்கதோர் காதல் காதலள்-திருவாய் -5-5-10-பேர் அமர் காதல் -பின் நின்ற காதல் -கழிய மிக்கதொரு காதல் -மூன்று திருவாய் மொழிகளில்
கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் -திரு விருத்தம் – 97-காலம் கழிய கழிய காதல் மிக்கும் என்றும் -கண்டால் தான் கழியும் காதல் என்றுமாம்
புருஷகார பூதையான தாயாரும் அங்கே இருக்க -தத் தஸ்ய ஸத்ருசம் பவேத் -ஸூ ந்தர -39-30-என்று ஆறி இருக்க ஒண்ணாத தசை
சிந்த யந்தீ ஜகத் ஸூதிம் பர ப்ரஹ்ம ஸ்வரூபிணம்
நிருச்ச் வாஸ தயா முக்திம் கதான்யா கோப கன்யகா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-22-
ப்ரஸாத பரமவ் நாதவ் மம கேஹம் உபாகதவ்
தன்யோஹம் அர்ச்சியிஷ்யாமீ த்யாஹ மால்ய உப ஜீவந -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-19-21-
ஸுந்தர்ய ஸுசீல்யாதி குண ஆவிஷ் காரேண அக்ரூர மாலாகாராதீந் பரம பாகவதான் க்ருத்வா -ஸ்ரீ கீதா பாஷ்ய ப்ரவேஸம்
கிம் ஏதத் நிர்த்தோஷ க இஹ ஜகதி –ஸ்ரீ குணரத்ன கோசம் -உசித உபாயங்களால் அவன் கோபத்தை ஆற்றுவாள்
தேந மைத்ரீ பவது -ஸூ ந்தர -21-21- அருள் உபதேசத்தாலும் அருள் நோக்காலும் இவனைத் திருத்துவாள்
அவனை அழகாலே திருத்துவாள் -இவனை அருளாலே திருத்துவாள்
இவளை உபாயமாகக் கொண்டால் உபாய நைரபேஷ்யத்துக்குக் குறை வருமே
லஷ்மீ புருஷகாரத்வே நிர் திஷ்டா பரமர் ஷிபி
மமாபி ச மதம் ஹ்யேதத் நான்யதா லக்ஷணம் பவேத் -ஸ்ரீ பாஞ்சராத்ர ஸாஸ்த்ரம்
ந கச்சின் ந அபராத்யதி -யுத்த -146-44-சேரவிடும் புருஷகார பூதையும் அங்கமு இருக்க ஆறி இருக்க ஒட்டுமோ -)

————————————————————————————————–

இப்படி பெரிய பிராட்டியாரோடே கூடி இருந்துள்ளவன் கிடி கோள்-சர்வ ஸமாஸ்ரயணீயன் -என்கிறது –

திருமங்கை நின்றருளும் தெய்வம் நா வாழ்த்தும்
கருமம் கடைப்படிமின் கண்டீர் -உரிமையால்
ஏத்தினோம் பாதம் இரும் தடக்கை எந்தை பேர்
நாற்றிசையும் கேட்டீரே நாம்–57-

பதவுரை

திரு மங்கை–பெரிய பிராட்டியார்
நின்றருளும் தெய்வம்–நித்யவாஸஞ் செய்யப் பெற்ற எம்பெருமானை
நா வாழ்த்தும் கருமம்–நாவினாலே வாழத்துகையாகிற காரியத்தை
பாதம்–திருவடிகளையும்
பேர்–திருநாமங்களையும்
உரிமையால்–ஸ்வரூப ப்ராப்தியாலே
ஏத்தினோம்–போற்றுமவர்களாயிராநின்றோம்
கடைப்பிடி மின் கண்டீர்–உறுதியாகப் பற்றுங்கள்
நாம்–நாமோவென்றால்
இரும் தடக்கை எந்தை–மிக நீண்ட திருக்கைகளை யுடையனான எம்பெருமானுடைய (இவ்விஷயத்தை)
நால் திசையும்–நான்கு திசைகளிலுமுள்ளீர்!
கேட்டீரே–கேட்டீர்களோ?

ஸ்வ சம்பந்தத்தாலே அவனுக்கு சர்வ உத்கர்ஷத்தையும் யுண்டாக்க வல்ல ஸ்வ பாவத்தை யுடையளாய்
போக யோக்கியமான பருவத்தையும் யுடையளான -பெரிய பிராட்டியார் -இறையும் அகலகில்லேன் என்று
இடைவிடாமல் உறையும்படி இருக்கிற சர்வாதிகனானவனை –
நாவால் ஸ்தோத்ரம் பண்ணுகை யாகிற கார்யத்திலே ஒருப்படுங்கோள் கிடிகோள் –

முறை அறிந்த மாத்திரம் ஒழிய அவ் விஷயத்தைப் பற்றுகைக்கு ஈடான நன்மைகள்
ஒன்றும் அற்ற அயோக்யரான நாம் –
பணைத்து வளர்ந்த திருத் தோள்களை யுடைய என் ஸ்வாமி யானவனுடைய திருவடிகளை
நமக்கு வகுத்த சேஷி யன்றோ -என்கிற பிராப்தியாலே அவன் திரு நாமங்களைக் கொண்டு ஏத்தினோம் –

இவ் வர்த்தத்தை நாலு வகைப்பட்ட திக்கில் உள்ளார் எல்லாரும் கேட்டீர்களே –
கடைப் பிடிமின் கண்டீர் –

இத்தை ஓலக்க வார்த்தை என்று இராதே புத்தி பண்ணுங்கோள் கிடி கோள் -என்னவுமாம் –

(ஸ்ரீர் இத்யேவ ச நாம தே பகவதி ப்ரூம கதம் த்வாம் வயம் -ஸ்ரீ சதுஸ்லோகி -1-
விஷ்ணோர் ஸ்ரீ -ஸ்ரீ விஷ்ணு புராணம்
உன் திரு -திருவாய் -10-10-2-
ஸ்வத ஸ்ரீ ஸ்தவம் விஷ்ணோ ஸ்வமஸி தத ஏவைஷ பகவான்
த்வதா யத்யர்த்தி த்வேப்ய பவத பராதீன விபவ
ஸ்வயா தீப்த்யா ரத்னம் பவமஹார்க்கம் ந வி குணம்
ந குண்ட ஸ்வா தந்தர்யம் பவதி ச ந சான்யா ஹித குணம் –ஸ்ரீ குணரத்ன கோசம்
ரத்ன பிரபா புஷ்ப பரிமள நியாயத்தாலே பர ப்ரஹ்மத்துவத்துக்குக் குறையில்லையே –
யுவதிஸ் ச குமாரிணி -யுவஸ்ய குமார –
அபாங்கா பூயாம் ஸோ யது பரி பரம் ப்ரஹ்ம தத பூத் —ஆழ்வான் அவளது பூர்ண கடாக்ஷத்தாலே பரம் பொருளானதே
வேதாந்தாஸ் தத்வ சிந்தாம் முரபிதுரஸி யத் பாத சிஹ்னைஸ் தரந்தி -பட்டர்
அகலகில்லேன் இறையும் -6-10-10-)

———————————————————————————–

நமக்கு இந்த நன்மை எல்லாம் உண்டாய்த்து -சர்வேஸ்வரனுடைய கடாக்ஷத்தாலே -என்கிறார் –

நாம் பெற்ற நன்மையையும் நா மங்கை நன்னெஞ்சத்து
ஓம்பி இருந்து எம்மை ஓதுவித்து -வேம்பின்
பொருள் நீர்மை யாயினும் பொன்னாழி பாடென்று
அருள் நீர்மை தந்த வருள்–58-

பதவுரை

வேம்பு பொருளின் நீர்மை ஆயினும்–(எம்பெருமானைப் பாடுவதானது) வேம்பு என்னும்
வஸ்துவின் ஸ்வபாவம் போலே கைப்பதாகத் தோன்றினாலும்
பொன் ஆழி–அழகிய திருவாழியை (கையுந்திருவாழியுமான சோத்தி யழகை)
பாடு என்று–பாடக் கடவாய் என்று
நா மங்கை–ஸரஸ்வதி யானவள்
நெஞ்சத்து–(நமது) நல்ல நெஞ்சிலே
ஒம்பி இருந்து–ஆதரித்து இருந்து  நீர்மைக் கொண்டு
எம்மை–
ஓது வித்து–பகவத் விஷயத்தைப் பாடச் செய்ததனால்
நாம் பெற்று நன்மையும்–தாம் அடைந்த ஸுஹ்ருதமும் (எதனாலே வந்ததென்னில்)
அருள் நீர்மை தந்த அருள்–அருளையே இயல்வாக வுடைய ஸர்வேச்வரன் அருளிய க்ருபையினாலே வந்தது.

வேம்பாகிற பதார்த்தத்தினுடைய ஸ்வ பாவம் போலே -இவ் விஷயத்தை ஏத்துகை யாகிற இது
அத்யந்த விரசமாய் இருந்ததே யாகிலும்
ஸ்ப்ருஹணீயமான திரு வாழியும் கையுமான சேர்த்தி அழகை ப்ரீதிக்குப் போக்கு விட்டுப் பாடு -என்று
சரஸ்வதி யானவள் – நமக்கு இருந்து திருத்துகைக்கு நல்ல ஸ்தலமாய் இருந்தது என்று ஆதரிக்கும் படி
விலக்ஷணமான நெஞ்சிலே முகம் கருக நியமியாமல்
நம் நினைவிலே தன்னை அமைத்து ராஜ புத்திரர்களை பள்ளி ஓதுவிப்பாரைப் போலே
அனுவர்த்தித்துக் கொண்டு இருந்து நம்மை சந்தையிட்டு ஓதுவித்து நாம் அலாப்ய லாபமாகப் பெற்ற
அனுபவத்துக்குப் போக்கு வீடாகக் கவி பாடுகை யாகிற இந்த பரம புருஷார்த்தமும்
அருளுகையே ஸ்வ பாவமாக யுடையனான சர்வேஸ்வரன் நிர்ஹேதுகமாக
சர்வ ஸ்வதானம் பண்ணின பிரசாதம் அடியாக வந்ததாய் இருக்கும் –

(லோகே வநஸ் பதி ப்ருஹஸ் பதி தார தம்யம் யஸ்யா
கடாக்ஷ பரிணாம முதா ஹரந்தி ஸா பாரதீ பகவதீ -ஸ்ரீ ஸ்தவம்
கருக்கோட்டியுள் கிடந்து கை தொழுதேன் கண்டேன் திருக்கோட்டி எந்தை திறம் -87-
ஸர்வ ரஸ -ஸர்வ கந்த
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஓத்தே -திருவாய் -2-3-1-
வேம்பின் –பாடு என்று ஓதுவித்து -என்று அந்வயம் -ஸ்ரீ அப்பிள்ளை
வேம்பின் –பாடு என்று அருள் நீர்மை தந்த அருள் -என்று அந்வயம் –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை )

——————————————————————————————————–

இந்த லாபத்துக்கு அடியாக அடியிலே அவன் நிர்ஹேதுகமாக தம்மைக் கடாஷித்த படி -சொல்லுகிறார் –

அருள் புரிந்த சிந்தை அடியார் மேல் வைத்து
பொருள் தெரிந்து காண்குற்ற வப்போது –இருள் திரிந்து
நோக்கினேன் நோக்கி நினைந்தேன் தொண் கமலம்
ஓக்கினேன் என்னையும் அங்கு ஓர்ந்து–59-

பதவுரை

அருள் புரிந்த சிந்தை–அருளோடு கூடின திருவுள்ளத்தை
அடியார் மேல் வைத்து–அடியவராகிய எங்கள் மேலே வைத்து
பொருள் தெரிந்து–அபதார்த்தமாகத் திருவுள்ளம் பற்றி
காண்குற்ற அப்போது–கடாக்ஷித்தருளுகிற காலத்திலே-பொருள் அல்லாத -நம்மை பொருளாக ஆக்கி -கடாக்ஷத்தாலே பொருள் ஆவோம்
இருள் திரிந்து–அஜ்ஞான விருள் நீங்கப் பெற்று
நோக்கினேன்–ஸ்வரூபத்தை ஆராய்ந்தேன்
நோக்கி–அப்படி ஆராய்ந்து
ஒண் கமலம் அது–அழகிய தாமரை மலர்களை என்னலாம் படி யுள்ள அத் திருவடிகளை
நினைந்தேன்–(ப்ராப்யமாக அநுஸ்ந்தித்தேன்
ஓர்ந்து–(இத் திருவடிகள் தவிர நமக்கு வேறு புகலில்லை யென்று நிரூபித்து
என்னையும்–ஆத்மாவையும்
அங்கு–அத் திருவடிகளிலே
ஒக்கினேன்–ஸமர்ப்பித்தேன்.-பிராபகமும் இதுவே –

அருளி அல்லது நிற்க ஒண்ணாத படி அருளிலே நோக்கான தேவருடைய திரு உள்ளத்தை -அருளுகைக்கு அடியான
சேஷத்வ ப்ராப்தியை யுடையரான -எங்கள் மேலே பரிபூர்ணமாக வைத்து -எங்களை ஒரு வஸ்து பூதராக நிரூபித்து
கடாக்ஷித்து அருளுகிற அந்த க்ஷணத்தில் அஞ்ஞானம் ஆகிற இருள் அடங்கலும் போன வழி தெரியாத படி சிதறிப் போய்
தேவர் சேஷீ நாம் சேஷம் -என்று இவருடைய ஸ்வரூபத்தையும் தெளியக் கண்டேன் –

(பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி என்றும்
அர்த்த பஞ்சக ஞானம் வந்த பின்பு என்றும்)

இப்படி இரண்டு தலையையும் யதாவாக தரிசித்து -தேவருடைய அழகிய தாமரை போலே நிரதிசய போக்யமான
அந்தத் திருவடிகளையே பரம பிராப்யமாக அனுசந்தித்தேன்
என்னோடு எனக்கு உரிமை இல்லாதபடி தேவர்க்கே அத்யந்த பரதந்த்ரமாய் இருக்கிற படியை உள்ளூற நிரூபித்து
ஸ்வ ரக்ஷணத்தில் இறங்குகைக்கு அநர்ஹனான என்னையும் தன்னைப் பெறுகைக்குத் தானே உபாயமான
அந்தத் திருவடிகளிலே நிஷேபித்தேன் -(நிஷேபம் ந்யாஸம் சரணாகதி பர்யாய சொற்கள் )
உபாயமும் தேவரீர் திருவடிகளே என்று அத்யவசித்தேன் என்றபடி

இத்தால் கிருபா பிரேரித ஹ்ருதயனாய்க் கொண்டு தம்மை அவன் நிர்ஹேதுகமாக கடாஷித்த படியையும்
கடாக்ஷ பலமாக ஸ்வரூப ப்ராப்ய ப்ராபகங்களை உணர்த்தி –
பதற்றம் துணிவுகள் தமக்கு உண்டாக்கின படியையும் சொல்லிற்று யாய்த்து –

அருளிலே நோக்கான திரு உள்ளத்தை எங்கள் மேல் வைத்து –
அத்தாலே நாங்கள் பதார்த்த விவேகம் பண்ணி தர்சிக்கிற போது என்னவுமாம் –

(பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய் -திருவாய் -5-7-3-
அசன்னேவ-இத்யாதி
யம் பஸ்யேந் மது ஸூதந –
பொருள் தெரிந்து -அர்த்த பஞ்சக ஞானம் பெற்று
ஸ்வத்மம் ஆத்மநீ ஸஞ்ஜாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம்
ஆத்ம தாஸ்யம் ஹரே ஸ்வாம்யாம் ஹரி
நிக்ஷேபாபர பர்யாய ந்யாஸ –
த்வமே உபாய பூதோ மே பவதி ப்ரார்த்தநா மதி ஸரணாகதி
இத்தால் கருணையாலேயே தூண்டப்பட்ட திரு உள்ளத்தை யுடைய அவன்
ஒரு கைம்முதலும் எதிர்பாராமல் இவரைக் கடாஷித்த படியையும்
அக்கடாக்ஷத்தாலேயே -அவன் ஸ்வரூபம் -ப்ராப்யம் -ப்ராபகம் -ஆகியவற்றை உணர்ந்த படியையும் –
அவனை அடையைப் பதற்றமும்
அவனே உபாயம் என்ற துணிவும்
உண்டானபடியை அருளிச் செய்தார் ஆயிற்று )

——————————————————————————————-

இப்படி சர்வேஸ்வரன் தன் பெருமை பாராதே எளியனாய் தம்மையே விஷயீ கரித்த நீர்மையை அனுசந்திக்கையாலே –
நிராங்குச ஸ்வ தந்த்ரனான மேன்மை அன்று அவனுக்கு நிலை நின்ற வேஷம் -ஆஸ்ரித பாரதந்த்ரயமே நிலை நின்ற வேஷம்
என்று அறிந்து இருக்குமவர்கள்– ஜகத்தை சர்வ காலமும் ரக்ஷிக்குமவர்கள் என்கிறார் –

(பிராட்டி புருஷகாரம் செய்யும் போது ஸ்வாதந்தர்யம் தலை சாயும் -ஆஸ்ரித பாரதந்தர்யமே நிலை நிற்கும்

எளிவரும் இயல்வினன் என்று சொல்லும் ஆழ்வார்களே மண் காப்பார் ஆவார்
அத்விதீயம் பரத்வம் ஒன்றை மட்டும் சொல்வார் அல்லர் -என்கிறார்)

ஓர் உருவன் அல்லை ஒளி உருவம் நின் உருவம்
ஈர் உருவன் என்பர் இரு நிலத்தோர் -ஓர் உருவம்
ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர் கண்டீர்
நீதியால் மண் காப்பார் நின்று–60-

பதவுரை

ஓர் உருவம் அல்லை–(எம்பெருமானே) பரத்வமே வடியாக இருப்பவனன்று நீ,
ஒளி உருவம்–ஆஸ்ரித பரதந்த்ரமாய்க் கொண்டு ஒளி பெற்றிருக்கிற ஸ்வரூபம
நின் உருவம்–உனது வடியாம் (இப்படி ஆஸ்ரித பாரதந்திரியமே வடியாவிருக்கிற உன்னை)
இரு நிலத்தோர்–இப் பெரிய பூமண்டலத்திலுள்ளவர்கள்
ஈர் உருவன் என்பர்–பரத்வமாகிற பெரிய வடிவை யுடையனாகச் சொல்லு கின்றனர்
ஓர் உருவம்–ஆஸ்ரித பாரதந்திரிய மாகிய ஒரு வடிவே
ஆதி ஆம் வண்ணம்–எல்லார்க்கும் உஜ்ஜீவந ஹேதுவாயிருக்கு மென்பதை
அறிந்தாரவர் கண்டீர்–தெரிந்து கொள்ளுமவர்களே
நீதியால்–நியாயப்படி
நின்று–நிலைத்து நின்று
மண் காப்பார்–உலகத்தை ரக்ஷிக்க வல்லவராவர்.

உன் படி பார்த்தால் என்றும் ஒருபடிப்பட ஸ்வ தந்திரமாய் இருப்பதொரு ஸ்வரூபத்தை யுடையை அல்ல –
பக்தாநாம் தவம் பிரகாசாசே-என்கிறபடி
உன்னை ஆஸ்ரிதர் இட்ட வழக்காக்கி -அத்தாலே புகர் பெற்று
உஜ்ஜவலமாய் இருக்கிற ஸ்வரூபம் உனக்கு நிலை நின்ற ஸ்வரூபம் –

இப்படி இருக்கிற உன்னை இந்த ஆஸ்ரித பாரதந்தர்யத்தின் ஏற்றம் அறியாத மஹா பிரத்வியில் உள்ள வாய்கரையர் ஆனவர்கள்
நிராங்குச ஸ்வாதந்திரம் ஆகிற பெரிய ஸ்வரூபத்தை யுடையவன் -என்று இத்தை பெரிய ஏற்றமாகச் சொல்லா நின்றார்கள் –

ப்ரணத பரதந்த்ரம் மநுமஹே -என்னும் படி
ஆஸ்ரித பரதந்த்ரம் ஆகிற ஒருபடிப்பட்ட ஸ்வரூபமே சர்வ சத்தா ஹேதுவாய்க் கொண்டு
ஆஸ்ரிதற்கு உஜ்ஜீவன ஹேதுவாய் இருக்கும் பிரகாரத்தை உள்ளபடி அறிந்து இருக்கும் மஹாத்மாக்களான அவர்கள் கிடீர்

ஈஸ்வரன் அரியன் -என்று ஜகத்தை வழியடித்து உக்கிர வாய்கரையரைப் போலே அன்றிக்கே
அவன் நீர்மையின் ஏற்றத்தைச் சொல்லி எல்லாரையும் பகவத் பிரவணராம் படி திருத்துகிற நியாயத்தாலே உருவ நின்று
ஜகத்தை தளிரும் முறியுமாம் படி ரக்ஷிக்கிறவர்கள் —

அன்றிக்கே
பஹுதா விஜாயதே -என்கிறபடி
ஆஸ்ரிதார்த்தமாக அவதரித்த தசையில் அநேகம் திரு மேனியை யுடையை யாகையாலே
ஒரு படிப்பட்ட விக்ரஹத்தை உடையை யல்லை-

(இந்த இரண்டாம் நிர்வாகம் இவர் வியாக்யானத்தில் மட்டும் உண்டு –
விபவம் தொடங்கி அர்ச்சாவதார பர்யந்தமாக கிருஷி பண்ணினவன் நீ அன்றோ என்கிறார்)

ச உ ஸ்ரேயான் பவதி ஜாயமான –
இப்படி பல வடிவு எடுத்துக் கொண்டு பிறந்த இடத்திலும் ஸூ த்த சத்வ மயமாகக் கொண்டு
நிரவதிக தேஜோ ரூபமாய் இருக்கும் உன் திரு மேனி –

இப்படி அசாதாரண விக்ரஹமும் -அவதார விக்ரஹமும் ஆகிற
இரண்டு விக்ரஹத்தையும் யுடையையாய் இருப்புதி-என்று
உன்னை நாட்டில் அறிவுடையார் சொல்லா நின்றார்கள் –

இதர சஜாதீயமாய் அவதரித்த அந்த அவதார விக்ரஹம் ஒன்றுமே
கிருஷ்ண ஏவ ஹி லோகா நாம் உத்பத்தி ராபிசாப்யய -என்கிறபடியே
ஜகத் காரணமாய் இருக்கிற பிரகாரத்தை அறிந்தவர்கள் ஜகத்தை எப்போதும் ரக்ஷிக்குமவர்கள் -என்றுமாம் –

(நிரங்குச ஸ்வா தந்தர்யம் அவனுக்கு ஸ்வரூபம் அன்று ஆஸ்ரித பரதந்த்ரமே நிலை நின்ற ஸ்வரூபம் -என்கிறார் –
நித்யோ நித்யா நாம் சேதனஸ் சேதநா நாம் ஏகோ பஹு நாம் யோ விததாதி காமான் -கட -2-5-13-
ந தே ரூபம் ந ச ஆகாரோ ந ஆயுதாநி ந ச ஆஸ்பதம்
ததாபி புருஷாகாரோ பக்தாநாம் த்வாம் ப்ரகாஸ ஸே -ஜிதந்தே
கிருபை தலை எடுக்கும் பொழுது ஸ்வாதந்தர்யம் தலை சாய்ந்து எப்போதும் உள்ள ஆஸ்ரித பாரதந்தர்யமே நிலை நிற்குமே
அன்யாதீ நத்வம் தவ கில ஜகுர் வைதிககிர
பரா தீநம் த்வாம் து ப்ரணத பரதந்த்ரம் மநு மஹே -வரத ஸ்தவம் -20-
உன்னது என்னதாவியும் என்னது உன்னதாவியும் -திருவாய் -4-3-8-
சேதனன் தன்னை சர்வேஸ்வரனுக்கு ஆக்க நினைக்கும் போது கர்மம் தடுக்கலாம்
இவன் அவன் இட்ட வழக்காகும் போது தடை ஒன்றுமே இல்லையே -ஆள வந்தார்
வையம் மன்னி வீற்று இருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே –திருவாய் -4-3-11-
தீர்த்த கரராமின் திரிந்து -இரண்டாந் திரு -14-
அர்ச்சாவதார பர்யந்தமான அவனது க்ருஷீ பலனே தம்மை பகவத் பிரவணர் ஆக்கி அருளிற்று என்கிறார்
அஜாய மானோ பஹுதா விஜாயதே
பிதா புத்ரேண பித்ரு மான்யோ நியோ நவ்
சதைக ரூப ரூபாய
ச உ ஸ்ரேயான் பவதி ஜாயமாந-
தத் ஈஷத பஹுஸ் யாம்
கிருஷ்ண ஏவ ஹி லோகா நாம் உத்பத்திர் அபி சாப்யய
ஜகத் காரணமாய் இருக்கிற பிரகாரத்தை அறிந்தவர்கள் எப்போதுமே ஜகத்தை ரக்ஷிக்குமவர்கள் என்றபடி -)

————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.