ஸ்ரீ வார்த்தா மாலையில் -ஸ்ரீ திருமந்த்ரார்த்த வார்த்தை முத்துக்கள் /அருளிச் செயல் ஸ்ரீ ஸூக்திகளும் திரு மந்த்ரார்த்தமும் – – – – – –

திருமந்த்ரார்த்த வார்த்தைகள் –

அகாரத்தாலே -சேஷத்வ பிரதிசம்பந்தியைச் சொல்லி —மகாரத்தாலே சேஷத்வத்துக்கு ஆஸ்ரயம் சொல்லி –
அவதாரணத்தாலே சேஷத்வத்தினுடைய அனந்யார்ஹத்வம்–சொல்லுகையாலே ஸ்வரூபம் சொல்லிற்று –

அகாரத்தாலே -ரஷகனைச் சொல்லி —மகாரத்தாலே -ரஷ்ய வஸ்துவைச்  சொல்லி —சதுர்த்தியாலே -ரஷ்ய ரஷ்ய பாவத்துக்கு
வேண்டும் உறவு சொல்லி -அவதாரணத்தாலே -ரஷ்ய ரஷ்யகங்களினுடைய லஷ்ய லஷணம் சொல்லுகையாலே-உபாயம் சொல்லிற்று –

அகாரத்தாலே பிராப்ய வஸ்துவைச் சொல்லி —மகாரத்தாலே ப்ராப்தாவைச் சொல்லி —சதுர்த்தியாலே பிராப்ய பலமான கைங்கர்யத்தைச் சொல்லி –
அவதாரணத்தாலே -கைங்கர்ய பிரகாரத்தை–சொல்லுகையாலே பிராப்யம் சொல்லிற்று –

பிரணவத்தாலே ஆத்ம ஸ்வரூபம் சொல்லிற்று–நாராயண பதத்தாலே பரமாத்ம ஸ்வரூபம் சொல்லிற்று –
சதுர்த்தி யாலே -புருஷார்த்த ஸ்வரூபம் சொல்லிற்று —ம-என்கிற இத்தாலே விரோதி ஸ்வரூபம் சொல்லிற்று –
நம -என்கிற இத்தாலே -உபாய ஸ்வரூபம் சொல்லிற்று —ஆகையாலே சகல வேதாந்த ப்ரதிபாத்யமான அர்த்த பஞ்சகம் சொல்லிற்று –

ஆஸ்ரயியான சேஷத்வத்தை பிரதமத்திலே சொல்லி –ஆஸ்ரயமான ஞான ஆனந்த லஷண வஸ்துவை பின்பு சொல்லுகைக்கு ஹேது என் –
என்னில் -அஹம் அர்த்தத்துக்கு ஞான ஆனந்தங்களில் காட்டில் –பிரதான நிரூபகம் சேஷத்வம் என்னும் இடம் தோற்றுகைக்காகவும் –
தாஸ்ய ரசத்தில் இழிய ஒட்டாத ஆத்ம அனுபவ மாத்ரத்தில் பர்யவசிப்பதொரு அந்தராயம் உண்டாகையாலே தத் பரிஹாரார்த்தமாகவும் –
நெருப்பிலே புக்கு சிலர் வேவாரைக் கண்டால் -அவர்களை இன்னார் என்று பாராதே பற்றி எரிகிற நெருப்பை அவிக்கையிலே யத்னம்
பண்ணுவாரோபாதி -அதாஹ்யமான ஆத்ம வஸ்துவை அநாதி காலம் பற்றி-தஹித்துப் போருகிற ஸ்வ ஸ்வா தந்த்ர்யத்தை அகற்றுவிக்கையிலே
தாத்பர்யம் ஆகையாலும் -புஷ்பத்துக்கு ஸ்லாக்யதை பரிமளத்திலே-ஆகிறவோபாதி -ஸ்வரூபத்துக்கும் உபாதேயத்வம் இஸ் ஸ்வபாவ
விசேஷத்தாலே ஆகையாலும் -இவ்வோ பிரதான்யத்தை பற்ற-பிரதமத்தில் சேஷத்வத்தை உபாதானம் பண்ணிற்று –

இவ் வாத்மாவுக்கு எம்பெருமான் கட்டிய திரு மாங்கல்ய ஸூத்ரம் திரு மந்த்ரம் -என்று பிள்ளை திரு நறையூர் அரையர் அருளிச் செய்வர் –

சம்சார வர்த்தகமாய இருக்கும் தாலிக் கயிறு–பதினாறு இழையாய் -இரண்டு சரடாய் -இருக்கும் –
கைங்கர்ய வர்த்தகமான மங்கல்ய ஸூத்ரம்–எட்டு இழையாய் மூன்று சரடாய் இருக்கும் –
ஸ்வரூபத்தின் உணர்த்தியைப் பற்றி இருப்பது ஒரு சரடும் —ஸ்வ ரஷணத்தில் அசக்தியைப் பற்றி இருப்பது ஒரு சரடும் –
ஸ்வரூபத்தின் உணர்த்தியாலும் -ஸ்வ ரஷணத்தில் அசக்தியாலும் —பலித்த ஈஸ்வரனை நாம் பேணுகையை வெளி இட்டு இருப்பது ஒரு சரடுமாய் இருக்கும் –

பிரமாண -பிரமேய -பிரமாதக்களை சேர அநு சந்திக்கும் படி –
ஆத்மாவுக்கு ஸ்வரூபம் -அனந்யார்ஹ சேஷத்வம்-ஏதத் பிரகாசம் -பிரணவம்–அனந்யார்ஹ சேஷத்வ பிரதி சம்பந்தி -பெருமாள் பொருந்த விட்ட திருவடிகள் –
ஆத்மாவுக்கு ஸ்வரூபம் -அநந்ய சரணத்வம் -ஏதத் பிரகாசம் -நமஸ் ஸூ —அநந்ய சரணத்வ பிரதி சம்பந்தி -பெருமாள் அமைத்த திருக்கை –
ஆத்மாவுக்கு ஸ்வரூபம் -அநந்ய போகத்வம் -ஏதத் பிரகாசம் -நாராயண பதம் –அநந்ய போகதவ பிரதி சம்பந்தி -பெருமாள் திரு முறுவல்
இதுக்கு கருத்து -தான் அறிகை -சைதன்யம் அறுகை -சதனாந்தரம் அறுகை-சாத்யாந்தரம் அறுகை-
அதாவது -வேர் அறுகை -வ்யாபாந்தரம் அறுகை -விஷயாந்தரம் அறுகை-

திரு மந்த்ரம் ஸ்வரூபம் சொல்லுகிறது என்று திருக் குருகை பிரான் பிள்ளான் அநு சந்தித்து அருளுவர் –
திரு மந்த்ரம் பிராப்யம் சொல்லுகிறது என்று -பிள்ளை திரு நறையூர் அரையர் அநு சந்தித்து அருளுவர் —
இவ்வாத்மாவினுடைய அனந்யார்ஹத்வம் சொல்லுகிறது என்று -நஞ்சீயர்  அநு சந்தித்து அருளுவர் —
இவ்வாத்மாவினுடைய பாரதந்த்ர்யம் சொல்லுகிறது என்று-எம்பார் -அநு சந்தித்து அருளுவர் —
திருமந்தரம் மூன்று பதத்தாலும் ஞான வைராக்ய பக்திகளை வெளி இடுகிறது என்று முதலியார் அநு சந்தித்து அருளுவர் —
திருமந்தரம் மூன்று பதத்தாலும் -அபிஜன வித்யா வருத்தங்களை வெளி இடுகிறது என்று ஆள வந்தார் அநு சந்தித்து அருளுவர் —
திருமந்தரம் அர்த்த பஞ்சகத்தையும் சொல்லுகிறது என்று நம்பிள்ளை அநு சந்தித்து அருளுவர் —
பாணிக் க்ரஹணமும் உடன் மண நீரும் சதுர்த்தி கல்வியும் சொல்லுகிறது என்று பிள்ளை உறங்காவல்லி தாசர் அநு சந்தித்து அருளுவர் —
மண நீர் அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனை மேல் மஞ்சனமாட்ட -நாச்சியார் திருமொழி -6-10-உபாயாந்தரம் அற்று இருக்கும்
நமஸ பதம் காட்டுவதை மண நீர் ஸ்தானத்தில் அருளினார் –
ஸ்வரூபத்தில் உணர்த்தியையும் -ஸ்வ ரஷணத்தில் அசக்தியையும் -எம்பெருமானைப் பேணுகையும் சொல்லுகிறது என்று
முதலி யாண்டான் அநு சந்தித்து அருளுவர் —-

தாய் மடியிலே கிடந்தது உறங்குகிற பிரஜை ஸ்வப்னத்திலே புலியின் கையில் அகப்பட்டுக் கூப்பிடுமா போலே தன்னை உணர்ந்த தஸை –
கண்ணை விழித்து தாய் முகத்தைப் பார்த்து நிர்ப்பயனாய் இருக்குமா போலே –எம்பெருமானை உணர்ந்த தசை –
உபாய தசையிலே எம்பெருமானாலே எம்பெருமானை பெறும் இத்தனை ஒழிய-தம் தாம் நன்மை கொண்டு பெற நினையார் -ஸ்வரூப ஞானம் உடையார் –
இந்த ஸ்வா தந்த்ர்யம் தலை எடுத்தால்-அகாரத்துக்கு அர்ஹன் அல்லன்
-ஒருவனுடைய வ்ருத்தத்தை இட்டாதல்-ஜென்மத்தை இட்டாதல் -தண்ணியதாக நினைக்கில் மகாரத்துக்கு அர்ஹன் அல்லன்
-பிறர் தனக்கு ரஷகர் என்று இருந்தானாகில் உகாரத்துக்கு அர்ஹன் அல்லன்
-தனக்குத் தான் ரஷகன் என்று நினைத்தபோது நமஸ் ஸுக்கு அர்ஹன் அல்லன் –
-தன் கார்யத்துக்கு தான் கடவன் என்று நினைத்த போது நாராயண பதத்துக்கு அர்ஹன் அல்லன் –
செய்ததொரு கைங்கர்யத்தை தான் உகத்தல் பிறர் உகத்தல் செய்யில் சதுர்த்திக்கு அர்ஹன் அல்லன் –
இவ்வர்த்தம் ஒரு அதிகாரி அறிந்து தவிர்ந்த போது திருமந்த்ரார்தம் கை புகுந்ததாகக் கடவது –
அல்லாத போதை திருமந்த்ரதோட்டை சம்பந்தம் சந்தேஹம் ஆம் இத்தனை -என்று பட்டர் அருளிச் செய்வர் –

ஸ்வ ஸ்வா தந்த்ர்யம் மேலிட்டதாகில் பிரணவத்தில் பிரதம பதார்த்தை அநு சந்திப்பான் –
இதரர் பக்கலில் சேஷித்வ பிரதிபத்தி நடை யாடிற்றாகில் உகாரராத்தை அநு சந்திப்பான் —
தேவோசஹம் என்று இருந்தானாகில் மகார்த்தத்தை அநு சந்திப்பான் –
ஸ்வ ரஷண விஷயத்தில் கரைந்தான் ஆகில் நமஸ் சப்தார்த்தை அநு சந்திப்பான் –
ஈஸ்வர விபூதிகளோடே காறு காறு என்றானாகில் -நார சப்தார்த்தை அநு சந்திப்பான் —
சப்தாதி விஷயங்களில் போகய புத்தி பிறந்ததாகில் ஆய சப்தார்த்தை அநு சந்திப்பான் –

பிரமாணம் -பத த்ரய யாத்மகமாய் இருக்கும் —பிரமேயம் பாவ த்ரய யாத்மகமாய் இருக்கும் —-அதிகாரி -ஆகார யாத்மகமாய் இருக்கும் –
பிரமாணம் பதத் த்ரய யாத்மகமாகை யாவது -பிரதம பதம் -மத்யம பதம் -த்ருதீய பதம் –
பிரமேயம் பர்வ த்ரய யாத்மகமாகை யாவது -பொருந்த விட்ட திருவடிகளும் -அஞ்சல் என்ற திருக்கையும் —சிவந்த திரு முகமண்டலமும் –
அதிகாரி ஆகார த்ரய யாத்மகமாகை யாவது -அனந்யார்ஹ சேஷ பூதனாய் -அநந்ய சரணானாய் -அநந்ய–போக்யனாய் இருக்கை –
பிரதம பதம் -அனந்யார்ஹ சேஷத்வ பிரகாசகம் —பொருந்த விட்ட திருவடிகள் அனந்யார்ஹதைக்கு பிரதி சம்பந்தியாய் இருக்கும் –
மத்யம பதம் அநந்ய சரணத்வ பிரகாசமாய் இருக்கும் —அஞ்சல் என்ற திருக்கை அநந்ய சரணத்வத்துக்கு பிரதி சம்பந்தியாய் இருக்கும் – –
த்ருதீய பதம் அநந்ய போக்யத்வ பிரகாசமாய் இருக்கும் —-சிவந்த திருமுக மண்டலம் அநந்ய போக்யத்வ பிரதி சம்பந்தியாய் இருக்கும் – –
என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்-

உத்பத்தியையும் -உடைமையையும் -உடைமைக்கு உண்டான ஊற்றத்தையும் -உடைமைக்கு உடைமை இல்லாமையையும் –
உத்பத்தி யானவைகளை உடையவனுடைய உயர் நிலையையும் – உடைமைக்கும் உடையவனுக்கும் உண்டான உறவையும்
சொல்லுகிறது திரு மந்த்ரம் – -திரு மந்த்ரத்தாலே -திரு அபிஷேகத்தை அநு சந்திப்பான் –

அர்த்த பஞ்சகமும் ரகஸ்ய த்ரயத்தில் சொல்லுகிற படி எங்கனே என்னில் –
திரு மந்த்ரத்தில் -நாராயண பதத்தாலே பர மாத்ம ஸ்வரூபம் சொல்லிற்று —
பிரணவத்தாலே ஆத்ம ஸ்வரூபம் சொல்லிற்று –
சதுர்த்தியாலே புருஷார்த்த ஸ்வரூபம் சொல்லிற்று —
நம -என்று உபாய ஸ்வரூபம் சொல்லிற்று –
நமஸ் சப்தத்தில் ஷஷ்ட் யந்தமான மகாரத்தாலே விரோதி ஸ்வரூபம் சொல்லிற்று –

ஸ்வரூபம் சொல்லுகிறது திருமந்தரம்–சாஸ்திர ருசி பரிக்ருஹீதம் -திரு மந்த்ரம்-ஆத்ம யாதாம்ய பிரதிபாதன பரம் திருமந்தரம்-
பிராப்ய பிரதானம் -திருமந்தரம்

ஆச்சார்ய  அங்கீகாரம் உடையவனுக்கு ஆசார்யன் இரங்கி திரு மந்த்ரத்தில் உபதேசித்த -அர்த்தைத்தை –
பத ஸ -அநு சந்திக்கும்படி சொல்லுகிறது –
ஈஸ்வர சேஷ பூதன் -அந்ய சேஷத்வ நிவ்ருத்தன் -விலஷண நிரூபகன் -ததீய பர தந்த்ரன் –
தத் சம்பந்த யுக்தன் -கிங்கர ஸ்வ பாவன் -என்று தன்னை அநு சந்திப்பது –
இத்தால் சொல்லிற்று ஆய்த்து
ரஷகத்வ பிரதி சம்பந்தி –பூர்வகமான ரஷ்யத்வம் சொல்லி –
அந்ய சேஷத்வ பிரதி சம்பந்தி -நிவ்ருத்தி பூர்வகமான அனந்யார்ஹத்வம் சொல்லி –
அசேதன வ்யாவ்ருத்தி பூர்வகமான சேதன வைலஷண்யம் சொல்லி
ஸ்வா தந்த்ர்ய நிவ்ருத்தி பூர்வகமான பாரதந்த்ர்யத்தினுடைய எல்லை சொல்லி –
சோபாதிக பந்து –நிவ்ருத்தி பூர்வகமான நிருபாதிக சம்பந்தம் சொல்லி –
அபுருஷார்த்த நிவ்ருத்தி பூர்வகமான புருஷார்த்த பிரகாரம் சொல்லித் தலைக் கட்டுகிறது –

திருநகரிப் பிள்ளை -பிரதம பதத்தில் -ஈஸ்வரனுடைய சர்வ ரஷகத்வமும் –
சர்வ சேஷித்வமும் -ஜகத் காரணத்வமும் -ஸ்ரீ ய பதித்வமும் -சொல்லுகிறது —எங்கனே என்னில் –
ஆள்கின்றான் ஆழியான் -திருவாய்மொழி -10-1-3-என்றும்
நல்கித்தான் காத்தளிக்கும் பொழில் ஏழும் -திருவாய் மொழி -1-4-5-என்றும் –
பொழில் ஏழும் காவல் பூண்ட புகழானாய் -திரு நெடும் தாண்டகம் -10-என்றும் –
மூ வுலகும் காவலோன் -திருவாய் மொழி -2-8-5-என்றும் சொல்லுகையாலே–சர்வ ரஷகத்வம் சொல்லிற்று –

நெடியோய்க் கல்லது மடியதோ வுலகு -திரு வாசிரியம் -5-என்றும் –
உலகம் மூன்றுடன் வணங்கு -திருவாசிரியம் -3-என்றும் –
மூ வுலகும் தொழுது ஏத்தும் சீரடியான் -திருவாய் மொழி -3-8-1-என்றும் –
யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர்த் துயின்றவன் -பெருமாள் திரு மொழி -8-10-என்றும்–
இத்யாதிகளாலே சர்வ சேஷித்வம் சொல்லிற்று –

நாவிக் கமல முதற் கிழங்கே -திருவாய்மொழி -10-10-3-என்றும் –
தானும் சிவனும் பிரமனுமாகிப் பணைத்த தனி முதல் -திருவாய் மொழி -8-8-4-என்றும் –
தேவர் உலகோடு உயிர் படைத்தான் -திருவாய் மொழி -4-10-1-என்றும் –
நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணி -திருவாய் மொழி -7-5-4-என்றும்–
இத்யாதிகளாலே ஜகத் காரணம் சொல்லிற்று –

திருநாரணன் -திருவாய் மொழி -4-1-1-என்றும் –
திருமகள் சேர் மார்பன் -திருவாய் மொழி -7-2-9-என்றும் –
திருமால் -திருவாய் மொழி -8-3-9-என்றும்–இத்யாதிகளாலே ஸ்ரீ ய பதித்வம் சொல்லிற்று – 

தாதர்த்யத்தாலே -ஏறிக் கழிந்த சதுர்த்தி யாலே
பொருள் அல்லாத என்னை பொருளாக்கி அடிமை கொண்டாய் –திருவாய்மொழி -5-7-3-என்றும் –
இன்று என்னைப் பொருளாக்கி -திருவாய்மொழி –10-8-9-என்றும் –
நாட்டினாய் என்னை உனக்கு முன் தொண்டாக -பெரிய திருமொழி -8-10-9-என்றும் –
அடியேன் பிறந்தேன் -பெரிய திருமொழி -8-9-8-என்றும்–இத்யாதிகளாலே சேஷத்வம் உதித்தபடி சொல்லிற்று –

த்வதீய பதத்தாலே -ஆத்மாவினுடைய சேஷத்வாந்தர நிவ்ருத்தி பூர்வகமான அனந்யார்ஹ சேஷத்வத்தையும் –
ஈஸ்வரனுடைய அனந்யார்ஹ சேஷித்வத்தையும் சொல்லிற்று -எங்கனே என்னில் –
மற்றாரும் பற்றிலேன் ஆதலால் நின் அடைந்தேன் -பெரிய திருமொழி –8-10-5-என்றும் –
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாழ் இணைக் கீழ் வாழ்ச்சி -திருவாய்மொழி -3-2-4-என்றும் –
மற்றோர் தெய்வம் எண்ணேன் உன்னை என் மனத்து வைத்து -பெரிய திருமொழி –6-3-5-என்றும்-
இத்யாதிகளால் -அந்ய சேஷத்வ நிவ்ருத்தி பூர்வகமான அனந்யார்ஹ சேஷத்வம் சொல்லிற்று –

பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும் நாயகன் அவன் -திருவாய் மொழி -4-10-4-என்றும் –
வானவர் தம்மை யாளுமவன் -திருவாய் மொழி –3-6-4-என்றும் –
நான்முகனும் இந்திரனும் மற்றை யமரரும் எல்லாம் -திருவாய் மொழி –1-9-10-என்றும் –
தாமோதரன் உருவாகிய சிவற்கும் திசை முகற்கும் ஆமோ தரம் அறிய -திருவாய் மொழி –2-7-12-என்றும் –
இத்யாதிகளாலே -ஈஸ்வரனுடைய அனந்யார்ஹ சேஷித்வம் சொல்லிற்று –

த்ருதீய பதத்தாலே -ஆத்மாவினுடைய ஞான ஆனந்தத்வமும் -ஞான குணகத்வமும் –
ப்ரக்ருதே பரத்வமும் -நித்யத்வமும் -சொல்லுகிறது -எங்கனே என்னில் –
என் மதிக்கு விண் எல்லாம் உண்டோ விலை -நான்முகன் திருவந்தாதி -54-என்றும் –
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -முதல் திருவந்தாதி -67-என்றும் –
யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு -திரு விருத்தம் -95-என்றும் –
நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு -திருவாய் மொழி -8-8-5-என்றும்–இத்யாதிகளாலே
ஆத்மாவினுடைய பிரக்ருதே பரத்வம் சொல்லிற்று –
ஆக பிரதம பதம் சொல்லிற்று ஆய்த்து

மத்யம பதத்தாலே ஆத்மாவினுடைய சாதநாந்தர நிவ்ருத்தியும் -சரீரத்வ சேஷத்வமும் –
ததீய சேஷத்வமும் -பரதந்த்ரனுக்கு அநு ரூபமான ஈஸ்வரனுடைய உபாயத்வமும் சொல்லுகிறது –
எங்கனே என்னில் –
வந்து எய்துமாறு அறியேன் -திருவாய் மொழி –7-6-6-என்றும் –
நோற்ற நோன்பிலேன் நுண் அறிவிலேன் -திருவாய் மொழி –5-7-1-என்றும் –
விரும்பி நின்று ஏத்த மாட்டேன் விதியிலேன் மதி ஒன்றில்லை -திருமாலை -17-என்றும் –
உன்னைக் காணும் மார்க்கம் ஓன்று அறிய மாட்டா மனிசரில் துரிசனாய மூர்க்கனேன் -திருமாலை -32-என்றும்–
இத்யாதிகளாலே சாதநாந்தர நிவ்ருத்தி சொல்லிற்று –

-உம் உயிர் வீடுடையான் -திருவாய் மொழி -1-2-1-என்றும் –
அடியேன் உள்ளான் -திருவாய் மொழி –8-8-2-என்றும் –
ஆவியை அரங்கமாலை -திருக் குறும் தாண்டகம் -12-என்றும் –
என்னுடைய வாணாள் -பெரிய திருமொழி -1-1-6-என்றும் —இத்யாதிகளாலே சரீரத்வ சேஷத்வம் சொல்லிற்று –

பயிலும் திருவுடையார் எவரேலும் -திருவாய் மொழி -3-7-1-என்றும் –
எம்மை யாளும் பரமர் -திருவாய் மொழி –3-7-1- என்றும் –
பணியுமவர் கண்டீர் எம்மை யாளுடைய நாதர் -திருவாய் மொழி –3-7-2-என்றும் –
தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலார் -பெரிய திருமொழி -7-4-1-என்றும் –
கொண்டாடும் நெஞ்சுடையார் அவர் எங்கள் குலதெய்வம் -பெரிய திருமொழி -2-6-4-என்றும் —
இத்யாதிகளாலே ததீய சேஷத்வம் சொல்லிற்று –

கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர் ஞான மூர்த்தியினாய் -திருவாய் மொழி –6-2-8-என்றும்
செய்ய சூழ் சுடர் ஞானமாய்-திருவாய் மொழி –3-6-7-என்றும் –
மழுங்காத ஞானமே படையாக -திருவாய் மொழி –3-1-9- என்றும் –
துக்கமில் ஞானச் சுடர் ஒளி மூர்த்தி -திருவாய் மொழி –3-10-9- என்றும் —இத்யாதிகளாலே சர்வஜ்ஞத்வம் சொல்லிற்று –

ஆளும் பணியும் அடியேனைக் கொண்டான் -பெரிய திருமொழி -6-7-1-என்றும் –
ஆட் கொள்ள வல்லான் -பெரிய திருமொழி –8-9-6-என்றும் –
மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் -திருவாய்மொழி -2-7-7-என்றும் –
அருளி அடிக் கீழ் இருத்தும் -திருவாய்மொழி -8-8-11-என்றும் —இத்யாதிகளாலே சர்வ சக்தித்வம் சொல்லிற்று –

எல்லாம் உலகும் உடைய ஒரு மூர்த்தி -திருவாய்மொழி -5-8-4-என்றும் –
தேவிமாராவார் திருமகள் பூமி ஏவ மற்றமரர் ஆட் செய்வார் மேவிய வுலகும்
மூன்றவை யாட்சி -திருவாய்மொழி –8-1-1- என்றும் –
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே
யாள்கின்ற வெம்பெருமான் -நாச்சியார் திருமொழி -11-3-என்றும் –
அடங்கு எழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன் அடங்கு எழில் அஃது -திருவாய்மொழி –1-2-7- என்றும்–
இத்யாதிகளால் அவாப்த சமஸ்த காமத்வம் சொல்லிற்று –

எந்நாள் எம்பெருமான் உன் தனக்கு அடியோம் -திருப்பல்லாண்டு -10-என்றும்
உற்று எண்ணில் அதுவும் மற்று ஆங்கு அவன் தன்னது -திருவாய்மொழி -7-9-10-என்றும் –
நெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு -பெரிய திருமொழி -2-8-9-என்றும் –
உயிர்கள் எல்லா வுலகும் வுடையவன் -திருவாய்மொழி -3-2-11-என்றும்–இத்யாதியாலே நிருபாதிக சேஷித்வம் சொல்லிற்று-

ஆக இவற்றாலே -சர்வஞ்ஞத்வம் -சர்வ சக்தித்வம் -அவாப்த சமஸ்த காமத்வம் -பூர்த்தி -நிருபாதிக சேஷத்வம் -பிராப்தி –
சொல்லி ஈஸ்வரனுடைய உபாயத்வம் சொல்லிற்று –

நார சப்தத்தாலே ஈஸ்வரனுடைய சர்வ ஸ்வாமித்வமும் -சர்வ வித பந்துத்வமும் –
சர்வ ஆதாரத்வமும் -சர்வ வித நியந்த்ருத்வமும் சொல்லிற்று -எங்கனே என்னில் –
எவையும் எவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும் -திரு வாய்மொழி –1-9-1-என்றும் –
தன்னுள் அனைத்துலகும் நிற்க நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான் –திருவாய்மொழி -9-6-4-என்றும் –
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் அண்டத் தகத்தான் புறத்துள்ளான் -திருவாய்மொழி -8-8-2-என்றும் –
நானுன்னை யன்றி இலேன் கண்டாய் நாரணனே நீ என்னை யன்றி யிலை -நான்முகன் திருவந்தாதி -7-என்றும்–
இத்யாதியாலே சர்வ ஸ்வாமித்வம் சொல்லிற்று –

சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும் மேலாத் தாய் தந்தையுமவர் -திருவாய் மொழி -5-1-8-என்றும் –
தாயாய் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் -திருவாய்மொழி -7-8-1-என்றும் –
எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கரசு என்னுடை வாணாள் -பெரிய திருமொழி -1-1-6-என்றும் –
தஞ்சமாகிய தந்தை தாயோடு தானுமாய் அவை யல்ல னாய் -திருவாய்மொழி -3-6-9-என்றும் —
-இத்யாதிகளாலே சர்வ வித பந்துத்வம் சொல்லிற்று –

ஆவிக்கோர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் -திருவாய்மொழி -10-10-3-என்றும் –
உன்னை விட்டு எங்கனே தரிக்கேன் -திருவாய்மொழி -7-2-1-என்றும் –
நாட்டினான் தெய்வம் எங்கும் -திருமாலை -10-என்றும் –
நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே -திருவாய் மொழி -5-2-8- என்றும் —
-இத்யாதிகளாலே சர்வ ஆதாரத்வம் சொல்லிற்று –

செய்யேல் தீவினை என்று அருள் செய்யும் என் கையார் சக்கரக் கண்ணபிரான் -திருவாய்மொழி -2-9-3-என்றும் –
நீ யோநிகளைப் படையென்று நிறை நான்முகனைப் படைத்தவன் -திருவாய்மொழி -1-5-3-என்றும் –
செருக்குவார்கள் தீக் குணங்கள் தீர்த்த தேவ தேவன் -திருச் சந்த விருத்தம் -109-என்றும் –
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்று அருள் கொடுக்கும் -திருவாய்மொழி -6-10-11-என்றும் —
-இத்யாதிகளாலே சர்வ நியந்த்ருத்வம் சொல்லிற்று –

இனி சதுர்த்தியாலே –
சேதநருடைய -தேச கால அவஸ்தா பிரகார உசித வ்ருத்ய அபேஷை சொல்லுகிறது -எங்கனே என்னில் –
உள்ள வுலகளவும் யானும் உளன் ஆவன் என்கொலோ -பெரிய திருவந்தாதி -76-என்றும் –
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி -திருவாய்மொழி -3-3-1-என்றும் –
பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிட -நாச்சியார் திருமொழி -4-1-என்றும் –
உருவார் சக்கரம் சங்கு சுமந்து இங்கு உம்மொடு ஒருபாடு உழல்வான் ஓர் அடியானும் உளன் -திருவாய்மொழி -8-3-7-என்றும்
சென்றால் குடையாம் முதல் திருவந்தாதி-53-என்றும் –
மற்றை நம் காமங்கள் மாற்று -திருப்பாவை -29-என்றும்-
அடிமை செய்ய வேண்டும் நாம் -3-3-1- என்றும் –
கூவிப் பணி  கொள்ளாய் -திருவாய்மொழி -8-5-7- என்றும் –
நல்கி யாள் என்னைக் கொண்டு அருளே -பெரிய திருமொழி -1-9-1-என்றும் –
இத்யாதிகளாலே வ்ருத்தி அபேஷை சொல்லித் தலைக் கட்டுகிறது –

விடை ஏழு அன்று அடர்த்து -பெரிய திருமொழி -8-9-3-என்கிற பாட்டை பிரணவ அர்த்தமாக அனுசந்திப்பது
யானே -திருவாய் மொழி -2-9-9-என்கிற பாட்டை மத்யம பத அர்த்தமாக அனுசந்திப்பது –
எம்பிரான் எந்தை -பெரிய திருமொழி -1-1-6-என்கிற பாட்டை த்ருதீய பத அர்த்தமாக அனுசந்திப்பது —
ஒழிவில் காலம் எல்லாம் -திருவாய்மொழி -3-3-1- என்கிற பாட்டை சதுர்த்தி அர்த்தமாக அனுசந்திப்பது —

அகாரத்தோ விஷ்ணுர் ஜகது தய ரஷா பிரளய க்ருன் மகார்த்தோ ஜீவ்ஸ் தது பகரணம் வைஷ்ணவ மிதம் உகாரோஸ் அனந்யார்ஹம் நியமயதி
சம்பந்த மநயோஸ் த்ரயீ சாரஸ் த்ர்யாத்மா-பிரணவ இமமர்த்தம் சமதிசத் -ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த அஷ்ட ஸ்லோகி முதல் ஸ்லோகம் –

திருமந்தரம் திருமுகப் பாசுரம்-அருளிச் செயல் படி எடுப்பு –

————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading