Archive for October, 2015

திருவாய்மொழி – -1-9- –ஈட்டு -ஸ்ரீ ஸூ க்திகள் —

October 15, 2015

கீழில் திருவாய் மொழியில் -அவனுடைய ஆர்ஜவ குண அனுசந்தானம் பண்ணினார்
இப்படி அனுசந்தித்தார் விஷயத்தில் சர்வேஸ்வரன் இருக்கும் படியை அருளிச் செய்கிறார் இதில்
சர்வேஸ்வரனாய் ஸ்ரீ யபதியாய் பரம ரசிகனாய் இருக்கிறவன் ஆழ்வார் பக்தியிலே துவக்குண்டு இவரோடு ஏக ரசனாய் இருந்தான் –
ஆழ்வார் ஆகிறார் -கீழில்ஆர்ஜவ குண அனுசந்தானத்தாலே அவன் பக்கலிலே பெரிய விடாயை உடையரானார் –
இது நமக்கு நல்ல வாய்ப்பாய் இருந்தது என்று பார்த்து -அர்ஜுனன் விபூதி ஸ்ரவணத்தாலே -விபூதிமானவானவனைக் காண வேணும் என்று
அபேஷிக்க-அதுக்கு உறுப்பாக -திவ்யம் ததாமி -சஷூ -என்கிறபடியே திவ்ய சஷூஸ்சைக் கொடுத்து வைச்வரூப்யத்தைக் காட்டினால் போலே
இவருக்கு தன்னை அனுபவிக்கைக்கு ஈடான விடையைப் பிறப்பித்து தன்னை அனுபவிப்பிக்கிறான்
நித்ய விபூதியில் உள்ளாரோடு பரிமாறும் போலே பரிமாறக் கோலி-அதாவது – பிராட்டிமாரோடு பரிமாறுவது -மகிஷிகளான முறையாலே
-திருவடியோடு பரிமாறுவது -வாஹனமான முறையாலே -திரு வநந்த ஆழ்வானோடு பரிமாறுவது படுக்கை யான முறையாலே
-இப்படி அவர்களோடு ஒரோ முறையில் பரிமாறும் பரிமாற்றம் எல்லாம் இவர் ஒருவரோடு இவர் ஒருவரோடு பரிமாறுகிறானாய்-
அது தன்னை குளப்படியிலே கடலை மடுத்தால் போலே அன்றிக்கே பொறுக்கப் பொறுக்கப் பரிமாற-இவரும் அவனை
சர்வ இந்த்ரியத்தாலும் சர்வ ஆகாரத்தாலும் யதா மநோ ரதம் அனுபவித்து -அவ்வனுபவ ஜனித ப்ரீதியாலே அவனைப் பேசி அனுபவித்தார்

——————————-

அவதாரிகை –

ஸ்ருஷ்ட்யாதி-ஹேது பூதனுமாய் -சர்வ அந்தராத்மாவுமான
கிருஷ்ணனானவன் -என்னுடைய பர்யந்தத்தை விட்டுப் போகாதபடி யானான் -என்கிறார்
அவனுடைய குண அனுபவத்தோடு விபூதி அனுபவத்தோடு வாசி இல்லை இறே இவர்க்கு –
முதல் திருவாய் மொழியிலே பரக்க அனுபவித்த இத்தை விசதமாய் இருக்கையாலே திரள அனுபவிக்கிறார்

இவையும் அவையும் உவவையும் இவரும் அவரும் உவரும்
எவையும் எவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என்னமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே –1-9-1-

இவையும் அவையும் உவவையும் இவரும் அவரும் உவரும் யவையும் யவரும் –
சித் வர்க்கத்தையும் அசித் வர்க்கத்தையும் திரளச் சொல்கிறது
தன்னுள்ளே ஆகியும் –
இவையும் அவையும் -என்று இங்கனே பிரித்து வ்யவஹரிக்க ஒண்ணாதபடி -சதேவ -என்கிறபடியே -தான் என்கிற சொல்லுக்கு
உள்ளேயாம்படி தன் மேலே ஏறிட்டுக் கொண்டு தரிக்கும் படியைச் சொல்லுகிறது
ஆக்கியும் –
பஹூச்யாம் -என்கிறபடியே தன் பக்கலிலே நின்றும் பிரிந்து நாம ரூப விபாக அர்ஹமாம் படி பண்ணியும்
காக்கும்
ஸ்ருஷ்டமான பதார்த்தங்களை ஈரக் கையாலே தடவி ரஷிக்கும் படி
அவையுள் தனி முதல்
ஸ்ருஷ்டமான பதார்த்தங்களில் -இவை பிரவ்ருத்தி நிவ்ருத் யாதிகளுக்கு யோக்யமாம் படி அந்தராத்மாவாய் நிற்கும் நிலையைச் சொல்லுகிறது
இது பின்னை ஆக்கியும் என்று சிருஷ்டியைச் சொன்ன போதே சொல்லிற்று ஆகாதோ -என்னில்
தத் அநு பிரவச்ய -என்று இவற்றினுடைய வஸ்துத்வ நாம பாக்த்வங்களுக்காக பண்ணும் அநு பிரவேசத்தைச் சொல்லுகிறது அங்கு
இங்கு இவற்றுக்குச் சொல்லும் வாசக சப்தம் தன்னளவிலே பர்யவசிக்கும் படியாக நிற்கும் நிலையைச் சொல்லுகிறது –

எம்மான்
தன் விபூதி விஷயமாக தனக்கு உண்டான ஓரத்தைக் காட்டி என்னை அனந்யார்ஹம் ஆக்கினவன்
கண்ணபிரான்
இப்படி இருக்கிறவன் தானே கிருஷ்ணன் – என்கையும்
அவன் தானே கண்ணுக்கு தோற்றி நின்று உபகரிக்கும் என்கையும்
என்னமுதம்
தேவர்கள் அதிகாரிகளாம் அம்ருத்தத்தில் வ்யாவ்ருத்தி
சுவையன்
பரம ரசிகன்
இந்த ரசிகத்வத்துக்கு ஊற்று வாய் சொல்லுகிறது
திருவின் மணாளன்
இவருடைய அமிர்தம் ஒரு மிதுனமாயிற்று
என்னுடைச் சூழல் உளானே –
பெரிய பிராட்டியார் -அகலகில்லேன் இறையும் -என்னப் பிறந்தவன்
என் பரிசரத்தில் வர்த்திக்கை தன் பேறாக வர்த்தியா நின்றான்
இப்படி பரத்வ-சர்வேஸ்வரத்வ- சௌலப்யங்கள் காட்டிய இடம் முன்பே உண்டே –
யஸ்ய பிரசாதே சத்தம் ப்ரசீதே யுரிமா -பிரஜா ச ராமோ வான ரேந்த்ரஸ்ய பிரசாதம் அபி காங்ஷதே -என்கிறபடியே
லோக நாத புரா பூத்வா ஸூகிரீவம் நாதம் இச்சதி –
தம்மை ஒழிந்தார்க்கு எல்லாம் நாதரானவர் ஸூக்ரீவனை நாதனாக இச்சியா நின்றார்
கிடைப்பது கிடையாது ஒழிவது-தாம் முந்துற முன்னம் இச்சியா நின்றார் –

————————————————————————————

அவதாரிகை –

என் பரிசரத்தில் வர்த்தித்தவன் -அது சாத்மித்தவாறே என் அருகே வந்து நின்றான் -என்கிறார் –

சூழல் பல பல வல்லான் தொல்லை யம் காலத்து உலகை
கேழல் ஒன்றாகி இடந்த கேசவன் என்னுடை யம்மான்
வேழ மருப்பை ஒசித்தான் விண்ணவர்க்கு எண்ணல் அரியான்
ஆழ நெடும் கடல் சேர்ந்தான் அவன் என் அருகில் இலானே –1-9-2-

சூழல் பல பல வல்லான் –
இப்போது சூழல் என்கிறது அவதாரத்தை -அவதாரத்தை சூழல் என்பான் என் -என்னில் -சேதனரை அகப்படுத்திக் கொள்ளுமதாகையாலே –
ஜாதி பேதத்தையும் அவாந்தர பேதத்தையும் பற்ற -பல பல -என்கிறது
வல்லான் –
கர்ம நிபந்தனமாக பிறக்கும் அவனுக்கும் முடியாத பிறவிகளை பிறக்க வல்லான்
கர்மம் செய்ய வல்லது அன்று இ றே -அனுக்ரஹம் செய்ய வல்லது -அவற்றிலே ஒரு சூழல் சொல்லுகிறார்
தொல்லை-
வராஹா கல்பத்தின் ஆதியிலே
யம் காலத்து
தன் வடிவைக் கண்ணுக்கு இலக்காக்கின காலம் இறே -அத்தைப் பற்ற அம் காலம் -என்கிறார்
உலகை
ஒரு திருவடி ஒரு திரு வநந்த ஆழ்வானுக்காகத்தான் இப்படி படப் பெற்றதோ -சங்கல்ப்பத்துக்கும் பாந்தம் போராத பூமிக்காகக் கிடீர்

கேழல் ஒன்றாகி
தன் மேன்மையோடு அணைந்து இருப்பதொரு வடிவை தான் கொள்ளப் பெற்றதோ
ஒன்றாகி –
பின்பு சர்வ சக்தியான தானே -இவ்வடிவைக் கொள்ள -எந்நாளும் ஒண்ணாத படி அத்விதீயமாய் இருக்கிறபடி
பூமி பிரளயத்திலே அகப்பட்ட வாறே நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்ட வித்தனை அவன் தான்
அது அவன் கொண்ட வடிவாகையாலே அழிவிக்கு இட்ட வடிவு தனக்கே ஆலத்தி வழிக்க வேண்டி இருக்கும்
பன்றியாம் தேசு -நாச்சியார் திருமொழி -11-8–இறே
இடந்த-
அஜ் ஜாதிக்காக உள்ளதொரு குணமாயிற்று செருக்கு
ஸ்ரீ யபதி அவ்வடிவைக் கொண்டால் சொல்ல வேண்டா விறே
அண்ட பித்தியில் சேர்ந்த பூமியைப் புக்கு எடுத்துக் கொண்டு ஏறினான்
கேசவன் –
பிரசச்த கேசவன்
அப்போதை திருமயிரும் உளை மயிருமாய் நின்ற நிலை
என்னுடை யம்மான்
சம்சார பிரளயம் கொண்ட என்னை எடுத்தவன் –
வேழ மருப்பை ஒசித்தான்
குவலயா பீடத்தினுடைய மருப்பை அநாயாசேன முறித்தவன்
அப்படியே என்னுடைய மத களிறு ஐந்தினையும் சேரி தெரியாமல் பண்ணினவன்-முதல் திருவந்தாதி -47- -விரோதி நிரசன சீலன் -என்றபடி
விண்ணவர்க்கு எண்ணல் அரியான்
தனியே குவலயா பீடத்தோடு பொருதவன் -ப்ரஹ்ம ருத்ராதிகள் மநோ ரதத்துக்கும் அவ்வருகு ஆனவன்
ஆழ நெடும் கடல் சேர்ந்தான்
அந்த ப்ரஹ்மாதிகள் கூக்குரல் கேட்கத் திருப் பாற் கடலிலே சாய்ந்து அருளினவன் -ஆழம் -உறுத்தாமைக்கு-
நெடுமை -தாளும் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பி வேண்டினபடி கண் வளர்ந்து அருளுகைக்கு
அவன் என் அருகில் இலானே
அவர்களைப் போலே எனக்கு அதூர விப்ரக்ருஷ்டமாகவும் நிற்கிறிலன்

———————————————————————————-

அவதாரிகை –

திருவடி -திரு வநந்த ஆழ்வான் -பிராட்டிமார் தொடக்கமானவரோடு ஒரோ வகையில் பரிமாறுமவன்
-என்னளவில் ஒரோ வகையில் பரிமாறி விட மாட்டுகிறிலன்-என்கிறார் –

அருகலிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன்
கருகிய நீல நன்மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன்
பொருசிறைப் புள்ளுவந்தேறும் பூ மகளார் தனிக் கேள்வன்
ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே –1-9-3-

அருகலிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன்
அருகல்–குறைகை-கேடு -இல் இல்லாமை -குறைவின்றிக்கே ஆய -ஆன-நன்றான
ஹேய ப்ரத்ய நீக முமாய் கல்யாணை கதா நமுமான -நிரவதிக குணங்களை யுடையனுமாய் -அவர்கள் சத்தாதிகள்
தன் அதீநமாம் படி இருக்கிறவன்
கருகிய நீல நன்மேனி வண்ணன்-கருகிய நீல நல் மூன்ன்று விசேஷணங்கள்

கறுத்து நெய்தது பேச்சுக்கு அவிஷயமாம் படி விலஷணமான திரு மேனியில் நிறத்தை யுடையவன்
அவர்களை சதா அனுபவம் பண்ணி வைக்கும் போது படி விடும்படி
செந்தாமரைக் கண்ணன்
அகவாயில் குணங்களுக்கு பிரகாசகங்களான திருக் கண்களை யுடையவன்
பொருசிறைப் புள்ளுவந்தேறும்
சர்வேஸ்வரன் பெரிய திருவடியை மேற்கொள்ளுவதாக நினைத்து வா என்று அழைத்தால் அவனுடைய அங்கீ காரத்தால் உண்டான
ஹர்ஷத்தாலே பெருக்காறு சுளித்தால் போலே சுழித்துத் தன்னில் தான் பொரா நின்றுள்ள சிறகை யுடையனாய் கொண்டாயிற்றுத் தோற்றுவது-
அவனும் நாம் இவனை மேற் கொள்ளப் பெற்றோமே -என்று திரு உள்ளத்திலே ப்ரீதியோடு யாயிற்று மேற் கொள்ளுவது –
பூ மகளார் தனிக் கேள்வன்
புஷ்பத்தில் பரிமளம் வடிவு கொண்டால் போலே இருப்பாளாய்-போக்யதைக வேஷையான பெரிய பிராட்டியார்க்கு வல்லபன் என்றால்
இப்படிப் பட்ட ஐஸ்வர்யத்துக்கு இரண்டாம் விரலுக்கு ஆள் இல்லாதபடி இருக்கிறவன்

ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே -அவர்களோடு பரிமாறுமா போலே ஒரு வழியால் வந்த ரசத்தை
தந்து விடுகிறிலன் என்னளவில் –நித்ய ஸூ ரிகள் எல்லார் பக்கலிலும் பண்ணும் ஆதரத்தை என் பக்கலிலே பண்ணா நின்றான்
உடனே
இவன் ஒரு விபூதிமான் -அந்ய பரன்-என்று தோற்ற இருக்கிறிலன்
நித்ய விபூதியில் கேள்வியும் இங்கே இருந்தே யாமித்தனை
தண்டாமம் செய்து -1-7-7–என்று நித்ய விபூதியில் பண்ணும் விருப்பத்தை பண்ணினார் என்றார் கீழில் திருவாய் மொழியில்
இதில் அவ் விபூதியில் உள்ளாரோடு பரிமாறும் படியை என் ஒருவனோடு பரிமாறினான் என்கிறார் –

அருகலிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன் -கருகிய நீல நன்மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன்
பொருசிறைப் புள்ளுவந்தேறும் பூ மகளார் தனிக் கேள்வன் என்னோடு உடனே-ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் -என்று அந்வயம்

————————————————————————–

அவதாரிகை –

மேன்மை அது –அகடிதகட பா சாமர்த்தியம் அது -இப்படி இருக்கிறவன் யசோதைப் பிராட்டி மருங்கிலே இருக்குமா போலே
என் மருங்கிலே வந்து இருக்கை தனக்குப் பெறாப் பேறாக நினைத்து இரா நின்றான் -என்கிறார் –

உடன் அமர் காதல் மகளிர் திருமகள் மண் மகள் ஆயர்
மடமகள் என்று இவர் மூவர் ஆளும் உலகமும் மூன்றே
உடன் அவை ஒக்க விழுங்கி யாலிலைச் சேர்ந்தவன் எம்மான்
கடல் மலி மாயப் பெருமான் கண்ணன் என் ஒக்கலையானே –1-9-4-

உடன் அமர் காதல் மகளிர் –
உடனே அமர வேண்டும்படியான காதலை உடைய பிராட்டிமார் -அகலகில்லேன் இறையும் -என்றாயிற்று இவர்கள் இருப்பது -அவர்கள் ஆர் என்னில்
திருமகள்-
சர்வேஸ்வரனுக்கு பிரதான மஹிஷியாய்-பட்டத்துக்கு உரியவளாய் – ந கச்சித் ந அபராத்யதி -என்று இருக்கும் பிராட்டி யார்
மண் மகள்
முதலிலே குற்றம் பார்க்கக் கடவதோ -என்று அவனுக்கு பொறைக்கு உவாத்தாய் -பொறை விளையும்படியான ஸ்ரீ பூமிப் பிராட்டி
ஆயர் மடமகள்
அனுபவ ஸூகம் தானாய்-தன் வடிவு அழகாலே துவக்கித் திரு உள்ளத்தில் குற்றம் படாதபடி இருக்கும் நப்பின்னைப் பிராட்டி
திரு மகள் -அவன் ஐஸ்வர்யம் -மண் மகள் -அது விளையும் பூமி –ஆயர் மட மகள் -அத்தை புஜிக்கிற போக்தா வானவள் -என்றுமாம்
என்று இவர் மூவர் –
மேன்மைக்கும் புருஷகாரத்துக்கும் தனித் தனியே அமைந்து இருக்கிற இவர்கள் மூவர் –
ஆளும் உலகமும் மூன்றே
அவர்களுடைய படுக்கைப் பற்று இருக்கிறபடி
த்ரிவித சேதனரையும் சொல்லுதல்
கீழும் மேலும் நடுவுமான லோகங்களைச் சொல்லுதல் –

உடன் அவை ஒக்க விழுங்கி-
அவற்றிலே ஒன்றும் பிரிகதிர் படாதபடி ஏக காலத்திலேயே தன் திரு வயிற்றிலே வைத்து
விபூதி த்வ்யமும் ரஷ்ய வர்க்கம் என்றால் திரு வயிற்றிலே வைக்குமது பிரளயத்துக்கு கர்மீபவிக்கும் எல்லையிலே யாகிறது
யாலிலைச் சேர்ந்தவன் –
சகல லோகங்களையும் வயிற்றிலே வைத்து ஒரு பவனான ஆலம் தளிரிலே சாய்ந்து அருளினவன் -அகதி தகட நா சாமர்த்தியத்தை உடையவன்
எம்மான்
அச் செயலாலே என்னை எழுதிக் கொண்டவன்
பத்ரா லம்பனம் பண்ணிக் கிடீர் அடிமை கொண்டது
கீழில் அகதி தகட நா சாமர்த்தியத்துக்கு மேலே ஒரு அகடி தகட நா சாமர்த்தியமாயாயிற்று இது
ந நமேயம் என்று இருந்த என்னை அனந்யார்ஹம் ஆக்கின படி
கடல் மலி மாயப் பெருமான்
திருப் பாற் கடலிலே குறைவற வந்து வர்த்திப்பானாய் -ஆச்சர்யமான சேஷ்டிதங்களை உடைய சர்வேஸ்வரன்
அன்றிக்கே
கடலில் காட்டில் மிக்க ஆச்சர்யத்தை யுடைய சர்வேஸ்வரன் -என்றுமாம்
கண்ணன் –
அந்த ஆச்சர்யங்கள் எல்லாம் தன் பக்கலில் காணலாம்படி இருக்கிற கிருஷ்ணன்
என் ஒக்கலையானே
யசோதைப் பிராட்டி -மருங்கிலே இருக்குமா போலே என் மருங்கிலே இரா நின்றான் –

—————————————————————————–

அவதாரிகை –

விரோதி நிரசன சீலனாய் சர்வ ஸ்ரஷ்டா வானவன் வந்து என்னுடைய ஹ்ருத்யச்தனானவன்-என்கிறார் –

ஒக்கலை வைத்து முலைப்பால் உண் என்று தந்திட வாங்கி
செக்கஞ்ச்செக வென்று அவள் பாலுயிர் செகவுண்ட பெருமான்
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாக
ஓக்கவும் தோற்றிய வீசன் மாயன் என் நெஞ்சின் உளானே –1-9-5-

ஒக்கலை வைத்து –
பரிவுடைய யசோதைப் பிராட்டியைப் போலே தூக்கி எடுத்து மருங்கிலே வைத்து
முலைப்பால் உண் என்று
முலைக் கண் நெறித்து-கிலேசப் படா நின்றேன்
உண் -என்று உறுக்கிக் கொடுக்க
தந்திட
அஸ்மான் ஹந்தும்-என்னுமா போலே அந்நஞ்சு தமக்குக் கொடுத்தால் போலே இருக்கையாலே -தந்திட -என்கிறார் ஆதல் –
தருகை -கொடுக்கையாய் வழங்குகையாலே-தந்திட என்கிறார் ஆதல் –
வாங்கி
அவள் முலை கொடா விடில் தரியாதாளாய் கொடுத்தால் போலே இவனும் முலை உண்ணா விடில் தரியாதானாய் உண்ட படி
செக்கஞ்ச்செக –
செக்கம் என்று மரணமாய் -அவள் கோலின மரணம் அவள் தன்னோடு போம்படி -என்னுதல்
அன்றிக்கே -செக்கம்-என்று சிவப்பாய்-அத்தாலே நினைக்கிறது-சீற்றத்தை யாய்–அவள் சீறின சீற்றம் அவள் தன் பக்கலிலே பலிக்கும்படி -என்னுதல்
இலங்கை செந்தீ யுண்ணச் சிவந்து -என்று சிவப்பைச் சீற்றமாக பிரயோகித்தது இ றே
அன்றிக்கே -செக்கஞ்ச்செக –என்றது செக்கச் சிவக்க -என்றாய் -முலை கொடுத்த உபகார ச்ம்ருதியாலே திரு அதரத்திலே
பழுப்புத் தோற்ற ஸ்மிதம் பண்ணின படியாதல்-மழலை மென்னகை இடையிடை அருளா வாயிலே முலையிருக்க என் முகத்தே-பெருமாள்திருமொழி -7-7-
அன்று –
ஜகத் உபசம்ஹாரம் பிறக்கப் புக்க அன்று
தனி இடத்தில் இவள் நலிய வந்த அன்று
அவள் பாலுயிர்
அவள் பால் என்றது -அவள் இடத்து என்றபடி -அவளுடைய ஹேய சரீரத்தைப் பற்றி நிற்கிற உயிர்
செகவுண்ட பெருமான்
செக -முடியும்படி –
அன்றிக்கே அவள் பாலையையும் உயிரையும் முடியும்படி என்னவுமாம் –
முலையூடுயிரை வற்ற வாங்கி யுண்ட வாயான் -என்னக் கடவது இ றே
முலையால் நினைக்கிறது பாலை இ றே அங்கு
முலை யுண்டான் என்றால் முலைப்பால் உண்டான் என்றபடி இ றே
உண்ட பெருமான்
அவள் முலை உண்டு அவளை முடித்து ஜகத்துக்கு ஒரு சேஷியைத் தந்தவன்
ஸ்தன்யம் தத் விஷ சம்மிச்ரம் ரச்யமாசீ ஜ்ஜ்கத் குரோ –என்கிறபடியே –
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாக ஓக்கவும் தோற்றிய வீசன்
ஸ்வ கோஷ்டிக்கு உபகாரகனாக பிரசித்தனாய் இருக்கிற ருத்ரனோடு கூட -அவனுக்கு ஜனகனான சதுர்முகனும்
அவனுக்கு இவ்வருகான இந்த்ரனும் தொடக்கமாக இவ்வருகு உள்ளார் எல்லாரையும்
அத்திக்காயில் அறுமான் போலே ஒன்றாக அரும்பிக்கும் படியாக பண்ணின சர்வேஸ்வரன் –
-பல கொசுக்கள் ஒரே நேரத்தில் அத்திக்காயில் ஓசை எழுப்புவது போலே
மாயன் –
ஸ்ருஷ்டமான ஜகத்திலே அனுபிரவேசம் முதலான ஆச்சர்யத்தை உடையவன் -சர்வ சரீரியாய் இருக்கிற சர்வேஸ்வரன்
என் நெஞ்சின் உளானே –
என் சரீரத்திலே ஏக தேசத்தைப் பற்றி நின்றான் -நெஞ்சிடந்தான் –பெரிய திருமொழி –2-4-7-

————————————————————————————————–

அவதாரிகை –

சர்வ அந்தராத்மா வானவன் என் தோளைப் பற்றி வர்த்தியா நின்றான் -என்கிறார் –

மாயன் என் நெஞ்சினுள்ளான் மற்றும் யவர்க்குமதுவே
காயமும் சீவனும் தானும் காலும் எரியும் அவனே
சேயன் அணியன் யவர்க்கும் சிந்தைக்கும் கோசரம் அல்லன்
தூயன் துயக்கன் மயக்கன் என்னுடைத் தோளிணை யானே –1-9-6-

மாயன் என் நெஞ்சினுள்ளான் –
இது என்ன பெறாப் பேறு-ஆச்சர்யமான குண சேஷ்டிதங்களை உடையவன் -என்னுடைய ஹ்ருதயஸ்தனானான்
இது என்ன சேராச் சேர்த்தி
மற்றும் யவர்க்குமதுவே
மற்றும் ஆரேனும் நான் பெற்ற பேறு பெற்றார் உண்டோ
நீர் பெற்ற பேறு தான் என்னில்
காயமும் சீவனும் தானும்
இது என்கிறார் மேல் –
காயமும் சீவனும் தானே -தேவ மனுஷ்யாதி சரீரங்களும் அவ்வவ சரீரஸ்தமான ஆத்மாக்களும் அவன் இட்ட வழக்கு
காலும் எரியும் அவனே
காற்றும் தேஜஸ் தத்வமும் இரண்டுக்கும் அஞ்சுக்கும் உப லஷணமாய் பூத பஞ்சகமும் அவன் இட்ட வழக்கு –
சேயன் அணியன்
சேயன் -ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்கு தூரச்தனாய் இருக்கும்
அணியன் -அவனாலே அவனைக் காண்பார்க்கு கை புகுந்து அணீயனாய் இருக்கும்
யவர்க்கும் சிந்தைக்கும் கோசரம் அல்லன் –
தூரச்தனாம் படிக்கு எல்லை சொல்லுகிறது
எத்தனைஎனும் அதிசய ஜ்ஞானராய் இருக்குமவர்களுக்கும் கண்ணுக்கு விஷயமாகி அன்றிக்கே மநோ ரத்தத்துக்கும் அவிஷயமாய் இருக்கும்
தூயன் –
இப்படி இருக்கிறவன் யசோதாதிகளுக்கு-யதி சக் நோஷி -என்னலாம் படி இருக்கும்
துயக்கன் மயக்கன்
உகவாதார்க்கு சம்சய விபர்யங்களைப் பிறப்பிக்கும்
துயக்கு -மனம் திரிவு -அருவினையேன் -1-5-1–என்று அகன்ற என் மனசை திரிய விட்டு
உன் தேனே மலரும் திருப்பாதம் சேருமாறு -1-5-5-என்னும்படி திரிய விட்டு என்னுடன் கலந்தவன்
மயக்கம் -கலத்தலும் கூடலும்
ஐதிக்யம் -பட்டர் சாஸ்திர ஞானம் இல்லாத ஒரு வைஷ்ணவர் இடம் பரிந்தது -ஸ்ரீ மன் நாராயணனே பரத்வம் -எம்பெருமானார் திருவடிகளே
தஞ்சம் என்று நீர் சொல்வதையே விச்வசித்து இருந்தேன் என்ற -ஒரு சாஸ்திர ஞானம் இல்லாத வைஷ்ணவர் இடம் பரிந்தது-
என்னுடைத் தோளிணை யானே
என் அளவிலே அங்கன் அன்றிக்கே திருவடி திருத் தோளிலே இருக்குமா போலே இரா நின்றான்

——————————————————————————————

அவதாரிகை –

நான் உகந்த படி அலங்கரித்துக் கொண்டு வந்து என் நாவிலே கலந்தான் -என்கிறார்

தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும்
தாளிணை மேலும் புனைந்த தண்ணம் துழாய் யுடை யம்மான்
கேளிணை ஒன்றும் இலாதான் கிளரும் சுடர் ஒளி மூர்த்தி
நாள் அணைந்து ஒன்றும் அகலான் என்னுடை நாவில் உளானே –1-9-7-

தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும் தாளிணை மேலும் புனைந்த தண்ணம் துழாய் யுடை யம்மான்
அபிமத விஷயம் இருந்தவிடத்துக்குப் போவார் அவர்கள் உகந்தபடியே பூசி புலர்த்தி ஒப்பித்துக் கொண்டு போமா போலே
ஆழ்வார் உகந்தபடியே திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதனாய் வந்தானாயிற்று
இவர் உகப்பதும் அதுவே -அவன் கொடுப்பதுவும் அதுவே இ ரே
புள்ளூர்தி கள்ளூறும் துழாய் கொயல்வாய் மலர் மேல் -திருவிருத்தம் -24-மனத்தை உடையராய் இருப்பர்
திருத் தாயார் சொல்லும் போது-வண்டு திவளும் தண்ணம் துழாய் கொடீர் –2-4-5-என்னும்
இவர் தாம் -விரை மட்டலர் தண் துழாய் –2-4-9-என்னும் -கண்ணன் கழல் துழாய் பொன் செய் பூண் மென்முலைக்கு -4-2-10-என்று மெலியும்-
அவனும் -தன் மன்னு நீள் கழல் மேல் தண் துழாய் நமக்கு அன்றி நல்கான் –6-8-6-என்று இவர்க்கு அல்லது கொடான்
தோளிணை மேலும்
ஸூ காடம் பரிஷச்வஜே -என்கிறபடியே அணைக்கக் கணிசிக்கிற திருத் தோள்களிலும் –

நன் மார்பின் மேலும்
அணிப்பிக்கும் அவள் இருக்கிற திரு மார்பிலும்
சுடர் முடி மேலும்
அணைத்துக் கொண்டு நின்று மேல் நோக்கிப் பார்த்த வாறே தன்னுடைய சேஷித்வ பிரகாசகமாய் இருக்கிற திரு அபிஷேகத்திலும்
தாளிணை மேலும் புனைந்த தண்ணம் துழாய் யுடை யம்மான்
தன்னுடைய சேஷித்வத்தை ஸ்திதிப்பிக்கிற திருவடிகளிலும் சாத்தின திருத் துழாயை உடைய சர்வேஸ்வரன்
தோளிணை -இத்யாதிகளுக்கு பட்டர் -வீரராய் இருப்பர் முற்பட ஆயுதத்துக்கு இடுவார்கள் -அப்படியே திருத் தோள்களுக்கு இட்டான் –
பிரணயிகளாய் இருப்பார் அனந்தரம் அபிமத விஷயத்துக்கு இடுவார்கள் –அப்படியே பெரிய பிராட்டியார் எழுந்து அருளி இருக்கிற
கோயில் கட்டணத்துக்கு கொடுத்தான்
ஆயுதத்துக்கும் அபிமத விஷயத்துக்கும் இட்டால் பின்னைத் தந்தாம் விநியோகம் கொள்ளும் இத்தனை இ றே-ஆகையால் தான் சூடினான்
சேஷம் பின்னை அடியார் இ றே கொள்ளுவார் -ஆகையால் திருவடிகளுக்குச் சாத்தினான் -ஆபத்துக்கு உதவுவார் அடியார் இ றே
-தளர்ந்தும் முறிந்தும் சகடவசுரர் உடல் வேறாப் பிளந்து வீயப் பொருவார் -6-9-4-அடியார் இ றே
நம்முடைய ஆபத்துக்களுக்கு திருவடிகளே துணை யானால் போலே காணும் அவனுடைய ஆபத்துக்களுக்கும் திருவடிகளே
துணையான படி -என்று அருளிச் செய்வர் –

கேளிணை ஒன்றும் இலாதான் –
கேள் -என்ற இத்தை கேழ் -என்றாக்கி அதாவது ஒப்பாய் -இணை என்றும் ஒப்பாய் -திரளவும் தனித்தனியும் ஒப்பில்லாதான் -என்னுதல்-
அன்றிக்கே -கேள் -என்று உறவாய் -சேர்ந்த ஒப்பில்லாதான் -என்னுதல்
கிளரும்
ஆற்றுப் பெருக்குப் போலே மேல் மேல் எனக் கிளரா நிற்பதாய் நிரவதிக தேஜோ ரூபமான திவ்ய மங்கள விக்ரஹத்தை உடையவன்
சுடர் ஒளி மூர்த்தி
சுடர் என்றும் -ஒளி-என்றும் பர்யாயம்-இரண்டாலும் மிக்க ஒளி என்றபடி -ஒளி பேர் அழகு
மூர்த்தி
கீழ்ச் சொன்ன ஒப்பனை மிகையாம் படியான வடிவை உடையவன்
நாள் அணைந்து ஒன்றும் அகலான் என்னுடை நாவில் உளானே –
நாள் தோறும் வந்து கிட்டும் அத்தனை அல்லது கால் வாங்க மாட்டுகிறிலன்
என்னுடைய ஸ்திதி விஷயம் ஆனான் -என்னுதல்
அன்றிக்கே வாசி திஷ்டன் என்கிறபடியே என்னுடைய வாக் இந்த்ரியத்துக்கு விஷயமானான் என்னுதல் –

———————————————————————————-

அவதாரிகை –

சகல வித்யா வேத்யனான சர்வேஸ்வரன் பிரமாணங்களாலே-காணக் கடவ வடிவை என் கண்ணுக்கு விஷயமாக்கினான் என்றார் –

நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக்கு எல்லாம்
ஆவியும் ஆக்கையும் தானே அழிப்போடு அளிப்பவன் தானே
பூவியில் நால் தடம் தோளன் பொரு படை யாழி சங்கேந்தும்
காவி நன் மேனிக் கமலக் கண்ணன் என் கண்ணினுள் உளானே –1-9-8-

நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக்கு எல்லாம்
ஜிஹ்வாக்ரத்திலே விகசியா நின்றுள்ள ஜ்ஞான சாதனமான வித்யா விசேஷங்களுக்கு எல்லாம்
ஆவியும் ஆக்கையும் தானே
ஆவி -என்கிறது -அர்த்தத்தை -ஆக்கை என்கிறது சப்தத்தை
இவ்வர்த்தத்தை இச் சப்தம் காட்டக் கடவது -என்று நியமித்து விட்டான் அவனாயிற்று
ஆக சப்தார்த்த சம்பந்தம் அவனிட்ட வழக்காயிற்று
அழிப்போடு அளிப்பவன் தானே
மந்த மதிகளானச சேதனருடைய பிரதிபத்தி தோஷங்களாலும்-லேகக தோஷங்களாலும் பாட பேதங்களாலும் இவை உருமாயும் அளவிலே
சம்ஹரித்தும் அபேஷித்த சமயத்தில் ஸ்ருஷ்டித்தும் போருகிறான் தானே -அல்லாத சிருஷ்டி சம்ஹாரங்களைச் சொல்கிறது -என்பாரும் உண்டு

பூவியில் நால் தடம் தோளன்
பூவால் அல்லது செல்லாத படி ஸூ குமாரமாய் -கல்ப தரு பணைத்தால் போலே நாலாய்ச் சுற்றுடைத்தாய் இருக்கிற திருத் தோள்களை உடையவன் –
பூவியல் -பூவாலே அலங்க்ருதமான தோள் என்னுதல் -பூவை ஒழியச் செல்லாத சௌகுமார்யத்தை உடையவன் என்னுதல்
பொரு படை
பணைத்து பூத்த கல்பக தரு போலே யாயிற்று -யுத்தத்துக்கு பரிகரமான திவ்ய ஆயுதங்களைத் தரித்தால் இருக்கும் படி
-பொரு படை -யுத்த சாதனங்கள் ஆனவை
யாழி சங்கேந்தும்
காவி நன் மேனிக்
அவ்வாயுதங்களாலே விரோதியைப் போக்கி அனுபவிக்கும் வடிவு அழகு
நன் மேனி –
காவி வடிவு அழகுக்கு உபமானமாக நேர் நில்லாமையாலே -நன் மேனி -என்கிறார் –
கமலக் கண்ணன் என் கண்ணினுள் உளானே —
இவர் கண் வட்டம் ஒழிய புறம்பே போனால் கண் வட்டக் கள்ளனாமே
பெரு வெள்ளத்தில் ஒரு சுழி போலே திருக் கண்கள் –
என் கண்ணினுள் உளானே —
பிராக்ருத விஷயங்களை அனுபவித்துப் போந்த என் கண்ணுக்கு தன்னை விஷயம் ஆக்கினான் –

——————————————————————————————–

அவதாரிகை –

கண்ணில் நின்ற நிலை சாத்மித்தவாறே என் நெற்றியிலே வந்து நில்லா நின்றான் -என்கிறார்

கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான் காண்பன் அவன் கண்களாலே
அமலங்களாக விழிக்கும் ஐம்புலனும் அவன் மூர்த்தி
கமலத்தயன் நம்பி தன்னைக் கண்ணுத லானொடும் தோற்றி
அமலத் தெய்வத்தோடு உலகமாக்கி என் நெற்றி உளானே –1-9-9-

கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான் –
புண்டரீகாஷனானவன் என் கண்ணுக்கு விஷயம் ஆனான்
ந சஷூஷா க்ருஹ்யதே -என்கிற மரியாதை குலைந்தது
அவன் வடிவை உம்முடைய கண்ணுக்கு விஷயம் ஆக்கினான் ஆனால் நீர் பின்னைச் செய்தது என் என்னில்
காண்பன் –
நானும் கண்டு அனுபவியா நின்றான் -இவ் விலஷண விஷயத்தை நீர் கண்டு அனுபவிக்க வல்லீரான படி எங்கனே என்ன
அவன் கண்களாலே அமலங்களாக விழிக்கும்
அவன் தன் திருக் கண்களாலே என் தோஷம் எல்லாம் கழிந்து நான் காண வல்லேனாம் படி குளிரக் கடாஷியா நின்றான்
ஆனாலும் இந்த்ரியங்கள் என்று சில உண்டே காட்சிக்கு பிரதி பந்தகங்கள் -அவை செய்தது என் என்ன
ஐம்புலனும் அவன் மூர்த்தி
காட்சிக்கு பிரதி பந்தகங்களான ச்ரோத்ராதிகளும் அவன் இட்ட வழக்காம் படி அவனுக்கு சரீரவத் விதேயமாய் அங்கே படை யற்றன
கமலத்தயன் நம்பி தன்னைக் கண்ணுத லானொடும் தோற்றி அமலத் தெய்வத்தோடு உலகமாக்கி –
திரு நாபீ கமலத்தில் அவ்யவதா நே ந பிறந்து எல்லாரிலும் விசஜாதீயமான ஜென்மத்தை உடையனாய் தனக்கு இவ்வருக்கு உள்ளவற்றை
உண்டாக்கும் இடத்தில் சர்வேஸ்வரனை கேள்வி கொள்ள வேண்டாத படி நிரபேஷனான சதுர்முகனை லலாட நேத்ரனான
ருத்ரனோடே உண்டாக்கி-அவளவிலே பர்யவசியாதே சத்வ பிரசுரரான தேவதைகளோடு லோகங்களை உண்டாக்கினவன்
நெய்யுண்ணி-என்னுமா போலே ஆக்கி என்றது ஆக்கும் ஸ்வபாவன் -என்றபடி
என் நெற்றி உளானே —
கர்ம அனுகுணமாக ஜகத்தை சிருஷ்டித்து விட்டான் –
பிரயோஜன நிரபேஷமாக என் நெற்றியிலே புகுந்து நின்றான் –

—————————————————————————————-

அவதாரிகை –

ப்ரஹ்மாதிகள் தன்னைப் பெறுகைக்கு அவசர ப்ரதீஷராய் தடுமாறும் படி இருக்கிறவன் தான் என்னைப் பெறுகைக்கு
அவசரம் பார்த்து வந்து என் உச்சி உளானே -என்கிறார் –

நெற்றியுள் நின்று என்னை யாளும் நிரை மலர்ப்பாதங்கள் சூடி
கற்றைத் துழாய் முடிக் கோலக் கண்ண பிரானைத் தொழுவார்
ஒற்றைப் பிறை யணிந்தானும் நான்முகனும் இந்த்ரனும்
மற்றை யமரரும் எல்லாம் வந்து என் உச்சி உளானே –1-9-10-

நெற்றியுள் நின்று என்னை யாளும்
நெற்றியுள் நின்று என்னை அடிமை கொள்ளுகிற
நிரை மலர்ப்பாதங்கள் சூடி
மலரை நிரைத்தால் போலே இருக்கிற திருவடிகளை சிரசா வஹித்து
கற்றைத் துழாய் முடிக் கோலக் கண்ண பிரானைத் தொழுவார்
ஒரு வாடல் மாலையைக் கொண்டு வந்து திரு முடியில் வைத்தாலும் திருக் குழலின் ஸ்பர்சத்தால் செவ்வி பெற்று தழையா நிற்கும்
தழைக்கும் துழாய் -பெரிய திருவந்தாதி -39–என்னுமா போலே செவ்வி பெற்று தழைக்கிற திருத் துழாய் உடன் கூடின
திரு அபிஷேகத்தை உடையனாய் -தர்ச நீயமான வடிவையும் உடைய உபகார சீலனான கிருஷ்ணனை நிரை மலர்ப்பாதங்கள் சூடித் தொழுவார்
ஒற்றைப் பிறை யணிந்தானும்
ஒரு கலா மாத்ரமான சந்த்ரனை ஜடையிலே தரித்து ஸூக ப்ரதனனாய் இருக்கிற ருத்ரனும்
நான்முகனும் இந்த்ரனும்
அவனுக்கு ஜனகனான சதுர்முகனும் தேவர்களை மெய்க்காட்டுக் -attendance- கொண்டு– இருக்கிற இந்த்ரனும்
மற்றை யமரரும்
மற்றும் உண்டான தேவர்கள் எல்லாம்
எல்லாம் வந்து என் உச்சி உளானே
இப்படி அவர்கள் தடுமாறா நிற்க தன்னைப் பெறுகைக்கு -அது எல்லாம் தான் என்னைப் பெறுகைக்கு பட்டு வந்து
என் உச்சி உளனாகா நிற்கிறான்
ராஜாக்கள் அந்தப் புரத்தில் ஒரு கட்டில் நின்றும் மற்றைக் கட்டில் ஏறப் புகா நிற்க நடுவே -வஸ்த்ரம் மாற்றும் போது -அந்தரங்கர் முகம் காட்டி
தம் கார்யம் கொண்டு போமா போலே இவர் திரு நெற்றியில் நின்றும் திருமுடி ஏறப் போகா நின்றாள் ப்ரஹ்மாதிகள் நடுவே முகம் காட்டித்
தங்கள் கார்யம் கொண்டு போம் அத்தனை –

————————————————————————————–

அவதாரிகை —

நிகமத்தில் இத்திருவாய்மொழியை எம்பெருமானுக்கு விண்ணப்பம் செய்ய அவர்கள் தலையிலே
எம்பெருமான் திருவடிகள் நாடொறும் சேரும் -என்கிறார் –

உச்சியுள்ளே நிற்கும் தேவ தேவற்கு கண்ண பிராற்கு
இச்சையுள் செல்ல யுணர்த்தி வண் குருகூர்ச் சடகோபன்
இச்சொன்ன வாயிரத்துள் இவையுமோர் பத்து எம்பிராற்கு
நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள் கழல் சென்னி பொருமே –1-9-11-

இனி எங்கே போவதாக இருந்தான் என்னில்
உச்சியுள்ளே நிற்கும்
அமரர் சென்னிப் பூவான தான் -என் சென்னிக்கு அவ்வருகு கந்தவ்ய பூமி இல்லை என்று என் உச்சி உள்ளே வர்த்தியா நின்றான்
என் உச்சியிலே நிற்கையாலே தேவதேவன் ஆனான் என்றுமாம்
உள்ளே நிற்கும்
இனி அவ்வருகு போக்கில்லை
தேவ தேவற்கு
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருக்கிற இருப்பையும் நினைக்கிறிலன்
கண்ண பிராற்கு
உபகார சீலனான கிருஷ்ணனுக்கு
இச்சையுள் செல்ல யுணர்த்தி
சர்வேஸ்வரனுக்கு தன பக்கல் உண்டான இச்சையைத் தாம் அறிந்த படியை அவன் திரு உள்ளத்திலே படும்படி உணர்த்தி
வண் குருகூர்ச் சடகோபன்
சர்வேஸ்வரனுக்கு அறிவித்த அளவே அன்றிக்கே -சம்சாரிகளுக்கும் அறியும் படி பண்ணின உதாரரான ஆழ்வார்
இச்சொன்ன-வாயிரத்துள் இவையுமோர் பத்து-
இப்பாவ வ்ருத்தியாலே சொன்ன ஆயிரத்திலும் இவையும் ஓர் பத்து
எம்பிராற்கு நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள் கழல் சென்னி பொருமே —
எம்பிராற்கு விண்ணப்பம் செய்ய நிச்சலும் நீள் கழல் சென்னி பொரும்-
தனக்கு பாங்கான சமயத்தில் ஒரு கால் விண்ணப்பம் செய்ய -நாள்தோறும் ஆசாலேசம் உடையார் இருந்த இடத்திலே செல்ல வளரும் திருவடிகள் சென்னியோடே சேரும்
எம்பிரான் -என்றது -இப்படி சாத்மிக்க சாத்மிக்கவும் -இழவு மறக்கவும் -அனுபவிப்பித்த உபகாரகன் என்றபடி
ஆழ்வார் க்ரமத்திலே உச்சி உளானே -என்ற பெற்ற பேறு-இது கற்றாற்கு முதல் அடியிலே உண்டாம்
பொரு -என்று ஒப்பாய் -ஒப்பாவது சேருகையாய்-சேரும் என்றபடி –
உச்சியுள்ளே நிற்கும் என்று இவர் பெற்றதுவே பேறாகக் கடவது –

முதல் பாட்டில் என்னுடைய பர்யந்தத்திலே வந்து நின்றான் -என்றார்
இரண்டாம் பாட்டில் -அது சாத்மித்தவாறே அருகே நின்றான் என்றார்
மூன்றாம் பாட்டில் நம்முடனே கூட நின்றான் என்றார்
நாலாம் பாட்டில் ஒக்கலையில் வந்து நின்றான் என்றார்
அஞ்சாம் பாட்டில் நெஞ்சிலே வந்து புகுந்தான் என்றார்
ஆறாம் பாட்டில் தோளிலே வந்து இருந்தான் என்றார்
ஏழாம் பாட்டில் நாவிலே வந்து புகுந்தான் என்றார்
எட்டாம் பாட்டில் கண்ணினுள்ளே நின்றான் என்றார்
ஒன்பதாம் பாட்டில் நெற்றியிலே நின்றான் என்றார்
பத்தாம் பாட்டில் திரு முடியிலே நின்றான் என்றார்
நிகமத்தில் -ஆக -இத்தால் தம்முடனே சாத்மிக்கும் படி கலக்கையாலே அவனை சிரஸா வஹித்தார் -பலம் சொல்லித் தலைக் கட்டினார் –

———————————————————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருவாய்மொழி – -1-8- –ஈட்டு -ஸ்ரீ ஸூ க்திகள் —

October 14, 2015

பிரவேசம் –

கீழில் திருவாய் மொழியில் நிரதிசய போக்யன் என்றார் –
இதில் அவனுடைய ஆர்ஜவ குணம் சொல்லுகிறார்
சௌலப்யம் ஆவது என் -சௌசீல்யம் ஆவது என்-ஆர்ஜவம் ஆவது என் –என்னில்
சௌலப்யமாவது -ஸ்ரீ வைகுண்டம் கலவிருக்கையாக உடையவன் -அங்கு நின்றும் சம்சாரி சேதனர் நின்ற இடத்தே வந்து அவதரித்து எளியனாகை-
சௌசீல்யமாவது-இப்படி தாழ விட்டால் -சிறியார் அளவில் நம்மைத் தாழ விட்டோமே -என்று தன் திரு உள்ளத்திலும் இன்றிக்கே இருக்கை-
இனி ஆர்ஜவ குணமாவது -இப்படிப் பொருந்தினால் -நினைவும் சொலவும் செயலும் ஒருபடிப் பட்டு இராதே
பலவகைப் பட்ட சேதனரோடு தான் பரிமாறும் இடத்தில்
அவர்கள் போன வழி தனக்கு வழி யாம் படி -தான் அவர்களுக்கு செவ்வியனாய் பரிமாறுகை –
குணவான் -என்று சௌசீல்ய குணத்தை சொல்லா நிற்கச் செய்தார் இ றே
ருஜூ என்று ஆர்ஜவ குணத்தை பிரிய அருளிச் செய்தார் இ றே -வசீ வதான்யோ குணவான் ருஜூ -ஸ்தோத்ர ரத்னம் -18-
இத் திருவாய் மொழி தான் சர்வேச்வரனுடைய ஐஸ்வர் யத்தைச் சொல்கிறது -என்பாரும் உண்டு
அன்றிக்கே -ஈச்வரத்வ லஷணம் சொல்லுகிறது என்பாரும் உண்டு
அன்றிக்கே கீழே பாடி இளைப்பிலம் -என்றார் -அப்படியே பாடி அனுபவிக்கிறார் என்பாரும் உண்டு –
ஆர்ஜவ குணம் சொல்லுகிறது -என்று பட்டர் அருளிச் செய்யும் படி
பத்தர் முக்தர் நித்யர் -என்று சேதனற்கு ஒரு த்ரைவித்யம் உண்டு இ றே
த்ரிவித சேதனரோடும் பரிமாறும் இடத்தில் அவர்கள் தம் நினைவிலே வரும்படி பண்ணுகை யன்றிக்கே-நீர் ஏறா மேடுகளிலே விரகாலே நீர்
ஏற்றுவாரைப் போலே தன்னை அவர்களுக்கு ஈடாக அமைத்து பரிமாறும் என்னும் அவ்வழியாலே இவனுடைய ஆர்ஜவ குணம் சொல்லுகிறார்

——————————————————————

அவதாரிகை –

நித்ய விபூதியில் உள்ளாரோடு செவ்வியனாய் பரிமாறும் படி சொல்கிறது -அவர்களுக்குச் செவ்வைக் கேடு இல்லை இறே
அவர்கள் பலராய்-ருசி பேதம் உண்டால் அவர்கள் நினைவு இருந்து பரிமாறவே அங்கும் ஆர்ஜவ குணம் ஏறும் இறே –

ஓடும் புள்ளேறி சூடும் தண் துழாய்
நீடு நின்றவை ஆடும் அம்மானே –1-8-1-

ஓடும் புள்ளேறி
புள்ளேறி ஓடும் -பெரிய திருவடியை மேற்கொண்டு சஞ்சரியா நிற்கும்
மஹிஷிக்கு ஸ்தன பரிரம்பணம் போலே தன்னை மேற்கொண்டு நடத்துவது அபேஷிதமாய் இருக்கும் இறே வாகனத்துக்கு
பெரிய திருவடியை மேற் கொள்ளுமது தான் அவ்விபூதியில் உள்ளார்க்கு காட்சி கொடுக்கைக்கும்
அவனுடைய ஸ்வரூப லாபத்துக்காகவுமாய் இருக்கும் இறே
த்வதங்க்ரி சம்மர்த்த கிணாங்க சோபி நா -ஸ்தோத்ர ரத்னம் -41–காமிநி யானவளுக்கு போக சிஹ்னங்கள் தாரகமாமோ பாதி
-திருவடிகள் உறுத்துகையாலே வந்த தழும்பு இவனுக்குத் தாரகமாய் இருக்கும் இறே
சூடும் தண் துழாய்
இப்போதே பறித்து திருக் குழலில் வளையமாக வையாது ஒழியில் செவ்வி அழியும் -என்னும் அளவில் அப்போதே பறித்து திருக் குழலிலே வைக்கும்
இதுக்குச் சைதன்யம் உண்டோ என்னில் -சின்மையஸ் ஸ்வ பிரகாசச்ச -என்னக் கடவது இறே
சில சேதனர் -புள்ளாயும் துழாயாயும் அங்குத்தைக்கு உறுப்பாக வர்த்திக்கிற படி இறே -விரோதி சைதன்யமே கழிந்தது -ராஜ சந்நிதியிலே
வர்த்திப்பார் கூனர் குறளராய் வர்த்திக்குமோ பாதி இறே
கர்ம நிபந்தனமாக பரிக்ரஹித்த சரீரங்களும் அன்றே -இச்சையாலே பரிக்ரஹிக்கிற அத்தனை இறே
இவ்விபூதியில் திர்யக் ஸ்தாவரங்கள் ஆமவை கர்மத்தாலே யாய் இருக்கும் -அங்கு ஸ்வ இச்ச அதீனமாய் இருக்கும் பரிக்ரஹித்த சரீரங்கள்
சம்சாரிகளுக்கு அன்றோ ருசி பேதமும் செவ்வைக் கேடும் உள்ளது
நித்ய ஸூரிகளுக்கு விஷயம் ஒன்றாகையாலே ருசி பேதம் இல்லை -செவ்வைக் கேடும் இல்லை
அவர்களுடன் செவ்வையனாய் பரிமாறுகை யாவது என் -என்னில் எல்லார்க்கும் விஷயம் ஒன்றே யாகிலும் -அவ்விஷயம்
தன்னில் வ்ருத்தி பேதத்தாலே ருசி பேதம் உண்டாம்

நீடு நின்றவை ஆடும் அம்மானே —
கர்ம அநு கூலமாகில் இறே அநித்யமாவது-
ஸ்வரூப அனுரூபமான பரிமாற்றம் ஆகையாலே இது தான் நித்தியமாய் இருக்கும்
அவனுக்கு இவர்களை ஒழியச் செல்லாது -இவர்களுக்கு அவனை ஒழியச் செல்லாது
அவை -புள் என்றும் -துழாய் -என்றும் சொல்லுகையாலே அவை என்கிறது
ஆடும்
அவற்றோடு பரிமாறும் என்னாதே-அவை ஆடும் என்கிறது
சர்வேஸ்வரனுக்கு அவர்களோடு அணையும் அது
விடாயர் மடுவிலே புக்கு ஆடினால் போலே இருக்கையாலே
அம்மானே
நித்ய ஸூரிகளோடு நித்ய சம்சாரிகளோடு வாசி அறும்படி சர்வாதிகனாய் இருந்து வைத்து -இப்படி பரிமாறும்

—————————————————————————–

அவதாரிகை –

இப்பாட்டு நித்ய விபூதியில் நின்றும் வந்து அவதரித்து விரோதிகளைப் போக்கி சம்சாரிகளுடன் செவ்வையனாய்ப் பரிமாறும் படி சொல்கிறது

அம்மானாய்ப் பின்னும் எம்மாண்பும் ஆனான்
வெம்மா வாய் கீண்ட செம்மா கண்ணனே –1-8-2-

அம்மானாய்ப் –
இப்படி சர்வாதிகனாய் இருந்து வைத்து
பின்னும் எம்மாண்பும் ஆனான் வெம்மா வாய் கீண்ட செம்மா கண்ணனே –
வெம்மா வாய் கீண்ட செம்மா கண்ணன் -பின்னும் எம்மாண்பும் ஆனான்-
செவ்விதான மா வுண்டு -கேசி -அதினுடைய வாயைக் கிழித்துப் பொகட்ட-
கேசி வாயை அங்காந்து கொண்டு வந்து தோற்றின போது கண்ட ஸ்ரீ நாரத பகவான் -ஜகத் அஸ்தமிதம் -என்று
கூப்பிட்டுக் கொண்டு வந்து விழுந்தான் இறே
அவனுக்கு தத் காலத்திலே பிறந்த பயம் –அவன் பட்டுக் போகச் செய்தேயும் ஸ்ம்ருதி சமயத்தில் அஞ்சுகிறார் இவர்
செம்மா கண்ணனே
விரோதி போகையாலே வந்த ப்ரீதியாலே சிவந்து மலர்ந்த திருக் கண்களை உடைய கிருஷ்ணன்
பின்னும் எம்மாண்பும் ஆனான்
அவ்வவதாரத்திலே பர்யவசிக்கை யன்றிக்கே அதுக்கு மேலே அநேக அவதாரங்களைப் பண்ணினான்
பஹூ நி –ஸ்ரீ கீதை -4-5-என்கிறபடியே
மாண்பு -என்று அழகு
பரத்வத்திலும் மனுஷ்யத்வே பரத்வத்தால் வந்த அழகைச் சொல்லுகிறது

————————————————————————————–

அவதாரிகை —

இரட்டை பிரஜை பெற்ற மாதாவானவள் இருவருக்கும் முலை கொடுக்கப் பாங்காக நடுவே கிடக்குமா போலே –
நித்ய சூரிகளுக்கும் சம்சாரிகளுக்கும் ஒக்க முகம் கொடுக்கைக்காக திருமலையிலே நின்று அருளின நீர்மையை அருளிச் செய்கிறார் –

கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு
தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே –1-8-3-

கண்ணாவான் –
நிர்வாஹகனாவான் -என்னுதல்
கண்ணாகைக்காக -என்னுதல்
சஷூர் தேவா நாமுத மர்த்யா நாம் -என்கிற ஸ்ருத்யர்த்தத்தை அருளிச் செய்கிறார்
மண்ணோர் விண்ணோர்க்கு -என்றும்-கண்ணாவான் —
நித்ய ஸூரிகளோடு சம்சாரிகளோடு வாசியில்லை யாயிற்று தங்கள் கார்யம் தாங்கள் செய்து கொள்ள மாட்டாமைக்கு –
தண்ணார் வேங்கடம்-
குளிர் அருவி வேங்கடம் -என்னுமா போலே அவனுக்கு ரஷ்யம் பெறாமையாலே வரும் தாபத்தை ஆற்ற வற்றாய் இருக்கை
விண்ணோர் வெற்பனே –
அவன் இரண்டு விபூதியில் உள்ளார்க்கும் முகம் கொடுக்க வந்து நின்றானே யாகிலும் -திருமலை தான் நித்ய ஸூரிகளதாயிற்று-
வானவர் நாடு போலே -விண்ணோர் வெற்பு -என்கிறார்
கானமும் வானரமுமான இவற்றுக்கு முகம் கொடுத்துக் கொண்டு நிற்கிற நீர்மையை அனுசந்தித்து
இது என்ன நீர்மை -என்று ஈடுபட்டு இருக்கையாலே அவர்களதே திருமலை என்கிறார் –

—————————————————————————-

அவதாரிகை

அவனுடைய ஆர்ஜவ குணம் தம்மளவிலே பலித்த அடியை அருளச் செய்கிறார்

வெற்பை ஓன்று எடுத்து ஒற்கமின்றியே
நிற்கும் அம்மான் சீர் கற்பன் வைகலே –1-8-4-

வெற்பை ஓன்று எடுத்து
பசுக்களும் இடையரும் தொலையும்படி வர்ஷிக்கப் புக்கவாறே -அதுக்கு ஈடாய் இருப்பது ஒன்றை இட்டு ரஷிக்கப் பற்றாமையாலே
தோற்றிற்று ஒரு மலையை எடுத்து பரிஹரித்தான் யாயிற்று
இப்படி ஏழு பிராயத்தின் பாலன் ஒருபடிப் பட்ட மலையை எடுத்து தரித்துக் கொண்டு நின்ற இடத்தில் இளைப்பு உண்டாயிற்று இல்லையோ என்னில்
ஒற்கமின்றியே நிற்கும் அம்மான்-
ஒற்கமாவது-ஒடுங்குதல் -அதாகிறது இளைப்பு
ஏழு நாள் ஒருபடிப்பட மலையைத் தரித்துக் கொண்டு நின்ற இடத்தில் இளையாமைக்கு ஹேது என் என்னில்
அவன் ரஷணத்தைப் பகிர்ந்து கொள்வார் இல்லாமையாலே இளைப்பு இல்லை
தாது ஷயம் பிறவா விடில் இளைப்பு இல்லை இறே
உண்கிற சோற்றிலே மணலைத் தூவுகை இல்லா விடில் இளைப்பு இல்லை இறே
அம்மான்
வகுத்த ஸ்வாமி யாகையாலே
ஸ்வபாவிக சம்பந்தத்தாலே இளைப்பின்றிக்கே நின்றான்
பிரஜா ரஷணத்தில் மாதாவுக்கு இளைப்பு உண்டாகாது இறே

சீர் கற்பன –
அவன் மலையை எடுத்து ரஷ்ய வர்க்கத்தை நோக்கின நீர்மையை அனுசந்தித்து -அவனுடைய கல்யாண குணங்களை
அந்த குண ப்ரேரிதனாய் அப்யசிப்பன் -குணைர் தாஸ்யம் உபாகத -என்னுமா போலே
வைகலே —
ஒரு கால் இத்தைச் சொல்லி பின்னை என் கார்யத்துக்கு போமவன் அல்லன்
நித்ய ஸூரிகளைப் போலே எனக்கும் இதுவே யாத்ரையாய் இருக்கும் –
விபன்யவ -இறே –ருக் வேதம் -எப்போதும் ஸ்துதித்த படியே உள்ளனர் -என்றபடி

—————————————————————————-

அவதாரிகை –

நீர் அவன் குணங்களை அப்யசியா நின்றீராகில் -அவன் தான் செய்கிறது என் என்னில் -நான் அவனை விட்டு அவன் குணங்களை
விருமபுகிறாப் போலே அவனும் என்னை விட்டு என்னுடைய தேஹத்தை விரும்பா நின்றான் என்கிறார்

வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்டான்
பொய் கலவாது என் மெய் கலந்தானே –1-8-5-

வைகலும் –
கற்பன வைகலே -என்று எனக்கு அவன் குணம் என்றும் தாரகமாய் இருக்கிறாப் போலே
ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யம் என்றும் ஒக்க தாரகமாய் இருக்குமாயிற்று அவனுக்கு -வெண்ணெய் கை கலந்து உண்டான் –
வெண்ணெயில் உண்டான ஆதரத்தாலே இடக்கையாலும் வலக்கையாலும் வாங்கி அமுது செய்தான்
அன்றியே
தாரார் தடம் தோள்கள் உள்ளளவும் கை நீட்டி -என்கிறபடியே கை நிறையும் அத்தனையும் வயிறு நிறையும் -என்னும் மௌக்யத்தாலே
திருக்கைகள் உள்ளளவும் கலந்து அமுது செய்தான் -என்னுதல்
கள்ளன் -என்று சிலுகிட்ட வாறே அவர்கள் தங்களோடு கலந்து அமுது செய்தான் -என்னுதல்
சர்வாதிகனானவன் நித்ய சம்சாரியாய் போந்தவனுடைய தேஹத்தை திருவாய்ப்பாடியிலே வெண்ணெயோபாதி ஆதரித்தான்
என்றால் இது கூடுவது ஒன்றோ என்னில்
பொய் கலவாது என் மெய் கலந்தானே —
அவ் வெண்ணெயில் பண்ணின விருப்பத்தில் பொய் இல்லாதாப் போலே கிடீர் என் உடம்புடன் கலந்த கலவியிலும் பொய் இல்லாதபடி -என்கிறார்
என் மெய்
அவன் மேல் விழ மேல் விழ தாம் இறாய்த்தமை தோற்றுகிறது
அழுக்கு உடம்பு -என்று நான் அநாதரிக்கிற சரீரம் இவனுக்கு ஆதரணீயம் ஆவதே -என்கிறார் –
வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்டான் -உண்டவன் என் மெய் கலந்தானே-இதில் பொய் கலவாது -என்று அந்வயம்

———————————————————————————————-

அவதாரிகை –

இப்படி கலந்து செய்தது என் என்ன -தேஹத்து அளவிலே விரும்பி விட்டிலன் -என் ஆவி நலத்தையும் கொண்டான் -என்கிறார் –

கலந்து என்னாவி நலம் கொள் நாதன் —
புலன் கொள் மாணாய நிலம் கொண்டானே –1-8-6-

கலந்து என்னாவி நலம் கொள் –
என்னோடு ஒரு நீராக கலந்து
பின்னை என் ஆத்மாவினுடைய நற்சீவனைக் கொண்டான் -அவ்வளவேயோ
நாதன் —
என்னை யாளும் கொண்டு –திரு நெடும் தாண்டகம் -25-என்கிறபடியே நான் எனக்கு உரியேனாய் இருக்கிற இருப்பையும் தவிர்த்தான்
இப்படி அகப்பட்டார் நீரேயோ என்ன –
புலன் கொள் மாணாய நிலம் கொண்டானே –
மகா பலியும் அகப்பட்டான் -ஆவி நலம் கொடுத்திலன்
கழஞ்சு மண் கொடுத்தான் அத்தனை
சர்வ இந்த்ரிய அபஹார ஷமமான வேஷத்தை பரிக்ரஹித்து -அவன் என்னது என்று அபிமானித்து இருக்கிற பூமியை அபஹரித்தன்

—————————————————————————————-

அவதாரிகை –

ஆவி நலம் கொண்டுவிட்ட அளவேயோ -நித்ய விபூதியில் பண்ணும் ஆதரத்தையும் என் பக்கலிலே பண்ணினான் -என்கிறார்

கொண்டான் ஏழ் விடை உண்டான் ஏழ் வையம்
தண் தாமம் செய்து என் எண் தானானானே –1-8-7-

கொண்டான் ஏழ் விடை –
இன்ன படைவீடு கொண்டான் -என்னுமா போலே
நப்பின்னை பிராடியோட்டை சம்ச்லேஷத்துக்கு பிரதிபந்தகமான வ்ருஷபங்கள் ஏழையும் ஜெயித்தான்
உண்டான் ஏழ் வையம்
பிரளய ஆபத்தில் பூமி தன் வயிற்றில் புகா விடில் தரியாதா போலே தான் என் பக்கல் புகுந்தால் அல்லது தரியாதானாக கலந்தான்
தனக்கு ச்நேஹித களாய் இருப்பார்க்கு செய்யுமதும் செய்தான்
தான் பண்ணும் ரஷணம் விலக்காதார்க்குச் செய்யுமதும் செய்தான்
அதுக்கு மேலே
தண் தாமம் செய்து
தட்பத்தை உடைத்தான தாமம் உண்டு பரம பதம்
அதில் பண்ணும் விருப்பத்தையும் என் பக்கலிலே பண்ணினான்
தத் விபூதிகனாக என்னை ஆதரித்து -என்றுமாம்
என் எண் தானானானே —
நான் மநோ ரதித்த படியே எனக்க்குக் கை புகுந்தான் என்னுதல்
அன்றிக்கே
என் மநோ ரதத்தை தான் கைக் கொண்டான் என்னுதல்
அதாவது மாக வைகுந்தம் காண்பதற்கு இறே இவர் ஏகம் எண்ணுவது
கண்ணன் விண்ணூர் தொழவே சரிகின்றது சங்கம் -திரு விருத்தம் -47-என்று நான் ஸ்ரீ வைகுந்தத்து ஏறப் போக வேணும் என்றும்
அங்கே அனுபவிக்க வேணும் என்று ஆசைப்பட
அவன் -திரு நகரி ஏறப் போக வேணும் ஆழ்வாரை அனுபவிக்க வேணும் -என்று பாரியா நின்றான்

—————————————————————————————-

அவதாரிகை –

என்னைச் சுட்டி அவன் பிறந்த பிறவிகளுக்கு ஒரு முடிவு இல்லை -என்கிறார்

ஆனான் ஆனாயன் மீனோடு ஏனமும்
தான் ஆனான் என்னில் தானாய சங்கே –1-8-8-

ஆனான் ஆனாயன்
இடையனாய்ப் பிறந்து
முடிசூட இராதே ஜாதி உசிதமான கோ ரஷணத்திலே அதிகரித்தான்
இடையனாய்ப் பிறந்த மெய்ப்பாடு
அவ்வளவிலே தான் விட்டானோ
மீனோடு ஏனமும் தான் ஆனான்
கீழே ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தைச் சொன்னார்
அது அயர்வறும் அமரரர்கள் அதிபதியாய் இருந்தவோ பாதி இறே இவ்வவதாரங்களைப் பற்ற
சர்வாதிகனான தான் இவற்றோடு சஜாதீயன் ஆனான்
அவன் க்ரமத்திலே பிறக்கச் செய்தே அனுசந்தானத்தில் பதற்றத்தால் ஏக காலத்தில் இரண்டு அவதாரம் போலே இருக்க அருளிச் செய்கிறார்
ஆனான்
வடிவும் சொல்லும் செயலும் தாஜ்ஜாதியர்க்கு அடுத்தவையாய் இருக்கை
இவை தான் வித்யாவதாரங்கள் -இதுக்கு அடி என் என்னில்
என்னில் தானாய சங்கே —
என் பக்கல் தனக்கு உண்டான சங்காதிசயத்தாலே -என்னுதல்
என்னைக் குறித்து -தான் ஆனவை -தன் அவதாரங்கள் -தன் சங்கே -மஹா சங்க்யை-என்னும் அத்தனை
அங்கன் அன்றிக்கே
சங்கே -மஹா சங்க்யை யளவோ முடிவுண்டோ -பஹூ நி -என்னும் அத்தனை

——————————————————————————————————

அவதாரிகை –

இப்படி அவதரிக்கும் இடத்தில் ஐஸ்வர்யமான சிஹ்னங்களோடு வந்து அவதரிக்கும் என்கிறார் –

சங்கு சக்கரம் அங்கையில் கொண்டான்
எங்கும் தானாய் நங்கள் நாதனே –1-8-9-

சங்கு சக்கரம் அங்கையில் கொண்டான்
சிலரை வசீகரிக்க நினைத்தவர்கள் -கையிலே மருந்து கொண்டு திரியுமா போலே
அவதாரங்கள் தோறும் திவ்ய ஆயுதங்களோடு வந்து அவதரிக்கும்
திவ்யாயுதங்கள் எல்லாம் அவதாரங்களிலும் உண்டோ என்னில் எங்கும் உண்டு
ராஜாக்கள் கறுப்புடுத்துப் புறப்பட்டால் அந்தரங்கர் அபேஷித்த தசையிலே முகம் காட்டுகைக்கா பிரியத் திரிவார்கள் –
அது போலே தோற்றாதாயும் நிற்பார்கள்
கூராழி வெண் சங்கு ஏந்தி வாராய் என்னும் இவர்களுக்கு அப்படி இறே தோற்றுவது
சங்குச் சக்கரம்
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும் கையிலே திவ்ய ஆயுதங்களைத் தரித்தான்
எங்கும் தானாய்
தேவ மனுஷ்யாதி பேதங்கள் தோறும் தான் வந்து அவதரித்து உளனாய்
அன்றிக்கே
ஒருவனைப் பிடிக்க ஊரை வளைப்பாரைப் போலே தம்மை விஷயீ கரிக்கைக்காக வியாபித்த படியைச் சொல்லுதல்
நங்கள் நாதனே –
நம்மை எழுதிக் கொள்ளுகையே பிரயோஜனமாக

—————————————————————————————–

அவதாரிகை –

அவன் நீர்மையைப் பேசப் புக்கு -நம்மால் பேசப் போமோ -கடல் கிளர்ந்தால் போலே வேதமே பேச வேண்டாவோ -என்கிறார் –

நாதன் ஞாலம் கொள் பாதன் என்னம்மான்
ஓதம் போல் கிளர் வேத நீரானே –1-8-10-

நாதன்
சர்வ நியந்தாவானவன்
ஞாலம் கொள் பாதன்
வசிஷ்ட சண்டாள விபாக ரஹீதமாக எல்லார் தலைகளிலும் திருவடிகளைப் பரப்பினவன்
என்னம்மான்
இம் மேன்மையையும் நீர்மையையும் காட்டி என்னை அனந்யார்ஹம் ஆக்கினவன்
அதவா
நாதன் –
முதல் பாட்டில் சொன்ன சேஷத்வத்தை உடையவன்
ஞாலம் கொள் பாதன் –
இரண்டாம் பாட்டில் சொன்ன அவதார சௌலப்யத்தை உடையவன்
என் அம்மான் –
எனக்கு கிட்டலாம் படி திருமலையிலே வந்து என்னை அடிமை கொண்டவன் -மூன்றாம் பாட்டில் கண்ணாவான்-என்றத்தை நினைக்கிறார்
ஓதம் போல் கிளர் வேத நீரானே –
இவனுடைய இந்நிலைமைகளை பேசும் பொழுது கடல் கிளர்ந்தால் போலே கிளரா நின்றுள்ள வேதத்தால் பிரதிபாதிக்கப் பட்ட நீர்மையை உடையவன்
நீர்மை யாவது -ஆர்ஜவ குணம் –

—————————————————————————————–

அவதாரிகை

நிகமத்தில் இத் திருவாய் மொழி -எல்லா திருவாய் மொழி களிலும் அவனுடைய ஆர்ஜவ குணத்தை ஆராய்ந்து சொன்ன பத்து -என்கிறார் –

நீர் புரை வண்ணன் சீர் சடகோபன்
நேர்தல் ஆயிரத்து ஓர்தல் இவையே –1-8-11-

நீர் புரை வண்ணன் சீர்
ஆக இத் திருவாய் மொழியில் சொல்லிற்று யாயிற்று -சர்வேஸ்வரனுடைய-ஆர்ஜவ குணம் யாயிற்று
நீரோடு ஒத்த ஸ்வ பாவத்தை உடையவனுடைய ஆர்ஜவ குணத்தை யாயிற்று சொல்லிற்று
ஆர்ஜவ குணமாவது -சம்சாரிகள் விலங்கிப் போனது தனக்கு வழியாம் படி தான் செவ்வியனாகை –
சடகோபன் நேர்தல்
இவை தான் -இவ்வர்த்தத்தைக் கடக்க நின்று ஒருவன் கவி பாடுகை அன்றிக்கே இவ்வார்ஜவ குணத்துக்கு இலக்கான ஆழ்வார் அருளிச் செய்தவை
ஆயிரத்து ஓர்தல் இவையே —
ஆயிரத்திலும் வைத்துக் கொண்டு ஓர்ந்து அருளிச் செய்யப் பட்டவை
அதாவது சம்சாரிகளுடைய செவ்வைக் கேட்டை அனுசந்தித்து -அத்தால் இழக்க வேண்டாத படி அவனுடைய ஆர்ஜவ குணத்தை
அனுசந்தித்து அருளிச் செய்யப் பட்டவை
அன்றிக்கே
சம்சாரிகளுக்கு ஓரப்படுபவை என்னுதல்
ஆயிரத்திலும் சடகோபன் நீர்புரை வண்ணனுடைய சீரை நேர்ந்த இவை ஓர்தல் -என்று அந்வயம் –

முதல் பாட்டில் -நித்ய விபூதியில் உள்ளாரோடு செவ்வையனாய்ப் பரிமாறும் படியை அருளிச் செய்தார்
இரண்டாம் பாட்டில் லீலா விபூதியில் உள்ளாரோடு செவ்வையனாய்ப் பரிமாறும் படியை அருளிச் செய்தார்
மூன்றாம் பாட்டில் இரண்டு விபூதியில் உள்ளாருக்கு முகம் கொடுக்கைக்காக திருமலையில் நிற்கிறபடியை அருளிச் செய்தார்
நாலாம் பாட்டில் அவ்வார்ஜவ குணம் தம்மளவிலே பலித்த படியை அருளிச் செய்தார்
அஞ்சாம் பாட்டில் நான் அவன் குணங்களை விரும்புமா போலே அவன் என் தேஹத்தை விரும்பா நின்றான் -என்றார்
ஆறாம் பாட்டில் -என்னுடைய தேஹத்தின் அளவன்றிக்கே என்னுடைய ஆத்மாவையும் கைக் கொண்டான் என்றார்
ஏழாம் பாட்டில் அவ்வளவும் அல்ல நித்ய விபூதியில் பண்ணும் ஆதாரத்தை என் பக்கலிலே பண்ணினான் என்றார்
எட்டாம் பாட்டில் என்னைச் சுட்டி அவன் பிறந்த பிறவிகளுக்கு ஒரு முடிவு இல்லை என்றார்
ஒன்பதாம் பாட்டில் இப்படிப் பிறந்த பிறவிகள் தோறும் ஐஸ்வர்யத்தோடு வந்து பிறந்தான் என்றார்
பத்தாம் பாட்டில் அவனுடைய ஆர்ஜவ குணத்தை பேசும் போது வேதமே பேச வேணும் என்றார்
நிகமத்தில் இத் திருவாய் மொழி சம்சாரிகளுக்கு எப்போதும் ஒக்க அனுசந்திக்கப் படும் -என்றார்

——————————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருவாய்மொழி – -1-7- –ஈட்டு -ஸ்ரீ ஸூ க்திகள் —

October 14, 2015

பிரவேசம்

கீழில் திருவாய் மொழியில் ஸ்வாராதன் -என்றார்
அதில் சொன்ன ஆஸ்ரயணம் தான் போக ரூபமாய் இருக்கும் என்கிறார் இதில் –
பகவத் சமாஸ்ரயணம் தான் இதுக்கு இட்டுப் பிறவாத சர்வேஸ்வரனுக்கும் ஆசைப்படும் படி போக ரூபமாய் இருப்பது ஓன்று இறே –
அச்ரத்தா நா புருஷா ஸ்ரீ கீதை -9-3—-விஸ்வாச பூர்வாக த்வாரா ரஹீதரானவர்கள் –அஸ்ய தர்மஸ்ய -என்றான் இறே தனக்கும் இனிதாய் இருக்கையாலே
பரந்தப -விரோதி வர்க்கத்தை உதற வல்லாய் நீ யன்றோ
அப்ராப்ய மாம் நிவர்த்தந்தே -செய்த குற்றங்களை அடையப் பொறுத்து தங்களை நல வழிப் போக்கும் என்னை விட்டு தம்தாமுடைய
விநாசத்தை சூழ்ப்பதான சம்சாரத்தை விரும்பி அவ வழியே போகா நிற்பார்கள் -இது தான் இருந்த படி பாராய் -என்கிறான் –
பிரத்யஷாவகமம் –ந மாம்ச சஷூர் அபி வீஷதே தம் -என்கிற நான் பிரத்யஷ பூதன் ஆனேன்
தர்ம்யம் -நம்மைக் காண்கை ஒரு தலையானால் அதர்ம்யமானாலும் மேல் விழ வேணும்
இது அங்கன் அன்றிக்கே தர்மாதநபேதமுமாய் இருக்கும்
ஸூ ஸூகம் கர்த்தவ்யம் -ஸ்மர்த்தவ்ய விஷயம் சாரச்யத்தாலே தானும் போக ரூபமாய் இருக்கும்
அவ்யயம் -கோலின பலங்களை கொடுக்கச் செய்தேயும் ஒன்றும் செய்யாதோமாய் நம் நெஞ்சிலே கிடக்கையாலே தான் முதல் அழியாதே கிடக்கும்
ருணம் பிரவர்த்தமிவ மே ஹ்ருதயான்லாப சர்ப்பத்தி -என்றான் இறே

ஸ்ரீ யபதியாய் –பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை –
சமஸ்த கல்யாண குணாத்மகனாய் -நிகரில் அவன் புகழ்
சகல ஆத்மாக்களுக்கும் சேஷியாய்-நாதனை –எப்பால் எவர்க்கும் நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பால் அவன்
நிரதிசய ஆனந்த யுக்தனாய்
ஏஷ ஹ்யேவா நந்தயாதி -என்கிறபடி தன்னைக் கிட்டினாரையும் ஆனந்தபிக்கக் கடவனாய் மோஷ தசையிலே அனுபவம்
இனிதாகிறதும் அவனைப் பற்றி வருகையால் இறே
அப்படியே ஆஸ்ரயணமும் அவனைப் பற்றி வருகையாலே போக ரூபமாய் இருக்கும் இறே
இப்படி சாதன சமயமே தொடங்கி இனிய விஷயத்தை பற்றா நிற்கச் செய்தே அவனை விட்டு ஷூத்ர பிரயோஜனத்தைக் கொண்டு அகலுவதே
-என்று கேவலரை நிந்தியா நின்று இருந்து கொண்டு இத்தை ஒழியில் நாம் உளராகாதபடி தமக்கு இனிதாய் இருக்கையாலே
இவ் வாஸ்ரயணத்தின் உடைய இனிமையைச் சொல்லித் தலைக் கட்டுகிறார் –

—————————-

அவதாரிகை –

இப்படி நிரதிசய போக்யனானவனை விட்டு பிரயோஜ நாந்தரத்தை கொண்டு அகலுவதே என்று கேவலரை நிந்திக்கிறார்

பிறவித் துயர் அற ஞானத்துள் நின்ற -துறவிச் சுடர் விளக்கம் தலைப் பெய்வார்
அறவனை ஆழிப் படை அந்தணனை மறவியை இன்றி மனத்து வைப்பாரே –1-7-1-

பிறவித் துயர் அற ஞானத்துள் நின்ற —
ஜரா மரண மோஷாயா தே ப்ரஹ்ம தத் விது மாம் ஆஸ்ரித — ஸ்ரீ கீதை -7-29-என்று இருப்பாரும் உண்டு -கேவலர் -அவர்களைச் சொல்லுகிறது
ஐஸ்வர் யார்த்திக்கும் -ஆத்ம பிராப்தி காமனுக்கும் -பகவத் பிராப்தி காமனுக்கும் ஒக்குமாயிற்று -சர்வேஸ்வரனை உபாசிக்கையும் அந்திம ச்ம்ர்தியும்-
இனி பேற்றில் தார தம்யம் வருகிறபடி என் என்னில் -உபாசன சமயத்தில் சிறுகக கோலுகையாலே -அதாவது அவன் அளவும் செல்லாதே
நடுவே வரம்பிட்டுக் கொள்ளுகை
அத்தை இ றே வரம்பொழி வந்து -திருப்பல்லாண்டு -4–என்கிறது -அது தனக்கு அடி அவர்கள் ஸூக்ருத தாரதம்யம்
சதுர்விதா பஜந்தே மாம் ஜநாஸ் ஸூக்ருதி ந அர்ஜூனா -ஸ்ரீ கீதை-7-16–என்று அருளிச் செய்தான் இறே
ஸூக்ருததுக்கு அனுரூபமாக வாயிற்று புருஷார்த்தங்களில் ருசி பிறப்பது -ருச்ய அனுகுணமாக வாயிற்று உபாசிப்பது
-உபாசன அனுகுணமாக இருக்கக் கடவது பலம் –
பிறவித் துயர் அற ஞானத்துள் நின்ற துறவிச் சுடர் விளக்கம் தலைப் பெய்வார்
இவனைப் பற்றி இப் பேற்றை பெற்றுப் போவதே -என்கிறார்
பிறவி என்கிற இத்தால் ஜன்மம் தொடக்கமாக உண்டான மற்ற ஐந்து விகாரங்களையும் நினைக்கிறது
ஆக ஜன்ம ஜரா மரணாதி சம்சாரிக சகல துரிதங்களும் போம் படியாக -இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று
இவர் தாமும் கழிக்கிறதாய் இரா நிற்கச் செய்தே இவர்களை நிந்திக்கிறதுக்குக் கருத்து என் என்னில்
இவருக்கு விரோதி போமது ஆநு ஷங்கிகமாய்-பகவத் அனுபவம் உத்தேச்யமாய் இருக்கும் –
அவர்களுக்கு துக்க நிவ்ருத்தி தானே உத்தேச்யமாய் இருக்கும்

ஞானத்துள் நின்று
இவ்வனுசந்தானம் அவ்வருகே போகா நிற்கச் செய்தேயும் ஆத்ம ஞான மாத்ரத்திலே கால் ஊன்ற அடி இட்டாயிற்று நிற்பது
துறவி என்கிற இது துறக்கையைச் சொன்ன படி
பிறவித் துயர் அற -என்றதனுடைய பலரூபமான பிரகிருதி விநிர்முக்த வேஷத்தை -சுடர் விளக்கம் தலைப் பெய்வார் என்கிற இது
ஞானத்துள் நின்று அதனுடைய பலரூபமாய் இருக்கிறது
சம்சார தசையில் கர்மம் அடியாக வரக் கடவ சங்கோசம் இல்லை இறே -மோஷ தசையில் விகசிதமாய் இருக்கும் இறே
ஜ்ஞான குணகமுமாய்-ஜ்ஞாதாவாயும் இறே வஸ்து தான் இருப்பது
பிறவித் துயர் அற ஞானத்துள் நின்று -என்றது உபாசனமானால் துறவிச் சுடர் விளக்கம் தலைப் பெய்கை பலமாய் இருக்கும் இறே
சம்சாரிக சகல துக்கங்களும் போக வேணும் என்று ஆத்ம ஞானத்தில் ஊன்ற நின்று பிரகிருதி விநிர்முக்தமான ஆத்ம ஸ்வரூபத்தை
பிராபிக்க வேண்டி இருப்பார்

அறவனை ஆழிப் படை அந்தணனை மறவியை இன்றி மனத்து வைப்பாரே —
அவர்கள் படியையும் பலம் கொடுக்கிறவன் படியையும் பாரா -என்ன பரம உதாரனோ -என்கிறார்
ஏதேனும் ஒரு பிரயோஜனத்துக்கும் தன்னையே அபேஷிக்கும் அத்தனை யாகாதே வேண்டுவது
எங்களுக்கு நீ வேண்டா ஷூத்ர பிரயோஜனமே அமையும் என்று இருக்கிறவர்களுக்கும் அத்தைக் கொடுத்து விடுவதே என்ன தார்மிகனோ -என்கிறார் –
ஆழிப் படை அந்தணனை
ஆத்ம அனுபவ விரோதியைப் போக்குகைக்கு பரிகரமான திரு ஆழியை கையிலே உடையவன்
அந்தணன் என்று சாணிச் சாற்றோ பாதி -சுத்தன் -என்று கொண்டாடுகிறார்கள் இத்தனை
போக்யதையில் நெஞ்சு சென்றது இல்லை
சுத்தி குண விசிஷ்டன் என்று ஆயிற்று அவர்கள் அனுசந்திப்பது
கையும் திரு ஆழியுமான அழகைக் கண்டால் அதிலே கால் தாழாது தங்கள் பிரயோஜனத்துக்கு உறுப்பான சுத்தி மாதரத்தைப் பற்றுவதே -என்கிறார்
மறவியையின்றி-
இவருக்கு கையும் திரு ஆழியுமான அழகைக் கண்டால் முன்னடி தோற்றாது -சக்கரத் தண்ணலே–4-7-10-என்றால்
-பின்னைத் தரைப் படும் அத்தனை இறே-இவர்
திரு மங்கை ஆழ்வாரும் -ஆழியோடும் பொன்னார் சார்ங்கமுடைய அடிகளை இன்னார் என்று அறியேன் -என்று
உத்தேச்ய வஸ்துவையையும் மறக்கும் படி கலங்குவர் –
பிள்ளாய் -நல்லத்தைப் மறக்கப் பண்ணா நிற்க -இவ்விஷயம் தீயத்தை மறவாது ஒழிவதே
மறவியையின்றி –
அவனுடைய போக்யதையும் கண்டு வைத்து -தங்கள் புருஷார்த்தத்தை மறவாதே ஆஸ்ரயியா நிற்பார்கள்
மறவியை -மறப்பை
மறப்பின்றிக்கே மறவாதே மனத்து வைப்பாரே
உபாசக பரமானால் -சுடர் விளக்கம் –குண பிரகாசகமான விக்ரஹமாகக் கடவது -அவனுடைய போக்யதையை அனுசந்தித்து வைத்தும்
பின்னையும் இந்நிலை குலையாதே நிற்பதே -இவ்வரிய செயலை செய்கைக்கு திண்ணியர் ஆவதே இவர்கள்
பிறவித் துயர் அற ஞானத்துள் நின்ற -துறவிச் சுடர் விளக்கம் தலைப் பெய்வார் -மறவியை இன்றி அறவனை
ஆழிப் படை அந்தணனை மனத்து வைப்பாரே-இத் அந்வயம்

—————————————————————————————————-

அவதாரிகை –

சர்வேஸ்வரனை ஆஸ்ரயித்து ஷூத்ர பிரயோஜனத்தை கொண்டு போவதே என்று கேவலரை நிந்தித்தான் –
அவன் தன்னையே பற்றி இருக்குமவர்களுக்கு அவன் தான் இருக்கும் படி சொல்லுகிறார் இப்பாட்டில்

வைப்பாம் மருந்தாம் அடியாரை வல்வினைத்-துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடானவன்
எப்பால் எவர்க்கு நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பாலவன் எங்கள் ஆயர் கொழுந்தே –1-7-2-

வைப்பாம் –
ஆடறுத்துப் பலியிட்டு -அரப்பையாக்கி -இஷ்ட விநியோக அர்ஹ்யமாம் படி ஷேமித்து வைக்கும் நிதி போலே
இவனுக்கு நினைத்த வகைகள் எல்லாம் அனுபவிக்கலாம் படி தன்னை இஷ்ட விநியோக அர்ஹ்யமாம் படி வைக்கும் என்றிட்டு -பிராப்யத்வம் சொல்லுகிறது –
மருந்தாம் –
ஆனாலும் ஷூத்ர விஷயங்களையும் உண்டு அறுக்க மாட்டாதே சம்சாரி சேதனனுக்கு இ றே சர்வாதிகனான தன்னை விஷயம் ஆக்குகிறது
இவன் தன்னை அனுபவிக்கும் படி என் என்னில் -அக் குறைகள் வாராதபடி அனுபவ விரோதிகளைப் போக்கி தன்னை
அனுபவிக்கைக்கு ஈடான சக்தி யோகத்தையும் கொடுத்து -தன்னையும் கொடுக்கும் என்று -அவனுடைய பிராபகத்வம் சொல்லுகிறது
ய ஆத்மதா பலதா -என்கிறபடியே
ஆக பிராப்யத்வமும் பிராபகத்வமும் சொல்லிற்று
இப்படி சொல்வது ஆர்க்கு என்னில்
அடியாரை
ந நமேயம் -என்னும் நிர்பந்தம் தவிர்ந்தார்க்கு
அவனைப் பற்றி ஒரு பிரயோஜனத்தைக் கொண்டு அகலாதே -அவன் தன்னையே பற்றி அவன் படி விட ஜீவித்து இருப்பாரை
வல்வினைத்-துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடானவன்
வலிய வினைகளிலே கொண்டு போய் மூட்டுகைக்கு ஈடான சாமர்த்தியத்தை யுடைத்தான இந்த்ரியங்கள் ஐந்தாலும் துஞ்சக் கொடான் -என்னுதல்
அஞ்சிலும் புக்குத் துஞ்சக் கொடான் -என்னுதல்
துப்பு என்று -சாமர்த்தியம்
அவன் என்கிறது -எவனைப் பற்ற -அவன் தான் இப்படிச் செய்ய எங்கே கண்டோம் -என்னில் -அத்தை உபபாதிக்கிறது மேல்

எப்பால் எவர்க்கு நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பாலவன் –
ஸ்தான விசேஷங்களாலும் மனுஷ்யாதி பேதங்களாலும் வரக் கடவன சில உயர்த்திகள் உண்டு இறே
பூமி போல் அன்று இறே ஸ்வர்க்கம்
மனுஷ்யர்களைப் போல் அல்ல விறே தேவர்கள் –
எப்பால் -எல்லா விதத்திலும் என்றபடி -பால் என்று இடம் -அப்பால் இப்பால் என்னக் கடவது இறே -அவ்விடம் இவ்விடம் -என்றபடி இறே
எல்லா விதத்திலும் உண்டான எல்லார்க்கும்
நலத்தால்
ஆனந்தத்தாலே மேலே மேலே போய்
பின்னையும் அது தன்னைச் சொல்லப் புக்கால் -யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று மீள வேண்டும்படியான ஆனந்த ப்ராசுர்யத்தை உடையவன்
சதகுணி தோத்தர க்ரமத்தாலே அப்யச்யமானமாகா நின்றுள்ள நிரதிசய ஆனந்த யுக்தன்
ஆனந்த மய -என்னக் கடவது இறே

எங்கள் ஆயர் கொழுந்தே —
இப்படி சர்வாதிகனானவன் இதர சஜாதீயனாய் வந்து அவதரித்து தன்னை ஆச்ரயித்தார் விஷய பிரவணராய் முடியும் படி விட்டுக் கொடுக்கவோ
தான் சோக மோகங்களை அனுபவிக்கிறது -தன்னைப் பற்றினார் சோக மோகங்களை அனுபவிக்கைக்காகவோ
மேன்மைக்கு எல்லை யானவன் தாழ்வுக்கு எல்லை யாயிற்று அது இவர்களை அனர்த்தப் பட விடவோ —
எங்கள் ஆயர் கொழுந்தே
கிருஷ்ணன் திரு வவதரித்த ஊரில் உள்ளாரோடு தமக்கு ஒரு ப்ராக்ருத சம்பந்தம் தேட்டமாய் இருக்கிற படி
அன்றியே
எங்கள்
அவதாரம் தான் ஆஸ்ரிதார்த்தமாய் இருக்கும் இ றே
நவநீத சௌர்ய நகர ஷோபம் பழையதாக எழுதிக் கிடக்கச் செய்தேயும் -எத்திறம் -என்றார் இ வரே இ றே
ஆயர் கொழுந்தே
இடையர் தங்களுக்கு தான் ப்ரஹ்மாதிகள் கோடியிலேயாம் படி அவர்களில் பிரதானனானவன் துஞ்சக் கொடான் –

———————————————————————————————-

அவதாரிகை –

பிரயோஜனாந்தர பரரான கேவலரை நிந்தித்தார்
அநந்ய பிரயோஜனர் திறத்தில் அவன் இருக்கும் படி சொன்னார்
நீர் இவ்விரண்டு கோடியிலே ஆர் என்ன
நான் பிரயோஜனாந்தர பரன் அல்லேன் -அநந்ய பிரயோஜனனாய் அவனைப் பற்றினேன் -என்று நேர் கொடு நேர் சொல்லவும் மாட்டாரே
அவனை அனுபவியா நிற்க விரோதி தன்னடையே போய்க் கொடு நின்றவன் நான் -என்கிறார் –

ஆயர் கொழுந்தாய் அவரால் படை யுண்ணும் மாயப்பிரானை என் மாணிக்கச் சோதியை
தூய வமுதைப் பருகிப் பருகி என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே–1-7-3-

ஆயர் கொழுந்தாய் –
இடையருக்குப் பிரதானனாய் இருக்கும் இருப்புச் சொல்லிற்று கீழ் –
இங்கு அவர்களில் ஏக தேசஸ்தனாய் இருக்கும் படி சொல்லுகிறது
அதாவது அவர்கள் வேராக-தான் கொழுந்தாய் இருக்குமவன் -என்கிறது
இடையர் காட்டில் பசுக்களின் பின்னே திரிந்து -அவர்களுக்கு அடிகொதித்தால் வாடுவது கிருஷ்ணன் முகமாய் இருக்கை –
வேரிலே வெக்கை தட்டினால் கொழுந்து இறே முற்பட வாடுவது
அவரால் படை யுண்ணும்
அவனால் என்னுதல் -அவளால் என்னுதல் -செய்யாமையாலே திருவாய்ப்பாடியிலே பஞ்ச லஷம் குடியிலும் இவனை நியமிக்க உரியர் அல்லாதார் இல்லை
மத்தாலே ஓர் அடி அடிப்பார்கள் போலே காணும் -என்று பட்டர் அருளிச் செய்யும் படி
மாயப்பிரானை
அவாப்த சமஸ்த காமனான சர்வேஸ்வரன்
தனக்கு ஒரு குறை உண்டாய் வந்து திருவவதரித்து
ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தால் அல்லது தரியாதானாய்
அது தான் நேர் கொடு நேர் கிடையாமையாலே களவு காணப் புக்கு தலைக் கட்ட மாட்டாதே வாயதுகையதாக
அகப்பட்டுக் கட்டுண்டு அடியுண்டு நிற்கும் நிலையை அனுசந்தித்து -மாயப் பிரானை -என்கிறார்
என் மாணிக்கச் சோதியை
ஆஸ்ரிதர் கட்டி அடிக்க அடிக்க களங்கம் அற கடையுண்ட மாணிக்கம் போலே திருமேனி புகர் பெற்று வருகிறபடி
கட்டின அளவுக்கு வெட்டு என்று இருக்குமவன்
கட்டியடிக்கப் புக்கால் புகர் பெறச் சொல்ல வேணுமோ
கண்ணியார் குறும் கயிற்றால் கட்டவெட்ட என்று இருந்தானே
என்
அப்புகரை எனக்கு முற்றூட்டு ஆக்கினவன்
தூய வமுதைப் பருகிப் பருகி
தேவர்கள் அதிகாரிகளாய் ப்ரஹ்மச்சர்யாதி நியமங்கள் வேண்டி சக்ருத் சேவ்யமாய் இருக்கும் இறே அது
சர்வாதிகாரமுமாய் ஒரு நியதியும் வேண்டாதே சதா சேவ்யமான அம்ருதமிறே இது
என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே–
ஆச்சர்யமான ஜன்மம் அடியாக உண்டான அஜ்ஞ்ஞானத்தை வாசனையோடு போக்கினேன்
ஜென்மத்துக்கு ஆச்சர்யமாவது ஒருபடிப் பட்டு இராமை
மயர்வறுத்தேன்-என்கிறது -இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று அபேஷித்த படியே பல அனுபவம் தம்மதாகையாலே அருளிச் செய்கிறார் –

——————————————————————————————–

அவதாரிகை –

இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று அடியிலே நீர் அபேஷித்த படியே உம்முடைய அபேஷிதம் தலைக் கட்டிற்றே
இனி இவ்விஷயத்தை விட்டுப் பிடிக்கும் அத்தனை அன்றோ -என்ன நான் என்ன ஹேதுவாலே விடுவேன் -என்கிறார்

மயர்வற என் மனத்தே மன்னினான் தன்னை -உயர்வினையே தரும் ஒண் சுடர்க் கற்றையை
அயர்வில் அமரர்கள் ஆதிக் கொழுந்தை என் இசைவினை என் சொல்லி யான் விடுவேனோ –1-7-3-

மயர்வற என் மனத்தே மன்னினான் தன்னை –
அஜ்ஞ்ஞானம் வாசனையோடு போக்க
இன்னமும் மயர்வு குடி கொள்ள ஒண்ணாது -என்று என்னுடைய ஹிருதயத்திலே புகுந்து ஸ்த்தாவர பிரதிஷ்டையாக இருந்தவனை
செடி சீய்த்துக் குடியேற்றின படை வீடுகள் விடாதே இருக்கும் ராஜாக்களைப் போலே -புறம்பேயும் ஒரு கந்தவ்ய பூமி யுண்டு -என்று தோற்ற இராமை
இப்படி இருந்து செய்கிறது என் என்னில்
உயர்வினையே தரும்
ஜ்ஞான விஸ்ரம்ப பக்திகளைத் தாரா நின்றான் -என்னுதல்
யமாதிகள் தலையிலே அடியிடும்படியான உத்கர்ஷத்தைத் தாரா நின்றான் -என்னுதல்
தரும்
தந்து சமைந்தானாய் இருக்கிறன் அல்லன்
காதல் கடல் புரைய
காதல் கடலின் மிகப் பெரிதால்
நீள் விசும்பும் கழியப் பெரிதால்
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா -என்றால் போலே

ஒண் சுடர்க் கற்றையை
இத்தால் எனக்கு உபகரித்தானாய் இருக்கை அன்றிக்கே -தான் உபகாரம் கொண்டான் -என்னும் இடம் வடிவிலே புகரிலே தோற்ற இரா நின்றான் -என்னுதல்
தம்மை வசீகரித்த அழகைச் சொல்லிற்றாகவுமாம்
தேஜசாம் ராசி மூர்ஜிதம் -என்னுமா போலே
இப்படி தன் பேறாக உபகரித்தவன் தான் உபகாரம் கொள்வார் இல்லாதான் ஒருவனோ என்னில்
அயர்வில் அமரர்கள் ஆதிக் கொழுந்தை
தான் உபகரியாத அன்று தங்கள் சத்தை கொண்டு ஆற்ற மாட்டாதாரை ஒரு நாடாக உடையவன்
பகவத் அனுபவ விச்ம்ருதிக்கு ப்ராக பாவத்தை உடையராய்
அவ்வனுபவத்துக்கு விச்சேத சங்கை இன்றிக்கே தாங்கள் பலராய் இருக்கிறவர்களுக்கு தாரகாதிகள் எல்லாம் தானாய் இருக்கிறவனை
என் இசைவினை
நான் அல்லேன் என்று அகலாத படி என் இசைவு தானாய்ப் புகுந்தவனை
என் சொல்லி யான் விடுவேனோ —
சிறிது மயர்வு கிடந்தது -என்று விடவோ
மயர்வைப் போக்கி தான் கடக்க இருந்தான் என்று விடவோ
எனக்கு மேல் மேல் என நன்மைகளைப் பண்ணித் தந்திலன் -என்று விடவோ
வடிவு அழகு இல்லை -என்று விடவோ
மேன்மை போராது என்று விடவோ
இப்பேற்றுக்கு கிருஷி பண்ணினேன் நான் என்று விடவோ
எத்தைச் சொல்லி நான் விடுவது -என்கிறார்

——————————————————————————————-

அவதாரிகை

திருவாய்ப்பாடியிலே இடைப்பெண்கள் கிருஷ்ணனை விட்டு பரமபதத்தை விரும்பின் அன்றோ நான் இவனை விட்டுப் புறம்பே போவது -என்கிறார்

விடுவேனோ என் விளக்கை என் ஆவியை -நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை
தொடுவே செய்து இள வாய்ச்சியர் கண்ணினுள்ளே விடவே செய்து விழிக்கும் பிரானையே –1-7-5–

விடுவேனோ என் விளக்கை –
ஸ்வ விஷயமான அஜ்ஞ்ஞான அந்தகாரம் போம்படி நிர்ஹேதுகமாக தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை பிரகாசிப்பித்தவனை
என் விளைக்கை என்பான் -என்-அல்லாதார்க்கும் ஒவ்வாதோ என்னில் –இவரைப் போல் அல்லாதார்க்கு ச்நேஹம் இல்லையே
ச்நேஹம் உண்டாகில் இறே இவ்விளக்கு பிரகாசிப்பது
விளக்காவது தன்னையும் காட்டி -பதார்த்தங்களையும் காட்டுவது ஓன்று இறே
இவருக்குத் தன்னையும் காட்டி -ஸ்வ ஸ்வரூபத்தையும் விரோதி ஸ்வரூபத்தையும் காட்டிக் கொடுத்தது –
என் ஆவியை —
தான் ஒருவன் உளன் என்னும் அறிவாதல் -தன் பக்கல் அபேஷையாதல் -இன்றிக்கே பிரகிருதி வச்யனாய் உருமாய்ந்து போந்த என் ஆத்மாவை
நடுவே வந்து
நிர்ஹேதுகமாக வந்து –
விஷய பிரவணனாய் போகா நிற்க நடுவே வந்து மீட்டவித்தனை
உய்யக் கொள்கின்ற –
கொண்டு விட்டிலன் –
மேன் மேல் என கொள்ளா நிற்கிற வித்தனை
அசந்நேவ ச பவதி -என்கிறபடியே -அசத் கல்பனான என்னை -சந்த மேநம் ததோ வித்து -என்னப் பண்ணினான்
என் ஆவி -என்று உம்மதாகச் சொன்னீர் -உம்முடைய ஆத்மாவை அவன் வந்து உய்யக் கொள்ள நிபந்தனம் என்ன –
நாதனை –
ஆருடைய வஸ்து அழியப் புக்கது
நான் -என்று ஒருவன் உண்டோ
உடையவன் ஆகையாலே செய்தான்
ஆரேனும் பேற்றுக்கு ஆரேனும் யத்னம் பண்ணுவார்களோ -என்ன -திருவாய்ப் பாதியிலே பெண்கள் பேற்றுக்கு யத்னம் பண்ணினார் யார் –
தொடுவே செய்து இள வாய்ச்சியர் கண்ணினுள்ளே விடவே செய்து விழிக்கும் பிரானையே
ஆராய்ச்சிப்படும் செயல்களை செய்து ஓர் இடத்திலே போய்களவு கண்டு அங்கே அகப்படுமே
கள்ளனைக் காண வேணும் என்று இருப்பாரும் உண்டே
இவனாலே புண்பட்டவர்கள் எல்லாரும் காண வருவார்களே –
புருஷர்களுக்கும் வ்ருத்தைகளுக்கும் ஒரு பயமும் இல்லையே
அருகே நின்றார்க்குத் தெரியாமே பருவம் நிரம்பின இடைப் பெண்கள் கண்ணுக்குள்ளே விடும்படியை செய்து விழிக்கும் -தூது விடும்படியைச் செய்து விழிக்கும்
தூது விடுகை யாகிற செயலைச் செய்து -என்னுதல்
விடருடைய செயலைச் செய்து -என்னுதல்
தூது செய் கண்கள் -என்னக் கடவது இ றே -அதாவது தூர்த்தருடைய வ்யாபாரங்களைப் பண்ணுதல்
தா வாஸ்மி தா சோஸ்மி-என்றால் போலே சொல்லுகை –
பிரானையே
அந்நோக்காலே இடைப்பென்கள் அனந்யார்ஹைகள் ஆக்கினால் போலே என்னையும் அனந்யார்ஹை
ஆக்கி விட்டவனை விடுவேனோ —

———————————————————————————-

அவதாரிகை –

இப்போது விடோம் என்கிறீர் அத்தனை போக்கி -பின்னையும் நீர் அல்லீரோ -உம்முடைய வார்த்தையை விஸ்வசிக்கப் போமோ -என்ன
அவனாலே அங்கீ க்ருதனான நான் அவனை விடுவேனோ -என்றார் கீழில் பாட்டில்
உம்மை அவன் தான் விடில் செய்வது என் -என்ன -தன் குண சேஷ்டிதங்களாலே என்னைத் தோற்ப்பித்து என்னோடு கலந்தவனை
நான் விட சம்வதிப்போனோ -என்கிறார் இதில் –

பிரான் பெரு நிலம் கீண்டவன் பின்னும் விராய் மலர்த்துழாய் வேய்ந்த முடியன்
மராமரம் எய்த மாயவன் என்னுள் இரான் எனில் பின்னையான் ஒட்டுவேனோ –1-7-6-

பிரான் –
நிலா தென்றல் சந்தனம்-பிறர்க்கே யாயிருக்குமா போலே தன் படிகளை யடைய பிறருக்கு ஆக்கி வைக்குமவன்
சர்வ விஷயமாகவும் ஆஸ்ரித விஷயமாகவும் பண்ணும் உபகாரத்தை நினைத்து -பிரான் என்கிறது
அத்தை உபபாதிக்கிறது மேல்
பெரு நிலம் கீண்டவன்
சர்வ விஷயமாக பண்ணும் உபகாரம் -பிரளயம் கொண்ட பூமியை நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்டு எடுத்தால் போலே
சம்சார பிரளயம் கொண்டு என்னை எடுத்தவன் –
பின்னும் விராய் மலர்த்துழாய் வேய்ந்த முடியன்
ஒப்பனையோடு யாயிற்று பிரளயத்திலே முழுகிற்று
நெருங்கத் தொடையுண்டு -பரிமள பிரசுரமாய் -செவ்வி பெற்று இருந்துள்ள திருத் துழாய் மாலையாலே சூழப் பட்ட திரு அபிஷேகத்தை உடையவன்
விரையை -விராய் என்று நீட்டிக் கிடக்கிறது -அன்றிக்கே மலர் விரவின திருத் துழாய் என்றுமாம்
மராமரம் எய்த மாயவன் –
ஆஸ்ரித விஷயமாக உபகரிக்கும் படி மகா ராஜர் வாலி மிடுக்கையும் பெருமாள் சௌகுமார்யத்தையும் அனுசந்தித்து -நீர் வாலியைக் கொல்ல மாட்டீர் என்ன
நான் வல்லேன் -என்று மழு வேந்திக் கொடுத்துக் கார்யம் செய்யும் வ்யாமோஹத்தை யுடையவன்
என்னுள் இரான் எனில் –
இப்படி ஆஸ்ரிதரை விஷயீ கரித்து-அவர்கள் பேற்றுக்கு
தான் கிருஷி பண்ணுமவன்-என்னுள் இரான் எனில்
எனில் -என்கையாலே விட சம்பாவனை இல்லை -என்கை
பின்னையான் ஒட்டுவேனோ —
எப்பிரகாரத்தாலும் இரேன் -என்னுமாகில் பின்னை நான் அவன் போக்கை இசைவேனோ —
என்னுடைய கர்ம பாரதந்த்ர்யம் போலே அவனுடைய ஆஸ்ரித பாரதந்த்ர்யத்துக்கும் ஏதேனும் கண் அழிவு உண்டோ
என் இசைவு இன்றிக்கே இருக்க அவனாலே போகப் போமோ
அன்றியே -நான் தொங்குவேனோ-என்று பிள்ளான் பணிக்கும் படி —

————————————————————————————-

அவதாரிகை –

குணத்ரய வச்யராய் போந்தீர்-காதா சித்கமாக -அவனை விடேன் -என்கிறார் -உம்முடைய வார்த்தையை விஸ்வசிக்கப் போமோ என்ன
நான் அவனை விட்டாலும் அவன் தான் என்னை விடான்-என்கிறார் –

யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன் தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து
ஊனொட்டி நின்று என்னுயிரில் கலந்து இயல் வானொட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே–1-7-7-

யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன் –
இசைவு என்னாலே வந்ததாகில் அன்றோ விடுகையும் என்னாலே வந்ததாவது
ஆழ்வீர்-நாம் உம்முடைய பாடே இருப்போம் -என்றால் -ஒட்டேன் -என்பரே –
ஆகில் இங்கே இருக்கக் கடவோம் -என்று பிரதிஜ்ஞை பண்ணியாயிற்று வந்து இருப்பது –
நான் இசைந்து -என்னுடைய ஹிருதயத்திலே இருக்க வேணும் -என்று இலேன் –
தான் ஒட்டி வந்து –
அத்ய மே மரணம் வாபி தரணம் சாகரஸ்ய வா -என்று
இத்தை முடித்தல் கடத்தல் செய்யுமதுக்கு மேற்பட இல்லை -என்றால் போலே பிரதிஜ்ஞ்ஞை பண்ணி யாயிற்றுப் புகுந்தது –
என் தனி நெஞ்சை –
தன்னாலும் திருத்த ஒண்ணாத படி ஸ்வதந்த்ரமாய்
அவிதேயமான நெஞ்சை
வஞ்சித்து
தன்னுடைய சீலாதி குணங்களாலும் வடிவு அழகாலும் தனக்கு விதேயமாம் படி பண்ணி
பின்னைச் செய்தது என் என்னில்
ஊனொட்டி நின்று என்னுயிரில் கலந்து –
சரீரத்தைப் பற்றி நிற்கிற என்னுயிரிலே கலந்து -என்கிறார் என்பாரும் உண்டு
அன்றிக்கே
அபிமத விஷயத்தில் அழுக்கு உகப்பாரைப் போலே -என்னுடைய சரீரத்தைப் பற்றி நின்று பின்னை என்பக்கலிலே விலக்காமை பெற்றவாறே
என் ஆத்மாவோடு வந்து கலந்தான் -என்று ஜீயர் அருளிச் செய்யும் படி
இயல் வானொட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே–
இயல்வான் –
இப்படியை ஸ்வ பாவமாக உடையவன் -என்னுதல்
இப்படி எதிர் சூழல் புக்கு உத்சஹித்தவன் -என்னுதல்
ஒட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே–
இப்படி நிர்ஹேதுகமாக என்னை விஷயீ கரித்தவன்-நான் தன் பக்கலிலும் நின்று நெகிழ்ந்து போவேன் -என்றால் அவன் இசையுமோ
எனக்கு ஜ்ஞானம் பிறக்கைக்கு கிருஷி பண்ணி
பிறந்த ஜ்ஞானம் பலிக்கும் அளவாக கொண்டு நான் அகன்று போவேன் என்றால் அவன் சம்வதிக்குமோ –

————————————————————————–

அவதாரிகை –

நான் விடேன் அவன் விடான் என்றால் போலே சொல்லுகிறது என் -இனி அவன் தான் பிரிப்பேன் என்னிலும்
தன்னுடைய கல்யாண குணங்களிலே அகப்பட்ட என் நெஞ்சை அவனாலும் பிரிக்கப் போகாது -என்கிறார் –

என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை முன்னை யமரர் முழு முதலானே –1-7-8-

என்னை நெகிழ்க்கிலும் –
மயர்வற மதி நலம் அருளப் பெற்ற என்னைத் தானே அகற்ற அரிது –
இவ்வரிய செயலைச் செய்யிலும்
என்னுடை நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத்
நெஞ்சே இயற்றுவாய் எம்மோடு நீ கூடி -என்றும்
தொழுது எழு என் மனனே -என்றும் சொல்லலாம் படி தன் பக்கலிலே அவகாஹித்த நெஞ்சம் தன்னை அகல்விக்க
தானும் கில்லான்
சர்வ சக்தி என்னா -எல்லாம் செய்யப் போமோ -என் செய்து போந்திலனோ இது நெடும் காலம் என்னா
இனி
அவனும் இனி மேல் உள்ள காலம் மாட்டான் -இனி என்கிற உரப்பு எத்தைப் பற்ற என்னில் -அத்தைச் சொல்லுகிறது மேல்
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை முன்னை யமரர் முழு முதலானே —
நப்பின்னை பிராட்டி புருஷகாரமாக
நித்ய ஸூரிகள் ஓலக்கம் இருக்க அடிமை புக்கு அந்தப்புர பரிகரமான வஸ்துவை அகற்றப் போமோ –
நப்பின்னை பிராட்டியுடைய நெடிதாய்ச் சுற்று உடைத்தாய் பசுமையை உடைத்தான மூங்கில் போலே இருக்கிற
தோளோடு அணைக்கை யாலே வந்த பெருமையை உடையனாய்
யத்ரர்ஷய-பிரதமஜா யே புராணா -என்கிறபடியே -பழையராய் இருந்துள்ள நித்ய ஸூரிகளுடைய ஸ்வரூப ஸ்தித் யாதிகள்
தன் அதீநமாம் படி இருக்கிறவன் -தானும் கில்லான்
ஹர்யருஷகண சன்னிதௌ-என்கிறபடியே அவர்கள் சந்நிதியிலே பிரதிஜ்ஞ்ஞை பண்ணிற்று
நப்பின்னை பிராட்டி புருஷகாரம் எங்கனே அகற்றும் படி

————————————————————————–

அவதாரிகை –

தானும் கில்லான் -என்கிற பிரசங்கம் தான் என் -ஏக த்ரவ்யம் என்னலாம் படி யான இத்தை எங்கனே பிரிக்கும் படி -என்கிறார்

அமரர் முழு முதல் ஆகிய வாதியை -அமரர்க்கு அமுதீந்த ஆயர் கொழுந்தை
அமர வழும்பத் துழாவி என்னாவி அமரத் தழுவிற்று இனி யகலுமோ –1-7-9-

அமரர் முழு முதல் ஆகிய வாதியை –
நித்ய ஸூ ரிகளுடைய ஸ்வரூப ஸ்தித்யாதிகள் தன அதீநமாம் படி இருக்கிறவனை
இது தொடங்கி லீலா விபூதி விஷயமாய் இருக்கிறது
தன் பக்கல் பாவ பந்தம் சத்தா பிரயுக்தம் இன்றிக்கே இருக்கிறவர்களுக்கும் தன்னை வழி படுக்கைக்கு
உறுப்பாக கரண களேபரங்களைக் கொடுக்குமவனை
அமரர்க்கு அமுதீந்த –
அவன் கொடுத்த கரணங்களைக் கொண்டு -எங்களுக்கு நீ வேண்டா உப்புச் சாறு அமையும்
என்பார்க்குக் கடலைக் கடைந்து அம்ருதத்தைக் கொடுக்குமவனை
ஆயர் கொழுந்தை
அவ்வம்ருதம் வேண்டா -நீ அமையும் என்பாருக்காக வந்து திருவவதரித்து தன்னைக் கொடுக்குமவனை
அமர வழும்பத் துழாவி என்னாவி அமரத் தழுவிற்று
இப்படி உபய விபூதி உக்தனாய் இருக்கிறவனை கிட்டிச் செறிந்து எங்கும் புக்கு அனுபவித்து
என்னுடைய ஆத்மாவானது ஏக த்ரவ்யம் என்னலாம் படி கலந்தது
இனி யகலுமோ —
இரண்டு வஸ்துக்களாகில் அன்றோ பிரிக்கலாவது
பிரகார பிரகாரிகளுக்கு ஏகத்வ புத்தி பிறந்தால் பிரிக்கப் போமோ
ஜாதி குணங்களோ பாதி த்ரவ்யமானதுக்கும் நித்யதாஸ்ரயத்வம் உண்டாகில் பிரிக்கப் போமோ

——————————————————————————

அவதாரிகை –

என்னோடு கலந்து எம்பெருமானுடைய குணங்களை கால தத்வம் உள்ளதனையும் அனுபவியா நின்றாலும் த்ருப்தன் ஆகிறிலன்-என்கிறார்

அகலில் அகலும் அணுகில் அணுகும் புகலும் அரியன் பொருவல்லன் எம்மான்
நிகரில் அவன் புகழ் பாடி இளைப்பிலம் பகலும் இரவும் படிந்து குடைந்தே –1-7-10–

அகலில் அகலும் –
இவன் அகன்ற படியே நிற்கில் -யதி வா ராவணஸ் வயம் -என்கிற சாபல்யமும் கிடக்கச் செய்தே கண்ண நீரோடு கை வாங்கும் –
த்விதா பஜ்யேய மப்யேவம் ந ந மேயம் -என்னும் நிர்பந்தத்தோடு நிற்கில் முடித்தே விடும்
அணுகில் அணுகும்
தன் பக்கலிலே ஆபிமுக்க்யம் பண்ணினால் -ஆக்யாஹி மம தத்த்வேன-என்னும்
இளைய பெருமாள் நிற்க -நாலடி வர நின்ற வனையிறே -ராஜ கார்யம் செய்யும் படி சொல்லீரோ -என்றது
ராஷசா நாம் பலாபலம் -இவனை ராஷச ஜாதியனாக நினைக்கை அன்றிக்கே -இஷ்வாகு வம்ச்யனாகவே புத்தி பண்ணி
-ராஷசருடைய பலாபலம் சொல்லீரோ -என்றார் இ றே
இத் திருவாய் மொழியில் முதல் பாட்டு -அகலில் அகலும் என்றவிடம் சொல்லுகிறது
இரண்டாம் பாட்டு -அணுகில் அணுகும் -என்றவிடம் சொல்லுகிறது –

புகலும் அரியன்-
அர்ஜுனனும் துரியோதனனும் கூட வரச் செய்தே -அர்ஜுனனுக்குத் தன்னைக் கொடுத்து துரியோதனனுக்கு தன்னை ஒழிந்த
பங்களத்தைக் கொடுத்து விட்டான் இறே
உகவாதார்க்கு கிட்ட அரியனாய் இருக்கும்
பொருவல்லன் –
ஆஸ்ரிதர் தன்னைக் கிட்டும் இடத்தில் தடை உடையன் அல்லன்
யாத்ர கிருஷ்னௌ ச கிருஷ்ணா ச சத்யா பாமா ச பாமிநீ –புத்ரர்களுக்கும் புக ஒண்ணாத சமயத்தில் இ றே சஞ்ஜயனை அழைத்துக் காட்சி கொடுத்தது
பொரு -என்று ஒப்பாய் -ஒப்பாவது நேர் நிற்குமதாய் -அத்தால் தடையைச் சொல்லிற்றாய்-தடை உடையவன் அல்லன் -என்கை
எம்மான்
இஸ் ஸ்வ பாவங்களைக் காட்டி என்னை அனந்யார்ஹன் ஆக்கினவன்
நிகரில் அவன் புகழ் பாடி இளைப்பிலம்
அவனுடைய ஒப்பில்லாத கல்யாண குணங்களைப் பாடி -ஒரு காலமும் விச்சேதிக்க ஷமன் ஆகிறிலேன்
இப்படி விடுகைக்கு ஷமன் இன்றிக்கே ஒழிகிறது-காலம் சாவாதியோ என்னில்
பகலும் இரவும்
சர்வ காலமும் .
ஆனால் விஷயத்தை குறைய அனுபவித்தோ என்னில்
படிந்து குடைந்தே
எங்கும் கிட்டு அனுபவியா நிற்கச் செய்தே விட மாட்டுகிறிலேன்-

————————————————————————————–

அவதாரிகை –

நிகமத்தில் இத் திருவாய்மொழி தானே கற்றவர்களுடைய ப்ராப்தி பிரதிபந்தகங்களை உன்மூலிதமாக்கும் -என்கிறார்-

குடைந்து வண்டுண்ணும் துழாய் முடியானை -அடைந்து தென்குருகூர்ச் சடகோபன்
மிடைந்த சொல்தொடை ஆயிரத்து இப்பத்து உடைந்து நோய்களை ஒடுவிக்குமே –1-7-11-

குடைந்து வண்டுண்ணும் துழாய் முடியானை
மது பானம் பண்ண இழிந்த வண்டுகளானவை-பெரும் கடலிலே இழிந்தாரைப் போலே -உள்ளே உள்ளே இடம் கொண்டு புஜியா நிற்கும்
அத்தனை போக்கி மது வற்றிக் கை வாங்க ஒண்ணாத படியாய் இருக்கிற திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதமாய் இருக்கிற
திரு அபிஷேகத்தை உடையவனைக் கவி பாடிற்று
-அடைந்து தென்குருகூர்ச் சடகோபன்
அம்மதுவிலே படிந்த வண்டுகள் விட மாட்டாதாப் போலே -பகவத் விஷயத்தை விட மாட்டாத ஆழ்வார் ஆயிற்று அருளிச் செய்தார் –
மிடைந்த சொல்தொடை –
அனுபவ ஜனித ப்ரீதியாலே பிறந்து இருக்கச் செய்தேயும் -சொற்கள் தான் -நாம் இங்குத்தைக்கு கிஞ்சித் கரித்ததாக வேணும் -என்று
என்னைக் கொள் என்னைக் கொள் -என்று மேல் விழுந்தன –
ஆயிரத்து இப்பத்து-
ஆயிரத்திலும் வைத்துக் கொண்டு இப்பத்தையும் அப்யசிக்க வல்லார்களுக்கு
உடைந்து நோய்களை ஒடுவிக்குமே
நோய்களை -உடைந்து-ஒடுவிக்குமே
ஐஸ்வர்ய கைவல்யங்கள் -புருஷார்த்தம் என்கைக்கு அடியான பாபங்கள் ஓடிப்போம்
நோய்களை -உடைந்து-ஒடுவிக்குமே-
இவனை விட்டுப் போம் போது திரளாகப் போகப் பெறாது
வள்ளலே உன் தமர்க்கு என்றும் நமன் தமர் கள்ளர் போலே -பெரிய திருமொழி -8-10-7-என்கிறபடி இருவர் ஒரு வழி போகப் பெறார்கள்
இப்பாபங்கள் ஆஸ்ரய அந்தரத்தில் கிடந்தாலும் மறுமுட்டுப் பெறாத படி உடைந்தோடும் –

முதல் பாட்டில் -கேவலரை நிந்தித்தார்
இரண்டாம் பாட்டில் -அநந்ய பிரயோஜனர் திறத்தில் இருக்கும் படியைச் சொன்னார்
மூன்றாம் பாட்டில் -இவ்விரண்டு கோடியிலும் நீர் ஆர் என்ன -உன்னை அனுபவியா நிற்க விரோதி கழிந்தவன் நான் -என்கிறார் –
நாலாம் பாட்டில் -என்னை இவ்வளவாக புகுர நிருத்தினவனை என்ன ஹேதுவாலே விடுவது -என்கிறார்
அஞ்சாம் பாட்டில் திருவாய்ப்பாடியில் பெண்கள் கிருஷ்ணனை விடும் அன்று அன்றோ நான் அவனை விடுவது -என்றார்
ஆறாம் பாட்டில் -அவன் தான் விடிலோ -என்ன அவன் போக்கை இசையேன் -என்றார்
ஏழாம் பாட்டில் -நீர் தாம் விடிலோ என்ன -அவன் என்னைப் போக ஒட்டான் -என்றார்
எட்டாம் பாட்டில் -இந்நாள் வரை போக விட்டிலனோ என்ன -நப்பின்னை பிராட்டி புருஷகாரமாகப் பற்றின என்னை இனி அவனாலும் விட ஒண்ணாது -என்றார்
ஒன்பதாம் பாட்டில் -இப்பிரசங்கம் தான் ஏன் -ஒரு நீராக கலந்ததை ஒருவராலும் பிரிக்க ஒண்ணாது -என்றார்
பத்தாம் பாட்டில் -அவனுடைய கல்யாண குணங்களை சர்வ காலமும் அனுபவித்து ச்ரமமுடையேன் அல்லேன் என்றார்
நிகமத்தில் இத் திருவாய் மொழியைக் கற்றார்க்குப் பலம் சொல்லித் தலைக் கட்டினார்

———————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருவாய்மொழி – -1-6- –ஈட்டு -ஸ்ரீ ஸூ க்திகள் —

October 13, 2015

பிரவேசம் –

முதல் திருவாய்மொழியில் -அவர் சர்வ ஸ்மாத் பரனாய் இருக்கும் படியைத் தாம் அனுசந்தித்தார் –
இரண்டாம் திருவாய்மொழியில் இப்படி பரனானவனை பஜியுங்கோள் என்றார்
அநந்தரம் பஜனத்துக்கு உறுப்பாக அவனுடைய சௌலப்யத்தை அருளிச் செய்தார்
அதுக்கு உறுப்பாக அவனுடைய அபராத சஹத்வத்தை அருளிச் செய்தார்
அதுக்கு உறுப்பாக சீலவான் என்றார்
இவை எல்லாம் உண்டானாலும் பசையில்லை இறே பரிமாற்றத்தில் அருமை தட்டி இருக்குமாகில் என்ன -அது வேண்டா -ஸ்வாரதன் -என்கிறார்

கீழில் திருவாய்மொழியில் -அயோக்யன் என்று அகன்ற இவரைப் பொருந்த விட்டுக் கொண்ட இதுக்கு ஒரு பிரயோஜனம் கண்டிலோமீ –
பொருந்த விட்டுக் கொள்ளுகிறது தான் ஒரு பரிமாற்றத்துக்கு இ றே
அதில் ஷூத்ரனான இவனால் ஷூத்ர உப கரணங்களைக் கொண்டு சர்வேஸ்வரனை ஆச்ரயித்துத் தலைக் கட்டப் போகாமையாலே
சம்சாரியான இவனால் நேர் கொடு நேராய் ஆஸ்ரயித்து தலைக் கட்ட ஒண்ணாத படி அவாப்த சமஸ்த காமனாய் இருக்கையாலும்
இவன் இட்டது கொண்டு த்ருப்தனாகா வேண்டாத படி பரிபூரணன் ஆகையாலும்
இவ்விரண்டுக்கும் அடியாக ஸ்ரீ யபதியாய் இருக்கையாலும்
இவன் அவனை ஆஸ்ரயிக்கை என்று ஒரு பொருள் இல்லையீ என்ன -அது வேண்டா
அப்படிகள் அடைய ஆஸ்ரயணத்துக்கு உறுப்பு -இவன் தன் ஸ்வரூப லாபத்துக்கு உறுப்பாக கிஞ்சித்கரிக்கும் இது தான் தன் பேறாகா நினைத்து இருக்கும்
இதுக்கு மேற்பட தனக்கு வேறு ஓன்று தேட வேண்டாதபடி எல்லாம் கை புகுந்து இருப்பான் ஒருவன் ஆகையாலும்
இவன் இட்டது கொண்டு த்ருப்தனாக வேண்டாதபடி பரிபூர்ணனாய் இருக்கையாலே இவன் பக்கல் பெற்றது கொண்டு
முகம் காட்டுகைக்கு உடலாய் இருக்கையாலும்
ஸ்ரீ யபதியாகையாலே ஸூ சீலனாய் இருக்கையாலும்
இதர சமாஸ்ரயணம் போலே பகவத் சமாஸ்ரயணம் அருமைப் பட்டு இராது
இனி இது தன்னிலே இழியவே விரோதிகள் அடங்கலும் நசிக்கும் -கடிவார் தீய வினைகள் நொடியாரும் அளவைக் கண் –வல்வினை மாள்வித்து -என்கிறார்
ஆஸ்ரயணம் தான் கிலேச ரூபமாய் இருக்கை யன்றிக்கே போக ரூபமாய் இருக்கும் -உள் கலந்தார்க்கு ஓர் அமுது –அமுதிலும் ஆற்ற இனியன் -என்றார்
இவனுக்கு வருந்தி ஒன்றும் தேட வேண்டாதபடி பெற்றது உப கரணமாய் இருக்கும் -புகை பூவே –
பகவத் சமாஸ்ரயணம் ஆகையாலே பிரத்யவாய பிரசங்கம் இல்லை -த்ரவ்யம் நியதி கால நியதி அதிகாரி நியதி இல்லை
கொள்கை கொளாமை இலாதான் -முதுவே முதல்வனுக்கு எது வேது என் பணி என்னாது அதுவே ஆட்செய்யுமீடே -என்றார் –
இப்படி இருக்கையாலே ஆஸ்ராயணம் ஸூகம் -ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

த்வத் அங்க்ரிம் உத்திச்ய -ஸ்தோத்ர ரத்னத்தில் அல்லாத ஆஸ்ரயணீயர்களில் காட்டிலும் இவனுக்கு உண்டான வ்யாவ்ருத்தியும்
இவன் பக்கல் சேஷபூதனுக்கு இழியும் துறை திருவடிகள் என்னும் இடமும் சொல்லுகிறது
கதாபி -கால நியதியை விதிக்கிற கர்மத்தில் காட்டில் வ்யாவ்ருத்தி
கேநசித் –அதிகாரி நியதியை விதிக்கிற வற்றில் வ்யாவ்ருத்தி
யதாயதா -க்ரம நியதியை அபேஷித்து இருக்கும் கர்மங்களில் வ்யாவ்ருத்தி
வா -அபி -என்கையாலே விகல்ப சமுச்சயங்களில் ஒன்றே ஆகக் கடவது என்கிற கர்மத்தில் காட்டில் வ்யாவ்ருத்தி
சக்ருத் -தீர்க்க சஸ்த்ராதிகளில் வ்யாவ்ருத்தி
க்ருத-ஆதி கர்மணிக்தவாய்-உத்தியோக மாத்ரத்திலே பலமாகச் சொல்கிறது
அஞ்ஜலி–வித்தவ்யா சஹகாரி சாத்தியமான அஸ்வமேத தைகளில் வ்யாவ்ருத்தி
ததைவ -தேசாந்திரே காலாந்திரே நின்று பலிப்பனவாகச் சொல்லுகிற கர்மங்களில் வ்யாவ்ருத்தி
முஷ்ணாதி–இவன் தானே தொடர்ந்து பிடிக்கும் -என்று இவன் அறியாமே போம் -என்கை
சும்மெனாதே கை விட்டோடித் தூறுகள் பாய்ந்தவனே -என்கிறபடியே
அசுபாநி-ஒரு கர்மம் ஒரு பாபத்தை சொல்லுகிற அதில் வ்யாவ்ருத்தி
அசேஷத -வாசனை கிடக்கப் போக்கும் கர்மங்களில் வ்யாவ்ருத்தி
சுபானி -ஒரு ஸூ க்ரோதம் ஒரு பலத்தை பலிப்பதாக சொல்லுவதில் வ்யாவ்ருத்தி
புஷ்ணாதி -தீமையைப் போக்கி விடும் அளவன்றிக்கே -அது போன இடம் எங்கும் நன்மையால் நிறைக்கும்
ந ஜாது ஹீயதே -பலத்தைக் கொடுத்து தான் நசிப்பதில் வ்யாவ்ருத்தி

பத்ரம் புஷ்பம் -ஸ்ரீ கீதை -9-86–இத்யாதி -த்ரவ்ய தாரதம்யம் பார்ப்பது இல்லை -இடுகிறவன் நெஞ்சில் ஈரமாயிற்று பார்ப்பது
அச் நாமி -இப்படித் தரப் பட்டவற்றை மநோ ரத பதத்துக்கும் அவ்வருகானவை கை புகுந்தால் போலே நினைத்து இருப்பவன் -என்னுதல்
அவன் கலங்கித் தருமா போலே நானும் கலங்கி அடைவுகெட விநியோகம் கொள்ளுவேன் என்னுதல்
அந்யத் பூர்ணா தபாம் கும்பாத் இத்யாதி
ந சேச்சதி-இவனுடைய உத்தியோக மாத்ரத்திலே வயிறு நிறையுமாயிற்று அவனுக்கு
யா க்ரியாஸ் சம்ப்ரயுக்தாஸ் ஸ்யு-அபிமத விஷயத்தின் பரிமாற்றம் போலே எல்லாம் உத்தேச்யமாய்த் தோற்றும்
ஏகாந்த கதபுத்திபி -இது ஒன்றுமே வேண்டுவது
தாஸ் சர்வா -அவற்றில் ஒன்றும் விட்டுப் பிடியான்
சிரஸா பிரதிக்ருஹ்னாதி -இவன் காலாலே பொகட்ட வற்றையும் அவன் தலையாலே சுமக்கும்
தேவ -காலாலே கொள்ளப் பிறந்தவன்
ஸ்வயம் -செல்வக் கிடப்பு உண்டு என்னா மகிஷி ச்வேதத்துக்கு ஆளிட ஒண்ணாதே
ஆக இப்படிகளாலே அவனுடைய ஸ்வ ஆராதயைச் சொல்லுகிறார் இத் திருவாய் மொழியிலே

—–

அவதாரிகை

எம்பெருமான் பரி பூரணன் ஆகையாலே ஸ்வா ராதன் -என்கிறார்

பரிவதில் ஈசனைப் பாடி –விரிவது மேவலுறுவீர்
பிரிவகையின்றி நன்னீர்த் தூயப் –புரிவதும் புகை பூவே –1-6-1-

பரிவதில் –
பரிவது -துக்கமாகவுமாம் -பஷ பாதமாகவுமாம்
இல் –இல் எனபது -இல்லாமை
இத்தால் துக்கம் இல்லாமை -என்னுதல் -பஷ பாதம் இல்லை என்னுதல்
துக்கமாவது -நான் இடுகிறவை அவன் கொள்ளுமோ கொள்ளானோ-என்று ஆஸ்ரயிக்கிற இவன் நெஞ்சில் துக்கம் உண்டாமன்று
ஆஸ்ரயணீயனுக்கு துக்கமாம் இ றே
அன்றிக்கே பஷ பாதமான போது -ஒருவன் குருவாக த்ரவ்யத்தைக் கொடுத்தால் அவன் பக்கல் பஷ பதித்து இருக்குமாகில் துஷ்ப்ராபன்
என்று ஆஸ்ரயணீயனுக்கு ஹேயம் இ றே
இவை இல்லாத படி இருக்கையாலே ஹேய ப்ரத்ய நீகன்-என்றபடி
பிராபகம் பிராப்யம் பரமாக இவ்விரண்டு பொருளும் சாதிக்கிறார்
தரதமவிபாகம் பாராதே இருக்கைக்கு அடி என் என்னில்
ஈசனைப் –
வகுத்த சுவாமி யாகையாலே
ஹேய ப்ரத்ய நிகம் புக்க இடத்தே கல்யாண குணங்களும் புகும் இ றே
ஆக ஹேய ப்ரத்ய நீகதையும் கல்யாண குண யோகமும் சொல்லிற்று ஆயிற்று
ஈசனை
புறம்பே ஒருவனுக்கு ஒருவன் விருந்து இடும் போது -நெடு நாள் பச்சை தேடி விருந்திட்டால் -இவன் உண்டு என்ன குறை
சொல்லப் புகுகிறானோ-என்று நெஞ்சாறல் உடன் தலைக் கட்ட வேண்டி இருக்கும்
புத்திரன் பிதாவுக்கு விருந்திட்டால் உண்டாகில் உள்ள குறை தமப்பதனாய் நெஞ்சாறல் பட வேண்டாது இருக்கும் இ றே
அப்படிப் பட்ட சம்பந்தத்தைப் பற்ற ஈசன் என்கிறது
பாடி –
சர்வேஸ்வரனை கிட்டினால் வாங் நியதியோடு நிற்கை யன்றிக்கே -ஹர்ஷத்துக்குப் போக்கு விட்டுப் பாடி –
பாடி விரிவது மேவலுறுவீர்-
ஏதத் சாம காயன் நாஸ்தே –என்று பாடி -விஸ்த்ருதர் ஆகையாகிற பேறு பெற வேண்டி இருப்பீர் –
பேறு கனத்து இருக்கிறது -நாங்கள் செய்ய வேண்டுவது என் என்னில்
பிரிவகையின்றி —
பிரிகை யாகிற வகையின்றி –
இமையோர் பலரும் முனிவரும் புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால் உன் பெருமை மாசுணாதோ-என்று
அகல வகையீட்டுக் கொண்டு அகலாதே
நல் நீர் –
ஏலாதி சம்ச்காரமும் இன்றிக்கே இருக்கை -கேவல ஜலமும் அமையும்
தூய
யதா ததா வாபி
புரிவதுவும்
இவன் அவனுக்கு அருள் கொடையாக கொடுக்குமதுவும்
புகை பூவே
அகில் புகை -கரு முகைப் பூ -என்று விசேஷியாமையாலே-ஏதேனும் புகையும் ஏதேனும் பூவும் அமையும்
செதுகையிட்டு புகைக்க அமையும் -கண்டகாளி இடவும் அமையும் -என்று பட்டர் அருளிச் செய்யும் படி
இத்தை பட்டர் அருளிச் செய்தவாறே -ந கண்டகாரிகா புஷ்பம் தேவாய விநிவேதயேத்-என்னா நின்றது இ றே-என்று நஞ்சீயர் கேட்க
அவனுக்கு ஆகாது என்கிறது அல்ல -பறிக்கிற ஆஸ்ரிதன் கையிலே முள் பாயும் என்றதற்காக தவிர்த்தது காணும் -என்று அருளிச் செய்தார்
கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும் முள்ளார் முளரியும் ஆம்பலும் -என்று விசஜாதீயங்களை சேர எடுக்கிறது கண்டீரே
-த்ரவ்ய தாரதம்யம் பார்ப்பது இல்லை என்கைக்காக –
புள்ளாய் ஓர் ஏனமுமாய் புக்கிடந்தான் –
அப்ராக்ருத த்ரவ்யம் வேணும் என்று இருந்தான் ஆகில் ஸ்ரீ வைகுண்டத்தில் இரானோ வராஹ கல்பம் பாரா நிற்கச் செய்தே
-ஸ்ரீ வராஹ நாயனார்க்கு முத்தக்காசை அமுது செய்விப்பது -என்று கிடந்ததாய்
இது என்ன மெய்ப்பாடு தான் என்று நஞ்சீயர் போர வித்தராய் அருளினார்
உள்ளாதார் உள்ளத்தை உள்ளமாகக் கொள்ளோமோ-இப்படி அனுசந்தியாராதருடைய ஹிருதயத்தை ஹிருதயமாக நினைத்து இரோம்
நாங்கள் பதின்மரும் -என்று என்று தம்மை ஒழிந்த ஆழ்வார்களையும்

—————————————————————————–

அவதாரிகை

ஆஸ்ரயிக்குமவனுக்கு த்ரவ்யத்தில் குறை பார்த்து அகல வேண்டா -என்றார் முதல் பாட்டில்
நான் அதிகாரி அல்லேன் -என்று அகல வேண்டா என்கிறார் இதில் –

மதுவார் தண்ணம் துழாயான் –முது வேத முதல்வனுக்கு
எதுவேது என் பணி என்னாது அதுவே ஆட்செய்யுமீடே –1-6-2-

மதுவார் தண்ணம் துழாயான் –முது வேத முதல்வனுக்கு
புரிவதும் புகை பூவே -என்றது கீழே
இதில் மதுவார் தண்ணம் துழாயன்-என்று தொடங்கிற்று –
இது சேரும்படி என் என்ன
பூவாகில் மதுவோடு கூடி அல்லது இராமையாலே சேரும் -என்று சொல்லுவார்கள் தமிழர்
வதுவார் தண்ணம் துழாயன் -என்ற பாடமான பொது போரச் சேரும்
வதுவை என்று -மணம்–ஆர்தல் -பூர்ணம் —
வதுவை வது என்று கடைக் குறைத்தலாய் நறு நாற்றத்தை யுடைய திருத் துழாய் -என்றுமாம் -இது தமிழர் போரச் சேரும் என்பர்
பொருள் இசை அந்தாதி இயல் இசை அந்தாதி -புரிவதுவும் -என்பதால் -மகாரத்தில் தொடங்கலாமே -இது இயல் இசை அந்தாதி
அடியேன் செய்யும் விண்ணப்பமே –செய்யும் என்பதால் செங்கழு நீர் -என்று அடுத்த பாசுரம்
மதுவார் தண்ணம் துழாயான் —
ஒரு வாடல் மாலையைக் கொண்டு வந்து திருக் குழலிலே வளையமாக வைத்தால் -திருக் குழலோட்டை ஸ்பர்சத்தாலே
-செவ்வி பெற்று மது நிரம்பி -சினையாறு பட்டு வார்ந்து வெள்ளம் இடா நிற்கும் -பரிம்லா நா –என்றும் -சர்வே சாபி மதுஸ்ரவா -என்றும் –
மரங்கள் நின்று மது தாரைகள் பாயும் -என்றும்–பெரியாழ்வார் -3-6-10- தழைக்கும் துழாய் -பெரிய திருவந்தாதி 39-என்றும் சொல்லக் கடவது இ றே
முது வேத முதல்வனுக்கு –
இவ் வொப்பனை அழகு பேசும் போது-இன்னமும் பாசி பூத்த வேதமே பேச வேண்டாவோ
நித்தியமாய் அபௌருஷேயமான வேத பிரதிபாத்யனாய் உள்ளவனுக்கு
வேத முதல்வனாகையாவது -சாஸ்திர யோநித்வாத் -என்கிறபடியே வேத பிரதிபாத்யன் -என்கை
மதுவார் தண்ணம் துழாயான் -என்கையாலே சர்வாதிகன் என்றதாயிற்று -வஷஸ் ஸ்தல்யாம் துளசி கமலா கௌச்துபைர் வைஜயந்தீ
சர்வே சத்வம் கதயதிதராம் -என்னக் கடவது இ றே
முது வேத முதல்வன்-என்கையாலே பரிபூர்ணன் என்றதாயிற்று -பூர்ணஸ்ய பூர்ணமாதாய சர்வமிதம் அப்யாத்த அவாக்யநாதர-என்னக் கடவது இ றே
இரண்டும் ஸ்வாராதன் -என்கைக்கு உறுப்பாகிறது

எதுவேது என் பணி என்னாது அதுவே ஆட்செய்யுமீடே –1-6-
முது வேத முதல்வனுக்கு எது பணி– என் பணி ஏது -என்னாது அதுவே -ஆட்செய்கைக்கு அதிகாராமாவது
நித்ய ஸூ ரிகள் அன்றோ அவனுக்கு ஈடான அடிமை செய்ய வல்லார் -நான் செய்யுமது ஏது -என்று தன்னைக் கொண்டு கை வாங்காது ஒழியும -அதுவே
அன்றிக்கே
முழு வேத முதல்வனுக்கு ஏது பணி ஏது என் பணி என்னாததுவே
இது அவனுக்கு ஈடன்று என்று சிலவற்றை விடாதே சகல கைங்கர்யத்திலும் அந்வயிக்கும் அதுவே ஆட்செய்கைக்கு அதிகாரம் ஆவது என்னுதல்

———————————————————————————-

அவதாரிகை –

அவனுடைய இஸ் ஸ்வ பாவத்தை அனுசந்தித்து -தாம் அதிகரித்த கார்யத்தை மறக்கும் படி தம்முடைய மநோ வாக் காயங்களுக்கு
அவன் பக்கல் உண்டான பிராவண்யத்தை அருளிச் செய்கிறார் –
இதிலும் அடுத்த பாசுரத்திலும் தம் மனசுக்கு உபதேசம் -முந்திய -மற்றும் பின் பாசுரங்கள் மற்றையோர்க்கு உபதேசம்

ஈடும் யெடுப்புமிலீசன் -மாடு விடாது என் மனனே
பாடும் என் நா அவன் பாடல் ஆடும் என் அங்கம் அணங்கே –1-6-3-

ஈடும் யெடுப்புமிலீசன்-
சிலரை உபேஷித்தல்-சிலரை ச்வீகரித்தல் செய்யாத சர்வேஸ்வரன்
சம்பந்தம் சர்வ சாதாரணமாய் இருக்கையாலே சிலரை விடப் போகாது இ றே
தேவானாம் தானவா நாஞ்ச சாமான்ய மதிதைவதம் –என்று சவீகரிக்குமவனோடு உள்ள சம்பந்தம் விடுமவன் பக்கலிலும் உண்டு இ றே
-ஈசன் மாடு விடாது என் மனனே
மாடு -பொன் பக்கல் செல்வம்-இங்கே பக்கம் பொருளில் –
ஒரு சாதனா புத்த்யா கிட்டிற்றாகில் இறே பலம் கை புகுந்தவாறே விடுவது
நான் அதிகரித்த கார்யத்துக்கு எனக்கு நெஞ்சு ஒழிகிறது இல்லை
நாவியலால் இசை மாலைகள் ஏத்தி –4-5-4-என்றோ -மனஸ் சஹகாரம் வேணுமே உமக்கு –
உம்முடைய அஹ்ருதயமான உக்தி அமையாதோ எங்களுடைய ஹிதத்துக்கு என்ன
பாடும் என் நா அவன் பாடல்
என்னுடைய வாக் இந்த்ரியமும் மனஸ்ஸூ அதிகரித்த அந்த கார்யத்திலே ஆதிகரித்தது
ஆனால் உம்முடைய ஹஸ்த முத்தரை அமையாதோ எங்களுக்கு அர்த்த நிச்சயம் பண்ணுகைக்கு என்ன
ஆடும் என் அங்கம் அணங்கே
அதுவும் அவ்விஷயத்தில் பிரவணம் ஆயிற்று
அணங்கு அப்சரஸ் தேவ பெண் போல ஆடிற்று

என் மனனே ஈடும் யெடுப்புமிலீசன் -மாடு விடாது – என் நா அவன் பாடல் பாடும் – என் அங்கம் அணங்கு என் ஆடும்-என்று அந்வயம்

————————————————————————————————

அவதாரிகை –

தம்முடைய மநோ வாக் காயங்களுக்கு அவன் பக்கல் உண்டான பிராவண்யம் காதாசித்கமாய் விடுகை யன்றிக்கே
நித்ய ஸூரிகளைப்போலே யாத்ரையானபடி சொல்கிறார் –

அணங்கு என ஆடும் என் அங்கம் -வணங்கி வழி படும் ஈசன்
பிணங்கி யமரர் பிதற்றும் -குணங்கு எழு கொள்கையினானே –1-6-4-

அணங்கு என ஆடும் என் அங்கம் -வணங்கி வழி படும் ஈசன் பிணங்கி யமரர் பிதற்றும் -குணங்கு எழு கொள்கையினானே என்னுதல் –
பிணங்கி யமரர் பிதற்றும் -குணங்கு எழு கொள்கையினானே ஈசனை அனுபவித்து அணங்கு என ஆடும் என் அங்கம் -வணங்கி வழி படும்-என்னுதல்
பிணங்கி யமரர் பிதற்றும் -குணங்கு எழு கொள்கையினானே ஈசனை அனுபவித்து -என் அங்கம் -வணங்கி வழி படும்-அணங்கு என ஆடும் -என்னுதல்
தைவா விஷ்டம் -என்னலாம் படி ஆடுகிற என் அங்கம் -வணங்கி அது தானே யாத்ரையாக செல்லும் படி இருக்கிற ஈசன்

பிணங்கி யமரர் பிதற்றும் –குணங்கு எழு கொள்கையினானே-
தாம் தாம் அனுபவிக்கிற குணங்களுக்கு ஏற்றம் சொல்லப் புக்கு -எதிரி சொல்லுகிற குணங்களுக்கு ஏற்றம் சொல்லித் தலைக் கட்டுகை
தாம்தாம் அகப்பட்ட குணங்களைச் சொல்லி -நான் முந்துறச் சொல் -நான் முந்துறச் சொல்ல -என்று பிணங்கி
நித்ய ஸூ ரிகள் ஜவர சந்நிபதிதரைப் போலே அடை வு கெடக் கூப்பிடுகிற குணங்கள் வந்து சேருகைக்கு ஆச்ரயமானவன்
ரத்னாகரம் போலே குணங்கள் சேருகைக்கு ஆச்ரயமாய் உள்ளான் என்னுதல்
இக் குணங்கள் வந்து கெழுகையை ஸ்வ பாவமாக உடையவன் என்னுதல்
சர்வஜ்ஞரானவர்கள் படுகிற பாடு என் கரணங்களுக்கும் உண்டாகா நின்றது கிடீர் என்கிறார்

————————————————————————————-

அவதாரிகை –

திரியட்டும் தாம் அதிகரித்த கார்யத்திலே போந்து -சர்வேஸ்வரன் தன பக்கலில் வந்து கிட்டினால் -இவர்கள் பிரயோஜனாந்தரத்தைக் கொண்டு
அகலுவார்களோ -என்று ஆராய்ந்து தன்னையே பிரயோஜனமாகப் பற்றினார்களுக்கு தானும் நிரதிசய போக்கினாய் இருக்கும் -என்கிறார்

கொள்கை கொளாமை இலாதான் எள்கல் இராகம் இலாதான் –
-விள்கை விள்ளாமை விரும்பி –உள் கலந்தார்க்கு ஓர் அமுதே —1-6-5-

கொள்கை கொளாமை இலாதான் –
இவன் ஜன்ம வ்ருத்த ஜ்ஞானங்களால் உயர்ந்தான் ஒருவன் இவனை அந்தரங்க வ்ருத்தி கொள்வோம்
இவன் அவற்றால் தாழ்ந்தான் ஒருவன் -இவனைப் புறம்பு தொழில் கொள்வோம் -என்னுமவை இல்லாதான்
வ்ருத்தி கொள்ளும் போது இல்லையாகில்
திரு உள்ளத்திலே தான் நினைத்து இருக்குமோ -என்னில்
-எள்கல் இராகம் இலாதான் –
திரு உள்ளத்தாலே சிலரை இகழ்ந்து இருத்தல் -சிலரை ஆதரித்தல் செய்யான் –
ஈடும் எடுப்பும் இல் ஈசன் -என்ற இடம் ச்வீகார சமயத்தில் குறை பாரான் என்றது -இங்கு பரிமாற்றத்தில் தரம் இட்டுக் கொள்ளான்-என்கை –
விள்கை விள்ளாமை விரும்பி –உள் கலந்தார்க்கு ஓர் அமுதே —
இது ஒன்றுமே பார்ப்பது –
விள்கை -பிரயோஜனங்களைக் கொண்டு விடுகை
விள்ளாமை -அநந்ய பிரயோஜனம் ஆகை
விரும்பி -ஆதரித்து
உள் கலந்தார்க்கு-இவனையே பிரயோஜனமாகப் பற்றி இவனுடனே ஒரு நீராக கலந்தவர்களுக்கு
ஓர் அமுதே -அத்விதீயமான அமிர்தமாய் இருக்கும் -ஆராவமுது இ றே

—————————————————————————————-

அவதாரிகை –

அவன் படி இதுவாய் இருக்க அவனை விட்டு பிரயோஜனத்தைக் கொண்டு அகலுவதே -என்று பிரயோஜனாந்தர பரரான தேவர்களை நிந்திக்கிறார் –

அமுதம் அமரர்கட்கு ஈந்த -நிமிர் சுடராழி நெடுமால்
அமுதிலும் ஆற்ற இனியன் நிமிர் திரை நீள் கடலானே –1-6-6-

அமுதம் அமரர்கட்கு ஈந்த –
என்ன பரம உதாரனோ -என்கிறார்
நீ வேண்டா -எங்களுக்கு சாவாமைக்கு பரிஹாரம் பண்ணித் தர வேண்டும் -என்றவர்களுக்கு
அவர்கள் உகந்த பதார்த்தத்தை கொடுத்து விடுவதே –
அவர்கள் பிரயோஜனத்தை அருவருத்து தாம் உகந்த பிரயோஜனத்துக்கு உண்டான வ்யாவ்ருத்தி சொல்லுகிறார்
நிமிர் சுடராழி நெடுமால் –
இவருடைய அம்ருதம் இருக்கிற படி
நால் தோள் அமுது -6-10-9-இறே இவர்க்கு அமுது
அமுது என்றும் தேன் என்றும் ஆழியான் என்றும் கையும் திரு வாழியுமாய் இ றே இருப்பது இவருடைய அமர்த்தம்
இவர்கள் பிரயோஜனத்தைத் தலைக் கட்டிக் கொடுக்கையாலே உண்டான புகர் திரு வாழியிலே தோற்றும்படி இருக்கை
நெடுமால்
நம் பக்கலிலே கொள்ளப் பெற்றோமே -வேர் ஒரு பிரயோஜனமே யாகிலும் -என்று பண்ணின வ்யாமோஹ அதிசயம்
அமுதிலும் ஆற்ற இனியன் –
இவர்கள் வாசி அறிவார்கள் ஆகில் இவனைக் கிடீர் கிட்ட அடுப்பது நம்பி திருவழுதி நாடு தாசர் -இத்தேவ ஜாதி வெறும் மறையோ -காட்டு மான்கள்
தவளைகள் போல்வர் –உப்புச் சாறு கிளறுவது எப்போதோ என்று கவிழ்ந்து பார்த்து கிடப்பதே இவன் அழகையையும் போக்யதையும் விட்டு -என்பாராம் –
ஆற்ற இனியன் -மிகவும் இனியன்
நிமிர் திரை நீள் கடலானே —
அசந்நிஹிதன் என்று தான் விடுகிறார்களோ
அவ்வம்ருதம் படுகிற கடலிலே கிடீர் அவன் சாய்ந்து அருளிற்று
தன் வாசி அறியாது இருப்பார்க்கு எழுப்பிக் கார்யம் கொள்ளலாம் படி கண் வளர்ந்து அருளுகிறவன்
தாளும் தோளும் முடிகளும் சமன் இலாத பல பரப்பி -என்கிறபடியே கண் வளர்ந்து அருளுகைக்கு ஈடான பரப்பை உடைத்தாய்
ஸ்வ சந்நிதானத்தாலே திரைக் கிளப்பத்தை உடைத்தான கடலிலே யாயிற்று சாய்ந்து அருளிற்று
மாலும் கரும் கடலே -என் நோற்றாய் என்னக் கடவது இ றே

———————————————————————————-

அவதாரிகை –

அவன் நிரதிசய போக்யன் என்றீர் -அவனை பிராபிக்கும் அளவு நடுவு கால ஷேபம் பண்ணும் படி என் என்ன –
அதுக்கு அன்றோ மனத்துக்கு இனியானுடைய குணங்கள் இருக்கிறது என்கிறார் –

நீள் கடல் சூழ் இலங்கைக் கோன்-தோள்கள் தலை துணி செய்தான்
தாள்கள் தலையில் வணங்கி நாள் கடலைக் கழிமினே –1-6-7-

நீள் கடல் சூழ் இலங்கைக் கோன்-
பரந்த கடலை அகழாக உடைத்தாய் -அது தானும் மிகையாம்படியான அரணாய் உடைத்தாய் உள்ள இலங்கைக்கு நிர்வாஹம்
அல்லேனோ-என்னும் -துர் அபிமானத்தாலே -சக்கரவர்த்தி திருமகன் -என்றும் மதியாதே எதிரிட்ட பையலுடைய
தோள்கள் தலை துணி செய்தான் -தாள்கள் தலையில் வணங்கி
அகப்படாதவன் அகப்பாட்டான் -தப்பாமல் கொன்று விடுவோம் -என்று பாராதே தோலைக் கிழித்து தலையைச் சரித்து
போது போக்காக நின்று கொன்ற படி -அவனுடைய வீர சரீதங்களைக் கொண்டு திருவடியைப் போல் போது போக்கி
நாள் கடலைக் கழிமினே
அவனுடைய போக்யதை நெஞ்சிலே பட்டால் -அவனை ப்ராப்பிப்பதற்கு முன்பு நடுவுபட்ட நாள் ஒரு கடல் போலே தோற்றுமாயிற்று
அன்றிக்கே
சக்கரவர்த்தி திருமகனை ஆச்ரயித்து
சம்சார துரிதத்தைக் கழித்துக் கொள்ளுங்கோள் -என்கிறாராதல்-

———————————————————————————————

அவதாரிகை –

சக்கரவர்த்தி திருமகனுடைய வீர சரித்ரத்தை அனுசந்தித்து -இதர விஷய ப்ராவண்யத்தைத் தவிரவே
அவன் தானே பிரதிபந்தகங்களைப் போக்கி நித்ய கைங்கர்யத்தைத் தந்து அருளும் என்கிறார் –

கழிமின் தொண்டீர்காள் கழித்துத் தொழுமின் அவனைத் தொழுதால்
வழி நின்ற வல்வினை மாள்வித்து அழிவின்றி யாக்கம் தருமே –1-6-8-

கழிமின் தொண்டீர்காள் –
பாஹ்ய விஷயங்களில் உண்டான ருசியைக் கழியுங்கோள் –
கழிக்கை யாவது -பொல்லாது -என்று இருக்கை
இந்த ருசியைப் பூண் கட்டிக் கொள்ளத் தேடுகிறவர்கள் கழிக்கச் சொன்னால் கழியார்கள் இ றே
பகவத் விஷயத்தில் சாபலம் உடையீர் -கழிக்கப் பாருங்கோள்
கழித்துத் தொழுமின் -அவனைத் தொழுதால்
அவனைத் தொழா நிற்கச் செய்தே இதுவும் க்ரமத்திலே கழிகிறது -என்று இராதே அவசியம் கழித்தே தொழுங்கோள்
கழிமின் -என்று வைத்து கழித்து -என்றது -இதர விஷயங்களில் விரக்தி தானே பிரயோஜனமாக போரும் என்கை-
தொழுமின் என்று வைத்து தொழுதால் -என்கிறது கரும்பு தின்னக் கூலி போலே மேல் ஒரு பலம் இல்லையாகிலும்
தொழுகை தானே பலம் போரும் என்கை
இப்படிச் செய்தால் –
வழி நின்ற வல்வினை மாள்வித்து –
இவ்வாத்மாவுக்கு ஸ்வரூப அநு பந்தியோ -என்னும் படி பொருந்தி இருக்கிற பிரபல கர்மங்களை வாசனையோடு போக்கி
வழி நின்ற வல் வினை -நடுவே நின்று பகவத் பிராப்தியை நிரோதிக்கிற கர்மம் என்றுமாம்
அழிவின்றி யாக்கம் தருமே —
ந ச புன ஆவர்த்ததே என்கிறபடியே அபுனாவ்ருத்தி லஷண மோஷத்தைத் தரும் —

—————————————————————————————

அவதாரிகை –

தன்னைப் பற்றின மாத்ரத்திலே இப்படி விரோதிகளைப் போக்கி இப் பேற்றைத் தரக் கூடுமோ -என்னில்
வெறும் அவன் படியையோ பார்ப்பது -அருகே இருக்கிறார் படியையும் பார்க்க வேண்டாவோ
ந கச்சின் ந அபராத்யதி -என்பார் அன்றோ அருகு இருக்கிறார் -என்கிறார் –

தரும வரும பயனாய -திருமகளார் தனிக் கேள்வன்
பெருமையுடை பிரானார் -இருமை வினை கடிவாரே–1-6-9-

தரும் –
இவ்வர்த்தத்தில் சம்சயம் இல்லை -முந்திய பாசுரத்தில் தரும் என்றதில் சங்கை இல்லை என்கிறார்
அவ்வரும் பயனாய -திருமகளார் தனிக் கேள்வன் -பெருமையுடை பிரானார்
பெறுதற்கு அரிய சாஸ்த்ரங்களிலே பிரசித்தமான பிரயோஜனமான ரூபமான வற்றை
அன்றிக்கே
தர்மத்தினுடைய பரம பிரயோஜனம் தான் ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கிற பெரிய பிராட்டியாருக்கு வல்லபன்
ஆகையாலே அத்விதீய நாயகனாய் இருக்கிறவன் -என்றுமாம்
அப்ரமேயம் ஹி தத்தேஜ-யஸ்ய வா ஜனகாத்மஜா -என்கிறபடியே ஸ்ரீ யபதியாகையாலே வரும் ஏற்றம் உள்ளது இவன் ஒருவனுக்கும் இறே
ஸ்ரீ லஷ்மி பதியாகையாலே வந்த மேன்மையை உடைய உபகாரர் ஆனவர் –
பிரானார் -ஆஸ்ரித அனுக்ரஹமே ஸ்வரூபமாய் உள்ளவர்
-இருமை வினை கடிவாரே-
பேர் வாசியேயாம்படி-நாம் பண்ணி வைத்த இருவகை கர்மங்களையும் போக்குவார்
புண்ய பாபங்களுக்கு தன்னில் தான் வைஷம்யம் உண்டே யாகிலும் மோஷ விரோதித்வாத் த்யாஜ்யமாக நின்றன விறே

——————————————————————————–

அவதாரிகை –

இப்படி அவனும் அவளுமாக குற்றங்களைப் போக்குவது எத்தனை காலம கூடி -என்னில் தன திருவடிகளிலே தலை சாய்ந்த அளவில் -என்கிறார் –

கடிவார் தீய வினைகள் -நொடியாரும் அளவைக் கண்
கொடியாவடு புள்ளுயர்த்த-வடிவார் மாதவனாரே –1-6-10–

கடிவார் தீய வினைகள்
கால தத்வம் உள்ளதனையும் தன்னால் போக்கிக் கொள்ள ஒண்ணாத கொடிய பாவங்களைப் போக்குவார் –
வழி நின்ற வல்வினை மாள்வித்து -என்கிற இடத்தில் ஆஸ்ரயித்த மாதரத்தில் பாபங்களைப் போக்கும் என்றார்
இருமை வினை கடிவார் -என்கிற விடத்தில் அவன் தானானதுக்கு மேல் பிராட்டியும் கூட இருக்கையாலே போக்கும் என்றார்
எவ்வளவில் போக்குவது -என்னில் -ஷண காலத்தில் என்கிறார் இதில்
நொடியாரும் அளவைக் கண்
நொடி நிறையும் அளவிலே
கொடியாவடு புள்ளுயர்த்த-வடிவார்
தூரத்தில் காணவே பிரதிபஷம் மண் உண்ணும் படியான பெரிய திருவடியை த்வஜமாக எடுக்கையே ஸ்வ பாவமாக உடையவர் -என்னுதல்
வடிவார் -மாதவனாரே
ஆர்ந்த வடிவை உடையவர்
அழகிய வடிவை உடையவர் என்னுதல்
வடிவார் மா -என்று நாய்ச்சிமாருக்கு விசேஷணம் ஆதல்
வடிவிலே ஆர்ந்து இருக்கிறவள் -என்னுதல்
அழகிய வடிவை உடையவள் என்னுதல்
வடிவிலே பொருந்தி இருந்தவள் என்னுதல்
மாதவனார்
பிராட்டி அருகே இருந்து போக்குவிக்க வாயிற்று போக்குவது -ஒருதலை ஜன்மம் -ஒரு தலை மரணம் –
நடுவே ஆதி வ்யாதிகள் -இவை செய்த குற்றங்களைப் பார்க்கக் கடவதோ -இஹ ஜகதி நிர்தோஷ க -ஸ்ரீ குணரத்ன கோசம் -52-
குற்றம் கண்டு விடில் விபூதியாக விட வேண்டாவோ -பொறுத்து அருளீர் -என்றால் அவளுக்காக பொறுத்தோம் -என்னும் இத்தனை
பெரிய திருவடியைக் கைக் கொள்ளுகிற படியே நம்மையும் பெரிய பிராட்டியார் உடன் கூடிக் கைக் கொள்ளுவான் என்றபடி –

———————————————————————————

அவதாரிகை

நிகமத்தில் இத் திருவாய்மொழியை அப்யசிக்க வல்லார்கள் சம்சாரத்தில் வந்து பிறவார் -என்கிறார் –

மாதவன் பால் சடகோபன் தீதவம் இன்றி யுரைத்த
ஏதமில் ஆயிரத்து இப்பத்து ஓத வல்லார் பிறவாரே –1-6-11-

மாதவன் பால் சடகோபன் தீதவம் இன்றி யுரைத்த ஏதமில் ஆயிரத்து இப்பத்து ஓத வல்லார் பிறவாரே
தீதும் -அவமும் -ஏதமும் -என்று மூன்றாய் -இம் மூன்றையும் பிரதிபாத்யனுக்கும் வக்தாவுக்கும் பிரபந்ததுக்குமாக்கி
-இவை இல்லாமையைச் சொல்லுகிறது என்று நிர்வஹிப்பாரும் உண்டு
பட்டர் அங்கன் அன்றிக்கே -ஏதமில் ஆயிரம் -என்று பிரபந்த லஷணம் சொன்ன போதே த்ரிவித தோஷ ராஹித்யையும் சொல்லிற்றாம்
-இனி தீதும் அவமும் ஆவது செய்வது என்-என்னில் -சடகோபன் மாதவன் பால் தீது அவமின்றி உரைத்த என்றாகக் கடவது என்று அருளிச் செய்தார்
அதாவது -தீதாவது -நான் ஸ்ரீ யபதி அல்லேனோ-என்று தனது மேன்மையைப் பார்த்து கடக்க இருக்குமது –
அவமாவது –ஆஸ்ரயிக்கிறவன் நித்ய சம்சாரி அன்றோ என்று இவன் சிறுமையைப் பார்த்து கைவிடுமது
இவையில் இல்லாமையைச் சொன்ன இப்பத்து என்றபடி
ஆயிரத்திலும் இப்பத்தையும் அப்யசிக்க வல்லார்கள் பிறவார் –
பிறவார் -பிறக்கை சுட்டி இ றே
மாத்ரு சம்ரஷணம் அழகிது என்னுமோபாதி-பகவத் சமாஸ்ரயணம் எளிது -என்று உபதேசிக்க வேண்டுகிறது –
இத் திருவாய் மொழியை அப்யசிக்க வல்லார்கள் உபதேச நிரபேஷமாக-சம்சார சம்பந்தம் அற்று பகவத் அனுபவமே
யாத்ரையாம் படி இருக்கிறவர்கள் உடன் கூடி அனுபவிக்கப் பெறுவார்கள் -என்கிறார் –

முதல் பாட்டில் -ஆஸ்ரயிக்கும் அவனுக்கு த்ரவ்ய நியதி இல்லை -என்றார்
இரண்டாம் பாட்டில் அதிகாரி நியதி இல்லை என்றார்
மூன்றாம் பாட்டில் தம்முடைய கரண த்ரயமும் பகவத் விஷயத்தில் பிரவணம் ஆனபடியை அருளிச் செய்தார்
நாலாம் பாட்டில் நித்ய ஸூரிகளைப் போலே அது தானே யாத்ரை யாயிற்று என்றார்
அஞ்சாம் பாட்டில் தன்னையே பிரயோஜனமாகப் பற்றினார்க்கு அவன் நிரதிசய போகய பூதன் என்றார்
ஆறாம் பாட்டில் இப்படி போகய பூதனானவனை விட்டு பிரயோஜ நத்தைக் கொண்டு அகலுவதே என்று பிரயோஜனாந்தர பரரை கர்ஹித்தார்
ஏழாம் பாட்டில் இவனையே பிரயோஜனமாகப் பற்றினார்க்கு கால ஷேபம் இன்னது என்றார்
எட்டாம் பாட்டில் ப்ராப்தி விரோதிகளையும் அவன் தானே போக்கும் என்றார்
ஒன்பதாம் பாட்டில் இது கூடுமோ என்று சங்கையாக -வெறும் அவன் படியையோ பார்ப்பது -அருகு இருக்கிறார் படியையும் பார்க்க வேண்டாவோ -என்றார்
பத்தாம் பாட்டில் இவர்கள் எத்தனை காலம் கூடி விரோதிகளைப் போக்குவது போக்குவது -என்ன ஷண காலத்திலே-என்றார்
நிகமத்தில் இத் திருவாய்மொழியை அப்யசிக்கவே சம்சரிக்க வேண்டா என்றார் –

————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருவாய்மொழி – -1-5- –ஈட்டு -ஸ்ரீ ஸூ க்திகள் —

October 12, 2015

பிரவேசம் –

சர்வேஸ்வரன் சர்வ ஸ்மாத் பரனாகையாலே அவனை ஆஸ்ரயிப்பார்க்கு ஒரு குறையும் இல்லை -என்றார் –
அந்த ஆஸ்ரயணம் தான் புருஷோத்தமனை ஆஸ்ரயிக்கிறதாகையாலே-பலத்தோடு வ்யாப்தமாய் அல்லாது இராது என்றார் –
பஜிப்பார்க்குத் தான் அவதரித்து ஸூலபனாகையாலே பஜிக்கத் தட்டில்லை என்றார் –
ஸூலபனானவன் தான் அபராத சஹன் ஆகையாலே பலத்தோடு வ்யாப்தம் அல்லாது இராது என்றார் –
அயோக்யத அநு சந்தானம் பண்ணி அகலுவாரையும் தன் செல்லாமையைக் காட்டி பொருந்த விட்டுக் கொள்ளும் சீலவான் என்கிறார் இதில் –

கீழே கலங்கித் தூது விட்ட விடம் ப்ரேம கார்யம் –
இங்கே அகலப் பார்க்கிற இடம் ஜ்ஞான கார்யம் –
மயர்வற மதி நலம் அருளினன்-என்று பக்தி ரூபாபன்ன ஜ்ஞானம் இறே இவர் தாம் பெற்றது
தூத ப்ரேஷண வ்யாஜ்யத்தாலே தம்முடைய ஆற்றாமையை அறிவித்த அநந்தரம்-இவரை இங்கனே நோவு பட விட்டோம் ஆகாதே -என்று
பிற்பாட்டுக்கு நொந்து -ஆனைக்கு உதவ வந்து தோற்றினால் போலே அரை குலையத் தலை குலைய வந்து தோன்றினான்
அவனுக்கு வைலஷண்யத்தையும் தம்முடைய ஸ்வரூபத்தையும் கண்டார்
தார்மிகன் வைத்த தண்ணீர் பந்தலை அழிப்பாரைப் போலே நித்ய ஸூ ரிகளுக்கு அநு பாவ்யமான வஸ்துவை நாம் கிட்டி
தூஷிக்கப் பார்ப்போம் அல்லோம் -அகலும் இத்தனை என்று பார்த்தார் –
அகன்றால் ஜீவிக்க வல்லீரோ -என்னில் முடியும் அத்தனையே -சேஷிக்கு அதிசயத்தை விளைக்கத் தேடுமவர்கள் தந்தாம் விநாசம் பாரார்கள் இ றே
-பெருமாளுக்கும் தேவதூதனுக்கும் மந்த்ரம் பிரவ்ருத்தமான சமயத்திலே-
உத்தர காண்டம் -104-113-ஸ த்வம் மநோ மய புத்ர பூர்ணாயூர் மானுஷேஷ்விஹ கால அயம் தே நரஸ்ரேஷ்ட சமீபமுவர்த்திதம் -என்ற மந்த்ரம்
துர்வாசர் -என்னை உள்ளே புக விட வேணும் என்ன -ராமம் தர்சய மே சீக்ரம் -உத்தர -105-2–
-இவனைத் தகைந்து –பெருமாளுக்கு அவத்யத்தை விளைவிப்பதில் நாம் அகன்று முடிய அமையும் -என்று பார்த்து
-ஏகச்ய மரணம் மே அசத்து மா பூத் சர்வ வி நாசனம் -உத்தர -105-9—அவனைப் புக விட்டு -யதி ப்ரீதிர் மஹாராஜ யத்ய அநு ராஹ்யதா மயி
-ஜஹி மாம் நிர் விசங்கஸ் த்வம் பிரதிஜ்ஞ் அநு பாலய-உத்தர-106-4-என்று விடை கொண்டார் இறே இளைய பெருமாள்
த்யஜேயம் ராகவம் வம்சே பர்த்துர் மா பரிஹாச்யதி-உத்தர-48-4-என்று விடை கொண்டாள் இறே பிராட்டி –

ஊருணி யிலே கள்ளியை வெட்டி எறிவாரைப் போலேயும் -அம்ருதத்தில் நஞ்சைக் கலந்தால் போலேயும் நித்ய ஸூரிகளுக்கு அநு பாவ்யமான
வஸ்துவை நாம் புக்கு அழிக்கையாவது என்-என்று இவர் அகலப் புக
-இவரை இழந்தோம் ஆகாதே -என்று ஈஸ்வரன் -ஆழ்வீர் அகலப் பார்த்தீர் –
அடியேன் அகலப் பார்த்தேன் என்ன –
நீர் நமக்கு அவத்யம் வரும் என்று அன்றோ அகலப் பார்த்தது -நீர் அகலவே இவ்விஷயம் அதிக்ருதா திகாரமாகாதே
-என்று நமக்கு ஆள் பற்றாது -இப்படி தண்ணியராக நினைத்து இருக்கிற நீர் ஒருவரும் நம்மைக் கிட்டவே -சர்வாதிகாரம் -என்று தோற்றும்
ஆனபின்பு நீர் அகலுமது காணும் நமக்கு அவத்யம் –இனித் தான் நமக்கு ஆகாதார் இல்லை என்னும் இடம் பண்டே அடிபட்டுக் காணும் கிடப்பது -என்று
நாம் குணா குண நிரூபணம் பண்ணாதே எல்லார் தலையிலும் நம் காலை வைத்தோமே கண்டீரே -என்று
-தாம் திரு உலகு அளந்து அருளின சௌலப்யத்தைக் காட்ட -ஆகில் கிட்டுவோம் என்று பாரா –
ஒரு குணாதிக்யமேயோ வேண்டுவது -நம்மால் வரும் குணமும் அவனுக்கு வேண்டா என்று
அகலப் புக -உம்மால் வரும் நான் தானும் வேணுமோ வேண்டாவோ -என்று நீர் அயோக்யர் என்று அகலுமதிலும் சம்ச்லேஷிக்கிறது
திருவாய்ப்பாடியிலே வெண்ணெயோ பாதி நமக்குத் தாரகம் காண்-இனி நீர் அகலில் திருவாய்ப்பாடியில் வெண்ணெய் விலக்கினார் புக்க லோகம் புகுவீர் கிடீர்
-நீர் அகலுமது நமக்கு சத்தா ஹானி என்று –மித்ர பாவேன சம்ப்ராப்தம் -என்று -அவன் பக்கல் உள்ளது போட்கனாகவுமாம் –
நாம் அவனை விடில் உளோம் ஆகிறோம் -என்று சேர்த்துக் கொண்டால் போலேயும்
பந்து வதம் பண்ணி ஜீவிக்கப் பார்க்கிறிலேன் -என்று அர்ஜூனனை- கரிஷ்யே வசனம் தவ -என்னப் பண்ணினால் போலேயும்
தம்மை வருந்தி இசைவித்து சம்ச்லேஷ உன்முகனாய் ஆனபடியே சம்ச்லேஷித்து தலைக் கட்டினான் -என்கிறார்-

———————————————————————————————

அவதாரிகை

நித்ய ஸூ ரிகளுக்கு அநு பாவ்யனானவனை என்னுடைய மநோ வாக் காயங்களாலே தூஷித்தேன் -என்கிறார்

வள வேழுலகின் முதலாய வானோர் இறையை அரு வினையேன்
களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா என்பன் பின்னையும்
தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லானாயர் தலைவனாய்
இளவேறேழும் தழுவிய எந்தாய் என்பன் நினைந்து நைந்தே –1-5-1-

வள வேழுலகின் முதலாய வானோர் இறையை அரு வினையேன்
வளிவிதான ஏழ் உலகு -என்று லீலா விபூதியாய்
வானோர் இறை -என்கையாலே நித்ய விபூதியைச் சொல்லிற்றாய்
இப்படி உபய விபூதி நாதனைக் கிடீர் நான் அழிக்கப் பார்க்கிறது -என்கிறார் –
வளவியனாய் ஏழ் உலகுக்கும் முதலாய் -வானோர் இறையாய் இருக்குமவனை -என்று அவன் தனக்கே விசேஷணம் ஆகவுமாம்
வளவியராய் ஏழ் உலகுக்கும் முதலாய் இருக்கும் வானோர் -என்று நித்ய ஸூரிகளுக்கு விசேஷணம் ஆக்கவுமாம்
இவர்கள் வளவியராகை யாவது -பகவத் அனுபவத்தில் குசலராகை
அஸ்த்ர பூஷண அத்யாயத்திலே -ஸ்ரீ கௌச்துபத்தாலே ஜீவ சமஷ்டியைத் தரிக்கும் என்றும்
-ஸ்ரீ வத்சத்தாலே பிரகிருதி ப்ராக்ருதங்களை தரிக்கும் என்றும் சொல்லா நின்றது இறே
வானோர் இறையை –
தேசிகர் ஆகையாலே -துறை அறிந்தே இழிவார்கள் -ஸ்வாமி-என்று ஆயிற்றே இவர்களுக்கு பிரதிபத்தி
வானோர் இறையைக் கள்வா என்பன் -என்னவாயிற்று நினைத்தது
தொடங்கின வாக்கியம் பூரிப்பதற்கு முன்னே தன்மை அனுசந்தித்து -அரு வினையேன் -என்கிறார் –
தார்மிகனாய் இருப்பான் ஒருவன் ரஜஸ் தமஸ் ஸூக்களாலே அபி பூதனாய் கிருஹத்திலே அக்னி ப்ரஷேபத்தைப் பண்ணி
சத்வம் தலை எடுத்தவாறே அநு தபிக்குமா போலே அநு தபிகிறார்
அரு வினையேன் –
இப்போது அரு வினையேன் -என்கிறது -கள்வா என்கைக்கு அடியான பிரேமத்தை -அத்தை அருவினையேன் -என்கிறார்
அநிஷ்டா வஹம் பாபம் என்று இருக்குமவர் ஆகையாலே –

களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா என்பன்
களவிலேவேழ்க்கை யுடையவனாய்-அபி நிவிஷ்டனாய் -என்னவுமாம்
அன்றிக்கே -களவு எழும்படி -களவு பிரசித்தமாம் படி -என்னவுமாம்
களவு பிரசித்தமாம் படி -வெண்ணெயைக் களவு கண்டு அமுது செய்த க்ருத்ரிமனே -என்பன்
இத்தால் பரிவுடைய யசோதைப் பிராட்டி சொல்லும் பாசுரத்தைக் கிடீர் சொல்லிற்று -என்கை-என்பன் -என்றது சொன்னேன் -என்றபடி

பின்னையும் தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லானாயர் தலைவனாய்
அதுக்கு மேலே
பரிவுடைய யசோதை பிராட்டிக்கு மறைத்தவற்றையும் வெளியிடும்படி அபிமதையான நப்பின்னை பிராட்டி பாசுரத்தையும் சொன்னேன்
தளவேழ் முறுவல்-
நப்பின்னை பிராட்டி உடைய தந்த பங்க்தியை கண்டவாறே முல்லை யரும்பு ஸ்ம்ருதி விஷயமாகை நெஞ்சிலே
கவயத்தைக் கண்டவாறே கிருஹத்தில் கோ ஸ்ம்ருதி விஷயமாம் போலே
பல்லுக்குத் தோற்ற பனி முல்லை -என்னக் கடவது இ றே

பின்னைக்காய்
நப்பின்னை பிராட்டி உடைய ஸ்மிதத்திலே தோற்று அவளுக்கு தன்னை இஷ்ட விநியோக அர்ஹமாகினான்-
வல்லானாயர் தலைவனாய் —
கிருஷ்ணாஸ்ரைய க்ருஷ்ணபலா கிருஷ்ண நாதாச்ச பாண்டவா -என்னுமா போலே அவனைப் பற்றி நாட்டை அழித்து திரியும் மிடுக்கைப் பற்ற -வல்லானாயர்-என்னவுமாம்
அன்றிக்கே -ஆனாயர் வலிய தலைவனாய் -அதாவது உடம்பு இருக்க தலை குளித்தும் தலை இருக்க உடம்பு குளித்தும் இறே திரிவது
கார்த்திகை புதியதுக்கு குளித்தார்கள் ஆகில் இவன் அதுவும் செய்யாதே இடைத் தனத்திலே ஊன்றி நிற்கும் படியைச் சொல்லுதல்
இப்படி இருக்கில் அல்லது பெண் கொடார்கள் இறே இடையர்
குலேந சத்ருசீ -ஸூ ந்தர பாஹூஸ் த்வம் -7-என்னக் கடவது இறே -துல்ய சீல வயோ வ்ருத்தாம் -என்று இரண்டு தலையும்
குறைவற்று இருக்க எருதுகளை முன்னிட்ட வன்னெஞ்சர் -என்னவுமாம்
இளவேறேழும் தழுவிய எந்தாய் என்பன் நினைந்து நைந்தே
மிருத்யு சமமாய் இருந்துள்ள ருஷபங்கள் ஏழையும் ஊட்டியாக ஒரு காலே தழுவினான் -அநந்தரம் அவளை லபிக்கையாலே
அவள் முலையிலே அணைந்தால் போலே இருக்கையாலே தழுவி -என்கிறது
எந்தாய் என்பன் –
எருது ஏழும் அடர்த்த செயலுக்கு தோற்று நப்பின்னை பிராட்டி பிராட்டி சொல்லும் பாசுரத்தைச் சொன்னேன்
உக்தி மாத்ரமேயோ –
நினைந்து -நெஞ்சாலும் தூஷித்தேன் -அவ்வளவேயோ -நைந்தே -பிறர் அறியும் படி சிதிலனாய் -காயிகத்தாலும் தூஷித்தேன்
வள வேழ் உலகு -இத்யாதி க்கு
அயர்வறும் அமரர்கள் அதிபதி என்றேன்
எத்திறம் -என்றேன்
பிராட்டிமார் தசையை பிராப்தனாய் தூது விட்டேன்
என்று அவற்றுக்கு அநுதபிக்கிறார்
நினைந்து நைந்து வள வேழ் உலகின் முதலாய வானோர் இறையை கள வேழ் வெண்ணெய் தோடு உண்ட கள்வா என்பன் -பின்னையும்-
தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லானாயர் தலைவனாய் இளவேறு ஏழும் தழுவிய எந்தாய் என்பன் -அருவினையேன் -என்று அந்வயம்

——————————————————————————

அவதாரிகை –

நெஞ்சாலே நினைந்தும் -வாயாலே பேசியும் -நைந்தும் -தப்பச் செய்தேன் -என்றார் கீழ்
தப்பச் செய்தேன் என்ற இடம் தப்பச் செய்தேன் -என்கிறார் இதில் சண்டாளன் -ஒத்துப் போகாது என்று தான் சொல்லப் பெறுமோ
-அப்படியே யன்றோ நான் அயோக்யன் என்று அகலுகையும் -ப்ரேம ஆர்த்தர சித்தரான ப்ரஹ்மாதிகள் அன்றோ அது தான் சொல்லப் பெறுவர்-
நான் தப்பச் செய்தேன் -என்று அகலுமத்தில் கிட்டி நின்று பரிமாறுவது நன்று அன்றோ -என்று கீழ் நின்ற நிலையையும் நிந்தித்துக் கொண்டு அகலுகிறார்

நினைந்து நைந்து உள்கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும்
புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால்
நினைந்த வெல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே
மனம் செய் ஞானத்து உன் பெருமை மாசூணாதோ மாயோனே –1-5-2-

நினைந்து நைந்து உள்கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும்
ப்ரஹ்மாதிகள் சமாராத நத்துக்கு ஒருப்படும் போது திருமாலை தொடக்கமான உபகரணங்களை சமைத்துக் கொண்டாயிற்று இழிவது
நினைந்து –
நாம் இவற்றையும் கொண்டு சென்றால் நம்மைக் குளிரக் கடாஷிக்கக் கடவனே -மாமக்ரூரேதி வஷ்யதி -என்கிறபடியே
நம்மை அவன் வினவக் கடவனே -என்று இங்கனே முந்துற நினைப்பார்கள்
நைந்து –
அநந்தரம் தரித்து இருக்க மாட்டாதே சிதில அந்த கரணராவர்கள்
உள் கரைந்து
நையுமது ஸ்தூலம் என்னும்படி உள் கரைவர்கள் –
உருகி
பின்னை ஓர் அவயவியாக்கி எடுக்க ஒண்ணாத படி மங்கு வர்கள்
இப்படி படுகிறவர் தாங்கள் ஆர் -என்றால் -இமையோர் பலரும் முனிவரும்
ப்ரஹ்மாதிகளும் -சனகாதிகளும் –
இவர்கள் ரஜஸ் தமஸ் ஸூ க்கள் அபி பூதரான போது பண்ணும் துர்மானம் கனத்து இருக்குமா போலே யாயிற்று
-சத்வம் தலை எடுத்த போது பகவத் குண அனுபவம் பண்ணி சிதிலராம் படியும்
இப்படி ப்ரேம ஸ்வ பாவராகையாலே திருமாலை தொடுக்குப் போது தொடங்கி-அவன் இத்தைக் கண்டு அருளக் கடவனே சாத்தி யருளக் கடவனே
–என்று சாதாரமாக தொடுத்த மாலை சாமாராதன உன்முகனானவன் ஸ்ரமம் ஆறுகைக்கு அர்க்க்யம் கொடுக்கைக்காக உண்டாக்கின ஜலம்
-அநந்தரம் சாத்தி அருளுவதாக சமைத்த சந்த நாதிகள் -தூபம் கண்டருள உண்டாக்கின அகில் புகை -இவை தொடக்கமானவற்றை
தரித்துக் கொண்டு வந்து நிர்மமராய்த் திருவடிகளிலே விழுவார்கள்
ஏந்தி வணங்கினால்
அவன் இவை கொண்டு கார்யம் கொள்ளுமதிலும் -அவனுக்கு -என்று தரிக்குமதுவே பேறாய் இருக்கும் இவர்களுக்கு
சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி -என்னுமா போலே அவன் தான் இவை கொண்டு கார்யம் கொள்ளுமதிலும் இவர்கள் தரித்துக் கொண்டு
நிற்கக் காணுமதுவே பேறாக நினைத்து இருக்கும் -பாவ பந்தம் இரண்டு தலைக்கும் உண்டு இறே
வணங்கினால் உன் பெருமை மாசூணாதோ -என்கை

நினைந்த வெல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே
மேலே மனம் செய் ஞானம் –என்று சங்கல்ப ரூப ஞானத்தை சொல்லா நிற்கச் செய்தே -நினைந்த -என்கிற இதுக்கு கருத்து என் என்ன
தேவாதி கார்யமாகக் கொண்டு விஸ்த்ருதமான தடங்கலும் அழிந்து -சதேவ என்று வ்யாஹரிக்க வேண்டும்படியான அன்று
புத்ர பௌத்ராதிகளோடே கூட ஜீவித்தவன் அவர்களை இழந்து தனியனானால்-தன் தனிமையை அனுசந்தித்து வெறுக்குமா போலேவும்
-தேசாந்தரகதனான புத்ரனை மாதா பிதாக்கள் நினைக்குமா போலேயும் -இவற்றின் உடைய இழவை அனுசந்திப்பதொரு
அனுசந்தானம் உண்டு -அத்தைச் சொல்லுகிறது
நினைந்த எல்லா பொருட்கட்கும் வித்தாய்
நினைத்தல் -கலத்தலும் –கூடலுமாய் -சதவஸ்தமாய் தன்னுடனே கூடிக் கிடக்கிற சகல பதார்த்தங்களுக்கும் காரணமாய் என்று
பிள்ளை யமுதனார் நிர்வஹிப்பர் -அன்றியே இப்படி தன் திரு உள்ளத்தாலே விஷயீ கரிக்கப் பட்ட சக பதார்த்தங்களுக்கும் காரணமாய்
முதலில் சிதையாமே
அவற்றை உண்டாக்கச் செய்தே தானான தன்மையில் குறை வாராதபடி இருக்கும் -ம்ருத்பண்டம் கடசராவாதி கார்யமானவாறே விசிஷ்டாகாரம்
நசிக்கும் –இங்கு அது இல்லை– நாட்டில் கார்யங்கள் உண்டாக்குவதான காரணத்தின் படி யல்ல இவன் படி இருக்கிறது
மனம் செய் ஞானத்து உன் பெருமை மாசூணாதோ
ஆனால் பின்னை சங்கல்பமோ ஜகத் காரணம் -ஸூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மம் அன்றோ -என்னில் -ஆனாலும் காரணமாம் போது
சங்கல்ப பூர்வகமாக வேணும் -சங்கல்ப விசிஷ்டம் காரணம் ஆனாலும்
பஹூச்யாம் -என்கிற சங்கல்ப ப்ராதான்யத்திலே சொல்லுகிறது -இப்படி இருக்கிற சங்கல்ப ஞான ரூபத்தை உடைய உன் பெருமை உண்டு
-உன் வை லஷண்யம் அது -இவர்கள் வணங்கினால் மாசூணாதோ
தன் சங்கல்பத்தாலே சகல பதார்த்தங்களையும் உண்டாக்கும் படியான வைலஷண்யத்தை உடையவனுக்கு
அவனாலே ஸ்ருஜ்யரான நாம் ஸ்பர்சித்த த்ரவ்யம் அங்குத்தைக்கு அர்ஹமோ-என்று தம்தாமுடைய அயோக்யதையை அனுசந்தித்து
அகலுகைக்கு அதிகாரம் உள்ளது அவர்களுக்கு அன்றோ
அதுக்குத் தான் நான் ஆர்
மாயோனே —
ப்ரஹ்மாதிகளையும் ஷூத்ர மனுஷ்ய ஸ்தானத்தில் ஆக்க வல்ல உன்னுடைய ஆச்சர்யமான வைலஷண்யம் இருந்த படி என் –

நினைந்த வெல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே மனம் செய் ஞானத்து உன் பெருமை இமையோர் பலரும் முனிவரும்
நினைந்து நைந்து உள்கரைந்து உருகி புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால் மாசூணாதோ மாயோனே -என்று அந்வயம்

—————————————————————————————-

அவதாரிகை –

நினைத்தும் பேசியும் நைந்தும் தப்பச் செய்தேன் -என்றார் முதல் பாட்டில்
தப்பச் செய்தேன் என்ற இடம் தப்பச் செய்தேன் -என்றார் இரண்டாம் பாட்டில்
நீர் நம்முடைய மேன்மையைப் பார்த்து அங்கன் நெகிழப் போகாதே -தான் தாழ நின்று எல்லோரோடும் பொருந்தும் சீல குணத்தையும் ஒரு கால் பாரீர் -என்று
திரு உலகு அளந்து அருளின சீல குணத்தையும் காட்டிக் கொடுக்க -அத்தை அநு சந்தித்து அகல மாட்டாதே -அணுகவும் மாட்டாதே
நடுவே நின்று அணா வாய்த்துக் காலம் கழிக்கிறார் -அப்படி காலம் கழிக்க வல்லரோ அவனை ஒழிய -என்னில்
சீர் கலந்த சொல் நினைந்து போக்கும் போது போக்க வல்லரே -சீல குண அனுசந்தானாதாலே போக்கலாம் இ றே –

மாயோனிகளாய் நடை கற்ற வானோர் பலரும் முனிவரும்
நீ யோனிகளைப் படை என்று நிறை நான்முகனைப் படைத்தவன்
சேயோன் எல்லா வறிவுக்கும் திசைகள் எல்லாம் திருவடியால்
தாயோன் எல்லா எவ்வுயிர்க்கு தாயோன் தான் ஓர் உருவனே –1-5-3-

மாயோனிகளாய் நடை கற்ற வானோர் பலரும் முனிவரும்
மஹா யோநிகளாய் -விலஷணமான ஜன்மங்களை உடையராய்
தம்தாமுடைய அதிகார அநு ரூபமான மரியாதைகள் உண்டு -சிருஷ்டி யாதிகள் -அவற்றில் வந்தால் அறிவித்த சர்வேஸ்வரன் பக்கல்
இருகால் மட்டுச் சென்று கேள்வி கொள்ள வேண்டாத படி கற்று இருப்பாரான வானோர் பலரும் முனிவருமான யோனிகளை –
அவர்கள் ஆகிறார் சப்த ரிஷிகள் தச ப்ரஜாபதிகள் -ஏகாதச ருத்ரர்கள் -த்வாதச ஆதித்யர்கள் -அஷ்ட வஸூக்கள் -என்று இப்படி
சொல்லப் பட்டு இருந்துள்ள ஜன்மங்களை உடையரானவர்களை
நீ யோனிகளைப் படை என்று நிறை நான்முகனைப் படைத்தவன்
நீ படை என்று முந்துற சதுர்முகனை உண்டாக்கினவன்
யோ ப்ரஹ்மாணாம் விததாதி பூர்வம் -என்கிறபடியே ப்ரஹ்மாவை சிருஷ்டித்து இவ்வருக்கு உண்டான கார்ய வர்க்கத்தை உண்டாக்கு -என்று
விட்டால் சர்வேஸ்வரனை கேள்வி கொள்ள வேண்டாத படி துப்பரவுடையன் ஆகையாலே பூர்ணனான சதுர முகனைப் படைத்தவன்
சேயோன் எல்லா வறிவுக்கும் திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன்
அவ்யவதாநேந தன் பக்கலிலே பிறந்து தான் ஓதுவிக்க ஓதி அவற்றாலே ஜ்ஞானத்தில் குறைவற்று இருக்கிற ப்ரஹ்மாதிகளுடைய
ஜ்ஞானத்துக்கும் தூரச்தனாய் இருக்கும்
எத்தனையேனும் அதிசய ஜ்ஞானாரானவர்களுடைய ஜ்ஞானத்துக்கு தூரச்தனாய் இருந்து வைத்து தான் தன்னைக் கொடு வந்து
காட்டும் அன்று வருத்தமற கொடு வந்து காட்டும்
திக்குகளோடு கூடின பூமிப் பரப்படைய திருவடிகளால் தாவி அளந்து கொண்டவன்
நாய்ச்சிமார் தொடும் போது பூ தொடுமா போலே கூசித் தொடும் திருவடிகளைக் கொண்டு கிடீர் காடும் ஓடையும்
அளந்து கொண்டது -என்று ஆச்சர்யப் படுகிறார்
குணா குண நிரூபணம் பண்ணாதே எல்லார் தலையிலும் திருவடிகளைக் கொடு வந்து வைக்கைக்கு நிபந்தனம் ஏன் என்னில்
எல்லா எவ்வுயிர்க்கு தாயோன்
சகல பிராணிகளுக்கும் தாய் போலே பரிவனாகை
எல்லா எவ்வுயிர்க்கும் என்கிறது உத்கர்ஷம் அபகர்ஷம் பாராதே பரிவனாகை
தான் ஓர் உருவனே
ஒருவருக்கும் நிலம் அல்லாத மேன்மையையும் அனுசந்தித்தார்
அப்படிப் பட்டவனுடைய நீர்மையையும் அனுசந்தித்தார்
இவனும் ஒரு படியை உடையவனாய் இருக்கிறானே -என்று வித்தராகிறார்
கடு நடையிட்டு ஓடுகிறவர் இவன் சீல குணத்தை அனுசந்தித்து கால் தாழ்த்துகிறார்

————————————————————————————-

அவதாரிகை –

அவன் படி இதுவாய் இருந்தது -இனி நீர் செய்யப் பார்த்தது என் -என்ன -நாம் அகலப் பார்த்தால் உடையவர்கள் விடுவார்களோ -என்கிறார்
அத்யந்த நிரபேஷனாய் இருந்து வைத்து -ஸ்ருஷ்டியாத் அநேக யத்னங்களைப் பண்ணி என்னை தனதாக்கிக் கொண்ட குணங்களாலே
என்னை விஷயீ கரித்தவன்–இனி நான் அல்லேன் என்னிலும் தன்னுடைய சௌசீல்ய குணத்தாலே என்னை விடான் -என்று சமாஹிதர் ஆகிறார்
தான் வித்து -ஓர் வித்து -தனி வித்து –உபாதான சஹகாரி நிமித்த மூவகைக் காரணங்களும் அவனே என்றவாறு

தானோர் உருவே தனிவித்தாய்த் தன்னில் மூவர் முதலாய
வானோர் பலரும் முனிவரும் மற்றும் மற்றும் முற்றுமாய்
தானேர் பெரு நீர் தன்னுள்ளே தோற்றி அதனுள் கண் வளரும்
வானோர் பெருமான் மா மாயன் வைகுந்தன் எம்பெருமானே –1-5-4-

தானோர் உருவே தனிவித்தாய்த் –
சதேவ சோம்யே தமக்ர ஆஸீதேகமேவாத்வதீயம் -இங்கே அத்விதீய பதங்கள் மூன்றும் உண்டாய் இருந்தது –
இவற்றால் கொள்ளுகிற விநியோகம் என் என்னில்
சிருஷ்டியைப் பிரசங்கிக்கையாலே-காரண விஷயமாகக் கிடக்கின்றன –
த்ரிவித காரணமும் தானே என்கை -தான் -என்கிற இத்தால் -உபாதா நாந்தரம் இல்லை -என்கை-
ஓர் -என்கிற இத்தால் சஹகார்யாந்தரம் இல்லை என்கை -தனி -என்கிற இத்தால் நிமித்தாந்தரம் இல்லை என்கை
உரு -என்று அழகு -அழகிய -த்ரிவித காரணமுமாய்
மூவகை காரணமுமாய் இருந்தும் ஸ்வரூப ஸ்வபாவங்களில் மாறுபாடு அடையாத அழகு உண்டே
தத் தேஜ அஸ்ருஜத ச ஈஷத லோகாந்து ஸ்ருஜா இதி –

தன்னில் மூவர் முதலாய
இஷ்வாகு வம்ச்யர் நடுவே வந்து -அவதரித்து அவர்களோடு எண்ணலாம் படி இருக்குமா போலேயும்
யாதவர்கள் நடுவே வந்து அவதரித்து அவர்களோடு ஒக்க எண்ணலாம்படி இருக்குமா போலேயும்
ப்ரஹ்மாதிகள் நடுவே அவர்களோடு ஒக்க சொல்லலாம் படி அவதரித்து -ஸ்வேந ரூபேண நின்று பாலநத்தைப் பண்ணி அவர்களுக்கு
அந்தராத்மாவாய் நின்று சிருஷ்டி சம்ஹாரங்களைப் பண்ணி போருகையாலே
தன்னோடு கூடின மூவர் தொடக்கமான -என்னுதல்
அன்றிக்கே
தன்னில் -என்றது தன் பக்கலிலே என்றபடியே தன்னுடைய சங்கல்ப ரூப ஜ்ஞானத்தாலே
மூவர் முதலாயா -சேந்திர-என்கிற இந்த்ரனையும் கூட்டிச் சொல்லுதல்
வானோர் பலரும் முனிவரும் மற்றும் மற்றும் முற்றுமாய்
ப்ரஹ்மாதிகள் தொடக்கமான தேவர்களையும்-சனாதிகளையும் -ஸ்தாவரங்களையும் -ஜங்கமங்களையும் அநுக்தமான
-எல்லாவற்றையும் உண்டாக்குகைக்காக

தானேர் பெரு நீர் தன்னுள்ளே தோற்றி அதனுள் கண் வளரும்
இப்படி சிருஷ்டி உன்முகனான தான் தனக்கு கண்வளர்ந்து அருளுகைக்கு போரும்படியான பரப்பை உடைத்தான ஏகார்ணவத்தை
தன் பக்கலில் உண்டாக்கி அதனுள் கண் வளரும் –
இப்படி ஏகார்ணவத்தில் தனியே சாய்ந்து அருளுகிறவன் தான் ஆர் என்னில்
வானோர் பெருமான் மா மாயன் வைகுந்தன் எம்பெருமானே —
நித்ய ஸூரிகளுக்கு நாதனானவன் -ஆச்சரயங்களான குண
சேஷ்டிதங்களை உடையவன் -வைகுந்தம் கலவிருக்கையாக யுடையவன் -அவன் என் நாயகனே
பெறுகைக்கு ஈடாக ஏற்கவே நோன்பு நோற்று வருந்தி பிரஜையைப் பெற்ற தாயானவள் -அவன் நடக்க வல்லனான சமயத்தில் –
தேசாந்தரம் போவேன் -என்றால் விட்டு ஆறி இராள் இ றே
அப்படியே நெடுநாள் தன வாசி அறியாதே போந்த எனக்கு அறிவைத் தந்து தன்னை உள்ளபடி அறிவித்தவன் -தான் தந்த
அறிவைக் கொண்டு நான் அகன்று போகப் புக்கால் அவன் விட்டு ஆறி இருக்குமோ –

—————————————————————————————————–

அவதாரிகை –

ஆபிமுக்யம் பண்ணின அநந்தரம்-க்ரியதாம் இதி மாம் வத-போலே ஏவி அடிமை கொள்ள வேணும் -என்று பிரார்த்திக்கிறார் -என்னுதல்
இவர் ஆபிமுக்யம் பண்ணச் செய்தே அவன் முகம் காட்டாதே அல்பம் விளம்பிக்க -அது பற்றாமை -அருளாய் -என்கிறார் என்னுதல் –

மானேய் நோக்கி மடவாளை மார்பில் கொண்ட மாதவா
கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறிந்தாய் கோவிந்தா
வானார் சோதி மணி வண்ணா மதுசூதா நீ யருளாய் உன்
தேனே மலரும் திருப்பாதம் சேருமாறு வினையேனே –1-5-5-

மானேய் நோக்கி மடவாளை மார்பில் கொண்ட மாதவா
அருளிவிப்பாரும் அருகே உண்டாயிருக்க -எனக்கு அருளாய் என்று பிரார்த்திக்க வேண்டுகிறது என்
மான் ஏய்ந்த நோக்கை யுடையளாய்- ஏய்கை-பொருந்துகை -மானோடு ஒத்த நோக்கை -கண்ணை உடையளாய்
மடவாளை -ஆத்ம குணோ பேதையாய் இருக்கிற பெரிய பிராட்டியாரை –
காரியப் பாடற கண்ணாலே அவனை ஒரு கால் நோக்கினால் -ஒரு பாட்டம் மழை விழுந்தால் போலே குளிரும்படி யாயிற்று நோக்கம் இருப்பது
அன்றிக்கே -மடவாள் -மடப்பமாவது துவட்சியாய் -அவன் தான் கண்ணாலே இவளை நோக்கினால்
-தெய்வ வண்டு துதைந்த எம் பெண்ணையம்பூ –9-9-4-என்கிறபடி வண்டாலே ஆத்தசாரமான பூ போலே யாயிற்று இவள் இருப்பது
புஷ்ப வாளி இவ ரசிக ப்ரமர உபபுக்த தவம் தேவி நித்ய அபி நந்தயசே முகுந்தம் -ஸ்ரீ குண ரத்ன கோசம் -45-என்றபடி
மார்பில் கொண்ட மாதவா
மாம்பழத்தோடே ஒரு சம்பந்தம் இன்றிக்கே இருக்கச் செய்தே -மாம்பழ உன்னி அப்பேரை தரிக்குமா போலே இறே
இவனை ஒழிய ஸ்ரீ மான் என்னும் பேரை தரிக்கிறவர்கள்
அங்கன் இன்றிக்கே -விஷ்ணு வஷஸ் ஸ்தலஸ் தயா -என்கிறபடியே அவள் திரு மார்பில் நித்ய வாசம் பண்ணுகையாலே
-மாதவன் என்னும் திரு நாமம் உடையவனே –
கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறிந்தாய் கோவிந்தா
அவள் அருகு இன்றிக்கே ஒழியவன் ஆனால் தான் உன்னைக் கிட்டினார்க்கு அவத்யம் வருமோ -கூன் சிதைய -என்றது
இவளுடைய அல்லாத அவயவங்களுக்கு ஒரு வாட்டம் வாராத படி நிமிர்த்த அத்தைப் பற்றா
வன வாச ஹேது பூதையான குப்ஜையைச் சொல்லிற்றாய்-பால்யத்திலே சுண்டு வில் கொண்டு திரியா நிற்க பெருமாள் லீலா ரசம் அனுபவித்தார்
என்று உண்டு -அத்தைப் பற்றிச் சொல்லிற்று ஆகவுமாம்
அப்போது கோவிந்தா -என்றது பூமிக்கு ரஷகன் ஆனவன் என்கிறது
அன்றிக்கே தீம்பு சேருவது கிருஷ்ணனுக்கே யாகையாலே போம் பழி எல்லாம் அமணன் தலையோடு -என்னுமா போலே அவன் தலையிலே ஏறிட்டு சொல்லுதல்
அதுவும் அன்றிக்கே சாந்து இட்ட கூனி தன்னை சொல்லிற்றாய் -வருத்தம் அற சுண்டு வில் நிமிர்க்குமா போலே நிமிர்த்தவன் -என்னுதல்
தெறிக்கை யாவது -க்ரியையாய் நிமிர்த்தாய் என்றபடி
கிருஷ்ணனுக்கு வில்லுண்டோ பின்னை என்னில் வேலிக் கோல் வெட்டி விளையாடு வில்லேற்றி திரியும் இறே
தருமம் அறியாக் குறும்பனை தன கைச் சார்ங்கம் அதுவே போலே -என்று வில் உண்டாகவே அருளிச் செய்தாள் இறே
கோவிந்தா -திர்யக்குகளோடும் பொருந்துமவன் அல்லையோ நீ –

வானார் சோதி மணி வண்ணா மதுசூதா நீ யருளாய்
அது கிடக்க -பக்தாநாம் என்னும் வடிவு படைத்தவன் அல்லையோ -குப்பியில் மாணிக்கம் போலே த்ரிபாத் விபூதியிலும் அடங்காதே
விம்மும் படியாயிற்று வடிவில் புகர் இருப்பது
மதி சூதா –
அவ்வடிவை அனுபவிப்பார்க்கு வரும் விரோதைப் போக்குவாயும் நீ யன்றோ -மதுவாகிய அசுரனைப் போக்கினால் போலே என் விரோதியையும் போக்கினவனே
உன் தேனே மலரும் திருப்பாதம்-
இவை ஒன்றும் இல்லை யானாலும் அடியில் உன் போக்யதையை பார்த்தால் தான் விடப் போமோ
விஷ்ணோ பதே பரமே மத்வ உத்ச -என்னக் கடவது இ றே
இவர் பெரு நிலம் கடந்த நல்லடிப் போது இ றே ஆசைப் பட்டது -இவர் ஆசைப் பட்ட படியே திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் -என்று
அந்த திருவடிகளையே காட்டிச் சேர விட்டான்
உன் தேனே மலரும் திருப்பாதம் –என்று அத்தையே அபேஷிக்கிறார்
சேருமாறு வினையேனே —
கலத்தில் இட்ட சோற்றை விலக்குவாரைப் போலே நீ வந்து கிட்டக் கொள்ள அகலுகைக்கு அடியான பாபத்தைப் பண்ணின நான் சேருமாறு
அருள வேணும் –தாம் இசைந்த பின்னும் கிடையாமையாலே -வினையேன் -என்கிறார் –

——————————————————————————————

அவதாரிகை

இவர் ஆபிமுக்யம் பண்ணினவாறே அவன் அல்பம் தாழ்த்தான் –இவர் என்னை இழந்தாய் கிடாய் என்கிறார்

வினையேன் வினை தீர் மருந்தானாய் விண்ணோர் தலைவா கேசவா
மனை சேர் ஆயர் குல முதலே மா மாயனே மாதவா
சினை யேய் தழைய மரா மரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா
இனையாய் இனைய பெயரினாய் என்று நைவன் அடியேனே –1-5-6-

வினையேன் வினை தீர் மருந்தானாய் விண்ணோர் தலைவா கேசவா
உன்னைப் பார்த்தல் என்னைப் பார்த்தல் -செய்ய வேண்டாவோ
வினையேன் வினை
சேதனர் எல்லாருக்கும் உள்ள வினை போலே வல்ல வாயிற்று இவரது –பகவத் சம்ச்லேஷம் பெற வேணும் என்று இறே அவர்கள் இருப்பது
-அகல நினைக்கிற இது உள்ளது இவர் ஒருவருக்கும் இறே
தீர் மருந்தானாய்-
நான் கிட்டுகை அத்தலைக்கு அவத்யம் என்று அகலுகைக்கு அடியான வினையைப் போக்கும் மருந்தானவனே-
வினையைப் போக்கிற்று எங்கு நின்றும் வந்து-என்னில்
விண்ணோர் தலைவா
நித்ய அனுபவம் பண்ணா நிற்கச் செய்தே நான் அயோக்யன் என்று அகல வேண்டாதார்க்கு நியந்தாவாய் இருக்கும் இருப்பில் நின்றும் வந்தாயிற்று
கேசவா
அதுக்கு இவ்வருகே ஒரு பயணம் எடுத்து விட்ட படி -ஆவாம் தவாங்கே சம்பூதௌ தஸ்மாத் கேசவ நாமாவான் -என்கிறபடியே

மனை சேர் ஆயர் குல முதலே மா மாயனே மாதவா
அந்நிலையில் நின்றும் இவ்வருகே போந்து கிட்டின படி
மனை -சேர் ஊர் கிருஷ்ணன் ஆயற்கு
இங்கே அவதாரம் செய்யாததால் சேர்த்தல் என்றது
பஞ்ச லஷம் குடியாகையாலே மனையோடு மனை சேர்ந்த -என்னுதல் -ஆயர் மனைகளிலே வந்து சேர்ந்து அவர்கள் குலத்துக்கு முதலானவன் என்னுதல்
அன்றிக்கே நாலு மூங்கிலைக் கொண்டு போய்-தங்கும் இடத்தில் வளைத்து தங்குகையாலே சொல்லிற்று ஆதல்
மா மாயனே –
இடைக் குலத்திலே வந்து பிறந்து -அவர்கள் ஸ்பரசித்த த்ரவ்யமே தாரகமாய் -அது தான் களவு கண்டு புஜிக்கும் படியாய்
அது தான் தலைக் கட்ட மாட்டாதே வாயது கையதாக அகப்பட்டு கட்டுண்டு அடியுண்டு நிற்கும் நிலை
இவ் வெளிமைக்கு அடி சொல்கிறது
மாதவா
அவளோட்டைச் சேர்த்தி
சினை யேய் தழைய மரா மரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா
மகா ராஜரை விஸ்வசிப்பித்து கார்யம் செய்த படி -சினை என்று பணை-ஏய்கை -நெருக்குகை-பணைகளோடு பணைகள் நெருங்கித் தழைத்து
நினைத்த படி இலக்கு குறிக்க ஒண்ணாத படி நின்ற மராமரங்கள் ஏழையும் எய்தவன்-
இத்தால் ஆஸ்ரிதர் தன்னுடைய ரஷணத்தில் சங்கித்தால்சங்கா நிராகரணம் பண்ணி ரஷிக்குமவன் -என்றபடி
சிரீதரா –
மரா மரங்கள் எய்குகைக்கு இலக்கு குறித்து நின்ற போதை வீர லஷ்மீயைச் சொல்லுகிறது
இனையாய் இனைய பெயரினாய் என்று நைவன் அடியேனே —
இனையாய் -ஏவம் விதமான குண சேஷ்டிதங்களை உடையவனே
இனைய பெயரினாய் –
குண சேஷ்டிதங்களுக்கு வாசகங்களான திரு நாமங்களை உடையவனே
என்று நைவன் –
காண வேணும் கேட்க வேணும் என்ன மாட்டாதே நையா நின்றேன்
அடியேனே
ஆர் உடைமை அழிகிறது -உடையவர்கள் தங்கள் வஸ்துவை வேணுமாகில் நோக்கிக் கொள்ளுகிறார்கள் என்கிறார்
இது ஏதேனும் ஸ்வ தந்திர வஸ்துவாய் படுகிறதோ
பிறர்க்கு உரித்தாய் அழிகிறதோ
உன்னால் ரஷிக்க ஒண்ணாமல் அழிகிறதோ
என்னால் ரஷிக்கலாய் அழிகிறதோ

—————————————————————————————-

அவதாரிகை –

நைவன் என்றார் -இவரை நையக் கொடுக்க மாட்டாமையாலே வந்து முகம் காட்டினான் -அவனைப் பார்த்து நம்மால் வரும்
குணாதியமும் இவனுக்கு வேண்டா -என்று அகலுகிறார் –

அடியேன் சிறிய ஞானத்தன் அறிதலார்க்கும் அரியானை
கடி சேர் தண்ணம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை
செடியார் ராக்கை யடியாரைச் சேர்த்தல் தீர்க்கும் திருமாலை
அடியேன் காண்பான் அலற்றுவன் இதனின் மிக்கதோர் அயர்வுண்டே –1-5-7-

அடியேன் சிறிய ஞானத்தன் அறிதலார்க்கும் அரியானை
சம்சாரிகளில் அறிவு கேடர் சர்வஜ்ஞ்ஞர் என்னும் படி கிடீர் என் அறிவு கேடு –
அல்லேன் என்று அகலுகிற இவர் அடியேன் -என்கிறது வாசனையாலே
அன்றிக்கே அடியேன் என்கிறது அடிமைக்கு இசைந்து அன்று -ஜ்ஞான ஆனந்தகளோ பாதி நிரூபகமாக
சேஷத்வத்தை பிரதி பத்தி பண்ணி இருக்கையாலே அஹம் என்றவோ பாதி அடியேன் என்கிறார்
சிறிய ஞானத்தன்
அத்யல்ப ஞானத்தை உடையவன்
அறிதலார்க்கும் அரியானை-
எத்தனையேனும் அதிசய ஜ்ஞானராய் இருப்பார்க்கும் அறியப் போகாதவன் யாயிற்று அவன்
சவதஸ் சர்வஜ்ஞனான தனக்கும் அறியப் போகாது
தனக்கும் தன தன்மை அறிவரியான் -8-8-6-இறே
தம் பிரகாசங்களுக்கு உள்ள சேர்த்தி போரும் கிடீர் எனக்கும் அவனுக்கும்
கடி சேர் தண்ணம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை
அறிவரிய வஸ்துவுக்கு அடையாளம் திருத் துழாய் மாலை
நாட் செல்ல நாட் செல்ல பரிமளம் ஏறி வாரா நின்றுள்ள திருத் துழாய் மாலையைப் புனைந்தவனே
கண்ணனை
அறிவரியவனாய் இருந்து வைத்து -இடையர்க்கும் இடைச்சிகளுக்கும் தன்னை எளியனாக்கி வைத்தவனை

செடியார் ராக்கை யடியாரைச் சேர்த்தல் தீர்க்கும் திருமாலை
செடி -பாபம்–ஆர்தல் -மிகுதி -பாபம் மிக்கு இருக்கிற சரீரம் -நோய் எல்லாம் பெய்ததோர் யாக்கை இ றே
ஜரா மரண மோஷாயா மாம் ஆஸ்ரித்ய யதந்தியே -என்று அவனையே உபாயமாகப் பற்றி தூறு மண்டின சரீரத்தை அறுத்துக் கொள்ளும்
அடியார் உண்டு -கேவலர் -அவர்களுக்கு அத்தை அறுத்துக் கொடுக்கும் ஸ்ரீ மானை
அவர்கள் பின்னை அடியரோ என்னில் அடியார் ஆவார் அவர்களே -என்று இருக்கிறார் -சேஷிக்கு அதிசயத்தை விளைவிக்கும் அவரே சேஷ பூதர் ஆவார்
என்னைப் போலே கிட்டி அவனுக்கு அவத்யத்தை விளைவிக்கப் பாராதே சம்சார சம்பந்தத்தை அறுத்துக் கொண்டு கடக்க நிற்கிறவர்கள் இ றே
உமக்கு இப்போது வந்தது என் -என்ன
அடியேன் காண்பான் அலற்றுவன் இதனின் மிக்கதோர் அயர்வுண்டே —
அடியேன் -எனபது -காண வேணும் என்பதாகா நின்றேன்
சம்சாரியான நாளில் அறிவே நன்றாய் இருந்தது இ றே -அது நன்றானபடி என் என்னில்
அப்போது கடக்க நின்று பகவத் தத்வத்தையே குறி அழியாமே வைத்தேன்
இப்போது அன்றோ நான் கிட்டி நின்று அழிக்கப் பார்த்தது -இதில் காட்டில் அறிவு கேடு உண்டோ

——————————————————————————————–

அவதாரிகை —

இவர் இப்படி அகலப் புக்கவாறே -இவர் துணிவு பொல்லாதாய் இருந்தது -இவரைப் பொருந்த விட வேணும் என்று பார்த்து –
வாரீர் ஆழ்வீர்-திருவாய்ப்பாடியிலே வ்ருத்தாந்தம் கேட்டு அறியீரோ -என்ன
அடியேன் அறியேன் என்றார் -அது கேட்கையில் உண்டான ஸ்ரத்தையாலும் -அவன் தான் அருளிச் செய்ய கேட்க வேணும் என்கிற
ஸ்ரத்தையாலுமாக –முன்பு ஒரு காலத்தில் பூமியை எடுத்து வயிற்றிலே வைத்தோம் -பின்பு அது தன்னை வெளி நாடு காண உமிழ்ந்தோம்
அதில் ஏதேனும் சேஷித்தது உண்டதாகக் கருதி திருவாய்ப்பாடியிலே வெண்ணெயை விழுங்கினோம் காணும் -என்ன
அது இதுக்குப் பரிஹாரமாகச் செய்தாயோ -அது ஒரு கால விசேஷத்திலே இது ஒரு கால விசேஷத்திலே என்ன
ஆனால் இது நாம் ஏதுக்குச் செய்தோம் -ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யம் உனக்கு தாரகம் ஆகையாலே செய்தாய் அத்தனை என்ன
ஆனால் அவ் வெண்ணெயோ பாதி உம்மோட்டை சம்ச்லேஷமும் நமக்குத் தாரகம் காணும் –
ஆனபின்பு நீர் உம்மைக் கொண்டு அகலுவீர் யாகில் திருவாய்ப்பாடியில் வெண்ணெய் விலக்கினார் புக்க லோகம் புகுவீர் கிடீர் -என்றான் –
அவன் கருத்தை தாம் அறிந்தமை தோற்ற அநு பாஷிக்கிறார் இப்பாட்டில்

உண்டாய் உலகு ஏழ் முன்னமே யுமிழ்ந்து மாயையால் புக்கு
உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர் உவலை யாக்கை நிலை எய்தி
மண் தான் சோர்ந்தது உண்டேலும் மனிசர்க்காகும் பீர் சிறிதும்
அண்டா வண்ணம் மண் கரைய நெய்யூண் மருந்தோ மாயோனே –1-5-8-

உண்டாய் உலகு ஏழ் முன்னமே யுமிழ்ந்து லோகங்கள் ஏழையும் எடுத்து வயிற்றிலே வைத்தாய் முன்பு ஒரு காலத்தில்
பின்னை அதுதன்னை வெளிநாடு காண உமிழ்ந்து
மாயையால் புக்கு உண்டாய் வெண்ணெய்
மாயா வயுனம் ஜ்ஞானம் -என்கிறபடியே இச்சா பர்யாயமாய் இருக்கிற ஜ்ஞானத்தாலே புக்கு உண்டாய் வெண்ணெய் –
அது செய்யும் இடத்தில் சக்கரவர்த்தி திரு மகனாய்ப் புக்கு -வெண்ணெய் அமுது செய்ய -என்றால் கொடார்கள் இறே
சிறு மனிசர் உவலை யாக்கை நிலை எய்தி
ஷூத்ரரான மனுஷ்யர்களுடைய ஹேயமான சரீரத்தினுடைய நிலையை-அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்துக்கு உண்டாக்கிக் கொண்டு
வந்தாயிற்று இப்படிச் செய்தது
கறையினார் துவருடுக்கை -என்கிறபடியே என்கிறபடியே இடையர் அளவிலே தன்னை அமைத்து வந்து கிட்டி இறே வெண்ணெய் அமுது செய்தது
சபலம் தேவி சஞ்ஜாதம் ஜாதோஹம் யத் தவோதராத் -என்னா நிற்கச் செய்தது இறே
நைஷ கர்ப்பத்வமாபேத ந யோன்யாம்வசத் பிரபு -என்கிறது
இஷ்வாகு வம்சயரில் ஒருவன் யாகம் பண்ணா நிற்க -பிபாசை வர்த்தித்தவாறே -மந்திர பூதமான ஜலத்தை பானம் பண்ண கர்ப்பம் உண்டாயிற்று
சுக்ல சோணீத ரூபத்தாலே பரிணதமாய் யன்று இறே -சக்த்யதிசயத்தாலே இப்படிக் கண்ட பின்பு -சர்வ சக்திக்கு கூடாதது இல்லை
-என்று கொள்ளத் தட்டில்லை இறே
மண்ணை அமுது செய்தது -அதின் சத்தைக்காக
வெண்ணெய் யை அமுது செய்தது உன் சத்தைக்காக –
மண் தான் சோர்ந்தது உண்டேலும் மனிசர்க்காகும் பீர் சிறிதும் அண்டா வண்ணம் மண் கரைய நெய்யூண் மருந்தோ மாயோனே –
பூமியைத் திரு வயிற்றிலே வைத்து உமிழ்ந்த போது சேஷித்தது ஏதேனும் மண் உண்டாகிலும் பிற்பட்ட மனுஷ்யர்க்கு அத்யல்பமும்
சேஷியாத படி நெய் அமுது செய்தது அதுக்கு ஓர் மருந்தோ
ஒன்றும் சேஷியாத படி அமுது செய்யிலோ மருந்தாவதோ
அன்றிக்கே பீர் –சோகை -என்று வைவர்ண்யமாய்-மண்ணிலே சிறிது சேஷித்தால் மனுஷ்யர்க்கு வரக் கடவதான
வைவர்ண்யம் சிறிதும் வாராத படி நெய்யூண் மருந்தோ
அன்று இ றே -ஆனால் ஏதுக்குச் செய்தோம் என்னில்
மாயோனே
ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தால் அல்லது தாரணம் இல்லாத படியான ஆஸ்ரித வ்யாமோஹத்தாலே செய்தாய் அத்தனை அன்றோ –

——————————————————————————————

அவதாரிகை

திருவாய்ப்பாடியில் யசோதாதிகள் வெண்ணெயோ பாதி தாரகம் காணும் நீர் தண்ணிதாக நினைத்து இருக்கிற உடம்பு -என்றான்
பாவ பந்தம் உள்ளவர்களுடைய வெண்ணெய் உனக்கு தாரகம் -அது இல்லாத என்னோட்டை ஸ்பர்சம் உனக்கு நஞ்சு -என்றார்
நஞ்சோ தான் -நஞ்சானமை குறையில்லையே -என்றான் அவன் –இவரும்-இது நஞ்சே இதுக்கு ஒரு குறை இல்லை -என்றார்
ஆனால் பூதனையினுடைய நஞ்சு தாரகமான நமக்கு ஆகாதது இல்லை காணும் -என்றான் –என்னை– பொருந்துகிறார்
அன்றிக்கே -பூதனையை முடித்தால் போலே நான் அல்லேன் –என்று அகலப் புக என் நிர்பந்தத்தைப் போக்கினான் என்பாரும் உண்டு

மாயோம் தீய வலவலைப் பெருமா வஞ்சப் பேய் வீய
தூய குழவியாய் விடப்பால் வமுதா வமுது செய்திட்ட
மாயன் வானோர் தனித்தலைவன் மலராள் மைந்தன் எவ்வுயிர்க்கும்
தாயோன் தம்மான் என்னம்மான் அம்மா மூர்த்தியைச் சார்ந்தே –1-5-9-

மாயோம் –
பிரிகையாவது விநாசம் என்று இருக்கையாலே இனி அகன்று மாயக் கடவோம் அல்லோம் -என்கிறார் –
நானும் என்னோடு சம்பந்தம் உடையாரும் முடியக் கடவோம் அல்லோம் –
அன்றியே இரண்டு தலையையும் அழித்துக் கொள்ள கடவோம் அல்லோம்
தீய வலவலைப் பெருமா வஞ்சப் பேய் வீய
ஸ்தன்யம் தத் விஷ சம்மிச்ரம் ரஸ்ய மாஸீத் ஜகத் குரோ -என்கிறபடியே ஜகத்துக்கு வேர் பற்றானவனை முடிக்கப் பார்த்த நெஞ்சில்
தீமையை உடையளாய்–யசோதைப் பிராட்டியைப் போலே பரிவு தோற்ற ஜல்ப்பித்துக் கொண்டு வருவாளாய்
ஸ்வதஸ் சர்வஜ்ஞனானவனும் தாய் என்று பிரமிக்கும் படி தோற்றின மகா வஞ்சகையான பூதனை முடியும்படியாக
தூய குழவியாய் –
ஐஸ்வரமான மேன்மையும் நடையாடா இருக்கச் செய்தே அது தோற்றாதபடி கலப்பற்ற பிள்ளைத் தனத்தை உடையனாய்
இவனுக்கு பிள்ளைத் தனத்தில் குறை இல்லை யாகில் அதின் கார்யம் காணாது ஒழிவான் என் என்னில்
விடப்பால் வமுதா –
விஷம் அமிர்தமாம் முஹூர்த்தத்திலே யாயிற்று பிறந்தது
தர்மியை வேறாக்க ஒண்ணாமையாலே விரோத்தித்த ஆசூர பிரக்ருதிகள் முடிய பிராப்தம்
வமுது செய்திட்ட மாயன்
விஷம் அமிர்தமாம் படி அமுது செய்து தன்னைத் தந்து நம்மை உண்டாக்கின ஆச்சர்ய பூதன் –
எனக்கும் அல்ல -பிறர்க்கும் அல்ல -அவனுக்கே -என்று அவள் அனந்யார்ஹம் ஆக்குகையாலே அமிர்தம் ஆயிற்று –
பூதனையுடைய விஷம் அமிர்தமாம் படி அமுது செய்தவன் தான் ஆர் -என்னில்
வானோர் தனித்தலைவன் மலராள் மைந்தன்
அயர்வறும் அமரர்களுக்குத் தனித்தலைவன் ஆனவன் –
அவர்கள் பரிந்து பரிசர்யை பண்ண பெரிய பிராட்டியாரும் தானுமாய் இருக்குமவன்
தேவிமாராவார் திருமகள் பூமி ஏவ மற்று அமரர் ஆட் செய்வார் -என்கிறபடியே
மைந்தன்
அவளுக்கு மிடுக்கானவன் -அவளோட்டை சேர்த்தியாலே நித்தியமான நவ யௌவனத்தை உடையவன் -என்னுதல்
அவளோட்டை சேர்த்தியாலே அழகிய மணவாளப் பெருமாளாய் இருக்கிறவன் என்னுதல்
எவ்வுயிர்க்கும் தாயோன்
சகல ஆத்மாக்களுக்கும் தாய் போலே பரிவானவன்
தம்மான் என்னம்மான் அம்மா மூர்த்தியைச் சார்ந்தே —
தம்மான் -சர்வேஸ்வரன்
என்னம்மான் -நான் தன்னை அகன்று முடிந்து போகாதபடி நோக்கினவன்
நித்ய ஸூரிகளும் மற்றும் உள்ள சகல ஆத்மாக்களும் ஒரு தட்டும் தான் ஒரு தட்டுமாம்படி என் பக்கலிலே
விசேஷ கடாஷத்தை பண்ணினவன் என்றுமாம்
அம்மா மூர்த்தியைச் சார்ந்தே —
விலஷணமான திருமேனியை உடைய அம் மஹா புருஷனைக் கிட்டி மாயக் கடவோம் அல்லோம்
மூர்த்தி -அழகான திரு மேனி என்றும் மஹா புருஷன் என்றுமாம்

———————————————————————————————

அவதாரிகை –

இப்படி இவரை இசைவித்து வைத்து ஒரு புதுமை செய்ய வேண்டாதபடி யான பரமபதத்தைக் கோடிக்கத் தொடங்கினாள்-

சார்ந்த விரு வல்வினைகளும் சரிந்து மாயப் பற்று அறுத்து
தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்
ஆர்ந்த ஞானச் சுடராகி யகலம் கீழ் மேல் அளவிறந்து
நேர்ந்து யுருவாய் யருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே –1-5-10-

சார்ந்த விரு வல்வினைகளும் சரிந்து மாயப் பற்று அறுத்து
திலதைலவத் தாருவஹ் நிவத் -என்கிறபடி பிரிக்க ஒண்ணாத படி பொருந்திக் கிடக்கிற புண்ய பாப ரூப கர்மங்களையும் சரித்து
சர்வ சக்தியான தான் போக்கும் அன்றும் போக்க ஒண்ணாத படி சதசாகமாகப் பணைத்த வினைகளை
விரகர் நெடும் சுவர் தள்ளுமா போலே போக்கி
மாயப் பற்று அறுத்து
ருசி வாசனைகளையும் கழித்து
தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்
தீர்ந்து -தான் க்ருத்க்ருத்யனாய் -என்னுதல்
தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி –
அல்லேன் என்று அகலாதே -தனக்கே தீர்ந்து -தன் பக்கலிலே நெஞ்சை வைக்கும்படி திருத்தி –
வீடு திருத்துவான்
கலங்கா பெரு நகருக்கும் ஒரு புதுமை பிறப்பியா நின்றான்
ஆர்ந்த ஞானச் சுடராகி –
பரிபூர்ண ஞான பிரபனாய்
யகலம் கீழ் மேல் அளவிறந்து
பத்து திக்கிலும் வியாபித்து
நேர்ந்து யுருவாய் யருவாகும் இவற்றின் உயிராம் –
அதி ஸூ ஷ்மமான சேதன அசேதனங்களுக்கும் ஆத்மாவாய் இருக்கிற
அன்றிக்கே -நேர்ந்த -கிட்டின -அதாவது ப்ரத்யஷ பரித்ருஷ்டமான ப்ரக்ருத் யாத்மாக்களுக்கும் ஆத்மாவாய் -என்றுமாம்
நெடுமாலே —
இப்படி இருக்கிற நெடுமால் வீடு திருத்துவானான்
வ்யாப்தியும் இவரைப் பெற்ற பின்பு புதுக் கணித்தது -என்னுதல்
அன்றியே -ஒருவனைப் பிடிக்க நினைத்து ஊரை வளைப்பாரை போலே இவரைத் திருத்துகைக்காக வ்யாப்தனாய் இருந்தான் என்னுதல்
நெடுமாலே
முனியே நான் முகன் அளவும் அவன் பண்ணின உபகாரத்தைச் சொல்லுகிறது
அவன் தெளிந்து வந்து கொடு போகப் பற்றாமே கூப்பிடுகிறார் இறே நடுவு எல்லாம் –

————————————————————————————

அவதாரிகை

நிகமத்தில் -இத் திருவாய் மொழியை அப்யசிக்க வல்லார்க்கு -அவன் வரக் கொள்ள -அயோக்ய அனுசந்தானம் பண்ணி
அகன்று இவர் பட்ட கிலேசம் பட வேண்டா -என்கிறார் –

மாலே மாயப் பெருமானே மா மாயனே என்று என்று
மாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே –1-5-11-

மாலே –
ஸ்வரூபத்தால் வந்த விபுத்வம் -வானோர் இறையை -1-5-1- என்றாரே
மாயப் பெருமானே
குணத்தால் வந்த விபூத்வம் -வெண்ணெய் தொடு வுண்ட -1-5-1- என்றாரே
மா மாயனே
சேஷ்டிதங்களால் வந்த ஆதிக்யம் -இள வேறு ஏழும் தழுவிய -1-5-1- என்றாரே
என்று என்று மாலே ஏறி –
ஏவம் விதமான வை லஷண்யத்தை அனுசந்தித்து -நான் அயோக்யன் -என்று அகலும்படி பிச்சேறி
மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்
தன்னை முடித்துக் கொள்வதாக கழுத்திலே கயிற்றை இட்டுக் கொண்டவனை யறுத்து விழ விடுவாரைப் போலே
அகன்று முடியப் புக இவரைப் பொருந்த விட்டுக் கொள்ள -அவன் அருளாலே பொருந்தின ஆழ்வார்
பிடி தோறும் நெய் ஒழியச் செல்லாத ஸூகுமாரரைப் போலே நின்ற நின்ற நிலைகள் தோறும் அவன் அருள் ஒழிய நடக்க மாட்டார்
மயர்வற மதிநலம் அருளினான் -என்றும் அருளாத நீர் அருளி -போலே அருளிச் செய்தாரே
பாலேய் தமிழர் –
பால் போலே இனிய தமிழை உடையவர்கள்
இசைகாரர் –
இயலுக்கு இசைய இசை இட வல்லவர்கள் -ஸ்ரீ மதுர கவியும் ஸ்ரீ நாத முனிகளையும் போல்வார்கள்
பத்தர் –
பகவத் குண அனுபவத்தில் இவர் தம்மைப் போலே காலாழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -என்று இருக்குமவர்கள்
ஆழ்வான் ஒரு உருவிலே -ஸ்ரீ பராங்குச நம்பியை -பாலேய் தமிழர் என்கிறார் –
இசைகாரர் என்கிறது ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையரை-பத்தர் என்கிறது -பிள்ளை உறங்கா வல்லி தாசரை -என்று பணித்தானாம்
பாலேய் தமிழர் -என்கிறது முதல் ஆழ்வார்களை -இசைகாரர் -என்று திருப் பாண் ஆழ்வாரை -பத்தர் -என்கிறது பெரிய ஆழ்வாரை -என்று
ஆளவந்தார் அருளிச் செய்வர்
இயல் அறிவார் இசை அறிவார் பகவத் குண வித்தராய் இருப்பர்-
இவர்கள் பரவும் –
இவர் அகலுகை தவிர்ந்து பாடின பின்பு உண்டான லோக பரிக்ரஹத்தைச் சொல்கிறது
ஆயிரத்தின் பாலே பட்ட-
கடலிலே முத்துப் பட்டது -என்னுமா போலே -ச்லாக்கியமான ஆயிரத்தின் நடுவே பட்ட இத் திருவாய் மொழி வல்லார்க்கு
இல்லை பரிவதே —
பரிவது இல்லை
அஞ்சிறைய மட நாரையிலே தூது விட்டு
அவன் வந்து சம்ச்லேஷ உன்முகன் ஆனவாறே
அயோக்யன் என்று அகன்று படும் துக்கம் இல்லை –

முதல் பாட்டிலே அயோக்யன் என்று அகன்றார்
இரண்டாம் பாட்டில் அகலுகைக்கு தானும் அதிகாரி அல்லேன் என்றார்
மூன்றாம் பாட்டில் சீல குணத்தைக் காட்டித் துவக்க துவக்குண்டார்
நாலாம் பாட்டில் அகல ஓட்டுவார்களோ உடையவர்கள் என்றார்
அஞ்சாம் பாட்டில் உடைய உன் திருவடிகளைக் கிட்டும்படி பார்த்து அருள வேணும் என்கிறார்
ஆறாம் பாட்டில் அவன் அரை ஷணம் தாழ்க்க முடியப் புகா நின்றேன் என்றார்
ஏழாம் பாட்டில் அப்படி அவன் வரக் கொள்ள அயோக்யன் என்று அகன்றார்
எட்டாம் பாட்டில் திருவாய்ப்பாடியிலே வெண்ணெயோபாதி உம்மோட்டை சம்ச்லேஷகமும் தாரகம் -என்றான் அவன்
ஒன்பதாம் பாட்டில் -அப்படி அல்ல இது நஞ்சு என்ன நஞ்சு தானே தமக்கு தாரகம் -என்றான்
பத்தாம் பாட்டில் தம்மை இசைவித்து பரமபதத்தைக் கோடிக்கத் தொடங்கினான் என்றார்
நிகமத்தில் கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டினார்

——————————————————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருவாய்மொழி – -1-4- –ஈட்டு -ஸ்ரீ ஸூ க்திகள் —

October 10, 2015

பிரவேசம்

பரத்வத்தையும் -பஜநீயதையும் -சௌலப்யத்தையும்-அனுபவித்து ஹிருஷ்டராய் -தாமாய்ப் பேசினார் கீழ் –
இதில் தாமான தன்மை அழிந்து ஒரு பிராட்டி தசையைப் பிராப்தராய் -ஹர்ஷத்தால் சொல்லும் பாசுரம் போய் ஆற்றாமையால் சொல்லும் பாசுரமாகச் செல்கிறது
அயமபர காரக நியம -என்னுமா போலே கீழ்ப் போந்த ரீதி ஒழிய வேறு ஒன்றாய் இறே இருக்கிறது –
முற்காலத்திலே அல்பம் விவஷிதனாய் இருப்பான் ஒருவன் -வீத ராகராய் இருப்பார் பரிக்ரஹித்துப் போருகிறதாய்
ஒன்றாய் இருந்தது தத்வபரமாக அடுக்கும் என்று இத் திருவாய் மொழி யளவும் வர அதிகரித்து –
இத் திருவாய் மொழி அளவிலே வந்தவாறே -இது காமுக வாக்யமாய் இருந்ததீ-என்று கை விட்டுப் போனானாம்
நிதித்யாசிதவ்ய -என்று விதிக்கிற பகவத் காமம் என்று அறிந்திலன் பாஹ்ய ஹானியாலே –
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் –என்ற இது -அனுபவிக்கிறார் -என்று பிள்ளான் பணிக்கும் என்ற இது
இவருக்கு முனியே நான்முகன் -அளவும் உள்ளது மானஸ அனுபவம் ஆகையாலே -அத்தோடு சேர விழும் இறே
அனுபவிக்கப் பாரிக்கிறார் -என்கிறவிடம் இத்தோடு போரச் சேர்ந்து இருக்கும் –
திரு உலகு அளந்து அருளினவனுடைய திருவடிகளை அனுபவிப்பதாக ஒருப்பட்டுக் கட்டிக் கொண்டார் –
அது ஒரு கால விசேஷத்திலேயாய்-தாம் பிறபாடராய்த் தோற்றுகையாலே
துணுக் என்று தாமான தன்மை இழிந்து -ஒரு பிராட்டி தசையைப் பிராப்தராய் -ஹர்ஷத்தால் சொல்லும் பாசுரம் போய்
-ஆற்றாமையாலே சொல்லும் பாசுரமாய் விட்டது-

ஆர்த்தோ வா யதி வா த்ருப்த-என்கிற விஷயத்தை அனுபவித்த இவர்க்கு இழவு வருகைக்கு பிரசங்கம் என் என்னில்
ஆமத்தில் சோறு பாதகம் –என்னுமத்தாலே நிதாநஜ்ஞாரான பிஷக்குகள் போஜன நிரோதனம் பண்ணுமா போலே
மேல் வரும் அனுபவங்கள் சாத்மிக்கைக்கு நாலடி பேர நின்றான்
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன் இறே
அனந்தரம் கலங்கினார் -மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் இறே இப்படி கலங்கினார்
அவன் தானே கொடுத்த அறிவும் விச்லேஷத்தில் அகிஞ்சித்கரமாம் படி இறே அவனுடைய வைலஷண்யம்
தத் தஸ்ய சத்ருசம் பவேத் –என்று இருந்தவள் தானே வேண்யுத்கர நாதிகளிலே ஒருப்பட்டாள் இறே
ஹம்ச காரண்ட வாகீர்ணாம் வந்தே கோதாவரீம் நதீம் -என்றும்
அசோகா சோகாப நுத சோகோ பஹத் சேதசம்-என்றும் இறே இவர்கள் வார்த்தையும்

பிராட்டிமார் தசை தான் உண்டாகிறபடி எங்கனே என்னில் -அனன்யார்ஹ சேஷத்வத்தாலும் –அநந்ய சரணத்வத்தாலும் –
அன்வயத்திலே தரித்து -வ்யதிரேகத்தில் தரியாது ஒழிகையாலும்-தத் ஏக போகராகையாலும் -அவர் நிர்வாஹகனாக
இத்தலை நிர்வாஹ்யமாகையாலும் பிராட்டிமார் தசை உண்டாகத் தட்டில்லை –
ஆனால் பிராட்டி தானாகப் பேசுவான் என் என்னில் தாமரை திருவடிகளுக்கு போலியாய் இருக்க -வையம் கொண்ட தடம் தாமரை
-என்று தாமரையாகவே திருவடிகளைப் பேசுவது போலே இங்கு பிராட்டியாகப் பேசுகிறது முற்று உவமை இருக்கிற படி
ராஷர்ஷி ப்ரஹ்ம ரிஷியான பின்பு ஷத்ரியத்வம் பின்னாட்டிற்று இல்லை இ றே -எதிர்த் தலையில் பும்ச்வத்தை அழித்து
பெண்ணுடை உடுத்தும் படி இ றே அவனுடைய புருஷோத்தமத்வம் இருப்பது

கூடும் இடம் குறிஞ்சி -அதுக்கு பூதம் -ஆகாசம் -பிரியும் இடம் -பாலை -அதுக்கு பூதம் -தேஜஸ் ஸூ –
ஊடலுக்கு ஸ்தானம் -மருதம் -அதுக்கு பூதம் -வாயு -பிரிந்தார் இரங்கும் இடம் -நெய்தல் -அதுக்கு பூதம் -ஜலம் –
பிரிந்தார் இரங்குவது நெய்தல் யாகையாலே -பிராட்டி தானும் தன் பரிகரமுமாக லீலா உத்யானத்தில் புறப்பட்டாளாய்-
தோழிமார் பூக் கொய்கையிலே அந்ய பரைகளாக-நாயகனும் தன்னோராயிரம் பிள்ளைகளும் தானுமாக வேட்டைக்குப் புறப்பட்டு வர
ஏவுண்ட மிருகம் இவனை இந்த உத்யானத்திலே தனியே கொண்டு வந்து மூட்டி அது மறைய தைவ யோகத்தாலே இருவருக்கும் சம்ச்லேஷம் பிரவ்ருத்தமாய்
-கூட்டின தைவம் பிரிக்கப் பிரிந்து
இனி இரண்டு தலையையும் அழித்தாகிலும் கிட்ட வேணும் -என்னும் ஆற்றாமை பிறந்து தன பரிசரத்தில் உள்ளார் -எம்மில் முன் அவர்க்கு மாய்வர் -9-9-5–என்கிறபடி
தளர்ந்து -கால் நடை தருவார் இல்லாமையாலே அப் பரிசரத்தில் வர்த்திக்கிற சில திர்யக்குகளைப் பார்த்து இவை வார்த்தை சொல்ல மாட்டாது என்னுமது
அறியாதே இவற்றுக்கு பஷபாதம் உண்டாய் இருந்ததாகையால் கடுகப் போய் நம் கார்யம் செய்ய வற்று என்று கமன சாதனமான பஷபாதமே பற்றாசாக
ராவண மாயையால் வரும் அதி சங்கையும் இல்லாமையாலே கண்ணால் கண்டவற்றை எல்லாம் தூது விடுகிறாள்
சக்கரவர்த்தி திருமகன் திருவவதரித்த பின்பு வானர ஜாதி வீறு பெற்றால் போலே காணும் ஆழ்வார்கள் திருவவதரித்து
திர்யக் ஜாதி வீறு பெற்ற படி என்று பட்டர் அருளிச் செய்வர்
இனி இவர்க்கு யாத்ருச்சிக்க சம்ச்லேஷமாவது -அநாதி காலம் இவரைத் தன்னோடு சேர விடுகைக்கு அவசர ப்ரதீஷனாய்ப் போந்தவன் இவர் பக்கல்
அப்ரதிஷேதம் உண்டாவதொரு அவகாசம் பெற்று -அவன் மயர்வற மதி நலம் அருளப் பெற்ற இது
இவர்க்கு விச்லேஷமாவது -அவன் கொடுத்த ஜன்மம் பேற்றோடு தலைக் கட்டப் பொறாமை
தூது விடுகைக்கு பற்றாசு தான் எது என்னில் -தன் மேன்மையாலே இத்தலையில் தண்மை பாராதே வந்து கலந்தான் -கிட்டினவாறே
தோஷ தர்சனத்தைப் பண்ணினான் -பிரிந்த அளவில் இது வன்றோ இருந்தபடி என்று அநாதரித்தான்
தோஷ தர்சனம் பண்ணும் அளவே அன்றிக்கே தமக்கு அபராத சஹத்வம் என்ற ஒரு குணம் ஓன்று நிரூபகமாய் இருப்பது ஓன்று –
அத்தை அறிவிக்க வரும் என்று அந்த அபராத சஹத்வம் பற்றாசாக தூது விடுகிறாள்

——————————————————————————–

அவதாரிகை –

தன் பரிசரத்தில் வர்த்திப்பதொரு நாரையைப் பார்த்து -என்றும் சேவலைக் கார்யம் கொள்ளுவார் பேடையை முன்னாகக் கார்யம் கொள்ள வேணும் -என்று
இருக்கும் தம் வாசனையாலே பேடையை முன்னிட்டுச் சேவலைப் பற்றி நீ என் தசையை அறிவித்து என்னையும் அவனையும் சேர்க்க வேணும் -என்கிறாள்
முதல் பாட்டில் ஆசார்யனுடைய ஞான வைபவத்தை அருளிச் செய்கிறார் —

அஞ்சிறைய மட நாராய் அளியத்தாய் நீயும் நின்
அஞ்சிறைய சேவலுமாய் யாவா என்று எனக்கு அருளி
வெஞ்சிறைப்புள் உயர்த்தார்க்கு என் விடுதூதாய்ச் சென்றக்கால்
வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செய்யுமோ –1-4-1-

அஞ்சிறைய
பிரஜை தாயினுடைய அவயவங்கள் எல்லாம் கிடக்க முலை யிலே வாய் வைக்குமா போலே -கமன சாதனமான சிறகிலே யாயிற்று முற்பட கண் வைத்தது –
நீர் பாய்ந்த பயிர் போலே பரஸ்பர சம்ச்லேஷத்தால் பிறந்த ஹர்ஷம் வடிவிலே தொடை கொள்ளலாம் படி இரா நின்றது -சிறை என்று சிறகு
ஆசார்யன் ஜ்ஞானத்தை அனுமித்து சிஷ்யன் உபசத்தி பண்ணுமா போலே சிறகிலே கண் வைக்கிறாள் –
மட –
ஏவிக் கார்யம் கொள்ளலாம் படி பவ்யத்தை தோற்ற இருந்தது –
சம்ச்லேஷத்திலே துவண்டு தூது போகைக்கு யோக்யமாம் படி இருக்கை
நாண் மடம் அச்சம் என்று ஸ்த்ரீத்வமாய் -பிரிவிலே வியசனம் அறியும் தன இனமான பேடையைப் பார்த்து சொல்லுகிறாள்
நாராய் –
அம்மே -என்னுமா போலே
அளியத்தாய்-
அவன் பொகட்டுப் போன சமயத்திலே ஆற்றாமை அறிவிக்கலாம் படி வந்து முகம் காட்டின அனுக்ரஹ சீலதை இருந்தபடி என் –
அளி -கிருபை -கிருபை பண்ணத் தக்கதாய் -என்றபடி
பம்பா தீரே ஹனுமதா சங்கதா-போலே வழி பறிப்பார் கையிலே அகப்பட்டு நிற்க தாய் முகத்திலே விழித்தால் போலே
செங்கழு நீர் மற்றும் தாமரை புஷ்பங்கள் கண்டதும் பிராட்டியை கண்டது போலே பெருமாள் மயங்கி நிற்கும் போது அன்றோ திருவடி வந்தது
நீயும் –
ச ப்ராதுச் சரனௌ காடம் நிபீட்ய ரகு நந்தன -சீதாமுவாச -என்றபடி
என்றும் சேவலைக் கார்யம் கொள்ளுவார் பேடையை முன்னிட்டுப் போலே காணும் கார்யம் கொள்ளுவது
நின் அஞ்சிறைய சேவலுமாய் –
பேடையை இட்டாயிற்று சேவலின் பக்கலில் பிரதிபத்தி -ஸ்ரீ யபதி என்னுமா போலே
பெண் அணைந்த வடிவு -என்று தோற்றா நின்றது ஆயிற்று
அது இட்ட வழக்கான நீயும் நீ இட்ட வழக்கான சேவலுமாய்
யாவா என்று
ஐயோ ஐயோ என்று
மிதுனமாய் இருக்கிறது தன் ஆர்த்தி பரிஹரிக்கைக்கு என்று இருக்கிறாள்
எனக்கு
ஏஹி பஸ்ய சரீராணி -என்று விரஹம் தின்ற தன் வடிவைக் காட்டுகிறாள்
அவனோடு கலந்து பிரிந்து -கண்ணாலே காணப் பெறுவது காண் என்று அபேஷையோடு இருக்கிற எனக்கு
அருளி
இரப்புக்கு செய்ததாகை அன்றிக்கே உங்கள் பேறாக அருளி
தயை பண்ணுகைக்கு அத்தலை குறைவற்றாப் போலே யன்றோ தயா விஷயமான இத்தலை குறைவற்றபடி
பகவத் விஷயத்திலும் உபகரிப்பார் பிரத்யுபகாரத்துக்கு அல்ல உபகரிப்பது
தங்கள் கிருபையாலே யாயிற்று -உபய விபூதி உக்தனை அவர்கள் உபகரித்தால் அவனுக்கு சத்ருசமாக உபகரிக்கலாவது இல்லையே இவனுக்கு
விக்ராந்தஸ்வம் சமர்த்தஸ்வம் ப்ராஜ்ஞஞஸ் வாநரோத்தம –என்றால் போலே இறே இவள் இவற்றை ஸ்லாகித்தது

எங்களை இங்கன் கொண்டாடுகிறது என் -உன் தசையைக் கண்டும் பொகட்டு போனவன் எங்கள் வார்த்தை கேட்கப் புகா நின்றானா –
இனித்தான் -நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி -என்கிறபடியே அங்குள்ளார் பரம சாம்யா பன்னராய் அன்றோ இருப்பது
நாங்கள் அவனுக்கும் அவர்களுக்கும் வாசி அறியும் படி என் என்று அன்றோ நாங்கள் இருப்பது -என்று அவற்றுக்குக் கருத்தாக மேல் வார்த்தை சொல்கிறாள்
வெஞ்சிறைப்புள் உயர்த்தார்க்கு –
அவர்கள் பரம சாம்யா பன்னராய் இருக்கையாலே -தனக்கு வ்யாவர்த்தக விசேஷணமாய் பெரிய திருவடியை த்வஜமாக உடையவனாக இருக்கும்
விரோதியைப் போக்கிக் கொண்டு வருகைக்கு அங்கே நமக்கு ஆள் உண்டு என்கிறாள் ஆதல்
நிரதயமாகப் பிரித்துக் கொண்டு புகையாலே அக்ரூர க்ரூர ஹ்ருதய -என்னுமா போலே சொல்லுகிறாள் ஆதல்
புள் உயர்த்தார்க்கு
புள்ளாலே வஹிக்கப் பட்டவர் -என்னுதல்
புள்ளை த்வஜமாக உடையவர் -என்னுதல்
என் விடுதூதாய்ச்
அவன் ஆள் விட இருக்கக் கடவ நான் அன்றோ விடுகிறேன்
விடு
க்ரியதாம் -என்கிறபடியே நான் ஏவ வன்றோ நீங்கள் போகிறது –
பெரு மிடுக்கரான பாண்டவர்கள் கிருஷ்ணனை தூது விட்டால் போலேயோ
அபலையாய் அத்யார்த்தையான நான் ஏவ வன்றோ போகிறது -பரார்த்தமாக தூது போகை கிடப்பது ஒன்றோ –
சென்றக்கால் –
எனக்கு முன்னே உங்களுக்கு உத்தேச்யம் அன்றோ சித்திக்கப் போகிறது -உங்கள் போக்கு அடிக் கழஞ்சு பெறாதோ
வன் சிறையில்
இவள் பாடு நின்றும் சென்றவற்றை சிறையிட்டு வைக்கிறான் அன்றே
இவர்களுக்கு முகம் கொடாதே அந்ய பரனாகை இறே இவைகளை சிறையிட்டு வைக்கை யாவது
ராஜ புத்ரர்களுக்கு பிராப்த காலங்களிலே வெற்றிலை இடாத போது மாந்துவர்கள் இறே
என் விடு தூதாய் சென்றக்கால் -வன் சிறையில் அவன் வைக்கில்
நீங்கள் ஏதேனும் அவனுக்குத் தூது போகிறிகளோ-சிறை கட்டுதல் சிங்க விளக்கு எரித்தல் -செய்யில் செய்வது என் என்று கூசுகைக்கு –
எனக்கு தூது போனாரை-பரிஷ்வங்கோ ஹனுமதா -என்னுமா போலே மார்பிலே அணைக்கும் காணுங்கோள் –
நான் அணைய ஆசைப்படுகிற மார்பன்றோ உங்களுக்கு பரிசிலாக புகுகிறது –
அவன் வைக்கில்
வ்யச நேஷூ மனுஷ்யாணாம் -என்று இருக்குமவன் வைக்குமோ -சிரசா வஹியானோ
வைப்புண்டால் என் செய்யுமோ —
அது பொல்லாதோ கிடைக்குமாகில்
பரார்த்தமாக சிறை இருக்க கிடைப்பது ஒன்றோ
ராவணன் தேவ ஸ்திரீகளை சிறையிட்டு வைக்க தான் அவர்கள் காலில் விலங்கைத் தன் காலில் கோத்து சிறை மீட்டவள் இ றே

————————————————————————————-

அவதாரிகை –

சில நாரைகளை தூது போக வேணும் என்று இரந்தாள் கீழே-
அங்கே போனால் சொல்லும் பாசுரத்தை குயில்களுக்குச் சொல்லா நின்றாள் -அந்ய து பக்ராந்த மன்யதா பதிதம்-என்னும்படியாய் வந்து விழுந்தது
இத்தனையும் கலங்கிற்று இலள் ஆகில் இவள் பிரிந்த விஷயத்துக்கும் நாட்டார் பிரிந்த விஷயத்துக்கும் வாசி இன்றிக்கே ஒழியுமே
இப்படிக் கலங்கப் பண்ணாத அன்று குணாதிக விஷயத்துக்கு நமஸ்காரமாம் அத்தனையே இறே
இரண்டாம் பாட்டில் மதுர பாஷியாய் இருக்கும் என்கிறார் –

என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு என் தூதாய்
என் செய்யும் உரைத்தக்கால் இனக்குயில்காள் நீரலிரே
முன் செய்த முழு வினையால் திருவடிக் கீழ் குற்றேவல்
முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே –1-4-2-

என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு
என் –
பிரிந்த சமயத்திலும் -என்னுடையவன் -என்று சொல்லலாம்படிகாணும் கலக்கிற சமயத்திலே அவன் இவள் இட்ட வழக்காய் இருந்தபடி
அன்றிக்கே -பிரிகிற சமயத்திலே தான் வரும் அளவும் இவள் தரிக்கைக்காக -இது எங்கே இருக்கில் என் -எங்கே போகில் என் உன் சரக்கன்றோ
-என்று சொல்லிப் போமே-அத்தாலே ஆகவுமாம்
என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு-
ஸ்வாபாவிகமான ஐஸ்வர்யத்தாலும் சிவந்து இருக்கும்
ஸ்வகீய வஸ்துக்கள் பக்கல் வாத்சல்யத்தாலும் சிவந்து இருக்கும்
மதுபாநபத்தரைப் போலே இவளோட்டை கலவியாலும் சிவந்து இருக்கும்
பிரிவாலே அரையாறு பட்டு சிவந்து இருக்கும்
இவை எல்லாம் இவள் அனுபவித்தவள் இ றே
முதல் திருவாய் மொழியிலே ஐஸ்வர்யம்
மூன்றாம் திருவாய் மொழியிலே வாத்சல்யம்
இத் திருவாய் மொழியிலே கலவியும் பிரிவும்
பெருமானார்க்கு –
பிரிகிற போது கண்ணாலே நோக்கி அனந்யார்ஹை யாக்கிப் போன படி
ஸ்வபாவிகமான ஐஸ்வர்யத்துக்கு மேலே -இத்தலையில் ஒடுக்கு மாட்டால் உண்டான ஐஸ்வர்யமும் உண்டாகையாலே இரட்டித்து இருக்கும் இ றே

என் தூதாய்
கடல் ஏறி வடிந்தால் போலே காணும் கிடக்கிறது
அவனோடு கலந்து பிரிந்து வெறும் தரையாய் இருக்கிற எனக்கு தூதாய்
என் செய்யும் உரைத்தக்கால் –
உபய விபூதியும் கண்டது உங்களுக்கு கிஞ்சித்கரிக்க என்று இருக்கிறாள் –
உரைத்தக்கால் –
அவனைக் கொடு வந்து சேர்க்கைச் சொல்லுகிறேனோ -ஒரு உக்தி நேர்ந்தால் என் செய்யும்
இனக்குயில்காள் –
என்னைப் போல் தனி இருக்கிறீர்கள் அன்றே
நீரலிரே-
நீர்மைக்கு நீங்கள் அன்றோ -நானும் அவனுமான போது கேட்ட வார்த்தைக்கு பிரதி வசனம் பண்ணின நீங்கள் அவன் பிரிந்தவாறே வேறு சிலர் ஆனிகளோ

முன் –
தான் பாபம் பண்ணிப் போருகிற காலம் சாவதியோ செய்த –
சங்கல்ப்பித்து விட்ட அளவேயோ
முழு வினையால் –
அது தன்னில் ஏதேனும் அகஞ்சுரிப் பட்டதுண்டோ -என்னால் பரிக்ரஹிக்கலாதல் -தன்னால் பரிஹரிக்க ஒண்ணாது ஒழிதல் செய்யில்
அன்றோ எனக்கு இழக்க வேண்டுவது –
திருக் கோட்டியூரிலே தெற்கு ஆழ்வான் கோளரி யாழ்வானுக்கு தீர்த்த துறையிலே சொன்ன வார்த்தை –
ஒரு முழுக்காலும் இரண்டு முழுக்காலும் போகாது காண்-
தெற்கு ஆழ்வார் கையிலே திரு வாழியாலே வினையை அறுத்துக் கொண்டு போக்கில் அத்தனை ஒழிய ஓன்று இரண்டு முழுக்கால்
போகாது காண் நான் பண்ணின பாபம் -என்று –
திருவடிக் கீழ் –
பிராமணர் பிச்சு ஏறினாலும் ஒத்துச் சொல்லுமா போலே இவர் பிராட்டியானாலும் முலையால் அணைக்க நினையார்
-திருவடிகளில் அணையத் தேடும் அத்தனை
குற்றேவல் –
திருவடிகளில் கிட்டி அந்தரங்க வ்ருத்தி பண்ண ஆசைப்படும் அத்தனை
திருவடிக் கீழ் குற்றேவல் முன் செய்ய முயலாதேன்
ஏற்கவே கோலாத நான் -என்னுதல்
முன் கிரியதாமிதி மாம் இவ -என்கிறபடி இன்னத்தைச் செய் என்று ஏவ திரு முன்பே அடிமை செய்ய முயலாதேன் -என்னுதல்
அகல்வதுவோ விதியினமே —
திருவடிகளில் அடிமை செய்கைக்கு ஈடாக இருப்பதொரு சாதன அனுஷ்டானம் என் தலையால் பண்ணாத நான் அகன்றே போம் இத்தனையோ
முதல் இல்லாதார் பலிசை இழக்கும் அத்தனை அன்றோ -என்ன –முதல் இல்லாதார் அன்றோ பலிசை இழப்பார்
அவன் தானே முதலாக இருக்கும் கோஷ்டி இறே இவர்கள் கோஷ்டி
களை கண் மற்று இலேன் -என்றும்
உன் சரண் அல்லால் சரண் இல்லை -என்றும்
மைத்து எழுந்த மா முகிலே பார்த்து இருக்கும் மற்றவை -என்றும்
நெறி வாசல் தானாய் நின்றானை -என்றும்
விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்று அல்லால் -என்றும் –
வாழும் சோம்பர் -என்றும்
இப்படிகளில் இறே இவர்கள் கோஷ்டியிலும் வார்த்தைகளும் இருக்கிற படி
விதியினமே
விதியினன் -என்றாய் -பாபத்தை உடையேனான நான் அகன்றே போம் அத்தனையோ -என்னுதல்
இனம் -என்கிற இத்தை -இன்னம் என்றாக்கி -எங்கள் அபிமதம் பெறுகைக்கு எங்கள் பக்கல் ஒரு நன்மை இல்லாத பின்பும் தாழ்க்கும்
இத்தனையோ -என்கிறாள் என்று பிள்ளை திரு நறையூர் அரையர் பணிக்கும் படி –விதியினம் -பாவியோம் -என்றபடி

————————————————————————————-

அவதாரிகை –

அகல்வதுவோ -என்றால் போலே சொல்லுகிற பக்தி வாதங்கள் நமக்குத் தெரியாது -அவசியம் அநு போக்தவ்யம் -என்று சொல்லுகிறபடியே
அனுபவித்தே அற வேணும் -என்று ஈஸ்வர அபிப்ப்ராயமாகக் கொண்டு -நான் பண்ணின பாபமேயோ அனுபவித்தாலும் மாளாதது என்று
சொல்லுங்கோள்-என்று சில அன்னங்களை இரக்கிறாள்
மூன்றாம் பாட்டில் சார அசார விவேகஞ்ஞன் என்கிறார் –

விதியினால் பெடை மணக்கும் மென்னடைய அன்னங்காள்
மதியினால் குறள் மாணாய் வுலகிரந்த கள்வர்க்கு
மதியிலேன் வல்வினையே மாளாதோ வென்று ஒருத்தி
மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே –1-4-3-

விதியினால்
நீங்கள் சாஸ்திரம் சொல்லுகிறபடி கலக்கையாலே பிரிவின்றியே இருந்தி கோள்-
இவள் அடைவு கெடக் கலக்கை இறே எனக்கு பிரிவு வந்தது -என்கிறாள் –
உங்களுடைய பாக்யத்தாலே -என்னுதல் –
என்னுடைய பாக்யத்தால் என்னுதல்
அபிமத சம்ச்லேஷம் புண்ய பலம் -அபிமத விச்லேஷம் பாப பலம்
தங்களுடைய ஸூ க்ருத்தத்தாலே அன்றியே இவை சேர விருக்கிற இருப்பு இவள் பாக்யமாகவுமாம் –
பெருமாள் பிராட்டியைப் பிரிந்து கடலும் மலையும் அரித்துக் கொண்டு வாரா நிற்கச் செய்தே -ராஜ்ய தாரங்களை இழந்த மகா ராஜரைக் கண்டு
அவர் குறை தீர்ந்த பின் இறே தம் யளவில் நெஞ்சு சென்றது
அங்கன் அன்றிக்கே இவை குறைவற்று இருக்கிற இது தான் இவள் கார்யமாய் இருக்கும் இறே
நீர்மை உடையாருக்குத் தந்தாம் இழவிலும் பிறருடைய இழவே நெஞ்சில் முற்படப் படுவது
பெடை மணக்கும்
பேடையோடே கலக்கும் -பேடையினுடைய கருத்து அறிந்து -அத்தை உகப்பிக்கை –
மென்னடைய அன்னங்காள்
இவ்வன்ன நடை கொண்டோ என் கார்யம் செய்யப் புகுகிறது
சா ப்ரச கலந்தீ -என்னுமா போலே இளைய பெருமாளுடைய ஜ்யா கோஷம் செவிப்பட -அனந்தரம் மது பானத்தாலே வந்த கலக்கமும் தெளிந்து
-கழுத்தில் மாலையும் அறுத்துப் பொகட்டு -இந்தச் சீற்றத்துக்கு நாம் முன்னிற்க ஒண்ணாது -என்று தாரையைப் புறப்பட விட –
தாரையை -எண்ணெயை -விட்டு ஆற்ற சிலேடை –அவள் கலவியால் உண்டான பாரவச்யம் அடங்கலும் நடையிலே தோற்றப் புறப்பட்டாள்
போலே இரா நின்றதாயிற்று இவற்றின் நடையும் -இளைய பெருமாளுடைய திரு உள்ளத்தில் சிவ்ட்கு தாரையை இட்டு ஆற்ற வேண்டிற்று காணும்
சா -ஒரு கலவியும் பிரிவும் வேண்டாத படியான நடை அழகை உடையவள்
ப்ரஸ் கலந்தீ –சம்ச்லேஷத்தால் உண்டான த்வட்சியாலே தடுமாறி -அடி மேல் அடியாக இட்டு வைத்தாள்
மதவிஹ்வலாஷீ –மதுபா நாதிகளால் தழு தழுத்த நோக்கை உடையாளாய் இருந்தாள்
ப்ரலம்ப காஞ்சீ குண ஹோம ஸூ தரா –அரை நூல் வடம் இழுப்புண்டு வரும்படி படுக்கையில் கிடந்த படியே பேணாதே வந்தாள்
ச லஷணா-சம்போக சிக்னங்கள் காணலாம் படி வந்தாள்
லஷ்மண சந்தி தானம் ஜகாம -தாய்க்கு ஒளிப்பது உண்டோ என்று புறப்பட்டு வந்தாள்
தாரா -தாரை யானவள்
இளைய பெருமாள் திரு உள்ளத்துக்கு சிவட்கு எத்தாலே ஆற்றலாம் என்று மகா ராஜரும் திருவடியும் விசாரித்து
வேறு ஒன்றால் ஆற்றுமது அல்ல -தாரையை இட்டு ஆற்ற வேணும் -என்று தாரையை விட விட்டார்கள்
நமிதாங்க யஷ்டி -கிஷ்கிந்தா -33-37–உருக்கு பதத்திலே வளைந்தவை நிமிர்க்க ஒண்ணாதாப் போலே இத் துவட்சி நிரூபகம் இவளுக்கு என்று
தோற்றும்படி இருந்தாள் –அப்படிப் பட்ட நடை அழகாலே அவரைத் துவக்கி கார்யம் கொள்ளவற்று இவையும் -என்று இருக்கிறாள் –

மதியினால் –
அவர் சால தூர தர்சிகள் கிடி கோள் -ராவணனைப் போலே தலை யறுத்து விட ஒண்ணாத படி ஔதார்யம் என்ற ஒரு குண
லேசத்தை ஏறிட்டுக் கொண்டு இருந்தான்
இந்த்ரன் ராஜ்யத்தை இழந்து நின்றான் -இரண்டுக்கும் அவிருத்தமாக செய்யலாவது என் என்று
கோ சஹச்ர பிரதாதாரம் -என்கிறபடியே கொடுத்து வளர்ந்த கையைக் கொண்டு நீர் ஏற்று அவனுக்குக் கொடுத்த விரகர்க்கு
குறள் –
கோடியை காணி யாக்கினால் போலே -பெரிய வடிவு அழகை கண்ணாலே முகந்து அனுபவிக்கலாம் படி சிறுக்கின படி
மாணாய்
உண்டு -என்று இட்ட போதொடு இல்லை -என்று தள்ளிக் கதவடைத்த போதொடு வாசியற முகம் மலர்ந்து போம்படி
இரப்பிலே தழும்பு ஏறின வடிவை உடையனாம் படி
வுலகிரந்த கள்வர்க்கு
தன் சங்கல்ப்பித்தினால் உண்டாக்கின லோகத்தை கொள்வன் நான் -என்று இரந்த
கள்வர்க்கு –
வஞ்சகர்க்கு-என்று திருமாலை யாண்டான் நிர்வஹிக்கும் படி
எம்பெருமானார் -ஒன்றை நினைத்து ஒன்றைச் செய்தவர்க்கு -என்று அருளிச் செய்வர்
மகா பலியை வஞ்சித்ததும் என்னை வசீகரிக்கைக்காக
கீழ் தான் -பெரு நிலம் கடந்த நல்லடிப் போது -என்று இறே ஆசைப் பட்டதும்
உலகம் கொண்ட அடியன் அறுவரு மேனி மாயத்தான் ஆகிலும் கொடிய என்நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் -என்றும்
அன்று ஒரு கால் வையம் அளந்த பிரான் வாரான் என்று ஓன்று ஒரு கால் சொல்லாது உலகு -என்றும் இறே இவர் கிடப்பது
திரு மங்கை ஆழ்வாரும் -முன்னம் குறள் உருவாய் மூவடி மண் கொண்டு அளந்த மன்னன் சரிதைக்கே மாலாகி பொன் பயந்தேன் -என்று
இவர்கள் எல்லாரும் ஈடுபடுவது இச் செயலுக்கு இ றே

மதியிலேன் –
பிரிகிற சமயத்திலே -போகாதே கோள் -என்றேன் ஆகில் இப்பாடு படாது ஒழியல் ஆயிற்றே -அறிவு கேடியானேன்
வல்வினையே மாளாதோ –
இவள் ஒரு தீர்க்க சிந்தயந்தீ யாயிற்று -எல்லைச் சதிரியாய் குரு தர்சனத்திலே முடிந்தாள் இறே அவள்
தச் சிந்த விமலாஹ் லா தேத்யாதி –அவன் பக்கல் நெஞ்சை வைக்கையாலே புண்ய பலம் அனுபவித்தாள்
அன்னினைவின் படி அனுபவிக்கப் பெறாமையாலே பாப பலம் அனுபவித்தாள்
ஆகையால் புண்ய பாபங்கள் இரண்டையும் அரை ஷணத்தில் அனுபவித்தாள் இ றே அவள்
வென்று ஒருத்தி
ஒருத்தி என்றால் அறியுமோ என்னில் எய்தவன் கை உணராதோ
இன்ன காட்டில் மான் பேடை ஏவுடனே கிடந்தது உறையா நின்றது -என்று ஊரில் வார்த்தை யானால் எய்தவன் கை உணராதோ
நீ யன்றோ எய்தாய் என்று சொல்ல வேண்டா இ றே
ஒருத்தி
சம்சார விபூதியில் உள்ள இவள் ஒருத்தியும் இ றே
சம்சாரிகள் புறம்ப்ர் அந்ய பரர
நித்ய ஸூரிகளுக்கு விச்லேஷம் இல்லை
மற்றை ஆழ்வார்கள் இவருக்கு அவயவமாய் இருப்பார்கள்
பூதத் தாழ்வார் தலை -பொய்கை பேய் ஆழ்வார்கள் -திருக் கண்கள் -பெரியாழ்வார் -திரு முகம்
திருமழிசை ஆழ்வார் -கண்டம் -குலசேகரர் திருப் பாண் ஆழ்வார் -திருக் கரங்கள்
தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -திரு மார்பு -திரு மங்கை ஆழ்வார் -திரு நாபி -மதுரகவிகள் எம்பெருமானார் -திருவடிகள் –

மதி எல்லாம் உள் கலங்கி
மதி கலங்கி
அறிவு அழிந்தாள் என்னுங்கோள் -தன் அறிவு அழிந்தாள் ஆகிலும் நாம் கொடுத்த அறிவு உண்டு என்று இருப்பர்-
மதி எல்லாம் கலங்கி
நாம் கொடுத்த அறிவு கொண்டு -தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்று இரானோ என்று இருப்பர்
அறிவு தந்தார் தாம் அன்றோ என்று அறிவியுங்கோள்
தாம் மயர்வு அறுத்துத் தந்த ஜ்ஞானப் பரப்பு எல்லாம் கலங்குகைக்கு உடலாயிற்று என்னுங்கோள்
மேல் எழச் சிறிது கலங்கிற்றாகிலும் பின்னையும் நாம் கொடுத்த அறிவு அன்றோ -அப்படி கலங்குமோ என்பர்
மதி எல்லாம் உள் கலங்கி
தாம் தந்த மயர்வறு மதி நலம் -எல்லாம் அடி மண்டியோடே கலங்கிற்றே என்னுங்கோள் -அத்தனையோ நாம் இருந்தோம்
பின்பு நாம் போனவாறே அறிவு கொடுத்துக் கொள்ளுகிறோம் என்று இராமே
மயங்குமால் –
மயங்கினாள் என்னில் -இனிப் போனால் செய்வது என் என்று இருப்பர் -முடியும் தசை யாயிற்று என்னுங்கோள்
என்னீரே —
உங்கள் தலையிலே பழியைத் துடைக்கப் பாருங்கோள்
அறிவித்த பின்பு வாராது ஒழிந்தால் அவனதன்றோ அவத்யம்
ஆர்த்த த்வனி பொறுக்க மாட்டான் -அறிவியுங்கோள்
என்னீரே –
உங்களுக்கு ஸ்வரூபம்
அவனுக்கு குணம்
எனக்கு சத்தை
உங்களுக்கு ஒரு உக்தி

——————————————————————————————-

அவதாரிகை –

அனுபவித்தாலும் மாளாதது நான் பண்ணின பாபமேயோ -என்று நின்றது கீழ்
இவள் அனுபவித்தாளோ பின்னை என்னில் -அவன் அரை ஷணம் தாழ்ந்து முகமும் மாற வைத்த போதே எல்லாம் அனுபவித்தாள் இ றே
இவ்வளவிலே சில மகன்றில்கள் நமக்கு கிஞ்சித்கரிக்க நல்லவளவு என்று -நாங்கள் இங்குத்தைக்கு செய்ய வேண்டுவது என்ன என்று
வந்து முகம் காட்டிற்றனவாக கொண்டு அவற்றைப் பார்த்து
என் தசையைக் கண்டு வைத்து இரங்காதே போனவனுக்கு நான் எத்தைச் சொல்லுவது -என்று நிராசையாய் பின்னையும் சாபலத்தாலே
பல கால் சொல்லு மறுத்தார்களுக்கு சொல்லுவாரைப் போலே இத்தனையும் சொல்ல வல்லிகளோ மாட்டிகளோ -என்கிறாள் –
நாலாம் பாட்டில் விக்ரஹ சௌந்தர்யத்தை அனுசந்திக்கிறார்

என்நீர்மை கண்டிரங்கி -இது தகாதென்னாத
என்நீல முகில் வண்ணர்க்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ
நன்னீர்மை இனியவர் கண் தங்காது என்று ஒரு வாய்ச் சொல்
நன்னீல மகன்றில்காள் நல்குதிரோ நல்கீரோ –1-4-4-

என்நீர்மை கண்டிரங்கி –
என் நீர்மை யுண்டு -என் ஸ்வ பாவம் -என் மார்த்வம்
கண்டிரங்கி இது தகாதென்னாத-
இத்தைக் கண்டு தயை பண்ணி -நாம் பிரியுமது தகாது -என்னாதே பொகட்டுப் போனவருக்கு
பட்டரை ஒரு தமிழன் -கேட்டு இரங்கி -என்னாதே கண்டு இரங்கி -என்னப் பெறுமோ என்ன
அணைத்த கை நெகிழ்த்த அளவிலே வெளுத்த படி கண்டால் பிரியத் தகாது என்று இருக்க வேண்டாவோ
இப்படி கூடுமோ என்னில் புல்லிக் கிடந்தேன் -திருக் குறள் -1187- இத்யாதி காதலர் தொடுவுழி -குறும் தொகை -399-இத்யாதி
உனக்கு இத் தமிழ் போதாதோ -என்றார்

என்நீல முகில் வண்ணர்க்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ
இத்தசையிலும் என்னுடையவன் என்னும் படி காணும் முகம் கொடுத்த படி கலந்த போது –
அவர்க்கு நான் சொல்லி விடுவது எத்தை -என்கிறாள்
திரு முகம்-பிராட்டியின் முகம் — மறுத்து போனவருக்கு எத்தைச் சொல்வது என்கிறாள் காணும்
இங்கன் சொல்லுவான் என் என்னில் கண்டு இரங்காதவரோ-கேட்டு இரங்கப் புகுகிறார் -என்னுமத்தாலே –
கண்டானோ பின்னை -என்னில் ஏன் -கண்டிலனோ -கலக்கிற சமயத்தில் கை நெகிழ்ந்த இடம் எல்லாம் வெளுக்கக் கண்டு இருக்குமே
அன்றிக்கே -இவ்வளவிலே சந்நிஹிதனாய் என் தசையைக் கண்டு இதுக்கு ஒரு போக்கடி பாராதே உங்கள் பக்கலில்
கேட்டு அறிய இருக்கிறவருக்கு என்னவுமாம் –
என் நீர்மை
அவனை அனுபவிக்குமதிலும் -அவனைப் பிரிந்து நோவு படுகிற தன் ஸ்வ பாவத்தைக் கட்டிக் கொண்டு கிடக்க அமைந்து இரா நின்றது காணும்
கண்டிரங்கி
எத்திறம் என்னா -மோஹித்து உடம்பு வெளுத்து கிடக்கும் படி கண்டால் பிரியப் பொழுது என்று இருக்க வேண்டாவோ
இது
‘தன் தசை தான் தனக்கும் பேச்சுக்கு நிலம் அல்ல காணும்
என் நீல முகில் வண்ணர்க்கு
அடியில் வடிவைக் காட்டிக் காணும் அனந்யார்ஹம் ஆக்கிற்று
இவ்வடிவில் புகர் அகவாயிலும் சிறிது உண்டாகப் பெற்றது இல்லை
இல்லையோ என்னில் யாமுடை ஆயன் தன் மனம் கல்லிறே
என் சொல்லி யான் சொல்லுகேனோ
என்ன பாசுரத்தை இட்டு எத்தை நான் உங்களுக்கு சொல்லி விடுவது
நான் சொல்லி விட இருக்கிறவன் நீங்கள் சொல்லும் அளவையோ பார்த்து இருக்கிறது
கண்டு இரங்காதவர்க்கு நான் எத்தைச் சொல்லுவது என்று நிராசையாய் பின்னையும் சாபல அதிசயத்தாலே வார்த்தை சொல்லுகிறாள்
திரு முகம் மறுத்தவன் கடையீட்டுக்கு கேட்கப் புகுகிறானோ
ஸ்ரீ கோபிமார்-அதவா கிம் ததாலாபை -என்ற அனந்தரத்திலே அப்யசௌ மாதரம் த்ரஷ்டும் சக்ருதப்யாகமிஷ்யதி -என்னுமா போலே
-இக் கிருஷ்ணன் பிதற்று ஒழிய வேறு ஓன்று இல்லையோ -என்னா -கலந்த நாம் அன்றோ வேண்டாதது -பெற்ற தாயைக் காண
வாகிலும் இங்கனே ஒரு கால் போதானோ என்பார்கள் இ றே
நன்னீர்மை
நல்லுயிர்
இனி
ஆனவளவும் கால் கட்டிப் பார்த்தாள் போலே காணும்
அவர் கண் தங்காது
சேஷியான உம்முடைய பக்கலிலே தங்கில் தங்கும் அத்தனை -ந சாஸ்ய மாதா -பெருமாள் பக்கல் குறையேயாய்-தன பக்கல் குறை
தோற்றாதபடி பிராட்டி அருளிச் செய்தவாறே -திருவடி -நாமோ தான் இங்கு நன்றாகச் செய்தோம் -பெருமாளை பிரிந்த அநந்தரம்
முடிந்தது என்னும் வார்த்தை கேட்கப் பெற்றது இல்லையே -என்ன
மாதா -என்னும் பிதா -என்னும் பலர் பக்கலிலே பாலி பாயக் கடவதான ச்நேஹத்தை பெருமாள் என் ஒருத்தி பக்கலிலும் ஒரு மடை செய்து போந்தார்
அவர் இவ்வாற்றாமையாலே உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடறுத்துக் கொண்டு வரக் கொள்ள
விடாயன் தண்ணீர் பந்தலில் வரக் கொள்ள சால் உருண்டு கிடந்தால் போலே ஆக ஒண்ணாது என்று நோக்கி இட்டு வைத்தேன் அத்தனை
அவரைக் கண்ட பிற்றை நாள் இருந்தேனாகில் காண் நீ இவ்வார்த்தை சொல்வது என்றாள் இ றே –
ஒரு வாய்ச் சொல்
ஒரு உக்தி நேர அமையும் -வாசா தர்ம மவாப்நுஹி
நன்னீலம் இத்யாதி
அவர் நீல முகில் வண்ணராய் இருந்தார்
நீங்களும் நீல மகன்றில் களாய் இருந்தீர்கள் -செயலும் அவரைப் போலே ஆகிறதோ -இத்தனையும் செய்கிறிகளோ-முதல் வார்த்தையிலே
பதின் கால் சொல் மறுத்தாரைச் சொல்லுமா போலே சொல்லுகிறாள் இறே ஆற்றாமையின் கனத்தாலே

—————————————————————————————–

அவதாரிகை –

எங்களை விடீர் -முடிவார்க்கு வேண்டாவிறே -ஜீவிக்க நினைத்து இருக்கிற தமக்கு தாம் வேண்டாவோ -என்கிறாள்
தம்முடைய நாராயணத்வம் ஒறுவாய்ப் போகாமே நோக்கிக் கொள்ளச் சொல்லும் -என்கிறாள் –
அஞ்சாம் பாட்டில் நினைத்தது கிட்டும் அளவும் சலியாத சுத்த ஸ்வபாவன் என்கிறார் –

நல்கித்தான் காத்தளிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே
நல்கத்தான் ஆகாதோ நாரணனைக் கண்டக்கால்
மல்கு நீர்ப் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகே
மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகம் கொண்டு அருளாயே –1-4-5-

நல்கித்தான் காத்தளிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே
நல்கி -விபூதி ரஷணம் பண்ணும் போது-கர்த்தவ்ய புத்த்யா வன்றிக்கே-பேறு தன்னதாக கிடீர் ரஷிப்பது-எனக்கு தன் பக்கல் உண்டான
வ்யாமோஹம்-தனக்கு விபூதியில் உண்டாயிற்று ரஷிப்பது
தான் -அபேஷிப்பார் இன்றிக்கே இருக்க தானே ரஷிக்குமவன் –
பொழில் எழும் -கீழும் மேலும் ஒன்றாக நினைத்துச் சொல்லுகிறார் ஆதல் -சப்த த்வீபதியான பூமியைச் சொல்லுகிறதாதல்-
ஸ்வ சரீர ரஷணம் பண்ணுவது சிநேக புரஸ் சரமாக இ றே
நாம ரூப விபாக நர்ஹமாக கிடந்த வன்று ஆர் இருந்து அபேஷிக்க இத்தை உண்டாக்கிற்று
சக்த்யவச்தை பரப்பை போலே தான் என்கிற சொல்லுக்கு உள்ளேயாய் தன்னையிட்டு வ்யவஹரிக்க வேண்டின வன்று தன் மேலே
ஏறிட்டுக் கொண்டு நோக்கினான் ஆயிற்று
காத்தளிக்கும் -காத்துக் கொடுக்கும் என்னுதல் –நோக்கி ரஷிக்கும் என்னுதல் –
வினையேற்கு நல்கத்தான் ஆகாதோ
இல்லாத வன்று உண்டாக்கினாய்
உண்டாக்கினதுக்கு பலம் கர்மத்தை ஏறிட்டுக் கை விடுகைக்காகவோ
ஸ்வ ஜன ரஷணம் பண்ணலாகாதோ
நாட்டுக்கு இட்ட நினைப்பு அந்தபுரத்துக்குஅரிதாக வேணுமோ
வினையேற்கே –
கடலிலே ஏற்றம் இட்டு தண்ணீர் அரிதாம் படியான பாபத்தைப் பண்ணுவேனே
நாரணனைக் கண்டக்கால்
ஜீவ சமூஹத்தின் உடைய ஸ்வரூப ஸ்திதயாதிகள் ஸ்வா தீனமாய் -இவை பிரகாரமாய் தான் பிரகாரியாய் –
இவற்றிலே ஓன்று குறையிலும் தம் இழவாம் படி இருக்கையாலே நாராயணன் என்று விருதூதிக் கொண்டு திரிகிறவரைக் கண்டக்கால்
இப்பேர் யோக ரூடியோ என்று இருந்தோம் மகா வ்ருஷத்தோபாதியோ–கள்ளிச் செடி-என்று கேளுங்கோள்
மல்கு நீர்ப் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகே
உன் செயல் பரார்த்தமாய் இருந்ததீ
பெருகா நின்றுள்ள நீரை உடைத்தான நீர் நிலம் உண்டு கொடித் தோட்டம் -அதிலே
பேடையின் வாய்க்கு அடங்குவது தேடா நின்றது -புள்ளுப் பிள்ளைக்கு இறை தேடும் –என்னக் கடவது இ றே
கயல் உகளா நிற்கச் செய்தே இ றே பிள்ளை வாய்க்கு அடங்குவது தேடுவது
வண் சிறு குருகே
குருகு – -கொய்யடி நாரை -வண்மை அழகும் ஔதார்யமும்
கைப்பட்ட இரை தன மிடற்றுக்கு கீழே இழிந்ததாயிற்று
நான் உபவாசக்ரிசையாய் இருக்க நினையாதே இருக்கும் அவனைப் போலே அன்றே உன் ஔதார்யம்
சிறு குறுகே-
கார்ய காலத்திலே ப்ருஷதம் சகமாத்ரமாக வேண்டா -தூது போகைக்கு ஸ்ரமம் செய்து இருப்பாரைப் போலே இருந்தது உன் வடிவில் லாகவம்

மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகம் கொண்டு அருளாயே
இதுவும் ஒரு நீர் நிலம் இருக்கிறபடி பாராய்
இரை தேடுகிற இத்தை விட்டு இத்தைப் பார்க்குமோ என்னில் -பார்க்கும் இறே -இங்கேயும் சேலும் கயலும் உண்டாகையாலே
மல்கு நீர்க் கண்ணேற்கு
தனக்கு நிரூபகம் கண்ண நீர் போலே காணும் -அதாவது
கலவியில் ஆனந்த ச்ரூ-பிரிவிலே சோக ச்ரூ
ஒரு வாசகம் கொண்டு
நேரே உடம்பைத் தர வேணும் -என்று சொல்ல மாட்டாளே -மறுப்பாரோ -என்னும் பயத்தாலே
மறுக்கும் வார்த்தையும் அமையும் இத்தலைக்கு -அவர் பக்கல் உள்ளது ஒன்றாம் அத்தனையே வேண்டுவது
தாரான் தரும் என்ற இரண்டத்தில் ஒன்றத்தனை -என்று இறே மற்ற ஒரு பிராட்டிமார் வாசகம்
மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி விடை தான் தருமேல் மிக நன்று -என்றும்
பாவி நீ என்று ஓன்று சொல்லாய் -என்றும் இறே இருப்பது
அருளாயே –
அவை திர்யக்குகளாகவும்–தான் ஜனக குல ஸூந்தரியாகவுமாம் -உபகரிப்பது பகவத் விஷயமானால் இங்கன் அல்ல சொல்ல ஒண்ணாதே
நம்பி ஏறு திருவுடையான் தாசர் திரு நாட்டுக்கு நடந்தார் -என்று பட்டருக்கு விண்ணப்பம் செய்ய துணுக என்று எழுந்து இருந்து
அவர் ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடன் பரிமாறும் படிக்கு திரு நாட்டுக்கு எழுந்து அருளினார் என்ன வேணும் காண்-என்று அருளிச் செய்தார் –

——————————————————————————————–

அவதாரிகை –

எங்கள் ஆற்றாமை பரிஹரித்திலர் ஆகிலும் தம்முடைய நாராயணத்வம் ஒறுவாய்ப் போகாமே நோக்கிக் கொள்ளச் சொல்லுங்கோள்–என்று நின்றது கீழ் –
இதுக்கு அவர்க்கு மறுமாற்றம் -நம்முடைய நாராயணத்வம் அழிய வமையும் -தரம் அல்லாதார் உடன் கலந்து வரும் அவத்யத்தில் காட்டில் -என்று இறே
நமக்கு அவத்யம் வாராமே -எங்கள் சத்தையும் கிடைக்கைக்கு ஒரு வழி யுண்டு -தாம் அழகு செண்டேறப் புறப்படுதல் –
ஆனைக்கு அருள் செய்யப் புறப்படுதல் செய்வன சில உண்டு இறே -அப்போது எங்கள் தெருவே போனால் தமக்கு ஸ்வரூப ஹானி வாராது
-நாங்களும் ஜாலக ரந்த்ரத்தாலே கண்டு ஜீவித்துக் கிடப்புதோம் -இப்படி அவிருத்தமாகச் செய்யலான பின்பு அத்தைச் செய்யச் சொல் -என்று ஒரு வண்டை இரக்கிறாள்-
ஆறாம் பாட்டில் பகவத் ஏக போகனாய் இருக்கும் என்றார் -ரூபவானுமாய் க்ருபாவானுமாய் கம்பீர ஸ்வபாவனுமாய் இருக்கும் என்றார் -மதுகரம் இ றே

அருளாத நீர் அருளி யவராவி துவரா முன்
அருளாழிப் புட்கடவீர் யவர் வீதி ஒரு நாள் என்று
அருளாழி யம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
அருளாழி வரி வண்டே யாமும் என் பிழைத்தோமே–1-4-6-

அருளாத நீர் அருளி யவராவி துவரா முன்
ஏதத் வ்ரதம் மம -என்று அருளுகைக்கு சங்கல்பித்து இருக்குமா போலே அருளாமைக்கு சங்கல்ப்பித்து இருக்கிற நீர்
மயர்வற மதி நலம் அருளினன் -என்று நெஞ்சு உருகிக் கிடக்குமவர் -அருளாத நீர் -என்கிறது -என்ன தசா விசேஷம் என்று அறிகிறிலோம்-
அருளாத நீர் –என்று ஒரு திரு நாமம் சாற்றுகிறாள்
அன்றிக்கே தயா விசேஷம்-விஷயம் – பெறாமையாலே தயை குமர் இருந்து தயை பண்ணாது இருக்கிற நீர் –
தயைக்கு விஷயம் போரும் இடத்தில் தயை பண்ணி என்னவுமாம் –
அருளி -அருளே நிரூபகமான ஸ்வரூபம் உம்மது
நிர்தயர்க்கும் ஐயோ என்ன வேண்டும் தசை அவளது -அருளாது ஒழியும் படி எங்கனே –
அவராவி துயரா முன்
பின்னையும் அருளைத் தவிரீரே -அது அசத் சமம் ஆவதற்கு முன்னே அருளப் பாரும்
அவளுடைய பிராணன் பசை அற உலருவதற்கே முன்னே அருளப் பாரும்
ஜீவந்தீம் மாம் யதா ராமஸ் சம்பாவயதி கீர்த்தி மான் -என்னுமா போலே

அருளாழிப் புட்கடவீர் யவர் வீதி ஒரு நாள் என்று
நாங்கள் சொல்லும் அத்தனையேயோ வேண்டுவது -அவன் அருளப் புகா நின்றானோ என்ன நீங்கள் அறிவிக்கும்
அத்தனையே வேண்டுவது -கொடுவருவாரும் அங்கே உண்டு –
அருளாழிப் புள் –
அருள் கடலான புள்
வெஞ்சிறைப் புள் என்றாள் கொண்டு போன படியால்
இப்போது வரவுக்கு உடலாகையாலே -அருளாழிப் புள் –என்கிறாள் –
கடவீர்
அனுகூலர் கண்டு வாழுகைக்கும்-ஸூக ஸ்பர்சத்தாலும் ஆகப்போகாதே பிசுகிச் சுழியா நிற்கும் இ றே
அசேதனமான ரதத்தோபாதி வடிவம்பாலே தாக்கி நடத்த வேணுமாயிற்று
எங்கே தான் என்னில்
அவர் வீதி
அவள் தெருவிலே -அங்கனே ஒண்ணுமோ ஒரு தெருவிலே பல கால் புக்கவாறே இது வெருமன் அன்று என்று இரார்களோ என்னில்
ஒரு நாள்
நாங்கள் ஜீவித்துக் கிடக்கைக்கு ஒரு நாள் போக அமையும்
அருளாழி யம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
பெரிய திருவடியும் மிகை –
தாமரையாள்-பெரியாழ்வார் -4-9-2-என்னும் படி அருள் கடல் ஆனவன் இ றே
அன்றிக்கே திருவடி ஒருவனுமாய் இருந்ததோ -அங்கு கையாளாய் உள்ளாரடைய நம் பரிகரம் அன்றோ
-அருளை நிரூபகமாக உடைய திரு வாழியைக் கையிலே உடையவன் -அருளார் திருச் சக்கரம் -திரு விருத்தம் -33-இ றே –
சர்வேஸ்வரனுக்கும் கைக்குரியாப்பை வாங்குவது இங்கே இறே -சர்வேஸ்வரன் பக்கல் அருள் மறுத்தாலும் அருள் கூடி கட்டி நிற்கும் இடம் இறே
இது சொல்லி யருள்
இத்தனையும் சொல்லி யருள வேண்டும்
ஏது என்னில் -அருளாழி புட்கடவீர் அவர் வீதி ஒரு நாள் -என்கிற வார்த்தையைச் சொல்லி யருள வேண்டும்
அருளாழி வரி வண்டே-
ஸ்ரமஹரமான அழகியதான வண்டே என்னுதல்
வடிவு சிறித்து இருக்கச் செய்தே காம்பீர்யம் பெருத்து இருக்கிற படியைச் சொல்லுதல்
ஆழி -வட்டமாய் சுழலப் பறக்கிற வண்டு -என்னுதல்
கடகருடைய ஆத்மா குணத்தோபாதி ரூப குணமும் உத்தேச்யம் -என்கை
யாமும் என் பிழைத்தோமே–
நாங்கள் என்ன தப்புச் செய்தோம்
தாம் பிரிந்து துவள விட்டு வைத்தால் போலே நாங்களும் க்ரமத்திலே பெறுகிறோம் என்று ஆறி இருந்தோமோ
திர்யக்கின் காலில் விழுவாரும்-தூது விடுவாரும் தாமாய் இருக்க அத்தலை இத்தலையாயும் வாராது இருக்க தம்மதோ குற்றம் -எங்களதோ

———————————————————————————-

அவதாரிகை –

தந்தாமுடைய அபராதத்தைப் பாராதே -அருளாழி புட்கடவீர் அவர் வீதி என்று சொல்லும் அத்தனையோ வேண்டுவது என்று அவர்க்கு கருத்தாக
எங்கள் குற்றம் ஒன்றுமேயோ பார்ப்பது -தம்முடைய அபராத சஹத்வம் பார்க்கக் கடவதன்றோ -என்று சொல் என்று தன் கிளியை இரக்கிறாள்
ஏழாம் பாட்டில் தான் சர்வஜ்ஞ்ஞன் ஆகிலும் ஆசார்யர் பக்கல் கேட்ட வார்த்தை யல்லது அருளிச் செய்யான் என்று அவனுடைய ஆப்தியை அனுசந்தித்தார்

என் பிழை கோப்பது போல் பனிவாடை ஈர்கின்றது
என் பிழையே நினைந்து அருளி யருளாத திருமாலார்க்கு
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்று ஒரு வாய்ச் சொல்
என் பிழைக்கும் இளம் கிளியே யான் வளர்த்த நீ யலையே –1-4-7-

என் பிழை கோப்பது போல் பனிவாடை ஈர்கின்றது
எலும்பும் நரம்புமே யாம்படி சரீரம் தான் போர க்ரூசமாயிற்று -எலும்பைத் துளைத்து அதிலே மூர்த்தமாய் இருப்பதொன்றை வ்யாபரித்தால்
போலே யாயிற்று பனி வாடை ஈர்கின்றது -நஞ்சூட்டின வாடை யானது இருக்கிற படி
பாம்போ பவன் மாருதம் -என்று நாயகனுக்கு இருக்குமா போலே இரா நின்றது காணும் இவ்வாடை இவளுக்கு
பத்ம சௌள கந்தி கவஹம் – கலம்பகன் சூடுவாரைப் போலே தாமரை ஓடை செங்கழுநீர் ஓடைகளிலே சென்று புக்கு
பூவில் இழியில் அதில் வெக்கை திட்டும் -என்று மேல் எழ நின்று அபரிமிதமான பரிமளத்தை கொய்து கொண்டு வாரா நின்றது -சிவம் கலப்பற்று
பசும் தென்றலாய் இரா நின்றது -அதாவது புறம்பே சிலர்க்கு உடம்பு கொடுத்து சுணங்கு அழியாதே தாய்த்தலை தென்றலாய் இருக்கை
சோக விநாசநம் -நம்மை இனி பிராணன் உடன் வைத்து நலியாது போலே இருந்தது –
தன்யா -காற்று வாரா நின்றது என்றால்-ஏகாந்த ஸ்தலம் தேடித் படுக்கை படுப்பவர்களும் சிலரே
லஷ்மண சேவந்தே-இது எப்போது வருவது என்று இருப்பார்கள்
பாம்போ பவன் மாருதம் -ஆகரத்தில் நெருப்பு என்னுமா போலே
இப்படி மகிஷியானவள் வாடைக்கு இடைந்து நோவு படா நிற்க இத்தை பரிஹரிக்கைக்கு அவர் கடல் அடைப்பது –
படை திரட்டுவது ஆகிற படி
நாயக நாயகிகள் ஒருவரை ஒருவர் பிரிந்தவாறே அந்தர ஜாதி காலிலே துகையுண்பதே இப்படி –
என் பிழையே நினைந்து அருளி –
நான் படுகிற கிலேசம் போராது-என்று கீழ் அண்டைச் சிகை வாசியா நின்றார்
அவிஜ்ஞ்ஞாதா வாகை தவிர்ந்து -சஹஸ்ராம் ஸூ என்கிறபடியே இப்போது தோஷத்தில் சர்வஜ்ஞராய் யாயிற்று இருப்பது
யருளாத திருமாலார்க்கு
ந கச்சின் ந அபராதயாதி -என்பாரும் அருகே இருக்கே எங்கள் குற்றம் பார்த்து அவன் பக்கல் முகம் பெற இருக்கிறாரே -என்று நஞ்சீயர் அருளிச் செய்யும் படி
நான் இப்படி நோவு பட வேண்டுகிறது -அவனுக்கு அவள் முகம் கொடுத்து அங்கே துவக்குகை இறே என்று இன்னாதாகிறாள் -என்று பிள்ளான் பணிக்கும் படி
உறவு உள்ள இடத்திலே இ றே வெறுப்பு உள்ளதும்
அருளாது ஒழிகிறது என்-என்றால் -தந்தாம் குற்றம் பாராதே அருளச் சொல்லும் இத்தனையோ வேண்டுவது –என்று சொல்ல நினைத்தாராகில்
நீங்கள் தான் இங்கனே சொல்லுங்கோள்-என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு -என்னுங்கோள்
என் குற்றத்தைப் பார்த்து தமிக்க நினைத்தார் ஆகில் தம் பொறையாகிற நேர்ந்தரவை -செல்லுச் சீட்டை – காட்டுங்கோள் –
சுவாமிகளான தம் பொறை வயிறு நிறைய எங்களால் குற்றம் செய்யப் போமோ -என்னுங்கோள்
ஆஸ்ரயத்துக்கு தக்கபடி யன்றோ எல்லாம் -நாங்கள் குற்றம் செய்வது எங்கள் அளவிலே -தாம் பொறுப்பதும் தம் அளவிலே யன்றோ
திருவடியின் தகவினுக்கு என் பிழைத்தாள் –
தேவரீர் கிருபைக்கு தண்ணீர் துரும்பாக ஏதேனும் ப்ரதஷிண நமஸ்காராதிகள் பண்ணிற்று உண்டோ -என்று நம்பிள்ளை அருளிச் செய்யும் படி
தகவினுக்கு
ஆன்ரு சம்சயம் பரோ தர்ம -என்று சொல்லும் படி இருக்கும் நிலைக்கு என் பிழைத்தாள் -என்ன தப்பு செய்தாள்-கிம் கோப மூலம் -என்றாள் இ றே தாரை
ராஜ புத்ரர்களை நாலு மாசம் மின்னுக்கும் இடிக்கும் இரையாக்கி தாங்கள் போக பிரவணராய் இருந்தவற்றை ஒன்றும் புத்தி பண்ணாதே
-உம்முடைய கோபத்துக்கு அடி என் என்றாள் இ றே
அவர்கள் பொறையை நினைத்து இருந்த கனத்தாலே
மநு ஜேந்திர புத்ர-அறுபதினாயிரம் ஆண்டு -செய்தார் செய்த குற்றங்களை பொறுத்துச் சேர விட்டு ஆண்டு கொண்டு போந்தார் உங்கள் தமப்பனார்
அவன் வயிற்றிலே பிறந்து குற்றம் செய்தோம் என்று தலை யறுக்க வந்து நின்றீர் நீர் -அழகியதாய் இருந்தது உங்களுடைய போக்கு
கஸ்தே ந சந்திஷ்டதி வாங்நிதேச -சாஸ்திர வஸ்யதையும் அன்றிக்கே -கண்டதிலே கடுக சாபலத்தைப் பண்ணி மீள மாட்டாத திரியக்குகளை
நீரே -இழந்த போகங்களை புஜிப்பது -என்று சேர விட்டு
நீர் சொல்லிற்று செய்தன வென்று தலை யறுக்க வந்து நின்றீர் -இப்படி சொல்லலாம் படி இறே இவர் பொறை இருப்பது
ஒரு வாய் சொல்
ஒரு வாய் -என்றது ஒரு வார்த்தை என்றபடி -சொல் என்றது -சொல்லு என்றாய் -ஒரு வார்த்தை சொல்லு என்றபடி
என் பிழைக்கும் இளம் கிளியே –
மௌக்யத்தாலும்-ஸ்நிக்தமான பணிதியினாலும் -வடிவில் பசுமையாலும் -வாயில் பழுப்பாலும் -நாயகனுக்கு ஸ்மாரகமாய்-
எலும்பை இழைக்கிற கிளி -என்னுதல்
என் பிழைக்கும் -என் தசையை அறிவித்தால் என்ன தப்புண்டாம்
யான் வளர்த்த நீ யலையே
ஸ்ரீ யபதியாய் -தான் தோன்றியாய் இருப்பார் செய்வதை வயிற்றில் பிறந்தாரும் செய்வாரோ –
கலந்து பிரிந்தார் செய்வதை வளர்ந்தவர்களும் செய்வார்களோ
யான் வளர்த்த நீ யலையே
அவன் தான் இப்படிச் செய்ய வேண்டிச் செய்தானோ -என்னோட்டை சம்பந்தம் அன்றோ அவன் இப்படிச் செய்தது
அப்படி என்னோட்டை சம்பந்தம் உனக்கும் உண்டான பின்பு நீ நலியச் சொல்ல வேணுமோ
யான் வளர்த்த நீ யலையே
எனக்குத் தக்கப் போலே யன்றே நீயும் இருப்பது -உனக்கு குறையோ

—————————————————————————————-

அவதாரிகை

முன்பு இவள் வார்த்தை சொல்லிக் கொண்டாடுகையாலே தரித்து இருந்த பூவை யானது இவள் உறாவப் புக்க வாறே தானும் உறாவப் புக்கது
அத்தைப் பார்த்து -முன்பே என் தசையை அறிவி என்ன -செருக்கு அடித்து இருந்தாய் நானோ முடியா நின்றேன்
-இனி உன்னை ரஷிப்பாரைத் தேடப் பாராய் -என்கிறாள் –பூவை எனபது நாகணவாய்ப் புள் -அதாவது ஒரு பஷி விசேஷம் –
எட்டாம் பாட்டில் ஆசார்யனுடைய தேக யாத்ரையே இவனுக்கு ஆத்ம யாத்ரை என்கிறார்

நீயலையே சிறு பூவாய் நெடுமாலார்க்கு என் தூதாய்
நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்து ஒழிந்தாய்
சாயலோடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனியுனது
வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே–1-4-8-

நீயலையே சிறு பூவாய் நெடுமாலார்க்கு என் தூதாய்
என் தசையை அறிவிக்க வேணும் என்ன -அறிவியாதே இருந்த உன்னாலே வந்ததன்றோ இது
அறிவித்தால் வாராது இருந்தானே யாகில் இறே அவனுக்கு குறையாவது -பகவல் லாபம் சேர்ப்பாராலே என்று இருக்கிறாள்
அவ்யவதா நே ந சம்பந்தம் எம்பெருமான் உடனேயாய் இருக்க ஆசார்யனை விரும்புகிறது பண்ணின உபகாரத்தைப் பற்ற இறே
ஆததீத யதோ ஜ்ஞானம் தம் பூர்வமபி வாதயேத்-என்னா நின்றது இறே
சிறு பூவாய்
உன் பருவம் நிரம்பாமை இறே நம் கார்யத்தைக் கெடுத்தது
நெடுமாலார்க்கு –
அவருக்கு வ்யாமோஹத்தை உண்டாக்கி கொடு வர வேணும் என்று இருந்தாய் அல்லையே
என் தூதாய் –
எனக்கு அவர் பக்கல் வ்யாமோஹம் தான் இல்லாமை இருந்தையும் அன்றே –
வயிற்றில் பிறந்த உங்களைக் கொண்டு அபிமதம் சேர்க்க வேண்டும் படி அன்றோ எந்நிலை –

நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்து ஒழிந்தாய்
ஸ்ரீ பரத ஆழ்வான் நோய் என்றால் சாதுர்த்திகமாய் இராதே-
ஜடிலம்-நல்ல மாலை வந்தால் பிள்ளை பரதன் மயிருக்காய் இருந்தது -என்று ஆயிற்று சக்கரவர்த்தி வாய் விடுவது –
அவனாயிற்று சடை புனைந்து இருக்கிறான்
சிர வசனம் –
நல்ல பரிவட்டம் கண்டால் இது பிள்ளைக்காம் என்று வாய் விடுவார்கள் -அவன் அன்று மரவுரி உடுத்து இருக்கிறான்
ப்ராஜ்ஞ்ஜலிம் –
அவர்கள் இரந்து கொடுக்கப் பெருமவன் தன் அபிமதத்துக்குத் தான் இரப்பாளனாய் இருந்தான்
பதிதம்புவி
அங்கே பரதம் ஆரோப்ய -என்னும் நிலை பெற்றது இல்லை -படுக்கை உறுத்தும் என்று மடியிலே கண் வளருமவன் யாயிற்று தரைக்கிடை கிடக்கிறான்
ததர்ச ராமோ துததர்சம்
வைத்த கண் வாங்காதே கண் கொண்டு இருக்கும் பெருமாளுக்கும் கண் வைக்க ஒண்ணாத படி இருக்கிறவனை
யுகாந்தே பாஸ்கரம் யதா
பெருமாள் ஒருவருக்கும் கண் வைக்க ஒண்ணாமையே யன்றிக்கே ஜகத் உபசம்ஹாரம் பிறக்கப் புகுகிறதோ என்னும் படி இருந்தான்
நோய் எனது நுவல் என்ன
என் தசையை அங்கே சென்று சொல் என்ன சொல்லாதே இருந்து ஒழிந்தாய் -நுவலாதே இருந்தாய் -என்னுதல்
நுவலாதே ஒழிந்தாய் என்னுதல் செய்ய அமையாதோ இரட்டிப்பு என் என்னில் -வந்து ஒழிந்தான் போய் ஒழிந்தான் -என்னக் கடவது இ றே
-வழக்கச் சொல் இருக்கிறபடி —
இரண்டு தர்மியையும் ஒரு உக்தி மாத்ரத்தாலே நோக்கலாய் இருக்க வன்றோ நீ ஆறி இருந்தது
அதுக்கு இப்போது வந்தது என் -என்ன
சாயலோடு மணிமாமை தளர்ந்தேன் –
சமுதாய சோபையோடு நிறத்தில் பௌஷ்கல்யமும் இழந்தேன் -இனிப் போய் அறிவிக்கிறேன் என்று த்வரிக்கப் புக்கது –
கதே ஜலே சேது பந்தம் போலே -இனி அறிவித்தால் என்ன லாபம் உண்டு
நான் இனியுனது வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே-
இனி உனக்கு ரஷகரைத் தேடப் பாராய் -அவன் வந்தாலும் போன நிறத்தை மீட்க்கப் போகாது -என்று இருக்கிறாள்
பெரிய திருமலை நம்பி தம்முடைய அந்திம தசையில் தமக்கு ஒரு வெண்ணெய்க்கு யாடும் பிள்ளை யாயிற்று திருவாராதனம் –
அவர் திரு முன்பில் திருத் திரையை வாங்கச் சொல்லி
சாயலோடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனி யுனது வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே -என்றாராம்

—————————————————————————————

அவதாரிகை –

சாயலோடு மணிமாமை தளர்ந்தேன் நான் -என்று இருக்கிற சமயத்தில் ஒரு வாடை வந்து உடம்பிலே பட்டது -இதினுடைய தோற்றரவு
இருந்த படியாலே வெறுமனன்று-
மகாராஜருடைய மிடற்று ஓசையில் தெளிவைக் கேட்டுத் தாரை -பூர்வ ஷணத்திலே வாலி கையாலே நெருக்குண்டு போனவர் இப்போது இப்படி
தெளிவாக வந்து அறை கூறுகிற இது வெறுமனல்ல-இதுக்கு ஒரு அடி உண்டு என்றாள் போலே இவளும்
இவ்வாடைக்கு ஒரு அடி உண்டாக வேணும் –என்று பார்த்து -ராஜாக்கள் ராஜ த்ரோஹம் செய்தவர்களை நாழிகைக்கு வேற்காரரை வர
விடுமா போலே நம்மை நலிகைக்கு சர்வேஸ்வரன் இவ்வாடையை வர விட்டானாக வேணும் என்று பார்த்து வேற்காரர் கொடு போய்
நலியப் புக்கவாறே நிதியுண்டு என்பாரைப் போலே நான் சொல்லுகிற வார்த்தையை நீ அங்கே சென்று அறிவித்தால் -அத்தலையால்
வரும் நன்மை வேண்டா என்று இருந்தான் ஆகில் அவசியம் வந்து என்னை முடிக்க வேணும் -என்று அவ்வாடையை இரக்கிறாள்-
ஒன்பதாம் பாட்டில் ஆசார்ய சம்பந்த மாத்ரமே சத்தா தாரகம் -இதர ஸ்பர்சம் சத்தா பாதகம் -என்கிறார்

நாடாத மலர் நாடி நாடோறும் நாரணன் தன்
வாடாத மலரடிக் கீழ் வைக்கவே வகுக்கின்று
வீடாடி வீற்றிருத்தல் வினையற்றது என் செய்வதோ
ஊடாடு பனிவாடா யுரைத்தீராய் எனதுடலே –1-4-9-

நாடாத மலர் நாடி நாடோறும் நாரணன் தன்
ஆத்ம புஷ்பத்தை சொல்கிறது -என்பாரும் உண்டு –
அங்கன் அன்றிக்கே -ஜீயர் -எண்டிசையும் உள்ள பூக்களைக் கொண்டு -என்கிறபடியே தேட அரிய புஷ்பங்கள் எல்லாம் தேடி -என்று அருளிச் செய்வர்
இது தான் ஒருநாள் தேடி விடுகை அன்றிக்கே
நாடோறும் –
விச்சேதியாத படி கிஞ்சித் கரித்து ஸ்வரூபம் வஸ்துவுக்கு விச்சேதம் ஸ்வரூப ஹானி இ றே
நாரணன்
நித்ய பரிசர்யை பண்ண வேண்டும்படி சர்வ சுவாமி யானவன்
வாடாத மலர் அடிக்கீழ்
செவ்வி மாறாத பூப் போலே இருக்கிற திருவடிகளின் கீழே
ஸ்வரூப ஹானியாலும் விட ஒண்ணாத படி நிரதிசய போக்யமான திருவடிகள்
வைக்கவே -சேர்க்கவே
வகுக்கின்ற -உண்டாக்கிற்று -ஸ்ருஷ்டத்வம் வன வாசாயா -போலே
இப்படி வகுத்ததுமாய் ஸூலபமுமாய் நிரதிசய போக்யமுமான திருவடிகளிலே சர்வ கைங்கர்யங்களையும் பண்ண வாயிற்று இத்தை உண்டாக்கிற்று
சேஷ பூதனுக்கு கிஞ்சித் கரித்து ஸ்வரூப சித்தி யானால் போலே சேஷிக்கும் கிஞ்சித் கரிப்பித்துக் கொண்டு இறே ஸ்வரூப சித்தி ‘
இப்படி இருக்க
வீடாடி வீற்றிருத்தல் வினையற்றது என் செய்வதோ
வீடு -என்று விடுகை -அதாவது -விச்லேஷிக்கை
ஆடுகை -அவஹாகிக்கை
வீற்று இருக்கை யாவது -விச்லேஷத்தில் மூர்த்த அபிஷிக்தையாய் இருக்கை
வினை யறுகை யாவது -நல் வினை யறுகை
இப்படி பாஹ்ய ஹானியால் விசேஷத்தில் அபிஷேகம் பண்ணி தம்மை பிரிந்து இருக்கிற இப்பொல்லாத இருப்புண்டு -இது என் செய்யக் கடவதோ -என்னுதல்
அன்றிக்கே -தம்மையும் பிரிந்து தம்மோடு ஒரு சம்பந்தத்தையிட்டு பந்துக்களும் கை விட அவர்களையும் விட்டு வேறு பட்டு இருக்கிற
இவ் வஸ்து என் செய்யக் கடவதோ -என்னுதல்
எமராலும் பழிப்புண்டு இங்கு என் -தம்மால் இழிப்புண்டு -என்றும் சொல்லக் கடவது இ றே
ஊடாடு பனிவாடா யுரைத்தீராய் எனதுடலே —
வேற்காரர்-அரசின் காவல்காரர் – அங்குத்தை வார்த்தையை இங்கே சொல்லி இங்குத்தை வார்த்தையை அங்கே சொல்லித் திரியுமா போலே
அங்கோடு இங்கோடாய்த் திரியா நின்றது ஆயிற்று
ஊடு என்று உள்ளாய்-ஆடுகை -சஞ்சரிக்கை –அங்கே அந்தரங்கமாக சஞ்சரிக்கை
அன்றிக்கே சம்ச்லேஷ சமயத்திலே கிட்டி வர்த்தித்துப் போந்த நீ -என்னுதல்
உரைத்து –
நித்ய கைங்கர்யத்துக்கு இட்டுப் பிறந்த வஸ்து இப்படி இருக்கக் கடவதோ என்று அறிவித்தால்
அத்தலையால் வரும் கைங்கர்யமும் நமக்கு வேண்டா என்று இருந்தான் ஆகில் அவசியம் வந்து அவனோட்டை பிரிவுக்கு சிளையாத
என் உடலை முடித்து விட வேணும் -என்று காலைப் பிடித்து -வாடையை-வேண்டிக் கொள்ளுகிறாள்

——————————————————————————

அவதாரிகை –

அல்லாத வற்றை எல்லாம் விட்டு நெஞ்சைத் தூது விடுகிறாள் -என்பாரும் உண்டு அப்போது விடல் என்றது -அவனை விடாதே கொள் என்கை-
அன்றிக்கே -கீழில் பாட்டில் –வைக்கவே வகுக்கின்று -என்று கைங்கர்யம் பிரச்துதமானவாறே தாய் முலையை நினைத்த கன்றே போல்
திரு உள்ளம் பதறி சரீரத்தை விட்டுப் போகப் புக்கது -நம் கார்யம் ஓர் அறுதி பிறக்கும் அளவும் நீ என்னை விடாதே கொள்-என்னுதல் –

உடல் ஆழிப் பிறப்பு வீடு உயிர் முதலா முற்றுமாய்
கடலாழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும்
அடலாழி யம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
விடலாழி மட நெஞ்சே வினையோம் என்றாம் அளவே –1-4-10-

உடல் ஆழிப் பிறப்பு வீடு உயிர் முதலா முற்றுமாய்
உயிரினுடைய உடலாழி பிறப்பு -ஆத்மாவினுடைய சஹஜமான பிறப்பு
வீடு முதலா முற்றும் ஆகைக்காக -மோஷாதி புருஷார்த்தங்களை பெறுகைக்காக-சரீரத்தினுடைய வட்டமான பிறப்பு
அன்றிக்கே -ஆழி என்று கடலாய் -அத்தாலே காம்பீர்யமாய் -அசங்க்யேயமான ஜன்மம் என்னுதல்
வீடு -மோஷம் -சிருஷ்டிக்கு பிரயோஜனம் மோஷம் ஆகையாலே சொல்லுகிறது
அன்றிக்கே -வீடுயிர் -ஜன்மங்கள் தோறும் உண்டான சரீரஸ்தமான ஆத்மாக்கள்
உயிர் தொடக்கமான மற்றும் உண்டான கார்ய ஜாதத்தை உண்டாக்குகைக்காக
ஆய்- பஹூச்யாம் என்கிறபடி தன் விகாசமே யாகையாலே
கடலாழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும்
ஆழி நீர் -ஆழிய நீர் -அப ஏவ சசார்ஜ தௌ-என்கிறபடியே மிக்க ஜலத்தை உண்டான ஏகார்ணவத்தை உண்டாக்கி
இவ்வருக்கு உண்டான சிருஷ்டி யாதிகளுக்காக அங்கே வந்து கண் வளர்ந்து அருளும்

அடலாழி யம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
ஸ்ருஜ்ய பதார்த்தாங்களுக்கு விரோதிகளாய் இருப்பாரை அழியச் செய்கைக்காக ஆசிலே வைத்த கையும் தானுமாயிற்று கண் வளர்ந்து அருளுவது
கண்டக்கால் -என்னிலும் உனக்கு அன்றோ பேறு முற்படுகிறது -சந்த்ரே த்ருஷ்டி சமாகம -போலே கண்டாரை காணும் அத்தனை இ றே தனக்கு
இது சொல்லி -வைக்கவே வைக்கின்று -என்கிற வார்த்தையைச் சொல்லி -என்னுதல்
சிருஷ்டிக்கு பிரயோஜனம் -விசித்ரா தேக சம்பந்தி ஈச்வராய நிவேதிதம் -என்கிறபடியே தேவர் திருவடிகளிலே
சர்வ கைங்கர்யங்களையும் பண்ணுகை யன்றோ -என்கை
விடல் என்கிற பதம் மேலே அன்வயிக்கிறது
ஆழி மட நெஞ்சே
அளவுடையையாய்– பவ்யமான நெஞ்சே என்னுதல்
சுழன்று வருகிற பேதை நெஞ்சே -என்னுதல்
வினையோம் ஒன்றாம் அளவே விடேல் –
சிருஷ்டிக்கு பிரயோஜனம் அங்கே அவரைக் கிட்டி அடிமை செய்கையாய் இருக்க பிரிகைக்கு ஈடான பாபத்தைப் பண்ணின நாம்
அவரோடு சேரும் அளவும் நீ அவரை விடாதே ஒழிய வேணும் –

————————————————————————————

அவதாரிகை –

நிகமத்தில் இத் திருவாய் மொழியில் சப்த மாதரத்தை அப்யசிக்கவே அமையும் திரு நாட்டைப் பெறுகைக்கு-என்கிறார்

அளவியின்ற வேழுலகத்தவர் பெருமான் கண்ணனை
வளவயல் சூழ் வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்துரைத்த
அளவியன்ற வந்தாதி யாயிரத்துள் இப்பத்தின்
வளவுரையால் பெறலாகும் வானோங்கு பெரு வளமே –1-4-11-

அளவியின்ற வேழுலகத் தவர் பெருமான் கண்ணனை
வியந்த என்கிற இது -வியன்ற -என்று கிடக்கிறது -வியத்தல் -கடத்தல் -அளவைக் கடந்து இருக்கும் -என்றபடி அபரிச்சேத்ய மஹிமனாகை
இத்தால் இத்தசையில் முகம் காட்டுகைக்கு ஈடான ஜ்ஞானாதி குண பூரணன் -என்கை
வேழுலகத்தவர் பெருமான் -நாராயணத்வம் விகலாமாகாத படி சர்வேஸ்வரன் ஆனான் -ஏழ் உலகத்தவர் என்னவே -தாமும் அதிலே அந்தர்பூதர் இறே
கண்ணனை -இவ்வளவிலே வந்து முகம் காட்டிற்று இலன் என்ற குற்றம் தீர வந்து முகம் காட்டுகையாலே ஆஸ்ரித ஸூ லபனானவன்
பத்துடை அடியவரில் கிருஷ்ணாவதாரத்தில் அனுபவிக்கப் பார்த்து -அது கிடையாமையாலே தூது விட்டார் ஆகையாலே
இங்கு முகம் காட்டினான் கிருஷ்ணன் என்னவுமாம்
இத்தால் அவனுடைய மேன்மையும் சௌலப்யமும் நிலை நின்றது -இவருக்கு முகம் காட்டின பின்பு யாயிற்று -என்றபடி

வளவயல் சூழ் வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்துரைத்த
அகால பலி நோ வருஷோ -என்கிறபடியே திரு நகரியும் தளிரும் முறியுமாயிற்று
வாய்ந்து உரைத்த -வாய்கை -கிட்டுகை-அதாவது பாவ பந்தத்தை உடையராகை-நெஞ்சு பிணிப்புண்டு சொன்னதாய் இருக்கை
அளவியன்ற வந்தாதி யாயிரத்துள் இப்பத்தின்
அபரிச்சேத்ய வஸ்துவுக்கு வாசகம் ஆகையாலே தானும் அபரிச்சின்னமாய்
ஒருவராலும் சலிப்பிக்க ஒண்ணாத தாய் இருக்கிற ஆயிரத்துள்

வளவுரையால் பெறலாகும் வானோங்கு பெரு வளமே —
இப்பத்தின் உடைய நன்றான உரையாலே -பால் குடிக்க நோய் தீருமா போலே இத் திருவாய் மொழியில் இனிய சொல்லாலே பெறலாம்
ஸ்வயம் பிரயோஜனமான இத்தாலே சம்சாரத்திலே சங்குசிதமான நிலை போய் பரம பதத்தில் போய் ஸ்வ ஸ்வரூபத்தைப் பெற்று
விஸ்த்ருதனாகை யாகிற நிரவதிக சம்பத்தைப் பெறலாம் –

முதல் பாட்டில் ஒரு நாரையைத் தூது விட்டாள்
இரண்டாம் பாட்டில் அங்குப் போனால் சொல்லும் பாசுரத்தை சில குயில்களுக்குச் சொன்னாள்
மூன்றாம் பாட்டில் நான் பண்ணின பாபமேயோ மாளாது என்று சொல்லுங்கோள் -என்று சில அன்னங்களை இரந்தாள்
நாலாம் பாட்டில் சில மகன்ற்றில்களைப் பார்த்து என் தசையை அங்கே சென்று சொல்ல வல்லிகளோ மாட்டிகளோ என்றாள்
அஞ்சாம் பாட்டில் சில குருகளைப் பார்த்து தன்னுடைய நாராயணத்வம் ஒருவாய்ப் போகாமே நோக்கிக் கொள்ளச் சொல்லுங்கோள்
ஆறாம் பாட்டில் ஒரு வண்டைக் குறித்து தம்முடைய நாராயணத்வத்துக்கு ஒரு ஹானி வாராமே எங்கள் சத்தையும் கிடக்கும்படி
இத்தெருவே எழுந்து அருளச் சொல் என்றாள்
ஏழாம் பாட்டில் ஒரு கிளியைக் குறித்து -இத்தலையில் அபராதத்தைப் பார்க்கும் அத்தனையோ தம்முடைய அபராத சஹத்வத்தையும்
ஒரு கால் பார்க்கச் சொல் என்றாள்
எட்டாம் பாட்டில் தான் உறாவினவாறே முன் கையில் இருந்த பூவையும் உறாவ நானோ முடியா நின்றேன் நீ உனக்கு ரஷகரைத் தேடிக் கொள் -என்றாள்
ஒன்பதாம் பாட்டில் ஒரு வாடையைக் குறித்து என் தசையை அங்கே சென்று அறிவித்தால் அவன் அவள் நமக்கு வேண்டா என்றான் ஆகில்
என்னை வந்து முடிக்க வேணும் என்று இரந்தாள்
பத்தாம் பாட்டில் தன் நெஞ்சைக் குறித்து நம் கார்யம் ஓர் அறுதி பிறக்கும் அளவும் நீ அவனை விடாதே கொள் என்று போக விட்டாள்
நிகமத்தில் இத் திருவாய் மொழியை அப்யசித்தார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டினார் –

முதல் பாட்டில் ஆசார்யனுடைய ஞான வைபவத்தை அருளிச் செய்தார்
இரண்டாம் பாட்டில் மதுர பாஷியாய் இருக்கும் என்றார்
மூன்றாம் பாட்டில் சார அசார விவேகஞ்ஞன் என்றார்
நாலாம் பாட்டில் விக்ரஹ சௌந்தர்யத்தை அனுசந்தித்தார்
அஞ்சாம் பாட்டில் நினைத்தது கிட்டும் அளவும் சலியாத சுத்த ஸ்வ பாவன் என்றார்
ஆறாம் பாட்டில் பகவத் ஏக போகனாய் இருக்கும் என்றார் -ரூபவானுமாய் க்ருபாவானுமாய் கம்பீர ஸ்வ பாவனுமாய் இருக்கும் என்றார் -மதுகரம் இ றே
ஏழாம் பாட்டில் தான் சர்வஜ்ஞ்ஞன் ஆகிலும் ஆசார்யர் பக்கல் கேட்ட வார்த்தை யல்லது அருளிச் செய்யான் என்று அவனுடைய ஆப்தியை அனுசந்தித்தார்
எட்டாம் பாட்டில் ஆசார்யனுடைய தேக யாத்ரையே இவனுக்கு ஆத்ம யாத்ரை என்றார்
ஒன்பதாம் பாட்டில் ஆசார்ய சம்பந்த மாத்ரமே சத்தா தாரகம் -இதர ஸ்பர்சம் சத்தா பாதகம் -என்றார்
பத்தாம் பாட்டில்
ஆக இப்படி ஜ்ஞானவானுமாய்
மதுர பாஷியாய்
சார அசார விவேகஞ்னுமாய்
தர்ச நீயனுமாய்
சுத்த ஸ்வ பாவனுமாய்
க்ருபா காம்பீர்யங்களை உடையனாய்
சிரோ உபாசித்த சத் வ்ருத்த சேவ்யனுமாய்
லோக பரிக்ரஹம் உடையனுமாய்
சச் சிஷ்யனாலே ஏவம் பூதனான ஆசார்யனுடைய தேக யாத்ரையே தனக்கு ஆத்ம யாத்ரையாய்
இதர ஸ்பர்சமும் தனக்கு பாதகமுமாய்
இப்படி சதாசார்யா சேவை பண்ணுகையாலே பகவத் கைங்கர்யத்திலே பிரவணமாய்
நின்னிடையேன் அல்லேன்–8-2-10- என்று நீங்கி
ஓர் கோல நீல நன் நெடும் குன்றம் வருவது ஒப்பான நாண் மலர்ப் பாதம் அடைந்தது நம் திரு உள்ளம் -என்று தலைக் கட்டினார்

————————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருவாய்மொழி – 1-3–ஈட்டு -ஸ்ரீ ஸூ க்திகள் —

October 8, 2015

பிரவேசம் –

சர்வ ஸ்மாத் பரன் என்றார் முதல் திருவாய் மொழியில் –
பரனாகையாலே பஜ நீயன் என்றார் இரண்டாம் திருவாய் மொழியில்
பஜியுங்கோள் என்று பலகாலும் அருளிச் செய்யா நின்றீர் -இருகை முடவனை ஆனை ஏறு என்றால் அவனாலே ஏறப் போமோ –
அப்படியே சர்வேஸ்வரனாய்-அவாப்த சமஸ்த காமனாய் இருக்கிற அவனை இந்த ஷூத்ரனான சம்சாரி சேதனனாலே பற்றப் போமோ என்ன
அவ்வானை தானே அவ்விருகை முடவனுக்கும் ஏறலாம் படி படிந்து கொடுக்கும் அன்று ஏறத் தட்டிலையே -அப்படியே இஸ் சம்சாரி சேதனனுக்கு
பஜிக்கலாம் படி அவன் தன்னைக் கொடு வந்து தாழ விட்டு ஸூலபனாகில் இவனுக்கு பஜிக்கத் தட்டில்லையே -என்கிறார் –
அவதாரம் தன்னில் வந்தால் பாக்ய ஹீனருக்கு சஜாதீய பிரதி புத்தி பண்ணி அனர்த்தப் பட்டு போகவுமாய் –
பாக்யாதிகர்க்கு -அரியன் எளியனாகப் பெற்றோமே என்று ஆஸ்ரயிக்கலாம் படி இரண்டுக்கும் பொதுவாய் இ றே இருப்பது –
சர்வேஸ்வரன் அரியன் என்றால் சம்சாரத்தில் ஆள் பற்றாது என்று அவன் எளிமையை உபபாதித்திக் கொண்டு போந்தோம் –
அது தானே இவர்களுக்கு இத்தனை எளியானோ-என்று விடுகைக்கு உடலாயிற்று
அவ்வெளிமை தானே ஆதரிகைக்கு உடலாயிற்று உமக்கு ஒருவருக்குமே இ றே -என்று எம்பாரைப் பார்த்து உடையவர் அருளிச் செய்து அருளினாராம் –
சில தார்மிகர் ஏரி கல்லினால் சேற்றிலே தலையை நொழுந்தி பட்டுப் போகா நிற்பார் சிலர் –விடாயர் அதிலே முழுகி விடாய் தீர்ந்து போகா நிற்பார்கள்
விளக்கை ஏற்றினால் அதிலே விட்டில் என்று சில பதார்த்தங்கள் விழுந்து முடிந்து போம் -சிலர் அதன் ஒளியாலே ஜீவியா நிற்பார்கள்
வேத நல் விளக்கு-பெரிய திருமொழி -4-3-8- இ றே
இவன் தான் ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு -திருப்பாவை -5-இ றே
வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்கு-பெருமாள் திருமொழி -10-1-இ றே
அவன் தான் அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டதும் -பெரிய திருமொழி -4-3-8-இப்படி வந்து
அவதரித்து ஸூலபனான நிலை தன்னிலே இ றே
அப்படியே சிசுபாலாதிகள் பூதனா சகட யமளார்ஜூன நாதிகளுக்கு எதிரிட்டு முடியவுமாய்
அனுகூலித்து உஜ்ஜீவிப்பார்க்கு உஜ்ஜீவிக்கவுமாய் யாயிற்று அவதாரம் தான் இருப்பது –
பலகாலும் அவனை பஜியுங்கோள் -என்னா நின்றீர் -கண்ணால் கண்டால் அல்லது பஜிக்க விரகு இல்லை
-ஆனபின்பு ஆஸ்ரயிக்கும் படி எங்கனே -என்ன
தஸ்மின் த்ருஷ்டே பராவரே -முண்டக உபநிஷத் -என்றும் விசதே தத நந்தரம்–ஸ்ரீ கீதை -18-55-என்னும் சொல்லுகிறபடியே
சில வருத்ததோடு காட்சியாய்த் தலைக் கட்டும் சாதன பக்தியை அன்று இங்குச் சொல்லுகிறது
காண வேணும் என்னும் ஆசா லேசம் உடையாருக்கு அவன் எளியனாம் படி யாயிற்று
-சர்வாதிகன் தாழ நிற்கும் அன்று நிவாரகர் இல்லை

-பஹூ நி மே வ்யாதீதா நீ -என்கையாலே அவதாரம் தன்னில் புரை இல்லை -இச்சை தானே யுண்டே –
இது தன்னை அவதார ரஹச்யத்திலே தானும் அருளிச் செய்தான் இ றே -ஜன்ம கர்ம ச மே திவ்யம் –என்று -என்னுடைய ஜன்மங்கள்
கர்மம் அடியாக அன்று -இச்சை வடியாக இருக்கும் -நாம் பிறவா நிற்கச் செய்தேயும் பிறவாமையும் கிடக்கும்
தாழ நின்ற நிலையிலே மேன்மையும் கிடக்கும் -அப்ராக்ருத சமஸ்தானத்தை இதர சஜாதீயமாக்கி வந்து பிறப்புதோம்-இவற்றிலே
ஒன்றை அறிந்தவர்களுக்கு பின்னை ஜன்மம் இல்லை
நானும் பிறந்து அவர்களும் பிறக்க வேணுமோ -ஈரிறை யுண்டோ -என்று அவன் சதுர்த்யத்யாயத்தில் அருளிச் செய்த படிகளை உப ஜீவித்துக்
கொண்டு -ராம கிருஷ்ணாத் யாவதாரங்களை பண்ணிக் கொண்டு ஸூலபனாம் -ஆனபின்பு ஆஸ்ரயணம் கூடும் ஆஸ்ரயியுங்கோள் -என்கிறார் –
அவதாரங்களை முன்னோட்டுக் கொண்டு
அவதாரங்களிலும் நீர்மைக்கு எல்லையான கிருஷ்ணாவதாரத்தில் இழிந்து
அது தன்னிலும் பரத்வத்தோடு ஒக்கச் சொல்லலான நிலைகளைக் கழித்து
நவநீத சௌர்ய நகர ஷோபத்திலே அகப்பட்டு -இள மணல் பாய்ந்து
பரத்வத்தை அனுசந்தித்தார் -தெளிந்து இருந்து பரோபதேசம் பண்ணினார் -எத்திறம் -என்று மோஹித்துக் கிடக்கிறார் –

————————————————————————-

அவதாரிகை –

முதல்பாட்டில் எம்பெருமானுடைய சௌலப்யத்தை உபதேசிக்கப் புக்கு அவனுடைய நவநீத சௌர்ய சரித்ரத்திலே அகப்பட்டு அழுந்துகிறார்

பத்துடை யடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே –1-3-1-

பத்துடை
பத்து -பக்தி -பத்து என்று பக்தியைக் காட்டுமோ என்னில்
எட்டினோடு இரண்டு என்னும் கயிற்றினால் மனம் தன்னைக் கட்டி -திருச் சந்த விருத்தம் -83-என்னக் கடவது இ றே
ஆகையால் பத்து என்று பக்தியைச் சொல்லுகிறதாய்-அது தன்னிலும் பரபக்தியை அன்று இங்குச் சொலுகிறது -பக்தி உபக்ரமாத்ரத்தை –
உபக்கிரம மாத்ரம் என்று இத்தை நியமிப்பார் யார் -அதினுடைய சரம அவஸ்தையை காட்டினாலோ -என்னில் -அது ஒண்ணாது –
இப்போது இங்குச் சொல்லிக் கொண்டு போருகிற இது குண பிரகரணம் ஆகையாலும்
சர்வேஸ்வரனுக்கு ஒரு உத்கர்ஷம் சொல்லுகை இப்போது இவர்க்கு அபேஷிதம் அல்லாமையாலும்
தம்தாமை ஒழியச் செல்லாதார்க்கு ச்நேஹிக்குமது அல்லாதார்க்கும் உண்டாகையாலும்
மித்ர பாவேன சம்ப்ராப்தம்
ந த்யஜேயம் கதஞ்சன -என்னுமவன் ஆகையாலும் -உபக்கிரம மாதரத்தையே சொல்லிற்றாகக் கடவது
ஆசாலேசம் உடையார்க்கு தன்னைக் கொடுப்பதாக பகவத் உக்தி உண்டாய் இருந்தது இ றே
எதிர் சூழல் புக்கு -2-7-6–என்றும் -என்னில் முன்னம் பாரித்து -9-6-10–என்றும் விலக்காமை தேடித் திரிகிறவன் இ றே
உடை –
இந்த அப்ரதிஷேதாத்வேஷ மாதரத்தை கனத்த உடைமையாகச் சொல்லுகிறது –
விண்ணுளாரிலும் சீரியர் -என்று இங்கே பகவத் அனுபவம் பண்ணுவாரை நித்ய ஸூரிகளில் காட்டில் கனக்க நினைத்து இருக்கும்
பகவத் அபிப்ப்ராயத்தால் சொல்லுகிறது
இவர்கள் பக்கலில் இம்மாத்ரம் உண்டானால் பின்னை இவர்களுடைய பரத்துக்கு எல்லாம் நானே கடவன் என்று இருக்குமவன் யாயிற்று
இவன் ராவண பவனத்தை விட்டு ஆகாசத்திலே கிளம்பின போதே ஸ்ரீ வைஷ்ணவ லஷ்மீ குடி கொண்ட படி இறே அந்தரிஷத கத ஸ்ரீ மான் -என்றது
லஷ்மணா லஷ்மி சம்பன்ன -என்றது இறே இளைய பெருமாளை
இது இறே இவனுக்கு நிலை நின்ற ஐஸ்வர்யம் -இத்தைப் பற்ற -உடை -என்கிறது

யடியவர்க்கு –
இதுவும் பகவத் அபிப்ராயத்தாலே -த்வயி கிஞ்சித் சமா பன்னே கிம் கார்யம் சீதயா மம-என்று
இன்று கிட்டிற்று ஒரு குரங்கை நித்யாஸ்ரிதையான பிராட்டிக்கு அவ்வருகாக நினைத்தான் இறே
ஒரு திருவடி திரு வநந்த ஆழ்வான் அல்ல -இவனுக்கு சேஷபூதராய் அதிசயத்தைப் பண்ணுகிறவர்கள் –
இவ்விலக்காமை உடையவர்கள் யாயிற்று
உள்ள குணத்தை அனுபவித்து இருக்குமவர் அத்தனை இ றே அவர்கள் -குணம் நிறம் பெறுவது இவர்கள் பக்கலிலே இறே –

எளியவன் –
அவர்கள் பாபத்தை போக்குதல் -புண்யத்தைக் கொடுத்தல் -தன்னைக் கிட்டலாம் படி இருத்தல் செய்கை யன்றிக்கே
தன்னை அவர்களுக்க் இஷ்ட விநியோஹ அர்ஹமாக்கி வைக்கும்
தன்னை ஒழிந்தவற்றைக் கொடுத்தல் -தன்னை அழித்துக் கொடுத்தல் செய்யான் –அழைத்து கொடுத்தல் செய்யான்
இமௌ ஸ்ம முநிசார்த்தூல கிங்கரௌ சமுபஸ்திதௌ-என்கிறபடியே
நான் உங்கள் அடியான் –என்னை வேண்டினபடி ஏவிக் கார்யம் கொள்ளுங்கோள் -என்று நிற்கும் –
பக்த்யா தவ நன்யா சக்ய அஹ்மேவம் விதோர்ஜூனா-பீஷ்மாதிகள் சொல்ல பரம் ப்ரஹ்ம பரம் தாம -என்று கனக்க கேட்டு இருந்தபடியாலே
நீ ஒருவன் பக்திக்கு எளியவன் எளியன் யாவது என் என்ன
ஒருவன் கருத்துக்கு ஒருவன் சிவந்து இருக்கிற படி கண்டாயே -அப்படியே எனக்கு இது நிலை நின்ற ஸ்வ பாவம் என்றான் இறே
பக்தி க்ரீதோ ஜனார்த்தன -சார்வ பௌமனான ராஜ புத்திரன் ஷாம காலத்திலே அல்ப த்ரவ்யத்துக்கு தன்னை எழுதிக் கொடுத்தால்
பின்னை தன செல்வக் கிடப்புக் காட்டி மீட்க ஒண்ணா தாப் போலே சர்வேஸ்வரனும் பக்தி நிஷ்டனுக்கு தன்னை அறவிலை செய்து கொடுத்தால்
பின்னை மேன்மை காட்டி அகல மாட்டான் -கழுத்திலே ஓலையைக் காட்டி தூது போ என்னலாம் படி தன்னைக் கையாளாக ஆக்கி வைக்கும் –

இவ் வெளிமை உகவாதார்க்கும் பொதுவாகிறதோ என்னும் இத்தை பரிஹரிக்கிறது மேல்
பிறர்களுக்கு அரிய வித்தகன் –
பிறர்கள் ஆகிறார் -இவனைக் கொண்டு கார்யம் கொள்ளோம் என்று இருக்குமவர்கள்
வித்தகன் –
விஸ்மய நீயன்
இங்கு விஸ்மய நீயம் என் என்னில் -யசோதாதிகளுக்கு பவ்யனான நிலை தன்னிலே பூதனா சகட யமளார்ஜூ நாதிகளுக்கு அநபிபவநீயனாய் இருக்கை –
இன்னமும் பள்ளி கொண்டு அருளா நிற்கச் செய்தே அர்ஜுனனும் துரியோதனனும் கூட வர அர்ஜுனனுக்குத் தன்னைக் கொடுத்து துரியோதனனுக்கு
பங்களத்தைக் கொடுத்து விட்டான் இறே
நம்முடையவர்கள் எம்பெருமானையே உபாயமாக பற்றா நிற்க அல்லாதார் அசேதன க்ரியாக லாபங்களை பற்றுகிறார் போலே இறே துர்யோதனன் நிலை
ராமாவதாரத்திலும் ஹிமவான் மந்தரோ மேரு -இத்யாதி
சத்ரூணாம பிரகம்யோபி லகுத்வமகமத் கபே -ராவணன் ச பரிகரனாய்க் கொண்டு எடுக்கப் புக்க விடத்தில் நெஞ்சிலே சாத்ரவத்தாலே எடுக்க மாட்டிற்று இலன்
திருவடி தனியனாய் இருக்கச் செய்தேயும் நெஞ்சில் செவ்வையாலே கருமுகை மாலை போலே எடுத்து ஏறிட்டுக் கொண்டு போனான்
இங்கன் அன்றாகில் ராவணனுக்கு கனக்க வேணும் -என்றும் திருவடிக்கு நொய்தாக வேணும் அன்று -வஸ்து ஸ்வ பாவம் இருக்கும் படி யாயிற்று இது –

மலர்மகள் விரும்பும் –
இவ்விரண்டுக்கும் அடி –இவளுடைய சேர்த்தி இ றே
புஷ்பத்தில் பரிமளம் போலே -புஷ்பத்தை இருப்பிடமாக உடையளாய்-அதில் பரிமளம் தானே ஒரு வடிவு கொண்டால் போலே இருப்பாளாய்-
நாட்டார் பரிமளத்தை விரும்புவர்களாகில்-பரிமளம் தான் தண்ணீர் தண்ணீர் என்னப் பிறந்தவன் –

நம் –
உளன் சுடர் மிகு சுருதியுள் என்கிற பிரமான பிரசித்தியைப் பற்றச் சொல்லுகிறது -நாராயண அனுவாதிகளோடேசேர
ஹரீச்ச தி லஷ்மீச்ச பத்ன்யௌ-எண்ணக் கடவது இ றே
உளன் சுடர் மிகு சுருதியுள் என்று சுருதி வழியால் அங்கீ கருத்த லஷ்மீ சம்பந்தத்தை வெளியிடுகிறார்

அரும் பெறல் அடிகள் –
பெறுதற்கு அரிய சுவாமிகள் –

மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள் –
பெரிய பிராட்டியார் விரும்பும் படி இருக்கை போலே காணும் சர்வாதிக வஸ்துவுக்கு லஷணம்
அப்ரமேயம் ஹி தத்தேஜ -என்னக் கடவது இ றே

மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
கீழ்ச் சொன்ன எளிமையை உபபாதிக்கிறார் மேல்
மந்தரத்தைப் பிடுங்கி -கடலிலே நடு நெஞ்சிலே நட்டு -நெருக்கிக் கடைந்து வெளி கொடு வெளியே தேவர்களுக்கு அமிர்தத்தை
கொடுத்து விட்ட மகா பாஹூ கிடீர் இப்போது
இடைச் சேரியிலே வந்து பிறந்து
வெண்ணெய் களவு காணப் புக்கு
கட்டுண்டு
அடியுண்டு
நின்றான் என்கிறார் –

மத்துறு கடை வெண்ணெய்-
தயிர்ச் செறிவாலே மத்தாலே நெருக்கிக் கடையப் பட்ட வெண்ணெய்
கடை வெண்ணெய் -என்றால் கால த்ரயத்தில் உள்ளதனையும் காட்டும்
முப்போதும் கடைந்து ஈண்டிய வெண்ணெய் -என்னக் கடவது இ றே
இங்கே வர்த்த மானத்தாலே ஒரு சௌகர்யம் உண்டாகையாலே கடையா நிற்கச் செய்தே பசியராய் இருக்குமவர்கள் சோறு சமையப் பற்றாது வெந்தது கொத்தையாக வாயில் இடுமா போலே கடையப் பற்றாமல் நடுவே அள்ளி அமுது செய்யும் படியைச் சொல்லுகிறது -என்று பிள்ளான் பணிக்கும் படி
களவினில்
கடைகிற பராக்கில் நிழலிலே ஒதுங்கி சாபலத்தாலே அள்ளி அமுது செய்தான் போலே காணும்
களவினில்
களவிடையாட்டத்தில்-
உபக்ர சமயத்திலே கிடீர் அகப்பட்டது
உரவிடை ஆப்புண்டு
உரம் -என்று மார்வு
மார்விடையிலே என்றபடி
பொன் பெயரோன் தனது உரம் பிளந்து -என்னக் கடவது இ றே
பெரிய பிராட்டியார் நெருக்க அணைக்கும் மார்வைக் கிடீர் கயிற்றாலே நெருக்கிக் கட்டக் கட்டுண்டது
அன்றியே
மிடுக்கை உடைய ருஷபம் போலே இருக்கிறவன் கிடீர் கட்டுண்டான் –

உரலிடை ஆப்புண்டு
உதரவிடை ஆப்புண்டு -உதரம் -என்கிற இத்தை -உரம் என்று இடைக் குறைத்தலாய் கிடக்கிறது
தாமோதரன் என்று பிள்ளை பெற்று பேரிடும் படி இ றே கட்டுண்டது
தாம் நா சைவோ தரே பத்த்வா பிரத்யபத்னாது லூகலே -என்றும்
யதி சக நோஷி கச்ச த்வமதி சஞ்சல சேஷ்டித இத்யுக்த்வாத நிஜம் கர்ம சா சகாரா குடும்பி நீ -என்றும் சொல்லுகிறபடி இ றே எளியனாம் இருக்கும் படி –
தான் தாயான பரிவு தோற்ற இவனைக் களவிலே கண்டு பிடித்து தாம்பாலே ஓர் உரலோடு அடுத்துக் கட்டி மறு கண்ணியும் பொத்தி
துருதுக்கைத்தனம் அடித்தித் திரிந்த நீ வல்லையாகில் போய்க் காணாய் -என்று உருக்கி விட்டால் போக மாட்டாதாய் இருக்கும்
பராஸ்ய சக்திர் விவிதைவ சரூயதே -என்று ஒதப்படுகிற வஸ்து இவளுக்கு எளியனனா படி இ றே இங்கனே சொல்லலாகிறது
சம்சார பந்த ஸ்திதி மோஷ ஹேதுவான தானே இ றே இப்படி கட்டுண்டு இருக்கிறான்
ப்ரஹ்மாதிகளை தன சங்கல்பத்தாலே கட்டுவது விடுவது ஆகிற இவனே இப்போது அபலை கையிலே கட்டுண்டு இருக்கிறான்
த்யக்த்வா தேஹம் புனர்ஜன்ம நைதி மாமேதி -என்கிறபடி நம்முடைய கட்டை அவிழ்க்க இ றே தான் கட்டுண்டு இருக்கிறது
உரலோனோடு இணைந்து இருந்து
உரலுக்கு ஒரு வியாபார ஷமதை உண்டான வன்று தனக்கு ஒரு வியாபார ஷமதை உள்ளது -என்று தோற்ற இருந்தபடி
ஏங்கிய
உரலில் காட்டில் வ்யாவ்ருத்தி இத்தனையே காணும்
அழப் புக்கவாறே -வாய் வாய் -என்னுமே
பின்னை அழ மாட்டாதே ஏங்கி இருக்கும் அத்தனை
எளிவுண்டு -எளிவந்தபடி
எத்திறம்
பிரானே
இது என்ன பிரகாசம் –
இன்னம் மேன்மை தரை காணலாம்
நீர்மை தரை காண ஒண்ணாதே இருந்ததீ-
உயர்வற உயர் நலம் உடையவன் என்கிற மேன்மையிலே போவேன் -என்கிறார்
ந்யாம்யனாய் இருக்கிற இருப்பிலே நியந்தாவாய் இருக்கிற இருப்பு பேசலாய் இருந்ததீ
பேசப் புக்க வேதங்களும் யதோ வாசோ நிவர்த்தந்தே -என்றதும் மேன்மையிலே இ றே
நிலம் அன்று என்கைக்கும் நிலம் அன்று இ றே நீர்மை
இத்தனை தாழ நில்லாமையாலே சம்சாரிகள் பக்கல் காண ஒண்ணாது
பரத்வத்தில் இந் நீர்மை இல்லை
இது என்ன பிரகாரம் -என்கிறார்
பெரியவன் தாழ்ச்சி யாகையாலே பொறுக்க மாட்டு கிறிலர்-

—————————————————————————————–

அவதாரிகை –

எத்திறம் என்று ஆறு மாசம் மோஹித்துக் கிடந்தார் என்று பிரசித்தம் இ றே -இவர் மோஹித்துக் கிடக்க -பெருமாளும் பிராட்டியும்
பள்ளி கொண்டு அருளும் இடத்தை ஸ்ரீ குஹப் பெருமாள் நோக்கிக் கொண்டு கிடந்தால் போலே
ஸ்ரீ மதுரகவி பிரகிருதி சஜ்ஜனங்கள் அடங்கலும் பலிதமான வ்ருஷத்தை பஷி ஜாதங்கள் மொய்த்துக் கொண்டு கிடக்குமா போலே
இவரைச் சூழ்ந்து கிடந்தார்கள்
மன்யே சா பரணா ஸூ ப்த சீதா அஸ்மின் சாயா நோத்தமே -என்று
வழி நடந்த விடாயாலே ஆபரணங்கள் கழற்றாதே யாயிற்றுப் பள்ளி கொண்டது
தத்ர தத்ர ஹி த்ருச்யந்தி சக்தா க நக பிந்தவ –பசியருகுத் தந்தாம் ஜீவனத்தைப் பகுந்து இடுவாரைப் போலே அந்த பாரத ஆழ்வானுக்கு
தான் நோக்கிக் கொண்டு கிடந்த இடத்தை காட்டுகிறான் இ றே
அவ்விடத்தைக் கண்டவாறே -சத்ருக்நோ அனந்தர ஸ்திதி -என்னும் படி அவ்விடத்தைக் காணா மோஹித்து கிடந்தான் யாயிற்று ஸ்ரீ பரதாழ்வான்
அப்படியே மோஹித்துக் கிடந்த இவர் –சிரேண-சம்ஜ்ஞ்ஞாம் பிரதிலப்ய சைவ விசிந்த்யமாசா விசால நேத்ரா -என்கிறபடியே
அனுபவிதாக்கள் பாக்யத்தாலே காலம் உணர்த்த உணர்ந்தார் –
நல்லார் நவில் குருகூர் இ றே -சத்துக்கள் அடங்கலும் இவரைப் பற்றிப் படுகாடு கிடந்தது
உணர்ந்த அநந்தரம் -நான் இங்குச் சொல்லிற்று என் -என்று கேட்டார்
பத்துடை யடியவர்க்கு எளியவன் -என்று ப்ராசக்த அனுபிரசக்தமாக சிலவற்றைச் சொல்லா
எத்திறம் என்று மோஹித்துக் கிடந்தீர்
தப்பச் சொன்னோம் -அழித்து பிரதிஜ்ஞை பண்ண வேணும் -என்கிறார் இரண்டாம் பாட்டில்
ஆவது என் என்னில் -பரோபதேசம் பண்ணப் புக்கு தாம் அனுபவித்தார் முதல் பாட்டில்
இப்பாட்டுத் தொடங்கி பரோபதேசம் பண்ணுகிறார்
கீழே ப்ரஸ்துதமான சௌலப்யத்தை சப்ரகாரமாக அருளிச் செய்கிறார் இதில் –

எளிவரும் இயல்வினன் நிலை வரம்பில பல பிறப்பாய்
ஒளி வரு முழு நலம் முதலில கேடில வீடாம்
தெளிதரு நிலைமையது ஒழிவிலன் முழுவதும் இறையோன்
அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே –1-3-2-

எளிவரும் இயல்வினன் –
எளிமையை இயல்வாக -ஸ்வ பாவமாக உடையவன்
ச்நேஹிகளுக்கு ச்நேஹியாய் இருக்கும் என்னுமிது குற்றம் அன்றோ
எல்லார்க்கும் காதாசித்கமாக எளிமை கூடும் -இவனுக்கு எளிமை ஸ்வரூபம் என்கிறார் –

நிலை வரம்பில –
இன்ன அவதாரம் இன்ன சேஷ்டிதம்-என்று இல்லை எனபது பூர்வாச்சார்யர்கள் நிர்வாஹம்
பட்டர் -ஈவிரண்டையும் நிலை இல்லாமையிலே கொண்டு -இனி வரம்பு இல்லாமை யாவது –
அவதரித்து எளியனாய் நின்று நிலை தன்னிலே பரத்வம் தோற்ற நிற்கிலும் நிற்கும் என்று
சாரத்திய வேஷத்தோடு தாழ நிற்கச் செய்தே விஸ்வ ரூபத்தைக் காட்டியும்
தான் புத்ராத்ரமாக போகா நிற்கச் செய்தே கண்டா கர்ணனுக்கு மோஷத்தைக் கொடுத்தும்
ஏழு திரு நஷத்த்ரத்திலே கோவர்த்தன கிரியை தரித்துக் கொண்டு நின்றும் செய்தவை
இத்தால் சொல்லிற்று ஆயிற்று -ஒன்றிலும் ஒரு நியதி இல்லை –
ரஷணத்துக்கு உறுப்பாம் அத்தனையே வேண்டுவது -ஏதேனுமாக வமையும் இவனுக்கு என்கை –

பல பிறப்பாய் –
தெளிவுடைய தான் சொல்லும் போது -பஹூ நி –18-55-என்னும்
யதாபூதவாதியான வேதம் -பஹூதா விஜாயதே -என்னும்
அவன் கொடுத்த அறிவு கொண்டு சொல்லுவார் -பல பிறப்பு -என்பார்கள்
பிறப்பாய் –
பரார்த்தமாக தாழ நின்றோம் என்று தன் பக்கலிலே புரை இன்றிக்கே இருக்கை
ஆத்மானம் மானுஷம் மன்யே -என்றும்
அஹம் வோ பாந்தவோ ஜாத –

ஒளி வரு முழு நலம் –
அபஹதபாப்மத்வாதிகள் ஜீவாத்மாவுக்கும் உண்டு இ றே
இங்கனே இருக்கச் செய்தே ஜன்ம நிபந்தனமான திரோதானம் பிறவா நின்றது இ றே ஸ்வரூபத்துக்கு

அவனுக்கு ஜன்மத்தால் வரும் விகாராதிகள் உண்டு
இவன் தன்னைத் தாழ விட்டு பிறக்கப் பிறக்க கல்யாண குணங்கள் புகர் பெற்று வாரா நிற்கும்
ச வு ஸ்ரேயான் பவதி ஜாயமான –கர்ம நிபந்தன ஜன்மமாகில் இ றே பிறக்கப் பிறக்க புகர் அழிவது
அனுக்ரஹம் அடியாக வருகிற ஜன்மம் ஆகையாலே புகர் பெற்று வாரா நிற்கும் -ச ஏவ ஸ்ரேயான் -என்றபடி –

அக் குணங்கள் தான் இருக்கும் படி என் என்னில்
முதலில கேடில –
ஒரு நாள் வரையிலே தோன்றி ஒரு நாள் வரையிலே முடியுமவை யன்றே -சூர்யன் போல்வாருக்கு தான் இது
–ஸ்வரூப அந்தர்கதமாய் உள்ளன –

வீடாம் தெளிதரு நிலைமையது ஒழிவிலன் –
இக் குணம் ஒளி வரும் முழு நலம் -என்ற இதில் புகாதோ என்னில் -மோஷ பிரதத்வமும் தனியே சொல்ல வேண்டுவது
ஒரு குணம் ஆகையாலே சொல்லுகிறார்
அவதாரத்துக்கு பிரயோஜனம் இதுவே இ றே

வீடாம் தெளிதரு நிலைமையது ஒழிவிலன் –
மோஷம் ஆகிற தெளிவு -பரமபதம் -அத்தைத் தரும் ஸ்வ பாவம் என்றும் ஒத்து இருக்குமவன்
அவன் இங்கே வந்து அவதரிக்க்கிலும் சோக மோஹங்களை பண்ணும் இவ்விடம்
இவன் அங்குச் செல்லிலும் தெளிவைப் பண்ணும் அவ்விடம் தெளி விசும்பு -என்னக் கடவது இ றே –

முழுவதும் ஒழிவிலன் –
கீழ்ச் சொன்ன இரண்டையும் கூட்டிச் சொல்கிறார்

இறையோன் –
மோஷ பரதத்வம் ஈஸ்வரனுக்கே உள்ளது ஓன்று இ றே
அவதரிக்கச் செய்தே ஈச்வரத்வத்தில் குறையாதே நிற்கை

அளிவரும் அருளினோடு –
குளிர்ந்த பக்வமான அருளோடு -நிர் ஹேதுகமான அருளோடு

அகத்தனன் புறத்தனன் அமைந்தே –
அகத்தனன் –
ஆஸ்ரிதற்கு கழுத்திலே ஓலை கட்டி தூது போ என்னலாம் படி இருக்கும் –
புறத்தனன்-
அநாஸ்ரிதர்க்கு அந்நிலை தன்னிலே கிட்ட ஒண்ணாத படியாய் இருக்கும்
அமைந்தே
இப்படி சமைந்து — இறையோன் -அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே முதலில கேடில ஒளி வரு முழு நலம் வீடாம்
தெளிதரு நிலைமையது முழுவதும் ஒழிவிலனாய் நிலை வரம்பில பல பிறப்பாய் எளிவரும் இயல்வினன் -என்று அந்வயம்-

—————————————————————————

அவதாரிகை –

எளியன் என்றார்
எளிமையை சப்ரகாரமாக அருளிச் செய்தார்
இவனுடைய அவதார ரகஸ்யம் ஒருவர்க்கும் நிலம் அல்ல கிடீர் என்கிறார் இதில்

அமைவுடை யறநெறி முழுவதும் உயர்வற வுயர்ந்து
அமைவுடை முதல் கெடல் ஓடிவிடை யறநில மதுவாம்
அமையுடைய யமரரும் யாவரும் யாவையும் தானாம்
அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே–1-3-3-

அமைவுடை யறநெறி முழுவதும் உயர்வற வுயர்ந்து
ஒரு தர்மத்தை அனுஷ்டியா நிற்கச் செய்தே -இப்போதே பலம் பெறாதே ஒழியிலும் ஒழியும் –
இடையிலே சில விக்னங்கள் வரிலும் வரும்
அங்கன் அன்றிக்கே -சக்ரவர்த்தி நாலு ஆஹூதி பண்ணி நாலு ரத்னத்தை எடுத்துக் கொண்டால் போலே பலத்தோடு சந்திப்பக் கடவ
தர்ம மார்க்கம் எல்லா வற்றாலும்
உயர்வற உயர் நலம் உடையவன் -என்று சர்வேஸ்வரன் குணங்களால் உயர்ந்து இருக்குமா போலே -இதுக்கு இவனுக்கு அவ்வருகு
ஒருவரும் இல்லை -என்றபடி சமைந்து இருக்கை

அமைவுடை முதல் கெடல் ஓடிவு -இடை
பிரம்மா ஜகத் சிருஷ்டி பண்ணினால் -சர்வேஸ்வரனோ என்று சங்கிக்கும் படி இருக்கை
இப்படி சமைவை உடைத்தான சிருஷ்டி என்ன -அப்படியே இருந்துள்ள சம்ஹாரம் என்ன -இடை ஒடிவு என்ன –
இடை இடையிலே நடுவு -ஒடிவு -சம்ஹாரம் -அவாந்தர சம்ஹாரம் -என்றபடி –

யறநில மதுவாம் -அமையுடைய யமரரும்-
இவை தங்களுக்கு நிலையிட்டுக் கொடுத்த சர்வேஸ்வரனையும் மறுத்து கேள்வி கொள்ள வேண்டாத படி
மிகவும் விதேயாம் படி சமைந்த ப்ரஹ்மாதிகளும்-

யாவரும் யாவையும்
சேதனங்களும் அசேனங்களும்

தானாம் அமைவுடை நாரணன் –
சேதன அசேதனங்கள் எல்லாம் தான் என்கிற சொல்லுக்கு உள்ளே பிரகாரமாய் அன்வயிக்கும் படியான சமவை யுடையவனாகையாலே
நாராயணன் -என்னும் திரு நாமத்தை உடையவனுடைய

மாயையை அறிபவர் யாரே
இவனுடைய அவதார ரகஸ்யம் ஒருவருக்கும் அறிய நிலம் அல்ல -என்கிறார்
பிரகாரியான தான் பிரகாரமான வச்துவிலே ஓன்று என் மகன் என்று அபிமாநிக்கும் படி வந்து பிறந்த இவ்வாச்சர்யம்
ஒருவருக்கும் நிலம் அல்ல -என்கிறார் –

தானாம் அமைவுடை நாரணன் –
ஒருவன் ஒருவனை உனக்கு ஜீவனம் என்ன வேணும் என்றால் தன் புத்ராதிகளையும் கூட்டிக் கொண்டு எனக்கு
கல நெல்லு வேணும் என்னா நின்றான் இ றே-
அப்படியே இவை அடங்கலும் தன் அஹம் சப்தத்துக்கு உள்ளே அடங்கி தான் இவற்றுக்கு அபிமானியாய் இருக்கும் படியைச் சொல்லுகிறது

அறிபவர் யாரே –
நித்ய ஸூ ரிகள் பரத்வ அனுபவம் பண்ணுகையால் அறியார்கள்
சம்சாரிகள் நாஸ்திகர்கள் ஆகையாலே அறியார்கள்
ப்ரஹ்மாதிகள் தாம்தாம் அறிவாலே அறிய இருக்கிறார்கள் ஆகையால் அறியார்கள்
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்கள் மோஹித்துக் கிடப்பார்கள்
ச்வதஸ் சர்வஜ்ஞனான தானும் -ஜன்ம கர்ம ச மே திவ்யம் -என்னுமாகையாலே ஒருவருக்கும் நிலம் அல்ல என்கிறார்

—————————————————————————————

அவதாரிகை –

அப்படி இருக்கிற அவதார சௌலப்யம் ஒருவருக்கும் அறிய நிலம் அன்றோ என்னில் -ஆஸ்ரிதற்கு அத்யந்த ஸூலபனாய்
அநாஸ்ரிதற்கு அத்யந்த துர்லபனாய் இருக்கும் -என்கிறார்

யாரும் ஓர் நிலைமையன் என அறிவரிய வெம்பெருமான்
யாரும் ஓர் நிலைமையன் என அறிவெளிய வெம்பெருமான்
பேருமோர் ஆயிரம் பிற பல வுடைய எம்பெருமான்
பேருமோர் உருவமும் உளதில்லை இலதில்லை பிணக்கே –1-3-4-

யாரும் ஓர் நிலைமையன் என அறிவரிய வெம்பெருமான்
யாரும் -எத்தனையேனும் அதிசய ஜ்ஞானராய் இருக்குமவர்களே யாகிலும் -ஸ்வ யத்னத்தாலே காணும் அன்று
இன்னபடிப்பட்டதொரு ஸ்வ பாவத்தை உடையவன் -என்று அறிய ஒண்ணாத என் ஸ்வாமி யானவன்

யாரும் ஓர் நிலைமையன் என அறிவெளிய வெம்பெருமான்
யாரும் -இந்த யச் சப்தம் தாழ்ச்சிக்கு எல்லையில் நிற்கிறது -ஜன்ம வ்ருத்த ஜ்ஞானங்களால் ஒரு அளவில்லை யாகிலும்
தானே காட்டக் காணுமவர்களுக்கு தன் படிகள் எல்லாம் அறியலாய் இருக்கும்
எங்கே கண்டோம் என்னில் -ஒரு குரங்கு வேடச்சி இடைச்சி இவர்களுக்கு எளியவனாய் இருக்கக் கண்டோம் இ றே
எம்பெருமான் –
ஆஸ்ரிதர்க்கு எளியனாய் -அநாஸ்ரிதற்கு அரியனான என் நாயன் நிலை இருந்தபடி என் என்று எழுதிக் கொடுக்கிறார்
நமோ நமோ வாங்மநஸாதிபூமயே நமோ நமோ வாங்மநசைகபூமயே –ஸ்தோத்ர ரத்னம் -என்றால் போலே-

பேருமோர் ஆயிரம் பிற பல வுடைய எம்பெருமான்
அனுபவிதாக்களுக்கு இழிந்த இடம் எல்லாம் துறையாம்படி அநேகம் திரு நாமங்களை உடையனாய் இருக்கை –
குணத்துக்கு வாசகமாயும் ஸ்வரூபத்துக்கு வாசகமாயும் வருமவற்றுக்கு ஓர் எல்லை இல்லை இ றே
தேவோ நாம சஹஸ்ரவான் –என்கிறபடியே –
பிறபலவுடைய-
அந்த நாமத்வாரா காணும் அநேகம் திருமேனிகளை உடையனாய் இருக்கை
பிற -என்ன திருமேனியைக் காட்டுமோ என்னில் -நாம ரூபஞ்ச பூதா நாம் -என்றும்
நாம ரூபே வ்யாக்ரவாணி -என்று நாமத்தோடு சேர ரூபத்தையும் சொல்லக் கடவது
அவ்வளவே யல்ல -இவர் தாமும் இத்தை அனுபாஷிக்கிற இடத்தில் -பேரும் ஓர் உருவமும் –என்று அருளிச் செய்து வைத்தார்

பேருமோர் உருவமும் –
இவற்றில் ஒரு திரு நாமமும் ஒரு விக்ரஹமும்

உளதில்லை-
அநாஸ்ரிதற்கு ஸ்தூல பிரதிபத்தியும் அரியதாய் இருக்கும்

இலதில்லை –
ஆஸ்ரிதற்கு எல்லாம் காண்கையாலே இலது இல்லையே

பிணக்கே —
ஆஸ்ரிதர் எல்லாம் காண்கையாலே மங்களா சாசனம் பண்ணி நிற்பார்கள்
அநாஸ்ரிதர் இதை இல்லை என்று இருக்கையாலே முதலிலே கிட்டார்கள்
இரண்டுக்கும் நடுவே வஸ்து நித்யமாகப் பெற்றோமே என்று தாம் இனியராகிறார்
அன்றியே
பேரும் ஒரு உருவமும் உளது
திருநாமமும் -திரு நாமத்துக்கு வாச்யமான திருமேனியும் நித்யம்
இலது இல்லை -இல்லை பிணக்கே –
இவ்விடையாட்டத்தில் விவாதம் வேண்டா என்கிறார் –

————————————————————————————-

அவதாரிகை –

பலகாலும் பஜியுங்கோள் என்னா நின்றீர் -பஜன உபாயம்
இருக்கும் படியை அருளிச் செய்யீர் -என்ன
இனி நான் உபதேசிக்க வேணுமோ –
அவன் தான் ஸ்ரீ கீதையிலே அருளிச் செய்த பக்தி மார்க்கத்தாலே அவனை ஆஸ்ரயியுங்கோள்-என்றார் –

பிணக்கற வறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த
கணக்கற நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புறநெறி களை கட்டு
உணக்குமின் பசையற வவனுடை உணர்வு கொண்டு உணர்ந்தே –1-3-5-

பிணக்கற வறுவகைச் சமயமும் –
வைதிக சமயத்துக்கும் -பாஹ்ய ஷட் சமயங்களுக்கும் தன்னில் தான் உண்டான பிணக்கு அறும்படியாக

நெறியுள்ளி யுரைத்த
தான் சொல்லிற்று அடைய வேதார்த்தமாக இருக்கச் செய்தே தந்தாமுக்கு என்ன ஓர் அர்த்தம் போதியாதார்
ஆராய்ந்து சொல்லுமா போலே விசாரித்து அருளிச் செய்தான்
அதுக்கு நினைவு என் என்னில் அஹ்ருதயமாக சொல்லிலும் நன்று
சடக்கெனச் சொன்னால் -வாய் வந்த படி சொன்னான் நிரூபியாதே -என்பார்கள் என்று ஆராய்ந்து சொன்னானாக சொன்னபடி –

கணக்கற நலத்தனன் –
எல்லையில்லாத குணத்தை உடையவன் -என்னுதல் -எல்லையில்லாத ச்நேஹத்தை உடையவன் என்னுதல் –
ஆர் இரக்கச் செய்தான் –
தன் வாத்சல்யத்தால் அருளிச் செய்தான் அத்தனை இறே

வாத்சல்யத்தாலே சொல்லிற்று எல்லாம் அர்த்தமாம் அத்தனையோ என்னில்
அந்தமில் ஆதி –
ஆப்த தமன் –
எல்லாருக்கும் உத்பத்தி விநாசங்களால் இறே ஜ்ஞான சங்கோசம் பிறப்பது
இவனுக்கு அவை இல்லாமையாலே அர்ரம வச்யன் -என்கிறது –

யம் பகவன்
ஜ்ஞானாதிகளால் அல்பம் உத்கர்ஷம் உடையவன் பக்கலிலே பகவச் சப்தம் வர்த்தியா நின்றது இறே –
அந்யத்ர ஹ்யுபசாரத -பகவச் சப்தம் முக்கியமாக வசிப்பது இவன் பக்கலிலே -அல்லாதார் பக்கலிலே ஔபசாரிகம்

அம் பகவன் வணக்குடைத் தவ நெறி வழி நின்று –
நமஸ் யந்தச்ச மாம் பக்த்யா –ஸ்ரீ கீதை -9-14-என்று பக்தி சரீரத்திலே நின்று அருளிச் செய்தான் இறே
அங்கனா பர்ஷ்வங்கம் போலே போக ரூபமாய் இ றே இது இருப்பது –

வணக்குடைத் தவ நெறி வழி நின்று –
வணக்கத்தை உடைய பக்தி மார்க்கம் ஆகிற வழியிலே நின்று
பக்தி சரீரத்திலே மாம் நமஸ்குரு-ஸ்ரீ கீதை -9-34- என்கையாலே -வணக்குடை -என்கிறது –
தபஸ் -சப்தத்தாலே பக்தியைச் சொல்லிற்று -பக்தி ஜ்ஞான விசேஷம் ஆகையாலே -யஸ்ய ஜ்ஞானமயம் தப -என்கிற நியாயத்தாலே என்னுதல்
இவனுடைய ப்ரேம மாதரத்தையே குவாலாக நினைத்து இருக்கும் பகவத் அபிப்ப்ராயத்தாலே யாதல் –

புறநெறி களை கட்டு –
புற நெறி யாகிற களையைக் கடிந்து -பறித்து
கட்டு -களைதல்
பக்தி விஷயமான போது -பலாந்தரத்திலே போய் விலக்கடிகளைத் தள்ளி -என்கிறதாகிறது
பிரபத்தி விஷயமான போது இதர சாதனங்களைத் தள்ளி -என்கிறது –

உணக்குமின் பசையற –
ரச வர்ஜம் என்கிறபடியே -பாஹ்ய விஷய பிராவண்யத்தை ருசி வாசனைகளோடு விடுங்கோள் –

இது எல்லாம் என் கொண்டு தான் -என்னில்
அவனுடை உணர்வு கொண்டு உணர்ந்தே-
தத் விஷய ஜ்ஞானத்தைக் கொண்டு -என்னுதல்
தத் உக்த ஜ்ஞானத்தைக் கொண்டு என்னுதல்
பக்தி மார்க்கத்தைக் கொண்டு என்னுதல்
அவன் அருளிச் செய்த சரம ஸ்லோகத்தின் படியைப் பற்றி நின்று என்னுதல்

——————————————————————————————–

அவதாரிகை –

அவதாரத்திலே ஆஸ்ரயிங்கோள் -என்று நின்றீர் -மத்யே விரிஞ்ச கிரிசம் பிரதமாவதார -என்கிறபடியே
-ப்ரஹ்ம ருத்ரர்கள் நடுவே அவதீர்ணனாய் நிற்கிற நிலையாய் இருந்தது பிரதம அவதாரம்
அதில் மூவரும் ஒத்த கார்யத்திலே அதிகரித்து நின்றார்கள் -இப்படி நிற்கையாலே மூவரும் பிரதானாரோ- மூவரில் ஒருவன் பிரதானனோ
மூவருக்கும் அவ்வருகே ஒருவன் பிரதானனோ -என்று எங்களால் விவேகிக்கப் போகாமையாலே ஆஸ்ரயணத்தில் அருமை கூடும்படியாய் இருந்தது –
ஆஸ்ரயணீய வஸ்துவை நிரூபித்து தரலாகாதோ நாங்கள் ஆஸ்ரயிக்கும் படி என்ன —
காண்கிற தேஹமே ஆத்மா வென்று இருக்கும் நிலை தவிர்ந்து தேக அதிரிக்தமாய் இருப்பதொரு ஆத்மா வஸ்து உண்டு என்று அறிகை தான் அரிது
வருந்தி அத்தை அறிந்தானே யாகிலும் -ப்ரஹ்மா ருத்ராதிகளை சரீரமாகக் கொண்டு தான் சரீரியாக நிற்கிற சர்வேஸ்வரன் படி தானே அறியப் போகாது
ஆனபின்பு இவ்வழியே இழிந்து ஆஸ்ரயிக்கப் பாருங்கோள் -என்று ஆஸ்ரயணீய வஸ்து இன்னது என்றும்
ஆஸ்ரயிக்கும் பிரகாரம் இன்னது என்றும் அருளிச் செய்கிறார் –

உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உருவியந்த இந்நிலைமை
உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறை நிலை உணர்வு வரிது உயிர்காள்
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் மனப்பட்ட தொன்றே –1-3-6-

உணர்ந்து உணர்ந்து
உணர்வு -என்னாதே-உணர்ந்து -என்கையாலே -ஜ்ஞப்தி மாத்ரமே உள்ளது ஜ்ஞாத்ராம்சம் இல்லை -என்கிற பஷத்தை தவிர்க்கிறது -யோகாசாரன் நிரசனம் –
உணர்ந்து உணர்ந்து -என்ற வீப்சைக்கு கருத்து -சைதன்யம் -ஆகந்துகம் முக்த்ய அவஸ்தையிலும் பாஷண கல்பமாய் இருக்கும் என்கிற பஷத்தை தவிர்த்து சைதன்யம் நித்தியமாய் இருக்கும் என்னும் இடத்தைச் சொல்கிறது -நையாயிக வைசேஷிகர்கள் வாதம் நிரசனம்
ஜ்ஞாத்ருத்வம் நித்தியமாய் இருக்கையாலே -ஜ்ஞானக்ரியா கர்த்ருத்வம் ஜ்ஞாத்ருத்வம் அது தான் அநித்தியம் -என்கிற க்ரியா வாதியையும் நிரசிக்கிறது

இழிந்து அகன்று உயர்ந்து –
இச் சேதனன் தான் அணு பரிமாணனாய் இருக்கச் செய்தேயும் -ஈஸ்வர ஸ்வரூபத்தாலே எங்கும் வியாபித்து இருக்குமா போலே-
ஜ்ஞானத்தாலே எங்கும் வியாபித்து இருக்கும் என்கிறது
பாதே மே வேத நா சிரஸி மே வேத நா – என்று இருக்கும் படியைச் சொல்கிறது –

உருவியந்த இந்நிலைமை –
உருவில் காட்டில் வியந்து -வேறு பட்டு இருக்கிற இந்நிலைமை உண்டு –இந்த ஆத்மாவினுடைய ஸ்வரூபம்
அன்றியே
உருவு இயந்த –என்ற பதபேத மான போது -யாத்தல் -கடத்தலாய்-உருவில் காட்டிலும் கடந்து இருக்கும் -வேறுபட்டு இருக்கும் -என்றுமாம்

உணர்ந்து உணர்ந்து உணரிலும்
ஆக இரண்டாலும் ஜடமான சரீரத்தில் காட்டில் வேறு பட்டு இருக்கிற ஆத்மாவின் ஸ்வரூபத்தை கேவல சரவண மனநாதிகளாலே சாஷாத் கரிக்கக் கூடிலும்
தேக அதிரிக்தமாய் இருக்கிற ஆத்மாவினுடைய ஸ்வரூபத்தை யோக சாஸ்த்ரத்திலே சொல்லுகிற க்ரமத்தாலே இழிந்து வருந்தி ஒருபடி அறிந்தானாகிலும்

இறை நிலை உணர்வு வரிது –
சர்வேஸ்வரன் ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு அந்தராத்மாவாய் -அவர்களை சரீரமாகக் கொண்டு தான் சரீரியாய் நிற்கிற நிலை அறியப் போகாது –

உயிர்காள்-
சைதன்ய யோக்கியம் அன்றிக்கே இருப்பது ஒன்றாய் தான் இழக்கப் பெற்றதோ
சேதனரான பின்பு அதன் கார்யம் பிறக்கப் பெற்றது இல்லையே -அறிவுகேடராய் நீங்கள் பட்டது என் –

எங்கள் அறிவும் அறியாமையும் கிடக்க கிடீர் -அறிந்த நீர் அருளிச் செய்யீர் -நாங்கள் அப்படி ஆஸ்ரயிக்க என்ன -அருளிச் செய்கிறார் மேல் –
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து-அரி அயன் அரன் என்னும் இவரை — உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து -இறைஞ்சுமின் மனப்பட்ட தொன்றே
ஒரு உணர்த்தி -ஸ்வரூப பரம் –
ஒரு உணர்த்தி ஸ்வபாவ பரம்
உரைத்து உரைத்து –
ஸ்வரூப பரமான பிரமாணங்களையும் ஸ்வபாவ பரமான பிரமாணங்களையும்
விரோதி நிரசன சீலனாய் -ரஷகனாய் இருக்கும் ஒருவன்
ஒருவன் திரு நாபீ கமலத்திலே அவயவதாநேந பிறந்தவனாய் இருக்கும் –
ஒருவன் சம்ஹாரம் ஒன்றுக்கே கடவனாய் இருக்கும்
இவர்களை பிரதிபாதிக்கிற பிரமாணங்களை ஆராய்ந்து பார்த்து
அவை தன்னை பலகாலும் சொல்லிப் பார்த்து
லிங்கத்துக்கே உத்கர்ஷம் தோற்றும்படியாய் இருப்பது ஒரு பிரபந்தம் பண்ணித் தர வேணும் -என்பாரைப் போலே ஒரு வ்யக்தியிலே பஷபதிக்கப் பாராதே
இவர்கள் ஸ்வரூப ஸ்வபாவங்களை பலகாலும் ஆராய்ந்து பார்த்து கோல் விழுக்காட்டாலே உத்கர்ஷம் கிடந்த வ்யக்தியைப் பற்றப் பார்ப்பது
இப்படி ஆராய்ந்தவாறே ஒரு வஸ்துவே பிரதானம் என்று உங்கள் நெஞ்சிலே தோற்றும்
அவ் வஸ்துவை சரவண மன நாதிகளால் கைபுகுந்தது-என்று விஸ்வசிக்கலாம் அளவும் ஆஸ்ரயிக்கப் பாருங்கோள்

————————————————————————————

அவதாரிகை –

அப்படியே செய்கிறோம் -என்று ஆறி இருந்தார்கள்
ஐயோ நீங்கள் உங்களுடைய ஆயுஸ் சினுடைய ஸ்திதியும் இழக்கிற விஷயத்தின் நன்மையையும் அறியாமை இறே ஆறி இருக்கிறது –
நீங்கள் முடிந்து போவதற்கு முன்பே நிர்ணய உபாயங்களால் வஸ்து இன்னது என்று நிர்ணயித்து -நிர்ணீதனானவன் பக்கலிலே
கடுக பக்தியைப் பண்ணப் பாருங்கோள் -என்று கீழ்ப் பாட்டுக்கு சேஷமாய் இருக்கிறது இப்பாட்டும் –
நீங்கள் மந்தாயுஸ்ஸூக்களாகையாலே-கடுகச் செய்து கொடு நின்று -செய்கிறோம் -என்ன வேணும்
செய்கிறோம் என்று செய்ய ஒண்ணாது என்கிற இதுவே விசேஷம் கீழில் பாட்டில் காட்டில் –

ஓன்று என பலவென வறிவரும் வடிவினுள் நின்ற
நன்ற எழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து
நன்றென நலம் செய்வது அவனிடை நம்முடைய நாளே –1-3-7-

ஓன்று என பலவென வறிவரும் வடிவினுள் நின்ற
மூவர் பிரதானராய் -மூவர்க்கும் மூன்று சரீரம் உண்டாய்த் தோற்றுகையாலே-மூன்று சரீரத்திலும் ஒருவனே
அதிஷ்டித்துக் கொண்டு நிற்கிறானோ
அன்றியே
மூன்றிலும் மூன்று சேதனர் அதிஷ்டித்துக் கொண்டு நிற்கிறார்களோ என்று அறிய அரிய வடிவுகளை உடையராய் நிற்கிற –
ஏக ஆத்ம அதிஷ்டிதமோ -அநேக ஆத்ம அதிஷ்டிதமோ -என்று அறிய அரிதான வடிவை உடையராய் நின்ற

நன்ற எழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை
அநந்ய பரமான நாராயண அனுவாதிகளை நினைக்கிறார்
எழில் என்று அபஹதபாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண -என்கிற புகரை நினைக்கிறது
நன்று எழில்
ரூப ஸ்ரீ யைப் பார்த்தவாறே -கண்டவாற்றால் தனதே உலகு என நின்றான் -4-5-10-என்கிறபடியே சர்வ ரஷகன் இவனே என்னலாம்
நாரணன் –
திரு நாமத்தைப் பார்த்தவாறே தன்னை ஒழிந்தது அடைய பிரகாரமாக கொண்டு தான் பிரகாரியாக இருப்பான் ஒருவன் என்று தோற்றி இருக்கும்
நான் முகன்
ஒருவன் சிருஷ்டி காலத்தில் வந்தால் நாலு வேதங்களையும் உச்சரிக்கைக்கு நாலு முகத்தை உடையனாய் சிருஷ்டி கார்யம் ஒன்றிலும் அந்விதன்-என்று தோற்றி இருக்கும்
அரன்
ஒருவன் சம்ஹர்த்ருத்வம் ஒன்றிலும் அந்விதன் என்று தோற்றி இருக்கும் –
சிருஷ்டி ஸ்திதி அந்த கரணீம் ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மிகாம் ச சம்ஜ்ஞாம் யாதி பகவா நேக ஏவ ஜனார்த்தன –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-23-என்கிறபடியே
சம்ஜ்ஞைகளில் வந்தால் ஒக்க ஒடுக்கலாய் விஷ்ணு சப்தத்தோடு பர்யாயமான ஜனார்த்தன சப்தத்தை இட்டுத் தலைக் கட்டுகையாலே தானே பிரதானன் என்று தோற்றும்படியாய் இருக்கும் –

இப்படி வி சத்ருச-மாறுபட்ட – ஸ்வபாவராய் இருக்கிற இவர்களை
ஒன்ற நும் மனத்து வைத்து –
அவனை ஒழிந்த இருவரில் ஒருவனுக்கு உத்கர்ஷம் வேணும் என்றாதல்
நிர்ணயிப்பதற்கு முன்னே இவனுக்கு உத்கர்ஷம் வேணும் என்றாதல் பாராதே ஒருபடிப்பட உங்கள் நெஞ்சிலே வைப்பது
உள்ளி –
உள்ளுவது -சுருதி நியாயங்களாலே ஆராய்வது
அவர்கள் ஸ்வரூப ஸ்வ பாவங்களை இப்படி ஆராய்ந்த வாறே ஒரு வஸ்து பிரதானமாய் இரண்டு அப்ரதானமாய் தோற்றும்

தோற்றினவாறே –
நும் இரு பசை அறுத்து –
அவ்விரண்டிலும் நீங்கள் பண்ணுகிற நசையைத் தவிருவது -பேச நின்ற சிவனுக்கும் —
வஸ்துகதமாய் வருவது உத்கர்ஷம் இல்லை -நீங்கள் ஏறிடுகிற இவற்றைத் தவிருவது –

நன்றென நலம் செய்வது அவனிடை –
இப்படி நிர்ணீதனவான பக்கலிலே -இவன் நமக்கு கை புகுந்தான் -என்று உங்களுக்கு ஏறத் தேற்றம் பிறக்கும் படி
அநந்ய பிரயோஜனமான பக்தியைப் பண்ணப் பாருங்கோள்-

க்ரமத்திலே செய்கிறோம் என்று இருந்தார்கள்
நம்முடைய நாளே —
கெடுவிகாள் நம்முடைய ஆயுஸின் நிலை அருவி கோளே-கடுக ஆஸ்ரயிகப் பாருங்கோள்
நம்முடை நாள் -என்னும் காட்டில் -ஆயுஸின் நிலையை அறிந்தபடி என் என்னில்
முன்பே மின்னின் நிலையில என்று அருளிச் செய்தார் இறே
ஒருவன் இரண்டு கதவையும் அடைத்துக் கொண்டு கிடந்து உறங்கா நின்றால்-நெருப்பு பற்றி எரியா நின்றால் -அவிக்கிறோம் -என்று ஆறி இருக்கலாமோ –
நந்த்தன்யுதிதே ஆதித்யே நந்தத்யச்தமித ரவௌ ஆத்மநோ நாவபுத்யந்தே மனுஷ்யா ஜீவிதஷயம் -ஆதித்ய உதயத்திலே வந்தவாறே
-த்ரவ்ய அர்ஜன காலம் வந்தது -என்று உகப்பார்கள் –அவன் அச்தமித்தவாறே-அபிமத விஷயங்களோடு ரமிக்கைக்கு காலம் வந்தது -என்று
உகப்பார்கள் -சாலில் எடுத்த நீர் போலே தங்கள் ஆயுஸ்ஸூ குறைகிறது என்று அறியாது இரா நின்றார்கள் என்னா நின்றது இறே

—————————————————————————————–

அவதாரிகை –

ஒரு நாளாகிலும் முற்பட்டது உடலாக ஆஸ்ரயிக்கச் சொல்லா நின்றீர்
அநாதி காலம் நாங்கள் பண்ணின பாபங்கள் விலக்கவோ-இனி காலம் தான் உண்டோ -என்ன –
நீங்கள் ஆஸ்ரயணத்திலே ஒருப்படவே விரோதிகள் அடங்கலும் நசிக்கும்
ஸ்ரீ யபதி சமாஸ்ரயணம் ஆகையாலே காலம் கழிந்தது என்று இருக்கவும் வேண்டா
நீங்கள் தண்டு காலா-பெரிய திருமொழி -1-3-5- ஊன்றி ஊன்றி தள்ளி நடக்கும் போது அக்கோலோடே சாயவும் அமையும் -என்கிறார்

நாளும் நின்று அடும் நம் பழமை அம் கொடு வினையுடனே
மாளும் ஒரு குறைவில்லை மனனக மலமறக் கழுவி
நாளும் நம் திருவுடையடிகள் தம் நலம் கழல் வணங்கி
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே –1-3-8-

நாளும் நின்று அடும் –
நாள்தோறும் இடைவிடாதே நின்று ஹிம்சிக்கக் கடவதான
பரமாணு கதமான பாரிமாண்டல்யாதிகள் நித்தியமாய் இருக்கச் செய்தே நித்ய பரதந்த்ரமாய் இருக்குமா போலேயும்
பகவத் ஸ்வரூபத்தோ பாதி குணங்கள் நித்தியமாய் இருக்கச் செய்தே நித்ய பரதந்த்ரமாய் இருக்குமா போலேயும் நித்ய வஸ்துவாய்
நித்ய பரதந்த்ரமாய் போரா நிற்கச் செய்தே அசித் சம்பந்தமும் நித்தியமாய் போருகிறது இறே

நம் பழமை அம் கொடு வினை
நம் –
த்விஷந்த பாபக்ருத்யாம் -என்கிறபடி பிறரதாய்-அசல் பிளந்து ஏறிட வந்தது அல்ல –நெஞ்சு உணர நாமே பண்ணி வைத்தவை
அபூத பூர்வம் மம பாவி கிம் வா -ஸ்தோத்ர ரத்னம் -25-என்று
எனக்கு முன்பு அனுபவியாததாய் மேல் அனுபாவ்யமாய் இருப்பது ஓன்று உண்டோ –
சர்வம் சஹே -எல்லாம் பொறுக்க வல்லேன்
மே சஹஜம் ஹி துக்கம் – தன காய் பொறாத கொம்பு உண்டோ -என்று சொல்லலாம் படி இறே நாம் பண்ணி வைக்குமாவை இருப்பது
பழமை
அது தான் இன்று நேற்று அன்றியே பழையதாய் இருக்கை
அம –
என்று க்ரைர்யத்தைப் பற்றச் சொல்கிறது
கொடு வினை
அனுபவ விநாசயமாய் இருக்கை –

உடனே மாளும்
ஆச்ரயண காலத்திலே நசிக்கும்
யதேஷீ கதூல மக்னௌ ப்ரோதும் ப்ரதூயேத ஏவம் ஹாஸ்ய சர்வே பாபமான ப்ரதூயந்தே -சாந்தோக்யம் -5-25-
மேரு மந்திர மாத்ரோபி –ஸ்ரீ விஷ்ணு தர்மம் -என்று சொல்லுகிறபடியே விரோதி போம் அளவேயோ

ஒரு குறைவில்லை –
மேலும் ஒரு விரோதங்கள் வாராது -என்னுதல்
சர்வ அபிமதங்களும் பூர்ணமாம் -என்னுதல்
கௌந்தேய பிரதிஜா நீஹி ந மே பக்த ப்ரணச்யதி அர்ஜூன -இவ் வர்த்தத்தில் நம்மை விச்வசித்து பிரதிஜ்ஞ்ஞை பண்ணு
-நம்மைப் பற்றினவர்களுக்கு அநர்த்தம் வாராது காண்
பகவத் சமாஸ்ரயணம் பண்ணுகைக்கும் வினை -கிடக்கைக்கும் -அக்னி நா சிஞ்சேத் போலே -என்ன சேர்த்தி உண்டு -அசங்கதம்
துராசாரோபி –செய்யக் கடவது அல்லாதவற்றைச் செய்து போருவது
சர்வாசீ -அபோஜ்ய போஜனங்களைப் பண்ணுவது -க்ருதக்ன -உபகரித்த விஷயத்தில் அபகாரத்தைப் பண்ணுவது
நாஸ்திக -வைதிக மரியாதையை இல்லை என்று போருவது -புரா -இது தான் பழையதாய் போருவது –
சமா ஸ்ர யேதித்யாதி-இவன் அனுகூலிப்பது எப்போதோ என்று ஏற்கவே அவசரம் பார்த்து இருக்கிறவனை பற்றி அனுகூலிக்குமாகில்
பின்பு அவன் நிர்தோஷனாக பிரதிபத்தி பண்ணுவது என் தான் -என்னில் -ப்ரபாவாத் பரமாத்மன -இவனைக் குறைய நினைக்கையாவது
பகவத் பிரபாவத்தை குறைய நினைக்கை இ றே
ந வா ஸூ தேவ பக்தா நாம் அஸூபம் வித்யதே க்வசித் -என்னுமா போலே

இனி செய்ய வேண்டுவது ஓன்று உண்டு –
மனனக மலமறக் கழுவி –
சர்வேஸ்வரன் ப்ரஹ்ம ருத்ரர்கள் நடுவே கலசி நின்றால் -இவனோ கடவான் -மற்றையவர்களோ -என்று சம்சயிக்குமது தவிர்ந்து
சர்வேஸ்வரனே கடவான் என்கிற அந்த கரண ஸூத்தி உண்டாக வேணும்
திருவடி தன் நாமம் மறந்தும் புறம் தொழாது ஒழியும் இத்தனையே வேண்டுவது

நாளும் நம் திருவுடையடிகள் தம் நலம் கழல் வணங்கி
நாளும்
அபர்வணி கடல் தீண்டல் ஆகாது என்னுமா போலே ஒரு நியதி இல்லை
நம் திருவுடையடிகள் தம்-
ஸ்ரீ மானான ஸ்வாமி யானவனுடைய
இத்தால் நித்ய யோகத்தைச் சொல்லுகிறது
சர்வேஸ்வரனை ஆஸ்ரயித்தான் ஆகில் அவன் பலப்ரதனாகிறான் –
பிராட்டியை புருஷகாரமாக பற்ற வேண்டுகிறது என் -என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க
நாளும் நம் திருவுடை யடிகள் தம் நலம் கழல் வணங்கி -என்று அவள் முன்னாக ஆஸ்ரயிக்க வேணும் என்னா நின்றது கண்டீரே
என்று அருளிச் செய்து -அவனை ஆஸ்ரயிக்கும் இடத்தில் இவன் குற்றம் பாராதே தன் நிழலிலே இவனை வைத்து அவன் பக்கல்
முகம் பெற்றவாறே குற்றத்தைப் பொறுப்பிக்கும் அவள் முன்னாகப் பற்ற வேணும்
நலம் கழல் –
அவள் முன்னாகப் பற்றினாருடைய குற்றங்களைப் பாராதே கைக் கொள்ளும் திருவடிகள்
வணங்கி -என்றது வணங்க என்றபடி
வணங்கி என்கிற இது வினை எச்சமாய் -வணங்க என்னும்
அர்த்தமாய் இருக்கும்

வணங்க நாளும் நின்றாடும் நம் பழமை யாம் கொடு வினை உடனே மாளும் -ஒரு குறை இல்லை –
ஆனாலும் ஆஸ்ரயணத்துக்கு காலம் தப்பி நின்றதே என்ன –
மாளும் ஓர் இடத்திலும் –
முடிகிற ஒரு ஷணத்திலும்
வணக்கொடு மாள்வது வலமே —
த்விதா பஜ்யேயமப் யேவம் ந நமேயம் -என்னாதே கிடக்கிற சீரைப் பாயைக் கவ்விக் கவிழ்ந்து கிடந்து சாவவும் அமையும்
வலமே
வரமே -என்னுதல் -ஸ்ரேஷ்டம் என்னுதல் -பலவத்தரம் என்னுதல்
அவனையும் ஆஸ்ரயித்து வேறு சிலர் பக்கலிலும் தலை சாய்க்க இராதே
முடிகிற சமயத்திலே ஆஸ்ரயிக்கவே-பின்னைப் பேற்றோடு தலைக் கட்டும்
இத்தால் -ஜன்ம ப்ரப்ருத்தி ஆஸ்ரயத்தாலும் பலமில்லை பகவத் வ்யதிரிக்தர் பக்கலில்
ஆஸ்ரயணத்தில் உபக்ரமித்து முடிந்தாலும் பலம் தப்பாது பகவத் விஷயத்திலே என்கை-

———————————————————————————————–

அவதாரிகை –

கீழ் -ப்ரஹ்மாதிகளுடைய அபரத்வமும் -சர்வேஸ்வரனுடைய பரத்வமும் சொன்னார் –
இப்பாட்டில் அவர்கள் தாங்கள் இவனைப் பற்றிய லப்த ஸ்வரூபராய் இருக்கிறபடியே அருளிச் செய்கிறார்
ப்ரஹ்மாதிகளுக்கும் உத்பாதகனாய் அவர்களுக்கு ரஷகனான சர்வேஸ்வரன் -அவர்கள் தாங்களும் காலிடமாட்டாத பூமியிலே வந்து
அவதரிக்கைக்கு ஹேது என் என்னில் -அவன் தானே அருளிச் செய்ததுவே ஹேது -பரித்ராணாம் சாதுநாம் -என்றான் இ றே
ஆஸ்ரயிக்கும் அவர்களுக்கு இதிலே த்வரை பிறக்கைக்காகவும்-ருசி ஜனகனாகைக்கும் வந்து பிறப்பான்
அதிலே பலமாய் வருமது இறே துஷ்க்ருதுக்களுடைய விநாசம் -என்று அருளிச் செய்ததுவே ஹேது -என்கிறார் –

வலத்தனன் திரிபுரம் எரித்தனன் இடம் பெறத்துந்தித்
தலத்தெழு திசைமுகன் படைத்த நல்லுலகம் தானும்
புலப்படப் பின்னும் தன்னுலகத்தில் அகத்தனன் தானே
சொலப்புகில் இவை பின்னும் வயிற்றுள விவையவன் துவக்கே–1-3-9-

வலத்தனன் திரிபுரம் எரித்தனன்-
கீழில் பாட்டுக்கு கீழ் இரண்டு பாட்டாலும் -6/7 பாட்டுக்களிலும் சொன்ன அர்த்தத்தை அனுபாஷிக்கிறார்
திரிபுர தஹனத்தாலே சஞ்ஜாத அபிமானியான ருத்ரன் திருமேனியிலே வலவருகை பற்றி லப்த ஸ்வரூபனாய் இருக்கும் –
பச்யைகாதச மே ருத்ரான் தஷிணம் பார்ச்வ மாஸ்ரிதான் -என்கிறபடியே –

இடம் பெறத்துந்தித் தலத்தெழு திசைமுகன் படைத்த நல்லுலகம் தானும் –
எழுச்சியை உடைய திசைமுகன் படைத்த லோகமும் தானும் அசங்கு சிதமாக திரு நாபி கமலத்திலே இருக்கும்
ப்ரஹ்மாணமீசம் கமலாசநச்தம்-என்கிறபடியே இவை இவர்களுடைய சர்வ பிரகார ரஷணத்துக்கும் உப லஷணம்
எழுச்சியாவதி-சதுர்தச புவனத்துக்கும் நிர்வாஹகனான அளவுடைமை -ஈஸ்வரன் விரும்பி வந்து அவதரிக்கையாலே -நல்லுலகம் -என்கிறது
ஏறாளும் இறையோனும் திசைமகனும் திரு மகளும் கூறாளும் தனி யுடம்பன் -4-8-1- என்கிறபடியே
பிராட்டிக்கும் ப்ரஹ்மாதிகளுக்கும் ஒக்கத் திருமேனியில் இடம் கொடுத்து வைத்தால் அந்தப்புரத்தில் உள்ளவர்கள் என்று
அவர்கள் இருப்பிடத்தில் இவர்களுக்கு நலிய ஒண்ணாத படி கூறாகக் கொடுத்து வைக்கும்
சர்வ அபாஸ்ரயமாய் இறே திருமேனி தான் இருப்பது
இடம் பெற
சவிகாசமாய் இருக்கும்
ருத்ரனுக்கும் இவ்வருக்கு உள்ளாருக்கும் நிர்வாஹகனாய் -சதுர்தச புவன ஸ்ரஷ்டாவான சதுர்முகன் -தான் உண்டாக்கின நன்றான லோகமும்
தானும் திருநாபி கமலத்தைப் பற்ற லப்த ஸ்வரூபனாய் இருக்கும்
உந்தி என்றும் துந்தி என்றும் திரு நாபிக்கு பெயர்
இடம்பெறத் துந்தி
இடம் பெற அத்து உந்தித்தலம்-என்றாய் பதம் -அதில் அத்து என்கிற பதம் -சாரியைச் சொல்லாய் பொருள் இன்றியே போய்
-இடம் பெற உந்தித் தலம் -என்கிறது -பூதலம் -என்னுமா போலே
திசைமகன் படைத்த நல்லுலகம் தானும் உந்தித் தலத்தனன்
ஸ்த நந்தய பிரஜை தாய் முலையை அகலில் நாக்கு ஒட்டுமா போலே திரு நாபீ கமலத்தை விடில் தன் சத்தை இல்லையாம் படி இருக்கை
இப்படிப் பின்னை சர்வ காலமும் இவர்கள் இருப்பார்களோ என்னில் ஆபத்துக்களிலே திரு மேனியிலே இடம் கொடுக்கும்
அது மகா குணம் ஆகையாலே ஆழ்வார்கள் எப்போதும் ஒக்க அருளிச் செய்து கொண்டு போருவார்கள்
சாமந்தர்க்கு புறம்பே நாடுகள் கனக்க உண்டாகிலும் மாளிகைக்கு உள்ளே செம்பாலே நாழி யரிசியை தங்களுக்கு வரிசையாக நினைத்து இருப்பார்கள் இ றே
அப்படியே இவர்களும் திருமேனியில் பண்ணி வைக்கும் பிராப்தி விடார்கள் இ றே
ஒரு கலகங்களில் அடைய வளைந்தானுக்கு உள்ளே குடி வாங்கி இருந்து காலம் தெளிந்தவாறே புறம்பே புறப்பட்டாலும் இவ்விடம் இன்னார் பற்று
இவ்விடம் இன்னார் பற்று என்று பின்னும் பிராப்தி சொல்லி வைக்குமா போலே

புலப்படப் பின்னும்
ப்ரஹ்மாதிகளுக்கு தன திருமேனியிலே இடம் கொடுத்ததுக்கு மேலே
தன்னுலகத்தில் அகத்தனன் –
தான் உண்டாக்கின ப்ரஹ்மாவால் உண்டான லோகங்களிலே வந்து அவதரிக்கும்
ப்ரஹ்ம ருத்ரர்களுக்கும் தன திரு மேனியிலே ஏக தேசத்தைப் பற்றி லப்த ஸ்வரூபராம் படி இருக்கிறவன்
அவர்களுக்கும் கூட காலிட அருவருக்கிற சம்சாரத்திலே வந்து அவதரிக்கைக்கு ஹேது என் என்னில்
புலப்பட
காண வாராய் என்று கண்ணும் வாயும் துவர்ந்து இருக்குமவர்களுக்கு தன் சங்கல்பித்தினாலே சம்விதானம் பண்ண ஒண்ணாதே
அவர்கள் சஷூராதி கரணங்களுக்கு விஷயமாக வேணும் என்று -ஏன் சங்கல்ப்பித்தினால் சம்விதானம் பண்ணினால் என் செய்யும் என்னில்
மழுங்காத ஞானமே படையாக மலருலகில் தொழும்பாயர்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையும் -என்பார்கள்
இது தனக்குத் தான் அடி என் என்னில்
தானே
ஆத்மமாயயா
ஆத்மேச்சாயா
ஒரு கர்மம் பிரேரிக்க அன்று -இச்சையாலே
சொலப்புகில் இவை பின்னும் வயிற்றுள விவையவன் துவக்கே–
அவன் இப்படி அவதரித்துப் பண்ணும் ரஷணங்களில் ஏக தேசம் சொல்லில் சொல்லும் அத்தனை
எல்லாம் சொல்லில் தலைக் கட்டப் போகாது
சொலப்புகில் உள்ளே உள்ளே யாம் இத்தனை
அன்றியே
தன்னாலே ஸ்ருஷ்டரான ப்ரஹ்மாதிகளால் ஸ்ருஷ்டரானவர்களுக்கு -என் மகன் -என்று அபிமாநிக்கலாம் படி வந்து பிறந்து
உனக்கு ராஜ்யத்தைத் தந்தேன் -அது தன்னை வாங்கினேன் போ என்றும்
கையிலே கோலைக் கொடுத்து பசுக்கள் பின்னே போ என்று சொல்லலாம் படி எளியனாய் இருக்கிற தான்
இவர்களுக்கு ஒரு ஆபத்து வந்தால் இவர்களை வயிற்றிலே வைத்து நோக்கும் படியைச் சொல்லிற்று ஆகவு மாம்
இப்படி இதுவே அர்த்தம் என்னும் இடம் நீர் அருளிச் செய்த போது தெரிந்து அல்லாத போது எங்களுக்கு தெரியாத படி இரா நின்றதீ என்ன
இவை அவன் துவக்கே
மம மாயா துரத்தயா-என்றபடி அவன் தானே பிரக்ருதியாகிற விலங்கை இட்ட பாக்ய ஹீனர்கள் தன் பக்கல் அணுகாதபடி பண்ணி
உங்கள் பக்கல் அவன் உதாசீனனாய் இருக்கையாலே தெரியாது ஒழிகிறது என்கிறார்
துயக்கம் -சம்சயம்

——————————————————————————–

அவதாரிகை –

அவன் விமுகர் பக்கல் பண்ணுமவை கிடக்கிடீர் -அவன் காட்டின வழியே காணப்புக்க நாம் மநோ வாக் காயங்களாலே நம் விடாய் கெடத்
திரு உலகு அளந்து அருளின திருவடிகளை அனுபவிப்போம் என்று பாரிகிறார் –

துயக்கறு மதியில் நல் ஞானத்துள் அமரரைத் துயக்கும்
மயக்குடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன்
புயற்கரு நிறத்தனன் பெரு நிலம் கடந்த நல்லடிப் போது
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே –1-3-10-

துயக்கறு மதியில் நல் ஞானத்துள் அமரரைத் –
துயக்கற்ற மதியை உடைய -சம்சய விபர்யய மதியையுடையராகையாலே
உள் -மனமும் இடமும் மேலும் -இங்கே மேலான அமரர் என்றபடி -நன்றான ஞானத்தை உடைய அமரரையும் கூட

துயக்கும் மயக்குடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன்
துயக்கு -மனம் திரிவு -அறிவு கெடும்படி தெரியாமையைப் பண்ணக் கடவதான குண சேஷ்டிதங்களை கூடின அவதாரங்கள் -மாயைகள் –
ஆகாசத்தைப் பரிச்சேதிக்கிலும் பரிச்சேதிக்கப் போகாது
அமரர் -என்கிறது இந்த்ராதிகளை
ரஜஸ் தமஸ் ஸூ க்கள் மிக்கு இருக்கச் செய்தே சத்யம் தலை எடுத்தாலும் அப்படியே கனத்து இருக்கும் இ றே அவர்கள் தங்களுக்கு –
அப்போது நம் கார்யம் நம்மால் செய்யப் போகாது -அவனே நம் கார்யத்துக் கடவன் என்று இரா அந்தர ஷணத்திலே எதிரிடா நிற்பார்கள்
தங்கள் இருப்பிடமும் இழந்து -ஸ்திரீகளும் பிடியுண்டு எளிமைப் பட்ட அளவிலே அத்தைப் பரிஹரித்து தர வேணும் என்று இரந்து-
பின்னை இவனும் போய் நரக வதம் பண்ணி -சிறை கிடந்த ஸ்திரீகளையும் மீட்டுக் கொடுத்து போரா நிற்கச் செய்தே புழக்கடைக்கே
நின்றதொரு பூண்டைப் பிடுங்கிக் கொண்டு போர-வஜ்ரத்தைக் கொண்டு தொடந்தான் இ றே
அன்றிக்கே
நல் ஞானத்து உள் அமரர் -என்கிறது நித்ய ஸூரிகளையாய்-ஜ்ஞானாதிகனான பெரிய திருவடியும் -தேவரீரையும் நாய்ச்சிமாரையும்
வஹித்தேன் நான் அன்றோ என்றால் போலே சிவியார் சொல்லும் வார்த்தையைச் சொன்னான் இறே

அவனுடைய ஆச்சர்யங்கள் நம்மால் பரிச்சேதிக்கப் போமோ -அது கிடக்கிடீர் –
அவன் அனுக்ரஹத்தாலே காட்டின வடிவழகை அனுபவிப்போம் நாம் என்கிறார்
புயற்கரு நிறத்தனன் –
வர்ஷூக வளாஹகம் போலே இருக்கிற திருமேனியை உடையவன் –
மநோ வாக் காயங்களால் அனுபவிக்கப் பெற்றேன் -என்கிறார் -என்று பிள்ளான் பணிக்கும் படி
இவற்றாலே அனுபவிக்கப் பாரிக்கிறார் -என்று நஞ்சீயர் அருளிச் செய்யும் படி
பெரு நிலம் கடந்த நல்லடிப் போது
பரப்பை உடைத்தான பூமியை அளக்கிற இடத்தில் -வசிஷ்ட சண்டாள விபாகம் அற எல்லார் தலையிலும் ஒக்கத் திருவடிகளை வைத்தான்
இவர்கள் நன்மை தீமை பாராதே தன்னுடைய சுத்தியே இவர்களுக்காம் படி பண்ணினான்
நல்லடிப் போது -படிக்களவாக நிமிர்ந்த நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய் -9-2-2–என்று ஆசைப்பட வேண்டும் படி இ றே இருப்பது
கதா புன -என்று பிரார்த்தித்து கிடக்குமது இ றே -செவ்விப்பூ சூட ஆசைப்படுவாரைப் போலே

அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே –
மறக்கக் கடவேன் அல்லேன் –
அக்ரமமாக பேசக் கடவேன் –
ஸூ காடம் பரிஷச்வஜே -என்னுமா போலே கட்டிக் கொள்ளக் கடவேன்
நிர்மமனாய் திருவடிகளிலே விழக் கடவேன்
அநந்ய பிரயோஜனனாய் இப்படி செய்யக் கடவேன்

————————————————————————————–

அவதாரிகை –

நிகமத்தில் -இத்திருவாய் மொழியை அப்யசிக்க வல்லார் முற்பட நித்ய ஸூ ரிகள் வரிசையைப் பெற்று -பின்னை
சம்சாரம் ஆகிற அறவைச் சிறை வெட்டி விடப் பெறுவார்கள் -என்கிறார்

அமரர்கள் தொழுது எழு அலை கடல் கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளம் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அமர்சுவை யாயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார்
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அஞ்சிறையே–1-3-11-

அமரர்கள் தொழுது எழு அலை கடல் கடைந்தவன் தன்னை
கவிழ்ந்து -உப்புச் சாறு கிளறுவது எப்போதோ -என்று கிடக்கிற தேவ ஜாதியானது -எழுத்து வாங்கும் படியாக வாயிற்று
தோளும் தோள் மாலையுமாய் ஒரு கடல் ஒரு கடலை நின்று கடையுமா போலே கடைந்த படி
குணங்களுக்குத் தோற்று -தொழுது எழு -என்கிற தம் பாசுரமேயாய் விட்டது -அழகுக்குத் தோற்ற அவர்களுக்கும் என்கிறார் –

அமர் பொழில் வளம் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
சேர்ந்த பொழில்
வளப்பத்தை உடைத்தாய் சம்பத்தை உடைத்தான திரு நகரி -இத் திரு நகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார் வாசிகமான அடிமை செய்த படியாயிற்று இது தான்
பூர்ண விஷயத்தில் வாசிகமான வ்ருத்திக்கு மேற்பட செய்யலாவது இல்லையே
தத் விப்ராசோ விபன்யவ -என்று நித்ய ஸூ ரிகளுக்கும் இதுவே இ றே வருத்தி

அமர்சுவை யாயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார்
ரசகனமாய் யாயிற்று ஆயிரம் தான் இருப்பது
இத்தால் வாசிகமான அடிமை முறை என்று கார்ய புத்த்யா செய்ய வேண்டா -என்றபடி
அவற்றினுள் இவை பத்தும் –
விண்ணவர் அமுது உண்ண அமுதில் வரும் பெண்ணமுது உண்ட -என்னுமா போல அவை தன்னிலே ரசகனமாய் இருக்குமாயிற்று
இத் திருவாய் மொழி –இவற்றை அப்யசிக்க வல்லார்

அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அஞ்சிறையே–
நித்ய ஸூரிகளோடு ஒத்த உச்ச்ராயத்தை உடையராய் தங்களுடைய ஜன்மம் ஆகிற விலங்கு அறப் பெறுவார்கள்
இப்பத்தை கற்ற போதே இவனை நித்ய ஸூரிகளிலே ஒருவனாக நினைப்பிடும்
சரீர விச்லேஷம் பிறந்தால் போய்ப் புகும் இத்தனை
ராஜா ஒருவனுக்கு நாடிட்டால் க்ரமத்தில் போய்ப் புகும் அத்தனை இறே
ராஜபுத்திரன் தலையிலே முடியை வைத்து பின்னை விலங்கு வெட்டி விடுமா போலே
நித்ய ஸூரிகளில் ஒருவராம் படியான தரத்தைப் பெற்று பின்னை சம்சார நிகள விச்சேதத்தை பெறுவார்கள்
அன்றியே
அமரரோடு உயர்வில் சென்று
ஆதி வாஹிகரோடு விரஜையிலே சென்று
அறுவர் தம் பிறவி யஞ்சிறையே -ஸூஷ்ம சரீரம் விதூநனம் பெறுவார்
த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி மா மேதி–ஸ்ரீ கீதை -4-9-என்று அருளிச் செய்த அதுவே பலமாகக் கடவது

முதல் பாட்டில் சுலபன் என்கிறார் –
இரண்டாம் பாட்டில் கீழ் பிரஸ்துதமான சௌலப்யத்தை சபிரகாரமாக அருளிச் செய்தார்
மூன்றாம் பாட்டில் -அவனுடைய அவதார ரகஸ்யம் ஒருவருக்கும் அறிய நிலம் அல்ல என்றார்
நாலாம் பாட்டில் -அப்படிகள் ஆஸ்ரிதற்கு அறியலாம் அநாஸ்ரிதற்கு அறியப் போகாது என்றார்
அஞ்சாம் பாட்டில் இப்படிப்பட்டவனை அவன் அருளிச் செய்த பக்தி மார்க்கத்தாலே ஆஸ்ரயிங்கோள் என்கிறார்
ஆறாம் பாட்டில் -ஆஸ்ரயணீய வஸ்து இன்னது என்றும் ஆஸ்ரயிக்கும் பிரகாரம் இன்னது என்றும் அருளிச் செய்தார்
ஏழாம் பாட்டில் -நீங்கள் மந்த ஆயுஸ் ஸூ க்களாகையாலே விளம்பிக்க ஒண்ணாது -கடுக ஆஸ்ரயிங்கோள் என்கிறார்
எட்டாம் பாட்டில் -ஆஸ்ரயிக்கவே விரோதிகள் அடங்கலும் நசிக்கும் என்கிறார்
ஒன்பதாம் பாட்டில் ப்ரஹ்ம ஈசா நாதிகளுக்கும் காரண பூதனானவான் வந்து அவதரிக்கைக்கு ஹேது அருளிச் செய்தார்
பத்தாம் பாட்டில் -இப்படி ஸூ லபனானவனை த்ரிவித கரணங்களாலும் அனுபவிக்கப் பாரித்தார்
இத்தை அப்யசித்தார்க்கு பலம் சொன்னார் நிகமத்தில்

———————————————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருவாய்மொழி – 1-2—ஈட்டு -ஸ்ரீ ஸூ க்திகள் —

October 6, 2015

அவதாரிகை –

தத்வ பரமாயும் உபாசன பரமாயும் இ றே மோஷ சாஸ்திரம் தான் இருப்பது -அதில் தத்வ பாரமாகச் சொல்ல வேண்டுவது
எல்லாம் சொல்லிற்று கீழில் திருவாய் மொழியில்
உபாசன பாரமாகச் சொல்ல வேண்டும் அவற்றுக்கு எல்லாம் சங்க்ரஹமாய் இருக்கிறது இத் திருவாய் மொழி –
இத் திருவாய்மொழி தன்னை ஆளவந்தார் அருளிச் செய்ததாக திருமாலையாண்டான் பிரபத்தி விஷயமாக நிர்வஹித்திக் கொண்டு போந்து
எம்பெருமானாரும் அப்படியே அருளிச் செய்து கொண்டு போந்து -பாஷ்யம் தலைக் கட்டின பின்பு
பக்தி விஷயமாக அருளிச் செய்து கொண்டு போருவர் பின்பு எம்பாரும் அப்படியே அருளிச் செய்தார் –

இவருடைய பக்தி பிரபத்திகள் தான் விகல்பிக்கலாய் இ றே இருப்பது –
மயர்வற மதி நலம் அருளினான் என்று -இவர் தாம் பெற்றது பக்தி ரூபா பன்ன ஜ்ஞானமாய் இருந்தது -தாம் பெற்றது ஓன்று
பிறருக்கு உபதேசிப்பது ஒன்றுமாக ஒண்ணாதே –அப்போது விப்ரலம்ப கோடியிலே ஆவாரே –
உபயபரிகர்மித ஸ்வாந்தஸ்ய -என்கிறபடியே
அதாவது கர்மம் ஞானம் இவற்றால் அலங்கரிக்கப் பட்ட ஞானம் கொண்டவனுக்கு -ஆத்ம சித்தி -ஆளவந்தார் அருளிச் செய்த படி
கர்ம ஜ்ஞான சம்ஸ்க்ருத அந்த கரணனுக்கு பிறக்கும் அது இறே பர பக்தி -அந்த ஜ்ஞான கர்மங்களினுடைய ஸ்தானே-
பகவத் பிரசாதமாய் -அதடியாக அநந்தரம் விளைந்தது இ றே இவருடைய பக்தி தான் –
இது தான் வேதாந்த விஹிதையான பக்தி தானே யானாலோ வென்னில் –
சர்வேஸ்வரன் அருள இவர் பெற்றார் ஆகிற ஏற்றம் போம் -அபசூத்ராதிகரண நியாயமும் பிரசங்கிக்கும் -ஆனபின்பு தாம் பெற்றதையே பிறருக்கு உபதேசிக்கிறாராக அமையும்-
கீழில் திருவாய்மொழியில் அவனுடைய பரத்வத்தை அனுபவித்து ஒரு பெரிய திருநாள் போலே இ றே போந்தது –
இவர் இப்போது நெஞ்சு ஒழிந்து இருந்து பிறருக்கு உபதேசிக்கிறபடி எங்கனே தான் –
தான் அனுபவித்த விஷயத்தை எல்லை கண்டோ -அன்றிக்கே தாம் அவ்விஷயத்தில் விரக்தராயோ -என்னில்
விஷயமோ வென்றால் -தனக்கும் தன தன்மை அறிவறியான்–8-4-6-என்கிறபடி அபரிச்சின்ன விஷயம் -கொள்ள மாளா இன்ப வெள்ளம் -4-7-2-இ றே
இனி தம் அபி நிவேசமோ வென்றால் -காதல் கடலின் மிகப் பெரிதால் -7-3-2–என்றும் –
மண் திணி ஜ்ஞாலமும் ஏழ் கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால் -7-3-8–என்றும்
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா -10-10-10–என்னும்படி பெருகி இருந்தது
ஆகிலும் ஒரு கால் அபி நிவேசம் பிறந்தால் அப்படிப்பட்ட விஷயம் தானே காலாந்தரத்தில் விரக்தி பிறக்கக் காணா நின்றோம் –
அப்படியே சில காலம் அனுபவித்து பின்பு விரக்தி பிறந்ததோ வென்னில் -அங்கனம் சொல்ல ஒண்ணாது
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தொரும் அப் பொழுதைக்கு அப் பொழுது என் ஆராவமுதம் -2-5-4-என்னும்படி
நித்ய அபூர்வமாய் இருக்கும்
இனி ஆசார்ய பதம் நிர்வஹிக்கைக்காக அன்று -நீசனேன் நிறைவு ஒன்றும் இலேன் என்பவர் இ றே
க்யாதி லாப பூஜைகளுக்காக அன்று -கொள் என்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் நெருப்பாக -என்று உபதேசிப்பவர் இ றே –
ஓத வல்ல பிராக்கள் -என்று அவர்களையும் தமது யஜமானராக எண்ணுபவர் இ றே
ப்ரப்ரூயாத் -முண்டக -1-2-13-என்ற ஒரு விதி பரதந்த்ரராய் அன்று – குருகுல வாசம் செய்யாதவனுக்கு உபதேசிக்கக் கூடாது என்று இருப்பவரும் அன்றே
ஆனால் இது பின்னை எத்தாலே யாவது என்னில் -ஸ்வ அனுபவ பிரகர்ஷம் இருக்கிற படி -தான் அனுபவித்த விஷயம் த
னியே அனுபவிக்குமது அன்றிக்கே இருந்தது
இனி நமக்கு போதயந்த பரஸ்பரத்துக்கு ஆளாவார் ஆர் என்று சம்சாரிகள் பக்கலிலே கண் வைத்தார்
தாம் பகவத் விஷயத்திலே பிரவணராய் இருக்கிறார் போலே அவர்கள் சப்தாதி விஷயங்களிலே பிரவணராய் இருந்தார்கள்
இவர்கள் அநர்த்தம் பரிஹரித்து அல்லது நிற்க ஒண்ணாதாய் இருந்தது
ஒருவனுக்கு வைஷ்ணத்வம் உண்டு இல்லை என்னும் இடம் தனக்கே தெரியும் காண்-என்று நஞ்சீயர் பல காலும் அருளிச் செய்வர்
பிறர் அநர்த்தம் கண்டால் ஐயோ என்று இருந்தான் ஆகில் -நமக்கு பகவத் சம்பந்தம் உண்டு என்று இருக்க அடுக்கும் –
இத்தனையும் பட்டிடுவானுக்கு -என்று இருந்தான் ஆகில் நமக்கு பகவத் சம்பந்தம் இல்லை என்று இருக்க அடுக்கும் என்று –
இவர்களை இவர் மீட்க்கப் பார்க்கிற வழி தான் என் என்னில்-இவர்கள் தான் சேதனராய் இருந்தார்கள் -சப்தாதி விஷயங்களில் வாசி அறிந்து –
தீயவை கழித்து நல்லவை பற்றி போருகிறது ஓன்று உண்டாய் இருந்தது –
அவற்றினுடைய ஹேயதையும்-சர்வேஸ்வரன் உடைய உபாதேயதையும் இவர்களுக்கு அறிவித்தால் அவற்றை விட்டு இவனைப் பற்ற அடுக்கும்
என்று பார்த்து -சர்வேஸ்வரன் உடைய நன்மையையும் இவர்கள் பற்றின விஷயங்கள் அல்ப அஸ்த்ரத்வாதி தோஷ துஷ்டங்கள் என்னும் இடத்தையும்
பற்றும் இடத்தில் வரும் அந்தராய பரிஹாரத்தையும்-பற்றும் இடத்தில் இன்று புதிதாக செய்ய வேண்டுவது ஓன்று இல்லை -பழைய சம்பந்தத்தை உணர அமையும் என்னும் இடத்தையும் -பற்றுவாருக்கு அனுசந்திக்கப் படும் மந்த்ரம் இன்னது என்னும் இடத்தையும் அவனுடைய பஜ நீயதயையும் அருளிச்
செய்யா நின்று கொண்டு இதர விஷய வைராக்ய பூர்வகமாக பகவத் பக்தியைப் பண்ணி ஆஸ்ரயிங்கோள் -என்று பர உபதேச பிரவ்ருத்தர் ஆகிறார் –

இதர விஷயங்களை விட்டு -உங்களுக்கு வகுத்த விஷயத்தை பற்றப் பாருங்கோள் -என்கிறார் முதல் பாட்டில் –

வீடு மின் முற்றவும் வீடு செய்து உம்முயிர்
வீடுடை யானிடை வீடு செய்ம்ம்மினே –1-2-1-

வீடு மின் –
வீடுமின் -என்று பன்மையாய் -ஒரு சொல்லாய்க் கிடக்கவுமாம் –
விடுமின் -என்றத்தை நீட்டி வீடுமின் –என்று கிடக்கிற தாகவுமாம் —
முதலிலே வீடுமின் என்பான் என் என்னில் -சிறு பிரஜை கையிலே சர்ப்பத்தை பிடித்துக் கொண்டு கிடந்தால் பொகட்டுக் கொடு நிற்கச் சொல்லி
-பின்னை சர்ப்பம் -என்பாரைப் போலேயும்
ஒருவன் கிருஹத்துக்கு உள்ளே கிடந்தது உறங்கா நிற்க நெருப்புப் புறம்பே பற்றி எரியா நின்றால்-புறப்பட்டுக் கொள் கிடாய் -என்று
பின்பு நெருப்பு என்பாரைப் போலேயும் முந்துற விடுங்கோள் என்கிறார் –
ஜன்ம மரணங்களுக்கு நடுவே இ றே-இவை தான் நோவு படுகிறது -த்யக்த்வா புத்த்ராம்ச தாராம்ச்ச –யுத்த -17-4-என்றும்
பரித்யக்தா மயா லங்கா –யுத்த -19-5-என்றும் -விடுகை முன்னாக இ றே முன்பு பற்றினவர்களும் பற்றிற்று –
வீடுமின் -என்கிற பன்மையால் சொல்லுகிறது என் என்னில் ஒருவன் தந்தனாய் வந்து நிற்க -அவனுக்கு உபதேசிக்கிறார் அன்றே
சம்சார வெக்காயம் எல்லாருக்கும் ஒத்து இருக்கையாலே-ஒருவர் அல்லா ஒருவர்க்காகிலும் ருசி பிறக்குமோ என்று எல்லாருக்கும் உபதேசிக்கிறார்
எத்தை விடுவது என்னில் –

முற்றவும்
சண்டாளர் இருப்பிடத்தை ப்ராஹ்மணர்க்கு ஆக்கும் பொது சில கூட்டி சில கழித்து அன்றே கொள்ளுவது
அப்படியே அஹங்கார மமகாரங்களாலே தூஷிதமான வற்றிலே சில கூட்டிக் கொள்ள ஒண்ணாதே -ஆகையால் கட்டடங்க விடுங்கோள் என்கிறார்

வீடு செய்து –
வீடுமின் முற்றவும் -என்றார் ஆகில் திரிய வீடு செய்து -என்கிற இதுக்கு கருத்து என் என்னில்
மேல் ஒரு பேறு பெறுவதிலும் -இவற்றை விட்டு நிற்கும் நிலை தானே பேறாகப் போருகையாலே -விடுகையாகிற பேற்றைப் பெற்று என்கிறபடி –
ராஜ புத்திரன் அழுகு சிறையிலே கிடந்தால் முடி சூடி ராஜ்யம் பண்ணுவதிலும் சிறை விடுகை தானே பிரயோஜனமாய் இருக்கும் இ றே –

உம்முயிர் வீடுடை யானிடை-
இதுக்குப் பல படியாக அருளிச் செய்வர்
யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய பிருத்வி சரீரம் -என்கிறபடியே உம் உயிரையும் அதினுடைய வீட்டையும் உடையவன் என்னுதல்-
உம் உயிரை வீடாக உடையவன் என்னுதல்
உம் உயிரை விடும் இடத்தில் -சமர்ப்பிக்கும் இடத்தில் -உடையான் பக்கலிலே என்னுதல் –
வீடுடையான் –
பரமபத நிலையன் பக்கலிலே -என்னுதல்
உம்முயிர் –
அநித்தியமான சரீரத்துக்கு நன்மை பார்க்கச் சொல்லுகிறேனோ
நித்தியமான ஆத்மா வஸ்துவுக்கு அன்றோ நான் நன்மை பார்க்கச் சொல்கிறது
அது தானும் என் உயிர்க்கோ
உம் உயிர்க்கு அன்றோ

உடையானிடை – வீடு செய்ம்ம்மினே
பொதுவிலே உடையவன் -என்கிறார்
ருசி பிறந்து -அவன் ஆர் என்றால் -வண் புகழ் நாரணன் -என்பாராக –
அவன் உடையவனாய் உங்கள் சத்தையாய் நோக்கிக் கொண்டு போரா நிற்க
நீங்களும் -நான் என்னது -என்று அகலப் பாராதே
உங்களை அவன் பக்கலிலே சமர்ப்பிக்கப் பாருங்கோள்-
அவன் உடையவன் ஆனபின்பு அவனோடு அவிவாதமே உங்களுக்கு வேண்டுவது

யம ப்ராதேசிகமான நியமனத்தை உடையவனை யன்று சொல்லுகிறது –
ப்ரபவதி சம்யமனே மமாபி விஷ்ணு -ஸ்ரீ விஷ்ணு புராணம் –என்று அவன் தன்னையும் நியமிக்குமவன் யாயிற்று இவன் —
வைவஸ்வத -விவஸ் வானுடைய குலத்திலே பிறந்தவன் -என்னுதல் -ஆதித்ய அந்தர வஸ்திதன் -என்னுதல்
ராஜா -அவனைப் போலே தஹ பாச என்கை யன்றிக்கே எல்லார்க்கும் இனியனாய் இருக்குமவன் யாயிற்று இவன்
ய-அந்தர்யாமி ப்ராஹ்மாணாதிகளிலே பிரசித்தி –
தவிஷா ஹ்ருதி ஸ்தித -அவன் எங்குற்றான் என்ன -கண்டில்லையோ -உன்னுடைய ஹிருதயத்திலே புகுந்து ஆட்சியிலே
தொடர்ச்சி நன்று என்று இருக்கிறான் -ஆனால் செய்ய வேண்டுவது என் என்னில் -தேன சேத விவாதஸ் தே-உடையவனாய்
இருக்கிறவனோடேஉனக்கு அவிவாதம் உண்டாகில் இத்தால் பேறு -என்பாயோ
மா கங்காம் மா குரூன் கம -மனு ஸ்ம்ருதி–ஒரு தீர்த்தம் தேடித் போதல் புண்ய ஷேத்ரம் தேடித் போதல் செய்ய வேண்டா
அஹங்கார மமகாரங்கள் கிடக்க பிராயச் சித்தம் பண்ணுகையாவது-நிஷித்த த்ரவ்யத்தை உள்ளே வைத்து மெழுக்கூட்டினவோபாதி இ றே-
உடையவனுக்கும் உடைமைக்கும் தக்க படி இ றே பிராயச் சித்தமும்
உடையவன் -சர்வேஸ்வரன் -த்ரவ்யங்களில் பிரதானமான ஆத்மா த்ரவ்யத்தை இ றே அபஹரித்தது
அபஹரித்த த்ரவ்யத்தைப் பொகட்டு பிராயச் சித்தம் பண்ண வேணுமே
பொகடுகிற த்ரவ்யமும் தானாகையாலே -பிராயச் சித்தம் பண்ணுகைக்கு வேறு அதிகாரியும் இல்லையே
ஆகையால் நீங்களும் உடையவன் பக்கலிலே வீடு செய்ம்மினே -வீடு -சமர்ப்பிக்கை-அதாகிறது -இசைகை

——————————————————————————————-

அவதாரிகை –

பகவத் வ்யதிரிக்த விஷயங்களை விட்டு சர்வேஸ்வரனான எம்பெருமான் பக்கலிலே ஆத்ம சமர்ப்பணம் பண்ணப் பாருங்கோள்-என்றார் முதல் பாட்டில் –
பகவத் வ்யதிரிக்த விஷயங்களை விடச் சொல்லா நின்றீர் -அநாதி காலம் வாசனை பண்ணிப் போந்த வற்றை இப்போதாக விடப் போமோ என்ன –
அவற்றினுடைய தோஷ தர்சனம் பண்ணவே விடலாம் என்கிறார் இதில் –

மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள்
என்னும் இடத்து இறை உன்னுமின் நீரே –1-2-2-

மின்னின் நிலையில –
மின்னோபாதியும் நிலை யுடைத்தல்ல –
அல்பமாய் அஸ்திரமாய் இருக்கும் இ றே அது
இதுவும் அஸ்திரமாய் இருக்கச் செய்தேயும் ஸ்திர புத்தியைப் பிறப்பித்து அனர்த்தத்தோடே தலைக் கட்டு வித்துவிடும்
சந்தன ப்ராந்தியாலே -நாற்றம் குளிர்த்தி மென்மைகளைக் கொண்டு சர்ப்பத்தின் மேலே கையை வைத்துக் கொண்டு கிடந்தது உறங்கா நின்றால்
ஒரு தார்மிகன் -இது சர்ப்பம் கிடாய் என்று அறிவித்தால் பின்னை அதில் நின்றும் கை வாங்கி அல்லது நிற்க ஒண்ணாது இ றே
அப்படியே இதர விஷயங்களில் போகாதா புத்தி பண்ணிப் போருகிற இவனுக்கு -இது அல்பம் அஸ்தரம் -என்று இதனுடைய
தோஷ தர்சனத்தை பண்ணுவிக்கவே விடலாய் இருக்கும் இ றே –

மன்னுயிர் ஆக்கைகள் –
உயிர் மன்னுகிற ஆக்கைகள் -என்னுதல்
நித்தியமான ஆத்ம வஸ்து பரிஹிக்கிற தேஹங்கள்-என்னுதல்
திறந்து கிடந்த வாசல்கள் தோறும் நுழைந்து திரியும் பதார்த்தம் போலே இ றே இவன் திரிவது –
மகிழல கொன்றே போலே மாறும் பல் யாக்கை -முதல் திருவந்தாதி -49–இ றே
ஓர் அலகு தானே காணி ஸ்தானத்திலே நிற்பது -கோடி ஸ்தானத்திலே நிற்பதாம் இ றே –
அப்படியே ஓர் ஆத்மா தானே கர்ம பேதத்தாலே தேவாதி தேஹ பேதங்களைப் பரிஹரிக்கும் இ றே
அன்றியே
உயிர் என்கிற ஏக வசனம் -ஜீவ அனந்யத்துக்கு உப லஷணமாய்-ஆத்மாக்கள் பரிகிரஹிக்கிற சரீரங்கள் -என்னவுமாம் –

என்னும் இடத்து –
பகவத் குணங்களை பரிச்சேதிக்கிலும் பரிச்சேதிக்கப் போகாதாயிற்று தோஷ பரப்பு
இவ்விடை யாட்டத்து என்றபடி –

இறை உன்னுமின் நீரே —
இதில் அல்பத்தை ஆராயுங்கோள்-
நீரே –
இது தனக்கு ஒரு பிரமாண அபேஷையும் இலை
சதாசார்ய உபதேசமும் வேண்டா

—————————————————————————————–

அவதாரிகை –

தோஷ தர்சனம் பண்ணவே விடலாம் என்றீர்
காலம் அநாதி -மேல் அனந்தமாய் இரா நின்றது –
பற்றின காலம் எல்லாம் வேணும் இ றே விடுகைக்கும் -என்ன
த்யாஜ்ய அம்சத்தை சுருங்க அருளிச் செய்கிறார் –
-சம்சார பீஜம் இன்னது என்றும் அதுக்கு பேஷஜம் இன்னது என்றும் அருளிச் செய்கிறார் –

நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து இறை
சேர்மின் உயிர்க்கு அதன் நேர் நிறை இல்லே –1-2-3–

நீர் நுமது -என்று –
அநர்த்த கரமான அஹங்கார மமகாரங்கள் -நான் எனது -என்னுமத்தை பிறருக்கு உபதேசிக்கும் போது-நீர் நுமது -என்று இ றே சொல்வது
நான் என்னது -என்று தம் வாக்காலே சொல்ல மாட்டாரே நாக்கு வேம் என்று –
என் உடமை -என்னுமது வேணுமாகில் தவிருகிறன்-நான் என்னுமது தவிரும்படி என் என்னில்
இவன் அஹம் என்றால் ராவணாதிகள் நான் என்றால் போலே
பிறருடைய நானைத் தவிர்த்துக் கொண்டு இ றே இருப்பது
தேஹத்தில் அஹம் புத்தி பண்ணிப் போருமது தவிர வேணுமே

இவை வேர் முதல் மாய்த்து –
இவை வேர் முதல் மாய்க்கையாவது என் என்னில் -இது அபுருஷார்த்தம் என்னும் பிரதிபத்தியைச் சொன்னபடி –
இரண்டு வ்ருஷம் தன்னிலே சேர நின்றால் ஒன்றிலே துளைத்து பெருங்காயத்தை வைக்க -சில நாள் ஓன்று போலே நின்று
பின்னைப் பட்டுப் போகா நின்றது இ றே
அப்படியே அஹங்கார மமகாரங்கள் த்யாஜ்யம் என்றும் பிரதிபத்தி உண்டாக தன்னடையே சம்சாரம் அடி அற்று நிற்கும்
அநாத்மன்யாத்மா புத்திர்வே அஸ்வே ஸ்வமிதியா மதி அவித்யாதரு சம்பூதி பீஜமேதத் த்விதா ஸ்திதம் -ஸ்ரீ விஷ்ணு புராணம்
-என்று சம்சார பீஜமும் சொல்லி அச்யுதாஹம் தவாஸ்மீதி சைவ சம்சார பேஷஜம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -என்று –
பரிகாரமும் சொல்லிற்று இ றே ரஷகனாவன் அவசர ப்ரதீஷகனாய் இருக்க இவன் பக்கலிலே விலக்காமை உண்டானால்
விரோதி போகைக்கு தட்டில்லை என்கை-

இறை சேர்மின் –
அப்ராப்த விஷயங்களை விட்டு வகுத்த சேஷி யானவனை சேரப் பாருங்கோள்-
சேர்மின் -என்கிறார் காணும்
கெடு மரக்கலம் கரை சேர்ந்தால் போலே இருக்கையாலே -சம்சாரிக்கு பகவத் சமாஸ்ரயணம் –

உயிர்க்கு அதன் நேர் நிறை இல்லே
இத்தோடு ஒக்க சீரியது இல்லை -என்னுதல்-
நேர் -என்று ஒப்பாய் –
நிறை என்று மிகுதியாய்
உயிர்க்கு இத்தோடு ஒத்ததும் மிக்கதும் இல்லை -என்றுமாம்
பிரதமத்தில் -ஔஷதம் போலே சம்சாரிகளுக்கு பகவத் சம்பந்தம் ஹிதமுமாய் -உதர்க்கத்தில் பிரியமுமாய் இருக்கும்
நித்தியமாய் ஜ்ஞானானந்த லஷணமான வஸ்துவுக்கு இத்தோடு ஒக்கும் சீரியது இல்லை
சம்சார ஆர்ணவ மக்நாநாம் -இத்யாதி
விஷ்ணு போதம் இக்கரையும் அக்கரையும் ஒன்றாய் நின்று அவ்வருகு நடத்தும் ஓடம் –

—————————————————————————————

அவதாரிகை –

விடுகிறவை போலே அபோக்யமுமாய் சதோஷமுமாய் இராது என்று பற்றப் படுகிற விஷயத்தின் உடைய போக்யத்தை அருளச் செய்கிறார் –

இல்லதும் உள்ளதும் அல்லது அவனுரு
எல்லையில் அந்நலம் புல்கு பற்றற்றே –1-1-4-

இல்லதும்-
பிரமாண யோக்கியம் அல்லாமையால் வரும் துச்சத்வத்தை பற்ற வாதல் –முயல் கொம்பு போன்றவை
ப்ரதீதி மாத்ரமாய்- பாத யோக்யமான மித்யாத்வத்தை பற்ற வாதல் -முத்துச் சிப்பி வெள்ளி போலே தோன்றுமே -சூன்யவாதி மாயாவாதி படிகளின் படி சொல்ல வில்லை-
இல்லது -என்கிறது அன்று -விநாசித்வத்தைப் பற்றச் சொல்கிறது

உள்ளதும் –
இல்லாத வஸ்துவில் வ்யாவ்ருத்தியைப் பற்ற -உள்ளது -என்கிறது –
யதஸ்தி யன்நாஸ்தி -என்றும் -சத்யஞ்ச நருதஞ்ச -என்றும் சொல்லக் கடவது இ றே சித் அசித்துக்களை
அன்றியே ஆத்மாவுக்கு இருப்பிடமான சரீரத்தின் படியும் அத்தை இருப்பிடமாக உடைய ஆத்மாவின் படியும் அல்ல என்றுமாம் –

அல்லது அவனுரு –
நச்வரமாய் இருக்கிற அசித்தின் படியும் அன்று
அசித் சம்சர்க்கத்தாலே அஹம் ஸூ கீ அஹம் துக்கி என்கிற சேதனன் படியும் அன்று அவன் ஸ்வரூபம்

ஆனால் எங்கனே இருக்கும் என்னில்
எல்லையில் அந்நலம் –
ஆனந்த மய -என்றும்
உணர் முழு நலம் -1-1-2-என்றும்
ஓடியாவின்பப் பெருமையொன் -8-8-2–என்றும்
சுடர் ஜ்ஞான இன்பம் -10-10-10-என்றும்
சமஸ்த கல்யாண குணாத் மகோசௌ-என்றும் சொல்லலாம் படி இருக்கும்

புல்கு பற்றற்றே —
அங்கனா பரிஷ்வங்கம் போலே போக ரூபமாய் இருக்கும் இ றே குண ஜ்ஞானம் உடையவனுக்கு குணாதிக விஷய அனுபவம் –
அது செய்யும் இடத்தில் இரு கரையன் ஆகை அன்றிக்கே புறம்பு உள்ள பற்று அற்றே புல்கு
பற்றிலார் பற்ற நின்றான்-7-2-7- இ றே அவன் –
ஆகையால் பற்று அற்றே புல்க வேணும்

—————————————————————————————

அவதாரிகை –

பற்றும் இடத்தில் வரும் அந்தராய பரிகாரத்தையும் அருளிச் செய்கிறார் –
இந்திர பதத்தைக் கோலுமவன்-இவ்வருக்கு உண்டான ஐஸ்வர் யத்தையும் கோலான்
ப்ரஹ்ம பதத்தை ஆசைப்படுமவன் இவ்வருக்கு உண்டான இந்திர பதத்தில் கண் வையான்
ஆத்மா அனுபவத்தை ஆசைப் படுமவன் ஐஸ்வர் யாதிகளில் கண் வையான்
சமஸ்த கல்யாண குணாத் மகனாய் -நித்ய மங்கள விக்ரஹ யுக்தனாய் இருக்குமவனைப் பற்றுமவன் இவை இத்தனையிலும் கண் வையான் –
ஆக இங்கன் வரும் அந்தராய பரிஹாரத்தை அருளிச் செய்கிறார் –

அற்றது பற்று எனில் உற்றது வீடுயிர்
செற்றது மன்னுறில் அற்றிறை பற்றே –1-2-5-

அற்றது பற்று எனில் –
பிரகிருதி பிராக்ருதங்களில் உண்டான பற்று அற்றது என்னும் அளவிலே –

உற்றது வீடுயிர் –
ஆத்மா மோஷத்தை பிராபித்தது –
விலஷண ஜ்ஞானத்தையும் ஸ்வரூபத்தையும் உடைய வஸ்துவுக்கு திரோதானத்தை பண்ணுகிற அசித் சம்சர்க்கம் இ றே
யோக அப்யாசத்தாலே கழிந்த வாறே ஸ்வரூபம் பிரகாசிக்கும் –
அது நித்தியமாய் ஜ்ஞானானந்த லஷண மாய் இருக்கையாலே -இது தன்னையே அனுபவிக்க அமையாதோ என்று என்று தன் பக்கலிலே கால் தாழப் பண்ணும் –

செற்றது –
அத்தை செற்றது -அத்தை முகம் சிதறப் புடைத்து –

மன்னுறில் –
மன்ன வுறில்-தன்னைப் பற்றினால் -இன்னமும் அதுக்கு அவ்வருகு ஒரு அனுபவம் உண்டு -என்று இருக்க வேண்டாத படியான நிலைநின்ற
புருஷார்த்தத்தைப் பற்றப் பார்க்கில்

அற்றிறை பற்றே —
ஆச்ரயண காலத்தில் அவனுக்கு என்று அத்யவசித்து
சேஷியான அவனை பற்றப் பாருங்கோள்
அன்றிக்கே
விபக்தியை மாறாடி இறையைப் பற்றி இத்தை அறப் பார் என்னுதல்
மால் பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு -மூன்றாம் திருவந்தாதி -14–என்னுமா போலே –

——————————————————————————————-

அவதாரிகை

பற்றும் இடத்தில் வரும் அந்தராய பரிஹாரம் சொன்னார் கீழ் –
நீர் பரிஹாரம் சொல்லுகைக்கு அவாப்த சமஸ்த காமனாய் சேஷியாய் இருக்கிற அவன் தான் நமக்கு
கை புகுந்தானோ என்ன -அவன் பக்கல் திருத்த வேண்டுவது ஓன்று இல்லை -அவன் சங்க ஸ்வபாவன் -என்கிறார் –

பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றனன்
பற்றிலையாய் அவன் முற்றில் அடங்கே –1-2-6-

பற்றிலன் –
பற்று உண்டு -சங்கம் -அன்பு -அத்தை வாசஸ் ஸ்தானமாக உடையவன்
பற்றிலான் என்னுமத்தை -பற்றிலன் -என்று குறைத்துக் கிடக்கிறது
இன்னான் இங்கு உண்டோ என்னில் இங்கு இல்லை யவன் அகத்திலான் -என்னக் கடவது இ றே

ஈசனும் –
ஈச்வரத்வம் கழற்ற ஒண்ணாமையாலே கிடக்கும் அத்தனை
இச் சங்கம் குணமாகைக்கு கிடக்கிறது
பயப்படுகைக்கு உடல் அன்று
பெரியவன் எளிமை இ றே குணமாவது
பிரசாத பரமௌ நாதௌ–தண்ணளியே இவர்களுக்கு விஞ்சி இருப்பது
மேன்மை கழற்ற ஒண்ணாமை யாலே கிடந்த இத்தனை
இரண்டும் அவ்வாஸ்ரயகதமாய் இருக்க தண்ணளியே உள்ளது என்று உணர்ந்தபடி என் என்னில்
மம கேஹம் உபாகதௌ-சேஷிகளாய் இருப்பார்க்கு சேஷ பூதரை அழைத்துக் கார்யம் கொள்ளலாய் இருக்க
நெடும் தெருவே போகிறவர்கள் நான் இருந்த முடுக்குத் தெரு தேடி வந்த போதே பிரசாதம் விஞ்சி இருக்கும் என்னும் இடம் தெரிந்தது இல்லையோ
தன்யோஹம் -என்றும் ஒக்க சஞ்சரிக்கிற வழியிலே நிதி எடுப்பாரைப் போலே
அர்ச்சயிஷ்யாமி -என்னுடைய ஸ்வரூப அனுரூபமான வ்ருத்தியிலே அன்வயித்து அழித்து கெடுத்து ஜீவிக்கப் பாரா நின்றேன்
இத்யாஹ-சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி நிற்பார் சொல்லக் கடவ பாசுரத்தை
இவன் சொல்லுவதே என்று ருஷி கொண்டாடுகிறான்
மால்ய உப ஜீவன -பூவில் கண் வைத்து தொடுக்கில் சாபலம் பிறக்கும் என்று கண்ணை மாற வைத்து தொடுத்து பூ விற்று ஜீவிக்கும்
அத்தனை புல்லியன் சொல்லும் வார்த்தையே ஈது -என்கிறார் –

முற்றவும் நின்றனன் –
சமோஹம் சர்வ பூதேஷு என்கிறபடி -ஆஸ்ரயணித்வே சமனாய் நின்றான்
இத்தலை இருந்தபடி இருக்க -தான் எல்லார்க்கும் ஒத்து இருக்கை

பற்றிலையாய் –
நீயும் பற்றிலையாய் –
நீயும் பற்றை உடயையாய்-சங்கத்தை உடையை யாய்

அவன் முற்றில் அடங்கே –
அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்கிறபடியே அவனுடைய எல்லா கைங்கர்யத்திலும் அன்வயி –

அதவா
பட்டர் அருளிச் செய்யும் படி
பற்றிலன் ஈசனும்
வாஸூ தேவோஸி பூர்ண -என்கிறபடியே
சமஸ்த கல்யாண குணாத் மகனாய் -ஜ்ஞானானந்த அமல ஸ்வரூபனாய் திரை மாறின கடல் போலே
ஈசிதவ்யரான நித்ய சூரிகளை உடையனாய் -பரம பதத்தில் எழுந்து அருளி இருக்கிறவனும் அவர்கள் பக்கல் பற்று உடையவன் அல்லன்
அவர்கள் பக்கல் பற்று உடையவன் அன்றிக்கே இருந்தால் குறை பட்டு இரானோ என்னில்

முற்றவும் நின்றனன்
அவர்கள் எல்லாராலும் வரும் ஏற்றம் இன்று ஆஸ்ரயிக்கிற இவனாலே யாம் படி நின்றான்
த்வயி கிஞ்சித் சமான்பன்னே கிம் கார்யம் சீதா மம -என்னுமா போலே
இன்று ஆச்ரயித்த தொரு திர்யக்குக்கு ஒரு வாட்டம் வரில் நித்ய ஆஸ்ரிதையான பிராட்டியாலும் கார்யம் இல்லை என்று
அன்று ஈன்ற கன்றின் பக்கல் வாத்சல்யத்தாலே முன்னணைக் கன்றினையும் கொம்பிலே கொள்ளுமா போலே

பற்றிலையாய்
விட ஒண்ணாதாரை நீ ஒரு தலையாக விட்டான் அவன்
அவன் ஒரு தலையானால் விடலாமவற்றை விடத் தட்டு என் உனக்கு

அவன் முற்றில் அடங்கே
அவனை எல்லாமாகப் பற்றப் பார்
மாதா பிதா பிராதா நிவாஸ சரணம் ஸூஹ்ருத் கதிர் நாராயண ஏகைக பல லாபாய சர்வ லாபாய கேசவ –

——————————————————————————

அவதாரிகை —

சங்க ஸ்வபாவன் -என்றார் கீழ் –
அவன் சங்கல்ப ஸ்வ பாவன் ஆனாலும் அபரிச்சின்ன உபய வித மகா விபூதி யை உடையனாய் இருந்தான் அவன்
இவன் அதி ஷூ த்ரனாய் ஷூத்ர உபகரணனாய் இருந்தான் -ஆனபின்பு அவனை இவனால் கிட்டலாய் இருந்ததோ
கடலிலே புக்க துரும்பானது இரண்டு தலையிலும் நினைவு இன்றிக்கே இருக்க திரை மேல் திரை யாக தள்ளுண்டு
போந்து கரையிலே சேருகிறது இல்லையோ –
அப்படியே இவனது ஐஸ்வர்ய தரங்கமாவது இவனைத் தள்ளாதோ என்னில்
இந்த ஐஸ்வர்யம் எல்லாம் நமக்கு வகுத்த சேஷியினுடைய ஐஸ்வர்யம் என்று அனுசந்திக்கவே -தானும் அதுவாய் அன்வயிகலாம் இ றே-
ஆனபின்பு சம்பந்த ஞானமே வேண்டுவது -என்கிறார் –

ஒரு வியாபாரி ஸ்திரீ கர்ப்பணியான சமயத்திலே அர்த்தார்ஜனம் பண்ண வேணும் என்று போவது
அவளும் பிள்ளை பெற்று அவனும் பகவனே தனக்கு தமப்பனாருடைய வியாபாரமே யாத்ரையாய் அவனும் போய்
இவனும் சரக்கு பிடித்துக் கொண்டு வந்து ஒரு பந்தலிலே தங்குவது –அது இருவருக்கும் இடம் போராமையாலே அம்பறுத்து
எய்ய வேண்டும்படி விரோதம் பரஸ்துதமான சமயத்திலே இருவரையும் அறிவான் ஒருவன் வந்து
இவன் உன் பதா -நீ அவன் புத்தரன் -என்று அறிவித்தால்
கீழ் இழந்த நாளைக்கு சோகித்து இருவர் சரக்கும் ஒன்றாய் -அவன் ரஷகனாய் இவன் ரஷ்யமாய் அன்வயித்து விடும் இறே

சமானம் வ்ருஷம் பரிஷச்வஜாதே -ஜீவாத்மாவும் பரமாத்மாவும் தேஹமாகிற வ்ருஷத்தைப் பற்றி இருந்தால் ஒருவன்
கர்ம பலங்களை புஜியா நிற்கும் -ஒருவன் புஜிப்பித்து விளங்கா நிற்கும் –
அவன் நியாமகன் -நாம் நியாம்யன் என்னும் ஞானம் முறை அறியவே பொருந்தலாம் இ றே
ராஜபுத்திரன் ஒரு உத்யானத்தைக் கண்டு புக அஞ்சினால் உன் தமப்பனது காண்-என்னவே நினைத்த படி புக்குப் பரிமாறலாம் இறே
ஆனபின்பு ததீயம் என்னும் பிரதிபத்தியே வேண்டுவது -தானும் அதுக்கு உள்ளே ஒருவனாய் அன்வயிக்கலாம் என்கிறார் –

அடங்கு எழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன்
அடங்கு எழில் அஃது கண்டு அடங்குக உள்ளே –1-2-7-

அடங்கு எழில் சம்பத்து அடங்கக் கண்டு –
போக பூமியாய் இருக்கும் நித்ய விபூதி -கர்ம நிபந்தனமாக அவனாலே நியாம்யமாய் இருக்கும் இவ் விபூதி –
அதில் ததீயம் என்று அனுசந்திக்கப் புக்கவாறே கர்ம நிபந்தனமான ஆகாரம் தோற்றாதே-ததீயத்வ ஆகாரமே இறே தோற்றுவது –

ஈசன் அடங்கு எழில் அஃது கண்டு –
கட்டடங்க நன்றான சம்பத்தை எல்லாம் கண்டு நமக்கு வகுத்த ச்வாமியானவனுடைய சம்பத்து இது எல்லாம் என்று அனுசந்தித்து
அவ்விபூதிக்கு உள்ளே தானும் ஒருவனாய் அன்வயிக்கப் பார்ப்பது –
அப்போது சேஷிக்கு அதிசயத்தை விளைத்தான் ஆகலாம் இறே
சேஷ பூதனுடைய ஸ்வரூப சித்தி -சேஷி பக்கல் கிஞ்சித் காரத்தாலேயாய் இருக்கும்

அடங்குக உள்ளே —
ஸ்வ ஸ்வாமி பாவ சம்பந்தம் ஜ்ஞானம் அடியாக தானும் அவன் விபூதியிலே ஒருவனாய் அன்வயிகலாம் இறே
சமுத்ரம் அபரிச்சின்னம் ஆனாலும் அதின் உள்ளில் சத்வங்களுக்கு வேண்டும்படி புகலலாம் இறே
அது போலே சம்பந்தம் ஜ்ஞானம் அடியாகக் கிட்டலாம் -சம்பந்த ஜ்ஞானம் இல்லாத த்ருணத்தை இறே
கடல் கரையிலே ஏறத் தள்ளுவது -சம்பந்த ஜ்ஞானம் பிறக்கை இறே கடக க்ருத்யம் –

————————————————————————————–

அவதாரிகை –

அவனுக்கு விபூதியாக அன்வயித்தால் பின்னை தானும் தனக்கு என்னச் சில கரணங்களும் என்று உண்டாய்
பஜித்தானாகை அரிதாய் இருந்ததே என்ன – பஜன பிரகாரத்தை அருளிச் செய்கிறார் –

உள்ளம் உரை செயல் -உள்ள விம் மூன்றையும்
உள்ளிக் கெடுத்து இறை யுள்ளில் ஒடுங்கே –1-2-8-

உள்ளம் உரை செயல் –
பாஹ்ய விஷயங்களிலே பிரவணம் ஆகிற மனசை பிரத்யக்காக்கின வாறே பகவத் அனுசந்தானத்துக்கு உடலாமே –
அவ்வனுசந்தானம் வழிந்து- பொங்கேழ் புகழ்கள் வாயவாய்-8-10-4-என்கிறபடியே சொல்லாய் புறப்படுகைக்கு உடலாம் இறே வாக்கு –
குணைர் தாஸ்யம் உபாகத -என்கிறபடியே திருவடிகளிலே விழுந்து சகல கைங்கர்யங்களும் பண்ணுகைக்கு உடலாய் இருக்கும் இறே உடம்பு

-உள்ள விம் மூன்றையும்
இவை தான் இன்றாக சம்பாதிக்க வேண்டாதே
சேஷியான தான் இவற்றை உண்டாக்கி வைத்தானே
இவையும் வேறு சிலவும் தேட வேண்டாவே
இங்கே தாம் உளரே -இரண்டாம் திருவந்தாதி –22
நா வாயில் உண்டே -முதல் திருவந்தாதி –95
இத்யாதிகளை யோஜித்துக் கொள்வது –

உள்ளிக்
உள்ள இம்மூன்றையும் உள்ளுவது -இவை தான் எதுக்காகக் கண்டது -இவை தான் இப்போது இருக்கிறபடி என்-என்று
ஆராய்ந்து பார்த்தால் அப்ராப்த விஷயங்களிலே பிரவணமாய் இருக்கும்

கெடுத்து
கெடுப்பது -அவற்றின் நின்றும் மீட்பது –

இறை யுள்ளில் ஒடுங்கே —
பாழிலே மேட்டிலே பாய்கிற நீரைப் பள்ளத்திலே பயிரிலே பாய்ச்சுவாரைப் போலே ப்ராப்த விஷயத்தில் ஆக்கப் பார்ப்பது
ஒடுங்க -என்னுதல்-அவனை அண்டுதல் –
ஒடுக்கு -என்னுதல் -அவன் விஷயத்தில் நிலை நிறுத்தல்
மெல்லினமான ஙகரத்தை வல் ஒற்றாக்கி ஒடுக்கு -என்று கிடக்கிறது ஆதல் –

தாம் உளரே –
தந்தாமைத் தேட வேண்டாவே
தம் உள்ளம் உள் உளதே –
எனக்குச் சற்று போது பகவத் விஷயத்தை நினைக்கைக்கு நெஞ்சு தர வேணும் -என்று தனிசு வாங்க வேண்டாவே
தாம் உளரானால் உண்டான நெஞ்சும் உண்டே
தாமரையின் பூ உளதே —
கைக்கு எட்டும் பூ உண்டாக்கி வைத்தானே
கள்ளார் துழாய் –பெரிய திருமொழி -11-7-6-என்று அங்குத்தைக்கு அசாதாரணமான திருத் துழாயைச் சொல்லி
அதோடு ஒக்க -கணவலர்-என்று காக்காணத்தையும் ஆம்பலையும் சொல்லுகையாலே அங்குத்தைக்கு ஆகாதது இல்லை என்றபடி
ஆகையால் தாமரையின் பூ உளதே -என்றது -எல்லா புஷ்பங்களுக்கும் உப லஷணமான இத்தனை
ஏத்தும் பொழுதுண்டே
-காலத்தை உண்டாக்கி வைத்தானே -அது தனிசு வாங்க வேண்டாவே
வாமனன் –
இது எல்லாம் வேண்டுவது அவன் அவன் அல்லாகில் அன்றோ -தன் உடமை பெருகைக்கு தான் இரப்பாளன் ஆவான் ஒருவனாய் இருந்தானே
திருமருவு தாள்
அவனுடைய ஐஸ்வர்ய பிரகாசகமான திருவடிகள் என்னுதல்
வடிவிணை இல்லா மலர் மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி -திருவாய் -9-2-10–என்னுதல்
மருவு சென்னியரே –
மருவுகை -சேருகை-இப்படிப் பட்ட திருவடிகளிலே சேருகைக்கு தலையை ஆக்கி வைத்தானே
வாமனன்
அமரர் சென்னிப் பூவான திருவடிகளை நித்ய சம்சாரிகள் தலையிலும் வைப்பான் ஒருவனாய் இருந்தானே
இப்படி இருக்கச் செய்தே
செவ்வே அரு நரகம் சேர்வது அரிது
இவர்கள் சம்சாரத்துக்கு விலக்கடி தேடிக் கொண்டு போகிற படி எங்கனேயோ
நா வாயில் உண்டே
இது முன்னம் புறம்பு தேடித் போக வேண்டாவே
நமோ நாரணா என்று ஓவாது உரைக்கும் உரை உண்டே
சஹாஸ்ராஷரீ மாலா மந்த்ரம் போலே இருக்கை அன்றிக்கே எட்டு எழுத்தே நடுவே விச்சோதியாதே சொல்லலாம் திருநாமம் உண்டாக்கி வைத்தானே
மூவாத மாக்கதிக் கண் செல்லலும் வகை யுண்டே
புனராவ்ருத்தி இல்லாத ப்ராப்யத்தை உண்டாக்கி வைத்தானே
என்னொருவர் தீக்கதிக் கண் செல்லும் திறம்
இங்கனம் இருந்த பின்பு இவர் தண்ணிய வழி தேடித் போகிற படி எங்கனேயோ

—————————————————————————–

அவதாரிகை –

சம்பந்த ஜ்ஞானம் உண்டாகவே -தனது சிறுமை பார்த்து அகல வேண்டா வென்றும் -பஜனமாவது என் –
அவன் தனக்காகத் தந்த கரணங்களை அவனுக்கு உறுப்பாக்குகை என்றும் சொல்லி நின்றார் கீழ் இரண்டு பாட்டாலே –
இது தன்னரசு நாடாய் ப்ராப்த விஷயம் அவன் அல்லாமை பஜியாது இருக்கிறோமோ
பஜன விரோதிகள் கனக்க யுண்டாகை யன்றோ நாங்கள் பஜியாது ஒழிகிறது என்ன –
நீங்கள் அவனைக் கிட்டவே அவை யடைய விட்டுப் போம் என்கிறார் இதில் –

ஒடுங்க அவன் கண் ஒடுங்கலும் எல்லாம்
விடும் பின்னை யாக்கை விடும் பொழுது எண்ணே–1-2-9-

ஒடுங்க அவன் கண் –
பிரகார பூதரான நீங்கள் பிரகாரியான அவன் பக்கலிலே சென்று சேர –

ஒடுங்கலும் எல்லாம் விடும் –
ப்ராப்தத்தைச் செய்ய -அப்ராப்தமானவை எல்லாம் தன்னடையே விட்டுப் போம்
ஸ்வரூப அனுரூபமானதைச் செய்யவே ஸ்வரூப விரோதிகள் அடங்க விட்டுப் போம்
ஒடுங்கல் -என்றதாலே இது ஸ்வரூபத்தில் கிடப்பது ஓன்று அல்ல
ஸ்வரூப விரோதியாய்க் கொண்டு வந்தேறி என்னும் இடம் தோற்றுகிறது
அன்றிக்கே -ஒடுங்கல் என்கிற மெல் ஒற்றை ஒடுக்கல் என்று வல் ஒற்றாக்கி இவனுக்கு சங்கோசத்தை பிறப்பிக்குமவை என்னுதல் –
எல்லாம் விடும் –
அவித்யா கர்மா வாசனா ருசிகள் -சவாசனமாக விட்டுக் கழியும்
வானோ மறி கடலோ -இத்யாதி
மாடே வரப்பெறுவராம் என்றே வல்வினையார் -இத்யாதிகளை யோஜித்துக் கொள்வது

இவை போமாகில் பின்னை இவனுக்கு கர்த்தவ்யம் ஏது என்னில்
பின்னை யாக்கை விடும் பொழுது எண்ணே–
உபாசனத்தால் வந்த ராஜ குலம் கொண்டு பலன் தப்பாது -தன்னடையே வருகிறது என்று ஆறி இருக்கை இன்றிக்கே
ஹேதுவான அவத்யாதிகள் கழிந்தது ஆகில் அவற்றின் கார்யமான இச் சரீரமும் ஒருபடிப் போய் தண்ணீர் துரும்பற்று பிராப்தி
கை புகுந்ததாவது எப்போதே – என்று அதுக்கு விரல் முடக்கி இருக்கும் அத்தனை
காமிநியானவள் தன்னுடம்பில் அழுக்கு கழற்றி போகத்தில் அன்வயிக்க அவசர ப்ரதீஷையாய் இருக்குமா போலே சரீர
அவசானத்தைப் பார்த்து கொண்டு இருக்கை
கொங்கை மேல் கும்குமத்தின் குழம்பு அழிய புகுந்து ஒரு நாள் தங்குமேல் என்னாவி தங்கும் -என்று
அழுக்கு கழற்றி ஒப்பித்து பார்த்து இருந்தாள் இ றே

அப்படி அழுக்கு உடம்பு -என்கிற இவ் வழுக்கு கழன்று
பிராப்யம் கை புகுந்ததாவது எப்போதோ என்று பார்த்து இருக்கும் அத்தனை
ம்ருத்யும் ப்ரியம் இவாதிதம் –என்று இருக்கும் அத்தனை -க்ருதக்ருத்யா -க்ருதக்ருத்யர் ஆகிறார் சித்த சாதனம் பரிக்ரஹம் பண்ணினவர்கள் இ றே
விது கிருஷ்ணம் ப்ராஹ்மணஸ் தத்வதோ யே தேஷாம் ராஜன் சர்வ யஜ்ஞாஸ் சமாப்தா -அவனை உள்ளபடி அறிந்தவர்கள் இ றே
எல்லாவற்றையும் அனுஷ்டித்து தலைக் கட்டினார்கள் ஆகிறார்
ஓர் அயனத்தின் அன்று குன்றத்து சீயர் எம்பெருமானார் ஸ்ரீ பாதத்தில் புக -அவருடைய சிறு பேரைச் சொல்லி
-சிங்கப் பிரான் -இன்று அயனம் கிடாய் -என்று திரு உள்ளத்திலே ஓடுகிறது இன்னது என்று அறியாமையாலே அவர் பேசாது இருக்க
இத்தேக சமன அந்தரத்திலே பிராப்தி கண் அழிவு அற்ற பின்பு நடுவு விரோதியாகச் செல்லுகிற நாளிலே ஓர் ஆண்டு கழியப் பெற்ற இது
உனக்கு ஒன்றாய் இருந்தது இல்லையோ -என்று அருளிச் செய்தார்
அன்றியே எம்பார் ஓர் உருவிலே -பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணே –என்று இங்கனே காரணம் ஆனபோது கழிந்த போதே
கார்யமும் தன்னடையே கழிந்ததே யன்றோ
பிராப்தியும் இனி கை புகுந்ததே யன்றோ -இனி சிந்தா விஷயம் உண்டோ -என்று அருளிச் செய்தார்

————————————————————————————

அவதாரிகை-

அழகிது -அப்படியே ஆகிறது -பஜனத்துக்கு ஆலம்பமான மந்த்ரம் ஏது என்ன -அது என்னது என்றும்
–அதினுடைய அர்த்தம் அனுசந்தேயம் என்றும் சொல்லுகிறார்
இது தன்னைப் புறம்பு உள்ளார் ஜப ஹோமாதிகளாலே கார்யம் கொள்ளா நிற்பார்கள்
நம் ஆசார்யர்கள் -ஸ்வரூப அனுசந்தானத்துக்கு ஈடாய் இருக்கிற இதினுடைய அர்த்த அனுசந்தானம் மோஷ சாதனம் -என்று
தாங்களும் அனுசந்தித்து -தங்களைக் கிட்டினார்க்கு உபதேசித்துக் கொண்டு போருவர்கள்
வேதங்களுக்கும் இவ் வாழ்வாருக்கும் இம் மந்த்ரம் ப்ரஸ்துதம் ஆனவாறே -முன்பே சப்தத்தைச் சொல்லி -அநந்தரம் அர்த்தத்தைச் சொல்லுதல் –
அன்றியே முன்பே அர்த்தத்தைச் சொல்லி பின்பே சப்த பிரயோகம் பண்ணுதல் செய்யக் கடவதொரு நிர்பந்தம் உண்டாய் இருக்கும்
அதுக்கடி அர்த்தானுசந்தானம் உத்தேச்யம் ஆகையாலே
யாவையும் யாவரும் தானாமவை யுடைய நாராயணன் –1-3-3-என்னுதல்
நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன் –2-7-2-என்னுதல் செய்வதொரு நிர்பந்தம் உண்டு
அந்தர் பஹிச்ச தத் சர்வம் வ்யாப்ய நாராயணஸ் ஸ்தித -என்னுதல்
நாராயண பரோஜ்யோதி -என்னுதல் செய்யும் வேதம் –

எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே –1-2-10-

எண் பெருக்கு அந் நலத்து-
இப்பாட்டாலே திரு மந்த்ரத்தை சார்த்தமாக அருளிச் செய்கிறார் –
ஆழ்வான் இப்பாட்டு அளவும் வரப் பணித்து -இப்பாட்டு அளவில் வந்தவாறே -இத்தை உம்தம் ஆசார்யர் பக்கலிலே கேட்டுக் கொள்ளுங்கோள் என்ன –
பட்டரும் சீராமப் பிள்ளையும் எழுந்து இருந்து போகப் புக்கவாறே -அவர்களை அழைத்து –
இன்னபோது இன்னார் இருப்பார் -இன்னார் போவார் என்று தெரியாது -இருந்து கேளுங்கோள் -என்று திரு மந்த்ரத்தை உபதேசித்து –
இப்பாட்டை நிர்வஹித்து இப்பாட்டை இதுக்கு அர்த்தமாக நினைத்து இருங்கோள் -என்று பணித்தான்
எண் பெருக்கு –
என்கிற இத்தால் ஜீவ அனந்யத்தைச் சொல்லுகிறது
நலத்து –
இவ்வஸ்துக்கள் தான் ஜ்ஞான குண ஆஸ்ரயமுமாக இருக்கக் கடவது இறே
பிரணவத்தில் திருதிய பதமான மகாரத்தாலே ஜ்ஞான குண ஆஸ்ரயமுமாய்-ஜ்ஞாதாவாயுமாய் இருக்கும் என்று சொல்லிற்றே-

ஒண் பொருள்-
அசைதந்யம் அசித்துக்கு ஸ்வ பாவமாக இருக்கச் செய்தே வஸ்து தான் ஜடமுமாய் இருக்கும் இறே -அசம்ஜ்ஞாவத்தாய் இருக்கும் இறே
அங்கன் அன்றிக்கே -வஸ்து தான் ஸ்வஸ்மை ஸ்வயம் பிரகாசமாய் -தர்ம பூத ஜ்ஞானம் ஆனதுவும் –
விஷயங்களை க்ரஹித்து தன்னையும் அறிவிக்கக் கடவதாய் இருக்கும் -அத்தைப் பற்றச் சொல்கிறது –

ஈறில-
என்கிற இது கீழும் மேலும் அன்வயித்துக் கிடக்கிறது
ஈறிலவான ஒண் பொருளையும்
ஈறிலவான வண் புகழையும் -உடையவனாகை யாயிற்று நாராயணன் ஆகையாகிறது
பாவத்க மங்கள குணா ஹி நிதர்சனம் ந–ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -35-தன்னுடைய
கல்யாண குணங்களோ பாதி நித்யமுமாய் பிரகாரமுமாய் இருக்கும் இவ்வஸ்து என்கைக்காக குணங்களை நிதர்சனமாகச் சொல்கிறது
நித்யரான த்ரிவித சேதனரையும் நித்தியமான கல்யாண குணங்களையும் யுடையனாய் இருக்கை யாயிற்று -நாராயணன் ஆகையாவது –

அவனுடைய
திண் கழல் சேரே —
இப்படி சம்பந்தம் காதாசித்கமாகை தவிர்ந்து நித்யமாயிற்ற பின்பு -ஸ்வரூப ஜ்ஞானம் உடையாரை ஒரு ஒரு நாளும் விடான் இறே
ஆஸ்ரிதரை ஒரு காலும் விட்டுக் கொடாத திண்மையைப்பற்றி -திண் கழல் -என்கிறது –
சேர்
ஆஸ்ரயி
உன்னுடையதாய் உனக்கு வகுத்ததாய் இருந்த பின்பு நீ கடுக சுவீகரி –
நம -என்றபடி

—————————————————————————————

அவதாரிகை –

நிகமத்தில் –
முதல் பாட்டில் -வ்யதிரிக்த விஷயங்களை விட்டு சர்வேஸ்வரன் பக்கலிலே ஆத்மாவை சமர்ப்பிக்க இசையுங்கோள் என்றார்
இரண்டாம் பாட்டில் -வ்யத்ரிக்த விஷயங்களின் உடைய தோஷ தர்சனம் பண்ணவே விடலாம் -என்றார்
மூன்றாம் பாட்டில் -த்யாஜ்ய அம்சத்தை அருளிச் செய்கிறார்
நாலாம் பாட்டில் பற்றப்படுகிற விஷயத்தின் உடைய நன்மையை அருளிச் செய்கிறார்
அஞ்சாம் பாட்டில் பற்றும் இடத்து வரும் அந்தராய பரிஹாரத்தை அருளிச் செய்கிறார்
ஆறாம் பாட்டில் -அவன் சங்க ஸ்வ பாவன் என்றார்
ஏழாம் பாட்டில் -சம்பந்த ஜ்ஞானம் உண்டாகவே பொருந்தலாம் -என்கிறார்
எட்டாம் பாட்டில் –வேறு ஒரு உபகரணம் -தேட வேண்டா -அவன் தந்த கரணங்களை அவனுக்கு ஆக்க அமையும்
ஒன்பதாம் பாட்டில் -அப்படி செய்யவே பஜன விரோதிகள் தன்னடையே விட்டுப் போம் என்றார்
பத்தாம் பாட்டில் -பஜனத்துக்கு ஆலம்பமான மந்த்ரம் இன்னது என்றார்
இது தான் வாய் வந்தபடி சொல்லிற்று ஓன்று அல்ல
சேதனருக்கு ஹிதத்தை ஆராய்ந்து சொல்லப்பட்டது -என்னுதல்
அன்றிக்கே இது தான் ஹிதமாய் இருப்பது ஓன்று ஆகையாலே எப்போதும் ஒக்க ஓரப்படுவது ஓன்று என்னுதல்-

சேரத் தடத் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
சீர்த் தொடை யாயிரத்து ஒர்த்த விப்பத்தே –1-2-11-

சேரத் தடத் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
சேர்த்தடம் என்கிற இத்தை சேர் தடமாக்கி -பொய்கைகள் உடன் பொய்கைகள் சேர்ந்து இருக்கும் படியைச் சொல்லிற்று ஆகவு மாம் –
அன்றியே
தென் குருகூர் என்று ஊர் பிரஸ்துதம் ஆகையாலே தடாகங்கள் சேர்ந்து இருந்துள்ள தென் குருகூர் என்று ஊருக்கு விசேஷணம் ஆதல்
அன்றிக்கே
சேர் -என்கிற இது கிரியா பதமாகக் கிடத்தல்

தென் குருகூர்ச் சடகோபன் சொல்-
ஹிதம் என்று சொல்ல இழிந்து அஹிதத்தைச் சொல்லுவான் ஒருவன் வார்த்தை அன்று
ஆப்த தமரானவர் சொன்ன வார்த்தை என்கை-

சீர்த் தொடை யாயிரத்து ஒர்த்த விப்பத்தே
எழுத்து அசை சீர் பந்தம் அடி தொடை பாவினம் -என்று கவிக்கு அவயவமாய் இருப்பன சில உண்டு -அவற்றைச் சொல்லுதல்
அன்றிக்கே
உபாசக அனுக்ரஹத்தாலே உபாச்யனுடைய கல்யாண குணங்களை தொடுத்த ஆயிரம் -என்னுதல்
ஆயிரத்து ஒர்த்த இப்பத்தே
ஆயிரத்திலும் வைத்துக் கொண்டு சேதனருக்கு ஹிதமாவது ஏது என்று நிரூபித்து சொல்லப் பட்டது என்னுதல்
அன்றிக்கே
சேதனருக்கு ஹிதமாய் இருப்பது ஓன்று ஆகையாலே எப்போதும் ஓரப்படுவது -என்னுதல்
ஒர்த்த இப்பத்தை நெஞ்சிலே சேர்
அனுசந்தி –
பரோபதேசம் பலரைக் குறித்து உபக்ரமிக்கையாலே மேல் ஏக வசனமான இடம் ஜாத்யபிப்ராயம் –

—————————————————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருவாய்மொழி – -1-1–ஈட்டு -ஸ்ரீ ஸூ க்திகள் —

October 5, 2015

அவதாரிகை –

ஸ்ரீ யபதி தான் சமஸ்த கல்யாண குணாத்மகனாய் இருக்கிற இருப்பைக் காட்டி உபகரித்தான் —
அக் குணங்களும் தன்னைப் பற்றி நிறம் பெற வேண்டும்படியாய் இருக்கிற திவ்ய ஆத்ம ஸ்வரூப வைலஷண்யத்தைக் காட்டி உபகரித்தான் –
இப் பேற்றுக்கு என் பக்கல் சொல்லலாவது ஒன்றும் இன்றிக்கே இருக்க -நிர்ஹேதுகமாக தானே உபகாரகன் ஆனான் –
ஸ்வ ஸ்வரூபாபன்னராய் இருக்கிறவர்களுக்கும் அவ்வருகாய் இருக்கிற இருப்பைக் காட்டி உபகரித்தான் —
தன்னுடைய திவ்ய விக்ரஹ வைலஷண்யத்தைக் காட்டி உபகரித்தான் -என்று -அவன் பண்ணி அருளிய உபகாரங்களை அடையச் சொல்லி
இப்படி உபகாரகன் ஆனவன் திருவடிகளிலே நித்ய கைங்கர்யத்தைப் பண்ணி உஜ்ஜீவிக்கப் பாராய் -என்று தம் திரு உள்ளத்தோடு கூட்டுகிறார் –

ஆறு கிண்ணகம் எடுத்தால் நேர் நின்ற மரங்கள் பறியுண்டு போய் கடலிலே புகும் -நீர் வஞ்சி தொடக்கமானவை வளைந்து பிழைக்கும் –
அது போலே பகவத் குணங்களினுடைய எடுப்பு இருந்தபடி கண்டோமுக்கு எதிரே நான் என்று பிழைக்க விரகு இல்லை –
அவன் திருவடிகளிலே தலை சாய்த்து பிழைக்க வாராய் -நெஞ்சே -என்கிறார் –
உயர்வற உயர்நலம் உடையவன் துயரறு சுடரடி தொழுது எழப் பாராய் நெஞ்சே -என்கிறார் –

அஹமஸ் யாவரோ ப்ராதா குணைர் தாஸ்யம் உபாகத -என்னுமா போலே இளைய பெருமாளை -நீர் இவர்க்கு என்னாவீர் என்ன
பெருமாளும் ஒரு படி நினைத்து இருப்பர் -நானும் ஒரு படி நினைத்து இருப்பேன் -என்றார் –
அவர் நினைத்து இருக்கும் படி என் -நீர் நினைத்து இருக்கும் படி என் -என்ன
அவர் தம் பின் பிறந்தவன் என்று இருப்பர் -நான் அவர் குணங்களுக்குத் தோற்று அடியேனே இருப்பன் -என்றார் இறே
அப்படியே இவரும்-உயர்வற உயர்நலம் உடையவன் துயரறு சுடர் அடி தொழுது எழப் பாராய் நெஞ்சே -என்கிறார்

இவர் தாம் முற்பட குணங்களிலே இழிவான் என் என்னில் -தாம் அகப்பட்ட துறை அதுவாகையாலே இவரை குணத்தை இட்டாயிற்று வணங்குவித்தது –

———————

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவ்ன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே –1-1-1-

—————-

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன் –
பகவத் ஆனந்தத்தைப் பேசப்புக்க வேதங்கள்
மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி-ப்ரஹ்ம ஆனந்தத் அளவும் சென்று
பின்னையும் அவ்வருகே உத்ப்ரேஷித்துக் கொண்டு சென்று -பின்னையும் -பரிச்சேதிக்க மாட்டாதே
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று மீண்டவன இறே –
இது ஆனந்த குணம் ஒன்றிலுமே இறே –
குணங்கள் எல்லாம் இப்படியே இறே இருப்பது -இக் குணங்கள் எல்லாம் தமக்கு நிலமாய் பேசுகிறாரே இவர் –

உயர்வு -வருத்தம் –
எல்லாருக்கும் உயர்த்தி உண்டாம் போது வருத்தம் உண்டு -அப்படி வருந்த வேணுமோ -என்றால் உயர்வற உயரா நிற்கும்-
இத்தைப் பற்ற விறே ஆளவந்தார் -ஸ்வா பாவிக -என்று அருளிச் செய்த சந்தை –
பகவத் வ்யதிரிக்த சமஸ்த வஸ்துகதமான சர்வ பிரகாரத்தாலும் உண்டான உச்சராயத்தை -உயர்வு -என்கிறது –

அற –
இன்றியிலே ஒழிய -இத்தால் அத்யந்தா பாவத்தைச் சொல்லுகிறது அன்று -பின்னை என் சொல்லுகிறது என்னில் –
தன்னுடைய உச்சாரத்தையும் இவற்றையும் பார்த்தால் -ஆதித்ய சந்நிதியில் நஷத்ராதிகளைப் போலேயும் –
மேரு சிகரத்தில் நின்றவனுக்கு கீழ் உள்ள சர்ஷ பாதிகள் இருக்குமா போலேயும்
உண்டாய் இருக்கச் செய்தே இல்லை என்னலாம் படி இருக்கை –
இப்படி அல்லாதவற்றை இல்லை என்னலாம் படி பண்ணினால் தனக்கு ஓர் எல்லை உண்டாய் இருக்குமோ என்னில்

உயர் –
கால தத்வம் உள்ளது அனையும் அனுபவியா நின்றாலும் அவ்வருகாய்க் கொண்டு வாங் மனஸ்ஸூக்களால் பரிச்சேதிக்க ஒண்ணாத படி உயரா நிற்கும் —
ஆனால் சர்வேஷா யாந்தா நிசயா பத நாந்தாஸ் சமுச்சரயா சம்யோகா விப்ரயோ காந்தா மரணாந்தஞ்ச ஜீவிதம் -என்கிறபடியே
இருக்கிறதோ என்னில் -அன்று -இயத்தாரா ஹித்யத்தைச் சொன்னபடி –( அளவிட்டுக் கூற இயலாத படி உயர்ந்தே இருக்கும் -)
இப்படி கரை கட்டாக் காவேரி போலே பரந்து இருந்தால் இப்பரப்பு எல்லாம் -பிரயோஜனமாய் இராதே காடு பட்டு கிடக்குமோ என்னில் –

நலம் –
கண்ட இடம் எங்கும் பயிர் பட்டு இருக்கும் நிலம் போலே எங்கும் ஒக்க உபாதேயமாய் இருக்கும்
நலம் -என்று ஆனந்த குணம் ஒன்றையும் சொல்லுதல் -என்னுதல்
குண சமூஹத்தை சொல்லுகிறது -என்னுதல்
ஆனந்தாவஹமான விபூதியைச் பற்றிச் சொல்லுகிறது -என்னுதல் –

உடையவன் –
இக் குணங்கள் தன்னை அஸ்தி -என்று விடும் அளவன்றிக்கே இவற்றையிட்டு நிரூபிக்க வேண்டும்படியாய் இருக்கும் –
அதாவது ஆகந்துகம் -அன்றிக்கே ஸ்வரூப அநு பந்தியாய் -இருக்கும் -என்றபடி
ஆழ்வான்-பிள்ளை பிள்ளையைப் பார்த்து நிர்க்குணம் என்பார் மிடற்றை பிடித்தாற் போலே –
ஆழ்வார் நலம் உடையவன் -என்றபடி கண்டாயே -என்று பணித்தான் –
இத்தால் சமஸ்த கல்யாண குணாத் மகோசௌ-என்றபடி
வர்ஷாயுதை -இத்யாதி -என்றும்
தாதூநாமிவ சைலேந்த்ரோ குணா நாமா கரோ மஹான்-என்றும்
பஹவோ ந்ருப கல்யாண குண கணா புத்ரச்ய சந்தி தே-என்றும்
ஸ்வா பாவிக அநவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குண கண –ஸ்தோத்ர ரத்னம் -11-இதுக்கு ஆளவந்தார் அருளிச் செய்யும் சந்தை –
இப்படி குணங்கள் கரை புரண்டு இருந்தால் இக் குணங்களாலே தனக்கு நிறமாம் படி இருக்குமோ திவ்யாத்ம ஸ்வரூபம் என்னில் –அங்கன் இராது –
அஸ் ஸ்வரூபத்தை பற்றி குணங்களுக்கு நிறம் பெற வேண்டும்படி இருக்கும் என்று ஸ்வரூப வைலஷண்யத்தைச் சொல்லுகிறது –

யவன் -என்று –
யதா சைந்தவகந- (உப்புக் கட்டி உள்ளும் வெளியிலும் உப்பாகவே இருப்பது போலே -ஞான மயமாகவே உள்ளவன் ) பிரமாண பிரசித்தியைப் பற்ற -யவன்-என்கிறார் –
இத்தால் குண நிரபேஷமான ஸ்வரூப பிரசித்தியைச் சொல்லுதல் –
குண விசிஷ்டமான ஸ்வரூப வைலஷண்யத்தைச் சொல்லுதல் –

அவன் –
இதுக்கு அவ்வருகே ஒரு உபகாரத்தைச் சொல்ல நினைத்து -கீழ் நின்ற நிலையை அமைத்து மேலே தோள் படி கொள்ளுகிறார்

அந்த உபகாரம் தான் ஏது என்னில்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன் –
மயர்வற —
ஜ்ஞான அநு தயம் -அந்யதா ஜ்ஞானம் -விபரீத ஜ்ஞானம் –என்கிற இவை வாசனையோடு போம்படியாக –
ஜ்ஞான அநு தயமாவது –தேஹாத்ம அபிமானம் –
அந்யதா ஜ்ஞானம் ஆவது -தேவதாந்திர சேஷம் என்று இருக்கை –
விபரீத ஜ்ஞானமாவது -ஸ்வ தந்த்ரமாகவும் ஸ்வ போக்யமாகவும் நினைத்து இருக்கிற கேவலனுடைய ஜ்ஞானம் என்று நம்பிள்ளை அருளிச் செய்வர் –
தம் வாயாலே -மயர்வற -என்று சொல்லலாம் படி கானும் அவன் தான் இவர்க்கு அஜ்ஞ்ஞானத்தை வாசனையோடு போக்கின படி

மதி நலம் –
ஜ்ஞான பக்திகள் இரண்டையும் தந்தான் -என்று நிர்வஹிப்பாரும் உண்டு
அன்றிக்கே –நலமான மதியைத் தந்தான் -என்றாய் -முளைக்கும் போதே வயிரம் பற்றி முளைக்கும் பதார்த்தம் போலே -( கருங்காலி மரம் போலே )
பக்தி ரூபாபன்ன ஜ்ஞானத்தைத் தந்தான் என்கிறார் -என்று பட்டர் அருளிச் செய்யும் படி –
கர்ம ஜ்ஞான அநு க்ருஹீதையான பக்தி ஸ்தானத்திலே பகவத் பிரசாதமாய்
அநந்தரம்-கைங்கர்யத்துக்கு பூர்வ ஷண வர்த்தியான பக்தியாயிற்று இவரது —
ஆழ்வார் பிரபன்னரோ -பக்தி நிஷ்டரோ -என்று எம்பாரை சிலர் கேட்க –
ஆழ்வார் பிரபன்னர் -பக்தி இவருக்கு தேக யாத்ரா சேஷம் –என்று அருளிச் செய்தார் -என் போலே என்னில்
நாமும் எல்லாம் பிரபன்னராய் இருக்கச் செய்தே ஆண்டாறு மாசத்துக்கு ஜீவனம் தேடுகிறாப் போலே
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை யும் எல்லாம் கண்ணன் -6-7-1-இ றே இவர்க்கு –

அருளினன் –
நிர்ஹேதுகமாக அருளிக் கொண்டு நிற்கக் கண்ட இத்தனை –
எனக்கு அருளினான் -என்னாது ஒழிந்தது -பகவத் விஷயீ காரத்துக்கு முன்பு நம்மை அசத் கல்பராக நினைத்து இருக்கையாலே –
அருளினன் –
இத்தால் அர்த்திக்க வன்றிக்கே-முலைக் கடுப்பாலே தரையிலே பீச்சுவாரைப் போலே அருளிக் கொண்டு நிற்கக் கண்ட இத்தனை –
தாதுபிரசாதான் மஹிமா நமீசம் -தைத்ரியம் -என்கிறபடியே நிர்ஹேதுகமாக அருளிக் கொண்டு நிற்கக் கண்ட இத்தனை –
இத்தலையில் நினைவு இன்றிக்கே இருக்க வந்து அருளினவன் –

-தன்னருள் கொள்வார் இல்லாதான் ஒருவனோ என்னில் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி –
தான் அருளாத வன்று சத்தை இன்றிக்கே இருப்பாரை ஒரு நாடாக யுடையவன் –
அயர்வாகிறது -விச்ம்ருதி-அது இன்றிக்கே இருப்பவர்கள் –ப்ராகபாவத்தைப் பற்றச் சொல்கிறது -பிரத்வம்சா பாவம் உண்டு இ றே முக்தர்க்கு –
அமரர்கள் –
பகவத் அனுபவ விச்சேதத்தில் தாங்கள் உளர் அன்றிக்கே இருக்குமவர்கள் –
ந ச சீதா த்வயா ஹீநா ந சாஹமபி ராகவ -என்கிறபடியே –
அமரர்கள் –
த்ரிபாத் விபூதி யோகத்தைப் பற்றச் சொல்கிறது
பரம சாம்யா பன்னராய் இருக்கையாலே ஓலக்கம் இருந்தால் யாயிற்று அவர்களுக்கும் அவனுக்கும் வாசி அறியலாவது –
பிராட்டிமாராலே யாதல் -ஸ்ரீ கௌஸ்து பாதிகளாலே யாதல் -சேஷி என்று அறியும் இத்தனை —
ஆனால் இப்படி இருக்கிற அவர்கள் பலராய் தான் ஒருவன் ஆனால் இவர்களை அனுவர்த்தித்துக் கொண்டு தன்னுடைய சேஷித்வமாம் படி இருக்குமோ -என்னில்
அதிபதி –
அவர்களுக்கும் தொட்டுக் கொள் தொட்டுக் கொள் என்ன வேண்டும்படி ஆனைக்கு குதிரை வைத்து அவ்வருகாய் இருக்கும் என்னுதல்-
ஸ்வாமி வாசகம் -என்னுதல்
இதுக்கு அவ்வருகே விக்ரஹ வைலஷண்யம் சொல்ல ஒருப்பட்டு கீழே நின்ற நிலையைக் குலுக்கி -அவன் என்று அவ்வருகே போகிறார்

துயர் அறு-
துயர் அறுக்கும் என்று முன்புள்ள முதலிகள் அருளிச் செய்யும் படி
சமஸ்த துக்காப நோதன ஸ்வ பாவமான திருவடிகள் சகல ஆத்மாக்களுடையவும் துக்கத்தைப் போக்குகையே ஸ்வ பாவமான திருவடிகள்
துயர் அறு சுடர் அடி -என்று எம்பெருமானார் அருளிச் செய்யும் படி வ்யச நேஷூ மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித -என்றால் துக்க நிவ்ருத்தியும் அவனதாய் இருக்கும் இ றே
இவர் துயர் அற-தான் துயர் தீர்ந்தானாய் இருக்கை-
இத்தால் இவன் மயர்வற -அவன் துயர் அற்றபடி –

சுடரடி –
நிரவதிக தேஜோ ரூபமான திவ்ய மங்கள விக்ரஹத்தைச்
சொல்கிறது –
சுடர் –
பஞ்ச சக்திமயமான புகரைச் சொல்லுகிறது
அடி –
சேஷபூதன் பக்கல் சேஷி கணிசிப்பது திருவடிகளை இ றே-
ஸ்தனன்ய பிரஜை முலையிலே வாய் வைக்குமா போலே இவரும் உன் தேனே மலரும் திருப் பாதம் –1-5-5-என்கிற திருவடிகளிலே வாய் வைக்கிறார்

தொழுது –
நித்ய சம்சாரியாய்ப் போந்த இழவு எல்லாம் தீரும்படி ஸ்வரூப அனுரூபமான விருத்தியிலே அந்வயித்து
எழு-
அசநேவ ச பவதீ -என்னும் நிலை கழிந்து -சந்தமேனம் ததோ விது-என்கிறவர்கள் கோடியிலே என்னலாம் படி உஜ்ஜீவிக்கப் பார் –
அடியிலே தொழாமையாலே வந்த சங்கோசம் தீரும்படி அடியிலே தொழுது உஜ்ஜீவிக்கப் பார் –
என் மனனே –
இப்போது ஆயிற்று தம்மைக் கண்டது
அருளினான் என்று நின்ற இத்தனை இ றே முன்பு
இருவர் கூடப் பள்ளியோதி இருந்தால் -அவர்களில் ஒருவனுக்கு உத்கர்ஷம் உண்டானால் மாற்றையவன் தனக்கு
அவனோடு ஒரு சம்பந்தத்தைச் சொல்லிக் கிட்டுமா போலே
மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷயா-என்கிறபடியே நெடுநாள் பந்த ஹேதுவாய் போந்தது
இப்போது முந்துற்ற நெஞ்சாய் முற்பட்டு நிற்கிறபடியாலே-அத்தோடு தமக்கு ஒரு சம்பந்தத்தை ஆசைப் பட்டு -என் மனனே -என்கிறார் –

பாட்டை முடியச் சொல்லி -அவன் -என்ன அமையாதோ -அடி தோறும் சொல்லுகிற இதுக்கு கருத்து என் என்னில்
இவர் தம் இத் திருவாய்மொழி தன்னில் ஈச்வரத்வம் ஆயிற்று பிரதிபாதிக்கிறது
அந்த ஈச்வரத்வதுக்கு ஒரோ குணங்களே நிரபேஷமாக போந்து இருக்கையாலே சொல்லுகிறது –

உயர்வற யுயர்நலம் யுடையவன் -எவன் -அவன் மயர்வற மதி நலம் அருளினன்-என்றும்
மயர்வற மதிநலம் அருளினன் எவன் -அவன் -அமரர்கள் அதிபதி -என்றும்
அமரர்கள் அதிபதி எவன் -அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு மனனே என்றும் இங்கனே வாக்யைக வாக்ய பாவத்தாலே யோஜிக்கவுமாம் –
அன்றிக்கே
உயர்வற யுயர்நலம் யுடையவன் -எவன்-அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு மனனே -என்றும்
மயர்வற மதிநலம் அருளினன் எவன் -அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு மனனே என்றும்
அமரர்கள் அதிபதி எவன் -அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு மனனே என்றும்–வாக்ய பேதம் பண்ணி யோஜிக்கவுமாம் –
நம புரஸ்தாதத புருஷ்ட தஸ்தே-ஸ்ரீ கீதை -11-30 கண்ணா உனக்கு முன் பக்கமும் பின் பக்கமும் நமஸ்காரம் என்றால் போலே –

ஆனால் -உயர்வற உயர்நலம் உடையவன் –அயர்வறும் அமரர்கள் அதிபதி –மயர்வற மதி நலம் அருளினன்-என்ன வேண்டி இருக்க —
உயர்வற உயர் நலம் உடையவன் -என்ற அனந்தரம் -அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்று அவ்வளவும் போக மாட்டாமை -உபகார ச்ம்ருதியாலே
– மயர்வற மதி நலம் அருளினன் -என்கிறார்
குணம் இல்லை விக்ரஹம் இல்லை விபூதி இல்லை -என்று சொல்லுகின்றவர்கள் எல்லாரும் நிரஸ்தர் இப்பாட்டாலே —
அவர்களை எதிரிகள் ஆக்கிச் சொல்ல வேண்டா விறே- ஸ்வ பஷத்தை ஸ்தாபிக்கவே பர பாஷம் நிரஸ்தமாம் இறே -நெல் செய்யப் புல் தேயுமா போலே தன்னடையே நிரஸ்தர் ஆவார்கள் இ றே அவர்கள் –

உயர்வற உயர்நலம் உடையவன் –அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்கையாலே பிராப்ய வேஷம் சொல்லிற்று –
மயர்வற -என்கையாலே -விரோதி போனபடி சொல்லிற்று –
அருளினன் -என்கையாலே -அவனே சாதனம் என்கிறது –
தொழுது எழு -என்கையாலே பிராப்தி பலமான கைங்கர்யத்தைச் சொல்லிற்று –
என் மனனே -என்கையாலே பரி ஸூ த்த அந்த கர்ணனே அதிகாரி -என்னும் இடம் சொல்லுகிறது –

———————————————————————————————-

அவதாரிகை –

யதோ வா இமானி -இத்யாதி ஸ்ருதி பிரக்ரியையாலே –தைத்ரியம் -கார்ய ஆகாரமான ஜகத்தை பிடித்து -ஜகத் காரண வஸ்து உபாஸ்யம் -என்னுதல் –
அன்றிக்கே –
ஸ்வரூபத்தை முற்படச் சொல்லி -பின்னை விபூதியில் போருதல் செய்யாதே முற்படக் குணங்களிலே இழிவான் என் என்னில்
சர்வேஸ்வரன் தம்மை வசீகரித்தது குணங்களைக் காட்டி ஆகையாலே தாம் அகப்பட்ட துறையிலே முற்பட இழிந்து பேசினார் —
அக்குணங்கள் தான் ஸ்வரூபத்தைப் பற்றி யல்லது இராமையாலே -அவற்றுக்கு ஆஸ்ரயமான ஸ்வரூபத்தை –
அவன் -என்று பிரசங்கித்தார் -முதல் பாட்டில் —அங்கு பிரஸ்துதமான-திவ்யாத்ம ஸ்வரூபம் –
ஹேய பிரத்ய நீகதையாலும் -கல்யாணகுணகதா நதையாலும் சேதன அசேதன விலஷணமாய் இருக்கும் என்று
அந்த ஸ்வரூபத்தை அனுபவிக்கிறார் இப்பாட்டில் –

மனனக மலமற மலர் மிசை எழு தரும்
மனன் உணரளவிலன் பொறியுணர் யவையிலன்
இனன் உணர் முழு நலம் எதிர் நிகழ் கழிவினும்
இனன் இலன் எனன் உயிர் மிகு நரையிலனே –1-1-2–

மனனக மலமற மலர் மிசை எழு தரும் மனன் உணரளவிலன் –
ஜீவாத்மா ஸ்வரூபத்தில் பகவத் ஸ்வரூபம் விலஷணம்-என்கிறார் –
ஆனால் மனனகம் -என்று தொடங்கிச் சொல்லுகிற இதுக்கு கருத்து என் என்னில் –
ஸ்வரூப வைலஷண்யத்தை அனுபவிக்கிற இவருடைய பிரதிபத்தி க்ரமம்-இருக்கிறபடி –மனன் -என்றது -மனம் -என்றபடி –
அகம் -நிரவவயமாய் இருக்கிற மனஸ் ஸூ க்கு ஓர் உள்ளும் புறம்பும் இல்லாமையாலே -மனனகம் -என்றது -மனசிலே -என்றபடி –
அன்றியே –
பராகர்த்த விஷயமாயும் -பிரத்யகர்த்த விஷயமாயும் போருகையாலே -பராகர்த்தத்தைத் தவிர்ந்து –
பிரத்யகர்த்த விஷயமானத்தை அகம் -என்கிறது ஆகவுமாம்-உட் பொ ருளிலே செல்லும் மனம் என்றபடி –

மலமற –
மனனகத்தில் உண்டான மலங்கள் -உண்டு -அவித்யாதிகள் -அவையாவன –
காம க்ரோதச்ச லோபச்ச ஹர்ஷ மாநமதா குணா விஷாதச் சாஷ்டம ப்ரோக்த இத்யேத மநஸோ மலா –என்று
ஆத்ம ஸ்வரூபமும் நித்யமாய் -ஜ்ஞானமும் நித்யம் ஆகையாலே -இத் தோஷம் ஸ்வரூப கதமுமல்ல – -ஜ்ஞான கதமுமல்ல
ஆத்மாவினுடைய தர்மபூத ஜ்ஞானதிற்கு உதய அச்த்மதய வ்யவஹாரம் பண்ணுகிறது -ஜ்ஞான ப்ரஸ்ருதி த்வாரத்தைப் பற்ற வாயிற்று –
ஆக -ஜ்ஞான ப்ரஸ்ருதி த்வாரமான மனசைப் பற்றிக் கிடக்கிற தோஷமானது-
யோக சாஸ்த்ரத்திலே சொல்லுகிற கிரமத்திலே பாஹ்ய விஷய பிரவணமான நெஞ்சை பிரத்யக் விஷயமாக்கி
-யம நியமாதி -யமம் -நியமம் -ஆசனம் -ப்ராணாயாம் பிரத்யாகாராம் தாரணை தியானம் சமாதி –
அஷ்ட அங்கங்கள் – க்ரமத்தாலே அனுசந்திக்கப் புக்கவாறே கழியக் கடவது –

அற-என்றது
அறவற -என்றபடி
அநந்தரம் –
மலர் -விகசிதமாய்
மிசை -மேல் நோக்கி
எழுதரும் -கொழுந்து விட்டு மேல் மேல் எனக் கிளரா நின்றுள்ள

மனன் உணர்வுண்டு –மானஸ ஜ்ஞானம்
இப்படி விகசிதமாகக் கொழுந்து விட்டு மேல் மேல் எனக் கிளரா நின்றுள்ள மானஸ ஜ்ஞான கம்யமாய் இருக்கும் -ஆத்மா –
அளவிலன் –அதின் அளவல்லன் ஈஸ்வரன்
மானஸ ஜ்ஞான கம்யமாய் இருக்கும் ஜீவாத்ம ஸ்வரூபம் -பகவத் ஸ்வரூபம் அங்கன் இராது என்றதுக்கு கருத்து என் என்னில்
ஏகேந்த்ரிய கிராஹ்யத்வமும் இல்லை -என்கை
பொன்னுக்கும் கரிக்கும் அத்யந்தம் வைஷம்யம் உண்டாய் இருக்கச் செய்தே க்ரஹிக்கைக்கு சாமக்ரி ஒன்றாய் இருக்கும் இ றே
அப்படி ஏக பிரமாண கம்யத்வ சாம்யமும் இல்லை -என்கை –
ஆனால் மநஸா து விசுத்தேன-என்று பரிசுத்தமான அந்த கரணத்தாலே கிரஹிக்கலாம் என்னா நின்றது இ றே அத்தோடு விரோதியாதோ வென்னில்
நேதி நேதி -என்று கிரஹிக்கும் அத்தனை அல்லது ஈத்ருக்த்தயா இயத்தையா பரிச்சேதித்து க்ரஹிக்கப் போகாது என்கை
முதலிலே ஞான விஷயம் அன்று என்னில் துச்சத்வம் வரும் இ றே-
அணு த்ரவ்யத்தை கிரஹிக்குமா போலே விபுத்ரவ்யத்தைக் கிரஹிக்கப் போகாது என்கை-

பொறி உணர்வு யவை இலன் –
பொறி -என்று சஷூராதி கரணங்கள்-அவற்றால் அறியப்படும் பதார்த்தங்களின் படி அல்லன் –
யமாத்ம ந வேத யம் பிருதிவி ந வேத -என்கிறபடியே –
இவ்வோபாதி ஜீவாத்ம ஸ்வரூபத்தில் விலஷணன் என்றதும் என்கை –
ஜாத்யந்தன் பதார்த்த தர்சனம் பண்ணிற்றிலன் என்பதுவும் -கண்ணில் வைசத்யமுடையவனும் கண்டிலன் என்பதும் -காணாமை இருவருக்கும் ஒக்கும் இ றே –
அப்படியே அசித் விலஷணன் என்றவோவாதி சித் விலஷணன் என்றதவும் என்கைக்காகச் சொல்கிறது –

இப்படி உபய விலஷணனாய் இருக்குமேயாகில் அவனைப் பிரதிபத்தி பண்ணும் படி என் என்னில்
இனன் –
ஏவம் விதன்-என்னும் இத்தனை – -உக்தத்தை சொல்லவுமாம் -வஹ்ய மாணத்தைச் சொல்லவுமாம் –
எப்படிப்பட்டவன் என்னில் –
உணர் முழு நலம் –
உணர்வு -என்று ஜ்ஞானம் –நலம் என்று ஆனந்தம் -முழு -என்று இரண்டு இடத்திலும்
கட்டடங்க ஞானமுமாய் கட்டடங்க ஆனந்தமுமாய் இருக்கும்
இத்தால் ஸ்வரூபத்தில் அப்ரகாசமாயாதல் –அனநுகூலமாயாதல்-இருக்கும் இடம் இல்லை -என்கை
அன்றிக்கே –
ஆனந்தம் ஆகிறதும் ஞான விசேஷம் ஆகையாலும் ஆனந்தத்தைச் சொன்ன போதே ஜ்ஞானத்தையும் சொல்லிற்றாய் வரும் இ றே
புனர் உகத தோஷம் வாராது
ஆகையால் -இனன் உணர் முழு நலம் –
நேர் கொடு நேர் தன்னை அறியப் போகாமையாலே -என்றும் ஒக்க -இனனாலே -உபமானத்தாலே -அறியப் படுமவனான முழு நலமாய் இருக்கும்
யதா சைவந்தவகன -என்கிறபடி நிரதிசய ஆனந்த மயமாய் இருக்கும் –
ஆனந்தோ ப்ரஹ்ம -என்றும் ஆனந்த மய-என்றும் சொல்லக் கடவது இ றே –

எதிர் நிகழ கழிவினும் இனன் இலன்
காலத்ரயத்தாலும் இனன் உண்டு -ஒப்பு -அது இல்லாதவன் –
சித் அசித் ஈஸ்வர தத்வ த்ரயமே யாயிற்று நம் தர்சனத்துக்கு உள்ளவை –
அதில் சித் அசித் விலஷணம் முன்பே சொல்லிற்று
இங்கு சொல்லிற்றாகிறது என் என்னில்
திரள் ஒப்பு இல்லையாகில் ஒரு வகையாலே தான் ஒப்பு உண்டோ என்னில் -அதுவும் இல்லை என்கிறது -என்று நிர்வஹிப்பாரும் உண்டு
அங்கன் அன்றிக்கே
பட்டர் -சாதர்ம்ய திருஷ்டாந்தம் -ஒத்த தர்மங்கள் உடைய பொருள்கள் -இல்லை என்றது முன்பு –
வைதர்ம்ய திருஷ்டாந்தம் -வேறு பட்ட தர்மங்களை உடைய பொருள்கள் -இல்லை என்கிறது இங்கு -என்று –
வைதர்ம்ய திருஷ்டாந்தத்துக்கு உதாஹரணம்
ந பரேஷூ மஹௌ ஜசச் சலாதப குர்வந்தி மலிம்லுசா இவ -சிறந்த வீரர்கள் விரோதி விஷயத்தில் திருடர்கள் போன்று வஞ்சனை செய்ய மாட்டார்கள் –

எனன் உயிர் –
இப்படி இருகிறவன் எனக்கு தாரகன் –யச்யாத்மா சரீரம் -என்கிறபடி -இத்தத் தனக்கு சரீரமாகக் கொண்டு –
தான் சரீரியாய் -தாரகனாய் இருக்கும் என்னும் அர்த்தமும் சொல்ல வேண்டுவது ஓன்று இ றே

மிகுநரையிலனே –
மிக்காரை உடையன் அல்லன் –
தான் ஜீவாத்மாவை சரீரமாகக் கொண்டு -தாரகனாய் நியமகனாய் இருக்குமா போலே –
தன்னையும் நியமிக்கக் கடவதொரு வஸ்த்வந்தரம் உண்டோ வென்னில் –
தனக்கு மேற்பட்டாரை உடையான் அல்லன் —
ந தத் சமச்ச அப்யதிகச்ச த்ருச்யதே -என்னுமா போலே
மனனக மலமற மலர் மிசை எழு தரும் மனன் உணர்வு அளவிலன்-பொறி உணர்வு யவை இலன் –
-எதிர் நிகழ் கழிவினும் இனன் இலன் -மிகுநிரையிலன் -உணர் முழு நலம் -இனன் எனன் உயிர் -என்று அந்வயம்
அன்றிக்கே
என் உயிரானவன் துயர் அடி தொழுது எழு என் மனனே -என்று கீழ்ப் பாட்டோடு அந்வயம் –

———————————————————————————————–

அவதாரிகை –

முதல் பாட்டிலே –
பிரதான்யேன கல்யாண குண யோகத்தையும் -நித்ய விபூதி யோகத்தையும் –விக்ரஹ வை லஷண்யத்தையும் அனுபவித்து –
அவற்றுக்கு ஆஸ்ரயமான திவ்யாத்ம ஸ்வரூபம் சித் அசித் விலஷணமுமாய்-உபமான ரஹிதமுமாய் இருக்கும் என்று
இரண்டாம் பாட்டாலே அருளிச் செய்து நின்றார் –
அவற்றோடு சேர் ஓர் கோவையாய்த் தோற்றும் இ றே -ததீயத்வ ஆகாரத்தாலே லீலா விபூதியும் இவர்க்கு –
நோ பஜநம் ஸ்மரன் நிதம் சரீரம் என்னா நிற்கச் செய்தே -ததீயத்வ ஆகாரத்தாலே லீலா விபூதியும் உத்தேச்யம் ஆகா நின்றது இ றே முக்தனுக்கு
இவருக்கும் கர்ம நிபந்தனமான ஆகாரம் கிடக்கச் செய்தே -மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் ஆகையால்ததீயத்வ ஆகாரமும் தோற்றி அனுபவிக்கிறார் –
ராஜாக்களுக்கு நாடு எங்கும் செல்லா நிற்கச் செய்தே மகிஷிகளும் தாங்களுமாக சில பூம் தோட்டங்களுக்கு குடிநீர் வார்த்து -ஆக்குவது அழிப்பதுமாய் -லீலா ரசம் அனுபவிக்குமா போலே
திரு விண்ணகர் சேர்ந்த பிரான் பெய்த காவு கண்டீர் பெரும்தேவுடை மூவுலகு -6-3-5- என்கிறபடியே
சர்வேஸ்வரனும் பெரிய பிராட்டியாருமாய் கடாஷித்த போது வுண்டாய்-இல்லையாகில் இல்லையாய்-
அவர்களுக்கு லீலா ரச விஷயமாய் இருக்கிற லீலா விபூதியை அனுபவிக்கிறார்

இலனது உடையனிது என நினைவரியவன்
நிலனிடை விசும்பிடை யுருவினன் அருவினன்
புலனொடு புலன் அலன் ஒழிவிலன் பரந்த வந்
நலனுடை ஒருவனை நணுகினம் நாமே –1-1-3-

இலனது உடையனிது என நினைவரியவன்
அது இலன் -இது உடையவன் -என நினைவு அரியவன் –
அநு பூதமாய் இருப்பதொன்ற்றைச் சொல்லி -அது இலன் என்றவாறே -அது ஒழிந்தத்தை உடையவன் என்று தோற்றும் –
ஒன்றைக் காட்டி இத்தை உடையவன் என்றவாறே இது ஒழிந்தது இல்லையாய் தோற்றும் –
இலனது –என்றால் பரிச்சின்ன விபூதிகனாம் –
உடையன் இது என்றால்-இது ஒழிந்தது இல்லாமையாலே அல்ப விபூதிகனாம் –
இரண்டு வழி யாலுமாக ஐஸ்வர்யம் குறைந்து தோற்றும்
என
இப்படி இருக்கும் என –
நினைவரியவன் –
அனுப பந்தங்களைச் சேர்த்து நினைக்கலாம் இ றே
ஓர் ஊசி நிற்கிறதாகவும் -அதின் மேல் கலசம் இருக்கிறதாகவும் -அதின் மேல் சால் -நெல் –இருக்கிறதாகவும் –
அதின் மேலே மகா மேரு இருக்கிறதாகவும் -இப்படி அனுப பந்தகங்களைச் சேர்த்து நினைக்கலாம் இ றே
இப்படியேதான் மநோ ரத்தத்துக்கு விஷயமாய் இருக்குமோ என்னில் மநோ ரத சமயத்திலும் பரிச்சேதிக்க அரியனாய் இருக்கும் –

ஆனால் இவனது ஐஸ்வர்யம் பேசும்படி தான் என் என்னில் –
நிலனிடை விசும்பிடை யுருவினன் அருவினன் –
பதிம் விச்வஷ்ய -என்னும் இத்தனை –
நிலனிடை -என்கிற இது பாதாளத்து அளவும் நினைக்கிறது
விசும்பிடை -என்கிற இது பரம பதத்துக்கு இவ்வருகு உள்ளதை எல்லாம் நினைக்கிறது
உருவினன் -உருக்களை உடையவன் -சரீரங்களை உடைய சேதனர்கள் உடையவன் –
-அருவினன் -அருக்களை உடையவன் –
இனன் -என்ன -உடையவன் என்று காட்டுமோ என்னில்
காராயின காள நன் மேனியினன்-9-3-1-என்றால் -மேனியை உடையவன் என்று காட்டுமா போலே
ஆக கீழ் மேல் உண்டான சேதன அசேதனங்களை உடையான் என்றபடி –
இத்தால் ப்ராதேசிகமான ஐஸ்வர்யம் உடையவர்களது அன்று லீலா விபூதி -சர்வாதிகனது -என்கை

இப்படி சர்வத்தையும் உடையவனாய் -தான் போகத்தில் அந்ய பரனாய் கோயில் சாந்து பூசி நித்ய விபூதியிலே இருக்குமோ என்னில்
புலனொடு புலன் நலன் ஒழிவிலன் –
புலனொடு –
இவை பட்டத்தை தானும் பட்டு -உடன்கேடாய் நின்று நோக்கும் என்கிறது –
புலன் -என்கிறது புலப்படும் பதார்த்தங்களை
த்ருச்யதே ச்ரூயதேபி வா -என்கிறபடியே பிரமாண் கோசரங்களான பதார்த்தங்களை

ஓடு –
தத் த்ருஷ்ட்வா என்கிறபடியே -இவற்றை உண்டாக்கி ஜீவத்வாரா அனுப்ரவேசித்து பின்னை இவற்றுக்கு வஸ்த்துத்வ நாம பாக்த்வங்கள்
உண்டாம் படி பண்ணி -அந்த பிரவிஷ்டாச் சாஸ்தா ஜனா நாம் சர்வாத்மா -என்கிறபடியே சர்வாத்ராந்தராமாவாய் நிற்கும்படியைச் சொல்கிறது
ஆனால் பின்னை தான் சர்வாத்மாவாய் நின்றால் அசித்தினுடைய பரிணாமாதிகளாதால்-சேதனருடைய ஸூகித்வ துக்கிதங்களாதல் தனக்கு
ஸ்பர்சிக்கும் படி இருக்குமோ என்னில்
புலனலன் –
தத் தர்மா வல்லன் –
த்வா ஸூ பர்ணா சயுஜா சகாயா வ்ருஷம் பரிஷஸ் வஜாதே தயோர் அந்ய பிப்பலம் ஸ்வாத் வத்த்ய நச் நன் நன்யோ அபிசாக தீதி -என்று
முண்டக உபநிஷத் –மரம் -உடல் –ஜீவாத்மா பரமாத்மா இரண்டு பறவைகள் –பலத்தை ஜீவன் மட்டுமே அனுபவிக்கிறான் -என்கிறது தான்
ஓட்டற்று நின்று விளங்கா நிற்கும்
ஒழிவிலன் பரந்த
ஒரு வஸ்துக்கள் ஒழியாமே இப்படி வியாபித்து இருக்கும் -என்னவுமாம்
அன்றிக்கே
கால பாரமாக்கி எக்காலத்திலும் எல்லா வஸ்துக்களிலும் வியாபித்து இருக்கும் என்னவுமாம் –
அந் நலனுடை ஒருவனை
கீழ் இரண்டு பாட்டாலும் சொன்ன குண விசிஷ்ட ஸ்வரூபத்தை நினைத்து அந் நலனுடை ஒருவனை -என்கிறார்
நணுகினம் –
மயர்வற மதி நலம் அருளினன்-என்கிற ஞான மாத்ரம் அன்றிக்கே கிட்டப் பெற்றோம்
நாமோ
இது பொய்யோ -கிந்து ஸ்யாத் சித்த மோஹோயம்-இது ஏதேனும் பிரம ஸ்வப்நாதிகளோ என்றால் போலே
இவர் ஈச்வரோஹம் என்றால் போலே அவனுக்கும் குடி வாங்க வேண்டும்படியாய் இ றே இருப்பது
அஹம் என்றால் அவன் அளவிலே பர்யவசிக்க வேண்டும்படியாய் இருக்க -தேஹத்து அளவிலே யாம் படியாய் இ றே முன்பு போந்தது
மன்யே ப்ராப்தாஸ் ஸ்ம தம் தேசம் பரத்வாஜோ யமப்ரவீத் -கைகேயி ராஜன் என்று சம்போதிக்கும்படி பிறந்து
ஸ்ரீ பரத்வாஜ பகவான் -அவள் மகனாய் கீழ் வயிற்றுக் கழலை அறுக்க வருகிறானோ –என்று கச்சினன துஷ்டோ வ்ரஜசி என்னும்படியான நான்
அவன் சொன்ன ஆஸ்ரமத்திலே புகுந்தேனோ என்று சங்கியா நின்றான் என்றான் இ றே –
வா நராணாம் நாரணாஞ்ச கதம் ஆஸீத் சமாகம -காட்டிலே வர்த்திக்கக் கடவ குரங்குகளும் நாகரீகரான சக்கரவர்த்தி பிள்ளைகளுக்கும்
ஒரு சேர்த்தி உண்டான படி எங்கனே -என்ன –
ராம ஸூ க்ரீவயோர் ஐக்யம் தேவ்யேவம் சம்ஜாயாத -பெருமாளும் மகா ராஜரும் சேர்த்த சேர்த்தி -பின்னே பிறந்த இளைய பெருமாள் நிற்க –
அடியேன் அந்தப்புர கார்யத்துக்கு வரும்படியாய் இ றே -நாமும் இங்கனே கூடிக் கொண்டு நிற்கக் கண்டேன் இத்தனை –
நாமே
இவ்வனுபவத்துக்கு புறம்பான –
பகவத் கந்த ரஹிதரான நாம் –
நாமே
இது பொய்யோ

——————————————————————————————-

அவதாரிகை –

கீழில் பாட்டிலே -ததீயத்வ ஆகாரத்தாலே அவன் குனங்களோபாதி உத்தேச்யமாகத் தோற்றுகையாலே-லீலா விபூதி யோகத்தை அனுபவித்தார்
இனி மேலில் பாட்டுக்கள் எல்லாம் லீலா விபூதி விஷயமாய் இருக்கிறது –
நித்ய விபூதியில் வந்தால் -அவ்விபூதி பாவஜ்ஞமாய் -அவனுடைய சந்தத்தைப் பின் செல்லுமதாய் இருக்கும் –
ஒண் டொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப -4-9-10–என்னும்படி யாய் இ றே இருப்பது
கர்ம நிபந்தனமான அசித் சம்சர்க்கத்தோடே கூடி -ஈஸ்வர சங்கல்பத்தை பின் செல்லுமதாய் இருக்கும் இந்த விபூதி –
அந்த விபூதியில் வந்தால் அவ்விருப்பு கண்டு உகக்கும் அதுக்கு அவ்வருகு ஒன்றும் இல்லை –
அந்ய சேஷத்வ -ஸ்வ ஸ்வா தந்த்ர்யங்கள் நடையாடுகிறது இவ்விபூதியில் ஆகையாலே –
இரண்டையும் தவிர்த்து -பகவத் அதீநம் என்று சொல்ல வேண்டுவது இங்கே யாய் இருந்தது –

இனி ஒரு மூன்று பாட்டாலே
இதினுடைய ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் பகவத் அதீனமாய் இருக்கும் என்று
ஜகத்துக்கும் ஈஸ்வரனுக்கும் சம்பந்தம் சரீராத்மா பாவம் என்று
குத்ருஷ்டிகளை நிரசித்து –
சூன்ய வாதியை நிரசித்து –
வ்யாப்தி சௌகர்யத்தைச் சொல்லி
பலத்தைச் சொல்லித் தலைக் கட்டுகிறார்
அதில் ஸ்வரூபம் அவன் அதீநம் என்றார் -இப்பாட்டில் -அது ஆகிறபடி -எங்கனே என்னில் –
சிருஷ்டி காலத்தில் வந்தவாறே இவற்றை உண்டாக்கி –ஜீவத்வாரா அனுப்ரவேசித்து -வஸ்துத்வ நாம பாக்த்வங்களும் உண்டாம் படி பண்ணியும்
இது அடங்கலும் அழிந்த வன்று சத்யவச்த பிரபை போலே தன பக்கலிலே ஸூ ஷ்ம ரூபேண கிடக்கும் படி ஏறிட்டுக் கொண்டு தரித்தும்
காரண தசையோடு கார்ய தசையோடு வாசி அற தன்னைப் பற்றி ஸ்வரூப ஸ்தித்யாதிகளாம் படி
இருக்கையாலே ஸ்வரூபம் அவன் அதீநம் என்கிறது –
அதில் -லோகத்தில் சகல பதார்த்தங்களையும் தனித் தனியே சொல்லி
-இதனுடைய ஸ்வரூபம் அவனாலே -இதனுடைய ஸ்வரூபம் அதனாலே -என்னில் பணிப்படும் இறே ஜீவா அனந்த்யத்தாலே-
இனி பிரயோஜகத்தில் சொல்லிவிடும் அன்று பிரதிபத்திக்கு விஷயம் ஆகாது –
ஆகையாலே -தேவாதி பதார்த்தங்களை நாலு மூன்று வகையாலே சேர்த்து அவற்றினுடைய ஸ்வரூபம் அவன் அதீநம் -என்கிறார் –
பெண்பால் -3-ஆண்பால் -3-பலவின்பால் -3-ஒன்றன்பால் -1-
அழியக் கூடியவை -1-நன்மை தீமை -1-கால பேதம் -1- ஆக 7-என்பதால் நான்கு மூன்று வகையாகச் சேர்த்து என்கிறார்

நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள்
தாம் அவர் இவர் உவர் அது விது வுது வெது
வீமவை யிவை வுவை அவை நலம் தீங்கிவை
ஆமவை யாயவை ஆய நின்ற அவரே –1-1-4-

நாம் அவன் இவன் உவன் எவன் –
நான் என்றும் நாம் என்றும் -யான் என்றும் யாம் என்றும் தந்தாமைச் சொல்லக் கடவது
சந்நிஹிதம் என்ன -தூரஸ்தம் என்ன -அதூரவிப்ரக்ருஷ்டம் என்ன -வினவப் படுகிறது –என்ன –

அவள் இவள் உவள் எவள் –
ஸ்திரீ லிங்க நிர்திஷ்ட வஸ்துக்களைச் சொல்லுகிறது –

தாம் அவர் இவர் உவர்
பாஹூ மந்தவ்யரை –

அது விது வுது வெது –
நபும்சக லிங்க நிர்திஷ்ட வஸ்துக்களைச் சொல்லுகிறது

வீமவை யிவை வுவை அவை –
நச்வர பதார்த்தங்கள் –

நலம் தீங்கிவை-
நன்மை தீமை -என்னுதல்
நன்றானவை தீதானவை -என்னுதல் –

ஆமவை யாயவை –
கழிந்த வற்றிலும் -வருமவற்றிலும் அடைப்புன்னும் இ றே வர்த்தமானம் –

ஆய நின்ற
ஆய நின்ற பதார்த்தங்கள்
இவற்றைப் பதார்த்தளவிலே கொண்ட போது மேல் ஐக்யம் சொல்லப் போகாது –
அசித்தும்-அசித் அபிமானியான ஜீவனும் -ஜீவா அந்தர்யாமியான பரமாத்மாவுமான இஸ் சங்காதம் இத்தனைக்கும் வாசகமாய் இருக்கிறது இச் சப்தம் –

அவரே –
இவையே நிற்கிறார் அவர்
இதம் சர்வம் ப்ரஹ்மம் கலு -என்னுமா போலே
தத் தவம் அஸி-என்றால் போலே
இருக்கிறது –

முதல் பாட்டிலே -கல்யாண குண யோகத்தையும் -நித்ய விபூதி யோகத்தையும் -விக்ரஹ வை லஷண்யத்தையும் சொல்லி
இரண்டாம் பாட்டிலே ஸ்வரூப வைலஷண்யத்தையும் சொல்லிற்று
தச் சப்தம் -பிரக்ருத பராமர்சியாகையாலே –சுட்டு -ஆகையாலே
அவர் -என்று கல்யாண குண விசிஷ்ட வேஷத்தைச் சொல்லி
ஆய நின்ற -என்று அசிஜ்ஜீவ விசிஷ்ட பரமாத்மாவைச் சொல்லி
சாமா நாதி கரண்யத்தாலே ஐக்யம் சொல்லுகிறது –
ஆக
ஸ்திரீ புன்ன பும்சக பேதத்தாலும்
பூஜ்ய பதார்த்தங்கள் நச்வர பதார்த்தங்கள் என்கிற பேதத்தாலும்
விலஷண அவிலஷண பேதத்தாலும்
பூத பவிஷ்யத் வர்த்தமான கால பேதத்தால் வந்த விசேஷங்களாலும்
சகல சேதன அசேதனங்களையும் சங்க்ரஹித்து -அவற்றினுடைய ஸ்வரூபம் பகவத் அதீநம் என்றதாய் விட்டது

————————————————————————————–

அவதாரிகை –

ஸ்வரூபம் அவன் அதீநம் ஆனவோபாதி -ஸ்திதியும் அவன் அதீனை என்கிறார் –
ஒருவன் ஒரு கிருஹத்துக்கு கடவனாய் இருக்கும்
ஒருவன் ஒரு க்ராமத்துக்குக் கடவனாய் இருக்கும்
ஒருவன் ஒரு ஜன பதத்துக்குக் கடவனாய் இருக்கும்
ஒருவன் த்ரை லோக்யத்துக்கு கடவனாய் இருக்கும்
ஒருவன் சதுர்தச புவனத்துக்கும் கடவனாய் இருக்கும்
ஆக -சதுர தச புவனத்துக்கு கடவன் ஆனவனோடு -ஒரு கிருஹத்துக்கு கடவன் ஆனவனோடு வாசியற
அவர்கள் ரஷகர் ஆகிறதும் இவை ரஷ்யமாய் உபகாரம் கொண்டது ஆகிறதும் -சர்வேஸ்வரன் அந்தராத்மாவாய் நின்று நடத்துகையாலே –
அவன் இப்படி நடத்திக் கொண்டு போராத வன்று இவர்கள் ரஷகர் ஆகமாட்டார்கள் என்கிறார்
ந சம்பதாம் சமாஹாரே விபதாம் விநிவர்த்தனே சமர்த்தோ த்ருச்யதே கச்சித் தம் விநா புருஷோத்தமம்
நஹி பாலன சாமர்த்தியம் ருதே சர்வேச்வரம் ஹரிம் -தைத்ரிய நாராயண வல்லி-
எல்லா நன்மைகளையும் பண்ணித் தர வல்லனாய் -விரோதிகளையும் போக்க வல்லவன் ஆனவனை ஒழிய
வேறு ஒருவர் பக்கலிலே இந்த ரஷகத்வம் கிடவாது –

யத் வேதா தௌ-ஸ்வர ப்ரோக்தோ வேதாந்தே ஸ ப்ரதிஷ்டித -செப்பிலே கிடந்த ஆபரணத்தை வாங்கிப் பூண்டு
பின்னையும் அவ் வாபரணத்தை வாங்கி செப்புக்குள்ளே இட்டு வைக்குமா போலே
ஆத்யந்த பீஜமாய் இருப்பது யாதொன்று -தஸ்ய பிரகிருதி லீ நஸய -அது தன்னுடைய பிரக்ருதியிலே லீனமாய் இருக்கிறதாகிறது-அகாரம்
அது ரஷகனைக் காட்டுவது ஓன்று இ றே
ய பரச்ச மகேஸ்வர-அதுக்கு வாச்யதயா பரனாய் இருக்கிறான் யாவன் ஒருவன் அவன் சர்வேஸ்வரன் என்றது இ றே

அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி யடைவார்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி யடைய நின்றனரே –1-1-5-

அவரவர் –
தம்ம்முடைய அநாதரமும்-அவர்களுடைய வைவித்யமும் தோற்றுகிறது-
தமதமது –
குண பேதத்தால் வந்த பல பதத்தைச் சொல்லுகிறது
அறிவறி –
அதுக்கடியான ஞான பதத்தைச் சொல்லுகிறது
வகைவகை –
மார்க்க பேதங்களாலே –
தமதமது –அறிவறி –வகைவகை —
சேதன பேதத்தோபாதியும் போருமாயிற்று ருசி பேதங்களும்
தம்தாமுடைய குண அனுகுனமாகப் புறம்பே ஆஸ்ரயிப்பாரும்-ஆஸ்ரயணீயருமாய் இருப்பாருமாய் இருக்கும் இ றே-
ரஜோ குண பிரசுரராய் இருப்பாரும் –தமோ குண பிரசுரராய் இருப்பாரும் -அளாவனான சத்வத்தை உடையாருமாய் இருபாரும் இ றே இருப்பது –
அப்படியே குண அனுகுணமாகப் பிறந்த ஜ்ஞானமும் –

இப்படி அறிந்த அறிந்த வகைகளாலே
அவரவர் இறையவர் என
அவ்வவர் ஆஸ்ரயணீயர் என்று
வடி யடைவார்கள்
அவ்வவ தேவதைகள் தான் துராராத தேவதைகளாய் -பிரஜையை அறுத்துத் தா -ஆட்டை அறுத்துத் தா -ஏன்னா நிற்கச் செய்தேயும் –
ஆஸ்ரயணம் ஆவது -அவற்றின் காலிலே குனியுமதுக்கு அவ்வருகு இல்லை என்று இருக்கிறார் இவர் –ஸ்வ கோஷ்டீபிரசித்தியாலே –
ஓர் அஞ்சலி சாத்யவஸ்துவோடே இ றே தமக்கு வாசனை –
அஞ்சலி பரமா முத்ரா ஷிப்ரம் தேவ பிரசாதிநீ க்ருதா பரா தஸ்ய ஹி தே நாந்யத் பச்யாம் யஹம் ஷமம் அந்தரேணாஞ்சலிம்
பத்த்வா லஷ்மணஸ்ய பிரசாத நாத் -ஸ்ரீ பரத்வாஜ சம்ஹிதை –
இளைய பெருமாளுடைய ஜ்யா கோஷத்தைக் கேட்டு மகாராஜர் கழுத்திலே மாலையை அறுத்துப் போகட்டு காபேயமாக சில
வ்யாபாரங்களைப் பண்ணி அருகே நின்ற திருவடியைப் பார்த்து -இவ்வளவில் நமக்குச் செய்ய வடுப்பது என் என்ன
அபராத காலத்திலேயே அனுதாபம் பிறந்து மீண்டோமாய் எளியன சில செய்கிறோம் அல்லோம்
தீரக் கழிய அபராதம் பண்ணின பின்பு இனி ஓர் அஞ்சலி நேராமல் போகாது -என்றான் இ றே
இப்படி குணாதிகனாய்-பிராப்தனாய் -இருக்கிறவன் உடன் உண்டான வாசனையாலே -அடியடைவர்கள் -என்கிறார் –
மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு தொழுது எழுதும் -9-3-9-என்னுமிது மிகையாய் இ றே-இவர் பற்றின விஷயம் இருப்பது –

அவரவர் இறையவர் குறைவிலர் –
ஆஸ்ரயிக்கிறவர்கள் உடைய இறையவர் -என்னுதல் –
அவ்வவ ஆஸ்ரயணீயர் ஆனவர்கள் என்னுதல் –
அவர்களுக்கு ஆஸ்ரயணீ யாரானவர்கள் அவர்களுக்கு பல பிரதான சக்தராகைக்கு குறை உடையர் அல்லர் –
அதுக்கடி என் என்னில்
இறையவர்-
பொதுவிலே — இறையவர் –இறையவர்- -என்கிறார்
அவர்களோடு -அவர்கள் ஆஸ்ரயிக்கிற தேவதைகளோடு -தம்மோடு -வாசியற -எல்லார்க்கும் ஒக்க இறையவர் ஆகையாலே
-பதிம் விச்வச்ய -என்கிறபடியே -எல்லார்க்கும் ஒக்க ஸ்வாமி யானவர் –
அவரவர் விதி வழி யடைய நின்றனரே –
அவ்வவ ஆஸ்ரயணீயர் தந்தாமுடைய ஆகமாதிகளிலே விதித்து வைத்த பிரகாரங்களிலே அடையும்படியாக நம் இறையவர் அந்தராத்மாவாக நின்றார்
அன்றிக்கே
சர்வேஸ்வரன் காம நாதிகாரத்தில் அருளிச் செய்தபடியே -அவர்கள் அடையும்படியாக -என்னுதல் –
சர்வேஸ்வரன் இரா மடம் ஊட்டுவாரைப் போலே முகம் தோற்றாதே அந்தராத்மாவாய் நின்று நடத்துகையாலே
அவர்களும் ஆஸ்ரயித்தார்களாய்-இவர்களும் பல பிரதான சக்தர் ஆகிறார்கள் இத்தனை –
அவனை ஒழிந்த அன்று இவர்கள் ஆஸ்ரயிக்கவும் மாட்டார்கள் -அவர்கள் பல பிரதானம் பண்ணவும் மாட்டார்கள் -என்கிறார்
ஐயன் பாழியில் ஆனை போருக்கு உரித்ததாம் அன்று ஆயிற்று -அவ்வோ தேவதா மாத்ரங்களுக்கு பல பிரதான சக்தி உள்ளது –

—————————————————————————————

அவதாரிகை –

லீலா விபூதியினுடைய ஸ்திதியும் பகவத் சங்கல்ப அதீனம் என்கிறார் கீழ் –
அதினுடைய பிரவ்ருத்தியும் நிவ்ருத்தியும் பகவத் சங்கல்ப அதீனம் என்கிறார் இதில்

ஆகிருதி வாசக சப்தம் வ்யக்தியிலே பர்யவசித்து நிற்குமா போலே ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளுக்கு வாசகமான சப்தமும்
அபர்யவசா நவ்ருத்த்யா -அவன் அளவிலே சென்று அல்லது நில்லாது –

நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
என்றும் ஓர் இயல்வினர் என நிலனைவரியவர்
என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே –1-1-5-

நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர் -நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
அருணயா பிங்காஷ்யா ஸோமம் க்ரீணாதி -என்கிற இடத்தில் -சிறந்த நிறம் உள்ளதும் பொன் நிறம் போன்ற நிறம் உள்ள கண்கள் கொண்டதும்
ஆகிய பசுவைக் கொடுத்து ஸோமம் என்ற கோடியை வாங்குவான் -என்றது போலே
குண விசிஷ்ட வஸ்து தோற்றா நிற்கச் செய்தேயும்
ஆருண்யாம் சத்திலே தாத்பர்யம் ஆகிறாப் போலே -பிரவ்ருத்தி நிவ்ருத்திகளுக்கு ஆஸ்ரயமான வஸ்துக்களின் உடைய ஸ்வரூபமும்
அவன் அதீனம் என்று
முன்னே சொல்லுகையாலே பிரவ்ருத்தி நிவ்ருத்தி யம்சத்திலே நோக்கு என்று சொல்வாரும் உண்டு —
அப்போது சாமா நாதி கரண்யம் சித்தியாது -எம் திடர் என்ற பதத்துடன் சாமா நாதி கரண்யம் பொருந்தாது -என்றபடி –
ஆக -பிரவ்ருத்தி நிவ்ருத்திகளுக்கு வாசகமான இச் சப்தம் -அவற்றுக்கு ஆஸ்ரயமான சேதனனைக் காட்டி
அவன் தனக்கு ஈஸ்வரனை ஒழிய -ப்ருதக் ஸ்திதி யாதல் -உபலம்பமாதல் -இல்லாமையாலே அவனளவும் காட்டுகிறது
பிரவ்ருத்தி அவன் அதீனை யாகிறது வேனுமாகில் -நிவ்ருத்திக்கு அவன் வேணுமோ -என்று எம்பாரைக் கேட்க
ஸ்வர்க்கத்தின் நின்றும் விழுகிற த்ரிசங்குவை சக்திமான் நிற்கச் சொல்ல நிற்க வேண்டிற்று கண்டாயே —
அப்படியே நிவ்ருத்திக்கு அவன் வேணும் காண்-என்று அருளிச் செய்தார்

என்றும் ஓர் இயல்வினர் என நிலனைவரியவர்
இப்படி அநேக பிரகாரராய் இருக்கையாலே -காலதத்வம் உள்ளதனையும் ஆராயா நின்றாலும் இன்னபடிப்பட்ட
ஸ்வ பாவத்தை உடையவர் என்று நினைக்கவும் கூட அரியவர் –

என்றும் ஓர் இயல்வொடு நின்ற –
வ்ருஷல விவாஹ மந்த்ரம் போலே ஓர் இயல்வொடு நின்றவராவது என் என்னில் ஸ்வ பாவத்தை உடையவர் என்று நினைக்க
அரிதான நிலை என்றும் ஒருபடிப்பட்டு இருக்கும் -என்கை-

எம் திடரே –
அபௌ ருஷேயமான வேத பிரதிபாத்யன் ஆகையாலே வந்த தார்ட்யத்தைச் சொல்லுகிறது -இப்படி ஸூ த்ருட பிரமாண
சித்தரான நிலை தம்முடைய லாபமாகத் தோற்றுகையாலே-எம் திடர் -என்கிறார் –

————————————————————————————————

அவதாரிகை

கீழே சாமா நாதி கரண்யம் சொன்ன இது பாவி பிரதி சந்தான நியாயத்தாலே யாய் -அத்தாலே பலித்த சம்பந்தம் சாரீராத்ம பாவம் என்கிறார் ஆதல்
அன்றிக்கே
கீழே சாமா நாதி கரண்யத்தாலும்-வையதி கரண்யத்தாலும் சொன்னார் -அப்படி சொன்ன ஐக்யத்துக்கு நிபந்தனம் சரீராத்மா பாவம் என்கிறார் ஆதல்
அநேன ஜீவே நாத்ம நா நு பிரவேச்ய நாம ரூபே வ்யாகரவாணி -சாந்தோக்யம் -என்கிறபடியே
த்ரிவ்ருத்க்ருதமான அச்சித்திலே ஜீவத்வாரா அநு பிரவேசித்து வஸ்துத்வ நாம பாக்த்வங்கள் உண்டாம்படி பண்ணி இவை-தான் -என்னலாம் படி இருந்தால் -ம்ருதாத்மகோ கட -என்னும்படி இருக்கை யன்றிக்கே
அந்தப் பிரவிஷ்டஸ் சாஸ்தா ஜனா நாம் சர்வாத்மா நாம் -என்கிறபடி-சர்வேஷாமாத்மாவாய் -இவற்றை நியமிக்கும் இடத்தில் இந்த சரீரத்துக்கு இந்த ஆத்மா தாரகனாய் நியாமகனாய் சேஷியாய் இருக்கிறாப் போலே
யஸ்யாத்மா சரீரம் யஸ்ய பிருத்வி சரீரம் என்கிறபடியே –
தான் இரண்டுக்கும் தாரகனாய் -நியாமகனாய் -சேஷியாய் -நின்று நடத்திக் கொண்டு போரும் என்று கீழ்ச் சொன்ன சாமா நாதி கரண்யத்துக்கு நிபந்தனம் சரீராத்மா பாவம் என்கிறார் –
வருஷத்தில் தேவதத்தன் நின்றான் என்றால் அங்கே சரீராத்மா பாவம் இல்லை
ஜாதி குணங்கள் வ்யக்தியிலே கிடந்தது என்றால் அங்கு சரீராத்மா பாவம் இல்லை
விசிஷ்டத்திலே இ றே சரீராத்மா பாவம் கொள்ளலாவது

திட விசும்பு எரி அளி நீர் நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும்
உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை யுண்ட சுரனே –1-1-7-

திட விசும்பு -எரி அளி நீர் நிலம் —
இது எல்லாவற்றிலும் ஏறி-த்ருடமான எரி-த்ருடமான காற்று -என்று கிடக்கிறதாகவுமாம்
அன்றிகே
ஆத்மந ஆகாசஸ் சம்பூத -என்று சொல்லுகிறபடியே அல்லாத பூதங்களுக்கு முன்பே உண்டாய் அவை அழிந்தாலும்
சில நாள் நிற்கக் கடவதாகையாலே த்ருடமான விசும்பு என்னவுமாம் –
அன்றிக்கே
சத்வார்யேவ பூதானி -என்கிறவனை நிராகரிக்கிறார் -நான்கு தத்வம் -அருக வாதம் ஆகவு மாம்
ஆக பூத பஞ்சகங்களையும் சொல்லுகிறது

இவை மிசை படர் பொருள் முழுவதும் யாய் –
இவற்றை அடியாகக் கொண்டு மேல் விஸ்த்ருதமாகா நின்றுள்ள பதார்த்தங்கள் எல்லாவற்றையும் உண்டாக்கி
ஆய -என்றது -ஆக்கி என்றபடி –
ஆய -என்பான் என் என்னில் பஹூச்யாம் என்கிற தன விகாசமே யாகையாலே வைதிக நிர்த்தேசம் -இருக்கிறபடி –

யவை யவை தொறும்
அவ்வவோ பதார்த்தங்கள் தொறும்

அவற்றிலே வியாபிக்கும் இடத்தில் -பல துணுக்காக ஒரு உத்தரம் கிடந்தாப் போலே அன்றிக்கே -ஜாதி வ்யக்தி தொறும்
பரி சமாப்ய வர்த்திக்குமா போலே எல்லாவற்றிலும் தனித்தனியாக குறைவற வியாபித்து நிற்கும் –

இப்படி வியாபித்து நிற்கும் இடத்தில்
உடன் மிசை யுயிர் எனக் –
இச் சரீரத்துக்கு ஆத்மா தாரகனாய் -நியாமகனாய் -சேஷியாய் -இருக்குமா போலே இச் சரீராத்மாக்களுக்கு
தான் தாரகனாய் -நியாமகனாய் -சேஷியாய் இருக்கும் –

கரந்து –
இப்படி இருக்கச் செய்தே யமாத்மா ந வேத -ப்ருஹத் உபநிஷத் -என்கிறபடியே அந்யை ரத்ருச்யனாய் இருக்கும்

எங்கும் பரந்து –
அந்தர் பஹிச்ச வியாபித்து

இதில் பிரமாணம் என் என்னில்
உளன் சுடர்மிகு சுருதியுள் –
அபௌருஷேயமாய் -நிர் தோஷமாய் இருக்கிற வேதத்தாலே பிரதிபதிக்கப் பட்டு இருக்கும் –
பிரத்யஷாதி பிரமாணங்கள் போலே ஹேத்வந்தரத்தால் கழிக்க ஒண்ணாத ஒளியை உடைத்தாய் இருக்கை –
சுருதி
பூர்வ பூர்வ உச்சாரண க்ரமத்தைப் பற்றி உத்தர உத்தர உச்சார்யமாணத்வத்தை பற்றச் சொல்லுகிறது
இத்தால் முதல் பாட்டுத் தொடங்கி சொன்ன அர்த்தங்களுக்கு எல்லாம் பிரமாணம் நிர்தோஷ சுருதி -என்கிறது –

இவை யுண்ட சுரனே —
இவற்றை சம்ஹரித்த தேவன்
முன்பே சிருஷ்டி ஸ்திதிகள்-அவன் அதீநம் என்று சொல்லிற்று –
சம்சாரம் வேறு ஒரு சேதனன் அதீனமாகில் -இது தன்னது அல்லாமையால் வரும் ஐஸ்வர்யம் குறையும் இ றே
அதுக்காக சம்ஹாரம் அவன் இட்ட வழக்கு -என்கிறார் –
இத்தால் சிருஷ்டி சம்ஹாரங்களை ப்ரஹ்மாதிகளே நடத்துகிறார்கள் -என்கிற குத்ருஷ்டிகளை நிரசிக்கிறார்
சுடர் மிகு சுருதியுள் -என்கையாலே நாராயண அனுவாகாதிகளில் சொல்லுகிற -பரத்வம் லஷ்மீ சம்பந்தம் -இவை
எல்லாவற்றையும் அங்கீகரித்தார் ஆகிறார்

—————————————————————————————–

அவதாரிகை –

சுருதி சித்தன் அவனே -என்றும்
சர்வ சரீரியாய் நிற்கிறான் அவனே என்றும் -சொல்லா நின்றீர்
அல்லாதாரும் ஒரோ கார்யங்களில் அதிகரித்து -அவையும் நடத்தி யன்றோ போருகிறது —
ப்ரஹ்மா சிருஷ்டிக்கு கடவனாய் -ருத்ரன் சம்ஹாரத்துக்கு கடவனாய் அன்றோ போருகிறது –
இவற்றை ஒரு ஒரு வ்யக்தியிலே ஏறிட்டால்-நீர் பஷ பாதத்தால் சொன்னீர் ஆகீரோ என்ன –
ஒரு வ்யக்தியில் பஷ பாதத்தாலே சொல்லுகிறேன் அல்லேன் -பிரமாண கதிகளை ஆராய்ந்தால் –
அவை அவர்கள் பக்கலிலே கிடவாமையாலே சொல்லுகிறேன் -என்கிறார் –

சுரர் அறி வரு நிலை விண் முதல் முழுவதும்
வரன் முதலாயவை முழுதுண்ட பரபரன்
புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து
அரன் அயன் என வுலகு அழித்து அமைத்து உளனே –1-1-8-

சுரர் அறி வரு நிலை விண் முதல் முழுவதும் –
ப்ரஹ்மாதிகளால் அறிய வரிய ஸ்வ பாவத்தை உடைத்தாய் இருக்கிற விண் உண்டு -மூல பிரகிருதி
அது தொடக்கமான உண்டான எல்லாவற்றுக்கும் வரிஷ்டமான காரணமாய் -அஷரம் அம்பராந்த தருதே –
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த்ரம் -ஆகாயத்துக்கு காரணமான மூல பிரக்ருதியைத் தரிப்பதால் அஷரம் என்பதே ப்ரஹ்மம்–என்றது
-அம்பராந்தம் -என்று சொல்லக் கடவது இ றே
ப்ருஹத் உபநிஷத்தில் கார்க்கி வித்யையிலே-கச்மின்நு கல்வாகாச ஒதச்ச ப்ரோதச்ச -என்று ஆகாச சப்தத்தாலே
மூல பிரக்ருதியைச் சொல்லுகையாலே இவரும் ஆகாச சப்தத்தாலே மூலப் பிரக்ருதியை அருளிச் செய்கிறார் –
பிரகிருதி கார்யமான ஆகாச வாசி சப்தத்தை இட்டு காரணமான மூல பிரக்ருதியை உபசரிக்கிறது –

வரன் முதலாய் –
காரண தசையிலும் ஸூ ஷ்ம ரூபேணவியாபித்து தன மேல் ஏறிட்டுக் கொண்டு நோக்கியும்
கார்யமாம் அளவிலே வந்தவாறே அவயகதம் -மஹான் -அஹங்காரம் -என்கிற இவற்றிலும் ஸூ ஷ்ம ரூபேண வியாபித்தும்
காரண பரம்பரையோடு கார்ய பரம்பரையோடு வாசியறத் தானே நின்று நடத்திக் கொண்டு போருகையாலே வரிஷ்டமான காரணம் என்கிறது
அவை முழுதுண்ட
சம்ஹாரத்தில் வந்தால் முழுக்க சம்ஹர்த்தா ஆகிறவனும் அவனே
கட உபநிஷத் -யஸ்ய ப்ரஹ்ம ச ஷத்ரஞ்ச உபே பவத ஓதன ம்ருத்யுர் யஸ்ய உபசேசனம் -என்று
யாவன் ஒருவனுக்கு ப்ரஹ்ம ஷத்ராத்மகராய் இருக்கிற இது எல்லாம் ஓதனமாய் இருக்கிறது –
யாவர் ஒருவனுக்கு ம்ருத்யு உபாசேசன கோடியிலே நிற்கிறான் –
க இத்தா வேத யத்ர ச – –
அப்படி இருக்கிறவன் பெருமை ஒருவர்க்கு அறிய நிலமோ என்னா நின்றது இறே

பரபரன்
ப்ரஹ்மாதிகள்-அதிகாரி புருஷர்களாய் இருக்கையாலே நம்மைக் குறித்து அவர்கள் பரராய் இருப்பது ஓன்று உண்டு இ றே
பர பராணாம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -என்கிறபடியே அவர்கள் தங்களுக்கும் பரனாய் இருக்குமவன் –
மனிசர்க்குத் தேவர் போலே தேவர்க்கும் தேவா -8-1-5- என்னக் கடவது இறே –

புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து
ருத்ரன் திரிபுர தஹனம் பண்ணினான் என்றும்
அமரர்க்கும் அறிவை ஈந்து -அன்றிக்கே வியத்தல் -கடத்தல் -கொடுத்தாலும் ஆகையாலே -அறிவைக் கொடுத்து -என்னவுமாம் –
ப்ரஹ்மா தேவர்களுக்கு ஜ்ஞான பிரதானம் பண்ணினான் என்றும் -ஒரு பிரசித்தி உண்டு இ றே நாட்டிலே அவர்களுக்கு
அங்கன் அன்றே என்னில் -அவற்றை ஆராய்ந்தால்
விஷ்ணுராத்மா பகவதோ பவச்யாமித தேஜஸ -தஸ்மாத் தனுர்ஜ்யா சம்ஸ்பர்சம் ச விஷேஹே மகேஸ்வர -என்னா நின்றார்கள் இ றே
அத்தை அடி அறிவார் –நண்ணார் நகரம் விழ நனிமலை சிலை வளைவு செய்து அங்கழல் நிற அம்பது ஆனவனே -பெரிய திருமொழி -6-1-3-
என்னா நின்றார்கள் இ றே மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்கள்
தான் பூட்டின நாணி தன கழுத்தை அறுத்துக் கொண்டு போகாது ஒழியும் பொழுது ஈஸ்வரன் அந்தராத்மாவாக இருக்க வேணும்
ப்ரஹ்மா தேவர்களுக்கு ஜ்ஞான பிரதானம் பண்ணினார் என்று பிரசித்தி உண்டு இ றே
அதுக்கடி ஆராய்ந்தால் -யோ ப்ரஹ்மாணாம் விததாதி பூர்வம் என்கிறபடியே அவன் அடியாய் இருக்கும் –

அரன் அயன் என வுலகு அழித்து அமைத்து உளனே –
அரன் செய்தான் அயன் செய்தான் என உலகு அழித்து அமைத்து உளன் –
ஏதௌ த்வௌ விபுத ஸ்ரேஷ்டௌ பிரசாத க்ரோதஜௌ சம்ருதௌ ததா தர்சித்த பந்தா நௌ சிருஷ்டி சம்ஹார காரகௌ-என்கிறபடியே
பிரமாண கதிகள் இருந்த படியாலே
ஏக தேச சிருஷ்டியும் ஏக தேச சம்ஹாரமுமே ப்ரஹ்மாதிகளுக்கு உள்ளது –
அது தானும் இவர்களுக்கு அந்தராத்மாவாய் நின்று சிருஷ்டி சம்ஹாரங்களைப் பண்ணுகிறவன் சர்வேஸ்வரன் ஆகையாலே சொன்னேன் அத்தனை
ஒரு வியக்தியிலே பஷ பாதத்தாலே சொன்னேன் அல்லேன் என்று குத்ருஷ்டிகளை நிரசிக்கிறார்

———————————————————————————————–

அவதாரிகை –

ஸூ ந்யவாதியை நிரசிக்கிறார் -நிரசிக்கிறபடி தான் என் என்னில் பாஷ்யத்தில் ஸூ ந்யவாதியை நிரசித்த க்ரமத்திலே –
இவ்வாழ்வார் தாம் அடியாக பாஷ்யகாரர்க்கு அவனை நிரசிக்கலாம் –
இவர் தாம் அவனை நிரசிக்கைக்கு அடி என் என்னில் அதுவும் இவ்வாழ்வார் பக்கலிலே உண்டு
புறம்பே சிலர் ப்ரஹ்மாதிகள் பக்கலிலே ஈச்வரத்வ பிரதிபத்தியைப் பண்ணி -பிரமாணங்களையும் அதுக்கு ஈடாக நியமித்துக் கொண்டு
வந்து தோற்ற தாம் அங்கீ கரித்தவனே சர்வ சமாத் பரன் என்னும்
ஜகத் அவனுக்கு சரீரதயா சேஷம் என்றும்
தத் பிரதிபாதிக பிரமாணம் வேதம் என்றும்
தம்முடைய மதத்தை உபன்யாசித்து நின்றார் கீழ்
இவை இத்தனையும் இல்லை என்னும் போது-பூர்வ பஷமாக இவற்றை அங்கீ கரித்து-அநு பாஷித்து கழிக்க வேணும் இ றே
அதில் இவற்றை அங்கீ கரித்து அநு பாஷித்து அவனால் இல்லை என்னப் போகாது
முதலிலே ஸூ ந்யம் என்னில் சர்வ ஸூ ந்யவாதம் சித்தியாது -இனி உன்னைக் கேட்போம் –
நீ தான் ஈஸ்வரன் உளன் என்கிற சொல்லாலே அவன் இல்லாமையை சாதிக்கப் பார்க்கிறாயா
இல்லை என்கிரசொள்ளாலே இல்லாமையை சாதிக்கப் பார்க்கிறாயா -என்ன –
இங்கன் விகல்பிக்கைக்கு கருத்து என் -என்ன -உளன் என்கிற சொல்லாலே சொன்னால் உனக்கு அபிமதமான அபாவம் சித்தியாதோபாதி
இல்லை என்கிற சொல்லாலே உனக்கு அநபிமாதார்த்தமே காண் சித்திப்பது –
இங்கே உள்ளது இப்போது உள்ளது இப்படியாக உள்ளது -பாவம்
இங்கே இல்லை இப்போது இல்லை இப்படியாக இல்லை -அபாவம் என்றபடி
ஆனபின்பு நீ இல்லை என்கிற சொல் கொண்டே அவன் உண்மையை சாதிப்பான்
லோகத்தில் பாவ அபாவ சப்தங்களுக்கு யாதொருபடி பொருள் கொள்ளுகிறோம்
அப்படி கொள்ளில் நீ நினைக்கிற அர்த்தம் உன்னால் சாதிக்கப் போகாது -அங்கனே கொள்ளாயாகில் வாதம் தன்னில் உனக்கு அதிகாரம் இல்லை –

உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள்
உளன் என இலன் என விவை குணமுடைமையில்
உளன் இரு தகைமையோடு ஒழிவிலன் பரந்தே –1-1-9-

உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்
ஈஸ்வர சத்பாவம் -முதலிலே இல்லை என்கிற நீ -அவன் உண்மைக்கு இசையாய் இ றே
நான் உளன் என்கிறாப் போலே சொல்லில் தான் உளன்
ஈசிதவ்ய நிரபேஷமாக வன்று இ றே ஈஸ்வரன் உளனாவது
யஸ்யாத்மா சரீரம் யஸ்ய ஆத்மா சரீரம் -என்கிறபடியே ஜகத்து அவனுக்கு சரீரதயா சேஷமாய் உண்டாம்

உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள்
உளன் அலன் என்பாயோ -அப்போது அபாவ தர்மியாய்த் தோற்றும்
அப்போது நாஸ்தி சப்த வாச்யமாய் அவஸ்தாந்திர பாக்காய்க் கொண்டு இவற்றின் உண்மை தோற்றும்
கடோ அஸ்தி என்றால் -வாயும் வயிருமான ஆகாரம் தோற்றும்
கடோ நாஸ்தி என்றால் -நாஸ்தித்வ தர்ம விசிஷ்டமாய்த் தோற்றும்
இங்கு இல்லை என்றால் -வேறு ஓர் இடத்தில் உண்டாம்
இப்போது இல்லை என்றாகில் வேறு ஒரு கால விசேஷத்திலே உண்டாம்
எங்கும் எப்போதும் ஒரு பிரகாரத்தாலும் கடம் இல்லை என்னக் கூடாமையாலே நிருபாதிக நிஷேதம் இல்லை இ றே –

உளன் என இலன் என விவை குணமுடைமையில்
உளனாகிற இத்தையும்
இலனாகிற இத்தையும்
இவை இரண்டையும் குணமாக உடையனாகையாலே -இவை இரண்டும் இரண்டு தர்மம் ஆயிற்று

உளன் இரு தகைமையோடு ஒழிவிலன் பரந்தே —
உளன் என்கிற சொல்லாலும்
இலன் என்கிற சொல்லாலும்
சொன்ன இரண்டு ஸ்வ பாவத்தாலும் உளன் ஆனான் –
ஒழிவிலன் பரந்தே –
நான் உளன் என்கிற சொல்லாலே உண்மையை சாதித்தேன்
நீ இலன் என்கிற சொல்லாலே உண்மையை சாதித்தாய்
ஆக இருவருமே உண்மையை சாதித்தோம்
இனி அவன் உளனாகில் உளனாம் போலே ச விபூதிகனாகவே உளனாகவே அமையாதோ -என்கிறார்

——————————————————————————————

அவதாரிகை –

ஜலத்தை சரீரதயா சேஷமாக உடையனாய் -எங்கும் வியாபித்து -தாரகனாய் -நியாமகனாய் -சேஷியாய் இருக்கும் என்று கீழே சொன்னார் –
இப்படி வியாபித்து நின்றால்-அசித் சம்வர்க்கத்தாலே சேதனனுக்கு ஒரு சங்கோசம் பிறவாது நின்றது இ றே
அப்படியே அவனுக்கும் இவற்றோட்டை சம்வர்க்கத்தாலே சங்கோசம் பிறக்குமோ என்னில் -அது செய்யாது
அசங்குசிதமாக வியாபித்து நிற்கும் என்று வ்யாப்தி சௌகர்யத்தை அருளிச் செய்கிறார் –

பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன்
பரந்த வண்டமிதென நில விசும்பு ஒழிவறக்
கரந்த சிலிடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும்
கரந்து எங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே –1-1-10-

பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன்
பரந்து குளிர்ந்து இருந்துள்ள கடலில் ஜல பரமாணுக்கள் தோறும வியாபித்து இருக்கும்
நீர் செறிவாலே திரண்டு தோற்றுகிற இத்தனை இ றே -பரமாணு சங்காதம் இ றே
ஜ்யாய அந்த்தரிஷாத்-சாந்தோக்யம் -ஆகாயத்திலும் உயர்ந்தவன் -என்கிற வஸ்து –
ஜல பரமாணுக்களிலே வியாபியா நின்றால் அல்ப அவகாசமே நெருக்குப் பட்டு இருக்குமோ எனில் –

பரந்த வண்டமிதென –
அந்த ஜல பரமாணுக்கள் தான் பரந்த அண்டமிது எனவாயிற்று வியாபித்து இருப்பது
ஓர் அண்டத்தை சமைத்து அதிலே ஓர் ஏகாகியை வைத்தால் போலே இருக்கும் –

இப்படி ஜல பரமாணுக்களில் வியாபித்து விடும் அத்தனையோ என்னில்
நில விசும்பு ஒழிவறக்
பூமி அந்த்ரிஷங்களிலும் அப்படியே
இவை மூன்றும் அஞ்சுக்கும் உப லஷணமாய்-அஞ்சாலும் ஆரப்தமான அண்டத்தளவும் நினைத்து -மேல் கார்யமான பதார்த்தங்களில் வியாபித்து இருக்கும் படி சொல்கிறது

கரந்த சிலிடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும்
இமையோடு இமை பொருந்தும் போதைக் காற்றில் முடியும்படியான ஸூ ஷ்மமான அல்ப சரீரங்கள் தோறும –
அவ்வவ சரீரங்க ளிலே-ஜ்ஞானானந்த லஷணமாகக் கொண்டு மிளிருகிற ஆத்மாக்கள் தோறும –

கரந்து எங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே —
கரந்து –
வ்யாப்ய பதார்த்தங்களுக்கு தெரியாதபடி அன்யைர த்ரஷ்டனாய்
எங்கும் பரந்துளன் –
சேதனன் சரீரத்திலே வியாபிக்கும் போது அதில் ஏக தேசத்திலே நின்று ஜ்ஞானத்தாலே எங்கும் வ்யாபிக்கக் கடவனாய் இருக்கும்
அவன் அங்கன் அன்றிக்கே ஸ்வ ரூபத்தால் எங்கும் வியாபித்து இருக்கும் விபுத்வத்தை அவனுக்குச் சொல்லி அணுத்வத்தை இவனுக்குச் சொல்லி
இதுக்குள்ளே அவன் குறைவற வியாபித்து இருக்கும் என்றால் அது கூடுமோ என்னில்
இவை யுண்ட கரனே
சிறிய வடிவைக் கொண்டு பெரியவற்றை எல்லாம் தன வயிற்றிலே வைத்தால் -தயிருண்ட பொன் வயிறு இவ் வேழ் உலகும் உண்டு இடமுடைத்தால் -பெரிய திரு -11-5-3–என்கிறபடி
பின்னையும் அவ்வயிறு இ றே இடம் உடைத்தாம் படி இருக்க வல்ல சர்வ சக்தி -சிறிய வற்றில் குறைவற இருக்க மாட்டானோ என்கிறார்
கரனே –
இப்படி ஸூ த்ருட பிரமான சித்தன்
இவை யுண்ட கரன் -பரந்த தண் பரவையுள் -நீர் தொறும் பரந்த வண்டமிதென பரந்துளன் –
நில விசும்பு ஒழிவற பரந்துளன்
கரந்த சிலிடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும்
கரந்து எங்கும் பரந்துளன் -என்று அந்வயம்

———————————————————————————————

அவதாரிகை

நிகமத்திலே
முதல் பாட்டிலே -கல்யாண குண யோகத்தையும் -நித்ய விபூதி யோகத்தையும் –விக்ரஹ வை லஷண்யத்தையும் சொல்லி
இரண்டாம் பாட்டில் -இவற்றுக்கு ஆஸ்ரயமான திவ்யாத்ம ஸ்வரூபம் சேதன அசேதன விலஷணம் என்று சொல்லி
மூன்றாம் பாட்டிலே -நித்ய விபூதியோபாதி -ததீயத்வாகாரத்தாலே அவனுக்கு அந்தரங்கமாகத் தோற்றுகிற லீலா விபூதி யோகத்தை அனுபவித்தார்
நாலாம் பாட்டில் -அந்த லீலா விபூதியினுடைய ஸ்வரூபம் அவன் அதீனம் -என்றார்
அஞ்சாம் பாட்டிலே -அதினுடைய ஸ்திதியும் அவன் அதீனை என்றார்
ஆறாம் பாட்டிலே -அதினுடைய பிரவ்ருத்தி நிவ்ருத்தி யும் பகவத் அதீனம் என்றார் –
ஏழாம் பாட்டிலே -சரீர சரீரிகளுக்கு உண்டான லஷணம் ஜகத்துக்கும் ஈஸ்வரனுக்கும் உண்டாகையாலே
இதுக்கும் அவனுக்கும் சொன்ன -ஐக்யத்துக்கு நிபந்தனம் சரீராத்மா பாவம் என்றார்
எட்டாம் பாட்டிலே குத்ருஷ்டிகளை நிரசித்தார்
ஒன்பதாம் பாட்டிலே ஸூ ந்யவாதியை நிரசித்தார்
பத்தாம் பாட்டில் வ்யாப்தி சௌகர்யத்தை அருளிச் செய்தார்
இப்படிகளாலே அவனுடைய பரத்வத்தை நிஷ்கரிஷித்தாராய் நின்றார் கீழ்
இத் திரு வாய் மொழி யில் அன்வயித்தவர்களுக்கு தாம் பெற்ற பேறே பேறு என்னும் இடத்தை அருளிச் செய்கிறார் –

கடவிசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
வரனவில் திறல் வலி யளி பொறையாய் நின்ற
பரனடி மேல் குருகூர்ச் சடகோபன் சொல்
நிரனிறை யாயிரத்து இவை பத்தும் வீடே –1-1-11-

கடவிசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
கரமான விசும்பு -த்ருடமான விசும்பு -என்றபடி
அன்றியே
கரந்த விசும்பு –
அச்சமான விசும்பு -என்னுதல்-அத்ர க்ருத்ர பததி என்று நிரூபிக்க வெண்டும்படியாய் இருக்கும் இ றே –
எரி -தேஜஸ் தத்வம் –
வளி -காற்று
நீர் -ஜலம்
நிலம் -பூமி
இவை மிசை -இவற்றின் மேலே உண்டான

வரனவில் திறல் வலி யளி பொறையாய் நின்ற –
வரனான -ஸ்ரேஷ்டமான
நவில் -வரிஷ்டமான சப்தம்
அக்னியினுடைய -தாஹகத்வ சக்தி
காற்றினுடைய மிடுக்கு
ஜலத்தினுடைய தண்ணளி
பூமியினுடைய பொறை
இப்படி ஸ ஸ்வ பாவமான பூத பஞ்ச கங்களையும்-சொல்லி -இத்தாலே லீலா விபூதியைச் சொல்லிற்றாய்
ரஜஸ் தமஸ் ஸூ க்களைக் கழித்து நிஷ்க்ருஷ்ட சத்வமேயாய்-இருக்கும் இ றே நித்ய விபூதி
ஆக இது தானே உப லஷணமாய் -ஆக உபய விபூதி யுக்தனாய் இருக்கிற சர்வ ஸ்மாத் பரன் திருவடிகளிலே

இவை பத்தும் பரனடி மேல் வீடே —
அவன் திருவடிகளிலே விடப்பட்டன -சமர்ப்பிக்கப் பட்டன –

குருகூர்ச் சடகோபன் சொல் –
வால்மீகிர் பகவான் ருஷி -என்னுமா போலே ஆப்திக்கு உடலாய் அருளிச் செய்கிறார் –

-நிரனிறை யாயிரத்து
நிரல் நிறை -என்னுதல் -சப்தங்களும் நிறைந்து அர்த்தங்களும் புஷ்கலமாய் இருக்காய் –
நிரன் நிறை என்னுதல் -நேரே நிறுத்தப் படுக்கை -என்றபடி
ப்ரமாணைஸ் த்ரி பிரந்விதம் பாத பத்தோஷர சமஸ் தந்த்ரீ லய சமன்வித –ஸ்ரீ ராமாயணத்துக்கு சொல்கிறபடியே
லஷணங்களில் குறையாமே -எழுத்தும் -சொல்லும் -பொருளும் -அந்தாதியும் -க்ரமத்திலே நிறுத்தப் படுகை

ஆயிரம் –
காவ்யம் ராமாயணம் க்ருத்ஸ் நமீத்ருசை கரவாண்யஹம்-என்னுமா போலே
மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் ஆகையாலே -மேல் உள்ளத்து அடையத் தோற்றா நின்றது –
வாச க்ரமவர்த்தித்வாத் அடைவே சொல்லும் அத்தனை யாகையாலே -ஆயிரம் -என்கிறது –
அன்றிக்கே
ஆயிரமும் சொல்லி யல்லது நிற்க ஒண்ணாத விஷய ஸ்வ பாவத்தாலே சொல்லுகிறார் ஆதல்

இவை பத்தும் வீடே –
இவை பத்தும் பரனடி மேல் விடப் பட்டது -என்னுதல்
அன்றிக்கே
இச் செய்யடைய நெல் -என்னுமா போலே நெல்லை விளக்குமது என்று காட்டுமா போலே
இவை பத்தும் வீடு என்றது -வீட்டை விளைக்கும் என்றபடியே -மோஷப்ரதம்-என்கிறார் ஆதல்

பகவத் பிரசாதத்தாலே தமக்கு பரத்வ ஜ்ஞானம் பிறந்த படியையும்
அந்த ஜ்ஞானத்துக்கு பலம் மோஷம் என்னும் இடத்தையும்
இப்பிரபந்தத்தில் ஏதேனும் ஒரு படி அந்வயம் உடையார்க்கும் பலம் நம்முடைய பலம் என்னும் இடத்தையும் அருளிச் செய்கிறார்

————————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமங்களில் –ஸ்ரீ கண்ணன் திரு நாமங்கள் –ஸ்ரீ வேளுக்குடி சுவாமிகள்–

October 4, 2015

ஸ்ரீ கீதையும் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஸ்ரீ மகா பாரத சாரங்கள்

தத்வ தர்சி இடம் கேட்கச் சொல்லி தானே கேட்டு அருளியதே ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் –

1-122 வரை பரத்வமும் -123-146- வரை வ்யூஹமும் -மேலே விபவமும் –
அந்தர்யாமி -பரத்வத்திலும் -அர்ச்சை விபவத்திலும் -சேர்ந்து அனுபவம் –

——————————-

697-770 வரையும் -மேலே 989-992–ஸ்ரீ கிருஷ்ண பரமான திரு நாமங்கள் –
வாசு ரேதஹா -முதல் திரு நாமம் –வாசு -ஜோதி -திவ்யமான ஜோதி வடிவானவன் –
ஆதி அம் சோதி உருவை அங்கே வைத்து இங்கே பிறந்த -ஆதியம் ஜோதியுமான உருவம் அவனதே
-அதுவே அங்கும் இங்கும் -அதே குணங்களுடன் இங்கும் –
சத்திய விரதம் -சத்திய பரம் -த்ரி சத்தியம் -மூன்று சத்தியங்களை சரீரமாகக் கொண்டு திரு அவதரித்தார் –
சூட்டு நன் மாலைகள் படியே –
நான் அவனுக்கு தாசன் ஆன பின்பு அவன் நம்மை விடாமல் நமக்கு தாசன் ஆகிறானே
கேசவன் -என்று வாழ்விலே ஒரு தடவை கூட சொல்லாமல் இங்கே உழல வந்தாயே -யமதர்மன் வார்த்தை
கேசவா என்ன இடராயின எல்லாம் கெடுமே
ஹரி ஹரி -காலையிலே எழுந்ததும் சொல்வதே புருஷார்த்தம் -சொல்லி பலனை எதிர்பார்க்கக் கூடாது
நமக்கே தன்னைத் தந்த கற்பகம் அன்றோ அவன்

மீன் பிடிப்பவன் -வியாபாரி –அரசன் -மாணிக்கம் -கதை –
அவன் திருமேனி -பொன் மேனி –நன் பொன் -மாசறு பொன் -உரைத்த பொன் -சுட்டு உரைத்த நன் பொன் –
சுட்டு உரைத்த நன் பொன் ஒவ்வாது –
அரங்கனைப் பாட முடியாது என்று சொல்வதற்கு ஆயிரம் நாக்குகளை கேட்டு அருளிச் செய்தார் பராசர பட்டர் –
வஸு பிரதஹா -சொத்துக்களையும் ஐஸ்வர்யங்களையும் நிதியாக அளிப்பவன்
தேவகி வசுதேவருக்கு மாதா பிதா பட்டம் அளித்தவன் –
மாணிக்கத்தைப் பெற்ற தாயை கௌசல்யா ஸூ ப்ரஜா ராமா -என்றார் இறே விஸ்வாமித்ரர்
என்ன நோன்பு நோர்ந்தாயோ -இவனைப் பெற்ற வயிறு உடைய நீ
அதே திருநாமம் மீண்டும் -யசோதை நந்தகோபனுக்கும் உண்டே
ஒருத்தி மகனாய் பிறந்து ஒருத்தி மகனாய் ஒளிந்து வளர்ந்து
தனக்கும் தாய் தந்தை பெற்ற ஐஸ்வர்யம் கொடுத்து அருளினானே என்றுமாம் –

32 பற்கள் சங்கு சக்கரம் உடன் காட்சி கொடுத்தானே பிறந்த உடனே —
தேவகி வசுதேவர் மகிழ்ந்து மறைக்கச் சொல்ல மறைத்தானே -வ ஸூ தேவா என்று சொல்வோம் –
படுக்கையை விட்டு பிரிய மாட்டானே -ராமன் லஷ்மணன் -கிருஷ்ணன் பலராமன் —
அடுத்த வேளை குளியல் பரதன் உடன் -திருச் சங்கு ஆழ்வான் அம்சம் –

வஸு மனஹா –
வசுதேவரை மனசில் கொண்டவன் -மறக்காமல் -10 வருஷங்கள் சென்ற பின் அனைத்தும் காட்டி அருளினான்
மாமனார் வீட்டில் பள்ளி கொண்டு அருளி -பாற் கடல் பையத் துயின்ற பரமன் -அது தானே பிராட்டி பிறப்பிடம்
ஸ்ரீ ரெங்க மன்னார் ஸ்ரீ வில்லிபுத்தூரில் ஸ்ரீ பெரியாழ்வார் திரு மாளிகையையே கோயிலாக கொண்டால் போலே
சிசுபாலன் கண்ணன் கள்வன் கண்ணன் திருடன் கண்ணன் பொய்யன் என்று சேர்த்து சொல்லியே பேறு பெற்றான்
சத் -ஆக நாம் திரு நாமம் சொன்னால் பலன் கிட்டும் எனபது கைமுதிக நியாயத்தால் பலிக்கும் –
வடை குச்சி சிஷ்யர் குரு கதை -தண்டா பூப நியாயம் –
கடலில் துரும்பும் தள்ளப்படும் திமிங்களும் அழுந்தும் -நாம் அவன் சொத்து என்று ஒத்துக் கொண்டாலே போதும்

சத் கதி –
நல்ல விஷயங்களைத் தர வல்லவன்

சத் கருதி –
நல்ல சேஷ்டிதங்கள் உடையவன் -அவனுக்கும் அவை திவ்யம் என்றான் இறே ஸ்ரீ கீதையில்
தாமோதரன் -தழும்பு அடியவர்க்கு அடியவன் காட்டிக் கொடுக்குமே
ராமர் சீதை கோதாவரி நீச்சல் போட்டியில் தோற்று –
மைத்துனன் பேர் பாடி -பிராட்டி வென்றதையும் கிருஷ்ணன் தோற்றத்தையும் பாடுவோம்
நீ இன்றி நான் இல்லை நான் இன்றி நீ இல்லை -மாயா சிரச் –
யமுனையும் கறுப்பு -அவன் சம்பந்தத்தால் -தூய யமுனைத் துறைவன் கொப்பளித்த நீர் அன்றோ
கோபிகள் -ஒரு கோபி மகிழ -மறைய மற்றை நம் காமங்கள் மாற்று -சொல்லிக் கொடுக்க லீலை

பூதா வாசஹா –
விஸ்வரூபம் காட்டி அருளின அவதாரம் அன்றோ -நாராயணா -நாரங்கள்
பகிர் வ்யாப்தி அந்தர் வ்யாப்தி இரண்டும் உண்டே
நாராயண -வாசுதேவ -விஷ்ணு -வ்யாபக மந்த்ரங்கள் –
ஓம் -உனக்கு நான் அடிமை -நமஹ -எனக்கு அடிமை அல்லேன் -சேர்த்து சொல்லி பயன் பெறுவோம்

சர்வாசு நிலையஹா –
அனைத்துக்கும் புகலிடம் அடைக்கலம் அவனே – அசுர தேவ விபாகம்

அனலஹா -நமக்கு கொடுத்து விட்டு போதும் என்று இருக்க மாட்டானே -அனல் -அக்னி
கோவிந்தா -கடன் பட்டவன் போலே போனான்
தர்ப்பஹா தர்ப்பதஹா –
தேவதைகளின் மமதை போக்கினவன் அன்றோ -கோவர்த்தன -பெரிய திருப் பாவாடை உத்சவம் –
கண்ணனை அன்றி வேறு தெய்வம் இல்லை -காட்டி அருளி கோவிந்தா பட்டாபிஷேகம்
தர்ப்பம் -ஆசை -யாதவர்கள் மமதை யால் குலத்தையே அழிக்க வேண்டிற்றே
உலக்கை கொழுந்து -கதை -ஆசை கர்வம் அளித்ததால் தர்ப்பஹா தரப்பதஹா
அத்ருத்தஹா –
என்ற திரு நாமமும் உண்டு ஆசை கர்வம் இல்லாதவன் –
நந்த கோபன் இளம் குமரன் -சக்கரவர்த்தி திருமகன் போன்று அடங்கி இருப்பவன் அன்றோ
ஷடர்த்த நயனஹா -வால்மீகி சிவனைப் புகழ்ந்தார்

துர்த்த்ரஹா -அடக்க முடியாதவன்
அபராஜிதஹா -வெல்ல முடியாதவன்
அன்பு பக்திக்கு அடங்குவானே
விஸ்வ மூர்த்தி -அனைத்தும் பிரகாரம் -சரீரம்
மகா மூர்த்தி -ஆதி அந்தம் இல்லாத –
தீப்த மூர்த்தி -பேர் ஒளியாக திகழ்பவன்
ஆண் அல்லன் பெண் அல்லன்
ஒன்றே என்னில் ஒன்றாவான் பலவே என்றால் பலவாவான்
அமூர்த்திமான் -அருவமும் அவனே -வடிவங்களுக்கு அப்பால் பட்டவன்
அநேக மூர்த்தி -சதா மூர்த்தி என்ற திரு நாமங்களும் உண்டே
ஷோடஸ ஸ்திரீ சஹாஸ்ராணி -பராசர பட்டர் -16108 திருமேனிகள் கொண்டானே
அவ்யக்தா -வெளிப்படாதவன் -புலப்படாதவன் -தனக்கும் தன தன்மை அறியாதவன்
ஏகஹா -ஒருவனாகவும்
நஏகஹா -அல்லாதவனாகவும்
அபராஜிதன் -தோல்வியே இல்லாதவன்
சஜாதீய விஜாதீய ஸ்வகத பேதம் இல்லாதவன்

நீராய் நிலனாய்
வையம் எல்லாம் கண்டாள் பிள்ளை வாயுளே
சஹா -கொடுப்பது -கொடுப்பவன்
வஹா -வசிப்பவன்
சஹா -ஞானத்தை தருபவன் என்றுமாம்
சஹா வஹா கஹா கிம் -கறந்த பாலுள் நெய்யே போலே இருப்பவன் அன்றோ கிம் -தேடிக் கண்டு அறியலாம் என்றபடி
யத் -யத்தனம் முயற்சியே வேண்டும்
அவனும் நம்மை மீட்க யத்நிக்கிறான் -சரணாகதர்களை ரஷிக்காமல் விடேன் விரதம் பூண்டு -உள்ளானே
ஆழி கொண்டு மறைத்து –
லோக நாதன் -செங்கோல் உடைய திருவரங்கன்
மாதவ -அகலகில்லேன் இறையும்-இத்யாதி என்பதால் மாதவன் -அவளாலே சிறப்பு பக்த வத்சலன்
அவனைக் கண்டு கலங்கிய விதுரர் போன்ற ஞானிகளுக்கு அவன் அடங்கி விரும்பி இருப்பான்
பதம் அநுத்தமம் -பரமபதம்
ஸ்வர்ண வர்ணஹா -சுட்டுரைத்த நன் பொன் அவன் திருமேனி ஒளி ஒவ்வாது

வீரஹ -வீரம் உள்ளவன்
ஹேமாங்கஹா -சுத்த சத்வ மயம்
விஷமஹ -விஷமக் காரன் கண்ணன்
ஆனாலும் விகல்பம் இல்லாதவன் -கல்லைப் பென்னாக்குவான் கல்லைத் தூக்கி குடையாக்குவான் -சர்வபூத ஸூ ஹ்ருத் –
சூன்யஹ -குற்றம் இல்லாதவன்
க்ருதாசிஹி -பூமியை ஆனந்தப் படுத்துபவன்
அசலன் -எந்த நிலையிலும் சலன் இல்லாதவன் -கடிகாசலம் –
ஸ்ரீ ருக்மணி பின்பு வந்ததால் நமக்கு ஸ்ரீ பார்த்த சாரதி தர்சனம் -முகத்தில் தழும்புடன் -அவள் அணைத்து ஆற்றி இருப்பாளே
சூன்யஹா -தீமையும் துர் குணமும் இல்லாதவன்
மானதஹா -மானம் கொடுத்து அருளினவன் -பாண்டவர்களுக்கு -செய்தவற்றிலே காணலாமே
பாண்டவ தூதன் பெயரில் ஆசை கொண்டான்
அமானி -தனது மானம் பற்றி கவலைப் படாமல் தன்னைத் தாழ விட்டுக் கொண்டவன்

ஸ்ரீ ராம ரத்னம் -ஒருவர் தவம் இருந்து பெற்ற நால்வரில் ஒருவன்
ஸ்ரீ கோபால ரத்னம் -நால்வர் வ்தவம் இருந்து பெற்ற ரத்னம் -மே தேஜ -விரதம் இருந்து பெற்ற பிள்ளை என்ற திருநாமம்
தேஜோப்ருஷ -தேஜஸ் கொண்டு உலகை அருளினவர் அன்றோ
குழந்தைகள் பசுக்களாக தானே தோன்றி பிரம்மா -பொறாமையால் -ஒருவருஷம் -துதி தஹா திருநாமம்
சர்வ சாஸ்திர பிரதாம் -அனைத்து சச்த்ரங்களையும் தரித்து -அப்படி தரித்து உள்ளவர்களுக்குள் ஸ்ரீ ராமனாக இருக்கிறேன் என்றானே
ப்ரக்ரஹ -கடிவாளம் போட்டு அடியவர்களை கட்டுப் பாட்டுக்குள் வைத்து இருப்பவன்
வியக்ரஹ -பொறுமை இல்லாதவன் -அடியவர்களுக்கு அனைத்தும் செய்தாலும் இன்னம் நிறைய செய்யப் பெற்றிலோமே என்பவன்
ஏக சிருங்கஹா -ஒரு ஆயுதமும் இல்லாதவன் -ஆயுதம் எடேன் என்றானே
நைக சிருங்கஹா -எப்பாடு பட்டாலும் அடியவர்களை ரட்ஷிப்பவன்
ஷிதிசஹாஸ்ரீ பூமா பிராட்டிக்கு அனைத்தும் செய்தவன் அன்றோ
பாப நாசனஹா -நம் பாபங்களை நாசம் செய்பவன் அன்றோ
ஸ்ரீ கிருஷ்ணனும் ஸ்ரீ ருக்மிணி பிராட்டியும் நமக்கு நாயக நாயகி அன்றோ

நயதி -அழைத்துச் செல்பவன் ப்ராப்யததி -தேவையானவற்றை தந்து அருள்பவன்
அவமரியாதை சொல் ஒன்றாலே கொல்வது போலே
நண்பன் தோழன் சஹா மித்திரன் ஸூ ஹ்ருத்
முறம் சல்லடை -ஒரே கார்யம் -கசடுகள் சல்லடையில் தங்கும் -நல்லவை முறத்தில் தங்கும்
ஆத்மா தேகம் பஞ்ச பூதங்கள் பரம் பொருள் இந்த்ரியங்கள் ஐந்தும் வேண்டுமே ஒரு செயலைச் செய்ய
ஆசார்யர் இடம் கால் வாசியும்
நம்மைச் சுற்றி உள்ளவர்கள் மூலம் கால் வாசியும்
காலப் போக்கில் கால் வசியும்
பகவத் கிருபையால் கால் வாசியும் அறியப்படும் என்பர்
மாவுக் கனவு கதை போலே கூடாதே
பலனை எதிர் பாராமல் கடமையைச் செய்து சர்வம் ஸ்ரீ கிருஷ்ணமயம் என்று அவனுக்கே சமர்ப்பணம்

————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்