Archive for October, 2015

எம்பெருமானார் திரு மஞ்சனக் கட்டியம் -ஸ்வாமி அஷ்டோத்திர நாமாவளி -ஸ்ரீ வடுக நம்பி அருளிச் செய்தது -ஸ்ரீ ஸூ தர்சன ஸூரி அருளிச் செய்த ஸ்ரீ பாஷ்யகாரர் ஸ்துதி ஸ்லோகம்-சரம சரம பர்வ நிஷ்டை –

October 4, 2015

நாயந்தே நாயந்தே –
காஷாய சோபி கம நீய சிகா நிவேசம்
தண்ட த்ரய உஜ்ஜ்வல கரம் விமல உபவீதம்
உத்யத் தி நேச நிபம் உல்லசத் ஊர்த்வம் புண்டரம்
ரூபம் தவாஸ்து யதிராஜ த்ருசோர் மமாக்ரே –

அப்பனுக்கு சங்காழி அளித்து அருளும் பெருமாள்
அறம் மிகு நற் பெரும் பூதூர் அவதரித்த பெருமாள்
அறுசமயச் செடியதனை அடியறுத்த பெருமாள்
அருளாழி வரி வண்டே என்று ஆழ்வார் அழைக்கும் பெருமாள்
அருள் மாரி அடி இணைக் கீழ் அன்பு பூண்ட பெருமாள்
அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாம் ஆண்டாள் தமக்கும் அண்ணரான பெருமாள்
அரங்கர் மௌலி சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல் அருளால் தாழ்வின்றி வாழும் பெருமாள்
அடியார் வினைத் தொடரை அருள் என்னும் ஒள் வாள் உருவிக் கிட்டிக் கிழங்கொடு வெட்டிக் கலைந்த பெருமாள்
நம் தேசிக சிகா மணிப் பெருமாள்

தேவரீர் திருவடித் தாமரைகளின் தாச்யார்ஹ சாரச்ய தாநார்த்தமாக ஆஸநா ரவிந்தத்தில் அழுத்தியிட்ட இடது காலும் –
இடத்துடையின் மேலே வளர்த்திக் கண்ணாரக் கண்டு கழிவதோர் காதலுற்றார்க்கு காட்டியீட வலது காலும்
சாஷாத் மன்மத மன்மதாயமான மதுமதன விஜய தூணிர யுகளம் போலே இணைத்து வைத்த கணுக் கால்களும்
கீழ் நோக்கும் ஒளி வெள்ளம் மறியுண்டு கழித்தால் இரண்டுருவம் திரண்டுண்டு மடியுண்ட முழம் தாள்களும்
கந்தளித கதலீ காண்ட கரிகர கலபகங்கள் போலே அதிம்ருதள மாம்ச லங்களாய் விளங்குகின்ற திருத் துடைகளும்
சந்த்யா ரஞ்சிதா சாரதாப்ரத்தில் தனித்து எழுந்ததோர் கொடி மின்னல் நிலை நின்று வளர்ந்தால் போல் ஆஜங்கம் தழைத்து உடுத்து அரைச் சிவந்த
ஆடையின் மேல் வளைந்து வந்து நிகு நிகென்ற பொன்னரை நாண் பூண்ட அழகும்
சேவாரசபாச பரிப்ராமித மதி மந்தார மா மத்யமான சௌந்தர்ய துக்த சிந்தூதரம் நடிக்குழித்திட்ட குழி போல் ஸூ ந்தரமாம் உந்தி மலரும்
மஞ்ஜூளதர மாயூரோ சீர வாலய்யஜன வேவீ ஜ்யாமான திவ்ய தூப குமுகுமித மந்தகதவஹ கோதூயமான திவ்ய லாவண்ய
தரங்கிணீ தரங்கங்கள் போலே இருபாலும் திகழ்கின்ற திருவாலிகளும்
அபி நவதர தர விகஸ்வர சரசிஜவர முகுள தளத்தளாயமாந நிஜாஞ்ஜலி சிகாங்குளீ சோபையை நிஜஹ்ருதய ஜலஜததர ரசிக ஹாரத்த ஜநார்த்த நத்துக்கு
அவ நமித்துக் காட்டுவது போலே நெஞ்சுக்கு நேராக கொஞ்ச்ம் சாய்த்து அஞ்ஜலித்த தடக்கைகளும்
தங்க வளை மேல் தங்கி தொங்குகின்ற சங்கிலி களோடு இணக்கமுற்ற கணுக் கைகளும்
முறிக்கியிட்ட முன்கையோடு உள்விம்பிப் புறம் குவிந்து மடியுண்ட முழம் கைகளும்
கனக மய குல தரங்களைக் கடைந்து எடுத்து மடுத்தால் போல் திரண்டு நீண்ட பாஹூ தண்டங்களும்
வைகுண்டாதி பிரம்மா கோசங்கள் வந்திருக்கும் மாணிக்கப் பண்டாரமான நெஞ்சமாகிய நீண் நகர்க்கோர் கனகமய கவாடம் போலே
பள பள வென்று அகன்று காடவ்யூடமாக திகழ்கின்ற திரு மார்பின் அழகும் –
அம்மார்பின் அழகில் ஆழம் கால் பட்டு மயங்கி விடும் மநோ நயனங்களை தோளளவில் துவக்கிவிடும் அவலம்ப ஸூ த்ரம் போலே இலங்குகின்ற முந்நூல் அழகும் –
சேச்வர விபூதித் த்வயமும் இளைப்பாறும் நிழல் தடமாய் வளர்ந்து உயர்ந்த திண் தோள்களும்
கண்ட வ்யக்த தாராஷரங்கள் புறம்பொசிந்து காட்டினால் போலே ரேகாத்ரய விபத்தங்கமாய் வலம் புரியின் சுழி ஒழுங்கைப் பழித்து எழுந்த கழுத்தின் அழகும்
மறுக்கழுத்தின சந்திர மண்டலத்தையும் அப்போது அலர்ந்த செந்தாமரைப் பூவையும் அதிகரித்து
கிட்டினாரை மையல் ஏற்றி மயக்கும் மாய மந்திரமாய் விளங்குகின்ற ஸ்மயமான முகாரவிந்தமும்
இசைந்து கனிந்து த்க்ராஷாத்வம் போலே வகுப்புண்ட கமுக விகாசமும்
அதிருசிர பாவ கர்ப்பமானதொரு வார்த்தை சொல்லத் துடங்கித் துடிப்பது போலே விளங்குகின்ற திருப் பவளங்களும் –
அபிமதஜன தர்சனானந்த வேகத்தால் அர்ச்சாதவரா சமாதியைக் கடந்து விம்மி வெளி வழிகின்ற அவ்யக்த மதுர மந்தஹாச விலாசமும்
ஸ்படிகமய முகர குண்டலங்கள் போலே தள தளவென்ற திவ்ய கபோலங்களும்
கன கனக மகர குண்டல த்வ்யத்தால் தலைந்து வளர்ந்து படிந்து வடிவிட்டு சுருண்டு நீண்டு தோள் அளவும் தொங்குகின்ற கர்ண பாசங்களும்
மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ என்று நித்ய சந்தேக ஜனகமான கோல நீள் கொடி மூக்கின் அழகும் –
மீதோ பத்த ச்பர்த ஸ்பரித சபரத்வந்த்வ ல் லிதங்களாய் புடை படர்ந்து மிளிர்ந்து நீண்ட தண் தாமரைக் கண்களும்
குணோத்கர்ஷ குண்டலிதமான திருச் சார்ங்கம் போலே வளைந்த திருப் புருவ வட்டங்களும்
அஷ்டமி சந்திர அம்ருத பிரவாஹங்கள் கற்பகக் கொடியடியில் பெருகி வந்து தேங்கினால் போலே திரு நுதல் போலே இலங்குகின்ற
நாஸிகா மூலத்ருத ஸ்ரீ ராமானுஜ தீவ்ய திவ்ய ஊர்த்வ புண்டர விசேஷமும்
அதன் நடுவில் உபய விபூதி சாம்ராஜ்ய பட்டாபிஷேக லஷ்மீ விஹார நிஷிப்த பத கமல சாஷா பங்கம் போலே சிவந்து படிந்து விளங்குகின்ற திருச் சூர்ண ரேகையும்
உயர்ந்து மலர்ந்த திரு முடியும்
வளர்ந்து மடிந்து வ்யக்தாவ்யசதமாய் விளங்குகின்ற திருக் குழல் ஒழுங்கும் -சுற்றிச் சுற்றிச் குழைத்திட்டு முடித்து தொங்க விட்ட சிகா பந்தமும்
பின்னெடுத்த பிடரி அழகும்
திரு வனந்த ஆழ்வான் பின் படம் போலே நடுப் பதிந்து விசாலமாய் நெரித்திட்ட திரு முதுகும்
வலவருகில் முன்னாட்டித் தாங்கியிட்ட த்ரிதண்டா க்ரமமும்
சீரியதோர் நிதி போலே திரு முன்பே நோக்கிக் கொண்டிட்டு வைத்த திருவடி நிலைகளுமாய்
இப்போது தேவரீர் திரு மஞ்சனம் கண்டருள எழுந்து அருளி இருக்கும் அழகியது
ஏதேனும் சிந்தை மருளோ
ஜகன் மோஹன மந்திர பிரபாவமோ
சகல ரச குளிகா விலாசமோ
சர்வ போக சிந்தாமணி பிரகாசமா
அகில ஜகத் ஸூ க்ருத விபாகமோ
நிகில பல கல்பலதா பிரசாரமோ
சமஸ்த சம்பத் சாம்ராஜ்ய வேஷமோ
சர்வ மங்கள சந்தா பிரசவமோ
அகில ஜகஜ் ஜீவன மூலமோ
அதுலா நந்த கந்தாவதாரமோ
சகல கலா ரகஸ்ய சர்வஸ்வமோ
சர்வேஸ்வர ஆபத் தனமோ
இதெல்லாம் திரண்டு எழுந்து கொண்டதோர் வடிவோ
இத்வுமன்றி அப்ரமேய தேஜசோ
நாங்கள் ஏதொன்றரியா இவ்வளகுடன் தேவரீர் ஊழி தொறும் ஊழி தொறும் வாழ்ந்திடுகவே
யதி சார்வ பௌமனே திரு மஞ்சனம் கண்டருள வே ஜய விஜயீ பவ –
——————————————————————————————————

ஸ்வாமி அஷ்டோத்திர நாமாவளி -ஸ்ரீ வடுக நம்பி அருளிச் செய்தது –

ராமானுஜ
புஷ்கராஷா
யதீந்திர
கருணாகர
காநிதிமத் யாத்மஜ
ஸ்ரீ மான்
லீலா மானுஷ விக்ரஹ
சர்வ சாஸ்திர தத்வஜ்ஞ
சர்வஜ்ஞ்
சஜ்ஜன ப்ரிய

நாராயண க்ருபா பாத்ரம்
ஸ்ரீ பூத புர நாயக
அநக
பக்த மந்தார
கேசவ நந்த வர்த்தன
காஞ்சி பூர்ண ப்ரிய சக
பிரணதார்த்தி விநாசன
புண்ய சங்கீர்த்தன
புண்ய
ப்ரஹ்ம ராஷச மோசக

யாதவ பாதாதி பார்த்த வ்ருஷச் சேதன குடாரக
அமோக
லஷ்மன முனி
சாரதா சோக நாசன
நிரந்தர ஜஞாநாஞான நிர்மொசன விசஷண
வேதாந்த தத்வ சாரஜ்ஞ
வரதாம்பு பிரதாகைய
பர அபிப்ராய தத்வஜ்ஞ
யாமுன அங்குலி மோசக
தேவராஜா கருணா லப்த ஷட் வாக்யார்த்த மஹோததி

பூர்ணாய லப்த சந்மந்திர
சௌரி பதாப்ஜ ஷட் பத
த்ரி தண்ட தாரீ
ப்ரஹ்மஜ்ஞ
ப்ரஹ்ம ஜ்ஞான பராயண
ரங்கேச கைங்கர் யரத
விபூதி த்வய நாயக
கோஷ்டி பூர்ண க்ருபா லப்த மந்த்ரராஜ பிரகாசக
வரரங்கா அனுகம்பீ
திராவிடம் நாயா சாகர

மாலாதார்யா ஸூ ஜ்ஞா திராவிடம் நாயதத்வதீ
சதுஸ் சப்தத்தி சிஷ்யார்ய
பஞ்சாசார்ய பதாஸ்ரய
பிரபீத விஷ தீர்த்தாம்ப பிரகடீக்ருத வைபவ
பிராணதார்த்தி ஹராச்சார்யா தத்தபிஷைக போஜன
பவித்ரீக்ருத கூரேச
பாகி நேய த்ரி தண்டக
கூரேச தாசரத்யாதி சரமார்த்த ப்ரதாயக
ரங்கேச வேங்கடேசாதி பிரகாசீக்ருத வைபவ
தேவராஜா அரச்ச நர்த

முக முக்தி பிரதாயக
யஜ்ஞ மூர்த்தி பிரதிஷ்டாதா
மன்நாத
தரணீதர
வரதாசார்ய சத்பக்த
யகஜ்ஞே சார்த்தி விநாசக
அநந்த பீஷ்ட பலத
விட்டலேச ப்ரபூஜித
ஸ்ரீ சைல பூர்ண கருணா லப்த ராமாயணார்த்தாக
பிரபத்தி தர்மைகரத

கோவிந்தார்யா ப்ரிப அனுஜ
வியாச ஸூத்ரார்த்த தத்வஜ்ஞ
போதாயன மத அனுக
ஸ்ரீ பாஷ்யாதி மஹா கிரந்த காரக
கலி நாசன
அத்வைத மத விச்சேத்தா
விசிஷ்டாத்வைத பாலக
குரங்க நகரீ பூர்ண மந்திர ரத்ன உபதேசக
விநாசித அகில மத
சேஷி க்ருத ரமாபதி

புத்ரி க்ருத சடாராதி
சட ஜித் ருண மோசக
பாஷாதத்த ஹயக்ரீவ
பாஷ்யகார
மஹா யசா
பவித்ரீ க்ருத பூபாக
கூர்ம நாத பிரகாசக
ஸ்ரீ வேங்கடா சலாதீச சங்க சக்ர ப்ரதாயக
ஸ்ரீ வேங்கடேசச்சவசுர
ஸ்ரீ ரமாசக தேசிக

க்ருபாமாத்ரா ப்ரசன்னார்ய
கோபிகா மோஷதாயக
சமீசீ நார்ய சச்சிஷ்ய சத்க்ருத
வைஷ்ணவ ப்ரிய
கிருமி கண்ட நருபத் வம்ஸீ
சர்வ மந்திர மஹாததி
அங்கீக்ருத ஆந்திர பூர்ணார்யா
சாளக்ராம ப்ரதிஷ்டித
ஸ்ரீ பக்த க்ராம பூர்ணேச
விஷ்ணு வர்த்தன ரஷக

பௌத்தத்வாந்த சஹஸ்ராம்சு
சேஷ ரூப பிரதர்சக
நகரீக்ருத வேதாத்ரீ
தில்லீச்வர சமர்ச்சித
நாராயணா பிரதிஷ்டாதா
சம்பத் புத்ர விமோசக
சம்பத் குமார ஜனக
சாதுலோக சிகாமணி
ஸூ ப்ரதிஷ்டித கோவிந்த ராஜ
பூர்ண மநோ ரத –

கோதாக்ரஜ
திக்விஜேதா
கோதாபீஷ்ட ப்ரபூதாக
சர்வ சம்சய விச்சேத்தா
விஷ்ணு லோக ப்ரதாயக
அவ்யாஹத மஹத் வர்தமா
யதிராஜ
ஜகத்குரு –

————————————————————————————-

ஸ்ரீ ஸூ தர்சன ஸூரி அருளிச் செய்த ஸ்ரீ பாஷ்யகாரர் ஸ்துதி ஸ்லோகம்-

ஸ்மை ராமானுஜார்யாய நாம பரம யோகின
ய சுருதி ஸ்ம்ருதி ஸூ த்ராணாம் அந்தர் ஜூரம் அசீசமத்

ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்க இவ அபரம்
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடம் இஷ்யதே

அவிஸ் த்ருதாஸ் ஸூ கம்பீரா ராமானுஜ முநேர் கிர
தர்சயந்து பிரசாதேன ஸவம் பாவமகிலம் த்ருடம்

பாஷ்யம் சேத் வ்யவ்ருணோத் ஸ்வயம் யதிபதி வியாக்யான வாசாம் ததா
காம்பீர்யாத நவ ஸ்திதி மிதமதிர்துரே ஜனஸ்த திராம்
ப்ரஷ்டவ்ய கதமீச்வர ச ஹி ந ந பிரத்யஷ்ரூபோ த்ருசாம்
தத் பாஷ்யம் ச ச பாஷ்யக்ருத் ச ச ஹரி சமயக் பிரசீதந்து ந –

————————————————————
வேதார்த்த சங்க்ரஹம்

அசேஷ சிதசித் வஸ்து சேஷினே சேஷ சாயினே |
நிர்மலானந்த கல்யாண நிதயே விஷ்ணவே நமஹா ||

பரம் ப்ரஹ்மை வாஞ்யம் ப்ரஹ்ம பரிகடம் சம்சர்த்தி தத்
பரோபாத்யாலீடம் விவசம் அசுபச்யாஸ் பதமிதி
சுருதி நியாய பீடம் ஜகதி வித்தம் மோகனமிதம்
தமோ யேனா பச்தம் ச ஹி விஜயதே யாமுன முனி

————————————————————————-

ஸ்ரீ சைல தயா பாத்ரம்
ஈடு பெருக்கர்
ஸூ ரஷணம் -வ்யாக்யானங்கள் அருளி -ஆர்த்தி பிரபந்தம்-அருளி
மயர்வற மதி நலம் அருளினான் -பக்தி ரூபாபன்ன ஞானம் –
காதல் அன்பு வேட்கை அவா கொடுத்து —பருகினேன் இனியவாறே –பொருள் கிட்டாவிடில் வாழ்வே இல்லை -அவா -அவா அறச் சூழ்ந்தான் –
இருள் துவக்கு மயக்கம் மறுப்பு நீக்கி -நாயனார் -ஞான உதயம் அந்யதா விபரீத ஞானம் நீக்கி மறப்பர என்னுள் மன்னினான் –
ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்களைக் காட்டிக் கொடுக்க -காட்டவே கண்ட பாத கமலம் —வாட்டமில் கண்கள் மேனி –பாட்டினால் கண்டு வாழும் —
கண்ணால் காண்பதும் -மட்டும் அல்ல -கண்டு அனுபவித்து -ப்ரீதி உள் அடங்காமல் பாசுரமாக வெளி வர –
பாகவத சேஷ்டிதங்களைகாட்டி ஸ்திரப்படுத்தி -பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு அடிமை –
நண்ணாத–எண்ணாதே -கண் சோர –தண் சேறை –என் தலை மேலேவை –சரம பர்வ நிஷ்டை
சரமத்தில் சரமம் -ராமானுச நூற்றந்தாதி -யதிராஜ விம்சதி -ஆர்த்தி பிரபந்தம் –இவைகள் –
பந்தம் -சொற்களின் கூட்டம் -பிரபந்தம் -திவ்ய பிரபந்தம் -கோஷ்டி -அருளிச் செயல் -மணவாள மா முனிகள் -ஆழ்வார்கள் ஏற்றம் அருளிச் செயல்கள் ஏற்றம் -கிருபை பண்ணினார்கள் ஆழ்வார்கள் -அருளிச் செய்தார்கள் -சாதித்து அருளிச் செய்ய -அருள -சேவை –யதிராஜ வைபவம் வடுக நம்பி உடையவர் காலத்திலேயே சாதித்து -அருளினார் –
அனனத்யயன காலத்தில் சாதிக்க திருவாய் மொழி நூற்று அந்தாதி பிரபந்தம் –
பகவத் கடாஷம் பெற்ற ஆழ்வார்கள் கடாஷம் பெற்ற ஆசார்யர்கள் கடாஷம் பெற்ற எம்பெருமானார் கடாஷம் பெற்ற மணவாள மா முனிகள் கடாஷம் பெற்ற நம் ஆசார்யர்கள் கடாஷம் பெற்ற நாமே பெரியவர்கள் –
ஆர்த்தி -துக்கத்தாலும் -ச்நேகத்தாலும் -ஆசையாலும் -ஆர்த்தி ஆலத்தி எடுத்து திருஷ்டி கழிக்க
பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம் -நம் பிள்ளை பெரிய வாச்சான் பிள்ளை சைளிகளைக் கலந்து அத்புத வியாக்யானம் –

நல்லார் வாழும் நளிர் அரங்கன்
நல்லார் பரவும் ராமானுஜன் -கிடாம்பி ஆச்சான் வடுக நம்பி ஆண்டான் ஆழ்வான் போல்வார்
பரம பக்தி தலை எடுத்து -எம்பெருமானார் -மேலே -ஆர்த்தி பிரபந்தம் -அருளி –
அமுதே ஆரா வமுதே
எங்கள் ஆரா அமுதே எங்கள் குலத்து இன்னமுதே
அமுதினில் இனியவாறே —
லாபம் நமக்கு தானே இந்த பிரபந்தம் கிடைத்ததே –
சொல்லும் பொருளே ரசம் -சப்தத்திலும் பொருளிலும் ஊன்றி-
பிள்ளாய் -தொடங்கி-பாகவத பிரபாவம் -அறியாமல் –
நாமம் பலவும் நவின்று -சொல்வதே இனிமை -நாவினால் நவின்று -நான் கண்டு கொண்டேன் -நாராயணா
த்ரிவித ரசங்களுடன் சொல்லுகை நவிலுதல் -சப்த அர்த்த -பாவ ரசம்
நீல மேனி ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே
நீணிலா முற்றத்து -நின்று இவள் நோக்கினாள் காணுமோ கண்ண புரம் என்று காட்டினாள்-பாவனை -தாயுக்கு சொல்லும் நிலைமை -அடைந்தார் ஆழ்வார் –
அழகிய மணவாளன் -பட்டர் சொல்வது போலே -இனிமை
வாழி எதிராசன் -மூன்று தடவை
வாழியன வாழ்த்துவோம் -மூன்று தடவை
பொலிக பொலிக -பொலிக -கண்டோம் கண்டோம் கண்டோம்
எந்தை திருவாய் மொழிப் பிள்ளை இன்னருளால்
அருள் -எனபது 7 தடவை உபதேச ரத்ன நிலை -பிரபந்தத்தில் –
எந்தை எதிராசர் இன்னருளுக்கு இலக்காகி
அருள் மொழிய
65 பாசுரங்கள் -ஆர்த்தி பிரபந்தம் -பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம் எல்லா ஸ்ரீ ஸூ கதிகள் கொண்டு
இராமானுச நம என்று -சிந்தித்து -இரா மனுசர் -உடன் இறைப் பொழுதும் -இன்புற்று இரா –விண்ணோர்கள் வெறுப்பார்கள் –
நவ வித சம்பந்தம் -அடுத்த பாசுரம் —
-கீர்த்தி பல தடவை -இராமானுச நூற்று அந்தாதியில்
படி கொண்ட கீர்த்தி
இடம் கொண்ட கீர்த்தி -இராமானுச நூற்று அந்தாதியில் –
அனந்தாழ்வான் -ஏய்ந்த பெரும் கீர்த்தி -ராமானுசன் -தனியன்
கீர்த்தி சப்தம் பொருந்தும்
கீர்த்தி -பத பிரயோகம் -இராமானுச நூற்று அந்தாதியில் –
சயம் தரு கீர்த்தி இராமானுச முனி தாளிணை மேல் -தனியன் –
இடம் கொண்ட கீத்தி மழிசைக்கு இறைவன் -12
திக்குற்ற கீர்த்தி இராமானுசனை –26
படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பத்தி வெள்ளம் -37-
புவனம் எங்கும் ஆக்கிய கீர்த்தி இராமானுசனை அடைந்த பின் -56
நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நிறை வேங்கடப் பொற் குன்றமும் –76
இப்படி அனைத்தும் ஏய்ந்தனன் கீர்த்தியினால் என் வினைகளை வேர் பரியக் காய்ந்தனன் -77-
தெரிவுற்ற கீர்த்தி இராமானுசன் என்னும் சீர் முகிலே -82-
தெரியும் வண் கீர்த்தி இராமானுசன் -87–
எண்ணரும் கீர்த்தி இராமானுச –இன்று நீ புகுந்து என் கண்ணுள்ளும் ந்ர்ந்சுள்ளும் நின்ற இக்காரணம் கட்டுரையே –92
கீர்த்திப் பயிர் எழுந்து விளைத்திடும் சிந்தை இராமானுசன் –103-
நம் தலை மிசையே பொங்கிய கீர்த்தி இராமானுசன் அடிப் பூ மன்னவே –108-

எதிராசா -உன் புதல்வன் –தர்க்க கீர்த்தி
ஆண்டாள் -கீர்த்திமை பாடிப்போய் –
வேம்பு -முற்ற கசப்பு -கரும்பு முற்ற இனிமை ஏறும் -கரும்பின் சாறு போலே பரிக்னேற்கு இனிய வாறே
-கரும்பின் இன் சாறு -வியாக்யானம் -திரு நெடும் தாண்டகம் -உடலை நீக்கவே வழி செய்
வத்சலையான தாய மண் தின்ன விட்டு பிரத் ஔஷ்யதம் இடுமா போலே –தத்துவம் அன்று தகவு அன்று -ஆண்டாள் –
பொய் நின்ற ஞானமும் -எம்பெருமான் இடம் விண்ணப்பம் செய்தது போலே எதிராசர் இடம் மா முனிகள் இடம் விண்ணப்பம் -உனக்கு இது தாழ்வோ சொல் –
திவளும் –நின் ஆகாத்து இருந்து அறிந்தும் –சொல்லு -நின் தாள் நினைந்து இருந்த இவளை சொல்லு -திருமங்கை ஆழ்வார் –
காரேய் கருணை இராமானுசா –அமுதனார்
எந்தை திருவாய் மொழிப் பிள்ளை இன்னருளால்
தண் தமிழ் நூல் செய்து அருளும் ஆழ்வார்கள்
அருள் பெற்ற நாத முனி முதலா நம் தேசிகர்
பிள்ளான் முதலானோர் செய்து அருளும் அந்த வியாக்கியைகள்
எதிராசர் பேர் அருளால் –பிள்ளான் -அன்று உரைத்தது இன்பம் மிகும் ஆறாயிரம்
பட்டர் நல்லருளால் நஞ்சீயர் ஆய்ந்து உரைத்தது ஏர் ஒன்பதினாயிரம்
நம்பிள்ளை நல்லருளால் ஏவி விட பெரிய வாச்சான் பிள்ளை –மாறன் மறைப் பொருளைச் சொன்னது இருபத்து நாலாயிரம்
உலகாரியன் இன்னருளால் செய்த கலை யாவையிலும் உன்னில் திகழ் வசன பூடனத்தின் சீர்மை ஒன்றுக்கு இல்லை
எதிராசன் இன்னருளுக்கு என்றும் இலக்காகி சதிராக வாழ்ந்திடுவர் தம்

கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் -கிருஷ்ணனது வேட்கையே வடிவாக கொண்ட நம் ஆழ்வார்
நீராய் நிலனாய்-ஆய -இரண்டாம் வேற்றுமை
பெரும் புறக் கடலை –
-வைத்த மா நிதியை
நிதியினை –மதியினை -விதியினை கண்ட கொண்ட தொண்டனேன் –
கூராழி வெண் சங்கு எனது கொடியேன் பால் வாராய் ஒரு நாள் மண்ணும் விண்ணும் வந்திடவே
கிருபையும் பார தந்த்ர்யமும் அனந்யார்ஹத்வமும் வேணும் புருஷகாரம் செய்து அருளும் பொழுது
யதீந்திர பிரவணர் -நம் மா முனிக்கு நிரூபண தர்மம்
ஆர்த்தி-சம்சார அடிக் கொதிப்பு நீங்கி -வேட்கை அவா அற சூழ
தென்னரங்கர் தமக்காகாவோ –தேவியர்கத்க்காவி சேனையர் கோன் முதலான சூரியார் கட்காவோ –
மன்னிய சீர் மாறன் அருள் மாறி தமக்காவோ -என்னுடைய பிழை பொறுக்க யாருக்கு முடியும் –
என் பிழையே நினைந்து அருளி அருளாத திருமாற்கு –தூது நாலுக்கு விஷயம் –
ஆசார்யர் சம்பந்தம் -உண்டே எனக்கு
தெரித்தும் எழுதியும் வாசித்தும் வணங்கியும் பூசித்தும் பொழுது போக்கினேன்
வியாக்யானம் -எனக்காக இல்லை உமக்காக இல்லை -அனுபவ பிரகர்ஷம் -கண்டது எல்லாம் எழுதி காதலுடன் கற்ப்பித்தும் காலத்தை களித்தேன் -இங்கேயே இருந்தேன் –
உய்யும் ஆறு -ஸ்ரீ பாஷ்யம் ஓதியும் ஓதி வித்தும்
அருளிச் செயல் ஓதியும் ஒதுவித்தும்
திரு நாராயண புரம் குடில் கட்டிக் கொண்டு
ஸ்ரீ வைஷ்ணவன் அபிமானத்தில் ஒதுங்கி
சீதக் கடல் உள் அமுது அன்ன தேவகி –பாதக் கமலங்கள் காணீரே –
பரமன் அடி பாடி –மாதவன் கேசவன் -திருப்பாவை சுருப்பார் குழலி யசோதை -திருவடி முதல் திருமுடி வரை -அமலனாதி பிரான் –
கம்பர் -பெருமாள் -அவயவ சோபை -அனுபவம் -திருவடி சொல்வது போலே
படி எடுத்துக் காட்டும் படித்து அன்று அவன் படி தொடங்கி
மையோ –மரகதமோ –ஆழ்வார்கள் அனுபவம்
சீராரும் எதிராசர் திருவடிகள் வாழி -மா முனிகள் –தூ முறுவல் வாழி துணை மலர்க் கண்கள் வாழி -இங்கும் திருவடி தொடங்கி அனுபவம்
மந்த ஸ்மிதம் -நம் பெருமாள் -தூ முறுவல்
55 -பாசுரம் -அபேஷிதம்-கிருதஜ்ஞ்ஞை -செய் நன்றி கொண்ட மகற்கு உய்வு இல்லையே –
தென் அரங்கர் சீர் அருளுக்கு இலக்காக பெற்றோம் -அனைவருக்கும் உப லஷணம்
ஸ்ரீ ரெங்கே ஸூ கமாஸ்வ -இருப்பாக பெற்றோம் -த்வயம் அனுசந்தானம் செய்து கொண்டே –
எம்பெருமான் ஸ்ரீ ஸூ கதி பலிக்காத இடம் -ஆயுதம் எடேன் என்று சொன்னது மட்டும்
கொல்லா மாக் கோல் -சாட்டைக்கு மங்களா சாசனம் -இதுவே ஆயுதம்
செங்கோல் -நம் பெருமாள் -ஆண்டாள் மங்களா சாசனம் செங்கோல் உடைய திருவரங்கச் செல்வனார் –
ஒரு பிரம்பின் கீழ் வளரும் தத்வம் இது –
விளக்கு பிச்சன் கையில் குச்சிக்கு பயந்து கிடந்தான்
திருவாய் மொழிப் பிள்ளை -திருக்கையிலும் கோல் அரசர் அன்றோ
யீதத் தாய் இராமானுசன் -எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே
திருவாய் மொழி காத்த குணவாளர் அன்றோ
முன்னவராம் நம் குரவர்-இங்கு -உணவாகப் பெற்றோம்
உபதேச ரத்ன மாலை
திருவாய் மொழி நூற்று அந்தாதி இதிலும் முன்னவர் பற்றி பாசுரங்கள் உண்டே
ஜீவனம் –உஜ்ஜீவனம் -சமுஜ்ஜீவனம் -இந்தலத்தில் தாமரைப் பூ பூத்தால் போலே ஆசார்ய அபிமானத்தில் ஒதுங்கி –
திருவாய் மொழி சாரம் –விடிமின் நினைமின் நெடியானை -இதுவே
சரம ஸ்லோகம் -சர்வ தர்ம பரித்யஜ்ய
மாம் ஏகம் சரணம் வ்ரஜ -நினைமின்
விடுவதும் பற்றுவதும் உபாயம் இல்லை –
விடுவித்து பற்றும் அவனே உபாயம் –
பிறர் மினுக்கம் பொறாமை இல்லா பெருமையும் பெற்றோமே இறுதி பாசுரம் -அமலனாதி பிரான் -பெயரும் பலனும் சொல்லாமல்
முதல் இரண்டு மூன்றாம் நான்முகன் திருவந்தாஇகலும் அப்படியே
திரு வாசிரியத்திலும் அப்படி
பெரிய திருவந்தாதியிலும்
திருமடல்களிலும்
ஆர்த்தி பிரபந்தம் –
திருவாய் மொழிப் பிள்ளை இன்னருளால் -ஆரம்பித்து எதிராசர் இன்னருளால்
இங்கே வாழி எதிராசர் -அரங்கன் அளித்த அருள் -தம்மது அன்றோ தாய் சொத்து முடித்து –வரத்தை பெற்று சுகமாக வாழ்வோம் -நிகமிக்கிறார் –
ஆற்றாமை -ஹர்ஷத்தால் பிறந்த பிரபந்தம் –
பிராப்யம் பிராபகம் -இரண்டுமே எம்பெருமானார் தானே -என்று எதிராஜ விம்சதி -ஆர்த்தி பிரபந்தம் -மூலம் அருளிச் செய்கிறார் –

எம்பெருமானாரும் ஸ்ரீ கூரத் ஆழ்வானும்

ஞானப் பிரானை அல்லால் மற்றது இல்லை நான் கண்ட நல்லதுவே
சரம ச்லோகார்த்தம் -திருக் கோஷ்டியூர் நம்பி திருவரங்கத்தில் ஏகாந்த ஸ்தலம் தேடி -எம்பெருமானாருக்கு வேறு யார் இடமும் சொல்ல மாட்டேன் என்ற சத்யம் வாங்கிக் கொண்டு
அருளிச் செய்ய -சென்ற இடத்தில் ஒரு கைங்கர்ய பரன் குறட்டை விட்டு தூங்க -அங்கே சொல்லலாகாது என்று
பிற்றை நாளில் -சொல்ல
எம்பெருமானார் -நடு பகலில் கூரத் ஆழ்வான் அமுது செய்யும் மடம் சென்று -அமுது செய்யும் இடத்தில் -உமக்கு சொல்லாமல் இருக்க முடியாது என்று சாதித்து அருளினார்
ஒரு மகள் தன்னை உடையேன் என்றும் -மா முனிகள் வியாக்யானம் மூன்றுக்கும் என்றும் – எம்பெருமானார் கூரத் ஆழ்வான் திரு நாட்டுக்கு
எழுந்தி அருளும் போது கதறி அழுதார் -முழுவதாக சொல்ல முடியவில்லையே
தனக்கும் பரம பதம் நிச்சயம் என்று கூத்தாடி அடுத்த ஷணம் கூரத் ஆழ்வான் பிரிவை தாங்க முடியாமல் -கட்டிக் கொண்டு -அழ
அங்கே உமக்கு முன் சென்றால் தானே நீர் வரும் பொழுது உமது பாதம் கழுவ முடியும் –
எம்பெருமானார் திருவடிகளே கூரத் ஆழ்வான் என்பர் காஞ்சி சுவாமிகள் -முதலி ஆண்டான் -பாதுகா -கூரத் ஆழ்வான் ஸ்ரீ வைஷ்ணவர் சென்னிக்கு சேர இசையாரே
திருமண் கோணல் என்று நினைத்து இருப்பேன் -ததீயாராதனம் -திருமண் இட்டுக் கொண்டு இருந்தால் தான் -என்று வைத்து இருப்பாராம் —
மற்றவர் பிழைகளையும் நானே தான் ஆயிடுக -ஏறிட்டுக் கொண்டார் -பூர்ண ஆசார்ய சிஷ்ய லஷணம் பொருந்திய கூரத் ஆழ்வான்
நம் பிறப்பு -அவனையும் இங்கேயே பிறக்க வைக்கும்
நிரஞ்சன பரமம் சாம்யம் -புண்ய பாபா விதூயா -அவன் திருவவதாரம் – –
கீதை கேட்ட அர்ஜுனன் எல்லாத்தையும் விட்டான் -கேட்டதையும் விட்டான் -ஆசார்யர்கள் ஆழ்வார்கள் அப்படி இல்லையே -வாய் திறந்த உடனே இன்னினிற்ற நீர்மை இனி யான் உறாமை -ஆழ்வார் -இனி இனி -இருபத்தின் காலம் -கதறினார் –
உதங்க பிர்சனத்துக்கு உத்தரம் இல்லையே -அது நம்மாலே காணும் -காரண களேபரங்கள் கொடுத்து உள்ளேன் -அறிவிலா -விவேகிக்க சாஸ்திரம் -இவை நல்லது தீயது காட்ட நின் கண் வேட்கை எழுவிப்பேன் -சங்கல்பம் -திருத்திநீரோ-என்னையும் -சம்சாரிகள் ஆக்கி விடுவார்கள் -கொடு உலகம் காட்டேல் என்று நின் ஆணை திருவானை
ராமானுஜ திவாகரன் –ஜகத் திருந்த -கழியும் கெடும் -கண்டோம் கண்டோம் கண்டோம் பொலிக பொலிக பொலிக
பிரமாண பிரமாத பிரமேயங்கள் மூன்றும் செய்து அருளினார் ஸ்வாமிகள்-ஜகதாசார்யர் -நவ ரத்னங்கள் அருளிச் செய்து -தென்னரங்கன் செல்வம் திருத்தி வைத்தான் வாலியே
கைங்கர்யம் கூரத் ஆழ்வான் சஹகரித்து –நாய் -பாகீரதி கங்கையில் தாகம் தீர்க்க நாக்கை தொங்க விடுவது போலே -விடை தீர்க்கும் அடி நாயேன் -சித்தி பெற -அவர்களுக்கு இழுக்கு வந்தாலும்
பட்டர் குழாம்-நடித்து காட்டுவார்கள் –
விஷ்டிதவை அத்வைதம் -அசேத சித் அசித் வஸ்து சேஷினே -கொண்டாடுகிறார்
அகில புவன ச்தேம பங்கா தி லீலே -உடன் மிசை உயர் எங்கும் கரந்து-போலே கூரத் ஆழ்வான் எம்பெருமானாரும்
உள்ளும் புறமும் வியாபித்து -ராமானுஜர் சம்பந்திகள் -ஸ்ரீ வைஷ்ணவர்கள் -எம்பெருமானார் தர்சனம் கோட்பாடு
-இந்த்ரியத்வாரா க்ரஹிக்கும் ஞானம் தர்சனம் -அதீந்திர க்ராஹனம்-மந்திர த்ரஷ்டா ரிஷி
4-3-12- தர்சனாச்ச -ச –
உபேயம்
பலம் -ஸூ ஷ்மானா நாடி மூலம் வெளி ஏறி –சுருதி -பரமம் சாம்யம் உபைதி
4-1-16- தர்சனம் -சுருதி ஸ்மிர்த்தி தர்சனம்
தர்சனம் வாழ கூரத் ஆழ்வான் தர்சனம் இழந்தார் -ஊற்றம் உறுதி காட்டும் -ஆச்சார்யா பக்தி -பிரதானம்
மந்த்ரத்த பிரதான ஆசார்யன் பக்கல் பிரேமம் கணக்கா -கார்யகரம் ஆகும்
மந்த்ரம் மந்திர உள்ளீடான பகவான் மட்டும் ப்ரேமம் போதாதே –
கனமான பிரேமம் குற்றேவல் செய்ய வேண்டும் -என் திருமகள் சேர் மார்பனே என்னும் என்னுடைய ஆவியே என்னும் சேர்ந்த நிர்வாகம்
இங்கு ஒரு மகள் தன்னை உடையேன் -அதற்கு தனியே அழுது
உலகம் நிறைந்த புகலால் திரு மகள் போல் வளர்த்தேன்
செங்கண் மால் தான் கொண்டு போனான் –
அருமாஞ்சோ -ஸ்லோகம் –

————————————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடுக நம்பி திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸூ தர்சன ஸூரி திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ வார்த்தா மாலாவில் முத்துக்கள் –

October 2, 2015

ரஷ்ய ரஷக சம்பந்தம் -பிதா புத்ர சம்பந்தம் -சேஷ சேஷி சம்பந்தம் -பர்த்ரு பார்யா சம்பந்தம் -ஞாத்ரு ஞேய சம்பந்தம்
-ஸ்வ ஸ்வாமி சம்பந்தம் -சரீர சரீரி சம்பந்தம் -ஆதார ஆதேய சம்பந்தம் -போக்த்ரு போகய சம்பந்தம்-

ஆச்சான் பிள்ளையை ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் -பாரதந்த்ர்யம் இருக்கும்படி என் என்று கேட்க -ஸ்வ சக்தி நிவ்ருத்தி பூர்வகமாக
சர்வ சக்தியை அண்டை கொண்டு -உபாயத்தில் -கந்தல் அற்று -உபேயத்தில் த்வரை விஞ்சி இருக்கை –பாரதந்த்ர்யம் என்று அருளிச் செய்தார் –

பொன்னைப் புடமிடப்  புடமிட உருச் சிறுகி -ஒளி விஞ்சி -மாற்று எழுமா போலே -சங்கோசம் அற்று -ஞான விகாசம் உண்டானவாறே –
நாய்ச்சிமாருடனே சாம்யம் சொல்லலாய் இறே இருப்பது இத் ஆத்மாவுக்கு என்று -திருக் கோட்டியூர் நம்பி அருளிச் செய்வர் .

அழுக்கு அடைந்த மாணிக்கத்தை நேர் சாணையிலே ஏறிட்டு கடைந்தால் பளபளக்கை வடிவாய் இருக்குமா போலே -அஞ்ஞனான சேதனனுக்கு
திரோதான நிவ்ருத்தியிலே அடியேன் என்கை வடிவாய் இருக்கும்-என்று முதலியாண்டான்-

அஹங்காரம் ஆகிற ஆர்ப்பைத் துடைத்தால் ஆத்மாவுக்கு அழியாத பேர் -அடியான்-என்று -இறே -என்று வடக்குத் திரு வீதிப் பிள்ளை

வங்கி புரந்து நம்பி -யதிவர சூடாமணி தாஸ்ர்க்கு -ஒரு சர்வ சக்தியை அசக்தன் பெரும் போது தானும் பிறரும் தஞ்சம் அன்று –
ஆசார்யன் அனுக்ரஹ பூர்வகமாக த்வயத்தில் அர்த்தத்தை அனுசந்தித்து பிழைத்தல் –
நித்ய சம்சாரியாய் முடிதல் செய்யுமதுக்கு மேற்பட்டது இல்லை என்று அருளிச் செய்தார்

நாச்சிமாரை ஈஸ்வரனில் காட்டிலும் குறையச் சொல்லும் இடமும் -ஒக்கச் சொல்லும் இடமும் – எழச் சொல்லும் இடமுமாய் இருக்கும்
-இதுக்கு பிரமாணங்கள் -இவன் பிரபத்தி பண்ணும் படியைச் சொல்லும் இடத்தில் -இவள் ஸ்வரூபம் சொல்லுகிறது என்றும்
-ஒக்கச் சொல்லுகிற இடத்தில் -ஐகயம் சொல்லுகிறது என்றும் –
எழச் சொல்லும் இடத்தில் சௌலப்யம் சொல்லுகிறது என்றும் பிரபத்தி பண்ணக் கடவன்

உகந்து அருளின இடங்கள் பலவிடமாய் -திருப் போனகம் படைப்பது ஒன்றே யானால் அமுது செய்யப் பண்ணும்படி என் என்று
பெரியவாச்சான் பிள்ளை நம்பிள்ளைக்கு விண்ணப்பம் செய்ய –த்வயத்தில் பூர்வ உத்தர கண்டங்கள் இரண்டுக்கும் நடுவே –
சர்வ மங்கள விக்ரஹாய -என்று விசேஷண சஹிதமாக உச்சரித்து அமுது செய்து அருளப் பண்ணுவது -என்று அருளிச் செய்தார் –

வஸ்துமான் வஸ்துவை முன்னிட்டுக் கொண்டு இருக்கும் —வஸ்து விநியோகத்தை முன்னிட்டுக் கொண்டு இருக்கும் –
விநியோகம் போகத்தை முன்னிட்டுக் கொண்டு இருக்கும் – போகம் அபிமதத்தை முன்னிட்டுக் கொண்டு இருக்கும் –
அபிமதம் அநு குணத்தை முன்னிட்டுக் கொண்டு இருக்கும் – அநு குணம் பரனுக்கு பாங்காய் இருக்கும் –

வயாக்ரா சிம்ஹங்களோ பாதி உபாய வேஷம் – யூத பதியான மத்த கஜம் போலே உபேய வேஷம் என்று திருக் கோட்டியூர் நம்பி அருளிச் செய்வர் –
வ்யாமோஹம் உபாயம் – முக மலர்த்தி உபேயம் என்று எம்பார் அருளிச் செய்வர் –

திருக் கோட்டியூர் நம்பி பெரிய முதலியாரைப் பார்த்து -உபாய அம்சத்தில் தஞ்சமாக நினைத்து இருப்பது என் -என்று விண்ணப்பம் செய்ய
-இது நெடும் காலம் ஸ்வரூப நிரூபணம் பண்ணப் பெற்று வைத்து உபாய நிரூபணமே பண்ண தேடுவதே என்று -விஷண்ணராய் அருள –
ஆகில் உபாயம் வேண்டாவோ என்று விண்ணப்பம் செய்ய –
அபிரூபையான ஸ்திரீ அழகை மட்டிக்க மட்டிக்க -அபிரூபனாய் ஐஸ்வர்யர்ய வானுமான புருஷன் அந்தரங்கமாக
ஆழம் கால் படுமா போலே -அஞ்ஞனான சேதனன் -அழுக்கு அறுக்க அழுக்கு அறுக்க அவ் வீஸ்வரன்
திரு உள்ளம் அத்ய அசந்னமாய்ப் போரும் காணும் -என்று அருளிச் செய்தார் –

தேவகிப் பிராட்டியார் -திருக் கோட்டியூர் நம்பியின் குமாரத்தி -அருளிச் செய்த வார்த்தை –
ஸ்வரூபஞ்ஞன் ஸ்வயம் ஸ்வரூப நிரூபணம் பண்ணினால் -தத் அநு ரூபமான பிரதான அநுபவ விசேஷத்தை அநுபவாந்தரத்துக்கு 
உறுப்பாக்குகையும் அநு பயுக்தம் –உக்தார்த்த ஸ்ரவணம் பண்ணினவனுக்கு உபாயாந்தர த்யாகம் உடம்போடே கூடாது –
ஆச்சார்ய -முக்ய -அனுபவம் கொண்டு பகவத்-அமுக்ய -அனுபவத்துக்கு உபாயம் ஆக்குவது ஒட்டாது-

பொன் நாச்சியார் கூரத் ஆண்டாளுக்கு பிரசாதித்த வார்த்தை –
ஸ்வரூபஞ்ஞன் ஸ்வயம் ஸ்வரூப நிரூபணம் பண்ணவே –
ஸ்வரூப அநு ரூபமான உபாய உபேயாதிகள் உபபன்னமாய் போரும் காணும் -என்று அருளிச் செய்தார்–
ஆசார்ய சேஷத்வ பாரதந்த்ர்யங்களே ஸ்வரூப நிரூபக தர்மம் –
ஆசார்ய அபிமானமே உபாயம் –
ஆசார்யன் உகக்கும் கைங்கர்யமே உபேயம்

மருதூர் நம்பி -எம்பெருமானார் சிஷ்யர்களில் ஒருவர் -தம்முடைய அந்திம தசையில் பணித்த வார்த்தை –
மூன்று ஜன்மம் திருவடிகளிலே அபராதம் பண்ணின சிசுபாலன் திருவடிகளைப் பெற்றான் -அநாதி காலம் திருவடிகளிலே
அபராதம் பண்ணின நான் பெறாது இருக்கை வழக்கோ -என்று அழ -அப்போதே பரமபதத தேற எழுந்து அருளினார் –

சிறியாண்டான் -எம்பெருமானாரின் சிஷ்யர் -கிருமி கண்ட சோழன் இறந்த செய்தியை எம்பெருமானாருக்கு அறிவித்து –
அவரால் -மாறொன்று இல்லா மாருதி -என்று கொண்டாடப் பட்டவர் —தம்முடைய அந்திம தசையில் பணித்த வார்த்தை –
திருவேம்கடமுடையான் தன் ஸ்வரூபத்தை மறந்து என் ஸ்வரூபத்தை நினைத்தான் ஆகில் – பழைய நரகங்கள் ஒழிய வேறே எனக்கு
ஒரு நரகம் சிருஷ்டிக்க வேண்டும் —
அன்றிக்கே
என் ஸ்வரூபத்தை மறந்து தன் ஸ்வரூபத்தை உணர்ந்தான் ஆகில் –
பழைய திருநாடு போராது எனக்கு என ஒரு திரு நாடு ஸ்ருஷ்டிக்க வேணும் –

அத்துழாய் பெரிய நம்பி ஆபத் தசையிலே
-நாம் இங்கு நின்றும் கோயில் ஏறப் போனாலோ -என்ன –
நாம் அங்கு போய் பிரக்ருதியை விட்டால் நாட்டில் ஸ்ரீ வைஷ்ணவர்கள் திருவடிச் சாரும் போது –
நம்பி அகப்பட கோயில் ஏறப் போக வேண்டிற்று இல்லையோ -என்று பயப்படார்களோ -என்று அருளிச் செய்தார் –

ப்ராப்யாந்தரங்களில் கை வைத்தான் ஆகில் சாஸ்திரம் சிலுகிடும் -வருந்தி சண்டை இடும் —
சாதனாந்தரங்களில் கை வைத்தான் ஆகில் -பாரதந்த்ர்யம் சிலுகிடும் —
சித்தோ உபாய ச்வீகாரத்தில் கை வைத்தான் ஆகில் ஸ்வரூபம் சிலுகிடும் –

அவித்யை அந்தர்பூதனான சேதனனுக்கு அநுபாவ்யமான போகம் –
அவித்யை நிவ்ருத்தி பூர்வகமான அநுபவேச்சை உடையவனுக்கு அநுபாதேயம் –
அநுபாதேய போகஸித்திக்கு காரணமான கர்ம காரணம் த்ரி விதம் -ஸ்வ ஸ்வாதந்த்ர்யம் -தேகாத்ம அபிமானம் -அந்ய சேஷத்வம் –
அதில் சிறிது -ஸ்வ ஸ்வா தந்த்ர்யம்-சிர காலத்தோடே கூட அவித்ய நிவ்ருத்தியை பிறப்பிக்க கடவதாய் இருக்கும்
-அல்லாதவை -தேகாத்ம அபிமானம் -அந்ய சேஷத்வம் –அவித்ய வர்த்தகங்களாய் இருக்கும்

எம்பார் வார்த்தை -ஸ்வரூபஞ்ஞன்-இதர விஷய ராக நிவ்ருத்தியும் -விகித விஷய ராக பிரவ்ருத்தியும் -இதர உபாய த்யாகமும் –
சித்தோ உபாய ச்வீகாரமும் –ஹிதபரன் பக்கல் யதா பிரதிபத்தியும் -உள்ளவனாய் இருப்பன்

சிறியாச்சான் கலங்குகைக்கு யோக்யதை உண்டாய் இருக்கச் செய்தே -தெளிந்து இருப்பர் –
அடியேன் யோக்யதை இல்லாமையாலே தெளிந்து இருப்பது -என்று ஜீயர் அருளிச் செய்தார்-

அமுதனார் சிறியாச்சானை -உம்முடைய அனுஷ்டானம் இருக்கும் படி  இது – நாங்கள் என் செய்யக் கடவோம் என்ன –
என் அனுஷ்டானத்துக்கு ஒரு பலம் உண்டாகில் அன்றோ உம்முடைய அந்அனுஷ்டானத்துக்கு ஒரு பிரத்யவாயம் உண்டாவது –
வெறும் புடவை தோயாமல் கெடும் -பட்டுப் புடவை தோய்க்கக் கெடும் – என்று இரீர் -என்று அருளிச் செய்தார் –
ஆசார்யர்களில் சிலர் -உம்முடைய அனுஷ்டானம் இருக்கும்படி இது -நாங்கள் என் செய்யக் கடவோம் என்ன –
என் படியும் உங்கள் படியும் கொண்டு கார்யம் என் -ஏதத் வ்ரதம் மம -என்று அருளிச் செய்தபடியே  யன்றோ -என்று அருளிச் செய்தார் –

நான் ஒரு நூலில் வைத்து சொல் என்றால் சொல்லும் நூலில் மாலைகள் ஒரு முமுஷுக்கு பாவனமுமாய் போக்யமுமாய் இருக்கும் என்று
ஆச்சான் பிள்ளை வார்த்தை –

ஆச்சான் பிள்ளை சிறிய தாயார் –பெரிய பிள்ளையையும் -பெரியவாச்சான் பிள்ளை தகப்பனார் யமுனாசார்யர் -யாக இருக்கக் கூடும் –
ஆச்சான் பிள்ளையையும் சேவித்து போருகிற காலத்தில் -இவள் சோகார்த்தையாக –ஆச்சான் பிள்ளை -நீ சோகிக்கிறது என் என்ன
அநாதி காலம் பாப வாசனைகளாலே -ஜந்மாதிகளிலே ஈஸ்வரன் இன்னம் என்னைத்-தள்ளப் புகுகிறானோ என்று பயப்பட்டு நின்றேன் -என்ன
கெடுவாய் -இது ஆர்கேடென்று இருந்தாய் -உனக்கு ஸ்ருஷ்டிக்க வேண்டுமோ -அவதரிக்க வேண்டுமோ -பிறப்பில் பல் பிறவிப் பெருமான் -என்றும்
-பொருள் என்று இவ்வுலகம் படைத்தான் -என்றும் -சம்பவாமி யுகே யுகே என்றும் – ஒருவனைப் பிடிக்க ஊரை வளையுமா போலே –
அகில ஜகத் ஸ்வாமி யாயிற்று -அஸ்மத் ஸ்வாமி யாகைக்கு யன்றோ -என்று அருளிச் செய்தார் –

ஞானப் பிரதன் ஆசார்யன் – ஞான வர்த்தகர் ஸ்ரீ வைஷ்ணவர்கள் – ஞான விஷயம் -எம்பெருமான் – ஞான பலம் -கைங்கர்யம் –
பலத்தின் இனிமை பாகவத கைங்கர்யம் – சிஷ்யனுக்கு ஆசார்யனுடைய ஸுப்ரஸாதம் அப்ப்ரசாதமாகவும் -அப்பிரசாதம் ஸுப்ரஸாதம் ஆகவும் வேணும் –

ஆசார்ய விஷயத்தில் -கிருதஜ்ஞதை -விஸ்வாசம் -ப்ரேமம் -விஸ்லேஷ பீருவாகை – சம்ச்லேஷ விஷயம் -மங்களா சாசனம் -கதி  சிந்தனை –
அனுபவ இச்சை -இவை இத்தனையும் உடையவன் -ஆத்ம ஜ்ஞானமும் உடையவன் ஆகிறான் –

அர்த்த பிரவணனுக்கு பந்துவும் இல்லை -குருவும் இல்லை – விஷய பிரவணனுக்கு லஜ்ஜையும் இல்லை பயமும் இல்லை –
ஷூத்து நலிந்தவனுக்கு விவேகமும் இல்லை -நியதியும் இல்லை – ஞானிக்கு நித்ரையும் இல்லை சுகமும் இல்லை

அனந்தாழ்வான் எச்சானுக்கு அருளிச் செய்த வார்த்தை -இவ்வாத்மா வாகிற பெண் பிள்ளையை – ஆசார்யனாகிற பிதா -எம்பெருமானாகிற வரனுக்கு
-குரு பரம்பரை யாகிற புருஷகாரத்தை முன்னிட்டு -த்வயம் ஆகிற மந்த்ரத்தை சொல்லி -உதகம் பண்ணிக் கொடுத்தான் –

ஆச்சான் பிள்ளை ஸ்ரீ பாதத்தில் -ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் -அஹங்காராதிகள் நடையாடிக் கொண்டு போருகிற அடியேனுக்கு –
அக்கரைப்பட வழி உண்டோ என்று கேட்க – அருளிச் செய்த வார்த்தை
-போக்தாவானவன் போக்ய பதார்த்தத்தை குலம் கொண்டே ஸ்வீகரித்து வைத்து -போக காலம் வந்தவாறே –
குலங்கறுத்து மணியை புஜிக்குமா போலே -ஆசார்ய வரணம் பண்ணி -சரணகதனாய் இருப்பான் ஒரு அதிகாரிக்கு
-அஹங்கா ராதிகள் நடையாடிற்றாகிலும் கைவிடாதே ஸ்வீகரித்து –
தீர்ந்த வடியவர் தம்மை  திருத்திப் பணி கொள்ள வல்ல -திருவாய் மொழி -3-5-11-என்கிற படியே இவனுடைய
அஹங்காராதிகள் ஆகிற சேற்றைக் கழுவிப் பொகட்டு -போக்யமான வஸ்துவை போக்தாவான எம்பெருமான் தானே புஜிக்கும் என்று நினைத்து இரீர்
என்று அருளிச் செய்தார் –

எங்கள் ஆழ்வான் -ஆசார்யன் ஆவான் அஹங்காரத்தை விட்டு -அழிச்சாட்டத்தை விட்டு –அழிச்சாட்டம் =ஸ்வ தாந்த்ர்யம் -சண்டித்தனம் -அலமாப்பு –
அந்ய சேஷத்வம் ஆகிற வருத்தம் –அலமாப்பை விட்டு -அகாரார்த்தமான அந்தர்யாமிக்கே அற்று –
அர்ச்சாவதாரத்தை ஆஸ்ரயித்து -ஆனந்தியாக போருமவன்
-அல்லாதான் ஒருவனுக்கு குடிமகனாய் லோக குருவாய் இருக்க -லோகத்துக்கு அடைய குடிமகன் ஆகா நின்றான்
-பணத்துக்காக அடிமைத் தொழில் புரிகின்றான்

நாராயணனைப் பற்றி நாடு பெறலாய் இருக்க -நாரங்களைப் பற்றி நரக வாசிகளாகா நின்றார்கள் –
எம்பெருமானைப் பற்றி ஏற்றம் பெறலாய் இருக்க -ஏழைகளைப் பற்றி எளிவரவு படா நின்றார்கள் –
ஏழையர் ஆவி உண்ணும் -சேட்டை தன மடி யகத்து செல்வம் பார்த்து இருக்கின்றீரே –
ஸ்ரீ வைஷ்ணவர்களைப் பற்றி சீர்மை பெறலாய் இருக்க -சில்வானவரைப் பற்றி சீர் கேடராகா நின்றார்கள்–சில்வானர் -அற்பர்கள் –
ஆசார்யனைப் பற்றி அம்ருத பானம் பண்ணலாய் இருக்க அஞ்ஞ்ரை பற்றி அனர்த்தப் படா நின்றார்கள் –
மந்த்ரத்தைப் பற்றி மாசு அறுக்கலாய் இருக்க -மமதையைப் பற்றி மரியா நின்றார்கள் —மரியா நின்றார்கள் –ஸ்வரூப நாசத்தை அடையா நின்றார்கள் –
வடுக நம்பி -நியந்தாவான ஆசார்யன் சந்நிதியிலே வர்த்தித்தல்-நியமவான் ஆன சிஷ்யன் சந்நிதியிலே வர்த்தித்தல் –செய்யில் அல்லது நியதன் ஆகைக்கு
வழி இல்லை –ஆசார்ய சிஷ்ய லஷண பூர்த்தி உள்ளவர் உடன் வர்த்தித்தால் எம்பெருமானே பிரப்யமாயும் பிராபகமாயும் -தாரகமாவும் –
போஷகமாவும் -போக்யமாயும் இருப்பவன் ஆகிறான்-

தான் வைஷ்ணவனாய் அற்றால் தனக்கு தன் ஆசார்யானில் குறைந்து இருப்பான் ஒரு சிஷ்யன் இல்லை -உத்தேச்ய பிரதிபத்தி துல்யமாகையாலே —
ஆகிற படி என் என்னில் -என்னுடைய அஜ்ஞானத்தையும் -அசக்தியையும் -அந் அனுஷ்டானத்தையும் பாராதே -என்னை விஷயீகரித்து -அத்தலைக்கு
ஆக்கினவன் அன்றோ -என்று சிஷ்யன் உத்தேச்ய பிரதிபத்தி பண்ணிக் கொண்டு போரக் கடவன் –
ஆசார்யனும் -என்னுடைய அஞ்ஞானத்தையும் அசக்தியையும் -அந் அனுஷ்டானத்தையும் பாராதே-
விஷய பிரவணன் மரப் பாவை காணிலும் ஆலிங்கனம் பண்ணுமா போலே –
என் பக்கலிலே உட்பட பர தந்த்ரனாய்க் கொண்டு போருகிறான் அன்றோ -பகவத் விஷயத்தில் தனக்கு உண்டான
ஆதர அதிசயம் இருந்தபடி என் -என்று உத்தேச்ய பிரதிபத்தி பண்ணிக் கொண்டு போரக் கடவன் –

ஆசார்யன் அருளிச் செய்யும் வார்த்தையை ஆப்தம் என்று ஆதரித்தாருக்கு அந்தக்கரணம் விதேயமாகும் –
அந்தக்கரணம் விதேயமான வாறே அந்தர்யாமி பிரசன்னனாம் -அந்தர்யாமி பிரசன்னன் ஆனவாறே –
அந்த பிரகாசமும் அந்தஸ் ஸு கமும் உண்டாம் –
இவை இரண்டும் உண்டானவாறே அந்தர் தோஷமும் அந்தர் துக்கமும் கழியும் –
இவை கழிகிற அளவன்றிக்கே -அந்தமில்லாத ஆனந்தம் உண்டாம் –

சத்ருக்களுக்கு கரைய வேண்டா -ஸ்வாமியுமாய் -ஸ்ரீ ய பதியுமாய் -ஆனவன் உடைமை ஆகையாலே –

ஆசார்யன் மூன்றாலே உத்தேச்யன் -ஞான ப்ரதன் -அனுஷ்டான ப்ரதன் -உபாய ப்ரதன் -என்று
ஸ்ரீ வைஷ்ணவர்களும் மூன்றாலே உத்தேச்யர் -உபாயத்துக்கு முற் பாடர் -உபேயத்துக்குஎல்லை நிலமாய் -இருந்த நாளைக்கு உசாத் துணை என்று –
பிராட்டியும் மூன்றாலே உத்தேச்யை -புருஷகார பூதை -கைங்கர்ய வர்த்தகை -நித்ய ப்ராப்யை -என்று –
ஈஸ்வரன் மூன்றாலே உத்தேச்யன் -ருசி ஜநகன் -மோஷ ப்ரதன் -உபாய பூதன் -என்று –

ஸ்வபாவ அந்யதா ஞானம் -ஸ்வரூப அந்யதா ஞானம் –இவை -அந்யதா ஞானம் -விபரீத ஞானம் —
இவன் ஆத்ம பிரதானம் பண்ணினாப் போலே இருப்பது ஓன்று இ றே அவன் -ஆசார்யன் -ஞானப் பிரதானம் பண்ணினபடி –

ஈச்வரனாகிற கர்ஷகன் -சேதனனாகிற திருப்பள்ளித்தாங்கன்றை -விதை–சேஷத்வ ஞானமாகிற ஷேத்ரத்திலே ஊன்றி –
ததீய அபராதமும் -விபரீத ஞானமுமாகிற புழுக்கடியாமல் நோக்கி -கைங்கர்ய அனுவர்த்தமாகிற -மடையாலே –
ஆசார்யர்ன் அருளாகிற நீர் பாய்ச்சி -அஹங்கார மமகாரமாகிற களை மண்டாமே –
பகவத் விஷயமாகிற களை கொட்டாலே சேற்றை எடுத்து -விபரீத அங்கீகாரமாகிற மாடும் -சப்தாதி விஷயமாகிற
பேய்க் காற்றும் – புகுராமே -பிரபன்னத்வம் ஆகிற வேலியை இட்டு –
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆகிற வர்ஷத்தை உண்டாக்கி -தளிரும் முறியும்
மொட்டும் செலுந்துமாய் -கொழுந்துமாய்-அதின் ஒளி மொட்டு எடுத்துக் கட்டின மாலை இறே
பரமை காந்தி-முதலி யாண்டான் அருளிச் செய்த வார்த்தை

பரம சேதனனாகிற பசியன் -ஆசார்ய முகத்தாலே அவகாதனாய் -சேதநனாகிற சிறு நெல் பொறுக்கி –
வேதாந்தமாகிற உரலிலே -உபதேசமாகிற உலக்கையாலே –
ஸ்ரவணமாகிற தலைத்துகை துகைத்து -உடம்பாகிற உமி கழித்து -மனனமாகிற அடுக்கலிட்டு –
நிதித்யாசநமாகிற சுளகாலே -விவேகமாகிற கொழி கொழித்து -அஹங்கார மம காரமாகிற -அடிக் கழித்து –
அந்ய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்த்ர்யமாகிற நுனிக் கொழித்து -ருசி வாசனை யாகிற தவிடறக் குத்தி –
சேஷத்வ ஞானமாகிற வெளுப்பை உண்டாக்கி -அத்யவசாயமாகிற அரிகுஞ்சட்டியிலே பிரபத்தி யாகிற நீரை வார்த்து –
சாதனாந்தரமாகிற தவிடறக் கழுவி -பிரயோஜனாந்தரமாகிற  கல்லற அரித்து,-
பரபக்தி யாகிற பானையிலே பர ஞானமாகிற உலை கட்டி – அனுபவமாகிற அடுப்பிலே -விச்லேஷமாகிற அடுப்பை இட்டு –
இருவினையாகிற விறகை மடுத்து -த்வரை யாகிற ஊத்தூதி -ஆற்றாமையாகிற கொதி கொதித்து –
பரமபக்தி யாகிற பொங்கினாலே -சூஷ்ம சரீரமாகிற கரிக்கலத்தோடே ஸூஷூம்நையாகிய வாசலாலே புறப்பட்டு –
அர்ச்சிராதி யாகிற படி யொழுங்காலே மாக வைகுந்தமாகிற மச்சிலேற்றி அப்ராக்ருதமாகிற பொற் கலத்தோடே –
அஹம் அன்னம் -என்கிற சோற்றை இட்டு – அஹம் அந்நாத -என்று புஜியா நிற்கும் -முதலி யாண்டான் அருளிச் செய்த வார்த்தை-

கலங்குகிறதும் -கலக்குகிறதும் -கலங்கிக் கிடக்கிறதும் –தெளிகிறவனும் -தெளிவிக்கிறவனும் -தெளிந்து இருக்கிறவனும் –
கலங்குகிறான் -சேதனன் – கலக்குகிறது -அசித் – கலங்கிக் கிடக்கிறான் -சம்சாரி –
தெளிகிறான் -சேதனன் – தெளிவிக்கிறான் -ஆசார்யன் – தெளிந்து இருக்கிறான் -ஈஸ்வரன் –
ஆகையால் கலங்குகிற தன்னையும் -கலக்குகிற அசித்தையும் – தெளிவிக்கிற ஆசார்யனையும் -தெளிந்த ஈஸ்வரனையும் – அறிய வேணும் .

ஆச்சான் பிள்ளை ஸ்ரீ பாதத்திலே சேவிப்பார் இரண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள் -ராகத் த்வேஷம் கொண்டாடி
அவர்களில் ஒருவர் பரிபவப்பட்டோம் என்று பட்டினி விட -பரிபவப் படுவாரும் தாமேயாம் -பட்டினி விடுவாரும் தாமேயாம் -என்று அருளிச் செய்தார் –
அவர்கள் இத்தை கேட்டு -வெட்கி -திருந்தினார்கள் –

இரண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள் ராகத் த்வேஷம் கொண்டாடி வர -இவர்களைச் சேர விட்டு அருள  என்று –
ஆச்சான் பிள்ளைக்கு -ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் விண்ணப்பம் செய்ய – ஜகத்தில் ஈச்வரர்கள் இருவர் உண்டோ -என்று அருளிச் செய்ய –
ஆகிலும் சேர விட்டு அருள வேணும் -என்ன –
ஸ்வ சரீரத்தை நியமிக்க மாட்டாத நான் -அந்ய சரீரத்தை நியமிக்க புகுகிறேனோ -என்ன -ஆகிலும் இப்படி அருளிச் செய்யலாமோ என்ன –
அத்ருஷ்டத்துக்கு அஞ்சி நெஞ்சை மீட்கக் கண்டிலோம் -த்ருஷ்டத்துக்கு அஞ்சி வாயை மூடக் கண்டிலோம் -நாம் இவர்களை சேர விடும்படி என
-என்று அருளிச் செய்ய –இருவரும் அந்யோந்யம் பீருக்களாய் தங்களில் ஏக மநாக்களாய் விட்டார்கள் –

பிள்ளை உறங்கா வல்லி தாசர் -முதலி யாண்டான் ஸ்ரீ பாதத்திலே சென்று -தண்டன் இட்டு சிஷ்ய லஷணம் இருக்கும்படி என் –
ன்று விண்ணப்பம் செய்ய -ஆண்டான் அருளிச் செய்த படி –
ஆசார்ய விஷயத்தில் சிஷ்யன் -பார்யா சமனுமாய் -சரீர சமனுமாய் -தர்ம சமனுமாய் இருக்கும் –
அதாவது -சொன்னத்தை செய்கையும் -நினைத்தத்தை செய்கையும் -நினைவாய் இருக்கையும் – என்று அருளிச் செய்தார் –

அநந்தரம் பிள்ளை கூரத் ஆழ்வான் ஸ்ரீ பாதத்திலே சென்று தண்டன் இட்டு ஆசார்ய லஷணம் இருக்கும்படி எங்கனே -என்று விண்ணப்பம் செய்ய –
ஆழ்வான் அருளிச் செய்தபடி – சிஷ்யன் விஷயத்தில் -ஆசார்யன் பர்த்ரு சமனுமாய் -சரீரி சமனுமாய் -தரமி சமனுமாய் -இருக்கக் கடவன் –
அதாவது -ஏவிக் கொள்ளுகையும் -எடுத்து இடுவிக்கையும் -அதாவது அசேதனத்தைக் கொண்டு –
நினைத்தபடி விநியோகம் கொள்ளுமா போலே விநியோகம் கொள்ளுகையும் -எடுத்துக் கொள்ளுகையும் -என்று அருளிச் செய்தார் –

ஆசார்யனாவான் சிஷ்யனுக்கு ஹித காமனாய் இருக்குமவன் -சிஷ்யனாவான் -சர்வ பிரகாரத்தாலும் ஆசார்யனுக்கு தன்னை ஒதுக்கி வைக்குமவன் –

கோளரி யாழ்வான் என்று ஒருத்தன் -எனக்கு ஹிதம் அருளிச் செய்ய வேணும் என்ன -பட்டர் பெருமாளையும் பார்த்து –
அவனையும் பார்த்து விட்டதில் -இவனுக்கு விசுவாசம் பிறவாமல் நிற்க –
வ்ருதைவ பவதோ யாதா பூயஸீ ஜந்ம சந்ததி -தஸ்யா மன்ய தமம் ஜந்ம சஞ்சிந்த்ய சரணம் வ்ரஜ -என்கிற ஸ்லோகத்தை அருளிச் செய்தார் –
உனக்கு கணக்கற்ற ஜன்மாக்கள் வீணாக கழிந்து விட்டன -அந்த ஜன்மங்களில் ஒன்றான இதிலாவது அவனே உபாயம் உபேயம் ஆக  என்று நினைத்து –
அவனையே உபாயமாக உறுதி கொள்வாய் -என்கை-

ஸூக்ருத துஷ்க்ருதங்கள் இரண்டுக்கும் தலை -ஆத்ம சமர்ப்பணமும் -ஆத்ம அபஹாரமும் – இவற்றிலும் விஞ்சின ஸூ க்ருத துஷ்க்ருதங்கள் -ஆத்ம அபஹார தோஷத்தைப் போக்கி ஆத்ம சமர்ப்பணத்தைப் பண்ணுவித்த ஆசார்யன் பக்கலிலே க்ருதஜ்ஞதையும் -க்ருதக்நதையும் –

தேவரீர் திருமஞ்சனச் சாலையிலே எழுந்து அருளி திரு மஞ்சனம் செய்து அருளி -தூய்தாக திருக் குற்றொலியல் சாத்தி அருளி –
உலாவி அருளும் பொழுது –
குறு வேர்ப்பு அரும்பின திரு முக மண்டலத்தில் சேவையும் -சுழற்றிப் பணி மாறுகிற கைங்கர்யத்தையும் விட்டு –
அடியேனுக்கு பரம பதத்துக்கு போக இச்சையாய் இருந்தது இல்லை -என்று பின்பழகிய பெருமாள் ஜீயர் விண்ணப்பம் செய்தார் –
இதைக் கேட்டருளி நம்பிள்ளையும் -முதலிகளும் எல்லாம் -இவ் விபூதியிலே இவ் உடம்போடே ஒருவருக்கும் இவ் ஐஸ்வர்யம் கூடுமதோ -என்று
மிகவும் திரு உள்ளம் உகந்து அருளினார்கள் –
இத்தால் சொல்லிற்று ஆய்த்து -ஆசார்யன் உடைய ஆத்ம குணங்களோடு தேக குணங்களோடு வாசி யற சிஷ்யனுக்கு உபாதேயமாய் இருக்கிறபடி –

அனந்தாழ்வான் -இடம் ஸ்ரீ வைஷ்ணவர்கள் -அடியேனுக்கு இரண்டு வார்த்தை அருளிச் செய்து அருளிற்று –என் பக்கலிலே ஹிதம்கேட்டால்
நான் பெரும் தேசம் பெறுவுதி -என்று அருளிற்று -அத்தைக் கிழிச் சீரையிலே தனம் என்று -முடிந்து கொண்டேன் –
இங்குள்ள ஐஸ்வர்யம் உன்னை விட்டு அகலும் என்று அருளிச் செய்திற்று – அது பிரத்யட்ஷமாக கண்டபடியாலே -ஸ்ரீ பாதத்துக்கு அடிமை
என்னும் இடம் கண்டேன் -என்று விண்ணப்பம் செய்ய -இனி நீர் இங்கேயே நில்லும் -என்று அருளிச் செய்து அருளினார் –

பெருமாள் ஆழ்வானைப் பார்த்து -நீ உனக்கு வேண்டுவது நம்மை வேண்டிக் கொள் -என்று திரு உள்ளமாக நாயந்தே
அடியேனுக்கு பண்டே எல்லாம் தந்து அருளிற்றே -என்று விண்ணப்பம் செய்ய –
இல்லை இப்போது நம்மை வேண்டிக் கொள் -என்ன -ஆகில் நாயந்தே அடியேனோடு சம்பந்தம் உடையார் எல்லாரும்
பரம பதம் பெற வேணும் -என்ன -தந்தோம் -என்று திரு உள்ளமாக – இத்தை உடையவர் கேட்டருளி –
காஷாயத்தை முடிந்து ஏறிட்டு ஆர்த்துக் கொள்ள -இது என் -என்ன –
நமக்கு ஆழ்வானுடைய சம்பந்தமுண்டாகையாலே பரம பதம் பெறலாமே -என்று அருளிச் செய்தார் –

எம்பெருமானை அபேஷிக்கை வார்த்தா மாதரம் -ஸ்ரீ வைஷ்ணவர்களை அபேஷிக்கை கையைப் பிடிக்கை –
ஆசார்யனை அபேஷிக்கை காலைப் பிடிக்கை -குரு பிரமாணீ க்ருத சித்த வ்ருத்தய –
ஸ்ருதி பிரமாண பிரதிபண்ண வ்ருத்தய -அமாநினோ டம்ப விவர்ஜிதா நரா தரந்தி சம்சார சமுத்ர மஸ்ரமம் –

அந்ய சேஷத்வ நிவ்ருத்தியும் -ஸ்வ ஸ்வா தந்த்ர்ய நிவ்ருத்தியும் -அதிகாரி க்ருத்யம் -ஞானப் பிரதானமும் -ஞான வர்த்தகத்வமும் ஆசார்ய  க்ருத்யம் –
புருஷகாரத்வமும் கைங்கர்ய வர்த்தகத்வமும் பிராட்டி க்ருத்யம் – விரோதி நிவர்தகத்வமும் பிராப்ய பிரதத்வமும் ஈஸ்வர க்ருத்யம் –

அக்நியை அகற்றுவாரும் –அவித்யயை அகற்றுவாரும் –அந்யரை அகற்றுவாரும் –அச்சத்தை அகற்றுவாரும் – அபோக்யரை அகற்றுவாரும் –
ஐந்து வித உபகாரங்கள் செய்யும் ஆசார்யர்கள் -கர்மாதிகள் விலக்கி -ஞானம் -அளித்து-அந்ய சேஷத்வம் கழித்து -ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ரூபமான
பிரபத்தியை உபதேசித்து -ஐஸ்வர்ய கைவல்ய -ஸ்வ பிரயோஜன பகவத் கைங்கர்யங்கள் ரூபமான அபோக்யதைகளை அகற்றி அருளுபவர்கள் –

துக்க அனுபவம் பிரகிருதி–துக்க அநுபவிதா -ஆத்மா–துக்க அசஹை பிராட்டி–துக்க நிவாரகன் ஈஸ்வரன் –

ஆழ்வானுக்கு பால மித்ரனாய் இருப்பான் ஒரு பிராமணனுக்கு அநேக காலம் பிள்ளை இன்றிக்கே இருந்து –
பின்பு ஒரு பிள்ளை பிறந்தவாறே -கோயிலிலே ஆழ்வானுக்கு வார்த்தையாய் கேட்டு –
அப்போதே பெரிய பெருமாள் திருவடிகளிலே சென்று – அப்பிள்ளைக்கு ஹிதத்தை அருளிச் செய்து –
வருவாரை எல்லாம் -அந்தப் பிள்ளை செய்வது என் -என்று வினவுவர் –
ஒரு நாள் ஆண்டாள் போனத்தை வா என்று அழைத்து உறவு கொண்டாடா நின்றீர் – இதுக்கு ஹேது என் -என்ன –
நான் அவனுக்கு ஒரு நல்வார்த்தை சொன்னேன் காண் -என்ன – அவன் எங்கே நீர் எங்கே –
இப்படி சொல்லுவதொரு வார்த்தை உண்டோ -என்ன -ஒருவன் விலங்கிலே கிடந்தால் -விலங்கு விடுவிக்கும் போது –
விலங்கில் கிடக்கிறவனுக்கு சொல்லுமோ -விலங்கை இட்ட ராஜாவுக்கு சொல்லுமோ -என்று அருளிச் செய்தார் –
அந்த பிள்ளை உபநயனம் பண்ணின சமனந்தரத்திலே கோயிலிலே வந்து ஆழ்வான் ஸ்ரீ பாதத்திலே வந்து சேர்ந்தான் –
போசல ராஜ்யத்து ஸ்ரீ சாளக் ராமத்துக்கு உடையவர் எழுந்து அருள -ஊரடைய சைவர் ஆகையாலே ஆதரியாதே இருக்க –
முதலி யாண்டானைப் பார்த்து இவ் ஊரார் நீர் முகக்கும் இடத்தில் உன்னுடைய ஸ்ரீ பாதத்தை விளக்கி வா -என்று அருளிச் செய்ய –
அவரும் அப்படியே செய்ய – பிற்றை நாள் அவ ஊரார் அடைய உடையவர் ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயித்தார்கள் –
அதுக்கு பின் ஸ்ரீ சாளக் க்ராமம் என்று பேர் ஆய்த்து –

மிளகு ஆழ்வானை  முதலிகள் -நீர் கீழை ஊருக்கு பல காலும் போவான் என் -என்று கேட்க –
நான் அங்கு போனால் பகவத் விஷயத்துக்கு அநு கூலமான வார்த்தைகள் அவர்களுக்கு சொல்லுவன் –
அத்தாலே இங்குத்தைக்கு விரோதியார்கள் என்று -அவர்கள் பக்கலில் சில கொண்டு போந்து பாகவத விஷயத்துக்கு உறுப்பாக்கினால் –
அவர்களுக்கு ஓர் ஆநு கூல்யம் பிறக்கும் என்றும் போனேன் -என்ன -அப்படி யாகிலும் அவர்கள் பதார்தங்கள் ஆமோ என்ன –
நான் எல்லோரையும் நாராயண சம்பந்த நிபந்தநமாகக் காணும் அத்தனை அல்லது பிரகிருதி சம்பந்த நிபந்தனமாகக் காணேன் —
அத்தாலே ஒரு வஸ்துவும் அந்ய சம்பந்தமாய் இராதே –

நடதூர் அம்மாளும் -ஆளிப் பிள்ளானுமாக கூட அமுது செய்யா நிற்க -அத்தை பெரும் கூரப் பிள்ளை கண்டு அநுபவித்து –
தேவரீர் உடைய அனுஷ்டானத்தை காணாதே அருளிச் செய்த வார்த்தையை தஞ்சம் என்று இருந்தேன் ஆகில்
அனர்த்தப் பட்டோம் இத்தனை இ றே -என்று விண்ணப்பம் செய்ய –
அம்மாளும் -சதாச்சார்ய பிரசாதம் உத்தேஸ்யம்  என்ற போதே எல்லாம் இதிலே கிடந்தது அன்றோ -என்று அருளினார்-

திருக் கோட்டியூர் நம்பியை தம்முடைய தமையனார் அந்திம தசையிலே எனக்கு தஞ்சம் ஏது  என்று கேட்க –
விரஜைக்கு இக்கரையிலே -உம்மை எங்கு நின்றும் வந்தீர் என்று கேட்டார் உண்டாகில் –
திருக் கோட்டியூர் நம்பி ஸ்ரீ பாதத்தில் நின்றும் வந்தோம் -என்றும் –
அக்கரையில் உம்மைக் கேட்டார் உண்டாகில் -திருக் கோட்டியூர் தமையனார் -என்றும் சொல்லும் என்று அருளிச் செய்தார் –

அபாகவத த்யாகம் -பாகவத பரிக்ரஹம் -பகவத் ஸ்வீகாரம் – ஸ்வ ஆசார்ய அங்கீகாரம் -ஸ்வ ப்ரஜ்ஞை –
இவை இத்தனையும் உண்டான போது
ஆய்த்து ஈடேற லாவது

பெரிய முதலியாருக்கும் நம் ஆழ்வாருக்கும் நடுவு உள்ள ஆசார்யர்கள் எல்லாரையும் அறிய வேண்டாவோ – என்று நம்பிள்ளை ஜீயரைக் கேட்க –
அவர்களுடைய பாஹுள்யத்தாலே அறியப்  போகாது -இத்தால் இவனுடைய ஞானத்துக்கு ஆதல் பேற்றுக்கு ஆதல் குறை வாராது -அது எங்கனே என்னில்
சந்தானத்தில் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹ ப்ரப்ருதிகளுக்கு அவ்வருகே நாம் அறிகிலோம் இ றே –
இதுக்காக ப்ராஹ்மண்யதுக்கு ஏதேனும் தட்டாகிறதோ -என்று அருளினார் –

ஆள வந்தார் ஸ்ரீ பாதத்திலே சேவித்து இருப்பார் இரண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள் அந்யோந்யம் விஸ்லேஷ பீருக்களாய் வர்த்திக்கிறவர்கள் –
ஒரு நாள் இருவரும் -ஆற்றுக்கு எழுந்து அருளி ஒருவர் புறப்பட்டு வர -ஆள வந்தார் அருளிச் செய்த வார்த்தை –
அன்றிலினுடைய அவஸ்தை பிறந்த போது காண் ஆத்ம ஞானம் பிறந்தது ஆவது -என்று அருளிச் செய்தார் –

ஆளவந்தார் திரு வனந்த புரத்துக்கு எழுந்து அருளுகிற போது -தெய்வ வாரி யாண்டானை மடத்துக்கு வைத்து –
திரு வனந்த புரத்துக்கு எழுந்து அருளுகிற அளவிலே -சந்நிதியில் முதலிகளைப் பார்த்து –
குருகைக் காவல் அப்பன் நமக்கு இட்டுத் தந்த திரு முகத்தை எடுத்துக் கொண்டு வாருங்கோள் –
என்று அருளிச் செய்து அருளி-திரு முகத்தைப் பார்த்து அருள -மாசமும் திவசமும் அன்று தானாய் இருந்த படியாலே
ஒரு புஷ்பக விமானம் பெற்றிலோமே என்று  போர சோகார்த்தராய் மீண்டு எழுந்து அருளா நிற்க – தெய்வ வாரி யாண்டானுக்கு ஆளவந்தாருடைய
விச்லேஷம் பொறாமல் திருமேனி சோஷிக்க – வைத்யர்கள் பலரும் பார்த்த இடத்தில் -விஷய ஸ்ப்ரூஹை யாக்கும் இப்படி யாய்த்து -என்று சொல்ல –
உமக்கு எந்த விஷயத்தில் ஸ்ப்ருஹை யாய் இருக்கிறது -என்று கேட்க –
அடியேனுக்கு ஆளவந்தார் விஷயம் ஒழிய வேறேயும் ஒரு விஷயம் உண்டோ -என்று அருளிச் செய்ய –
ஆகில் இவரை அங்கே கொண்டு போங்கள் என்று வைத்யர்கள் சொல்ல -இவரை கட்டணத்திலே கொண்டு போக -ஒருநாளைக்கு ஒரு நாள்
திருமேனி பெருத்து நடக்க வல்லராய் வருகிற அளவிலே -ஆளவந்தாரும் திருவனந்தபுரம் சேவித்து மீண்டு எழுந்து அருளா நிற்க –
தெய்வ வாரி யாண்டானும் தெண்டம் சமர்ப்பித்து எழுந்து இருக்க மாட்டாமல் இருந்தபடியைக் கண்டு –
பெருமாள் ஸ்வ தந்த்ரருமாய் ஸூ ரருமாய் இருக்கையாலே ஸ்ரீ பரதாழ்வான் வைத்த இடத்தில் இருந்தார் –
நான் ஸ்வ தந்த்ரனும் அன்றிக்கே சூரனும் அன்றிக்கே இருக்கையாலே இறே நாம் வைத்த இடத்தில் இராதே நீர் வந்தது -என்று ஆளவந்தார் அருளிச் செய்ய –
இத்தைக் கேட்டு தெய்வ வாரி யாண்டான் -நாம் வந்து ஸ்வரூப ஹாநி பட்டோம் -என்று சத்தை குலைந்து கிடக்க –
என்னை -ஸ்வ தந்த்ரனுமாக்கி ஸூ ரனுமாக்கி எழுந்து இருக்கிறோம் என்று கிடக்கிறாயோ -என்று ஆளவந்தார் அருளிச் செய்ய –
வைத்த இடத்தே இராதே வந்து ஸ்வரூப ஹாநி பட்டால் போலே – இதுவும் ஒரு ஸ்வரூப ஹாநியாய் ஆய்த்தோ -என்று
பர பர என எழுந்து இருந்து நிற்க – ஆளவந்தாரும் -இதொரு அதிகார  விசேஷம் இருந்தபடி இருந்தபடி என் -என்று உகந்து –
போர இளைத்தாயே -என்று கிருபை பண்ணி -திருவனந்தபுரத்து திருக் கோபுரம் தோன்றுகிறது –
ஸ்ரீ பத்மநாபப் பெருமாளை சேவித்து வாரும் என்று அருளிச் செய்ய -என்னுடைய திருவனந்தபுரம் எதிரே வந்தது -என்று
ஸ்வ ஆசார்யரான ஆளவந்தார் திருவடிகளைக் காட்டி -கூட சேவித்துக் கொண்டு மீண்டு கோயிலுக்கு எழுந்து அருளினார் –

அப்பன் என்பவர்-ஆழ்வான் உடைய அந்திம தசையிலே -ஸ்ரீ பாதத்திலே சேவிக்கப் பெற்றிலேன் எனக்கு 
ஹிதாம்சம் அருளிச் செய்ய வேணும் -என்று பட்டருக்கு விண்ணப்பம் செய்ய-
ஊரையும் ஸ்வாஸ்யத்தையும் விட்டுமேற்கு நோக்கி ஓரடி இட்ட போதே ஹிதாம்சம் அற்றது சொல்ல வேணுமோ என்று அருளிச் செய்தார்

முதலியாண்டான் -ஸ்வ அனுவ்ருத்தி பிரசனாச்சார்யாலே மோஷம் -என்ன -கூரத் ஆழ்வான் கிருபா மாத்திர பிரசன்னாசார்யாலே மோஷம் -என்ன –
ஆண்டான் -குற்றம் இன்றி குணம் பெருக்கி குருக்களுக்கு அனுகூலராய் -என்று பெரியாழ்வார் அருளிச் செய்கையாலே -4-4-2-
ஸ்வ அனுவ்ருத்தி பிரசனாச்சார்யாலே ஆகவேணும் -என்ன -ஆழ்வான் -அங்கன் அன்று –
பயன் அன்றாகிலும் பாங்கலர் ஆகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான் குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி -என்று
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் அருளிச் செய்கையாலே அவருடைய அடிப்பாட்டிலே நடக்கிற நமக்கு
எல்லாருக்கும் ஸ்வ அனுவ்ருத்தி கூடாமையாலே கிருபா மாத்திர பிரசன்னாசார்யாலே மோஷம் -ஆகவேணும்
என்று அருளிச் செய்தார் -ஆண்டானும் அப்படியாம் என்று மிகவும் ப்ரீதரானார் –

ஈஸ்வரன் மோஷ ப்ரதன் என்று இருந்த போது ஆசார்யனை தஞ்சம் என்று இருப்பான் –
ஆசார்யன் மோஷ ப்ரதன் என்று இருந்த போது ஆசார்ய வைபவம் சொன்னவனை தஞ்சம் என்று இருப்பான் –

வைஷ்ணவனுக்கு கரண த்ரயத்தாலும் கால ஷேபம் ஏது என்னில் -ஆசார்ய கைங்கர்யம் – பகவத் கைங்கர்யம் -பாகவத கைங்கர்யம் –
இவை மூன்றும் தன்னில் ஒக்குமோ -என்னில் ஸ்வரூபத்தை உணர்ந்தவன் ஆசார்ய கைங்கர்யமே பகவத் கைங்கர்யமும் பாகவத கைங்கர்யமும்
என்று இருக்கும் -ப்ரபாவஜ்ஞன் -சர்வேஸ்வரனுடைய பெருமையை மட்டுமே உணர்ந்தவன் -பகவத் கைங்கர்யமே பிரதானம் என்று இருக்கும் –
உபயத்திலும் உணர்வு இல்லாதான் -உபாய உபேய யாதாம்ய ஞானம் இலோலாதவன் -மூன்றையும் தத் சமம் என்று இருப்பான் –

ஆசார்ய கைங்கர்யம் -தனக்கு பசி விளைந்து உண்கை -பரம போக்யம்-பாகவத கைங்கர்யம் தாய்க்கு சோறு இடுகை -விலக்க ஒண்ணாத கடமை –
பகவத் கைங்கர்யம் -ஒப்பூண் உண்கையும் -பலரில் ஒருவனாக உண்கை – மூப்புக்கு சோறு இடுகையும் -வயசான ஏழை எளியவர்களுக்கு சோறு இடுகை –
என்று வடுக நம்பி அருளிச் செய்வர் –

ஆச்சான் பிள்ளை தேவியார் -மடத்தில் பிள்ளையோடே பிணங்கி -வாரு கோலே போய்க் கிட – என்ன -மடத்தில் பிள்ளையும் –
வாழும் மடத்துக்கு ஒரு வாரு கோலும் வேணும் காணும் – இவ்வார் கோல் தலைக் கடையை விளக்கி –
பஹிரங்க கைங்கர்யம் செய்து -திண்ணையிலே கிடக்கவோ –
திருப் பள்ளி யறையை விளக்கி -அந்தரங்க கைங்கர்யம் செய்து -உள்ளே கிடக்கவோ -என்று விண்ணப்பம் செய்தார் –

பகவத் பிரசாதம் பகவத் ருசியைப் பிறப்பிக்கும்–பகவத் ருசி ஆசார்ய அங்கீகாரத்தை பிறப்பிக்கும்–
ஆசார்ய அங்கீகாரம் ஸ்வீகார ஞானத்தை பிறப்பிக்கும் -எம்பெருமானை உபாயமாக பற்றும் அறிவு –
ஸ்வீகார ஞானம் பகவத் ப்ராப்தியை பிறப்பிக்கும் பகவத் ப்ராப்தி தத் கைங்கர்யத்தை பிறப்பிக்கும்-
தத் கைங்கர்யம் ததீய கைங்கர்யத்தை பிறப்பிக்கும் –

ஆசார்யன் கடவன் என்று இருந்தால் வருவது என் -என்னில் -த்ருஷ்டத்திலே கர்மாதீனம் -அங்கு ஏதேனும் சுருங்கிற்று உண்டாகில் ஆசார்யனை
வெறுத்த போது எம்பெருமானைக் கொண்டு தீர்த்துக் கொள்ள ஒண்ணாது – எம்பெருமானை வெறுத்தோம் ஆகில்
ஆசார்யனைக் கொண்டு தீர்த்துக் கொள்ளலாம்

தான் அனுபவிக்கையாவது -அவன் அனுபவிக்கை —அபிமத விஷயத்தில் அழுக்கு உகக்கும் செருக்கரைப் போலே
வருந்திப் பெறுவாரும் இரந்து பெறுவாருமாய் இருக்கும் –
செஞ்சொற் கவிகாள் -திருவாய்மொழி -10-7—மங்க ஒட்டு உன் மா மாயம் -10-7-10-
ஆழியான் அருள்தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே -போலே–ஆக பிராப்தாவும் ப்ராப்திக்கு உகப்பானும் அவனே

பகவத்பரர் த்விவிதர் -முமுஷுகள் என்றும் புபுஷுகள் என்றும்–முமுஷுக்கள் தான் த்விவிதர் -பகவத் சரணாகதர்களும் கைவல்யார்த்திகளும்
பகவத் சரணாகதர்கள் த்விவிதர் -உபாசகரும் பிரபன்னரும் –பிரபன்னர் த்விவிதர் -ஆர்த்தரும் த்ருப்தரும்
ஆர்த்த பிரபன்னர் த்விவிதர் -சம்சாரம் அடிக் கொதித்தவர்களும் -பகவத் அனுபவம் பெற்றால் ஒழிய தரிக்க மாட்டாதாரும் –

வ்யதிரிக்தங்களை விட்டு அவனைப் பற்றுகை வைஷ்ணவன் ஆகையாவது –தன்னை விட்டு அவனைப் பற்றுகை ஏகாந்தி யாகை யாவது –
அவனை விட்டு அவனை பற்றுகை பரமை காந்தியாகை யாவது -அவன் ஆனந்தத்துக்கு மட்டுமே பற்றுதல் –

அம்மங்கி அம்மாள் வார்த்தை –
உடம்பை பற்றி சோறு தேடுவாரும்–உறவு முறை பற்றி சோறு தேடுவாரும்–உடம்பரைப் பற்றி சோறு தேடுவாரும் –
உடம்பர்களைப் பற்றி சோறு தேடுவாரும்–லோகத்தை பற்றி சோறு தேடுவாரும்–உயிரைப் பற்றி சோறு தேடுவாரும்
அவனைப் பற்றி சோறு தேடுவாரும்–அவளைப் பற்றி சோறு தேடுவாரும்–அவனையும் அவளையும் பற்றி சோறு தேடுவாரும்
தன்னையும் அவனையும் பற்றி சோறு தேடுவாரும்–தன்னையும் அவனையும் அவளையும் பற்றி சோறு தேடுவாருமாய்- இறே இருப்பது –

கலக்கத்தோடு கூடின தேற்றம் ப்ரதம அதிகாரிக்கு–தேற்றத்தோடு கூடின கலக்கம் சரம அதிகாரிக்கு –

சர்வேஸ்வரனைப் பற்றுமவர் ஷட் விதர் -அவர்கள் ஆகிறார் -உத்தமன் -உத்தமப்ராயன் -மத்யமன் -மத்யமப்ராயன் -அதமன் -அதம ப்ராயன்
உத்தமன் ஆகிறான் -உத்க்ருஷ்டனான எம்பெருமானே தனக்கு எல்லா உறவும் என்று இருக்குமவன் –
உத்தமப்ராயன் ஆகிறான் -உத்க்ருஷ்டனான எம்பெருமான் பக்கல் உபஜீவாம்ச்யதுக்கு விரை கட்டுமவன்
மத்யமன் ஆகிறான் மாதவைஸ்வர்யதுக்கு மஹானான தபசு பண்ணுபவன்-மத்யம ப்ராயன் ஆவான் -மாதவனைப் பெற்றும் வகுத்த வாழ்வு அறியாதவன்
அதமன் ஆவான் -அம்மானைப் பெற்று அன்னத்தை பற்றுமவன்-அதம ப்ராயன் ஆவான் அம்மானைப் பெற்றும் அல்லாதாரை பற்றுமவன் –

கந்தாடை யாண்டான் வார்த்தை -பிரபத்தி நிஷ்டர் மூவர் –சப்த நிஷ்டரும் –அர்த்த நிஷ்டரும் –அபிமான நிஷ்டரும் –

சர்வயோக சந்நியாசி -திரு மழிசைப் பிரான்–சர்வ உபாய சூந்யன் -நம் ஆழ்வார்–உண்டு உபவாசி -திருமங்கை ஆழ்வார்–சர்வ சங்க பரித்யாகி -எம்பெருமானார்

அர்த்த லுப்தன் சம்சாரி–ஜ்ஞான லுப்தன் -ஸ்ரீ வைஷ்ணவன்–கைங்கர்ய லுப்தர் -முக்த நித்யர்–தாஸ்ய  லுப்தர் -எம்பெருமான் –

பக்தருக்கு சோறும் தண்ணீரும் தாரகம் -ஆஜ்ய ஷீராதிகள் போஷக த்ரவ்யம் –ஸ்ரக் சந்தநாதிகள் போக்கியம் –
முமுஷுவுக்கு ஜ்ஞானம் தாரகம் -ஆசார்ய வைபவம் போஷகம் —பகவத் குண அனுசந்தானம் போக்கியம் –
நித்ய முக்தருக்கு மிதுன அனுபவம் தாரகம் -கைங்கர்யம் போஷகம் —பகவன் முகோல்லாசம் போக்கியம்-

அஹங்காரம் கழிகை யாவது தேகத்தில் ஆத்ம புத்தி நிவ்ருத்தியும் -தேக அனுபந்தியான பதார்த்தங்களில் மமதா புத்தி நிவ்ருத்தியும்
-தேஹாந்தர அனுபவத்தில் புருஷார்த்த நிவ்ருத்தியும் –
ஸ்வரூபத்தில் அஹங்காரம் ஆவது -தேஹத்தை அண்டை கொண்டு ஸ்வரூபத்தை உறுமுதல் –
ஸ்வரூபத்தை அண்டை கொண்டு தேகத்தை உறுமுதல் செய்கை -இது கழிகையாவது -அவன் வடிவே வடிவாகையாலே
பர ஸ்வரூபத்துக்கு உள்ளே ஸ்வ ஸ்வரூபம் விளங்குகை –
உபாயத்தில் அஹங்காரம் ஆவது -ஸ்வகத ச்வீகாரத்தில் உபாய புத்தி பண்ணுகை –
இது கழிகையாவது -ஸ்வகத ச்வீகாரத்தில் உபாய புத்தியை த்யஜித்து பரகத
ஸ்வீகாரத்துக்கு விஷயனாகை –
உபேயத்தில் அஹங்காரம் ஆவது -நாம் அவனுக்கு அடிமை செய்கிறோம் என்று இருக்கை இது கழிகையாவது –
தன் கையாலே தன் மகிரை வகிர்ந்தால் அந்யோந்யம் உபகார ஸ்ம்ருதி கொண்டாட வேண்டாதாப் போலே
அவயவ பூதனான ஆத்மா அவயவியான எம்பெருமானுக்கு அடிமை செய்கிறான் -என்று இருக்கை .

எம்பெருமான் பக்கலிலே அபராதம் பண்ணினால் ஜன்மாந்தரத்தில் ஈடேறலாம் –
ஸ்ரீ வைஷ்ணவர் பக்கலிலே அபராதம் பண்ணினால் ஜன்மாந்தரத்திலும் இல்லை

ஆண்டாள் வார்த்தை–ஆசார்யன் விஷயத்தில் அபராதம் பண்ணின நாலூரானும் ஈடேறினான் —
பகவத் விஷயத்தில் அபராதம் பண்ணின சிசுபாலனும் ஈடேறினான்–
பாகவத விஷயத்தில் அபராதம் பண்ணினார் இன்னார் ஈடேறினார் என்று இதுக்கு முன்பு கேட்டு அறிவது இல்லை –

எல்லா வேதங்களையும் -எல்லா சாஸ்திரங்களையும் -எல்லா ஆழ்வார்கள் பிரபந்தங்களையும் -எல்லா ஆசார்யர்கள் பாசுரங்களைப் பார்த்த இடத்தில்
ஒரு வைஷ்ணவனுக்கு நிலை நின்ற ஆசார்ய அபிமானம் ஒழிய மோஷ உபாயம் இல்லை –
நிலை நின்ற பாகவத அபசாரம் ஒழிய மோஷ விரோதியும் இல்லை

நம் மனிச்சர் ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டால் தங்களோபாதி பிரகிருதி மான்களாக நினைத்து இருக்கும் புல்லிமை இன்றிக்கே யாய் இற்று இருப்பது –
திரு உடை மன்னர் -திருவாய்மொழி -4-4-8-
செழு மா மணிகள் -திருவாய்மொழி -5-8-9-
நிலத்தேவர் -திருவாய்மொழி -7-10-10-
தெள்ளியார் -நாச்சியார் திருமொழி -4-1-
பெருமக்கள் -திருவாய்மொழி -3-7-5-
பெரும் தவத்தார் -திரு நெடும் தாண்டகம் -24-
உரு உடையார் இளையார் -நாச்சியார் திருமொழி -1-6-
சிறு மா மனிசர் -திருவாய்மொழி -8-10-3-
எம்பிரான் தன் சின்னங்கள் இவர் இவர் -பெரியாழ்வார் திருமொழி -4-4-9-
எம் குல நாதரான ஆழ்வார்கள் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு இப்படி திரு நாமம்-சாத்துகையாலே கேவலம் தன்னோடு ஒக்க
மனுஷ்யன் என்று நினைத்து இருக்ககை அபசாரம்

உடலை நெருக்கி உயிர் உடன் உறவு கொண்டாடுவாரைப் போலே காணும் நாரங்களை நெருக்கி நாராயணன் உடன் உறவு கொண்டாடுகை-

ஸ்ரீ வைஷ்ணவர்களை நெகிழ நினைத்தான் ஆகில் -நிலம் பிளந்தால் இழை இட ஒண்ணாதாப் போலேயும்
-மலை முறிந்தால் தாங்க ஒண்ணாதாப் போலேயும் -கடல் உடைந்தால் அடைக்க ஒண்ணாதாப் போலேயும் இதுவும்
அப்ரதி க்ரியமாய் இருப்பது ஓன்று –

நாட்டிலே இருந்து பெருமாளை சேவிப்பார் இரண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள் அந்யோந்யம் விஸ்லேஷ பீருக்களாய் போருகிறவர்கள் –
ஒருகால் ராகத்வேஷம் கொண்டாடி ஒருவன் ஸ்ரீ ஆச்சான் பிள்ளை ஸ்ரீ பாதத்தேற வந்து மற்றவருடைய குற்றங்களை விண்ணப்பம் செய்ய
சேவித்து இருந்தவர்களில் சிலர் -அப்படி சொல்லலாமோ என்ன -ஆச்சான் பிள்ளை -அவர் சொல்லு கிடீர் –
தண்டல் படையினான யமன் -பரிஹர என்றான்-பிராட்டி ந கச்சின் நாபராத்யாதி -யென்றாள் –
ஈஸ்வரன் -செய்தாரேல் நன்று செய்தார் -பெரியாழ்வார் திருமொழி –4-9-2-என்றான் –
ஆழ்வார்கள் -தமர் எவ்வினையர் ஆகிலும் – முதல் திருவந்தாதி -55-என்றார்கள் -இப்படி இருக்க
அவர் குற்றம் இவரை ஒழிய சொல்லுவார் யார் என்று அருளிச் செய்தார் –

சோமாசி யாண்டானுக்கு அப்பிள்ளை அருளிச்செய்தபடி -ஆண்டான் தேவரீர் ஞான வ்ருத் தருமாய் வயோ வ்ருத்தருமாய் -சீல வ்ருத்தருமாய் -ஸ்ரீபாஷ்யம்
திருவாய்மொழி இரண்டுக்கும் நிர்வாஹகராய் -எல்லாவற்றாலும் பெரியவராய் இருந்தீர் –
ஆகிலும் சாத்தி இருக்கிற திருப்பரிவட்டத் தலையிலே பாகவத அபசார
நிமித்தமாக ஒரு துணுக்கு முடிந்து வையும் -என்று அருளிச் செய்தார் –

ஒருவனுக்கு பாகவத சேஷத்வம் ஸ்வரூபம்–பாகவத பிரசாதம் உபாயம் பாகவத கைங்கர்யம் உபேயம் பாகவத அபாசாரம் விரோதி
ஔ பாதிக பாகவத விஷய ராகமும் -நிருபாதிக பாகவத த்வேஷமும்ஒருவனுக்கு நிலை நின்ற தோஷம் –

பிள்ளை வரம் தரும் பெருமாள் தாசர் வார்த்தை –
எம்பெருமான் வெறுக்கும் -மறக்கும் -பொறுக்கும் -ஒறுக்கும் –பிரயோஜனாந்த பரரை கண்டவாறே நம்முடைய ரஷகத்வத்தை
பறித்துக் கொண்டு போவதே என்று வெறுக்கும் -தன்னளவிலே பண்ணின அபசாரத்தை மறக்கும் –
ஆஜ்ஞ்ஞாதி லங்கனத்தை பொறுக்கும் -பாகவத அபசாரத்தை ஒறுக்கும் –

நடாதூர் ஆழ்வான் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் கையைப் பிடித்துக் கொண்டு போகா நிற்க-
நடுவில் திருவீதியில் ஒரு திருக்குலத்தில் ஸ்ரீ வைஷ்ணவர் அணுகி வர கைக் கொடுத்து கொண்டு போகிற ஸ்ரீ வைஷ்ணவர்
அவரை ஜாதி நிரூபணம் பண்ணி -கடக்கப் போ – என்ன -ஆழ்வான் அத்தைக் கேட்டு மூர்ச்சித்தார் –
மூர்ச்சை தெளிந்த பின்பு அருகு நின்ற ஸ்ரீ வைஷ்ணவர்கள் -இது என் -என்ன –
திருக் குலத்தில் திரு வவதரித்து இரண்டு ஆற்றுக்கும் நடுவே வர்த்திகப் பெற்ற மஹானுபாவனா பறையன் –
நெடும்காலம் ஆத்மாபஹாரம் பண்ணித்  திரிந்த நான் அன்றோ பறையன் -என்று அருளினார் –
எம்பெருமானாரின் மருமகன் -நடாதூர் அம்மாளின் பாட்டனார்

ஸ்ரீ வைஷ்ணவனுக்குஅடும் சோறு மூன்று -அடாச் சோறு மூன்று
அடாச் சோறாவது -அனுகூலரை நெருக்கி ஜீவிக்கையும் பிரதி கூலர் பக்கல் சாபேஷனாய் ஜீவிக்கையும் –
சாதனாநதர புத்த்யா கைங்கர்யம் பண்ணி ஜீவிக்கையும்
அனுகூலரை நெருக்குகையாவது -சர்வேஸ்வரன் உயிர் நிலையிலே கோலிட்டடித்த மாத்ரம் -ஆயர் கொழுந்தாய் –திருவாய்மொழி -1-7-3–
பத்தராவியை –பெரிய திருமொழி -7-10-1-/10-1-8–
நாஹமாத்மா ந மாசசே மத் பக்தைஸ் சாது பிரவிநா -மம ப்ராணா ஹி பாண்டவா -என்று உண்டாகையாலே –
இவ்வர்த்தத்தில் வடுக நம்பி வார்த்தை –
பகவத் அபசாரம் -எம்பெருமான் திருமேனியிலே தீங்கு நினைக்கை -பாகவத அபசாரம் -அவன் திரு மார்பிலே -திருக் கண் மலரிலே -கோலிட்டடித்த
மாத்ரம் -யே பிரபன்னா மகாத்மாநஸ் தே மே நயன சம்பத -என்று உண்டாகையாலே –
இவ்வர்த்தத்தில் வானமாமலை யாண்டான் பணிக்கும் படி –
சாத்விகரை நெருக்குகையாவது -மிதுன போக்யமான ஸ்ரீ கௌ ஸ்துபத்தில் கரி இட்டுக் கீறின மாத்ரம்
வகுளாபரண சோமயாஜியார் -தெய்வ வாரி யாண்டானை -எம்பெருமான் இங்கே வந்து அவதரிகைக்கு ஹேது என் என்ன –
பாகவத அபசாரம் பொறாமை என்றார் -ஆகையாலே ஸ்ரீ வைஷ்ணவர்களை நெருக்க எம்பெருமான் நெஞ்சு உளுக்கும் –
பிரதிகூலர் பக்கல் சாபேஷன் ஆகையாவது -ராஜ மஹிஷி ராஜ சந்நிதியிலே அற்பன்காற் கடையிலே நின்ற மாத்ரம் –

போஜன விரோதி யாவது –
ஒரு வைஷ்ணவன் ஆதரத்தோடே சோறிடப் புக்கால் உண்ணுமவன்-ஆஹார சௌ ஷ்டம் நிரூபிக்கையும் –
இடுமவன் இவனுக்கு இது அமையாதோ என்று இருக்கையும் —
போஜ்ய விரோதியாவது -இட்டுக் கணக்கு எண்ணும் சோறு
ஸ்வரூப அனுரூபமான போஜனமாவது -க்யாதியைப் பற்றவாதல் -பூஜையைப் பற்றவாதல் – எ
ன்னது நான் இடுகிறேன் என்கிற போஜனத்தை தவிர்ந்து–
நெய்யமர் இன் அடிசில் -திருவாய்மொழி -6-8-2-என்றும் -நல்லதோர் சோறு -திருப்
பல்லாண்டு -8-என்றும் -உண்ணும் சோறு -திருவாய்மொழி -6-7-1–என்றும் இவற்றைப் புஜிக்கை –

ஒரு ஸ்ரீ வைஷ்ணவரை ஒரு ஸ்ரீ வைஷ்ணவர்  அமுது செய்ய பண்ணும் போது-இழவும் இரப்பும் இறுமாப்பும் -சாத்விக கர்வம் –
துணுக்கமும் சோகமும் வாழ்வும் உண்டாக வேணும்-என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்து அருளினார் –

பிணச் சோறும் -மணச் சோறும் -விலைச் சோறும் -புகழ்ச் சோறும் -பொருள் சோறும்-எச்சில் சோறும் -ஆறும் த்யாஜ்யம் –
மற்றைச் சோறு இ றே வைஷ்ணவன் உண்ணும்சோறு -என்று திருக்குறுங்குடி ஜீயர் அருளிச் செய்வர் –

தேஹம் திறள் பொறாது -ஸ்வரூபம் தனி பொறாது -பகவத் விஷயத்துக்கு வெளியும்-திறளும் தேட்டமாய் இருக்கும் –
ஷூத்ர விஷயத்துக்கு இருளும் தனிமையும் தேட்டமாய் இருக்கும் –

பகவத் அனுபவம் பண்ணுமவனுக்கு விஷய அனுபவத்தில் அந்வயம் இல்லை -இவ்வர்த்தைத்தை ஆழ்வார்கள் பல இடங்களிலும் அருளிச் செய்தார்கள் –
எங்கனே என்னில் –
வாசுதேவன் வலையுள் அகப்படுதல் -திருவாய்மொழி -5-3-6-
மாதரார் கயற்கண் என்னும் வலையில் அகப்படுதல் -திருமாலை -16-
மதுரக் கொழும் சாறு கொண்ட சுந்தரத் தோளிலே அகப்படுதல் -நாச்சியார் திருமொழி -9-1-
சாந்தேந்து மென் முலையார் தடம் தோளிலே அகப்படுதல் -பெரிய திருவந்தாதி -6-3-4-
வானவர்க்கு வன் துணைஅரங்கத்து உறையும் இன் துணையான் -பெரிய திருவந்தாதி -3-7-6-
அவரவர் பணை முலை துணை யா -என்று இருத்தல் –பெரிய திருவந்தாதி 1-1-2-
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதத்தை பானம் பண்ணுதல் -திருவாய்மொழி -1-5-4-
பாவையர் வாய் அமுதத்தை பானம் பண்ணுதல் -பெரிய திருமொழி -1-3-5-
நால் வேதப் பயனை பேணுதல் -திருவாய்மொழி -3-4-6-
மாதரார் வனமுலைப் பயனை பேணுதல் -பெரிய திருமொழி -1-6-1-
ஓன்று இதுவாதல் ஓன்று அதுவாதல் என்று ஏவமாதிகளாலே பஹு விதமாக
அருளிச் செய்தார்கள் –

ஸ்ரீ வைஷ்ணவனுக்கு விஷய ப்ராவண்யம் பத்து முகமாக விரோதிக்கும் –
அவை யாவன -ஸ்வா நர்த்தம் -பரா நர்த்தம் -சாஸ்திர விரோதம் -பகவன் நிக்ரஹம் -பாகவத நிக்ரஹம் –
ஆசார்ய நிக்ரஹம் -விரோதி வர்தகத்வம் -ஸ்வரூப விரோதம் -உபாய விரோதம் -உபேய விரோதம் -தேசாந்தர பாவம் –
தேவதாந்தர பரனுக்கு கலாந்தரேணு வாகிலும் பாகவதன் ஆகைக்கு யோக்யதை உண்டு -விஷய ப்ரவணனுக்கு நரகம் ஒழிய பலம் இல்லை -ஆகையால்
ஸ்ரீ வைஷ்ணவன் விஷய பிரவணன் ஆகையாவது -முதலை  முடியோடே விழுங்குமா போலே -என்று ஆச்சான் பிள்ளை –

முமுஷுவுக்கு விஷய ப்ராவண்யமும் தேவதாந்திர பஜனமும் சமாநம் -வெற்றிலையும் சந்தனமுமாய் புக்கு காமனை அர்ச்சிக்கிறதோடு
எருக்கும் தும்பையும் கொண்டு ருத்ரனை அர்ச்சிக்கிறதோடு வாசி இல்லாமையாலே தேவதாந்தரம் தான் இதுக்கு சத்தை –
மாரனார் வரி வெஞ்சிலைக்கு ஆட் செய்யும் பாரினார் -பெருமாள் திருமொழி -3-3-..
தேவதாந்தர பரனுக்கு அனந்தர ஜன்மத்திலே வைஷ்ணவன் ஆகைக்கு யோக்யதை உண்டு –
விஷய பரனுக்கு நரகம் ஒழிய பலம் இல்லை – ஆகையால் தேவதாந்தர பஜனத்திலும் க்ரூரம் -சௌ சாபேஷன் ஸ்நானம் பண்ணி
வருமா போலும் காண் -வ்ருத்தி ஆசௌம் போன்ற தீட்டு உள்ளவன் -விஷய பிரவணன் பகவத் சந்நிதி நுழைய தக்கவன் அல்லன் –

முமுஷுவுக்கு தேவதாந்தர ப்ராவண்யமும் -அர்த்த ப்ராவண்யமும் -விஷய ப்ராவண்யமும் -மோஷ பிரதிபந்தகம் –
அதில் இரண்டு ப்ராவண்யம் உண்டானால் காலாந்தரத்திலே ஈடேறலாம்–ஒரு பிராவண்யம் பிரதிபந்தகமாகவே விடும் –

அநந்ய பிரயோஜணன் அல்லாமையாலே உகப்புக்கு பாத்ரம் அல்லேன் -ஆர்த்த பிரபன்னன் அல்லாமையாலே இரக்கத்துக்கு பாத்ரம் அல்லேன் –
ப்ராமாதிகம் அல்லாமையாலே ஷமைக்கு பாத்ரம் அல்லேன் -உபகாரகன் என்று உகந்தீர்-அனந்யன் என்று இரங்கினீர் அவர்ஜீயன் என்று பொறுத்தீர் –
-என்று ஆச்சான் பிள்ளை நைச்ய அனுசந்தானம் –

முதலியாண்டான் மிளகு ஆழ்வானுக்கு அருளிச் செய்த வார்த்தை –
கன்னக் கள்வர் நால்வர் -அவர்களை பரிஹரித்து வர்த்திக்க வேண்டும் —
அவர்கள் ஆர் என்னில் -ஆத்ம அபஹாரி -விபூத்ய அபஹாரி -குணித்வ அபஹாரி -பரதவ அபஹாரி —
ஆத்ம அபஹாரி யாகிறான் -திருமார்பில் கௌஸ்துபத்தை களவு கண்டவன் -எங்கனே என்னில் -ஸ்வ தந்த்ரனாய் இருக்கை –
விபூத்ய அபஹாரி யாகிறான் -ஏகாயநன் -எங்கனே என்னில் மாத்ரு ஹீனன் –குணித்வ அபஹாரி யாகிறான் -மாயாவாதி –
எங்கனே என்னில் நிர்க்குணம் என்கையாலே -பரதவ அபஹாரி யாகிறான் -ருத்ர பரத்வ பிரமாண நிஷ்டன் –
இவர்களுக்கு அஞ்ஞானமும் -அந்யதா ஞானமும் -விபரீத ஞானமும் விஞ்சி இருக்கும் –

அனந்தாழ்வான் நோவு சாத்திக் கிடந்தார் என்று கேட்டருளி திருவேம்கடமுடையான் – அனந்தாழ்வானை அறிந்து வாரும் கோள் -என்று
சில ஏகாங்கி ஸ்ரீ வைஷ்ணவர்களை விட்டு அறிவிக்க -ஆளிட்டு அந்தி தொழுதா னோ என்ன –
திருவேம்கடமுடையான் எழுந்து அருளி வாசலிலே வந்து நிற்க பேசாதே கிடந்தார் –
அனந்தாழ்வான் நான் வர பேசாதே கிடந்தாயீ -என்ன -ஒரு ஸ்ரீ வைஷ்ணவன் வரப் பேசாதே யிருந்தேன் ஆகில் அன்றோ
எனக்கு குறை யாவது -என்ன -நாம் உம்மை இதனின்றும் போகச் சொல்லில் செய்வது என் என்ன –
நீர் ஒரு கிழமை முற்பட்டீர் இத்தனை யன்றோ -இருவரும்
திருமலை ஆழ்வாரை ஆஸ்ரயித்தோம் இத்தனை -யன்றோ -என்று அருளிச் செய்தார் –

எம்பெருமான் இடைச்சி கையிலே கட்டுண்டு இருந்தபடி -ராஜா-அந்தபுரத்திலே மாலையாலே கட்டுண்டு இருந்தால் போலே –

மூன்று வஸ்துவிலே பகவத் வஸ்து வளரும் என்று பணிக்கும்–திரு வனந்தாழ்வான் மடியிலும் -பெரிய திருவடி திரு முதுகிலும்
சேனை முதலியார் திருப் பிரம்பின் கீழும் -ஜகந நிர்வஹணத்தை மறக்கிறானோ என்று நியமிக்கைகாக
சேனை முதலியார் எழுந்து அருளின வாறே -இந்தாணும் ஐயர் வந்தார் -என்று நாய்ச்சிமார் உள்ளே புக்கருளுவாராம் –

கைகேயி பகவத் அபசாரம் பண்ணினாளே யாகிலும் -தன் மகன் என்றாகிலும் -பாகவத ஸ்நேகம் உண்டாகையாலே முக்தை யானாள் –
சக்ரவர்த்தி பகவத் ஸ்நேகம் பண்ணினானே யாகிலும் முக்தன் ஆகிறிலன் –

ஸ்ரீ வைஷ்ணத்வம் ஆவது ரூப ப்ரதான்யம் -சிஹ்ன ப்ரதான்யம் -உக்தி பிரதான்யம் -க்ரியா ப்ரதான்யம் –
சம்பந்த விசேஷ ப்ரதான்யம் -த்யான ப்ரதான்யம் -இவை ஒன்றும் அன்று -பாவ ப்ரதான்யமே ப்ராதான்யம் –
நால்வர் அறிந்த வைஷ்ணத்வம் அன்று -நாராயணன் அறிந்த வைஷ்ணத்வமே
வைஷ்ணத்வம் -நாடும் நகரமும் நன்கு அறிய நமோ நாராயணாய -திருப்பல்லாண்டு -4-என்ன வேண்டும் –
நாடு வைஷ்ணவன் என்று கை விட வேண்டும் -நகரம் வைஷ்ணவன் என்று கைக் கொள்ள வேண்டும்
-நாடாவது -சம்சாரம் நரகமாவது பரமபதமும் -உகந்து அருளின திவ்ய தேசங்களும் ஜ்ஞானாதிகரான ஸ்ரீ வைஷ்ணவர்களும் –

ஸ்வரூப ஜ்ஞானம் பிறந்தவனுக்கு சரீர விச்லேஷத்து அளவும் மஹா பயமும் மஹா விஸ்வாசமும் அநு வர்திக்கைக்கு காரணம் –
தன்னைப் பார்த்த போது எல்லாம் மஹா பயமும் -எம்பெருமானை பார்த்த போது எல்லாம் மஹா விஸ்வாசமும் —
இரண்டுக்கும் மஹத்தை யாவது -தன்னை அனுசந்தித்த போது சம்சாரத்திலே இருந்தானாகவும் –
இங்கே இருந்தானேயாகிலும் – எம்பெருமானை அனுசந்தித்த போது பரம பதத்தில் இருந்தானாகவும் நினைத்து இருக்கை –

சம்பாஷண சம்பந்தம் -போஜன சம்பந்தம் -அதருஷ்ட சம்பந்தம் -த்ருஷ்ட சம்பந்தம் -இவை பார்த்து செய்ய வேண்டும் -தானிடும் தண்டனுக்கு உகந்திடவும்
தன்னை யிடும் தண்டனுக்கு  குழைந்து  போரவும் -தன் சத்தையை அழிய மாறியாகிலும் தண்டன் கைக்கொள்ள வல்லனாகையும் அதிகாரி க்ருத்யம் –

மலை நாட்டிலே ஒருவனுடன் மூவரும் ஸ்ரீ ராமாயணம் வாசித்தார்கள் – அவர்களில் முதலில் அதிகரித்தவனை அழைத்து உனக்கு இதில் பிரதிபன்ன
அர்த்தம் ஏது என்று கேட்க -சக்கரவர்த்தி திருமகன் பித்ரு வசன பரிபாலனம் பண்ணுகையாலே மாத்ரு பித்ரு ஸூ ஸ்ருஷை தர்மம் என்று தோற்றிற்று -என்ன
நீ அத்தைச் செய் -என்றான் இருவர் ஆவனைக் கேட்க -சக்கரவர்த்தி திருமகனாய் சரீர பரிக்ரஹம் பண்ணினாலும் உடம்பு எடுக்கை பொல்ல்லாதாய் இருந்தது –
ஆகையால் இவ்வுடம்பை அகற்றும் வகை விசாரிக்க வேண்டும் -என்றான் -ஆகில் நீ தத் விமோசன உபாயத்தை பண்ணு என்றான் –
மூவர் ஆனவனைக் கேட்க -நம்முடைய புண் மருந்துகளால் ஒரு பசை இல்லை – ராவணன் தானே யாகிலும் அவனை விடில் தரியேன் -என்ற
சக்கரவர்த்தி திருமகன் கிருபை உண்டாகில் பிழைக்கலாம் அல்லது பிழைக்க விரகு இல்லை -என்றான் –
ஆகில் நீ உள்ளதனையும் ஸ்ரீ ராமாயணத்தை பரிசயி -என்றான் –

தர்சந ரஹஸ்யம் இருக்கும்படி -உறங்குகிற போது நம்மை நோக்குகிறவன் உணர்ந்தாலும் நம்மை நோக்கும் என்று கந்தாடை யாண்டான் –

ஆழ்வான் காலத்திலே சந்த்யாவந்தனம் பண்ண எழுந்து அருளாநிற்க -இரண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள் அருளிச் செயல் த்வநியைக் கேட்டுக் கொண்டு நிற்க –
கூட எழுந்து அருளினவர்கள் அனுஷ்டானத்துக்கு காலம் தப்புகிறதே -என்ன சந்த்யா வந்தன வைகல்யம் பிறந்தால்
பிராயச்சித்தம் பண்ணிக் கொள்ளலாம் -பகவத் அனுபவ வைகல்யம் பிறந்தால் பிராயச்சித்த சாத்யமன்று -என்று அருளினார் –

அனந்தாழ்வான் மூன்று சம்வத்சரமாக வாதமாய்க் கிடக்க -ஸ்ரீ பாதத்துக்கு பரிவராய் இருப்பவர் சிலர் -திருவேம்கடமுடையான் செய்து அருளுகிறது என் –
என்று வெறுக்க -திருவேம்கடமுடையான் ஹிதம் அல்லது செய்யான் -என்று அருளிச் செய்தார் –

அனந்தாழ்வான் திரு நந்தவனத்துக்கு மண் சுமவா நிற்க -பிள்ளைகளிலே ஒருவன் சென்று -கூடையை வாங்க –
நான் இத்தை விடில் இளைப்பன் -நீ இத்தைத் தொடில் இளைப்புதி -என்ற அளவிலே -இளைப்பாகாது -என்று பின்னையும் வாங்க –
ஆனால் நான் ஜீவிக்கிற ஜீவனத்தை வாங்க வேணுமோ -நீயும் வேணுமாகில் ஒரு கூடையை வாங்கி சுமக்க மாட்டாயோ -என்று அருளிச் செய்தார் –

அனந்தாழ்வான் திரு நந்தவனத்திலே திருமண்டபத்திலே இருந்து திருமாலை கட்டா நிற்க -திருவேம்கடமுடையான் அருள் பாடிட –
இவரும் பேசாதே இருந்து திருமாலையும் கட்டிக்கொண்டு பின்பு கோயிலுக்குள் புக்கவாறே –
நான் அழைக்க வராவிட்டது என் -என்று திரு உள்ளமாக -தேவரீரைக் கொண்டு கார்யம் என்
கருமுகை மொட்டு வெடியா நிற்க -என்ன -ஆனால் -நாம் உம்மை இங்கே நின்று போகச் சொன்னோமாகில் செய்வது என் -என்ன –
பரன் சென்று சேர் திருவேம்கடமாமலை அன்றோ -தேவரீர் அன்றோ வந்தேறிகள் -இவ்விடம் தேவரீரை ஆஸ்ரயித்தவர்களது அன்றோ -என்றார் –

அனந்தாழ்வான் திருபடலிகை யிலே திருமாலையைச் சேர்த்துக் கொண்டு உள்ளே புக்கு –
கைப் புடையிலே நின்று அருளப்பாடு என்றவாறே திருத் திரையை நீக்கித் திருமாலையை நீட்டி கையை மறித்துப் போருவர் –
நைந்து சோர்ந்து கை மறித்து நின்றனரே -பெரியாழ்வார் திருமொழி -3-6-6-
தனது கையில் சக்தி இல்லை -மாலை கட்டும் கைங்கர்யம் தானே செய்வித்துக் கொண்டான் என்றபடி-

பீஷ்மர் ஞாநாதிகராய் யிருக்க -பகவத் பரிக்ருஹீத பஷ பிரதிபஷத்தில் நின்று கிருஷ்ணன் திருமேனியில் அகப்பட அம்பு படும்படியான  செயல் கூடிற்று –
ராஜக்களை பணிக்கன் சிரமம் செய்விக்கும் போது நினைத்த இடத்திலே தட்டுகை ப்ராப்தமாம் போலே –
ஏவம் விதரும் சர்வேஸ்வரனுடைய லீலா ரஸாதீ ந சங்கல்ப அந்தர்கதர் –

திருமாலையாண்டான் அருளிச் செய்யும்படி -நாம் பகவத் விஷயம் சொல்லிக்கிறோம் என்றால் சம்சாரத்தில் ஆள் இல்லை -அ
து எங்கனே என்னில் -ஒரு பாக்கைப் புதைத்து அது உருவாந்தனையும் செல்லத் தலையாலே எரு சுமந்து ரஷித்து அதினருகே கூரை கட்டி –
பதினாறாட்டைக் காலம் காத்துக் கிடந்தால் கடைவழி ஒரு கொட்டைப் பாக்காயிற்று கிடைப்பது –
அது போல் அன்றிக்கே இழக்கிறது ஹேயமான சம்சாரத்தை – பெறுகிறது விலஷணமான பரம பதத்தை –
இதுக்கு உடலாக ஒரு வார்த்தை அருளிச் செய்த ஆசார்யன் திருவடிகளிலே ஒருகாலும் க்ருதஜர் ஆகாத
சம்சாரிகளுக்கு நாம் எத்தைச் சொல்வது -என்று வெறுத்தார் –

துறை அறிந்து இழிந்து–முகம் அறிந்து கோத்து–விலை அறிந்து பரிமாறி–நினைவு அறிந்து–அடிமை செய்ய வேண்டும் –

ஜ்ஞானத்துக்கு இலக்கு -ஆச்சார்ய குணம் -அஜ்ஞானத்துக்கு இலக்கு ஆச்சார்ய தோஷம் –
சக்திக்கு இலக்கு ஆச்சார்ய கைங்கர்யம் -அசக்திக்கு இலக்கு -நிஷித்த அனுஷ்டானம் –

அன்ன சாங்கர்யம் –ஜ்ஞான சாங்கர்யம் –கால சாங்கர்யம் –தேச சாங்கர்யம் –போக சாங்கர்யம் –இவை த்யாஜ்யம் -சாங்கர்யம் =கலப்படம்

நடுவில் திருவீதிப் பிள்ளை -சம்சாரிகள் தோஷத்தை தன் அசக்தியாலே காணாது இருக்கக் கடவன்
-சாத்விகருடைய தோஷத்தை இவர்களுடைய சக்தியாலே காணாது இருக்கக் கடவன் –
பத்த லோகத்தில் விலஷண ஜ்ஞானத்துக்கு விச்சேதம் இன்ற்க்கே இருக்கை யாவது -ஔ ஷத பலத்தாலே அக்நியை ஏந்தி இருக்குமா போலே –
ஜ்ஞானத்துக்கு அவித்யா சம்பந்த நிவ்ருத்தி பூர்வகமான அப்ராக்ருத தேச பிரவேசத்திலும் அவித்யா சம்பந்தத்தில் ஆர்த்தி அத்யந்த அபேஷிதம் –

திருவேம்கட யாத்ரையாக எழுந்தருளா நிற்க -காட்டிலே ஒரு நாள் விடுதியிலே நீராட எழுந்து அருளா நிற்க –
ஸ்ரீ பாதத்திலே விஷம் தீண்ட -பரிவராய் இருப்பார் – எங்கே விஷம் தீண்டிற்று என்ன — அந்த செடியிலே என்ன –
அவர்களும் லஜ்ஜா விஷ்டராய்ப் போக -இத்தை அனந்தாழ்வான் கேட்டருளி பிரபன்னர் எழுந்தருளின வாறே –
நீர் என்ன நினைத்து விஷம் விஷம் தீர்க்க வேண்டாது இருந்தீர் -என்ன –
பிரபன்னரும் கடித்த பாம்பு பலவானாகில் விரஜையிலே தீர்த்தமாடி ஸ்ரீ வைகுண்ட நாதனை சேவிக்கிறோம் –
கடி உண்ட பாம்பு பலவானாகில் திருக் கோனெரியிலெ தீர்த்தமாடி திருவேம்கடமுடையானை சேவிக்கிறோம் -என்று
நினைத்து இருந்தேன் என்று விண்ணப்பம் செய்தார் –

ஆழ்வார்கள் மடலூர்ந்தும் நோன்பு நூற்றும் தூது விட்டும் ஸ்வாமிக்கு அசஹ்யமாம்படி செய்கை ஸ்வரூப வ்ருத்தமன்றோ -என்று
எம்பாரை முதலிகள் கேட்க -எம்பாரும் -இவர்கள் செய்வது என் -ஜ்ஞானம் தலை மண்டி யிடும்படி அவனுடைய சௌந்தர்யம்
இப்படி செய்யுமாகில் அது அவன் சௌந்தர்யத்தின் குற்றம் அன்றோ – எங்கனே என்னில் –
சக்கரவர்த்தி வாய் திறப்பதற்கு முன்னே நீங்கள் எல்லாரும் பெருமாளை திருவபிஷேகம் செய்ய வேண்டும் என்பான் என் –
என் பக்கலில் குறை உண்டோ என்ன -நாங்கள் செய்வது என் –
பஹவோ ந்ருப கல்யாண குண புத்ரச்ய சந்தி தே -குணான் குணவதோ தேவ -தேவ கல்பச்ய தீமத -என்று
பிள்ளையைப் பெற்ற உன் குறை யன்றோ என்றார்கள் -என்று அருளி செய்தார் –

சோமாசியாண்டான் -அகளங்க நாட்டாழ்வான் காலத்திலே ஒரு இடையன் பால் களவு கண்டான் என்று கட்டி யடிக்க –
பிள்ளை அத்தைக் கேட்டு மோஹித்து
விழுந்தாராம் –

முலைகள் இல்லையான  யுவதியைப் போலே காணும் ஊமை அல்லாத வைஷ்ணவன் அருளிச் செயலில்
அந்வயியாது ஒழிகை -என்று ஆச்சான் பிள்ளை –

எம்பெருமான் கிருஷ்ணனாய் வந்து அவதரித்தாப் போலே வேதங்களும் திருவாய்மொழி யாய் வந்து அவதரித்தன –

பெரிய நம்பியும் -திருக்கோட்டியூர் நம்பியும் -திருமாலை யாண்டானும் கூடி-ஸ்ரீ சந்திர புஷ்கரணிக் கரையிலே திருப்புன்னைக் கீழே எழுந்தருளி இருந்து
தங்கள் ஆசார்யரான ஆளவந்தார் எழுந்தருளி இருக்கும்படியையும்-அவர் அருளிச் செய்த நல் வார்த்தைகளையும் நினைத்து அனுபவித்துக் கொண்டு
மிகவும் ஹ்ருஷ்டராய் -ஆநந்த மக்னராய்க் கொண்டு எழுந்து அருளி இருக்கிற-அளவிலே -திருவரங்க செல்வர் பலி பிரசாதிப்பதாக எழுந்தருளி புறப்பட –
இவர்களுடைய சமாதிபங்கம் பிறந்து எழுந்து இருந்து தண்டன் இட வேண்டுகையாலே – கூட்டம் கலக்கியார் வந்தார் –
இற்றைக்கு மேல்பட ஸ்ரீ பலி எம்பெருமான் எழுந்தருளாத கோயிலிலே இருக்கக் கடவோம் -என்று பிரதிக்ஜை பண்ணிக் கொண்டார்கள் –

எம்பெருமானுக்கு இல்லாதது ஒன்றாய் -அவனைப் பெறுகைக்கு பெரு விலையாய் இருக்குமது அஞ்சலியே -இ றே -கருட முத்ரைக்கு விஷம் தீருமா போலே
அஞ்சலி பரமா முத்ரா -என்கிறபடியே இம் முத்ரையாலே அநாத்யபராதமும் நசித்து எல்லாம் அகப்படும் என்று –

அனந்தாழ்வான் போசல ராஜ்யத்துக்கு எழுந்து அருளுகிற போது கட்டுப் பிரசாதம் கட்டிக் கொண்டு போய் ஒரு இடத்திலே அவிழ்த்தவாறே 
அடைய எறும்பாய் இருந்தது – இத்தைக் கண்டு அனந்தாழ்வான் பயப்பட்டு –
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும்ஆவேனே -என்று அருளிச் செய்தவரிலே சிலராய் வர்த்திப்பர்கள் –
இப்படியே கொண்டு போய்த் திருமலையிலே வைத்து வாரும்கோள் -என்று அருளிச் செய்தார் –

நம் ஆழ்வார் அறிவு கலங்கின போதோடு -அறிவு நடையாடின போதோடு –சாத்விக அஹங்காரம் தலை மண்டி இட்ட போதோடே 
அநுவர்த்தநத்தோடு -வாசியற மிதுனம் அல்லது வாய் திறக்க அறியார் -எங்கனே என்னில்
-அறிவு கலங்கின போது-சிந்தை கலங்கித் திருமால் என்று அழைப்பன் -திருவாய்மொழி -9-8-10-என்பர் –
அறிவு நடை யாடின போது -திருமால் நான்முகன் செஞ்சடையான் என்று இவர்கள்
எம்பெருமான் தன்மையை யார் அறி கிற்பார் -திருவாய்மொழி -8-3-9- என்பர் -அஹங்காரம் தலை மண்டை இட்ட போது –
திருமால் தலைக்கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீவினை -திருவிருத்தம் -87-என்பர் –
அநுவர்த்தநத்தில் -அடிமை செய்வர் திருமாலுக்கே -திருவாய்மொழி -6-5-11- என்பர் –

திருமங்கை ஆழ்வாரை  ஈஸ்வரன் ஆக்கலாம் விரகு ஏது என்று பார்த்த இடத்து -இவர் விஷயாந்தர பிரவணர் ஆகையாலே
இவர் பக்கல் சாஸ்திரம் ஜீவியாதாய் இருந்தது -இவர் விஷயாந்தரங்களிலே வந்தால் –
இது விலஷணம் -இது ஆவிலஷணம் -என்று அறிகிற உள்மானம் புறமானம் அறிவார் ஒருத்தராய்  இருந்தார் என்கிற இதுவே
பற்றாசாக நம்மை விஷயம் ஆக்கினால் மீட்கக் கூடும் -என்று தன் வடிவைக் காட்ட அதிலே அதி பிரவணராய் –
அர்ச்சாவதாரத்துக்கு அவ்வருகு ஒன்றும் அறியாதபடி யானார் –

நம் ஆழ்வாரை ஈஸ்வரன் ஸ்வரூபத்தைக் காட்டி அங்கீகரித்தான் -அவருக்கு எல்லாம் பரத்வத்திலே யாய் இருக்கும் –
இவருக்கு எல்லாம் அர்ச்சாவதாரத்திலே யாய் இருக்கும் -எங்கனே என்னில்
அவர் தொழுவது -கண்ணன் விண்ணோரை -திருவிருத்தம் -47
இவர் தொழுவது -கண்ணபுரம் தொழுதாள் -என்றும் -பெரிய திருமொழி -8-2-1-
அவர் தூது விடுவது -வீசும் சிறகால் பறத்தீர் விண்ணாடு நுங்கட்கு எளிது -திரு விருத்தம் -54 என்றும் –
இவர் தூது விடுவது -செங்கால மட நாராய் இன்றே சென்று திருக்கண்ணபுரம் புக்கு -திரு நெடும் தாண்டகம் -27-என்றும் –
அவர் மடல் எடுப்பது -சேணுயர் வானத்திருக்கும் தேவ பிரான் தன்னை –குதிரியாய் மடலூர்தும் -திருவாய்மொழி -5-3-9- என்றும் –
இவர் மடல் எடுப்பது -சீரார் கணபுரம் –ஊராய வெல்லாம் ஒழியாமே –ஊராது ஒழியேன் –
சிறிய திருமடல் -72-77- என்றும் –
அவர் வளை இழப்பது -விண்ணூர்  தொழவே சரிகின்றது சங்கம் -திருவிருத்தம் -47 என்றும் –
இவர் வளை இழப்பது -திருக் கண்ணபுரத்து உறையும் வரை எடுத்த பெருமானுக்குஇழந்தேன் என் வரி வளை -பெரிய திருமொழி -8-3-1- என்றும் –
அவர் எண்ணுவது -மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் -திருவாய்மொழி -9-3-7- என்றும் –
இவர் எண்ணுவது -கண்ணபுரம் தொழும் கார்க்கடல் வண்ணர் மேல் எண்ணம் -பெரிய திருமொழி -8-2-4- என்றும் –
அவர் -விரும்புவது அந்தமில் பேர் இன்பத்து அடியோரோடு இருந்தமை -திருவாய்மொழி -10-9-11-என்றும்
இவர் -அந்தரங்கம் -காட்டினாய் கண்ண புரத்துறை யம்மானே -பெரிய திருமொழி -8-10-9- என்றும்
அவருக்கு ஜ்ஞானப் ப்ரதன் -ஏனத்துருவாய் இடந்த பிரான் -திருவிருத்தம் -99-
இவருக்கு ஜ்ஞானப் ப்ரதன் -வயலாலி மண வாளன் –
அவருக்கு சேஷி -ஒரு மா தெய்வம் மற்றுடையமோ யாமே -திருவாசிரியம் -7 -என்கிற ஜகத் காரண வஸ்து
இவருக்கு சேஷி -அரங்க நகரப்பா துணியேன் இனி நின் அருள் அல்லது எனக்கு -பெரிய திருமொழி -11-8-8- என்றும் –
அவருக்கு உபாயம் -அந்நலன் உடை ஒருவனை நணுகினம் நாமே -திருவாய்மொழி -1-1-3–என்றும்
இவருக்கு உபாயம் குருங்குடிக்கே என்னை உய்த்திடுமின் -பெரிய திருமொழி -9-5-என்றும் –

—————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

வார்த்தா மாலாவில் –எம்பெருமானார்– பற்றிய வார்த்தை -முத்துக்கள் –

October 2, 2015

கண்ணியனூர் சிறியாச்சான் -தாசரதி என்னும் திரு நாமம் கொண்டவர் -எம்பாரை தண்டம் இட்டுதிரு உள்ளத்தில் தஞ்சமாக நினைத்து இருக்குமத்தை
எனக்கு அவசியம் அருளிச் செய்யவேணும் -என்ன-தாசரதீ –எம்பெருமானார் ஸ்ரீ பாத த்வயம் ஒழிய தஞ்சமாய் இருப்பது இல்லை என்று அருளிச் செய்தார் –

எம்பெருமானார் பெரிய நம்பி ஸ்ரீ பாதத்தில் சென்று –பிரபத்தி என் -என்று விண்ணப்பம் செய்ய –கனிப் பழம் -தானே -காம்பு அற்றால் போலே இருக்கும் என்ன –இன்னமும் சந்தேஹம் செல்லா நின்றது -என்று விண்ணப்பம் செய்ய -ஆகில் இவ் அர்த்தத்தைதிருக் கோட்டியூர் நம்பி ஸ்ரீ பாதத்தில் கேளும் -என்ன –
பழுத்தால் விழும் கனி போல் பற்றற்று வீழும் விழுக்காடே -ஞான சாரம் -1- இவரும் அங்கே சென்று விண்ணப்பம் செய்ய -அவரும் –சக்ருதேவ -என்று அருளிச் செய்ய -சஹசைவ சடக்கென திருவடிகளில் விழ வேணும் -இன்னமும் சந்தேஹம் செல்லா நின்றது என்று விண்ணப்பம் செய்ய -ஆகில்
இவ் அர்த்தத்தை திருமாலை ஆண்டான் ஸ்ரீ பாதத்திலே கேளும் என்ன -இவரும் அங்கே சென்று விண்ணப்பம் செய்ய -அவரும்
இத்தனை பிசகுகைக்கு உண்டோ –ஒரு ரேகை மாதரம் என்ன -அதாவது நாம் பற்றும் பற்று ச்வீகாரம் ஆகுமோ -என்ற சங்கை வேண்டாம் –
கையில் உள்ள ரேகை போலே அதிகாரி விசேஷணம் ஆகவே இருப்பது பரிகாரம் என்ற கருத்து – இன்னமும் சந்தேஹம் செல்லா நின்றது என்று விண்ணப்பம் செய்ய -ஆகில் இவ் அர்த்தத்தை ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர் ஸ்ரீ பாதத்திலே கேளும்  என்ன -இவரும் அங்கே சென்று விண்ணப்பம் செய்ய
அவரும் ததீய பர்யந்தமாக  காணீர் -என்று அருளிச் செய்தார் –பாகவத அபிமானத்துக்கு விஷயம் ஆகிறவனுக்கு பிரபத்தி ஏற்பட்டு எம்பெருமான் அருள் கிட்டும்

எம்பெருமானார் தம்முடைய ஸ்ரீ பாதத்திலே ஆஸ்ரித்ததொரு ஸ்ரீ வைஷ்ணவருடைய பிள்ளைக்கு ஏகாயனரோட்டை சம்சர்க்கம் உண்டாக –
நம்மோடு சம்பந்தம் உடையவன்  -வ்யபசரித்து அநர்த்த பட ஒண்ணாது என்று -பெருமாள் திருவடிகளிலே எழுந்து அருளி இருக்கச் செய்தே
-அவனும் அங்கே சந்நிஹிதனாக -வாராய் உனக்கு பிரமாணங்களால் காட்டலாம்படி ஞான பௌஷ்கல்யமில்லை
-நாம் வேதாந்தங்களில் அறுதி இட்டு இருக்கும் பொருள் -இவ் வாத்மாவுக்கு தஞ்சமாக இருக்கும் அர்த்தம் த்வயம் அல்லது இல்லை
-என்று பெருமாள் திருவடிகளில் ஸ்ரீ சடகோபனை எடுத்து சத்யம் பண்ணிக் கொடுத்து அருளினார் -அவரும் அன்று தொடங்கி த்வய நிஷ்டர் ஆனார் –

உடையவர் -சந்யசித்து அருளுகிற போது -சரீர சம்பந்தத்தை விட்டு விட வேண்டுகிறதோ – என்று கேட்க -முதலியை ஒழிய சந்யசித்தோம் -என்றார் –
இப்படி செய்யலாமோ -என்று அருகிருந்தார் கேட்க –த்ரிதண்டத்தை விடில் அன்றோ -முதலியை விடுவது -என்று அருளிச் செய்தார் –

திருக் கோட்டியூர் நம்பி திரு நாளுக்கு எழுந்து அருளி திருமாலை யாண்டானையும் – அழைத்துக் கொண்டு எம்பெருமானார் மடமே எழுந்து அருள -அவரும் தண்டன் சமர்ப்பிக்க – அவரைப் பார்த்துஅருளி -நீர் திருமாலை யாண்டான் பக்கலிலே திருவாய் மொழிக்கு அர்த்தம் கேளும் -என்று இவரைத் திருமாலை யாண்டான் திருக் கையிலே காட்டிக் கொடுத்து தாம் மீண்டு எழுந்து அருளினார் -திருக் கோட்டியூர் நம்பி கோயிலுக்கு எழுந்து அருளி
திருமாலை யாண்டான் பக்கலிலே எழுந்து அருளி -திரு வாய் மொழி வியாக்யானம் நடத்தாமல் தவிருவான் என் -என்று கேட்டு அருள -ஆள வந்தார் அருளிச் செய்ய -அடியேன் கேட்ட அர்த்தம் ஒழிய இவர் சில விஸ்வாமித்ரர் ஸ்ருஷ்டி பண்ணி -ஸ்வ கல்பிதமாக சொல்லுகையாலே தவிர்ந்தேன் -என்ன
அவர் சொன்ன அர்த்தம் ஏது என்ன –அறியாக் காலத்துள்ளே -என்கிற பாட்டை -உபகர ச்ம்ருதியாக வேணும் என்று -சொன்னார் -என்ன -அதுவும் ஆள வந்தார் அருளிச் செய்ய நான் கேட்டேன் -என்று நம்பி அருளிச் செய்து -சாந்தீபன் பக்கலிலே கிருஷ்ணன் அத்யயனம் பண்ணினால் போலே காணும் உம்முடைய பக்கலிலே எம்பெருமானார் திருவாய்மொழி கேட்கிறது -ஆள வந்தார் திரு உள்ளத்தில் உண்டான அர்த்தம் ஒழிய இவருக்கு பிரகாசியாது என்று இரும் -நீர் இவருக்கு அஜ்ஞாத் ஜ்ஞாபனம் பண்ணுகிறோம் என்று இராதே கொள்ளும் -என்று அருளிச் செய்து அருளினார் –

பெருமாள் கோயிலிலே ஒரு பாகவத ஜன்மத்திலே பிறந்தான் ஒரு ஊமை -அஞ்சாறு வருஷம் ஊமையாய் இருந்து -அநந்தரம் இரண்டு மூன்று சம்வத்சரம் காணாது இருந்து – பின்பு அவன் வார்த்தை சொல்ல வல்லனாய் வர இந்த ஆஸ்ரயத்தை காண்கைகாக எல்லாரும் திரண்டு –ஊமாய் எங்குப் போனாய் என்று கேட்க -அவனும் நான் ஷீராப்திக்கு போய் வந்தேன் என்ன – அங்கே விசேஷம் என் என்று கேட்க –சேனை முதலியார் உடையவராய் வந்து அவதரித்தார் –
என்று சொன்ன அநந்தரம் அவனைக் கண்டது இல்லை -என்று சேநாபதி ஜீயர் அருளிச் செய்தார் –

யாதவ பிரகாசனோடே எம்பெருமானார் படித்து அருளுகிற காலத்தில் அந்த ராஜ்யத்தின் ராஜாவினுடைய புத்ரியை ப்ரஹ்ம ரஷஸூ பிடிக்கையாலே யாதவ பிரகாசனுக்கு அறிவிக்க – யாதவ பிரகாசன் போகச் சொன்னான் என்று சொல்லும் கோள் -என்று சொல்லிப் போக விட – அவன் தன்னை அங்கு நின்று போகச்சொன்னேன் -என்று ப்ரஹ்ம ரஷ ஸூ சொல்ல – யாதவ பிரகாசனும் போர குபிதனாய் சிஷ்யர்களையும் கூட்டிக் கொண்டு -மஹா மந்தரத்தையும்
ஜபித்துக் கொண்டு ப்ரஹ்ம ரஷஸூ முன்னே போய் நிற்க -ரஷ ஸூ -உம் முடக்கின காலை பின்னையும் நீட்டி -வாராய் அடே யாதவ பிரகாசா நீ சபிக்கிற மந்த்ரம் நான் அறியேனோ -என்று அந்த மந்தரத்தையும் சொல்லி -நான் இவற்றுக்கு -போவேனோ நீ உன் ஜன்மமும் அறியாய் -என் ஜன்மமும் அறியாய் -என்ன -ஆகில் நீ பிரானே சர்வஞ்ஞனாய் இருந்தாய் ஆகில் உன்னுடைய ஜன்மம் ஏது -என்னுடைய ஜன்மம் ஏது -என்று யாதவ பிரகாசன் கேட்க –உன்னுடைய ஜன்மம் ஸ்ரீ மதுராந்தகத்திலே ஏரிக் கரையிலே ஒரு புற்றாய் அதிலே ஒரு உடும்பாய் இருப்புதி –திருமலைக்கு பெரும் கூட்டம் போகிற போது -ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஏரிக் கரையிலே நீராடி அங்கே ஸ்வயம்பாகம் செய்து – அமுது செய்து அருளின தளிகையின் கீழே சிந்தின பிரசாதத்தையும் தீர்த்தத்தையும் பிரசாதப்பட்டாய் – அத்தாலே நீ இப்படி வித்வானாய் பிறந்தாய் -இனி என்னுடைய ஜன்மம் ப்ராஹ்மண ஜன்மம் – யாகம் பண்ணினேன் –மந்திர லோப க்ரியாலோபம் வந்தவாறே ப்ரஹ்ம  ரஷஸ் ஆனேன் -என்ன -ஆனால் நீ யார்க்கு போவுதி -என்ன-உன்னுடன் வாசிக்கிறவரிலே ஒருவர் –அநந்த கருட விஷ்வக் சேநாதிகள் என்கிற நித்ய சூரிகளிலே ஒருவர் -என்று உடையவரைக் காட்டி -அவர் திருவடிகளைத் தெண்டன் இட்டு -இவர் போகச் சொன்னார்
ஆகில் போகிறேன் -என்ன -ஆகில் இளையாழ்வார் நீர் போகச் சொல்லீர் -என்ன -ஆனால் நீ போகிறதுக்கு அடையாளத்தைக் காட்டிப் போ என்ன -இவ்வரசு முறிந்து விழும் -என்று அவ்வரசை முறித்துக் கொண்டு போயிற்று -யாதவ பிரகாசனும் –இளையாழ்வார் நீர் சர்வஞ்ஞராய் இருந்தீர் –என்று மிகவும் உபச்லோகித்து -மீண்டும் தன்னுடைய மடமே வந்தான் –

உடையவர் அபயப் பிரதானம் அருளிச் செய்யா நிற்க -பிள்ளை உறங்கா வல்லி தாசர் கோஷ்டியில் நின்றும் புறப்பட்டு -ஸ்ரீ விபீஷணப்  பெருமாள்
ஸ்வ அபிமானத்தை விட்டு பெருமாள் திருவடிகளே தஞ்சமாக -சர்வ லோக சரண்யாய ராகவாய -என்று பற்றினவரை கல்லும் தடியும் கொண்டது
-பெருமாள் பரிகரம் -நாம் என் செய்யக் கடவோம் -என்று பயப்பட – உடையவர் அருளிச் செய்த படி –கமுகு உண்ணில் வாழை உண்ணும் –
எனக்குபெரிய நம்பி உண்டு –உமக்கு நான் உண்டு -என்று அருளிச் செய்து அருளினார் –

எம்பெருமானாரிலும் ஆளவந்தாரிலும் வாசி யார்க்கு உண்டு -என்று ஆழ்வானை முதலிகள் கேட்க -ஓர் இரவெல்லாம் விசாரித்து -பெருமாளிலும் பெரிய பிராட்டியாரிலும் வாசி யார்க்கு உண்டு -என்றார் – ந த்யஜேயம் -என்றார் பெருமாள் -ந கஸ் சின்ன அபராத் யதி -என்றாள் பிராட்டி -இப்படி இருவருக்கும் வாசி
என்று அருளிச் செய்தார் -நண்பனாக வந்தவனைக் கை விட மாட்டேன் -பெருமாள் வார்த்தை – இவ்வுலகில் குற்றம் செய்யாதவன் ஒருவனும் இல்லையே பிராட்டியார் வார்த்தை –

ஒரு நாள் உடையவரும் முதலிகளும் எழுந்து அருளா நிற்க -பெரிய நம்பி தண்டன் இட -உடையவர் அஞ்சலி பண்ணிப் போக -உடையவரை இது என்
என்று கேட்க -அப் போது –அவருடைய இஷ்டம் அநு வர்த்திகை அன்றோ -நமக்கு ஸ்வரூபம் –என்று அருளிச் செய்தார் –

அநந்தரம் நம்பி ஸ்ரீ பாதத்திலே சென்று கேட்க –ஆள வந்தாரும் முதலிகளும் எழுந்து அருளினால் போலே இருந்தது -அத்தாலே தண்டன் இட்டேன் -என்ன -இது-ஹேதுவாக மாட்டாது என்று விண்ணப்பம் செய்ய ஆள வந்தாருக்கு பின்பு அர்த்த ஸ்திதி -ஆசார்ய பூர்த்தி -இவருக்கே உள்ளது -வேறு
ஒருவருக்கும் இல்லை -ஒருவரை தண்டன் இடக் கடவதாய் அத்தால் மற்றோரை தண்டன் இடுவது என்று அருளிச் செய்தார் –

எம்பெருமானார் மேற்கே வெள்ளை சாத்தி எழுந்து அருளின போது -இவருடைய உபன்யாசத்தைக் கண்டு சர்வரும் விஸ்மிதராக -என் பரமாச்சார்யர் வார்த்தையை கேட்டு சொன்னேன் இத்தனை –அவரைக் கண்ணாலே கண்டேன் ஆகில் -பரம பதத்தில் அளவும் -சோபாநமாகக் கட்டேனோ -என்று அருளிச் செய்தார் –

எம்பெருமான் தானே நம்மாழ்வாராய் வந்தார் -என்று ஆள வந்தார் அருளிச் செய்வர் —நித்ய சம்சாரிகளில் ஒருவனை உபய விபூதி விலஷணன் ஆம்படி எம்பெருமான் ஆக்கினான் என்று எம்பார் அருளிச் செய்வர் –

திருமாலை யாண்டான் ஸ்ரீ பாதத்திலே எம்பெருமானார் திருவாய்மொழி கேளா நிற்க – ஆளவந்தார் அருளிச் செய்தாராக திருமாலை யாண்டான் நிர்வஹிததது ஒழிய -பாட்டுக்கள் தோறும் சில அர்த்தங்களை பிரதிபாதித்து -இங்கனே ஆனாலோ -என்று உடையவர் அருளிச் செய்ய – இப்படி ஆளவந்தார் அருளிச் செய்யக் கேட்டு அறியேன் என்று திருமாலை யாண்டான் அருளிச் செய்து – இங்கனே நடவா நிற்கச் செய்தே -அறியா காலத்துள்ளே -என்கிற பாட்டுக்கு -அறிவு நடையாடாத தசையிலே சம்பந்த ஞானத்தை அழிக்கக் கடவதான தேக சம்பந்ததோடே பின்னையும் வைத்தாய் -என்கிற இழ வாலே அருளிச் செய்கிறார் -என்று திருமாலை யாண்டான் அருளிச் செய்ய -இத்தை எம்பெருமானார் கேட்டருளி – முன்னில் பாட்டுக்களும் பின்னில் பாட்டுக்களும் பெரிய ப்ரீதியோடே  நடவா நிற்க -நடுவே அப்ரீதி தோற்றச் சொல்லுமது -சேராது -இங்கனே யாம் இத்தனை -அறியா மா மாயத்து அடியேனை –அறியாக் காலத்துள்ளே – அடிமைக் கண் அன்பு செய்வித்து -வைத்தாயால் -என்கிறார் என்று இத்தையும் ஒரு உபகாரமாக்கி அருளிச் செய்கிறார் -என்று உடையவர் விண்ணப்பம் செய்ய -இது விஸ்வாமித்ர ஸ்ருஷ்டி -ஆளவந்தார் அருளிச் செய்யக் கேட்டு அறியோம் -என்று திருமாலை யாண்டான் திருவாய் மொழி அருளிச் செய்யத் தவிர்ந்தார் –

எம்பெருமானார் வெள்ளை சாத்தி எழுந்து அருளின போது -திருமலை நல்லான் சிஷ்யரான சில வேடர் புனம் பாரா நிற்க -அம மலையடியே ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் எழுந்து அருள -இந்த வேடர் அவரைத் திரு நாமமே குறியாக -நீர் எங்கு நின்று எழுந்து அருளுகிறீர் -என்று கேட்க -கோயில் நின்றும்
வருகிறேன் -என்ன -எம்பெருமானார் திருவடிகளுக்கு ஒரு குறைகளும் இல்லையே -பெரிய திருச் செல்வத்துக்கு ஒரு குறைகளும் அற நடவா நின்றதோ -என்று கேட்க -என்ன எம்பெருமானாரும் என்ன–திருச் – செல்வமும்  -எம்பெருமானார் வெள்ளை   எழுந்து அருளினார் -இன்ன இடத்தில் எழுந்து அருளினார் என்று தெரிந்தது இல்லை -என்று அருளிச் செய்ய – அவர்களும் ஆறு நாள் பட்டினியே கிடந்தார்கள் -ஆறாம் நாள் ராத்ரி எம்பெருமானார் மழையும்
இடியுமாய் -குளிரிலே ஈடுபட்டு -இவர்கள் மலையிலே நெருப்பு ஒளி கண்டு -அங்கே நம்மைக் கொண்டு போம் கோள் – என்று அருளிச் செய்ய -முதலிகளும் அங்கே எழுந்து அருளி -வழி எங்கே பிள்ளைகாள் -என்று அழைக்க – பிராமணக் குரலாய் இருந்தது -பெருவிடாயோடே ஒரு கால் அழையா நின்றது -என்று ஓடி வந்து -வேலியையும் பிரித்து -இங்கே வாரும் கோள் என்று -சாத்துகைக்கு புடைவையும் கொடுத்து -சாத்தின புடைவையும் காம்புலர விட்டு -காய்ச்சி ஒற்றி -எங்கு நின்று எழுந்து அருளுகிறது -என்று கேட்க -கோயில் நின்றும் வருகிறோம் என்று அருளிச் செய்ய -எம்பெருமானார் செய்து அருளுகிறது என் -என்று கேட்க -நீங்கள் எம்பெருமானாரை அறிந்த படி என் -என்ன –நாங்கள் நல்லான் அடிமைகள் –எங்களுக்கு ஹிதம் அருளிச் செய்கிற போது – எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இரும் கோள் -என்று அருளிச் செய்தார் -அன்று தொடங்கி எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இருந்தோம் -என்ன -ஆகில் அவர் இ றே இவர் – என்று முதலிகள் உடையவரைக் காட்ட -இவர்களும் உடையவர் திருவடிகளைப் பிடித்துக் கொண்டு வ்யாகுலப்பட்டு சேவித்து நிற்க -உடையவரும் –நல்லான் -என்கிற காள மேகம் இங்கும் வர்ஷித்ததோ என்று உகந்து அருள -பின்பு தினைக் கதிரைக் கொண்டு வந்து தேனமுதையும் மிடாவோடே-சமர்ப்பித்து – இத்தை வறுத்து இடித்து தேனிலே குழைத்து அமுது செய்யும் கோள் -என்று விண்ணப்பம் செய்ய – அவர்களும் அப்படியே செய்து -அமுது செய்து கண் வளர்ந்தார்கள் -மற்றை நாள் விடிந்த வாறே -அந்த வேட முதலிகளிலே ஒருவரையும் -ஸ்ரீ பாதத்திலே முதலிகளிலே ஒருவரையுமாக கோயிலுக்கு போக விட -அவர்கள் உடனே நாற்பத்து ஐஞ்சு திரு நாமம் எழுந்து அருளினார்கள் – அந்த வேட முதலிகள் அந்த மலைக்கு மேற்கே அறுகாத வழி கொண்டு போய் ஒரு வேடன் அகத்திலே – விட்டு வர -அந்த வேடன் பகல் எல்லாம் வேட்டைக்கு போய் வந்து-ராத்ரி உண்ணப் புக்க வாறே – பிராமணர் உண்ணாது இருக்க -நாம் உண்ணலாகாது என்று -அருகாக ஒரு க்ராமத்திலே கட்டளை வாரியன் என்பான் -ஒரு வனகத்திலே வேண்டும் கட்டளைகளும் பண்ணிக் கொடு வந்து -இவர்களைக் கொண்டு போய் சடக்கென அமுது செய்வியும் கோள் -என்று மீண்டான் -அவ்வகமுடைய மணவாட்டுப் பெண் -உங்களுக்கு அமுது செய்ய வேண்டாவோ -என்ன -வேண்டா -என்றார்கள் -உங்களுக்கு பயப்பட வேண்டா -நானும் எம்பெருமானார் ஸ்ரீ பாதத்தை உடையேன் -என்றாள் -நீ எம்பெருமானாரை ஆஸ்ரயித்த படி என் -என்று கேட்க -நாங்கள் இவ்விடம் வர்ஷம் இன்றிக்கே இருந்தவாறே அங்கே  கோயிலிலே வந்து இருந்தோம் -என்னகமுடையானும் நானும் ஒரு மச்சிலிலே இருக்கையாய்  இருக்கும் -அப்போது எம்பெருமானார் -ஏழு அகத்திலே மாதுகரம் பண்ணி – அமுது செய்து அருளுவர் -திரு வீதியிலே எழுந்து அருளும் போது அகளங்க நாட்டு ஆழ்வான் முதலான பட்ட முதலிகள் எல்லாரும் இவர் திருவடிகளிலே சேவித்துக் கொண்டு வருவார்கள் -இவர் மாதுகரத்துக்கு அந்த அகத்தில் எழுந்து அருளினார் -நான் மச்சின் நின்றும் இழிந்து தகைந்தேன் –இது என் பெண்ணே என்றார் –
உம்மை ராஜாக்களும் பட்ட முதலிகளும் தண்டன் இடா நின்றார்கள் -நீர் மாதுகரம் பண்ணா நின்றீர் – என்றவாறே -அவர்களுக்கு நாம் பகவத் விஷயத்திலே சில வார்த்தை சொல்லுகை -யாலே காண் என்று அருளிச் செய்ய -அந்த வார்த்தையை எனக்கும் அருளிச் செய்ய வேண்டும்  -என்ன -அப்போது அருளிச் செய்து அருளினார்–பின்பு எங்கள் தேசம் வர்ஷம் உண்டாய் -நாங்கள் நடேறப் போகிற போது -அவர் அருளிச் செய்த வார்த்தையை மறந்தேன் -என்றவாறே -அத்தை நெஞ்சிலே படும்படி அருளிச் செய்து போகப் புக்கவாறே -அடியேனுக்கு ஆத்ம ரஷையாக ஏதேனும் தந்தருள வேணும் -என்று
விண்ணப்பம் செய்தேன் –அப்போது சாத்தி இருந்த பாத ரஷையை பிரசாதித்து எழுந்து அருளினார்நாங்களும் அன்றே போந்தோம் -பின்னையும் சேவிக்க பெற்றிலேன் –என்றவாறே -திரு உள்ளத்திலே விசாரித்து அருளி திருப் போனகம் சமைக்க அருளிச் செய்து -இவள் செய்யுமது பார்த்திரும் -என்று ஒரு
ஸ்ரீ வைஷ்ணவரை வைக்க -அவளும் அடைவாக சமைத்து -முன்புடுத்த புடைவையும் விழுத்து – சுத்தமான புடைவையும் உடுத்து -உள்ளே புகுந்து -எம்பெருமானார் திருவடிகளே சரணம் -என்று உச்சரித்து -ஸ்ரீ பாத ரஷையையும் எழுந்து அருளி பண்ணி -திருவடி விளக்கி -அமுது செய்யப் பண்ணப் புறப்பட்டு
தண்டன் சமர்ப்பித்து –முதலிகளை -ஸ்ரீ பாதம்விளக்க எழுந்து அருள வேணும் -என்று விண்ணப்பம் செய்ய – முன்பு பார்த்து இருக்கச் சொன்ன ஸ்ரீ வைஷ்ணவரை அழைத்து -இவள் செய்தது ஏது -என்று கேட்டருள – இவளும் திருப்போனகத்தை சமைத்து -முன்பு உடுத்த புடைவையை விழுத்து -சுத்தமான புடைவையை உடுத்து -திருப் போனகத்தை உள்ளே கொண்டு புகுந்து கதவை யடைத்து த்யானம் பண்ணிக் கொண்டு இருந்தாள் – கறுத்து நீண்டு இருந்தது எம்பெருமானாய் இருந்தது இல்லை -என்றவரே அவள் தன்னை அழைத்து -நீ உள்ளே செய்தது ஏது -என்று கேட்க –முன்பு ஏறி அருளிப் பண்ணித் தந்த ஸ்ரீ பாதரஷையை ஏறி அருளப்பண்ணி திருவடி விளக்கி -அமுது செய்யப் பண்ணி யாக்கும் அடியேன் பிரசாதப் படுவது -இப்போதும் அப்படியே செய்தேன் -என்று விண்ணப்பம் செய்ய -அவை தன்னைக் கொண்டு வந்து காட்டு -என்ன – அவளும் கொண்டு வந்து காட்ட -அங்குத்தைக்கு தகுதியாய் இருந்தவாறே -எம்பெருமானார்அருளிச் செய்த வார்த்தை ஒத்து இருந்தது இல்லையாகில் முதலிகள் அமுது செய்யார்கள் – அத்தை என் செவியிலே சொல்லிக் காணாய் என்ன -அவளும் விண்ணப்பம் செய்தாள் -வார்த்தையும் ஒத்து இருந்தது -ஆகில் இதுக்குள்ளே எம்பெருமானார் உண்டோ என்று பார்த்துக் காணாய் -என்ன -அவளும் திரு விளக்கு ஏற்றிக் கொண்டு வந்து அடைவே பார்த்தாள் – எம்பெருமானார் திருவடிகள் ஆனவாறே அங்கே திகைத்து -எம்பெருமானார் திருவடிகள் போலே
இருக்கிறது -காஷாயம் இல்லாமையாலே தெரிகிறது இல்லை -என்றவாறே -நான் காண் -என்ன – அவளும் திருவடிகளைப் பிடித்துக் கொண்டு அழப் புக்கவாறே -கண்ண நீரைத் துடைத்து -விதுரான் நானி புபுஜே ஸூ சீ நி குண வந்திச -என்று பாவனத்வ போக்யத்வங்கள் உடைத்தாய் இருந்தது -முதலிகாள் இனி அமுது செய்யும் கோள் -என்று அருளிச் செய்ய – அவர்களும் அமுது செய்து கண் வளர -இவளும் தளிகை பிரசாதமும் கூட்டி பாலையும் கலந்து -மச்சிலே கிடக்கிற பர்த்தாவை எழுப்பி -பிரசாதத்தையும் இட்டூட்டி பிரசாதப் படப் பண்ணி தான் பிரசாதப் படாதே கிடக்க -இது என் -என்று கேட்க -கோயில் நின்றும்
எம்பெருமானாரும் முதலிகளும் எழுந்து அருளி யமுது செய்ய மாட்டோம் என்று கண் வளருகிறார்கள் -என்றவாறே -நான் இதுக்கு என் செய்ய  வேணும்-என்ன -நீ எம்பெருமானார் திருவடிகளைஆஸ்ரயிக்க வல்லையோ -என்ன -இவனும் ராத்ரியிலே சம்வதித்து பிரத்யயம் பண்ணிக் கொடுக்க -இவளும் – பிரசாதம் சூடி நித்தரை பண்ணி -விடிந்தவாறே எம்பெருமானார் திருவடிகளிலே தண்டன் இட்டு – இற்றைக்கு எழுந்து அருளி நிற்க வேண்டும் -இவனை கிருபை பண்ணி எழுந்து அருள வேணும் – என்று விண்ணப்பம் செய்ய -எழுந்து அருளி நின்று அவனை கிருபை பண்ணி -அந்த க்ராமத்திலெ நாலஞ்சு நாள் எழுந்து அருளி இருந்து -த்ரிதண்ட காஷாயாதிகளையும் சம்பாதித்து தம்முடைய திரு வாராதன பேரருளாளர் திரு முன்பே வைத்து தண்டன் சமர்ப்பித்து முன்பு போலே
அவற்றை உடையவர் தரித்து அருளினார் –

திருக் கோட்டியூர் நம்பி ஸ்ரீ பாதத்திலே உடையவர் -பதினெட்டு பிரகாரம் எழுந்து அருள -இன்னமும் கேட்க வந்தீரோ -என்ன -உடையவர் –ஓருரு இரண்டுரு வாந்தனையும் வருவன் – என்று அருளிச் செய்தார் –

எம்பெருமானார் -திருக் கோட்டியூர் நம்பி ஸ்ரீ  பாதத்திலே நின்று நெடு நாளோடு கூட ஸ்தோத்ரம் கேட்டருளி சாத்தினவாறே -இனி ஜ்ஞான கார்யத்தில் உமக்கு கர்த்தவ்யம் ஒன்றும் இல்லை -பெரிய நம்பிக்கு பிரியமாக கோயில் திருவாராதனம் நடத்தல் ஆகாதோ -என்று சரம ஸ்லோக அர்த்தத்தையும் அவ்வளவிலே அருளிச் செய்து -விடை கொடுத்து அருள – இவரும் விடை கொண்டு -திருக் குளக் கரையிலே எழுந்து அருள -முதலியாண்டான் எம்பெருமானார்
தாழ்த்த அருளினவாறே ஸ்ரீ பாதத்திலே கண்டு வர வேணும் என்று வர -ஓரடி முற்பட்டீர் இல்லையே – எனக்கு சரம ஸ்லோகம் அருளிச் செய்த உருகு பதத்தோடு எழுந்து அருளி -இருக்கிறார் புக்கு தண்டனிட்டு வா – என்று அருளிச் செய்ய-ஆண்டானும் நம்பி ஸ்ரீ பாதத்திலே சென்று -தண்டனிட்டு நிற்க-
ராமானுஜ பரிக்ருஹீதனைப் போலே யிருந்தாய் -என்று விஷயீ கரித்து -சரம ஸ்லோக அர்த்தத்தை அருளிச் செய்து -உனக்கு பரிஹரிக்க வேண்டுவது மூன்று படு குழி உண்டு – அத்தைக் கேள் -என்ன -அருளிச் செய்யலாகாதோ -என்ன -வித்வான் -அபிஜாதன் -எம்பெருமானார் மருமகன் என்கிறவற்றை -எல்லாம் -உத்தேச்ய என்று இராதே – எம்பெருமானார் திருவடிகளில் பண்ணின சம்பந்தமே உனக்கு உத்தாரக ஹேது -என்று இரு என்று அருளிச் செய்ய-அத்யந்த ஹேயனாய் இருக்கிற என்னையும் தங்களோடு ஒரு கோவையிலே கோப்பதே -என்று கண்ணும் கண்ண நீருமாய் விடை கொண்டு எம்பெருமானார் ஸ்ரீ பாதத்து
ஏறப் போந்தார் -என்று பிள்ளை அருளிச் செய்வர் –

எம்பெருமானார் -உந்து மத களிற்றன் என்கிற பாட்டை அனுசந்தித்துக் கொண்டு திருக் கோட்டியூர் நம்பி திரு வாசலிலே -சீரார் வளை ஒலிப்ப வந்து திறவாய் -என்கிற இடத்தை அனுசந்திக்கிற போது -நம்பி திரு மகளார் -தேவகிப் பிராட்டியார் -திருக் கதவைத் திறந்து கொண்டு புறப்பட -எம்பெருமானார் விழுந்து தெண்டன் இட்டு கிடக்க -நெரித்துக் கொண்டு உள்ளே ஓடிப் போக நம்பி -இது என் பெண்ணே -என்ன -என்னை எம்பெருமானார் தண்டன் இட்டார் -என்ன –
அதுக்கு பயப்பட வேணுமோ என்று அருளிச் செய்து -எபெருமானார் உள்ளே புக்கு அருளினவாறே – இளையாழ்வீர் –இப்போது அனுசந்தானம் உந்து மத களிற்றனோ -என்று அருளிச் செய்தார்
என்று பிள்ளை அருளிச் செய்வர் –

பெரிய நம்பி திருமகளார் அத்துழாய் புக்ககத்திலே இரா நிற்க -ஒருநாள் தீர்த்தமாடத் துணை வர வேணும் -என்று மாமியாருக்கு அருளிச் செய்ய -உன் சீதன வெள்ளாட்டியை கொண்டு போ என்று தடுத்துச் சொல்ல -நம்பி பக்கல் வந்து-நம்பீ என்னை இப்படி சொன்னார் என்ன – நாம் அறியோம் உங்கள் ஜீயருக்கு சொல்லும் -என்ன -இவளும் அங்கு சென்று விண்ணப்பம் செய்ய அருகே இருந்த முதலி யாண்டானைப் பார்த்து -உமக்கு இந்தாரும் அம்மா ஸ்ரீ தன வெள்ளாட்டி -என்று திரு உள்ளமாய் -இவரைக் கொண்டு போ -என்ன -ஆண்டானும் கூட எழுந்து அருளி நீராடப் பண்ணு வித்து – இவருடைய புககத்திலே நின்று -தாஸ வ்ருத்திகளை செய்யத் தொடங்கினார் -இவருடைய புக்ககத்தார் – இது என் ஆண்டான் -என்ன -என்னை வர விட்ட உடையவரும் எங்கள் நாய்ச்சியாரும் சொன்னது செய்ய வேணுமே -என்ன -அவர்களும் நம்பி ஸ்ரீ பாதத்தில் ஏறப் போய் -நம்பீ முதலி யாண்டானை ஏற விட்டு இப்படி எங்களை நசிப்பிக்கிறது என் -என்ன -நாம் அறிந்தோமோ -எம்பெருமானாருக்கு சொல்லுங்கோள்- என்ன -அங்கே  சென்று விண்ணப்பம் செய்ய – உடையவரும் -ஆண்டானை அத்துழாய் க்கு ஸ்ரீ தன அடிமையாகக் கொடுத்தோம் -அங்கு உங்களுக்கு நிற்க ப்ரியம் அன்று  ஆகில் இங்கே நின்று அடிமை செய்கிறது -என்று அருளிச் செய்து அழைப்பித்துக் கொண்டு அருளினார் –

எம்பார் திருமலை நம்பி திருமாளிகைக்கு சர்வவித கைங்கர்யங்களும் பண்ணிக் கொண்டு போருகிற படியைக் கண்டு -உடையவர் ப்ரீதராய் கொண்டு எழுந்து அருளி இருக்கிற அளவிலே – ஒருநாள் நம்பிக்கு திருப்படுக்கை படுத்து -எம்பார் முதலில் அதிலே படுத்துக் கொண்டு பார்க்க – இத்தை ஒருநாள் உடையவர் கண்டு -இவருடைய பரிமாற்றம் இருந்த பொல்லாங்கு என் -என்று இக்ரமத்தை திருமலை நம்பிக்கு அருளிச் செய்ய -திருமலை நம்பி எம்பாரை அழைத்து –
ஸ்ரீ கோவிந்த பெருமாளே -நீர் நமக்கு படுத்த படுக்கையிலே படுத்துக் கொண்டீர் என்று கேட்டோம் இப்படிச் செய்யலாமோ -இதுக்கு பலம் ஏது -என்ன -நரகம் -என்ன -இப்படி அறிந்து இருந்து செய்வான் என் – என்ன –தேவரீர் திருமேனியிலே ஓன்று உறுத்துதல் -ஊன்றுதல் –ஊர்தல் -கடித்தல் செய்யாமல் -கண் வளரப் பெற்றால் அடியேனுக்கு நரகமே அமையும் -என்று விண்ணப்பம் செய்ய -இத்தைஉடையவர் கேட்டருளி – இதொரு பிரதிபத்தி விசேஷம் இருந்தபடி என் -என்று உகந்து அருளினார் –

த்ரை லோக்யாள் -என்பாள் ஒரு ஸ்த்ரி -எம்பெருமானார் சிஷ்யர்களில் ஒருவர் வங்கி புரத்து ஆச்சிஸ்ரீ பாதத்திலே ஆஸ்ரயித்து இருக்கும் -அங்கே அனந்தாழ்வான் எழுந்து அருள -அவரை ஆறு மாசம் சேவித்து இருந்து அவர் எழுந்து அருளின வாறே ஆச்சி ஸ்ரீ பாதத்து ஏறச் சென்றாள் -அவரித்தனை நாள் வந்திலையீ என்ன -அனந்தாழ்வானை சேவித்து இருந்தேன் என்ன -அவர் நான் சொன்னதிலும் ஏற்றமாக சொல்லிற்று உண்டோ -என்ன – உண்டு –உம்மை ஆஸ்ரயித்து -பதினாறாட்டை நாளுண்டு -எம்பெருமானார் திருவடிகளைத் தஞ்சம் என்றீர் இத்தனை -அவர் ஆறு மாசத்திலே உம்முடைய திருவடிகளே  தஞ்சம் என்னும்படி பண்ணினார் – என்றாள் –

உடையவர் அந்திம தசையில் அருளிச் செய்த வார்த்தை
ஒருவன் பிரபன்னன்  ஆனால் – அவனுடைய தேக யாத்ரை கர்ம ஆதீனம் ஆகையாலே -கரைய வேண்டா -கரைந்தான் ஆகில் நாஸ்திகன் ஆம் இத்தனை -ஆத்ம யாத்ரை பகவத் ஆதீனம் ஆகையாலே அதில் தனக்கு அந்வயம் இல்லை -உண்டு என்று இருந்தான் ஆகில் -ஆத்ம சமர்ப்பணம் பொய்யாம் இத்தனை -ஆகையால் உபய யாத்ரை யும் கொண்டு அந்வயம் இல்லை -ஆகையால் கரண த்ரயங்களையும் கொண்டு வேண்டிற்று செய்து திரியவோ -என்னில் -அது ஸ்வரூபம் அன்று –இனி உபாயாந்தரத்தில் அந்வயம் இல்லா விட்டால் ப்ராப்யமான கைங்கர்யத்தில் அந்வயிக்கும் இத்தனை –இங்கே இருக்கும் நாள் செய்யும் கைங்கர்யம் ஆறு -அவை யாவன –
நீ பாஷ்யத்தை வாசித்து வாசிப்பிக்கவும் -அதுவும் மாட்டிற்று ஆகில்
அருளிச் செயலை ஓதி ஓதுவிக்கவும் –அதுவும் மாட்டிற்று ஆகில்-
உகந்து அருளின திவ்ய தேசங்களிலே அமுதுபடி சாத்துப்படி ஆராய்ந்து போரவும் –அதுவும் மாட்டிற்று ஆகில்-
திரு நாராயண புரத்தில் ஒரு குடில் கட்டி இருக்கவும் –அதுவும் மாட்டிற்று ஆகில்-
த்வயத்தின் அர்த்த அனுசந்தானம் பண்ணவும் –அதுவும் மாட்டிற்று ஆகில்-
என்னுடையவன் என்று அபிமாநிப்பான் ஒரு ஸ்ரீ வைஷ்ணவன் அபிமாநத்திலே ஒதுங்கி இருக்கவும் –
இப்படி வர்த்திக்கும் அதிகாரிக்கு முன்னடி பார்த்து வர்த்திக்க வேண்டுவது மூன்று விஷயங்கள் உண்டு –
அவர்கள் ஆர் என்னில் —அநு கூலரும் -பிரதி கூலரும் அநு பயரும் –
இதில் அநு கூலர் ஆவார் -ஸ்ரீ வைஷ்ணவர்கள்பிரதி கூலர் ஆவர் பகவத் விட்டுக்கள் -எம்பெருமானை த்வேஷிப்பவர்கள் – அநு பயர் ஆவார் சம்சாரிகள்
இதில் அநு கூலரான ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டால் -சந்தனகுஸு ம தாம்பூலாதிகளைப் போலவும் – நிலாத் தென்றல் சந்தனம் போலேயும் – அபிமத விஷயம் போலேயும் –உகந்து வர்திப்பான்பகவத்த்விட்டுக்களைக் கண்டால் சர்பாக்நிகளைக் கண்டால் போலே வெருவி வர்த்திப்பான் –
அநு பயரைக் கண்டால் காஷ்ட லோஷ்டாதிகளைக் கண்டால் போலே உபேஷித்து வர்த்திப்பான் -இப்படி வர்த்திக்க ஒட்டாது ஒழிகிறது அர்த்த காம ப்ராவண்யம் -அர்த்த காமம் அடியாக அநு கூலரான ஸ்ரீ வைஷ்ணவர்களை அவமானம் பண்ணினால் – ராஜ புத்ரனை அவமானம் பண்ணினால் ராஜஹ்ருதயம் புண் படுமா போலே த்த்வாரா எம்பெருமான் திரு உள்ளம் புண் படும் -பிரதி கூலரான பகவத்த்விட்டுகளை அர்த்த காமம் அடியாக ஆதரித்தான் ஆகில் -ராஜா சார்வ பௌமனாய் இருக்க –ராஜ மஹிஷி ஷூத்ர ஜந்துக்கள் பக்கலிலே மடிப் பிச்சை புக்கால் ராஜாவுக்கு அவத்யமாம்போலே எம்பெருமானுக்கு அவத்யமாய் -தத்த்வாரா எம்பெருமான் திரு உள்ளம் புண் படும்அநு பயரான சம்சாரிகளை அர்த்த காமம் அடியாக ஆதரித்தான் ஆகில் ரத்னத்துக்கும் பாஷாணத்துக்கும் வாசி அறியாதாரைப் போலே நமக்கும் பிறர்க்கும் வாசி அறிந்திலன் -இவனுக்கு பிறந்த ஞானம் கார்யகரமாக பெற்றிலோமே என்று இவன் அளவில் ஈஸ்வரன் உதாசீனனாய் போரும் –

எம்பெருமானார் தம்முடைய ஸ்ரீ பாதத்திலே ஆஸ்ரயித்து இருப்பார் ஒரு ஸ்ரீ வைஷ்ணவரோடே பிள்ளைக்கு ஏகாயனரோட்டை சம்சர்க்கம் உண்டாக –
நம்மோடு சம்பந்தம் உடையவன் வ்யபசரித்து அனர்த்தப் பட ஒண்ணாது என்று பெருமாள் திருவடிகளில் எழுந்து அருளி நிற்கச் செய்தே -அவனும் அங்கே
சந்நிஹிதனாக -வாராய் உனக்கு பிரமாணங்களால் காட்டலாம்படி ஞான பௌஷ்கல்யம் இல்லை -நான் வேதாந்தங்களில் அறுதி இட்டு இருக்கும் பொருள்
இவ்வாத்மாவுக்கு தஞ்சமாய் இருக்கும் அர்த்தம் த்வயம் அல்லது இல்லை -என்று பெருமாள் திருவடிகளில் ஸ்ரீ சடகோபனை எடுத்து
சத்யம் பண்ணிக் கொடுத்து அருளினார் -அவரும் அன்று தொடங்கி த்வய நிஷ்டரானார் –

எம்பெருமானார் தம்முடைய அந்திம தசையிலே அருளிச் செய்த வார்த்தை –
உடையவர் தம்முடைய திரு உள்ளத்திலே ஆர்த்தியோடே விசாரித்து பெரிய பெருமாளை திருவடி தொழுது விண்ணப்பம் செய்தபடி
சம்சாரத்தில் அருசி பிறந்தது என்று சாங்கப் பிரபத்தியை பண்ணி அருளினார் இப்போது இது என் என்று பெரிய பெருமாள் வினவி அருள -கால அதிக்ரமம்
பிறந்ததே என்ன -காலத்துக்கு நாம் அன்றோ கடவோம் -சிறிது காலம் உம்மைக் கொண்டு லோகத்தை திருத்தப் பார்த்தோம் -அறப் பதறினீர் -இனி உமக்கு வேண்டுவது என் என்ன –சடக்கென திருவடிகளில் சேர்த்து கொள்ள வேண்டும் என்ன -ஆகில்
இற்றைக் கிழைமைக்கு நாலாம் நாள் அப்படியே செய்கிறோம் என்ன –
அப்போது என்னுடைய சம்பந்த சம்பந்திகள் எல்லாரும் நான் பெற்ற லோகம் பெற வேணும் -என்று விண்ணப்பம் செய்து –
மடத்துக்கு எழுந்து அருளி -அப்போது முதலிகள் எல்லாரையும் அழைத்து அருளி ஒருகாலும் அருளிச் செய்யாத அர்த்தங்களை எல்லாம் அருளிச் செய்தார் –
அவ்வர்தங்களை எல்லாம் கேட்டு அதி சங்கை பண்ணி விண்ணப்பம் செய்ய –
இவரும் வெள்ளக்கேடாக ஒண்ணாது என்று இற்றைக்கு நாலாம் நாள் பெரிய பெருமாள் திருவடிகளில் போகிறோம் என்று அருளிச் செய்ய -இவருடைய
விச்லேஷத்தில் ஆத்மத்யாகம் பண்ணக் கடவோம் என்று முதலிகள் தேறி இருக்கிற பிரகாரத்தை திரு உள்ளம் பற்றி -ஆளவந்தார் ஸ்ரீ பாதமே –ஆத்மத்யாகம்
பண்ணினார் உண்டாகில் நம்மோடு அந்வயம் இல்லை என்று அருளிச் செய்ய – இவர்களும் இத்தைக் கேட்டு மிகவும் சோகார்தராய் -இனி எங்களுக்கு செய்ய அடுப்பது என் பட்டி புகுதல் -பட்டினி கிடத்தல் அன்றோ -என்று விண்ணப்பம் செய்ய -அருளிச் செய்த வார்த்தை –
சகல வேதங்களிலும் சகல சாஸ்திரங்களிலும் சகலமான ஆழ்வார்கள் திவ்ய
பிரபந்தங்களிலும் -சகல ஆசார்ய பாசுரங்களிலும் பார்த்த இடத்தில் -ஒரு அதிகாரிக்கு
த்வயம் ஒழிய மந்த்ரம் இல்லை —
மிதுனம் ஒழிய வஸ்து இல்லை –
மிதுன கைங்கர்யம் ஒழிய புருஷார்த்தம் இல்லை –
ஆசார்ய அபிமானம் ஒழிய மோஷம் இல்லை –
பாகவத அபசாரம் ஒழிய மோஷ விரோதி இல்லை-

பாகவத அபசாரம் தான் பஹூ விதம் -அதில் பிரதான அபசாரம் பன்னிரண்டு –
அவை எவை என்னில்
-ஜன்ம நிரூபணம் –சரீர நிரூபணம் -பாவ -பாக -நிரூபணம் –ஆஸ்ரம நிரூபணம் -அவயவ நிரூபணம் -ஆலச்ய நிரூபணம் –
வாஸ நிரூபணம் -பந்து நிரூபணம் -பிரகாச நிரூபணம் –பிரகார நிரூபணம் -வர்த்தன நிரூபணம் -தோஷ நிரூபணம் –
இதில்-
1- ஜன்ம நிரூபணம் ஆவது -ஸூ த்ரம் வா பகவத்பக்தம் நிஷாதம் ஸ்வ பசம்ததா -வீஷதே ஜாதி சாமான்யாத் ஸ யாதி நரகம் நர -ந ஸூ த்ரா பகவத்
பக்தா விப்ரா பாகவதாஸ் ஸ்ம்ருதா -சர்வ வர்னேஷூ தே ஸூ த்ரா யே ஹ்யபக்தா ஜநார்தனே -ய பஸ்யதி ஸூ பாசாரம் வைஷ்ணவம் வீத கல்மஷம்
ஸ வை யஸ்மின் குலே ஜாதம் பிரணமேத் தண்டவத் புவி -கிமப்யத்ராபி ஜாயந்தே யோகி நஸ் சர்வ யோநிஷூ -பிரத்யஷிதாத்மா நாதானாம் நைஷாம் சிந்த்யம் குலாதிகம் என்று இத்யாதி புராணங்களிலே சொல்லப்பட்டு இருக்கையாலே தான் வைஷ்ணவர்களை ஜன்ம நிரூபணம் பண்ணுவது அபசாரம்
2-சரீர நிரூபணம் ஆவது -புருஷ சரீரம் என்றும் -ஸ்திரீ சரீரம் என்றும் -திருவனந்த ஆழ்வானை பாம்பு சரீரம் என்றும் -ஸ்ரீ கருட ஆழ்வானையும் -ஸ்ரீ ஜடாயு மகா ராஜரையும் பஷி சரீரம் என்றும் -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானையும் திருவடியையும் ஸ்ரீ சுக்ரீவ மகாராஜரையும் மிருகங்கள் என்றும் -பிரகலாத
ஆழ்வானையும் ஸ்ரீ விபீஷண பெருமாளையும் மகா பலியையும் இவர்கள் முதலான பகவத் தாசரை ராஷசர் என்றும் -தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ரூபங்களான சதுர்வித சரீரங்களிலே பகவத் பக்தர் யாதொரு சரீரம் பரிகிரஹித்து இருந்தாலும் இந்த சரீரம் என்று சரீர நிரூபணம் செய்கை அபசாரம்

3-பாவ -பாக நிரூபணம் ஆவது ஷட்பாவ விகாரமான பால்ய யௌவன வருத்தத்வாதி வயோ நிரூபணம் செய்கை அபசாரம்
4-ஆஸ்ரம நிரூபணம் ஆவது -ப்ரஹ்மசர்ய -க்ருஹச்த -வானப்ரஸ்த -யதியாதிகளில் ஸ்ரீ வைஷ்னவர்களை
இந்த ஆஸ்ரமம் என்று ஆஸ்ரம நிரூபணம் செய்கை அபசாரம்
5-அவயவ நிரூபணம் ஆவது -திருமேனியிலே ஆதல் -அவயவங்களிலே ஆதல் ஸ்ரீ வைஷ்ஹ்னவர்களுக்கு ஒரு தோஷம் உண்டே ஆகிலும்
அவர்கள் ஜ்ஞானமே சர்வ அவயவ பூர்த்தி என்று பாராமல் இருக்கை அபசாரம்
6-ஆலச்ய நிரூபணம் ஆவது -பிரபன்னனானவன் தன்னுடைய திருமேனியை உபேஷை பண்ணி ஹேயமாய் இருக்குமிடத்தில் குத்சியாமல் அவர் விக்ரகமே
போக்யமாகபாராது இருத்தல் அபசாரம் -இதுக்கு விண்ணப்பம் செய்வார் கதை -கொட்டைப் பாக்கொடு பெருமாளையும் வாயில் இட்ட அரையர் கதை –

7-வாஸ நிரூபணம் ஆவது -கோயில் திருமலை பெருமாள் கோயில் நின்றும் எழுந்து அருளின ஸ்ரீ வைஷ்ணவர்களை எத்தனை ஆதரிப்பார்கள் அப்படியே
ஒரு குப்பத்தில் இருந்து எழுந்து அருளின ஸ்ரீ வைஷ்ணவரை அவர் இருந்த ஸ்தலமே திவ்ய தேசம் என்று உத்தேச்ய பிரதிபத்தி செய்யாது இருக்கை -அபசாரம் -கருடன் -சாண்டிலி அம்மையார் வ்ருத்தாந்தம் –
8-பந்து நிரூபணம் ஆவது -தன்னுடைய பிரகிருதி பந்துக்களிலே ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் உண்டாகில் தன்னுடைய ஸ்வாமி என்று உத்தேச்ய பிரதிபத்தி செய்யாது இருக்கை அபசாரம்
9-பிரகாஸ நிரூபணம் ஆவது -ஆசார்யரையும் சிம்ஹாசனத்தில் அவர்களையும் பூஜ்யர் ஆனவரையும் -பிரசித்தமாக ஆசார்ய கைங்கர்ய தாஸ்ய க்ருத்யம்
பண்ணுமவர்களையும் -உபாய சூன்யராய் ஒதுங்கி வர்த்திக்கும் அவர்களையும் ஏக பிரகாரத்தில் ரஷகர் என்று பாராது இருத்தல் அபசாரம் –
10-பிரகார நிரூபணம் ஆவது –திரு நந்தவனம் செய்கிற பிரப்ன்னரையும் -திரு முற்றங்கள் கட்டுவிக்கிற பிரபன்னரையும் -சாத்துப்படி திருமாலை திரு விளக்கு இடுகிற பிரபன்னரையும் -மற்றும் இத்யாதி பரிசாரகங்கள் செய்கிற பிரபன்னரையும் – பார்வைக்கு ஒன்றும் செய்ய மாட்டாத வெறுமனே இருக்கிற பிரப்ன்னரையும் ஏக பிரகாரத்தில் உத்தேச்யர் என்று பாராது இருக்கை அபசாரம்
11-வர்த்தந  நிரூபணம் ஆவது-ஸ்ரீ வைஷ்ணவர்கள் திருமேனி யாத்ரையான பிரகிருதி வஸ்யர் நிரூபணத்தில் வ்யவஹாரம் பண்ணுதல் -கிருஷி பண்ணுதல் -ஆயுதம் பிடித்து சேவித்தல் – எவ்வகையில் பாங்காய் இருந்தாலும் இவ்வகையில் இருக்கிறார்கள் என்று நினைக்கை அபசாரம் -இதுக்கு அவரை வியாபாரி கதை
12-தோஷ நிரூபணம் ஆவது -ஸ்ரீ வைஷ்ணவர்கள் திருமேனி போகமான பிரவ்ருத்தி ஸா கதா பாரதீ புண்யா த்ரௌபதி ச பதி வ்ரதா -தத் விதா பாண்டவா தன்யா பிரசன்னே புருஷோத்தமே -என்று த்ரிவித கரணங்களாலும் அவி சேஷஞ்ஞர் என்றும் – அனுஷ்டாதா அன்று என்றும் -ஸ்ரீ வைஷ்ணவர்களை ஏவ மாதி தோஷங்கள் நிரூபிக்கை அபசாரம் –
தான் ஸ்ரீ வைஷ்ணவர்கள் தோஷத்தை பார்க்க கடவன் அல்லன் -கண்ணாலே பார்த்து மனச்சாலே நினைத்து வாக்காலே சொல்லி -அம்மை கனக மிருகத்தைக் கொண்டு வரச் சொல்லி -பகவானை அனுப்ப்பின அபசாரம் – அது எங்கனே என்னில் -கந்தர்ப்பகோடி லாவண்யமாய் பஞ்சோபஷிணத்மயமாய்
ஹாவு ஹாவு ஹாவு என்று திவ்ய மங்கள விக்ரக அனுபவம் பண்ணி —சப்தாதி விஷய ப்ராவண்யத்தில் ஒரு ஸுவர்ண பாஸ மிருகத்தை அபேஷித்து
பெருமாளை விட்ட போதே -பரம பாகவதனான இளைய பெருமாளை பருஷ வாக்யங்களைச் சொன்ன போதே ராஷ சர்கையிலே சிறை போக வேண்டிற்று –
வாசகத்தால் செய்த அபசாரத்துக்கு பிராயச்சித்தம் இல்லை -ந ஷமாமி கதாசன – மத் பக்தம் ஸ்வ பசம் வாசபி நிந்தாம் குர்வந்தி யே நரா -பத்ம கோடி சதேனா சபிந ஷமாமி வஸூ ந்தரே -இவை தான் ஓரொன்று பஹூ முகமாய் வந்தேறும் – இவ்வபராதங்களை தான் பண்ணுகையும் -தனக்கு உத்தேச்யனான ஆசார்யன்
பண்ணிலும் -ந்யமாதி க்ரமம் ரஹசி போதயேத் -என்கிறபடி ஏகாந்தத்தில் நியமித்து தவிர்ப்பியாது ஒழிகையும் -பரதந்த்ரரானவர்கள் பண்ணுமிடத்தில் முதுகிலே யடித்து விலக்காது ஒழிகையும் -ஸ்ரீ வைஷ்ணவர்கள் அந்யோந்யம் அபராதம் பண்ணும் இடத்தில் அவர்கள் ஸ்ரீ பாதத்தைக் கட்டிக் கொண்டு ஆனவளவும் நியமித்து தவிர்ப்பியாது ஒழிகையும் -அவர்கள் தவிராத அளவிலே தான் பகவத் விஷயத்தில் சரணம் புகாது ஒழிகையும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஏகாந்தத்தில் பண்ணின அபராதங்களை பிரகாசம் ஆக்குகையும் அபராத ஷாமணம் பண்ணினவர்களை பாகவத அபசாரம் பண்ணினார்கள்  என்று நினைத்து இருக்கையும்
இவ்வபதாரங்களுக்கு எல்லாம் அடி –

அவஸ்யம் பரிக்ராஹ்யங்கள் ஆன பன்னிரண்டு அறிய வேணும் -அவை யாவன –
ஆகார நியமமும் -விஹார நியமமும் -அன்ன நியமமும் -போஜன நியமமும் – ஸ்நான நியமமும் -ஸ்வரூப நியமமும்
-உபாய நியமமும் -உபேய நியமமும் -வாஸ நியமமும் -போக நியமமும் -ஆசார நியமமும் -சம்சர்க்க நியமமும் –
1-ஆகார நியமம் ஆவது -பாகவத அன்னமே புஜிககை
2-விஹார நியமம் ஆவது –பகவத ஆலயங்களிலும் திரு நந்தவனங்களிலும் ஸ்வா சார்யன் சஞ்சரிக்கும் ஸ்தலங்களிலும் -மற்றும்
விலஷணமான ஸ்தலங்களிலும் சஞ்சரியாதே  -மற்ற விடத்திலே சஞ்சரிக்கை –
3-அன்ன நியமம் ஆவது -ப்ராக்ருதர் இடத்தில் தன்னைக் கீழ் படுத்தி ஆர்ஜியாதே அமுதுபடி -சாத்துப்படி -ஸ்ரீ கார்யம் முதலானவற்றுக்கு அர்ஹமான த்ரவ்யங்களுக்கு கர்தவ்யதயா அநு கூலரை நெருக்கி ஆர்ஜியாதே ஸ்வ ஷேத்ரத்தில் ஸ்வ சரீரத்தில் க்ருஷி பண்ணி யாதல் -அநு கூலருடைய ச்நேஹத்தாலே வந்த த்ரவ்யம் ஆதல் – மாதுகர முஷ்டியினால் ஆர்ஜித்த த்ரவ்யம் ச்வீகரிக்கையும்
4-போஜன நியமம் ஆவது -இப்படி ஆர்ஜிதமான த்ரவ்யத்தை பகவத் பாகவத விஷயத்தில் சமர்ப்பித்து பிரசாத பிரதிபத்தி பண்ணும் போது பிரசாத ஸ்வீகாரம்
என்றும் -ஷு ந நிவ்ருத்தி மாத்ரம் என்றும் -தேஹ  தாரண மாத்ரம் என்றும் – புருஷார்த்தம் என்று இருக்கை –
5-ஸ்நான நியமம் ஆவது -பாப விமோசனம் என்று ஆதல் -பிரயோஜனாந்தர நினைவு ஆதல் -புண் கழுவுகிறோம் என்றாதல் -அதிகாரி சம்பத்துக்கு உடலாக வாதல் -சரீர மாலின்யத்துக்காகவாதல் அன்றிக்கே பர்த்ரு போகத்துக்கு பதி வ்ரதை ஸ்நானம் பண்ணுமா போலே பகவத் பாகவத சமாராதனம் செய்கைக்காக ஸ்நானம் பண்ணுகை
6-ஸ்வரூப நியமம் ஆவது -ததீய சேஷமாய் இருக்கை –
7-உபாய நியமம் ஆவது -அநந்ய சாதநனாய் இருக்கை
8-உபேய நியமம் ஆவது அநந்ய பிரயோஜனனாய் இருக்கை
9-வாஸ நியமம் ஆவது -அநந்ய பிரயோஜனரான மகா பாகவதருடைய திருமாளிகை கடைத்தலையிலே ஒதுங்கி வர்த்திக்கை –
10-போக நியமம் -ஆவது -அவர்களுடைய சேவையே எல்லா போகங்களும் என்று இருக்கை
11-ஆசாரநியமம் ஆவது -அர்த்த காம அபிமானங்கள் ஹேதுவாக ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரு உள்ளத்திலும் ஆசார்யன் திரு உள்ளத்திலும்
கலக்கம் வாராமல் வர்த்திக்கை –
12-சம்சர்க்க நியமம் ஆவது -சாத்விகர் அங்கீகாரம் உள்ள தேசத்தில் வசித்து இருக்கை –
இந் நியமங்கள் உண்டாய் போரவே -இவ்வபதாரங்கள் ஒன்றும் புகுராது என்று–அருளிச் செய்து அருளினார் –

உடையவர் திருமலைக்கு எழுந்து அருளுகிற போது உத்தர நல்லூரிலே எழுந்து அருளின அளவிலே -வானமாமலை தாசர் என்று ஒரு கோபால
ஸ்ரீ வைஷ்ணவர் -ஆய்க்குலத்தை சேர்த்தவர் -பாலமுது காய்ச்சி கொண்டு வந்து உடையவருக்கு பாங்காக பரிமாற -உடையவர்
விரும்பி அமுது செய்ய -மீண்டும் எழுந்து அருளுகிற போதும் அப்படியே பாங்காக கொண்டு வந்து பரிமாற -இது நன்றாய் இருந்ததீ -என்ன
ஸ்ரீ வைஷ்ணவர் முன்பு விரும்பி அமுது செய்தவாறே இப்போதும் பாங்காக கொண்டு வந்தேன் -என்ன -அங்கனேயோ -என்று ஒருநாள் உபவசித்து அருளினார் –அஹங்காரம் த்வநிக்கையாலே எடுத்துக் கொண்டதுக்கு வருந்தி உபவாசம் இருந்தார் என்று தாத்பர்யம்

உடையவர் திருக்கண்ணபுரத்துக்கு எழுந்து அருளுகிற போது ஆளவந்தார் சிஷ்யர் அம்மங்கிக்கு போய் வருகிறேன் என்ன –
அம்மங்கி உடையவருக்கு பிரசாதித்த வார்த்தை –
அக்நி ஜ்வாலையிலே அகப்படாதே கிடீர்–அரு நஞ்சு தின்னாதே கிடீர்–அ ஸூ சி மிதியாதே கிடீர் – அபலைகளோடே செறியாதே கிடீர் —
-ஆஸ்திகரோடு செறிந்து போரும் கிடீர் —இதுக்கு வ்யாக்யானமாக உடையவர் தமது சிஷ்யர்களுக்கு அருளிச் செய்தபடி –
அக்நி ஜ்வாலை என்கிறது விரோதிகளை –விரோதிகள் சர்பாக்நி போலே அவர்கள்-ஆகிறார் பாஹ்ய குத்ருஷ்டிகள் –
அரு நஞ்சு என்கிறது ப்ரசன்ன விரோதிகளை —ப்ரசன்ன விரோதிகள் எலுமிச்சம் பழம் கருப்பூரமும் போலே -அவர்கள் ஆகிறார்
ரூப நாமங்களை ஏறிட்டுக் கொண்டு உள்ளே புகுந்து பின்னப் பிரதிபத்திகளாய் இருக்குமவர்கள் –
அ ஸூசி என்கிறது -விரோதிகளை -விரோதிகள் காஷ்ட லோஷ்டாதிகள் போலே -அவர்கள் ஆகிறார் சரீரை கதத் பரரான சம்சாரிகள்அபலைகள் என்கிறது
அநுகூலரை -அநு கூலர் கன்னிகளைப் போலே -அவர்கள் ஆகிறார் –த்யாஜ்ய உபாதேயங்களை தெளிய அறியாதவர்கள்ஆஸ்திகர் என்கிறது –
அநு போக்தாகளை -அநு போக்தாக்கள்-காமிநிகளைப் போலே -அவர்கள் ஆகிறார் -பூர்ணாதிகாரிகள் -என்று –

பெரிய திருநாள் தீர்த்தம் பிரசாதித்து பெருமாள் எழுந்து அருளுகிற போது எம்பெருமானார் தாமும் தீர்த்தமாடி சேவித்து எழுந்து அருளுகிறவர் -பிள்ளை உறங்கா வல்லி தாசர் திருக்கை கொடுத்து வர -இதென் -என்று சிலர் விண்ணப்பம் செய்ய –ஜன்மம் உயர்ந்து இருக்கத் தாழ நின்றோமே என்கிற அபிமாநம் உண்டு இ றே எல்லாருக்கும் -அக்கொத்தையும் இல்லாதவர் இ றே இவர் -என்று அருளிச் செய்து அருளினார் –
வேதகப்பொன் -ராமானுஜ ஸ்பர்ச வேதி -என்று அழைக்கப்பட்டார் பிள்ளை உறங்கா வல்லி -தாசர் –இரும்பை பொன்னாக்கும் ஸ்பர்ச வேதி –

வீர ஸு ந்தரனுக்கு பயப்பட்டு எம்பார் அடிமையான ஜகந்நாத ப்ரஹ்ம ராயருடைய வேச்யை மடத்திலே வந்து இருக்க -இவளை அவன் சொன்ன
வார்த்தையைக் கேட்டு பயத்தாலே உடையவர் -எம்பார் இவளை இங்கு நின்றும் போக விட வேண்டும் -என்ன -எம்பாரும் பயார்தையான இவளை ரஷிக்கவே
தர்மம் தானே ரஷிக்கும் -எம்பெருமான் ரஷகன் என்னும் இடமும் – ஆஸ்த்ரீ பாலமும் அறியுமே –அவனே ரஷகன் என்கிற அவதாரணம் அறிகைக்கு
அன்றோ ஆசார்ய சேவை பண்ணுகிறது -என்று விண்ணப்பம் செய்தார் –

எம்பெருமானார் எம்பாரை  நோக்கி -ஸ்ரீ கோவிந்த பெருமாளே -எம்பெருமான் எளியன் என்று பலபடியாலும் சொன்னோமே என்ன -இப்படி எளியனாகில் நமக்கு
என் -என்று எல்லோரும் உபேஷிகைக்கு உடலாம் இத்தனை யன்றோ -என்ன – இப்படி இருக்கிற அவனைக் காண வேண்டும் என்னும் ஆசை உள்ளது உமக்கு ஒருவருக்கும் அன்றோ -என்று அருளினார்

எம்பெருமானார் ஸ்ரீ பாதத்திலே சம்பந்தம் உடைய -முமுஷுகளுடைய காலஷேபத்துக்கும் -பரமபத ப்ராப்திக்கும் -சாதனா ஈஸ்வரன் கிருபை என்கிற
பிரதிபத்தி நழுவாது ஒழிகையும் – அநாதி கால வாஸித பாப நிவ்ருத்திக்கு சாதனம் பெரிய பிராட்டியாருடைய விசேஷ கடாஷம் என்று இருக்கையும் –
இவ்வர்த்தம் உபதேசிக்கும் ஆசார்ய விஷயத்தில் பிரத்யுபகார நிரபேஷ உபகார ஸ்ம்ருதி கண் அழிவு அற உண்டாகையும் – இவ்வர்த்ததோடு சம்பந்தம் உடைய ஸ்ரீ வைஷ்ணவர்கள் அளவில் தனக்கு சிஷ்யத்வம் ஆகிற முறை தப்பாது இருக்கையும் – தேவதாந்தர ஸ்பர்சத்தை தூரதே வர்ஜநீயம் ஆக்குகையும் –
உத்தேச்யரான ஸ்ரீ வைஷ்ணவர் விஷயத்தில் த்யஜ்யமான அர்த்த காமம் நிமித்தமாக நெஞ்சு தவறாமல் அனுவர்த்திக்கையும் – இவ்வதிகாரிக்கு சரீர பாதத்தளவும் ஸ்வரூப அநுரூபமான க்ருத்யம் பகவத் பாகவத விஷயத்தில் பண்ணும் அநுகூல வ்ருத்தி மாறாது ஒழிகையும் – -ஈஸ்வரனையும் பிராட்டியையும் -ஆசார்யனையும் -உத்தேச்யரான ஸ்ரீ வைஷ்ணவர்களையும் ஒழிய அல்லாத விஷயத்தில் நிஸ் ப்ருஹனாகையும் –

முதலியாண்டான் திருவாய்மொழி ஓதுகிற போது -உடையவர் எழுந்து அருளி இருந்து
ஒரு பாட்டு சந்தை இட்ட அளவிலே இதினுடைய அர்த்த அநுசந்தானத்திலே பரவசரானார் –

ஈஸ்வரனுடைய ஆகாரத் த்ரயமாவதுமேன்மையும் -நீர்மையும் -வடிவு அழகும் –அதாவது
முன்னை அமரர் முதல்வன் வண்டுவராவதி மன்னன் மணி வண்ணன் -திருவாய்மொழி -5-3-5- என்றும் –
மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர் அணியை -திருவாய்மொழி -1-10-11- என்றும் –
கண்ணபிரானை விண்ணோர் கருமாணிக்கத்தை அமுதை -திருவாய்மொழி -5-1-5-என்றும் –
அண்டர்கோன் அணியரங்கன் என் அமுதினை -அமலனாதி பிரான் -10-என்றும் –
பச்சை மா மலை போல் மேனி அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே -திருமாலை -2-என்றும் –
மீதிட்டுப் பச்சை மேனி மிகப் பகைப்ப -கை தொழக் கிடந்த -மூவுலகளந்த -திருவாசிரியம் -1- என்றும் இத்யாதிகளாலே அனுசந்திப்பான் –

அநாதியான கர்ம பிரவாஹத்தாலே சதுர்வித சரீரங்களிலும் பிரவேசித்து
சதுர்தச புவனங்களிலும் தட்டித் திரிகிற சேதனரை  ஈச்வரன் தன்னை பெறுகைக்கு உறுப்பாக
த்ரிவித சரீரங்களை த்யஜிப்பித்து –மனுஷ்ய ஜன்மத்திலே ஆக்கி  –
கரண த்ரயத்தாலும் -காலத் த்ரயத்திலும் -கர்ம த்ரயத்தில் அன்வயிப்பித்து
அசித் த்ரயத்துக்கு அவ்வருகு ஆனவன்
குண த்ரயத்தாலே ஷூ தரனாய் -ஆசாத்ரயத்தாலே அலமந்து –அபராத த்ரயத்தை
ஆர்ஜித்து –ஈஷணா த்ரயத்தாலே அடிபட்டு –தத்வ த்ரயத்தை அறியாதே -தாப த்ரயத்தாலே தப்தனான இவனை
தேவதா த்ர்யத்துக்கு சேஷியாய் –மஹிஷி த்ரயத்துக்கு வல்லபனாய் –ஆத்ம த்ரயத்தை ஆளுமவனாய்
த்ரிவித பரிச்சேத ரஹீதனாய் –த்ரிவித காரண வஸ்துவான ஸ்ரீ மான் கடாஷித்து –
விரோதி த்ரயத்தை விடுவிக்கக் கோலி –ஸூ க்ருத த்ரயத்தை தொடுமானம் ஆக்கி –
ஆனுகூல த்ரயத்திலே அன்வயிப்பித்து –அனுவர்தன த்ரயத்துக்கு ஆளாக்கி –
அதிகாரி த்ரயத்தை உடைய ஆசார்ய உபதேசமான மந்திர த்ரயத்தாலே மாசறுத்து –
பத த்ரயத்தை அறிவிப்பித்து –ஜ்ஞான த்ரயத்திலே நாட்டி வைத்து –சங்கா த்ர்வ்யத்தை தவிர்ப்பித்து
ஆகார த்ரயத்திலே அன்வயிப்பித்து பர்வ த்ரயத்தாலே போகமாக்கி
லோக த்ரயத்தை உபேஷிப்பித்து –பாத த்ரயத்திலே கொண்டு போய் –
சாம்ய த்ரயத்தை சம்பன்னமாக்கி புன்மை த்ரயம் அற்ற போகத்தை புஜிப்பிக்கும்

த்ரிவித சரீரமாவது –தேவ திரயக் ஸ்தாவர சரீரங்கள்
கரண த்ரயமாவது -மநோ வாக் காயங்கள்
கால த்ரயமாவது -பூத பவிஷ்யத்  வர்த்தமானங்கள்
கர்ம த்ரயமாவது -நினைக்கை செய்கை சொல்லுகை
நினைக்கை யாவது -பர சம்ருத்ய சஹத்வமும் -பரா நர்த்த சிந்தனையும் –
பர தோஷ பிரதிபத்தியும் -ஸ்வ யாத்ரா நிரூபணமும்
சொல்லுகையாவது -குடி முடியும்படி தோஷம் சொல்லுகையும் ஸ்வம் அறுதி கொள்ளும்படி
கோட் சொல்லுகையும் -இதர சரிதங்களை சொல்லுகையும் -பொய் சொல்லுகையும் –
செய்கையாவது -பர ஹிம்சையும் -பர த்ரவ்ய அபஹாரமும்
அசித் த்ரயமாவது -வ்யக்தமும் அவ்யக்தமும் காலமும்
குண த்ரயமாவது -சாத்விக ராஜஸ தாமஸும்
ஆஸா த்ரயமாவது -அஹங்கார யுக்த  ப்ராவண்யமும் -அர்த்த ப்ராவண்யமும் -விஷய ப்ராவண்யமும் –
அதாவது -வென்றியே வேண்டி வீழ் பொருட்கு இரங்கி வேற் கணார் கல்வியே கருதி -பெரிய திருமொழி -1-1-4-என்கிற இவை

அபாரத த்ரயமாவது -பகவத -அபசாரமும் பாகவத அபசாரமும் அசஹ்ய அபசாரமும்
ஈஷணா த்ரயமாவது -அர்த்தேஷணை -தாரேஷணை -புத்ரேஷணைகள் -பாசத்தில் அடி பட்டு கிடப்பது
தத்வ த்ரயமாவது -சித்தும் அசித்தும் ஈஸ்வரனும் –
தாப த்ரயமாவது -ஆத்யாத்மிகம் ஆதி தைவிகம் ஆதி பௌதிகம்
தேவதா த்ரயமாவது -வானவர் தம்மை யாளுமவன் -திருவாய்மொழி -3-6-2-பிரம ருத்ர இந்த்ராதிகள்
மஹிஷீ த்ரயமாவது -ஒருமகள் ஆயர் மடந்தை ஒருத்தி நிலமகள் மற்றைத் திருமகள் -பெரிய திருமொழி -3-3-9-
ஆத்ம த்ரயமாவது -பத்தர் முக்தர் நித்யர்
த்ரிவித பரிச்சேத ரஹிதனாவது -காலத்தாலும் தேசத்தாலும் வஸ்துக்களாலும்
பரிச்சேதிக்கப்  போகாது ஒழிகை
த்ரிவித காரண வஸ்து வாவது -நிமித்த உபாதான சஹகாரி காரணமாகை –
விசேஷ கடாஷம் ஆவது -சௌஹார்த்தம்
விரோதி த்ரயமாவது -ஸ்வ ஸ்வாதந்த்ர்யமும் -அந்ய சேஷத்வமும் -தேஹாத்ம அபிமானமும்
ஸூக்ருத த்ரயமாவது -ஆநுஷங்கிகம் -பரா சங்கிகம் -யாத்ருச்சிகம்
ஆநுகூல்ய த்ரயமாவது -அத்வேஷமும் ஆபிமுக்யமும் சத் சம்பாஷணமும்

அநுவர்த்தன த்ரயமாவது -சரீரம் அர்த்தம் பிராணஞ்ச சத்குருப்யோ நிவேதயத் –
அதிகார த்ரயமாவது பஹூ ஸ்ருதாநாம் வ்ருத்தாநாம் ப்ராஹ்மணாநாம் உபாசித
என்கிறபடியே -அறியக் கற்று வல்லார் ஆகை
மந்திர த்ரயமாவது -சாஸ்திர ருசி பரிக்ரஹீதமும் -சரண்ய ருசி பரிக்ரஹீதமும் –ஆசார்ய ருசி பரிக்ரஹீதமும் –
பத த்ரயமாவது -அந்ய சேஷத்வ நிவ்ருத்தியும் அந்ய உபாய நிவ்ருத்தியும் – பிரயோஜனாந்தர-நிவ்ருத்தியும் பண்ணிக் கொடுக்குமது
ஜ்ஞானத் த்ரயமாவது -ஸ்வ ஜ்ஞானம் -ப்ராபக ஜ்ஞானம் -பிராப்ய ஜ்ஞானம் –
சங்கா த்ரயமாவது -விரோதி பூயஸ்தையும் -ப்ராப்ய ப்ராசுர்யமும் -உபாய லகுத்வமும்
ஆகார த்ரயமாவது -ஈஸ்வரனுடைய மேன்மையும் நீர்மையும் வடிவு அழகும் -அதாவது
முன்னை அமரர் முதல்வன் வண்டுவராபதி மன்னன் மணி -வண்ணன் -திருவாய்மொழி -5-3-6-
பர்வ த்ரயமாவது -ஸ்வரூப விரோதி நிவ்ருத்தியும் -சாதன விரோதி நிவ்ருத்தியும் -ப்ராப்ய விரோதி நிவ்ருத்தியும் –
லோக த்ரயமாவது -பூம்யந்தரிஷத ஸ்வர்க்கம்
பாத த்ரயமாவது த்ரிபாத் விபூதி
சாம்ய த்ரயமாவது -ரூப சாம்யம் -குண சாம்யம் -போக சாம்யம்
புன்மை த்ரயமாவது -அல்பம்  அஸ்திரம் அபோக்யம்
அறுகை யாவது இவை இன்றிலே ஒழிகை-

1-சங்கத்தைக் கழித்து -2–ஈஷணையைக் கழித்து -3–பால்யத்தை கழித்து -4-யௌவனத்தை கழித்து –
5-ஜரையைக் கழித்து -6–மரணத்தைக் கழித்து -7–நரகத்தைக் கழித்து -8-அவித்யையைக் கழித்து –
9-கர்மத்தைக் கழித்து -10–வாசனையைக் கழித்து –11-தாபத் த்ரயத்தைக் கழித்து -12-சூஷ்ம த்ரயத்தைக் கழித்து –
13-விரஜைக்கு அக்கரைப் படுத்தி -14–லோகப் ப்ராப்தியை உண்டாக்கி -15–ரூபப் ப்ராப்தியை-உண்டாக்கி -16–சமீப ப்ராப்தியை உண்டாக்கி -17–சாயுஜ்யத்தை உண்டாக்கி –
18-ஜ்ஞானத்தை உண்டாக்கி-19- -பலத்தை உண்டாக்கி –
20-ஐஸ்வர்யத்தை உண்டாக்கி -21–வீர்யத்தை உண்டாக்கி –
22-சக்தியை உண்டாக்கி -23–தேஜசை உண்டாக்கி –
24-விக்ரஹ அனுபவத்தை உண்டாக்கி 25–கைங்கர்யத்தை உண்டாக்கி –
இவன் கைங்கர்யத்தை கண்டு அவன் உகந்தால் அவன் உகந்தபடி கண்டு உகக்கை
சேஷத்வத்துக்கு பிரயோஜனம் என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தார் –

குளப்படியிலே தேங்கினால் குருவி குடித்துப் போம் -வீராணத்து ஏரியிலே தேங்கினால் நாடு விளையும் -என்று அருளிச் செய்தார் நாதமுனிகள்
இவ்வர்த்தத்தை உய்யக் கொண்டாருக்கு அருளிச் செய்தார் –
உய்யக்கொண்டார் மணக்கால் நம்பிக்கு அருளிச் செய்தார் –
மணக்கால் நம்பியும் ஆளவந்தாருக்கு பச்சை இட்டார் –
இம் மஹா அநுபாவன் இத் தர்சனத்திலே புகுந்தானாகிலோ -என்றார் ஆளவந்தார்
ஆளவந்தாருக்கு எம்பெருமானார் ஏகலவ்யன் அன்றோ என்றார் -எம்பார்
வித்தாகும் காய் பிஞ்சிலே தெரியும் என்று பெரிய திருமலை-நம்பி
இது ஒரு திரு வவதாரமோ -என்றார் திருமாலை யாண்டான் –
உன்னோடு வருகிறவன் நித்ய சூரிகளில் ஒருவன் என்றது ப்ரஹ்ம ரஷசூ -என்னுடைய திருவனந்தபுரம் எதிரே வந்தது – என்றார் தெய்வவாரி யாண்டான் –
ஊர் புக்கு வருகிறேன் என்றார் திருக்கோட்டியூர் நம்பி –
பெருமாளே சரணம் என்னக் கண்டிலோம் -ஆளவந்தாரே சரணம் என்னக் கண்டிலோம் -நாம் என் செய்யக் கடவோம் -என்றார் பெரியநம்பி
என்னுடைய சர்வஸ் வத்தையும் வாங்கிக் கொள்ளவோ இப்படி செய்கிறது என்றார்ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர்
வைத்த கையிலும் வாங்கின கை தஞ்சம் -என்றார் அம்மங்கி –
சர்வம் பலவத பத்யம் -என்றார் முதலி யாண்டான் –
பலம் உடையவனுக்கு அபத்யமான ஆகாரமும் பத்தியமாக இருக்கும் வெள்ளை சாத்தி எழுந்து அருளியது பற்றி முதலி யாண்டான் வார்த்தை –
பிதற்று என்றே இருந்தேன் -என்றார் கூரத் ஆழ்வான்
அன்னக் கேடும் தீர்ந்தது என்றார் -அருளாள பெருமாள் எம்பெருமானார்
அத்தீட்டை யாருக்குச் சொல்வேன் -என்றார் வங்கி புரத்து நம்பி –
பார்த்திட்டேன் ஆகில் செய்வது என் -என்றார் பிள்ளை உறங்கா வல்லி தாசர் –
பொன்னாச்சி -பூணாரச் செப்பாய் இருந்திலையீ -என்றார் பிள்ளை உறங்கா வல்லி தாசர் –
நஞ்ஜீயருக்கு விசேஷ கடாஷம் மூன்று உண்டு -எம்பெருமானார் கடாஷம் பட்டரை நியமித்து –
வேதாந்திகள் மூலம் செய்தி அனுப்பியது -நேராக திரு நெடும் தாண்டகம் அருளி கடாஷித்தது
நான் அவருக்கு நல்லேன் -என்றார் வடுக நம்பி
விஷ த்ருஷ்டியான பாம்பைப்  பிடித்துக் கொண்டு ஆட்டா நின்றீர் -என்றார் அனந்தாழ்வான்
தொண்டனூர் நம்பி பின்னாட்டியாக பெற்றிலேன் -என்றார் –
கொல்லி காவல தாசர் பாய்ந்த பாய்ச்சலே தஞ்சம் என்று இருந்தேன் -என்றார் ஆட் கொண்ட வில்லி ஜீயர்
நெருப்பு எழுந்து தாக்கின போது ஓன்று உண்டோ -என்றார் கணியனூர் சிறியாச்சான் –
நான் காண்கிற களவுக்கு இதொரு களவோ -என்றார் திருப்பாவை பாடினார்
ஆண்டாள் சாத்தின திரு வாபரணமோ உள் இருக்கிறது என்றார் தேவ ராஜப் பிள்ளை
த்ரிவித ப்ரவ்ருத்தியை நிவர்த்திக்கலாமோ -என்றார் -திருவரங்கத்து ஆழ்வார் –
பிரஜைகள் நடமாடுகிற வாசலிலே பாம்பைப் பிடித்து விடுவாரைப் போலே இவருக்கு நான் ஹிதம் சொன்னேன் -இது என்னாய் விளைகிறதோ என்று –
உடலைக் காட்டி வெருட்டாதே உயிரைக் காட்டி அகப்படுத்திக் கொடு போகப் பார்-என்று அருளிச் செய்தார் -அம்மங்கிக்கு ஆளவந்தார் –

—————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ வார்த்தா மாலாவில்- ஸ்ரீ பராசர பட்டர் -ஸ்ரீ நஞ்சீயர் – ஸ்ரீ நம்பிள்ளை அருளிச் செய்த வார்த்தை முத்துக்கள் –

October 2, 2015

நம் பிள்ளை -இச்சை -ஸ்வரூபம் –இரக்கம் -உபாயம் -இனிமை -உபேயம் -என்று அருளிச் செய்தார் –

ஸ்வ ஸ்வரூபத்துக்கு ஸீமா -ததீய சேஷத்வம்–பர ஸ்வரூபத்துக்கு ஸீமா -அர்ச்சாவதாரம்
விரோதி ஸ்வரூபத்துக்கு -அஹங்கார மம ஹாரங்கள்–உபாய ஸ்வரூபத்துக்கு ஸீமா -பகவத் கிருபை
உபேய ஸ்வரூபத்துக்கு ஸீமா -பகவ ந் முகோலாசம்–என்று நம்பிள்ளை அருளிச் செய்வர் –

தன்னை சரீரியாக பிரபத்தி பண்ணி அனர்த்தப் படுதல்–தன்னை சரீரமாக பிரபத்தி பண்ணி உஜ்ஜீவித்தல்
செய்யும் அத்தனை -என்று நம்பிள்ளை அருளிச் செய்தார் –

பிள்ளை நம் ஜீயர் ஸ்ரீ பாதத்திலே ஸ்ரீ பாஷ்யம் வாசியா நிற்கச் செய்தே -திருப் போனகம் சமைந்தது – என்றவாறே
சொக்கத் தேவரை திருவாராதனம் பண்ணி வாரும் -என்று அருளிச் செய்ய -அடியேன் திருவாராதனத்தை அறிந்தேனோ -என்று விண்ணப்பம் செய்ய –
நானோ சால க்ரமம் அறிந்து இருக்கிறேன் ?-த்வயத்தைக் கொண்டு திருவடி விளக்கி  அமுது செய்ய மாட்டீரோ ? என்று அருளிச் செய்தார் –

பட்டர் ஸ்ரீ பாதத்தில் சம்பந்தம் உடையார் ஒரு சோமயாஜி யரான ஸ்ரீ வைஷ்ணவர் -எனக்கு திரு வாராதன க்ரமத்தை அருளிச் செய்ய வேணும் -என்ன -பட்டரும் இவருக்கு உடையவருடைய நித்ய பிரகாரத்தை அருளிச் செய்ய -அவரும் அது கொண்டு நெடு நாள் திருவாராதனம் பண்ணிப்
போரச் செய்தே -ஓன்று இரண்டு நாள் பட்டர் திருவாராதனத்தில் சேவித்து இருந்தார் -அங்கு தமக்கு அவர் அருளிச் செய்தவை ஒன்றும் கண்டிலர்
-அவர் திருவாராதனம் பண்ணி யருளின படி -தாம் திருமஞ்சனம் பண்ணி சேலை சாத்தி திருநாமம் சாத்தி -அமுது செய்ய தளிகை வைத்த அளவிலே –
தெற்கு ஆழ்வாரை -எழுந்து அருளி வைத்துக் கொண்டு -வாரும் கோள் -என்று தமக்கு படைத்த திருப் போனகத்தையும் தண்ணீர் அமுதத்தையும்
அமுது செய்யப் பண்ணி பிரசாதப் பட்டு அருளினார் -இத்தைக் கண்டு அந்த ஸ்ரீ வைஷ்ணவர் எனக்கு அருளிச் செய்த படி ஓன்று
-தேவரீர் இப்படி செய்து அருளிற்று -இதுக்கு அடி என் என்று – ஆரத்தியோடே கேட்க -சகல வேத  சாஸ்திரங்களையும் ஆராய்ந்த -இடத்து 
உமக்கு அப்படி அல்லது சொல்லலாவல் இல்லையாய்  இருந்தது -என்னை நிரூபித்த இடத்து -கால்ஆழும்  நெஞ்சு அழியும்
கண் சுழலும் -என்று தளர்ச்சி அடையும் என்னை பார்க்கும் பொழுது -இப்படி ஒழிய செய்கைக்கு ஒரு செயல் கண்டிலேன் என்று அருளிச் செய்தார் –

நஞ்சீயர்  சரம தசையில் அருளிச் செய்த வார்த்தை —ஸ்வ விஷயமான வியாதி -சாந்த்யர்த்தமான பிரபதநமும் ஸ்வரூப ஹானி —
இது தான் பாரதந்த்ர்யத்துக்கு தூஷணம்-பர விஷய வியாதி சாந்த்யர்த்தமான சாங்க பிரபதநமும் ஸ்வரூப ஹானி -இது ஈஸ்வரனுடைய
பர ரஷண விஷயமான சர்வ ஞ்ஞத்வாதிகளுக்கு தூஷணம் –

அனந்தாழ்வான் நஞ்சீயரைக் கண்டு
-இது என் ஜீயா -ஸூகுமாரராய் இருக்கிற நீர் – வேர்த்த போது நீராடி -பசித்த போது அமுது செய்து -பட்டரை சேவித்து இருந்தால் –
சந்யசித்து வந்திலீர் என்று உம்மைப் பரம பதத்தில் நின்றும் தள்ளுவார் உண்டோ – இனி என் என்று பார்த்து
-மந்த்ராந்தரங்களை அடைய விட்டு -திரு மந்த்ரத்திலே பிறந்து -த்வயத்திலே வளர்ந்து த்வயைக நிஷ்டர் ஆவீர் -என்று வாழ்த்தி –
பின்னை அருளிச் செய்த வார்த்தை
-த்ருஷ்டத்தில் உள்ளது எல்லாம் பட்டருக்கு ஆக்கினோம் – த்ருஷ்டத்துக்கு கடவார் பட்டர் என்று இருப்பதோர் இருப்பு உண்டு
-அது பூர்வ தசையிலும் அநர்த்தாயவாம் -என்று பார்த்து -த்ருஷ்டதுக்கு கடவார் பெருமாள் – அத்ருஷ்டத்துக்கு கடவார் பட்டர் -என்று இரும்
-த்ருஷ்ட அத்ருஷ்டங்கள் இரண்டுக்கும் ஆசார்யன் கடவன் என்று இருந்தால் வருவது என் என்னில்
-த்ருஷ்டத்தில் கர்மாதீனமாக ஏதேனும் சுருங்கு உண்டாகில் ஆசார்யனை வெறுத்த போது பெருமாளைக் கொண்டு
தீர்த்துக் கொள்ள ஒண்ணாது -பெருமாளை வெறுத்தான் ஆகில் ஆசார்யனைக் கொண்டு தீர்த்துக் கொள்ளலாம் –

நஞ்சீயர் பரம பதத்துக்கு எழுந்து அருளுகிற காலத்திலே-தெற்கு ஆழ்வார் பட்டர் -தூவிரிய பாசுர வ்யாக்யானத்தில் இவரை பெற்றி என்றும் சொல்வர்
-ஜீயர் ஸ்ரீ பாதத்திலே எழுந்து அருளி -உமக்கு செய்ய வேண்டுவது என் -என்று கேட்டு அருள -ஜீயர் – பெருமாள் சர்வ ஸ்வதானம் பண்ண அனுபவிக்க வேண்டி இரா நின்றது -என்று விண்ணப்பம் செய்ய -பட்டரும் இத்தை -திருமாலை தந்த பெருமாளுக்கு-இவர் நம் பெருமாளுடைய
அர்ச்சகர் -அருளிச் செய்ய -அவரும் பெருமாளுக்கு விண்ணப்பம் செய்ய -பெருமாளும் புறப்பட்டு அருளி -சேலையைக் களைந்து அருளி ஜீயரை அனுபவித்து அருள -ஜீயரும் அனுபவித்து – நம் பிள்ளை தொடக்கமான முதலிகளைக் குறித்து -பெருமாள் எனக்கு சர்வ ஸ்வதானம் பண்ணி அருளினார் -நானும் சர்வ ஸ்வதானம் பண்ணக் கடவதாக ஒருப்பட்டேன் -அபேஷை உடையார் உடைய படியே அபேஷித்து கொள்ளும் கோள் என்று அருளிச் செய்ய -நம்பிள்ளையும் -அடியேனுக்கு தஞ்சமாக ஒரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் -என்று விண்ணப்பம் செய்ய – மணக் கோலத்தே முளை தெளிப்பாரைப் போலே இப்போது தஞ்சமான ஒரு வார்த்தை உண்டோ கேட்பது -என்று பின்னையும் அருளிச் செய்த வார்த்தை – ஆத்மவிநியோகம் ஈஸ்வரன் என்று இராதே ஈஸ்வர விநியோகம் ஆத்மா என்று இரும் -என்று அருளிச் செய்ய -இவர் திரு உள்ளம் பிரசன்ன மாகாமையாலே பேசாதே நிற்க -உம்முடைய நினைவேது சொல்லிக் காணீர் -என்ன -ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் பரம பதத்துக்கு எழுந்து அருளினால் இருக்கிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் என் நினைத்து இருக்கக் கடவர் -என்ன -அது அதிகார அநு குணமாய் அன்றோ இருப்பது -தருப்தன் ஆகில் ஆர்த்தனாய் இருக்கிறான் – ஆர்த்தனாகில் த்ருப்தனாய் இருக்கிறான் -என்று அருளிச் செய்ய -பிள்ளையும் இவ்வர்த்தத்தை
அநுஷ்டான பர்யந்தமாக கண்டபடி -அம்மங்கி அம்மாள் பரம பதத்துக்கு எழுந்து அருளுகிற காலத்தில் -அவர் திரு மாளிகையிலே பிள்ளை எழுந்து அருள -அவருடைய தேவியார் பிரசன்னையாய் இருக்க -ஸ்ரீ பாதத்தில் சேவித்துப் போந்த முதலிகள் -இதுக்கு நிதானம் என் -என்று கேட்க -அம்மாள் தேவியார் விஷயத்தில் இதுக்கு முன்பு பண்ணின ப்ராதி கூல்யம் உண்டாகில் அன்றோ -அவர் பேற்றுக்கு இவர் வெறுக்க வேண்டுவது -என்று அருளிச் செய்தார்-அநந்தரம்
 தம்முடைய ஸ்ரீ பாதத்தை உடையார் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் திரு நாட்டுக்கு எழுந்து அருள -ஸ்ரீ வைஷ்ணவர் பிள்ளைகள் தம்முடைய ஸ்ரீ பாதத்திலே விழுந்து அழ இதுக்கு அடி என் என்று முதலிகள் கேட்க -பெறுகிற தேசம் கொந்தளிக்கிற படி கண்டால் -இழக்கிற தேசம் என் படக் கடவது -என்று அருளிச் செய்தார் –

பட்டர் ஸ்ரீ பாதத்திலே சேவித்து இருப்பார் ஒரு ஸ்ரீ வைஷ்ணவரை -பிரசாதக் கிழியை எடுத்துக் கொண்டு வாரும் -என்ன -பிரசாதக் கிழியின் அருகே –
பணக் கிழியும் இருக்க -அவர் பிரசாதக் கிழியை எடுப்பது பணக் கிழியை எடுப்பதாக நிற்க -இவர் வரக் காணாமையாலே எழுந்து அருளி –
இவர் நிற்கிற நிலையைக் கண்டு -இடம்பெற்ற அளவிலே இருவரும் உம்மை நலிந்தார்கள் ஆகாதே வாரீர் -என்று அருளிச் செய்தார் –

நஞ்சீயர் மடத்திலே பட்டருடைய மூத்த பெண் பிள்ளை -காஞ்சோரிச் சருகுண்டோ -என்று கேட்டு வர அப்போது -முன்வாயிலே சிலவற்றை பார்த்து காணாமையாலே இல்லை என்று -பின்னையும் பார்த்தவாறே ஒரு கலத்திலே இட்டு -தம்முடைய மடியிலே இட்டு கொண்டு எழுந்து அருளினவாறே இத்தை
ஒருவர் கையிலே வர விடல் ஆகாதோ -நீர் கொண்டு எழுந்து அருள வேணுமோ -என்று பட்டர் அருளிச் செய்ய -அப்பொழுது இல்லை என்று விட்ட மஹா பாபிக்கு ஆளிட்டு இருக்கவும் வேணுமோ -என்று அருளிச் செய்தார் -இத்தால் ஆசார்ய புத்ர பௌத்ராதி களும் ஆசார்யவத் அநு வர்த்தநீயர்-என்று கருத்து –

பிள்ளை திரு நறையூர் அரையரும் நம்பி திரு வழுதி வளநாடு தாசரும் -வேம்பு முற்ற முற்ற கைக்குமா போலே இவ் வாத்மாவும் ஒரு நாளைக்கு
ஒரு நாள் விஷயாந்தரங்களிலே மண்டா நின்றது -இதுக்கு பகவத் பிராப்தி கூடுமோ -என்று -பட்டரைக் கேட்க
-சரீர வியோக சமயத்திலே யாகிலும் இஸ் சரீரத்தில் உபேஷை பிறக்கையாலும் -ஸ்ரீ மாலாகாரருக்கு தன் வடிவு அழகைக் காட்டினால் போலே
-இவனுக்கும் வடிவு அழகை காட்டுகையாலும் -அது கூடும் -என்று அருளிச் செய்தார் -இதுக்கு பிரமாணம் -ந கலு பாகவதா யம விஷயம் கச்சந்தி –

பட்டர் குடும்ப சஹிதமாக கூர குலோத்தமனிலே இருக்கிற நாளிலே -திரு நந்தவனத்திலே அல்பம் உபஹதி உண்டாய்த்தென்னா -திரு நந்தவனம் செய்கிற ஏகாங்கிகள் சில வார்த்தை சொன்னார்கள் என்று பெரிய ஜீயர்-கூர  நாராயண ஜீயர் -அவர்களை அழைத்து -நான் பெருமாள் திருக்குழல் சிக்கு
நாறுகிறது என்றோ திரு நந்தவனம் செய்கிறது -பட்டரது குடும்பத்துக்கு இஷ்ட விநியோக அர்ஹமாக திரு நந்தவன வ்யாஜத்தாலே கோலினேன் அத்தனை அன்றோ -என்று அருளிச் செய்தார் -இத்தால் -சிஷ்யனுக்கு ஆசார்ய குடும்பமே உத்தேச்யம் -என்றது ஆய்த்து-

தூவியம் புள்ளு திரு அவதரித்தார் என்று -பட்டர் திரு வம்சத்தில் -நம்பிள்ளைக்கு சிலர் விண்ணப்பம் செய்ய -அப்போது அருகே சேவித்து இருந்த திருப் பேராச்சானைப் பார்த்து -எனக்கு ஒரு தமையனார் திரு அவதரித்தார் -என்று நம்பிள்ளை அருளிச் செய்தார் –

நம்பி திருவழுதி வள நாடு தாசர் திரு நாட்டுக்கு எழுந்து அருளுகிற சமயத்தில் சேவித்துப் போந்த ஸ்ரீ வைஷ்ணவர் அழ -கெடுவாய் -செத்துப் போகிற நான் போகா நின்றேன் -ஸ்ரீ பராசர பட்டர் வாசிக்க கேட்க இருக்கிற நீ ஏன் அழுகிறாய் -என்று அருளிச் செய்தார் என்று -பிள்ளை அருளிச் செய்தார் –

நஞ்சீயர் பட்டரை -பெருமாள் சந்திர புஷ்கரணி கரையிலே கண் வளர்ந்து அருளுகிற இதுக்கு திரு உள்ளத்தில் கருத்து என் -என்று விண்ணப்பம் செய்ய –
நாராயணா ஒ  மணி வண்ணா -என்று கூப்பிட்ட பின்பு இ றே மடுவின் கரையிலே வந்தது -இங்கு கண் வளர்கிறது நான் கூப்பிடுவதற்கு முன்பே -என்னை எடுக்கைகாக -நான் அகப்பட்ட பொய்கையிலே ஏற்கனவே வந்து கண் வளர்ந்து அருளுகிறார் -இவ்வர்த்தம் கேட்டது-
உம்முடைய வசநத்தால் அன்று காணும் -உம்மைக் கொண்டு பெருமாள் என் நினைவை வெளி இட்டு அருளினார் -என்று அருளிச் செய்தார் –

நஞ்சீயரை பெரிய கோயில் வள்ளலார் திருவாய் மொழியிலே -ஓர் அர்த்த பிரச்தாபத்திலே ஜீயர் அருளிச் செய்த படி ஒழிய -இங்கனே யானாலோ என்ன –
நான் சொன்னபடி அழகிது என்று திருக் கலி கன்றி தாசர் சொல்லுவர் -என்று ஜீயர் அருளிச் செய்ய – உம்முடைய அழகியது என்பர் என்றது பிரமாணமாக சொல்லுவான் என் -என்ன – அதில் ஒரு நிபந்தனம் இல்லை காணும் -சதாசார்ய சந்நிதியோடு -சச் சிஷ்ய சந்நிதியோடு –
வாசி இல்லை காணும் ஒருவனுக்கு திருத்தம் பிறக்க -என்று அருளினார் –

பிள்ளை பின்பு அழகிய ஜீயர் மடத்திலே ஒரு நாள்  எழுந்து அருளி இருக்க -எல்லாருக்கும் ஆழ்வாருடைய அவஸ்தை-உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் -என்று இருக்கும் நிலை – உண்டாய் பெற வேண்டி இரா நின்றது -ஸ்த்ரி அன்ன பாநாதிகளோடே இருக்கிற
நாங்கள் செய்வது என் -என்று விண்ணப்பம் செய்ய -இங்கு அந்த அவஸ்தை பிறந்தது இல்லை யாகிலும் சதாசார்ய விசேஷ கடாஷத்தாலே ஸ்தூல சரீர விமோசநத்துக்கும் -கைங்கர்ய ப்ராப்திக்கும் நடுவே – அவ்வஸ்தை பிறப்பித்து எம்பெருமான் கார்யம் செய்யும் -என்று நம்பிள்ளை அருளிச் செய்தார் என்று
நடுவில் திரு வீதிப் பிள்ளை பட்டர் அருளிச் செய்வர்-

எல்லாரும் ஸ்ப்ருஹை  அர்த்த காமம் களிலே எங்களுக்கு ஸ்ப்ருஹை உண்டாய்தே ஆகிலும்-நாங்கள்  உபதேசிக்கிற ஜ்ஞானத்துக்கு -ஒரு சம்சார பந்தத்தை அறுத்து புருஷார்த்தை தர வல்ல சக்தி உண்டு என்று இரும் -என்று அருளிச் செய்தார் – இத்தால் -ஆசார்யனுக்கு ஆதல் -வேறு ஒரு ஸ்ரீ வைஷ்ணவனுக்கு ஆதல் -இதர சம்சாரிகளோ பாதி ஹேது சத்தா பிரயுக்தமான அர்த்த காம ப்ராவண்யம் உண்டாய்த்து என்னா -இவர்களையும் பிரக்ருதிமான்களோ பாதி யாக
நினைக்கல் ஆகாது -எங்கனே என்னில் -காமோபபோக பரமா ஏதாவதி தி நிஸ் சிதா -என்று அர்த்த காமங்கள் புருஷார்த்தம் என்றிருப்பர் அஞ்ஞர் -ஜ்ஞானவான்கள் சரீர அவசானத்தளவும் -சத்ருசம் சேஷ்டதே  ஸ்வ ஸ்யா ப்ரக்ருதேர் ஜ்ஞனவா நபி -இத்யாதி பிரக்ரியையாலே வாசனா பிரயுக்தமாக செல்லக் கடவது என்று-நஞ்சீயர் பட்டர் ஸ்ரீ பாதத்திலே ஆஸ்ரயித்த அனந்தரத்திலே-அருளிச் செய்தார் –

பட்டர் திருவணை யாட எழுந்து அருளுகிற போது பகலில் வழி நடந்த ஆயாசத்தாலே விட்டதொரு தூற்றடியிலே நஞ்சீயர் மடியிலே திரு முடியை வைத்து கண் வளர்ந்து அருள -அவ்விரா முடியத் துடை மாறுதல் -சலிப்புதல் செய்யாதே -எழுந்தி அருளி இருந்தார் என்று பிள்ளை அருளிச் செய்வர் –

நம்பி திருவழுதி வள நாடு தாசர் -ஓருரு கண்ணி நுண் சிறுத் தாம்பை அருளிச் செய்து – மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -என்று தலைக் கட்டினவாறே ஸ்ரீ பாதத்திலே சேவித்து இருந்த ஸ்ரீ வைஷ்ணவர் லீலா விபூதியில் இத்தை ஒருவன் ஸ்ரத்தை பண்ணி -அநுசந்திக்க -அவ்விடம் நித்ய விபூதியாம்படி எங்கனே -என்று கேட்க -அது இருந்தபடி கேளீர் கூரத் தாழ்வான் திரு மகனார் திரு வவதரித்த பின்பு இடைச் சுவர் தள்ளி இரண்டு விபூதியும் ஒன்றாய்த்து காண் என்று அருளிச் செய்தார் என்று பிள்ளை அருளிச் செய்வர் –

சிஷ்யன் ஆசார்ய விஷயத்தில் அர்த்த முகத்தாலே பிரதிபத்தி பண்ணும் இடத்து – அப்போது அங்குத்தைக்கும் அடி உண்டு இல்லை என்று நிரூபிக கடவன் அல்லன் – தன் சரீர தாரணத்தோ பாதியாகிலும் அங்குத்தைக்கு அம்முகங்களாலே ப்ரீதி பண்ணுகை ஸ்வரூபம் என்று நம்பிள்ளை அருளிச் செய்வர் –

நஞ்சீயர் பட்டரை ஸ்ரீ பாதம் தாங்குவதாக தோளிலே தண்டை வைக்கப் புக -உம்முடைய வேஷத்துக்கு விருத்தமாக செய்யலாகாது காணும் -என்று பட்டர் அருளிச் செய்ய – இங்குத்தை கைங்கர்யத்துக்கு ஏகாந்தம் என்று வேஷ பரி க்ரஹம் பண்ணினேன் –
இது தானே இதுக்கு விரோதி யாகில் பழைய வெள்ளையை உடுக்கிறேன் -என்றார் –

எல்லா ஆசார்யர்கள் உடைய அபிப்ராயமும் -எல்லா ஆழ்வார்கள் திரு உள்ளக்  கருத்தும் – எல்லா வேதங்களுடைய கதியும் -எல்லா சாஸ்திரங்கள் உடைய நினைவும் நிரூபித்த அளவில் -ஆசார்ய கைங்கர்யமே பரம பிரயோஜனம் -என்று நஞ்சீயர் பிள்ளைக்கு அருளிச் செய்தார் என்று வடக்கு திரு வீதிப்
பிள்ளை அருளிச் செய்வர் –

பட்டர் -த்வயத்தின் அர்த்தத்தை புத்தி பண்ணி சப்தாநதரத்தாலே இவ்வர்த்தத்தை அனுசந்திக்க ஒண்ணாதோ -என்று உடையவருக்கு விண்ணப்பம் செய்ய –
அனுசந்திகைக்கு குறை இல்லை -ஆகிலும் இப்பாசுரத்துக்கு சுரக்கும் அர்த்தம் வேறு ஒரு பாசுரத்துக்கு சுரவாது -என்று அருளிச் செய்தார் –

நஞஜீயருக்கு பட்டர் அருளிச் செய்த வார்த்தை –
உபாயாம்ச நிரூபகர் த்ரிவிதர் -எங்கனே என்னில் –கர்ம ஞான நிஷ்டர் என்றும் -சித்த உபாய ஸ்வீகார நிஷ்டர் என்றும் -சித்த உபாயாந்தர்க்கத நிஷ்டர் என்றும் இதில் சித்த உபாய ஸ்வீகார நிஷ்டன் -கர்ம ஞாநாதி நிஷ்டனை அருவருக்கும்-சித்த உபாயாந்தர்க்கத நிஷ்டன் -சித்த உபாய ஸ்வீகார நிஷ்டனை அருவருக்கும்-கர்ம ஞாநாதி நிஷ்டன் கர்ம பரிபாலன பங்கம் பிறக்கிறதோ என்று கலங்கிக் கொண்டு போரும் -சித்த உபாய ஸ்வீகார நிஷ்டன் -சித்த சாதன பரிபாலன பங்கம் பிறக்கப் புகுகிறதோ -என்று கலங்கிக் கொண்டு போரும் – சித்த உபாயாந்தர்க்கத -தத்வ -நிஷ்டன் சித்த சாதன நிஷ்கர்ஷம் பண்ணிக் கொண்டு போரும் –

திருச் சங்கணித் துறை நம்பிக்கு பட்டர் அருளிச் செய்த வார்த்தை –
முமுஷு சேதனகதமான ஜ்ஞானம் த்ரிவிதம்
உபாசநாத்மக ஜ்ஞானம் -என்றும் -ப்ரபதநாத்மக ஜ்ஞானம் என்றும் -ஸ்வரூப யாதாம்ய ஜ்ஞானம் என்றும் –
உபாசநாத்மக ஜ்ஞானம் உடையவன் -உபாஸ்யன் பக்கலில் தனக்கு உண்டான வ்ருத்தியில் உகப்பை  அவனுக்கும் தனக்கும் என்று இருக்கும் –
ப்ரபதநாத்மக ஜ்ஞானம்உடையவன் பிரபத்தவ்யன் பக்கலிலே தனக்கு உண்டான வ்ருத்தியில் உகப்பை அவனுக்கே என்று இருக்கும்
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே -போலே உனக்கே நாம் ஆட் செய்வோம் –
ஸ்வரூப யாதாம்ய ஜ்ஞானம் உடையவன் ஸ்வ தஸ் சர்வஞ்ஞன் பக்கல் உண்டான வ்ருத்தியை ஸ்வயம் ஸ்வ கார்யம் என்று இருக்கும் -இவற்றுக்கு உதாஹரணம் பதிவ்ரதை மாங்கல்ய ஸூ த்ரம் பெருகினால் பந்திக்கும் போது பர்த்தாவினுடைய நிக்ரஹ அனுக்ரஹங்களை ஹேது வாக்காமல்
தன்னுடைய அநர்த்த வ்ருத்தி என்று நினைத்து இருக்குமா போலே –

நம்பிள்ளை வார்த்தை
ஆத்ம சமர் -பிராண சமர் -திருஷ்டி சமர் -பாஹூ சமர் –ஆபரண சமர் -ஆயுத சமர் -பாத சமர் -பாத ரேகா  சமர் -பாத ரஷா சமர்-சாயா சமர் –

அஜ்ஞ்ஞான தசை கும்பகரணனைப் போலே —தேவதாந்தர பஜனம் பண்ணுகிற தசை ராவணனைப் போலே –
பக்தி தசை சூர்பணகை போலே —பிரபத்தி தசை ஸ்ரீ விபீஷண ஆழ்வானைப் போலே –என்று நம்பிள்ளை –

நம்பிள்ளை நஞ்சீயரை அவதாரங்கள் ஏதுக்காக என்ன –
ஈஸ்வரன் அவதரித்துப் பண்ணின ஆனைத் தொழில்கள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமை -என்று ஜீயர் அருளிச் செய்தார்

த்ரிபுவன வீர தேவன் பட்டருடைய ஆபிஜாத்யம் கண்டு -நீர் நம் பக்கல் ஒருநாள் வந்து போகீர் -என்று அபேஷிக்க -பள்ளி கொள்கிறவர் கை மறுத்தால்
உன்னுடைய வாசல் ஒழிய வேறு ஒரு போக்கு உண்டோ -என்று அருளினார் –
இவ்வர்த்தத்தில் கந்தாடை யாண்டான் -பெரிய ஜீயருக்கு நியச்த பரனானவன் உடுத்த புடைவைக்கு பிரதி கூலர் பகலிலே கஞ்சி அரிசி -சில -வேண்டி
நிற்கையாவது -படி பெற்று உண்ணும் பதிவ்ரதை மேல் அழிவுக்கு பர பர்த்ரு ஸ்வீகாரம் பண்ணின மாத்ரம் -என்று அருளிச் செய்தார்
சாதனா புத்த்யா கைங்கர்யமாவது -பணி கொள்ளக் கூலி இன்றிக்கே பணி செய்து கூலி வேண்டுகை –
இவ்வர்த்தத்தில் கந்தாடை யாண்டான் கோபால ஜீயருக்கு அருளிச் செய்த வார்த்தை -கைங்கர்யம் பண்ணி பலம் வேண்டுகை யாவது நாடும் ஊரும் அறிய
ஒருவனுக்கு கை கொடுத்த ஸ்திரீயானவள் தன் பர்த்தாவோடே ராத்ரி சம்ச்லேஷித்து விடிந்தவாறே அதுக்கு கூலி தா வென்று அவனை மடி பிடித்து
வளைத்த மாத்ரம் -அது என் -கைங்கர்யம் பண்ணுமவனுக்கு ஜீவிக்க வேண்டாவோ – என்ன -கொட்டை இட்டு பணி செய்யா நின்றால் -கொட்டின் வாய் தேய்ந்தால் கொட்டுடையவன் இரும்பிட்டுக் கொள்ளும் இத்தனை யல்லது -கொட்டு தானே இரும்பிட்டுக் கொள்ளக் கண்டிலோமே -அப்படியே இவனைக் கைக் கொண்டு பணி கொள்ளும் அவனுக்கே அன்றோ ஜீவனம் இடுகையும் பரமாய் இருப்பது என்று அருளிச் செய்தார் –

விளை நகர்ப் பிள்ளை -பிள்ளை நகரிப் பிள்ளை -ஸ்ரீ வைஷ்ணவர்களை அமுது செய்யப் பண்ணுவர் -என்று பட்டர் கேட்டு -இதுக்கு அபிப்ராயம் அறிய வேணும் -என்று அவர் திருமாளிகை ஏற எழுந்து அருள -அமுது செய்ய காலமானவாறே -அகத்துக்கு எழுந்து அருள வேணும் -என்ன பட்டரும் பிள்ளையை அழைத்து -வாரீர் பிள்ளாய் நீர் என்ன நினைத்து அமுது செய்யப் பண்ணுவீர் என்ன -அடியேன் பின்வரும் முதலிகளுக்கு முன்பு எழுந்து அருளின முதலிகள் திருப் போனகப் பானை ஒழிச்சுவர் என்கிற இது பிரயோஜனமாக நினைத்து இருப்பன் என்ன -பட்டரும் முதலிகள் முகம் பார்த்து இச் சொல் அற்ற சோறு உண்டாகில் உஜ்ஜீவனம் -என்று அருளினார் புகழை விரும்பும் சொல் சொல்லாமல் ஸ்வயம் பிரயோஜனமாக செய்தார் ஆகில் இவருக்கு ஆத்ம உஜ்ஜீவனம் ஆகும் -என்று அருளினார் –
ஸ்ரீ விதுரர் திருமாளிகையில் அமுதுசெய்தது மடி தடவாத சோறு என்று இ றே–இச் சொல்லற்ற சோறு இ றே அது –

அக்கரைச்சடியார் வார்த்தை-தாஸித் தொழில் செய்து வந்த பெண் பிள்ளை -இவள் உச்சியம் போதினில் ஷூத்து நலியாது நின்றது என்று என் பக்கலிலே
ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் வந்தால் ஷூநநிவ்ருத்தி பண்ணி உகபபிக்குமோபாதி பிரகிருதி வியாதி நலியா நின்றது என்று என் பக்கலிலே ஒரு ஸ்ரீ வைஷ்ணவர்
வந்தால் பிரகிருதி வியாதியை பிரகிருதி இட்டு சமிப்பித்தால் ஆகாதோ என்ன-நம்பிள்ளை அருளிச் செய்தபடி –
வாரீர் தாய் நெடும் காலம் மலடி நின்று பெற்றதொரு பிள்ளை பித்தேறி உன் பக்கலிலே -உறி போட்டுக் கொள்ளுகைக்கு கயிறு தா -கழுத்தை
அறுத்துக் கொள்ளுகைக்கு அரிவாள் தா -என்று வந்தால் கொடாது ஒழிகிறது அவன் சரீர நாசத்தை அஞ்சி அன்றோ -அவ்வளவும் போராதோ ஒரு
ஸ்ரீ வைஷ்ணவனுடைய ஸ்வரூப நாசம் என்று –

அந்தர்யாமியாய் நின்று சத்தையை நோக்கினீர் -அழுந்திக் கிடந்த நாளிலே கரணங்களைத் தந்தீர்
பிரகிருதி சம்பந்தத்தை கழித்து அருளினீர் -சர்வ அபராதங்களையும் பொருது அருளினீர்
அர்ச்சிராதி மார்கத்தையும் பரமபதத்தையும் குண அனுபவத்தையும் தந்து யாவதாத்மபாவி நித்ய கைங்கர்யம் கொண்டு அருளினீர்
சர்வ ஸ்வாமி யான சர்வேஸ்வரனே தேவரீர் செய்து அருளினபடி என் தான் என்று நம்பிள்ளை அநு சந்தானம் –

பட்டருக்கு எம்பார் அருளிச் செய்த வார்த்தை –
நீர் ஒருகாலும் உடம்போடு உண்டான உறவுக்கு உளைந்து போருகிறீர் இல்லை
இதுக்கடி உற்றானான எம்பெருமான் பக்கலிலே உறுதியை உணர்ந்தோ – அன்றியே உம்முடைய பக்கல் உண்டான உறுதியை உணர்ந்தோ என்று கேட்க –
அடியேனுக்கு இவை இரண்டும் உண்டோ -உள்ள உறவு இத்தனையும் உடம்போடு வந்த ஊற்றத்தால் அன்றோ -என்று விண்ணப்பம் செய்ய -எம்பாரும் இது கேட்டு க்ருதார்த்தராய் -நீர் இங்கனே சொல்லுவான் என் -ஆழ்வான் உடன் உண்டான குடல் துவக்காலே -அந்தரங்கமான அர்த்தங்களை ஆராயும்படியான ஆகாரங்களை உடையீர் -உடையவரால் உண்டான ஞானம் உடையீர் -அதடியாக எங்கள் உடன் உண்டான உறவு அறிவீர் -இப்படி இருக்க எங்களை நீ இங்கன் உழைப்பிக்கலாமா -இவ் வாகரங்களிலே உமக்கு உண்டான உறவு உறுதி சொல்லீர் -என்று உறுத்திக் கேட்க -பட்டர் விண்ணப்பம் செய்தபடி -என்னுடைய உயிருக்கு உடைமை யாகை  அன்றோ உறுதி யாவது – அங்கன் அன்றியே இவ் உயிருக்கு உறுதி உண்டாகில்-அவ் உயிருக்கு உறுதி உண்டோ -ஆகையால் அவ் உயிரை உணர்ந்த ஆனந்தத்தாலே பிறந்த உறுதி அன்றோ -உண்டாகில் உள்ளது -என்று விண்ணப்பம் செய்ய -எம்பாரும் இதில் ஒரு குறை இல்லை -சொன்னபடி அழகிது -ஆனாலும் அவ் விஷய ஸ்பர்சத்தை உணர்ந்த ஆனந்தத்திலும் காட்டிலும் இவ் விஷயத்தில் அனாதர அதிசயம் காணும் அபேஷிதமாய் இருப்பது -ஆகையால் உடம்போடு உண்டான உறவுக்கு உளைந்து போரீர் -என்று அருளிச் செய்ய -பட்டரும் கிலேச ஹேதுவான பிரக்ருதியை உணர்ந்துசோகிக்க தொடங்கினார் -எம்பாரும் அருளிச் செய்த கார்யம் பலித்ததே என்று ப்ரீதரானார் –

நம்பிள்ளை வார்த்தை –
த்யாஜ்ய விஷயமும் -உதாசீன விஷயமும் -அனுக்ரஹ விஷயமும் -அனுபவ விஷயமும் -அதாவது -நாஸ்திகர் -ஆஸ்திக நாஸ்திகர் -நாஸ்திக ஆஸ்திகர் -ஆஸ்திகர் -நாஸ்திகர் ஆவார் புறம்போடு உள்ளோடு வாசி யற நாஸ்திகர் -ஆஸ்திக நாஸ்திகர் ஆவார் -புறம்பு ஆஸ்திகரைப் போலேயாய் உள்ளு நாஸ்திகர் –
நாஸ்திக ஆஸ்திகர் ஆவார்-புறம்பு நாஸ்திகரைப் போலேயாய் உள்ளு ஆஸ்திகர்–ஆஸ்திகர் ஆவார்-உள்ளோடு புறம்போடு வாசி யற ஆஸ்திகராய் இருப்பவர்கள்

பட்டர் நீராடி எழுந்து அருளா நிற்க -ஒரு சைவன் எதிரே வர -அவன் உடம்பில் சாம்பல் தம் திருமேனியில் படிந்தால் போலே இருக்க -பின்னையும் போய் நீராடி எழுந்து அருளி உள்ளே எழுந்து அருளாதே திருமாளிகை வாசலில் நின்று ஆண்டாளை அழைத்து இப்படி பட்டத்துக்கு பிராயச் சித்தம் அருளிச் செய்ய வேண்டும் -என்ன -ஆண்டாளும் நெடும் போது திகைத்து நின்று -ஸ்ரீ பாத தீர்த்தத்தை  யாகிலும் கொள்ளும் இத்தனை யன்றோ -என்ன -அது சேருமோ என்ன -உயிர் மாளும் அளவில் உயிரை மாறி யாகிலும் உயிரை நோக்க வேண்டாவோ என்ன -ஆகில் திரு உள்ளம் ஆனபடி செய்யும் இத்தனை யன்றோ -என்ன -அவ்வளவிலே ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையரை ஸ்ரீ பாதம் தாங்குகிற சொல்லாமல் சுட்டார் இங்கே தண்டு வாங்க எழுந்து அருள –
ஆண்டாள் அவரைக் கண்டு -தீர்த்தம் வாரா நின்றது -என்ன -பட்டர் -நமக்கு கூடுகிறதோ என்ன -முற்றூண் இட்டுக் கறக்கிலும் பசலுக்கு பால் அன்றோ வேண்டுவது -என்ன – பட்டரும் -அப்படியே செய்கை யன்றோ உள்ளது -என -கலசப்பானையில் திருமஞ்சனம் கொண்டு ஸ்ரீ பாதத்திலே சொரிந்து தீர்த்ததையும் பிரசாதப்பட்டு ப்ரீதர் ஆனார் –

பட்டர் அறியில் சம்மதியார் என்று பட்டருடைய ஸ்ரீ பாதத்தை வேறே சிலரை இட்டு விளக்குவித்து ஆண்டாள் பிரசாதப்படுவார் என்று நஞ்சீயர் அருளிச் செய்தார் என்று நம்பிள்ளை அருளிச் செய்வர் –

மத் பக்த விஸ்லேஷ விஷயத்தில் சத்தை உடனே இருக்குமவர்கள்-மத் விஷய சத்ருக்கள் -என்று ஈஸ்வர வாக்யம் -மறுவலிடாத சப்தாதி விஷயத்தில் ப்ராவண்யத்தில் விரக்தியும் -வளரா நிற்பதான பாகவத விஷய ப்ராவண்யமும் காண் -வைஷ்ணவ லஷணம் ஆவது -என்று நம்பிள்ளை –

ஒருவனுக்கு ஒரு வ்யசனம் உண்டானால் அந்த வ்யசனம் தீரும்படியாக பிரசாதிக்க வேண்டும் என்று ஒரு ஸ்ரீ வைஷ்ணவனை அபேஷிக்க -அந்த ஸ்ரீ வைஷ்ணவனும் பிரசாதிக்க -அவனுக்கு அந்த வ்யசனம் தீரக் காணா நின்றோம் -இது பகவத் சக்தி யாலேயோ வைஷ்ணவன் சக்தி யாலேயோ -என்று பின்பழகிய பெருமாள் ஜீயர் நம்பிள்ளையை கேட்க
பகவத் சக்தியாலேயே என்று அருளிச் செய்ய -ஆனால் எம்பெருமானை அபேஷிக்க அமையாதோ -என்ன -அமையாது -அவனை பிரசாதிப்பித்திக்கொள்ளும் வகை இது வல்லதில்லை -என்ன -ஒரு வைஷ்ணவன் பிரதிஞ்ஜையை எம்பெருமான் முடித்துக் கொடுத்த இடம் உண்டோ -என்ன -அர்ஜுனனுக்கு ஜயத்ரதநோபாதி பலம் இன்றிக்கே இருக்க -நான் அஸ்தமிக்கும் முன்பே ஜயத்ரதனை வதிக்கக் கடவேன் -என்று அர்ஜுனன் பண்ணின பிரதிக்ஜையை சர்வேஸ்வரன் முடித்துக் கொடுத்தமை கண்டிலீரோ என்று அருளினார் –

நம் பிள்ளை வார்த்தை –பிரபன்னர் ஜுவரமாய் கிலேசியா நிற்க -பிள்ளை காரியார் தாசரும் -சக்ரபாணிப் பிள்ளானும் அறிய வந்த அளவிலே -இடவகையில் உத்தம நம்பி ரஷகனாய் கிலேசியா நின்றான் என்ன பிரபன்னர் -வர்த்தமானரோக ஸாந்தி ரஸ்து – என்று பிரசாதிக்க -பிள்ளான் -நீர் கிலேசியா நிற்க பிரசாதிக்கை ஆவது என் -அது சமிக்கை யாவது என் -என்ன -பிராட்டி ராவண பவனத்தில் இருந்து ராஷசிகளால் கிலேசிகப்பட்டாள் -என்ன -அவள் -சீதோ பவ ஹநூமத -என்ற வாக்யம் பலித்தது இல்லையோ -என்று மூதலித்துக் கொடுத்தார் –

ஸ்வ ஸ்வரூபத்துக்கு ஸீமா பூமி ததீய சேஷத்வம் —பர ஸ்வரூபத்துக்கு ஸீமா பூமிஅர்ச்சாவதாரம் —விரோதி ஸ்வரூபத்துக்கு ஸீமா பூமி அஹங்கார மமகாரங்கள் —உபாய  ஸ்வரூபத்துக்கு ஸீமா பூமி பகவத் கிருபை —உபேய ஸ்வரூபத்துக்கு ஸீமா பூமி பகவந முகோல்லாசம் —என்று நம்பிள்ளை வார்த்தை –

அம்மணி ஆழ்வான் இரு நூற்று காதம் ஆறு வந்து பட்டர் ஸ்ரீ பாதத்திலே தெண்டனிட்டு -நெடுமாற்கு அடிமை அர்த்தம் அருளிச் செய்ய வேணும் -என்று
அபேஷிக்க -பட்டரும் -எம்பெருமானை அறிகை யாவது -அவனுக்கு அரை வயிற்றுப் படி – ததீயரை அறிகை யாவது -அவனை முழுக்க அறிகை -என்று அருளிச் செய்ய -இனி பலவகையாக அருளிச் செய்யில் அடியில் மறப்பேன் -என்று அவர் அது தன்னையே தாரகமாக கொண்டு போனார் –

கழிந்த நாளைக்கு அநுதபிக்கையும் வருகிற காலத்தை பழுது போக்காமையும் -காண் வைஷ்ணத்வம் ஆகிறது -என்று நம்பிள்ளை –
பழுதே பலகாலும் போயின என்று அஞ்சி அழுதேன் -முதல் திருவந்தாதி -16 அன்று நான் பிறந்திலேன் -திருச்சந்த விருத்தம் -64-
பிறந்த பின் மறந்திலேன் -திருச்சந்த விருத்தம் -64-. அரவணை மேல் கண்டு தொழுதேன் -முதல் திருவந்தாதி -16

நம்பிள்ளை நஞ்சீயரை -தான் தனக்கு வைஷ்ணத்வம் உண்டு என்று அறியலாவது எவ்வசஸ்தை பிறந்தால் -என்ன –
அர்ச்சாவதாரதுக்கு உயிர் உண்டு என்று நெஞ்சில் பட்ட வன்றும் –
ஒரு வைஷ்ணவன் பக்கல் புத்ராதிகள் பக்கல் ஸ்நேஹத்தளவாகிலும் ஸ் நேஹம் பிறந்த வன்றும் –
ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் கடுத்து வார்த்தை சொன்னால் தன் நெஞ்சில் சிவிட்குத் தட்டாமல் -கோபம் கொள்ளாமல் -போக ரூபமான வன்றும் –
பர தார பர த்ரவ்யங்களில் நசை யற்ற வன்றும் –ஏகாந்தி என்று அறியலாம் –
ஸ்வ தார ஸ்வ தரவ்யங்களில் நசை யற்ற வன்று பரமை காந்தி என்று-அறியலாம் என்று அருளிச் செய்தார் –

பட்டர் தம்முடைய ஸ்ரீ பாதத்தில் சேவிப்பார் ஒரு வைஷ்ணவரை -நீர் அனந்தாழ்வான் ஸ்ரீ பாதத்திலே சென்று ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் இருக்கும்படி
என் -என்று கேட்டுவாரும் என்ன -அவரும் அனந்தாழ்வான் ஸ்ரீ பாதத்தில் செல்ல – அன்று பல ஸ்ரீ வைஷ்ணவர்கள் அங்கே  அமுது செய்து அருள -அவரும் இடம் பெறாமையாலே ஸ்ரீ வைஷ்ணவர்கள் அமுது செய்யும் அளவும் பேசாதே இருக்க – அனந்தாழ்வானும் அவரைப் பார்த்து -அனந்தாழ்வானும் அவரைப் பார்த்து – அமுது செய்து அருளிற்று இல்லையே -நெடும் போதுண்டே இளைப்போடே நிற்கிறது என்று -அனந்தாழ்வான் தாமும் அவருமாக உள்ளே அமுது செய்துஅருளி -பின்னை எங்கு நின்றும் எழுந்து அருளுகிறது -என்ன -பட்டர் -அனந்தாழ்வான் ஸ்ரீ பாதத்தில் சென்று
ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் இருக்கும்படி என்னென்று கேட்டுவா என்று அருளிச் செய்து விட்டார் -என்ன -ஆகில் – கொக்குப் போலே இருக்கும் –

பட்டரை ஒருவன் -தேவதாந்தரங்களை வைஷ்ணவர்கள் அனுவர்த்தியாது ஒழிவான் என் -என்ன -பிரமாண விரோதம் உள்ள இடத்தில் அன்றோ
சந்தேஹம் உள்ளது -இங்கு சந்தேஹம் இல்லை காண் -என்று அருளிச் செய்தார் – ஆவதென் என்ன -சத்வ ப்ரசுரரை ரஜஸ் தம பிரசுரர் அனுவர்த்திக்கும் அது ஒழிய சத்வ ப்ரசுரர் ரஜஸ் தம ப்ரசுரரை அனுவர்திகக் கடவதோ -என்று அருளிச் செய்தார் – தேஷாமபி நமோ நம -என்கிறபடியாலே –

நம்பிள்ளையை -ஒருவன் எம்பெருமானை ஒழிய தேவதாந்தரங்களை பஜிக்கலாகாது என்கிற நீங்கள் -நித்ய நைமித்திகாதிகளில் -அக்நி இந்திராதிகளை பஜிப்பான் என் – ஆலயத்தில் பஜியாது ஒழிவான் என் -என்ன -அக்நி ஹோதராதிகளில் அக்நியை உபாசித்தும் ஸமஸா நாக்நிகளை நிவர்தித்தும் போகிறாப் போலே —
இரண்டு இடத்துக்கும் வாசி எங்கனே என்னில் -நித்யாதிகளில் பகவத் ப்ரகார புத்த்யா பண்ணுகிற உபாசநம் -பகவத் உபாசநமேயாக விதிக்கையாலும் –
அவற்றினுடைய பிரதிஷ்டைகளில் பராபர தத்வ ப்ரத்யயம் -பண்ணி இருக்கும் தாமஸ புருஷர்களாலே வேத வ்ருத்த ஆகம மந்த்ர ப்ரகிரியையாலே
ஸ்வ தந்தரமாக தேவதாந்த்ரங்கள் க்ருத ப்ரதிஷ்டிதம் ஆகையாலும் – இவ்விடத்தில் பகவத் ப்ரகார புத்யயா உபாசிக்க விதி இல்லாமையாலும்
தேவதாந்தர வர்க்கங்களில் தூரதோ வர்ஜநீயத்வம் ருத்ரனுக்கு உண்டு – எங்கனே என்னில் -சத்வஸ்தருக்கு அத்யந்தம் விரோதியான தம ப்ராசுர்யத்தாலே –
நித்யாதிகளில் போலே ஆலயங்களிலும் பகவத் ப்ரகாரா புத்யயா உபாசிக்ச்லாமோ என்ன -அப்படி உபாசிக்க விதி இல்லாமையாலே ஆகாது -த்யாஜ்யதயா ஜ்ஞாதவ்யங்களான பகவத் வ்யதிரிக்த விஷயங்கள் சவீ காரத்துக்கு உடலாகவும் -உபாதேயதயா ஜ்ஞாதவ்யங்களான பகவத் விஷயம் த்யாகத்துக்கு உடலாகவும் கடவதோ என்று அருளிச் செய்தார் –தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூம் தாமம் -திருவாய்மொழி -2-8-6-என்கிற பாட்டில் ப்ரஸ்துதமான தேவதாந்தர பஜனம் அர்ஜுனனுக்கு ருத்ரன் பக்கலிலே ஓர் அஸ்தர லாபத்துக்காக பகவந நியோகத்தாலே வேண்டிற்று -எம்பெருமானால் நியமிக்க பெற்ற பூஜை –

வைஷ்ணவன் ஆகையாவது -தத்வ ஜ்ஞான நிஷ்டனாகை -தத்வ ஜ்ஞானம் தான் -ஆசார்ய விஷயீ கார லப்யம் –ஆசார்ய விஷயீ காரம் தான் -தத்வத்தை நாமறிய வேண்டும் என்னும் அபிநிவேச அதிசய பூர்வகமாக பஜன லப்யம் -இந்த இச்சைக்கு முதலடி பகவத் விஷயத்தில் அத்வேஷம் –
அந்த அத்வேஷதுக்கு காரணம் பகவத் கடாஷம் – பகவத் கடாஷத்துக்கு ஹேது என் என்னில் -இஸ் சம்ஸார சேதனனுக்கு அநாதியாக எம்பெருமான் பக்கல் த்வேஷ தூஷிதத்வம் உண்டாகையாலே அவன் பார்த்து அருளுகைக்கு ஈடாக ஓன்று செய்யக் கூடாமையாகையாலே பகவத் நிர்ஹேதுக கடாஷம்
-ஆனால் ஈஸ்வரனுக்கு வைஷம்ய நைர்க்ருண்யங்கள் வாராதோ என்னில் -இச் சேதனனுக்கு அஜ்ஞாதமான அநந்ய பிரவ்ருத்தி களிலே பிறப்பன சில
ஸூக்ருதம் அடியாக பார்த்து அருளுகிறான் ஆகையாலே வைஷம்ய நைர்க்ருண்யங்கள்வாராது – இங்கனே இருப்பதொரு ஸூ க்ருதம் அடியாய் இருக்க நிரஹேதுகம் ஆவான் என் என்னில் -விழ விட்டு மறந்து போன பொருளை எடுத்துக் கொண்டு சென்று கொடுத்தவனை -நம்மதை நமக்குத் தந்தான் என்று இராதே -இவன் நமக்குத் தந்தான் என்று இருக்கும் க்ருதஞதை போலே -தன் தலையிலே ஒன்றும் இன்றியிலே இருக்க -எம்பெருமான் பார்த்து அருளினான் என்று க்ருதஜஞனாய் இருக்கிற இவ்வதிகாரி அபிசந்தியாலே நிர்ஹேதுகம் என்கிறது – இந்த யாத்ருசிக ஸூ க்ருதம் என்கிறதுக்கு அடி சௌஹார்த்தம் –
அவனுக்கு சர்வாத்ம விஷயமாக எப்போதும் உண்டாய் இருக்க -ஒருத்தனுக்கு ஒருகாலாக யாத்ருசிக ஸூக்ருததை உண்டாக்குவான் என் என்னில் –
நெடும்காலம் அனுபவித்து போந்ததொரு பாபம் சுருக்கம் ஒழிய தொலைந்த அளவிலே இந்த சௌஹார்த்தம் இவனுடைய யாத்ருசிக ஸூ க்ருததுக்கு அடியாம் –
ஜபாகுஸூ மச்சாயை பதார்த்தங்கள் எல்லாம் கிடக்க -பளிங்கிலே பிரதி பலிக்குமா போலே அச்சபா பனான  அதிகாரி பக்கலிலே சௌஹார்த்தம் பலிக்கக் கடவது
என்று நம்பிள்ளை அருளிச் செய்வர் –

ஒருவன் தன்னை வைஷ்ணவன் என்று நினைத்து இருக்கலாவது-எவ்வளவு ஜ்ஞானம் பிறந்தால் -என்று பிள்ளை நஞ்சீயரைக் கேட்க –
பகவத் பாகவத விஷயங்களிலே ஒரு உச்சாராயம் கண்டால் நெஞ்சு சிவீல் என்று இருந்தது இல்லை யாகில் தன்னை -வைஷ்ணவன் என்று இருப்பது –
சிவீல் என்று இருந்தது ஆகில் நமக்கு எம்பெருமானோடு உறவு இல்லை யாகாதே – சம்பந்த ஜ்ஞானம் பிறந்தது இல்லை யாகாதே என்று நினைப்பது இருப்பது என்று அருளினார் –

த்ருஷ்டதுக்கு நாக்கு நீட்டாது ஒழிகையும்-அத்ருஷ்டதுக்கு கை நீட்டாது ஒழிகையும் காண் -வைஷ்ணவ லஷணம் -என்று நம் பிள்ளை வார்த்தை –

பெருமாள் எழுந்து அருளா நிற்கத் திருவடி தொழப் புறப்பட்டருளி நஞ்சீயர் திருமேனியிலே திருநாமங்கள் இன்றியிலே இருந்தபடியைப்
பார்த்து -பர்த்தாவின் முன்பே தாலி கட்டாமல் நின்ற ஸ்த்ரி யைப் போலே இரா நின்றது திருமண் கொண்டு வாரும் கோள் என்று அருளினார் –

ஸ்வரூபத்தில் தெளிவும் -உபாயத்தில் துணிவும் -உபேயத்தில் த்வரையும்-அதிகாரி க்ருத்யம் என்று நம்பிள்ளை –

வீர சிகாமணிப் பல்லவ ராயர் பட்டரை -ராஜ கார்யம் செய்கையாலே ஸ்ரீ வைஷ்ணவர்களை அநுவர்த்தித்து நல் வார்த்தை கேட்கப் போகிறதில்லை -அடியேனுக்கு தஞ்சமாய் இருப்பதொரு வார்த்தை அருளிச் செய்ய வேண்டும் -என்ன -கடற்கரை வெளியை நினைத்து இரும் -என்று அருளினார் -பல்லவ ராயரும் தெரியாமையாலே கையைப் பிசைந்து நிற்க -கடற்கரை வெளியிலே ஓர் அமிர்த கடல் போலே விட்டுக் கொண்டு இருக்க -எதிர்கரையிலே பிணம் தின்னிப் பையல் ராவணன் விட்டு இருக்க எழுபது வெள்ளம் சேனை உணர்ந்து கொண்டு பெருமாளைக் குறிக் கொண்டு நோக்கா நிற்க – பிரக்ருதிமான்கள் ஆகையாலே கண் தூங்கி கால் ஓய்ந்து கை சோர்ந்த அளவிலே – பெருமாள் தாமும் தம்பியருமாக முதுகிலே ஆனவனாழி கையைக் கட்டிக் கையிலே தெரிந்து பெருக்கிப் பிடித்த அம்பும் தாமுமாக -சில அண்டஜங்கள் முட்டை இட்டு நோகுமா போலே எழுபது வெள்ளம் சேனையும் சூழ நடையாடும் மதிள் போலே
சாரிகையாக வந்த சக்கரவர்த்தி திருமகனுடைய கையும் வில்லும் தஞ்சம் என்று ஸுகமே இரும் -என்று அருளினார் –

ஒருநாள் திரு வீதியிலே பட்டரும் ஸ்ரீ வைஷ்ணவர்களும் திரளாக எழுந்து அருளி இருந்து பகவத் குண அநுசந்தானம் நடவா நிற்க -ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் -நாம் பண்ணின ஸுக்ருதம் கண்டதே – இப்படி இருக்கப் பெற்றோமே -என்ன சிறியாச்சான் எழுந்து இருந்து -இது நெடுநாள் பெருமாள் ரஷகர் என்று சிஷித்தோம் -இப்போது ஒரு ஸுக்ருத தேவர் உண்டாவதே என்றார் –
எம்பெருமான் ரஷகர் என்று இருக்கையும் ஸ்வரூபம் அன்று – எம்பெருமான் ரஷ்யம் என்று இருக்கையும் ஸ்வரூபம் அன்று-எங்கனே என்னில்
ரஷகன் என்று இருந்தானாகில் அனந்யார்ஹ சேஷத்வத்துக்கு சேராது – ரஷ்யம் என்று இருந்தானாகில் ஸ்வ ஸ்வாமி சம்பந்தத்துக்கு சேராது –

முதலியாண்டான் திருக் குமாரர் கந்தாடை யாண்டான் பட்டருக்கு சரஸ்வதி பண்டாரத்தில் எழுந்து அருளி இருந்து பணித்த வார்த்தை –
எம்பெருமான் சிலரைப் போம் என்னும் -சிலரை வா வென்னும் -சிலரைப் போது என்னும் -பிரயோஜனந்தர நிஷ்டரை பலத்தைக் கொடுத்து போ என்னும் –
கர்ம ஜ்ஞான நிஷ்டரை கர்மம் கழிந்த வாறே வா வென்னும் –அநந்ய பிரயோஜனரை போது என்னும் -போதுவீர் போதுமினோ -உடனே வாரும்கோள்
என்று கை நீட்டி வரவேற்ப்பான் -இந்த தேசத்தில் ஒரு அநந்ய  பிரயோஜனரை உண்டு என்று இருந்தோமோ – உண்டாகில் அங்கே கண்டு கொள்கிறோம் -எங்கனே என்னில் – பிராப்ய பிரபகங்கள் இரண்டும் எம்பெருமான என்றால் விஸ்வசிப்பார் இல்லை -விஸ்வசித்தால் க்ருதஜராய் இருப்பார் இல்லை –
க்ருதஜராய் பெற்றதாகில் பகவத் கைங்கர்யம் விரசமாய் இருக்கும் – -இவை மூன்றும் கூடிற்று ஆகிலும் -ராக த்வேஷ அபஹதர் ஆகையாலே
பாகவத கைங்கர்யத்துக்கு இசையார் -அதுவும் கூடிற்றாகில் ஆசார்ய உடைய தேக யாத்ரையைக் கண்டு நெகிழ நினைப்பர்கள் -இதுவும் கூடிற்றாகில் தங்களை
ஸூத்தராக நினைப்பர்கள் – ஆகையால் பகவத் குணம் சொல்லுகைக்கும் கேட்கைக்கும் இவ்விடத்தில் ஆள் இல்லை காணும் –

அவதாரம் இருக்கும்படி என் -என்று நம்பிள்ளையை முதலிகள் கேட்க -மெய் வெளுத்து நாக்கு வற்றி இருக்கும் -என்ன -அது  என் என்ன -அதிகாரி பெறாமையாலே மெய் வெளுத்து இருக்கும்-பெற்றால் பிரயோஜனாந்த பரர்  ஆகையாலே மயிர் பட்ட சோறு என்று நாக்கு வற்றி இருக்கும்
-என்று அருளிச் செய்தார் –

நம்பிள்ளை ஸ்ரீ பாதத்திலே சேவித்து இருப்பார் இரண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள் அந்யோந்யம் பிணங்கி ஒருவரை ஒருவர் மடி பிடித்துக் கொண்டு செல்ல –
அதுக்கடி என்ன -என்று பிள்ளை கேட்டருள -பெரியவாச்சான் பிள்ளை -இத்தனை நாளாக சேவித்து நின்றதில் தேங்கின அர்த்தம் இது என்று காட்ட
வந்தார்கள் -என்ன -கோ மூத்தவன் பாடே போகாதே நம்பாடே வந்தார்கள் -என்று அருளினார் –

சர்ப்பாஸ் யகதமான மண்டூகத்தினுடைய ஆர்த்த நாதத்தைக் கேட்டு ஆழ்வான் மோஹித்தார் என்று நம் பிள்ளை அருளிச் செய்தார் -இத்தால்
பர துக்க அஸ ஹிஷ்ணுத்வமும் -பர ஸம்ருத்த்யேக ப்ரயோஜனத்வமும் வைஷ்ணவனுக்கு ஸ்வபாவம் -என்றபடி –

வீர சுந்தர ப்ரஹ்ம ராயன் காலத்திலே பட்டர் திருக்கோட்டியூரிலே எழுந்து அருளி இருக்கச் செய்தே -வீர சுந்தர பட்டான் என்று பிள்ளை  பிள்ளை யாழ்வான்
ஆண்டாளுக்கு விண்ணப்பம் செய்ய -போர க்லேசித்தார் -பட்டரை கோயிலில் இருக்கவும் கூட ஒண்ணாதபடி பண்ணின இவன் பட்டான் என்றதுக்கு இது வென் –
என்ன -பிள்ளையோடு உண்டான விரோதத்தாலே அத்ருஷ்டத்தை இழந்தான் – சில நாள் இருந்து த்ருஷ்ட சுகமாகிலும் அனுபவிக்கிறானோ என்று இருந்தோம் –
அதுவும் கூட இழந்தான் ஆகாதே -என்று க்லேசமாயிற்று -என்று அருளிச் செய்தார் –

நம்பிள்ளை திரு உள்ளத்திலே அபேஷை நடக்கும்படியையும் -அநபேஷை நடக்கும்படியையும் -வடக்குத் திருவீதிப் பிள்ளை அருளிச் செய்யும் படி –
அபேஷை நடப்பது -அஹங்கார நிரசநத்திலும் -அவிவேக நிரசநத்திலும் -அநபேஷை நடப்பது -ஆத்ம ஜ்ஞானத்திலும் -ஆத்ம லாபத்திலும் -பகவல் லாபத்திலும் -ஆத்ம ஜ்ஞானம் ஆவது -ஜ்ஞாநானந்த சாஷாத்காரம் -ஆத்ம லாபம் ஆவது -தத் பிரதிபந்தக நிவ்ருத்தி –
பகவல் லாபமாவது -ஸ்வ யத்ன சாத்யமுமாய் -ஸ்வ கதமுமான பகவத் அநுபவத்தை –

நம்பிள்ளையை ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் -தஞ்சமாய் இருப்பதொரு வார்த்தை அருளிச் செய்ய வேணும் -என்ன -முமுஷுவான அதிகாரிக்கு
அனுசந்தேயம் -ஸ்வரூபம் -பரதந்த்ரம் -விரோதி -பிரபலம் – புருஷார்த்தம் -அந்ய சாத்தியமன்று –
பரிஹார்யம் தேவதாந்திர பஜனமும் -பாகவத அபசாரமும் ஆகிற படு குழிகள் -என்று அருளினார் –

நம்பிள்ளை திருவெள்ளறை தேன கொள சோலை தாஸா மாளிகையிலே எழுந்தருளி -அவருடைய திருமாளிகையிலேயே ஐஸ்வர்யத்தைக் கண்டு
ப்ரீதராய் இருக்க -இதுக் கடி என் என்று எதிராஜ தாசர் பிள்ளையைக் கேட்க -நம்பிள்ளை -இஸ் சம்ஸார ஸுகம் தான் மூன்று படியாய் இருக்கும் –
இஸ் ஸுகத்தை தனக்கு என்றும் -தனக்கும் எம்பெருமானுக்கும் என்றும் -எம்பெருமானுக்கே என்றும் -நினைக்கை காண் –
தனக்கு என்கை -நரக அநுபவ சத்ருசம் -தனக்கும் எம்பெருமானுக்கும் என்கை ஸ்வர்க்க அநுபவ சத்ருசம் -எம்பெருமானுக்கே என்கை பரமபத அநுபவ சத்ருசம்

பட்டர் பிரபன்னரை அழைத்தருளி -உம்மை எல்லோரும் பிரபன்னர் என்னா நின்றார்கள் ப்ரபன்ன லஷணம் இருக்கும்படி என் -என்று கேட்க
அர்த்த ராத்ரியிலே தனி வழி போகா நிற்க -துஷ்ட மிருகங்களால் மிடைநததொரு காட்டிலே -முன்னடி தோற்றாதபடி மருண்டு -வர்ஷமும் இடியும் உண்டாய் –
கண்ணுக்கு உள்ளே கொள்ளியை வீசினாப் போலே மின்னிக் கொண்டு வாரா நிற்க – அவ்வஸ்தையிலே திருநாம உச்சாரணம் பண்ணாது ஒழிகை ப்ரபன்ன லஷணம் என்று அருளினார் –

ஒரு விசேஷ திவசத்திலே பெரிய திருமண்டபத்திலே பெருமாளும் நாய்ச்சிமாரும் புறப்பட்டருளி இருந்து திருத் திரை யிட்டு ஏகாந்தமாய் இரா நிற்க -பட்டர் திருவடித் தொழ என்று எழுந்தருளி திருத் திரையை வாங்கினவாறே பெரு மாள்  முனிந்து புறப்படவிட திரு உள்ளமாக -இவர் புறப்பட்ட அளவிலே
-அவனை அழையும் கோள் -என்று திரு உள்ளமாக -அருளப்பாடு -என்ற அளவிலே இவரும் வந்து திருவடி தொழ -நாம் புறப்பட சொன்ன போது என நினைந்து இருந்தாய் என்று கேட்டருள -பெருமாளும் நாய்ச்சிமாருமாக நினைந்து இருந்தேன் -என்ன -நம்மை முன்பு என்ன நினைந்து இருப்பதென்று கேட்டருள -முன்பு ஆழ்வானும் ஆண்டாளுமாக நினைத்து இருப்பேன் என்ன -நம் ஆணையே -நம்மை முன்பு போலே நினைத்து இரு – என்று திரு உள்ளமாய் அருளினார் –

என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு -என்றது
அணுகதமான பாபம் -விபுகதமான கிருபைக்கு  எதிர் நிற்குமோ –
நம்பிள்ளை ப்ரஹ்ம தேசத்தில் எழுந்தருளி நிற்கச் செய்தே பெரிய கோயில் வள்ளலார்
காண வர -குலம் தரும் -என்கிற பாட்டில் முதல் பதத்துக்கு தாத்பர்யம் அருளிச் செய்ய வேணும் என்று
பிள்ளையைக் கேட்க முரட்டு திருப்பதியானான உன்னை நம்பூர் குலத்துக்கு சேஷமாக்கின-குலம் தரும் -என்று விண்ணப்பம் செய்தார்
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானே -திருவாய்மொழி -2-5-8-
என்னுடைய சத்தாஹானி காணும்படிக்கு ஈடான கிருபா ஹாநி அவனுக்கு இல்லாமையாலே என்னை அங்கீகரித்தான் -தொடங்கின உபாயம் முடிவதற்கு முன்னே என்னுள் கலந்தான் வறுத்த பயறு போலே ஆத்ம அனுபவத்தளவிலே  நின்று முடியாதபடி என்னுள் கலந்தான் –
என் அஹங்காரம் பாராதே குலம் கொண்டே பரிக்ரஹித்தான் அபரிச்சேதயனான தன்னை நான் புஜிக்குமா போலே அணு ஸ்வரூபனான என்னை புஜித்தான்
நாநாவித நரகம் புகும் பாவம் நானே செய்தேன் -பெரிய திருமொழி -1-9-2- தேன விநா தருணக் ரம்பி ந சலதி -நீ செய்து என்னைச் சொல்லலாமோ -என்பார் –
அடாப் பழி யிடுகிறார்கள் அத்தனை யன்றோ -நான் செய்தது என் -தேவாங்கு சேற்றிலே விழுமா போலே அவனுக்கு ஸ்ப்ருஹணீயமான வஸ்து இப்படி படுவதே
நானே செய்தேன் -அஹங்காரம் ஒன்றாலும் செய்தேன் –

பிரபன்ன ஸ்வரூபம் இருக்கும்படி–நம் மனிசர்க்கு த்வயம் ஒழிய அனுசந்தானம் எல்லாம் கடலோசை மாத்ரம் என்று
நஞ்சீயர் அருளிச் செய்ததாக பிள்ளை அருளிச் செய்வர் –

நஞ்சீயர் பட்டரை -பிரபத்தியாவது ஜ்ஞான விசேஷமோ க்ரியா விசேஷமோ என்று கேட்க-வஸ்து விசேஷம் என்று அருளிச் செய்தார் –

—————————————————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ வார்த்தா மாலையில் -ஸ்ரீ திருமந்த்ரார்த்த வார்த்தை முத்துக்கள் /அருளிச் செயல் ஸ்ரீ ஸூக்திகளும் திரு மந்த்ரார்த்தமும் – – – – – –

October 2, 2015

திருமந்த்ரார்த்த வார்த்தைகள் –

அகாரத்தாலே -சேஷத்வ பிரதிசம்பந்தியைச் சொல்லி —மகாரத்தாலே சேஷத்வத்துக்கு ஆஸ்ரயம் சொல்லி –
அவதாரணத்தாலே சேஷத்வத்தினுடைய அனந்யார்ஹத்வம்–சொல்லுகையாலே ஸ்வரூபம் சொல்லிற்று –

அகாரத்தாலே -ரஷகனைச் சொல்லி —மகாரத்தாலே -ரஷ்ய வஸ்துவைச்  சொல்லி —சதுர்த்தியாலே -ரஷ்ய ரஷ்ய பாவத்துக்கு
வேண்டும் உறவு சொல்லி -அவதாரணத்தாலே -ரஷ்ய ரஷ்யகங்களினுடைய லஷ்ய லஷணம் சொல்லுகையாலே-உபாயம் சொல்லிற்று –

அகாரத்தாலே பிராப்ய வஸ்துவைச் சொல்லி —மகாரத்தாலே ப்ராப்தாவைச் சொல்லி —சதுர்த்தியாலே பிராப்ய பலமான கைங்கர்யத்தைச் சொல்லி –
அவதாரணத்தாலே -கைங்கர்ய பிரகாரத்தை–சொல்லுகையாலே பிராப்யம் சொல்லிற்று –

பிரணவத்தாலே ஆத்ம ஸ்வரூபம் சொல்லிற்று–நாராயண பதத்தாலே பரமாத்ம ஸ்வரூபம் சொல்லிற்று –
சதுர்த்தி யாலே -புருஷார்த்த ஸ்வரூபம் சொல்லிற்று —ம-என்கிற இத்தாலே விரோதி ஸ்வரூபம் சொல்லிற்று –
நம -என்கிற இத்தாலே -உபாய ஸ்வரூபம் சொல்லிற்று —ஆகையாலே சகல வேதாந்த ப்ரதிபாத்யமான அர்த்த பஞ்சகம் சொல்லிற்று –

ஆஸ்ரயியான சேஷத்வத்தை பிரதமத்திலே சொல்லி –ஆஸ்ரயமான ஞான ஆனந்த லஷண வஸ்துவை பின்பு சொல்லுகைக்கு ஹேது என் –
என்னில் -அஹம் அர்த்தத்துக்கு ஞான ஆனந்தங்களில் காட்டில் –பிரதான நிரூபகம் சேஷத்வம் என்னும் இடம் தோற்றுகைக்காகவும் –
தாஸ்ய ரசத்தில் இழிய ஒட்டாத ஆத்ம அனுபவ மாத்ரத்தில் பர்யவசிப்பதொரு அந்தராயம் உண்டாகையாலே தத் பரிஹாரார்த்தமாகவும் –
நெருப்பிலே புக்கு சிலர் வேவாரைக் கண்டால் -அவர்களை இன்னார் என்று பாராதே பற்றி எரிகிற நெருப்பை அவிக்கையிலே யத்னம்
பண்ணுவாரோபாதி -அதாஹ்யமான ஆத்ம வஸ்துவை அநாதி காலம் பற்றி-தஹித்துப் போருகிற ஸ்வ ஸ்வா தந்த்ர்யத்தை அகற்றுவிக்கையிலே
தாத்பர்யம் ஆகையாலும் -புஷ்பத்துக்கு ஸ்லாக்யதை பரிமளத்திலே-ஆகிறவோபாதி -ஸ்வரூபத்துக்கும் உபாதேயத்வம் இஸ் ஸ்வபாவ
விசேஷத்தாலே ஆகையாலும் -இவ்வோ பிரதான்யத்தை பற்ற-பிரதமத்தில் சேஷத்வத்தை உபாதானம் பண்ணிற்று –

இவ் வாத்மாவுக்கு எம்பெருமான் கட்டிய திரு மாங்கல்ய ஸூத்ரம் திரு மந்த்ரம் -என்று பிள்ளை திரு நறையூர் அரையர் அருளிச் செய்வர் –

சம்சார வர்த்தகமாய இருக்கும் தாலிக் கயிறு–பதினாறு இழையாய் -இரண்டு சரடாய் -இருக்கும் –
கைங்கர்ய வர்த்தகமான மங்கல்ய ஸூத்ரம்–எட்டு இழையாய் மூன்று சரடாய் இருக்கும் –
ஸ்வரூபத்தின் உணர்த்தியைப் பற்றி இருப்பது ஒரு சரடும் —ஸ்வ ரஷணத்தில் அசக்தியைப் பற்றி இருப்பது ஒரு சரடும் –
ஸ்வரூபத்தின் உணர்த்தியாலும் -ஸ்வ ரஷணத்தில் அசக்தியாலும் —பலித்த ஈஸ்வரனை நாம் பேணுகையை வெளி இட்டு இருப்பது ஒரு சரடுமாய் இருக்கும் –

பிரமாண -பிரமேய -பிரமாதக்களை சேர அநு சந்திக்கும் படி –
ஆத்மாவுக்கு ஸ்வரூபம் -அனந்யார்ஹ சேஷத்வம்-ஏதத் பிரகாசம் -பிரணவம்–அனந்யார்ஹ சேஷத்வ பிரதி சம்பந்தி -பெருமாள் பொருந்த விட்ட திருவடிகள் –
ஆத்மாவுக்கு ஸ்வரூபம் -அநந்ய சரணத்வம் -ஏதத் பிரகாசம் -நமஸ் ஸூ —அநந்ய சரணத்வ பிரதி சம்பந்தி -பெருமாள் அமைத்த திருக்கை –
ஆத்மாவுக்கு ஸ்வரூபம் -அநந்ய போகத்வம் -ஏதத் பிரகாசம் -நாராயண பதம் –அநந்ய போகதவ பிரதி சம்பந்தி -பெருமாள் திரு முறுவல்
இதுக்கு கருத்து -தான் அறிகை -சைதன்யம் அறுகை -சதனாந்தரம் அறுகை-சாத்யாந்தரம் அறுகை-
அதாவது -வேர் அறுகை -வ்யாபாந்தரம் அறுகை -விஷயாந்தரம் அறுகை-

திரு மந்த்ரம் ஸ்வரூபம் சொல்லுகிறது என்று திருக் குருகை பிரான் பிள்ளான் அநு சந்தித்து அருளுவர் –
திரு மந்த்ரம் பிராப்யம் சொல்லுகிறது என்று -பிள்ளை திரு நறையூர் அரையர் அநு சந்தித்து அருளுவர் —
இவ்வாத்மாவினுடைய அனந்யார்ஹத்வம் சொல்லுகிறது என்று -நஞ்சீயர்  அநு சந்தித்து அருளுவர் —
இவ்வாத்மாவினுடைய பாரதந்த்ர்யம் சொல்லுகிறது என்று-எம்பார் -அநு சந்தித்து அருளுவர் —
திருமந்தரம் மூன்று பதத்தாலும் ஞான வைராக்ய பக்திகளை வெளி இடுகிறது என்று முதலியார் அநு சந்தித்து அருளுவர் —
திருமந்தரம் மூன்று பதத்தாலும் -அபிஜன வித்யா வருத்தங்களை வெளி இடுகிறது என்று ஆள வந்தார் அநு சந்தித்து அருளுவர் —
திருமந்தரம் அர்த்த பஞ்சகத்தையும் சொல்லுகிறது என்று நம்பிள்ளை அநு சந்தித்து அருளுவர் —
பாணிக் க்ரஹணமும் உடன் மண நீரும் சதுர்த்தி கல்வியும் சொல்லுகிறது என்று பிள்ளை உறங்காவல்லி தாசர் அநு சந்தித்து அருளுவர் —
மண நீர் அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனை மேல் மஞ்சனமாட்ட -நாச்சியார் திருமொழி -6-10-உபாயாந்தரம் அற்று இருக்கும்
நமஸ பதம் காட்டுவதை மண நீர் ஸ்தானத்தில் அருளினார் –
ஸ்வரூபத்தில் உணர்த்தியையும் -ஸ்வ ரஷணத்தில் அசக்தியையும் -எம்பெருமானைப் பேணுகையும் சொல்லுகிறது என்று
முதலி யாண்டான் அநு சந்தித்து அருளுவர் —-

தாய் மடியிலே கிடந்தது உறங்குகிற பிரஜை ஸ்வப்னத்திலே புலியின் கையில் அகப்பட்டுக் கூப்பிடுமா போலே தன்னை உணர்ந்த தஸை –
கண்ணை விழித்து தாய் முகத்தைப் பார்த்து நிர்ப்பயனாய் இருக்குமா போலே –எம்பெருமானை உணர்ந்த தசை –
உபாய தசையிலே எம்பெருமானாலே எம்பெருமானை பெறும் இத்தனை ஒழிய-தம் தாம் நன்மை கொண்டு பெற நினையார் -ஸ்வரூப ஞானம் உடையார் –
இந்த ஸ்வா தந்த்ர்யம் தலை எடுத்தால்-அகாரத்துக்கு அர்ஹன் அல்லன்
-ஒருவனுடைய வ்ருத்தத்தை இட்டாதல்-ஜென்மத்தை இட்டாதல் -தண்ணியதாக நினைக்கில் மகாரத்துக்கு அர்ஹன் அல்லன்
-பிறர் தனக்கு ரஷகர் என்று இருந்தானாகில் உகாரத்துக்கு அர்ஹன் அல்லன்
-தனக்குத் தான் ரஷகன் என்று நினைத்தபோது நமஸ் ஸுக்கு அர்ஹன் அல்லன் –
-தன் கார்யத்துக்கு தான் கடவன் என்று நினைத்த போது நாராயண பதத்துக்கு அர்ஹன் அல்லன் –
செய்ததொரு கைங்கர்யத்தை தான் உகத்தல் பிறர் உகத்தல் செய்யில் சதுர்த்திக்கு அர்ஹன் அல்லன் –
இவ்வர்த்தம் ஒரு அதிகாரி அறிந்து தவிர்ந்த போது திருமந்த்ரார்தம் கை புகுந்ததாகக் கடவது –
அல்லாத போதை திருமந்த்ரதோட்டை சம்பந்தம் சந்தேஹம் ஆம் இத்தனை -என்று பட்டர் அருளிச் செய்வர் –

ஸ்வ ஸ்வா தந்த்ர்யம் மேலிட்டதாகில் பிரணவத்தில் பிரதம பதார்த்தை அநு சந்திப்பான் –
இதரர் பக்கலில் சேஷித்வ பிரதிபத்தி நடை யாடிற்றாகில் உகாரராத்தை அநு சந்திப்பான் —
தேவோசஹம் என்று இருந்தானாகில் மகார்த்தத்தை அநு சந்திப்பான் –
ஸ்வ ரஷண விஷயத்தில் கரைந்தான் ஆகில் நமஸ் சப்தார்த்தை அநு சந்திப்பான் –
ஈஸ்வர விபூதிகளோடே காறு காறு என்றானாகில் -நார சப்தார்த்தை அநு சந்திப்பான் —
சப்தாதி விஷயங்களில் போகய புத்தி பிறந்ததாகில் ஆய சப்தார்த்தை அநு சந்திப்பான் –

பிரமாணம் -பத த்ரய யாத்மகமாய் இருக்கும் —பிரமேயம் பாவ த்ரய யாத்மகமாய் இருக்கும் —-அதிகாரி -ஆகார யாத்மகமாய் இருக்கும் –
பிரமாணம் பதத் த்ரய யாத்மகமாகை யாவது -பிரதம பதம் -மத்யம பதம் -த்ருதீய பதம் –
பிரமேயம் பர்வ த்ரய யாத்மகமாகை யாவது -பொருந்த விட்ட திருவடிகளும் -அஞ்சல் என்ற திருக்கையும் —சிவந்த திரு முகமண்டலமும் –
அதிகாரி ஆகார த்ரய யாத்மகமாகை யாவது -அனந்யார்ஹ சேஷ பூதனாய் -அநந்ய சரணானாய் -அநந்ய–போக்யனாய் இருக்கை –
பிரதம பதம் -அனந்யார்ஹ சேஷத்வ பிரகாசகம் —பொருந்த விட்ட திருவடிகள் அனந்யார்ஹதைக்கு பிரதி சம்பந்தியாய் இருக்கும் –
மத்யம பதம் அநந்ய சரணத்வ பிரகாசமாய் இருக்கும் —அஞ்சல் என்ற திருக்கை அநந்ய சரணத்வத்துக்கு பிரதி சம்பந்தியாய் இருக்கும் – –
த்ருதீய பதம் அநந்ய போக்யத்வ பிரகாசமாய் இருக்கும் —-சிவந்த திருமுக மண்டலம் அநந்ய போக்யத்வ பிரதி சம்பந்தியாய் இருக்கும் – –
என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்-

உத்பத்தியையும் -உடைமையையும் -உடைமைக்கு உண்டான ஊற்றத்தையும் -உடைமைக்கு உடைமை இல்லாமையையும் –
உத்பத்தி யானவைகளை உடையவனுடைய உயர் நிலையையும் – உடைமைக்கும் உடையவனுக்கும் உண்டான உறவையும்
சொல்லுகிறது திரு மந்த்ரம் – -திரு மந்த்ரத்தாலே -திரு அபிஷேகத்தை அநு சந்திப்பான் –

அர்த்த பஞ்சகமும் ரகஸ்ய த்ரயத்தில் சொல்லுகிற படி எங்கனே என்னில் –
திரு மந்த்ரத்தில் -நாராயண பதத்தாலே பர மாத்ம ஸ்வரூபம் சொல்லிற்று —
பிரணவத்தாலே ஆத்ம ஸ்வரூபம் சொல்லிற்று –
சதுர்த்தியாலே புருஷார்த்த ஸ்வரூபம் சொல்லிற்று —
நம -என்று உபாய ஸ்வரூபம் சொல்லிற்று –
நமஸ் சப்தத்தில் ஷஷ்ட் யந்தமான மகாரத்தாலே விரோதி ஸ்வரூபம் சொல்லிற்று –

ஸ்வரூபம் சொல்லுகிறது திருமந்தரம்–சாஸ்திர ருசி பரிக்ருஹீதம் -திரு மந்த்ரம்-ஆத்ம யாதாம்ய பிரதிபாதன பரம் திருமந்தரம்-
பிராப்ய பிரதானம் -திருமந்தரம்

ஆச்சார்ய  அங்கீகாரம் உடையவனுக்கு ஆசார்யன் இரங்கி திரு மந்த்ரத்தில் உபதேசித்த -அர்த்தைத்தை –
பத ஸ -அநு சந்திக்கும்படி சொல்லுகிறது –
ஈஸ்வர சேஷ பூதன் -அந்ய சேஷத்வ நிவ்ருத்தன் -விலஷண நிரூபகன் -ததீய பர தந்த்ரன் –
தத் சம்பந்த யுக்தன் -கிங்கர ஸ்வ பாவன் -என்று தன்னை அநு சந்திப்பது –
இத்தால் சொல்லிற்று ஆய்த்து
ரஷகத்வ பிரதி சம்பந்தி –பூர்வகமான ரஷ்யத்வம் சொல்லி –
அந்ய சேஷத்வ பிரதி சம்பந்தி -நிவ்ருத்தி பூர்வகமான அனந்யார்ஹத்வம் சொல்லி –
அசேதன வ்யாவ்ருத்தி பூர்வகமான சேதன வைலஷண்யம் சொல்லி
ஸ்வா தந்த்ர்ய நிவ்ருத்தி பூர்வகமான பாரதந்த்ர்யத்தினுடைய எல்லை சொல்லி –
சோபாதிக பந்து –நிவ்ருத்தி பூர்வகமான நிருபாதிக சம்பந்தம் சொல்லி –
அபுருஷார்த்த நிவ்ருத்தி பூர்வகமான புருஷார்த்த பிரகாரம் சொல்லித் தலைக் கட்டுகிறது –

திருநகரிப் பிள்ளை -பிரதம பதத்தில் -ஈஸ்வரனுடைய சர்வ ரஷகத்வமும் –
சர்வ சேஷித்வமும் -ஜகத் காரணத்வமும் -ஸ்ரீ ய பதித்வமும் -சொல்லுகிறது —எங்கனே என்னில் –
ஆள்கின்றான் ஆழியான் -திருவாய்மொழி -10-1-3-என்றும்
நல்கித்தான் காத்தளிக்கும் பொழில் ஏழும் -திருவாய் மொழி -1-4-5-என்றும் –
பொழில் ஏழும் காவல் பூண்ட புகழானாய் -திரு நெடும் தாண்டகம் -10-என்றும் –
மூ வுலகும் காவலோன் -திருவாய் மொழி -2-8-5-என்றும் சொல்லுகையாலே–சர்வ ரஷகத்வம் சொல்லிற்று –

நெடியோய்க் கல்லது மடியதோ வுலகு -திரு வாசிரியம் -5-என்றும் –
உலகம் மூன்றுடன் வணங்கு -திருவாசிரியம் -3-என்றும் –
மூ வுலகும் தொழுது ஏத்தும் சீரடியான் -திருவாய் மொழி -3-8-1-என்றும் –
யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர்த் துயின்றவன் -பெருமாள் திரு மொழி -8-10-என்றும்–
இத்யாதிகளாலே சர்வ சேஷித்வம் சொல்லிற்று –

நாவிக் கமல முதற் கிழங்கே -திருவாய்மொழி -10-10-3-என்றும் –
தானும் சிவனும் பிரமனுமாகிப் பணைத்த தனி முதல் -திருவாய் மொழி -8-8-4-என்றும் –
தேவர் உலகோடு உயிர் படைத்தான் -திருவாய் மொழி -4-10-1-என்றும் –
நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணி -திருவாய் மொழி -7-5-4-என்றும்–
இத்யாதிகளாலே ஜகத் காரணம் சொல்லிற்று –

திருநாரணன் -திருவாய் மொழி -4-1-1-என்றும் –
திருமகள் சேர் மார்பன் -திருவாய் மொழி -7-2-9-என்றும் –
திருமால் -திருவாய் மொழி -8-3-9-என்றும்–இத்யாதிகளாலே ஸ்ரீ ய பதித்வம் சொல்லிற்று – 

தாதர்த்யத்தாலே -ஏறிக் கழிந்த சதுர்த்தி யாலே
பொருள் அல்லாத என்னை பொருளாக்கி அடிமை கொண்டாய் –திருவாய்மொழி -5-7-3-என்றும் –
இன்று என்னைப் பொருளாக்கி -திருவாய்மொழி –10-8-9-என்றும் –
நாட்டினாய் என்னை உனக்கு முன் தொண்டாக -பெரிய திருமொழி -8-10-9-என்றும் –
அடியேன் பிறந்தேன் -பெரிய திருமொழி -8-9-8-என்றும்–இத்யாதிகளாலே சேஷத்வம் உதித்தபடி சொல்லிற்று –

த்வதீய பதத்தாலே -ஆத்மாவினுடைய சேஷத்வாந்தர நிவ்ருத்தி பூர்வகமான அனந்யார்ஹ சேஷத்வத்தையும் –
ஈஸ்வரனுடைய அனந்யார்ஹ சேஷித்வத்தையும் சொல்லிற்று -எங்கனே என்னில் –
மற்றாரும் பற்றிலேன் ஆதலால் நின் அடைந்தேன் -பெரிய திருமொழி –8-10-5-என்றும் –
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாழ் இணைக் கீழ் வாழ்ச்சி -திருவாய்மொழி -3-2-4-என்றும் –
மற்றோர் தெய்வம் எண்ணேன் உன்னை என் மனத்து வைத்து -பெரிய திருமொழி –6-3-5-என்றும்-
இத்யாதிகளால் -அந்ய சேஷத்வ நிவ்ருத்தி பூர்வகமான அனந்யார்ஹ சேஷத்வம் சொல்லிற்று –

பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும் நாயகன் அவன் -திருவாய் மொழி -4-10-4-என்றும் –
வானவர் தம்மை யாளுமவன் -திருவாய் மொழி –3-6-4-என்றும் –
நான்முகனும் இந்திரனும் மற்றை யமரரும் எல்லாம் -திருவாய் மொழி –1-9-10-என்றும் –
தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசை முகற்கும் ஆமோ தரம் அறிய -திருவாய் மொழி –2-7-12-என்றும் –
இத்யாதிகளாலே -ஈஸ்வரனுடைய அனந்யார்ஹ சேஷித்வம் சொல்லிற்று –

த்ருதீய பதத்தாலே -ஆத்மாவினுடைய ஞான ஆனந்தத்வமும் -ஞான குணகத்வமும் –
ப்ரக்ருதே பரத்வமும் -நித்யத்வமும் -சொல்லுகிறது -எங்கனே என்னில் –
என் மதிக்கு விண் எல்லாம் உண்டோ விலை -நான்முகன் திருவந்தாதி -54-என்றும் –
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -முதல் திருவந்தாதி -67-என்றும் –
யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு -திரு விருத்தம் -95-என்றும் –
நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு -திருவாய் மொழி -8-8-5-என்றும்–இத்யாதிகளாலே
ஆத்மாவினுடைய பிரக்ருதே பரத்வம் சொல்லிற்று –
ஆக பிரதம பதம் சொல்லிற்று ஆய்த்து

மத்யம பதத்தாலே ஆத்மாவினுடைய சாதநாந்தர நிவ்ருத்தியும் -சரீரத்வ சேஷத்வமும் –
ததீய சேஷத்வமும் -பரதந்த்ரனுக்கு அநு ரூபமான ஈஸ்வரனுடைய உபாயத்வமும் சொல்லுகிறது –
எங்கனே என்னில் –
வந்து எய்துமாறு அறியேன் -திருவாய் மொழி –7-6-6-என்றும் –
நோற்ற நோன்பிலேன் நுண் அறிவிலேன் -திருவாய் மொழி –5-7-1-என்றும் –
விரும்பி நின்று ஏத்த மாட்டேன் விதியிலேன் மதி ஒன்றில்லை -திருமாலை -17-என்றும் –
உன்னைக் காணும் மார்க்கம் ஓன்று அறிய மாட்டா மனிசரில் துரிசனாய மூர்க்கனேன் -திருமாலை -32-என்றும்–
இத்யாதிகளாலே சாதநாந்தர நிவ்ருத்தி சொல்லிற்று –

-உம் உயிர் வீடுடையான் -திருவாய் மொழி -1-2-1-என்றும் –
அடியேன் உள்ளான் -திருவாய் மொழி –8-8-2-என்றும் –
ஆவியை அரங்கமாலை -திருக் குறும் தாண்டகம் -12-என்றும் –
என்னுடைய வாணாள் -பெரிய திருமொழி -1-1-6-என்றும் —இத்யாதிகளாலே சரீரத்வ சேஷத்வம் சொல்லிற்று –

பயிலும் திருவுடையார் எவரேலும் -திருவாய் மொழி -3-7-1-என்றும் –
எம்மை யாளும் பரமர் -திருவாய் மொழி –3-7-1- என்றும் –
பணியுமவர் கண்டீர் எம்மை யாளுடைய நாதர் -திருவாய் மொழி –3-7-2-என்றும் –
தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலார் -பெரிய திருமொழி -7-4-1-என்றும் –
கொண்டாடும் நெஞ்சுடையார் அவர் எங்கள் குலதெய்வம் -பெரிய திருமொழி -2-6-4-என்றும் —
இத்யாதிகளாலே ததீய சேஷத்வம் சொல்லிற்று –

கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர் ஞான மூர்த்தியினாய் -திருவாய் மொழி –6-2-8-என்றும்
செய்ய சூழ் சுடர் ஞானமாய்-திருவாய் மொழி –3-6-7-என்றும் –
மழுங்காத ஞானமே படையாக -திருவாய் மொழி –3-1-9- என்றும் –
துக்கமில் ஞானச் சுடர் ஒளி மூர்த்தி -திருவாய் மொழி –3-10-9- என்றும் —இத்யாதிகளாலே சர்வஜ்ஞத்வம் சொல்லிற்று –

ஆளும் பணியும் அடியேனைக் கொண்டான் -பெரிய திருமொழி -6-7-1-என்றும் –
ஆட் கொள்ள வல்லான் -பெரிய திருமொழி –8-9-6-என்றும் –
மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் -திருவாய்மொழி -2-7-7-என்றும் –
அருளி அடிக் கீழ் இருத்தும் -திருவாய்மொழி -8-8-11-என்றும் —இத்யாதிகளாலே சர்வ சக்தித்வம் சொல்லிற்று –

எல்லாம் உலகும் உடைய ஒரு மூர்த்தி -திருவாய்மொழி -5-8-4-என்றும் –
தேவிமாராவார் திருமகள் பூமி ஏவ மற்றமரர் ஆட் செய்வார் மேவிய வுலகும்
மூன்றவை யாட்சி -திருவாய்மொழி –8-1-1- என்றும் –
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே
யாள்கின்ற வெம்பெருமான் -நாச்சியார் திருமொழி -11-3-என்றும் –
அடங்கு எழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன் அடங்கு எழில் அஃது -திருவாய்மொழி –1-2-7- என்றும்–
இத்யாதிகளால் அவாப்த சமஸ்த காமத்வம் சொல்லிற்று –

எந்நாள் எம்பெருமான் உன் தனக்கு அடியோம் -திருப்பல்லாண்டு -10-என்றும்
உற்று எண்ணில் அதுவும் மற்று ஆங்கு அவன் தன்னது -திருவாய்மொழி -7-9-10-என்றும் –
நெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு -பெரிய திருமொழி -2-8-9-என்றும் –
உயிர்கள் எல்லா வுலகும் வுடையவன் -திருவாய்மொழி -3-2-11-என்றும்–இத்யாதியாலே நிருபாதிக சேஷித்வம் சொல்லிற்று-

ஆக இவற்றாலே -சர்வஞ்ஞத்வம் -சர்வ சக்தித்வம் -அவாப்த சமஸ்த காமத்வம் -பூர்த்தி -நிருபாதிக சேஷத்வம் -பிராப்தி –
சொல்லி ஈஸ்வரனுடைய உபாயத்வம் சொல்லிற்று –

நார சப்தத்தாலே ஈஸ்வரனுடைய சர்வ ஸ்வாமித்வமும் -சர்வ வித பந்துத்வமும் –
சர்வ ஆதாரத்வமும் -சர்வ வித நியந்த்ருத்வமும் சொல்லிற்று -எங்கனே என்னில் –
எவையும் எவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும் -திரு வாய்மொழி –1-9-1-என்றும் –
தன்னுள் அனைத்துலகும் நிற்க நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான் –திருவாய்மொழி -9-6-4-என்றும் –
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் அண்டத் தகத்தான் புறத்துள்ளான் -திருவாய்மொழி -8-8-2-என்றும் –
நானுன்னை யன்றி இலேன் கண்டாய் நாரணனே நீ என்னை யன்றி யிலை -நான்முகன் திருவந்தாதி -7-என்றும்–
இத்யாதியாலே சர்வ ஸ்வாமித்வம் சொல்லிற்று –

சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும் மேலாத் தாய் தந்தையுமவர் -திருவாய் மொழி -5-1-8-என்றும் –
தாயாய் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் -திருவாய்மொழி -7-8-1-என்றும் –
எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கரசு என்னுடை வாணாள் -பெரிய திருமொழி -1-1-6-என்றும் –
தஞ்சமாகிய தந்தை தாயோடு தானுமாய் அவை யல்ல னாய் -திருவாய்மொழி -3-6-9-என்றும் —
-இத்யாதிகளாலே சர்வ வித பந்துத்வம் சொல்லிற்று –

ஆவிக்கோர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் -திருவாய்மொழி -10-10-3-என்றும் –
உன்னை விட்டு எங்கனே தரிக்கேன் -திருவாய்மொழி -7-2-1-என்றும் –
நாட்டினான் தெய்வம் எங்கும் -திருமாலை -10-என்றும் –
நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே -திருவாய் மொழி -5-2-8- என்றும் —
-இத்யாதிகளாலே சர்வ ஆதாரத்வம் சொல்லிற்று –

செய்யேல் தீவினை என்று அருள் செய்யும் என் கையார் சக்கரக் கண்ணபிரான் -திருவாய்மொழி -2-9-3-என்றும் –
நீ யோநிகளைப் படையென்று நிறை நான்முகனைப் படைத்தவன் -திருவாய்மொழி -1-5-3-என்றும் –
செருக்குவார்கள் தீக் குணங்கள் தீர்த்த தேவ தேவன் -திருச் சந்த விருத்தம் -109-என்றும் –
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்று அருள் கொடுக்கும் -திருவாய்மொழி -6-10-11-என்றும் —
-இத்யாதிகளாலே சர்வ நியந்த்ருத்வம் சொல்லிற்று –

இனி சதுர்த்தியாலே –
சேதநருடைய -தேச கால அவஸ்தா பிரகார உசித வ்ருத்ய அபேஷை சொல்லுகிறது -எங்கனே என்னில் –
உள்ள வுலகளவும் யானும் உளன் ஆவன் என்கொலோ -பெரிய திருவந்தாதி -76-என்றும் –
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி -திருவாய்மொழி -3-3-1-என்றும் –
பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிட -நாச்சியார் திருமொழி -4-1-என்றும் –
உருவார் சக்கரம் சங்கு சுமந்து இங்கு உம்மொடு ஒருபாடு உழல்வான் ஓர் அடியானும் உளன் -திருவாய்மொழி -8-3-7-என்றும்
சென்றால் குடையாம் முதல் திருவந்தாதி-53-என்றும் –
மற்றை நம் காமங்கள் மாற்று -திருப்பாவை -29-என்றும்-
அடிமை செய்ய வேண்டும் நாம் -3-3-1- என்றும் –
கூவிப் பணி  கொள்ளாய் -திருவாய்மொழி -8-5-7- என்றும் –
நல்கி யாள் என்னைக் கொண்டு அருளே -பெரிய திருமொழி -1-9-1-என்றும் –
இத்யாதிகளாலே வ்ருத்தி அபேஷை சொல்லித் தலைக் கட்டுகிறது –

விடை ஏழு அன்று அடர்த்து -பெரிய திருமொழி -8-9-3-என்கிற பாட்டை பிரணவ அர்த்தமாக அனுசந்திப்பது
யானே -திருவாய் மொழி -2-9-9-என்கிற பாட்டை மத்யம பத அர்த்தமாக அனுசந்திப்பது –
எம்பிரான் எந்தை -பெரிய திருமொழி -1-1-6-என்கிற பாட்டை த்ருதீய பத அர்த்தமாக அனுசந்திப்பது —
ஒழிவில் காலம் எல்லாம் -திருவாய்மொழி -3-3-1- என்கிற பாட்டை சதுர்த்தி அர்த்தமாக அனுசந்திப்பது —

அகாரத்தோ விஷ்ணுர் ஜகது தய ரஷா பிரளய க்ருன் மகார்த்தோ ஜீவ்ஸ் தது பகரணம் வைஷ்ணவ மிதம் உகாரோஸ் அனந்யார்ஹம் நியமயதி
சம்பந்த மநயோஸ் த்ரயீ சாரஸ் த்ர்யாத்மா-பிரணவ இமமர்த்தம் சமதிசத் -ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த அஷ்ட ஸ்லோகி முதல் ஸ்லோகம் –

திருமந்தரம் திருமுகப் பாசுரம்-அருளிச் செயல் படி எடுப்பு –

————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

வார்த்தா மாலாவில் பிரபத்தி பற்றிய வார்த்தை முத்துக்கள் –

October 2, 2015

வருணன் விஷயத்தில் பெருமாள் பண்ணின பிரபத்தி பலியாது ஒழிந்தது -சரணாகதியின் சீர்மையை அறியும் சரணாகதன் அல்லாமையாலே –
பெருமாள் வருணனை சரணம் புகுகிற போது ப்ரான்முகத்வாதி நியம சஹிதர் ஆனபடியாலே சரணாகதர் ஆவார்க்கு எல்லாம் நியம அபேஷை
உண்டா என்று வேலவெட்டி நாராயண பிள்ளை-நம்பிள்ளையைக் கேட்க -சரணாகதிக்கு நியம அபேஷை உண்டாய் செய்தார் அல்லர் –
இஷ்வாக்குகள் ஏதேனும் ஓன்று செய்யிலும் நியமத்தோடு அல்லது செய்ய மாட்டாத வாசனையாலே-செய்தார் -என்று அருளிச் செய்தார் –

பற்றிற்று எல்லாம் பற்றி அவனையும் பற்றுகை பக்தி —விடுவது எல்லாம் விட்டு தன்னையும் விடுகை பிரபத்தி –

ஸ்வ ஸ்வாதந்த்ர்யம் பீஜ பூதமான சம்சாரத்தில் -அருசியும் – ஸ்வ பாரதந்த்ர்ய மூலமான உசித கைங்கர்யத்தில் ருசியும் –
தன்னுடைய ஞான அனுஷ்டானங்களில் பிராவண்ய புத்தியும் – இதுக்கு அடியான முமுஷூக்களின் சஹவாசத்தில் கர்த்தவ்ய புத்தியும் –
இதைனுடைய விபாக தசையான நித்ய முக்தர் பரம பதத்தில் உத்தேச்ய புத்தியும் —இவை பிரபன்ன நிஷ்டை –
ஸ்வரூபம் ஒரு மிதுனம் என்று இருக்கையும் ஸ்வரூப அநு ரூபமான புருஷார்த்தம் மிதுன விஷயத்தில் பண்ணும் கைங்கர்யம் என்று இருக்கையும் –
ஸ்வரூப விரோதி ஸ்வா தந்த்ர்யம் என்று இருக்கையும் – இவை பரமைகாந்தி நிஷ்டை –
இவை இரண்டு வார்த்தையும் ஆட் கொண்ட வில்லி ஜீயர் அருளிச் -செய்தவை –

பட்டர் ஒருவருக்கு ஹிதம் அருளிச் செய்கிற போது  நம் ஜீயர் -பிராட்டி முன்னிலையாக பற்றுகிற இதுக்கு பிரயோஜனம் என் என்று கேட்க
இவள் சந்நிதியாலே -மிகவும் சாபராதியான காகம் தலை கொண்டு தப்பிற்று – அத்தனைக்கு அபராதம் இன்றியிலே இருக்க இவள்சந்நிதி
இல்லாமையாலே-ராவணன் தலை யறுப்பு உண்டான் -இளைய பெருமாள் பிராட்டி முன்னிலையாக பெருமாள் திருவடிகளைப் பற்றி
தம்மை நில் என்ற சங்கல்ப்பத்தையும் -அழித்துப் பெருமாளையும் பெற்று விட்டார் -மற்றும் ஸ்ரீ விபீஷண ஆழ்வான் -ஸ்ரீ குஹப் பெருமாள்
தொடக்கமானவர் பிராட்டி முன்னிலையாகப் பெற்றார் ஆய்த்து –
முமுஷுப்படி -சூரணை -135-

பிரபன்னன் ஆகையாவது -அநிஷ்ட நிவ்ருத்தியும் -இஷ்ட பிராப்தியும் -நமக்கு எம்பெருமான் பண்ணித் தந்து அருளும் என்று த்வய அனுசந்தான
முகத்தாலே ஒருகால் விஸ்வசித்து இருக்கை –
பிரபத்தி நிஷ்டை யாவது -பிரபத்தி பிரகாரமும் -பிரபத்தி பிரபாவமும் நெஞ்சிலே படுகை –
பிரபத்தி பிரகாரம் நெஞ்சிலே படுகை யாவது -பிரபத்தாவினுடைய க்ருத்யமான பிரபதநத்தை பிராபகம் என்று நினையாது ஒழிகையும் –
பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் ஸ்வா தினம் என்று நினையாது ஒழிகையும் –
பிரபத்தி பிரபாவம் நெஞ்சிலே படுகை யாவது -பிரபத்தி பண்ணினவனுடைய பிரக்ருதியில் பிராக்ருத நிரூபணம் பண்ணாது ஒழிகை
பிரக்ருத் யாதம விவேகம் உடையவன் ஆகில் -பிரபன்னனை பிரபாவத்தை இட்டுக் காணாதே பிரக்ருதியை இட்டுக்  கண்டான் ஆகில் 
பழைய ப்ராக்ருதனாயே விடும் -என்று நம் பிள்ளை அருளிச் செய்வர் –

திருக் கோட்டியூர் நம்பி அந்திம தசையில் -திரு உள்ளக் கருத்தேது -என்று முதலிகள் கேட்க –
சக்கரவர்த்தி திருமகனார் திரு உள்ளக் கருத்தை ஒரு பஷி புண் படுத்திற்று -என்றார் –
ஈட்டில் 6-8-6- இந்த புறா கதை அருளாள பெருமாள் எம்பெருமானார் வார்த்தையாக அருளி இருக்கிறார் -இருவரும்
அந்திம தசையில் இந்த வார்த்தை அருளி இருக்கலாம் –

திருக்கச்சி நம்பி ஸ்ரீ பாதத்திலே ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் ஆஸ்ரயித்து -அடியேனை அங்கீகரித்து அருள வேணும் -என்ன
-நம்பி பெருமாளுக்கு விண்ணப்பம் செய்ய -பெருமாளும் -நம்மை அவனுக்கு சொல்லும் என்ன -நம்பியும் பெருமாள் பிரபத்தியை அருளிச் செய்ய –
ஸ்ரீ வைஷ்ணவரும் க்ருதார்த்தராய் ஷண காலமும் பிரியாதே சேவிக்க -இவருடைய பிரகிருதி பந்துக்கள் இது கண்டு பொறுக்க மாட்டாமல்
இவரைப் பிரித்துக் கொண்டு போய் பிராயச்சித்தம் பண்ண வேணும் என்ன -இவரும் ஆகில் அநந்த சரஸ்சில் தீர்த்தமாடி -வாரா நின்றேன் என்று போந்து
-நம்பி ஸ்ரீ பாதத்திலே தண்டன் இட்டு நிற்க -நீர் போகா விட்டதென் அவர்கள் பொல்லாங்கு சொல்லாமே -என்ன –
அத்தனையோ அடியேனுக்கு என்று சோகம் பொறுக்க மாட்டாமல் -சோகார்த்தராய் பரம பதத்துக்கு எழுந்து அருளினார் –

சம்சார பீதியும் -ப்ராப்ய ருசியும் -ஆகிஞ்சன்யமும் -அநந்ய கதித்வமும் -ஸ்வ தோஷ ஞாபனமும் – -ஸ்வரூப பிரகாசமும் -ஸ்வரூப ஞானமும் –
இவை இறே அதிகாரிக்கு ஸ்வரூபம் –
ஸ்வரூபஞ்ஞன் ஸ்வரூப நிரூபணம் பண்ணுகையாவது -ஸ்வதஸ் சர்வஞ்ஞன் பக்கல் உண்டான நித்ய கைங்கர்ய அந்விச்சா விசேஷ பிரதிபத்தி நிவ்ருத்தி –

உபாசகனை ஈஸ்வரன் புஜிப்பிக்க வேணும் என்று நினைத்து இருக்கும் –பிரபன்னரை ஈஸ்வரன் புஜிக்க வேணும் என்று நினைத்து இருக்கும் –

பிரபன்ன அதிகாரிக்கு கார்யம் ஒன்றாய் இருக்க -மூன்று அவஸ்தை கூடிக் கார்யம் ஆக வேணும் -அவை யாவன –
ஆஸ்ரயண அதிகாரம் -பல அதிகாரம் -போக அதிகாரம் –
இவற்றுக்கு வேஷம் -ஆகிஞ்சன்யமும் -அநந்ய கதித்வமும் -அத்யாவச்யமும் -பரபக்தி பரஞான பரம பக்தியும் –
இவற்றுக்கு விஷயம் -சீலாதி குண விசிஷ்டனுமாய் -ஞான சக்தியாதி குண விசிஷ்டனுமாய் – ஆனந்தாதி குண விசிஷ்டனுமாய் -இருந்துள்ள ஸ்ரீ ய பதி –
இவன் தன் ஆகிஞ்சன்யத்தையும் -அநந்ய கதித்வத்தையும் முன்னிட்டு -ஆச்ரயண அபேஷை பண்ண –
அவனும் தன்  சீலாதி குணங்களை முன்னிட்டு ஆஸ்ரயணீ யனாம் –
இவன் அத்யாவச்யத்தை முன்னிட்டு பல அபேஷை பண்ண -அவன் ஞான சக்தியாதி குணங்களை முன்னிட்டு பல பிரதனாம் –
இவன் பரபக்தி பரஞான பரமபக்தி களை முன்னிட்டு போக அபேஷை பண்ண -அவன் ஆனந்தாதி குணங்களை முன்னிட்டு போக்தாவாம் –

சோமாசி யாண்டான் அருளிச் செய்த வார்த்தை —பகவத் பிரவ்ருத்தி விரோதி -ஸ்வப் பிரவ்ருத்தி நிவ்ருத்தி பிரபத்தி –
பக்தியும் உபாயம் அன்று -பிரபத்தியும் உபாயம் அன்று – பிரபத்தவ்யனே உபாயம் –

பிரபன்னனுக்கு புத்தி பூர்வ அபசாரம் புகுருகைக்கு வழி இல்லை –பிரமாதத்தாலே புகுந்தது ஆகில் -ஞானமும் அனுதாபமும் -ஒரு தலையாக
அபுத்தி பூர்வமாம் இத்தனை –அநுதாபம் பிறந்தது இல்லை யாகில் ஞானம் பிறந்தது இல்லையாகக் கடவது என்று ஜீயர் அருளிச் செய்தார் –

நம் பிள்ளை நம் ஜீயரை -இதர உபாயங்களுக்கு பிரமாணங்களும் பாஹூள்யமாய் அனுஷ்டானங்களும் பாஹூள்யமாய் இருக்க –
இதுக்கு பிரமாணமும் சுருங்கி -அனுஷ்டாதாக்களும் சுருங்கி யிரா நின்றது -இதுக்கு -பிரபத்திக்கு -அடி என் -என்று – கேட்க –
நான் நினைத்து இருக்கும் அதுக்கு அவ்வருகு உமக்கு வேண்டுவது ஓன்று உண்டோ -இருவர் கூடி ஓர் ஆற்றில் இழிந்து போகா நின்றால்
-முந்தினவன் முந்தாதவன் கையைப் பிடிக்கும் போது -இதுக்கு ஒரு பிரமாண அபேஷை உண்டோ -வேண்டில் பிரமாணங்களாலும் ஒரு குறை இல்லை –
இனி பிரமாணங்கள் காண வேணும் என்று நினைத்து இரேன் – இருந்ததே குடியாக சம்சாரிகளாய் -நாலத்திரண்டு உத்தம அதிகாரிகளாய் இருந்தால்
அவர்களுக்கு ஒரு உத்கர்ஷைதையும் இவர்களுக்கு ஒரு அபகர்ஷைதையும் உண்டோ -ஸ்வரூப பிராப்தம் என்னும் அத்தனை ஒழிய –
ஸ்வர்க காமோ யஜேத- என்கிறபடியே ஸ்வர்க்க பலத்தை அனுபவிக்க சாதனமாக இதுக்கோ உமக்கு ஆள் பற்றப் புகுகிறது -என்று அருளிச் செய்ய
பிள்ளையும் க்ருதார்த்தரானார் –

பட்டர் திருவணையாட எழுந்து அருளா நிற்க -சேது ஸ்நானம் செய்தல் -பாதிரிக் கொடியிலே -போது வைகி வந்து -அஸ்தனமாக
-ஒரு வேடன் அகத்திலே புக-அவன் தான் இருந்த ஆசனத்தையும் வாங்கிப் பொகட்டு -ஒரு கட்டிலையும் கொடுக்க -அதிலே எழுந்து அருளி இருந்து
-இவன் நம்முடைய வைபவத்தை அறிந்து செய்தான் அல்லன் -க்யாதி பரனாய் செய்தான் அல்லன் -நம்மாலே உபக்ருதனாய்ச் செய்தான் அல்லன் –
தன்னுடைய கிருஹத்திலே புகுந்தோம் என்கிற அபிமானம் இ றே அவன் இது செய்ய வேண்டிற்று –
ஈஸ்வரன் தன் அபிமானத்திலே ஒதுங்கினாரை என் நினைந்து இருக்கிறானோ -என்று அநு சந்தித்து அருளி – ஐயா இற்றைக்கு விசேஷம் என் என்று கேட்டருள -நாயன்தே காட்டுக்கு வேட்டைக்கு போனேன் – அங்கே ஒரு முசல் குட்டியைப் பிடித்தேன் -அதனுடைய தாயானது பின்னே முடுகி வந்து -ஒரு எரி
வெளி யானவாறே -பொட்டை வெளி -முன்னே வந்து கும்பிட்டு கிடந்தது -எனக்கு அத்தைக் கண்டு வ்யசனமாய்க் குட்டியை விட்டேன் -என்றான் –
இத்தைக் கேட்டு -இது சேதனனுக்கு இல்லாத ஓன்று -பரம சேதனனுக்கு உள்ளது ஓன்று -மாமேகம் சரணம் வ்ரஜ என்று
-இம் முசலுக்கு உபதேசித்தார் இல்லை – அரி பிராணான் பரித்யஜ்ய ரஷி தவ்ய க்ருதாத்மனா -என்று வேடனுக்கு உபதேசித்தார் இல்லை –
அவ்யவதாநேன சரணாகதி பலித்ததே -இதொரு பிரமாண பிரசித்தி என் -என்று அருளிச் செய்தார் –

முதலியாண்டான் அருளிச் செய்த வார்த்தை
பிரபன்னன்  யாவச் சரீரம் கால ஷேபம் பண்ணும்படி எங்கனே என்னில்
தேகத்தில் ஆத்ம புத்தி தவிர்கையும்-தேக அனுபந்திகள்ளான பதார்தங்களிலே மமதா புத்தி தவிர்கையும் –
தேகாத்பரனான ஆத்மாவை தானாக நினைத்து இருக்கையும் -ஸ்வ ரஷணத்தில் பிராப்தி இல்லாத பாரதந்த்ர்யமே ஸ்வரூபம் என்று இருக்கையும் –
பாரதந்த்ர்யத்துக்கு எல்லை ஏது எனில் -ததீய சேஷத்வ பர்யந்தம் என்று இருக்கையும் ,–உத்தேச்யரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் விஷயத்திலும் –
கரண த்ரயத்தாலும் ஆனவளவும் அநு கூலராய் போரவும் -வருந்தியும் பிரதி கூல்யம் தவிரவும் -ஆசார்ய ருசி பரிக்ருஹீதமான த்வயார்தம் நெஞ்சில் பட அனுசந்திகையும் -உகந்து அருளின நிலங்களிலே பலகாலம் புக்கு முகம் காட்டவும் -அருளிச் செயலைக் கொண்டு போது போக்கையும் -ந்யாயார்ஜிதமான த்ரவ்யத்தாலே ஷூந நிவ்ருத்தி மாத்ரத்திலே பர்யாப்தி பிறக்கவும் -தேகாத்ம அபிமான நிவ்ருத்தி பூர்வகமாக சித்தோ உபாய வ்யவஸ்தையும் -இவை இத்தனையும் ஆசார்ய கடாஷத்தாலும் -எம்பெருமான் விஷயீ காரத்தாலும் ஸித்திக்கும் என்று அத்யவசித்து இருக்கையும் –
ஆசார்ய சந்நிதி இல்லாத போது விடாய்த்தவன் தண்ணீர் பெற்றான் ஆகிலோ என்னுமா போலே யிருக்கவும் -பகவத் சந்நிதி இல்லாதபோது -நடு வழியிலே பசித்தவன் ஊரைச் சேரப் போமா போலே இருக்கவும் – இவ்வதிகாரிக்கு ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸ்ரீ பாத தீர்த்தம் -ஜாதமான பிரஜைக்கு தாய் முலைப் பாலைப் போலே -எம்பெருமானுடைய தீர்த்தம் பசுவின் பாலும் நெய்யும் போலே -ஆழ்வார்கள் அருளிச் செயல் அமிர்த பானம் போலே -சாமான்ய சாஸ்திர ஸ்ரவணம் அநபிமத போஜனம் போலே -விவித பலங்களான நாநாவித பகவத் மந்திர ஜபாதிகள் வாஸனா பலத்தாலே வந்ததாகில் சம்சார தர்ம அனுவர்தனம் போலே -த்வயர்த்த அனுசந்தானம் ப்ராப்ய தேச வாஸ ஸூ க சமானம் என்னலாம் இத்தனை இறே -மற்றுச் சொலலாவது இல்லை –

பத்தன் தன்னை பிரகிருதி என்று இருக்கும்–விஷயீ தன்னை காமுகன் என்று இருக்கும்–கேவலன் தன்னை ஸ்வ தந்த்ரன் என்று இருக்கும்
சாஸ்த்ரி தன்னை சர்வஞ்ஞன் என்று இருக்கும்–கர்மீ தன்னை போக்தா என்று இருக்கும்–ஜ்ஞானி தன்னை வ்ரக்தன் என்று இருக்கும்
பக்திமான் தன்னை மோஷ சாதனன் என்று இருக்கும்–பிரபன்னன் தன்னை அசித் என்று இருக்கும் –

ஓர் ஆசார்யன் ஸ்ரீ பாதத்திலே இரண்டு பேர் ஆஸ்ரயிக்க -ஒருவர் ஜ்ஞாநாதிகராக ஒருவர் சம்பந்த மாத்ரமே யாய் இருப்பான் என் -என்னில்
பாபம் ஷீணம் ஆகாமை–அப்படியானால் ஆஸ்ரயிக்க கூடுமோ என்னில் யாலே
பாபம் தான் த்ரிவித மாகையாலே கூடும் -எங்கனே என்னில் -ஒரு ஸ்திரீக்கு மூன்று பிரதிபந்தகம் உண்டாமா போலே –
அவையாவன -பானிக்ரஹனம் பண்ண ஒட்டாத பாபமும் பர்த்தாவோடு சம்ச்லேஷிக ஒட்டாத பாபமும் -புத்திரன் இன்றிகே இருக்கிற பாபமும் –
இவை பர்வ க்ரமத்தாலே போமா போலே அதிகாரிக்கும் சமர்பண விரோதி ஷயமும் சாதன விரோதி ஷயமும் -ப்ராப்தி விரோதி ஷயமும் என்ற
இவை மூன்றும் பர்வ க்ரமத்திலே போக வேண்டுமாகையாலே –

வைஷ்ணவன் என்றும் -ஏகாந்தி என்றும் -பரமைகாந்தி என்றும் -ஆகாரம் மூன்று –
வைஷ்ணவன் ஆகிறான் -தேவதாந்திர நிவ்ருத்தி பூர்வகமாக பகவத் சேஷத்வ ஜ்ஞானம் பிறந்தவன் –
ஏகாந்தி யாகிறான் -சாதநாந்தர நிவ்ருத்தி பூர்வகமாக ஸித்த ஸாதனம் ஸ்வீகாரம் பண்ணினவன் –
பாரமை காந்தி யாகிறான் -பிரயோஜனாந்தர நிவ்ருத்தி பூர்வகமாக பரம ப்ராப்ய ருசி பிறந்தவன் –

வைஷ்ணவன் அக்ருத்யத்தை பாபம் என்று தவிரும் —ஏகாந்தி அக்ருத்யத்தை ஸ்வரூப ஹானி என்று தவிரும் – பரமை காந்தி அக்ருத்யத்தை ருசி இல்லாமையாலே தவிரும் – அன்னமென்ன நடையினார் கலவியை அருவருத்த அஞ்சினாயேல் -பெரிய திருமொழி -9-7-2- என்னக் கடவது இ றே –

வைஷ்ணவன் க்ருத்யத்தை அதிகாரி சம்பத்திக்காக செய்யும் – ஏகாந்தி க்ருத்யத்தை லோக சங்க்ரஹதயா கர்த்தவ்யம் என்று செய்யும் –
பரமை காந்தி க்ருத்யத்தை கிருபையாலே செய்யும் –

வைஷ்ணவன் கைங்கர்யத்தை சாதனம் என்று செய்யும் -ஏகாந்தி கைங்கர்யத்தை கால ஷேபம் என்று செய்யும் –
பரமை காந்தி கைங்கர்யத்தை ராக ப்ராப்தி என்று செய்யும் –

சாந்தனுக்கு சத்வோத்ரேக ஹேது -சத்வோத்தரருடைய சரீராஹார நிரூபணம் பண்ணி சருகு திரட்டாத சம்யக்ஜ்ஞான நிஷ்டை –
ஸ்வரூபஞ்ஞனுக்கு ஸ்வ வர்ண அநு கூல மான ஸூஹ்ருத் தர்சனமே சர்வ அபேஷிதம் -ஸ்வ ரஷணத்துக்கு பரேச்ச அநு கூலமான ஸ்வ சேஷத்வமே ஸ்வரூப உபாய உக்தம் –சத்வஸ்தனுக்கு ஸ லஷ்மீ காநுபவ சாதனம் சத்வச்த விஷய லஷ்மீ கத சம்பந்த ஸார ஜ்ஞானமே –

சாந்தன் ஆகிறான் சதுர்வித அஹங்காரம் கழித்தவன் -அவை யாவன தேகத்தில் அஹங்காரமும் – ஸ்வரூபத்தில் அஹங்காரமும் –
உபாயத்தில் அஹங்காரமும் – உபேயத்தில் அஹங்காரமும் – தேகத்தில் அஹங்காரம் ஆவது -தேகத்தை தானாக நினைக்கையும் –
தேக அனுபந்திகளான பதார்தங்களிலே மமதா புத்தி பண்ணுகையும் – தேகாந்தர அனுபவத்தில் புருஷார்த்த புத்தி பண்ணுகையும் –

பத்தன் அவித்யா தீநன்–சாஸ்த்ரி புண்ய பாபாதீநன்–கேவலன் ஸ்வ ஸ்வரூப அதீநன்
முமுஷு பகவத தீநன்–பிரபன்னன் ஆசார்ய அதீநன்–பிரபத்தி நிஷ்டன் ததீய அதீநன் .

பிரபன்னத்வம் ஆவது –
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் –திருவாய்மொழி -5-8-8-என்றும் —
வங்கத்தின் கூம்பே றும் மாப்பறவை போன்றேன் -பெருமாள் திருமொழி -5-5-என்றும் –
அருள் நினைந்தே அழும் குழவி அது போன்று இருந்தேனே -பெருமாள் திருமொழி -5-1-என்றும்
அருளே புரிந்து இருந்தேன் -பெரியாழ்வார் திருமொழி -5-4-1-என்றும் –
கடைத்தலை இருந்து வாழும் -திருமலை -38 என்றும் –
படியாய் கிடந்தது -பெருமாள் திருமொழி -4-9-என்றும்
அவ்வருள் அல்லன அருளும் அல்ல -திருவாய்மொழி -9-9-6-என்றும் —
நல்லான் அருள் அல்லால் நாமநீர் வையகத்து பல்லார் அருளும் பழுது -முதல் திருவந்தாதி -15-என்றும் –
துணியேன் இனி நின் அருள் அல்லது எனக்கு -பெரிய திருமொழி -11-8-8-என்றும் –
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -திருவாய்மொழி -5-8-3-என்றும்
சேமம் செங்கோன் அருளே -திரு விருத்தம் -27 என்றும்
அவன் செய்யும் சேமம் -திருவாய்மொழி -7-5-10 என்றும் –
அவன் செய்வது செய்து கொள்ள -பெரியாழ்வார் திருமொழி -3-7-9-என்றும்– இருக்கை

முமுஷுத்வம் ஆவது –
அடியேற்கு வானுலகம் தெளிந்தே என்று எய்வது -பெரிய திருமொழி -6-3-8-என்றும் –
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -திருவாய்மொழி -2-3-10-என்றும் –
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -திருவாய்மொழி -6-9-3-என்றும் –
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் -திருவாய்மொழி -9-3-7-என்றும் –
செந்நாள் எந்நாள் -திருவாய்மொழி -5-8-3-என்றும் –
முகப்பே கூவிப் பணி கொள்வாய் -திருவாய்மொழி -8-5–7-என்றும் –
உனக்கு ஆட் பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ -திருவாய்மொழி -5-8-10–என்றும் –
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ -திருவாய்மொழி -3-2-2-என்றும்
மங்கவொட்டு -திருவாய்மொழி -10-7-10-என்றும் இருக்கை –

காட்டுத் தீ சூழின் போக்கடியற்ற ம்ருகாதிகளைப் போலே -தாபத்ரயாத்மகமான சம்சார அனுபவ பீதரான முமுஷுகளுக்கு ஆசார்யன் முன்னிலை யாக பிரபத்தி
அநுஷ்டான பிரகாரம் சொல்லுகிறது -ஸ்ரீ விபீஷண ஆழ்வான் ராவணனை குறித்து ப்ரதீயதாம் தாசரதாய மைதிலீ -என்று கொண்டு பெருமாள் திருவடிகளில் பிராட்டியை சமர்ப்பி -என்று அருளிச் செய்தால் போலே –
ஆசார்யனும் முமுஷுவை குறித்து -இவ்வாத்மாவை எம்பெருமான் திருவடிகளில் சமர்ப்பி -என்றும் – ஸ்ரீ விபீஷண ஆழ்வான் பெருமாள் திருவடிகளை அடைகைக்கு – கதம் நு ராமாத் பவிதா பயம் ந -என்று கொண்டு ப்ரஹச்தாதி வாக்ய தோஷ தூஷிதமான ராவணன் ஹிருதயம் போலே –
ஆசார்யன் பிரசாதித்த வார்த்தையும் பிராக்ருத சஹ வாஸ தோஷ தூஷிதமான முமுஷுவின் ஹிருதயத்தில் தொங்காது –
-ஸ்ரீ விபீஷண ஆழ்வான் பெருமாள் திருவடிகளை அடைகைக்கு-வத்யதா மேஷ தீவ்ரேண தண்டேன சசிவைஸ் சஹ -என்று கொண்டு
மகாராஜர் சொன்ன வார்த்தைக்கு ஸ்ரீ விபீஷண ஆழ்வான் ஹ்ருஷ்டராய் நின்றாப் போலே
முமுஷுவும் ஒரு ஞாநாதிகர் நெருக்கிச் சொன்ன வார்த்தைக்கு அதி ப்ரீதனாய் இருப்பான் –
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் பெருமாள் திருவடிகளை அடைகைக்கு –பரித்யக்தா மயா லங்கா மித்ராணி ச தநாநி ச -என்று பரிக்ரஹமானவற்றை விட்டால் போலே முமுஷுவும் பகவத் விஷயம் சொல்லப் போகாத தேசத்தை விட்டுப் போவான் ஸ்ரீ விபீஷண ஆழ்வான் பெருமாள் திருவடிகளை அடைகைக்கு
கச்த ஏவ வ்யதிஷ்டத-என்று நிராலம்பனாய் நின்றாப் போலே முமுஷுவும் எம்பெருமான் திருவடிகளை அடைகைக்கு உபாயாந்தர சூன்யமாய் இருப்பான் –
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் பெருமாள் திருவடிகளை அடைகைக்கு – த்யக்த்வா புத்ராம்ச தாராம்ச ராகவம் சரணம் கத -என்று அனுபாதேயங்களை விட்டு போந்தாப்
போலே முமுஷுவும் எம்பெருமான் திருவடிகளை அடைகைக்கு விலங்கான விரோதிகளை விடுவான் -ஸ்ரீ விபீஷண ஆழ்வான் பெருமாள் திருவடிகளை
அடைகைக்கு -ஆஜகாம முஹூர்த்தேன யத்ர ராமஸ் ஸ லஷ்மண -என்று கொண்டு பெருமாள் எழுந்து அருளி இருந்த தேசமே உகந்து வந்தாப் போலே முமுஷுவும் எம்பெருமான் உகந்து அருளின திவ்ய தேசமே தனக்கு தஞ்சமாக பற்றுவான் – ஸ்ரீ விபீஷண ஆழ்வான் பெருமாள் திருவடிகளை அடைகைக்கு -நிவேதயத மாம் ஷிப்ரம் – ஆனைய நம் ஹரிஸ் ஸ்ரேஷ்ட -என்கிற இடங்களில் ஸ்ரீ விபீஷண ஆழ்வான் ஒருவனுமே ப்ரஸ்துதனாக கூட வந்த முதலிகளுக்கு இழவு பேறு ஒத்தாப் போலே முமுஷுக்களுக்கு எம்பெருமான் திருவடிகளிலே ஆசார்யன் பண்ணின பிரபத்தியே அமையும் -ஸ்ரீ விபீஷண ஆழ்வான் பெருமாள் திருவடிகளை அடைகைக்கு ததஸ்து  ஸூ க்ரீவ வசோ நிசம்ய தத் ஹரிஸ் வரேணாபி ஹிதம் நரேஸ்வர விபீஷனே நாசூ ஜகாம சங்கமம் பதத்ரி ராஜேன யதா புரந்தர -என்று மகாராஜர் முன்னிலையாகபெருமாள் விபீஷண ஆழ்வானை கைக் கொண்டு அருளினால் போலே
முமுஷுவையும் ஆசார்யன் முன்னிலையாக எம்பெருமான் கைக்கொண்டு அருளும்

இப்படி கைக் கொண்டு அருளப் பட்ட பிரபன்னன் -சம்சார மண்டலத்திலே இருக்கும்
இருப்பை -பிராட்டி ராவண பவனத்திலே அசோக வநிஹையிலே இருந்து காட்டினாள் –
1-பிராட்டிக்கு ராவண சம்பந்தம் போலே ஸ்ரீ வைஷ்ணவனுக்கு உடம்போடே சம்பந்தம் –
2-பிராட்டிக்கு ஏகாஷீ ஏக கரணிகளைப் போலே ஸ்ரீ வைஷ்ணவனுக்கு அஹங்கார மமகாரங்கள் –
3-பிராட்டியை பெருமாள் திருவடிகளில் நின்றும் பிரிக்கைக்கு தோற்றின மாரீசனைப் போலே -முடிகைக்கு தோற்றின -விஷய ப்ராவண்யம்
4-பிராட்டியை தர்ஜன பர்த்ச்நாதிகளைப் பண்ணின ராஷசிகளோடே சம்பந்தம்-ஸ்ரீ வைஷ்ணவனுக்கு புத்ர மித்ராதிகளோடே சம்பந்தம் –
5-பிராட்டிக்கு திருவடி தோற்றரவு போலே ஸ்ரீ வைஷ்ணனுக்கு ஆசார்யன் தோற்றரவு
6-பிராட்டிக்கு திருவடி வர்ஷித்த ராம குணம் போலே ஸ்ரீ வைஷ்ணவனுக்கும் அருளிச் செயல்
7-பிராட்டிக்கு திருவாழி மோதிரத்தின் வரவு போலே ஸ்ரீ வைஷ்ணவனுக்கும் ஆசார்யன் உபதேசித்த குரு பரம்பரை
8-பிராட்டிக்கு திருவாழி மோதிரம் போலே ஸ்ரீ வைஷ்ணவனுக்கு ஆசார்யன் பிரசாதித்த திருமந்தரம்
9-பிராட்டிக்கு திருவாழி மோதிரத்தைப் பார்த்து -அவ்வழியாலே அணி விரலைக் குறித்து -அவ்வழியாலே திருக்கை தொடக்கமாக அணைத்த திருத்தோள்
திருமேனி எல்லாம் அணைத்து தரித்தால் போலே ஸ்ரீ வைஷ்ணவனும் ஆசார்யன் பிரசாதித திருமந்த்ரத்தில் அர்த்த அனுசந்தானதொடு தரித்து இருப்பன்
10-பிராட்டிக்கு இளைய பெருமாள் திறத்தில் அருளிச் செய்த வார்த்தை பெருமாள் திருவடிகளை அகற்றினால் போலே -ஸ்ரீ வைஷ்ணவனுக்கும் பாகவத அபசாரம்
11-பிராட்டிக்கு விரோதிகளான ராவணாதிகளை துணித்து பெருமாள் பிராட்டியை திரு அயோதியை ஏறக் கொண்டு எழுந்து அருளினால் போலே
ஸ்ரீ வைஷ்ணவனுக்கும் விரோதியான பிரகிருதி சம்பந்தத்தை சவாசனமாக அறுத்து இந்த ஆத்மாவை எம்பெருமான் பரம பதத்துக்கு ஏறக் கொண்டு போய்
நித்ய முக்தரோடு ஒக்க நித்யகைங்கர்யத்தை கொண்டு அருளும் – இப்பத்து வார்த்தையும் அனுஷ்டானபர்யந்தமாக உடைய ஸ்ரீ வைஷ்ணவனுக்கு
இவ்விடம் தான் பரமபதம் –

தேவகிப் பிராட்டி வார்த்தை –
ந கஸ்சிநன்அபராத்யதி -என்னுமவள் ஆகையாலே பிராட்டியும் தன் விஷயத்தில் அபராதம் பொறுக்கும்
-மித்ர பாவேன -என்னுமவன் ஆகையாலே ஈஸ்வரனும் தன் விஷயத்தில் அபராதம் பொறுக்கும்
-பாகவத விஷயத்தில் அபசாரம் இவர்கள் தங்களுக்கே ஆகிலும் உயிரும் உடலும் பிரியும்படி இ றே இருப்பது –
புருஷகார பூதையான பிராட்டி ஒரு கையும் -பிரபத்தி உபதேசம் பண்ணின ஆசார்யன் ஒருகையுமாக பிராப்ய ஸ்தலம் ஏறப் பிடித்துக் கொண்டு போகிலும்
பிரதிபந்தகமாயே விடும் -பிரபன்ன விஷய அபசாரம் -இதுக்கு உதாஹரணம் விண்ணப்பம் செய்வார் திறத்தில் அபசாரம் பண்ணின ஸ்ரீ வைஷ்ணவர் கதை –

அடும் சோறாவன -அனுகூலர் ஆதரத்தோடு இடுமதும் -சிஷ்யன் இழவாளானாக கொடுக்குமதுவும் -முஷ்டிபுக்கு ஜீவிக்குமதும் –
இவ்வர்த்தத்தில் பிரபன்னர் அருளிச் செய்யும்படி –
போக்ய புத்தயா  கைங்கர்யம் பண்ணி ஜீவிக்குமதுவும் -அனுகூலர் ஆதரத்தோடு கொடுக்குமதுவும் -அவன் திருக்கை சிறப்பு -ஸிஷ்யன் கொடுக்குமது கருவூலத்தார் கொடுக்கக் கொள்ளுகை -முஷ்டி புகுந்தது அவன் பிறந்த -பிரித்த -பேரளவிலே தண்டிக் கொண்ட மாத்ரம் -அதிலும்
பேர் இழிவிலே ப்ரீதி விஷாதம் பிறவாதோ என்ன – பெறுவதும் ஒரு முஷ்டி இழப்பதும் ஒரு முஷ்டி யாகையாலே -அப்போது உச்சரிக்கிற
பகவத் நாமத்தோடே ஷமிக்கும் -என்று பிள்ளை அருளிச் செய்வர் –

சோமாசி யாண்டான் -ஸ்ரீ வைஷ்ணவனுக்கு விஷய ப்ராவண்யம் தன்னை உணர்ந்தாலும் கூடாது தன் சத்தையை உணர்ந்தாலும் கூடாது
சம்பந்தத்தை உணர்ந்தாலும் கூடாது சரீரத்தை உணர்ந்தாலும் கூடாது -என்று அருளினார் –

ஸ்ரீ வைஷ்ணவனை ஸ்ரீ வைஷ்ணவர்கள் கொண்டாடப் புக்கால்–ஆசார்ய வைபவம் இருக்கும் படியே –
உடையவர்கள் செய்யுமதுக்கு கேள்வி உண்டோ-என்றும் அவர்கள் அருளிச் செய்கையாலே உண்டாகக் கடவது என்றும் -நினைக்கக் கடவன் –

ஸ்ரீ வைஷ்ணவர் பரிபவத்தில் அனுசந்திக்கும் படி -இவர் நமக்கு கழுத்துக்கு மேலாக உறவு பண்ணி விடாதே -அபிமாநித்த
இத்தாலே சிஷா ரூபமாக சொல்லப் பெற்றோமே -என்று -இவருக்கு அடிமையான ஸ்வரூபம் உஜ்ஜீவித்தது -என்று க்ருதார்த்தனாவான் –

ஸ்ரீ வைஷ்ணவன் ஸ்தோத்ரம் பண்ணினால் நமக்குள்ள குணங்களைச் சொன்னான் என்று -உகக்கக் கடவன் அல்லன் -இல்லாத குணங்களை ஏறிட்டுச் சொன்னான்
என்று வெறுக்கக் கடவன் அல்லன் -சீற்றத்துக்கு விஷயமான நம்மைக் குறித்து – நிர்ஹேதுகமான பிரசாதித்த படியால் உகந்து -இவர் சொன்ன குணங்கள் நமக்கு
முன்பு இல்லையாகிலும் -இவர் பிரசாதத்தாலே மேல் உண்டாகக் கடவது -என்று விச்வசித்து இருப்பன் -சம்சாரி ஸ்தோத்ரம் பண்ணினால் -அடியானவனுடைய
ஸ்தோத்ரதுக்கு உகப்பான் நாயன் அன்றோ -என்று தான் அதில் அந்வயம் அற்று சாந்தனாய் இருப்பன் -இவனுடைய ஸ்தோத்ரம் தேக ஸ்பர்சியாய் தோன்றின போது தேகத்தில் இக்குணங்கள் இல்லை -இவன் தன வாசனையாலே பிரமித்தான் இத்தனை – இக்குணங்கள் ஆத்ம ஸ்பர்சி அன்று -என்று இருப்பன் –

ஒருவனுக்கு பாரதந்த்ர்யமும் வ்யவசாயமும் வ்ருத்தியும் வேண்டும் –பௌ ருஷத்தை ஏறிட்டுக் கொண்டு பாரதந்த்ர்யத்தை அழித்தான் –
வ்யாபாரத்தை ஏறிட்டுக் கொண்டு வ்யவசாயத்தை அழித்தான் –விஷயாந்தர அனுவ்ருத்தியை ஏறிட்டுக் கொண்டு வ்ருத்தியை அழித்தான் –

ஆத்ம சாஷாத்காரஞானம் பிறவாமையாலே ஸ்வ தேகாத்ம அபிமானம் போகிறதில்லை –பகவத் பாரதந்த்ர்ய சாஷாத்காரஞானம் பிறவாமையாலே ஸ்வ ஸ்வா தந்த்ர்யம் போகிறதில்லை –பகவத போக்யதா விஷய சாஷாத்காரஞானம் பிறவாமையாலே விஷய ப்ராவண்யம் போகிறதில்லை –

உடையவன் உடைமையை முன்னிட்டுக் கொண்டு கிடந்தான்–உடைமை விநியோகத்தை முன்னிட்டுக் கொண்டு கிடந்தது
-ப்ரீதி உபாயத்தை முன்னிட்டுக் கிடந்தது-பர ஸ்வரூபத்தை முன்னிட்டுக் கொண்டு கிடக்கில் ஸ்வ ஸ்வரூபத்தை அறிந்திலன் –
ஸ்வ ஸ்வரூபத்தை முன்னிட்டுக் கொண்டு கிடக்கில் ஜீவனத்தை அறிந்திலன் –

நாட்டாரோடு இயல் ஒழிந்து நாரணனை நண்ணினான் -திருவாய்மொழி -10-6-2–ஒருவன் -நாட்டாரோடு வார்த்தை சொல்லக் கடவன் அல்லன் -ஆரோடு சொல்லுவது என்னில் –நாராயணனுக்கு வார்த்தை சொல்லுதல் –நாராயண பரமான நெஞ்சுக்கு சொல்லுதல் –நாராயண பரரோடே சொல்லுதல் –
நாராயண பரமாக வேண்டும் என்பாருக்கு சொல்லுதல் செய்யக் கடவன் –

முமுஷுவாய் பிரபன்னனாய் இருக்குமவனுக்கு அஞ்சுகோடி த்யாஜ்யமாய்–மூன்று கோடி உபாதேயமாய் இருக்கும் -அதென் என்னில் என்போலே என்னில் –
பதி வ்ரதையாய் இருப்பாள் இரு ஸ்திரீக்கு அஞ்சு கோடி-த்யாஜ்யமாய் மூன்று கோடி உபாதேயமாய் ஆனால் போலே –
அவளுக்கு த்யாஜ்யர் -கன்னிகைகள் -வேச்யைகள் -வேச்யாபதிகள் -ஒருவனுக்கு கைகொடுத்து வைத்து எழுந்து போனவள் -உள்ளே இருந்து மயக்குகிறவள்
இனி உபாதேயர் ஆவார் -மாதா பிதாக்கள் -தன் பர்த்தாவுக்கு அவர்ஜநீயரான பந்துக்கள் –தன்னோட்டை பதி வ்ரதைகள் –
இவனுக்கு த்யாஜ்யர் -சம்சாரிகள் -தேவதாந்தரங்கள் -தேவதாந்திர பரதந்த்ரர்கள் –தர்சனத்தில் புகுந்து நின்று தர்ச நாந்திரியாய் போனவர்கள் –
ரூப நாமங்களை உடையராய் உள்ளே புகுந்து அநந்ய பிரயோஜனர் உடன் மசக்கு-பரலிட்டு திரிகிறவர்கள் –
இனி உபாதேயர் -ஆசார்யர்கள் -ஸ்ரீ வைஷ்ணவர்கள் -சபிரமசாரிகள்

ஒரு வைஷ்ணவனோடே சஹ வாஸம் பண்ணும் போது அவனுடைய குண தோஷங்கள் இரண்டையும் நிரூபிக்க வேண்டும் -நிரூபிக்கிறது குணம் கண்டு
ஸ்துதிக்கவும் -தோஷம் கண்டு தூஷிக்கவும் அன்று -நாமே செறுகைக்கும் பற்றுகைக்கும் -என்று ஆச்சான் பிள்ளை –

ஸ்வரூப நாசகரோடு செறிகையும் அநர்த்தம் -ஸ்வரூப வர்த்தகரோடு செறியாது இருக்கையும் அநர்த்தம் –
என்றும் அசத் சங்கதி அனர்த்தத்தில் தலைக்கட்டும் சத் சங்கதி சதா பச்யந்தியில் தலைக்கட்டும் -என்று ஆச்சான் பிள்ளை வார்த்தை

பகவத் சேஷத்வம் சர்வ சாதாரண முமாய் -சேதனனுக்கு சர்வ அசாதாரணமுமாய் இருக்கும் -பகவத் சேஷ வ்ருத்தி சர்வ ஜன சாதாரணமுமாய் இருக்கும் –
பாகவத சேஷத்வமும் பாகவத கைங்கர்யமும் பரமை காந்திக்கே அசாதாரணம் –

பாகவத வைபவம் சொல்லா நிற்க செய்தே -ஒருவர் பகவத் விஷயம் சொல்ல இப்போது விசேஷம் சொல்லுகிற இடத்தில் சாமாந்யம் என் –
என்று ஆச்சான் பிள்ளை –

பாகவத சேஷத்வ விதுரமான பகவத் சேஷத்வமும் -தேகாத்ம அபிமானம் போலே பொல்லாது என்று முதலி யாண்டான் –
திருமங்கை ஆழ்வாருக்கு ததீய விஷயத்தில் உண்டான ஊற்றம் சொல்லுகிறது –இது இவரின் மடிபிடி ரகஸ்யம் என்பார்கள் –
நம்பி தன் நல்ல மா மலர் சேவடி சென்னியில் சூடியும் தொழுதும் எழுந்தாடியும் -பெரிய திருமொழி -7-3-10-
பாசுரத்தை கேட்டு இவர் கால்வாசி அறிந்தவராய் இருந்தார் என்று -ஆழ்வீர்
திருச்சேறையிலே வாரீர் -உம்முடைய அபேஷிதத்தை தலைக்கட்டித் தருகிறோம் –
என்ன -இவர் திருச்சேறையிலே எழுந்து அருள -இவ் வாழ்வார் உடைய அசைந்த வளையத்திலே புனுகை வழிய வார்த்தால் போலே –
மா மதலைப் பிரான் -தம்முடைய திருவடிகளை கொண்டு வந்து வைக்கப் புக -அத்தை புறம்கையாலே தட்டி –
உன் பொது நின்ற பொன்னம் கழலோ -மூன்றாம் திருவந்தாதி -88-என் தலை மேல் இருப்பது
-உன் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலார் -பெரிய திருமொழி -7-4-1–என்ன
அத்தைக் கேட்டு லஜ்ஜா விஷ்டனாய் -உமக்கு அந்தர்யாமியாய் இருந்தோமே -என்ன –
எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே -பெரிய திருமொழி -7-4-2-என்ன –
ஆகிலும் அர்ச்சாவதாரமாய் ஸு லபனாய் இருந்தோமே என்ன –
கடல் மல்லைத் தல சயநத்து உறைவாரை கொண்டாடும் நெஞ்சுடையார் அவர்எங்கள் குல தெய்வமே -பெரிய திருமொழி -2-6-4-என்ன –
அவர்கள் எங்கே உளர் என்ன –
போதோடு புனல் தூவும் புண்ணியரே விண்ணவரில் பொலிகின்றாரே -பெரிய திருமொழி -2-6-4- என்று அவர்கள் ஸ்வரூபத்தை சொல்ல
-கண்கள் ஆரளவும் நின்று கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே -பெரிய திருமொழி -7-10-9-என்கிறபடியே
கண்ணுக்கு இரை இடுகைக்கும் நெஞ்சுக்கு அனுசந்தானமாக இரை இடுகைக்கும் நாம் வேணுமே -என்ன
-வண் சேறை எம்பெருமான் அடியார் தம்மைக் கண்டேனுக்கு இது காணீர் என்னெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே -பெரிய திருமொழி -7-4-6-என்ன
ஆகில் சர்வ கந்தஸ் சர்வ ரச -என்கிறபடியே உமக்கு ரசாயன சேவைக்கு நாம் வேண்டுமே -என்ன –
எம்பெருமான் தாளை நாளும் சிந்திப்பாருக்கு என்னுள்ளம் தேனூறி எப்பொழுதும் தித்திக்குமே -பெரிய திருமொழி -7-4-5-என்ன –
ஆகில் உமக்கு உபாய உபேயத்துக்கு நாம் வேணுமே என்ன -உபாயத்துக்கு முற்பாடர் ஆகையாலும் -உபேயத்துக்கு எல்லை நிலம் ஆகையாலும் -இருந்த நாளுக்கு உசாத் துணை யாகையாலும் -பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே -பெரிய திருமொழி -7-4-4- என்ன –
ஆகில் அடியிலே நமக்கு தாசர் என்று புகுந்தீரே -என்ன –
மற்று எல்லாம் பேசிலும் நின் திரு எட்டு எழுத்தும் கற்று நான் உற்றதும் உன் அடியாருக்கு அடிமை -பெரிய திருமொழி -8-10-3-என்ன –
இவர் நின்ற நிலையிலே தமக்கு பிறந்த ப்ரீதி அதிசயத்தாலே -பின்னையும் அவ் வாழ்வார் திரு உள்ளத்தை சோதிகைக்காக –
அடியிலே நம்மைக் கவி பாட என்று இழிந்து நம் அடியார் திறத்திலே மண்டிற்று என் -என்ன –
ராஜபுருஷ என்னுமா போலே -ஒருவனைக் கவிபாடுமவன் ஊரும் பேரும் தாரும் குடியும் வைத்துக் கவிபாடுமா போலே சொன்னேன் இத்தனை -ததீய விஷயமே
உத்தேச்யம் என்ன -ஆகிலும் பிரித்துச் சொன்னீரே என்ன -பர்த்தாவின் தேகத்தை விரும்பின பதி வ்ரதைக்கு குற்றம் உண்டாகில் இ றே -திவ்ய மங்கள விக்ரஹத்தை விரும்பின எனக்கு குற்றம் உண்டாவது -என்ன –
என்று தமக்கு ததீய விஷயத்தில் உண்டான ஊற்றத்தைச் சொல்ல ஈஸ்வரன் திரு உள்ளமும் களித்து -இவ் வாழ்வாருக்கு தோற்றம் -என்று-
இவர் திறத்தில் மடல் எடுக்கும்படி யாயிற்று ஈஸ்வரன் திரு உள்ளம் –

ஒரு தேசவிசேஷத்து ஏறப் போய் அனுபவிக்கும் அநுபவம் சாத்மிக்கைக்காகாவும் – உபகார ஸ்ம்ருதிக்காகவும் -பிரபத்தி பண்ணின போது -பரம பதத்து ஏறப் போக்கில் – நச்சுப் பொய்கை என்று சம்சாரிகள் இத்துறையில் இழிவார் இல்லாமையாலும் – இவன் சம்சாரிகளைத் திருத்த வேண்டுகையாலும் -பிரபன்னனுடைய சரீரம் சரம சரீரம் ஆகையாலும் -சர்வேஸ்வரனுக்கு அபிமதம் ஆகையாலும் -இத்தேசத்தில் பகவத் அனுபவம் தான் இவனுக்கு அபூர்வம் ஆகையாலும் -ஆசை கிளரவும் – இவன் தன் இசைவாலும் இவ்வர்தங்களைப் பற்ற வாய்த்து சரீர அவசாநத்திலே மோஷம் ஆகைக்கு அடி –

ஸ்ரீ வைஷ்ணவன் ஆகிறான் சம்சாரத்தில் நசை யற்று -பரம பதத்திலே ஆசை பிறந்தவன் -இவனுக்கு பரிஹரிக்க வேண்டுவது என் என்னில் –
உடம்பில் ருசி விளையாது ஒழிகையும் -உறவு முறையார் பக்கல் ஆசை வளராது ஒழிகையும் –
உடம்படியாக உகக்கும அவர்களோடு உறவு கொண்டாடாது ஒழிகையும் – லோகம் சிலுகிடாமல் ஒதுங்கி வர்திக்கையும் –
உடம்புக்கு இரை தேடி ஒருவனுக்கு ஏவல் தொழிலை ஒருபடியாலும் செய்யாது ஒழிகையும்
-உள்ளத்துக்கு உள்ளே நிற்கும்ஒருவன் பக்கல் ஒருபடிப்பட்ட ருசி உண்டாய்ப் போரவும்
தலை அறுப்புண்டவனையும் தலை அறுத்து அத்தாலே சந்நிதியிலே தலையோடு ஏந்தினவனையும் -இவர்களுக்கு கீழான சந்திர ஆதித்யர்களையும் சரணம் என்று புகாது ஒழிகையும் -இவர்களை சரீரம் ஆகவும் அடிமையாகவும் உடைய எம்பெருமான் பக்கல் ஆன அடிமை செய்து பொறவும் –
எம்பெருமானே தஞ்சம் என்று சரணம் புக்கவர்களைத் தனக்குத் துணையாகவும் உயிராகவும் நினைத்துப் பொறவும் -இவர்களோடு விளையாடியும் பொல்லாங்கு சொல்லாது ஒழியவும் -இவர்களைப் பொல்லாங்கு சொல்லுவார் உடனே கூடினர் ஆகில் அவர்களை வாயைக் கிழித்தல் -தான் செவியைப் புதைத்துக் கொண்டு கடக்கப் போதல் செய்யவும் – எம்பெருமான் திரு வாசலுக்கு உள்ளேயே மயிர் விரித்தல் உமிழ்தல் கால் நீட்டுதல் தொடக்கமானவை வருந்தியும் தவிரவும் -ஆபத்துகளாலே புகுந்து ஒதுங்க வேண்டிற்று ஆகில் -அனர்த்தப் படா நின்றோமே -என்று அஞ்சிப் போரவும் -இப்படிப்பட்ட போதுபோக்கு சம்சாரத்தில்
இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவனுக்கு –

ஸ்ரீ வைஷ்ணத்வம் ஆவது -மூன்று பிரகாரமாய் இருக்கும் -எங்கனே என்னில் – சத்கார யோக்யர் என்றும் -சஹ வாஸ யோக்யர் என்றும் -சத அநுபவ யோக்யர் -என்றும் – சத் கார யோக்யர் -ரூப நாம ப்ரதானர் -உச்சாரண ப்ரதானர் -அபிமான ப்ரதானர் – சஹ வாஸ யோக்யர் -ஜ்ஞான ப்ரதானர் -அனுஷ்டான ப்ரதானர் -அங்கீகார ப்ரதானர் – சத அநுபவ யோக்யர் ஆர்த்தி பிரதானர் -அபி நிவேச பிரதானர் -அபி ருசி பிரதானர் -என்று ஆட் கொண்ட வில்லி ஜீயர் –

ஆச்சான் பிள்ளையை ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் -ஸ்ரீ வைஷ்ணத்வம் ஆவது சர்வ உபாய சூன்யதையோ -இதர விஷய வ்ரக்தியோ -சித்த உபாய ச்வீகாரமோ -பகவத் பிரேமமோ -என்று கேட்க -சர்வ உபாய சூன்யதை சம்சாரிக்கும் உண்டு -இதர விஷய விரக்தி ஷபணனுக்கும் உண்டு – சித்த  உபாய ச்வீகாரம் கேவலனுக்கும் உண்டு -பகவத் ப்ரேமம் ஏகாயநனுக்கும் உண்டு -ஆகையால் இவை இத்தனையும் அன்று -இவற்றோடே கூட பகவத் அனந்யார்ஹ
சேஷத்வ ஜ்ஞானத்தாலே பிறப்பதொரு தாந்தி விசேஷம் -அதாவது பரிபவத்தில் நிர்தோஷ அநுசந்தானம் -நிர்பரத்வ அநுசந்தானம் -உபகார ஸ்ம்ருதி -இரக்கம் என்று அருளிச் செய்தார்-

வடக்குத் திரு வீதிப் பிள்ளை -அடுக்கு குலையாத முஷ்டியும்ஆஸ்திக்யம் குலையாத ஸ்ரீ வைஷ்ணத்வமும்-

திருநகரிப் பிள்ளை -ஆழ்வார்கள் அருளிச் செயலிலே அந்வயம் உள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களைத் தன் உயிராக நினைத்து இருப்பன் -ஆசார்யர்கள் பாசுரங்களிலே அந்வயம் உடைய ஸ்ரீ வைஷ்ணவர்களை தன்னுடைய சத்தை யாக நினைத்து இருப்பன் -இரண்டோடும் அந்வயம் உடைய ஸ்ரீ வைஷ்ணவர்களை அல்லது ஸ்ரீ வைஷ்ணவன் என்று அறுதி இட ஒண்ணாது-

ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்று இவர்களுக்கு பேராகைக்கு அடி ஏது என்று கேட்க -ஸ்ரீ மத் புத்ரர் ஆகையாலும் -ஸ்ரீ மான் பிதா வாகையாலும் -ஸ்ரீ புருஷகாரம்
ஆகையாலும் -ஸ்ரீ மான் வைபவத்தை அறிகையாலும் -இவர்கள் ஸ்ரீ மத் பதத்தே பிறக்கையாலும் -ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்று நிரூபகம் -என்று பெரிய கோயில் வள்ளலார் அருளிச் செய்வர்-

ஸ்ரீ வைஷ்ணவனுடைய தின சரிதம் –
1-குரு பரம்பரையும் -திரு மந்த்ரத்தினுடைய விசத அநுசந்தானமான தவத்தையும்
சதா அநுசந்தானம் பண்ணுகை –
2-த்வய நிஷ்டரான ஸ்ரீ வைஷ்ணவர்களோடே சஹ வாஸம் பண்ணுகை
3-அஹங்கார அக்ரச்தரான சம்சாரிகளோடு அணுகி வர்த்தியாது ஒழிகை
4-சாத்விக சமாசாரம் ஒழிய நாட்டாருடைய பரிமாற்றங்களை நேராக நிவர்திக்கை –
5-உத்தேச்யரான ஸ்ரீ வைஷ்ணவர்களை உதாசீனம் பண்ணாது ஒழிகை –
6-த்யாஜ்யரான சம்சாரிகளை த்ருஷ்டம் அடியாக அனுவர்த்தியாது ஒழிகை –
7-ஆசூர பிரக்ருதிகளுக்கு அதருஷ்ட வார்த்தை சொல்லாது ஒழிகை –
8-சாது பரிக்ரஹமும் சதாசார்ய பிரசாதமும் ஸ்வரூப வர்த்தகம் என்று இருக்கை –
9-பகவத் பாகவத விஷயங்களில் அநுகூல வ்ருத்தியை தேக யாத்ரா சேஷம் ஆக்காது ஒழிகை
10-ஸ்துதி நிந்தைகளில் அவிக்ருதனாய் இருக்கை –
11-ஸ்வ தோஷ தர்சனம் பண்ணுகை –
12-ஸ்வ ப்ரசம்சை பண்ணாது ஒழிகை –
13-ஸ்வ ஸ்வா தந்த்ர்ய நிவ்ருத்தி பூர்வகமான பகவத் பாரதந்த்ர்ய பராகாஷ்டை
பாகவத பாரதந்த்ர்யம் என்று இருக்கை –
14-இவ்வோ அர்த்தங்களை அனுசந்தித்து உண்டான அம்சத்துக்கு உபய பூதனான
எம்பெருமான் பக்கலிலே உபகார ஸ்ம்ருதி பண்ணுகை –
15-இல்லாத அம்சத்துக்கு அநுதாப பூர்வகமாக ஈஸ்வரனை இரக்கை –
16-இவ்வர்த்த நிஷ்டை தனக்கு உண்டான போது நிஷ்டை இல்லாத வேஷ தாரிகளை நெஞ்சாலே நெகிழ நினையாதே பகவத் ப்ரபாவத்தை இட்டு ஆதரிக்கை –
நிர்தோஷம் வித்தி தம் ஜந்தும் ப்ரபாவாத் பரமாத்மன -இவ்வர்த்த நிஷ்டை தான் பகவத் பிரசதத்தாலே பலிக்கும் அத்தனை அல்லது ஸ்வ யத்னத்தாலே வருமதன்று -அக்ரூர மாலாகார அதீன் பரம பாகவதான் க்ருத்வா என்று பிரமாணம் -இவ்வோ அர்த்தங்கள் தங்களுக்கு உறுப்பாக அதிகரிக்குமவை அல்லது பிறருக்கு சொல்லுகைக்கு கற்க்குமவை அன்று –

கடக்கத்தப் பிள்ளையைக் கடக்கத்தனொரு பிராமணன் -உமக்கு தேக யாத்ரை நடக்கிறபடி என் -என்று  கேட்க -ஸ்வ ரஷண விஷயமாக
சித்திரை மாசத்திலே மூக்கு நீர் முன்னடியிலே விழ ஏற்றம் இறைக்கிற உனக்கு இடுகிற எம்பெருமான் ந்யச்த பரனாய் அணையிலே
சாய்ந்து -சார்ந்து -கிடக்கிற எனக்கு இடச்சொல்ல வேண்டுனோ -என்றார் –

ஒரு பிராமணன் இறப்பில் நின்றும் விழ -அவ்வளவிலே சிறியாச்சான் அங்கேற எழுந்தருள பிராமணன் -ஆச்சான் -பெருமான் என்னைத் தள்ளினபடி கண்டீரே -என்ன – அங்கன் அன்று காண் -கர்மத்தாலே நாம் விழுந்தோம் -பெருமாள் எடுத்தார் -என்று நினைத்து  இராய் -என்று அருளினார் –

எம்பெருமான் சாபேஷன்–பிராட்டியும் ஆசார்யனும் பிரபன்னர்களும் சாபேஷ நிரபேஷர்கள் –

ஸ்ரீ விபீஷண ஆழ்வான் -ஐஸ்வர் யார்தியோ -அநந்ய பிரயோஜநனோ -என்னில் அஸ்மாதாதிகள் பிரபன்னராய் வைத்தே சரீர அவசாநத்தளவும் ஸ்த்ரி அன்ன
பாநாதிகளோடே இருக்கிறாப் போலே -அநந்ய ப்ரயோஜநனாயே அதிகார அவசாநத்தளவும் ஐஸ்வர்ய அனுபவம் பண்ணுகிறான்-

ஆளவந்தார் ஒரு நாள் பெருமாளைத் திருவடி தொழ வென்று உள்ளே புகுரா நிற்க ஒருத்தி அநந்ய பிரயோஜனரைப் போலே கண்ணும் கண்ண நீருமாய் -கழுத்தும் கப்படுமுமாய் -சேலை யுமாய் -பிரதஷணம் பண்ணா நிற்க -உள்ளுப் புகுராதே புறம்பே நின்றருளி -பிரயோஜனாந்த பரை யானவள் புறப்பட்டாளோ -என்று கேட்டருள – இதுக்கு நிதானம் என் -என்று விண்ணப்பம் செய்ய -பெருமாள் சன்னதியே யாகிலும் பிரயோஜனந்த பரரோட்டை சேர்த்திக்கு -அதிகாரி விரோதம் பிறந்து -பல விரோதமும் பிறக்கும் காண் -என்று அருளிச் செய்தார் –

தேஹாத்ம விவேகம் -பரமாத்ம விவேகம் -த்ரி மூர்த்தி சாம்ய விவேகம் -புருஷார்த்த அபுருஷார்த்த விவேகம் -விரோதி அவிரோதி விவேகம் –
உபாய அநுபாய விவேகம் -வைஷ்ணவ அவைஷ்ணவ விவேகம் -துஷ்கர ஸூகர விவேகம் -ஆசார அநாசார விவேகம் -சிஷ்ய ஆச்சர்ய விவேகம் –
இவைகள் ஒருவனுக்கு அவஸ்யம் ஜ்ஞாதவ்யங்கள் –

முமுஷுவாய் பிரபன்னனான அதிகாரிக்கு ஜ்ஞாதவ்யமான அர்த்தம் -நாலு -ப்ராப்ய விஷயமும் -பிராபக விஷயமும் -ஆசார்ய விஷயமும் -போஜன விஷயமும் -ப்ராப்ய விஷயம் ஆவது -சரீர சம்பந்தம் அற்று அர்ச்சிராதி மார்க்கத்திலே போய் பரம பதத்திலே சென்று -அங்குண்டான பகவத் அனுபவ ப்ரீதியாலே பிறக்கும் கைங்கர்யம் – இதில் அத்யாவச்யம் ஆவது -கைங்கர்யத்தை ஒழிந்த தர்மார்த்த காமங்களிலும் – மோஷத்தில் கைவல்யம் முதலாக உள்ள புரஷார்தங்களிலும் கால் தாழாதே இக்கைங்கர்யமே பரம ப்ராப்யம் என்று இருக்கை – பிராபக விஷயமாவது -சௌலப்யாதி குண விசிஷ்டனாய் -விக்ரஹ விசிஷ்டன முமாய் உள்ள ஈஸ்வரன் -இதில் அத்யாவசியம் ஆவது -பிராட்டி புருஷகாரமாக அவனே உபாயம் என்று அறுதி இட்டு -உபாயாந்தரங்களான கர்ம ஜ்ஞான பகதிகளில் கால் தாழாமல் இருக்கை – ஆசார்ய விஷயமாவது -இவ்வுபாய ஸ்வீகாரம் பண்ணினவன் சரீர அவசாநத்து அளவும் -மநோ வாக் காயங்களினால் அநுகூலித்து வர்திக்கை – அதாவது -உகந்து அருளின நிலங்களிலும் -அர்ச்சாவதார ப்ரேமம் உடைய ஸ்ரீ வைஷ்ணவர்கள் பக்கலிலும் -த்ரிவித கரணத்தாலும் ப்ராதிகூல்யம் தவிருகை – இதில் அத்யாவச்யம் ஆவது -இப்படி வர்த்திக்கும் இடத்தில் -க்யாதி  லாப பூஜைகளைப் பற்றவாதல் -பகவத் ப்ராப்திக்கு சாதனம் என்றாதல் -செய்யாதே ஸ்வயம் பிரயோஜனம்
என்று இருக்கை – போஜன விஷயம் ஆவது -ந்யாய ஆர்ஜித த்ரவ்யத்தாலே தாஹம் போம் அளவே என்று ஜீவிக்கை – இதில் அத்யாவச்யம் ஆவது -அநுகூலரை நெருக்கி யாதல் -பிரதிகூலரை அபேஷித்தது ஆதல் -அமுதுபடி த்ரவ்யத்தை யாதல் ஜீவனம் ஆக்காதே உடம்பை வருத்தி யாதல் அயாசிதமாக வாதல் வந்த த்ரவ்யதைக் கொண்டு தேக யாத்ரை நடத்துகை –

பிள்ளை திருவழுதி நாட்டு அரையருக்கு அந்திம தசையிலே ஒரு சோகம் உண்டாயிற்று –
சுற்றில் இருந்த முதலிகள் அந்யோந்யம் முகம் பார்த்தார்கள் -இவர் அத்தை திரு உள்ளத்திலே கோலி -வாரி கோள் முதலிகாள் -சம்சாரிகள் இழவுக்கு நொந்தோம் காணும் கோள் – அவர்களில் நமக்கு அல்பம் ஆய்த்து வாசி -எங்கனே என்னில் -நாம் இடுவது ஒரு தண்டன் – பண்ணுவது ஒரு பிரபத்தி -இழப்பது சம்சாரம் -பெறுவது பரமபதம் -இத்தை அறியாதே அத பதிக்கிறார்களே என்று கிலேசம் ஆயிற்று காணும் கோள்–என்ன -இவர்களும் க்ருதார்தர் ஆனார்கள்

எளிவரும் இயல்வினன் நிலை வரம்பில பல பிறப்பாய் ஒளி வரும் -திருவாய்மொழி -1-3-2- என்கிற இடம் அருளிச் செய்யா நிற்க -இப்படி குணவானாய் இருக்கிற அவனை சாஷாத்கரிக்க விரகு இல்லையோ என்று மணக்கால் நம்பியை ஆளவந்தார் கேட்டருள -எனக்கு சேஷத்வ அனுசந்தானமே
அமையும் நீர் குருகை காவல் அப்பன் பாடே செல்லும் என்ன -இவரும் அங்கே செல்ல – அவரும் காலம் குறித்து விட -இவரும் திருவனந்த புரத்துக்கு எழுந்து அருளி -அங்கே அக்காலத்தை நினைத்து -அப்பன் பக்கல் ஏறப் போக ஒரு புஷ்பகம் பெற்றிலோமே – என்று க்லேசிக்க -பெருமாளும் -நாம் செய்தபடி காணும் இது -சேஷத்வ ஜ்ஞானமே அமையும் என்று அருளினார் –

ஸ்வா பாவிகமான சேஷத்வத்தை விட்டு -ஔ பாதிகமான பௌ ருஷத்தை ஏறிட்டுக் கொள்ளுகிற இத்தனை இ றே-என்று பெரியவாச்சான் பிள்ளை –

ஆச்சான் பிள்ளை -சித்த உபாயனான பிரபன்னனுக்கு அஞ்சு ஸ்பர்சம் பரிஹார்யம் –அவையாவன –
சைவ ஸ்பர்சம்-மாயாவாத ஸ்பர்சம்-ஏகாயன  ஸ்பர்சம்-உபாயாந்தர ஸ்பர்சம்-விஷயாந்தர ஸ்பர்சம் –இவை ஐந்தும் ஐந்து அனுசந்தானத்தாலே போம்
எம்பெருமானுடைய சர்வ ஸமாத் பரத்வத்தை அனுசந்திக்க சைவ ஸ்பர்சம் போம்-சமஸ்த கல்யாண குணங்களை அனுசந்திக்க மாயாவாத ஸ்பர்சம் அறும்
ஸ்ரீ ய பதித்வதை அனுசந்திக்க ஏகாயன  ஸ்பர்சம் அறும்-உபாய பூர்த்தியை அனுசந்திக்க உபாயாந்தர ஸ்பர்சம் அறும் –
திவ்ய மங்கள விக்ரஹத்தை அனுசந்திக்க விஷயாந்தர ஸ்பர்சம் அறும் –

முமுஷுவாய் பிரபன்னன் ஆனவனுக்கு சர்வ பிரகார ரஷகனான சர்வேஸ்வரன் விஷயமாகவும் -அநாதிகால ஆர்ஜித பாபத்தை போக்கக் கடவளான பிராட்டி விஷயமாகவும்- மஹா உபகாரகரான ஆசார்ய விஷயமாகவும் -உத்தேச்யரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் விஷயமாகவும் -த்யாஜ்யரான சம்சாரிகள் விஷயமாகவும் -ஸ்வ சரீர விஷயமாகவும் – சரீர சம்பந்திகள் விஷயமாகவும் -பிறக்கும் அநுசந்தானம் -தேகாத்ம அபிமான நிவ்ருத்திக்கும் -தேஹாத் வ்யதிரிக்தனான ஆத்மாவினுடைய அனன்யார்ஹ சேஷத்வ ப்ரகாசத்துக்கும் -சேஷ பூதனுக்கு ஸ்வ ரஷணத்தில் ப்ராப்தி இல்லாத பாரதந்தர்யதினுடைய எல்லைக்கும் -இப்படி பரதந்த்ரனானவனுக்கு ஸ்வரூப ப்ராப்தமான புருஷார்த்த சித்திக்கும் – இப்புருஷார்ததுக்கு இடைச் சுவரான அஹங்கார மமகார நிவ்ருத்திக்கும் அவனே உபாயம் என்று சர்வ பிரகார ரஷகனான சர்வேஸ்வரனை அனுசந்திப்பது – இப்படி ரஷகனான ஈஸ்வரனுடைய கழற்ற ஒண்ணாத ஸ்வா தந்த்ர்யத்தை தலை சாயப் பண்ணி இவ்வதிகாரி உடைய அபராதம் அவன் ஹிருதயத்திலே படாதபடி பண்ணி அவனுடைய சீலாதி ஸ்வாபாவங்களை ப்ரகாசிப்பித்து ரஷிக்கும் என்று பிராட்டியை அனுசந்திப்பது-இம் மிதுனத்தோடே கழற்ற ஒண்ணாதபடி சம்பந்தத்தையும் -இஸ் சம்பந்தத்துக்கு அநுரூபமாய் -ஸ்வரூப அநுரூபமான ஜ்ஞான வர்த்தகர் என்று ஆசார்யனை அனுசந்திப்பது – சஹ வாஸ யோக்யர் என்றும் -ப்ராப்யாந்தர்க்கரர் என்றும் -ஸ்ரீ வைஷ்ணவர்களை அனுசந்திப்பது –
பகவத அனுபவ விரோதிகள் என்றும் பாகவத சம்ச்லேஷ விரோதிகள் என்றும் சம்சாரிகளை அனுசந்திப்பது -பகவத் ஜ்ஞான விரோதி என்றும் விபரீத ஜ்ஞானத்திலே அன்வயிப்பிக்கும் என்றும் தன்  பக்கலில் போக்ய புத்தியைப் பிறப்பிக்கும் என்றும் -சரீரத்தை அனுசந்திப்பது – பகவத் ப்ராவண்ய விரோதிகள் என்றும் -அர்த்த காம அபிமானங்களை வர்திப்பிப்பார்கள் என்றும் -சரீர சம்பந்திகளை அனுசந்திப்பது – ந்யார்ஜிதமான தனத்தாலே ஷூ நிவ்ருத்தி பர்யாப்தனாய்ப் போருவது – இப்படிப்பட்ட ஆத்ம குணங்கள் ஆசார்ய கடாஷத்தாலும் -எம்பெருமான் விஷயீகாரத்தாலும் உண்டாகக் கடவது ஆகையாலே ஆசார்ய விஷயத்தில் க்ருதக்ஜையும் -எம்பெருமான் பக்கலிலே ரஷகத்வ பிரதிபத்தியும் – சர்வ காலமும் நடையாடவும் – கரணத் த்ரயத்தாலும் பகவத் பாகவத விஷயங்களிலே ஸ்வரூப ப்ராப்த கைங்கர்யம் பண்ணவும் உபகாரகனான ஆசார்யனுக்கு சத்ருச சத்காரம் இல்லாமையாலே -என்னைத் தீ மனம் கெடுத்தாய் -உனக்கு என் செய்கேன் -என்று அனுசந்திக்கவும் –

விஷயம் வகுத்த விஷயமானாலும் –ஆற்றாமை கரை புரண்டாலும் -0உபாயம் ப்ரபல உபாயமானாலும் –ஸ்வ சக்தி அதிகாரமானாலும் – ஸ்வரூப அனுரூபமான உபாயத்தால் அல்லது பெறக் கடவோம் என்கிற-அத்யவசாயத்தை சொல்லுகிறது –தத் தஸ்ய சத்ருசம் பவேத் -சுந்தர காண்டம் -39-30-
என்று இருக்கும் இருப்பு

ஆசார்ய விஷயீகாரமோ -ஸ்ரீ வைஷ்ணவ அங்கீகாரமோ -பகவத் பாகவதவிஷயத்தில் கைங்கர்யமோ -தன்னுடைய அனுசந்தானமோ -சம்சார நிவ்ருத்திக்கும்
பரமபத ப்ராப்திக்கும் ஹேது என் என்னில் -இவை நாளும் அன்று -அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமாக இஷ்டப் ப்ராப்திக்கும் ஈஸ்வரன் கிருபை என்கிற பிரதிபத்தி
நழுவாது ஒழிகை -ஆசார்ய விஷயீகாரம் அஜ்ஞ்ஞானத்தை போக்கி வெளிச் செறிப்பிக்கும் – ஸ்ரீ வைஷ்ணவ அங்கீகாரம் சத்துக்கள் சத்கரிக்கப் பண்ணும் –
பகவத் பாகவத விஷயத்தில் கைங்கர்யமும் தன்னுடைய அநுசந்தானமும் தன்னுடைய காலஷேமம் –

ரஷகனுடைய ரஷகத்வம் ஆளிட்டுச் செய்விக்கை யாவது -அவனுடைய ஸ்வாமித்வத்துக்கு கொத்தை சேஷபூதனுடைய சேஷ வ்ருத்தி ஆளிட்டு செய்விக்கையாவது -இவனுடைய சேஷத்வத்துக்கு கொத்தை -கொத்தையாக வேண்டுவான் என் என்னில் -இருவருக்கும் இரண்டும் ஸ்வரூபம் ஆகையாலே –

வைஷ்ணத்வம் ஆவது -வைஷம்ய ஜ்ஞானம் -அதாவது வாஸி அறிகை –
குருக்களுக்கும் சத்குருவுக்கும் உள்ள வாசியும் –தேவதாந்தரங்களுக்கும் பர தேவதைக்கும் உள்ள -வாசியும் மந்த்ராந்தரத்துக்கும் மந்திர ரத்னத்துக்கும் உலா வாசியும் – தேஹத்துக்கும் ஆத்மாவுக்கும் உள்ள வாசியும் – உபாசகனுக்கும் பிரபன்னனுக்கும் உள்ள வாசியும் – சாதனாந்தரங்களுக்கும் சித்த சாதனத்துக்கும் உள்ள  வாசியும் – பரத்வத்துக்கும் அர்ச்சாவதாரத்துக்கும் உள்ள வாசியும் – சம்சாரிகளுக்கும் வைஷ்ணவனுக்கும் உள்ள வாசியும் – ஆத்மாவுக்கும் ஈஸ்வரனுக்கும் உள்ள வாசியும் – புருஷார்தங்களுக்கும் பரம புருஷார்தத்துக்கும் உள்ள வாசியும் -அறிகை –
அதாவது –
குருக்கள் ஆகிறார் -சம்சார பிரவர்த்தகருமாய் -அஜ்ஞ்ஞான ப்ரதருமாய் இருப்பார்கள் என்றும் சத்குரு ஆகிறான் சம்சார நிவர்தகனுமாய் -ஜ்ஞான ப்ரதனுமாய் இருக்கும் என்று அறிகை – தேவதாந்தரங்கள் அஜ்ஞ்ஞராய் அசக்தராய் இருப்பார்கள் என்றும் – பரதேவதை சர்வஜ்ஞ்ஞனுமாய் சர்வ சகதியுமாய் இருக்கும்  என்று அறிகை – மந்த்ராந்தங்கள் பிரயோஜநாந்தர ப்ரவர்தகமுமாய் ஸ்வாதந்த்ர்ய ப்ரவர்த்தகமுமாய் இருக்கும் என்றும் மந்திர ரத்னம் புருஷார்த்த ப்ரவர்தகமுமாய் பாரதந்த்ர்ய பிரகாசமுமாய் இருக்கும் என்று அறிகை -தேஹம் ஜடமாய் பரிணாமியாய் இருக்கும் என்றும் ஆத்மா ஜ்ஞாநானந்த ரூபமுமாய் ஏக ரூபமுமாய் இருக்கும் என்று அறிகை-உபாசகனுக்கு ஆநுகூல்யஸ்ய சங்கல்பமும் ப்ராதிகூல்ய வர்ஜனமும் வேண்டும்
பிரபன்னனுக்கு அபராதாநாம் ஆலய -அகிஞ்சன என்று இருக்க வேண்டும் -என்று அறிகை-சாதநாந்தரம் சாத்யமுமாய் சாபாயுமாய் இருக்கும் என்றும் -சித்த சாதனம் சித்தமுமாய் நிர் உபாயுமாய் இருக்கும் என்று அறிகை பரத்வம் ஸ்வ தந்த்ரமுமாய் துர் லபமுமாய் இருக்கும் -என்றும் -அர்ச்சாவதாரம்
ஸுலபமுமாய் ஆசீத பராதீனமுமாய் இருக்கும் என்று அறிகை-சம்சாரிகள் அநாசார பிரவர்த்தகருமாய் துர்மான ப்ரதர்களுமுமாய் இருப்பார்கள் என்றும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆசார்ய ப்ரவர்தகருமாய் துர்மான நிவர்தகருமுமாய் இருப்பார்கள் என்று அறிகை –ஆத்மா வ்யாப்யமுமாய் சேஷமுமாய் இருக்கும் என்றும் -ஈஸ்வரன் வ்யாபகனுமாய்-சேஷியுமாய் இருக்கும் என்று அறிகை-புருஷார்தாந்தரம் அல்பமுமாய் அஸ்திரமுமாய் இருக்கும் என்றும் பரம புருஷார்த்தம்
நித்யமுமாய் நிரதிசயமுமாய் இருக்கும் என்று அறிகை-ஆகிற இது வைஷம்ய ஜ்ஞானம் ஆவது –

ஸ்வரூப அனுகூலமான ரஷகத்வம் -ஸ்வரூப அனுகூலமான சேஷத்வம் -ஸ்வரூப அனுகூலமான சேவை -ஸ்வரூப அனுகூலமான சஹ வாஸம் –
ஸ்வரூப அனுகூலமான கால ஷேபம் -ஸ்வரூப அனுகூலமான இருப்பு -ஸ்வரூப அனுகூலமான பரிக்ரஹம் -ஸ்வரூப அனுகூலமான போஜனம் –
ஸ்வரூப அனுகூலமான அத்யவசாயம் -ஸ்வரூப அனுகூலமான அபேஷை -என்கிற இவை பத்தும் ஒருவனுக்கு அவஸ்யம்   ஜ்ஞாதவ்யமாகக் கடவது –

1-ஸ்வரூப அனுகூலமான ரஷகத்வம் ஆவது -தேச ரஷகன் என்றும்-தேக ரஷகன் என்றும் -பதார்த்த ரஷகன் என்றும் -பௌருஷ ரஷகன் என்றும் -சொல்லுகிற
ரஷகத்வங்களைத் தவிர்ந்து – தேச நிவர்தகன் என்றும் -தேக நிவர்தகன் என்றும் -விஷய நிவர்தகன் என்றும் பாப நிவர்தகன் என்றும் -பற்றுகை –
அதாவது -கொடு உலகம் -திருவாய்மொழி -4-9-7- என்று அஞ்சினவாறே -கலி யுகம் ஒன்றும் இன்றிக்கே -திருவாய்மொழி -5-2-11-தன்னடி யார்களுக்கு
அருள் செய்யும் பொல்லா ஆக்கை -திருவாய்மொழி -3-2-3- என்று அஞ்சினவாறே -செடியார் ஆக்கை அடியாரைச் சேர்த்தல் -திருவாய்மொழி -1-5-7-தீர்க்கும்
ஐவர் அறுத்துத் தின்றிட அஞ்சி நின்னடைந்தேன் -பெரிய திருமொழி -7-7-7-என்றவாறே அடியரைத் துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடான் -திருவாய்மொழி -1-7-2- நமன் தமர் செய்யும் வேதனைக்கு ஒடுங்கி நடுங்கினேன் -பெரிய திரு மொழி -1-6-3- என்றவாறே -நமன் தமர் என் தமரை வினவப் பெறுவர் அலர் -பெரிய திருமொழி -10-6-5–என்னும் அடியார் படு துயர் ஆயின எல்லாம் நிலம் தரம் செய்யும் -பெரிய திருமொழி -1-1-9-என்னக் கடவது இ றே

2–ஸ்வரூப அனுகூலமான சேஷத்வம் ஆவது -இதர சேஷம் என்றும் -க்ருஹ சேஷம் என்றும் -பித்ரு சேஷம் என்றும் -தேவதாந்தர சேஷம் என்றும் -சொல்லுகிற ஆபாஸ சேஷங்களைத் தவிர்ந்து சர்வேஸ்வரனே தாரகன் என்றும் -வியாபகன் என்றும் -சரீரி என்றும் -சேஷி என்றும் பற்றுகை -அதாவது –
ஆவிக்கோர் பற்றுக்கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் -திருவாய் மொழி -10-10-3- என்றும்-உன்னை விட்டு எங்கனே தரிக்கேன் -திருவாய்மொழி -7-2-1- என்றும் —என்னுடை வாழ் நாள் -பெரிய திருமொழி -1-1-6- என்றும் —அடியோர்க்கு அகலலாமே -திருமாலை -20 என்றும் -இருக்கை –

3-ஸ்வரூப அநுகூலமான சேவை யாவது -சேதனாந்தர சேவையையும் -தேவதாந்தர சேவையையும் -பகவத் சேவையையும் -த்ருஷ்ட பிரயோஜனதுக்காக சேவிக்கையும் -அத்ருஷ்டதுக்கு ஹேது என்று சேவிக்கிற சேவையையும் தவிர்ந்து -ஸ்வரூப பிரயுக்தம் என்று சேவிக்கை -அதாவது
சேவியேன் உன்னை அல்லால் -திருமாலை -35 -என்றும் -உன்னை சேவித்து -புண்ய ஷேத்ர வாசமும் யோக்யதைக்கு உறுப்பு என்றும் இருக்கிற இருப்பைத் தவிர்ந்து தேசத்திலே பிரேமம் பிறக்கைக்கு என்றும் -தேசிகனை நித்ய சேவை பண்ணவாம் என்றும் -தேச வர்த்தகரான சாத்விகரோடே கலந்து பரிமாறுகைக்கு என்றும் விபரீதங்கள் புகுராத இடம் என்று இருக்கை -அதாவது – தஞ்சை மா மணிக்-திருவாய்மொழி -9-6-7-என்றும் – கற்றார் சேர் கண்ணபுரம் -பெரிய திருமொழி -8-10-5-என்றும் – விளைந்த தானியமும் இராக்கதர் மீது கொள்ள கிலார்கள் -பெரியாழ்வார் திருமொழி -4-4-8-
என்றும் இருக்கை

6-ஸ்வரூப அநுகூலமான பரிக்ரஹம் ஆவது –
அனுகூலரை நெருக்கி ச்வீகரிக்கையும் பிரதிகூலர் பக்கல் சாபேஷனாய் ச்வீகரிக்கையும்-ஸ்வரூப பிரயுக்தமானவற்றை பதார்த்தங்களுக்கு உறுப்பாக்கி ச்வீகரிக்கையும் – அமுதுபடி சாத்துப்படிக்கு அர்ஹமானவற்றையும் பரிக்ரஹிக்கை தவிர்ந்து – க்ருஷி பண்ணுதல் -அதாவது
மெய் வருத்திக்  கை செய்தும்மினோ -திருவாய்மொழி -3-9-6- முஷ்டி புகுதல் -அதாவது -பிச்சை புக்காகிலும் எம்பிரான் திருநாமமே நச்சுமின் -பெரியாழ்வார் திருமொழி -4-6-3- சிஷ்யன் ப்ரீதியாலே தர்மத்தை யாதல் -அதாவது -சரீரம் அர்த்தம் பிராணஞ்ச சத்குருப்யோ நிவேதயத் -என்றும் –
சாத்விகர் திரு உள்ள பிரசன்னத்தாலே தருமத்தை யாதல் -அதாவது -வருவிருந்தை அளித்திருப்பார் -பெரியாழ்வார் திருமொழி -4-8-2 பரிகிரஹிக்கை -என்கிறவர்களுடைய பதார்த்தங்களை ச்வீகரிக்கை

7-ஸ்வரூப அனுகூலமான போஜனமாவது -க்யாதியைப் பற்றவாதல் -பூஜையைப் பற்றவாதல் – என்னது நானிடுகிறேன் -என்றாதல் -இடுகிற போஜனத்தை தவிர்ந்து – நெய்யமர் இன் அடிசில் -திருவாய்மொழி -6-8-2- என்றும் நல்லதோர் சோறு -திருவாய்மொழி -6-7-1-
என்றும் சொல்லுகிறவற்றை புஜிக்கை

8-ஸ்வரூப அனுகூலமான அத்யவசாயமாவது -இவ்வருகு உண்டான ரசாக ச்வீகாரங்கள் அன்றியே ஸ்வரூப விரோதி நிவ்ருத்த பூர்வகமான புருஷார்த்தத்தை தரும் என்கிற விஸ்வாசம் -அதாவது –
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் -திருவாய்மொழி -5-8-8- என்றும் -நீ தாராய் பறை -திருப்பாவை -28-என்றும் -உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -திருவாய்மொழி -5-8-3- என்றும் – நின்னருளே புரிந்து இருந்தேன் -பெரியாழ்வார் திருமொழி -5-4-1- என்றும் இருக்கை

9-ஸ்வரூப அனுகூலமான அபேஷை யாவது -புத்ர பச்வன்னாதி பதார்த்தத்தையும் ஸ்வர்க ஐஸ்வர்ய புருஷார்த்தத்தையும் -கைவல்ய புருஷார்த்தத்தையும் -பகவத் அனுபவத்தை தனக்கு இனிது என்று புஜிக்கிற பதார்த்தங்களையும் தவிர்ந்து
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் -திருவாய்மொழி -9-3-7- என்றும்-அடியார்கள் குழாம் -களை உடன் கூடுவது என்று கொலோ -திருவாய்மொழி -2-3-10-என்றும் – காண்பது எஞ்ஞான்று கொலோ -திருவாய்மொழி -5-9-5-என்றும் வழு விலா அடிமை செய்ய வேண்டும் -திருவாய்மொழி -3-3-1- என்று ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வார்த்தை –

தெண்மை -திறமை-சதிர் -இளிம்பு இவை நாலும் ஒரு அதிகாரிக்கு அவசியம் அனுசந்தேயம்-தெண்மை -தெளிவு -யாவது -தத்வ த்ரய விஷய ஜ்ஞானமும் -பிராப்ய பிராபக விஷய ஜ்ஞானமும்–சதிராவது -நெஞ்சில் நினைத்தது ஒழிய வாயால் -வாக்கு-சொல்லுகை -அதாவது
சம்சாரத்தில் இருக்கும் நாள் பிரகிருதி வந்து விட்டு ஆள் விட்டு நலியா நின்றால்தனக்கு இவ்விருப்பில் நசையாலே போகமாட்டான்
ராஜ மனுஷ்யன் ஆகையாலே புறப்பட விடமாட்டான் -இனி உள்ளது அகவாயில் அவன் போகைக்கு திரு விளக்கு பிரதிபலியா நிற்க புறவாயிலிலே பிரதிவசனம்
பண்ணுமா போலே -பிரகிருதி பந்துக்களும் நாராயணன் வரவிட வந்தவர்கள் ஆகையாலே -இவர்கள் அளவில் யதா பரகதா நாரீ -என்றும் -பத்ம பத்ர மிவாம் பஸி -என்றும் -கண்டதோடு பட்டதல்லால் -காதல் மற்று யாதும் இல்லை -திருவாய்மொழி -9-1-1-என்றும் இருக்கும் அத்தனை அல்லது வேறு செய்யல் ஆவது இல்லை -இளிம்பு யாவது -உத்தேச்யர் சொன்ன வார்த்தைக்கு உடன் படுகை –

பகவத் சன்னதியிலே -அபராதானாம் ஆலய அகிஞ்சன -என்று அனுசந்திப்பான் -ஆசார்யன் சன்னதியிலே அஜ்ஞ்ஞதையையும் ஆர்த்தியையும் அனுசந்திப்பான் –
ஸ்ரீ வைஷ்ணவர்கள் சன்னதியிலே தன்னுடைய சேஷத்வத்தையும் பாரதந்த்ர்யத்தையும் அனுசந்திப்பான் –
சம்சாரிகள் நடுவே தனக்கு இனிமையையும் பூர்த்தியையும் அனுசந்திப்பான்
அமர்யாதா
கண்டவா திரிதந்தேன் -பெரிய திருமொழி -1-1-5-
ஷூத்ர
அற்ப சாரங்களவை சுவைத்து அகன்று ஒழிந்தேன்-திருவாய்மொழி -3-2-6-
சலமதி
நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன்-பெரிய திருமொழி -1-1-4-
அஸூயா ப்ரசவ பூ
தீ விளி விளிவன் வாளா-திருமாலை -30-
க்ருதக்ன
செய்நன்றி குன்றேல்மின்-பெரிய திருமொழி –11-6-1-
துர்மாநீ
சதிரமென்று தம்மைத் தாமே சம்மதித்து-திருவாய்மொழி –9-1-5-
ஸ்மர பரவச
மாரனார் வரி வெஞ்சிலைக்கு ஆட்செய்யும் பாரினார்-பெருமாள் திருமொழி -3-3-
வஞ்சனபர
சூதனாய் கள்வனாகி-திருமாலை-16-
நருசம்ச
கொன்றேன் பல் உயிரை-பெரிய திருமொழி -1-9-3-
பாபிஷ்ட
ஒப்பிலாத் தீ வினையேன்-திருவாய்மொழி -7-9-4-
கதமஹமித
என் நான் செய்கேன்-திருவாய்மொழி -5-8-3-
துக்க ஜல தேர பாராது த் ததீர்ண –
துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன் -நாச்சியார் திருமொழி -5-4-
தவ பரிசரேயம் சரணயோ –
உன் அடிக்கள் அடியேன் மேவுவதே -திருவாய்மொழி -6-10-6-

ஈஸ்வரன் அளவிலே உத்தாரகத்வ பிரதிபத்தியும்–ஆசார்யன் அளவிலே உபகாரத்வ பிரதிபத்தியும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் அளவில் உத்தேச்ய பிரதிபத்தியும்
உபாயத்தளவிலே அத்யாவஸாய  பிரதிபத்தியும் உபேயத்தளவில் த்வரா  பிரதிபத்தியும் சரீரத்தளவில் விரோதி பிரதிபத்தியும்
சரீர சம்பந்திகள் அளவில் பிரிவுகாரர் பிரதிபத்தியும் இதரரான சம்சாரிகள் பக்கலில் வழி பறிகாரர் பிரதிபத்தியும் ஐஸ்வர்யத்தளவில் அக்நி பிரதிபத்தியும்
விஷயத்தளவில் இடி பிரதிபத்தியும் – ஆகிற இப்பத்து பிரதிபத்தியும் ஒரு அதிகாரிக்கு அவஸ்யம் ஜ்ஞாதவ்யமாகக் கடவது
என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்ததாக திருநகரிப் பிள்ளை அருளிச் செய்வர் –

இவற்றிலே ஈஸ்வரன் அளவிலே உத்தாரகத்வ பிரதிபத்தி யாவது –
ஆவிக்கோர் பற்றுக்கொம்பு -திருவாய்மொழி -10-10-3- என்றும்
என்னுடை வாணாள் -பெரிய திருமொழி -1-1-6- என்றும் –
ஆவியை அரங்கமாலை -திருக் குறும் தாண்டகம் -12-என்றும் –
உன்னை விட்டு எங்கனம் தரிக்கேன் -திருவாய் மொழி -7-2-1- என்றும் இருக்கை –

ஆசார்யன் பக்கலில் உபகாரத்வ பிரதிபத்தி யாவது –
என்னைத் தீ மனம் கெடுத்தாய் உனக்கென் செய்கேன் -திருவாய்மொழி -2-7-8- என்றும் –
மருவித் தொழும் மனமே தந்தாய் -திருவாய்மொழி -2-7-7- என்றும்
தேவு மற்று அறியேன் -கண்ணி நுண் -2
மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள் நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் -கண்ணி நுண் -9-
ஒண் தமிழ் சடகோபன் அருளையே எண் திசையும்அறிய இயம்புகேன் -கண்ணி நுண் -7–என்றும் இருக்கை –

ஸ்ரீ வைஷ்ணவர்கள் பக்கல் உத்தேச்ய பிரதிபத்தியாவது
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியர் -திரு விருத்தம் – – என்றும்
போதோடு புனல் தூவும் புண்ணியரே விண்ணவரில் பொலிகின்றார் -பெரிய திருமொழி -7-4-3- என்றும்
எத்தனையும் கண் குளிரப் காணப் பெற்ற இரு நிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார் தாமே –
பெருமாள் திருமொழி -10-5- என்றும் –
பயிலும் திரு உடையார் எவரேலும் அவர்கண்டீர் பயிலும் பிறப்பிடை தோறும்
எம்மை ஆளும் பரமர் -திருவாய்மொழி -3-7-1- என்றும் இருக்கை –

உபாயத்தளவில் அத்யாவச்ய பிரதிபத்தி யாவது –
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் -திருவாய்மொழி -5-8-8- என்றும் –
என் நான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய் -உன்னால் அல்லால்
யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -திருவாய்மொழி -5-8-3- என்றும்
நல்லான் அருள் அல்லால் -முதல் திருவந்தாதி -15- என்றும் –
நின் அருளே புரிந்து இருந்தேன் இனி என் திருக் குறிப்பே -பெரியாழ்வார் திருமொழி -5-4-1-என்றும் இருக்கை

உபேயத்தளவில் தவரா பிரதிபத்தியாவது –
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் இராப் பகல் இன்றியே -திருவாய்மொழி -9-3-7- என்றும் –
அடியேற்கு வானுலகம் தெளிந்தே என்று எய்துவது -பெரிய திருமொழி -6-3-8- என்றும் –
அடியார்கள் குழாம் களை உடன் கூடுவது என்று கொலோ -திருவாய்மொழி -2-3-10-என்றும் –
வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம் -திருவாய்மொழி -3-3-1- என்றும் இருக்கை –
சரீரத்தளவில் விரோதி பிரதிபத்தியாவது –
பாம்போடு ஒரு கூரையிலே பயின்றாற் போலே -பெரிய திருமொழி -11-8-3- என்றும் –
பொல்லா வாக்கை -திருவாய்மொழி -3-2-3-
ஆக்கை  விடும் பொழுது எண்ணே -திருவாய்மொழி -1-2-9-
மங்கவொட்டு -திருவாய்மொழி -10-7-10-
மேம்பொருள் போக விட்டு-திருமாலை -38 என்றும் இருக்கை

சரீர சம்பந்திகள் அளவில் பிரிவுகாரர் பிரதிபத்தி யாவது –
தாயே நோயே  தந்தையே நோயே -பெரிய திருமொழி -1-9-1- என்றும்
பெற்றாரும் சுற்றமும் என்று இவை பேணேன் நான் -பெரிய திருமொழி -8-10-5- என்றும்
பிறிந்தேன் பெற்ற மக்கள் பெண்டிர் என்ற இவர் பின் உதாவாது அறிந்தேன் -பெரிய திருமொழி -6-2-4- என்றும் -இருக்கை –

இதரரான சம்சாரிகள் வழி பறிகாரர் பிரதி பத்தி யாவது –
நீசர்-திருச்சந்த விருத்தம் -66- என்றும் –
தொழும்பர் -திருமாலை -5 என்றும் –
பூமி பாரங்கள் -பெரியாழ்வார் திருமொழி -4-4-5- என்றும் இருக்கை
ஐஸ்வர்யத்தில் அக்நி பிரதிபத்தியாவது –
வீழ் பொருட்கு இரங்கி -பெரிய திருமொழி -1-1-4- என்றும் –
பெரும் செல்வம் நெருப்பு -திருவாய்மொழி -4-9-4- என்றும் –
ஆண்டார் வையம் எல்லாம் அரசாகி முன் ஆண்டவரே மாண்டார் என்று வந்தார் -பெரிய திருமொழி -6-2-5- என்றும் இருக்கை

விஷயத்தளவில் இடி பிரதிபத்தி யாவது –
சாந்தேந்து மென் முலையார் தடம் தோள் புணர் இன்ப வெள்ளத்து ஆழ்ந்தேன்
அரு நரகத்து அழுந்தும் பயன் படித்தேன் –பெரிய திருமொழி -6-3-4-என்றும்
பொறுத்துக் கொண்டு இருந்தார் பொறுக்க ஒணாப் போகாமே நுவர்வான் புகுந்து
ஐவர் அறுத்துத் தின்றிட அஞ்சி நின் -அடைந்தேன் -பெரிய திருமொழி -7-7-7- என்றும் –
கடியார் காளையர் ஐவர் புகுந்து காவல் செய்த அக்காவலைப் பிழைத்துக் குடி போந்து
உன் அடிக்கீழ் வந்து புகுந்தேன் -பெரிய திருமொழி -7-7-8- என்றும் –
கோவாய் ஐவர் என் மெய்க்குடி ஏறிக் கூறை சோறு இவை தா வென்று குமைத்துப் போகார்
நான் அவரைப் பொறுக்கிலேன் புனிதா புட்கொடியாய் நெடுமாலே தீவாய் நாகணையில்
துயில்வானே திருமாலே இனிச் செய்வது ஓன்று அறியேன்-பெரிய திருமொழி -7-7-9-என்றும் இருக்கை-

உத்தாரக -பிரதிபத்தியை -உயர்வற உயர்நலம் -1-1-1-தொடக்கமானவற்றிலும்
உபகாரத்வ பிரதிபத்தியை -தூதுகள் நாலிலும் -அஞ்சிறைய -1-4/வைகல் 6-1-
பொன்னுலகு ஆளீரோ -6-8/எம் கானலகம் -9-7/
உத்தேச்ய பிரதிபத்தியை -பயிலும் சுடரொளி-3-7/நெடுமாற்கு அடிமை -8-10-தொடக்கமானவற்றிலும்
அத்யாவசாய பிரதிபத்தியை -நோற்ற நோன்பு -5-7-1-/ஆரா வமுது -5-8-1-/தொடக்காமான வற்றிலும்
த்வாரா பிரதிபத்தியை -முனியே நான்முகனே -10-10-1- தொடக்கமானவற்றிலும்
விரோதி பிரதிபத்தியை -முந்நீர் ஞாலம் -3-2-1- தொடக்கமானவற்றிலும்
பிரிவுகாரர் பிரதிபத்தியை -கொண்ட பெண்டிரிலும் -9-1-1-
வழி பறிகாரர் பிரதிபத்தியை -நண்ணாதார் முறு வலிலும் -4-9-1-
அக்நி பிரதிபத்தியை -ஒரு நாயகத்திலும் -4-1-1-
இப்படிப் பிரதிபத்தியை -உண்ணிலாவிய விலும் பிரதம ஆசார்யரான நம் ஆழ்வார் விசேஷித்து அருளிச் செய்தார் ஆகையாலே
இப்பத்து பிரதிபத்தியும் ஒரு அதிகாரிக்கு அவஸ்யம் ஜ்ஞாதவ்யமாகக் கடவது
என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்ததாக திருநகரிப் பிள்ளை அருளிச் செய்வர் –

ஒரு அதிகாரிக்கு த்யாஜ்ய உபாதேயங்கள் இரண்டு -அவையாவன பிரகிருதி ப்ராக்ருதமும் –
பகவத் பாகவதரும் -த்யாஜ்யம் -ஆவது த்யாஜ்யப் பிரதிபத்தி –
உபேதேயமாவது -உபாதேய பிரதிபத்தி –
பிரதிபத்தியாவது -பெறாததிலே செல்லாமை -பெற்றதில் ப்ரீதி இன்றிக்கே ஒழிகை —
இழந்ததில் கிலேசம் இன்றிக்கே ஒழிகை -வழி இல்லா வழியில் ஆர்ஜியாது ஒழிகை யாகிற இவை –
இவை யன்றே நல்ல இவை யன்றே தீய -பெரிய திருவந்தாதி -3 -என்றும் –
உளதென்றினும் ஆவார் -இரண்டாம் திருவந்தாதி -45-என்றும் –
இன்பங்கள் மொய்த்திடினும் கனியார் -இராமானுச -நூற்றந்தாதி -17-என்றும் –
உண்டு இல்லை என்று தளர் தல தனரு குஞ்சாரார் -இரண்டாம் திருவந்தாதி -45 என்றும் –
துயரங்கள் முந்திலும் முனியார் -இராமானுச நூற்றந்தாதி –17-என்றும்
கூறை சோறு இவை வேண்டுவது இல்லை -பெரியாழ்வார் திருமொழி -5-1-4-என்றும்
இத்யாதிகளாலே த்யாஜ்ய பிரதிபத்தி சொல்லிற்று –
எங்கே காண்கேன் –திருவாய்மொழி -8-5-1-என்றும் -காணுமாறு அருளாய் -திருவாய்மொழி -8-1-2-என்றும் –
காண்பது எஞ்ஞான்று கொலோ -திருவாய்மொழி -5-9-6-என்றும் –
கண்டு கொண்டு -திருவாய்மொழி -9-4-9-என்றும் –
கண்டேன் கமல மலர்ப்பாதம் -திருவாய்மொழி -10-4-9- என்றும் –
திகழக் கிடந்தமை கண்டேன் -திருவாய் மொழி -5-8-1- என்றும் –
என்னுடைய கண் களிப்பே நோக்கினேன் -என்றும் -பெரிய திருமடல் -73-என்றும் –
கூட்டுண்டு நீங்கினான் -திருவாய்மொழி -9-5-6- என்றும் –
எம்மைப் பணி யறியா விட்டீர் -பெரிய திருமொழி -4-9-7- என்றும் –
உருக்காட்டாதே ஒளிப்பாயோ -திருவாய்மொழி -6-9-5-என்றும் –
தாம் தம்மைக் கொண்டகல்தல் தகவன்று -திருவாய்மொழி -9-7-9-என்றும் –
யாம் மடலூர்ந்தும் -திருவாய்மொழி -5-3-10-என்றும் –
குதிரியாய் மடலூர்தும் -திருவாய்மொழி -5-3-9- என்றும்
அறிவிழந்து எனை நாளையும் -திருவாய்மொழி -5-3-1-என்றும் –
எங்கு  சென்றாகிலும் கண்டு -திருவாய்மொழி -6-8-5-என்றும் -இத்யாதிகளாலே-பெறாததில் செல்லாமை பிறக்கையும் – பெற்றதில் ப்ரீதி பிறக்கையும் –
இழந்ததில் கிலேசம் இருக்கையும்-வழி யல்லா வழி யாகிலும் பெற வேண்டும் என்று இருக்கையும் ஆகிற உபாதேய பிரதி பத்தி சொல்லிற்று –

ஒரு குல ஸ்திரீக்கு பாதிவ்ரத்ய ஹாநி என்றும் -ஸ்த்ரீத்வ ஹாநி என்றும் – பந்து ஹாநி என்றும் -மூன்று உண்டு –
இவளுக்கு இவை பரிஹார்யம் ஆனவோபாதி அதிகாரிக்கும் இவை பரிஹார்யம் – அதிகாரிக்கு பாதிவ்ரத்ய ஹாநி யாவது -த்ருஷ்டார்தமாக இதரரை அநுவர்திக்கை -ஸ்த்ரீத்வ ஹாநி யாவது -த்ருஷ்டத்தை ஈஸ்வரன் பக்கலிலே அபேஷிக்கை –
பந்து ஹாநி யாவது -த்ருஷ்டத்தில் இல்லாமையை ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு சொல்லுகை –

அதிகாரிக்கு ரூபம் நாமம் உக்தி வ்ருத்தி புத்தி -என்கிற இவை ஐஞ்சும் வேண்டும் –இவற்றில் புத்தியே பிரதானம் –
அது இல்லையாகில் மற்றை நாலும் அசத் கல்பம் -ஆகை யிறே ஆழ்வார்களும் அதிலே உறைக்கைக்கு அடி -எங்கனே என்னில் –
எட்டு பாசுரங்களில் அறிவில்லை என்றால் அனரத்தம் விளையும் என்றும்
அடுத்த எட்டு பாசுரங்களால் -அறிவுக்கு பிறப்பிடமான நெஞ்சு அனுகூலமாய் இருந்தால்
உயர் கதிக்கு செல்வான் என்றும் -அடுத்த ஒன்பது பாசுரங்களால் -இத்தகைய நெஞ்சையும்
அறிவையும் உடையவனை எம்பெருமான் ஒருகாலும் பிரிய மாட்டான் -என்று அருளினார்கள் –

சித்தமும் செவ்வை நில்லாது -திருக்குறும் தாண்டகம் -10 என்றும் –
நெஞ்சமும் நீயம் பாங்கல்லையே -திருவாய்மொழி -5-4-2- என்றும் –
சிந்தித்து அறியாதார் -பெரிய திருமொழி -11-7-8- என்றும்
நின்றவா நில்லா நெஞ்சு -பெரிய திருமொழி -1-1-4- என்றும்
மறந்தேன் இறந்தேன் -பெரிய திருமொழி -6-2-2- என்றும் –
உணர்வு ஒன்றில்லா -திருமாலை -34 என்றும் –
மனத்திலோர் தூய்மை இல்லை -திருமாலை -30 என்றும் –
உள்ளமே ஓன்று நீ உணர மாட்டாய் -திருமாலை -24 -என்றும் –
இது அவிதேயமானால் அநர்த்தம் என்னும் ஆகாரத்தை அருளிச் செய்தார்கள் –

உள்ளிலும் உள்ளம் தடிக்கும் -பெரிய திருவந்தாதி -76 என்றும் –
உய்த்து உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கேற்றி -மூன்றாம் திருவந்தாதி -94-என்றும் –
நினைக்கும் கால் -மூன்றாம் திருவந்தாதி -81-என்றும் –
சிந்தையை செந்நிறுத்தி -திருவாய்மொழி -5-2-6- என்றும் –
தொழுமின் தூய மனத்தராய் -திருவாய்மொழி -3-6-7- என்றும் –
கூடு மனமுடையீர் -திருப்பல்லாண்டு -4 என்றும் –
பாடு மனமுடைப் பத்தருள்ளீர் -திருப்பல்லாண்டு -7 என்றும் –
சிந்தித்து இருப்பார்க்கு -நான்முகன் திருவந்தாதி -65 என்றும் சொல்லுகையாலே
இது அனுகூலித்தால் உத்தராகம் என்னுமிடத்தை அருளிச் செய்தார்கள் –

இப்படி அனுகூலித்த நெஞ்சுடையவனை ஈஸ்வரன் விச்லேஷிக்க மாட்டான் என்னும் இடத்தை சொல்லுகிறது –
மாசற்றார் மனத்துளான் -திருமாலை -22 என்றும் –
நெஞ்சத்து பேராது நிற்கும் பெருமான் -மூன்றாம் திருவந்தாதி -81- என்றும் –
சிந்தை உள்ளே முளைத்து எழுந்த தீம் கரும்பு -பெரிய திருமொழி -2-5-1- என்றும் –
அந்தாமத்து அன்புசெய்து என்னாவி சேர் அம்மான் -திருவாய்மொழி -2-5-1- என்றும் –
நெஞ்சமே நீணகராக இருந்த -திருவாய்மொழி -3-8-2- என்றும் –
வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் -பெரிய திருமொழி -3-5-1- என்றும் –
வந்தாய் என் மனம் புகுந்தாய் -பெரிய திருமொழி -1-10-9- என்றும் –
உள்ளம் புகுந்த ஒருவர் -பெரிய திருமொழி -5-2-3- என்றும் –
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என்நெஞ்சுள் -திருச்சந்த விருத்தம் -65- என்றும்
சொல்லுகையாலே அனுகூலரான ஸ்ரீ வைஷ்ணவர்களை ஈஸ்வரன் விச்லேஷிக்க மாட்டான் என்னும் இடத்தை சொல்லிற்று –

தான் அறுகை–சைதன்யம் அறுகை–சாராந்தரம் அறுகை–வேர் அறுகை–வ்யாபாரம் அறுகை விஷயாந்தரம் அறுகை
என்று ஸ்ரீ வகுளாபரண தாசர் பிள்ளை வார்த்தை –
தான் அறுகை யாவது -பிரகார பிரகாரி பாவம் அறிந்து –
யானும் தானாய்  ஒழிந்தான் -திருவாய்மொழி -8-8-4- என்றும் –
யானும் நீ தானே -திருவாய்மொழி -8-1-9- என்றும் –
யானே நீ -திருவாய்மொழி -2-9-9- என்றும் –
தானே யாகி நிறைந்து -திருவாய்மொழி -10-7-2- என்றும்
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம் -திருவாய்மொழி -2-3-1- என்றும் -இருக்கை
சைதன்யம் அறுகை யாவது -தான் கர்த்தா போக்தா என்னும் நினைவு போவது
செய்த்தலை எழு நாற்றுப் போலே -பெரியாழ்வார் திருமொழி -3-7-9- என்றும் –
கடைத் தலை யிருந்து -திருமாலை -38-என்றும் –
படியாய்க் கிடந்தது -பெருமாள் திருமொழி -4-9- என்றும் –
பூம் பட்டாம் புல்கும் அணையாம் -முதல் திருவந்தாதி -53-என்றும் இருக்கை –
சாராந்தரம்  அறுகை யாவது -எம்பெருமான் முக மலர்த்தி தவிர வேறு ஓன்று உண்டு என்கிற நினைவு போவது –
அஹம் அன்னம் -என்றும் -உருவமுமார் உயிரும் உடனே உண்டான் -திருவாய்மொழி -9-6-5- என்றும் –
என் நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே யாகி நிறைந்தான் -திருவாய்மொழி -10-7-1- என்றும் –
தான் என்னை முற்றப் பருகினான் -திருவாய்மொழி -9-6-10 -என்றும் இருக்கை
வேர் அறுகை யாவது -எம்பெருமான் உடன் சம்பந்தம் இல்லாதவன் என்னும் நினைவு போகை
நான் உன்னை யன்றி இலேன் கண்டாய் நாரணனே நீ என்னை யன்றி இலை -நான்முகன் திருவந்தாதி -7 என்றும் –
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது -திருப்பாவை -28-என்றும் இருக்கை
மண்நீரை ஒரு பாத்ரத்திலே எடுத்துத் தேற்றினால் -மண்ணானது கீழே படிந்து தெளிந்த நீரானது மேலே நிற்குமா போலே -அஞ்ஞான மிஸ்ரமான சரீரத்தில் இருக்கிற ஆத்மாவை ஆசார்யன் ஆகிற மகா உபகாரகன் -திருமந்தரம் ஆகிற தேற்றம் பாலாலே தேற்ற – அஞ்ஞானம் பதிந்து ஜ்ஞானம் -பிரகாசிக்கும் -தெளிந்த ஜலத்தை பாத்ராந்தரத்திலே சேர்க்கும் தனையும் கை பட்ட போதெல்லாம் கலங்குமா போலே -கலங்கும் என்று அஞ்சி -கலங்காமல் நோக்குவான் ஒருவன் கண் வட்டத்திலே வர்திக்கை ஸ்வரூபம் என்று அருளிச் செய்தார் –

சேதனனுடைய பர்வ த்ரயம் -அதாவது -ஸ்வரூப விரோதி நிவ்ருத்தி -சாதனா விரோதி நிவ்ருத்தி -ப்ராப்ய விரோதி நிவ்ருத்தி –
தீர்த்தனுக்கு அற்றபின் மற்றோர் சரண் இல்லை என்று எண்ணி தீர்த்தனுக்கே தார்த மனத்தனாகி -திருவாய்மொழி -7-10-11- என்றும் –
தலை வணக்கிக் கை கூப்பி ஏத்த வல்லார் -பெருமாள் திருமொழி -10-5-என்றும்
தாளும்  தடக்கையும் கூப்பி பணியுமவர் -திருவாய்மொழி -3-7-2- என்றும் –
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும்
சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும் தாமரை கண் என்றே தளரும் -திருவாய்மொழி -7-2-1- என்றும் –
நாட்டினாய் என்னை உனக்கு முன் தொண்டாக மாட்டினேன் அத்தனையே கொண்டேன் வல்வினையை
பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை காட்டினாய் -பெரிய திருமொழி -8-10-9- என்றும் –
மெய்ம்மையை மிக உணர்ந்து ஆம்பரிசு அறிந்து கொண்டு -உன் கடைத்தலை யிருந்து -திருமாலை -38- என்றும் –
இத்யாதிகளாலே சேதனனுடைய பர்வ  த்ரயத்தை அனுசந்திப்பான் –

முமுஷுவாய் பிரபன்னனானவன் தன்னை சிறையனாகவும் -பெரும் கடல் பட்டானாகவும் -அந்தகனாகவும் –
விஷ தஷ்டகனாகவும் அனுசந்திப்பான் -அனுசந்திக்கும்படி எங்கனே என்னில் –
தேகம் சிறைக்கூடாகவும்-தேக அனுபந்திகளான பார்யா புத்ராதிகள் சிறைக் கூட்டராகவும் –அஹங்கார மமகாரங்கள் வளையலாகவும்
நாசமான பாசம்-பெரிய திருமொழி -1-3-8- நாலியாகவும்-அவிவேகம் மூட்டாணியாகவும்-இந்திரியங்கள் பிரிவாளராகவும்-விஷயங்கள் பிரியலாகவும்
மனஸ்ஸு மேல் தண்டலாகவும்-தான் சிறையனாகவும் எம்பெருமான் விமோசகனாகவும் அனுசந்திப்பான் –

சம்சாரம் சமுத்ரமாகவும் -ஆசை பெரு நீராகவும்-மநோ விகாரம் வாயு ஷோபமாகவும் -அநுராகம் பெரும் சுழி யாகவும் –
அஹங்கார மமகாரங்கள் க்ரஹ சங்கங்களாகவும் ஆத்யாத்மிகாதிகள் அலை யொழுங்காகவும் உடம்பு ஒழுகல் ஒடமாகவும்
தத் ரஷணாதிகள் வன் பாரமாகவும் தான் பெரும் கடல் பட்டானாகவும்எம்பெருமான் உத்தாரகனாகவும் அனுசந்திப்பான்

மனஸ்ஸு கண்ணாகவும் -ஜ்ஞானம் பார்வையாகவும் -காமம் காசமாகவும் –லோபம் காமிநி யாகவும் -உப போகம் புருஷார்தமாகவும் –
அக்ருத கரணம் வழியாகவும் -அஞ்ஞானம் கோல்காட்டாகாவும் நரகம் படு குழி ஊன்று கோலாகவும் அனுசந்திப்பான் –

சம்சாரம் செடியாகவும் உடம்பு புற்றாகவும் இந்திரியங்கள் விவரங்களாகவும் விஷயங்கள் பாம்பாகவும் அவற்றின் சேர்த்தி விஷமாகவும் –
அவற்றின் சந்நிதி தம்சம் ஆகவும் அனுபவம் வ்யாப்தி யாகவும் -மோஹம மூர்ச்சையாகவும்
தான் விஷ தஷ்டனாகவும் எம்பெருமான் தீர் மருந்தாகவும்-திருவாய்மொழி -1-7-4- அனுசந்திப்பான் —

எல்லாம் வேண்டுவதும் பிரபன்னனுக்கு – ஒன்றும் வேண்டாததும் பிரபன்னனுக்கு –
படுக்கை சேர்த்திக்கு முன்பு இவை எல்லாமும் வேண்டும் – படுக்கையில் ஏறினால் இவை எல்லாம் மிகை –
பிணம் கிடக்க மணம் செய்ய ஒண்ணாதாப் போலே காண் இவ்வுடம்பு கிடக்க-வகுத்த கைங்கர்யம் விளையாதபடி -ஆயிட்டு எம்பெருமானைப் பெறுகைக்கு இவ்வுடம்பே அல்ல விரோதம் தான் செய்யும் நன்மைகளும் விரோதம் -எங்கனே என்னில் அழகுக்கு இட்ட சட்டை அணைக்கைக்கு
விரோதி யாமா போலே முன்பு பூஷணத்தை அனுபவிக்க வேணும் சம்பந்தம் சம்பாத்தியம் அன்று -தடை விடுகை சம்பாத்தியம் –
அதாவது பகவத் ப்ராப்திக்கு விரோதியான இச்சா பிரவ்ருத்திகளை சொன்னபடி –

பகவத் சேஷமாய் வைத்து அகன்று போன ஆத்மாவை எம்பருமானோடே சேர்க்கைக்கு பற்றாசாக பிராட்டி உளள் என்று அத்யவசித்து இருக்கை –
தொண்டனூர் நம்பி தம்முடைய அந்திம தசையிலே மருதூர் நம்பி நடக்க –
இவ்வாத்மா எம்பெருமானைப் பற்றி கரை மரம் சேரும் படி ஒரு வார்த்தை சொல்ல வல்லையே -என்று கேட்க
எம்பெருமானுக்கு இல்லாததுமாய் -இவ்வாத்மாவுக்கு உள்ளது ஒன்றுமாய்-எம்பெருமானை பெருகைக்கு பொருள் விலையும் தானேயாய் இருப்பதொரு
அஞ்சலியே காண் என்று அருளிச் செய்தார் –
அது எங்கனே என்னில்
-அடித்துப் பறிக்கும் தசையிலே ஓர் அறிமுகம் பெற்றால் போலேயும்-கருட முத்ரைக்கு விஷம் தீருமா போலேயும்
நமக்கு புருஷகார பூதையான பிராட்டி உளள் என்று அத்யவசித்து இருக்கையே வேண்டுவது
இவ்வதிகாரிக்கு பிரகிருதி உடன் இருக்கும் நாள் இத்தனையும் நினைத்து இருக்க வேண்டும் படி எங்கனே என்னில்
எம்பெருமானும் நித்யன் -ஆத்மாவும் நித்யமாயிருக்க இது இற்றை வரை இழப்பதே என்று இழவு பட்டு இருக்கையும்
நெடும்காலம் இழப்பித்த உடம்போடு எம்பெருமான் தன்னை ரஷகன் என்று அநுசந்திக்க வைப்பதே என்று இருக்கையும் –
இற்றைவரை இழப்பித்த உடம்பு இருந்தது -இன்னம் இழக்கிலோ -என்று பயம் பிறந்து இருக்கையும் –
பெறுகைக்கு நாம் பண்ணுவது ஒரு நற்றம் உண்டோ -இழக்கைக்கு பயப்பட இரண்டும் அவனே ஆனபின்பு -தன்னை அனுசந்தித்துத் தளருகையும் –
அவனை அனுசந்தத்திது பெரும் தேற்றமும் -இவ்வாகார த்வயமும் பிரகிருதி சம்பந்தம் அறும் அளவும் இப்படி அநுசந்திக்குமவன் அதிகாரி யாகிறான் –

இவ்வதிகாரிக்கு உபாயத்துக்கு செய்ய வேண்டுவது  ஒன்றும் இல்லை –
த்வயத்தில் பூர்வ கண்டத்தை அனுசந்தித்தால் துரும்பு நறுக்க பிராப்தி இல்லை – உத்தர கண்டத்தை அநுசந்தித்தால் தலை சொரிய அவசரம் இல்லை
ஜ்ஞானப் பிரதன் ஆசார்யன் –ஜ்ஞான வர்த்தகர் ஸ்ரீ வைஷ்ணவர்கள் –ஜ்ஞான விஷயம் எம்பெருமான்
-ஜ்ஞான பலம் பகவத் கைங்கர்யம் – பலத்தின் இனிமை பாகவத கைங்கர்யம் –

—————————————————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ தேசிகனும் -கோயில் -திருமலை -பெருமாள் கோயில்- திருவஹீந்திர புரம் -அனுபவம் –ஸ்ரீ வேளுக்குடி சுவாமிகள்—

October 1, 2015

ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்ரீ ரெங்க அனுபவம் –

காட்டில் வேங்கடம் கண்ண புர நகர் —பள்ளி கொடும் இடம் -கூடிடு கூடலே -பக்திக்கு பரவசப் பட்டு அசேதனம் காலில் விழுந்தாள்
-உலகு அளந்தான் வரக் கூவாய் –
அபீத ஸததம் அரங்கன் மேல்
நியாச விம்சதி நியாச பஞ்சதி திலகம் -அரங்கன் திருவடிகள்
பகவத் த்யான சோபனம் -படிக்கட்டு -முநிவாகன போகம் -காண்பனவும் –உரைப்பனவும் -மற்று ஓன்று இன்றி கண்ணனையே கண்டு உரைத்த கடிய காதல் –பாண் பெருமாள் -நின் கண் வேட்கை எழுவிப்பன் -ஆழ்வார் செய்த கைங்கர்யம் -அர்ச்சையிலே ஈடுபட்டு -எட்டாக் கனி இல்லையே –
படுகாடு கிடந்தது கண்டு குமிழ் நீர் ஆழம் கால் படுவார்கள்
அஷ்ட புஜ அஷ்டகம்
வேக்கா சேது ஸ்துதி
காமாட்சி அஷ்டகம்
பரமார்த்த ஸ்துதி -திருபுட்குளி
தேகளீச்வர ஸ்தோத்ரம் -திருக்கோவலூர்
38 திவ்ய தேசம் -நம் ஆழ்வார் -அருளி இருந்தாலும் -மதிள் அரங்கர் வண் புகழ் மேல் ஆயிரம் -பட்டர் -ஈத்த பத்து –
சேராத உளவோ பெரும் செல்வருக்கு –
ஜகதாம் பத்தி -சேஷி தம்பதிகள் -திவ்ய தம்பதிகள் -லஷ்மி நாத –நாத யாமுன –அஸ்மத் ஆச்சார்யா -திருவரங்க நாச்சியாரும் பெரிய பெருமாளையும் குறிக்கும் -ஆசார்ய பதவி ஆசை பட்டு -தேர் தட்டிலும் -அரங்கத்திலும் -குறு பரம்பரையில் முதல் ஸ்தானம் –ரகஸ்ய த்ரயம் உபதேசித்து அருளி –
குருக்கள் தம் குருப்யச்ய-இவர்களைத் தான் குறிக்கும் –
அபய முத்திரை -வைத்த அஞ்சேல் என்ற கையை -அடுத்த ஸ்லோகத்தில் –
மீண்டும் மீண்டும் பிரபத்தி பண்ணாதே ஹஸ்தம் சொல்லும் -என்னை ரஷிக்கட்டும்
வியாக்யானம் -முத்தரை காட்டி அருளும் -நாட்டியகாரர் -அபயம் பத்ரஞ்சவோ -கரதலே-ஸ்மிதம் பண்ணி -காட்டி அருளி -மாஸூசா –
-அபய பிரதானம் -நம் பெருமாள் ஸ்மிதம் இன்றும் சேவிக்கலாம்
வந்ததே போதும் -சரணா கதிக்கு பின்பே நமக்கு கைங்கர்யங்கள் நிறைய செய்து பொழுது கழிக்க வேண்டும்
-சம்சார பயம் வேண்டாமே -பிரபத்தி ஒரு தடவையே
த்வயம் இனிமையால் மீண்டும் சொல்லி -நினைவு படுத்த மீண்டும் சொல்லி -ஆச்சார்யர்களுக்கு இனிமை அதனால் சொல்லி
-சம்சார பயம் போக்க சொல்லி -கிஞ்சித் தாண்டவம் -கோட்டங்கை வாமனனாய் செய்த கோலங்கள் –
கையில் பிடித்த -திவ்யாயுதங்களும் வைத்த அஞ்சேல் என்ற கையும் -கவித்த முடியும் -தேவாதி தேவன் -சிரித்த முகமும் முறுவலும் –
ஆசன பத்மத்தில் அழுந்திய திருவடிகளும் -இவை எல்லாம் நமக்கு நம் பெருமாள் பக்கலிலே காணலாம்
குற்றம் கன்று வெறுவாமைக்கு வாத்சல்யம் –ஸ்வாமித்வம் -சௌசீல்யம் சௌலப்யம் –
ஆறாவது ஸ்லோகம் மா புஜங்கர் -சேர்த்தி மூன்று -தடவை –வெளி ஆண்டாள் உள் ஆண்டாள் -உபய நாச்சியார் -ராமர் துர்நபி பாஷதே -நம் பெருமாள் ராமர் -பெரிய பெருமாள் -கண்ணன் -கற்றினம் மேய்த்த கழல் -கொண்டல் வண்ணன் கோவலன் -நாச்சியார் மாலை நம் பெருமாள் இடம் வராது –ஆண்டாள் மட்டும் தான் அந்த உரிமை -அரங்கனுக்கே என்று இருந்தவள் -அரங்கற்கே பன்னு திருப்பாவை பல் பதியம் இன்னிசையால் பாடிக் கொடுத்தாள்
ஐஞ்சு லஷம் பெண்களையும் -பிருந்தாவனம் தனது வசம் கொண்டு இருந்தவன் அசேஷ ஜன -க்ரஹனாயா கொள்வதற்காக -சயனத்தில்
-ரெங்கே புஜங்க சயனே –
சம்சாரம் கிழங்கு எடுத்தால் அன்றி பேரேன்
நாபி கமலம் -ஸ்மிதம் -பிறந்த குழந்தை பார்த்து பெரிய பெருமாளும் பெரிய பிராட்டியாரும் சேர்ந்து -அன்யோன்ய மந்த ஸ்மிதம் –ஓம் சத் இத்யாதி சொல்வதைக் கேட்டு -நான்முகனால் ஆராதனம் -அவனாலே எழுந்து அருளப் பெற்ற -ஆதி ப்ரஹ்ம உத்சவம் என்றே பெயர்
கர்ம கோடி-கிடாம்பி ஆச்சான் -திரு மேனி -அந்த அப்புள்ளார் வம்சத்தில் பிறக்க வைத்தாயே
சரணம் வார்த்தை சொல்லும் படி சொல்பம் பண்ணி அருளும் –
ஆசார்ய சம்பந்தம் வரை பண்ணி அருளிய பின்பு -இத்தையும் பண்ணி அருள வேண்டும் -முக்தி அளவும் நீயே அருள வேண்டும்
உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்-நம் ஆழ்வார் போலே –
ஈஸ்வர சௌஹார்த்தம் -யத்ருச்சா ஸூ ஹ்ருதம் விஷ்ணோர் கடாஷம் -அத்வேஷம் ஆபி முக்கியம் -ஆசார்யர் -சாது சமாகம் படிக்கட்டுக்கள் –
மெய்யடிகார்கள் ஈட்டம் கண்டு -கண் இணை என்று கொலோ கழிக்கும் கொலோ -முதலில் பெருமாள் திருமொழி -பிரார்த்தித்து
ஸ்ரீ ரெங்க வாசிகள் உடன் சேர்க்கை -கூடுமேல் அது காண்டும் கண் படைத்த பயன் ஆவதே -திலகம் -திருவடி துகள்கள் தண்ணீர் பட்டு –கண்ண நீர் கொண்டு அரங்கன் திரு முற்றம் சேறு செய்வர் –
ஸூ ரிகள் -பெருமாள் உபாயம் நினைக்காமல் -முக்தி அடைந்த பின்பு – ஏறி வந்த ஏணி நினைப்போமோ –திருவடிகளே உபேயம் புருஷார்த்தம் சாத்தியம் கைங்கர்யம் செய்ய -அத்தை ஸ்ரீ ரெங்க வாசிகள் இங்கேயே நினைக்க -எப்பொழுதும் பிராப்யம் -அனுபவிக்கத் தக்கவன்
பால் விருந்து -மருந்துக்கும் பித்தம் பிடித்தால் –
பால் அக்கார அடிசில் நினைவு வருமா பித்த மருந்து என்று நினைவு வருமா அஜீர்ணம் தொலைந்த பின்பு –
அது போலேவே அவன் உபேயம் -புருஷார்த்தம் –அந்திம காலத்தில் ராமானுஜர் -உபதேசம் -அந்திம கால தஞ்சம் –
ஒரு ஷணம் உபாயம் ஆக்கி பின்பு எல்லாம் புருஷார்த்தமாக நினையும் -கரு முகை மாலையை சும்மாடு போலே
துவத் சேஷத்வ -ரசிகா –தேசிகன் ஸ்ரீ ஸூ கதிகள் இத்தை அடி ஒட்டியே —
புறப்பாடு நேரம் கழித்து சேவித்தால் கழுத்தில் தூக்கு போட்டு கொள்ளுவார்கள் ஈடு
வெள்ளோட்டம் -அங்கே சென்று கைங்கர்யம் செய்ய பயிற்சி -இங்கே –

கைங்கர்ய பிரார்த்தனை -அவனுக்கு நாம் சொல்லும் மாஸூசா
பகவத் த்யான சோபானம் -படிக்கட்டுக்கள் -காட்டவே -அடி -முதல் -ஆகார சுத்தி -சத்வ குணம் வளர -திரு மேனி த்யானம் சத்வ குணம் வளர -சுத்த சத்வம் -வெள்ளை சாயல் சிகப்பு கருப்பு மாறும் -ரஜஸ் தமஸ் மாறி சத்வ குணம் வளர்க்க –மோஷ ப்ரதன்-அவன் ஒருவனே -தெளிவான சிந்தனை -ஆனந்தமாக இருப்பார்கள் –நல்லதே மனசில் படும் -பேசினாலே இனிமையாக -பிறர் ஸூ ஹ்ருதம் ஒன்றே மனசில் –
சயனத் திருக் கோலம் -ஆழ்வார்கள் ஆசார்யர்கள் ஈடுபட்டு -வேதார்த்த சந்க்ரகாம் -சேஷ சாயினே -நின்று இருப்பவன் இடம்
-தென் அரங்கன் என்னில் மயலே பெருகும்
ஏரார் கோலத் திகழ கிடந்தாய் -கிடந்ததோர் கிடக்கை -கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு
அந்தர் ஜோதி —அஞ்சனம் யோக திருஷ்டி -ஹிருதயத்தில் பிரகாசிக்க மோஷ மொஷாதி ரூபம் சித்தி -சிந்தா மணி -திவ்யம் சஷூஸ் ரெங்க மத்யே -சமுதாய சோபை –அவயவ சோபை –திருக் கமல பாதம் -தொடங்கி–நீண்ட அப்பெரியவாய கண்கள் வரை -ஆல–நீல மேனி ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சம்
லாவண்யம் திருக் குருகுடி நம்பி
-சௌந்தர்யம் நாகை அழகியார் –
பராசர பட்டர் -லாவண்யம் கப்பல் ஏறி சௌந்தர்யம் அனுபவிக்க –
சீதக் கடலும் –பாதக் கமலம் –21 பாசுரங்கள் –
அனுபவிக்கும் மனச் கிட்டும் அப் பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதம்
தானே ஏற்றி கொள்ளும் திருவடியில் நின்றால்-திருக் கண்கள் கடாஷம் பெற்று மோஷம் –
வைகுண்ட வாசலில் நுழைந்து –
பாதாம் போஜாம் –ஜனகா –தொடைகள் -நாபி -சொல்லி சொல்லி கூப்பிடுமாம் -மார்பு -நாச்சியார் -கழுத்து வாய் மாசுசா -சொல்லி -கனக வளை முத்ரா -கழுத்தில் தானே -அணைக்கும் இடம் -கழுத்து முழுங்கின இடம் மாசூசா சொன்னது வாய் -கண் பொய்யே பேசாதே அனுக்ரஹம் ஒன்றே பொழியும் மௌலி பந்தே –மாயனார் -ஆய சேர் முடியும் தேசும் அடியேற்கு அகலுமோ –வலது பக்கம் திரும்பி நம்மை நோக்கி ஜரிக்க கூடாதே உண்டது -எண்ணைக் காப்பு சாத்தி சேவை -ஆபரணங்கள் சாத்தி அழகைக் குறைக்க -ஆபரணங்களுக்கு அழகு கொடுக்கும் பெருமாள் -ஆடி 18 முதல் புறப்பாடு -48 நாள்களுக்கு பின்பு -ராஜாவுக்கு பிரஜை போலே அரங்க நகர் மக்கள் –

ஏகாதசி -சந்தன மண்டபம் -திருமஞ்சனம் –
ஸ்ரீ ரெங்கம் -மூலவர் உத்சவர் பிரதான்யம்
காஞ்சி -உத்சவர் பிரதான்யம்
திருவேங்கடம் -மூலவர் பிரதான்யம்
1323 உலுகான் படை எடுப்பு -துக்ளக் -1311-முதல் படையெடுப்பு -12000 முடி திருத்திய பன்றி மெட்டு -கொள்ளிடம் -அருகில் -தேசிகன்
1205-1305-பிள்ளை லோகாச்சார்யர் -ஒத்தக்கடை யானை மலை -மறைவிடம் -2 வருஷம் அங்கேயே -திருவரசு
1268/69–1369-தேசிகன் -சாஸ்திரம் ரசித்து -சுத்த பிரகாசர் -மேற்கு நோக்கி -அபிபீத ஸ்தவம் அருளி மேல் கோட்டையில்
கூறத் ஆள்வான் திரு மால் இரும் சோலை -சைவ வைணவம் சண்டை
1390 அப்புறம் சண்டை கலக்கம் முடிந்து
1371=1443 மா முனிகள்
அரங்கம் ராஜதானி வேர் பற்று -நரக பாதக -திரு அரங்கன் நாமாவளி சொல்லி
பெரிய பிராட்டிக்கு கேள்வன் -ரெங்க பூத ரமண -விருப்பத்துடன் இங்கே அந்து சேர்ந்தவன் -ந்ருத்த ஸ்தானம் –
கிருஷ்ண -கண்ணனே விஷ்ணோ ஹரே -திரு மனத் தூண்கள் இரண்டும் ஹரி -அஷரங்கள்-
த்ரிவிக்ரம ஜனார்த்தன -த்ரியுக -3 இரட்டைகள் பகவான் -நாராயணன் -நிரஸ்த -எதி தலைவர் ராசா பாரதி சொல் -பயங்கள் போனதே –தலை நரைத்து -நிரஸ்த -நிபு சம்பவம் -ரெங்க முகே -எதிரிகள் வர மாட்டார்கள் பரஸ்பர ஹிதம் -ஸ்ரீ வைஷ்ணவ செல்வம் –
பிரபாவம் சொல்லி அருளி -கைங்கர்ய செல்வம் –

——————————————————————————-

ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருமலை — அனுபவம்

தயா சதகம் -108- ஸ்லோகங்கள் -திரு வேங்கடம் உடையானே பாட்டுடைத் தலைவன் -இல்லை தயை குணம் தான் -தயா தேவி -துளசி தேவி போலே –
காடு வானரம் வேடர்களுக்கும் -ஏகாந்தமான -போதரிந்து வானரங்கள் பூச்சுனை புக்கு -ஆழ்வார்
தயை ஒன்றே அவனை பொதுவாக்கி -நித்யர் மண்ணவர் நடுவில் -கண்ணாவான்-அனைவருக்கும் -தாய் இரட்டை குழந்தைகளுக்கு இரு முலையால் பால் அளிப்பது போலே –
திரு மணி அம்சம் தேசிகன் -ராமானுஜர் ஸ்ரீ ஸூகதிகள் ரீங்கரிக்கும் படி பல கிரந்தங்கள் அருளி
ஸ்ரீ நிவாச அநு கம்பாய –உதாரணம் -கரும்பு -கடித்து ஆசாரம் பொருந்தாதே -கரும்பு சாறு -அஸ்தரம் -கட்டி கல் கண்டு –
திருவேங்கடம் உடையான் -கரும்பு -சாறு -தயை -திருமலை கல் கண்டு -திருமலையே திரு உடம்பு -ஆதி செஷன்
அஹோபிலம் -திரு மேனி -ஸ்ரீ சைலம் வாழ் -திருமலை -தலைப் பாகம் -குஷீக்கி -பர்யங்க வித்தை -ஆதி செஷன் பீடம் காலை வைத்து -அது போலே திருமலையில் கால் வைக்கலாம் -முழம் தாளால் நடந்து போனதாக சொல்வார்கள்
கிருபா –அநு கம்பா -நடுக்கம் -பிறர் நடுக்கம் பார்த்து தானும் நடுங்கி ஆர்த்தி நனைத்து -ஆர்த்ரா நஷத்ரம் –
இரங்கி தீர்த்தம் ஆடி -அடுத்த ஸ்லோகம் -பிரவாஹம் -பகவத் அனுபவம் -படித்துறை -குரு பரம்பரை -பெருமாள் -வசிசிஷ்டர் -சக பத்ன்யா விசாலாட்ச்யா –ஆற்றில் இறங்குவார் கையிலே துணை பற்றி போவார் போலே -போனார் –

குண பிரவாகம் -செஞ்சொல் கவிகாள் உயிர் காத்து ஆள் செய்மின் -வஞ்சக் கள்வன் -பரத்வம் கருணை சுசல்யம் வாத்சல்யம் -சௌசீல்யம் -மூழ்க அடிக்கும்
குளிர்ந்து இருக்கும் குரு சந்ததி -சீதலாம்–தண் தெரியல் பட்டர் பிரான் -வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் திருப்பாதம் பணிந்து –
பட்டர் -அழகிய மணவாளன்
ராமானுஜர் -சோமாசி ஆண்டான்
திருக் கண்ண புரம்-திருமங்கை ஆழ்வார்
திருத் தொலை வில்லி மங்கலம் -நம் ஆழ்வார்
திரு வேங்கடம் -பெரிய திருமலை நம்பி -அனந்தாழ்வான்
அத்யயன உத்சவம் -21 நாள் -மற்ற இடங்களில் -அனந்தாழ்வான் -ஏற்பாடு -22 நாள் ராமானுச நூற்று அந்தாதி தனியாக –
23-தண்ணீர் அமுது திருத்தும் உத்சவம் -பெரிய திருமலை நம்பி -தாத்தா தீர்த்தம் கொடு கேட்டு –
ஆசார்யர்கள் ஆழ்வார்கள் ஸ்ரீ ஸூ கதி கொண்டு -சர்வ யோக்யதாம் -பொதுவாக்கி -தங்க பாத்ரம் போலே -சர்வாதிகாரம் அருளிச் செயல்
-த்ரிவேதி சர்வ யோக்யதாம்

உத்தர பாகம் திராவிட பாஷா -வேதாந்தம் -ஆயிரம் இன் தமிழால் -எய்தற்கு அறிய மறைகளை –வேதம் எண்ணிக்கை இல்லை -இதுவோ இனிமை ஆயிரம் –
கமலா வாசம் -கருணை ஒன்றையே ஏகாந்தி-பிரபன்ன ஜன சாதகாம் பஷி போலே
ஆழ்வார் திரு நகர் -தெற்கு மேற்கு கிழக்கு வடக்கு திருவேங்கடம் சந்நிதி உண்டே –
மாரி மாறாத தண் அம மலை வேங்கடம் —அண்ணலை -வாரி மாறாத -தாமிர பரணி -திருவாய் மொழி தயையால் -மயர்வற மதி நலம் அருள -திருவேங்கடம் -ஆண் பெண் பெயர்கள் அங்கும்
மணி வல்லி -பெயர் –
3-3- 6-10-திருவாய்மொழி -நோன்ற நாலிலும் சரண் -பலிக்க வில்லை -உலகம் உண்ட பெருவாயா -அகலகில்லேன் இறையும்-த்வயார்த்தம் தெளிவாக அருளி
ஒழிவில் காலம் -சவ தேச -சகலமும் -இளைய பெருமாள் போலே -பரதன் கைங்கர்யமும் வேண்டும் -சத்ருகன்
ராமனைத் தவிர தெய்வம் மற்று அறியாத பரதனைத் தவிர மற்று அறியாத சத்ருனன் -நிலைமையே வேண்டும்
த்வயம் பூர்வ உத்தர வாக்யார்த்தம் இங்கேயே –
கமலா வாசன் கருணையே எதிர்பார்த்த ஆழ்வார் -ஆழ்வார் தீர்த்தம் -கபில தீர்த்தம் இன்று பெயர் -கீழே மண்ணாக இருக்க -தொண்டைமான் சக்கரவர்த்தி மலைக்கு போகும் வழி –

ஆறாவது ஸ்லோகம் -சமஸ்த -சைதன்யம் -ஞானம் -பெரிய பிராட்டியார் -ஸ்ரீ நிவாசா கருணா இவ ரூபிணி
ருக் வேதம் -10 புராணம் -அடையாளம் -கிரிம் கச்ச -ஸ்ரீ பீடம் -கோவிந்த நாமம் – சொல்லிக் கொண்டே -திருமலை ஏறுவது -ஆருஷம் -பீடம் கொண்டே அவனுக்கு அடையாளம் –மாலையைத் தாங்கி கொண்டு இருப்பவர் உபன்யாசம் –
திருக் கண்டேன் -இடை களியில் சேவித்து முதலில் -நாச்சியார் -தான் முதலில் கண்ணில் பட -ஸ்ரீ நிவாசன் ஸ்ரீ தரன் இவனே -நித்ய அனபாயினி –அபாயம் -பிரிவி அனபாயின்மை பிரிவி இல்லாமை -இறையும் அகலகில்லேன் -ஸ்ரேயதே ஸ்ரீ நிவாசனுக்கும் பெருமை சேர்த்து தேவத்வம் அஸ்நுதே ஸ்ரேயதாம் –
பார் என்னும் மடந்தையை மால் செய்யும் -விஸ்வ தாரிணீம் -பூமா தேவி -தைக்கு தடை பாவங்கள் சூழ்ந்து இருக்கும் -பாபம் போக்க -குற்றம் போருக்க -பூமி தேவி
தென்னன் உயர் பொருப்பும்-தெய்வ வட மலையும் மன்னு நிலையே முலையாக–மலராள் தனத்துள்ளான் – ஸ்ரீ ஸ்தன ஆபரணம் இவன் –
தைர்யே ஹிமாசலன் –பூமா தேவி போலே பொறுமை பெருமாளுக்கு வால்மீகி –
நீலா தேவி -அடுத்த ச்லோஹம் -கண் புரை நோய் இருந்தால் தான் பாபங்கள் தெரியாதே -போக படலம் -அனைத்து ஆனந்தம் -மயக்கி
தயா தேவி வணங்கி –ஞானம் விளக்கு காட்டி -விழுந்தாரை எடுத்து -பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ் கொண்டு திருத்தி -ஸ்வாதீன–அவனை தனக்கு வசப்படுத்தி வைத்து -நாமும் -உபதேசம் பண்ணி திருத்தி அவனை அழகாலே மயக்கி

உசித உபாயம் உசித நேரத்தில் சொல்லி -தத் இங்கித பராதீனன் -தயை ஓடம் -கிருபை ஒன்றாலே மோஷ பிரதன்-கிருத அபராதங்கள் நிவாரணம் தேடி -சம்சார தாரிணீம் நீயே –
மமமாயா துரத்தயா -கீதா -ச்லோஹம் –என் அருளினால் -மா மேவ யே பிரபத்யந்தே -விஷ்ணு போதம் –
ராமன் ராவணன் -ஞான பலாதிகள் ஓன்று போலே இருந்தாலும் தயை ஒன்றே வாசி -இது இல்லாததால் அவை இருந்தும் தோஷம் ஆகுமே -ராமனை ராவணன் இடம் பிரித்து கொடுப்பதே நீ –
கிருபா பரிபாலையா -கேவலம் மதீயைய தையா -மா மேவ ஏவ -ஏவகாரம் –அபராத சஹச்ர பாஜனம் -சம்சாரம் பாழும் கிணற்றில் விழுந்து தவிக்க –
தயை -17 ஸ்லோகம் -பிரயோக்கும் இடம் -சிருஷ்டி காலத்திலேயே செய்து அருளி -அசித் போலே இருக்க -அசித் அவிசிஷ்டான் பிரளையே–ஜாத நிர்வேதம் -வெறுத்து சிருஷ்டி பண்ணி அருளி –

சிருஷ்டி கார்யமே தயையால் தூண்டப்பட்டு -இத்தை செய்து அருளியதே -திரு வேங்கடமுடையான் -அவனே ஓங்கி உலகு அளந்த பெருமாள் -தனி மா தெய்வம் –உலகம் மூன்றும் முளைப்பித்த தனி மா தெய்வம் தளிர் அடிக் கீழ் -புகுதல் அன்றி -அவன் அடியார் நனி மா கலவி இன்பம் வாய்க்க -பிரார்த்திக்கிறார்
உழவன் -21 ஸ்லோகம் -பக்தி உழவன் -தயா தேவி -ஜலம் -சர்வ பாபேப்யோ மொஷயிஷ்யாமி களை பறித்து -ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் -உபகரணங்கள் அந்த உழவனுக்கு -பக்தியே விதை –
கமலா காந்தன் -தயா தேவி நாளைக்கு உனக்கு யார் சோறு போடப் போகிறார்கள் -அபராதங்கள் -தானே அவளுக்கு உணவு -துஷ்கிருதகளில் பிரதானன் நான் -கொஞ்சமாக தோஷம் பண்ணுகிறவர்களை பார்க்காதே –
சீதா மத்யே ஸூ மத்யமா -இடையே இல்லாதவள் இடையில்
இளையனோடு பொய்யோ இடையோ என்று இருப்பவள் -மேலும் கீழும் உள்ளது கண்டு இடை இருக்க வேண்டும் என்று ஊகம் –
தயா தேவி -ஞான -சக்தி பலம் தேஜஸ் –வீர்யம் ஐஸ்வர்யம் பெருமாளுக்கு நல்லது தேட வேண்டாமா பேசி -குணம் சமாஹம் -எதிர் வக்கீல் -தயா தான் நீதிபதி –
குழந்தையை ரஷித்தே தீர வேண்டும் -33 ஸ்லோகம்
சீறி அருளாதே -சீருவதே அருள்
கடல் அரசன் –இடத்தே வில்லை வளைத்து -விரோதிகளை ஒழித்து
பரசுராமன் -தபம் பலம் மட்டும் வாங்கி
காகாசுரன் -ஒரே கண்ணை அழித்து-
அவனது தண்டனையை மாற்றி -தடுத்து நிறுத்தாமல் -இப்படி திருப்பி விட்டு அருளுகிராய் தயா தேவி –
வேடர் தலைவன் கபி குலபதி -யாரோ ஒரு சபரி -காபி சபரி -தாழ்ந்த -குசேலர் குப்ஜா -விரஜை ஐஞ்சு லஷம் பெண்கள் மாலா காரர் -உன்னதி -நீ -பிரபு- தயை வெள்ளம் -நிரப்பி செய்து அருளி -65- ஸ்லோகம்
முகுந்த -மோஷ பூமி ததாதி இதி முகுந்தா -இங்கேயே இஹ முக்த அநுபூதி அருளி -வேறு என்ன கேட்க உள்ளது

————————————————————-

ஸ்ரீ வேதாந்த தேசிகன்-பெருமாள் கோயில் அனுபவம்

பிறந்தக அனுபவம் -வரதராஜ பஞ்சாசாது -உத்சவம் -அவதாரம் –
தேவாதி ராஜன் -பேர் அருளாளன் -ராஜா அருள் சேர்ந்து
தாக மண்டபம்
மதுரை -இழந்து ஆய்ப்பாடி
அயோத்தியை -தண்டகாரண்யம்
தூப்புல் -திரு மலைக்கு மேலே சென்று மங்களா சாசனம் உத்சவம் –
மலைக்கட்டு திவ்ய தேசம் -திரு வெள்ளறை -திருவாட்டாறு போலே அத்திகிரி
காருண்யா ராசி குவியில் -திரு நாமம் சாதிக்கிறார் முதல் ஸ்லோகத்தில் -பேர் அருளாளன் இல்லையோ -வரதன் –வரதர்களுக்குள் ராஜா வராத ராஜன் -உதாரா சர்வ ஏவைஷ என்பவன் அன்றோ –
நாலு பேர் வருகிறார்கள் -நாலு பேர் வரவில்லை -உடனே எந்த நாலு பேர் வரவில்லை கேட்டான் -அர்ஜுனன் துஷ்க்ருதா மூடர் -அசுரர் போல்வார்
இவர்கள் வாங்கி கொண்டதால்தானே உதாரன் -வாங்கினவன் கொடையாளி ஆகிறான் –
காரே ய் கருணை இராமானுச -பேர் அருளாளன் அருள் பெற்றவர் பெயர் வாங்கிக் கொண்டாரே
மகா ரச கந்தம் -மடப்பள்ளி மனம் கமழும் வம்சம் -கிடாம்பி ஆச்சான் வம்சம்
அத்திகிரி அத திகிரி -அந்த உயர்ந்த சக்கரத் ஆழ்வார் -பிடித்த அழகு -நிமிர வழி இல்லாமல் –
ராமன் ஒரு தடவை குனிந்து சமுத்திர ராஜன் இடம் அடியேன் -சொல்லி பலிக்காமல் வில் எடுத்து கார்யம் கொள்ள வேண்டிற்று
கலசி ஜலசி -கன்யா கலசம் -ஜலம் -கடலில் பிறந்த -பெரும் தேவி -காருண்யா ராசி என்றே பெயர்
புஷ்கரம்-தீர்த்த ரூபம் -ப்ரஹ்மா சேவை -ஆசைப்பட -தீர்த்தம் -சேவை கிடைக்க -நைமிசாராண்யம் -வன ரூபம் -சத்ய வ்ரத ஷேத்ரம் வந்து அஸ்வமேத யாகம் பண்ணி –
காஞ்சி -க பிரம்மா அஞ்சித்த -அவரால் வணங்கப் பட்டவர் -காயத்ரி -தேவிக்கும் சந்நிதி உண்டே புஷ்கரம்
சரஸ்வதி தேவி இல்லாமல்
தீப பிரகாசர் -இருளை நீக்க – -காளையன் அனுப்பி -அவனை விளக்கில் கொண்டார்
யானைக் கூட்டம் ஆளறி வேளுக்கை
பூத கணங்கள் -அஷ்ட பூஜை பெருமாள்
நதி போலே -வந்து வேக வாதி ஆறு -வேகமாக வந்ததால் வேக வாதி -சேது வெக்கா சேது யதோத்த காரி -தலை மாடு மாறி -என்ன பன்ன தெரியாமல் –
ப்ரஹ்மா சொன்ன வண்ணம் செய்த பெருமாள் அப்புறம் திருமங்கை ஆழ்வார் சொன்ன வண்ணம் –
நான்கு பெருமாள் எழுந்து அருளி -வர வேண்டியவர் வர வேண்டுமே
ரேவதி புனர்வசி ரோகிணி ஹஸ்தம் -சித்தரை மாசம் -திருவவதார உத்சவம் –
சம்ப்ரதாயம் ரஷனம் -காருண்யா ராசி திருமங்கை -வேகவதி ஆற்றங்கரை வந்து சொத்து -மண்ணை அளந்து போட தங்கம் வார்த்து கொடுத்த பெருமாள்
ஆளவந்தார் -பிரார்த்தனைக்கு ராமானுஜர் சம்ப்ரதாயத்துக்கு கொண்டு வந்த வரதன்
வெள்ளை வஸ்த்ரம் -இருவரும் சேவை -நவராத்திரி மகா நவமி -ஒரே வெண் கொற்றக் குடைக்கு கீழே –இருவரும் சேர்ந்து புறப்பாடு
ஸ்ரீ ரெங்கம் அனுப்பிய கருணை -ராமானுஜரை –ஆவாரார் துணை -தேவாரார் கோலத்துடன் –
அன்பன் -சர்வ ஸூஹ்ருத் -அவ்யாக வத்சலன் -ஞான சாரம் பிரேம சாரம் ராமானுஜர் காலத்தில் பிறந்த தமிழ் பிரபந்தங்கள் இவை -ராமானுஜ நூற்று அந்தாந்தி போலே -ஆசார்ய வைபவம் சொல்ல வந்தவை –
வேதாந்தம் உன்னைப்பார்க்க முடியாது சொன்னதும் உண்மை கண்ணுக்கு தெரியும் படி நீ சேவை சாதிப்பதும் உண்மை உளனஎனில் உளன் இலன் எனில் இலன் -சொல்லலாம் -சொல்லே முக்கியம் விரோதி பரிகாராம்
அவன் செய்யும் முயற்சியால் முடியாது நீ காட்டவே காணலாம் –எச் சஷூசாம் விஷயம் -மனிசர்க்கு தேவா போலே தேவர்க்கும் தேவர் நீ -அனுபிரவேசித்துநியமித்து -சிருஷ்டித்த பதார்த்தங்களுக்குள்ளும் -சம காலத்திலேயே புகுந்து -வஸ்துவாக்கி -சத்தை பெற -சட்டை போலே தேவர்கள் -அங்கான் அங்கா தேவதைகள் ஜகத் சர்வம் சரீரம் -பிரகாரம் -ஆதி ராஜ்ஜியம் -வேத ரஷகன் தேவ ராஜன் -சாயா -நிழல் -புறப்பாடு கொடை அழகு -வள்ளல் அழகு 18 ஜான் குடை அழகு –
வேதம் மரம் -பழம் உன்ன வரும் பறவைகள் போலே தேவர்கள்
அகில ஹேய -விபஷ பூதம் -பிரத்ய நீக -கல்யாணைக -உபய லிங்கம் -விபூதி லிங்கம் நம் சம்ப்ரதாயம் -உபய லிங்க பாதம் ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ தரம்
நித்யோதித்த சாந் தோ தித தசை -பாஞ்சராத்ர ஆகமம் -ஸ்ரீ பத்ரியில் நாராயணன் தன்னை தானே த்யானம் ஸ்வரூப த்யானம் -விசாத வியூஹ ஸ்தம்பம் -சதிர் வித- பர வாசு தேவன் வ்யூஹ வாசு தேவன் இருவரும் நீயே -பெருமாள் கோயிலில் பாஞ்ச ராத்ர ஆகமம் –
பெரும் தேவி -கம்பர் -கௌசல்யையை–அங்கு இளைய தேவிகள் உள்ளார் -பெரும் தேவி கேட்டு அருளாய் -திருவடி -பெருமைக்கு தக்க தேவி –
கருட வாகனம் இருக்க சக்கர தாழ்வாரும் இருக்க சம்சார சாகரம் -பல முதலைகள் -கடிக்க -ஆர்த்தி உடன் நானும் கூப்பிட -அருளாதநீர் -புதுப் பெயர் கொடுக்கிறார் ஆழ்வார் – -பிரதம சதகே வீஷித வரதம் -இமையோர் தலைவா -அமரர்கள் அதிபதி தேவாதி ராஜன் -அபராத சஹாத்வம் குணம் உண்டே
கோஷ்டியார் சேர்க்கை எனக்கே எப்பொழுது உண்டாகும் –மற்றவர்களுக்கு அனுபவம் கொடுப்பார்கள் –
கனக முத்தரை -விஸ்வரூபம் சேவிக்க வேண்டும் -தீர்க்க சுமங்கலி -திரு நாராயான யது கிரி -நாச்சியார் புது மணப் பெண் போலே
புல்லாக்கு கீழே சிரிப்பை குனிந்து சேவித்து அனுபவகிக்க வேண்டும் காஞ்சியில் -பரதந்த்ரன் -சாஷி வளையல் முத்தரை காட்டிக் கொடுக்கும் –
இந்திரா -லோக மாதா -பிராட்டி திருநாமம் பரம ஐச்வர்யாயா தாது —
48 ஸ்லோகம் -உத்சவங்கள் சேர்த்து அருளி -விசேஷ அனுபவம்
குதிரை -கருட விந்தை ராஜன் -தேர் -ஆளும் பல்லக்கு ஆந்தோளிகா -தியாக ராஜன் வெய்யிலோ மழையோ-உத்சவம்
நிரந்தரம் -வாரண சைல ராஜா -அச்சுவை பெறினும் வேண்டேன் கச்சி நகர் உளானே -சத்யம் சபே –
நீர் இங்கே இருந்து என் உள்ளம் புகுந்து இருக்க
பல சுருதி -சொல்லி நிகமிக்கிறார் -கல்பக விருஷம் -தேவ ராஜன் -கையாலே பறிக்கும் படி
கோடியில் உள்ள துணியை கம்பாலே போட்டு கம்பாலே எடுக்க வேண்டும் -சாஸ்திரம்
அனைத்து ஐஸ்வர்யங்களையும் அளிக்கும் தேவாதி தேவன் -ஞாத சதகம் -காஞ்சிக்காக அருளி

————————————————————-

ஸ்ரீ வேதாந்த தேசிகன்-திருவஹீந்திர புரம் -அனுபவம்

அடியவர்க்கு மெய்யன் தேவ நாதன் -அஹீந்திர -ஆதி சேஷ புரம் –
ஔஷதக கிரி -கருடனை த்யானிக்க -ஹயக்க்ரீவ மந்த்ரம் உபதேசம் -28 ஸ்தோத்ர கிரந்தங்கள் தேசிகன் அருளி –
கவி -தார்க்கிக சிம்ஹம் -புற சமயம் நிரசனம் தர்க்க நியாய சாஸ்திரம் கொண்டு வேதார்த்தம் ஸ்தாபித்து அருளி -வாதம் நிலை நிறுத்த ஞாய சாஸ்திரம் –
கவிகளுக்குள்ளே சிம்ஹம் -தார்க்கிகர்களுக்குள்ளே சிம்ஹம் -ஞான பாவம் -உபதேசிக்க -அனுபவம் -உள்ளம் உருகி -நாயகி பாவம் -மகள் தாய் தோழி பாவங்கள் –
தேசிகன் -27-ஆண் பாவம் -தேவ நாத பஞ்சாசத் -50
அச்யுத சதகம் –பெண் பாவம் -அவயவ சபைகள் -100 ஸ்லோகங்கள் -ஆண்கள் முரட்டு சமஸ்க்ருதம் -பெண்கள் -மெல்லிய சமஸ்க்ருதம் வல்லினம் இல்லாமல் போலே
பிராக்ருத பாஷை -பெண்களும் குழந்தைகளும் -பேசுவது -பெண் பேச்சு தனி சிறப்பு -திருப்பாவை -லோக பிரசித்தம் –
அர்த்தம் புரிய அவரே சாமான்ய சமஸ்க்ருதத்திலும் அருளி உள்ளார் –
தெய்வ நாதன் -புருஷோத்தமன் -அழகன் பெரியவன் மூவராகிய ஒருவன் -ஞான பிரான் மலைக்கு மேலே –
தேசிகன் முதல் ஸ்தோத்ரம் பிறந்த இடம் -பொற் கால் இட்ட பெருமை கொண்டைக் கோல் நாட்டி –
திருக்குடந்தை -ஆராவமுதன் -ஆறு பிரபந்தங்களிலும் மங்களா சாசனம் -நாலு வித கவி -சிதற கவி -திரு வெழு கூற்று இருக்கை-
சக்ராயுதம் -த்ரி சூலம் -மாட்டி -சேவை சாதிக்க -தீர்த்த தாகம் -ஆதி சேஷன்-வாளால் அடித்து அஹீந்திர புரம்
கருடன் -சுத்தி வர -கருட நதி -கடிலநதி மருவி -பெருமாள் அங்கு எழுந்து அருளி உத்சவம்
மூவராகிய முதல்வன் -சத்யம் -தாசாநாம்-அடியார்க்கு மெய்யன் – அச்சுதன் -ந சுத்தி நழுவ விடாதவன் கஜேந்த்திரன் -கர்வம் -வேழப் போதகமே -அன்னவன் தாலேலோ —
பச்சிலை மரம் போலே -கருட நதிக்கரையில் -வையம் ஏழும் உண்டு ஆலிலை -அடியவர்க்கு மெய்யனாகிய -சௌலப்ய எல்லை -பரதவ எல்லை -இரண்டும் அவனே –
என் பேச்சை கிளிப் பேச்சாக எடுத்துக் கொள் -கூண்டில் உள்ள சுகம் போலே -கிளிக்கு தான் ஆழ்வார்கள் -குயிலுக்கு இல்லையே -உன்னுடோம் தோழைமை கொள்ளுவன் கிளி உடன் என்பர் -மென் கிளி போல் மிக மிழற்றும் என் பேதையே முன்னோர் மொழிந்த முறை தப்பாமல்
தாச சத்யன் -கிங்கரர் சத்யன் -இன்னும் ஒரு திரு நாமம் சாத்துகிறார் –பாலன் -அறியாத பிள்ளைகளோம் -ஸ்துதி ஸ்தவ-இளைய புன் கவிதை ஏலும் -எம்பிராற்கு இனியவாறே
அஸ்மத் குருநாம் அச்யுத -நாக்கு என்கிற சிங்கா சனத்தில் உட்கார்ந்து -ஆசார்யர் மூலமாக -புல்லாங்குழல் –அபண்டித்வம் -போக்கி -யதார்த்த ஞானம்
முனிவரை இடுக்கியும் -முந்நீர் வண்ணனையும் -உபதேசித்து அருளுவான் -சத்வாரகம் அத்வாரகம் இரண்டையும் பண்ணி
டோலாயமானமான ஊஞ்சல் ஆடும் உள்ளத்தில் உட்கார மாட்டீர் -மனச் சஞ்சலம் நின்றவா நில்லா நெஞ்சம்
கோ கோபில ஜனம் -இடக்கை வலக்கை அறியாத -கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை அறிந்தவர்கள் -உத்தவர் -வைராக்கியம் சொல்லிக் கொடுக்க வந்தார் -ஞான மார்க்கம் உபதேசிக்க -கண்ணன் போனதாகவே நினைக்க வில்லை ஹி கிருஷ்ண யாதவா முராரே –
பக்தியால் திளைத்து -மெய்ப்பாடு -கண்டு கலங்கினார் -பக்தி உபதேசம் பெற்று வந்தார் –
ஸ்ரத்தா ஹிருதயம் சுலபன் -உள்ளுவார் உள்ளத்து உடன் கண்டாய்
மகிமையை இருப்பிடமாகக் கொண்டு படைக்கிறாய் -மூன்று தொழில் களையும் செய்து -உலகம் யாவையும் தாம் உலகாக்கி நிலை பெருத்து -அலகிலா விளையாட்டு உடையவன் –
தேவ நாதன் -சர்வ வியாபகன் -சகல தார ணா தி-அணுவாகி இருந்து -விபுவாகியும் –ஸ்தூலம் சூஷ்மம் -அணு விபு -நான்கும் -அவன் -கரந்த பாலுள் நெய்யே போல் –
திலதைதவது -எள்ளுக்குள் – எண்ணெய் கட்டைக்குள் உள்ள நெருப்பு போலே மூன்று உதாரணங்கள் கதய த்ரயம் –
ஒளி பண்பு எங்கும் -த்ரவ்யம் -ஞான மாயன் –
ஒரு இடத்தில் இருந்து வேறு இடம் போக முடியாதவன் -எங்கும் உள்ளவன் என்பதால்
பெண் பாவனையில் வேதார்த்த அர்த்தம் -வேதாந்த தேசிகன் -அன்றோ –
புள்ளை கடாவுநின்றதை காணீர் -மனக் கடலுள் வாழ வல்ல மாய நம்பி -அரவித பாவையும் தானும் –
மட்குடம் நூல் வேஷ்டி ஜகத் பிரமம் -காரணம் காரியம் -தாரண நியமன ச்வாமித்வ -மூன்றும் உண்டே –உபாதான நிமித்த சஹகாரி காரணத்வம்-அவனே -வேர் முதலாய் வித்தாய் -வைஷண்யம் -விஷம சிருஷ்டி இல்லாமல்
நைர்காருண்யம் -கருணை இல்லாதவன் இல்லை
நைரபேஷ்யம்-அபேஷிக்காமல் சிருஷ்டி -கர்மாதீனம்
மெய்யனாகும் விரும்பி தொழுவார்க்கு எல்லாம் -பாண்டவ பஷபாதி -விசயனுக்காய் மணித்தேர் கோல் கொள் கைத்தலத்து எந்தை -பெரிய திருமொழி 3-1-9-
சர்வ ஜன சௌஹார்த்தம் என் பக்தன் காட்டுவான் -பாகவத அபாசரம் -பொறுக்காதவன் -அச்யுதன் -சூர்யன் இடம் ஓட்டை காண்பவன் போலே –
ஏவம் முக்தி பலம் –எல்லாம் செய்து இருந்தாலும் பாகவத அபசாரம் பெரும் தடையாகும் மோஷத்துக்கு
சேஷத்வ ஞானம் -தான் ஆத்மாவுக்கு சக்கரப் பொறி -என்னையும் என் உடைமையையும் உன் சக்கரப் பொறியால் ஒற்றிக் கொண்டேன்
கைங்கர்யத்தில் ஆசை -என்பதால் -அச்சுவை பெறினும் வேண்டேன் -தாவத சேவா ரசி பரிதா –உத்தர விருத்தி அதிகாரம் -சரணாகதிக்கு பின்பு பகவத் பாகவத ஆசார்ய கைங்கர்யமே கர்த்தவ்யம் –
அமுதுபடி சாத்துப்பொடி சமர்ப்பித்து -பரஸ்ப நீச பாவம் -கூரத் ஆழ்வான் -ஸ்ரீ ஸூ கத்திகளை மேற்கோள் காட்டி அருளுகிறார்
திருநாம சங்கீர்த்தனமே -வாழ்வு –
84 ஸ்லோகம் -கைகுழந்தையை கை பிடித்து கூட்டிப் போவது போலே தினகரன் கர -அர்சிராதிகதி மார்க்கம் -12 லோகங்கள் கடந்து -விரஜா நீராடி ஸ்வரூப ஆவிர்பாவம்
சுத்த சத்வ சரீரம் -சுத்த சத்வ மாயம் -ரஜஸ் தமஸ் இல்லாமல் ப்ரஹ்ம அலங்காரம் -மதி முக மடந்தையர் –
95- ஸ்லோகம் தவ சிந்தன முகானாம் -பய நாசம் -பக்தர் கடாஷம் பெற்றுக் கொடு -செங்கண் சிறு சிறிதே -ஆண்டாள் பகவத் கடாஷம் இவர் பாகவத கடாஷம் பிரார்த்திக்கிறார்
நித்யம் கிருபணன் அஸ்மின் -அநந்ய கதித்வம் -அகிஞ்சனன்-திருவடி ஆகிய புதையல் -97 ஸ்லோகம் கதா புனா -மதியம் மூர்த்தம் அலங்கரிஷ்யதி எம்மா வீட்டு -நின் செம் மா பாத பற்பு என் தலை மேல் சேர்த்து ஒல்லை
100 ஸ்லோகம் -வேடன் -குழந்தை -ராஜ குமாரன் -அறிந்து -பக்தி இல்லா விடிலும் -கொள்ள வேண்டும் -கல்யாணம் நிச்சயம் -ஆனபின்பு -பெண் மூக்கு போல்வன இனி பார்க்க வேண்டுமோ -நீயே மணவாளன் -கூவிக் கொள்ளும் காலம் குறுகாதோ –
வேங்கடேச கவி -101- ஸ்லோகம் -நல்ல மனஸ் படைத்தவர் மனசில் ஒளி பெரும்

————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம்
ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .